Archive for November, 2024

ஸ்ரீ நாலு கவிப்பெருமாளும் ஸ்ரீ கவி சக்ரவர்த்தியும்-ஸ்ரீ கலியனும் ஸ்ரீ கம்பரும்

November 26, 2024

திரு வெழு கூற்று இருக்கை திருமடல்

இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –

ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்

————

திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-

ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-

—————

கம்பர்பாடல்

என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-பரகாலன் பாவனையில் அருளிச் செய்த பாடல் –

————–

வண்ணம்-மை வண்ண இந்தளூர் வண்ணம் -அகலிகை படலம் அதே 8 வண்ணம் கால் வண்ணம் -துகள் மூலம் திருவடியால் தீண்ட மாட்டான் -முக்கால் எங்கு காண்பேன்

கங்கை படலம் -ஆத்ம ஸஹ -இளவலும் -ஏழை அறிந்து பாடினார்-நின்னோடும் எழுவர் ஆனோம்

பேடையொடு –நறையூர் -வெட்க்கி
ஆரண்ய -யானை நடை அன்னம் நடை

தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றதே கோழியும் கூவ வில்லை -பெரிய ஒடுங்கின -பிராணிகள் -நான்கு கண்கள் தவிர

இன்று போய் போருக்கு நாளை வா -ஆளாயா -ஆள் ஐயா -வால்மீகி 2 நாள் கம்பர் முதல் நாள் -வெள்ளியங்குடி -காற்றிடை

காதைகள் செறிவான செவி நுகர் கனிகள் –நாட்டு படலம்

செவிகளாரே நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் காலப் பண் தென் உறைப்பத்துற்று –திருவாய் -3-8-6-

செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து –பெரிய திரு -3-6-7-

எம்பெருமான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே —

————

ஸ்ரீ பால காண்டம் –

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
“முன்னரே எண்கின்வேந்தன் யான்”-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்’ என்றான். 23-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-

———

உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26′

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—–பெரிய திருமொழி–3-4-1-

திறம் கொள் ஆமையாய் முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக்கைகள் பரப்பி மீ வலிப்ப–அகலிகை படலம் -24-

ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-4-

——–

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் இன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத் தரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே யுன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் -82-

மழை வண்ணத்து அண்ணலே –மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –

இப்பாட்டில் எட்டு தடவை வண்ணம் பத பிரயோகம் –

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே-பெரிய திருமொழி-–4-9-8-போலவே

————

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் –
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38-

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி -3-1-1-

இராமனை நினைத்து சீதை உருகுதல்
‘இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57-

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –21-

விண்ணுளே எழுந்த மேக மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்து என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலேன்
கண்ணுள்ளே இருந்த போதும் என் கொல் காண்கிலாதவே -53-

இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பர கால நாயகி போலவே –

——

மண்ணுற விழுந்து நெடு வானுற எழுந்து
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண்ணிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண்ணிற நறும் பொடி புனைந்த மத வேழம்–வரைக்காட்சி–19-

குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கயத்தாய் –திரு நெடும் தாண்டகம் -9-

—–

மாடகம் பற்றிய மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
பாடினள் ஒருத்தி தன் பாங்கி மார்களோடு
ஊடின துறை செயாள் உள்ளத்து உள்ளதே—உண்டாட்டுப் படலம்-32-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே-திரு நெடும் தாண்டகம்–-15-

———-

பழுது இலா வொரு பாவை யன்னாள் பதைத்து
அழுது வெய்துயர்த் தன் புடைத் தோழியை
தொழுது சேர்ந்தயர் வாள் இந்தத் தோன்றலை
எழுதலாம் கொல் இம் மன்மதனால் என்றாள்–25-

தோழியை தொழுதாள் என்றும் தேர் போன திக்கைத் தொழுதாள் என்றுமாம்

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே–திரு நெடும் தாண்டகம் -14-

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை –ஆரண்ய –சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் –24-

கண்ட போதே நுகர வேண்டும் கனி அன்றோ இவன்

அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே -என்றும் –திரு நெடும் தாண்டகம் -15-

யானை தோன்றிய இடம் கடல் -திருப் பாற் கடலிலே பழுத்த பழம்

————-

ஸ்ரீ அயோத்யா காண்டம் – —

செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
வந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவனாகும் அவ்வளவில் இராமன் என்றாள் –சூர்ப்பனகை வர்ணனை -ஆரண்ய -மாரீச வதை படலம் -149-

கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே–பெரிய திருமொழி-7-6-5-

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –பெரிய திருமொழி–9-2-6-

குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். 11

அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்
நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் -73-

அங்குள கிளை காவற்கு அமையின் உளன் ஊம்பி
இங்குள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனதன்றோ உறு துயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் -76-

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

———–

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலார் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பது பாராய் -35-

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே ––பெரிய திருமொழி–1-2-10-

—————

உவரி வாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணித் தடம் தோறும் இடம் தோறும் துவன்றிக்
கவரிப் பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவளமால் வரை அருவியைப் பொருவன பாராய் -5-

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-

——

உருகு காதலின் தழை கொண்டு மழலை வந்து உச்சி
முருகு ஞாரு செந்தேனினை முலை நின்றும் வாங்கிப்
பெருகு சூழினும் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின் அழிப்பது பாராய் -10-

கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –பெரிய திருமொழி-–1-2-5-
பிரசம் -தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பெயர் -வாரி -அவற்றினுடைய தேன்

—————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம் –

அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59′

ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-3-

பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை–விசிஷ்டாத்வைத தத்வம் –

ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.’ 60-

அருளோடு பெரு நிலம் அளிக்கும் –பெரிய திருமொழி -1-1-9-

—————–

கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை —-24-இந்திரன் இராமபிரானை ஸ்துதிப்பது –

அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-

————

மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இரு இருளும் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடை கடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை
தேவா இங்கு இவ்வோ நீ சென்ற நிலை என்றாள் சிலை ஏந்தி வந்து செம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல் கரும் கடலில் கண் வளராய் கைம்மாறும் உண்டோ —

வெண்மையான பாற்கடலும் இவன் நிழலீட்டாலே கருங்கடல் ஆனதே

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி 3-1-1-

————

‘செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்’ என்றாள். 149-இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்-

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே –திரு நெடும் தாண்டகம் -21-

———–

பொங்கு வெம் கோளரா விசும்பு ஒத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்
அங்கண் மா ஞாலத்தை விளக்குமாய்க் கதித்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்-196-
கிரகண காலத்தில் சூர்ய சந்திரர் பீடிக்கப்பட்டு மீளுவது போலே பிறவி -சடாயு சமாதானம் இளைய பெருமாளுக்கு –

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் –பெரிய திருமொழி 1-7-1-

————-

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம் – 

ஆடினான் அன்ன மாய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள்
சூடினான் முனிவர் தொகுதி சேர் சோலை வாய்
மாடு தான் வைகினான் ஏறி கதிரும் வைகினான் -37-

வில் நெறி முறையின் படி–மிக்க நீர்மை அமைந்த வேத நெறி படி அரக்யாதிகளைச் செய்து முடித்தான் –
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி 5-7-3-

——

‘துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,
தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –பெரிய திருமொழி-–8-1-9-

—–

அனுமன் ராமபிரானை புகழ்ந்து சுக்ரீவன் இடம் கூறினமை
உளை வயப் புரவியான் உதவ உற்ற ஒரு சொலால்
அளவில் கற்புடைய சிற்றவை பணித்தருளால்
வளை யுடையப் புணரி சூழ் மகிதலத் திருவெலாம்
இளைவர்க் குதவி இத்தலை எழுந்து அருளினான் -46-

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-

—————–

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் –காப்புச் செய்யுள்

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

——–

வழை துறு கானயாறு மா நிலக் கிழத்தி மக்கட்கு
உழைத்துறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த
விழை வுறு வேட்கை நாளும் வேண்டினார்க்கு தவ வேண்டிக்
குழை தோறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை -34-

காரார் வரைக் கொங்கை –சிறிய திருமடல்

மழைக் கூந்தல் தென்னன் உயிர் பொறுப்பும் தெய்வ வடமலையும் என்னும்
இவையே முலையா வடிவமைத்த –பெரிய திருமடல் —

————

ஸ்ரீ ஸூந்தர காண்டம் – 

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-

ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தநமே தக்க உபாயம் –

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே
இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால் –பாசுரமும் ஒப்பு நோக்குக –

———-

பெரிய நாள் ஓளி கொள் நாநாவித மணிப் புத்திப் பத்தி
சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச் செய்யனாய்க் காட்டும் காண்டற்கு
அரியனாய் எளியனாய் தன் அகத்துறை அழகனே போல் –ஊர் தேடு படலம்

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–திரு நெடும் தாண்டகம்–-3-

———

கரிய நாழிகைப் பாதியில் காலனும் வெருவி ஓடும் அரக்கர் தம் வெம் பதி —

இரவு பாதி ராத்ரியை -கரிய நாழிகைப் பாதியில் என்றது

கரிய நாழிகை ஊழியில் பெரியன கலியுமாறு அறியேனே –ஸ்ரீ பெரிய திரு மொழி -8-5-6-

——

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.–காட்சிப் படலம்–23–

வாழி நண்பினை–நட்புக்குப் பல்லாண்டு பாடுகிறார் —

ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே ––பெரிய திருமொழி-5-8-1-

அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’–குகப் படலம்–42

‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; –குகப் படலம்–43

————

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்-இலங்கை

அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –பெரிய திரு -1-7-1-

——

ஸ்ரீ யுத்த காண்டம் – —

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன் -நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். –இராமன் அறிவுரை கூறி, ‘இன்று போய், நாளை வா’ எனல்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –பெரிய திருமொழி-–4-10-6-

———-

அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?’

எம்பிரான் என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்றும் வாழ் நாள் –பெரிய திருமொழி 1-1-6-

——

கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80

திட்டியின் விஷம் -என்று சீதா பிராட்டியை குறிக்கிறார் –

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ -பெரிய திருமொழி-–10-2-4-

—————–

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253-

உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒற்றை விடையனும் நான்முகனும்
உன்னை அறியாப் பெருமையோனே –பெரிய திருமொழி 4-10-4-

——

சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257-

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–-பெரிய திருமொழி–5-10-10–

————

நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்; –நிகும்பலை யாகப் படலம்—140–

எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—பெரிய திருமொழி–10-6-1-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

November 25, 2024

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ  (மைதாரணீய உபநிஷத நிர்ணயம்-நாலாவது ப்ரபாடகம்) 

பரமாத்மாவுக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன. பரமபுருஷனானுடைய ராஜஸாமசம பிரம்மன், ஸாத்வீகாமசம விஷ்ணு, தாமஸாமசம ருத்ரன் என ஓதப்பட்டுள்ளது ஸாத்வீக ராஜஸ தாமஸ தேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

விஷ்ணு மஹேஸ்வராகயா நாராயணமனஸ்ஸ ஸத்வ தமோ குண பரதாநை (-த்ரிபாதவிபூதிமஹாநாராயண உபனிஷத் நிர்ணயம்52)

 நாராயணமசபூதகளாய ஸத்வ தமோ குண பரதாத்நரான விஷணு மஹேஸ்வரர்களாலே -என மறுபடியும் உத்கோஷிக்கிறது.

ராஜஸோ ப்ரஹ்மா ஸாத்வீகோ விஷ்ணு தாமஸோ ருத்ர (யோகசூடாமணி உபனிஷத்நிர்ணயம்46)

தமோமாயாத்மகோ ருத்ர: ஸாத்விகமாயாத்மகோ விஷ்ணூ ராஜஸமாயாத்மகோ ப்ரஹ்மா– பாசுபத பிரம்மோபனிஷத் நிர்ணயம்

தமோ குணத்தானவன் ருத்ரன், ஸாத்விக வடிவானவன் விஷ்ணு, ராஜஸமானவன் ப்ரஹ்மா என அடித்துரைக்கிறது-

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே-ஸூபாலோபனிஷத நிர்ணயம்

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து  உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது. கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம். 

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன: ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான: ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம் பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி–ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்க வொண்ணாதவனாய், ஸர்வேஷ்வரனும், ஸர்வ வியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய் ஜீவாத்மாவின் ஸம்ஸார பந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்த ரூபமாய், எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தை யெனபடும் கருமம், தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோகுணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம். 

ஸர்வவேதபடிதமாய், ஸர்வவேத ஸ்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநத ரஹிதமான புருஷ ஸூக்தத்திலே லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில் ‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

தம தவா கருணமி தவஸமவதவயாந         க்ஷயநதமஸ ரஜஸ பராகே’-ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது  விஷ்ணுஸூக்த வாசகம்

மிகவும் முதியவனான ரஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

“பூதாநாம ச பரஜாபதிஸ ஸமவதஸராய தீக்ஷித உஷ பதநீ பூதாநாம பதீஸ ஸமவதஸேர உஷஸி ரேதோஸிஞசத ஸமவதஸரே குமாரோ ஜாயத ஸோராதீத தம ப்ரஜாபதிர பரவீதகுமார கிம ரோதிஷ யச்சரமாத தபஸோதி ஜாதோஸீதா ஸோபரவீத அநபஹதபாபமாவா  அஹமநாஹிதநாமா நாம மே ஹேதி பாபமநோ அபஹதயை தம புந ப்ரஜாபதிரபரவீத ருதரோஸீதி“[சதபதபரஹ்மானம்]

பூதங்களின் பதியின் பிரமன் ஒரு வருஷ தீக்ஷையுடனான பின் உருத்திரனை உண்டாக்கினான். அது பிறந்தவுடன் ஓயாது அழுக பிரம்மன் ஏன் அழுகிறாய் என வினவினார். அக்குழந்தை பெயரிடபடாதநான் பாபம் நீங்கபெறதவனாயுள்ளேன்;என் பாபம் நீங்கும்வகையில் நன்நாமம் தருவாயாக என்றது. அதற்கு மறுமொழியாக ” ருத்ரன் எனும் நாமம் உண்டாவதாக”என்றார். (இம் மாதிரியே பவன், சாவன், ஈசானன், பசுபதி, பீமன், உகர்ன் எனும் நாமங்கள் கொடுக்கப்பட்டன) என்று ஓதப்பட்டுள்ளது. -இதன்மூலம் ருத்ரன் பிறக்கையிலே பாவம் நிறைந்திருந்ததால் தமோ குணத்தின் ஆதிக்கமே இதன் காரணமாம். 

ஆஸீதிதமதமோபூதம……………………………………..பகவாந பரா துரோஸீத தமோநுத-மனுஸ்மிருதியின் முதலத்யாய வசனம்

தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)’தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)’ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)   

ஸத்வகுணமுள்ள முன் போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.   

“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)ராமஸஸதபுருஷோலோகே”(அயோத்யாகாண்டம்2:29)

 ‘ஸ ச சர்வகுணோபேத
(பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத
(அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே
(அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந’
(கிஷ்கிந்தாகாண்டம்15:21)

  சிறந்த மலைத்தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன் என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

பாரதம் பஞ்சமோ வேத’ என புகழப்படும் ஐந்தாம் வேதமாகிய மஹாபாரதத்திலும் இவ்விஷயம் பேசப்பட்டுள்ளது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ‘ஸத்வவாந ஸாத்விக’ என்றும் ‘ஸத்வஸ்த‘ என்றும் நிருநாமங்கள் படிக்கப்படுகின்றன. இவ்விடங்களுக்கு பாஷ்யமிட்ட ஆதிசங்கரரும், ஸத்வகுணத்தை ப்ரதானமாக அதிஷ்டித்து நிற்பவன் என்றார். 

      ‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)

 சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக 
அநுஸநித்தது. 

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

 பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான். அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும் இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும் அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர். ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது. 

ஸங்கீர்ணாஸதாமஸாஸ சைவ ராஜஸாஸ ஸாத்விகாஸ ததா கல்பாஸசதுர்விதா ப்ரகோதா ப்ரஹ்மணோ தி வ்ஸாத்யயோ யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரேதேஷவேவ யோக ஸம்ஸிததா கமிக்ஷயந்தி பராம கதிம

பிரம்மனுக்கு ஒவ்வொருநாளும் ஸங்கீர்ணங்கள்,தாமஸங்கள், ராஜஸங்கள், ஸாத்வீகங்கள் என நான்கு விதமான கல்பங்கள் கூறப்படுகின்றன. ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன. 
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் என்று மாத்ஸயபுராணம் கூறிநிற்கிறது. இது கூர்மபுராணத்திலும் ஒப்புகொள்ளப்பட்டது.

ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

 ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ  பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது. 
ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ  ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர||                          (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத்பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார். கல்ப காலம் முடியும் வரை
யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை  உடைய விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார். புசித்த பின் உலகம்முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார். -என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன்
ருத்ரன் எனவும்   காட்டுகிறது. 

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ||                                 (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான். ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு  புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான். ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோகுணத்தைகொண்டு  ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது. 

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ || தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|–வராஹபுராண நிர்ணயம்-அகஸ்தியருத்ர ஸம்வாதத்தில் 

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன. ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது. ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன். அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது. வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ, அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது, கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். 
என ருத்ரனே ஒப்புகொண்டான். 

ஹிரண்யகர்ப்போ  ரஜஸா  தமஸா  ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந  ஸர்வகோ  விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன்  தமோகுணத்தோடும்,
ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும்ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்… என்று 
பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ  ருத்ரஸ்  தமஸா ச  ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா  ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத்  ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன்கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு
ஸத்வ குணமுடையவன் 
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத|| 

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த 
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோகநமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும் லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது. 

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா |      தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||      அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் |      ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||      ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே |      ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|-           மத்யஸ்யபுராண நிர்ணயம்

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது. அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது. ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது. ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிகபெருமை சொல்லப்படுகின்றன. 
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் . 

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||-ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்றுகுணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே. ரக்ஷணம், 
ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான். அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது. 

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||-ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்

ஆதிகாலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுணதிருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர். அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர். கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய் சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர். ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர் . என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும்  தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது. 

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||-ஸ்ரீமத் பாகவத புராணநிர்ணயம்

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு 
வசப்பட்டவன். தமோகுணமுடையவன். ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே. இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது, தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன. 

பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் –திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே!  ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்ஜீவாத்ம  பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும்  ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன. ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,  உமக்கு  என்னிடமுள்ள வாத்சல்யப்பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்லவேணும், முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்? சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்? ஐந்துமுகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்? இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும். 
வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன். மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவாமனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான். அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர். ஸத்ரயாகம் நடக்கும்போது பரம்பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர். “வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது? ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்? எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது? எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்? எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? “என்று இவ்வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று. சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர். சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான அழிவற்ற தாமரைகண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர். அவர்களின் விவாதம் தொடர்ந்தகொண்டிருக்கையில்ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.  “சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன். ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல.” என்று அவர் கூறியதை கேட்ட மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர். “எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்மவிஷ்ணுருத்ரர்களுக்கு அருகில் சென்று  ஸத்வகுண சரீரம் கொண்டு ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக” . 
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார். சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார். “தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக”. இதைகேட்ட நந்தி  கடுமையாக பின்வருமாறு கூறிற்று” எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார், எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்”. இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி ‘ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்கஸ்வரூபமாக ஆகுக. தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னைஅவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான், ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும். இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக வேதத்திற்கு புறம்பானவராவார்”என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார். அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார். முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை, எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை. இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி “அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக” என்று இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார். அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார். இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார். (இவ்வாறு நடக்கவேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து ‘தன்யனானேன்’ என்று பேரானந்தத்தோடு அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார். உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி வணங்கி சொல்லலானார். அஹோ!  என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது? குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன். உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர். சுத்தஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது, நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது, மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன்  ஸனாதனனான உன்னை பூஜித்து உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான். பித்ரு ஸிராத்தத்தில் உன்  தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர். உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது. ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே!  தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்), மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனேப்ராஹ்மன்யன்,ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன், கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனேப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும் ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம், ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான  பரமாத்மாவுக்கு  உனக்கு நமஸ்காரம், ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம். எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா! உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!  அப்பாதஹமான செயலைபொறுத்தருளவேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார். வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தையுறைத்தார். ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம்பெறுவான். அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத்நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை. ஆகையால் மற்றயவர்களைவிட்டு பழையோனாகியவிஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது 
மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும் ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம். ருத்ரபக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம். தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல் “மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்” என்பதையும் அறிகிறோம். எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.  

“பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர். அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரான் சென்னார். 
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ, அவருக்கு சமமாக ப்ரஹ்மருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ, கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார். 
இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச்சென்று நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேததர்ம நிஷ்டர்களாய் விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர். அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர். 
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும் என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும் பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும். ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால் உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.
இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய். இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான். 
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன. என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள். வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது. இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன. கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது. தேவகுருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது. திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது. 
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது. கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது. வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும். அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும். அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது. 
கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம் வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது. நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள் 1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம் ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள் 1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம் 4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம் தாமஸகுண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள் 1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம் இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை (+வாஷிஷ்டம்,ஹாரிதம்,  வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்)  கொடுக்கும் மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்”என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது. 

ஸ்கந்த புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது. 

ஜைமினி சொன்னார்- இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான். “உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்? அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தியுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ! புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை  முக்தியையடைகின்றனர்” என ப்ரஹ்மஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார். பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்? வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம்  என்பவற்றை பகவான் செய்கிறார். ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;அந்தபுருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும், இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின”. என தாமஸகுண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது. இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம் மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

‘சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி. அதுவே  எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது’.  என்கிறார். இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது. 

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை 
ஸ்ருதி, ஸ்மிருதிஇதிஹாசபுராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது. 
இவையொன்றிற்கு கூட பதில்கூற தெரியாத சில சிசுபாலர்கள் நமது பகவத்பரத்வசாக்ஷிகளை அசைக்கப்பார்த்தும், சில ஸ்ருதி, புராணவசனங்களைகொண்டு சைவாச்சார்யார்கள் எழுதிய புரட்டுக்ரந்தக்களை வைத்து பகவான் ஹரி தமோகுணத்தான், அவரது பெருமையுறைக்கும் புராணங்கள் தாமஸமானவை, சிவன் சுத்தஸாத்வீகி, சிவசம்மந்த புராணங்கள் ஸாத்வீகமானவை என பிதற்றுவர் . அவைகூட அவைதீகமானவை என்பதை நிரூபித்து மறுபடியும் விஷ்ணுசம்பந்தமுடையவை யாவும் ஸாத்வீகமானவை என்பதை கல்வெட்டுபோல நிலைநாட்டுவோம். 

ஆக்ஷேபம்-  ஆ. ஈஸ்வரமூர்த்தி பிள்ளையின் சுலோக பஞ்சக விஷயமெனும் க்ரந்தம் பின்வருமாறு பிதற்றும். 

 “ஸாத்விகீ ருத்ரே பக்தே ப்ரஹ்மணீ ராஜஸீ |
தாமஸீ தைத்ய பக்ஷேஷு மாயாத்ரேதாஹ்யுதாஹ்ருதோ ||

என்ற க்ருஷ்ணஉபனிஷத் ருத்ரனை ஸாத்வீகி, எனவும் விஷ்ணுவை தாமஸி எனவும் கூறிற்று.இது மற்றைய உபனிஷதுகளோடு முரண்படும் என தோன்றலாம். ஆனால் இதற்கு விளக்கம்
ஸுதசம்ஹிதையில் உள்ளது. 

ரஜோ குணோநஸம்  சந்தோ ப்ரஹ்மாதிஷ்டாய தம் குணம் த்ரஷ்டாப்வதி ஸர்வஸ்ய ஜகத : பண்டிதோத்தமா : குணோர்ந தமஸாச் சந்தோ விஷ்ணுஸ்  ஸத்வகுணம்புதா : அதிஷ்டாய பவேத் ஸர்வ ஜகத : பாலக :ப்ரபு : ததாஸத்வகுணச் சந்தோ ருத்ரோ விப்ராஸ்தமோ குணம் அதிஷ்டாய பவேத்தக்தாஜகதஸ்ஸத்யவாதிந

இதன் பொருள் : ராஜஸ குணத்தால் மூடப்பட்ட பிரம்மா அந்த குணத்தையே அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவானார்.தாமச குணத்தால் மூடப்பட்ட விஷ்ணு சத்வ குணத்தை அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் ரட்சக கர்த்தாவானார்.சத்வ குணத்தால் மூடப்பட்ட ருத்ரர் தாமஸ் குணத்தை அதிஷ்டித்து சர்வ ஜகத்துக்கும் சம்ஹார கர்த்தாவானார் 

ஆக,அந்த உபனிஷத்துக்களிடையே எந்த முரணும் இல்லை என்று அறியலாம்.ஆக திரிமூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் இருகுணம் உண்டு,ஒன்று சகஜம்(இயல்பு) மற்றொன்று அதிஷ்டானம்.ஆக,பிராம்மாவுக்கு இயல்பு மற்றும் அதிஷ்டானம் இரண்டுமே ராஜஸம்.விஷ்ணுவுக்கு இயல்பான குணம் தாமஸம்,அதிஷ்டானம் சாத்விகம்.ருத்ரருக்கு இயல்பான குணம் சாத்விகம்,அதிஷ்டானம் தாமசம்.

ஒருவன் உள்ளத்தின் குரோதமும் வெளியே நல்லவன் போல் நடித்தாலும்,அவனை குரோதி என்றே அழைப்போம்.அவனது இயல்பைக் கொண்டே அவன் குணத்தைக் கூறுவோம் அன்றி அவனது வெளி வேஷத்தை வைத்து அல்ல.அதுபோல்,விஷ்ணுவின் இயல் தாமசம்,ஆனாலும் அவருக்கு சாத்விக தொழிலான காத்தலுக்கு இறைவன் நியமித்துள்ளான்.ஆகையால்,இயற்கையாக தாமச குணம் உடைய விஷ்ணுவை அவரது தொழிலை வைத்து அவரை சாத்விகி என்பது மடைமை.அவரது சஹஜ குணத்தை வைத்தே அவர் குணத்தை குறிப்பிட வேண்டும்.அவர் சஹஜ குணம் தாமசம் ஆகையால்,விஷ்ணு தாமசியே.

ஆக,உண்மையான தாமஸி விஷ்ணு,தாமஸ புராணங்கள் வைணவப் புராணங்களாம்.சாத்விகி ருத்திரர்,சைவப்புராணங்கள் சாத்விக புராணங்களாம். 

நமது ஸமாதானம்- வேத,வேதாந்தங்களிலேயே புருஷஸூக்தத்தில் லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில் ‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது
 ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது  விஷ்ணுஸூக்த வாசகம்
‘தம தவா கருணமி தவஸமவதவயாந
         க்ஷயநதமஸய ரஜஸ பராகே’
மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிப்பவன் என நேரடியாகவே உறைத்தபோது அதை மறைபொருளாக பாவித்து இரட்டையர்த்தம் கற்பிப்பது அவைதீகமன்றோ. 

மற்றும் இங்கு கிருஷ்ணோபனிஷத் வாக்யத்தை கையாண்ட விதம் காண்கையில் இவருக்கு கண்ணில் கோளாறா அல்லது வடமொழி புலமை சூன்யமா எனும் ஐயம் எழக்கூடும்.
அவ்வாக்யத்தில் “மாயை எனும் வஞ்சகம் மூன்றுகுணங்களை கொண்டது
அவை ஸத்வம், ராஜஸம், தாமஸம். ஸத்வகுணம் சிவனிடமும் பிரம்மாவிடம் 
ராஜஸமும் வெளிப்படுகிறது” எனதான் கூறியதே தவிற விஷ்ணுவிற்கு தமோகுணமுண்டு என எவ்விடத்திலும் இல்லை. பகவானுடைய நாமத்திற்கு அங்கு எப்பதமுமில்லையே. 

மற்றும் அவ்வசனத்தில் சிவனை பரமஸாத்வீகி என கூறவில்லை, சிவனிடம் ஸாத்வீக குணம் வெளிப்படுத்தப்படுகிறது என்றே கூறியது. இதை நாம் ஆக்ஷேபிக்கவில்லையே. 

ஹஸ்தே(அ)க்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம் ஸ்வமஸ்ததே கேஸவபாத தீர்த்தம் ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்தரம் சிவம் மஹாபாகவதம் ஸ்மராமி

”’ கையில் துளசிமணிமாலையும், நெஞ்சில் ராம தத்வத்தையும், தன் தலையில் கேசவனின் பாததீர்த்தமான கங்கையையும், நாவின் நுனியில் தாரகமான ராம மந்திரத்தையும் தரித்து நிற்கும் சிவனை மஹாபாகவதனாக அறுதியிடுகிறேன்.”’ என்றல்லவோ பாகவதம் கூறிற்று. இவ்வாறு எம்பெருமாளின் பக்தபாகவதனுக்கு ஸாத்வீககுணம் ஆங்கேங்கே வெளிப்படதான் செய்யும். சிவன் தன் தமோகுணத்தை இப்படி பகவத்நிஷ்டையால் போக்கிக்கொள்கிறார் என்பதும் பொருந்தும்.

பகவான் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் ஸாத்வீகுணம் அவரை அறியும் எளியவழியென்பதாற்தான் ஸாத்வீகதிருமேனியை கொண்டருளுகின்றார் என்பதற்கும் மேலே பல ப்ரஹ்மானம் காட்டினோம். ஜட குணங்களால் மூடப்பட்டவன் எவ்விதம் ப்ரஹ்மமாக முடியும்? அங்கனம் மேற்காட்டிய ஸூதசம்ஹிதை வசனத்தால் ஜடகுணங்களுள் ஒன்றில் சிவன் மூடப்பட்டதாக உள்ளதே, ஆகையால் சிவன் சாதாரண ஜீவாத்மா என விளங்கும். ஆகையினால் மேற்காட்டிய ஸூதசம்ஹிதை வசனத்திற்கு எவ்வித ஸ்ருதி ப்ரமாணமுமில்லையென்பதால் அது நிராகரிக்கதக்கதே. 

