164-
பூநிலாய ஐந்துமாய் -1
தன்னுளே -10
உபாதான காரணத்வத்தை திருஷ்டாந்த சஹிதமாக சொல்லி அருளி –
ஸ்வ இதர சமஸ்த வஸ்துக்களிலும் விலஷணன் -ஐந்து மாய் என்றும் தத் தத்கத குணங்கள் என்றும்
ஒருமைப் படுத்திக் கூடுவது -சாமாநாதி கரண்யம் -சரீர ஆத்ம சம்பந்தம் –
அவற்றின் சத்தாதிகள் அவன் அதீனம் -இதை யார் நினைக்க வல்லர் –
பரமாணுக்களே -உபாதான காரணம் -என்னும் வைசேஷிகர் நினைக்க வல்லர் அல்லர்
பிரதானமே -உபாதான காரணம் -என்னும் –சாங்க்யர் நினைக்க வல்லர் அல்லர்
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்க வல்லர் அல்லர் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமும் பரஹம பரிணாமம் என்னும் பேத அபேத வாதிகள் நினைக்கவோ –
நிர்விசேஷ சிந் மாத்ரம் ப்ரஹ்மம் தத் வ்யதிகரங்கள் அபரமார்த்தங்கள் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ –
வேதாந்த ப்ரேமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது -என்கிறார் –
அண்டாகாரணமாய் -ஸ குணமான ப்ருத்வ்யாதி பூத பஞ்சகங்களுக்கு அந்தராத்மாவாய்
நிற்கிற நீயே ஜகத்துக்கு உபாதான காரணம் -இவ்வர்த்தம் வேதாந்த ப்ரமேயம் கை படாத
பாஹ்ய குத்ருஷ்டிகளால் நினைக்க ஒண்ணாது என்கிறார் –
பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே –1-
பூநிலாய ஐந்துமாய்–
பூமியிலே வர்த்திக்கிற சப்தாதி குணங்கள் ஐந்துமாய்
பூதேப்யோண்டம் -என்றும்
கந்தவதீ ப்ரத்வீ -என்றும் –
தஸ்யா கந்தோ குணோ மதஸ் -என்றும்
ப்ர்த்வி குணம் கந்தமாய் இருக்க -சப்தாதிகள் ஐந்தும் அதுக்கு குணமாகச் சொல்லுவான்
என் என்னில்
சப்தாதிபிர் குணைர் ப்ரஹ்மன் சம்யுதான் யுத்தரோத்தரைஸ் -என்கிறபடியே
காரண குண அனுவர்த்தியாலே -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களையும் கூட்டிச் சொல்கிறது –
புனல் கண் நின்ற நான்குமாய் –
அப்பிலே வர்த்திக்கிற சப்த ஸ்பர்ச ரூப ரசங்களுமாய்
சம்பவந்தித தோம்பாம்சி ரசாதாராணிதாநிது -என்கிறபடியே தத் குணம்
ரசமாய் இருக்க அதிலும் காரண குண அனுவர்த்தியாலே சப்த ரச ரூபங்களையும் கூட்டிச் சொல்லுகிறது
தீ நிலாய மூன்றுமாய்
ஜ்யோதி ருத்பத்ய தேவா யோஸ் தத் ரூபம் குண உச்யதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்கிறபடியே
அக்நி குணமான ரூபத்தோடே சப்த ஸ்பர்சங்களைக் கூட்டி –மூன்றுமாய் -என்கிறது –
சிறந்த கால் இரண்டுமாய் –
ஸ்வ சஞ்சாரத்தாலே சேதனர்க்கு ஆதாரமான பலத்தை உடைய வாயுவினுடைய குணம்
இரண்டுமாய் –
பலவான் பகவசந் வாயுஸ் தஸ்ய ஸ்பர்சோ குணோ மதஸ் -என்கிறபடியே
வாயு குணமான ஸ்பர்சதோடே ஆகாச குணமான சப்தத்தையும் கூட்டிச் சொல்லுகிறது
மீநிலாயதொன்றுமாகி –
மீதிலே வர்த்திக்கிற சப்த குணம் ஒன்றுமாய் –
ஆகாசம் சப்த லஷணம் -என்கிற படியே ஆகாச குணம் ஒன்றையும் சொல்லுகிறது
உக்தமான பூத பஞ்சகங்களுக்கு காரணமான ஏற்றத்தாலும் ஸ்வ வ்யதிரிக்தங்களுக்கு
அவகாச பிரதானம் பண்ணும் ஏற்றத்தாலும் –மீது -என்று ஆகாசத்தைச் சொல்லுகிறது –
அண்ட காரணம் ப்ர்திவ்யாதி குணங்களாய் இருக்க -சப்தாதி குணங்களோடே ஸாமாநாதி கரித்தது
பரத்வ்யதிகளோபாதி தத் குணங்களும் ஸ்வாதீநமாய் இருக்கையாலே (பகவத் ஆதீனம் -சரீரம் என்றவாறு )
பிருதிவி வாதி களோடு ஸாமாநாதி கரண்யம் சரீர ஆத்ம சம்பந்த நிபந்தனம்
குணங்களோடு ஸாமாநாதி கரண்யம் அவற்றின் உடைய சத்தாதிகள் ஸ்வாதீநமாய் இருக்கையாலே(பிரகாரம் பிரகாரி பாவம் )
அண்டத்துக்கு மஹத் அஹஙகாரங்களும் காரணமாய் இருக்க பூதங்கள் ஐந்தையும்
சொல்லுவான் என் என்னில் –
தஸ்மா த்வாஸ் தஸ்மா தாத்மன ஆகாரஸ் சம்பூத (ஆனந்த வல்லி )-என்கிற
ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
பூதோப்யோஸ்ண்டம் -என்று ரிஷிகள் சொல்லுகிற பஞ்சீ கரணத்தாலே –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம காரணம் ஆகையாலே சித் அந்தர்பூதமான புருஷ சமஷ்டியையும் நினைக்கிறது
இவ்வளவாக பரகத ஸ்ருஷ்டி சொல்லிற்று ஆய்த்து
வேறு வேறு தன்மையாய்
அண்டாந்த வர்த்திகளாய் -ஒன்றுக்கு ஓன்று விலஷணமான தேவாதி பதார்த்தங்களுக்கும்
ஆத்மாவாய்
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் -ஏக ரூபமாய் இருக்க –வேறு வேறு -என்கிறது கர்மத்தால்
வந்த தேவாதி ரூபங்களைப் பற்ற
நீ நிலாய வண்ணம் –
சித் அசித் சரீரி யான நீ -கார்ய காரண வர்க்கத்தில் நிற்கிற பிரகாரம் -அதாகிறது
அசித் கதமான பரிணாமம் என்ன
சேதன கதமான அஞ்ஞான துக்காதிகள் என்ன
இவை உன் பக்கல் ஸ்பர்சியாதபடி நிற்கை
நின்னை
சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமான உன்னை
ஆர் நினைக்க வல்லர்
நினைக்க வல்லார் ஆர்
பரமாணுக்கள் உபாதான காரணம் என்னும் வைசேஷிகர் நினைக்கவோ
பிரதானம் உபாதான காரணம் -சித் அசித் சம்வர்க்கத்தாலே ஜகன் நிர்வாஹம் என்னும் சாங்க்யர் நினைக்கவோ
நிமித்த உபாதனங்களுக்கு பேதம் சொல்லும் சைவர் நினைக்கவோ
சித் அசித் ஈஸ்வர தத்த த்ரயங்களும் ப்ரஹ்ம பரிணாமம் என்னும் பேத அபேதிகள் நினைக்கவோ
நிர்விசேஷ வஸ்து வ்யதிரிக்தங்கள் அபரமார்தம் என்னும் மாயாவாதிகள் நினைக்கவோ
வேதாந்த பிரமேயம் கைப்பட்டார் ஒழிய ஆர் நினைக்க வல்லர் என்கிறார் –
பத்தாம் பாட்டு -அவதாரிகை –
சர்வ சமாஸ்ரயணீ யத்வத்தால் வந்த உபாயஸ்யத்வமே அன்றிக்கே –
காரணந்து த்யேய -என்கிறபடி ஜகது உபாதான காரண வஸ்துவே சமாஸ்ரயணீயம்
என்று சொல்லுகிற காரணத்வ ப்ரயுக்தமான ஆஸ்ரயணீயத்வமும் தேவரீருடையது
என்று த்ர்ஷ்டாந்த சஹிதமான உபாதான காரணத்வத்தை அருளிச் செய்கிறார் –
(முதல் பத்து பாசுரங்களும் பகவானே உபாதான காரணம் -நின்னை யார் நினைக்க வல்லார் என்பார்
கடலில் உருவாகும் அலை அதிலேயே சேருமா போல் என்று த்ருஷ்டாந்தம் காட்டி இந்தப் பிரகரணம் நிகமிக்கிறார்)
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் இத்யாதி –
த்ருஷ்டாந்த்தத்திலே அர்த்தத்தை சிஷித்து த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார் –
தன்னுளே -என்கிற இத்தால் -சரீர பூதசேதன அசேதனங்களும் -ஸ்ருஷ்டாத வியாபாரங்களும்
-ஸ்வரூப அந்தர்பூதம் என்கை –
திரைத்து எழும் தரங்கம் –
நிஸ்தரங்க ஜலதி யானது வாயுவாலே கிளர்ந்து எழுந்து எங்கும் ஒக்க சஞ்சரியா நின்றுள்ள
திரைகளை உடைத்தாகை –
த்ருஷ்டாந்திகத்திலே வாயு ஸ்தாநீய பகவத் சங்கல்பம் அடியாக ஸ்ருஷ்டி காலத்திலே
பிறந்த குண வைஷம்யம்
வெண் தடம் கடல் –
சஞ்சாரியான திரையையும் அசஞ்சாரியான வெண்மையும் உடைத்தான இடமுடைய கடல் –
இது மேலே –நிற்பவும் திரிபவும் -என்கிறதுக்கு திருஷ்டாந்தம்
தன்னுளே திரைத்து எழும் தடங்குகின்ற தன்மை போல் –
வாயு வசத்தாலே பரம்பின திரைகள் மற்றப்படி ஒன்றிலே ஓன்று திரைத்து எழுந்து
உப சம்ஹரிக்கிற ஸ்வபாவம் போலே -இத்தால் ஏக த்ரய பரிணாமத்தை சொல்லுகிறது அன்று –
கீழ்ப் பாட்டிலே உபாசனம் சொல்லிற்றாய் -இப்பாட்டில் உபாஸ்யமான ஜகத் உபாதான
காரணத்தை சொல்லுகிறது -அதாகிறது
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே காரணம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே
கார்யம் என்று வேதாந்த பிரசித்தமான அர்த்தம் -இது எத்தாலே அறிவது என்னில் –
ந கர்மா விபாகாத் -என்கிற ஸூத்ரத்தாலே
சதேவ -என்கிற அவிபாக ஸ்ருதியாலே -அக்காலத்தில் ஷேத்ரஞ்ஞர் இல்லாமையாலே
கர்மம் இல்லை என்று பூர்வ பஷித்து -ஞானவ் த்வா வஜ்ர வீச நீ சௌ –என்றும்
நித்யோ நித்யாநாம் -என்று ஷேத்ரஞ்ஞர்களுக்கும் தத் கர்ம ப்ரவாஹத்துக்கும் அநாதித்வம்
உண்டாகையாலே -அது அர்த்தம் அன்று என்று நிஷேதித்து -நாம ரூப விவேக பாவத்தாலே
சதேவ என்கிற அவதாரணம் உபபன்னம் என்றது இறே
திருஷ்டாந்தம் ஏக த்ரவ்ய முகத்தாலே சொன்னார் இவரே அன்று –
யதா சோம்யை கேந ம்ர்த்பிண்டேந -என்று உபநிஷத்து
கடகமகுட கர்ணிகாதி பேதைஸ் -என்று ஸ்ரீ பராசுர பகவான்
இத்தை த்ருஷ்டாந்திகத்திலே அதிதேசிக்கிறார்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் –
உன் ஸ்வரூபத்துக்கு உள்ளே உத்பத்தியும் விநாசமுமாய் போருகிற ஸ்தாவர ஜங்க மாத்மகமான சகல பதார்த்தமும் –
ப்ரக்ர்த உபசம்ஹார வேளையிலே -தம ஏகி பவதி -என்கிறபடியே தேவரீர் பக்கலிலே
அடங்குகின்ற இந்த ஸ்வபாவம்
நின் கண் நின்றதே –
தேவரீர் பக்கலிலே உள்ளது ஓன்று -இவ் உபாதான காரணத்வம் வ்யக்த்யநதரத்தில் இல்லை என்கை
முதல் பாட்டில் சொன்ன காரணத்வத்தை -பத்தாம் பாட்டில் திருஷ்டாந்த சஹிதமாய்
சொல்லி முடித்தாராய் விட்டது –
———————-
165-
ஊறோடு ஓசை -2
உண்ணும் சோறு பருகு நீர் -திருவாய்மொழி -6-7-1-
சேலேய் கண்ணியரும் -திருவாய் மொழி -5-1-8-
சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம்-
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-
ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்
ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்
கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக் கடவது இறே
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் -உன்மத்தக அனுபவம் -தேடிப் போனாளோ. என்றது,-
தேக யாத்ரை பார்க்க வேண்டுமோ இவள்
இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கே புக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி.
“அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்” என்று
இருப்பார்க்கும் -இங்கேயே பெற்று இருப்பார்க்கு -அவ்வருகு போக வேணுமோ?
சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவை யவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;
(ஆசைப்பட்ட சமயத்தில் அவை அவை பெற்றால் உகக்குமா போல் பூ சாத்தும் தோள் உடன் அணைவது உகக்குமே -)
அப்படியே, இவை தாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;
அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு
எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.
தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாஸு தேவஸ் ஸர்வம்”
“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள்.
‘உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும்,
இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.
“கணை நாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே,
ஓவாத ஊணாக உண்” -பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும்,
மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
“கொள்ள மாளா இன்ப வெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர்,
இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.
இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10-
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-
சேல் ஏய் கண்ணியரும் –
தங்கள் நோக்காலே துவக்க வல்ல பெண்களும்.
பெரும் செல்வமும்-
நிரவதிகமான செல்வங்களும்.
நன்மக்களும் –
குணங்களால் மேம்பட்ட புத்திரர்களும்.
மேலாத் தாய் தந்தையும் –
தங்கள் தங்களை அழித்து மாறியாகிலும் குழந்தைகளை நோக்கும் தாய் தந்தையர்களும் எல்லாம்.
இனி அவரே ஆவார்–
இனி அவரையே எனக்காகப் பற்றப் பார்த்தேன் என்கிறார். துக்கங்களைக் கொடுக்கக்கூடிய அவர் அவர்களுடைய
சம்பந்தத்தால் துக்கப்பட வேண்டா என்பார் ‘அவரே ஆவார்’ எனப் பிரிநிலை ஏகாரங் கொடுத்து ஓதுகிறார்.
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் சிநேகிதனும் மோக்ஷ உலகமும்
ஸ்ரீமந் நாராயணனாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம்.
யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை;
எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.
அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”-அயோத். 58 : 31.
