வார்த்தை -265-
பிரபன்னத்வம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்மொழி -5-8-8-என்றும் –(அநந்ய கதித்வம் மஹா விஸ்வாஸம்)
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேன் -(கத்யந்தர ஸூன்யத்வம் மஹா விஸ்வாஸம்-)பெருமாள் திருமொழி -5-5-என்றும் –
அருள் நினைந்தே அழும் குழவி அது போன்று இருந்தேனே (ஸம்பந்த உறைப்பால் தருதுயரம் -அவனையே சொல்லலாம் அன்றோ)-பெருமாள் திருமொழி -5-1-என்றும்
அருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் –
கடைத்தலை இருந்து வாழும் -திருமாலை -38 என்றும் –
படியாய் கிடந்தது (அசித்வத் பாரதந்தர்யம் -குலசேகரன் படி)-பெருமாள் திருமொழி -4-9-என்றும்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -திருவாய்மொழி -9-9-6-என்றும் —
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15-என்றும் –
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3-என்றும்
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27 என்றும்
அவன் செய்யும் சேமம் -திருவாய்மொழி -7-5-10 என்றும் –
அவன் செய்வது செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும்– இருக்கை
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-
உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை-–அறிவிப்பே அமையும் – –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்-
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே— 5-5-
தானே ஏறிட்டுக் கொண்ட அகலம் எல்லாம் நீரிலே ஆழுகைக்கு உடலாம் அத்தனை இறே –
அவன் கை நெகிழ்ந்தான் என்று தோற்ற அடி மட்டையை உரக்கப் பற்றும் அத்தனை இறே –
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -5-1-
தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் பண்ணித் தவிர்த்துக் கொள்ளுகிறான் என்று நம்மைப் பழியிட்டு தள்ள நினைத்தான் ஆகிலும் நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் – நான் செய்த கர்மமும் பரதந்த்ரம் – நான் பண்ணும் சாதன அனுஷ்டானத்துக்கு பல பிரதன் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் ஆகையாலே –தரு துயரம் -என்கிறார் –
ஸ்ரீ முதலிகள் எல்லாரும் கூட ஸ்ரீ பெரிய திரு மண்டபத்துக்கு கீழாக இருந்து ரகஸ்யார்த்தங்கள் விசாரித்து எழுந்து இருப்பார்களாய்த்து- ஒரு நாள் நித்ய சம்சாரியாய்ப் போந்தவனுக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே – யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் என்னப் பிறந்தது –அவ்வளவிலே ஸ்ரீ கிடாம்பி பெருமாள் இருந்தவன் நமக்கு ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் போலே
ஸ்ரீ ஸூக்ருத தேவர் என்று ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயன் என்றான் –
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிற நீர் தாம் நினைத்து எத்தைக் காண் என்றார் —அதாவது ஒன்றை ஆராயப் புக்கால் அதுக்கு அவ்வருகு வேறு ஓன்று இன்றி இருப்பது இறே -அடியாவது –யாதொன்று பல பிரதமானது இறே உபாயமாவது -அல்லது நடுவே அநேக அவஸ்தை பிறந்தால் அவற்றின் அளவில் பர்யவசியாது இறே-இளைப்பாறுவது இதிலே சென்று இறே -நடுவு இளைப்பாறாது இறே –தரு துயரம் -என்னலாம் -இறே –தடாயேல் – நீ விளைத்த துக்கம் நீயே போக்காயாகில் –