ஆக்ஷேபம்-  கந்த புராணம்:ஸுத சம்ஹிதை:இரண்டாம் அத்யாயம்:

ருத்ரஸ்ய விக்ரஹம் ஸுகலம் க்ருஷ்ணம்
விஷ்ணோஸ்ச விக்ரஹம் |
ப்ரஹ்மணோதி விக்ரஹம் ரகதம சிந்தயேத பூதிமுகதயே||
ஸெளகலம் ஸத்வகுணஜ்ஜாதம ராகம ஜாதம ரஜோகுணத|
கார்ஷண்யம் தமோகுணஜ்ஜாதம இதி வித்யாத ஸ்மஸ்தத||

ருத்ரனுடைய சரீரத்தை வெளுப்பாகவும், விஷ்ணுவுடைய சரீரரத்தை கருப்பாகவும் பிரம்மனின் சரீரத்தை சிவப்பாகவும் பூதிமுக்தியின் பொருட்டு சிந்திக்கக்கடவான். வெளுப்பு ஸத்வகுணத்தாலுண்டாகும்; சிவப்பு ரஜோகுணத்தாலுண்டாகும்;கறுப்பு தமோகுணத்தாலுண்டானது என அறியகடவான். 

எனவே விஷ்ணுவுடைய மேனி தாமஸத்தாலுண்டானதுசிவனுடைய செம்மேனி ஸாத்வீகம். ஆகையால் சிவசம்பந்தபுராணம் ஸாத்வீகம்;விஷ்ணு சம்பந்தபுராணம் தாமஸமாகும். 

ஸமாதானம்:அப்புராண வசனத்தில் விஷ்ணுவுக்கு தமோகுணமுண்டு என சாபதமாக கூறப்படவில்லை. இதைக்கொண்டு நாம் வேதத்திலிருந்து எடுத்த மேற்கோள்களின் மூலம் பகவானுக்கு தமோகுண நாற்றமும் கிடையாது என்பதை அசைக்கவும் முடியாது என்பதை நடுநிலையாளர்க்கு புரியும். 
வெண்மை , செம்மை, கருமை ஆகிய நிறங்கள் ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களை காட்டுமென்பதெல்லாம் ப்ராக்ருதமான சரீரரங்களுக்கல்லவா? சொல்லப்படும். 

ந தஸ்ய ப்ராக்ருதா  மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந
(பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று. 

எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது? ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ|
நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய், பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது. 

பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின்ப சும்புறம்
போலுநீர்மை பொற்புடைத்த டத்துவண்டு விண்டுலாம்
நீலநீர்மை யென்றிவைநி றைந்தகாலம் நான்குமாய்
மாலினீர்மை வையகம்ம றைத்ததென்ன நீர்மையே.

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
இவ்வுலகத்திலுள்ளவர்கள் திரஸ்கரித்தது என்ன ஸ்வபாவம்!

என்ற திருச்சந்த விருத்தத்திலும்(44)

நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்
நான்கும்…. 

வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு (நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய். 

என்ற நான்முக அந்தாதி(24) பாடலும் மாறிமாறி வரும் வர்ணங்களுடையவை பகவானின் திருமேனி என்றதே. 
எனவே பகவான் தாமஸகுணத்தைகொண்டவர் என்பதற்கு  கறுப்பு நிறத்தை காரணம் காட்டும் இக்கந்தபுராண வசனம் பொருந்தாது என்க. 

ஆக்ஷேபம்- 

சிவமஹிமை கூறும் புராணங்கள் எல்லாம் தாமஸமென தள்ளதக்கவை எனின் ஸ்கந்த, லிங்க, மத்யஸ்த புராணங்களை  தாமசம் கருதி விருத்தம் எனத் தள்ளிவிட வேண்டியதே.மற்றும் சிவனும், உமையும் தாமஸ தெய்வம், அவர்களின் சம்பாஷணையும் தாமஸபுத்தியுடன் கூடியதாய்த் தானிருக்கும் அது  எப்படி பிரமாணமாயிற்று?
 அன்றியும் பாத்மபுராணம் பிரமனுக்குரியது, ஆகலின் ராஜஸம், அதனைப் பிரமாணமாக எடுப்பது எப்படித் தகும்? அதனைச் செய்யாமல் அப்புராண வாக்கியத்தை தன்கொள்கைக்குப் பிரமாணமாகக் கொண்டது அஃதேன்? 

ஸமாதானம்- சிவமஹிமை புராணங்களையும், பிரம்ம மஹிமை புராணங்களை தாமஸம், ராஜஸம் என கூறிவிட்டு அவற்றிலிருந்து ப்ரமாணம் எடுத்தல் கூடுமோ என்பது நியாயமான கேள்வியே. இங்கு முக்யமாக கருதவேண்டியொன்று உள்ளது. எந்தப்புராணத்தையும் முழுவதுமாக வைதீகர்கள் தள்ளமாட்டார்கள். வேதவிருத்தமான விஷயங்கள் இருந்தால் அதை தள்ளியே தீரவேண்டும். 
வேதத்திற்கு விருத்தமில்லாத விஷயமிருந்தால் அது ஸ்ந்தபுராணமானாலும், லிங்க புராணமானாலும், மத்யஸ்தபுராணமானாலும், பத்மபுராணமானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். “அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம்”
எனும் மத்யஸ்த புராணவசனமும் அக்னி, சிவமஹாத்மியத்தை சொல்லும் புராணபகுதிகள் தாமஸங்கள் என்று சொல்லிற்றே ஒழிய முழுபுராணத்தையும் கழிக்கவில்லை. ஒரு புராணம் தாமஸம், இன்னொரு புராணம் ஸாத்வீகம் இன்னொன்று ராஜஸம் என்று சொல்வது பெரும்பான்மையான தாமஸ பகுதிகளையோ அல்லது ஸாத்வீக பகுதிகளையோ அல்லது ராஜஸபகுதிகளை உடையது என்பதாலேயே ஆகும். உதாரணமாக ஸ்கந்த புராணத்தில் ‘கறுப்புநிறம் தாமஸம் என்பதால் விஷ்ணு தாமஸம்’ என்ற வசனமும்  அதே புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராம் அத்யாயத்தில் ” மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்”என்ற வசனமும் முரண்பட்டுகொள்கிறது. இவற்றுள் விஷ்ணுவானவர் ஸாத்வீகவடிவானார், அவறுக்கு தமோகுணஸ்பரிசமும் கிடையாது என்ற வேதவசனங்களுக்கு ஒத்திருக்கும் வாக்யத்தையே அனுஸரிக்க வேண்டுமென பாலபருவ பிள்ளைக்கும் தெரிந்திருக்கும். ஆகவே எப்புராணமாயினும் அவை ஸாத்வீகபுராணத்திற்கு முரணில்லாமலும், வேதத்தை அனுஸரித்துமிருந்தால் அதை தாராளமாக ஏற்கலாம். பெரும்பகுதி விரோதிக்குமானால் அவை தள்ளதக்கவை என்பது முடிவு. 

ஆக்ஷேபம்- யாழ்பாணத்து நல்லூர் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர்

 ‘சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம் சத்துவ
       குணம் வெண்ணிறமுடையதும் சுகத்துக்கும்
       ஞானத்துக்கும் இடமுமாம், யோகிகளுக்கு ஞானம்
       உபதேசிக்கும் சிவபெருமான் தெளிபளிங்கு வடிவி
       னராய் எங்குமுறங்காது பிராமணாதிபதியாயிருப்பர்’,

       ‘விட்டுணு புராணம் நான்கும் தாமசங்களாம், தமோ
       குணம் கருநிறமுடையதும் உதாசீனரூபமும், கூட கிருத்
       திய சமர்த்தமுமாம். நித்திரை, சோம்பு, பிரமாதம், வஞ்ச
       னம் முதலியவைகள் தாமசங்கள். விட்டுணு கரியரும்,
       சேஷசயனம் செய்வோரும் பக்தரை மோகிப்பிப்பவருமாயிருப்பர்,

       ‘பிரமபுராணம் இரண்டும் இராசசங்களாம். இரசோ
       குணம் சிவந்த நிறமுடையதும் துக்கத்துக்கிடமும்
       சஞ்சல ரூபமுமாம். பிரமாச் செந்நிறமுடையராய்ச்
       சஞ்சல ரூபியாயிருப்பர்.

       ‘அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுணயுத்த
       மாம். அக்கினியுஞ் சூரியனும் முக்குண வடிவினராயிருப்பர்.
       ஆதலால், இப்பதினெட்டினுள்ளுஞ் சிவபுராணங்கள்
       பத்துமே உயர்ந்தனவாம். ஆகையாற் சிவனடியார்கள்
       சிவ புராணங்களையே விதிப்படி மெய்யன்போடு கேட்கக்கடவர்கள்’

என்றருளினார். 

ஸமாதானம்-சிவ புராணம் பத்து என எந்த ஸ்மிருதி, இதிஹாச, புராணமும் நிஷ்கரிகை செய்யவில்லை. பத்ம புராணமோ சிவபுராணம் ஆறு, விஷ்ணுபுராணம் ஆறு, பிரம்ம புராணம் ஆறு என நிஷ்கரிகை செய்துவிட்டது. ஆனால் சைவர்கள் பிரம்மபுராணத்தில் சில சிவமஹிமை சரிதத்தை எடுத்துகொண்டு அவையும் சிவபுராணமென பிதற்றுவர். ஆனால் பத்மபுராண நிஷ்கரிகை செய்ததை பார்கையில் பிரமபுராணங்களுள் சிவசரிதம் புகுத்தப்பட்டிருக்கும் புனைவென புரியும். குணம் நிறபேதத்தை அனுஸரிப்பது என்பது ப்ரமாணமற்ற பேச்சு என்பதை மேலே கண்டோம்

மோகிப்பது, கிருத்திய சமர்தமும் தாமஸமெனில் சிவன்  மோகிக்கப்பட்டாரெனும் புராணகதையின் மூலம் சிவன் சாதாரண ஜீவாத்மா என விளங்கவில்லையோ. நாராயணன் தூங்குகின்றதால் அவருக்கு தாமஸகுணமுடையது என்பது ப்ரமாண விருத்த பேச்சு. 

‘யோவித யயாநுபஹதோபி தஸார்த்த வ்ருத்தத்யா நிதராமுவாஹ ஜடரீக்ருதலோகயாத்ர’ (பாகவதம்-3-9-20)

பகவான் அஞ்ஞானம் தீண்டபெறாது
 நெடுங்காலம் லோகயாத்ரை பொருட்டு சிந்தித்து நித்திரையில் அமர்ந்தாரென்றும்

நயஸ்யேத  மாதமஜி  ஜகத விலயாமபுமதயே ஸேஷ தமநா நிஜஸுகாநுபவோ நிரீஹ|
யோகேந மீலித்தருகாதமநி வீதிநிதரஸ துர்யே ஸதிதோ ந து தமோ ந குணாமஸச யுங்ஷே|| (7-9-32)

இவ்வுலக்கனைத்தையும் தன் திருவயிற்றில் வைத்துகொண்டு ப்ரளய ஜலத்தில் தன் பெருமைகளில் நிலைநிற்பவனாய் தன் ஸ்வரூபஸுகாநுபவத்திலேயே ஈடுபட்டவனாய் கிரியையற்றவனாய் விழித்துகொண்டே கண்ணைமூடியிருப்பவனாய் தூக்பமற்றவனாய் ஜாகரத ஸ்வபநஸுஷுபதி ( விழிப்பு, கனவு, தூக்கம்) எனும் மூன்று நிலைக்கு அப்பாற்பட்டு நான்காம் நிலையில் நின்று 
தாமஸ ப்ராக்ருதமான மற்ற குணங்களும்
கூடியிருக்கப்பெறாதவனாய் ஆதிஷேனில் சயனித்திருக்கிறாய்

என்று ஆதிஷேஷ சயனம் யோகநித்திரை என்பதற்கு புராணம் சான்று. அது தாமஸம் என்பதற்கு புராண ப்ரமானமும் இல்லையென்பதாற் ஆறுமுகநாவலரின் பேச்சும் அபத்தமாய் முடிந்தது. 

யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய
பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ
மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே…… என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராயணபரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர் பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்’

எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய் ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன் என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது.

கிருஷ்ணரும் ராமரும் முருகணை போல பிராக்ருத பிறப்பில் பிறக்கவில்லை.
பிதா புத்ரணே பித்ருமாந்
யோநியோநௌ நாவே
தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்”
[யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந”
[யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்”
[புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே”
[புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

முதலிய பிரமாணங்களால் தன்னிஷ்டபடியே பரமாத்மா பிறப்பெடுப்பதாக கூறுகிறது அதன்படி நாராயணரே இப்பரமான்மா என்பது சொல்லாமலேயே விளங்கும்.

இவ்வகையில், ஸத்வ குண புராணங்கள் ஸ்ரீ விஷ்ணுவையும், தமோ குண புராணங்கள் ருத்ரனையும், ராஜஸகுண புராணங்கள் ப்ரஹ்மாவையும் பிரபலபடுத்தி புகழ்கின்றன. இவ்விதமான , ரஜோ மற்றும் தமோ குண புராணங்களில் பகார பேதங்கள் மலிந்து காணப்படும். எனவே சரியான இறைநிலையையும் , அதன் தத்துவத்தையும் புரிந்து கொள்ள ஸாதகர்கள் ஸத்வகுண புராணங்களை வழிகாட்டியாக கொண்டு ஸாதனை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்தால் ஒழிய மற்ற எந்த முறைகளினாலும் மோக்ஷ யோக்யர்களாக  தங்களை மேம்படுத்தி கொள்ள முடியாது என்பது முடிவு. எனினும், நாம் ஸத்வைஷ்ணவர்களாக இருந்தும் ஸத்வ புராணங்களில் தேர்ச்சியும், அதன் பயனாக நம் தெய்வமான ஸ்ரீ ஹரியானவன் ஸகல தேவோத்தமன் என்றும் அவனே அனைத்திற்கும் மூல காரணன் என அறுதியிட்டு கூற இயலாத துர்பாகியர்களாக இருக்கிறோம்.ஏனெனில் , ஸத்வ புராணங்களை கூறி அதன் தத்வ விளக்கங்களை பாமரன் முதல் பண்டிதர்கள் வரை புரிந்து கொள்ளும் வகையில் உரைப்பார் எவருமில்லை. எனவே, இனிவரும் கால கட்டங்களில் அவை அனைத்தையும் படித்து, பொருளுணர்ந்து  மற்றவர்களுக்கும் உணர்வித்து உய்ய சமய அவகாசம் முதலிய கிடைக்கா என்ற தீர்க நோக்கில், அதனை சரிபடுத்தும் பொருட்டு அப்புராணங்களின் ஸாரத்தை வழங்கி அதன் மூலமாக ஸ்ரீ ஹரியின் ஸர்வோத்தமத்தை நிலைநிறுத்திக்கொள்வோம்


————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-



ஶ்ரீ ஸரயூ அஷ்டகம்

November 25, 2024

ஶ்ரீ சக்ரவர்தீ த³ஶரத² உவாச ।

நமஸ்தே ஸரயூ தே³வி வஸிஷ்ட² தநயே ஶுபே⁴ ।
ப்³ரஹ்மாதி³ ஸகலைர்தே³வைர்ரு’ஷிபி⁴ர்நாரதா³தி³பி:⁴ ॥ 1॥

ஸதா³ த்வம் ஸேவிதா தே³வி ததா² ஸுக்ரு’திபி⁴ர்நரை: ।
மாநஸாச்ச ஸமாயாதே ஜக³தாம் பாப ஹாரிணி ॥ 2॥

ஸ்மரதாம் பஶ்யதாம் தே³வி பாபநாஶே படீயஸி ।
யே பிப³ந்தி ஜலம் தே³வி த்வதீ³யம் க³தமத்ஸரா: ॥ 3॥

ஸ்தநபாநம் ந தே மாது: கரிஷ்யந்தி கதா³சந ।
மநு ப்ரப்⁴ரு’திபி⁴ர்மாந்யைமாநிதாஸி ஸதா³ ஶுபே⁴ ॥ 4॥

த்வத்தீர மரணேநைவ த்வந்நாம ரடநேந ச ।
யே த்யஜந்தி தநும் தே³வி தே க்ரு’தார்தா² ந ஸம்ஶய: ॥ 5॥

த்வம் து நேத்ரோத்³ப⁴வா தே³வி ஹரேர்நாராயணஸ்ய ஹி ।
மஹிமா தவ தே³வைஶ்ச கீ³யதே ச முஹுர்முஹு: ॥ 6॥

தத்ர கா ஹி மந: ஶக்தி: ஸ்தவநே மாநுஷஸ்ய ச ।
த்வத்தீரே ஸர்வ தீர்தா²நி நிவஸந்தி சதுர்யுகே³ ॥ 7॥

நமோ தே³வி நமோ தே³வி புநரேவ நமோ நம: ।
ஹே வாஸிஷ்டி² மஹாபா⁴கே³ ப்ரணதம் ரக்ஷ ப³ந்த⁴நாத் ॥ 8॥

இதி ஶ்ரீஸரயூ அஷ்டகம் ஸம்பூர்ணம் ।

————–

அயோத்தியின் அணிகலன் சரயு

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் புகுந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா.

அசுரர்களின் இம்சைகளைத் தாங்க முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுகோள் வைத்தனர். துஷ்ட நிக்ரகம் செய்ய ராமாவதாரம் எடுக்க விரும்பிய ஸ்ரீமகாவிஷ்ணு வைகுந்தத்தின் ஒரு பகுதியையே அயோத்தியாக்கினார். அந்த அயோத்தியை மனு, சரயு நதியின் அருகே ஸ்தாபித்தார் என வரலாறு கூறுகிறது. திருமாலோடு மண்ணுலகில் சேர்ந்திருக்க விரும்பிய அவரின் தர்மபத்தினியான நீளாதேவியே சரயுவாகத் தோன்றி அயோத்திக்கு அருகே பிரவாகம் எடுத்தாள் என்கின்றன புராணங்கள். சரத்தைப் போல விரைந்து ஓடுபவள் என்பதால் சரயு என்றானாள்.

இன்றும் சுத்தமான குளிர்ந்த நதியாக ஓடும் சரயு அன்னையின் 14 படித்துறைகள் அயோத்தியில் முக்கியமானவை. அதில் குப்த்வார் காட், கைகேயி காட், கௌசல்யா காட், பாப விமோச்சன் காட், லக்ஷ்மண் காட் போன்றவை சில. ஸ்ரீராம நவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் உறுதி என்பது நம்பிக்கை. கங்கைக்கு ஆரத்தி எடுப்பதைப் போல சரயுவுக்கும் ஆரத்தி பூஜை அன்றாடம் நடைபெறுகிறது.

ராமாயணத்தின் தொடக்கம் சரயு நதிக்கரையில் இருந்தே தொடங்குகிறது. நடக்க முடியாத, பார்வை இழந்த பெற்றோர்களைத் தூக்கிச் சுமந்த சிரவணன், சரயுவில் குடுவை ஒன்றில் நீரை எடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ மிருகம் நீர் குடிக்கிறது என்று எண்ணிய தசரத மன்னர், சப்தம் வந்த திசை பார்த்து அம்பெறிய அது சிரவணனைக் கொன்றது. மகனை இழந்த பெற்றோர், தசரதனும் அவ்வாறே மகனைப் பிரிந்து புத்திர சோகத்தில் வாடவேண்டும் என்று சாபம் பெற்றார். ராம அவதாரத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வே அமைந்தது எனலாம். தசரதனின் அம்பு சிரவணனைக் கொன்ற பகுதி சர்வாரா என்றும், சிரவணன் பெற்றோரோடு வாழ்ந்த பகுதி சமதா என்றும் அயோத்தியிலேயே உள்ளது. இன்றும் சரயூவில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

அயோத்தி திரும்பிய ஸ்ரீராமர் தசரதருக்காகவும் சிரவணனுக்காகவும் சரயுவில் பித்ருக் கடன்களை செய்தார் எனவும் ராமாயண நூல்கள் கூறுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தின் சர்முல் என்ற இடத்தில் சரயு அன்னை தோன்றுகிறாள். அவளே அயோத்தியை அழகுற வளர்க்கிறாள். அயோத்தி சென்று ராமநவமி நாளில் சரயுவில் நீராடினால் மோட்சம் பெறலாம் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.

சூரிய வம்ச அரசர்களுடைய வீரமும் துணிவையும் தாண்டி அவர்கள் நல்லொழுக்கதோடு இருப்பதைப்போல அலைபுரண்டு சரயு பாய்ந்தாலும் கரைக்குள் மட்டுமே அடங்கி ஓடுவாள். கோசலை நாட்டில் ஒவ்வொரு ஜீவனும் தழைத்து வளரப் பாலூட்டும் தாயின் தனங்களைப்போன்றது சரயு என்கிறார் கம்ப ராமாயணத்தில் கம்பர். சரயு நதிக்கரையில் அமர்ந்தே துளசி தாசர் ராமாயணம் எழுதினாராம். பல நூறு ரிஷிகளையும் மகான்களையும் தனது கரையில் அமர வைத்து ஞானமும் மோட்சமும் அளித்தவள் சரயு.

ராம அவதார நோக்கம் முடிவடைந்ததும் தம்பி இளைய பெருமாளைத் தொடர்ந்து ஸ்ரீராமர் மூழ்கி வைகுண்டம் அடைந்ததும் சரயு நதியில்தான் என்கிறது வால்மீகி ராமாயணமும் துளசி ராமாயணமும். அவரைத் தொடர்ந்து பரதன், சத்ருக்கனனும் சரயுவில் புகுந்தே சங்கு சக்கரமாக வைகுந்தம் புகுந்தார்கள் என்றும் காவியங்கள் கூறுகின்றன. அதேபோல லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவும் சரயுவில் மூழ்கி மோக்ஷம் அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

சரயு நதிக்கரையிலேயே ஸ்ரீராமர் பிறந்தார். சரயுவில் நீராடியே வளர்ந்தார். சரயுவைக் கடந்தே கானகம் நுழைந்தார். சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார் என ஸ்ரீராம காவியத்தின் சத்திய சாட்சியாக, அன்றும், இன்றும், என்றும் கம்பீரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறாள் சரயு மாதா. அவளைப் பணிந்து சகல பாவங்களும் நீங்கி உயர்ந்த வாழ்வைப் பெறுவோம்!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்மாழ்வார் மஹாத்ம்யம்

November 25, 2024

இன்றைய நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் என்று வழங்கப்பட்டு வந்தது. அவ்வூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி – உடைய நங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். உடைய நங்கையின் ஊர்திருவண் பரிசாரம். (இன்றைய திருப்பதிசாரம்). திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார். மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர். சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார். ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.பெருமாள் முன்பு, “கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்” என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார்.
இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம் “எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும் படி, சேனை முதலியாரை நம்மாழ்வாராக…….. நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.
பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல்) இருந்தது. இந்தக் குழந்தை. விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர். உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் ஆதிசேஷன் புளிய மரமாக உள்ளதிருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்

இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார்.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?”, இது வரை பேசாத ஆழ்வார் இவரின் வினாவிற்கு விடை யளிக்கும் வண்ணம் ” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று இசைந்தார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார். ஆழ்வார் கூறிய பதில் சிறியதாக இருந்தாலும் அது அனைத்தயும் அடக்கிய தத்துவார்த்தமாக அமைந்திருந்தது. 

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.) மகான் மதுரகவி, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி நம்மாழ்வாரை வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார்.
அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டி தங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”. ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.
எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய் மொழிதிராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.
மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார். நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள்.

ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார்.

எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.

திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார்.

புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார். இவர் ஸ்ரீ விஸ்வக்ஷேனாவின் அவதாரமவார்.

இவரின் ஆயுள் 32 ஆண்டுகள் என்றாலும், நான்கு வேதங்களை பற்றி எடுத்துரைக்கும் வண்ணம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு படைப்புகளை உருவாக்கினார். இதனால் இவரை ஜகத்குரு ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜர் “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் பட்டம் சூட்டியுள்ளார். மேலும் நம்மாழ்வார் இயற்றிய ஸ்ரீ பகவத் விஷயம், சாம வேதத்தினை விளக்குவதாக உள்ளது. 

இவர் பெருமானின் மீது கொண்டிருந்த பக்தி, இவரை இவ்வாறு பாடவைத்ததோ?…

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்றும்.. 

திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றும்… 

”கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”என பரவசத்துடன் பாடி இறைவனடிக்கு சேவை புரிந்த இவர் ஸ்ரீ நாதமுனிக்கு நாலாயிரம் பாசுரமும் கிடைக்க வழி வகுத்தார்.

இயற்பெயர் : –

நக்ஷத்திரம் : விசாகம் 

மாதம் : வைகாசி 

சேக்ஷதிரம் : திருகுருஹூர் (ஆழ்வார் திருநகரி), 

திருநெல்வேலி – தமிழ்நாடு

பிரபந்தம் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி (பிற்காலத்தில் இவை அனைத்தும் சேர்த்து ஸ்ரீ பகவத் விஷயம் எனப்போற்றபட்டது)

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது. ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர். இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார். வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு. பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.
திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை. எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது. இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.
நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது

நம்மாழ்வாரின் பெருமை:

சைவத்தில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தது போல வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள். 

1. காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது மேல் நாட்டிலிருந்து வைணவ அடியார்கள் சிலர் மன்னாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச்சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள்அடியார்களிடம் ஆழ்வாரின் ஆயிரம் பாடல்கள் பற்றியும் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார். நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான். எனவே தான் ஆழ்வாரின் தனியனில் “ நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே” என்று கூறியுள்ளனர்.

2. பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர். வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது. திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள். பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது. நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது வைணவ குருபரம்பரை. ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாரே முதலும் முடிவுமாக இருக்கின்றார். இவர் ஆழ்வார்களுள் கடைசியும் ஆசாரியர்களுள் முதல்வரும் ஆவர்.
3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு. இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம். இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல் “ சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.
4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும். அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து. இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு. 1, 12, 18, 40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும், 27, 38, 78, 79 ஆகியவை உயிர்நிலையையும், 2, 2, 331, 81 ஆகியன விரோதி சொரூபத்தையும், 47, 48, 49, 40 ஆகியன உபாய சொரூபத்தையும், 19, 23, 80, 93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.
வைணவத்தின் தத்துவக் கருத்துக்கள் ஆழ்வார்கள் பிறர் பாசுரங்களை விட நம்மாழ்வார் பாசுரங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இதிலிருந்துதான் ராமாநுஜர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கினார். எனவேதான் ஆளவந்தார் நம்மாழ்வாரை “ குலபதி” என்று போற்றுகிறார். இதனையே பராசர பட்டர் ,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்
.-என்று ஏத்தினார்.
5. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நம்மாழ்வார் அருளிச் செய்தவை. இவற்றுள் திருவாய்மொழி சாமவேத சாரமாகக் கருதப் படுவது. இதுவே ஆழ்வார் அருளியவற்றில் வைணவர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுவது.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் கி. பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கி 7 விதமானவியாக்கியானங்கள் (விரிவுரைகள்) தோன்றியுள்ளன. இவற்றுக்கு ‘ ஸ்ரீ பகவத் விஷயம்’ என்று பெயர். திருவாய்மொழியின் நுட்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இவ்வுரைகளே பெருந்துணை செய்கின்றன. திருவாய்மொழி ‘ திராவிட வேத உபநிஷத்’ என்றே போற்றப்படுகிறது. இதன் சிறப்பை ‘ திராவிட வேதோபநிஷத் சங்கதி’, ‘ திராவிட வேதோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற வடமொழி நூல்கள் எடுத்துரைக்கின்றன.

இத்திருவாய்மொழி வடமொழி, தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது .

திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயரையும் பத்துப் பத்துக்களும் அவனுடைய பத்து அவதாரங்களையும் நினைவூட்டுவன என்பர் பெரியோர் .

6. ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக ( உறுப்புகளாக) அமைத்து ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,

நம்பெருமாள் – ( நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை, பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்

என்பதாக அமைவர்.

7. நம்மாழ்வார் அருளியவை நால்வேதம் எனவும் திருமங்கையாழ்வார் அருளியவை அதற்கான ஆறங்கம் எனவும் மணவாள மாமுனிகள் போற்றுகிறார்.

8. நம்மாழ்வார் பாசுரங்களில் கூறப்பட்டுள்ள திருமாலின் பெயர்களே அந்தந்த திருப்பதி பெருமான்களுக்கு இன்றளவும் வழங்கப்படுகின்றன. ‘ ஒன்றும் தேவும்’ என்னும் குருகூர் பாசுரத்தில் ‘ ஆதிப்பிரான் , பொலிந்து நின்ற பிரான்’ என்ற ஆழ்வாரின் வாக்குகளே ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமானுக்குப் பெயராயிற்று. இவ்வாறே பிற திவ்ய தேசங்களிலும் கண்டு கொள்ளலாம்.

9. ” வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைக்கின்ற நம்மாழ்வார் பாடல்கள் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் , தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுமையிலுமே முன்னென்றும் கண்டிராத ஒரு புதிய பக்தி வெள்ளமும் சமய தத்துவப் பிரவாகமும் தோன்றி வளர்வதற்கு மூலமாயிருந்தன. இது தமிழருடைய ஒரு பெரும் சாதனை.” என்பார் பேரறிஞர் மு. அருணாசலம்.

10. நம்மாழ்வார் பிறந்து வளர்ந்ததனாலேயே திருக்குருகூர் ‘ ஆழ்வார்திருநகரி’ எனப் புகழ் பெறுவதாயிற்று.

11. ஆழ்வார் மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், மகிழ்மாறன், வகுளாபரணன், திருக்குருகூர் நம்பி, குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன், திருவாய்மொழிப் பெருமாள், திருவழுதி வளநாடன், நாவீறுடையான் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.

12. இவர் உலகனைத்துக்கும் ஞான உபதேசம் செய்கின்ற ஆழ்வார் என்பதனால் ‘ நம்மாழ்வார்’ எனப் படுகின்றார். நம்பெருமாள் என்ற திருமாலின் அருமைத் திருநாமத்தைப் போல நம்மாழ்வார் என்ற பெயரும் அமைந்துள்ள சிறப்பை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில்(50)

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பது அவரவர்தம் ஏற்றத்தால்
“-என்று போற்றுகின்றார்.

