திரு வெழு கூற்று இருக்கை திருமடல்
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பது என்றும் பொன்னித்
தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூம் குடந்தை
விடம் கொண்ட வெண் பல் கருந்துத்தி செங்கண் தழல் உமிழ் வாய்
படம் கொண்ட பாம்பணைப் பள்ளி கொண்டான் திருப் பாதங்களே –
ஆராவமுத ஆழ்வார் உடைய திருவடி இணைகள் ஆழ்வார் திரு உள்ளத்தில் பொருந்தி
பெறாமல் இருப்பதை- ஆழ்வார் அனுசந்திப்பதாக
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் அருளிச் செய்கிறார்
————
திரு கம்ப நாட்டு ஆழ்வார் அருளிச் செய்த தனிப் பாடல்-
ஊராது ஒழியேன் உலகு அறிய ஒண் நுதலீர்
சீரார் முலைத் தடங்கள் சேரளவும் –பாரெல்லாம்
அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர்
மன்று ஓங்க வஊர்வன் மடல்-
—————
கம்பர்பாடல்
என்னிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் -பின்னைப் போய்
ஒண்டுறை நீர் வேலை யுலகறிய யூர்வன் நான்
வண்டறை பூம் பெண்ணை மடல்-பரகாலன் பாவனையில் அருளிச் செய்த பாடல் –
————–
வண்ணம்-மை வண்ண இந்தளூர் வண்ணம் -அகலிகை படலம் அதே 8 வண்ணம் கால் வண்ணம் -துகள் மூலம் திருவடியால் தீண்ட மாட்டான் -முக்கால் எங்கு காண்பேன்
கங்கை படலம் -ஆத்ம ஸஹ -இளவலும் -ஏழை அறிந்து பாடினார்-நின்னோடும் எழுவர் ஆனோம்
பேடையொடு –நறையூர் -வெட்க்கி
ஆரண்ய -யானை நடை அன்னம் நடை
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றதே கோழியும் கூவ வில்லை -பெரிய ஒடுங்கின -பிராணிகள் -நான்கு கண்கள் தவிர
இன்று போய் போருக்கு நாளை வா -ஆளாயா -ஆள் ஐயா -வால்மீகி 2 நாள் கம்பர் முதல் நாள் -வெள்ளியங்குடி -காற்றிடை
காதைகள் செறிவான செவி நுகர் கனிகள் –நாட்டு படலம்
செவிகளாரே நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் காலப் பண் தென் உறைப்பத்துற்று –திருவாய் -3-8-6-
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து –பெரிய திரு -3-6-7-
எம்பெருமான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன்னமுதம் மதியோம் அன்றே —
————
ஸ்ரீ பால காண்டம் –
என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
“முன்னரே எண்கின்வேந்தன் யான்”-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்’ என்றான். 23-
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-
———
உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26′
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக வென மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை யாறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீ ராம விண்ணகரே சேர்மின் நீரே—–பெரிய திருமொழி–3-4-1-
திறம் கொள் ஆமையாய் முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக்கைகள் பரப்பி மீ வலிப்ப–அகலிகை படலம் -24-
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-4-
——–
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் இன்றி மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத் தரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே யுன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் -82-
மழை வண்ணத்து அண்ணலே –மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –
இப்பாட்டில் எட்டு தடவை வண்ணம் பத பிரயோகம் –
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே-பெரிய திருமொழி-–4-9-8-போலவே
————
மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் –
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38-
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி -3-1-1-
இராமனை நினைத்து சீதை உருகுதல்
‘இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே! 57-
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட
எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண் இணையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –21-
விண்ணுளே எழுந்த மேக மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்து என்ன வந்து போன மைந்தனார்
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலேன்
கண்ணுள்ளே இருந்த போதும் என் கொல் காண்கிலாதவே -53-
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை
இன்னார் என்று அறியேன் -பர கால நாயகி போலவே –
——
மண்ணுற விழுந்து நெடு வானுற எழுந்து
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண்ணிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண்ணிற நறும் பொடி புனைந்த மத வேழம்–வரைக்காட்சி–19-
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கயத்தாய் –திரு நெடும் தாண்டகம் -9-
—–
மாடகம் பற்றிய மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க்கரம் சிவப்பத் தொட்டனள்
பாடினள் ஒருத்தி தன் பாங்கி மார்களோடு
ஊடின துறை செயாள் உள்ளத்து உள்ளதே—உண்டாட்டுப் படலம்-32-
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனி என்றும்
அல்லியம்பூ மலர்ப் பொய்கை பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை யிறையே தோன்றநக்கு
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவியாங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே-திரு நெடும் தாண்டகம்–-15-
———-
பழுது இலா வொரு பாவை யன்னாள் பதைத்து
அழுது வெய்துயர்த் தன் புடைத் தோழியை
தொழுது சேர்ந்தயர் வாள் இந்தத் தோன்றலை
எழுதலாம் கொல் இம் மன்மதனால் என்றாள்–25-
தோழியை தொழுதாள் என்றும் தேர் போன திக்கைத் தொழுதாள் என்றுமாம்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே–திரு நெடும் தாண்டகம் -14-
கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை –ஆரண்ய –சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் –24-
கண்ட போதே நுகர வேண்டும் கனி அன்றோ இவன்