நற்றாதை நீ தனிநாயகன் நீ வயிற்றிற் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
கற்றா யிது காணுதி இன்றெனக் கை மறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.- என்பது கம்ப ராமாயணம்
————————————————————————————————-
166-
ஆதியாய -5-
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -நான்முகன் திருவந்தாதி -54
பிரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் பிரதானவன் ஆனவனே சாஷாத் கரிக்கும் போது
நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடி –
விசேஷ்யமான தேவரீர் பிரதானராய் சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும் -சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்
நிற்கின்ற -சமஸ்த வஸ்துக்களிலும் சேதன த்வாரா பிரவேசித்து -அவற்றுக்கு வஸ்துத்வ
நாம பாகத்வம் உண்டாகும் படி நிற்கிற நிலை -என்றவாறு –
நின்று இயங்கும் ஒன்றிலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னதென்று
என்றும் யார்க்கும் எண்ணிறந்த வாதியாய் நின்னுந்தி வாய்
அன்று நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –5-
இன்னதென்று –
ஏவம் விதம் என்று -திருஷ்டாந்த முகத்தாலே உபபன்னம் என்று
என்றும் யார்க்கும் –
வர்த்தமான காலத்தோடு பவிஷ்ய காலத்தோடு வாசி யற அதிசயித ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளுக்கும்
எண்ணிறந்த –
மநோ ரததுக்கும் அவ்வருகாய் நின்ற
வாதியாய் –
ப்ரதீதி வ்யவஹாரங்களிலே வந்தால் ப்ரதானன் ஆனவனே
சாஷாத் கரிக்கும் போது –நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்கிறபடியே விசேஷ்யமான தேவரீர்
பிரதானமாய் -சேதன அசேதனங்கள் விசேஷண மாத்ரமாய் இருக்கையும்
வ்யவஹாரத்தில் வந்தால் –வசசாம் வாச்யமுத்தமம் -என்கிறபடியே சப்த வாச்யங்களில் பிரதானனாய் நிற்கையும்
அன்று-நின்னுந்தி வாய் நான்முகன் பயந்த வாதி தேவன் அல்லையே –
இது கிடக்க -ஜகத் ஏக காரணனாய் நிற்கிற நிலை தான் ஒருவருக்கும் அறிய நிலமோ –
சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-
தேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-
தேவர்களே நிற்கின்ற வேண்டற்பாடும்-
அத்தேவதைகளில் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளாய் நிற்கிற பழையதான செயலும்
எல்லாருமாய்க் கொண்டு
மற்றும் மனுஷ்யாதிகளுமாகக் கொண்டு -நிற்கிற இது எல்லாம் சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்று
அறியாதார் கற்கின்றது எல்லாம் வ்யர்த்தம் –
தேவராய் நிற்கும் அத்தேவும் -நெடுமால் —அத்தேவரில்-மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் நெடுமால்
யவராய்-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று அறியவாருடைய கல்வியே பயன் பெற்றதாம்
அனைத்துக்கும் அந்தர்யாமி அவன் அன்றோ -த்ரி மூர்த்தி அவதாரம் எடுத்ததும் திருமாலே
இப்படி பிரித்து பிரித்து சொல்லுவான் என் –சர்வம் அவனே என்ற
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் நிலையே கற்று உணர்ந்தார் நிலை என்றவாறு –
————————————————————————————————–
167-
ஓன்று இரண்டு மூர்த்தியாய் -7
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி -திரு நெடும் தாண்டகம் -2-
ஓன்று பிரதானமான மூர்த்தியும் -அப்ராதமான இரண்டு மூர்த்தியும் -பிரம ருத்ராதிகளைக்
சரீரமாக கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனான ஸ்ரீ மன் நாராயணன் –
ஒன்றாம் சோதி -ஒன்றே யாம் சோதி -உத்பாதகமாயும் சரீரியாயும் சேஷியாயும் இருக்கும் தேஜஸ் ஒன்றே
மற்ற இரண்டும் உபபாதமாயும் -சரீரமாயும் -சேஷமாயும் இருக்கும் -எங்கே கண்டோம் என்னில் –
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந பிரம்மா நேசான நேமே த்யாவா ப்ருத்வீ -என்று அசேதனமான ப்ருத்வ்யாதிகளோபாதி பிரம ருத்ராதிகளையும்
சம்ஹாரத்திலே கர்மீபவிக்கச் சொல்லுகையாலும் -ஸ ப்ரஹ்ம ஸ சிவ -இத்யாதிகளில்
இவர்களுடைய ஷேத்ரஜ்ஞத்வ சேஷத்வத்தை சொல்லுகையாலும் –
ஏஷ சர்வ பூதாந்தராத்மா என்று சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ருதமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமர் ஆகையாலும் -கார்யத்வமும் -ஷேத்ரஜ்ஞத்வமும் சேஷத்வமும் சரீரத்வமும் சம்ப்ரதிபன்னம் என்கை –
ஓன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஓன்று இரண்டு காலமாகி வேலை ஞாலமாயினாய்
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே
ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே –7
ஓன்று இரண்டு மூர்த்தியாய் –
ப்ரதானமான ஒரு மூர்த்தியும் அப்ரதானமான இரண்டு மூர்த்தியுமாய்
ப்ரஹ்ம ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு -அவர்களுக்கு நிர்வாஹனாய் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை இதர சஜாதீயமாக ஆக்கிக் கொண்டு அவதரித்து
பிரயோஜனாந்தர பரரோடு முமுஷுகளோடு வாசி யற சர்வ நிர்வாஹகனாய் –
முனியே நான்முகனே முக்கண் அப்பா –
பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே––2-
மூ வுருவம் கண்ட போது –
மூன்று தத்வத்தையும் பிரமாணத்தால் கண்ட போது –
ஒன்றாம் சோதி –
அவற்றில் வைத்துக் கொண்டு ஒன்றேயாம் சோதி –
உத்பாதகமாயும் –
சரீரியாயும் –
சேஷியாகவும் -இருக்கும் –
எங்கே கண்டோம் -என்னில் –
ஏகோஹவை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந ப்ரஹ்ம நேசாந நேமேத்யாவா பர்த்வீ (மஹா உபநிஷத் )–என்று
அசேதனமான ப்ரத்வ்யாதிகளோபாதி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் சம்ஹாரத்திலே கர்மீபவித்து
சொல்லுகையாலும் –
ஸ ப்ரஹ்ம ஸ சிவா ஸ இந்த்ர (தைத்ரியம் நாராயண வல்லி )-இத்யாதிகளாலே
இவர்களுடைய ஷேத்ரஞ்ஞ்த்வ சேஷத்வத்தைச் சொல்லுகையாலும்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா (ஸூ பாலா உபநிஷத் ) – என்று
சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ர்தமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமராகையாலும் –
கார்யத்வமும்
ஷேத்ரஞ்ஞத்வமும்
சரீரத்வமும்
சம் பிரதிபன்னம் -என்கை –
ஆம் சோதி -என்கையாலே
நிர்வாஹ்ய ஜ்யோதிஸ் ஸூக்களான -ஆத்மாக்களை -வ்யாவர்த்திக்கிறது –
சேதனரும் ஸுவயம் பிரகாசமாய் இறே இருப்பது –
ஆகையால் இறே
நாராயண பரோஞ்சோதி -(தைத்ரியம் நாராயண வல்லி)என்றும் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி -(ப்ருஹதாரண்யம் )என்றும்
சொல்ல வேண்டிற்று –
மூ வுருவும் கண்ட போது ஒன்றாம் ஜோதி -என்கிறது –
ஏக த்ரவ்யாதிகளுக்கு சேருமா போலே இருக்கும் –
இது இவருக்கு தர்சனம் அல்லாமையாலே பஷம் அல்ல –
இன்னமும்
மின்னுருவாய் –என்றும் –பின்னுருவாய் -என்றும் –பொன்னுருவாய் -என்றும்
தத்வ த்ரயங்களை அகலகல பிரித்துச் சொல்லுகையாலும் –
இப் பாட்டிலே –ஏருரு -என்றது சரீர ஆத்ம பாவங்களைச் சொல்லுகையாலும்
இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை -என்று மேலே (4 பாசுரம் )சொல்லுகையாலும்
பிரகரண விரோதம் உண்டு –
—————————————————————————————————–
168-
ஆதியான வானவர்க்கும்-8
ஏழு உலகின முதலாய வானோர் -திருவாய்மொழி -1-5-1-
அஸ்த்ர பூஷணா தயா க்ரமத்தாலே நித்ய ஸூரிகளை ஜகத்துக்குக் காரண பூதராக சொல்லக் கடவது இறே
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே ஸ்ரீ கௌஸ்துபத்தாலே ஜீவ சமஷ்டியை தரிக்கும் என்றும் –
ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும்சொல்லா நின்றது இறே
ஆதியான வானவர்க்கும் அண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கும் ஆதியான வாதி நீ
ஆதியான வான வாணர் அந்த கால நீ யுரைத்தி
ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே
ஆதியான வானவர்க்கும்
ப்ரஹ்ம -தஷ பிரதாபதிகள் -சப்த ரிஷிகள் -த்வாதச ஆதித்யர்கள் ஸ்ருஷ்டி கர்த்தாக்கள்
இந்திரன் சதுர் தச மனுக்கள் ஸ்திதி கர்த்தாக்கள்
ருத்ரன் அக்நி யமன் -சம்ஹார கர்த்தாக்கள் இவர்களை இத்தால் சொல்லிற்று
அண்டமாய வப்புறத்து ஆதியான வானவர்
நித்ய ஸூரிகள்
அண்ட சப்த வாச்யமான லீலா விபூதிக்கு அப்புறத்தில் -பரம பதத்தில் -வர்த்திக்கிற
ஜகத் காரண பூதரான நித்ய ஸூரிகளுக்கும் –
அஸ்த்ர பூஷணாத்யாய க்ரமத்தாலே
நித்ய ஸூரிகளை ஜகத் காரண பூதராக சொல்லக் கடவது இறே
(ஸ்ரீ விஷ்ணு புராணம் அஸ்திர பூஷண அத்யாயம்
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவாத்மா தரிக்கும்
ஸ்ரீ வத்ஸம் -பிரகிருதி மண்டலம் தரிக்கும்)
அதவா
(அநாதி யான பழைமையான என்ற அர்த்தத்தில்)
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்திதேவ -என்றும்-
யத்ரர் ஷயஸ் ப்ரதம ஜாயே புராணா -என்றும் சொல்லுகிற -அநாதி-ஆதி தேவர்கள் என்றுமாம்
ஆதியான வாதி நீ –
அவர்களுக்கும் நிர்வாஹகனாய் –
இப்படி உபய விபூதியிலும் ப்ரதானரான இவர்கள் உடைய சத்தாதிகளுக்கு ஹேதுவான ப்ரதானன் நீ –
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
வளிவிதான ஏழ் உலகு -என்று லீலா விபூதியாய்-ததீயத்வ ஆகாரத்தால் வளப்பம் –
வானோர் இறை -என்கையாலே நித்ய விபூதியைச் சொல்லிற்றாய்
இப்படி உபய விபூதி நாதனைக் கிடீர் நான் அழிக்கப் பார்க்கிறது -என்கிறார் – கள்வா என்பான் –
வளவியனாய் ஏழ் உலகுக்கும் முதலாய் -வானோர் இறையாய் இருக்குமவனை -என்று அவன் தனக்கே விசேஷணம் ஆகவுமாம்
வளவியராய் ஏழ் உலகுக்கும் முதலாய் இருக்கும் வானோர் -என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
இவர்கள் வளவியராகை யாவது -பகவத் அனுபவத்தில் குசலராகை
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே -ஸ்ரீ கௌச்துபத்தாலே ஜீவ சமஷ்டியைத் தரிக்கும் என்றும்
ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும் சொல்லா நின்றது இறே –
ஜகத் வியாபார வர்ஜம் -சூத்ரம் -நித்ய சூரிகள் ஜகத் காரணத்வம்-சக்தி இருந்தாலும் துரந்தார்கள் என்பதால் – சொல்ல முடியாதே –
இவர்கள் மூலமாக தரிக்கிறார்கள் என்றவாறு -புத்தி -கதா -/-பூதாதி இந்த்ரியாதி சங்க சார்ங்க /சக்கரம் மனஸ்/ஸ்ரீ வத்சம் -மூல பிரகிருதி
——————————————————-
169-
நிலாய சீர் வேத வாணர்-9
மிக்க வேதியர் -கண்ணி நுண் சிறு தாம்பு -9
நிலாய சீர்-வர்த்திக்கிற குணங்கள் -அமாநித்வாத ஆத்ம குணங்களாலும் -உபாசன அங்கமான
சம தமாதி குணங்களாலும் -சம்பன்னராய் இருக்கை
அங்கன் இன்றிக்கே நிலாய சீர் வேத -என்று வேத விசேஷணமாய்
நித்யத்வ அபௌருஷேயத்வ நிர்த்தோஷத்வங்களாலே -காரண தோஷ பாதக பரய யாதி
தோஷ ரஹித கல்யாண குணங்களைச் சொல்லிற்றாகவுமாம்
மிக்கார் வேத விமலர் -என்ற ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி கேட்டு -மிக்க வேதியர்-என்கிறார் –
பகவத் ப்ராப்தியே புருஷார்தம் என்றும் -சரணாகதியே பரம சாதனம் என்றும் -வேதாந்த விஜ்ஞானத்தாலே
ஸூநிச்சிதராய் இருக்குமவர்கள் -அன்றிக்கே மிக்க வேதியர் வேதம்-என்று வேதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
சுடர் மிகு சுருதி-என்கிறபடியே பிரத்யஷாதி பிரமாணங்களில் அதிகமான வேத பிரமாணம் என்கிறபடியே
தாதுலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –9-
நிலாயா சீர் –
வர்த்திக்கிற குணங்கள் –
அதாகிறது ஞான சாதனமான அமாநித்வாத் யாத்ம குணங்களாலும்
உபாசன அங்கமான சம தமாதி குணங்களாலும் சம்பன்னராய் இருக்கை
அங்கன் அன்றியே –
நிலாய சீர் வேதம் -என்று வேத விசேஷணமாய் -நித்யத்வா -அபௌருஷேயத்வ
நிர் தோஷத்வங்களாலே -காரண தோஷ பாதக ப்ரத்யயாதி தோஷ ரஹித கல்யாண
குணங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்
வேத வாணர்
வேதங்களுக்கு நிர்வஹகர் என்னலாம் படி வேதார்த்தத்தை கரை கண்டவர்
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9–
மிக்க வேதியர் –
ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –
உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே –
அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –
வேதத்தின் உட் பொருள் –
சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –
வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இ றே
வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்-
எம்பெருமான் பக்கலிலே ஜ்ஞான பக்திகளைப் பூரணமாக வுடைய வைதிகர்-
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம் (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –
வேதியர்
வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்
அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-
ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கே
உத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்
முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்
மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –
அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்
ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்
வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்
வேதத்தின் உட்பொருள்
அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்
அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே
சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இ றே
உட்பொருள்
அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்
அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை இரண்டாலும் அருளிச் செய்தார்
—————————————————–
170-
சொல்லினால் படைக்க நீ படைக்க-11
எப்பொருளும் படைக்க–நான்முகனைப் படைத்த -திருவாய்மொழி -2-2-4-
லோக ஸ்ரஷ்டாவான பிரமனும் நாரணனாலே படைக்கப் பட்டவன் –
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்ற ஸ்ருதி சாயையிலே இருவரும் அருளிய படி –
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –-11-
சொல்லினால் படைக்க-
யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோ தி தஸ்மை -நீ கொடுத்த வேதத்தை த்ர்ஷ்டியாகக் கொண்டு-
ஜகத் சிருஷ்டி பண்ணுவாராக -ஸ பூரி திவ்யாஹரத்
நீ படைக்க வந்து தோன்றினார் –
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்கிறபடியே நீ ஸ்ருஷ்டிக்க உன் திரு நாபீ