உலக நடைக்கு மாறாக இருந்ததனால் ‘ மாறன்’ எனவும், மாறன் காரியார் புதல்வர் ஆதலின் ‘ காரிமாறன்’ எனவும், கர்ப்பத்திலிருக்கும்போது குழந்தைகளை அஞ்ஞானத்திற்கு ஆட்படுத்தும் சடம் எனும் வாயுவை கோபித்து ஓட்டியதால் ‘ சடகோபன்’ எனவும், குருகூர் பொலிந்து நின்ற பிரான் தந்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் ’ மகிழ்மாறன்’,’ வகுளாபரணன்’ எனவும், பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களில் கூறிய தத்துவக் கருத்துக்கள் எனும் அங்குசத்தால் அடக்கியமையால் ‘ பராங்குசர்’ எனவும், பிரபக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் வைணவர் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதால் ‘ பிரபன்ன ஜன கூடஸ்தர்’ எனவும் போற்றப் பெறுகின்றார்.

13. மதுரகவிகள், திருவரங்கத்து அமுதனார், மணவாள மாமுனிகள், ஈசுவர முனிகள், சொட்டை நம்பி, அனந்தாழ்வான், பட்டர், அப்புள்ளார், வேதாந்த தேசிகர் முதலிய ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நம்மாழ்வாரைப் பலபடியாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

14. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சடகோபர் அந்தாதி, நம்மாழ்வாரின் பெருமைகளை 100 பாடல்களில் எடுத்துரைக்கின்றது.

15. கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால் மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.

16. வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில் ‘ திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’ அற்றது பற்றெனில்’ என்றும், ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’ களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை ‘ களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும், ‘ நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

17. கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.

அரையர் சேவையும் திருவாய்மொழியும்

ஆழ்வார்களின் பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை அழகுறப் பேசி நடிக்கும் கலைதான் அரையர் சேவை.
திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்தார். பின் பெருமாளிடம் அவர், “ மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அத்யயன உற்சவம் நிகழும்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருளி வேத சாம்யமாக ஏற்றம் அருள வேண்டும்” என்று கேட்டார். பெருமாளும் சம்மதம் தந்தார்.

அன்று முதல் ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை மார்கழி மாத சுக்ல தசமியன்று திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்வித்தனர். நம்மாழ்வாரின் பிரதிநிதியாக மதுரகவியாழ்வார் இருந்து திருவாய்மொழியைப் பண்ணுடன் இசைத்து அபிநயித்தார். இதற்காக அவருக்கு “ திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்ற விருதினை நம்பெருமாள் வழங்கினார். இவ்விருதுப் பெயர் நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வரும் ‘ அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்ற வாக்கிலிருந்து வந்திருக்கலாம்.

நாலாயிரத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள் அதை இயலும் இசையுமாக வகுத்து தன் மருமக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் கற்பித்தார். அவர்களைக் கொண்டே திருவரங்கத்தில் மீண்டும் அரையர் சேவை நடைபெறச் செய்தார்.

மார்கழி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் பகலில் நடப்பது பகல்பத்து. இதில் பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெருமாள் திருமொழி, திருமாலை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் அடங்கிய முதலாயிரம் பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.

திருமங்கையாழ்வாரால் முன்னமே ஏற்படுத்தப்பட்டு நின்று போயிருந்த திருவாய்மொழித் திருநாளை மீண்டும் நடத்தினார் நாதமுனிகள். இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் 10 நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது 10 நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’ இராப்பத்து’ எனப்படுகிறது.

இதுவே ’ அத்யயனத் திருவிழா’ எனப்படும். நம்பிள்ளை ஈட்டுரையில் ‘ திருவத்யயனம்’ என இவ்விழாவைக் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்திருநகரி, திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 திருப்பதிகளில் மட்டுமே அரையர் சேவை இப்போது நடைபெறுகிறது.

ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “ இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார். அவள், “ ‘ கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள். இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?-
என்று போற்றி மகிழ்ந்தனர்.

————–

நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16

1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)

2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி

3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி

4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி

5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)

6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)

7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)

8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)

9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)

10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)

11. திருவனந்தபுரம் (அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)

12. ஆரம்முளா (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)

13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)

14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)

15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)

16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)

——————–

நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)

1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)

1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)

நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)

1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)

நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)

1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)

1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)

1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)

1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்

நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ நாராயண ஸ்தோத்ரம்

November 25, 2024

நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே
ஜெய கோவிந்த ஹரே
நாராயண நாராயண ஜெய கோபால ஹரே
ஜெய கோபால ஹரே(1)

கோவிந்தன் எனப்படும் நம்மைக் காக்கும் கடவுளான ஹரி நாராயணனுக்கு வெற்றி கூறுவோம். கோபாலனாய் பசு’க்களாகிய நம்மைக் காத்து ரக்ஷிக்கும் ஹரி நாராயணனுக்கு வெற்றி

கருணாபாரவார வருணாலயகம்பீர
நாராயணா (2)

கநநீரதஸங்காச’ க்ருதகலிகல்மஷநாச’ந
நாராயணா (3)

கருணைக் கடலானவரும், நிறைந்த மேகக் கூட்டம் போன்றவரும், கலியின் தோஷங்களை நீக்குபவரும், நாராயணனே!

யமுநாதீரவிஹார த்ருதகௌஸ்துபமணி
ஹார நாராயணா (4)

யமுனா தீரத்தில் விளையாடி மகிழ்ந்தவரும்,
கௌஸ்துபமணியினை ஹாரமாய்த் தரித்தவரும் நாராயணனே!

பீதாம்பரபரிதாந ஸுரகல்யாண நிதான
நாராயணா (5)

பொன்னிற பட்டாலான பீதாம்பரம் அணிந்து, தேவர்களுக்கு அளப்பரிய நன்மைகளை அருள்பவர் நாராயணனே!

மஞ்ஜுலகுஞ்ஜாபூஷ மாயாமானுஷ வேஷ
நாராயணா (6)

குஞ்ஜ மணிகளாலான மாலையை அணிந்து, மானுட வேடம் தரித்து மாயையால் நம்மை ஆட்கொள்பவரும் நாராயணனே!

ராதாதரமதுரஸிக ரஜநீகரகுலதிலக
நாராயணா (7)

ராதையின் அருகாமையில் இதழினின்று தேனைச் சுவைத்து மகிழ்ந்திருப்பவரும், சந்திர வம்சத்தின் மணிமகுடமாய்த் திகழ்பவரும் நாராயணனே!

முரளீகானவிநோத வேதஸ்துதபூபாத
நாராயணா
பர்ஹிநிபர்ஹாபீடநடநாடக ஃபணிக்ரீட
நாராயணா (9)

குழலூதி மகிழ்ந்திருப்பவரும், நாராயணனே!
இவரின் திருவடிகளையே வேதங்கள் போற்றுகின்றன.

வாரிஜபூஷாபரண ராஜீவருக்மிணீரமண
நாராயணா (10)

பாரிஜாத மலர் மாலை அணிந்து, ருக்மிணியிடம் ரமித்திருப்பவரும் நாராயணனே!

ஜலருஹதளநிபநேத்ர ஜகதாரம்பகஸூத்ர
நாராயணா (11)

மயிற்பீலி அணிந்து, காளிங்கன் தலைமீது நர்த்தனம் ஆடியவரும் நாராயணனே!

பாதகரஜநீஸம்ஹார கருணாலய மாமுத்தர
நாராயணா (12)

தாமரை மலர்களால் ஆன மாலையை ஆபரணமாய் அணிந்து, தாமரை மலரில் உதித்த திருமகளுடன் மகிழ்ந்துறைபவரும் நாராயணனே!

பாப இருளை நீக்கி, கரைத்தேற்றுபவரும் நாராயணனே!

தாமரை மலர் போன்ற அழகிய விழிகளுடன், இவ்வுலகம் உருவாகக் காரணமாய் விளங்குபவரும் நாராயணனே!

அகபகஹயகம்ஸாரே கேச’வக்ருஷ்ண
முராரே நாராயணா (13)

அகன், பகன், மற்றும் கம்சனை, முரனை வதைத்த கேசவனும் நாராயணனே!

ஹாடகநிப பீதாம்பர அபயம் குரு மே மா
வர நாராயணா (14)

மஞ்சள் பட்டாலான பீதாம்பரமணிந்த லக்ஷ்மீ தேவியின் பர்த்தாவான நாராயணனே எம்மைக் காப்பாற்றும்!

தச’ரதராஜகுமார தானவமதஸம்ஹார
நாராயணா (15)

தசரதனின் மைந்தனும், அசுரர்களின் அஹங்காரத்தை அழித்தவரும் நாராயணனே!

கோவர்தனகிரி ரமண கோபீமானஸஹரண
நாராயணா (16)

கோவர்த்தனமலையைத் தாங்கி அருளியவரும், கோபிகைகளின் மனம் கவர்ந்தவரும் நாராயணனே!

ஸரயூதீரவிஹார ஸஜ்ஜநருஷிமந்தார
நாராயணா (17)

சரயூ நதி தீரத்தில் விளையாடி, கற்பக மரம் போல் வேண்டும் வரங்களை அருள்பவரும் நாராயணனே!

விச்’வாமித்ரமகத்ர விவிதவராநுசரித்ர
நாராயணா (18)

விச்வாமித்திரரின் யாகங்களைக் காத்து, பலவித அவதார வரலாற்றை உடையவரும் நாராயணனே!

த்வஜவஜ்ராங்குச’பாத தரணீஸுதஸஹ
மோத நாராயணா (19)

த்வஜ, வஜ்ர அங்குச பாச ரேகைகளைப் பாதங்களில் உடையவரும், பூமகளால் மகிழ்ந்திருப்பவரும் நாராயணனே!

ஜநகஸுதாப்ரதிபால ஜய ஜய ஸம்ஸ்ம்ருதி
லீல நாராயணா (20)

ஜனகரின் மகளை அடைய காத்திருந்தவரும், வாழ்க்கை நாடகங்களை ரசித்து மகிழ்பவரும் நாராயணனே! இவருக்கு வெற்றி கூறுவோம்!

தச’ரதவாக்த்ருதிபார தண்டகவனஸஞ்சார
நாராயணா (21)

தசரதனின் சொல்லுக்குப் பணிந்தவரும், தண்டகாரண்யத்தில் சஞ்சரித்தவரும் நாராயணனே!

முஷ்டிகசாணூரஸம்ஹார முனிமானஸ
விஹார நாராயணா (22)

முஷ்டிக, சாணூரர்களை வதைத்து, முனிவர்களின் மனத்தில் உறைந்திருப்பவரும் நாராயணனே!

வாலிவிநிக்ரஹசௌ’ர்ய வரஸுக்ரீவ –
ஹிதார்ய நாராயணா (23)

வாலியை வதைத்து, நல் சுக்ரீவனுக்கு அருளியவரும் நாராயணனே!

மாம்முரளீதர தீவர பாலய பாலய ஸ்ரீதர
நாராயணா (24)

வலிமை மிக்கவராய் குழலூதி மகிழும் லக்ஷ்மீ தேவியின் பதியே, நாராயணா! எம்மைக் காப்பாற்றும்!

ஜலநிதிபந்தந தீர ராவணகண்டவிதார
நாராயணா (25)

நதியின் மீது அழகிய பாலம் அமைத்து, ராவணனை ஸம்ஹரித்தவரும் நாராயணனே!

தாடீ மத தலநாட்ய நடகுணவிவித நாட்ய
நாராயணா (26)

தாடகையின் கர்வம் அழித்து, தேவர்களால் போற்றி பாடப்படுபவரும் நாராயணனே!

கௌதமபத்நீபூஜந கருணாகநாவலோகந
நாராயணா(27)

கௌதமரின் மனைவியான அகலிகையினால் பூஜிக்கப்படுபவரும், காருண்யமூர்த்தியும் நாராயணனே!

ஸம்ப்ரமஸீதாஹார ஸாகேதபுரவிஹார
நாராயணா (28)

சீதா தேவியின் மனம் கவர்ந்தவரும், அயோத்தியில் ஆட்சி புரிந்தவரும் நாராயணனே!

அசலோத்ருதசஞ்சத்கர பக்தாநுக்ரஹ
நாராயணா (29)

மலையையும் விரலால் தாங்கும் வலிமை கொண்டவரும், பக்தர்களுக்கு அருள்வதில் எப்பொழுதும் நாட்டம் கொண்டவரும் நாராயணனே!

நைகமகானவிநோத ரக்ஷ: ஸுதப்ரஹ்லாத
நாராயணா (30)

ஸாம கானத்தில் மகிழ்பவரும், அரக்கனின் மகனான ப்ரஹ்லாதனை காத்தவரும் நாராயணனே

பாரதீயதிவரச’ங்கர நாமாம்ருதமகிலாந்தர
நாராயணா

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்

November 25, 2024

ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 ||

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்ற பெருமாளே! ஒளிரும் நிறம் கொண்ட அழகிய திருமேனி உடையவரே! ரிஷி, முனிவர்களை காத்து அருள்பவரே! உம்மை சரணாகதி அடைந்த பக்தர்களையும் காக்கின்ற அருள் வடிவானவர் நீர்தானே! இந்த வாழ்க்கை எனும் பெருங்கடலை கடக்க படகாக இருந்து பாதுகாப்பு தருமாறு அருள்புரிய வேண்டுகிறோம் நரசிம்மரே!! என் கைபிடித்து தூக்கிவிட்டு அருள்புரிய வேண்டும்

ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 ||

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 ||

ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 ||

ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 5 ||

ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 6 ||

ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 7 ||

ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 8 ||

ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 9 ||

ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 10 ||

ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 11 ||

பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 12 ||

லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம் || 13 ||

ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 14 ||

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 15 ||

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 16 ||

லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம் || 17 ||

நரசிம்ம காயத்ரி

வஜ்ர நகாய வித்மஹே, தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத்.

Srimat Payonidhi Nikethana Chakra Pane,
Bhogeendra Bhoga Mani Rajitha Punya Moorthe,
Yogeesa Saswatha Saranya Bhabdhi Potha,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 1

Oh Great God Lakshmi Nrsimha,
Who lives in the ocean of milk,
Who holds the holy wheel as weapon,
Who wears the gems of the head,
Of Adhisesha as ornaments,
Who has the form of good and holy deeds,
Who is the permanent protection of sages,
And who is the boat which helps us cross,
This ocean of misery called life,
Please give me the protection of your hands.

Brahmendra, Rudra Arka Kireeta Koti,
Sangattithangri Kamala Mala Kanthi Kantha,
Lakshmi Lasath Kucha Saroruha Raja Hamsa,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 2

Oh Great God Lakshmi Nrsimha,
Whose feet is touched by the crowns,
Of Brahma, Indra, Shiva and Sun,
Whose shining feet adds to his effulgence,
And who is the royal swan playing,
Near the breasts of Goddess Lakshmi,
Please give me the protection of your hands.

Samsara Gora Gahane Charathe Murare,
Marogra Bheekara Mruga Pravardhithasya,
Aarthasya Mathsara Nidha Chain Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 3

Oh Great God Lakshmi Narsimha,
Oh Lord who killed the Asura called Mura,
I have been traveling in the dark forests of day to day life,
Where I have been terrified by the lion called desire,
And scorched by the heat called competition, and so,
Please give me the protection of your hands.

Samsara Koopam Adhi Ghora Magadha Moolam,
Samprapya Dukha Satha Sarpa Samakulasya,
Dheenasya Deva Krupana Padamagadasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 4

Oh Great God Lakshmi Narasimha,
I have reached the very dangerous and deep,
Bottom of the well of day to day life,
And also being troubled by hundreds,
Of miseries which are like serpents,
And am really miserable and have,
Reached the state of wretchedness and so,
Please give me the protection of your hands.

Samsara Sagara Vishala Karala Kala,
Nakra Graham Grasana Nigraha Vigrahasya,
Vyagrasya Raga Rasanormini Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 5

Oh Great God Lakshmi Nrsimha,
I have reached this wide unfathomable ocean of day to day life,
And I have been caught by black deadly,
Crocodiles called time which are killing me
And I am also afflicted by waves of passion,
And attachments to pleasures like taste and so,
Please give me the protection of your hands.

Samasra Vrukshamagha Bheeja Manantha Karma,
Sakha Satham Karana Pathramananga Pushpam,
Aroohasya Dukha Phalitham Pathatho Dayalo,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 6

Oh Great God Lakshmi Nrsimha,
I have climbed the tree of worldly life,
Which grew from the seed of great sin,
Which has hundreds of branches of past karmas,
Which has leaves which are parts of my body,
Which has flowers which are the result of Venus,
And which has fruits called sorrow,
But I am falling down from it fast and so,
Please give me the protection of your hands.

Samsara Sarpa Ghana Vakthra Bhyogra Theevra,
Damshtra Karala Visha Daghdha Vinashta Murthe,
Naagari Vahana Sudhabhdhi Nivasa Soure,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 7

Oh Great God Lakshmi Nrsimha,
Oh, Lord who rides on the enemy of snakes,
Oh, Lord who lives in the ocean of nectar,
The serpent of family life has opened,
Its fearful mouth with very dangerous,
Fangs filled with terrible venom,
Which has destroyed me and so,
Please give me the protection of your hands.

Samsara Dava Dahanathura Bheekaroru,
Jwala Valee Birathi Dhighdha Nooruhasya,
Thwat Pada Padma Sarasi Saranagathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 8

Oh Great God Lakshmi Nrsimha,
I have been scarred badly by the fire of daily life,
And even every single hair of my body,
Has been singed by its fearful flames,
And I have taken refuge in the lake of your lotus feet, and so,
Please give me the protection of your hands.

Samsara Jala Pathithasya Jagan Nivasa,
Sarvendriyartha Badisartha Jashopamasya,
Proth Ganditha Prachoora Thaluka Masthakasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 9

Oh Great God Lakshmi Nrsimha,
I have been caught in this net of daily life,
And all my organs are caught in that web,
And the five senses which is the hook,
Tears apart my head from me, and so,
Please give me the protection of your hands.

Samsara Bheekara Kareeendra Karabhigatha,
Nishpishta Marmma Vapusha Sakalarthi Nasa,
Prana Prayana Bhava Bhhethi Samakulasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 10

Oh Great God Lakshmi Nrsimha,
I have been struck by the fearful king of elephants,
Which is the worldly illusion, and my vital parts,
Have been completely crushed, and I suffer,
From thoughts of life and death, and so,
Please give me the protection of your hands.

Andhasya Me Viveka Maha Danasya,
Chorai Prabho Bhalibhi Rindriya Nama Deyai,
Mohanda Koopa Kuhare Vinipathathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 11

Oh Great God Lakshmi Nrsimha,
I have become blind because, the sense of discrimination,
Has been stolen from me by the thieves of ‘senses’,
And I who am blind, have fallen in to the deep well of passion, and so,
Please give me the protection of your hands.


Baddhvaa Gale Yamabhataa Bahutarjayantah,
Karshhanti Yatra Bhavapaashashatairyutam Maam.
Ekaakinam Paravasham Chakitam Dayaalo
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 12

Oh Great God Lakshmi Nrsimha,
I have been tied by the soldiers of the God of death,
By numerous ropes of worldly attachments,
And they are dragging me along by the noose around the neck,
And I am alone, tired and afraid, and so Oh merciful one,
Please give me the protection of your hands.


Lakshmi Pathe Kamala Nabha Suresa Vishno,
Vaikunta Krishna Madhu Soodhana Vishwaroopa,
Brahmanya Kesava Janardhana Chakrapane,
Devesa Dehi Krupanasya Karavalambam 13

Oh King of Devas,
Who is the Lord of Lakshmi, who has a lotus on his belly,
Who is Vishnu, the lord of all heavenly beings, who is Vaikunta,
Who is Krishna , who is the slayer of Madhu,
Who is one with lotus eyes, Who is the knower of Brahman,
Who is Kesava, Janardhana, Vasudeva,
Please give me the protection of your hands.

Ekena Chakramaparena Karena Shamkha-
Manyena Sindhutanyaaamavalambya Tishhthan,
Vaame Karena Varadaabhayapadmachihnam,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 14

Oh Great God Lakshmi Nrsimha,
Who holds Sudarshana, the holy wheel in one hand,
Who holds the conch in the other hand,
Who embraces the daughter of ocean by one hand,
And the fourth hand signifies protection and boons, and so,
Please give me the protection of your hands.

Samsaara Saagara Nimajjana Muhyamaanam
Diinam Vilokaya Vibho Karunaanidhe Maam,
Prahlaada Kheda Parihaara Paraavataara
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 15

Oh Great God Lakshmi Nrsimha,
I am drowned in the ocean of day to day life,
Please protect this poor one, oh, Lord, Oh treasure of compassion,
Just as you took a form to remove the sorrows of Prahlada, and so,
Please give me the protection of your hands.

Prahlaada Naarada Paraashara Pundariika-
Vyaasaadi Bhaagavata Pungavah Rinnivaasa ,
Bhaktaanurakta Paripaalana Paarijaata,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 16

Oh Great God Lakshmi Nrsimha,
Who dwells in the hearts of great sages like Prahlada,
Narada, Parashara, Pundarika and Vyasa,
Who loves his devotees and is the wish giving tree,
That protects them, and so,
Please give me the protection of your hands.

Lakshminrisimha Charana Abja Madhuvratena
Stotram Kritam Shubhakaram Bhuvi Shankarena
Ye Tatpathanti Manujaa Haribhakti Yuktaa-
Ste Yaanti Tatpada Saroja Makhandaruupam 17

This prayer which blesses earth with good things,
Is composed by Sankara who is a bee,
Drinking deeply the honey from the lotus feet of Lakshmi Nrsimha,
And those humans who are blessed with devotion to Hari,
Will attain the lotus feet of the Brahman.

Sri Lakshmi Narsimha Padarpanamasthu

Dedicated to the feet of Lord Lakshmi Narsimha !!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ பிராட்டியார் ஸமேத ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

நந்திபுரம்‌-குடவாயில்‌ பாலசுப்ரமண்யம்‌-

November 25, 2024

நந்திபுரத்தில்‌ தங்கியிருந்த நந்திவர்மனைச்‌ சித்திரமாயப்‌ பல்லவராஜனும்‌, தமிழ்‌ அரசர்களும்‌
(பாண்டியனோடு பிற மன்னர்களும்‌) முற்றுகையிட்டுச்‌
சிறைப்படுத்தினர்‌. இச்செய்தியினை அறிந்த வில்வலம்‌ எனும்‌
நகரத்தின்‌ தலைவனும்‌, யபல்லவமல்லனளைத்‌ தன்‌ பேரரசனாக
ஏற்றுக்‌ கொண்டவனும்‌, பூசான்‌ குலத்தில்‌ பிறந்தவனுமான
உதயசந்திரன்‌ தம்பெரும்‌ படையோடு நந்திபுரம்‌ வந்து,
பகைவர்களுடன்‌ போரிட்டு, சித்திரமாயப்‌ பல்வவராஜனைக்‌
கொன்று, தம்பேரரசனான நந்திவர்மனை மீட்டான்‌.உதயசந்திரன்‌ நந்திபுரத்தினை மீட்டதற்குப்‌ பின்பு பல்லவமல்லனான இரண்டாம்‌ தந்திவர்மனின்‌ பலம்‌ மிகவும்‌ ஒங்கியது. பாண்டிய மன்னனுடன்‌ போரிட்டு அவன்‌ வெற்றிபெற்றதைத்‌ திருமங்கை ஆழ்வார்‌. பரமேச்சுர விண்ணகரப்‌ பாசுரத்தில்‌,
“தேம்‌ பொழில்‌ குன்றெயில்‌ தென்னவளைத்‌
திசைப்பச்‌ செருமேல்வியத்‌ தன்று சென்றபாம்புடைப்‌ பல்லவர்‌ கோன்‌ பணிந்த
பரமேச்சுர விண்ணகரம்‌ ௮.துவே”” (பெரியதிருமொழி 2:9:5)
“நிரந்தவர்‌ மண்ணையில்‌ புண்ணுகர்வேல்‌
தெடுவாயல்‌ ககச்செரு வில்‌ முன நான்‌
பரந்தவன்‌ பல்லவர்‌ கோள்‌ பணிந்த.
பரமேச்சர விண்ணகரம்‌ அதுவே.” (பெரியதிருமொழி 2:9:2)
என்றும்‌ பாடுகிறார்‌.
இப்பதிகத்தில்‌ குறிக்கப்படும்‌ மண்ணை எனும்‌ ஊர்‌
தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ மணக்குடி என ஆராய்ச்சியாளர்‌
கருதுகின்றனர்‌.

இவை அனைத்தையும்‌ தொகுத்து நோக்கும்‌ போது
சாளுக்கிய விச்கிரமாதித்தியனின்‌ தாக்குதலால்‌ காஞ்சியை
விடுத்துச்‌ சோழநாட்டு நந்திபுரத்தில்‌ தங்கிய நந்திவர்மன்‌,
சித்திரமாய பல்லவராஜனால்‌ அல்லலுற்றதையும்‌, பின்பு
உதயசந்திரனின்‌ ஆற்தலால்‌ அவனைக்‌ கொன்றதோடு,
பாண்டிநாடுவரை சென்று பெரு வெற்றியும்‌ பெற்று
வலிமையுடன்‌ திகழ்ந்ததையும்‌. நாம்‌ : அறிய முடிகின்றது.
அதனால்‌ தான்‌ 68 ஆண்டுகள்‌ இவனது ஆட்சி தொடரமுடிந்தது,௮ப்பல்லவனின்‌ வரலாற்றில்‌ நந்திபுர நகரம்‌
மிகச்‌ சிறந்த இடத்தினைப்‌ பெற்றது.

காஞ்சி மாநகரில்‌ உள்ள பல்லவர்காலத்து ஆலயபங்களுள்‌ குறிப்‌பிடத்தக்கது வைகுந்தநாதப்பெருமாள்‌ கோயில்‌
எனும்‌ வைணவ ஆலயமாகும்‌. இரண்டாம்‌ நந்திவர்ம பல்லவன்‌ எடுப்பித்த சிறப்புடையது. திருமங்கை ஆழ்வார்‌ “பரமேச்சுர விண்ணகரம்‌” என்று மங்களாசாசனம்‌ செய்த திருப்பது இது. இவ்வாலயத்தின்‌ கருவறையைச்‌ சுற்றியுள்ள மண்டபத்தின்‌
உட்புறச்சுவர்‌ முழுவதும்‌ பல்லவர்‌ வரலாற்றைச்‌ சித்ரிக்கும்‌
புடைப்புச்‌ சிற்பங்கள்‌ உள்ளன. காட்சித்‌ தொகுப்பகளுக்குக்‌
கீழாகப்‌ பல்லவ கிரந்தத்தில்‌ கல்வெட்டுப்‌ பொறிப்புகளும்‌ உள்ளன. இவை குறிப்பிட்ட ஒவ்வொரு காட்ச பற்றியவிளக்கங்களாகும்‌. இதனை முழுமையாக ஆராய்ந்த டாக்டர்‌ ௪.
மீனாட்சி அவர்கள்‌ (76 1450071021 Sculptures of the
Vaikuntaperumal Temple, Kanchi) என்ற நூலில்‌”
இக்காட்சிகள்‌ பற்றிய படங்களோடு பல்லவர்‌ வரலாற்றைச்‌
சிறப்புற எழுதியுள்ளார்கள்‌. இந்நூலில்‌ நந்திபுர முற்றுகை யிலிருந்து உதயசந்திரன்‌ மீட்பது.ம்‌, பல்லவ மல்லனான
தந்திவர்‌மன்‌ நந்திபுரக்கோட்டையில்‌ அமர்ந்துள்ளதுமான பல
காட்சிகளை எடுத்துக்‌ காட்டியுள்ளார்கள்‌.
இவ்வாலயத்துத்‌ திருச்சுற்று மண்டபத்தின்‌ தென்புறச்‌
சுவரில்‌ நந்திவர்ம பல்லவன்‌ அமர்ந்திருத்தல்‌, உதயசந்திரன்‌ குதிரை மீது அமர்ந்த வண்ணம்‌ தன்‌ வீரர்களுடன்‌ உத்திர மாயனின்‌ படையை நோக்கிச்‌ செல்லுதல்‌, சித்திரமாய
பல்லவனைத்‌ தாக்கிக்‌ கொல்லுதல்‌, வெற்றிச்‌ செய்தியினை
வீரர்கள்‌ பல்லவ மல்லனுக்குக்‌ கூறுதல்‌, மனமகிழ்வோடு
தந்திவர்மன்‌ வீற்றிருத்தல்‌, பின்னர்‌ உதயசந்திரன்‌ பலவெற்றி களைத்‌ தழுவுதல்‌ ஆகிய காட்சிகள்‌ தொடர்சிற்பங்களாக
உள்ளன. :உதயேந்திரம்‌ செப்பேடு கூறும்‌ நந்திபுர முற்றுகையும்‌ மீட்புமான செய்திகள்‌ இங்குக்‌ காட்சிச்‌ சிற்பங்களாக அமைந்‌ து
“பல்லவன்‌ கண்ட நந்திபுரத்தை நம்‌ முன்‌ நிறுத்துகின்றன.

நந்திபுர விண்ணகரம்‌
கி.பி. எட்டாம்‌ நூற்றாண்டில்‌ இரண்டாம்‌ நந்திவர்மன்‌
காலத்தில்‌ வாழ்ந்தவராகப்‌ பன்னிரு ஆழ்வார்களில்‌ ஒருவரான
திருமங்கை ஆழ்வாரைக்குறிப்பர்‌. இவர்‌ பெரிய திருமொழியில்‌
தீதறு எனத்தொடங்கும்‌ பாசுரமொன்றினைப்‌ பாடியுள்ளார்‌.
பத்துப்‌ பாடல்களிலும்‌ “நந்திபுர விண்ணகரம்‌ நண்ணு மனமே” என்று நந்திபுரத்தில்‌ இகழ்ந்த வைணவ ஆலயத்தைக்‌
குறிக்கின்றார்‌. இப்பதிகத்தின்‌ ஏழாம்‌ பாடவில்‌
தந்தைமன முந்துதுயர்‌ நந்த, இருள்‌ வந்தவிறல்‌
தந்தன்‌ மதலை
எத்தையிவன்‌ என்றமரர்‌ கந்தமலர்‌ கொண்டுதொழ
தின்ற நகர்‌ தான்‌–5-10-7-

பழையாறு என்ற பெயரில்‌ பல அரர்கள்‌ . இருந்தது
போலவே நந்திபுரம்‌ என்ற பெயரிலும்‌ நந்திவன.ம்‌ என்ற
பெயரிலும்‌ பல ஊர்கள்‌ இருப்பதைக்‌ கண்டோம்‌.
சோழநாட்டைப்‌ பொறுத்த வரை முற்காலச்‌ சோழர்களின்‌
கல்வெட்டுக்களில்‌ அதிலும்‌ குறிப்பாகப்‌ பராந்தக சோழனின்‌
காலத்துச்‌ சாசனங்களில்‌ குறிக்கப்படும்‌ நந்திபுரங்கள்‌ மூன்று.
ஒன்று கிழார்‌ கூற்றத்து ஆயிரத்தளியான நந்திபுரம்‌, மற்றவை
உம்பள நாட்டு நந்திபுரமும்‌பழையாற்று நந்திபுரமுமாகும்‌.
இருமங்கை ஆழ்வார்‌ குறிப்பிடும்‌ விண்ணகரம்‌ இருந்த
நந்திபுரம்‌ இவை மூன்றில்‌ எங்கும்‌ இருந்திருக்கலாம்‌.

