Archive for October, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 24, 2012

எனதுஆவி யுள்புகுந்த பெருநல் உதவிக்கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வது என்பது உண்டே?
எனதாவி ஆவியும் நீ, பொழில்ஏழும் உண்டஎந்தாய்!
எனதுஆவி யார்? யான் ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.3

    பொ – ரை : ‘எழுவகைப்பட்ட உலகங்களையும் பிரளயதகாலத்தில் திருவயிற்றில் வைத்துப் பாதுகாத்த என் சுவாமியே! என் உயிருக்குள்வந்து ஒரு நீராகக் கலந்த பெரிய நல்ல உதவிக்குப் பதில் உதவியாக என் உயிரை உனக்கே உரியதாகத் தந்தேன்; தந்த பின்னர், உன்னிடத்தினின்றும் மீள்வது என்பது உளதோ? ‘இன்று,’ என்றபடி, என்

உயிருக்குள் உயிராக இருப்பவனும் நீ ஆவாய்; என்னால் கொடுக்கப்பட்ட உயிர் யாருடையது? அவ்வுயிரை உனக்குக் கொடுக்கிற நான் யார்? கொடுத்த நீயே கொடுக்கப்பட்ட பொருளினை உனக்கு உரிமையாக்கிக்கொண்டாய்’ என்றவாறு.

    வி -கு : கைம்மாறு – பிரதியுபகாரம். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு’ என்பது திருக்குறள். ‘தந்தொழிந்தேன்’ ஒரு சொல். மீள்வது தொழிற்பெயர், உண்டே -ஏகாரம், எதிர்மறை. ‘ஆர்’ என்பது, வினா வினைக்குறிப்பு முற்று. இது, ‘யார்’ என்பதன் மரூஉ; ஈண்டு அஃறிணைக்கண் வந்தது.

        ‘ஊதைகூட் டுண்ணும் உகுபனி யாமத்துஎம்
கோதைகூட்டு உண்ணிய தான்யார்மன் -போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு?’

என அஃறிணைக்கண் வருதலும், ‘நானார்’ என்னுள்ளமார்?’ என ‘யார்’ என்பது ‘ஆர்’ என மரீஇ வருதலும் புதியனபுகுதலாம் என்பது நன்னூல் விருத்தி, சூ. 349.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘வைத்தாயால்’ என்று அவன் செய்த உபகாரத்தைச் சொல்லி, ‘இங்ஙனே கிடந்து நெஞ்சாறல்பட நில்லாதே, பிரதியுபாகாரமாக உம்மதாய் இருப்பது ஒரு பொருளைக் கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ?’ என்ன, ‘அப்படியன்றோ செய்வது?’ என்றுஅவன் திருவடிகளிலே ஆத்தும சமர்ப்பணத்தைப் பண்ணி, தகழிவிரக்கங்கொள்ளுகிறார்.

    எனது ஆவியுள் புகுந்த – அநாதிகாலம் சமுசாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்தும வஸ்துவிலே அன்றோ வந்து கலந்தான்? வசிஷ்டன் சண்டாளச் சேரியிலே புகுந்தது போன்று தம்மைச் சொல்லுகிறார் ‘எனதாவி’ என்று; 2‘நீசனேன்’ என்று அன்றோ தம்மை அநுசந்திப்பது? அவ்வாறு கலக்கும் இடத்திலும்3கடக்க நின்று சில போக மோக்ஷங்களைத் தந்து போதல் அன்றி,

1‘எல்லாம் தன்னுளே கலந்தொழிந்தோம்’ என்னும்படி கலந்தானாதலின், ‘உள்கலந்த’ என்கிறார். பெருநல் உதவிக் கைம்மாறு – இப்பெரிய உபகாரத்துக்குப் பிரிதியுபகாரமாக; உதவி, நல்லுதவி, பெருநல்லுதவி: உதவியாவது,உபகரித்தல். நல்லுதவியாவது, 2பச்சை கொள்ளாதே உபகரித்தல். பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல். எனது ஆவி தந்தொழிந்தேன் – என்னுடைய ஆத்மவஸ்துவைத் தேவரீருடைய திருவடிகளிலே சமர்ப்பித்தேன். ‘அழகிது; இதுதான் 3எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன். இனி மீள்வது என்பது உண்டே –4சத்தோதஸாகமாகத் தந்தேன். ‘அழகிது, நீர்தாம் யாரதை யாருக்குத் தந்தீர்? ஆராய்ந்து பார்த்தீரோ!’ என்றான் ஈஸ்வரன். ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது. ‘எனது ஆவி ஆவியும் நீ’ என்கிறார்; அதாவது, ‘என் ஆத்துமாவுக்கு அந்தாரத்துமாவாய்ப் புகுந்து நின்றாயும் நீயாய் இருந்தாய்,’ என்றபடி.

    ‘பகவானுக்கு உரிமைப்பட்ட பொருளை நெடுநாள் ‘நம்மது’ என்றிருந்து, இத்தை இன்று அவன் பக்கலிலே சமர்ப்பித்தோம்; முற்றறிவினான சர்வேஸ்வரன் என் நினைந்திருப்பான்?’ என்று தாம் அதனையறிந்து அதற்கு நாணுகிறார், ‘எனது ஆவி யார்? யானார்?’ என்று. ‘நன்று; ஆத்தும சமர்ப்பணம் செய்யாவிடில் 5சர்வமுத்தி பிரசங்கமாம்; சமர்ப்பிக்கில் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாம்; அப்படியாயின், செய்ய அடுப்பது என்?’ என்னில்,

1மயங்கிக்கிடக்கிற காலத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும்; தெளிந்ததால், ‘கொடுத்தோம்’ என்று இருக்கக்கடவன் அல்லன். 2‘தேவரீருடைய திருவடித்தாமரைகளில் எனதுஉயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,3‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ? இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?’ என்றும் வருகின்ற ஸ்ரீ ஆளவந்தார்திருவாக்குகளை ஈண்டு உணர்தல் தகும்.

    பொழில் ஏழும் உண்ட எந்தாய் -‘இயல்பாகவே அமைந்த சேஷியாய் இருக்குந்தன்மையைக் கொண்டு சொல்ல வேண்டுமோ? பிரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கின அது போதாதோ நீ சேஷி என்கைக்கு?’ இனி, ‘பிரளயாபத்திலே நசியாதபடி உலகத்தைப் பாதுகாத்தது போன்று, பிரிந்து நசியாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவன்’ என்பார், ‘பொழில் ஏழும் உண்ட எந்தாய்’ என்கிறார் எனலுமாம்.

    எனது ஆவி யார் யான் ஆர்  – ‘கொடுக்கப்படுகின்ற பொருள் யாருடையது கொடுக்கின்றவன் யாருடையவன்? ஆதலால், நான் என் ஆத்துமாவை உன்னிடத்தில் சேர்த்தேன் என்னத் தக்கவனோ? அல்லன்,’ என்றபடி. தந்த நீ கொண்டாக்கினையே – ஆதியில் இதனை உண்டாக்கின நீயே கொண்டாய் ஆனாய். ‘ஆயின் நித்தியமான ஆத்துமாக்களை ‘உண்டாக்கினை’ என்ற என்?’ என்னில், 4‘தேவரீருடைய நித்தியமான இச்சையினாலேயே, எல்லாப் பொருள்களினுடையவும் உளதாந்தன்மை’ என்கிறபடியே, இவ்வாத்துமாக்கள் நித்தியமாக இருத்தல், இறைவனுடைய நித்தியமான இச்சையினாலோயாம்.

உபகாரம் அனுசந்தித்து பிரத் உபகாரம்–ஆத்மா சமர்பிக்க நான் யார் -என்கிறார் .

அங்குற்றேன் அல்லேன் -ஐவர் -கதறின இடங்கள் பல உண்டு -அறியா காலத்து -பிள்ளான் திக்கம்

பிரகரணத்து வைத்து அர்த்தம்-எம்பெருமானார் கவனித்து –
கீழும் மேலும் பிரீதிகரம் -நடிவில் துக்கம் பொருந்தாது
உபகாரமாக தான் சொல்கிறார் -அறியா மா மாயத்து அடியேனை -ஆரம்பித்து அந்வயம்-
வாமன சரித்ரம் திருஷ்டாந்தம் -மனோ ஹாரி சேஷ்டித்தால் வஞ்சித்து –
வைத்தையால்– உபசாரம் அனுசந்தித்து சந்தோஷ பட்டு
ஆனந்த அதிசய சூசகம் -பதில் உம்மதே உள்ள வஸ்து கொடுத்து -அஆத்மா சமர்ப்பணம் பண்ணி
அதுக்கும் வருத்தம்-அதுவும் அவனது தானே -துக்கப்படுகிறார் –
கிருதக்ஜமாக சமர்ப்பிக்கவும் வேண்டும் துக்கிக்கவும் வேண்டும்
என்னுள் கலந்த உதவிக்கு -பொழில் எழும் உண்ட எந்தாய் உடைமை அவனது ஆவியும் அவனது தான்
ஆவி யார் யான் யார் உன்னுடையவன்
நீயே கொடுத்தனை நீய எடுத்துக் கொண்டார்
எனது ஆவி சம்சாரத்தில் அநாதி காலம் போன -காகுச்ஸ்வரம்
வசிஷ்டர் சண்டாள ரேழியில் புகுந்தால் போலே -வரிஷ்டனான சிஷ்ட ஆசாரம் உள்ளவர்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் எனது ஆவியில்
உள் கலந்த -அது தன்னிலும் கடக்க  நின்று போக மோஷங்கள் கொடுத்துப் போகாமல்
ஒன்றுக்கு ஓன்று கலந்து
உதவி நல் உதவி பெரு நல் உதவி
உபகரிக்கை
பச்சை கொள்ளாமல் உபகரிக்கை நல் உதவி
பேறு தன பேறாக உபகரிக்கை
அது இன்றி தரிக்க மாட்டாமல் -உபகரிக்கை
எனது தாவி -வெளிறு கழிந்த ஆத்மாவை -ஆசாரம் நீக்கி சாரமனத்தை சமர்பித்தேன்
நீ  என்னை உனக்கு ஆக்கினாய் நான் என்னை உனக்கு ஆக்கினேன்
அழகு இது இத்தனை குளிக்கு நிற்கும் -வாசனாதி த்ரவ்யங்கள் -அன்று -இதை கொண்டே பல குளியலுக்கு நிற்கும் –
வார்த்தைப் பாடு —
இனி மீள்வது எனபது உண்டோ சத்யோதசாகமாக தந்தேன் இப்பொழுதே கொடுத்தேன்
கிரயம் -10 நாள் கெடு அன்று அவதி -சத்யாக தசாகம் அது போல் 10 நாள் கெடு இன்றி கொடுத்தேன் –
இதுவும் வாய்ப்பாடி –
ஆதசாம்நிவர்த்தந்தே -ஸ்லோகம் அரும்பதத்தில்
யாரத்தை யாருக்கு  தந்தீர் ஆராய்ந்து பாரும்
ஆராய்ந்தவாறே
எனது ஆவி ஆவியும் நீ அந்தர்யாமியும் நீயும்
நெடு நாள் நம்மது என்று நினைத்து -சமர்ப்பிக்க சர்வக்ஜன் என்ன நினைப்பான் என்று லஜ்ஜிக்கிறார் –
ஆத்மா சமர்ப்பணம் சமர்ப்பிக்காவிடில் சர்வ முக்தி பிரசங்கம்
விசித்ரா தேக சம்பந்தம் ஈஸ்வரா நிவர்த்தந்தி –
ஹேது இன்றிதன் கிருபையால் கொடுப்பவன் அனைவருக்கும் கொடுக்க வேண்டுமே
கொஞ்சம் ப்ரீதி அத்வேஷம் ஆபி முக்கியம் இருக்கா
சர்வ முக்தி பிரசங்க பரிகாரார்த்தம் -வியாஜ்யம் -இவை சாதனம் இல்லை –
அவனது வஸ்துவை சமர்ப்பித்தால் -பிராந்தி சமயத்தில் சமர்ப்பிக்கவும் வேண்டும் தெளிந்தால்
இதை கொடுத்தோமே நினைக்கவும் வேண்டும்
ஆள வந்தார் -தவ பாத பத்மம் -வபுரா யோகி கோபிவா எது வாக இருந்தாம்
தேகமாக இருந்து தொலையட்டும் -குணங்கள் தோஷங்கள்  இருந்து போகட்டும்
மயா சமர்ப்பிதாக
அடுத்த ஸ்லோகம் மம நாத -ததைவம் -கிம் சமர்ப்பயாமி தே-
ஸ்லோக த்வயம்-சமர்ப்பண சப்தம் ஸ்வாபாவிக தாஸ்ய குணம் –
இரண்டும் வேண்டும் -சேஷி -பதவி மட்டும் இல்லை செயலும் உண்டே –

எங்கே பொழில் ஏழும் உண்ட எந்தாய் -அனைத்து வச்துக்களையும்நோக்கி
எந்தாய் எனக்கு ஸ்வாமி பிரிந்து நசியாத படி என்னை கலந்து ரஷித்தான்
பிரளய ஆபத்தில்
யானும் தானும் எல்லாம்தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
பிரதேயமான வஸ்து -பிரதாயா கொடுத்தவனும் கொடுத்த வஸ்துவும் உன்னதே தான் –
உண்டாக்குவதுநித்ய வஸ்துவை
இச்சா விஸ்வா பதம் -இச்சையால் தான் வஸ்துவின் நித்யத்வம் –
சரீரம் உடன்சேர்த்து வைப்பது -பிறப்பு –
தந்தான் -எந்த வஸ்துவையும் எதாவாது மாற்ற முடியும்
நித்யம் அணு ஸ்வரூபம் ஸ்வாபாவம்
மாறாமல் இருக்க அவன் சங்கல்பித்தான் -சக்தி உண்டு –
நித்ய தத்வமாக இருக்க அவன் சங்கல்பம் தான் காரணம்
நித்ய சூரிகளாக இருப்பதும் இதனால் தான்
நச புன ஆவார்த்ததே வேதம் சொல்வதும் இது போல் தான் –
கழுத்தை பிடித்து தள்ளலாம் ஆனால் மாட்டான் -சங்கல்பித்ததால் -அதிகாரம் பிரயோகம் செய்ய மாட்டான்
அநாவிருத்தி சப்தாத்வேதம் சொல்லி -அதனால் –
இச்சா ஏவ தேவ விஸ்வ பதார்த்தா சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
தந்த நீ கொடுத்தாய் நீயே கொண்டாய் -பிதா உபநயனம் பிள்ளை க்கு கொடுத்து தானே கொள்ளும் பிதா போல்
தந்த நீ கொண்டாக்கினாயே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 24, 2012

இனியார் ஞானங்களால் எடுக்கல்எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ்முதலே!! பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.

    பொ – ரை : எத்தகைய பெரியோர்களுடைய ஞானங்களாலும் அளவிட்டு அறிய முடியாதபடி இருக்கின்ற என் நாயனே! பத்தி நிறைந்து அதனால் கனிந்த மனம் உடையவர்களுக்கு மோக்ஷ சுகமானவனே! எனக்குக் கடலில் உண்டாகாத அமிர்தம் போன்றவனே! யான் பெற்ற இப் பேற்றுக்கு மூல காரணம் ஆனவனே! உலகங்கள் ஏழனையும் ஒப்பற்ற வராக அவதாரமாகிக் கூர்மை மிக்க தந்தத்தில் வைத்துத் தூக்கி வந்தவனே! இப்பொழுது உன்னுடைய திருவடிகைளைச் சேர்ந்ததேனே அன்றோ?

    வி-கு  : இப்பாசுரம் பூட்டுவிற்பொருள்கோள். ‘இனி, சேர்ந்தேனே’ எனக் கூட்டுக. அன்றி, ‘இனியார்’ என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு, இனியார் – இனியர் அல்லாதார்; அதாவது, அன்பு இல்லாதார் என்று பொருள் கூறலுமாம். ஞானம் பல வகைப்படுதலின், ‘ஞானங்களால்’ என்கிறார். கனிவார் – வினையாலணையும் பெயர். முதல் – காரணம். சேர்ந்தேனே – ஏகாரம் தோற்றப்பொருளது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘ஞான லாபமே அமையுமோ? பேறு வேண்டாவோ?’ என்ன, ‘எனக்குப் 3பிரதம சுக்ருதமும் நீயேயாய், என்னைச் சமுசாரிகளில் வேறுபட்டவன்ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்.

1அதாவது துரியோதனனால் அளவிட்டு அறிதல், 2இராவணனாலே எடுக்கலாய் இருத்தல் செய்ய அரிதாய் இருக்கை. கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள்கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷசுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்று கோடலுமாம்.  ‘அப்படி எங்கே கண்டோம்?’ என்னில், யசோதைப்பிராட்டி, 3தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் அன்றோ? என் கடல் படா அமுதே – பகை, பத்தி என்ற இவ்விரண்டின் எல்லையிலே உள்ள இரு திறத்தாரிலும் எண்ண ஒண்ணாதபடி இருக்கிற எனக்கு, முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே தனியேன் வாழ் முதலே – தனியேனான என்னுடைய அனுபவத்துக்குப் பிரதம சுக்ருதம் ஆனவனே! பிராட்டி ஒற்றைக் கண்ணள், ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், 4தனியேன்’ என்கிறார். பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் – தனக்கு ஒத்தது வேறு ஒன்று இல்லாததான மஹாவராகத்தின் யார் ஞானங்களால் எடுக்கல் எழாது எந்தாய் – தன் முயற்சியால் அறியப் பார்க்குமன்று எத்துணை மேம்பட்டவர்களுடையவடிவை மேற்கொண்டு, பிரளயம்கொண்ட உலகங்கள் ஏழனையும் எடுத்து கூர்மை மிக்க கோட்டில் வைத்தைவனே! இதனால், தனிமையில் வந்து உதவினபடியையும், பாதுகாக்கப் படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத பாதுகாக்கின்றவனுடைய பாரிப்பையும் அருளிச்செய்தபடி இனி நுன பாதம் சேர்ந்ததேனே – பிரளயம் கொண்ட பூமியை எடுத்தது போன்று, பிறவிப் பெருங்கடலால் கொள்ளப்பட்ட என்னை எடுத்த போதே தேவர் திருவடிகளை நான் கிட்டினேனே அன்றோ?’ அன்றி, 1‘இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி, அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’ என்று பொருள் கோடலுமாம்.