அமுதம் பொதியின் சுவைக் கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே -என்றும் –திரு நெடும் தாண்டகம் -15-
யானை தோன்றிய இடம் கடல் -திருப் பாற் கடலிலே பழுத்த பழம்
————-
ஸ்ரீ அயோத்யா காண்டம் – —
செந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும்
சந்தார் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
வந்தார் அகலத்தோடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவனாகும் அவ்வளவில் இராமன் என்றாள் –சூர்ப்பனகை வர்ணனை -ஆரண்ய -மாரீச வதை படலம் -149-
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ண மங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்து உண்டானைச்
செஞ்சொல் நான் மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றன் தன்னை அடியேன் கண்டு கொண்டேனே–பெரிய திருமொழி-7-6-5-
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –பெரிய திருமொழி–9-2-6-
குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல்
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்’ என்றான். 11
அன்னவள் உரை கேளா அமலனும் உரை நேர்வான்
என்னுயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இந்
நன்னுதல் அவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் -73-
அங்குள கிளை காவற்கு அமையின் உளன் ஊம்பி
இங்குள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனதன்றோ உறு துயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் -76-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-
———–
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மா சுணம் கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர் தாழ்விலார் தாம் மிதித்து ஏறப்
படிகளாம் எனத் தாழ்வரை கிடப்பது பாராய் -35-
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே ––பெரிய திருமொழி–1-2-10-
—————
உவரி வாய் அன்றிப் பாற் கடல் உதவிய அமுதே
துவரின் நீள் மணித் தடம் தோறும் இடம் தோறும் துவன்றிக்
கவரிப் பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவளமால் வரை அருவியைப் பொருவன பாராய் -5-
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே -6-1-2-
——
உருகு காதலின் தழை கொண்டு மழலை வந்து உச்சி
முருகு ஞாரு செந்தேனினை முலை நின்றும் வாங்கிப்
பெருகு சூழினும் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின் அழிப்பது பாராய் -10-
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –பெரிய திருமொழி-–1-2-5-
பிரசம் -தேன் கூட்டுக்கும் மதுகரங்களுக்கும் பெயர் -வாரி -அவற்றினுடைய தேன்
—————-
ஸ்ரீ ஆரண்ய காண்டம் –
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ; அவை உன்னை
முன்னம் ஆர் ஒதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ?
என்ன மா மாயம் இவை?-ஏனம் ஆய் மண் இடந்தாய்! 59′
ஒரு நாள் அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி -5-7-3-
பின்னம் ஆய் ஒன்று ஆதல், பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை–விசிஷ்டாத்வைத தத்வம் –
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து, அடியேன் அருந் தவத்தால் அணுகுதலால்,
இப் பிறவிக் கடல் கடந்தேன்; இனிப் பிறவேன்; இரு வினையும்,
துப்பு உறழும் நீர்த்த சுடர்த் திருவடியால், துடைத்தாய் நீ.’ 60-
அருளோடு பெரு நிலம் அளிக்கும் –பெரிய திருமொழி -1-1-9-
—————–
கண்டாமவை யாயிரம் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியில்
கண்டான் அரு நான் மறையின் கனியை —-24-இந்திரன் இராமபிரானை ஸ்துதிப்பது –
அரும்பினை அலரை அடியேன் மனத்தாசையை
அமுதம் பொதியின் சுவை கரும்பினைக் கனியைச் சென்று நாடிக்
கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –பெரிய திருமொழி -7-10-1-
————
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இரு இருளும் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடை கடையோடு ஈறில்லை முன்னோடு பின்னில்லை
தேவா இங்கு இவ்வோ நீ சென்ற நிலை என்றாள் சிலை ஏந்தி வந்து செம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல் கரும் கடலில் கண் வளராய் கைம்மாறும் உண்டோ —
வெண்மையான பாற்கடலும் இவன் நிழலீட்டாலே கருங்கடல் ஆனதே
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் –பெரிய திருமொழி 3-1-1-
————
‘செந் தாமரைக் கண்ணொடும், செங் கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளோடும், தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும், அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும், அவ் வல் வில் இராமன்’ என்றாள். 149-இராவணன்-சூர்ப்பணகை உரையாடல்-
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே –திரு நெடும் தாண்டகம் -21-
———–
பொங்கு வெம் கோளரா விசும்பு ஒத்தன
வெங்கதிர்ச் செல்வனை விழுங்கி நீங்குமால்
அங்கண் மா ஞாலத்தை விளக்குமாய்க் கதித்
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால்-196-
கிரகண காலத்தில் சூர்ய சந்திரர் பீடிக்கப்பட்டு மீளுவது போலே பிறவி -சடாயு சமாதானம் இளைய பெருமாளுக்கு –
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய் –பெரிய திருமொழி 1-7-1-
————-
ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம் –
ஆடினான் அன்ன மாய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள்
சூடினான் முனிவர் தொகுதி சேர் சோலை வாய்
மாடு தான் வைகினான் ஏறி கதிரும் வைகினான் -37-
வில் நெறி முறையின் படி–மிக்க நீர்மை அமைந்த வேத நெறி படி அரக்யாதிகளைச் செய்து முடித்தான் –
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தான் –பெரிய திருமொழி 5-7-3-
——
‘துன்பினைத் துடைத்து, மாயத் தொல் வினைதன்னை நீக்கி,
தென் புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம்?
