Archive for October, 2012

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் 1பிரான்அன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?

    பொ-ரை : ‘தன் நினைவிலேயே எல்லாத் தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியமான செயல்களையுடையவனை அல்லாமல், இம்மூன்று உலகங்களையும் திருந்தச் செய்து, தனது திருவுள்ளத்தே வைத்து, ஒரு நோவும் வாராதபடி காத்து நோக்குகின்ற இயல்பினையுடையவர் வேறு யாவர்? ஒருவரும் இலர்,’ என்றவாறு.

    வி-கு : ‘காக்கும் இயல்வினர் மாயப் பிரான் அன்றி யாரே?’ எனக்கூட்டுக. வருத்தித்த – உண்டாக்கின, காக்கும் – எச்சம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. படைத்தலையும் காத்தலையும் தனக்கு அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே இறைவன் என்கிறார்.

    கருத்தில் தேவும். இயல்வினர் யாரே – ‘தன்னுடைய நினைவினாலே தேவ சாதியையும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியத்தையுடையனான சர்வேஸ்வரனை அன்றி, மூன்று உலகங்களையும் திண்ணிதான நிலையினையுடைய வாம்படி திருத்தி, தம்முள் இருத்தி, அவ்வப் பொருள்கட்குத் தகுதியான பாதுகாத்தல்களையும் திருவுள்ளத்தே வைத்துப் பாதுகாத்தலைச் செய்யுமிதனை 2இயல்வாக உடையவர் யார்?’ என்கிறார். 3‘‘காப்பாற்றுவதில் நிலைநின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர, காத்தலாகிய ஆற்றல் வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்பது விஷ்ணுபுராணம்.

சிருஷ்டியும் பாலனும் இவனே ஈஸ்வரன் காட்டி கொடுக்கும்

கருத்தில் -சங்கல்பத்தால்
தேவும் எப் பொருளும்
வருத்தித வ்ருதித்த்
மாயப் பிரானை அன்றி
திருத்திமூ உலகும் தன்னுள் இருத்தி
தின்னியதாக
ஸ்வபாவமாக உடையவன்
பகுச்யாம் பிரஜா -சங்கல்பம்
வர்திப்பித்த -உண்டாக்கின –
மாய பிரான் அன்றி யாரே –
திண் நிலை மூ உலகு -திண்ணியதாக ஸ்திதி உடையதாக திருத்தி
உண்டாக்கி திருத்தி வைத்து –
அதுக்கு மேல் தன்னுள் இருத்தி ரஷனம் -அனுபிரவேசித்து காக்கும் இயல்பினன்
இத்தை ஸ்வபாவமாக உடையவர்
வேறு யார் –

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 9, 2012

பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும்
வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்
உள்உள் ஆர்அறி வார்அ வன்தன்
கள்ள மாய மனக்க ருத்தே?

    பொ – ரை : ‘ஆலந்தளிராகிய படுக்கையில் சயனித்திருக்கிற வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய வயிற்றையுடைய பெருமான்; ஒருவர்க்கும் தோன்றாத ஆச்சரியமான, உள்ளே உள்ளே செல்லுகின்ற, அவனுடைய மனத்தின் எண்ணத்தை அறிய வல்லவர் எவர்தாம்? ஒருவர் இலர்,’ என்றவாறு.

    வி – கு : ‘கொள்ளும்’ என்னும் எச்சத்தை ‘வயிறு’ என்னும் பெயருடன் முடிக்க. ‘வள்ளல், வல்’ இவ்விரண்டும், வயிற்றுக்கு அடைமொழி. கள்ளம் – ஒருவருக்கு அறிய முடியாத தன்மை. மாயம் – ஆச்சரியம். ‘அறிவார் ஆர்?’ என்ற வினா, இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஏழாம் பாட்டு, 1‘அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    பள்ளி ஆல் இலை – அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிராகிய படுக்கையிலே ஏழ் உலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் – ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து அப்படுக்கையில் அறிதுயில் செய்கிறின்றவன்.2உள்ளே புக்க உலகங்கட்கு இடம் கொடுத்தலோடு அமையது. இன்னம் வேறு தனியாக உலகங்கள் இருப்பினும், அவற்றிற்கும் இடம் கொடுக்க வல்ல வயிறு ஆதலின், ‘வள்ளல் வயிறு’ என்றும், உள்ளே புக்க பொருள்கட்கு அச்சமென்பது சிறிதும் இல்லாத வண்ணம் காப்பாற்ற வல்ல மிடுக்கினையுடைத்தாய் இருத்தலின், ‘வல் வயிறு’என்றும், இப்படிக் காப்பாற்ற வேண்டிய கடமையினையுடையவனாதலின், காப்பாற்றுகிறான் என்பார்,‘பெருமான்’ என்றும் அருளிச் செய்கிறார்.அவன் தன் கள்ளம் மாயம் மனம் கருத்தை ஆர் அறிவார் – ஒருவரும் அறியாதவாறு இன்னம் உள்ளே உள்ளே இருப்பதாய், அறிந்த தன்மை ஆச்சரியமாக இருக்கிற அவனுடைய மனத்தின் வியாபாரத்தை யாவர் அறிவார்? ‘ஏன்? நீர் அறிந்து சொன்னீரே?’ எனின், கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி, ‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’ என்பார், ‘யார் அறிவார்?’ என்கிறார்.

அகதி கடனா சமர்த்தன்
பெரிய உலகம் சிறிய வயிற்றில் கொண்டவனே பரன்
ஏழாம் பாட்டு –
ஆல் இலை சரித்ரம் –
ஏழு உலகும் கொண்ட வாளால்
வால் வாயிற்று பெருமான்
அவன்தான் கள்ள கிருத்ரிமம்
மாய மனக் கருத்தை
உள்ளே சென்று யார் அறிவர்
பள்ளி -படுக்கை
பவனாய்- இருப்பதாய் -முகிளும் தளிர்  –ஆல் இலை -கூட இல்லை தளிர் தான்
அதிலே ஏழு லோகமும் -சப்த லோகம்
வள்ளல் -இன்னும் இடமாய் உண்டாகும் படி -வஸ்து இல்லையே –
வலிமை வயிற்ருக்கு உல் புகுந்த வச்துவுக்குபய பிரசங்கமின்றி மிடுக்கை உடையவன்
பெருமான் -ரஷிக்க வேண்டியது பெருமான் ஆனபடியால் -உடையவன் ஸ்வாமி சொத்து -பாவம்
அவனுடைய உள்ளுள் -கள்ள மாய மன கருத்தை யார் அறிவார்
கண்ட ஒன்றை பார்த்த  இத்தை  சொல்வதை போக்கி
யாருக்கும் அறியாதபடி கள்ளமாய்
ஆச்சர்யமாய் -மாய
மார்கண்டேயர் கண்ணால் கண்டதை சொல்லி நாமும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் .
நளிர் மதி சடையன் எங்கோ முதல் தீர்த்த காரர்
அம் கண்ஞாலம் உண்ட பொது வெள்ளி வெற்பு அகன்றதோ கைலாச்யம்
பாஹ்யமான வியாபாரமும் நிலை அன்று
வெளி செயலும் பேச நிலம் அன்று

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வுஇன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி
அவர்எம் ஆழி அம்பள்ளி யாரே.

    பொ – ரை : உயர்திணையும் அஃறிணையுமான எல்லாப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கு உண்ணாதவாறு தன் வயிற்றில் ஒடுங்கும்படி நின்ற, பரந்து விரிந்த ஞானவெள்ளத்தினையுடைய ஒளி மிகுந்த திருமேனியையுடையவர் யாவர்? அவர்தாம், எமக்காகத் திருப்பாற் கடலில் அறிதுயில் செய்கின்றவர் ஆவர்.

    வி-கு :  ‘இன்றி ஒடுங்க நின்ற’ என முடிக்கஅவ்வாறு முடித்து ‘நின்ற’ என்பதனை ‘மூர்த்தி’ என்பதனோடு முடிக்க. மூர்த்தி – திரு மேனியையுடையவன். கவர்வு – ஒரு பொருளும் மற்றொரு பொருளும் நெருக்குண்டு அந்நெருக்கால் வருந்தல். பவர் – பரப்பு.

    ஈடு : ஆறாம் பாட்டு. 3‘ஆபத்துக் காலத்தில் துணைவன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

 எவரும் யாவையும் எல்லாப் பொருளும் – அறிவுடைப் பொருளும் அறிவில்லாத பொருளும் ஆகிய எல்லாப்பொருள்களும் பிரளய காலத்தில் தன் வயிற்றில் சேர்ந்திருந்தபோது. கவர்வு இன்றி – கவர்கையாவது, பற்றுகை: அதாவது, துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி. தன்னுள் ஒடுங்க நின்ற –1‘உலகத்தில் சராசரங்களாக என்னால் பார்க்கப்பட்டவை எத்துணை உண்டோ, அவை எல்லாவற்றையும் நான் விஷ்ணுவினுடைய திருவயிற்றில் பார்த்தேன்,’ என்கிறபடியே, 2தன்னுள் அடங்க நின்ற. இனி ‘தன்னுள்’ என்பதற்கு, 3‘தன்னுடைய சங்கல்பத்தின் ஏகதேசத்தில்’ என்று பொருள் கூறலுமாம். பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தையுடையனாய். இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர், எம் ஆழி அம் பள்ளியாரே – 4தம் சம்சார மத்யஸ்தராய் இருக்கையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு, எங்களைப் பாதுகாத்தற்காக வந்து பிரளயத்தை அழகிய படுக்கையாவுடையவர் ஆனார். பள்ளி – படுக்கை. 5‘பாயலும் பள்ளியும் பாழியும் படுக்கை’ என வருதல் காண்க.

    ‘இப்படி ஆபத்துக்காலத்தில் துணைவனாய் 6அணியன் ஆகையாலும் இவனே ஈஸ்வரன்,’ என்கிறார்.                