3. ‘முழுதும் வெண்ணெய் அளைந்துதொட் டுண்ணும்
முகிழ்இ ளஞ்சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யும்அஞ்சி நோக்கும்அந் நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்
தொழுகை யும்இவை கண்டஅ சோதை
தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே.1

(பெருமாள் திருமொழி)

4. ‘பந்துக்கள் நடுவே இருக்கிறவர் ‘தனியேன்’ என்கிறாரிறே; வழிப்பறிக்காரர் நடுவே
நின்றால் அவர்கள் துணையாகாரிறே; எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கியிறே
இவர்க்குத் தனிமை. தம்மை அத்தலைக்கு ஆக்கிவைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’
என்பது இருபத்து நாலாயிரப்படி வியாக்கியானம்.

ஞான விசேடங்களாலும் பெயர்க்கப் பெயராது இருக்கின்ற என் நாயனே!

ஞான லாபமே அமையுமே அடைந்து விட்டால் போன்ற அனுபவம்
பிராப்தி வேண்டாமா -எம்பெருமான் -பிரதம சுக்ரதமாய் நீயே -அன்றே நான் உன்னை பெற்று விட்டேன்
இனி -சப்தம் விட்டு அந்வயம்
எப்பேர்பட்ட ஞானிகளாலும்  அறிய முடியாதே
வீட்டு இன்பம்மோஷம் போல் சுகமாய்
கடல் படா அமுதம் -உப்புசாறு போல் இல்லை சுத்த சித்த அமுதம்
தனியேன் வாழ்முதல் -எனக்கு தாரகம்
பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார்  கோட்டில் வைத்தாய்
இனி உன பாதம் சேர்ந்தேனே
அதிசயத்த ஞானியர் -ஆருடைய ஞானத்தாலும் -சுய யத்னத்தால் அறிய முடியாது
பேர்க்க பேராத-சர்வேஸ்வரன்
துரி யோதனன் கட்ட முடிய வில்லை –சகாதேவன் கட்டி
ராவணன் எடுக்க முடியாமல் -திருவடி -கருமுகை மாலை எடுப்பது போல்
எடுக்கல் முடியாமல் –
கனிவார் வீட்டு இன்பம் -உள் கனிந்து பக்குவமாய் உருகி போகும்
நினைத்தவாறே -கால் ஆளும் நெஞ்சு அழியும் -வீட்டு இன்பம் மோஷ சுகம்
அந்தமில் பேர் இன்பம் தொல்லை இன்பம்
நீ -இருப்பிடத்தில் வந்து ஆனந்தம்கொடுக்கும்
வீட்டு இன்ப பாக்களில் -குளம்  ஆராய கூடாது ஆசார்ய ஹிருதயம் –
அர்ச்சா- வீட்டு இன்ப -இன்ப பா த்ரவ்ய பாஷா ஆராய கூடாது –
தாறு ரூபம் -மூலவர்
தேவ பெருமாள் முன்பு தாறு இப்பொழுது சிலா
திரு வெள்ளரை தாறு திரு மேனி
சுதா திருவரங்கம் பெரிய பெருமாள் –
சாந்நித்யம் ஆனா பின்பு வீட்டு இன்பத்தில் த்ரவ்ய நிரூபணம்
இன்ப பாவை பச்சை தேனை எம்பெருமானை குறிக்கும் ஆழ்வார் பாசுரத்தில்
இன்ப பாவில் பாஷா நிரூபணம் கூடாது
இன்ப மாரியே அடியார்க்கு இன்ப மாரி-ஆழ்வாரை குறிக்கிறார்  நாயனார் ஆசார்ய ஹிருதயம்

 

எங்கே கண்டோம் யசோதை பிராட்டி தொல்லை இன்பம் இறுதி கண்டாள்
அந்த அனுபவம் காட்டினான்
என் கடல் படா அமுதமே
என் -எனக்கு -கனிவார் -இனி யார் ஞானங்கள் -அங்கு எல்லாம் சொல்லி இரண்டு கோடியிலும் இல்லாத நான்
நைச்யானுசந்தானம் பண்ணி கொள்கிறார் –
முழுதும் வெண்ணெய் -அரும்பதம் பாசுர வியாக்யானம் காட்டி –
கடல் படா -அயத்தன சித்த அமுதம்-
அங்கு பெரிய யத்னம் -செய்ய வேண்டுமே
தனியேன் -என்னுடைய அனுபவத்துக்கு பிரதம  சுக்ருதம் நீ தானே மயர்வற மதி நலம் அருளி –
பந்துக்கள் நடுவில் இருக்கும் -வழி பரிகாரார் நடுவில் இருந்தால் தனியேன் தானே
நாசம் உண்டாக்கும் -துணை யாகாதவர்
எனக்கு என்று இருப்பார் நடுவே இருப்பது தனிமை இறே ஆழ்வாருக்கு
ஏகாஷி ஏக கரணி நடுவே பிராட்டி இருந்தால் போல் சம்சாரத்தில் ஆழ்வார் இருப்பு –
பந்துக்களை கண்டால் சர்ப்பங்களை கண்டால் போலேயும் –
ராவணன் சொல்படி கேள் -எம்பெருமான் இடம் ஈடுபாடு சகிக்காத சம்சாரிகள் -ஏகாஷி செய்யும் கார்யம் -தானே
அதிலே போக  ஊக்கம் செய்பவர் ஆத்மா பந்து
வாழ் முதல் -தாரகம் -வாழ்வுக்கு முதல்
வராக அவதாரம் தனிமையில் வந்து உதவியதை
அத்விதீய மகா வராகம்
பொழில் லோகம் எடுத்தான் –
ஏனம் ஒன்றாய் -ஒப்பற்ற
நுனி கூர்மை நுனியார் மிகுந்த கூர்மை
ரஷ வர்க்கத்தின் அளவு  இல்லாத  ரஷ்கத்தில் பாரிப்பு
அன்றே திருவடி பெற்றேன் ஞானம் கொடுத்த அன்றே சேர்ந்தேன் -என்கிறார் ஆழ்வார் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் —

October 21, 2012

அறிவாலே மோஷம் -ஸ்ரீ வசன பூஷணம் வியாக்யானம் முதலில் மா முனிகள்

பசி மனுஷ்ய பஷி

அடியார் திருவடி ஒதுங்கி மோஷம்

ஆல மரம் நிழல் -எமர் ஏழு பிறப்பும் -முன் பின் 21 தலை மறைக்கும் வாழ்ச்சி

பட்டர் 30 / சிற்றம் ஒன்றாவது /அதுவும் முடியாவிடில் -இத்தை நினைந்து

ஐ ஐந்தும் ஐந்தும்  முப்பதும் –

ஆண்டாள் பிறந்து 30 பாடி இருக்கிறாள் ஞானம் கூட இல்லா விடில் -வையம் சுமப்பது வம்பி

கோபி –ஆண்டாள் அனுகரித்து -அப்யசித்து -ஞானம் பக்தி வைராக்கியம் இல்லாமல் –

தத்வ த்ரயம்  ஞானம் -சேதன அசேதன –அசேதன வைராக்கியம்

தோல் கன்றுக்கும் -இரங்கும் -நல் கன்றுக்கும் -அன்று பசு அழுமே என்றாம் –

அசல் செய் பொசிந்து காட்டுமா போலே பாகவதர் ஞான பக்தி வைராக்கியம் -நமக்கு

பரம பதம் நுழையும் பொழுது கொடுத்து அருளுவான் ஆத்மா விவாகம் முக்தன் -புக்ககம் போகிறான்

பரி பக்குவம் -ஆத்மா சம்பந்தம் கிட்டியதும் -பாகவதர் அபிமானமே உத்தாரகம்

மா முனிகள் சம்பந்தமே வாழ்ச்சி –

பரம காருண்யத்தால் பிரமாணம் ததாமி -உதாரன் -விவேகிக்கைக்காக நீர்மையினால் அருளு செய்தான்

வேத வேதாந்தம் -அநந்தாவை வேதா முடிவு இல்லாத சாஸ்திரம் சமஸ்க்ர்தம் –
வேதம் இதி காச புராணம் ரகஸ்ய த்ரயம் அருளி செயல் –
அருளி செயல் ஒன்றே நமக்கு உஜ்ஜீவனம் -மா முனிகள் காட்டி –
பூர்வாசார்யர் -பகவத் போதாயானர் -விருத்தி கிரந்தம் விஸ்தரம்-ஆயுசு நிறைய வேண்டுமே –
மற்றவை அதி சந்க்ரகம் -புத்தி சூஷ்ஜ்மம் -அடிக்கடி  கிரந்த பரிச்சயமும் இல்லை புரிய ஸ்ரீ பாஷ்யம் பண்ணுகிறேன் –
8 அஷரம் திரு மந்த்ரம் –
/25 அஷரம் த்வயம் –
 /32 சரம  ஸ்லோகம்
65 அஷரத்துக்குள் அத்தனை அர்த்தங்களும் உண்டே –
கூளமும் பலாபிசினும் போலே -மா முனிகள் -புராணங்கள் –
வேதம் – இதிகாச -ரகஸ்ய த்ரயம் குற்றம்
அருளி செயல் இந்த குற்றம் இல்லை
எம்பெருமானார் வட நாடு -மா முனிகள் தென் நாடு
திக்குகள் நம் சம்ரதாயம் இல்லை –இடத்துக்கு தான் –ஓர் இடம் வைத்து
சீரார் திருவேம்கடமே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் -பாரோர் புகழும் -பதறி
ராஜ தானி ஸ்தானம்
பள்ளி கொள்ளும் இடத்து அடி  கூட்டிட கூடுமாகில் -கூடும் -தெய்வம் –
திரு மால் இரும் சோலை அழகன் பள்ளி கொள்ளும் இடம் திரு வரங்கம் –
ஆழ்வார் இசை மாலைகள் ஏத்தி உய்யப் பெற்றேன் -வாயாலே பாடி மனத்தாலே நினைக்கப் பெற்றேன் –
எது முதலில் அவன் சொல்ல சொன்னேன் –ஆழ்வார்  சொல்லுக்கு நினைவு பகவான் நினைவு
பாட்டினால் -என் நெஞ்சில் இருந்தமை காட்டினாய் திரு மங்கை ஆழ்வார் -வேதம் தமிழ் செய்த மாறன் –
பாமரு மூ உலகும் -கால ஷேபம்-ஆர்த்தி ஏக தேசம் கூட இல்லையே -அர்த்தம் சொல்ல முடியுமா -பாசுரம் செவிக்கும்
ஆழ்வாரை போலே அழுவேன் அந்த பாவம் வந்தால் -இன்பம் பயக்கும் நாம் பாடினால் –
உடல் நொய்ந்து தகப்பனார் ஆயிரம் சேகரித்து வைத்த ஆனந்தம் பிள்ளைக்கு அனுபவத்தால்
தர்ம வீர்ய ஞ்சானத்தால் இன்றி அருளின பக்தியால் சோகித்து மோகித்து
வாயாலே -வந்து உஜ்ஜீவன –
அருள் பெற்ற நாத முனி -ஆழ்வார் அருளும் காட்டு மன்னார் அருளும் பெற்றவர்
ஆழ வந்தார் காலம் அர்த்த விசேஷம் எம்பெருமானார் காலத்தில் பெருகி –
வியாக்யானம் -தானே செய்யாத குறை தீர்க்க மா முநிகள் -எறும்பி அப்பா –
ஸ்தோத்ர பிரபந்தம் சிஷ்யர்கள் பலர் மா முனிகளுக்கு -பிரதிவாதி பயங்கர அண்ணா –
வரவர வர முனி -நமோ நமஸ்தே –
எதிவர தத்வ விது -மா முனிகள் -விது -அறிபவர் அடைபவர் இரண்டு அர்த்தம் –
எம்பெருமானாரே உபாயம் உபேயம்
எதிவர  ஆகும் தன்மை -புனர் அவதாரம் –

யதீந்திர ப்ரவணர் -இதுவே நிரூபக திரு நாமம் மா முனிகளுக்கு –
உத்தமன் -தன சரிதை கேட்டிட பெருமாள்
பிராட்டி பெருமை – விரக தாபம் போக்க கேட்டதாலே குற்றம் இல்லை
தன தனியனை தான் கேட்பாரோ
எம்பாரை கொண்டாட -தானே கேட்டு-ஒக்கும் சொல்ல – -எம்பெருமானார் இருக்க –
உத்தமரே -காளகஸ்தி தேவதாந்திர பரனாய் இருந்தவனை கொண்டாட  வில்லை
தேவரீர் திருவடி சம்பந்தம் கொண்டாட
ஆலிங்கனம் செய்து அந்த வி லஷண புத்தி எனக்கும் கொடும் -எம்பெருமானார்
உபகாரக ஆசார்யர் -திரு மலை ஆழ்வார்
உத்தாரக ஆசார்யர் எம்பெருமானார்
கண்ணன் -ஆழ்வார் -எம்பெருமானார் -மா முனிகள் படி கட்டு-
சரமம் தான் பரமம் -சீர் அரங்கருக்கு இலக்காக பெற்றோம் –
மாறன் கலை உணவாக பெற்றோம் -கண்ணனை இல்லை திரு வாய் மொழியே -உணவு மா முனிகளுக்கு
மம பக்தி பூமா -என் நாவுக்கு இனிக்கும் –
என் அப்பனில் -மதுராதிபதியே அதி மதுரம் -நடுக் கண்ணன் –கன்னி நுண் சிறு தாம்பினில் –
குரவை -முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -பரவும் மனம் பெற்றேன் -பராங்குசன் தன சொல் தேனில் நெஞ்சே துவள் –
பாவிப் இன்னிசை பாடித் திரிவனே -மதுரகவி நிலையை பெற்றோம் –
வாமன விருத்தாந்தம் நடுவில் துல்யம் –அனைவரையும் தொட்டு பேசி
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே -மா முனிகள் -அவதாரத்தால் -ரஷணம் –
நம் பிள்ளை கோஷ்டி -திரு அரங்க விளக்கு பிச்சன் -மொசு மொசுத்த திருமேனி உரச –
அவரே ஆச்சார்யனாக வரித்து பெரிய திரு மண்டபத்தில் திரு தேவிமார் உடன் –
ஆதி சேஷ பீடம் -வழங்கி

வரவர முனி தாள்- கொண்டாடி -பர  வாசு தேவனே -பிருகு மக ரிஷியை கொண்டாடி –
வாக் சாதுர்யம் -என்பதால் விசதமான தெளிந்த வாக்கு நமக்கு உஜ்ஜீவனம்  இவர்  ஒருவரே
நித்யர் அங்கு அமர்த்த சாகரம் அழுந்தி இருப்பது போல் மா முனிகள் வ்யாக்யானத்தில் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்
எறும்பி அப்பா -கோவில் அண்ணன் தேக சம்பந்தி
மா முனிகள் தீர்த்தம் வாங்காமல் திரும்ப
பெருமாள் -சக்கரவர்த்தி திருமகன் -திரு காப்பு திறக்காமல் காட்டி கொண்டுத்தானே இவர் மகிமையை
பல கிரந்தங்கள் அருளி -எண்மரும் பல ஸ்துதிகள்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் அஷ்டப் பிரபந்தம்
போல் வர வரமுனி அஷ்ட பிரபந்தங்கள்
அவர் திரு வாக்கு மகிமை பற்றி விளக்கும் இவை
அரங்கர் தம் சீர் தளைப்ப -செம் பொன் மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி போல் ஆரணமே –
கீதா பாஷ்யம் போல் ரகஸ்ய த்ரயத்துக்கும் -ஆசார்ய ஹிருதய வியாக்யானம் அருளி –
யதீந்திர ப்ரவாணர்
தன்னைத் தானே தொழும் ராமன் -பெருமாள் -பெரிய பெருமாளை ஆராதனம் போலே
பெரிய நம்பி -பட்டர் -திரு கோஷ்டியூர் நம்பி வம்சத்தாரும் மா முனிகள் தனியன் சாதித்து
சந்த்ரோதயம் -ஐதிகம் -மீனாடு -பங்குனி மாசம் சந்திர பிறை தெற்கு உசர
மற்று எட்டும் வடக்கு உயர -மகர கும்பம் சமமாக தை மாசி -சுபிஷம்
சொன்னபடி சோமன் இல்லா விடில் அன்னம் அரிதாய் விடும்
சட கோபன் ஈய்ந்த தமிழ் ஆயிரம் ஓவாத உணவாக  இருக்கு