கமலத்திலே வந்து தோன்றின ப்ரஹ்மா முதலான தேவர்கள் –
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4–
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த
தேவ ஜாதியையும் சகல பதார்த்தங்களையும் உண்டாக்குகைக்காக ஒரு பூவிலே நாலு பூ பூத்தால் போலே சதுர்முகனை உண்டாக்கினவன் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே —
தேவன் –
1-க்ரீடா-2- த்யுதி–3- ஸ்துதி-4- மோத-5- மத-6- ஸ்வப்ன-7- காந்தி-8- கதிஷூ –பொருள்கள் உண்டே
சதுர்முக ஸ்ரஷ்டா வாகையாலே வந்த த்யுதியைச் சொல்லுதல் -விளையாட்டாக படைத்து -அதனால் ஒளி தேஜஸ் பெற்ற –அகில ஜன்ம –லீலே –
இது தன்னை லீலையாக உடையவன் -என்னுதல்-சௌந்தர்யாதிகளால் வந்த விளக்கம் -என்னுதல்
———————————————————
171
உலகு தன்னை நீ படைத்தி –உலகு தன்னுளே பிறத்தி -12
இருவர் அவர் முதலும் தானே இணைவனாம் -திருவாய் மொழி -2-8-1-
சகல பதார்த்தங்களுக்கும் ஜநகனான நீ -உன்னாலே ஸ்ருஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாக்கிக்
கொண்டு ஜநிப்பதே -என்று ஆழ்வார் விஸ்மிதர் ஆகிறார் –
இருவர் -இருவரான பிரம ருத்ராதிகளுக்கும் உத்பாதகன் நாரணனே என்றும் -கூறி
இணைவனாம் -அவர்களோடு சமமாக எண்ணலாம்படி விஷ்ணுவாய் அவதரித்த அவதார சௌலப்யம்
ஆக -பரத்வ சௌலப் யங்களை ஆழ்வார்கள் அனுபவித்தபடி-
காரணத்வத்தாலே வந்த பரத்வமும் கார்யத்வத்தாலே வந்த அபரத்வமான நீர்மையும் இறே- பராவர சப்தார்த்தம் –
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்று பகவானை வேதாந்தம் பராவரன் -என்று இறே கூறுவது –
உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-
உலகு தன்னை நீ படைத்தி –
அசித்தை உபகரணமாக கொண்டு ப்ராக்ர்த சிருஷ்டியைப் பண்ணின நீ ப்ரஹ்மாதி
சகல தேவதா அந்தர்யமியாய்க் கொண்டு சகல பதார்த்தங்களையும் சிருஷ்டியா நிற்றி
உள் ஒடுக்கி வைத்தி –
நித்ய நைமித்திகாதி பிரளய ஆபத்துக்களிலே நாம ரூபங்களை இழந்த பதார்த்தங்களை
உன் திரு வயிற்றில் வைத்து ரஷியா நிற்றி –
இத்தால் -சகல பதார்த்த சிருஷ்டிக்கும் கர்த்தாவாய் -சகல சம்ஹாரங்களிலும் ரஷகனாய் இருக்கிறான் –
அடியிலே பஹூஸ்யாம் -என்கிற ஜகத் உபாதான காரண பூதன் என்றது ஆய்த்து
மீண்டு உலகு தன்னுளே பிறத்தி
ஜகத் ஏக காரணத்வத்தால் வந்த வைபவத்தின் நின்றும் மீட்டு உன்னாலே ஸ்ருஷ்டமான
உலகத்திலே சில ஷேத்ரஞ்ஞருக்கு புத்ரனே வந்து அவதரியா நிற்றி –
மீண்டு –
அது போராமே திரியட்டும் என்றுமாம் -சகல பதார்த்தங்களுக்கும் ஜனகனான நீ
உன்னாலே ஸ்ர்ஜயனாய் இருப்பான் ஒரு ஷேத்ரஞ்ஞனை ஜனகனாகக் கொண்டு ஜனிப்பதே –
பிரளய ஆபத்திலே சகல பதார்த்தங்களையும் உன் திரு வயிற்றில் வைத்து ரஷித்த நீ
ஒரு ஸ்த்ரி வயிற்றில் கர்ப பூதன் ஆவதே
ப்ரீத்யாத்வம் தாரயே சாநம் தாத்மயே நாகிலம் ஜகத் -என்னக் கடவது இறே
ஓர் இடத்தை அல்லையால் –
ஓர் ஸ்தலத்தாய் என்று நிர்ணயிக்க ஒண்ணாத வனாகையாலெ ஒரு கோடியிலே
சேர்த்து அறியப் போகிறது இல்லை -அதாகிறது உபாதான காரணத் வத்தாலே புரை
இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
அவதாரத்தில் சஜாதீய பாவத்தில் புரை இல்லாமையாலே கார்யம் என்ன ஒண்ணாது –
இது என்னபடி என்கிறார் –
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-
இருவரவர் முதலும் தானே
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு காரண பூதனாய் இருக்கும்
ஸ ப்ரஹ்ம ஸ சிவா -என்கிற பிரசித்தியாலே –இருவரவர் -என்கிறார்
அவ்விபூதியைச் சொல்லுகிற இடத்தில் அணைவது புணைவது -என்கையாலே அது போக பூமியுமாய் -நித்யமுமாய் -இருக்கும் என்னும் இடமும்
இங்கு முதல் -என்கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த சம்பந்தமும் -இது தான் ஆவதும் அழிவதாம் என்னும் இடமும் சொல்லுகிறது
முதல் -உத்பத்தி -முதல் இருந்தாலே முடிவும் உண்டே -சம்ஹாரம் -இரண்டும் உண்டே –
இத்தால் ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்
ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் -என்கை
ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தா ஜகத்தந்தர் வ்யவஸ்திதா பிராணின கர்மஜனித சம்சார வச வர்த்தின -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்னா நின்றது இறே
ஸ்ரீ சௌனக பகவான் வார்த்தை -அர்ச்சா மூர்த்திகள் பற்றி பல சொல்லி இருக்கிறார்
இப்படி ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் காரண பூதன் ஆகையாலே வந்த மேன்மையை உடையவன் –
இணைவனாம் எப்பொருட்கும்
தேவாதி சகல பதார்த்தங்கள் தோறும் சஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவில் வந்து –விஷ்ணுவாக -ஜகதாதிஜா -அவதரிப்பது –உபேந்த்ரனாவது
சக்கரவர்த்தி ஸ்ரீ வசுதேவர்கள் அளவிலே வந்து பிறப்பது -மஹா வராஹமாவது -குப்ஜாம்மரமாவதாக நிற்கும்
—————————————————————
172-
பணத்தலை-15
பைந்நாகணை-திருப் பல்லாண்டு -9-
பகவானுடைய திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களை உடையவர் திரு வனந் தாழ்வான் –
பணத்தலை -என்ற இடத்தில் இவ்விஷயம் அஸ்புடம்
திருப் பல்லாண்டில் அதிஸ்புடம் ஆகிறது –
அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-
பணைத் தலை செங்கண் நாகணைக் கிடந்த செல்வாஉன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9
படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்
—————————————————————–
173
செங்கண் நாகணை -15
அழல் உமிழும் பூங்கார் அரவு-நான் முகன் திருவந்தாதி -10
சிகப்பு நிற காரணங்கள் பல -பகவத் களிப்பின் மிகுதியால் கண் சிவந்து இருக்கும் -திரு சந்த விருத்த கருத்து –
பரம பதத்தில் அஸ்த்தானே பய சங்கை ஏற்பட்டு அழல் உமிழும் கோபத்தாலே கண் சிவந்து
ஆங்கு -என்றது பரம பதத்தை நினைத்து இறே -ஈட்டில் -1-10-1-வ்யக்தம் –
அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-
உன்னுடைய ஸ்ப்ர்சத்தாலே விகசிதமான பணத்தின்
தலையிலே மதுபாநமத்தரைப் போலே சிவந்த திருக் கண்களை உடையவனான
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளி -நிரவதிகமான
ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் உடையவனே
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-
ஆங்கு ஆரவாரம் -இத்யாதி
லோகத்தை யளக்கிற தசையில் ஆரவாரத்தைக் கேட்டுத் தன் பரிவாலே
பிரதி பஷத்தின் மேலே அழலை யுமிழ்வதும் செய்து
மேகம் போலே அழகிய சீலத்தை யுடையனான திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடையவனுடைய
ஸ்ப்ருகஹணீயமான திரு மேனியை நாம் காண வல்லோம் அல்லோமோ –
ஆங்காரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை இறே
ஆங்கு -தேசம் அது
ஆரவாரம் அது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற ஆரவாரம்
அங்கே இது கேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படிப் படச் சொல்ல வேணுமோ
———————————————————————–
174-
ஏக மூர்த்தி -17
குன்றில் நின்று -48
விண் மீது இருப்பாய்-திரு வாய் மொழி -6-9-5-பர வ்யூஹ விபவ ஹாரத்த அர்ச்சா -திருமேனிகள் அனுபவம் -பஞ்ச பிரகாரங்கள்
பகல் ஓலக்கம் இருந்து -கறுப்பு உடுத்து சோதித்து கார்யம் மந்தரித்து
வேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி -விண் மீது
என்கிற ஐந்திலும் காணலாம் -ஆச்சர்ய ஹ்ருதயம் ஸ்ரீ ஸூக்தி
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-
ஏக மூர்த்தி
வாசுதேவோசி பூர்ண -என்கிறபடி ஞாநாதி ஷட் குண பூர்ணனாய் -நிஸ்தரங்க ஜலதி
போலே பரமபத நிலயத்திலே எழுந்து அருளி இருந்து -நித்ய சித்தரும் முக்தரும் அனுபவிக்க
இருக்கிற அத்விதீயமான மூர்த்தியை உடையாய் –
மூன்று மூர்த்தி –
அந்த ஷட் குணங்களில் இவ்விரண்டு குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளைப் பண்ணுகைக்காக சங்கர்ஷணாதி ரூபத்தாலே மூன்று மூர்த்தியாய்
நாலு மூர்த்தி –
பர அவஸ்தையும் வ்யூஹங்களோடு எண்ணலாம் படி பரார்தமாய் இருக்கையாலே
அத்தையும் கூட்டி நாலு மூர்த்தி -என்கிறது –
அதவா –
வ்யூஹ கார்யமான ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயோகமாய் இருக்கிற பிரதான புருஷ
அவ்யக்த காலங்களைசரீரமாக உடையனாய் இருக்கறபடியை சொல்லுகிறது என்னவுமாம் –
நன்மை சேர் போக மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாகிற நன்மையை உடைத்தாய் -சம்சாரிகளுக்கு போக யோக்யமான மூர்த்தி –
அனுக்ரஹ ப்ராசுர்யமாவது -ஸ்வ அசாதாரணமாய் அப்ராப்ரக்ருதமான விக்ரஹத்தை –
தேவாதி சஜாதீயமாக்கிக் கொண்டு சம்சாரிகளுக்கு சஷூர் விஷயமாம் படி பண்ணுகை –
அதவா –
ஆமுஷ்மிகத்தில் நித்ய அனுபவத்தோடு சேர்ந்த நன்மையை உடைத்தாய் -ஐஹிகத்தில்
போக ரூபமாய் இருக்கும் மூர்த்தி என்னவுமாம் –
புண்ணியத்தின் மூர்த்தி –
அது தான் பாக்யாதிகருடைய புண்ய விபாகத்தில் பலிப்பதாய் இருக்கை –
பரித்ராணாயா ஸாதூநாம் -என்று பரம பக்தி உக்தருக்கு ஸ்வயம் பிரயோஜனமாய் –
சித்த சாதன பரிக்ரஹ உக்தருக்கு சரணமாயும் -உபாசகருக்கு சுபாஸ்ரயமாயும் இறே இருப்பது –
மாநுஷீம் ததுமாச்ரிதம் பரம்பாவமஜா நந்த -என்று பாஹ்ய ஹீநராய் -அவதாரத்துக்கு இழவாளராக சொல்லா நின்றது இறே –
எண்ணில் மூர்த்தியாய் –
இப்படி அசங்யாதமான விபவ ஜாதீயமான விக்ரஹத்தை உடையையாய் –
பஹுதா விஜாயதே -என்று ஸ்ருதி –
பஹூநி -என்று ஸ்வ வாக்யம் –
சன்மம் பல பல -என்று அபி உக்தர் வாக்யம் –
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-
குன்றில் நின்று –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -என்கிறபடியே தாழ்ந்தாருக்கு முகம்
கொடுக்கைகாக சிலர் அபேஷியாது இருக்க திருமலையிலே நின்ற நிலை
வான் இருந்து –
அச்ப்ர்ஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபவம் பண்ணுகைகாக
பரம பதத்திலே இருக்கிற பெரிய மேன்மையாய் உடையையாய் இருக்கச் செய்தே
யன்றோ திரு மலையில் வந்து நின்றது
நீள் கடல் கிடந்தது –
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -என்கிறபடியே
அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடாக திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளிற்று
மண் ஓன்று சென்று –
இந்த்ரன் இழந்ததும் மகா பலி அபஹரிததும் த்ரை லோகத்து அளவாய் இருக்க
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக -ஒருத்தர் அபேஷியாது இருக்க எல்லார் தலைகளிலும் திருவடிகளை
வைத்திலையோ -பிரதான பூமியை அளந்து –
சென்று -என்று பத விஷேபமாய் அளந்து என்றபடி
பூமியிலே ஓர் ஓர் இடங்களிலே சென்று அவதரித்தது என்னவுமாம்
அ து ஒன்றை உண்டு –
அந்த பிரதானமான பூமியை பிரளயம் கொள்ளப் புக அர்தித்வ நிரபேஷமாக
திரு வயிற்றிலே வைத்து ரஷித்தது இல்லையோ
அது ஓன்று இடந்து பன்றியாய் –
மஹா வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை உத்தரித்து
நன்று சென்ற நாள் அவற்றுள் நல்லுயிர் படைத்து –
நன்றாகச் சென்ற நாள்களிலே மனுஷ்யர்களை ஸ்ர்ஷ்டித்து –நன்று சென்ற நாள் –என்று
மஹா வராஹ வேஷத்தைக் காணலாம் காலம் என்னுமத்தாலே வராஹ கல்பத்தைக்
கொண்டாடுகிறார் –நல்லுயிர் என்று சாஸ்திர அதிகாரத்தாலே ஸ்ரேஷ்டரான
மனுஷ்யர்களைச் சொல்லுகிறது -துர்லபோ மானுஷோ தேஹ -என்னக் இறே –
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-
ஸர்வத்ர ஸந்நிஹிதனாய் -எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய்
என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து,
என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.
விண் மீது இருப்பாய் –
எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி.
இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.
மலை மேல் நிற்பாய் –
நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ–பெரிய திருமொழி, 2. 1 : 9.-
கடல் சேர்ப்பாய்-
கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.
‘விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –
ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு
மண் மீது உழல்வாய்-
அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!
“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும் –பெரிய திருவந். 18.– என்கிறபடியே,
அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதி கூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
அனுகூலை யசோதை பிரதி கூலன் காளியன் பாடாற்றல் துக்கம் -இளக-இரட்டிப்பாக –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!
சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால்,
தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே.
“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகு முறுகு -பொறாமை -என்றால்,
அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –
எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!
“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்
அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.
எனது ஆவியுள் மீது ஆடி –
என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.
அன்றிக்கே,
என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.
உருக் காட்டாதே ஒளிப்பாயோ –
வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.
குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?
பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி
ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157
———–
ஒரு மூர்த்தியாகி இருமூர்த்தியாகி மும்மூர்த்தியாகிப் பல மூர்த்தியாகி ஐம்பூதங்களாகி இருசுடர்களான சூரிய சந்திரர்களாகி
இவற்றுக்கு உள்ளுயிராகித் திருப்பாற்கடலின் நடுவில் ஆதிசேஷனாகிய படுக்கையின்மேலே ஏறி யோகநித்திரை செய்கின்ற நாராயணனே!
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை முதலிய இன்பப்பொருள்கள் எல்லாம் என்னுள்ளேயாம்படி செய்து
உன் திருவுள்ளமானது துன்பத்தை நீக்கியது,’ என்கிறார்.என்றது, ‘ஒருபடி கரை மரம் சேர்க்க வல்லனே’ என்று
இருந்த உன்னுடைய திருவுள்ளத்தில் துன்பம் கெட்டு, கிருதார்த்தன் ஆனாயே!’ என்றபடி.
ஆவி – ஈண்டு, மனம். ‘ஆவி அடக்கி அல்லலை மாய்த்தது’ என்க.