மம மாயா துரத்யயா -என்றும் –மா மேவயே ப்ரபத்யந்தே மாயா மேதான் தரந்திதே –என்றும் நம்முடைய மாயை ஒருவரால் கடக்க ஒண்ணாது காண் என்றும் – இது கடக்க வேண்டி இருப்பவன் நம்மைப் பற்றி கழித்துக் கொள்வான் என்றும்-நீயே சொல்லி வைக்கையாலே நீயே துயர் தந்தாய் என்னும் படி தோற்றப் படுகிறது இறே – துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இறே இருப்பது – பண்ணினவன் தானே போக்கும் இத்தனை இறே–
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் – ஒரு -குருவி பிணைத்த பிணையல் ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை-ஒரு சர்வ சக்தி பிணைத்த பிணையை எலி எலும்பனான இவன் அவிழ்க்க என்று ஒரு கார்யம் இல்லை இறே –அவன் தன்னையே கால் கட்டி போக்கும் அத்தனை இறே -என்றார்-உன் சரண் அல்லால் சரண் இல்லை –இவ்வளவாக விளைத்துக் கொண்ட நான் எனக்கு இல்லை-பிறர் ரஷகர் உண்டாகிலும் நான் அவர்களை ரஷகராக கொள்ள மாட்டாமையாலே அவர்களும் இல்லை – நான் பண்ணும் சாதன அனுஷ்டானமும் எனக்கு கழுத்துக் கட்டி யாகையாலே-தேவரீர் திருவடிகள் அல்லது வேறு ஒரு உபாயம் இல்லை–
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் அவனே ரஷகன் என்னும் அத்யவசாயம் உண்டானாலும் -பேறு தாழ்த்தால் அவனை வெறுக்க வேண்டும் பிராப்தி உண்டு இறே சேதனன் ஆகையாலே – தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று அசித் சாமானமாக பாரதந்த்ர்யத்தைச் சொல்லி வைத்து எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –என்கிறது புருஷார்த்த சித்தி சேதனனுக்கு ஆக வேண்டி இறே –
அவனைக் குறித்து சேதன அசேதனங்கள் இரண்டுக்கும் பாரதந்த்ர்யம் அவிசிஷ்டமாய் இருக்கச் செய்தே புருஷார்த்த சித்தி இவனுக்கு உண்டாகிறது சேதனன் ஆகையால் இறே-அரி சினத்தால் –அரிந்து போக வேண்டும் சினத்தை யுடையாளாய்க் கொண்டு-ஈன்ற தாய் –
வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-அகற்றிடினும் –
அகற்றிடினும் என்கையாலே அகற்றுகை அசம்பாவிதம் -என்கிறது-ஈன்ற தாய் -என்கையாலே பெறுகைக்கு நோன்பு நோற்கையும்-பத்து மாசம் சுமக்கையும் -பிரவச வேதனை படுகையும் என்கிற இவை எல்லாம் உடையவள் -என்கை-அகற்றிடினும் –
இப்படி பெறுவதுக்கு முன்புள்ள வெல்லாம் துக்கமும் பட்டவள் ஆகையாலே வருகிறதை நினைக்குமது ஒழிய அகற்ற நினையாள் இறே -அவள் தான் அகல விடினும் – இத்தால் சொல்லிற்று யாய்த்து -நிருபாதிக தேவரீர் கை விடிலும் வேறு எனக்கு புகல் இல்லை என்கிறார் –மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி – இவள் கோபித்து விட்டாலும் வேறு ஒருவருடைய அருளை அபேஷியாது இறே பிரஜை – அதுக்கு அடியான பிரேமத்துக்கு அவதி உண்டாகில் இறே கோபத்துக்கு அவதி உள்ளது – ஸ்நேஹம் இல்லாமையாலே கோபமும் இல்லை இறே பிறருக்கு –
ஸ்ரீ நம்பி திரு வழுதி வள நாடு தாசரை ஸ்ரீ முதலியாண்டான் கோபித்து கையாலும் காலாலும் துகைத்து இழுத்தவாறே திண்ணையிலே பட்டினியே ஒரு நாள் போகாதே கிடந்தார் –ஸ்ரீ ஆண்டான் மற்றை நாள் அமுது செய்யப் புகுகிறார் -அவன் செய்தது என் என்று கேட்ட வாறே பட்டினியே வாசலிலே கிடந்தான் என்று கேட்டு அழைத்து -நீ போகாதே கிடந்தது என் -என்ன –ஒரு நாள் ஒரு பிடி சோறிட்டவன் எல்லா படியாலும் நிந்தித்தாலும் வாசல் விட்டுப் போகிறது இல்லை –ஸ்ரீ நாத நான் எங்கே போவது –என்றார்-அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –வேறு சிலரால் ஆற்ற ஒண்ணாது இறே-முன்னாள் முலை கொடுத்த உபகாரத்தை நினைத்து இருக்குமதாகையாலே -அவள் தானே ஆற்ற வேணுமே
ஸிஸூஸ்தநந்தய -என்றும் – அளவில் பிள்ளைமை -என்றும் சொல்லுகிறபடியே