லீலைக்கு விஷயம் ஆக்காமல் கருணை கிருபைக்கு ஆக்கி கொள்ள பிராத்திக்க வேண்டும்
லீலா விபூதியில் இருள் தரும் மா ஞாலத்தில் இன்றி
கருடன் -குறை -செறும் ஐம்புலன் -விண்ணுளார் –சுமுகன் –
அதனால் ஆதி செஷனை அனுப்பி இரண்டு நூறு வருஷம் –
சிலுகையார் சொல்லும் வார்த்தை -சொல்லி -கருடன் –
பல ராமன் குடித்தும் தன்னிலை மாறாமல் லஷ்மணன் ஆதி செஷன் தானே குறை இன்றி –
சென்றால் குடையாம் -திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கும் கைங்கர்யம் –
தலை பிடித்து தூக்க வேண்டும் -கச காரகன அப்பைய தீஷிதர் –
கை பிடித்து -அப பாதாம் சொல்லிக் கொடுத்தவர் -பிரபாகம் விழுந்து கை தூக்கி கூப்பிடுவனே –
துதிக்கை முழுகும் படியான ஆபத்து -யதிராஜ சப்தத்தி -அப்பைய தீஷிதர் ஒத்துக் கொண்டாராம்
ஆண் மூலம் அரசு ஆளும் ரங்க ராஜனை ஆண்டார் மா முனிகள் –
என் மூலம் –அவதார மூலம் -காந்தோ பயந்தா அழகிய மணவாளன் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் மூவரும் குருகை முப்புறி ஊட்டிய திவ்ய தேசம் –
கலியும் கெடும் -இரண்டு பவிஷ்யாசார்யா விக்ரகம் என்பர் முதலில் மதுர கவி –
மாசி விசாகம் -அர்ச்சை அவதாரம் வைகாசி விபவ அவதாரம் –
கருணை ஏக சிந்தோ -எம்பெருமானை வ்யாவர்த்திக்கிறது –
பாக்ய குத்ருஷ்டிகள் போக்கிய இரண்டு ராமானுஜன் மா முனிகள் -செம் தமிழ்  மறை சிந்தை மகிழும்படி
மாற்றாத -அர்த்தம் மாறாமல் -ஏமாற்றாமல் -முன்னோர் மொழிந்த
ஸ்ரீ குண ரத்ன-காஞ்சி சுவாமிகள் கடைசியில் அருளிய வியாக்யானம் ஆர்ஜவம் –
உல்லாச பல்லவ -ஸ்லோகம் மனசில் பதிய வில்லை
மா முனிகள் ஆயி ஜகன்னாசார்யர் -ஆதித்ய ஹிருதயம்
திரு செங்கனித் துறை வரை வந்து
இவரும் அங்கெ போக –சந்தித்து -கேட்டு அறிந்தாராம்
வர வர முனி சதகம் இரண்டு உண்டே எறும்பி அப்பா -பிரதிவாத பயங்கரம் அண்ணா –
18 பூர்வசார்யர் ம காரம் மதுர கவி போல் மா முனிகள் –

வரவர முனி திவ்யாஜ்ஞ்ஞை இன்றும் -வைகுண்ட ஏகாதசி
முந்திய நாள் -சயன திரு கோலம் ஆழ்வாருக்கு -எம்பெருமானார் -திரு வடியில் -பவிஷ்யாசார்யர் நாச்சியார் திரு கோலம்
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் –
திரட்டு பால் அமுது செய்து –
திரு புழி ஆழ்வார் -அடியிலே திரு வாய் மொழி பிள்ளை பிரதிஷ்டை செய்து
தன்னையே தான் தொழுதார்  பெருமாள் பெரிய பெருமாள் போலே –
யதீந்திர ப்ராவணர் பெயர் -திருவாய் மொழி பிள்ளையே அருளிய திரு நாமம் –
யதிராஜ விம்சதி பிறந்த -திருவாய்  மொழி பிறந்தார் உயர்ந்தே முடிந்ததும்
திரு வாய் மொழி பிள்ளை கேட்டதும் -சித்தரை திருவாதிரை -அன்றே பிறந்த பிரபந்தம் –
அந்தணன் ஒருவன்  -சாந்தீபன் -அத்வதீயன் -நம் பிள்ளை யை கொண்டாட -எதீந்திர பிரணவன் சாத்தி இதை திருவாய் மொழி பிள்ளை அருள –
முற்பட துவயத்தை அதிகரித்து -பிற்பாடு இதிகாச பிராணன்கள் -கற்று –
பர மத நிரசனம் -மீமாம்ச நியாய சாஸ்திரங்கள் கற்று
பொழுது போக்கும் அருளி செயலில் நம் பிள்ளை போல் இருப்பான்
-சீர் நினைந்து சொல் நினைந்து போக்காரேல் என் நினைந்து போக்குவார் -ஆழ்வார் அருளியது போல் –
பெரியவாச்சான் பிள்ளை கொண்டாடுகிறார்
பால் குடிக்க கால் பிடிக்க வேண்டுமோ -ராக பிராப்தமான இதுக்கு ஸ்ரீ ரெங்கத்தில் போய் அனுபவிக்க
திரு வாய் மொழி நியமிக்க –
பொன்னடிக்கால் ஜீயர் பிரசித்தமான
வானமா மலை ஜீயர் ஒன்னான ஸ்வாமி இவர் திருவடி பணிய சிஷ்ய பரம்பரை
செம் பொன் கழல் அடி செல்வா போல் –
குப்பாயம் வஸ்த்ரம்
கபாய்-மருவி –
பல ராமன் -தம்பி பெருமை கண்டு மகிழ்ந்து திரு வல்லிக்கேணி பெருமை
இராமானுஜர் -தேவபெருமாள் அருளிய திரு நாமம் இளையாழ்வார்-அங்கு தான் சன்யாச ஆஸ்ரமம் –
ரங்கநாதன் மணவாள மா முனி திரு நாமம் மாற்ற வேண்டாம்
ரகசியம் விளைந்த மண் பல்லவ ராயன் –
கோவில் அண்ணன் என்ற திரு நாமம் உடன் பிரதி பயங்கர அண்ணன் சுவாமி
திரு வேம்கடமுடையானுக்கு கைங்கர்யம்
மா முனிகள் விருத்தாந்தம் கேட்டு தீர்த்தம் ஏலக்காய் ஒன்றும் சமர்ப்பிக்காமல்
திரு வேங்கடமுடையான் பரிமளம் மிகுந்து
தேசிகன் இடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டவர்
உம் கிருபா பாத்ரம்    ஆன பெருமை –
அஷ்ட திக் கஜங்கள் –
தேவராஜாசார்யர் -எறும்பி அப்பா -சாமான சாஸ்திரம் பெரிதாக நினைத்து -ஸ்ரீ பாத தீர்த்தம்
சக்கரவர்த்தி திருமகன் -கோவில் ஆழ்வார் திறக்காமல்
நாம் யார் பெரிய பெருமாள் யார்
தென் அரங்கர் சீர் அருள் இலக்காக பெற்றோம் -தீர்த்தம் ஸ்நானம் கூட
அனுபவிக்காமல் -ஒரு வருஷம் ஈடு அனுபவித்துக் கொண்டு
மணவாள மா முனி வேந்தே -நின்னையே பெறப் பெறுவேன்
நின்னையே குருவாக பெற எத்தைனையும் பிறவி பெற பெறுவோம் –

சைலேந்த பாத்ரம் -சுக்ரீவன் -குறை பட்டார் பெருமாள்
வருத்தம் தீர -ஆ முனி வேள்வியை  காத்த அரங்கத்தம்மா -ஸ்ரீ சைல தயா பாத்ரம்
தீ ஞானம் பக்தி சமுத்ரம்
பெருமாள் போல் இன்றி
யதீந்திர ப்ரவனர் -ரம்யா ஜாமாதரம் முனி
கிருஷ்ணா அவதார முனி -சாந்தீபன் -ராம அவதார முனி -விஸ்வாமித்ரர் ராம அவதார முனி
சதானன்தரர் -அகல்யை -சாப விமோசனம் -கதை எல்லாம் சொல்லி –
ரம்யஜா மாத்தாரம் -அழகிய மணவாளன் பெயரை இதனால் அன்றே இதை பெயரை
மணவாள மா முனி சிஷ்யன் என்பதால் -அழகிய மணவாளன் தனக்கு திரு நாமம் கொண்டவர் நம் பெருமாள்

 

முனி –மா முனி -மணவாள மா முனி –அழகிய மணவாள மா முனி
அழகிய மணவாள  பெருமாள் நாயனார் பூர்வ திரு நாமம்-
இதே திரு நாமம் பலருக்கும் -நாயனார் ஆச்சார்யா ஹிருதயம்
பன்னீராயிரப்படி வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –
திரு நா  வீறு உடைய பிரான் -தாச அன்னர் ஐயர் -தந்தையாய் -ஆழ்வார் திரு நகரி -அவதாரம் –
பராங்குச தாசர் -பெரிய நம்பி
மகிழ் மாலை மார்பினன் திரு மாலை ஆண்டான்
திரு கோஷ்டியூர் நம்பி திரு நா வீறு  உடைய பிரான் –
முனி த்ரயம் சம்ப்ரதாயம் நாத முனி ஆளவந்தார் ராமானுஜர் –
ஆதி மத்திய -குல கூடஸ்தர் -சடகோப முனி வந்தே -ரிஷி முனி கவி என்னும் –
ஞான முனி முனி மாறன் முன்பு உரை செய் -மா முனிகள் –
இராமானுசன் என்னும் மா முனியே -நாயக ஸ்ரீ மகத்த குரு பரம்பர ஹாரம் –
ஒன்பது மேற் மேலே ஒன்பது பேர் கீழே –
இராமானுசன் -திரு மண் பெட்டி செம்பு வீற்று இருந்த திரு கோலம் திருவரங்கம்
நின்ற திரு கோலம் ஆழ்வார் திரு நகர்
 பிரணவம் அ ஆழ்வார் ம காரம் எம்பெருமானார் மகாரம் மா முனிகள்
சிக்கில் கடாரம் -15 -20 வருஷம் வசித்து வித்யா -அப்யாசம் –
தோழப்பர் -நம் ஆழ்வார் உத்சவம் -ரஷித்து -பிராண தாகம் -வம்சத்தார் மரியாதை உண்டு –
திரு வாய் மொழிப் பிள்ளை ஏற்ப்பாடு -ராமானுஜ சதுர வேத மங்கலம்
ரம்யா சாமாதா -சௌம்யா =ரம்யா -சுந்தர -ஜாமாதர –
வர வர -மா முனி -தமிழ் இலிருந்து வந்த பெயர் வரன் =மாப்பிள்ளை மணவாள
வர -ஸ்ரேஷ்ட –
நாத முனி -காஷாயம் இல்லை -காட்டயு மன்னர் கோவில் சஞாசம்தான் முனி அர்த்தம் இல்லை
முனி -சப்தம் எம்பெருமானுக்கே உண்டே
முனியே நான் முகனே முக்கண் அப்பா –
முனிதல்-கோபித்தல் -உம் தம் அடிகள் முனிவர் -யசோதை வார்த்தை –
முனிந்து சகடம் உத்தைது -கோபித்து கொண்டு
சூழ் விசும்பு பலன் -இவை வல்லார் முனிவரே -மனன சீலோ முனி -முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -அங்கும் இரண்டு கோஷ்டி பிணங்கி அமரர் பிதற்றும் கோஷ்டி
குண அனுபவ நிஷ்டர் -முனிவர் -மனஸ் வியாபாரம்
கைங்கர்ய நிஷ்டர் யோகி –சரீரத்தால் கைங்கர்யம் –
அவன் முனி -முனியே திரு மூழிக் களத்து விளக்கே -முனி -சங்கல்பமாகிற நினைவு
பகுச்யாம் -நினைந்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய்யும் ஞானம் –
படைக்க வேணும் நினைவு மட்டும் இல்லை –
கரண களேபரங்கள் கொடுக்க வேண்டுமே –

வாரிப்பிடியாக கொண்டு போக அனைவரையும் வாரிக் கொண்டு போக அவதரிக்கிறான் –
நடைவழியில் போட்டு வியாபாரம் செய்பவன் போல சாமர்தம் அவனுக்கு இல்லை –
வாழ்ந்திடுவர் -அவஜானாந்தி மூடா இங்கே சொல்லி
அங்கெ விட்டு கொடுக்காமல் -முனியே திரு மூழிக் களத்து விளக்கே அர்ச்சையில் காட்டிக் கொடுத்து
பின்னானார் வணங்கும் சோதி -சக்தி ஞானமிவற்றிலும் பின்னான நம் போல்வாரும் கால தேசம் மட்டும் இல்லை –
இதே நினைவால்  ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் முனி
துக்கம் கண்டால் பொறுக்காமல் எ பாவம் பரமே –ஈ பாபம் செய்து அருளால் அளிப்பார் யார்
அவனை மட்டும் மனனம் செய்யாமல் இவருக்கும் இவர் அடி பணிந்தோருக்கும் இவை உண்டே
நாத முனி நாலாயிர பிரபந்தம் பெற நினைத்து
ஆளவந்தார் ஆ முதல்வன்
எம்பெருமானார் ஆசை உடையோர்க்கு எல்லாம்
மா முனிகள்-கிரந்த வியாக்யானம் –ஈடு பெற்று வெளி இட்ட உபகாரம் –
இதையே வாய் அனுசந்தானம் -வாசோ விஷயமாக கொண்டு இருந்தாராம் அனுசந்தானம் நித்யம்
ஈடு பெருக்கர் -ஆச்சர்ய ஹ்ருதயம் வியாக்யானம் -துண்டு பாசுர விளக்கம் இதை கொண்டே அருளி –
முன்னவராம் குரவர் உள்ளப் பெற்றோம் –கற்று இருந்து பிறர்க்கு காதல் உடன் கற்பித்து -பொழுது போக்கினேன் –
தாமே சொல்லிக் கொள்கிறார்
திரு வாய் மொழி பிள்ளை மா முனிகள் பொன்னடிக்கால் ஜீயர் அனைத்து பட்டம் ஜீயர்பாதுகைகளையும் சேவிக்கலாம்
ஸ்ரீ பாதம் தீர்த்தம் -ஸ்வாமி தீர்த்தம் சாதிக்க மாட்டார்கள் –
இந்த ஸ்வாமி தாமே சேர்த்த தீர்த்தம் -பாகவத கைங்கர்யத்துக்கு தான் ஜீயர் –
பிரதி வந்தனம் அவரும் செய்வார் –
திரு பணியாரம் தானே சாதிப்பார்கள் –
மன் உயிர் காள்-மணவாள மா முனி அருளிச் செய்து -இந்த திரு நாமத்தை அவரே ஏற்றுக் கொண்டார்
மணவாள மா முனிவன்  -திருவாய் மொழி நூற்று அந்தாதி -இறுதியிலும் –
மா முனி -இவர் தானே நிறைய மனனம் செய்ய வேண்டி இருந்தது
ராமானுசன் என்னும் மா முனியே -அமுதனார் -விசேஷ காலத்தில் தான் அனுபவிக்கும்படி
வேத்தாந்த மா முனி நஞ்சீயர் –
 இயல் பெயர் இவர் ஒருவருக்கு தான்
எந்தை எதிராஜர் -இன் அருளால் -சிந்தை -தானே சொல்லி கொள்கிறார் உபதேச ரத்ன மாலை
தானே சூட்டிய திரு நாமம் இந்த பிரபந்தத்துக்கு –
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -நம்மையும் மனன சீலர் ஆக்குகிறார் –
கூர குலோத்தமர் தாசர் இட்டு பிள்ளை லோகாசார்யர் -திரு வாய் மொழிப் பிள்ளையை திருத்தி பணி கொள்ள
அனுப்பி -நம் பெருமாள் பரதேசி -ஸுய தேசம் விட்டு போன நிலை 1323தொடங்கி 48 வருஷம் 1371 திரும்பி
சூர்யோதயம் அப்பொழுது தான் -அருணோதயம் போலே 1370 மா முனிகள் –திரு அவதாரம் –
திரு வாய் மொழி பிள்ளை ஆச்சார்யா ஸ்தானம் இந்த இருண்ட காலத்தில் –
செங்கோல் செலுத்த திருவரங்கம் வர வில்லை -இவர் ஒருவர் மட்டுமே
மதுரா விஜயம் காவ்யம் -தலை முறையே போனது கோலம் போட தெரியாது
அனைத்தும் அழிந்து போனது -அனைவர் இடம் சென்று கிரகித்து புனர் நிர்மாணம் செய்த –
திரு புட் குழி -ஜீயர் சேவித்து -ஈடு அறிய -பிள்ளை லோகாச்சார்யர் ஆக்ஜை -அன்று பரம பதித்து போக
யதீந்திர பிரணவம் வாசிக்க வேண்டும்
சம்பாதித்து மா முனிகள் இடம் சேர்த்தார் –
திருவாய் மொழி பிள்ளை இன் அருளால் வந்த உபதேச மார்க்கம் தன்னை
கற்றோர்கள்  தாம் உகப்பார் மற்றவர் இகழ்கை-
மா முனி -பெரிய –
விரக்தி ஆனால் கிரகமே -சன்யாசம் -வரிராக்யம் சகஜம் இவர்களுக்கு
கூரத் ஆழ்வான் -உஞ்ச விருத்தி கொண்டே ஜீவனம்
வைராக்கியம் வேற சன்யாசம் வேற
எம் ஐயன் இராமானுசன்
திரு குமாரர்
ஜீயர் நாயனார் -ஜீயர் பேரன் என்றே பெயர்
1443 வரை அதிகமான காலம் சன்யாசம் இல்லை –
மா முனி -சப்தம் இரண்டு ரிஷி விஸ்வாமித்ரர் அகஸ்தியர் இருவருக்கும்
தவம் புணர்ந்து  உயர்ந்த எங்கள் மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆஸ்ரமத்தில் உள்ளானே
பெருமாளை கொணர்ந்தால் மா முனி -சக்கரவர்த்தி திரு மகன் விஷயமாகவே –
புகன்ற கங்கை -பராங்குச தாசர் -திருத்தினால் ஆகாதோ என்ன
திருத்த பலம் போதாது உள்ளத்தர்க்கு தான் அர்த்தம் சொல்லுவோம் -நம் பிள்ளை சொல்ல –
வ ண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி -குலசேகரர் -தமிழ் மா முனி திக்கு சரண்யம் அகஸ்தியர் –
தனி சிறப்பு -சக்ரவர்த்தி சிஷ்ய வருத்தி பண்ணினதால் மா முனி
ராமக ராஜீவ லோசனா -அஹம் வேதமி ராமம் சத்யா பராக்கிரமம்-கிம்கரஉமக்கு என்றான்
பெருமாள் -கிம் கர கிம்கர கேட்டு மேல் வேலை கேட்டு -இட்டு வா என்றால் சுட்டு வா -கணை ஆழி
இட்டு வா மட்டும் இன்றி இலங்கை சுட்டு வந்தான் திருவடி -கட்டளைக்கு விரோதம் இல்லாமல் –
கிம் க்ரதவான் -யஜமான் கொண்டாடும்படி -அஹம் வேதமி பரத்வம் ஒதுக்கி தள்ளி சொவ்லாயம் காட்டி
பல அதி பலா மந்த்ரம் -உபதேசித்து பசி தாபம் எடுக்காமல் இருக்க -ஆசார்யன் –
அஸ்த்ர சஸ்த்ர உபதேசித்து அகஸ்தியர் -மா முனி –
உத்தர காண்டம் சக்கரவர்த்தி திரு மகன்வைபாவம் அகஸ்தியர் சொல்லி
அது போல் மா முனி இவருக்கும் பொருந்துமே