தஞ்சை சரஸ்வதி மகாலில்‌ உள்ள சமஸ்கிருத
ஏட்டுச்சுவடி ஒன்று “தந்திபுரமாகாத்மியம்‌!” என்ற பெயரில்‌
(B.No. 11328, D.No. 10028) உள்ளது. இதில்‌ நந்திபுரம்‌-
தந்திதாதபுரம்‌ என்று குறிக்கப்பெற்றுள்ளது. பின்பு இதுவே
நாதன்கோயில்‌ என மருவியும்‌ உள்ளது. வைணவ மரபு வழி
போற்றப்பெறும்‌ திருப்பதி என்பதாலும்‌, அங்குப்‌ பல்லவ
மல்லன்‌ காலத்தியது எனக்‌ கலை வல்லோர்‌ ஏற்கக்‌ கூடிய
விஷ்ணு திருமேனி வழிபாட்டில்‌ இருப்பதாலும்‌, நாதன்‌
கோயிலை நந்திபுர விண்ணகரமாச நாம்‌ ஏற்றுக்‌
கொண்டாலும்‌ நாதன்‌ கோயில்‌-நந்திபுரம்‌ என்ற பெயர்‌
வழக்கிற்கான சான்றுகள்‌ மிக பிற்காலத்தியவையே.ஆயினும்‌
வரலாற்றுச்‌ சிறப்பு வாய்ந்ததும்‌, பல்லவ மல்லன்‌ வாழ்ந்த
அரண்மனை இருந்ததுமான நந்திபுரம்‌ செங்கமேடு- வீரசிங்கம்‌
பேட்டை எனா ஊு களாகத்‌ இகழும்‌ கிழார்‌ கூற்றத்து நந்திபுரம்‌
தான

“ஆயிரத்தளி”
என்பது ஆயிரம்‌ சிவலிங்கங்கள்‌ உள்ள ஒரு சிவாலயத்தைக்‌
குறிப்பிடும்‌ சொல்லாகும்‌. ஆயிரம்‌, நூறு இலவிங்கங்களை
வழிபடும்‌ நெறிகள்‌ தோன்றியபோது நியமத்திலும்‌,
தந்திபுரத்திலும்‌ ஆயிரத்தளிகள்‌ தோன்றின.

கோயிற்பெயராலேயே சில ஊர்களும்‌ அழைக்கப்‌
பெற்றன. திருதாசேச்சரம்‌ எனும்‌ கோயிலால்‌ அவ்வூர்‌
திருநாகேசுவரமாயிற்று. ரங்கமன்னார்‌ உறையும்‌ கோயில்‌
மன்னார்‌ கோயிலாகூப்‌ பின்பு கோயில்‌ என்றசொல்‌ தெலுங்கில்‌
குடி” என்றழைக்கப்பெறுவதால்‌ தாயக்கர்களால்‌ மன்னார்‌
குடியாக ஊர்ப்‌ பெயரும்‌ மாறிற்று. இதுபோலவே ஆயிரத்தளி
இருந்த ஊர்‌ ஆன நந்திபுரம்‌ பின்னாளில்‌ *ஆயிரத்தனி”” என்ற
ஊர்ப்‌ பெயராகவே ஆயிற்று. அதுவும்‌ காலப்‌ போக்கில்‌ பல
மன்னர்விருதுப்‌ பெயர்களோடு இணைந்து பின்பு முற்றிலுமாக
வழக்கொழிந்தும்‌ விட்டது. நந்திபுரம்‌ ஆயிரத்தளியாஇப்‌ பின்பு
அதுவும்‌ மறைந்து தற்போது வீரசிங்கம்பேட்டை (கண்டியூர்‌)
என்று மருவியது தான்‌ வரலாற்று உண்மை.

நந்தியின்‌ புதல்வனான’ நிருபதுங்களின்‌ கண்டியூர்‌
தருக்கோடிக்காவல்‌”” திருச்சென்னம்‌ பூண்டி” லால்குடி
சல்வெட்டுக்கள்‌ நந்திபுரம்‌ உள்ளிட்ட சோழநாட்டுப்‌ பகுதிகள்‌
இப்பெருவேத்தனின்‌ ஆளுகையின்‌ கீழ்‌ இருந்தமையை
விவரிக்‌கன்றன. இவை அனைத்தையும்‌ தொகுத்து நோக்கும்‌
போது சோழப்பெருநாட்டின்‌ சீர்மிகு பல்லவ ஆட்சி
நந்தபுரத்தனைத்‌ தலைமை இடமாகக்‌ கொண்டு மன்னனின்‌
கோயிலாம்‌ அரண்மனையோடு திகழ்ந்தது என்பது உறுதி
பெறுகின்றது.

எலியட்‌ மற்றும்‌ டவ்ஸன்‌ அமீர்குஸ்ரு பற்றிக்‌ கூறும்‌
போது “இந்துஸ்தான கிளி” என்றே இக்கவிஞனை, வரலாற்று
எழுத்தாளனைக்‌ குறிப்பிடுகின்றனர்‌. 2253 இவ்‌ பிறந்து 2325 ல்‌
‘இறந்ததாகவும்‌குஸ்ரு டெல்லி சுல்தான்‌ அலாவுதீன்‌ கில்ஜியின்‌ .
அவைக்களப்புலவராய்த்‌ இகழ்ந்ததாகவும்‌ கூறுகின்றனர்‌.
அலாவுதீன்‌ கில்ஜியின்‌ தளபதியான மாலிக்காபூர்‌ தென்‌
னாட்டின்‌ மீது படை எடுத்துக்‌ கொள்ளையிட்ட இரு முறையும்‌
அவனுடன்‌ பயணித்துத்‌ தான்‌ கண்ணால்‌ கண்ட காட்சிகளைக்‌
குறிப்பெடுத்து எழுதியதே இவ்வாவணங்கள்‌. 1309 இல்‌ மாலிக்‌
டெல்லியிலிருந்து புறப்பட்டுத்‌ தேவகி வாரங்கல்‌ வரை
படை எடுத்து 2310 இல்‌ இல்லி திரும்பினான்‌. இரண்டாம்‌ முறை
18-li- 7870 இல்‌ தில்லியிலிருந்து புறப்பட்டுத்‌ தேவூரி,
பண்டிரி, துவாரசமுத்திரம்‌, (கர்நாடகம்‌) மாபார்‌ (தமிழகம்‌)
வரை கொள்ளையிட்டு 28-70-7477 இல்‌ தில்லி திரும்பியது
இரண்டாம்‌ நிகழ்வாகும்‌.

தமிழகத்திற்கு மாலிக்காபூர்‌ வருவதற்குக்‌ காரணமாய்த்‌
திகழ்ந்தவன்‌ பாண்டிய அர குடும்பத்தைச்‌ சேர்ந்த இராராஜன்‌
சுந்தரபாண்டியன்‌ எனபவனே. தாயத்தார்மீது பொறாமை
யாலும்‌, தான்‌ நாடு பெற வேண்டிச்‌ செய்த சூழ்ச்சியாலும்‌,
கொடியவன்‌ மாலிக்காபூரூடன்‌ இணைந்தான்‌. இதனால்‌
தமிழகம்‌ தனித்தன்மை கொண்ட தம்‌ கலைச்‌ செல்வங்களாம்‌
கோயில்களை இழந்ததோடு நவநிதிச் செல்வங்களையும்‌ இழந்தது.

மாவிக்காபூரின்‌ இப்படை எடுப்பில்‌ பெரும்பகுதி
கண்டியூரிவ்திகழ்ந்தவையாகும்‌. யானைகளைக்‌ கைப்பற்றியது,
கோயில்களையும்‌ கண்டியூர்‌ மக்களையும்‌ அழித்தது, இங்கிருந்த
மூகமதியர்களை மட்டும்‌ மன்னித்துக்‌ கொல்லாமல்‌ விட்டது போன்ற பல திகழ்வுகள்‌ திகழ்ந்தன. :
இக்காரணங்களால்‌ தான்‌ இன்று நந்திபுர நகரம்‌ இல்வை. ஆயிரத்தளி சகஸ்ரவிங்கக்‌ கோயில்‌ இல்லை.
மல்லீச்சுரம்‌ இவ்லை. பராந்தக தேவீச்சுரம்‌ இல்லை. வானவன்‌
மாதேவீச்சரம்‌ இல்லை. மன்னனது கோயிலோ, அயிஷேக
மண்டபமோ, பல்லவராயன்‌ மண்டபமோ, பள்ளியறைக்‌
கூட்மோ, காணிங்கராயன்‌, சேதிறாயன்‌ போன்ற மன்னனது கட்டில்களோ இல்லை.
இப்படை எடுப்பால்‌ நந்திபுரம்‌ மட்டுமின்றித்‌ தில்லை
இருவரங்கம்‌, கங்கைகொண்ட சோழபுரம்‌, தஞ்சாஷர்ப்‌
பெருங்கோயில்‌ போன்றனவும்‌ சதைவுற்றன. தில்லையிலிருத்து
மயிலாடுதுறை வழியாகத்‌ திருவரங்கம்‌ செல்லும்‌ சாலையில்‌
(காவிரிக்கரை வழி) தான்‌ ஆயிரத்தளி-கண்டியூர்‌ உள்ளது.
இப்பகுதியில்‌ உள்ள அனைத்து இந்து அலயங்களும்‌
இத்தாக்குதலால்‌ பேரழிவுக்கு உட்பட்டன.

இவ்வளவு . பேரழிவும்‌, பெரும்‌ மாற்றங்களும்‌
70-9-1277- லிருந்து 8- 4-7227- க்குள்‌ நிகழ்ந்தது என்பதை அமீர்‌
குஸ்ருவின்‌ குறிப்புகளால்‌ அறியமுடிகிறது. பெருமைமிகு
நந்திபுரம்‌ கி.பி. 1312-ல்‌ அழிந்தது. எஞ்சிய அரண்மனையில்‌
பின்புவந்த இரண்டாம்‌ வீரபாண்டியன்‌ ஆட்சிபுரிந்தான்‌.
இதனால்‌ தான்‌ தாராசுரம்‌ சல்வெட்டில்‌ தன்னுடைய
அரண்மனையை “கண்டியூர்‌ கோயில்‌” என்றே குறிப்பிட்டுக்‌
கொள்கிறான்‌. 1341-ல்‌ பேரழிவுக்கு உட்பட்ட இந்நகரம்‌ 7280-ல்‌
வீரபாண்டியன்‌ ஆட்சியோடு மறைந்து பெருமை இழந்து பல
சிற்நார்களாகப்‌ பிரிந்தது.

மூவுலகத்தின்‌ மேன்மைக்காகச்‌ சுமேரு மாலையின்‌
உச்சியிலே சிறந்த யோகபந்த நிலையில்‌ அமர்ந்திருப்பவரும்‌
சூரியசந்திரர்களை இரு கண்களாக உடையவரும்‌ உமையுடன்‌
கூடியவரும்‌, ஆதரவுடன்‌ மேன்மையளிக்கக்‌ கூடிய உதயசந்திர
னுக்குத்‌ திருவை அளிக்கக்‌ கூடியவரும்‌ சடைமுடி தறித்தவரு
மான சதாசிவனை நான்‌ வணங்குகிறேன்‌ என்பதே
இத்தமிழாக்கமாகும்‌.
சதாசிவ வடிவம்‌ பற்றிக்‌ கூறும்‌ சிற்ப ஆகமதூல்கள்‌,
அவர்‌ வடிவைப்‌ பஞ்ச பிரமன்‌ என்றே கூறுகின்றன.
“பஞ்சப்ருஹ்மதநுஸ்‌ சாக்ஷாத்‌
ஸிவேூத்‌ ஸதா௫வ:”
எனவேதான்‌ அவர்‌ வடிவை ஐந்துமுகமுடைய வடிவாகவோ
ஐந்து உடல்கள்‌ இணைந்த வடிவாகவோ ிற்பங்களில்‌
வடித்தனர்‌. சதாசிவன்‌ ஐந்து முகமுடையவராக 4 வேதங்‌
களையும்‌ 6 அங்கங்களையும்‌ அளித்தார்‌… . ”’ எனக்‌ கூறப்‌
பெறுகின்றது. “ஐந்து முகமுடைய இவ்வள்ளல்‌ ஞானம்‌ உரைக்‌
கவில்லை என்றால்‌ இவ்வுலகம்‌ அறியாமை இருளில்தான்‌
மூழ்கி இருந்திருக்கும்‌” – என்பது ஆகமங்களின்‌ கூற்று.

  • பஞ்ச வக்த்ரஹரோ பூத்வா
    பஞ்ச பூதைர்‌ முகைரபி
    வேதாதிக்ரந்த ஜாலம்‌ யத்‌
    தத்‌ ஸர்வம்‌ அவதத் ப்ரபு
    சதாசிவமூர்த்தியின்‌ தியான சுலோகம்‌
    பஞ்ச வக்த்ரே தஸபுஜ: ஹ்யக்ஷ்பஞ்ச தஸைர்யுத: 1
    ஸாுத்தஸ்படிக சங்காஸ: ஸர்வாபரண பூஷித: 11
    ஸர்வஞ்ஞ ஸர்வக: ஸாந்த: ஸர்வோபரி ஸுஸம்ஸ்தித: 1
    பத்மாஸனஸ்த: ஸோமேஸ: பாபம்‌ ஆஸு வ்யயோஹது 1!
    ஆகமங்கள்‌ சதாசிவமூர்த்தியின்‌ முகங்களைக்‌ கிழக்கு
    தோக்கியது தத்புருஷம்‌ என்றும்‌ தெற்கு நோக்கியது அகோரம்‌
    என்றும்‌ மேற்கு நோக்கியது சத்யோஜாதம்‌ என்றும்‌ வடக்கு
    நோக்கியது வாமதேவம்‌ என்றும்‌ முகத்தின்‌ உச்சியில்‌ உள்ளது
    ஈசானம்‌ என்றும்‌ பெயரிட்டு அழைக்கின்றன. ஈசான
    முகத்தினை வடிவின்றி லிங்கத்தின்‌ சிரசாக கொள்ளல்‌
    வேண்டும்‌ என்றும்‌ உரைக்கின்றன.எனவே சதாசிவ வடிவம்‌ லிங்க மூர்த்தமாயினும்‌ வேறு வடிவாயினும்‌ பெரும்பாலும்‌ நான்கு முகங்களோடு தான்வடிக்கப்‌ பெறுவதாகும்‌.

தென்‌ ஆர்க்காடு மாவட்டம்‌ திருவதிகைக்‌ கோயில்‌
பல்லவர்‌ காலத்தியதாகும்‌. இங்கு மூன்றாம்‌ நந்திவர்மன்‌ மற்றும்‌
நிருபதுங்க பல்லவன்‌ காலத்தில்‌ பல திருப்பணிகள்‌ நிகழ்ந்தன.
அவர்கள்‌ காலத்தில்‌ வடிக்கப்‌ பெற்ற அரிய சதுர்முக இலிங்கம்‌
ஒன்று அத்திருக்கோயில்‌ தஇருச்சுற்றில்‌ இன்றும்‌ உள்ளது.
பீடத்தின்‌ மேல்‌ காணப்படும்‌ பாணத்தில்‌ நான்கு திக்குகளிலும்‌
முறையே தத்புருஷம்‌, அகோரம்‌, சத்யோஜாதம்‌,வாமதேவம்‌
ஆகிய முகங்கள்‌ உள்ளன. பாணத்தின்‌ உச்சியாகத்திகமும்‌
வளைந்த சிரசு இங்கு ஈசான முகமாக வடி.வின்றி உள்ளது. இது
போன்று வடிக்கப்பெற்ற பஞ்சமுகலிங்கங்கள்‌ திருவானைக்கா,
திருக்காளத்தி போன்ற தஇிருக்கோயில்களில்‌ வழிபாட்டில்‌
உள்ளன.தஞ்சைப்‌ பெரிய கோயிலின்‌ முதற்‌ கோபுரத்தில்‌ (கேரளாந்‌
தன்‌ திருவாயில்‌) 4 முகங்களும்‌ (ஐந்தாம்‌ முகம்‌ மறைந்த
திலையில்‌) பத்துக்‌ கரங்களும்‌ கொண்டு பத்மபிடத்தில்‌ அமர்ந்த
கோலத்தில்‌ வடிக்கப்‌ பெற்ற சுதைச்‌ சிற்பங்கள்‌ இரண்டு
உள்ளதை இன்றும்‌ காணலாம்‌.
இதே திருக்கோயிலில்‌ காணப்படும்‌ இராஜராதனின்‌
கல்வெட்டொன்று *பஞ்ச தேகழூர்த்தி”” என்ற செப்புத்‌
திருமேனி பற்றி விவரிக்கின்றது.

————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரம் – ஸம்ஸ்க்ரு’த வ்யாக்²யாநம்

November 25, 2024

ஶ்ரீமாந் வேங்கடநாதா²ர்ய: கவிதார்கிககேஸரீ ।
வேதா³ந்தாசார்யவர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ ஹ்ரு’தி³ ॥

ஸ்வத:ஸித்³த⁴ம் ஶுத்³த⁴ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த்ப்ரதிப⁴டம்
ஸுதா⁴ஸத்⁴ரீசீபி:⁴ த்³யுதிபி⁴ரபதாபதிபு⁴வநம் ।
அநந்தை: த்ரய்யந்தைரநுவிதி³தஹேஷாஹலஹலம்
ஹதாஶேஷாவத்³யம் ஹயவத³நமீடீ³மஹி வஹ: ॥

————–
வ்யாக்²யாநம்
இந்தி³ராமந்தி³ரோரஸ்கமிந்தா³தி³ஸுரவந்தி³தம்வந்தா³ருப்³ரு’ந்த³மந்தா³ரம் வந்தே³ கோ³விந்த³பா³லகம் ॥ 1॥
கந்த³ர்பஸம்வராகாரம் ப்³ரு’ந்தா³வநவிபூ⁴ஷணம் ।
ஆநந்த³கந்த³ஜம் நந்த³நந்த³நம் வந்தி³ஷீமஹி ॥
ப்ரணிபத்ய கு³ரூத்தம்ஸம் ஶ்ரீமத்³வேதா³ந்ததே³ஶிகம் ।
ஹயக்³ரீவஸ்தவவ்யாக்²யாம் குர்வேऽஹம் தத்ப்ரஸாத³த: ॥

இஹ க²லு ஶ்ரீமாந் வேதா³ந்ததே³ஶிக:, ஸம்யகு³பாஸநவிஶேஷவஶீக்ரு’த
ஹ்ரு’த³ய புண்ட³ரீகமத்⁴யமண்ட³நாயித தாண்ட³வப்ரசண்ட³துரங்க³முக²
மார்தாண்ட³மண்ட³ல:, ஸகல பண்டி³தநிகுரும்ப³முக்தாதபத்ரிதகீர்திமண்ட³ல:,
ஸர்வதந்த்ரஸ்வதந்த்ர:, கவிதார்கிககேஸரீ, பரமகாருணிக:,ப⁴க³வத்மல்யாணகு³ணக³ணாநுஸந்
அநாதி³ஸம்ஸார ஸஞ்சிததௌ³ஷ்கர்ஶ்ய பாஶப³ந்தீ³க்ரு’த ப்ராணிப்³ரு’ந்த³ம்
ஸந்திதாரயிஷு:, ஶ்ரீஹயக்³ரீவமபி⁴ஷ்டோதும் ப்ரதிஜாநீதே (ஸ்வத) இதி ।
ஸ்வதஸ்ஸித்³த⁴ம் – ஸ்வப்ரகாஶம், நநு ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய பா⁴வார்த²விஹித
க்ரு’த்ப்ரத்யயாந்தத்வே ஸ்வத இதி பஞ்சம்யர்த²பூ⁴தஹேத்வர்த²விஹித தஸில்ப்ரத்யயஸ்யாநந்ஸ்யாத் – ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய ப்ரகாஶமாத்ரார்த²கத்வேந, ஸ்வஶப்³த³ஸ்யாபி
“ப்ரகாஶார்த²கத்வேந தஸி: பஞ்சம்யர்த²ஹேத்வர்த²கத்வேந ச ப்ரகாஶாதீ⁴நப்ரகாஶார்த²லாபா⁴த1

ப்ரக்ரு’தே ப்ரகாஶஸ்ய நித்யத்வேந ஸ்வாத்மாநம் ப்ரதி ஸ்வஸ்ய ஹேதுத்வாஸம்ப⁴வேந
ச தத³ஸம்ப⁴வாத், கர்த்ரர்த²விஹித க்ரு’தக்ரு’த்ப்ரத்யயாந்தத்வே பூர்வோக்தரீத்யா ।
ஸ்வாதீ⁴ந ப்ரகாஶவத்த்வமர்த²ஸ்ஸ்யாத்। ததா² ச ஸ்வஸ்யேவ ஸ்வப்ரகாஶஸ்யாபி
நித்யத்வேந பூர்வோக்த தூ³ஷணக்³ராஸாதி³தி சேத், மைவம்। உப⁴யதா⁴ऽபி
தோ³ஷாபா⁴வாத்। ததா²ஹி।ஆத்³யபக்ஷே-ப்ரகாஶஸ்ய ஸ்வாதீ⁴நத்வே தாத்பர்யாபா⁴வாத்।
அந்யாநதீ⁴நத்வே தாத்பர்யாத், த்³விதீயபக்ஷே- ஸ்வாதீ⁴நப்ரகாஶவத்த்வே
தாத்பர்யாபா⁴வாத், அந்யாநதீ⁴நப்ரகாஶவத்த்வே தாத்பர்யாத், உப⁴யதா²பி மணி
ப்ரகாஶமண்யாதி³ வ்யாவ்ரு’த்திஸித்³தே:⁴। ஸ்வத: – ஸ்வஸ்மாத், ஸித்³த⁴ம் – ஸித்³தி:⁴

  • ஜ்ஞாநம், ப்ரகாஶ ஸ்வரூபம்; ஸித்³த⁴ம் ஜ்ஞாதம் ப்ரகாஶிதம் வா; ஸ்வாதீ⁴ந
    ப்ரகாஶாபி⁴ந்நம் அந்யாதீ⁴ந ப்ரகாஶ ரஹிதம் வேத்யர்த:²। ஸார்வவிப⁴க்திகதஸில்
    ப்ரத்யயாந்தத்வே து ப்ரத²மார்த⁴ வர்ணநஸம்ப⁴வேந ஸ்வயம் ப்ரகாஶார்த²லாபா⁴ந்ந
    கோऽபி தோ³ஷக³ந்த:⁴। யத்³வா – ஸ்வத: – ஸ்வஸ்மாத், ஸித்³த⁴ம் – உத்பந்நம்,
    காரணாந்தராபாதி³தோத்பத்தி ஶூந்யமித்யர்த:²। நித்யமிதி யாவத்। அத²வா,
    நித்யத்வம் நாந்யாதீ⁴நமித்யாவா – (ஸ்வத) இதி। அநேந நித்யமுக்த தி³வ்யாவ்ரு’த்தி:,
    தேஷாம் ஸ்வரூப ஸ்வபா⁴வஸ்தி²திப்ரவ்ரு’த்தீநாம் ப⁴க³வதா³யத்தத்வாத்। நநு
    நித்யமுக்தஸ்வரூவ ஸ்வபா⁴வாதீ³நாமபி நித்யத்வாத்கத²ம் ப⁴க³தா³யத்தத்வமிதி
    சேந்ந, நித்யாநாமபி தத்³வதிரேக ப்ரஸஞ்ஜிதவ்யதிரேக ப்ரதியோகி³த்வரூப
    ப⁴க³வதா³யத்தத்வஸம்ப⁴வாத்। ததா² ச ஶ்ருதி:- “கோ ஹ்யேவாந்யாத்ம ப்ராண்யாத்,
    யதே³ஷ ஆகாஶ ஆநந்தோ³ ந ஸ்யாத்” இதி – பரமாணுக³தபாரிமாண்ட³ல்யஸ்ய
    நித்யத்வேऽப்யாஶ்ரயாதீ⁴நாவஸ்தா²யா ந்யாயவித்³பி⁴ரங்கீ³காராச்ச। நநு ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய
    நித்யபர்யாயத்வம் கத²மிதி சேது³ச்யதே – “ஸித்³தே³ ஶப்³தா³ர்த²ஸம்ப³ந்தே⁴”
    இத்யத்ர மஹாபா⁴ஷ்யே ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய நித்யபர்யாயத்வேந வ்யாக்²யாநாத்।
    ததா² ஹி। ஸித்³த⁴ஶப்³த³ஸ்ய க: பதா³ர்த:²? நித்யபர்யாயவாசீ ஸித்³த⁴ஶப்³த:³
    கத²ம் புந: ஜ்ஞாயதே? மத்கூட ஸ்தே²ஷ்வவிசாலிஷு பா⁴வேஷு வர்ததே
    தத்³வச்ச ஸித்³த⁴ம்। ஸித்³தா⁴ ப்ரு’தி²வீ, ஸித்³த⁴ மாகாஶ மித்யலம் ப³ஹுநா।
    (ஶுத்³த⁴ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த்ப்ரதிப⁴ட) மிதி। ஶுத்³த⁴ஸ்ய – நிர்மலஸ்ய,
    ஸ்ப²டிகமணிபூ⁴ப்⁴ரு’த: – ஸ்ப²டிகமயபர்வதஸ்ய, ப்ரதிப⁴டம் – ததோऽப்யதிஶயித
    காந்திமத்த்வேந தம் திரஸ்குர்வந்தமித்யர்த:² । ஸுதா⁴ஸத்⁴ரீசீபி:⁴ – அம்ரு’தஸஹசரீகி:²,
    த்³யுதிபி:⁴ – காந்திபி:⁴, (அபதாபத்ரிபு⁴வநம்) அபக³த: தாப: -ஆத்⁴யாத்மிகாதி⁴தை³விகாதி⁴பௌ⁴திஸமஸ்தது:³கா²த்மகஸ்தாபோ யஸ்மிந் தத்; த்ரயாணாம் பு⁴வநாநாம் ஸமாஹார
    ஸ்த்ரிபு⁴வநம், பாத்ராதி³த்வாந்ந ஜீப்। அபதாபம் த்ரிபு⁴வநம் யஸ்ய ததோ²க்த:;
    ஹயக்³ரீவகாந்தயஶ்சந்த்³ரமண்ட³லமத்⁴யவ்ரு’த்திஸுதா⁴ஸ ஹிதாஸ்ஸத்ய
    ஸ்த்ரிலோகீஸந்தாபஹாரிண்யோ ப⁴வந்தி। மண்ட³லஸ்த²ஸ்ஸுதா⁴ம்ஶோ: “பும்ஸாம்
    கர்மாநலார்தாநாம் பாபிநாம் க்லேஶஶாந்தயே, ஸ்வதே³தேந்து³ஸ்ஸமுத்³ரேண
    ஹ்லாத³யந்கோ³க³ணேநவே” த்யாதி³வசநாத்। அநந்தை:- நிரவதி⁴கை:,த்ரய்யந்தை: வேதா³ந்தை:, (அநுவிஹிதஹேஷாஹலஹலம்), அநுவிஹித: – அநுஸ்ரு’த:, ஹேஷா ஹேஷாப்⁴யோ ஹலஹல:, அஶ்வத்⁴வநிவிஶேஷோ யஸ்ய ததோ²க்தம்। யதோ²க்தம்
    பா⁴க³வதே த்³விதீய ஸ்கந்தே⁴ ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ – “வாசோ ப³பூ⁴வு ருஶதீ
    ஶ்வஸதோऽஸ்ய ந ஸ்த” இதி। “தஸ்ய ஹ வா தஸ்ய மஹதோ பூ⁴தஸ்ய நிஶ்வஸித
    மேதத்³ரு’க்³வேத³” இதி ஶ்ருதி:। (ஹதாஶேஷாவத்³யம்) ஹதாநி – பரிஹ்ரு’தாநி,
    அஶேஷாவத்³யாநி – நமஸ்ததோ³ஷா:, யேந தத்ததோ²க்தம்। ஆஶ்ரிதாநாமிதி ஶேஷ:।
    யத்³வா – ஆஶ்ரிதாபராதோ⁴பேக்ஷகத்வமத்ர விவக்ஷிம்। “ந ஸ்மரத்யபகாராணாம்
    ஶதமப்யாத்மவத்தயே” த்யுக்தே:।ஹதாநி- அத்யந்தாஸம்ஶ்லிஷ்டாநி, அஶேஷாவத்³யாநி
  • ஸமஸ்தஹேயாநி, யஸ்மிந் ததோ²க்தம்। நிகி²லஹேயப்ரத்யநீகத்வாத்தத்ர
    தோ³ஷா ந ஸம்ப⁴வந்தீதி பா⁴வ:। ததா² ச ஶ்ருதி: – “அபஹதபாப்மா விரஜோ
    விம்ரு’த்யுர்விஶோகோ விஜிக⁴த்ஸோऽபிபாஸஸ்ஸத்யகாமஸ்ஸத்யஸங்கல்ப”
    இதி। ஹயவத³நம் – ஹயஸ்ய வத³நமிவ வத³நம் யஸ்ய ததோ²க்தம், ஶாக
    பார்தி²வாதி³த்வாந்மத்⁴யமபத³லோபீ ஸமாஸ:। (மஹ) இதி। பரம் ப்³ரஹ்ம
    ஜ்யோதிஷா மபி ஜ்யோதிரயம் புருஷஸ்ஸ்வயஞ்ஜ்யோதி:। “தேஜஸ்தேஜஸ்விநாமஹ”
    மித்யாத்³யுக்தே:। ஈடீ³மஹி – ஸ்துவீமஹி। (ஈட³- ஸ்துதௌ லடா³த்மநேபத³ம்)
    நித்யத்வ- தேஜிஷ்ட²த்வ -ஸகலதோ³ஷாபஹாரித்வ- வேத³ப்ரவக்த்ரு’த்வநிர்தோ³ஷத்வாதி³கு³ணகம் ஶ்ரீஹயக்³ரீவம் ஸ்தும இத்யர்த:²। ஸ்வபா⁴வோக்திரலங்கார:।
    “ஸ்வபா⁴வோக்திரலங்காரோ யதா²வத்³வஸ்துவர்ணந” மிதிலக்ஷணாத்। அத்ர
    ஸ்வாதந்த்ர்யாபி⁴மாந நிவ்ரு’த்தயே கர்துரநுபாதா³நம் ।
  • ப்ராசீ ஸந்த்⁴யா காசித³ந்தர்நிஶாயா: ப்ரஜ்ஞாத்³ரு’ஷ்டே ரஞ்ஜநஶ்ரீ ரபூர்வா ।
    வக்த்ரீ வேதா³ந் பா⁴து மே வாஜிவக்த்ரா வாகீ³ஶாக்²யா வாஸுதே³வஸ்ய மூர்தி: ॥ 2॥