ஆபத் சகன் ஆகையாலும் இவரே ஈச்வரனே என்கிறார்
எவரும் யாவையும் சேதனர் அசெதனர் பிதிர் கதிர் படாமல்
பரம்பி நின்று உள்ள ஞான வெள்ள சுடரே தேஜஸே திரு மேல்
திருப்பாற்கடல்    சயனம் ரசிக்க தன்
ஹிம்சை நெருக்காதவடி  கவர்வின்றி  -விசாலம் இடம் உண்டே
பிரளய காலத்தில்
தன்னுள் ஒடுங்க நின்ற –
மார்கண்டேயர் கரியே
விசாலமாக இருந்தது பச்யம் அஹம் சர்வம் -ஸ்லோகம் –
தன்னுள் சங்கல்ப ஏக தேசத்தில் வைத்து கொண்டான்
பவர் கொள் பரம்பிய ஞானம்
சுடர் பிரகாசிக்க ரஷித்தது தன் பேறாக தோற்றும் திவ்ய மங்கள விக்ரகம்
ஆழி சம்சார ஆர்ணவம்
ஏகார்ணவம் –
கொள்ளிடம் வட திருக்காவேரி பிரியும் பொழுது வேற பெயர்
ஆழி அம் பள்ளி -படுக்கை
ஆபத் சகன் -கிட்டியவன் அண்ணியவன்-
அவனே பரன் என்கிறார் .

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

தகும்சீர்த் தன்தனி முதலி லுள்ளே
மிகும்தேவும் எப்பொருளும் படைக்கத்
தகும்கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும்சோதி மேல்அறிவார் எவரோ?

    பொ – ரை : ‘படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடையதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றும் எப்பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகிய தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளி உருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஓர் இறைவன் உளன் என்று அறிகின்றவர் யாவர்? ஒருவரும் இலர்’ என்றபடி.

    வி-கு : தனி முதல் – தனித்த காரணமான மூலப்பகுதி. தனி என்பது, இரண்டாவது வேறு காரணம் இன்மையைக் குறிக்க வந்தது. மேல் – மேம்பட்ட பொருள். அறிவார் – வினையாலணையும் பெயர். ‘யவர்’ என்பது, முன்பு உள்ள பாடம். ‘எவர்’ என்னும் வினா ஈண்டு இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘தாமரைக்கண்ணன் ஆகையாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    தகும் சீர் – படைத்தலுக்குத் துணையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன். தன் தனி முதலினுள்ளே – காரிய வர்க்கத்துக்கு அடையக் காரணமான மூலப் பிரகிருதி.

இனி, இதற்கு, 1‘நான் பல பொருள்கள் ஆகின்றேன்,’ என்கிற படியே, அந்த மூலப்பகுதிக்கும் காரணமான சங்கல்ப ரூப ஞானம் என்று பொருள் கூறலுமாம். 2‘உலகத் தோற்றத்திற்குப் பரமாணுக்களே காரணம்’ என்பாரும் உளராதலின், அவர் கொள்கையினின்றும் வேறுபடுத்துவதற்குத் ‘தனி’ என்னும் அடைபுணர்த்து ஓதுகிறார். மிகும் தேவும் – தன்னோடு 3மசக்குப் பரல் இடலாம்படியான தேவசாதியையும், 4‘சிவனுடைய வில் விஷ்ணுவின் ஆற்றாலால் ஒடிபட்டதனைக் கண்டு விஷ்ணுவே பரம்பொருள் என்று எண்ணினார்கள்,’ என்னலாம்படி அவர்களுடைய மிகை இருத்தலின், ‘மிகும் தேவும்’ என்கிறார்.

    எப்பொருளும் படைக்கத் தகும் கோலம் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி – ‘மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகைக்குத் தகுவான்-ஒருவன்’ என்னுமிடத்தைத் தெரிவிப்பனவாய், காக்குந் தன்மை இல்லையாயினும், ‘காட்சிக்கு இனியவாய்க் குளிர்ந்திருக்கிற திருக்கண்களையுடைவனாய், அக் கண் அழகாலே என்னை அடிமை கொண்டவனே மிக்க பேரொளியை யுடையவன். ‘தகும் கோலம் தாமைரைக் கண்ணன் எம்மான்’ என்று 5திருவடி தோற்ற துறையிலே இவரும் தோற்கிறார். 6‘பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம்பொருளினை அடைந்து’ என்றும், 7‘பரம்பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும்

நாராயணனே’ என்றும் கூறப்படுமவன் ஆதலின், ‘மிகுஞ்சோதி’ என்கிறார். மேல் அறிவார் எவரே – இவனை ஒழிய நாராயணாநுவாகச் சித்தமாய் இருப்பது ஒரு பொருள் உண்டு என்று அறிவார் யாவரேனும் உளரோ? எவரோ –1‘எந்த வைதிகன்?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார்.

    ‘உனக்கே உரியதான நாராயணாநூவாகாதிகளிலே கூறப்பட்ட பெருமையையுடைய உன் பக்கலிலே பொறாமை கொண்டிருப்பான் ஒரு வைதிகன் உளனோ? உளனாகில், அவன் அவைதிகனாமித்தனை’ என்றபடி. 2‘பரம்பொருளான விஷ்ணுவினிடத்தில் பத்தி இல்லாதான் ஒருவன் எல்லாச் சாத்திரங்களின் பொருள்களையும் அறிந்தவனாய் இருப்பினும், அவனிடத்தில் பிராமணத் தன்மை இல்லை; அவன் பிறவியினை ஆராய்தல் வேண்டும்,’ என்பது பத்மபுராணம்.

 

புண்டரீகாட்ஷன் இவன் ஒருவனே
தாமரை கண்ணன்
சங்கல்பம்
மிகும் தேவும் எல்லா பொருளையும் படைக்க தக்க எம்பெருமான்
மேல் பட்ட ஜோதி யார்
சிருஷ்டிக்கு -செய்ய உபயோகி ஞான  சக்தி யாதிகளை உடையவன்
தன் தனி முதல்
தனக்கு ச்வம்மாய் -சொத்து
மூல பிரகிருதி
பரமாணு காரனத்வாதியை வ்யாவர்த்திகிறது
ஏக காரணம் -பரமாணு காரணம் -அதுக்கும் இவன் காரணம்
பகு ச்யாம் சங்கல்பம்
மிகும் தேவும் -தன்னோடு விகல்பிகலாம் படி  அந்தர்யாமியாய் நின்றாலும் –
தானே நிற்கும் படி -கொடி படர சுள்ளி கால் கொள் கொம்பு -கொம்பே தெரியாமல் படர -கொடியே நிற்பதாக
அது போல் மிகும் தேவும் -இவனை மறைத்து
வில்லை வளைத்த போதாகா -வால்மீகி ராமாயணம் பரசு ராமர்
ஐந்தாம் பாட்டில்

தகும் சீர் -மூல காரணமான பிரகிருதி தனி

முதல் சங்கல்பம் இரண்டையும் சொல்லி -தனி முதல் –
மிகு சீர் -மசக்கு  பறல் இடலாம் படி போலி தேவ ஜாதி -duplicate -போலே
வில்லை வளைத்த பொது
தகும் போலே தாமரை கண்ணன்-ரஷகன் இல்லாவிடிலும்
கண் அழகில்
திருவடி தோற்ற துறையில் இவரும் தோற்றார்
விஸ்வ கர்மா இரண்டு வில் பண்ண -ருத்ரன் -நாராயணன் இருவருக்கும் கொடுக்க –
மூச்சு விட ருத்ரன் விழி முறிய ஹூங்காரம் -ஒன்றாலே –
அதிகம் மேனிரே விஷ்ணு சொல்லும் படி மிக்க தேவர் –
தகும் கோல தாமரை கண்ணன் ஸ்பஷ்டம்
ரஷகத்வம் இல்லை என்றாலும் ஜிதம் தோற்பித்த துறை கண் அழகு
விடப்போகாத தர்சநீயமான கண் அழகு
கார்ய வர்க்கம் தோற்ற துறையில் இவர் தோற்றார்
ராமக கமலா பத்ராட்ஷா -திருவடி வார்த்தை
சர்வ சத்வ மனோ கர -தேஜச ஆதித்ய சங்காச பிரகஸ்பதி சம புத்தா –
சர்வாங்க சுந்தராக இருக்கை -அதிலே சுழி ஆயிற்று கண் அழகு -அமிழுவாருக்கு வேண்டியது
கமலா பத்ர அஷர தாமரை இலை போன்ற கண் -காஞ்சி ஸ்வாமி –
கமலம் இவ அஷினி பத்ரம் இவ தேவ -அசாம் கண் காயம் உடம்பு இரண்டு அர்த்தம்
அக்கமலத்து இலை போலும் திருமேனி –
எல்லை எது சர்வ சத்யா மனோ கரைய
திர்யக் ஜாதியாக பனை தாவும் என்னையும் ஈர்த்ததே
தேக ஆத்மா குணம் -குறை அற்றவனாய் இருக்கிறான்
உத்பத்தி தொடக்கமாக -சகஜம் –
நாராயண பரம் ஜோதி மிகும் சோதி ஜோதிஸ் வடிவாக
வேத அபகாரக -ச்வாபிவிக அதிசய -பரத்வம் சொல்லி வைதிகன் அனைவரும்
அநந்ய பரர் -நாராயண அனுவாதிகம்
வைதிகன்  காக உண்டாகில் அவைதிகனாம் இத்தனை
உன்னை பரத்வமில்லை என்பவன் வைதிகன் அல்லன்
நாராயணம் பத்ம புரானம்விஷ்ணு பக்தி இல்லாதவன் சாஸ்திரம் கற்றவனாலும் ப்ராக்மானுயமும் இல்லை
புத்திரன் தகப்பனை த்வேஷித்தால் —
மேல் அறிவர் எவரே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?