 

ஈடு காலஷேபம் கேட்டு -தனியன் சமர்ப்பித்து –
எம்பெருமானாரும் -திரு குரும்குடி நம்பி வைஷ்ணவ நம்பி
அப்பனுக்கு சங்கு ஆழி அதானால் கொண்டாடத்தில் மா முனி
இவர்களுக்கு இயற்கையாக மா முனி
ஈடு -நம் திரு முன்பே -சந்தனம் மண்டபத்தில் -ஆவணி திரு மூலம் தொடங்கி ஆணி திரு மூலம் வரை –
ஆச்சார்யா ஹிருதயம் ஸ்ரீ வசன பூஷணம் அறிந்த இவர் இடம் கேட்க்கதான்
மா முனி அவதரித்த பின்பு – தைரியமாக வந்தான் -ஸ்ரீ ரெங்கம் –
திரு மலை காடுகளில் 20 வருஷம் மலையில் 4 வருஷம் செஞ்சி 8 வருஷம் –
ஐந்து வியாக்யானம்  சேர்த்து ரகஸ்ய கிரந்தம்-அனைத்தையும்  ஒரே வருஷம் நடத்தி –
ஆத்ம குணம் பரி பூர்த்தி இவர் ஒருவருக்கே
தமக்கு வைபவம் ஏற்பட விரும்பாமல் சின்ன விக்ரகம் ஏற்பாடு செய்ய சொல்லி –
நாம் யார் -பெரிய திரு மண்டபம் -உருகி போகிறார் மா முனிகள் –

 

 

முமுஷுபடி சுருக்கம் -திரு மந்திர பிரகரணம் –ஸ்ரீ M.A.V.ஸ்வாமிகள் ….

October 13, 2012

முமுஷு படி ரகஸ்ய த்ரயம் சுருக்கமாக பார்ப்போம்

அஷ்ட ஸ்லோகி பட்டர்-முதலில் கிரந்தம் ரகஸ்ய த்ரயத்துக்கு
1208 வருஷம் பிள்ளை லோகாசார்யர்
1102 பட்டர்
பரந்த ரகசியம் பெரிய வாச்சான் பிள்ளை /நாயனார் ஆசான் பிள்ளை அருளியது என்பர்
மா முனிகள் வியாக்யானம் முமுஷு படிக்கு தான்
சூத்ரம் சொல்லி அர்த்தம் அறிய –
அறிய வேண்டிய ரகசியம் மூன்று
முதல் ரகசியம் திரு மந்த்ரம்
இரண்டாது த்வயமோ சரம ஸ்லோகமா வரும்
அனுஷ்டானம்
பிரேமத்தொடே பேணி அனுசந்திக்க வேணும்
மந்த்ரத்த்திலும் /உள்ளீடான வஸ்து /உபகரிக்கும் ஆசார்யன் பக்கலில் மூவர் மேலும் ப்ரீத்தி-கார்ய கரம் ஆகும்
சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் மறந்து
ஈஸ்வர கைங்கர்யமும் இழந்து
இழந்தோம்  என்ற  இழவும் இன்றிக்கே
கிருபையாலே  கரை  மரம்  சேரும் படி தன்னை அறிந்து
வெளி இட்டு அருளினான் -தானே சிஷ்யனமும் தானே ஆசார்யனுமாய்
நர நாராயணனாய் –
சிஷ்யனை நின்றது சிஷயனாய் இருப்பு நாட்டார் அறியாமையாலே
பைத்ருக தனம் போலே -சுலபம்
அநேக மந்த்ரங்கள்
வியாபகம் அவ்யாபக மந்த்ரங்கள் இரண்டு வகை
கரந்து எங்கும் பரந்துளன்
விஷ்ணு வாசுதேவன் நாராயணன்
விசால வியாபனே தாது
வாசு சர்வத்ர வசதி சர்வம் அதர வாசி
நாராயணம் அப்படி .
வேத சார உபநிஷத் உபநிஷத் சார–சாரதர அனுவாக சார தரம் –அனுவாக சார தர-தார தம காயத்ரி –
வ்யாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள்
பெரிய திரு  மந்த்ரம்  இவை மூன்றிலும்பெருமை
அசிஷ்ட பரிக்கிரகம் -சிஷ்டர் இல்லாதவரும் யாக பிரயோஜனம் செய்வார்
அபூர்த்தியுமுண்டு
வேதங்களும் ரிஷகளும் ஆழ்வார்களும் ஆசார்யர்கள் விரும்பி போந்தார்கள்
வாசக பிரபாவம் -வாக்ய பிரபாவம் விட
அவன் தூரச்தன் ஆனாலும்  இது கிட்டி நின்று உதவும் .

நாஸ்திகனும் உபயோக்கிறான் -வெளி வேஷம் போடுகிறவர்கள் உண்டே .
தரவ்பதிக்கு ஆபத்திலே புடைவை சுரந்தது
சொல்லும் கிராமம் இன்றி சொன்னாலும் ஸ்வரூபம் கெட நில்லாது
நெருப்பு சுடுவது ஸ்வாபம் போலே
திண்ணம் நாரணமே -நாராயணன் சப்தம் சுருக்கி
குளம் தரும் -போலே எல்லா அபெஷிதங்களும் கொடுக்கும் நலம் தரும் சொல்
ஐஸ்வர்யா கைவல்ய பகவத் லாபம்
கர்ம ஞான பக்தன் விரோதி போக்கி
ஸ்வரூப ஞானம் பிரபித்து -கால ஷேபத்துக்கும் போக்யத்துக்கும் பிரபன்னனுக்கு
அறிய வேண்டிய அர்த்தம் அர்த்த பஞ்சகம்
பிறந்த பின் மறந்திலேன்
வாச்யத்தில் ஊன்றுகைக்கு அடி -ஈச்வரனே உபாயம் உபேயம்என்று நினைத்து இருக்காய்
பிரனவத்தால் ஸ்வரூபமும் மந்த்ரம் -தன்மை
மந்திர செஷத்தால்  -பிரப்யம் பலம்
ஸ்வரூபம் உபாயம் பலம் மூன்றாகவும் பிரித்து
பலம் இருக்கிற படி பிரேமேய சாகரம் அர்ச்சிராதி கதியில் சொன்னோம்
எட்டு திரு அஷரம் மூன்று பதமாய் இருக்கும்
மெய் எழுத்து ஒற்று நீக்கி -மூலமாகிய ஒற்றை எழுத்து
மூன்று அர்த்தம்
செஷத்வமும் –பாரதந்த்ர்யமும் –கைங்கர்யமும்
பிரணவம் –
மூன்று அஷரம் அ உ ம காரம்
பதம் வேற எழுத்து வேற
சப்தம் -அர்த்தம் ஊகிக்கும்படி பதமாகும் –பூ பூட்டு
பூ எழுத்து பதம் இரண்டும்
ஆ – பசு அன்று அதனை ஈன்று உகந்த ஆ
மூன்று தாழி யிலே  தயிரை  கடைந்து வெண்ணெய்  திரட்டி -சகல வேத சாரம் .
அகர முதல் -அச்ஹராம் நான்
காரணம் பகவானை குறிக்கும்
அவதி -காப்பாற்றுகிறான்
ரஷிக்கிறவனை குறிக்கும்
ரூடி காரணம்
ம விட– ம் -ஜீவாத்மா -மனு அவ போதன ம ஞான –
உ காரம் ஏவ மட்டும் அர்த்தம்
பகவான் ஏவ ஜீவாத்மா -அர்த்தம் தப்பாக கொள்ள வாய்ப்பு
லுப்த சதுர்த்தி வேற்றுமை உருபு
ஆல் ஓடு உடன் விபக்தி வேற்றுமை உருபு
யார் புஸ்தகம் ராமன் புஸ்தகம் விளக்கி ராமனுடைய புஸ்தகம்
அது போல் லுப்தம்
வேற்றுமை தொகை –
வெள்ளை அடிப்பான் -சுன்னாமாம்பு அடித்தான் சுண்ணாம்பை இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து
லோபம் லுக்தம் மறைந்து
அ வுக்கும் உ வுக்கும்தோன்றி மறைந்து –
அது ஏன் நான்காவது -மேலே மந்திர சேஷம் விளக்கி சொல்லும் பொழுது ஆய –
அதன் சுருக்கம் என்பதால்
லுப்த சதுர்த்தி சேர்த்து பகவானுக்கு
உ காரம் சேர்த்து பகவானுக்கே
பகவானுக்கே ஜீவாத்மா -பகவான் ஜீவாத்மா போக்கி
உடமை
எனக்கே எனக்கு போலே
உரியது இல்லாவிடிலும் அர்த்தமுண்டே
எனக்கே =எனக்கே உரியது தன்னடியே கிடைக்கும் அர்த்தம்
செஷப்பட்டவன் அர்த்தம் கிட்டி ஸ்வரூபம் இது தான் .
அ காரம் காரணம் -சப்தங்களுக்கும் காரணம் -நாராயண பத சுருக்கும் -சர்வ ரஷகனை குறிக்கும்
ரஷிக்கையாவது -விரோதியை போக்கி அபெஷிததைக் கொடுக்கையும்
சேதனன் நின்ற அளவு
சம்சாரி சத்ரு பீடாதிகள்
அன்ன பானதிகள்
முமுஷுக்களுக்கு சம்சார சம்பந்தம் விரோதி பரம பத ப்ராப்தி அபெஷிதம்
முக்தர் நித்யர் கைங்கர்ய ஹானி விரோதி அபெஷிதம் கைங்கர்ய விருத்தி
அவனே ரஷகன்
பிராட்டி சன்னதி ரஷிக்கும் பொழுது வேண்டியதாலே ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம்
அவன் மார்பு விட்டு பியில் இவ் அஷரம் விட்டு பிரிவது
அகலகில்லேன் இறையும்
படுக்கையும் தொட்டில்  விடாதே
யசோதை நந்த கோபன் கிருஷ்ணன் -அம்பரமே பாசுரம்
புருஷகாரம் பூதை முதலில் –
அடிமை கொள்ளும் பொழுது -ஆவண ஓலை -க்ருஹிநிக்கு என்று அன்று எழுதினாலும் பணி செய்வது அவளுக்கு
பிரித்து நிலை இல்லை
பிரபை பிரபாவான் போலே /அனந்யார்க்க ராகவேணாம் பாஸ்கரென ப்ராபை
புஷ்பம் மணம் போலே
குணம் விசெஷனம் கீழ் பட்டு -பிராட்டி
சேர்த்தி உதேச்யமாய்
சதுர்த்தி ஏறி கழியும்
ஆய -ய
ஈஸ்வரனுக்கு சேஷம் என்கிரத்து இத்தால்
சேஷத்வே சதுர்த்தி பாணினி சூத்ரம்
எம்பார் ஜீயர் அரும் பதம் வேறே உண்டு -மா முனி வ்யக்யானதுக்கு
திரு மந்திர பிரகரணம் மட்டும் உண்டு இப்பொழுது
சேஷத்வம் உகந்த விஷயத்தில் சுகமாக
காஞ்சி சுவாமி காமகோடி சங்கரர் வார்த்தை -கைங்கர்யம் நாய் பிழைப்பு சுகம் –
வீசுகிறாரே -அவரை கேட்டு -கடனே பாவி என்று வீசுகிரிறாரா அவர் முன்னே கேட்டு
கோயில் கைங்கர்யம் -சுக ரூபம்
செஷத்வமே ஆத்மா ஸ்வரூபம்
ஆத்மா அபகாரம் -ஸ்வதந்த்ரம்
உகாரத்தம் -அவன்னுக்கு ஏவ அவன் ஒருவனுக்கு
பிறர்க்கு அன்று
பெரிய பிராட்டிக்கும் என்று சொல்லும்
அந்ய சேஷத்வம் கழிகையே பிரதானம்
கானிடை -திரிவதோர் நாய் –
ஈஸ்வரனுக்கு சேஷம் சம்சாரிகளுக்கு ஆக்குகை
மறந்தும் புறம் தொழா மாந்தர்
வாசனை இருந்தும்
மறப்பு-எனபது தெரிந்த பின்பே தான்
பார்த்தா போலே
இத்தால் தனக்கும் பிறர்க்கும் உருத்து அன்று -என்கிறது
ம் காரம்
25 அஷரம் -தத்வம் பொங்கு ஐம்புலனும் -அசித் ஒரே தத்தவத்தை 24 ஆக பிரித்து
ஞான வாசியுமாய் இருக்கையாலே
ஆத்மாவை சொல்லுகிறது
ஏக வசனமாக இருக்கிறது
சமஷ்டி வாசகம் -ஜாதி ஏக வசனம் .
தேகத்தில் வ்யாவ்ருத்தி இத்தால்
தத்வ சேகரத்தில் சொன்னோம்
இயக்குவது –
இந்திரியங்கள் ஆத்மா இல்லையே
மணத்தையும் ஒளியையையும் கொண்டு புஷ்பம் ரத்னம்
சேஷத்வம் கொண்டே ஆத்மாவை ஆதரிக்கிறது
சேஷத்வத்தை சொல்லி பின்னர் ஆத்மாவை சொல்லும் காரணம்
பகவானுக்கே செஷப்பட்டவன்
கண்ண புரம் ஓன்று உடையான் -அ கார அர்த்தம்
உடையானுக்கு -சதுர்த்தி விபக்தி
அடியேன் மகார அர்த்தம்
ஒருவர்க்கு உரியேனோ உ கார அர்த்தம்
ஜீவ பர சம்பந்தம்
தாமரையாள் கேள்வன் –அகார ஒருவனையே -உ கார அர்த்தம் -உணர்வு -ஞானம் மகார அர்த்தம்
அ காரத்தால் ரஷகன்
ம் காரத்தால் ரஷ்யத்தையும்
ரஷன ஹேதுவான ப்ராப்தியையும் பலத்தையும் சொல்லிற்று
பிரணவத்தை விவரிக்கிறது நமச்சால்
உ காரத்தை விவரிக்கிறது நமச்சு
அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்
மகாரத்தை விவரிக்கிறது சதுர்த்தி நார பதம் என்றும் சொல்லுவார்கள்
அடைவே விவரியாது ஒழிகிறது -விரோதி போய் அனுபவிக்க வேண்டுகையாலே

ஈ ஒட்டி தேனை உண்பது போலே .
அந்ய சேஷத்வம் கழித்து –
ந ம் இரண்டு பதம் நமஸ்
ம் இத்தால் தனக்கு உரியன் என்கிறது ந அத்தைதவிர்கிறது
நம தமக்கு உரியன் அன்று
பிறர்க்கு உரியனான அன்று தன வை லஷ்ண்யத்தை காட்டி மீட்கலாம்
தனக்கு என்னும் அன்று யோக்யதையும் கூட கழியும்
பகவானுக்கு -அவனுக்கு மட்டும் -வேறு யாருக்கும் இல்லை -தனக்கும் இன்றி –
கை கட்டி வேலை பார்க்காமல் நானே -ஸ்வ தந்த்ர்யம்  எல்லாத்தையும் அழிக்கும் .
இத்தால் விரோதியை கழிக்கிறது –
ஸ்வரூப விரோதி-உபாய விரோதி –ப்ராப்ய விரோதி மூன்று விரோதிகள்
யானே  நீ என் உடைமையும் நீயே – என்று இருக்கை- ஸ்வரூப விரோதி கழிகை –ஓம் நம
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் -என்று இருக்கை  உபாய விரோதி –நமோ நம
மற்றை நம் காமங்கள் மாற்று -பிராப்ய விரோதி கழி கை -நாராயண நம
ம் என்கை ஸ்வரூப நாசம்
நம என்கை ஸ்வரூப உஜ்ஜீவனம்
இது தான் ஸ்வரூபத்தையும் உபாயத்தையும் பலத்தையும் காட்டும்
அர்த்த பஞ்சகம் -முக்கியம் வததந்தி சகலா வேதாக -பிராப்யச்ய பிரம்மா ரூபம்

