Archive for the ‘ஸ்ரீ மணவாள மா முனிகள்’ Category

ஸ்ரீ அநந்தாழ்வான் மஹாத்ம்யம்—ஸ்ரீ மா முனிகள் மஹாத்ம்யம்–

May 4, 2026

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

சென்றால் குடையாம் ஒரே பாசுரம் நித்ய ஸூரிகளில் ஒருவனுக்கு
உறகல்-இவனைச் சொல்ல வில்லையே
அங்கும் அஸ்தான பயசிங்கை பண்ணி பெரியாழ்வாரிலும் விஞ்சிய பரிவு உண்டே

அநந்தம் பிரதம ரூபம் -பின்பு எம்பெருமானார் -அடுத்து அனந்தாழ்வான் -பின்பு மா முனிகள்
ஆண் பிள்ளை
ஸ்த்ரீ பிராய ஸ்வரூபம் தன்னை அழிய மாறி
சிஷ்யன் இருக்கும் இருப்பைக் காட்டவே
நரன் காட்டி அருளாத ஒன்றைக் காட்டி அருளினார்
திருமலை நம்பி திருமலையில் நித்ய வாசம் செய்யாமல் கீழே இருந்து நித்யம் சென்று கைங்கர்யம்
ராமானுஜர் வேறே யாருக்கும் இப்படி பட்டம் கொடுக்க வில்லையே
பத்துக்கு மேல் அடையாளங்கள் திருமலையில் இவர் வை லக்ஷண்யம் காட்டி
புஷ்கரணி கைங்கர்யம் -பேக் சவாரி -கடப்பாரை -பூ பறிக்க பிராட்டியைக் கட்டி வைத்து -மாமனார் ஸ்தானம்

அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
மலையில் வேங்கடவருக்கு மாமனார் வாழியே
திருத்தேர் -இவர் சமர்ப்பிக்க -மாப்பிள்ளைக்கு மாமனார் சம்பாவனை இன்றும் உண்டே

மோவாக் கட்டையில் ரத்தம் பெருகி -மண்ணை வைத்து -நிற்க வைக்க
மகரந்த பொடி -என்று வேங்கடேச இதிஹாச மாலையிலே இவரே சொல்லி வைத்து
ப்ரஹ்ம உத்சவம் 10 நாள்-அப்ரதிக்ஷணமாக எழுந்து அருளி
மரத்துக்கு மரியாதை -பாக் தோட்டப்புறப்பாடு
திருத்தேர் உத்சவம் மணலை முன்பு என்றும் பின்பு பத்தாம் நாளாக மாற்றி
கடப்பாரை கோபுர வாசலில் இட்டும் காணலாமே
பச்சை கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு -இன்றும் பெற்று மகிழ்கிறோம்
தாமோதரன் பட்டம் போல் இன்றும் அடையாளம் உண்டே

கூப்பிட்டாலும் போகாமல் -ஆச்சார்ய நியமித்த கைங்கர்யங்களிலே ஈடுபாடு -ஆச்சார்யர் உகப்புக்காக செய்தார் –
பரன் சென்று சேர் திருவேங்கடம் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து
நான் -பூ லோக வைகுண்டத்தில் -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து வந்தேன்

ப்ராப்யத்துக்கு ஆச்சார்ய கைங்கர்யம் பிரதம பர்வம்
மா முனிகள் -ப்ரீதிக்காகப் பண்ணும் பகவத் கைங்கர்யம் என்று காட்டி அருளுகிறார் –

பாகவதர் ப்ரீதிக்காகச் செய்யும் ஆச்சார்யர் கைங்கர்யம் சரம கைங்கர்யம்
நந்தவனம் -ஏரி -இவற்றைப் பார்க்கிறோம் இன்றும்
எங்கள் ஆழ்வான் வாத்ஸா வரதாச்சார்யர் வரும் பொழுது
பிரசாதம் கொடுத்து -அனந்தாழ்வான் தனியனை சாதித்த ஐதிக்யம்
அகிலாத்மா -இத்யாதி
இதில் ஆச்சார்யர் திருநாமம்
ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜம் திருவடி நிலைகள்
கேட்டு ஆச்சரியப்பட்டார்

கடிபட்ட பாம்பு கடித்த பாம்பு

எறும்பு பிரசாதம் திரும்பி -எம்பெருமான் பொன்மலையிலே யாதேனும் ஆவேனே
அவனே யாகவுமாம் –
ஸ்வரூபம் அழிய மாறி இங்கே கைங்கர்யம் செய்ய வந்த ஆண் பிள்ளை அன்றோ
அதே போல் இங்கும்

எம்பெருமானார் தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள
மரம் மேல் ஏறினவர் பார்த்து வார்த்தை
கைகால் தானே உடையும்

திருக்கோளூர்
அங்கே கழுதை மேய்த்து ஜீவிக்க மாட்டாயோ
வெட்டு ஓன்று துண்டு ஒன்றாகப் பேசுவார்

எம்பெருமானாரே ஆலிங்கனம் செய்த உத்சவ மூர்த்தி ப்ரதிஷ்டை -செய்து இன்றும் சேவிக்கிறோம்

எம்பெருமானார் திருவடி நிலை முதலியாண்டான் -மற்ற இடங்களில்
திருமலையில் அனந்தாழ்வான் என்றே பெயர்

அத்யயன உத்சவம்
இயற்பா முதலில் செவிப்பர் இங்கு
நான்கு நாள் முதலாயிரம்
21 கண்ணி நுண்
அடுத்த நாள் ராமானுஜ நூற்றந்தாதி தனியாக

81 வருஷமா – 100 வருஷம் என்பர்
நேராக வர வேண்டாமோ
ஆள் அந்தி தொழுகிறானோ

சரம கைங்கர்யம் தோட்டத்திலே
மகிழ மரம் முளைத்து
இவரே இந்த மரம் என்று

திருவாடிப்பூரம் அன்று -பிராட்டி உடன் எழுந்து அருளுகிறார்
பாக் சவாரி தான் மட்டும் எழுந்து அருளுகிறார் –

பெரிய ஜீயர் -அனந்தாழ்வான் சிஷ்ய பரம்பரையே
மா முனிகளே மூன்று வருஷங்கள்
பெரிய சேஷ வாஹனம்
சின்ன சேஷ வாஹனம்
இரண்டுமே உண்டே இன்றும்
இப்படி பல விசேஷங்கள் திருமலைக்கு

அனந்தம் ப்ரதமம் ரூபம்
ராமானுஜ ததா பரம்
அனந்தாழ்வான் த்ருதீய
ததோ வர முனி ஸ்ம்ருத

————————————–

அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், “அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே.
அன்றிலிருந்து, அவர் திருமலை ‘அனந்தாண்பிள்ளை’ என்று போற்றப்பட்டார்.
ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி,
பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார்.
அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு,
அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து,
ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர்.
இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த
மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும்
தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி,
“அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்” என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்!
அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது.
அத்தோட்டம், இப்போது ‘அனந்தாழ்வான்’ தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில்
உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும்
என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார்.
அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான்.
கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர்.
சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து,
தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது!
இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், ‘அந்தக்’ கடப்பாரையைக் காணலாம்!
அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது.
அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது,
பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார்.
அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல்,
தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும்,
அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!!
அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது ‘ஆச்சார்ய தனியனை’ கூறுமாறு பணித்தனர்.
உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்

போற்றுதலுக்குரிய கல்யாண குணங்களும், கருணையும், நற்சுற்றமும் கொண்ட ஆச்சார்ய அனந்தார்யனின்
திருவடிகளுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்.
அவரே, தன்னை வந்தடையும் மாந்தர்க்கு சிறந்த அடைக்கலம் தந்து அவர்களது அஞ்ஞான இருளை
நீக்குகிறார்!

அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது,
பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !

இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்)
ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், “ஏய்ந்தபெருங் கீர்த்தி” என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே.
‘வேங்கடாசல இதிகாசமாலா’ என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் ‘கோயில் ஒழுகு’க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது.
அவர் இயற்றிய ‘ராமானுஜ சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய
நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார்.
அது போலவே, ‘கோதா சௌத்ஸ்லோகி’ என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக,
வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,
வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, ‘பெத்த ஜீயங்கார் மடத்தை’ நிறுவினர்.
தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான்,
குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்!
உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார்.
அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர்
திரு மூர்த்திகளை போலவே பிரசித்தம்
ஞான முத்திரையுடன் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த திருமேனி அன்றோ
இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, ‘அனந்தாழ்வான்’ என்றே அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி,
‘உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்’ யாரென்று அறிந்து வரச் சொன்னார்.
அனந்தாழ்வான் சீடனிடம், ” உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன்,
ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்” என்று கூறினார்!!!
பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

‘நாரையைப் போன்றவன்’ என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும்,
‘கோழியைப் போன்றவன்’ என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும்
சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும்,
‘உப்பைப் போன்றவன்’ என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும்,
‘உன்னைப் போன்றவன்’ என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை,
பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான்
புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

———–

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை
அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)
ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்
எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு
எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார்.
எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார்.
அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார்.
எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார்.
அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும்
எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார்.
திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள்.
மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய
நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார்.
அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார்.
இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று
அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க
அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார்.
அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார்.
அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து
அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார்.
இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை
விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார்.
அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர்.
ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார்.
பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று
மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார்.
திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து
அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார்.
திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள்.
அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால்
பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்).
அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர்.
அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான்.
ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார்.
ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள்.
இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார்.
இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார்.
அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான்.
திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும்
திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார்.
“என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப்
பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன்.
மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார்.
அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது
அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார்.
ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே.
அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து
வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த
மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார்.
அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில்
இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால்
எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ
அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.;
அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார்.
அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர
வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார்.
பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்)
மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து
பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான
நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர்.
அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும்
பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி
அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார்.
அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர்
அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.

நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின்
திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை,
அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார்.
பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து
இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான
பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார்.

இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே
இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு
ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே.
ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார்.
வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க
அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு)
பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு)
அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.

நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று
நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள்.
ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார்.
அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து
நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள்.
இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார்.
அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும்.
இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”.
இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.

பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம்
திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார்.
அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக
திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.

பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று
கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார்.
இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ,
அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.

திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த
அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார்.
அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு
கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார்.
ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து
கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற
பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார்.
அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார்.
அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .
இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள்
செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.

திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை
எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார்.
அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள்
இந்த ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும் இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள்.
(பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால்
எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .
அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை
எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.

திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் –
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார்.
அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால்
அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.

வார்த்தமாலை 345 –
ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார்.
அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது.
அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார்.
அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார்.
பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும்,
பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.

அதற்கு அநந்தாழ்வான் கூறினார்,
ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.

கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே
மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும்.
அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்)
அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு
அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.

உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும்.
அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு
ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த
நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.

இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து
என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின்
சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான
சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி
தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார்.
எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார்.
நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல்
ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச் சுடர் கோன் அநந்தன் என வந்து உதித்தான் வாழியே
உலகுக்கோர் தஞ்சம் என உதித்து அருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்து உய்ந்தோன் வாழியே
இலகு சித்திரை தன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை திருவுக்கு அப்பனார் வாழியே
அனந்தாழ்வான் திருவடிகள் அநவரதம் வாழியே –

https://acharya.org/mag/g/g0505.pdf–கீதாசார்யன் -505-ஐப்பசி 2020–மா முநிகழ் 650-திரு நஷத்ர மலர்

இயற்பெயர் அழகிய மணவாளன் -ஸந்யாஸ ஆஸ்ரமம் ஏற்றுக்கொண்ட பின்பும் இந்த திருநாமம் தொடரும் -பால்யாத் -ஸஹஜ -மஹாத்ம்யம் -அழகிய மணவாள மா முனிகள் -கொண்டாடுகிறோம்-கீதா உபதேசம் -62 திருநக்ஷத்ரம் -ஈடு ஸாதித்த மா முநி களுக்கும் 62 திருநக்ஷத்ரம்-எம் ஐயன் ராமானுஜன் -திருக்குமாரருக்கு திருநாமம் ஸாதித்து அருளினார்-

ராமாநுஜ ரஹச்யத்ரயம் மூலம் – நித்தியம்  -அனுசந்திக்க வேண்டியவை :1-திருமந்த்ரம் – திருவஷ்டாக்ஷரம்–ஓம் நமோ ராமாநுஜாய-2. த்வய மந்த்ரம்–ஸ்ரீமத் ராமாநுஜ சரணௌ சரணம் ப்ரபத்யே : /ஸ்ரீமதே  ராமாநுஜாய நம :  //3. சரமச்லோகம்–ஸர்வகர்மாணி  ஸந்த்யஜ்ய ராமாநுஜ இதி ஸ்மர /விபூதிம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம //

ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம் யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!

திருவானந்தாழ்வானுக்கு திருவேங்கடமுடையான் ஸாதித்த தனியனும் உண்டே-தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||
–அனைத்து நற்குணங்களுக்கும் இருப்பிடமாகவும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவராகவும், தன்னை ஆசிரயித்தவர்களுக்கு (நம்பியவர்களுக்கு) சிறந்த புகலிடமாகவும் இருக்கும் அனந்தாரியர் (அனந்தாழ்வான்) எனும் ஆச்சாரியரை வணங்குகிறேன். 

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !
-இராமனுஜரின் இரண்டு பாதங்கள் போன்ற (அதனாலேயே, சான்றோர் எல்லாம் போற்றி வணங்கும்) ஆச்சார்ய அனந்தார்யரின் அடி பணிந்துத் தொழுகிறேன்.

தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

இன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ஈட்டுப் பெருக்கர் கோயில் செல்வ அழகிய மணவாள மா முனிகள் -கோயில் செல்வமான பெரிய பெருமாளைக் கொண்டவரே -கோயிலுக்கு செல்வமான -ஸ்ரீ ரெங்க தனம் மா முனிகள் –

அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*

ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் :தினமும் அவர் மாமுனிகள் சாப்பிட்ட சேஷப் பிரசாதத்தை (மிச்சத்தை) உண்ணுவார். மாமுனிகள் சாப்பிட்ட வாழை இலையிலேயே சாப்பிடுவார். மாமுனிகள் மோர் சாதத்துடன் முடிக்கும் பொழுது பட்டர்பிரான் ஜீயர் அந்த சுவை மாறாமல் இருப்பதற்காக மோர் சாதத்திலிருந்தே சாப்பிடத் தொடங்குவாராம். அதனால் அவர் மோர் முன்னர் ஐயர் என அழைக்கப்பட்டார்.

இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார்.

இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.

இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .

மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.-தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.-பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்

ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.

செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,-எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது-எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.-ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது-பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது-இந்த குணங்களோடு-சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.-ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை-தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

ஸ்ரீ மா முனிகள் திருவரங்கத்தில் தமது திருமடத்தில் எழுந்தருளி இருப்பதை -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் –ததஸ் தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் ப்ராங்முகம் ஸூக மாஸீநம் ப்ரஸாத மதுர ஸ்மிதம் -பூர்வ திநசர்யை – 18-கம்பத்தின் அடிக்கு அலங்காரமாக கிழக்கு நோக்கி இனிய புன்முறுவலுடன் வீற்று இருந்தார் -என்று அருளிச் செய்துள்ளார் -இன்றும் நாம் ஆதி சேஷனுடன் இருக்கும் இருப்பை உத்தம நம்பிக்கு சேவை ஸாதித்த விருத்தாந்தம்-சித்ர வடிவில் நாம் சேவித்துக் கொள்கிறோம் அன்றோ இந்த திருவுருவத்தை –

தம்முடைய திருக்கை சொம்பை உபாதானமாக்கி இரண்டு சிறிய திரு விக்ரஹங்கள் -ஓன்று ஆழ்வார் திரு நகரியில் மூன்று அங்குல உயர நின்ற திருக்கோலம் அஞ்சலித்த திருக்கையுடன் சேவை -மற்ற ஓன்று திருவரங்கத்தில் ஞான முத்திரையுடன் வீற்று இருந்த திருக்கோலம்-ஐப்பசி திரு மூலம் சாற்றுமுறை என்று மா முனிகள் நம்மாழ்வார் திருவடிகளில் எழுந்தருளச் செய்து திருமஞ்சனம் கண்டருளப்பண்ணி நம்மாழ்வாருக்குச் சாத்தியருளிய திருமண் காப்பை மா முனிகளுக்கு சாத்தி அருளும் அழகை இன்றும் சேவிக்கலாம் -திருவரங்கத்தில் பெரிய பெருமாளே கஜ துரக சித்ரா சாமர வாத்ய விசேஷங்களுடன் பெரிய கோயில் அர்ச்சகர்கள் கைங்கர்ய பரர்கள் வந்து அமுது செய்யப்பண்ணி நடத்துவது அசாதாரண சிறப்பாகும்-காஞ்சி புரத்திலும் மா முனிகள் பரமபதித்த 50 வருடத்துக்குள் சந்நிதியும் உருவாகி -தேவப்பெருமாள் சாற்றுமுறை அன்று இங்கு எழுந்தருளி நடை பெறும் வைபவங்களைக் காணக் கண் கோடி வேண்டும்-ஸ்ரீ பெரும்பூதூரில் எம்பெருமானார் பெரிய சேஷ வாகனத்திலும் மா முனிகள் சிறிய சேஷ வாகனத்திலும் எழுந்தருளி புறப்பாடு கண்டருளுகிறார்கள்-

பூர்வாச்சார்கள் என்னும் வ்யாபதேசம் மா முனிகள் அளவில் –மதுரேண ஸமாபயேத் -என்னும்படி விஸ்ராந்தமாயிருக்கும் அன்றோ-ஆழ்வார் ஆச்சார்ய பரம்பரை பொய்கையாழ்வார் தொடக்கி பொய்யில்லாத மா முனிகளுடன் தலைக் கட்டுகின்றது -இவருடைய அந்தரங்க சிஷ்யர்கள் பல பல ஸ்தோத்ர பிரபந்தகளை அருளிச் செய்துள்ளமையும் இவருக்கே அசாதாரணம்-ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பலைகதாமநி -ஆதிசேஷன் இவர் அவதாரம்–இவை இவரது பரம விலக்ஷண திரு நாறு வீறு பற்றி அருளிச் செய்துள்ளார்கள் –விசதவாக் சிகாமணிகள் -என்று கொண்டாடுகிறோம்

நாந் ருக்வேத விநீதஸ்ய நா யஜுர் வேத தாரிண நா சாமவேத விதூஷ ஸக்யமேவம் ப்ரபாஷிதம் நூநம் வியாகரணம் க்ருத்ஸ்னம் அநேந பஹுதா ஸ்ருதம்
இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக்கடலுமீ என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ஆர் கொலிச்
சொல்லின் செல்வன் வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

ஆத்ம குணங்களில் பிரதானம் சமமும் தமமும் –சூரணை -96-

சமம் ஆவது -அந்தக் கரண நியமனம்-
தமம் ஆவது -பாஹ்ய கரண நியமனம் –
சமஸ் சித்த பிரசாந்திஸ் ஸ்யாத் தமஸ் சேந்த்ரிய நிக்ரஹா-என்னக் கடவது இறே –
ஷமா சத்யம் தமஸ் சம-என்கிற இடத்தில் –
தமோ பாஹ்ய கர்ணா நா மனர்த்த விஷயேப்யோ நியமனம் -சமோந்த  கரணஸ்ய ததா நியமனம் -கீதை -10-4- என்று இறே பாஷ்யகாரரும் அருளிச் செய்தது –
மாறிச் சொல்லும் இடமும் உண்டு –

மாறிச் சொல்லுவதும் உண்டு என்னாமல் மாறிச் சொல்லும் இடமும் உண்டு –என்று அருளிச் செய்து-பாஷ்யக்காரரே -16-1 கீதா பாஷ்யத்தில் அந்தக்கரண நியமனத்தை தமமாகவும் பாஹ்ய கரண நியமனத்தை சமமாகவும் அருளிச் செய்துள்ளார்-தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )-இரண்டு படியும் ஹ்ருத் கதமாயிருக்கையாலே இவ்வாறு அருளிச் செய்துள்ளார்

இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –சூர்ணிகை -162—அதாவது இந்த ஜகத் சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனம் வெறும் லீலை -என்றபடி –லீலை யாவது -தாதாத்விக்ம ரசம் ஒழிய காலாந்தரத்தில் வருவது ஒரு பலத்தைக் கணிசியாமல் பண்ணும் வியாபாரமே யாகிலும் –இதுக்கு பிரயோஜனம் -என்று சிருஷ்டி வியாபாரத்துக்கு பிரயோஜனமாகச் சொல்லுகையாலே-தாதத்விக்ம ரச மாதரத்தை சொல்லிற்றாகக் கடவது இந்த சிருஷ்டி ரூப வியாபாரமான சார்வ பௌமரான ராஜாக்களுக்கு த்யூதாதிகள் போலேயும் பாலர்க்கு மணல் கொட்டகம் போலேயும் தாதாத்ரவிக ரசமாய் இருப்பது ஓன்று இறே இவனுக்கு –இத்தால் –லோகவ்தது லீலா கைவல்யம்-2–1–33- -என்கிற ஸூத்ரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று–ஜகத் சர்கே லீல ஏவ கேவலா பிரயோஜனம் -என்றும் பரஸ்ய ப்ரஹ்மணோ லீல ஏவ பிரயோஜனம் -ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி–கிரீடதோ பால கச ஏவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய –என்று ஸ்ரீ பராசர பகவானும் அப்ரமேயோ நியோஜ் யசச யத்ர காம கமோ வசீ–மோததே பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்று ஸ்ரீ வேத வியாச பகவானும் நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -என்றும் இன்புறும் இவ்விளையாட்டுடையான் -என்றும் அபியுக்தரும் இவனுடைய ஜகத் வியாபாரத்துக்கு பிரயோஜனம் லீலையாகவே சொன்னார்கள் இறே-

ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் |
|-திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

———————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி -ஸ்ரீ அனந்தாழ்வான் எனப்படும் இராமநாதபுரம் சதாவதானம் முத்துஸாமி யையங்கார் ஸ்வாமிகள்-

September 20, 2025

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி –

காப்பு,
நம்மாழ்வார்‌.
மன்னு புகழ்க் கோயின் மணவாள மா மானிவன்‌
தன்னடி மீதந்தாதி சாத்தவே-யின்னமுதின்‌
செந் தமிழால் வேதச் செழும் பொருளை மா நிலத்தே
தந் தருண் மாறன் தாள் சரண்‌-

எம்பெருமானார்‌
தாடொடர்பு நின் பாற்றழுவா தவர்க்கிலை நம்‌
வீட்டை தலென்று விளம்ப வரி–நீடணையாய்‌
நின்றான் யதிபதியாய் நீணிலத்திலே யுதித்தான்
என் தான் நமக்கேது இடர்

நூல்
பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1)

செய்யனந் தாமரைப் போதுற்று றங்கும் திருவரங்கத்‌
தையனந்தாதருண் மந்திர முண்டஃதன்‌றி வெண்மை
மெய்யனந்தாழ்வான்‌ மணவாள மாமுனி மென் கழலுண்‌டு
உய்யனர்தாப மறத் தொலைத்தின்ப முறுவதற்கே (2)

உறு பொருளின்பமுந் தாயுமெய்த்தந்தையு மொண் குருவு
நறு மலரிந்திரை நாதனு மற்று மிந் நானிலத்தோர்‌
சிறுமையை நீக்கு மிராமாநுசனெனச் சிந்தை செயுந்
திறமையன் கோயின் மணவாள மா முனித் தேசிகனே
(3)

தேசிகர் தங்களடிப்போ துளத்திடைச் சேர்த்‌தி யவர்‌
பேசிய நூல் வழிச் சேர்‌ திருவாய் மொழிப் பிள்ளை யன்பால்‌
வீசிய கீர்த்தி மணவாள மாமுனி மென் கழலை
நேசியு நீணிலத்தீரு மதுட்டுயர் நீங்கடுமே
–4-

நீங்கிய தீய வினையாளர் கூறு நெறிகளெலாந்
தேங்கின வெங்கு மகிழ் மாறன்‌ வேதச் செழுந் தமிழ்‌ க
டாங்கின மன்னுயிர் கண் மால் பரனெனச் சாற்றுதலை
யோங்கின ஞான மணவாள யோகி வந்துற்ற பின்பே-
-5-

உற்றினிதோங்கு மனமே யுனக்கோருறுதி சொல்வன்
இற்றிட வேண்டும் வினைப் பூரியருடனே சித்திடேன்
அற்றவர் போற்று மணவாள மாமுனி நம்பி யருள்‌
பெற்றிடினீதரப் பெற்றிடுவார் பலர் பேரின்பமே
-6-

பேரியல் கொண்ட பெருமாளருளிற் பெருமை பெற்ற
வாரியன் கோயினங் கந்தாடை யண்ணனை யார்ந்த பின் மெய்க்
குரியனாய மணவாள மா முனி தொல் புகழைப்‌
பாரினிற் பாடிப் பயன் பெறலெற்கொரு பாரமன்றே
-7-

பாராளு மன்னர் பதி தொறும் போயவர்பால் வருந்திச்
சிராயனந்தங் கவி பாடுவீர் நறுஞ் செங்கமலத்‌
தாராளன் கோயின் மணவாள மாமுனி தாளிணையை
யாராதனஞ் செயிலெய்திடு மிங்கும் அங்கு மானந்தமே
–8-

ஆனந்த மிக்கு மணவாள மாமுனி யன்பெனக் கொண்
ஞானந்த வாத பெரியோரவன் பெயர் நாடியதாற்‌
றேனந்துமின் சுவையாம் பா வெனத் துதி செய்வரல்லா
லீனந்தரும் பா வென விகழாரிதை யென்றைக்குமே
–9-

என்றிலங் காரணங் காணா வரும் பொருளிந் திரைப் பெ
ணின்றிலங்கஞ்சன மேனி யம்மான்‌ செய் நிய மனத்தா
லொன்றிய கீர்த்தி யிராமாநுசன் பின்‌ புயிர்க்கிரங்கி
யின்றதை யோம்ப மணவாள யோகியி னெய்தினனே
–10-

எய்‌திய நள்ளிருள் போமாறு லககலிற் கடனெய்‌
பெய்தினனாஞ் சுடரேற்றிய பொய்கைப் பிரான்‌ றமிழின்‌
மெய் தெரிந்தோது மணவாள மாமுனி மேவிய திப்‌
பொய் திகழ் ஞாலத்‌ துயிர்க்கின் மீந்து புரந்திடவே–11-

புரந்ரனாமெனப் பூ பதி யாகிப் பொருண் முழுதுந்
தரந்தரம் பெற்றிட வேண்டி வந்துன்‌றனைச் சார்ந்திலனின்‌
னிரந்தர மெய் யன்புடையார் பதத் தென்னினைவு நிற்க
வரந்தர வேண்டு மெய்த் தேவே மணவாள மாமுனியே
-12-

மா மகிழ் மாறன்‌ றமிழார் கலிக் கண் வரை யெனத்தன்‌
னாமடுத்தாரியர்‌ நூலரவார்த நலி தரச் செய்‌
தே மதிவாய்ந்த நரர்க்கமுதாப் பொருளீந்தது காண்‌
கோமலி கீர்‌த்தி மணவாள மாமுனிக் கொண்டனின்றே
-13-

கொண்ட தன்னுள்ளத் திருள் போயிறை யருள் கூடி யுய்யப்‌
பண்டை நன் ஞான நிறை விளக்கேற்றிய பண்பினன் சீர்‌த்
தொண்டர்கள் போற்றுங் கடன் மல்லை நாதன் றுணை யடியை
யண்டி நின்றேந்து மணவாள மாமுனி யாரியனே–14-

ஆரிருண் மாண்ட பின் கோவலுண் மா மலராள் பதியை
நேரினிற் கண்டு நெடுந் தமிழ் பாடிய நின்‌மலன் றன்‌
சீரினிற் செல்லு மணவாள யோகியைச் சிந்தை செயில்‌
வேரினிச் செல்லாதறுப்பான வனம் வினைகளையே
–15-

வினையாளர் கூறுஞ் சமயங்கடோறும் விழைந்து முத்தி
நினைவேதுந் தோன்‌றற் கிடந்தந்திலவென நீக்கி யரி
தனையே துதிக்கு மழிசைக் கிறைவன்‌ றமிழ்ப் பொருட்டே
னினையே பருகு மணவாள மாமுனி யென் குருவே-16-

குருகை வந்தோங்கு மகிழ் மாறன் வேதக் குரை கடல் க
டருந் தொடைச் சொல்லமுதுட் கொடு கோயிற் றடவரை நின்‌
நிரும்புவிமீதுயிர்க் கூழின் புறப் பொருளே பொழிந்து
வரும் புயல் காணு மணவாள மா முனி மாதவனே-17-

மாதவன் வேங்கடத் தெவ் வுருவாக வுமாவனென
வோதிய சேரலர் கோன் குலசேகரன் ஓண்டமிழ்க்கண்
ஆதரங் கொண்ட மணவாள மாமுனிக் கனமிலரிப்‌
பூதலத்தே வினைக் காளாக நின்று புழுங்குவரே
(18)

புழுங்கும் வழுதிப் பெருமான் மனத்‌திருள் போக வின்பத்‌
தழுங்கும்படி மால் பரமென்றுணர்த்தும் அமலனின்சொல்‌
விழுங்குங் குணங் கொண் மணவாள மாமுனி மேய பின்பே
யொழுங்கும் பொறையுங் குணமுமறிவு முயிர்க்குற்றவே —
(19)

உயிர்க்கின்ப நல்கும் பொருட்டன்று வில்லிபுத்‌தூரெழுஞ் செங்
கயற் கண்ணி யாயர் தங் கன்னிகையா யநுசாரஞ் செய்து
தயிர்க்கஞ்சி யாடும் பிரான்‌ றிருப் பள்ளி யிற்றந்த தமிழ்ப்‌
பயிர்க்கம்புதங் காண் மணவாள மா முனிப் பண்டிதனே-
-20-

பண்டரும் வேதப் பசுந் தமிழ் மாலையும் பைந் துளவத்‌
தண்டொடையுங் கொடு தென்னரகங் கேசனைத் தாழ்ந் தெழுப்புந்
தொண்டர் தம் பாதத் துகளடிப் போதைத் தொழுமவரை
மண்டி நின்றேத்து மணவாள மாமுனி வையகத்தே
(21)

வையம் புகழ வரு பாணர் கோனடிவாழ்த்‌து மெங்க
ளையன் குருகை மணவாள மா முனியன் பெவர்க்குஞ்‌
செய்யுங் கிரிசைகள் கேளீரிகத்‌தினிச் சென்‌ம வினை
நையும்படி செய்தழியாத முத்தியு நல்‌கடுமே
–22-

இடுமே வினைக் கணிடுவதல்லா னரகெய்து வித்த
விடுமே பவமிப் பவத்தை மெய்யென்று விரும்பிய வத்‌
தொடுமே யுழலுமவர்‌ தம் முறவை யொழித் தருட் கண்‌
கொடு மேனிலவு மணவாள யோகியைக் கூடுளமே (23)

கூடாரை வெல்லும் பெருமாளரங்கர் குணங்களைக் கொண்‌
டாடாவவரதருள் பெற்றிருப்பினு மாங்கவர்க்குன்‌
னேடார் மலர்ப் பதத்துண்டேற்றொடர் பவரீவர் முத்தி
வீடாருமின்ப மணவாள மா முனி மெய்ம்மை யிதே–
24-

மையார் கருங்கண் மடவார்‌ மயக்கின்‌ மயங்கியவர்‌
கையாளினின்று மவமே புரிந்துங்கலங்‌கி யிந்தப்‌
பொய்யா முலகிலுழல்கின்‌ற வென்னைப் புரந்திடுத
லையா கடமை மணவாள மா முனி யற்புதனே–25-

அற்புத நங்கை வடிவினின்‌றே மடலானறையூர்ப்‌
பொற் பமர் பூமகள் கேள்வனைப் பாடிப் புகழ்ந்திடு நங்‌
கற்பக மங்கைப் பரகாலன்‌ செஞ்சொற் கவிகளினு
ணற் பொருடேரு மணவாள மாமுனி நாயகமே–26-

நாயக நங்கை மகவெனத் தோன்‌றிய நம்பி யன்றிப்‌
பேயக மற்றொரு செய்வந் தொழாதெனப் பேசிய மெய்த்‌
தூய குணத் திருக்கோளூரறை தன் றுணை யடியை
நேயம் வைத்தேத்து மணவாள மா முனி நீணிலத்தே–27-

நிலத்‌தின்‌ மறைப் பொருண்முற்றுந் தமிழினிகழ்த்திய கோ
நலத்தின் பெருமை யவன் பாவருமை நவை யிலுயிரப்‌
புலத்திற் றெரிக்க மணவாள மா முனி போந்திலனேற்‌
றலத்திற் புதைத்த பொருள் போல நின்று தளர்வுறுமே–28-

தளரா ரிடுக்கண்கள் எய்‌தினு மின்பங்கள் சார்ந்திடினுங்‌
கிளரார் குருகைப் பெருமான்‌ மறையிற் கெழுமியசொல்‌
வளரா நிலவும்படி செய்த நாதமுனி மலர்த்தா
ளுளராரையுஞ் சொன் மணவாள யோகியை யுன்னினரே
-29-

உன்னற்கரிய மறைகளை யாயிர மொண் டமிழாற்‌
பன்னற்குலகில் வருஞ் சடகோபனைப் பத்தி யென்று
மன்னப் பதிவைத்திறைஞ்சு மணவாள மாமுனியா
மென்னப் பனுண்டெனக் கிங்கொரு நாளும் இடரில்லையே–3
0-

இட.ங்கொண்ட கீர்த்தி மணவாள மாமுனி யென்னி பம்பூச்‌
தடங்கொண்ட தென்குருகாபுரி மாறன்‌ றமிழ் மறையின்‌
நிடங் கொண்ட வின்பப்பொருண் மதம்பாயச் சினத்துந்து முக்கோ
லுடன் கொண்வந்த வப்போதற்றவா திய ரூக்கங்களே-31-

கள்ளார் மலர்ப்பொழிற் றென்னரங்கேசனைக் கண்டு தொழு
துள்ளாருறவை யொழித்‌ துய்யக் கொண்டார் தமொண் கழற்கண்‌
விள்ளாத வன்பன் மணவாள மாமுனி மென்பதநீர்‌
கொள்ளா ரிகத்தினிற்றள்ளார் பிறப்பின் கொடுமையையே
-32-

கொடுப்பா னருளைக் கொடுத்‌தும் வினைகள் குலைந்திட வந்
தடுப்பா னெதிரினடுத்‌ தின்ப மென்னு மலை கடற் கண்‌
மடுப்பானிகத்தின்‌ மடுத்ததன் பின் றிருமால் பதத்தில்‌
விடுப்பான்‌ குருகை மணவாள யோகியை மேவிடினே
-33-

மேவார் தமக்கிலை யெங்கோன ரங்கன் விரை மலர்ச் செம்‌
பூவார் கழலைப் பொருந்தி நல்லின்பம் புசித்‌திடுத
லாவாவெனத் திரிந்தாலென் பயனுண்டடை மனமே
பாவார் குருகை மணவாள மாமுனி பாதத்தையே
–34-

பாதகராயினுந் தஞ்ச நின்றாளெனப் பற்றிலவர்‌
மேதக வாய்ந்து நல்லின்ப மெய்ஞ்ஞானம் கண்‌ மேவியிகத்‌
தேதகவோடழியா முத்தராக விருப்பரென்றும்‌
போதகமங்கொண் மணவாள மாமுனிப் புண்ணியனே
-35-

புண்ணிய நோன்பு கண் முற்றுந் துறந்து புகலெனையே
நண்ணுதி யானினைச் செய்கு வல் பாவநவை யறவென்‌
றண்ணன் முன்போதிய நீதியெலா நீயவதரிக்க
மண்ணினிற்றேர்ந்ததுயிர் காண் மணவாள மாமுனியே–36-

முனிந்தாலும் தள்ளி மிதித்தாலும் சேயனை முன்பவடன்‌
மனந்தானிரங்கும் படிக்கமுமல்லது மாட்டகலா
தினன்றானிகர்க்கு மணவாளமாமுனி யென்னப்ப நீ
சினந்தாயெனினும் விடாதுன்கழலை யென் சிந்தனையே-37-

சிந்திக்க வின்பம் தருமரங்கேச ன் திருவருளால்
பந்தித்த தொல் வினை தீர் மணக்கால் நம்பி பாதத்தையே
வந்திக்குங் கோயின் மணவாள மாமுனி வைபவ நும்‌
புந்திக்கணின்பம் புகட்டும் புலவீர் புகழுமினே–
38-

புகழும் பொருளும் பொருந்தி யிப்பூதலம் போற்ற வின்பச்‌
தகழுமவரு மழியா திருந்திலராதவினால்
இகழும் புவி வாழ்வினை வெறுத் துன்னடி யெய்‌தி யன்பிற்‌
றிகழும்படி மணவாள மாமுனி செய்தருளே
-39-

௮ருளாழி யேந்தும் பெருமான் சமயத்தணி விளக்கா
லிருள் யாவு நீக்கும் யமுனைத்‌ துறைவ னிணையடி தன்‌
பொருளா யுகந்த மணவாள மாமுனி பூங்கழலைக்‌
தெருளார்ந்து இறைஞ்சு மவர்க் கினி மேலில்லை சென்மங்களே-40-

சென்‌மப் பெரும்பிணிக் குள்ளுற்றுழலுஞ் சிறியவர் தங்‌
கன்மக் கடுங் கனற் கோர் கடைக் காரெனக் கண்ண பிரான்‌
றன்மப் பயிர்க்கு நல்வித்தெனத் தோன்றிய தாழ்விலியுள்‌
வன்மத்தை நீக்கு மணவாள மாமுனி வண்மை நன்றே–41-

வண்மைப் பராங்குசன் றாளே கதியென வாழ்த்‌து மனச்‌
திண்மைப் பரம குருவாயுதித்த திருவரங்கத்‌
துண்மைப் பொருடேர் பெருமாளரைய ரொளிர் கழல் சேர்‌
தண்மைக் குணத்து மணவாள மாமுனி தாள் சரணே -42-

தாளானிலம் பண்டளந் தோனழகன்‌ றனக் கன்பு கொண்‌
டாளாகி நின்ற திருமாலை யாண்டா னருளமுதுண்‌
ணீளார் குணத்து மணவாள மாமுனி நீர்மை சொல
மாளாதிகத் திற்றலை யாயிரங் கொண்ட வாளகிக்கே-43-

வாசம் கலந்த துழாய் மாலை சூடி வரும் பெருமான்
நேசம் கலந்த திருக்கோட்டி நம்பி நிலை யுணர்ந்து
பேசும் புகழெம்மிராமா நுசனடி பெற்றிலகு
தாசன் குருகை மணவாள மாமுனி தாள் கதியே–44-

கதி காட்டு நூலிதுவோ வதுவோ வெனக் கற்று நுங்கண்‌
மதி காட்டும் பல் வழிச் சென்றுழல்வீர்‌ திருமால ருணற்‌
பதி காட்டு மின்பப் பயன் காட்டி மாறன்‌ பழ மறை யின்‌
றுதி காட்டுங் கோயின்‌ மணவாள மாமுனி சொன்னலமே–45-

சொல்லான்‌ மறைப் பொருளெல்லாந் தமிழிற்று லங்கிடச் செய்‌
நல்லார் குருகை வகுளா பரண னகு மலர்த்தா
ளல்லா திறைஞ்சாத் திருமலை நம்பி யடியலதுள்‌
புல்லான்றுதியான்‌ மணவாள மாமுனி பூதலத்தே (46)

பூதங்கவர் தெறுக்கால் கொட்டுலை கவி போன்‌ற நெஞ்சை
யேதம் படர் புலத்தூடுற்றுழலா திருத்‌தி யின்‌பப்‌
போதம் பயிற்றிய மாறனேர் நம்பி புகழ் கொளிரு
பாதம் பரவு மணவாள மாமுனி பண்பினிதே (47)

பண்பாடளி குடைந் தூதும் துளவப் பசுந் தொடையோ
டொண் பா வணியலணி தேவராசனுகப்ப வெழு
நண் பார்தவத்துத் திருக் கச்சி நம்பி நலங்கொடிந் தத்‌
திண் பார் புரக்கு மணவாள யோகி யென் சேம வைப்பே–48

வைப்பாய வான்‌ பொருளெல்லா முனது மலரடி யென்‌
றெப்போதும் வாழ்‌த்தி யிருக்கு மெய்ஞ்ஞானிய ரீட்ட மெனை
பிப்பாவியா ரென்றிகழா தணைக்கு நல்லின்ப மதி
தப்பாதெனக்கு மணவாள மாமுனி த்ந்தருளே (49)

அரு மா மறைப்பொருண் முற்றுந் தமிழிலருளிய வெம்‌
பெருமான் குணங் கண்டுவந்து வந்தேத்‌தும் பெரிய நம்பி
யிரு மா மலர்ப் பதத்துள்ளன்பு கொண்ட வெழிற் குருகை
வரு மா தவத்‌த மணவாள யோகி யென்‌ மா நிதியே (50)

நிதியா மறை வீந்துலகங் கலியா னிரப்புறுங்கால்‌
விதியாரனை யினருளா லெழுந்த விமலனின்ப
மதியார் குணத் தெம்மிராமாநுசன்‌ றன்‌ மலரடியே
கதியா யுகந்த மணவாள மாமுனி கார்முகிலே (51)

காரேய் கருணை யிராமாநுசன்‌ றன் கழற் கன்பினர்‌
யாரே யெனினு மவர் பான் மருவு மருங்குணத்துச்‌
சீரேய் குருகை மணவாள மாமுனிச் செல்வன்‌ றன்‌ வண்‌
பேரே துதிக்கிற் றருவானழியாப் பெரும் பதமே 52-

பெரும்பதம் வேண்டி யென் போலியர் போனிதம் பேதற்று நீ
கரும்பினு மின்சுவைப் பாமாலை தந்து கடலுலகந்
தரும் புகழ் கொண்ட விராமாநுசனடி தாழ்ந்திரந்து
வருந்திய தென்கொன் மணவாள யோகி யுன் மாய நன்றே–53-

மாயப் பெரும் பிணிக்குள்ளுற்று நாளுமடி தருமிக்‌
காயத்தை யான்‌ பரித்தேங்காது நிற்கக் கடைக் கணிப்பாய்
தா யொத்த வின்பத் திராமாநுசனடி தாழ்பவர் பா
னேயததைவைக்கு மணவாள மாமுனி நீ மகிழ்ந்தே –54-

நீ மகிழ்ந்து என் பாலருள்‌ செய வேண்டுவ னீணிலத்தோர்‌
கோ மகனாயினுமல்லா திரக்கும் குறை யுறினும்
நாமன நின் திரு நாமம் குணகணவின்‌ றெணத்தென்‌
பா மலி கீர்த்தி மணவாள மாமுனி பண்‌ணுதற்கே–55-

பண்ணார் பொழிலரங்கம் முதலாய பதிகளொரு
கண்ணாய் மவிந்த விராமாநுசற் கொடு காமரு சீர்
எண்ணார் பரவு மணவாள மாமுனி யெய்‌திய பின்‌
றண்ணார் மலர்க்கணிரண்டாகி நின்று தளிரந்ததனவே–56-

தளிர்த்தது சீலத்திராமாநுசன்‌ றன்‌ தரிசனமே
குளித்தது மன்னுயிரின்பக் கடற்குட் கொழுந் தமிழ்ப் பாத
துளித்தது நான்மறை யோடு உலகெங்கும் துழாயவன் பேர்‌
களித்தது கோயின்‌ மணவாள யோகியைக் கண்டவன்றே–57-

கண்டவ ருள்ளக் கசடறுத் தாட் கொளுங்கார் முகினேர்‌
மண்டலத் தோங்கு மிராமாச முனி வைபவ முட்‌
கொண்டறத்தே தளிர்‌ததாய் யுயிர்க்கீயுங் குருகைப் பிரான்‌
றண்டமிழ்ப் பாவை மணவாள மா முனி தண்ணளியே—58-

அளிக்குமினித்தாய கடுற்றுயிருழல ல்லலின்‌றிக்‌
களிக்குமது நல்லறத்தே தளிர்‌த்திடக் கண்டு மண் விண்‌
டுளிக்கும் புகழெம்மிராமாநுச னருட்டுய்த்‌ திரை வாய்க்‌
குளிக்கும் தவத்து மணவாள யோகி குணத்தியல்பே–59-

குணமேது தொண்டுட் குறியேது வேதக் கொழுந்தெழு நன்‌
மணமேது ஞான மணமேது தீய வலி கொள் வினைத்‌
தணவேது தன்‌ம நினைவேது பாரிற்றனமென வந்
தணவா திருக்கின்‌ மணவாள மாமுனி யாருயிர்க்கே (60)

ஆருண்டெனக் கிணை யென்றைவர் முன்‌பரு ளச்சுதன்‌ றன்‌
பேருண்டருங்கதி சேர்ப்பதற் கென்றெணும் பேய் மதியீர்‌
பாருண்ட கீர்த்தி மணவாள யோகி தன் பற்றிலர்க்குத்‌
தாருண்டு நீருண்டு சோறுண்டு பேருண்டு தாயுமுண்டே (61)

தாயுண்டு பண்ணிய தந்தை நீ யென்‌றிருப்பார் தமக்கு
வாயுண்டு நற்கதி தா வென்‌று கேட்க வோர் வண்மை யற்ற
தீயுண்ட நெஞ்சத் தென் போலியர்க் கென்னுண்டு சென்‌றிரக்க
நீ யுண்டு பண்ணின்‌ மணவாள மாமுனி நேருமன்‌றே (62)

நேரோதனத்திற் கிரங்கி நைந்தாயயினேர் விழியார்‌
வாரேர் தனத்திற்கவல முற்றாயிது வன்‌றி செஞ்சே
தாரோதுங் கீர்த்தி மணவாள மாமுனி தாணிலையு
ளாரோடுறவுண்டு லைந்தாய் வலி யுனக்கியா துளதே (63)

உளராகவென்று நினைந்தே யுரைப்பர் பல்லோர் தவத்‌துட்‌
டளரா வருந்துவர் வீணான தெய்வந் தனைப் பணிந்து
வளரா விரங்குவர் பாரின்‌ மணவாள மாமுனிவன்‌
கிளரா ருயிர்க்கின்ப நல்க வந்தேய்ததைக் கேட்டுமென்னே (64)

கேட்டா கமங்களுட னீறணீந்திரன்‌ கேடிலியென்‌
றூட்டா தரத்துலைந் தின் பா மறை தேர்ந்துகந்து வில்வக்‌
கோட்டூடு நின்று குதித்து வெங் கூற்றைக் குதித்த வெம்பார்‌
மாட்டோங்கு மன்பிற் சிறந்தோன் மணவாள மா முனியே (65)

மா மதங் கொண்ட பர வாரணங்கண் மடிய வெழுந்
தே மலி சிங்க மிராமாநுனடி யென்ன நின்ற
பூ மலி கீர்‌த்தி முதலியர் கோனருட் பொற்பை யுன்னிப்‌
பா மகிழ்ந்தோது மணவாள யோகி யென் பாக்கியமே —66-

எனக்கீந்த பேறிந்த நாலூரவனு மின்‌றெய்த வரு
டனத் தொன்று பூ மகள் கேள்வா வென்றேத்திய சற்குணத்தெம்‌
மனத்தொன்றி நின்‌ற வக்கூரேசன் றாணிலை வாழ்த்‌திடு நல்‌
லினத்தொன்று கீர்த்‌தி மணவாள மாமுனி யென்னப்பனே- (67)

என்னைப் பவக் கலிக்குள் ளுற்றுழலா தெடுத்தருள்வான்‌
மன்னித்‌ திகழ் வள்‌ளல் பட்டர்‌ தஞ்செய்ய மலரடியைப்‌
பன்னிப் பரவு மணவாள மாமுனி பான்மை யிலொன்‌
றுன்னப் பவம் போமெனி லென்னுறா தருளுற்றவர்க்கே (68)

உற்றார் கலிக்கணுழல்வார் தமக்குதவோர் தருவாய்க்
கற்றா நிகர்க்குங் குணங் கொணஞ்சீயர் கழறிய நூல்‌
பெற்றார்க்குமோது மணவாள மாமுனி பேர் சொலவாய்‌
சற்றே திறக்கிற்றிறந்திடு முத்தித் தலைக் கதவே (69)

தலையாயிரங் கொண்ட சேடன் றன்‌ மேற்றுயிறண்டுளவ
மலையார் புயத்‌துத்‌ திருவரங்கேசன்‌ வடிவெனவிவ்‌
வலையார் நிலத்‌திற் பொலிந்த நம்பிள்ளை யருளினுக்கோர்‌
நிலையாய கோயின் மணவாள யோகி யென்னெஞ்சத்தனே (70)

நெஞ்சிற் கறை யற்றிடத்‌ தமிழ் வேதத்‌துணீள்‌ பொருளை
யஞ் சொற்களால் வெளியாக்கும் பெரிய வாச்சான் பிள்ளையைக்‌
கொஞ்சிப் பரவு மணவாள யோகி முக்கோல் கொண்ட திக்‌
கஞ்சத்தலைப் புவிமீதுயிர்க் கின்பினைக் காட்டுதற்கே –71-

காட்டாவின்பின்‌ செஞ்சிலம்படி நோவக் களித்தெழுங்கா
ரூட்டாக மங்கை யுறை மார்பரங்கனுகக்க விரு
பீட்டாளர் தந்த வடக்குத்‌ திரு வீதிப் பிள்ளை யந்தாள்‌
சூட்டாற் பரிக்கு மணவாள யோகி யுட் சோர்விலனே (72)

சோர்வுற்ற மன்னுயிர்க்குள்ளன்பு தூண்டத் துணிந்து மறைச
சார்வுற்ற மெய்ப் பொருளெல்லாந் தமிழிடைத் தந்த நந்தாத்
தேர்வுற்ற ஞானத் துலகாரிய னருட் செவ்வி முற்று
மார்வுற்ற சிந்தை மணவாள யோகி யுண்டாள்வதற்கே –73-

ஆளாகி நிற்பவர்க் கில்லை நெஞ்சே யிகத்தல்லலென்‌று
நீளாசலாம் புயத்‌ திந்திரையோடுறை நேமி யங்கைக்‌
காளாம்புதத் தெந்தை நல் வீட்டினின்பமுங்கைக் கொள்வராற்‌
றாளாளன்‌ கோயின் மணவாள மாமுனி தாளிணைக்கே (74)

இணையாருனக்குண்டு நெஞ்சே யறிவிலிதுவதுவென்‌
றணையா தணைந்தவவரோ டுறவறலன்‌றி யன்பிற்‌
றுணையாங் குருகை மணவாள மாமுனி தொண்டர் தங்க
டிணையாரிடந் தொறும் போய்ப் பணிவானருள் செய்தனையே (75)

நையேனினி யிந்த நானிலத்தே யொளிர் ஞாயிறென
மையேயகற்றித் திருவாய் மொழிப் பிள்ளை வண்மை சொல்லி
மெய்யே பரவு மணவாள மாமுனி மேற் றுதிகள்‌
செய்யேனெனினுமுள் செய்தவர் தாடொழச் சிந்தித்தே –76-

சிந்தாகுல மறுத்தெங் கோனரங்கன்‌ றிருவடி யுட்‌
டந்தாதரத்திற் பணி பொழுதோர் துயர் சாற்ற வுன்னிச்
செந்தாதிலகிய வாடை முக்கோல் கொடு சீர் யதியாய்‌
வந்தானுலகை மணவாள மாமுனி வாழ்விக்கவே (77)

வாழ்வைப் பெரிதென வெண்ணி நையேலதுவான்‌ மினினும்
தாழ்வுற்றழி தருந்தன்மை யதாதலிற் சார்ந்திலர்‌ நூல்‌
சூழ்வுற்ற ஞானியர் நெஞ்சே வெறுத்தச்சுதனருட் க
ணாழ்வுற்ற கோயின் மணவாள மாமுனிக்கன்பு கொள்ளே (78)

அன்பே யுருக்கொடு நின்‌றது போனின்றனைத்‌ தயிர்க்குந்
துன்பே யகற்றி யறத்தே பயிற்றி யித் தொல்லுலகி
லின்பே கொடுக்கு மணவாள மாமுனி யிங்கு வந்த
பின்பே வருத்தந் தவிர்‌ந்தாரெமனும் பிரமனுமே (79)

மன மாசகற்றத் திருவரங்கேசன் மகி தலத்திற்‌
றனமா யுகந்த விராமாநுச னிரு தாளிணை மீக்
கென மா வெழுந்து மணவாள மாமுனி காதல் கொடு
தினமே பொழிந்த கலி யன்றி யுண்டு கொல் செப்புதற்கே–80-

செப்பார் குணத் தெம்மிராமாநுசன்‌ தன்‌ திருவடியை
யெப்போதும் வாழ்த்து மணவாள யோகியை யேத்தி யென்றுந்‌
தப்பாதவன் செய் திருவாய் மொழி நூற்றந்தாதியை யுள்‌
வைப்பார்‌ தமக்கிணை பாரீர் எவருண்டு மாதலத்தே (81)

தலத்தாரணந் தமிழ் தந்த நம்மாழ்வார் சரித்‌திர நூல்‌
வலத்தாசிரியா்‌ தம் வைபவ மன்னர் வரன்‌ முறை யுண்‌
மலத்தாசகற்ற வுபதேச ரத்‌தின மாலை யென்றே
நலத்தாலுரைத்தான்‌ மணவாள மாமுனி நானிலத்தே (82)

நானினி வேண்டுவதுண்டு கொன் முற்றுணர் நாயக வுன்‌
பானினை வொன்றிப் பரவுவதன்றி யோர் பற்றுமின்‌றி
மேனிலை காண மணவாள மாமுனி மெய்ச் சுடேரே
நீ நிழல் போற் பிரியாதுறு மென்னுள நேர் செயவே (83)

செயலேதுமின்றி வருந்துயிருட் கொடு தேர்‌ தரவோர்‌
புயலேய் குணத் துலகாரியன்‌ செய்த பொருவில் கலை
யயலே புதைத்த மணி போற் கிடந்த வரும் பொருளி
னியலே விரித்தான்‌ மணவாள மாமுனி யெந்தை வந்தே (84)

எந்தை யிராமாநுசனடிப் போதை யெப்போது மெண்ணுஞ்‌
சிந்தையன் கோயின்‌ மணவாள யோகி தெளிதர முன்‌
செந் தமிழ் வேதத் தரும் பொருளீட்டுள சிர்மை யெலாந்
தந்தனன் காண் பிரமாணத் திரட்டென்ற சாத்திரத்தே (85)

சாத்‌திரங் கற்றும் பிறர்க்குரைத்தும் மதிற்றா மடங்காக்‌
கோத்திரரோடும் குலாவுதல் விட்டுக் குருகைப் பிரான்‌
வாய்த்திரங் காட்டு மறைப் பொருண் முற்றும் வழங்க வந்த
பாத்‌திரன் கோயின்‌ மணவாள யோகியைப் பற்று நெஞ்சே (86)

பற்றா மனிதரைப் பற்றிய தாலென் பயனுளது
நற்றா யென வெழுந்தாரு யிர்க்கின்ப நலங் கொடுக்குங்‌
கற்றார் பரவு மணவாள மாமுனி நான்‌ மலரை
யுற்றா லொழியும் பவத்தே வருத்து நும் மூழ்வினையே–87-

ஊழிக் கடுங்கனற் குள்ளுற்ற மான் போலுலைந் துலைந்து
தாழிப் பெரு வயிற்றோடுழல்வீர் நிதி தா வெனப் போ
யாழிப் புவிக்கரசானவர் பாலிரந்தால் வருமோ
வாழிப் பதநம் மணவாள யோகியை வாழ்த்தலற்றே–88-

௮ற்றவர் போற்று மணவாள யோகி யருளிய நூன்‌
முற்றுமிந் நூலிடை முற்றிலவே யெனின் மூதுலசைச்‌
சிற்ற வரங்கை யுட் சேர்ப்பதற்கா மெனிற் சிந்து வைக்கை
யிற்றவர் நீந்துதற்கே யுமென்றாலிதிலே யுமன்றே–89-

ஏயும் குணத்து மணவாள யோகி யிருந் தெண்மரைத்‌
தீயுமு யிர்க்குத் தன்‌ போலருள் செய்ய வெண்டிக் கயங்க
ளாயும் பரமத சிங்கங்களாயு மமைத்திலனேன்‌
மாயன் பொருளென்று ரைப்பதர்காங் கொலிம் மானிலத்தே-90-

மானிலத்தோங்கு தென்‌ சீ வர மங்கை வளம்பதி யுண்‌
ஞானியர் போற்று மிராமாநுச முனி நாயகத்தை
யீனமிலென் போலியர்‌ தமைக்காக்க வினிது வைத்தான்‌
கோனிலை கொண்ட மணவாளயோகி குணக்கடலே–
91-

கடலாடை மான்‌ முலை போன்‌ மலி வேங்கடக் கார் வரைக் க
ணடலாழி யங்கைப்பெருமான் பணி கொடிங் காருயிர்க
ளிடராழி நீந்த விராமாநுசமுனியை யிருத்திச்
சுடராயிலங்கு மணவாள யோகி சுகிர்‌தமென்னே-92-

சுகத்தே யுலகத்‌துயிர் வாழ்‌ தரத் திருவுள்ளம் வைத்திச்‌
செகத்தே பரவத்தூர்ப் பட்டர் பிரானெனுஞ் சீயரைக் கொண்‌
டகத்தேய் பவத்தை யறுத்து விட்டான் குருகாதிபன் சொன்‌
முகத்தே யிலகு மணவாள யோகி முறை தெரித்தே–93-

முறையோர்ந்திலா துழல்வார்‌ தமைக் கண்டுமுதமொடவர்‌
கறையே யகற்றி யுணர்வே பயிற்றிக் கதி தருவான்‌
குறையேதுமின்‌றி நம் கந்தாடை யண்ணனைக் கோயிலுக்கோ
ரிறையாக வைத்த மணவாள யோகி யன்பென் சொல்வனே–94-

சொல்லு மெறும்பி யப்பா வொடப் பிள்ளாரைத் தூவழிக் கட்‌
செல்லுங் குணத்‌தி னப்பிள்ளேயை நீரிச் செகத்‌துயிர்க
ளல்லும் பகலு மரியே துதித்திட வாக்குவிப்பா
னில்லு மினென்றான்‌ மணவாள மாமுனி நேசம் வைத்தே–95-

நேசித்து நம் திருமாலின் சமய நெறி யிகழ்ந்து
பேசித் திரியும் பிறமதத் தீயர்‌ தம் பேரடக்க
வாசற்ற பிரதிவாதி பயங்கர வண்ணனுக்கோர்‌
தேசைக் கொடுத்தான் மணவாள மாமுனி சிந்தை செய்தே-96-

சிந்திக்க விந்த மணவாள மாமுனி செய்தது போ
னந்‌தித்‌ திரைப் புவி மீதெவர் செய்தனர் நாமினி மேற்‌
பந்தித்த தொல் வினைக்குள்ளுற்று வாடும் பரிசுளதோ
வந்தித்து வாழ்த்‌தி வழி படுவாமென்‌ மட நெஞ்சமே–97-

நெஞ்சே நமக்கு மணவாள மாமுனி நீணிலத் திற்‌
செஞ்சேம முற்றிடச் செய்த விந் நன்‌மையைச் சிந்தித்திடி
னஞ்சேய் வினையு நலமாய் வீடுமொரு நாளுமதற்‌
கஞ்சேல் வருந்தே லிருப்பா யவன்‌ றனருள்
நயந்தே–98-

நயவேனினி யொரு தெய்வத்தை நாளுமந் நான்‌ மறையி
னியலே யுணர்த்து மிராமாநசனெனி லின்‌பமுற்றி
மயலே பெருகு மணவாள யோகியை வாழ்த்‌துவர் த
மயலே திரிந்தவர்க் காட் செய்ய வென்னுள மைந்ததுவே–99-

அமையார் புயத்திந்திரை வாழு மார்பனரங்கன் பதந்‌
தமையே யடைதனின்‌ றண்ணளியால் வரிற் சார்வதல்லா
லெமையே யழைத்த வனீயினும் வேண்வதில்லை கண்டாய்‌
கமையே நிறைந்த மணவாள யோகி யென் கற்பகமே–100-

கற்புக்கணிகலமாய மின்னார்‌ தம் கணவனல்லா
லற்புக் கிடங்கொடார் நற் பரனெய்தினு மன்னரைப் போற்‌
சொற்புத்தி நின்னடிப் போதன்றி யொன்றைத் தொழாது செல்வப்‌
பொற்புற்ற கோயின்‌ மணவாள யோகிப் புகழ்ப் பொருளே–101

பொருளைப் புதல்வரைப் பூமியை மாதரைப் போற்ற வுன்னி
மருளுற்றுலகில் வருந்து நெஞ்சே பொன் மதிலரங்க
னருளைப் புநைந்த மணவாள மா முனிக் கன்பு கொண்டாற்‌
றெருளுற்ற ஞானஞ் செறிவுற்று நற்கதி சேர்குலமே- (102)

சோராதகன்ற பெண்ணாண யிர்ப்பின்‌றி வந்தே பதிபாற்
றாரா யருளை யென வேண்டல் போல நின்றாளடைந்தேன்‌
சீரார் குணத்து மணவாள யோகி யுன்‌ சிந்தை யென்னோ
வோரா தகற்றிற் கதி வேறிலை யெனக்குத்தமனே– (103)

உத்‌தமன் கோயின்‌ மணவாள யோகியை யுன்னி யுன்னி
நிச்சமும் போற்று நெறியினர் தாடொழ நேச நெஞ்சில்‌
வைத்தவர் தாமத்‌ திருநாட்டிடையின் மலர்‌மகள் கோன்‌
கைத் தலத்தாலணைப் புண்டிருப்பாருட் களிப்படைந்தே (104)

அடைந்தேன் குருகை மணவாள மாமுனி யம்புயத்தாண்‌
மிடைந்தே யினியெனை தீண்டாது தீய வினை கடலைக்‌
கடைந்தேய முதிமையோர்க் கருண் மாயன் கதி பெற உள்‌
ளுடைந்தேய்‌ வருத்த மொழிந்தேனிகக் தெவரொப் பெனக்கே (105)

எனக்குற்ற செல்வ மணவாள மாமுனி யென்‌றிருப்பார்‌
மனக்குற்ற நீங்கி மலமற்று ஞான வழிக்கணின்று
செனக் குற்ற மாற்றிப் பின்‌றம் போலருள் பெறச் செய்து நம் மா
றனக்குற்ற மெய்ப்பதம் வேண்டிய போதவர் சார்குவரே – (106)

சார்தேனுனது சரணாம்புயத்தைத் தலைக் கொடிவ
ணார்ந்தே னுனதடியார்‌ தமக்காட் செய வன்பர் தந்நோ
யீர்ந்தே யருளு மணவாள யோகி யிதிற் பெரிதோ
பேர்ந்தே யொளிரும் திரு நாட்டிடை யுறும் பேரின்பமே (107)

இன்புற்ற ஞானத்தி ராமாநுசன்‌ தன் இணை யடிக் க
ணன்புற்று நீ யிங்கிருப்பது போல் அவனும் தினமும்
துன்பத்தை நீக்கி மணவாள யோகி யித் தொல்லுலகிற்‌
புன்பற்ற கற்‌றப் புனைந்தேன் சிரத்‌து நின் பூங்கழலே -(108)

பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1

———————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ஷட்சதி-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -ஸ்ரீராமாநுஜன் 263-265-ஸ்ரீராமாநுஜன்-277-

July 8, 2025

ஸ்ரீராமாநுஜன் 263-265—30/58-ஸாதாரண ஐப்பசித் திருமூல மலர்-3-11-1970.

ஸ்ரீ சைலேச தயா பாத்ர ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரக்ரியை எப்படிப்பட்ட தென்றல்; ஸ்ரீசைலேச என்பதற்கு,
சகார -ரேப – ஈகார சகார -ஐகார, லகார-ஏகார, சகரர அகார-என்று வர்ண க்ரமம் சொல்லுவோம்; இதே ரீதியில் ஸ்ரீசைலேசதயாபாத்ர சுலோகத்திற்கு வர்ண க்ரம அடைவில்
ஒவ்வோரெழுத்தை ஆதியாக வைத்து
: இந்த ஸ்தோத்திரம் அமைக்கப் பட்டிருக்கிறது.

1-(சம் நேர மித்ர )* சம்நோ மித்ர: * என்றும் * சம்நோ பவத்வர்யமா-என்றும் சொல்லுமவர்கள் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கட்டும் : அடியேனுக்கு அத்தகைய உக்திகளில் சிறிதும் ஆஸ்தையில்லை ;* சம் நோ ரம்ய வரோ பயந்த்ரு யமிராட் பூயாத் * [மணவாள மாமுளிகளே நமக்கு க்ஷேமங்கரராகக் கடவர் என்னுமிந்த ருக்கையே எனது நாக்கு அநவரதம் ஆவ்ருத்தி செய்யும்.

2-( ரங்கம் ரங்கம். ) *ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் க்ஷதப்ரஸ்கல நாதி *என்கிற சாஸ்திரத்தை யடி யொற்றி இருமல் தும்மல்களில் ரங்கம் ரங்கமென்பாரும், ஆசார்ய நாம ஸங்கீர்த்தனமே உத்தேச்ய மென்று கொண்டு ராமாநுஜ! என்பாரும், கேசவா மாதவா ! ! என்று பகவந் நாம கீர்த்தநம் பண்ணுவாரும் இவ்வுலகில் பலர் இருக்கட்டும். அப்படிப்பட்ட கீர்த்தனங்கள் என் காதில் விழவே வேண்டா: மணவாளமாமுனிகளென்கிற திருநாமமே எனக்குக் கர்ணாமிருதமாகும்.

3-(ஈசாநோபி ) ‘சிவன் பிரமன் இந்திரன் ஸூர்யன் இவர்கள் ஒருவரும் தெய்வமன்று,ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம்” என்று வைதிகர்களின் ஸித்தாந்த மிருந்தாலும் அடியேனுள்ளத்திற் பதிந்த ஸித்தாந்தம் மணவாளமாமுனிகளே பரதெய்வமென்பதாம்.

4-(சத்தோநைவ ) எம்பெருமானே பரதெய்வமென்று கொண்டாடப்பட்டாலும் அப்பெருமான் செவிக்கினிய செஞ்சொற்களாலே விவேகிகளின் மனத்தைக் கவர வல்லவனல்லன்: ஏன்? ஸ்ரீ விஷ்ணு புராணம் பகவத்கீதை முதலியவற்றில் அப்பெருமானருளிச் செய்த திவ்ய கூக்திகள் பல இல்லையோ வென்னில் வ்யாஸ பராசராதி மஹர்ஷிகள் எதையோ எழுதிவைத்து பகவத்வாக்யமாக நம்மை வஞ்சிக்கிறார்களத்தனை;மணவாளமாமுனிகளோ வென்னில் அப்படி யல்லாமல் நேராகத் திருவவதரித்தருளி அமுதமன்ன மென்மொழிகளைத் தாமே யருளிச்செய்து அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றார்.

5-(ஐஸ்வர்யம் ) சிலர் லக்ஷ்மீ கடாக்ஷத்தாலாகும் சிறிது செல்வத்தைப் பெற்றுத் தங்களை ஒப்பற்றவர்களாக மதிக்கின்றார்கள்; அந்த அழியுஞ் செல்வத்தினால் என்னாகும்? உபயவிபூதியிலும் நித்யபோக்யமும் எல்லை யற்றதுமான நிதி அடியேனுக்குக் கிடைத்திருக்கின்றது; அந்த நிதிக்கு மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியென்று பெயர்; அப்படிப்பட்ட நிதியைப் பெற்றுள்ள அடியேனே மிகவும் தன்யன்

6-(லக்ஷ்மீச:) எம்பெருமான் முன்பு இராமபிரானாயும் கண்ணபிரானாயும்.அவதரித்து விச்வாமித்ரர் ஸாந்தீபிநி போல்வாரிடத்தில் சிஷ்யனாயிருந்து, அவர்கள்
ஜிதேந்த்ரியர்களன்றிக்கே நித்ய ஸம்ஸாரிகளா யிருக்கும்படியைப் பிறகு தெரிந்து
கொண்டு அந்தோ! ஆசார்யத்வ பூர்த்தியில்லாத இவர்களையா நாம் ஆசார்யராக
வரித்தோமென்று எம்பெருமான் திருவுள்ளம் வெறுப்புற்றே யிருந்தது. அக்குறையை அர்ச்சாவதாரத்தில் தீர்த்துக்கொள்ள விரும்பி ஒரு நாளும் விடவொண்ணாத ஆசார்யரைப் பெற விரும்பி ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆசார்யராக வரித்து க்ருதக்ருத்யனாயினன்.

7-(ஏஷஸ்ரீவரயோகி.) மணவாளமாமுனிகளுக்கு விசதவாக் சிகாமணியென்கிற விருது ப்ரஸித்தமானது; உண்மையில் இந்த விருது இவரொருவர்க்கே தகுமேயன்றி மற்றெவர்க்கும் ஏற்காது. ஏனெனில், ஸந்தேஹிக்க இடமில்லாமலும்
விபரீதார்த்தங்கொள்ள வொட்டாமலும் வீண்வம்புவார்த்தைகளுக்குச் சிறிதும்
இடமளிக்காமலும் மிகவும் லலிதமாய் பரமபோக்யமான ஸ்ரீஸுக்திகள் நிரம்பிய வியாக்கியானங்களை அருளிச் செய்தவரென்கிற புகழ் மாமுனிகளுக்கே
அஸாதாரணமாய் விளங்குமதன்றோ.

8-(ஏதத்பத்த்ய.) எனது செவிக்கினியதோர் செஞ்சொல்லைக் கேண்மின்; மண
வாளமாமுனிகளின் மதுரமான ஸ்ரீஸூக்திகளை இடைவிடாது ஸேவித்துப் பாருங்கள்: அவரைப் போன்ற வோராசிரியர் இதுகாறும் இந்நிலவுலகில் அவதரித்ததுண்டா? இனியாகிலும் அவதரிக்க முடியுமா வென்று, நன்மதியுடையீர்! நீங்களேசிறிது சிந்தித்துப்பாருங்கள்

9-(சாந்திர் தாந்தி:) சமம் தமம் முதலிய ஆத்ம குணங்கள் சேதநர்களுக்கு அவசியம் வேண்டியவை யென்றும் அவரவர்கள் தங்கள் நூல்களில் கம்பீரமாக எழுதிவைக்கிறார்கள். ஆனால், அந்தத் திருக்குணங்களுக்குக் கொள்கலமான ஆசிரியர்யாவர்? என்று சிலர்சிந்திக்கப் புகுந்தால் அவர்களின் உள்ளத்தில் மணவாளமாமுனிகளே குடிகொண்டிருக்கக் கூடியவர். மாமுனிகளைப் போன்ற சமதமஸம்பந்நர் வேறொருவருமிலர்.