    பொ – ரை : தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்குத் தனது திருவுந்தித் தாமரையினின்றும் நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்த ஒளியினையுடையவனான எம்பெருமானுக்கு அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அருச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா என்றபடி.

    வி – கு : ‘தேவு – தெய்வத்துக்கு ஒரு பெயர்’ என்பர், நச்சினார்க்கினியர். (சிந். கட. வாழ்த்) ‘படைக்கப் படைத்த தேவன்’ என்றும், ‘அல்லால் தகுமோ?’ என்றும் முடிக்க. தகுமே – ஏகாரம் எதிர்மறைப் பொருளது. பூசனை – நாடோறும் கடவுளர்க்குச் செய்யப்படும் வழிபாடு முதலியன. ‘சிறப்பொடு பூசனை செல்லாது’ என்றார் திருவள்ளுவர்.

    ஈடு : நான்காம் பாட்டு 3‘சௌகுமார்யத்தாலும் முதன்மை யாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

 தேவும் எப்பொருளும் படைக்கப் 1பூவில் நான்முகனைப் படைத்த தேவன் – தேவர்களுடைய கூட்டங்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்காக, 2ஒரு பூவில் நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன். தேவன் – பிரமனைப் படைத்தவன் ஆதலின், அதனால் உண்டான காந்தியினையுடையவன். இனி, ‘தேவன்’ என்பதற்குப் படைத்தல் முதலிய தொழில்களை விளையாட்டாக உடையவன் என்றும், அழகு முதலியவைகளால் வந்த விளக்கத்தினை உடையவன் என்றும் கோடலுமாம். எம்பெருமானுக்கு அல்லால் – படைத்தல் முதலிய தொழில்களைச் செய்த உபகாரத்தாலும் படைத்தலுக்கு உறுப்பான குணங்களாலும் என்னை அடிமை கொண்டவனுக்கு அல்லாமல். பூவும் பூசனையும் தகுமே – 3சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது; பூத்தகுவது சுகுமாரனுக்கு; பூசனை தகுவது முதன்மையுடையவனுக்கு; ஆதலால், இவனை ஒழிந்தவர்க்குத் தகாது,’ என்கிறார்.

    இறைவனுடைய முதன்மையினை நெடும்போது விரிவாகக் கூறிக் கொண்டே வந்து, 5‘பெரியதாயும் விசாலமானதாயும் நீண்டதாயும் இருக்கிற திருக்கண்களையுடையவன்காண், உங்களுக்கு மைத்துனனாகப் புகுந்திருக்கிற கிருஷ்ணன்,’ என்று அவ்விறமைத் தன்மையினைக் கிருஷ்ணன்மேல் மாட்டெறிந்தான், தத்துவ ஞானியான வீடுமன். அவ்வாறு மாட்டெறிந்து முதன்மையினை அறுதியிட்ட வீடுமனுக்கு ஒரு சிறப்பும் செய்திலர் தேவர்கள், 6‘கிருஷ்ண பரமாத்துமாவை, இந்த இராய சூய யாகத்தில் பூசிக்கத் தக்கவராக நாங்கள் விரும்புகிறோம்; இச்சபையில் இருக்கிற நீங்கள் எல்லோரும்.

அவரைப் பூசிப்பத்தற்கு உங்கள் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தக்கவர்களாய் இருக்கின்றீர்கள்,’ என்று சகாதேவன் கூறித் தனது வைராக்கியத்தைத் தெரிவித்த காலத்தில், அவன் வைராக்கியத்தைக் கண்ட தேவர்கள், அவன் தலையில் மலர் மாரியைப் பெய்து அவனை வாழ்த்தினார்கள். இதனால், ஒருதலையாக வேண்டற் பாலது ஞானத்தைக் காட்டிலும் வைராக்கியமே என்பது புலப்படும். ஆதலால். இவரும், ‘அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும், ‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், ‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும், ‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும் அவ்வைராக்கியத்தையே அருளிச்செய்தார்.

 

 ‘ஒரு பூ’ என்றது, பிரமன் உதித்த உந்தித் தாமரையினை ‘நான்கு பூ’ என்றது, நான்கு
முகங்களை.

மென்மை மேன்மை சொவ்குமார்யம்
பூவும் பூசனை கொண்டு முதன்மை
தேவும் எப்பொருளையும் படைக்க நான் முகனை பூவை படைத்த
அவன் ஒருவனுக்குதான் பூவும் பூசனையும்
தேவ ஜாதிகளையும்
ஒரு பூவில் நான்கு பூ பூத்தாது போலே
தேவன் -க்ரீடா காந்தி சதுர முக ஸ்ருஷ்டாவால் வந்த தேஜஸ்
விளையாட்டு .
ஸ்ருஷ்டியாதி உபகாரம் குணம் இத்தால் என்னை  எழுதி கொண்டவன் எம்பெருமான்
மற்றவர்க்கு பூவும் பூசனையும் தகுமோ
சிக்கு தலையனுக்கு பூ தகாது -ஜடா முடியன் ருத்ரன்
பிச்சி உண்னிக்கு பூசனை   தகுமோ –
சிக்கு தலையன் பிரமா அரும் பதம்
எம்பார் -ஐ திஹ்யம்
உள்ளம் கை நாயனார் -காலஹஸ்தி பிரதிடை -எம்பெருமானார்
திருமலை நம்பி -கோவிந்தன் அப் பொழுது
திண்ணன் வீடு கால ஷேபம் செய்து –
தகாது தகாது தகாது -குடலை விட்டு எரிந்து திருவடிகளில் ஆஸ்ர்யயித்தார்
ராஜ சூயை யாகம் -வார்த்தை -சகா ஏஷா –தீர்க்காஷன் -சம்பந்தி தேக பந்து -ஜனார்த்தனன் -பீஷ்மர் நெடும் பொது சொல்ல
சுருதி சித்தமான தாமரை கண்ணன் கப்யாசம் புண்டரீகாஷம் ஏவம் அஷனி பரத்வம் அவன் தலையில் இட்டு
மார்கண்டேய புராணம் –
ஜீயர் அரும் பதம் -பிரமாண திரட்டு
விதி ரேகம் -பிரமாணம்
சத்யம் -சகாதேவன் வாக்கியம் –கூடாது என்பர் தலை மேல் காலை வைப்பேன் -சொன்னதும் –
புஷ்ப வ்ருஷ்டி விழ –
அன்வயம் பீஷ்மருக்கு விழ வில்லை
விதி ரேகம் சொல்வது விசேஷம் காட்ட
ஆழ்வாரும் அத்தால் சொல்லிக் கொண்டே போக –
ஞானம் விட வைராக்யத்துக்கு ஏற்றம் இத்தால்சொல்லி .

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 8, 2012

ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை
வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து
மேல்தன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட
மால்தனின் மிக்கும்ஒர் தேவும் உளதே?

    பொ – ரை : ‘இடப வாகனத்தையுடைய சிவனையும் தாமரைப் பூவில் பிறந்த பிரமனையும், தாமரைப் பூவில் வீற்றிருக்கிற பெரிய பிராட்டியாரையும் வேறுபாடு இன்றி, அயர்வறும் அமரர்கள் தொழும் படி தனது திருமேனியில் வைத்து, மேலே உள்ள உலகங்களுக்கு எல்லாம் மேலே செல்லும்படி வளர்ந்து உலகத்தை அளந்துகொண்ட அறப்பெரிய தெய்வத்தைக்காட்டிலும் உயர்ந்ததாகக் கூறத்தக்க வேறு தெய்வமும் உளதோ? இல்லை’என்றவாறு.

    வி-கு : ‘தொழவைத்து நிமிர்ந்துகொண்ட மால்’ என்க. உளதே – ஏகாரம் எதிர்மறைப்பொருளது. ‘மாறுகொள் எச்சமும்’ என்ற எழுத்ததிகாரச் சூத்திரத்தில் எதிர்மறைப்பொருளையும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளமை காண்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘சௌசீல்யத்தாலும், உலகங்களை எல்லாம் மூன்று அடிகளால் அளத்தலாகிய மனிதர்கள் அளவுக்கு அப்பாற்பட்ட செயலாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

 ஏறனை – சர்வேஸ்வரன் ‘கருடவாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று, ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப்போன்று இறுமாந்து இருப்பவன். பூவனை – ‘திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன். அதாவது, தாமரைப்பூவில் பிறந்தவனாதலின் பிறப்பு இல்லாதவன் என்று நினைத்திருப்பவன் என்றபடி. பூமகள் தன்னை – தாமரைப்பூவில் வாசனையும் உபாதானமாகப் பிறந்தவளாய், இன்பமே ஒரு வடிவு கொண்டவளாய், 1‘உனக்கு ஏற்கும்’ என்னும்படி தலைமை தோன்ற, ‘பூமகள் தன்னை’ என்கிறார். மற்றும், அவர்களை ‘ஏறனை, பூவனை’ என்கிற விருப்பம் இன்மையைப் புலப்படுத்துகிற வார்த்தைகளாற் கூறியவதனானும் இவளுடைய முதன்மை தோன்றும்.

    விண் தொழ வேறு இன்றித் தன்னுள் வைத்து – வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும், வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற சீலத்தை நினைத்து விண்ணினுள்ளார் தொழாநிற்பார்கள். ‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, 2‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச்செய்தார். 3‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனி உடம்பன்’ என்கிறபடியே, வேறுபாடு இன்றி உடம்பைக் கொடுத்துள்ளானாதலின், ‘வேறின்றி’ என்கிறார். ’கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ‘விண்’ என்பது இடவாகுபெயர். இங்குள்ளார் 4‘ஜஸ்வரியம்’ என்றிருப்பார்கள்; அங்குள்ளார் ‘சீலம்’ என்று தோற்று இருப்பார்களாதலின், ‘விண் தொழ’ என்கிறார்.

    மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண்கொண்ட – மேலே உள்ள உலகங்களை 5‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே, விஞ்ச வளர்ந்து,

பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்ட. மால் தனில் – இவ்வதிமா நுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும். ஓர் தேவும் உளதே – ஒக்கப் பரிமாறாநிற்க, 1‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?

    2‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.

சௌசீல்யம்  அதி மானுஷ செஷ்டிதம்
திரி விக்ரமன் வ்ருத்தாந்தம்
திருவடி நீட்டி ஒருவன் கழுவ
ஒருவன் தலையில் தாங்கமாத்ச்ய புராண பிரசித்தம் கபாலி மோஷம் அருளினார் முன்னர்

இதிகாச புராண பிரக்ரியை என்பதால்
இதில் அதி மானுஷ செஷ்டிதம்
சௌசீல்யம் திரு விக்ரமன் சரித்ரம் அருளுகிறார்
ஏறன்-எருகின்ற்றவன் ஏற்றி உடையவன் ஏற்றான் ருத்ரன்
பூவன் புஷ்பத்தில் உண்டானானவன்
பூ மகள் தன்னையும் -வாசி இன்றி -வேறின்றி-
விண் தொழ -இத்தை நினைத்து நித்ய சூரிகள தொழ
மேல் மீதிட -நிமிர்ந்து மண் கொண்ட -மால் தன்னில் மாறன் –
சர்வேஸ்வரன் கருட வாகனன் போலே
நானும் வாகனம் எருது கொண்டு இறுமாந்து இருக்கும் ருத்ரன்
வேதாத்மா விககேச்வரன் -வேதமே வடிவு எடுத்தவன் .
எருதை தேடி -கை கொள் ஆண்டி பூம் பூம் மாட்டுக்காரன் போலே –
குடுகுடைப்பை காரன் -இறுமாந்து இதற்கே
பூவனை-திரு நாபி கமலத்தில் அவ்வ்யதானம் இன்றி இடை வெளி இன்றி நேராக படைக்க பெற்ற இறுமாப்பு
பத்ம யோநித்வத்தால் அஜன் -என்று கருவித்து இருக்கிறான் –
மற்றவர் போலே பிறக்காதவன் அஜன் -யோனி சம்பந்தம் இல்லாமல் .
பரிமளம் உபாதாநமாக பிறந்தவள் குடத்துக்கு மண் உபாதானம் போல்
பூ வாசனையே இவள் போக்யதையே வடிவு
உனக்கு ஏற்ற கோல மலர் பாவை
பூ மகள் தன்னை சொல்லல் ஏற்றம் –
சாத்தனை கூத்தனை போல் அனாத யுக்தி ஏரன் பூவன்
பூ மகள் தன்னை விசேஷித்து சொல்லி
தன்னுள் வைத்து -விண் தொழ தன்னுள் வைத்து
வேறின்றி தன்னுள் வைத்து
அந்ய பரர் அநந்ய பெரிய ப்ராட்டியாருக்கும் -ஒக்க முகம் கொடுத்து வைக்கும் சீலம்
அனுசந்தித்து நித்ய சூரிகள் தொழ -தேவர்கள் இல்லை -பிரம ருத்ராதிகளை சொல்லுவதால்
இறையும் அகலகில்லேன் போல் இன்றி
நஞ்சீயர் பட்டர் சம்வாதம்
ஓர் ஒரு ஆபத்துக்களில் திரு மேனியில் இடம் கொடுக்கிறான் –
அத்தை நீர்மை விடமாட்டாமல் வாய் புலத்துகிறார்கள்-
வலத்தனன்  திரி புரம் உள்ளே குடி இருந்துநீங்கி போன பின்பும்  -இன்னார்இடம் சொல்லி கொள்வது போலே –
கூராளும்-விண் தொழ -மஞ்சா க்ரோசந்தி போலே கட்டில் சப்தம் போலே
ஊர் சிரிக்கும் -அது போல் ஆகு பெயர் இங்கும் .
பிரம ருத்ராதிகள் இருப்பதை
இங்குள்ளார் ஐஸ்வர்யம் என்று இருப்பார்கள்
அங்குள்ளார் சீலம் என்று இருப்பார்கள் .-நித்ய சூரிகள் –
மேல் தன்னை -உபரித லோகங்களை
ஒரு கால் நிற்ப -அண்டம் -அப்பால் மிக்கு -விஞ்ச வளர்ந்த பூமி பரப்பு எல்லாம் இட்டு கொண்ட
மகா பலி நினைத்ததுக்கு அப்பால் –
தாரகையின் புரம் தடவி அப்பால் மிக்கு –
மேல் தன்னை -திருவடிகளின் கீழே இட்டு கொண்டவன் –
மாறனில்-சர்வேஸ்வரன் -காட்டிலும் மிக்குமோர் தேவுமுளதோ
கட்டகுடி -கஷ்டக் குடி அதி நிர்த்தன குடும்பி -அல்ப ஜீவனம் எடுத்து கழிக்க கூட கழிக்க தெய்வம் இல்லை .
குடி மகன் அனைவரும் –
ஒக்க பரிமாறா நிற்க கட்டக்குடி என்று களிக்க
இவன் காலில் துகை உண்டவர்கள் அனைவரும்
பரத்வம் -விபவத்தில் –
இதிகாச புராண பிரக்ரியை
விதி ரேகத்தில் அருளி .
மால் தனில் -மாறனில் எதிகைக்கு ஆனது
காஞ்சி ஸ்வாமி-தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
மதுர கவி ஆழ்வார் ஆச்சார்யர் சொன்னதை தான் சிஷ்யன் சொல்லி
மாறனில் மிக்கதோர் தேவு உளதோ .அர்த்தம் வேண்டாம் சப்தம்

 

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 5, 2012

ஏஎபா வம்!பர மே!ஏழ் உலகும்
ஈபா வம்செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மாபா வம்விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி 3ஏறுஅன் றீயே?

    பொ – ரை : ‘பிரமனுடைய தலையினைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்குபடி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய, கோகுலத்திற்பிறந்தார்க்கு எல்லாம் வலிய ஆண் சிங்கத்தினை ஒத்த கிருஷ்ணனை அன்றி, உலகங்கள் ஏழிலும் உள்ள அவ்வவ்வுயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்து ஆவதே!’ என்கிறார்.

    வி – கு : ‘ஏஎ’ என்பது, இரக்கத்தின்கண் வந்தது. பரம் – பாரம்; கடமை.
ஈ – அழித்தல். ‘தழல் – அழல்; மலர் – அலர்’ என்பன போன்று, ‘வீ’ என்பது மெய்ம்முதல் கெட்டு ‘ஈ’ என உயிர்

மாத்திரையாய் நின்றது. ‘உலகு’ என்பது, ஈண்டு உயிர்களுக்கு ஆயிற்று. ‘விடப்பெய் கோபாலன்’ என முடிக்க, ‘அருளால் ஈ பாவம் செய்து’ என்று அருளால் என்பதனை முன்னுங்கூட்டுக. கோளரி ஏறு அன்றி அருளால் அளிப்பார் ‘ஆர்?’ என்க. யார் என்பது ‘ஆர்’ என மருவிற்று.

    ஈடு : இரண்டாம் பாட்டு. ‘அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? பிரமனும் சிவனும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின், ‘‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்; அவர்கள்ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான் இவன்; அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்.

    ‘ஏஎ’ என்றது ‘ஓஒ’ என்றபடி. இதனால் துக்கத்தின் மிகுதியினைக் குறிக்கிறார். ஏஎ பாவம் – இரத்தினத்திற்கும் காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்ல வேண்டுவதே! மக்கள் சிற்றறிவினர்களாய் இருத்தலின், பகவானுடைய  பரத்துவத்தை விளக்கவேண்டி இருக்கின்றதே என்னும் இன்னாப்பாலே ’என்னே பாவம்!’ என்கிறார். பரமே –1‘பகவானுடைய குணங்களைஅநுபவிக்குமது ஒழிய, இது நமக்குக் கடமை ஆவதே! இதுநாம்செய்யக்கூடியதாக வந்து விழுவதே!’ என்றபடி. ஏழ் உலகும் -ஏழ் உலகங்களிலும் உண்டான மக்கள் இருக்தே குடியாகப் பாவங்களைச் செய்து அப்பாவங்களால் தங்களை நிறைத்துக்கொள்ள. ஈ பாவம் செய்து – பாவங்களை அழியும் படியாகச் செய்து. அருளால் – பாவங்களை அழிக்கும் போது, மக்கள் விரும்ப, தான் செய்தல் அன்றி நிர்வேஹதுகக் கிருபையாலே. அளிப்பார் ஆர் – இவர்களை ஈரக்கையால் தடவிக் காப்பார் ஆர்? அளிப்பான் இவன் என்னாதே ‘ஆர்’ என்கிறார். அவர்களுக்கும் சத்துவம் தலை எடுத்தபோது, ‘நீர் சொல்லுகிறவனே’ என்று இசையவேண்டும் பிரசித்தியாலே. 2‘ஸ்ரீராமா!! நீதான் எல்லா உலகங்களிலும் இருக்கின்ற எல்லா உயிர்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கித் தூய்மை ஆக்குபவன்,’ என்றும், 3‘காப்பாற்றுவதில் நிலை நின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கின்ற விஷ்ணுவைத் தவிர,

காத்தலாகிய ஆற்றலானது வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காண்க. ‘மக்கள், தாங்கள் செய்த பாவங்களைப் பிராயச்சித்தத்தால் (கழுவாய்) போக்கிக்கொள்ள ஒண்ணாதோ?’ எனின், இவர்கள் செய்த பாவம் அவன் அருளால் போக்கில் போமத்தனை அல்லது, தாங்கள் பிராயச்சித்தம் செய்து போக்குதல் என்பது, அவற்றை மேன்மேலும் வளர்த்தலாகவே முடியும்.