முனயச்ய மகாத்மான -ஆழ்வார்களும் -வாசு தேவ சர்மம் மகாத்ய்மா அவனே சொல்லி -அபி வதந்தி –
வேத வேதார்த்த   வேதின -ஆசார்யர்கள்
அ பரமாத்மா  ஸ்வரூபம் -ம ஜீவாத்மா ஸ்வரூபம் ஆய -கைங்கர்ய ஸ்வரூபம் செஷதவே சதுர்த்தி
உ காரம் விரோதி ஸ்வரூபம் சொல்லும்
ஆர்த்தமாக பலமும் உபாயமும் –
பிரணவம் அர்த்த பஞ்சகம் -நான்கு எழுத்தாலே ஐந்து அர்த்தங்களும் –
வதந்தி சகல வேதா
திரு மொழி ஆயிரம் -மிக்க இறை நிலையும் –
பிரணவம் ஸ்வரூபம் சொல்லி -தன்மை -அவனுக்கே உரியவன் –
ஆய -கைங்கர்யம் -பிரார்த்சனாயாம் சதுர்த்தி ஸ்வரூபத்துக்கு தக்க பிராப்யம்
அருளி செயல் ரகசியம் –
அர்ஜுன ரதம் போலே உபய பிரதானமாய் இருப்பது இது -பிரணவம் -நாயனார் –
முக்கியத்வம் -சப்த சக்தியால் ஜீவாத்மாவுக்கும் –வாக்கியம் யாருக்கு விஷயம் –
ஜீவாத்மாவை பற்றிய வாக்கியம்-விசேஷ்யம் எழுவாய் –
எழுவாய் -பயனிலை -செயப்படு பொருள் -அறியாதவனை எழ சொன்ன கதை -சுவாமிநாத ஐயர்
அர்த்தம் -அவனுக்கு அடிமை என்பதால் -பரமாத்மாவுக்கு மிக்கியத்வம் கிடைக்கும் –
உபய பிரதானம் -பிரணவம் –
சாரதி -ரதி -நேராக அர்ஜுனனுக்கு பிரதான்யம்-சேனையோர் நடுவில் விட சொல்லி –
கை மேல் ஏறி தோள் மேல் கால் வைத்து -ஏவல் தொழில் –
இறங்கும் பொழுதும் இப்படி –
கீழ் ஆசனம் சாரதிக்கு -காலை தூக்கி
நிறுத்த சொல்ல இரண்டு காலாலும் மிதித்தி அழுத்தி -வலது பக்கம் திருப்ப அந்த காலை அலுத்து
கர்ணனுக்கு சல்யன் சாரதியாக இருக்க மாட்டேன் -இதனால் தான் –
அந்த அர்ஜுனனுக்கும் யுத்த பயம் -நடத்தி வைத்தவன் -உள் புகுந்து பார்த்தால் -கண்ணனுக்கு பிராதான்யம்.
அஷ்ட ஸ்லோகி -நம -மத்திய மணி ந்யாயம்-
யானே நீ என்  உடைமையும் நீ -யே  -சு ஸ்வா தந்த்ரம் -ஸ்வரூப விரோதி கழிகை  -ஓம் நம-
பிரணவம் வேத சப்தம் சொல்ல கூடாது சுரத்துடன் சொல்லக் கூடாது
ஓமப்பொடி -அறிவோம் கூடுவோம் சொல்லலாமே –
ஓம் என்னுமது போல் சுருக்காய் -அனைவரும் சொல்லலாம் -பெண்ணுக்கும் பேதைக்கும் –
எனக்கும் உரியன் அன்று –
உபாய விரோதி –
சகண்ட நமஸ்சு அகண்ட நமஸ்சு ஒரே வார்த்தை நம வணங்குகிறேன் -நமக கரோமி நமஸ்காரம்
நமக நமக -இப்படி சொன்ன வார்த்தையும் என்னுடையது அன்று -காரியமும் உபாயம் அன்று –
அவன் தான் செய்விக்கிறான்
இசைவித்து உன் தாளினை கீழ் இருத்தும் அம்மான்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இல்லை
நீ செய்கிறாயா செய்ய மாட்டாயா நானே பண்ணிகவா -சொல்ல முடியாதே
உபாயத்தில் விரோதி கழிக்க -சி பிரவ்ருத்தி கழி கை
கைங்கர்யம் எதற்கு -தன ஆனந்தம் எனபது பிரபல விரோதி
உனக்கே நம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று -அவன் திரு உள்ளத்துக்கு பாங்காக இருந்தது –
நமக்கு நினைத்து பண்ணுபவன்  மக்கு
மற்றை நம் காமங்கள் மாற்று
ஆசார்யர் -இரண்டு சிஷ்யர் -சண்டை -கால் பிடிக்க –
வலது கால் ஒருவன் பிடிக்க இடது கால் ஒருவன் பிடிக்க
கொஞ்சம் காலம் கழித்து மாற்றி பிடிக்க
அவன் பிடித்த கால் தொட மாட்டேன் புழுத்து நாசமாக போகட்டும் என்றானாம்
தெரு நாய் -சண்டை போட -எதற்கு சண்டை போடுகிறது இது கூட ஸ்ரீவசன பூஷன கால ஷேபம் கேட்கிறதா மா முனிகள் கேட்க
வெட்கி சேர்ந்தார்களாம் -யதீந்திர பிரணவம் இது கூட சொல்லி இருக்கிறார்கள் .

 

ஆசார்யர் குளிர – சிஷ்யன் விசிற –அது ஒன்றுமே அறிந்ததால் -கைங்கர்யம் -கட்டை தேறாது -செய்யா விடில் –
கீழே போடா விடில் இந்த கட்டை கரை சேர்ந்து விடும் -ஆசார்யர் சொன்னாராம் .
ம எங்கை ஸ்வரூப நாசம்
நம எங்கை ஸ்வரூப உஜ்ஜீவனம்
வழு இலா அடிமை
தொலை வில்லி மங்கலம் தொழும் -என்கையாலே ஸ்வரூபம் சொல்லிற்று
வேம்கடத்து உரைவார்க்கு நம  என்கையாலே உபாயம் சொல்லிற்று
அந்தி தொழும் சொல் -என்கையாலே பலம் சொல்லிற்று
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்கிறபடியே இதிலே
பாகவத செஷத்வமும் அனுசந்தேயம்
அகங்காரம் மம காரம் கந்தல் கழியும் இடம் நமச்சிலே
கண்ண புரத்து உறை அம்மானே
மற்று ஓர் தெய்வம் உளது -இருப்பாரோடு உற்றிலேன் -முதலில் சொல்லி -இருந்திளேன்  இல்லை
உற்றிலேன் -அப்புறம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
மற்று எல்லாம் பேசிலும் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று –
அ காரத்திலும் சொல்லலாம் -அவயவ பூதர்
திருவடி இல்லை –
உ காரத்தில் பெரிய பிராட்டி -அனந்யார்க்க சேஷத்வம் எல்லை
ஈஸ்வரன் தனக்கே யாக இருக்கும்
அசித் பிறர்க்கே யாக இருக்கும்
ஆத்மா தனக்கும் பிறர்க்கும் பொது முன் பட்ட நினைவு
அசித் போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேணும் -நமசால்
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் போது அழியாது ஒழிகை
இறாயக்க கூடாது
அவன் வஸ்து அழிகைக்கு ஹேது -மேலும் சொலும்
இந்நினைவு பிறந்த போதே க்ருத்க்ருத்யன்
இல்லாத போது எல்லா துஷ் க்ருதங்களும் கருத்தும்
இன்னினைவிலே எல்லா சூக்ருதங்களும் உண்டு
இது இன்றிக்கே பண்ணும் யக்ஜ்ஜாதிகளும் பிராய சித்தாதிகளும் நிஷ் பிரயோசனங்கள்
இது தன்னாலே எல்லா பாபங்களும் போம்
எல்லா பலன்களும் உண்டாம்
நாராயண பதார்த்தம்
நாரங்களுக்கு அயனம் என்றபடி
நாரங்கள் ஆவன நித்ய வஸ்துகளின் உடைய திரள்
அசித் -ரூபம்  தான் அழியும்  -ஸ்வரூபம் மாறும்
நராகா பல அழியாதா வஸ்துக்கள் –
வஸ்துக்கள் பல நாராகா
அயனம்  ஆதாரம் sustaining force
ஞான அமலத்வாதி ஸ்வரூபங்கள்
குணங்கள் -திரு மேனி- குணங்கள் -பூஷணங்கள் -திவ்ய  பிராட்டி –
திவ்ய ஆயுதங்கள் -சத்திர சமராதிகள் திரு வாசல் காக்கும் முதலிகள் கணாதிபர் முக்தர்
பரம ஆகாசமும் பிரகிருதியும் உபய விபூதியும் பக்தாத்மாக்களும் காலமும் மகதாதிகளும்
அண்டங்களும் தேவாதி பதார்த்தங்கள்
அவனைத்தவிர அனைத்தும் நாரங்கள்
அயனம் இவற்றுக்கு ஆஸ்ரயம்-உடல் மிசை உயர் என  கரந்து எங்கும் பரந்துளன்
இவை தன்னை ஆஸ்ரயமாக உடையவன் என்னவுமாம்
தன்னுள் அனைத்து உலகும் நிற்க -நெறிமையால் தானும் அவற்றுள்
பரத்வம் சௌலப்யம் இரண்டும் காட்ட
அந்தர்யாமித்வம் -உபாயத்வம் உபெயத்வம்
எம்பிரான் எந்தை -என்கையாலே நவ வித சம்பந்தமும் உண்டு
நாம் பிறர்க்கான அன்றும் அவன் நமகாகாய் இருக்கும்
உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும்
இரா மடமூட்டுவாரைப் போலே

த்வேஷம் கொண்ட பிள்ளைக்கும் மற்று ஒருவர் மூலம் ஊட்டுவாளை போலே
வ்யக்த சதுரத்த அர்த்தம்
\ஆய இத்தால் சென்றால் குடையாம் -அவனுக்கு செல்லுகை அபேஷிதமான போது குடை
தன்னை அவனுக்கு தக்க
இப்பொழுது நான் குடையாக இருக்க விரும்பிக்றேன் செல் என்று சொல்லாதே
நமசால் -தன்னோடு உறவு  இல்லை என்று வைத்து கைங்கர்யத்தை பிராத்திக்க கூடுமோ -என்னில்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
பிரார்த்திப்பது -சு போக்யத்தால் அகங்காரம் இன்றி -அவனை மகிழ்விக்க பிரார்த்தனை –
படியாக மட்டும் இல்லைபவள வாய் காண்கைக்கும் பிராத்தனை
பிரார்த்தனை வந்தேறி இல்லை -ஸ்வரூப பிரயுக்தம் –
பிரகாசம் ரத்னம் போல் –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் பிரார்த்தனை
உண்டோ கண்கள் துஞ்சுதல் -சதா பச்யந்தி -இரண்டு தடவையும்
இழந்த நாள் களுக்கு பழுதே பல காலும் போயின கூபிடுகிரவனுக்கு உறக்கம் இல்லை
திரு மந்திர ஞானம் பிறந்த பின் -அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்து இலேன்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே
தேசம் காலம் அவஸ்தை நிலை எல்லா வற்றிலும் –
எட்டு இழை மூன்று சரடு -மங்கள சூத்ரம் போலே
தேதாந்திர பஜனம் கூடாது –
திரு இல்லாத் தேவரை தேறேன் மின்
திருவடி நாமம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -ஸ்வரூப ஹானி
பார்த்தா கோபித்து பார்யை வேறு புருஷன் இடம் போகாமல் –
சாக்கியம் கற்றோம் -எங்கும் போனவர் -அடி பட்டவர் சொல்லி
ஞானம் பிறந்த பின் மறந்திலேன் –
பார்த்தா உதாரணம் பொருந்துமா -தெரியாமல்
பெண் பார்க்கும் கல்யாணம் முன் -வேறு யாரையோ பர்தா வருவானா நினைப்பது தப்பா -போல்
கலக்கம் எல்லாம் அன்று நான் பிறந்திலேன் -பூர்வ ஜன்ம தொடர்பு
திரு மந்திர ஞானம் வந்த பின்பு –
ரகஸ்ய த்ரயம் உபதேசம் பஞ்ச சம்ஸ்காரம் -சமாஸ்ரயணம் ஆன பின்பு
ஈஸ்வரன் ஆத்மாக்களுக்கு பதியாய் கிடந்தது ரஷிக்கும் –
ஆக
திரு மந்தரத்தால்
எம்பெருமானுக்கே உரியேனான நான்
எனக்கு உரியன் அன்றிக்கே ஒழிய வேணும்
சர்வ சேஷியான நாராயனனுனுக்கே எல்லா அடிமைகளும் செய்யப்
பெறுவேனாக வேணும் -என்றது ஆயிற்று .
பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் சாயர் திருவடிகளே சரணம் .

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 11, 2012

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.

    பொ – ரை : ‘பெரிய பிராட்டியாரும் அறியாதவாறு வாமனாதாரத்தைச் செய்து, ‘மாவலி, மூவடி நிலம்’ என்று இரந்து,  அசுர குருவாகிய சுக்கிரன் கூறிய சொற்களையும் மஹாபலி அறியாதவாறு அவனை வஞ்சித்தது போன்று, என்னுடைய உயிரில் வந்து கலந்து அறியாமையினை உண்டுபண்ணுகிற மிகக்கொடிய இப்பிறவியில் அகப்பட்டிருக்கும் என்னை, ஒன்றையும் அறியாத இளமைப்பருவத்திலேயே அடிமை செய்வதில் மிகப் பெரியது ஓர் அவாவை எனக்கு உண்டாக்கி வைத்தாய்,’ என்கிறார்.

    வி – கு : ‘மாவலியை வஞ்சித்தது போன்று, ‘எனது ஆவியுள் கலந்து, அறியா மாமாயத்து அடியேனை, அறியாக் காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்’ என்று கூட்டுக. ’கலந்து செய்வித்து வைத்தாய்’ என்க. அறியாமை – மையீற்று வினையெச்சம்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. ‘அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்; பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய இச்சரீரத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் 1இன்னாப்பாலே சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார்கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவாநிற்க, நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது; ஆன பின்னர், இங்ஙனேயாமித்தனை. ‘அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச்செய்தார். ‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்; அவற்றிலே நீர்மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்.

    1அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து – ‘இராமபிரான் பக்கல் இலக்குமணர் இளமைப்பருவம் தொடங்கி எப்பொழுதும் நேசத்துடன் இருந்தார்,’ என்கிறபடியே, அறிவு நடையாடாத பருவத்திலே 3‘தூங்குகிற நிலையிலும் விழித்திருக்கிற நிலையிலும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, சமுசாரத்தில் சிறிதும் சம்பந்தம் இல்லாத நித்தியசூரிகளுடைய பரிமாற்றத்திலேயன்றோ என்னைச் சேர்த்தாய்? ‘வரில் போகடேன்; கெடில் தேடேன்’ என்று இருத்தல் அன்றி, 4‘என்னை உடன் வருகின்றவனாகச் செய்தருளல் வேண்டும்’ என்கிறபடியே. பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார். அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – அறிவின்மையினை உண்டு பண்ணுகிற பிரகிருதியில் சேர்ந்தவனாயிருக்கிற அடியேனை வைத்தாய். ‘பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘இது எங்கே சிறைப்பட்டாலும் நல்லது; நம்முடைய பொருள் அன்றோ? என்று இருக்கிறான் இறைவன் என்பார்,‘அடியேனை’ என்கிறார். ‘வைத்தாயால்’ என்ற சொற்போக்கால், ‘இத்தண்ணீர்ப்பந்தலை வைத்தாயே’ என்ற தொனிப்பொருள் தோன்றும். அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்த வைத்தாயால்.

    தம்மை அறியாமை வஞ்சித்ததற்கு எடுத்துக்காட்டு ஒன்று அருளிச்செய்கிறார் மேல்: அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று – நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன வேடத்தை மேற்கொண்டு, 1‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே, ‘நிலம் மாவலி மூவடி’ என்ற பொருத்தம்அற்ற வார்த்தைகளைக் கூறி; பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது? அறியாமை வஞ்சித்தாய் –2சுக்கிரன் முதலியோர் ‘இவன் சர்வேஸ்வரன்; தேவ காரியம் செய்ய வந்தான்; உன் செல்வம் அனைத்தையும் அபகரிக்க வந்தான்,’ என்றால், அவர்கள் வார்த்தைகள் செவிப்படாதவாறு உன் பேச்சாலே அவனை அறிவு கெடுத்து வஞ்சித்தாய். அப்படியே, எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து, ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ என்பதாம்.

    ‘அறியாமையிற் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தது போன்று, எனது ஆவியுள் கலந்து, அறியா மா மாயத்து அடியேனை, அறியாக்காலத்துள் அடிமைக்கண் அன்பு செய்வித்து வைத்தாய்,’ என்க.