‘இத்தலையை உனக்கு ஆக்கி அத்தாலே கிருதக் கிருத்தியன் ஆனாயே!’ என்கிறார்.
ஏகமூர்த்தி –
‘சோமபானம் செய்தற்குரிய சுவேத கேதுவே! காணப்படுகிற இந்த உலகமானது படைப்பதற்கு முன்னே ‘சத்’ என்று
சொல்லக்கூடியதாயும் நாமரூபங்கள் இன்மையால் ஒன்றாகவும் அடையக்கூடிய வேறு பொருள் இல்லாததாயும் இருந்தது,’ என்கிறபடியே,
படைப்பதற்கு முன்னே ‘இது’ என்ற சொல்லுக்குரிய பொருளாய்க் கிடந்த உலகமுழுதும்,
அழிந்து ‘சத்’ என்று சொல்லக்கூடிய நிலையாய் -பொடி மூடிய தணல்-நீறு பூத்த நெருப்புப்போலே
இவை அடையத் தன் பக்கலிலே கிடக்கத் -தான் ஒருவனுமேயாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
ஆக, ‘படைப்புக்கு முன்னே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி.
இரு மூர்த்தி –
பிரகிருதியும் மஹானும் ஆகிய இரண்டையும் நோக்கிக்கொண்டு அவற்றைத் திருமேனியாகக் கொண்டிருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது; என்றது, ‘காரிய காரணங்கள் இரண்டையும் தனக்குத் திருமேனியாக வுடையனாய் இருக்கும்
இருப்பைச் சொல்லுகிறது,’ என்றபடி. இரண்டுக்கும் உண்டான அண்மையைப் பற்றச் சொல்லுகிறது.
அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலையன்றோ மஹானாகிறது?
காரணம் கார்யமாகட்டும் என்று அனுக்ரஹிக்க கடாஷிக்கிறார் என்றபடி -இரண்டையும் பிடித்து
-காரண கார்ய அவஸ்தைகள் இரண்டையும் சொன்னபடி –
மூன்று மூர்த்தி –
மூன்று விதமான அகங்காரங்களைச் சரீரமாகக் கொண்டிருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
சாத்விகமாயும் இராஜசமாயும் தாமசமாயும் மூன்று வகைப்பட்டே அன்றோ அகங்காரந்தான் இருப்பது?
பல மூர்த்தியாகி ஐந்து பூதமாய் –
மேலே கூறிய முறை அன்று இங்குச் சொல்லுகிறது; சாத்துவிக அகங்காரத்தின் காரியம்,
பதினோரிந்திரியங்கள்; தாமச அகங்காரத்தின் காரியம், மண் முதலான ஐம்பெரும்பூதங்கள்; இரண்டற்கும் உபகாரமாய் நிற்கும்,
இராஜச அகங்காரம்-ராஜச அஹங்காரம் மேற்பார்வையாளர் போலே ; ஆக பதினோரிந்திரியங்களையும், குணங்களோடு கூடிய
ஐம்பெரும்பூதங்களையும் சொல்லி -அவற்றைத் திருமேனியாகவுடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.
(நம்பிள்ளை -ச குணமான பூத பஞ்சகம் என்பதால் வியாசர் பஷத்தை சொன்னபடி )
அவ்யக்தம் பிரக்ருதியின் அவஸ்தா பேதம்
பிரகிருதி -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் அஷர தமஸ் அவ்யக்தம் தமஸ் -நான்கு நிலைகள் உண்டே
பூதலே -விதை -போலே பிரகிருதி -பீஜ ச்தாநீயம்
நிச்சிருத வெடித்த -நிலை விபக்தி
சலில சம்ஸ்ருஷ்ட -நீரை வாங்கி -சிதில –
உஜ்ஜூன பீஜ சமான ஆகாரம் -முளை அவ்யக்தம்
அங்கூர ஸ்தானம் முளை ஸ்தானம் மகான் -நான்கு நிலைகளை தாண்டி –
சகுணமான பூத பஞ்சகம்-வேத வியாசர் அபிப்ராயம் இது –
தன் மாத்ரா விசிஷ்டமான பூதம் எகமாக்கி ஐந்து பூதம் என்கிறது
ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரா விசிஷ்ட பூதங்கள் ஐந்தும்
சப்தாதி குணங்கள் ஐந்தும் -பிரித்து -24 தத்வங்கள் –
பராசரர் -ஏகாதச இந்த்ரியங்கள் -தன்மாத்ரைகள் ஐந்தும் -பிரித்தே சொல்லி -இவரும் 24 தத்வங்கள் -என்பர் –
இரண்டு சுடராய் –
‘பிரமாவானவர் சூரிய சந்திரர்களை முன்பு போலே படைத்தார்,’ என்கிறபடியே, படைத்த சூரிய சந்திரர்களைச் சொல்லுகிறது.
இவற்றைக் கூறியது, காரியமான பொருள்கள் எல்லாவற்றிற்கும் உபலக்ஷணம்.
அருவாகி –
‘அவற்றைப் படைத்து அவற்றுக்குள் அநுப்பிரவேசித்தார்; அவற்றுக்குள் அநுப்பிரவேசித்துச்
சேதனமாயும் அசேதனமாயும் ஆனார்,’ என்றபடியே, இவற்றை உண்டாக்கி இவைகள் பொருள் ஆகைக்காகவும்
பெயர் பெறுகைக்காகவும் தான் அவ்வவ் வுயிருக்குள் அந்தராத்துமாவாய் அநுப் பிரவேசித்து நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
‘நன்று; மேலே, அசித்தை அருளிச் செய்தாராதலின், அங்கு ‘அரு’ என்பதற்கு ஆத்துமா என்று பொருள் கூறுதல்
ஏற்புடைத்தாம் அன்றோ?’ என்னில், சரீரமாகவுடைய நான் அந்தரியாமியாய்ப் புகுந்து நாம ரூபங்களை உண்டு பண்ணுகிறேன்,’ என்கிறபடியே,
இந்த ஆத்துமாக்களையெல்லாம் சரீரமாகவுடைய சர்வேசுவரனுக்கு அநுப் பிரவேசமாகையாலே அப்பொருளும் சொல்லிற்றாயிற்று.
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே –
தன்னால் படைக்கப்பட்ட பிரமன் முதலானோர்கட்குப் பற்றப்படுமவன் ஆகைக்காகத் திருப்பாற்கடலின் நடுவில்
திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்தருளினவனே!
அன்றிக்கே, ‘பயிரைச் செய்து செய்த்தலையிலே குடி கிடக்குமாறு போன்று, படைக்கப்பட்ட பொருள்களைப் பாதுகாத்தற்காகக்
கண்வளர்ந்தருளுகின்றவனே!’ என்னவுமாம். ‘இப்படி எல்லாக் காலமும் ஒரு படிப்படத் திருவருள் புரிதலையே
இயல்பாகவுடையன் ஆகைக்கு அடியான சம்பந்தத்தையுடையவன்’ என்பார், ‘நாராயணனே’ என்கிறார்.
அனைவரையும் சமமாக பார்க்க வேண்டுமே இத்தை அறிந்த பின்பு வித்யா விநய தர்சனம் பண்டிதம் சம தர்சினி -என்றானே –
உன் ஆகம் முற்றும் –
உன் திருமேனிக்கு வேண்டும் சாந்து பூமாலை பரிவட்டம் ஆபரணங்கள் இவையெல்லாம்.
அகத்து அடக்கி –
என்னுள்ளே உண்டாம்படி செய்து. ‘இதுவே அன்றோ படைப்புக்குப் பிரயோஜனம்? இப்படிச் செய்த காரணத்தால்
துக்கம் இல்லாதவர் ஆனார் யார்?’ என்னில்,
‘அவன்’
என்கிறார் மேல்;
ஆவி அல்லல் மாய்த்தது –
உன் திருவுள்ளத்தில் உண்டான துன்பம் ஒருபடி அழியப்பெற்றதே! என்றது,
‘இத்தலையை ஒருபடி கரைமரஞ் சேர்த்து நீ கிருதக்கிருத்யன் ஆனாயே!’ என்றபடி.
அன்றிக்கே, ‘என் உள்ளமானது துக்கம் இல்லாததாயிற்று,’ என்னுலுமாம்.
இனி, இப்பாசுரத்திற்கு, ‘ஏகமூர்த்தி என்பது, பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்றும்,
‘இருமூர்த்தி’ என்பது, வியூகத்தைச் சொல்லுகிறது; அதாவது, ‘வாசுதேவ சங்கர்ஷணர்களைச் சொல்லுகிறது’ என்றும்,
‘மூன்று மூர்த்தி என்பது, ‘வியூகத்தில் மூன்றாம் மூர்த்தியான பிரத்யும்நரைச் சொல்லுகிறது’ என்றும்,
‘பல மூர்த்தி’ என்பது, அவதாரங்களைச் சொல்லுகிறது என்றும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!’ என்பது,
இன்னார் படைப்புக்குக் கடவர், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்கிற படியாலே சொல்லுகிறது’ என்றும் நிர்வஹிப்பார்கள் உளர்.
‘உளர்’ என்பதனாலே, இவ்வாறு பொருள் கூறுதல் தமக்குத் திருவுள்ளம் அன்று என்பது போதரும்.
‘இந்த ஆத்துமாக்களை எல்லாம் காரிய காரணங்கள் இரண்டையும்’ என்றது, மஹானாகிய காரியத்தையும்
மூலப்பகுதியாகிய காரணத்தையும் குறித்தபடி.
‘அகங்காரம் முதலான தத்துவங்களும் மூலப்பகுதியின் காரியமாயிருக்க,
‘மஹத்’ என்னும் தத்துவத்தை மாத்திரம் சொல்லுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இரண்டுக்கும் உண்டான’ என்றுதொடங்கி. ‘
அண்மை எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அவ்யக்தம்’ என்று தொடங்கி. ‘அவ்யக்தத்தினுடைய மலர்ந்த விளக்கமான நிலை’ என்றது,
அவ்யக்தமாவது, பிரகிருதியினுடைய நிலை வேறுபாடுகளுள் ஒன்று;
பிரகிருதியானது. ‘அவிபக்த தமஸ்’ என்றும், ‘விபக்த தமஸ்’ என்றும்,‘அக்ஷரம்’ என்றும்,
‘அவ்யக்தம்’ என்றும் நான்கு வகையாக இருக்கும்;
அவற்றுள் ஒன்றான அவ்யக்தத்தினுடைய காரியநிலை மகானாய் இருத்தலால் என்றபடி,
‘அவிபக்த தமஸ்’ என்பது, பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது.
‘விபக்த தமஸ்’ என்பது, பூமியிலிருந்து எழும் விதை போன்றது.
‘அக்ஷரம்’ என்பது, நீருடன் கலந்து நனைந்து பிரிந்த உறுப்புகளையுடைய விதைபோன்றது.
‘அவ்யக்தம்’ என்பது, ஊறிப் பருத்து மேலெழுந்து வெடித்த விதை போன்றது.
‘மகத்’ என்பது, வித்தினின்றும் எழுந்த முளை போன்றது.
‘மேலே கூறிய முறையன்று இங்குச் சொல்லுகிறது’ என்றது,
‘ஏகமூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி’ என்ற இடங்களில் காரணகாரியங்கள் என்ற முறை பற்றி அருளிச்செய்தார்;
‘இனி, அருளிச்செய்வது அம்முறையில் அன்று,’ என்றபடி. அதனை விளக்குகிறார், ‘சாத்விக அகங்காரம்’ என்று
தொடங்கி. பதினோர் இந்திரியங்கள் ஆவன, ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து,
மனம் ஒன்று. இங்குக் கூறிய தத்துவங்களின் முறையையும் விரிவையும் பரம காருணிகரான
ஸ்ரீமத் பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்துவத்திரயத்தில் அசித் பிரகரணத்தாலும்,
பாகவதத்தில் சுகமுனி தத்துவமுரைத்த அத்தியாயத்தாலும் தெளிவாக உணரலாகும்,
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றதனால், இன்னார் படைப்புக்குக் கடவர் என்றும்,
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்றதனால், இன்னார் பாதுகாத்தலுக்குக் கடவர் என்றும் பிரித்துக் கூட்டிக்கொள்க.
‘ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி’ என்றது, சிருஷ்டியைக் கூறுவதனால்,
மேலே கூறிய பிரத்யும்நரது தொழிலாகிய சிருஷ்டியைக் கூறுகின்றது என்பது பொருள்.
‘நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே’ என்பது,
‘அநிருத்தரையும் அவருடைய காரியமான பாதுகாத்தலையும் கூறுகின்றது’ என்பது பொருள்.