  • ப⁴க³வந்தம் ஸ்தோதும் ததா³விர்பா⁴வப்ரார்த²நயா தமபி⁴முகீ²கரோதி। ப்ராசீதி।
    வாஸுதே³வஸ்ய – “ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச வஸத்யத்ரேதி வை யத:, தத
    ஸ்ஸ வாஸுதே³வேதி வித்³வத்³பி:⁴ பரிபட்²யத” இத்யாத்³யுக்தஸ்ய பரமாத்மந:,
    வாஜிவக்த்ரா -ஹயவத³நா, வாகீ³ஶாக்²யா – வாகீ³ஶேதி ஆக்²யா யஸ்யா
    ததோ²க்தா; வேதா³ந் -ரு’க்³யஜுஸ்ஸாமாத⁴ர்வணரூபாந், வக்த்ரீ – வ்யஞ்ஜயந்தீ,
    “ரு’சஸ்ஸாமாநி ஜஜ்ஞிரே ச²ந்தா³ங்க்³ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்” இதி, “ப்ரவக்தா
    ச²ண்ட³ஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய ஸ்ஸ்வய”மித்யாதி³வசநாத்। அத்ர
    “ந லோகாய நிஷ்டா²க²லர்த²த்ரு’ணா”மிதி ஷஷ்டீ²நிஷேத:⁴। அந்தர்நிஶாயா:
  • அஜ்ஞாநநிஶீதி²ந்யா:, காசித்-விலக்ஷணா ஸந்த்⁴யா, ப்ராசீ ஸந்த்⁴யா விபா⁴தஸந்த்⁴யா, அஜ்ஞாநாந்த⁴கார நிவர்திநீதி யாவத்। (ப்ரஜ்ஞாத்³ரு’ஷ்டே:)
    ப்ரஜ்ஞா – தத்த்வஹிதபுருஷார்த²விஷயிணீ தீ:⁴, ஸைவ, த்³ரு’ஷ்டி: – ஈக்ஷணம்,
    தஸ்யா:, அபூர்வா – ப்ரஸித்³தா⁴ விலக்ஷணா, அஞ்ஜநஶ்ரீ: – அஞ்ஜநஸம்பந்மூர்தி:,
    தநு: மே, பா⁴து – ஸ்பு²ரது, பா⁴ -தீ³ப்தௌ லோட்। தாத்³ரு’ஶமூர்திஸாக்ஷாத்காரே
    ஸ்வஸ்யாப்யஜ்ஞாநநிவ்ரு’த்திபூர்வக ஜ்ஞாநவ்ரு’த்³தி⁴ர்பூ⁴யாதி³த்யாஶய:। ரூபகாலங்கார:।
    “ஆரோப்யவிஷயஸ்ய ஸ்யாத³திரோஹிதரூபிண:, உபரஞ்ஜிதமாரோப்யமாணம்
    ததூ³ப்ரகம் மத” மிதி லக்ஷணாத் ।
  • ஜ்ஞாநாநந்த³மயம் தே³வம் நிர்மலஸ்ப²டிகாக்ரு’திம் ।
    ஆதா⁴ரம் ஸர்வவித்³யாநாம் ஹயக்³ரீவமுபாஸ்மஹே ॥ 3॥

  • பூர்வஸ்மிந் ஶ்லோகே ஹயமுக²ஸந்நிதா⁴நம் ப்ரார்தி²தம்। இதா³நீம் ஸந்நிஹிதம்
    ப⁴க³வந்தமுபாஸ்மஹ இத்யாஹ (ஜ்ஞாநாநந்தே³தி)। ஜ்ஞாநாநந்த³மயம் ஜ்ஞாநாநந்த³ப்ரசுரம்। “தத் ப்ரக்ரு’தவசநே மயடி³தி ப்ராசுர்யார்தே² மயட்। யத்³வா
  • ஜ்ஞாநாநந்த³மயம் – ஜ்ஞாநாநந்த³ஸ்வரூபம், “ஸ்வார்தே² மயட், ப்ராணமய
    இத்யாதி³வத்। “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்³ரஹ்ம, கோ ஹ்யேவாந்யாத்க: ப்ராண்யாத்
    யதே³ஷ அகாஶ ஆநந்தோ³ ந ஸ்யா” தி³த்யுக்தே:। (நிர்மலஸ்ப²டிகாக்ரு’திம்)
    நிர்மல:- ஜாஜ்வல்யமாந:, ஸ்ப²டிக: – ஸ்ப²டிகமணி:, தஸ்யாக்ரு’திரிவாக்ரு’திர்யஸ்ய
    தம்; ஸர்வவித்³யாநாம் – ஸகலகலாநாம், ஆதா⁴ரம் – நிலயம், “ச²ந்தோ³மயோ
    மக²மயோऽகி²லதே³வதாத்மே” த்யுக்தே:। ஹயக்³ரீவம் தே³வமுபாஸ்மஹே த்⁴யாயாம:, “ஆஸ- உபவேஶநே” ।
  • விஶுத்³த⁴விஜ்ஞாந க⁴நஸ்வரூபம் விஜ்ஞாநவிஶ்ராணநப³த்³த⁴தீ³க்ஷம் ।
    த³யாநிதி⁴ம் தே³ஹப்⁴ரு’தாம் ஶரண்யம் தே³வம் ஹயக்³ரீவமஹம் ப்ரபத்³யே ॥ 4॥

  • கு³ருலகூ⁴பாயபூ⁴தயோர்ப⁴க்தி ப்ரபத்த்யோர்மத்⁴யே ப்ரசராமீத்யாஹ (விஶுத்³த⁴) மிதி।
    அஹம் – தா³ஸபூ⁴த:, த³யாயா: நிதி⁴ம் – அக்ஷயஸ்தா²நம், தம், அத ஏவ தே³ஹப்⁴ரு’தாம்
  • ப்ராணிநாம், ஶரண்யம் – ரக்ஷகம், (விஶுத்³த⁴விஜ்ஞாநக⁴நஸ்வரூபம்) விஶுத்³தே⁴ந
  • நிர்மலேந, விஜ்ஞாநேந, க⁴நம் – நிபி³ட³ம், அந்தர்ப³ஹிர்ஜ்ஞாநமயமித்யர்த:²।
    யத்³வா, விஜ்ஞாநரூபோ க⁴ந: -பிண்ட:³, தத்³ரூபமித்யர்த:²। “விஜ்ஞாநக⁴ந ஏவே”தி
    ஶ்ருதே:, ஸ்வரூபம் யஸ்ய, தம்। (விஜ்ஞாநவிஶ்ராணநப³த்³த⁴தீ³க்ஷம்) விஜ்ஞாநஸ்ய
  • ஜ்ஞாநயோக³ஸ்ய, விஶ்ராணநே – விதரணே, ப³த்³தா⁴ -த்⁴ரு’தா, தீ³க்ஷா ஸங்கல்ப:, யஸ்ய தம்। “தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம், த³தா³மி
    பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி த” இத்யாதி³வசநாத்। ஹயக்³ரீவம்,
    ப்ரபத்³யே – ஶரணம் யாமி, “பத்³ல் -க³தௌ” லடா³த்மநேபத³ம்। ஜ்ஞாநஸ்வரூபஸ்ய
    ஜ்ஞாநப்ரத³ஸ்ய த³யாளோ: ஸர்வபூ⁴தஶரண்யஸ்ய ஶரணாக³தா அஸ்மத்ஸம்ரக்ஷணம்
    கியதி³தி பா⁴வ: ।
  • ஸமாஹாரஸ்ஸாம்நாம் ப்ரதிபத³ம்ரு’சாம் தா⁴ம யஜுஷாம்
    லய: ப்ரத்யூஹாநாம் லஹரிவிததிர்போ³த⁴ஜலதே:⁴ ।
    கதா²த்³ரு’ப்யத்கௌதஸ்குதகலஹ கோலாஹலப⁴வம்
    ஹரத்வந்தர்த்⁴வாந்தம் ஹயவத³நஹேஷாஹலஹல: ॥ 5॥

  • ப⁴க³வதி ஹயாஸ்யே ப⁴க்திப்ரபத்திரூபோபாயத்³வயம் விதா⁴ய,ஸம்ப்ரதி சிகீர்ஷிதஸ்தோத்ரபரிஸ
    ப்ரதிப³ந்த⁴காஜ்ஞாநாந்த⁴காரநிவ்ரு’த்திம் ஸர்வவிக்⁴நோபஶமாத்³த⁴யமுக²
    ஹேஷாரவஸகாஶாத் ஸ்வஸ்ய ப்ரார்த²யதே (ஸமாஹர) இதி। ஸாம்நாம் ஸாமஶாகா²நாம்,ஸமாஹார: -ஸங்கா⁴த:, தத்ஸ்வரூபமிதி யாவத்। “ப்ரணவோத்³கீ³த²வசஸ”
    இத்யுக்தே:। ரு’க்ஸாகா²நாம், ப்ரதிபத³ம்- தத³ர்த²போ³த⁴கபர்யாயபத³ம், யஜுஷாம் தைத்திரீயஶாகா²நாம், தா⁴ம – வாஸப்தா²நம், ப்ரத்யூஹாநாம் – வித்³யாப்ரதிப³ந்த⁴கவிக்⁴நாநாம்,லய: – த்⁴வம்ஸ:, போ³த⁴ஜலதே:⁴ – ஜ்ஞாநஸாக³ரஸ்ய, லஹரிவிததி: – தரங்க³பரம்வரா,(ஹயவத³நஹேஷாஹலஹல:) ஹயவத³நஸ்ய – ஹயக்³ரீவஸ்ய, ஹேஷாக்²யோ ஹலஹல: அஶ்வத்⁴வநி:, (கதா²த்³ரு’ப்யத்கௌதஸ்குதகலஹ கோலாஹலப⁴வம்) கதா²ஸு
  • வாத³கதா²ஸு, த்³ரு’ப்யந்த: கௌதஸ்குதா: – குத: குத இதி வாதி³ந:, ஸ
    “கஸ்காதி³த்வாத்ஸ:”, தேஷாம், கலஹகோலாஹலேந – அயதா²ர்த²வாத³கலஹேந,
    ப⁴வ: – ஜந்ய:, அந்தர்த்³வாந்தம், ஹரது – நிவர்தயது, “ஹ்ரு’ஞ்- ஹரணே”।
    ஹேஷாஹலஹலஸ்ய ஸமாஹாராத்³யபே⁴தோ³க்த்யா பே⁴த³ரூபகாலங்கார: ।
  • அபௌருஷேயை ரபி வாக்ப்ரபஞ்சை ரத்³யாபி தே பூ⁴திமத்³ரு’ஷ்டபாராம் ।
    ஸ்துவந்நஹம் முக்³த⁴ இதி த்வயைவ காருண்யதோ நாத² ! கடாக்ஷணீய: ॥ 6॥

  • ஸாக்ஷாத்க்ரு’தே ப⁴க³வதி விவித⁴ விசித்ராநந்தாஶ்சர்ய ஸநகஸநந்த³நாதி³
    த்⁴யாநாகோ³சர தி³வ்யஸ்வபா⁴வம் த்³ரு’ஷ்ட்வாऽஸ்ய ப⁴க³வத்³கு³ணாநுவர்ணநே
    ப்ரயத்ந: பரிஹஸாஸ்பத³ இத்யபி⁴ப்ரேத்யாஹ (அபௌருஷேயை ரிதி)। ஹே நாத² ஹே ஹயக்³ரீவ, அத்³யாபி – இதா³நீ மபி, அபௌருஷேயை: – நித்யை:, “அநாதி³நித⁴நா
    ஹ்யேஷா வாகு³த்ஸ்ரு’ஷ்டா ஸ்வயம்பு⁴வே” த்யாத்³யுக்தே:। வாக்ப்ரபஞ்சைரபி வேத³ஜாலைரபி, (அத்³ரு’ஷ்டபாராம்) அத்³ரு’ஷ்டம் – ப்ரதிபாத³நாவிஷயீபூ⁴தம், பாரம்அவதி:⁴, யஸ்யா ஸ்ஸா ததோ²க்தா “யதோ வாசோ நிவர்தந்தே, அப்ராப்ய மநஸா
    ஸஹே” தி ஶ்ருதே: । “நாந்தோऽஸ்தி ம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தபே” த்யாதி³

    ஸ்ம்ரு’தேஶ்ச । பூ⁴திம் – கு³ணாத்³யைஶ்வர்யம், ஸ்துவந் – வர்ணயந், அஹம், முக்³த:⁴
  • பா³ல:, க்ரு’த்யஸாத்⁴யே யதமாந இதி யாவத்; இதி – ஹேதோ:, த்வயா, காருண்யத
    ஏவ – க்ரு’பாவஶாதே³வ, ந ஹ்யஸ்மதா³தி³ஷு கடாக்ஷநிமித்தம் கிஞ்சித³ஸ்தீதி
    பா⁴வ:। கடாக்ஷணீய: – பா³லேஷ்வகிஞ்சித்குர்வத்ஸ்வபி பரமகாருணிகஸ்ய பிது:
    கருணாகடாக்ஷ: ஸ்வாபா⁴விக இதி பா⁴வ: ।
  • தா³க்ஷிண்யரம்யா கி³ரிஶஸ்ய மூர்திர்தே³வீ ஸரோஜாஸநத⁴ர்மபத்நீ ।
    வ்யாஸாத³யோऽபி வ்யபதே³ஶ்யவாச ஸ்ஸ்பு²ரந்தி ஸர்வே தவ ஶக்திலேஶை: ॥ 7॥

  • லோகே யே வித்³யாதி³கா: தே ஸர்வேऽபி ப⁴வதீ³யஶக்த்யம்ஶை: ஸ்ப்ரு’ஶந்தீத்யாஹ
    (தா³க்ஷிண்யே) தி । ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, கி³ரிஶஸ்ய – ருத்³ரஸ்ய,
    (தா³க்ஷிண்யரம்யா) தா³க்ஷிண்யீந – ஸுக²ப்ரியவசநாதி³நா, ரம்யா -மநோஹரா,
    யத்³வா, தா³க்ஷிண்யேந – வித்³யாப்ரதா³ந ஸாமர்த்²வேந, ரம்யா – மநோஜ்ஞா,
    மூர்தி:, ஸரோஜாஸநஸ்ய – சதுர்முக²ஸ்ய, த⁴ர்மபத்நீ – ஸஹத⁴ர்மசரீ, தே³வீ
  • ஸரஸ்வதீ, வ்யபதே³ஶ்யவாச: – ப்ரஸித்³த⁴ க்³ரந்த²கர்தாரோ வ்யாஸாத³ய:,
    வ்யாஸவால்மீகிஶுக பராஶராத³யோऽபி, ஸர்வே – பூர்வஸமுதி³தவ்யதிரிக்தா:, தவ
    ஶக்திலேஶை: – வித்³யாஶக்த்யம்ஶை:, ஸ்பு²ரந்தி – பா⁴ந்தி। “ந தத்ர ஸூர்யோ பா⁴தி
    ந சந்த்³ரதாரகம், நேமா வித்³யுதோ பா⁴ந்தி குதோऽயமக்³நி:, தமேவ பா⁴ந்த மநுபா⁴தி
    ஸர்வம் தஸ்ய பா⁴ஸா ஸர்வமித³ம் விபா⁴தீ” தி ஶ்ருதே:। “யத்³யத்³விபூ⁴திமத்ஸத்வம்
    ஶ்ரீமதூ³ர்ஜிதமேவ வா, தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோऽம்ஶஸம்ப⁴வ” மிதி
    ஸ்ம்ரு’தேஶ்ச ।
  • மந்தோ³ ப⁴விஷ்யந்நியதம் விரிஞ்சோ வாசாம் நிதே⁴! வஞ்சிதபா⁴க³தே⁴ய: ।
    தை³த்யாபநீதாம் த³யயைவ பூ⁴யோऽப்யத்⁴யாபயிஷ்யோ நிக³மாந்நசேத்த்வம் ॥ 8॥

  • ப்³ரஹ்மாதீ³நாமபி ப்ரமாத³காலே த்வமேவ க³திரித்யாஹ (மந்த³) இதி। ஹே வாசாம்
    நிதே⁴ – வாகீ³ஶ, த்வம் – ப⁴வாந், (தை³த்யாபநீதாந்) தை³த்யேந – அஸுரேண,
    அபநீதாந் – அபஹ்ரு’தாந், நிக³மாந் – வேதா³ந், பூ⁴யோऽபி – புநரபி, த³யயா காருண்யேநைவ, நாத்⁴யாபயிஷ்யோ யதி³, விரிஞ்ச: – ப்³ரஹ்மா, வஞ்சிதபா⁴க³தே⁴ய:
  • ப்ரதாரிதபா⁴க்³யஸ்ஸந், மந்த:³ – ஜட:³, கார்யாகார்யவிவேகஶூந்ய:; அப⁴விஷ்யத்।
    ஹேதுஹேதுமதோர்ல்ரு’ஜ்। நியதம் – த்⁴ருவம்। “ஆபந்நாநாம் பரா க³தி” ரித்யுக்தரீத்யா
    ப்³ரஹ்மதீ³நாமப்யாபத்காலே த்வமேவ க³தி ரிதி பா⁴வ:। அத்ர மது⁴கைடபா⁴ப்⁴யாம்
    சதுர்முக²ம் ப்ரதார்ய வேதா³ அபஹ்ரு’தா:, தத: ப்ரபு³த்³தே⁴ந ப்³ரஹ்மணா ப⁴க³வாந்
    ப்ரஸாதி³த: மத்ஸ்யரூபேணாவதீர்ய, தௌ ஹத்வா வேதா³ந் ஸங்க்³ரு’ஹ்ய தா⁴த்ரே
    வ்யதரதி³தி பௌராணிகீ கதா²ऽநுஸந்தே⁴யா ।
  • விதர்கடோ³லாம் வ்யவதூ⁴ய ஸத்த்வே ப்³ரு’ஹஸ்பதிம் வர்தயஸே யதஸ்த்வம் ।
    தேநைவ தே³வ! த்ரித³ஶேஶ்வராணாமஸ்ப்ரு’ஷ்டடோ³லாயிதமாதி⁴ராஜ்யம் ॥ 9॥

  • இந்த்³ராதீ³நாமபி சாதி⁴காரஸ்ய ஸ்தி²ரீகரணம் த்வதா³யத்தமேவேத்யாஹ
    (விதர்கே) தி। ஹே தே³வ – ஹே ஹயக்³ரீவ, யத: – யஸ்மாத்³தே⁴தோ:, த்வம்,
    ப்³ரு’ஹஸ்பதிம் – தி⁴ஷணம், (விதர்கடோ³லாம்) விதர்கை: – து³ரூஹை:, டோ³லாம்
  • சித்தசஞ்சலதாம், ரஜஸ்தம:கார்யபூ⁴தாம்; தாம், வ்யவதூ⁴ய – நிவார்ய, ஸத்வே ஸத்வமார்கே³, வர்தயஸே – ப்ரதிஷ்டா²பயஸே, தேநைவ – த்ரித³ஶேஶ்வராணாம் இந்த்³ராதீ³நாம், ஆதி⁴பத்யம் – ஸ்வர்கா³தி⁴பத்யம், (அஸ்ப்ரு’ஷ்டடோ³லாயிதம்)
    அஸ்பஷ்டம் – அநதி⁴க³தம், டோ³லாயிதம் யேந தத்ததோ²க்தம், ஸ்தி²ரமிதி யாவத்।
    அபூ⁴தி³தி ஶேஷ: ப்³ரு’ஹஸ்பதி: தத்ப்ரத³ர்ஶித ஸந்மார்க³ நிஷ்ட²ஸ்ஸந் தேநைவ
    மார்கே³ண இந்த்³ராதீ³ந் வர்தயதே அந்யதா² அஸுரவம்ஶை: ஸுரவம்ஶோऽபி
    அலப்³த⁴ஶ்ரீராஜ்யகோஶ: க்ஷயம் யாதி³த்யாஶய:, ஸம்ஶயோ ஹி ஹேயகு³ண:।
    “அஜ்ஞஶ்சா ஶ்ரத்³த⁴தா⁴நஶ்ச ஸம்ஶயாத்மா விநஶ்யதி, நாயம் லோகோऽஸ்தி ந பரோ
    ந ஸுக²ம் ஸம்ஶயாத்மந:, யோக³ஸந்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சி²ந்நஸம்ஶயம்,
    ஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய” இத்யாதி³ ப⁴க³வது³க்தே: ।
  • அக்³நௌ ஸமித்³தா⁴ர்சிஷி ஸப்ததந்தோ ராதஸ்தி²வாந் மந்த்ரமயம் ஶரீரம் ।
    அக²ண்ட³ஸாரைர்ஹவிஷாம் ப்ரதா³நைராப்யாயநம் வ்யோமஸதா³ம் வித⁴த்ஸே ॥
    10॥

  • இந்தா³த்³ரீநாம் ஹவிர்பா⁴க³ப்ரதா³நமுகே²ந த்ரு’ப்திகரோऽபி ப⁴வாநேவேத்யாஹ(அக்³நா)விதி।ஹே தே³வ – ஹே ஹயக்³ரீவ, ஸப்ததந்தோ: ஸம்ப³ந்தி⁴நி, (ஸமித்³தா⁴ர்சிஷி)
    ஸமித்³தா⁴நி – ப்ரஜ்வலிதாநி, அர்சீம்ஷி – தேஜாம்ஸி, யஸ்ய தஸ்மிந்நக்³நௌ
    மந்த்ரமயம் – மந்த்ராத்மகம், ஶரீரம் – விக்³ரஹம், ஆதஸ்தி²வாந் – ஸம்ப்ராப்நுவந்
    ஸந்। “அஹம் க்ரது ரஹம் யஜ்ஞ ஸ்ஸ்வதா⁴ஹ மஹமௌஷத⁴ம், மந்த்ரோऽஹமஹமேவாஜ்ய
    மஹமக்³நி ரஹம்ஹுத” மித்யாத்³யுக்தே:, (அக²ண்ட³ஸாரை:) அக²ண்டா:³
  • அவிச்சி²ந்நா:, ஸாரா: – மாது⁴ர்யாதி³ரஸா:, யேஷு தை:; ஹவிஷாம் புரோடா³ஶாதி³ஹவிஷாம், ப்ரதா³நை: – விதரணை:, வ்யோமஸதா³ம் – இந்த்³ராதி³தே³வாநாம்,
    ஆப்யாயநம் – த்ரு’ப்திம், வித⁴த்ஸே – வித³தா⁴ஸி, “டு³- தா⁴ஞ்தா⁴ரணபோஷணயோ:”।
    “அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ ரேவ ச, ஸத்ரே மமாஸ ப⁴க³வாந்
    ஹயஶீர்ஷ ஏஷ:,
    ஸாக்ஷாத்ஸயஜ்ஞபுருஷஸ்தபநீயவர்ண:, ச²ந்தோ³மயஸ்ஸோऽகி²லதே³வதாத்மா
    வாசோ ப³பூ⁴வு ருஶதீஶ்ஶ்வஸதோऽஸ்ய நஸ்த” இத்யாதி³வசநாத் ।
  • யந்மூலமீத்³ரு’க்ப்ரதிபா⁴தி தத்த்வம் யா மூலமாம்நாயமஹாத்³ருமாணாம் ।
    தத்த்வேந ஜாநந்தி விஶுத்³த⁴ஸத்த்வா ஸ்தாமக்ஷராமக்ஷரமாத்ரு’காம் தே ॥ 11॥
  • ப்ரபஞ்சஸ்ய மூலகாரணமபி த்வமேவேத்யாஹ (யந்மூலமிதி)। ஹே தே³வ,
    (விஶுத்³த⁴ஸத்த்வா:) விஶுத்³த⁴ம் – நிர்மலம், ஸத்த்வம் – ஸத்த்வகு³ண:, யேஷாம்
    தே ததோ²க்தா:; ஈத்³ரு’க் – தே³வதிர்யங்மநுஷ்ய ஸ்தா²வராத்மநா அபா³தி⁴ தத்வேந
    ப்ரமாணஸித்³த⁴ம், தத்த்வம் – சதுர்விம்ஶதிமஹதா³தி³தத்த்வம், (யந்மூலம்) யத்
    மூலம் யஸ்ய ததோ²க்தம்; (ஆம்நாய மஹாத்³ருமாணாம்) ஆம்நாயா: – வேதா³
    ஏவ, மஹாத்³ருமா: – வ்ரு’க்ஷா:, தேஷாம், யா மூலம், தாம், அக்ஷராம்- நித்யாம்,
    அக்ஷரமாத்ரு’காம் – அகாராத்³யக்ஷரஸமஷ்டிம், தே – த்வத்ஸம்ப³ந்தி⁴நம், தத்த்வேந
  • யாதா²ர்த்²யேந, ஜாநந்தி- வித³ந்தி। “ஜ்ஞா – அவபோ³த⁴நே। “வேதே³ந ரூபே
    வ்யகரோத்ஸதா ஸதீ ப்ரஜாபதி:”, “வேத³ஶப்³தே³ப்⁴ய ஏவாதௌ³ தே³வாதீ³நாம் சகார
    ஸ:” இதி வேத³ஸ்ய ஜக³த்ஸ்ரு’ஷ்டி ஹேதுத்வாத்தந்மூலபூ⁴தாயா அக்ஷரமாத்ரு’காயா
    அபி த்வத³தீ⁴ந
    த்வாத்ஸாக்ஷாத்பரம்பரயா வா க்ரு’த்ஸ்நமபி ப்ரபஞ்சஜாதம் த்வத்த ஏவோத்பந்நமிதி
    பா⁴வ:। “யதோ வா இமாநி பூ⁴தாநி ஜாயந்தே”, “ததை³க்ஷத, ப³ஹுஸ்யாம்
    ப்ரஜாயேயேதி, தத்தேஜோऽஸ்ரு’ஜத”, “யந்மூலாஸ்ஸோம்யேமாஸ்ஸர்வா: ப்ரஜாஸ்ஸதா³யதநாஸ“ரு’சஸ்ஸாமாநி ஜஜ்ஞிரே ச²ந்தா³ங்க்³ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத்”, “கார்யாணாம் காரணம்
    பூர்வ”மித்யாத்³யத்ராநு ஸந்தே⁴யம் ।
  • அவ்யாக்ரு’தாத்³வ்யாக்ரு’தவாநஸி த்வம் நாமாநி ரூபாணி ச யாநி பூர்வம் ।
    ஶம்ஸந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டா²ம் வாகீ³ஶ்வர! த்வாம் த்வது³பஜ்ஞவாச: ॥
    12॥

  • உத்பந்ந ப்ரபஞ்சஸ்ய பர்யவஸாந ஸ்தா²நமபி த்வமேவேத்யாஹ (அவ்யாக்ரு’தாதி³)தி।
    ஹே வாகீ³ஶ்வர, த்வம், அவ்யாக்ரு’தாத் – ப்ரதா⁴நாத், பூர்வம் – ப்ரத²மம், யாநி
    நாமாநி – வாசகாநி, ரூபாணி – ப்ரு’தி²வ்யாதி³ஸம்ஸ்தா²நாநி ச, வ்யாக்ரு’தவாந்
  • ப்ரணீதவாநஸி, “இமா ஸ்திஸ்ரோ தே³வதா: அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
    நாமரூபே வ்யாகரவாணீ” தி ஶ்ருதே:। தேஷாம் – நாமரூபாணாம், சரமாம் ப்ரதிஷ்டா²ம்
  • பர்யவஸாநபூ⁴மிம், ப⁴வந்தம், (த்வது³பஜ்ஞ வாச:) த்வத் – தவ, உபஜ்ஞாநி த்வயா ஆதௌ³ த்³ரு’ஷ்டாநி, “உபஜ்ஞோऽபக்ரமம் “ததா³த்³யா சிக்²யாயா”மிதி
    நபும்ஸகத்வம்। தாநி, வாசஶ்ச ததோ²க்த:, வேதா³ இத்யர்த:²; ஶம்ஸந்தி – வத³ந்தி,
    “ஶம்ஸு – ஸ்துதௌ”। ஶரீரபூ⁴தாநாம் ப்ரு’தி²வ்யாநாம் ஶரீர்யாயத்தஸ்தி²தித்வாத்;
    நாம்நாம் வாசகாநாம் ப்ரகாரத்³வாரா ப்ரகாரிபர்யந்தவ்ரு’த்திகத்வாதி³தி
    பா⁴வ: “யஸ்ய ப்ரு’தி²வீ ஶரீரம் யஸ்யாபஶ்ஶரீரம் யஸ்ய தேஜஶ்ஶரீரம் யஸ்ய
    வாயுஶ்ஶரீரம் யஸ்யாகாஶஶ்ஶரீரம் யஸ்யாக்ஷரம் ஶரீர”மித்யாதி³ ஶ்ருதே:; “வசஸாம்
    வாச்யமுத்தம”மித்யாதி³ ஸ்ம்ரு’தேஶ்ச ।
  • முக்³தே⁴ந்து³நிஷ்யந்த³விலோப⁴நீயாம் மூர்திம் தவாநந்த³ஸுதா⁴ப்ரஸூதிம் ।
    விபஶ்சிதஶ்சேதஸி பா⁴வயந்தோ வேலாமுதா³ராமிவ து³க்³த⁴ஸிந்தோ:⁴ ॥ 13॥