செய்தன -மொத்தமாக தான் அனுபவிக்க முடியும் என்றீரே
அத்தில்
ஒன்றாவது சொல்லு எம்பெருமான் கேட்டதை
ஞானம் இப்படி பட்ட சம்சாரத்தில் உபகரித்தாயே என்கிறார் .அறிவு நடையாடாத நிலத்தில் -இழவாலே சொல்கிறார் -திரு மலை ஆண்டான் ஆழ வந்தார் நிர்வாகம்  துக்கம்

எம்பெருமானார் -விட்டு இலங்கு செம் ஜோதி பாசுரம் -விஸ்வாமித்ரர் சிருஷ்டி செய்யாதீர் திரு மசாலை ஆண்டான் கோபிக்க
கால ஷேபம் நிற்க -ஆழ வந்தார் சொன்னதை நானும் கேட்டு இருக்கிறேன்
எது அருளி செய்தாலும் ஆழ வந்தார் சாதித்து தான் -சாந்தீபன்  இடம் கண்ணன் கேட்டது போலே -அவதார புருஷர் அவர்
திரு கோஷ்டியூர் நம்பி அறிந்து வந்து சொல்லி மீண்டும் தொடக்கி

அறியா காலத்தில் அடிமை கண் அன்பு செய்வித்து
அறியா  மா மாயம் பிரகிருதி சம்சாரத்தில் வைத்தாய்
அறியாமை குறளாய் -வஞ்சித்தாய்
ஆவியுள் கலந்தாய்
ஆல் -ஐயோ விஷாய சூசுகம் கதறுகிறார்
எம்பெருமானார் கலந்த ப்ரீதியால் அருளி-
உபகாரம் பரம்பரை சொல்லி வர கதருவாரா
மேலும் சந்தோஷம் -நடுவில் துக்கம் பிரக்ரனதுக்கு சேராதே –
என்னை ஏமாற்றி விட்டாயே நன்றாக இரு -வார்த்தைக்கு அர்த்தம் போலே
அறியா மா மாயத்தில் அடியேனை வைத்தாயால்
இங்கேயே -உழன்று இருந்தும் -அறியா காலத்தில் அன்பு செய்வித்தாய் ஆல் கொண்டாடுகிறார்
என்னையும் கரை ஏற்றி –
சம்பந்த ஞானம் பிறபித்து-இழவாலே சொல்கிறார் -திருமாலை ஆண்டான்
இத்தையும் உபகாரம் ஆக்கி -எம்பெருமானார்
அத்தா நீ செய்தன அடியேன் அறியேன் –
ஒன்றாவது சொல்லும் –
மயர்வற மதி நலம் அருளி -நித்ய சம்சாரியாக போந்த எனக்கு –
அறியா காலம் -பால்யத்திலே -பால்யா பிரவ்ருத்தி அர்த்தம் சைசவம்
தொட்டில் பருவத்தே பிடித்து இளைய பெருமாள் –
தொட்டில் மாற்றி -ஒரே தொட்டில் -போடா அழுகை குறைய
அடிமைக் கண் அன்பு செய்வித்து -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
அப்ஸ்ருஷ்ட சம்சார கந்தர் -சம்சார வாசனை படாத நித்யர் போலே கைங்கர்யம் செய்ய அருளினாய்
அன்பு செய்வித்து -கைங்கர்யத்தில் ப்ரீத்தி
வரில் புகடேன் கெடில் தேடேன் -இல்லாமல் ஈடு பாடு
பெறாவிடில் முடியும் படி -அன்பு செய்வித்து –
அறியா மா மாயத்து -பிள்ளாய் -உன்மத்தன்காய் – தின்று பிரமித்தால் போலே
சிறை பட்டாலும் நம் வஸ்து தானே என்று வைத்தாயே
மாணிக்கம் சாக்கடை விழுந்தாலும் கொள்வது போல்
சம்சாரத்தில் -ஹெயயமாய் இருந்தாலும் -நம் வஸ்து
சேஷத்வ அன்விருத்த வ்ருத்தி கொடுத்து –
அடியேனை -சப்தம் இங்கு -அஹம் சப்தம் பரியாயம்
நான் -என்னை -அறிவுக்கு சம்பாவம் இல்லாத பால்யத்தில்
இங்கே வைத்து பகவத் விஷயத்தை அவகாகித்து
தேச விஷயத்தில் பெற போக விஷயம் சாத்மிக்கவும்
தரிக்க training
பிராப்யத்தில் த்வரை விசுக்கைக்காவும் இறே
போக்யதை இருக்கிறபடி
அடியேனை -என்னை -மா மாயத்தில் சிக்கி -சேஷத்வம் தெரியாமல் இருந்த என்னை –
அடையாளம் சொல்கிறார் மேல்
அறியாமை குறளாய்
நெஞ்சு அறியாத படி கார்யம் செய்வது போல்
திரு மார்பில் இருக்கும் நாச்சியார் கூட அறியாமல்
தன நெஞ்சு அறிவது போய் -வள்ளுவர்
வாமன வேஷம் பரிகிரகித்து
நிலம் மா வலி மூவடி
கொள்வன்-
அனந்வித பாஷனம் –
குறளாய் -சேர் பால் போலே போக்யதை மிக்கு–திரட்டு பால் -போல் தாள விட்டு அர்த்தியாணன்
நிலம் என்றான்
புரிய வில்லை
முகம் பாராமையாலே -மாவலி இருக்க -முதல் பேர் சொல்வது இல்லாமையாலே
திரும்ப -மூவடி –
இத்தால் வசீகரிக்கை-
பண்டும் இரந்து பழக்கமில்லாமையால் -ஸ்தோத்ரம் செய்யாமல் –

சர்வேஸ்வரன் –
அறியாமை வஞ்சித்தாய்
‘சுக்ராதிகள் பாசுரம் செவிப்படாமல் –
தேவர் கார்யம் செய்ய வந்த சர்வேஸ்வரன் -சொல்லும் பொழுது –
வார்த்தை காதில் விழாமல் -மனசு அபகரிக்க பட்ட மா வலி
போர் வெந்த  மன்னை -மனம் கொள்ள வஞ்சித்து –திரு மங்கை –
அறிவு கெடுத்து வஞ்சித்தான் –
அது போல் என்னையும் மயக்கி என்னுள் கலந்தான்
இருக்கும் இடம் வந்து குண செஷ்டிதங்களாலே –
நான் இருக்கும் இடம் வந்து என் ஸ்வ தந்த்ர்யம் அபகரித்து
அந்ய பரனான என் ஆத்மாவில் கலந்து –
என்ன ஆசார்யம் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 10, 2012

ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன 3அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே.

    பொ – ரை : ஒத்தவர்களும் உயர்ந்தவர்களும் இல்லாத மிகப்பெரிய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனே! அவ்வப் பொருள்கட்குத் தக்க நிலைகளை உடையவனாகி வந்து அவதரித்தவனே! சுவாமியே! என்னுடைய உயிராகி, என்னைப் பெற்ற அந்தத் தாயாகித் தந்தையுமாகி, அறியாதனவற்றை எல்லாம் அறியச் செய்து நீ செய்த காரியங்களை அடியேன் அறியேன்.

    வி-கு : ‘அத்தா! தாயாகித் தந்தையாகி அறிவித்து நீ செய்தன அடியேன் அறியேன்,’ என்க. ‘இலையாய மாயா’ என்க, அறியாதன, செய்தன – வினையாலணையும் பெயர்கள்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அகன்ற நம்மை அவன் திருவடிகளிலே சேரவிட்டது நெஞ்சு அன்றோ?’ என்று, இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு, ‘நீர் அடி

அறியாதே, வழிப்போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார், ‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ? நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

    1எம்பார், திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த அளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த 2முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்; எம்பார், ‘அங்ஙன் அன்றுகாண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 3‘இசைவித்து’ என்கிறபடி, அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன்காண் பிரதம குரு’ என்று அருளிச்செய்தார்.

    ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா – 4‘பரம்பொருளுக்கு ஒத்தவனும் காணப்படுவது இல்லை; மிக்கவனும் காணப்படுவது இல்லை,’ என்கிறபடியே, ஒத்தவனும் மிக்கவனும் இல்லாதவனாய் இருப்பான். திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு 5தாரித்திரியம் உண்டு என்று அருளிச்செய்வார்,எம்பார், ‘என்னை அப்படி அங்கீகரித்த நீதான் ஒரு குறைவாளனாய்ச் செய்தாயோ?’ என்பார், ‘ஒத்தார் மிக்காரை இலையாய’ என்கிறார். ‘இவ்வாச்சரியந்தான் என்னே!’ ‘மா மாயா’ என்கிறார். எப்பொருட்கும் ஒத்தாய – ஒத்தாரும் மிக்காரும் இலையாய நீயே, இதர சாதீயனாய் வந்து அவதரித்தாய்; அவையாவன, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்னும் பெயரோடும், இந்திரனுக்குத் தம்பியாகவும், இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும், விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும், நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.

1‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின், செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு. ‘ஆயின் எப்பொருட்கும் ஒத்து வருவதற்குக் காரணம் என்னை?’ எனின், மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்; தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்; ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான். 2‘ஒத்தாரை இல்லாதவனாய் ஒளியுருவனாய் உள்ள இறைவனுக்கு, பிரமன் சிவன் இவர்கள் நடுவில் விஷ்ணு என்ற ஒரு எண்ணிக்கையும், பன்னிரண்டு சூரியர்களுள் விஷ்ணு என்ற ஓர் எண்ணிக்கையும், அதிதிக்குப் புத்திரனாய் இருக்கும் ஒரு சம்பந்தத்தால் 3உபேந்திர அவதாரமும், இராமகிருஷ்ணர்களாய் வந்து அவதரிப்பதுமான மேற்கூறிய இவைகள் போற்றத் தக்கவைகளாய் இருக்கின்றன, என்றார் கூரத்தாழ்வான்.

    ‘‘இப்படி அவதரித்துச் செய்தது என்?’ எனின், உயிராய் – இவ்வாத்துமாதான் தனக்குப் பார்க்கும் ஹிதத்தையும் பார்க்கக் கூடியவனாய் இருக்கை. இனி, ‘உயிராய்’ என்பதற்குத் ‘தாரகனாய்’ எனலுமாம். என்னைப் பெற்ற அத்தாயாய் – பெறல் வேண்டும் என்று நோன்பு நோற்றுத் தன் சரீரத்தினை ஒறுத்துப் பெற்று இவன் பிரியத்தையே நடத்தக் கூடிய தாயாய். 4மற்றைத் தாயர்களை நீங்குதற்குப் ‘பெற்ற தாய்’ என்கிறார். தந்தையாய் – இப்படி நோன்பு நோற்று வருந்தி வரம் கிடந்து பெற்ற தாயும் இட்டு வைத்தற்கு ஒரு பை மாத்திரமாம் படி, இவன் தோன்றுவதற்குக் காரணனாய் ஹிதம் பார்க்கும் தந்தையாகி. தான், தனக்குத் தேடிக் கொள்ளும் நன்மையும், 5தான் உளனாய பின்னரே செய்துகொள்ள வேண்டுதலின், ‘உயிராய்’ என்றதனைச் சார, தாய் தந்தையர்களை அருளிச்செய்கிறார். அவ்வளவே அன்றி, அறியாதன அறிவித்து –

1ஆசாரியனாய் இருந்துவிரிந்த ஞானத்தையும் எனக்கு உண்டாகச் செய்து 2‘தாய் தந்தையர்கள் சரீரத்தை மட்டும் கொடுத்தார்கள்; ஆசாரியன் மாணாக்கனைக் கல்வியால் வேறு ஒரு சரீரத்தை அடையும்படி செய்கிறான்; கல்வியால் ஆய பிறவியே சிறந்தது,’ என்கிறபடியே, இச்சரீரத்தை உண்டாக்கிய தாய் தந்தையர்களைக் காட்டிலும், ஞானத்தைத் தந்து உயர்பிறவி அடையச் செய்த ஆசாரியன் சிறந்தவனாதலின், தாய் தந்தையர்கட்குப்பின் ஆசாரியனை அருளிச்செய்கிறார். ‘ஆயின், இறைவன் ஆசாரியன் ஆவனோ?’ எனின், 3‘அது என்னுடைய விரதம்’ என்றார் பெருமாள். 4‘என்னுடைய இரண்டு திருவடிகளையும் சரணமாகப் பற்று’ என்றான் ஸ்ரீகண்ணபிரான். 5‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் வசிக்கும் இடமும் பற்றுக்கோடும் நட்டோனும் பேறும் ஆகிய அனைத்தும் நாராயணனே,’ என்பது உபநிடதம். 6’பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ, மற்றையார் ஆவாரும் நீ பேசில்’ என்பது தமிழ் மறை.

    அத்தா – மஹோபகாரகன் ஆனவனே! இவ்வுபகாரங்களை உடையவனாகையாலே செய்தான் என்கிறார். நீ செய்தன அடியேன் அறியேன்-ஸ்வாமியான நீ, அடியவனான என் பக்கல் செய்த உபகாரங்களை அடியேன் அறியேனே. ஒன்று இரண்டு ஆகில் அன்றே ‘இன்னது’ என்னலாவது? ஆகையாலே, ‘நீ செய்தன’ என்னுமித்தனை. செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ? அனுபவித்துக் 7குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ என்கிறார். 

7. குமிழிநீர் உண்கை -‘தண்ணீருக்குள் இருக்கிற மணலைத் தொடுகின்றவாறு

  தண்ணீருக்குள் புக்குக் கீழே இறங்குதல். நீரிலே குமிழி புறப்படுதல்’ என்பது பொருள்.

இதில் எம்பெருமானை கொண்டாடுகிறார் –
நெஞ்சை கொண்டாடி முதலில்
எம்பார் அருளி செய்த வார்த்தை
சம்வாதம் -பிரதம குரு யார் -முதலிகளில் சிலர் ஆச்சார்யர் அன்றோ
சிலர் அழைத்து கொண்டு சேர விட்ட ஸ்ரீ வைஷ்ணவர்
அவன் இவனை அழைத்தாலும் இவன் அல்லேன் என்னாமல் இசைவித்த சர்வேஸ்வரனே பிரதம குரு
இசைவித்து என்னை உன் தாளினை கீழ் இருத்தும் அம்மானே
அக வாயில் இருந்து -உள்ளே இருந்து –
இதனால் நெஞ்சை கொண்டாட புக்கவாறே -நெஞ்சு வழி போவாரை கொண்டாடுகிறீரே
உள்ளுவார் உள்ளத்தில் எல்க்லாம் உடன் இருந்து அறுதி
என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனை கொண்டாட நெஞ்சு சொல்ல –
ஒத்தர் மிக்காரை இலையாய மா மாயன்
ஒத்தே ஏப் போருல்க்சளுக்கும் உயிர் ராய்
என்னை பெற்ற தாயாய் தந்தையை
அறியாய அறிவித்தன அத்தா
நீ செய்தன அடியேன் அறியேனே
என்னை விஷயீ கரித்த நீ தான் குறைவாளனாக இருந்தாயா
ஒத்தார் மிக்கார் இலையாய
ஸ்ரீ ய பத்தி
தன்னால் கழிக்க ஒண்ணாமல் இருக்கும் தாரித்ர்யம் உண்டு
சமம்மேம்பட்டவர் இல்லாமை -உண்டே
ந சத் சமஸ்த அப்யகதிச்ய த்ர்ருஷ்ட்யதே -வேதம் தமிழ் செய்த மாறன்
மாயா –
நீயே இதர சஜாதீயனாக அவதரித்தாய்
எப் பொருள் க்கும்
பிரம ருத்ரர் நடுவில்
இந்த அனுஜனுபெந்த்ரன் வாமன
அதிதி காச்யபர் பெற்றோர்
ராம கிருஷ்ண மனுஷ்யர்
திர்யக் -மகா வராக -மான்கள் -ஓட -அங்கு இங்கு மெய்ப்பாடு -ஜந்துக்களின் கந்தமும் கொண்டான்
குட்டையான மா மரங்கள் –நெட்டையாக இருந்தால் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற முடியாதே
தாழ விடுவதற்காக சௌலப்யம்
ஒத்தார் மிக்கார் இலையாய இவன் இப்படி
மேன்மையோடு வரில் கிட்ட ஒண்ணாது –  அகல்வார்கள்
தாழ வந்தால் காற்கடை கொண்டு அலட்சியமாக
அதனாளந்த அந்த ஜாதிக்கு சமமாக சஜாதீயன்
அதிலும் பரத்வம் குறையாமல் -அவதரிக்கிறான்
இஷ்வாகு வம்ச யது வம்ச ஜனிகி -அதி மானுஷ ஸ்தவம் –
ப்ரமேச்ய மத்திய -அர்க்க பந்தவ் -சூர்யன் -பன்னிரண்டு ஆதித்யன் -துவாதச ஆதித்யன் -விஷ்ணு
அதிதி பிள்ளை -ஹந்த -பரஸ்ய தாம்னி -சிறப்பை கொடுக்கும் அனைத்தும்
உயிர் ராய் -தனக்கு பார்க்கும் ஹிதம் -தாரகனாய் இருக்கிறான் –
தான் உண்டாகிலிரே தான் ஹிதம் சிருஷ்டிக்கும் -நோன்பு நோற்று சரீரத்தை சுமந்து பெற்று பிரியம் நடத்த கடவ
தந்தையாய் இட்டு வைக்கும் பை போல்தே -உண்டாக்கினவன்
சரீரம் ஏவ மாதா பிதா
ஞான விகாசம் ஆச்சார்யர் துவிஜன்மா -நாம் -பிரம உபதேசம் ஆனதும் –
முட்டை குஞ்சு போல் –
ஞான ஜன்மம் உண்மையான பிறவி –
சகி வித்யா -வித்யை கொடுக்கிறவனே
ஸ்ரேஷ்ட ஜன்மம் கொடுக்கும் ஆசார்யர்
பஞ்ச சம்ஸ்காரம்-நேரே ஆசார்யர் –
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை யான்
நெறி எல்லாம் எடுத்து உரைத்த
ஏதத் விரதம் மம -மித்ர பாவேனே
மாம் ஏகம்  சரணம் விரஜ
அத்தா சுவாமி உடையவன் ஆகையாலே இவ் உபகாரங்கள் செய்தான்
சுக்ருத் கதி எல்லாம் நாராயணன்
மற்றை யார் யாவாரும் நீ பெரிய திருவந்தாதி
நீ செய்தன -ஓன்று இரண்டு ஆகில் இறே இன்னது என்னலாம்
சேஷ பூதன்
அடியேன் அறியேன்
உபகரித்த நீ சொல்ல லாமோ என்னவோ
சொல்லி முடிக்க முடியாது
அனுபவத்தில் குமிழ் நீர் -முழுக்க முழுகி தான் அனுபவிக்க முடியும் –
வாய் விட்டு சொல்ல முடியாது

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 10, 2012

மூன்றாந்திருவாய்மொழி -‘ஊனில்வாழ்’

முன்னுரை

    ஈடு : ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில். ‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின், ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின், அது சம்பந்தமாகத் தோன்றிய அம்முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச்செய்தார்; பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில். ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில்1பிராசங்கிகமாக வந்ததித்தினை.