‘ஆயின், சங்கர்ஷணருடைய தொழிலாகிய சம்ஹாரத்தைக் கூறவில்லையே?’ எனின்,
‘அழித்தலானது, படைத்தற்றொழிலில் லயப்பட்டிருப்பது ஒன்றாகையால்,
அது, பொருளாற்றலால் தானே சித்திக்கும்’ என்க
————————————————————————
175-
புள்ளின் மெய்ப் பகை-திருச்சந்த விருத்தம் -19
நாகப் பகைக் கொடியான் -திருப்பல்லாண்டு -8-
திருவடிக்கு சகஜ சத்ரு -சாதாரண திருஷ்டியில்
இருவரும் கூட விரும்பி கைங்கர்யம் செய்யும் -கண் வளர்ந்து அருளுகிறது என் கொலோ –
இருவரையும் ஏக கண்டராக்கி அடிமை கொண்ட இது சர்வ சக்தித்வம் பிரகாசிக்க –
அநாதியாக அஹங்காரத்தை விரும்பி போந்த சேதனனை சேஷ தைகதசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாக்குவது இந்த சக்தி இறே –
இத்தையே அஹம் -என்று சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்தான் –
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்தது அது என் கொல் –
சாமான்ய த்ர்ஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு சஹஜ சத்ரு என்னலாம் படி இருக்கிற
திருவநந்த ஆழ்வான் மேலே திருப் பாற் கடலிலே இருவரும் கூடி விரும்பி அடிமை செய்யும்படி
கண் வளர்ந்து அருளுகிற இது என் கொலோ
சஹஜ சத்ரு என்று புத்தி பண்ணி இருக்கும் சம்சாரத்தில் இருவரையும் ஏக கண்டராக்கி
அடிமை கொண்ட இது தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தை பிரகாசிப்பிக்கைக்காக அன்றோ என்று கருது –
அநாதியாய் அஹங்காரத்தை விரும்பிப் போந்த சேதனனை சேஷதைகரசரான
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்குவது இச் சக்தி இறே –
நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-
பையுடை இத்யாதி-மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு
அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்
————-
176-
ஆமையான கேசவா-20
கேழல் ஒன்றாக இடந்த கேசவன்-திருவாய்மொழி-1-9-2-
கேசவா என்றது பிரமாதிகள் சரணம் புகுர -தத் ரக்ஷண அர்த்தமாக கூர்ம சஜாதியன் ஆகையாலே -மேன்மை அழியாதபடி –
கேழல் -கேசவன் -பிரசஸத கேசன் -அப்போதை திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலை –
கூர்ம வராக அவதாரங்களிலும் அஜகதசவ ஸ்வபாகனாகவே ஆழ்வார்கள் கூறுகிறார்கள் –
கீதையிலும் –அஜோபிசன் அவ் யயாத்மா பூதானம் ஈஸ்வரோபிசன் -என்றான் இறே –
கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –
சமுத்திர மதன வேளையில் வருண பாசங்களை உடைத்தான கடலிலே முதுகிலே
மந்த்ரம் சுழலுகிற இது ஸ்வயம் பிரயோஜனமாக நினைத்து கூர்ம சஜாதீயன் ஆனவனே –
பாச நின்ற நீர் -என்று
பரம பதத்தில் காட்டில் பிரேம ஸ்தலமான கடலிலே என்னவுமாம்
கேசவா
ப்ரஹ்மாதிகள் சரணம் புகுர தத் ரஷண அர்த்தமாக கூர்ம சஜாதீயன் ஆகையாலே
அவ்வளவாலும் ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு உத்பாதகனான மேன்மை அழியாது இருக்கிறபடி
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-
கேழல் ஒன்றாகி
தன் மேன்மையோடு அணைந்து இருப்பதொரு வடிவை தான் கொள்ளப் பெற்றதோ –
ஒன்றாகி –
பின்பு சர்வ சக்தியான தானே -இவ்வடிவைக் கொள்ள -எந்நாளும் ஒண்ணாத படி அத்விதீயமாய் இருக்கிறபடி-
பூமி பிரளயத்திலே அகப்பட்ட வாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்ட வித்தனை அவன் தான்-அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கும்-அது அவன் கொண்ட வடிவாகையாலே
பன்றியாம் தேசு -நாச்சியார் திருமொழி -11-8–இறே
பிரணியித்வம்-தோற்றின வடிவம் கொண்டான் -நிரந்குச ஸ்வ தந்த்ரன் கொண்டதால் பிரிய தமம் –ஸ்வரூபம் விட ரூபத்தில் ஆழ்வார்கள் ஆழ்வார்கள்
இடந்த-
அஜ் ஜாதிக்காக உள்ளதொரு குணமாயிற்று செருக்கு
ஸ்ரீ யபதி அவ்வடிவைக் கொண்டால் சொல்ல வேண்டா விறே
அண்ட பித்தியில் சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறினான்
கேசவன் –
பிரசச்த கேசவன்
அப்போதை திருமயிரும் உளை மயிருமாய் நின்ற நிலை
என்னுடை யம்மான்
சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தவன் –
————————————————————————
177-
பண்டும் இன்றும் மேலும் -22
மனனக மலமற -திருவாய் மொழி -1-1-2-
இப்பாட் டுக்களில் கிரியா பதம் இல்லை –
பண்டும்- பூமி – நாதனே இப்படிப் பட்ட தேவரீருக்கு ஆஸ்ரித வத்சலர் என்னுமிது ஓர் ஏற்றமோ –
என்று வாக்ய சேஷம் கொள்ள -வேண்டும் -அன்றிக்கே -பகவான் ஆழ்வாருக்கு வட தள சயனத்தை
காட்டிக் கொடுக்க -அதிலே வித்தராய் வாய்ப் பேச்சு அற்று போனார் -என்னவுமாம்
மனனக மலமற –இனன் எனதுயிர் -என்றும் கொள்ளலாம்
அன்றிக்கே
எனன் உயிர் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் ஆகவும் கொள்ளலாம் –
பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –22-
பண்டு இன்று மேலுமாய் –
பண்டு -சிருஷ்டி பூர்வ காலத்தை
இன்று -சிருஷ்டி காலத்தை
மேல் -பிரளய வேளையில்
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -என்கிறபடியே நாம ரூபங்களை இழந்து அசித விசேஷிதமாய்
சோச்ய தசாபன்னமான சகல பதார்த்தங்களையும் –
ஸ்ருஷ்டி வேளையில் கர்ம அநுரூபமாக ஸ்ருஷ்டித்து
தத் அநுரூபமாக ரஷித்தும் –
பிரளயம் கொள்ளும் அளவில் வயிற்றிலே வைத்து நோக்கியும்
போருமவன் ஆகையாலே
ஆய் -என்றது ஆகையாலே என்று ஹேது கர்ப்பமாய் கிடக்கிறது
பிரளய ஆபத்திலே வரையாதே எல்லாரையும் வட தள சாயியாய் சர்வ சக்தித்வம்
தோற்ற சிறு வயிற்றிலே வைத்து ரஷித்த தேவரீருக்கு -ஆஸ்ரித விஷயத்தில் வத்சலர் -என்னும் இது ஒரு ஏற்றமோ -என்கிறார் –
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
மனனகம் -என்று தொடங்கிச் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
ஸ்வரூப வைலஷண்யத்தை அனுபவிக்கிற இவருடைய பிரதிபத்தி க்ரமம்-இருக்கிறபடி –மனன் -என்றது -மனம் -என்றபடி –
அகம் -நிரவவயமாய் இருக்கிற மனஸ்ஸூ க்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே –மனனகம் -என்றது -மனசிலே -என்றபடி –
அன்றியே –
பராகர்த்த விஷயமாயும் -பிரத்யகர்த்த விஷயமாயும் போருகையாலே -பராகர்த்தத்தைத் தவிர்ந்து –
பிரத்யகர்த்த விஷயமானத்தை அகம் -என்கிறது ஆகவுமாம்-உட் பொருளிலே செல்லும் மனம் என்றபடி –
மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
-எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்
எனன் உயிர் -எனன் உயிர் -என் உயிர் என்றவாறு
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன் –யஸ்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இறே –யோகி ஹிருதயத் த்யான கம்யம் -அந்தர்யாமி -இரண்டு வகை -ஸ்ரீ லஷ்மி விசிஷ்டன் -விசேஷ வியாப்தி-அசேதனம் உள்ளும் இருக்கிறார் -ஆட்சி செய்வதை புரிந்து கொள்ள வேண்டும் –
அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –
—————————————————————–
178-
வரத்தினில் சிரத்தை மிக்க -25
மதிள் இலங்கைக் கோ -திருவாய்மொழி -4-3-1-
பிரம்மா தனக்கு தந்த வரத்தினில் அத்யாதரத்தை பண்ணி -வர ப்ரதனான பிரம்மாவுக்கு
உத்பாதகனான அவனோடு விரோதித்து -தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை –
என்று உன்னை அறியாதே வரத்தையே விஸ்வசித்து இருந்தவன் –
இம் மதிளும் ஊரும் உண்டே நமக்கு -என்று சர்வ ரஷகனான பெருமாளை மதிளை ரஷகம் என்று
இருந்து சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டான் ஆயிற்று -இது இ றே தானே தனக்கு பண்ணிக் கொள்ளும்
ரஷை -ஆக ஆசூர ராஷசர்கள் ரஷகரான பெருமாளை விட்டிட்டு அரஷகத்தை ரஷகமாக பிரமித்த படி –
இத்தன்மை உடையார் எல்லாரும் ஆசூர ராஷசர்களே –
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
வரத்தினில் சிரத்தை மிக்க –
தனக்கு தந்த வரத்தில் -அத்ய ஆதரத்தைப் பண்ணி -வரப்ரதானனான ப்ரஹ்மாவுக்கு
உத்பாதகன் ஆனவனோடே விரோதித்து -அவனாலே உத்பன்னனான ப்ரஹ்மா தனக்கு
தந்த வரத்திலே இறே மிக்க சிரத்தையைப் பண்ணிற்று -கோயம் விஷ்ணு -என்றான் இறே –
தன் வரத்துக்கு புறம்பான வடிவு கொள்ள வல்லை என்று உன்னை அறியாதே வரத்தையே
விஸ்வசித்து இருந்தவன் –
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் –
‘மதிளை உடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகன் அல்லனோ?’ என்று செருக்கு உற்றிருக்கிற இராவணன் முடிய வில்லை வளைத்தாய்;
‘இம்மதிளும் ஊரும் உண்டே நமக்கு,’ என்று சக்கரவர்த்தி திருமகனை எதிரிட்டவன் ஆதலின், ‘மதிள் இலங்கைக்கோ’ என்கிறார்.
சர்வ இரட்சகனான பெருமாளை விட்டு, மதிளை இரட்சகம் என்று இருந்தானாயிற்று.
இது அன்றோ தான் தனக்குச் செய்து கொள்ளும் காவல்?
ஆக, ‘மதிள் இலங்கைக் கோ’ என்றதனால், ‘இராவணனால் ஆளப்படுகின்ற இலங்கை’ என்கிறபடியே,
மண்பாடு தானே ஒருவர்க்கும் புகுவதற்கு அரிது; அதற்குமேலே உள் நின்று நோக்குகின்றவனுடைய வலிமையைக் கூறியபடி.
—————
179-
பௌ நீர் –கிடந்தது கடைந்த -28
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –வங்கக் கடல் கடைந்த-திருப்பாவை 2-30-
சமுத்திர சயன சமுத்திர மதனங்களை அனுபவித்தபடி –
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-
படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே
அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக
அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –
இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –
அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இறே
முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –
கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்-2-
பாற் கடலுள் பையத் துயின்ற –
பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக-
திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து-
ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹிதனாய்-
ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி
கீழே நாராயணன் -என்றார்களே –
அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே
தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்கிறார்கள் –
மன்னு வடமதுரை மைந்தன் -என்று மேலே சொல்லப் புகுகிறார்கள் ஆகையால் –
நாராயணன் -என்பது –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் என்பதாகா நின்றார்கள் –
ஸ்ரீ பீஷ்மர் பரத்வமே பிடித்து உபபாதித்திக் கொண்டு வாரா நிற்க –
ச ஏஷ ப்ருது தீர்க்கா ஷஸ் சம்மந்தீ தே ஜனார்த்தன -என்று மூதலித்துக் காட்டினால் போலே –
அபரம் பவதோ ஜென்ம பரம் ஜென்ம விவஸ்தத-என்று அர்ஜுனனுக்குத் தானும் அருளிச் செய்தான்
—————————————————————
180-
கூனகம் புகத்தெறித்த -30
கொண்டை கொண்ட கூன்–அரங்க ஒட்டி -49
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் -திருவாய்மொழி -1-5-5-
ஒருகால் நின்று உண்டை கொண்டு-பெரிய திருமொழி -10-6-2-
உள்ளங்கை நெல்லிக்கனியாக சாஷாத் கரித்த ஸ்ரீ வால்மீகி பகவானும் அறியாத
ஸ்ரீ ராம வ்ருத்தாந்தத்தை அறிந்த ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூக்திகள் -நிர்ஹேதுக கிருபையால்
மதிநலம் அருளப் பெற்ற படியால் -அபரிச்சின்ன ஞானம் ஆழ்வார்களுக்கு –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
கூனி கூன் நிமிர்தவர்-பெருமாள் அஹங்கரிக்கும் ஜீவனுடைய அஹங்காரத்தை அழித்து
குனிய வைக்கிறார் -திருவரங்கம் பெரிய பெருமாள் -எனபது திருமழிசைப் பிரான் அனுபவம் –
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-
கூனகம் புகத்தெறித்த –
கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது
கொற்ற வில்லி யல்லையே —
வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –
கொற்றம் -வென்றியும் -வலியும்
புண்டரீகனே -கொற்ற வில்லி அல்லையே என்று அவதார அந்தரமாய் இருக்கச் செய்தேயும்
தரம்யைக்யத்தாலே -பால்ய யவன அத்யவஸ்தா விசேஷங்கள் போலே தோன்றுகிறது ஆய்த்து
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி-
மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீ ய வேஷை யான கூனி –
இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –
கூனி கூன் –
கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்
உண்டை கொண்டு அரங்கவோட்டி-
லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித்
தெறித்து -அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
அவள் அருகு இன்றிக்கே ஒழியவன் ஆனால் தான்–(பெருமாள் -கிருஷ்ணன் இருவருக்கும் கூனி விருத்தாந்தம் பொழுது பிராட்டி அருகிபோல் இல்லையே _-உ ன்னைக் கிட்டினார்க்கு அவத்யம் வருமோ –கூன் சிதைய -என்றது
இவளுடைய அல்லாத அவயவங்களுக்கு ஒரு வாட்டம் வாராத படி நிமிர்த்த அத்தைப் பற்றா
வன வாச ஹேது பூதையான குப்ஜையைச் சொல்லிற்றாய்-பால்யத்திலே சுண்டு வில் கொண்டு திரியா நிற்க பெருமாள் லீலா ரசம் அனுபவித்தார்
என்று உண்டு -அத்தைப் பற்றிச் சொல்லிற்று ஆகவுமாம்
வேலைக்காரர்கள் இடம் சரியாக நடக்கிறாயா -பரத ஆழ்வான் இடம் பெருமாள் –ஏதோ பட்டு சொல்லுகிறாயே-அப்போது கோவிந்தா -என்றது பூமிக்கு ரஷகன் ஆனவன் என்கிறது-
அன்றிக்கே தீம்பு சேருவது கிருஷ்ணனுக்கே யாகையாலே போம் பழி எல்லாம் அமணன் தலையோடு -என்னுமா போலே அவன் தலையிலே ஏறிட்டு சொல்லுதல்
கன்னக் கோல்-திருடன் -சாக -அவள் பெண் -சிற்றாள் கலவை -பானை அளவு அதிகம் -குயவன் -ஸ்திரீ பார்த்து -வண்ணான் இடம் துணி வாங்க –