    ‘அவன் எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை நிற்க; 1தந்தம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ என்கிறார் மேல்: மா பாவம் விட – 2‘பின்னால், கோபத்தால் பீடிக்கப்பட்டவனாயும் சிவந்த கண்களையுடையவனாயும் இருக்கிற என்னால் இடக்கைக் கட்டைவிரல் நகத்தின் நுனியால் அந்தப் பிரமனுடைய தலை கிள்ளப்பட்டது,’ என்கிறபடியே, உலகத்திற்கெல்லாம் குருவாயும் தனக்குத் தந்தையாயும் இருக்கிறவன் தலையை அறுத்துப் பாவத்தையுடையவனாய் நின்றான்; நின்ற அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

    அரற்குப் பிச்சை பெய் கோபால கோள் அரி ஏறு – ‘சிவன், அழிக்கும் தலைவனான வேஷத்தோடே அதிகாரம் குலையாதே நின்று பாவத்தை விளைத்துக்கொண்டான்’ என்பார், ‘அரன்’ என்கிறார். ‘இறைவன், அவனுடைய துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார். இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும், இறைவன் எத்துணைத் தன்னைத் தாழவிட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன. கோபால கோள் அரி ஏறு – கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம். கோள் – வலிமை. ‘பிறருடைய வலிமையினைக் கொள்ளுகின்ற’

என்று உரைத்தலுமாம். நித்தியசூரிகளை எல்லாம் ஏவுகின்ற இறைவன் ஆயர்களால் ஏவப்படுகின்றவனாய் இருக்கும் செருக்கினைத் தெரிவிப்பார், ‘அரியேறு’ என்கிறார்.

    ‘தீவினைகளால் பீடிக்கப்பட்டவர்களாய்த் துன்பத்தினை அடைகின்ற இவர்களை ஈஸ்வரர்கள் என்போமோ, ஆபத்துகளைப் போக்கிப் பாதுகாக்கும் இவனை ஈஸ்வரன் என்போமோ?’ என்கிறார்.      

பிரமாணங்கள் பிரம ருத்ராதிகளுக்கும் உண்டே

அவர்கள் நிலைகளை ஆராய்ந்து பார்த்தல்
தலை அறுப்பார் சிலரும் அறுப்புண்டு சிலரும்
அவர்கள் ஆபத்தை போக்கி ரஷித்தவன் இவன் தானே
எ பாவம் பரமே
இது கூட உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்கே
பிரசித்தமான விஷயம்
பரம் பாரம்
ஏழு உலக்கையும் ஈ பாபம் செய்து
பாகங்கள் அழித்து காத்து
மா பாபம் விட அரனுக்கு -பிச்சை பெய்த கோபால கோளரி
ஏ -ஒ ஒ பிராந்திய பாஷை -ஏ என்ன  இப்ப வந்தாய்
ஒ ஒ உலகினது இயல்பே
விஷாத அதிசய சூசகம் துக்கம் மிகுந்து .
ஏ பாவம் ரத்னம் கரிக்கு வாசி சொல்லியா வைஷன்மயம் சொல்ல வேண்டுமா –
ரசிகனே இல்லாதவனுக்கு சொல்ல வேண்டி இருக்கே ஏ பாவம் பரமே

மந்த மதிகளாய் -பகவத் பரத்வம் சொல்ல என்ன பாவம்
பகவத் குண அனுபவம் சொல்லி போகாமல் இது நமக்கு சாத்தியமாய் போனதே
ஏழு உலகும் -இருந்ததே குடியாக பாவங்களை கூடு பூரிக்க -மேலே மேலே சேர்த்து -கொண்டு –
ஈ பாவம் செய்து ஈயும் படியாக செய்து
அழியும் படி
இது தான் சேதனர் அர்த்திக்காமல் அருளால் கிருபையால்
ஈரக்கையால் தடவி ரஷிப்பார் யார்
அவன் அருளால் தான் போக்க முடியும்
பிராயச்சித்தம் செய்து போக்கினால் மேலும் வர்த்திக்கப்பண்ணும்
அளிப்பான் இவன் எண்ணாதே அளிப்பான் யார்
அவர்களுக்கும் சத்வம் தலை எடுக்கும் பொழுது
பாவனம் ஏற்படுத்துபவன் அவன் தான் என்பார்களே
பாலான சாமர்த்தியம் ஹரிம்
ஹரி அம்சம் கொண்டே ரஷணம் தர்ம சாஸ்திரம் –
ராஜ ஆக்ஜை தடையாக இருந்தால் அதை பின் பற்று-
விஷ்ணு அம்சம் கொண்டவனே ராஜா -சட்டம் சாஸ்திரம் விட உயர்த்தி இதனால்
பிரளய -சர்வ விஷயம்
தம் தாம் கால் தாம் தான் நீட்டி மடக்க -சாமர்த்தியம் -ஓர் ஓர் அளவுகளிலே ஆபன்னராய் ஆனால்
மா பாபம்விட -பெரிய பாபம்
பெரியவன் ஆனைக்கு தக்க வாதம் இறே
ஞான சக்திகளாலே ஆதிக்கம் அதிகம் -ஆபத்தும் அதிகம் –
அவற்றை கொண்டு லோக குரு தனக்கு பிதா -சங்கரனை தான் படைத்தான்
தலையை அறுத்து பாதகனே நின்றான்
இடது கை நகத்தால் கட்டை விரலால் எடுத்தான் மாத்ச்ய புராண ஸ்லோகம்
கபாலம் நிறைந்து அகலும் -ஹிமவந்தம் தத்ர நாராயணா ஸ்ரீ மான்
தாரை -தஸ்ய விஷ்ணு பிரசாதம் சுச்ரோணி -பார்வதி பார்த்து சொல்லுகிறான் –
சகஸ்ரமாக சிதற சொப்பன தனம் போனது போலே கையில் அடையாளம் இன்றி போனது
பிரமாணம் –
அடி முடி தேடின கதை சிவன் பரத்வம் சொல்லுவார் புராணங்களில் இல்லை
ஸ்தல புரானனம் யாரோ கட்டி வைத்தது
அரக்கு பிச்சை
சம்கர்த்தா வேஷத்துடன் –
அழிக்கிற உத்தியோகம் செய்ததும் பாபமாக போக
அங்கெ இங்கே ஆவிர்பவித்து திரிகிற இடம் –
கோபால கோளரி  -பிச்சை பெய்தவன்
தாழ விட்டாலும் ரஷகன் இவன்
அவர்கள் எத்தனை ஏற விட்டாலும் பாப்பம்
கோபால கோளரி
ஏறு எழும் வென்று அடர்த்த எந்தை -நம்பி திரு வழுதி நாட  தாசர்
ஏறி உருவம் உடையவன் எருது வாகனம் கொண்டவன்
ஏறு ஏறி
பாறேறி உண்ட தலை பருந்துகள் கவ்வ
தலை வாய் நிறைய
சொல்லில் கதை .
ஏழு எருதுகளை வதம் பண்ணி பாபம் இல்லை
தகப்பன் தலை கிள்ளி பாபம் இவனுக்கு
கோ கத்தி பாவம் வல்லையே
அவன் தான் பர தேவதை
கோள் மிடுக்கு -பிரதி பஷம் கொள்ளும் விரோதி அழித்து
நித்ய சூரிகளுக்கு நியமிக்கிறவன் இடையராக வந்த மிடுக்கு
மா பாவம் குருபாதகம் -வேத அபகார -தைத்ய பீடா அசுரர்களால் ஆபத்து
குரு பாதகம் பெரிய பாபம் மா பாபம்
ஆபத்து போக்கி ரஷணம்
ஏறு அன்றி அருளால் காப்பவர் யாரும் இல்லை
அன்வயம் எதிரேகம் இரண்டாலும் சொல்லி இங்கும் .
யார் அகத்தினார் கபாலம் பிள்ளை பெருமாள் ஐயங்கார்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-2-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 5, 2012

இரண்டாந்திருவாய்மொழி

‘திண்ணன் வீடு’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்துபோமித்தனை என்று இருந்தார். பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்; ‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே, மற்றைப் பொருள்களினுடைய வேறு இழவுகளில் அளவு அல்லாத இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது; அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதப்படியாய், கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய 2வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி. ‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, 3எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது; ‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது. ‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின், ‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின், எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும். ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக இடத்திற்கு ஏற்பத் தோன்றிய இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.1இத்திருவாய்மொழியில்.

    இனி, ‘மேல் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்; அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை – இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பனிப்பர்திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

    ‘ஆயின், முதல்  திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின், 2‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்; ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன், இனி, பகவத் விஷயத்தில் கூறியது கூறல் என்ற குற்றமும் ஆகாது. ‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்; ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி கணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன். ‘ஆயின் ‘கணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின், பயிலா நிற்கச் செய்தே 3‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்; 4‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும். ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்பியம் ஆகிறது? ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு; முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், சுவாநுபவமாய் இருக்கும்; இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும். இங்கு விதிமுகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்; இங்கு 1விதிமுகம் மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார். அங்கு, 2சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார். 3அங்கு, முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் முதன்மை.

122

        திண்ணன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லைஓர் கண்ணே.

    பொ – ரை : என்றும் அழியாத பரம்பதம் முதலான எல்லா உலகங்கட்கும் உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களையுடையவனாய், அக்குணங்களைக் காட்டி என்னை அடிமை கொண்டவனாய், இவ்வுலகம் தெய்வ உலகம் முதலான எல்லா உலகங்களையும்  ஒருசேர உண்டவனாய் உள்ள நம் கண்ணபிரானே உலகத்திற்கு எல்லாம் களைகண்; அவனை அல்லது களைகண் ஆவார் ஒருவரும் இலர்.

    வி-கு : திண்ணன் என்பது, திண்ணம் என்பதன் விகாரம். திண்ணம் என்பது, வீட்டிற்கு அடைமொழி. இனி, இதனை ‘இல்லை ஓர் கண்; இது திண்ணம்’ எனக்கூட்டிப் பூட்டுவிற்பொருள் கோளாக உரைத்தலும் அமையும். இனி, ‘திண் நல்’ எனப்பிரித்தலுமாம்.

    ஈடு : முதற்பாட்டு, இத்திருவாய்மொழியில் சொல்லப்புகும் பரத்துவத்தைத் தொகுத்து அருளிச்செய்கிறார்.

    திண்ணன் வீடு முதல் முழுதுமாய் – திண்ணியதான பரமபதம் தொடக்கமான எல்லா உலகங்களையுமுடையனாய். திண்ணம்

என்றது, உறுதி என்றபடி. இது பரமபதத்திற்கு அடைமொழி. உறுதியாவது, 1ஆவிர்ப்பாவ திரோபாவ ஜன்ம நாச விகல்பங்கள் என்னுமவை இல்லாமையாலே கர்மம் காரணமாக வரும் அழிவு இல்லாமை. ‘ஆயின், விமானம் கோபுரம் மண்டபம் முதலியனவாகநிலை மாறுதல் நித்திய விபூதியில் உளவே?’ எனின், அவை இச்சை காரணமாக வருகின்றவை ஆதலின், குற்றம் அன்று; அவை அழிவாயும் தோற்றா. எவ்வாறாயினும், இவ்வுலகங்களைப் போன்று கருமங்கள் காரணமாக வருகின்ற தோற்றக் கேடுகள் இலவாதலின் ‘திண்ணம்’ என்கிறார். எண்ணின் மீதியன் – எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன். ஆக, இவ்விரண்டாலும் எல்லா உலகங்களையும், எல்லா நற்குணங்களையும் உடையவன் என்பதனைத் தெரிவித்தபடி.

    இனி, 2‘திண்ணன் வீடு முதல் முழுதுமாய்’ என்பதற்கு மோக்ஷம் கைவல்யம் செல்வம் ஆகிற உறுதிப் பொருள்களைக் கொடுக்கிறவன் என்றும், ‘எண்ணின் மீதியன்’ என்பதற்கு, ‘எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ என்றும் கூறலுமாம். அன்றி, ‘திண்ணன் வீடு முதல் முழுதுமாய்’ என்பது, மோக்ஷம் முதலான உறுதிப்பொருள்களைக் கொடுக்கிற கொடையாகிற குணம் ஒன்றனையே கூறுவதாகக் கொண்டு, எண்ணின் மீதியன் என்பது, எண் இல்லாத மற்றை நற்குணங்களைக் கூறுகிறது என்று கோடலுமாம். ஆக, குணங்களாலேயாதல், உலகங்களாலேயாதல் வந்த அளவிட முடியாத தன்மையைச் சொல்லுகிறது. எம்பெருமான் – குணங்களையும் உலகங்களையும் உடையனாய் இருக்கிற இருப்பைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவன்.

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் – பூமியையும் தெய்வ உலகங்களையும் வெள்ளம் கொள்ளப்புக, அவற்றுள் ஒன்றும் தப்பாதவாறு ஒரேகாலத்தில் அவற்றை எல்லாம் எடுத்துத் தன் திருவயிற்றிலே வைத்துக் காத்த நம் கண்ணன். காத்தல் அவனுக்குத் 1தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும். ‘ஆயின், உலகத்தை விழுங்கினவன் கிருஷ்ணனோ?’ என்னில், ஆம் கிருஷ்ணனே; 2அங்காந்திட வையம் ஏழும் கண்டாள் அன்றோ யசோதை? ஆக, இதனால், இப்படி உலகங்களையுமுடையனாய், உடைமை நோவுபட விட்டிருக்கையன்றி, பிரளய ஆபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கும் என்பதனைத் தெரிவித்தபடி கண் – சர்வ ரக்ஷகனான கிருஷ்ணனே உலகத்துக்குக் கண். 3‘உலகங்களுடைய தோற்றமும் கிருஷ்ணனே; காணப்படுகிற சராசரங்களாகிற எல்லாம் கிருஷ்ணன் பொருட்டாகவே இருக்கின்றன; இது பிரசித்தம்’ என்கிற பிரமாணப் பிரசித்தி இருக்கிறபடி.

    4அல்லது இல்லை ஓர் கண்ணே – அவன் அல்லது களைகண் ஆவார் வேறு ஒருவரும் இலர். ‘கண்’ என்பதற்குக் காப்பவன் என்னும் இப்பொருளைத் தவிர, இதனை வெறுஞ்சொல் அளவிலே கொண்டு, 5‘பீலிககண்’ என்று கூறும் வழக்கு உண்டு அன்றோ? அவ்வாறு வழங்கக்கூடிய பொருளும் வேறு ஒன்று இல்லை என்பார்,.

‘அல்லது இல்லை ஓர் கண்’ என்கிறார். ‘ஆயின், மற்றைத் தேவர்களும் காப்பவர்களாகக் கூறப்படுகின்றனரே?’ எனின், மாலைக்கண் என்று இருப்பார்க்கு அல்லாதவை எல்லாம் மாலைக்கண்ணாகத் தோற்றும். திண்ணம் – இது திடம். 2‘சத்தியம் சத்தியம்; மீண்டும் சத்தியம்; கைகளை மேலே தூக்கிச் சொல்லுகிறேன்; வேதமாகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் இல்லை; அது போன்று கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறு இல்லை’ என்றார் ஸ்ரீ வியாச பகவான். ஆதலின், இவரும் ‘திண்ணம்’ என்கிறார்.

    ‘நம் கண்ணன் கண்’ என்கையாலே விதிமுகத்தால் பரத்துவமும், ‘அல்லது இல்லை’ என்கையாலே மறைமுகத்தாலே பரத்துவமும் அருளிச்செய்தார்.  

1. ‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது, விதிமுகத்தாற் கூறியது. ‘அல்லது
இல்லை ஓர் கண்’ என்றது மறைமுகத்தாற்கூறியது.

திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் ‘மீதியன்’ என்பதற்கு மூன்று வகையாகப்
பொருள் அருளிச் செய்கிறார். ‘இனி’ என்று தொடங்குவது இரண்டாவது பொருள்.

      இரண்டாவது பொருளில், கொடுத்தலாகிய குணம் ஒன்றனையே கூறினாராயினும்,
உபலக்ஷணத்தால் மற்றைங் குணங்களையும் கொள்க. ‘ஈண்டு, உபலஷணத்தால் மற்றைக்
குணங்களையும் கொள்ள வேண்டுவது என்னை?’ எனின் – முன்றாவது பொருளில்,
‘மோக்ஷம் முதலான உறுதிப் பொருள்களைக் கொடுக்கிற கொடையாகிய குணம்
ஒன்றனையே கூறுவதாகக் கொண்டு’ என்று கூறுவதனால் என்க.

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே!’

  என்ற சிலப்பதிகாரப் பகுதியில், ‘என்ன கண்?’ என்பதற்கு முன்னர்க் கூறியவாறே கூறுக;
‘பீலிக்கண்ணும் உண்டாகலின்’ என்னும் உரைப்பகுதி ஈண்டு நோக்கத் தகும்.

திண்ணன் வீடு

பரத்வம் அனுசந்திக்க
பிராசன்கிகமான திரு  வாய் மொழி இது என்கிறார்
உஊனில் வாழ் உயர் ரே
இருக்க வேண்டும்
சந்தோஷம் வெளிப்படுத்து கிறார் அதில்
கீழில் ஆற்றாமை பேச்சுக்கு நிலம் இல்லை
கடல் வெதும்பினால் விளாவ நீர் உண்டு இல்லை .-
ஆழ்வார் துக்கத்துக்கு விஞ்சி மிக்க புலம்பல் முடிந்து போம் இத்தனை
முகம் காட்டவரே ஆற்றாமை புக்க இடம் கண்டு இல்லை
இதுக்கு அடி என் என்று ஆராய்ந்து பார்த்தால்
இதர விஷய லாப அலாபம் போல இல்லாத விஷய வைலஷ்ண்யம் .
பிரிந்த போதும் தன்னை விட வேறு ஓன்று தோன்றாத படி
கலந்த போதும் அப்படியே
இதுக்கு அடி சமஸ்த கல்யாண குணங்களுடன் கூடி
இதுக்கு அடி
சர்வேஸ்வரன் என்பதால்
உயர்வற உயர்நலம் உடையவன் என்றால்
அயர்வறும் அமரர்கள் அதி பதி என்பதால்
அந்த பரத்வம் சொல்ல ஆரம்பிக்கிறார்
இத்தால் தான் கை கொண்டான்
மூவா முதல்வா காரணத்வம் சொன்னதால்
அதை விளக்க பிள்ளான் நிர்வாகம்
முதலில் சொல்லிற்றே இறே  ஈச்வரத்வம்
ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி நிற்பார் அல்லர் இவர்
ஒரு  கால்  விடும் படியோ -விஷயமும் அப்படி கை வாங்க விடாதே
பகவத் விஷயத்தில் புனர் உக்தி தோஷம் ஆகாதே
கேசவா திரும்பி திரும்பி
ஒரு குணத்தையே எல்லா காலமும் அனுசந்தித்து அனுபவிகிக்க கூடுபவர் இவர்
தயா ஒன்றையே சதகம் தேசிகன்
ஷணம் தோறும் புதுமை பிறபித்து ஒரே குணத்தை அனுபவிக்க வல்லவன் அவன்
பயிலா நிற்க செய்து இருக்கவே பண்டு இவரை கண்டு அறிவது எவ்வூரில் யாம் –
அவுஊரில்  சொல்லுவாளாம் எவுஊரில்  சொல்வாளாம்
பயில்கின்றாளே கண்டீரே பட்டர்
நித்ய அபூர்வம்
ஈடுபாடு அவ்வளவு -அப்படி அனுபவிக்க கொடுக்கிறான் -தன்னை
புனர் உக்திதொஷமே இல்லையே பகவத் விஷயத்தில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம்
பரத்வம்மீண்டும் அனுபவிக்கிறார் இதில்
உண்ணும் சோறு  பருகும் நீர் தின்னும்வெற்றிலை எல்லாம் கண்ணன்
ஆனாலும் வாசி உண்டு
அங்கு பரத்வம் சவ்வ உபதேசம்
இங்கு பரோ உபதேச பிறர் நெஞ்சில் பதிய
அங்கு அன்வய முகத்தாலே அவனே
இங்கு அவன் அல்லது வேறு
அன்வய வியதிரேகா
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்
அங்கு உளன் சுடர் மிகு ஸ்ருதியில் -வேத சாயை
இங்கே இதிகாச கோபால கோளரி
அங்கு பரத்வத்தில் பரத்வம்
இங்கே விபவத்தில் பரத்வம் .அங்கே தம் மனசுக்கு சொல்லி இங்கு பர உபதேசம்