  • யோகி³நோ மோக்ஷரூபப²லாவாப்தயே த்வாமேவ சிந்தயந்தீத்யாஹ (முக்³தே⁴)
    தி। ஹே வாகீ³ஶ்வர, தவ, (ஆநந்த³ஸுதா⁴ப்ரஸூதிம்) ஆநந்த³ ஏவ, ஸுதா⁴ அம்ரு’தம், தஸ்யா: ப்ரஸூதிர்ஜந்ம யஸ்யாஸ்தாம் ததோ²க்தாம்; “ரஸோ வை
    ஸ:, ரஸங்க்³ ஹ்யேவாயம் லப்³த்⁴வா நந்தீ³ ப⁴வதி, ஏஷ ஹ்யேவாநந்த³யாதி” இதி
    ஶ்ருதே: ।(முக்³தே⁴ந்து³நிஷ்யந்த³விலோப⁴நீயாம்) முக்³தே⁴ந்தோ:³, நிஷ்யந்த³வத் ப்ரவாஹவத், அபூ⁴தோபமா। விலோப⁴நீயாம் – ஸ்ப்ரு’ஹணீயாம், து³க்³த⁴ஸிந்தோ:⁴,
    உதா³ராம்- ஶ்ரேஷ்டா²ம், வேலாமிவ – ஸேதுமிவ ஸ்தி²தாம், மூர்திம் – விக்³ரஹம்,
    விபஶ்சித: – ஜ்ஞாநிந:, சேதஸி – ஹ்ரு’த³யே, பா⁴வயந்தி – பரிஶீலயந்தி, ஆநந்த³
    ஸுதா⁴கரத்வாதி³தர விஷயாந் பரிஹ்ரு’த்ய தத்ரைவ ரமந்த இத்யர்த:²।
    “மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ரு’திமாஶ்ரிதா:, ப⁴ஜந்த்யநந்யமநஸோ
    ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம், ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஶ்ச த்³ரு’ட⁴ப்ரதா:,
    நமஸ்யந்தஶ்ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே, தத்ரைகாக்³ரம் மந: க்ரு’த்வா
    யதசித்தேந்த்³ரியக்ரிய:, “ரமந்தே யோகி³நோऽநந்தே நித்யாநந்தே³ சிதா³த்மநீ” த்யாதி³
    வசநாத்; தது³க்தம் ப⁴க³வதா -“அநந்யாஶ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே,
    தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹ” மிதி ।
  • மநோக³தம் பஶ்யதி ய ஸ்ஸதா³ த்வாம் மநீஷிணாம் மாநஸராஜஹம்ஸம் ।
    ஸ்வயம் புரோவாத³விவாத³பா⁴ஜ: கிங்குர்வதே தஸ்ய கி³ரோ யதா²ர்ஹம் ॥ 14॥

  • ஹயக்³ரீவமுபாஸீந: புமாந் ப்ரயத்நம் விநைவ வித்³யாம் லப⁴த இத்யாஹ (மநோக³த)
    மிதி। (மாநஸராஜஹம்ஸம்) மாநஸம் – மந ஏவ மாநஸம், மாநஸாக்²யஸர:;
    தத்ர, ராஜஹம்ஸம் – ராஜஹம்ஸவத்³விஹரணோத்ஸுகமித்யர்த:²; த்வாம்
    மநீஷிணாம் மத்⁴யேய: – புமாந், ஸதா³ – ஸர்வதே³ஶஸர்வகாலஸர்வாவஸ்தா²ஸு,
    “தஸ்மாத்ஸர்வேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச”, “யந்முஹூர்தம் க்ஷணம் வாபி
    வாஸுதே³வோ ந சிந்த்யதே, ஸா ஹநிஸ்தந்மஹச்சி²த்³ரம் ஸா ப்⁴ராந்தி ஸ்ஸா ச
    விக்ரியே” த்யாத்³யுக்தை:; மநோக³தம் – ஹ்ரு’த³யஸ்த²ம், பஶ்யதி – ஸாக்ஷாத்கரோதி,
    மநஸா சிந்தயதீத்யர்த:²। தஸ்ய – ஜநஸ்ய, கி³ர: – வாச:, ஸ்வயம் – யத்நம் விநைவ,
    (புரோவாத³ விவாத³பா⁴ஜ:) புரோவாதே³ – ப்ராத²மிகோபஸ்தி²தௌ, விவாத³ம் அந்யோந்யகலஹம், பா⁴ஜ: – ப⁴ஜந்த:, அஹமஹமிகயா ப்ரத²மம் ஸ்பு²ரந்த இத்யர்த:²;
    தாஸ்ஸத்ய:, யதா²ர்ஹம் – யதா²யோக்³யம், கிங்குர்வதே – கிங்கரத்வம் ப⁴ஜந்தே,
    “டு³க்ரு’ஞ் – கரணே” ।
  • அபி க்ஷணார்த²ம் கலயந்தி யே த்வாமாப்லாவயந்தம் விஶதை³ர்மயூகை:² ।
    வாசாம் ப்ரவாஹைரநிவாரிதை ஸ்தே மந்தா³கிநீம் மந்த³யிதும் க்ஷமம் தே ॥ 15॥

  • ந கேவலம் த்வாமுபாஸீநஸ்ய வித்³யாப²லமாத்ரமபி த்வதிவாசாலகத்வமபீத்யாஹ
    (அபீ) தி। ஹே வாகீ³ஶ, விஶதை:³ – ஸ்வச்சை:² மயூகை:² – கிரணை:, ஆப்லாவயந்தம்
  • ஹ்லாத³யந்தம், ஸேவகாநிதி ஶேஷ:। த்வாம், யே – ப⁴க்தா:, க்ஷணார்த²மபி
  • ஸூக்ஷ்மகாலமபி, கலயந்தி – த்⁴யாயந்தி, தே – ப⁴க்தா:, அநிவாரிதை: ப்ரதிவாதி³பி⁴ர்நிரோத்³து⁴மஶக்யை:, வாசாம் – கி³ராம், ப்ரவாஹை: – பரம்பராபி:⁴,
    மந்தா³கிநீம் – க³ங்கா³ம், மந்த³யிதும் – அல்பவேகா³ம் கர்தும்,க்ஷமந்தே – ஶக்நுவந்தி,
    தேஷாம் வாக்³வேகோ³ க³ங்கா³ ப்ரவாஹவேகா³த³ப்யதிஶயிதஸ்ஸ்யாதி³தி பா⁴வ: ।
  • ஸ்வாமிந்! ப⁴வத்³யோக³ஸுதா⁴பி⁴ஷேகாத்³வஹந்தி த⁴ந்யா: புலகாநுப³ந்த⁴ம் ।
    அலக்ஷிதே க்வாபி நிரூட⁴மூலமங்கே³ஷ்விவாநந்த³து⁴மங்குரந்தம் ॥ 16॥

  • த⁴ந்யாநாமேவ த்வயி லாப⁴ இத்யாஹ (ஸ்வாமிந்நி) தி। ஹே ஸ்வாமிந்
  • வாகீ³ஶ, (ப⁴வத்³யோக³ ஸுதா⁴பி⁴ஷேகாத்) ப⁴வதஸ்ஸம்ப³ந்தீ⁴ யோக:³ ப⁴க்தியோக:³, ஸ ஏவ ஸுதா⁴, தயா, அபி⁴ஷேக: – ஸ்நபநம், தஸ்மாதி³த்யர்த:²;
    அலக்ஷிதே – அத்³ரு’ஷ்டே, க்வாபி – க்வசித்ப்ரதே³ஶேऽபி, “யோகீ³ யுஞ்ஜீத
    ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி²த:, ஏகாகீ யதசித்தாத்மா நிராஶீரபரிக்³ரஹ:,
    ஶுசௌ தே³ஶே ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸநமாத்மந:, நாத்யுச்ச்²ரித்ரம் நாதிநீசம்
    சேலாஜிநகுஶோத்தர”மித்யாத்³யுக்தே:; (நிரூட⁴மூலம்) நிரூட⁴ம் – த்³ரு’ட⁴தரம், மூலம்
    யஸ்ய தம்; அங்கே³ஷு – அவயவேஷு, அங்குரந்தம் – உத்³யந்தம், அநந்த³து⁴மிவ
    ஸ்தி²தம் – ஆநந்த³ மிவ ஸ்தி²தம், “ஸ்யாதா³நந்த³ து⁴ ராநந்த³” இத்யமர:।
    புலகாநுப³ந்த⁴ம் – ரோமாஞ்சம், த⁴ந்யா: – பா⁴க்³யவந்த:, வஹந்தி – ப்ராப்நுவந்தி।
    “வஹ – ப்ராபணே”। உபமாலங்கார: ।
  • ஸ்வாமிந்! ப்ரதீசா ஹ்ரு’த³யேந த⁴ந்யாஸ்த்வத்³த்⁴யாந சந்த்³ரோத³யவர்த⁴மாநம் ।
    அமாந்தமாநந்த³பயோதி⁴மந்த: பயோபி⁴ரக்ஷாம் பரிவாஹயந்தி ॥ 17॥

  • த்வாம் சிந்தயந் பரமாநந்த³மநுப⁴வதீத்யாஹ (ஸ்வாமி) ந்நிதி। ஹே ஸ்வாமிந் ஹயக்³ரீவ, த⁴ந்யா: – பா⁴க்³யவந்த:, ப்ரதீசா “அப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா
    நாந்யகா³மிநே” த்யுக்தரீத்யா அந்தர்முகே²ந, ஹ்ரு’த³யேந – மநஸா, த்வத்³த்⁴யாநம்
    சந்த்³ரோத³ய:, தேந வர்த⁴மாநம் -ஜ்ரு’ம்ப⁴மாணம், அத ஏவ, அந்தர்ஹ்ரு’த³யே,
    அமாந்தம் – அபர்யாப்தம், உத்³வேலமிதி யாவத்; ஆநந்த³பயோதி⁴ம் – ஸுதா⁴ப்³தி⁴ம்,
    அக்ஷாம் பயோபி:⁴ – ஆநந்த³பா³ஷ்பை:, பரிவாஹயந்தி – ப்ரஸ்ரவந்தி ।
  • ஸ்வைராநுபா⁴வத்வத³தீ⁴நபா⁴வாஸ்ஸம்ரப்³த⁴வீர்யாம் த்வத³நுக்³ரஹேண ॥
    விபஶ்சிதோ நாத²! தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹநபிஞ்சி²காம் தே ॥ 18॥

  • ப⁴வத்³யோகி³ந: த்வத்கடாக்ஷேணைவ மாயாம் தரந்தீத்யாஹ (ஸ்வைராநுபா⁴வே) தி
    ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, (ஸ்வைராநுபா⁴வத்³வத³தீ⁴நபா⁴வா:) ஸைராநுபா⁴வஸ்ய ஸ்வேச்சா²விஹாரஸ்ய, த்வத், தவ, அதீ⁴நம் – வஶம்வத:³, பா⁴வ: – அபி⁴ப்ராய: யேஷாம்
    தே ததோ²க்தா:; விபஶ்சித: – ஜ்ஞாநிந:, த்வத³நுக்³ரஹேண – த்வத்ஸங்கல்பேந,
    ஸம்ருத்³த⁴வீர்யாம் – நிருத்³த⁴ஶக்திம், வைஹாரிகீம் – லீலோபகரணபூ⁴தாம்,
    மோஹநபிஞ்சி²காம் – ஸகலலோகவ்யாமோஹநகரீம் மயூராதி³ பிஞ்ச²பூ⁴தாம்। லோகே
    இந்த்³ரஜாலிகவித்³யாவதாம் விவித⁴விசித்ராநந்தாஶ்சர்யகரகார்யஜநந ஸமர்த:²
    கஶ்சந பிஞ்ச²விஶேஷ: ப்ரஸித்³த:⁴। “மயாம் து ப்ரக்ரு’திம் வித்³யாந்மாயிநம்
    து மஹேஶ்வர” மித்யாத்³யுக்தே:; த்வத³நுக்³ரஹேண – த்வத்ப்ரஸாதே³ந, தரந்தி அதிக்ராமந்தி ।
  • ப்ராங்நிர்மிதாநாம் தபஸாம் விபாகாத்ப்ரத்யக்³ர நி:ஶ்ரேயஸ ஸம்பதோ³ மே ।
    ஸமேதி⁴ஷீரந் தவ பாத³பத்³மே ஸங்கல்பசிந்தாமணய: ப்ரணாமா: ॥ 19॥

  • ஜந்மாந்தர க்ரு’த தபஶ்ஶாலிநாம் மாயாதரணே த்வத்பாதா³ரவிந்த³ ப்ரணமநமேவ
    ஶரணமித்யாஹ (ப்ராகி³)தி। ஹே நாத²- ஹே ஹயக்³ரீவ, (ப்ரத்யக்³ரநி:ஶ்ரேயஸஸம்பத:³)
    ப்ரத்யக்³ரா – நூதநா, நிஶ்ரேயஸஸம்பத் யேஷு ததோ²க்தா:; (ப்ராங்நிர்மிதாநாம்)
    ப்ராக் – பூர்வஜந்மநி, நிர்மிதாநாம் – க்ரு’தாநாம், தபஸாம், விபாகா: – பரிபாகபூ⁴தா:,
    (ஸங்கல்பசிந்தாமணய:) ஸங்கல்பஸ்ய – இச்சா²யா:, சிந்தாமணய:, ப்ரணாமா:,
    தவ – ப⁴வத:, பாத³பத்³மே – பாதா³ரவிந்தே³, ஸமேதி⁴ஷீரந் – ஸமபி⁴வ்ரு’த்³தா⁴
    பூ⁴யாஸுரித்யர்த:², “ஏத⁴-வ்ரு’த்³தௌ⁴”। “ஹரத்யக⁴ம் ஸம்ப்ரதி ஹேதுரேஷ்யதஶ்ஶுப⁴ஸ்ய
    பூர்வாசரிதை: க்ரு’தம் ஶுபை:⁴, ஶரீரபா⁴ஜாம் ப⁴வதீ³யத³ர்ஶநம் வ்யநக்தி
    காலத்ரிதயேऽபி யோக்³யதா” மித்யுக்தரீத்யா பூ⁴தப⁴விஷ்யத்³வர்தமாநகாலேஷு
    ப⁴வதீ³ய பாதா³ரவிந்த³ஸேவா யஶஸ்கரீதி பா⁴வ: ।
  • விலுப்தமூர்த⁴ந்யலிபிக்ரமாணாம் பூ⁴யாந் ப்ரஸாதோ³ மயி நாத² பூ⁴யாத் ।
    த்வத³ங்க்⁴ரிராஜீவ ரஜ:கணாநாம் ஸுரேந்த்³ரசூடா³பத³ லாலிதாநாம் ॥ 20॥

  • பூர்வஸ்மிந்ஶ்லோகே ப்ரணாமாதிவ்ரு’த்³தி:⁴ ப்ரார்தி²தா; இதா³நீம் பாதா³ரவிந்த³
    ப்ரணாமாநந்தரம் பாத³ரஜஸாம் ப்ரஸாத:³ ப்ரார்த்²யதே (விலுப்தை)ரிதி। ஹே நாத² ஹே ஹயக்³ரீவ, (விலுப்தமூர்த⁴ந்யலிபிக்ரமாணாம்) விலுப்த: – ப்ரம்ரு’ஷ்ட:, மூர்த⁴ந்ய: மூரி ஜாத:, (ஶரீராவயவாத்³யத்) லிபீநாம் – அக்ஷராணாம், க்ரம: – பங்த்கி:, யேஷாம் தே
    ததோ²க்தா:; “பரிஸரவிநதாநாம் மூர்த்⁴நி து³ர்வர்ணபங்த்கிம் பரிணமயஸி ஶௌரே:
    பாது³கே த்வம் ஸுவர்ணம்” – “அயம் த³ரித்³ரோ ப⁴விதேதி வைத⁴ஸீம் லிபிம்
    லலாடேऽர்தி²ஜநஸ்ய ஜாக்³ரத்ரீம், ம்ரு’ஷா ந சக்ரேऽல்பிதகல்பபாத³ப: ப்ரணீய
    தா³ரித்³யத³ரித்³ரதாம் நள:” இத்யுக்தரீத்யா (ப்³ரஹ்மணா தத்கர்மாநுகு³ண்யேந
    லிகீ²தாம் தா³ரித்³யாத்³ரிஸூசக லலாடலிபிம் ஸ்வயமதிஶய ப்ரதா³நேநாந்யதா²
    நயதீத்யர்த:²; அத ஏவ, (ஸுரேந்த்³ரசூடா³பத³ லாலிதாநாம்) ஸுரேந்த்³ரை:
    ப்³ரஹ்மாதி³பி:⁴, சூடா³பதை:³- மௌளிபி:⁴, லாலிதாநாம் – ஶ்லாகி⁴தாநாம்,
    த்வத்பாதா³ரவிந்த³ப்ரணதிகாலே விரோபூ⁴ஷணத்வேந உஹ்யமாநாநாமித்யர்த:²;
    (த்வத³ங்க்⁴ரிராஜீவ ரஜ:கணாநாம்) த்வத் – தவ, அங்க்⁴ரிராஜீவஸ்ய – பாதா³ரவிந்த³ஸ்ய,
    ரஜ:கணாநாம் – பராக³லேஶாநாம், பூ⁴யாந் – மஹாந், ப்ரஸாத:³ – அநுக்³ரஹ:, மயி,
    பூ⁴யாத், “பூ⁴- ஸதாயா” மாஶிஷி லிங் ।
  • பரிஸ்பு²ரந்நூபுர சித்ரபா⁴நு ப்ரகாஶநிர்தூ⁴த தமோऽநுஷங்கா³ம் ।
    பத³த்³வயீம் தே பரிசிந்மஹேऽந்த: ப்ரபோ³த⁴ராஜீவ விபா⁴தஸந்த்⁴யாம் ॥ 21॥

  • அஜ்ஞாநாந்த⁴கார நிவர்தகம் ஜ்ஞாநோத³யஹேதும் த்வத்பாதா³ரவிந்த³ம் மநஸா
    த்⁴யாயாமீத்யாஹ (பரிஸ்பு²ரந்நி) தி। ஹே நாத² – ஹே ஹயக்³ரீவ, பரிஸ்பு²ரந்நூபுர
    ஏவ சித்ரபா⁴நு: – ஸூர்ய:, தஸ்ய ப்ரகாஶேந – தேஜஸா, நிர்தூ⁴த: – ப்ரதிக்ஷிப்த:,
    தமோऽநுஷங்க:³ – தமஸ்ஸம்யோக:³, யஸ்யா ஸ்தாம், ததோ²க்தாம்;(ப்ரபோ³த⁴ராஜீவ
    விபா⁴தஸந்த்⁴யாம்) ப்ரபோ³த:⁴ – ஜ்ஞாநமேவ, ராஜீவம் – தஸ்ய, விபா⁴தஸந்த்⁴யாம்
  • பூர்வஸந்த்⁴யாம், தே, பத³த்³வயீம் – சரணயுக³ளம், அந்த: – மநஸி, பரிசிந்மஹே பரிஶீலயாமஹே, “சிஞ் – சயநே” ।
  • த்வத்கிங்கராலங்கரணோசிதாநாம் த்வயைவ கல்பாந்தரபாலிதாநாம் ।
    மஞ்ஜுப்ரணாத³ம் மணிநூபுரம் தே மஞ்ஜூஷிகாம் வேத³கி³ராம் ப்ரதீம: ॥ 22॥

  • நூபுரமபி⁴வர்ணயதி (த்வத்கிங்கரே) தி। ஹே நாத²! (த்வத்கிங்கராலங்கரணோசிதாநாம்)
    த்வத் – தவ, கிங்கராணாம் – ப⁴க்தாநாம், அலங்கரணம் – த்வத்பாதா³ரவிந்த³ரூப
    ஶிரோபூ⁴ஷணம், தஸ்ய, உசிதாநாம் – ப்ரதிபாத³நயோக்³யாநாம், யத்³வா,
    த்வத்கிங்கராணாம் – ப்³ரஹ்மாதீ³நாம், அலங்கரணே – அலங்காரகரணே, உசிதாநாம் யோக்³யாநாம்। அநேந விஶேஷணேந வேத³கி³ராமாப⁴ரணத்வாகாரோ வ்யஜ்யதே;
    அத ஏவ நூபுரமஞ்ஜூஷிகாத்வேந ரூபணம் ஸங்க³ச்ச²தே। த்வயைவ ப⁴வதைவ, கல்பாந்தரபாலிதாநாம் – ரக்ஷிதாநாம், வேத³கி³ராம் – வேத³வாக்யாநாம்,
    (மஞ்ஜுப்ரணாத³ம்) மஞ்ஜு – மநோஹர:, ப்ரணாத:³- ஶிஞ்ஜாரவ:, யத: மணிநூபுரபேடிகாக³ர்ப⁴க³தவஶிஞ்ஜாரவத்வேந நிக³த்³யந்த இதி பா⁴வ:; மணிநூபுரம் – மணிமயஶிஞ்ஜீரம்,மஞ்ஜூஷிகாம்
  • பேடிகாம், ப்ரதீம: – ஜாநீம:, “இண் – க³தௌ”। லோகே யதா² த⁴நவாந்
    புத்ரபௌத்ராதீ³நாம் ரக்ஷணார்த⁴ம் ஸர்வாப⁴ரணஜாதம் ஸங்கோ³ப்ய பேடிகாம்
    ஸங்க்³ரு’ஹ்ணாதி தத்³வதி³திபா⁴வ: ।
  • ஸஞ்சிந்தயாமி ப்ரதிபா⁴த³ஶாஸ்தா²ந் ஸந்து⁴க்ஷயந்தம் ஸமயப்ரதீ³பாந் ।
    விஜ்ஞாநகல்பத்³ருமபல்லவாப⁴ம் வ்யாக்²யாநமுத்³ராமது⁴ரம் கரம் தே ॥ 23॥

  • இத: பரம் த்ரிபி:⁴ ஶ்லோகை: பாணிபங்கஜமபி⁴வர்ணயதி (ஸஞ்சிந்தயாமீ)தி। ஹே
    நாத²!, (ப்ரதிபா⁴த³ஶாஸ்தா²ந்) ப்ரதிபா⁴ – தாத்காலிகோபஸ்தி²தி:, ஸைவ, த³ஶா வர்தி:, தஸ்யாம் வர்தமாநாந், ஸமயப்ரதீ³பாந் – வேதா³விருத்³த⁴ஸித்³தா⁴ந்தப்ரதீ³பாந்,
    ஸந்து⁴க்ஷயந்தம் – அபி⁴வர்த⁴யந்தம், வ்யாக்²யாநகாலே ஆவஶ்யகப்ரபோ³த⁴முத்³ரயா
    அங்கு³ள்யா தீ³பவத்ஸகலஸித்³தா⁴ந்த ரஹஸ்யார்த²ப்ரகாஶநேந ஸர்வே
    ஸித்³தா⁴ந்தா அபி⁴வ்ரு’த்³தா⁴ ப⁴வந்தீத்யர்த:²। (விஜ்ஞாநகல்பத்³ரும பல்லவாப⁴ம்)
    விஜ்ஞாநமயப⁴க³வச்ச²ரீரமேவ கல்பத்³ரும: – கல்பதரு:, தஸ்ய, பல்லவாநாம் கிஸலயா நாம், ஆபே⁴வாபா⁴ யஸ்ய தம்; (வ்யாக்²யாநமுத்³ராமது⁴ரம்) – வ்யாக்²யாந
    முத்³ரயா- போ³த⁴முத்³ரயா, மது⁴ரம் – மநோஹரம், கரம் – பாணிம், ஸஞ்சிந்தயாமி த்⁴யாயாமி। ரூபகோபயோஸ்ஸங்கர: ।
  • சித்தே கரோமி ஸ்பு²ரிதாக்ஷமாலம் ஸவ்யேதரம் நாத²! கரம் த்வதீ³யம் ।
    ஜ்ஞாநாம்ரு’தோத³ஞ்சநலம்படாநாம் லீலாக⁴டீயந்த்ரமிவாஶ்ரிதாநாம் ॥ 24॥

  • (சித்த) இதி – ஹே நாத:²!, த்வதீ³யம் – ப⁴வதீ³யம், (ஸ்பு²ரிதாக்ஷமாலம்)। ஸ்பு²ரிதா
  • ப்ரகாஶமாநா, ஆக்ஷமாலா – ஜபமாலா யஸ்ய தம்। (ஜ்ஞாநாம்ரு’தோத³ஞ்சந
    லம்படாநாம்) ஜ்ஞாநாம்ரு’தஸ்ய, உத³ஞ்சநே – உத்³த⁴ரணே, லம்படா: – ஆஸக்தா:,
    ஆயாஸவந்த இதி யாவத்; தேஷாம், ததோ²க்தாநாமாஶ்ரிதாநாம், லீலாக⁴டீயந்த்ரமிவ
    ஸ்தி²தம் – லீலாசரணார்த²ம் நிர்மிதோ யோ க⁴டீயந்த்ரவிஶேஷ:, தமிவ ஸ்தி²தம்,
    ஸவ்யேதரம் – த³க்ஷிணம், சித்தே – ஹ்ரு’த³யே, கரோமி – ப்ரதிஷ்டா²பயாமி ।
  • ப்ரபோ³த⁴ஸிந்தோ⁴ரருணை: ப்ரகாஶை: ப்ரவாளஸங்கா⁴தமிவோத்³வஹந்தம் ।
    விபா⁴வயே தே³வ! ஸபுஸ்தகம் தே வாமம் கரம் த³க்ஷிணமாக்³ரிதாநாம் ॥ 25॥

  • (ப்ரபோ³தே⁴)தி। ஹே தே³வ – ஹயவத³ந, தே – தவ, ப்ரபோ³த⁴ஸிந்தோ:⁴ ஜ்ஞாநஸாக³ரஸ்ய, அருணை: – தாம்ரை:, ப்ரகாஶை: – காந்திபி:⁴, ப்ரவாளஸங்கா⁴தம்
  • வித்³ருமஸங்க⁴ம், உத்³வஹந்தமிவ ஸ்தி²தம் – பி³ப்⁴ரதமிவ ஸ்தி²தம், ஸபுஸ்தகம்
  • புஸ்தகஸஹிதம், ஆஶ்ரிதாநாம் த³க்ஷிணம் – வித்³யாப்ரதா³நஸமர்த²ம், வாமமபி
    த³க்ஷிணமிதி விரோத:⁴ – தத்பரிஹார: பூர்வோக்தரீத்யா। ஸவ்யம் கரம், விபா⁴வயே த்⁴யாயாமி ।
  • தமாம்ஸி பி⁴த்வா விஶதை:³ ப்ரகாஶைஸ்ஸம்ப்ரீணயந்தம் விது³ஷ ஶ்சகோராந்
    நிஶாமயே த்வாம் நவபுண்ட³ரீகே ஶரத்³க⁴நே சந்த்³ரமிவ ஸ்பு²ரந்தம் ॥ 26॥

  • அவயவஸௌந்த³ர்யமபி⁴வர்ண்ய, விக்³ரஹ ஸௌந்த³ர்யமபி⁴வர்ணயதி (தமாம்ஸீ)
    தி। ஹே தே³வ!, தமாம்ஸி-அந்தர்பா³ஹ்யந்த⁴காராந், விஶதை:³ – ஸ்வச்சை:,
    ப்ரகாஶை:, பி⁴த்வா – சி²த்வா, விது³ஷஶ்சகோராந் – பண்டி³தாநேவ சகோராக்²யஶகுநிவிஶேஷாந்ஸம்ப்ரீணயந்தம் – ஸந்தோஷயந்தம், நவபுண்ட³ரீகே – நூதந ப்ரபுல்லபத்³மே,
    ஸ்பு²ரந்தம், அத ஏவ ஶரத்³க⁴நே- ஶரத்மால மே ,ஸ்பு²ரந்தம் சந்த்³ரமிவ ஸ்தி²தம்,
    த்வாம், நிஶாமயே-ஸாக்ஷாத்குர்வே। உபமாலங்கார: ।
  • தி³ஶந்து மே தே³வ! ஸதா³ த்வதீ³யா த³யாதரங்கா³நுசரா: கடாக்ஷா: ।
    ஶ்ரோத்ரேஷு பும்ஸாமம்ரு’தம் க்ஷரந்தீம் ஸரஸ்வதீம் ஸம்ஶ்ரிதகாமதே⁴நும் ॥ 27॥

  • ப⁴க³வதோ வித்³யாம் ப்ரார்த²யதே (தி³ஶந்த்வி)தி। ஹே தே³வ, த்வதீ³யா:,
    த³யாதரங்கா³நு சரா: – க்ரு’பாகல்லோல ஸஹசரா:, கடாக்ஷா:, பும்ஸாம்
    ஶ்ரோத்ரேஷு, அம்ரு’தம் -ஸுதா⁴ம்,க்ஷரந்தீம் -ஸ்ரவந்தீம், ஶ்ரோத்ராநந்த³கரீமித்யர்த:²
    ஸம்ஶ்ரிதகாமதே⁴நும் – ஆஶ்ரிதாநாமபீ⁴ஷ்டதா³யிநீம், ஸ்வர்தே⁴நுமிவ ஸ்தி²தாம்,
    ஸரஸ்வதீம், ஸதா³ மே, தி³ஶந்து – விதரந்து, தி³ஶ – அதிஸர்ஜநே ।
  • விஶேஷவித்ஸாரிஷதே³ஷு நாத²! வித³க்³த⁴கோ³ஷ்டீ² ஸமராங்க³ணேஷு ।
    ஜிகீ³ஷதோ மே கவிதார்கிகேந்த்³ராந் ஜிஹ்வாக்³ர ஸிம்ஹாஸநமப்⁴யுபேயா: ॥ 28॥

  • குமதிவாத³ப⁴ஞ்ஜநார்த²ம் வாத³காகாலேஷு ப⁴க³வத்ஸந்நிதா⁴நம் ப்ரார்த²யதே
    (விஶேஷ வித்பாரிஷதே³ஷ்வி)தி। ஹே நாத² – ஹயக்³ரீவ, த்வமித்யத்⁴யாஹர:;
    விஶேஷவிதா³ம் – வாத³ப்ரதிவாத³விஶேஷஜ்ஞாநாம், பாரிஷதே³ஷு – பரிஷத்³யுக்தேஷு,
    (வித³க்³த⁴கோ³ஷ்டீ² ஸமராங்க³ணேஷு) வித³க்³தா⁴நாம் – ஸமர்தா²நாம்,
    கோ³ஷ்ட்²யா: -ஸமாஜஸ்ய,ஸமராங்க³ணேஷு – வாத³ஶாலாஸு, (கவிதார்கிகேந்த்³ராந்)
    கவீநாம் – க³த்³யபத்³ய ரசநாஸமர்தா²நாம், தார்கிகாநாம் – ஊஹபோஹாதி³
    நாநாவித⁴யுக்திசதுராணாம், இந்த்³ராந் – ஶ்ரேஷ்டா²ந், ஜிகீ³ஷத: – ஜேதுமிச்ச²த:,
    மே, (ஜிஹ்வக்³ர ஸிம்ஹாஸநம்) – ஜிஹ்வாயா: – ரஸநாயா:, அக்³ரமேவ ஸிம்ஹாஸநம்
  • ஸிம்ஹபீட²ம், அப்⁴யுபேயா: – ப்ராப்நுயா:, “இண் – க³தௌ” ।
  • த்வாம் சிந்தயம் ஸ்த்வந்மயதாம் ப்ரபந்நஸ்த்வாமுத்³க்³ரு’ணந் ஶப்³த³மயேந தா⁴ம்நா