அமணன் உட்கார்ந்து கால தாமதம் -மௌன சந்நியாசி
அதுவும் அன்றிக்கே சாந்து இட்ட கூனி தன்னை சொல்லிற்றாய் -வருத்தம் அற சுண்டு வில் நிமிர்க்குமா போலே நிமிர்த்தவன் -என்னுதல்
தெறிக்கை யாவது -க்ரியையாய்- நிமிர்த்தாய் என்றபடி
கிருஷ்ணனுக்கு வில்லுண்டோ பின்னை என்னில் வேலிக் கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி திரியும் இறே
தருமம் அறியாக் குறும்பனை தன கைச் சார்ங்கம் அதுவே போலே -என்று வில் உண்டாகவே அருளிச் செய்தாள் இறே
கோவிந்தா -திர்யக்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ –
குன்றொன்று மத்தா வரவமளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு ஒரு கால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர நினைந்த பெருமான் அதுவன்றியும் முன்
நன்றுண்ட தொல் சீர் மகரக் கடலேழ் மலையேழ் உலகேழ் ஒழியாமை நம்பி
அன்றுண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப் புண்டு இருந்தவனே -10-6-2-
நின்றுண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் –
முன்பு நின்ற நிலையிலே நின்று
வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி
வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –
(கண்ணனுக்கு முன்பு நின்ற நிலை -ராமனின் சேஷ்டிதம் என்றும்
உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா )
————————————————————
181-
ஆதி ஆதி ஆதி நீ -34
வேர் முதல் வித்தாய் -திருவாய்மொழி -2-8-10-
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி
த்ரிவித காரணமும் நீ -என்றவாறே –
வேர் -சஹ காரி காரணம் -முதல்-நிமித்த காரணம் -வித்து-உபாதான காரணம்
பரம வைதிக சித்தாந்தம் -இது-
ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-
ஆதி யாதி யாதி நீ –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் -ஏகமேவ அத்வதீயம் -என்கிறபடி யே த்ரிவித காரணமும்நீயே
எதுக்கு காரணம் ஆகிறது என் என்னில் -மஹதாதி விசேஷாந்தமான ப்ரகர்தி சிருஷ்டிக்கு –
பஹூஸ்யாம் -என்கிற சங்கல்ப்பத்தாலே காரண பூதன் –
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்
முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்
பரமபததுக்கு காரணத்வம் உண்டோ -நித்யம் அன்றோ
பரம பதம் – நித்யா இச்சா வேஷத்தால் நிமித்த காரணம் -கைங்கர்யம் கொண்டு கொண்டே இருப்பேன்-வேற மாதிரி சங்கல்பம் அங்கே –நித்யா இச்சா விசிஷ்ட ப்ரஹ்மம்-அப்ராக்ருத அசித் சித் ஜீவ விசிஷ்ட ப்ரஹ்மம் -மண்டப கோபுராதிகள் அங்கே-நித்யர்-
வேர் முதலாய் வித்தாய் –
த்ரிவித காரணமும் தானேயாய்
பரந்து –
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –என்கிறபடியே — தஜ்ஜ தல்ல தன்ன தஜலன –
முந்துற இவற்றை யடைய உண்டாக்கி
பின்னை இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக அநு பிரவேசித்து -இப்படி ஜகதாகாரனாய் நின்று –
——————————————————
182-
பாலின் நீர்மை -44
நிறம் வெளிது செய்து -மூன்றாம் திருவந்தாதி -56
நிகழ்ந்தாய் பால் பொன் -நான்முகன் திருவந்தாதி -24
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-2-
திருமால் கரு நெடுமால் சேயன் -திரு நெடும் தாண்டகம் -3
யுக அநு குணமாக தனது காள மேக நிபஸ்யாமமான நிறத்தை அழிய மாறி -முகம் காட்டுகிறான் –
கலி யுகத்தில் தன் பக்கல் அபிமுகராய் ஒரு வர்ண விசேஷத்தில் ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான வடிவு தன்னை கருநீல வர்ணனாய் இருக்கும் படி –
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44-
பாலின் நீர்மை –
க்ர்த யுகத்தில் உள்ளார் சத்வ ப்ரசுரராய் வெளுப்பு உகக்குமவர்கள் ஆகையாலே
அவர்களுக்கு பால் போன்ற நிறைத்தைக் கொள்ளும் ஸ்வபாவம் –அதாகிறது நிறம் –
வளை வுருவாய்த் திகழ்ந்தான் -என்றும் -சங்க வண்ண மன்ன மேனி -என்றும் –
சொல்லுகிற ஸ்தானத்தில் பாலின் நீர்மை -என்றது -இவ் வெளுப்புக்கு ஆஸ்ரயம்
சர்வ ரச -என்கிற விஷயம் என்று தோற்றுகைக்காக –
செம்பொன் நீர்மை –
த்ரேதா யுகத்திலே வந்தால் -ருக்மாபம் -என்றும் –
கட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்றும் சொல்லுகிறபடியே
சிவந்த நிறத்தை கொள்ளும் -சேயன் என்றும் த்ரேதைக் கண் -என்கிற ஸ்தானத்திலே –
செம்பொன் நீர்மை -என்றது அந் நிறத்துக்கு ஆஸ்ரயமான விக்ரஹம் மஹார்க்கம்
என்று தோற்றுகைக்காக –
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை –
த்வாபர யுகத்திலே வந்தால் பாசியினுடைய புறத்தில் பசுமை போல ஸ்ரமஹரமான
திரு நிறத்தை உடையவனாய் –
பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை –
கலி யுகத்தில் வந்தால் எல்லா வடிவும் கொண்டாலும் அபிமுகீ கரிப்பர் இல்லாமையாலே
ஸ்வாபாவிகமான நீல நிறமாய் இருக்கும் –
நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -என்னக் கடவது இறே –
கலௌ ஜகத் பதிம் -அழகிய தடாகத்திலே வண்டுகள் நெருங்கப் படிந்து மது பாநத்தை
பண்ணி -அத்தால் வந்த ஹர்ஷத்தாலே சிறகு விரித்து வுலவா நின்றுள்ள நீலப்
பூவின் நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனாய் -இத்தால் ஸ்ரமஹரமாய்
செவ்வியை உடைத்தான நீலப் பூ என்கை –
பொற்பு-அழகு
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் —
இறையினுடைய வடிவானது
வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-
பொருளின் வண்ணம் சொல்லாமல் பொருளையே அருளிச் செய்கிறார் பால் இத்யாதியால்
பால் -வெளுப்பு மட்டும் அல்ல ரஸம் –ரஸோ வை ஸஹ
பொன் சிகப்பு மட்டும் அல்ல ஸ்ப்ருஹனீயம் –
பாசி -மாந்தளிர் பச்சை மட்டும் அல்ல பார்த்தாலே குளிர்ச்சி –
கார் வண்ணம் -கறுப்பு மட்டும் அல்ல வண்மை -இயற்கை வர்ணம்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும்
க்ருத யுகத்தில் புருஷர்கள்
சத்வ பிரசுரர் ஆகையால்
வெளுத்த நிறத்தை உகப்பவர்கள் என்று
அதுக்காக வெளுத்த நிறத்தை கொண்டான் ஆய்த்து-
அவர்கள் உகந்ததை நாம் செய்யவே
நாம் உகந்ததை இவன் செய்தான்
நாமும் இவன் தன்னை உகப்போம் -என்று
ஆதரிப்பார்கள் என்று பார்த்து –
அவ் வழியாலே
அனந்தரத்தில் உள்ளாருக்கு ரஜோ குணம் அளாவி இருக்கையாலே
அவர்கள் உகந்த சிவந்த நிறத்தை உடையவன் ஆனான்
அதுக்கு அனந்தரம்
மணியின் வண்ணத்தை உடையவன் ஆனான்-
வண்ணம் எண்ணும் கால்
இவனுடைய வடிவை ஆராயப் புக்கால்
நித்தியமான அசாதாராண விக்ரஹம்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து இருப்பது –
திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர்
இவன் யுகங்கள் தோறும் அவ்வவர் உகந்த
வடிவுகளைக் கொள்ளும்
இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும்
என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான்
இருக்கும்படி இது காண்
என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ் வடிவைக் காட்ட வேண்டும்
திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே
திரு வடிவில் –
வடிவிடை யாட்டத்தில் –
கீழே -சேஷத்வத்தின் இடையாட்டமாகவும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியின் இடையாட்டமாகவும் -செய்தவை போலே
இவ்விடை யாட்டத்தில் செய்தவை கிடீர் என்கிறார் –
திரு வடிவு
1-வி லஷணமான வடிவு -என்னுதல் –
2-திருவினுடைய வடிவு -என்னுதல் –
வடிவு -யென்ன அமைந்து இருக்க
திரு வடிவு -என்கிறது
அகலகில்லேன் இறையும்-என்கிறபடியே
பிராட்டி தண்ணீர் தண்ணீர் -என்னும்படி இருக்கிற
துர்லபமான வடிவைக் கிடீர் நாட்டார்க்கு அழிய மாறி –
முகம் கொடுத்தது என்று
அவ்வடிவின் வை லஷண்யம் தோற்றுகைக்காக –
(நித்ய அநபாயிநி -திருவே அவளும் அனுபவிக்க உரிய வடிவு -திருவை அனுபவிக்கக் கொண்ட வடிவு
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)
அவ்வடிவை உபகரித்த படியை சொல்லுகிறது மேல் –
கரு நெடு மால் –
காள மேய நிபஸ்யாமமான வடிவை உடையனாய்
உபய விபூதிக்கும் அவ்வருகான
பெரிய மேன்மையை உடையவன் –
இத்தால் –
விலஷண விக்ரஹ உக்தனாய்
ஸ்வயம் நிரபேஷனாய்
சர்வாதிகனாய் இருக்குமவன் கிடீர் -இப்படி ஆனான் -என்கிறார் –
அதவா
மால் -என்று – வ்யாமோஹமாய்
அதி வ்யாமுக்தன் என்னவுமாம் –
இத்தால்
இப்படி இருக்கிறவன் -தன்னை அழிய மாறி முகம் காட்டுகைக்கு ஹேது
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே என்ற ஹேது ஆகவுமாம் –
சேயன் என்றும் -த்ரேதைக் கண் –
த்ரேதா யுகத்தில் வந்தால் -சிவந்த வடிவை உடையவனாய் இருக்கும் –
அக் காலத்திலே புருஷர்கள் ரஜஸ் பிரசுரர் ஆகையாலே சிவப்பிலே யாய்த்து ருசி உண்டாய் இருப்பது –
அந்த ருசி அனுகுணமாக சிவந்த வடிவைக் கொண்டு முகம் காட்டும் –
ரஜஸ் ஸூ சிவந்து இருக்கக் கடவதாய் –
சத்வம் வெளுத்து இருக்கக் கடவதாய் –
தமஸ் ஸூ கறுத்து இருக்கக் கடவதாய் -இறே இருப்பது –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்று இறே
(வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * (ஸ்வேதார உபநிஷத் ) என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.
பிரக்ருதியை முக்குண கலவி கொண்ட பெண்ணாக உருவகம் -முமுஷு இதில் தண்மை அறிந்து அவன் மேன்மை அறிந்து முக்தன் ஆகிறான்
முதல் யுகத்தில் கொண்ட வெண்மையை முதலில் சொல்லாமல் சிகப்பைச் சொல்லி வெண்மை சொன்னது போல் இங்கும் அருளிச் செய்கிறார் )
பிரக்ர்திக்கு அசாதாரண குண த்ரயத்தையும் சொல்லிற்று –
சிவந்த வடிவை பிரதமத்திலே சொல்லிற்று –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்கிற ஸ்ருதி சாயையாலே
அருளிச் செய்கிறார் -என்னும் இடம் தோற்ற –
சேஷி உகப்புக்கு அனுகுணமாக சேஷ பூதன் தன் வடிவை அமைக்கை அன்றிக்கே
(நிவாஸ சய்யா –இத்யாதி
சென்றால் குடையாம் -இத்யாதி )
சேஷ பூதன் உகப்புக்கு அனுகுணமாக சேஷி தன் வடிவை
அழிய மாறுகிறான் இறே
தமர் உகந்தது எவ்வுருவம் -என்கிறபடியே
என்றும் -என்றும் -என்கிற இவை
ஊழி தூறு ஊழி -நின்று ஏத்தல் அல்லால் என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது
(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி-53-
நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 40 –
ஆபாஸ விருத்திக்கு ஐம்பது சரீரம் கொண்டானே ஸுபரி
“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்
சதங்கை அழகியார் -நம்பிள்ளை ஆராதன தெய்வம் -நாவல் பழம் கேட்ட வ்ருத்தாந்தம்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி —44–)
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் –
கிருத யுகத்தில் வந்தால் –
திரேதைக் கண் -என்றவோபாதி –க்ர்த யுகம் -என்னாதே
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்கிறது-
திரேதைக் கண் -என்று மலட்டுக் காலம் போலே இருக்கையாலே
பகவத் ஸ்பர்சியான காலம் என்று அருளிச் செய்கிறார் –
அக் காலத்தில் பண்ணின வியாபாரம் தமக்கு அபிமதமாய் இருக்கையாலே-
183
எழுந்து இருந்து பேசு -61
வகை யருளாய் -வந்தே-திருவாய்மொழி -3-2-4-
கண் வளர்ந்து அருளா நிற்க அருளிச் செய்ய ஒண்ணாது
எனது பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும்
எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் -அருளிச் செய்யும் போதை ஸ்வரத்தாலும்
எனக்கு பயம் கெட வேணும்-என்கிறார் திரு மழிசைப் -பிரான்
சேரும் வகை அருள வேணும் -என்கிறார் நம் ஆழ்வார் –
அது செய்யும் இடத்து முகம் தோற்றாது அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது
வந்து அவதரித்து உனது குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாதபடி வந்து
சேர்த்து அருள வேணும் என்கிறார் –
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-
எழுந்து இருந்து பேசு-
இதுக்கு ஹேதுவை -கண் வளர்ந்து அருளா நிற்க -அருளிச் செய்ய ஒண்ணாது
என் பயம் கெட எழுந்து இருந்து அருளிச் செய்ய வேணும் –
எழுந்து இருக்கும் போதை சேஷ்டிதத்தாலும் –
அருளிச் செய்யும் பொழுது ஸ்வரத்தாலும் –
எனக்கு பயம் கெட வேணும்
வாழி –
அப்படி அருளிச் செய்யாமையாலே -ஆயுஷ்மான் -என்னுமா போலே -ஒரு தீங்கு
இன்றிக்கே கண் வளர்ந்து அருளுகிற இவ்வழகு நித்யமாய் செல்ல வேணும் என்று மங்களா
சாசனம் பண்ணுகிறார் –
கேசனே —
கேசவ சப்தமாய் கடைக் குறைத்தலாய் கிடக்கிறது -என்னுதல்
கேசத்தை உடையவன் -என்னுதல்
இரண்டுக்கும்
ஸ்நிக்த நீல குடில குந்தளன் -என்று அர்த்தம்
இத்தால் -கேசவா க்லேச நாஸ -என்கிறபடியே திருக் குழலைப் பேணி என்னுடைய
க்லேசத்தை தீர்த்து அருள வேணும் -என்கை
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து
உன்னை ஒழிந்த மற்றுள்ள இடத்திலும் வரக்கடவதான தாழ்ச்சியையும் தவிர்ந்து
யாதானும் பற்றி -திருவிருத்தம் -95–என்கிறபடியே நீ யன்றிக்கே ஒழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு-
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி –
வகுத்ததாய்-நிரதிசய போக்யமாய் இருக்கிற உன் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை -வாழ்ச்சி என்றாலே கைங்கர்யம் தானே –
இதுக்கு முன் புதியது உண்டு அறியாத கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேண்டும் -புதியது -ஏக தேசத்திலும் –
இரண்டு இடத்திலும் ப்ராவண்யம் ஒத்து இருக்க தாழ்ச்சி என்றும் வாழ்ச்சி என்றும் சொல்லுகிறார்