    2தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்; அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்; எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது. மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே 3எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது; ‘இத்தகைய பேற்றுக்கு உசாத்துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,  அவன் தன்னோடு ஒக்கப் 4பிராப்பியருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணாநிற்பாருமாய், பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய சூரிகள் திரளிலே சென்று புக்கு ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும் 1அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக்கட்டுகிறார். ‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று, பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய சூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின், ‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் 2அசேதநங்களையும் சேர்த்தார்; இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு இயற்கை அறிவையுடைய நித்தியசூரிகளைத் தேடுகிறார்.

    இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.

3. இவ்விடத்தில், ஸ்ரீராமாயணச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்:
ராமஸ்து – பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்
சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ
சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த
இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’
என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்
பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார – இப்படிப்
பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் –
‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த
போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ –
ம்ஸ்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-
தஸ்யாம் கத: – சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி
ஸமர்ப்பித : – இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்
இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’
என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

நேர் சங்கதி இது தன்

நடிவில் திண்ணன் வீடு
பிராசங்கிகமாக வந்தது
அடியவர் உடன் என்று கூடப் போகிறேன் மனோ ரதம் வெளி இடுகிறார்
கட்டி அழ -முன்பு –
ஈச்வரத்வம் நடுவில் -வாயும் திரை உகளும் -அடுத்து –
நேர் சங்கதி –
ஈஸ்வரன் இவர் பிரகிருதி அறியும் என்பதால்
தரிப்பை கொடுக்க பரத்வம் காட்டி –
இது போல் பிராசங்கிகம் எங்கு எல்லாம் என்பதை  பட்டியல் -அரும் பொருளில் காட்டி அருளுகிறார் .
தாம் பெற்ற பேற்றை கணம் பார்த்தார்
சர்வேஸ்வரன் தானே கொடுத்தது
தம் அடியால் வந்தால் -குறைவாக இருக்கலாம் –
பெருமாளுக்கு கொண்டை பண்ண -ராஜா பட்டார் உடன் -நல் முத்து
15000 rs அன்று 40 வருஷம் முன்பு -21 வாசி ஸ்வாமிகளுக்கு
தனிகர் இடம் -கேட்டு நாலு பேரும் போக –
என்ன தோன்றுதோ கொடுங்கோ -பட்டர் சொல்ல –5000 –
அடுத்த நாள் பாங்கு சென்று அனைத்தையும் கொடுக்க
அன்றி சவரன் 400 rs விலை .
அது போல் -தம் அடியாக வந்தால் அளவு பட்டதாக இருக்கும் -உதாரணம்
தான் அனுபவித்த ரசங்களில் எல்லா ரசமும்
தேன் பால்கன்னல் அமுதும் ஒத்து
சமாத்யபிதிக்க -சமமாகவோ  மேலாகவோ இன்றி
பேற்றுக்கு உசாத் துணை யாவார்யார்
சம்சாரத்தில் ஆள் இல்லையே –
நித்ய சூரிகளை -எப்பொழுது சேரப் போகிறோம்
அவனோடு ஒக்க பிராப்யர் -அவனை நித்ய அனுபவம் செய்யும் -பகவத் அனுபவத்தில் தேசிகர் வல்லவர் –
அனுபவம் செய்தவர் காட்டிக் கொடுப்பவர் -உசாத் துணை -பொருத்தம் நித்யர் –
போதயந்தக பரஸ்பரம் -மத் சித்தா -துஷ்யந்தி ரமந்திச –
ஸ்வாமி – இரண்டும் சந்தோஷம் –
பரஸ்பரம் பாவயந்தி சங்கர
பக்த்யாந்தா ச்ரோத்யந்தா -இரண்டும் கேட்பவரும் சொல்பவரும் ஆனந்தம்
அனுப்பிக்க பெறுவது எப்போதோ பாரிப்புடன் அருளிய திரு வாய் மொழி
வானின் நிலம் அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ –
வாயும் -திரை உகளும் கட்டி அழ -அறிவு கலங்கி அறிவு நடை யாடாத திர்யக்-அங்கு
இங்கு அறிவு கூடி சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதி
அறிவில் மிக்கவர் உடன் சகவாசம் பிரார்த்திக்கிறார் இங்கே
ராமச்து சீதா -சார்த்தம் -திருக் கல்யாணம் ஆன பின்பு -அயோத்யாயாம் -வன பிரவேசம் முன்பு
ருதுக்கள் அனுபவிக்க –
ராமகா து -ஏக தத்வம் போல கலந்த கலவி
து -பித்ரு சுஸ்ருனு இது வரை தர்மம் நிலை நாட்டி இதுவரை
காம திர்ஹந்த்ரம் நடத்தி கரை கண்டவர் போல்
சீதையா சார்த்தம் -அவளும் -இன்பக்கேளிகள்
பரம பதத்தில் செவ்வி உடன் வந்தவளும் இந்த விஷயத்தில் பின்பட்டு
போக உபோத்காததுக்கு அவ்வருகில் போக -ஆரம்பித்தார்கள்
பகு குண்- ருது வருஷம் சொல்லாமல்
அந்த கால போக வஸ்துகள் கொண்டு ரசித்தார்கள்
மனச்வி -சம்ச்லேஷத்தால் பிராட்டி கோலின அளவு அதிகமாக
தத்-ஜாதி குணங்கள் பிரிக்க ஒண்ணாத படிஒறு நீராக கலந்து
அப்ருக்தக் பிரிக்க முடியாத –
உயர்த்தி அறிந்தவள் ஆகையாலே -அப்பெரியவன் இப்படி தாழ விடுவதே
சீதை அது அது என்று கிடக்குமா போலே
பிராவண்யம் -துவக்கு பட்டு –
ஒரு நீராக கலந்த படி இங்கு அருளி
உசாத் துணை பாரிப்புடன் தலைக் கட்டுகிறார் .

ஊனில்வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்அம்மான்
தானும்யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும்பாலும் நெய்யும் கன்னலும் அமுதும்ஒத்தே.

    பொ – ரை : சரீரத்தில் வசிக்கிற மனமே! நீ மிகவும் நல்லை நல்லை! உன்னை நான் துணையாகப் பெற்ற காரணத்தால், நித்தியசூரிகட்குத் தலைவனும், மது என்னும் அரக்கனைக் கொன்றவனும், என்னை அடிமை கொண்டவனுமான இறைவனுக்கு யானும் கலந்த கலவியிலே எல்லாச் சுவைகளும் உண்டாகுமாறு, தேனும் பாலும் நெய்யும் கருப்பஞ்சாறும் அமுதுமாகிய பொருள்கள் தம்மில் கலந்தாற்போன்று கலந்தோம்.

    வி-கு : ‘ஊன்’ என்பதில் னகரம் சாரியை, ‘ஊ’ என்பதே பெயர், ஊ – தசை. ‘கலந்தொழிந்தோம்’ என்பது, ஒரு சொல் நீர்மையது; தொடர்மொழியாகக் கோடலுமாம்.

    ஈடு : முதற்பாட்டில், 1இராச்சியத்தை இழந்த இராஜபுத்திரனை ஒருவன் இராச்சியத்திலே பிரவேசிப்பித்தால், ‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்’ என்று, அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று, ‘கைங்கரிய சாம்ராச்சியத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க, இந்நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

    ஊனின் வாழ் உயிரே – சரீரத்திலே வசிக்கிற உயிரே! இவ் விளியால், ‘பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? 2எழுவகைத் தாதுக்களாலான சரீரத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ உதவினாய்?’ என்ற தொனிப்பொருள் தோன்றும், இனி, ‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச் ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தையன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம். இவ்விளியால், ‘நெடுநாள் இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ, அவ்வுலக இன்பத்துக்குக் கைதர நிற்பதே!’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இப்பொருளில் வாழ்தல் – அனுபவித்தல். ஈண்டு ‘உயிர்’ என்றது, மனத்தினை. ‘ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’ எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம் மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று விளிக்கிறார். 3‘நல்லை போ – நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.

    ‘நடுவே என்னைக் கொண்டாடுகிறது என்?’ என்ன, ‘உன்னைப் பெற்று – பிறப்பிற்குக் காரணமாகப் போந்த உன்னை மோக்ஷத்திற்குக் காரணமாகப் பெற்று. அதாவது, இறைவனும் என்றும் உளன்; அவன் சம்பந்தமும் அநாதி; அவன்4எதிர் சூழல் புக்குத் திரியா நிற்கவும், நீ அவனுக்கு முகங்காட்டாமையால் அன்றோ நெடுங்காலம் இழந்திருந்தது? இன்று நீ முகங்காட்டினமையால் அன்றோ இப்பேறு பெற்றது?’ என்றபடி. ‘ஆயின், நீர் பெற்ற பேறு எது? என்ன, சொல்லுகிறார் மேல்: வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும யானும் – தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் அவதரித்து, மதுவாகிற அசுரனைப்போக்கியது போன்று, என்னுடன் கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும்  கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள யானும், இனி, ‘தானும் யானும்’ என்பதற்கு, ‘என்னைப் பெறுகைக்கு நெடுநாள் எதிர்சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும், ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில், ‘கண்ணாற்கண்ட பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக நினைத்து விடாய்த்த நானும்’ என்றும், ‘கிருஷி செய்த தானும், கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’ என்றும் பொருள் கூறலும் ஆம்.

    எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் –1‘ஆயிரத்தில் ஒன்றும், கடலிற்குளப்படியும் போலே, தானும் நானும் ஆன சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம்; நித்திய விபூதியிற் சென்று புகினும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமித்தனை; அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை; இதனுடைய பிரவின்மையே அங்குள்ளது,’ என்பார், ‘கலந்தொழிந்தோம்’ என்கிறார். இனி, பரமபதத்திற்குப் போகத் தேடுவது, உசாத்துணைக்காவும், இச் சேர்த்தி இடைவீடு இன்றி இருத்தற்குமாம். ‘நன்று; என்போலே கலந்தோம்?’ என்னில், ‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார். இதற்கு, ‘ஒரு சாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பொருள் அருளிச்செய்வர். அதாவது, தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற்போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற்போலவும் அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

    2இதற்கு இவற்றைச் சுவையுடைப்பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித் ‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங் களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று எம்பெருமானார் பொருள் அருளிச்செய்வர். 1‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி ஆதலானும் சர்வ ரகங்களும் பிறக்கத் தட்டு இல்லை.

    நன்று; ஆளவந்தார் நிர்வாகத்திலே, ‘தேனும் தேனும் கலந்தாற்போலே கலந்தோம்’ எனின், 2இவ்விரண்டனையும் சேர்த்துச் சொல்லும்போது, வருவது ஓர் அளவின் மிகுதி உண்டு அன்றே? அவ்வளவின் மிகுதிதானே பொருள்கள் இரண்டு என்பதற்கு ஏற்ற பிரமாணமாம்.

1. ‘ஆயிரம் என்ற எண்ணுடன் ஒன்று என்ற எண்ணும், கடல் நீருடன் குளப்படி நீரும்
சேர்ந்தது போன்று’ என்பதாம். இவ்வுவமைகள் இறைவனுடைய ஞான ஆனந்தங்களின்
மிகுதியையும், ஆழ்வாருடைய ஞான ஆனந்தங்களின் சிறுமையினையும் காட்ட வந்தன.
குளம்பு அடி – குளப்படி: ‘ஒரு விலங்கானது வைத்த குளம்பினது அடிச்சுவட்டில் தங்கிய
நீர்’ என்பது பொருள்.

2. ஆளவந்தார் நிர்வாஹத்தில், ‘தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும்பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’ என்று கூட்டிப் பொருள் காண்க.
எம்பெருமானார் நிர்வாஹத்தில், ‘தானும் யானுமான தன்னுள் (கலவிக்குள்) தேனும்
பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் எல்லாம் ஒத்து (உண்டாம்படி) கலந்தொழிந்தோம்’
எனக் கூட்டிப் பொருள் காண்க.

சோராமல் -அனைத்தையும் கொண்டவன் -தன்னையும் கொண்டு கலந்தான் என்றார் முன்னம் –

ராஜ புத்திரன் பிரவேசித்து -இழந்த ராஜ்ஜியம்  காட்டி கொடுத்து சேர்த்தவனை கொண்டாடுவது போல்
இவனாலே இப் பேறு பெற்றோம்
நெடு நாளாக இழந்ததை  கொடுத்தவனை கொண்டாடுவது போல்
முன்புற்ற நெஞ்சே
நம்பியை  காண நங்கைக்கு ஆயிரம் கண் வேண்டும்
தம்பியை -காண -தவம் உடைத்து
முனிவனை இறைஞ்சும் என்பர்
விச்வாமித்ரரை கொண்டாடினது போல்
தேனும் பாலும் நெய்யும் கன்னல்கும் அமுதும் ஒத்தே
ஊன் சரீரம் வர்த்திக்கும் உயிர் என்னுதல்
சரீரம் பற்றி அதையே வாழ்ச்சியாக கொண்ட உயிர் –கிணற்று தவளை போலே
அவ்வருகு ஓன்று அறியாத உயிர்
இந்த சரீரத்திலே வாழ்கிறாயே ஆச்சர்யம் தானே
வையத்து வாழ்வீர்கள்
வாழ்ச்சி -போதுவீர் போதுமினோ -வையத்து -இங்கும் வாழ்வீர்காள்
ஓடி வந்தீர்களே
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளினை கீழ் வாழ்ச்சி
ஊனிலும் வாழும் உயிர் -இங்கும் அது போல் -அவனை அனுபவிக்க சகாயம் பண்ணி –
ஆக மூன்று அர்த்தம் -கொண்டாடும் அர்த்தம் இந்த பிரகரணத்தில்
மாம்ச -மஜ்ஜாச்திகள் சரீரத்தில் நித்ய சூரிகள் அனுபவம் கொடுத்தாயே
நானா பாவம் -அங்கு அனுபவிக்க -சகஸ்ர்ச பவதி -அனுபவத்துக்கு தடை இல்லையே
பஞ்ச உபநிஷத் மயமான சரீரம்
மாம்ச –மூத்திர -எலும்பு -தோல் =மலம் -நரம்பு வேண்டா நாற்றம் -இங்கு கொடுத்தாயே
வேதனை –வேத மயன் -தொழுவார் விண்ணுலாரிலும் சீரியரே –
விரோதிகள் நடுவில் அனுபவிக்க –
நாரதர் -எண்ணெய் கிண்ணி கொண்டு சுத்தி -அவனை நினைக்காமல் புராண கதை
எண்ணெய் கொண்டு என்னையே மறந்தாயே –
வைராக்யத்துக்கு பழக்க–அனைத்தையும் – சாதித்து உண்ணாமல் தனியன் எல்லாம் –
அப்யாசம்-மனசு வாயு விடகட்டுபடுத்த  துர் லபம்-அப்யாசத்தாலும் வைராக்யத்தாலும் உறுதி கொண்டே –
பாவே வைராக்கியம் -இருக்கும் பொழுது வைராக்கியம் –
நெஞ்சே இந்த சரீரத்தில் இருந்தும் உபகரித்தாயே -வாழ்ச்சி
அனுபவிக்கி
பிராக்ருத புசித்து போன நீ அப்ராக்ருத அனுபவம்துணை வந்தாயே  –
மனசை கொண்டாடுகிறார் உயிர் என்பான் என் என்னில்
ஆத்மாவுக்கு தர்ம பூத ஞானம் நித்யம்
பந்த மொஷதுக்கு ஹேது மனஸ் தானே –
மனசா ஏவ மனுஷ்ய பந்த மோஷ ஹேது பிராதாண்யம் பற்ற உயிர் என்கிறார்
நல்லை போ -நல்லவன் போ
விபரீத லஷனையால் வா என்கிறார்
நல்லை கொண்டாடுகிறார்
 போ –சம்போதனம் -நல்லை நல்லை என்னுதல் –
அல்ல -நான் அல்ல -தப்பு நன் அல்லேன் -நீ அல்லை -அவள் அல்லள்- அது அல்ல –
நல்லை -சப்தம் முன்னிலை வார்த்தை
நடுவே எண்ணெய் கொண்டாடுவது எதற்கு
எம்பெருமானுக்கும் உமக்கும் நடுவில் யார் -நெஞ்சு கேட்டதாம்
பந்த ஹேதுவாக போந்த நீ மோஷ ஹேதுவாக
ஈஸ்வரனும் என்றும் உண்டு -தத் சம்பந்தமும் அநாதி
இன்று தான் மனஸ் சககரிக்க அனுபவம் பெற்றோம்
அதனால் -கொண்டாடுகிறார்
அவனுன் எதிர் சூழல் புக்கி நிற்க
ஆபி முக்க்யம்செய்ததால் பேறு பெற்றோம்
என்ன பேறு
வானுளார் பெருமான் -நித்ய சூரிகள் அதிபதி –கலந்து ஒழிந்தோம்
மது சூதனன்
போக்கினது போல்
என் அம்மான் -சம்ச்லேஷ விரோதி போக்கி –
என்னை எழுதி கொண்டான் –
தன் பக்கல் கைங்கர்யம் கொண்டான்
வாயும் -கண்ணால் கண்ட பதார்த்தங்கள் -பகவத் அலாபத்தால் நோவு படுவதால் -கட்டி அழுது விடாய்த்த நானும்
எதிர் சூழ புக்கு அவனும் விடாய்
கிருஷி பண்ணின தானும் கிருஷிக்கு விஷயமான நானும்
திரு வெள்ள குளம் -அண்ணன் கோவில் பெருமாளுக்கு அந்த பெயர்
பெரும் குளம் -அங்கும் பெருமாள் பெயர் -மரகத மணி தடம்
வாசத் தடம் போல் வருவானே
தான் அடிமை செய் விடாய் தானானான்
அடிமை கொள்ள அவன் விடாய்த்தான்
வெள்ளத்தில் முழுகி பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம் –
தன்னுள்ளே கலந்து ஒழுந்தோம்
ஆயிரத்தில் ஒன்றும் கடலில்  குழப்படி போல்கலந்தோம்
எல்லா ரசங்களும் பிறக்கும்படி
ஒழிந்தோம்  நித்ய விபூதியில் புக்காலும் அசை இட வேண்டியது தான்-
மறுபடியும் நினைத்து -நினைத்து இதே அனுபவம்
இதனுடைய அவிச்செதமே அங்கு உள்ளது -இது ஒன்றே வாசி –
இடை வெளி இல்லாமல் விட்டு போகாமல் நித்தியமாய் இருக்கும்
இப்படி இங்கே இருக்க பரம பதம் தேட இரண்டு காரணங்கள்
உசாத் துணை உண்டு -நித்தியமாய் இருக்கும்  பிரகிருதி சம்பந்தம் –