விபவ பரத்வம் .
சந்க்ரேகென முதல் பாசுரம் நிதானப்பாட்டு இது
திண்ணன் -திண்ணம் -உறுதியானது -திடம் என்றபடி .திடமான வீடு என்றும் சொல்லுவது எல்லாம் திண்ணம்
மனம் -மனன் போலே கடை போலி –
வீடு முதல் முழுதுமாய் -அனைத்துக்கும் நிர்வாகன்
எல்லாம் உண்ட  நன் கண்ணன்
கண்-ரஷகன்
கர்ம நிபந்தனமாக அழியாத வீடு -திண்ணம் வீடு -நித்யவிபூதி
லீலா விபூதி -அழிந்து மீண்டும் படைத்து –
ஆவிர்பாவம் -கர்மத்தால் திரோ பாவம் மறத்தல் ஞானம் சுருங்காமல் ஜன்ம நாச விகல்பம் -மாறுபாடுகள் இன்றி –
ஐக்யமாக வரும் இச்சையால் வரும் -இச்சித்து கைங்கர்யம் செய்ய மாறுதல் உண்டு –
கைங்கர்யம் பலரும் -பகவத் இச்சையாலும் இவன் இச்சையாலும் அங்கே
இங்கு அவன் இச்சை ஒன்றே காரணம்
கர்ம நிபந்தனம் சம்சார விநூதி போல் இல்லை –
திண்ணன் – முதல் முழுதும் -தொடக்கமான எல்லா விபூதிகளையும் உடையவன் –
சொல்லுவது எல்லாம் திண்ணம்
வீடு முதல்- மோஷம் தொடங்கி அனைத்து புருஷார்ர்தங்களையும் கொடுப்பவன்
எண்ணின் மீதியான் அப்பால் பட்டவன்
குண பரம் இது கீழ் விபூதி அர்த்தம் கொண்டால் .-
புருஷார்த்த அர்த்தம் ஆனால் –அங்கு குண பரம் இங்குவிபூதி பரம்
எண்ணுக்கு மேலாக
குணங்கள் ஆதால் -விபூதியாலும் -அளவுக்கு மேல் -அபரிச்சேதம் –
எம்பெருமான் -இப்படி பட்டவன் தன் இருப்பை காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
ஆவண ஓலை -குணங்கள் விபூதி காட்டி
உடைமை நோவு பட விடாமல் –உடையவன் -பிரளய ஆபத்தில் வயிற்றில் வைத்து நோக்கும் உடன் -உண்ட
வெள்ளம் கொள்ள புக -ஒன்றும் பிதிர் கதிர் படாமல் -எல்லாம் -உண்டான் –
வாரிப்பிடியாக கொண்டு போவான் -palaatform கடை போலே -மழை க்கு வாரிப்பிடியாக மூடுவது போல்
பரம பதம் கொண்டு போக ஆசைப்படுவான் அனைவரையும் -முடியவில்லையே -உண்பதாவது அனைத்தையும் உண்ணலாமே
ஒன்றும் நழுவாமல் உண்பானே –
மண்ணும் விண்ணும் எல்லாம் -உடன்-ஏக காலத்தில்
உண்ட -ரஷகம் தாரகம் என்பதால் உண்ட -இல்ல என்றால் காக்கும் என்பது அமையும்
கண்ணன் -கிரிஷ்ணனே -அங்கு வையம் ஏழும் கண்டாள் யசோதை -அங்காந்திட
மஞ்சள் தேக்க -பசும் சிறு நஞ்சளால் ஐய- நாக்கு வழித்தாளுக்கு
இவனே ஜகத்துக்கு தர்ஷ்டி கண் -ராஷை
கிருஷ்ண ஏவகி லோகாயாம் உத்பத்தி -பீஷ்ம பர்வதம் -ராஜ சூயை கட்டம் -அக்ரா தாம்பூலம் -அவன் தான் எல்லாம்
பூனா ஸ்லோகம் index உண்டு 125000 ஸ்லோகங்களுக்கும் அன்று ஓலை சுவடி தான் -மனசில் பதிந்து பூர்வர்கள்
கண்ணனே கண்
அல்லது  இல்லை ஓர் கண்
சப்தம் கொண்டு-அர்த்தம் கொண்டு – பீலிக் கண் போல் மற்றவை மயில் தோகை மயில் கண் போல் ரூபம்
அதுக்கும் கூச வேண்டும்படி இருக்கும்
கிஞ்சித் ஆகார தர்சத்தால் அங்கு சொல்லலாம் .
இங்கு அதுவும் கூட இல்லை சாத்ருசம் கூட இங்கே இல்லை
மாலைக்கண் என்று  இருப்பார்க்கு -அல்லாதது எல்லாம் மாலைக் கண்ணாய்  தோற்றும் -கண் இல்லாததாக தோற்றும்
மற்றவை கண்ணாகா தோற்றாது -இது திண்ணம்
மாலைக்கண் வியாதி -மாலை ரஷகனாக –
மாலை வேளையில் கண் தெரியாது -காலை கண் பெயர் வைத்து இருக்கலாம் –
மாலையில் கண் இல்லை என்பதால் மாலைக்கண்
சத்யம் சத்யம் -வேதசாஸ்த்ராம் கேசவன் வியாசர் சொல்லி -திண்ணம் இங்கும்
நம் கண்ணன் கண் அன்வயத்தில்பரத்வம்
அல்லது இல்லை ஓர் கண் வ்யதிரேக்கம்
உறுதியாக ஸ்தாபிக்கிறார்-
அவதாரத்தில் பரத்வம் –
பிள்ளை பெருமாள் ஐயங்கார் -ஆனைக்காவல்பெருமாளை பாட சொல்ல –
விஸ்வரூப பசு கவர்ந்து போய் அங்கே வைத்து
ருத்ரனை பாடி கூட்டி போக
இப்பொழுதே பாடு -ஒரு சீர் பதமாவது சொல்லும்
ஒன்றி மங்கை பாகன் -ஆரம்பித்து -பசுவை விட –
சடையில் வைத்த -கபாலம் யார் அகத்தினால்
உங்கள் தேவனோ
வெள்ளி வெற்பு அகன்றதோ
அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லை
திருவடி தீர்த்தம்
வனசமே முனிவன் பரமன்
செய்ய தாளின் மலர் அரனின்  சிரத்தில் இல்லையோ -பாசுபதாஸ்த்ரம் விருத்தாந்தம் –    .

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 4, 2012

 சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.

    பொ – ரை : ‘ஒன்றும் ஒழியாத எல்லாப்பொருள்கட்கும் மூல காரணானான பரஞ்சோதி உருவமாய் இருக்கின்ற இறைவனுக்கு, அமையாது மேலும் மேலும் வளர்கின்ற காதலையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபாராலே அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் நழுவ நில்லாதவர்கள் (கற்று வல்லவர்கள்) வைகுந்தம் அடைதல் உறுதியாம்’ என்றவாறு.

    வி – கு : ‘சேராத’ என்பது, பொருள்களின் குறைவின்மையைக் காட்ட வந்தது; சோர்தல் – நழுவுதல். சோரார் – வினையாலணையும் பெயர். கண்டீர் – தெளிவின்கண் வந்தது. திண்ணன – ஐயமின்மையின் கண் வந்தது.

    ஈடு : 2‘இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல், கண்டார் எல்லாம் பகவானைப் பெற்றுக் களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ என்கிறார்.

    சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கு – இவ்வளவிலே வந்து இவரோட கலந்து இவரை உளராக்குகையாலே, ஒன்றும் ஒழியாதபடி எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனுமாய், இவரோடே வந்து கலந்து அத்தாலே ஒளி உருவனுமாய் இருந்தான். இவர் ஒருவரையும் சோரக் கொடுக்கவே, எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாயுள்ள தன்மை அழியுமாதலின, இவர்க்கு வந்து முகங்காட்டுதற்கு

முன்பு எல்லாப் பொருள்கட்கும் ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது; இவர் இழவு தீர வந்து முகங்காட்டின பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார், ‘சேராத எப்பொருட்கும் ஆதி’என்கிறார். பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்றநின்றானாதலின்‘சோதிக்கு’ என்கிறார். இதனால், ‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இராநின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி. ஆராத காதல் – இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால் காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக் கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான 1அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு ‘ஆராத காதல்’ என்கிறார். காதல் குருகூர்ச் சடகோபன் – காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார். ‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின், 2தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.