சர்வம் பரவசம் துக்கம் -என்றும்-ஸ்வ வசம் ஸூகம் -அப்ராப்த விஷயத்தில் இது -அவனுக்கு வசம் ஸூகம் என்றபடி
சேவா ஸ்வ வ்ருத்தி-என்றும் அவற்றைச் சொல்லா நின்றது இறே
சாயா வா சத்வம் அநு கச்சேத்-என்று இத்தை விதியா நின்றது –
அவற்றைப் பற்ற இவ்வாழ்ச்ச்சிக்கு இட்டுப் பிறந்து வைத்து அத்தை இழந்து இருக்கிற நான் கிட்டுவது ஒரு பிரகாரம் அருளிச் செய்ய வேணும்
யான் சேரும் வகையருளாய்
வந்தே –
அது தானும் முகம் தோற்றாதபடி நின்று அருள ஒண்ணாது
என் கண்ணுக்கு இலக்கு ஆம்படி
ராம கிருஷ்ணாத் யாவதாரங்கள் போலே எனக்காக ஒரு அவதாரத்தைப் பண்ணியே யாகிலும் வந்து அருள வேணும் –
———————————————————-
184-
எம்மாதி -69
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -திருவாய்மொழி -3-2-1-
எம்மாதி என்பான் என் என்னில் -ஈஸ்வரன் ஜகத் சிருஷ்டியை பண்ணுகிறது முமுஷு
ஸிச ருஷையாலே யாகையாலே -அந்த ஸ்ருஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர்
பக்கலிலே என்று எம்மாதி என்கிறார் –
எம் முகில் வண்ணனே -ஸ்ருஷ்டி சர்வ சாதாரணம் ஆனாலும் இவர் தமக்காக என்று இருக்கிறார்
எங்கும் ஒக்க வர்ஷித்தாலும் -அது கொண்டு விளைத்துக் கொண்டவன் -எனக்காக -என்று
இருக்குமா போலே -எல்லாருக்கும் ஒக்க அவன் செய்தாலும் -கிருதஞ்ஞன் எனக்காக என்று
இருக்கும் இறே –
ஸ்ருஷ்டி அவதாராதிகளைப் போலே -ஸ்வார்தமாக என்று இறே ஞானாதிகர் அநு சந்திப்பது –
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-
எம் ஆதி பால் பேணி –
எங்களுக்கு காரண பூதனானவன் பக்கலிலே ஆதரத்தைப் பண்ணி –
ஜகத் காரண வஸ்துவாய் இருக்கிறவனை
எம்மாதி -என்பான் என் என்னில் –
ஈஸ்வரன் ஜகத் ஸ்ர்ஷ்டியைப் பண்ணுகிறது முமுஷூ சிஸ்ர்ஷையால் யாகையாலே
அந்த ஸ்ர்ஷ்டி பலித்தது அநந்ய பிரயோஜனர் பக்கலிலே என்று எம்மாதி -என்று
விசேஷிக்கிறார்
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
முந்நீர்
1–ஆற்று நீர் -ஊற்று நீர் வர்ஜ ஜலம்-என்று சொல்லுகிறவற்றை-அப ஏவ ச சார்ஜ தௌ –மனு ஸ்ம்ருதி -1-8-என்று
2–முற்பட ஜல சிருஷ்டியைப் பண்ணி பின்பிறே அண்ட சிருஷ்டி தான் பண்ணிற்று
மேலைத் தண் மதி என்றால் கீழை கதிரவன் வாங்கிக் கொண்டு அர்த்தம் போலே முந்நீர் பின் ஞாலம் தருவித்துக் கொள்ள வேண்டும் –
ஞாலம் படைத்த -திருவாய் மொழி -9-5-9–இந்திர ஞாலங்கள் காட்டி என்பதற்கு ஏற்ப –
1-விசித்தரமாக ஜகத் சிருஷ்டியைப் பண்ணின -தய நீய தசையைக் கண்டு –
2-இவை கரண களேபரங்களைப் பெற்று கரை மரம் சேர வேணும் என்று தயா பரதந்த்ரனாய் சிருஷ்டித்த படி
எம் முகில் வண்ணனே
அவன் சர்வ விஷயமாக உபகரிக்கச் செய்தே -மதர்த்தம் -என்று இருக்கிறார்
1-இவர் ஒருவர் சாதனானுஷ்டானம் பண்ணி வர்ஷிப்பிக்க – நாடு வாழ்ந்து போமா போலே -பகீரதன் -கங்கை –
2-அவன் எனக்காக ஜகத் சிருஷ்டியைப் பண்ணினான் நாடு வாழ்ந்து போயிற்று என்று இருக்கிறார் –
முகில் வண்ணனே
1-சர்வ விஷயமாக உபகரித்த படியும்
2-பிரத்யுபகாரம் கொள் இராமையும் பற்ற முகில் வண்ணனே என்கிறார் –
—————————————————-
185
நடந்த கால்கள் நொந்தவோ -61
தாளால் உலகம் அளந்த அசைவே கொல் -நான் முகன் திருவந்தாதி -35
அடியார் அல்லல் தவிர்ந்த அசைவோ -திருவாய் மொழி -8-3-5-
அர்ச்சா சமாதியிலே -அர்ச்சக பராதீன ஸ்வ வ்யாபாரங்களை உடையவனாய்
குளிர நோக்குதல் –வினவுதல் -திரு மேனி அசைதல் -எழுந்து உலாவுதல்
இன்றிக்கே இருக்கை -ஆழ்வார்கள் வயிறு பிடிக்கிறார்கள் -இவனுடைய அர்ச்சா சமாதி
என்று தெளியாதே கலங்கி -பகவானுக்கு என் வந்ததோ -பலவாறு அபேஷிக்கிறார்கள் –
திருக்குடைந்தை -திருவல்லிக்கேணி -திருக்கோளூர் -திருப்புளிங்குடி -எழுந்து அருளிய
பெருமாளை இங்கனம் வேண்டியபடி –
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-
நடந்த கால்கள் நொந்தவோ
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்கிறபடியே
ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு திரு உலகு அளந்த இது பொறாமே நொந்து
கண் வளர்ந்து அருளுகிறதோ –
சக்கரவத்தி திருமகனாய் காட்டிலும் மலையிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு
திரிந்த வது பொறாமே நொந்து கண் வளர்ந்து அருளுகிறதோ –
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ -என்று -சௌகுமார்யத்தை அறியுமவர்கள்
கூப்பிடும்படியாய் இ றே இருப்பது –
நடந்து பொறாமே கண் வளர்ந்து அருளுகிற தாகில் -நான் திருவடிகளைப் பிடிக்க –
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-
பெரிய அலைகள் வந்து அடிக்கிற ஸ்லாக்யமான மயிலாப்பூருக்கு அடுத்த ஸ்லாக்யமான
திருவல்லிக்கேணியில் எழுந்து அருளி இருக்கிறவன்
ஐந்து சிரஸ்ஸூக்களையும் முகங்களையுமுடைய திரு வனந்த ஆழ்வான்
ஆகிற படுக்கை மேல் சலியாமல் கண் வளர்ந்து அருளுகிறான்
ஒரு வார்த்தையும் சொல்லான்
இது திருவடிகளினால் லோகங்களை அளந்த ஆயாசத்தினாலேயாய் இருக்கலாமோ –
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாளா கிடந்தருளும் வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-
(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )
(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசைவோ பணியாயே–8-3-5-
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் –
அவிகாரியாய் இருக்கிற நீ -ஒருபடியே கண் வளர்ந்து அருளி-
அதனாலே இனியன் ஆகைக்கு காரணம் என் –
இவன் முகத்தில் தெளிவு உண்டாய் இருந்தது அதுக்கடி முன்பே ஸ்ரமம் உண்டாகை அன்றோ -என்று இருக்கிறார்-
சிரமம் உடையாருக்கு உறங்க உறங்க முகம் தெளிந்து வரக் காண்கையாலே-
அடியார் அல்லல் தவிர்த்த வசைவோ –
திருவடிகளில் சரணம் புகுந்த இந்த்ரன் முதலானவர்கட்காக–இராவணாதிகளை அழியச் செய்து
அவர்கள் துக்கங்களை கெடுத்த இளைப்போ –
அன்றேல் –
அன்றாயின்
இப்படி தான் நீண்டு தாவிய வசைவோ-
நீண்டு இப்படிதான் தாவிய அசைவோ –
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து மிருதுவான திருவடிகளைக் காடும் ஓடையும்
அளந்து கொள்ளுகையாலே திருவடிகள் நொந்ததோ
தோள் நொந்தோ-திருவடிகள் நொந்தோ-அருளிச் செய்யாய் -என்றது –
தோள் நொந்தது என்னில் தோளைப் பிடிக்கவும்–தாள் நொந்தது என்னில் தாளைப் பிடிக்கவும்
அருளிச் செய்ய வேண்டும் -என்றபடி
——————————————————
186
எங்கள் செங்கண் மாலை -75
உள்ளமாக் கொள்ளோமே -பெரிய திருமொழி -11-7-6-
மற்று உள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்கிறார்கள் இப்படி –
ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-
எங்கள் செங்கண் மாலை –
சரணாகத வத்ஸலனான புண்டரீகாஷனை
எங்கள்-என்று மற்ற ஆழ்வார்களையும் கூட்டிக் கொள்கிறார் என்னுதல் –
தம்மையே பற்றி வர்த்திக்கும் சரணாகத சமூஹத்தை கூட்டிக் கொள்கிறார் -என்னுதல்
செங்கண் மால் என்றது -ஜிதந்தே புண்டரீகாஷ-என்கிறபடியே
ருசியே தொடங்கி பரமபக்தி பர்யந்தமாக -அத்தலையிலே விசேஷ கடாஷத்தாலே
சித்தி என்று தோற்றுகைக்காக
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-
உள்ளாதார் உள்ளத்தை –
நினைவே அமையும் –
செயல் மிகை –
உள்ளமாக் கொள்ளோமே
வேறேயும் நினைப்பன யுண்டு இறே அவர்கள்
தான் நினைக்கும் அவை ஒழிய
நினைக்குமவை ஹிருதயம் அன்று -என்கிறார் –
ரத்ன பரிஷகன் கையிலே புகுந்து
இவன் விலை இட்டால் இறே விலை பெறுவது –
அவ்வளவும் முடி கொண்டு திரியும் அத்தனை –
————————————————————-
187
வேங்கடம் அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ-81
கண்ணன் கழலிணை -திருவாய் மொழி -10-5-1-
இப்படி இருவரும் பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்கள் –
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-
வ்யூஹ விபவங்கள் -தேச கல -விபகர்ஷத்தாலே நிலம் அன்று என்ன வேண்டாதபடி
பிற்பாடர் இழவாமைக்கு –
திருமலையிலே வந்து நின்று அருளினான் –
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகப் பாரும் கோள் என்று உபதேசத்தை
தலைக்கட்டுகிறார் –
வேங்கடம் அடைந்து மால பாதமே யடைந்து –
பிரயோஜனாந்த பரருக்கு முகம் கொடுத்த சீலமும் –
அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –
பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்
திருவடிகளை அநந்ய ப்ரயோஜனராய் ஆஸ்ரயித்து நாளும் உய்மினோ
நாளும் -அடைந்து உய்மின் என்றுமாம் –
கைங்கர்யம் என்றும் உஜ்ஜீவனம் என்றும் பர்யாயம்
சுடரடி தொழுது எழு -என்னக் கடவது இறே
ஆஸ்ரிதருக்கு திருவேங்கடமுடையான் திருவடிகளே ஆஸ்ரயணீய ஸ்தலம்
திருவேங்கடமுடையானுக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம் திருமலை –
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-
பரோபதேசத்திலே ஒருப்பட்டு
அவன் தம்மை பரம பதத்துக்கு கொடு போவதாக விரைகிறபடியாலும்
கேட்கிற இவர்கள் அறிவுக்கு புலன் ஆக வேண்டும் என்னும் அதனாலும்-பாசுரப் பரப்பு அறும்படி சுருங்கக் கொண்டு
அந்த பக்திக்கு – -பற்றுக் கோடான -எண்ணும் திரு நாமம்-திருப் பெயரைச் சொல்லி –
இதில் இழிவார்க்கு நினைக்க தகும் மந்த்ரம் -நாரணம் –இன்னது என்றும் –
அதனுடைய பொருள் நினைவே -3/4-பாசுரங்களால் -மோஷத்துக்கு சாதனம் என்றும்-
தாள்வாய் மலரிட்டு நாள்வாய் நாடீர் -அவ்வழியாலே பக்தியைப் பண்ணுங்கோள் என்றும் –
முக்கரணங்களாலும் அவனைப் பற்றுங்கோள் என்றும் –5-
இப்படிப் பற்றுவார்க்கு அவன் -மேயான் வேங்கடம் – சுலபன் என்றும் –6-
மாதவன் -திருமகள் கேள்வன் ஆகையாலே எளிதில் ஆராதிக்கத் தக்கவன் -என்றும் –7-
மாதவன் என்று என்று -இவனை இடுவித்து பற்றச் செய்து இதனையே
அவன் திரு உள்ளத்தில் படுத்தி குவால் ஆக்குவாரும் அருகே உண்டு -என்றும்-8-
பேர் ஆர் ஓதுவார் -மனம் உடையீர் -பற்றும் இடத்தில் அதிகாரிகளுக்கு சொன்ன முறைகள் வேண்டா-
ருசி உடையார் எல்லாரும் இதற்கு அதிகாரிகள் என்றும்-9-
சுனை நன் மலரிட்டு -மலர் முதலான சாதனங்களைக் கொண்டு-அடையுங்கோள் என்றும்-10-
இதில் இழிய விரோதிகள் -அமரா வினைகள் -வினை வல் இருள் -தன்னடையே போம் -என்றும்-
இப்புடைகளிலே சொல்லி-
நாம் இன்னமும் சில நாள்கள் இங்கே இருக்கிறோம் அன்றிக்கே
போக்கு அணித்தான பின்பு எல்லோரும் இதனைக் கொள்ளுங்கோள் -என்று-உபதேசித்து-
அதனோடே தொடங்கின பரோபதேசத்தை தலைக் கட்டுகிறார்-
வீடு முன் முற்றவும் -திருவாய் மொழியில்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் -என்று
வணங்குதற்கு பற்றுக் கோடாகச் சொல்லப் பட்ட மந்த்ரத்தை-
எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்று காட்டுகிறார் இங்கு-
பக்தியை உடையராய்க் கொண்டு-அவனை நினைப்பார்க்கு-
பற்றுக் கோடானா-திருமந்தரம் -இன்னது –என்கிறார்
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர் –
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –என்று மேலே சொன்னதனையே
இங்கே கண்ணன் கழல் இணை -என்கிறார் –திரியவும் ஒருக்கால் சொல்கிறார்
இவர்கள் கேட்க வேண்டுவதனை சொல்லுகைக்கு உறுப்பாக –
கிருஷ்ணன் திருவடிகளை கிட்ட வேண்டும் என்று இருப்பீர் –
பரம பதத்தில் சென்று காண வேண்டும்படி இருக்கை அன்றிக்கே-
எல்லா வகையாலும் சுலபனானவன் உடைய திருவடிகள் -என்பார் -கண்ணன் கழலிணை -என்கிறார் –
அடியார்கட்கு தூது போதல்-தேர் ஒட்டுதல் செய்யும் திருவடிகள் —
-பிரிந்து கூடினாரைப் போலே இருக்கிறது காணும்-ஆதலின் -நண்ணும் -என்கிறார் -வந்தான் என்பது போலே –
இத் யுக்த பருஷம் வாக்யம் ராவணம் ராவணா நுஜ-ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராம ஸ லஷ்மண-யுத்தம் -17-1-
ஜகாம என்னாமல் ஆஜகாம -நண்ணும் -ஸூ ஸ்தானம் போலே -இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் -அக்கரையில் இருந்து அநர்த்தப் படாமல் –
கரங்கள் மீச்சுமந்து செல்லும் கதிர்மணி முடியன் கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல்
இரங்கினன்-நோக்குத் தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி யன்ன தாளிணை வந்து வீழ்ந்தான் –கம்பர்
மனம் உடையீர் -என்கிறார் -நிதி உடையீர் -என்னுமாறு போன்று-இதனையே குவாலாக நினைத்து இருத்தலின் –
இதனால் -இதற்கு அதிகாரம் தேட வேண்டா-ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் -என்பது போதரும் –
சுவர்க்கம் அடைவதற்கு இன்னார் இனியார் என்ற வரை யறையும்-கழுவாயும் -பிராயச் சித்தம் -வேண்டா நின்றது –
மீண்டு வருதல் இல்லாத தன்மையை உடைய மோஷத்திற்கு-அது வேண்டாது ஒழிகிறது-
பெரும் பேற்றுக்குத் தக்கதான அதிகாரம் இவனால் சம்பாதிக்க முடியாமையாலே-
தோல் புரையே போமதுக்கு பழுதிலா யோக்யதை வேணும்-
மனம் உடையீர் என்கிற ச்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு –
நானும் நமரும் -என்னும்படி -சர்வரும் அதிகாரிகள் –-சூர்ணிகை -18-
எண்ணும் திருநாமம் –
நினைக்கப் படும் திருப்பெயர் –சுலபமான அநுஸந்திக்கும் திரு நாமம்
அன்றிக்கே –பக்திமான்களைச் சொல்லுகையாலே அது தான் -அது அது –என்னும்படியாய் ரசமாக இருக்கையாலே சொல்லுதல் -என்னுதல் –
தேனும் பாலும் — நானும் சொன்னேன் நமரும் உரைமின் –
எண்ணும்- திருமந்தரம் -என்னாமல்-நாமம் -என்கிறது-இதற்கு ஒரு அதிகாரி நியதி -அங்க நியதி -வேண்டா-
குழந்தை தாயின் பெயரைச் சொல்லுமாறு போன்று அமையும் -என்கைக்காகா –
அது தான் எது -என்னில் –
நாரணம்
இது தான் இறைவன் திருப் பெயர் ஆகையால் -ஸ்வாமி வாசகம் -–அம்மே -என்பாரைப் போலே இருக்கிறதாயிற்று-