இங்கு பண்ணினால் முதுகு கடுக்கும் -தினவு எடுக்கும் சரீர உபாதை -இங்கு உண்டே –
விசசேதம் இன்றி கைங்கர்யம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் -கருப்பஞ்சாறு -அமுதும் –
ஆள வந்தார் அருளி செய்ததாக  திரு மாலை ஆண்டான் நிர்வாகம்
தேனும் தேனும் கலந்தால் போலே ஏக ஜாதி த்ரவ்யம் போலே
எம்பெருமானார் -தம் கலவியில் எல்லா ரசங்களும் கலந்தது போல் பஞ்சாமிர்தம் –
ராசா பதார்த்தங்கள் உபலஷனம்
கலவியில் இல்லாத ரசமே இல்லை என்னும் படி சம்ச்லேஷித்தோம்
சர்வ கந்த சர்வ ரச என்கிற வச்துவுடன் கலந்தது
ஞான ஆனந்த வஸ்து இரண்டுமே -அனைத்துமே உண்டே
அத்வைதமா -ஐக்கியம் இல்லை –
பரிமாண ஆதிக்யம் உண்டே -சேர்த்த தேனும் சேர்க்க பட்ட தேனும் சேர்ந்து அளவு கூடுமே
த்ரவ்ய சத்பாவம் பிரமாணம் –
நாழி தேனும் நாழி தேனும் கூட்டி இரண்டு நாழி தென் ஆகுமே
இரண்டு வஸ்து தானே

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத் துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.

    பொ – ரை : ‘ஏழ் உலகங்களிலும் உள்ளவர் எல்லாரும் ஏத்த, எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்துகொண்ட அழகு பொருந்திய கூத்தன் விஷயமாக, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்று உணர்ந்து துதிக்க வல்லவர் ஒரு குற்றமும் இலர் ஆவர்,’ என்பதாம்.

    வி – கு : ‘ஏத்த, கொண்ட கூத்தன்’ என்க. வல்லவர் – வினையாலணையும் பெயர். ஊனம் – குற்றம். குற்றமாவது, ஒப்பாரும் மிக்காரும் இலாத

இறைவனை மற்றைத் தேவர்கட்கு ஒப்ப நினைத்தல்; அன்றி, அவனைக் குறைய நினைத்தல்; அன்றி, அவனைக்காட்டிலும் மற்றைத் தேவர்களை உயர்வாக நினைத்தல்; ஆக, இவற்றால் உளவாய குற்றம்.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணரவல்லவர்கட்கு, மற்றைத் தேவர்களை இறைவர்களாக நினைத்தலாகிய குற்றம் இல்லை,’ என்கிறார்.

    ஏழ் உலகம் ஏத்த ஏழ் உலகும் கொண்ட – 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால் அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின் பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை – திருவுலகு அளத்தருளினபோது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும், அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார், ‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச்செய்கிறார். இதனால், இந்திரன் இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியதுபோன்று, இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதூஉம், அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதூஉம் போதரும்.

    குருகூர்ச் சடகோபன் சொல் – 2ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார். இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள உயர்குடிப்பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி வாய்ந்த ஆயிரம் இத்தனைபோது இவர் கூறி வந்த பரம்பொருள் நேர்பட்டாற்போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி. அன்றி,

1வாச்சியத்திற்காட்டில் வாசகம்நேர்பட்டபடி என்றுமாம். அதாவது, விஷயத்தை உள்ளபடி பேசவற்றாய் இருக்கை. இவை பத்து உடன் ஏத்த வல்லவர்க்கு – இத்திருவாய்மொழியை மனமாரத் துதிக்க வல்லவர்கட்கு. ஓர் ஊனம் இல்லை – இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது இறைவர் அல்லாதாரை இறைவர் என்று எண்ணுதலும், இறைவனை இறைவன் என்று எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.

    முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச்செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து அருளிச்செய்தார். இரண்டாம் பாசுரம் முதல், துக்கத்தைப் போக்குமவன் ஆதலானும், சீலவான் ஆதலானும், சுகுமாரன் ஆதலானும், தாமரைக்கண்ணன் ஆதலானும், ஆபத்சகன் ஆகையானும், அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும், ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய துதிகள் முதலியவைகளாலும், இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச்செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

நிகமத்தில் இல்லையோர் ஊனமே
தேவாந்தர  பஜனம் -செய்யும் ஊனம் இல்லை என்கிறார் .
ஏத்த ஏழு உலகும் கொண்ட
சங்கமாக ஏத்த -காழியன் கட்டம் –
மாங்கல்ய வருத்தி ஸ்லோகம் –
ஹர்ஷத்தாலே –
ஏழு உலகும் கொண்ட
தன் திருவடிகளில் இட்டு கொண்டான்
கோல கூத்தனலகான
திரு உலகு  அளக்கும் பொழுது -வல்லார் ஆடினது போல் இருந்தது
ஆப்திக்கு இன்னார் சொல்வதுகுருகூர் சடகோபன்
வேதம் போல் தான் தோன்றி இல்லை
சடகோபன்-வேதாந்தம் காட்டில் -ஆபிஜாத்யம் -உயர்ந்த குலம் –
வாய்த்த ஆயிரம்
பர வஸ்து நேர் பட்டது போல் திருவாய் மொழி யும் நேர் பட்டது -வாய்த்தது
வாசகம் வாச்யன்
விச்வாசத் துடன் – ஏத்த
ச ஹ்ருதயமாக ஏத்த
அவன் இடம் பரத்வம் பண்ணாமையும் மற்றவர் இடம் பரத்வம் பண்ணுகை யும்  ஊனம்
துக்க நிவர்தகன் சீலன் -சிருஷ்டி சத்தி சம்காரம்
ஈஸ்வர ஸ்தோத்ரம்
பகு பிரகாரங்கள்  வழியாக ல்பரத்வம்  காட்டினார்

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        திண்ணியதாம் மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணிஅவ தாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்
உற்றாரை மேலிடாது ஊன்.

திருமால் பரத்வத்தை திண்ணியதாக
நண்ணி
அவதாரத்தே நன்கு உரைத்தார்
தாழ விட்ட இடங்களிலும் பரத்வம் பொழிய
அறிந்து
அற்றார்கள்
அற்று தீர்ந்தார் -அவரடிக்கே
ஊனம் சேராது

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

‘கள்வா! எம்மையும் ஏழுல கும்நின்
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளே றன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர் திகழல் பணிந்துஏத் துவரே.

    பொ – ரை : வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்.

    வி-கு : ‘கள்வா, இறைவ’ என்பன விளிப்பெயர்கள். ‘என்று பணிந்து ஏத்துவர்,’ என முடிக்க. ஊர்தி – ஊர்கின்றவன்; ஆண்பாற் பெயர். இத்திருப்பாசுரத்தின் முதலிரண்டு அடிகளைப் பரிபாடல் மூன்றாம் பாட்டின் முதல் பதினாறு அடிகளோடு ஒப்பு நோக்கல் தகும்.

    ஈடு : பத்தாம் பாட்டு. ‘இவ்வளவும் வர. நான் கூறிவந்த பரத்துவத்தை, நீங்கள் அடையத் தக்க தெய்வங்களாக நினைந்திருக்கிற அவர்களுடைய 3மேலெழுத்தைக் கொண்டாயினும் நம்புங்கோள்,’ என்கிறார்.

 கள்வா – 1சர்வேஸ்வரன் பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.; நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த, 2‘பார்வதியோடு கூடிய சிவன், இருகைகளையும் குவித்துக்கொண்டு விஷ்ணுவைப் பார்த்து, விஷ்ணுவினுடைய பெருமையினைச் சொல்லுதற்குத் தொடங்கினான்’ என்கிற படியே, புறப்பட்டு, 3‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ? ‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ என்றான். 7‘நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?

    இவன் தாடி நின்ற நிலையும் துதி செய்த நிலையும் களவு என்னுமிடத்தை விளக்குகிறார் மேல்: எம்மையும் ஏழ் உலகும் நின் உள்ளே தோற்றிய, ‘நீ இவற்றைப் படைக்கின்ற காலத்தில்எங்களை முன்னே படைத்து, பின்னர் மற்றைப்பொருள்கள் எல்லாவற்றையும் படைத்தாய். இறைவ – இறைவனே!’ என்பார்கள். ‘இங்ஙனே சொல்லுகிறவர்கள்தாம் யார்? என்னில், வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் – சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின்,இராஜசேவை செய்வார் தத்தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று, இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். 1‘இரவியர் மணிநெடுந்தேரோடும் இவரோ? இறையவர் பதினொரு விடையரும் இவரோ?’ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?’ என்றார் தொண்டரடிப்பொடிகள். புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் – சர்வேஸ்வரன் பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே, திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால், இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான், அப்பொழுது 2ஆட்டத்து வெளியில் யானைக்காலில் துகையுண்ணா நிற்பார்கள்.

நீங்கள் ஆஸ்ரயநீயராக நினைத்து இருப்பீர்கள் விச்வசித்து
வேறு யாரோ நினைத்து
அவர்களே இவனை ஸ்தோத்ரம் செய்யும் பொழுது
அவர்களின் மேல் எழுத்து கை எழுத்து இட்டு ஒப்புக் கொண்டு
விஸ்வசியும் கோள்
கள்வா – எம்மையும் எழ உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா ஸ்வாமி
என்று வெளுத்த  ஏறு   ருத்ரன் பிரமன் இந்த்ரன்  தேவர் அனைவரும் ஏத்துவர்
இன்னும் வரம் கேட்டு அர்திக்க
என்னிடம் வந்து வரம் வாங்கி போ அந்த செயலால் எல்லாராலும் பூஜிக்க படுவேன்
அப்படியே செய்கிறேன் என்று விட்டு
ருக்மிணி பிராட்டி உடன்பிள்ளை வரம்
நம கண்டாய கட கடாயச
அர்த்தம் இன்றி
கருப்புடைய தாழ விட்டு -நின்ற நிலையில் மனுஷ்ய அவதாரத்தில் -செய்தாயே
பரத்வத்தில் கேடு இல்லை
ராஜா மாறு வேஷம் போக கருப்புடுத்து சோதித்து -விபவம்
கார்யம் மந்திரித்து சோதித்து –
பிரஜையாக குடி மகன் போல் காட்டிக் கொண்டு போக -=
இத்தை நாட்டார் மெய் என்று நினைப்பார்களா –
கள்வா என்பர்கள்
ஸ்வா தந்த்ர்யம் மறைத்து பாரதந்த்ர்யமாக இருக்கும் நிலை கள்வா
ஹரி வம்சம் –
ஸ்தோத்ரம் பண்ணிய படியை கேட்ட பிராமணன் -புராண ஸ்ரவண வேளையில் –
இதற்க்கு முன்பு ஸ்தோத்ரம் சொல்லி அறியாமல் –மீன் துடிக்கும்  படி -பாராய் –
நாத்தழும்ப நான் முகனும் ஈசனும் -அவர்களுக்கு உண்டே ஸ்தோத்ரம் செய்வதால் .
களவு கிரித்ரிமம்
எங்களையும் உண்டாக்கி –
முதலில் பரமனை ருத்ரனை எம்மையும் முதலில்
இறைவ என்பர்
வெளுத்த ஏற்றை வாகனமாக கொண்ட ருத்ரன்
ராஜ சேவை பண்ணுவார் தம் தம் அடையாளம் சட்டையும் பிரம்புமாக போவார்
மயில் கட்டு -தலை பா உடன் -போவார்கள் –
இறைவையர்-விடையர் மயிலினன் -தொண்டர் அடி போடி
புள்ளை ஊர்தி -சர்வேஸ்வரன்
பெரிய பிராட்டியார் இருக்கும் இருப்பு காண மாட்டாமல் -அந்த புரம்புகப் பெறாமையாலே
ஆட்டத்து வெளியில் ஆனைக் காலில் துவை உண்டு இருப்பார்கள்
யானை ஏறி போகும் பொழுது காண காத்து இருப்பார்கள்
திரு பாற்கடலில் இப்பால் கதற காட்சி கொடுக்க -புள் ஏறி போக
ஆட்டது வெளி -யானை மேல் ராஜா ஏறும் பொழுது -யானைக் காலில் விழுந்து கூப்பிடுவாரை  போலே
யார் பரன்
வையாளி வெளியிலே -நிர் அபிமானராய் துவை உண்டு
நின் உள்ளே தோற்றிய இறைவா –
உன் இடத்தில்
கேசவ திரு நாமம் இங்கே பெற்றார் சர்வேஸ்வரன்
கீதி-ககா பிரமம் ஈசானன் ருத்ரன் ஆவாம் தவாங்கம் சம்பவோ தஸ்மாத்  ப்ரமன்னோ ராம தாஸ்மான் கேசவ நாம
நின் உள்ளே
ஆவாம் தவாங்கோ -அவர்கள் வார்த்தை தானே இது தான் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

 காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்துதன் உந்தி உள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே.

    பொ-ரை : எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்.

    வி – கு : ‘தன உந்தியுள்ளே ஆக்கினான்’ எனக் கூட்டுக. சேர்க்கை செய்தல் – அழித்தல்; ஒரு சொல். இனி, தன் திருமேனியில் சேர்தலாகிய தொழிலைச் செய்து என்று பொருள் உரைத்து இதனை இருசொல்லாகக் கோடலுமாம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் இம்முத்தொழிலையும் 1தன் அதீனமாம்படி இருக்கின்றான் ஆதலானும், இவனே இறைவன்,’ என்கிறார்.

    காக்கும் இயல்வினன் – 2‘செல்வங்களைக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை நீக்குவதிலும் ஆடவர் திலகனான திருமகள் கேள்வனைத் தவிர, வேறு ஒருவரும் ஆற்றலுடையவராகக் காணப்படுகின்றார் இலர்,’ என்கிறபடியே, காப்பாற்றுதலை இயற்கையாகவுடையவன். கண்ண பெருமான் – காப்பாற்றும்பொருட்டுக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இறைவன். சேர்க்கை செய்து – அழிக்கிற காலம் வந்த அளவில், காரிய வடிவமான இவ்வுலகங்கள் முழுதும் தன் பக்கலில்சேர்தலாகிய செயலைச் செய்து. 1தன் உந்தியுள்ளே – தன்னுடைய திருநாபிக்கமலத்தில். வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் தெய்வ உலகுகள் ஆக்கினான் – பிரமன் இந்திரன் மற்றும் உண்டான தேவர்களோடே கூட அவர்களுக்கு இருப்பிடமான உலகங்களையும் கட்டளைப்பட உண்டாக்கினான். இறைவன், 2பிரமனைப் படைத்து அவனை நோக்கி, ‘உலகத்தை எல்லாம் படைப்பாய்’ என்று ஒருகால் ஏவிவிட்டால் பின்னைத் தன்னையும் கேட்க வேண்டாதபடி படைத்தலின் ஆற்றல் வாய்த்தவனாதலின் ‘வாய்த்த திசைமுகன்’ என்கிறார்.

. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை’–
  என்றார் இளங்கோவடிகள்.

மூன்றும் சுவாதீனம்
சம்காரம் சங்கை வேண்டாம்
காக்கும் இயல்பினன்
சேர்க்கை செய்து உந்தி உள்ளே
திசை முகன்
தெய்வ உலகு ஆக்கினான்
நல்லது சேரவும் தீயதும் விலக்க சமர்த்தன் புருஷோத்தமன் ஒருவனே –
கண்ணா பெருமான் -நிரூபிக்க கிரிஷ்ணனான வந்த சர்வச்வரன்
கிரிஷ்ணனை எ தொட்டு கொண்டு போவார்
கிருஷ்ண த்ர்ஷ்ணா தத்வம்
கண்ணன் அடி மேல் குருகூர் சடகோபன்
தன் பக்கல் சேர்த்து கொண்டு
திரு நாபி கமலத்தில் ஆக்கி
வாய்த்த திசை முகன்
ஒரு கால் சிருஷ்டி என்று விட்டால் பின்பு –தன்னையும் கேட்க்காமல் செய்து கொண்டே -வாய்த்த அடை மொழி –
தானே சிருஷ்டிக்கும் சக்தன்
தெய்வ லோககங்களையும் கட்டளை பட உண்டாக்கி கொடுத்தான் .

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.