10-அந்தர்வாணி ) அஸூயை யற்றவித்வான்களை அடிபணிந்து ஒன்று விண்ணப்பம் செய்கிறேன்; நீங்கள் பல பல ஆசாரியர்கள் இயற்றிய பல நூல்களைப் பார்த்திருக்கிறீர்களே; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளிலுள்ள இன்சுவை
எந்த ஆசிரியருடைய திருவாக்கிலாவது கண்டதுண்டா? உள்ளவாறுரையீர்.

11-(தம்பம் கேவலம்) சில ஆசாரியர்கள் தங்கள் வாக்கினால் டம்பத்தை மாத்திரமே வெளியிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய வாக்குகளில் பெரும்பாலும்
பரநிந்தை தவிர வேறு என்ன காணமுடியும் ? நீறுபூத்த நெருப்பு என்னும்படியான மணவாளமாமுனிகள் ஒருவரே பரநிந்தாதிதோஷ லேசமுமற்ற பரமபோக்ய ஸ்ரீ ஸூக்திகளை யருளிச்செய்தவர்

12-(அந்தர்மாநஸம்) மற்றையோர்கள், நெஞ்சில் ஒன்றைவைத்துக் கொண்டுவாக்கில் வேறொன்றை வெளியிடுபவர்களாய் நூல்கள் எழுதிப் போருவர்கள்; பெரும்பாலும் அவர்கள் வஞ்சிக்க வல்லவர்கள்; அப்படிப்பட்ட துர்க்குண லேசமும் அற்றவரான மணவாளமாமுனிகள் ஸ்ரீரங்கநாதனுடைய தவப்பயனாகத்தோன்றினவர்:-அவர் எப்போதும் பக்தர்களின் உள்ளத்துள்ளே உறைபவர்.

13( யஸ் ஸர்வஜ்ஞ : ) (இந்தச்லோகத்தில் ஏழு வேற்றுமைகளும் வரிசையாக வரும்படி தொடையழகு காண்க.) எவர் ஸர்ஜ்ஞரென்று புகழ்பெற்றாரோ,எவரை ஸ்ரீரங்கநாதன் ஆசார்யராகக் கொண்டானே,எவரால் ஸ்ரீராமாநுஜதர்சநம் காக்கப்பட்டதோ, எவர் பொருட்டு நமஸ்காரம் நன்மை பயக்குமோ, எவரைக் காட்டிலும் மேம்பட்ட ஆசாரியர் இல்லையோ, எவருடைய தனியன் இவ்வுலகில் எஞ்ஞான்றும் வெற்றி பெற்று விளங்குமோ, எவரிடத்தில் ஸகல திருக் குணங்களும் பொருந்தி யுள்ளனவோ அந்த மணவாளமாமுனிகளைப் போற்றுகிறோம்

14-(ஆகாரம் வர) மணவாளமாமுனிகளின் பாற்கடல் போன்று பரமபோக்யமான திருமேனியை அடியேன் எப்போது ஸேவிக்கப்பெறுவேனென்று நெடுநாளாகக் கண்ணீர் விட்டழுது நைந்து கிடந்தேன்; அங்ஙனே துவண்டு கிடந்த அடியேனுக்கு மாமுனிகள் ஐயோவென்றிரங்கி அருள்செய்த படியை என்சொல்லுவேன்? எனக்குப் பெறாப்பேறு பெறுவித்தவரான அவரே மஹான்.

15-(பத்தயம் கிஞ்சந) காதோடு ஒரு இன்சொல் சொல்லுகேன் கேண்மின்-பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயத்திற்கு மிகச்சிறந்த வியாக்கியானத்தை யருளிச்செய்து தம்முடைய ஸர்வஜ் த்வத்தை விளங்கக் காட்டியருளின மணவாளமாமுனிகளையே அநவரதம் சிந்தை செய்மின் ; வேறுவழியால்
ஜன்மம் க்ருதார்த்தமாக விரகில்லை.

16-(ஆகாசே) சிறுவர்கள் (அவிவேகிகள்) சேற்றையெடுத்து ஆகாசத்தில் விட்டெறிந்தால் என்னாகிற தென்பதை அனைவரும் காணத் தட்டில்லையே.மண வாளமாமுனிகள் விஷயத்திலும் இந்த நியாயமே காணத்தகும். கருவிலே திருவிலாதார் மாமுனிகளின் அமுதமொழிகளில் தூஷணைகளைப் பிதற்றுவது அவர் களுக்கே அநர்த்தத்தை விளைக்குமதாம்.

17-(தம் தம் தேசிகம்) உலகில் புத்திமான்கள் அந்தந்த ஆசாரியரைத் துதிக்கும்போது ” மற்றஆசாரியர்களை விட்டு இவ்வாசிரியரையே தொழுங்கள்” என்று சொல்லுவதுண்டு; அடியேன் மணவாளமாமு களைத் துதிப்பது அந்த முறைமை யில் அல்ல; உண்மையில் மாமுனிகளைத் தவிர வேறு ஆசாரியர் இல்லை யென்று ஆணையிட்டுரைப்பேன்.

18-(ரங்கீ யஸ்ய) ஸ்ரீரங்கநாதன் யாவரொரு மணவாளமாமுனிகளின் திருக் குணங்களை நெடுநாள் ஆராய்ந்து நோக்கி சிஷ்யனானானோ அந்த மாமுனிகளுக்குப் பிறகு வேறொரு ஆசாரியர் இருக்கக் கூடாதென்று அவரோடு ஆசார்ய பரம்பரையை ஸமாப்தி செய்து விட்டான்; (அதாவது)பூருவாசாரியர்கள் என்கிற வியபதேசம் மாமுனிகளோடு முற்றுப்புள்ளி யடைந்திட்டது. இவ்விஷயம் உலகமெல்லாம்அறிந்ததேயாதலால் மாமுனிகளுக்குமேற்பட்ட ஆசார்யார் இல்லையென்று அடியேன் துணிந்து கூறுகின்றேன்.

19-(அத்யாச்சர்ய) பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்யஹ்ருதயமென்னும் திவ்ய க்ரந்தத்தை உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினார்; பரம போக்யமான அந்த வியாக்கியானத்தை இடைவிடாது ஸேவித்தால் ஸர்வஜ்ஞராகப் பெறலாம்.

20-(மத்தாநாமபி) அறிவிலிகளுக்குங்கூட நிகரற்ற ஸந்தோஷத்தை விளைக்கவல்ல பல ஸ்ரீஸூக்திகளைத் தமது நிர்ஹேதுக க்ருபையினாலேயே யளித்து உலகத்தை உய்வித் தருள்பவரான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய யதிரா விம்சதியைக் கண்டபாடம் செய்லு ஸதா அநுஸந்தியுங்கள்.

21-(தந்யாஸ் ஸ்யாம்.) எப்போதும் நாம் பாக்யசாலிகளாகவே யிருக்க வேணு மென்னும் விருப்புடையீர்! கேண்மின் ; மணவாளமாமுனிகளருளிச் செய்த வியாக் கியானத்தோடு கூட ஸ்ரீ வசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆசார்ய ஸந்நிதியில் அடிக்கடி ஸேவியுங்கள்; இதுவே பரமபாக்யம்; இதற்கு மேற்பட்ட பாக்யமில்லை

22-(ஈர்ஷ்யாதுர்க்குண) *பிறர்மினுக்கம் பொறாமையிலாப் பெருமைபெற்றுசமதமக் கடலாக விளங்குகின்ற மணவாளமாமுனிகளை விட்டு வேறொரு ஆசார்யரை ஆசரயிக்கின்றவற்கு என்னத்ரூப்தியுண்டாகும்? அன்னவற்கு ஆயுள் முழுவதிலும் உண்மைப்பொருள்களை யுணர்வதற்கு ப்ரஸக்தியில்லையாகுமன்றே

23-(பங்கோதைவ) மணவாளமாமுனிகளின் தனியனுக்கு இப்பூமண்டலத் தில் ஓரிடத்திலும் ஒருபோதும் பங்கம் விளைவதில்லையென்கிற (இந்தத்தத்துவத்தை நன்கு உணரவல்ல மஹான்களின் மனத்தில்மாமுனிகள் தவிர மற்றொரு ஆசாரியர் திருவடிவைக்கமுடியுமோ? அஸூயை யற்றவர்கள்இதனை ஆராய்ந்துணர்க

24-(அந்யாய்யார்த்த ) சிலர் தங்கள் சுவடிகளில் தப்பான அர்த்தங்களையேகூசாமல் பெரும்பாலும் எழுதிவைத்து, அவ்வளவோடும் நில்லாமல் “இதில் தப்பான அர்த்தம் ஒன்றுகூட இல்லை; எல்லாம் மஹாப்ராமாணிகமான அர்த்தமே எழுதிவைத்தோம்” என்றும் ஊடே யூடேயெழுதி உலகத்தை வஞ்சித்துக் கீர்த்தி பெறுவாருளர் ; அன்னவர்கள் கிடக்க ; மணவாள மாமுனிகளொருவரே பிராமாணிகர்களில் தலைவர்.

25-(கச்சிந்மாமிஹ) கீதையில் கண்ணபிரான் *கச்சிந்மாம் வேத்தி தத்வதஎன்று என்றைக்கோ சொல்லி வைத்தான்; ‘தன்னை யுள்ளபடி யறியவல்லவர்யாரோ வொருவர் ‘ என்று சொன்னஅந்தகீதையின்படி மணவாளமாமுனிகளொருவரே தத்வஜ்ஞராகத் திருவவதரித்தவர் ; அவருடைய ஸ்ரீஸூக்திகளில் ப்ராவண்யமுடையோமுக்கும் தத்வஜ் பாவனை உரியதேயாம்.

26-(தர்க்கவியாகரண . ) தர்க்கம் வியாகரணம் முதலான ஸகல சாஸ்த்ரங்களிலும் நிகரற்ற பாண்டித்யத்தைஸ்பஷ்டமாகக் காட்டவல்ல வியாக்கியானங்ககளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய நிகரில்புகழ் வாய்ந்த முமுக்ஷஎப்படி வியாக்கியானத்தை நெஞ்சே! இடையறாது அநுஸந்திப்பாயாக.

27-(யஸ்ய ஸ்வாது ) தம்முடைய பரமமதுரமான ஸ்ரீஸுக்திகளில் தமது பரம பராமாணிகத்வத்தை விளங்க வைத்தவரும், குடில் புத்தியின்றிக்கே ருபுத்தியா யிருப்பவரும், பிள்ளை யுலகாசிரியருடைய ஸ்ரீஸூக்திகளைக் காக்கவே அவதரித்தவரும், ஸ்ரீரங்கநாதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமான மணவாளமாமுனிகள் எனது உள்ளத்துள்ளே யுறைகின்றார்.

28-(ஆதாவாதி.) முதலில் ஆதிசேஷனாயிருந்து பிறகு இளையபெருமாளாகவும் அதன்பிறகு எம்பெருமானாராகவும் அதற்குப்பிறகு மணவாளமானிகளாகவும் இங்னே அடைவே திருவவதாரமாயிற்றென்று ஸத்துக்கள் உண்மையுணர்ந்துபேசப்பெற்ற மாமுனிகள் அடியேனுடைய அகவிருளைப் போக்கியருளினார்.

29-(த ஸ்ஸந்தி ) ஆச்சரியமான பந்தங்களுடன் கூடின பல கவிதைகளைச்கணப்பொழுதில் இயற்றவல்ல கவிச்ரேஷ்டர்கள் பலர் இவ்வுலகிலுளர் ; இது கிடக்கட்டும். அவற்றால் என்னபயன்? அவையெல்லாம் ஒன்றுகூடினாலும் மணவாளமாமுனிகளின் அமுதமென் மொழிகளில் ஒரு அக்ஷரத்திற்கு இணையாகாவென்பது ஸத்யம்.

30-(இந்தேஸந்ததம்) மணவாளமாமுனிகள் பாற்கடல் போன்ற தமது திருமேனியொளியை என்னெஞ்சினுள்ளே விளங்கக் காட்டியருளா நின்று கொண்டுஸேவைஸாதிக்கின்றார். கனவிலுங் காண வரிதான அத்திருமேனி விளக்கத்தைப் பாவியேன் நனவிற்காணுமாறு அருள்செய்த அதிசயம் என்னே.

31-(கச்ேயம் யதி) ஒருகால் அடியேன் பரமபதத்திற்குச் செல்வேனாயின் அங்கும் மணவாளமாமுனிகளின் திருவடி வாரத்திலேயே ஸகல கைங்கரியங்களையும் செய்துகொண்டு அவருடைய மதுர ஸ்ரீஸுக்திகளையே அநுபவித்துக்கொண்டு
வாழக்கடவேன்; இல்லையாகில் ஜூனர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு மீண்டும்
இந் நிலவுலகுக்கே வந்து விடுவேனென்பது திண்ணம்.

32-(உர்வ்யாமத்ர) இவ்விருள் தருமாஞாலத்தில் பிறப்பு வெறுக்கத்தக்கதென்று பெரியார்கள் கூறுகின்றார்களெனினும் அது அடியேனுக்கு ருசிக்கவில்லை;ஏனெனில், அடியேன் இவ்வுலகில் இருந்துகொண்டும் மணவாள மாமுனிகளின் திவ்யஸுக்தி யமுதத்தையே பருகிக்கொண்டு எப்போதும் ஆனந்தசாலியாகவே யிருக்கிறேனன்றோ! ( துன்பமுண்டானாலன்றோ உலகவாழ்க்கை வெறுக்கதக்கதாம்).

33-(உக்தம் யத் ) நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்றருளிச் செய்தது எம்பெருமானாரை நோக்கி யென்பர்கள்
அவ்வெம்பெருமானார் தாமே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்
தருளிக் கலி வித்வம்ஸநமாகிற ஸ்வக்ருத்யத்தைக் குறையறச் செய்து தலைக்கட்டி
அவ்வாழ்வார் ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாக்கி யருளினார்.

34-பாணிநி முனியின் சாஸ்த்ரமான வியாகரணத்தில் விபரீதங்கள் பலகாணப் படும்.ந-காரம் ண- காரமாய் மாறிவிடும், ஸ – காரம் ஷ-காரமாய்மாறிவிடும். ப்ர நயதி, ப்ரணயதி வி-ஸஹதே,விஷஹதே. இத்யாதிகள் காண்க. மணவாளமாமுனிகளின் திருவாக்குக்களில் இங்ஙனே ஒரு விபரீதங்கூடக் காணமுடியாது. எதுவும் யதாவத்தாகவேயிருக்கும். இது சாடூக்தி.

35-(ஆவேசம் ) பொய்கையார் முதலான ஆழ்வார்களனைவரும் ஸ்ரீமந்நாதமுனிகள் முதலான ஆசார்யர்களனைவரும் மணவாளமாமுனிகள் பக்கலில் ஆவேசித்தனர் என்னலாம், அல்லது, வடமொழி தென்மொழி மறைகளின் பாக்யஸர்வஸ்வமும் ஒன்றுசேர்ந்து மாமுனிகளாக வடிவு பூண்டு உதித்தது என்று நிஷ்கர்ஷிக்கத்தட்டில்லை.

36-(ரங்காதீச்வர) ஸ்ரீரங்கநாதனுடைய பாக்ய பரம்பரையே மணவாளமாமுனிகளென்கிற திருநாமங் கொண்டு உலகில் அவதரித்தது என்கிற ப்ரதிபத்தியே அடியேனது நெஞ்சில் கொழுந்துவிட்டோங்குகின்றது; இவ்விஷயத்தில் அதிகமான உபபத்தியிருப்பதால் இதுவே திடமான ஸித்தாந்தமாக வடுக்கும்.

37-(ணத்வம்பாததே.)மஹாபண்டிதரென்று புகழ் பெற்ற அப்பயதீக்ஷிதர் நாராயண நாமத்தை சிவபரமாக நயிப்பிக்கவேணுமென்று சிரமப்பட்டு ணத்வம்பாதிக்கிறது ‘ என்றுசொல்லிக் கையொழிந்தார் என்பது ப்ரஸித்தமான விஷயம்;அவர்க்கு ஸ்ரீமந்நாராயணனிடத்தில் இருந்த த்வேஷம் உலகமறிந்ததே.அதனால்நாராயணனுக்கு ஒருகுறைவு நேர்ந்ததாகவில்லை. இதுபோலவே, வித்வான்களென்று பேர் படைத்த பிறர்கள் மணவாளமாமுனிகளிடத்தில் மாச்சரியம் கொண்டாலும் அதனால் குறையொன்றுமில்லை; அன்னவர்கள் படும் பாடு சொல்லவேணுமோ?

38-(அல்பீயா நஹம்) உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகளை பக்தியிற் சிறந்த மஹான்கள் துதிக்கவேணுமே யன்றி நீசனேன் நிறையொன்றுமிலேன் துதிப்பது தகுதியே யன்று; ஆயினும் அடியேன் ஓயாமல் அவரையே துதித் துக்கொண்டிருக்கிறேன்; இதற்காக நான் சிறிதும் வெட்கப்படுகின்றிலேன்; ஏனெனில், மாமுனிகளின் ஸகல வைபவங்களையும் உள்ளபடி யுணர இவ்வுலகினுள் அடி யேனொருவனே பாக்யம் பெற்றேனன்றோ.

39-(வல்லீதுல்ய ) வல்லிசேர்நுண்ணிடை மாதர்களோடு அணைவதனால் இன்பமுள்ள தென்று நீசர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இன்பமிருக்கலாம்; ஆனால் அது மிகவும் அற்பமானது; ஸ்ரீரங்கநாதனுக்கு ஆசார்யராக அமைந்த மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ஸாகரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து உலகிலுள்ள ஸகலவித போகங்களாலும் விளையக்கூடிய ஸகலவிதமான இன்பங்களையும் நுகர்வோம் யாம்.

40-(அந்யாந்யேஷு ) உலகில் ஒவ்வொருவர்க்கும் லௌகிகமான பலபலகாரியங்க ளிருப்பதால் அவற்றில் போது போக்கநேர்ந்து அதிசுகாலம் வீணாகவே கழிந்து
போகிறது; மணவாளமாமுனிகளே! அடியேனுக்கு அப்படியல்லாமல் தேவரீருடைய
திவ்யஸ்ரீஸூக்திகளிலேயே ஸகல காலமும் செல்லும்படி அருள்புரிய வேணுமென்று
திருவடிவாரத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

41-(மஞ்ஜீராஞ்சித.) மாதர்கள் பாதச்சிலம்பு அணிந்துகொண்டு நடந்துசெல்லுமளவில் அச்சிலம்பொலி கேட்டு மயங்கிப்போவாருமுளர்; அதுகிடக்க; மணவாளமாமுகளின் தனியனை கோஷ்டிகளில் உரக்க அநுஸந்திக்கும்போது உண்டாகும் த்வநி விசேஷத்தைக் கேட்குமளவிலே அடியேன் வியாமோஹித்திருக்குமது ஸுப்ரஸித்தம்.

42-(யஸ்ய ஸ்யாநி ) மணவாளமாமுனிகளின் பரமபவித்திரமான திருக் கோலத்தைச் சிந்தைசெய்யும் பாக்கியமுடையார்க்குஎம்பெருமானார் தரிசனத்தில் நல்ல உணர்ச்சி விளையும். ஸகல தத்துவங்களையும் உள்ளபடி யுணரவல்ல யோக்யதை அவர்கட்கே உரியதாகும்

43-(யத்யப்யத்ர) இவ்வுலகில் நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்களும் நம்முடைய பக்திக்குப் பாத்திரமாகக் கூடியவர்களாக விளங்குகின்றார் களெனினும்,அடியேனுக்கு விசதவாக்சிகாமணிகளான ம ணவாள மாமுனிகளிடத்தில் மாத்திரமே விலக்ஷணமாய் நவம்நவமான பக்திஒளிர்கின்றது.

44-(அத்வாதம்) மணவாளமாமுனிகள் காட்டியருளின பத்ததியைப் பற்றினவர்களுக்குத் தத்வார்த்தங்களில் தூய நன்மதி விளங்குவது ப்ரஸித்தம்; தெளர்ப்பாக்யவசத்தாலே அந்த நல்வழியில் விமுகராயிருக்குமவர்கள படும்பாட்டை என்சொல்வேன்? அன்னவர்களின் பிறவியே வெறுக்கத்தக்கது.

45-(தந்யாந்திஸ்துல) மணவாளமாமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்ரீஸுக்தி)களில் விமுகராயிருப்பார்கட்கும் அன்பு உண்டாகும்படி கடாக்ஷித்தருளவேணுமென்று அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவர்களாகபிறந்து மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளில் மாச்சரியங் கொண்டிருந்தால் அவர்களுக்கு இடையறாத துர்க்கதிகளன்றோ நேரும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு துர்க்கதி நேருவதென்றால் இந்த துக்கம் ஸஹிக்கக் கூடிய தன்றே. ஆகவே, தீயவர்களையும் நல்லவர்களாக்கி யருள்க.

46-ஈஷத்பத்தி:)மண வாளமாமுனிகளின் திருவடிகளில் ஸ்வல்பபக்தியிருந்தாலும், பரமார்த்தங்களை உள்ளபடி உணர் தற்கு அவ்வளவே போதுமானது.இங்ஙனமே மாமுனிகள் திறத்தில் சிறிது மாச்சரியமுண்டானாலும் பல கொடிய நரகங்களில் விழுந்துழல்வதற்கு அவ்வளவேபோதும். அந்தோ! இவ்வுண்மையை அறிந்து வைத்தும் நசித்துப்போக நினைப்பார் பலருளரே!!

47-( நத்வா ஸ்ரீவரயோகி ) அடியேனுடைய தலை மணவாளமாமுனிகளின் திரு வடிகளைத் தொழுது தன்யமாகின்றது. வாக்கு அவருடைய திருக்குணங்களைத் துதித்து க்ருதார்த்தமாகின்றது. உள்ளம் அவருடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்தை செய்து பவித்திரமாகின்றது. கை அவருடைய பரந்த புகழை யெழுதி ஸத்தை பெறுகின்றது.

48-(தத்தேரம்யவர ) மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி உண்மையில் கட லென்னத்தகும். கடல் செய்வதெல்லாம் செய்கின்றது இதுவும். கடல் ஸ்ரீயைத் தந்தது.இந்தக்கடல் பக்தர்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தந்திடுகின்றது. கடல் ரத்னங்களைத் தருகின்றது; இக்கடல் ஸக்குணங்களாகிற ரத்னங்களைத் தருகின்றது. (மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைப் பயில்பவர்கட்கு நற்குணங்கள் விளையுமென்கை.)
கடல் அலைகளைத்தரும். இக்கடல் மதுரோபதேச தரங்கங்களைத் தரும். கடல் சந் திரனைத் தந்தது; இக்கடல் நல்ல கீர்த்தியாகிற சந்திரனைத் தருகின்றது. (மாமுனி களின் ஸ்ரீஸுக்திகளைப் பயில்பவர்கட்கு நல்லபுகழுண்டாமென்கை)அக்கடல் கல்ப வ்ருக்ஷத்தைப்பயந்தது. இக்கடல் ஞானமாகிற கற்பகத்தருவைத் தரும். அக்கடல் அமுதமளித்தது. இக்கடல் வேதாந்த விழுப்பொருளாகிற அமுதமளிக்கவல்லது அக்கடல் ஹாலாஹல மென்னும் நஞ்சை நல்கிற்று; இக்கடல் (தத்வத்ரய வ்யா க்யாநாதிகளில்) பரமத த்வம்ஸந ஸ்ரீஸுக்தியாகிற ஹாலாஹலத்தைத்தரும். ஆகவே கடலென்னப் பொருந்தும். ( பரமத த்வம்ஸந ஸ்ரீஸூக்திகளும்தொண்டர்க்கு அமுதமேயானாலும் பிறருடைய திருஷ்டியாலே ஹாலாஹலமென்றது.)

49-(ரக்ஷயாம் நிபுண: ரக்ஷிக்க வல்லவன் லக்ஷ்மீபதி என்றொரு ப்ரஸித்தி வீணாகவே உலகிற் பரவியது. உண்மையில் மணவாளமாமுனிகளே நம்மைரக்ஷிப்பவராவர். இஷ்டப்ராப்தியையும் அநிஷ்ட நிவாரணத்தையும் செய்பவரே ரக்ஷக ராதலால் மாமுனிகள் தாமே தமது ஸ்ரீஸூக்திகளால் அவ்விரண்டையும் செய்துகொண்டு ஸம்ஸாரிகளை நன்கு ரக்ஷித்தருளா நின்றார்.

50-(அந்தநாம் ரவி) குருடர்களுக்கு ஸூர்ய கிரணங்களால் ஒரு பலனுமில்லை யென்பதால் ஸூர்யனுக்கு ஏதேனும் குற்ற முண்டோ? அதுபோல கருவிலே திருவிலாதார் சிலர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளால் பயன் பெற்றிலரென்றால்
அதனால் என்ன சேதம்? பயன் பெற்று வாழ்கிற புனிதர்களைக் கண்டு தெளிக.

51-(பர்ஜந்யோ ஜல) மேகமானது கடல்நீரைப் பருகிப் பரமமதுரமாக வர் ஷிப்பதுபோல மணவாள மாமுனிகளும் சாஸ்த்ரக் கடலில் நின்றும் அளவற்றவிஷயங்களை முகந்து கொண்டு அதிமதுரமாக வர்ஷித்து பாக்யசாலிகள் பலரும் பருகிக்களிக்குமாறு செய்தருளா நின்றார்.

52-(ரக்ஷாபேக்ஷண.) “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேசஸ் ஸதா காருணிகோபி ஸந்
ஸம்ஸார தந்த்ரவாஹித்வாத் ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ர தீக்ஷதே”
என்கிறப யே ரக்ஷா
பேக்ஷ மாத்திரத்தையே எம்பெருமான் எதிர் பார்க்கிறானாதலால் நாம் பரக்கவொரு ஸாதநாநுஷ்டானம் பண்ணலாகாதென்று பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்
ததை நன்கு விளக்குகின்ற மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ரத்னம் எம்பெருமானார் தரிசனத்திற்கு உயர்ந்த மணி விளக்காகவுள்ளது.

53-ந்தர்த்வாந்தம்.) அகவிருளையகற்றுவதற்கு உலகில் ஞானவிளக்கொன்று தவிர வேறொரு கருவி கிடையாதென்பது நிர்விவாதம். அப்படிப்பட்ட அணி விளக்கை இன்னருளால் ஏற்றிவைத்தவர் மணவாள மாமுனிகள் ஓருவரேயாவர். ஆயினும் அந்தோ! அவ்விளக்கில் சலபமாகி யொழிவாரும் சிலருளரே! அன்னவர் கட்கு நேரப்போகும் துர்க்கதியை என் சொல்வோம்!

54-(வந்தே ஸுந்தர.) க்ஷத்ர ஜனங்களுக்கு வியாமோஹத்தை விளைக்க வல்ல பலபல சுவடிகளை யெழுதி வைத்து உலகை வஞ்சிப்பார் பலருளர்; அன்னவர்களுடைய உக்திராசிகளால் அடியேனுடைய மனம் ஒருபோதும் விகாரமடையாதிருக்க வேணுமென்று மணவாளமாமுனிகளின் திருவடியிணையை இறைஞ்சுகிறேன்.

55-(அப்திர் லங்கித:) * அப்திர் லங்கித ஏவ வாநர படை:* என்று முராரிகவி பணித்தபடியே கடலைக்கடந்த வானர முதலிகளுக்குக் கடலின் ஆழம் தெரியாதாப்போலே உலகில் பண்டித்தரென்று பேர்படைத்தவர்களெல்லாரும் மேலெழுந்தவாரியாக அறிந்தவர்களே யன்றி சாஸ்த்ரார்த்த ஸாரங்களை உட்புகுந்து அறிந்தாரிலர்;மணவாள மாமுனிகளொருவரே ஆழ்ந்த அறிஞரென்று திண்ணமாகவெண்ணுக

56-(ண ஸ்த்ரு ) ண ஸ்த்ரு = தள” ” சச – லுதகதெள” என்றிப்படி தாது பாடங்களை நெட்டுருப் போட்டுக் கொண்டே வாணாளை யெல்லாம் வீணாளாகக் கழிக்கின்ற ஜடர்கள் அந்தோ! மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளை அறியப் பெற்றிலரே! நல்ல கதிக்கு வழி தேடுகின்றிலரே.

57-(அந்தஸ் ஸர்வ பதார்த்த) ஸகல பதார்த்தங்களிலும் உள்ளும் புறமுமொக்க வியாபித்திருக்கின்ற எம்பெருமானுடைய வ்யாப்தியாவது வஸ்துதோறும்
பரிஸமாப்ய வர்த்தமாநத்வமன்று என்று வாதிப்பவர்களும் பகவானுடைய விசித்திர சக்தியை ஸஹியாதவர்களுமான பிறரைத் தமது ஸ்ரீஸூக்தியால் உதறித்தள்ளுகின்ற மணவாள மாமுனிகளே ஸத்துக்களில் தலைவர்.

58-(மந்யந்தே வர) மணவாள மாமுனிகள் உடையவருடைய அபராவதாரமேயாவர். பெரும்பாலும் வியாக்யான ரூபங்களான கரந்தங்களையே அருளிச்செய் வதும், வீண் தூஷண பரிஹாஸ வாக்குக்களைப் பொழியாமலிருப்பதுமான தன்மைகள் இவ்விரண்டு ஆசார்யர்கள் பக்கலிலுமே நன்கு பொருந்தியிருப்பதால்

59-(வர்த்திஷ்ணூந்ப்ரதி) மேன்மேலும் ஞானவிளக்கம் பெறவேணு மென்றிருப் பார்க்கு ஒன்று சொல்லுகேன். சித்தப்ரமத்தை விளைக்கவல்ல பல்வேறு புத்தகங்களில் வீணாகப் போதைப் போக்குவது தகுதியற்றது : த்ராக்ஷரபாகத்திற்கு நிதர்சநமாக அமைந்த மணவாள மாமுனிகளின் அத்புத லலித திவ்ய ஸூக்திகளையே இடை வீடின்றி அனுபவியுங்கள்,

60-(அந்தஸ் ஸந்ததம்) என்னுள்ளத் துள்ளே மணவாள மாமுனிகளொருவர் தாமே தமது திருமேனி யொளியை விளங்கச் செய்தருளா நின்றுள்ளார்; வேறோ ராசிரியாக்காவது எம்பெருமானுக்காவது இனி என்னெஞ்சில் இடம் கிடைப்பரிது;-இல்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரே.

61-(நக்ஷத்ரேச) மணவாள மாமுனிகாள்! தேவரீருடைய திங்கள்போன்ற திருமுக மண்டல் தையும் நிலாப்போன்ற புன்முறுவலையும் செவியளவும் நீண்ட திருக்கண்களையும் திருவாய் மொழியின் மணம் கமழும் திருவதரத்தையும் திவ்யோர்த்வபுண்ட்ரஸுபகமான திருமேனியையும் நேரில் ஸேவிக்கப் பெற்றவர்களே பாக்யசாலிகள்.

62-.(தத்தேநிச்சல) மணவாள மாமுனிகள் என்னுள்ளத்துள் எப்போதுமெழுந்தருளியிருந்து தமது திருவடிகளில் ஸ்திரமான பக்தியை யளிக்கின்றார்:விரக்தியை விளைக்கின்றார்; பொருளாசையைப் போக்குகின்றார்; ஓ மனமே! குபேராதி பதவிகளைப் பெறுவதற்கும் நீ ஆசைகொள்ளாதே; விஷயாந்தரங்களில் ஓடநினைப்பதும் வேண்டா; மதயானைபோல் கண்டவிடமும் திரியாதே; மாமுனிகளிடத்தேஊன்றியிரு.

63-(ஏரண்டோபி ) * நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி திருமாயதே[மரமில்லாதவூரில் ஆமணக்கஞ் செடியும் மரமாம் ] என்றாப்போலே ஆங்காங்குப்பலரும் ஆசார்ய பீடத்தில் அமாந்து ஆசார்ய விருது வஹித்து விடலாம்-உண்மையில் மணவாள மாமுனிகளொருவர் பக்கலிலேயே ஆசார்யத்வ பூர்த்தியுள்ள தென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பேன்.

64-( ரக்ஷிஷ்யதி. ) உலகில் பலரும் எம்பெருமானையே ரக்ஷகனாக மயங்கி அவனையே துதிக்கின்றனர். அந்த பகவான் தானும் ஆசார்ய ஸம்பந்த மில்லா தாரைக் கடாக்ஷிக்க வல்லவனல்லன்; மணவாள மாமுனிகளிடத்திலேயே ஆசார்யத்வம் புஷ்கலமாதலால் இவருடைய ஸம்பந்தத்தை நோக்கியே அவன் ரக்ஷிக்கவல்லவன்; ஆதலால் மாமுனிகளே முமுக்ஷக்களுக்குத் தஞ்சம்.

65-(அத்வாத்வ ) நல்வழி தீ வழி தெரியாது திகைக்கின்றவர்களுக்குக் கை கொடுக்கவே பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த ரஹஸ்யார்த்தக்ரந்தங்களை மணவாளமாமுனிகள் பரமகிருபையோடு விசதமாக வியாக்யானித்தருளாதிருந்தால், அந்தோ ! உலகம் முழுவதும் ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துவளுமே! மாமுனிகளின் பேரருள் பேச்சுக்கு நிலமோ?

66-(மக்நாநாம்) மணவாள மாமுனிகளின் திருவடிகள் பிறவிக்கடலுள் அழுந்தினார்க்கு நாவாய் போலும்; அவருடைய திருவாக்குக்கள் விஷயவிஷதரங்களாலே கடியுண்டார்க்கு கருட மந்த்ரம் போலும்; அவருடைய திருமேனிவிளக்கத்தைச் சிந்தை செய்வது பாவங்களாகிற காட்டுத் தீயில் வேகின்றவர்களுக்கு வர்ஷதாரை போலும், அன்னவர் வாழ்க-

67-(யத்நோவ யவிதேய) ‘சைதன்ய கார்யமான ஸாதநா நுஷ்டானங்களை அவசியம் பண்ணியே தீரவேண்டும்; இல்லையானால் முக்திபெற வழியில்லை’ என்பாருடைய அகவிருளைப் போக்குமதாய் ப்ரபந்நர்களுக்கு அருமருந்தான ஸ்ரீஸக்திகளைப் பணித்தருளின மணவாள மாமுனிகள் அடியேனை *ஆம்முதல்வனிவ னென்று கடாக்ஷித்தருளினார்.

68-(அஹ்தாயாச்ரயத ) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை உகந்து விரைந்து பணிமின்: பின்னை அவருடைய திவ்ய ஸூக்திகளுள் ஆர்த்திப் பிரபந்தத்தை உரக்க அநுஸந்தித்து எல்லா ஆர்த்திகளையும் உடனே தொலையப் பெறுங்கள்; ஸகல ச்ரேயஸ்ஸுகளும் தன்னடையே வந்து சேரும்படி கண்டு மகிழுங்கள்.

69-(ஐந்மாந்யத்ர) அடியேன் இப்போது போலவே எப்போதும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளையே சுவைத்திருப்பேனாயின் அடியேன் மீண்டு மீண்டும் இவ்வுலகிலே பிறக்கப் பெறுவேனாக; பிறவிதோறும் இப்பெரும் பாக்கியம் வாய்க்குமாகில் பரமபதத்திலும் வாஞ்சை யுடையேனல்லேன்; மாமுனிகளே! இதுவே உண்மையுரை : பூர்ணமாகக் கடாக்ஷித்தருள வேணும்.

70-(ஆசாரா .) மணவாள மாமுனிகள் காத்தருளின ஸதநுஷ்டானங்களில் பக்யசாலிகள் ஊன்றிப் போருவர்கள் : அங்ஙனல்லாத மற்றையோர் தீயவழிகளில் அலமந்து துவள்க. பரமபவித்திரமான இந்த ஸத்ஸம்பிரதாயஸரணியில் பரம பாக்ய வசத்தினால் பிறக்கப் பெற்றோமே யென்கிற களிப்பு அடியேனுக்கே உள்ளது.

71-(மந்த்ராஸ் ஸந்திஹி) மணவாள மாமுனிகளே! உலகில் பலபல பகவந் மந்த்ரங்கள் உள்ளன; அவற்றிற்கு என்ன பெருமை ஏற்பட்டது? அவற்றைச் சிந்திப்பாரார்? அவற்றில் யாருடைய உள்ளம் ஊன்றியிருக்கிறது? ஸ்ரீரங்கநாதனுடைய முகாரவிந்தத்தில் தோன்றின மதுவென்னலான (தேவரீர் விஷயமான) ஸ்ரீசைலேச மந்திரத்தின் பெருமையேயன்றோ உலக முழுவது மோங்கி நிற்கின்றது.

72-(ஆசார்யப்ரவரம் ) மணவாள மாமுனிகளிடத்தில் எல்லாப் பெருமைகளும் விளங்க நின்றாலும் ஒரு குறை மாத்திரம் உள்ளதேயாம்: அது என்னெனில்; மிகச் சிறந்து பரமபாவனமாய் விளங்கும் ஸ்ரீசைலேச மந்திரத்தைச் சிந்தை செய்யும் பாக்கியம் அவர்க்கு இல்லையாயிற்றே.

73-( த்வம் கிஞ்சந.) மணவாளமாமுனிகளே! ஒரு உண்மைகேளீர் : தேவரீருடைய மஹோத்ஸவம் கச்சிநகர் முதலான பலதலங்களில் பெருக்க நடக்கிறதன்றோ. அந்த ஸமயங்களில் அடியேன் அனுபவிக்கும் ஆனந்தாதிசயத்தை தேவரீர் விபவத்தில் அனுபவிக்கப் பெற்றிலீரன்றோ ( அப்போது மணவாளமாமுனிகளுத்ஸவமென்று ஒன்று நடைபெறவும் அவ்வானந்தத்தை அநுபவிக்கவும் ப்ராப்தமாகவில்லையே.] ஆதலால் இவ்வகையால் தேவரீரைவிட அடியேனே பாக்யசாலியாவேன்.

74-(அத்யேஷாமபி) திவ்ய தேசங்களில் மற்றும் பல ஆசிரியர்களுக்கும் உத்ஸவம் நடைபெற்றாலும் மணவாள மாமுனிகளுத்ஸவத்தின் வீறு விலக்ஷணமானதே. ஐப்பசி மாதம் அவதரிக்கப் போகிறதென்னும்போதே பிடித்து எமது நெஞ்சில் நடைபெறும் உத்ஸாஹ மஹோத்ஸவத்தை என் சொல்வோம்.

75-(ரங்காதீச்வர ) மணவாள மாமுனிகளே! அர்ச்சா மூர்த்திகளில் ஸ்ரீரங்க நாதனொருவனே பாக்யசாலி. அப்பெருமானேயன்றோ தேவரீருக்கு சிஷ்யனாக அமைந்த பெருமையை நாளைக்கும் காப்பாற்றி வருகிறான். ஒரு ஆசிரியர்க்கும் நடைபெறாத திருவத்யயனத் திருநாளை மாசிமாஸ க்ருஷணலபக்ஷத்வாதசியன்று தேவரீருக்கு அப்பெருமான் நடத்திப் போருவது சிஷ்யக்ருத்யம் அவர்ஐநீயம் என்றுகொண்டன்றோ?

76-(அத்யாஹம்வரயோகி) மணவாளமாமுனிகளே! இன்று அடியேன் தேவரீரைத் துதிக்கவிழிந்து, சிறிதும் ஆலோசனையின்றியே இங்ஙனே ச்லோக மாலிகையை விரைவாகவே விண்ணப்பம் செய்து வருகிறேன்; இந்த ஸ்தோத்திரமோ முடிவு பெற்று விடும். தேவரீருடைய பெருமைக் கடலிலோ சில திவலைகள் மாத்திரமே அநுபவிக்கப்பட்டன, முழுவதும் அநுபவிக்க எங்ஙனே முடியும்?

77-(மந்தப்ரஜ் ): மணவாள மாமுனிகளே! அடியேன் மந்தமதி யென்று பேர் பெற்றவனாயினும், தேவரீருடைய பெருமைகளை விளக்கும் ச்லோகங்களையே இடைவீடின்றித் தொடுத்துக் கொண்டிருக்கி றேனாதலால் மஹாப்ராஜ்ஞ னென்று விருது பெற்றேனானேன்; தேவரீருடைய திருவருளை என் சொல்வேன்?

78-(மந்த்ரம் த்வத்விஷயம்) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய தனியனான ஸ்ரீசைலேசத் திருமந்த்ரம் ஸகல திவ்ய தேசங்களிலும் புகழ் பெற்றுவருவதைக் கண்டு பொறாதார் சிலர் தாம் வேறொரு பத்யத்தை ஸ்ருஷ்டித்து அடிக்கடி பிரபலமான பரிபவத்தைப் பெற்று வருகிறார்களென்பதை நன்கு அறிந்தேயிருக்குமவர்கட்கும் அந்தோ! தேவரீருடைய பெருமை தெரியவில்லையே!

79-(உத்திஸ்ஸத்யதமா) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸூக்திகளே பொய்யொன்றுமில்லாதவை என்கிற உண்மையை நன்கு அநுபவித்துத் தெரிந்து கொண்டவர்களான பூருவாசாரியர்கள் * பொய்யிலா தமணவாளமாமுனி புந்திவாழி * என்று வாழ்த்தினார்கள், தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை ஆராயு மளவில் அந்த வாழ்த்து ஸத்யமானதே யென்று பறைசாற்றத் தட்டில்லை.

80-(நந்தாஅந்ந்த) * ஸித்திர் பவதி வா நேதி ஸ சயோச்யுத ஸேவிநாம் என்று பகவானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமே யுள்ளதாக சாஸ்த்ரம் முறையிடுகின்றது; அங்ஙனன்றிக்கே, மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றினார்க்கு ஸகல ச்ரேயஸ்ஸுக்களும் மல்குமென்று ஐயமற அறுதியிடப்பட்டதாம்,

81-(இந்த்ரஸ் ஸம்யமிநாம் ) பெரிய ஜீயர், மணவாளமாமுனிகள், அழகிய மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப்பிள்ளை மாதகாவால் வாழ்ந்தவர், திருவனந்தாழ்வான் திருவவதாரமானவர் என்றிங்ஙனே நாமாவளிகளை எனது நெஞ்சம் நிச்சலும் சிந்தை செய்து தூய்மை பெறுகின்றது.

82-(இந்தே ருத்ர வர) மணவாள மாமுனிகள் எங்கு எழுந்தருளியுள்ளாரென்று
கேட்டால். தம்மைச்சிந்திப்பார் சிந்தையினுள்ளும், திவ்ய தேசங்களிலும், திருவாய் மொழியின் இன்னிசை மன்னுமிடங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பலரும்
கூறுவர்; அடியேன் விண்ணப்பம் செய்வது அங்ஙனன்று; அவை யெல்லாவற்றோடுங்கூட என்னுள்ளத்துள்ளே யுறைகின்றா ரென்பதே உண்மை.

83-(மந்த்ரோ யஸ்ய) விவேகிகளான பாக்யசாலிகளுக்கு ஸர்வஸ்வமுமான தமது தனியனால் அர்ச்சாவதாரஸ்தலங்களை யெல்லாம் புனிதமாக்கி யருளாநின்ற
மணவாள் மாமுனிகளின் திருக்குணங்களைப் பன்னியுரைப்பதும் ஸகல பலன்களையு
மளிப்பதுமான இந்த ஸ்துதியானது வித்வான்களின் வாக்கிலே விளங்குக.

84-மந்யந்தாமிஹ) அடியேன் மணவாள மாமுனிகளொருவரையே பெருக்கத் துதிக்கிறேனென்பது பற்றிப்பொறாமையாளர் எதுவேனும் எண்ணுக ; ஸத்யமாக
விஜ்ஞாபிக்கிறேன்; மாமுனிகளைச் சிந்தை செய்யப் புகுந்தபின்பு, நம்மாழ்வார்
எம்பெருமானார் நம்பிள்ளை முதலானார் திறத்திலும் அடியேன் பக்தி குறையப் பெற்றேன், ஆதலால் மாமுனிகளையே துதிப்பது எனக்கு நித்யகால க்ஷேபமாயிற்று

85-(மந்தப்ரஜ் ஜநா )-இதன்மூலம் ஸம்ஸ்க்ருத ச்லோகங்களாயிருந்தாலும் அவற்றின் பொருளை ஸாதாரண வயுத்பந்நர்களும் எளிதாக அறிந்துகொள்ள வேணுமென்று நாரிகேளபாக மன்றிக்கே த்ராக்ஷாபாகமாக இத்தகைய ஸ்தோத்ரங்களை மணவாள மாமுனிகள் என்வாக்கில் நின்றும் அன்போடு வெளியிடுவித்தருள்கின்றார்; அப்பேராசிரியரின் பரம கிருபையை என்னென்பது!

ஸ்ரீ காஞ்சீ அண்ணங்கராசா ய ஸ்ரீ வைஷ்ணவதாஸன் விண்ணப்பஞ் செய்த ஸ்ரீ சைலேசதயாபாத்ர ஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ச்லோக ஷட்சதியில்-இரண்டாவதுஸ்தோத்ரம்.-ஸ்ரீ வரவர முநிகர்ணாம்ருதம்

(அவதாரிகை )எம்பெருமான்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் * மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்வது போல மணவாள மாமுனிகளிடத்தில் ஈடுபட்டவர்கள் * வரவரமுநி பத கமல! ஐயஎன்று (வடமொழியில்) சொல்லி மங்களா சாஸநம் பண்ண ப்ராப்த மாகையாலே அந்த வாக்ய ஸந்நிவேசத்தை யிட்டு அதிலுள்ள அக்ஷரங்களின் அடைவே ஒரு ஸ்தோத்ரம் விஜ்ஞா பிக்கலாயிற்று. இதற்கு ஸ்ரீமத் வரவரமுநிகாணாம்ருதமென்று ஒரு பெரியார் நாமமிட்டருளினார். மேலேவரும் ரஸாயந ஸ்தோத்ரமும் இதுவும் லகுவான அக்ஷரங்களே நிரம்பப் பெற்றது.

86-(வரவர) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையே! நீ வாழ்க என்னும் பொருளதான * வரவரமுநிபதகமல! ஐய * என்கிற இந்த வொருபாதத்தையே சிந்தை செய்மின்; (அதற்குமேல் சக்தியிருந்தால்) இந்த பாதத்தின் எழுத்தடைவே அமைக்கப்பட்ட இந்த கர்ணாம்ருத ஸ்துதியையும் கண்ட பாடம் செய்து சொலலுமன். (வடமொழியிலுள்ளவது தேவநாகரலிபியிலுள்ளது)

87-(வரவர) மணவாள மாமுனிகளே! தேவரீருடைய திருவடிகள் அடியேனது மனத்தில் மாத்திரமே எப்போதும் ஸூர்யோதயமானாப்போலே விளங்கிக் கொண்டிருக்கின்றன என்னவே அடியேனுடைய ஜென்மம் ஸபலமாயிற்று.

88-(ரவிரிஹ) மணவாளமாமுனிகளே! ஸுர்யன் வெளியிருளை மாத்திரம் போக்க வல்லவனே யன்றி உள்ளிருளை யொழிக்க வல்லவனல்லன்; தேவரீர் அடியேனது அகவிருளையெல்லாம் அகற்றி யருள்கின்றீர்

89-(வசளிச) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய பரம மதுரமான ஸ்ரீஸூக்திகளையே ஸதா அடியேனுடைய வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமாக்கி யருளிற்று; இனியெனக்கு ஸம்ஸார பயம் நடையாட விரகுண்டோ?

90-(ரகுவர) மணவாள மாமுனிகளே! இவ்வுலகில் ஸ்ரீராம க்ருஷ்ணாதி விக்ரஹங்களும் விளங்குகின்றன; தாராளமாக விளங்கட்டுமே ; தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹ மொன்றே அடியேனது கண்ணுக்குத் தோற்றுவதாம்

91-{முநிரிதி) முநியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருந்தாலும் அந்த முநி -குரு – யதிபதங்களெல்லாம் மணவாளமாமுனிகள் திறத்திலே தான் அர்த்த புஷ்டியுடன் விளங்குவன

92-(நிதிமிவ) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்ய ஸ்ரீ ஸுக்திகளை உள்ளத்துள் நிதிபோல வைத்துக் காக்க வல்லவர்கள் பலபிறவிகளில் செய்தபாவங்களெல்லாம் ஒருநொடிப் பொழுதில் தொலையப்பெறுமவராவர்கள்.

93-(படுமதிரி ) இவ்வுலகில் விவேகியான வொருவன் தேவரீருடைய ஸ்ரீஸுக்திகளை ஓயாமல் வாய்க்கொள்வனாகில் அவன் ஹயக்ரீவனை வென்றவனென்று புகழ் பெற்றவனேயாவன்.

94-(தமசமமுக) சமதமாதி குணக்கடலென்று பெற்ற புகழினால் உலகத்தை யெல்லாம் பரிமளிக்கச் செய்தருளாநின்ற மணவாள் மாமுனிகளே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை என்னுடைய நெஞ்சகம் பால் எழுதியருள வேணும்.

95-(கலிபலம்) கலியின் கொடுமை நாள்தோறும் எவ்வனவு வளர்ந்து சென்றாலும் அதுபற்றி எனது நெஞ்சில் சிறிதும் அச்சமில்லை. ஏனென்றால். மணவாள மா னிகளின் ஸ்ரீஸக்திகளினால் என்னுள்ளம் தெளிவுபெற்றிருப்பதனால்.

96-(மம மதிரி ) மணவாள் மாமுனிகளே! அடியேன் எப்போதும் தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளையே நெஞ்சில் நிதியாகக்கொண்டிருக்கிறே னென்பதுபற்றி அடியேனது புத்தியைப் பலரும் கொண்டாடுகின்றனர், இஃது ஒக்கும்.

97-( லஸத்தி)மணவாளமாமுனிகளே! இவ்வுலகில் மற்றும் பல ஆசிரியர்களின் திருவாக்குகள் பல விளங்கினாலும் அவற்றால் பயனொன்றும் காணோம்; தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் அவதரியாதிருந்தால் இருள் செறிந்தேயிருக்கும்.

98-(ஜகதிதம்) இவ்வுலகமானது அளவுகடந்த ஆசாரியர்களை நிரம்பக்கொண்டது; இன்னமும் லக்ஷக்கணக்கான ஆசாரியர்கள் தோன்றட்டுமே; அதனாலென்ன? மணவாளமாமுனிகளொருவரே ஒப்பற்ற ஆசாரியர்

99-(யதிபதிமதம்) எம்பெருமானார் தர்சனத்தை விளங்கச்செய்வதற்கெறேன்இந் நிலவுலகில் திருவவதரித்தருளின பேரருட்கடலான மணவாளமாமுனிகள் அடி
யேனுள்ளத்துள் மகிழ்ந்து உறைகின்றார்.

100-(வரவர) மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸ்தோத்ரமானது ஒருகுணமுமற்றதாயினும் வித்யான்களின் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்பது திண்ணம், என்று விஜ்ஞாபித்து இந்த வடமொழி ஸ்தோத்ரம் தலைக்கட்டப்பட்டது.

ஸ்ரீ மத்வரவரமுநீந்த்ரக்லோக ஷட்சதியில் இரண்டாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி கர் ணாமருதம் முற்றிற்று.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ர ஷட்சதியில்:- மூன்றாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி வைபவ ஸ்தோத்ரம்

ஸ்ரீ சைலேசதயாபாத்ரம் “ என்கிற தனியனிலுள்ள முப்பத்திரண்டு அக்ஷரங்களில் ஒவ்வொரு அக்ஷரத்தையும் அடைவே ஒவ்வொரு ச்லோகத்தின் முதலெழுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.

101-(ஸ்ரீமத்வர.) கற்பகக்கொடிபோல் விரும்பிய பொருளனைத்தையும் பதந்தோறும் அளிக்கவல்ல ஸ்ரீஸூக்திகளையருளிச் செய்தவரும் ஸமஸ்த திருக்கல்யாண
குணங்களுக்கும் கொள்கலமுமான மணவாளமாமுனிகளை எப்போதும் வணங்குவன்

102-(சைல இவ.) மணவாளமாமுனிகளே ! தேவரீர், ஸ்ரீஸூக்திகளாகிற புண்ணிய நதிகளுக்கு மலைபோல் உத்பதிஸ்தானமாயும், ஸம்ஸாரதாபங்களினால் வருந்தினவர்களுக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போன்றவராயும், தீபநெறியாகிற இருளைத் தொலைப்பதில் இரவிபோன்றவராயும் விளங்கினீர்.

103-(லேசோபி ) தமது ஸ்ரீஸூக்திகளில் ஸ்வல்பபாகத்தைச் சிந்தனைசெய் தாலும் ஆனந்தம் பொங்கி வளரும்படியாக அவற்றைத் திருவாய்மலர்ந்தருளிய மணவாள மாமுனிகள் தமது திருவடித்தாமரைகளில் (அடியேன் போல்வார்க்கு) பக்தியை விளைத்தருளாநின்றார்.

104-(சமயதி ) தீவினைகளனைத்தையும் தொலைத்து நல்லறிவை நல்குகின்ற திவ்ய ஸூக்திகளைத் திருவாய் மலர்ந்தருளின மணவாளமாமுனிகள் எப்போதும் எனது உள்ளத்திலே விளங்கா நின்றார்.

105-தயயா)எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினாலே நம்மைக் காத்தருள்கிறானென்னுமிடத்தை விளங்கக்காட்டும் ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய் தருளின மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தில் நிர்ஹேதுக கருணையோடு எழுந் தருளியுள்ளார்.

106-(யாது ஸகலோபி.) மணவாள மாமுனிகளின் வியாக்கியானங்கொண்டே ஸகலார்த்தங்களையும் அறியக் கூடியதாகவுள்ள ஸ்ரீவசநபூஷணமென்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் அநுபவத்திலேயே அடியேனுடைய வாழ் நாளெல்லாம் செல்ல துவணும்.

107-(பாது வாயோகி ) ரஹஸ்யத்ரயார்த்தவிவரணமாகப் பிள்ளையுலகாசிரியர் பணித்தருளின முமுக்ஷப்படியை மிகவழகிய புனிதமான திவ்யஸூக்திகளினால் ஸத் ஸம்ப்ரதாயப்படியே வியாக்கியானித்தருளின மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

108-(த்ரய்யந்தார்த்தம்) பிள்ளையுலகாசிரியர் பணித்தருளிய தத்வத்ரய மென்னும் ரஹஸ்யக்ரந்தத்தை வியாக்கியானித்தருளும் முகத்தால் ஸகல வேதாந்தஸாரப் பொருள்களையும் எளிய நடையில் உபகரித்தருளின மணவாள மாமுனிகளே நமக்கு அகவிருளை அகற்றவல்ல பேராசிரியர்.

109-( ரிஹ ஜகதி.) இவ்வுலகில் அவதரித்துள்ள பலபலவாக்குக்களை அநுபவித்து ஓய்வு அடைகின்ற எனது புத்தியானது மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளின் அநுபவத்திலிருந்து மாத்திரம் ஒருபோதும் ஒய்வடைகின்றதில்லை. “ எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமே .’ என்னுமா போலே நித்யாபூர்வமானவை மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளென்க.

110-(பவபயபேஷஜம்.)அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்ததும்
பிறவியென்னும் நோய்க்கு மருந்துமான ஆசார்யஹ்ருதய மஹாசாஸ்த்ரத்தின்
ஸகலார்த்தங்களையும் விசதமாகக் காட்டவல்ல வியாக்கியானத்தைத் திருவாய்
மலர்ந்தருளிய மணவாளமாமுனிகள் வாழ்க.

111-(பக்த்யா)மணவாளமாமுனிகளின் முகாரவிந்தத்தின் மகரந்தம் போன்றதும் ஸத்துக்களின் ஹ்ருதயத்திற்கு சோபாவஹமுமான உபதேசரத்தினமாலையென்னும் திவ்ய ப்ரபந்தத்தை அன்புடன் ஓதுமின் [இதில் (க்த்யா) இரண்டமெழுத்து ]

112-(தி துமயி) திருவாய்மொழியின் உட்பொருள்களைத் திருவாய்மொழிநூற்றந்தாதி யென்னும் திவ்யப்ரபந்த மூலமாக வெளியிட்டருளின் மணவாள மாமுனிகள் அடியேனுக்கு திவ்ய சக்ஷஸ்ஸை அருளவேணும்.

113-(குருபிரிஹ) இவ்வுலகில் பல பல ஆசிரியர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீஸூக்திகள் அளவு கடந்தவை யுண்டெனினும் மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளிலுள்ள இனிமை இணையற்றதேயாம்

114-(குணவை) ஒரு யோக்யதையும் சிறிதுமில்லாத அடியேனுக்கும் மணவாளமா முனிகளின் திவ்யஸூக்திகளின் ஆழ்பொருள்களெல்லாம் நன்கு தெரியும் படி அந்தமாமுனிகளின் திருவருளே வாய்க்கவேணும். [ இந்த ச்லோகத்தில் ணகலைரம் இரண்டாமெழுத்தாக அமைக்கப்பட்டது.

115-(அர்ணவ ) .’ அப்ரமேயோ மஹோததி:” என்னப்பட்ட, கடலின் காம்பீர்யத்தையும் அளவிடவல்லார் சிலருண்டு: மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திக்கடலின்காம்பீர்யம் மாத்திரம் ஒருவர்க்கும் நிலமன்று. I இந்த ச்லோகத்தில் (ர்ண ) என்கிற எழுத்து இரண்டாமக்ஷரமாக அமைக்கப் பட்டது .)

116-(வம்சே ஸூமஹதி ) மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளில் பக்தி விசேஷம் இல்லாவிடினும் அத்வேஷமாவது இருந்திருக்குமாகில் அதன்பயனாக மாசில்குடிப்பிறப்பும் நல்லுணர்வின் மிகுதியும் சமதமாதி குணபூர்த்தியும் விளையுமென்று மஹான்கள் கூறுகின்றார்கள்.

117-( யதிபதி) மணவாளமாமுனிகள் எம்பெருமானாருடைய அபராவதாரமேயென்று அறுதியிடுவதற்குப் பலபல சான்றுகள் உள்ளனவாதலால் அவற்றையே எப்போதும் சிந்தை செய்வேனாக

118-(தீர்த்வா ) பிறவிக்கடலைக்கடந்து ஒருகால் விண்ணுலகம் சென்று சேரப் பெறுவேனாயினும் அங்கும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தியமுதமே அடியேனுக்கு உணவாக வேணும்.

119-(த்ரவதித்ருஷத பி) கேட்டவளவிலே கல்லும் உருகும்படியான நடையில் அமைந்த யதிராஜவிம்சதியை அருளிச்செய்தவரும் சமதமாதி ஸத்குண நிதியுமான மணவாளமாமுனிகள் உலகைக் காத்தருளவேணும்.

120-(ப்ரதயதி.) பகவத்கீதையின் அற்புதமான தாற்பரியத்தை விளங்கக்காட்ட வல்ல கீதாதாத்பர்ய தீபமென்னும் வியாக்கியானத்தை யருளிச்செய்த மணவாளமாமுனிகளின் சிறந்த திருநாமங்களையே என்வாய் உரைத்திடு .

121-(வரதாதிராஜ.) பேரருளாளன் விஷயமாகப் பரமபோக்யமான மங்களா சாஸந ஸ்துதியை அருளிச்செய்த மணவாள மாமுனிகளுக்கே என் வாக்கு அநவரதம் பல்லாண்டு பாடக்கடவது.

122-(ப்ரவணம்)எம்பெருமானாருடைய திருக்குணங்களை அழகாகப் பேசவல்லதும்
மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தினால் சிறப்புற்றோங்குவதுமான இராமானுச நூற்றந்தாதியில் நெஞ்சே! எப்போதும் ஊற்றமுற்றிருப்பாயாக. (இந்த ச்லோகத்தில் ணகாரம் மூன்றாவது அக்ஷரமாக அமைக்கப்பட்டது.)

123-(வஞ்சயிதும்) கபடபக்தியினால் உலகை வஞ்சிக்க நினைத்தாலும் அந்தக் கபட பக்தியையும் மணவாளமாமுனிகள் விஷயமாகவே கொள்வது நலம். ஏனென்னில், மாமுனிகள் திறத்தில் பக்திபாவனை செய்யினும் ஆத்மா புனிதமாகுங்காணும்
“பொய்யேகைம்மைசொல்லி” இத்யாதி காண்க.

124-(தேயாத் வரவர.) மணவாளமாமுனிகள் பெரியாழ்வார் திருமொழிக்குத் தாமருளிச்செய்த இனிய வியாக்கியானத்தில் மிகவும் ஆழ்ந்து அவகாஹிக்கவல்ல
உள்ளத்தை எனக்கு அருள்புரியவேணும்.

125-(ரமயதிமம்) ஆசார்ய ஸார்வபெளமரான மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸகலப்ரமாண ஸங்க்ரஹமென்னும் [பிரமாணத்திரட்டு திவ்யகரந்தம் என்னுள்ளத்தை எப்போதும் உகப்பிக்கின்றது.

126-ய இ வரயோகி.) இந்நிலத்தில் அடிக்கொதிப்பால் ஆர்த்திப்பிரபந்த மருளிச் செய்தருளின மணவாளமாமுனிகள் ‘இன்னமொரு நூற்றாண்டிரும்‘ என்ற வாழ்த்துப்படியே இவ்வுலகில் எந்நாளுமெழுந்தருளியிருந்துகொண்டு நமது ஆர்த்திகளைத் தீர்த்தருளவேணும்.

127-(ஜாயாஜந்நீ) தாரமென்றும் தாயென்றும் தந்தையென்றும் ஸஹோதரனென்றும் பலரிடத்துப் பாலிபாயக் கூடிய அன்பு முழுவதும் அடியேனுக்கு மணவாளமாமுனிகளின் திருவடிகளிலேயே பதியக்கடவது. ஸகலவித பந்துக்களும்மாமுனிகளே யென்கை.

128-(மாதவ முகுந்த) எனது வாய், மாதவ! முகுந்த! முராரே! மதுஸு தந! கேசவ! என்சிற திருநாமஸங்கீர்த்தனங்களை விட்டிட்டு எப்போதும் மணவாள மாமுனிகளின் திருநாமங்களையே கூறப்பெற வேணும்.

129-(தலமபி) எனதுநெஞ்சு நின்றவாநில்லாது அலைபாய்வதேயானாலும் மணவாளமா முனிகளின் திருவடிகளில் மாத்திரம் ஒருபடிப்பட ஆழ்ந்த அன்பை யுடைத்தாயிருக்கின்றது. இங்ஙனே அருள்புரிந்த அந்த மாமுனிகளின் திருவருளை எங்ஙனே புகழ்வேன்.

130-(ரங்கீ ஸ்வயமி.) ஸ்ரீரங்கநாதனையும் தம்பக்கலிலே சிஷ்யனாகக்கொண்ட மாணவாள மாமுனிகளின் மஹிமை என்போன்ற சிறியோர்களின் இளைய புன்கவிதை களால் வருணித்துத் தலைக்கட்டக்கூடியதோ?

131-(முஹ ரிஹ) மணவாளமா னிகளின் ஸ்ரீஸத்தியமுதத்தைப் பருகிப் பருகிக் களித்த ஸ்ரீரங்கநாதன் சோதிவாய் திறந்து பணித்த* ஸ்ரீசைலேசத்தனியன் உலகிலுள்ள ஸகல மந்த்ரங்களையும் வென்று வீறுபெற்று விளங்குகின்றது.

132-(நிகில பி) ஆங்காங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள னைவரும் மணவாளமாமுனிகளையே தேவதையாகக்கொண்ட எந்த ஸ்ரீசைல மந்தரத்தையே நாடோறும் திருச்செவிசாத்தித் திருவுள்ளம் பூரிக்கின் றனரோ அந்த மந்த்ரத்தையே நான் எப்போதும் ஜபிக்கக்கடவேன்.

133-(மஹதாம் சுபகுல) ஸ்ரீவைஷ்ணவதாஸனானவடியேன் பெரியோர்களின் நற்குலத்திற் பிறந்ததனாலும் பேராசிரியர் திருவருளுக்கு இலக்காகப் பெற்றதனாலும் இந்த ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்யலானேன்.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரஷ் சதியில் மூன்றாவதான ஸ்ரீவரவரமுநி வைபவ ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷ்சதியில் நான்காவதான ஸ்ரீமத் வரவரமுநி ஸ்தோத்ரம் ரஸாயநம்

ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்னும் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே நெடிலெழுத்து இன்றியே குறிலெழுத்துக்களையே அமைத்து இந்த ஸ்தோத்ர ரஸாயநம்இயற்றப்படுகிறது. (பாதங்களின் முடிவில் மாத்திரம் நெடி லெழுத்து இருப்பது விருத்தமன்று) இந்த ஸ்தோத்ரத்தில் தீர்க்காக்ஷரம் புகாமையினாலே ஸ்ரீசைலேசத்தனியனில் தீர்க்கமாகவுள்ள அஷரங்களும் இதில் ஹ்ரஸ்வமாயிருப்பது பொருந்தும்.

134-(ச் தஜநீ) அடியார்கள் செய்த பாவங்ளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தீயினில் தூசாக்குகின்ற மணவாளமாமுனிகள் தமது திருமேனியை எப் போதும் என்னுள்ளத்துள்ளே காட்டியருளா நின்றார்.

135-(சமதம) சமதமாதி குணக்கடலே! மிகத்தெளிவான வியாக்கியானாங்களை யருளிச் செய்யவல்லவரே! மணவாளமாமுனிகளே! அடியேன் இங்கு நாடேறும் தேவரீருடைய திருப்புகழ்களையே அநுபவியா நின்றேன்.

136-(லகுமயி )மணவாளமுனிகளே ! அடியேனுக்கு நல்ல புத்தியை நல்தவற்றான சிறந்த திருவருளை என்மீது விரைவில் செய்தருளவேணும். அந்தத் திருவருள் இல்லையேல் என் ஜன்மம் எப்படிஸபலமாகும்.

137-(சசதர ) திங்களைப்பழிக்கும் திருமுகமண்டலமுடையவரே! நற்குணங்களையெல்லாம் விளங்கக் காட்டியருளினவரே! சாந்தர்களான யதிகளுக்குள் தலைவரே அடியேனுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி நல்க வேணும்.

138-(தர தலத்) மணவாளமாமுனிகளே! சிறிது மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்ணோக்கத்தை அடியேன்மீது வீழ்த்தியருளவேணும்; இவ்வருள் வாய்க்காவிடில் என்னிற்காட்டில் வேறொரு மூடன் உலகில் தேறமாட்டான்.

139-( யதிபதி) தமது வியாக்கியான ஸ்ரீஸூக்திகளாலே ஸ்ரீராமாநுஜ தர்சந ஸாரார்த்தங்களை யெல்லாம் விளக்கினவரும் சிறந்த குணக்கடலென்று புகழ்பெற்ற வருமான மணவாள மாமுனிகள் வாழ்க.

140-(பவநஜ ) இளையபெருமாளாகத் திருவவதரித்து, திருவடி, ஸக்ரீவ மஹாராஜர் முதலான வானர முதலிகளோடு கூடப் பெருமாளுக்குக் கைங்கரியங்கள் செய்தருளினவரும் இந்திரஜித்தை அடர்த்தவருமான மணவாளமாமுனிகளே! அடியேன்மீது மிகவும் இரங்கியருள வேணும்.

141-(தநுரியம்) வணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருவருளால் தேவரீரதுதிருவடிகளில் அடியேனுக்கு இடையறாத சிந்தனை நிகழுமாயின் இப்புவியில் அடியேன் சிரஞ்ஜீவியாக வாழப்பெறுவேனாக.

142-(தியமஹம்) மணவாளமாமுனிகளே! ஒவ்வொரு நிமிஷமும் தேவரீருடையதிருக் குணங்களைத் துதிப்பதிலேயே என்னுடைய புத்தியையெல்லாம் உபயோகித்து வருகிறேன் ; தேவரீருடைய சிறந்த திருவருளே இதற்குக் காரணம்.

143-(பவமய) அருள்மிகுந்த மணவாள மாமுனிகளே! பிறவிக் கடலினுள்ளே விழுந்து துவளும் பலபல ஜனங்களுக்குக் கை கொடுக்க வல்லமையினாலே அவர்களெல்லாரும் துன்பம் தீர்ந்து இன்பம் பெறுமாறு செய்தருளாநின்றீர்.

144-யதிபதி)மணவாளமாமுனிகளே! எம்பெருமானாரும் தேவரீரும் வேற்றுருவ மல்லாமையாலே தேவரீரே எம்பெருமானாராக அவதரித்து அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களை யெல்லாம் என்னுள்ளத்துள் எழுதியருளவேணும்.

145-(திவி புவி )மணவாளமாமுனிகளே! அடியேனை விண்ணுலகில் கொண்டு வைத்தாலும் இம்மண்ணுலகிலேயே வைத்தாலும் என்மனத்தால் ஒருவாசியுமில்லை; எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களையே என்னுடைய ஸ்தோத்ரங்களுக்கு விஷயமாக்கிக் கொண்டிருக்க வேணுமென்பதொன்றே கோரிக்கை.

146-(குருவர ) மணவாளமாமுனிகளே! திருவாய் மொழியின் ஆழ்ந்த அழகியகருத்தை யெல்லாம் அடியேனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தருளினீர்; அடியேன்பால் தேவரீருடைய திருவருள் மிகக்கனத்தது.

147-(ப்ரணமத.)(மாநிலத்தீர் !) மணவாள மாமுனிகளின் திருவடியை வணங்குமின், ஸ்ரீஸூக்திகளைச் செப்புமின், அவர்க்கேகைங்கரியம் செய்மின் ;இங்ஙனேயாகில் * நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர். (இந்த சலோகத்தில் முதலெழுத்தாக வரவேண்டிய ணகாரம் இரண்டாமெழுத்தாக அமைந்துளது.)

148-( ரசயிதும் ) மணவாள மாமுனிகளே! தேவரீரைத் துதிக்க வேணுமென்று அடியேன் நெஞ்சிற்கொண்டவனல்லேன்; ஆனாலும் தேவரீருடைய திருக்குணங்களெல்லாம் என்னெஞ்சில் அஹமஹமிகயா வந்து கூத்தாடுவதனால் இங்ஙனேதுதிகள் அமைகின்றன. ( இந்த ச்லோகத்தில் [ ர்ண )என்கிற எழுத்துக்கு பதிலாகரேபம் மாத்திரமே கொள்ளப்பட்டது.)

149-(வச ச.)மணவாளமாமு களே ! என்வாக்கிலும் மனத்திலும் எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களே விளங்குமாறு செய்தருளினீர் ; இனி வேறு எந்த ஆசாரியரும் என் மனத்தில் அடிவைக்க முடியாதபடி ஆய்விட்டது.

150-( யசஇ )மணவாளமாமுனிகளே ! தேவரீருடைய திருப்புகழ் இவ்வுலகமெங்கும்பரவி ” மணவ ள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.” என்றுவீடுதோறும் நாடுதோறும் வாழ்த்தும்படியமைந்துளது. இப்பெருமையைச் சிலகுமதிகள் அபலாபம் செய்ய முயன்றதனால் என்ன சேதம்?