    ஸ்வாமிந்! ஸமாஜேஷு ஸமாதி⁴ஷீய ஸ்வச்ச²ந்த³வாதா³ஹவப³த்³த⁴ஶூர: ॥ 29॥

  • த்வத்ஸந்நிதா⁴நவஶாதே³வ ப்ரதிவாதிகோலாஹலாந் ஸ்தம்ப⁴யாமீத்யாஹ(த்வாமி)தி।
    ஹே ஸ்வாமிந் – ஹயக்³ரீவ, த்வாம் – ப⁴வந்தம், சிந்தயந், த்⁴யாயந், த்வந்மயதாம் த்வதா³த்மத்வம், ப்ரபந்ந: – ப்ராப்த:, ஶப்³த³மயேந – மந்த்ரமயேந, தா⁴ம்நா – தேஜஸா,
    த்வா முத்³க்³ரு’ணந் – ஸ்துவந், அஹமிதி ஶேஷ:। ஸமாஜேஷு – மஹத்ஸபா⁴ஸு,
    (ஸ்வச்ச²ந்த³ நாதா³ஹவப³த்³த⁴ஶூர:) ஸ்வச்ச²ந்த³வாதா³நாமாஹவேஷு யுத்³தே⁴ஷு, ப³த்³த:⁴ – ஸந்நத்³த:⁴, ஶூர: – நிபுண:, ஸமேதி⁴ஷீய – வ்ரு’த்³தி⁴ம்
    ப்ராப்நுயாம், “ஏத⁴-வ்ரு’த்³தௌ⁴” ஆத்மநேபத³ம்। ப⁴வந்தம் த்⁴யாயதாம் ஸ்துவதாம் ச
    வாத³கதா⁴தா³ஸு விஜயஸ்ஸ்வாதி³தி பா⁴வ: ।
  • நாநாவிதா⁴நாமக³தி: கலாநாம் ந சாபி தீர்தே²ஷு க்ரு’தாவதார: ।
    த்⁴ருவம் தவாநாத²பரிக்³ரஹாயா நவம் நவம் பாத்ரமித³ம் த³யாயா: ॥ 30॥

  • ப⁴க³வதஸ்ஸர்வாபீ⁴ஷ்டம் ஸம்ப்ரார்த்²ய, தஸ்ய க்ரு’போத³யாய ஸ்வஸ்யாநந்யக³திகத்வமநுஸ(நாநாவிதா⁴நா)மிதி। ஹே ஸ்வாமிந், நாநாவிதா⁴நாம் – நாநாப்ரகாராணாம், கலாநாம்
  • வித்³யாநாம், அக³தி: – அப்ராப்யஸ்தா²நம், (ந சாபி தீர்தே²ஷு க்ரு’தாவதார:)
    தீர்தே²ஷு – க³ங்கா³தி³புண்யதீர்தே²ஷு, க்ரு’தாவதார: – க்ரு’த: – அநுஷ்டி²த:,
    அவதார: – அவகா³ஹநம் யேந ஸ ததோ²க்த:, ஸ்நாத இதி யாவத்; தாத்³ரு’ஶோऽபி
    நேத்யர்த:²। ஈத்³ரு’ஶோऽஹம் தவ, அநாத²பரிக்³ரஹாயா: – அநாதா²நாம் -தீ³நாநாம்,
    பரிக்³ரஹாயா: – அநுக்³ரஹ ஹேதுபூ⁴தாயா:, த்வதீ³யாயா, த³யாயா: – க்ரு’பாயா:,
    நவந்நவம் – அத்யந்தாபி⁴ நவம், அத்யந்தவிலக்ஷணமிதி யாவத்। பாத்ரம் – விஷய:,
    அஸ்தீதி ஶேஷ:; த்⁴ருவம் – நிஶ்சய:, த்வதே³க ஶரணாவயம் ந ஸாத⁴நாந்தராவலம்பி³ந
    இதி பா⁴வ: ।
  • அகம்பநீயாந்யபநீதிபே⁴தை³ரலங்க்ரு’ஷீரந் ஹ்ரு’த³யம் மதீ³யம் ।
    ஶங்காகளங்காபக³மோஜ்வலாநி தத்த்வாநி ஸம்யஞ்சி தவ ப்ரஸாதா³த் ॥ 31॥

  • இதா³நீம் த்வதே³கஶரணஸ்ய மே த்வத்ப்ரஸாதா³தே³வ ஸமஸ்ததத்த்வாநி
    கரதலாமலகா நீத்யாஹ (அகம்பயாநீ)தி। ஹே ஸ்வாமிந், தவ, ப்ரஸாதா³த்
  • அநுக்³ரஹாத், அபநீதிபே⁴தை:³ – நாநாவிதா⁴ந்யாயைரபி, அகம்பநீயாநி அப்ரம்ரு’ஜ்யாநி, (ஶங்காகளங்காபக³ மோஜ்வலாநி) ஶங்கா – அப்ராமாண்யஶங்கா,
    ஸைவ களங்க:, தஸ்யாபக³ம: – நிராஸ:, தேந உஜ்ஜ்வலாநி – ப்ரகாஶமாநாநி,
    ஸம்யஞ்சி – யதா²ர்தா²நி, தத்த்வாநி, மதீ³யம் – மத்ஸம்ப³ந்தி⁴, ஹ்ரு’த³யம் – மாநஸம்,
    அலங்க்ரு’ஷீரந் – அலங்குர்வந்து, தவ ப்ரஸாத³வஶாத்ஸர்வ தத்த்வஸாக்ஷாத்காரோ
    பூ⁴யாதி³த்யர்த:²। “டு³க்ரு’ஞ்-கரணே।”
  • வ்யாக்²யாமுத்³ராம் கரஸரஸிஜை: புஸ்தகம் ஶங்க²சக்ரே
    பி³ப்⁴ரத்³பி⁴ந்நஸ்ப²டிகருசிரே புண்ட³ரீகே நிஷண்ண: ।
    அம்லாநஶ்ரீரம்ரு’தவிஶதை³ரம்ஶுபி:⁴ ப்லாவயந்மாம்
    ஆவிர்பூ⁴யாத³நக⁴மஹிமா மாநஸே வாக³தீ⁴ஶ: ॥ 32॥

  • அத² ஹயக்³ரீவமூர்தே ரஸாதா⁴ரண ஸ்வரூப த்⁴யாநபத³வீமதி⁴ரோஹதி (வ்யாக்²யா
    முத்³ராமி)தி। கரஸரஸிஜை: – சதுர்பி:⁴ கராரவிந்தை:³, ஶங்க²சக்ரே, புஸ்தகம் ஶ்ரீகோஶம், வ்யாக்²யாமுத்³ராம் – போ³த⁴முத்³ராம் சேதி ஶேஷ:; பி³ப்⁴ரத் – வஹந்,
    பி⁴ந்நஸ்ப²டிகருசிரே – த³ளிதஸ்ப²டிகமநோஹரே,புண்ட³ரீகே – ஸிதாம்போ³ஜே,
    நிஷண்ண: – ஆஸீந:, அம்லாநஶ்ரீ: – நித்யஶ்ரீ:, நித்யஶோப:⁴; அத ஏவ (அநக⁴மஹிமா)
    அநக:⁴ – நிர்து³ஷ்ட:, மஹிமா – மாஹாத்ம்யம், யஸ்ய ஸ ததோ²க்த:; வாகீ³ஶ:
  • ஹயக்³ரீவ:, அம்ரு’தவிஶதை:³ – அம்ரு’தஸ்வச்சை:², அம்ஶுபி:⁴ – கிரணை:,
    மாம் – ஸம்ஸாராபி⁴தப்தம், ப்லாவயந் – ஸேசயந், மமேத்யத்⁴யாஹர:; மாநஸே சித்தே, ஆவிர்பூ⁴யாத் = ஸந்நிதே⁴யாத், “பூ⁴ ஸத்தாயா” மாஶிஷி லிஜ்। மநஸி
    ஹயகீ³வாவிர்பா⁴வே அம்ரு’த கல்பதத்கிரணஜாலைர்மநோக³த ஸகல ஸந்தாப
    நிவ்ரு’த்திர்மே ப⁴வேதி³த்யாஶய: ।
  • வாக³ர்த²ஸித்³தி⁴ஹேதோ: பட²த ஹயக்³ரீவஸம்ஸ்துதிம் ப⁴க்த்யா ।
    கவிதார்கிககேஸரிணா வேங்கடநாதே²ந விரசிதாமேதாம் ॥ 33॥

  • இதி கவிதார்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஶ்ரீமத்³வேங்கடநாத²ஸ்ய
    வேதா³ந்தாசார்யஸ்ய க்ரு’திஷு
    ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

  • கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலிநே ।
    ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம: ॥

  • ஶ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஶிகாய நம: ।

  • ஸ்வக்³ரந்த²ஸ்ய விஶ்வஸநீயத்வாய ஸ்வநாம ப்ரகடயந் ஸ்வக்ரு’தஸ்தோத்ரஸ்ய
    ப²லம ப்யாஹ(வாக³ர்தே⁴)தி। ஹே ஸுதி⁴ய இத்யத்⁴யாஹர:; கவிதார்கிககேஸரிணா
  • கவிதார்கிக ஶ்ரேஷ்டே²ந, வேங்கடநாதா²ஹ்வயேந; விரசிதாம் – நிர்மிதாம்,
    ஏதாம், ஸம்யக்பத³வாக்ய ரசநோஜ்வலாம், (வாக³ர்த⁴ ஸித்³தி⁴ ஹேதும்) வாசாம்
  • வாக்³ரூபாணாம், அர்தா²நாம், ஸித்³தௌ⁴ – ஜ்ஞாநே, ஹேதும் – காரணம்,
    ஹயக்³ரீவஸம்ஸ்துதிம் – ஹயக்³ரீவஸ்தவம்; ப⁴க்த்யா பட²த – அநுஸந்த⁴த³த்⁴வம்

    இதி ஶ்ரீஹயக்³ரீவஸ்தோத்ரஸ்ய வ்யாக்²யா ஸமாப்தா ।
    ஶ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஶிகாய நம: ।

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்பி மூத்த பிரான் திரு அவதாரம் 6 பாசுரங்கள்

November 25, 2024

ஸ்ரீ நம்பி மூத்த பிரான் திரு அவதாரம் 6 பாசுரங்கள்
பெரியாழ்வார்-1-7-5-
ஆண்டாள்-திருப்பாவை -17-நாச்சியார் திருமொழி-12-7/14-1-
திருமங்கை ஆழ்வார்-8-8-8-/10-7-4


அவதாரம் சகாயம்
புருஷகாரம்
அபிநயா பாவம் விட்டுப் பிரியாமல்
கண்ணன் இவருக்குப் பணிந்தே இருப்பான்
தீம்பு அற்றவன்
பரதந்த்ரன் -அவன் கொன்றாலும் கண்ணனே செய்ததாகச் சொல்லமாமே -ராமஸ்ய தக்ஷிண பாஹு-கொல்லை அரக்கியை மூக்கரிந்தவன் சொல்லும் பொய்யானால்

ஆதி சேஷன் அவதாரம்-அநந்தன் -லஷ்மணன் –பலராமன் – -ராமானுஜர் மா முனிகள் -அண்ணாவாகவும் ஆச்சார்யராகவும்

ராமன் ரம்யாதி மகிழச் செய்பவர் பலம் மிக்கவர் -பலபத்ரன் -ஸங்கர்ஷணன் -கர்க்காச்சார்யார் சூட்டிய இயற் பெயர்-தேவகி ஏழாவது கர்ப்பத்தில் முதல் இருந்தவர் – -ரோகிணி கர்ப்பத்துக்கு இழுத்து வைக்கப் பட்டவர்-

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்
இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந –
க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–81-

பொய்ந் நம்பி -பெயர் சூட்டுகிறார் திருமங்கை ஆழ்வார் -/
மெய் போலும் பொய் வல்லன் –திருவாய் -10–4–5-/ ஏலாப் பொய்கள் உரைப்பான் –நாச்சியார் -14–3-/பொருத்தம் அன்றோ –

கும் கும் இதி கிம் ப்ரமதி அம்ப ததி மத்யே
டிம்ப ந நு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப நவநீதம் இதி சம்வததி கிருஷ்னே
மந்த ஹசிதம் ச மாதுரதி ரம்யம்
-இப்படி மழலைச் சொற்களால் மயக்கி யன்றோ வெண்ணெய் உண்டான் –

மாத கிம் யதுநாத தேஹி சஷகம் கிம் தேன பாதும் பய
தன் நாஸ்தி யத்ய கதா அஸ்தி வா நிசி நிஸா கா வா அந்தகார உதயே
ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா தேஹீதி மாதுர் முஹு
வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந
–க்ருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகம்
மாத-அம்மா / கிம் யதுநாத-என்ன கிருஷ்ணா / தேஹி சஷகம்–ஒரு கிண்ணம் தா / கிம் தேன-எதற்கு /பாதும் பய -பால் குடிக்க /
தன் நாஸ்தி யத்ய -அது இப்போது இல்லை / கதா அஸ்தி வா-பின் எப்போது / நிசி-இரவில் தான் / நிஸா கா வா -இரவு எப்போது வரும் /
அந்தகார உதயே -இருட்ட ஆரம்பிக்கும் பொழுது /ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா-இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு இருட்டும் வந்து விட்டதே – தேஹீதி-பாலக் கொடு –
மாதுர் முஹு வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –கள்வனுடைய சாமர்த்திய பேச்சு கேட்க என்ன பாக்யம் செய்தாளோ-

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம்
–க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

———-

முன்னலோர் வெள்ளிப் பெரு மலை குட்டன் மோடு மோடு விரைந்தோடே
பின்னை தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடி இடுவது போல்
பன்னி உலகம் பரவி யோவாப் புகழ் பல தேவன் என்னும்
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ –
1 7-5 –

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளி மலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடு மொடு–திடு திடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக் கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப் பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக் கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர் நடை நடவானோ -.

உலகம் எனபது -உயர்ந்தோர் மாட்டே -தொல்காப்பிய சூத்தரம் –
உலகம் பன்னி பரவி -உயர்ந்தவர்கள் ஆராய்ந்து துதித்து –

முன்னே விலஷணமாய்-அத்வீதியமாய் -பெரிதாய் இருந்துள்ள -வெள்ளி மலை ஈன்ற
குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோடே

கரு மலைக் குட்டனுக்கு முன்னே நன்றாய்
அத்விதீயமாய்
பெரிதான வெள்ளி மலைக் குட்டன்
மலை ஈன்ற குட்டியானது தன் செருக்காலே திடு திடு என விரைந்தோட
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )

பின்னை இத்யாதி –
அந்தக் குட்டியின் பின்னே -தன் செருக்காலே அத்தை பிடிக்கைக்காக தொடர்ந்து –
அஞ்சன கிரி ஈன்றதொரு குட்டி தன் சைசவ அநு குணமாக காலுக்கு கால் பேர்ந்து அடி இட்டு
செல்லுமா போலே –
(கோவர்த்தனம் -த்ரோணாசலம் ஈன்றது அன்றோ )

அக் குட்டியின் பின்னே
அஞ்சன கிரி ஈன்ற குட்டி தன் செருக்காலே அத்தை தொடர்ந்து ஓடுவது போலே-

பன்னி இத்யாதி –
லோகம் எல்லாம் கூடி -தங்கள் ஞான சக்திகள் உள்ள அளவெல்லாம் கொண்டு
ஆராய்ந்து ஸ்துத்திதாலும் முடி காண ஒண்ணாத புகழை உடையவனாய் –
பல தேவன் என்னும் பெயரை உடையனான தன்னுடைய தமையனாவன் செருக்கி முன்னே ஓட –

அவன் பின்னே அவனை கூட வேணும் என்று தன் சைசவ அநு குணமாக
த்வரித்து நடக்குமவன் தளர் நடை நடவானோ –

(யானைக்கு குதிரை வைப்பாரைப் போல் )

லோகத்தில் உள்ளார் சாஸ்திரங்களையும்  ஸ்தோத்ரங்களையும்  ஆச்சார்ய முகத்தாலே ஆராய்ந்து இடைவிடாதே ஸ்துதித்திப் போரும் படியான புகழை யுடையனாய் –தனக்கு அக்ரஜனான நம்பி மூத்த பிரான் வெள்ளி மலைக் குட்டி போலே செருக்காலே முன்னே ஓட
பின்னே அவனைப் பிடிக்க வேணும்  என்று ஓடிச் செல்வான் 
தளர் நடை நடவானோ-

பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலை யீன்ற குட்டியோடுவதையும்,
கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார்.
காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க.
நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர். இங்கு, தமையனென்ற பொருளைக் காட்டிற்று.
அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால்,
அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம்.
மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்புமாம்

கண்ணனால் விரும்பப்பட்ட புகழ்-ஆதிசேஷனைப் பிரியாதவன்-புல்கும் அணையாம் -படுக்கை இல்லாமல் ராமனால் தூங்க முடியாதே-

————-

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
-17-

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா –
பிள்ளை பெருகைக்கு பொற் கால் பொலியப் பிறந்த சீமானே –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –
இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –

லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் –
அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ –
பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்

கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –
சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ

பல தேவா
பல தேவர் என்று திரு நாமம் -பலைகதாமநி

———–

உம்பியும் நீயும் –
உனக்கு பவ்யமான தம்பியும்-அவனுக்கு பவ்யமான நீயும் –

உறங்கேலோ ரெம்பாவாய்
உறங்காது ஒழிய வேணும்-
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –

அவனும் பிறப்பால் பாரதந்தர்யம் கொண்டாட –
நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ –
திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி

உம்பியும் நீயும்
உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –
அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –
அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –
இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –

புல்கும் அணையாம்-என்று
நாய்ச்சிமாரைப் பிரிந்தால் ஆற்றலாய் இறே இருப்பது –

பிராட்டியைப் பிரிந்து நெடு நாள் இருந்தார் –
இளைய பெருமாளை பிரிந்த பின்பு அமுது செய்திலர்
லஷ்மனேந கதாம் கதிம்-என்று
என் தம்பி போன வழியே நானும் போம் அத்தனை என்று எழுந்து அருளினார்

உம்பியும் நீயும் உறங்கேல்
படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ

அவன் படுக்கையான நீ உணர்ந்து
எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )

உம்பியும் நீயும் உறங்கேல்
இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே
நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே
பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது
(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்
அம்பரீஷன் துர்வாசர் )

இழவிலே-
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தி-என்பார்கள்

ஊடின போது –
தீ முகத்து நாகணை -என்பார்கள்

உகந்த போது –
நாகணை மிசை நம்பிரான்

ஸ்ரீ குஹப் பெருமாள் -மஹா ராஜர் -திருவடி -விபீஷண ஆழ்வான்-எல்லார்க்கும்
இளைய பெருமாள் இறே புருஷகாரம்
ஆன பின்பு அவனையும் எழுப்பி நீயும் எழுந்திராய் என்கிறார்கள் –

செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து
ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்
வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்

செல்வா பலதேவா –
இப்படி சம்பன்னனான பல தேவனே

உம்பியும் நீயும் உறங்கேல்
உனக்கு பவ்யனான கிருஷ்ணனும்
கிருஷ்ணனுக்கு பவ்யனான நீயும்
உறங்காது ஒழிய வேணும்

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் –
பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்-
இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )

சந்தேசை சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர் விதை –
ராமேண ஆஸ்வாசிதா கோப்ய ஹரிணா ஹ்ருத சேதச -என்கிறபடியே
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ
திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்
சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –

(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)

——–

உனக்கு இஸ் ஸ்வபாவ அந்யதாபாவம் எத்தாலே தீரக் கடவது என்ன –
அது இன்னது என்கிறாள்
அவன் வெற்றி மாலையிட்டு நிற்கிற இடத்திலே
என்னைக் கொடு பொய் பொகடுங்கோள் என்கிறாள்-

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

பதவுரை

வண்ணம் திரிவும்–(என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும்–மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும்–ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும்–அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன்–கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட–குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும்–நீங்கும்,
(அத் திருத் துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும்–மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும்–வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன்–பலராமன்
பிலம்பன் தன்னை–ப்ரலம்பாஸுரனை
பண் அழிய–ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி,
வென்ற–கொன்று முடித்த இடமாகிய பாண்டி வடத்து
பாண்டீரமென்னும் –ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்.

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
வண்ணம் திரிவும்-நிறத்தினுடைய அந்யதா பாவமும்
மனம் குழைவும்-லாப அலாபங்களுக்கு இடையக் கடவதல்லாத நெஞ்சினுடைய நெகிழ்ச்சியும்
மானமிலாமையும்-எல்லா அளவிலும் உண்டான ஸ்த்ரீத்வ அபிமானம் வாசனையோடு குடிபோகையும்
வாய் வெளுப்பும்-போக்யத் த்ரவ்யங்களைக் குறைக்கையினாலே வாயிலே உண்டான வெளுப்பும் –
வாய்ப்புறம் வெளுத்து
 -நாச் திரு -1-8-

உண்ணல் உறாமையும் உள் மெலிவும் –
வேறு ஒன்றும் தாரகமாய் இருப்பது இல்லாமையினாலே சரீரத்தில் பிறந்த பல ஹானியும்
இவை எல்லா வற்றுக்கும் அடியான ஜ்ஞான சங்கடமும் 
உள்
 -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது -ஜ்ஞான சங்கோசம் –

ஓத வண்ணன் என்பான் ஒருவன்-
இவை எல்லாம் இப்படிப் பண்ணி வேறு படுத்தின வடிவு அழகு இருக்கிறபடி –
ஓதம் கிளர்ந்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையான் ஒருவன்
ஒருவன் -இதர சஜாதீயன் –என்றுமாம் –

தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும்
அவன் தான் இதர விசஜாதீயனாய் இருக்குமா போலே –
அம்மாலையின் படியும்
அத்தைக் கொடு வந்து ஸ்பர்சிக்க இது தணியும் –

பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்-
கன்றுகள் மேய்க்கும் பிரதேசத்தில் -ஆல மரத்தின் அடியிலே –
ப்ரலம்பா ஸூரன் கட்டழிந்து -சந்தி பந்தங்கள் குலைந்து

சிதிலனாம் படியாக நம்பி மூத்த பிரான் வென்ற பாண்டீர வடத்திலே கொடு பொய் பொகடப் பாருங்கோள் –
இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண -அந்த வெற்றி பெருமாளானதாப் போலே யாய்த்து இங்கும்
நம்பி மூத்த பிரானுடைய வெற்றியும் கிருஷ்ணனதாய் இருந்தது இறே –
அவன் வீர அபிஷேகமும் விஜய அபிஷேகமும் பண்ணி மாலையிடும் போது–(வெற்றி வாகை சூடும் பொழுது )அவன் தனியே நில்லாமே
நானும் ஒக்க நின்று மாலையிடும்படியாக என்னை அங்கே கொடு பொய் பொகடுங்கோள்-

பாண்டீர வனம் -அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது.-வைகாசி விசாக பௌர்ணமி நாளில்தான் பிருந்தாவனத்தில்- பாண்டீர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா- கிருஷ்ண திருமணம் நடந்ததாம்.உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் ‘பிரம்மஸரண்‘ என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய ஊர்தான் ராதை பிறந்த இடம். ராதையை இங்கு ‘ராதாராணி’ என்றே கூபிடுகிரார்கள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675 -ம் ஆண்டு, செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டது. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது. ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி இந்த ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.

சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.

பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.

————————

விண்ணாட்டவர் மூதுவர்-திருவிருத்தம் -2-என்று சொல்லுகிறவர்கள் நியமிக்க
வானிளவரசு-பெரியாழ்வார் -3-6-3–அவர்களால் நியாம்யனாய் –
அவர் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21-
தங்கள் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாம் படி போது போக்கி இருக்கிற அளவிலே
திருவாய்ப்பாடியிலே வெண்ணெய் திரளா நின்றது -என்றும்
நப்பின்னை பிராட்டி பிராப்த யௌவனை யானாள் என்றும் -கேட்டு
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே –இங்கே வந்து திருவவதரித்து –
பிருந்தா வனத்திலே ஸ்வரை சஞ்சாரம் பண்ணி-
அத்தாலே தன்னிறம் பெற்றுத் திரிகிற படி –

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-

பதவுரை

ஓர் கார் ஏறு–(கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து–காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு–பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய்–ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு–ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி–விளையாடிக் கொண்டு
இங்கே போத–இப்படி வர
கண்டீரே–பார்த்தீர்களோ?
இட்டம் ஆன–(தனக்கு) இஷ்டமான
பசுக்களை–பசுக்களை
இனிது–த்ருப்தியாக
மறித்து–மடக்கி மேயத்து
நீர் ஊட்டி–தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு–(இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட–(அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே–ப்ருந்தாவனத்திலே
கண்டோம்–ஸேவித்தோம்.

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
பரம பதத்தில் கட்டுண்டு இருப்பரோபாதியாய் –
கட்டுண்ட காளையாய் –
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுவது திருவவதரித்து போந்த இடத்தே யாய்த்து-

வானிளவரசு– என்கிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் பிரம்பின் கீழிலும் –
பெரிய திருவடியின் சிறகின் கீழிலும் யாய்த்து இத் தத்வம் வளருவது என்றாய்த்து பட்டர் அருளிச் செய்வது – –

ஆனை கருப்பம் தோட்டத்தைப் புக்கால் திரியுமா போலே யாய்த்து இவனும் ஊரை மூலையடியே திரியும் படி
பரம பதத்தில் நூல் பிடித்து பரிமாறுவது போல் அன்றிக்கே
வெண்ணெய் களவு போய்த்து– பெண்கள் களவு போய்த்து-என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை அழித்துக் கொண்டு திரியும்படி

ஓர் காரேறு –
அபிமத லாபத்தினால் அத்விதீயனாய்
தன்னிறம் பெற்று
மேணானித்து இருக்கும் இருப்பு –
பரம பதத்தில் உடம்பு வெளுத்து போலே காணும் இருப்பது

பல தேவேற்கோர் கீழ்க் கன்றாய் –
வாசனை இருக்கிறபடி –
திருவநந்த ஆழ்வான் மடியில் இருந்த வாசனை போக்க முடியாதே –
பெண்கள் அளவில் தீம்பு செய்து திரியுமவன் -இவன் அளவிலே பவ்யமாய் இருக்கும்
தனக்கு அபிமத விஷயங்களை சேர விடுகைக்கு கடகன் ஆகையாலே
அவன் நினைவின் படியே யாய்த்து திரிகிற படி

பெருமாளும் பிராட்டியுமாக பள்ளி கொண்டு அருளும் போது
இளைய பெருமாள் கையும் வில்லுமாய் உணர்ந்து நின்று நோக்கி –
ரமமாணா-வநே த்ரய -பால -1-31–என்கிறபடியே
இருவருமான கலவியிலே பிறக்கும் ஹர்ஷத்தில் மூவராகச் சொல்லலாம் படி அந்வயித்து
அவர்களுடைய சம்ஸ்லேஷத்துக்கு வர்த்தகராய் இருக்குமா போலே

கிருஷ்ணன் தீம்பாலே ஏறுண்ட பெண்கள் நெஞ்சில் மறத்தை தன் இன் சொல்லாலே பரிஹரித்து
ராமேணாஸ் வாசிதா கோப்யோ ஹரிணா ஹ்ருத சேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-20–என்கிறபடியே –
அவர்களை ஆஸ்வசிப்பித்துப் பொருந்த விடுகையாலே இவனளவில் பவ்யனாய்த்து இருப்பது –

இவன் தானே அவன் நினைவின் படியே திரியுமவனாய் –
ஓர் அளவில் நியமிக்கவும் கடவனாய் யாய்த்து இருப்பது
பலதேவன் என்னும் தன் நம்பியோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் -1-7-5-என்னக் கடவது இறே-
இவன் தான் ஓரடி பிற்பட விறே பாம்பின் வாயிலே விழுந்தது –

இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இச் சேதனன் முக்தனானால் பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று
சாம கானம் பண்ணுமா போலே அவன் தான் இங்கே வந்து திருவவதரித்து

இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு பண்ணும் வியாபாரம் இருக்கிற படி
கீழே ஏறு-என்று ஜாதி உசிதமாக பண்ணும் வியாபாரம் இருக்கிறபடி

அவாக்ய அநாதர-தத்வம்
இட்டீறிட்டு-என்னும் படி இருப்பதே என்று சிறியாத்தான்
போர வித்தராய் இருக்கும் -என்று அருளிச் செய்வர்

விளையாடி –
அச் செருக்குக்கு போக்கு விட்டுப் பண்ணும் லீலையைச் சொல்லுகிறது –
இது தானே இறே பிரயோஜனம்

இங்கே போத –
அங்கே போனாலும் பெற வரிய பரிமாற்றத்தை
அவன் இங்கே பரிமாறக் காணப் பெற்றார் உண்டோ –

கண்டவர்கள் பாசுரமாய் இருக்கிறது மேல் –
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
யுவாக்களானவர் அபிமத விஷயத்திலும் கடகரை விரும்பி இருக்குமா போலே
இவனும் பசுக்களை யாய்த்து விரும்புவது

ஆகள் போக விட்டு குழலூத வேணுமே
நீ தாழ்த்தது என் என்று மாதா பிதாக்கள் கேட்டால்
பசுக்களின் பின்னே போனேன் என்று சொல்லலாம் படி
தனக்கு ஒதுங்க நிழலாய் இருக்கும் இறே அவை –
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே -திருவாய் -6-2-2-

இட்டமான பசுக்களை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -செங்கனிவாய் எங்கள் ஆயர்தேவே -திருவாய் -10-3-10-என்கிறபடியே
பரம பதத்தில் காட்டிலும் பசுக்களை மேய்க்குமத்தை யாய்த்து விரும்பி இருப்பது
அவ்விருப்பிலும் -வாய் வெருவிக் கிடப்பதுவும்
கனாக் காண்பதுவும் இப்பசுக்களை வாய்த்து –

இனிது மறித்து –
இருவராக கலந்து பரிமாறா நின்றால்-
எதிர்த் தலையினுடைய நாம க்ரஹணம் பண்ணினால் அது ப்ரீதியாய் இருக்குமா போலே யாய்த்து
இவற்றின் பேரைச் சொல்லி அழைத்தால் அவற்றுக்கு பிரியமாய் இருக்கும் படி
லோகத்தில் சேதனர் அசங்கேயரராய் இருக்கச் செய்தேயும்
எல்லாருடையவும் நாம ரூப வியாகரணம் பண்ணுமா போலே-