இதுவும் இன்னம் எதுவும் வேண்டுமோ என்றால்-
இத்துணையே அமையும் -என்பார் -நாரணமே -எனத்-தேற்றகாரம் கொடுத்து ஓதுகிறார் –
கனத்த பேற்றுக்கு இவ்வளவு போருமோ -என்னில்
திண்ணம் –
நிச்சயம்
சத்யம் சத்யம்மீண்டும் சத்யம் கையைமேலே உயர்த்தி சொல்லுகிறேன் –
வேதம் ஆகிற சாஸ்திரத்தைக் காட்டிலும் மேலான பிரமாணம் கிடையாது –
கேசவனைக் காட்டிலும் மேலான தெய்வம் கிடையாது-என்னுமாறு போலே -திண்ணம் -என்கிறார் –
நாரணமே -என்ற ஏகாரத்தாலே
பிரணவத்தை ஒழியவும்-நமஸை ஒழியவும்-நான்காம் வேற்றுமையை ஒழியவும்-இத்துணையே நிறைந்தது -என்கை –
நாரணம் -என்று இல்லாத மகரத்தையும் கூட்டி-உள்ளவற்றைக் குறைத்துச் சொல்லுகையாலே-
அளத்தில் பட்டன எல்லாம் உப்பு ஆமாறு போன்று-இதனோடு கூடிய வெல்லாம் உத்தேச்யம் -என்றும்-
குறைந்தாலும் -அங்கம் தப்பிற்று -ஸ்வரம் தப்பிற்று என்று-ப்ரஹ்ம ரஷஸ்ஸாகப் போக வேண்டுமவற்றை-
காட்டிலும் இதற்கு உண்டான எல்லா பெருமையும்-சொல்லிற்று ஆயிற்று-
பூமியைப் போலே பொறுமை -தாரை சகாரம் விட்டு சொன்னால் போலே -ஷமாவான் ச காராம் இல்லாமல் சொன்னால் போலே
————————————————————–
188-
என்னாவி தான் இன்ப வீடு பெற்றதே -120
வீடு பெற்ற குருகூர் சடகோபன்-திரு வாய் மொழி -10-10-11–
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத நிரதிசய ஆனந்தமான கைங்கர்ய ரூப மோஷத்தை
இப்படி அருளி இருவரும் தங்கள் பிரபந்தங்களைத் தலைக் கட்டின படி –
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-
இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி-
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து என்கிறபடியே விச்சேதியாதே
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஆத்மகமான பல வகைப் பட ஜன்மங்களில் நின்றும் –
அஞ்ஞனாய் -நித்ய சம்சாரியாய் போந்த என்னை மாற்ற நினைத்து –
இயக்க யறாமை யாவது -ஒரு தேகத்துக்கு ஆரம்பகமான கர்மத்தை அனுபவிக்க இழிந்து –
அநேக தேக ஆரம்பகமான கர்மங்களைப் பண்ணுகையாலே
தேக பரம்பரைக்கு விச்சேதம் இன்றி செல்லுகை –
இயக்கு -நடையாட்டம் –
இயக்கல் -என்று வல் ஒற்றாய் கிடக்கிறது –
மாற்ற நினைப்பதை –மாற்றி -என்பான் என் என்னில் –
உயிர் முதலாய் முற்றுமாய் -என்றாப் போலே –
இன்று வந்துதுயக் கொண் மேக வண்ணன் நண்ணி –
விஷயாந்தர ப்ராவண்யத்தை தவிர்த்து
தன பக்கலிலே பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தரும்
காளமேக நிபச்யாமானவன் –
எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க
இன்று நிரஹேதுக கிருபையினால்
நான் இருந்த இடத்தே வந்து கிட்டி –
நண்ணுதல் -அணைதல்
நச்சு நாகணைக் கிடந்தான் -என்றும் –
பொன்னி சூழ் அரங்கமேயபூவை வண்ணா -என்றும் –
சொல்லிப் போந்தவர் ஆகையாலே -இங்கும் உய்யக் கொள் மேக வண்ணன் என்று
பெரிய பெருமாள் திருமேனியைத் தமக்கு உஜ்ஜீவன ஹேது-என்கிறார்-
என்னிலாய தன்னுளே –
அஹம் புத்தி சப்தங்கள் தன்னளவிலே பர்வசிக்கும்படி –
தனக்கு பிரகாரமான என்னுடைய ஹ்ர்த்யத்திலே –
தத்வமஸி -என்று -உபதேசித்து -அஹம் ப்ரஹ்மாசி -என்று அனுசந்தித்துப் போந்த
அர்த்தம் இ றே இவர் இங்கு அருளிச் செய்கிறார் –
இந்த சரீர ஆத்ம சம்பந்தம் இங்கே சொல்லுகிறது -தன் பேறாக உபகரித்த விதுக்குக் ஹேதுவாக –
மயக்கினான் தன் மன்னு சோதி –
அபிமதமாய் -அநுரூபமாய் -ஜ்யோதிர் மயமான –
திவ்ய மங்கள விக்ரஹத்தை பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் –
மயக்கம் -செறிவு – தன்னை ஒழிய எனக்கு ஒரு ஷண காலமும் செல்லாதபடி பண்ணினான் என்கை –
ஆதலால் –
இப்படி தான் மேல் விழுந்து இவ்வளவும் புகுர நிறுத்துகையாலே
என்னாவி தான் –
தனக்கு அநந்ய சேஷமாய் -ஸ்ரீ கௌஸ்துபம் போலே -அபிமதமுமான என் ஆத்மாவானது –
இயக்கெலா மறுத்து –
அந்யோந்ய கார்ய காரண பவத்தாலே ஒழுக்கறாத -அவித்யா கர்ம வாசன ருசி ப்ரகர்தி
சம்பந்தங்களை யறுத்து –
இயக்கறாத பல் பிறப்பில் -என்று காரணமான தேக சம்பந்தகளை சொல்லிற்றாய் –
தத் கார்யமான அஞ்ஞான கர்மங்கள் என்ன –
தத் ஆஸ்ரயமான வாசனா ருசிகள் என்ன -இவற்றையும் கூட்டி -எலாம் –அறுத்து என்கிறார்
அறாத இன்ப வீடு பெற்றதே –
யாவதாத்மபாவி விச்சேதம் இல்லாத –நிரதிசய ஆனந்தமான
கைங்கர்ய ரூப மோஷத்தைப் -பெற்றது
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-
அவா அறச் சூழ் அரியை –
விரும்பியவற்றை எல்லாம் அருளும் சர்வேஸ்வரனை –தம்முடைய காதல் கெட வந்து கலந்த படியாலே-
ஒரு அடைவு கொடாதே அது தன்னையே சொல்கிறார் –
அவா அறச் சூழுகையாவது-
தன்னைக் காண வேண்டும் என்னும் விடாய் உள்ள-அடியவர்களின் விடாயை தீர கலக்கை –
அயனை அரனை அலற்றி-
தன்னுடைய ஏவல் ஆள்களான பிரமன் சிவனுக்கும் அந்தராத்மாவானவனை-
அயனை அரனை -என்கிற சாமாநாதி கரண்யத்தால்-
பிரமன் சிவன் போல்வார் ஈஸ்வரர் ஆவார்களோ என்னும் மக்கள் கொள்ளும் ஐயத்தை அறுக்கிறார்-
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லாம் சர்வேஸ்வரன் அதீனமாய்-
இருப்பதாலே அவர்களுக்கு பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் –தலைவர்களாய் இருக்கும் தன்மை அவர்கள் செயல்கள் காரணமாக வந்த இத்தனை –
இச் சாமாநாதி கரண்யத்தை அறியும் தன்மை இன்றியே எளியராய் இருப்பார்-அறியத் தகும் முறையிலே கூறப்படும் வகைகளும் உண்டு-
அவை
அயனை அரனை அவா அற்று-அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -ஒரு வகை –
அயனை அரனை அவா அறச்-சூழ் அரியை அலற்றி-வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் –மற்று ஒரு வகை-
அலற்றி அவா அற்று வீடு பெற்று –
கூப்பிட்டு அவனைப் பெற்று எல்லா தடைகளும் நீங்கியவர்-ஆகையாலே துக்கம் இல்லாத ஆழ்வார் அருளிச் செய்த-
————————————————-
198
அங்கமாறும் வேதம் நான்கும் -15
அமரவோர் அங்கமாறும் வேதமோர் நான்கும் -திருமாலை -43–
அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று –
சீஷாத் யங்கங்கள் யாறும் –
சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியதை சீஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யாயங்களை பாகுபடுத்தி வியாகரணம் சொல்லும்
அர்த்த விவேகம் நிருக்தம் சொல்லும்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை கல்பமும் சொல்லும்
அங்கியான வேதங்கள் நாலும் -ஆகிற இவற்றுக்கு பிரவர்தகனாய் நின்று
அவற்றுளே தங்குகின்ற தன்மையாய் –
சாங்கமான வேதங்களினுள்ளே ப்ரமேயமாய் வர்த்திக்கிற ஸ்வபாவங்களை உடையவனே –
ஆகி நின்று அவற்றுளே –
நிர்தோஷ பிரமாணமாய் நின்றவற்றுள் என்னவுமாம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோஅஸ்னுதே ஸர்வான் காமாந்சஹ ப்ரஹ்மணோ விபஸ்ஸிதேதி
(தைத்ரியம் ஆனந்த வல்லி -1-2)
வேத ப்ரதிபாத்யமான ஸ்வபாவங்கள் ஆவன -சத்யம் ஞானம் -இத்யாதிகளில் சொன்ன சர்வாதிகத்வம் என்ன –
யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித் யஸ்ய ஜ்ஞாநமயம் தப:
(முண்டக உபநிஷத் -1-1-10)
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொன்ன கல்யாண குணங்கள் என்ன –
யச்ச கிஞ்சித் ஜகத்யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ருயதே அபிவா
அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித
(தைத்ரியம் நாராயண ஸூக்தம் -11)
வ்யாப்ய நாராயணஸ் ஸ்திதி -இத்யாதிகளில் சொன்ன உபய விபூதி நாதத்வம் என்ன –
மகாரஜதம்வாஸ -இத்யாதிகளில் சொன்ன விக்ரஹ யோகம் என்ன –
யாஷோந்தராதித்ய ஹிரண்மய புருஷ -இத்யாதிகளில் சொன்ன அவதாரங்கள் என்ன –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
திவீவ சக்ஷூராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் )
தத் விஷ்ணோ பரமம் பதம் -இத்யாதிகளில் சொன்ன நித்ய விபூதி யோகம் என்ன –இவை
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –
அமர ஓர் அங்கம் ஆறும்-
அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து
அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –
அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது
ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால்
லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை –
சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –
வேதம் ஓர் நான்கும் –
வேதங்களுக்கு அத்விதீயம் அபௌருஷேயத்வம் –
பௌருஷேய சப்தங்களில் காட்டில் வ்யாவர்த்தி யாதல் –
தனித் தனியே விநியோக பேதத்தால் வந்த வ்யாவர்த்தி யாதல் –
ஓதித் –
அங்கங்களோடு
வேதங்களோடு
வாசி யற
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண முகத்தாலே கிரஹிக்கை –
இப்படிகளிலாலே -எம்பெருமானை உள்ளபடி அறிபவர்கள் ஆகை –
———————————————–
199-
மற்றவன் -25
மாறாளன்-திருவாய்மொழி -4-8-1–
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
மற்றவன் –
சத்ருவானவன் –
சம்பந்தம் ஒத்து இருக்க –மற்றவன் -என்கிறது -ஆஸ்ரித சத்ருவே தனக்கு சத்ரு என்னும் நினைவாலே
ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-
மாறாளன் –
‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன,
‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே,
தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ?
—————————————————
200
படைத்து அடைத்து அதில் கிடந்தது -28
படைத்து அடைத்து அதில் கிடந்தது –92
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28-
படைத்து பார் இடந்து –
பௌவ நீர் -படைத்து பார் இடந்து –என்று அந்வயமாகக் கடவது –
அபயேவ ஸ சர்வஜா தெவ் -என்கிறபடியே -அண்ட காரணமான -ஏகார்ணவத்தை
சங்கல்ப லேசத்தால் சிருஷ்டித்து -ஜகத் காரணமான அண்டத்தையும் -அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும்
சிருஷ்டித்து -ப்ரஹ்மாவாலே ஸ்ரஷ்டமான பிரளய ஆர்ணவத்திலே அந்தர்பூதையான
பூமியை -ஸூரி போக்யமான திவ்ய விக்ரஹத்தை வராஹ சஜாதீயமாக்கி அண்ட புத்தியிலே
புக்கு இடந்து எடுத்து -இது சங்கல்ப்பத்தாலே செய்ய முடியாதது ஓன்று அன்றே –
சம்சார பிரளய ஆபத்தில் நின்றும் எடுப்பவன் இவனே -என்று ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக இறே
அளந்து –
அதுக்கு மேல் -மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக
அது உண்டு உமிழ்ந்து –
நைமித்திக பிரளயம் வர வட தள சாயியாய் -தன்னுடைய சிறிய வயிற்றில் த்ரிலோகத்தையும்
வைத்து ரஷித்து -உள்ளே இருந்து நோவு படாமல் -அவற்றை உமிழ்ந்து –
இதுவும் சங்கல்பத்தால் -அப்படி செய்ததும் சர்வ சக்தி என்றும் -உரு வழிந்த பதார்த்தங்களை
உண்டாக்குமவன் என்றும் –ஆஸ்ரிதர் விஸ்வசிக்கைகாக -பௌவ நீர் படைத்து அடைத்து –
என்று இங்கேயும் அந்வயிக்கக் கடவது –
அண்ட காரணமான ஏகார்ணவத்தை சங்கல்ப லேசத்தால் ஸ்ர்ஷ்டித்த நீ அண்ட அந்தர்வர்த்திகளான
சமுத்ரங்களில் ஒரு சமுத்ரத்தை வருணனை சரண் புக்கு படை திரட்டியும் அடைத்து -இதுவும்
ப்ரணியி நி யுனுடைய விச்லேஷத்தில் தேவரீர் உடைய ஆற்றாமை பிரகாசிப்பித்த இத்தனை இறே
முன் அதில் கிடந்த
ப்ரஹ்மாதிகள் ஆர்த்தரான தசையிலே தூரஸ்தராக ஒண்ணாது என்றும்
அபிமுகீ கரித்தாருக்கு அவதரித்து சுபாஸ்ர்யமம் ஆகைக்கும் திருப் பாற் கடலில்
கண் வளர்ந்து அருளி -ஜ்யோதீம் ஷி விஷ்ணு -என்கிறபடி சர்வருக்கும் சந்நிஹிதரான தேவரீர்
இப்படி செய்து அருளிற்று –ஆஸ்ரித ரஷணத்தில் சதோத்உக்தர் என்று தோற்றுகைக்காக இறே –
கடைந்த பெற்றியோய் –
துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக
அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் –
இதுவும் ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் என்று தோற்றுகைகாக –
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –92-
முன் வேலை நீர் படைத்தது –
அப ஏவஸஸர்ஜா தௌ -என்கிறபடியே -ஏகார்ணவ ஸ்ர்ஷ்டியைப் பண்ணி
வேலை நீர் -என்றது எல்லையான கடல் -என்னுதல்
திரைக் கிளர்தியை உடைய கடல் -என்னுதல்
வேலை -என்று எல்லையும் -திரையும் –
நீர் -என்று -கடல் –
அதில் கிடந்து –
அதிலே கிடந்து –
ஸ்ரஷ்டமான ஜகத்திலே சேதனருக்கு ஆஸ்ரயண ருசி பிறந்தவன்று சரண்யரான நாம்
தூரஸ்தர் ஆக ஒண்ணாது என்று ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி
கடைந்து –
அக்கிடை பலித்து தேவர்கள் ஐஸ்வர்யத்தை இழக்க
சரணம் த்வாம் அநு ப்ராப்தாஸ் சமஸ்தா தேவதா கணா -என்கிறபடி சரணம் புக
அவர்கள் இழந்தவற்றை –கடலைக் கடைந்து -அக்கடலிலே உண்டாக்கிக் கொடுத்தவன் -என்கை
அடைத்து –
அந்த தேவதைகளை குடி இருப்பு அழியும்படி அதிக்ரமத்திலே நடந்த ராவணாதி
கண்டக நிரசன அர்த்தமாக -தசரதாத் மஜனாய் வந்து அவதரித்து லவணார்ணவத்தை யடைத்து –
————-
201-
ஏழை நெஞ்சமே-115
ஏழை நெஞ்சே -பெரிய திருமொழி -8-9-7-
அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
ஏழை நெஞ்சமே –
பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே –
ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்
நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –
ஏழையர் -அறிவிலோர்
முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-
இனி இது சொல் என் ஏழை நெஞ்சே
சம்சாரத்தே சில விடவுமாய்
பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற நீ சொல்லு –
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்