151-(த்திதிரிதி.) மணவாளமாமுனிகளே! * ஆண்டுகள் நாள் திங்களாய்நிகழ்காலமெல்லாம் என்கிறபடியே திதியாகவும் கிழமையாகவும் நக்ஷத்ரமாகவும் அயநமாகவும் கழிந்து செல்லுகின்ற நாட்களில் ஒருநொடிப் பொழுதும் தேவரீ ருடைய திவ்ய ஸக்தியின் அனுபவமின்றிக்கே யிருக்ககில்லேன்.

152-(த்ரவதிஹி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸுக்திகளை ஓய்வின்றிச் சித்தைசெய்கின்ற. என்மனம் நீர்ப்பண்டமாயுருகுகின்றது.மஹாஜ்ஞாதாக்கள் சொல்லவேண்டிய இவ்வார்த்தையை அல்பஜ்ஞனான அடியேன் சொல்லுவதற்காக வெட்கமும் படுகின்றிலேன்.

153-(ப்ரதயதி) மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விளக்குவது போலவே பல குத்ருஷ்டி மதங்களையும் கண்டித் தொழிக்கின்றன; இத்தகைய ஸ்ரீஸக்திகள் எனக்கு வாசோவிதேயமாக வேணும்.

154-(வபுஷிச.) மணவாளமாமுனிகளே! எனது மனமொழி மெய்களில் தேவர் ருடைய திவ்யமங்கள விக்ரஹவொளியே இடையறாது புரள்கின்றது; இப்படிப் பட்ட பாக்கியம் பாவியேனுக்கு எங்ஙனே வாய்த்ததோ?

155-(நதித்தி ) மணவாளமாமுனிகளே ! அடியேனுடைய த்ரிகரணவ்ருத்தியும் தேவரீர் திறத்திலேயே பெருகிச்செல்லுகின்றது; தேவரீரையே தொழுவது உட லின் பணி; தேவரீரையே மனனம் செய்வது மனத்தின் பணி,இந்த ச்லோகத்தின் முதலெழுத்து ணகாரத்திற்கு பதிலாக நகாரம் கொள்ளப்பட்டது.

156-(வரகவி) இப்புவியில் தைவ கடாக்ஷத்தாலே கவியியற்றும் வல்லமை வாய்ந்த பல பண்டிதர்கள் வரகவி யென்று விருது பெறுவதுண்டு; ஆனாலும் வரமு னிகவியென்று ஒருவரும் இதுகாறும் விருது பெறவில்லை; மணவாள மாமுனிகளையே இடைவிடாது துதிப்பதனால் அடியேனே அந்த உயர்ந்த விருதைப் பெற்றேனானேன்.

157-.(தச சக )மணவாளமாமுனிகளின் திருப்புகழைப் பேசுவதென்றால் அடி யேனுடைய கொண்டேயிருக்கும். வாக்கிலிருந்து ஆயிரமாயிரம் ஸ்துதிகளும் நாள்தோறும் அவதரித்துக் அவை ஸூர்ய சந்திரர்களுள்ளவளவும் விளங்கக் கூடும்.

158-(ரமயதி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனி யழகே அடி யேனது உள்ளத்தை மகிழ்விக்கிறது; எனது ஒப்பற்றவனுபவத்தை நான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்.

159 (யதிபதி .) மணவாளமாமுனிகளே! எம்பெருமானார் நம்மாழ்வார் உலகா சிரியர் முதலான ஆசாரியர்கள் விஷயமாகவும் கௌரவபுத்தியுடன் நான் பல ஸ்து திகளைப் பண்டு விண்ணப்பம் செய்திருக்கிறேன்; ஆயினும், ஐயோ! அதெல்லாம் எதற்குச் செய்தோமென்கிற அனுதாபமே மிகவுமடியேனுக்குள்ளது.

160-(ஜகதிதம்) இவ்வுலகில் பலபல காலங்களில் (பலபல மதங்களில்) பல பல ஆசிரியர் ஆசிரியர்கள் தோன்றியே வருகிறார்கள்: ஆயினும் மணவாள மாமுனிகளைப் போன்ற எந்த மதத்திலும் தோன்றவேயில்லையென்று ஆணையிடுவேன்.

161-(மஹிமஸு)மணவாள மாமுனிகளே! தேவரீருடைய பெருமைக்கடலில் ஒரு சிறு திவலையளவு கூட அடியேன் அநுபவிக்கவல்லவனல்லேன்; ஆயினும் ஓயாது தேவரீர் விஷயமான ஸ்துதிகளை எழுதுவதிலேஊன்றிக்கிடக்கிறேன்.

162-(தரலஹ்ருத்.) நான் சஞ்சலசித்தனேயானாலும் மணவாள மாமுனிகளிடத்தில் அன்பு இன்றிக்கே ஒரு நிமிஷமும் இருப்பதில்லை; தேவப் பெருமாளை ஸேவித்தாலுங் கூட மணவாளமாமுனிகளென்கிற நினைவோடு தான் ஸேவிக்கிறேன். (வரதன் என் கிற திருநாமத்தில் வரவர முனியின் திருநாமத்திலேகதேசம் கலந்திருப்பதனால்

163-(ரசயது.) இவ்வுலகில் பல கவிகள் மிகச் சிறந்த பல பல நூல்களை இயற்றட்டும்; யார் எந்த நூல் இயற்றினாலும் மணவாள மாமுனிகளின் திவ்யகுணங்களைப் பேசப் பிறந்த எனது நூல் தான் ஓங்கிநிற்கும்.

164-(முனி வர) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனியின் சிந்தனையே என்னுள்ளத்துள் இடைவீடின்றி யிருத்தலால் இவ்வுலகில் என் கைக்கு எட்டாதது ஒன்றுமில்லை; நானே அவாப்த ஸமஸ்த காமன்.

165-.(நிரவதி)ஒப்பற்ற எண்ணில் பல் புகழ் வாய்ந்த மணவாளமாமுனிகளே! தேவ ருடைய திருவருளால் நலம் மிகுந்த இத்தகைய ஸ்துதிகள் நாடோறும் நிமி ஷந்தோறும் அவதரித்துக் கொண்டே யிருக்க வேணும்.

ஸ்ரீமத் வரவர முநீந்தரஷட்சதியில் நான்காவதானஸ்ரீவரவரமுநிஸ்தோத்ர ரஸாயனம் முற்றிற்று

ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே மணவாள மாமுனிகள் விஷயமான மங்களாசாஸநஸ்துதி இது.

166-(ஸ்ரீசமரிச ) ஆழ்வாரெம்பெருமானார் ஸ்ரீஸுக்திகளாகிற அமுதத்தையே பருகும் மணவாளமாமுனிகள் வாழ்க.

167-(சைசவாத்) இளமையே தொடங்கி பகவத்குணக் கடலில் ஆழ்ந்த மணவாளமாமுனிகள் வாழ்க.

168-(லேகநே.) மிகத்தெளிவான வியாக்கியானங்களை அருளிச்செய்ய வல்ல ஆதிசேஷாம்சமான மாமுனிகள் வாழ்க.

169-(சடாரி) நம்மாழ்வார் கலியன் முதலான ஆழ்வார்களின் அருளிச் செயல் மணம் கமழும் திருவாக்கையுடைய மணவாள மாமுனிகள் வாழ்க.

170-(தயாபால) அருளாளப் பெருமாளெம் பெருமானாரருளிச் செய்த ஞான ப்ரமேய ஸாரங்களை வியாக்கியானித்தருளின அருட்கடலான மணவாள மாமுனிகள் வாழ்க.

171-(யாதாயாத.) ஸம்ஸாரமென்னும் பாலைநிலத்தில் நாம் திரிந்துழல் வதைத் தொலைத்தருளின மணவாளமாமுனிகள் வாழ்க.

172-(பாதாப்ஜ.) திருவடி பணிந்தார்க்கு நித்யமும் ஸ்ரீபாத தீர்த்தமளித் தருளித் தூய்மை பெறுவித்த மாமுனிகள் வாழ்க.

173-(த்ரய்யந்தார்த்தார்.) தத்வத்ரய வியாக்கியான முகத்தால் வேதாந்தப் பொருள்களை விவரித்தருளின மாமுனிகள் வாழ்க.

174-(தீமத்பி) கோயிலண்ணன் முதலான பெரியார்கள் அடிபணியப்பெற்ற மஹா தீரரான ணவாளமாமுனிகள் வாழ

175-(பயம்பயாப்தி) பிறவிக் கடலில் மூழ்கினவர்களின் அச்சத்தை அறவே போக்கியருளின மணவாளமாமுனிகள் வாழ்க

176-(யாதநாம்) நரகத்தில் நேரக்கூடிய வேதனை யொன்றும் நமக்கு நேராதபடி யருள் செய்த மணவாளமாமுனிகள் வாழ்சு.

177-(திவ்யஸூக்தி) அருளிச் செயலமுதத்தை அநவரதமும் பருகிக்களிக்கின்ற
மணவாள மாமுனிகள் வாழ்க.

178-(குரூணாமபி.) ஸகல ஆசார்யர்கட்கும் முன்னே எண்ணத் தகுந்தவரும் ரஹஸ்யார்த்த தத்வநிதியுமானமாமுனிகள் வாழ்க

179-(குணாதாம்) அளவிறந்த திருக்குணங்கட்குக் கடல் போன்று அடியார் திறத்துப் பரிவு பூண்ட மாமுனிகள் வாழ்க.

180-(அர்ணவாய) சிறந்த அர்த்தங்களுக்குக் கடல்போன்று அற்புதமான ஞானச் செல்வம் படைத்தமாமுனிகள் வாழ்க.

181-(வந்தே ஸ்தெளமி.) இறைஞ்சுகின்றேன் ஏத்துகின்றேன் வணங்குகின்றேன்
என்பவற்றுக்கு முக்கிய இலக்கான மாமுனிகள் வாழ்க

182-(யச் சதே.) நூற்றந்தாதியினால் திருவாய்மொழி யாயிரத்தின் பொருளை
யளித்த, எம்பெருமானார் தரிசன விளக்கான யாமுனிகள் வாழ்க.

183-.தீர்த்வா.) பிறவிக்கடலைக் கடந்து பரவாஸுதேவனை ஸேவிக்க விருப்ப முடையவர்களால் ஸேவிக்கப்பட வேண்டிய மாமுனிகள் வாழ்க

184-(த்ரவீபவ.) தம்முடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்திப்பாருடைய உள்ளத்தை யுருக்குபவரும் அருளிச் செயல்களின் பாக்கியமே வடிவெடுத்தவருமான மணவாள மா முனிகள் வாழ்க.

185-(ப்ரலயேபி.) பிரளயத்திலும் அழியமாட்டாத தனியனால் வைபவம் பெற்ற
உலகம் நிறைந்த புகழாளரான மாமுனிகள் வாழ்க.

186-(வசோபூஷண.)ஸ்ரீவசன பூஷணத்தின் உண்மைப்பொருளை உணர்த்தும் வியாக்கியானத்தை யருளிச்செய்து புகழ்மிக்கவரும் ஸர்வஜ்ஞரும் பரமோதாரருமான மாமுனிகள் வாழ்க.

187-(ணமுதாத்வர்த்த.) ணமுதாதுவின் பொருளான வணக்கத்தில் ஊற்றமே
நெஞ்சிற்குடிகொண்டிருக்கப்பெற்ற ஆசார்யசிகாமணி வாழ்க.

188-(வஸிஷ்டாதி.) வஸிஷ்டாதி மஹர்ஷிகளின் வாக்கைக் காட்டிலும் மிகச் சிறந்த ஸ்ரீஸூக்திகள் யருளிச்செய்தமாமுனிகள் வாழ்க

189-(தேசிகாநாப்) ஸகல ஆசாரியர்களும் ஒன்று சேர்ந்து உதிக்கப்பெற்றவரிவர்
என்று மஹான்கள் போற்றும் மாமுனிகள் வாழ்க.

190-ரந்த்ராந்வேஷி) என்ன தப்பு தவறு கிடைக்குமென்று தேடிப்பார்த்து தூஷிப்பதிலேயே கண்ணானவர்களுக்கும் நிலமல்லாத நிரவத்ய ஸ்ரீஸூக்திகளை யளித்த மாமுனிகள் வாழ்க.

191-(யதிப்ரவர ) ஸ்ரீபாஷ்யார்த்தங்கள் நிரம்பிய ஸ்ரீஸக்திகளைத்தந்தருளினவரும், வானமாமலைஜீயர் பட்டர்பிரான் ஜீயர் திருவேங்கட ராமாநுஜீயராகிய மூவரால் துதி செய்யப் பெற்றவருமான மாமுனிகள் வாழ்க.

192-(ஜாக்ரத்தசாயாம்) கனவிலன்றிக்கே நனவிலேயே அடியேனுக்கு ஸேவை ஸாதித்தருளின மணவாள மாமுனிகள் வாழ்க.

193-(மாயா துரத்யயேத்யேவம்) *மம மாயா துரத்யயா க என்று கடக்க வரிதாகக் கீதையிற் சொன்ன மாயையைத் தொலைத்தருளின மாமுனிகள் வாழ்க.

194-(தத்வார்த்தம்) ஸகல சாஸ்த்ர தத்துவப் பொருள்களையும் கையிலங்குநெல்லிக் கனியாகக் கண்டு நிஸ் ஸந்தேஹமாக உரைத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

195-(ரஞ்ஜிதாசேஷ) எல்லாருடைய நெஞ்சையும் உகப்பித்தவரும், அகவிருளை அகற்றினவரும், அழகிய திருவாக்குக்களை யளித்தவருமான மணவாளமாமுனிகள் வாழ்க.

196-(முகபங்கஜ திருவாய்மலர்ந்தருளும் தேன்மொழிகளாலே முமுக்ஷக்
களைக் காத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

197-(நித்யகைங்கர்ய) *சென்றாற்குடையா மித்யா திப்படியே நித்யகைங்கரியங்களிலே நிரதரான திருவனந்தாழ்வானே வந்து திருவவதரித்தவரான மணவாளமாமுனிகள் வாழ்க வாழ்கவே.

198-(மங்களாசாஸநம்) மணவாள மாமுனிகளின் திருக்குணங்கள் திகழநின்ற இந்த மங்களாசாஸந ஸ்துதியைச் சிந்தை செய்வார்க்கு நித்யஸ்ரீர் நித்யமங்கள முண்டாம் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.

ஸ்ரீசைலேசதயாபாத்ரமங்களாசாஸன ஸ்தோத்திரம் முற்றிற்று.

200 (ச்லோ) க்ருதம் பூய பாபம் ப்ரதி கிமிதி சிந்தா பவதி வ ?
கலத்ரே தாதே வா தநய உத பந்துஷ்வபி புந:, விரக்த்யா மத்வாக்யே ருசிரிஹ பவேத்வாபரமித: கலித்வர்ந்தத்வம்ஸ் வரவரமுநிர் வோ த்ருவமவேத்– இதில் நான்கு பாதங்களிலும் க்ருத த்ரேதாத்வாபர கலியுகங்களின் பெயர் (முத்ராலங்கார ரீதியில்) அமைந்திருப்பது காண்க. (இனி கருத்துக்கேண்மின்.) ஜனங்களே! நீங்கள் செய்த அபரிமிதமான பாபத்தைப்பற்றி உங்களுக்கு ஏதுக்கு விசாரம்? மனைவி தந்தை மகன் உற்றாருறவினர் என்னுமிவர்களிடத்தில் நசையற்று என் வார்த்தையில் உங்களுக்கு ருசியுண்டாகுமா? (அப்படியானால் ) இன்று தொட்டு மெழுமையும் கலிகல்மஷத்தைப் போக்கவல்லவரான மணவாளமாமுனிகள் உங்களை அப தபாப்மாக்களாக்கி ரக்ஷித்தே தீருவர். மூன்றாம்பாதத்தில் பவேத் வாபரமித: என்றதில் த்வாபரயுகஸ்பூர்த்திகாண்க. இத பரம் மத்வாக்யே ருசிர் பவேத் வா? என்று அந்வயக்ரமம் காண்பது . மேல்வரும் நக்ஷத்ரமாலா பர்யந்த ஸ்தோத்ரங்களிலெல்லாம் இவ்வண்ணமாகவே முத்ராலங்கார ரீதியிலே ஸம்வத்ஸராதி நாமங்களின் விந்யாஸ முணரத்தக்கது.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோக ஷட்சதியில் இரண்டாவது சதகம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீ வரவரமுநி ஸம்வத்ஸரமாலாஸ்தோதாம் ஏழாவது.-ப்ரபவ முதலான அறுபது ஸம்வத்ஸாங்களின் பெயர்களை முறையே அறுபது சுலோகங்களில் அமைத்து மாமுனிகளின் திவ்ய குணாநுபவமாகச்செய்த தோத்திரமிது. இந்தத் தோத்திரத்தில் (வடமொழியமைப்பில்) இரண்டு நிர்ப்பந்தங்கள் கொள்ளப்பட்டன; (1) ப்ரபவாதி ஸம்வத்ஸநாமத்தை ச்லோகங்களின் தொடக்கத்திலேயே வைப்பது. (2) சுலோகந்தோறும் முதலில் வரும் எழுத்தையே மற்றமூன்று பாதங்களிலும் முதலெழுத்தாக வைப்பது.

201-(ப்ரபவோ பஹவஸ் ஸந்தி.) இவ்வுலகின்கண் புகழ் பெற்ற ப்ரபுக்கள் பலருளர்; இருக்கட்டுமே. மஹாப்ராஜ்ஞரான மணவாள மாமுனிகளே விவேகிகளுக்கு அத்விதீய ப்ரபுவாவர்.

202-(விபவாந் விவிதாந்ஸத்ப்ய:) மணவாள மாமுனிகளின் வைபவங்களைச்
சிந்தை செய்வதில் ஊக்கமுண்டானால் அது ஸத்துக்களுக்குப் பலவகைப்பட்ட
விபவங்களை விளைக்கவல்லதாகும்.

203-(சுக்லபக்ஷேந்துவந்நித்யம்.) மணவாள மாமுனிகளின் திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தூயமனத்தில் வைத்துச் சிந்தை செய்பவர்களுக்கு சுத்தஸத்வ குணமானது சுக்லபக்ஷத்துச்சந்திரன் போல் மேன்மேலும் வளர்ந்து செல்லும்.

204-(ப்ரமோதோதநுரஸ்மாகம்) எங்கும் புகழ்பெற்ற மணவாள மாமுனிகளின் ப்ரபாவங்களைச் சிந்தை செய்வதனால் நமது உள்ளத்தினுள் பேரின்ப வெள்ளம் பெருகுகின்றது.

205(ப்ரஜோத்பத்திக்ருதௌ நித்யம்) பரமபுருஷன் நிச்சலும் ப்ரஜைகளைப் படைத்துக் கொண்டே போவதில் வல்லவனே யொழிய, பெற்ற ப்ரஜைகளுக்கு உணவளிக்கவல்லவனல்லன்; அவன் படைத்த ப்ரஜைகளுக்கெல்லாம் உணர்வாகிற உணவையளிக்க அவதரித்தவர் நம் மணவாள மாமுனிகள்.

206(ஆங்கீரஸக்ருதாநந்தம்) மணவாள மாமுனிகள் எனக்குஆனந்தத்தை விளைவிக்கவல்ல தமது திவ்யமங்கள விக்ர திவ்யகாந்திகளை எனது நெஞ்சினுள் அடிக்கடி விளக்கிக் கொண்டே யெழுந்தருளியிருக்கிறார்.

207- (ஸ்ரீமுகாம்போஜநிர்கச்சத்) தமது முகாரவிந்தத்தில் நின்றும் வெளி வருகின்ற ஸ்ரீஸூக்திகளாகிற அமுதவெள்ளத்தைப் பெருக்குவதனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தை வளர்த்தருளாநின்ற மணவாளமாமுனிகள் வாழ்க.

208- (பவஸாகரஸந்தார்:) அன்பர்களே! ஸம்ஸாரஸாகரத்தைக் கடந்து வாழவேணுமென்று விரும்புகின்றீர்களாகில், மணவாள மாமுனிகளின் திவ்ய ஸ்ரீஸக்திகளில் பக்தி செலுத்துங்கள்.

209(யுவத்வம் ப்ராபுஷாம் மாபூத்) பாலப்பிராயத்திலும் முதுமைப்பிராயத்திலும் பெறமுடியாத நன்மைகளை யௌவனபிராயத்தில்தான் பெறமுடியும்; அந்தப் பிராயத்தைப் பெற்றிருப்பவர்களே! அதனைப் பாழ்படுத்தாமல் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைச் சிந்தனை செய்வதே உந்தமக்குத் தக்கதாம்)

210 (தாதுஸாம்யே ஸதி ஸ்வைரம்) கை நாடிகளெல்லாம் விஷமநிலையிலன்றிக்கே ஸம நிலையிலிருக்கும்போதே (நல்லகாரியங்களை ஸாதிக்கவேண்டியிருக்க. அது செய்யாதே )யதேஷ்டமாகத் தீயவழிகளிற்சென்றுழல்வதனால் என்னபேறுபெற்றதாகும்? எப்போதும் கண்டபாடமாகத் தரிக்கவேண்டியதான மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கண்டபாடமாக்கிக்கொள்ள முயலுங்கள்.

211 (ஈச்வரோ ஜகதாம் விஷ்ணு)ஜகத்துக்களுக்கெல்லாம் போஷகன்ஸ்ரீமஹாவிஷ்ணு வென்கிறார்கள்; அது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; அந்த ஸர்வேச்வரனையும் போஷிப்பவர் மணவாள மாமுனிகளேயாவர். 

212(பஹுதாங்யநேச்சாபி 🙂 தனதான்யங்களை அபரிமிதமாக ஸம்பாதிக்க வேணுமென்று எங்கும் சுழன்று திரிகின்ற ஸம்ஸாரிகளின் சிந்தையில் மணவாள மாமுனிகள் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பதில்லை யந்தோ!

213 (ப்ரமா திவ்யப்ரபந்தேஷ ) ஆழ்வாரருளிச் செயல்களில் யதார்த்த ஜ்ஞானம் பெற வேணுமென்று விருப்பங்கொண்ட ப்ராஜ்ஞர்கள் மணவாளமாமுனிகளின் திவ்ய க்திகளை விசேஷித்துச் சிந்தைசெய்யக்கடவர்கள்.ப்ரமாதி சஞ்சலஞ்சேதி ) கீதையில் சஞ்சலம் ஹி ம : க்ருஷ்ண! ப்ரமாதிபலவத்த்ருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்று(அர் னனால்) அடக்கவரித்தாகச் சொல்லப்பட்ட மனத்தை அடக்கியாண்டவர் புகழ் பெற்ற மணவாள மாமுனிகளே யாவர்.

214 (விக்ரமம் வாசி பிப்ராணா ) நா வீறு படைத்த நாவலர்களும் அஸூயை குடிகொண்ட நெஞ்சினராய் மணவாள மாமுனிகளின் பெருமைகளை மறைப்பதிலேயே குதூஹலங் கொண்டிராநின்றார்களந்தோ! .

215 (வ்ருஷபம் முநிவர்யாணாம்.) (விக்ரமவருஷத்திற்கு அடுத்தவருஷத்தை
வ்ருஷவர்ஷமென்று சிலரும் விஷ வருஷமென்று சிலரும் சொல்லுவர்கள்.
இரண்டுபடிக்குஞ்சேர இரண்டு சு லோகங்கள் விஜ்ஞாபிப்போம். (வ்ருஷ)
என்கிற பக்ஷத்திற்கு இந்த சுலோகம்.) முனிவர்களேறு என்றும் ஞானவ்ருத்த ரென்றும் புகழப்பெற்ற மணவாள மாமுனிகளை என்னுடைய ஸகலபாபங்களும் தீயினில் தூசாவதற்காகத் தஞ்சமாகப்பற்றுகிறேன்.-(விஷு என்பது வர்ஷநாம மென்னும் பக்ஷத்தில்){விஷ்வக்வ்யாபியச காய) எங்கும் பரந்த புகழ்த் திருமேனியினால் விளங்கா நின்ற நிரவத்யரான மணவாளமாமுனிகள் நூருண்டு வாழ வேணும்.

216 (சித்ரபா நுலஸத்பூ 🙂 எம்பெருமான் விசித்திரமான ஒளிகள் திகழும் திருவாபரணங்களை யணிந்து என்முன்னே நின்றாலும் அவனை விட்டு, என் சிந்தனைக்கினிய மணவாள மாமுனிகளை மட்டுமே யான் சித்தை செய்வேன். 

217 (ஸ்வபாநுபிஸ் தமோ பாஹ்யம்) கதிரவன் தனது கிரணங்களினால் வெளியிருளை மட்டும் போக்குகின்றான். பரமமதுர திவ்ய க்திகளையளித்த மணவாள மாமுனிகள் தமது திருவாக்குக்களினால் அகவிருளை அகற்றுகின்றார்.

218-.(தாரணோ பவவாராசே:) பிறவிக்கடலைக் கடக்கச் செய்பவரும்.திங்கள் போன்ற திருமுகத்தையுடையவரும், தாபத்ரயத்தையும் தணிக்க வல்லவருமான மணவாள மா முனிகள் என்னுடைய இருள்மலிந்த மதியை மாற்றி யருளவேணும். தெருள் கொள்ளச் செய்யவேணும்.

219- (பார்த்திவாந் தந்தர்ப்பாடயா ) செல்வச்செருக்குற்றபாமரப்ரபுக்களை நோக்கிச் செல்கின்றவர்கள் மணவாள மாமுகளின் பரமபவித்திரமான திருவடித் தாமரையை நோக்கிச் செல்லக்கடவர்கள்.

220 (வ்யயம் வாசாம் விதந்வந்தி) அறிஞர்களுங்கூட தங்களுடைய வாக்கை வீணாகவே அஸ்தானத்தில் விநியோகிக்கின்றார்கள்; அன்னவர்கள் தங்களது விவேக சக்தியைச் செலுத்தி, தாங்கள் படைத்த நாவீறுகொண்டு மணவாளமாமுனிகளைத் துதித்துத் துயர் தீர்வது நலம்.

221 (ஸர்வஜித் பகவாந் விஷ்ணு:) தனது மேன்மையினால் எங்கும் வெற்றி பெற்றவனான எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனாய் மணவாளமாமுனிகளுக்கு ஸச்சிஷ்யனாகி க்ருதார்த்தனாயினன்.

222 (ஸர்வதாரீ ஹரிஸ் ஸாக்ஷாத் )எல்லார்க்கும் ஆதாரபூதன் ஸாக்ஷாத் ஸர்வேச்வரனே யென்பதை நாம் மதிப்பதில்லை ; ஸர்வஜ்ஞரான மணவாளமாமுனிகளே தமது திவ்யஸூக்திகளால் அனைவர்க்கும் ஆதாரபூதராகிறார்.

223 (விரோதீதி கமப்யஸ்யாம்) இந்த நிலவுலகத்தில் ஒருவரையும் விரோதியென்று கொள்ளாதவராக ப்ரஸித்தரான மணவாளமாமுனிகள் விலக்ஷணரான ஆசாரியராவர். ( இந்த சுலோகத்தில் விபுலாயாம் – என்றது நிலவுலகத்திலென்றபடி விபுலா என்று பூமிக்குப்பெயர்; அமரகோசங்காண்க.)…

224( விக்ருதிம் யாந்தி பூயாம்:) பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்று ஆழ்வார் வெருவியருளிச்செய்த விஷயக்ராமங்களைக்கண்டு பலர் விகாரமடைகின்றார்கள்; நாம் விகாரமடைவது அவற்றலல்ல; மணவாளமாமுனிகளின் விசதவாக் விசேஷங்களாலேயாம். விகாரமடைவதாவது ககண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்தீர்ணபாஷ்பாம் புநா *காலாழும் நெஞ்சழியுங்கண் சுழலும் என்னும்படியான நிலைமை பெறுதல்.)

225 (வரா இவ விவேகாந்தா:) கழுதைகள்போல் விவேக சூநயர்களான சில தூர்த்தர்கள் மிகவும் மத்தர்களாய்க்கொண்டு மணவாளமாமுனிகளை தூஷிப்பது பொறாமை யினாலன்றோ. அதனாலென்ன ?

226(நந்தநந்தந க்ருஷ்ணேதி.).நந் தன்மைந்தனே! கண்ணனே! என்று பகவந்நாமங்கள் சொல்லுவதை யான் விட்டிட்டு மணவாள மாமுனிகளின் திரு நாமங்களைச் சிந்தை செய்வதிலேயே ஊன்றியிருந்து மகிழக்கடவேன்.

227 (விஜயோ விபுலஸ் தேஷாம்) மணவாளமாமுனிகளின் உலகமறிந்த பெருமைகளை யாவர் உபந்யஸிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்கும் வெற்றியே விளையும் ; உலகம் பரந்த புகழுமுண்டாகும்.

228.(ஜய ஏவ பவேந்நித்யம்) ‘மணவாளமாமுனியே! வாழி வாழி’ என்று உரக்க அநுஸந்திக்குமவர்களுக்கு இந்நிலவுலகில் எங்கும் ஐயமே யொழிய பராஜய ப்ரஸக்தியேயிராது

229(மந்மதாஜ்ஞாபடா: ப்ராய:) மனிசர்கள் பெரும்பாலும் மதனனது செங்கோலுக்கு ஆட்பட்டவர்களாய் ஸம்ஸாரமண்டலத்தில் மதங்கொண்டு திரிகிறார்கள். அடியேனோவென்னில், மணவாள மாமுனிகளின் திவ்யஸூக்திகளாகிற மதுவைப் பருகுவதனாலுண்டாகிற மதமுள்ள வன்.

230 (துர்மு கீதி ப்ரஸித்தாநாம்) சுடுமூஞ்சிகளென்று யாவராலும் பழிக்கப் பெற்ற துஷ்டர்களைச் சென்று துக்க நிவ்ருத்திக்காகப் பணியவேண்டா ; மணவாளமாமுனிகளின் பாலன்னமென்மொழிகளைக்கொள்ளுமளவில் கைலதுக்கங்களும் தொலையும்.

231 (ஹே விலம்பிதுமர்ஹம் ந) த்யாஜ்யோபாதேயங்களைப் பகுத்தறியவல்ல விவேகிகளே! (நான் சொல்லுவதை நிறைவேற்றுதலில் ) சிறிதும் தாமதிக்கத்தகாது. மணவாள மாமுனிகளின் பொற்றாமரையடிகளை அநாயாஸ மாகத் துதிக்கக்கடவீர்கள்.

232(விலம்பிகுண்டலோல்லாஸி) * மகரஞ்சேர் குழையிருபாடிலங்கியாடப் பெற்ற திருமுகமண்டலத்தையுடைய எம்பெருமான் என் முன்னே நிற்க வேண்டா, நின்றாலும், எங்கும் மணவாள மாமுனிகளையே காணப்பெற்ற வடியேன் அவனைக் காணகில்லேன்.

233(விகாரிதா து ஹேயேதி) விகாரமடைவதுஹேயமென்று அறிஞர்களு மறிகின்றார்கள், மணவாள மாமுனிகளின் வைபவங்களைச் சிந்திப்பதனா லுண்டாகும் விக்ருதி ஹேயமன்று; விரும்பத்தக்கதேயாகும்.

234 (சார்வரீசப்ரபாஜிஷ்ணு) திங்களொளியை வென்று விளங்கும் திரு மேனியை யுடையவரும் கூமாநிதியுமான மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி களை ஸேவிப்பதனால் ஸகல பாபங்களும் தொலையும்.

235(பலவாலாபாத் ஸதா ச) ஸம்ஸார ஸாகரத்திலழுந்தி, கரை சேர்வதற் குத்தோணி கிடைக்காமையினால் துன்புற்று வருந்திக்கிடப்பவர்கள் மணவாள மாமுனிகளின் தளிர்போன்ற திருவடிகளைத் திடமான தோணியாகபற்றுக. 

236 (சுபக்ருத் ப்ரதிதோ விஷ்ணு:) நமக்கு நன்மைகள் செய்பவனென்று ப்ரஸித்தி பெற்றவனான எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்தருளவில்லை;
மணவாள மாமுனிகளே தமது திவ்ய ஸூக்திகளினால் உலகுக்கெல்லாம் நன்மை செய்து விளங்கினார்.

237-(சோபக்ருத்தாமஸாஹாரை:) தாமஸாஹாரங்களென்று கழிக்கப்பட்ட உணவுகளை யுண்டு ஊன்மல்கி மோடுபருத்தவர்களாகி வருந்தத்தக்க நிலைமையில் நிற்குமவர்கள் மணவாள மாமுனிகளின் திருமேனியழகைச் சிந்திப்பதனால் தங்கள் உடலைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுக. ச்லோகத்தில் (சோபக்ருத்] என்ற விடத்தில் இரண்டாமெழுத்து பவர்க்கத்விதீயம் –சோபமாவது தடிப்பு; அதை யுண்டு பண்ணவல்ல உணவுகள் தாமஸாஹாரங்கள் )

238-(க்ரோதீ ஜநோ வ்ருதைவாத்ர) காமம் க்ரோதம் முதலிய துர்க்குணங்களைத் தொலைக்க வல்லவரான மணவாள மாமுனிகளிடத்தில் க்ரோத பரவசர்களானார்-அஸூயைக்கு வசப்பட்டு வீணாக எதையோ பிதற்றுகின்றன

239-(விச்வா வஸுமதீ தேஷாம் மணவாளமாமுளிகளின் ஸகலவைபவங் களையும் நன்குணர்வார்க்கு பூமண்டலம் முழுதும் வசப்பட்டதாகும்

240-(பராபவ: கதாப்யஸ்மாங்) பரமபாவனமான மணவாளமாமுனிகளின் பொன்னடியாஞ் செங்கமலப்போதுகளைப் பணிகின்ற நம்மை அங்குமிங்குமெங்கும் எவ்விதமான பரிபவமும் அணுகாது.

241- (ப்லவம்கவேஷமாணா யே) பிறவியென்னுங்கடலில் தோணி பெரு
துழல்கின்றவர்கள் மணவாளமாமுனிகளைத் தோணியாகப் பற்றினால் வானரமுதலி
கள் கடலைக்கடந்தது போல் பிறவிக்கடலை அநாயாஸமாகக் கடக்கவல்லராவர். 

242(கீலகோத்பாடநோத்யுக்த.) கீலோத்பாடீவ வாநர: என்னும் நியாயத்தின்படி (அதாவது, வெறுமனே யிருக்க மாட்டால் தன்னுடைய அனர்த் தத்தைத் தானே விளைவித்துக் கொண்டதொரு குரங்கின் கதையின்படி) சில பாமரர்கள் தங்கள் விபத்தைத் தாமே தேடுகிறவர்களாய் மணவாளமாமுனிகளைப் பழிக்கப் புகுகிறார்கள் அந்தோ !

243. (ஸௌம்யஜாமாத்ருபகவாந்) ஸௌம்ய ஜாமாதா ‘ என்று திருநாமம் பெற்ற அழகிய மணவாளன் மணவாளமாமுனிகள் பக்கல் மிகவழகிய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டுதிவ்யமான தனியனை வெளியிட்டருளினான்.

244 (ஸாதாரணாஹ்வயே வர்ஷே) பகவத்ராமாநுஜரான எம்பெருமானார் ஸாத்விகர்களை நன்கு காத்தருளவேண்டி ஸாதாரண ஸம்வத்ஸரத்தில் மணவாள மாமுனிகளாக மீண்டும் அவதரித்தனர்.

245 (விரோதிக்ருத்ஸ்நம் துர்த்வாந்தம்) விசத வாக்சிகாமணிகளான மணவாள மாமுனிகள் உண்மையுணர்ச்சிக்கு இடையூறான அகவிருளை யெல்லாம் நிரஸிக்க வேண்டி விலக்ஷணனான ஸூர்யனென்னும்படி தோன்றியருளினார். 

246 (பரிதாவீமுஹர்ஜந்ம) ஜன்மபரம்பரைகளிலேயே தோள்மாறித் திரிகின்ற பாமரஜனம் மணவாளமாமுனிகளின் செய்யதாமரைத் தாளிணையை ஸேவித்து இடர்நீங்கி மகிழ்கின்றது.

247 (ப்ரமாதீ சாதாஜ்ஜந்து: சிலர் மஹாப்ரலயமாகும்வரையில் அவதான மற்று ஸம்ஸார ஸாகரத்தில் சுழலட்டும்; என்றேனுமொருநாள் மணவாளமாமுனிகளிடத்தில் ப்ராவண்யங் கொள்ள நேர்ந்தால் அன்றோடு துயர்தீர்ந்ததாம்.

248(ஆநந்தமமிதம் திவ்யம்) அளவு கடந்த ப்ரஹ்மானந்தத்தைஅடையவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரைகளை அன்போடு ஆராதிக்கக் கடவர்கள்.

249 (ராக்ஷஸாநாம் வதாயைவ) சக்ரவர்த்தி திருமகனார்அரக்கர்களை யழிக்கும் பொருட்டே அவதரித்தனர்; இளையபெருமாள் பாபிகளையும் காத்தருள்வதற்காக மணவாளமாமுனிகளாக வடிவெடுத்தார்

250– (நலக்ஷ்யம் யமதூதாநாம்) மணவாளமாமுனிகளைத் தொழுமவர்கள்,
நரகங்களில்- நகங்கள் ஆயுதங்கள் முதலானவற்றால் நலியுமவர்களான யமதூதர்
களுக்கு இலக்காகமாட்டார்கள்.

251-(பிங்கலாக்ரீதஸோமோத்தம் ) சுவர்க்கம் புகவேண்டி யாகஞ்செய்பவர்கள் ஸோமபானம் செய்வர்கள் ; அதற்காக ஸோமலதை ஸம்பாதிக்க வேண்டும்;-ஸோமலதையைக் காட்டிலிருந்து தாமாகக் கொண்டுவரக்கூடாது; * பிங்கலயைக ஹாயந்யா ஸோமம் க்ரீணாதி* என்று வேதத்தில் ஓதியிருக்கிறபடி பிங்கலவர்ணமான பசுவை விலையாகக்கொடுத்து ஸோமலதையை வாங்கவேணும். இத்தகையபரிச்ரமங்களைப் பிறர்வஹித்து ஸோமபானம் செய்யட்டும்: நாம் மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியமுதத்தைப் பருகிப்பூரித்திருக்கிறோம்.

252(காலயுக்திரசேஷாணாம்) மனிதர்காள்! அனைவர்க்கும் என்றேனுமொரு நாள் காலனோடு கூடவே நேரும்; வாழ்நாளில், என்றேனு மொருநாள் மணவாள மாமுனிகளின் கருணைக்கு இலக்காகிக் களித்திருங்கள்.

253-(ஸித்தார்த்தித்வம் து நைவாத்ர) உலகில் யாவர்க்கும் ஸாத்ய வஸ்துக்களில் அபேக்ஷை யுண்டாகுமே யொழிய ஸித்தவஸ்துக்களில் அபேக்ஷையுண்டாகாதென்று கொண்டு பிறர்ஸித்தோபாய பூதனான எம்பெருமானிடத்தில் அவிஸ்ரம்பத்தாலேஸாத்யோபாய விச்வாளிகளாகித் தடுமாறுகின்றனர். நாம் அப்படியன்றிக்கே மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸக்தியடியாக ஸித்தோபாயத்தின் கையையே பார்த்திருக்கின்றோம்.-(ஸித்தார்த்திதா யதி ஸ்ரீமத்) மணவாள மாமுனிகள் பக்கலிலே [அர்த்திதாஸித்தா யதி] அர்த்தித்வம் ஸித்திக்குமானால்- யாசிப்போமாகில்; ஸகலமான புருஷார்த்தங்களும் ஸித்தித்தே தீரும்; இது தடையற்ற ஸித்தாந்தம்.

254-(ரெளத்ரீம் தநுர்லதாமல்பாம் )இராமபிரான் அற்பமானதொரு சிவதநுஸ்ஸை யிறுத்தானென்பது பெரிதா? மணவாள மாமுனிகள் மிகக்கொடிய நமது ஸம்ஸாரப் புதர்களையெல்லாமன்றோ அரிந்து பொடுகிறார்.

255(துர்மதித்வம்ஸநீஸ் ஸூக்தீ:) மணவாளமாமுனிகள் தீயபுந்தியைத்
தொலைக்கவல்ல திவ்ய க்திகளை யளித்தருளினார். பிறர் அவற்றில் குறை
கூறிப்பாவங்களைக் கூடுபூரித்துக் கொள்கின்றனர்.

256-(துந்துபித்வா தத்துல்யை:) தோ ஷலவலேசமுமற்றுக் குணக்கடலாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளின் மீது தூஷணோக்திகளைப் பறையடிக்கின்ற பாவிகளை வையஞ்சுமப்பதும் வம்பு.

257-(ருதிரோத்காரி பாணொளகாந்) எம்பெருமான் (அவதாரங்களில் உதிரமொழுக நின்ற கொடியசரங்களைத்தான் வீசியெறியவல்லவன்; மணவாளமாமுனிகள் மதுரமான திவ்ய க்திகளாலே அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற எல்லாரையும் வசப்படுத்தியருள்கின்றார்.

258- (ரக்தா ப்ரம் ரஸஜ்ஞா மே ) என்னுடைய நாவானது எம்பெருமானைத்துதிப்பதை விட்டிட்டு அல்லும்பகலும் மணவாள மாமுனிகளைத் துதிப்பதிலேயே விரைந்து ஆசைக்கொண்டு கிளர்கின்றது.

259- (க்ரோதநோ தாருணோ மூர்க்க) மணவாளமாமுனிகளைத்தொழுமவர்
களின் வம்சத்தில் தோன்றுமவர்களெல்லாரும் ஸௌம்யமுகர்களாயும் நன்மை
செய்பவர்களாயும் சதுரர்களாயும் ஜனிப்பர்களேயொழிய ஒருவரும் மாருகத்
தோன்றார்.

260(அக்ஷயாஸ் ஸம்பதஸ் ஸாவா ) இங்குமங்கும்நீங்காத செல்வங்களையெல்லாம் நிறையப் பெறவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸம்வத்ஸர மாலாஸ்தோத்ரத்தை அநுஸந்திக்கக் கடவர்கள்.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் ஸம்வத்ஸரமரலாஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீ வரவரமுநி அயநமாலா ஸ்தோத்ரம்-எட்டாவது.

261(பவாப்திஸந்தாரணதக்ஷிணா.) பிறவிக் கடலைக் கடத்த வல்லவைகளும் அமுதம் போன்றவைகளுமான சிறந்த திவ்ய ஸூக்திகளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தைவிட்டு அகலகில்லே னென்றிருக்கிறார். (இது தக்ஷிணாயன ச்லோகம்.)

262- (ஸர்வோத்தர ஸ்ரீ சடவைரிவாசாம்) லோகோத்தரமான நம்மாழ்வாரருளிச்செயலின் பரமபோக்யமான பொருளை ஸமய விசேஷத்தில் திருவாய்மலர்ந்தருளி ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ஸ்ரீ சைலேசத்தனியனைப் பெற்றவரான
மணவாள மாமுனிகளே பரத்தைவம். (இது உத்தராயண ச்லோகம்.)

263-(அயநநாம நிவேச்ய.) தக்ஷிணாயனோத்தராயண நாமங்களை யிட்டு மணவாள மாமுனிகளின் துதியரக இயற்றப்பட்ட அயநமாலாஸ்துதியை உள்ளத்துக் கொள்ளுமவர்களுக்கு எம்பெருமான் இங்குமங்கும் அன்போடு நல்வழி நல்குவன் காண்மின்- என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று

264- இங்ஙனே அபூர்வமாயும் விலக்ஷணமாயுமுள்ள துதிகளை மணவாள
மாமுனிகள் விஷயமாக விஜ்ஞாபனம் செய்துபோருமடியேனே க்ருதார்த்த ஜன்மா.

ஸ்ரீ வரவரமுந்யயநமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ச்லோகஷட்சதியில்-ருதுமாலா ஸ்தோத்ரம் ஒன்பதாவது-வஸந்தருது முதல் சிசிரருதுவீருக ஆறுருதுக்களின் பெயரையும் உள்ளீடாகக்கொண்டமாமுனிகளின் துதி.)

265-(ஸதைவஸந்த:) மணவரளமாமுனிகளின் திருவடியிணைகளையே எஞ்ஞான்றும் சிந்தை செய்பவர்களான ஸத்துக்கள் என்னுள்ளத்துள்ளே உறைபவர்களாகி எனக்குச்சிறந்த மகிழ்ச்சியை விளைத்து அருள்புரியக் கடவர்கள். 

266- (ஹாஹா! பவக்ரீஷ்மவிசேஷதப்தா:) ஸம்ஸாரமாகிற கொடியவேனிலில் தாபமுற்றவர்கள் விரைவில் ஸகல தாபங்களினின்றும் விடுபடுவதற்காக
மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரை நிழலிலொதுங்கிக் களிப்பார்களாக.

267-(ஸ்ரீமச்சடாராகி.) ஆழ்வாரெம்பெருமானார் முதலான பூர்வாசார்யர்
களனைவரும் திரண்ட திருவவதாரமான மணவாளமாமுனிகள் அன்பர்களுக்கு
இனியராய்க்கொண்டு பல்லாயிரமாண்டு வாழ்க.

268- (ஸ்ரீமத்வசோபூஷண.) ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு வியாக்கியான மருளிச் செய்தது முதலானவற்றாலே பரந்த புகழ்பெற்றவரும் யதீந்த்ரப்ரவணருமான மாமுனிகள் இவ்வுலகில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

269- (யோகீந்த்ர! ஹேமந்தரி.) மணவாள மாமுனிகளே! மிகச்சிறந்த மந்த்ரமான தேவரீருடைய தனியனை ஸதா அநுஸந்தித்து வருகின்ற அடியேன் பால் காருண்ய மாருதாநீத கடாக்ஷ தாரைகளைப் பெருக்கிப் பல பல நன்மைகளை மேன் மேலும் வளரச் செய்தருளவேணும்.

270-காருண்யபூரைச் சிசிராந்தரங்க) தி ரு வருள் வெள்ளங்களினால் குளிர்ந்த திருவுள்ள முடையவரான மணவாளமாமுனிகள் இப்போது போலவே எப்போதும் தமது திருக்கல்யாண குணங்களை ய நுஸந்திப்பதிலேயே அடியேளைக் குதூஹலமுடையேனாகச் செய்தருளவேணும்.

ஸ்ரீமத் வரவரமுநிருதுமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

(ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோகஷட்சதியில் பத்தாவதான.)மாஸமாலா ஸ்தோத்ரம்
(மேஷ மாஸம் முதல் மீன மாஸமளவும் பன்னிரண்டு மாதங்களின் நாமங்களை உள்ளீடாக்கி மணவாளமாமுனிகளைத் துதிப்பது.)

271- (கலா நா மேஷ ஸர்வாஸாம்) ஸகல கலைகளுக்கும் நிதி போன்றவரான நம் மணவாளமாமுனிகள் அருள் கூர்ந்து எஞ்ஞான்றும் என்னுள்ளத்துள்ளேஉறைவாராக.

272- (வலாநாம் மநாயை ) புருஷர்ஷபரென்று கொண்டாடத்தக்க வரும் தீயவர்களைத் தணிப்பதற்காகவே இந்நிலவுலகில் அவதரித்தவருமான மணவாளமாமுனிகள் மேன்மேலு மோங்குக.

273- (கதிரேஷ பணீந்த்ரோந ) திவ்ய தம்பதிகளின் திவ்யாஜ்ஞையினாலே
மணவாள மாமுனிகளாகத் திருவவதரித்து நம்மை வாழ்வித்தருளின திருவனந்
தாழ்வான் தான் நமக்குப் புகல். 

274- (சரந்து வக்ரகதய 🙂 கர்க்கடே குடிலா கதி: என்கிறபடியே நண்டுகள் போலே குடிலகதியையுடையரான சிலர் அப்படியே திரிந்துழலட்டும்; மணவாளமாமுனிகளின் பக்தர்களிடத்திலே ரு கதியுள்ளதென்பது உலகறிந்தது.

275- (ஜந்மமருத்யுஜராவ்யாதி) பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளுக்கு அஞ்சி
யிருப்பவர்கள் ஸ்ரீமத் வரவரமுநிஸிம்ஹத்தினுடைய திருவருளையே தஞ்சமாகக்
கொள்ளக்கடவர்கள்.

276- (ஐரீம் கவேரகங்யாயா 🙂 காவிரியின் பெருக்கையும் மந்தமாக்கவல்ல
தம்முடைய ஸ்ரீ ஸூக்தி ராசிகளினால் இந்நிலம் முழுவதையும் புனிதமாக்க வல்ல
மணவாளமாமுனிகள் வாழ்க. 

277-(தநோது வரயோகீந்த்ர.) ஆசார்ய ஹ்ருதயத்தின் சீரிய பொருள்களெல்லாம் அடியேனுள்ளத்தில் தங்குமாறு மணவாளமாமுனிகள் எனக்கு ஒப்பற்ற அருளைச் செய்தருள்க.

278- ாருணா ( வ்ருச்சிக ப்ராயா 🙂 தேள்களைப் போன்று விஷத்தைக் கக்குமவர்களான சில கொடியவர்கள் இந்நிலத்தைக் கெடுப்பவர்களுளர்; அன்ன வர்கள் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளினால் திருத்தம் பெறுக

279- (தநுஷா பகவாந் சத்ரூந்) எம்பெருமான் அவதரித்து “வில்லாலிலங்கைமலங்க” என்னும்படி அஸ்த்ரசஸ்த்ரங்களாலே பகைவரை வென்றானென்பதில் என்ன வியப்பு? மணவாளமாமுனிகள் தமது திருக்குணங்களினாலேயே உலகை வென்றாராயிற்று.

280- (பரம் தாம கரக்ராஹ்யம்) நலமந்தமில்லதோர் நாட்டை அஸ்மதாதிகளுக்கும் கைக்கு எட்டினதாகப் பண்ணுகைக்கே எம்பெருமான் மணவாளமாமுனிகளைத் திருவவதரிப் பித்தருளினான். 

281- (பகவாந் கும்பஸம்பூதி:) கும்பஸம்பவரான அகஸ்த்யர், பராசரர், வியாஸர் இத்யாதிகளான முனிவர்களிற்காட்டிலும் மணவாளமாமுனிகள் மிகச் சிறந்த முனிவராவார்.

282- (யே படந்தி.) ஸ்ரீவரவரமுனிமாஸ மாலையென்னும் இந்த ஸ்துதியை மகிழ்ந்து ஓதுமவர்கள் யாவரோ, அந்த இந்த பக்தர்கள் ஒருபோதும் இறையும் இடர்ப்படார். (ச்லோகத்தில் “‘அமீ ந ஜாதுசித்” என்றவிடத்தில் மீ நமாஸ ஸ்பூர்த்திகாண்க.)

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் மாஸமாலாஸ்தோத்ரம் முற்றிற்று.

பதினூேராவது பக்ஷமாலா ஸ்தோத்ரம்.

283-(யுகலம் வரமுநி.) மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரையிணையை
நிச்சலும் சிந்தை செய்பவர்கள் தங்களது கீர்த்தியினால் இவ்வுலகத்தையெல்லாம்
வெண்ணிறமாக்க வல்லவர்களாவர்.

284-(ஸ்யூதாம் வரவரமுநிவர.) மணவாளமாமுனிகளின் திருக்கல்யாண
குணங்களாகிற முத்துக்களால் கோக்கப்பட்ட இந்த ஸ்துதிமாலையை எப்போதும்
கண்ட பூஷணமாகக் கொள்ளுமளவில் ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உங்களுக்கு
மங்களங்களை யளிப்பன். 

285- (பக்ஷமாலாமிமாம் வாசி.) இந்த வரவரமு நிபக்ஷமாலாஸ்துதியைத்
திருந்தச் சொல்லுமவர்கள் பக்கலில் எம்பெருமான் ப பாதியாயிருப்பன?
மார்பாரப் புல்கியும் அருள்வன்.

ஸ்ரீமத்வரவர முநீத்த்ரஷட்சதியில் பக்ஷமாலாஸ்துதி முற்றிற்று.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ஷட்சதியில் பன்னிரண்டாவதான ஸ்ரீவரவரமுநி திதிமாலா
(இந்தஸ்தோத்ரம் வடமொழியில் எழுத்தந்தாதியாக அமைக்கப்பட்டது.)

286-(ஸ்ரீமதி வரவரயோகிநி)-ப்ரதமை அத்புதமான வைதுஷ்யத்திற்கு நிதியான மணவாளமாமுனிகள் பக்கலில் பக்தியுள்ளவர்கள் யாவரோ அவர்கள்
ஸாத்விகர்களின் திரளில் தவருமல் ப்ரதமஸ்தானத்தில் எண்ணப்படுவர்கள். 

287-(நச்வரபுமர்த்தவாஞ்சாம்) த்விதீயை – நச்வரங்களான புருஷார்த்தங்களில் ஆசையை விட்டுத் தொலைத்து மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் அன்புமிக்கவர்கள் யாவரோ அவர்களுக்கு அத்விதீயமான நற்புகழ்விளையும். (சுலோகத்தில் நான்காம் பாதத்தில் சுபகீர்த்தி ரத்விதீயாஸ்யாத் என்பதில் த்விதீயாஸ்பூர்த்தி காண்க.) 

288-(ஸ்யாதிஹ வரவரயோகீ த்ருதீயா -மணவாள மாமுனிகளின் யாதொரு கருணையின் கனத்தினால் உள்ளே மூன்றாவது கண் (ஞானக்கண்) விகளிக்குமோ, அப்படிப்பட்ட கருணையை அவர் எஞ்ஞான்றும் என் பக்கலிலேயே செய்தருளவேணும்.

289 (திமிரம் நிரஸிதுமவநெள .) சதுர்த்தீ- இவ்வுலகின் கண் அகவிருளை அகற்றுவதற்காக ஸமய விசேஷங்களில் வந்து திருவவதரிக்கின்ற திருவனந்தாழ்வானுடைய நான்காவது மூர்த்தியான மணவாளமாமுனிகளை எஞ்ஞான்றும் வழுத்துவோம்.

290ஏதத்ப்ரபஞ்சமீச 🙂 – பஞ்சமி -இந்தப்ரபஞ்சத்தை ஸர்வேச்வரனென்று பேர்படைத்த எம்பெருமான் ரக்ஷித்தருள்கிறானென்பது உண்மையன்று; வஸ்து ஸ்திதியில் மணவாளமாமுனிகள்தாமே தமது திவ்ய க்திகளினால் உலகையெல்லாம் காத்தருள்கின்றார்.

291- (க்ஷித்யாம் வதந்தி போக்யம் – ஷஷ்டீ-இந்நிலவுலகில் பஞ்சாம்ருதமென்கிற போக்ய வஸ்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; அஃதிருக்கட்டும்;மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்தியானது ஆறாவதான அம்ருத தாரை யென்பது திண்ணம்.

292- (தமிதேந்த்ரியா : ப்ரஸித்தா:. ஸப்த மீ- ஜிதேந்த்ரியர்களென்று பேர் பெற்ற ஸப்தரிஷிகளும் கருப்புவில் மலர்க்கணைக்காமவேளுக்கு இலக்கானவர்களே ; மணவாளமாமுனிகளொருவரே விரக்தமு நிஸார்வபௌமர்.

293- (யஸ்யாஷ்டமீந்துஸந்கிப)-அஷ்டமி அஷ்டமீ சந்திரன் போன்ற தமது திருநெற்றியில் விளங்கும் ஊர்த்வபுண்ட்ர ரேகையே நெடுநாளாக ஸகல  திவ்ய தேசத் தெம்பெருமான்களும் உகந்து அணிந்து கொள்வதென்னும்படியான மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

294-(கீர்வாணவாசி ஸததம்)- நவமீ-ஸம்ஸ்க்ருதபாஷையில் இங்ஙனேபுதிது புதிதான ஸ்துதிகளை விண்ணப்பஞ் செய்து கொண்டு மணவாளமாமுனிகளுக்குத் தொண்டுபூண்டமுதமுண்பவனாக வா க்கடவேன்.

295(சய்ாமபி சேதிஹ தசமீம்) – தசமி- அடியேன் மாளுமோரிடத்திலும் எனது நெஞ்சம் மணவாளமாமுனிகளின் சிந்தனையையிழவாமலிருக்கவேணும்

296- ( துஷ்யந் விவேகரேகாத். ஏகாதசி வடமொழிவேதத்தைப் பூர்த்தியாக ஓதினவர்களுக்கு அ தி அத்யாயிகளென்று பெயர் வழங்கும்; அந்தப்பெயர் பெறுவதனால்மட்டும் பயனில்லை; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளில் வல்லமை பெற்றுவிட்டால் ஸர்வஜ்ஞதை யுண்டாகும்.

ஸாதாரணத் திருமூலமலர்-ஸாதாரணவாண்டு ஐப்பசித் திருமூலதன்னாள்.-3-11-1970

புண்யாபபோஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாயச, ஸ்ரீமாந் ஆவிரபூத்பூமெள ராமாநுஜ திவாகர ” என்றபடி எம்டெருமானாராகிற விலக்ஷண ஸ் ர்யன் இவ்வுலகில் திருவவதரித்து “கடலளவாய திசை யெட்டினுள்ளுங் கலியிருளே, மிடைதரு காலத்திராமானுசன் – மிக்க நான் மறையின் சுடரொளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை யுடையவன்
நாரணனென்று அறிவாரில்லை யுற்றுணர்ந்தே” என்ற அமுதனாரருளிச்செயலின்படியே மஹோபகாரம் செய்தருளும்படியாயிற்று. “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும்மாண்டனர் நீணிலத்தே. பொற்கற்பகம் எம்மிராமானுசமுனி போந்த
பின்னே’ என்கிறபடியே ஸம்ஸ்க்ருத வேத பாஸ்குத்ருஷ்டிகளையெல்லாம் தம் ஒக்தி சரங்களாலே நிரஸித்தருளி,”வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும், ஈன்ற முதல் தாய் சடகோபன். மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்
இராமாநுசன்” என்னும்படியாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் ப்ரவர்த்திப்பித் தருளி, திவ்யதேசங்களையும் உத்தரிப்பித்து ஒருவாறு அவதார க்ருத்யத்தைத் தலைக்கட்டிக்கொண்டு சுடரொளிச் சோதிக்கு எழுந்தருளினபின், சிலகாலம் கடந்தபிறகு, அவ்வவதாரத்தில் சிதைந்தொழிந்த ஸம்ஸ்க்ருத வேத பாஹ்யகுத்ருஷ்டிகள் தாமே மீண்டும்
த்ராவிட வேத பாஹ்ய குத்ருஷ்டிகளாக ஜனித்து இவ்வுலகை நலியஅந்தஎம்பெருமானார் தாமே மீண்டும் வைகுந்தநாதனுடைய திருவாணையினால் இந்நிலவுலகில் திருவவதரித்து மணவாள மாமுனிகளென்கிறதிருநாமத்துடனே விளங்கி, முன்னவதாரத்திற் செய்த ளின மஹோபகாரங்களிற் காட்டிலும் பன்மடங்கு அதிசயித்தசேமங்களைச் செய்தருளி
இவ்விருள் தருமா ஞாலத்தைத் தெருள் தருமா ஞாலமாகத் திருத்திப்பணிகொண்டார். அவ்வாசார்ய சிகாமணியின் எண்ணில் பல் குணங்களைக் கூறுதற்கு அவர் தம்முடைய நிஜரூபமான ஆதிசேஷனும்அசக்தன் என்கிறவிது அதிசயோக்தியன்று

மதுரேண ஸமாபயேத் என்பது நியாயமாதலால் மாதுர்யமே வடிவெடுத்த மாமுனிகளோடு பூர்வாசார்ய பரம்பரையை எம்பெருமான் ஸமாபநம் செய்தது மிகப்பொருந்தும். மதுரம்
என்கிற வடசொல்லானது, ‘மகாரத்தை முன்னே யுடையது’ என்னும் பொருளையு முடைத்தாதலால் மகாராதியான திருநாமமணிந்த மணவாளமாமுனிகளோடே ஸமாபநம் செய்தருளின பகவான் ஸுஸமர்த்தனே.-*மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிற லயோத்தியெம்மரசாயும் கோவலனாய் வெண்ணெ யுண்டவாயனாயு முள்ள அழகிய மணவாளனான திருக்கோலத்தில், ஆசார்யத்வபூர்த்தி யுள்ள மணவாள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யவருத்தியை வஹிந்து க்ருதார்த்தனானான். இத்தகைய ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த மாமுனிகளின் வைபவம் ஸ்ரீ வைஷ்ணவஉலகுக்கெல்லாம் ஜீவாது-திருவனந்தாழ்வான் நல்லார் நவில் குருகூரெங்கிற ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடைய பிரான் தா ஸரண்ணர்என்கிறமஹாசா யனை-பிதரம்ரோசயாமாஸ என்கிற கணக்கிலே தந்தையாக வுகந்து அவருடைய திருக்குமாரராய் (கலியுகாதி
நாலாயிரத்து நானூற்றெழுபத்திரண்டாவதான ) ஸாதாரண வருடத்தில்
ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்திரத்தில் அந்தத் திருநகரியில் திருவவதரித்தருளினான்.

-இங்ஙனே உலகுக்கெல்லாம் ஓருயிராகத் திருவவதரித்தருளின திவ்யமூர்த்திக்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருநாமத்தைச் சாத்த விரும்பிய பெரியார் ‘அழகிய மணவாளன்’ என்று திருப்பெயரிட்டனர். அழகிய மணவாள நாயனார் என்று சிறப்புத்திருநாமமாக வழங்கி வந்தது.

அருகேயிருந்த முதலிகள்,
“வல்லார்கள்வாழ்த்துங்குருகேசர் தம்மை மனத்துவைத்துச்
சொல்லாரவாழ்த்தும் மணவாளநாயனார் தொண்டர்குழாம்
எல்லாந்தழைக்க எதிராசவிம்சதியின்றளித்தோன்
புல்லாரவிந்தத்திருத்தாளிரண்டையும் போற்றுநெஞ்சே’
-என்ற பாசுரத்தை விஜ்ஞாபித்தனர்.

அழகிய மணவாள் நாயனார் இங்ஙனே ஆசார்ய பரதந்திரராய் வாழ்ந்தருளாநிற்க, கூரார்ணவத்தில் சந்திரன் போலே ஒரு திருக்குமாரர் திருவவதரித்தார். அவர்க்கு இராமாநுசப்பிள்ளை என்று திருநாமமிடும்படி ஆசார்ய நியமனத்தையடியொற்றி நாயனார் நியமித்தருளினார்.-அப்ரதிம சிஷ்ய ஸம்பத்தோடே வாழ்ந்தருளாநின்ற திருவாய்மொழிப்பிள்ளை திருமேனி தளர்ந்து திருநாட்டுக் கெழுந்தருளுகையிலே விருப்பமுடையராய்
“உத்தமனேயுலகாரியனே! மற்றெப்பாரையில்லா
வித்தகனே நல்லவேதியனே! வண்முடும்பைமன்னா
சுத்தநன்ஞானியர் நற்றுணையே சுத்தசத்துவனே!
எத்தனை காலமிருந்துழல்வே னிவ்வுடம்புகொண்டே.”
என்று அநுஸந்தித்துக் கொண்டிருக்க, ஒருநாள் கனவிலே பிள்ளை லோகாசாரியர் ஸேவை ஸாதித்தருளி ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் “என்று பணிக்க, பிள்னையும் தேறியெழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிக்கொண்டு முதலிக ளெல்லாரையும் வரவழைத்து “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” ‘வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே,நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே!‘ என்ற பாசுரங்களைப் பரக்க வுபந்யஸித்தருளி, ‘முதலிகாள்! இன்று எம்பெருமான் நம்மை ஆசாரியன் திருவடிவாரத்திற்கு அழைத்துக் கொள்வதாகத் திருவுள்ளம் பற்றியிரா நின்றான்; இனி நீங்க னை வரும் நம் அழகிய மணவாள நாயனாரை (மாமுனிகளை)ஸாமாந்யமாக ரதிபத்தி பண்ணியிராமல் நம்மிராமானுசனுடைய அபராவதாரமே யிவர் என்று ப்ரதிபத்தி பண்ணி`இவருடைய அபிமானத்திலே யொதுங்கி வாழ்வீராக” என்று நியமித்தருளி, நாயனாரையும் ஆசார்யபீடத்திலே எழுந்தருளச்செய்து, “வாரீர்குலக்கொழுந்தே! * ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸ தா, ஸீதா பர்த்தார மாஸாத்ய ராமம் தசரதாத்மஜம் என்று ஜநக சக்ரவர்த்தி பாரித்தாப் போலே நானும் உம்மை அண்டை கொண்டு கனக்கப் பாரியா நின்றேன்-நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநம் உம்மாலே பரம விலக்ஷணமான-பெருமையையும்புகழையும் ப்ராப்தமாகக்கடவது; *ச்ரேயாம்ஸி ஸர்வாண்
ய ஜக்முஷஸ் தே
என்றாப்போலே ஒன்றிலுங் குறையில்லாத வுமக்கு இனி நாம் ஆசாஸிக்கவேண்டுவதொன்றில்லை. என் உள்ளத்திலே கிடந்த குறையைப் பண்டே உமக்குப் பேசிநின்றேன்; அக்குறைதீரஇன்றுகாறும் நீர் நடந்துவந்ததுபோலவே இனியும் நம் பூர்வசார்ய திவ்யாக்ரந்த ரவசநாநுபவங்களே போதுபோக்காக இருந்து வரக்கடவீர்; நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒருமிடறாக மண்டியிருந்து தர்சந நிர்வாஹம் செய்தருளினவிடம் திருவரங்கம் பெரியகோவிலாதலால் நீரும் அவ்விடத்தேறச்சென்று முந்தின அவதாரத்திற் போலவே அறுசமயச்செடிய தனை யடியறுத்துச் செறுகலியைச் சிறிது மறத் தீர்த்துவிட்டுத் தென்னரங்கர் செல்லமுற்றுந் திருத்திவைத்து மறை யதனிற்பொருளனைத்தும் வாய்மொழிந்து மாறனுரை செய்ததமிழ்மறை வளர்த்து இந்த லீலாவிபூதியை நித்யவிபூதியாகவே ஆக்கிக்கொண்டு போரக்கடவீர்” என்று நாயனாரை நோக்கி நியமித்தருளி, அநந்தரம்ஸந்நிதிக்கெழுந்தருளிப் பொலிந்துநின்ற பிரானையும் ஆழ்வாரையும்மங்களாசாஸநம் செய்தருளி முதலிகளெல்லாரையும் நாயனார் திருக்
கையிலேகாட்டிக்கொடுத்துத் திருமாளிகையேற வெழுந்தருளிப் பிள்ளையுலகாசிரியர் திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டே திருநாட்டுக்கெழுந்தருளினார். நாயனார் தொடக்கமான முதலிகளெல்லரும்அவர்க்குத் திருவத்யயநாந்தமான சரம கைங்கர்யங்களைப் பெருக்கநடத்தினார்கள் .

வானமாமலையிலே மஹாஜ்ஞாநாதிகராயெழுந்தருளியிருந்த அழகிய வரதர் பரம விரக்தியினாலே ஆச்ரமஸ்வீகாரஞ் செய்து ஸ்ரீராமாநுஜஜீயர் என்று திருநாமம் பெற்று நாயனார்திருவடிகட்கு நிழலுமடிதாறும் போலே மிகவுமணுக்கராய் வந்து சேர்ந்து
வாழ்ந்தார். இவர்க்குப் பொன்னடிக்கால்ஜியர் என்றும் திருநாமம் வழங்கிவந்தது.-“ஸ்ரீமாந் ஸ்ரீபாஷ்யகாரோஸௌ பூதலே புநருத்தித:,
இதி நீச்சித்ய ஸந்துஷ்ய ப்ராவண்ய மதுலம் ததே.”
-என்கிறபடியே நாயனாரை எம்பெருமானாருடைய புநரவதாரமாகவே அறுதியிட்டுப் பரிஜந பரிபர்பரிச்சத புரஸ்கார விசேஷங்களுடனே ஸந்நிதியில் மங்களாசாஸநம் நடைபெறுமாறு ஸம்விதாநம் செய்து வைத்தார்.-பலபல பரிவாரங்களுடன் ஸந்நிதி மங்களாசாஸனத்திற்கு எழுந்தருளின நாயனார் முந்துறமுன்ளம் எம்பெருமானார் ஸந்நிதியிலே விடைகொண்டு ஸேவித்து உடையவர் திருக்கோலத்திலே மிகவும் ஈடுபட்டு,
“இவ்வுலகந் தன்னி லெதீராசர் கொண்டருளும்
எவ்வுயிரும் யான்சென்றிறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லா மினிதேனு மீவ்வரங்கத் திற்போல
நில்லாதென் னெஞ்சில் நிறைந்து-
-என்கிற பாசுரத்தை அங்கு விண்ணப்பஞ்செய்து, பிறகு ஸபரிவாரரான பெரிய பெருமாளை அடைவே மங்களாசாஸனஞ் செய்து திருமாலை அமலனாதிபிரான் முதலான திவ்யப்ரபந்தங்களையும் ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலானஸ்தோத்ரங்களையும் அநுஸந்தித்துக்கொண்டு நம்பெருமாள் திருமுன்பேநிற்க, பெருமாளும் நாயனாரைக் குளிரக் கடாக்ஷித்தருளி நமக்காவாரை நாமே தேடிக்கொண்டோம்; நம்முடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் இன்றே குறையற்ற தாய்த்து” என்றருளிச் செய்து ஸகல வரிசைகளும் ப்ரஸாதித்தருள், நாயனாரும் பெற்று க்ருதார்த்தராய், பெரியார்க் காட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு” என்று அண்ணனார் விஷயத்திலும் பட்டர் விஷயத்திலும் க்குதஜ்ஞதாநுஸந்தாநம் பண்ணிப் பேருவகையோடே திருமாளிகைக் கெழுந்தருளினார்.

விடுதியாகப் பல பாசுரங்கள்-”இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத் தீர்த்தார்-இதுவோதான்
தேங்கும் பொருநல் திருநகரிக்கொப்பான
ஒங்கு புகழுடைய வூர்.”
எந்தை யெதிராசர் எம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ-சிந்தை
மருளோ தெருளோ மகிழ்மாலை மார்வ
னருனோ விப்பேற்றுக் கடி.”
–இத்யாதிகள்.

ஸ்ரீ யதோக்தகாரி யெம் பெருமான்ஸந்நிதியிலே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஸ்ரீபாஷ்ய பரவசநம் செய்தருளினார். (இதுபற்றியே திருவெஃகாவில் மணவாள
மாமுனிகள் வியாக்கியான முத்திரையோடு ஸேவை ஸாதித்தருளும்படி
யென்று பெரியார் பணிப்பது.)”செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்” என்கிற திருமங்கை யாழ்வாரருளிச் செயலுக்கு முக்கிய இலக்காக விளங்கினவர் கடல்சூழ்ந்த இம்மண்ணுலகில் இந்த வ்யக்திவிசேஷ மொன்றே யென்னத் தட்டில்லை.