அதாவது – ரக்த ஸ்பர்சம் உடையார் எல்லாரையும் அறியாதே மாதா ஒருத்தியையுமே அறியும் அளவே யாய்த்து அதி பால்யம் அப்படியே ஸ்ரீ எம்பெருமானைக் குறித்து இவ்வாத்ம வஸ்து நித்ய ஸ்தநந்த்யமாய்த்து இருப்பது-ஆகையால் இறே இவன் பேற்றுக்கு அவன் உபாயம் ஆகிறது –
சென்னியோங்கு தண் திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – –
என்னையும் என் உடைமையும் –ஆத்மாவையும் சரீரத்தையும் திரு இலச்சினை சாத்தி
ஆத்மாவுக்கு சாத்துகையாவது -அனந்யார்க்க சேஷத்வ ஞானம் பிறப்பிக்கை
அது பிறந்தமை தோற்ற இறே தோளுக்கு திரு இலச்சினை இடுவது –நின் அருளே –
இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது-அவன் அடியாக வரில் – விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல் (பெருமாள் திருமொழி -5-7-)-இத்யாதி-இருந்தேன் – உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில் –இனி பதறுகிறது என் –இனி என் திருக் குறிப்பே –என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான்
இன்னும் போவேனே கொலோ என்-கொல் அம்மான் திருவருளே(10-7-9)-திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-
உன் கடைத் தலை இருந்து –உன் தலைக்கடை -என்றபடி –சரணவ் -என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –ஸ்வ நிகர்ஷத்தை அனுசந்தித்து திருவடிகளிலே கிட்டாமையாலும் சம்சாரத்தின் தண்மையை அனுசந்தித்து புறம்பு போக மாட்டாமையாலும்
திரு வாசலைப் பற்றுகிறார் -திருக் கண்ண மங்கை யாண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றி கிடந்ததொரு நாயை நலிந்தவனை வெட்டி தானும் குத்திக் கொண்ட படியை கண்டு
ஒரு தேகாத்ம அபிமானி அளவு இது வானால் பரம சேதனன்-யமாதிகள் கையில் நம்மை விட்டுக் கொடான் –என்று திரு வாசலைப் பற்றிக் கிடந்தான் இறே-இருந்து – விஷயாந்தர பிராவண்யத்தால் பரகு பரகு என்று திரிந்தவன் – மரக்கலத்துக்கு நங்கூரம் அவிழ்த்து விட்டாப் போலே-அதஸோ பயங்கதோ பவதி -என்று-அபய ஸ்தானத்தைப் பற்றி நிர்ப்பயனாய் இருந்த படி –வாழும் –உபாயம் ஈச்வரனே யானால் போகம் இறே பின்பு உள்ளது –இருந்து வாழும் -என்று அவ்விருப்பு தானே வாழ்ச்சியான இருப்பு -என்றுமாம் –சோம்பரை உகத்தி போலும் –உன் பக்கலிலே ந்யஸ்த பரராய்-ஸ்வ ஹிதத்தில் சோம்பினவர்களைக் கண்டால் உனக்கு திரு உள்ளம் இங்கனே உகந்தாகாதே இருப்பது –வாழும் சோம்பர் -என்று கெடும் சோம்பரை வ்யாவர்த்திக்கிறது -என்றுமாம் –
அதாகிறது சாஸ்த்ரத்தில் நாஸ்திகராய் கர்த்தவ்யங்களை விடுகை அன்றிக்கே
ஆஸ்திக் யதிரேகத்தாலே நிரபேஷ உபாயத்தை ஸ்வீகரித்து பகவத் அனுபவமே யாத்ரையாய் ஸ்வ ஹிதத்தில் சோம்பி இருக்கை போலும் நித்ய ஸூரிகளை உகக்குமா போலே சோம்பரை உகப்புதி –
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-
தேவரீருடைய திரு வாசலிலே-அநந்ய பிரயோஜனரும் –பிரயோஜனாந்தர பரரும்-
அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் –அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –
அவனுடை யருள் பெறும் போதரிதால் அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெறுமள வாவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6-