    சொன்ன அவற்றுள் – இக்காதலோடே அருளிச் செய்த ஆயிரத்துள் அவற்றுள் இவை பத்தும் – அல்லாதவை ஒரு தலையாக, இத்திருவாய்மொழி ஒரு தலையாம் படி அக்காதலை வாய் விட்டுக் கூறிய பதிகமாதலின், ‘அவற்றுள் இவை பத்தும்’ என்கிறார். இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம். இங்கே இருந்து, கண்ணுக்கு இலக்கான பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள், இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் பகவானைப் பெற்றமையால் களிக்கும் நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள். ‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார். ‘திண்ணன’ என்றது, ஐயமின்மையைக் குறிக்க வந்தது. இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்? பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச் சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி, நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட, ‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி, இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக்காட்டினார்.    

நிகமத்தில் பலன் சொல்லி -பகவத் அலாபத்தால் நோவு படாமல் –

களித்து வர்த்திக்கும் பரம பதம் புகப் பெறுவார் –

ஆதியாம் ஜோதி காரண கர்த்தா

சோராத ஒன்றையும்விடாமல் உடைமை ஒன்றையும் கைவிடமாட்டான்

ஆழ்வாரிடம் சேர்த்து விட்டான்

சோரார் விடாதவருக்கு வைகுந்தம் உறுதி

இவரை உளர் ஆக்குகையலே ஈஸ்வரன்-தேஜஸ் உஜ்ஜ்வலம் –

கலந்ததால் வந்த தேஜஸ் –

முகம் காட்டும் முன்பு சர்வேஸ்வத்வமும் அழிந்தது போலே கிடந்தது –

வடிவில் புகர் இப்பொழுது தான்

இழவு தீர முகம் காட்டிய பின்பு தான் –

பேறு இழவுகள் இவரது அன்றிக்கே -அவனுக்கு தானே

வடிவிலே தெரியுமே இது

பிராப்தாவும் பிராபகமும் பிராப்தி உகப்பானும் அவனே

வடிவிலே புகரிலே தெரியுமே இவை என்கிறார் .க்ருதக்ருத்யா என்னும் படி ஆனான்

தாதா ராமா விபீஷணன் பட்டாபிஷேகம் செய்த பின் விஜுரா –

செய்ய வேண்டியதை செய்து பின்பு ததா ராமா பிறகு ராமரே ஆனார்

பிறகே தாம் உளர் ஆனார் பூர்வம் அராம ராக இருந்தார் –

இருப்பே கொள்ளே வில்லை சத்தையே கொள்ளவில்லை

விஜுர விகதக -வேண்டாம் சொல்வார்கள் தம்பிகள் எல்லாரும் இஷ்வாகு குளம் வந்தாலே பட்டாபிஷேகம் வேண்டாம் என்பரே

பிரமோதாக -ஹ -மோத- -ஹ கூட அர்த்தம் பூர்வர்கள்

 

ஆசார்யர் படுகிறார் ரிஷி -ஹ என்று
ஆதி யாம் ஜோதி இங்கு –
ஆராத காதல் -ப்ரேமம் பரவச்யம் -அபிநிவேசம்
கண்ணால் கண்டவையும் தம்மை போலே -அவற்றுக்கும் சேர்த்து நோவோ
காதல் குருகூர் சடகோபன் அதுவே ஸ்வரூபம்
தன்னை தம் படியை சொல்ல வேற யாரும் இல்லை
இக்காதல் உடன் அருளிற்று ஆயிரமும்
அல்லாதது ஒரு தலையாக இது ஒரு தலையாக –
அக்காதலை முக்த கண்டகமாக வாய் விட்டு வெளிய சொல்லிய காதல்
அனைவரும் பகவத் அலாபம் –
லாபத்தால் கழிக்கும் விடாதே நித்ய அனுபவம்
இப்பத்தை விடாதவர் அதை விடாதார்
கண்டீர் கை எடுத்து கூப்பிடுகிறார்
நிச்சயம் இது நடக்கும் .
சம்சயம் விபரீதம் இன்று
பகவத் பிரபாவம்சபதம் செய்து
பாட்டு முழுவதும் -அர்த்தம் தொகுத்து சொல்லி
அவன் வந்து முகம் காட்ட -விடாதே கொள் சொல்லி நிகமிக்கிறார்

 

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        வாயும் திருமால் மறையநிற்க ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியா தவற்றே டணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து.

மறைய நிற்க -வாயும் திரு மால்
ஆசை பட்ட அவன் மறைந்து
ஆற்றாமை விஞ்சி போய்
மிக்க புலம்புதளால்
அறியாதவற்றுடன் அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து நோக்கு
கடாஷிப்பார்

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

October 4, 2012

 வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்அளந்த
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.

    பொ – ரை : ‘கேசியினது வாயைப் பிளந்து, இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து உலகத்தையெல்லாம் அளந்த, காரியத்தில் சோம்புதல் இல்லாத முதல்வனே! சில நாள் வருந்த, அதனோடு அமையாது, மேன்மேலும் வருந்தும்படி வளர்ந்துகொண்டே செல்லுகின்ற வேட்கை நோயானது மிருதுவான உயிரை உள்ளேயுள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, இடைவிடாது எல்லாக் காலங்களிலும் உன் குணங்களைக் காட்டி, என்னை, உன்பக்கல் விழ விட்டுக்கொண்டு, நீ கடக்க நின்றாய்; இனிமேல் நான் தளரும்படி விடாதொழியவேண்டும்; என்கிறாள்.

    வி – கு : ‘வேவ ஆரா’ என்பது, ‘வேவாரா’ என விகாரப்பட்டது. ‘வேவ ஆரா நோய்’ என்றும், ‘உலர்த்த வீழ்த்து ஒழிந்தாய்’ என்றும், ‘பிளந்து போய் அளந்த முதல்வா’ என்றும் முடிக்க. வீழ்த்தொழிந் தாய் – ஒரு சொல்லுமாம். ‘இருந்தொழிந்தாய்’ (1. 4 : 8) என்றார் முன்னும். ‘வேட்கை – பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம்’ என்பர் நச்சினார்க்கினியர் (தொல். எழுத். 288.) சோரேல்; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.

 ஈடு : பத்தாம் பாட்டு. இவள் துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து, ‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறாள்.

    வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான், ஆக, ‘வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி. மெல் ஆவி உள் உலர்த்த – சரீரத்தில் உண்டான மிருதுத்தன்மை இவட்கு ஆத்துமாவிலும் உண்டாய் இருத்தலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.

    ஓவாது இராப்பகல் – வேவ ஆராத வேட்கை நோய் போன்று, இராப்பகலும் ஓவாது ஒழிதலின் ‘ஓவாது இராப்பகல்’என்கிறாள். உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய். இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம். இப்பொருளுக்கு

‘வீழ்த்தொழிந்தாய்’ என்பன இரண்டு சொற்கள்.  மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா – கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய், மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உதவிகளைச்செய்து, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் இரக்ஷணத்திலே முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே! இனி, 1‘மூவா முதல்வா’ என்பதற்கு, ‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’ என்று பொருள் கூறலும் ஒன்று.

    இனி எம்மைச் சோரேல்2 – கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள். இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே ‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.’ என்று கோடலுமாம். 3‘கழிந்து போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே, முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும் என்பாள், ‘இனி’ என்கிறாள். ‘போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள் என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள் என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;இது ஒன்றுமே எனக்குச் சோகத்திற்குக் காரணம்; 1போன பருவம் இப்பால் மீட்க ஒண்ணாதே!’ என்றார் ஸ்ரீராமபிரான்.

அவசானதம் எல்லாம் தீர சம்ச்லேஷித எம்பெருமான் –

இனி ஒரு நாளும் விடாதே ஒழிய வேணும் என்கிறாள்
மூவா முதல்வா இனி எம்மை சோரேல் -வைத்து அவதாரிகை –
வேவ்வாரா வேட்கை நோய் –வெந்தாலும் போகாத -நொந்தாரா காதல் நோய்
சரீரத்தில் உள்ளசொவ்குமார்யம் -ஆத்மாவுக்கும் உண்டே இவளுக்கு
மெல்லாவி –
உக்க காலுக்கும் -விளக்கு உளையுமே -அணியுமே
காற்று பட்டாலே அழியும் –
உள்ளே பிடித்து புறம்பு வரை வேவா நின்றது
வேரிலே வேட்கை தட்டி செடி வாடுமே –
அடியிலே நெருப்பு -கூடோக்னி பரதன் –
அதாக்யோயம் நெருப்பாலே எரிக்க முடியாது ஆத்மா
அக்னியால் முடியாதது -காதல் நோய் எரிக்குமே –
வெந்த இடமே விறகாக வேவா எரிகிறது மகதா -நெருப்பு மலை போலே
அக்னி பர்வதம் எரி மலை போல் நொந்தாரா காதல் நோய் வேவேரா வேட்கை நோய்
இராப்பகல் ஒழியாமல்
உன் பால் விழும் படி செய்து விட்டு
விழ விட்டு கொண்டே முகம் காட்டாமல் கடக்க நின்றாய்
மாவாய் பிளந்து கேசி வாயை அனாயசமாக கிழித்து
மருதிடை போய்
மண் அளந்த
உபகாரங்களை பண்ணி ஒன்றும் செய்யாமல் குறை பட்டு –
மூவா முதல்வா -ஜகத் சிருஷ்டி யாதிகளை
விரோதிகளை போக்கினது போல் முகம் காட்டி
ஆபத்தின் கனத்தால் வந்து முகம் காட்டுபவன் விசுவாசத்தால் சொல்கிறாள்
அண்டத்து குலத்துக்கு அதிபதி போல்
ரஷகன் நம்பிக்கை உண்டே
இனி -இருப்பதன் கால் இனி
முன்பு உள்ள காலம் இழந்தது தான் மீட்க முடியாதே
பெருமாள் -பிரியா தூரே -சொகிக்கிறேன் இல்லை பயணம் எடுக்க தீரும்
வழிய ரஷசால் பிரிய நோவா தலையை அறுக்க தீரும்
வயகா அஸ்ய-பிரிந்த காலம் திரும்பி வராதே -இனி -எம்மை சோரேல் –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.