அக்காலத்தில், ஸ்வாமிக்கு ஜ்ஞாதிகள் பலரிருந்தமையால் அடிக்கடி ஆசௌச ப்ரஸங்கம் நேர்ந்து கரந்த காலக்ஷேபத்திற்கும் பெருமாளுடைய மங்களாசாஸனத்திற்கும் இடையூறு விளைந்துவந்தது கண்டு கருஹஸ்தாச்ரமத்திலே வெறுப்புண்டாகி உத்தமாச்ரமஸ்வீகாரம் செய்தருளத் திருவுள்ளமாய், அப்போது கோயிலிலே ஸ்ரீசடகோபஜீயரென்றுப்ரஸித்தராய் ஞானமனுட்டான மிவை நன்றாகவே யுடையராயிருந்த மஹநீயர் பக்கலிலே துரீயாச்ரமம் ஸ்வீகரித்து நம்பெருமாளைமங்களாசாஸனம் செய்யச்சென்று நின்றவளவிலே, பெருமாளும்இவரை ஆதரித்தருளித் தம்முடைய திருநாமத்தையே இவர்க்கு
ப்ரஸாதித்தருளி [அழகிய மணவாள மாமுனிகள் என்றிட்டு] ஸகல மரியாதைச் சிறப்புகளையும் * யாவச்சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்ககேஸுகமாஸ்வ *
-என்று எம்பெருமானார்க்குப் போலே நியமனம் தந்தருளி,பல்லவராயன் மடத்தையும் ஸ்வாமிக்குப் ப்ரஸாதித்து அனைத்துக் கொத்துப்பரிகரங்களுடனே போகவிட்டருள, அழகிய மணவாள மாமுனிகளானநாயனார் பெருமாளுடைய திருவருள் நிரம்பிய நியமனத்தைச் சிரஸாவஹித்து மடமேற எழுந்தருளி அழகிய மணவாளனுடைய அருட்பெருக்குக்கு அதிமாத்ரம் உகந்து போந்தார்.

மாமுனிகள்சாடூக்தியாக “நீர் ப்ரதிவாதிபயங்கரர்; நாம் ஸாது; எங்ஙனே கூடுவது?”
என்று புன்முறுவலோடேயருளிச்செய்ய, உடனே அண்ணன் ஐயோவென்று அலமந்து தெண்டன் ஸமர்ப்பித்து, * ப்ரஸித்த: பரகோஷ்டீஷபரவாதி பயங்கர, ஸ்ரீவைஷ்ணவாநசம் கோஷ்டீ தத்தால இதி விச்ருத:என்று விண்ணப்பம் செய்து, ‘இத் திருவடி ஸம்பந்தமல்லது பாவியேனுக்கு உய்வுபாயம் மற்றொன்றில்லை’ என்று கண்ணீர் பெருக நின்று-ப்ரார்த்திக்க, மாமுனிகளும் இவருடைய ஆத்மகுண ஸம்பத்திக்குஅதிசயித்து இவருடைய பிரார்த்தனைக்குத் திருவுள்ள முகந்து ஸக்குடும்பரான விவர்க்குப்பஞ்ச ஸம்ஸ்காரங்களை ப்ரஸாதித்தருளி, ஸ்ரீவைஷ்ணவதாஸன் என்று விலணமான தாஸ்ய நாமத்தையும ரசாரப்படுத்தியருள அண்ணன் க்ருதார்த்தராய்,
“போதச்சிவத்து பரிமளம்வீசிப் புதுக்கணித்த சீதக்கமலத்தை நீரேறவோட்டிச் சிறந்தடியேன் ஏதத்தைமாற்று மணவாளயோகி யினிமைதரும்|
பாதக்கமலங்கள் கண்டேனெனக்குப் பயமில்லையே
“-என்று விண்ணப்பஞ்செய்து இப்பாசுரத்தையே முதலாகக்கொண்ட அமலனாதிபிரான்’ என்கிற பிரபந்தத்தை விஜ்ஞாபித்து அன்றுமுதல் மாமுனிகளின் திருவடிகட்கு அந்தரங்கராய் வர்த்தித்து ஸகல திவ்ய ப்ரபந்த ரஹஸ்ய வயாக்யானங்களையும்அதிகரித்துக்கொண்டு க்ருதார்த்தராயிருந்தார்

அர்த்த விசேஷங்களைக் கேட்டுஉவந்தார். அப்போது மாமுனிகளின் ஸர்வதோமுகமான வைதுஷ்யவிசேஷத்தைக் கண்டு விஸ்மயஸ்திமிதரான ஜநந்யாசார்யர்
“பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்
தாதார் மகிழ்மார்பன் தானிவனோ? – தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மாமுனிவன்
எந்தையிவர் மூவரிலும் யார்?-
என்கிற வெண்பாவை யருளிச்செய்து மாமுனிகளை விலக்ஷணாவதார வ்யக்தி விசேஷமாக எங்கும் ப்ரஸித்தப்படுத்திப் போந்தார்.

அழகிய மணவாளன் நாலைந்து பிராயம் வாய்ந்த அர்ச்சக குமாரனான கோலம்பூண்டு கனவேகமாசுக் கோஷ்டியிடையிலே வந்து, அவரவர்கள் விலக்கினதையும் ல யம் பண்ணாமே புகுந்து கைகூப்பி நின்று]-ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம், யதீந்த்ர பரவணம் வந்தே ரம்யஜாமாதரம் மு ம் * என்கிற தனியனை விண்ணப்பஞ்செய்து மறைய, இவ்வதிசயத்தை நோக்கி அனைவரும் வியந்தனர்.

சரீராத்மபாவத்திற்கு ப்ரதான திதந்த்ர மென்று பெயரிடப்பட்டிருக்கின்றது.-சரீராத்மபாவ ஜ்ஞானமே வேதாந்திகளுக்குத் தலையானதென்றுதேறிற்று. இதை வேதாந்தத் திறவுகோல் என்று கொள்க.-சேதநனைப் பெறுவதுதான் ஸர்வேச்வரனுக்குப் பேறு’ என்று நிஷ்கர்ஷிப்பதுண்டே,இதுதான் ரஹஸ்யார்த்த நிர்வாஹத்திற்கு திறவுகோலாம்.-எம்பெருமானுடைய ருபை ஸஹேதுகமா? நிர்ஹேதுகமா? ப்ரபத்தி உபாயமா?அதிகாரி விசேஷணமா? இத்யாதி விசாரங்களைத் தனிப்படச் செய்ய வேண்டிய ஆவச்யகதையில்லை; “சேதநனைப் பெறுவது ஈச்வரனுக்குத் தான் புருஷார்த்தம்” என்று நிராபாதமாகத் தேறிவிட்டால் பகவத்க்ருபா நிர்ஹேதுகத்வமும் ப்ரபத்யநுபாயத்வமும் மற்றும் தன்னடையே தேறிற்றாகும். இம்மூன்று விஷயங்களிலும் ஸ்ரீலோகாசார்யாதிகளின் ஸித்தாந்தம் வேறென்றும் ஸ்ரீமத் வேதந்ததேசிகனுடைய ஹித்தாந்தம் வேறென்றும் இக்காலத்து ஒருவகுப்பினர் ( இரண்டொரு நூற்றாண்டாக)ப்ரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இஃது உண்மைக்கு மிகவும் மாறானது, அடியேனுடைய நூல்களில் நவீனர்களென்று பெயரிடப் பெற்றவர்களின் கொள்கையாம் இவை. இவற்றை தேசிகனுடைய சித்தாந்தமாகக் கூறுவதற்கு அணுமாத்ரமும் அவகாசமில்லை.

“கர்மஸ்வநாதிவிஷமேஷ ஸமோ தயாலு ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண , ஸ்வப்ராப்தயே தநுப் தாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்தமிதம் க்ருணந்தி.“-சரணாகதி தீ பிகை-11-எம்பெருமான் தனது ஸஹஜ ஸெளஹார்த்த குணத்தினால் தான் சரணாகதியில் ஆபிமுக்க்யத்தை விளைவித்தருளுகிறானென்பதை
சுலோகத்தின் முடிவில் காட்டியருளினர். “ சோபநம் ஹ்ருத் யஸ்ய ஸ- ஹ்ருத்” என்று வ்யுத்பத்தியென்பதை வயுத்பந்தர் உணர்வர் சோபநாசம்ஸியான ஹ்ருதயத்தை யுடையவன் எம்பெருமான்.-தேசிகன் பரமபதஸோபானத்திலே நன்கு காட்டியிருக்கிறார். அதில் ஆரம்பத்திலேயே எழுதியுள்ள வாக்கியங்கள் இவை:-
“அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும்விடாதே அனுபவிக்க ப்ராப்தரான க்ஷேத்ரஜ்ஞர் அநாத்யவித்யாகர்மாதி ரவாஹத்திலொழுகிக் கரையேற விரகற்று அலமருகின்றபடியைக் கண்டருளின பரமகாருணிகனான பரமசேஷிதானே ஞானக்கைகொடுத்து இவர்களையெடுக்க இடம்பார்த்து அஜ்ஞாத யாத்ருச்சிகஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்திமூல ஸுக்ருத விசேஷங்களைவயாஜமாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம்பண்ணி அத்வேஷ ஆபிமுக்க்ய ஸாவிக ஸம்பாஷணதிகளை யுண்டாக்கி” இத்யாதிகள்.இவை கிடக்க; ரகருதச்லோகத்தில் ஸ்வேநைவ கலப்தம் அபதேசம்அவேமாண: * என்றதை ஆழ்ந்து நோக்கவேண்டாம்; மேலெழபிபிநோக்கினாலும் போதும். பதத்தின்மேல் பொருள் என்ன,ஸ்வேநைவ -தானாகவே, கல்ப்தம் -கல்பித்துக்கொண்ட, அபதேசம்-வ்யா ஜவிசேஷத்தை, அவேக்ஷமாண கடாக்ஷித்தவனாய்.-

ஸ்ரீ வசனபூஷணத்தில்-
“என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக்கொடுத்தாய்என்றாப்போலே சிலவற்றைஏறிட்டு மடிமாங்காயிட்டு… … ஜன்மபரம்பரைகள் தோறும்யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவிசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்“-என்கிறஸ்ரீஸூக்தி ரத்னங்களை ஸந்தத் சிந்தனை பண்ணியே யென்பதில் ஐயுறவேண்டா. மேலே யெடுத்துக் காட்டிய வசனபூஷண ஸ்ரீஸூக்திகளில் காணும் பொருள்*ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண-என்கிற இந்த சலோகத்தில் கண்ணாடியிற்போல் அப்படியே பிரதி பலிக்க வில்லையா?

இதற்கு மேலும் நோக்கவேணும். ஸ்வப்ராப்தயே த ப்ருதாம்-த்வரஸே முருந்த! * என்பது மூன்றாவது பாதம். இதில் த்வரஸே என்கிற க்ரியாபதம் பேறு யாருடையதென்பதை நிஸ்ஸந்தேஹ விபரியமாகக் கரட்டித்தரவில்லையா? இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகிரு. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மொழிபெயர்த்தவத்தனையேயோ? சாஸ்த்ரார்த்தத்தைச் சந்தித்து உள்ளமுருகியன்றோஉரைத்திருக்கிறார்.-சுமாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து தொலையட்டுமிவன் என்று கைவாங்கிய யிராதே, கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ ! என்றுஇவன் கதறுவது அற்பமென்னும்படி ‘கூடி வாழுங்காலமின்னுங் குறுகாதோ ? என்று அவன் பதறியிருப்பது பெருங்கடல் போன்றது என்கிற தத்துவத் தையன்றோத்வரஸே என்பதனால் தெள்ளிதாக உணர்த்தியிருக்கின்றார் தேசிகன்-உபநிஷத்தானது, ரஸோ வை ஸ:,ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி என்றது. இதில் [அயம் லப்த்வா] என்று லாபத்தைசேதநகதமாக ஓதியிருக்கச் செய்தேயும், ஸ்வாமி பாயகாரர் அநா ருத்திஸ்த்ர ஸ்ரீபாஷ்யத்தில் ” பரம புருஷ: ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸு க்தியானது ஸாம்பரதாயிக தத்வார்த்தங்களுக்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினது போலன்றோவுள்ளது-ெய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித்தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்று சொல்லியுள்ள ஸ்வாமி இத்தகைய விஷயத்தையன்றோ முக்கியமாக நெஞ்சிற்கொண்டது. வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணி லென்றுஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத், தானென்னைமுற்றப் பருகினான் என்கிற திருவாய்மொழிப் பாசுரமன்றோ நமது
ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஜீவாதுவாயிருந்தது.-ந ச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞா நம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி”வேதாந்தா சார்யஸம்ஜ்ஞாம் அவஹித பஹுவித்ஸார்த்தம் அந்வர்த்தயாமி என்ற தேசிகன் இவ்வர்த்த தத்வத்தை யுணர்ந்தும் உணர்த்தியும் அந்வார்த்த ஸம்ஜ்ஞராகி இருக்கிறார்.

அஹமந்நம் அஹமந்நம் அஹமந்தம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக ஓதுவதனால்- என்னில் முன்னம்பாரித்து விடாய்த்திருக்கிற எம்பெருமானுடைய பசியைத் தீர்க்க அவனுக்கு நான் அன்னமாகிறேனென்றதாயிற்று. எம்பெருமானுக்கு மட்டுமன்றே விடாய்;சேத னுன இவனுக்கும் விடாயுண்டே; அவனுடைய விடாயைமுன்னம் தீர்த்தபிறகு தன்விடாயும் தீரப்பெறுகையை .அஹமந்நாதஅஹமந்நாத: அஹமந்நாத என்கிற அனுஸந்தான முணர்த்துகிறது.இங்ஙனே இரண்டு வாக்கியங்களினால் சொல்லப்பட்ட அர்த்தத்தைஅஹமந்நம் அந்நமதந்தம் அத்மி என்கிற மூன்றாவது வாக்கியம் நன்கு விவரிக்கின்றது.-நான் முந்துற முன்னம் எம்பெருமானுக்கு அன்னமாகியிருந்து, என்னையநுபவித்து மகிழ்கிற அவனை நானுமநுபவித்து மகிழ்கிறேன் என்பதாம்.படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே* என்கிற குலசேகரப்பெருமாள் பாசுரத்தில் & படியாய்க்கிடந்து * என்பதனால் அசேதநவ்ருத்தியை முன்னம் அபேக்ஷித்து, பின்னை உன்பவளவாய் காண்பேனே* என்று சேதனவருத்தியும் அபேக்ஷிக்கப்பட்டது. இத்
தலையை வி நியோகங்கொண்ட எம்பெருமானுக்கு விளையும் உகப்பைக்கண்டு உகப்பதுதவிர வேறு பயனில்லை சேதனனுடைய ஆனந்தித்வத்திற்கு- என்று நம் ஆசாரியர்களனைவரும் பணிக்கும்படி.

ப்ரபத்தி இன்னதென்பதைக் காட்டும் வசனம் யாவருமறிந்தது; த்வமேவ உபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி, சரணாகத்திரித்யுக்தா * என்பது. நீயே உபாயமாயிருக்க வேணுமென்கைதான் ப்ரபத்தி-என்னாநிற்க, ப்ரபத்தியும் உபாயமென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ?-கீதார்த்த ஸங்க்ரஹத்தில்-நிஜகர்மாதி பாத்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவா காரித , உபாயதாம் பரித்யஜ்ய யஸ்யேத் தேவே து தாம் அபீ என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிவைத்தார்.-(ரக்ஷாயாம்] முக்தவ்யாபாரந்யாயேந ஸ்வயம்
ஸ்வாதுத்லாத் ணிகஸ்ய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுப்பத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வவ்யாபாரே மோக்ஷோபாயதாபுத்திரபி ஸ்யாத் இதி பாவ , அத: தைஸ்தைராராதிதோ பகவாநேவ ஸர்வத்ர உபாய?”
என்று கல்வெட்டாக எழுதியிருக்கிறார். இங்கு”முக்தவ்யாபாரந்யாயோ என்றெழுதியிருக்கிற இதுதான் இவ்விஷயத்தில் ஜீவநாடியானது.-கேவலம் பலாநுபவத்தில் ஊன்றின க்தனுக்கு ஸாதநாநுஷ்டான
ரூபமான செயல் லவலேசமுமில்லை, அது அபேக்ஷிதமுமன்று; ஆனாலும்
முக்தன் வாளாவிருப்பதில்லை. செய்வனவெல்லாம் ஸ்வயம் போக்ய மாகக்கொண்டு செய்கிறான். பரமைகாந்திகளான முமுக்ஷக்களின் வியாபாரங்களும் அப்படிப்பட்டவையே யென்று நிரூபித்திருக்கிறார்.

தேசிகனுக்கு வழிகாட்டியாக ரஹஸ்யக்ரந்தங்கள் பணித்தவர். “ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்’ என்றருளிச்செய்ததை நிதியாகக் கொண்டே தேசிகன் கத்யபத்யங்களை அபரிமிதமாக எழுதிவைத்துள்ளார். அவற்றில் தலையானது உபாயஸ் ஸ்வப்ராப்தேருபநிஷததீதஸ்
ஸ பகவாந் ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ரபதந் நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா நிதாநாம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண
என்கிற (தேசிகனுடைய சலோகரத்னம்.-இதில் “நிதாநாளம் தத்ராபி ஸ்வயம் அகிலநிர்மாணநிபுண ” என்ற நான்காவதுபாதமானது “ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணினக்ரு பலம்’ என்கிற ஸ்ரீலோகாசார்ய திவ்ய ஸக்தியின் ப்ரதிச்சந்த ென்பதில் ஐயமுண்டோ? ஸ்வப்ராபதேஸ்ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண: சருதெள*இத்யாதிகளும் அபரிமிதம். “எம்பெருமானை அடிபணிகின்றவர்களாகச் சொல்லப்படுமவர்கள் உண்மையில்தாமாக அடிபணிகின்றார்களல்லர் ; பின்னையோவென்னில், புழுகுறித்தது எழுத்தாமாப்போலே யத்தனை” என்கிற நம்பிள்ளை ஸூக்தியைப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களிலேகண்ட தேசிகன்| அதை ச்லோகபத்தமாக்கினார்; சகுணக்ஷதலிபிக்ரமாத் உபநிபாதிம் பாதி நா * என்று; இதைத்தான் குணாக்ஷரந்யாயமென்பது. இந்தகணக்கிலே தேறுகிற நம்முடையபகவதுபஸர்ப்பணத்தை உபாயமாகக் கொள்ளலாகாதென்று நிலையிட்டிருப்பவர் தேசிகன். நியாஸத்திலகத்தில் மத்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத் ஸாதநத்வம் ஸுரயோ மே ஸ்வதந்தாம் என்று, எம்பெருமானைக்கூட உபாயமென்ன ஸஹியாத நித்ய முக்தகல்பர்களான மஹான்கள் திறத்திலே எனக்கு ப்ராவண்யாதிசயமுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாந்-என்று ஆழ்வானருளிச் செய்ததை யடியொற்றி தேசிகனும் ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்ப்பரம், ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நயஸ்யதி மாம் ஸ்வயம் * என்று ந்யாஸ்தச
கத்தில் சொன்னார். இதில் ஸ்வசப்தத்தை எத்தனை தடவை ப்ரயோகித்திருக்கிறாரென்று எண்ணிப் பார்க்கவேணும். இதில் பூர்வார்த்த மிருக்கட்டும். உத்தரார்த்தத்தைஉற்று நோக்கவேணும். “ஸ்வதத்தயா தியா” என்னலாமே எளிதாக “ஸ்வதத்த ஸ்வதியா” என்று
சொல்லியிருப்பதை நோக்குவாரில்லையே.. மருவித்தொழும் மனமே தந்தாய் என்றார் ஆழ்வார். முன்னங்கொடுத்த மனம் தொழுமனமன் றிக்கே அழும்மனமா யிருந்தபடியால் அதைத் தவிர்த்து, தொழுகைக் காகப்புதியதொருமனம் தந்தருளினம் எம்பெருமான் அவ்வருளிச் செயலை யடியொற்றிதேசிகன் பேசியிருக்க, இந்தச் சுவடறியாதார்க்கு
என் சொல்லுவது? ஊமையரோடு செவிடர்வார்த்தை.-நியாயஸித்தாஞ்ஜனத்தில் இயம் கேவல லஷ்மீசோபாயத்வ சுரத்யயாத்மிகா* என்றதையும், உடனே ஸ்வஹேதுக்வதியம் ருந்தே என்றதையும் கிம் புநஸ் ஸஹகாரிணாம் என்றதையும் தனித்தனியே ஆழ்ந்து பார்க்க வேண்டாவா ? ப்ரபத்தி யென்கிற வஸ்துதேறும்போதே தன்னிடத்தில் உபாயத்வத்தை அணுவளவும் ஸஹியாமலே தேறுவத னால் ஸ்வஹேதுத்வதியம் ருந்தே என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியுள்ளதன்றோ?

மாமேகம் சரணம் வரஜ என்று விதிக்கப்பட்டிருக் கின்ற ப்ரபத்திக்கு எப்படி உபாயத்வம் இல்லாமற் போகுமென்றும் சிலர் சங்கிப்பதுண்டு; இந்த சங்கையை நியாஸதிலகத்தில்தேசிகனே வேரற அரிந்து பொகட்டிருக்கிறார்; எங்ஙனேயென்னில்;-ஹேதுர் வைதே விமர்சேபஜநவத் இதரத், கிந்து அநுஷ்டாநகாலே வேத்யஸ் த்வத்ரூப
பேதோ விவித இஹ ஸதூபாயதா அந்யாநபேக்ஷாசு
என்று கையிலங்குநெல்லிக் கனியாகக்காட்டியிருக்கிறார் தத்துவத்தை. இதன் கருத்துயாதெனில்; ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் பக்திபோலே இதுவும் உபாயமென்று சொல்லக் கூடியதாயிருந்தாலும் இங்கு அங்ஙனே கொள்வதற்கிடமில்லை; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெரு மானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதாயிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்திவித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் [அதாவது, பிறி தொன்றை எதிர்பாராத உபாயத்வம் வேத்யாகாரமாக இருக்கையாலே என்கை.

முப்பது வாக்யங்கள்கொண்ட ரஹஸ்ய ரத்நாவளியில் நான்காவது வாக்கியம்- ஸர்வஸ்வாமி நியாய் ஸர்வேசவரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதி
சயத்தாலும் புருஷகாரமாக்கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள். இவளைப் புருஷகாரமாக்கவேண்டுகிறது ஈச்வரன் தண்ட தரனாகையாலே
” என்று பணித்தார். இதன் விவரணமான ரஹஸ்ய ரந்நாவலி ஹ் தயத்தில் “இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்‘ என்றதற்கு- ” பவேயம் சரணம்ஹி வ என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷஹேதுவாகிறாளென்றபடி” என்று விவரணம் காட்டினார்தாமே. ரக்ஷகத்வமும் ரக்ஷாஹேதுத்வமும் பர்யாயமன்று ;ஈச்வரனை ராஹேதுவென்று யாரும் சொல்லுவதில்லையே. ரக்ஷாஹேதுத்வமேபிராட்டிக்குப் பொருந்துமென்று காட்டினாராயிற்று..

சோழநாட்டில் கண்டியூரையும் தஞ்சைமாமணிக் கோயிலையும் தென்கலையாக ஸேவித்தவர்கள் நாளைக்கும்பல்லாயிரவர் உளர். அடியேனும் பலகால் ஸேவித்தவன். இவைவடகலையாக மாறினது அறுபது வருஷங்களுக்கு மேல் இராது.
திருக்குடந்தை திருவயிந்திரபுரம் திருவெவ்வுளூர் முதலிய திருப்பதிகள்மாறுபட்டு 80, 85 ஆண்டுகட்கு மேலே ஆய்விட்டதென்று வடகலையார்களே சொல்லுகிறார்கள். எப்படியானாலும் கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்படி தேவாலயங்களில்திருமண்காப்பு மாறுபட ஆரம்பித்ததென்பது அனேக ஆதாரங்களால்
ஊர்ஜிதமான விஷயம்.

—————-

ஸ்ரீராமாநுஜன்-277-விரோதிஹ்ருத் ஐப்பசியில் திருமூலம்-24-10-71

நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயமானது ஆழ்வார்களாலும்
ஆசாரியர்களாலும் பெருமைபெற்றுப் பொலிகின்றது. இவ்வாழ்வாராசார்ய பரம்
பரையானது பொய்(கை யாழ்வார் தொடங்கிப் பொய்யிலாத மணவாளமாமுனிக
ளோடு தலைக்கட்டுகின்றது.

அஷ்டத்திக்கஜாசார்யர்களின் அஷ்டப் பிரபந்தங்களும் தமிழில்தோன்றியுள்ளன. எறும்பியப்பா வென்னுமாசிரியர் வடமொழியில் வரவரமுநி சதகமொன்றேயன்றி வரவரமுநி காவியம் வரவரமுநி சம்பூ வரவரமுநி கர்ணாம்ருதம் அம்ருதத்வநி இத்யாதிகளான பல துதிநூல்களையும் பணித்துள்ளார்.-ப்ரஹ்ம ஸத்ரத்திற்குப் பல வியாக்கியானங்களிட்டவர் ரஹஸ்யப்பொருள் விளக்கமாக ஒரு நூலும் பணித்திலர்.அது அவர்க்குப் பெரிய குறையேயாம். அக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காகவே அவர்தாமே மாமுனி களாகத் திருக்கோலம் பூண்டார். இவ்வவதாரத்தில் செய்தருளின காரியங்களே
மிகமிகப் புகழத்தக்கவையாயின. ஆனதுபற்றியே இவ்வவதாரத் தனியன் வாழி களுக்கே நாடு நகரமும் நன்கறிந்த பெருமை விளைந்து அது சந்திர ஸூரியர்களுள்ள வரையில் விளங்குமதாயிற்று.-உடையவரை ஸூர்யனாகவும் மாமுனிகளைச் சந்திரனாகவும் அறுதியிடலாம். ஆனால் ஆகாசத்திலுள்ள சந்திரனுக்குக் கலைகள் குறைவதும் ஏறுவதுமாகவேயிருக்கும். மாதத்தில் ஒருநாள்தான் ஸகலகலாபரிபூர்ணனாகச்சந்திரனைப் பார்க்கமுடியும். ஸ்ரீமத்வரவரமுநி சந்திரனுக்கு எப்போதும் ஸகலகலாபரி பூர்ணஸ்திதியொழிய வேறில்லை. அந்தசந்திரனுக்குக் களங்க ஸம்பந்தமுள்ளது ப்ரஸித்தம்.சாஸ்த்ர ஸித்தமுமானது.-ஸ்ரீமத் வரவரமுனிசந்திரனுக்கு எவ்விதமான களங்கப்ரஸக்தியுமில்லை.

விசதவாக் சிகாகணியென்கிற விருது மாமுனிகளொருவர்க்கே அஸாதாரணம். கூறினது கூறல், மயங்கவைத்தல், நலிந்து பொருள்கொள்வைத்தல், இன்னது சொல்லிற்றென்று தெரியாதபடி பேசிவைத்தல்,பிறர்மனம்நோவப் பேசுதல், வீணாக வளர்த்துதல், முன்னோர் மொழிந்த மொழிகளுக்கு மாறாகப் பேசுதல் முன்பின் முரண்படப் பேசுதல்,நிந்தா பரிஹாஸங்களை நிரப்புதல் முதலிய குற்றங்குறைகளை இதர ஆசிரியர்களின் நூல்களில் பார்க்க இயலும்.

நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வெம்மைத் தனித்தழைத்து நீமாறன் செந்தமிழ்வேதத்தின் செம்பொருளை நாளுமிங்கே வந்துரை யென்றேவுவதே வாய்ந்து” என்று நைச்சியமாய் அநுஸந்தித்து மறுநாள் தொடங்கி ஓராண்டளவும் பகவத் விஷய பிரவசனம் நடத்திவந்தார், அவ்வாண்டில் ஸகல உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன-பிறகு ஸமாப்தி தினத்தில் ஸ்ரீரங்கநாதன் ஒரு சிறு குமாரனாய்த் திருவோலக்கத்திலே வந்து நின்று,”ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்,யதீத்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.”என்கிற திவ்ய பத்யத்தைக் கைகூப்பி நின்று விஜ்ஞாபித்தனனாக இதிஹாஸம் ப்ரஸித்தமாகவுள்ளது.-இத்தனியனில் சொற்கள் அமைந்திருக்கிற அமைப்பை
ஆராயுமிடத்தில் இது தெய்வவாக்கேயன்றி மானிட வாக்காக இருக்கமுடியாதென்
பதை ப்ராமாணிகர்கள் எளிதில் உணரலாம்.இராமபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் கண்ணபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் சில வியக்திகளிடத்தில் ஆச்ரயித்து, அவ்விடங்களில் திருவுள்ளத்திற்கு திருப்தியில்லாமலே முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறைகண்டு வெறுப்புடனிருக்க நேர்ந்தது. அந்த வெறுப்பெல்லாந்தீர இப்போது மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து “ஸதாசார்ய லக்ஷணபூர்த்தியுள்ளஇவரை ஆச்ரயிக்கப் பெற்றோமே!” என்று மகிழ்ச்சிகொண்டமை இந்த ச்லோகத்தில் ஒவ்வொரு விசேஷணத்தினாலும் ஸ்புடமாகக் காட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறோங்காண்மின் :

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் என்பது முதல் விசேஷணம். ராமாவதாரத்தில்சைலேசதயா பாத்ரமானவொரு வ்யக்தியை வணங்கிக் கெட்டேன்; இப்போதுஸ்ரீசைலேசதயாபாத்ரமான வ்யக்திவிசேஷத்தை வணங்கி வாழ்கிறேன் என்கிறது. ராமாவதாரத்தில் வணங்கப்பட்ட சைலேசதயாபாத்ரமான வ்யக்தி யாரென்னில்; ஸு க்ரீவன். சைலமாவது ரிச்யமூக பர்வதம். அதற்கு ஈசர்- மதங்கமுனிவர். அவருடைய தயைக்குப் பாத்ரபூதன் ஸுக்ரீவன் என்பது ஸ்ரீராமாயணம் கிஷ்கிந்த-காண்டத்தில் பதினோராவது ஸர்க்கத்திலுள்ள கதையினால் ஸ்பஷ்டம். ஆயிரம் பலங்கொண்டவனான துந்துபியென்னுமரக்கன் எருமைக்காடா வடிவமெடுத் துக் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைச் சண்டைக்கழைக்க, இருவர்க்கும் பிரபலமான போர் நடந்து வாலியினால் துந்துபியின் சரீரம் முழுதும் மடியும்படிபிசையப்பட்டு அவ்வரக்கன்யோசனைமரணமடைந்து தரையில்விழ, வாலி அவனுடையவுடலை ஒரு தூரம் போய் விழும்படி வீசியெறிய, அப்போது அவனது வாயிலிருந்து ரத்தத்துளிகள் காற்றினால் தள்ளுண்டு [சைலேசரான ] மதங்கமாமுனிவரின்
ஞானத்ருஷ்டியினால்ஆச்ரமத்தில்போய்விழ, அதைக்கண்ட அம்முனிவர் மிகுந்த சீற்றங்கொண்டு தன் இங்ஙனம் தீச்செயல் செய்தவன் வாலியென்றுணர்ந்து “பரிசுத்தமான எனது ஆச்ரமத்தை இவ்விதம் அபரிசுத்தமாக்கினவன் யாவனோ அவனும் அவனன்பர்களும் இவ்வாச்ரம பரிஸரங்களில் வந்தால் உடனே மரண மடையக் கடவர்கள்” என்று சாபமிட்டு அச்சாபம் நடத்தைக்கு வருவதற்கு ஒரு நாள்கெடு கொடுத்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவ்வனத்திலுள்ள [வாலி யைச்சேர்ந்த வானரர்களெல்லாரும் ஓடிச்சென்றனர். சாபபயத்தினால் வாலி அவ்விடம் வருவதற்கில்லாதபடியாயிற்று. அவனுடைய ஸம்பந்தமற்றவனான ஸுக்ரீவன்மாத்திரம் தனது அன்பர்களுடன் அவ்வாசரமத்தில் வாழ்ந்து வந்தன னாதலால் அவன் சைலேச தயாபாத்ரமாயினன். ” ஸு க்ரீவம் சரணம் கத என்கிற படியே அவனை வணங்கியிருந்த இராமன் பிறகு அவனோடே மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டது. அவ்விஷயம் கிஷ்கிந்தாகாண்டம் முப்பதாவது ர்க்கத்தில் விளங்கியதே. அதாவது-மாரிகாலம் முடிந்தபின்பும் ஸுக்ரீவன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வராமற்போகவே பெருமாள் இளையோனை நோக்கி’லஷ்மணா! இன்னமும் சுக்ரீவன் என்னை அடியோடு மறந்துவாளாகிடக்கின்றனன்காண்; செய்ந்நன்றிமறந்த காதகனன்றோ சுக்ரீவன்; நீ உடனே அவனிடஞ்சென்று நான் சொன்னதாகச் சொல்லு; செய்ந்நன்றிமறந்த பாபிஷ்டன் புருஷர்களில் கடையான வன் அவன் மரணமடைந்தால் அவனது உடலை மாமிசந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா . லஷ்மணா; என் பராக்ரமத்தைச் சுக்ரீவன் நன்றாக அறிந்திருந்தும் சிறிதும் அச்சமில்லாமல் கிடக்கிறானே; வாலி சென்றவழி அவனுக்கும் திறந்திருக் கிறதென்று அவனிடம் கூறு. அவனை உற்றாருறவினரோடும் யமபுரமனுப்பச் சித்தமாயிருக்கிறேனென்று தெரிவி’ என்று கூறியிருப்பதேயாம். ” ஸு க்ரீவம் நாத மிச்சதி” என்றும் ” ஸுக்ரீவம் சரணம் கத ” என்றும் ஈடுபட்டவிடத்திலே இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டதனால், முன்புசைலேச தயாபாத்ர பூதனானவொரு வனை வணங்கி வருந்தின குறைதீர இப்போது ஸ்ரீசைலேச தயாபாத்ர பூதரை வணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று. திருமலையாழ்வாரென்கிற திருவாய் மொழிப்பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மாமுனிகளை வணங்குகின்றே னென்கை.

இனி இரண்டாவது விசேஷணம் தீபக்த்யாதி குனார்ணவம். ஸ்ரீராமனாக அவதரித்திருந்த அக்காலத்திலே ஸுக்ரீவன் காலிலே குனிந்ததுபோலவே லவணார்ணவத்தின் காலிலும் குனிந்தமை யுத்தகாண்ட ப்ரஸித்தம். “ஸமுத்ரம் ராகவோராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின்படி லவணார் ணவத்தை நோக்கிச் சரணகதி பண்ணியிருந்து அங்கும் மநஸ்தாபம் மிகுந்தது. அக்கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து “சாபமாநய ஸௌமித்ரே!…..ஸாகரம் சோஷயிஷ்யாமி – லக்ஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டுவா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன் என்று கூறி நிக்ரஹத்தி லேயன்றோ துணிந்து நின்றது. சரணாகதி பண்ணினவிடத்திலே இது தகுமோ ?-அப்படியான குறைதீர அந்த லவணார்ணவத்தைவிட்டு தீபக்த்யாதி குணார்ண வத்தை அடிபணிந்து வாழப்பார்க்கிறபடி. ஞானபக்தி விரக்திகளுக்குக் கடலானமாமுனிகளை வணங்குகின்றேனென்கை.)

இனி மூள்றாவது விசேஷணம் யதிந்த்ரப்ரவணம்.இப்போது ஸ்ரீரங்க நாதனாயிருக்கின்ற பெருமானே”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்” என்கிறபடியே திருவேங்கடமுடையானாகவும் நின்ற நிலையிலே எம்பெருமானார்க்கு [ஸ்ரீராமாநுஜர்க்கு]சிஷ்யனாயினன். “அப்பனுக்குச் சங்காழியளித்தருளும் பெருமாள்” என்று போற்றப்படுகின்றஸ்ரீராமா நுஜரிடம் திருமலையப்பன் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அந்த ய ந்த்ரரிடத்தில் சிஷ்யவருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம். ஆனால் அங்கு மநஸ்தாபமொன்றும் நேரவில்லையானாலும் இராம ச நூற்றந்தாதியில் ‘தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினார்” என்கிற பாட்டைத் திருச்செவி சாத்தினபின்பு “ய ந்த்ரரிடத் திலே சிஷ்யவருத்தி செய்வதிற்காட்டிலும் யதீந்த்ரப்ரவணரானார் திறத்திலே சிஷ்ய வருத்தி செய்வதுதான் சிறந்ததென்று தோன்றி விட்டது. அந்தப் பாசுரத்தில், தன்னையுற்றாட் செய்வதிற்காட்டிலும் தன்னையுற்றாட் செய்யுந் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்வாரே சிறந்தவரென்று எம்பெருமானார் திருவுள்ளம்பற்றியதாக வெளியிடப்பட்டுள்ள தன்றோ. அதனால் யதீந்த்ரப்ரவணரை யிறைஞ்சுகின்றே னென்கிறதாயிற்று.மணவாளமா முனிகளுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திருநாமம் சிறப்பாகக் கிடைத்ததென்றுணர்க.

இனிச்லோகத்தின் ஸமாப்தி . வந்தேரம்யஜாமாதரம் முனீம் + இராமனாயும் கண்ணனாயுமவதரித்த இரண்டவதாரங்களிலும் இரண்டு முனிகளிடத்திலே சிஷ்யவருத்தி செய்திருந்தானெம்பெருமான். ராமாவதாரத்தில் விச்வாமித்ர முனிவன் பக்கலிலும் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனி ழனிவன் பக்கலிலும் சிஷ்ய வருத்திசெய்திருந்து அவ்விருவரிடத்திலும் வெறுப்பேயாயிற்று எம்பெருமானுக்கு. எங்ஙனேயென்னில், விச்வாமித்திரர் ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் மிதிலையில் ஜனக சக்ரவர்த்தியினது வேள்விச் சாலையில் புகுந்தபின் கௌதம புத்திரரும் ஜநக புரோஹிதருமான சதாநந்தர் [பாலகாண்டம் 51 – ஆம் ஸர்க்கம் முதலாக ] விச்வா மித்ரருடைய பழைய கதைகளைச் சொல்லத்தொடங்கி அவர் ரஜோகுண தமோ குணங்களுக்கு வசப்பட்டுச் செய்த செயல்களை யெல்லாம் சொல்லிவர, அதெல்லாம் கேட்ட இராமன் இப்படிப்பட்ட வொருவரையா நாம் ஆசாரியனாகக் கொண்டோம்!என்று வெறுத்திருக்க நேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் அவந்திகாபுரியில் வாழ்ந்துவந்த ஸாத்தீப நிமுனிவரிடத்தில் அறுபத்துநான்கு கலைகளையும் பயின்ற கண்ணபிரான் “ஆசார்யாய ப்ரீயம்தநமாஹ்ருத்ய” என்ற உபநிஷத்தின் கட்டளையிலே குருதக்ஷிணை ஸமர்ப்பிக்கின்றவளவிலே அம்முனிவர் “மாதவத்தோன் புத்திரன்போய்மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்“என்கிறபடியே என்றைக்கோ பிரபாஸ தீர்த்தத்தில் விழுந்து மாண்டுபோன மகனைமீட்டுத்தரவேணுமென்று வேண்ட அப்படியே கொடுத்தனன். கண்ணபிரானைஸாஷாத் நாராயணமூர்த்தியென்று அறியாதவனல்லன் அந்தஸாந்தீப நிமுனிவன்.அறிந்துவைத்தும் மோக்ஷபுருஷார்த்தத்தை விரும்பாதே மகனை மீட்டுத்தருகையாகிற க்ஷத்ர புருஷார்த்தத்தை விரும்பினபடியால் அவன் பக்கலிலும் வெறுப்பேயாயிருந்தது. இப்படி வெறுப்புக்கு இலக்ான இரண்டு முனிகளையும்விட்டு
ஸமஸ்த கல்யாண குணக்கடலாய் விரக்தாக்ரேஸரரான ரம்யஜாமா ருமுனியைவணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று.

ியாக்கியான மருளிச்செய்வதில் மாமுனிகளின் திறமை ஒப்புயர்வற்றது. ஒத்ரம் போன்ற ஸ்ரீ லோகாசார்ய திவ்ய க்திகளுக்கு அவதாரிகையிடுகிற அழகும், மூலத்திற்கு அர்த்தமருளிச் செய்கிற வைகரியும்,ஆங்காங்குஅர்த்தங்களைப் பிண்டீகரித்து நிகமித்தருளுகிற சைலியும், மதாந்தரங்களைக் கண்டித்தெழுதினாலும்கூட ஒருவருடைய மனமும் நோகாதபடிக்கும் வீணான தூஷணபரிஹாஸங்கள் சிறிதும் புகாதபடிக்கும் எந்த இடத்தை யெடுத்தாலும் சாஸ்த்ரார்த்தமே கைகொள்கனியாம் படிக்கும் ஸ்கல சாஸ்த்ரஸாகர பாரங்கதர் இவரொருவரே’ என்றுதிண்ணமாக எண்ணும்படிக்கும் மயங்கவைத்தல் முதலிய குற்றங்களுக்குச் சிறிதுமிடமில்லாதபடிக்கும் ஸூக்திகளருளிச் செய்தவர் மாமுனிகளொருவரே யென்பதை எத்தனை தடவை சொன்னாலும் எழுதினாலும் புநருக்தி துஷ்டமாகாது.-மாமுனிகளின் வியாக்கியானங்களை ஸேவிக்குமளவில் மாருதியைநோக்கி இராமபிரானருளிய வாசகமே நினைவுக்குவருகிறது. நாந்ருகவேத வி தஸ்ய நாயஜ ர்வேத்தாரிண , நாஸாமவேதவிதுஷா சக்யமேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேநபஹதா சருதம் இத்யாதி. இல்லாத வுலகத்தெங்கும் என்கிற கம்பர்

நம்மாழ்வார் தம்முடைய பெருமையைத் திருவாய்மொழியில் “துவளில்மாமணி மாடம்” ”உண்ணுஞ்சோறு பருகுநீர் “ முதலான பதிகங்களில் தாமேவெளியிட்டுக் கொண்டவாறு போல், மாமுனிகள் தாமும் ஆர்த்திப்பிரபந்தத்தில்ஒரு பாசுரத்தினால் தமது பெருமையைத் தாமே அருளிச் செய்யும்படியாயிற்று-நம்போல்வார்நிச்சலும் அநுஸந்தித்து உய்வதற்காக. அந்தப்பாசுரம் கேண்மின்:-
தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்ருேம்
தேவனுறை தீடுப்பதியே யிருப்பாகப் பெற்ருேம்*
மன்னியசீர் மாறன் கலையுணவாகப் பெற்நேம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றேம்*
முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்நேம்
முழுது நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்ருேம்
பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற்பெற்றேம்
பிறர்மினுக்கம் பொருமையிலாப் பெருமையும் பெற்ருேமே.

உலகில் பேசுவதெல்லாம் பேச்சல்ல, எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.-பட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் “அநாக்ராதாவத்யம் பஹுருணபரீ ” என்றுஆரம்பித்து ஐந்து விசேஷணங்களிட்டுச்சிறப்பித்த வாக்வி ஸிதம் மாமுனிகளுடையதேயாகும் “பதாநாம் ஸௌப்ராத்ராத் அ மிஷ ஷேவ்யம் சரவணயோ:” என்று அந்தச்லோகத்தில் பட்டர் பணித்த அதிசயம் மாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் தவிரவேறெங்கும் காணக் கிடைக்காது. சொல்லமைப்பென்பதொன்றுண்டே அதுமற்றையோருடைய வியாக்கியானங்களில் ஸாதாரணமாகவேயிருக்கும். மணவாளமாமுனிகளின் வியாக்கியானங்களில் அது ஆச்சரியம் அற்புதம் அந்யாத்ருசம் என்றே சொல்லத்தக்கதாக விளங்கும். இதைத் தெரிந்து கொள்வது எல்லார்க்கும் எளிதன்று. முராரி யென்கிறவொரு மஹாகவி “அப்திர் லங்கீத ஏவ வானரபடை  கீந்த்வஸ்ய கம்பீரதாம் ஆபாதால மநபீவரதநுர் ஜாநாதி மந்தாசல ‘‘ என்கிறான். வானமுதலிகள் கடலைக் கடந்துவிட்டார்களானாலும் மேலெழச் சென்ற வவர்களுக்குக்
கடலின் ஆழம் சிறிதும் தெரியாதென்றும் மந்தரமலை யொன்றே அதனை அறியவல்லதென்றும் இந்தச்லோகத்தில் கூறப்பட்டிருப்பதுபோல, ஸாரஸ்வதஸரத்தை
உட்புகுந்து மர்மஸ்பர்சிபாக உணரப்பெற்றவர் கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குள்மணவாளமா முனிகளொருவரேயென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பர் அவருடைய திவ்ய ஸ்ரீஸக்திகளில் நன்கு ஆழ்ந்தவர்கள்.

அ யையினாலும் த்வேஷத்தினாலும் பலர் அவருடைய ஸக்தியமுதக்கடலில் அவகாஹிக்கப்புகுவதில்லை. அவகாஹிக்கும் பாக்யம் பெற்றவர்களிலும்
பலர் ‘மணிப்ரவாள ஸ்ரீஸூக்திதானே’ என்று ஸமான்யமாக நினைத்து மேலெழப்
பார்த்துச் செல்வர்கள்.”தேநாவலோக்ய கருதித பரிபஞ்ஜதே நம்” என்று பட்டர்
அருளிச்செய்தபடி அனுபவபாகிய பரிபாகசாலிகள் யாரோசில ஸுக்ருதிகளேயாவர் .

மாமுனிகளின் திவ்யகரந்தங்களுக்குள் தத்வத்ய வியாக்கியான
மொன்றைஸேவிக்குங்கால்- : கலசாஸ்த்ரங்களிலும் ஸ்ரீபாஷ்ய ஸதா நிதியிலும்
ஆழ அவகாஹித்தமஹாஜ்ஞான நிதி மாமுனிகளல்லது வேறு எவருமில்லை” என்று
சபதமிட்டுரைக்கலாம். ஞானம் என்பது வேறு, வ்யுத்பத்தி என்பது வேறு.அந்த
வ்யுத்பத்தியானது ஸகலதந்த்ரங்களிலும் மணவாளமாமுனிகளுக்கு மிகவும் அதி
சயிக்கத்தக்கது. இதை நிரூபிக்க அவருடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளில் பலபல
விடங்களுண்டு; பலகால் பரக்க நிருபித்துமிருக்கிறோம்.

மணவாள் மாமுனிகளை எம்பெருமானாருடைய அபராவதார மென்று
அஷ்டதிக்கஜாசாரயர்க னைவரும் ஸாக்ஷாதநுபவத்தினால் நிர்ணயித்துப் பல
பாசுரங்களும் ச்லோகங்களும் பணித்துள்ளார்கள். அவை ஜகத் ப்ரஸித்தமா
னவை. அவ்வளவு ப்ரஸித்தமல்லாமல் வித்வத் கோஷ்டியில்மட்டும் பரஸித்தமான
தொரு விஷயம் இங்கு விஜ்ஞாபிக்கப்படுகிறது . திருநாராயணபுரத்தில் மண்டயம்
அனந்தாழ்வாரென்று ஸுப்ரஸித்தரான மஹா வித்வான் எழுந்தருளியிருந்தார்.
மை ர் அனந்தாழ்வானென்றும் அவர் வழங்கப்படுவதுண்டு. வேதாந்த வாதாவளி
யென்று ஜகத்ப்ரஸித்தமான மஹா கரந்தரத்னங்களை யருளிச்செய்தவர் இவரே.
இவர் ஜீவித்திருந்த காலம் மிகவும் ஸமீபமானதே. (அதாவது சென்ற நூற்றாண்
டில் எழுந்தருளியிருந்தவர்.) இவருடைய சிஷ்யர்களை ஸேவித்திருக்கிறேன்.
இவருடைய சதுச் சாஸ்த்ரபாண்டித்யப்ரபாவங்களைக் கொண்டாடாதவர்களில்லை.
அவரிடத்தில் ஸாமாந்ய சாஸ்த்ரங்கள் பயின்ற வித்வான்களின் சிஷ்யர்கள் (பல
மதஸ்தர்கள்] கன்னட நாட்டில் ப்ரஸித்திபெற்று விளங்குகிறார்கள். இம்மஹாவித்
வான் மை ர் பரகாலமடத்தில் ஆஸ்தானவித்வானாக அமர்த்தப்பட்டிருந்தார்
அங்கு இதர ஸம்ரதாயஸ்தர்களான பல வித்வான்களிடையே இவரொருவரே
ஸ்ரீமத் வரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராக விளங்கிவந்தார்.இவரையும் தம் ஸம்ப்ரதா
யஸ்தராக்கிக் கொள்ளவேணுமென்று அந்த ஸ்ரீ பரகால மடாதிபதி ஸ்வாமிக்குத்
தோன்றி அந்த அவாவை அடிக்கடி தெரிவித்துவர, இவர் அதற்கு இடங்கொடாது
வந்தார். கடைசியாக, விசேஷ த்ர யோபபத்திகளையும் ஜாகீர் ஜமீன்களையும்
கொடுப்பதாகச் சொல்லி நிர்ப்பந்திக்கவே இவரும் சிறிது இசைவுகாட்டியிருந்தார்.
நாளை காலைமுதல் திருமண் காப்பை மாற்றிக்கொள்வது’ என்று ஒருநாள் இவர்
எண்ணியிருக்கையில் அன்றிரவு கனவிலே எம்பெருமானார் ஆதிசேஷ ரூபேண
இவர்க்கு ஸேவைஸாதித்து உடனே மணவாளமாமுனிகளான திருக்கோலத்துட
னும் ஸேவைஸாதித்து நாமே அவர், அவரே நாம்’ என்று சொல்லி மறைந்தருளி
னார். இவரும் துயில் விழித்தெழுந்து எம்பெருமானாருடைய கருணைத் திறத்திற்கு
மிகவும் வியந்து தாம் எண்ணியிருந்த எண்ணத்திற்காக மிகவும் அநுதபித்து, காலை
யனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு சலோகத்தையெழுதி அந்த மடாதிபதி
ஸ்வாமி ஸன்னிதியீலே ஸமர்ப்பித்தார். அந்த ச்லோகமாவது:-
சேஷ ஸ்ரீமாந் நிகமமகுடீயுக்மரக்ஷாப்ரவ்ருத்த ஸ்ரீமத்ராமாவரஜமுந்தாம் ரம்யஜாமாத்ருதாஞ் ச,-வீந்தத் திருப்யத்விமத படலீபாடநோத்தாம ஸூக்தி. பூயாத் பவ்யப்ரத்தமஹிமா ச்ரேயஸே பூயஸே ந | -என்பது.-அந்த ஸமயத்தில் அந்த அனந்தாழ்வான்ஸ்வாமி ந்யாய பாஸ்கரமென்கிற
மஹா கரந்தமெழுதிக்கொண்டிருந்தார் அதில் இரண்டாவது பரிச்சேதமெழுதி
வருகையில் இந்த மஹா நுக்ரஹம் நேர்ந்தபடியினால் அந்த மஹாக்ரந்தத்தோடு
கூடவே இவ்வநுக்ரஹ விசேஷமும் சாசவதமாக உலகில் விளங்கவேணுமென்றுகருதி மேலே குறித்தச்லோகத்தை அந்தக்ரந்தத்தில் இரண்டாவது பரிச்சேதத்தில் விந்யாஸம் செய்தருளித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இந்த சுலோகத்தின்கருத்தாவது- உபய வேதாந்தங்களையும் காத்தருளவேணுமென்று திருவுள்ளங்கொண்ட திருவனந்தாழ்வான் எம்பெருமானாராகத் திருவவதரித்து ஸம்ஸ்க்ருத வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும், மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து த்ராவிட வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும் இப்படி உபயவேதாந்த ப்ரதிஷ்டாபனம்செய்து பெருமைபெற்றனன்.-அத்திருவனந்தாழ்வான் நமக்கு ஸகலவிதநன்மைகளும் அளித்தருளவேணுமென்பதாம். 

மாமுனிகளருளிச்செய்த நூற்றந்தாதியின் பெருமையை விளக்கி இவ்
வநுபவத்தைத் தலைக்கட்டுகிறேன். உலகில் தோன்றியுள்ள அந்தாதி வெண்பா
நூல்களில் நிகரற்றது திருவாய்மொழிநூற்றந்தாதியொன்றேயாம். ஆசிரியர்களருளிய
எந்த நூலை யெடுத்துக்கொண்டாலும் இது நிகரற்றது” ‘இஃது ஒப்பற்றது’ என்றே
சொல்லும்படியாயிருக்கும். அப்படிச்சொல்லுவதன்று இது. இதன் சிறப்பையாவரு
மிசையும்படி நன்கு நிரூபிக்கிறேன் கேண்மின். திருவாய்மொழியாயிரமும்
அந்தாதியே; இயற்பாவில் எட்டு திவ்வியப் பிரபந்தங்கள் அந்தாதிய ;கண்ணி
நுண் சிறுத்தாம்பு அந்தாதியே; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தம்தம்
திருமொழிகளில் ஒவ்வொரு பதிகம் அந்தாதி பாடியுள்ளார்கள். கிம் பஹ நா?
உலகில் பல்லாயிரம் அந்தாதிப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவை யெல்லா
வற்றினுடையவும் ப்ரக்ரியை எப்படிப்பட்டதென்றால் செய்யுளைத் தொடங்க)
வேண்டியது நூலாசிரியர்களின் தம்தம் இஷ்டத்தைப் பொறுத்தது.செய்யுளை
முடிக்கவேண்டியதும் தங்கள் தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. தங்களிஷ்டப்
படி முடித்தசீரையோ சொல்லையோ எழுத்தையோதொட்டுக்கொண்டு மேற்பாட்டு
ஆரம்பம் செய்வதென்பதொன்றே அந்தாதி பாடுகிறவர்களனைவருங்கொண்ட
நியதியாகும். (உதாரணம்) பொய்கையாழ்வார் * வையம் தகளியா * என்று
தொடங்கினார். (வையம்) என்று ஆரம்பம்செய்தது அவரிஷ்டமே கடையடியை
இடராழி நீங்குகவே யென்று” என்று முடித்தார். இதுவும் அவரிஷ்டமே.
“‘இடராழி நீங்குகவேயிங்கு’ என்றாலும் கேள்வியில்லை. அந்தாதி பாடுவார்
வெண்பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ முடிக்குஞ்சொல்லை அவரவர்களிஷ்
டப்படி பாடலாம், பாடியிருக்கிறார்கள் என்பது நிர்விவாதம். இனி மணவாள
மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியின் அமைப்பைப்பற்றிக் கேண்மீன்;
நம்மாழ்வார் “உயர்வற” என்று திருவாய்மொழி தொடங்கினபடியால் அதற்குக்
கட்டுப்பட்டு உயர்வே பரன்படியை என்று தம்முடைய அந்தாதியைத் தொடங்கினார். (திருவாய்மொழியில்) அடுத்த பதிகம் (வீடுமின் முற்றவும்) என்று தொடங்குவதால் (மாமுனிகள் தம்முடைய அந்தாதி) அத்தோடும் சேரும்படி”வேராகவே விளையும் வீடு” என்று (வீடு) என்பதையே கடைச் சீராகவைத்துப் பாசுரத்தைமுடித்தார், அதற்கு மேற்பாட்டைத் தம் இஷ்டப்படி தொடங்காமல்தமது நூலுக்கும் அந்தாதியடைவு குலையாதபடிக்கு (வீடுசெய்து) என்றே தொடங் கினார். நூறுபாட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே அவதரித்துள்ளன .செய்யுளுக்குரிய மோனையின்பமும் எதுகையின்பமுங்கூட தம்மிஷ்டத்தைப் பொறுத்ததல்லவென்பதை உற்றுநோக்கவேணும் . (வீடு) என்றதற்கு மோனை சேரும்படி (வேராகவே) என்னவேண்டிற்று. (வேராக)என்றதற்கு எதுகை சேரும்படி முன்னடியில் (வாராமல்) என்னவேண்டிற்று. இவ்வளவோடுங்கூட ஒவ்வொரு பதிகத்தின் ஸரத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் அடக்கவேண் டிற்று பாட்டுத்தோறும் நம்மாழ்வார் திருநாமமும்தவறாது வரவேண்டியதாயிற்று. இத்தனை நிர்ப்பந்தங்களைக்கொண்டு பாடின அந்தாதி நூல்இஃதொன்றுதவிர மாநிலத்தில் வேறொன்று கிடையாது.

யந்மூலமாச்வயுஜமாஸ்யவதாரமூலம் காந்தோபயந்த்ருயமிந கருணைகஸிந்தோ ,ஆ தஸத்ஸு கணிதஸ்ய மமாபி(ஸத்தாமூலம் ததேவ ஜகதப்யுதயைகமூலம்.
மன்னுயிர்காளிங்கே மணவாளமாமுனிவன் பொன்னடியாஞ்செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் கரத்தாலே தீண்டல் கடன்.

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ருமுநீந்த்ராய மஹாத்மநே, ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி ஸூ சரித சஷகம்

February 16, 2024

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

மூலர்ஷே ஸ்ரீ நகர்யாம் உதயம் அதிகாதோ ஜைத்ர ஜிஹ்வே ஸதாஸாத்
தஸ்மாத் தாபாதி பூர்வம் ருசிர வர இதி ப்ராப்த நாமா குணைஸ்வா
திஷ்டந் கிராம் கடாரே கதிசந ஸரதோ மாதூலா வாஸ பூதே
ஸ அங்க உபாங்காக மஜ்ஜோ த்ரமிட நிகம வித் பிராப தாரா நுதாரான்
–1-

மணவாள மா முனிகள் ஆழ்வார் திரு நகரியில் திகழக்கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணருக்குத் திருகுமாரராக ஐப்பசித் திரு மூலத்தில் திரு அவதரித்தார்
தம்முடைய திருத்தகப்பனாரிடம் இருந்து திருவிலச்சினை ப்ரஸாதிக்கப் பெற்று வடிவழகினாலே அழகிய மணவாளன் என்று திருநாமம் இடப்பெற்றார்
பின்பு ஒரு சில ஆண்டுகள் சிக்கில் கடாரத்தில் தம் அம்மான் திருமாளிகையில் இருந்து கொண்டு அங்க உபாங்கங்களோடு வேதத்தையும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் கற்று குணவதியான பத்னியையும் அடைந்தார்

பூய ஸ்ரீ ரெங்க நாதே நிஜ நிலயகதே ஸ்ரீ நகர்யாம் கடாராத்
ஸ்ரீ சைல ஆர்யம் ஆஸ்ரித தத் கலி யதிபதவ் விம்சதிம் ஸம் ஸதி ஸ்ம
தத் தத் தாம் தத்ஸபர்யாமநுதி நம கரோத் த்ராவிட ஆம்நாய பாஷ்யம்
ஷட் த்ரிம்ஷத் ஸஹஸ்ரைஸ் ஸூ கணிதமதிபிர் வாக் விதேயம் ததவ் ஸா
-2-

நம்பெருமாள் மீண்டும் கோயிலேற எழுந்து அருளின பிறகு அழகிய மணவாளரும் சிக்கில் கடாரத்தில் இருந்து ஆழ்வார் திருநகரிக்குச் சென்று திருவாய் மொழிப்பிள்ளை என்று ப்ரஸித்தரான திருமலை ஆழ்வாரை ஆச்ரயித்தார்
அங்கு அந்தத் திருவாய் மொழிப்பிள்ளையால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த உடையவரைக் குறித்து யதிராஜ விம்சதியை அருளிச் செய்தார்
திருவாய் மொழிப்பிள்ளையால் அளிக்கப்பட யதிராஜ கைங்கர்யத்தைத் தினம் தோறும் செய்து வந்தார்
திருவாய் மொழிக்கு வியாக்யானமான ஈடு முப்பத்தாயிரத்தை கூர்மையான புத்தியுள்ள ஸ ப்ரஹ்ம சாரிகளுடன் கேட்டு வாஸோ விதேயமாக்கிக் கொண்டார்

ஸ்ரீ சைலேஸாய க்ருத்வா ஸஸ பதம் அகில த்ராமிட ஆம்னாய பாஷ்ய
வ்யாக்யா தீஷாம் ததோ அஸ்மின் ஸ்ரிதவதி பரமம் தாம தத் கிம் க்ரியாட்யா
தத் ஸூக்த்யா ரங்கநாத ப்ரணமருதுகீ பட்ட நாதேந கோதாம்
நத்வோத் யாநாத்ரி நாதம் ததநு வரவரோ ரங்கராஜம் ததர்ஸ
–3-

அந்த அழகிய மணவாள நாயனார் திருமலை ஆழ்வாரின் அந்திம தசையில் -ஆழ்வார்களுடைய தர்ம வேதங்களை தத் வ்யாக்யானங்களோடு கூடக் கால ஷேபம் செய்து கொண்டு இருப்பேன் என்று சபதம் செய்து
பின்பு அவர் திரு நாடி அலங்கரித்த போது அவருக்குச் செய்ய வேண்டிய சரம கைங்கர்யங்களை செய்தார்
அவரது வாக்குப்படி பெரிய பெருமாளைத் திருவடி தொழ வேண்டும் என்று ஆவலுடன் திரு நகரியில் இருந்து புறப்பட்டு வழியில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் மங்களா ஸாஸனம் செய்து திருமாலிருஞ்சோலை அக்கறையும் மங்களா ஸாஸனம் செய்து திருவரங்கத்தை அடைந்து பெரியபெருமாளைக் கண்டு களித்தார்

தேநாஸ்மின் நித்ய வாஸம் ப்ரதி நியமித ஹ்ருல் லோக குர்வாதி சர்யாம்
தத் ஸூக்திம் தத் க்ருஹாம்ச ஸ்வமநஸி கலயன் ரங்க கைங்கர்ய மாப்தா
கத்வா உசவ் வேங்கடாத்ரிம் ததநு கரிகிரிம் பூத புர்யாம் யதீந்த்ரம்
நத்வா கத்வா உத காஞ்சீம் வரத குரு வரதாத்ரி ஜாத் பாஷ்யமாப
-4-

அந்த பெரிய பெருமாளுடைய தரிசனத்தால் ஸ்ரீ ரெங்கத்தில் நித்ய வாஸம் பண்ண வேண்டும் என்று கட்டுண்ட மனத்தை யுடையவரானார்
பிள்ளை லோகாச்சார்யர் முதலான ஆச்சார்யர்களின் சரித்ரங்களைக் கேட்டு அவர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை மனதில் அனுசந்தித்து -அவர்களுடைய திரு மாளிகைகளை ஸேவித்து திரு அரங்கநாதனின் கைங்கர்யத்தைப் பெற்றார் -பின்பு திவ்ய தேசங்களை மங்களா ஸாஸனம் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி -திரு வேங்கட மலைக்கும் -அத்திகிரிக்கும் சென்று பின்னர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரைத் திருவடி தொழுது பிறகு திரு வெஃகாவை அடைந்து கிடாம்பி திருமலை நாயனார் என்கிற ஆத்ரேய வரதாச்சார்யர் ஸந்நிதியில் ஸ்ரீ பாஷ்யத்தை அதிகரித்தார் –

ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய தஸ்மிந் நித்ய வசதி க்ருத் மங்களா ந்யஸ்ய வாஞ்சந்
ஆசவ் சார்த்தஸ் ஸூதே நோஜ் ஜஹத தத் க்ருஹிணீம் துர்ய மாபாஸ்ரமம் ஸா
அத்ர ஸ்ரீ சைல நாதாஹ்வய பரி மலிதம் மண்டபம் காரயித்வா
லோகாச்சார்யாதி ஸூக்திம் வ்யவ்ருணுத நிபுணம் ரம்ய ஜாமாத்ரு யோகீ
–5-

மீண்டும் திருவரங்கத்தை அடைந்து அங்கே நியதமாக வசிப்பதற்கு ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொண்டு எம்பெருமானுக்குத் தடை இன்றி மங்களா ஸாஸனம் செய்ய விரும்பியவராய் எழுந்து அருளி இருந்தார்
அதற்கு இடையூறான ஆஸவ் சத்தைச் சிலர் தெரிவிக்க அதனால் போரக் கிலேசித்து பத்னியையம் குமாரரையும் த்யஜித்து ஸந்யாஸ ஆஸ்ரமத்தை ஸ்வீ கரித்தார் –
பெரிய பெருமாளிடம் இருந்து அழகிய மணவாள ஜீயர் என்று திரு நாமத்தைப் பெற்று அங்கு ஸ்வாச்சார்யரான திருமலை ஆழ்வாரின் திரு நாமத்தால் ஒரு வியாக்யான மண்டபத்தை ஏற்படுத்தி அவ்விடத்தே இருந்து கொண்டு பிள்ளை லோகாச்சார்யார் முதலிய பூர்வர்களுடைய ஸ்ரீ ஸூக்திகளை நன்றாக விவரித்துக் கொண்டு எழுந்து அருளி இருந்தார் –

தத்ராச்சாம் ரங்க ராஜம் ததுதித நியமாத் ப்ராப்ய பூயோபி ரார்யை
வாதூலாத்யைஸ்ரி தாங்க்ரி கமபி து குத்ருஸாம் தாஸ ரத்யார்ய வர்யாத்
ஜித்வா தஸ்மிந் வதூலே ஸஹ வரத குரு ஸ்வ ஆச்சார்ய ரங்காதி ராஜம்
தத்வா வாதூல வம்சோ ஸமதிககருணாம் ஸர்வ லோகே விவவ்வரே
–6-

பின்பு பெரிய ஜீயர் பெரிய பெருமாளுடைய நியமனத்தாலே ஸ்ரீ ரெங்கராஜரைத் தமக்கு திருவாராதனமாகப் பெற்றார் –
பின்னர் கோயில் அண்ணன் முதலான அநேக கந்தாடை அய்யங்கார்களும் மா முனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்தனர்
பின்பு ஒரு சமயம் ஒரு ஏக தண்டி ஸந்யாஸி பெரிய ஜீயரைத் தன்னுடன் வாதத்துக்கு அழைக்க அவனை வேடலப்பையின் சிஷ்யரான தாசரதி யட்சன் மூலமாக ஜயித்தார்
பின்பு கோயில் அண்ணனும் தாசாரதி ஆச்சானை மடத்துக்கு அழைத்துக் கொண்டு வர ஜீயரும் ப்ரீதியுடன் தன்னுடைய திரு வாராதனத்தில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ ரெங்கராஜரை அவருக்கு ப்ரஸாதித்து வாதூல வம்சத்தில் தனக்குள்ள அதிகமான கருணையை அனைத்து உலகிற்கும் வெளிப்படுத்தினார் –

வாத்ஸ்யே தேவாதி ராஜே வரத குரு வரைஸ் சாகமாகத்ய த்ருஷ்ட்வா
ஸ்மேரஸ் வாந்தோ அபி பாக்ய வ்யதிகர விரஹாத் ஷேமம ப்ராப்ய யாதே
ஸ்வாச்சார்ய ஸ்ரீ ஜாநகீ ஸப்ர பல நியமநே நாபி முக்யாது பேதே
ஸ்பீதை ஸ்வைர் த்ருஷ்டி பாதைர் கநதர கருணா சார வர்ஷம் வவர்ஷ
–7-

ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் உதித்த தேவராஜன் என்கிற எறும்பி அப்பா -திருவரங்கத்துக்கு வந்து ஆப்த பந்துவான கந்தாடை அண்ணனோடே கூட ஜீயர் மடத்துக்கு எழுந்து அருளி -மணவாள மா முனிகளை ஸேவித்து திருவாய் மொழியில் ஓர் இடத்திற்கு ஜீயர் சாதித்து அருளிய அர்த்த விசேஷங்களைக் கேட்டுப் போர ப்ரீதரானார்
ஆனாலும் விதி கூடாமையாலே ஜீயர் மடத்தில் அமுது செய்யாமலும் -ஜீயருடைய திருவடிகளில் ஆஸ்ரயிக்காமலும் தமது ஊருக்கு மீண்டும் எழுந்து அருளினார்
அவரது திருவாராதன எம்பெருமானான சக்ரவர்த்தித் திருமகன் அவரது கனவிலே -நீர் சேஷ அவதாரமான ஜீயர் திருவடிகளிலே அபசாரப்பட்டு வந்தீர்
ஜீயர் திருவடிகளிலே ஆஸ்ரயித்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டு வந்தால் ஒழிய உம்முடைய கையாலே திரு வாராதனம் கொள்ள மாட்டோம் நீர் கடுகப் போவீர் என்று எறும்பி அப்பாவை நியமித்து அருள
அவரும் உடனே புறப்பட்டுக் கோயிலுக்கு எழுந்து அருளி அத்யாதாரத்துடனே ஜீயரை தண்டனிட ஜீயரும் தமது மலர்ந்த திருக் கண்களாலே குளிரக்கடாக்ஷித்து அப்பாவிடம் மிகவும் கருணை மழையைப் பொழிந்தார் –

பத்வேமாம் ஸப்த கோத்ரீம் பிரதிவத பயக்ருத் வர்ய கோவிந்த வர்யவ்
வாத்ஸ்யம் ஸ்ரீ தேவ ராஜம் யமிநமபி மஹாவாந சைலாதி வாஸம்
ஆர்யா நந் யாம்ஸ் ச க்ருத்வா வஸூதிகி பவராந் பஞ்ச ரத்நீம் ச க்ருத்வா
பவ்த்ரவ் ஸ்வவ் ரம்ய ஜாமாதரமதிக குணம் பட்ட நாதம் ரரக்
ஷ -8-

எழுபத்து நான்கு சிம்ஹாசனாதி பதிகளிலே பரிகணிதரான முதலியாண்டான் முடும்பை நம்பி முடும்பை அம்மாள் ஆஸூரிப்பெருமாள் கிடாம்பிப்பெருமாள் குமாண்டூர் இளையவல்லி யாச்சான் -வங்கி புரத்து நம்பி ஆகிய ஏழு கோத்ரத்தாரும் தங்களுக்குள்ளே சம்பந்தம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நியமனம் செய்து ஸப்த கோத்ர வ்யவஸ்தையை ஏற்படுத்தினார் பெரிய ஜீயர்
பிரதிவாதி பயங்கரம் அண்ணன் பூர்வ ஆஸ்ரமத்தில் கோவிந்த தாஸர் என்கிற திரு நாமமுடையவரான பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் எறும்பி அப்பா வான மா மலை ஜீயர் கோயில் கந்தாடை அண்ணன் திருவேங்கட ராமானுஜ ஜீயர் அப்பிள்ளார் அப்பிள்ளை ஆகிய எண்மரையும் அஷ்ட திக் கஜங்களாக நியமித்து பஞ்ச ரத்னங்களையும் நியமித்தார்
நற்குணங்கள் நிறைந்த தமது பவ்த்ரர்களான அழகிய மணவாள நாயனாரையும் -ஜீயர் நாயனாரையும் -பெரியாழ்வார் ஐயனையும் நன்கு ரக்ஷித்தார்

தேவம் பூயோ தித்ருஷுஸ் ஸட மத நமஸவ் ஸ்ரீ நகர்யாம் கதஸ்தம்
நத்வா ஸ்துத்வா ப்ரஹ்ருஷ்டோ விபு நவ நிலயீம் வர்த்த யித்வா அர்ய சேதா
ஜிஞ்ஞாஸூர் யாதவாத் ரோதி சரணி ஜனந் யார்ய தர்சீ நிவ்ருத்த
ப்ராப்தார்த்தஸ் துஷ்ட சேதாஸ் சத நிஜ நிலயே வஹ்னிதாநத்வ க்ருஹ் ணாத்
-9-