என்பு எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை; அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன். 13
வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –பெரிய திருமொழி-–8-1-9-
—–
அனுமன் ராமபிரானை புகழ்ந்து சுக்ரீவன் இடம் கூறினமை
உளை வயப் புரவியான் உதவ உற்ற ஒரு சொலால்
அளவில் கற்புடைய சிற்றவை பணித்தருளால்
வளை யுடையப் புணரி சூழ் மகிதலத் திருவெலாம்
இளைவர்க் குதவி இத்தலை எழுந்து அருளினான் -46-
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-1-
—————–
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால் –காப்புச் செய்யுள்
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-
——–
வழை துறு கானயாறு மா நிலக் கிழத்தி மக்கட்கு
உழைத்துறு மலை மாக் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த
விழை வுறு வேட்கை நாளும் வேண்டினார்க்கு தவ வேண்டிக்
குழை தோறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை -34-
காரார் வரைக் கொங்கை –சிறிய திருமடல்
மழைக் கூந்தல் தென்னன் உயிர் பொறுப்பும் தெய்வ வடமலையும் என்னும்
இவையே முலையா வடிவமைத்த –பெரிய திருமடல் —
————
ஸ்ரீ ஸூந்தர காண்டம் –
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயராயின வெல்லாம்
நிலம் தரும் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளோடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் யாயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம் –1-1-9-
ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தநமே தக்க உபாயம் –
நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தேயுமே
இம்மையே ராம என்று இரண்டு எழுத்தினால் –பாசுரமும் ஒப்பு நோக்குக –
———-
பெரிய நாள் ஓளி கொள் நாநாவித மணிப் புத்திப் பத்தி
சொரியுமா நிழல்கள் ஆங்குச் சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச் செய்யனாய்க் காட்டும் காண்டற்கு
அரியனாய் எளியனாய் தன் அகத்துறை அழகனே போல் –ஊர் தேடு படலம்
திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே–திரு நெடும் தாண்டகம்–-3-
———
கரிய நாழிகைப் பாதியில் காலனும் வெருவி ஓடும் அரக்கர் தம் வெம் பதி —
இரவு பாதி ராத்ரியை -கரிய நாழிகைப் பாதியில் என்றது
கரிய நாழிகை ஊழியில் பெரியன கலியுமாறு அறியேனே –ஸ்ரீ பெரிய திரு மொழி -8-5-6-
——
ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்.–காட்சிப் படலம்–23–
வாழி நண்பினை–நட்புக்குப் பல்லாண்டு பாடுகிறார் —
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே ––பெரிய திருமொழி-5-8-1-
அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்;
‘என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’–குகப் படலம்–42
‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; –குகப் படலம்–43
————
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்-இலங்கை
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் –பெரிய திரு -1-7-1-
——
ஸ்ரீ யுத்த காண்டம் – —
ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு
நாளை வா’ என நல்கினன் -நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். –இராமன் அறிவுரை கூறி, ‘இன்று போய், நாளை வா’ எனல்
காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன வுண்டு மண்டிச்
செற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி யதுவே –பெரிய திருமொழி-–4-10-6-
———-
அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, “நீ இகழ்ந்தது” என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?’
எம்பிரான் என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்றும் வாழ் நாள் –பெரிய திருமொழி 1-1-6-
——
கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80
திட்டியின் விஷம் -என்று சீதா பிராட்டியை குறிக்கிறார் –
எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ -பெரிய திருமொழி-–10-2-4-
—————–
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி; முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில், இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமே கொல்? பிறிதேகொல்?-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 253-
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி; ஒற்றை விடையனும் நான்முகனும்
உன்னை அறியாப் பெருமையோனே –பெரிய திருமொழி 4-10-4-
——
சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி; மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி; கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? 257-
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே–-பெரிய திருமொழி–5-10-10–
————
நாராயண நரர் என்று இவர் உளராய், நமக்கு எல்லாம்
வேராய், முழு முதல் காரணப் பொருளாய், வினை கடந்தோர்;
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார்;
பாராயண மறை நான்கையும் கடந்தார்; இவர் பழையோர்; –நிகும்பலை யாகப் படலம்—140–
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—பெரிய திருமொழி–10-6-1-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்பநாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்