நீரூட்டி
அவற்றுக்குத் தண்ணீர் பருகுகை அபேஷிதமானால் தான் அரை மட்ட நீரிலே இழிந்து
பின்னே கையைக் கட்டிக் குனிந்து நின்று தண்ணீர் பருகிக் காட்டுமாய்த்து —
இவன் பின்னை அவையும் கூடக் குடிக்கும்

தடம் பருகு கரு முகில் -பெரிய திருமொழி -2-5-3–
இவன் கரு முகில் இறே
ச யத் பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே -ஸ்ரீ கீதை -3-21—
காரயித்ருத்வம் இருக்கிற படி
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16—
தடாகத்திலே ஒரு மேகம் படிந்தால் போலே இறே இருப்பது –

விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அபிமத சித்தியாலே தன் மேன்மை பாராதே –
திருக் குழல் பேணாதே ஸ்வரை சஞ்சாரம் பண்ணா நிற்கும் –
அவை மேய்த்துத் தண்ணீரும் பருகுகையாலே பின்னைத் தனக்கு ஒரு கர்த்தவ்யம்சம் இல்லையே
நிரபேஷனுக்கு இறே லீலையில் அந்வயம் உள்ளது –
இந்த லீலை தானே இறே பிரயோஜனம் –

விருந்தாவனத்தே கண்டோமே
ஸ்ரீ வைகுண்டத்திலே கண்டால் போலவே இருப்பது ஓன்று இறே திருவாய்ப்பாடியிலே காணும் காட்சி –
செருக்கராய் இருக்கும் ராஜாக்கள் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலங்களிலே மாளிகை சமைத்து
அபிமத விஷயங்களும் தாங்களுமாய் புஜித்தால் போலே இருப்பது ஓன்று இறே
ஸ்ரீ பிருந்தா வனத்தில் பரிமாற்றம் –

(ராம் காட் -வடகிழக்கு பகுதியில் இன்றும் காண்கிறோம் -நம்பி மூத்த பிரான் கோபிகள் உடன் ஜலக்ரீடை பண்ணிய இடம் -ஆஸ்வாஸம் -இனிமையாக ப்ரேம கர்ப்பத்துடன் பேசி –)

—————————

அக்ரூர ஆழ்வான் பலராமன் ஆழ்வான் லஷ்மணன் ஆழ்வான் சொல்வது இல்லை -கைங்கர்ய பிரதானர்கள்
பரசுராம ஆழ்வான் சொல்கிறோம்
பலராம ஆழ்வான் -கௌண அவதாரம் இவரும்
பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் பிரஹலாத ஆழ்வான் விதுர ஆழ்வான் சொல்வோம்
ஆதி சேஷன் அவதாரம் -லஷ்மணனும் பலராமனும் -ஆனால் தனது சக்தியையும் ஆவேசமாகக் கொண்டதால்
இவர் தசாவதாரத்தில் -கண்ணனுக்கு நம்பி மூத்த பிரானாகக் கொண்டார் –

ராஜா -இடுப்பில் சாவிக் கொத்தும் -ஒற்றைக் குழையும் -குண்டலம் உண்டே -ஒரு காதில் நீல மணியும் இருக்கும்
சவ்ரி ராஜர் -நாகை அழகியார் -ராஜ மன்னார் -காட்டு மன்னார் -சேவிக்கிறோமே
குழை -காது ஆபரணம்
கலப்பை மூடி இருப்பதால் ஒரு காது மட்டுமே பலராமன் இடம் சேவிக்கிறார் –

கையும் கலப்பையுமாகப் பிறந்த நம்பி மூத்த பிரான் விஜயத்தில்
தாம் தோற்று ஜிதந்தே என்னப் பண்ணிய அவதாரம் என்று மங்களா சாசனம் –

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே
–8-8-8-

ஒரு பால் ஒற்றைக் குழையும் ஒரு பால் நாஞ்சிலும் தோன்ற-என்றபடி –

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி –
ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால்
தோன்ற தான் வந்து –
( கரூர் அருகில் தான் தோன்றி மலையில் தான் தோன்றி பெருமாள் சேவை சாதிக்கிறார் )

வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து -செற்ற கொற்றத் தொழிலானைச்-
வெற்றியே தொழிலாக உடைய
வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை
தொழிலாக உடையவனை –(ருக்மியைக் கொன்றவனும் நம்பி மூத்தபிரானும்
விவிதனையும் அழித்தவன்)

செந்தீ மூன்றும் இல்லிருப்ப கற்ற மறையோர்-
த்ரேதாக்னிகள் தங்கள் கிருஹங்களிலே இருக்கை  –
த்ரேதாக்னி முகத்தாலே பகவத் சமாராதானம் பண்ணுகையாலே
ஹவிஸ்ஸைக் கொள்ள தங்கள் கிருஹங்களுக்கு உள்ளே
சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கும் படி கற்ற பிராமணர் –
(குளித்து மூன்று அனலை ஓம்பும் -கற்ற மறையோர் -அனுஷ்டான பர்யந்தம் –
கற்றபடியே ஆராதனையும் செய்கிறார்கள் )

கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-

—————————————

சங்கர்ஷணன் -ஆறு மாதம் ஒரு கர்ப்பம்
கீழ் யசோதை பிராட்டி எல்லாரையும் பார்த்து புகார் செய்தமை
அத்தைக் கேட்டு கீழை அகத்து நங்கைக்கு மறு மாற்றம் கிட்டாமையாலே
அவள் தன் வாய் வந்தபடி
இவனைப் பழி சொல்லி
நம்பி மூத்தபிரானைக் கொண்டாடி
இனி ஒருவருக்கும் இங்கு இருந்து பிழைக்க விரகு இல்லை
என்று வெறுத்துக் கொண்டமையை அனுபவிக்கிறார் )

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ
 –10-7-4-

(நல்லாள்–தேவகி- ரோஹிணி -யசோதை
நம்பி நம்பி -நம்பிக்கு மூத்த பிரான்
நம்பி நம்பியா–நிறபேஷனான கண்ணன் தீம்பால் பூர்ணனாகைக்காக )

மைந்நம்பு வேற் கண் நல்லாள் முன்னம் பெற்ற –
அஞ்சனம் பற்றின வேல் போலே யாயிற்று
கண்ணில் கருமையும் புகரும் இருக்கிறபடி –
(மை தீட்டிய வேல் -கருமையும் கூர்மையும் பெருமையும் )
அவ்வளவு அல்லாத
ஆத்ம குணத்தை உடையவள் பெற்ற –
(தேக குணம் அளவு அல்லாத -அடை மொழி உடன் தேக குணம் –
ஆத்ம குணம் அடை மொழி இல்லாமல் நல்லாள் ஸ்வயம் -உத்க்ருஷ்டம் )

வளை வண்ண நன் மா மேனி தன்னம்பி நம்பியும் இங்கே வளர்ந்தது அவனிவை செய்து அறியான் –
சங்கு வர்ணனாய் இறே நம்பி மூத்த பிரான் இருப்பது –
தன் தமையன் தீம்பாலே குறையற்றான் ஒருவன் இறே –
அவன் முற் காலத்திலே இங்கே விளையாடித் திரியும் போது
நாங்கள் இப்பாடு பட்டு அறியோம் –

பொய்ந் நம்பி –
பொய்யால் குறைவற்று இருக்கிறவன் –

புள்ளுவன் –
கண்ணி வைப்பாரைப் போலே
கடைகிற போதே துடங்கி
இவர்கள் எங்கே வைப்பார்களோ -என்று –
கண்ணி வைப்பார் -வலை வைப்பார் இவர்கள் -ராம கிருஷ்ணர்கள்
அடி ஒற்றிக் கொண்டு திரியா நிற்கும் ஆயிற்று –

கள்வம் பொதியறை –
களவிட்டு வைக்கைக்கு ஒரு கொள் கலம் –

போகின்றவா தவழ்ந்திட்டு –
இக் களவைச் செய்து தான் அல்லாதாரைப் போலே
தவழா நிற்கும் –

இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை –
நிரபேஷனான இவன்
இவனாக
இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –

என் செய்கேன் என் செய்கேனோ  –
இவர்கள் கீழே எங்கனே நான்
இவ் வூரில் குடி இருக்கும் படி –

கள்வம் பொதி அறை -கள்ளத் தனத்துக்கு கொள்கலமாய் இருப்பவனான இக்கண்ணபிரான்
முன்னலோர் வெள்ளிப் பருமலைக் குட்டன் -சூது வஞ்சனை கள்வம் ஒன்றும் அறியானவன் –
மை நம்பு வேற்கண் நல்லாள் -தேவகி ஆகவுமாம் –ரோகிணி -ஆகவுமாம் -மையை விரும்புகின்ற கண்களை யுடையவள்
நம்பும் மேவும் நசையாகுமே
வளை வண்ண நன் மா மேனி -வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் -என்பார் கீழும் –
வெள்ளிப் பருமலைக் குட்டன் -என்பர் பெரியாழ்வார்
நம்பி நம்பியும் -நம்பி மூத்தபிரான் -தன் நம்பி நம்பியும் -என்றதை நம்பி தன் நம்பியும் -என்று அந்வயம்
இந் நம்பி நம்பியா நம்பியால் -என்ற பாடம் மறுக்கத் தக்கது -நம்பியா -என்றது நம்பியாக -என்றபடி
நிரபேஷனான இவன்–இவனாக–இவ்வூரிலே இடைச்சிகளுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை –
இவன் இவனாக என்றது -இவன் இப்படி தீம்பில் குறையற்றவனாக இருக்கையாலே -என்றபடி –

————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பி மூத்த பிரான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்

November 25, 2024

திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன் : கூரத்தாழ்வான்
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம்
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே
-தனியன்:

பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் கோயில் சீர் திருத்த முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மனம் மாறி, அவர் அருளுக்குப் பாத்ரபூதரானார்.

பெரிய பெருமாள் எம்பெருமானாருக்கு உடையவர் எனும் திருநாமம் சூட்டி, சந்நிதி க்ரமங்களைச் சீர்படுத்தத் திருவுள்ளமானபோது, பெரிய கோயில் நம்பி எம்பெருமானார் பக்கல் சற்று உதாசீனராய் இருக்கவே, ஸ்வாமி திகைப்பூண்டு என் செய்வோம் என்று கவலை கொண்டிருந்தார். அவரை அப்பதவியிலிருந்து விலக்குவதே சரியான உபாயம் என ஸ்வாமி திருவுள்ளம் பற்றியபோது ஒருநாள் புறப்பாட்டின் போது பெருமாள் ஸ்வாமிக்குப் பெரிய கோயில் நம்பி தமது நெடுநாள் அந்தரங்கக் கைங்கர்யபரர் என உணர்த்தினார்.

எம்பெருமானார் கோயில் நம்பி பால் தமக்குள்ள வருத்தம் நீங்கி, ஆழ்வானைக் கொண்டு அவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளமாகி நம்பியே சீர்திருத்தங்களை ஆதரிக்குமாறு செய்தார், ஆழ்வானின் உபதேசங்களால் மனம் மாறிய நம்பி, எம்பெருமானாரிடம் சிஷ்யராக விரும்பினார். ஆழ்வானால் அவர் திருத்தப்பட்டதால், எம்பெருமானார் அவரை ஆழ்வானுடைய சிஷ்யராகவே ஆக்கினார். அவர் ஆழ்வானின் சிஷ்யரானபின் அவரது அபார கவிதா சாமர்த்யத்தைப் பற்று ஸ்வாமி தாமே அவர்க்கு அமுதனார் என்னும் திருநாமம் சாற்றினார், இதன்பின் அமுதனார் ஆழ்வானிடமும் எம்பெருமானாரிடமும் அளவிறந்த பக்தி பூண்டொழுகலானார்.

அமுதனார் பெரிய கோயில் நிர்வாகத்தை எம்பெருமானாருக்கு ஸமர்ப்பித்தல்

அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்குகொள்ள  ஒரு ஸ்ரீ  வைஷ்ணவரைத் தேடினர் , அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப் படுவார். மேலும் ஓராண்டு  காலம் அவர கோயில் கைங்கர்யம் எதுவும் செய்ய முடியாது, எம்பெருமானார் நியமனப் படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் த்ருபதோஸ்மி (த்ருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே ச்ரார்த்தம் சம்பூர்ணமாகும் என்ற நியமமிருப்பதால், எம்பெருமானாரின் திருவாணைக்குப் பெரியகோயிலை உட்பட்டதாக்க வேணும் என்ற ஆர்ப்பத்தோடு, ஆழ்வான் நம்பியிடம் கோயில் திறவு கோல் கொண்டு சொல்வேன் என்று கூறி, கோயில்  கதவுச் சாவியைப் பெற்று நேரே எம்பெருமானார் மடம் சென்று தொழுது “தேவர் நியமித்த படி ச்ராத்த கார்யம் ஆயிற்று, சாவிகள் இதோ சமர்ப்பித்தேன் இனி கோயில் கார்யங்கள் ஸ்வாமி திருவுளப்படி” என்றார்.  எம்பெருமானாரும், பெருமாள் திருவாக்கை நினைந்து, கோயிலில் பௌரோஹித்யம் புராண படநங்கள் ஆழ்வான் வம்சத்தார்க்கும், திவ்ய ப்ரபந்த சேவைகளை அரையர்க்கும் ஆக்கி, இயற்பாவை அமுதனார் வம்சத்தார்க்காக்கி, அவை இன்றளவும் அவ்வாறே நடக்கிறது,

இராமானுச நூற்றந்தாதி தோற்றமும் பெருமைகளும்

இதன்பின் அமுதனார் எம்பெருமானார் விஷயமாக இராமாநுச நூற்றந்தாதி எனும் 108 பாசுரங்களை இயற்றி நம்பெருமாளுக்கும் எம்பெருமானார்க்கும் சமர்ப்பிக்க, அதை உகந்த நம்பெருமாள் அன்றைய புறப்பாட்டில் எம்பெருமானாரை வாராமல் தடுத்து, அந்தாதியை சேவிக்கச் சொல்லிக் கேட்டுகந்து,அதன்பின் அதை வழக்கமாக்கி சேவிக்க நியமிக்கவும், எம்பெருமான் திருவுளமறிந்த ஸ்வாமியும், நம்மாழ்வார் விஷயமான கண்ணிநுண் சிறுத்தாம்பு பூர்வர்களால் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டது போல, அதை இயற்பாவில் சேர்த்து எப்போதும் சேவிக்க நியமித்தார், இதுவே ப்ரபந்ந காயத்ரி என  ப்ரஸித்தி பெற்றது. யஜ்யோபவீதம் பெற்றோர் தினமும் காயத்ரி அநுஸந்தித்தல்போல்  ஸமாச்ரயணமானோர், ஸ்ரீவைஷ்ணவர், ப்ரபன்னர் எனப்படுவோர் இதை ஒரு முறையாகிலும் தினமும் அநுஸந்திக்கவேணும்,

இதில் இராமானுசர் திருநாமம் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவதால் இப்பெயர் பெற்றது, ஆசார்ய அபிமான  நிஷ்டர் அறிய வேண்டும் அர்த்தங்கள் யாவும் இதிலுள்ளதால், ஆசார்யன் (எம்பெருமானார்) சம்பந்தமடியாக எம்பெருமான் சம்பந்தம் நமக்குண்டு என்றும் எம்பெருமானார் திருவடித் தாமரைகளே நமக்கு உத்தாரகம் என்பதை இப்ரபந்தம் உறுதிப்படுத்துகிறது.

பேறொன்று மற்றில்லை எனும் 45ம் பாசுரத்தையும், நின்றவண் கீர்த்தி எனும் 76ம் பாசுரத்தையும்  வைத்து ஆசார்யர்களில் தலைவரான நடாதூரம்மாள் எம்பெருமானாரே ப்ராப்ய ப்ராபகங்கள் என்று அறுதியிட்டார், பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனாராச்சான் பிள்ளை தம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html) ஸ்வாமியின் வைபவங்களை விளக்க இப்ரபந்தத்தைப் பரக்க உதாஹரிக்கிறார்,

மாமுனிகள் இதற்கு ரத்தினச் சுருக்கமான ஒரு திவ்ய வ்யாக்யானம் அருளியுள்ளார். அதன் தொடக்கத்தில் அமுதனார் மற்றும் நூற்றந்தாதியின் பெருமைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்:

ஆசார்யனையே சார்ந்திருக்கும் சரம பர்வ நிஷ்டையே திருமந்திரம், மற்றும் அனைத்துப் பாசுரங்களின் உட்பொருள். நம்மாழ்வார் விஷயமான தம் பிரபந்தத்திலும்  தம் அனுஷ்டானத்திலும் மதுரகவி ஆழ்வார் இதைக் காட்டினார், அமுதனாரும் மதுரகவி ஆழ்வார் போன்றே எம்பெருமானாரிடத்துத் தம் ப்ரதிபத்தியை வெளியிடுகிறார், ஆசார்ய நிஷ்டர்கள் தம் நிஷ்டையால் எம்பெருமானையே அடிக்கிறார்கள். இவர் எம்பெருமனாரின் நிர்ஹேதுக க்ருபையினாலும் ஆழ்வானின் கருணைமிக்க விடா முயார்சியாலும் திருத்தப்பட்டவர். எப்படி மதுரகவி ஆழ்வார்  11 பாசுரங்கள் மூலமாக தன்னுடைய ஆசார்ய நிஷ்டையை எல்லோருடைய நன்மைக்காகவும் வெளியிட்டாற்போலே, இவரும் 108 பாசுரங்கள் மூலமாக அனைவரும் ஆசார்ய நிஷ்டையைப் பற்றி அறிந்து கொண்டு அனுஷ்டிப்பதற்காக வெளியிட்டார். உபவீததாரிகளுக்கு காயத்ரிபோலே ப்ரபன்னர்களுக்கு இது என்று மாமுனிகள் திருவுள்ளம், ஆகையால் இது ப்ரபன்ன ஸாவித்ரி என்று அழைக்கப் படுகிறது,

அமுதனார் நிபுணத்வம்

அமுதனார் தென்கலையும் (தமிழ்) வடநெறியும் (ஸம்ஸ்க்ருதம்) திகழ்ந்த நாவர், அவரது அளவற்ற பாண்டித்யத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு:

திருவிருத்தம் 72ம் பாசுரத்தில் ஆழ்வார் நிலையை நம்பிள்ளை அப்பாசுரத்துக்கான தம் உரையில் விளக்குகிறார், பராங்குச நாயகி இரவில் எம்பெருமானின் பிரிவை உணர்கிறாள். நிலவில் விரகம் அதிகம், அப்போது குளிர் தென்றல் மேலும் கொடிது. இந்நிலையில் சிறு பிறை நிலா வரினும் இருள் விலகும். சேர்த்தியில் நிலவு இனிது, பிரிவில் பிறை நிலவும் கொடிது. இதை விளக்க அமுதனார் தரும் உதாரணம் சுவையானது. காட்டு வழியில் தனியே இரவில் சென்று கொண்டிருந்த ஒரு மெலிந்த பிராமணனை ஒரு கொடிய விலங்கு துரத்த, அவன் ஓடி ஒரு மரம் ஏறித் தன்னைக் காத்து கொண்டான். அப்பொழுது அவ்விலங்கை ஒரு புலி அடித்து உண்கிறது, பிராமணன் நிம்மதி அடையும் போது புலி மேலே மரத்தை நிமிர்ந்து பார்க்க அவன் அச்சம் பன்மடங்காகிறது போல், பிறை நிலவில் பராங்குச நாயகி பிரிவுத் துயர் இருளில் இருந்ததை விட மிகுந்து விட்டதாம்.

பட்டரும் அமுதனாரும்

பட்டர் தாம் ஞான வைராக்கியங்கள் மிக்க ஆழ்வான் குமாரர் என்பதில் செருக்குள்ளவர், இதை அவரே ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் வெளியிடுகிறார். அமுதனாரும் நூற்றந்தாதியுயில் “மொழியைக் கடக்கும்” பாசுரத்தில் ஆழ்வான் பெருமையைப் பரக்கத் பேசி ஸத்தை பெற்றார். ஒருக்கால் அமுதனார் வேறொரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் பட்டருக்கு, “நீர் ஆழ்வானோடு தேஹ சம்பந்தமுள்ளவர், அடியேனுக்கு அவரோடு ஆத்ம சம்பந்தமுண்டு காணும்” என்று தெரிவிக்க, பட்டர், “அந்தப் பெருமையை நீரே சொல்லலாகாது” என்கிறார். நம் பூர்வாசார்யர்கள் இவ்விஷயங்களை பெரிது படுத்தார், அமுதனார் ஆழ்வான் பக்தியிலேயே ஊன்றி இருந்தார். நம் பூர்வர்கள் மிகவும் அரிய சமயங்களில் சில மனவேற்றுமைகள் கொண்டிருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் வாழ்ந்து காட்டியது நாம் உணர்ந்து கைக்கொள்ளத்தக்கது.

ஆர்த்தி ப்ரபந்தத்தில் மாமுனிகள் 40ம் பாசுரசத்தில் நாம் ஆசார்ய பக்தியில் இடையறாதிருந்து எம்பெருமானாரிடம் சரணடைந்து, இராமானுசரடியார்களுடன் பொழுது போக்கி, இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தித்து சம்சாரக் கடலைத் தாண்டலாம் என்கிறார்.

இப்படி, நாமும் அமுதனாரின் மேன்மைமிகு சரித்திரத்தில் ஒரு சில துளிகளை அநுபவித்தோம். இவர் பாகவத நிஷ்டையில் நிலை நின்று, எம்பெருமானார் மற்றும் ஆழ்வானின் அபிமானத்தைப் பெற்றவர். நாமும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையை அடைய இவர் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

கோயிலின்‌ நடைமுறைகளில்‌ பழகியிருந்த பெரிய கோயில்‌ நம்பி என்பவர் தடையாக இருப்பதாகப் பலர்‌ ராமானுஜரிடம்‌ சொன்னார்கள்‌. அவரைக் கோயில்‌ நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால்‌, ராமானுஜரின்‌ எண்ணம்‌ நடக்காது என்றனர்‌. எம்பெருமானாரும்‌, கோயிலை நிர்வாகம்‌ செய்து வந்த கோவில்‌ பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்‌.

ராமானுஜர்‌ ஒரு நாள்‌ பெருமாள்‌ புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும்‌ போது, சற்று கண்‌ அயர்ந்தார். அரைத்தூக்கத்தில்‌, பெருமாள் தோன்றி “கோயில்‌ நம்பி என்னையே நம்பி என்னுடன்‌ இருக்கிறார்‌. அவரை வெளியேற்றாதே’ என்று சொல்லி மறைந்தார்‌. கூரத்தாழ்வானிடம்‌ இதுபற்றி சொன்னார் ராமானுஜர்‌. கூரத்தாழ்வானும்‌, பெரிய கோயில்‌ நம்பியிடம்‌ உடையவரின்‌ பெருமை பண்புகளைச்‌ சொல்லவும்,‌ கோயில்‌ நம்பிக்கு உடையவராகிய ராமானுஜர்‌ மீது பிடிப்பு வந்து அதுவே பக்தியாக மாறியது.


ஒருநாள்‌, ராமானுஜர்‌ அவரது இலக்கிய அறிவைப்‌ பாராட்டி”அமுதன்‌’ என்ற திருநாமத்தைச்‌ சூட்டினார்‌. அதனால்‌ திருவரங்கத்தமுதனார்‌ என்ற பெயர் நிலைத்தது‌. ராமானுஜர்‌ மீது கொண்ட பற்றால்‌ கூரத்தாழ்வானின்‌ அறிவுரையின்படி “ராமானுஜ நூற்றந்தாதி‘யை அமுதனார்‌ அருளினார்.

எல்லாப் பாசுரத்திலும் இராமானுசர் என்ற திருப்பெயர் வருவதால், இதைப் பாராயணம் செய்தாலே மாபெரும் புண்ணியம் கிட்டும்.

பெருமாள்‌ உலாவில்‌ உடன்‌ செல்லும்‌ பழக்கம்‌ உடையவராகிய ராமானுஜருக்கு உண்டு. சித்திரை மாதம்‌ 11
ஆம்‌ திருநாளில்,‌ ராமானுஜர்‌ கனவில்‌ பெருமாள்‌ தோன்றி, இன்று தாள வாத்தியங்கள்‌ வேண்டாம்‌ என்று சொல்லி மறைந்தார்‌. அன்று பெருமாள்‌ புறப்பாட்டின்‌ போது  தீப்பந்தங்கள்‌ மட்டும்‌ இருந்தன; ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச்‌ சேவித்ததைப் பெருமாள்‌ கேட்டுக்கொண்டு மகிழ்வுடன் சென்றார்‌. ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச்‌ சேவிக்கும்‌ போது கோஷ்டிக்கு வெகு அருகில்‌ பெருமாள்‌‌ தன்னையும்‌ ஒருவராக ஆக்கிக்‌ கொள்கிறார்‌ என்பது நம்பிக்கை. இன்றும்‌ திருவரங்கம்‌ கோயில்‌ ரங்கநாதர்‌ சந்நிதியில்‌ இயற்பா சாற்றி முடித்த பின்‌, அதனுடன்‌ ராமானுஜ நூற்றந்தாதியும்‌ சேவிக்கிறார்கள்.


திருவரங்கத்தமுதனார்‌ ராமானுஜரைக்‌ காட்டிலும்‌ மூத்தவர்‌ என்ற கருத்தும், 108 ஆண்டு காலம்‌ வாழ்ந்தார்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும்‌ ஸ்ரீ சுதர்சனர்‌ சந்நிதியில்‌ இந்த ராமானுஜதாசராகிய திருவரங்கத்து அமுதனார், சிலை உருவில்‌ இருக்கிறார்‌.

அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.

நாதமுனிகள் காலம் தொடங்கி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்து வந்தார்கள். சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுத்து, பிறகு அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலா வந்து. அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வருவதற்குப் பெயர் பிரம்மரத மரியாதை.

‘பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்’ ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தை( புத்தகம்) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.

அமுதனார் சன்னதி – ஸ்ரீரங்கம் கோயில்

அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்று கிழித்துப் போட்டுவிட்டார். பிறகு கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை ப்ரபந்ந காயத்திரி என்றும் சொல்லுவர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி ”இன்று என்னுடன் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். இந்த காரணத்தினால் இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. அதே போல் வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.

இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது.

திருவரங்கத்தமுதனார் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் அதிக வயதானவர் என்பதும், அவர் 105(108 என்றும் சொல்லுகிறார்கள்) ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதும் தெரிகிறது.. முதலாயிரத்தில் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ப் போல,இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச் சேர்த்தால் தான் நாலாயிர திவ்வியப் பிரபந்ததின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 வரும் என்பது இன்னொரு ஆச்சரியம்.

கிபி 1965க்குப் பிறகு அமுதனார் வம்சத்தவர்கள் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபடுவதில்லை. திருவரங்கத்தமுதனார் வம்சத்தவர்கள் இன்று அமெரிக்காவிற்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்து போய் விட்டதால், இயற்பா சேவிப்பதை அரையர்களே மீண்டும் செய்து வருகிறார்கள். ஆனால் திருவரங்கத்தமுதனாருக்கு ஏற்படுத்தப்பட்ட பிரம்மரத மரியாதையை அரையர்கள் பெற்றுக் கொள்வதில்லை.

திருவரங்கத்து அமுதனார் வாழ்ந்த திருமாளிகை (வீடு ) எங்கே என்று கண்டுபிடிக்க போன மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒருவரை விசாரித்ததில் ஸ்ரீரங்கத்தில் கிடையாது என்று அடித்து சொன்னார். பிறகு கோயிலுக்கு வெளியே வந்து சிலரிடம் விசாரித்ததில் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் விசாரித்தவர்கள் தினமும் கோயிலிலும் வீட்டிலும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவிப்பவர்கள். தொடந்து விசாரித்ததில் வடக்கு உத்திரவீதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் தென்கலை நாமம் போட்டுக்கொண்டு பூட்டிய வீட்டு திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த ஒருவரிடம் “திருவரங்கத்தமுதனார் வீடு இங்கே எங்கே இருக்கு?” என்றுகேட்டேன்.

அவர் காதில் என்ன விழுந்ததோ

“திருவரங்கத்துக் கொத்தனாரா ? ” என்றார்.

“இல்ல மாமா, திருவரங்கத்தமுதனார்…ராமானுஜ நூற்றந்தாதி எழுதியவர். அவர் வீடு இங்கே தான் எங்கோ இருக்குன்னு..சொல்றா.” என்றேன் தயங்கியபடி.

“தெரியலை, அவ வீட்டைப் பூட்டிண்டு எங்கோயோ போய்ட்டா, அவ வர்ற்த்துக்கு நான் காத்துண்டு இருக்கேன்…” என்று செல்போனை பார்த்துக்கொண்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

நான் இவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த எதிர்த்த வீட்டு பெண்மணி என்னிடம் தயங்கியபடி வந்தார்.
“என்ன சாமி, யாரை தேடறீங்க?” என்றாள்.

“நாமம் போட்டவருக்கே தெரியலை, இந்த அம்மாவிற்கு.. ஹும்..நோ சான்ஸ்” என்று மனதில் நினைத்துக்கொண்டு  “அமுதனார் வீடு” என்று சொல்லிக் கொண்டே, பைக்கை ஸ்டார்ட் செய்த போது “அமுதனார் வீடுங்களா ? அதோ அந்த வீடு தான்” என்றாள்.

“நீங்க எந்த அமுதனாரை சொல்றீங்க .. இவர்.. ” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க “சக்கரத்தாழ்வார் சன்னதியில் இருக்கும் அமுதனாரை தானே சொல்றீங்க, அதோ உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறாரே பெரியவர். அந்த வீடு தான் அமுதனார் வீடு” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்ப அந்த பெரியவர் யார் ?”

“அவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கார். அமுதனார் வாழ்ந்த வீடு ரொம்ப வருஷம் முன்பே கைமாறிவிட்டது..”

எனக்கு நிறைய விஷயம் புரிந்தது. மானசீகமாக அந்த பெண்மணியை சேவித்துவிட்டு கிளம்பினேன்.

அமுதனாரை பற்றி எழுதும்படி அப்பா சொன்னதற்கு காரணம் இது தானோ என்று யோசித்தவாறு கிளம்பினேன். கொஞ்சம் தூரம் சென்று, அமுதனார் வீட்டை திரும்பிப் பார்த்தேன். மனைவி வந்து பூட்டைத் திறப்பதற்காக, அமுதனார் வீட்டு திண்ணையில் கையில் செல்போனுடன் காத்துக்கொண்டிருந்தார் அவர்.

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
–4-9-2-

தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.
–5-1-7-

நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.-பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே
.–6-1-6-

பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,-‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,-‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி. ‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் – அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
.-6-8-1-

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!
உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.

உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.
பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-