மீண்டும் சடகோபரான நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி ஆழ்வார் திருநகரிக்குச் சென்று அவரை ஸ்துதித்து ஏத்தி திருவடி தொழுது இன்புற்றவராய் நவதிருப்பதி எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்
திரு நாராயணத்து ஆய் என்ற ஜனன்யார்ச்சர்யர் இடம் இருந்து ஆச்சார்ய ஹ்ருதயத்தின் பொருளை அறிய வேண்டும் எண்டு விரும்பி திரு நாராயண புரத்துக்குப் புறப்பட்டார்
வழியில் சிறிய தொலைவிலேயே அவரைக் கண்டு அவருடன் திருநகரிக்கு மீண்டு எழுந்து அருளி ஆச்சார்ய ஹ்ருதய ரஹஸ்யார்த்தங்களைக் கேட்டு அறிந்தார்
பின்பு கூரை வேய்ந்த தம் மடத்துக்கு தீ வைத்தவர்களை அந்த தேசத்து அரசன் தண்டிக்க முற்பட்ட போது அதனைத்தடுத்து அவர்களைக் காத்து அருளினார்

க்ருத்வா அசவ் ஸ்ரீ நகர்யாம் சட மதந முதே மண்டபம் கால மேகம்
வீதி ஸ்ஸீமாஸ் ச க்ருத்வா ருசிர வர மஹா மண்டபம் கல்பயித்வா
விப்ரம் ஸ்ரீ ஹர ஸ்வகுட்யாம் நிஜசரந ஜூஷம் தத்ர கைங்கர்ய கார்யே
நிஷ் ப்ராப்யாஸாத்யா ஹ்ருஷ்டா புநரபி குருகா மாக மத் ரங்க தாம
-10-

பெரிய ஜீயர் நம்மாழ்வார் திரு உள்ளம் உகக்கும் படி திரு நகரியில் காளமேக திரு மண்டபத்தையும் திரு வீதிகளையும் எல்லைகளையும் ஏற்படுத்தி அழகிய மணவாளன் திரு மண்டபத்தையும் உண்டாக்கினார்
தம் திருவடிகளை ஆஸ்ரயித்த திருவேங்கடமுனையான் என்ற ப்ராஹ்மணனைத் திருக்குறுங்கடி கைங்கர்யத்திலே நியமித்து மீண்டும் திரு நகரி ஏற எழுந்தருளி ஆழ்வாருக்கு அனைத்து அழகும் கண்டருளப்பண்ணி மகிழ்ந்து பின்பு திருவரங்கத்துக்கு எழுந்து அருளினார் –

தத்ர ஸ்ரீ தால வ்ருத்த வ்யஜந பரிகரேண உத்தமம் சேவமாநம்
ஸ்வப்நே ஸ்ரீ ரெங்க பர்த்ரா ஸ்வயம் அநுகதி தஸ்வாஹி ராஜாவதார
மத்யாஹ்நே காஞ்ச வ்ருத்தாம் ப்ரதி ரஹஸி பரம் ஸ்வாஹி ராஜத்வ வேத்ரீம்
ஸ்வம் பாவம் நிஹ்நுவாத பணி பதீ சயனம் ப்ரத்யஹம் சேவதே ஸ்ம
–11-

ஒரு நாள் திருவாலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த உத்தம நம்பி பெரிய ஜீயருடைய பாலின் வண்ணமான திருமேனி நிறத்தை வேறு விதமாக நினைத்து -நெடும் போது இருக்க வேண்டாம் என்று கூடி அபசாரப்பட ஜீயரும் மடத்துக்கு எழுந்து அருளினார் –
உத்தம நம்பியும் தூங்கிப் பல கணிக்கதவிலே சாய்ந்திருக்க -பெரிய பெருமாள் அவர் கனவிலே தோன்றி -திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று கூறினார்
உத்தம நம்பியும் கண் விழித்து அப்போதே மடத்துக்கு வந்து ஜீயர் திருவடிகளில் விழுந்து அபராத ஷாமணம் பண்ணிக்கொண்டார் –
பின்பு ஒரு நாள் மத்யாஹ்னம் சடகோபகொற்றி என்கிற மூதாட்டி திருமலை ஆழ்வார் என்கிற வ்யாக்யான மண்டபத்திலே யகாந்தமாக எழுந்து அருளி இருந்த ஜீயரைக் கதவுப்புரையிலே ஆதி சேஷனாகக் கண்டதை ஒருவருக்கும் வெளியிடாமல் மறைக்கும் படி நியமித்தார் ஜீயர் –
ப்ரதிதினமும் அரவின் அணை மிசை மேய மாயனாரான பெரிய பெருமாளை மங்களா ஸாஸனம் செய்து கொண்டு எழுந்து அருளி இருந்தார்

ஏவம் பூதம் முனீந்த்ரம் தரணி ஜலதி ஜாநாயகோ ரங்க நாத
ஸ்வஸ்மை பாஷ்யம் ஸ்ருதிநம் லகு தர ரமுநேர் வக்தும் ஆஜ்ஞா பயத்தம்
ஸோ அயம் ஸம்வத்ஸரேண த்ரமிட மய ஸூதாம் ரங்க நாதாய வர்ஷத்
ஸ்ரீ சைலேத் யாதி பத்ய ப்ரவசன முக தஸ்தேந ஸம் பூஜிதோ அபூத்
–12-

இப்படி இருக்கிற பெரிய ஜீயரை ஒரு நாள் ஸ்ரீ பூ நாயகரான நம்பெருமாள் மகிழ் மாலை மார்பினரான நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதமான திருவாய் மொழியின் வியாக்கியானங்களைச் சொல்லும்படி நியமித்தார்
அவரும் ஒரு ஸம்வத்ஸர காலம் தொண்டர்க்கு அமுதான திருவாய் மொழியின் ஈடு முதலான வ்யாக்யானங்களை நம்பெருமாள் திரு முன்பே அருளிச் செய்தார்
சாற்று முறை அன்று நம்பெருமாள் அரங்கநாயகம் என்கிற ஐந்து வயதான அர்ச்சக குமாரனாக வந்து ஸ்ரீ சைல தயா பாத்ரம் எண்டு தொடங்கும் தனியனை அருளிச் செய்து ஆசார்யரான ஜீயரை உரிய முறையில் ஸம்மானித்தார்-

லோகாசார்ய யுக்த தத்வத்ரிதயமநு யுக ஸ்லோக வாக் பூஷ டீகா
மாலா ஸம் ஷேப கீதாஹ்ருதய விவரணே ஞான சாரதி டீகே
அந்தாதிம் ரத்ன மாலாம் ஸடரிபு பணி திவ்யா க்ரியாமாந கோலம்
சக்ரே கௌசித் விவைராவ கலயத நிஹீநாத்ம ப்ருச் சாபதே ஸாத்
–13-

பெரிய ஜீயரும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்த தத்வத்ரயம் ரஹஸ்ய த்ரய அர்த்த ப்ரதி பாதகமான முமுஷுப்படி -ஸ்ரீ வசன பூஷணம் -இவைகளுக்கு வியாக்கியானங்களை கீதைக்கு சங்ஷிப்தமான தொரு விவரணத்தையும் ஞான சாரம் மற்றும் ப்ரமேய ஸாரத்திற்கு வியாக்கியானங்களையும்
திருவாய் மொழி நூற்றந்தாதி உபதேச ரத்னமாலை ஈடு முப்பத்தாறாயிரப்படிக்கு ப்ரமாணத்திரட்டு ஆகியவற்றையும் அருளிச் செய்தார்-நீங்களும் ஸ்ரீ வசன பூஷணாதிகாரிகளோ அஹங்காரம் மேலிட்டுச் சண்டை இடுவதற்கு என்று தெருவில் சண்டையிடும் நாய்களைக் கேட்க்கும் வ்யாஜத்தால் விவாதம் பண்ணிக்கொண்டு இருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இருவரைத் தம்முள் விரோத பாவம் அற்றவர்களாகச் செய்தார் ஜீயர்

தத்த்வா க்ஷேத்ரம் மடீயம் ப்ருதக புஜி மிஷாத் ரங்க பர்த்ரே நிசீதே
வ்ருத்தாம் காஞ்சித் விவாஸ்ய ஸ்த விரத ருருஹந்யாயதோ அலர்க்க ஹேதோ
பத்தீம் வ்ருத்தாம் ச ஹித்வா புநரபி க்ருபயா வைஷ்ணவா கோவி முக்தாம்
அங்கீ குர்வன் நஸாஹ்யாக தவரத ஹரிம் ஸ்வீச காராதி க்ருச்ச்ராத்
–14-

ஒரு சமயம் மடத்திற்குச் சொந்தமான விளை நிலத்துக் கூலி யாட்கள் மடத்திற்குச் சொந்தமான இடத்தில் உண்டு சென்றதை அறிந்து உடனே அந்நிலத்தை பெருமாளுக்கு ஸமர்ப்பித்தார்
ஒரு நாள் வயதான மூதாட்டி ஒருத்தி இரவு மடத்திலே சயனிக்க முற்பட கிழட்டணி லாகிலும் மரமேற வல்லது ஓன்று அன்றோ –
உகவாதார் அபவாதம் சொல்ல இது போதுமே என்று கூறி அவ்வம்மையாரை வெளியேற்றினார்
தளிகைக்காக கறியமுது திருத்தித் தரும் அம்மையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரிவோடு ஸமர்ப்பித்த தூதுளங்கீரையை உதாஸீனத் படுத்தியதை அறிந்து அவ்வம்மையாரை கைங்கர்யத்தில் இருந்து விலக்கி பின்னர் பாகவத அவமானம் பண்ணின பாபத்துக்கு மன்னிப்புக் கேட்கச் செய்து கிருபையுடன் ஏற்றுக் கொண்டார்
ஜீயரை ஆஸ்ரயிக்கத் தனியே வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளையை -வரத ஹரியை -ஸ்ரீ வைஷ்ணவர்களை முன்னிடாதே தனித்து வருவதே என்று வெறுத்து ஆறு மாஸம் புறத்திண்ணையிலே இருக்கச் செய்து பின்பு அங்கீ கரித்து அருளினார் –

சத்த்வஸ்தோதி ஸ்வரூபம் வ்ரதிவர மஹிதம் ப்ராப்ய சத்தேச கர்த்தா
பட்டார்யாய ஸ்வ சிஷ்யான் விநய பரிதயந் தோஷத் ருஷ்டிம் விதூய
பூர்வ அநுஷ்டாந நிஷ்டா புநரபி வ்ருஷபாத்ரிஸ முக்யான் தித்ருஷு
சாகம் ஸ்ரீ வாதி பீக்ருத் குருமுக விநதை ராஸ்தயா அசவ் ப்ரதஸ்தே
–15-

ஸத்வ குணத்தில் நிலை நிற்பவராய் வான மா மலர் முதலான யதிகளால் ஆஸ்ரயிக்கப்பட்டவரான மா முனிகள் நல் வார்த்தை கேட்டு அனுப்பிய வடநாட்டு அரசன் ஒருவனுக்கு பாகவத சேஷத்வமே பரமார்த்தம் என்று எழுத அனுப்பினார்
அக்காலத்தில் கோயில் பட்டர் ஒருவர் ஜீயரிடம் உம்முடைய ஸிஷ்யர்கள் நம்மை வணங்காமல் அவமானப்படுத்துகிறார்கள் என்று கூற
ஜீயரும் விசாரித்த அளவிலே ஸிஷ்யர்கள் அவருடைய தோஷங்களை சொல்லி எங்களுக்கு அவரை அனுவர்த்திக்க விருப்பமே இல்லை -என்ன
அவரைப் பெருமாளாக நினைத்துப்பணிவுடன் சேவித்துப் போங்கள் எண்டு தோஷம் உள்ள இடத்திலும் குண பிரதிபத்திநாடக்கும்படி செய்தார்
பூவர்களின் அனுஷ்டானத்தில் நிலை நிற்பவரான பெரிய ஜீயர் மீண்டும் திருவேங்கடம் முதலான திவ்ய தேசத்து எம்பெருமான்களை ஸேவிக்க ஆசைப்பட்டு பிரதிவாதி பயங்கரம் அண்ணன் முதலான பணிவுள்ள முதலிகளுடன் புறப்பட்டார் –

நாதம் ஸ்தம்பேரமாத் ரேஸ் ததநுஸக ருதா மீஸ்வராம் ஸாவ தம்சம்
ஸ்துத்வா தத்வா அத தஸ்மிந் கதி பயதி வசான் தேவராஜாதி யுக்த
நத்வா க்ருத ரஹ்ரதேஸம் ததனு ச கடிகாத் ரீஸ்வரம் தேவராஜ
க்ராமம் ஸ்ரீ ரெங்கயித்வா விமல மத ஸரஸ் ஸஹ் யஜாம் ஸ ஹ்ய கார்ஷீத் –
-16-

அத்திகிரி நாதனான பேர் அருளாளனை ஸேவித்து வைகாசித்திரு நாளில் பக்ஷி ராஜனான பெரிய திருவடி நாயனார் மீது ஆபரணம் போல் திகழும் அவனைப் பணிந்து ஏந்தி அங்கேயே சில நாட்கள் எழுந்து அருளி இருந்தார்
பின்பு ஒரு நாள் ஸேவிக்க வந்த எறும்பி அப்பாவோடு புறப்பட்டு திருப்புடக்குழி எம் போர் ஏற்றையும் கடிகைத் தடம் குன்றில் அக்காரக்கனியையும் மங்களா ஸாஸனம் செய்து அருளி எறும்பியை அடைந்து அவ்வூருக்கு வட திருவேங்கடம் என்று திரு நாமம் இட்டு அங்குள்ள குளத்திற்கு திருக்காவேரி என்று பெயர் இட்டு அருளினார்

த்ருஷ்ட்வா ஸ்ரீ வேங்கடாத்ரிம் ததநு ஸ நிகடே தஸ்ய கோவிந்த ராஜம்
யோகீந்த்ர ஸ்தாபிதம் ஸ்ரீ சடமதந முகான் சம்யமீந்த் ராம்ஸ் ச நத்வா
ஆருஹ் யாத்ரிம் ததீஸம் யதிபதி ஸஹிதம் ஸ்ரீ நிதிம் சங்க சக்ரோ
தஞ்சத் பாஹும் ஸடாரி ப்ரமுக ஸூவ சநைஸ் துஷ்டுவே ஹ்ருஷ்ட சேதா
–17-

பின்னர் திரு வேங்கட மலையை அடைந்து அதன் அடிவாரத்தில் எம்பெருமானாராலே எழுந்து அருளப் பண்ணப் பட்ட கோவிந்த ராஜனையும்
நம்மாழ்வார் முதலான ஆழ்வார்களும் சேவித்து திருமலை ஏறி அருளி யதிராஜரான எம்பெருமானரோடு திருவாழி திருச்சங்குகளை திருக்கைகளில் ஏந்திய அலர் மேல் மங்கை உறை மார்பனை அருள் மாறன் சேரலர் கோன் நற்கலியன் முதலான ஆழ்வார்கள் திருவேங்கடமுடையான் விஷயமாக அருளிச் செய்த பாசுரங்களை அனுசந்தித்துத் திருவடி தொழுது மனம் மகிழ்ந்தார் –

தத்ர ஸ்ரீ கார்ய க்லுப்த்யை யாதிபதி யமிநம் கல்பயித்வா நிதேசே
தஸ்மாத் ப்ரஸ்தாய கத்வா ரகுவர நிலயம் கிம் க்ருஹம் நிஸ்து லேஸம்
ஸ்ரீ மந்தம் பக்தி ஸாரம் தசரத தநயம் பூர்ணவர்யம் ச நத்வா
ஸூதம் பார்த்தஸ்ய நீரஷிததர திலகம் ஸம்ய மீந்த்ரம் ச பேஜே
—-18-

அங்கே -திருமலையில் -ஸ்ரீ காரியத்திற்காக இளம் கேள்வி எம்பெருமானார் ஜீயரை நியமித்து அங்கு புறப்பட்டு திரு வெவ்வுளூர் வீர ராகவனையும் -திரு நின்றவூர் நித்திலத் தொத்தையும் திரு மழிசையில் பக்தி ஸாரரான திருமழிசைப் பிரானையும் பிச்சை வாரணப் பெருமாள் கோயிலில் தாசாரதியான முதலியாண்டானையும் -பூவிருந்த வல்லியில் காஞ்சீ பூர்னரான திருக்கச்சி நம்பியையும் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதியையும் திரு நீர்மலை எம்பெருமானையும் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பெருமானாரையும் மங்களா ஸாஸனம் செய்து அருளினார் –

பூயோ நத்வா கரீசம் ததநுஸ மதுராம் தத் த்வயோத்பத்தி பூதம்
கத்வா ஸ்துத்வா அபி ராமம் பணி திலக புரே தேவ நாதம் ச நத்வா
வந்தி த்வா ஸத் கவீந்த்ரம் கலி மதந முநீம் திவ்ய தேசான் ப்ரணம்ய
ஸ்ரீ ரெங்கம் ப்ராப்ய யோகீ சிரவிரஹருஜம் ஸ்பீத மோதோ முமோச
–19-

மீண்டும் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளி பேர் அருளாளனை ஸேவித்து அங்கிருந்து த்வயம் விளைந்த திருப்பதியான மதுராந்தகத்திற்குச் சென்று சக்ரவர்த்தித்த திருமகனை ஸ்துதித்து பின்னர் திரு வஹீந்திர புரத்துக்கு எழுந்து அருளி தெய்வ நாயகனை மங்களா ஸாஸனம் செய்து அருளி நாலு கவிப்பெருமாளும் திருக்கலி கன்றியுமான திருமங்கை ஆழ்வாரை திரு நகரியிலே ஸேவித்து திருக்கண்ண புரம் ராஜ மன்னார் குடி திருக்குடந்தை முதலான திருப்பதிகளையும் வணங்கி திருவரங்கத்தை அடைந்து பெரிய பெருமாளை நெடுநாள் பிரிந்ததால் உண்டான வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தார்

நத்வா ஸ்ரீ ரெங்க நாதம் விவித மணி முகைர் வஸ்துபிஸ் தோஷயித்வா
நித்யம் தத்ரைவ திஷ்டன் ஸ்வ தின சரித க்ருத தேவராஜார்ய ஜூஷ்டா
ஸார்வஞ்ஞாத் வ்ருத்த கேஸம் வரத ஹரி மசவ் பாவநார்த்தம் நிதேஷ்டா
த்ருஷ்டாத் த்ருஷ்டைர் வதூலம் வரத குரு வரம் சத்ததம் சம்பு போஷ
–20-

பெரிய பெருமாளை ஸேவித்து தாம் கொண்டு வந்த பலவகைப்பட்ட திரு ஆபரணங்கள் -திரு வெண் கொற்றக்குடை கள் -திரு வெண் சாமரங்கள் -திரு ஆலவட்டங்கள் -முதலான பொருள்களாலே உகப்பித்து நித்தியமாக அங்கேயே திருவரங்கத்திலேயே -எழுந்து அருளி இருக்கையாலே தம் வ விஷயமான தின சர்யை என்கிற பிரபந்தத்தை அருளிச் செய்த எறும்பி அப்பாவால் வந்து அடையப்பட்டார்
ஜீயர் எல்லாம் அறிந்தவராகையாலே கைங்கர்யத்திற்காக வந்த வரம் தரும் பெருமாள் பிள்ளை தீஷையோடு இருப்பதைப் பார்த்து ஸூத்த்யர்த்தமாக இன்றைக்கு திருமுடி விளக்குவித்துக் கொள்ளும் என்று நியமித்தார்
அன்றைய தினமே வரம் தரும் பெருமாள் பிள்ளைக்குக் குமாரர் பிறந்து பத்து நாளும் கடந்தது என்ற செய்தி வர அனைவரும் ஜீயரின் எல்லாம் உணர்ந்த தன்மையைக் கண்டு வியந்தனர்
கந்தாடை அண்ணன் திரு மாளிகையில் உபாதான திரவ்யத்தைக் கொண்டு நடந்து வந்த அழகிய சிங்கர் திரு வாராதனத்திற்கு த்ரவ்யம் குறைந்து வருகிறபடியைக் கண்டு
தமக்கு வந்த திரு முன் காணிக்கை த்ரவ்யத்தை தினம் தோறும் அண்ணன் திரு மாளிகைக்கு அனுப்பும் படி நியமித்து
இவ்வண்ணம் த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் அண்ணனை அந வரதம் ஆதரித்துப் போந்தார்

அர்ச்சா ரூபாம் ஸ்வ மூர்த்திம் சரண ஸரஜி ஜத்ராயிணீம் உத்தரீயம்
ஸ்வ தர்சம் ஸ்வேத ம்ருத்ஸ்நாம் ஸ்வமத விதரன் ப்ராஹிணோத் தேவ ராஜம்
வாநாத்ரவ் யோகி வர்யம் விபு பரி சரணே ஸ்தாபயித்வா ஸ்வ ஸிஷ்யம்
கோவிந்தார்யம் ச கோதா ப்ரஸதந முகதோ பட்ட நாதம் ஸமாக்யத்
-21-

பிறகு ஜீயர் தம்முடைய அர்ச்சா விக்ரஹத்தையும் திருவடித் தாமரைகளைப் பாதுகாக்கும் திருவடி நிலைகளையும் -திருப்பரி யட்டத்தையும் -திருக்கண்ணாடியையும் -திருமண் காப்பு சேஷத்தையும் தந்து எறும்பி அப்பாவை அவருடைய ஊருக்கு அனுப்பி அருளினார்
அழகிய வரதரான ராமானுஜ ஜீயரை வான மா மலையில் தெய்வ நாயகப்பெருமாள் ஸ்ரீ காரியத்துக்காக நியமித்தார்
திருவாடிப் பூரத்தில் ஆண்டாளுடைய தீர்த்த ப்ரஸாதங்களை ஆதரத்தோடு கொணர்ந்து சமர்ப்பித்த கோவிந்த தாஸர் அப்பருக்கு பட்டர் பிரான் தாஸர் என்று திரு நாமம் சாத்தி அருளினார்

த்ரஷ்டும் பூயஸ் சடாரிம் ஸபதி ஜிக மிஷத் மாதுரம் பாண ராஜம்
தாபாத் யை பாவயித்வா ததுசிதஸிபி காதாரணாத் யர்ச்யமாநா
தத் தத்த க்ராம வர்யம் ருசிர வர இதி க்யாப யித்வா முனீந்திர
ஸேதோர் மார்கேண கச்சந்த குருத மனஸா தீந்த்ரிணீ வ்ருஷ மோக்ஷம்
–22–

மீண்டும் நம்மாழ்வாரை ஸேவிக்க விரும்பி விரைந்து புறப்பட்ட ஜீயர் மதுரை அரசனான மஹா பலி வாணராயனுக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து அருளி அவனாலே பல்லக்குச் சுமத்தலாகிற கைங்கர்யத்தினால் கௌரவிக்கப் பட்டார் –அவன் கொடுத்த முத்தரசனத்தல்
என்ற க்ராமத்தை அழகிய மணவாள நல்லூர் என்று பெயர் இட்டார் –
திருவணை வழியாகச் செல்லும் போது தமக்கும் முதலிகளுக்கும் நிழல் கொடுத்த பெரிய புளிய மரம் மோக்ஷம் அடைய வேண்டும் என்று மனத்தால் நினைத்தார் -அவ்வளவிலே அம்மரம் பட்டுப்போய் பரமபதத்தை ப்ராபித்தது

த்ருஷ்ட்வா ஸ்ரீ மச் சடாரிம் புநரபி ருதுகீ பூர்வ வத் ரங்க தாம்நி
ஸ்ரீ ஸம் நத்வா வநாத்ரவ் யதிவரயமிநம் ப்ராஹிணோத் கிங்க்ரி யார்த்தே
ஸ்ரீ மத் ராமானுஜ அங்க்ர் யோரம்ருத குரு வரை ரர்ப்பித்தாம் ஸூக்தி மாலாம்
வ்யாஸஷாணோ மஹார்கைர சரஸ க்ருத முகை ரங்க நாதம் புபோக்ஷ
–23-

நம்மாழ்வாரை மங்களா ஸாஸனம் செய்து விட்டு மீளவும் குதூ ஹலத்தோடு கோயிலுக்கு எழுந்து அருளிப் பெரிய பெருமாளைப் பணிந்து நின்றார் –
திருமாலிருஞ்சோலையில் ஸ்ரீ கார்ய நிர்வாஹகராய் இருந்து கைங்கர்யம் பண்ண யதிராஜ ஜீயரை அனுப்பி வைத்தார்
எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளில் திருவரங்கத்து அமுதனாரால் சமர்ப்பிக்கப்பட்ட சொல் மாலையான இராமானுஜ நூற்றந்தாதி க்கு வ்யாக்யானம் அருளிச் செய்தார்
நறு நெய் பச்சை கற்பூரம் முதலிய சிறந்த பதார்த்தங்களாலே நம்பெருமாளை உபசரித்து உகப்பித்தார்

ஸ்ரீ மான் காந்தோ பயந்தா ஸடரிபு பணி திவ்யாக்ரியாயா ஸஹஸ்ரை
ஷட்பிஸ் த்ரிம்ஷத் ஸஹஸ்ர்யா உபசயக்ருதி தி ஸ்ரீஸ பட்டார்ய கீத
ஆக்யாதாம் க்ருஷ்ண பாதைர் கலி கலுக்ஷபலாத் கர்சிதாம் பூர்வ டீகாம்
திருஷ்ட்வா பட்டேச ஸூக்தேர் லலிதர ஸமயீம் வ்யாக்ரியாம் ஸாது சக்ரே
–24-

கைங்கர்யச் செல்வம் நிறைந்தவரான மணவாள மா முனிகள் திருவாய் மொழி வியாக்யானமான ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று திருமாலை தந்த பெருமாள் என்கிற பட்டராலே கொண்டாடப்பட்டார்
கிருஷ்ண ஸூரியான பெரியவாச்சான் பிள்ளையால் அருளிச் செய்யப்பட பெரியாழ்வார் திரு மொழி வியாக்யானத்தின் முன் -பெரும் -பகுதி கலியின் கொடுமையினால் காணாமல் போக அப்பகுதிக்கு ரஸ மயமான ஒரு வியாக்யானத்தை நன்றாக அருளிச் செய்தார் ஜீயர்

பாலம் வாதூல நாதம் ஸ்வ க்ருத விவரண ஸ்லாகிநம் வர்தயித்வா
பாணார்யே தத் சஹாயே புவந குரு தனம் ரங்க நாதம் ததவ் ஸா
ஆம்நாய நாம் விமர்ஸீ குருவர ஹ்ருதயம் ஸ்தாவிரே வ்யாசி கீர்ஷத்
யுஷ்மத் வம்ஸ் யார்த்த மேதத்த்விதி வரத குரும் ப்ராஹ தேதாநு புக்தா
–25-

தம்முடைய வியாக்யானத்தைக் கொண்டாடின அதி பாலரான கந்தாடை நாயனை ஆசீர்வதித்து பெரியாழ்வார் திருமொழி வ்யாக்யானம் எழுதும் போது உடன் இருந்து உதவிய திருப்பாண் ஆழ்வார் தாதர் நாயனாருக்கு பிள்ளை லோகாச்சார்யரின் திருவாராதனப் பெருமாளான ஸ்ரீ ரெங்கராஜரைக் கொடுத்து அருளினார்
ஜீயர் முதுமையில் திருக்கழுத்து நோவ ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம் எழுதுகையில் எதற்க்காக இப்படி ஸ்ரமப்பட வேண்டும் என்று கேட்ட கோயில் கந்தாடை அண்ணனுக்கு உம்முடைய வம்சனத்திற்காகவே என்று பதில் உரைத்தார்

ஹ்ருதயம் வாதூல வர்யம் வரத குரு வரம் வாதிபீ க்ருத் குரும் ச
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ சடாரிம் ஸ்ருதி விவரணயோர் கல்பயித்வா அபி ஷிக்தவ்
தேவஸ் யாதேஸ மேவம் ஜகதி சபலயந் ஸ்வாவ தாரேண பூயா
ப்ராப்தும் ஸ்வம் தாம திவ்யம் ருசிர வரமுனிஸ் சேதநாயாம் சகாங்ஷே
–26-

ஜீயர் தம் மனதுக்கு இனியவர்களான கந்தாடை அண்ணனையும் பிரதிவாதி பயங்கரம் அண்ணனையும் முறையே பகவத் விஷய ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹாசனங்களில் அபிஷேகம் செய்து அருளினார்
இவ்வண்ணம் எம்பெருமானுடைய நியமனத்தை தம்முடைய அவதாரத்தாலே நிறைவேற்றி மணவாள மா முனிகள் மீண்டும் தம்முடைய திவ்யமான ஸ்தானத்தை அடைய மனஸ்ஸால் நினைத்தார் –

ஆர்த்திம் ஸ்வோக்த்யா விவ்ரண்வத் ருசிர வர முனி ஸ்யந்த நஸ்தம் ரமேஸம்
ஸ்ரீ ரெங்கேஸம் தித்ருஷு ஸ்வ மட துரி சமாகத்ய திஷ்டந்த மேவ
த்ருஷ்ட்வா தூதாகி லாத்திர் கதிபயதி வசான் லோக பாக்யேந ஜீவன்
பூயோ ராமானுஜ அங்கரி த்வய சமுபகமே துர் நிவாரத்வரோ அபூத்
–27-

எம்பெருமானை உடனே அடைய வேண்டும் என்று தம்முடைய திரு உள்ளத் துடிப்பை -ஆர்த்தி பிரபந்தம் மூலம் வெளிப்படுத்திய ஜீயர் திருத்தேரிலே புறப்பட்டு திருமகள் கொழுநனாகிய நம்பெருமாள் மடத்து வாசலிலே நின்று ஸேவை ஸாதிக்கக் கண்ட துக்கம் எல்லாம் தீர்ந்தவராய் உலகத்தார் செய்த பாக்யத்தால் ஒரு சில நாட்கள் எழுந்து அருளி இருந்து மீண்டும் எம்பெருமானாரின் திருவடி இணையை அடைவதில் மிகுந்த த்வரையை யுடையவரானார் –

தஸ்மின் காலே ஷிதீஸம் கமபி யதுகிரே ஸூந்தரம் பட்ட நாத
த்வாரா ரஷத் ஸ்வ பவ்த்ரே நிஜதநு க்ருதயே பாஜநம் ஸ்வம் திதேச
ஸ்தித்வா ராமானுஜ அங்க்ரிய ஆஸ்ரித இஹ சரதாம் சப்ததிம் த்ரயப்த பூர்வாம்
ஸோ அயம் ராமானுஜ அங்க்ரித்வய மதருதிரோத் காரி கும்பே ப்ரபேதே
–28-

அக்காலத்தில் வந்தடைந்த அண்ணராய சக்ரவர்த்திக்கும் மேல் நாட்டுத் தோழப்பருக்கும் வர தமையரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கும் பரவஸ்து பட்டர் பிரான் ஜீயரைக் கொண்டு பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்வித்து அருளினார் –
பின்பு தம்முடைய பூர்வாஸ்ரம திருப்பேரானார் இடத்தில் தமது அர்ச்சா விக்ரஹத்தை எழுந்த அருளப் பண்ணுவதற்காகத் தம்முடைய திருக்கைச் செம்பைக் கொடுத்து அருளினார்
எம்பெருமானார் திருவடிகளில் ஊன்றியவராய் 73 திரு ன் நக்ஷத்ரங்கள் இந்நிலவுலகில் எழுந்து அருளி இருந்த ஜீயர் ருதிரோத்காரி ஸம்வத்சரத்தில் எம்பெருமானார் திருவடிகளை அடைந்தார்

ஸாஹஸ்ராணாம் சதுஷ்காத நுகலி சரதே ஸர்வாக் சதுர்ப்யாஸ தேப்யா
சப்தத் யூர்த்வம் த்விதீயே சதுலசித கருத் யுக்த சாதாராணாப்தே
மூலே க்லுப்தா வதாரோ க ந இவ ஸஜலா ஸர்வ ஸந்தாப ஹாரீ
ஸ்ரீ மான் காந்தோ பயந்தா முனி ரிஹ ஜய தாதா விரிஞ்ச ப்ரபஞ்சம்
–29-

கலியுகம் பிறந்த 4472-ஸாதாரண வருஷத்தில் துலா -ஐப்பசி -மாதத்தில் வளர்பிறையில் திருமூல நன்னாளில் திருவவதரித்து நீருண்ட காள மேகம் போலே அனைவருடைய தானங்களையும் போக்கிக்கொண்டு எழுந்து அருளி இருந்த கைங்கர்யச் செல்வரான பெரிய ஜீயர் உலகம் உள்ளவரையில் இங்கே வெற்றியோடு விளங்கட்டும்

வரத யாக்ருத்யாத ரங்க ப்ரபு மணி வஸசா மிஞ்ச வ்ருத்தாகி ராஸ
ஸ்வா வாஸே வஹ்னி ஜூஷ்டே பணி பதி வபுஷா நாலதோ நிர்கமேன
ஸ்ரீ மான் சேஷ அவதாரோ வரவர முனி ரித்யேவ ஸர்வோ அபி லோக
யம் மேநே தம் குணாட் யம் ருசிர வர முனிம் ப்ரோஸச்ய தன்யோ மதாத்மா
–30-

பாலின் வண்ணம் போன்ற திருமேனி நிறத்தாலும் உத்தம நம்பிக்கு கனவிலே தோன்றிய பெரிய பெருமாள் -இவர் காணும் மா முனிகளாக அவதரித்துள்ளார் -என்று திருவானந்தாழ்வானைத் தொட்டுக் காட்டி அருளிச் செய்கையாலும் -திருமலை ஆழ்வார் கால ஷேப கூடத்திலே சடகோபக் கொற்றி என்ற மூதாட்டி பெரிய ஜீயரை ஆதிசேஷன் உருவில் கொண்டதாலும்
ஆழ்வார் திருநகரியிலே ஜீயர் எழுந்து அருளி இருந்த மடத்துக்கு சிலர் நெருப்பு வைத்த போது பாம்புருக்கொண்டு கோமுகச்சாரிக்கை வழியே வெளியில் வந்தபடியால் கைங்கர்யச் செல்வம் நிறைந்த ஆதி சேஷனின் அவதார பூதரே மணவாள மா முனிகள் என்று எல்லா உலகத்தாராலும் கருதப்படும் குணக்கடலான பெரிய ஜீயரைப் பற்றி பேசி அடியேன் தன்யன் ஆனேன்

இத்தம் பூ சார வாசான் ந்ருஹரி குரு வராடீ தாசரத் யார்ய வம்ஸ்யாத்
ஜாதஸ் தத் த்ருஷ்டி பூதோ வரத குரு க்ருபா லப்த போத ப்ரபுத்த
ஸத்ஸே வீராக வார்யோ ருசிர வர முனே ஸர்வ லோகேடி தாங்க்ரே
வ்யாஜஹ்ரே திவ்ய சர்யா ரஸ சஷகம் இதம் யா படேத் ஸோ அதி தன்ய
–31-

இவ்வண்ணம் மஹீ சார க்ஷேத்ரமான திருமழிசையில் வஸிக்கும் முதலியாண்டான் திரு வம்ஸ்யரான நரசிம்ஹாச்சார்யருக்கு புத்ரனாகப் பிறந்து அவரால் கடாக்ஷிக்கப் பட்டவரும் வரதாச்சார்யருடைய அருளாலே பெற்ற அறிவினால் விளங்குபெறும் நல்லோர்களைப் பணிபவருமான வீர ராகவார்யர் அனைத்து உலகினராலும் வணங்கப்படும் திருவடிகளை யுடையவரான மணவாள மா முனிகளின் திவ்ய சரித்ர அமுதத்தை இவ்வாறு அருளிச் செய்தார் -இந்நூலைப் படிப்பவர் அதி தன்யராவர்-

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை அண்ணா வப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திருமங்கை ஆழ்வார் வடிவு அழகு சூர்ணிகை –ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

February 25, 2023

அணைத்த வேலும், தொழுத கையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும்,
பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும்,
தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும்,
அல்லிக் கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனி மாலையும்,
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத் தண்டையும், சதிரான வீரக் கழலும் தஞ்சமான தாளிணையும்,
குந்தி யிட்ட கனணக் காலும் குளிர வைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும்,
வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய,
நீலக்கலிகன்றி, மருவலர் தம் உடல் துணிய வாள்வீசும் பரகாலன், மங்கை மன்னனான வடிவே.

உறை கழித்த வாளை யொத்த விழி மடந்தை மாதர் மேல்,
உருக வைத்த மனமொழித் திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லை தன்னில் வழி பறித்த குற்றமற்ற செங்கையான்,
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன் முனே
மடி யொடுக்கி மனமடக்கி வாய் புதைத்து, ஒன்னலார்
கறை குளித்த வேலணைத்து நின்ற விந்த நிலைமை, என்
கண்ணை விட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.

காதும் சொரி முத்தும் கையும் கதிர் வேலும்,
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீது புனை தென்னாலி நாடன் திரு வழகைப் போல,
என்னாணை ஓப்பாரில்லையே.

வேலணைத்த மார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க் கலியன் கொண்ட நன் முகமும்
கண்டு களிக்குமென் கண்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்.

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]
ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை
ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான்
வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்
எட்டெழுத்தும் பெற்ற இடம்.

பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது.
திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும்,
ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும்,
எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும்,
வலிய திருத் தோள்களும், வனப்பான மேல் முதுகும்,
குறுகிய இடையும், எழிலார் மாலைகளும்  மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும்,
மறம் செறிந்த கணைக் கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும்  மாமுனிகளின் வர்ணனை.

ஆழ்வார்க்கு
பர காலன்,
கலியன்,
நீலன்,
கலி த்வம்ஶன்,
கவி லோக திவாகரன்,
சதுஷ் கவி
ஶிகா மணி
ஷட் பிரபந்தக் கவி,
கலி வைரி,
நாலு கவிப் பெருமாள்,
திரு நா வீறுடைய பெருமான்,
மங்கையர் கோன்,
அருள் மாரி,
மங்கை வேந்தன்,
ஆலி நாடன்,
அரட்ட முக்கி,
அடையார் சீயம்,
கொங்கு மலர்க் குழலியர் வேள்,
கொற்ற வேந்தன்,
கொற்ற வேல் மங்கை வேந்தன்
என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.

——————–

ஸ்ரீ சைல தயா பாத்திரம் தீ பக்த்யாதி குண ஆர்ணவம் -ஞானக்கடல் குரும் ப்ரகாஸம் செய்து அருளுகிறார்

இதுவோ திருவரசு-இதுவோ திரு மணம் கொல்லை இதுவோ திருவாலி –எட்டு எழுத்தும் பறித்த ஊர்

திருமேனியில் பொதிந்த கல்யாண குணங்களை -படி எடுத்துச் சொல்லும் படி அல்லவே
கண்கள் கருணை வடிவம்

கருணை பொறுமை அன்பு -மூன்று தேவிமார்களும் ஹ்ருதயத்தில்
மூச்சுக் காற்று வேதம்

அவனை அடங்கப் பிடித்தேனே -என்று சொல்லும் ஆழ்வார் திருமேனியும் தத்வ ப்ரகாஸம்

சார்ங்கத்தில் சாய்ந்து பெருமாள் -அவருக்கும் ஆதாரம் -திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு ஆதாரம்
திருமேனியில் பொதிந்த தத்வம் அனைத்தையும் அருளிச் செய்த அழகு

வாய்ந்த -திரு மணம் கொல்லை

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

வலது செவி சாய்த்து
அணைத்த வேலும்
ஓம் என்னும் வாய் -வேதம்
நாசி -பிராணன் தானே திருவாய் மொழி -இரும் தமிழ் நூல் புலவன் –

அணைத்த வேலும் -விரோதி நிரஸனம்

அரசமர அடியில் பெருமாளாக அரசன் ஆலி நாட்டு அரசனுக்கு மந்த்ர அரசான திருமந்திர உபதேசம்
மகிழ மரம் அடியில் பெரிய நம்பி நாயக ரத்னமான யதி ராசருக்கு மந்த்ர ரத்னம் உபதேசம்

க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
மண்டினார் உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே -அர்ச்சா திருஷ்ணையாலே உஜ்ஜீவனம்

நால் வேதம் கண்டான் -மந்த்ர த்ருஷ்டா ஆழ்வார் -நான்கு வேதங்களால் காணப்படுபவனைக் கண்டார் -கர்த்தரை கர்த்ரு பிரயோகம் –
ஸ்வரூபமும் விபவமும் கண்டார் ஆழ்வார்
ஆறு அங்கம் கண்டார் -ஆறு உபாயம் அங்கமே என்று கண்டார் திருமங்கை ஆழ்வார்
பிடி தோறும் அர்ச்சை -விபவமும் அர்ச்சையும் இவருக்கு
இருக்கும் நாள் அர்ச்சாவதார ப்ராவண்யமும் அருளிச் செயல்களில் ஈடுபாடும் இருந்தாலே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்

துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -இணை ஆதி -ஒவ்வொன்றுக்கும் மற்ற ஒன்றே திருஷ்டாந்தம் -ஓன்று ஓன்று துணை மற்ற ஒன்றும் துணை யாகாதே-வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் இங்கு -வசனமும் உதாஹரிக்கிறார்
நல்லீர் அறிவீர்-உம அடியார் எல்லோரோடும் ஓக்க எண்ணி இருக்கீரோ –நும்மைத் தொழுதோம் -ஆண் ஊடல் காதில் கடிப்பிட்டு -நாயகி பாவத்திலும் உண்டே-அர்ச்சையை தொட்டு இருப்பார்கள் மற்றவர்கள் -இவர் தானே மண்டி இருந்து அனுஷ்டித்துக் காட்டினார்
வேம் உயிர் –துணை முலை பயந்து -ஆழ்வார்
இங்கு வியாக்யானம் -பகவானுக்குத் துணை ஆழ்வாரது மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -மலராள் தனத்துள்ளான் -அங்கு வியாக்யானம் –

வடவரை நின்றும் வந்து இன்று கண புரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள் -திருத்தாயார் அர்ச்சாவதார அநு காரம் இவருக்கே

ஓ மண் அளந்த தாடாளா -தூது நான்கு பாசுரங்கள் மட்டுமே விட வல்லவர்
இரும் தமிழ் நூல்-திருவாய் மொழிப் புலவர் இவரே

———————————–

பேதை நெஞ்சே இன்றைப் பெருமை யறிந்திலையோ
ஏது பெருமை இன்றைக்கு என்று என்னில் -ஓதுகின்றேன்
வாய்த்த புகழ் மங்கையர் கோன் மா நிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள் காண் –8- பகருகின்றேன் உரைக்கின்றேன் என்று சொல்லாமல் -ஓதுகின்றேன்

காண் –கண்டவர்கள் -த்ரஷ்டா -ஞானக் கண்ணால் –

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கை தொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளரறா அணியாலியம்மானே –3-5-6-

சார்ங்கம் -அம்சம் -கூடவே அவனை அனுபவிக்கிறோம் –
ஆலி நாடான் திருச்சுற்று கட்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாளிகை சுற்றியே கட்டி -அருள் மாரி -பட்டம் பெற்றவர்
உன் தாமரை சேவடி கை தொழுவாரைத் தொழுவார் –
களைக் கத்திக்கு அருள் மாரி பெயர் -நெஞ்சுக்கும் இருள் கெடுக்கும் தீபம் -கவிம் லோக திவாகரம்- கவிகளுக்குள் திவாகரன்

வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி நாடன் அருள் மாரி -4-2-10-

————————-

ஸ்ரீ வால்மீகி ராமாயணம் -14 இடங்களில் –ராமானுஜன் பத பிரயோகங்கள்
அயோத்யா 1 இடம் கிஷ்கிந்தா 6 இடங்களில் சுந்தர 2 இடங்களில் யுத்த 2 இடங்களில் -இவை எல்லாம் லஷ்மணன் 11 இடங்களில்
பரதனுக்கு 2 இடங்களில் -அயோத்யா -உத்தர
சத்ருக்னன் 1 இடத்தில்-உத்தர காண்டத்தில்
பிரயோகங்கள்
அநுஜன் -சேஷன் -பெருமாளை பிரிந்து 3 நாள்கள் -இரண்டு நாள் கழித்து அவதாரம் -ஒரு நாள் முன்பே ஸ்ரீ வைகுண்டம்
கைங்கர்ய ஸாம்ராஜ்யம் இழக்காமல் -கைங்கர்ய ஸ்ரீ -லஷ்மணோ லஷ்மி ஸம்பன்னன் -நற் செல்வன்

ராமானுஜன் = (பல)ராமனின் தம்பியான கண்ணன்

இராமவாதாரத்தில் இரு சேஷாவதாரங்கள்!
* சேஷன் இலக்குவன் = பகவத் கைங்கர்யம்
* சேஷன் பாதுகை = பாகவத கைங்கர்யம்

இந்தப் பாதுகையின் அம்சமாகத் தோன்றிய சடாரி அல்லவோ நம்மாழ்வார்!
எனவே ஆழ்வார், “இராம+அனுஜர் = இராமானுஜர்” என்னும் சொல்லுக்குப் பரிபூர்ணமாகப் பாத்யதைப் பட்டுள்ளார்!

அதான் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அந்தப் பாதுகை பாடியது!
மாறன் எங்கள் சடகோபன் = இளையாழ்வான் என்னும் இராமானுசனே!

வேள்வியினால் பிறந்து –
யாகம் காத்து
சேர்த்தியில் ஸரணாகதி
தீர்த்த கைங்கர்யம் (அயோத்யா காண்டம் 103-5-கௌசல்யை சுமத்தரை இடம் சொல்லும் ஸ்லோகம் -இவர் சாலைக்கிணறு தீர்த்தம் )
ஓங்கார வடிவில் நடந்து
கண் அழகில் ஈடுபட்டு
தாசர்கள்-அடியேன் ராமானுஜ தாசன் -தாஸ்ய நாமம் பெறுகிறோம்
நமக்கா புருஷகாரம் செய்தவர்கள்-யாத்ர ராம ச லஷ்மணா -புருஷகாரமும் உண்டே
தொண்டிலே நோக்கம்
பரந்த விசால திரு உள்ளம்-துர்வாசர் -சாபம் -அவதாரம் முடிந்து திரும்பிய விருத்தாந்தம் –
இவ்வாறு பல ஒற்றுமைகள் இளைய பெருமாளுக்கும் நம் ராமானுஜருக்கு உண்டே

ஸோஹம் –ஸஹ அஹம்
தாஸோஹம் —
ஸதா ஸோஹம்
தாஸ தாஸோஹம் -இப்பொழுது தான் முழுமையான சாந்தி கிடைக்கும்

ஸ்ரீ இளைய பெருமாளும் ஸ்ரீ இளையாழ்வானும்

தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரனான இராமனைப் பெருமாள் என்று அழைப்பது ஸம்பிரதாயம். அவன் தம்பியான லக்ஷ்மணனை இளைய பெருமாள் என்பர். நம், ராமநுஜரான லக்ஷ்மணமுனியை இளையாழ்வான் என்று அழைப்பர். இவ்விருவருக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு. இங்கே சிலவற்றை மட்டும் கூறி, இவ்விருவரின் ஸாத்ருச்யத்தைக் காட்டுகிறோம். இருவருக்கும் ராமாநுஜன் என்ற பெயர் பொருத்தம் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.

இலக்குவன் ஆதிசேஷனுடைய அவதாரம் என்பது பல பிரமாணங்களினால் பிரசித்தமானது. ‘சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்’ என்ற பாசுரப்படி, பாதுகை என்பது ஆதிசேஷனுடைய திருவவதாரம். ‘நிவாஸசய்யாஸநபாதுகா’ என்று ஆளவந்தார் கூறினார். லக்ஷ்மணனும் பாதுகையும் ஒருவரே என்பதும், பாதுகாஸஹஸ்ரத்திலுள்ள ‘பரதசிரஸி லக்நாம் பாதுகே … ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண: சேஷபூத:’ என்ற ச்லோகத்தால் ஸுவ்யக்தமாகிறது: ‘சேஷபூத: லக்ஷ்மண: என்றதனாலும், ‘ஸ்வதநுமபி’ என்றதனாலும் ஆதிசேஷனே லக்ஷ்மணனாக, அவதரித்தான் என்றும், பாதுகையும் லக்ஷ்மணனும் ஒன்றே என்றும் தெளிவாக ஏற்படுகின்றன அல்லவா? எனவே, லக்ஷ்மணன் ஆதிசேஷ அவதாரம். இது போலவே இளையாழ்வானான ராமாநுஜரும் ஆதிசேஷனின் அவதாரம்.

ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர ஸ்வாமி அருளிய திவ்யஸூரி ஸ்தோத்திரத்தில், ‘ராமாநுஜன் சேஷாவதாரம்’ என்று ஸ்பஷ்டமாகக் காட்டப்படுகிறது. அதில் உள்ள ச்லோகம் – மேஷார்த்ராஸம்பவம் விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம் | – துண்டீரமண்டலே சேஷமூர்த்திம் ராமாநுஜம் பஜே || என்பது.

ஸ்ரீராமாநுஜருக்கு ஸாக்ஷாத் சிஷ்யரான வடுகநம்பி என்று சொல்லப்பெறும் ஆந்த்ரபூர்ணரும் இதைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார் – 

வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய, பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை |
சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம் தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத் || என்று
சேஷோ வா ஸைந்யநாதோ வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை: |
விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர் யதிராஜாய மங்களம் ||

என்றும் இவரைப் புகழ்ந்திருக்கின்றனர். வேங்கடாத்ரி என்ற மகாகவி தமது விச்வகுணாதர்ச சம்பூவில் இவரைச் சேஷனுடைய அவதாரம் என்றே பணிக்கிறார். 

ராமாநுஜாய குரவே நரவேஷபாஜே, சேஷாய தூதகலயே கலயே ப்ரணாமாந் |
யோ மாத்ருசாநபி க்ருசாந் பரிபாதுகாம:, பூமாவவாதரத் உதஞ்சித போத பூமா || என்று,

இப்படி பல ஆசார்யர்கள் இந்த இளையாழ்வானை சேஷாவதாரம் என்றே ஒருமுகமாக சொல்லுகின்றனர். வேதாந்தாச்சார்யார் மாத்திரம் இவரை சேஷனுடைய அவதாரம் என்று கூறவில்லை.

அநந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச ததாபர: |
பலபத்ரஸ் து கலெள கஸ்சித் பவிஷ்யதி ||–என்று பவிஷ்ய புராணத்தில் இவரைச் சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதை அநுஸரித்ததுதான்.

ப்ரதமோ நந்தரூபஸ்ச த்விதீயோ லக்ஷ்மணஸ் ததா |

த்ருதீயோ பலராமஸ் ச கலெள ராமாநுஜோ முநி: ||–என்ற முன்னோர்களின் பாசுரமும்.

வைகுண்ட லோகத்தில் பரம ஆனந்தத்துடன் பர்யங்கத்தில் பக்தர்களும் பாகவதர்களும் சூழப் பரம த்ருப்தராய் இருக்கும் பகவான் தம் பர்யங்கபூதனான எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்து சேஷன் என்ற பெயர் பெற்ற ஆதிசேஷனைப் பார்த்து, 

ச்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதா த்விஜா: |
அங்காநி ச வி சீர்ணாநி ஹா விருத்தோ வர்த்ததே கலீ: ||

“ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் அழிந்துவிட்டன. அந்தணர்கள் தங்களுடைய நித்ய கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டனர். வேதாங்கங்களும் சிதறிப் போயிந. கலியுகம் மேன்மேலும் விருத்தியடைகிறது. ஆகவே, நீ என் பஞ்சாயுதங்களின் சக்தியை ஏந்திக்கொண்டு உலகத்தில் ராமாநுஜ தரிசனம் என்ற பெயர் விளங்கும்படியாக ராமாநுஜராக அவதரித்து, வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி முதலியவற்றுக்குக் காப்பாக உரையிட்டு ஜனங்களை உஜ்ஜீவிக்கும்படி செய்” என்று உத்தரவிட்டார். அதன்படி இவர் அவதரித்தார்.

மந்நியோகாத் பூதபுர்யாம் அஹீநாமீச்வர : கலெள |
ஸ்ரீராமாநுஜரூபேன ஜநிஷ்யதி ஸதாம் முதே ||

இளையபெருமாள் தசரதனுடைய புத்ரகாமேஷ்டி மூலமாகப் பிறந்தவர். ராமாநுஜரும் புத்ரகாமேஷ்டி மூலமாகவே பிறந்தவர். இவரது பிதா ஆஸூரி கேசவாசார்யருக்கு ஸர்வக்ரது என்ற பிருதமும் உண்டு. இவர் காந்திமதி என்ற பெண்மணியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வந்தார். வெகு காலமாகியும், சந்ததி இல்லாமலிருந்து, பிறகு பெரியோர்களின் நியமனத்தினால் ப்ருந்தாவன க்ஷேத்திரம் என்று பெயர் பெற்ற திருவல்லிக்கேணியில் புத்ரகாமேஷ்டி செய்து முடித்தார். வேள்வி நிறைவேறியது. அன்றிரவு ஸ்ரீபார்த்தசாரதி, “நானோ என் படுக்கையான ஆதிசேஷனோ உனக்குப் பிள்ளையாகப் பிறந்து வேத வேதாந்தங்களை ரக்ஷிக்க வருகிறோம்” என்று ஸ்வப்னத்தில் சொன்னார் எனற வரலாற்றையும் கண்டுகொள்ள வேண்டும். ஆகவே இருவரும் புத்ரகாமேஷ்டியின் மூலமாகப் பிறந்தவர்கள்.

இளையபெருமாள் விசாலமான மனத்தைப் பெற்றவர் என்பது ராமாயணப் பிரசித்தம். ‘என் ஒருவனுக்கு மரணம் வந்தாலும் பாதகம் இல்லை; வம்சத்துக்கே விநாசம் ஏற்படக்கூடாது’ என்ற பரந்த மனத்துடன் துர்வாஸர் என்ற மகரிஷியிடம் அவர் நடந்துகொண்டார் என்பது தெளிவானது.

இளையாழ்வானும், “பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குரு-பாதகாத்| ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம் ||” என்று விசாலமான மனத்துடன் மந்திரார்த்தங்களை ஆசார்ய நியமனத்தை உல்லங்கனம் செய்து உபதேசித்தார் என்பது பிரசித்தமானது.

பகவானான ஸ்ரீராமனுடைய திருவடியை அடைவிப்பதற்கு லக்ஷ்மணன் எப்போதும் ராமனை விட்டுப் பிரியாமலே இருந்தார். ‘யத்ர ராம’ ஸலக்ஷ்மண:’ என்றார் வால்மீகி. விபீஷணன் இலங்கையைவிட்டு ராமனிடம் சரணாகதி செய்யச் சமுத்திரத்தின் தென்கரையை அடைந்தான். ‘இலக்குவனோடு கூடிய ராமன் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தான்’ என்றார் வால்மீகி. இதன் கருத்து – ராமனை அடைவதற்கு லக்ஷ்மணனுடைய உதவி வேண்டும் என்பது. ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய’ என்று மற்றோரிடத்தில் கூறினார்.

இளையாழ்வானும் பகவானுடைய திருவடியை நம்மை அடையும்படி செய்கிறார். ‘உலகோர்கள் எல்லாம் அண்ணல் ராமாநுசன் வந்த தோன்றிய அப்பொழுதே .. நாரணற்கு ஆயினரே’ என்பது நோக்கத் தக்கது. ‘இவை என்றனுக்கு அன்று அருளால் தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து’ என்பதையும் நோக்கவேண்டும்,

த்வயமந்திரத்தின் அர்த்தமான சரணாகதியை இளையபெருமாள் இராமன் காட்டுக்குச் சென்றபோது, ‘ஸ ப்ராதுஸ் சரணெ காடம் நிபீட்ய ரகுநந்தந: | ஸீதாமுவாச அதியஸா: ராகவம் ச மஹாவ்ரதம் || பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா கிரி ஸாநுஷு ரமஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே || என்ற பாசுரங்களை அநுஷ்டித்து விவரித்தார். இளையாழ்வானும் சரணாகதிகத்யம் என்று பெயரிட்டு த்வயார்த்தத்தை உலகுக்குத் தாமே அநுஷ்டித்துக் காட்டினார்.

இளைய பெருமாளை அனுமான் பார்த்து, “இவருக்கு நீர் என்ன ஆவீர்?” என்று கேட்க, “அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யம் உபாகத:. ராமர் என்னைத் தம் தம்பி என்று நினைத்திருப்பார். அவருடைய குணங்களுக்குத் தோற்று நான் தாஸன் என்று நினைத்திருப்பேன்” என்று பதிலளித்தார் இளைய பெருமாள். இதனால் பகவானுக்கும் தமக்கும் உள்ள ஸ்வஸ்வாமி பாவஸம்பந்தம் சேஷசேஷிபாவஸம்பந்தம் காட்டப்பட்டது. பாஷ்யகாரரும், ‘சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ:’ என்று இந்த ஸம்பந்தத்தை பல இடங்களில் வெளியிட்டார்.

ராமன் காட்டுக்குச் சென்றபோது, காட்டில் முதலில் ராமனும் பிறகு சீதையும் பிறகு லக்ஷ்மணனும் சென்றதாக ‘அக்ரத: ப்ரயயெள’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது. ராமாநுஜரும் காசியாத்திரையினின்று தெளிந்து மீண்டு திரும்பி வந்த போது காஞ்சிக்கருகில் முதலில் வேடனுடைய உருவம் தரித்த வரதனும் பிறகு பெருந்தேவியும் பிறகு ராமாநுஜரும் வந்தார்கள் என்பதையும் இங்கு நோக்க வேண்டும்.

லக்ஷ்மணன் ராமனுடைய திருவடிகளில் கைங்கர்யம் ஒன்றைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை.

ந தேவலோகாக்ரமணம் நாமரத்வம் அஹம் வ்ருணே |
ஐச்வர்யம் வாபி லோகாநாம் காமயே ந த்வயா விநா ||

என்றார். பகவானைப் பெற விரும்புகிறவன் மற்றப் பொருள்களில் வைராக்யமும், பகவானிடத்தில் ஆசையும் பெற்றிருக்கவேண்டும். ராமாநுஜரும் பகவானுடைய திருவடிகளில் உண்டான வியாமோகத்தினால் மற்றப் பொருள்களை த்ருணமாக நினைத்தார். ‘யோ நித்யம்’ என்ற இவருடைய தனியனை இங்கு அநுஸந்திப்பது,

லக்ஷ்மணன் தம் அண்ணனான ராமனுக்குத் தீர்த்தத்தை நதிகளிடமிருந்து எடுத்து வந்து உபசரித்தார். பரதாழ்வான் ராமனைச் சித்திரகூடத்திலிருந்து அழைத்துவர எண்ணி அந்த மலைக்குச் சென்றபோது வஸிஷ்ட முனிவர், கெளஸல்யை முதலிய தேவிகள் அனைவரும் சென்றனர். அங்கே கங்கை நதிக்கரையில் ஸுமித்ரை முதலியானவர்களைப் பார்த்துக் கெளஸல்யை சொல்லும் வார்த்தை –

இத: ஸுமித்ரே புத்ரஸ்தே ஸதா ஜலம் அதந்த்ரித: |
ஸ்வயம் ஹரதி ஸெளமித்ரிர் மம புத்ரஸ்ய காரணாத் ||
ஜகந்யமபி தே புத்ர க்ருதவாந் ந து கர்ஹித: |
ப்ராதுர் யதர்த்தஸஹிதம் ஸர்வம் தத் விஹிதம் குண: (அயோத்யா காண்டம் – 103)

என்பவை அங்குள்ள ச்லோகங்கள். “எப்பொழுதும் சோம்பலில்லாமல் இந்தக் கங்காநதியிலிருந்து என் குமாரனான ஸ்ரீராமனுக்கு உன் புதல்வன் தானாகவே தீர்த்தத்தைக் கொணர்ந்து உபசரிக்கிறான். இப்படித் தீர்த்தத்தைக் கொண்டுவரும் இந்தக் கைங்கர்யம் தோஷத்தை உண்டுபண்ணாது. இது பரிகாசத்திற்கு உரியதாகவும் ஆகாது. உலகத்தில் தண்ணீர் கிடைப்பது துர்லபமாக இருக்கும் காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கொணர்ந்தால் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று பிரபுக்களின் வார்த்தையைக் கேட்டுப் பண ஆசையால் ஒருவன் அம்மாதிரி செய்தால் அது பரிகசிப்பதற்கு உரியதாகும். ஸர்வவித பந்துவாய் ஸர்வஸ்வாமியாக உள்ள எம்பெருமானான ராமனுக்காகக் கொண்டு வரும் கைங்கர்யமானபடியால் இது எல்லோராலும் போற்றக் கூடியதாகவே முடியும்.” என்கிறாள்.

ஆளவந்தார் பல சிஷ்யர்களுக்குப் பகவத்விஷய காலக்ஷேபம் ஸாதித்து வந்தாராம். அப்பொழுது, ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம் கொண்டு’ என்ற திருவேங்கடமுடையான் விஷயமான பாசுரம் நடந்து வந்ததாம். ‘நீர் கொண்டு என்று தீர்த்த கைங்கர்யம் சொல்லப்பட்டிருக்கிறபடியால் திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்வதில் நமமாழ்வாருக்குப் பேரவா இருந்திருக்க வேண்டும். இதைப் பூர்த்தி செய்து அவரது மனோரதத்தை ஆளவந்தார் நிறைவேற்ற எண்ணினார். காலக்ஷேபம் முடிந்ததும், “திருவேங்கடமுடையானுக்குத் தீர்த்த கைங்கர்யத்தை இந்தக் கோஷ்டியில் யார் செய்யப் போகிறார்கள்?” என்று வினவினார். பெரிய திருமலை நம்பி, “அடியேன் சித்தமாக இருக்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுத் திருமலைக்குச் சென்று அந்தக் கைங்கர்யத்தை அழகுடன் செய்து வந்தாராம்.

தினந்தோறும் பாபவிநாசம் என்ற நதியிலிருந்து ஒரு கலசத்தில் இவர் தீர்த்தத்தை எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் கலசத்தில் தீர்த்தத்தை எடுத்துச் சென்றார். அப்போது பகவான் வில்லி வேஷம் பூண்டு, அவருக்குத் தெரியாமல் கலசத்தில் துவாரத்தை உண்டுபண்ணி நீரைக் கீழே பெருகும்படி செய்துவிட்டார். கொஞ்ச தூரம் சென்றதும், “தாதா, எனக்கு ரொம்பவும் தாகமாய் உள்ளது. கொஞ்சம் நீர் கொடு” என்றார். அப்போது கலசத்தில் நீரே இல்லை. பெரிய திருமலை நம்பி திக்பிரமம் அடைந்தார். “வெகு தூரத்திலிருந்து தீர்த்தத்தை கொண்டுவந்தேன். திருமலைக்குச் சமீபத்தில் வந்து விட்டேன். கலசத்திலோ நீர் இல்லை. மறுபடி பாபவிநாசம் சென்று கொண்டு வரவும் சக்தி இல்லை. என்ன செய்வது?” என்று கலங்கினார். அப்போது வில்லிவேஷம் பூண்ட பகவான், “பெரியவரே! கவலைப்பட வேண்டாம், நான் பாணத்தைப் பிரயோகம் செய்து இங்கிருந்தே நீரை வரவழைக்கிறேன். இதிலிருந்து தீர்த்தத்தை எடுத்துச் செல்லும்” என்று சொல்லி, ஓர் அஸ்திரத்தைப் பிரயோகம் செய்தார். திரிவிக்ரமாவதார காலத்தில் கங்கை எப்படி வேகமாகக் கிளம்பிற்றோ அது போல ஆகாசத்திலிருந்து கங்கை விழ ஆரம்பித்தது. இதற்குத்தான் ‘ஆகாச கங்கை’ என்று பெயர்.

நம்பி மிகவும் விஸ்மயப்பட்டு, இதிலிருந்து நீரைக் கொண்டு சென்றார். அது முதல் உண்மையை உணர்ந்து, பகவானுக்கு இங்கிருந்து தீர்த்தத்தைக்கொண்டு கொடுப்பதுதான் மிகவும் பிரீதியை உண்டுபண்ணும் என்பதை உணர்ந்து, தினமும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ‘தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித் வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந் யயாசே’ என்றார் வேங்கடாத்வரி கவி. ஆகையால், பகவானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யம் மிகவும் போற்றத்தக்கது.

இளையாழ்வானும் சாலைக்கிணற்றிலிருந்து, பகவானுடைய அபிப்பிராயத்தை உணர்ந்து, தினமும் தீர்த்த கைங்கர்யம் செய்து வந்தார் என்பது உலகப் பிரசித்தம்.
இப்படிப் பல வகைகளில் இரண்டு ராமாநுஜர்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

இதை ஸ்ரீதேசிகன் “தத்தம் யேன தயாஸுதாம்பு நிதினர்” என்கிற ஸலோகத்தால் காட்டினார். அமிர்தமாகிற கடல் தயை என்னும் அமிர்தம் இதற்கு கடல் ஸ்ரீபாஷ்யகாரர். தேவப் பெருமாளும் கருணைக் கடல். இவர் ஸமர்ப்பித்த அம்ருத ஜலத்தை பருகினார். புஷ்டியை அடைந்தார். கருமுகில் கடல் நீரை பருகும் மலை மீது அமரும். அதிக மழையைக் கொடுக்கும். அது பகவானாகிற கருமுகிலும் அமுத நீரைப் பருகி புஷ்டியை அடைந்து நமது விருப்பத்துக்கும் அதிகமாக நமக்கு பல பலரை பொழிகிறான் என்றார்.

தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத–ஸ்ரீ யதிராஜ ஸப்ததி 9-

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

———————-

”ஸ்ரீ ராமானுஜர் யாமுனாச்சார்யாருக்கு கொடுத்த வாக்கை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பித்தார்.
அதற்காக அவர் நீண்ட பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. வடக்கே காஷ்மீரம் வரை நடந்தே சென்றார்
ஸ்ரீ ராமானுஜர் எண்ணற்ற தடங்கல்களை இன்னல்களை எல்லாம் சந்தித்து தான் நமக்காக எத்தனை எத்தனை
செல்வங்களை அளித்திருக்கிறார் என்று அறியும்போது நமது கண்களில் நன்றிக் கண்ணீர் ஆறாக வடிகிறது.”
”வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது. தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பதித்த குணத்தினார்க்கு அந்
நாழற்றது, நம்மிராமாநுசன் தந்த ஞானத்திலே.-(இராமானுசன் தந்த ஞானத்தின் பயன்)
‘மஹா ஞானியான யதிராஜர் வியாசரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ஆளவந்தார் விரும்பிய படி
விசிஷ்டாத்வைத பரமாக ஶ்ரீபாஷ்யம் இயற்றும் பணியில் முனைந்தார்.
‘ தரிசனத்திற்கு (கோட்பாடு, சித்தாந்தம் ) ப்ரதானமான ஆசார்யராக ஒருவரைக் கொள்ள வேண்டும் என்றால்
ப்ரஸ்தானத்ரயம் என்று சொல்லப் படுகிற மூன்று க்ரந்தங்களுக்கு அவர்கள் ஶ்ரீபாஷ்யம் ( விளக்கம்) அளிக்க வேண்டும் .
முதலில் வேதத்தின் ப்ரஹ்ம பாகமாகிய உபநிஷத்துக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக , அந்த உபநிஷத்துக்களுக்கு வ்யாக்யானங்கள் போல அமைந்ததான
ப்ரஹ்ம சூத்திரங்களுக்கு விளக்கங்கள் அருளிச் செய்ய வேணும்.
மூன்றாவதாக உபநிஷத்தின் சாரமாக அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் அருளிய பகவத்கீதைக்கு
ஒரு வ்யாக்யானம் (தெளிவான உரை) அருள வேண்டும் .
இவ்வாறு உபநிஷத்துக்கள் , ப்ரஹ்ம சூத்திரம், கீதை இவை மூன்றுக்கும் (பிரஸ்தான த்ரயம்) வ்யாக்யானம் (உரை) எழுதியதால்
தான் ஸ்ரீ ராமானுஜர் தர்சன ஸ்தாபகர் என்றும் ஶ்ரீபாஷ்யகாரர் என்றும் போற்றப்பட்டார்.
இப்படி ஶ்ரீபாஷ்யம் எழுதுவதற்காக யதிராஜர் முதலில் நம்மாழ்வாரின் பாசுரங்களின் ஆழமான கருத்துகளை வெகுவாக ஆராய்ந்தார்.
ஏற்கனவே பல பெரியோர்கள் விரிவுரைகளை எழுதியிருந்தார்கள்.
உதாரணமாக
1. போதாயந பாஷ்யம் என்ற ஒரு வ்யாக்யானத்தை வியாசபகவான் சீடர்களில் ஒருவரும் மகரிஷியுமான போதாயநர் எழுதி இருந்தார். .
2. திரமிட பாஷ்யம் என்று ஒரு உரையை திரமிடாசார்யர் எழுதிஇருந்தார்..
3. ப்ரமானந்தி என்கிற ஒரு ஞானி ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ‘வார்த்திகா’ என்ற உரை எழுதியிருக்கிறார்.
4. குஹா தேவாசாரியர் பாஷ்யம் என்றும் ஒன்று இருந்தது.
5. ஆசார்ய பாருசி பாஷ்யம் என்று மற்றொன்று.
6. பகவத் ஸ்ரீவத்ஸாங்கமிச்ரர் என்பவரின் பாஷ்யம் ப்ரம்மசூத்ர பாஷ்யங்களில் மிகவும் பழமையானது.
7. நாதமுனிகள் ஒரு சில அருமையான நூல்களை இயற்றி இருந்தார். அவை விசிஷ்டாத்வைத தத்துவத்தின் யோகரஹஸ்யம், ந்யாயதத்வம் ஆகும். .
8. யாமுனாசார்யர் (ஆளவந்தார்) எழுதிய ஸம்வித் ஸித்தி, ஈசுவரஸித்தி, ஆத்மஸித்தி ஆகமப்ரமாண்யம் முதலிய நூல்களும் பிரசித்தமானவை.
ஞாநியான யதிராஜர் “போதாயநருடைய ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி க்ரந்தத்தின் கருத்துகளை ஆராயாமல்
உபநிஷத்துக்களுக்குப் பொருளுரைப்பது நிறைவு பெறாது” என்று நிச்சயித்து,
கூரத்தாழ்வானோடு, காஷ்மீரத்திலுள்ள சாரதா பீடத்துக்குச் சென்றார்.
அங்குள்ள வித்துவான்கள் அவரை ஆதரிப்பார்களா? எதிர்த்தார்கள். ஸ்ரீ ராமானுஜர்
சாரதா பீடத்தில் உள்ள வித்வான்கள் அனைவரையும் வாதத்தினால் ஜயித்தார்.
சாரதா பீடத்தில் அருள் புரியும் சரஸ்வதி தேவி ஶ்ரீராமாநுஜரின் வித்வத்தில் மகிழ்ந்து அவரை பரிக்ஷிக்க
‘கப்யாஸ ச்ருதியின் பொருளைச் சொல்ல முடியுமா ’ என்கிறாள்
யதிராஜர் தேவியை வணங்கி ‘கம்’ எனப்படும் ஜலத்தை பானம் பண்ணுவதால் ‘கபி’ என்று சூர்யனுக்கு பெயர்.
அவனாலே மலர்விக்கப்படும் தாமரை ‘கப்யாஸம்’ என்று பொருள் படுகிறது.
‘அந்தத் தாமரையை யொத்த கண்கள் விஷ்ணுவுக்கு உள்ளன’ என்பதைத் தான்
‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரிகம் ஏவ மஷினி (சாந் 1-6-6) என்னும் வேதவாக்கியம் உணர்த்துகிறது” என்று கூறினார்
சாரதாதேவியும் மிகவும் மகிழ்ந்து போதாயந வ்ருத்தியை ஶ்ரீராமாநுஜருக்கு அளிக்க அதை ப்ரீதியோடு பெற்றுக் கொண்டார்.
சில நாட்களில் திருவரங்கம் நோக்கிக் கிளம்பினார் .
இதற்கிடையில் சாரதா பீடத்தில் உள்ள, வித்வான்கள் அங்குள்ள ஸ்ரீ கோசங்களை ( ஒலைகள்) தேடும் போது ,
போதாயன வ்ருத்தி க்ரந்தம் அங்கு காணாமல் போனதைக் கண்டு, ராமானுஜர் அதை தேடிவந்ததால்
அவரே தான் அதை எடுத்துச் சென்றி ருக்க வேண்டும் என்று தீர்மானித்து ,
யதிராஜரிடமிருந்து அதை கைப்பற்றி மீண்டும் சாரதா பீடத்துக்குக் கொண்டு சென்றனர்.
இவ்வளவு பிரயாசைப் பட்டு அடைந்த போதாயன பாஷ்யம் கைவிட்டு சென்றதே என்று மிகவும் வருந்திய
ஶ்ரீராமாநுஜரைக் கூரத் தாழ்வான் கவனித்து
“யதிராஜரே! குருதேவா, துளியும் நீங்கள் வருந்த வேண்டாம். கடந்த சில நாளில் இரவு நேரங்களில்
அடியேன் அந்த போதாயன பாஷ்ய க்ரந்தம் முழுவதையும் படித்து மனதில் முழுவதுமாக பதிவு செயது கொண்டு விட்டேன்.
தேவரீருடைய கடாக்ஷத்தால் இப்போதே வேண்டுமானாலும் அதில் உள்ளதனைத்தும் சொல்லமுடியும்” என்றார் கூரத்தாழ்வான்.
ஆழ்வானின் அற்புத ஆற்றலை நினைத்து மகிழ்ந்து பாராட்டிய ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் திரும்பியதும்
ஶ்ரீபாஷ்யம் எழுதும் பணி துவங்கினார்.
‘கூரேசரே! நான் ஶ்ரீபாஷ்ய வாக்யத்தைச் சொல்ல்லிக்கொண்டே வருகிறேன்,
உம்முடைய திருவுள்ளத்திற்கு அது சரி எனப்பட்டால் எழுதும். எங்கேனும் பொருத்தமில்லை என்று தோன்றினால்
சொல்வதை எழுதாமல் நிறுத்தி மௌனமாயிரும்’ என்கிறார்.
‘அப்படியே சுவாமி’ என்று கூரேசரும் ஒப்புக் கொண்டு ஸ்ரீ பாஷ்யத்தை எம்பெருமானார் சொல்லச் சொல்ல விரைவாக எழுதுகிறார்.
ஓரிடத்தில் உடையவர் சொல்லியும் ஆழ்வான் எழுதாமல் நின்று விட்டார்.
இதைக் கவனித்த ஶ்ரீராமாநுஜர் சினமடைந்து “கூரேசா! நான் சொல்வதை எழுத மனம் இல்லை என்றால்
மேற்கொண்டு நீரே ஸ்ரீபாஷ்யம் எழுதும்” என்று சொல்லி எழுந்து சென்றார்.
அங்கிருந்த சிஷ்யர்கள் பலருக்கும் வியப்பு. ஶ்ரீராமாநுஜர்கட்டளையிட்டபடி தானே கூரேசர் எழுதுவதை நிறுத்தினார்.
என்ன காரணம்? .ஆழ்வான் அமைதியாக இருந்தார் .
சிறிது நேரம் கழித்து வந்த ஶ்ரீராமாநுஜர் திரும்பி வந்தார்.
”கூரேசா என் வாக்கியத்தை திருத்திக் கூறுகிறேன் இப்போது எழுது” என்றார் .
ஆழ்வானும் மேற்கொண்டு தடையின்றி எழுதிச் சென்றார் .
‘ஜீவாத்ம ஸ்வரூபத்தைப் பற்றி விளக்கும்போது ” பகவத் சேஷ பூத: ” அதாவது ஜீவன் பகவானது அடியவன் என்ற
தாஸ்ய ஸ்வரூபமே ஜீவாத்மாவிற்கு உள்ள முக்கிய லக்ஷணம்.
ஆனால் ஶ்ரீராமாநுஜர் அவ்விதம் கூறாமல் அந்த அம்சம் குறைவு பட ஜீவன் ஞாத்ருத்வம் (அறிவுடைமை) மட்டும் கொண்டது
என்று சொன்னதால் ஆழ்வான் தயங்கி எழுதுவதை நிறுத்தினார் .
ஶ்ரீராமாநுஜர் ஆழ்வானை கோபித்த போது ஆழ்வான் வருத்தப்படவில்லை
” உடைமை , உடையவன் இட்ட வழக்காயிருக்கும் , இதில் அடியேனுக்கு அந்வயம் இல்லை ” என்றார்.
அதாவது தன் பாரதந்திரியத்தை பிறர் இட்ட வழக்காயிருக்கும் தன்மையை வெளியிட்டார்.
வேதார்த்த நிரூபணமாக ஶ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்து அதனை சாரதா பீடத்துக்கு அனுப்பி உலகோர் அறிய
அதை வெளிப்படுத்த வேண்டும் என்று யதிராஜர் திருவுள்ளங் கொண்டார்.
கிடாம்பியாச்சான், கிடாம்பிப் பெருமாள் முதலான சிஷ்யர்களிடம் காஷ்மீரத்துக்கு ஸ்ரீகோசத்தை கொடுத்தனுப்ப,
அவர்களும் அப்படியே கொண்டு சென்று சாரதா பீடத்தை அடைந்தனர் .
ஸரஸ்வதி தேவியும் மகிழ்ந்து அந்த ஸ்ரீ கோசத்தை பாராட்டி உடையவருக்கு ‘ஸ்ரீ பாஷ்யகாரர்’ என்று திருநாமம் சாற்றி
ஹயக்ரீவப் பெருமாளையும் ஆராதிக்கக் கொடுத்து மகிழ்ந்தாள் என்று வரலாறு சொல்கிறது.
ஶ்ரீபாஷ்யகாரர் என்ற திருநாமமும் ஶ்ரீராமாநுஜரை அடைந்து சிறப்பித்தது.
”ராமானுஜர் ஸ்ரீயாமுநாசார்யரின் முதல் மனக்குறையைப் போக்கினார் என்று அறியும்போது
அவரது குருபக்தி சேவை புல்லரிக்க வைக்கிறது
பிறகு ஸ்ரீ ராமானுஜர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் முன்பே ஶ்ரீபாஷ்யத்தை உபந்யாசம் செய்தார் .
பெரிய பெருமாளும் மிக உகந்து, அனைத்து கொத்து பரிவாரங்களையும் அழைத்து எம்பெருமானார்க்கு சதகலசாபிஷேகம் செய்து
ப்ரஹ்ம ரதத்தில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச ்செல்ல ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் .
யதிராஜரின் சிஷ்யர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த வைபவத்தை சிறப்பாக செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
காவேரி கொள்ளிடத்திலுள்ள அனைத்து படித்துறைகளிலும் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ,
அழகிய திவ்ய சிம்மாசனத்திலே யதிராஜரை எழுந்தருளச் செய்து ,
” யதிராஜரே நீர் இந்நின்ற திருமஞ்சனம் செய்வதே” என்று திருமஞ்சன ஸ்லோகங்கள் , ஶ்ரீபுருஷஸுக்தம் சொல்லி
விசேஷமாக அலங்காரத் திருமஞ்சனம் பண்ணி விசேஷ அலங்காரங்கள் பண்ணி ப்ரஹ்ம ரதத்திலே எழுந்தருளச் செய்து
ஶ்ரீபாதம் தாங்கிகள் சுமந்து சென்றனர் .
ஆயிரக்கணக்கான சிஷ்யர்களோடு அனைத்து வாத்தியங்கள் ஒலிக்க திருவீதி வலம் வந்தார்.
மாவிலைத் தோரணங்கள் கட்டி , வீதிகள் தோறும் பெரிய கோலங்கள் இழைத்து விளக்குகள் ஏற்றி மஞ்சநீர் சுழற்றி
” வாய்த்த பெரும்பூதூரில் மன்னவன் வந்தான் ;ஏத்தும் இளையாழ்வார் என்னும் எம்பிரான் வந்தான் ;
எதிராச முனிவன் வந்தான் ; ஶ்ரீபாஷ்யகாரர் என்னும் ஶ்ரீமான் வந்தான்”
”.போற்றி போற்றி” ”வாழி வாழி” என்றும் மங்களாசாசனம் பண்ணி
யதிராஜரை மடத்திலே எழுந்தருளப் பண்ணினார்கள்.
கல்யாண வைபவம் போல எல்லோரும் கூடியிருந்து கிடாம்பி ஆச்சான் பரிமார அனைவரும்
இன்சுவையோடு கூடிய ப்ரசாதத்தை அமுது செய்து மகிழ்ந்திருந்தனர்.
—————
ஸபரி திருக்கச்சி நம்பியாக அவதாரம் என்பர்
கஜேந்த்ரனுக்கும் கஜேந்திர தாசருக்கும் பல ஒற்றுமைகள்
வரதன் இடம் ப்ராவண்யம்-லீலை -சக்கரைப் பொங்கல் ஊட்டி விட்டு -வீர ராகவன் தந்தையும் நம்பாமல்-கோயிலுக்கு உள்ளே வர விடாமல் -திருக்கச்சி நம்பியைக் கூட்டி வந்தால் தான் அமுது செய்வேன் -100 தடா உண்டு வியர்வை உடன் இருக்க -உலகு உண்ட பெரு வாயன் -காட்டி அருளி -இவரால் உண்ண முடியாது என்று காட்டி அருளி
வரதனே பேசி கைங்கர்யம் செய்ய அழைத்து -வீச சொல்லி -நிரந்தரமாக இன்றும் வீசிக் கொண்டே இருக்கிறார்
முதலை யானையின் காலைப் பிடித்து முதலில் மோக்ஷம்
திருக்கச்சி நம்பி தாசர் திருவடிகளை பற்றி முதலில் பேறு

அருளாளன் அருளிய ஆறு வார்த்தைகள்…….!!!

இளையாழ்வாருக்கு(இராமானுஜருக்கு) ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

1. “அஹமேவ பரம் தத்துவம்”
நாராயணமே உயர்ந்த தத்துவம், நாராயணனே பரம் பொருள்.

2. “தர்சநம் பேத ஏவச”
சித்தாந்தம் ஆத்ம பரமாத்ம பேதத்தையுடையது.
ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3. “உபாயேஷு ப்ரபத்திஸ்யாத்”
மோட்சத்திற்கு ப்ரபத்தியே சிறந்த உபாயம்.
சரணாகதியே மோட்சத்திற்கு வழி.
சரணாகதியே கடைத்தேறுவதற்கு உகந்த வழி.

4. ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”
அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இவ்வாறு சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.

5. “தேஹாவஸாகே முக்கிஸ் யாத்”
சரீர முடிவில் மோட்சமுண்டு – பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

6. “பூர்ணாசார்ய ஸ்மாச்ரய”
பெரிய நம்பிகளையே நாட வேண்டியது. அவரைக் குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே ஆசிரியர் போல இருந்து ராமானுஜருக்கு விளக்கினார் திருக்கச்சி நம்பிகள்.

கஜேந்திரனின் ஆறு வார்த்தைகள்
நமோ நமஸ்தே
அகில காரணாயா
நிஷ் காரணாயா
அத்புத காரணாயா
கேசவர் kes
ஸர்வ ஆகம மஹார்ணவம் ஸர்வ ஆகமங்கள் சென்று சேர்க்கும் கடல்
அபவர்க்கா -மோக்ஷம் அளிப்பவன்
பராயணாயா –

முனிவர் -மனன சீலர்
முனிதல் கோபித்தல்

முனியே நான்முகனே முக்கண் அப்பா -அவனும் முனிவன்
நம்மை உஜ்ஜீவிக்கும் நமது பிரதிபந்தங்களைப் போக்கவும் கோபிக்கவும் வேண்டுமே
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைகிறோம்

நம்மாழ்வார் நின் கண் வேட்க்கை எழுவிப்பன் –ஊரும் நாடும் உலகம் தன்னைப்போல் ஆக்க மனனம்
சட வாயுவை கோபித்து
நாதமுனி யமுனா முனி

ராமானுஜரும் முனிவர் -திவாகர முனி -அப்போது ஒரு சிந்தை செய்து

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

சவும்ய மணவாள மா முனி -கோபிக்காத முனி -நம்மை உஜ்ஜீவித்து கால ஷேபம் நன்றாக செய்யவே மனனம் ராமானுஜ பிரவணர் என்பதால் –

இரு பிறவிகள்-திருக்கோளூர் பெண் பிள்ளை போற்றும் இரண்டு கஜேந்திரன் திருவடிகளே சரணம்
கைங்கர்யம் ஸ்ரீ யால் திகழ்பவர்கள்-ஸ்ரீ வரதர் பாராட்டும் இரண்டு கஜேந்திரர் தார்கள் புகழ் வாழியே
——————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குமுத வல்லி ஸமேத திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ வகுள மாலை–ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம்–

February 24, 2023

ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்கள்

சடகோபன்,
மாறன்,
காரிமாறன்,
பராங்குசன்,
வகுளாபரணன்,
குருகைப்பிரான்,
குருகூர் நம்பி,
திருவாய்மொழி பெருமாள்,
பெருநல் துறைவன்,
குமரி துறைவன்,
பவரோக பண்டிதன்,
முனி வேந்து,
பரப்ரம்ம யோகி,
நாவலன் பெருமாள்,
ஞான தேசிகன்,
ஞான பிரான்,
தொண்டர் பிரான்,
நாவீரர்,
திருநாவீறு உடையபிரான்,
உதய பாஸ்கரர்,
வகுள பூஷண பாஸ்கரர்,
ஞானத் தமிழுக்கு அரசு,
ஞானத் தமிழ் கடல்,
மெய் ஞானக் கவி,
தெய்வ ஞானக் கவி,
தெய்வ ஞான செம்மல்,
நாவலர் பெருமாள்,
பாவலர் தம்பிரான்,
வினவாது உணர்ந்த விரகர்,
குழந்தை முனி,
ஸ்ரீவைணவக் குலபதி,
பிரபன்ன ஜன கூடஸ்தர்,
மணிவல்லி,
பெரியன் –
இவையெல்லாம் நம்மாழ்வாரின் திருநாமங்களாக போற்றப்படுகிறது.

————–

ஸ்ரீ வகுள மாலை-may june -1937-

அகந்தை செத்த பின் அமலன் தோற்றுவான்
ஆடை இல்லாதவன் அரை மனிதன்
இந்திரையை மார்பில் வைத்தான் இருடீகேசன்
ஈசன் இடத்து உமையை அந்தி பகல் அமைத்தான்
உந்திக் கமலன் கமலையை நாவில் வைத்தான்
ஊமையராய் வாழ்தலை உத்தமன் உகவான்
எக்காலத்தும் எம்பெருமான் அடி சேர்
ஏய்ந்த புகழ் யுடையோன் எம் இராமானுசன்
ஐ ஐத் தத்துவம் நம் உயிர் என்க
ஒரு தனி முதல்வன் காண் எம் ஆதிப்பிரான்
ஓதல் ஓதுவித்தல் ஒப்பிலார் தொழில்கள்
ஒவ்வியம் அவித்தலே ஆக்கத்திற்கு அடியாம்

—————

ஸ்ரீ மாறன் அடி மெய்ம்மை

மாறன் அடி பணிந்து உயந்த உடையவர் ஒருவரே உத்தாரகர் -உலகு உய்ய ஒரே வழி

மறை நெறி தேறித் தூய மாறனார் பாத பற்பே
இறை எனும் முறைமை காக்கும் திறமையே தெரிக்கும் தீரர்
முறை முறை முழங்கி யாங்கே துறை துறை உயிர் அளிக்கும்
நிறை மொழி சொரிந்து யாண்டும் நிரம்பியது இயம்புவாமே

சந்திம் இச்சந்தி சாது -சாதுக்கள் ஸத்தின் மேல் அன்பு செய்பவர்
ஸத் -ஸந்தாதா -சந்திமான் -பரமனின் திரு நாமங்கள்
பரனும் ஏனையரும் சந்தி நிலமே சடகோப தத்வம்
பாதுகா ஸ்ரீ பெற்ற பரதாழ்வானை -பரனை ஒன்றினீரோ -பேறு பெற்றீரோ –என்று உஸாவினார் பரத்வாஜ முனிவர் –
ஆர்யம் மார்க்கம் ப்ரபந்நஸ்ய நாநுமந்யே தக புமாந் -என்று வால்மீகி பகவான் புகழ்கிறார்
இது அடியாகவே
நாம் ஆழ்வாரை
ப்ரபந்ந ஜன கூடஸ்தர்-ஆத்யஸ்யன குல பதே-
குல தனம்
குல தைவதம்
எம்பெருமான் திருப்பாதத்தையும் ஸ்ரீ சடாரி என்கிறோம் –

சத்ருக்ந ஆழ்வானை -பாதுகா ப்ருத்ய அநு ப்ருத்யன் என்பர்

சூழ் விசும்பு திருவாய் மொழியில்
நிதி -பத பிரயோகம் ஸ்ரீ சடகோபன் -திருவடி நிலை என்றே பிள்ளானும் நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்கள்
நிதி -நல்ல ஆதாரம் -நல்ல காப்பு -என்றவாறு
சாந்தியை சாதுவாக்குவாரே சாதுக்கள்
வகுள பூஷண பாஸ்கரர் அன்றோ
கவி முனி ரிஷி இவரே
ஏஷ விக்ரஹவான் தர்ம
ஏஷ புத்யாதி கோ லோகே
தபஸ் ச பராயணம்
விச்வா மித்ரர் -உலகுக்கு எல்லாம் அன்பார் அன்றோ -மந்திரம் கொள் மறை முனிவன்
காயத்ரியே விஸ்வ ஜநநீ
இவரையே ஏஷ வீர்ய வாதம் வர -என்கிறார் வால்மீகி

அந்த விச்வா மித்ர முனிவரிலும் தூயராய்
அவ்வன்பர் தமக்கும் நல் அன்பராய்
தமிழ் மறை பருப்பதமுமாய்
அப்பன் பொற் பாதுகமுமாய்
அப்பனும் அடியாரும் ஒன்றித் திகழும் ஓர் தனிச் சாந்தி நிலமாய்
திரு நாரணன் ஒருவனே தனக்கு மாறு என்னலாம்படி மதி நலம் அருளும்
தெள் அருள் மாரியாய் -தெள்ளிய மாறப் பிரானாய்

ஏவம் யுக அநு ரூபாப்யாம் பகவான் யுக வர்த்திபி –கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா
க்வசித் க்வசித் மஹா ராஜத்ரவிநேஷுச பூரிச
தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருத மாலா பயஸ்வி நீ காவேரீ ச மஹா புண்யா ப்ரதீ சீச மஹா நதி
யே பிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனு ஜேஸ்வர ப்ரயோ பக்தா பகவதி வாஸூ தேவே அமலா சயா
தேவ ரிஷி பூதாத்ம ந்ரூணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ரிணீ ச ராஜன்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்
ஸ்வ பாத மூலம் பஜத ப்ரியஸ்ய த்யக்த அந்நிய பாவஸ்ய ஹரி பரேச விகர் மயச் சோத் பதிதம் கதம் சித் துநோதி ஸர்வம் ஹ்ருதி சந்நிவிஷ்ட

யுக வர்ண க்ரமம் கலவ் -என்பதால் வர்ணமும்
பக்தா நாராயண பராயணா பன்மையாலே ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைஸ் பாகவத ஸஹ -என்று ஓதிய பக்தர்களே ஆழ்வார்கள் என்றும்
ஸர்வாத்ம யச் சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத் யகர்த்தம்-என்ற ஒருமையாலே
பூதம் தனியனில் போல் –நம்மாழ்வார் அங்கி மற்றவர்கள் அங்கங்கள் என்றும்
வாஸூ தேவ ஸர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று விடாய்த்துப் பெற்றவராயும்
அவர் தம்மிலும் ஸ மஹாத்மா ஸூ துர்லப-என்று பரன் தன்னாலும் பெரு விடாய்த்துப் பெறப்பட்டவராயும்-ஆழ்வாரே இந்த சுலோகத்துக்கு விஷயம் –

பக்தா நாராயண பராயணா
கலவ் தேவ பராங்குச

ஆழ்வார் கண்ணன் கழலிணை -என்று தேறி மதுரகவியாரும்
தேவு மற்று அறியேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ என்று
திண்ணம் நாரணமே என்றது திண்ணம் பராங்குசமே
பரன் திருப்பாதுகமே இவ்வாழ்வார் என்றதை
திருடித் திருடி தயிர் உருக்கும் நெய்யோடு உண்டான் அடிச் சடகோபன் –பொருநல் குருகூர் எந்தை என்றும்
திரு நாடனை வேலை சுட்ட சிலை ஆரமுதின் அடிச் சடகோபனைச் சென்று இறைஞ்சும் தலையார் எம்மை ஆளும் தபோ தநரே
திரு நாட்டிலும்
திரு அயோத்தியிலும்
திரு ஆய்ப்பாடியிலும்
திருக் குருகூரிலும்
விளங்கா நிற்கும் ஓர் ஒருவரே பரன் அடிச் சடகோபன்

குருகையில் கூட்டம் கொண்டார் –என்னை வானின் வரம்பிடை நின்று அழைத்தார்
அறிவும் தந்தார் -அங்குப் போய் அவர்க்கு ஆட் செய்வேனே
மாறன் -விலக்ஷணன் என்பதை பாவகத்தால் தன் திரு அவதாரம் பதினொன்று

என்று இப்பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழ்ந்து
நாவாகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்து அளித்த கோவகத்தார்
மறையோர் பெற்ற ஆணிப்பொன்னே இவர்

மறைச் சிரம் மருவும் ஆன்றோர் அன்று தொட்டு இன்று காறும்
அறை மறை செழித்த மாறன் அமிழ்தின் இணை அடியே மூழ்கும்
முறைமையே பழகி வாழும் மூதுவர் உலகு வாழ
நிறை யரித்து திருவாய் ஓதும் நிதி எனும் நிலை விரித்தோம் –

—————

ஸ்ரீ திருவாய் மொழி அனுபவம்

காரணந்து த்யேய
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸூ -அடுத்து ப்ரஹ்ம லக்ஷண வாக்யம்
ப்ரஹ்மம் ஆனந்த மயம் -ப்ரஹ்மமே ஆனந்தம் -உயர்வற உயர் -நலம்
உடையவன் அவன் -ஸர்வ ஸ்வாமி -அஸ்மத் ஸ்வாமி
அருளினன்
அதிபதி
அடி தொழுது -அடிகள் தோறும் ஸ்வாமித்வம் சொல்லி

ம்

து
என்று நான்கு அடிகளிலும் தொடங்கி -உமது என்று தானும் அவனதே என்று காட்டி அருளி
முடிவிலும் முனியே நான்முகனிலும்
என் என்பது என் யான் என்பது என் என்று
ஸ்வத்வ ஸ்வா தந்தர்யங்களை -விலக்கி
என் முதல் தனி வித்தேயோ
முழு மூ வுலகாதிக்கு எல்லாம் முதல் தனி யுன்னை யுன்னை
முக்தி பெறும் தர்ணத்திலே அனுசந்தித்து
முனியே என்ற விளியால் காரணமே -மவ்நம் -சிந்தனை –தவம் செய்து
இனிப்போடே தொடங்கி
இனிதே பேசிப்பாடி
இனிப்போடே
இந்த திவ்ய ப்ரபந்தம்
இனிது முற்றிற்று
ஆனந்த வல்லி ப்ருகு வல்லி கூட்டிப் பொருள் அருளுகிறார்

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

வாதியர்-புற சமயிகள்
தேற்றம் -துணிபு
திரு எட்டு எழுத்தின் உரியார்–ப்ரதிபாத்யர் ஸ்ரீயப்பதி
உடு -நக்ஷத்ரம்
பேச்சு -உபதேசம் –

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

புத்தியம் -புத்தி
பத்தியம் -வேதம்

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

கை –கீழ் மகன்
அகம் -இடம்
மெய்யகம் -ஸத்யமான ஹ்ருதயம்
விரை -மணம்
பூ மகள் -ஸ்ரீ தேவி

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

————————-

ஶ்ரீவைணவ ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திரு அத்யயன தீர்த்தம் நாளை(17/02/2023) மாசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசியுடன் கூடிய திருநாள்

ஸ்ரீராமாநுஜரின் புனரவதார புருஷரான ஸ்ரீ மணவாள மாமுனிகள் பரமபதம் எய்திய திருநாள் 16-2-1444
ருதிரோத்காரி ஆண்டு

இந்த நாளில் தான் பெரிய ஜீயரான மாமுனிகள் திருநாட்டுக்கு எழுந்தருளினார்
( இன்று 16-2-2023 ஆச்சாரியர் திருநட்சத்திரமான மூலம் என்னே பொருத்தம்)

மாமுனிகள் திருநாட்டுக்கு எழந்தருளிய பிரகாரத்தை ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்

யதீந்த்ர ப்ரவண பிரபாவம் என்னும் ஸ்ரீமணவாள மாமுனிகள் திவ்ய சரிதத்தில் கீழே உள்ளவாறு அருளிச் செய்துள்ளார்

ஆதித்ய அஸ்தமன மானவாறே தம்முடைய கர்ம அனுஷ்டானங்களை செய்தருளி திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகளே சரணம்
வாழி உலகாசிரியன்
என்று அனுஸந்தித்துக் கொண்டு
பிள்ளையை தியானித்து கொண்டு அவசராக அணையிலே சாய்ந்தருள ஸ்ரீபாதத்து முதலிகள் எல்லாரும் கைகூப்பிக் கொண்டு

ப்ரஹ்மவல்லி ப்ருகுவல்லி சூழ்விசும்பணி முகில்
அர்ச்சிராதி இராமானுஜ நூற்றந்தாதி இவைகளை அநுஸந்திப்பாராய் பெரிய ஆரவாரத்துடன் சொல்லுகிற அளவில்

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் (இரா.நூற்.108) பாசுரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுஸந்திக்க கேட்டு தாமும் கிருதாஞ்சலி புடராய் (தம் திருக்கைகளைக் கூப்பி) எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று அனுஸந்தித்துக் தத்கத சித்தராய் திருக்கண்களை செம்பளித்து கொண்டிருக்க

கநககிரிமேலே கரியமுகில்போல விநதை சிறுவன் மேற்கொண்டு’
(ஆர்த்.பிர.52)என்றும் எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல் வந்து முகங்காட்டி வழி நடத்த (59) என்றும் இவர் அபேக்ஷித்தபடியே பெரிய பெருமாளும்

செழும்பறவை தானேறி திரிவராய்த் தம் தாளிணையை (திரு.மொழி10-6-5) இவர் திருமுடி மேலே வைத்து
மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்த மாமுகில் போன்ற (பெரிய.திரு.9-2-8)
தன் வடிவை ஸாக்ஷாத்கரிப்பித்து அநுபவிக்க அநுபவித்து
உன் சரணம் தந்தென் சன்மங் களையாயே என்றும் ஸுகேநேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய என்றும்

நோய்களால் என்னை நலுங்காமல் சதிராக உன் திருத்தாள் தா என்றும்

நிரதிசய போக்யமான திருமேனியை விடுவித்து அங்கீகரிக்கப் பெற்று மாதவன் தன் துணையா நடந்தாள் என்றும்

அரங்கத்துறையுமின் துனைவனோடும் போய் என்றுஞ் சொல்லுகிறபடியே

ச்ரியபதியான பெரிய பெருமாள்

பெரிய திருவடி மேற்கொண்டு ஹார்த்தன் வழி நடத்த ஷுஷும்நையாகிற (நாடி)
வாசலிலே புறப்பட்டு சிர கபாலத்தைப் பேதித்து பரஹ்மரந்த்ரத்தாலே
ஜீயர் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்கிறார்

ஆச்சாரியன் திருநாடு எழுந்தருளிய நாளை தீர்த்த தினம் என்பர் (ஆசார்யரின் நினைவைப் போற்றிஅவரது ஸ்ரீபாததீர்த்தம் ஸ்வீகரித்து கொள்வதால்)

திருவத்யயனம் தீர்த்த பரிபாலனம் (ஆசார்யர் நினைவைப் போற்றித் திருவாய் மொழி அத்யயனம் செய்வதால்-சேவிப்பதால்) என்று வைணவ சம்பிரதாயத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது

(சாதாரணமாக சிரார்த்தம் திதிவதிவசம் எனப்படுகிறது)

ஒருவருடைய திருஅத்யயனம்/தீர்த்தம் (திதி) அவருடைய நேரடி சந்ததி(குமாரர்) அல்லது நேரடி சீடரால் மட்டுமே அனுஷ்டிக்கப் படுகிறது

ஆழ்வார்கள் ராமாநுஜர் மற்றுள்ள ஆசார்யர்களுக்கு நேரடி சந்ததி/சீடர் இன்று இல்லாததால் அவர்களுக்கு திருவத்யயனம் அனுஷ்டிப்பதில்லை

மணவாளமாமுனிகள் சுமார் 580 ஆண்டுகளுக்கு முன்னரே பரமபதம் எய்தியிருந்தாலும் அவருடைய நேரடி சீடர் இன்றும் எழுந்தருளி இருக்கிறார் அவர் என்றென்றும் எக்காலத்திலும் இருப்பார்

அவர் தமது ஆசார்யருக்கு ஆண்டுதோறும் திருவத்யயனம் செய்கிறார்

ஆம் மணவாள ஜீயரின் (மாமுனிகளின்),மகத்தான அழகிய மணவாள சீடர்
அந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாளே

ஶ்ரீரங்கநாயகம் என்னும் பாலகன் வடிவில் வந்து மாமுனிகளை தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்

திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் ஈடு வியாக்யனத்தை
மணவாள மாமுனிகள் திருவாயால் செவியுற விரும்பிய அழகிய மணவாளர் (நம்பெருமாள்) ஒரு வருடம் தம்முடைய உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாமுனிகளிடம் சிரத்தையாக ஈடுவியாக்யானம் கேட்டார்

வியாக்யானம் முடியும் சாற்றுமுறை தினத்தில் நம்பெருமாளே ஒரு பாலகனாக உருவெடுத்து வந்து மாமுனிகளை ஆசார்யராக ஏற்று கொண்டதற்கு ஆசார்ய சம்பாவணையாக ஒரு தனியனைச் சுவடியில் எழுதிச் சமர்ப்பித்தார்

அந்தத் தனியனே நாம் அனைவரும் நாளும் அனுஸந்திக்கும்

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம்முநிம் என்னும் தனியன்

(ஸ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய்மொழிப் பிள்ளையின்
எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமான வரும்,வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்றிருப்பவரும் யதிராஜரான ராமாநுஜர் மீது அளவுகடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்)

அதோடு மட்டுமல்ல ஒரு சீடர் ஆசார்யருக்குச் செய்ய
வேண்டிய சிஷ்ய லட்சணமான ஐந்து கடமைகளையும் செவ்வனே நடத்தினார் நம்பெருமாள்

1) தனியன் சமர்ப்பித்தல்

2) ஆசார்யர் கீர்த்தியை வையம் எங்கும் பரப்புதல்

எல்லா திவ்ய தேசங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன் முதலிலும் சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான ஸ்ரீசைலேச தயாபாத்ரம் சேவிக்க வேண்டுமென்று நியமித்தார்

அதுபோக ஶ்ரீமடங்கள் ராமானுஜ கூடங்கள் ஆசார்யர்கள் பாகவதர்கள் திருமாளிகைகள் என நாளும் சேவிக்கபடுகிறது

3) ஒரு சீடர் தனக்கென்று எந்த உடமையும்/சொத்தும் இல்லையென்றும் எல்லாம் ஆசார்யருடையதே தாம் அனுபவிப்பது அவர் கிருபையால் தந்தருளியது என்னும் நிஷ்டையில் இருத்தல் அவசியம்

இதை நடைமுறை செய்யவே அரங்கன் தம் உடமைகளை யெல்லாம் ஆளும்/நிர்வகிக்கும் ஆதிசேஷனையே மாமுனிகளுக்குத் தந்து விட்டார்
அதனால் தான் மாமுனிகள் எங்கும் எப்போதும் சேஷபீடத்திலேயே எழுந்தருளியிருக்கிறார்

ஆதிசேஷ அவதாரமான ராமாநுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுனிகளுக்குத் கொடுத்து அருளினார் நம்பெருமாள்

4) ஆசார்யருடைய திருநாமத்தை சீடர் தரித்தல்

நம்பெருமாளின் திருநாமம்- அழகிய மணவாளன் என்பதே அது மாமுனிகளின் இயற்பெயர் அவர் சந்யாசம் ஏற்ற போது
சடகோப ஜீயர் என்னும் நாமத்தை ஏற்க விரும்பினார் ஆனால் பெருமாள் நியமனத்தால் பழைய நாமத்தையே தொடர்ந்தார் (அப்படியிருந்தால் தானே ஆச்சார்யர் திருநாமமும் பெருமாள் திருநாமமும் ஒன்றாக இருக்க முடியும்)

5) ஆசார்யர் திருநட்சித்திரத்தையும்
தீர்த்தத்தையும் சிறப்பாக அனுஷ்டித்தல்

அரங்கர் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார்

இரண்டு நாட்களிலும் பெருமாள் பிரசாதங்கள் உடுத்துக்களைந்த மாலைகள் பரிவட்டங்கள் சந்தனம் முதலானவற்றை மாமுனிகள் சந்நிதிக்கு அனுப்பி வைக்கிறார்

தீர்த்த நாளன்று (நாளை) அரங்கருக்குத் திருவாராதனம் செய்யும் அர்ச்சகரே மாமுனிகளுக்கும் ஆராதனம் செய்கிறார்

நம்பெருமாளுக்குக் காலை நைவேத்யம் இல்லை

மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே இவருக்கு நைவேத்யம்.(நம் போன்றே நம்பெருமாளும் காலை உபவாசம்)

அன்று பெருமாள் சுருளமுது (வெற்றிலை) கண்டருள்வதில்லை

ஆக நாளை ஶ்ரீமணவாள மாமுனிகளின் தீர்த்த நாளில் அவசியம் ஶ்ரீமடங்களுக்கு எழுந்தருளி தீர்தம் ஸ்வீகரியுங்கள்

அவசியம் அகத்தில் ஒரு இனிப்பு பட்சணம் செய்து ஆச்சாரியனுக்கு சமர்பித்து பகவானுக்கும் சமர்பித்து ஸ்வீகரியுங்கள்

கும்பம் பாஸ்வதி யாதி தத் ஸூ ததிநே பக்ஷே வள க்ஷேத்ரே
த்வாதஸ்யாம் ஸ்ரவணர் க்ஷபாஷி ருதி ரோத் கார்யாக்ய ஸம் வத்சரே
தீ பக்த்யாதி குண ஆர்ணவோ யதி வராதீ நா நிலாத்ம ஸ்த்திதி
ஸ்ரீ வைகுண்ட மகுண்ட வைபவ மகாத் காந்தோ பயந்தா முனி–மணவாளமாமுனிகளின சரம ஸ்லோகம்

ஞான பக்த்யாதி குணங்களுக்கு மஹா சமுத்திரம் போன்றவரும்
எம்பெருமானாருக்கு ஸ்வா தினமான ஸமஸ்த நிலைகளையும் யுடையவரான
மணவாள மா முனிகள்
ருதிரோத்காரி சம்வத்சரத்தில்
ஸூ ர்யன் கும்ப ராசியை அடைந்த அளவில் -மாசி மாதத்தில்
சனிக்கிழமை
கிருஷ்ண பக்ஷம்
திருவோணம் நக்ஷத்திரத்தில்
துவாதசி தினத்து அன்று
எல்லையற்ற பெருமை கொண்ட ஸ்ரீ வைகுண்டத்தை அலங்கரித்து அருளினார்
என்று அங்குத்தை அந்தரங்கள் அருளிச் செய்தார்கள்

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ உத்தர தினச்சர்யா–ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பயங்கார் ஸ்வாமி வியாக்யானம் தழுவி – ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

December 12, 2022

இதி யதிகுல துர்ய மேத மாநை: ஸ்ருதி மதுரை ருதிதை: ப்ரஹர்ஷ யந்தம் |
வரவர முநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||

பதவுரை:

இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,

ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,

ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,

உதிதை: – பேச்சுக்களாலே,

யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,

ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,

வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,

சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,

இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,

நிரத்யயம் – நித்யமான,

ப்ரஸாதம் – தெளிவை,

ஏதி – அடைகிறது.

இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த

தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற

மணவாள மாமுனிகளொருவரையே நினைத்துக் கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,

முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.

‘வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதி நூலால் மகிழ்விக்கும்

மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.

பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,

ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.

இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச் சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று

மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது

எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ள வேணும்.

தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்

ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.

கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹா புருஷர்கள்.

‘ப்ரஹர்ஷ யந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘

ப்ர’ என்று உப ஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்

ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதே யன்றி அந்த ஸந்தோஷத்தைக் கொண்டு

மாமுனிகள் வேறொரு பயனை ஸாதித்துக் கொள்ள நினைக்க வில்லை யென்பதை அறிவிப்பதற்காகவே என்க.

வரவர முநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான

ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்

எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம் மணவாள மாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.

எம்பெருமானை நினைப்பவரை விட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.

இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.

ஸ்ருதி மதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.

ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.

இந்த யதிராஜ விம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்

தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாப காரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டு பண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,

‘ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க.

மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி

மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.

(யதிராஜ விம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்தி ப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

————-

அத கோஷ்டீம் கரிஷ்டாநம் அதிஷ்டாய ஸுமேதஸாம் |
வாக்யாலங்க்ருதி வாக்யாநி வ்யாக்யாதாரம் நமாமி தம் ||-2-

பதவுரை:

அத – யதிராஜ விம்ஸதியை இயற்றி யருளிய பிறகு,

கரிஷ்டாநம் – (தனித்தனியே ஒவ்வொருவரும் நூலியற்றும் வல்லமை பெற்றவராய்) ஆசார்ய ஸ்தாநத்தை வஹிக்கத்தக்க பெருமை பெற்றவரான,

ஸுமேதஸாம் – நல்ல புத்திமான்களுடைய,

கோஷ்டீம் – ஸமூஹத்தை,

அதிஷ்டாய – அடைந்திருந்து,

வாக்யாலங்க்ருதி வாக்யாநி – ஸ்ரீவசநபூஷணக்ரந்தத்திலுள்ள வாக்யங்களை,

வ்யாக்யாதாரம் – விவரித்துரைக்கும் தன்மையரான,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – வணங்குகிறேன்.

இதுவரையில் க்ரந்த நிர்மாணமாகிய ஸ்வாத்யாயத்தை அருளிச்செய்து, இனி ஸ்வாத்யாயத்தில் மற்றொருவகையான பூர்வாசார்யக்ரந்த வ்யாக்யானத்தை அருளிச்செய்கிறார்.

கரிஷ்டா – அத்யந்தம் குரவ: கரிஷ்டா: – உயர்ந்த ஆசார்யர்கள் என்றபடி.

இவர்களுக்கு அடைமொழி – ஸுமேத ஸ: என்பது.

ஒருதடவை சொல்லும் போதே பொருளை நன்றாக அறிதலும், அறிந்த பொருளை மறவாதிருத்தலும், மேதா எனப்படும்.

ஸுமேத ஸ: நல்ல மேதையை உடையவர்களை, இங்ஙனம் நல்ல மேதாவிகளாய் கரிஷ்டர்களானவர் யார் என்றால் – கோயில் கந்தாடையண்ணன், வானமாமலை ஜீயர் முதலிய அஷ்டதிக் கஜாசார்யர்களேயாவர்.

இதுவரையில் யோகத்தில் ரஹஸ்யமாக எம்பெருமானாரை அநுபவித்தவர், அதைவிட்டு ஸிஷ்யர்கள் இருக்கும் கோஷ்டியில் சேர்ந்து அவர்களுக்கு ஸ்ரீவசந பூஷண க்ரந்தத்தை விவரித்தருளிச் செய்கிறார் மாமுனிகள். அன்னவரை வணங்குகிறேனென்றாராயிற்றிதனால்.

வசந பூஷணம் – ரத்நங்களை நிறைய வைத்துப் பதித்துச் செய்த பூஷணத்தை (அணிகலனை) ரத்ந பூஷணம் என்று சொல்லுமாப்போலே, பூர்வாச்சார்யர்களுடைய வசநங்களை (சொற்களை) நிறைய இட்டுப் (தமது சொற்களைக் குறைய இட்டு) படிப்பவர்களுக்கு ப்ரகாஸத்தை யுண்டாக்குமதாகப் பிள்ளைலோகாச்சார்யரால் அருளிச்செய்யப்பட்ட க்ரந்தம் வசநபூஷணமென்று சொல்லப்படுகிறது.

அது பரம கம்பீரமாகையால் அதன் பொருள் விளங்கும்படி மாமுனிகள் வ்யாக்யானம் செய்தருளுகிறார்.

வ்யாக்யானமாவது – பதங்களைப் பிரித்துக்காட்டுதல். பொருள் விளங்காத பதங்களுக்குப் பொருள் கூறுதல், தொகைச்சொற்களை இன்ன தொகையென்று தெரிந்து கொள்வதற்காக அதற்கேற்றபடி பிரித்துக்கூறுதல், வாக்கியங்களிலுள்ள பதங்களில் எந்தப் பதம் எந்தப்பதத்தோடு பொருள் வகையில் பொருந்துமோ அப்படிப்பட்ட பொருத்தம் காட்டுதல், ஏதாவது கேள்வி எழுந்தால் அதற்கு விடை கூறுதல் ஆகிய இவ்வைந்து வகைகளையுடையதாகும்.

‘ஸுமேத ஸ: கரிஷ்டா:’ என்று சொல்லப்பட்ட கோயில்லண்ணன் முதலியவர்களுக்கும் அறியமுடியாத வசநபூஷணத்தின் பொருளை மணவாளமாமுனிகள் விவரிக்கிறாரென்றதனால், ஸ்ரீவசநபூஷணநூலின் பொருளாழமுடைமையும், மாமுனிகளின் மேதாவிலாஸமும் அறியப்படுகின்றன.

எல்லா வகையான வேதங்கள் ஸ்ம்ருதிகள் இதிஹாஸங்கள் புராணங்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள், திவ்யப்ரபந்தங்கள் ஆகியவற்றின் ஸாரமான பொருள்களெல்லாம் ஸ்ரீவசநபூஷண க்ரந்தத்தில் கூறப்பட்டுள்ளதனால், இந்த ஒரு நூலை விவரித்துச்சொன்னால் அந்நூல்களெல்லாவற்றையும் சொன்னதாக ஆகுமாகையால் இந்நூலை விவரித்து எல்லாவிதமான ஸ்வாத்யாயத்தையும் அநுஷ்டித்தாராயிற்று மாமுனிகள் என்க.

—————

உத்தர​ திநசர்யை – 2
ஸாயந்தநம் தத: க்ருத்வா ஸம்யகாராதநம் ஹரே: |
ஸ்வைராலாபை: ஸுபை: ஸ்ரோத்ருந் நந்தயந்தம் நமாமி தம்||

பதவுரை:

தத: – ஸாயங்காலத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தபிறகு,

ஸாயந்தநம் – மாலைக்காலத்தில் செய்யவேண்டிய,

ஹரே: ஆராதநம் – அரங்கநகரப்பனென்னும் தமது பெருமாளுடைய திருவாராதநத்தை,

ஸம்யக் – நன்றாக, (பரம பக்தியோடு),

க்ருத்வா – செய்து,

ஸுபை: – கேட்பாருக்கு நன்மை பயக்குமவையான,

ஸ்வை:ஆலாபை: – தம்மிஷ்டப்படியே பேசும் ஸுலபமான பேச்சுக்களாலே,

ஸ்ரோத்ரூந் – கேட்போரை,

நந்தயந்தம் – மகிழ்வித்துக்கொண்டிருக்கிற,

தம் – அம்மாமுநிகளை,

நமாமி-வணங்குகிறேன்.

ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருளல்லாமறிவார் ? ஆர் அது சொல் நேரில் அநுட்டிப்பார்’ (உபதேச. 55) என்கிறபடியே

அறிவதற்கும், அறிந்தபடியே அநுஷ்டிக்கைக்கும் முடியாத ஸ்ரீவசநபூஷணார்த்தங்களை ஸிஷ்யர்களுக்கு உபதேசிக்கும்போது எவ்வளவு எளிய நடையில் உபதேசித்தாலும், அர்த்தத்தின் அருமைக்கு ஏற்றபடி அவ்வுபதேசமும் அரிய நடையாகவே தோன்றும்.

ஸாயம்ஸந்த்யாவந்தநமும் பெருமாள் திருவாராதநமும் முற்றுப்பெற்ற பின்பு இப்போழுது செய்யும் ப்ரவசநம் தன்னிச்சைப்படி தானாகவே வரும் எளிய பேச்சாகவே இருக்கும்.

இதுவே ஸ்வைராலாபம் எனப்படும்.

ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மிகமிக எளிமையான பேச்சுக்கு ஸ்வைராலாபம் என்று பெயர்.

இத்தகைய பேச்சுக்களாலே முன்பு ஸ்ரீவசநபூஷணம் கேட்ட தம் ஸிஷ்யர்களையே மகிழ்விக்கிறார் மாமுனிகள் என்க.

இங்கு ‘ஹரி:’ என்றது பூர்வ திநசர்யையில் பதினேழாம் ஸ்லோகத்தில் ப்ரச்தாவிக்கப்பட்ட ‘ரங்கநிதி’ என்ற தம் திருவாராதந பெருமாளாகிய அரங்க நகரப்பனையே யாகும்.

ஹரி: என்றதற்கு ஆஸ்ரிதருடைய விரோதியைப் போக்குமவனென்றும், எல்லா தேவதைகளையும் நியமிப்பவன் (அடக்கியாள்பவன்) என்றும் பொருள்.

பூர்வ திநசர்யையில் ‘அத ரங்க நிதிம்’ (17) என்று காலையாராதநமும், ‘ஆராத்ய ஸ்ரீநிதிம்’ (29) என்று பகலாராதநமும், இந்த ஸ்லோகத்தில் மாலையாராதநமுமாகிய மூன்று வேளைத் திருவாராதநங்களும் கூறப்பட்டது காணத் தக்கது.

—————–

உத்தர​ திநசர்யை – 3 & 4
தத: கநகபர்யங்கே தருணத்யுமணித்யுதௌ|
விஸாலவிமல ஸ்லக்ஷ்ண துங்கதூலாஸநோஜ்ஜ்வலே ||

ஸமக்ரஸௌரபோத்கார நிரந்தர திகந்தரே |
ஸோபதாநே ஸுகாஸீநம் ஸுகுமாரே வராஸநே ||

பதவுரை:

தத: – அதன்பிறகு,

தருணத்யுமணி த்யுதௌ – பாலஸூர்யன் போல் காந்தியையுடையதாய்,

விஸால விமலஸ்லக்ஷ்ண துங்க தூலாஸன உஜ்ஜ்வலே – அகன்றதும், அழுக்கற்றதும், மழமழப்பானதும், பருமனானதுமான பஞ்சுமெத்தையினால் விளங்குகின்ற தாய்,

ஸமக்ரஸௌரப உத்கார நிரந்தர திகந்தரே – நிறைந்த, பெருமாள் சாத்திக்களைந்த மாலைகளின் நறுமணத்தின் ப்ரவாஹத்தினால் சூழப்பட்ட நான்கு திக்குகளையுமுடையதாய்,

ஸோபதாநே – சாய்ந்து கொள்வதற்கேற்ற தலையணைகளை உடையதாயுமிருக்கிற,

கநகபர்யங்கே – தங்கத்தாலான மஞ்சத்தில்,

ஸுகுமாரே – மிகவும் மெத்தென்றிருக்கிற,

வரஆஸநே – (த்யானத்துக்கு உரியதாய்) உயர்ந்த தர்ப்பம் மான்தோல் துணிகளையிட்டுச் செய்யப்பட்ட ஆஸநத்தில்,

ஸுகஆஸீநம்-(த்யானத்திற்கு தடையில்லாதபடி) ஸுகமாக உட்கார்ந்திருக்கிற,

தம்-அந்த மணவாளமாமுநிகளை,

சிந்தயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

ஸகல ஸாஸ்த்ரார்த்தங்களுக்கும் நோக்கான பஞ்சமோபாயத்தின் (எம்பெருமானாரே மோக்ஷோபாயம் என்பதின்) பெருமையை உள்ளடக்கியிருக்கும் தமது இனிய எளிய பேச்சுக்களாலேயே ஸிஷ்யர்களை மகிழ்வித்த பின்பு,

அவ்வெம்பெருமானாரை த்யாநம் செய்வதற்கு உறுப்பாக மாமுனிகள் ஸ்வர்ண மயமான கட்டிலில் ஆஸநத்தில் எழுந்தருளியிருக்கும் அழகை, தாம் ஸதா த்யாநம் செய்வதாக இந்த ஸ்லோகத்தினால் தெரிவிக்கிறார்.

தாமே ஆசைப்பட்டு மஞ்சத்தில், அதிலும் ஸ்வர்ண மஞ்சத்தில் உட்காருதல், ஸந்யாஸிகட்கு ஸாஸ்த்ரத்தில் மறுக்கப்பட்டிருந்தாலும் ஸிஷ்யர்களுடைய வேண்டுகோளுக்கிரங்கி, அவர்கள் செய்வித்திட்ட ஸ்வர்ணமஞ்சத்தில் வீற்றிருப்பது மறுக்கப்படவில்லையென்பது கருதத்தக்கது.

‘பொன் வெள்ளி வெண்கலம் செம்பு கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களில் உண்பதினால் ஸந்யாஸிக்கு பாபம் ஏற்படாது. அப்பாத்திரங்களைப் பிறரிடம் கேட்டுத் தானமாக வாங்கினால் தான் பாபம் உண்டாகும்’ என்று மேதாதிதி கூறியதை நோக்கினால்,

உண்ணும் கலத்தைச் சொன்னது கட்டிலுக்கும் உபலக்ஷணமாய், பொன்னால் செய்த கட்டிலைகேட்டுப் பெற்றுக் கொள்ளாமல், ஸிஷ்யர்கள் பொன்கட்டிலை இட்டு அதில் வீற்றிருக்கும்படி ப்ரார்த்தித்தால் அதன் மீது வீற்றிருப்பது குற்றத்தின்பாற்படாதென்று கொள்ளல்தகும்.

பொன்னின் மீதோ கட்டிலின் மீதோ தமக்குள்ள ஆசையைத் தடுக்கமுடியுமே தவிர, மிகமிக உயர்ந்தவர்களான ஸிஷ்யர்களின் வேண்டுகோளைத் தடுக்கமுடியாதிறே எப்படிப்பட்ட ஸந்யாஸிகளுக்கும்.

ஆக பொன் கட்டிலை இவர் உபயோகிப்பது தவறன்றென்க.

———–

உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6

பதவுரை:

தயாளு:‍‍‍‍‍‍‍‍ – கருணை புரியுந்தன்மையராய்,

தேசிகேந்த்ர: – ‍ ஆசார்யர்களில் உயர்ந்தவரான,

ரம்யஜாமாத்ருயோகீ ‍- அழகிய மணவாளமாமுனிகள்,

உந்மீலத்பத்ம கர்ப்பத்யுதிதலம் ‍- மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின்

(சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப்பகுதியை (உள்ளங்காலை)யுடையதும்,

உபரிமேற்பகுதியில்,

க்ஷீரசங்காத கௌரம் ‍- பாலின் திரட்சி போல் வெளுத்ததும்,

ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுரநகமணி த்யோத வித்யோதமாநம் ‍- பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற

(வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும்,

அங்குளி அக்ரேஷு ‍- நகங்களின் நுனிப்பகுதிகளில், கிஞ்சித் நதம் ‍- சிறிது வளையையுடையதும்,

அதிம்ருதுலம் ‍- மிகவும் மெத்தென்றிருப்பதும்,

திவ்யம் ‍- அப்ராக்ருதமானதும்,

தத் ‍- மிகச்சிறந்ததுமான,

பாதயுக்மம் ‍- (தமது) திருவடியிணையை,

மே சிரசி ‍- அடியேனுடைய தலையில்,

திசது ‍- வைத்தருளவேணும்.

இந்த ஸ்லோகம் முதலான ஆறு ச்லோகங்கள் சிஷ்யர்களின் ஸ்தோத்ர ரூபமாக அமைந்திருக்கின்றன.

இம்முதல் ச்லோகத்தில் ஒரு சிஷ்யர் தமது சிரஸிற்கு அணிகலனாக மணவாளமாமுனிகள் தம் திருவடியிணையை வைத்தருளவேணுமென்று வேண்டுகிறார்.

தயாளு: ‍ தயைபுரிவதை இயற்கையாகக் கொண்டவர். பிறர் தமக்கு அடிமை செய்தால் அதுகாரணமாக தயையுண்டாகப் பெறும் பிற ஆசார்யர்களைப் போலல்லாமல், இயற்கையாகவே அனைவரிடத்திலும் தயை புரியும் எம்பெருமானாரைப் போன்றவர் இம்மாமுனிகள் என்றபடி.

திசதி ‍ உபதிசதி இதி தேசிக: ‍ சாஸ்த்ரார்த்தங்களை உபதேசிப்பவர் தேசிகரெனப்படுகிறார்.

தேசிகாநாம் இந்த்ர: ‍ தேசிகேந்த்ர: ஆசார்யர்களாகிற தேசிகர்கட்குத் தலைவரென்றபடி.

ஆசார்யர்கட்குத் தலைவராகையாவது ‍ ஆசார்யர்களுக்கு இருக்க வேண்டிய அறிவு, அறிவுக்குத்தக்க அநுஷ்டானம், தயை முதலிய குணங்களால் நிறைந்தவராயிருக்கை.

மணவாளமாமுனிகளின் திருவடிகளின் அடிப்புறம் தாமரைமலர் போல் சிவந்ததும், நகங்கள் நிலவைப்போல் வெளுத்தும் விரல்களின் நுனிகள் கொஞ்சம் வளைந்தும், பொதுவாகத் திருவடி முழுவதும் மிகவும் மெத்தென்றும் பால்போல் வெளுத்தும் இருக்கின்றனவாம்.

மாமுனிகள் ஆதிசேஷாவதாரமாகையால், அவர் திருவடியிணையை அப்ராக்ருதம் (பரமபதத்தில் உள்ளதொரு உயர்ந்ததான பொருள்) என்றார். இவ்வுலகிலுள்ள சம்சாரிகளின் பாதங்கள் போல் தாழ்ந்தவையல்ல என்றபடி.

கீழ்த் திருவடிகளுக்கு ‘உந்மீலத்பத்மகர்ப்ப’ என்று தொடங்கிச் சொன்ன அழகுகளெல்லாம் உத்தம புருஷனுக்கு இருக்கவேண்டிய உத்தம லக்ஷணங்களாகும்.

இத்தகைய சிறப்பத்தனையும் பெற்றுத் தமக்கு வகுத்ததுமான திருவடிகளை வைத்தருளவேணுமென்று ஒரு சிஷ்யர் மாமுனிகளை ப்ரார்த்தித்தாராயிற்று.

இதனால் பகவத் பக்தரான ஆழ்வார் ‘நின்செம்மாபாதபற்புத்(பத்மத்தை) தலைசேர்த்து’ என்று எம்பெருமானை வேண்டினார்.

ஆசார்ய பக்தரான ஒரு சிஷ்யர் ‘பாதயுக்ம சிரசி திசதுமே’ என்று ஆசார்யரான மாமுனிகளை வேண்டுகிறார்.

மாமுனிகள் தமது திருவடியிணையை அடியேன் முடியில் வைத்தருளட்டும்’ என்று படர்க்கையாக இருந்தாலும், ‘மாமுனிகளே! தேவரீர் திருவடிகளை அடியேனுடைய சிரஸில் வைத்தருளவேணும்’ என்று முன்னிலைப்படுத்தி ப்ரார்த்திப்பதிலேயே இதற்கு நோக்கு.

இவ் விஷயம் மேலுள்ள பல ஸ்லோகங்களால் விளக்கமுறும்.

————

த்வம் மே பந்து  ஸ்த்வமஸி ஜநகஸ் த்வ ம் ஸகா  தேஸிகஸ் த்வம் 
வி த்யா  வ்ருத்தம் ஸுக்ருதமதுலம்  வித்தமப்யுத்தமம் த்வம்| 
ஆத்மா ஶேஷீ  பவஸி பகவந் ஆந்தர: ஶாஸிதா  த்வம்  
யத்வா ஸர்வம் வரவரமுநே! யந்யதாத்மாநுரூபம்||-7-

பதவுரை:

ஹே வரவரமுநே -வாரீர் மனவாளமாமுனிகளே

த்வம் – தேவரீர் அடியேனுக்கு,

பந்து அஸி-விடமுடியாத உறவினர் ஆகிறீர் .

த்வம்  ஜநக: அஸி – கல்வி கற்பிப்பதனாலே நன்மையைத் தேடும் தமப்பனார் ஆகிறீர்,

த்வம்  ஸகா  அஸி-(1)ஆபத்தில் உதவும் தோழராகிறீர் , (2)பகவதநுபவ  காலத்தில் துணைவர் ஆகிறீர்:

த்வம்  தேஸிக : அஸி – அறியாதவற்றை அறிவிக்கும் ஆசார்யன் ஆகிறீர்,

த்வம் வித்யா அஸி – அவ்வாசார்யார்கள் உபதேஸித்த தாய்போல் காக்கும் வித்யை ஆகிறீர்.

த்வம் வ்ருத்தம் அஸி – முன்பு கூறிய வித்யையின் | பலனாய நன்மையைத்தரும் நன்னடத்தை ஆகிறீர்.

த்வம்  அதுலம் ஸுக்ருதம் அஸி – (இதுவரையில் கூறிய உறவினர் முதலியோரின்  லாபத்துக்கும்,

மேல் சொல்லப்படும் செல்வம் முதலியவற்றின் லாபத்துக்கும் காரணமான) ஒப்பற்ற புண்யமாக ஆகிறீர்.

த்வம் உத்தமம் ஸித்தம் அஸி – (ஈட்டும்போதும் காப்பாற்றும் போதும் துன்பத்தைத் தரும்  அழியும் செல்வம்  போலல்லாமல்)

அழியாத உத்தம செல்வமாக  ஆகிறீர்,

த்வம் ஆத்மா அஸி – முற்கூரிய அனைத்தையும்  தனக்காக  ஏற்றுக்கொள்ளும் ஆத்மாவாக  ஆகிறீர்,

த்வம் ஶேஷீ பவஸி – முற்கூறப்பட்ட ஆத்மாவையும் அடிமைகொள்ளும் தலைவராக  ஆகிறீர்.

ஹே பகவந் –  அறிவு ஆற்றல் முதலிய குணங்களை மிகக்கெண்ட மாமுனிகளே,

த்வம் ஆந்தரஶ்ஶாஸிதா அஸி – (1)உள்புகுந்து நியமிக்கும் பரமாத்வாக ஆகிறீர், (2)’அந்தர‘ எனப்பட்டபடி பரமாத்மாவையும் நியமிக்கும் ஆந்தரரான ஜ்ஞாநியாக ஆகிறீர்,

யத்வா – இப்படிப் பலவாராகச் சொல்லிப் பயனென்?

ஆத்மஅநுரூபம் – விரோதியைப் போக்குதல், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யங்களாகிய விரும்பியவற்றைத் தருதல் முதலாக)

ஜீவாத்ம ஸ்வரூபத்துக்குத் தக்கதாக, யத்யத் பவதி- எது எது  உள்ளதோ, தத்(ஸர்வம்) அஸி-அது எல்லாமுமாகவும் ஆகிறீர்.

பத்நாதி இதி பந்து – நம்மை விடாமல் நாம் துன்புற்றபோது துன்புற்றும், இன்புற்றபோது இன்புற்றும் கூடவே இருக்கும் உறவினன் என்றபடி. ஸகா தோழன்.

நாம் துயருற்றபோது துயரைப் போக்குமவராய் பகவதநுபவம் பண்ணும்போதும், ‘போதயந்த பரஸ்பரம்‘ (கீதை 10- 9) என்று ஒருவருக்கொருவர் பகவத் குணங்களைச் சொல்லுவதற்கும் கேட்பதற்கும் உறுப்பான துணைவர் என்றபடி,

ஆத்மா – தான் என்பது அதன் கருத்து ‘தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் ‘ திருவாய்மொழி 3 – 6- 9) என்று ஆழ்வார் ‘நான்‘ அன்று சொல்லவேண்டிய இடத்தில் ‘தான்‘ என்றாரிரே.

இதனால் ‘தவம்‘ ஆத்மா அஸி‘ – என்பதற்கு ‘தேவரீர் நானாக ஆகிறீர்‘ என்பது பொருளாகத்தகும்.

மேலும் ‘ஸேஷி பவஸி, ஆந்தரஸாசிதா பவஸி ‘ என்பவற்றிற்கு – என்னயடிமை கொள்ளுமவரும் என்னையுட்புகுந்து நியமிப்பவரும் (பரமாத்வாகவும்) தேவரீரே ஆகிறீர் என்பது பொருள்.

‘ஆந்தர: ஸாஸிதா‘ என்பதற்கு பதவுரையில் கூறிய இரண்டு பொருள்களுக்கும்.

(1) ஆந்தர: என்பதற்கு அந்தரேபவ : மனத்தில் இருக்கும் பரமாத்மா என்று முதற்பொருள்,

(2) ‘ஆதமந: அந்தர: (ப்ருஹ . உப 5 -7 – 22) என்றவிடத்தில் அந்தர: என்பதற்கு (ஆத்மாவுக்கு) உள்ளிருக்கும் பரமாத்மா என்று பொருள் கூறப்பட்டுள்ளபடியினால்,

அந்தரஸ்யா அயம் உள்ளிருக்கும் பரமாத்மாவின் உள்ளும் இருந்து அப்பறமாதவை நியமிக்கும் ஜ்ஞானி‘ என்பது இரண்டாம் பொருள்.

‘ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்‘ (கீதை 7 – 18) (ஜ்ஞாநியோ என்றால் எனக்கு ஆத்மா என்பதே என் கருத்தாகும்) என்று எம்பெருமான் ஜ்ஞாநியை தனக்குள்ளிருந்து தன்னையும் நியமிப்பவனாக அருளிச்செய்தது இதற்கு பிரமாணமாகும்.

யத்வா = இது முன்பு தனித்தனியே சொன்னவற்றையெல்லாம் தவிர்க்கிறது.

இப்படி ஒவ்வொன்றாக இருத்தலைச் சொல்லி கொண்டுபோனால் நூல்விரிவுபடுமென்பதனால். ஆத்மாவுக்குத் தகுந்ததாக உலகில் சுருக்கமாகச் சொல்லி முடித்தருளியபடி.

(இந்த ஸ்லோகத்தில் ‘தவம் ஆத்மா அஸி – (தேவரீர் அடியேனாக ஆகிறீர்) என்று இவர் தமக்கு மாமுநிகளோடு அருளிச்செய்த ஒற்றுமை ஜீவாத்மாக்களைனவரும் ஒன்றே‘ என்று பக்ஷத்தாலல்ல;

சேஷ சேஷி பாவத்தாலும், நியந்த்ருதியாம்யபாவத்தாலுமே என்பது ‘மேலே ஸேஷீ பவஸி, ஆந்தர : ஸாஸிதா பவஸி‘ என்றருளிச்செய்வதிலிருந்து ஸ்பஷ்டமாகிறது.

இவ்வொற்றுமை தமக்குப் பரமாத்மாவோடு உள்ளமை ஸாஸ்த்ர ஸித்தமாகையாலும்

‘பீதவாடைபிரானார் பிரமகுருவாகி வந்து‘ (பெரியாழ். திரு. 5 – 2- 8) என்கிறபடியே மாமுனிகள் பரமாத்மாவின் அவதாரமாகையாலும்;

இவர் தமக்கு அம்மாமுநிகளோடு ஒற்றுமை கூறினாரென்று கருத்தாகும்.

—————-

அக்ரே  பஸ்சாது பரி பரிதோ  பூதலம் பார்ஸ்வதோ  மே 
மௌலௌ  வக்த்ரே  வபுஷி ஸகலே மாநஸாம் போருஹே ச| 
பஸ்யந் பஸ்யந் வரவரமுநே திவ்யமங்கரித்வயம் தே 
நித்யம் மஜ்ஜந்நம்ருத ஜலதௌ நிஸ்தரேயம் பவாப்திம்||-8-

பதவுரை :

ஹேவரவரமுநே! –  வாரீர் மணவாளமாமுநிகளே,

தே  – தேவரீருடைய ,

திவ்யம் – ஆச்சர்யகரமான,

அங்ரித்வயம் – திருவடியிணயை,

அக்ரே – எதிரிலும்,

பஸ்சாத் – பின்புறத்திலும்,

பூதலம் பரித: – பூமியின் நான்கு பக்கங்களிலும்,

மே  பார்வஸ்வத: – அடியேனுடைய இரு பக்கக்கங்களிலும்,

மௌ லௌ – தலையிலும்,

வக்த்ரே – முகத்திலும்,

கிலே வபுக்ஷி – உடலில்லுள்ள  எல்லா உறுப்புக்களிலும்,

மாநஸ  அம்போருஹே  ச – ஹ்ருதய கமலத்திலும்,

பஸ்யந் பஸ்யந் (இடையறாத நினைவின் மிகுதியாலே) எப்போதும் ஸ்பஷ்டமாகப் பார்த்துக்கொண்டே,

அம்ருத ஜலதௌ – இறப்பவனைப்  பிழைப்பூட்டும் அமுதக்கடலில்,

மஜ்ஜந்  – முழ்குமவனாய்  கொண்டு,

பவாப்திம் நிஸ்தரேயம் – பிறவிக்கடலைத் தாண்ட விரும்புகிறேன்.

“குருபாதாம்புஜம் த்யாயேத் குரோரந்யம் நபாவாயேத்” – (ப்ரபஞ்சஸாரம்) [ஆசார்யனுடைய திருவடித்தாமரைகளை த்யாநிக்க வேண்டும்.

ஆசார்யனைத் தவிர வேறொருவனை நினைத்தல் கூடாது.] என்ற ப்ரமாணம் இங்கு நினைக்கத்தக்கது,

ஒரு கடலில் மூழ்கிக் கொண்டே மற்றொரு கடலைத் தாண்டவிரும்பவது ஆச்சர்யமுண்டாக்கலாம்,

ஆசார்யனுடைய ஆச்சர்யகரமான திருவடிகளை த்யானம் செய்துகொண்டே இருக்கிற பாவநாப்ரகர்ஷத்தின் மஹிமையினியால் எல்லாம் ஸித்திக்குமாகையால், இதில் பொருந்தாமை ஏதுமில்லை என்கிறார் ஆசார்ய பக்தாக்ரேஸராகிய திருமழிசை அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி (வ்யாக்யாதா).

‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘

(எம்பெருமானால் தன்னுடைய பரம போக்யமான திருவடித் தாமரைகளை தன தலையில் வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக் கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு ஸுகமாக இருக்கக் கடவன்) என்று

ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் எம்பெருமான் விஷயத்தில் அருளிச் செய்ததை இவர் இங்கு ஆசார்யரான மாமுனிகள் விஷயத்தில் அருளிச் செய்தார்.

————

கர்மாதீநே வபுக்ஷி குமதி: கல்பயந்நாத்மபாவம்
து: கேமக்ந:கிமிதி ஸுசிரம் தூயதே ஜந்துரேஷ: |
ஸர்வம் த்யக்த்வா வரவரமுநே ஸம்ப்ரதி த்வத்ப்ரஸாதாத்
திவ்யம் ப்ராப்தும் தவ பதயுகம் தேஹி மே ஸுப்ரபாதம்||–9-

பதவுரை:

ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!,

ஏஷ: ஜந்து: – நம்மடியவனாகிய இந்த ஜீவாத்மா,

கர்ம அதீநே – முன்செய்த முழுவினையால் உண்டான,

வபுக்ஷி – தனது தேஹத்தில்,

ஆத்மபாவம் – ஆத்மாவின் தன்மையை,

கல்பயந் – ஏறிட்டு,

குமதி: – திரிபுணர்ச்சியுடையவனாய்க் கொண்டும்,

து: கே மக்ந: – ஸம்சாரது: க (ஸாகர) த்தில் மூழ்கியவனாய்க்கொண்டும்,

கிம் – எதற்காக

தூயதே – வருந்திகிறான்,

இதி (மத்வா) – என்று தேவரீர் நினைத்தருளி,

(அடியேன்) ஸர்வம் – முற்கூறிய திரிபுணர்ச்சி ஸம்ஸாரதுக்கம் முதலிய எல்லாவற்றையும்,

த்யக்த்வா – விட்டொழிந்து,

ஸம்ப்ரதி – இப்பொழுதே,

தவதிவ்யம் பதயுகம் ப்ராப்தும் – தேவரீருடைய மிகவும் அழகிய திருவடியிணையை அடைவதற்கு உறுப்பாக,

த்வத் ப்ரஸாதாத் – தேவரீருடைய (இயற்கையான) அனுக்ரஹத்தினாலே,

மே – அடியேனுக்கு,

ஸுப்ரபாதம் – (தேவரீர் திருவடிகளை அநுபவிப்பதென்னும் பகல்வேளைக்கு ஆரம்பமாகிற) நல்ல விடிவை,

தேஹி – தந்தருளவேணும்.

‘கர்மாதீநே’ என்று, தொடங்கி, ‘தூயதே ஜந்துரேஷ:’ என்பதிறுதியாக முன்னிரண்டடிகளும், மாமுநிகள் தமது சிஷ்யனைப் பற்றி நினைக்கவேண்டிய நினைப்பின் அநுவாதமாகும்

‘இதி’ என்பதற்கு பிறகு ‘மத்வா’ என்றொரு பதத்தைக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.

தேவரீர் திருவடிகளை அனுபவிக்கமுடியாமல் கழிந்த காலம் ப்ரளயராத்ரி இனிமேல் அவ்வனுபவத்தைப் பெறப்போகும் காலம் பகல் போன்றது.

அதற்கு முற்பட்டதகிய நல்ல விடியற்காலத்தை, தேவரீருக்குண்டான் இயற்கையான க்ருபையாலே கற்பித்தருள வேணுமென்றாயிற்று இதனால்.

————

யாயா வ்ருத்திர் மநஸி மம ஸா ஜாயதாம் ஸம்ஸ்ம்ருதிஸ தே
யோயோ ஜல்பஸ் ஸ பவது விபோ நாமஸங்கீர்த்தநம் தே|
யாயா சேஷ்டா வபுக்ஷி பகவந்ஸா பவேத் வந்தநம் தே
ஸர்வம் பூயாத் வரவரமுநே! ஸம்யகாராதநம் தோ||-10-

பதவுரை:

ஹே வரவரமுநே ! – மணவாளமாமுநிகளே!