அவனுடைய பிரசாதம் பெறுகை அரிதாகா நின்றது –கொள்வார் தேட்டமான அருள் நமக்குத் தேட்டமாவதே -தண்ணீர் பந்தலிலே சேர்ந்த விடாயர்க்கு குளிர்ந்த தண்ணீர் அரிதாய்-இருக்குமாறு போலே அன்றோ எனக்கு அவன் திருவருள் அரிதானபடி –சர்வ சாதாரணமான ஜலம் அது ஒழியச் செல்லாத தத்துவங்களுக்கு அரிதாப் போலே அவன் அருள் கிடைக்கும் அளவும் பந்துக்களுடைய இன் சொல்லாலே தரித்தாலோ என்ன –அவ்வருள் அல்லன வருளும் அல்ல–தாபார்த்தர் அக்னியைக் கொண்டு விடாய் தீருமா போலே தாயமாருடைய ஹித வசனத்தாலே தரிக்கவோ –விடாய் தீராத அளவல்ல –விடாயை விளைப்பதும் செய்யும் —நல்லான் அருள் அல்லால் பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15 -என்றதே அன்றோ –விடாய்த்தவனுக்கு நெருப்பு கூட்டங்களைக் கொண்டு விடாயை நீக்கினாப் போலே அன்றோ பிறர் உடைய அருள் நீக்க ஒண்ணாமை மாத்ரமே அன்று-தீமையையும் விளைவிக்கும் –அவன் அருள் தப்பாத பின்பு கிட்டும் தனையும் ஆறி இருந்தாலோ என்னில் –அவன் அருள் பெருமள வாவி நில்லாது-அவன் பிரசாதம் கிட்டும் அளவும் பிராணன் தரிக்கிறது-இல்லை – க்ரம ப்ராப்தியை சஹிப்பதொரு பிராணனை பெற்றோம் ஆகில் ஆறி இருக்கலாம் இறே-கிரமத்திலே அடைகிற வரையிலும் பொறுத்து இருப்பது-ஓர் உயிரைப் பெற்றோம் ஆகில்-ஆறி இருக்கலாயிற்றே –
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —-15-
இதுக்கு அடங்க காரண பூதனுமாய்-இவற்றை உடையானும் ஆகையாலே இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள அவனுடைய அருள் அல்லது பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள –பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்-இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு வாசி யடைய வ்யர்த்தம்-நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –பழுது தான் பலியாமையே அல்ல பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும் -அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்-திருவடி நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திரு -68–மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ-தேவ தாந்தரங்களுக்கும் உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்-தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-
அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி -11-8-8-
ஸ்ரமஹரமான தேசத்திலே வந்து சாய்ந்து அருளின நிருபாதிக பந்துவான தேவர் அவசர ப்ரதீஷராய் வந்து நிற்க-நான் வேறு சிலரை அபாஸ்ரயமாக நினைத்திரேன் – தேவரீருடைய சௌஹார்த்தம் ஒழிய வேறு ஒன்றைத் தஞ்சம் என்று வ்யவசிதனாய் இரேன் –
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-
நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பவ -“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.
ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –
உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –
உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –
யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.
அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி. இதனையே அருளிச் செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி. அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.
இரண்டாவது பொருள்.
“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,-உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி. அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.-‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.-அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.
மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,
உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,-பிராப்பியம் ஒரு பரம சேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே, இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.
சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-
இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை
அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் , சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து-பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி
திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும்-இத்தை கால் கடை கொண்டு ,-தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில் அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே இருப்பது அவன் படி(பக்தி உழவனின் பெரும் உபகாரங்கள் –ஷேம க்ருஷி பரம்பரைகளைப் பட்டியல் இடுகிறார்-யாதானும் பற்றி அன்றோ நாம் இவற்றைத் தப்புவது )இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்- தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-உத்தமன் என்றும் உளன் கண்டாய் –நாம் பாராமுகனாய் இருக்கும் அவஸ்தையிலும் அவன் ரஷித்தே தீருவான்-செம்கோன்-செவ்விய நிர்வாககன் —பதிம் விஸ்வஸ்ய —யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி
பாரார்த்யம் ஸ்வம் —என்று சொல்லலாம் படி இருக்கும்–அருளே- அவன் கிருபை அல்லது இல்லை — அவ் வருள் அல்லன அருளும் அல்ல — இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-
ஆத்ம ஸ்வரூபம் தெரியாத படி அறிவு கெடுக்கும் ஜென்மம் என்ன -அது புக்க இடத்தே புக்க கடவதான வியாதி என்ன -அத்தை பொறுத்தாலும் அவர்ஜனீயமாய் வரக் கடவதான மூப்பு என்ன -அதுக்கு எல்லையான மரணம் என்ன -இவற்றை அடைய –விரகர் நெடும் சுவ போக்க வேண்டும் படி இறே அதின் கனம்-அஹம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –என்றான் இறே–மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒரு வார்த்தை அன்றோ?
வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ?-மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது.–கீதையிலும் இத் திருவாய்மொழியிலும்-ஆத்ம அனுபவம் ஆகிற மஹா துக்கத்தை வாசனையோடு போக்கி -ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு அஸ்த்தர்ம் என்பதொரு நன்மை உண்டு -அபுருஷார்த்தம்-ஸ்திரமானத்துக்கு மேல் இல்லை இறே மஹா துக்கம் -அதுக்கு மேலே -பாத ரேகை போலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து.-நித்ய கைங்கர்யத்தை கொடுத்து அருளி-இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மை-இவனுக்கு ஒன்றும் செய்யாதாரைப் போலே என் செய்வோம் என்று இருக்கும் என்னுதல்-இக் கைங்கர்யத்துக்கு நிலவரான நித்ய ஸூரிகளோடு சேர்த்து யாவதாத்மபாவி யாக்கும் என்னுதல்-இம் மஹா உபகாரத்தை அனுசந்தித்து -இதுவே அர்த்தம் என்று தெளிந்து வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?-
கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-
செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்
———————————————
வார்த்தை -266-
முமுஷுத்வம் ஆவது –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்வது -பெரிய திருமொழி -6-3-8-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6-9-3-என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7-என்றும் –
செந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-8-3-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்வாய் -திருவாய்மொழி -8-5–7-என்றும் –
உனக்கு ஆட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -திருவாய்மொழி -5-8-10–என்றும் –
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -3-2-2-என்றும்
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-என்றும் இருக்கை –
——————————————————–
முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
உன் பக்கலிலே தெளிவை உடையேனாய் -ஸ்நேஹத்தை உடையேனாய் -அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான மநோ ரதத்தை உடைய -அநந்ய கதியான -எனக்கு
அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-திரு விண்ணகரானே – அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே -வெட்டிதான நிலத்திலே வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே
சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து அவதானத்தைப் பண்ணி அநவரதம் மநோ ரதிக்கும் படியான தெளிவை உடைய எனக்கு புநரா வ்ருத்தி இல்லாத மோஷத்தை தரப் பார்த்தது என்று அத்தைத் தருகைகாக வந்து நிற்கிற நீ–
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே –2-3-10-
இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ் விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் -நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-
காக்கின்ற அக் காத்தல் தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ் விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய்-ஓக்க ப்ராப்யருமாய் – இறைவனுடைய நற் குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய், போதயந்த பரஸ்பரத்துக்கு -தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக் கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய ஸூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். -கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,-இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–
பிராப்தமாய் -ஸூ லபமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை கிட்டி -என்கிற ஸ்தானத்தில் சேர்ந்து என்கிறது கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கை –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி குதச்சந-என்று ஸூ ஸ் த்ரனாய் இருப்பது-இன்ன நாள் என்று ஓர் அவதி பெறிலும் பெற்றத்தோடு ஒக்கும் –அது எந்நாளாக வற்றோ? அபீதா நீம் ச காலஸ் ஸ்யாத் ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ,
அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பது போன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார்
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-
என் ஆத்மா யுண்டாய் செல்லும் நாள் எத்தனை நாள் யுண்டு -அத்தனை நாளும் உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும் படி பார்த்து அருள வேணும்
அடியேன் அரு-உனக்கு அநந்யார்ஹ சேஷமான ஆத்மவஸ்து தான் நினைத்த பரிமாற்றம் கிட்டாமையாலே -அதுக்கடியான அத்யாவசாயம் குலைகிறதோ என்று அஞ்சி அது குலையாதபடி பார்த்து அருள வேணும் என்கிறார் என்றுமாம்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -என்கிறபடி குலையாத படி பார்த்து அருள வேணும்-காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். ‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்;
இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார்.