மம – முன்செய்த வினைக்கு வசப்பட்ட அடியேனுடைய அறிவானது,

ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,

ஸா வ்ருத்தி: – அந்தந்த அறிவெல்லாம்,

தே – நினைத்தவுடனே மகிழ்ச்சியூட்டுகிற தேவரீருடைய,

ஸம்ஸ்ம்ருதி: – நல்ல நினைவினுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்,

ஹே விபோ – வாரீர் ஸ்வாமியே! ,

மே – அடியேனுக்கு,

யா: யா: ஜல்ப: – எந்தெந்த வார்த்தையானது,

ஜாயதாம் – (தந்தம் காரணங்களால்) உண்டாகத்தகுமோ,

ஸ: – அவ்வார்த்தையனைத்தும்,

தே – புகழத்தக்க தேவரீரைப் பற்றியதான,

ஜல்ப: – வார்த்தையுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்.

ஹே பகவந் ! – அறிவாற்றர்களால் மிக்கவரே,

மம – அடியேனுடைய,

வபுக்ஷி – ஏதோவொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்கும் சரீரத்தில்,

யா யா சேஷ்டா – அச்செயலெல்லாம்,

தே – வணங்கத்தக்க தேவரீரைப் பற்றியதான,

வந்தநம் – வணக்கவுருவாகவே,

ஜாயதாம் – உண்டாகவேணும்,

ஸர்வம் – இதுவரையில் சொல்லியும் சொல்லாததும் போந்த, (அடியேனுடைய வினையடியாக உண்டாகத்தக்க) செயல்களெல்லாம்,

தே – தேவரீருடைய,

ஸம்யக் ஆராதநம் – ப்ரீதிக்குக் காரணமான நல்ல ஆராதநரூபமாகவே,

பூயாத் – உண்டாகவேணும்.

அடியேனுக்கு, முன்செய்ததீவினையின் பயனாக மனத்தில் உண்டாகும் தீயஎண்ணெங்களெல்லாம் தேவரீரருளா ல் மாறி தேவரீரைப் பற்றிய த்யாநமாகவே உண்டாகவேணும்,

வாயில் வரும் தீயபேச்சுக்களெல்லாம் மாறி தேவரீருடைய நாமஸந்கீர்த்தனமாகவே உண்டாகவேணும்.

உடலில் உண்டாகும் தீய செயல்களெல்லாம் மாறி தேவரீரைபற்றிய வணக்கமாகவே உண்டாகவேணும் என்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

‘ஜாயதாம்’ என்பதனை ஒவ்வொறு வாக்கியத்திலும் இரண்டு தடவை திருப்பிப் பொருள் உரைக்கப்பட்டது.

‘ஜாயதாம்’ என்பது லோட் ப்ரத்யயாந்தமான சப்தம். அதற்குப் பலபொருள்கள் உள்ளன.

இங்கு முதலில் அர்ஹம் – தகுதியென்ற பொருளிலும்,

பின்பு வேண்டுகோள் என்ற பொருளிலும் அச்சொல் ஆளப்பட்டமை பதவுரையில் கூறியது கொண்டு அறிதல் தகும்.

இங்ஙனமன்றி (ஜாயதாம் என்பதை ஆவ்ருத்தி செய்யாமலேயே) அடியேன் மனத்தினிலுண்டாகும் ஜ்ஞாநமெல்லாம் தேவரீர் நினைவாகவும்,

வாயில் வரும் சொற்களெல்லாம் தேவரீர் நாமஸங்கீர்த்தனமகவும்,

தேஹத்தில் தோன்றும் செயல்களெல்லாம் தேவரீர் திருவாராதநமாகவும் உண்டாகவேணும் – என்றும் பொருள் தகும்.

————

அபகத மதமாநை: அந்திமோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தை: அர்த்த காமாநபேக்ஷை:|
நிகில ஜந ஸுஹ்ருத்பி: நிர்ஜித க்ரோத லோபை:
வரவர முநி ப்ருத்யை: அஸ்து மே நித்ய யோக:|| 11

பதவுரை:

மே – இத்தனை நாள்கள் தீயவரோடு எப்போதும் சேர்த்திருந்த அடியேனுக்கு,

அபகதமதமாநை:- நாமே உயர்ந்தவர் என்ற கர்வமும், பெரியோர்களை அவமதிக்குமளவுக்கு வளர்ந்த அகங்காரமும் சிறிதும் இல்லாதவர்களும்,

அந்திம உபாய நிஷ்டை: – ஆசார்யாபிமானத்திற்கு இலக்காகையாகிற கடைசியான மோக்ஷோபாயத்தில் மிகவும் நிலைநின்றவர்களும்,

அதிகத பரம அர்த்தை: – பூரணமாக அடையப்பட்ட ஆச்சார்ய கைங்கர்யமாகிற பரமபுருஷார்த்தத்தை (எல்லையான பலனை) உடையவர்களும்,

அர்த்த காம அநபேக்ஷை: – மற்ற உபாயத்தையும் மற்ற பலனையும் விரும்பாதவர்களும், அல்லது செல்வத்தையும் காமபோகத்தையும் விரும்பாதவர்களும்,

நிகிலஜநஸுஹ்ருத்பி: வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் இவ்விருவருமில்லாத நடுவர்கள் ஆகிய எல்லா மனிதர்களிடமும் நன்மையைத்தேடும் நல்லமனமுடையவர்களும்,

நிர்ஜிதக்ரோதலோபை: – கோபத்தையும் உலபித்தனத்தையும் நன்றாக வென்றவர்களுமான,

வரவரமுநிப்ருத்யை: மணவாளமாமுநிகளின் அந்தரங்க சிஷ்யர்களான கோயில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர் முதலியவர்களோடு, நித்யயோக: (திருவடிகளைத் தாங்கும் பஞ்சுமெத்தை, திருவடி இரேகை ஆகியவற்றிற்குப் போல்) நித்தியமான ஸம்பந்தமானது,

அஸ்து – உண்டாகவேணும்.

இதுவரையில் மதம், மானம், பொன்னாசை, பெண்ணாசை, கோபம், உலோபம் முதலிய தீயகுணங்களே நிறையப்பெற்ற நீசஜநங்களோடு இடைவிடாமல் பழகிப்போந்த தமுக்கு,

இக்குற்றங்களில் ஏதுமின்றியே, ஆசார்ய கைங்கர்யம், அதற்கு உபாயமாக ஆசார்யனையே பற்றுதல், அனைவரிடத்திலும் நல்லெண்ணம் தொடக்கமான நற்குணங்களே மல்கி யிருக்கப் பெற்ற

மணவாளமாமுநிகளின் சிஷ்யர்களோடு  நித்ய சம்பந்தம் (நீங்காத தொடர்பு) உண்டாக வேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாயிற்று.

———

இதிஸ்துதிநிபந்தேந நஸூசிதஸ்வமநீஷிதாந்|
ப்ருத்யாந் ப்ரேமார்த்ரயா த்ருஷ்ட்யா ஸிஞ்சந்தம் சிந்தயாமி தம்||–12-

பதவுரை:

இதி – முற்கூறிய இந்த ஆறு ஸ்லோகங்களின்படியே,

ஸ்துதி நிபந்தேந – ஸ்தோத்ரமாகிய பிரபந்தத்தினால்,

ஸூசித ஸ்வமநீஷிதாந் – குறிப்பிடப்பட்ட தாம்தாம் விரும்பிய புருஷார்த்தங்களை (பயன்களை) உடைய,

ப்ருத்யாந் – விற்கவும் வாங்கவும் உரிய கோயிலண்ணன் முதலிய சிஷ்யர்களை,

ப்ரேம ஆர்த்ரயா – ப்ரீதியினால் குளிர்ந்திருக்கிற,

த்ருஷ்ட்யா – திருக்கண்ணோக்கத்திலே,

ஸிஞ்சந்தம் – குளிரச்செய்துகொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

சிந்தயாமி – எப்போதும் த்யாநம் செய்கிறேன்.

இதுவரையில் ஆசார்யரான மணவாளமாமுனிகளைப் பற்றி திநசர்யை என்னும் ஸ்தோத்ரக்ரந்தம் இயற்றி அனுபவிக்கப்பட்டது,

இனி ஸ்தோத்ரத்தினால் உண்டான ப்ரீதியையுடைய மணவாளமாமுனிகளை அனுபவிக்கிறார் எறும்பியப்பா.

இதி என்பது இவ்வாறாக என்றபடி, முற்கூறிய ஆறு ஸ்லோகங்களிலுள்ள பொருளின்படியே என்று கருத்து.

அவற்றில் ‘தவம் மே பந்து:’ (7) என்று தொடங்கி ‘யாயா வ்ருத்தி’ (10) என்பதீறாக உள்ள நான்கு ஸ்லோகங்கள் இவர் அருளிய வரவர முநி சதகத்திலும் படிக்கப்பட்டுள்ளன.

‘உந்மீலபத்ம’ (6) என்ற இவற்றின் முன் ஸ்லோகமும், ‘அபகதமதமாநை’ என்ற பின் ஸ்லோகமும் இவற்றோடு படிக்கப்பட்டு வருவதானாலும், இவ்விரண்டினை வேறொருவர் இயற்றியதாக யாரும் இருகாறும் கூறாமையாலும், இவ் விரண்டும் அந்த நான்கு ஸ்லோகங்களுடன் ஒப்ப எறும்பியப்பாவே அருளிசெய்தாரென்று கொள்ளுதல் பொருந்தும்.

இவ்வாறு ஸ்லோகங்களுக்குள்ளே ‘திவ்யம் தத்பாதயுக்மம் திஸது’ (6), ‘தவபதயுகம்தேஹி’ (9), ‘அங்க்ரித்வயம் பஸ்யந் பஸ்யந்’ (8) என்று மூன்று ஸ்லோகங்களில் மாமுனிகள் தம் திருவடிகளைத் தலைமேலே வைத்தருளவேணுமென்றும்

அவற்றை இப்போதும் சேவிக்கவெண்டுமென்றும் பிரார்த்தனை உள்ளடிங்கியிருப்பது பொருந்துமென்று கொண்டு

இந்த ஆறு ஸ்லோகங்களும் அஷ்டதிக்கஜாசார்யர்களில் கோயிலண்ணன், வானமாமலை ஜீயர் இவர்களை விட்டு

இவ்வெறும்பியாப்பா, திருவேங்கட ஜீயர், பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணா, அப்பிள்ளை, அப்புள்ளாராகிய இவ்வறுவரால் (ஒவ்வுருவர் ஒன்றாக) அநுஸந்திக்கப்பட்டனவென்று கொள்ளுதல் தகும்.

கோயில்கந்தாடைஅண்ணன் ஸதா மாமுநிகளைத் தாங்கும் பாதுகையாகவும்,

வானமாமலை திருவடிகளை விடாத ரேகையாகவும் பிரஸித்தர்களாகையால்

எப்போதும் திருவடிகளைப் பிரியாத இவ்விருவரும் மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரிக்கவேண்டுமேன்றும் அவற்றை எப்போதும் ஸேவிக்கவேண்டுமேன்றும் ஆசைப்படார்களே என்கிறார்,

அண்ணாவப்பய்யங்கார் ஸ்வாமி. எறும்பியப்பா அருளிச்செய்த இவ்வாறு ஸ்லோகங்களில் ஒன்று இவர் அநுஸந்தித்ததாகவும்,

மற்ற ஐந்தும் இவரிடம் உள்ள கௌரவத்தினாலும் ஸ்லோகங்களின் இனிமையாலும் மற்ற ஐவரும் அநுஸந்தித்ததாகவும் கொள்க.

———–

அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||-13-

பதவுரை:

அத – முற்கூறியபடியே சிஷ்யர்களுக்கு தத்வார்தோபதேசம் செய்தல் முதலியவற்றால் இரிவில் இரண்டு யாமங்கள் கழிந்தபிறகு,

ப்ருத்யாந் – முற்கூறிய சிஷ்யர்களை

அநுஜ்ஞாப்ய – விடைகொடுத்து அனுப்பிவிட்டு,

ஸுபாஸ்ரயே – கண்களையும் மனத்தையும் கவர்கின்ற எம்பெருமானுடைய திருமேனியில்,

சேத: க்ருத்வா – தமது திருவுள்ளத்தைச் செலுத்தி (அதை தியானம் செய்து) பிறகு,

ஸயநீயம் – படுக்கையை,

பரிஷ்க்ருத்ய – அலங்கரித்து,

ஸயானம் – கண்வளர்கின்ற,

தம் – அந்த மணவாளமாமுநிகளை

ஸம்ஸ்மராமி – த்யானம் செய்கிறேன்.

உத்தர​ திநசர்யை – 12
அத ப்ருத்யாநநுஜ்ஞாப்ய க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே|
ஸயநீயம் பரிஷ்க்ருத்ய ஸயானம் ஸம்ஸ்மராமி தம்||

‘க்ருத்வா சேத: ஸுபாஸ்ரயே’ – என்றதனால் இரவில் செய்யவேண்டிய பகவத்த்யாநமாகிய யோகம் என்று கூறப்பட்டது.

‘தத: கநக பர்யங்கே’ (4) என்று முன்பு கூறப்பட்ட பகவத்த்யாநத்துக்கு உரிய ஆசனத்தை விட்டு எழுந்திருந்து, ஸ்தோத்ரம் செய்த சிஷ்யர்களை கடாக்ஷித்து அவர்களை விடைகொடுத்தனுப்பிவிட்டு, படுக்கைக்கு அலங்காரமாக பகவானை த்யானம் செய்துகொண்டே திருக்கண்வளருகிறார் மாமுனிகள்.

அத்தகைய மாமுனிகளைத் தாம் த்யானம் செய்கிறார் இவ்வெறும்பியப்பா.

(மாமுனிகள் தாம் திருவனந்தாழ்வானுடைய திருவவதாரமாகையாலே அப்ராக்ருமான அவருடைய திருமேனியழகு திருக்கண் வளருங்காலத்தில் இரட்டிதிருக்குமாகையால் த்யானம் செய்துகொண்டேயிருக்கத் தடையில்லையிரே.

மாமுனிகளுக்கு ஸுபாஸ்ரயம் எம்பெருமானுடைய திருமேனி, இவருக்கு ஸுபாஸ்ரயம் மாமுனிகளுடைய திருமேனி என்க.

யதீந்த்ர ப்ரவணாரான மாமுனிகள் எம்பெருமானை த்யாநிப்பது யதீந்த்ரரான எம்பெருமானாருடைய திருவுள்ள உகப்புக்காக என்றும் சௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரரை (மாமுனிகளை) த்யானம் செய்வது, தம்மை மணவாள மா முனிகளின் நிர்பந்தமாக நியமித்தருளிய இவர் தம் திருவாரதனப் பெருமாளாகிய சக்ரவர்த்தித் திருமகனாரின் திருவுள்ளவுகப்புக்காக என்றும் கொள்ளலாம்.

சக்ரவர்த்தித் திருமகனாரின் நியமனம் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்திலும் இவரருளிய வரவர முநி சதகத்திலும் காணத் தக்கது.

————–

திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||-14-

பதவுரை:

இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி

‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும்,

‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை

தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை,

நித்யம் – தினந்தோறும் (இரவும், பகலும்)

பக்த்யா அநுத்யாத்யாயந் – பக்தியோடு தொடர்ந்து அநுசந்திக்கிற மனிதன்,

பரமம் பதம் – இனி இதுக்குமேலில்லை என்னும்படி மிகவுயர்ந்த ஸ்ரீவைகுண்டலோகத்தை,

பராப்நோதி – அடைகிறான்.

உத்தர​ திநசர்யை – 13
திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:|
பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்||

முடிவில் திநசர்யை என்ற இந்த கிரந்தந்தை அனநுசந்தித்தால் உண்டாகும் பிரயோஜனத்தை அருளிச்செய்கிறார் இந்த ஸ்லோகத்தினால்

பூர்வ தினசர்யையில் முதலில் பதின்மூன்றாம் ஸ்லோகம் வரையில் உபோத்காதமென்று முன்னமே சொல்லப்பட்டது.

அதில் 14வது ஸ்லோகம் முதற்கொண்டு இவ்வுத்தர திநசர்யையில் 13ம்ஸ்லோக வரையிலுமே வரவர முநி திநசர்யை என்று என்ற நூலாகக் கொள்ளப்பட்டது.

‘திவ்யாம்’ என்பதற்கு திவ்யமான (மிகவுயர்ந்த) பாஞ்சராத்ராகமம் முதலிய ஸாஸ்த்ர ஸித்தங்களான அநுஷ்டானங்களைக் கூறும் நூல் என்னும் பொருளேயன்றி திவ்யமான – பரமபதத்திய என்று பொருள் கொண்டு, இவ்வுலகில் நடைபெறாதவையாய் பரமபதத்தில் மட்டும் நடைபெருமவைகளான பாஞ்சசாலிக (ஐந்து காலங்களில் செய்யவேண்டிய) அநுஷ்டானங்களை தெரிவிப்பதான நூல் என்னும் பொருளும் கொள்ளலாம்.

இந்த அநுஷ்டானங்கள் மிகவும் துர்லபங்களென்றவாறு பரமைகாந்திகளுடைய இவ்வநுஷ்டான ரூபமான தர்மமானது க்ருத யுகத்தில் பூரணமாகவே (குறைவின்றியே) நடக்கும். த்ரேதத்வாபர யுகங்களில் சிறிது சிறிதாய் குறையும்; கலியுகத்தில் இருக்குமோ இராதோ தெரியவில்லை என்று பரத்வாஜபரிஸிஷ்டத்தில் கூறியது கொண்டு இதன் அருமை விளங்கும்.

மேலும் பற்பல ஆசைகளோடு சேர்ந்த அறிவையுடையவர்களும் அது காரணமாக பற்பல தேவதைகளை அராதிப்பவர்களுமான மனிதர்கள், கலியுகத்தில் திருமாலொருவனையே தெய்வமாக கொள்ளும் இந்த தர்மத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அறிவு படைத்த வித்வான்களாயிருப்பர். எம்பெருமானைபற்றியதான இவ்வுயர்ந்த நெறியை அறிந்துவைத்தும், கலியின் கொடுமையினால், மோகமடைந்து, இதனை அறிவதற்கு முன்புள்ள தங்களது தீயநெறியை விட்டொழிக்க வல்லவராகமாட்டார்.

கலியிலும் கூட சிலவிடத்தில் ஒரு சிலர் எம்பெருமனொருவனையே பற்றுமவர்கள் உண்டாக போகிறார்கள்.

ஆனால் கெட்ட நோக்கமுடைய புறச்சமயிகள் தங்களுடைய கெட்ட யுக்திகளாலே அவர்களையும் மயக்கிவிட போகிறார்கள் என்று அதே நூலிலுள்ளும் காணத் தக்கது.

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூர்வ தினச்சர்யா–ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பயங்கார் ஸ்வாமி வியாக்யானம் தழுவி – ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் அருளிச் செய்தது –

November 21, 2022

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன்

ஸௌம்ய ஜாமத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞாந ப்ரதம் ஶுபம் ||

ஸௌம்ய ஜாமத்ரு யோகீந்த்ர – அழகியமணவாளமாமுனிகளின்,

சரணாம் புஜ ஷட் பதம் – திருவடித்தாமரைகளில் வண்டுபோல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும்,

திவ்ய ஜ்ஞாந ப்ரதம் – (தம்மையண்டினவர்க்கு) உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்,

ஶுபம் – அறிவினாலும், அநுஷ்டாநத்தாலும் ஶோபிப்பவருமான,

தேவராஜ குரும் – தேவராஜ குரு என்ற எறும்பி யப்பாவை,

வந்தே – வணங்கித் துதிக்கிறேன்.

————

இந்நூல் முன்று பிரிவுகளைகொண்டது. பூர்வ திநசர்யை, யதிராஜ விம்ஶதி, உத்தர திநசர்யை என்பன அப்பிரிவுகள்.

ஒருநாளின் முற்பகுதியின் அநுஷ்டாநத்தையும், பிற்பகுதியின் அநுஷ்டாநத்தையும் முறையே தெரிவிப்பன பூர்வ திநசர்யையும், உத்தர திநசர்யயும் ஆகும்.

எம்பெருமானாரைப் பற்றி த்யாநித்துத் துதிப்பதும் மணவாள மாமுனிகளின் அநுஷ்டாநத்தில் சேர்ந்ததாகையால்

பெரியோர்கள் மணவாள மாமுனிகள் எம்பெருமானார் விஷயமாக அருளிச்செய்த யதிராஜ விம்ஶதியையும்

பூர்வோத்தர திநசர்யைகளின் இடையில் சேர்த்தருளினர்.

இம் முன்று பகுதிகளைக் கொண்ட ஸ்ரீ வரவர முநி திநசர்யை என்னும் நூலுக்கு

ஏறக்குறைய 260 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தருளிய ‘வாதூலவீரராகவஸூரி’ என்ற

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி பணித்தருளிய ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவித் தமிழில்  எழுதப்படுகிறது.

———–

பூர்வ தினச்சர்யா – 1
அங்கே கவேர கந்யாயாஸ் துங்கே புவந மங்களே |
ரங்கே தாம்நி ஸுகாஸீநம் வந்தே வர வரம் முநிம்||

துங்கே – மிகவும் உயர்ந்த,
புவந மங்களே – உலகோரின் மங்களங்களுக்கு (எல்லாவகையான நன்மைகளுக்கும்) காரணமான,
கவேர கந்யாயா – அங்கே – காவேரி நதியின் மடியில் (நடுவில்) இருக்கும்,
ரங்கே தாம்நி – திருவரங்கமென்னும் திருப்பதியில்,
ஸுக, ஆஸீநம் – ஸுகமாக (உபத்ரவமேதுமில்லாமல்) எழுந்தருளியிருப்பவரும்,
வரவரம் – (உருவம், ஔதார்யம், நீர்மை முதலியவற்றால் அழ்கிய மணவாளப் பெருமாளை ஒத்திருக்கையால்) அழகியமணவாளர் என்ற திருநாமத்தை தரித்திருப்பவரும்,
முநிம் – ஆசார்யனே ஶேஷியென்ற உண்மையை மநநம் செய்பவருமாகிய மணவாளமாமுனிகளை,
வந்தே – வணங்கித் துதிக்கின்றேன்.

“மகி ஸமர்ப்பணே” (கதௌ) என்னும் தாதுவடியாகப் பிறந்த மங்களம் என்னும் சொல் கம்யம் (அடையப்படும் பயன்) என்ற பொருளையும், இலக்கணையினால் அதற்கு ஸாதனமான உபாயத்தையும் காட்டுகிறது.

இது “கவேர கந்யாயா: அங்கே” என்றவிடத்திலும், “ரங்கேதாம்நி” என்கிறவிடத்திலும் பொருந்துகிறது.

இரண்டும் நமக்கு அடையப்படும் பயனாகவும் மற்றுமுள்ள பயன்களுக்கு உபாயமாகவும் ஆகக் குறையில்லை யல்லவா?

‘ரங்கம்’ என்ற சொல் எம்பெருமானுக்கு ப்ரீதியை உண்டாக்குமிடம் என்னும் பொருளைத் தரும்.

‘ஸுகாஸீநம்’ என்பதனால், மணவாளமாமுனிகளின் அவதாரத்திற்குப்பின்பு துலுக்கர் முதலியோரால் ஸ்ரீரங்கத்திற்கு எவ்வகையான உபத்ரவமுமில்லை என்பது ஸூசிப்பிக்கப்பட்டது.

எம்பெருமானார் காலத்தில் சைவர்களாலும், பிள்ளைலோகாசார்யார், வேதாந்ததேசிகர் ஆகியவர் காலத்தில் துலுக்கர்களாலும் உபத்ரவம் நேர்ந்ததுபோல் மாமுனிகள் காலத்தில் யாராலும் எந்த உபத்ரவமும் உண்டாகவில்லை என்றபடி.

‘வதி – அபிவாதந ஸ்துத்யோ’ என்று தாதுவடிவாகப் பிறந்த ‘வந்தே’ என்னும் வினைச்சொல், உடலால் தரையில் விழுந்து வணங்குதலையும், வாயினால் துதித்தலையும் நேராகக் குறிப்பிட்டு,

இவ்விரண்டும் மணவாளமாமுனிகளைப் பற்றிய நினைவில்லாமல் நடவாதாகையால், பொருளாற்றலால் நினைத்தலையும் குறிப்பிட்டு, காயிக வாசிக மாநஸிகங்களான மூவகை மங்களங்களையும் தெரிவிப்பதாகும்.

———————-

பூர்வ திநசர்யை – 2
மயி ப்ரவிஶதி ஸ்ரீமந் மந்திரம் ரங்க ஶாயிந: |
பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்த மவிதூரத: ||

பதவுரை: –

ஸ்ரீமந் – கைங்கர்யமாகிய செல்வம் மிகப்பெற்ற மணவாளமாமுனிகளே!
ரங்கஶாயிந: – ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டருளிய பெரியபெருமாளுடைய,
மந்திரம் – கோயிலைக் குறித்து,
மயி – அடியேன்,
ப்ரவிஶதி ஸதி – சென்று புகும் போது,
பத்யு: – ஜகத்பதியான பெரியபெருமாளுடைய,
பதஅம்புஜம் – தாமரை மலர் போன்ற திருவடிகளை,
த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,
அவிதூரத: – அருகில்,
ஆயாந்தம் – எழுந்தருளிக் கொண்டிருக்கிறவராயும்.

(இதற்கு 12ம் ஶ்லோகத்தில் உள்ள ‘த்வாமேவ’ என்பதனோடு அந்வயம்.

இப்படியே மேலுள்ள ஶ்லோகங்களிலும் அந்வயம் கொள்ளத்தக்கது)

‘ஸ்ரீமந்’ என்று பிரிக்காமல் ‘ஸ்ரீமத்’ என்று பிரித்து, இதனை மந்திரத்திற்கு அடைமொழியாகவும் ஆக்கலாம்.

அப்போது செல்வமாகிற பகவத் கைங்கர்யத்தைச் செய்வதற்கு மிகவும் உரிய இடம் ஸ்ரீரங்கநாதன் கோவில் என்பது பொருளாகும்.

முதன்முதலில், முக்கியமான மாமுனிகளிடம் பராமுகமாயிருத்தலென்ற தோஷமுள்ளமையினால் அவரை ஸேவிக்க நினையாமல், அவ்வளவு முக்கியரல்லாத பெருமாளை ஸேவிப்பதற்காக அடியேன் கோவிலுக்குள் ப்ரவேஶிக்கும் போது, எதிர்பாராமல் அடியேனுக்கு அருகிலேயே மாமுனிகள் பெருமாளை திருவடி தொழுவதற்காக எழுந்தருளி நின்றார். இது அடியேனுடைய பெரிய லாபமென்கிறார்

இதனால். ‘ ஆசார்ய கடாக்ஷ வைபவத்தினால், முன்பு அவரிடம் பராமுகமாயிருந்ததற்குக் காரணமான பாவம் தொலைந்ததென்று, ‘நான் கோவிலுக்குள் புகும்போது மாமுனிகள் என் அருகிலே வந்துகொண்டிருக்கிறார்’ என்பதனால் குறிப்பாகக் காட்டப்பட்டதாயிற்று.

பகவானை விட ஆசார்யர் மிகவும் உயர்ந்தவராகையால் அவனை வணங்கச் சென்ற  போது ஆசார்யர் எதிர்பட்டமை, விறகு வெட்டி வயிறு வளர்ப்பவன் விறகு தேடிச் செலும் போது வழியில் எதிர்பாராமல் நிதி கிடைத்தது போலிருந்ததென்று இங்குக் கருத்துக் கூறுவர் உரையாசிரியர்.

எம்பெருமானார் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமே புருஷார்த்தம். அதற்கு அவர் திருவடிகளே உபாயமென்று நினைத்த ஆசார்ய நிஷ்டரான மாமுனிகள் கோவிலுக்குள் சென்று பெரிய பெருமாளைத் தொழுவது – பெருமாளுக்கு மங்களாஶாஸநம் செய்வதற்காகவே யன்றி, ஸித்தோபயமான பெருமாளைத் தம்முடைய புருஷார்த்தத்திற்கு உபாயமாகப் பற்றுதலாகிய ப்ரபத்தி செய்வதற்காக அன்று.

‘ தேவதாந்தரங்களையும் ஶப்தாதி விஷயங்களையும் உபாய பக்தியையும் உபாயமான எம்பெருமானையும் ஸமானமாக எண்ணியவனாய், ‘எம்பெருமான் நமக்கு ஸ்வாமி (அவனை ஸ்வயம் ப்ரயோஜநமாக ஸேவித்து மங்களாஶாஸநம் செய்ய வேணும்) என்று நினைப்பவன் பரமை காந்தி’ என்று ஶாஸ்த்ரம் சொல்லுகையாலே, மாமுனிகள் அத்தகைய பரமை காந்தி யாகையால் என்க.

——————–

பூர்வ திநசர்யை – 3
ஸுதா நிதி மிவ ஸ்வைர ஸ்வீக்ருதோ தக்ர விக்ரஹம்|
ப்ரஸந்நார்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் ||

பதவுரை :-

ஸ்வைர ஸ்வீக்ருத உதக்ர விக்ரஹம் – தமது இஷ்டப்படி தாமே ஏற்றுகொண்ட மிக அழகிய திருமேனியை உடையவராய்,

ஸுதாநிதி மிவ (ஸ்திதம்) – திருப்பாற்கடல் போல் வெண்மை நிறமுடையவராய் இருப்பவரும்,

ப்ரஸந்ந அர்க்க ப்ரதீகாஶ ப்ரகாஶ பரிவேஷ்டிதம் – (கண்கூசாமல் காணும்படியாகத்) தெளிந்தும் குளிர்ந்துமிருக்கும் ஸூர்யன் (ஒருவன் இருப்பானாகில் அவன்) போன்ற காந்தியினால் சூழப்பட்டவருமாகிய …

‘ ஆசார்யருடைய திருமேனியை, திருவடி முதலாகத் திருமுடியீறாக, ஶிஷ்யன் த்யானிக்கவேண்டும்’ என்றும், ‘ ஶிஷ்யன் ஆசார்யன் திருமேனியை ஸேவிப்பதில் பற்றுடையவனாக இருக்கவேண்டும்’ என்றுமுள்ள வசனத்தின்படி ஆசார்யன் திருமேனியை வருணிக்கிறார் எறும்பியப்பா.

மாமுனிகள் வெள்ளைவெளேரென்ற திருமேனியையுடைய திருவநந்தாழ்வானுடைய அவதாரமாகையாலே தம்மிஷ்டப்படி தாமே ஏற்றுக்கொண்ட திருப்பாற்கடலுக்குக் காந்தி அதிகமாக இல்லாமையால், மேலும் காந்தியையுடைய ஸூரியனை மாமுனிகளுக்கு உபமானமாக்கினார்.

ஸூரியனுடைய காந்தி உக்ரமாகவும் உஷ்ணமாகவும் உள்ளதனால் அதனை நீக்க, ஸூரியனுக்கு ‘ப்ரஸந்ந’ என்ற விஶேஷணமிட்டார். ‘ தெளிந்தும், குளிர்ந்துமிருக்கிற’ என்பது அதன் பொருள்.

அப்படி ஒரு ஸூரியன் உண்டானால் அவனுடைய ஒளிபோன்ற ஒளியால் சூழப்பட்டவர் மாமுனிகள் என்று அபூதோபமையாக (இல்பொருளுவமையாக) ஸூரியனைக் கூறியபடியாம் இது.

—————-

பூர்வ திநசர்யை – 4
பார்ச்வத: பாணி பத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத் ப்ரியௌ |
விந்யஸ் யந்தம் சநைரங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீ தலே ||

பதவுரை:-

பார்ஸ்வத: – இரண்டு பக்கங்களிலும்,

பவத் – தேவரீருக்கு,

ப்ரியௌ – ப்ரீதி பாத்ரர்களான கோயிலண்ணனையும் அவர் திருத்தம்பியாரையும்,

பாணி பத்மாப்யாம் – தாமரை மலர் போன்ற திருக்கைகளால்,

பரிக்ருஹ்ய – நன்றாகப் பிடித்துக் கொண்டு,

ம்ருதுளௌ – ம்ருதுவான,

அங்க்ரீ – திருவடிகளை,

மேதிநீதலே – பூதலத்தில்,

ஸனை: – மெல்ல, மெல்ல,

விந்யஸ்யந்தம் – வைத்து நடப்பவராகிய

இரண்டு கைகளையும் கூப்பிச்செய்யும் நமஸ்காரமே தண்டவத் ப்ரணாமமாகையால், இப்படிப்பட்ட ப்ரணாமத்தை, த்ரிதண்டத்தைக் கையிலேந்திக் கொண்டு செய்யமுடியாதாகையால் கோயிலுக்குச்செல்லும்போது த்ரிதண்டம் தரியாவிட்டால் குற்றமேதுமில்லை.

இரண்டு கைகளின் நடுவே ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளாமல் கைகளைக் கூப்பிக்கொண்டு தண்டனிடும்போது த்ரிதண்டத்தைத் தரிக்கமுடியாதல்லவா ? என்பதே அக்கேள்விக்கு விடையாகும்.

ஆக, த்ரிதண்டமில்லாமல் ஸந்யாஸி இருக்கக்கூடாதென்ற விதி, பொது விதியேயாகையால் அது தண்டவத் ப்ரணாமாதி காலங்களில் தவிர மற்ற சமயங்களைப் பற்றியதேயாகும் என்றபடி.

(மேதிநீதலே அங்க்ரீ விந்யஸ்யந்தம்) இங்கு பூமிதலே என்னாமல் மேதிநீதலே என்று பூமியை மேதிநீ என்று குறிப்பிட்டருளியது – திருமால் மதுகைடபர்களைக் கொல்லும்போது அவர்கள் உடலிலிருந்த மேதஸ்ஸு (கொழுப்பு) பட்டதன் காரணமாக பூமிக்கு மேதிநீ என்று பெயருண்டானமையால், அவர்களின் கொழுப்பினால் பூசப்பட்டு தூய்மையிழந்த மேதிநீயானது (பூமியானது) இப்போது மாமுனிகளின் திருவடிகளின் ஸம்பந்தம் பெற்றுத் தூய்மை மிகப்பெற்றதென்று தெரிவிக்கைக்காகவாகும்.

‘நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே’ (பெரியாழ் திரு 4-4-6) என்று பகவத் பக்தர்களின் பாததூளி படுதலை இவ்வுலகம் செய்த பாக்யத்தின் பயனாக அருளிச்செய்தாரிறே பெரியாழ்வார்.

—————–

பூர்வ திநசர்யை – 5
ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் |
ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜ பூஷணம் ||

பதவுரை:-

ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும்,

ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும்,

ஆபீந விபுல உரஸ்கம் – உயர்ந்த (முன்னுக்குவந்த) விஸாலமான திருமார்பையுடையவரும்,

ஆஜாநு புஜபூஷணம் – முழ்ந்தாள் வரையில் நீண்டு, திருமேனிக்கு ஆபரணம் போன்ற திருக்கைகளை யுடையவருமாகிய…

திருவடியழகை அநுபவித்துவிட்டு, இனித் திருமேனியின் மென்மையையும், ஸந்யாஸாஸ்ரமத்திற்குத் தக்க, திருப்பரிவட்டத்தின் இனிமையையும், மற்றுமுள்ள அவயவங்களின் அழகையும் அநுபவிக்கிறார் இதனால்.

(அம்லாந:) – வாடாக்குறிஞ்சிமலர். அது காட்டுவாகை மலர் முதலியவற்றைவிட மெத்தென்றிருக்குமாம்.

அம்லாந கோமலாகாரம் என்றதனால் – முன் ஸ்லோகத்தில் கூறியபடி திருவடிகள் மட்டும் ம்ருதுவானவையல்ல. திருமேனியே மெத்தென்றிருக்கும் என்று காட்டியபடி. திருவநந்தாழ்வானேயன்றோ மாமுநிகள்.

சிலர் அம்லான பதத்திற்கு, காட்டுவாகைமலர் என்று பொருள் கூறினர். வஸ்த்ரத்திற்குச் சிவப்பு நிறம் துறவறத்திற்கேற்பக் காவிக்கல்லினால் ஏற்றப்பட்டது.

திருப்பாற்கடல்போல் வெள்ளைவெளேரென்ற திருமேனிக்கு, சிவப்பு நிறக்காஷாயத்தினால் உண்டான பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்ற (பரபாக) ஸோபை, திருபாற்கடலுக்கு அதன்கண் உள்ள பவழங்களால் உண்டான ஸோபை போன்றுள்ளமை குறிப்பாகக் காட்டப்பட்டது.

(ஆபீநவிபுலோரஸ்கம்) திருமார்பு உயர்ந்தும் விஸாலமாகவும் இருத்தல் உத்தம புருஷ லக்ஷணமாகும்.

(ஆஜாநுபுஜபூஷணம்) இங்கு திருக்கைகள் முழந்தாளளவும் நீண்டுள்ளமை கூறியது உண்மையுரையாகும்.

அதனால் ஸிஷ்யர்களைக் கைகளால் பிடித்துக் கொண்டு நடந்தருளும்போது முழந்தாளளவும் நீண்டதாகத் தென்படாவிட்டாலும் குறையில்லை என்க.

அல்லது ஸிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஸ்ரமமாக இருக்குமே என்று நினைத்து இடையிடையில் கைகளைத் தொங்கவிடவும் கூடுமாகையால், அச்சமயத்தில் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல் தென்படுதலால் அது தன்னை இதனால் கூறினாரென்றலும் பொருந்தும்

——————

பூர்வ திநசர்யை – 6
ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா|
சோபிதம் யக்ய ஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா ||

பதவுரை: 

ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவள த்விஷா – தாமரைத் தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும்,

நாபி பிம்ப ஸநாபிநா – வட்ட வடிவமான நாபியின் ஸமான தேசத்தையுடையதுமான (=நாபிதேசம் வரையில் தொங்குகின்றதுமான)

யஜ்ஞஸூத்ரேண – யஜ்ஞோபவீதத்தினால்.

சோபிதம் – விளங்குமவருமாகிய

திருமார்பிலுள்ள யஜ்ஞோபவீதத்தை வருணிக்கிறார் இதனால்.

‘புத்தம் புதிய நூல்களால் நிருமிக்கப்பட்டதும் வெண்மை நிறமுள்ளதுமான பூணூலை அணிய வேண்டும்’ என்ற தத்தாத்ரேயரின் வசனம் இங்கு நினைக்கத்தகும்.

மேதாதிதியும் ‘ஸந்யாஸிகளுக்கு யஜ்ஞோபவீதமும் பற்களும் ஜலபவித்ரமும் ஆகிய இம்மூன்றும் எப்போதும் வெண்மையாக இருக்கக்கடவன’ என்று பணித்தார்.

‘உபவீதம் ப்ரஹ்மஸூத்ரம் ஸூத்ரம் யஜ்ஞோபவீதம், யஜ்ஞஸூத்ரம் தேவலக்ஷ்யம் என்ற ஆறும் பூணூலின் பெயர்கள்’ என்றார்கள் மஹரிஷிகள்.

‘யன்ஜ்ஞஸூத்ரேண’ என்ற ஒருமையினால் ஸந்யாஸிகளுக்கு மூன்றுவடம் கொண்ட ஒரு பூணூல்தான் என்பது குறிக்கப்படுகிறது.

‘ஸந்யாஸிக்கு ஒரே பூணூல், ப்ரஹ்மசாரிக்கு மான்தோலுடன் கூடிய ஒரே பூணூல், க்ருஹஸ்தனுக்கும் வானப்ரஸ்தனுக்கும் (முதுமையில் மனைவியுடன் வனம் சென்று சேர்ந்து தவம் செய்யுமவனுக்கும்) உத்தரீயத்துக்காக அணியப்படும் ஒரு பூணூலுடன் சேர்ந்து இரண்டு பூணூல்கள் – அதாவது ‘மூன்று’ என்று வ்யாஸரும் பரத்வாஜரும் அறுதியிட்டனர்.

இங்கு ஸந்யாஸிக்கு ஒரே பூணூல் என்றது – ஒரு ஒற்றை வடத்துடன் கூடிய – மூன்று வடங்கொண்ட ஒரே பூணூல் என்றபடி.

‘நாபிக்கு மேல் பூணூல் தரித்தவனுக்கு ஆயுள் குறையும், நாபியின் கீழ் தொங்கும்படி தரித்தவனுக்கு தவம் அழியும். ஆகவே நாபியளவாகவே பூணூலணியக்கடவன் என்று மஹரிஷிகள் கூறியதை இங்கு நினைக்கத்தக்கதாகும்.

—————–

பூர்வ திநசர்யை – 7
அம்போஜ பீஜ மாலாபி: அபிஜாத புஜாந்தரம்|
ஊர்த்வ புண்ட்ரைருபஸ் லிஷ்டம் உசித ஸ்தாந லக்ஷணை:||

பதவுரை :-

அம்போஜ பீஜ மாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால்,

அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும்,

உசித ஸ்தாந லக்ஷணை: – சாஸ்திரம் விதித்ததற்கு ஏற்ற – வயிறு முதலிய இடங்களென்ன, இடைவெளியோடு கூடியுள்ளமை முதலிய லக்ஷணங்களென்ன இவற்றையுடைய,

ஊர்த்வபுண்ட்ரை: – ஊர்த்வபுண்ட்ரங்களுடன் (கீழிருந்து மேல் நோக்கி இடப்படும் திருமண்காப்புகளுடன்)

உபஸ்லிஷ்டம் – பொருந்தப் பெற்றவருமாகிய…

திருமார்பு அதற்கு இருவருகுமுள்ள புஜங்கள் பூணூல் நாபியாகியவற்றை வருணித்தபின்பு, திருமார்பு முதலியவற்றோடு தொடர்பு கொண்ட தாமரைமணிமாலையையும் திருமண்காப்புகளையும் வருணிக்கிறார் இதனால்.

“ஸுத்தமான தாமரை மணிமாலையையும், தோள்களில் ஒற்றிக்கொள்ளப்பட்டு அலங்காரமான சங்கு சக்கரப்பொறிகளையும், விஷ்ணுவின் பெயர்களிலாவது விஷ்ணு பக்தர்களின் பெயர்களிலாவது ஏதோ ஒன்றையும் தரிக்க வேண்டும்’ என்று பரத்வாஜரும்,

“பூணூலையும், குடுமியையும், திருமண்காப்புகளையும், தாமரை மணிமாலையையும், பட்டு வஸ்த்ரத்தையும், அந்தணன் தரிக்க வேண்டும்’ என்ற பராசரரும் பணித்தருளியவற்றை இங்கு அனுஸந்தித்தல் தகும்.

‘மாலாபி:’ என்ற பஹுவசநத்தினால் தாமரைமணி மாலையோடு, துளஸீ மணிமாலையையும் பட்டினால் செய்யப்பட்ட பலநிறமுள்ள பவித்ரமாலைகளையும் கொள்க. ‘கருந்துளஸிக் கட்டையினால் செய்த மணிமாலையையும், பட்டுப்பவித்ரங்களையும், தாமரை மணிமாலையையும் எம்பெருமானுக்கு அணிவித்து, அவன் ப்ரஸாதமாகிய இம்மூன்றையும் தரிக்கவேண்டும்’ என்றுள்ள ப்ராஹ்ம புராண வசநம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

திருமண்காப்பைப் பற்றி, ஸ்ரீபாஞ்சராத்ர – பராஸர ஸம்ஹிதையில் ‘மூக்கின் அடிப்பகுதியில் (புருவ நடுவின் கீழுள்ள மூக்குப்பகுதியில்) ஒரு விரலகலமுள்ள பாதமும், நெற்றியின் நடுவில் ஒன்றரை விரல் அகலமுள்ள இடைவெளிப்பகுதியும் இருபக்கங்களிலுமுள்ள கோடுகள் ஒருவிரல் அகலமுடையதுமாக – ஊர்த்வபுண்ட்ரத்தை (கீழிலிருந்து மேலுக்குச் செல்லும் நெற்றிக்குறியை) அந்தணன் தரிக்கவேண்டும்’ என்றுள்ளது.

பாத்மபுராணத்தில் ‘மூக்கின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி நெற்றியின் முடிவளவாக ஊர்த்வபுண்ட்ரமிட வேண்டும். புருவத்தின் நடுப்பகுதி தொடங்கி நெற்றியின் இறுதிவரையில் இடப்படும் இரண்டு கோடுகளின் நடுவில் இடைவெளியை அமைக்க வேண்டும். அவ்விடைவெளி இரண்டு விரலகலமுடையதாகவும், இருகோடுகள் ஒரு விரலகமுடையதாகவும் இருக்கவேண்டும்’ என்று காண்கிறது.

‘விஷ்ணு க்ஷேத்ரத்திலிருந்து வெண்மை நிறமுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டுவந்து, அதைத் திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தினால் அபிமந்த்ரித்து, அம்மண்ணினால் நெற்றி முதலிய அவயங்களில் கேஸவாதி நாமங்களுக்குத் தக்கபடி (பன்னிரண்டு) ஊர்த்வபுண்ட்ரங்களை தரிக்கவேண்டும்’ என்ற பராஸர ஸ்ம்ருதியில் குறிக்கப்பட்டுள்ளது.

ஊர்த்வ புண்ட்ரங்களை எறும்பியப்பா இங்குக் கூறியது ஸ்ரீசூர்ணத்திற்கும் உபலக்ஷணம்;

‘ஊர்த்வபுண்ட்ரத்தின் இடைவெளியில் ஸ்ரீதேவிக்கு அபிமதமான (இஷ்டமான) மஞ்சளால் செய்யப்பட்ட ஸ்ரீசூர்ணத்தைத் தரிக்கவேண்டும்’ என்று பராஸரர் பணித்தமையால் என்க.

———————

பூர்வ திநசர்யை – 8
காஷ்மீர கேஸர ஸ்தோம கடார ஸ்நிக்த ரோசிஷா|
கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்த மூலா வலம்பிநா||

பதவுரை:-

காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய்,

ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற,

கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால்,

மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய….

ஊர்த்வபுண்ட்ரத்தோடு பொருந்திய தோள்களும் அவற்றில் தரிக்கப்பட்ட பட்டுவஸ்த்ரமும் நினைவுக்கு வரவே அவற்றையும் வருணிக்கிறார் இதனால்.

பட்டு வஸ்த்ரத்தை உத்தரீயமாக அணிந்திருத்தல் இங்குக் கூறப்படுகிறது.

ப்ரஹ்மசாரி, க்ருஹஸ்த்தன், வாநப்ரஸ்தன், ஸ்ந்யாஸி எனப்படுகிற நான்கு ஆஸ்ரமங்களிலுள்ள எல்லா ப்ராஹ்மணர்களுக்கும் பொதுவாக பட்டு வஸ்திரமணிதல் விதிக்கப்பட்டுள்ளது.

பராஸரர் ‘யஜ்ஞோபவீதம் குடுமி ஊர்த்வபுண்ட்ரம் தாமரைமணிமாலை பட்டுவஸ்த்ரமென்னுமிவற்றை ப்ராஹ்மணன் எப்போதும் தரிக்கக்கடவன்’ என்று கூறியது காண்க.

இந்த ப்ரகரணத்தில் ‘உத்தரீயத்தை அணியக்கூடாது’ என்று விலக்கியிருப்பது – அவைஷ்ணவ (வைஷ்ணவரல்லாத) ஸந்யாஸியைப் பற்றியதேயன்றி வைஷ்ணவ ஸந்யாஸியைப் பற்றியதன்றென்று கொள்ளத்தக்கது.

இது தெருவில் எழுந்தருளிக் கொண்டிருக்கிற மாமுநிகளைப் பற்றி வருணிக்கிற ஸ்லோகமாகையால் உத்தரீயம் தோளிலணிந்திருப்பது குற்றத்தின்பாற்படாது.

‘ப்ரதக்ஷிணம் பண்ணும்போதும், தண்டனிடும்போதும், தேவபூஜை செய்யும் போதும், ஹோமம் பண்ணும் போதும், பெருமாளையும் ஆசார்யனையும் ஸேவிக்கும் போதும் தோளில் உத்தரீயம் அணிதல் ஆகாது’ என்றே சாண்டில்யர் கூறியுள்ளதனால் என்க.

இங்குக் குறிப்பிட்ட பட்டுஉத்தரீயம் காஷாய வர்ணமுடையதென்று கொள்க; ஸந்யாஸிகளுக்கு அதுவே நியாயமுடையதாகையாலே.

—————————

பூர்வ திநசர்யை – 9
மந்த்ர ரத்நாநு ஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம் |
ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலகோத்கமம் ||

பதவுரை:-

மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும்,

ததர்த்த தத்த்வ நித்யாந, ஸந்நத்த புலக உத்கமம் – அந்த த்வய மந்த்ரத்தின் அர்த்தத்திலுள்ள உண்மை நிலையை நன்றாக த்யாநம் செய்வதனால் உண்டான மயிர்க்கூச்செறிதலையுடையவருமாகிய….

அர்த்தங்களையும் நினைத்தலே ப்ரபத்தியாகையால், அப்ரபத்தியை ஒருதடவை மட்டுமே அநுஷ்டிக்க வேண்டியிருத்தலால், இடைவிடாமல் அநுஷ்டித்தமை சொல்லப்படுதல் பொருந்தாதே என்று கேட்கவேண்டா.

மோக்ஷார்த்தமாகப் ப்ரபத்தியை அநுஷ்டித்தல் ஒருதடவையேயாகிலும், நற்போது போக்குவதற்காகவும், அநுபவித்து மகிழ்வதற்காகவும் இடைவிடாமல் அவ்வர்த்தத்தின் தத்துவங்களை நினைத்தல் கூடுமென்க.

முற்கூறியபடியேயன்றி ‘ததர்த்த தத்த்வ நித்யாநம்’ என்பதற்கு வேறுபடியாகவும் கருத்துக்கூறுவர்.

‘விஷ்ணு: ஸேஷீ ததீய: ஸுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீஸடாரி:, ஸ்ரீமாந் ராமாநுஜார்ய பதகமலயுகம் பாதி ரம்யம் ததீயம் | தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர தஸ்மாத், ஸேஷம் ஸ்ரீமத் குரூனாம் குல மிதமகிலம் தஸ்ய நாதஸ்ய ஸேஷ: ||

[விஷ்ணுவானவர் ஸேஷி (நாம் செய்யும் கைங்கர்யங்களை ஏற்றுக் கொண்டு உகக்கும் தலைவர்). நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய அப்பெருமானுடைய திருமேனியே ஸ்ரீஸடாரி என்னும் நம்மாழ்வார், அவருடைய திருவடித்தாமரையிணையாக ஸ்ரீமத் ராமாநுஜாசார்யராகிய எம்பெருமானார் விளங்குகிறார். குரு: என்ற பதம் அவ்விராமாநுசரிடத்தில் நிறைபொருளுடையதாய் விளங்குகிறது. வேறு யாரிடத்திலும் விளங்குவதில்லை. ஆகையால் அவ்விராமாநுசருக்கு முன்பும், பின்புமுள்ள மற்ற குருக்களுடைய ஸமூஹம் அனைத்தும் அவ்விராமாநுச முனிவருக்கு ஸேஷமானது.] என்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்தபடியே,

பகவத் ராமாநுஜாச்சார்யரே த்வயத்தில் உள்ள ‘ஸ்ரீமந்நாராயண்சரணௌ’ என்ற சரண்ஸப்தார்த்தம். அதுவே ததர்த்த தத்த்வம். அதாவது ஸ்ரீமந்நாராயணனுடைய – நாம் காண்கிற திருவடி ஸ்ரீமந்நாராயணனுடைய சரணங்களல்ல; பின்னையோவெனில் பகவத் ராமாநுஜரே ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகள் என்பது த்வயமந்த்ரார்த்தத்தின் உண்மைநிலை என்றபடி.

யதீந்த்ரப்ரவணரான (பகவத் ராமாநுஜ பக்தராகிய) மணவாள மாமுனிகளுக்கு ராமாநுஜரென்னும் ஸ்ரீமந் நாராயண சரணங்களை இடைவிடாமல் த்யானித்தலே முக்கியமாகையால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வத்தை விட இந்த த்வயார்த்த தத்த்வமே இங்கு எறும்பியப்பாவால் அருளிச்செய்யப்பட்டதென்கை யுக்தமாகும்.

த்வயார்த்த தத்த்வ த்யானத்தினால் மயிர்க்கூர்ச்செறியபெற்ற தேவரீரையே இடைவிடாமல் கண்ணாரக்காணக்கடவேன் (12ம் ஸ்லோகம்) என்கையால், ‘எம்பெருமானுடைய குணங்களாலே ஆவேஸிக்கப்பட்டு எம்பெருமான் குணங்களையே த்யானித்து அதனால் ஆனந்தக் கண்ணீருடனும் மயிர்க்கூச் செறியப்பெற்ற திருமேனியுடனும் விளங்கும் பக்தனானவன் உடலெடுத்த அனைவராலும் எப்போதும் காணத்தக்கவனாகிறான்’ என்று விஷ்ணு தத்த்வ க்ரந்தத்தில் கூறியபடியே மணவாளமாமுனிகளைக் கண்ணாரக் காண எறும்பியப்பா ஆசைப்பட்டபடி இது

——————————-

பூர்வ திநசர்யை – 10
ஸ்மயமாந முகாம்போஜம் தயமாந த்ருகஞ்சலம் |
மயி ப்ரஸாத ப்ரவணம் மதுரோதார பாஷணம் ||

பதவுரை:-

ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும்,

தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும்,

மயி – இத்தனை நாள்கள் தம்திறத்தில் பாராமுகம் காட்டியிருந்த அடியேனிடத்தில், 

ப்ரஸாத ப்ரவணம் – அருள்புரிவதில் பற்றுடையவராய்,

மதுர உதார பாஷணம் – செவிக்கினியதாய் ஆழ்ந்த பொருள்களைக் கொண்ட வார்த்தைகளையுடையவருமாகிய….

அதரத்தில் குடிகொண்ட மந்தஹாஸத்தையும் அதனுடன் கூடிய கடைக்கண் பார்வையையும் அவ்விரண்டோடு ஒற்றுமை கொண்ட அமுதமொழிகளையும் அம்மூன்றினாலும் ஊகிக்கத்தக்க – அவர் தம்மிடம் புரியும் அநுக்ரஹத்தையும் வருணிக்கிறார்.

இது தன்னால் முற்கூறிய த்வயார்த்த தத்த்வ த்யாநத்தின் தொடர்ச்சியால் தமக்கு மோக்ஷலாபம் உண்டாகிவிட்டதாக நினைத்துத் தமது விருப்பம் நிறைவேறிய ஸந்தோஷத்தினால் ஸதா மந்தஹாஸமுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

அதுவேயன்றி இம்மந்தஹாஸத்தை – மேற்கூறப்படும் மதுரவார்த்தைக்கும் பூர்வாங்கமாகவும் கூறலாம்;

ஸந்தோஷத்தை புன்சிரிப்பினால் தெரிவித்துப் பின்பல்லவோ மஹான்கள் மதுரமாக பேசுவது.

இனி, தயையாவது பிறர் துன்பங்கண்டு இரங்குதல்.

‘நாம் இங்ஙனம் த்வயார்த்த தத்வத்யானத்தினால் அடையும் இன்பம் இவ்வுலகோர்க்குக் கிடைக்கவில்லையே, ஐயோ இவர்கள் ஸம்ஸாரத்தில் உழல்கின்றார்களே’ என்று உலகோர் துன்பங்கண்டு மாமுனிகள் துன்பப்படுகிறாரென்க.

இதுவேயன்றி, மேற்கூறப்படுகின்ற மதுரபாஷணத்திற்கும் இத்தகைய காரணமாகலாம்; தயையோடல்லவா ஆசார்யர்கள் ஸிஷ்யர்களோடு மதுரமாகப் பேசுவது.

இந்த ஸந்தோஷமும் தயையும் மிகவும் முக்யமான தருமங்களாகும்.

‘ஸத்யம் ஸுத்தி தயை மனங்கலங்காமை பொறுமை ஸந்தோஷம் இவை அனைவர்க்கும் அவசியமாக இருக்க வேண்டிய தருமங்கள்’ என்றுள்ள பரத்வாஜ பரிசிஷ்ட வசநம் இங்கு நினைக்கத்தக்கதாகும்.

‘மயி ப்ரஸாத ப்ரவணம்’ என்பதற்கு – ‘அடியேனுக்கு அருள் செய்வதில் பற்றுடையவர்’ என்று முற்கூறிய பொருளேயன்றி, ‘அடியேன் முன்பு பராமுகமாக இருந்ததனால் உண்டான மனக்கலக்கம் நீங்கப்பெற்று, அதற்கு நேர் முரணாக மனம் தெளிந்திருக்குமிருப்பில் பற்றுடையவராயினர் என்ற பொருளும் கூறலாகும்.

மதுரமாகவும், அர்த்தகாம்பீரியமுடையதாகவும் பேச வேண்டும்.

‘மதுரமான – செவிக்கினிய வார்த்தையைப் பேச வேண்டும்’ என்று மேதாதிதியும்,

‘ஆழ்ந்த பொருளோடு கூடிய பேச்சுக்களையே பேச வேண்டும்’ என்று சாண்டில்யரும் கூறியது காண்க.

இங்கே பேச்சுக்கு ஆழ்ந்த பொருளுடைமையாவது – எந்த வார்த்தை பேசினாலும் முற்கூறிய த்வயத்தின் ஆழ்ந்த கருத்திலேயே நோக்குடைமையாகும்.

————————

பூர்வ திநசர்யை – 11
ஆத்ம லாபாத் ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||

பதவுரை:-

ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,

அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,

பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,

இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,

அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,

இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),

அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள்கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக்கொள்வதற்கென்று,

ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட மந்தஹாஸம், கருணை பொங்கிய கண்ணிணை, மதுரமான வார்த்தை ஆகியவற்றால் அடியேன் ஊகிக்கிறேன் –

அடியேனுக்கருள் செய்வதற்காகவே அடியேன் வரும் ஸமயத்தை நிஸ்சயித்து அடியேன் கோவிலுக்குச் செல்லும்போது எழுந்தருளினார்;

அவருடன் அடியேனுக்கு நேர்ந்த சேர்த்தி தானாகவே நேர்ந்ததன்று – என்பதாக – என்று கூறுகிறார்

இதனால். ஜந – பிறந்தவன், அகிஞ்சந – குணமில்லாதவன், இமம் – (அயம்) (ஸ்வரத்தைக் கொண்டு பொருள் கொள்க) – குற்றமனைத்துக்கும் கொள்கலமானவன்.

இவற்றால் – உலகத்தில் பூமிபாரமாகவும் உண்டிக்கும் கேடாகவும் பிறந்தது மட்டுமேயன்றி பிறப்புக்குப் பயனாகக் குற்றம் நீக்குதலும் குணம் பெருக்குதலுமின்றிக் கெட்டுப்போனவன் அடியேன் என்று தம்மை இகழ்ந்தார் எறும்பியப்பா என்க.

இத்தகையவனையும் விடாமல் காக்கவந்த மாமுனிகளின் மஹக்ருபை என்னே என்று வியக்கிறார் இதனால்.

ப்ராப்தமிவ – இங்கு ‘இவ’ என்பது உவமையைக் குறிப்பதன்று – ஊகையைக் குறிப்பதாகும். ஊகை – (உத்ப்ரேக்ஷை) – கருத்துரையில் கூறப்பட்டது.

————————

பூர்வ திநசர்யை – 12 &13
பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |
முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ் த்வாமேவ கீர்த்தயந் || 12

த்வதந்ய விஷய ஸ்பர்ஸ விமுகைர  கிலேந்த்ரியை:|
பவேயம் பவது:க்காநாம் அஸஹ்யாநாம நாஸ்பதம் || 13

பதவுரை:-

ஸ்வாமிந் வரவர – தேவரீருடைய ஸொத்தான அடியேனிடத்தில், தாமே அபிமாநம் செலுத்தும் ஸ்வாமித்வத்தையுடைய மணவாளமாமுனிகளே!

முநே – அடியேனை ஏற்றுக்கொள்ளத்தக்க உபாயத்தை மனனம் செய்யும் மஹாநுபாவரே!

பவந்தமேவ – திருமேனியழகு நீர்மை எளிமை முதலிய குணங்களால் பூர்ணரான தேவரீரையே,

நீரந்த்ரம் – இடைவிடாமல்,

பஸ்யந் – கண்டுகொண்டும்,

வஸ்யேந் சேதஸா – (தேவரீரின்னருளால் அடியேனுக்கு) வசப்பட்ட மநஸ்ஸுடன்,

த்வாமேவ – ஸ்தோத்ரம் செய்யத்தக்க தேவரீரையே,

முஹூ – அடிக்கடி, 

கீர்த்தயந் – ஸ்தோத்ரம் செய்துகொண்டும், (அஹம் – அடியேன்) (12)

த்வத் அந்ய விஷய ஸ்பர்ஸ விமுகை – தேவரீரைவிட வேறாகிய ஸப்தாதி விஷயங்களைத் தொடுவதில் பராமுகமான (பகைமைபூண்ட),

அகில இந்த்ரியை – கண், மூக்கு முதலிய ஜ்ஞாநேந்த்ரியங்களென்ன, வாக்கு முதலான கருமேந்த்ரியங்களென்ன, இவற்றாலே

அஸஹ்யாநாம் – பொறுக்கமுடியாத,

பவது:க்காநாம் – பிறவியினாலுண்டாகும் து:க்கங்களுக்கு,

அநாஸ்பதம் – இருப்பிடமாகாதவனாக, பவேயம் – ஆகக்கடவேன். (13)

விஷயமாகக் கொள்ளாமையினால் பிறவித் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க வேண்டும்.

இங்ஙனமிருக்கும்படி தேவரீர் அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று.

கண், காது, கை, கால் முதலிய ஜ்ஞாநேந்த்ரிய கர்மேந்த்ரியங்களனைத்தையும் பகவத் பாகவதாசார்ய கைங்கர்யங்களிலேயே உபயோகிக்க வேண்டும். லௌகீக நீச விஷயங்களில் செலுத்தக்கூடாதென்பது சாண்டில்ய ஸ்ம்ருதி, பரத்வாஜ பரிசிஷ்டம் முதலிய தர்மசாஸ்த்ர க்ரந்தங்களில் பரக்கக்கூறப்பட்டுள்ளது. விரிப்பிற்பெருகுமென்று விடப்பட்டது.

இதுவரையில் இந்த வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு உபோத்காதமாகும். உபோத்காதம் = முன்னுரை.

இதுதன்னில் மேலே சொல்லப்போகிற ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய அபிகமநம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து அம்ஸங்களில் – இஜ்யை தவிர்ந்த மற்ற நான்கும் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

அபிகமநமாவது எம்பெருமானை ஸேவிப்பதற்காக எதிர்கொண்டு செல்வது.

இது ‘பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம்’ (2) என்று ஜகத்பதியான அழகியமணவாளனை ஸேவிக்கக் கோயிலுக்கு மாமுநிகள் செல்லுவது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

உபாதாநமாவது – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தல்.

இது ‘ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யத் நாஸ்தீதி நிஸ்சயாத் – இமம் ஜநம் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம்’ (11) என்று பரமாத்மாவுக்கு – ஜீவாத்மாவைத் தொண்டனாக்கி அவனைப் பெறுதலே ப்ரயோஜநமென்று அறுதியிட்டு, அதற்காக மாமுநிகள் தம்மை ஏற்றுக் கொள்வதற்கு எழுந்தருளல் கூறப்பட்டதனால், மாமுனிகள் எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய எறும்பியப்பாவை ஸ்வீகரிப்பதாகிற உபாதாநம் ஸூசிப்பிக்கப்பட்டது.

ஸ்வாத்யாயமாவது – வேத மந்த்ரங்களை ஒதுதல்.

இது ‘மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம்’ (9) என்று – வேத மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் ஸ்புரித தசைகிற அதரத்தை யுடைமை கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

யோகமென்பது பகவத் விஷயத்தைப் பற்றிய த்யானமாகும்.

இது ‘ததர்த்த தத்வ நித்யாந ஸந்நத்த புலகோத்கமம்’ (9) என்று அந்த த்வயமந்திரத்தின் உண்மைப் பொருளாகிய பிராட்டி பெருமாள் முதலிய பொருளையாவது, பகவத் ராமாநுஜமுநிகளையாவது த்யானம் செய்வது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது.

இங்ஙனம் முற்கூறிய ஐந்தில் நான்கு அம்ஸங்கள் குறிக்கப்பட்டனவாகக் கொள்க.

ஆக, இவ்வுபோத்காதம் மேலுள்ள நூலுக்குச் சுருக்கமாக அமைந்ததென்க. ‘

எம்பெருமானை எதிர் கொண்டும் எம்பெருமானை ஆராதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தும், ஆராதனம் செய்தும், வேத மந்த்ராத்யயனம் செய்தும், வேத மந்த்ரார்த்தத்தை த்யானம் செய்தும் இப்படிப்பட்ட ஐந்து அம்ஸங்களினால் போதை நற்போதாகப் போக்கவேண்டும்’ என்று பரத்வாஜ முனிவர் பணித்தது காணத்தக்கது.

—————-

பூர்வ திநசர்யை – 14
பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ் ஸமுபஸ்திதே |
ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குரு பரம்பராம் ||

பதவுரை:-

பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில்,

யாமிந்யா – இரவினுடைய,

பஸ்சிமே யாமே – கடைசியான நாலாவது யாமமானது,

ஸமுபஸ்திதே ஸதி – கிட்டினவளவில், (மாமுனிகள்)

ப்ரபுத்ய – தூக்கம் விழித்து,

பராம் – உயர்ந்த,

குரு பரம்பராம் – எம்பெருமான் தொடக்கமாக தம்முடைய ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளை முடிவாகவுள்ள ஆசார்யர்களின் தொடர்ச்சியை,

ஸரணம் கத்வா – த்யானித்துச் ஸரணம் புகுந்து…

எம்பெருமானாகிய ஸித்தோபாயத்தை (ஆசார்ய பர்யந்தமாக) மோக்ஷோபாயமென்று பற்றும் அதிகாரிக்கு ஸர்வதர்மங்களையும் விட்டுவிடுதலை அங்கமாகக் கண்ணபிரான் கீதை சரமஸ்லோகத்தில் விதித்திருந்தபோதிலும்,

நித்யகர்மாநுஷ்டானத்தை பகவத் கைங்கர்யரூபமாகவோ, உலகத்தாரை அநுஷ்டிக்கச் செய்வதாகிற லோகஸங்க்ரஹத்திற்காகவோ பெரியோர்கள் செய்தே தீரவேண்டுமென்னும் ஸித்தாந்தத்தை அநுஸரித்து,

பரம காருணிகரான மாமுனிகள் முற்கூறியபடி அபிகமனம், இஜ்யை முதலான – ஐந்து காலங்களில் செய்யத்தக்க ஐந்து கருமங்களையும் பகவத் கைங்கர்யாதிரூபமாக நாள்தோறும் அநுஷ்டித்து வருவதனாலும்,

‘குருவின் நித்யகர்மாநுஷ்டானங்களையும் ஸிஷ்யன் அநுஸந்திக்கவேண்டும்’ என்னும் ஸாஸ்த்ரத்தை உட்கொண்டும்,

ஆசார்ய பக்தியை முன்னிட்டும் இவ்வெறும்பியப்பா மாமுனிகளைப் பற்றிய திநசர்யா ப்ரபந்தத்தை அருளிச் செய்கிறார்.

ததீயாரதன காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பங்க்தியைப் பாவநமாக்குவது – பங்க்தி பாவநராகிய மாமுனிகளைப் பற்றிய இந்நூலென்பது முன்பே கூறப்பட்டது நினைக்கத் தக்கது.

மேல் ஸ்லோகத்தில் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் சொல்லப்படுவதனால் இக்குருப்பரம்பராநுஸந்தானம் அதற்கு அங்கமாக நினைக்கத்தக்கது;

குரு பரம்பரையை த்யானம் செய்யாமல் ரஹஸ்யத்ரயாநுஸந்தானம் கூடாதாகையால் என்க.

இங்கு குருபரம்பரை என்பது – பரமபதத்தில் ஆசார்யப்ரீதிக்காகப் பண்ணும் பகவதனுபவமாகிய மோக்ஷமொன்றையே புருஷார்த்தமாகவும், ஆசார்ய பர்யந்தமாக எம்பெருமான் ஒருவனையே அதற்கு உபாயமாகவும் உபதேசிக்கிற நம்முடைய ஆசார்யர்களின் பரம்பரையேயாகும்.

————–

பூர்வ திநசர்யை – 15
த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் |
பர வ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச ||

பதவுரை:-

தத்த்வ யாதாத்ம்ய தர்ப்பணம் – ஜீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய,

ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும்,

த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து,

பர வ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான,

பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய,

ப்ரகாராந் – ஐந்து நிலைகளை,

ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

ஜீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன – ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை, அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை, அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும்,

இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை – த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும்,

கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும்

இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது.

எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன

(1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை;

(2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை;

(3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை;

(4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை;

(5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும்.

இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு.

பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க.

இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள் பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று.

————

பூர்வ திநசர்யை – 16
தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: |
யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா ||

பதவுரை:-

தத: – அதற்குப்பின்பு,

ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில்,

ஸ்நாத்வா – நீராடி,

பௌர்வாஹ்ணிகீ: – காலையில் செய்யவேண்டிய,

க்ரியா: – ஸுத்தவஸ்த்ரம் தரித்தல், ஸ்ந்த்யாவந்தனம் செய்தல் முதலிய காரியங்களை,

யதீந்த்ர சரணத்வந்த்வ ப்ரவணேந ஏவ – யதிராஜரான எம்பெருமானாருடைய திருவடியிணையில் தமக்குள்ள பரமபக்தியொன்றையே கொண்ட,

சேதஸா – மனஸ்ஸுடன்,

க்ருத்வா – செய்து.

ப்ரத்யுஷ: – அருணோதயகாலம். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள நான்கு நாழிகைக் காலமாகும்.

இக்காலம் முன்பு கூறப்பட்ட – இரவின் நான்காவது யாமத்தின் கண் உள்ள ஏழரை நாழிகையில் முதல் மூன்றரை நாழிகை கழிந்தவுடன் பின்பு உண்டான நான்கு நாழிகைகாலமாகும்.

இந்த ஸ்லோகத்தில் கூறிய ஸ்நாநத்திற்கும், முன் ஸ்லோகத்தில் குறிக்கப்பட்ட குருபரம்பரை, எம்பெருமானுடைய ஆறுநிலைகள் ஆகிய இவற்றின் த்யானத்திற்கும் இடையில் நேரும் தேஹஸுத்தி தந்தஸுத்தி ஆகிய இவற்றையும் கொள்ளல் தகும்.

முன்பு ஆறு, ஏழு, எட்டாம் ஸ்லோகங்களில் குறிப்பிட்டபடி காஷாயங்களை உடுத்துதல், திருமண்காப்பு அணிதல், தாமரை மணிமாலை, துளஸிமணி மாலைகளை தரித்தல் ஆகியவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்வது உசிதம்.

ஆசார்யனையே எல்லாவுறவுமுறையாகவும் கொண்டுள்ள ஸிஷ்யர்கள், ‘எம்பெருமானே ஆசார்யனாக அவதரிக்கிறான்’ என்ற சாஸ்த்ரத்தின்படி ஆசார்ய ரூபத்தில் உள்ள எம்பெருமானுடைய திருமுக மலர்ச்சிக்காகவே நித்ய நைமித்திக கருமங்களாகிய கைங்கர்யங்களைச் செய்ய வேண்டியிருப்பதனால், மாமுனிகள் அவற்றை எம்பெருமானார் திருவடிகளிலுண்டான பக்தி நிறைந்த மனஸ்ஸுடன் அநுஷ்டித்தமை இங்குக் குறிக்கப்பட்டது.

————–

பூர்வ திநசர்யை – 17
அத ரங்க நிதிம் ஸம்யக் அபிகம்ய நிஜம் ப்ரபும் |
ஸ்ரீநிதாநம் ஸநைஸ் தஸ்ய ஸோத யித்வா பத த்வயம் ||

பதவுரை:-

அத: – காலை அநுஷ்டாநங்களை நிறைவேற்றிவிட்டுக் காவேரியிலிருந்து மடத்துக்கு எழுந்தருளிய பிறகு,

நிஜம் – தம்முடைய ஆராதனைக்கு உரியவராய்,

ப்ரபும் – ஸ்வாமியான,

ரங்கநிதிம் – (தமது மடத்தில் எழுந்தருளியுள்ள) ஸ்ரீரங்கத்துக்கு நிதி போன்ற அரங்கநகரப்பனை,

ஸம்யக் அபிகம்ய – முறைப்படி பக்தியோடு கிட்டித் தண்டன் ஸமர்ப்பித்து,

ஸ்ரீநிதாநம் – கைங்கர்யமான செல்வத்துக்கு இருப்பிடமான,

தஸ்ய பதத்வயம் – அப்பெருமானுடைய திருவடியிணையை,

சநை: – பரபரப்பில்லாமல் (ஊக்கத்தோடு)

சோதயித்வா – தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து (திருவாராதனம் செய்து).

சாண்டில்ய ஸ்ம்ருதியில், ஸ்நாநத்துக்குப் பின்பு பகவானை அபிகமனம் செய்வது (கிட்டுவது) பற்றிக் கூறப்பட்டுள்ளது.

‘பகவானை அபிகமனம் செய்யவேண்டும். (எப்படியெனில்) நன்றாக நீராடித் திருமண் காப்புகளை யணிந்து, கால்களை அலம்பி, ஆசமநம் செய்து, பொறிகளையும் மனத்தையும் அடக்கி, இரண்டந்திப் பொழுதுகளிலும், தினந்தோறும் முறையே காலையில் சூரியன் தோன்றும் வரையிலும், இரவில் நக்ஷத்திரங்கள் தோன்றும் வரையிலும் மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டே யிருந்து அதன் பிறகு பகவானை அபிகமனம் (திருவாராதனத்திற்காகக் கிட்டுதல்) செய்யவேண்டும்’ என்பது சாண்டில்ய ஸ்ம்ருதி வசநம்.

இங்கு ரங்கநிதியின் திருவடி ஸோதனம் கூறியது திருவாராதனம் முழுவதற்கும் உபலக்ஷணமென்று கொள்ளல் தகும்.

இங்கும் முன்புகூறிய யதீந்த்ரசரண பக்தி தொடருவதனால், தம்முடைய அரங்க நகரப்பனுக்குத் திருவாராதனம் செய்வதும், தம்முடைய ஆசார்யராகிய எம்பெருமானார்க்கு, அவ்வப்பன் உகந்தபெருமானாகையாலே என்று கொள்ளல் பொருந்தும்.

பரதனுடைய பக்தரான ஸத்ருக்னாழ்வான், பரதனுக்கு ஸ்வாமியாகிய ஸ்ரீராமபிரானை, பரதாழ்வானுடைய உகப்புக்காகவே நினைத்துக் கொண்டிருந்தது போல் இது தன்னைக் கொள்க.

———–

பூர்வ திநசர்யை – 18
ததஸ்தத் ஸந்நிதி ஸ்தம்ப மூல பூதல பூஷணம் |
ப்ராங்முகம் ஸுகமாஸீநம் ப்ரஸாத மதுரஸ்மிதம் ||

பதவுரை:-

தத: – அரங்கநகரப்பனுக்குத் திருவாராதனம் செய்தபின்பு,

தத்ஸந்நிதி ஸ்தம்பமூலபூதலபூஷணம் – அப்பெருமானுடைய ஸந்நிதியிலுள்ள கம்பத்தின் கீழுள்ள இடத்திற்கு அணிசெய்யுமவராய்,

ப்ராங்முகம் – கிழக்கு முகமாக,

ஸுகம் – ஸுகமாக (மனத்தின் ஒருமைப்பாட்டிற்கு அநுகூலமாக),

ஆஸீநம் – உட்கார்ந்திருக்குமவரும்,

ப்ரஸாத மதுரஸ்மிதம் – மனத்திலுள்ள தெளிவினால் உண்டான இனிய புன்சிரிப்பையுடையவருமாய்…

முன் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பகவதாராதனத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய த்வயமந்த்ர ஜபத்தையும் உபலக்ஷண வகையால் கொள்க;

அதுவும் நித்யாநுஷ்டானத்தில் சேர்ந்ததாகையால். ‘முக்காலங்களிலும் பெருமாள் திருவாராதனம் செய்த பிறகு, சோம்பலில்லாதவனாய்க் கொண்டு, ஆயிரத்தெட்டுதடவைகள் அல்லது நூற்றெட்டுத் தடவைகள் அதுவும் இயலாவிடில் இருபத்தெட்டு தடவைகள் மந்த்ரரத்நமென்னும் த்வய மந்த்ரத்தை அர்த்தத்துடன், தன் ஜீவித காலமுள்ளவரையில் அநுஸந்திக்க வேண்டும் என்று பராசரர் பணித்தது காணத்தக்கது.

இப்படி மந்த்ர ஜபம் செய்யும்போதும் மாமுனிகளின் மனம் ஆசார்யரான எம்பெருமானாருடைய திருவடிகளில் ஒன்றி நிற்குமென்பதையும் நினைவில் கொள்ளவேணும்;

மாமுனிகள் ஆசார்ய பரதந்த்ரராகையால் என்க.

மாமுனிகள் திருவுள்ளத்தில் கலக்கமேதுமின்றித் தெளிவுடையவராகையால், அவரது திருமுகத்தில் சிரிப்பும் அழகியதாயிருக்கிறதென்றபடி.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமிறே.

நற்காரியங்களைச் செய்யும் போது கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ இருந்து செய்யவேணுமென்று சாஸ்த்ரம் சொல்லுவதனால், ‘ப்ராங்முகம் ஸுகமாஸீநம்’ எனப்பட்டது.

——-

பூர்வ திநசர்யை – 19
ப்ருத்யை: ப்ரிய ஹிதைகாக்ரை: ப்ரேம பூர்வ முபாஸிதம் |
தத் ப்ரார்த்தநா நுஸாரேண ஸம்ஸ்காராந் ஸம்விதாய மே ||

பதவுரை:-

ப்ரயஹித ஏகாக்ரை: – (பகவதாராதநத்திற்காக) ஆசார்யனுக்கு எப்பொருள்களில் ப்ரீதியுள்ளதோ, ஆசார்யனுக்கு வர்ண, ஆஸ்ரமங்களுக்குத் தக்கபடி எப்பொருள்கள் ஹிதமோ (நன்மை பயப்பனவோ) அப்பொருள்களை ஸம்பாதிப்பதில் ஒருமித்த மநஸ்ஸையுடைய,

ப்ருத்யை: – கோயிலண்ணன் முதலான ஸிஷ்யர்களாலே,

ப்ரேமபூர்வம் – அன்போடுகூட,

உபாஸிதம் – முற்கூறியபடி ப்ரியமாயும், ஹிதமாயுமுள்ள பகவதாராதனத்திற்கு உரிய பொருள்களைக் கொண்டுவந்து ஸமர்ப்பித்துப் ப்ரிசர்யை (அடிமை) செய்யப் பெற்றவராய்க் கொண்டு,

தத் ப்ரார்த்தநா அநுஸாரேண – அச்சிஷ்யர்களுடைய வேண்டுகோளை அநுஸரிக்க வேண்டியிருப்பதனால் (அவர்களுடைய புருஷகாரபலத்தினால்),

மே – (முன் தினத்திலேயே தம் திருவடிகளில் ஆஸ்ரயித்த) அடியேனுக்கு,

ஸம்ஸ்காராந் – தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம், யாகம் என்ற ஐந்து ஸம்ஸ்காரங்களை,

ஸம்விதாய – நன்றாக (ஸாஸ்த்ர முறைப்படியே) ஒருகாலே செய்து…

முறைப்படி திருவாராதனம் செய்து, தீர்த்தமாடி அநுஷ்டாநம் முடித்து வந்த ஸிஷ்யனை அழைத்து, அவன் கையில் கங்கணம் கட்டி முறைப்படியே பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்யக் கடவன்’ என்றுள்ள பராஸரவசநத்தோடு பொருந்தும்.

அடுத்த ஸ்லோகத்தில் அப்பா செய்யும் யாகமாக (தேவ பூஜையாக) மாமுனிகளின் திருவடிகளைத் தலையில் தரித்தலும்,

அதற்கு அடுத்த ஸ்லோகத்தில் த்வய மந்த்ரோபதேஸமும், கூறப்படுகிறபடியால்

இந்த ஸ்லோகத்தில் தாபமென்கிற சங்கு, சக்கரப் பொறிகளை இரண்டு தோள்களில் ஒற்றிக்கொள்ளுதலும், புண்ட்ரமென்னும் பன்னிரண்டு திருமண் காப்புக்களை அணிதலும், ராமாநுஜதாஸன் முதலிய நாமந்தரித்தலும் ஆகிய மூன்று ஸம்ஸ்காரங்களே கொள்ளத்தக்கன.

ஸம்ஸ்காரமாவது – ஒருவனுக்கு ஸ்ரீவைஷ்ணவனாகும் தகுதி பெறுவதற்காக ஆசார்யன் செய்யும் நற்காரியம். ஸம்ஸ்காரம் – பண்படுத்தல் – சீர்படுத்தல்.

—————

பூர்வ திநசர்யை – 20
அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் |
திவ்யம் பத த்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம ||

பதவுரை:-

அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால்,

அபிஷேசந பூர்வகம் – அடியேனை (துன்பமென்னும் தாபம் தீரும்படி) முதலில் முழுக்காட்டி அப்புறமாக,

தீர்க்கம் – வெகுநேரம்,

ப்ரணமத: – பக்தியினால் தெண்டனிட்டு அப்படியே கிடக்கிற,

மம – அடியேனுக்கு,

திவ்யம் – மிகவும் உயர்ந்த,

பதத்வயம் – திருவடியிணையை,

தத்வா – தலையில் வைத்து.

மாமுனிகள் – தம்முடைய தாபமெல்லாம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்து, ஒரு தடவை தண்டம் ஸமர்ப்பித்து பக்திப் பெருக்கினால் அப்படியே வெகு நேரம் கிடக்கிற தம்முடைய ஸிரஸ்ஸில் திருவடிகளை வைத்தருளினாரென்கிறார்.

ஒருவன் துன்பத்தால் நடுங்கா நிற்க, அது கண்டு தானும் துன்பமுற்று நடுங்குதலே அநுகம்பா என்பது. தயை யென்பது இதன் பொருள். ‘க்ருபாதயா அநுகம்பா’ என்ற அமர கோஸம் காணத் தக்கது.

‘க்ருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரம் ஒன்றேயாக இருந்தாலும் அது பத்து அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்தாலொத்த பெருமையைப் பெறும். பத்துத் தடவைகள் அஸ்வமேத யாகம் செய்தவன் அதன் பயனாக ஸ்வர்க்க போகத்தை அநுபவித்துவிட்டு மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்புவது நிஸ்சயம். க்ருஷ்ண நமஸ்காரம் செய்தவனோ என்றால் பரமபதம் சென்று, மறுபடியும் இவ்வுலகில் பிறவியெடுக்க மாட்டான் (விஷ்ணுதர்மம் 4-36) என்பது இங்கு கருதத்தக்கது.

பகவானுக்குச் செய்யும் ப்ரணாமமே இப்படியானால், ஆசார்யனைக் குறித்துப் பண்ணும் ப்ரணாமத்தைத் தனியே எடுத்துக் கூற வேண்டியதில்லை.

திவ்யம் பதத்வயம் – பகவானுடைய திருவடியிணையை விட உயர்ந்தது ஆசார்யனுடைய திருவடியிணையென்றபடி.

ஸம்ஸார மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான காரணமாகிய பகவத் ஸம்பந்தத்தைவிட, மோக்ஷத்திற்கே காரணமான ஆசார்ய ஸம்பந்தம் உயர்ந்ததென்று கூறும் ஸ்ரீவசந பூஷணம் (433 சூர்ணிகை) ஸேவிக்கத் தக்கது

ஈஸ்வர சம்பந்தம் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆசார்ய சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –சூரணை-433-

———–

பூர்வ திநசர்யை – 21
ஸாக்ஷாத் பலைக லக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ர ரத்நம் ப்ரயச் சந்தம் வந்தே வர வரம் முநிம் ||

பதவுரை:-

ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி

பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக,

மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை,

ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற,

வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை,

வந்தே – வணங்குகிறேன்.

க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும்.

ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும்

இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து, ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று.

இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்;

நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க.

குரு பரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால் ‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்ய பரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று, அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து.

ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது,

இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று, எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று.

இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில் ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது

————————–

பூர்வ திநசர்யை – 22
ததஸ் ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர் நித்யாநபாயிபி: |
ஸ்ரீரங்க மங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் ||

பதவுரை:-

தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு,

ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய்,

புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய்,

புருஷம் – புருஷோத்தமராகிய பெரியபெருமாளை,

த்ரஷ்டும் – ஸேவிப்பதற்காக,

நித்ய அநபாயிபி: ப்ருத்யை: ஸார்த்தம் – ஒருகணமும் விட்டுப்பிரியாத கோயிலண்ணன் முதலிய அடியவர்களுடன் கூடி,

விநிர்க்கத்ய – தமது மடத்திலிருந்து புறப்பட்டு.

இயற்கையாகவே பெருமையைப் பெற்ற பொருளைக் காட்டுகிற ஸ்ரீஸப்தம் இங்கு ரங்க நகரத்திற்கு அடைமொழியாயிற்று.

ஸ்ரீயாகிற ரங்கம் – ஸ்ரீரங்கமென்றபடி. பெரியபெருமாள் பள்ளி கொண்டதனால் அரங்கத்திற்குப் பெருமை ஏற்படவில்லை. பின்னையோவென்னில் எல்லார்க்கும் பெருமையை உண்டாக்கும் பெரியபெருமாளும் தமக்கு ஒரு பெருமையைத் தேடிக்கொள்வதற்காகவே வந்து சேரும்படிக்கீடாக இயற்கையான பெருமை வாய்க்கப் பெற்றது அரங்கநகரமென்பது இவ் வடைமொழிக்குக் கருத்து.

‘க்ஷீராப்தேர் மண்டலாத் பாநோர் யோகிநாம் ஹ்ருதயாதபி, ரதிம் கதோஹரிர்யத்ர தஸ்மாத் ரங்கமிதி ஸ்ம்ருதம்’ (எம்பெருமான் திருப்பாற்கடல், ஸூர்ய மண்டலம், யோகிகளின் ஹ்ருதயம் ஆகியவற்றை விட அதிகமான ஆசையைப் பெற்ற இடமாதல் பற்றி இந்நகரம் ரங்கமென்று கருதப்பட்டது) என்ற ஸ்லோகம் இங்கு நினைக்கத் தக்கதாகும்.

இக் கருத்து எம்பெருமானுடைய நினைவைத் தழுவிக் கூறப்பட்டதாகும்.

நம்முடைய நினைவின்படி – மேல் ‘ஸ்ரீரங்கமங்களம்’ என்று ஸ்ரீரங்கநகருக்கும் அணிசெய்பவராக – பெருமையைத் தருமவராக எம்பெருமான் கூறப்படுவதும் கண்டு அநுபவிக்கவுரியதாகும்.

இயற்கையாகவே பெருமைபெற்ற இரண்டு பொருள்களும் தம்மில் ஒன்று மற்றொன்றுக்குப் பெருமை தருமவையாகவும் உள்ளனவென்பது உண்மையுரையாகும்.

(1) புருஷ: – புரதி இதி புருஷ: என்பது முதல் வ்யுத்பத்தி. ‘புர-அக்ரக மநே’ என்ற தாதுவடியாகப் பிறந்த புருஷஸப்தத்திற்கு உலகமுண்டாவதற்கு முன்பே இருந்த எம்பெருமான் பொருளாகையால் அப்பெருமானுக்கு உண்டான ஜகத் காரணத்வம் இந்த வ்யுத்பத்தியாலே குறிக்கப்பட்டது.

(2) புரீ ஸேதே இதி புருஷ: என்பது இரண்டாவது வ்யுத்பத்தி. ஜீவாத்மாக்களுடைய ஸரீரத்தில் (இதய குகையில்) தங்கியிருப்பவனென்பது இதன் பொருளாகையால் அந்தர்யாமித்வம் இதனால் குறிக்கப்பட்டது.

(3) புரு ஸநோதி இதி புருஷ: என்பது மூன்றாவது வ்யுத்பத்தி. அதிகமாகக் கொடுப்பவனென்பது இதற்குப் பொருளாகையால், கேட்பவர் கேட்கும் மற்ற பொருள்களோடு தன்னோடு வாசியில்லாமல் எல்லாவபேக்ஷிதங்களையும் தந்தருளும் ஔதார்யம் இதனால் குறிக்கப்பட்டது.

இம்மூன்று பொருள்களும் அழகியமணவாளப் பெருமாள் திறத்தில் பொருந்துமவையேயாம்.

ஆதி ஸேஷன் மீது பள்ளிகொண்டிருப்பது பரம்பொருளின் லக்ஷணமென்பர் பெரியோர்.

ஸ்ரீரங்கமங்களமாய் புருஷ ஸப்த வாச்யனாய் புஜகஸயனனாயிருக்கிற எம்பெருமானை மணவாளமாமுனிகள் ஸேவிப்பது எம்பெருமானாருடைய திருவுள்ளவுகப்புக்காகவேயன்றி வேறொன்றுக்காகவல்ல என்பதும் இங்கு நினைக்கத்தக்கது.

‘நித்யநபாயிபி: ப்ருத்யை:’ – ஒருக்ஷணமும் விட்டு நீங்காத ஸிஷ்யர்கள் என்றபடி.

ஒரு மனிதனை விட்டு நீங்காதது அவனுடைய நிழலே யன்றி வேறொன்றில்லை யென்பர் உலகோர்.

நிழல் கூட இருளில் மனிதனைவிட்டு நீங்கும்.

மாமுனிகளின் ஸிஷ்யர்கள் அவரை இருளிலும் விட்டு நீங்காத பெருமையைப் பெற்றவர்கள் என்கிறார் ஸ்ரீ  அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

இதனால் மாமுனிகள் விஷயத்தில் ஸிஷ்யர்கள் வைத்திருக்கும் பக்தியின் பெருமை கூறப்பட்டது.

———–

பூர்வ திநசர்யை – 23
மஹதி ஸ்ரீமதி த்வாரே கோபுரம் சதுராநநம் |
ப்ரணிபத்ய ஸநைரந்த: ப்ரவிஸந்தம் பஜாமி தம் ||

பதவுரை:-

ஸ்ரீமதி – ஐஸ்வர்யம் நிறைந்ததும்,

மஹதி – மிகப்பரந்ததுமான,

த்வாரே – கோவிலுக்குச் செல்லும் வழியில்,

சதுராநநம் – நான்முகனென்று சொல்லப்படுகிற,

கோபுரம் – கோபுரத்தை,

ப்ரணிபத்ய – மனமொழிமெய்களால் வணங்கி,

ஸநை: – மெல்ல (கோபுரத்தின் அழகை அநுபவித்து மகிழ்ந்திருக்கும் தம் கண்களை வருத்தப்பட்டு மெல்லத் திருப்பி)

அந்த: – கோவிலுக்குள்ளே,

ப்ரவிஸந்தம் – எழுந்தருள்கின்ற,

தம் – அந்த மணவாள மாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

ஸ்ரீமதி, மஹதி என்பன நான்முகன் கோட்டைவாசலென்று ப்ரஸித்தமான கோவில் வாசலுக்கு அடைமொழிகள்.

ப்ரஹ்மாதிகளும் இவ்வாசலில் புகுந்த மாத்திரத்தால் ஸகலைஸ்வர்யங்களையும் பெறும்படிக்கீடான ஐஸ்வர்யம் மலிந்திருக்கப் பெற்றுள்ளமையும், ஸ்ரீரங்கநாதன் தன்னடியாரெல்லாரோடும் கூடி இவ்வாசலில் ப்ரவேஸித்தாலும் நிரப்ப முடியாதபடி இருக்கும்.

இதன் விஸாலத்தன்மையும் முறையே இவற்றால் குறிக்கப்படுகின்றன.

சதுராநநம் கோபுரம் – இக்கோபுரம் நான்முகன் கோபுரமென்று வழங்கப்படுகிறது.

தெண்டன் ஸமர்ப்பிப்பதை மனத்தினால் நினைத்தும், ‘அடியேன் தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்’ என்று வாயால் சொல்லியும்,

ஸாஷ்டாங்கமாகத் தரையில் படுத்தும் தெண்டனிடுவதை ‘ப்ரணிபத்ய’ என்ற சொல் தெரிவிக்கிறது

————-.

பூர்வ திநசர்யை – 24
தேவீ கோதா யதிபதி ஸடத்வேஷிணௌ ரங்க ஸ்ருங்கம்
ஸேநாநாதோ விஹக வ்ருஷப: ஸ்ரீநிதிஸ் ஸிந்து கந்யா |
பூமா நீளா குரு ஜந வ்ருத: புருஷச் சேத்யமீஷாம் அக்ரே நித்யம் வரவர முநேரங்க்ரி யுக்மம் ப்ரபத்யே ||

பதவுரை:-

தேவீ கோதா – தெய்வத்தன்மை வாய்ந்த ஆண்டாள்,

யதிபதி சடத்வேஷிணௌ – யதிராஜாரான எம்பெருமானார் சடகோபராகிய நம்மாழ்வார்,

ரங்கஸ்ருங்கம் – ஸ்ரீரங்கமென்னும் பெயர்பெற்ற கர்ப்பக்ருஹத்தினுடைய மேற்பகுதியான விமாநம்,

ஸேநாநாத: – ஸேனைமுதலியார்,

விஹகவ்ருஷப: – பக்ஷிராஜரான கருடாழ்வார்,

ஸ்ரீநிதி – ஸ்ரீமஹாலக்ஷ்மீக்கு நிதிபோன்ற ஸ்ரீரங்கநாதன்,

ஸிந்துகந்யா – திருபாற்கடலின் பெண்ணான ஸ்ரீரங்கநாச்சியார்,

பூமா நீளா குருஜந வ்ருத: – பூமிபிராட்டியாரென்ன, பெரியபிராட்டியாரென்ன, நீளாதேவியென்ன, நம்மாழ்வார் முதலிய பெரியோர்களென்ன என்றிவர்களால் சூழப்பட்ட, புருஷ:

 – பரமபதநாதன்,

இதிஅமீஷாம் அக்ரே – என்னும் இவர்கள் அனைவருடையவும் முன்னிலையில்,

வரவரமுநே: – மணவாளமாமுனிகளுடைய, அங்க்ரியுக்மம் – திருவடியிணையை,

நித்யம் – தினந்தோறும்,

ப்ரபத்யே – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

மணவாளமாமுனிகள் நான்முகன் கோட்டைவாயில் வழியாக உள்ளே ப்ரதக்ஷிணமாக எழுந்தருளும் க்ரமத்தில்

ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், ஸ்ரீரங்கவிமாநம், ஸேனைமுதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார் இவர்களையும்,

பின்பு பரமபதநாதன் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ள் ஸ்ரீபூமிநீளைகளோடும் நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்களனைவரோடும் கூடிய பரமபதநாதனையும் ஸேவித்துவிட்டு எழுந்தருளும்போது,

ஒவ்வொரு ஸந்நிதி வாசலிலும் தாம் அவர்களை ஸேவியாமல் மணவாளமாமுனிகளை ஸேவிப்பதாக எறும்பியப்பா இதனால் அருளிச் செய்கிறார்.

ஏன்? அவர்களை இவர் ஸேவிப்பதில்லையோ என்றால் அவர்களை இவர் தமக்கு ருசித்தவர்களென்று ஸேவியாமல், தம்முடைய ஆச்சார்யராகிய மணவாள மாமுனிகளுக்கு இஷ்டமானவர்களென்ற நினைவோடே ஸேவிக்கிறாராகையால், அப்படி இவர் அவர்களை ஸேவிப்பதைப் பற்றி இங்குக் குறிப்பிடவில்லை.

எறும்பியப்பா தமக்கு ருசித்தவரென்ற காரணத்தினால் ஸேவிப்பது மாமுனிகளொருவரையேயாகும்;

இவர் ஆசார்யபரதந்த்ரராகையால் என்க.

‘எம்பெருமானை ஸேவிக்கும்போது அர்ச்சாரூபிகளாக எழுந்தருளியுள்ள அவனுடைய பரிவாரங்களையும் பக்தர்களையும் ஆசார்யர்களையும் பரமபக்தியோடு நன்றாக ஸேவிக்கவேண்டும்’ என்கிற பரத்வாஜவசனத்தையொட்டி,

மாமுனிகள் ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்கும்போது ஆண்டாள் தொடக்கமான பக்தஜநங்களையும் ஸேனைமுதலியார் தொடக்கமான பரிவாரங்களையும் நன்றாக ஸேவித்தது இதனால் கூறப்பட்டது.

ஆண்டாள் ‘அஹம் ஸிஷ்யா ச தாஸீ ச பக்தா ச புருஷோத்தம!’ (புருஷ ஸ்ரேஷ்டரே! நான் உமக்கு ஸிஷ்யையாகவும், அடியவளாகவும், பக்தையாகவும் இருக்கிறேன்) என்று வராஹப் பெருமாளிடம் விண்ணப்பித்த பூமிதேவியின் அவதாரமாகையால் பக்தையாகவும், ஆழ்வார்கள் கோஷ்டியில் சேர்ந்தவளாகையால் குர்வீயாகவும் ஆவது காணத்தகும்.

ஸ்ரீபூமிநீளாதேவிகள், பெரிய பிராட்டியாராகிய ஸ்ரீரங்கநாச்சியார் இவர்கள் பத்நி வர்க்கத்தில் சேர்ந்தவர்கள்.

ஆக மணவாளமாமுனிகள் பத்நீ பரிஜந குரு ஜந ஸஹிதரான ஸ்ரீரங்கநாதனை மங்களாசாசனம் செய்து வருவதையும் தாம் அம்மாமுனிகளை அவர்களெதிரில் தினந்தோறும் ஸேவிப்பதையும் இதனால் கூறினாராயிற்று.

———–

மங்களாசாசனம் க்ருத்வா தத்ர தத்ர யதோசிதம் |
தாம்நஸ் தஸ்மாத்விநிஷ்க்ரம்ய ப்ரவிஸ்ய ஸ்வம் நிகேதநம் || 25

பதவுரை:-

தத்ர தத்ர – ஆண்டாள் தொடங்கி பரம்பதநாதன் முடிவான அந்தந்த அர்ச்சாவதார விஷயங்களில்,

மங்கள் ஆஸாஸநம் – (உள்ள குறைகளனைத்தும் நீங்கப்பெற்று) மேன்மேலும் எல்லையில்லாத மங்களங்கள் (நன்மைகள்) உண்டாக வேணுமென்னும் ப்ரார்த்தனையை,

யதோசிதம் – அவ்வவ்விஷயங்களில் தமக்கு உண்டான ப்ரீதிக்குத் தக்கபடி,

க்ருத்வா – செய்துவிட்டு ,

தஸ்மாத் தாம்ந – அந்த ஸந்நிதியிலிருந்து,

விநிஷ்க்ரம்ய – வருந்திப்புறப்பட்டருளி,

ஸ்வம்நிகேதநம் – தம்முடையதான மடத்திற்குள்,

ப்ரவிஸ்ய – ப்ரவேஸித்து (உட்புகுந்து)

கருத்துரை:-

மாமுனிகள் ஆண்டாள் முதலியவர்களின் ஸந்நிதிக்குச் செல்வது, அவர்களைச் சேவித்துத்

தாம் ஒரு பலனைப் பெறுவதற்காக அல்லாமல், அவர்கள்தமக்கு மங்களாஸாஸநம் செய்வதற்காகவேயாகையால்,

‘அவர்களைச் சேவித்து’ என்னாமல், அவர்களுக்கு மங்களாஸாஸனம் செய்து என்றார்.

மங்களாஸாஸநம் செய்வதும் முக்யமாக எம்பெருமானார்க்கேயாகையாலும்,

அவருடைய உகப்புக்காகவே மற்றுள்ளவர்களுக்கு மங்களாஸாஸநம் செய்வதனாலும்

மங்களாஸாஸநங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நெஞ்சில் கொண்டு, ‘

யதோசிதம்’ (அவரவர்களுக்குத் தக்கபடி) என்றருளிச்செய்தாரானார்.

‘அநக்நி: அநிகேத: ஸ்யாத்’ (ஸந்யாஸி அக்நியில் ஹோமம் செய்வதும், ஸ்திரமான வீடும் இல்லாதிருக்கக்கடவன்) என்று

ஸாஸ்த்ர விதியிருக்கச் செய்தேயும் ‘

ஸ்வம் நிகேதநம் ப்ரவிஸ்ய’ (தமது மடத்திற்கு எழுந்தருளி) என்று அவர் தமதாக ஒரு இருப்பிடத்தை இங்கே குறிப்பிட்டது

ஸ்ரீரங்கநாதன் மாமுனிகளுக்கென்னவே ஓரிடத்தை நியமித்து அதில் ஸ்திரமாக அவரை எழுந்தருளியிருக்கும்படி

ஆணையிட்டருளியதனால் குற்றத்தின் பாற்படாதென்று கருதவேண்டும்.

‘விநிஷ்க்ரம்ய’ = (ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதியிலிருந்து வருந்தி மிகமுயன்று புறப்பட்டு) என்றது,

அவ்வவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமையால், மடத்தில் செய்யவேண்டிய திருவாராதநம், க்ரந்த காலக்ஷேபம்

முதலிய கார்யங்களுக்காகத் திரும்பி எழுந்தருளவேண்டிய நிர்பந்தத்தைக் குறிப்பதாகக் கொள்க.-

——————-

பூர்வ திநசர்யை – 26
அத ஸ்ரீஸைலநாதார்யநாம்நி ஸ்ரீமதி மண்டபே |
ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்யநிவாஸிநம் ||

பதவுரை:-

அத – மடத்துக்கு எழுந்தருளியபின்பு,

ஸ்ரீஸைலநாதார்ய நாம்நி – ஸ்ரீஸைலநாதர் (திருமலையாழ்வார்) என்னும் தம்மாசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையின் திருநாமமுடையதாய், 

ஸ்ரீமதி – மிக்க ஒளியுடையதான,

மண்டபே – மண்டபத்தில்,

தத் அங்க்ரி பங்கஜ த்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம் – சித்ரரூபமாக எழுந்தருளியிருக்கும் அந்தத் திருவாய்மொழிப்

பிள்ளையுடைய திருவடித் தாமரையிணையின் நிழல் நடுவே எழுந்தருளியிருக்கிற,

(மாமுனிகளைத் தொழுகிறேனென்று மேல் ஸ்லோகத்தில் இதற்கு அந்வயம்)

தமது மடத்திலுள்ள காலக்ஷேப மண்டபத்திற்குத் ‘திருவாய்மொழிப் பிள்ளை’ என்ற தமது குருவின் திருநாமம் சாத்தி அதில் சித்ர வுருவாக அவரை எழுந்தருளப் பண்ணினார் மாமுனிகள்.

அந்தச் சித்திரத்தின் திருவடி நிழலில் தாம் வீற்றிருக்கிறார் என்க.

‘ஸ்ரீமதி மண்டபே’ மிக்க ஒளியுடைய மண்டபத்தில்.

இங்கு மண்டபத்திற்குக்கூறிய ஒளியாவது – பிள்ளைலோகாசார்யர் முதலிய பூர்வாசார்யர்களுடைய திருமாளிகையிலுள்ள ஸுத்தமான மண்ணைக் கொண்டு வந்து சுவர் முதலியவற்றில் பூசியதனாலுண்டான ஸுத்தியேயாகும்.

மஹான்கள் எழுந்தருளியிருந்த ஸ்தாநங்களில், அவர்களின் திருவடிகள் பட்ட மண் பரிஸுத்தமன்றோ ? அதனாலன்றோ இம்மண்டபத்திற்கு ஸுத்தியேற்படுவது.

இங்கு ‘ததங்க்ரி பங்கஜத்வந்த்வச்சாயா மத்ய நிவாஸிநாம்’ என்று ஷஷ்டி பஹுவசநாந்தமான பாடமும் காண்கிறது.

அப்பாடத்திற்கு – அத்திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிச் சாயையின் நடுவில் (தம்மைப்போல்) எழுந்தருளியிருக்கிற தமது ஸிஷ்யர்களுக்கு என்பது பொருள்.

இதற்கு மேல் ஸ்லோகத்தில் உள்ள ‘திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் வ்யாசக்ஷாணம் நமாமி தம்’ (திவ்ய ப்ரபந்தங்களின் ஸாரார்த்தங்களை உபதேஸித்துக் கொண்டிருக்கும் அம் மாமுனிகளை வணங்குகிறேன்) என்றதனோடு அந்வயம் கொள்ள வேண்டும்.

————

பூர்வ திநசர்யை – 27
தத்த்வம் திவ்யப்ரபந்தாநாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் |
ஸரஸம் ஸரஹஸ்யாநாம் வ்யாசக்ஷாணம் நமாமி தம் ||

பதவுரை:-

ஸம்ஸார வைரிணாம் – ஸரீரஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் பகைக்குமவையாய் (போக்கடிக்குமவையாய்)

ஸரஹஸ்யாநாம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் பொருள்களோடு கூடியவைகளுமான,

திவ்யப்ரபந்தாநாம் – ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களினுடைய,

ஸாரம் – ஸம்ஸாரத்தைப் போக்கத்தக்க மிக்க பலமுடைய,

தத்த்வம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மைநிலையான ‘ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும்’ என்னும் பொருளை,

ஸரஸம் – மிக்க இனிமையோடு கூடியதாக,

வ்யாசக்ஷாணம் – ஐயந்திரிபற விவரித்தருளிச்செய்கிற,

தம் – அம்மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

திவ்ய ப்ரபந்தங்கள் ஸரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்ற விஷயம்

‘மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே’ (திருவிருத்தம்-100)

‘செயரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே’ (திருவாய் 4-8-11) முதலிய பல ஸ்ருதிப் பாசுரங்களில் காணலாகும்.

முற்கூறிய ரஹஸ்யங்களுக்கும் – எம்பெருமான் ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவான் என்பது மேலெழுந்தவாறு தோன்றும் பொருளாகும்.

சிறிது ஆராய்ந்தவாறே, பாகவதர்களே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவர்கள் என்பது தோன்றும்.

மேலும் சற்று விமர்ஸித்தால் ஆசார்யனே ஸேஷியும், உபாயமும், ப்ராப்யமும் ஆவார் என்பது புலப்படும்.

ஆக, ரஹஸ்ய த்ரயத்துக்கும் முக்கிய நோக்கம் மூன்றாம் பொருளாகிய ஆசார்யனிடத்திலேயே ஆகுமென்பது ஆசார்ய நிஷ்டையில் ஊன்றிய ஸ்ரீமதுரகவிகள் முதலிய மஹான்களின் துணிபாகும்.

இங்கு மணவாளமாமுனிகள் யதீந்த்ர ப்ரவணர் – எம்பெருமானாரிடத்தில் ஊன்றியவராகையால், அவரையே ஸேஷியாகவும், உபாயமாகவும், ப்ராப்யமாகவும், ஸிஷ்யர்களுக்கு திவ்யப்ரபந்தங்களின் ஸாரார்த்தமாக உபதேஸித்தாரென்பது அறியத்தக்கது.

ஆசார்யர்களில் எம்பெருமானாரே உயர்ந்தவரென்று முன்பே கூறப்பட்டது இங்கு நினைக்கத்தகும்.

ஸேஷி – தலைவன்; ப்ராப்யன் – அடையத் தகுந்தவன்; உபாயம் – நாம் தலைவனை அடைவதற்குத்தக்க கருவி.

நாம் கைங்கர்யம் செய்யத்தக்க தலைவர் ஆசார்யரே யாகையால், அதற்காக அடையத் தக்க (ப்ராப்யரான) வேறொரு உபாயத்தைத் தேடாமல் அவ்வாச்சார்யரையே உபாயமாக பற்ற வேணுமென்பது ரஹஸ்யத்ரயத்தின் ஸாரமான பொருளாகும்.

இதையே மாமுனிகள் ஸிஷ்யர்களுக்கு உபதேஸித்ததாக இந்த ஸ்லோகத்தில் கூறினாராயினார்.

இப்படி உயர்ந்ததோர் அர்த்தத்தை உபதேஸித்த மணவாள மாமுனிகளுக்குத் தலை யல்லால் கைம்மாறில்லாமையாலே, தலையால் வணங்குதலை ‘தம் நமாமி’ – அவரை வணங்குகிறேனென்றதாகக் கொள்க.

—————-

பூர்வ திநசர்யை – 28
தத: ஸ்வ சரணாம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: |
பாவநை ரர்த்திநஸ் தீர்த்தை: பாவயந்தம் பஜாமி தம் ||

பதவுரை:-

தத: – திவ்யப்ரபந்தங்களின் ஸாரப்பொருளை உபதேஸித்த பின்பு,

ஸ்வ சரண அம்போஜ ஸ்பர்ஸ ஸம்பந்ந ஸௌரபை: – தமது திருவடித்தாமரைகளின் ஸம்பந்தத்தினால் மிக்க நறுமணத்தையுடையதும்,

பாவநை: – மிகவும் பரிஸுத்தமானதுமாகிய,

தீர்த்தை: – ஸ்ரீபாததீர்த்தத்தினால் – ஸ்ரீபாததீர்த்தத்தை உட்கொள்ளும்படி கொடுப்பதனால்,

அர்த்திந: – ஸ்ரீபாததீர்த்தத்தைக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிற ஸிஷ்யர்களை,

பாவயந்தம் – உய்யும்படி செய்யாநின்ற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

பஜாமி – ஸேவிக்கிறேன்.

திவ்யப்ரபந்த ஸாரார்த்தங்களை உபதேஸித்தபிறகு, உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் ப்ரார்த்தித்தார்களாகையால் தம்முடைய ஸ்ரீபாததீர்த்தத்தை அவர்களுக்குத் தந்து உட்கொள்ளச்செய்து அவர்களுக்கு ஸத்தையை உண்டாக்கினார் மாமுனிகள் – என்கிறார் இதனால்.

எம்பெருமானார் இப்போது எழுந்தருளியிராமையால், அவர் தமக்குக் கருவியாகத் தம்மை நினைத்து தமது ஸ்ரீபாததீர்த்தத்தை ஸிஷ்யர்களுக்குக் கொடுத்தருளியதனால், இது மாமுனிகளுக்குக் குற்றமாகாது.

ஸிஷ்யர்கள் மிகவும் நிர்பந்தமாக வேண்டிக்கொண்டது இதற்கு முக்கிய காரணமாகும்.

மாமுனிகளின் திருவடிகள் தாமரை போன்றவையாகையால் அதன் ஸம்பந்தத்தினால் தீர்த்தத்திற்கு நறுமணமும், தூய்மையும் மிக்கதாயிற்றென்க.

‘தீர்த்தை’ (தீர்த்தங்களாலே) என்ற பஹுவசநத்தினால் ஸ்ரீபாததீர்த்தம் மூன்று தடவைகள் கொடுத்தாரென்பது ஸ்வரஸமாகத் தோன்றுகிறது.

ஸ்ரீபாத தீர்த்தம் உட்கொள்ளும் ப்ரகரணத்தில் ‘த்ரி பிபேத்’ (மூன்று தடவைகள் ஸ்ரீபாததீர்த்தம் பருகக்கடவன்) என்ற ஸ்ம்ருதி வசநம் இங்கு நினைக்கத் தக்கது.

சிலர் ஸ்ரீபாத தீர்த்தத்தை இரண்டு தடவைகள் கொடுக்கிறார்கள்.

‘எல்லார்க்கும் தூய்மையளிக்குமதான பாகவத ஸ்ரீபாததீர்த்த பாநம் (பருகுதல்) ஸோமபாந ஸமமாகச் சொல்லப்பட்டுள்ளது’ என்று உசந ஸ்ம்ருதியில், ஸ்ரீபாததீர்த்த பாநத்தை – யாகத்தில் ஸோமலதா-ரஸபாந ஸமாநமாக இரண்டு தடவை பருகத்தக்கதாகக் கூறப்பட்டிருப்பது இதற்கு ப்ரமாணமாகும்.

ஆக, இரண்டு வகையான முறைகளும் ஸாஸ்த்ர ஸம்மதமாகையால் அவரவர்களின் ஸம்ப்ரதாயப்படி அனுஷ்டிக்கக் குறையில்லை.

பாரத்வாஜ ஸம்ஹிதையில் ஸிஷ்யன் ஆசார்யனிடம் உபதேஸம் பெறுதற்கு, ஆசார்ய ஸ்ரீபாததீர்த்தத்தை ஸ்வீகரிப்பதை அங்கமாகக் கூறியுள்ளதனால், முன் ஸ்லோகத்தில் திவ்ய ப்ரபந்த ஸாரார்தோபதேஸத்தை ப்ரஸ்தாவித்த பின்பு இதில் ஸ்ரீபாததீர்த்த பாநத்தை கூறினாராயிற்று.

முன்பு உபதேஸம் செய்தருளியதற்காக அதில் ஈடுபட்டு ‘நமாமி’ என்றவர், இப்போது ஸ்ரீபாத தீர்த்தம் ஸாதித்ததில் மனங்கனிந்து ‘பஜாமி’ என்கிறார்;

வேறொன்றும் செய்ய இயலாமையாலும், மாமுனிகளும் வேறொன்றை எதிர்பாராத விரக்தராகையாலும் என்க.

—————-

பூர்வ திநசர்யை – 29
ஆராத்ய ஸ்ரீநிதிம் பஸ்சாதநுயாகம் விதாய ச |
ப்ரஸாதபாத்ரம் மாம் க்ருத்வா பஸ்யந்தம் பாவயாமி தம் ||

பதவுரை:-

பஸ்சாத் – பின்பு (மாத்யாஹ்நிகாநுஷ்டாநம் நிறைவேற்றிய பின்பு),

ஸ்ரீநிதிம் – திருவுக்கும் திருவான (தம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய) அரங்கநகரப்பனை,

ஆராத்ய – மிக்க பக்தியுடன் ஆராதித்து,

அநுயாகம் – பகவான அமுது செய்த ப்ரஸாதத்தை ஸ்வீகரித்தலாகிய அநுயாகத்தை,

விதாய – செய்து, மாம் – இதற்கு முன்பு இந்த ப்ரஸாதத்தில் பராமுகமாக இருந்த அடியேனை,

ப்ரஸாதபாத்ரம் க்ருத்வா – தாம் அமுது செய்த ப்ரஸாதத்துக்கு இலக்காகச் செய்து (தாம் அமுது செய்து மிச்சமான ப்ரஸாதத்தை அடியேனும் ஸ்வீகரிக்கும்படி செய்து)

பஸ்யந்தம் – அடியேனைக் கடாக்ஷித்துக் கொண்டிருக்கிற

தம் – அந்த மாமுனிகளை,

பாவயாமி – ஸதா த்யாநம் செய்கிறேன்.

ஆராத்ய – நன்றாக பூசித்து, த்ருப்தியடையும்படி செய்து என்றபடி,

“இளவரசனையும் மதம்பிடித்த யானையையும் நம் அன்புக்கு விஷயமாய்ப் பிற தகுதிகளையும் பெற்ற விருந்தினனையும் எங்ஙனம் (அன்புடனும் அச்சத்துடனும்) பூசிக்கிறோமோ, அங்ஙனமே பகவானையும் பூசிக்கவேண்டும்.

பதி விரதை தனது அன்பிற்குரிய கணவனையும், தாய் முலைப்பாலுண்ணும் தன் குழந்தையையும், ஸிஷ்யன் தன்னாசார்யனையும், மந்திரமறிந்தவன் தான் அறிந்த மந்த்ரத்தையும் எங்ஙனம் மிகவும் அன்புடன் ஆதரிப்பார்களோ அங்ஙனம் எம்பெருமானையும் ஆதரிக்கவேண்டும்” என்று சாண்டில்ய ஸ்ம்ருதியில் கூறியபடியே அரங்கநகரப்பனை மாமுனிகள் ஆராதித்தாரென்றபடி.

அநுயாகமாவது – யாகமாகிற பகவதாரதனத்தை அநுஸரித்து (பகவதாராதனத்திற்குப் பின்பு) செய்யப்படுகிற பகவத் ப்ரஸாத ஸ்வீகாரமாகிய போஜனமாகும்.

‘பரிசேஷனம் செய்து விட்டு ப்ராணன் அபாநன் வ்யாநன் உதாநன் ஸமானனென்னும் பெயர்களைக்கொண்ட எம்பெருமானை உத்தேஸித்து அந்நத்தை ஐந்து ஆஹூதிகளாக வாயில் உட்கொள்ள வேணும், பின்பு உண்ணவேணும்’ என்று பரத்வாஜர் கூறியது நினைக்கத்தக்கதிங்கு.

சாண்டில்யரும் ‘நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள எம்பெருமானை த்யாநம் செய்து, பெருமாள் தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ராணாய ஸ்வாஹா முதலிய மந்த்ரங்களை உச்சரித்துக் கொண்டே நமது வாயில் அந்நத்தை ஹோமம் செய்யவேண்டும்.

பின்பு எம்பெருமானை நினைத்துக்கொண்டே சிறிதும் விரைவின்றிக்கே, அந்நத்தை நிந்தியாமல் (உப்புக்குறைவு, புளிப்பதிகம் காரமேயில்லை என்றிவ்வாறாகக் குற்றங்கூறாமல்) உண்ண வேண்டும்.

ஸுத்தமானதும் நோயற்ற வாழ்வுக்கு உரியதும் அளவுபட்டதும் சுவையுடையதும் மனத்துக்குப் பிடித்ததும் நெய்ப்பசையுள்ளதும் காண்பதற்கு இனியதும் சிறிது உஷ்ணமானதுமான அந்நம் புத்திமான்களாலே உண்ணத்தக்கது’ என்று கூறியது கண்டு அநுபவிக்கத்தக்கது.

‘அநுயாகம் விதாய ச’ என்ற சகாரத்தினாலே (அநுயாகத்தையும் செய்து என்று உம்மையாலே) மணவாளமாமுனிகள் தாம் அமுது செய்வதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவர்களை அமுது செய்வித்தமை கொள்ளத்தக்கது.

‘பெருமாளுக்கு அமுது செய்வித்த பிறகு, பெருமாள் திருப்பவளத்தின் ஸம்பந்தத்தினால் சுவை பெற்றதும் நறுமணம் மிக்கதும் ஸுத்தமானதும் மெத்தென்றுள்ளதும் மனத் தூய்மையை உண்டாக்குமதும் பக்தியோடு பரிமாறப்பட்டதுமான பகவத் ப்ரஸாதத்தினாலே பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை மிகவும் ஊக்கத்தோடு த்ருப்தி யடையச் செய்தார்.

பிறகு தாம் அமுது செய்தார்’ என்று இவ்வெறும்பியப்பாவே தாம் அருளிய வரவரமுநி காவ்யத்தில் குறித்துள்ளமை இங்கு கருதத்தக்கதாகும்.

மாம் – அடியேனை. அதாவது இதற்கு முன்பு மாமுனிகள் தம்மை தமது மடத்தில் அமுது செய்யும்படி நியமித்தபோது, ‘யதியின் அந்நமும் யதி அமுது செய்த பாத்ரத்திலுள்ள அந்நமும் உண்ணக்கூடாது’ என்ற

ஸாமாந்ய வசநத்தை நினைத்து துர்புத்தியாலே அமுது செய்ய மறுத்து, இப்போது நல்லபுத்தி உண்டாகப்பெற்ற அடியேனை என்றபடி.

பஸ்யந்தம் பாவயாமி – பார்த்துக்கொண்டேயிருக்கிற மாமுனிகளை த்யானிக்கிறேன்.

முன்பு மறுத்துவிட்ட இவர் தமக்கு இப்போது ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும்படியான பெருமை ஏற்பட்டது எங்ஙனம் ? என்று ஆஸ்சர்யத்தோடு தம்மையே பார்த்துக்கொண்டிருக்கிற மாமுனிகளை, தம்மைத் திருத்தின பெருந்தன்மைக்காக எப்போதும் த்யாநிக்கிறேன் என்றபடி.

ஆகையால் ‘யதியின் அந்நம் உண்ணத்தக்கதன்று’ என்று ஸாஸ்த்ரம் மறுத்தது – அவைஷ்ணவ யதியின் அந்நத்தைப் பற்றியது என்று எண்ணுதல் வேண்டும்.

———–

பூர்வ திநசர்யை – 30
தத: சேதஸ் ஸமாதாய புருஷே புஷ்கரேக்ஷணே |
உத்தம்ஸித கரத்வந்த்வம் உபவிஷ்டமுபஹ்வரே ||

பதவுரை:-

தத: – அமுதுசெய்த பிறகு,

புஷ்கர ஈக்ஷணே – தாமரைக் கண்ணனாகிய,

புருஷே – பரம புருஷணான எம்பெருமானிடத்தில்,

சேத: – தமது மநஸ்ஸை,

ஸமாதாய – நன்றாக ஊன்றவைத்து,

உத்தம் ஸிதகரத்வந்த்வம் – ஸிரஸ்ஸின்மேல் வைக்கப்பட்ட இரண்டு கைகளை (கைகூப்புதலை) உடையதாக இருக்கும்படி,

உபஹ்வரே – தனியடத்தில்,

உபவிஷ்டம் – (பத்மாஸநமாக யோகாப்யாஸத்தில்) எழுந்தருளியிருக்கிற – மணவாளமாமுனிகளை ஸேவிக்கிறேன்

என்று 31ஆம் ஸ்லோகத்துடன் அந்வயம்.

அநுயாகத்திற்குப் (போஜனத்திற்குப்) பின்பு யோகம் – பரமாத்ம்த்யாநம் செய்ய வேண்டுமென்று ஸாஸ்த்ரம் விதித்துள்ளதனால் அதைச் சொல்லுகிறார்.

யோகமானது ஆராதநம் போல் மூன்று வேளைகளிலும் செய்ய வேண்டுமென்று மேல் சொல்லப்போவது காண்க.

யோகமாவது யோகிகள் தமது ஹ்ருதயகமலத்தில் திருமேனியோடு கூடி எழுந்தருளியுள்ள எம்பெருமானை, அசையாத மனதுடன் நன்றாக த்யாநித்தலாகும்.

‘எம்பெருமான் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் ஆகிய ஜீவாத்மாக்களில் வ்யாபித்திருக்கிறான்.

எல்லாவிடத்திலும் வ்யாபித்துள்ளமையால் அந்நிலையே விஷ்ணுவின் அந்தர்யாமி நிலையாகும்.

அவ்வெம்பெருமானே யோகம் செய்பவர்களின் ஹ்ருதய கமலத்திலோ என்றால் திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்’ என்று பராஸரர் பணித்தமை காண்க.

‘யோகிகளின் ஹ்ருதயத்தில் உள்ள பரமாத்மாவும் ஸூர்யமண்டலத்திலுள்ள பரமாத்மாவும் ஒருவனே’ என்று தைத்திரீயோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்,

ஸூர்ய மண்டலத்திலுள்ள பரமாத்மாவுக்குப் புண்டரீகாக்ஷத்வம் (தாமரைக் கண்ணனாந் தன்மை) சாந்தோக்யத்தில் கூறப்பட்டுள்ளதனாலும்

‘புருஷே புஷ்கரேக்ஷணே’ என்று இங்கு மாமுனிகளாகிய யோகியின் ஹ்ருதயத்திலுள்ள பரமபுருஷனுக்குப் புண்டரீகாக்ஷத்வம் கூறப்பட்டதென்க.

புரி ஸேதே – யோகி ஸரீரத்தில் வஸிக்கிறான் என்ற வ்யுத்பத்தியினால் புருஷ ஸப்தம் பரமபுருஷனாகிய விஷ்ணுவைக் குறிக்குமதாகும்.

யுஜி – ஸமாதௌ என்ற தாதுவினடியாகப் பிறந்த யோக ஸப்தம் ஸமாதியாகிற பரமாத்ம த்யாநத்தைத் தெரிவிக்கிறது.

—————–

பூர்வ திநசர்யை – 31
அப்ஜாஸநஸ்தமவதாதஸுஜாத மூர்த்திம்
ஆமீலிதாக்ஷமநுஸம்ஹித மந்த்ரரத்நம் |
ஆநம்ரமௌளிபிருபாஸிதமந்தரங்கை:
நித்யம் முநிம் வரவரம் நிப்ருதோ பஜாமி ||

பதவுரை:-

அப்ஜாஸநஸ்தம் – பரமாதமத்யாநத்திற்காகப் பத்மாஸநத்தில் எழுந்தருளியிருப்பவரும்,

அவதாத ஸுஜாத மூர்த்திம் – பாலைத்திரட்டினாற்போல் வெளுத்து அழகியதான திருமேனியை உடையவரும்,

ஆமீலித அக்ஷம் – (கண்ணுக்கும் மனத்துக்கும் இனிய எம்பெருமான் திருமேனியைத் த்யாநம் செய்வதனாலே) சிறிதே மூடிய திருக்கண்களையுடையவரும்,

அநுஸம்ஹித மந்த்ரரத்நம் – ரஹஸ்யமாக மெல்ல உச்சரிக்கப்பட்ட மந்த்ரரத்நமாகிய த்வயத்தையுடையவரும்,

ஆநம்ர மௌளிபி: – நன்றாக வணங்கிய தலைகளை உடையவரான,

அந்தரங்கை: – மிகவும் நெருங்கிய கோயிலண்ணன் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா முதலிய ஸிஷ்யர்களாலே,

உபாஸிதம் – ஸதா ஸேவிக்கப்படுமவருமான, வரவரம் முநிம் – அழகியமணவாளமாமுநிகளை,

நிப்ருதஸ்ஸந் – ஊக்கமுடையவனாய்க் கொண்டு, 

நித்யம் பஜாமி – எப்போதும் ஸேவிக்கிறேன்.

அதிகமான காற்றில்லாததும் அழகியதும் மேடுபள்ளமில்லாததுமானதோர் இடத்தில் முதலில் (மரத்தாலான மணையை இட்டு) அதன்மேல் தர்ப்பங்களையும், அதன்மேல் மான்தோலையும், அதன்மேல் வஸ்த்ரத்தையும் விரித்து

பத்மாஸநத்திலுள்ளவனாய் அவயங்களை நேராக வைத்துக்கொண்டு யோகம் செய்ய வேண்டும்’ என்று விஸ்வாமித்ரர் கூறியது காணத்தக்கது.

மூக்கின் நுனியை இரு கண்களாலும் பார்த்துக் கொண்டு யோகம் செய்ய வேண்டுமென்று தர்ம ஸாஸ்த்ரங்களில் கூறியுள்ளதனையொட்டி, சிறிதே மூடிய திருக்கண்களையுடைமை மாமுனிகளுக்குக் கூறப்பட்டது.

‘ஸந்தோஷத்தினால் குளிர்ந்த கண்ணீர் பெருக்குமவனும், மயிர்க்கூச்செறியப்பெற்ற தேஹத்தையுடையவனும், பரமாத்மாவின் குணங்களால் ஆவேஸிக்கப்பட்டவனுமாகிய (பரமாத்மகுணங்களை த்யாநம் செய்யுமவனுமாகிய) யோகியானவன் உடலெடுத்த அனைவராலும் ஸதா காணத்தக்கவனாகிறான் (விஷ்ணுதத்வம்) என்று கூறுகிறபடியினால்,

ஸிஷ்யர்களால் ஸேவிக்கப்பட்ட மணவாளமாமுனிகளை எப்போதும் ஸேவிக்கிறேன்’ என்று கூறினாரென்க.

—————–

பூர்வ திநசர்யை – 32
தத: ஸுபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மந: |
யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம் ||

பதவுரை:-

தத: யோகமாகிற பகவத்த்யாநம் செய்தபிறகு,

தஸ்மிந் – முற்கூறிய,

ஸுபாஸ்ரயே – யோகிகளால் த்யாநிக்கப்படும் பரமபுருஷனிடத்தில்,

நிமக்நம் – மூழ்கியதாய்,

நிப்ருதம் – அசையாது நிற்கிற,

மந: – தனது மனத்தை,

யதீந்த்ரப்ரவணம் – எதிராஜரான எம்பெருமானாரிடத்தில் மிக்க பற்றுடையதாய் அசையாமல் நிற்றலையுடையதாக,

கர்த்தும் – செய்வதற்கு,

யதமாநம் – முயற்சி செய்து கொண்டிருக்கிற,

தம் – அந்த மணவாளமாமுனிகளை,

நமாமி – தெண்டம் ஸமர்ப்பிக்கிறேன்.

இங்கு ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும்’ என்பதற்கு ‘யதீந்த்ரப்ரணமேவ கர்த்தும்’ என்பது பொருள்.

அதாவது முன்பு ‘யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று எம்பெருமானார் திருவடியிணையை மனத்தினால் பக்தியோடு நினைத்துக்கொண்டே பகவதபிகமநம் முதலாக எல்லாவநுஷ்டானங்களையும் மாமுனிகள் நிறைவேற்றிவருவதாகக் கூறியுள்ளபடியால்,

எம்பெருமானாரையும் அவருக்கு இஷ்டமான எம்பெருமானையும் நினைத்துக்கொண்டிருந்த தமது மநஸ்ஸை ‘எம்பெருமானாரையே நினைப்பதாகச் செய்வதற்கு’ என்பது கருத்தென்ற்படி.

ஸுபாஸ்ரயமென்றது – த்யாநம் செய்பவனுடைய ஹேயமான து:க்காதிகளைப் போக்குவதும், அவனுடைய மனத்தைத் தன்னிடம் இழுத்து நிறுத்துவதுமான எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹமாகும்.

இதனால் எறும்பியப்பா மாமுனிகளின் யதீந்த்ர ப்ராவண்யத்தை (சரமபர்வநிஷ்டையை) அநுஸந்தித்து அவரை வணங்கினால்,

தமக்கும் சரமபர்வநிஷ்டை ஸித்திக்குமென்று கருதி ‘யதீந்த்ரப்ரவணம் கர்த்தும் யதமாநம் நமாமி தம்’ என்றருளினாராயிற்று.

————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் நம் சின்ன ஸ்வாமி ஸ்ரீ உ. வே .ஸார்வ பவ்மன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -கன்னி பூரட்டாதி திரு அவதாரம் —

September 24, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை  அண்ணன் ஸ்வாமிகள் தனியன்

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்ய மஹம் பஜே

ஸகல வேதாந்த ஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ஸ்ரயே

வாழி திருநாமம்

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே

திருச் சேலை இடை வாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க் கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மான பரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப் பவள வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கத் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.
மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார்.

மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆஸ்ரயிக்கச் செய்தவர்.

இவர்
கந்தாடையப்பன்,
திருகோபுரத்து நாயனார்,
சுத்தசத்வம் அண்ணன்,
திருவாழி ஆழ்வார் பிள்ளை,
கந்தாடை நாயன்,
ஜீயர் நாயனார்,
ஆண்ட பெருமாள் நாயனார்,
ஐயன் அப்பா
ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.

அண்ணன் என அழைக்கப்பட காரணம்:

அண்ணன் ஸ்வாமி ஒரு நாள் கூட தவற விடாமல், அரங்கரின் விஸ்வரூப தர்சனத்துக்கும்-புறப்பாட்டுக்கும் வந்து விடுவார்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சிலர் இவரிடம், ஒரு நாள் அரங்கரைச் சேவிக்க முடியா விட்டால் என்னாகும் என்றனர்.
இவர் அப்படித் தவறினால், தம் கண்களை இழந்து விடுவேன் என்றார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அவர்கள் இவருக்குத் தெரியாமல் கோவில் அர்ச்சகர்களிடம் கூறி, ஒரு நாள்
அதிகாலையில் மிகச் சீக்கிரமாகவே விஸ்வரூபம் நடத்திவிட முடிவு செய்தனர்.
அப்படிச் செய்ய முயன்றபோது, அவர்களால் கோவில் கர்ப்பக் கிரகக் கதவுகளைத் திறக்க முடியாமல் ஏதோ அடைத்திருந்தது போலிருந்தது.
அவர்கள் திறக்க முயன்று கொண்டிருந்த போது, வரதநாராயண குருவின் திருமாளிகையில் அவரது தம்பி அவரை,
“அண்ணா,எழுந்திருங்கள், விஸ்வரூபத்துக்கு நேரமாகிவிட்டது” என்று எழுப்பினார்.
அண்ணன் உடனே எழுந்திருந்து அவசரமாக நீராடிவிட்டு, திருமண்காப்பு இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு விரைந்தார்.
தம்பியும் அவருடன் சென்றார். கோவில் த்வஜஸ்தம்பத்துக்கு அருகில், இருவரும் தண்டனிட்டு நமஸ்ஹாரம் செய்தனர்.
அதன்பின் தம்பியைக் காணவில்லை.

கோவில் கதவுக்குப் பக்கத்தில் சென்றவுடன், அனைவரும் வியக்கும்படி கோவில் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.
அங்கிருந்தோர் அனைவரும் வரத நாராயணரின் பக்தி நிஷ்டையைக் கண்டு போற்றி வணங்கினர்.
திருவரங்கர் அர்ச்சக முகேன ஆவேசித்து,தாமே அவர் திருமாளிகைக்குச் சென்று ‘அண்ணா’என்று எழுப்பியதைச் சொல்லி,
இனி மேல் வரதநாராயணரும், அவர் சந்ததிகளும் ‘அண்ணன்’ என்று அழைக்கப்படுவர் என்று அருளினார்.
அன்றிலிருந்து அவர் ‘கோவில் கந்தாடை (முதலியாண்டான் திருக்குமாரரின் பட்டப் பெயர்) அண்ணன்’ என்றழைக்கப்பட்டார்.
அவரின் சந்ததியினருக்கும் இந்தக் ‘கோவில் அண்ணன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்று அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.

அண்ணன் ஸ்வாமிகளும் அவர் சகோதரர்களும் ஸ்ரீரங்கத்தில் கோவில் மரியாதைகளுடன் புகழ் பெற்ற ஆசார்யர்களாக விளங்கி வருகையில், மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரி யிலிருந்து ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். அரங்கனின் அநுக்ரஹமும், அவருடைய தேஜஸும் ஸ்வாமி மாமுனிகளுக்கு பல சீடர்களைப் பெற்றுத் தந்தது.

ஒரு நாள் அண்ணன் ஸ்வாமி அவர் திருமாளிகை திண்ணையில் ஓய்வெடுத்து இருக்கையில், மாமுனிகள் மடத்திலிருந்துஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் அவரை அழைத்து, நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?என்று கேட்டார். அவர் தம் பெயர் சிங்கரையர் என்றும்,அருகில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பெரியஜீயரிடம் (மாமுனிகள்) சீடராக விரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கும் போது,ஏன் மாமுனிகளிடமே சீடராக வேண்டும் என்றார். சிங்கரையர் அது பெருமாளின் திருவுள்ளம் என்றும்,பரம ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டுஎதுவும் சொல்ல முடியாதென்றும் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அண்ணன், அவரை உள்ளே அழைத்து பிரசாதம்,தாம்பூலம் அளித்து அன்றிரவு அவர் திருமாளிகையிலேயே தங்கும்படி சொன்னார். அன்றிரவு மேலும் அவரிடம் விவரம் கேட்க, அவரும் அந்த அரிய வைபவத்தைச் சொன்னார். அவர் தாம் மாமுனிகள் மடத்துக்கும், மற்ற திருமாளிகைகளுக்கும் காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்து வருவதாகவும், மாமுனிகள் அவற்றை மடத்தில் சேர்க்கும் முன்,அவரிடம்”இவை எங்கே விழைகின்றன?யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்?யார் அறுவடை செய்கிறார்கள்” என்று பலவாறு கேட்டுத் திருப்தி யடைந்த பின்பே கொடுக்கச் சொன்னார் என்றார். அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் தோட்டத்தில் விளைந்ததாகவும்,அதன் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களே;சிலர் மாமுனிகளின் சீடர்களும் ஆவார்கள் என்று மாமுனிகளிடம் சிங்கரையர் சொன்னாராம்.

மாமுனிகள் அவரிடம் பெரிய பெருமாளைச் சேவித்து ஊர் திரும்புமாறு,அருளியதால் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அர்ச்சகர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் சாதித்து, அபய ஹஸ்தமும் அளித்தார். மாமுனிகளின் ஆசார்ய சம்பந்தமும் விரைவில் கிட்டும் என்று ஆசீர்வதித்தார். சிங்கரையர் மீண்டும் மாமுனிகள் மடத்துக்குச் சென்று அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றாராம்.

செல்லும் வழியில் மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பிரசாதத்தை உட்கொண்டதாகவும், ஆசார்ய பிரசாத மகிமையால் அவரது ஆத்மா சுத்தியடைந்தது என்றார். அன்றிரவு, கனவில் அவர் பெரியபெருமாள் சந்நிதியில் சேவித்துக் கொண்டிருப்பது போலவும், அப்போது பெருமாள், அவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனைக் காட்டி “அழகிய மணவாள ஜீயர் (மாமுனிகள்) ஆதிசேஷனுக்குச் சமம்; நீர் அவர் சிஷ்யனாகக் கடவது” என்று அருளினார் என்று சொல்லி முடித்தார். இதைக் கேட்டுப் பெரிதும் வியந்தார் அண்ணன் ஸ்வாமி. இந்த வைபவம் அண்ணன் மாமுனிகளிடம் ஆஸ்ரயிப்பதற்கான முதல் தூண்டுகோலாக இருந்தது.

சிங்கரையர் வைபவத்தைக் கேட்டு அதையே எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார் அண்ணன்.அன்றிரவு அவரும் ஒரு கனவு கண்டார்!அந்தக் கனவில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இவரைச் சவுக்கால் அடித்தார்!பிறகு இவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றார்; அங்கு ஒரு சந்யாசி மிகவும் கோபமாக அமர்ந்திருந்தார். அவரும் அண்ணனைச் சவுக்கால்அடித்தார்;அழைத்துச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் சந்யாசியிடம்”இவன் சிறுபிள்ளை; தான் செய்வதறியாது செய்து விட்டான்” என்றார்.

சந்யாசியும் சாந்தமடைந்து அண்ணனை அழைத்துத் தம் மடிமீது அமரவைத்து “நீயும், உத்தமநம்பியும் தவறு இழைத்து விட்டீர்கள்” என்றார். “மாமுனிகளின் பெருமை அறியாது தவறிழைத்து விட்டேன் அடியேனை மன்னியுங்கள்” என்று வேண்டினார் அண்ணன்.அந்த சந்யாசி”நாம்ஸ்ரீபாஷ்யகாரர் ராமாநுஜர், இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான், நாமே ஆதிசேஷன்; இங்கு மணவாள மாமுனிகளாக அவதரித்திருக்கிறோம்.நீரும் உம்சொந்தங்களும், அவரிடம் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்றார்.

கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த அண்ணன் ஸ்வாமியின் கண்களிலும், மனத்திலும் ஆனந்தம் பொங்கியது! ஜகதாசார்யரையும், தம் குலபதி முதலியாண்டானையும் சேவித்த ஆனந்தம்!! உடையவரே தம்மைத் திருத்திப் பணிகொண்டு, மாமுனிகளை ஆசார்யராக காட்டிக் கொடுத்த பேறு பெற்ற ஆனந்தம்!!!

மாமுனிகள் கோவில் அண்ணனை தம் அஷ்ட திக்கஜங்களுள் ஒருவராக நியமித்தார். இடைக்காலத்தில் பெரிய கோவிலில் கந்தாடையார்களுக்கு நின்று போன சில மரியாதைகளை மீண்டும் பெற்றுத் தந்தார் மாமுனிகள். அண்ணனுக்கு பகவத் விஷயத்தில்

(திருவாய்மொழி) இருந்த ஞானத்தினால் அவருக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றினார். கந்தாடை அப்பன், சுத்த சத்வம் அண்ணன் மற்றும் பல ஆசார்யர்களை அண்ணனிடம் ஆஸ்ரயித்து பகவத் விஷ்ய காலட்சேபம் கேட்குமாறு செய்தார். இவ்வாறு பலகாலம் பெரிய பெருமாளுக்கு கைங்கரியங்கள் புரிந்தார்.

மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.

இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.

பேராத நம் பிறப்பை பேர்க்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாளால் அருள் பெற்றோன் வாழியே
ஏராரு நன் மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழை படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படி யுடையோன் வாழியே
ஆராமாஞ்சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழும் கந்தாடை யண்ணன் என்றும் வாழியே!!!🙏🙏🙏

புண்ணிய நற் புரட்டாசி பூரட்டாதி
மண்ணில் உதித்த மறையோனே – எண்ணாதியாம்
கன்னி மதிள்சூழ் கோயில் கந்தாடை அண்ணனே
இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் –சித்திரை அனுஷம் –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 23 ஆம் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்:
ஸ்ரீ கௌசிகாந்வய ஸுதார்ணவ பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய குருவர்ய ஸுதம் வரேண்யம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய போதம்
ஸ்ரீமந் மஹா குருமஹம் ஸரணம் ப்ரபத்யே||

வாழி திருநாமம்:
வாழியிராமாநுசாரியன் வண்கமலத் தாளடைந்த வாழி
தொட்டையாரியன் தாள் வாழியவே
வாழியரோ தென்குருகூர் மாறன் திருவாய்மொழிப் பொருளை
இங்கு உலகோற்கு ஈந்தருளும் சீர்

சித்திரையில் அனுஷநாள் சனித்த வள்ளல் வாழியே
சீராரும் இளையவில்லி திருக்குலத்தோன் வாழியே
பக்தியுடன் பூதூரான் பதம் பணிவோன் வாழியே
பதின்மர் கலைப் பொருளனைத்தும் பகருமவன் வாழியே
நித்தியமும் அரங்கர் பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடனத்தின் நெறியுடையோன் வாழியே
எத்திசையும் அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே
இளையவில்லி தொட்டையாரியன் இணை அடிகள் வாழியே

பொன்னரங்கம் வாழ பூதூரான் தாள் வாழ
தன்னிகரில் ஆரியர் நற்றாள் வாழ – மன்னுலகில்
தொன் நெறி சேர் இளைய வில்லி தொட்டையாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.