அடிவிடில் உறுதி குலையுமே, அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக.
அத்யாவசாயம் இது -ருசியில் வந்தால் பரமபக்தி யுக்தர்-விளம்பத்துக்கு அடி என் என்னில் -பக்தி விபாகத்துக்காகவும் இவருடைய ப்ரேமம் வழிந்த சொல்லாலே நாட்டைத் திருத்துகைக்கும் –
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10-
நீ இருக்கிற பரமபதத்தே நான் கிட்டவேண்டும்படியாயிருக்க, நான் இருக்கிற இடத்திலே நீ கிட்ட வந்து கிடக்கிறவனே! என்றபடி-சம்சாரிகளை அனுபவிக்க வந்து கிடக்கிற உனக்கு ஆட்பட்டும் -பரமபதத்தில் இருப்பிலே யாதல் -அவதாரங்களிலே யாதல் -ஆசைப் பட்டேனோ –ஆருடைய வஸ்து இங்கனம் அலமந்து திரிகிறது -என்னுடைய முயற்சிகள் எல்லாவற்றையும் உன் திருவடிகளிலே பொகட்டு, நீ செய்து தலைக்கட்டக் கடவையாக
நினைத்திருக்கிற நான், இன்னமும் எத்தனை திருப்பதிகள் தட்டித் திரியக் கட வேன்-
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-
வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தாமரைகள் -என்கிறது உபேய அம்சம் —கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-
அந்நிய பர உக்தியில் -வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.-கால அவதி -கேட்க்கும் பிரகரணத்தில் பிராப்ய நிஷ்கரஷம் பண்ணுகிறார் –தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக் கட்ட வல்லன் என்னும் சத்தி யோகம் கூறியபடி-பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி.-இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது.
இதனால் பிராப்யம் சொல்லுகிறது.-கூவிக் கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது.-இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது.-இதர விஷயங்களின் காட்சி முடியும்படியாய்,-உன் திருவடிகளின் இனிமை அறிந்து விட மாட்டாத அளவு பிறந்து பின்பு – இன்னம் தாழ்க்குமத்தனையோ?-பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க,-‘கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பல கால் சொல்ல,-இதனைக் கேட்டுச் சீயர் அழ,
‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்?-அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.
வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்–க்ரியதாம் இதி மாம் வத -என்று கண் முகப்பே அடிமை கொள்ள வேணும் -குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் ப்ரக்ருதி யல்லேன் –ஜலான் மத்ஸ்யா விவோத்தருதவ் -என்னும் இளைய பெருமாள் பிரக்ருதியான என்னை அடிமை கொண்டு அருள வேணும் –குண ஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் – தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள் தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –திருப் புளி கீழ் இருந்தாலும் -இவர் மநோ ரதம் இருந்த படி –பணி கொள்ளாய் –என்கிறார் –சோற்றை இட்டுப் பணி கொள்வாய்– திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-
மாக வைகுந்தம் காண்பதற்கு-விரோதி நிரசன சீலனானவன் நித்ய வாஸம் பண்ணுகிற பரமபதத்தை காண வேணும் என்று-என் மனம்-ஏகம் எண்ணும் –இராப்பகல் இன்றியே–-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது-எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது – -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-
மங்க ஒட்டு உன் மா மாயை -ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ –மமமாயா துரத்யயா -என்றிலையோ–வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும்
————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .