Archive for the ‘முமுஷுபடி –’ Category

ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ சரம ஸ்லோக ப்ரகரணம்‌-

November 18, 2025

மத்திய ரஹஸ்யமான்‌ த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்த பிறகு அதில்‌, த்வயத்தின்‌ முதல்‌ வாக்கியத்தில்‌ சொல்லுகிற உபாயத்தை ஸர்வேஸ்வரன்‌ தானே விதிக்கையாலே, இந்த உபாயம்‌ கண்ணனெம்பெருமானுக்கு மிகவும்‌
இஷ்டமென்னுமத்தையும்‌, உபாயத்தை கைக்கொள்ளுவதற்கு முன்னோடியாம்‌ செயலான மற்றைச்‌ சாதன த்யாகத்தையும்‌, உபாயமாக வரித்த செயலே உபாயமென்ற புத்தியையும்‌ விட்டு உபாயமாக வரிக்கப் பெற்ற எம்பெருமானே உபாயமென்பதையும்‌, இவ்வர்த்தங்களை நேரே காட்டும்‌ சப்தத்தால்‌ முதல்‌ வாக்யம்‌ ‘சொல்லுகையாலும்‌.
த்வயத்தின்‌ உத்தர வாக்கியத்தில்‌ (பிற்பாதி வாக்கியத்ததாலே) சொல்லுகிற கைங்கர்யத்துக்கு முன்‌ நிகழக்‌ கூடியதான அடைதற்குத்‌ தடையான அனைத்துப்பாபங்களின்‌ விடுதலையையும்‌ “அஹம் த்வா’ என்ற பின் வாக்கியத்தாலே நேரே சப்தமாகச்‌ சொல்லுகையாலும்‌, த்வயத்துக்கு
விவரணமாய்‌ ஐந்தாம்‌ வேதமான ஸ்ரீமஹாபாரத ஸாரமான கீதோபநிஷத்தின்‌ தாத்பர்யமாய்‌, முடிவான ரஹஸ்ய மாயிருந்துள்ள சரம ஸ்லோகத்தினுடைய அர்த்தத்தை
ஐயந்திரிபுகளின்றி அருளிச்‌ செய்கிறார்‌.-
இதில்‌, அர்த்தங்‌ கேட்கைக்காக வன்றோ எம்பெருமானார்‌ 18 தடவை திருக்கோட்டியூர்‌ நம்பி பக்கல்‌ எழுந்தருளியது-நம்பி தாமும்‌ இதில்‌, அர்த்தத்தினுடைய பெருமையையும்‌ இதை மேற்கொண்டோழுகுமவர்கள்‌ இல்லாமையையும்‌ பார்த்துத் தான்‌ இவருடைய நம்பிக்கையையும்‌
விருப்பத்தையும்‌ பரீக்ஷிப்பதற்காகப்‌ பல்கால்‌ நடந்து துவளச்‌ செய்து ப்ரதிஜ்ஞை கொண்டு ஒரு மாஸம்‌ உபவாஸம்‌ இருக்கச்‌ செய்து அருமைப்படுத்தி அருளிச்‌ செய்தது. ஸுத்த ஸத்வ நிஷ்டனாய்‌, பரமாத்ம விஷயத்தில்‌ அபார ப்ரேமை யுடையனாய்‌, இதற்குப் புறம்பான மற்றவற்றில்‌ மிக்க வெறுப்புடையவனாய்‌, ப்ரமாணங்களை மீறாது அதற்கு உடன்பட்ட வனாய்‌, பகவத்‌ வைபவம்‌ கேள்வி யுற்றால்‌ பொருந்து மென்று விசாலமான ஹ்ருதயமும்‌ மிக்க நம்பிக்கை யுடையனாய்‌, சாஸ்த்ர நம்பிக்கை யுடையவர்களில்‌ தலைவனாய்‌ ஒருவன்‌ உண்டானால்‌ அவன்‌ இந்த ஸ்லோகார்த்தம்‌ கேட்டு அதன்‌ படி அநுஷ்டிக்கத்தக்க அதிகாரியாவான்‌. ஆகையாலே, அப்படிப்பட்ட அதிகாரி கிடைமையாலும்‌ அர்த்தத்தின்‌ சீர்மையாலும்‌ இத்தை வெளியிடாதே மறைத்துக்‌ கொண்டு வந்தார்கள்‌ எம்பெருமானாருக்கு முன்புள்ளார்‌. ஸம்ஸாரிகள்‌ துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி, கருணை கரை புரண்டிருக்கையாலே, அர்த்தத்தின்‌ கெளரவம்‌ பாராதே பிறப்பு மரணம்‌ போன்ற துன்பத்தில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ மக்களுடைய இழவை நினைத்து எம்பெருமானார்‌ தகுதியுடைய அதிகாரிகளுக்கு உபதேச மூலமாக வெளியிட்டருளினார்‌ என்கிறார்‌. அப்படி உபதேசித்து விடுவதல்லாமல்‌, இந்த அர்த்தமாகிற பொருளை எல்லாருமறிந்து உய்வு பெற வேணுமென்ற மேலான கருணையாலே,, இதன்‌ அர்த்தத்தை பல நூல்களிலும்‌ சுருக்கமாகவும்‌, விரிவாகவும்‌ (இவர்‌) பிள்ளைலோகாசாரியர்‌ அருளிச்‌ செய்தது. மற்றுள்ள ப்ரபந்தங்கள்‌ எல்லாவற்றிலும்‌ போலன்றிக்கே பெண்களும்‌ பாலர்களும்‌ கற்றுணரலாம்படி தெளிய அருளிச்‌ செய்தது இந்த ப்ரபந்தமாகும்‌ என்கிறார்‌ மணவாள மாமுநிகள்‌.
அநுஷ்டாநம்‌ – ஒழுக்கம்‌.

இதில்‌, முதலிலே இந்த ஸ்லோகார்த்தத்தினுடைய பெருமையை எல்லாருடைய மனத்திலும்‌ படுத்துகைக்காக இது தனக்குச் சரம ஸ்லோகமென்று திருநாமமாகைக்குக்‌
காரணத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -185. கீழே சில உபாய விசேஷங்களை உபதேசிக்க அவை துச்சகங்களென்றும்‌,ஸ்வரூப விரோதிகளென்றும்‌ நினைத்து சோகாவிஷ்டனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய சோக நிவருத்த்யர்‌த்தமாக ‘இனி இதுக்கு அவ்வருகில்லை’ என்னும்‌படியான சரமோபாயத்தை அருளிச்‌ செய்கையாலே சரம ஸ்லோக மென்று இதுக்குப்‌ பேராயிருக்கிறது

இந்த ஸ்லோகத்துக்குக்‌ கீழே சில உபாய விசேஷங்களை அநேகாத்யாயங்களிலே கர்ம ஜ்‌ஞாநாதிகளைத்‌ தன்னை அடைதற்குரிய மோக்ஷ ஸாதநமாக விரிவாக உபதேசிக்கக்‌ கேட்டு, உடலை வருத்தி ஓடுக்கிச்‌ செய்கை முதலானவையும்‌, இந்திரிய ஐயம்‌ அரிதாகையாலும்‌, குறிக்கொண்டு நீண்டகாலம்‌ ஒழுக்கம்‌ மேற் கொண்டு ஸாதிக்க வேண்டி யிருக்கையாலும்‌, அவைகளை கடைப் பிடித்து ஒழுக இயலாதென்றும்‌, பகவானுக்குச்‌ சரீரமா யிருக்கிற ஆத்மாவின்‌ பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்குத்‌ தன்‌ முயற்சியாலே முயல்வது இவை விரோதிகளென்‌றும்‌ புத்தி பண்ணி, இவற்றாலே எம்பெருமானைப்‌ பெறுவது என்பது ஒன்றில்லை; இனி இழந்தே போனோம்‌’ என்கிற சோகத்தாலே கவரப் பெற்றவனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய அந்த சோகம்‌ போகைக்காக எளிதில்‌ ஒழுகக் கூடியதும்‌ ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்திய தாகையாலும்‌ இனி இதற்கு மேலில்லை என்னும்‌ படியான முடிந்த உபாயத்தை அருளிச் செய்கையாலே சரம ஸ்லோகமென்‌று இதற்குத்‌ திருநாமமா யிருக்கிறது

இனி, இந்த ஸ்லோகத்துக்கு வாக்யார்‌த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -186 – இதில்‌ பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌; உத்தரார்த்தத்‌தாலே உபாய க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌.
இரண்டு அர்த்தங்களின்‌ (முற்பாதி பிற்பாதி) வடிவமான இந்த ஸ்லோகத்தில்‌, முற் பாதியாலே இந்த உயாயத்துக்கு அதிகாரி யானவன்‌ செய்யுமத்தை அருளிச்‌ செய்கிறான்‌; பிற் பாதியாலே உபாயமான தான்‌ இவனுக்குச்‌ செய்யுமதை அருளிச்‌ செய்கிறான்‌ என்கை.

அதிகாரி செய்யுமது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -187-அதிகாரிக்கு க்ருத்யமாவது – உபாய பரிக்ரஹம்‌
அதிகாரியானவனுக்கு இங்குச்‌ செய்யத் தக்கது, இந்த உபாயத்தைப்‌ பற்றுகை என்கை.

ஆனால்‌, அவ்வளவு சொல்லாதே வேறு பட்ட உபாயங்களை விடச்‌ சொல்வானென்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -186- அத்தை ஸாங்கமாக விதிக்கிறான்‌-
அந்த உபாயத்தைப்‌ பற்றுகிறதை மற்ற உபாயங்களை விடுகையாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான்‌: என்கை.
“ப்ரக்ஷாள்ய பாதா வாசாமேத்‌ ஸ்நாத்வா விதிவதர்ச்சயேத்‌ ஸ்தித்வார்க்யம்‌ பாநவே தத்யாத்‌ த்யாத்வா தேவம்‌ ஐபேந்மநும்‌”
பாதெள
– கை கால்களை,
ப்ரஷாள்ய – கழுவிக்கொண்டபின்புதான்‌,
ஆசாமேத்‌ – “ ஆசமனம்‌ பண்ணக் கடவன்‌, .ஸ்நாத்வா – ஸ்நாநம்‌ பண்ணியே,
விதிவத்‌ – விதிப்படி,
அர்ச்சயேத்‌– அர்ச்சிக்கக்‌ கடவன்‌,
ஸ்தித்வா – நின்று கொண்டே,
அர்க்யம்‌ – அர்க்யத்தை,
பாநவே – சூரியன்‌ பொருட்டு,
தத்யாத்‌ – கொடுக்கக்கடவன்‌,
தேவம்‌ – தேவனை,
த்யாத்வா – த்யாநித்துக்‌ கொண்டேதான்‌, மநும்‌ ஜயேத்‌ – மந்த்ரத்தை ஜபிக்கக்கடவன்‌ என்று கைகால்‌ கழுவுதலை முதலில்‌ செய்து விட்டுத்தான்‌ பிறகு ஆசமனம்‌ முதலானவற்றை செய்ய வேண்டும்‌. இல்லையென்றால்‌, அநுஷ்டாநத்திற்குக்‌ குறைவேற்படும்‌. அது போலே, ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றும்‌ பொழுது உபாயாந்திரங்களை (மற்ற உபாயங்களை) முதலில்‌ விட்டே பற்றவேணும்‌. இதை த்யஜ்ய என்ற பதத்தில்‌ இறுதியிலிருக்கும்‌ ல்யப்‌ என்ற விகுதி, ‘விடுதல்‌’ என்ற பொருளைக் காட்டும்‌ த்யாகத்தை வொழிய பற்றுதல்‌ என்ற ஸ்வீகாரம்‌ பொருந்தாது என்பதைக்‌ காட்டிக்கொடுக்கிறது.
ஆகையால்‌ “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய ஸ்திதச்சேத்‌” (எல்லா தர்‌மங்களையும்‌ விட்டிருந்தானாகில்‌) என்று தாம்‌ மேற் கொண்டொழுகுவதாகிய தன்‌ முயற்சியால்‌ செய்யக்‌கூடிய கர்ம ஜ்ஞாத பக்திகள்‌, செய்வதற்கு அருமையாயிருத்தலால்‌ ப்ரபத்தி பற்ற எளிதாயிருத்தலால்‌, அதை விட்டு இதை பற்றலாம்‌ என்று அநுவதித்து ஸித்தோபாய ஸ்வீகாரத்தை விதிக்கிறதென்கிற பிறருடைய வாதம்‌ பொருத்தமற்றது என்கிறார்‌.

எளிதில்‌ செய்யக் கூடியதும்‌ தன்‌ தகுதிக்கு ஏற்றதும்‌ விரும்பி மேற் கொண்டு ஒழுகுவதற்கும்‌ உரியதான இந்த ப்ரபத்தியைச்‌ செய்யென்று நியமிக்க வேணுமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌ ராக ப்ராப்தம்‌ எனறு தொடங்கி-ராக ப்ராப்தம்‌ – விருப்பத்துக்குரியது.
ஸூர்ணை -189-ராக ப்ராப்தமான உபாயந்தானே வைதமானால்‌ கடுகப் பரிக்ரஹிக்கைக்கு உடலாயிருக்குமிறே .
இனிமையாலே விரும்புதலுக்குரியதான பாலைப்‌ பித்த ரோகத்துக்கு மருந்தாகக்‌ கொடுக்கச்‌ சொல்லி நியமித்தால்‌ உடனே கைக் கொள்ளுகைக்கு உரித்தாமாப் போலே, மற்ற உபாயங்களைக்‌ காட்டிலும்‌ இந்தப் ப்ரபத்தியாகிற சரணாகதிக் குண்டான தனிச் சிறப்பாலே சேதனனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாகக்‌ கை கொள்ளத் தக்கதாயுள்ள இந்த உபாயத்தை ‘மேற் கொள்ள வேண்டும் என்ற ஆணையுமிட்டால்‌ விரைந்து ஏற்கைக்கு உரித்தாயிருக்குமன்றோ என்கை.

இனி, இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக முற்பாதியின்‌ பதங்களின்‌ எண்ணிக்கையைக்‌ குறிப்பிடுகிறார்‌.
ஸூர்ணை -190 -இதில பூர்வார்த்தம்‌ ஆறு பதம்‌.
அதில்‌ முதல் பதத்தை தொடங்குகிறார்‌.
ஸூர்ணை -191- ஸர்வ தர்மாந்‌ – எல்லா தர்மங்‌களையும்‌ –
“ஸர்வதர்மாந்‌ என்று அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌ எல்லாத்‌ தர்மங்களையும்‌ என்று.

அது தான்‌ தர்மமும்‌, பன்மையும்‌, ஸர்வ சப்தமுமாய்‌ மூன்று விதமாயிருக்கையாலே இம் மூன்‌றுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச் செய்வதாக, முதலில்‌ தர்ம லக்ஷணத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -192- தர்மமாவது – பல ஸாதநமா யிருக்குமது
தர்மம்‌’ என்ற சொல்‌ பயனை ஸாதித்துத்‌ தரும்‌ ஸாதநமாயிருக்குமது.
தர்ம சப்தம்‌ இம்மைப்‌ பலங்களையும்‌ ஸ்வர்க்கம்‌ முதலிய மறுமைப் பலன்களுக்கும்‌ ஸாதநமாகையால்‌ இவைகளை வேறுபடுத்துகிறார்‌.
ஸூர்ணை -193 -இங்குச்‌ சொல்லுகிற தர்ம சப்தம்‌ த்ருஷ்ட பல ஸாதநங்களைச்‌ சொல்லுகை யன்றிக்கே, மோக்ஷ பல ஸாதநங்களைச்‌ சொல்லுகிறது .
அதாவது, கீதையில்‌ கண்ணன்‌ இதற்கு முன்‌ உபதேசித்த கர்ம ஜ்ஞாந பக்திகளை, உபதேசிக்கிற போதே இம்மைப்‌ பல ஸாதநங்கள்‌ இவற்றுக்கு வேறுபட்டவையாகையாலும்‌, மோக்ஷோபாயங்களை உபதேசித்து வருகிற பகுதியாகையாலும்‌, இவ் விடத்தில்‌ சொல்லுகிற தர்ம சப்தம்‌ புத்ர,பசு, அந்நம்‌ முதலிய இவ்வுலக பலன்களையும்‌ ஸ்வர்க்கம்‌ முதலிய பர லோக பலன்களையும்‌ உள்ளவற்றுக்கு ஸாதநங்‌களைச்‌ சொல்லுகை யன்றிக்கே, பகவத்‌ விஷயத்தை அடைந்‌தின்புறுவதாகிய மோக்ஷ பல ஸாதநமா யுள்ளவற்றைச்‌ சொல்‌லுகிற தென்கை.

மேல்‌ பன்மையின்‌ பொருளை அருளிச்‌ செய்கிறார்
ஸூர்ணை -194 -அவைதான்‌ – ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய்ப்‌ பலவா யிருக்கையாலே பஹு வசந ப்ரயோகம்‌ பண்ணுகிறது .
அந்த மோக்ஷ பல ஸாதநங்கள்‌ தாம்‌, வேதங்களாலும்‌ அதன்‌ வழி நூல்களான தர்ம சாஸ்திர இதிஹாஸப்‌ புராணங்களாலும்‌ சொல்லப் பெற்றவையாய்‌ அநேகங்களா யிருக்கையாலே *தர்மாந்‌’ என்று பன்மை விகுதி உபயோகிக்கப் பெற்றுள்ளது என்கை.

அப்படி இருந்துள்ளவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -195-அவையாவன – கர்ம ஜ்ஞாந பக்தி யோகங்களும்‌, அவதார ரஹஸ்ய ஞாநம்‌, புருஷோத்தம வித்யை, தேச வாஸம்‌, திருநாம ஸங்கீர்த்தநம்‌,
திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை தொடக்கமான உபாய புத்தயா செய்யுமவையும்‌
கீழ்ப் பலவாகச்‌ சொல்லப் பட்டவையாவன, “கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஐநகாதய: தஸ்மாத ஸக்தஸ் ஸததம்‌ கார்யம்‌ கர்ம ஸமாசர
அசக்தோஹ்யா சரந் கர்ம பரமாப்நோதி புருஷ:”
தஸ்மாத்‌
– ஸாதநமில்லாமலே ஆத்மாவைக்‌ காண வல்ல முக்தனுக்கோ மஹா யஜ்ஞம்‌ முதலிய வர்ணாஸ்ரமங்கடட்கு ஏற்ற தர்மத்தைச்‌ செய்ய வேண்டியதில்லை யாதலால்‌,
அசக்த:– (தர்மத்திலே) பற்றுதலில்லாமலே, கார்யம்‌ – கர்மம்‌ செய்யத் தக்கது,
(இத்யேவ) என்று நினைத்தே,
ஸததம்‌- ஆத்மாவை அடையும்‌ வரைக்கும்‌-எப்போதும்‌,
கர்ம-கர்மத்தையே,
ஸமாசர – அநுஷ்டிப்பாய்‌,
அசக்த-பற்று இல்லாமல்‌,
கர்ம ஆசரந்‌ – கர்மத்தை அநுஷ்டிக்கிற, புருஷ: புருஷன்‌,
பரம்‌ ஆப்நோதி ஹி – ஆத்மாவை அடைகின்றா னன்றோ?
ஐநகாதய:– ஜனகர்‌ முதலியோர்‌, கர்மணைவ – கர்ம யோகத்தினாலேயே, ஸம்ஸித்திம்‌ – ஆத்மாவை நேரே காணுதல்‌,
அஸ்திதா: ஹி – அடைந்தார்களன்றோ! என்று அங்கமாக இராமல்‌ தானே ஸாதநமென்று சொல்லப்பட்டுள்ள கர்ம யோகமும்‌, “ஸ்ரேயாந்‌ த்ரவ்ய மயாத்‌ யஜ்ஞாத்‌ ஜ்ஞாந யஜ்ஞு:பரந்தப, ஸர்வம்‌ கர்மாகிலம்‌ பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே”
பரந்தப-சத்ருக்களைத்‌ தவிக்கச்‌ செய்பவனே!
த்ரவ்யம்‌ ஜ்ஞாநம்‌ –என்ற இரண்டு அம்சங்களை யுடைய கர்மத்தில்‌,
த்ரவ்ய மயாத்‌ யஜ்ஞாத்‌ – த்ரவ்ய அம்ச மாயிருக்கிற யஜ்ஞ்த்தைக்‌ காட்டிலும்‌, ஜ்ஞாந யஞ்ஞ :- ஜஞாநாம்‌சமாயிருக்கிற யஜ்ஞம்‌,
ஸ்ரேயாந்‌ – சிறப்புடையது,
பார்த்த – குந்தி புத்திரனே,
ஸர்வ கர்ம – ஸகல கருமமும்‌,
அகிலம்‌ (அந்தக்‌ கர்மத்துக்குப் புறம்பா யிருக்கிற) எல்லாமும்‌, (அந்தக் கர்மத்துக்கு உபயோகமான ‘ஸகலவஸ்‌துக்களும்‌),
ஜ்ஞாநே – ஜ்ஞாந யோகத்திலே
பரி ஸமாப்யதே – முடிக்கப்படுகிறது.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருசம்‌ பவித்ரமிஹ
வித்யதே, ஜஞாநாக்நிஸ்‌ ஸர்வ கர்மாணி பஸ்மஸாத்‌ குருதே ததா”
ஜ்ஞாநஅக்நி
: -ஜ்ஞாநமாகிற அக்நியானது,
ஸர்வகர்‌மாணி -எல்லாக்‌ கர்மங்களையும்‌, பஸ்மஸாத்குருதே – பஸ்மமாகச்‌ செய்கிறது,
ஜ்ஞாநேந ஸத்ருசம்‌ – ஜ்ஞாந யோகத்தைப் போன்று,
பவித்ரம்‌ – சுத்தியானது,
இஹ – இந்த லோகத்தில்‌,
ந வித்யதே ஹி – வேறொன்று இல்லை யன்றோ!
என்று சொல்லப்பட்ட கர்மத்தால்‌ ஸாதிக்கக் கூடிய ஜ்ஞாந யோகமும்‌ “பக்த்யாத்வநந்யயாசக்ய:” பக்த்யா
அநந்யயா – வேறு இடத்திலில்லாது சிறந்த பக்தியினாலே,
ஸக்ய: அடையக்‌ கூடியவன்‌ (நான்‌) . இவை முதலானவைகளால்‌ சொல்லப்பட்ட கர்ம ஜ்ஞாநங்களை அங்கமாகக்‌ கொண்ட பக்தி யோகமும்‌ “ஐந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌
யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம்‌ புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந’ அர்ஜாந -அர்ஜ்ஜுநனே!,
மே
– என்னுடைய,
ஐந்ம கர்மச- பிறப்பும்‌ செயலும்‌ திவ்யமானவை,
ய: எவன்‌, ஏவம்‌ – இப்படி, தத்வது: வேத்தி – உள்ளபடி அறிகிறானோ, ஸு: அவன்‌, தேஹேம்த்யகத்வா – -தேகத்தை விட்டு, புநர்ஜன்மநைதி – மீண்டும்‌ பிறப்பை
அடைய மாட்டான்‌,
மாம்‌ஏதி – என்னையே அடைகிறான்‌-என்று விரோதி கழிவது முன்னாகத்‌ தன்னை அடைதற்குச்‌ சாதநமாகக்‌ கண்ணன்‌ சொன்ன அவதார ரஹஸ்ய ஜ்ஞாநம்‌.
“ஏதத்‌ புத்த்வா புத்திமாந்‌ ஸ்யாத்‌ க்ருதக்ருத்யச்ச பாரக்‌
பாரத
– பாரத குலத்தில்‌ பிறந்த அர்ஜுந, ஏதத்‌ – இந்த புருஷோத்தம வித்யயை, புத்வா – தெரிந்து கொண்டவன்‌,
புத்திமாந்‌-நல்ல ஜ்ஞாநத்தை யுடையவனாகவும்‌,
க்ருதக்ருத்யச்‌ச -செய்ய வேண்டிய கர்மங்களைச்‌ செய்தவனாகவும்‌,
ஸ்யாத்‌ – ஆவான்‌-என்று விரும்பிய பலன்‌ தருவதாக!
(க்ருதக்ருத்ய) செய்யவேண்டியதை செய்தவனாக்கும்‌ என்‌கிற புருஷோத்தம வித்யை,
“தேசோயம்‌ ஸர்வ காம து…
அயம்தேச:
-இந்த புண்ணிய ஸ்தலம்‌, ஸர்வகாமதுக்‌-எல்‌லா விருப்பங்களையும்‌ கொடுக்கும்‌ என்கிற புண்ணிய தேசவாஸம்
ஸர்வபாபவிசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்‌” அனைத்துப்‌ பாப விமோசநம்‌ முதலாக ப்ரஹ்மத்‌தை அடைவதைப்‌ பலமாகச்‌ சொல்லி யிருக்கிற திருநாமஸங்கீர்த்தநமும்‌. “க்ருதே வாத தைலேந தீபம்‌ போ ஜ்வாலயேந்நர:, விஷ்ணவே விதிவத்‌ பக்த்யா தஸ்யபுல்‌!।. !
பலம்‌ ச்ருணு, விஹாய ஸகலம்‌ பாபம்‌ ஸஹஸ்நாத்‌:.ஸந்நிப: ஜ்யோதிஷ்மதா விமாநேந விஷ்ணுலே…..மஹீயதே”
ய:நர:-
எந்த மனிதன்‌,
விஷ்ணவே பகவாந்பொருட்டு,
பக்த்யா – பக்தியோடு,
விதிவல்‌ சாஸ்திரத்தில்‌ சொன்ன படி, க்ருதேந- நெய்யினாலாது ,
அதாவா – அல்லது, தைலேந -எண்ணையினாலாவது,
தீப தீபத்தை,
ஜ்வாலயேத்‌– எரியும்படி செய்கிறோனோ, தஸ்ய– அவனுடைய,
புண்யபலம்‌ – புண்ணியத்தின்‌ பலத்தை, ஸ்ருணு– கேள்‌,
ஸ:-அவன்‌,
ஸகலம்‌ பாபம்‌: எல்லாப்பாபங்களையும்‌,
விஹாய – விட்டு,
ஸஹஸ்ராதித்ய ஸந்நிப -ஆயிரம்‌ ஸூர்யனுக்கு ஓப்பானவனாகி, ஜ்யோதிஷ்மதா – காந்தியோடு கூடிய, விமாநேந – விமாநத்தாலே (போய்‌) விஷ்ணு லோகே – விஷ்ணு லோகத்தில்‌, மஹீயதே – கெளரவிக்கப்படுகிறான்‌.
என்ற பாப விடுதலை முன்னாக பகவானை அடைவதற்குச்‌ சாதகமாகச்‌ சொல்லபடுகிற திருவிளக்கெரிக்கை திருமாலை எடுக்கை முதலாக ஸாதந புத்தியோடு செய்யப்படும்‌
உபாயங்கள்‌
என்கை.

இனி, ஸர்வ சப்தார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -196 – ஸர்வ சப்தத்தாலே அவ்வவ ஸாதந விசேஷங்களை அநுஷ்டிக்குமிடத்தில்‌ அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச்‌ சொல்லுகிறது ,
தர்ம விசேஷேணமான ஸர்வ சப்தத்தாலே பன்மையாகச்‌ சொல்லப் பெற்ற அந்த அந்த
ஸாதந விசேஷங்களைக்‌ கைக் கொண்டு ஒழுகும்‌ இடத்தில்‌
“ஸந்த்யா ஹீநோ?சுசிர்‌ நித்யம்‌ அநர்ஹஸ் ஸர்வ கர்மஸ-“,
ஸந்த்யாஹிந:
-ஸந்த்யாவந்தநம்‌ செய்யாதவன்‌,
நித்‌யம்‌ – எப்பொழுதும்‌,
ஸர்வ கர்மஸு – எல்லாக் கர்மங்களும்‌ செய்ய,
அநர்ஹ: – தகுதியற்ற வனாகிறான்‌.-என்கிறபடியே தகுதி யற்றவனாகாமல்‌ தன்னை மேற்கொண்டொழுகுவதாலே அவற்றுக்குத் தகுதியை உண்டாக்கிக்‌ கொடுக்கும்‌ ஸந்த்யாவந்தந பஞ்ச மஹா யஜ்ஞங்கள்‌ முதலிய நித்ய கர்‌மங்களைச்‌ சொல்லுகிறது என்கை.

சொன்னதை முடிக்கிறார்‌.
ஸூர்ணை -197- ஆக, ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய்‌ நித்ய நைமித்திகாதி ரூபங்களான கர்ம யோகாத் யுபாயங்களை என்றபடி.
ஆக, கீழ்ச்‌ சொன்ன எல்லாவற்றாலும்‌ “சோதநாலக்ஷணார்த்தோ தர்ம.” (விதியினால்‌ -‘விதிக்கப்படும்‌ பொருள்‌ தர்மம்‌ என்கிறது.) என்கிறபடியே விதியை விதிக்கிற ப்ரமாணத்தை உடைத்தான அர்த்தம்‌ தர்மம்‌ என்கையாலே, வேதம்‌ தர்ம சாஸ்திரங்களாகிற
ப்ரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய்‌, நித்யம்‌ நைமித்திகம்‌ முதலானவற்றை வடிவாக உடைத்தான கர்ம யோகம்‌ தொடக்கமான உபாயங்களை என்றபடி. என்கை.
நித்யம்‌-தினந்தோறும்‌ செய்யக்கூடிய திருவாராதநம்‌. நைமித்திகம்‌- பக்ஷங்களிலும்‌ மாஸங்களிலும்‌ செய்யக்கூடிய தர்மங்கள்‌-

ஸ்வரூபத்துக்கு தகுதி யல்லாததாய்‌ அதர்மமாகச்‌ சொல்ல வேண்டியவற்றைத்‌ தர்மம்‌ என்கிறதுக்கு காரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -198 – இவற்றை, தர்மம்‌ என்கிறது – ப்ரமித்த அர்ஜுநன்‌ கருத்தாலே பகவதத்யந்த பாரதந்த்ர்ய மாகிற ஆத்மாவின்‌ இயல்பிற்கு விரோதியா யிருக்கையாலே அதர்மம்‌ என்று சொல்ல வேண்டிய இவைகளை தர்மம்‌ என்று சொல்லுகிறது, தன்னுடைய தர்மமான யுத்தத்தை அதர்மம்‌ என்றும்‌, இவற்றை (ஸாதந தர்மங்களை) தர்மமென்றும்‌ (ப்ரமித்து மயங்கிய அர்ஜுநனுடைய நினைவாலே என்கை.

ஆக, முதல் பத அர்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று. பிறகு, இரண்டாம்‌ பதத்தைத்‌ தொடங்குகிறார்‌.
ஸூர்ணை -199- பரித்யஜ்ய .
இதுவும்‌, த்யாகமும்‌ ல்யப்பும் த்யஜ்ய என்றதின்‌ விகுதியும்‌ உப ஸர்க்கமுமாய்‌,
மூன்று விதமா யிருக்கையாலே, அதில்‌ த்யாகத்தை முதலில்‌ அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -200- த்யாகமாவது -உக்தோபாயங்‌களை அநுஸந்தித்து, ‘சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும்‌, விபரீத திசாகமநம்‌ பண்‌ணுவாரைப் போலேயும்‌, அநுபாயங்களிலே உபாய புத்தி“பண்ணினோம்‌’ என்கிற புத்தி விசேஷத்தோடே த்யஜிக்கை .
இவ்விடத்திற்‌ சொல்லுகிற த்யாகமாவது – வெறும்‌ விடுகை மாத்திரமன்‌று சொல்லுகிறது. -கீழ்ச்‌ சொல்லப்பட்ட உபாயங்களை நினைத்து வெள்ளி யல்லாத கிளிஞ்சலை வெள்ளி யென்று நினைப்‌பாரைப்‌ போலேயும்‌, தன்‌ கார்யத்துக்கு உரியதான திசையிலே போக நினைத்து அதற்கு எதிரான திக்கிலே அதுவாக நினைத்துப்‌ போவாரைப் போலேயும்‌, பகவானை அடைதற்குரிய உபாயத்தை விரும்பக் கூடிய நாம்‌ உபாயமல்லாதவற்றிலே உபாய புத்தி பண்ணினோம்‌’ என்கிற அனுதாபத்தோடே விடவேண்டும்‌ என்றபடி.

இனி, (உபஸர்க்கத்தின்‌) உரிச்‌சொல்லின்‌ அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -201 – பரி என்கிற உப ஸர்க்கத்தாலே – பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும்‌ லஜ்ஜையோடுங் கூட மறுவலிடாதபடி. விட வேணுமென்கிறது .
(பரி ஸாகல்யே என்று பரி என்ற உரிச் சொல்லுக்கு (ஸகலம்‌) எல்லாம்‌” என்ற பொருள்‌ கொள்ளலாமாயினும்‌, அது ஸர்வ சப்தத்தாலே சொல்லியதால்‌ ஸகலம்‌ என்ற அர்த்தம்‌ இங்குத்‌ தேவை யில்லாமையால்‌, மிகுதி என்ற பொருள்‌ தரும்‌ “பரி’ என்ற உரிச்‌ சொல்லாலே “ப்ரஹ்ம ஹத்யா ஸுராபாநம்‌ ஸ்தேயம்‌ குர்வங்க நாகம :” –
அதாவது, (ப்ரஹ்ம ஹத்தி,) பிராம்ணனைக்‌ கொல்லுதல்‌, மது வருந்துதல்‌, பொன் திருடுதல்‌, குரு பத்நியைத்‌ தழுவுதல்‌- என்கிறபடியே இவைகள்‌ மஹா பாதகங்களாகையால்‌ -இவைகளை விடும் போது, மீண்டும்‌ இதில்‌ , தொடர்பு வராதபடி “நாம்‌ இதைச்‌ செய்வதே’ என்ற லஜ்ஜா பயங்களோடே விடுமா போலே, ” அத பாதக பீதஸ்த்வம்‌” (இனி உபாயாந்தரங்களில்‌ மிக்க – பாதகம்‌* என்கிற அச்சமுடைய நீ இதை அறவிட்டு நாராயணனையே உபாயமாகப்‌ பற்று.) என்று தர்ம தேவதை பாதகமாகச்‌
சொன்ன உபாயாந்தரங்களை விடும் போது புத்தி பூர்வகமாக அவற்றில்‌ மூளுகைக்கு உறுப்பான ருசியும்‌, வாசனையும்‌ ஆகிறவற்றோடே கூட பகவானே உபாயம்‌ என்ற ஒன்றையே ஸாதநமாகக்‌ கொள்ளுதற்கு உரிய தன்‌ ஸ்வரூபத்துக்கு (தன்‌ இயல்புக்கு) மிகவும்‌ ‘தகாததைச்‌ செய்வதே என்கிற லஜ்ஜையோடு கூடியவனாய்‌, மீண்டும்‌ அதில்‌ தொடர்பு உண்டாகதபடி விட வேண்டுமென்று சொல்லுகிற தென்றபடி.

இதில்‌ ‘ல்யப்‌’ (த்யஜ்ய) என்ற பத அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -202- லயப்பாலே “ஸ்நாத்வா புஞ்ஜீத” என்னுமா போலே, உபாயாந்தரங்களை விட்டே பற்ற வேணும்‌ என்கிறது.
த்யஜ்ய’ என்கிற லயப்பாலே -‘த்யஜ்ய’ என்பதிலுள்ள யகர விகுதியை வடமொழி
இலக்கணப்படி. “ல்யப்‌’ என்று சொல்லுவர்‌. “புக்த்வா சாந்த்ராயணம்‌ சரேத்‌” (வஸ்திரத்திலும்‌, கல்லிலும்‌, தாமிர பத்திரத்திலும்‌, ஆலிலையிலும்‌, அரச இலையிலும்‌) புசித்திருந்தால்‌, சாந்த்ராயண விரதத்தை (அதற்கு ப்ராயசித்தமாக), அநுஷ்டிக்க வேண்டும்‌ என்னுமா போலன்றிக்கே, ‘ஸ்நாத்வா புஞ்ஜீத’ (ஸ்நாநம்‌ செய்து விட்டே புஜிக்க வேண்டும்‌) என்கிற விதி புஜிக்கமளவில்‌ நியமத்தைச்‌ சொல்லுமா போலே, ஸித்தோபாயத்தைப்‌ பற்றுமளவில்‌
விட வேண்டியதான உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞாந பக்த்யாதிகளை விட்டே பற்ற வேணும்‌ என்கிற நியமத்தைச்‌ சொல்லுகிறதென்கை.

இப்படி விட்டே பற்ற வேணுமென்கிற இதன்‌ கருத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -203- “சசால சாபஞ்ச முமோச வீர” என்கிறபடியே இவை அநுபாயங்களான மாத்ரமன்றிக்கே கால் கட்டு என்கிறது .
“யோ வஜ்ரபாதாசநிஸந்நிபாதாந்‌ த சுக்ஷுபே நாபி சசால ராஜா, ஸ ராம பாணாபிஹதோ ப்ருசார்த்த : சசால சாபஞ்ச முமோச வீர:”
ய : ராஜா
– எந்த ராஜாவான ராவணன்‌,
வஜ்ரபாத – வஜ்ராயுதத்தாலும்‌ அடி பட்டாலும்‌,
அசநிஸந்நிபாதாத்‌ – இடியே மேல்‌ விழுந்தாலும்‌,
நகுக்ஷுபே – மன க்லேசமடைய வில்லையோ,
நஅபிசசால – சரீர நடுக்கத்தையும்‌ அடைய வில்லையோ,
ஸு: – அவனே,
ராம பாண அபிஹத : ஸந்‌ – ஸ்ரீராம பாணத்தினால்‌ அடி பட்டவனாய்க்‌ கொண்டு,-ப்ருச ஆர்த்த: – மிகவும்‌ கலங்கி,
சசால – நடு நடுங்கினான்‌,
வீர:– சூரனாயிருந்தாலும்‌
(தன் கையில்‌ ஆயுதமிருந்தால்‌ ஸ்ரீராமன்‌ போக வொட்டானென்று நினைத்து உயிரினிடத்துள்ள ஆசையினாலே,)
சாபம்‌ – வில்லை,
முமோச – விடவும்‌ செய்தான்‌ என்கிற இந்த
ஸ்லோகத்தில்‌ ராவணன்‌ ஸ்ரீராம பாணங்களாலே மிகவும்‌ கலங்கி நிலை குலைந்து போகப்‌ பார்த்த அளவிலும்‌ கையில்‌ வில்லிருக்குமளவும்‌ பெருமாள்‌ போக வொட்டாமையாலே
பின்பு போட்ட வில்‌ கையிலிருந்த போது, எதிரியை வெல்லுதற்கு உரித்தாகாத மாத்ர மன்றிக்கே “இன்று போய்‌ நாளை வா” என்று பின்பு செய்த அநுமதி, பெருமாள்‌
அப்போது செய்யக்‌ காணாமையாலே போகவும்‌ ஒண்ணாதபடி. கால்‌ கட்டானமையைச்‌ சொல்லுகிறபடியே உபாயாந்தரங்களான இவற்றிலே அல்பம்‌ தொடர்பிருக்கிலும்‌ இவை பலத்துக்கு ஸாதநமாகாத மாத்திரமன்றிக்கே பலத்துக்குத்‌ தடையாய்த்‌ தலைக் கட்டுமென்றபடி.

இன்னமும்‌ இவற்றில்‌ அந்வயம்‌ (தொடர்பு) இருப்பதற்குக்‌ காரணமா மென்னுமத்தை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -204 – சக்ரவர்த்தியைப்‌ போலே இழக்‌கைக்கு உறுப்பு.
முன்பே வரங்கொடுத்து வைத்து இப் போததை மறுக்க வொண்ணாதென்று ஆபாஸமான ஸத்ய தர்மத்தைப்‌ பற்றி நின்று “ராமோ விக்ரஹவாந் தர்ம: ” (தர்மமே திருமேனியாக வடிவெடுத்த ராமன்‌) என்கிற பெருமாளோடே கூடி வாழு இருந்த மேலாம்‌ பயனை இழந்த தசரத சக்ரவர்த்தியைப்‌ போலே தாழ்ந்ததான சேதநனுடைய முயற்சியாலே உண்டாவதான உபாயாந்தரங்களில்‌ அந்வயித்து நிற்கிறதாகிறது, “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌” – க்ருஷ்ணனையே ஸநாதமான தர்மம்‌ என்று சொல்லுகிறார்கள்‌- என்கிற பகவத் விஷயத்தோடே கூடி வாழுகை யாகிற பெரும் பயனை இழக்கைக்கு உறுப்பாய்‌ விடுமென்கை .

இனி, இங்குச்‌ சொன்ன ஸர்வ தர்மங்‌களையும்‌ விடுகையாகிற இதன்‌ கருத்தறியாதார்‌ சொல்லும்‌ குறைபாட்டைத்‌ தள்ளுகைக்காக அந்தப்‌ பக்ஷத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -205- ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்று சொல்லுகையாலே, சிலர்‌ “அதர்மங்கள்‌ புகுரும்‌’ என்கிறார்கள்‌
விடத் தக்க தர்மந்தான்‌, “இதம்‌ குரு இதம்‌ மாகாரீஷீ:” என்று செய்யச்‌ சொல்லுவதும்‌ விடச்‌ சொல்லுவது மாயிருக்கையாலே ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு’ என்று சொல்லுகையாலே தக்கதை செய்யச்‌ சொல்வதோடு, தகாததையும்‌ ஒரு சேரத் தள்ளுமளவில்‌, மூடின கதவைத்‌
திறந்தால்‌ நாய்‌ முதலானவை புகுமா போலே அதர்மங்களான தகாத செயல்களும்‌ புகும்‌’ என்று, சிலர்‌ சொன்னார்கள்‌ என்கை.

அந்தப்‌ பக்ஷத்தைத்‌ தள்ளுகிறார்‌.
ஸூர்ணை -206- அது கூடாது ; ‘அதர்மங்‌களைச்‌ செய்‌’ என்று சொல்லாமையாலே .
ஸர்வ தர்மங்களையும்‌ விடச்‌ சொன்ன இத்தால்‌ அதர்மங்கள்‌ புகும்‌ என்கிற இதுஉண்டாகாது ; ஏனெனில்‌? இங்கு, தர்மங்களை விடச்‌ சொன்ன மாத்திரம்‌ தவிர அதர்மங்களைச்‌ செய்யென்று சொல்லாமையாலே என்கை.

‘அதர்மத்தை தவிர்தலையும்‌ தர்ம சப்தம்‌ காட்டுமாகையாலே, அதை விடச்‌ சொன்னால்‌ அதர்மத்தைச்‌ செய்யென்பது குறிப்புப்‌ பொருளாகாதோ? என்கிற எதிர்வாதியின்‌ கருத்தை அநுவதிக்கிறார்‌. ஸூர்ணை -207.- ‘தன்னடையே சொல்லிற்றாகாதோ?’ என்னில்‌ ,
இதற்கு விடை அளிக்கிறார்‌.
ஸூர்ணை -208 – ஆகாது, தர்ம சப்தம்‌ அதர்மநி வ்ருத்தியைக்‌ காட்டாமையாலே
.
தர்மங்களை விடச்‌ சொன்ன இத்தால்‌ ‘அதர்மங்களைச்‌ செய்‌’ யென்னுமிடம்‌ தன்னடையே சொல்லிற்றாகாது; தர்ம சப்தம்‌ அதர்மத்தை செய்யாதே என்ற அங்கங்களோடு கூடிய முதன்மையா யிருந்துள்ள செய்ய வேண்டிய தர்மத்தைக்‌ காட்டுமதொழிய, பொதுவில்‌ அதர்மத்தை தவிர்தலை மாத்திரத்தைக்‌ காட்டாமையாலே என்கை.

தர்மம்‌ என்ற சொல்‌ அதர்மத்தை விடுகை என்பதில்‌ முக்கியப்‌ பொருள்‌ இல்லையே யாகிலும்‌ ஸர்வ சப்தமான இது தன்னையுங்‌ காட்டாதோ’ என்ன, அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -209 – காட்டினாலும்‌, அத்தை ஒழிந்தவற்றைச்‌ சொல்லிற்றாமித்தனை.
அப்படிக்‌ காட்டிற்றாகிலும்‌ அது இவ் விடத்தில்‌ சொன்னவன்‌ கருத்து அது அல்லாமையாலே, அதைத்‌ தவிர்த்த விதிரபமான தர்மங்களானவற்றைச்‌ சொல்லிற்றாமித்தனை என்கை.

இப்படி ஒதுக்குகிறது எது கொண்டு? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -210- தன்னையும்‌, ஈஸ்வரனையும்‌, பலத்‌தையும்‌ பார்த்தால்‌ அவை புகுர வழி யில்லை.
அதர்மத்தைச்‌ செய்தல்‌ சேஷியான எம்பெருமானுக்கு மிகவும்‌ வெறுப்புக்குரிய தாகையாலே, அவன்‌ விருப்பத்துக்குரியனாமது ஒழிய,அவன்‌ இஷ்டத்துக்கு சேராத படியான ஸ்வரூபத்தை யுடைய சேஷ பூதனாகிற தன்னைப்‌ பார்த்தாலும்‌, அவனை
ரக்ஷகனாகக்‌ கொள்ளும் போது வேறு துணை கூட்டுப்‌ பொறாதவனாகையாலே இத் தலையில்‌ தன் முயற்சியை விட்டிருக்கும்‌ நிலையை ஒழிய, செயல் படுவதை ஒன்றையும்‌ பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும்‌, இவனுடைய முயற்சிக்குப் பலம்‌ அவன்‌ முக மலர்த்தியாகையாலே இத்தகைய பலனைப் பார்த்தாலும்‌, இம் மூன்றுக்கும்‌
முரண்பட்டவைகளான அவை புகுவதற்கு வழியில்லை என்கை.
ஆகையால்‌, தர்ம சப்தம்‌ அதர்மத்தை விடுகையைக்‌ காட்டிற்றாகிலும்‌, அத்தை தவிர்ந்த வேறு ஸாதநங்களை சொல்லிற்றாகக்‌ கொள்ள வேணும்‌ என்று கருத்து. ஆக, இரண்டாம்‌ பத அர்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு, மூன்றாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -211- மாம்‌ – ஸர்வ ரஷகனாய்‌, உனக்குக் கையாளாய்‌, உன்னிசைவு பார்த்து, உன்‌ தோஷத்தை போக்யமாகக்‌ கொண்டு, உனக்குப்‌ புகலாய்‌, நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும்‌ போதும்‌ விட மாட்டாதே ரஷிக்கிற என்னை,
‘மாம்‌’ என்ற பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. ஸர்வ ரக்ஷகனா யென்று தொடங்கி அதாவது, நம்மைக்‌ காக்குமோ? காவானோ? என்று ஸந்தேஹிக்க வேண்டாதபடி, அனைவருடைய காப்பிலும்‌ காப்பது என்ற விரதத்தை யுடையவனாய்‌, தன்‌ பெருமையையும்‌ நம்‌ சிறுமையையும்‌ பார்த்து நம்மோடு கூட்டற்றிருக்குமோ? என்று என்ன வேண்டாதபடி “ஸேநயோ ருபயோர்‌ மத்யே ரதம்‌ ஸ்தாபய” (இரு சைந்யங்களின்‌ நடுவில்‌ ரதத்தை நிறுத்து)
என்று ஏவிக்‌ கொள்ளலாம்படி உனக்குக்‌ கையாளாய்‌, உன்னைக்‌ காப்பதில்‌ உண்டான அசையாலே“ரஷ்யாபேக்ஷாம்‌ ப்ரதீஷதே’ ரக்ஷிக்க வேண்டும்‌ என்ற ப்ரார்த்தனையை இறைவன்‌ எதிர்பார்க்கிறான்‌) என்கிறபடியே காக்கப்படுகிற உன்‌ இசைவு பார்த்து, நம்‌ குற்றங்கண்டு கை விடுமோ? என்று அஞ்ச வேண்டாதபடி. தகாத இடத்தில்‌ ஸ்நேஹ காருண்யங்கள்‌ காட்டியும்‌, தர்மம்‌ இன்னது, அதர்மம்‌ இன்னது என்ற விஷயத்தில்‌ கலங்குகிற உன்‌ குற்றத்தைக்‌ குணமாகக்‌ கொண்டு, தஞ்சமற்றவர்களுக்குத்‌ தான்‌ தஞ்சமாகையாலே நீயும்‌ பிறரும்‌ உனக்குத்‌ தஞ்சமில்லாத நிலையில்‌ ஒதுங்கலாம்படியான புகலாய்‌, குளிர்ச்சியே இயல்பான நீர்‌, சூடேற்றிக்‌ கொள்ளுமா போலே அபராதங்‌களைப் பொறுப்பித்துச்‌ சேர்ப்பிக்கும்‌ புருஷகார பூதரே “தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌” என்கிறபடியே -குற்றங்காட்டி அகற்றும்‌ போதும்‌ விட மாட்டாதவனாய்‌ “என்னடியாரது செய்யார்‌” என்று எதிரிட்டு ஒருநிலை நின்று ரஷிக்கும்‌ என்னை என்றபடி…

‘என்னை’ என்று விபாவதாரக்‌ கண்ணனாகிய தன்னைக்‌ காட்டுகையாலே வேறுபடுத்த வேண்டியவற்றைக்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -212-இத்தால்‌, பர வ்யூஹங்களையும்‌ தேவதாந்தர்யாமித்வத்தையும்‌ தவிர்க்கிறது.
என்னை” என்று அவதரித்துக்‌ கண்‌ காண நிற்கிற தன்னைத்‌ தஞ்சமென்று பற்றத்‌
தக்கவனாகச்‌ சொன்ன இத்தாலே, வேறு தேசத்திலிருப்‌பதாலே காணவும்‌ கிட்டவும்‌ இயலாதபடி இருக்கிற பர வாஸுதேவனையும்‌ பாற்கடல் வாஸுதேவனையும்‌, சிறந்ததான திருமேனி யன்றிக்கே உபாஸகரான வேற்றுபாய நிஷ்டர்க்கு இலக்காயிருக்கிற அக்நி இந்திரன்‌ முதலான தேவதாந்தர்யா மித்வத்தையும்‌ நீக்குகிறது – என்கை.

தர்மங்களை எல்லாம்‌ விட்டுத்‌ தன்னைப்‌ பற்றச்‌ சொல்லுகையாலே ஏற்பட்டதொரு
அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -213- தா்ம ஸம்ஸ்தாபநம்‌ பண்ணப்‌ பிறந்தவன்‌ தானே ‘ ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று என்கையாலே ஸாக்ஷாத்‌ தர்மம்‌ தானே யென்கிறது.
‘தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்‌பவாமி யுகே யுகே
” என்கிறபடியே தன்னை அடைதற்குரித்‌தான தர்மத்தை நிலை நிறுத்‌துவதற்குப்‌ பிறந்தவன் தானே
“ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” என்று மோஷத்துக்கு ஸாதநமாக சாஸ்திரங்களில்‌ சொல்லப் பெற்ற ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று என்று சொல்லுகையாலே, அவைதான்‌ நேரே பயனைத் தரும்‌ தருமங்களல்ல, நிலைநாட்டுதற்‌குரிய ஸாக்ஷாத்‌ தர்மம்‌ “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌”(ஸநாதந தர்மம்‌ கிருஷ்ணனே) என்கிறபடியே பழைய தர்மமான தானே என்னுமிடம்‌ சொல்லுகிறது.

இத்தால்‌ என்‌? சொல்கிறது என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -214 – இத்தால்‌, விட்ட ஸாதநங்களில்‌ ஏற்றம்‌ சொல்லுகிறது.
இப்படிச்‌ சொன்ன இத்தால்‌, கீழ் விட்ட ஸாதநங்களிற் காட்டில்‌ இந்த ஸாதநத்துக்குண்‌டான ஏற்றம்‌ சொல்லுகிறது என்கை.
அதுதான்‌ எது ? என்ன, அருளிச்‌செய்கிறார்‌.
ஸூர்ணை -215- அதாவது – ஸித்தமாய்‌, பரமசேதநமாய்‌, ஸர்வ சக்தியாய்‌, நிரபாயமாய்‌, ப்ராப்தமாய்‌, ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்கை.
கீழ்விட்ட ஸாதநங்களிற்‌ காட்டில்‌ இதற்கு ஏற்றமாவது – சேதநனுடைய செயலாலே
(ஸ்வரூப ஸித்தியாம்படி,) தானுளதாம்படி. இருக்கை யன்றிக்கே பழமையான தர்ம மாகையாலே ஸித்தமாய்‌, “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்‌”(எவனொருவன்‌ எல்லாப்‌ பொருளையும்‌ அவற்‌றின்‌ ஸ்வபாவங்களையும்‌ அறிகிறானோ) என்று சொல்லுகிறபடி ஸர்வஜ்ஞ விஷயமாகையாலே பரபீசதநமாய்‌,”பரா அஸ்ய சக்திர்‌ விவிதைவஸ்ரூயதே” (அந்த பரமாத்மாவுக்கு பலபடிப்பட்டதும்‌ மேலானதுமான சக்தியும்‌ உளதென்று கேட்கப்பபடுகிறது) என்கிறபடியே ஸர்வ “சக்தியாய்‌, சேதநனால்‌ செய்யப்படுமதாய்‌ நடுவே அபாயங்கள்‌ புகுவதற்கு . அவகாச முண்டாம்படி யிருக்கை யன்றிக்கே, பழையதாக நிலை நின்ற பொருளாயிருக்கையாலே அபாயமற்றதாய்‌ பரதந்திரனான இந்த சேதநனுடைய இயல்பான ஸ்வரூபத்துக்குத்‌ தகுதி யற்றதாய்‌ இராதே தகுதி யுடைத்தானதாய்‌, கீழ்ச்‌ சொன்ன பரம சேதநத்வம்‌ முதலானவைகளாலே வேறு துணையை விரும்பாமை யாகிற
கூட்டு வேண்டாதபடி. இருக்கை யென்றபடி

இந்த வேறு துணை வேண்டாமையைக்‌ காரணத்தோடு நிலைநிறுத்துகிறார்‌.
ஸூர்ணை -216- மற்றை உபாயங்கள்‌ ஸாத்யங்களாகையாலே, ஸ்வரூப ஸித்தியில்‌ சேதநனை அபேஷித்திருக்கும்‌; அசேதநங்களுமாய, அசக்தங்களுமா யிருக்கையாலே கார்ய ஸித்தியில்‌ ஈஸ்வரனை அபேக்ஷித்திருக்கும்‌ . இந்த உபாயம்‌ அவற்றுக்கு எதிர்‌த்தட்டா யிருக்கையாலே, இதர நிரபேக்ஷமாயிருக்கும்‌ .
இதைத் தவிர்த்த உபாயங்கள்‌ சேதநனுடைய செயல் மூலம்‌ உருவாக்கப்படுமவை யாகையாலே தானுளதாம்‌ படியான ஸ்வரூப ஸித்தியில்‌ முயன்று செய்பவனான சேதநனை விரும்பி இருக்கும்‌; இவனுக்குச்‌ செய்ய வேண்டுமவை அறிகைக்கும்‌ அவை தன்னைச்‌ செய்து தலைக்கட்டுகைக்கும்‌ தகுதி யில்லாத (அசேதநங்களுமாய்‌)
அறிவில்லாதவைகளாய்‌ (அசக்தங்களுமாய்‌) ஆற்றலில்லாதவையாய்‌ இருக்கையாலே, சேதநனுடைய இஷ்டம்‌ தருகைக்கும்‌, அநிஷ்டம்‌ தவிருகைக்குமான கார்யத்தினுடைய ஸித்தியில்‌ “பலமத உபபத்தே:” (பலத்தை யளிப்பவன்‌ ஈஸ்வரனே) என்ற ப்ரஹ்ம ஸூத்திரப்படி பலத்தை அளிப்பதற்கு உபயோகியான ஸர்வ சக்தி முதலான தகுதிகளை யுடையனான ஈஸ்வரனை எதிர்பார்த்திருக்கும்‌; இந்த உபாயம்‌ ஏற்கனவே பூர்ணமாயிருப்பதாய்‌, அனைத்து சக்திகளாலும்‌ நிறைவுற்றதாய்‌, உபாயாந்தரங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கையாலே வேறொன்றைத்‌ துணை கோலாதிருக்கும்‌ என்கை.

இனி, இப்பதத்திலே தஞ்சமென்று பற்றுகைக்கு அநுகூலிப்பதான குணச்‌ சிறப்புக்களெல்லாம்‌ ப்ரகாசிக்கிறபடியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -217 – இதிலே, வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸெளசீல்ய ஸெளலப்யங்களாகிற குண விசேஷங்கள்‌ நேராக பரகாசிக்கிறது .
இதிலே என்றது, “மாம்‌” என்ற பதத்திலே என்றபடி, அதாவது – அதர்மம்‌ என்ற நினைவாலே தர்மத்தினின்றும்‌ விலகியவனான அர்ஜுுநனுக்குக்‌ குற்றம்‌ பாராதே தேவையான அர்த்தங்களனைத்தும்‌ அருளிச்‌ செய்கையாலே, வாத்ஸல்யம்‌ என்ற குணம்‌ ப்ரகாசிக்கிறது; தன்னுடைய பரத்வத்தைப்‌ பலகாலும்‌ அருளிச்‌ செய்த அளவன்றிக்கே அர்ஜுநன்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி விஸ்வரூபத்‌தால்‌ தன்னை நேரே காணும்படிச்‌ செய்கையாலே, ஸ்வாமித்‌வம்‌ ப்ரகாசிக்கிறது; “ஹே க்ருஷ்ண ஹே யாதவ” என்று அழைத்ததாக அர்ஜுநன்‌ தானே சொல்லும்படி, இவனோடே கலந்து பரிமாறுகையாலே, ஸெளசீல்யம்‌ ப்ரகாசிக்கிறது; ஸுத்த ஸத்வமான அப்ராக்ருதமான திருமேனியைக்‌ கண்ணுக்கிலக்காம்படி செய்கையாலே, ஸெளலப்யம்‌ ப்ரகாசிக்கிறது என்கை.
குண விசேஷங்கள்‌” என்றது, தஞ்சம்‌ என்று பற்றுகைக்குத் தேவையான குணங்களென்று தோற்றுகைக்காக.-நேராக ப்ரகாசிக்கிறது என்றது – தெளிவாகப் ப்ரகாசிக்கிறது – என்றபடி.

இவை அனைத்திலும்‌ வைத்துக்‌கொண்டு மிகவும்‌ விரும்புகைக்குரித்தானது ஸெளலப்யமாகையாலே, அவதார மூலமான ஸெளலப்யத் தளவன்றிக்கே
தன்னைத்‌ தாழ விட்டுக்‌ கொண்டு ஸாரதியாய் நிற்கிற நிலையிலே தோற்றுகிற ஸெளலப்யத்தின்‌ மிகுதியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -218- கையும்‌ உழவுகோலும்‌, பிடித்த சிறுவாய்க் கயிறும்‌, ஸேநா தூளிதுரஸரிதமான திருக்‌குழலும்‌, தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய்‌ நிற்‌கிற ஸாரத்ய வேஷத்தை மாம்‌ என்று காட்டுகிறான்‌.
குதிரைகளைத்‌ தூண்டுகைக்குத்‌ திருக் கையிலே தரித்த உழவுகோலும்‌, குதிரைகளை இடப் பக்கம்‌ வலப் பக்கம்‌ திருப்புகைக்காகவும்‌ நிறுத்த வேண்டுமிடத்திலே தாங்கி நிறுத்துகைக்காவும்‌ பிடித்த சிறுவாய்க்‌ கயிறும்‌, திரு முடியில்‌ எதுவும்‌ மறைக்காமல்‌ – அணியாமல்‌ நிற்கையாலே ஸேநாதூளியாலே புழுதி அளைந்த திருக்குழலும்‌ “தேர்‌ கடவிய பெருமான்‌ கனைகழல்‌” என்கிறபடியே சாத்தின சிறுசதங்கையும்‌ தானுமாகத்‌ தேருக்குக் கீழே தொங்க விட்ட திருவடிகளுமாய்‌ நிற்கிற ஸாரத்ய வேஷத்தை ‘மாம்‌’ (என்னை) என்று காட்டுகிறான்‌ என்கிறார்‌.

பிறகு, நான்காம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -219- ஏகம்‌.
ஏகம்‌ – என்னையே என்று இப்பதத்தின்‌அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -220- இந்த ஏக சப்தம்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்ததைக்‌ காட்டுகிறது-
இந்த உபாய விசேஷத்தைச்‌ சொல்லும்‌ இடங்களிலே பல விடங்களிலும்‌ தேற்றேவகாரமாக உபயோகிக்கப் படுகையாலே, உகாரம்‌ போலே இந்த’ஏக’ சப்தமும்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே தேற்றேவகாரமாகிற அர்த்தத்தைக்‌ காட்டுகிறது. என்கை. அவதாரணம்‌ – தேற்றேவகாரம்‌,

இந்த உபாயத்தை நிர்ணயம்‌ பண்‌ணின பிறகு அவதாரண ப்ரயோகம்‌ – ஏவகார ப்ரயோகம்‌ பண்ணிய வசனங்கள்‌ பலவற்றையும்‌ இதுக்கு உதாரணமாக அருளிச்‌ செய்கிறார்‌, என்கை.
ஸூர்ணை -221 – “மாமேவயே ப்ரபத்யந்தே” “தமேவசாத்யம்‌” “த்வமேவோபாய பூதோ மே பவ” “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” என்றுஞ்‌ சொல்லுகிறபடியே.
அதாவது, “மாமேவ யே ப்ரபத்யந்தே”(என்னையே யாவர்‌ சிலர்‌ ப்ரபத்தி செய்கிறார்களோ.) என்றும்‌ “தமேவ சாத்யம்‌ புருஷம்‌ ப்ரபத்யே” முழு முதல்வனான அந்தப்‌ புருஷனையே ப்ரபத்தி செய்கிறேன்‌) என்றும்‌, “த்வமேவோபாய பூதோ மே பவ” (நீயே எனக்கு
உபாயமாக வேணும்‌) என்றும்‌, “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” (எனக்கு உபாயந் தருமிடத்தில்‌ உன்‌ திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்‌)என்றும்‌ சொல்லுகிற இவ் விடங்களில்‌ “மாமேவ” “தமேவ” “த்வமேவ””நின்‌ பாதமே” என்று பற்றும்‌ பொருளை நிர்ணயித்த பிறகு தேற்றேவகாரமாகச் சொல்லப்பட்டதல்லவா என்கிறார்‌

இப்படி ஏவகாரத்தை யுடைய இந்த’ஏக’ சப்தத்தால்‌ தவிர்க்கப்பட வேண்டியது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -222- இத்தால்‌, வ்ரஜ என்கிற ஸ்வீகாரத்தில்‌ உபாய பாவத்தைத்‌ தவிர்க்கிறது. உபாயாந்தரங்கள்‌ தவிர்க்கப்‌படுமளவில்‌ ஏற்கனவே ‘ஸர்வ தர்மான்‌ பரித்யஜ்ய’ என்ற இடத்திலே உபாயாந்தரங்கள்‌ தவிர்க்கத்‌ தக்கவை யென்று ஏற்பட்டு விட்டபடியால்‌ அதை மறுபடியும்‌ கூறுதல்‌, “கூறியவை கூறல்‌’ என்ற குற்றம்‌ வருகையாலும்‌, இதர
தெய்வங்களினுடைய ஸம்பந்தத்தைத தவிர்க்கப்படுமளவில்‌, அது மாம்‌” என்ற பதத்தில்‌ எம்‌பெருமானுடைய தனித் தன்மையை “என்னை என்று காட்டி விட்டபடியால்‌, இந்த ‘ஏகம்‌’ என்ற தேற்றேவகாரத்தால்‌ வ்ரஜ என்று மேல்‌ சொல்‌லுகிற ஸ்வகாரத்தில்‌ தான்‌ பற்றக் கூடிய பற்றையே உபாயம்‌’ என்று சொல்லுவதைக்‌ கழிக்கிறது என்றபடி.

பற்றின பிறகே உபாயம்‌ கார்யம்‌ செய்கையாலே பலத்துக்கு இது அவஸ்யம்‌ வேண்டி யிருக்க, இதில்‌ உபாயம்‌ என்ற நினைவைக்‌ கழிக்கிறபடி தான்‌ எங்ஙனே”? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -223–ஸ்வீகாரந்தானும்‌ அவனாலே வந்‌தது.
உபாயமாகப்‌ பற்றின பிறகு இவனுக்கு வேண்டாததைத்‌ தவிர்க்கையும்‌ வேண்டியதைக்‌ கொடுக்கையும்‌ செய்கையாகிற இது எம்பெருமானாலே ஆனாற் போலே, இதற்கு முன்‌ நிகழ்வதான பற்றுமதுதானும்‌ எம்பெருமானாலே உண்டானது என்கை. இத்தால்‌,
பற்றக்கூடிய உபாயமான பகவானாலே கார்யஞ்‌ செய்யப்படுவது தவிர நேரே “வ்ரஜ என்ற ஸ்வீகாரத்திற்கு உபாயத்வம்‌ இல்லை என்கை.

பற்றுகை அவனாலே வந்தது என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -224- ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம்‌
(கரண களேபர விதுரனாய்‌) கை கால்‌ முதலிய உறுப்புகளோடு சேர்ந்த உடம்பு
இல்லாதவனாய்‌, இங்கு நுகரும்‌ இன்பமோ, மோக்ஷ இன்பமோ இல்லாதவனாய்‌, அறிவற்ற ஐடப்பொருளுக்கும்‌ தனக்கும்‌ வேற்றுமை யின்றிக்‌ கிடக்கிற நிலையிலே, எம்பெருமான்‌ இவனுக்கு உடல்‌ இந்த்ரியங்களோடு கூடியவனாய்‌ அறிவு ப்ரகாசம்‌ அடைவதற்கு உரியனாம்படி படைத்து எதிர்‌ சூழல்‌ புக்கு’ என்கிறபடியே இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைச்‌ செய்து, அவதரித்த இடங்களிலே தன்னைஅடைகைக்கு ருசியையும்‌ விஸ்வாஸமும்‌ விளைவிக்குமதான தன்‌ குணங்கள்‌ செயல்களைக்‌ காட்டி, இவ்வழியாலே அந்த எம்பெருமான்‌ செய்த செயலாலே பலித்தது இது என்கை,

இவ் வர்த்தத்‌ துக்கு மேற்கோள்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -225-“அதுவும்‌ அவனது இன்னருளே”.
“உணர்வில்‌ உம்பரொருவனை அவன தருளாலுறற்‌ பொருட்டுஎன்னுணர்வினுள்ளே யிருத்தினேன்‌
” என்று ஞானம்‌ மிக்கிருக்கக் கடவரான நித்ய ஸுரிகளுடைய நிலை பேறு முதலானவைகளுக்குக்‌ கடவனான ஓப்பிலான அவனருளாலே அவனை அடைகைக்காக, என்னுடைய விருப்பத்தோடு கூடிய ஜ்ஞாநத்துக்குள்ளே இருத்தினேன்‌ என்று தாம்‌ அவனைத்‌ தஞ்சமென்று பற்றினதைச்‌ சொன்ன பிறகு, “அதுவும்‌ அவனது இன்னருளே” என்று அந்தப்‌ பற்றுகை தானும்‌ அவனுடைய காரணமில்லாமல்‌ உண்டான கருணையாலே உண்டானதென்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே, அந்தப்‌ பற்றுதல்‌ தானும்‌ எம்பெருமானுடைய முயற்சியின்‌ பலமென்றே கொள்ளவேணும்‌ என்கை.

இப்படியாகையால்‌, இந்த ஸ்வீகாரத்தில்‌ (பற்றுகையில்‌) உபாயத்வ புத்தியை நீக்கி நினைக்கக்‌ கடவன்‌ என்கிறார்‌.
ஸூர்ணை -226- இத்தை ஒழியவும்‌ தானே கார்யஞ் செய்யும்‌ என்று நினைக்கக் கடவன்‌
இந்தப்‌ பற்றுதலுக்கும்‌ தானே க்ருஷி(முயற்சி) பண்ணுவான்‌ ஒருவனாகையாலே, இதுக்காகவன்று அவன்‌ நமக்குக்‌ கார்யஞ்‌ செய்கிறது; இத்தை ஒழியவும்‌ இவ்வாத்மோஜ்ஜீவநம்‌ செய்பவன்‌ தானே நம்முடைய இஷ்டம்‌ கொடுக்கை, அநிஷ்டம்‌ (இஷ்டமில்லாததை) தவிர்‌க்கை யாகிய கார்யம்‌ செய்யும்‌ என்று நினைக்கக் கடவன்‌
என்கை.

இப்படி நினைக்க வேண்டுகிறது என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -227- அல்லாத போது உபாய நைரபேக்ஷ்யம்‌ ஜீவியாது.
இத்தை ஒழியவும்‌ கார்யஞ்செய்‌யும்‌’ என்று நினையாதே, “இதுவும்‌ வேணும்‌ அவன்‌ கார்யஞ்‌செய்கைக்கு என்று நினைக்குமளவில்‌ உபாய பூதனான பகவானுடைய வேற்றுத்‌ துணை வேண்டாமையாகிய தன்மை நிலை பெறாது என்கை.

ஆனால்‌, இந்தப்‌ பற்று தான்‌ ஏதாவதென்ன? அருளிச் செய்கிறார்‌-
ஸூர்ணை 228 . இதுஸர்வ முக்தி ப்ரஸங்க பரிஹாரார்த்தம்‌, புத்தியமாதாநார்த்தம்‌, சைதந்ய கார்யம்‌, ராக ப்ராப்தம்‌, ஸ்வரூயநிஷ்டம்‌, அப்ரதிஷேதத் யோதகம்‌.
இந்தப்‌ பற்றுதல்‌, இந்த சேதநனிடத்தில்‌ ஒன்றுமின்றிக்கே இருக்க, எம்பெருமான்‌ தானே இவனை உஜ்ஜீவிப்பிக்குமளவில்‌, “பின்னை எல்லாரும்‌ முக்தராக வேண்டாவோ”? என்கிற ஸர்வ முக்தி ப்ரஸங்கத்தைத்‌ தவிர்க்கைக்கு உறுப்பு;இதுதான்‌, ‘நெடுங்காலம்‌ நம்மை ரக்ஷியாதவன்‌, இன்று நம்மை ரக்ஷிக்கு மென்று இருக்கிறது நாம்‌ என் கொண்டு? என்று இவன்‌ தளும்பாமல்‌ புத்தி ஸமாதாநம்‌ பிறந்திருக்கைக்கு உறுப்பு; இவன் தான்‌ அசேதநமன்றிக்கே சேதநமாகையாலே அவனே உபாயம்‌’ என்கிற திட நம்பிக்கைக்‌ கொள்ளுதல்‌ இவன்‌ அறிவுடைமையின்‌ கார்யம்‌; சாஸ்திரம்‌ முதலானவற்றின்‌ விதி யின்றிக்கே எம்பெருமானையே சரணமாகப்‌ பற்றுவதிலுள்ள ருசியை அறிந்தவனான இவனுடைய இச்சையால்‌ வந்த இது, ஸ்வரூபத்திற்கு மாறுபட்ட தன்றிக்கே அவன்‌ காப்பிலேயே ஓதுங்குகையாகிய ஸ்வரூபத்திலே நிற்குமது; கீழ்‌ அநாதி காலமாக அவன்‌ தன்னைக்‌ காக்குமதை தன் முயற்சியால்‌ விலக்கிக்‌ கொண்டு வந்த இவன்‌, : அதைத்‌ தவிர்த்தமையைக்‌ காட்டும்‌ என்கை.

இனி, ‘மாம்‌’ என்கிற பதத்துக்கு முன்பும்‌, இங்கும்‌ ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -229- கீழ்‌ தானும்‌ பிறருமான நிலையைக்‌ குலைத்தான்‌; இங்குத் தானும்‌ இவனுமான நிலையைக்‌ குலைக்கிறான்‌
அதாவது – ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்ற இடத்தில்‌ ஸகல உபாயங்களையும்‌ விடச்‌ சொல்லுகையாலே, பலம்‌ தருவானான தானும்‌ கர்ம ஜ்ஞாந பக்தியாகிற உபாயாந்தரங்களுமாய்க்‌ கூடி நிற்கிற நிலையைக்‌ குலைத்தான்‌. ‘ஏகம்‌’ என்கிற இடத்தில்‌ ஸ்வீகாரத்தில்‌ உபாய பாவத்தைக்‌ கழிக்கையாலே, உபாயமாகிற தானும்‌, தான்‌ பற்றிய பற்றில்‌ உபாய புத்தி பண்ணிய இவனுமான நிலையைக் குலைக்கிறான்‌ என்பது. அஃதாவது : “நாம்‌ எம்பெருமானை உபாயமாகப்‌ பற்றின தாலன்றோ அவன்‌ நம்மை ரக்ஷிக்கப்‌ .போகின்றான்‌’ என்று தான்‌ ஈஸ்வரனை உபாயமாகப்‌ பற்றிய பற்றில்‌ உபாயத்வ புத்தியைக்‌ கொள்ளுகிற இந்த சேதநன்‌ நிலையைக்‌ குலைக்கிறான்‌ என்கை. –உபாயாந்தரங்களைப் பிறர்‌ என்றது, “உன்னாலல்‌லால்‌ யாவராலும்‌?” என்றன்றோ ஆழ்வார்‌ அருளியது.-ஸ்ரீகீதையில்‌ சரம ஸ்லோகத்துக்கு முன்பு அருளிச்‌ செய்துள்ள கர்ம யோகம்‌ முதலிய உபாயங்களை எல்லாம்‌ விளக்கி அங்கு ரக்ஷகனாகச்‌ சொன்ன தன்னையே இங்கு
உபாயமாகச்‌ சொன்னதால்‌, கர்ம யோகம்‌ முதலானவை உபாயமாம்‌ போது தான்‌ ரக்ஷகனாக வேண்டுமென்ற நிர்பந்தம்‌ உள்ளது. இங்கு, தானே உபாயமாம்‌ போது வேறொரு உபாயம்‌ வேண்டியதில்லை என்பது பெறப்படுதல்‌ காண்க.

இனி, உபாய புத்தியாக இவன்‌ செய்யும்‌ (ஸ்வீகாரத்தை) பற்றுதலினுடைய குறைபாட்டை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை – 230- அவனை இவன்‌ பற்றும்‌ பற்று அஹங்கார கர்ப்பம்‌, அவத்யகரம்‌ –
காரணமில்லாத இயல்பான பந்தத்தாலே ரக்ஷகனான அவனை, அவனால்‌ காக்கப்படுகிற இவன்‌, தன்‌ காப்புக்கு உறுப்பாகப்‌ பற்றுகிற பற்று, தான்‌ கர்த்தா என்ற அஹங்காரத்தோடு கூடியதாய்‌, பிதாவினிடத்திலே நான்‌ என்னை ரஷித்துக் கொள்கிறேன்‌’ என்று
கையெழுத்திடும்படி புத்திரன்‌ கையெழுத்து வாங்குமா போலே பழிப்புக் கிடமாயிருக்குமென்கை.

ஆனால்‌, ரக்ஷகமாவது தான்‌ எது? என்ன”, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -231-அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்‌
இவ் வாத்மாவினுடைய ரக்ஷணத்துக்குக்‌ கடவனான எம்பெருமான்‌, ‘ இவனை நாம்‌ ரக்ஷிக்கக்‌ கடவோம்‌’ என்று அபிமாநித்துக்‌ கொள்ளுகை யாகிற ஸ்வீகாரமே – பற்றே இவனுக்கு ரக்ஷகமாகும்‌ – என்கை.

‘சேதநன்‌ முயற்சியில்‌ ஒன்றையும்‌ இவ் வுபாயம்‌ ஸஹியாது’ என்னுமத்தைத்‌ தெளிவிக்கைக்காக, உபாயாந்தரங்களுக்கும்‌ இவ் வுபாயத்துக்கும்‌ உண்டான வேற்றுமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -232- மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் , இதுக்கு ப்ரவ்ருத்தி தோஷம்‌
ஏற்கனவே ஸித்தமாயிருக்குமதான இவ் வுபாயத்தை ஒழிந்த மற்ற உபாயங்களுக்கு, சேதநன்‌ தன்‌ செயல் மூலம்‌ உண்டாக்க வேண்டுமாகையாலே இவனுடைய தன் முயற்சி தவிர்கை குறை யுடைத்தாகும்‌; இந்த ப்ரபத்தி உபாயத்துக்குத்‌ துணைக்‌ கூட்டு பொறுக்காமையாலே இச் சேதநனுடைய முயற்சி குறைபாடுடைத்தாயிருக்குமென்கை

சேதனனுடைய முயற்சி ஒன்றும்‌ வேண்டா’ என்னுமிடத்துக்கு மேற்கோள் காட்டுகிறார்‌.
ஸூர்ணை -233- “சிற்ற வேண்டா” ,
ஸித்தோபாயத்தைப்‌ பற்றுகையைச்‌ சொல்லுகிற “மற்றொன்றில்லை” -9-1-7-என்கிற பாட்டிலே, ‘சிற்ற வேண்டா” என்று சிற்றுதல்‌ – சிதறுதலாய்‌ ‘பரக்க ஒரு செயலும்‌ செய்ய வேண்டா’ என்கையாலே, இவ் வுபாயத்தில்‌ இழியுமவனுக்கு ஒரு செயலும்‌ செய்ய வேண்டா என்று சொல்லிற்றன்றோ என்கை.

சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா -வேறு ஒரு செய்கை வேண்டா என்கை –சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்-அந்தோ-இவ் விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –

இது தான்‌ இந்த ஸ்லோகத்திலேயே சொல்லிற்றென்கிறார்‌.
ஸூர்ணை -234 – நிவ்ருத்தி கீழே சொல்லிற்று –
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’ என்று ப்ரவ்ருத்தி தர்மமான அனைத்துச்‌ செயலையும்‌ தவிர்கையே இவனுக்கு வேண்டுவது என்பது கீழே சொல்லிற்று என்கை.

ஆனால்‌, நன்றி பாராட்டுகை தான்‌ வேணுமோ? அது உபாயத்தில்‌ முதலிடாதோ?’ என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -235- உபகார ஸ்ம்ருதியும்‌ சைதந்யத்‌தாலே வந்தது; உபாயத்தில்‌ அந்தார்பவியாது.
“என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌ -“மருவித்தொழும்‌ மனமே தந்தாய்‌”
என்று இவை முதலானவைகளாலே இவன்‌ செய்யும்‌ நன்றி அறிதலும்‌ இவனுடைய ஜ்ஞாந மூலமாய்‌ வந்ததித்தனை; இது உண்டாகையா லன்றோ ஈஸ்வரன்‌ கார்யம்‌ செய்தது என்று உபாயத்தில்‌ உட்புகாது – என்கை.

இனி, ஐந்தாம்‌ பத அர்த்தத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -236 – சரணம்‌ – உபாயமாக.
சரணம்‌’
– என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ உபாயமாக என்று.
சரண சப்தத்திற்கு வேறு அர்த்தங்களையும்‌ காட்டக்‌ கூடியதாயிருக்க, இவ்விடத்தில்‌ உபாயத்தையே காட்டுகின்றமையைக்‌ காரணத்தோடு கூட அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -237 – இந்த சரண சப்தம்‌ – ரஷிதாவையும்‌ க்ருஹத்தையும்‌ உபாயத்தையும்‌ காட்டக்‌ கடவதே யாகிலும்‌, இவ் விடத்தில்‌ உபாயத்தையே காட்டுகிறது; கீழோடே சேர வேண்டுகையாலே .
“உபாயே க்ருஹ ரஷித்ரோச்‌ சப்தச்‌ சரண மித்யயம்‌, வர்த்ததே ஸாம்ப்ரதம்‌ சைஷ உபாயார்த்தைகவாசக :
சரணம்‌ இதி –
சரணமென்கிற,
அயம்‌ சப்த :- இந்த சப்தமானது,
உபாயே – உபாயத்திலும்‌,
க்ருஹ ரஷித்ரோ:- க்ருஹத்திலும்‌ ரக்ஷகனிடத்திலும்‌,
வர்த்ததே – உபயோகிக்கத் தக்கது,(இப்படியானாலும்‌)
ஸாம்ப்ரதம்‌ – இப்போது(இவ்விடத்தில்‌) ஏஷ: – இந்த சரண சப்தமானது,
உபாயார்த்த ஏக வாசக : – உபாயத்திற்கே பேராகக்‌ கடவது. என்கிறபடியே இந்த சரண சப்தமான இது ரஷிப்பவனையும்‌, இல்லத்தையும்‌ உபாயத்தையும்‌ காட்டக்‌ கடவதே யாகிலும்‌, இந்த இடத்தில்‌ உபாயத்தையே காட்டுகிறது. ஸர்வ தர்மங்களையும்‌ விட்டுத்‌ தன்னையே பற்றச்‌ சொல்லுகிற பகுதியாகையால்‌, கீழோடே சேர வேண்டுகையாலே, இந்த ‘சரண’ சப்தத்திற்கு உபாயம்‌” என்ற பொருளைத் தான்‌ கொள்ள வேண்டும்‌ என்கிறார்‌. கர்ம யோகம்‌ முதலான எல்லாம் கேட்டு அவை சுலபமாகச்‌ செய்யக் கூடியவை அல்ல வென்றும்‌, ஸ்வரூப விரோதம்‌ என்று நினைத்து, நாம் கரை ஏறும்‌ உபாயம்‌ எதுவோ என்று கவலை கொண்டுள்ள அர்‌ஜூநனைக்‌ குறித்து இந்தச்‌ சரம ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்கையால்‌ அதற்கேற்ப, க்ருஹம்‌ ரக்ஷகன்‌ என்றவற்றை விட்டு, உபாயம்‌ என்ற பொருளைக்‌ கொண்டால் தான்‌ கர்மம்‌ முதலானவைகளை உபாயமாகக்‌ கொள்ளுதலை விட்டுவிட வேணு மென்றிருக்கிற அர்ஜூநனுக்கு ஸமாதானஞ்‌ சொல்லுகிற தென்று கீழோடே பொருந்த வருமென்றபடி. ஆனால்‌, கீழ்ச்‌ சொன்ன உபாயாந்தரங்களை விடுகை தானே உபாயமாகப்‌ பற்றுகிற கண்ணன் எம்‌பெருமானின்‌ உபாயத்வத்தைத்‌ தோற்றுவிப்பதாயிருக்க, சரண சப்த ப்ரயோகம்‌ இங்கு வேணுமோ? என்னில்‌, ஆம்‌ வேணும்‌; இங்கே ஒரு ஆக்ஷேபம்‌ எழுகிறது. அதாவது, சரண சப்தத்துக்கு ப்ரகரண பலத்தாலே உபாயம்‌ என்ற பொருளைக்‌ கொண்டு வர வேண்டுமானால்‌, சரண சப்தமில்லாமலே ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ – வ்ரஜ என்ற இம் மாத்திரமே சொன்னாலும்‌, ப்ரகரண பலத்தாலே ‘வ்ரஜ’ என்பதற்கு – (உபாயமாகப்‌) புத்தி பண்ணு என்று அர்த்தம்‌ கொண்டு விடலாமே? இந்த சரண சப்தம்‌ ஏதுக்கு? என்று அவ்வாக்ஷேபம்‌.-அதற்குச்‌ சமாதாநம்‌:- எம்பெருமானை உயேயமாகப்‌ பயனாகப்‌ பற்றும் போதும்‌, நதியை கடந்தவனுக்கு ஓடத்தின்‌ தேவை யில்லாதது போல்‌ ஸாதநாந்தரங்கள்‌ ஒன்றும்‌ வேண்டியதில்லை யாகையால்‌,’ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம்‌ ஏகம்‌ வ்ரஜ என்பதற்கு – எல்லா சாதநங்களையும்‌ விட்டு உபேயமாக எம்பெருமான்‌ ஒருவனையே பற்று என்று பொருள்‌ கொள்ளவும்‌ இடமுண்டாகையால்‌, “சரணம்‌ வ்ரஜூ என்னாமல்‌ ‘வ்ரஜ’ என்று மாத்திரம்‌ விதிக்கும்‌ ஸ்வீகாரம்‌ அப்படி உபேயமாக :பற்றுதலைத்‌ தவிர்க்காது; ஆகவே, ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு உபேயமாக ஸ்வீகரித்தலைத்‌ தவிர்ப்பதற்காக “சரண”சப்தம்‌ அவஸ்யம்‌ வேண்டுமென்றபடி.-மறுபடியும்‌ இன்னுமொரு ஆக்ஷேபம்‌ வருகிறது அதாவது, “யத் யத்‌ ஸாங்கம்‌ தத்தத்‌ ஸாதநம்‌” (எது எது அங்கத்தோடு கூடியதோ, அது அது உபாயம்‌) என்ற நியாயத்துக்கு ஏற்ப ‘வ்ரஜூ என்ற விதிக்கு அங்கமாக ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்று உபாயாந்தரத்தை விடுதலைச்‌ சொல்லி யிருத்தலால்‌, இங்கு “வ்ரஜ என்பதனால்‌ விதிக்கப்படும்‌ ஸ்வீகாரம்‌, உபாயமாக ஸ்வீகரித்தலையே காட்டக்‌ கூடிய தாகையாலே, இந்த சரண சப்தம்‌ வேண்டிய தில்லையே என்று அவ்வாக்ஷேபம்‌ இதற்குச்‌ சமாதாநம்‌ :-அர்த்த பலத்தால்‌ கிடைக்கக் கூடிய பொருளைக் காட்டிலும்‌ சப்தத்தாலே சொல்லக் கூடிய பொருளே சிறப்புடையதாகையாலே, “ஆக்ஷேபத:ப்ராப்தாத்‌ ஆபிதாநிகஸ்யைவ க்ராஹ்யத்வாத்‌” (அர்த்த பலத்தால்‌ வரும்‌ பொருளைக் காட்டிலும்‌ சப்த பலத்தால்‌ வருவதே ஏற்றுக்‌ கொள்ளத்‌ தக்கதாகையால்‌) என்று ஸ்ரீபாஷ்யகாரரும்‌ ஸ்ரீ பாஷ்யத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.ஆக, உபாயத்தைச்‌ சொல்லக் கூடிய இந்த சரண சப்தத்தாலே, உபேயமாகவும்‌ உபாயமாகவும்‌ பற்றக்‌ கூடிய இரண்டு தன்மையும்‌ எம்பெருமானுக்கு உண்டாகையால்‌ அதில்‌, உபேயமாக பற்றும்‌ தன்மையை இங்கு வேறு படுத்திக் காட்டினாராயிற்று.

இனி, ஆறாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை – 238 -வ்ரஜ-புத்தி பண்ணு
வ்ரஜ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ ‘புத்தி பண்ணு’ என்று.
அது தன்னை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -239- கத்யர்த்தமாவது-புத்த்யர்த்தமாய்‌, அத்யவஸி யென்றபடி
“வ்ரஜ கதெள’
என்கிற தாது (வினைப்பகுதி) செல்லுதல்‌ என்று பொருளாகும்‌. “கத்யர்த்தா புத்த்யர்த்தா :” (கதி சப்தம்‌ புத்தியைக் காட்டும்‌.) அதாவது – கதியைச்‌ சொல்லும்‌ சப்தங்கள்‌ மானஸ கதியான புத்தியையும்‌ சொல்லுகின்றன என்கிறபடி. மனத்தில்‌ ஏற்படக்கூடிய திட நம்பிக்கையைச்‌ சொல்லுகிறது இந்த வ்ரஜ என்ற பதம்‌ என்கிறார்‌-“இந்தப்‌ புத்தியாகிறது விடத் தக்கதான த்யாகத்தின்‌ முடிந்த நிலையிலிருப்பதாய்‌, உபாயத்வத்தில்‌ சேராததாய்‌,
உபாயாந்தரங்களை விடுவதை முன்னிட்டுக்‌ கொண்டிருப்பதாய்‌, பகவான்‌ செய்யும்‌ ரக்ஷகத்வத்தை அநுமதிப்பதாய்‌, அறிவின்‌ செயலாய்‌, ப்ரார்த்திப்பதை உட் கொண்டதாய்‌, பகவந் முக மலர்த்திக் குரியதாய்‌, ஜ்ஞாநத்தின்‌ கார்யமான ஸ்வரூபமாம்‌ தன்னியல்புக்கும்‌ பொருந்தியதாய்‌, தப்பாமல்‌ தாமதமின்றிப் பயனைத் தரக் கூடியதாயிருப்தொரு திட நம்பிக்கையோடு கூடிய ஞான கார்யம்‌
” என்று இந்த புத்தி விசேஷத்தை பரந்த படியில்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச்‌ செய்ததை இவ்விடத்தில்‌ அதை நினைவில்‌ கொள்ளக்‌ கூடியது என்கிறார்‌ மாமுநிகள்‌.

பொதுவில்‌ சஞ்சரித்தலைச்‌ சொல்லக்‌கூடிய கதி சப்தம்‌, மனம்‌ வாக்கு உடல்‌ என்ற முக் கரணங்களாலும்‌ இறைவனை அடைதலைக் காட்டா நிற்க, மனஸாலே அடைகிற திட நம்பிக்கை மாத்திரம்‌ சொல்லி ஒன்றில்‌ ஒதுக்குகிறதென்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -240- வாசிக காயிகங்களும்‌ இதுக்கு அபேஷிதிதங்களா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஜ்ஞாநாந்மோஷ மாகையாலே மாநஸமான அநுஷ்டானத்தை
அதாவது – “சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையினாலும்‌” என்கிறபடியே முக் கரணங்களாலும்‌ உண்டான பற்றுதல்‌ அதிகார பூர்த்திக்கு வேண்டியதாகையாலே “வரிக்கிறேன்‌’ என்று சொல்லக் கூடிய வாக்கும்‌, அஞ்ஜலி முதலான காயிகமும்‌, உபாயமாகப்‌ பற்றுகைக்கு உரியதா யிருக்கச்‌ செய்தேயும்‌, “ஜ்ஞாநாந் மோக்ஷ:” என்று ஜ்ஞாநத்தாலே மோக்ஷமாகையாலே அவை இரண்டும்‌ நீங்கலாக மாநஸ அநுஷ்டான மாத்திரத்தைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌. ஆக, ஆறாம் பத்ததுக்கு பதவுரை அருளிச்‌ செய்தாயிற்று.

இனி, முற்பாதியால்‌ சொன்ன அர்த்த்தத்தை அநுவதித்து (திரும்பச்‌ சொல்லி) முடிக்கிறார்‌.
ஸூர்ணை -241-ஆக த்யாஜ்யத்தைச்‌ சொல்லி, த்யாக ப்ரகாரத்தைச்‌ சொல்லி, பற்றப்படும்‌ உபாயத்தைச்‌ சொல்லி, உபாய நைரபேக்ஷ்யஞ் சொல்லி, உபாயத்வஞ் சொல்லி, உபாய ஸ்வீகாரம்‌ சொல்லுகிறது.
அதாவது – ஆக, முற் பாதி ஸ்லோகத்தால்‌’ஸர்வ தர்மாந்‌ என்று விட வேண்டியதைச்‌ சொல்லி, ‘பரித்யஜ்ய’ என்று த்யாக ப்ரகாரத்தைச்‌ சொல்லி, ‘மாம்‌’ என்று பற்றப்படும்‌ உபாயத்தைச்‌ சொல்லி, ‘ஏகம்‌’ என்று இந்த ஸித்தோபாயம்‌ இன்னொரு உபாயத்தை விரும்பாதது என்பதைச்‌ சொல்லி, ‘சரணம்‌” என்று உபாயத்தைச்‌ சொல்லி, ‘வ்ரஜ’ என்று உபாய ஸ்வீகாரஞ்‌ சொல்லுகிறது என்கை.

பிறகு, பிற்பாதிக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பித்து, அதில்‌ முதல்‌ பதத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -242 -அஹம்‌ –
அஹம்‌ – நான்‌ – என்று.
இந்த பிற்பாதியில்‌ ஈஸ்வரன்‌ செய்தருளுகிற அம்சத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -243 -ஸ்வ க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌:
அதிகாரிச்‌ செயலை முற்பாதியிற்‌ சொன்‌னான்‌. உபாயமாகிய தன்‌ செயலை இதிலே அருளிச் செய்‌கிறான்‌.
இனி ‘அஹம்‌’ என்ற இப் பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -244-ஸர்வஜ்ஞனாய்‌, ஸர்வ சக்தியாய்‌, ப்ராப்தனான நான்‌ .
அதாவது, “யஸ்‌ ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்‌“(யாவனொரு பரமாத்மா எல்லாவற்றையும்‌ அறிகிறானோ ?) என்கிறபடியே ஸர்வத்தையும்‌ அறியுமவனாய்‌ “பராஸ்ய சக்திர்‌ விவிதைவ ஸ்ரூயதே‘ என்கிறபடியே எல்லா ஸாமர்த்யத்தையும்‌ உடையவனாய்‌, எஜமானனாகையாலே உரிமை யாளனாயிருக்கிற நான்‌ – என்கை.

மற்ற குணங்களெல்லாம்‌ கிடக்க இந்தக் குண விசேஷங்களை இந்த ‘அஹம்‌’ என்கிற சப்தம்‌ காட்டுகிற இதற்கு ப்ரயோஜநம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -245- இவன்‌ கீழ்‌ நின்ற நிலையும்‌, மேல்‌ போக்கடியும்‌ அறிகைக்கும்‌, அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும்‌ ஏகாந்தமான குண விசேஷங்களையும்‌, தன் பேறாகச்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான பந்த விசேஷத்தையும்‌ காட்டுகிறது.
அதாவது, எம்பெருமான்‌ இந்த சேதநனுக்கு வேண்டாதனதைத் தள்ளி வேண்டியதைக்‌ கொடுக்குமளவில்‌, -முன் நின்ற நிலையும்‌, மேல்‌ போகத் தகும்‌ நிலையை அறிந்தும் அறிந்தபடியே அவற்றைச்‌ செய்து தலைக் கட்டுகைக்கும்‌ தகுந்தவை யாயிருந்‌ துள்ள (ஸர்வஜ்ஞத்வ) எல்லாவற்றையும்‌ ஒரே காலத்தில்‌ அறிவது ஸர்வ சக்தித்வங்களாகிற குண விசேஷங்களையும்‌, இவன்‌ கார்யம்‌ செய்யுமிடத்தில்‌ இவனுக்காக அன்றிக்கே தன் பேறாகச்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சேஷித்வ ரூப (எஜமானான) பந்த விசேஷத்‌தையும்‌ ப்ரகாசிப்பிக்கிறது – என்கை. மாம்‌” என்கிற இடத்தில்‌ அடைதற்கே அவஸ்யமான குண விசேஷங்கள்‌ ப்ரகாசித்தாற்போலே, ‘அஹம்‌’ என்கிற இடத்திலும்‌ கார்ய கரத்வத்‌துக்கு அவஸ்யமான குண விசேஷங்கள்‌ ப்ரகாசிக்குமன்றோ? வாத்ஸல்யாதிகள்‌ இல்லாத போது தஞ்சமாக அடைகைக்‌ கூடாதாப் போலே, ஜ்ஞாந சக்த்யாதிகள்‌ இல்லாத போது
கார்ய கரத்வம்‌ பொருந்தாமையாலே, இவ் விடத்தில்‌ ஜ்ஞாந சக்திகளும்‌ ப்ராப்தியாம்‌ உறவையும்‌ சொன்ன இது பூர்த்திக்கும்‌ உபலக்ஷணம்‌
. உபலகஷணம்‌ -மற்றுமுண்டான லக்ஷணத்தையும்‌ கூட்டிச்‌ சொல்வது.

இந்தப் பதத்தில்‌ ‘மாம்‌’ என்ற இடத்தில்‌, ஸாரதியாய்‌ நின்ற பாரதந்த்ரியத்துக்கு எதிர்த்தட்டான தன்‌ ஸ்வாந்ந்த்ர்யத்தை ப்ரகாசிப்பித்தமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -246- தனக்காகக்‌ கொண்ட ஸாரத்ய வேஷத்தை அவனை யிட்டுப்‌ பாராதே தன்னை யிட்டுப்‌ பார்த்து, அஞ்சின அச்சந் தீரத்‌ தானான தன்மையை அஹம்‌” என்று காட்டுகிறான்‌.
அதாவது, மாம்‌’ என்று ஸாரத்ய வேஷத்தோடே நிற்கிற தன்னைப்‌ பற்றச்‌ சொன்ன போது, அர்‌ஜுநன்‌, தன்‌னைக்‌ காப்பதற்காக ஏறிட்டுக்‌ கொண்ட தேரோட்டியான வேஷத்தை அனைத்துக்கும்‌ மேலானவன்‌ இப்படித்‌ தாழ நின்றது தன்‌ இச்சையான குணத்தலான்றோ’ என்று அவனை யிட்டுப்‌ பார்க்காமல்‌, ‘நமக்கு இழி தொழில்‌ செய்து ஸாரதியாய்‌ நிற்கிறவனன்றோ?” என்று தன்னை யிட்டுப்‌ பார்த்து, “ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று’ என்னா நின்றான்‌; இது’ என்னாகுமோ? என்று அஞ்சின அச்சந்தீர, தனக்கு வஸப்பட்ட பத்தர்‌, முக்தர்‌, நித்யர்களான மூன்று விதமான சேதநர்கள்‌, ஸுத்த ஸத்வமாகிய பரம பதம்‌, மிஸ்ர ஸத்வமான ப்ருக்ருதி மண்டலமான லீலா விபூதியும்‌ இவைகளின்‌ நிர்வாஹங்களுக்குத்‌ துணையான காலமும்‌ ஆகிய தன்னதீநமான சேதநா சேதநங்களின்‌ ஸ்வரூபமும்‌, இவைகளின்‌ நிலைபேறும்‌ காப்பும்‌ செயல்களும்‌, தடை யற்ற சுதந்திரனா யிருக்கிற தன்னுடைய உண்மையான வேஷத்தை ‘அஹம்‌’ (நான்‌) என்று வெளிப்படுத்‌துகிறான்‌ – என்கை.

இத்தன்மை யானவன்‌ பரதந்த்ரனானதும்‌, தன்‌ இயல்பாலானதன்று என்னுமிடத்தை அருளிச்‌செய்கிறார்‌. பரதந்த்ரம்‌ – பிறர்க்கு வஸப்படுதல்‌.
ஸூர்ணை -247-கீழில்‌ பாரதந்தர்யமும்‌ இந்த ஸ்வாதந்தர்யத்தினுடைய எல்லை நிலமிறே.-
அதாவது- கீழ்‌, ஸாரதியாய்‌ நின்ற பாரதந்த்ர்யமும்‌, தான்‌ நினைத்தது செய்யுமளவில்‌ தன்னைத்‌ தடை செய்பவ ரில்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்‌யத்தினுடைய முடிவெல்லை யன்றோ-என்கை.

பிறகு ‘த்வா என்ற இரண்டாவது பதத்தை வெளியிடுகிறார்‌.
ஸூர்ணை -248 – த்வா – அஜ்ஞனாய, அசக்தனாய்‌, அப்ராப்தனாய்‌, என்னையே உபாயமாகப்‌ பறிறியிருக்‌கிற உன்னை.
‘த்வா’ என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. அதாவது – அஜ்ஞனாய்‌ என்று தொடங்கி-உன்கார்யங்கள்‌ அறிவதற்குத்‌ தக்க ஜ்ஞாநமில்லாதவனாய்‌, அறிந்தாலும்‌ செய்து தலைக் கட்டிக்‌ கொள்ளுகைக்கு சக்தி இல்லாதவனாய்‌, அது தான்‌ உண்டானாலும்‌ உன்னுடைய
ரக்ஷணத்தில்‌ உனக்கு உரிமை இல்லாதவனாய்‌, இப்படி இருக்கையாலே எல்லாத்‌ தர்மங்களையும்‌ விட்டு என்னையே (வேறொரு உபாயம்‌ வேண்டாதபடியான) உபாயமாகப்‌ பற்றி யிருக்கிற உன்னை – என்கை.

பிறகு, மூன்றாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.’ஸர்வ பாபேப்ய –” என்று.
ஸூர்ணை -249 – ஸர்வ பாபேப்ய :- மத் ப்ராப்தி ப்ரதி பந்தகங்கள்‌ என்று யாவை யாவை சில பாபங்களைக்‌ குறித்து அஞ்கிறாய்‌, அவ்வோ பாபங்கள்‌ எல்லாவற்றில்‌ நின்றும்‌ .
ஸர்வபாபேப்ய : ” என்று இதுவும்‌ –பாபமும்‌ என்று ஒருமையும்‌, பாபங்களும்‌ என்று பன்மையும்‌, ஸர்வ சப்தமுமாய்‌ மூன்று விதமாயிருக்கையாலே, இம் மூன்றையும்‌ உட் கொண்டு இப்பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. “மத் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள்‌’ என்று தொடங்கி,-அதாவது – பாபமாகிறது இஷ்ட விரோதியாயும்‌ இஷ்டமில்லாதான துன்பத்திற்குக்‌ காரணமாயிருக்கு மதாகையாலும்‌, மோக்ஷப் பகுதி யாகையாலே இவ்விடத்தில்‌ இஷ்டவிரோதி களாகின்றன-பகவானை அடையத் தடை செய்யுமவை யாகையாலும்‌, அதில்‌ ஜ்ஞாந விரோதியும்‌ ருசி விரோதியும்‌ உபாய விரோதியும்‌ ஆகிற இவை திருமந்த்ரத்தில்‌ நம சப்தத்தாலே முன்பே கழிக்கப் பட்டதாகையாலும்‌, இனி யுள்ளது என்னை அடைவதற்கு தடையா யிருக்கும்‌ விரோதி யாகையாலே, நீ என்னை அடைய தடையா யிருக்கும்‌ விரோதிகள்‌ என்று யாவை யாவை சில பாபங்களைக்‌ குறித்து
பயப்படுகிறாயோ? அந்த அந்தப்‌ பாபங்களெல்லா வற்றிலிருந்தும்‌-விடுவிக்கிறேன்‌ என்கிறான்‌-
என்றபடி.

பன்மை மிகுதியால்‌ காட்டுமதை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -250- “பொய் நின்ற ஞானமும்‌ பொல்‌லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்கிறபடியே, அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களைச்‌ சொல்லுகிறது
அதாவது, “பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்குமழுக்குடம்பும்‌” என்று உண்டாதல்‌, அழிதல்‌ முதலியவற்றின்‌ தொடர்பாலே அறிவு இல்லாமையாலே இல்லை யென்று சொல்லும்படியான அறிவற்ற ஜடப்‌ பொருளான அசேதனத்தை ஆத்மாவாக நினைக்கும்‌
நினைவும்‌, அந் நினைவாலே தேகமே ஆத்மா என்கிற இந்த புத்தியால்‌ உலகியலைச்‌ சார்ந்த தீய செயல்கள்‌ செய்கையும்‌, இந்தக்‌ கர்மங்‌ காரணமாக வரக் கூடியதான தீண்டா வழும்பும்‌
செந்நீரும்‌ செறி தசையுமான மல ரூபமான தேக ஸம்பந்தமும்‌
‘ என்று சொல்லுகிறபடியே அறிவின்மையும்‌, கர்மமும்‌, வாஸனையும்‌, ருசியும்‌, ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற இவற்றைச்‌ சொல்லுகிறது – என்கை. இவைகளில்‌ அறிவின்மையாவது :- தேகமே ஆத்மாவாக நினைக்கும்‌ நினைவும்‌, ஐய உணர்வும்‌ திரிபு உணர்வும்‌ ஆகிய மூவகைப்பட்ட அறிவின்மை. -கர்மமாவது :- நல் வினை, தீ வினைகள்‌. பகவானை அடைய நல் வினையும்‌ பாபத்தைப்‌ போலே விடத் தக்கது. வாஸனையாவது -அஜ்ஞாந வாஸனை, கர்ம வாஸனை, தேக ஸம்பந்த வாஸனை என மூன்றாகும்‌. ருசியாவது– விஷய பேதத்தாலே பலவாயிருக்கும்‌; ப்ரக்ருதி ஸம்பந்தமாவது– பரு உருவும்‌ அருவ உருவுமாகிய இரு வகையான ஐடப் பொருளைப்‌ பற்றிய அசித் ஸம்பந்தமாகும்‌. என்றபடி.

இனி, ஸர்வ சப்தத்தின்‌ கருத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -251- தருணச்‌ சேத கண்டூயநாதிகளைப்‌ போலே ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்குமவை- யென்ன, லோகாபவாத பீதியாலும்‌, கருணையாலும்‌, கலக்கத்தாலும்‌ செய்யுமவையென்ன, எல்லாவற்றையும்‌ நினைக்கிறது .
அதாவது – துரும்பு நறுக்குகை, தினவு எடுத்த இடத்தில்‌ சொறிகை முதலானவை போல நினைவின்றிக்கே உடலின்‌ வாஸனையாலே தொடரும்‌ ப்ரபத்தி செய்த பிறகும்‌ செய்யும்‌ வினைகளென்ன; நாம்‌ இவற்றைச்‌ செய்யாத போது “உலகம்‌ நம்மைப்‌ பழித்துச்‌ சொல்லுமே” என்கிற பயத்தாலும்‌, நாம்‌ செய்யாத போது மற்றவர்களும்‌ செய்யாது விடுவார்களாகில்‌ இது அவர்களுக்கு நாசமாமே; ஐயோ! என்கிற இரக்கத்தாலும்‌ செய்யும்‌ தினசரி செய்யுமவையென்ன, ஏதேனும்‌ ஒரு நிமித்தத்தால்‌ செய்யும்‌ கர்மங்களென்ன, ராஜஸ தாமஸங்களாலே கலங்கி முன்‌ விட்ட உபாயங்களில்‌ தொடர்பு கொள்ளுதல்‌ மீண்டும்‌ ப்ரபத்தி செய்தலென்ன, இவை எல்லாவற்றையும்‌ நினைக்கிறது என்கிறார்‌.

உபாயமென்கிற புத்தியோடு செய்யாதவையும்‌ பொருள்‌ தொடர்பால்‌ உபாயம்‌ என்ற நிலையில்‌ சேரும்‌ என்னும்‌ கேள்வியை முன் வைத்‌து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -252- ‘உந்மத்த ப்ரவ்ருத்திக்கு க்ராம ப்ராப்தி போலே’ த்யஜித்த உபாயங்களிலே இவை அந்விதங்களாமோ ? என்று நினைக்க வேண்டா.
அதாவது ” உந்மாதச்‌ சித்த விப்ரம:” (பைத்தியம்‌ பிடித்தவனும்‌ மனம்‌ கலங்கியவனும்‌ ஆகிற இரண்டும்‌ ஒரே பொருளைக்‌ கொடுக்கும்‌) என்கிறபடியே பைத்தியக்காரன்‌ ‘இன்ன ஊருக்குப்‌ போகிறோம்‌’ என்கிற நினைவு இன்றிக்கே ஒரு வழியே போகா நின்றால்‌, அவ்வழி ஒரு ஊரோடே ஸம்பந்த முண்டா யிருக்கையாலே அவ் வூரிலே சென்று சேருமா போலே, உபாயம்‌ என்கிற நினைவு இன்றிக்கே உலகத்தவர்‌ பழிக்கஞ்சி செய்தல்‌ முதலானவைகளாலே செய்யப்படுகிற இவை-விட்ட உபாயங்களில்‌ தொடர்பு கொள்ளுமோ என்று நினைக்க வேண்டா ; தொடர்பு கொண்டே விடும்‌ என்றபடி. (ஆந்ரு சம்ஸ்ய ப்ரதாநராய்‌) பிறரிடத்தில்‌ இரக்கம்‌ கொண்டவராய்‌ அதாவது – ” இவ்வளவு ஞானவானே கர்மங்களைச்‌ செய்யாது விட்டால்‌ உலகத்தவர்‌ அவரே விட்டார்‌; நமக்கென்‌? என்று பகவதாஜ்ஞா ரூபமான கர்மங்களை விட்டால்‌ அதனால்‌ அவர்கட்கு பகவத்‌ ஆஜ்ஞையை மீறின பாபம்‌ வரும்‌. பிறரிடத்தில்‌ கருணையால்‌ அநுஷ்டித்தாலும்‌, உயர எறிந்த கல்‌ ஆகாயத்தில்‌ நில்லாதாப் போலே, அவையும்‌ ஒரு பலத்தைக்‌ கொடுத்தே விடும்‌. ஆகையாலே, அவையும்‌ பாப சப்தத்தாலே சொல்லக்‌ கடவது” என்று தனி சரமத்தில்‌ இவர் தாமே அருளிச்‌ செய்தது என்கிறார்‌ மாமுநிகள்‌.

அதுதானே யாகிறது, திரும்பவும்‌ மறுபடியும்‌ பண்ணும்‌ ப்ரபத்திக்கு குறை எது?” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -253-கலங்கி உபாய புத்த்யா பண்ணும்‌ ப்ரபத்தியும்‌ பாதகத்தோடு ஓக்கும்‌.
அதாவது – ஒரு தடவை செய்யும தொழிய மறுபடி செய்யுமதை ஸஹியாத ப்ரபத்தி ஸ்வபாவத்தை அறியாதே கலங்கி விரோதியைக்‌ கழிப்பதற்காகவோ கஷ்டத்தை அடைவதற்காகவோ உபாய புத்தியோடு மீண்டும்‌ பண்ணும்‌ ப்ரபத்தியும்‌ – “அத பாதக பீதஸ் த்வம்‌” அத – இனி, த்வம்‌ – நீ, பாதக பீத: -உபாயாநுஷ்டாநமாகிய பாவத்தைச்‌ செய்ய அஞ்சினாயானால்‌. என்று உபாயாந்தரம்‌ போலே பாதக ஸமமென்கை.

பிறகு, நாலாம்‌ பதத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -254- மோக்ஷயிஷ்யாமி -முக்தனாம்படி பண்ணக் கடவேன்‌.
இதிலிருந்தும்‌ (இந்த பாபங்களிலிருந்து) விடுபட்டுப் போம்படி பண்ணக் கடவேன்‌ -என்கை.

இனி, ‘யிஷ்‌’ என்கிற ‘ணிஜ’ ர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -255 – ணிச்சாலே – நானும் வேண்டா, நீயும்‌ வேண்டா -அவை தன்னடையே விட்டுப்‌போம் காணென்கிறான்‌.
அதாவது – ‘யிஷ்யாமி’ என்கிற ணிச்சாலே இயற்றுதல்‌ கர்த்தா வன்றிக்கே ஏவுதல்‌ கர்த்தாவாய்‌ விடுவிக்கக்‌ கடவேன்‌ என்கையாலே, இதற்கு நானும்‌ ஒரு முயற்சி செய்ய வேண்டா; நீயும்‌ இதற்காக ப்ரார்த்திக்க வேண்டா; நீ என்னைத்‌ தஞ்சமாக அடைந்த ராஜ குல (மாஹாத்ம்யத்தாலே) பெருமையாலே அந்த பாபங்கள்‌ உன்னைக் கண்டு பயப்பட்டு “கானோ ஒருங்கிற்றுக்‌ கண்டிலமால்‌” என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போங்காண்‌ என்று அருளிச்‌ செய்கிறானென்கை.

இப்படிச்‌ சொன்னதன்‌ கருத்தை வெளி யிட்டு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -256 – என்னுடைய நிக்ரஹ பலமாய்‌ வந்தவை நானிரங்கினால்‌ கிடக்குமோ? என்கை.
அதாவது, பாபங்களாகின்றன குப்பையில்‌ ஆமணக்குப்‌ போலே எழுந்து பாம்பு போலே கழுத்தைப்‌ பிடிப்பதொன்றன்றே; சேதநன்‌ பண்ணின கர்மங்கள்‌ நொடிப்‌ போதில்‌ நசிப்பதொன்றாகையாலே, அப்போதே போம்‌; அஜ்ஞனாகையாலே (செய்த செயலை மறந்தவனாகையாலே) கர்த்தாவான இவனும்‌ மறந்து போக, இயல்பாகவே பேரறிவாளனாய்‌ ஒன்றொழியாமல்‌ உணர்ந்திருந்து அந்தந்த காலங்களிலே தப்பாமல்‌ நிறுத்து அநுபவிப்பிக்கிற என்னுடைய நிக்ரஹ பலமாகையாலே, அந்த என்னுடைய நிக்ரஹ பலமாய்‌ வந்தவை, நிக்ரஹத்துக்கு எதிர்த் தலையான அநுக்ரஹத்தை நான்‌ பண்ணினால்‌ பாபங்கள்‌ அவ் விஷயத்தில்‌ பின்னைக்‌ கிடக்குமோ? என்று இதற்குக்‌
கருத்தென்றபடி.

‘தன்னடையே விட்டுப் போம்‌’ என்ற இடத்தில்‌ அபிப்ராயத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -257- அநாதி காலம்‌ பாபங்களைக்‌ கண்டு நீ பட்ட பாட்டை அவை தாம்‌ படும்படி. பண்ணுகிறேன்‌.
அதாவது – அநாதியான காலமெல்லாம்‌ துன்பம்‌ தருவதான பாபங்கள்‌ வந்துமேலிடப் புகுந்தால்‌, அவற்றைக்‌ கண்டு நீ நடுங்கின நடுக்கமெல்லாம்‌ என்னைத்‌ தஞ்சமடைந்த ராஜ குல மாஹாத்ம்யத்தாலே உன்னைக் கண்டு அவை தான்‌ குடல்‌ வெந்து நடுங்கும்படி பண்ணக்‌ கடவனென்கை. “அவை தாமே விட்டுப் போம்படி பண்ணுகையாவது -இவை தமக்கு முன்பு உண்டாய்க்‌ கழிந்தவை என்று தோற்றாதபடிபோக்குகை ; அதாகிறது – இவை நினைவுக்கு வந்தாலும்‌ ப்ரபந்நனான தான்‌ பகவானுக்கே அற்றுத்‌ தீர்ந்த தன்மையைப்‌ பார்த்து கனவு கண்டாற் போலே இவை நமக்கு இடையில்‌ வந்தவையாய்‌ கழிந்தவை என்றிருக்கையும்‌, நினைவாலே துக்கம்‌ அணுகாதிருக்கையும்‌” என்று தனி சரமத்தில்‌ இவர்‌ தாமே அருளிச்‌ செய்தார்‌ என்பது இங்கே நினைவில்‌ கொள்ளத் தக்கவை.

“மோக்ஷயிஷ்யாமி” என்கிற தன்மை இடத்துப்‌ பொருளில்‌ அபிப்ராயமான ஓரர்த்த விசேஷத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -258 – இனி உன் கையிலும்‌ உன்னைக்‌ காட்டித்‌ தாரேன்‌, என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்‌ கொள்ளேனோ?
அதாவது, இத்தனை காலமும்‌ நம்‌ கார்யத்துக்கு நாமே உரிமை யுடையவன்‌ என்று நீ திரிகையாலே தன்‌ கார்யம்‌ தானே செய்‌து கொள்கிறான்‌ என்றிருந்த இத்தனை யல்லது எனக்கு நீ உடம்பைப்‌ போலே அடிமை’ என்றறிந்து என்‌ பக்கலிலே உன்னை ஸமர்ப்பணம்‌ செய்த பின்பு உன்னுடைய பாப விமோசனத்தின்‌ பொருட்டு முயற்சி நீ செய்து கொள்ளென்று உன்‌ கையிலும்‌ உன்னை காட்டித் தாரேன்‌; என்னுடம்பான உன்னுடைய அறிவின்மையான அழுக்கைச்‌ சரீரியாய்‌ உயிரான நானே போக்கிக்‌ கொள்ளேனோ? என்கை. ‘ என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்‌ கொள்ளேனோ’ என்றது, முயற்சி பயனிரண்டும்‌ தன்னதென்று தோற்றுகைக்காக. ஆகையால்‌, உன்னுடைய விரோதியில்‌ கிடப்பது ஒன்றில்லை என்றபடி. “விரோதியைக்‌ கழிப்பதும்‌ இஷ்டம்‌ பெறுகையும்‌ இரண்டும்‌ பலமாயிருக்க ஒன்றைச்‌ சொல்லுவானென்னென்னில்‌ ?” ஒன்றைச்‌ சொன்னால்‌ மற்றையது தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை. “மாமே வைஷ்யஸி” – (என்னையே அடைகிறாய்‌) என்று, முன்னே சொல்லப்பட்ட உபாயத்துக்குச்‌ சொன்ன பலந் தவிர வேறு பலம்‌ இல்லாமையாலே சொல்லிற்றில்லை என்னவுமாம்‌; ஆனால்‌, விரோதியை ஒழிப்பது மட்டில்‌ சொல்லுவான்‌ ஏன்‌? என்னில்‌, – அது அதிகமாகையாலே சொல்லிற்று. விரோதி கழிகை உண்டானால்‌ பலம்‌ இயல்பாக ஸித்தமாயிருக்கையாலே, தனித்துச்‌ சொல்ல வேண்டாவன்றோ” என்று சுருக்கமாக ஸ்ரீய:பதிப்படி ரஹஸ்யத்திலும்‌, விரிவாகப் பரந்தபடி தனி சரமங்களிலும்‌, அருளிச்‌ செய்த கேள்வியும்‌ விடையும்‌ இவ் விடத்தில்‌ சொல்லிக்‌ கொள்ள வேணும்‌.

பிறகு, கடைசி பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -259- மாஸூச: – “நீ உன்‌ கார்யத்திலே அதிகரியாமையாலும்‌, நான்‌ உன்‌ கார்யத்திலே அதிகரித்‌துக்‌ கொண்டு போருகையா லும்‌, உனக்கு சோக நிமித்தம்‌ இல்லை காண்‌: என்று அவனுடைய சோக நிவருத்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறான்‌.
மாஸூச :’ என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. அதாவது, “ நீ உன்‌ கார்யத்திலே அதிகரித்து நின்றாயாகில்‌, “நம்‌ கார்யத்துக்கு என்‌ செய்வோம்‌” என்று கரைந்து சோகிக்கத்‌ தகுதி; நான்‌ உன்‌ காரியத்திலே அதிகரியாதிருந்தேனாகில்‌, ‘தம்‌ கார்யத்தில்‌ இவன்‌ உதாஸீநனா யிராநின்றான்‌,; நாம்‌ எங்ஙனே உஜ்ஜிவிக்கப்‌ போகிறோம்‌?” என்று சோகிக்கத்‌ தகுதி உண்டு; -இங்ஙனன்றிக்கே “முயற்சியும்‌ பயனும்‌ ஆகிய இரண்டும்‌ உனக்கு இல்லாத படியான பாரதந்தர்ய ஸ்வரூபத்தைஉணர்ந்து, நீ உன்னுடைய காப்பிலே முயற்சி பண்ணாதொழிகையாலும்‌, உன்னுடைய ரக்ஷணத்தில்‌ முயற்சியும்‌ பயனுமாகிற இரண்டும்‌ என்னதாம்படி, ஸ்வாமியான நான்‌ உன்‌ கார்யத்தில்‌ தடையறுக்கையாலே உன்னுடைய ரக்ஷண கார்யத்திலே அதிகரித்துக்‌ கொண்டு போருகையாலும்‌, உனக்குச்‌ சோகிக்கக்‌ காரணம்‌ இல்லை காண்‌’ என்று, முன்பு சோக முடையவனாய்‌ நின்ற அவனுடைய சோக நிவருத்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறான்‌ – என்கை.இத்தால்‌, அஹம்‌ த்வா என்கிற பதங்களாலே சொல்லப்பட்ட ர்க்ஷக ரக்ஷ்யரான (காப்பவன்‌, காக்கப்படுபவன்‌) இருவருடைய ஸ்வபாவத்தையும்‌ அநுவதித்துக் கொண்டு சோகத்தைத்‌ தவிர்த்தபடியை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனிமேல்‌, பாபத்தைப்‌ போக்குபவனான தன்னுடையவும்‌ போக்கப்படுபவையான பாபங்களினுடையவும்‌ தன்மைகளைச்‌ சொல்லிச்‌ சோகம்‌ தவிர்த்தபடியை
அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -260- நிவர்த்தக ஸ்வரூபத்தைச்‌ சொல்‌லி, நிவர்த்யங்கள்‌ உன்னை வந்து மேலிடாதென்று சொல்லி, உனக்கு சோக நிமித்தம்‌ இல்லை காண்‌ என்கிறான்‌.
அதாவது- அஹம்‌ என்று ஸர்வஜ்ஞத்வம்‌ முதலான குணங்களோடு கூடினவனாய்க்‌. கொண்டு விரோதியைப் போக்குபவனா யிருக்கிற தன்‌ ஸ்வரூபத்தைச்‌ சொல்லி, “த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி” என்று ‘ணி”ச்சால்‌ நிவர்த்திக்கப்படுமதான பாபங்கள்‌ உன்‌னைக் கண்டு தானே அஞ்சி ஓடிப் போமதொழிய, என்னையே உபாயமாகப்‌ பற்றி இருக்கிற உன்னை வந்து மேவிடாது என்னுமிடம்‌ சொல்லி, பிறகு ‘மாஸூச:‘ என்கையாலே
‘இப்படியான பின்பு உனக்குச்‌ சோகிக்கக்‌ காரண மில்லை” என்கிறானென்கை.

இத் தலையில்‌ விரோதியைப்‌ போக்குகைக்குத்‌ தான்‌ மூண்டு நிற்கிற படியை அறிவித்து, இவனுடைய சோகத்தைப்‌ போக்குகின்றமையைப்‌ பெரியோரின்‌ பாசுரத்தை மேற்கோள் காட்டிக்‌ கொண்டு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -261 “எத்தினா லிடர்க்கடற் கிடத்‌தி யேழை நெஞ்சமே” என்கிறான்‌.
அதாவது – திருமழிசைப்‌ பிரான்‌ தம்முடைய திருவுள்ளத்தைக்‌ குறித்‌து ,ஸர்வேஸ்வரன்‌ இத் தலையில்‌ (நம்மிடத்தில்‌)விரோதியைப்‌ போக்கி அடிமை கொள்வதாக என்று ஏன்று கொண்டு வந்து புகுந்திருக்கிற படியைச்‌ சொல்லி, ‘இனி ஏதுக்காக நீ துன்பக் கடலில்‌ அழுந்துகிறாய்‌” என்றாற்போலே, ஈஸ்வரனும்‌ இப்போது இத் தலையில்‌ அனைத்துப்‌ பாபங்களையும்‌ போக்குவதாகத்‌ தானே, ஏறிட்டுக்‌ கொண்டமையை அறிவித்து, “இனி ஏதுக்காக சோகிக்கிறாய்‌ ?’ என்று இவனைக்‌ (அர்ஜுனனைக்‌) குறித்து அருளிச்‌ செய்கிறான்‌ என்கை.

இனி, இவனுடைய சோகம்‌ மறுவலிடாமல்‌ போக்குவதற் குறுப்பான பகவதபிப்ராய விசேஷத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -262 – பாபங்களை நான்‌ பொறுத்துப்‌ புண்யமென்‌று. நினைப்பிடா நிற்க நீ சோகிக்கக்‌ கடவையோ ?
அதாவது – நீ செய்த பாபங்களை நான்‌முந்துற என்னுடைய பொறுமைக் குரித்தாக்கி – அவ்வளவுமன்றிக்கே பின்பு: உன் பக்கல்‌ எனக்கு உண்டான வாத்ஸல்யத்தாலே “செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்‌” என்று இவன்‌ ப்ரார்த்தனை. அடியார்‌ திறத்‌து அவன்‌
சொல்வது, ” செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்கிறபடியே அவை தன்னைப்‌ பாபமாக நினையாதே புண்ணியமென்று நினைப்பிடா நிற்க , இனி நீ சோகிக்கக்‌ கடவையோ? என்கை.
ஆக, இவ்வுத்தரார்த்தத்தில்‌ ஐந்து பதத்தாலும்‌, நிவர்த்தகனான ஈஸ்வர ஸ்வரூபத்தை அஹம்‌” என்ற பதத்தால்‌ சொல்லப்பட்டது. நிவர்த்யாஸ்ரயத்தையும்‌ பகவானால்‌ போக்குதற்குரிய பாபங்களுக்குச்‌ சார்பான சரணாகதனை த்வா’ என்ற பதத்தால்‌ சொல்லப்பட்டுள்ளது. ஸர்வ பாபேப்யோ பதத்தால்‌, போக்குதற்குரிய பாபங்களையும்‌,
மோக்ஷயிஷ்யாமி’ பதத்தால்‌ அவைகளைப்‌ போக்குகிற விதத்தையும்‌, மாஸூச:’ பதத்தால்‌ அதன்‌ காரணமான சோக நிவ்ருத்தியையும்‌ சொல்லிற்றாயிற்று.

இனி, இந்த ஸ்லோகத்திற்‌ சொன்ன விஷயங்களின்‌ சார்பான பொருள்களை மாமுநிகள்‌ அருளிச்‌ செய்கிறார்‌. இனி என்று தொடங்கி,
இனி, இந்த ஸ்லோகார்த்தத்தில்‌ சுவை ஒருவனுக்கு உண்டாகையில்‌ உள்ள அருமையையும்‌, இந்த ஸ்லோகந்தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தையும்‌, இதில்‌ நம்பிக்கை உண்டாவதில்‌ அருமையையும்‌ இதில்‌ ஆசை உண்டாவதின்‌ அருமையையும்‌, ஈஸ்வரன்‌ இத்தை முதற்கண்‌ உபதேசியாமைக்குக்‌ காரணத்தையும்‌, வேத புருஷன்‌ ப்ரபத்திக்கு வேறான உபாயங்களை விதிப்பதற்குச்‌ காரணத்தையும்‌ உபாயாந்தரங்‌-களை (ப்ரபத்திக்கு வேறானவைகளை) உபாயமாக மேற் கொண்டொழுகாது விட்டு விடுமளவில்‌ குற்றமில்லை என்னுமத்தையும்‌, அவை தான்‌ வேற்று முகத்தால்‌தொடர்புடையதாகையாலே இயல்பாக விடப்படுவதன்‌று என்னுமிட்‌த்தையும்‌, பயன் கிடைத்தற்கு ஸாதநம்‌ இன்னது என்னுமிடத்தையும்‌ பலன் கிட்டுகைக்கு இவன்‌ பக்கல்‌ வேண்டுமவற்றையும்‌, ஈஸ்வரனுக்கு இவனுடைய நல் வினைகள்‌ தேவையற்றது என்னுமத்தையும்‌, இவ் வர்த்தத்தில்‌ நம்பிக்கை உண்டாகி உஜ்ஜிவித்தல்‌ இல்லை யாகில்‌ நசித்தலித்தனை என்னுமத்தையும்‌, இதில்‌ திட நம்பிக்கை இல்லாதவன்‌ இதில்‌ தொடர்பு கொண்டால்‌ விநாசத்துக்குரித்தென்னுமத்தையும்‌, இதற்குத்‌ தகுதியுடைய அதிகாரிகள்‌ இன்னா ரென்னுமத்தையும்‌ முறையே அருளிச்‌ செய்து தலைக்‌ காட்டுகிறார்‌ என்கிறார்‌ மாமுநிகள்‌.
அவற்றில்‌ முதலில்‌, இதில்‌ ஒருவனுக்கு சுவை பிறப்பதிலுள்ள அருமையைக்‌ காட்டுவதற்காசு ஒரு உதாரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -263- உய்யக்‌ கொண்டார்‌ விஷயமாக உடையவர்‌ அருளிச்‌ செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.
அதாவது – தத்வ நிர்ணயம்‌ பண்ணின உய்யக்‌கொண்டார்‌ என்பவர்‌ பக்தி நிஷ்டராயிருந்தார்‌. அவரை ப்ரபத்தி நிஷ்டராம்படிச்‌ செய்ய வேணுமென்று உடையவர்‌ இந்த ஸ்லோகார்த்தத்தை அருளிச்‌ செய்த அளவில்‌, ‘அர்த்தம்‌ அழகியதாயிருந்தது; ஆகிலும்‌ இத்தை மேற்கொண்டொழுகுவதில்‌ எனக்குச்‌ சுவை யில்லை’ என்ன, ‘வித்வானாகையால்‌ அர்த்தத்துக்கு இசைந்தாய்‌; பகவத்‌ கடாக்ஷ விசேஷமில்லாமையாலே உனக்கு ருசி பிறக்கவில்லை என்று அவர்‌ விஷயமாக உடையவர்‌ அருளிச்‌ செய்த வார்த்தையை நினைப்பது என்கை.

இந்த ஸ்லோகந்‌ தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -264. இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு .
அதாவது – சாஸ்திரங்களெல்லாம்‌ ஒரு தலையும்‌, தான்‌ ஒரு தலையுமாயிருக்கிற இந்த ஸ்லோகத்துக்கு சாஸ்திரங்களில்‌ சொன்ன தர்மங்களை வாஸனையோடு
விடுவித்து, இந்தச்‌ சேதநனுக்குத்‌ தானே வேறொன்றையும்‌ எதிர்பாராமல்‌ தன்னை அடைதற்குத்‌ தடையான அனைத்துப்‌ பாபங்களையும்‌ தள்ளிப் போட்டுத்‌ தன்னை அடைவித்துக்‌ கொள்ளும்‌ ஸ்வாதீநமான அனைத்து (ப்ரவர்த்தகங்களையும்‌)
செயல்களையும்‌ உடைய ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பரியம்‌ என்கை.

இதில்‌ விருப்பம்‌ உண்டாவதில்‌ அருமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -265. “இதுதான்‌ அநுவாத கோடியிலே” என்று வங்கிப்புரத்‌து நம்பி வார்த்தை –
அதாவது – இந்த ஸ்லோகார்த்தந்தான்‌ அநுவாத கோடியிலே என்று ஆப்த தமர்‌ – ப்ரமாணங்களில்‌ மெய்ம்மை கண்டவர்‌ வங்கிப்புரத்து நம்பி அருளிச்‌ செய்தது என்கை. அநுவாத கோடி – ஒருவர்‌ சொல்லி யிருக்கும்‌ வார்த்‌தையை இன்னொருவர்‌ அதையே மேற் கொண்டு சொல்லுதல்‌.

அது. எத்தாலே என்ன? அருளிச்‌ செய்கிறார்‌ ; ‘அர்ஜுனன்‌’ என்று தொடங்கி.
ஸூர்ணை -266-அர்ஜூநன்‌, க்ருஷ்ணனுடைய ஆனைத் தொழில்களாலும்‌, ருஷிகள்‌ வாக்யங்களாலும்‌, க்ருஷ்ணன் தன்‌ காரியத்திலே அதிகரித்துக்‌ கொண்டு
போருகையாலும்‌, இவனே நமக்குத்‌ தஞ்சமென்று துணிந்த பின்பு தன்னைப்‌ பற்றச்‌ சொல்லுகையாலே :-

அதாவது, இதுக்கு அதிகாரியான அர்ஜுநன்‌ இளமைப் பிராயந்தொடங்கி கிருஷ்ணனுடைய பொருந்தாதெல்லாம்‌ பொருந்தும்படி செய்யக்கூடிய செயல்களெல்லாம்‌ காட்டுமதான மனிதர்கள்‌ செய்யக்கூடிய செயல்களை மீறின செயல்களாலும்‌ “ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந;, நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌”
ஸ்ரீமான்‌ – பெரிய பிராட்டியோடு கூடின, க்ஷீரார்ணவ நிகேதந:– திருப்பாற்கடலை இருப்பிடமாகக்‌ கொண்ட,
ஏஷ: நாராயண:- இந்த க்ருஷ்ணன்‌, நாகபர்யங்கம்‌ ்‌ பாம்பணையான கட்டிலை, உத்ஸ்ருஜய – நன்றாகவிட்டு
மதுராம்புரீம்‌ – மதுரா பட்டணத்துக்கு, ஆகதோ ஹி – எழுந்தருளினாரன்றோ.
“புண்யா த்வாரவதீ யத்ர தத்ராஸ்தே மது ஸதெந : ஸாக்ஷாத்தேவ : புராணோ8ஸெள
ஸஹிதர்மஸ் ஸநாதந :
புண்யா
– பயனும்‌ ஸாதநமுமான,
த்வாரவதீ- துவராகையானது,
யத்ர – எவ்விடத்திலிருக்கிறதோ,
தத்ர – அவ்விடத்தில்‌,
மதுஸுூதந : – மது என்ற அஸூரனைக்‌ கொன்ற நாராயணன்‌,
அஸ்தே – இருக்கிறான்‌,
௮ணெள – இவர்‌,
ஸாக்ஷாத்‌ – ஸாக்ஷாத்‌ தேவனானவனும்‌, புராண :- அநாதியானவருமாகி,
ஸஹி – ப்ரஸித்தியான,
ஸநாதந தர்ம :– ஸநாதநமாயிருக்குமவர்‌ பழமையானவர்‌ என்றபடி.
“யத்ர நாராயணோ தேவ: பரமாத்மா ஸநாதந :, தத்ர க்ருத்ஸ்நம்‌ ஜகத்‌ பார்த்த தீர்த்தாந்யாயதநாநிச “
ஹே பார்த்த –
ஓ அர்ஜுநா,
யத்ர – எவ்விடத்தில்‌,
ஸநாதநஃ அநாதியாயும்‌,
பரமாத்மா – பரம்பொருளுமாயிருக்கிற,
நாராயணோ தேவ:-ஸ்ரீக்ருஷ்ண னிருக்கிறானோ,
தத்ர – அவ்விடத்தில்‌,
க்ருத்ஸ்நம்‌ ஜகத்‌ – அனைத்து உலகங்களும்‌,
தீர்த்தாநி – தீர்த்தங்களும்‌,
ஆயதநாநிச – அனைத்து தேவாலயங்களும்‌ இருக்கின்றன)
பவித்ராணாம்‌ ஹி கோவிந்த : பவித்ரம்‌ பரமுச்யதே, புண்யாநாமபி புண்யோ5$ ஸெள மங்களாநாஞ்சமங்களம்‌”
அஸெள கோவிந்த
-இந்த கோவிந்தன்‌, பவித்ராணாம்‌ ஹி -பவித்ரங்களுக்கெல்லாம்‌,
பரம்‌ பவித்ரம்‌ – மேலான புனிதப்‌ பொருளாக,
உச்யதே – சொல்லப்படுகிறார்‌.
புண்யாநாமபி புண்ய -புண்யங்களுக்கெல்லாம்‌ புண்யமும்‌,
மங்களாநாஞ்ச மங்களம்‌ –மங்களங்கட்கெல்லாம்‌ மங்களமும்‌ அவனே.
“யே ச வேத விதோ விப்ரா: யே சாத்யாத்‌ மவிதோ ஐநா :,
தே வதந்தி மஹாத்‌ மாநம்‌ க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌”
வேத வித:
வேதத்தை உணர்ந்தவர்களான, விப்ரா: பராஹ்மணர்கள்‌,
யேச – யாவருளரோ,
அத்யாத்மவித்‌ ஜநா :- வேதாந்த வித்யையை உணர்ந்த ஜநங்கள்‌,
யேச – யாவருளரோ,
தே – அவர்களெல்லாம்‌,
மஹாத்மாநம்‌ – பரமாத்மாவான, க்ருஷ்ணம்‌ – கிருஷ்ணனை,
ஸநாதநம்‌ தர்மம்‌ -(ஸநாதநமான)பழையதான தர்மஸ்வரூபியாக,
வதந்தி – சொல்லுகிறார்கள்‌.
“க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத் திரபி சாப்யய :, க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம்‌ இதம்‌ விச்வம்‌ சராசரம்‌”
லோகாநாம்‌
– உலகங்கட்கெல்லாம்‌, உத்பத்திஅபிச -படைக்கின்றவனும்‌ காக்கின்றவனும்‌,
அப்யய: அழிக்கின்றவனும்‌,
க்ருஷ்ண : ஏவஹி – க்ருஷ்ணனே,
இதம்‌ விச்வம்‌ – இந்த எல்லாமான,
சராசரம்‌ – சேதநாசேதநங்களும்‌, க்ருஷ்ணஸ்‌ யக்ருதே – கிருஷ்ணனை உத்தேசித்தே,
பூதம்‌ – உண்டாயிற்று.
என்று இவை முதலானவைகளாலே உயர்ந்ததும்‌ தாழ்ந்ததுமான தத்துவங்களின்‌ உண்மை யுணர்ந்தவர்களான, ருஷிகள்‌ வாக்யங்களாலும்‌, இளமை தொடங்கி நகர இருப்போடு, வநத்திலிருப்போடு எவ்வித வித்யாசமுமில்லாத கிருஷ்ணன்‌, தன்‌ கார்யத்துக்குக்‌ கடவனாய்‌ நோக்கிக்‌ கொண்டு போகையாலும்‌, இவன்‌ சொல்லுகிற உபாயங்களெல்லாம்‌ நமக்குத்‌ தஞ்சமல்ல; இவனே நமக்குத்‌ தஞ்சம்‌ என்று துணிந்த பின்பு “அப்படியானால்‌ என்னைப் பற்று’ என்று சொல்லுகையாலே

இது தன்னை முதலிலே உபதேசிக்கமைக்குக்‌ காரணம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ புறம்பு என்று தொடங்கி-
ஸூர்ணை – 267 – புறம்பு பிறந்தது எல்லாம்‌, இவன்‌ நெஞ்சை சோதிக்கைக்காக.
அதாவது – “யச்ச்ரேய : ஸ்யாந்‌ நிச்சிதம்‌ ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம்‌ சாதிமாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌”
யத்‌ –
எதுவானது,
மே – எனக்கு,
ஸ்ரேய :– சிறந்த ஸாதநமாக,
நிச்சிதம்‌ – நிச்சயமாக,
ஸ்யாத்‌ – ஆகுமோ, தத்‌ – அதை,
ப்ரூஹி – சொல்லுக, தே – உனக்கு,
அஹம்‌ – நான்‌, சிஷ்ய: – மாணாக்கன்‌, த்வாம்‌ – உன்னை, ப்ரபந்தம்‌ – சரணமாக அடைந்த,
மாம்‌ – என்னை, சாதி -நல்லுணர்வையுடையவனாகச்‌ செய்வாய்‌. என்று இவனுக்கு உபாய உபதேசம்‌ செய்யத்‌ தொடங்குகிற அளவிலே, முதலிலே இத்தை உபதேசியாதே வேற்றுபாயங்களைப்‌ பரக்க நின்று உபதேசித்ததெல்லாம்‌ ‘இவன்‌ இவைகளிலேயே நிலை பெற்று- விடுவானோ அவைகளினுடைய குறைபாடுகளைப்‌ பார்த்து இப்போது சொன்ன இந்த உபாய உபதேசத்‌துக்கு அதிகாரியாமோ? என்று, இவன்‌ நெஞ்சை சோதிக்கைக்காக – என்கை.

ஆனால்‌, இவன்‌ வேண்டுமானால்‌ இவன்‌ நெஞ்சை சோதிப்பதற்காக வேற்றுபாயங்களை உபதேசித்தவனாகலாம்‌; வேத புருஷன்‌ அவற்றை விதிப்பான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -268-வேத புருஷன்‌ உபாயாந்தரங்களை விதித்தது, கொண்டிப் பசுவுக்குத்‌ தடி கட்டி விடுவாரைப்‌ போலே, அஹங்கார மமகாரங்களால்‌ வந்த களிப்பு அற்று ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்காக.
அதாவது – ஆப்த தமன்‌ (மெய்ம்மை கண்டு அதையே சொல்லுபவன்‌) ஆன வேதபுருஷன்‌ “விஜ்ஞாய ப்ரஜீஞாம்‌ குர்வீத” (அறிவுடையனாய்க்‌ கேட்டல்‌, சிந்தித்தல்‌ முதலியவைகளால்‌ அந்தப்‌ பரமாத்மாவை அறிந்து நிரந்தர த்யானம்‌ பண்ணக் கடவன்‌) என்‌றும்‌, “ஓமித்யாத்மாநம்‌ த்யாயத’, ஆத்மாநம்‌ – பரமாத்வை, ஓம்‌ இதி- ஓம்‌ என்று த்யாயத – த்யாநம்‌ பண்ணுங்கள்‌. என்றும்‌, “ஆத்மாநமேவ லோகமுபாஸீத” ஆத்மாநம்‌ – ஸாதநமாகிய பரமாத்வையே, –லோகம்‌ – ஸாத்யமான பயனாக, உபாஸீத –உபாஸிக்கக்‌ கடவன்‌. என்றும்‌, “ஆத்மாவாஅரே த்ரஷ்டவ்ய ச ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய :”. அரே – ஏ சிஷ்யனே,-ஆத்மாவா-ஆத்மாவே, த்ரஷ்டவ்ய:-பார்க்கத் தக்கது, ஸ்ரோதவ்ய:– கேட்கத் தக்கது மந்தவ்ய :- மநநம்‌ செய்யத் தக்கது, நிதித்யாஸிதவ்ய: தர்சந ஸமாநாகார முண்டாம்படி தியானிக்கத் தக்கது, என்றும்‌ இவை முதலானவைகளாலே வேற்று உபாயங்களை மோக்ஷ ஸாதநமாக விதித்தது – பட்டி மேய்ந்து திரிகிற பசுவுக்கு தம் வழிப் படுத்துகைக்காகக்‌ கழுத்திலே தடியைக் கட்டி விடுவாரைப்‌ போலே, அஹங்கார மமகார வஸ்யனாய்க்‌ களித்துத்‌ திரிகிற இவனுக்கு, “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி:” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு – ஆயிரம்‌ ஐந்மங்களில்‌, தபோ ஜ்ஞாந ஸமாதிபி – கர்ம ஜ்ஞாந பக்திகளினால்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி, என்கிறபடியே சரீரத்தை வருத்துமதான கர்மாநுஷ்‌டாநம்‌ இந்த்ரிய ஐயம்‌ முதலான அரிய செயல்களால்‌ தாக்குண்டு அந்தக்‌ களிப்பும்‌ போய்‌ பகவத்‌ பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபஜ்ஞாதம்‌ பிறக்கைக்காக – என்கை.

“ஆனால்‌, இப்படி ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்குக்‌ காரணமான இவற்றை விட்டால்‌ குற்றம்‌ வாராதோ?’ என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -269 – ஸந்யாஸி முன்புள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்‌ இவற்றை விட்டால்‌ குற்றம்‌ வாராது.
அதாவது கடைசியான ஆஸ்ரமத்திலே தொடர்பு கொண்டவன்‌ முன்புள்ள ஆஸ்ரம தர்மங்களை விடுமா போலே, ஸித்தோபாயத்துக்கு வேறான உபாயங்களினுடைய ஸ்வரூப விரோதித்வ முதலானவைகளாலே ஸித்தோபாயத்தில்‌ இழியும்‌ இவ்வளவான ஜ்ஞாந பரி பக்குவமுடையவன்‌ இந்த வேற்று உபாயங்களை விட்டால்‌ தோஷமில்லை – என்றபடி.

‘இவைதான்‌ வேறு ப்ரகாரங்களாலே தொடர்புண்டாகையாலே, இவற்றில்‌ இவன்‌ தனக்குக் கர்ம ஜ்ஞான பக்‌தியாகிற செயலை நேரே விட்டானென்பதில்லை
என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -270 – இவன் தான்‌ இவை தன்னை நேராக விட்டிலன்‌-
வேறு ஸாதநங்களை விடுவது முன்னாக (பகவானான) ஸித்த ஸாதநத்தைக்‌ கைக் கொண்ட இந்த அதிகாரி தான்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற இவைகளைத் தன்‌ செயல்‌ மூலம்‌ இயல்பாக விட்டானென்‌பதில்லை.

அது எங்ஙனே? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -271 – கர்மம்‌ – கைங்கர்யத்திலே புகும்‌-ஜ்ஞாநம்‌ – ஸ்வரூப ப்ரகாசத்திலே புகும்‌; பக்தி – ப்ராப்ய ருசியிலே புகும்‌;ப்ரபத்தி – ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்திலே புகும்‌.
அதாவது தத்தம்‌ ஜாதிக்கும்‌ ஆஸ்ரமத்துக்கும்‌ பொருந்தியதாக இவன்‌ மேற் கொண்டொழுகும்‌ விதிக்கப்‌பெற்ற (கர்மம்‌) நற் செயல்‌ ஸாதநம்‌ என்ற புத்தி இன்றிக்கே பிறர்‌ விஷயத்தில்‌ கருணையாலே இவைகளை அனைவரும்‌ ஒழுக வேண்டுமென்று பிறருக்காகத்‌ தாம்‌ ஒழுகிக் காட்டுகையாலே, பகவானுச்கு மிகவும்‌ உகப்பாகையாலே, அவன்‌ ப்ரீதியை மூன்னிட்டுச்‌ செய்யும்‌ கைங்கர்யத்திலே உட் புகும்‌. “நுண்ணறிவு என்கிறபடியே தன் ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பெறும்‌ முகமாக பர ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்‌கரிக்கைக்கு உறுப்பான ஸுஷ்ம ஜ்ஞாநம்‌, ஸாதநம்‌ என்ற புத்தி கழிந்ததும்‌ ஸ்வரூபத்தினுடைய ப்ரகாசத்திலே உட் புகும்‌. “பக்த்யா த்வநந்யயா சக்ய.” (வேறிடத்திலில்லாது என்னிடமே கொண்டுள்ள சிறந்த பக்தியினாலே என்கிறபடியே பகவானை அடைவதற்கு ஸாதநமான பக்தியில்‌ அந்த ஸாதந புத்தி கழிந்தவாறே போஜநத்துக்குப்‌ பசி போலே பலமான கைங்கர்யத்துக்கு முன்‌ வரக் கடவதான ருசியிலே உட் புகும்‌.-பகவானை உபாயமாகக்‌ கொள்ளுகைக்கு அடையாளமான ப்ரபத்தி, ‘ஏக’ பதத்தில்‌ சொல்லுகிறபடியே ஸாதநம்‌ என்ற நினைவு கழிந்தவாறே அத்யந்த பரதந்த்ரமான வேறு தஞ்சமற்றதா யிருந்துள்ள ஸ்வரூபத்தினுடைய யதார்த்த ஜ்ஞாநத்திலே (உண்மை யறிவிலே) உட் புகும்‌ என்கை.

“பக்தி ப்ரபத்திகளிரண்டையும்‌ கழித்தால்‌ இவனுக்குப்‌ பலத்துக்கு ஸாதநமாவது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -272- ஒரு பலத்துக்கு அரிய வழியையும்‌, எளிய வழியையும்‌ உபதேசிக்கையாலே, இவை இரண்டும்‌ ஒழிய பகவத்‌ ப்ரஸாதமே உபாயமாகக்‌ கடவது –
அதாவது, பகவானை யடைதலாகிற ஒரு பலத்துக்கு “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷ தபோ ஜ்ஞாந ஸமாதிபி : நராணாம்‌ ஷீண பாபாநாம்‌ க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”. (ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷ – முன்புண்டான ஆயிரம்‌ பிறவிகளில்‌ செய்த கர்ம ஜ்ஞாந பக்தியினால்‌ சேதநர்களுடைய பாபங்கள்‌ நசிக்கப்‌ பெற்று கிருஷ்ணனிட த்தில்‌ பக்தி உண்டாகப்பெறுவர்கள்‌. ) என்கிறபடியே அநேக ஐந்மங்களிலே செய்கிற கர்ம ஜ்ஞாநம்‌ முதலான அங்கங்களாலே ஸாதிக்கப்படுவதாலே அரியதாயிருந்துள்ள பக்தி மார்க்கத்தையும்‌, ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்று கர்மம்‌ முதலான அனைத்திலும்‌ செயல்படுதலை தவிர்க்கக் கூடியதை முன்னிட்டுக்‌ கொண்டிருக்கிற ஒரே தடவை
செய்யக் கூடியதாகையாலே எளிதா யிருந்துள்ள ப்ரபத்தி மார்க்கத்தையும்‌ உபதேசிக்கையாலே, உபாயங்களில்‌ அருமை எளிமை என்பதில்‌ நோக்கின்றி அவற்றை ஒரு காரணமாகக்‌ கொண்டு பலந் தருபவனான இறைவனுடைய கருணையே முக்கியமாகையாலே பக்தி ப்ரபத்திகளாகிற இவை இரண்டும்‌ ஒழிய பகவானுடைய கருணையே உபாயமாகக்‌ கடவது: ‘ஆனாலும்‌, பலன்‌ பெறுகைக்கு இவன்‌ வேண்டாவோ?” (சேதனன்‌) பக்கலிலும்‌ ஏதேனும்‌ உண்டாக என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -273. பேற்றுக்கு வேண்டுவது – விலக்காமையும்‌ இரப்பும்‌ –
அதாவது, பலன்‌ பெறுகைக்குச்‌ சேதநன்‌ பக்கல்‌ உண்டாக வேண்டுவது – தன்‌ முயற்சியாலே அவன்‌ பண்ணும்‌ ரக்ஷணத்தை விலக்காதொழிகையும்‌, அது பயனாக அமைவதற்கு உறுப்பான ஜீவனுடைய ப்ரார்த்தனையும்‌ என்கை.

‘இங்ஙனன்றிக்கே, இவன்‌ பக்கலிலும்‌ சில நற் செயல்கள்‌ உண்டானால்‌ ஆகாதோ?’ அது உபாயமாக யிருக்கிற பகவானுக்கு வெறுப்புக்கிடம்‌ என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -274- சக்ரவர்த்தித்‌ திருமகன்‌, பாபத்‌தோடே வரிலும்‌ அமையுமென்றான்‌; இவன்‌, புண்யத்‌தைப்‌ பொகட்டு வர வேணுமென்றான்‌.
அதாவது, “ராமோ விக்ஹவாந்‌ தர்ம“(ராமன்‌ தர்மமே வடிவானவன்‌) என்கிற சக்ரவர்த்தி திருமகன்‌ ” யதி வா ராவணஸ்‌ ஸ்வயம்‌” (ராவணனேயானாலும்‌) என்று ‘பாபிஷ்டனான ராவணனே யானாலும்‌ அழைத்து வாரும்‌’ என்கையாலே பாபம்‌ பலத்துக்குக்‌ காரணமென்று நினைக்கைக்கு உரிய தல்லாமையாலே, “பாபத்தோடே வரிலும்‌ கைக்‌ கொள்ளுகிறேன்‌” என்றான்‌; “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌” (கிருஷ்ணனே அநாதியான பழமையான தர்மம்‌) என்கிற இவன்‌ “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய ” என்கையாலே பலத்துக்குக்‌ காரணமென்று
நினைத்தற் குரித்தான புண்யத்தை போட்டு விட்டு வரவேணுமென்றான்‌ என்கை.-ஆகையால்‌, வேறு ஒரு உபாயத்தின்‌ துணைக் கூட்டுதலை பொறுக்காதவனான உபாய பூதனுக்கு இவன்‌ பக்கல்‌ தன்‌ முயற்சி மூலமாக வரும்‌ நற் செயல்கள்‌ எம்பெருமானுக்கு இஷ்டமில்லாதது என்று கருத்து.

இவ் வர்த்தத்தைக் கேட்டு அதன் படியே அநுஷ்டிக்க இழிந்தவனுக்கு -ஆஸ்திகனாய்‌ உஜ்ஜீவித்தல்‌ அல்லது நாஸ்திகனாய்‌ நசித்தல்‌ ஒழிய, நடுவில்‌ நிலை யில்லை என்பதைப்‌ பூர்வாசார்ய வசநத்தால்‌ அறிவிக்கிறார்‌.
ஸூர்ணை -275- “ஆஸ்திகனாய்‌ இவ் வர்த்தத்தில்‌ ருசி விஸ்வாஸங் களுடையனாய்‌ உஜ்ஜிவித்தல்‌, நாஸ்திகனாய்‌ நசித்தல்‌ ஒழிய நடுவில்‌ நிலை யில்லை” என்று பட்டர்க்கு எம்பார்‌ அருளிச்‌ செய்த வார்த்தை.
அதாவது – ‘இவ் வர்த்தத்தை மேற் கொண்டவன்‌ பகவத்‌ ப்ரபாவத்தால்‌ “இது ஸத்யம்‌’ என்ற சாஸ்த்ர நம்பிக்கை யுடையவனாய்‌ இவ் வர்த்தத்தில்‌ சுவையும்‌ “இது தப்பாது’ என்கிற விஸ்வாஸ முடையவானாய்‌ உஜ்ஜீவித்தல்‌; சாஸ்த்ரங்களெல்லாம்‌ ஒரு தலையும்‌ இது ஒரு தலையுமாய்‌ இப்படி இருப்ப தொன்றுண்டோ? என்று நாஸ்திகனாய்‌ இத்தை அநாதரித்து நசித்தல்‌ தவிர, நடுவில்‌ நிலை யில்லை’ என்று ஸகல சாஸ்த்ர பாரங்கதரான பட்டருக்கு உண்மை உணர்ந்ததையே சொல்லும்‌ உண்மை யறிந்தவரான எம்பார்‌ அருளிச்‌ செய்த வார்த்தை – என்கை.

மஹா விஸ்வாஸமான நம்பிக்கை யற்றவனுக்கு இதில்‌ தொடர்பு பிறப்பு இறப்பாகிற (விநாசத்துக்குரித்தாம்‌) அழிவுக்கு உரியதாம்‌’ என்னுமத்தை உதாரணத்தோடு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -276- வ்யவஸாயம்‌ இல்லாதவனுக்கு இதில்‌ அந்வயம்‌, ஆமத்தில்‌ போஜநம்‌ போலே ,
அதாவது – இதில்‌ சொல்‌லுகிற விட வேண்‌டியவை, பற்ற வேண்டியவை களுக்கீடான நம்பிக்கை இல்லாதவனுக்கு இதில்‌ உண்டான தொடர்பு, அஜீரண நிலையில்‌ செய்த போஜநம்‌ மரணத்துக்குச்‌ காரணமாமா போலே அழிவாகிற மறு பிறவிக்குக்‌ காரணமாய்‌ முடியுமென்கை.

இதற்கு அதிகாரிகள்‌ இன்னாரென்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -277- “விட்டு சித்தர்‌ கேட்டிருப்பார்‌” என்கிறபடியே அதிகாரிகள்‌ நியதர்‌.
“செம்மை யுடைய திருவரங்கர்‌ தாம்‌பணித்த மெய்ம்மைப்‌ பெரு வார்த்தை விட்டு சித்தர்‌ கேட்டிருப்பர்‌’ என்று ‘முக் கரணங்களாலும்‌ செவ்வியராய்‌, அவற்றை செயல் மூலம்‌ காட்ட வேணுமென்று கோயிலிலே அரவணையிற் கண்‌ வளர்ந்தருளினவர் தாம்‌, அர்ஜுநனைக்‌ கருவியாகக்‌ கொண்டு திருத் தேர்த் தட்டிலே நின்று அருளிச் செய்த யதார்த்தமுமாய்‌ (உண்மையான அர்த்தத்தை யுடையதாய்‌) சீரியதுமாய்‌ சுலபமுமான “மாமேகம்‌ சரணம்‌
வ்ரஜ என்கிற வார்த்தையைப்‌ பெரியாழ்வார்‌ கேட்டு, “அதன் படியே ஒழுகுவார்‌’
என்கிறபடியே இவ் வர்த்ததுக்கு அதிகாரிகள்‌ இது கேட்டால்‌ இதன் படியே நியதமாக ஓழுகுவார்கள்‌ என்கை.

இவ்வர்த்தத்தின்‌ படியே ஓழுகுமவர்களான ஆழ்வார்களுடைய அருளிச்‌ செயலில்‌ இதுக்கு அர்த்தமாக அநுஸந்திக்கப்‌ படுமவற்றை அருளிச்‌ செய்து இது தன்னை நிறைவு பெறுத்துகிறார்‌.
ஸூர்ணை -278 – “வார்த்தை யறிபவா்‌” என்கிற பாட்டும்‌, “அத்தனாகி” என்கிற பாட்டும்‌ இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்‌
அதாவது – “வார்த்தை யறிபவர்‌ – பேர்த்த பிறப்போடு நோயொடு மூப்பொடு இறப்பவை பேர்த்துப்‌ பெருந்துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன்‌ தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணித்‌ தெளிவுற்று மாயவற்‌காளன்றி ஆவரோ?” என்று, “மா மேகம்‌ சரணம்‌ வ்ரஜ – ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்ற நல் வார்த்‌தையை அறியுமவர்கள்‌, பரணிக் கூடு வரிந்தாற்போலே இவ் வாத்மாவைச்‌ சூழ்ந்து பொதிந்து கொண்டு கிடக்கிற
ஐந்மங்களோடும்‌, அவை புகுந்த விடத்தே புகக் கடவதான வ்யாதியோடும்‌ அப்படி யிருந்தாலும்‌ பரவாயில்லை, நாம்‌ சில நாள்‌ வாழலாம்‌ என்று இருக்க முடியாதபடி திடீரென்று இடி விழுந்தாற்போலே வரக் கூடிய நரையும்‌ மூப்போடு கூடிய கிழட்டு சரீரத்தில்‌ உண்டாகக்கூடிய துன்பமும்‌, அங்ஙனே யாகிலும்‌ இருக்க வொண்ணாதபடி (அதையும்‌ பொறுத்துக்‌ கொண்டு இருந்தாலும்‌,) அடுத்தபடி வரக் கூடிய மரண அவஸ்தையும்‌, இப்படிப்பட்ட இவனுக்கு விருப்பமற்ற அழிவைத் தரக் கூடிய அவற்றை யுத்தியாகத்‌ தொழில்‌ செய்ய வல்லவர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமா போலே தள்ளி, அவை போன பிறகு வரக் கடவதான கைவல்யமாகிற பெருந் துன்‌பத்தை நிர் மூலமாகப்‌ போக்கி, பாத தூளி போலே தன்‌ திருவடிகளில்‌ கீழே சேரும்படி. பண்ணி மீண்டு வருகை இல்லாதபடி அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணி மஹா விஸ்வாஸமுடையராய்க்‌ கொண்டு தாங்கள்‌ தஞ்சமென்று
பற்றுதற்குரியவனாய்‌ விரோதிகளைப்‌ போக்க வல்ல வியப்புக்குரிய எம்பெருமானைத்‌ தவிர வேறொருவர்க்கு ஆளாவரோ? – என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்த “வார்த்தை யறிபவர்‌” என்கிற இந்தப்‌ பாட்டும்‌”முத்தனார்‌ முகுந்தனார்‌ ஓத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை
யாட்‌ கொள்வான்‌ – அத்தனாகி அன்னையாகி ஆளும்‌
எம்பிரானுமாய்ப்‌ புகுந்து – நம்‌ முள்‌ மேவினார்‌; ஏழை
நெஞ்சமே! எத்தினாலிடர்க்‌ கடல்‌ கிடத்தி”
என்று ‘புன்மையாதும்‌ தீண்டாதவராகையாலே ஸம்ஸார வாசனையும்‌ தொடாதவராய்‌, முக்தியை அருளக் கூடியவரும்‌அனைத்துடம்புகளில்‌ உறைவதான ஆத்மாக்களும்‌, ஜ்ஞாநத்தால்‌ ஒருபடிப்பட ஓத்து தேவர்‌, மனிதர்‌, விலங்கு தாவரம்‌ ஆகிய ரூப பேதத்தாலே ஒவ்வாமலிருக்கும்‌ – பலவகைப்பட்டபிறவிகளைப்‌ போக்கி, நித்ய .ஸம்ஸாரிகளாய்க் கிடந்த)நிரந்தரமாக பல பிறவிகளில்‌ கிடந்த நம்மை நித்ய ஸுரிகளைக்‌ கொள்ளும்‌ அடிமையைக்‌ கொள்ளுகைக்காகநன்மையே விளைவிக்கும்‌ பிதாவாயும்‌ பிரியமே விளைவிக்கும்‌ மாதாவாயும்‌ இருந்து அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமியாயும்‌ இப்படி எல்லாவித உறவுமாய்‌, நம்முடைய தாழ்வையும்‌ தம்முடைய பெருமையையும்‌ பாராதே நம்முடைய பாரமனைத்தும்‌ தாமே ஏறிட்டுக்‌ கொண்டு செய்வாராகத்‌ தாழ்வுக்குரிய நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப்‌ பொருந்தினார்‌; அறிவிலியான நெஞ்சே! நம்முடைய நன்மையை அறிகைக்கு நாம்‌ முற்றின அறிவாளியோ? அவன்‌ அறிவில்லாதவனோ ? நமக்கு நாமே நன்மையைச்‌ செய்து கொள்ள ஆற்றலுடையவரோ, அவன்‌ ஆற்றலில்லாதவனோ, நாம் நம்‌ கார்யஞ்‌ செய்து கொள்ள உரியவரோ, அவன்‌ உரிமை யற்றவனோ, தன்‌ மேன்மை பாராதே தாழ நின்று நமக்கு உதவி புரிபவனா யிருக்க எதற்காக நீ துன்பக் கடலில்‌ கிடக்கிறது? என்று திருமழிசைப் பிரான்‌ அருளிச்‌ செய்த
அத்தனாகி” என்கிற பாட்டும்‌ இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக நினைக்கக் கடவது என்கிறார்‌.
(அரிமா நோக்கம்‌) ஆக, இந்த சரம ஸ்லோகத்தால்‌ 1-பற்றுகைக்கு அங்கமாகக்‌ கடவதான கர்ம ஜ்ஞான பக்திகளாகிற தர்ம விசேஷங்களையும்‌, 2-அந்தத்‌ தர்மங்களை விடுவதினுடைய விதத்தையும்‌, 3-அந்தத்‌ தர்மங்களை விடுவதற்கு முன்பாகப்‌ பற்றும்‌ பகவத்‌ விஷயத்தினுடைய எளிமை முதலான குணங்களோடு கூடிய குணத்தின்‌ சிறப்பையும்‌, 4-அந்த குணங்களோடு கூடின பொருளான எம்பெருமானுடைய வேறு துணையைப்‌ பொறாத தனக்குத் துணையாக வேரொன்றை விரும்பாத தன்மையையும்‌, 5-பிறிதொன்றையும்‌ விரும்பாத எம்பெருமானுடைய தஞ்சமாகுந்‌ தன்மையையும்‌, 6-அவனையே உபாயமாகப்‌ பற்றுகையையும்‌, 7-இப்படிப் பற்றின உபாயத்தினுடைய (ஜஞான சக்தியாதி) அறிவாற்றல்‌ முதலான குணங்களின்‌ கூட்டத்தையும்‌, 8-அந்தக்‌ குணங்களோடு கூடியவனான எம்பெருமானிடத்தில்‌ தன்னை ஸமர்ப்பித்த அதிகாரியையும்‌,. 9-இந்த அதிகாரிக்கு விரோதியான பாபக்‌ கூட்டத்தையும்‌, 10-அந்தப்‌ பாபத்தை போக்கக் கூடிய விதத்தையும்‌, 11-அந்தப்‌ பாவத்தைப்‌ போக்கும்‌ எம்பெருமானை பற்றின அதிகாரியினுடைய பாரமற்ற தன்மையையும்‌ இது வரை இந்தச்‌ சரம ஸ்லோகத்தால்‌ சொல்லப்பட்டதாகும்‌.

மணவாள மாமுநிகள்‌ அருளிச்செய்த முமுக்ஷ ப்படி வ்யாக்யானத்தின்‌ தெளிவுரை முற்றுப்‌ பெற்றது.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ த்வய ப்ரகரணம்‌-

November 17, 2025

முதல்‌ மந்த்ரமான திருமந்த்ரத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்த பிறகு, அதில்‌ இரண்டாம்‌ பதத்தாலும்‌ மூன்றாம்‌ பதத்தாலும்‌ சொன்ன உபாய உபேயங்களை விரிவாகச்‌ சொல்லா நின்றுள்ள த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்கிறார்‌-முன்பு அருளிச்‌ செய்த ஸ்ரீய:பதிப்படி யாத்ருச்சிகப்படி பரந்தபடி. என்ற மூன்று ப்ரபந்தங்களிலும்‌ திருமந்த்ர அர்த்தத்துக்குப்‌ பிறகு சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச்‌ செய்து பின்பு த்வயார்த்தம்‌ அருளிச்‌ செய்தவர்‌, இப்போது த்வயத்தின்‌ அர்த்தத்தை முன்னம்‌ அருளிச்‌ செய்வானென்‌? என்னில்‌, இரண்டு விதங்களும்‌ அருளிச்‌ செய்யலா யிருக்கையாலே. பெரியவாச்சான்பிள்ளை, வாதிகேஸரி அழகிய மணவாளச்சீயர்‌ முதலானாரும்‌ இந்த விதமாக வன்றே அருளிச்‌ செய்தது. இந்த இரண்டு விதங்களுக்கும்‌ கருத்து என்ன? என்னில்‌: சரம ஸ்லோகார்த்தம்‌ முன்னாகவும்‌, த்வயார்த்தம்‌ பின்னாகவும்‌ சொன்னது, சரம ஸ்லோகத்தில்‌ “சரணம்‌ வ்ரஜ -உபாயமாகப்‌ பற்று” என்று விதிக்க, த்வயத்தில்‌ “சரணம்‌ ப்ரபத்யே’ என்று அநுஷ்டானத்தை மேற் கொண்டு ‘உபாயமாகப் பற்றுகிறேன்‌’ என்று சொல்லிப்‌ பற்றுகையாலே, விதிக்கவும்‌ அதை மேற் கொண்டு பற்றுகையுமா யிருக்கையாலே, இப்படி விதி முன்னாகவும்‌ -அதநுஷ்டாநம்‌- மேற்கொண்டொழுகுவது பின்பாகவும்‌ முறையாகையாலும்‌ சரம ஸ்லோகம்‌ முன்பும்‌ த்வயம்‌ பின்பும்‌ சொன்னதாம்‌.திருமந்த்ரம்‌ பயனைச்‌ சொல்லுமதாய்‌, சரம ஸ்லோகம்‌ அந்தப்‌ பயனைத்‌ தரும்‌ சாதனத்தைச்‌ சொல்லு மதாயிருக்கையாலே முன்‌ மூன்று ப்ரபந்தங்களில்‌ சரம ஸ்லோகம்‌ முன்னும்‌ த்வயம்‌ பின்னுமாகச்‌ சொன்னார்‌-இந்த முமுஷுப்படியில்‌, திருமந்த்ரார்த்தம்‌ த்வயார்த்தம்‌ சரம ஸ்லோகார்த்தம்‌ இப்படிச்‌ சொல்லியிருப்‌பதாவது: திருமந்திரத்தில்‌ நடுப் பதத்துக்கும்‌ மூன்றாம்‌ பதத்துக்கும்‌ இரண்டு வாக்கியங்களை யுடைய த்வயம்‌ விவரணமாய்‌, அந்த த்வயத்துக்கு சரம ஸ்லோகத்தில்‌, முற்பாதி பிற்பாதி இரண்டு வாக்கியங்களை யுடைய சரம ஸ்லோகம்‌ விவரணமாய்‌ இருக்கும்‌ ஆகாரத்தாலே அப்படி சொல்லப்பட்டது. இப்படி இரு முறைகளும்‌ சொல்லலாயிருக்கை யாகையாலே, முன்‌ மூன்று ப்ரபந்தங்களும்‌ சரம ஸ்லோகம்‌ முன்னாக த்வயம்‌ பின்னாகச்‌ சொன்னவர்‌, மற்ற முறையும்‌ சொல்ல வேண்டிய தாகையாலே இந்த ப்ரபந்தத்தில்‌ த்வயம்‌ முன்னாகச்‌
சொல்லுகிறார்‌ என்றபடி.

அதில்‌ முதலிலே வைஷ்ணவனாய் யிருப்‌பானொருவனுக்குத்‌ தன்‌ அதிகாரார்த்தமாக அவச்யம்‌ மேற் கொண்டொழுக வேண்டியவற்றைச்‌ சுருங்கவும்‌, தெளிவாகவும்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -116-புறம்புண்டான பற்றுக்களை யடைய வாசனையோடே விடுகையும்‌, எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையும்‌, பேறு தப்பாதென்று துணிந்திருக்கையும்‌, பேற்றுக்கு த்வரிக்கையும்‌, இருக்கும்‌ நாள்‌ உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணாநுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகையும்‌, இப்படி இருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஏற்ற மறிந்து உகந்திருக்கையும்‌, திருமந்திரத்திலும்‌ த்வயத்திலும்‌ நியதனாகையும்‌, ஆசார்ய ப்ரேமம்‌ கனத்திருக்கையும்‌, ஆசார்யன்‌ பக்கலிலும்‌ எம்பெருமான்‌ பக்கலிலும்‌ க்ருதஜ்ஞனாய்ப்‌ போருகையும்‌, ஜ்ஞாநமும்‌, விரக்தியும்‌, சாந்தியும்‌ உடையவனா யிருக்கும்‌ பரம ஸாத்விகனோடே ஸஹவாஸம்‌ பண்ணுகையும்‌ வைஷ்வண அதிகாரிக்கு அவஸ்யாபேஷிதம்‌.

புறம்புண்டான பற்றுக்களை யடைய வாசனையோடே விடுகையாவது, “பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந் குரூந்‌, ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி சக்ருஹாணி ச , ஸர்வ தர்மாம்ச்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்சச ஸாக்ஷராந்‌,
லோக விக்ராந்த சரணெள சரணம்‌ தேவ்ரஜம்‌ விபோ”
பிதரம்‌
– பிதாவையும்‌,
மாதரம்‌ – மாதாவையும்‌,
தாராந்‌-மனைவியையும்‌,
புத்ராந்‌-பிள்ளைகளையும்‌,
பந்தூந்‌– பந்துக்களையும்‌,
ஸகீந்‌-ஸ்நேஹிதர்களையும்‌,
குரூந்‌-ஆசார்யா்‌களையும்‌,
ரத்நாநி- ரத்தினங்களையும்‌,
தந தாந்யாநி- -தந தாந்யங்களையும்‌, க்ஷேத்ராணிச-வயல்களையும்‌,
க்ருஹாணிச-வீடுகளையும்‌,
ஸர்வ தர்மாம்ச்ச (உபாயாந்தரங்‌களான) அனைத்து தர்மங்களையும்‌,
ஸாக்ஷ்ராந்‌ – கைவல்யத்தோடு கூடிய, ஸர்வ காமாம்ச்ச – (மற்ற) அனைத்துப் பயன்‌களையும்‌,
ஸந்த்யஜ்ய-நன்றாக விட்டு,
விபோ-ஸ்வாமி!
தே-தேவரீருடைய,
லோக விக்ராந்த சரணெள-உலகளந்த திருவடிகளையே,
சரணம்‌– உபாயமாக,
அவ்ரஜம்‌-பற்றினேன்‌.
இவை முதலானவற்றின்‌ படியே எப்பெருமானைத்‌ தவிர்ந்த விஷயங்களில்‌ பற்றுக்களெல்லாவற்றையும்‌, மீண்டும்‌ வாராதபடி. வாசனையோடு விடுகை.

எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையாவது, வேறொன்று தஞ்சமென்கிற நினைவு கலசாதபடி, காரணமில்லாது இயல்பாகவே ரக்ஷகனான ஸர்வேஸ்வரனையே தஞ்சமாகப்‌ பற்றுகை.
இந்த இரண்டு வாக்யத்தாலும்‌ சரம ஸ்லோகத்தில்‌ முற்‌பாதியில்‌ அர்த்தத்தத்தைச்‌ சொல்லுகிறது. எவ்வாறெனில்‌? புறம்புண்டான பற்றுக்களை யடைய என்று ஸர்வ தர்மாந்‌’
என்கிற பதத்தில்‌ அர்த்தத்தையும்‌, வாசனையோடே விடுகையும்‌ என்று ‘பரித்யஜ்ய’ என்கிற பதத்திலர்த்தத்தையும்‌, எம்பெருமானை என்று ‘மாம்‌’ என்கிற பதத்தில்‌ அர்த்தத்தையும்‌ -‘ஏ’ என்ற ஏவகாரத்தாலே ஏக’ பதார்த்தத்ததையும்‌, தஞ்சம்‌ என்கையாலே ‘சரண பதத்தில்‌ அர்த்தத்தையும்‌, பற்றுகையும்‌ என்று வ்ரஜ பதத்திலர்த்தத்தையும்‌ அடைவே சொல்லுகையாலே.

பேறு தப்பாது என்று துணிந்திருக்கையாவது, -உபாயத்தின்‌ எளிமையையும்‌ பெற வேண்டிய பலத்தில்‌ நம்பிக்கை கொள்வதில்‌ உண்டான அருமையையும்‌, தன்‌ திறத்துண்டான குறைபாடுகளையும்‌, இதன்‌ மூலமாக வரும்‌ மூன்று ஐயங்களும்‌ இல்லாமல்‌, பலம்‌ தப்பாமல்‌ கிடைக்கு மென்று நம்பிக்கை யோடிருக்கை

பேற்றுக்கு த்வரிக்கையாவது: இப்படி நம்பிக்கையோடிருந்து பலம்‌ கிடைத்த போது கிடைக்கட்டுமென்று ஆறி இராமல்‌ “மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என்‌ மனம்‌ ஏகமெண்ணும்‌” என்று “தாவி வையங் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்‌ கொள்‌
ளுங் காலம்‌ இன்னங் குறுகாதோ?’
என்கிறபடியே முறைப்படி.வரட்டும்‌ என்று பொறுத்திருக்காமல்‌ பதறுகை.

இருக்கும்‌ நாள்‌ உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய்‌ குணா நுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்காகையாவது:
-பரமபதத்திலே போய்‌ பகவதநுபவ கைங்கர்யங்களைப்‌ பண்ணுகையாகிற பேற்றில்‌ வேட்கை நடவா நிற்கச்‌ செய்தேயும்‌, இந்தச்‌ சரீரத்தோடே இருக்கும்‌ நாள்‌ ‘தானுகந்த ஊர்‌” என்கிற படியே எம்பெருமான்‌ உகந்து கோயில்‌ கொண்டுள்ள திவ்விய தேசங்களிலே “கண்டியூரரங்கம்‌ மெய்யம்‌ கச்சி பேர் மல்லை’ என்று மண்டுகையாகிற வேட்கை யுடையவனாய்‌, அவ்வோ திவ்விய தேசங்களிலே
நிற்கிறவனுடைய கல்யாண குணாநுபவமும்‌, அதன்‌ மூலமாக முக் கரணங்களாலும்‌ அவன்‌ விஷயத்தில்‌ செய்யுங்‌ கைங்கர்யமுமே காலக் கழிவுக்கு விஷயமாம்படி, இருக்கை.

இப்படி. இருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஏற்றமறிந்து உகந்திருக்கையாவது: கீழ்ச்‌ சொன்ன இந்த நிலைமைகளெல்லாம்‌ உடையராயிருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைக்‌ கண்டால்‌ நெருப்புச்‌ சட்டியில்‌ தாமரை பூத்தாற் போலே இந்த இருள்‌ தருமா ஞாலத்திலும்‌ இப்படியும்‌ சிலருண்டாவதே! என்று அவர்கள்‌ வைபவமறிந்து அவர்களளவில்‌ பேரன்புடையனா யிருக்கை.-கீழ்ச்சொன்னவை எல்லாம்‌ உண்டானாலும்‌ இது உண்டாவதரிதா யிருப்ப தொன்றன்றோ.

திருமந்த்ரத்திலும்‌ த்வயத்திலும்‌ ‘ நியதனாகையாவது:- வேறு மந்த்ரங்களின்‌ திறத்தில்‌ மறந்தும்‌ போகாதே விட வேண்டிய வற்றையும்‌, பற்ற வேண்டிய வற்றையும்‌ தெளிய அறிவிக்குந்‌ திருமந்த்ரத்திலும்‌, அதன்‌ அர்த்தத்துக்கு விவரணமான த்வயத்திலும்‌ நிலைத்த. நிஷ்டை யுடையனாகை.

ஆசார்ய ப்ரேமம்‌ கனத்திருக்கையாவது:– கீழ்ச்‌சொன்ன நிலைமைகளெல்லாம்‌ உபதேசத்தாலே தனக்குண்‌டாக்கின ஆசார்ய விஷயத்தில்‌, “யஸ்ய தேவே பரா பக்திர்‌ யதா தேவே ததா குரெள”,
யஸ்யதேவே
– யாதொருவனுக்குத்‌ தெய்வத்தினிடத்தில்‌,
பரா பக்தி:- மேலான பக்தி (இருக்கிறதோ), ததா – அப்படியே,
யதா தேவே – அந்தத்‌ தெய்வத்திற்குச்‌ சமமான,
குரெள-ஆசார்யனிடத்திலும்‌,
பரா பக்தி: மேலான பக்தி இருக்கின்றதோ, தஸ்ய மஹாத்மந:- அந்த மஹாத்மாவுக்கு,
கதிதா:– சொல்லப்பட்ட,
ஏதே அர்த்தா:- இந்த அர்த்தங்கள்‌,
ப்ரகாசந்தே – ப்ரகாஸியா நிற்கும்‌. என்கிறபடியே ப்ரேமம்‌ மிகுந்திருக்கை.

ஆசார்யன்‌ பக்கலிலும்‌, எம்பெருமான்‌ பக்கலிலும்‌ க்ருதஜ்ஞனாய்ப்‌ போருகை யாவது:– நித்ய ஸம்ஸாரியான தன்னை நித்யஸூரிகள்‌ நிலைமைக்குத்‌ தகுந்தவனாம்‌ படி. ‘இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போலே’ திருத்தின ஆசார்யன்‌ பக்கலிலும்‌ தன் திறத்‌து த்வேஷமின்மை முதலானவைகளை உண்டாக்கிக்‌ கொண்டு வந்து ஆசார்யன்‌ திறத்துச்‌ சேர்த்த எம்பெருமான்‌ பக்கலிலும்‌ நன்றி பாராட்டும்‌வனாகை.

ஜ்ஞாநமும்‌ விரக்தியும்‌ சாந்தியும்‌ உடையனாயிருக்கும்‌ பரம ஸாத்விகனோடே ஸஹவாசம்‌ பண்ணுகையாவது – தான்‌ கலங்கினாலும்‌ கலங்காமல்‌ நோக்குகைக்கு உறுப்பாகவும்‌, கீழ்ச் சொன்ன நிலைமைகள்‌ தனக்கு மேம்படுகைக்கு உறுப்பாகவும்‌, (தத்வ யாதாத்ம்ய ஜ்ஞாநமும்‌) உண்மையான வற்றை உள்ளபடி. அறிகிற அறிவும்‌, தகாதவற்றில்‌ வைராக்யமும்‌ இவை இரண்டும்‌ நமக்குண்டென்று இறுமாப்பற்றிருக்கையாகிற சாந்தியும்‌ உடையனாயிருக்கும்‌ பரம ஸத்வ நிஷ்டனாயிருப்பான்‌ ஒரு பாகவதனோடே
ரசித்துப்‌ போருகை வைஷ்ணவாதிகாரிக்கு அவஸ்யாபேஷிதம்‌ என்றது, இவை இத்தனையும்‌ வைஷ்ணவன்‌ என்றிருப்‌பான்‌ ஒரு அதிகாரிக்கு அவசியம்‌ உண்டாக வேணுமென்கை –

இப்படி இருக்கும்‌ இவனுக்கு அநுஸந்திக்க வேண்டியதை வகுத்து அருளிச்‌ செய்கிறார்‌-
ஸூர்ணை -117-இந்த அதிகாரிக்கு ரஹஸ்ய த்ரயமும்‌ அவஸ்யம் அநு ஸந்தேயம்‌.
கீழ்ச்‌ சொன்ன நிலைமைகளை யுடையனாயிருக்கும்‌ இவ் வதிகாரிக்கு, அந்த அறிவு வர்க்கங்களை வளர்ப்பதான்‌ இந்த மூன்று மந்த்ரங்களுமே அர்த்தத்தோடு அறிகைக் குரித்தான நினைவிற்கு விஷயமாகக்‌ கொள்ள வேண்டும்‌-

இனி, த்வயத்திற்‌ சொல்லுகிற சிறப்புடைமையை அறிவிக்கைக்காக, சாஸ்திரம்‌ திருமந்த்ரம்‌ சரம ஸ்லோகம்‌ இவைகளில்‌ அருளிச்‌ செய்கிற விதங்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு போய்‌ த்வயார்த்தச்‌ சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -118- எல்லா ப்ரமாணங்களிலும்‌ தேஹத்‌தாலே பேறென்கிறது;திருமந்த்ரத்தில்‌ ஆத்மாவாலே பேறென்கிறது; சரம ஸ்லோகத்தில்‌ ஈஸ்வரனாலே
பேறென்கிறது; த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே பேறென்கிறது .

சேதனனுடைய சரீரத்தோடு யுள்ள நிலையிலே நோக்கான ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ சாதனத்தைக்‌ கொண்டு ஒழுகுவதற்கு ஏற்றதான தேகத்தாலே ப்ரயோஜன லாபமென்கிறது. தேகத்தைத்‌ தள்ளி ஆத்ம ஸ்வரூபத்தில்‌ நோக்கான திருமந்த்ரத்தில்‌, இவன்‌ காப்பில்‌ நின்றும்‌ கை வாங்கினாலொழிய எம்பெருமானுடைய ரக்ஷகத்வம்‌ நடவாதாகையாலே, பகவத் ரக்ஷகத்வ விரோதியான தன் முயற்சியை விட்டிருக்கும்‌ ஆத்மாவாலே
புருஷார்த்த லாபமான பயனென்கிறது. எம்பெருமானுடைய ஸ்வதந்தரத்திலே நோக்கமான சரம ஸ்லோகத்தில்‌, (சேதனனுடைய) இவனுடைய பற்றுக் கோடும்‌ மிகையாம்படி
தானே கைக் கொண்டு தன்னை அடையத் தடையான அனைத்துப்‌ பாபங்களையும்‌ தள்ளி, தன்‌ திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ எம்பெருமானாலே பயனாகிற லாபமென்கிறது. எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியிருக்கிற நிலையில்‌ நோக்கான த்வயத்தில்‌, எம்பெருமானை சார்ந்திருப்பவளான பெரிய பிராட்டியாராலே புருஷார்த்த லாபம்‌
என்கிறது என்கை. புருஷார்த்தம்‌ – புருஷனாலே ஆர்த்திக்கப்பட்ட பேறு பயன்‌.

விரோதியைப்‌ போக்கித்‌ தன்னிடத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ உபாயம்‌ எம்பெருமானாயிருக்க பிராட்டியாலே பேறாகையாவதென்‌? என்கிற ஐய வினாவை அருளிச்‌ செய்கிறார்‌. பேறு – பயன்‌.
ஸூர்ணை -119 – பெரிய பிராட்டியாராலே பேறாகையாவது- இவள்‌ புருஷகாரமானாலல்லது ஈஸ்வரன்‌ கார்யஞ் செய்யானென்கை .
இஷ்டத்தைக்‌ கொடுக்கையும்‌, இஷ்ட மல்லாததைத்‌ தள்ளுகையும்‌ இரண்டும்‌ “செய்வான்‌ எம்பெருமானா யிருக்கப்‌ பெரிய பிராட்டியாலே இவனுக்குப்‌ பேறாகையாவது:- இவனுடைய அபராதத்தைப்‌ பாராதே ரஷிக்கும்படி இவள்‌ சிபாரிசு செய்தாலொழிய, ஈஸ்வரன்‌
கார்யம்‌ செய்யானென்றபடி என்கை.

கீழ்ப்‌ பொதுவிலே வைஷ்ணவாதிகாரிக்கு வேண்டியவற்றைச்‌ சொல்லிற்று;-சிறப்பித்து த்வயத்துக்கு அதிகாரி யாமவனுக்கு வேண்டியவற்றை அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -120-த்வயத்துக்கு அதிகாரி அகிஞ்சந்யமும்‌ அநந்ய கதித்வமும்‌ உடையவன்‌ .
ஸித்தமாயிருக்கிற எம்பெருமானை உபாயமாக வரிப்பதைச்‌ சொல்லுவதாகிய த்வயத்துக்கு அதிகாரி, “அகிஞ்சந: அகதி:‘ (தன்‌ காப்பில்‌ கைம்‌ முதலில்லாதவன்‌. பிறன்‌ வாசலும்‌ புகாதவன்‌) “த்வமேவோபாய பூதோ மே பவ” (எனக்கு நீயே உபாயமாக வேணும்‌). “அகிஞ்சநோ அநந்ய கதிஸ்‌ சரண்ய” (தஞ்சமாகப்‌ பற்றுவதற்கு உரியவனே, என்‌ காப்பில்‌ எனக்குரிமையும்‌ பிறன்‌ வாசல்‌ புக உரிமையும்‌ இல்லாதவன்‌.) “புகலொன்றில்லா அடியேன்‌” என்றுஞ்‌ சொல்லுகிறபடியே (அகிஞ்சந்யமும்‌) கை முதல்‌ இல்லாமையும்‌, (அநந்ய கதித்வமும்‌) வேறு கதி யற்றவனும்‌ ஆகிற இரண்டும்‌ உடையவனென்கை.

இவை இரண்டின்‌ நிலை தான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -121 – இவை இரண்டும்‌ ப்ரபந்ந பரித்‌ராணத்திலே சொன்னோம்‌ .
எம்பெருமானைத்‌ தவிர வேறு உபாயங்களை மேற் கொண்டொழுகுவதை அறத் தள்ளுகையாகிற அகிஞ்சந்யத்தின்‌ நிலையையும்‌, வேறொருவரை ரக்ஷகமாகக்‌ கொள்ளாமை யாகிற அநந்ய கதித்வத்தின்‌ நிலையையும்‌ ப்ரபந்ந பரித்ராணம்‌ என்ற நூலிலே தெரியச்‌ சொன்னோம்‌. அதிலே கண்டு கொள்வதென்கை.

இனி, த்வயத்துக்கு வாக்யார்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -122- இதில்‌ முற் கூற்றால்‌, பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன்‌ திருவடிகளை உபாயமாகப்‌ பற்றுகிறது; பிற் கூற்றால்‌ அச் சேர்த்தியிலே அடிமையை இரக்கிறது-
இந்த த்வயத்தில்‌ முதல்‌ வாக்கியத்தாலே ”ஸ்ரீமத்‌’ என்று பெரிய பிராட்டியாரை
முன்னிட்டு, “நாராயண சரணெள” என்று ஈஸ்வரன்‌ திருவடிகளை “சரணம்‌ ப்ரபத்யே என்று உபாயமாகப்‌ பற்றுகிறது. உத்தர வாக்கியத்தாலே “ ஸ்ரீமதே” என்று பெரிய
பிராட்டியாரும்‌ அவனுமான சேர்த்தியிலே, நாராயணாய -என்கிற நான்காம்‌ வேற்றுமை யுருபாலே தொண்டினை ப்ரார்த்திக்கிறது என்கை. நமஸ்ஸு-கைங்கர்யத்தை நான்‌ செய்கிறேன்‌ என்ற கர்த்ருவத்தையும்‌, இது எனக்கு இன்‌ பமாயிருக்கிறது” என்கிற போக்த்ருத்வமும்‌; அதாவது, நான்‌’ என்‌னது’ என்கிற அஹங்கார மமகாரங்களை தொண்டாற்றுவதில்‌ வரும்‌ விரோதியைக்‌ கழிப்பதைச்‌ சொல்லுகையாலே, அடிமையை இரக்கிறது என்ற இதிலே உட்படும்‌.

இனி, பதத்துக்குப்‌ பதம்‌ அர்த்தம்‌ அருளிச் செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி “ஸ்ரீமத்‌” பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்ய ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -123 – ஸ்ரீ என்று பெரிய பிராட்டியாருக்குத்‌ திருநாமம்‌ –
“ஸ்ரீ” என்ற சொல்‌ செல்வம்‌ முதலானவைகளுக்குப்‌ பெயராக உலகில்‌ வழங்கக்‌ காண்கையாலே, அதை வேறுபடுத்துகைக்காக “ஸ்ரீ” என்கிற இது பெரிய பிராட்டியாருக்குத்‌ திருநாமம்‌ என்கிறார்‌. ஆகையாலன்றோ “லக்ஷ்மி: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர்‌ ஹரி ப்ரியா” என்று மற்றத்‌ திரு நாமங்களோடே கூட்டிச்‌ சொல்லப்பட்டது. இது தான்‌ எல்லாத்‌ திருநாமங்கள்‌ போலன்றிக்கே “ஸ்ரீரிதி ப்ரதமம்‌ நாம லக்ஷ்ம்யா:” ஸ்ரீ என்ற இது லக்ஷ்மீ தேவிக்கு முதல்‌ திருநாமம்‌-என்கிறபடியே இவளுக்கு இது முதன்மையான
பெயராயிருக்கும்‌. “அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதாநம்‌” (அகாரமானது பகவானான நாராயணனுடைய முதல்‌ திருநாமம்‌) என்று அகாரம்‌ எம்பெருமானுக்கு முதன்மையான திருநாமமானாற் போலே, இவளுக்கும்‌ இது முதன்மையான திருநாமமா யிருக்கும்‌ படி. அது, அவனுடைய ரக்ஷகத்துக்கு அவஸ்யமான ஸ்வபாவங்களைச்‌ சொல்லும்‌; இது இவளுடைய புருஷகாரத்துக்கு அவஸ்யமான ஸ்வபாவங்‌களைச்‌ சொல்லக்‌ கடவதா யிருக்கும்‌. புருஷகாரம்‌- சேர்ப்பித்‌தல்‌. அல்லது சிபார்சு செய்தல்‌ என்பதைக்‌ குறிக்கும்‌.

இனி, இந்த சப்தத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக முதலில்‌ இதன்‌ மேல்‌ வந்த சொல்‌ பொருள்‌ தொடர்புகளின்‌ இரண்டு வகைகளை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -124 – ஸ்ரீயதே ஸ்ரயதே .
அதாவது – “ஸ்ரிஞ்ஸேவாயாம்‌” என்கிற வினைப் பகுதியில்‌ ‘ஸ்ரீயத இதி – ஸ்ரீ :, ஸ்ரயத இதி – ஸ்ரீ:’ என்ற தேர்ந்ததான செயப்படு பொருளைக் காட்டுவதாயும்‌, எழுவாய்‌ பொருளைக்‌ காட்டுவதாயும்‌ உள்ளதைச்‌ சொன்னபடி.

இந்தச்‌ சொல் பொருள்‌ தொடர்புகளின்‌ வகை இரண்டுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -125- இதுக்கு அர்த்தம்‌ -எல்லார்க்‌கும்‌ இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய்‌, இவள்‌ தனக்கும்‌ அவனைப்‌ பற்றி ஸ்வரூப லாபமாயிருக்கும்‌ என்று .
கர்மணி, கர்த்தரி என்ற இந்த இரண்டு வ்யுத்பத்திகளுக்கும்‌ அர்த்தம்‌ ‘ஸ்ரீயதே” என்று எல்லோராலும்‌ ஸேவிக்கப்‌ பெறுகிறாள்‌ என்பதாலே எல்லா (சேதநர்களுக்கும்‌) மக்களுக்கும்‌ இவளைப்‌ பற்றித்‌ தங்களுடைய சேஷத்வமான ஸ்வரூப லாபமாய்‌, “ஸ்ரயதே” என்று ஈஸ்வரனை ஸேவியா நின்றாள்‌ என்கையாலே, இவள்‌ தனக்கும்‌ ஈஸ்வரனைப்‌ பற்றித்‌ தன்னுடைய சேஷத்வ ரூப லாபமாயிருக்கும்‌ என்கை. இவள்‌ தனக்கு சேதந விஷயத்தில்‌ சேஷித்வமும்‌ ஈஸ்வர விஷயத்தில்‌ சேஷத்வமும்‌ என்றும்‌ உண்டா யன்றோ இருப்பது. ஆகையால்‌, இந்த ஸேவிக்கப்‌ பெறுகை, ஸேவிக்கை என்கிற இரண்டும்‌ இவளுக்கு நித்யமாய்ச்‌ செல்லா நிற்கும்‌.

எம்பெருமானுக்கு உபாயத்வமும்‌ (உபேயத்வமும்‌) பயனுமாகிற இருநிலைகளும்‌ உண்டானாற் போலே இவளுக்குப்‌ புருஷகாரத்வமும்‌ (ப்ராப்‌யத்வமுமாகிற) பயனுமாகிற இரு நிலைகளும்‌ உண்டாகையாலே, இதில்‌ எந்த நிலையை நினைத்து இப்போது சொல்லுகிறது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -126- இப்போது இவளைச்‌ சொல்லுகிறது புருஷகாரமாக .
‘புருஷகாரமாக’ என்கையாலே உபாய வஸ்து விசேஷணமாகச்‌ சேர்ந்திருக்கை யாகிற நிலையை யிட்டு இவளுக்கும்‌ உபாயத்வம்‌ சொல்லும்‌ கொள்கை யுடையாருடைய பக்ஷம்‌ கணடிக்கப்பட்டது என்கை.

எம்‌ பெருமானுடைய நாராயணத்வம்‌ காரணமாக இயல்பான ஸம்பந்த ஜ்ஞாநம்‌ முதலியவை உடையவனாய்க்‌ கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிற இந்தச்‌ சேதநனுக்கு இவளைச்‌ சிபாரிசாகிற புருஷகாரமாக முன்னிட வேண்டுகிறது தான்‌ எதற்கு? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -127- நீரிலே நெருப்புக்‌ கிளருமா போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால்‌ சீற்றம்‌ பிறந்தால்‌ பொறுப்பது இவளுக்காக .
குளிர்ந்த நீரிலே, சென்று அணுக வொண்‌ணாத படியான நெருப்புக் கிளருமா போலே, “ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌” (எல்லா ப்ராணிகளிடத்தும்‌ நட்பையே உடையவன்‌). “ஸமோஹம்‌ ஸர்வ பூதேஷு தான்‌ எல்லா ப்ராணிகளிடத்தும்‌ வித்யாச மில்லாமல்‌ ஸமமாகவே இருக்கிறவன் தான்‌) என்கிறபடியே எல்லா ப்ராணிகளிடத்தும்‌ நேய மனப்பான்மை யுடையனாயும்‌, ஸமமாகவே எல்லாராலும்‌ தஞ்சமடையத் தக்கவனாயுமுன்ள ஸ்வபாவ விசேஷங்களாலே, தெளிந்து குளிர்ந்திருக்கிற எம்பெருமான்‌ திரு வுள்ளத்திலே “பரிபூர்ணாகஸி ஜநே ஹிதஸ் ரோதோ வ்ருத்த்யா பவதிச கதாசித்‌ கலுஷதீ:”
பரிபூர்ண அகஸி –
நிரம்பின குற்றத்தைச்‌ செய்த,
ஐநே – சேதநர்களிடத்தில்‌,
ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா– (பிற்காலத்‌தில்‌) நன்மையை விளைக்கிற நீர்ப் பெருக்கின்‌ செயல் போன்ற செயலாலே (அநுகூலனே யானாலும்‌, பின் விளையும்‌ நன்மையைக்‌ கருதி),
கதாசித்‌ – ஒரு கால்‌ (பெருங்குற்றத்தைச்‌ சேதநர்களிடத்தில்‌ காண்பதனால்‌)
கலுஷதீ: – கலங்கினவனாக,
பவதிச – ஆகவும்‌ ஆகிறான்‌
என்கிறபடியே சேதநனுடைய அளவிறந்த குற்றங்களின்‌ காரணமாக ஷிபாமி (பிறவிக் கடலில்‌ தள்ளுவேன்‌) ந க்ஷமாமி (பொறுக்க மாட்டேன்‌) என்னும்‌படியான சீற்றம் பிறந்தால்‌ அந்தக்‌ குற்றங்களைப்‌ பொறுப்பது.”கிமேதந்‌ நிர்தோஷ:க இஹஜசதி”
ஏதத்‌
– இந்தக் கோபம்‌,
கிம்‌ – இங்ஙனம்‌ மனம்‌ கலங்குவது- என்ன?
இஹ ஜகதி – இந்த உலகத்தில்‌,
நிர்தோஷ: குற்றமற்றவன்‌
க: ஆர்‌?,
இதி – என்றவாறு சொல்லி,
என்கிற படியே, தன்‌ உபதேசம்‌ முதலானவைகளாலே அந்தக் கோபத்தை யாற்றித்‌ தயையைப்‌ பிறப்பிக்கும்‌ இவளுக்காக என்கை. ஆகையாலே, பகவான்‌ திறத்து ஸம்பந்த ஜ்ஞாநம்‌ பிறந்தவனுக்கும்‌ இவன்‌ அபராத பயத்தாலே புருஷகாரத்தை முன்னிடுகை தேவை என்று கருத்து.

சேதநன்‌ கார்யத்தைத்‌ தான்‌ மேற்‌கொண்டும்‌ எம்பெருமானை வசீகரித்தும்‌ இரண்டு பக்ஷத்தையும்‌ பொருத்துகைக்கு இவள்‌ தான்‌ இடையூறில்லாத புருஷகாரமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -128- இவள்‌ தாயாய்‌, இவர்கள்‌ க்லேசம்‌ பொறுக்க மாட்டாதே அவனுக்குப்‌ பத்நியாய்‌, இனிய விஷயமா யிருக்கையாலே, கண்ணழிவற்ற புருஷகாரம்‌ .
“த்வம்‌ மாதா ஸர்வ லோகாநாம்‌”
(உலகத்து எல்லா ப்ராணிகளுக்கும்‌ நீயே தாய்‌) என்றும்‌
“அகில ஜகந் மாதரம்‌” (அனைத்து ஜகத்து ப்ராணிகளுக்கும்‌ தாயானவளை) என்றும்‌ சொல்லுகிறபடியே இந்தச்‌ சேதநர்களுக்கு இவள்‌ தாயாய்‌, ” தந்தம்‌ மக்களழுது சென்றால்‌ தாய்மாராவார்‌ தரிக்க கில்லார்‌ என்கிறபடியே தாயான தொடர்பின்‌ காரணமாக இவர்களுடைய வருத்தங் கண்டால்‌ பொறுக்க மாட்டாதே, “விஷ்ணு பத்நி” என்று அவனுக்குப்‌ பத்தினியாய்‌, ” பித்தர்‌ பனி மலர் மேல்‌ பாவைக்கு” என்கிறபடியே, அவன்‌ இவள்‌ தன்னுடைய பிறரெவர்க்கு மில்லாத பேரழகு முதலானவற்றைக்‌ கண்டு பிச்சேறித்‌ தன்‌ சொல் வழி நடக்கும்படி இஷ்டமான பொருளா யிருக்கையாலே (கண்ணழி வற்ற) தடையற்ற புருஷகாரம்‌ ஆவாள்‌ என்றபடி.

எல்லாம்‌ செய்தாலும்‌ தடையில்லாத சுதந்திரனான எம்பெருமான்‌ சேதநனுடைய அபராதங்களைத்‌ தான்‌ பத்தும்‌ பத்தாக நிறுத்து அறுத்துத்‌ தீர்த்துவன்‌ என்றவன்‌ நிற்குமளவில்‌, இவளாலே பொறுப்பிக்கப்‌ போமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -129- திருவடியைப்‌ பொறுப்பிக்குமவள்‌ தன்‌ சொல் வழி வருமவனைப்‌ பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே .
பிராட்டியைப்‌ பத்து மாதம்‌ மருட்டுவதும்‌ பழிப்பதுமாகிய கொடுஞ் செயல்களைச்‌ செய்த ராக்ஷஸிகளின்‌ அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சித்ர வதம்‌ செய்ய முயன்ற சொல்லை மீறுந் தன்மையனான திருவடியையும்‌ உட்பட, “க:குப்யேத்‌” (அரசன்‌ வயத்தவராய்‌ அவனால்‌ ஜீவிக்கு மவர்களாய்‌ அவன்‌ அதீனத்தி லிருப்பவர்களாய்‌, அவன்‌ ஏவினதைச்‌ செய்ததைக்‌ கொடுந்தொழிலென்று எவன் கோபிப்பான்‌) என்றும்‌ “ந கச்சிந் நாபராத்யதி” (தப்புச் செய்யாதவன்‌ எவன்‌) என்றும்‌, இவை முதலான உபதேசங்களாலே பொறுப்பிக்குமவள்‌, “மலராள்‌ தனத்துள்ளான்‌” என்றும்‌, “மா மலர்‌ மங்கை மண நோக்க முண்டான்‌” என்றும்‌ “அல்லிமலர்‌ மகள்‌ போக மயக்குக்களாகியும்‌ நிற்கும்‌” என்றும்‌, தன்‌ இனிமையிலே ஆழ்ந்து “நின்னன்‌ பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரானேக” என்கிறபடியே ‘மாயா விலங்கின்‌ பின்னே போ’ என்னிலும்‌ மேல் விளைவு அறியாதே அதன் பின்னே போம்‌ படி, தன்‌ சொல் வழி வருமவனைப்‌ பொறுப்பிக்க வல்லள்‌ என்னுமிடம்‌ சொல்ல வேண்டாதாயிற்று என்கை. “செய் தகவினுக் கில்லை கைம்மாறு” என்னும்‌படி. இருவர்க்கும்‌ கலங்கி உபகரித்து தன்‌ சொல் வழியே போக வேண்டும்‌ படியான திருவடியோடே (மறுதலிக்குமவள்‌) எதிரிடுமவள்‌, “தான்‌ முயங்கும்‌” (அணைக்கப்பெற்ற) என்னும்‌ படியான இனிமைக்குத் தோற்று எத்தைச்‌
செய்வோம்‌’. என்று கலங்கி, “நின்னன்பின் வழி நின்று”,அதனின்‌ பின்னே படர்ந்தான்‌’ என்னும்படி மேல்‌ விளைவ தறியாதே, புன்முறுவலுக்குத்‌ தோற்று சொல்‌ வழி போமவனைப்‌ பொறுப்பிக்கும்‌ என்னுமிடம்‌ சொல்ல வேண்டா என்று இது தன்னை இவர்‌ திருத் தம்பியாரும்‌ அருளிச்‌ செய்தார்‌ என்ற படி.
ஆக, ஸ்ரீமத்‌ பதத்தில்‌ பகுதியைக்‌ குறித்து அருளிச்‌ செய்தார்‌ கீழ்‌; விகுதிப்‌ பொருளைக்‌ குறித்து அருளிச்‌ செய்கிறார்‌ மேல்‌.

ஸூர்ணை – 130 -மதுப்பாலே இருவர்‌ சேர்த்தியும்‌ நித்ய மென்கிறது –
“ஸ்ரீமத்‌”
என்ற பதத்தில்‌ ஸ்ரீ என்ற பகுதிப் பொருளைச்‌ சென்னார்‌. இப்போது ‘மத்‌’ என்ற விகுதிப்‌ பொருளைச்‌ சொல்லுகிறார்‌. அதாவது, இம் மதுப்புத் தான்‌ நித்தியமாகவே கூடி இருத்தல்‌ என்ற பொருளைத் தரும்‌ மதுப்பாகையாலே,-இத்தால்‌ புருஷகாரம்‌ செய்பவளான பிராட்டியும்‌, இவள்‌ புருஷகாரத்தை ஏற்றுச்‌ சேதநனுக்கு உபாயமாகும்‌ ஈஸ்வரனும்‌ ஆகிய இருவருடைய சேர்த்தியும்‌ எப்போதும்‌ உண்டு என்னுமிடம்‌ சொல்லுகிறதென்கை. நித்யம்‌ -நிலையாக.

இந்த நித்ய யோகத்தின்‌ சிறப்பைச்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -131 -இவளோடே கூடியே வஸ்துவினுடைய உணமை.
“ஸ்ரீய: பதிர்‌ நிகில ஹேய ப்‌ரத்ய நீக கல்யாணைகதாநஸ்‌ ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப!”
நிகில:
– ஸமஸ்தமான,
ஹேய ப்ரத்யநீக – தாழ்ச்சிக்கெல்லாம்‌ எதிர்த் தலையான,
கல்யாண – மங்கள குணங்கட்கு,
ஏக தான – முக்கியமான ஆதாரமும்‌,
ஸ்வ இதர -தன்னில்‌ வேறுபட்ட,
ஸமஸ்த வஸ்து -எல்லாப் பொருள்களை விட,
விலக்ஷண – வேறுபட்டுத்‌ தோன்றுபவனாய்‌,
ஜ்ஞாந – ஞாநமென்ன,
அநந்த – அநந்தமென்ன (இவைகளை)
ஏக ஸ்வரூப – முக்கியமான ஸ்வரூபமாக உடையவனுமான,
ஸ்ரீ யபதி – திருமால்‌
என்று ஸ்வரூப நிரூபகமான ஜ்ஞாநாந்தாதிகளுக்கு முன்னே ஸ்ரீய:பதித்வத்தைச்‌ சொல்லும்படி அவன்‌ ஸ்வரூபத்துக்கு முக்கிய நிரூபகையா யிருக்கையாலே, இவளோடே கூடியே வஸ்துவினுடைய நிலை பேறு இருப்பது என்கை.
ஆக, பிராட்டியின்‌ ஸ்வரூபத்தோடே சேர்ந்திருக்கும் படியான எம்பெருமானுடைய நித்ய யோகத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, இவளுடைய குணமடியாக எப்போதுங்‌ கூடி யிருக்குமதை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -132 -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ சேதனனுடைய அபராதத்தையுங்‌ கண்டு அகல மாட்டாள்‌-
அபராதங்களை ஒன்றும்‌ விடாது கணக்கிட்டு, அறுத்து அறுத்துத் தீர்க்கும்‌
எம்பெருமானுடைய ஸ்வாதந்தர்யத்தையும்‌, “யத் ப்ரஹ்ம கல்பநியுதா நுபவேப்ய நாச்யம்‌” (யத்‌ – எந்தப்‌ பாபமானது,
ப்ரஹ்மகல்பதியுத அநுபவேபி – பிரமனுக்கு ஏற்பட்டிருக்கும்‌ படியான ஆயுளின்‌ லக்ஷம்‌ மடங்கு காலம்‌ அநுபவித்தாலும்‌, அதாச்யம்‌– நீங்காதோ, தத்கில்பிஷம்‌ – அப்படிப்பட்ட பாபத்தை இஹ ப்ராணி – இவ்வுலகில்‌ ப்ராணியானது, ஷணார்த்தே ஸ்ரூஜதி – அரை க்ஷணத்தில்‌ செய்கிறது.-என்றபடி கால தத்துவமுள்ளதனையும்‌ அதுபவித்தாலும்‌ சிறிது கழிந்தது என்றுஅளவிட்டுக் காட்ட முடியாதபடி செய்து வைத்திருக்கும்‌ இச் சேததனுடைய தகாத செயல்களையுங் கண்டு ஏதாய் விடுமோ? என்னும்‌ பயத்தாலே எம்பெருமானை விட்டு பிராட்டி ஒரு கணமும்‌ விட்டகல மாட்டாள்‌ என்கை.

இத்தால்‌ சேதநனுக்கு பலிக்குமதை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -133- சேதநனுக்கு இவை யிரண்டையும்‌ நினைத்து அஞ்சவேண்டா .
இப்படி இவள்‌ இருந்து நோக்குகையாலே ஈஸ்வரனுடைய ஸ்வாதத்தர்யமும்‌, தன்‌ அபராதமுமாகிற இவை இரண்டையும்‌ நினைத்து “நமக்கு என்ன (தீங்கு) விளையுமோ?” என்று அஞ்ச வேண்டா என்கை.

இனி, இம் மதுப்பின்‌ (தாத்பர்யம்‌) சுருக்‌கமான ஸாராம்ஸம்‌ இது என்று அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -134 – இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது, காலம்‌ பார்க்க வேண்டா என்கிறது-
இப்படிப் புருஷகார உபாயமாகிய வஸ்துக்களான இருவருமான சேர்த்தியை எப்போதுங் கூடி இருப்பதைக்‌ காட்டும்‌ இம் மதுப்பால்‌ உபாயமான எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்க்கு, ஆஸ்ரயிக்கையில்‌ ருசியே வேண்டுவது. இருவரும்‌ சேர்ந்திருக்கும்‌ தசையிலே ஆஸ்ரயிக்க வேணுமே’ என்று ஆஸ்ரயணத்துக்குக்‌ காலம்‌ பார்க்க வேண்டா யென்கிற தென்கை-

இனி, இவள்‌ புருஷகாரம்‌ அவஸ்யம்‌ தேவை என்பதை அறிவிக்கைக்காக,இவள்‌ கூடி இருப்பதாலும்‌ பிரிந்திருப்பதாலும்‌ உண்டான நன்மை, தீமைகளை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -135 – இவள்‌ ஸந்நிதியாலே காகம்‌ தலை பெற்றது; அது இல்லாமையாலே ராவணன்‌ முடிந்‌தான்‌.
“தேவ்யா காருண்ய ரூபயா”
(ஸ்ரீதேவியானவள்‌ கருணையே வடி வெடுத்தவள்‌) என்கிறபடியே கருணை தான்‌ ஒரு வடிவு கொண்டாற் போலே இருப்பவளாய்‌, ஸ்வதந்திரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்தர்யத்தை அமுக்கிக்‌ கருணையைக் கிளப்புமவளான இவள்‌ கூடி. இருந்ததாலே பேரபராதத்தைச்‌ செய்து அதனாலே ப்ரஹ்மாஸ்திரத்துக்கு இலக்காய்‌ தலை யறுப்புண்கைக்கு உரித்தான காகம்‌, ‘க்ருபயா பர்யபாலயத்‌” (தன்னுடைய கருணையாலே நன்றாக ரக்ஷித்தான்‌) என்கிறபடியே, கருணைக்கு இலக்காய்‌ தலை பெற்றுப்‌ போயிற்று. அப்படியான இவள்‌ கூடி இல்லாமையாலே போக்கற்றுச்‌ செயல்‌ மாண்ட நிலை ஒத்திருக்கச்‌ செய்தேயும்‌, காகத்தினுடைய பேரபராதம்‌ இல்லாதிருக்க, ஸ்ரீராம பாணத்துக்கு இலக்காய்‌ ராவணன்‌
முடிந்து போனான்‌ என்கை. ஆகையால்‌, பெருமானை அடையும் பொழுது பிராட்டி ஸந்நிதி அவஸ்யம்‌ வேணும்‌ என்று கருத்து. ஆக, ஸ்ரீமத்‌ பதத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்து முடித்தார்‌.

பிறகு, நாராயண பத அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -136- புருஷகார பலத்தாலே ஸ்வாதந்‌தர்யம்‌ தலை சாய்ந்தால்‌ தலை யெடுக்குங்‌ குணங்களைச்‌ சொல்லுகிறது நாராயண பதம்‌ .
உபதேசத்தாலும்‌, தன் பேரழகாலும்‌ தடையற வசீகரித்து காரியங்கொள்ள வல்ல புருஷகார பலத்தாலே அவனை அடைய முயலும்‌ சேதநன்‌, ஆரம்பம்‌ அறிய முடியாத காலமாகப்‌ பண்ணின குற்றங்களைப்‌ பார்த்துச் சீறி, கைக் கொள்ள மாட்டேன்‌’, என்றிருக்கும்‌ ஈஸ்வர
ஸ்வாதந்த்ர்யம்‌ தலை மடிந்தால்‌, அதன்‌ கீழ் தலை எடுக்க முடியாத அழுத்தம்‌ தீர்ந்துத்‌ தலை யெடுக்கும்‌ குணங்களைச்‌ சொல்லுகிறது நாராயண பதம்‌ என்கை.

அந்தக்‌ குணங்கள்‌ தான்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -137 – அவையாவன – வாத்ஸல்யமும்‌, ஸ்வாமித்வமும்‌, ஸெளசீல்யமும்‌, ஸெளலப்யமும்‌ ஜ்ஞாநமும்‌, சக்தியும்‌
அவையாவன – என்று தொடங்கி இவற்றில்‌, வாத்ஸல்யம்‌ ஆவது: அன்றீன்ற கன்றின்‌ திறத்துப் பசு காட்டும்‌ பரிவு. அதாவது, அதன்‌ மீதுள்ள வழும்பைச்‌ சுவைத்துப்‌ புஜிக்கையும்‌, பால் கொடுத்து வளர்க்கையும்‌, அதன்‌ அருகே சென்றவர்களை முட்டுதல்‌ உதைத்தல்‌
முதலியவைகளால்‌ ரஷிக்கையும்‌; அப்படியே ஈஸ்வரனும்‌ குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொண்டு “பாலே போல்‌ சீரெ“ன்ற குணங்களாலே தரிக்கச்‌ செய்து “கதஞ்சன – ந த்யஜேயம்‌’
ஒருபடியாலும்‌ கைவிடுபவனல்லேன்‌). “அபயம்‌ ஸர்வ பூதேப்ய:” (எல்லா ப்ராணிகளிடத்தும்‌ பயமற்றிக்கச்‌ செய்‌வேன்‌.) என்கிறபடியே அநுகூலர் நிமித்தமாகவும்‌ ப்ரதிகூலர்‌ நிமித்தமாகவும்‌ நோக்கும்‌. ஸ்வாமித்வமாவது:- இவன்‌ பராமுகனான நிலையிலும்‌ விடாதே நின்று நன்மையே குறிக் கொள்ளற்குக் காரணமான ஒரு பந்த விசேஷம்‌; அதாவது
உடையவனா யிருக்குமிருப்பு; துவேஷம்‌ இல்லாமை தொடங்கி கைங்கர்யம்‌ வரை உண்டான ஸ்வபாவ விசேஷங்களை யெல்லாம்‌ உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம்‌. -ஸெளசீல்யமாவது:– உபய விபூதி நாயகத்வத்தாலும்‌ பெரிய பிராட்டியாருடைய சேர்த்தியாலும்‌, தடையற்ற ஸ்வாதீநனா யிருக்கிற மேன்மையையும்‌, தங்கள்‌ சிறுமையை-யும்‌ பார்த்து “அவனெவ்விடத்தான்‌ யானார்‌” என்று பின்‌ வாங்காதபடி எல்லாரோடும்‌ ஓக்க மேல் விழுந்து வேறு பாடின்றி கலக்கையும்‌, அது தன்‌ பயனாகக்‌ கருதுகையும்‌, எதிர்த் தலையில்‌ விருப்பமின்றிக்கே இருக்கக்‌ கலந்து பரிமாறுகையும்‌ முதலானவைகள்‌. -ஸெளலப்யமாவது:– கண் காண முடியாதபடி இருக்கிற தான்‌ கண்ணாலே கண்டு பற்றலாம்படி இருக்கை. -ஜ்ஞாநமாவது:- எம்பெருமான்‌ இந்த அடியானுக்குக்‌ கழிக்க வேண்டிய விரோதி வர்க்கத்தையும்‌ கொடுக்க வேண்டிய விருப்பத்திற் குரியதையும்‌ நேரே அறிந்து கொள்ளற்குரிய தன்னையும்‌ அனைத்துப்‌ பொருள்களையும்‌ ஓரே நேரத்தில்‌
காண வல்ல பேறறிவு-சக்தியாவது – மிகத் தாழ்ந்தவர்களான ஸம்ஸாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல பொருந்தாத வற்றையும்‌ பொருந்துவிக்கும்‌ ஸாமர்த்யம்‌-இவற்றில்‌ வாத்ஸல்யாதிகள்‌ நாலும்‌ எம்பெருமானை அடையச்‌ செளகரியத்தை செய்யக் கூடிய மணங்கள்‌. ஜ்ஞாந சக்திகள்‌ அடைந்தாருடைய காரியங்கள்‌ செய்கைக்குரிய குணங்கள்‌. “நிகரில்‌ புகழாய்‌” என்று தொடங்கி வாத்ஸல்‌யாதிகள்‌ நாலையுமல்லவா அடையத் தக்கதாக ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது. ஜ்ஞாந சக்திகள்‌ இரண்டைச் சொன்னது, ப்ராப்தி பூர்த்திகளுக்கும்‌ உப லக்ஷணம்‌; கார்யம்செய்வதற்கு இவையும்‌ தேவைப் படுவதால்‌ சொல்லப்பட்டது என்கை, ‘

இந்தக்‌ குணங்களுக்கு இவ்விடத்தில்‌ உபயோகம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -138 – குற்றங் கண்டு வெறுவாமைக்கு வாத்ஸல்யம்‌; கார்யஞ் செய்யுமென்று துணிகைக்கு ஸ்வாமித்வம்‌; ஸ்வாமித்வங் கண்டு அகலாமைக்கு ஸெளசீல்யம்‌; கண்டு பற்றுகைக்கு ஸெளலப்யம்‌; விரோ தியைப்‌ போக்கித்‌ தன்னைக்‌ கொடுக்கைக்கு
ஜ்ஞாந சக்திகள்‌ .

அடைய முயலும்‌ இச்சேதநன்‌, தன்‌ குற்றத்தைக்‌ கண்டு அஞ்சாமைக்குரியது, குற்றத்தைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌ வாத்ஸல்யம்‌ என்ற குணம்‌. நம்‌ கார்யம்‌ செய்யுமோ, செய்யானோ? ‘ என்று ஐயப் படாதே கார்யம்‌ செய்யுமென்று நம்புகைக்கு உறுப்பு ஸ்வாமித்வம்‌ என்ற
குணம்‌. இத்தால்‌, இழத்தல்‌ பெறுதல்‌ தன்னதாம் படியான ஸ்வாமித்வ குணத்தின்‌ செயல்‌ எனப்படும்‌, இருள்‌ தருமா ஞாலம்‌ என்கிற பூலோம்‌ தொடக்கமான உலகத்திற்கும்‌ தெளி விசும்பு திரு நாடு என்ற பரம பதம்‌ என்கிற இரண்டு விதமான உலகங்களுக்கெல்லாம்‌ நாயகத்‌ தன்மையைக் காட்டிக்‌ கொடுக்கிற ஸ்வாமித்வத்தைக்‌ கண்டு, தன் தாழ்வை நினைத்து அகலாமைக்கு உறுப்பு; தாழ்ந்தாரோடும்‌ வேற்றுமையறக்‌ கலக்கும்‌ தன்மையது ஸெளசீல்யம்‌ என்ற குணம்‌. கண் காண முடியாதவனென்று பின் வாங்காதபடி கண்ணாலே கண்டு பற்றுகைக்குரியது, தன்‌ வடிவைக்‌ கண்ணுக்கிலக்‌காக்கும்‌ ஸெளலப்யம்‌ என்ற குணம்‌. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌.’ என்கிறபடியே தன்னை யடையத்‌ தடை செய்யும்‌ விரோதிகளைப்‌ போக்கிப்‌ பயனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு, பயனான தன்னை அடையும்‌ இச் சேதநன்‌ இவன்‌ கீழ் நின்ற நிலையும்‌ மேல்‌அடைய வேண்டிய தேசத்தையும்‌ அறிகைக்கும்‌ அறிந்தபடியே செய்து முடிக்கைக்கும்‌ அவஸ்யமானது ஜ்ஞாந சக்திகளென்ற குணங்களென்பது.

அவனை அடைய உதவும்‌ நான்கு குணங்‌களில்‌ ஸெளலப்யம்‌ முக்கியமாகையாலே அந்த ஸெளலப்யத்தில்‌ எல்லையை அருளிச்‌ செய்கிறார்‌. ஸெளலப்யம்‌- சுலபத்‌தன்மை.
ஸூர்ணை -139- இங்குச் சொன்ன ஸெளலப்யத்துக்கு எல்லை நிலம்‌ அர்ச்சாவதாரம்‌ –
இந்த நாராயண பதத்தில்‌ அவனை அடைய முக்கிய உபயோகியான ஸெளலப்யத்துக்கு
முடிவானது “தமருகந்த தெவ்வுருவம்‌ அவ்வுருவம்‌ தானே” என்கிறபடியே அடியார்‌ உகந்த தொன்றைத்‌ திருமேனியாகக்‌ கொண்டு கோயில்களிலும்‌ இல்லங்களிலும்‌ எழுந்தருளி இருக்கும்‌ அர்ச்சாவதாரம்‌ என்கை.

அவற்றைத்‌ தொடர்ந்து சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -140 – இது தான்‌ பர வ்யூஹ விபவங்கள்‌ போலன்றிக்கே கண்ணாலே காணலாம்படி. இருக்கும்‌ .
இந்த அர்ச்சாவதாரம் தான்‌ வேறு தேசமான பரத்வத்துக்கு இடமான பரம பதமும்‌,
வ்யூஹத்துக்கிடமான பாற்கடலும்‌ இந்தத் தேகத்தால்‌ காண முடியாததாயும்‌ கால வேறு பாட்டாலே இப்போது நாம்‌ காண முடியாதபடி போன ராமன்‌ கண்ணன்‌ முதலான விபவாவதாரங்கள்‌ போலல்லாமல்‌, நமக்கு ஸமீபமாய்‌ நாம்‌ காணலாம்படி திவ்ய தேசங்களிலும்‌ இல்லங்களிலும்‌ என்றும்‌ இருக்கும்‌ அர்ச்சாவதாரம்‌ என்கை.

இந்தக்‌ குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்தில்‌ காணலாமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -141- இவை யெல்லாம்‌ நமக்கு நம்‌ பெருமாள்‌ பக்கலிலே காணலாம்‌ .
அவனை அடையத் தடை செய்யுமவற்றை நீக்குமதும்‌, அவன்‌ நம்‌ கார்யம்‌ செய்ய உபயோகப் படுமதாயும்‌ உள்ள இந்த குணங்களெல்லாம்‌ இவற்றைக்‌ காண விருப்பமுடைய நமக்கு நம்முடைய பெருமாள்‌ பக்கலிலே காணலாமென்கை.

பெருமாள்‌ பக்கலில்‌ இக் குணங்களுக்கு ப்ரகாசங்களாய்‌ விளக்கங்களா யுள்ளவற்றைச்‌ சொல்லி, இவற்றோடு நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சமென்கிறார்‌.
ஸூர்ணை -142- திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌, வைத்து அஞ்சல்‌ என்ற கையும்‌, கவித்த முடியும்‌, முகமும்‌ முறுவலும்‌, ஆஸந பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌.
கார்யஞ்செய்ய உபயோகியான ஜ்ஞான சக்திகளுக்கு விளக்கமாம்படி திருக்கைகளிலே தரித்துக்‌ கொண்டிருக்கிற சங்க சக்ரம்‌ முதலான திவ்யாயுதங்களும்‌, வாத்ஸல்யம்‌ தோன்றும்படி வைத்து அஞ்சலென்ற கையும்‌, ஸ்வாமித்வம்‌ விளங்கும்படியான கவித்த முடியும்‌ ஸெளசீல்யத்தை விளக்குமதான முகமும்‌ முறுவலும்‌ அனைவரும்‌ கண்டு பற்றலாம்படியான ஸெளலப்யங்‌ காட்டுமதான (ஆஸந பத்மத்திலே) தாமரை மலராசனத்திலே அழுத்தின திருவடிகளுமாய்க்‌ கொண்டு எழுந்தருளி நிற்கிற நிலையே வேறு புகலற்ற நமக்கு ரக்ஷகமென்கை. உபாய உபேய நிஷ்டர்கள்‌ விரும்பும்‌ ரக்ஷகத்வமும்‌, சுவையுடைய பயனும்‌ ஆகிற இரண்டு தன்மையும்‌ கீழ்ச்‌ சொன்னபடியே எம்பெருமானுடைய திருமேனியிலே தோற்றும்‌ என்கிறார்‌. ஆயுதங்களை யேந்துகை, சக்திமானுடைய கார்யமாகையாலும்‌, அடியார்கள்‌ விரோதிகளை அறிந்து ஏந்திய ஆயுதங்களைக்‌ கொண்டு களைவது ஜ்ஞாநவானுடைய கார்யமாகையாலும்‌, : எம்பெருமான்‌ தனது திருக்கையிலேந்திய திவ்யாயுதங்கள்‌ அவனது ஜ்ஞாந சக்திகளுக்கு விளக்கம்‌. எம்பெருமானது அஞ்சலென்று காட்டுகிற அபய முத்திரை. சேதநர்‌ தங்களது குற்றங்களை நினைந்து அசுலாமலிருக்கைக்குக்‌ காரணமாகையால்‌ வாத்ஸலயம்‌ அடையாளமாகும்‌. பெரியோனாயிருப்பவன்‌ மிகவும்‌ தாழ்ந்தாரோடு பேதமின்றிச்‌ சேர்ந்திருக்கை புன்முறுவலும்‌ மலர்ந்த முகமும்‌ உண்டாவது இஷ்டங்களைக்‌ காணும்‌ போதே யாத்லால்‌, சேதநனை அவ் வெம்பெருமான்‌ காணும் போது அந்தப்‌ பரமனிடத்துத்‌ தோன்றுகின்ற முக மலர்ச்சியும்‌, குதூகலமும்‌ அவ் வெம் பெருமானுடைய ஸெளசீல்யத்தைக்‌ காட்டும்‌. -வேறு புகலற்றவர்கள்‌ – அவ் வெம் பெருமானைத்‌ தவிர வேறெரு புகலிட மில்லாதவர்கள்‌.

எம்பெருமானை (ஆறும்‌)உபாயமாகவும்‌ (பேறுமாக) பயனுமாகக்‌ கொண்டு ள்ளவர்கள்‌ வேண்டும்‌ நிலைமை களிரண்டும்‌ கீழ்ச்‌ சொன்னபடியே நிற்கிற திருமேனியிலே தோற்றும்‌ என்கிறார்‌.
ஸூர்ணை -143 – ரஷகத்வ போக்யத்வங்கள்‌ இரண்டும்‌ திருமேனியிலே தோற்றும்‌ .
காத்தலுக்கு உபயோகமான திவ்யாயுதங்களோடும்‌, காப்பதற்குக்‌ கவித்த முடியோடும்‌ கூடியிருக்கையாலே ரக்ஷ்கத்வம்‌ தோன்றுகையாலும்‌,
‘அணியாராழியும்‌ சங்கமும்‌ ஏந்தும்‌”, “முடிச்சோதியாய்‌ உனது முகச்சோதி மலர்ந்ததுவோ” என்கிற படியே அவை தானே அழகை உண்டாக்குவதற்குக்‌ கருவியாய்‌, வைத்தஞ்சலென்றகையும்‌ முகமும்‌ முறுவலும்‌ தாமரை மலரில்‌ அழுத்தின திருவடிகளும்‌ ஒவ்வொன்றே அழகுக்குச்‌ சிகரமாயிருக்கையாலே இனிமையா யிருக்கக்கூடிய போக்யத்வம்‌ தோற்றுகையாலும்‌ இரண்டும் திருமேனியிலே தோற்றுமென்பது.
ஆக, நாராயண பதப் பொருளை அருளிச் செய்தாராயிற்று

இனி, ‘சரணெள’ என்கிற பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. .
ஸூர்ணை -144 – சரணெள – திருவடிகளை ‘சரணெள’ என்றால்‌, திருவடிகளை என்று
பொருள்‌. இந்த ‘சரணெள’ என்கிற (த்வி வசனம்‌) இருமைச்‌ சொல்லால்‌ சொல்லுகின்ற அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -145 -இத்தால் சேர்த்தி யழகையும்‌, உபாய பூர்த்தியையும்‌ சொல்லுகிறது .
அதாவது, ‘சரணெள’ என்று இரண்டு திருவடிகளையும்‌ சொல்லுகிற இத்தால்‌, “இணைத் தாமரை யடி.” என்கிறபடியே, இரண்டு தாமரைப் பூவை வரிசையாகச்‌ சேர வைத்தாற் போலே சேர்த்தி யழகையும்‌, இருமைச்‌ சொல்‌லானது இரண்டுக்கு மேல்‌ வேறொன்று புகுவதைப்‌ பொறுக்‌காமையாலே இன்னொன்றைத்‌ துணையாகக்‌ கூட்டு வேண்‌டாத அவனுடைய பரிபூர்ண உபாயத் தன்மையைச்‌ சொல்லுகிறது என்பது. ்‌

உபாயமான தனித்தன்மைக்கு இதன்‌ குண மிகுதியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -146 – பிராட்டியும்‌ அவனும்‌ விடிலும்‌ திருவடிகள்‌ விடாது; திண்‌ கழலாயிருக்கும்‌-
“ஸ்ரீமத்‌”
பதத்திலே புருஷகாரபூதையாகச்‌ சொன்ன பிராட்டியும்‌, இவள்‌ தானே
“சிதகுரைக்கிலும்‌” என்கிறபடியே குறை கூறிலும்‌ “என்னடியார்‌ அது செய்யார்‌” என்னும்படி, நாராயண பதத்‌தில்‌ சொன்ன குணங்களோடு கூடிய அவனும்‌ கை விடிலும்‌, திருவடிகள்‌ தன் பேரழகைக்‌ காட்டிக்‌ கட்டுப்படுத்திக் கொள்ளுகையாலே கை விடாது; “வண் புகழ்‌ நாரணன்‌ திண் கழல்‌” என்கிறபடியே பற்றினாரை நழுவ விடாதபடி-திண்மையை– உறுதியை உடைத்தா யிருக்குமென்கை.
இந்தக்‌ குண மிகுதியைப்‌ பற்றவுமல்லாமல்‌, அடியவனான தன்‌ இயல்பாம்‌ தன்மைக்குப்‌ பொருந்த திருவடிகளிலே இழிகை என்பதற்கு உதாரண முகத்தால்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -147 – சேஷி பக்கல்‌ சேஷ பூதன்‌ இழியும்‌ துறை; ப்ரஜை முலையிலே வாய் வைக்குமா போலே .
ஆண்டானைத்‌ தஞ்சமென்றடைய நினைக்கும்‌ அடியான்‌ தன்‌ இயல்புக்குப்‌ பொருந்த இழியும்‌ துறை திருவடிகளாகும்‌. எது போலே யென்னில்‌? முலை யுண் குழவி தாயினுடைய உறுப்பெல்லாமிருக்கத்‌ தனக்கு வகுத்ததாயுள்ள ஸ்தநத்திலே வாய்‌ வைக்குமா போலே என்கை.

திருவடிகளைச்‌ சொன்ன இது திரு- மேனிக்கும்‌ உபலக்ஷணம்‌ என்கிறார்‌ மேல்‌.
ஸூர்ணை -148 – இத்தால்‌, பிராட்டிக்கு இருப்பிடமாய்‌, குண ப்ரகாசகமுமாய்‌, சிசுபாலனையும்‌ அகப்படத்‌ திருத்திச்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ திருமேனியை நினைக்கிறது .
‘சரணெள’ என்கிற இது, திருமேனியின்‌ ஒரு பகுதியான திருவடிகளைச்‌ சொன்ன இத்தால்‌, “திருவிருந்த மார்பன்‌” என்னும்படி “ஸ்ரீமத்‌” பதத்தில்‌ சிபாரிசு செய்பவளான பிராட்டிக்கு இருப்பிடமாய்‌ “நாராயண” பதத்திற்‌ சொன்ன குணங்களுக்கு விளக்கமாய்‌
“பலபல நாழஞ்சொல்லிப்‌ பழித்த சிசுபாலன்‌” என்கிறபடியே பல நிந்தைகளைச்‌ சொல்லிப்‌ பகை வைத்தவனாய்ப்‌ பழிச்‌ சொற்களைச்‌ சொல்லித் திரிந்த சிசுபாலனையும்‌
உட்பட “அலவலைமை தவிர்த்த அழகன்‌” என்கிறபடியே வாய் வந்தபடியே பிதற்றின பகைமை தவிரும்படி தன்னழகாலே திருத்தி “திருவடி தாட்பாலடைந்த” என்கிறபடியே சேர்த்துக்‌ கொள்ளும்‌ இயல்புடைத்தான திருவடி என்று சொல்லுகிற படி பரமபதத்திலுள்ள பஞ்ச உபநிஷத் மயமாய்‌ குறைபாடொன்றும்‌ சாராததான திருமேனியை நினைக்கிறது
என்கை.-

பிறகு ‘சரணம் ‘ பதப் பொருளை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -149 -சரணம்‌ – இஷ்ட ப்ராப்திக்கும்‌ அநிஷ்ட நிவாரணத்துக்கும்‌ தப்பாத உபாயமாக,
“உபாயே க்ருஹ ரஷித்ரோச்‌ சப்தச் சரணமித்யயம்‌, வர்த்ததே ஸாம் ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைக வாசக:” சரணம்‌ இதி
– சரணமென்கிற,
அயம்‌ சப்த: – இந்த சப்தமானது,
உபாயே -உபாயத்திலும்‌,
க்ருஹ ரஷித்ரோச்‌ – க்ருஹத்திலும்‌ ரக்ஷ்கனிடத்திலும்‌,
வர்த்ததே– இருக்கிறது.
(இப்படி அர்த்தமானாலும்‌) ஸாம்ப்ரதம்‌ இப்போது (இவ்விடத்தில்‌),
ஏஷ: – இந்த சரண சப்தமானது,
உபாயார்த்த ஏக வாசக: – உபாயத்திற்கே பேராகக்‌ கடவது.
என்கிற படியே, சரண சப்தம்‌ ரக்ஷகனுக்கும்‌, வீட்டிற்கும்‌, உபாயத்துக்கும்‌ பேரே யாகிலும்‌, இவ்விடத்தில்‌ உபாயத்துக்கே பெயராகும்‌. இந்த உபாயத்தின்‌ செய்கையாவது,
இஷ்டத்தைக்‌ கொடுப்பதும்‌, இஷ்டமில்லாததைக்‌ போக்கக்‌ கூடியதும்‌ ஆகையாலே இஷ்டப்ராப்திக்கும்‌ அநிஷ்ட நிவாரணத்துக்கும்‌ தப்பாத உபாயமாக என்று இப் பதத்துக்கு அர்த்தம்‌ அருளுகிறார்‌.
இஷ்டம்‌, அநிஷ்டம்‌ என்பவைகள்‌ தாம்‌ இன்னவை என்பதனைப்‌ “பரந்தபடி’ என்ற நூலிலே விரிவாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீய: பதிப்படியிலும்‌ “அநிஷ்டமாகிறது – அறிவின்‌மையும்‌ இவற்றின்‌ காரியமான இச்சையும்‌, பகைமையும்‌ இவற்றின்‌ கார்யமான நல்வினை, தீவினைகளும்‌ இவற்றின்‌ கார்யமான தேவன்‌, மனுஷ்யன்‌, விலங்கு, தாவரங்களான நான்கு விதமான உடல்களும்‌. ஆதி ஆத்மிகம்‌ (தன்னாலேயே நேரும்‌ துன்பங்கள்‌), ஆதிபெளதிகம்‌ இதர ப்ராணிகளால்‌ வருந் துன்பங்கள்‌.) ஆதி தைவீகம்‌ (தெய்வத்தால்‌ வரக்கூடியது.) முதலான துக்கப் பரம்பரைகள்‌ என்று கூறி யிருக்கிறார்‌.
இஷ்டமாகிறது – எம்பெருமானது மேலான கருணையாலே மோக்ஷத்தைப்‌ பெறும்‌ ஆத்மாக்கள்‌, இந்த ஸ்தூல உடம்பிலிருந்து ஸூஷ்ம உடலோடு புறப்பட்டு ஸூர்ய கிரணத்தைப்‌ பற்றிக்‌ கொண்டு முதலில்‌ அர்ச்சிஸென்கிற அக்னியையும்‌, பின்பு அஹஸ்ஸையும்‌, சுக்ல பக்ஷ அபிமானியையும்‌,உத்தராயணாபிமாநியையும்‌, ஸம்வத்ஸர அபிமாநியையும்‌, வாயுவையும்‌, முறையே கிட்டி, இவர்கள்‌ வழி நடத்தப்‌ பின்பு ஸூர்ய மண்டலத்தைப்‌ பேதித்துக்‌ கொண்டு போய்ச்‌ சந்திரனைக் கிட்டி, அவன்‌ கெளரவித்து அவன்‌ வழி நடத்த, . பின்பு வருணனையும்‌, இந்திரனையும்‌ பிரம்மாவையும்‌ முறையே கிட்டி அவர்கள்‌ உலகங்களையும்‌ கடந்து, இவ் வண்டத்தையும்‌, இதைச் சுற்றியுள்ள ஏழு ஆவரணங்களையும்‌, (மூல ப்ரக்ருதி) மூலப் பகுதியையும்‌ கடந்து விரஜை யாற்றை அடைந்து அதில்‌ மூழ்கித்‌ தாம்‌ கொண்டிருந்த அரு உடல்‌ முதலியன கழியப் பெற்று, அந் நதியின்‌ அக்கரையிலுள்ள அமாநவர்‌ தொடுகையாலே பஞ்ச உபநிஷந்‌ மயமான திவ்ய தேஹம்‌ பெற்று, மீளுதலில்லாத பரம பதத்தைப்‌ பெற்று, பரமாத்ம தர்சநமும்‌ குணாநுபவ கைங்கர்யங்களை பெறுகையுமாம்‌.”

கீழ்க்‌ குறிப்பிட்டபொருளை உபாயமாகச்‌ சொன்னதின்‌ தாத்பர்ய ஸாரத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -150-இத்தால் ப்ராப்யந்தானே ப்ராபகம்‌ என்கிறது .
கீழ்‌ 148 ஆம்‌ ஸூத்ரத்தில்‌, பிராட்டிக்கு இருப்பிடமான எம்பெருமானையே உபாயமாகச்‌ சொல்லுகிற இத்தால்‌, பயனாம் பொருள் தானே பயனைச்‌ சாதிக்கும்‌ சாதனமாகச்‌ சொல்லுகிற தென்கை.

கீழே பயனைச்‌ சொன்னதுண்டோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -151–கீழ்ச்‌ சொன்ன மூன்றும்‌ ப்ராப்யமிறே.
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள”
என்று ஒரு தொடராகச்‌ சொன்ன இதில்‌, பெரிய
பிராட்டியாரோடு கூடி இருக்கை, திவ்ய மங்கள குணங்கள்‌, திருமேனியோடு இருக்கையாகிய மூன்றும்‌. * ஸ்ரீயா ஸார்த்தம்‌ ஆஸ்தே” நித்ய முக்தர்களோடும்‌ பிராட்டியோடும்‌ கூட எம்பெருமான்‌ பரம பதத்தில்‌ வாழ்கிறான் ) என்றும்‌, ‘ஸர்வாந்‌
காமாந்‌ அஸ்நுதே
‘ (இந்த உபாஸகன்‌ எல்லாவற்றையும்‌ உணர்ந்த பர ப்ரஹ்மத்தோடு அணைத்துக்‌ கல்யாண குணங்களையும்‌ அநுபவிக்கிறான்‌). என்றும்‌, “ஸதா பச்யந்தி
ஸூரய:
” (பரமபதத்தில்‌ அந்த எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நித்ய ஸூரிகள்‌ நிரந்தர மாகக்‌ கண்டு இன்புறுகிறார்கள்‌) என்றும்‌, இப்படி, பெரிய பிராட்டியோடும்‌, கல்யாண குணங்களோடும்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்‌ கூடி இருப்பவனைக்‌ கண்டு இச்சேதநன்‌ இன்புறும்‌ பயனெனச்‌ சொன்னதாம்‌. சேதநன்‌ – ஜீவாத்மா.

ஆனால்‌, பயனகிய இத்தை, உபாயமாகிய சாதனமாக்குகிறது தான்‌ என்‌? “என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -152- இவன்‌ செயலறுதியாலே உபாயமாக்கு கிறானித்தனை .
தன்னைத் தானே ரக்ஷித்துக் கொள்ள முடியாத அகிஞ்சனானவனும்‌ எம்பெருமானைத்‌ தவிர வேறொருவரையும்‌ காப்பாகக்‌ கொள்ளாதவனுமாகிய இவன்‌, தன்‌ செயலறுதியாலே சுவை மிக்க பாலை மருந்தாக்குவரைப்‌ போலே, – பயனான பெருமானையே சாதனமாக்குகிறானித்‌தனை என்கிறார்‌.

இது தன்னாலே இந்த உபாயத்துக்கு ஒரு சிறப்பைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌
ஸூர்ணை -153- “சரணெள சரணம்‌ என்கையாலே உபாயாந்தர வ்யாவருத்தமான உபாயம்‌ என்கிறது
“சரணெள சரணம்‌”
என்று பயனான வஸ்து தன்னையே சாதனமாகச்‌ சொல்லுகையாலே, (உபாயாந்தரங்களான) வேறு உபாயங்களான கர்ம ஜ்ஞாந பக்திகள்‌ முதலானவைகள்‌ சாதனமாகவும்‌, அவைகளால்‌ சாதிக்கப்படும்‌ பகவத் கைங்கர்யமாகிய பயனும்‌
வெவ்வேறாயிருக்கும்‌ உபாயாந்தரங்களில்‌ காட்டில்‌, வேறுபட்ட உபாயம்‌ இது என்னுமிடம்‌ சொல்லுகிறது என்கை.

பிறகு, வினைச்‌ சொல்‌லுக்குப் பொருள்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -154 – ப்ரபத்யே- பற்றுகிறேன்‌ .
இப்பதம்‌ பதகதெள’ என்ற வினைப் பகுதியடியாக வந்ததாகையாலே கதி சப்தம்‌ பற்றுதல்‌ என்ற பொருளைத் தருவதாகையாலும்‌ தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூன்றிடங்களில்‌ உத்தமன்‌ என்ற தன்மைக்கு இடமாகையர்லே ; ‘பற்றுகிறேன்‌’ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌.

இந்தப்‌ ‘பற்றுதல்‌’ தான்‌ மாநஸமாயும்‌) மனதாலும்‌, (வாசிகமாயும்‌) வாக்காலும்‌, (காயிகமாயும்‌) உடலாலும்‌ ஆகிய முக் கரணங்களாலும்‌ பற்றுதலைக்‌ காட்டக்‌
கடவதாகையாலே, எந்தக்‌ கரணத்தால்‌ உண்டான பற்றுதலைச்‌ சொல்லுகிறது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -155- வாசிகமாகவும்‌ காயிகமாகவும்‌ பற்றினாலும்‌ பேற்றுக்கு (இழவில்லை) அழிவில்லை ‘ஜ்ஞாநாந் மோக்ஷம்‌’ ஆகையாலே, மாநஸமாகக்‌ கடவது
“பவ சரணம்‌” (நீயே) உபாயமாக ஆவாய்‌.) என்கிறபடியே ப்ரார்த்திக்கையாகிற வெறும்‌ வாசிகமாகவும்‌, “அஞ்ஜலி: பரமா முத்ரா ஷிப்ரம்‌ தேவ ப்ரஸாதிநீ”
பரமா முத்ரா-சிறந்த அடையாளமான,
அஞ்ஜலி: – இருகைகளும்‌ கூப்பி வணங்குகை,
ஷிப்ரம்‌ – சீக்கிரமாக,
தேவப்ரஸாதிநீ – தேவனுடைய கருணையை உண்டாக்கும்‌. என்கிறபடியே பகவானுடைய கருணையை உண்டாக்குகின்ற அஞ்ஜலியைச்‌ செய்தல்‌. குகப் பெருமாள்‌ காகம்‌ முதலானவைகளைப்‌ போலே ரஷிக்கக் கூடிய எம்பெருமான்‌ இருக்குமிடத்தில்‌ போதலாகிற வெறும்‌ உடாலாகிய உறுப்பாலே பற்றினாலும்‌ பலம்‌ கிடைப்பது தவறுவது கிடையாது. “ஜ்ஞாநாந்‌ மோக்ஷ; ஜ்ஞாநத்தாலேயே மோக்ஷம்‌-என்கையாலே, மாநஸமான கரணத்தாலே
பற்றுதலாகக்‌ கடவது என்கை, அதாவது, மனஸாலே பற்றுவதென்பது மனத்தின் கார்யமான உறுதியான நினைவு, -இதை புத்தி விசேஷம்‌’ என்பர்‌. இந்தப்‌ புத்தி விசேஷத்தைப்‌ பரந்த படியிலே விரிவாகச்‌ சொன்னார்‌. ஸ்ரீய: பதிப்படியிலும்‌, இந்தப்‌ புத்தி விசேஷமாகிறது: பிறர்க்குரியதல்லாத அவனுக்கே உரிமையான சேஷத்வ ஜ்ஞாந கார்யமாய்‌
மற்ற உபாயங்களில்‌ மேம்பட்டு வேறுபட்டதாய்‌,(காக்குமவன்‌ செயலைத்‌ தடுக்குமதான தன்‌ முயற்சியைத்‌ தள்ளி,) பகவான்‌ காப்பதை அநுமதிப்பதாய்‌, ஒரே முறை
(சரணாகதி) செய்ய வேண்டியதாய்‌, பலனில்‌ நழுவுதல்‌ கால தாமதம்‌ செய்தலில்லாததாய்‌, பிறப்பு செயல்‌ அறிவுகளால்‌ குறைவாளரும்‌ செய்தற்குரியதாய்‌, இன்னார்‌ தான்‌ செய்யக்கூடும்‌ இன்ன காலத்தில்‌ தான்‌ செய்யலாம்‌ இன்ன விதம்‌ தான்‌ செய்வது இவை முதலான நியமங்களில்‌லாததாய்‌, மரண காலத்தில்‌ பகவானை நினைவு
கொள்ள வேண்டுமென்பதில்லாததாய்‌, வருத்தமின்றிச்‌ செய்யக்‌ கூடியதாய்‌, (ப்ரார்த்தநா ரூபமாய்‌) ப்ரார்த்திப்பதை செயலாக உடையதாய்‌, திட நம்பிக்கை யோடிருப்பது முதலான ஜ்ஞாந விசேஷம்‌
” என்று ப்ரபத்தியினுடைய லக்ஷணத்தை அருளிச்‌ செய்தார்‌. ஆகையால்‌, இவ்விடத்தில்‌ அதையும்‌ நினைவில்‌ கொள்வது.

இப்படி, மாநஸ மாத்திரமே போதுமோ?”சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையாலும்‌” என்று ஆழ்வார்‌ அருளியபடியே முக் கரணங்களாலும்‌ பற்ற வேண்டாவோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -155–உபாயம்‌ அவனாகையாலும்‌, இவை நேரே உபாயம்‌ அல்லாமையாலும்‌, இம் மூன்றும்‌ வேணும்‌ என்கிற நிர்ப்பந்தம்‌ இல்லை .
பலன்‌ தருபவன்‌ பகவானே யாகையாலும்‌ முக் கரணங்களாலும்‌ பற்றுதல்களான இவை மேலெழுந்த வாரியாக உபாயம் போல்‌ தோற்றிக் கழியுண்டு போம தொழிய, இது ஸாஷாத்தான உபாய மல்லாமையாலும்‌, பயனடைதற்கு நம்பிக்கையோடு கூடிய மனக் கரணத்தால்‌ பற்றுகையே போதும்‌. இவை மூன்றும்‌ வேண்டுமென்ற நிர்‌பந்த மில்லை யென்கை. -அன்றிக்கே இப்படி ஓவ்வொன்றே போதுமென்று சொல்லுவானென்‌? முக் கரணங்களாலும்‌ பற்றுதலைச்‌ சொன்னாலோ என்ன? உபாயம்‌ அவனாகையாலும்‌ என்று
தொடங்கி அருளிச்‌ செய்கிறாராகவுமாம்‌. அப்போதும்‌ ஓரொன்றே போதும்‌. இம் மூன்றும்‌ வேணும்‌ என்ற நிர்பந்தமில்லை என்கை. -நிர்பந்தம்‌ இல்லை என்கையாலே இந்தப்‌ பற்றுகையானது முக் கரணங்களாலும்‌ உண்டானாலும்‌ குறையில்லை என்பது தோற்றுகிறது.”பற்றுகிறேன்‌’ என்ற “இந்த ப்ரபத்தி, முக்கரணங்களாலும்‌ உண்டாகவுமாம்‌ -ஒரு கரணத்தாலே உண்டாகவுமாம்‌ பலன்‌ கிடைப்பதில்‌ குறையில்லை. இவன்‌ தகுதிக்கு முக் கரணங்களுமே வேணும்‌; பலன்‌ கிடைப்பதற்கு ஒரு கரணமே போதும்‌. உபாயமாகும்‌ அவன்‌ தகுதிக்கு ஸ்ரீய: பதித்வமும்‌, வாத்ஸல்யம்‌ ‘ முதலான குணங்களும்‌, திவ்ய மங்களமான திருமேனியும்‌ வேண்டற் பாடாயிருக்குமா போலே, இவன்‌ தகுதியாம்‌ பூர்த்திக்கு முக் கரணங்களுமே வேண்டற்பாடா யிருக்கும்‌” ‘ என்றிவர்‌ தாமே பரந்தபடியிலே அருளிச்‌ செய்தது.

“ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த:க்ருதோயம்‌ தாரயேந்நரம்‌”
ஸக்ருத்‌
– ஒரு தடவை,
க்ருத: – அநுஷ்டிக்கப்பட்ட,
அயம்‌ – இந்த,
சாஸ்த்ரார்த்த – சாஸ்த்ரார்த்தமான,
ஏவஹி – இந்த பரபத்தியே,
நரம்‌-மநுஷ்யனை,
தாரயேத்‌ – ஸம்ஸாரத்தினின்றும்‌ தாண்டு விப்பிக்கும்‌.
‘ஸக்ருதேவ ப்ரபந்நாய” (ஸக்ருதேவ-ஒரு தரமே, ப்ரபந்நாய– ப்ரபத்தி பண்ணினவனும்‌) இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே ப்ரபத்தி ஒரு தரமே அநுஷ்டிக்க வேண்டியதா யிருக்க. “முக் காலத்திலும்‌ ஒத்தியல்‌ பொருளைச்‌ செப்புவர்‌ நிகழுங் காலத்தானே” என்று நிகழ் காலத்துச் சொல்‌ முக் காலத்திய நிகழ்ச்சியைச்‌ சொல்லுவதாகையாலே, -பற்றுகிறேன்‌’ என்ற நிகழ் காலமாகச்‌ சொல்வதால்‌
எப்போதும்‌ சொல்ல வேண்டிய தாகுமாதலால்‌ “நிகழ் காலமாகச்‌ சொல்வது எதற்கு? என்ன, அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -157 -வர்த்தமாந நிர்த்தேசம்‌ -ஸத்வம்‌ தலை எடுத்து அஞ்சின போது அநுஸந்திக்கைக்காக .
“லோக விக்ராந்த சரணெள சரணம்‌ தே5 வ்ரஜம்‌ விபோ”
விபோ –
ஸ்வாமீ |,
தே – தேவரீருடைய,
லோக விக்ராந்த சரணெள – உலகத்தை யளந்த திருவடிகளையே,
சரணம்‌‘ – உபாயமாக,
அவ்ரஜம்‌ – பற்றினேன்‌. என்றும்‌, ‘நின்னடியினை அடைந்தேன்‌” என்றும்‌, “அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்‌” என்றும்‌ இறந்த காலமாகச்‌ சொல்லாமல்‌, “ப்ரபத்யே” பற்றுகிறேன்‌ என்று நிகழ் காலமாகச்‌ சொல்லுகிறதாவது, சரீரத்தோடே இருக்கிற இவன்‌, ராஜஸ தாமஸங்களாலே கலங்கி இதர உபாயங்களான அபாயங்களில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ தொடர்பு கொண்டு பிறகு ஸத்வம்‌ தலை யெடுத்து அநுதாபம்‌ பிறந்து பயப் பட்ட காலத்திலே, “ப்ராயச் சித்திரியம்‌ ஸாத்ர யத் புநச் சரணம்‌-வ்ரஜேத்‌ ” புந மறுபடியும்‌, சரணம்‌ வ்ரஜேத்‌ (இதியத்‌) (பகவானையே) உபாயமாகப் புத்தி பண்ணுகிறானென்பது யாதொன்றுண்டு,
ஸாஇயம்‌ – இந்த இதுவே,
ப்ராயச்சித்தி:– (தவறினதுக்கு) ப்ராயச் சித்தமாகும்‌–என்கிறபடியே ப்ரபத்தி
தவிர அதற்குப்‌ பரிஹார மில்லாமையாலும்‌, அது தான்‌ ஒரு தரமே செய்ய வேண்டிய நியமமாகையாலும்‌, மீண்டும்‌ செய்தல்‌ கூடாமையாலும்‌ முன் செய்த ப்ரபத்தியையே நினைவிற்‌ கொள்ளுகைக்காக (கொழுந்து படக் கிடக்கிறது) இந்தப் ப்ரபத்தியே மேன் மேலும்‌ உண்டாயிருக்கும்‌
என்றபடி.

இன்னமும்‌ நிகழ் காலமாக பற்றுவதற்குச்‌ சில ப்ரயோஜநங்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -158- உபாயாந்தரங்களில்‌ நெஞ்சு செல்‌லாமைக்கும்‌, கால க்ஷேயத்துக்கும்‌, இணிமையாலே விட வொண்ணாமையாலும்‌ நடக்கும்‌ .
முன் பின்‌ பழக்கத்தாலே எப்போதாகிலும்‌ பகவானைத்‌ தவிர்ந்த வேறு உபாயங்களான கர்ம ஜ்ஞாந பக்திகளிலே மநம்‌ செல்லாமைக்கும்‌, இதைச்‌ சொல்லுகை யின்றி பொழுது போக்க அரிதாகையாலே காலங் கழிப்பதற்காகவும்‌ இதனுடைய சுவை மிகுதியாலே இதை விட மாட்டாமையாலும்‌, இடைவிடாமல்‌ நடக்கக்‌ கடவதா யிருக்குமென்கை.

இவ்வாறன்றி, பலங் கிடைக்கப்‌ பல காலும்‌ சொல்ல வேணு மென்றாலோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -159-பேற்றுக்குப்‌ பலகாலும்‌ வேணுமென்று நினைக்கில்‌ உபாயம்‌ நழுவும்‌ –
முன்‌ ஸூத்திரத்தில்‌ சொன்ன ப்ரயோஜனங்களுக் கன்றிக்கே பலங் கிடைப்பதற்குப்‌ பலகாலும்‌ சொல்ல வேணுமென்று நினைக்கில்‌, வேற்றுத் துணை பொறுக்காத பகவானாகிய ஸித்தோபாயம்‌ சணற்கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம்‌ போலே தன்னைக்‌ கொண்டு நழுவுமென்கை.
ஆக, த்வயத்தின்‌ முதல்‌ வாக்கியத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, உத்தர வாக்கியத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -160-உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம்‌ சொல்லுகிறது –
ப்ராப்யமாவது, (ஸ்ரீய: பதியாய்‌) திருமகள்‌ கேள்வனாய்‌ ஸர்வ ஸ்வாமி யாயிருக்கிற ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு.

உபாயத்தைப் பற்றிய பிறகு அடையத்‌தக்க பயனைச்‌ சொல்லுகிற இதற்கு அபிப்ராயத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -161 -ப்ராப்யாந்தரத்‌துக்கு அன்றென்கை –
முதல்‌ வாக்யத்தில்‌ சொன்ன உபாயத்துக்கு-1- நூதனமான செல்வத்தை வேண்டுபவனும்‌,
2-இழந்த செல்வத்தைப் பெற வேண்டுபவனும்‌, -3-கைவல்யத்தைப்‌ பெற வேண்டுபவனும்‌, -4-அவ் வெம்பெருமான்‌ திருவடிகளை அடைய வேண்டுபவனும்‌ ஆகிய நான்கு விதமான பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்கும்‌ இந்த உபாயம்‌ பொதுவாகையாலே, உத்தர வாக்யத்தில்‌ சொல்லுகிற பலந்தான்‌ இன்னது என்று நிரூபிக்க வேண்டுகையாலே வேறு
பயன்களுக்கன்று, அவன்‌ திருவடிகளில்‌ பண்ணும்‌ கைங்கர்யமே இதற்குப்‌ பலனாகும்‌
என்பதாம்‌.

மற்ற பயன்களை விட்டு பகவத் கைங்‌கர்யமாகிற இதொன்றையுமே வேண்டுவானென்‌? என்ன, விடை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -162 – உபாயாந்தரங்களை விட்டுச்‌ சரமோபாயத்தைப்‌ பற்றினாற் போலே, உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது.
உபாயத்தைப்‌ பற்றும்‌ போது அவனைத்‌ தவிர்த்து வேறொன்றையும்‌ உபாயமாகப்‌ பற்றத் தகாத தன்னியல்பான ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்த, கர்ம ஜ்ஞாந பக்திகளாகிய வேற்று உபாயங்களை விட்டு முடிந்த உபாயமான ஸித்தோபாயமான அவனைப் பற்றினாற்‌-
போலே, பயனைப் ப்ரார்த்திக்கிற சமயத்திலும்‌ அவன்‌ தவிர்‌த்த வேறுப் பயன்‌ நுகராத தன்னியல்பான ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்த வேறு பயன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டுச்‌ சரமமான முடிந்த சிறந்த பயனைப்‌ பிரார்த்திக்கிறது என்கை.

நினைவறியும்‌ ஈஸ்வரன்‌ ஸ்ரீமந் நாராயணன்‌ பக்கல்‌ ப்ரார்த்தனை அதிகம்‌ என்றிருப்பார்‌ செய்யும்‌ வினாவை தாமே ப்ரதிவாதம்‌ பண்ணுகிறார்‌.
ஸூர்ணை -163 – இவன்‌ அர்த்திக்க வேணுமோ? ஸர்வஜ்ஞன்‌ இவன்‌ நினைவறியானோ ? என்னில்‌ .
இவன்‌ ப்ராத்திக்க வேணுமோ? அனைத்‌தும்‌ அறியுமவன்‌ இவன்‌ நினைவறியானோ ? என்னில்‌, அதற்கு விடை அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -164 – இவன் பாசுரங் கேட்டவாறே திருவுள்ளம்‌ உகக்கும்‌ –
அதாவது, நோய் வாய்ப்பட்டமையாலே சோற்றில்‌ ஆசை யற்றுக் கிடந்த சிறு குழந்தை, நோய்‌ தீர்ந்து பசி யுண்டாகி “சோறு’ என்று கேட்டவாறே பெற்ற தாய்‌ உகக்குமா போலே, அநாதி காலமாக இவன்‌ பகவானைத்‌ தவிர்த்த வேறு பயன்களில்‌ மனம்‌ ஊன்றியவனாகை யாகிற நோய்‌ கொண்டு இந்தப்‌ பயனில்‌ நசையற்றுக் கிடந்தவன்‌, நோய்‌ தீர்ந்து இதிலே சுவை பிறந்து தன்‌ பக்கல்‌ வந்து இத்தை விரும்பிக் கேட்டவாறே தலைவனாகிற எம்பெருமான்‌ திரு வுள்ளம்‌ உகக்கும்‌. அதற்காக ப்ரார்த்திக்கிறான்‌ என்கை.

இனி, இந்த வாக்யத்துக்குப் பதந்தோறும்‌ பொருள்‌ சொல்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி முதல்‌ பதத்தை ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -165- ஸ்ரீமதே – பெரிய பிராட்டியாரோடே கூடி யிருந்துள்ளவனுக்கு -ஸ்ரீமதே‘ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவனுக்கு’ என்று இங்கும்‌ முதல்‌ வாக்யத்திற் போலே ஸ்ரீசப்தத்துக்குச்‌ சொன்ன (கர்மணி வ்யுத்பத்தி, கர்த்தரி வ்யுத்பத்தி) செயப்படு பொருள்‌, எழுவாய்‌ என்ற இரண்டு வ்யுத்பத்திகளும்‌, அதில்‌ அர்த்தமும்‌ மதுபர்த்தமான (நித்யயோகமும்‌) என்றுங்கூடி இருக்கையும்‌ நினைக்க வேண்டும்‌ என்கிறார்‌.

முதல்‌ வாக்கியத்திலும்‌ இரண்டாம்‌ வாக்கியத்திலும்‌ நித்ய யோகம்‌- எப்போதும்‌ கூடி இருக்கை ஓத்திருக்கச் செய்தே அந்தந்த நிலைகளுக்குப்‌ பொருந்த இவளிருக்கும்‌ இருப்பை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -166 – அவன்‌ உபாயமாமிடத்தில் தான்‌ புருஷகாரமாயிருக்கும்‌; அவன்‌ ப்ராப்யனாமிடத்தில்‌ தான்‌ ப்ராப்யையுமாய் கைங்கர்ய வர்த்தகையுமா யிருக்கும்‌ .
எம்பெருமான்‌ சேதநர்க்கு விரோதமானவற்றைத்‌ தவிர்க்கையும்‌ இஷ்டமானவற்றைக்‌ கொடுக்கையுமாகிற உபாயமாமிடத்தில்‌, வேறொரு துணைக்‌ கூட்டாகிற சேர்த்தியை பொறுக்காமையாலே, பிராட்டியாகிய தான்‌ உபாயத்வத்தில்‌ தொடர்பு கொள்ளாமல்‌,
குற்றங்களோடு கூடிய சேதநரைப்‌ பார்த்து அவன்‌ சீறுமளவில்‌ அத்தைப்‌ பொறுத்து கைக் கொள்ளும்படியாகச்‌ செய்‌யும்‌ புருஷகாரமாயிருக்கும்‌
-அவன்‌ சேதநர்கள்‌ செய்யும்‌ தொண்டினை ஏற்கும்‌ பயனாமிடத்தில்‌, அவனைப் போல தொண்டினை ஏற்பவளாய்க்‌ கொண்டு பயனுமாய்‌, இவர்கள்‌ செய்யும்‌ தொண்‌டினை அவன்‌ திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப் படுத்தி அவனை உகப்பிக்கையாலே கைங்கர்யத்தை வளர்ப்பவளாயிருக்கும்‌ என்றபடி-இது தன்னைப்‌ பரந்தபடியிலே த்வயத்தில்‌ முதல்‌ வாக்யத்தில்‌, “ஸ்ரீமத்‌ சப்தம்‌ சேதநருடைய அபராதத்தையும்‌, ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையுங் கண்டு, இவர்கள்‌ அவனுடைய கோபத்துக்கு உரியராய்‌ நசித்துப் போகாதே அவனைக் கிட்டி, உஜ்ஜீவித்துப்‌ போக வேணும்‌. என்று குற்றங்களோடு கூடிய சேதநரை ஈஸ்வரனேடே சேர்க்கைக்காக என்றும்‌ ஒக்க விடாதே இருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லுகிறது;(உத்தர) பின்‌ வாக்கியமாகிய ஸ்ரீமச்சப்தம்‌ கைங்கர்யத்தை ஏற்பதைப் பற்றவும்‌, இவர்கள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தை ஈஸ்வரன்‌ திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப்‌ படுத்துகைக்காகவும்‌ அநுபவத்தில்‌ இடையூறு வாராமைக்காகவும்‌ (அநுபவ விச்சேதத்தில்‌) பகவதநுபவம்‌ குறைவதினால்‌ தான்‌ இல்லை என்னலாம்‌படி. தரியாமையாலே இடைவிடாமற்‌ சேர்ந்து அவனை நொடியும்‌ பிரியாதே எல்லாக்‌ காலங்களிலும்‌ கூடி யிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லுகிறது.”என்று விரிவாக அருளிச்‌ செய்தார்‌.

திருமந்த்ரத்தில்‌ உத்தர பதத்துக்கு இந்த உத்தர வாக்யம்‌ விவரணமா யிருக்கிற படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -167- இதிலே திருமந்த்ரத்தில்‌ சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்திக்கிறது .
கைங்கர்யத்தை ஏற்பது (ஒரு மிதுநம்‌) ஓர்‌ இருவர்‌ என்பதைச்‌ சப்தத்தாலேயே சொல்லுகிற இந்த வாக்யத்திலே, திருமந்த்ரத்திலே நாராயணாய என்று கைங்கர்யத்தை ஏற்பது ஒரு திவ்ய தம்பதிகள்‌ என்னுமிடம்‌ அர்த்த பலத்தாலே சொல்லுகையாலே, சுருங்கச்‌ சொன்ன பயனை விரியச்‌ சொல்லுகிற தென்கை. அங்கு ‘நாராயணனுக்கே அடிமை செய்யப்‌ பெறுவேனாக வேணும்‌’ என்கிற இவ்வளவொழிய “அடிமை கொள்ளுமவன்‌ ஸ்ரீமானாக வேணும்‌’ என்றும்‌ ‘அடிமை செய்பவன்‌ மமகாரம்‌ அற்றவனாக வேணும்‌’ என்றும்‌ சொல்லாமையாலும்‌ அவை இரண்டும்‌ இங்குச்‌ சொல்லுகையா லன்றோ அந்தப்‌ பதத்துக்கு இந்த வாக்யம்‌ விவரணமாயிற்று என்பதாகும்‌.

இந்தத்‌ திவ்ய தம்பதிகளுக்கே அடிமை செய்ய வேணும்‌ என்கிற நிர்பந்தம்‌ தான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -168-இளைய பெருமாளைப் போலே இருவருமான சோர்த்தியிலே அடிமை செய்கை முறை –
“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம்‌ ஸர்வம்‌ . கரிஷ்யாமி ஜாக்ரதஸ்‌ ஸ்வபதச்சதே” பவாம்ஸ்து
– தேவரீர்‌,
வைதேஹ்யா -பிராட்டியோடுகூட,
கிரிஸா நுஷ-–பர்வதத்தின்‌ தாழ்வரைகளிலே,
ரம்ஸ்யதே – விளையாடப்‌ போகிறீர்‌,
அஹம்‌ – நான்‌,
ஜாக்ரத:- விழித்துக்‌ கொண்டும்‌,
ஸ்வபதச்ச – நித்திரை செய்து கொண்டு மிருக்கிற,
தே-தேவரீருக்கு,
ஸர்வம்‌ கரிஷ்யாமி– அனைத்துத்‌ தொண்டுகளும்‌ செய்வேன்‌. என்கிறபடியே எல்லா தேசங்களிலும்‌, எல்லாக் காலங்களிலும்‌, எல்லா நிலைகளிலும்‌ பெரிய பிராட்டியாரும்‌ ஸ்ரீமானுமான மிதுநத்துக்கு அடிமை செய்கையே சேஷ பூதனுக்கு ப்ரயோஜனமென்பது. இப்படி, பெருமாளும்‌ பிராட்டியுமானச்‌ சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே இருவருமானச்‌ சேர்த்தியிலே அடிமை செய்கை இவ்வாத்மாவுக்கு இயல்பு. திவ்ய தம்பதிகளான இருவருக்கும்‌ அடிமை செய்வது (மிதுந சேஷத்வம்‌) இயல்பானால்‌, மிதுந கைங்கர்ய மன்றோ (ஸ்வரூபாநுரூபமான) இயல்புக்குச்‌ சேர்ந்த ப்ரயோஜனமென்கை. -ஸ்வரூபம்‌ – ஆத்மாவின்‌ இயல்பு.

இன்னமும்‌ அச் சேர்த்தியிலே அடிமை செய்யுமளவில்‌ உள்ள வித்யாசமான தன்மையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -169-அடிமை தான்‌ ஸித்திப்பதும்‌ ரஸிப்பதும்‌ அச் சேர்த்தியிலே ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்‌ அநாதரிக்காமல்‌ கைங்கர்யங்‌ கொண்டருளும்படி செய்பவள்‌ இவளாகையாலே “ஸீதாமுவாச” (ஸீதையிடம்‌ விண்ணப்பித்தான்‌) என்கிறபடியே பிராட்டியைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு, “ஸீதாஸமக்ஷம்‌ காகுத்ஸ்தமிதம்‌ வசநம்‌ அப்ரவீத்‌”
(ஸீதாபிராட்டியின்‌ முன்னிலையாகத்‌ தம்முடைய இயல்புக்கு ஏற்ற ‘ தொண்டை வேண்டிப்‌ பெற்ற) இளைய பெருமாளைப்‌ போலே, இவன்‌ (சேதநன்‌) ப்ரார்த்திக்கிற தொண்டு தான்‌ ஸித்திப்பதும்‌ (தனக்கு உண்டாவதும்‌) மாதா பிதாக்கள்‌ இருவருமான சேர்த்தியிலே தொண்டு செய்யும்‌ புத்திரனைப் போலே, செய்கிற தொண்டு தான்‌ ரஸிப்பதும்‌ பிராட்‌டியும்‌ அவனுமானச்‌ சேர்த்தியிலே என்பது.

இனி, இரண்டாம்‌ பதமான நாராயணாய”, என்ற பதத்தை விவரிக்கிறார்‌, ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு’ என்று அதற்குப் பொருள்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -170 – நாராயணாய – ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு-
நாராயணத்வம்‌ என்பது அதாவது – நாராயணன்‌ என்பவன்‌ இரண்டு விதமான உலகத்திற்கும்‌ நாதன்‌ ஆகையாலே, ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு தான்‌ தவிர்ந்த எல்லாப் பொருள்களுக்கும்‌ எஜமானனா யுள்ளவனுக்கு என்கிறார்‌. தொண்டை. ஏற்றுக் கொள்ளுபவன்‌ எஜமானனாகையாலே.

கைங்கர்யந்தான்‌ – பகவானுக்குச்‌ செய்யும்‌ தொண்டு தான்‌ பகவானை அநுபவிப்பதால்‌ பிறந்த உகப்பின்‌ கார்யமாகையாலும்‌, அந்த உகப்பு தான்‌ அநுபவிக்கிற பகவத் விஷயத்தி லாகையாலும்‌ நாம்‌ அநுபவிக்‌கிற விஷயத்தை இன்னது என்று சொல்ல வேண்டுகையாலே அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -171 – இதிலே திருமேனியையும்‌ குணங்களையும்‌ சொல்லும்‌ –
தொண்டன்‌ செய்யும்‌ தொண்டினை ஏற்கும்‌ பொருளைச்‌ சொல்லுகிற இப் பதத்திலே,
கைங்கர்யத்துக்கு முன்னோடியா யிருக்கிற அநுபவத்துக்கு இலக்கான பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ கல்யாண குணங்களையும்‌ சொல்லும்‌ என்கை. “ஸதா பஸ்யந்‌தி ஸூரய: (நித்ய ஸூரிகள்‌ எம்பெருமானின்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை நிரந்தரமாக ஸேவிக்கிறார்கள்‌.) என்றும்‌,
ஸோஸ்நுதே ஸர்வான்‌ காமான்‌” (உபாசகன்‌ எம்பெருமானுடைய அனைத்துக் கல்யாண குணங்களையும்‌ அநுபவித்துக் கொண்டிருக்கிறான்‌) என்றும்‌, “ரஸம்ஹ்யேவாயம்‌ லப்த்வா-
ஆநந்தி பவதி
” (அந்தப்‌ புருஷன்‌ அனைத்துச்‌ சுவைகளாலும்‌ நிரம்பிய பெருமானை அடைந்து அநந்திக்கிறான்‌.) என்றாற்‌போல்‌ அவனுடைய ஸ்வரூபம்‌ எப்படி அநுபவத்துக்கு இலக்கோ? அதே போன்றே அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமும்‌ கல்யாண குணங்களும்‌ அநுபவத்துக்குரியதாய்‌, தொண்டினை மேன்மேலென வளர்ப்பிப்பதாய்‌, இனிமை மிகுந்து மன்றோ இருப்பது.-குணங்களென்று பொதுவாகச்‌ சொல்லுகையாலே ஜ்ஞாந சக்தியாதி குணங்களோடு, வாத்ஸல்யாதி குணங்களோடு, செளர்யாதி குணங்களோடு வாசியற எல்லாக்‌ குணங்களும்‌ அநுபவிக்கப் பெறுவதா யிருக்கையாலே, முதல்‌ வாக்யத்தில்‌ நாராயண பதத்தில்‌ உபாயமாக வரிப்பதற்கு உபயோகமாகச்‌ சொல்லப் பெற்ற குணங்களும்‌ இப் பதத்தில்‌ பயனாக நினைக்கத் தக்கவை, ஆதாரமான
ஸ்வரூபத்துக்கு உபாயம்‌, உபேயம்‌ என்ற இரண்டு நிலைகளுண்டா யிருக்கிறாற் போன்றே அதேயமான குணங்‌களுக்கும்‌ உபாயம்‌, உபேயம்‌ என்ற இவ்விரண்டு நிலைகளும்‌ உண்டாயன்றோ இருப்பது.-இவை எல்லாம்‌ பரந்தபடியிலே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌ மாணவாள மாமுநிகள்‌.

இனி, இப்பதத்துக்கு நோக்கு இன்னதிலே என்கிறார்‌.
ஸூர்ணை -172- சேஷித்வத்திலே நோக்கு –
அனுபவித்தற்கு ஏற்றலாதலென்பது பகவானுடைய எல்லா குணங்களையும்‌ நாராயண பதம்‌ சொல்லி யிருந்தாலும்‌ சதுர்த்தி யம்ஸத்தில்‌ ஆய” என்கிற நான்காம்‌ வேற்றுமையில்‌ சொல்லுகிற கைங்கர்ய விசேஷத்துக்கு (சிறப்புக்கு) மிகவும்‌ உரியதாயிருப்பது சேஷித்வ (எஜமானத்வ) மாகையாலே, இப் பதத்‌ துக்கு அதிலே நோக்கு என்கை என்கிறார்‌

இந்த சேஷித்வம்‌ சொல்லுகைக்கு ப்ரயோஜநம்‌ அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -173- ப்ராப்த விஷயத்தில் கைங்கர்‌யமிறே ரஸிப்பது
“ஸர்வம்‌ பரவசம்‌ துக்கம்‌”
(பிறன்‌ வசத்து இருப்பது அனைத்தும்‌ துன்பமே) என்றும்‌,
“ஸேவா ஸ்வவ்ருத்தி” (அடிமை நாய்த் தொழில்‌) என்றும்‌ சொல்லுகிற படியே சாஸ்திரங்கள்‌ தகாதென்ற விஷயத்தில்‌ தொண்டாற்றுகைப்‌ போலன்றிக்கே “சாயாவா ஸத்வ மநுகச்சேத்‌”( பரன்‌ திறத்தில்‌ நிழல் போல்‌ தொடரக் கடவன்‌.)என்றும்‌, “ஸாகிமர்த்தம்‌ ‘நஸேவ்யதே” (பரனுக்குத்‌ தொண்டாற்றுகை சிறந்த தாயிருக்க ஏன்‌? செய்யப்படவில்லை) என்றும்‌, சொல்லுகிற படியே சாஸ்திரங்கள்‌ விதித்த -தகுந்த விஷயத்தில்‌ தொண்டாற்றுகை யன்றோ இவனுக்குச்‌ சுவைப்பது என்கை.

இனி இப் பதத்தில்‌ வேற்றுமை உருபுக்‌குப் பொருள்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -174 – இந்தச்‌ சதுர்த்தி கைங்கர்யத்தை ப்ரகாசிப்பிக்கிறது.
சேஷத்வ ஜ்ஞாந கார்யமான உபாயத்தைக் கைக்‌ கொண்டதின்‌ பிறகு வந்ததாகையாலே, இந்த நான்காம்‌ வேற்றுமை “அதற்காக’ என்ற முறைப்‌ பொருளுணர்த்துகை யன்றிக்கே, இந்த சதுர்த்தி, கை பற்றிய உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தைப்‌ பிரகாசிப்‌பிக்கிற தென்கை.-கைங்கர்யத்தை ப்ரகாசிப்பிக்கையாவது – கைங்கர்ய ப்ரார்த்தனையைச்‌ சொல்லுகை. கைங்கர்யமாவது:- பகவாந்‌ முகமலர்த்திக் குறுப்பான தொண்டாற்றுகை. இந்தக்‌ கைங்கர்யந்தான்‌ “ஏதத்‌ ஸாம காயந் நாஸ்தே” (முக்தன்‌ இந்த ஸாமத்தைப்‌ பாடிக்‌ கொண்டிருக்கிறான்‌.) என்றும்‌, “நம இத்யேவ வாதிந:” நம: என்ற இத்தைச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.) “யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி’ (எந்தெந்த வழியில்‌ ப்ரபு செல்கிறானோ அந்தந்த வழியில்‌ இவனும்‌ செல்கிறான்‌.) என்றும்‌ இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே தொண்டு வாசிக காயிக ரூபமாயிருக்கும்‌ என்றபடி.

இந்தக்‌ கைங்கர்யம்‌ ப்ரார்த்திக்கப்‌-பெறுமதாகில்‌ எப்போதாவது ஒரு ஸமயத்திலாகாதோ வென்‌னில்‌? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -175 – கைங்கர்யந்தான்‌ நித்யம்‌ .
அதாவது, (சேஷத்வமே) அடிமையே ஆத்‌மாவுக்கு இன்றியமையாத லக்ஷண்‌ மாகையாலும்‌, “அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வாநுபபத்தி’: (அடிமையை மேற்‌- கொண்டொழுகாத போது ஆத்மாவுக்கு சேஷத்வம்‌ என்ற லக்ஷணம்‌ பொருந்தாது.) என்கிறபடியே தொண்டு செய்யாத-
போது அடிமைத்‌ தன்மைப்‌ பொருந்தாமையால்‌ ஆத்மாவுக்குக்‌ கைங்கர்யம்‌ நித்யமென்கை.-ஆகையாலன்றோ “நித்ய கிங்கர: ப்ரஹர்ஷ யிஷ்யாமி”( நித்திய கிங்கரனாகவே இருந்து உன்னை களிப்புறச்‌ செய்வது என்றோ.) என்றும்‌, “நித்ய கிங்கரோ பவாநி” (எப்போதும்‌ கைங்கர்யம் பண்ணுபவனாகவே ஆகக் கடவன்‌) என்றும்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச்‌
செய்தது.

நித்தியமாயிருக்குமாகில்‌ ப்ரார்த்திக்க வேணுமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -176 – நித்யமாக ப்ரார்த்தித்தே பெறவேணும்‌ .
கைங்கர்யத்தை ஏற்குமவன்‌ பரம்‌ பரனாகையாலும்‌, தொண்டு செய்யும்‌ சேதநன்‌ அத்யந்த பரதந்த்ர னாகையாலும்‌, ப்ரார்த்தநா விசேஷம்‌ இல்லாத போது கைங்கர்யம்‌ ஸித்தியாமையாலும்‌, நித்யமாக ப்ரார்த்தித்தே பெற வேணும்‌ என்கிறது

நித்தியமும்‌ ப்ரார்த்தனைக்கு உரித்தாகைக்கு நிதாநம்‌ அருளிச்செய்கிறார்‌.
ஸூர்ணை -177- சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷபூதனுக்கு ஸ்வரூப லாபமும்‌, ப்ராப்யமுமம்‌ ,
“நாகிஞ்சித் குர்வதச்‌ சேஷத்வம்‌” என்கிறபடியே தொண்டாற்றி சேஷிக்கு ஸந்தோஷத்தை விளைவிக்காத வஸ்துவுக்கு சேஷத்வம்‌ இல்லாமையாலே, சேஷியான ஈஸ்வரனுக்குத்‌ தன்னுடைய அடிமைச்‌ செயலாலே ப்ரீதியை விளைவிக்கை ஆடியவனுக்குத்‌ தன்‌ ஸ்வரூப லாபமாய்‌, அவனுடைய முக மலர்த்திக்‌ குறுப்பாயிருக்கையாலே பயனுமாயிருக்குமென்கை. ஆகையாலே, நித்யமும்‌ ப்ராத்தனைக் குரித்தாயிருக்குமது பகவத்‌ கைங்கர்யம்‌ எனப்படுவது இவ் விடத்தில்‌ கருத்தாயிருக்கும்‌. சேஷி-எஜமானனான எம்பெருமான்‌. சேஷ பூதன்‌ – அடிமையாகிற நாம்‌. (ஆத்மாக்கள்‌).

பிறகு கடைசி பதத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை – 178- நம: கைங்கர்யத்தில்‌-களையறுக்கிறது.
நம:
என்கிற இதற்கு அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌. * கைங்கர்யத்தில்‌ களை யறுக்கிறது’ என்று அதாவது, நமச் சப்தம்‌ பொதுவாக அஹங்கார மமகாரங்‌களைக்‌ கழிக்கையாலே, திருமந்த்ரத்தில்‌ மத்யம பதமான நமச்‌ சப்தம்‌ போலே ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள்‌ மூன்றையுங்‌ கழிக்க வற்றா யிருந்ததே யாகிலும்‌, இங்கு அங்ஙனன்றிக்கே, இந்த நமப் பதம்‌ கைங்கர்ய ப்ரார்த்தனைக்குப்‌ பிறகு சொல்வதாகையாலே, இந்தக் கைங்கர்யத்தில்‌ விரோதியைக்‌ கழிக்கிறது என்கை.

கைங்கர்யத்துக்குக் களை எது” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -179- களையாவது-தனக்கென்னப் பண்‌ணுவது
தனக்கென்னப் பண்ணுகையாவது, “போக்‌-தாஹம்‌ மம போகோயம்‌” (நான்‌ புஜிக்கிறவன்‌, இது எனக்கு புஜிக்கப்படுவது.) என்கிறபடியே இத்தைத்‌ தன்னுடைய ஸந்தோஷத்துக்கு உறுப்பாக நினைத்துப்‌ பண்ணுகை: கைங்கர்யம்‌ பகவாந்‌ முக மலர்த்திக்கு சந்தோஷத்திற்கு ஏதுவாகையாலே இது நமக்கு விரும்பத் தக்கது என்கிற நினைவு ஒழிய, இது என்னுடைய போகத்துக்குரியது’ என்றும்‌, இது என்னுடையது” என்ற புத்தியும்‌ நடக்குமாகில்‌ பயனற்றதா யன்றோ இருப்பது இந்த கைங்கர்யம்‌. இப்படி,
எனக்கென்றும்‌ என்னுடைய தென்றும்‌ வருகிற நினைவை அடியோடு களைகிறது, இந்த நமப்பதம்‌ என்கை .

இன்னமும்‌ இந்தக்‌ கைங்கர்யத்தைப்‌ பெறுகைக்கு விரோதிகளானவையும்‌ இதிலே கழியுண்ணுமென்கிறார்‌.
ஸூர்ணை -180-இதிலே அவித்யாதிகளும்‌ கழியுண்ணும்‌
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந்த நமஸ்ஸிலே, “அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி; அவித்யா தருஸம்‌ பூதிபீஜமேதத்‌ தீவிதா ஸ்திதம்‌”
அநாத்மநி – ஆத்மாவல்லாத தேகத்தில்‌,
ஆத்மபுத்தி:– ஆத்மா என்கிற புத்தியானது, யாமதி – தொன்றுண்டோ,
அவித்யாதரு – அஜ்ஞாநமாகிய மரம்‌,
ஸம்பூதி – உண்டாவதற்கு,
பீஜம்‌ – காரணமானது,
ஏதத்த்‌- விதாஸ்திதம்‌ – இப்படி (அஹங்கார மமகாரமென்கிற)இரண்டாக இருக்கிறது. என்கிறபடியே ஆத்மாவல்லாத உடலை ஆத்மாவாக புத்தி பண்ணுவதையே வடிவாக உடைத்‌தாய்க் கர்ம உற்பத்தி காரணமா யிருந்துள்ள அறிவின்மையும்‌,அதன்‌ கார்யமான கர்மங்களும்‌, அதன்‌ கார்யமாய்‌ வரும்‌ உடல்‌ தொடர்பும்‌ எல்லாம்‌ கழி யுண்ணும்‌ என்கிறது. -ஆகையாலே தான்‌ த்வய விவரணமான கத்யத்திலே எம்பெருமானார்‌ நமச் சப்தார்த்தத்தைச்‌ சொல்லி யருளுகிற அளவில்‌ “மநோ வாக்காயை:” என்ற சூர்ணையாலே முக் கரணங்களாலும்‌ செய்யக்‌ கூடாததைச்‌ செய்கை, செய்யக்‌ கூடியதைச்‌ செய்யாமை முதலான அனைத்துக் கர்மங்களும்‌ கழிகையும்‌, “அநாதி கால ப்ரவருத்த” முதலான குர்ணையாலே அறிவின்மை அழிகையும்‌, “மதீயாநாதி” என்றசூர்ணையாலே, உடல்‌ தொடர்பு கழிவும்‌ ப்ராத்தித்தருளினார்‌.

ஆனாலும்‌, இதற்கு முதன்மையான பொருள்‌ கைங்கர்யத்தில்‌ தன்னலங்கழிகையே. அத்தைச்‌ சொல்லி அருளுகிறார்‌ மேல்‌. அதில்‌ முதலில்‌ பகவத் கைங்கர்‌யம்‌ பண்ணும் போது தான்‌ எப்படியாக வேணும்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -181- “உனக்கே நாமாட் செய்வோம்‌ ‘ என்னும்‌ படியே ஆக வேணும்‌ .
கைங்கர்யம்‌ செய்யுமளவில்‌ “உனக்கே நாமாட்செய்வோம்‌” என்று “உனக்கும்‌ எங்களுக்கு மாயிருக்கும்‌ இருப்புத்‌ தவிர்ந்து, உனக்கே உகப்பாக நாங்கள்‌ அடிமை செய்ய வேணும்‌’ ‘என்கிறபடியே ஆண்டானுக்கே உகப்பாக அடிமைத்‌ தொழில்‌ செய்ய வேணுமென்கை.
“தனக்கே யாக எனைக்‌ கொள்ளுமீதே“என்றன்றோ ஆழ்வாரும்‌ அருளிச்‌ செய்தது.

இனி, இந்தக்‌ கைங்கர்யத்துக்குத்‌ தடைகளை அருள்கிறார்‌.
ஸூர்ணை -182-ஸெளந்தர்யமும்‌ அந்தராயம்‌; கீழ்ச்‌ சொன்ன கைங்கர்யமும்‌ அப்படியே .
அவன்‌ திருமேனி அழகும்‌ மனத்‌தைக்‌ கொள்ளை கொள்வதாய்க்‌ கொண்டு கை சோரப்‌ பண்‌ணுகையாலே, கைங்கர்யத்துக்குத்‌ தடை; இந்த நமஸ்ஸுக்குக் கீழே ‘ஆய’ பதமான சதுர்த்தியிற்‌ சொன்ன கைங்கர்யமும்‌, கணவன்‌ மனைவி என்ற இருவரும்‌ ஒருவர்க் கொருவர்‌ செய்து கொள்ளும் பரிமாற்றம்‌ போலே சுயநலத்துக் குறுப்பாகையாலே, எம்பெருமான்‌ முகமலர்த்‌தியே நமக்கு பயன்‌’ என்ற உண்மையான நிலைக்கு மாறாக
சுயநலம்‌ கலந்த அநுபவம்‌ வருவதால்‌ அந்த கைங்கர்யத்துக்கு பெருமானுடைய திருமேனி அழகு தடையாகும்‌
என்கை.

இப்படியாகையால்‌, இந்த விரோதி கழிகைக்குச்‌ செய்யும்‌ ப்ரார்த்தனையும்‌ இடைவிடாமல்‌ நடக்கும்‌ படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -183- கைங்கர்ய ப்ரார்த்தனை போலே, இப்பதத்தில்‌ ப்ரார்த்தனையும்‌ என்றுமுண்டு .
அதாவது, நாராயண பதத்திலிருக்கும்‌ ஆய” என்ற நான்காம்‌ வேற்றுமையில்‌ சொல்லுகிற கைங்கர்ய ப்ராத்தனை எப்போதோ ஒருக்காலுண்டாவது என்பதில்லாமல்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமா போலே, இந்த நமப் பதத்திற்‌ சொல்லுகிற கைங்கர்ய விரோதி கழிகைக்குச்‌ செய்யும்‌ ப்ரார்த்தனையும்‌, இங்கிருக்கும்‌ காலத்தோடு பரமபதத்தில்‌ புகுகிற காலத்தோடு வாசியற எல்லாக் காலத்திலும்‌ இந்த ப்ரார்த்தனை நடக்கக்‌ கடவதாயிருக்குமென்கை.

அஹங்கார மமகாரத்துக்கு விளை நிலமான இந்த உடல் தொடர்பற்று பரம பதம்‌ சென்ற பின்பும்‌, அங்கேயும்‌ தன்‌ அநுபவத்திற்காக பகவதநுபவம்‌ பண்ணுகை என்ற சுயநல புத்தி உண்டாமோ? என்ன, அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -184- “மருந்தே நங்கள்‌ போக மகிழ்ச்‌சிக்கு என்னா நின்றதிறே.
உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும்‌ ஆனந்தத்துக்கு சுய அதுபவமாகிற புத்தி விளையாமல்‌, எங்கள்‌ (பரதந்திர ஸ்வரூபத்தை) உனக்காகவே நாங்கள்‌ இருக்கும்‌ நிலையை அழியாத படி தணிவிக்கும்‌ மருந்தானவனே’ என்று நித்ய ஸுிரிகள்‌ பேசும்‌ பாசுரமாகச்‌சொல்லா நின்றதல்லவா! ஆகையால்‌, பகவானுடைய திருமேனி அழகாலும்‌ அவனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யத்‌தாலும்‌ விளையும்‌ சிறந்த ஆனந்தம்‌, அதைத் தன்னாநந்தத்திற்காக என்று நினைக்கிற சுய நலமாகிற புத்தி அங்கும்‌ உண்டாவதாலே, இப் பதத்தில்‌ ப்ரார்த்தனை என்றும்‌ உண்டென்பது நிச்சயமாயிற்று. ஆகையன்றோ முக்தர்க்குலக்ஷணம்‌ சொல்லுகிற விடத்திலே “நமஇத்யேவ வாதித: (நம: நாங்கள்‌ உனக்குரியவர்கள்‌,எங்களுக்குரியவரன்று ஆகையால்‌, நாங்கள்‌ செய்யும்‌ தொண்டு உனக்குரியதே எங்களுக்கல்ல) என்று பரம பதத்திலுள்ளவர்கள்‌ கூறினார்‌களன்றோ என்றது.
ஆக,
(புருஷகாரத்தையும்‌) சேர்த்து வைத்தலையும்‌,
அந்தப்‌ புருஷகாரம்‌ செய்யும்‌ பிராட்டியும்‌
பெருமானும்‌ என்றும்‌ பிரியாது சேர்ந்திருக்கையும்‌,
பெருமான்‌, சேதநன்‌ அபராதங்கண்டு சீற்றம்‌ கொள்ளும்‌போது பிராட்டியால்‌ கிளப்பி விடப்பட்ட வாத்ஸல்யம்‌ முதலான குணங்களையும்‌,
அந்தக்‌ குணங்களுக்கு விளக்கமான திருமேனியையும்‌, குணங்களோடும்‌, திருமேனியோடும்‌ கூடி இருக்கிற எம்பெருமானுடைய உபாயத்தையும்‌, அவ்வுபாயத்தை வரிப்பதையும்‌,
அதன்‌ பலமான கைங்கர்யத்தை ஏற்பது
ஒரு திவ்ய தம்பதிகள்‌ என்னுமிடமும்‌,
அவ் வஸ்துவினுடைய ஸர்வ சேஷித்வத்தையும்‌,
அவ் விஷயத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌
கைங்கர்ய விரோதி கழிகையையும்‌
சொல்லிற்றாயிற்று
என்று த்வய ப்ரகரணத்தை முற்றுவிக்கிறார்‌

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ திருமந்த்ர ப்ரகரணம்‌-

November 16, 2025

ஸ்ரீ முமுஷுப்படி – மோக்ஷ்த்திலே இச்சை யுடையவன்‌ – படி-நிலை. அதாவது, நிரதிஸய ஆநந்தத்தைத்‌ தருகிற மோக்ஷத்திலே ஆசை யுடையவன்‌-இதில்‌, தத்வ. ஹித புருஷார்த்தங்களை விளக்கப்படுகிற மூன்று மந்த்ரங்களிலும்‌, ஒவ்வொன்றையும்‌ ஒவ்வொரு மந்த்ரமும்‌ ப்ரதாநமாகச்‌ சொல்லும்‌. அதாவது, ‘தத்வம்‌’ என்ற ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ பரமாத்ம ஸ்வரூபத்தையும்‌ நன்றாக விளக்குகிறது திருமந்த்ரம்‌ என்ற அஷ்டாக்ஷர மஹாமந்த்ரம்‌. ‘ஹிதம்‌’ என்ற உபாயத்தை நன்றாக விளக்குகிறது கீதையின்‌ சரம ச்லோகம்‌. ‘புருஷார்த்‌தம்‌” என்ற பயனை நன்றாக விளக்குகிறது த்வயம்‌ என்ற
உபநிஷத் மந்த்ரம்‌
. இவற்றை விரிவாக அங்காங்கே இந்நூலில்‌ விளக்கப்பட்டுள்ளது.

த்வயம்‌’ என்ற மந்திரத்தில்‌, “ஸ்ரீமந்‌ நாராயண சரணெள” என்ற பதத்தில்‌ ‘ஸ்ரீமந்‌ நாராயண’ என்றால்‌, பெரிய பிராட்டியோடு சேர்ந்துள்ள நாராயணன்‌ என்று பொருளாகும்‌. இப்படி, பெரிய பிராட்டியார்‌ நாராயணனோடு சேர்ந்திருப்பதாலே “ஸ்ரீமத்‌ சப்தத்தாலே
பத்நீ விசிஷ்டத்துக்கும்‌ உபாயத்வம்‌ உண்டு”
அதாவது, பெரிய பிராட்டிக்கும்‌ உபாயத்வம்‌ உண்டு என்று இன்றுள்ள நவீன ஸம்ப்ரதாயஸ்தர்கள்‌ வாதிடுகிறார்கள்‌. –அவர்கள்‌ வாதம்‌ நிலை நிற்காது எங்கனே யென்னில்‌? கேண்மின்‌, பெரிய பிராட்டியோடு கூடி யிருக்கும்‌ நிலையைக்‌ கொண்டு பிராட்டிக்கு உபாயத்வம்‌ கற்பித்தால்‌, “ஜகந்நாதம்‌ ப்ரபத்யேத்‌” என்ற இடத்தில்‌, ஜகத்தும்‌ எம்பெருமானும்‌ சேர்த்திருப்பதால்‌ அந்த ஐகத்துக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டி வரும்‌. பிராட்டி அவனை விட்டு பிரியாதாப் போலே -“ஐகத்‌ ஸர்வம்‌ சரீரந்தே‘ எல்லா உலகமும்‌ அவனுக்கு சரீரமா யிருப்பதாலே ஐகத்தும்‌ அவனை விட்டுப்‌ பிரியாது. அதே போல “யஸ்ய ஆத்மா சரீரம்‌, யஸ்ய ப்ருதிவீ சரீரம்‌” என்ற இடங்களிலும்‌ ஸகல ஆத்மாக்களோடு எம்பெருமான்‌ கூடி யிருப்பதாலே ஆத்மாவுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டி வரும்‌. அசேதனத்தோடும்‌ கூடி யிருக்கையாலே அந்த அசேதனத்துக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டி வரும்‌. எனவே, அவர்கள்‌ வாதம்‌ அசட்டுத்தனமான வாதம்‌ அறிவாளிகள்‌ யாரும்‌ இத்த வாதத்தை ஏற்க மாட்டார்கள்‌.

எம்பெருமானோடு பிராட்டி கூடி யிருப்பது எதற்‌காக யென்னில்‌? “ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ சேதனனுடைய அபராதத்தையும்‌ கண்டு அகல மாட்டாள்‌” என்பது லோகாசார்யர்‌ ஸ்ரீஸூக்தி-த்வயத்தில்‌, ‘சரணெள” சப்தத்தைக்‌ கொண்டு “பெருமானுடைய திருவடிகளுக்கு உபாயத்வம்‌ போலே பிராட்டியினுடைய திருவடிகளுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டும்‌” என்று வாதம்‌ செய்கிறார்கள்‌ இந்த நவீன ஸம்ப்ரதாயத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌-வடமொழியில்‌ ஏக வசநம்‌, த்வி வசநம்‌, பஹு வசநம்‌ முறையே ஒருமை, இருமை, பன்மை என்று இலக்கணம்‌. ஆனால்‌, தமிழில்‌ ஒருமை, பன்மை தான்‌-இருமை கிடையாது. அந்த ப்ரகாரம்‌ பார்த்தால்‌ இங்கு “சரணெள” என்பதற்கு நாராயணனுடைய இரண்டு திருவடிகள்‌ என்று அர்த்தம்‌ கொள்ள வேண்டும்‌.
பிராட்டியினுடைய இரண்டு திருவடிகளையும்‌ சேர்த்தால்‌ பஹு வசனமாக (பன்மையாக) வந்திருக்க வேண்டும்‌. -அப்படியில்லாமல்‌ ‘சரணெள’ என்பதால்‌ இரண்‌டு திருவடிகள்‌ என்ற அர்த்தத்தில்‌ ப்ரயோகம்‌ வந்திருக்கிறது.-இந்த த்விவசநம்‌ இருமை -இரண்டுக்கு மேல்‌ மற்றொன்று வருவதற்கு ஸஹிக்காதது. சரண: என்று ஜாத்யேக வசநமாகக்‌ கொண்டு (ஜாதி யொருமையாகக்‌ கொண்டு) வந்திருந்தால்‌ அவளுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ளலாம்‌.
அல்லது “சரணாந்‌” என்று பன்மையில்‌ ப்ரயோகம்‌ வந்திருந்திருந்தாலும்‌ பிராட்டி திருவடியும்‌ -நான்காகச் சேர்த்து -அவளுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ளலாம்‌.
-அப்படியில்லாமல்‌ “சரணெள” என்று த்வி வசநம்‌ வந்திருப்பதாலே எம்பெருமான்‌ ஒருவனுக்குத் தான்‌ உபயத்‌வம்‌ உண்டு. பிராட்டிக்கு புருஷகாரத்வமே உண்டு என்று எம்பெருமான்‌ தானே தன்‌ சோதி வாய் திறந்து ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ அருளிச்‌ செய்துள்ளான்‌-அகிஞ்சந்யைக சரணா: கேசித் பாக்யாதிகா: புந: மத்‌ பதாம் போருஹத்‌-வந்த்வம்‌ ப்ரபத்ய ப்ரீத மாநஸா: –இந்த ப்ரமாணத்தில்‌, “மத்பதாம்‌ போருஹ த்வந்த்வம்‌” – (எனது இரண்டு திருவடித் தாமரைகளையே) என்று த்வி வசந ப்ரயோகம்‌ பண்ணி யிருக்கிறான்‌ எம்பெருமான்‌. ஆகவே, சரணெள-சப்தத்திற்கு எம்பெருமான்‌ ஒருவனுக்குத் தான்‌ உபாயத்வம்‌ உண்டு பிராட்டிக்கில்லை என்று ஏற்படுகிறது.

“மத்‌ ப்ராப்திம்‌ ப்ரதி ஐந்துநாம்‌ ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்‌திஷ்டா பரமர்ஷிபி: மமாபிச மதம்‌ ஹ்யேதந்‌ நாந்யதா லக்ஷணம்‌ பவேத்‌” பிறவியாகிற படு குழியில்‌ விழுகிற இம்மக்களுக்கு, என்னை அடையுமிடத்தில்‌ லக்ஷ்மி தேவியானவள்‌ புருஷகார மாயிருக்கும்‌ தன்மையில்‌ பரம ருஷிகளாலே வரம்பு கட்டப்‌் பட்டிருக்கிறாள்‌; எனக்கும்‌ அதுவே இஷ்டம்‌.-இது தவிர வேறான இலக்கணம்‌ அவளுக்கில்லை என்று ஸ்ரீய: பதியான எம்பெருமானே கூறியிருப்பதால்‌ இதற்கு- மேலே ஒன்று கற்பிப்பது ப்ராமணங்களுக்கு முரணானது.

“ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம் பச்யேந்‌ மதுஸூதந: ஸாத்விகஸ்‌ ஸ து விஜற்னோயஸ்‌ ஸவை மோக்ஷார்த்தசிந்தக:” அதாவது, மதுஸூதனான எம்பெருமான் யவனை ஜாயமாந காலத்தில்‌ கடாஷிக்கிறானோ அந்த புருஷன் ஸாத்‌விக குணத்தைப்‌ பெற்று ஜ்ஞானம்‌ உள்ளவனாகி மோக்ஷ விஷயத்தைப்‌ பற்றியே சிந்திக்கிறான்‌ என்று கூறப்படுகிறது. -எனவே, ஒருவனுக்கு பகவானுடைய பூர்ணமான நல்லருள்‌ உண்டாக வேண்டுமானால்‌, அவன்‌ ஆசாரியன்‌ திருவடியை அடைந்து ஐந்து தீக்ஷைகளைப்‌ பெற்று அதனால்‌ ரஜஸ்‌, தமஸ்ஸூக்கள்‌ தலை மடிந்து அவன்‌ முறையாக இந் நூலில்‌-முமுஷுப்படியில் – கூறப்பட்ட விஷயத்தைக்‌ கேட்டு முழுப் பயனையும்‌ அடைவான்‌-
“ஆத்ம குணங்களில்‌ ப்ரதாநம்‌ – ஸமமும்‌, தமமும்‌.” -ஸ்ரீவ.- 97.
இவை இரண்டு முண்டானால்‌ ஆசாரியன்‌ கைபுகுரும்‌; ஆசார்யன்‌ கைபுகுந்தவாறே
திருமந்த்ரம்‌ கைபுகுரும்‌; திருமந்த்ரம்‌ கைபுகுந்தவாறே ஈச்வரன்‌ கைபுகுரும்‌;
ஈச்வரன்‌ கைபுகுந்தவாறே வைகுந்த மாநகர்‌ மற்றது கையதுவே’ என்கிறபடியே ப்ராப்ய பூமி கைபுகுரும்‌.
” -ஸ்ரீவ.-98.

காருணிகனான ஸர்வேஸ்வரன்‌ இவர்கள் மேல்‌ கருணை கரை புரண்டு இவர்களை மீட்கும்‌ விரகு யாதோ என்று பார்த்து, இவர்களை மீட்கும்‌ வழி இது வன்றி வேறில்லை என அறுதி யிட்டு பதரிகாச்ரமத்தில்‌ தானே ஆசார்யனாகவும்‌ சிஷ்யனாகவும்‌ நின்று திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை வெளியிட்டான்‌. -த்வயத்தை தன்‌ தேவியான பெரிய பிராட்டிக்கு விஷ்ணு லோகத்தில்‌ உபதேசித்தான்‌. முடிந்த உபாயமான- சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்து அதை இவ் வுலகவர்களுக்கு உதவும்படி செய்தான்‌.-திருமந்த்ரத்தின்‌ விரிவே மற்றைய இரண்டு மந்த்ரங்களும்‌ என முன்னோர்‌ அருள்வர்‌.-மக்கள்‌ உய்வுபேற்றுக்குரிய பொருளனைத்தும்‌ திருமந்த்ரத்திலேயே உண்டென்பார்‌.

ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது

லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –

——

ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்

லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம

——–

பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்

லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்

—-

ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே

——–

ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்

———-

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –

————-

ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –

கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —

முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்

————–

(ஸ்ரீயப்பதியான தனக்கு லோக ரக்ஷணத்தில் உண்டான மஹா ஆர்த்தி தீர்ந்து திருப்தி பெறுகைக்காக அவதரிப்பித்து அருள திரு அவதரித்தவராய் -திரு அனந்தாழ்வானுடைய திரு அவதார விசேஷமான அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளின ரஹஸ்ய த்ரயத்தினுடைய சம்பிரதாய ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தம்முடைய பரம கிருபையாலே செய்து அருளின ஸ்ரீ முமுஷுப்படி என்னும் கிரந்தத்தின் வாக்ய அர்த்தங்களை அத்யந்தம் மந்த மத்தியிலும் அநாயாசேன அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பஞ்ச லக்ஷண லஷிதமான வியாக்யானம் செய்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி முமுஷுப்படிக்கு மூலமான ரஹஸ்யத் த்ரயத்தினுடைய அவதாரண க்ரமத்தைஉபோத்காத சங்கதியாக முந்துற இந்த ஸூர்ணையாலே அருளிச் செய்கிறார் )

——–

ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —

(ஸ்ரீ யபதியாகை யாவது -ஸர்வ மங்களாவஹையாய் -ஸர்வ உத்கர்ஷாவஹையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருக்கை
ஸ்ரீ வைகுண்ட நிகேதனாகை யாவது -ஸ்ரீயப்பதித்வத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தையும் நகர விசேஷத்தையும் இருப்பிடமாக உடையனாய் இருக்கை

நித்ய முக்த அனுபாவ்யனாகை யாவது -அபரிச்சின்ன ஞானாதி குணகரான நித்ய முக்தராலும் ஸதா பஸ்யந்திப்படியே அனுபாவ்யனாய் இருக்கை
நிரதிசய ஆனந்த யுக்தனாகை யாவது -ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே நிரதிசய ஆனந்த குண யுக்தனாய் இருக்கை
சர்வேஸ்வரன் -ஆகையாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் ஈஸ்வரனாய் இருக்கை )

——–

அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –

———-

(அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவிக்கை யாவது -அவர்கள் ஸதா பஸ்யந்தி ப்படியே அனுபவிக்கிறாப்போலே
பகவத் கடாக்ஷத்தாலே ஸம்ஸாரம் கழிந்து முக்தராய் -அபரிச்சின்ன ஞானாதி குணகராய் அனுபவிக்கை
தன்னை -ஸர்வ சேஷியான தன்னை
கைங்கர்யமாவது -பகவன் முக விலாஸ ஹேதுவான வ்ருத்தி விசேஷம்
நித்ய கைங்கர்ய ரசராய்-என்றது -அனுபவ ஜெனித ப்ரீதி காரித நித்ய கைங்கர்யத்தில் ப்ரீதி உடையவர்களாய் என்றபடி
வாழுகையாவது -ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஸூகமாக வர்த்திக்கை
பிராப்தி யாவது -சேஷ சேஷி பாவ சம்பந்தம்
அத்தை இழந்து என்றது -அந்த சேஷ சேஷி பாவ ஞானத்தை இழந்தது என்றபடி
அசந்நேவ-என்கிறபடியே-என்றது -அசந்நேவ-என்ற ஸ்ருதி அர்த்தத்தின் படியே என்றபடி
அசத் கல்பராய் கிடக்கிற என்றது -அஸத் ஸப்த வாஸ்ய மானத்தோடு கிஞ்சித் ந்யூனமாக ஸத்ருசராய் இருக்கிற என்றபடி
சம்சார சேதனர் உடைய இழவை -என்றது அநாதி அசித் சம்பந்தத்தாலே ப்ரவாஹ ரூபேண வருகிற
அவித்யா கர்ம வாஸனா ருசி விவசராய் ஜென்ம மரணாதி கிலேச பாகிகளாய்த் திரிகிற பத்த சேதனருடைய இழவை என்றபடி
அனுசந்திக்கை யாவது -இடைவிடாமல் எண்ணுகை
அத்யந்த வியாகுல சித்தனாய் -அந்தம் இல்லாத வ்யாகுல ஹ்ருதனாய் -என்றபடி )

———

இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –

——-

(இவர்கள் -கீழ்ச் சொன்ன ஸம்ஸாரி சேதனர்
கரணம் -ஸ்ரோத்ரம் முதலான கரணங்கள்
களேபரங்கள் -கரணங்களுக்கு ஆஸ்ரயமான சரீரங்கள்
இறகு ஒடிந்த பஷி போலே–விஷ்ணு பத ப்ராப்தி ஸாதனங்களான இறகுகள் ஒடிந்த பக்ஷி போலே என்றபடி
கிடக்கிற தசையிலே -மூல ப்ரகாராதிகளிலே கிடக்கிற தசையில்
கரணாதிகளைக் கொடுத்து -பகவத் ப்ராப்தி உபகரணங்களான காத்ரங்களைச் சொல்கிறது
அவற்றைக் கொண்டு -தன்னை ஆஸ்ரயிக்கைக்குக் கொடுத்த அந்தக் கரணாதிகளைக் கொண்டு
வியபிசரியாதே -அந்தக் கரணாதிகளைக் கொண்டு அந்யத்ர ஸஞ்சரியாதே
தன்னை ஆஸ்ரயித்து -அவற்றைக் கொண்டு தன்னை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிகைக்கு உடலாக -உத்க்ருஷ்டமாக ஜீவிக்கைக்கு உபாயமாக )

——–

அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –

——–

(அபுருஷேயமாய்-புருஷனால் செய்யப்படாதது
நித்ய நிர் தோஷமாய் -நித்யமாயும் நிர்தோஷமாயும்
ஸ்வத பிரமாணமான -ஸாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தங்களுக்குப் பிரமாணமாகத் தன்னை அபேக்ஷிக்குமா போலே
தன்னில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு ப்ரமாணமாகத் தான் ஒன்றுமே அபேஷியாமல் தனக்குத் தானே ப்ரமாணமாய் இருக்கை
வேதத்தையும் -புபுதஸூ க்களாய் ஆஸ்திகராய் இருப்பவருக்கு ஸ்வ அர்த்த ப்ரகாசமாய் இருக்கையாலே வேதம் என்கிறது
தத் உப ப்ரும்ஹணங்களான-அந்த வேதார்த்த வ்யக்தீ கரணங்களான
ஸ்ம்ருதி -மன்வாதி ஸ்ம்ருதிகள்
இதிகாச -மஹாபாரத ராமாயணங்கள்
புராணங்களையும் -விஷ்ணு புராணாதிகள்
ப்ரவர்ப்பித்த இடத்திலும் -மந்த மதிகளாலே வேதார்த்தம் அறுதி இடப் போகாது என்று மஹா மதிகளான
பராசர பாராசார்ய வால்மீகி ப்ரப்ருதி மஹரிஷிகளைக் கொண்டு ப்ரவர்த்திப்பித்த இடத்திலும் -_

——-

அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-

——–

(அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு -ஸ உப ப்ரஹ்மணமான அந்த வேத ஸாஸ்த்ர அப்யாசத்துக்கு
அநேக யோக்யதை வேண்டுகையாலே -நியமம் பஹு வேதந சாமர்த்தியம் தீர்க்க ஆயுஷ்யம் முதலான அநேக யோக்யதை அவஸ்ய அபேக்ஷிதம் ஆகையாலே
அவ்வழியாலே -அநேக யோக்யதா சா பேஷமான அந்த மார்க்கத்தாலே
ஞானம் பிறந்து -ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி -உஜ்ஜீவிக்கை துர்லபமாய் இருக்கும் பிரகாரத்தைத் திரு உள்ளத்திலே விசாரித்து
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யங்களையும்
ஸூக்ரகமாக -அநாயாசமாக
இவர்கள் -பரிமித கால வர்த்திகளாய் -அல்பஞ்ஞராய் அல்ப ஸக்தர்களாய் இருக்கிற ஸம்ஸார சேதனர்கள்
அறியலாம் படி பண்ண வேண்டும் என்று -அறியும்படியாக
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும் -இவற்றினுடைய யதாவஸ்தித வேஷத்தைப் ப்ரதிபாதியா நிற்கிற
ஸ்வயமேவ –ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளைப் போலே அந்யரை இட்டுப் ப்ரவர்த்திப்பியாதே ஸ்வயமேவ என்றபடி
ஆசார்யனாய் நின்று -ஆச்சார்ய ரூபேண அவதரித்து
பிரகாசிப்பித்து அருளினான்– ஸர்வ ஸ்லாக்யமாகப் பண்ணினான் )

——–

அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –

(அதில்-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்
ஸ்வ மகிஷி-என்றது பிராட்டிமாரில் பிரதானை என்றபடி –
த்வயம் என்கிறது இரண்டு வாக்யமாய் இருக்கையாலே
சரம ஸ்லோகம் என்கிறது சரமமான ஸ்லோகம் என்று அன்று -சரமமான உபாயத்தை ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகம் என்கிறது
ஆகையால் -ஸர்வேஸ்வரன் ஸ்வயமேவ ஆச்சார்யனாய் நின்று ரஹஸ்ய த்ரயத்தையும்
தத் தத் விஷயங்களில் பிரகாசிப்பித்து அருளினான் என்கையாலே இறே -இவ்வர்த்தம் பிரசித்தம் அன்றோ என்றபடி )

(இவ்வளவாய் ரஹஸ்ய த்ரயத்தினுடைய அவதரண கிரமத்தை அருளிச் செய்து
இனி தாம் வியாக்யானம் செய்து அருளும் முமுஷுப்படி கிரந்த அவதரண கிராமத்தை அருளிச் செய்கிறார் )

இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

——–

(இனி -இப்போது என்றபடி
இந்த ரகஸ்ய த்ரயம் தான் -ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினை ரஹஸ்யத் த்ரயம் தான்
சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் போலே க்ரஹண தாரணாதிகளுக்கு வருத்தமாம் படி பல ஸப்தங்களாய் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தும்
இருபத்தைந்து எழுத்தும்
முப்பத்து இரண்டு எழுத்துமாக
அநாயாசேன க்ரஹிக்கும் படி இருந்த போதிலும்
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் -ஸ்வ புத்தி பலத்தாலும் ஸாஸ்த்ர அப்யாஸத்தாலும் அறியத்தக்கது அன்றிக்கே ஆச்சார்ய உபதேசத்தால் அறியத்தக்கத்து ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் -உபதேஸ கம்யமான அந்த ரஹஸ்யத்ரய அர்த்தத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அறிந்தே -என்ற அவதாரணத்தாலே அறியாத போது உஜ்ஜீவனம் இல்லை என்றதாயிற்று
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் -அந்த ரஹஸ்யத்ரய அர்த்தம் தன்னிலும்
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை -நம்மாழ்வார் தொடக்கமான பூர்வாச்சார்யர்களுடைய உபதேஸ பரம்பரையாகத் தமக்குப் பிராப்தமான விசேஷ அர்த்தங்களை
சர்வருக்கும் -ஸ்த்ரீ பாலாதி சர்வருக்கும்
ஸூக்ரமாகவும் -அநாயாசேன க்ரஹிக்கும் படியாகவும்
ஸூவ்யக்தமாகவும் -மிகவும் அர்த்த ப்ரகாசகமாகவும்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் -தம்முடைய பரம கிருபையாலே -ரஹஸ் யத்ரய கிருபையிலும் அதிசயிதமான கிருபையால்
இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –வியாக்யானமான இப் பிரபந்த ஸ்ரேஷ்டத்தாலே -)

———–

(இப் பிரபந்த முகேன-என்றதாலே -இதற்கு முன்பே சில பிரபந்தங்கள் அருளிச் செய்ததாகத் தோன்றுகையாலே
அவற்றை உதாஹரித்து -அவற்றுக்கு உண்டான தோஷத்தையும்
அவற்றைக் காட்டில் இதற்கு உண்டான வை லக்ஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் மேல் )

—————

முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி  இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –
த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –

ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .

(முன்பே -இப்பிரபந்தம் அருளிச் செய்வதற்கு முன்பே
அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் -பெண்ணுக்கும் பேதைக்கும் விசதமாக அர்த்த பிரகாசம் ஆகாமையாலும்
அதி விஸ்ருதம் ஆகையாலும் -இன்ன இடத்தில் இன்ன அர்த்தம் சொல்லிற்று என்று அறியப் போகாமையாலும்
உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -அதி ஸங்க்ரஹமாயும் அதி விஸ்தாரமாயும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
பேதை -அறிவில்லா சபலை
எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும்-பண்டிதர்களுக்கும் பரிக்ரஹிக்கத் தக்கது )

திருமகள்‌ கேள்வனாய்‌, ஸ்ரீவைகுண்டத்தை இருப்‌பிடமாக உள்ளவனாய்‌, நித்திய முக்தர்களால்‌ ஸேவித்தின்‌புறத் தக்கவனாய்‌, அளவிறந்த ஆநந்தத்தோடு கூடி இருக்கிற எல்லாவற்றுக்கும்‌ மேம்பட்ட இறைவன்‌. இவ்வுலகவர்‌ தன்னை அந்த பரமபதத்திலிருக்கும்‌ நித்திய முக்தரோடு கண்டுகந்து நிரந்தரமாக வாழ்த்தி வாழுகைக்கு உரிமை இருக்கச்‌ செய்தேயும்‌ அத்தை இழந்து (அஸந்நேவ) அசத்தைப் போல இருந்தும்‌ இல்லை என்னலாம்படி. அசத்துக்களாய்க்‌ கிடக்கிற ஸம்ஸாரி சேதநர்களுடைய இழவைக்‌- குறித்து, மிக மிகத் துன்புற்ற மனத்தினை யுடைய இறைவன்‌, இவர்கள்‌ உடல்‌ ஐம்பொறிகளை இழந்து இறகொடிந்த பறவை போலே கிடக்கிற நிலையிலே, உடல்‌ பொறி முதலானவற்றைக்‌ கொடுத்து அவற்றைக்‌ கொண்டு புறம்‌ போகாதே தன்னை யடைந்து உய்வு பெறுகைக்கு ஏதுவாக, ஒரு (சேதநனால்‌) மனிதனால்‌ இயற்றப்படாததும்‌, அழிவற்றதும்‌, குறையில்லாததும்‌ தனக்குத் தானே சான்றாய்‌ இருக்கிற வேதங்களையும்‌, இதன்‌. வழி நூல்களாம்‌ இதிஹாஸ புராணாதிகளையும்‌ தோற்றுவித்த விடத்திலும்‌, இவைகளைப்‌ பயில்வதற்கு அநேக தகுதிகள்‌ வேண்டுகையாலே, அந்த சாஸ்‌த்‌திர நூல் வழியாலே அறிவுண்டாகி மக்கள்‌ உய்வு பெறுகை அரிதாயிருக்கிற படியைத்‌ திருவுள்ளம்‌ பற்றி அனைத்துச்‌ சாஸ்த்திர ஸாரார்த்தங்களை தெளிய சுலபமாக அறிந்து உய்யும்படி செய்ய வேணுமென்று, தத்துவம்‌ உபாயம்‌ பயன்‌ இவைகளை உள்ளவாறு காட்டுமதான மூன்று மந்திரங்களையும்‌ தானே ஆசார்யனாய்‌ நின்று வெளிப்படுத்தினான்‌.அதில்‌, திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே தன்‌ அம்ஸமாகிய ‘நரன்‌ மூலமாக வெளிப் படுத்தினான்‌. த்வயத்தை தன்‌ தேவியான லக்ஷ்மீ மூலமாக ஸ்ரீவிஷ்ணு லோகத்தில்‌ வெளிப் படுத்தினான்‌. சரம ஸ்லோகத்தை திருத்தேர்‌ தட்டிலே தன்‌ அடியவனான அர்ஜுநன்‌ மூலமாக வெளிப்படுத்தினான்‌. ஆகையால் தான்‌, “லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்‌” என்று குருபரம்பராதியிலே இறைவனைச்‌ சொல்லுகிறது. இனி,மந்த்ரங்கள்‌ மூன்றும்‌ சப்தம்‌ எளிதா யிருந்ததே யாகிலும்‌, இதன்‌ பொருளை அறிந்தே எல்லோர்க்கும்‌ உய்ய வேண்டுகையாலும்‌, இந்த மூன்று மந்த்ரங்களிலும்‌ பூர்வாசார்யர்களுடைய உபதேச பரம்பரையாக வந்த பொருட் சிறப்புக்களை அனைவர்க்கும்‌ சுலபமாயும்‌ தெளிவாயும்‌ அறிய, பிள்ளை லோகாசார்யர்‌ தம் மேலான கருணையாலே இந்த நூல்‌ மூலமாக அருளிச்‌ செய்கிறார்‌.முன்பே இந்த மந்த்ரங்களின்‌ விஷயமாக மூன்று நூல்கள்‌ அருளி இருக்கச்‌ செய்தேயும்‌, இதில்‌ “யாத்ருச்சிகப்‌படி” மிகச்‌ சுருக்கமாகையாலும்‌, “பரந்தபடி” மிக விரிவாகையாலும்‌ “ஸ்ரீய:பதிப்படி” இவ் விரண்டு குறைகளும்‌ இல்லையே யாகிலும்‌, வடமொழி மிகுத்திருக்கையால்‌ எளிதாக அனைவரும்‌ பயில்வதற் கில்லாமையால்‌ இந்த மூன்று குறைகளும்‌ இல்லாத படியாக இன்னமும்‌ ஒரு நூல்‌ இயற்ற வேண்டுமென்று திருவுள்ளம்‌ பற்றி எல்லாவற்றுக்கும்‌ பின்பாக இந்த நூலிட்டருளினார்‌.அதனால் தான்‌, மற்ற ப்ரபந்தங்கள்‌ இருக்க இதை எல்லோரும்‌ விரும்பிக் கற்பது. இன்னமும்‌ முந்திய ப்ரபந்‌தங்களில்‌ சொல்லாத சிறந்த பொருள்களும்‌ இதிலே சொல்லி இருக்கையாலே, எல்லோர்க்கும்‌ இதுவே விரும்பிக் கற்பதற்கு ஏற்றதாயிருக்கும்‌.
வ்யாக்யான அவதாரிகையின்‌ தெளிவுரை முற்றிற்று

ஸூத்ரம்‌ .1 . முமுஷுவுக்கு அறிய வேண்‌டும்‌ ரஹஸ்யம்‌ மூன்று

மோக்ஷத்திலே இச்சை உடையவனுக்கு முமுஷு என்று பெயர்‌. முமுஷு என்ற சொல்‌ “மூச்ல்‌ மோக்ஷணே” என்ற தாதுவாகிய வினைப் பகுதி யடியாகப்‌ பிறந்த சொல்‌. இது, மரணம்‌ விடுதலை நித்தியாநந்த பர வீடு என்ற மூன்று பொருள்களையுமுடைய இச்சொல்‌, இங்கே
விடுதலை என்ற பொருளிலே வந்து பிறப்பு இறப்பாகிய ஸம்ஸார விமோசநத்தில்‌ ஆசை பிறந்தவனுக்கு முமுக்ஷு என்ற பொருளைக்‌ காட்டும்‌. தன்‌ ஆத்மாவை தான்‌ அடைய ஆசை யுடைய கைவல்ய நிஷ்டனுக்கும்‌ முமுஷுத்வம்‌ உண்டானாலும்‌, இவ் விடத்தில்‌ அவனைக்‌ குறிப்பிடவில்லை. அவனுக்கு மூன்று ரஹஸ்யங்களை அறிய வேண்டிய விருப்பம்‌ இல்லை யல்லவா. ப்ரணவம்‌ என்ற ஓரு மந்த்ரம்‌ போதும்‌ அவனுக்கு. ஆகையால்‌, இவர்‌ முமுஷு என்றது பகவானை அடைவதில்‌ ஆசையும்‌ பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அடைய இச்சையும்‌ உடையவனை முமுஷு என்கிறார்‌.

இப்படி, பகவானை அடைவதில்‌ ஆசையும்‌ பிறப்பிலிருந்து விடுதலையிலிச்சை யுமுடையவனுக்கு அவசியம்‌ அறிய வேண்டியது, தன்‌ இயல்பையும்‌, அதற்குத்‌ தகுந்த உபாயத்தை (வழியையும்‌, அந்த உபாயத்தால்‌ ஸாதிக்கக்‌ கூடிய பயனையும்‌ இந்த மூன்று மந்த்ர ரஹஸ்யங்களிலுமே உள்ளதை உள்ளபடி சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, இம் மூன்று ரஹஸ்ய மந்த்ரங்களுமே இவ் வதிகாரி அறியவேண்டுவ தொன்றாகாகையாலே “அறிய வேண்டும்‌ ரஹஸ்யம்‌ மூன்றென்கிறார்‌.
“ஸ்வ ஜ்ஞாநம்‌ ப்ராபக ஜ்ஞாநம்‌ ப்ராப்ய ஜ்ஞாநம்‌ முமுக்ஷுபி : ஜஞாந த்ரய முபாதேயம்‌ ஏததந்யந்ந கிஞ்சந”
ஸ்வ ஜ்ஞாதம்‌
– தன்னைப் பற்றிய அறிவும்‌, ப்ராபகஜ்‌ஞாநம்‌ – உபாயத்தைப்‌ பற்றிய அறிவும்‌,
ப்ராப்ய ஜ்ஞாநம்‌ – பயனைப் பற்றிய அறிவும்‌.
ஜ்ஞாந த்ரயம்‌ – மூன்று வகை அறிவும்‌, முமுக்ஷுபி : – முமுக்ஷாக்களால்‌. உபாதேயம்‌ – கொள்ளத்தக்கது.
ஏதத்‌ அந்யந்‌ – இதை விட வேறொன்று.
கிஞ்சந – கொஞ்சமும்‌.
– வேண்டியதில்லை. என்று -சொல்லப்பட்ட தன்றோ.

ரஹஸ்யம்‌ மூன்று என்று இவர்‌ குறிப்பிடுவது, -திருமந்த்ரமூம்‌ த்வயமும்‌ சரம ஸ்லோகமும்‌ ஆகிய இவற்றை மேலே நன்றாக விளக்கிக்‌ கூறப் போகிறார்‌ என்பதை அறியலாம்‌. இவற்றை ரஹஸ்யங்களென்கிறது – எல்லா வேதங்களின்‌ அர்த்தங்களை சொல்லப் படுவதாலும்‌ மறைக்கப்பட வேண்டியவற்றில்‌ மேம்பட்ட தாகையாலே. ஆக இந்த ஸூத்ர வாக்கியத்தால்‌, வீடு பேற்றுக்கு தகுதி யுடைய அதிகாரியைப்‌ பற்றியும்‌ அவன்‌ அறிய வேண்டிய அர்த்தத்தின்‌ சிறப்பையும்‌ நிரூபணம்‌ செய்து முடிக்கிறார்‌.

இனி, அந்த மூன்று ரஹஸ்யங்களிலும்‌ முதல்‌ ரஹஸ்யம்‌ எது? என்ற கேள்விக்கு விடை கூறுகிறார்‌.
ஸூர்ணை – 2 அதில்‌ ப்ரதம ரஹஸ்யம்‌ – திருமந்த்ரம்‌

அந்த மூன்று ரஹஸ்யத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு இந்த அதிகாரிக்கு முதற்கண்‌ அறிய வேண்டிய ரஹஸ்யம்‌, ஸ்வரூபத்தை உண்மை யாம்‌ வகையில்‌ சொல்லுமதாய்‌, . விட வேண்டிய வற்றையும்‌ பற்ற வேண்டியவற்றின்‌ வேறுபாடுகளை அறிவித்து முழுமையான ஜ்ஞாநத்தை உண்டாக்குவதில்‌ திரு மந்த்ரம்‌ சிறந்தது. (அநந்யார்ஹ சேஷத்வம்‌) பகவானுக்கே அற்றுத் தீர்ந்த அடிமை, (அநந்ய சரணத்வம்‌) மற்றொருவரை தஞ்சமாக பற்றாது அவனையே தஞ்சமென்று பற்றுகை, (அநந்ய போக்யத்வம்‌ அவனையே அநுபவிக்கிற சுவைப் பொருளாகக்‌ கொள்ளுகையாகிற இன்றியமையாத மூன்று தன்மைகளையும்‌ சொல்லுகையாலே (சேதநனுடைய) மனிதனுடைய இயல்பை உண்மையாம்‌ வகையில்‌ சொல்லுமதாய்‌ இவற்றுக்குப்‌ பொருந்தியதான விட வேண்டிய, பற்ற வேண்டிய வேறுபாட்டை தெளியச் சொல்லுமதா யிருந்துள்ள இந்த மந்த்ரத்தாலே தோற்றுவிக்கப்பட்ட தன்மை யுடையவனுக் கன்றோ மற்ற மந்திரங்களிரண்‌டாலும்‌ சொல்லப்படுகிற உபாய உபேயங்களில்‌ வேட்கை யுண்டாவது. ஆகையால்‌ (ஸ்வரூபத்தினுடைய) ஆத்மாவினுடைய இயல்பை சொல்லுகிற திருமந்த்ரம்‌ முதல்‌ மந்திர மென்‌னக்‌ குறையில்லை.

இன்னமும்‌, ப்ரணவத்தை நமோ நாராயணாய என்கிற பதம்‌ விரித்துச்‌ சொல்வது போலே, நமோ நாராயணாய பதத்துக்கு த்வயம்‌ விவரணமாய்‌, த்வயத்துக்குச்‌ சரம ஸ்லோகம்‌ விவரணமா யன்றோ இருப்பது. அந்த ந்யாயத்தாலும்‌ இதனுடைய முதன்மை ஸித்தம்‌. ஆக, இவை எல்லாவற்றையும்‌ திருவுள்ளம்‌ பற்றியாயிற்று ப்ரதம (முதல்‌) ரஹஸ்யம்‌ திருமந்த்ரம்‌ என்று இவர்‌ அருளிச்‌ செய்தது.
இத்தை மந்த்ரமென்கிறது, “மந்தாரம்‌ த்ராயத இதி மந்த்ர :” என்கிற படியே மநநம்‌ செய்பவர்களை சப்த சக்தியாலும்‌, அர்த்தத்தை அறிவிப்பதாலும்‌ தன்னைப்‌ பற்றுவார்க்கு ரக்ஷகமாகையாலே. சப்த சக்தியாலே ரக்ஷகமாம்‌ ஐப ஹோமம்‌ முதலானவைகளாலே கார்யங்கொள்ளும்‌ உபாஸகரான பக்தி யோக நிஷ்டருக்கு. அர்த்தத்தை அறிவிப்பதாலே ரக்ஷகமாம்‌, ஈஸ்வரனே ஸாதநமும்‌ பலனும்‌ என்றிருக்கிற ப்ரபந்நர்க்கு. அர்த்த போதநத்தாலே ரக்ஷகமாகையாவது,

“தேஹாஸக்தாத்ம புத்திர்‌ யதி பவதி பதம்‌ ஸாது வித்யா த்ருதீயம்‌, ஸ்வாதந்தர்யாந்தோ யதி ஸ்யாத்‌ ப்ரதமம்‌ இதர சேஷத்வதீச்‌ சேத் த்விதீயம்‌, ஆத்ம த்‌ராணோந்முகச்‌ சேந்நம இதி சபதம்‌ பாந்த வாபாஸ லோலச்‌ சப்தம்‌ நாராயணாக்யம்‌ விஷய சபல தீச்சேச்‌ சதுர்த்தீம்‌ ப்ரபந்ந :”
ப்ரபந்ந
:- பரபந்நனானவன்‌.
தேஹாஸத்த – -தேஹத்தில் தானே.
ஆத்ம புத்திர் யதி பவதி – ஆத்மா என்கிற நினைவை யுடையவனானால்‌-உடலே உயிர்‌ என்கிற மயக்கத்‌தை யுடையவனனால்
த்ருதீயம்‌ பதம்‌ – ஜ்ஞாநத்தை- யுடையதென்று தெரிவிப்பதன்‌ மூலம்‌ தேஹத்தில்‌ ஆத்மா வேறுபட்டது என்று காட்டுகிற மூன்றாம்‌ பதமான மகாரத்தை.
ஸாது – நன்றாக (அர்த்தத்தோடு)
வித்யாத்‌ – அறியக் கடவன்‌.
ஸ்வாதந்தர்ய அந்த : ஸ்வாதந்தர்யனாக அறிவு கெட்டவனாக (தான்‌ ஸ்வதந்த்ரனென்கிற அறியாமையை யுடையவனாக).
ஸ்யாத்யதி – ஆவானே யானால்‌.
ப்ரதமம்‌– (எம்பெருமானுக்கு அடிமை என்று தெரிவிக்கிற) ப்ரணவத்தின்‌ முதல் பதமான அகாரத்தை.
வித்யாத்‌ – அறியக் கடவன்‌.
இதர சேஷத்வ – (ஸ்ரீமந் நாராயணனைத்‌ தவிர) மற்றவர்களுக்கு அடிமை என்கிற, தீ:சேத்‌ -கெட்ட புத்தி உண்டாகுமாயின்‌
த்விதீயம்‌ – வேறொருவர்க்கு அடிமையைத்‌ தவிர்க்கிற இரண்டாம்‌ பதமான உகாரத்தை.
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌. ஆத்ம த்ராண : – தன்னைத் தானே
காப்பாற்றுதலில்‌.
உந்முக : சேத்‌ – முயற்சி யுடையவனானால்‌.
நம:இதி பதம்‌-தற்காப்பில்‌ தொடர் பில்லாமையைத்‌ தெரிவிக்‌கிற நம: என்னும்‌ பதத்தை.
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌. பாந்தவ ஆபாஸ லோல :- வினைத் தொடர்‌பால்‌ பிதா புத்திரர்‌ முதலான பந்துக்கள்‌ போலத்‌ தோன்று மவர்களிடத்தில்‌ ஆசை யுடையவனா யிருப்பானானால்‌,
நாராயணாக்யம்‌ சப்தம்‌ – நாராயணனே எல்லா உறவு முறையும்‌ என்று தெரிவிக்கிற நாராயண னென்கிற பதத்தை,
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌. விஷய சபல தீச்சேத்‌ : ஐம்புலனுகர்ச்சியில்‌ செல்லுகிற புத்தியை உடையவனாகில்‌. சதுர்த்தீம்‌ – பகவத்‌ தொண்டின்‌ ப்ரார்த்தனையைக்‌ காட்டுகிற ‘ஆய’ என்கிற நான்காம்‌ வேற்றுமையை
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌
என்று பட்டர்‌ அருளியபடியே, தன்னை அறியுமவர்களுக்கு தேஹமே ஆத்மா என்கிற நினைவும்‌, சுதந்திர புத்தியும்‌, அவனைத் தவிர்த்த பிறர்க்கடிமை என்ற நினைவும்‌, தற்காப்பில்‌ தொடர்பும்‌, உறவல்லாதாரிடத்தில்‌ உறவுடைமை என்கிற புத்தியும்‌, ஐம்புலனுகர்ச்சியில்‌ வேட்கையும்‌, மேலிடாதபடி செய்து தன்னியல்புக்குப்‌ பொருந்த நடக்கும்படி, நோக்குகை.

————-

இனிமேல்‌ இந்த மந்திரத்தினுடைய சிறப்பை விரிவாக அருளிச்‌ செய்வதாக திருவுள்ளம்‌ பற்றி முதலில்‌ சொல்ல வேண்டிய முறையைச்‌ சொல்லும்‌ முகத்தால்‌ இதன்‌ சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌-
ஸூர்ணை -3 . திருமந்தரத்தினுடைய சீர்மைக்குப்‌ போரும்படி ப்ரேமத்தோடே பேணி அநு ஸந்திக்க வேணும்‌

திருமந்த்ரத்துக்குச்‌ சீர்மையாவது,
“ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநிச, ஸர்வ மஷ்டாக்ஷராந்த:ஸ்தம்‌”.
ரூசோ
-ருக்‌ வேதங்களும்‌,
யஜும்ஷி – யஜூர்‌ வேதங்களும்‌.
ஸாமாநி – ஸாம வேதங்களும்‌,
ததைவ – அப்படியே
அதர்வணாநிச – அதர்வண வேதங்களும்‌.
ஸர்வம்‌ – ஆகிய எல்லாமும்‌, அஷ்டாக்ஷராந்தஸ்தம்‌ – -திருமந்த்ரத்தினுள்ளே இருப்பனவாம்‌-என்கிறபடியே , அனைத்து வேதங்களின்‌ சுருக்கமாய்‌ “மற்றெல்லாம்‌ பேசிலும்‌” என்கிறபடியே அறிய வேண்டிய எல்லா அர்த்தங்களையும்‌ அறிவிப்பதாய்‌,
மந்த்ராணாம்‌ பரமோ மந்த்ரோ குஹ்யாநாம்‌ குஹ்ய முத்தமம்‌, பவித்ரம்‌ ச பவித்ராணாம்‌ மூலமந்த்ரஸ்‌ ஸநாதந :”
ஸநாதந
:- மிகவும்‌ பழமையானதான மூலமந்த்ர:- எல்லா மந்த்ரங்கட்கும்‌ மூல மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரமானது.
மந்த்ராணாம்‌ – மந்திரங்கட்குள்ளே,
பரமோ மந்த்ர:- சிறந்த மந்திரமாகும்‌,
குஹ்யாநாம்‌ – ரஹஸ்யங்களுக்குள்ளே,
உத்தமம்‌ குஹ்யம்‌ – உத்தமமான ரஹஸ்யமாகும்‌.
பவித்ராணாம்‌ – புனிதங்கட்கெல்லாம்‌, பவித்ரம்ச – இது பவித்ரமாகும்‌. என்கிறபடியே மந்த்ரங்களில்‌ வைத்துக்‌ கொண்டு மேலான மந்த்ரமாய்‌, ரஹஸ்யங்களில்‌ உத்தமமான ரஹஸ்யமாய்‌, பவித்ரங்களுக்கும்‌ பவித்ரமாயிருக்கும்‌ கெளரவம்‌.
சீர்மைக்குப்‌ போரும்படி என்றது-தகும்படி என்கை.
ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்கை யாவது;– இத்தைச்‌ சொல்லுமளவில்‌ வரண்ட மனமுடையவனா யன்றிக்கே மேற்‌சொன்ன இதன்‌ கெளரவமடியாக இதன்‌ பக்கல்‌ தனக்குண்‌டான ப்ரேமத்தோடே மறைக்க வேண்டியவை யாகையாலே தகாதார்‌ செவிப்படாதபடி. “மந்த்ரம்‌ யத்நேத கோபயேத்‌” (மந்திரம்‌ முயன்று மறைக்கக்‌ கூடியது) என்கிறபடியே மிக மறைத்‌துக்‌ கொண்டு சொல்லுகை.
இப்படிச்‌ சொல்ல வேண்டுமாகையாலே வேறு விதமாகச் சொல்லக் கூடாது என்கிற நியமம்‌ தோற்றுகிறது.

இப்படித் தன்‌ பக்கல்‌ ப்ரேமம்‌ உண்டாகவே இம் மந்திரம்‌ இவனுக்குக்‌ கார்ய கரமாகுமோ? என்ன , அருளிச்‌ செய்கிறார்‌.
சூர்ணை -4 மந்த்ரத்திலும்‌ மந்த்ரத்துக் குள்ளீடான வஸ்துவிலும்‌ மந்தர ப்ரதனான ஆசார்யன்‌ பக்கலிலும்‌ ப்ரேமம்‌ கநக்க உண்டானால்‌ கார்யகரமாவது

அதாவது, அறிய வேண்டியவற்றை அறிவிக்கிற இம்மந்த்ரந் தன்னிலும்‌, தலைவனா யிருக்குந்‌ தன்மை, தஞ்சமாக அடையப்படும்‌ தன்மை அநுபவிப்பதற்குப்‌ பயனாக இருக்கும்‌ தன்மை ஆகிய இம் மூன்று நிலைகளோடு கூடி இம் மந்த்ரத்தின்‌ பொருளாயிருக்கிற
ஈஸ்வரன்‌ திறத்திலும்‌, “தந் மந்த்ரம்‌ ப்ராஹ்மணாதீநம்‌” (அந்த மந்திரம்‌ ஆசார்யன்‌ அதீநமாயிருப்பது)-என்கிறபடியே இதன்‌ தகுதிக்கேற்ப நினைவுடையவனாய்க்‌ கொண்டு தனக்கு உபகரித்த ஆசார்யன்‌ திறத்திலும்‌ அந்தந்த தகுதிகளுக்குப்‌ பொருந்த விருப்பம்‌ மிக உண்டானால்‌ இம் மந்திரம்‌ இவனுக்குக்‌ காரியம்‌ கூட்டுவிக்கும்‌ என்கை –
“மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரெள, த்ரிஷு பக்திஸ்‌ ஸதா கார்‌யா ஸாஹி ப்ரதம ஸாதநம்‌”
மந்த்ரே
– மந்திரத்தினிடத்திலும்‌
தத் தேவதாயம்ச – அதனுடைய தேவதை யினிடத்திலும்‌,
ததா – அப்படியே
மந்த்ர ப்ரதே குரெள – மந்திரம்‌ உபதேசித்தவனிடத்திலும்‌
த்ரிஷுபக்தி :– இம் மூவிடத்திலும்‌ பக்தியானது,
ஸதா கார்யா – எப்போதும்‌ செய்யத் தக்கது, ப்ரதம ஸாதநம்‌ ஸா ஹி – அந்தப்‌ பக்தியானது முதல்‌ ஸாதநமன்றோ?-என்னக்‌ கடவதன்றோ.

இனி, இம் மந்த்ரத்தினுடைய தோற்றத்‌தின்‌ முறையை சொல்லும்‌ முகத்தாலே இதனுடைய அளவு கடந்த சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -5-ஸம்ஸாரிகள்‌ தங்களையும்‌ ஈஸ்வரனையும்‌ மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தையும்‌ இழந்து, இழந்தோ மென்கிற இழவு மின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே விழுந்து நோவு பட, ஸர்வேஸ்வரன்‌ தன் க்ருபையாலே இவர்கள்‌ தன்னை யறிந்து கரை மரஞ் சேரும்படி தானே சிஷ்யனுமாய்‌, ஆசார்யனுமாய்‌ நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்ட ருளினான்‌.

ஸம்ஸாரிகளாகிறார்‌ – ஆரம்பங் காணமுடியாத காலமாய்‌ (அசேதநத்தின்‌) அறிவற்ற ஐடப்‌பொருளின்‌ தொடர்பாலே மாறி மாறி முன்னுள்ள (நாம ரூபங்களோடு) பெயர்‌ உருவங்களோடு வருகிற அறிவின்மை, இதனால்‌ வரும்‌ தீய வினை, இவற்றில்‌ நீளப் பழகின வாஸனை(தீயதில்‌ நெஞ்சறிய முயலும்‌ வாஸனை), இவைகளின்‌ வயத்தராய்‌ பிறப்பு, இறப்பு இவைகளில்‌ கட்டுண்டு துன்பமுடையராய்த் திரிகிற (சேதநர்‌)மக்கள்‌.
தங்களையும்‌ ஈச்வரனையும்‌ மறந்து என்றது – “தாஸபூதா: ஸ்வதஸ்‌ ஸர்வேஹ் யாத்மாந : பரமாத்மந :நாந்யதா லக்ஷணம்‌ தேஷாம்‌ பந்தே மோக்ஷேதவைச.
பரமாத்மந -அப் பரமாத்மாவான எம்பெருமானுக்கு,
ஸர்வே ஆத்மாந :- எல்லா (ஆத்மாக்களும்‌) மக்களும்‌,
ஸ்வத :- இயல்பான ஸ்வரூபத்தாலேயே,
தாஸ பூதாஹி – அடிமை யுடையவர்களாய்‌ நிலை பெற்றவர்களன்றோ.
தேஷாம்‌ – அவர்களுக்கு,
பந்தே – பிறப்பிறப்பில்‌ கட்டுண்டுழலும்‌ நிலையிலும்‌,
அப்படியே மோஷ – முக்த நிலையிலும்‌
அந்யதா – வேறான சுதந்திரம்‌ என்கிற, லக்ஷணம்‌
ந – லக்ஷணம்‌ இல்லை.
சேதநா சேதநங்கட்கு அடிமைத் தன்மை பொதுவாயிருந்தாலும்‌, ஆத்மாவுக்கு முக்கியமான ஸ்வரூபம்‌, இயல்பாகவே உண்டான பகவத் சேஷத்வத்தை லக்ஷணமாக வுடையரா யிருக்கிற தங்களையும்‌, “பதிம் விஸ்வஸ்ய(இயல்பாகவே எல்லோருக்கும்‌ ஸ்வாமியா யிருப்பவன்‌) என்றும்‌,“ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்திதம்‌” அனைத்தையும்‌ சொத்தாகக்‌ கொண்டு உடையவனா யிருக்குந்தன்மை ப்ரஹ்மத்தினிடம்‌ நிலை பெற்றுள்ளது.-இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே தங்களுக்குக் கராணமின்றி இயல்பாகவே ஆண்டானா யிருக்கிற ஈஸ்வரனையும்‌ அறியாதே -என்கை.
ஆனால்‌, அறியாமலென்னாதே மறந்து என்பான்‌ என்‌? என்னில்‌, முன்‌ ஒருக்கால்‌ நினைவிலிருந்து பின்பு மறந்த போதன்றோ மறந்து என்று சொல்ல வேண்டுவதென்னில்‌: திருமங்கையாழ்வார்‌ “மறந்தேனுன்னை முன்னம்‌” என்கிறபடியே, நமக்கும்‌ இறைவனுக்குமுண்டான இயல்பாகவே அழிவின்றி நித்தியமாக இருக்கும்‌ தொடர்பின்‌ உறைப்பை உணர்ந்தால்‌ மறந்து என்ன வேண்டி இருத்தலால்‌ இப்படி அருளிச்‌ செய்தாராமித்தனை.
ஈஸ்வர கைங்கர்‌யத்தையும்‌ இழந்து-என்றது, கீழ்ச்‌ சொன்ன அறிவின்மையாலே தகுந்த ஆண்டானான பகவத் விஷயத்தில்‌ தொண்டாற்றுகை யாகிற மேலாம் பயனையும்‌ பெறப் பெறாதே என்கை.-பயனினுடைய கெளரவத்தையும்‌, அதுக்கென்றிட்டுப்‌ பிறந்து வைத்து இழந்து கிடந்தபடியையுங் குறித்து இழந்து என்கிறார்‌.
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே என்றது, தன்னியல்பும்‌, பரனியல்பும்‌,பயனின்‌ இயல்பும்‌ ஆகிய நல்லறிவு இல்லாமையாலே, தன்‌ அடிமைக்குப்‌ பொருந்திய ஆண்டான்‌ முக மலர்த்திக் குறுப்பாக தொண்டாற்றுகை யாகிற பயனை இழந்தோமென்கிற துன்‌பந்தானு மின்றிக்கே என்கை.
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட – என்றது “ஸம்ஸார ஸாகரம்‌ கோரம்‌ அநந்த க்‌லேச பாஜநம்‌”.
ஸம்ஸார ஸாகரம்‌ –
ஸம்ஸாரமாகிற பெருங்கடல்‌,
கோரம்‌ – பயத்துக்குரிய கோரமாய்‌, அநந்தக்‌லேச – எல்லை காண் பரிய துன்பத்துக்கு,
பாஜநம்‌ – இருப்பிடம்‌ என்கிறபடியே, அளவிட முடியாத துன்பத்துக் கிருப்பிடமாய்‌, யாவராலும்‌ தன்‌ முயற்சியால்‌ கரை காண அரிதாம்படி இருக்கிற பிறவிப்‌ பெருங் கடலிலே விழுந்து தன்னால்‌ நேரும்‌ துன்பங்களால்‌ தபிக்கப்படுவதும்‌, பிற உயிர்களால்‌ வரும்‌ துன்பங்களால்‌ தபிக்கப்படுவதும்‌,-தெய்வீகமாக வரும்‌ துன்பங்களால்‌ தபிக்கப் படுவதுமாகிய தாப த்ரயங்களால்‌ -மூன்று தாபங்களால்‌- வருந்துவார்கள்‌ என்கை.
இத்தால்‌ தங்களையும்‌, ஈஸ்வரனையும்‌ அறியாமையாலும்‌, ப்ரயோஜநத்தை அறியாமையாலும்‌, ஸம்ஸார ஸமுத்திரத்துக்குள்ளே கிடந்து நோவு படா நிற்கிற விரோதியான ஸம்ஸாரந் தன்னையும்‌, அத்தைக்‌ கடத்தற்கு மார்கமறியாமையாலும்‌, அறிய வேண்டியதான தன்னியல்பு பரனியல்பு, உபாயத்தினியல்பு, பயனியல்பு, விரோதியினியல்புகளாகிய (அர்த்த பஞ்சக ஜ்‌ஞாநத்தில்‌) ஐந்து பொருள்‌களைப் பற்றி அறிவதில்‌ ஒன்றையும்‌ அறியாதவர்களாய்க்‌ கிடந்தார்களென்கை. “ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ருபம்‌” என்ற சான்றுகளின் படி. ஸகல சாஸ்த்திரங்களும்‌ இந்த அர்த்த
பஞ்சகத்தை அன்றோ சொல்வது. இவ் வர்த்தங்களை இவர்களுக்குத்‌ தெளிய அறிவிக்கைக்காக அனைத்து சாஸ்த்ர சுருக்கமான திரு மந்த்ரத்தை ஸர்வேஸ்வரன்‌ வெளியிட்ட விதத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌,

ஸர்வேஸ்வரன்‌ தன்‌ க்ருபையாலே” என்றது, “ஈசேசிதவ்ய ஸம்பந்தாத்‌ அநிதம் ப்ரதமாதபி:” இப்பொழுது உண்டாயிற் றென்‌பதின்றி அநாதியான ரக்ஷகன்‌, ரக்ஷ்யன்‌ என்ற ஸம்பந்தம்‌-
என்கிறபடியே காலாரம்பம்‌ அறிய முடியாதபடி, அநாதியாக அனைவரோடும்‌ உண்டான உடையவன்‌ உடமை என்ற ஸம்பந்தத்தை உடையவனான எம்பெருமான்‌-“ஏவம்‌ ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி: ஜீவேது:காகுலே விஷ்ணோ: க்ருபாகாப் யுப ஜாயதே”
ய ஏவம்‌
– இவ்விதமாக,
ஸம்ஸ்ருதி சச்ரஸ்தே – ஸம்ஸாரமாகிற சக்கரத்திலிருந்து கொண்டு,
ஸ்வகர்மபி : ப்ராம்யமாணே – தன்னுடைய கர்மங்களால்‌ சுழன்று,
துக்கா குலே – துக்கத்தினாற்‌ கலங்கின.
ஜீவே – ஜீவனிடத்தில்‌.
விஷ்ணோ : – விஷ்ணுவுக்கு.
காபி – சொல்ல முடியாத,
க்ருபா உபஜாயதே – கருணையானது உண்டாகிறது. என்கிறபடியே, எம்பெருமான்‌ இவர்கள்‌ படுகிற துன்பத்தைக்‌ காண்பது மாத்திரத்தா லுண்டான தன்‌ காரணமில்லாத கருணையாலே என்கை.

இவர்கள்‌ தன்னை யறிந்து கரைமரஞ்சேரும்‌ படி என்றது – இப்படி ஸம்ஸார ஸாகரத்திலே கிடந்து நோவு படுகிற இவர்கள்‌ “த்வாமேவ சரணம்‌ ப்ராப்ய திஸ்தரந்திமநீஷிண :”
மநீஷ்ண:
– புத்திமான்கள்‌,
த்வாம்‌ஏவ – தேவரீரையே,
சரணம்‌ – உபாயமாக,
ப்ராப்ய – அடைந்து,
நிஸ்தரந்தி – கடக்கிறார்கள்‌. என்றும்‌,
“ஸம்ஸாரார்ணவ மக்நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநாநாந்யத் கிஞ்சி தஸ்திபராயணம்‌”, ஸம்ஸார ஆர்ணவ – ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்திலே.
மக்நாநாம்‌ – முழுகி,
விஷய அக்ராந்த சேதஸாம்‌ – ஸப்தாதி விஷயங்களாலே ஆக்ரமிக்கப்பட்ட மநஸ்ஸை உடையவர்க-ளுக்கு, விஷ்ணுபோதம் விநா – ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரனாகிற தெப்பத்தைத்‌ தவிர.
அந்யத்‌ கிஞ்சித்‌ – மற்று எதுவும்‌,
பராயணம்‌ – முக்கியமான ஆஸ்ரயமாக, நாஸ்தி – இல்லை. என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸம்ஸாரமாகிற கடலைத்‌ தாண்டுவதற்கு உபாயமான தன்னை அறிந்து, அந்த ஸம்ஸார கடலைக்‌ கடந்து அக்கரைப்படும்படி என்கை.
தானே சிஷ்யனுமாய்‌ ஆசார்யனுமாய்‌ நின்று என்றது, -நர நாரணனா யுலகத்தற நூல்‌ சிங்காமை விரித்தவன்‌ -என்கிறபடியே, நர நாராயண ரூபத்தால்‌ அவதரித்து நரனான தான்‌ சிஷ்யனுமாய்‌, நாராயணனான தான்‌ ஆசார்யனுமாய்‌ நின்று என்கை.

திருமந்திரத்தை வெளியிட்டருளினான்‌ என்றது, -ஸகல சாஸ்திர சுருக்கமாய்‌, அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தை தெளிவாகச்‌ சொல்லா நிற்கும்‌ திருமந்திரத்தை வெளியிட்டருளினா னென்கை. அருளிச்‌ செய்தானென்‌னாதே வெளியிட்டருளினா னென்றது, இப்போது, தான்‌ ஒன்றை நிர்மித்துச்‌ சொன்னானல்லன்‌, ஏற்கனவே அநாதியா யுள்ளதொன்றை வெளிப்படுத்தினா னென்னுமிடமும்‌, மிக்க ரஹஸ்யமாகையால்‌ மறைந்திருந்ததை இவர்கள்‌ துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாதே வெளிக்‌ கொணர்ந்தானென்னு மிடமும்‌ தோற்றுகைக்காக என்கிறார்‌.

ஆனால்‌, ஆசார்யனாய்‌ நின்று வெளியிட்டமை போதாவோ? சிஷ்யனாய்‌ நின்றது எதற்காக? என்ன -அருளிச்‌ செய்கிறார்‌. –
ஸூர்ணை -6-சிஷ்யனாய்‌ நின்றது சிஷ்யனிருக்குமிருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக

ஆசார்யனாய்‌ நின்று வெளியிட்டருளின அளவன்றிக்கே தானே சிஷ்யனுமாய்க்‌ கொண்டு நின்றது, “ஆஸ்திகோ தர்மசீலச் ச சீலவாந்‌ வைஷ்ணவச் சுசி : கம்பீரச் சதுரோ தீரச்‌ சிஷ்ய இத்யபிதீயதே ” ஆஸ்திக : சாஸ்திரத்தில்‌ நம்பிக்கை உள்ளவனும்‌,
தர்ம சீலச்ச – நல்வினைகளில்‌ ஈடுபாடுடையவனும்‌,
சீலவாந்‌ – நல் வினைகளை மேற் கொண்டொழுகுபவனும்‌,
வைஷ்ணவ:– விஷ்ணுவிடத்தில்‌ பக்தி யுடையவனும்‌, -விஷ்ணுவையே ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றினவனும்‌.
சுசி :- தற்பெருமை யில்லாதவனும்‌,
கம்பீர: ஆசார்யனிடத்தில்‌ ஆழ்ந்த பக்தியுள்ளவனும்‌,
சதுர: ஆசார்ய முகமலர்த்திக்கு றுப்பான கைங்கர்யத்தில்‌ சாதுர்யமுடையவனும்‌,
தீர :- சிரமப்பட்டு செய்யக்கூடிய ஆசார்ய கைங்கர்யத்‌தில் மநோ தைர்யமுடைய.
இத்யபிதீயதே – சிஷ்யனென்றுசொல்லுதற்குரிய லக்ஷணமென்பதாகும்‌. “சரீரம்‌ வஸ–விஜ்‌ஞாநம்‌ வாஸ : கர்ம குணான ஸுரிந்‌ குர்வர்த்தம்‌ தாரயேத்‌ யஸ்து ஸ சிஷ்யோ நேதர: ஸ்ம்ருத :”
சரீரம்‌ –
உடலையும்‌,
வஸு – பொருளையும்‌,
விஜ்ஞாநம்‌ – அறிவையும்‌,
வாஸ : வஸிக்குமிடத்தையும்‌.
கர்ம- செயலையும்‌,
குணாந்‌ – குணங்களையும்‌,
அஸுந்‌ – ப்ராணன்களையும்‌,
குர்வர்த்தம்‌ – குருவின்‌ நிமித்தமாகவே,
: – எவன்‌,
தாரயேத்‌ – தரிக்கிறானோ,
ச : சிஷ்ய – அவனே சிஷ்யன்‌ என்னத்‌ தக்கவன்‌,
இதர: வேறு வகையாக இருப்பவன்‌,
ந ஸ்ம்ருத
:- சிஷ்யனென்று சொல்லத் தகாதவன்‌.

“ஸத்புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷீ சுச்ருஷிஸ் த்யக்தமாந : ப்ரணிபதந பர : ப்ரச்ந கால ப்ரதீக்ஷ: சாந்தோ தாந்தோ நஸரியு : சரண முபகதச்‌ சாஸ்த்ர விஸ்வாஸ சாலீ சிஷ்ய : ப்ராப்த : பரீ க்ஷாம்‌ க்ருதவிதபி மதஸ் தத்வதஸ்‌ சிக்ஷணீய :”
ஸத் புத்தி:
– விடுகை பற்றுகை முதலானவைகளை அறியும்‌ நற்புத்தியை யுடையவனும்‌,
ஸாது ஸேவீ – அதற்கடியாகப்‌ பெரியோர்களை (அநுவர்த்திப்பவனும்‌) அடிபணிபவனும்‌.
ஸமுசித சரித : ஜ்ஞாநத்துக்கேற்ற ஒழுக்கமுடையவனும்‌.
தத்வபோதாபிலாஷீ – முத் தத்‌துவங்களுடைய உண்மை யறிவதில்‌ ஆசை யுடையவனும்‌.
சுச்ருஷு:– ஆசார்யனுக்குத்‌ தொண்டு செய்வதில்‌ இச்சை உடையவனும்‌.
த்யக்தமாந : – அதற்கு விரோதியான அஹங்காரத்தை விட்டவனும்‌,
ப்ரணிபதந பர: ஆசார்யனிடத்து நமஸ்காராதிகளைச்‌ செய்பவனும்‌.
ஸாந்த :- மனம்‌ முதலான அகக் கரணங்களை அடக்குபவனும்‌.
தாந்த :- புறக் கரணங்களை அடக்குபவனும்‌.
அநஸு-ரியு : ஆசார்யனிடத்து பொறாமை யில்லாதவனும்‌.
சரணம்‌ உபகத :- ஆசார்யன்‌ திருமாளிகையில்‌ காத்திருப்பவனும்‌.
சாஸ்திர விஸ்வாஸ சாலீ – சாஸ்திரங்‌களில்‌ விஸ்வாஸ முடையவனுமான.
சிஷ்ய : சிஷ்யன்‌ –
பாக்ஷாம்‌ . ப்ராப்த:– உபதேசிக்கப் படுகிற -செய்யப்பட்டு,
க்ருதவித்‌ அபிமத –ஆசார்யன்‌ செய்த உபகாரத்தை மறவாத பெரியோர்களாலே -இவன்‌ உபதேசிக்கத் தக்கவனென்று அங்கீகரிக்கப் பெற்றவனாய்க்‌ கொண்டு. தத்வத : உண்மையாக
“சிக்ஷ்ணீய :- (சிக்ஷைக்குத் தக்கவன்‌) ஞானோபதேசத்திற்குத் தகுதியானவன்‌ என்று,
இவை முதலானவைகளிற் சொல்லுகிற படிகளும்‌, ஆசார்ய அநுவர்த்தநமாகிற-அடிமை செய்தலாகிற பயனுக்குப்‌ புறம்பானவையான வேறு பயனில்‌ விருப்பத்தைத்‌ தவிர்க்கையும்‌, ஆசார்ய உகப்புக்குப் பாத்ரமான பலனுக்குச்‌ சாதநமான ஆசார்யத்‌ தொண்டும்‌, ஆர்த்தியும்‌, விருப்பமும்‌, பொறாமையும் யில்லாதவனா யிருக்கையாகிற சிஷ்ய லக்ஷணம்‌ உலகத்தவர்க்குத்‌ தெரியமையாலே-அதைத் தன்‌ ஒழுக்கத்தால்‌ காட்டுகைக்காக சிஷ்யனாய்‌ நின்றது என்கிறார்‌.-ஆசாரியனாய்‌ சொல்லுமளவில்‌ தன்‌ மேன்மை தேடிக்‌ கொள்கிறானென்று நினைக்கவும்‌ கூடும்‌. –ஒழுகிக்‌ காட்டுமளவில்‌ இது நமக்கும்‌ வேண்டுமென்று உலகோர்‌ கைக்‌ கொள்வதற்கு ஏதுவாயிருக்கும்‌.

இப்படி சிஷ்யனாய்‌ நின்று இந்த மந்த்ர சிக்ஷை பண்ணி இதன் மூலமாக ஜ்ஞாநம்‌ பிறக்க வேணுமோ? “ஞாநக்‌ கலைகள்‌” என்கிறபடியே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஜ்ஞாந சாதநமாயன்றோ இருப்பது.-அவற்றைப்‌ பயின்று அவ் வழியாலே ஜ்ஞாநம்‌ பிறந்தாலோ? என்ன, சாஸ்திரப்‌ பயிற்சியால்‌ பிறக்கும்‌ ஜ்ஞாநத்துக்கும்‌, இந்த திருமந்த்ர உபதேச மூலமாக பிறக்கும்‌ ஜ்ஞாநத்துக்கும்‌ உண்டான வேற்றுமையை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை – 7-ஸகல சாஸ்த்ரங்களாலும்‌ பிறக்கும்‌ ஜ்ஞாநம்‌ ஸ்வயமார்ஜிதம் போலே; திருமந்த்ரத்தால் பிறக்கும்‌ ஜ்ஞாநம்‌ பைத்ருக தநம்‌ போலே .

தத்வ ஜ்ஞாநமாம்‌ மெய்யுணர்வை விளக்குமதான வேதங்கள்‌ அற நூல்கள்‌ இவை முதலான அனைத்து சாஸ்திரங்களாலும்‌ உண்டாகும்‌ ஜ்ஞானம்‌ தானே முயன்று வருந்திச்‌ சம்பாதிக்கும்‌ திரவியம்‌ போன்று மிகச்‌ சிரமப்பட்டும்‌ பெறுவதும்‌ பெறாதிருப்பதும்‌ போலுமாயிருக்கும்‌. ஆசார்ய உபதேசம்‌ மூலமாக திருமந்த்ரத்தால்‌ உண்டாகும்‌ ஜ்ஞாநம்‌ பிதா சேமித்து வைத்த திரவியத்தை பிறந்த உரிமை தானே காரணமாகத்‌ தான்‌ பெறும்‌ திரவியம்‌ போலும்‌ எளிதில்‌ பெறலாமாயிருக்கும்‌ என்கிறார்‌.
” சாஸ்த்ர- ஜ்ஞாநம்‌ பஹு க்லேசம்‌ புத்தேச்சசலந காரணம்‌, உபதேசாத்‌-
ஹரிம்‌ புத்தவா விரமேத் ஸர்வகர்மஸ-.” சாஸ்த்ரஜ்ஞாநம்‌
– சாஸ்த்ர நூல்களைப்‌ படித்துப்‌ பெறும்‌ மெய்யுணர்வு,
பஹுக்லேசம்‌ – மிகச்‌ சிரமமுடைத்தா யிருக்கும்‌.
புத்தே : – புத்திக்கு,
சலந காரணம்‌ – கலக்கத்தை உண்டாக்கு மாதயிருக்கும்‌. (ஆகையாலே)
உபதேசாத்‌ – உபதேசத்தாலே.
ஹரிம் புத்வா – ஈஸ்வரனை (உபாயமாக) அறிந்து,
ஸர்வகர்‌மஸு – உபாயாந்த்ரமாகிற எல்லாக்‌ கர்மங்களிலிருந்தும்‌,
விரமேத்‌ – ஓழியக் கடவன்‌.
இத்தால்‌ சாஸ்திரங்களிற்‌ காட்டில்‌ இவைகளின்‌ ஸாரமான திருமந்த்ரத்தின்‌ ஏற்றஞ்‌ சொல்லிற்றாம்‌ என்பது.

சாஸ்திரங்களின்‌ நிலை யிதுவானால்‌ மற்றுமுண்டான பகவந் மந்த்ரங்கள்‌ மெய் யுணர்வை பிறப்பிக்‌காதோ? என்ற கேள்வியிலே மற்ற மந்த்ரங்களிற்‌ காட்டில்‌ இந்த மந்த்ரத்துக் குண்டான ஏற்றத்தை அருளிச்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி,
ஸூர்ணை –8-பகவந் மந்தரங்கள்‌ தான்‌ அநேகங்கள்‌.

ஆஸ்தாந்தே குண ராசிவத்‌ குண பரீவாஹாத்மநாம்‌ ஐந்மநாம்‌ ஸங்க்யா” குணராசிவத்‌ – உமது – ஜ்ஞாநம்‌ சக்தி முதலிய குணங்கட்கு எல்லை யில்லாமை போலவே.
குண பரிவாஹ ஆத்மநாம்‌ –தயை; வாத்ஸல்யம்‌ முதலிய குணங்களுடைய
பிரவாஹ ரூபங்களான -தேவரீரது தயாதி குணங்களைப்‌ பிரகாசப்படுத்துவதான. ஜந்மநாம்‌ – பிறவிகளுடைய,-ஸங்க்யா – எண்ணிக்கையானது. ஆஸ்தாம்‌– எல்லையில்லாததாக இருக்கும்‌.
“பஹவோந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்திதே. “
ந்ரூப :- ராஜாவே!,
தே – உன்னுடைய.
புத்ரஸ்ய – பிள்ளைக்கு.
பஹுவ : கல்யாண குணா : – பலவான கல்யாண குணங்கள்‌,
ஸந்தி – இருக்கின்றன.
“தவாநந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா:”
அநந்த குணஸ்யா அபி – எல்லை யில்லாத குணங்களை யுடையவனாக இருந்தாலும்‌. தவ – உனக்கு.-ஷட்குணா: ஏவ- ஆறு குணங்களே.-ப்ரதமே– முதன்மையானவை.
“பஹூநி மேவ்யதீ தாநி ஜந்மாநி தவசார்ஜுந “
அர்ஜாந
“ அர்ஜுநனே.
மே – எனக்கு,
பஹுநி – அளவிறந்த,
ஜந்மாநி – ஐந்மங்கள்‌,
வ்யதீதாநி – கடந்து போயின.
தவ ச – உனக்கும்‌ அப்படியே,
“எண்ணில்‌ தொல்‌ புகழ்‌” (எண்ணிக்கை யில்லாத குணங்கள்‌) “எந் நின்ற யோநியுமாய்‌ பிறந்தாய்‌” (எல்லா வித பிறப்புக்களும்‌ பிறந்தாய்‌) என்றும்‌ இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே, பகவத்‌ குணங்களும்‌ – குணங்களுக்குப்‌ போக்கு வீடான அவதாரங்களும்‌ எல்லை யில்லாதனவா யிருக்குமாப் போலே இவைகளைச்‌ சொல்லும்‌ மந்த்ர விசேஷங்களும்‌,
“அநந்தாவை பகவந்‌ மந்த்ரா: (பகவன்‌ மந்த்ரங்கள்‌ எல்லை யில்லாதன) என்கிறபடியே அநேகங்களா யிருக்கு மென்கை.

அவை எல்லாம்‌ ஒரே வர்க்கத்தில்‌ சேர்ந்ததோ என்ன?
ஸூர்ணை -9.-அவை தான்‌, வ்யாபகங்களென்றும்‌ அவ்‌யாபகங்களென்‌றும்‌ இரண்டு வர்க்கம்‌

எல்லா இடத்திலும்‌ உள்ளும்‌ புறமும்‌ பரவி வ்யாபித்திருக்கும்‌ பகவத்‌ ஸ்வரூபத்தைச்‌
சொல்லுகையால்‌ வ்யாபகங்களென்றும்‌, பகவதவதாரமான குணம்‌ செயல்கள்‌ இவைகளில்‌ ஒவ்வொன்றைச்‌ சொல்லுகையாலே அவ்யாபகங்களென்றும்‌
இரண்டு வர்க்கமா யிருக்கும்‌ என்கை. .

இருவர்க்கங்களும்‌ ஓத்திருக்குமோ- யென்னில்‌?
ஸூர்ணை -10.-அவ்யாபகங்களில்‌ வ்யாபகங்கள்‌ மூன்‌றும்‌ ஸ்ரேஷ்டங்கள்‌ –

அவ்யாபகங்களா யிருந்துள்ள எல்லா மந்த்ரங்களிலும்‌ “நாராயணாய வித்மஹே, வாஸூதேவாய தீமஹி, தந்நோ விஷ்ணு : ப்ரசோதயாத்‌” என்றும்‌ விஷ்ணு காயத்ரியில்‌ ஓதப்படுகிற வ்யாபகங்கள்‌ மூன்றும்‌ சிறந்தவைகளா யிருக்குமென்கை. இந்த விஷ்ணு காயத்ரியிலே -நாராயண வாசுதேவ விஷ்ணு சப்தங்கள்‌, -அந்த மூன்று
மந்த்ரங்களுக்கும்‌ ப்ரதானமான மூன்று நாமங்கள்‌ -ஆகையாலே, பொதுவில்‌ ப்ரணவ – நமஸ்ஸுக்களோடே கூடின மூன்று மந்த்ரங்களுக்கும்‌ (உப லக்ஷணமாக) விடுபட்டதைக்‌ கூட்டிச்‌ சொல்லக்‌ கடவது.

இந்த மூன்று வ்யாபக மந்த்ரங்களும்‌ தம்முள்‌ ஒக்குமோ என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -11- இவை மூன்றிலும்‌ வைத்துக்‌ கொண்டு பெரிய திருமந்தீரம்‌ ப்ரதாநம்‌.

அவ்யாபகங்களில்‌ காட்டில்‌ சிறந்ததா யிருந்துள்ள இந்த வ்யாபக மந்த்ரங்கள்‌ மூன்றையும்‌ வைத்துப்‌ பார்க்கும் போது. “நாராயணாய வித்மஹே” என்று தைத்‌-நாரணவல்லி உபநிஷத்தில்‌ முதலில்‌ இந்த நாராயண மந்த்ரததை ஒதுவதாலும்‌, முழுமையான அர்த்தங்களை உடையதாகையாலும்‌, “நாஸ்தி சாஷ்டாக்ஷராத் பர:” (பல மந்திரங்களில்‌ அஷ்டாக்ஷர மந்த்ரமான நாராயண மந்திரத்தைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை) என்னும்‌ படியான பெருமை யுடையதாகையாலே பெரிய திருமந்த்ரம்‌ முதன்மையாக இருக்கும்‌ என்கை.

ஸூர்ணை 12-. மற்றையவை இரண்டுக்கும்‌ அசிஷ்ட பரிக்ரஹமும்‌, அபூர்த்தியுமுண்டு .

வாஸுதேவ விஷ்ணு சப்தங்களான மற்ற வ்யாபக மந்த்ரங்களிரண்டுக்கும்‌ நாராயண சப்தம்‌ போலே ஸ்வரூபம்‌- இயற்கை வடிவம்‌, உருவம்‌ ரூபம்‌, குணம்‌ முதலானவைகளெல்லாம்‌ சொல்லாதே ஸ்வரூப மாத்திரத்தைச்‌ சொல்லுகையாலே யாதொரு லக்ஷணமுமின்றி “ஜ்ஞாந மாத்ரமா யிருப்பது ப்ரஹ்மம்‌” என்று வேதாந்தங்களுக்குப்‌ பொருந்தாத வேற்றுப் பொருள்‌ கொள்ளுகிற குத்ருஷ்டிகள்‌ மிகவும்‌ விரும்பிக்‌ கொள்ளுகையாகிற சிஷ்டரல்லாதார்‌ ஏற்பதாலும்‌, வ்யாபிக்கப்பட்ட பொருள்கள்‌ இன்னது என்று சொல்லாமையாலும்‌, இதற்காக ‘ஸர்வம்‌’ என்ற சொல்லை இசை எச்சமாகக்‌ கொள்ள வேண்டி யிருத்தலாலும்‌, வாஸுதேவ மந்திரம்‌ முற்றுஞ்‌ சொல்லாமையாகிற அபூர்த்தியும்‌, மாயா வாதிகள்‌ ஆதரிப்பதாகிய அசிஷ்டர்‌ கொள்ளுகை யாகிற குறைபாடும்‌ உண்டு.
“ஓம்‌ நமோ விஷ்ணவே”
என்ற ஆறு எழுத்துக்களாலாய இம் மந்திரம்‌ : வ்யாப்தி என்ற இம் மாத்திரமே சொல்லி, வ்யாபிக்கப்படும்‌ பொருள்களைச்‌ சொல்லாமை, இன்ன படி வ்யாபித் திருக்கிறான்‌ என்று சொல்லாமை, வ்யாபித்திருப்‌பவன்‌ குணங்களைச்‌ சொல்லாமை, வ்யாபித்தலால்‌ வரும்‌ பலத்தையும்‌ சொல்லாமையாகிற குறைபாடுகளும்‌, அதோடு இதுவும்‌ அசிஷ்டர்‌ விரும்புவதாகிய குறைபாடும்‌ உண்டு.
இன்னமும்‌, வாஸுதேவ மந்த்ரம்‌ : “ஸர்வத்ர வஸதி இதி வாஸுதேவ :” என்று வ்யாபிக்கும்‌ ப்ரகாரம்‌ “வஸதி” என்று சொல்லியதால்‌ எந்தப்‌ பொருளில்‌ வஸிக்கிறான்‌ என்பது சொல்லாமை. இதற்கு “எங்கும்‌” என்ற அர்த்தம்‌ தோன்ற “ஸர்வம்‌” என்ற இசை எச்சம்‌ கூட்டிக்‌
கொண்டாலும்‌ வ்யாபகனுடைய குணம்‌ சொல்லாமையால்‌ இந்த குணத்துக்காக “ஓம்‌ நமோ பகவதே வாஸுதேவாய”-என்று பகவச்‌ சப்தம்‌ கூட்டிக்‌ கொள்ள வேண்டுகையாலும்‌ -வ்யாபித்தலின்‌ பலஞ்‌ சொல்லாமையாலும்‌ திரு த்வாதச அக்ஷ்ர்‌ மந்த்ரமும்‌, குறைபாடுக ளுடையதேயாம்‌. இந்த நாராயண மந்த்ரமாகிற அஷ்டாக்ஷரி வ்யாபகத்தைச்‌ சொல்லி, வ்யாபிக்கப்படும்‌ பொருள்களைச்‌ சொல்லி, வ்யாபிக்கும்‌ விதம்‌ சொல்லி, வ்யாபித்தலின்‌ பலன்‌ சொல்லி, வ்யாபிக்கின்றவன்‌ குணங்களைச்‌ சொல்லி, இவைகளை எல்லாம்‌ சப்த்தாலே சொல்லி யிருக்கையாலே இதற்கு அர்த்த பூர்த்தியின்‌ காரணமான அதிச்யம்‌ உண்டு என்று, மற்ற வ்யாபக மந்த்ரங்களிரண்டினுடைய குறைபாடாம்‌ -அபூர்த்தியையும்‌ திருமந்த்ரமாம்‌ நாராயண மந்திரத்தினுடைய பூர்த்தியையும்‌ தெளிய பெரியவாச்சான்‌ பிள்ளைப்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ காட்டி யருளினார்‌ என்கை.

வ்யாபகாந்தரங்களில் காட்டிலும் அர்த்த பௌஷ்கல்யத்தாலே  நெடு வாசி யுண்டு –
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பூர்த்தியால் உண்டான வாசி எது என்னில் –-ஷடஷரி -வ்யாப்ய பதார்த்தங்களையும் -வ்யாபத பிரகாரத்தையும் -வ்யாப்தி பலத்தையும் -வ்யாபகனுடைய குணங்களையும் சொல்லாதே வ்யாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –வ்யாபன பிரகாரத்தை சொல்லா நிற்கச் செய்தேயும் -வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் – சர்வம் வசதி என்று அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் அதில் குணம் அன்வயியாமையாலும்
இதில் குண சித்திக்காக பகவத் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வ்யாப்தி பலத்தைச் சொல்லாமையாலும் – திரு த்வாதச அஷரியும் அபூர்ணம் –
இம்மந்த்ரம் அவை போல் அன்றியே வ்யாப்ய பதார்த்தங்களோடு -வ்யாபன பிரகாரத்தோடு-வ்யாப்தி பலத்தோடு – வ்யாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அல்லாத வ்யாபக மந்த்ரங்களைக் காட்டில்  இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் யுண்டு –

மற்ற வ்யாபக மந்திரங்கள்‌ மாயாவாதி அத்வைத மதங்களாம்‌ குத்ருஷ்டிகள்‌ விரும்பும்‌ குறைபாடு, விசிஷ்டாத்வைதிகளாம்‌ சிஷ்டர்கள்‌ விரும்புவதாகிய மேம்பாடு உண்டோ? இந்த நாராயண மந்த்ரத்‌ துக்கு என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -13- இத்தை வேதங்களும்‌, ருஷிகளும்‌, ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ விரும்பினார்கள்‌.

விஷ்ணு காயத்ரியிலே வ்யாபக மந்த்ரம்‌ மூன்றைஞ்சொல்லும்‌ போது முதற் கண்‌
நாராயண சப்தத்தை ப்ரதாநமாகச்‌ சொல்லுகையாலும்‌,
“விஸ்வம்‌ நாராயணம்‌”
என்று தொடங்கி “நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: நாராயண பரோஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: யச்ச கிஞ்சித்‌ ஜகத்யஸ்மின்‌ த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா, அந்தர்‌ பஹிஸ் ச தத் ஸர்வம்‌ வ்யாப்ய நாராயணஸ்‌ ஸ்தித:” என்று ஸகல வேதாந்த ஸாரமான நாராயண அநு வாகத்திலும்‌,
விஸ்வம் நாராயணம்‌– அனைத்துச்‌ சேதந அசேதநகங்‌களுக்கும்‌ ஆத்மாவானவன்‌ நாராயணன்‌ என்றும்‌, ‘
நாராயண பரம் ப்ரஹ்ம- பர ப்ரஹ்மமும்‌ நாராயணனே
தத்வம்‌ நாராயண;:பர:-பர தத்துவமும்‌ நாராயணனே
ஆத்மா நாராயண: பர: – பரமாத்வாவும்‌ நாராயணனே,
அஸ்மிந்‌ ஜகதி – இந்த உலகத்திலே. யச்ச கிஞ்சித்‌ – யாதானுமொன்று,
த்ருஸ்யதே- காணப்படுகிறதோ,
ஸ்ரூயதேபிவா – கேட்கப்‌ படுகிறதோ,
தத் ஸர்வம்‌ – அந்த வஸ்துக்கள்‌ எல்லா வற்றினுடையவும்‌.
அந்த :* உள்ளும்‌,
பஹிச்ச – புறமும்‌,
வ்யாப்ய
– நிறைந்து,
நாராயண : ஸ்தித : – நாராயணன்‌ இருக்கிறான்‌.
“ஏகோஹவை நாராயண ஆஸீத்‌ ந ப்ரஹ்மா நேசாந : நேமே த்யாவா ப்ருதிவீ”
மஹாப்ரளயத்தில்‌,
ஏகோஹவை நாராயண: – நாராயணன்‌ ஒருவன்‌ மாத்திரமன்றோ,
ஸீத்‌ – இருந்தான்‌,
ப்ரஹ்மா – ப்ரம்மாவும்‌,
– இல்லை,
ஈசாந : – சிவனும்‌,
– இல்லை,
இமே – இந்த,
த்யாவாப்ருதிவீ – ஆகாசமும்‌ பூமியும்‌,
– இல்லை,
‘ சஷுஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண: ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண :
சஷுஸ்ச
– பார்க்கிற கண்களும்‌, த்ரஷ்டவ்யஞ்ச – பார்க்கப்படும்‌ பொருள்களும்‌,
நாராயண ஃ நாராயணனே,
ஸ்ரோத்ரஞ்‌ – கேட்கிற செவிகளும்‌, ஸ்ரோதவ்யஞ்ச – கேட்கப்படும்‌ சப்தமும்‌, நாராயண :- – நாராயணனே.
“திசச்ச ப்ரதி சச்ச நாராயண :”(திக்குகளும்‌ மூலை திக்குகளும்‌ நாராயணனே) என்று முடிவாக, நடுவடைய ஸுபாலோப நிஷத்திலும்‌,

“யஸ்யாத்மா சரீரம்‌ யஸ்ய ப்ருதிவீ சரீரம்‌” யஸ்ய – எவனுக்கு,
ஆத்மா சரீரம்‌ – ஆத்மா சரீரமாக இருக்கிறதோ,
யஸ்ய – எவனுக்கு,
ப்ருதிவீ சரீரம்‌ – பூமியானது சரீரமாக இருக்கிறதோ,
யஸ்ய – எவனுக்கு,
ம்ருத்யுச் சரீரம்‌ – ம்ருத்யு வானவன்‌ சரீரமாக இருக்கிறோனோ, என்பதீறாக நடுவுள்ள இடங்கள்‌ தோறும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண :”
ஏஷ :
இவன்‌,
ஸர்வபூத அந்தராத்மா – எல்லா ஆத்மாக்களுக்கும்‌ அந்தராத்மாவாயும்‌, அபஹத பாப்மா – அவற்றின்‌ தோஷம்‌ தீண்டாதவனாயும்‌,
திவ்ய: பரமபத நிலயனாயும்‌,
தேவ :- உபய விபூதிக்கும்‌ நாதனாயும்‌, .
ஏக : நிகரற்றவனாயும்‌ உள்ள,
நாராயண :- நாராயணன்‌-என்று, அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும்‌,வாஸுதேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து நாராயண சப்தத்தையிட்டு பகவத்‌ ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும்‌, அபெளருஷேயமாய்‌, நித்ய நிர்தோஷமாய்‌, தனக்குத் தானே
ப்ரமாணங்களான வேதங்களும்‌ விரும்பின.
“யதா ஸர்வேஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர :
ததா ஸர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி ச அஷ்டாக்ஷராத் பர :”

யதா ஸர்வேஷு தேவேஷாு – எப்படி எல்லாத்‌ தேவர்களிலும்‌,
நாராயணாத் பர: நாராயணனைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தவர்களும்‌ ஒத்தவர்களும்‌,
நாஸ்தி – இல்லையோ,
ததா ஸர்வேஷு மந்த்ரேஷு .- அப்படியே எல்லா மந்த்ரங்களிலும்‌, நாஸ்திசாஷ்டா்ஷ்ராத் பர:- அஷ்டாக்ஷர மந்த்ரத்தோடு மிக்கதும்‌ ஒத்ததுமில்லை.
“பூத்வோர்த்வ பாஹுரத்யாத்ர ஸத்ய பூர்வம்‌ ப்ரவீமிவ :
ஹே புத்ர சிஷ்யா : ஸ்ருணுத நமந்த்ரோஷ்டாக்ஷராத் பர :”
ஹே புத்ர சிஷ்யா
: ஏ புத்ரர்களே சிஷ்யர்களே,
அத்ர – இவ்விடத்தில்‌,
ஊர்த்வ பாஹு : பூத்வா – உயரத் தூக்கின கையை உடையவனாய்‌.
அத்ய – இப்பொழுது.
ஸத்ய பூர்வம்‌ – சபத பூர்வகமாக,
:- உங்களுக்கு,
ப்ரவீமி – சொல்லுகிறேன்‌.
யூயம் ஸ்ருணுத – நீங்கள்‌ கேளுங்கள்‌.
பர -மேலான,
அஷ்‌டாக்ஷர மந்த்ர : – எட்டெழுத்து மந்த்ரமானது
– இல்லை.
“ஸர்வ வேதாந்த ஸாரார்த்தஸ்‌ ஸம்ஸாரார்ணவ தாரக : கதிரஷ்டாக்ஷரோ ந்ரூணாம்‌ அபுநர்ப்பவ காங்க்ஷிணாம்‌”.
ஸர்வ வேதாந்த ஸாரார்த்த
: அனைத்து வேதங்களினுடைய ஸாரமான அர்த்ததைச்‌ சொல்லுவதும்‌.
ஸம்ஸாரார்ணவ தாரக:– ஸம்ஸாரமாகிற கடலைக்‌ கடத்துவதுமான.
அஷ்டாஷர: திருவஷ்டாக்ஷர மந்திரமானது.
அபுநர்ப்பவ காங்ஷிநிணாம்‌- மீண்டும்‌ பிறவாமலிருக்கும்படி விரும்பும்‌ முமுஷுக்களான,
ந்ரூணாம்‌ – மனிதர்களுக்கு,
கதி : புகலாகும்‌. ,
ஆர்த்தா விஷண்ணாஸ்‌ சிதிலாச்ச பீதா : கோரேக்ஷுச வ்யாதிஷு வர்த்த மாநா : ஸங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம்‌ விமுக்த து:காஸ்‌ ஸுகிநோ பவந்தி”.
ஆர்த்தா
: ஐச்வர்யம் நஷ்ட மடைந்தவரும்‌,
விஷண்ணா :- நூதநமாக செல்வத்தை விரும்புபவரும்‌.
ஸிதிலா:– மனோ வியாதிகளை யுடையவரும்‌.
பீதா -சத்ருக்களிடத்தில்‌ பயப்பட்டவர்களும்‌. கோரஷு ச வ்‌யாதிஷு – வர்த்தமாநா :கொடிய வியாதிகளினால்‌ பீடிக்கப்‌பட்டவர்களும்‌.
நாராயண சப்த மாத்ரம்‌ – திருமந்த்ரத்தை.
ஸங்கீர்த்ய – ஸ்ரத்தையோடு அநுஸந்தித்து. விமுக்ததுக்கா : – செல்வ நாசம்‌ முதலியவற்றாலுண்டாகும்‌ துக்கத்தினின்றும்‌ விடுபட்டவர்களாய்‌, ஸுகிந : செல்வம்‌ முதலிய ஊதியத்திலுண்டான ஸுகத்தை உடையவர்களாய்‌
பவந்தி – ஆகிறார்கள்‌.
உள்ளுறை பொருள்‌ :
ஆர்த்தா :
கைங்கர்யம்‌ நழுவுதலைப் பொறுக்க மாட்டர்தவர்களாய்‌,
விஷண்ணா : தற்காப்பின்‌ தொடர்பைப்‌ பொறாதவர்களாய்‌.
சிதிலா -தேவதாந்தரங்கட்கு அடிமைப்படும்‌ நிலை வந்த போது மனம்‌ இடிந்துபோகும்படி யானவர்களாய்‌.
பீதா -சுதந்திரத்திற்கு அஞ்சினவர்களும்‌. கோரேஷு-தம்‌ முயற்சியால்‌ போக்க அரியதான.
வ்யாதிஷு-தேஹாத்மா பிமானம்‌, விஷய சபலம்‌ ஆகியவற்றிலே.
வர்த்தமாநா -இருப்பவர்களும்‌.
நாராயண சப்த மாத்ரம்‌ ஸங்கீர்த்ய – -நாராயண சப்தத்தை மாத்ரம்‌ சொன்னவர்கள்‌.
விமுக்‌தது:கா: கைங்கர்யத்‌ தடை முதலியவற்றால்‌ வரக் கடவ துன்பம்‌ அடியோடு நீங்கப்‌ பெற்றவர்களாய்‌. ஸுகிந:– நித்ய கைங்கர்யத்தால்‌ அநந்த பரிபூர்ணராய்‌,
பவந்தி– ஸ்வரூபத்தை உடையவர்களாவார்‌.
“நாராயணேதி சப்தோஸ்திவாகஸ்தி வசவர்த்திநீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்‌”
நாராயண இதி
– நாராயணனென்கிற
சப்த : அஸ்தி – சப்தம்‌ இருக்கிறது. வசவர்த்திநீ – அத்தைச்‌ சொல்லுகைக்கு-ஸ்வாதீநமான
வாக்‌ – வாகிந்த்ரியம்‌.
அஸ்தி – இருக்கிறது,
ததாபி – அப்படி இருக்கச்‌ செய்தேயும்‌ கோரே நரகே – கோரமாந நரகத்தில்‌, பதந்தி – விழுகிறார்கள்‌.
இதிகிம்‌ – இது என்‌? (என்று சித்திர குப்தன்‌ யமனைக் கேட்க, யமனும்‌ தனக்குச்‌ காரணம்‌ தெரியாமல்‌) அற்புதம்‌ – இதுவும்‌ ஓர்‌ ஆச்சரியம்‌ என்கிறான்‌.
“கிம் தத்ர பஹுபிர் மந்த்ரை: கிம் தத்ர பஹுபிர் வ்ரதை
நமோ நாராயணாயேதி மந்த்ரஸ்‌ ஸர்வார்த்த ஸாதக:”
நமோ நாராயணாய இதி –
நமோ நாராயணாய என்னும்‌,
மந்த்ர: மந்த்ரமானது,
ஸர்வாத்த ஸாதக -அனைத்துப்‌ பொருள்களையும்‌ ஸாதித்துக்‌ கொடுக்கும்‌. தத்ர- அப்படி இஷ்டத்தைப்‌ பெறுவதில்‌, பஹுபி: மந்த்ரை:- பல மந்திரங்களாலே, கிம்‌ – என்ன ப்ரயோஜநம்‌?
பஹுபி : வ்ரதை : அநேக விரதங்களாலே. கிம்‌ – என்ன ப்ரயோஜநம்‌?
இவை முதலானவைகளாலே வேதார்த்தத்தை விளங்கச்‌ சொல்லுகிற தத்தம்‌ நூல்களிலே பல இடங்களிலும்‌ இத்தைச்‌ சிறப்பித்துச்‌ சொல்லுகையாலே வேதார்த்தத்தை விரிவுபடுத்தும்‌ முயற்சி யுடையரான மேலான ரிஷிகளும்‌ விரும்பினார்கள்‌.
‘வண் புகழ்‌ நாரணன்‌’ ‘செல்வ நாரணன்‌‘ என்று தொடங்கி, ‘வாழ்புகழ் நாரணன்‌‘ என்று முதல்‌ நடு முடிவாக நம்மாழ்வாரும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌, “நாடும்‌ நகரமும்‌
நன்கறிய நமோ நாராயணாய
” என்று தொடங்கி, “ஓவாதே நமோ நாரணா வென்பன்‌” என்று பெரியாழ்வாரும்‌,
நாத்தழும்பெழ நாரணா” என்று தொடங்கி, ‘நலந் திகழ்‌ நாரணன்‌’ என்று குலசேகரப்‌ பெருமாளும்‌, “நான்முகனை நாராயணன்‌ படைத்தான்‌” என்று தொடங்கி “எட்டெழுத்தும்‌ ஓதுவார்கள்‌ வல்லர் வானமாளவே” என்று திருமழிசைப் பிரானும்‌, “நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா வென்னும்‌ நாமம்‌” என்று ஆரம்பத்தில்‌ ஒருகால்‌ சொன்னாற்‌ போலே ஒன்பது முறை சொல்லி “நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய்‌ வாராய்‌”-என்று திருமங்கையாழ்வாரும்‌, முதல்‌ கடைவாசியற அருளிச்செய்கையாலும்‌,
நன் மாலை கொண்டு நமோ .நாரணா என்னும் சொன்மாலை கற்றேன்‌” என்றும்‌, “‘நாரணா வென்றோவா துரைக்கும்‌ உரை யுண்டே?” என்றும்‌ “ஞானச்‌ சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு” “நாரணன் தன்‌ நாமங்கள்‌”, “பகல் கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌” என்றும்‌ “நாமம் பல சொல்லி நாராயணா” என்றும்‌ முதலாழ்வார்களும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ “மயர்வற மதி நலம்‌ அருளினன்‌” என்கிறபடியே, நிர்ஹேதுக பகவத்‌ கடாக்ஷத்தாலே செவ்வையான ஜ்ஞானத்தை அடைந்து எல்லாவற்றையும்‌ உண்மையாம்‌ வகை தம்‌ ஞானக் கண்ணாலே காண்பவர்களான ஆழ்வார்களெல்லாரும்‌ விரும்பினார்கள்‌. மற்ற மந்த்ரங்களை அநாதரித்து இத்தையே தந்தமக்குத் தஞ்சமாகத்‌ குறிக்‌ கொண்டு பிறர்க்கு உபதேசிக்கும்‌ போதும்‌, தந் தம்மைப்‌ பற்றினார்க்கும்‌ இத்தையே உபதேசிக்கையாலும்‌, அந்த
ஆழ்வார்களைப்‌ பின்‌ சென்ற ஆசார்யர்களெல்லாரும்‌ விரும்பினார்களென்கை.
இத்தால்‌ வேற்று மந்த்ரங்களிற் காட்டில்‌ இம்மந்த்ரத்துக் குண்டான சிறப்பு சொல்லிற்றாயிற்று.

இனி மந்த்ரத்தின்‌ பொருளான ஈஸ்வரனைக் காட்டிலும்‌, மந்த்ரத்துக்கு உண்டான சிறப்பைச்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -14-வாஸ்ய ப்ரபாவம்‌ போலன்‌று வாஸக ப்ரபாவம்‌ –

இதற்குப்‌ பொருளான ஈஸ்வரனுடைய பெருமையே போலன்று, அவன்‌ பெயரான இம் மந்த்ரத்தின்‌ பெருமை என்றபடி-அது தான்‌ ஏதென்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -15 – அவன்‌தூரதஸ்தனானாலும்‌ இது கிட்டி நின்று உதவும்‌ –

இம் மந்த்ரத்தின்‌ பொருளான ஈஸ்வரன்‌ ஸமீபத்தி லின்றிக்கே யிருந்தாலும்‌, அவன்‌ பெயரான இது கிட்டி நின்று தன்னைச்‌ சொன்னவர்களுடைய விருப்பங்‌களை ஸாதித்‌துத்‌ தரும்‌ என்கை.

இப்படி. இம் மந்த்ரத்துக்குப்‌ பொருளான இறைவன்‌ தூரவானாய்‌ இருக்க, அவனைச்‌ சொல்லுகிற சொல்லான இம் மந்த்ரம்‌ அருகே நின்று உதவின இடமுண்டோ என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -16- திரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே –

பெரிய சபையிலே துச்சாஸநன்‌ ஆடையைக் களையும்‌ போது திரெளபதி யானவள்‌ “மஹத்‌யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவாந் ஹரி :”பேராபத்து விளைந்த போது ஹரியான பகவானை நினைப்பாயாக-என்று ஸ்ரீவஸிஷ்ட ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து,
“சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலைய அச்யுத,கோவிந்த புண்டரீகாஷ் ரக்ஷமாம்‌ சரணாகதாம்‌” என்று சரணம்‌ புகுந்த த்ரெளபதிக்கு அவ் வாபத்திலே மானக் குறை வராமல்‌ மேன்மேலென அடைகளை வளரவித்தது கோவிந்தா என்ற திருநாமமன்றோ ?.(சங்க சக்ரங்களைக்‌ கையிலேந்தியவனே! துவராகையை இருப்பிடமாக உடையவனே! அடைந்தாரை நழுவ விடாதவனே! பசுக்களைக் காப்பதையே விந்தையாக உடையவனே!
தாமரைக் கண்ணனே! உன்னையே தஞ்சமடைந்த என்னைக்‌ காத்தரூள்வாயாக). என்று சரணம்‌ புகுந்த த்ரெளபதிக்கு அந்த ஆபத்திலே “கோவிந்தேதி யதா க்ரந்தத்‌ க்ருஷ்ணாமாம்‌
தூரவாஸிநம்‌ ச ருணம்‌ ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயாந்‌ நாப ஸர்ப்பதி”
(தரெளபதி யானவள்‌ தூரத்தில்‌ இருந்த என்னைக்‌ குறித்து கோவிந்தா! என்று அழுதாள்‌ என்பது யாதொன்றுண்டோ அது வட்டிக்கு வட்டியாக வளரும்‌ கடனைப்‌ போல்‌, என்னுடைய மனத்தினின்றும்‌ நீங்கவில்லை, என்று பாண்டவர்களை வந வாஸம்‌ நீங்கி உபப்லாவ்யத்தில்‌ கண்டு சொன்னது) என்கிறபடியே நாமத்துக்குப்‌ பொருளான கண்ணன்‌ தூர வாஸனாயிருக்கச்‌ செய்தேயும்‌, ஆடையை உண்டாக்கிக்‌ கொடுத்தது அந்த அவதாரத்தின்‌ பேரான கோவிந்தனென்கிற திருநாமமென்கை. நாராயண சப்தார்த்தப்‌ பல்லாயிரப் பகுதியில்‌ ஒரு பகுதியான கோவிந்த நாமம்‌ இப்படிச்‌ செய்த தென்றால்‌ நாராயண நாமத்தின்‌ ஏற்றம்‌ சொல்ல வேண்டாதாயிற்று.

இன்னமும்‌ ஒரு விதத்தாலே இதன்‌ பெருமையைச்‌ சொல்கிறார்‌.
ஸூர்ணை -17. சொல்லும்‌ கிரமம்‌ ஒழியச்‌ சொன்‌னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெட நில்லாது

யாதொரு மந்த்ரமும்‌ தன்னைத்‌ தஞ்சமாக மிக விருப்பத்தோடு சொன்னவர்களுக்கல்லது காப்பதாகிய தன்‌ கார்யஞ்‌ செய்யாதே யாகிலும்‌, இந்த மந்த்ரம்‌ அவ்வாறன்றிக்கே தன்னைத் தஞ்சமாக விரும்பிச்‌ சொல்லுகை யாகிற முறை யன்றிக்கே “ஸாங்கேத்யம்‌ பாரிஹாஸ்யஞ்ச, ஸ்தோபம்‌ ஹேள ந மேவ வா” (இடுகுறியாகிய ஒருவன்‌ பெயராகச்‌ சொன்னாலும்‌ அநுகூலர்‌ விஷயத்தில்‌ தரிக்காமல்‌ பெயராக அழைத்தாலும்‌, கீதம்‌ பாடுமவர்கள்‌ பல பெயர்களைப்‌ பன்னுகிற முறையில்‌ சொன்னாலும்‌, சிசுபாலன்‌ முதலானாரைப்‌ போல்‌ கோபம்‌ பிறக்கச்‌ சொன்னாலும்‌ தான்‌ நற்பலன்‌ தருவதில்‌ தவறாது) என்கிறபடியே, எங்கனே சொல்லினும்‌ சொன்னவர்களைக்‌ காப்பதாகிற தன் நிலை கெடாது.

இது தான்‌ எவரெவர்‌ எந்த எந்த பலன்களை விரும்புகிறார்களோ அவரவர்கள்‌: விரும்பினபடியே தரும் படியான பெருமையைச்‌ சொல்கிறார்‌-
ஸூர்ணை -18 -இது தான்‌ “குலந்தரும்‌” என்கிறபடியே எல்லா அபேஷிதிதங்களையும் கொடுக்கும்‌ .

இந்த மந்த்ரமானது “குலந்தரும்‌” என்று தொடங்கி, ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடியே அவரவர்‌ தகுதிகளுக்கேற்ப எல்லா கோரிக்கைகளையும்‌ கொடுக்கும்‌ என்கை.

மேற்சொன்னவற்றை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -19 -ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்‌களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌ .

ஐஹலெளகிகம் ஜஸ்வர்யம்‌. ஸ்வர்க்காத்யம்‌ பார லெளகிகம்‌, கைவல்யம்‌ பகவந்தஞ்ச மந்த்ரோயம்‌ ஸாதயிஷ்யதி”, (இவ்வுலகச்‌ செல்வம்‌, ஸ்வர்க்கம்‌ முதலான பர லோகத்துச்‌ செல்வம்‌, ஆத்மாநுபவமாகிய கைவல்யம்‌, பரமாத்மாநுபவமாகிய பரம பதத்தின்பம்‌ ஆகியவைகளை இந்த மந்திரம்‌ ஸாதித்துக்‌ கொடுக்கும்‌. என்கிறபடியே -இவ் வுலகத்ததாயும்‌, மேல்‌ பர லோகத்ததாயும்‌ உள்ள ஐஸ்வர்யங்களையும்‌, ஆத்மாவின்‌ இயற்கை நிலை எய்துவதாகிய கைவல்யத்தையும்‌. அளவற்றதும்‌, அழிவற்றதும்‌, மேம்பட்டதுமாகிய பரமாத்மாநுபவமாகிய பரம பதத்தில்‌ அநுபவத்தையும்‌ ஆசைப்பட்ட அந்த அந்த தகுதி யுடையார்க்கு ஜப ஹோமம்‌ முதலானவைகளாலே நேரே தானே ஸாதநமாய்‌ நின்று அவ் வவற்றைக்‌ கொடுக்கும்‌ என்கை.

கர்மம்‌ முதலான ஸாதநங்களுக்குத்‌ துணை பண்ணும்‌ இதன்‌ சிறப்பைச்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -20 -கர்ம ஜ்ஞாந பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி அவற்றைத்‌ தலைக் கட்டிக்‌ கொடுக்கும்‌

கர்ம யோகத்தை முக்தி ஸாதநமாகக்‌ கொள்ளுமவர்களுக்கு கர்ம யோக ஆரம்ப
விரோதியான பாபத்தைத்‌ தள்ளி அந்தக்‌ கர்மம்‌ நிர்விக்நமாயிருந்து, அதை முடிவு பெறச்‌ செய்யும்‌. முதற் கண்‌ ஜ்ஞாந யோகத்தை முன்னிடுமவர்களுக்குத்‌ தன்னைத்‌ துணை கொள்ளுமளவில்‌, கர்மத்தால்‌ ஸாதிக்கக்‌ கூடிய ஜ்ஞாநாரம்ப விரோதியான பாபத்தைத்‌ தள்ளி அந்த ஜ்ஞாநத்துக்கு நாள்‌ தோறும்‌ வளர்ச்சியைச்‌ செய்து கொண்டு, அத்தை முடிவு
பெறுத்துவிக்கும்‌. பக்தி யோகத்தை மோக்ஷ ஸாதநமாகக்‌ கொள்ளுமவர்களுக்கு, தன்னைத்‌ துணை கொள்ளுமளவில்‌, பக்தி யோகாரம்ப விரோதியான பாபத்தை ஒழித்து,
பக்தி யோக வளர்ச்சிக்குக்‌ காரணமாய்‌ நின்று அதை முடிவு பெறுத்துவிக்கு மென்கை.

இங்ஙனன்றிக்கே ப்ரபந்நர்க்கு இது செய்யும்‌ உபகார வைபவத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -21 – ப்ரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப்‌ பிறப்பித்துக்‌ கால ஷேபத்துக்கும்‌ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌ .

கீழ்ச்‌ சொன்னவை போலே செயற்கரியதாய்‌, ஜீவர்களுடைய பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு முரண் பட்டதாய்‌ இருக்கை யன்றிக்கே, சுலபமாக ஓழுகுவதற்‌குரித்தாய்‌, ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்தியதுமான ப்ரபத்தியாகிய நிஷ்டையில்‌ நின்றவர்களுக்கு இந்த நிஷ்டைக்குப்‌ பொருந்தியதான, பரதந்த்ர ரூப ஸ்வரூப ஜ்ஞாநத்தை மிக விரிவாக உண்டாக்கி, அர்த்தா நுஸந்தாநம்‌ பண்ணுதல்‌ முதலியவைகளாலே போது போக்குகைக்கும்‌ உரித்தாய்‌, “எனக்‌ கென்றுந்தேனும்‌ பாலும்‌ அமுதுமாய திருமால்‌ திருநாமம்‌” என்கிறபடியே திருமந்த்ர பொருளான எம்பெருமான்‌ நலமந்தமில்லாதவனைப்‌ போலே, இது தானே சுவை மிகுத்து இனிய போகத்துக்கும்‌ உரித்தாயிருக்கும்‌.

அறியப்‌ பெறுவனவாகிய அனைத்து அர்த்தங்களையும்‌ சொல்லுகையாகிற இதன்‌ வைபவத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை – 22- “மற்றெல்லாம்‌ பேசிலும்‌” என்கிறபடியே அறிய வேண்டும்‌ அர்த்தமெல்லாம்‌ இதுக்குள்ளே உண்டு .

நின்திருவெட்டெழுத்துங்‌ கற்று, மற்றெல்லாம்‌ பேசிலும்‌” என்கிறபடியே, ஆத்மா உஜ்ஜீவனத்துக்குப்‌ பொருந்த அறிய வேண்டும்‌ அர்த்த விசேஷங்களெல்லாம்‌ இந்த மந்த்ரத்துக்குள்ளே உண்டென்கை.

அறிய வேண்டும்‌ அர்த்தமெல்லாம்‌ எது? என்னும்‌, விருப்ப முடைமை யாலருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -23 – அதாவது – அஞ்சர்த்தம்‌ .

அஞ்சர்த்தமாவது : ஆத்மாவின்‌ இயல்‌பான தன்மையையும்‌ பரமாத்மாவின்‌ இயல்பான தன்மையையும்‌, பரமாத்மாவால்‌ ஜீவாத்மா பெறும்‌ பயனின்‌ தன்மையையும்‌, இப் பயனை ஸாதித்துத்‌ தரும்‌ ஸாதநத்தின்‌ தன்மையையும்‌, இவற்றை தடுக்கிற தடையின்‌ தன்மையையும்‌ இந்த மந்த்ரம்‌ சொல்வதாகும்‌. இவற்றுக்கு ப்ரமாணமாவது,
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துசச ப்ரத்யகாத்மந: ப்ராப்த் யுபாயம்‌ பலம்‌ ப்ராப்தேஸ்‌ ததா ப்ராப்தி விரோதிச, வதந்தி ஸகலா வேதாஸ்‌ ஸேதிஹாஸ புராணகா: முநயச் ச மஹாத்மாநோ வேத வேதார்த்த வேதிந :”
(அடையத் தக்க பர ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபத்தையும்‌, அடைபவனான ஜீவனுடைய ஸ்வரூபத்தையும்‌, அடைகிறதற்கேற்ற உபாய ஸ்வரூபத்தையும்‌, அடையும்‌
பலனின்‌ ஸ்வரூபத்தையும்‌, அப்படியே அடைவதற்கு விரோதியா யிருப்பதன்‌ ஸ்வரூபத்தையும்‌, இதிஹாஸ புராணங்களுடன்‌ கூடின எல்லா வேதங்களும்‌ சொல்லுகின்றன.-வேதங்களையும்‌, வேதாந்தங்களான வற்றையும்‌ அறிந்தவர்‌களான மஹாத்மாக்களான மஹரிஷிகளும்‌ சொல்லுகிறார்‌கள்‌.) இப்படியே ஸகல வேத சாஸ்திரங்களும்‌ சொல்லுவது இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஆகையாலே, அதன்‌ சுருக்கமான இந்த மந்த்ரத்தில்‌ சொல்லப் பெறுவதும்‌ இதுவே யாம்‌. -இந்த மந்த்ரந்தான்‌ ப்ரணவத்தாலே ஜீவ ஸ்வரூபத்தையும்‌, நமஸ்ஸாலே விரோதி, உபாய ஸ்வரூபங்களையும்‌, நாராயண பதத்தாலே பர ஸ்வரூபத்தையும்‌, அதில்‌ நான்காம்‌ வேற்றுமையாலே பல ஸ்வரூபத்தையும்‌ சொல்லுவதாயிருப்பதாகும்‌.

இந்த மந்த்ரத்தின்‌ பொருளின்‌ சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌ மேல்‌.
ஸூர்ணை -24- பூர்வாசார்யர்கள்‌ இதில்‌ அர்த்தம்‌ அறிவதற்கு முன்பு தங்களைப்‌ பிறந்தார்களாக நினைத்திரார்கள்‌; இதில்‌ அர்த்த ஜ்ஞாநம்‌ பிறந்த பின்பு, “பிறந்தபின்‌ மறந்திலேன்‌” என்கிறபடியே இத்தை யொழிய வேறொன்றால்‌ கால க்ஷேபம்‌ பண்ணி அறியார்கள்‌ .

நாதமுநிகள்‌ ஆளவந்தார்‌ எதிராஜர்‌ முதலான நம்‌ பூர்வாசார்யர்கள்‌ “அன்று நான்‌ பிறந்திலேன்‌” என்கிறபடியே இந்த மந்த்ரத்தில்‌ அர்த்தம்‌ அறிவதற்கு முன்பு தங்களைப்‌ பிறந்தார்களாக நினைத்திறார்கள்‌. இதில்‌ அர்த்த ஜ்ஞாநம்‌ தங்களுக்கு உண்டான பின்பு “பிறந்த பின்‌ மறந்திலேன்‌” என்று ஆழ்வார்‌ பாசுரத்திற்‌ சொல்லுகிறபடியே இந்த மந்த்ர அர்த்தத்தைத்‌ தவிர வேறொன்றால்‌ காலங் கழிக்க மாட்டார்கள்‌ என்கை-வேத சாஸ்திரங்களிலோ, ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செயல்களிலோ பொழுது போக்கும்‌ போதும்‌ இந்த மந்த்ர அர்த்தத்தை உட் கொண்டே விசாரிப்பதாலே இத்தை யொழிய வேறொன்றால்‌ காலக்ஷேபம்‌ பண்ணி யறியார்களென்னத்‌ தட்டில்லை.

சப்த சக்தி தானே அனைத்தையும்‌ ஸாதித்துத்‌ தருவதாயிருக்க, இவர்கள்‌ இதன்‌ அர்த்தத்திலே ஊன்றுகைக்குக்‌ காரணம்‌ என்‌? என்ன, அருளுகிறார்‌.
ஸூர்ணை -25- வாசகத்திற் காட்டில்‌ வாச்யத்தில்‌ ஊன்றுகைக்கடி, ஈஸ்வரனே உபாய உபேயமென்று நினைத்திருக்கை ;

அனைத்துப் பலன்களுக்கும்‌ இம் மந்த்ரம்‌ தானே ஸாதநமாயும்‌ மற்றைச்‌ சாதனங்களுக்குத்‌ துணையாய்‌ நின்று தலைக் கட்டிக்‌ கொடுக்குமதான சப்த சக்தி தானே அமைந்திருக்கச்‌ செய்தே, இதை விட்டு முன்‌ ஸூத்திரத்தில்‌ சொன்ன படியே இந்த மந்த்ரத்தினுடைய அர்த்தத்திலே பூர்வாசார்யர்கள்‌ நோக்கா யிருப்பதற்குக்‌ காரணம்‌, எம்பெருமான்‌ உகப்பை விட்டு வேற்றுப்‌ பயன்‌ கருதுமவராய்‌ இம் மந்திர சப்தத்தை ஸாதநமாகக்‌ கொண்டு
சாதித்தல்‌; வேறு ஸாதநங்களைக்‌ கைக்‌ கொள்ளுமவர்களாய்‌ அது முற்றுப்‌ பெறுவதற்கு இதன்‌ சப்தத்தை துணைக்‌ கொள்ளுமவர்களைப்‌ போலன்றிக்கே, உபாய உபேயங்கள்‌ இரண்டும்‌ எம்பெருமானே என்று நினைவிற் கொண்டு ஒழுகுகை என்றபடி.

இனி மேல்‌ இம் மந்த்ரத்துக்கு அர்த்தம்‌ இரண்டு வாக்யங்களாக அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -20- இது தன்னில்‌ சொல்லுகிற அர்த்தம்‌ ஸ்வரூபமுமம்‌, ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும்‌; ஸ்வரூபமும்‌, உபாயமும்‌, பலமும்‌ என்னவுமாம்‌.

இந்த மந்த்ரந் தன்னில்‌ சொல்லுகிற அர்த்தமாவது, இது ஆத்மாவினுடைய அடிமையும்‌ பராதீநனாயும்‌ இருக்கிற இயல்பான ஸ்வரூபமும்‌, இந்த ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்தியதான தொண்டாற்றுகை யாகிற பலமும்‌. (ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்துகையாவது: தன்னலங்‌ கருதுகை யாகிற சுய நலமும்‌, தான்‌ செய்வதாகக்‌ கருதுகையாகிற அஹங்காரமும்‌ நீங்கிப்‌ பகவந் நியமநத்தால்‌ அவனுகப்புக்கென்றே செய்கையாகிற நியமம்‌.)
அல்லது
அடிமையாகிற ஸ்வரூபமும்‌, இந்த ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்திய உபாயமும்‌.” இந்த உபாயத்தால்‌ ஸாதிப்பதாகிற பயனுமாமென்கை.
இதில்‌ முன்னர்‌ பொருள்‌ கொண்ட ரீதியில்‌ ப்ரணவ நமஸ்ஸுக்களாலே ஸ்வரூபமும்‌, நாராயண பதத்தாலே பயனுஞ் சொல்லுகிறது.
பின்னர்‌ பொருள்கோளில்‌ ப்ரணவத்தாலே சேஷத்வமாகிற ஸ்வரூபமும்‌, நமஸ்ஸாலே உபாயமும்‌, நாராயண பதத்தாலே பலமும்‌ சொல்லுகிறது.

ஸூர்ணை -27-பலம்‌ இருக்கும்படி. ப்ரமேய சேகரத்திலும்‌, அர்ச்சிராதி கதியிலும்‌ சொன்னோம்‌ .

இவ் வாத்மாவுக்குப்‌ பெறப்‌-பெறுகை யாகிற பலந்தான்‌ -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்திலே போய்‌ பரிபூர்ண பகவதநுபவத்தைச்‌ செய்து அவ் வநுபவத்தால்‌ பிறந்த ப்ரேமை தூண்டச்‌ செய்யும்‌ அனைத்துத்‌ தொண்டும்‌ ஆகையாலே, அது இருக்கும்படியைச்‌
சுருக்கமாக “ப்ரமேய சேகரம்‌” என்கிற ப்ரபந்தத்திலும்‌, விரிவாக “அர்ச்சிராதி கதி” யாகிற ப்ரபந்தத்திலும்‌ சொன்னோம்‌, அவற்றிலே கண்டு கொள்வதென்கை.

இந்த மந்த்ரத்துக்கு பதவுரை அருளிச்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம் பற்றி,இதனுடைய எழுத்திலக்கத்தையும்‌, பத இலக்கத்தையும்‌ முதலில்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -28- இதுதான்‌ எட்டு திரு வக்ஷரமாய்‌ -மூன்‌று பதமாயிருக்கும்‌ .

இந்த மந்த்ரம்‌ தான்‌ “ஓமித்யேகாக்ஷரம்‌, நம இதித்வே அக்ஷரே, நாராயணாயேதி
பஞ்சாக்ஷராணி, இத்யஷ்டாக்ஷரம்‌ சந்தஸா காயத்ரீ சேதி
” என்றும்‌ “ஓமித்யக்ரே வ்யாஹரேத்‌, நம இதி பச்சாத்‌, நாராயணாயேத்யுபரிஷ்டாத்‌” என்கிறபடியே, எட்டு திருவக்ஷரமாய்‌, மூன்று பதமாயிருக்குமென்கை. இதனுடைய அஷ்‌டாக்ஷரத்வம்‌ சொல்லுகிற இடத்தில்‌ “ஓமித்யே காக்ஷரம்‌” என்று ப்ரணவத்தை ஒரக்ஷரமாகவும்‌ “நம இதித்வே அக்ஷரே” என்று நமஸ்ஸை இரண்டக்ஷரமாகவும்‌, “நாராயணாயேதி
பஞ்சாக்ஷ்ராணி”
என்று நாராயண பதத்தை அஞ்சக்ஷரமாகவும்‌ வேதம்‌ சொல்லுகையாலே ஸமஸ்த பதமான நாராயண பதத்தில்‌ நார பதத்தைப்‌ பிரித்து ஆறு எழுத்தாக்கி ப்ரணவம்‌ நீங்கலாக அஷ்டாக்ஷரத்வம்‌ சொல்லுகையாகிற பக்ஷம்‌ வேத மார்கம்‌ அல்லாததாகையாலே ஏற்றுக்‌ கொள்ளத்தக்க தன்று என்கை.

இதில்‌, மூன்று பதங்களும்‌ எவ்வர்த்தத்தைச்‌ சொல்லுகிறது என்னும்‌ வேட்கையில் அருளிச் செய்கிறார்‌.

ஸூர்ணை -29- மூன்று பதமும்‌ மூன்றர்த்தத்தைச்‌ சொல்லுகிறது –
மூன்று பதமும்‌ மூன்று அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌.
அவ்வர்த்தங்கள்‌ தம்மை விரிவாக அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -30- அதாவது, சேஷத்வமும்‌, பாரதந்த்ரியமும்‌, கைங்கா்யமும்‌

ப்ரணவத்தாலே சேஷத்வமும்‌, நமப் பதத்தாலே பாரதந்த்ரியமும்‌, நாராயண பதத்தாலே கைங்கர்யமும்‌ என்று விவரிக்கிறார்‌-ஸ்வரூபமும்‌, ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும்‌ என்று முதலில் சொன்ன வாக்யார்த்தம்‌, இத்தை நினைத்துச்‌ சொன்னதாம்‌.

இந்த மூன்று பதங்களில்‌ முதற்பதம்‌ எது என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -31- இதில்‌ முதல்‌ பதம்‌ ப்ரணவம்‌ .
“ஓமித்யக்ரே வ்யாஹரேத்‌”
ப்ரணவத்தை முதலில்‌ ஓதக் கடவது; என்றன்றோ வேதஞ் சொல்லிற்று. தர்ம சாஸ்திரமாகிய ஸ்ம்ருதியும்‌ “ப்ரணவாத்யம்‌ நமோ மத்யம்‌ நாராயண யதாந்திமம்‌, மந்த்ரமஷ்டாக்ஷரம்‌ வித்யாத்‌ ஸர்வ ஸித்தி கரம் ந்ருணாம்‌”
ப்ரணவம்‌’ முதற்‌ பதமாகவும்‌, நம:’ பதம்‌ மத்யமாகவும்‌ “நாராயண” பதம்‌ கடைசியாகவும்‌ உடைய அஷ்டாக்ஷர மந்த்ரம்‌, சேதநர்களுக்கு எல்லா விருப்பங்களையும்‌ தரும்‌ என்றறியக்‌ கடவன்‌ என்றது.

இனி ப்ரணவத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக, இதனுடைய மூன்றெழுத்தா யிருக்குமதை அருளிச்‌ செய்கிறார்‌-

ஸூர்ணை – 32 -இது -அ-. என்றும்‌ -உ – என்றும்‌ -ம்‌ -என்றும்‌ மூன்று திருவக்ஷரம்‌ ஃ
இந்த ப்ரணவந்தான்‌ விபக்தமாகப்‌ பிரிந்த நிலையிலே மூன்றெழுத்துக்களாய்‌, மூன்று பதமாய்‌, மூன்று அர்த்தங்கள்‌ காட்டுமதாய்‌, கூட்டான நிலையிலே ஒரெழுத்தாய்‌, ஒரு பதமாய்‌, ஒரர்த்தங் காட்டுமதா யிருக்கும்‌.

இனி, இந்த மூன்றெழுத்துக்களும்‌ உற்பத்தியான கிரமத்தை உபமாந முகத்தாலே காட்டுகிறார்‌.

ஸூர்ணை -33 – மூன்று தாழியிலே தயிரை நிறைத்துக்‌ கடைந்து வெண்ணெய்‌ திரட்டினாற் போலே மூன்று வேதத்திலும்‌ மூன்றக்ஷரத்தையும்‌ எடுத்தது.

மூன்று தாழியிலே என்று தொடங்கி “பூரிதிரிக்‌ வேதாதஜாயத, புவ இதி யஜுர் வேதாத்‌, ஸுவரிதி சாம வேதாத்‌, தாநி ஸாக்ராணி அப்யதபத்‌, தேப்யோ அபிதப்தேப்ய ஸ்‌ த்ரயோ வர்ணா அஜாயந்த, அகார உகார மகார இதி, தாநேகதா ஸமபரத்ததே ததோமிதி”
“பூ:” என்பது ரிக்வேத ஸாரமாக உண்டாயிற்று; ‘புவ:’ என்பது யஜுர்வேத ஸாரமாக உண்டாயிற்று; ‘ஸுவ:” என்பது சாமவேத ஸாரமாக உண்டாயிற்று.
தாநி – அந்த “பூ; புவ:, ஸுவ:” என்கிற சாரச்‌ சொற்களாகிற,
ஸுக்ராணி – பரிசுத்தமான பொன் திவலைகளை,
அப்யதபத்‌-மீண்டும் சுருங்க உருக்கினான்‌. தேப்ய: “அபிதப்தேப்ய த்ரயோ வர்ணா : உருக்கப்பட்டதான . அந்த, ‘பூ ; புவ ஸுவ: மூன்றும்‌ (லயத்தை அடைந்து) சுருங்கி, அகார, உகார, மகார இதி – அ’ ‘௨’ ‘ம’ என்று, த்ரயோவர்ணா : மூன்று எழுத்துக்கள்‌.
அஜாயந்த – உண்டாயின,
தாந்‌ – அந்த மூன்று எழுத்துக்களையும்‌, ஏகதாஸமபரத்‌ – ஒன்றாகச்‌ சேர்த்தான்‌,
தத்‌ ஏதத்‌ – சேர்த்த அந்த இது தான்‌ .
ஓம்‌ இதி – ஓம்‌ என்பது அகும்‌.

தகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி : வேதத்ரயாநீ நிரப்ருஹத்‌ பூர்புவஸ்‌ ஸவரிதீதிச “
அகாரஞ்சஅபி
– அகாரத்தையும்‌,
உகாரஞ்ச – உகாரத்தையும்‌,
மகாரஞ்ச – மகாரத்தையும்‌,
பூ : புவ: ஸுவ : – வயாஹ்ருதிகளென்ற இந்த ஸாரமான சொற்களை
ப்ரஜாபதி :- எம்பெருமான்‌,
வேத த்ரயாத்‌ – மூன்று வேதங்களினின்‌றும்‌,
நிர ப்ருஹத்‌ – எடுத்தான்‌. என்று வேதங்களிலும்‌ தர்ம சாஸ்திரங்களிலும்‌ சொல்லுகிறபடியே -ரிக் யஜுஸ்‌ சாமங்களான மூன்று வேதங்களினின்றும்‌ ‘பூ : புவ : ஸுவ:” என்ற ஸாரச்‌ சொற்கள்‌ மூன்றையும்‌ தோற்றுவித்து, அவைகளை மீண்டும்‌ பொன்‌ உருக்குமா போலே எம்பெருமான்‌ தன்‌ ஸங்கல்பத்தாலே சுருங்கச்‌ செய்து அவற்றில்‌ நின்றும்‌ அகார உகார மகாரங்களாகிற எழுத்துக்கள்‌ மூன்றும்‌ முறையே தோன்ற வைத்து, இப்படி. உண்டாக்கின படியைத்‌ திருவுள்ளம்‌ பற்றி மூன்று தாழியில்‌ தயிரை நிறைத்து தனித்தனியே கடைந்து,
அதன்‌ ஸாரமான வெண்ணெயைத்‌ திரட்டினாற் போலே மூன்று வேதத்திலும்‌ மூன்றெழுத்தையும்‌ எடுத்ததென்கிறார்‌.

இத்தால்‌ பலித்த அம்ஸத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -34 – ஆகையாலிது, ஸகல வேத ஸாரம்‌.

ப்ரணவத்திலுள்ள மூன்று எழுத்துக்களான அ , ௨, ம, ஓவ்வொரு வேதத்தினுடைய ஸாரமாக எடுக்கப்பட்ட தாகையாலே இது, ஸகல வேத ஸாரம்‌ என்ற படி.

மூன்றெழுத்துக்களுக்கும்‌ முறையே அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி முதற் கண்‌ அகாரார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -35- இதில்‌ அகாரம்‌, ஸகல ஸப்தத்துக்கும்‌ காரணமாய்‌ நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்‌கையாலே, ஸகல ஐகத்துக்கும்‌ காரணமாய்‌ ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானைச்‌ சொல்லுகிறது .

இந்த மூன்றெழுத்துக்களிலும்‌ வைத்துக்‌ கொண்டு முதலெழுத்தான அகாரம்‌,
“நாமரூபஞ்ச பூதாநாம்‌ க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சநம்‌ வேத ஸப்தேப்ய ஏவா தெள தேவாதீ நாஞ்‌ ச காரஸ :”
ஸ எ –
பிரமன்‌,
அதெள – படைப்புக் காலத்தில்‌,
தேவாதீநாம்‌ – தேவர்‌ முதலாக தாவரங்களீறாக உள்ள,
பூதாதாம்‌ – ப்ராணிகளுக்கு,
நாம – பெயர்களையும்‌,
ரூபஞ்ச – வடிவங்களையும்‌,
க்ருத்யாநாம்‌ ப்ரபஞ்ச நஞ்ச : – தொழில்‌முறைகளாகிற விரிவையும்‌,
வேத ஸப்தேப்ய:ஏவ – வேதத்தினுடைய சப்தங்களிலிருந்தே,
சகார – படைத்தான்‌, -என்கிறபடியே உலகில்‌ சப்தங்களுக்கு வேதம்‌ காரணமாய்‌,
ப்ரணவாத்யா ஸ்‌ ததா வேதா!”
வேதா:
– வேதங்கள்‌,
ப்ரணவாத்யா :- ப்ரணவத்தை முதலாக உடைத்தாயிருக்கின்றன.
ஓம்கார ப்ரபவா வேதா:”
வேதா
-வேதங்கள்‌,
ஓங்கார ப்ரபவா – ப்ரணவத்தைப்‌ பிறப்பிடமாக உடையன. இவை முதலானவைகளிற் சொல்லுகிறபடியே அந்த வேதங்களுக்கும்‌ ப்ரணவம்‌ காரணமாய்‌,
“தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய”
ப்ரக்ருதி லீநஸ்ய
– தன்‌ காரணமான அகாரத்திலே அடங்கி இருக்கிற;
தஸ்ய – அந்த ப்ரணவத்திற்கு. என்கிறபடியே அந்தப் ப்ரணவம்‌ தனக்கு அகாரம்‌ காரணமாயிருக்கையாலே,
“அகாரோவை ஸர்வா வாக்‌”
ஸர்வாவாக்‌
– எல்லா வாக்குக்களும்‌,
அகாரோவை – அகாரமாயே-அகாரத்தைத்‌ அணைக்‌ கொண்டே (பாண்டமெல்லாம்‌ மாண்ணாலேயே இருக்கும்‌) என்பது போல, ‘அகாரத்தின்‌ சிதைவே எல்லா எழுத்துக்களும்‌ என்றதென்க.
“ஸமஸ்த ஸப்த மூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத:” (இயல்‌ பாகவே அகாரம்‌ எல்லாச்‌ சொற்களுக்கும்‌ காரணமாயிருக்கும்‌) இப்படிகளால்‌ அகாரம்‌ ஸகல ஸப்தங்களுக்கும்‌ காரணமாயும்‌, ஸர்வேஸ்வரன்‌ உலகிலுள்ள அனைத்துப்‌ பொருள்களும்‌ தனக்கு உடலாயும்‌, தான்‌ அவற்றுக்கு உயிராயும்‌ இருந்து ஸர்வ ரக்ஷகனாயிருக்கும்‌ படியை சொல்‌லுகிற நாராயண பதத்துக்கு சுருக்கமா யிருக்கையாலே,
“யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி”.
யதோவா –
எவனிடத்திலிருந்து,
இமாநி பூதாநி – இந்த தேவ மநுஷ்யாதி ப்ராணிகள்‌ எல்லாம்‌,
ஜாயந்தே – உண்டாகின்றனவோ,
யேந – இவ்வாத்மாவாயிருக்கிறது எதனால்‌,
ஜாதாநி – உண்டான பூதங்களெல்லாம்‌, ஜீவந்தி – உயிருடன்‌ இருக்கின்றனவோ என்றும்‌,
ஸஏவ ஸ்ருஜ்யஸ்‌ ஸ ச ஸார்க்ககர்த்தா ஸ ஏவ பாத்யத்‌ தி ச பால்யதே ச “
ஸ_ஏவ
– அவனே,
ஸ்ருஜ்ய:– படைக்கப்‌ படுகின்றான்‌,
ஸர்க்க கர்த்தாச – ஸ்ருஷ்டி, பண்ணுகிறவனும்‌,
:- அவனே,
ஸஏவபாதி – ரக்ஷிக்கிறவனும்‌ ௮வனே, பால்யதேச – ரஷிக்கப்படுகிறவனும்‌ அவனே,
அத்தி – ஸ்ம்ஹரிக்கிறவனும்‌ அவனே என்றும்‌, இவைகளிற்‌ சொல்லுகிறபடியே எல்லா ஐகத்துக்குங்‌ காரணமாய்‌, எல்லார்க்கும்‌ ரக்ஷகனாயிருக்கும்‌ எம்பெருமானைச்‌ சொல்லுகிறதென்கை. இத்தால்‌ இவ் வெழுத்தில்‌ எழுத்தினியல்பான பொருளான காரணத்வமும்‌, பகுதியான(தாத்வர்த்தமான) வினை யடியாகப்‌ பிறந்த ரக்ஷ்கத்வமும்‌, சொல்லிற்றாயிற்று. இந்த அகாரத்துக்கு நாராயண பதத்தின்‌ சுருக்கமான ரக்ஷகத்வம்‌ சொல்லும் போதும்‌ தாதுவினால்‌ கிடைத்த தன்மையை முன்னிட்டே சொல்ல வேணுமென்றதாம்‌.

ரக்ஷிக்கும்‌ விதம்‌ எது? என்னும்‌ வேட்கையிலே அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -36 – ரஷிக்கையாவது விரோதியைப்‌ யோக்‌குகையும்‌ அபேஷிதிதத்தைக்‌ கொடுக்கையும்‌-

ரக்ஷிப்பதென்பது இஷ்டமில்‌லா தவற்றைத்‌ தவிர்க்கையும்‌, இஷ்டமானதைக்‌ கொடுக்கையும்‌ ஆகிய இரண்டுவகை யாகையாலே, ஈஸ்வரன்‌ சேதநரை
ரக்ஷிக்கையாவது – அவர்களுக்கு வருத்தத்துக்‌ கேதுவான விரோதியைப்‌ போக்குகையும்‌ சுகத்துக் கேதுவான விருப்பத்‌துக் குரியதைத் தருகையும்‌ என்கை-

இவன்‌ இவர்களுக்குப்‌ போக்கும்‌ விரோதி எது? கொடுக்கும்‌ (அபேஷிதம்‌) விருப்பம்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -37-இவை இரண்டும்‌ சேதநர்‌ நின்ற நின்ற அளவுக்கீடாயிருக்கும்‌ .
சேதநர்‌ .நின்ற நின்ற அளவுக்கீடாயிருக்கும்‌ என்றது, தாம்‌ தாம்‌ நின்ற (அதிகாரத்துக் கீடான) தகுதிகளுக்குப்‌ பொருந்த இருக்கும்‌ என்றபடி.

இது தன்னைத்‌ தெளிய அருளிச்‌ செய்‌கிறார்‌ மேல்‌.
ஸூர்ணை –38 –ஸம்ஸாரிகளுக்கு விரோதி ஸத்ரூ பீடாதிகள்‌, அபேஷிதிதம்‌ – அந்ந பாநாதிகள்‌; முமுஷுக்களுக்கு விரோதி – ஸம்ஸார ஸம்பந்தம்‌, அபேஷிதிதம்‌ – பரம பத ப்ராப்தி;முக்தர்க்கும்‌ நித்யர்க்கும்‌ விரோதி கைங்கர்ய ஹாநி, அபேஷிதிதம்‌ கைங்கர்ய வ்ருத்தி .
தேகமே ஆத்மா என்கிற நினைவும்‌ ஐம்புலனுகர்ச்சி அநுபவமே நிரந்தர அநுபவமாக நினைத்து வாழ்க்கை நடத்துகிற ஸம்ஸாரிகளுக்கு போக்க வேண்டிய விரோதி – ஸத்ருக்களால்‌ வரும்‌ நலிவு தொடக்கமானவை, பெறுகைக்குரிய விருப்பம்‌ – சோறு
தண்ணீர்‌ முதலானவைகள்‌. ஸம்ஸாரிகள்‌ – மாறி மாறி பிறந்‌ துழலும்‌ மக்கள்‌.
ஸத்ரு பீடாதிகள்‌‘ என்கிற விடத்தில்‌, ஆதி சப்தத்‌தாலே அதிவ்யாதி – மன ஸங்கடமுதலான வற்றால்‌ வரும்‌ துன்பங்களைச் சொல்லுகிறது.’அந்நபாதாதிகள்‌‘ என்கிற விடத்தில்‌ ஆதி சப்தத்தாலே மலர் மாலை, ஆடை அணிகலன்‌, சந்தநம்‌, பெண்‌ சேர்க்கை முதலானவைகளைச்‌ சொல்லுகிறது.
முமுஷுக்களுக்கென்றது – இவ் வுலகத்தில்‌ அடிக் கொதித்து பரம பதத்துக்குப்‌ போக ஆசைப்‌படா நிற்குமிவர்களுக்கு போக்க வேண்டிய விரோதி, பொய்‌ நின்ற ஞாநமாய்‌, பொல்லா ஒழுக்குமாய்‌, அழுக்குடம்‌புமாய்க்‌ கொண்டு, இவ் வுலகிலிருக்கை யாகிற ஸம்ஸார ஸம்பந்தம்‌. முமுஷுக்களுக்குப்‌ பெற வேண்டிய விருப்பம்‌ – பகவதநுபவம்‌ முதலானவைகளுக்கு அநுகூலமான பரமபதத்தை அடைவதென்கை. முக்த நித்யர்களுக்கு என்றது- இவ்வுலகிலிருந்து விடுபட்டவர்களும்‌, இவ்வுலகத்‌ தொடர்பே அற்றவர்களாயும்‌, பகவத நுபவத்தால்‌ உண்டான ப்ரீதியால்‌ கைங்கர்ய பரர்களாயுமிருக்கும்‌ முக்த நித்யர்களான இவர்களுக்கு விரோதி – வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே தம்மியல்புக் கேற்ற வகை செய்து கொண்டு போகும்‌ தொண்டுக்கு வரும்‌ இடையூறு. இவர்களுக்கு விருப்பமாவது மேன்மேலெனச்‌ செய்கையாகிற கைங்கர்ய விருத்தி என்கை.
ஆக இப்படி அவரவர்‌ தகுதிகளுக்‌கேற்ப விரோதியைப்‌ போக்கி விருப்பத்தைத்‌ தருகையால்‌ எம்பெருமானே ஸர்வ ரஷகனென்னுமிடம்‌ சொல்லிற்றாயிற்று.

இப்படி, எம்பெருமானொருவனேயோ எல்லாரையும்‌ ரக்ஷிக்கிறவன்‌?? உலகில்‌ மாதா, பிதா, தேவதாந்‌தரங்கள்‌ (இதர தெய்வங்கள்‌) முதலானோர்‌ பலரும்‌ ரக்ஷகராக இல்லையோ என்ன ? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை – 39-ஈஸ்வரனை யொழிந்தவர்கள்‌ ரக்ஷகரல்லர்‌ என்னுமிடம்‌ பிரபந்ந பரித்ராணத்திலே சொன்னோம்‌ .

இயற்கையான உறவாய்‌, எல்லாக் காலத்திலும்‌ நம்மைக்‌ கை விடாதே ரக்ஷித்துக்‌ கொண்டு வரும்‌ எம்பெருமானை யொழிந்தவர்களான தோன்றி மறையக் கூடிய ஆபாஸ பந்துக்களான தாய்‌ தந்‌தை முதலானவர்களும்‌, இடையில்‌ தோன்றி மறையக்‌ கூடிய மற்றத் தெய்வங்களும்‌ நம்மை காப்பவர்கள்‌ அல்லரென்னுமிடம்‌ பல காரணங்களைக் காட்டி ‘ப்ரபன்ன பரித்ராணம்‌” என்கிற நூலிலே சொன்னோம்‌; அந்த நூலிலே இவற்றை கண்டு கொள்ளலாம்‌ என்கிறார்‌.-

பிறகு அர்த்த பலத்தாலே இப் பதத்தில்‌ சொல்லப்படும்‌ ஸ்ரீய: பதித்வத்தை (திருமகள்‌ கேள்வனென்‌பதை) அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை –40–ரக்ஷிக்கும்‌ போது பிராட்டி ஸந்நிதி அநுஸந்தேயம்‌ .

“லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா, ரக்ஷகஸ்‌ ஸர்வ ஸிந்தாந்தே வேதாந்தேபிச கீயதே”
காருண்ய ரூபயா
– காருண்யத்தை-அதற்கு ஏற்ற விஷயத்திலே சேர்த்து அந்தக்‌ காருண்யத்தை வடிவுடைய தாக்குமவளான-
லக்ஷ்ம்யாதேவ்யாணஹ – லக்ஷ்மி தேவியோடு கூட,
ஹ்ருஷீகேச : விஷ்ணு வானவர்‌,
ரக்ஷக : – காப்பாற்றுவரான,
ஸர்வ ஸித்தாந்தே – ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில்‌ உள்ளனவான மந்த்ர ஸித்தாந்தமென்ன, ஆகம ஸித்தாந்த மென்ன, தந்த்ர ஸித்தாந்தமென்ன, தந்த்ராந்தர ஸித்தாந்தமென்ன ஆகிய-எல்லா ஸித்தாந்தங்களிலும்‌.
வேதாந்தே அபிச – புருஷ ஸூக்தம்‌ முதலிய உபநிஷத்துக்களிலும்‌, ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களிலும்‌,
கீயதே –சொல்லப்படுகிறான்‌.
என்கிறபடியே ரக்ஷ்கனான இறைவன்‌ ஆத்மாக்‌களை ரக்ஷிக்கும்‌ நிலையில்‌, இவர்களுடைய குற்றங்களைக்‌ கண்டாதல்‌ தன்‌ சுதந்திரத்தாலே யாதல்‌, அநாதரித்துக்‌ கை விடாமல்‌ காப்பதற்குறுப்பான இரக்கத்தைப்‌ பிறப்பிக்கும்‌ (புருஷகாரம்‌) சிபாரிசு செய்கிறவளான பிராட்டி சேர்ந்திருப்பது மிக மிக முக்யமாகையாலே காப்பாளனாம்‌ அவனைச்‌ சொல்லுகிற இவ் வகாரத்தில்‌ அவனுடைய தேவியான லக்ஷ்மீ ஸம்பந்தமும்‌ சொல்ல வேண்டுமென்கை. -‘லக்ஷ்மீ’ என்னாதே ஸ்ரீ என்றது (ஸ்ரேயதி இதிஸ்ரீ🙂 என்கிறபடியே, அவனை நித்ய ஸேவை செய்கையாலே அவனோடு இவளுக்குண்டான பிரிவின்மையும்‌, (ஸ்ரீயத இதி ஸ்ரீ) என்கிறபடியே சேதநர்களால்‌ இவள்‌ என்றும்‌ ஸேவிக்கப்‌ பெறுமவளாகையாலே ஸ்ரீ என்று சொல்லப்பட்ட தென்கை.

இன்னமும்‌ இவ் வகாரத்திலே இறைவனுடைய லக்ஷ்மீ ஸம்பந்தம்‌ நியமேன தோற்றும்‌ என்னுமத்தை மெய்மைமை கூறுவார்‌ கூற்றாலே காண்பிக்கிறார்‌.
ஸூர்ணை -41-அத்ர பகவத் ஸேநாபதி மிச்ரர்‌ வாக்‌யம்‌ :- அவன்‌ மார்பு விட்டுப்‌ பிரியில்‌ இவ் வக்ஷரம்‌ விட்டுப் பிரிவது

இவ் விடத்தில்‌ அறிவில்‌ முதிர்ந்தவரான ஸ்ரீஸேநாபதி ஜீயர்‌ அருளிச்‌ செய்யும்‌ வார்த்தை. “அகலகில்லேனிறையும்‌’ என்று அவன்‌ திருமார்‌பிலே நித்ய வாஸம்‌ செய்யுமிவள்‌, அவன்‌ மார்பை விட்டுப்‌ பிரியும் போது அவனுக்குப்‌ பெயரான இந்த (அக்ஷரம்‌) எழுத்தை விட்டுப்‌ பிரிவது” என்று என்கை. “என்று என்கிற இத்தனையும்‌ கூட்டாத போது கீழோட இவ் வாக்கியம்‌ பொருந்தாது-
இத்தால்‌, அவன்‌ திருமார்பில்‌ ஸம்பந்தம்‌ இவளுக்கு நித்தியமாகையாலே அவன்‌ தோற்றுமிடமெல்லாம்‌ இவளும்‌ தோற்றுகை நிச்சயமாகையாலே அவன்‌ திருமார்பில்‌ தொடர்போடு அவனுக்குப்‌ பெயரான அ காரத்தில்‌ தொடர்பும்‌ நித்தியம்‌ என்றதாயிற்று.

இன்னமும்‌ எம்பெருமான்‌ தோற்றுமிடத்தில்‌ லக்ஷ்மியும்‌ தோற்றுவா ளென்‌பதை நிலை நிறுத்துகைக்காக பரமாத்மா ஆத்மாக்களின்‌ பெயர்களான அகார
மகாரங்களிரண்டிலும்‌ இவளுக்குண்டான, என்றும்‌ உள்ளதான தொடர்பை உபமான முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -42 -பர்த்தாவினுடைய படுக்கையையும்‌ ப்ரஜையினுடைய தொட்டிலையும்‌ விடாதே யிருக்கும்‌ மாதாவைப் போலே ப்ரதம சரம பதங்களை விடாதே இருக்கும்‌ இருப்பு –

பர்த்தாவுக்கு அடிமையான தன்‌ தன்மைக்குச்‌ சேரும்படி அவனை உகப்பிக்கைக்காக பர்த்தாவினுடைய படுக்கையை விடாதே, காக்கும்‌ தன்மைக்குச்‌ சேரும்படி காப்பதற்காக ப்ரஜையினுடைய தொட்டிலையும்‌ விடாதே இருக்கும்‌ மாதாவானவளைப்‌ போலே, இந்தப்‌ பிராட்டியும்‌, கேள்வனான எம்பெருமானுக்குப்‌ பெயரான முதல்‌ பதமான அகாரத்தையும்‌, மக்களாந் தன்மையரான ஆத்மாக்களின்‌ பெயரான ப்ரணவத்தில்‌ ஈற்றுப்‌ பதமான மகாரத்தையும்‌ அந்த அந்த விஷயத்தில்‌ தனக்குண்டான தொடர்புகளுக்கேற்ப, உகப்பிக்கை ரஷிக்கையாகிற இவற்றை முன்னிட்டு, விடாதே இருக்கும்‌ இருப்பு என்கை.

முன் பொது உபமாநத்தாலே சொன்‌னதை ஒரு சிறப்பு உபமாநத்தாலே சொல்லுகிறார்‌.

ஸூர்ணை -43- ஸ்ரீநந்தகோபரையும்‌ க்ருஷ்ணணையும்‌ விடாத யசோதைப்‌ பிராட்டியைப்‌ போலே .
பார்யையான தன்‌ இயல்புக்‌கேற்ப உகப்பிக்கைக்காக பர்த்தாவான ஸ்ரீ நந்தகோபரையும்‌ விடாதே, மாதாவான தன்னியல்புக் கேற்ப காப்பதற்காக புத்ரனான கண்ணனையும்‌ விடாதே “அம்பரமே” என்கிற பாட்டிற்‌ சொல்லுகிறபடியே இடையே நிற்கும்‌
யசோதைப்‌ பிராட்டியைப்‌ போலே ப்ரணவம்‌ முதல்‌ பத ஈற்றுப்‌ பதங்களின்‌ பொருள்களான பரமாத்மா ஆத்மாக்க ளிருவரையும்‌ விடாதே இவளும்‌ பொருந்தி இருக்கும்‌ என்பதாம்‌.

ஈஸ்வர சேஷத்வமென்பதன்றி பிராட்டிக்கும்‌ அடிமை என்னுமிடம்‌ இந்த அகாரத்தில்‌ சப்தத்தால்‌ சொல்லா திருக்கச்‌ செய்தேயும்‌ இவளுக்கும்‌ அடிமை யென்று நாம்‌ கொள்ளுகிற படி எங்ஙனே என்ன?அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -44- ஒருவனடிமை கொள்ளும்‌ போது கீருஹிணிக் கென்றன்றே ஆவண வோலை எழுதுவது; ஆகிலும்‌, பணி செய்வது க்ருஹிணிக்கிறே அது போலே
நாம்‌ பிராட்டிக்கு அடிமையா யிருக்கும்படி .

உலகில்‌ ஒருவன்‌ தாஸ தாஸிகள்‌ முதலான ஓரடிமையைக்‌ கொள்ளும் போது தனக்கென்றே எழுதிக்‌ கொள்ளுமதொழிய தன்‌ மனைவிக் கென்றல்ல விலை யோலை எழுதுவது; ஆயிருக்கச்‌ செய்தேயும்‌ அடிமைத்‌ தொழில்‌ செய்வது மனைவிக்கும் தான்‌: அது போலே இந்த அகாரம்‌ எம்பெருமானுக்கடிமை என்னுமளவைச்‌ சொல்லிற்‌றாகிலும்‌ நாம்‌ பிராட்டிக்கும்‌ அடிமையா யிருக்கும்படி என்கை.

கீழ்ச்‌ சொன்ன காரணங்களை எல்லாம்‌ (அநுவதித்து) திரும்பச் சொல்லி இறைவனுக்கும்‌ இறைவிக்கும்‌ ஒருக் காலும்‌ பிரிவின்மையை அருளிச்‌செய்கிறார்‌.

ஸூர்ணை -45 – ஆகவே பிரித்‌து நிலையில்லை
இந்தப்‌ பிரிவின்மைக்கு இரண்டு உதாஹரணம்‌ காட்டுகிறார்‌.

ஸூர்ணை -46-ப்ரபையையும்‌, ப்ரபாவானையும்‌, புஷ்பத்தையும்‌ மணத்தையும்‌ போலே.

ஒளிக்கும்‌ ஒளியை யுடையையாய் இருக்கும்‌ ஸூர்யனுக்கும் பிரிவென்பதில்லாதாப் போலேவும்‌, மலருக்கும்‌ மணத்துக்கும்‌ பிரிவென்பதில்லாதாப்‌ போலவும்‌ “அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபாயதா” (சூரியனை விட்டுப்‌ பிரியாத ஒளி போல்‌ நான்‌, ஸ்ரீராமனை .விட்டு பிரிவின்றியே இருப்பவள்‌) என்று ஸீதையும்‌, “அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா” ஸூரியனோடு ஒளியைப்‌ போல்‌ சீதையானவள்‌ என்னோடு சேர்ந்தே இருப்பவளன்றோ என்று சீதையும்‌ ராகவனும்‌ சொன்னார்கள்‌. இப்படி இருவர்‌ வாக்காலும்‌ சொன்னதால்‌ பிரிவு என்பது எப்போதுமில்லை. “ப்ரஸ-தெம்‌ புஷ்யந்தீமபி பரிமளர்த்திம்‌ ஜிகதிஷ-:” (மலரை மேன்மை யுறச்‌ செய்யும்‌ மணத்துக்கு மேன்மைத்‌ தன்மை இயல்பு.-இது போல்‌ இயல்பில்‌ மங்களமான நீ பெருமானைச்‌ சேர்ந்து மங்கள கரனாக்குகிறாய்‌ என்று பட்டரும்‌ அருளிச் செய்தபடி-கதிரவனும்‌ கதிரும்‌ போன்றும்‌ மலரும்‌ மணமும்‌ போன்றும்‌ பெருமானும்‌ பிராட்டியும்‌ பிரிவின்றியே இருப்பர்‌ என்பதாம்‌.

இந்தப்‌ பிரிவின்மையை அநுவதித்துக்‌ கொண்டு இந்தச் சேர்த்தியே சேதநர்களுக்குப்‌ பற்றுவதற்கு உத்தேச்யமாய்த் தலைக்‌ கட்டின படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -47- ஆக, இச் சேர்த்தி உத்தேச்யமாய்‌ விட்டது.

இந்தச்‌ சேர்த்தியே பற்றுகைக்குத்‌ தகுதியாய் விட்ட படியால்‌, இவற்றுக்கு முரணாக தனித் தனியே விரும்புகை தகுதி அன்றென்றபடி. இருவரையும்‌ பிரித்து விரும்பினால்‌ ராவண சூர்ப்பணகைகளுக்குப்‌ போலே அழிவே உண்டாகும்‌. இருவரையும்‌ பற்றினால் தான்‌ ஸ்ரீவிபீஷணாழ்வான்‌ போல்‌ வாழலாவது என்பதாம்‌.

இனி மேல்‌, இதில்‌ வேற்றுமை உருபின்‌ பொருளைச்‌ சொல்வதாக நான்காம்‌ வேற்றுமையை எடுத்துக்‌ கூறுகிறார்‌.
ஸூர்ணை -48 – இதிலே சதுர்த்தி ஏறிக் கழியும்‌.

இவ்வகாரத்திலே நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளில் தோற்றிச்‌ சொல்லில்‌ தோற்றாது வேற்றுமைத்‌ தொகையாக மறையும்‌.

எட்டு வேற்றுமைகளில்‌ மற்ற வேற்றுமைகளெல்லாம்‌ இருக்க நான்காம்‌ வேற்றுமை தோற்றுவான்‌ என்‌? என்று ஆஷேபிக்கிறார்‌.
ஸூர்ணை -49 -சதுர்த்தி ஏறினபடி என்‌? என்னில்‌:
அதற்கு விடை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -50 – நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே.
இந்த அகாரம்‌, நான்காம்‌ வேற்றுமையை ஈற்றிலே உடைய நாராயண பதத்துக்குச்‌ சுருக்கமா யிருக்கையாலே இதிலும்‌, (அகாரத்திலும்‌) நான்காம்‌ வேற்றுமை ஏறிற்றென்கை. இப்படி அன்றாகில்‌ இரண்டுக்கும்‌ சுருக்கம்‌ விரிவு என்கிற தன்மை குலையும்‌.

இந்த நான்காம்‌ வேற்றுமையால்‌ சொல்‌லுகிற பொருள் தான்‌ எது என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -51- இத்தால்‌, ஈஸ்வரனுக்கு சேஷமென்‌கிறது.
இது தான்‌ “தாதர்த்த்யே சதூர்த்தி” (இது நான்காம்‌ வேற்றுமையின்‌ பொருட்டுப்‌ பொருளதாம்‌) என்கையாலே, இந்த நான்காம்‌ வேற்றுமையால்‌ நாராயணனுக்கு அடிமை’ என்று சொல்லுகிற தென்கை.

ஸர்வம்‌ பர வசம்‌ து:க்கம்‌‘(பிறர்க் கடிமையா யிருத்தல்‌ துன்பங்களனைத்தும்‌ நேரும்‌)”, ஸேவா ச்வவ்ருத்தி:‘ (அடிமை நாய்த்‌தொழில்‌) என்கிற உலக வழக்கைக்‌ கொண்டு அடிமை துன்பமென்று நினைப்பவர்‌ செய்யும்‌ வினாவை அநுவதிக்கிறார்‌.
ஸூர்ணை -52 – ‘சேஷத்வம்‌ து:க்க ரூபமாக வன்றோ நாட்‌டில்‌ காண்கிறது” என்னில்‌:
அடிமைத்‌ தன்மை துன்ப மயமா யன்றோ நாட்டில்‌ காண்கிறது என்றால்‌, இதற்கு விடை சொல்கிறார்‌.
ஸூர்ணை -53- அந்த நியமமில்லை; உகந்த விஷயத்துக்குச்‌ சேஷமாயிருக்கும்‌ இருப்பு ஸுகமாகக்‌ காண்கையாலே
நாட்டில்‌ “பணிமின்‌ திருவருள்‌” என்று பரியப்‌ பெறுமவளாம்‌ மனைவிக்கு அந்தரங்கத்தில்‌ அடிமை யாயிருக்கும்‌ இருப்பு இன்பமாகக்‌ காண்கையாலே, அடிமை என்றால்‌ துன்ப மயம்‌ என்கிற நியமமில்லை.
“மனைவி விஷயத்தில்‌ அடிமை இன்பமாகிறது அவளிடத்துள்ள குணங்களடியாக வந்ததன்றோ” என்ன, அதற்கு விடை சொல்கிறார்‌.
ஸூர்ணை -54 -அகாரத்திலே கல்யாண குணங்‌களைச்‌ சொல்லுகையாலே, இந்த சேஷத்வமும்‌ குணத்தாலே வந்தது –
ஈஸ்வரனுடைய காக்கும்‌ தன்மையைச் சொல்‌லுகிற அகாரத்திலே காப்பதற்கு உபயோகப்படும்‌ கல்யாண குணங்களைச்‌ சொல்லுகையாலே. நாராயணன்‌ விஷயமான இந்த அடிமைத்‌ தன்மையும்‌ அந்த குணம்‌ காரணமாக வந்ததென்கை. ஆகையால்‌, இதுவும்‌ இன்பமயமா யிருக்கக்‌ குறையில்லை என்று கருத்து.

ஆனால்‌, செயற்கையாக குணங் காரணமாக வந்த இந்த அடிமை இயற்கையான தன்னியல்புக்குப்‌ பொருந்திய தல்லவே என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -59- சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்‌.
உகந்த விஷயத்தில்‌ இதன்‌ இன்ப மயமாகைக்குக்‌ குணங்களடியாகக்‌ காரணத்தைச்‌ சொல்‌லுகையாலே, குணங்களடியாக வருகை இங்கும்‌ உண்டென்னுமிடத்துக்குச்‌ சொன்னது தவிர, அர்த்த ஸ்திதியை நிரூபிக்கும் போது, “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்‌
ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்திதம்‌”.
ஸ்வத்வம்‌ –
சொத்தாயிருக்கும்‌ தன்மை. ஆத்மநி – ஆத்மாவினிடத்தில்‌,
ஸஞ்ஜாதம்‌ – உண்டாயிருக்கிறது.
ஸ்வாமித்வம்‌ – யஜமாநத்வம்‌. ப்ரஹ்மணிஸ்திதம்‌ – ப்ரஹ்மத்தினிடத்தில்‌ நிலைத்திருக்கிறது.
ஆத்ம தாஸ்யம்‌ ஹரே ஸ்வாம்யம்‌ ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர”
ஆத்மதாஸ்யம்‌ –
ஆத்மாவினிடத்தில்‌ அடிமைத்‌ தன்மையும்‌,
ஹரேஸ்வாம்யம்ச – ஹரியினிடத்தில்‌ ஸ்வாமியாயிருக்குந்‌ தன்மையுமே,
ஸ்வபாவம்‌ – இயல்பாகவே உள்ளன என்று, ஸதா ஸ்மர – எப்போதும்‌ நினைவிற்‌ கொள்‌.
தாஸ பூதாஸ்‌ ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந : நாந்யதா லக்ஷணம்‌ தேஷாம்‌ பந்தே மோக்ஷே ததைவச”
பரமாத்மந :
– பரமாத்மாவுக்கு,
ஸர்வே ஆத்மாந : – எல்லா ஆத்மாக்களும்‌, ஸ்வத : – இயல்பான ஸ்வரூபத்தாலேயே, தாஸ பூதா : – தாஸ பூதர்களாய்‌ நிலை பெற்றவர்கள்‌,
ஹி – அன்றோ,
தேஷாம்‌ – அவர்களுக்கு,
பந்தே – பந்த நிலையிலும்‌,
மோக்ஷே – மோக்ஷ நிலையிலும்‌,
அந்யதா – வேறான ஸ்வதந்திரத் தன்மை, லக்ஷணம்‌ ந – தனக்கே உரித்‌தான லக்ஷணமன்‌று.
இவை முதலானவைகளிலே (சேஷத்வத்தை) பகவானுக்கடிமையை ஆத்மாவுக்கு (ஸ்வாபாவிகமாக) இயல்பாகச்‌ சொல்லுகையாலே (சேஷத்வமே) அடிமையே ஆத்மாவுக்கு
ஸ்வரூப மென்கை.

சேஷத்வமே என்‌ று தேற்றேவகாரத்தால்‌ சொல்லுவானென்‌ -ஜ்ஞாநம்‌, ஆநந்தம்‌ இவைகளை ஸ்வரூபமாக உள்ள ஆத்மாவுக்கு அடிமை அல்லாத போதும்‌ ஸ்வரூபம்‌ இல்லையோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -56 – சேஷத்வமில்லாத போது ஸ்வரூபமில்லை.
(சேஷத்வமில்லாதபோது ) பகவானுக்கு அடிமை யில்லாத போது ஆத்மாவை அபஹரிப்பதான ஸ்வாதந்த்ரிய புத்தி நடக்கையாலே, ஸ்வரூபம்‌- ஆத்மாவின்‌
இயல்பு அழிந்து விடும்‌ என்னுமத்தைச்‌ சொல்லுகிறார்‌ -மேலிரண்டு வாக்யத்தாலே.

ஸூர்ணை – 57- ஆத்மாபஹாரமாவது – ஸ்வதந்த்‌ரமென்கிற நினைவு; ஸ்வதந்த்ரமாம் போது இல்லையாய்‌ விடும்‌
“யோந்யதாஸந்தமாத்மாநம்‌ அந்யதா ப்ரதிபத்யதே, கிம்தேத ந க்ருதம்‌ பாபம்‌ சோரேணாத்மாப ஹாரிணா”
ய: –
எவன்‌,
அந்யதாஸந்தம்‌ – வேறு வகையாயிருக்கிற(பகவச்‌ சேஷமாயிருக்கிற),
ஆத்மாநம்‌ – ஆத்ம வஸ்துவை,
அந்யதா – ஸ்வதந்த்ரமாக,
ப்ரதிபத்யதே – நினைக்கிறானோ,
ஆத்மாபஹாரிணா – ஆத்மாவை அபஹரித்தவனான,
தேந சோரேண – அந்தத்‌ திருடனால்‌,
கிம் பாபம்‌ – எந்தப்‌ பாபம்‌,
ந க்ருதம்‌ – செய்யப்படவில்லை. அதாவது, ஆத்மாபஹாரஞ்‌ செய்தவன்‌ எல்லாப்‌ பாபங்களும்‌ செய்தவனாகிறான்‌ என்றபடி.

ஆக, அகாரத்தின்‌ இயல்பாலே சொல்லப்பட்ட பொருளான ஈஸ்வரனுடைய காரணத்வமும்‌, வினைப்‌ பகுதி அர்த்தமான ரக்ஷகத்வமும்‌, அர்த்த பலத்தால்‌ வந்த திருமகள்‌ கேள்வனாந் தன்மையும்‌, வேற்றுமை யுருபால்‌ கிடைத்த சேதநனுடைய சேஷத்வ எதிர்த் தலையான சேஷித்வமும்‌ ஆகிற அகாரார்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு, ப்ரணவத்திலிருக்கும்‌ மூன்றெழுத்துக்களில்‌ நடுவெழுத்தான உகாரத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -58- ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம்‌ அவதாரணார்த்தம்‌ –
ததேவபூதம்‌ ததுபவ்யமா இதம்‌”
பூதம்‌
– கழிந்த காலத்துப்‌ பொருளும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே,
பவ்யமாயிதம்‌ – எதிர்கலப்‌ பொருளாக இருப்பதும்‌ (நினைப்பதும்‌,)
தது – அந்த ப்ரஹ்மமே.
“ததேவாக்நிஸ்‌ தத்‌ வாயுஸ்‌ தத்‌ ஸுிர்யஸ்தது சந்த்ரமா:”
அக்நி :
– அக்நியும்‌,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
வாயு : – காற்றும்‌,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
ஸூர்ய :- சூர்யனும்‌,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
சந்த்ரமா :- சந்திரனும்‌,
தது – அந்த ப்ரஹ்மமே.
இவைகளில்‌, கழிந்த காலப்‌ பொருளைக்‌ காட்டும் போது, ‘ததேவ’ அந்த ப்ரஹ்மமே என்றும்‌, எதிர்காலப்‌ பொருளைக்‌ காட்டும்‌ போது, ‘தது-ததேவ’ என்று முன்‌ சொன்ன ஏவகாரமே தது என்று உகாரமாக மாறி வந்துள்ளதும்‌,
அக்நியும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும்‌, வாயுவும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும்‌, ஸுர்யனும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும்‌ சொல்லி சந்திரனும்‌ அந்த ப்ரஹ்மமே என்றும்‌ சொன்ன இடத்தில்‌, ‘தது’ என்று உகாரமாக மாறி வந்ததுங்‌ காண்க.
இவை . முதலான இடங்களிலே ஏவகாரத்தை உபயோகிக்குமிடத்தில்‌ உகாரத்தை உபயோகிக்கக்‌ காண்கையாலே, ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம்‌ ஏவகாரார்த்தத்தை
உடைத்தாயிருக்குமென்கை.

ஸ்தான ப்ரமாணமாவது !- ஒரு பதம்‌ இருக்க வேண்டிய இடத்தில்‌ ஒரே பொருளைத் தருகிற வேறே ஒரு பதம்‌ உபயோகித்தால்‌ முன்னிருந்த பதத்தின்‌ பொருளே அந்த பதத்துக்கும்‌ ஆகி வருவது. ஏவகாரம்‌ இருக்க வேண்டியிடத்தில்‌ உகாரம்‌ இருத்தலால்‌, உகாரத்துக்கு ஏவகாரத்தின்‌ பொருளைக்‌ கொள்ள வேண்டிய தென்கை.,

அவதாரணத்துக்கு (பிரிநிலை ஏவகார த்திற்கு) அர்த்தம்‌ அவயோக வ்யவச்சேதமாதல்‌, -அந்யயோக வ்யவச்சேதமாதல்‌ ஆகையாலே, இவ்வதாரணத்தால்‌ சொல்கிறது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -59 – இத்தால் , பிறர்க்கு சேஷம்‌ அன்று என்கிறது .

ஏவகாரமான இந்த உகாரத்தால்‌ கீழ்‌ ஈஸ்வர சேஷமாகச்‌ சொன்ன இந்த ஆத்மாவானது,
பிறர்க்கு சேஷம்‌ அன்று என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது என்கை. -நான்காம்‌ வேற்றுமையால்‌ எம்பெருமானுக்கு அடிமை என்று சொல்லி யிருக்கப்‌ பிறர்க்கு அடிமை என்பது உண்டாகுமோ? என்னில்‌, உலகிலே ஒருவனுக்கு அடிமையான வீடு, நிலம்‌, பிள்ளை, வேலைக்காரி, வேலைக்காரர்‌ இவைகள்‌ பிறர்க்கும்‌ அடிமையாகக்‌ காண்கையாலே அத்ததைய பிறர்க்கு அடிமை இந்த இடத்திலும்‌ உண்டோ? என்று ஒரு ஐயம்‌ உண்டாகுமன்றோ? ஆகையாலே அத்தகைய பிறர்க்கு அடிமை இங்கு இல்லை என்பதைச்‌ சொல்லுகிறது உகாரம்‌.

அங்ஙனன்றிக்கே அந்த உகாரத்தால்‌ பிராட்டிக்கு அடிமை என்று சொல்லுகிறது என்பாரும்‌ உண்டென்கிறார்‌.
ஸூர்ணை –60- பெரிய பிராட்டியாருக்கு சேஷமென்‌கிற தென்றுஞ்‌ சொல்லுவார்கள்‌ .
” அகாரச் சித் ஸ்‌வரூபஸ்ய விஷ்ணோர்‌ வாசக இஷ்யதே,
உகாரச் சித் ஸ்வரூபாயா; ஸ்ரீயோ வாசீ ததா விது:
மகாரஸ்து தயோர்‌ தாஸ இதி ப்ரணவ லக்ஷணம்‌”
“அகாரேணோச்யதே விஷ்ணுஸ்‌ ஸர்வ லோகேஸ்வரோ-
ஹரி: உத்த்ருதா விஷ்ணு நா லக்ஷீமீ : உகாரேணோச்‌-
யதே ஸதா மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ஆத்மநஸ் சேஷ பூதஸ்ய வாசக: ஸ்ருதி சோதித:”
அகார:-
அகாரமானது,
சித் ஸ்வரூபஸ்யா – ஜ்ஞாந ஸ்வரூபனான, விஷ்ணோர் வாசக: – விஷ்ணுவுக்குப்‌ பெயராக,
இஷ்யதே – இச்சிக்கப்‌ படா நின்றது,
ததா – அப்படியே,
உகார: – உகாரமானது,
சித் ஸ்வரூபாயா – ஜ்ஞாந ஸ்வரூபையான, ஸ்ரய : வாசீ – ஸ்ரீதேவிக்குப்‌ பெயராக,
விது – அறிகிறார்கள்‌,
மகாரஸ்து – மகாரமோவென்றால்‌,
தயோ : தாஸ : – அவ்விருவருக்கும்‌ தாஸ பூதனான, ஆத்மாவாகச்‌ சொல்லப் படுகிறது,
இதி ப்ரணவ லக்ஷணம்‌ – இது ப்ரணவ லக்ஷணம்‌,
விப்ர – ப்ராஹ்மணனே!
ஸர்வ லோகேஸ்வர: – அனைத்துலகங்களுக்கும்‌ இறைவனாம்‌, விஷ்ணு :– ஸர்வ வ்யாபகனும்‌ ஆன,
ஹரி :- ஹரியானவன்‌,
அகாரேண உச்யதே – அகாரத்தாலே சொல்லப்படாநின்றான்‌,
விஷ்ணுநா – அந்த விஷ்ணுவாலே,
உத்த்ருதா – எப்போதும்‌ திருமார்‌பிலே தரிக்கப்படுகிற,
லக்ஷ்மீ – லக்ஷ்மியானவள்‌,
ஸதா உகாரேண உச்யதே – எப்பொழுதும்‌ உகாரத்தாலே சொல்லப்படா நின்றாள்‌, மகாரஸ்து – மகாரமோ வென்றால்‌,
தயோ ஸ்ரீநாராயணயோ :- அந்த ஸ்ரீ நாராயணர்களாகிய இவர்களிருவர்க்கும்‌, ஸதா சேஷபூதஸ்ய ஆத்மாந :- எப்போதும்‌ சேஷ பூதனான ஆத்மாவுக்கு,
வாசக.“ பெயராக,
ஸ்ருதி சோதித . : வேதங்களால்‌ சொல்லப் பட்டிருக்கிறது -என்றும்‌, இவை முதலான பகவச்‌ சாஸ்திரங்களிலே அகாரத்தைப்‌ பெருமானுக்குப்‌ பெயராகவும்‌, உகாரத்தைப்‌ பிராட்டிக்குப்‌ பெயராகவும்‌, மகாரத்தை’ இவ்விருவர்க்கும்‌ அடியானான ஜீவனுக்குப்‌ பெயராகச்‌ சொல்லுகையாலே, உகாரத்தை ஏவகாரமாகக்‌ கொள்ளாதே பிராட்டி பெயராகக்‌ கொண்டு, இவ் வுகாரத்தாலே பெரிய பிராட்டியார்க்கு அடிமை என்கிற தென்றும்‌ நிர்வஹிப்பார்களென்கை.

இப்படிச்‌ சொல்வதை விட முன்‌ சொன்ன பொருளே முக்கியமென்றருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -61 – அதிலும்‌, அந்ய சேஷத்வங் கழிகையே ப்ரதாநம்‌ –
பெரிய பிராட்டியார்க்கு அடிமை என்கிறதை விட கீழ்ச்‌ சொன்ன பகவானுக்கு அடிமை என்பதற்கு விரோதியான பிறர்க்கடிமை என்பது கழிகையே முக்கியமாகக்‌ கொள்ளக்‌ கடவது என்கிறார்‌.

பிறர்க்கடிமை என்பது இப்படி கொடியதோ? என்ன, அதன்‌ கொடுமையை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -62- தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய்க்கிடுமா போலே, ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை.
ஆராதிக்கப்படுகிற இந்திரன்‌ முதலான தேவர்களுக்குச்‌ சுவை மிக்கதாக கல்பிக்கப் பெற்ற ஹவிர்‌ பாகத்தைக்‌ காணவும்‌, தொடவும்‌ தகுதியற்ற. தாழ்மையை உடைத்தான நாய்க்கு இடுமா போலே இருப்பதோன்று, தகுந்த எஜமானான பகவானுக்கு அடிமையான ஆத்மாவை பகவானில்‌ மிக மிகத்‌ தாழ்ந்தவர்களான ஸம்ஸாரிகளுக்கு அடிமையாக்குகை என்கை. இங்கு, ஸம்ஸாரி என்பது-தேவர்கள்‌ முதலானவர்‌களைக் குறிக்கும்‌.

இப்படிக்‌ கொடியதான பிறர்க்கடிமை என்பது கழிகையே முக்கியமான கொள்கை என்று கீழ்ச்‌ சொன்ன அர்த்தத்தை திடப்படுத்துகிறார்‌.
ஸூர்ணை -3- பகவச்‌ சேஷத்வத்திலும்‌ அந்ய சேஷத்வம்‌ கழிகையே ப்ரதாநம்‌ .

பிராட்டிக்‌ கடிமை என்பதிலுங்‌காட்டில்‌ பிறர்க்கடிமை என்பது கழிகையே ப்ரதாநம்‌ என்பது மட்டுமல்ல, பகவானுக்கு அடிமையா யிருக்கும்‌ அதிலுங்‌காட்டில்‌ பிறர்க்கடிமை என்பது கழிகையே ஆத்மாவுக்கு முக்கியக்‌ கொள்கையாகும்‌ என்கை.

இதற்கு ப்ரமாணங்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -64 – “மறந்தும்‌ புறம் தொழா மாந்தர்‌’ -என்கையாலே

யம கிங்கர ஸம்வாதத்தைத்‌ திருமழிசைப் பிரான்‌ அருளிச்‌ செய்த “திறம்பேன்மின்‌
கண்டீர்‌
” என்கிற பாட்டிலே பாகவத லக்ஷணஞ்‌ சொல்லுகிற அளவில்‌ “திருவடி தன் நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌” என்று ஸ்வாமியான வனுடைய திருநாமத்தை மறந்தார்களாகிலும்‌, மற்றொரு விஷயத்தில்‌ அடிமைத்‌ தொழில்‌ செய்யாதவர்கள்‌ என்று சொல்லுகையாலே என்கை.

பகவானுக்கு அடிமையான ஆத்மவஸ்து தனக்கும்‌ அடிமையா யிருக்கை, பகவான்‌ தவிர்த்த மற்றவர்களுக் கடிமையா யிருத்தல்‌ என்ற இரண்டும்‌ அந்ய சேஷத்வமாகையாலே இவ் விரண்டையும்‌ இந்த உகாரம்‌ கழிக்கிறதென்‌று சொல்லி முடிக்கிறார்‌.
ஸூர்ணை -65-இத்தால்‌, தனக்கும்‌ பிறர்க்கும்‌ உரித்தன்‌று என்கிறது .

அந்ய சேஷத்தைக்‌ கழிக்குமதான இந்த உகாரத்தால்‌, (அந்யரில்‌) பிறரில்‌ தானும்‌ ஒருவனாகையாலே தனக்கும் தான்‌ உரிமை என்பது கூடாது. -அது போல தன்னை யொழிந்த மற்றவர்களான மனிதருக்கும்‌ (மற்ற தெய்வங்களுக்கும்‌) உரிமை படுதல்‌ கூடாது என்பதை தெரிவிக்கிறது இந்த உகாரம்‌.
ஆக, உகாரார்த்தம்‌ அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு மூன்றாம்‌ எழுத்தாகிய மகாரார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌-
ஸூர்ணை -66 – மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ அக்ஷரமாய்‌ (எழுத்தாய்‌), ஜ்ஞாந வாசியுமா யிருக்கையாலே ஆத்மாவைச்‌ சொல்லுகிறது
வடமொழிப்படி, ‘பூதாநிச கவர்க்கேண சவர்க்கே ணேந்த்ரியாணி ச டவர்கேண தவர்கேண ஜ்ஞாந கந்தாதயஸ் ததா மந :பகாரேணை வோக்தம்‌ பகாரேணத்வ ஹங்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந்‌ ப்ரக்ருதி ருச்யதே, ஆத்மாது ஸமகாரேண பஞ்சவிம்ச : ப்ரகீர்த்தித :”
கவர்க்கேண
– “KA, KKA, GA, GGA, ங ” என்ற பிரிவுகளுடைய கவர்க்கத்தாலே,
பூதாநிச – ‘ச, ச்ச, ஐ, ஜஜ, ஞ்‌ என்ற பிரிவுகளை யுடைய சவர்க்கத்தாலே, பூதங்களைந்தும்‌,
இந்த்ரியாணிச – வாக்கு, பாதம்‌, பாணி, பாயு, உபஸ்தம்‌ ஆகிய கர்மேந்த்ரியங்களைந்தும்‌,
டவர்கேண – ட, ட்ட, DA, 00, ண்‌ ஆகிய டவர்க்கத்தால்‌,
ஜ்ஞாந – .ஜ்ஞாநேந்திரியங்‌களைந்தும்‌,
தவர்கேண – “THA, TTHA, DHA, DDHA, ந” என்ற தவர்க்கத்தால்‌,
கந்தாதய :– ஓசை, ஊறு ஒளி, சுவை, மணம்‌ ஆகிய ஐந்து புலன்களும்‌.
பகாரேணே… ‘ப’ என்ற எழுத்தால்‌,
மந : – மநஸ்ஸாம்‌,
பகாரேண – ‘ப்ப’ என்ற எழுத்தால்‌, அஹங்க்ருதி – அஹங்காரமும்‌,
உக்தம்‌ – சொல்லப்படுகிறது,
பகாரேண – ப என்ற எழுத்தால்‌,
மஹாந்‌ – மஹத்தும்‌,
பகாரேண – BBA என்ற எழுத்தால்‌,
ப்ரக்ருதி – மூல ப்ரக்ருதியும்‌,
உச்யதே
-சொல்லப்படுகின்றன,
மகாரேண – “ம’ காரத்தால்‌,
ஆதீமாது – அந்த ஆத்மவோ,
பஞ்சவிம்ச : – இருபத்தைந்தாம்‌ அவனாக, பரகீர்த்தித : – சொல்லப்பட்டுள்ளான்‌.
என்கிறபடியே நிலம்‌ முதல்‌ மூல ப்ரக்ருதி ஈறாக இருபத்து நாலு தத்துவங்களுக்கும்‌ பெயராயிருந்துள்ள ககாரம்‌ முதல்‌ ‘ப” என்ற எழுத்தீறாக உள்ள இருபத்து நாலு
எழுத்துக்கள்‌ போலன்றிக்கே மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ அக்ஷரமாய்‌, மகாரம்‌’மந்யதே இதி மம்‌” என்றாவது “மநுதே இதி மம்‌” என்றாவது, மகாரத்துக்கு வ்யுத்பத்தி. ‘மநஜ்ஞாநே்‌ ‘மந’ என்ற வினைப் பகுதி, ஜ்ஞாநே -ஜ்ஞாநார்த்தத்தில்‌, அல்லது மநு அவபோதநே, மநு – என்ற வினைப் பகுதி-அவபோதநே. போதம்‌ என்ற ஜ்ஞாநார்த்தத்தில்‌ வரும்‌ என்கிற தாதுவாம்‌ வினைப்பகுதி காட்டப்பட்டிருப்பதால்‌
ஜ்ஞாநத்துக்குப்‌ பெயராயிருக்கையாலே, “பஞ்ச விம்சோயம்‌ புருஷ:” – அயம் புருஷ : ஆத்மாவாகிற இந்த புருஷன்‌, பஞ்சவிம்ச :- இருபத்தைந்தாம்‌ தத்‌துவமானவன்‌.
“பஞ்சவிம்சஆத்மாபவதி” ஆத்மா -ஆத்மாவானவன்‌,
பஞ்ச விம்ச : பவதி – இருபத்தைந்தாவது தத்‌துவமாகிறான்‌. இவை, இருபத்தைந்தாம்‌ தத்துவம்‌ ஆத்மா என்று காட்டுவதாம்‌.
” விஜ்ஞாநாத்மா புருஷ:”
புருஷ: – ஜீவன்‌,
விஜ்ஞாநாத்மா – ஜ்ஞாந ஸ்வரூபன்‌, இது ஆத்மா ஞான வடிவமானவன்‌ என்று காட்டும்‌.
“விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்‌” அரே – ஓ, சிஷ்யனே,
விஜ்ஞாதாரம்‌ – குணமான, ஞாநத்தால்‌ அறியுந்‌தன்மையனான ஆத்மாவை,
கேந – எதனால்‌, விஜாநீயாத்‌ – அறியவாம்‌. (எம்பெருமானருளால்‌ இவனை அறியலாமென்‌பதனைக்‌ காட்டுமென்பர்‌). இதனால்‌ ஜீவன்‌ ஞாந குணகன்‌ என்றது. இவற்றால்‌, ஆத்மா இருபத்தைந்தாம்‌ தத்‌ துவமாயும்‌, ஞாந வடிவனாயும்‌, ஞானத்தைக்‌ கருவியாக உடைய ஞாந குணகனாயும்‌ இருப்பான்‌ என்பதாம்‌.

கீழ்ச்‌ சொன்ன அடிமைத்‌ தன்மை அனைத்து ஆத்மாக்களுக்கும்‌ பொதுவாகையாலே நித்ய, முக்த, பத்த என்கிற மூன்று வர்க்க ஆத்மாக்களையும்‌ சொல்ல வேண்டுகையாலே அதை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -67-இது தான்‌ ஸமஷ்டி வாசகம்‌ இப்படி ஆத்மாவின்‌ பெயரான இந்த மகாரந்தான்‌ ஆத்ம கணங்கள்‌ அனைத்துக்கும்‌ பெயராமென்கை. -அதாவது, ஆத்மாக்களின்‌ பன்மையைச்‌ சொல்லுகிறது.

ஆத்மா என்ற ஒருமைப்‌ பெயா்‌ பன்‌மைப்‌ பொருள்களைக்‌ காட்டுவ தெப்படி என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -68- ஜாத்யேக வசநம்‌ .
நெல் குவியலைச்‌ சொல்லுகிறவன்‌, “இது ஒரு நெல்‌’ என்றால்‌ அந்த ஒருமைச்‌ சொல்‌ இன முழுமையையும்‌ காட்டுமா போலே, ஒரு ஆத்மாவைச்‌ சொன்‌னால்‌ அந்த ஆத்ம ஜாதி அனைத்தும்‌ காட்டும்‌ ஒருமைச்‌ சொல்லாகும்‌ என்றபடி.

இந்த மகாரத்தால்‌ ஆத்மாவினுடைய எந்த நிலையைச்‌ சொல்லுகிறது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -69- இத்தால்‌, ஆத்மா ஜ்ஞாதா என்று தேஹத்தில்‌ வ்யாவ்ருத்தி சொல்விற்றாயிற்று-
அதாவது இருபத்தைந்தாம்‌ எழுத்தாய்‌-ஞாநத்துக்குப்‌ பெயருமா யிருந்துள்ள இந்த மகாரத்தால்‌ அடிமைக்குரித்தான ஆத்மா ஞாநத்துக்கு ஆதாரமாயிருப்பவன்‌ என்று (அசேதநமான) அறிவில்லாத தேஹத்திற்‌ காட்டில்‌ ஆத்மாவின்‌ வேற்றுமையைச்‌ சொல்லிற்றாயிற்று என்கை.

நான்‌ மநுஷ்யன்‌, நான்‌ தேவன்‌, நான்‌ இளைத்திருக்கிறேன்‌, நான்‌ பருத்திருக்கிறேன்‌’ என்று உடம்பில்‌ ‘நான்‌’ என்ற புத்தி நடவா நிற்க, ‘நான்‌’ என்ற சொல்லுக்குப்‌ பொருளான ஆத்மா தேஹத்தில்‌ வேறுபட்டவன்‌ என்று சொல்வதெப்படி? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -70 -தேஹத்தில்‌ வ்யாவ்ருத்தி தத்வ சேகரத்திலே சொன்னோம்‌ .
அதாவது, பல காரணங்களாலே தேஹத்தில்‌ ஆத்ம தன்மை யில்லாமையைச்‌ சாதியா நின்று கொண்டு, ஆத்மா தேஹத்தைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது என்பதை தத்வ சேகரம்‌’ என்ற நூலிலே தெளியச்‌ சொன்னோம்‌. -அதிலே கண்டு கொள்வதென்கை. .

தர்மியான ஆத்மாவை முதலில்‌ சொல்லி, இதன்‌ தர்மமான அடிமையைப்‌ பின்‌ சொல்வது முறையா யிருக்க, இந்த ப்ரணவத்தில்‌ முதலில்‌ அடிமையைச்‌ சொல்லி, பிறகு ஆத்மாவைப்‌ சொல்வானென்ன?’ என்ற கேள்விக்கு, அப்படிச்‌ சொல்‌லுகைக்குக்‌ காரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -71- மணத்தையும்‌, ஒளியையுங்‌ கொண்டு, பூவையும்‌, ரத்நத்தையும்‌ விரும்புமா போலே, சேஷமென்று ஆத்மாவை ஆதரிக்கிறது; அல்லாத- போது “உயிரினாற்‌ குறைவிலம்‌” என்கிறபடியே த்யாஜ்யம்‌; அது தோன்ற சேஷேத்வத்தைச்‌ சொல்லிப்‌ பின்னை ஆத்மாவைச்‌ சொல்லுகிறது –
அதாவது, மணத்துக்கு ஆதாரமாமிருப்பதால்‌ பூவை விரும்புமா போலேயும்‌, ஒளிக்கு ஆதாரமென்று ரத்நத்தை விரும்புமா போலேயும்‌, அடிமைத்‌ தன்மைக்கு ஆதாரமென்றாயிற்று ஆத்மாவை விரும்புகிறது. (சேஷத்வ) அடிமைத் தன்மை சேராத போது “உயிரினாற்‌ குறைவிலம்‌” என்கிறபடியே ‘சேஷத்வ நீக்கமான ஆத்மாவில்‌
விருப்பமுடை யோமல்லோம்‌” என்கிறபடியே தள்ளுபடிக் குரியனாமித்தனை. இப்படி இருந்துள்ள சேஷத்வத்தின்‌ ஏற்‌றந்‌ தோற்ற அடிமையை முன்னர்‌ சொல்லிப்‌ பின்னர்‌ ஆத்மாவைச்‌ சொல்லிற்றாயிற்றென்கை.

மூன்று பதங்களின்‌ கூட்டான இந்தப்‌ ப்ரணவத்தால்‌ சொல்லித்‌ தலைக்கட்டின்‌ அர்த்தத்தைத்‌ திரள அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -72.-ஆக, ப்ரணவத்தால்‌ “கண்ணபுர மொன்றுடையானுக் கடியேன்‌ ஒருவர்க் குரியேனோ’ என்கிறபடியே ஜீவ பரஸம்பந்தஞ்‌ சொல்லிற்று .
ஆக என்று தொடங்கி அதாவது, கீழ்ச்‌ சொன்ன எல்லாவற்றிலும்‌, ப்ரணவத்தால்‌ “கண்ணபுரமொன்று டையானுக்கு’. என்று நான்காம்‌ வேற்றுமையை ஈற்றிலே உடைய அகாரார்த்தத்தையும்‌ “அடியேன்‌” என்று அடிமைத் தன்மையைக்‌ காட்டக்‌ கூடிய மகாரத்திலர்த்தத்‌தையும்‌, “ஒருவர்க் குரியேனோ” என்று; அந்ய சேஷத்வத்தைக்‌
கழிக்குமதான உகாராத்தத்தை அருளிச்‌ செய்த திருமங்கையாழ்வார்‌ அருளிச்‌ செயலின்‌ படியே, ஜீவ பரர்களுக்குண்‌டான சேஷ சேஷி பாவ (அடியான்‌ ஆண்டான்‌ என்று ஸம்பந்தத்தைச்‌ சொல்லிற்றென்கை.

இன்னமும்‌ பொய்கையாழ்வாருடைய அருளிச்‌ செயலாலே, அடியானுக்கு பற்றுக்கோடாக இருப்‌பது ஒரு மிதுநம்‌ என்னுமிடந்‌ தோற்ற, இந்த ஜீவ பர ஸம்பந்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -73- இத்தால்‌, “தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்கு முணர்வு” என்றதாயிற்று –
அதாவது, இந்த ப்ரணவத்தால்‌ “தாமரையாள்‌ கேள்வன்‌” என்று அகாரத்தைப்‌ பெயராக உடையவனாய்‌ சேஷத்வத்துக்கு முன்னிலையான திருமகள்‌ கேள்வனையும்‌, ‘ஓருவனையே நோக்கும்‌ என்று நான்காம்‌ வேற்றுமை உகாரங்களால்‌ சொல்லுகிற அவன்‌ தவிர்த்த மற்றவற்றுக் குரித்தல்லாத சேஷத்வத்தோடு கூடிய ஆத்மாவினுடைய அவன்‌ தனக்கே உரியனாந்‌ தன்மையையும்‌, “உணர்வு” என்று அந்த அடிமைக்கு ஆதாரமாக மகாரத்தால்‌
சொல்லப்பட்ட ஜ்ஞாநமே நிரூபணியனான ஆத்மாவைஞ்‌ சொல்லுகிற அருளிச்‌ செயலின்‌ படியே ஜீவ பர ஸம்பந்தம்‌ சொல்லிற்றாயிற்றென்கை.

அகாரத்தில்‌ இயற்கையில்‌ விளைந்த காரணத்வ – சேஷித்வ ‘ -ப்ர்தூநமாக ‘ ப்ரணவார்த்தத்தை யோஜித்தார்‌ கீழ்‌ ; அதில்‌, வினைப்பகுதி யர்த்த ப்ரதாநமாக
ப்ரணவத்துக்கு இன்னமும்‌ ஒரு யோஜனை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -74 – அகாரத்தாலும்‌ மகாரத்தாலும்‌ ரக்ஷகளையும்‌ ரக்ஷ்யத்தையும்‌ சொல்லிற்று; சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ ரஷண ஹேதுவான ப்ராப்தியையும்‌ பலத்தையும்‌ சொல்லிற்று :
அதாவது, அகாரத்தாலே ரக்ஷ்கனான நாராயணனாகிற ஈஸ்வரனைச்‌ சொல்லிற்று; மகாரத்தாலே அவனால்‌ ரக்ஷிக்கப்படுமதான ஆத்ம வஸ்துவைச்‌ சொல்லிற்று; சதுர்த்தியாலே ரஷிக்கைக்குக் காரணமான அடிமையான ஸம்பந்தஞ்‌ சொல்லிற்று. இப்படி ரக்ஷிகைக்குப்‌ பலம்‌, இந்த ஆத்மாவானது அத் தலைக்கே உரித்தாக விநியோகப் படுகையாலே அவனுக்கே அர்ஹமென்றதுக்குப்‌ பெயரான உகாரத்தாலே ரக்ஷண பலத்தைச்‌ சொல்லிற்று.
ஆக, இம்மந்த்ரத்தில்‌ முதல்‌ பதமான ப்ரணவார்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, மேலிற்‌ பதங்களுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக (மந்த்ர சேஷமும்‌) மந்த்ரத்தின்‌ மிச்சமான பாகமும்‌ இந்த ப்ரணவத்துக்கு விவரணமாயிருக்கும்‌ படியை முந்துற அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -75 -இனி மேல் பிரணவத்தை விவரிக்‌கிறது.
அதாவது, இவ்விடத்தில்‌ விவரணமாகிறது, சொல்லப்பட்ட அர்த்தத்துக்குப்‌ பொருந்தியதான அர்த்தத்தைச்‌ சொல்லிக்‌ கொண்டு முன்‌ சொன்ன அர்த்தத்தை விரிவு படுத்துகை என்று தீப ப்ரகாசத்திலும்‌,
“உக்தார்த்த விசதீகார யுக்தார்த்தாந்தர போதநம்‌ மதம்‌ விவரணம்‌ தத்ர மஹிதாநாம்‌ மநீஷிணாம்‌”.
உக்தார்த்த விசதீகார
– சொல்லிய அர்த்தத்தைத்‌ தெளிவிப்பதென்ன, யுக்தார்த்தாந்தர போதநம்‌ – அவ்விடத்துக்குத் தக்க வேறு அர்த்தம்‌ சொல்வதென்ன,
(இவை) விவரணம்‌ – விவரணமென்று, தத்ர – அவ்விடத்தில்‌,
மஹிதாநாம்‌ – மேன்மையுடையவரான,
மநீஷிணாம்‌ – பெரியோர்களுக்கு,
மதம்‌ – கொள்கையாகும்‌ -என்று ரஹஸ்ய த்ரயார்த்த விவரண க்ரமம்‌ அருளிச்‌ செய்த ப்ரபந்தத்திலும்‌, விவரண லக்ஷணத்தை வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சியர்‌ அருளிச்‌ செய்தார்‌.

விவரிக்கிறபடி தான்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -76-உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸூ -அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்‌; மகாரத்தை விவரிக்கிறது சதூர்த்தி; நார பதமென்றுஞ்‌ சொல்லுவார்கள்‌ –
அதாவது, (அந்யசேஷத்வத்தை) பிறர்க்‌ கடிமையா யிருக்கிற இவற்றைக்‌ கழிக்கிற விடத்தில்‌, பகவத்‌ விஷயத்துக்கு வேறானவனென்பதில்‌ தானும்‌ சேர்ந்தவனாகிய தன்னை வெளிப்படையாகச்‌ சொல்லிக்‌ கழிக்கையாலே உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு–ரஷிக்கிறவனான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்‌, -ரக்ஷிக்கப்படுகிற சேதநாசேதநங்களையும்‌, ரக்ஷகத்வத்துக்கு உபயோகப்படுகிற அவன்‌ குணம்‌ முதலானவைகளையும்‌,
ரக்ஷிக்கும்‌ விதத்தையும்‌, விரியச்‌ சொல்‌லுகையாலே அகாரத்தை நாராயண பதம்‌ விவரிக்கிறது. “நாகிஞ்சித்‌ குர்வதச்‌ சேஷத்வம்‌” –
அகிஞ்சித்‌ குர்வத:– கைங்கர்யம்‌ செய்யாதவனுக்கு,
சேஷத்வம்‌ – சேஷத்வமானது,
ந- இல்லை
“அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வ அநுபபத்தி:”
அகிஞ்சித்‌ கரஸ்ய
– கைங்கர்யம்‌ செய்யாதவனுக்கு,
சேஷத்வ ௮நுபபத்தி:- அடிமைத் தன்மை யில்லை-என்கிறபடியே அடிமையாகிற கிஞ்சித்கார மில்லாத போது அடியானென்ற சேஷத்வ தன்மை இல்லாமையால்‌ அந்த சேஷத்வ ஸித்திக்‌குறுப்பான அடிமையைச்‌ சொல்லுகிற நான்காம்‌ வேற்றுமை உருபுஅடிமைக் குரியனான ஆத்மாவைச்‌ சொல்லுகிற மகாரப்‌ பொருளான ஆத்மாவினுடைய நித்யத்வமாகிய அழிவின்மை, மாறுதலற்ற ஏக ரூபத்வம்‌,
பன்மை முதலானவற்றைச்‌ சொல்லுகையாலே மகாரத்தை விவரிக்கிறது நார பதமென்றுஞ்‌ சொல்லுவார்கள்‌ என்கை.

ப்ரணவத்தின்‌ அக்ஷரங்களமைந்த முறையில்‌ விவரிக்காதே முரணானமுறையில்‌ விவரிப்பானேன்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -77-அடைவே விவரியா தொழிகிறது, விரோதி போய்‌ அநுபவிக்க வேண்டுகையாலே .
அதாவது, அக்ஷரங்களமைந்த முறையிலே விவரியா தொழிகிறது-அகார விவரணமான நாராயண பதத்‌தில்‌ சொல்லும்‌ பகவதனுபவத்துக்கு விரோதியான அஹங்‌கார, மமகாராதிகள்‌ நமஸ்ஸாலே கழி யுண்டு போய்ப்‌ பின்னை அநுபவிக்க வேண்டுகையாலே என்கை.
இனி, இரண்டாம்‌ பதமான மத்ய பதமாம்‌ நமஸ்ஸூக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக
அதினுடைய உட் பிரிவை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -78- நமஸ்ஸு, ‘ந’ என்றும்‌ ‘ம:’என்‌றும்‌ இரண்டு பதம்‌ .
அதாவது, ‘நம :- என்கிற பதம்‌ ‘ந’ என்றும்‌,-ம:” என்றும்‌ இரண்டு பதமாக வுள்ள து என்கிறார்‌.
இவ் விரண்டு பதங்களுக்கும்‌ அர்த்தம்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -79-ம:’ என்கிற இத்தால்‌, தனக்குரியன்‌ என்கிறது; ‘ந’ என்று அத்தைத்‌ தவிர்க்கிறது .
அதாவது, ‘ம:’ என்று ஆறாம் வேற்றுமை யுருபை ஈற்றிலே யுடைய இந்த மகாரத்ததால்‌, மகாரத்தின்‌ பொருளான ஆத்மாவுக்குக்‌ கீழ்ச் சொன்ன நான்காம்‌ வேற்றுமையால்‌ ‘பகவத் விஷயத்தின்‌ பொருட்டு’ என்றதுக்கு எதிர்த் தட்டான ‘தன் பொருட்டு’ என்று தோற்றுகையாலே, “தனக்குரியன்‌’ என்னுமத்தைச்‌ சொல்லுகிறது. ந என்ற எதிர் மறைப்‌ பொருளாகிற நஞ்சாலே (நகாரத்தாலே) அதைக் கழிக்கிறது என்று.

இரண்டு பதங்களாலும்‌ சொன்ன அர்த்தத்தைச்‌ சேரப் பிடித்து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -80- ஆக, நம: என்கிற இத்தால் ,”தனக்கு உரியனன்று’ என்கிறது .
அதாவது, ‘நம :’ என்ற முறையில்‌ பொருள்‌சொல்லாதே “ம:ந” என்ற முரணான முறையில்‌ சொன்னது. தனக்குரியன்‌’ என்பது கொடுமை மிக்க தொன்றாகையாலே; கொடுமையை முன்‌ சொல்லி அன்று என்பதைப்‌ பின்‌ சொன்னதாம்‌. முறையில்‌ சொல்லும் போது “வீடுமின் முற்‌றவும்‌” என்னுமா போலே விடுகையை முன்‌ சொல்லி விட வேண்டியதைப்‌ பின்‌ சொல்லுகிறதென்று யோஜிக்க வேணுமென்று பரந்த படியிலே இவர் தாமே அருளிச்‌ செய்தார்‌.

“தனக்கும்‌ பிறர்க்கும்‌ உரித்தன்று’ என்று, பகவத்‌ விஷயம்‌ தவிர்த்த மற்றவற்றுக்கு உரித்தன்று -என்ற அந்ய சேஷத்வத்தைக்‌ கழித்த உகாரத்தை விவரிக்கிறதாகில்‌, பிறர்க்கு உரித்தன்றென்றத்தையும்‌ விவரியாமல்‌ *தனக்குரியனன்று’ என்று இத்தையே விவரிப்பானேன்‌? என்கிற ஐயத்திலே அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -81 – பிறர்க்கு உரியனான அன்று தன்‌ வைலக்ஷண்யத்தைக்‌ காட்டி மீட்கலாம்‌; தனக்கென்னுமன்று யோக்யதையுங் கூட அழியும்‌ .
அதாவது, பிறர்க்குரியனென்ற போது, அடிமைக்கு இசைகையாலே, பிறரில்‌ காட்டில்‌ பகவானுக்கு உண்டான ஸர்வ காரணத்வ, ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வ சேஷித்வம்‌ முதலான மேம்பாடுகளைக் காட்டி, அந் நிலையில்‌ நின்றும்‌ மீட்கலாம்‌. ‘தனக்குரியன்‌’ என்று நிற்குமன்று, நீ எனக்குரியன்‌ என்றால்‌, இல்லை; நான்‌ எனக்கே உரியன்‌’ என்னுமது –அடிமைக்கு இசையாமையாலே மீட்கைக்குரிய தகுதியும்‌ கூட இல்லையாய்‌ விடுமென்கை. அதனால் தான்‌ “தனக்குரியன்‌’ என்பதை முதலில்‌ தவிர்க்க வேண்டு மென்கிறார்‌.

இந்த நமஸ்ஸால்‌ செய்யப்படுகிற செயல் தான்‌ எது? என்ன, அருளிச்‌செய்கிறார்‌.
ஸூர்ணை -82- இத்தால்‌, விரோதியைக்‌ கழிக்கிறது .
இத்தால்‌ என்பது நமஸைக் குறிக்கும்‌. அதுதான்‌ விரோதியைக்‌ கழிக்கிறது என்கிறார்‌.

அதுதான்‌ ஒன்றோ? பலவோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -83- விரோதி தான்‌ மூன்று .
அந்த விரோதி தான்‌ மூன்று என்கிறார்‌.

அம் மூன்றுந்தான்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -84- அதாவது, ஸ்வரூப விரோதியும்‌, உபாய விரோதியும்‌, ப்ராப்ய விரோதியும்‌ .
இத்தால்‌, முதல்‌ பதமாம்‌ ப்ரணவத்தில்‌ சொன்ன ஆத்ம ஸ்வரூபத்துக்கு விரோதியும்‌, இந்த நமப் பதத்தில்‌ அர்த்த பலத்தால்‌ கிடைத்த உபாய விரோதியும்‌, கடைசி பதத்தில்‌ சொன்ன பயனுக்கு விரோதியுமென்கை. -இந்த நமப்‌ பதந்தான்‌ காகாக்ஷி ந்யாயத்தாலே முன்‌ பின்‌ பதங்களில்‌ சொல்லுகிற ஸ்வரூப பலங்களின்‌ விரோதிகளைக்‌ கழிக்கக்‌ கடவதா யன்றோ? இருப்பது.

இந்த விரோதி மூன்றுங்‌ கழிகையாவது தான்‌ எது? என்ன, அது தன்னை அடைவே அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -85 – ஸ்வரூப விரோதி கழிகையாவது – யானே நீ என்னுடைமையும்‌ நீயே” என்றிருக்கை;
உபாய விரோதி கழிகையாவது -“களைவாய்‌ துன்பங்‌ களையாதொழிவாய்‌ களை கண் மற்றிலேன்‌‘ என்றிருக்கை; பிராப்ய விரோதி கழிகையாவது – “மற்றை நங் காமங்கள்‌ மாற்று” என்றிருக்கை .-ஸ்வரூப விரோதி கழிகையாவது: தன்னியல்பான ஸ்வரூபத்துக்கு விரோதி, “யானே என்றனதே” என்றிருக்கை யாகிற சுதந்திர புத்தி யாகையாலே. இது
கழிகையாவது, “யானே நீ என்னுடையையும்‌ நீயே” என்று தானும்‌ தன்னுடைமைகளும்‌ எம்பெருமானுக்குச்‌ சரீரங்களாக சேஷமாயிருக்கும்‌ என்றிருக்கை.
உபாய விரோதி கழிகையாவது:-அவனுக்குப்‌ பரதந்திரனாய்‌ அவனையே ரக்ஷகமாகக்‌ கொள்ள வேண்டியதான ஆத்மா தற்காப்பில்‌ தொடர்பு கொள்ளுதல்‌
உபாய விரோதி யாகையால்‌, “களைவாய்‌ துன்பங்களையாதொழிவாய்‌ களை கண் மற்றிலேன்‌” என்று என் துன்பங்‌களைப்‌ போக்குவாய்‌ போக்கா தொழிவாய்‌.-ஆனால்‌, என்னையோ, பிறரையோ காப்பாக உடையேனல்லேன்‌ என்றிருக்கை என்கை. பலத்துக்கு விரோதியாவது: பர தந்த்ரனான தான்‌ தன்னலங் கருதுகையால்‌ “மற்றை நங் காமங்கள்‌ மாற்று” என்று உன்னுகப்புக்குப்‌ புறம்பான என்‌ ஆசையைப்‌ போக்கு, என்றிருக்கை என்கை.

இப்படி ஸ்வரூப, உபாய, பலங்களாகிய மூன்றுக்கும்‌ விரோதியாகிறது,-இவனுடைய அஹங்கார, மமகாரங்களாகையாலே இதனுடைய கொடுமையையும்‌, இது கழிகை யிலுண்டான நன்மையையும்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -86- “ம” என்கை ஸ்வரூப நாசம்‌; நம: என்கை ஸ்வரூப உஜ்ஜீவனம்‌ .
அதாவது, “சேத நஸ்ய யதா மம்யம்‌ ஸ்வஸ்மிந்‌ ஸ்வீயே ச வஸ்துநி மம இத்யக்ஷர த்வந்த்வம்‌ ததா மம்யஸ்ய வாசகம்‌.”
சேதநஸ்ய –
சேதநனுக்கு,
யதா – எப்பொழுது,
ஸ்வஸ்மின்‌-தன்னிடத்திலும்‌,
ஸ்வீயே ச வஸ்துநி – தன்னுடைமைமைகளின்‌ பக்கலிலும்‌, மம்யம்‌ – (மம) என்னது என்ற புத்தி நடையாடுகிறதோ,
ததா – அப்பொழுது,
மம இதி – (மம) என்னது என்கிற,
அக்ஷரத்வந்தவம்‌ – இரண்டெழுத்‌துக்களும்‌,
மம்யஸ்ய வாசகம்‌ – அஹங்கார மமகாரத்துக்குப்‌ பேராயிருக்கும்‌,
அஹம் மம – நான்‌ எனக்கு உரியன்‌,
இதம்‌ மம – இது எனக்கு உரியது என்று இரண்டிடங்களிலும்‌ வருகிற அஹம்‌ என்பதும்‌, இதம்‌ என்பதும்‌ முறையே அஹங்கார மமகாரங்களென்று கொள்ளக்‌ கூடாது; முறையே அவ் விரண்டிடங்களிலும்‌ வருகிற ‘மம’ என்பதே அஹங்கார மமகாரத்துக்குப்‌ பெயரென்றபடி. ‘மம’ என்ற இரண்டெழுத்‌துக்களே அஹங்கார மமகாரங்களைத்‌ தோற்றுவிக்கும்‌. ம: என்கிற இதிலே அஹங்கார மமகாரங்கள்‌ இரண்டும்‌ உண்டாகையாலே இதிலே தொடர்புடையனாகை இந்த ஆத்மாவினுடைய பரமனுக்கு வசப்பட்டிருக்கும்‌ பரதந்த்ரமாம்‌ ஸ்வரூபத்துக்கு நாசம்‌. “நம:” என்று அதில்‌ தொடர்‌ பற்றிருக்கை ஸ்வரூபத்துக்கு உஜ்ஜீவநம்‌.
“த்வ்யக்ஷரஸ்து பவேந்‌ ம்ருத்யுஸ்‌ த்ர்யக்ஷரம்‌ ப்ரஹ்மண : பதம்‌, மமேதித்வ்யக்ஷ்ரோ ம்ருத்யுர்‌ ந மமேதி ச சாச்‌ வதம்‌”
த்வ்ய க்ஷ ரஸ்து
– இரண்டக்ஷரங்களோ, ம்ருத்யு: பவேத்‌-ஆத்மாவை அழிப்பது, த்ர்யக்ஷரம்‌ – மூன்றக்ஷரங்களோ, ப்ரஹ்மண:பதம்‌ – பர ப்ரஹ்ம ஸ்தாநத்தை அளிப்பதாம்‌(அப்படிப்பட்ட இரண்டும்‌ மூன்‌ றுமாகிய அக்ஷரங்கள்‌ தாம்‌ எவை என்னில்‌?)
மம இதி – மம என்கிற,
த்வ்யக்ஷரம்‌. – இரண்டு அக்ஷரங்களும்‌, ம்ருத்யு:- மரணத்தை யளிப்பது,
நமம இதி ச – நமம என்கிற மூன்று அக்ஷரங்களும்‌,
சாச்வதம்‌ – ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம்‌. என்று சொல்லிற்றன்றோ.

இப்படி ஸ்வரூப, உபாய, பல விரோதிகளைக் கழிக்கிற அளவன்றிக்கே இந்த நமஸ்ஸூ தான்‌, ஸ்வரூபம்‌ முதலான மூன்றையும்‌ தெற்றெனக்‌ காட்டும்‌ என்கிறார்‌.

இந்த நமப் பதத்தில்‌, அடியார்க் கடிமை என்பது அர்த்த பலத்தால்‌ சித்திப்பதாலே அத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -89- “உற்றதும்‌ உன்னடியார்க் கடிமை” என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும்‌ அநுஸந்தேயம்‌ .
அதாவது, “நின்‌ திருவெட்டெழுத்‌துங் கற்று நானுற்றதும்‌ உன்னடியார்க்கடிமை” என்று
திருமந்திரம்‌ சுற்றதால்‌ நான்‌ உற்றதும்‌ உன்‌ அடியார்க்கு அடிமை என்கிறபடியே, அஹங்கார மமகாரங்கள்‌ கழிந்து பகவச்‌ சேஷத்வம்‌ உள்ளபடி தெளிவிக்கிற இந்த நமஸ்ஸிலே, பகவச்‌ சேஷத்வத்தின்‌ முடிவெல்லையான பாகவத சேஷத்வமும்‌ சொல்ல வேணுமென்கை.

இப்படி அர்த்த பலத்தால்‌ சொல்லப் படுகிற பாகவத சேஷேத்வம்‌, இந் நமஸ்ஸி லன்றிக்கே வேறிடங்களிலும்‌ சொல்லுவாரு முண்டாகையாலே அத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -90- இது- அகாரத்திலே என்றும்‌ சொல்லுவர்கள்‌; உகாரத்திலே என்றும்‌ சொல்லுவர்‌கள்‌ .
அதாவது, நான்காம்‌ வேற்‌றுமையாலே ஆத்மாவினுடைய பகவச்‌ சேஷத்வத்தைச்‌ சொல்லுகையாலே, அந்த சேஷத்வத்தின்‌. முடிவெல்லையான : இந்த பாகவத சேஷத்வம்‌ சொல்லுவது அகாரத்திலே என்றும்‌ சிலர்‌ சொல்லுவர்கள்‌. அவன்‌ தவிர்த்த பிறர்க்கு சேஷமன்று என்பதான அநந்யார்ஹ ‘சேஷத்வத்‌ துக்கு முடிவெல்லை அடியார்க்‌கடிமை என்ற அளவு நிற்கையாகையாலே, உகார்த்திலே .என்றுஞ் சிலர்‌ சொல்லுவார்கள்‌. அர்த்த பலத்தால்‌ சொல்லப்‌ படுவதாகையாலே அவ்வவ் விடங்களிலும்‌ சொல்லலாமா யிருந்ததே யாகிலும்‌, அஹங்கார மமகாரங்களாகிய விரோதியாகிற கந்தல்‌. கழிவது நமஸ்ஸிலே யாகையாலே இங்குச்‌ சொல்‌லுவதே பொருந்‌தும்‌ என்கிறார்

இந்த நமஸ்ஸூக்கு முந்திப் பிறந்த நினைவை முன்னிட்டு இதில்‌ பிறந்த நினைவுக்கு உண்டான வாசியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -91- ஈஸ்வரன்‌ தனக்கே யாயிருக்‌கும் -அசித்துப்‌ பிறர்க்கே யாயிருக்கும்‌; ஆத்மா தனக்கும்‌ பிறர்க்கும்‌ பொதுவா யிருக்கும்‌ என்று முற்பட்ட நினைவு; அங்ஙனன்றிக்கே, அசித்தைப்‌ போலே” தனக்‌கேயாக எனைக்‌ கொள்ள வேணும்‌” என்கிறது
நமஸ்ஸால்‌ .அதாவது “ஸ்வரூபம்‌ ஸ்வாதந்த்ர்யம்‌ பகவத்‌ –
பகவத:- பகவானுடைய,
ஸ்வரூபம்‌ – இயல்பான வடிவமானது. ஸ்வாதந்த்ரியம்‌ – தன் ஸ்வாதீநமாக சுதந்திரமாகவே இருக்கும்‌-என்கிறபடியே ஸ்வாதந்த்ரியமே ஸ்வரூபமான ஈஸ்வரன்‌ தன் பொருட்டே யாயிருக்கும்‌.-அசித்து, ஞாநமில்லாததாகையாலே தனக்கு என்கைக்குத்‌ தகுதி யின்றிக்கே பர தந்தர ஸ்வரூபமாயிருக்கும்‌ -ஆகையால்‌, இது பிறர்‌ பொருட்டே யாயிருக்கும்‌. அகாரத்தில்‌ லுப்த சதுர்த்தியில்‌-மறைந்த நான்காம்‌ வேற்றுமையில்‌ சொன்ன .. சேஷத்வத்தையும்‌, மகாரத்திற்‌ சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தையும்‌ உடையனான ஆத்மா ஜ்ஞாந முடமையால்‌ தன்‌ பொருட்டும்‌, சேஷத்வமாம்‌ அடிமை யுடைமையால்‌ பிறர்‌ பொருட்டுமாகப்‌ பொதுவா யிருக்கும்‌ என்று நமஸ்ஸுக்கு முன் பதமான ப்ரணவத்தில்‌ பிறந்த நினைவு-அப்படி அன்றிக்கே பிறர்‌ ‘ பொருட்டேயான அசித்தைப்‌ போலே “தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே” என்கிறபடியே – பகவத் விஷயத்துக்கே சுவை உடைத்தாம்படி ஆத்மாவை உபயோகித்துக்‌ கொள்ள வேணும்‌ என்கிறது நமஸ்ஸாலென்கை. –

‘தனக்கேயாக‘ – என்றத்தை விவரித்துரைக்கிறார்‌.
ஸூர்ணை -92-அதாவது, போக தசையில்‌ ஈஸ்வரன்‌ அழிக்கும்‌ போது நோக்க வேணு மென்று அழியா தொழிகை.
இத்தால்‌, அத் தலைக்கே சுவை யுடைத்தாம்படி, உபயோகப்‌ படுகையாவது, தன்னோடே (ஆத்மா வோடே) கலந்து பரிமாறும்‌ நிலையில்‌ அநுபவிக்கிறவனான ஈஸ்வரன்‌ “ஆட்கொள்வானொத் தென்னுயி ருண்ட மாயன்‌” என்கிறபடியே அடிமை கொள்வாரைப்‌ போலே புகுந்து, தன்‌ ப்ரேமை மிகுதியாலே தாழ நின்று பரிமாறி ஆத்மாவினிடத்தில்‌ உள்ள அடிமையை அழிக்கும்‌ போது, நம்‌ அடிமைத்‌ தன்மையை நாம்‌ காத்துக்‌ கொள்ள வேணும்‌’ என்று தாழ்மையைப்‌ பாரித்துப்‌ பின் வாங்கி அவனுக்குப்‌ பிரியமான சுவையான இன்பத்தைத்‌ தடுக்காதொழிகை என்கை.

இப்படி இவன்‌ அழிக்கைக்குக்‌ காரணம்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -93- அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று; மேலும்‌ சொல்லும்‌ .
அதாவது, எம்பெருமான்‌ மேல்‌ விழுந்து விநியோகம்‌ கொள்ளும் போது இவன் தன்‌ ‘ அடிமைத்‌ தன்மையாகிற தாழ்மையைப்‌ பாவித்‌துப்‌ பின் வாங்கி அவன்‌ இஷ்டத்தை அழிக்கைக்குக் காரணம்‌, ‘சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்கையாலே கீழே ப்ரணவத்திலே சொல்லிற்று, மேலே நாராயண பதத்தில்‌ உள்ள நான்காம்‌ வேற்றுமை தொண்டாற்றும்‌ அடியானாகச்‌ சொல்லுகையாலே மேலும்‌ சொல்லும்‌ என்கை-

இனி, இந்தப்‌ பரதந்த்ரமாம்‌ சிறப்பை அருளிச்‌ செய்யா நின்று கொண்டு நமப் பத அர்த்தத்தை முடிவு செய்கிறார்‌.
ஸூர்ணை – 94 – இந் நினைவு பிறந்த போதே க்ருத க்‌ருத்யன்‌: இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும்‌. க்ருதம்‌: இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்‌களும்‌ உண்டு. இது இன்றிக்கே இருக்கப்‌ பண்ணும்‌ யஜ்‌ஞாதிகளும்‌ ப்ராயச் சித்தாதிகளும்‌ நிஷ் ப்ரயோஜநங்கள்‌: இது தன்னாலே எல்லா பாபங்களும்‌ போம்‌, -எல்லா பலங்களும்‌ உண்டாம்‌ .’இந்நினைவு பிறந்த போதே க்ருத க்ருத்யன்‌’ என்றது, “தனக்கேயாக எனைக் கொள்ள வேணும்‌” என்னும்‌ பரமாத்மாவுக்கு வசப்படுகிற மிகவும்‌ சிறப்புடைய தான இந்த பாரதந்த்ரியம்‌ ஆகிய நினைவு பிறந்த போதே தன்னுடைய நன்மைக்கு உரித்தாகச்‌ செய்ய வேண்டுவதெல்லாம்‌ செய்து முடித்தவனென்கை.-“இந்நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும்‌ க்ருதம்‌” என்றது – இந்தப்‌ பரதந்த்ரமாம்‌ நினைவு இல்லாத போது “கிம்தேந நக்ருதம்‌ பாபம்‌ சோரேணாத்மாப ஹாரிணா” என்கிறபடியே,
சோரேணாத்மாப ஹாரிணா – -பகவச்‌ சேஷமான தன்னைச்‌ சுதந்திரனாக நினைத்திருக்கிறவன்‌- பகவச்‌ சொத்தான ஆத்மாவைத்‌ திருடிய திருடனாகிறான்‌.
தேந – இவனால்‌,
ந க்ருதம்‌ – செய்யப்படாத,
கிம் பாபம்‌ – எந்தப்‌ பாபம்‌ உண்டு? எல்லாப்‌ பாபங்களும்‌ -செய்தவனாகிறான்‌. என்கிறபடியே சகல தீமைகளும்‌ செய்தவனாகிறான்‌ – என்கை.-“இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்களும்‌ உண்டு” என்றது- இந்த பாரதந்ரிய நினைவு உண்டாகவே எல்லா நற் செயல்களும்‌ செய்தால்‌ உண்டாகும்‌ ப்ரீதி எம்பெருமானுக்கு விளைகையாலே, இந்தப்‌ பாரதந்ரிய நினைவிலே எல்லா நற் செயல்களும்‌ உண்டு என்கை. “இது இன்றிக்கே இருக்கப் பண்ணும்‌ யக்ஞாதிகளும்‌ ப்ராயச்‌ சித்தாதிகளும்‌ நிஷ் ப்ரயோஜநங்கள்‌ என்றது, இந்தப்‌
பாரதந்த்ரிய நினைவு இல்லாமலிருந்து கொண்டு பகவத்‌ ப்ரீதி உண்டாவதன்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ யாக யக்ஞங்கள்‌ முதலானவைகள்‌, சுதந்திர புத்தியோடு செய்வதால்‌ பகவானுக்கு ப்ரீதி உண்டாகாது கோபமே உண்டாகும்‌. முன்பு நாம்‌ செய்த பாபங்களின்‌ விமோசத்தின்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ க்ருச்றம்‌, சாந்த்ராயணம்‌ முதலான ப்ராயச் சித்தங்களாகிய ஸாந்திகளும்‌ சுதந்திர புத்தியோடு செய்வதால்‌ பாப விமோசனம்‌ உண்டாகாமல்‌ பயனற்றுப் போகுமென்கை.
“இது தன்னாலே எல்லா பாபங்களும்‌ போம்‌” என்றது– இந்தப்‌ பரதந்திர நினைவிலே எம்பெருமான்‌ இவனளவிலே கருணை மிகுந்து அருள்‌ செய்வதாலே, அவன்‌ இவனைத்‌ தண்டித்தற் குரித்தான எல்லாப்‌ பாபங்களும்‌ போமென்றும்‌. “எல்லாப்‌ பலன்களும்‌ உண்டாம்‌” என்றது,“உன்னடியார்க்கு என்‌ செய்வனென்றே யிருத்தி நீ” என்கிறபடியே, இவனுக்கு எந்த நன்மையைச்‌ செய்வோமென்று எம்பெருமான்‌ மேன் மேலும்‌ உபகரிக்கையாலே பிறவிக் கடலினின்றும்‌ கரை யேற்றி பரம பதத்திற் கொண்டு போய்‌ அழுகோலக்கத்திலே தன்னைக்‌ கண்டு களித்து வாழ்த்துவதாகிய நிரந்தரத் தொண்டுக் குரியனாம்படி செய்கையாகிய எல்லாப் பலன்களும்‌ உண்டாம்‌ என்கிறார்‌.
ஆக, மத்திய பதமான நமப்‌ பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.

இனி, நாராயண பதார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை-95- -நாராயணனென்றது -நாரங்களுக்கு அயநமென்றபடி
அதாவது, நாராயண பதந்தான்‌ “நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ: நாராயண:-நாரங்களுக்கு இடமாக இருப்பவன்‌ எவனோ அவனே நாராயணன்‌- என்று வேற்றுமைத்‌ தொகையாகவும்‌, “நாரா: அயநம்‌ யஸ்ய ஸ: நாராயண: நாரங்களை இடமாக உடையவன்‌ எவனோ அவனே நாராயணன்‌- என்று அன்மொழித் தொகையாகவும்‌ சொல்ல வேண்டுகையாலே அதில்‌ முதலில்‌-தத் புருஷ ஸமாஸம்‌- வேற்றுமைத்‌ தொகையில்‌ அர்த்தத்தை ‘நாரங்களுக்கு
அயநம்‌’ என்றபடி.
” என்று அருளிச்‌ செய்கிறார்‌-

நாரங்களாகிறவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -96 – நாரங்களாவன- நித்ய வஸ்‌ துக்களுடைய திரள்‌ .
அதாவது, நார பதம்‌, ‘நர’ என்றும்‌ “நார”என்றும்‌ “நாரா: என்றுமாய்‌ “ரிங்க்ஷயே” என்கிற வினைப் பகுதியிலே ‘ர’ என்று அழியும்‌ பொருளைச்‌ சொல்லி, ‘ந’ காரம்‌ அழிவது என்பதைக்‌ கழித்து, ‘நர’ என்று அழிவற்ற நித்ய வஸ்துவைக்‌ காட்டி, கூட்டம்‌ என்ற பொருளிலே அண்‌” என்ற விகுதியும்‌ ஆதி நீளுதலுதாய்‌ ‘நார’ என்று நித்திய வஸ்துக்களின்‌ கூட்டத்தைச்‌ சொல்லி ‘நாரா:’ என்று கூட்டங்களின்‌ பன்மையுஞ்‌ சொல்லுகையால்‌ நித்ய வஸ்துக்களுடைய திரள்‌” என்கிறார்‌-இதில்‌, நித்ய என்றதாலே நர சப்தார்த்தமும்‌, ‘வஸ்துக்கள்‌’ என்கையாலே ‘நார’ சப்தார்த்தமும்‌, அவற்றினுடைய திரள்‌’ என்கையாலே நாரா சப்தார்த்தமாகிற பன்மைப்‌ பொருள்களும்‌ சொல்லப் பட்டது.

அப்படிப் பட்டவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -97-அவை யாவன ஜ்ஞாநாநந்தாமலத்‌வாதிகளும்‌, ஜ்ஞாந சக்தி யாதிகளும்‌, வாத்ஸல்ய ளெளசீலயாதிகளும்‌, திருமேனியும்‌, காந்தி ஸெளகுமார்யாதிகளும்‌, திவ்ய பூஷணங்களும்‌, திவ்யாயுதங்‌களும்‌, பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான
நாச்சிமார்களும்‌, நித்ய ஸூரிகளும்‌, சத்ர சாமராதிகளும்‌ திரு வாசல்‌ காக்கும்‌ முதலிகளும்‌, கணாதிபரும்‌, முக்தரும்‌, பரமாகாசமும்‌, ப்ரக்ருதியும்‌, பத்தாத்மாக்களும்‌, காலமும்‌, மஹதாதி விகாரங்களும்‌, அண்டங்களும்‌, அண்டத்‌துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்‌ .

ஜ்ஞாநாநந்தாமலத்‌ வாதிகளாவன: ஸ்வரூப நிரூபக தர்மங்கள்‌. அதாவது, ஈஸ்வர ஸ்வரூபம்‌ இன்னபடியானது என்று நிரூபித்துக் காட்டும்‌ தர்மங்களான
குணங்கள்‌. ஆதி சப்தத்தாலே, கணக்கிலடங்காத கல்யாண குணங்களைச்‌ சொல்லுகிறது.
ஜ்ஞாந சக்தியாதிகள்‌ அவன் முன்‌ சொன்ன குணங்களால்‌ நிரூபிக்கப்பட்ட ஸ்வரூபத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும்‌ அனைத்து நற் குணங்களுக்கும்‌ ப்ரதாநமாயிருந்துள்ள ஜ்ஞாநம்‌, சச்தி, பலம்‌, ஐஸ்வர்யம்‌, வீரியம்‌, தேஜஸ்‌ ஸூக்களாகிற ஆறு குணங்கள்‌. வாத்ஸல்ய ஸெளசீல்யாதிகளாவன -இவை முன்‌ சொன்ன ஆறு குணங்களிலிருந்து தோன்றக் கூடிய வாத்ஸல்யம்‌ ஸ்வாமித்வம்‌ ஸெளசீல்யம்‌, ஸெளலப்யம்‌ ஆகியவை. இதில்‌ ஜ்ஞாநத்தின்‌ தன்மையாவது – ஸ்வரூபத்தாலேயே எப்போதும்‌ ஓரே காலத்தில்‌ அறியக் கூடியயற்றை எல்லாம்‌ காண்கை. –சக்தியாவது – நினைவாலேயே எண்ணிக்கை யற்ற புவனங்கட்கு எல்லாம்‌ தானே முதற்‌ காரணமா யிருக்கை.-பலமாவது – அனைத்துச்‌ சேதநாசேதநங்களையும்‌ இளைப்பின்றித்‌ தாங்கும்‌ ஆற்றல்‌. வீர்யமாவது- தான்‌ உபாதாந காரணமாகிய முதற் கருவியாகி சேதநாசேதநங்களை உண்டாக்கித்‌ தனக்கொரு மாறுபாடு இன்றிக்கே இருக்கை- ஐஸ்வர்யமாவது- சுதந்திரத்தோடு எங்கும்‌ தடையின்றிச்‌ செல்லுகின்ற நினைவுடைமை.-தேஜஸ்ஸாவது– வேறொரு உதவியின்றி அடைந்தாரது தாபங்களைப்‌ போக்கியும்‌, எதிரிகட்குத்‌ தாபங்களைத்‌ தந்து போருந்தன்மை, ஜ்ஞாநம்‌ முதலான ஆறு குணங்களினின்று தோன்றிய வாத்ஸல்யமாவது – குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளுந்‌ தன்மை. ஸ்வாமித்வம்‌ – எப்பொருட்கும்‌ தலைவனாகை. ஸெளசீல்யம்‌ -உயர்ந்தோனாயிருந்தும்‌ தாழ்ந்தாரோடு கலந்தும்‌ வேற்றுமையின்றி யிருக்கை. ஸெளலப்யம்‌ – எல்லா மநுஷ்யர்‌ கண்களுக்கும்‌ தன்னை காணக்‌கொடுக்குங் குணம்‌. –திருமேனி யாவது – தனக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம்‌. ஒருமை ஜாத்யேசக வசநமாய்‌ நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌, இச்சையால்‌ ஏற்கும்‌ திருமேனிகளையும்‌ சொல்லுகிறது.-அல்லாத போது கூட்டமாக எண்ணி வருவதற்குச்‌ சேராது. இது தான்‌ நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டர்‌, ஆச்சான்‌ பிள்ளை முதலானோர்‌ அருளிச்‌ செய்த நூல்களிலும்‌ தெளியக்‌ காணலாம்‌. –காந்தி ஸெளகுமார்‌யாதிகள்‌ ஆவன – அந்தத்‌ திருமேனியின்‌ பண்புகளான பேரழகும்‌, மென்மையும்‌, இயல்பிலான மணமும்‌, மெருகிட்ட பொன்னின்‌ ஒளி போல்‌ மேனியின்‌ மீது தவழும்‌ ஒளியும்‌, பதினாறு வயதென மதிக்கலாம்‌ படியான யெளவனத்வமும்‌ ஆகிய இவை முதலான பண்புகளாம்‌-திவ்ய பூஷணங்களாவன – எம்பெருமானார்‌ கத்யத்தில்‌ ஆபரண ஸூர்ணையாக வர்ணித்துச்‌ சொன்ன மகுடம்‌ முதல்‌ பாதச்‌ சிலம்பீறாக அந்தத்‌ திருமேனிக்குச்‌ சாத்தும்‌ கணக்கற்ற திருவாபரணங்கள்‌. திவ்விய ஆயுதங்களாவன – அழகுக்கும்‌, அடியவர்‌ பகை களைவதற்கும்‌ உரித்தான சங்கம்‌, சக்ரம்‌, நாந்தக வாள்‌, கெளமோதகியாம்‌ கதை, சார்ங்கம்‌ முதலான கணக்கற்ற ஆயுத விசேஷங்கள்‌. –பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான நாச்சிமார்‌ ஆவார்‌ – “ஸ்ரீவல்லப ஏவம்‌ பூத பூமி நீளா நாயக!” ஸ்ரீவல்லப – மகாலக்ஷ்மியை இஷ்டையாக உடையவனே! –ஏவம்‌ பூத பூமி நீனா நாயக – இப்படிப்பட்ட இவளுக்குச்‌ சமாநர்களான பூமி தேவிக்கும்‌, நீளா தேவிக்கும்‌ நாயகனே! “தேவி த்வாம்‌ அநு நீளயா ஸஹ மஹி தேவ்யஸ்‌ ஸஹஸ்ரம்‌ ததா” தேவி – லஷ்மி தேவியே,
த்வாம்‌ அநு – உன்னை அனுஸரித்து; நீளயா – நீளா தேவியோடு,
மஹீ – பூமிதேவியும்‌,
ததா – அப்படியே,
ஸஹஸ்ரம்‌ தேவ்ய : – ஆயிரம்‌ தேவிமார்களும்‌ (இருக்கின்றனர்‌) என்கிற படியே, முதன்மையுடைய பெரிய பிராட்டியார்‌ முதலாக இந்தப்‌ பிராட்டிக்குச்‌ சமாநர்களான பூமி நீளைகளும்‌, மற்றும்‌ அநேகராகச்‌ சொல்லப்படுகிறவர்களும்‌, “லக்ஷ்மீ முதலான தேவிமார்‌ வர்க்கமும்‌” என்றே பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தது.
நித்ய ஸ-ிிரிகளாவார்‌ – அநந்த கருட விஷ்வக்ஸேநர்‌ முதலா யிருந்துள்ள கணக்கற்ற ஸுிரி ஜனங்கள்‌. சத்ர சாமராதிகளாவன – கைங்கர்ய உபகரணங்களான குடை, கவரி, விசிறி,வெற்றிலைப் பெட்டி, தாம்பலப் படிக்கம்‌ முதலானவைகள்‌. திரு வாசல்‌ காக்கும்‌ முதலிகளாவார்‌ – சண்ட ப்ரசண்ட பத்ர ஸுபத்ர, ஜய விஜயர்‌ முதலானோர்‌.
கணாதிபராவார்‌ -குமுதர்‌, குமுதாக்ஷர்‌, புண்டரீகர்‌, வாமநர்‌, சங்குகர்ணர்‌, ஸர்வ நேத்ரர்‌, ஸுமுகர்‌, ஸுப்ரதிஷ்டிகர்‌ முதலானவர் களாவார்‌.
முக்தராவார்‌ – “கரை கண்டோர்‌” என்கிறபடியே ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடந்து அக்கரைப் பட்டு, நித்ய ஸூரிகளோடு ஸமமான உருவுடையராய்‌ அனைத்துத்‌ தொண்டும்‌ செய்கையே தொழிலாக உடையரா யிருக்கும்‌ எண்ணி லடங்காத சேதநர்‌-பரமாகாசமாவது பரமேஷ்டி, புமாந்‌, விச்வ, நிவ்ருத்த, ஸர்வ: என்ற பெயர்களை யுடைய பஞ்சோபநிஷத் மயமான பரமபதம்‌. இந்த லீலா விபூதியில்‌ பஞ்ச பூதங்களைப்‌ போன்று பரம பதமாகப்‌ பரிணமிப்பதாய்‌ சுத்த ஸத்வமா யிருப்பதொரு அசேதநம்‌. இதுவும்‌ பஞ்ச உபநிஷந்‌ மயமாகையாலே கூட்டமாயிருக்கும்‌.
ஆக, ஜ்ஞாநாநந்தா மலத்வாதிகளும்‌ என்று தொடங்கி இவ்வுளவும்‌ ஸ்வரூப நிரூபக தர்மங்களையும்‌, இப்படி நிரூபித்த ஸ்வரூபத்தைச்‌ சார்ந்துள்ள கல்யாண குணங்களையும்‌, அக் குணங்களுக்கு விளக்கமான திவ்ய மங்களமான திருமேனியையும்‌, இந்தத்‌ திருமேனியின்‌ குணங்களான அழகு முதலானவைகளையும்‌, இந்த அழகு முதலானவற்றோடு புஷ்பம்‌ பூத்தாற் போலே சாத்தின திருவாபரணங்களையும்‌, அந்த ஆபணரங்களோடு (விகல்பிக்கலாம்‌ படியான) ஒளியில்‌ போட்டி யிட்டு எதிர்‌நிற்கும்‌ படியான திவ்யாயுதங்களையும்‌, இவை இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலவாகாதபடி அருகே இருந்து கண்டு களிக்கிற நாச்சிமாரையும்‌, அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற நித்ய ஸுரிகளையும்‌, அவர்களுக்குக்‌ கைங்கர்ய உபகரணங்களான-துணைக் கருவிகளான குடை, சாமரம்‌ முதலான-வைகளையும்‌, இச்‌ சேர்த்திக்கு என்ன தீங்கு நேருகிறதோ என்று அஞ்சும்‌ திரு வாசல்‌ காக்கும்‌ முதலிகளையும்‌, இவ் விதமாகவே மங்களாசாஸந பரராய்த்‌ திருப்படை வீட்டுக்கு முழுக் காவலாயிருக்கும்‌ கணாதிபரையும்‌, ஸம்ஸாரமாம்‌ பிறவியை நீத்தவராய்‌ நித்தியரோடு ஒரு கோவையாய்‌ அடிமை செய்கிற முக்தரையும்‌, அவ் வடிமையை வளர்ப்பதான பரம பதத்தையும்‌ அருளிச்‌ செய்தாராயிற்று.
இனி, லீலா விபூதியிலுள்ளவற்றை அருளிச்‌ செய்கிறார்‌ மேல்‌: ப்ரக்ருதியாவது – ஸத்வ ரஜஸ்‌ தமஸ்ஸூக்களாம்‌ முக்குணக்‌ கூட்டமாயிருக்கும்‌ மூல ப்ரக்ருதி. “முக்குண மயமாகையாலே மூல ப்ரக்ருதியும்‌ கூட்டமாயிருக்கும்‌”என்றல்லவா இதுக்கும்‌ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தது. பத்தாத்மாக்களாகிறார்‌ – உரை கல்லில்‌ ஓற்றி யெடுத்த மெழுகில்‌ பொன் போலே இந்த ப்ரக்ருதிக்‌குள்ளே பந்திக்கப்பட்டு உருமாய்ந்து கிடக்கிற ஆத்மாக்கள்‌–காலம்‌ அவது – இரவு பகல்‌ முதலான பிரிவுகளால்‌ கூட்டமாயிருக்கும்‌ அசேதநப்‌ பொருள்‌. இராப் பகல்‌ முதலான வேற்றுமைகளாலே காலமும்‌ கூட்டமாயிருக்கும்‌ என்றே இதுக்கும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது.ஆக, இவ்வளவும்‌ இயல்பாகவே நித்யமா யிருக்‌கு மவற்றைச்‌ சொல்லினார்‌. இனி மாறுபாட்டோடு கூடியே நித்யங்களாயிருக்கும்‌ அவற்றைச்‌ சொல்லுகிறார்‌. மாறுபாடற்று நித்யமா யிருக்கையாவது – உண்டாவது, அழிவது என்ற மாறுபாடு அடியோடில்லாமை. மாறுபாடுற்றும்‌ நித்திய மாகையாவது -உண்டாவதும்‌, அழிவதுமாக நிற்கச்‌ செய்தேயும்‌ முன் காலத்திலுண்டான பெயர்‌, உரு குறி இவைகள்‌ வேறாகாமல்‌ இருக்கை. இதில்‌ மஹத்து முதலான விகாரங்களாவன – மஹத்‌ தத்வந் தொடங்கி ப்ருதிவி என்ற பூமி பர்யந்தமாக உண்டான இருபத்து மூன்று தத்துவங்களும்‌. -அண்டங்களாவன – இந்த மஹத்து முதலானவைகளாலே உண்டானதாய்‌, “அண்டாநாந்து ஸஹஸ்ராணாம்‌ ஸஹஸ்‌ராண்யயுதாநிச” பல்லாயிரக்கணக்காக அளவின்றியே இருக்‌கும்‌ பல அண்டங்கள்‌-அண்டத்துக்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களாவன- தேவ, மநுஷ்ய, (திர்யக்‌) விலங்குகள்‌, ஸ்தாவரங்கள்‌ என்பனவாகும்‌. -ஆக, நார பதத்தின்‌ அர்த்தம்‌ அருளிச்‌ செய்தாறாயிற்று

மேல்‌, அயந பதார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -98 – அயநமென்றது -இவற்றுக்கு ஆஸ்ரயமென்றபடி. –
‘அயநமென்பது’ தங்கும்‌ இடம்‌ என்பதாலே, சேதநாசேதநமான இவற்றுக்குத் தான்‌ இடமென்றபடி என்கை.

அன்மொழித்‌ தொகையாலான அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -99 – அங்ஙனன்றிக்கே, இவை தன்னை ஆஸ்ரயமாக வுடையனென்னனுமாம்‌
அதாவது – இவற்றுக்கு இடம்‌” என்ற வேற்றுமைத்‌ தொகையாகச்‌ சொன்னதன்றி, இவை தன்னை இடமாக உடையவன்‌’ என்று அன்மொழித் தொகையாச்‌ சொல்லவு மாமென்கை.
இவற்றுக்கு ஆஸ்ரயம்‌என்கிற விடத்தில்‌ குணங்களையும்‌ சொல்லிற்றே யாகிலும்‌, இவை தன்னை ஆஸ்ரயமாக உடையவன்‌” என்கிற விடத்தில்‌, குணங்களைத்‌ தவிரச்‌
சொல்ல வேணும்‌
. அக் குணங்களுக்கு வ்யாபிக்கப்படும் பொருள்‌ என்று சொல்லுமளவில்‌ தன்னில்‌ தானிருக்கை என்ற குற்றமும்‌, முடிவின்மை என்ற குற்றமும்‌ வருமாகையாலே,
“ஈஸ்வரன்‌ தன்‌ குணங்களில்‌ வ்யாபிக்கும் போது குணத்‌தோடு சேர்ந்தே வ்யாபிக்க வேணும்‌. குணமில்லாமல்‌ ஒரு பொருளும்‌ இல்லாமையாலே; அப்போது, வ்யாபிக்கப்‌-
பட்ட குணங்களே வ்யாபக குணங்களாய்‌, வ்யாபக குணங்களே வ்யாபிக்கப்பட்ட குணங்ளா யறுகையாலே, தன்னில் தான்‌ வ்யாபித்தல்‌’ என்ற குற்றம்‌ உண்டாகும்‌.
அதற்கு மேலே, தன்‌ குணங்களிலே குணி வியாபிக்கப் புகுந்தால்‌, அதைச்‌ சேர்ந்த குணங்களையும்‌ குணி வ்யாபிக்க வேண்டும்‌.’ இப்படி வ்யாபித்த குணத்துக்குள்ளும்‌ வேறொரு குணமும்‌ அதற்குள்‌ மற்றொன்றும்‌ என்று இவ்வாறு வரும்‌. ஆதலால்‌, ஒரு முடிவு ஏற்படாதென்று” இவற்றைத்‌ தெளிவாக பெரியவாச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தார்‌ என்கிறார்‌.

வேற்றுமைத்தொகை, அன்மொழித்‌-தொகை என்ற இருவகை தொகையாக வந்த பொருளில்‌ பலித்தவை எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -100-இவை இரண்டாலும்‌ பலித்தது, பரத்வ ஸெளலப்யங்கள்‌ .
அதாவது, நாரங்களுக்கு அயநம்‌ என்றும்‌ நாரங்களை அயநமாக உடையன்‌ என்றும்‌ சொன்ன இவை இரண்டாலும்‌ தேர்ந்த பொருள்‌, தன்னைத்‌ தவிர்த்த மற்ற
அனைத்துக்கும்‌ தான்‌ அதாரமாயிருக்கிற மேன்மையும்‌, இப்படிப்‌ பெரியனான தான்‌ அனைத்துச்‌ சேதனாசேதநங்களிலும்‌ தன்னை அமைத்துக்‌ கொண்டு புகுந்திருக்கையாகிற எளிமைத் தன்மையும்‌ கூறப்படுகிறது என்கை.

இன்னமும்‌ ஒரு முறையாலே இந்தத்‌ தொகைகளிரண்டாலும்‌ தேர்ந்த பொருள்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -101 – அந்தர்யாமித்வமும்‌, உபாயத்வமும்‌, உபேயத்வமுமாகவுமாம்‌
அதாவது, அன்மொழித்‌ தொகையும்‌ வேற்றுமைத்‌ தொகையும்‌ ஆகிய இரண்டாலும்‌ தேர்ந்தது, அந்தர்யாமித்வம் சொல்லுகிற நூல்களிலே அனைத்துச்‌
சேதநாசேதநங்களிலும்‌ அந்தராத்மாவாய்‌ இருப்பவனாய்‌, நியமிக்கிறவனாய்‌ இருக்கிற அந்தர்யாமித்வமும்‌, –இண்கதெள’ என்கிற வினைப் பகுதியிலே யாதல்‌, அயகதெள என்கிற வினைப் பகுதியிலே யாதல்‌ நிர்ணயிக்கப்பட்ட அயந பதத்தில்‌ கருவியாகக் காட்டும்‌ முறையிலும்‌, செயப்படு பொருளாகக்‌ காட்டும்‌ முறையிலும்‌, சொல்வதான உபாயத்வமும்‌ உபேயத்வமும்‌ ஆமென்கை. நாரங்களை அயநமாக உடைய என்னும்‌ அன்மொழித் தொகையில்‌ யோக்யதாநுகுணமாக நார சப்தத்தைக்‌ குணங்களைத்‌ தவிர்த்த பொருள்களுக்கு வாசகமாகக்‌ கொண்டாற்போலே, வேற்றுமைத்‌ தொகையிலும்‌
நாரங்களுக்கு அயநமாயிருப்பவன்‌ என்பதில்‌ உபாயமாகவும்‌, உபேயமாகவும்‌ இருப்பவன்‌ என்னும்‌ போது நார சப்தம்‌ சேதநாசேதநங்களைக்‌ காட்டுமதேயாயினும்‌ தகுதிக்கேற்ப
அசேதநங்கள்‌ தவிர்த்த சேதநங்களையே காட்டுவதாகக்‌ கொள்ளவேண்டும்‌. உபாயம்‌ – இறைவனை அடையும்‌ வழி.-“நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகத்யதே,
கதிராலம்பநம்‌ தஸ்ய தேத நாராயணஸ்‌ ஸ்ம்ருத:”

நார: துஇதி – நார என்கிற சப்தத்தாலே,
ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ -அனைத்துச்‌ சேதநங்களும்‌,
பரிகத்யதே – சொல்லப்படுகிறது,
தஸ்ய – அந்த ஜீவ சமூகத்துக்கு
கதி :– அடையத்‌ தகுந்த,
அலம்பநம்‌ – ஆஸ்ரயமாகையால்‌,
தேந – அதனால்‌,
நாராயணஸ் ஸ்ம்ருத – நாராயணனென்று சொல்லப்படுகிறான்‌.
“நார சப்தேந ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புதை: தேஷாமயந பூதத்வாந்‌ நாராயண இஹோச்யதே”.
புதை
:- புத்திமான்களாலே,
நார சப்தேந- நார சப்தத்‌தால்‌,
ஜீவாநாம் ஸமூஹ:– ஜீவர்களுடைய கூட்டமானது,
ப்ரோச்யதே – சொல்லப்படுகிறது.
தேஷாம்‌ – அந்த ஜீவர்களுக்கு,
அயந பூதத்வாத்‌ – உபாயோபேயமாயிருக்‌கையாலே,
இஹ – இவ்விடத்தில்‌, (எம்பெருமான்‌), நாராயண -நாராயணனென்று,
உச்யதே – சொல்லப்படுகிறான்‌. என்று
உபாயோபேயமாகக்‌ கொள்ளும் போது அசேதநங்கள்‌ தவிர்த்த இவை முதலானவைகளிலே சேதநங்களையே சொல்லா நின்றதல்லவா

செயப்படு பொருளைக்‌ காட்டும்‌ விருத்தியால்‌ தேர்ந்த பலத்துக்கு வரம்பில்லாமையாலே எல்லா விதத்தோடும்‌ கூடி யுள்ளதாலும்‌, உறவு முறையார்‌ என்ற இதுவும்‌ ஒரு பயனாயிருக்கையாலும்‌, எல்லா உறவு முறையும்‌ உள்ள எம்பெருமானுடைய உறவுகளையும்‌ இப் பதத்திலே சொல்லும்‌ படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -102- “எம்பிரானெந்தை” என்கையாலே, ஈஸ்வரனே எல்லா வுறவுமுறையு மென்று சொல்லும்‌ ,
அதாவது – நாராயண சப்தார்த்தத்தைச்‌ சொல்லுகிற திருமங்கையாழ்வார்‌ “எம்பிரானெந்தை என்‌னுடைச்‌ .சுற்றம்‌ எனக்கரசு என்னுடைய வாழ்நாள்‌” என்கையாலே எம்பெருமானே இந்த ஆத்மாக்களுக்கு எல்லாவித உறவு முறையு மென்று இப்பதத்திலே சொல்லுமென்கை.

இப்படி உறவுடையனாய்க்‌ கொண்டு இவ் வாத்மாக்களுக்கு அவன்‌ செய்யுமவை எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -103- நாம்‌ பிறர்க்கான அன்றும்‌ அவன்‌ நமக்காயிருக்கும்‌ –
அதாவது – நாம்‌ எம்பெருமானை வெறுத்து .அவனோடு ஓட்டற்றுப் பிறர்க்கு நல்லவரா யிருந்த காலத்திலும்‌, அவன்‌ நமக்கு நல்லவனாயிருக்கு மென்கை. “

நாம்‌ பிறர்க்கான அன்றும்‌ அவன்‌ நமக்‌கே யாயிருந்து செய்யுமவை தான்‌ எவை? என்ன, அருளிச் சென்றார்‌-
ஸூர்ணை -104- இரா மடம்‌ ஊட்டுவாரைப்‌ போலே உள்ளே பதி கிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்‌ கொண்டு போரும்‌
அதாவது – நேராக தங்கள்‌ பக்கல்‌ வந்து விருப்பங்களைப்‌ பெற்று ஜீவியாதே துர்மாநத்தாலே பட்டினியே திரியுமவர்களையும்‌ விட மாட்டாமையாலே,
பிறரறியாதபடி இரவில்‌ ஊர்ச் சாவடியில்‌ உண்பிப்‌பாரைப் போலே, தன்‌ பக்கல்‌தலை வணங்கோம்‌ என்று இந்த சேதநர்கள்‌ சுதந்திரம்‌ பாராட்டித்‌ திரியா நிற்க, இவர்கள்‌ கண் காணாத படி அந்தராத்மாவாய்க்‌ கொண்டு உள்ளே மறைந்திருந்து இவர்கள்‌ நிலை பேற்றையே தொடங்கிக்‌ காத்துக்‌ கொண்டு போருமென்கை.
ஆக, நாராயண பதத்தால்‌ இவன்‌ செய்யும்‌ தொண்டுகளை ஏற்பவனான எம்பெருமான்‌ தன்மையை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, இதில்‌ வேற்றுமை உருபாலே இவன்‌ தொண்டு செய்ய ப்ரார்த்திப்பதை அருளிச்செய்கிறார்‌.
ஸூர்ணை -105- “ஆய” என்கிற இத்தால்‌ “சென்‌றாற் குடையாம்‌” என்கிறபடியே எல்லா அடிமைகளும்‌ செய்ய வேணுமென்று அபேஷிக்கிறது –
அதாவது “ஆய” என்கிற இந்த நான்காம்‌ வேற்றுமையாலே “சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே, திருவநந்தாழ்வானைப் போலே எல்லா அடிமைகளையும்‌ செய்ய வேணுமென்று விரும்புகிறது என்கை.

‘நமஸ்ஸாலே தனக்கென்று ஒன்றை விரும்புகைக்கு உரிமை யில்லை என்று பாரதந்த்ரியம்‌ சொல்லி யிருக்க, இந்தக்‌ கைங்கர்யத்தைத்‌ தான்‌ விரும்பிக்‌ கோருவது பொருந்தாது” என்று இருக்குமவர்கள்‌ செய்யும்‌ வினாவை அநுவதிக்கிறார்‌.
ஸூர்ணை -106- ‘நமஸ்ஸாலே தன்னோடு உறவில்லை என்று வைத்துக்‌ கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கக்‌ கூடுமோ?” என்னில்‌ : அதற்கு விடை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -107- “படியாய்க் கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே” என்கிறபடியே கைங்கர்ய ப்ரார்த்‌தனை வந்தேறி அன்‌று; ஸ்வரூப ப்ரயுக்தம்‌ .

அதாவது, “படியாய்க் கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே” என்று, மிக்க முடிந்த நிலையான பாரதந்த்ரியத்தோடே கைங்கர்ய ப்ரார்த்தனையையும்‌ சொல்லுகிறபடியே, கைங்கர்ய ப்ரார்த்தனை தன்னலங் கருதுவதான அஹங்கார மடியாய்க்‌ கொண்டு இடையில்‌
வந்தேறி யானது அன்று. ஆண்டனுக்கு மிக்க உகப்பை விளைவித்தல்லது தரியாதபடியான தன்‌ இயல்பான ஸ்வரூபத்தைப்‌ பற்றி வந்தது
என்கை.
மேற்சொன்ன வினா விடைகளாவன – நமச்சப்தம்‌ நாராயணாய என்பதோடு சேர்ந்து “நாராயணாய நம.” என்று மகாரத்தில்‌ சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தால்‌ தொண்டாற்றுவதில்‌ வரும்‌ என்னது என்ற மமகாரத்தை விளைவிக்கும்‌ என்று நமச் சப்தார்த்தப் பகுதியில்‌ சொல்லி விட்டு, இங்கே கைங்கர்ய ப்ரார்த்தனையைச்‌ சதுர்த்தி காட்டுமென்பது பொருந்‌துமோ? என்று வினாவுக்குக் கருத்து-இந்த ஐய வினாவுக்குத்‌ தெளிவான விடையாவது:
இங்கே சொல்லுகிற கைங்கர்ய ப்ரார்த்தனை, அறிவற்ற அசேதநத்துக்கு வேறாக அறிவுடைய சேதநனாயிருந்தும்‌, அறிவில்லாதான ஜடப் பொருளுக்குச்‌ சமமான பகவத்‌ பரதந்‌திரத்தை நமப் பதம்‌ சொல்லுவதால்‌, தன்னலம்‌ சிறிதும்‌ கொள்ளாது ஆண்டானின்‌ முக மலர்த்தியே குறிக் கொண்டதாயும்‌, அசித்துக்கு வேறான மகாரத்தில்‌ சொல்லுகிற தன்னியல்பான அறிவுடைமைக்குப்‌ பொருந்தியதா யிருப்பதால்‌ சமாதாநம்‌ கண்டு கொள்வது.

முன்‌ சொன்னதைக்‌ காரணமாகக்‌ கொண்டு நான்காம்‌ வேற்றுமையின்‌ கைங்கர்ய ப்ரார்த்தனையின்‌ விளக்கத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -108- ஆகையால்‌. “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” என்கிற ப்ரார்த்தனையைக்‌ காட்டுகிறது . :
அதாவது – கைங்கர்ய ப்ரார்க்தனை இடையில்‌ வந்ததன்றிக்கே, பகவானுக்கு அடியவன்‌ ‘என்ற தொடர்பாலே வந்ததாகையாலே “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” என்று, ‘அடிமையில்‌ ஒன்றும்‌ நழுவாதபடி எல்லா அடிமைகளும்‌ செய்ய வேண்டும்‌ நாம்‌’ என்கிற ப்ரார்த்தனையை இந்த நான்காம்‌ வேற்றுமை காட்டுகிறதென்கை.

இந்தக்‌ கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல்‌ நடக்கைக்கு உறுப்பான பயனில்‌ மிக்க சுவையுடையார்‌ தன்மையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -109- “கண்ணாரக் கண்டு கழிவதோர்‌ காத லுற்றார்க்கு முண்டோ கண்கள்‌ துஞ்சுதல்‌” என்கிறபடியே காண்பதற்கு முன்பு உறக்கமில்லை,-கண்டால்‌ “ஸதா பஸ்யந்தி’ ஆகையாலே உறக்கமில்லை.
அதாவது, “இமையோர்கள்‌ குழாம்‌ தொழுவதும்‌ சூழ்வதுஞ்‌ செய்‌ தொல்லை மாலைக்‌ கண்ணாரக்கண்டு கழிவதோர்‌ காதலுற்றார்க்கும்‌ உண்டோ கண்கள்‌ துஞ்சுதல்‌” என்று ‘நித்ய ஸுிரிகளுடைய திரளானது நிரந்தரம்‌ அநுபவம்‌ பண்ணுகிற ஸர்வேஸ்வரனைக்‌ கண்கள்‌ நிறையும்படி கண்டொழியக் கழியாதபடியான காதலிலே நிலை நின்றவர்களுக்கும்‌ கண்கள்‌ உறங்குதல்‌ உண்டோ என்னுமாப் போலே, பகவத் விஷயத்தைக்‌ காண்பதற்கு முன்பு அறிவு சுருங்குவதால்‌ வரும்‌ உறக்கமில்லை; கண்ட காலத்தில்‌ ‘ஸதா பஸ்யந்தி’ (எப்போதும்‌ பரமபதத்தில்‌ ‘ பகவானைக்‌ காண்கிறான்‌) என்பதாலே உறக்கமில்லை.

இன்னமும்‌ ஒரு காரணத்தினாலே இவனுக்கு உறக்க மில்லாமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -110- “பழுதே பல பகலும்‌ போயின” என்று இழந்த நாளுக்குக்‌ கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை .
அதாவது “செங்கணடலோத வண்ணரடி அரவணை மேல்‌ கண்டு தொழுதேன்‌, பல பகலும்‌ பழுதே போயின வென்று அஞ்சி அழுதேன்‌” என்று “விஷயத்தைக்‌ கண்டு அநுபவித்தவாறே இப்படி அநுபவிக்கைக்கு உடலான அநேக காலமொல்லாம்‌ வீணே போய் விட்டதே’ என்று இழந்த நாளை நினைத்‌து வருந்திக்‌ கூப்பிடுகிறவனுக்கு மேலுள்ள நாளில்‌ உறக்கம்‌ வர வழி இல்லை என்கை.

இன்னமும்‌ (இவ் விஷயத்தில்‌) பகவத்‌- விஷயத்தில்‌ அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தைப்‌ பொருத்துவிக்கிறார்‌.
ஸூர்ணை -111- “அன்று நான்‌ பிறந்திலேன்‌ பிறந்த பின்‌ மறந்திலேன்‌”என்னா நின்றார்களிறே
அதாவது, “அவன்‌ என்னைப்‌ பெறுவதற்குத்‌திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆகா நிற்க, அக் காலத்தில்‌ ஜ்ஞாந லாப ரூபமான ஜன்மத்தை யுடையனாகப்‌ பெற்றிலேன்‌; அந்த ஜன்மமுண்டான பின்பு, அவனை ஒருக்காலும்‌ மறந்திலேன்‌’ என்று சொல்லா நின்றார்‌களென்கை. ஆக; சிறப்புடைய பயனில்‌ அறிவு பிறந்தார்‌ தன்மை இதுவாகையாலே இந்தக்‌ கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல்‌ நடக்குமென்று கருத்து.

இனி, இந்தக்‌ கைங்கர்யத்துக்கு தேச காலம்‌ முதலான நியமமில்லாமையை அருளிச் செல்கிறார்‌.
ஸூர்ணை -112- இவ் வடிமை தான்‌ “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி” என்கிறபடியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ அநுவர்த்திக்கும்‌ ,
அதாவது, இவ்வாத்மாவினுடைய இயல்‌பான தன்மைக்குப்‌ பொருந்திய அரும் பயனான இந்தக்‌ கைங்கர்யந்தான்‌, “ஒழிவில்‌ கால மெல்லா முடனாய்‌ மன்னி” என்று ‘ஒழிவில்லாத காலமெல்லாம்‌ எல்லா இடத்திலும்‌ உடனாய்‌ எல்லா நிலைகளிலும்‌ பிரியாது நின்று -என்கிறபடியே எல்லாத் தேசத்திலும்‌ எல்லாக்‌ காலத்திலும்‌, எல்லா நிலைகளிலும்‌ நடந்து செல்லுமென்கை –

‘மணாட்டிக்குத்‌ திருமாங்கல்ய தாரணம்‌,மணாளனுக்கே உரித்தரனவள்‌’ என்று காட்டுமா போலே, திரு மந்த்ர தாரணம்‌ (சேதநர்க்கு) மக்களுக்கு, ‘ “பகவான்‌ ஒருவனுக்கே உரிமைப்பட்டவர்கள்‌ என்பதை விளக்க இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -113- எட்டிழையாய்‌ மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸுித்ரம்‌ போல திருமந்த்ரம்‌ .
அதாவது, பதினாறிழையாய்‌, இரண்டு சரடாயிருப்பதொரு லெளகிகமான மங்கள ஸூத்திரம்‌ போலன்றிக்கே, வைதிகமான மங்கள ஸூத்திரம்‌ ‘எட்டிழையாய்‌ மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸூத்திரம்‌ போலே’ எட்டுத்‌ திருவக்ஷரமாய்‌ மூன்று பதமாயிருக்கிறது இத் திருமந்த்ரமென்கை

இப்படி நிரூபித்துச்‌ சொன்ன இத்தால்‌ எவ் வர்த்தம்‌ சொல்லுகிறது?” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -114 – இத்தால் , ஈஸ்வரன்‌ ஆத்மாக்களுக்குப்‌ பதியாய்‌ நின்று ரஷிக்கும்‌ என்கிறது
அதாவது, மங்கள ஸூத்ரமாகச்‌ சொன்ன இத் திருமந்த்ரத்தால்‌, ஈஸ்வரன்‌-நாராயணன்‌- இந்த திரு மந்த்ரத்தை ஆசார்யனாலே உபதேசிக்கப் பெற்ற ஸம்பந்தமுடைய ஆத்மாக்களுக்குப்‌ பதியாய்‌ நின்‌று கொண்டு ரக்ஷிக்‌கும்‌ என்று சொல்லுகிறது என்கை.

இனி, இந்த மந்த்ர்த்தால்‌ சொல்லப்‌-பெற்ற அர்த்தத்தைத்‌ தொகுத்துச்‌ சொல்லி இத்தை முடிக்கிறார்‌. ,
ஸூர்ணை -1 15- ஆக , திரு மந்த்ரத்தால்‌ ‘எம்பெருமானுக்கே உரியேனான நான்‌ எனக்கு உரியனன்றிக்கே ஒழிய வேணும்‌; ஸர்வ சேஷியான நாராயணனுக்கே
எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌’ என்றதாயிற்று .

‘ஆக’ என்றது, கீழே விரிவாக அருளிச்‌-செய்த எல்லாவற்றையும்‌ தொகுத்து அருளிச்‌ செய்கிறாரென்னுமிடந் தோற்ற ‘எம்பெருமானுக்கே உரியேனானநான்‌‘- இதில்‌, “எம்பெருமானுக்கு என்ற நான்காம்‌ வேற்றுமையை ஈற்றிலுடைய முதல்‌ அக்ஷரத்தின்‌ அர்த்தத்‌தையும்‌, ஏவ காரத்தாலே மத்யம அக்ஷ்ரத்தின்‌ அர்த்தத்தையும்‌, ‘உரியேனான நான்‌” என்று மூன்றாமக்ஷரத்தின்‌ அர்த்தத்தையும்‌ சொல்லுகையாலே, ப்ரணவத்தின்‌ முதல்‌ பதத்தைத்‌ தொகுத்ததாகும்‌.
எனக்குரிய னன்றிக்கே ஓழியவேணும்‌ –-இதில்‌, எனக்குரியன்‌ என்று ஆறாம்‌ வேற்றுமையை ஈற்றிலே உடைய மகாரார்த்தத்தையும்‌, அன்றிக்கே ஒழிய என்கையாலே ‘ந’காரார்த்தத்தையும்‌ வேணும்‌ என்கையாலே இவ் வர்த்தம்‌ சேதநனுக்கு ப்ராத்திக்கப்படுமது என்னுமத்தையும்‌ சொல்லுகையாலே நம: என்ற மத்யம பதார்த்தத்தைத்‌ தொகுத்ததாகும்‌.-ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌:- இதில்‌, ஸர்வ சேஷியான
நாராயணனுக்கே’ என்று அடிமையை ஏற்கும்‌ ஆண்டானையும்‌, கைங்கர்ய ப்ரார்த்தனையின்‌ விளக்கமான (ஆய)என்ற நான்காம்‌ வேற்றுமைமையும்‌, ‘எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌’ என்று கைங்கர்ய ப்ரார்த்தனையின்‌ விதத்தையும்‌ சொல்லுகையாலே, மூன்றாம்‌ பதம்‌ தொகுத்ததாம்‌. என்றதாயிற்று என்றது – என்று சொல்லிற்‌- றாயிற்றென்கை.

இப்படி விரிவாக அருளிச்‌ செய்ததை மீண்டும்‌ சுருக்கமாக அருளிச் செய்தது, இந்தத்‌ திருமந்த்ராத்தத்தை எல்‌லோரும்‌ அறிந்து நினைவிற் கொள்வதற்காக. ஆகையாலே, எல்லோருக்கும்‌ இவ்வர்த்தம்‌ எப்போதும்‌ நினைவில்‌ கொள்ள வேண்டும்‌.
ஸ்ரீ திருமந்த்ர ப்ரகரண வ்யாக்யானத்தின்‌ தெளிவுரை முற்றிற்று. .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –263–278–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

இனி இந்த ஸ்லோக அர்த்தத்தில் ருசி ஒருவனுக்கு உண்டாகையில் உள்ள அருமையையும் –
இந்த ஸ்லோகம் தனக்கு இன்னதிலே நோக்கம் என்னுமத்தையும் –
இதில் விஸ்வஸ் உத்பத்தியின் அருமையையும் –
ஈஸ்வரன் தான் முதலிலே இத்தை உபதேசியாமைக்கு ஹேதுவையும் –
வேத புருஷன் உபயாந்தரங்களை  விதிக்கைக்கு ஹேதுவையும் –
உபாயாந்தரங்களை ஸ்வரூபேண த்யஜிக்கும் அளவில் தோஷம் இல்லை என்னுமத்தையும் –
அவை தானே முகாந்தரேண அந்விதங்கள் ஆகையாலே ஸ்வரூபேண த்யக்தங்கள் அன்று என்னும் இடத்தையும் –
பேற்றுக்கு சாதனம் இன்னது என்னுமத்தையும் –
பல சித்திக்கு இவன் பக்கல் வேண்டும் அம்சத்தையும் –
ஈஸ்வரனுக்கு இவனுடைய ஸூக்ருதம் அநிஷ்டம் என்னுமத்தையும் –
இவ் அர்த்தத்தில் ஆஸ்திகயாதிகள் உண்டாய் பிழைத்தல்-இல்லையாகில் நசித்தல் இத்தனை -என்னுமத்தையும் –
வ்யவசாயஹீனன் இதில் அந்வயித்தால் விநாச பர்யந்தமாம் என்னுமத்தையும் –
இதுக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தையும் –
அடைவே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————————————————

உய்யக் கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-சூரணை -263-

அவற்றில் பிரதமத்தில் -இதில் ஒருவனுக்கு ருசி பிறக்கையில் உள்ள அருமையை தர்சிப்பிக்கைக்காக
ஓர் ஐதிக்யத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தத்வ நிர்ணயம் பண்ணின உய்யக் கொண்டார் பக்தி நிஷ்டராய் இருக்கையாலே -அவரை
பிரபத்தி நிஷ்டராம் படி பண்ண வேண்டும் என்று அவருக்கு இந்த ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்த அளவிலே –
அர்த்த ஸ்திதி அழகிதாய்  இருந்தது -ஆகிலும் அத்தை விட்டு இத்தை பற்ற தக்க ருசி எனக்கு இல்லை -என்ன –
வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி பிறந்தது இல்லை -என்று
அவர் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது -என்கை –

—————————————————-

இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு –சூரணை -264-

இனி இந்த ஸ்லோகத்துக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் -தான் ஒரு தலையுமாய் இருக்கிற இந்த இச் சேதனனுக்கு தானே –
நிரபேஷ சாதனமாய் -ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு –
ஸ்வ ப்ராப்தியை பண்ணிக் கொடுக்கும் -ஸ்வாதீன சகல ப்ரவர்த்தகனான ஈஸ்வரனுடைய
ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பர்யம் -என்கை-

————————————————————-

இது தான் அநுவாத கோடியிலே-என்று வங்கி புரத்து நம்பி -வார்த்தை –சூரணை -265

இனி இதில் விஸ்வாஸ உத்பத்தியில் அருமையை அருளிச் செய்கிறார் –

அதாவது இந்த ஸ்லோக அர்த்தம் தான் அனு வாதத்தினுடைய கோடியிலே -என்று
ஆப்த தமரான வங்கி புரத்து நம்பி அருளிச் செய்யும் வார்த்தை -என்கை –
அனுவாதம் -கூறிய ஒன்றை மீண்டும் கூறுவது -அர்ஜுனனன் அறிந்தவற்றை மீண்டும் கண்ணன் அருளிச் செய்கிறான் –

————————————————————

அர்ஜுனன்-கிருஷ்ணனுடைய ஆனை தொழில்களாலும் –
ருஷிகள் வாக்யங்களாலும் –
கிருஷ்ணன் தன் கார்யங்களிலே அதிகரித்துப் போருகையாலும் –
இவனே நமக்கு தஞ்சம் என்று துணிந்த பின்பு –
தன்னைப் பற்றி சொல்லுகையாலே –
அது எத்தாலே -என்ன -அருளி செய்கிறார் –சூரணை -266-

அதாவது –
இதுக்கு அதிகாரியான அர்ஜுனன் பால்யமே தொடங்கி கிருஷ்ணனுடைய அகடிதகடநா
சாமர்த்திய பிரகாசமான அதி மானுஷ சேஷ்டிதங்களாலும் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஸ்ரீரார்ணவ நிகேதன
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்

புண்யா த்வாரவதீ யத்ர தத்ராச்தே மது சூதன
சாஷாத் தேவ புராணோ அசௌ சஹி தர்மஸ் சனாதன

யத்ர நாரயனோ தேவ பரமாத்மா சனாதன
தத்ர க்ருத்ச்னம் ஜகத் பார்த்த தீர்த்தாந் யாயதநாநி ச

யே ச வேத விதோவிப்ரா யே சாத்யாத்மா விதோ ஜனா தேவதந்தி
மஹாத்மானம் கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –

பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ராம் பரமுச்யதே
புண்யா நாம்பி புண்யா அசசௌ மங்களாணாம் ச மங்களம்

கிருஷ்ண ஏவ ஹி லோகா நா முத்பத்தி ரபி சாப்யய
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம்  விச்வம் சராசரம் -என்றும்
இத்யாதிகளில் இருந்துள்ள பராவர தத்வ யாதாத்ம்ய வித்துக்களான ருஷிகள் வாக்யங்களாலும் –

பல்யாத்ப்ரப்ருதி புரவாச தசையோடு -வன வாச தசையோடு -வாசியற கிருஷ்ணன்
தன் கார்யத்துக்குக் கடவனாய் நோக்கிக் கொண்டு போருகையாலும் –

இவன் சொல்லுகிற உபாயங்கள் எல்லாம் நமக்கு தஞ்சம் அன்று -இவனே நமக்கு தஞ்சம் –
என்று விச்வசித்த பின்பு -ஆனால் என்னை பற்று -என்று சொல்லுகையாலே -என்கை –

————————————————————–

புறம்பு பிறந்தது எல்லாம் இவன் நெஞ்சை சோதிக்கைக்காக-சூரணை-267-

இது தன்னை முதலில் உபதேசியாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது
யச்சரேய சியான் நிச்சிதம் ப்ருஹூ தன்மே சிஷ்ய ஸ்தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் –
என்ற இவனுக்கு உபாய உபதேசம் பண்ணத் தொடங்கிகிற அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே
உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் -அவ்வளவிலே பர்யவசித்து விடுமோ -அவற்றினுடைய
தோஷத்தாலே இவ் உபாய உபதேசத்துக்கு  அதிகாரி யாமோ -என்று
இவனுடைய ஹ்ருதயத்தை  சோதிக்கைக்காக என்கை –

——————————————————–

வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது -கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகாரங்களால் வந்த களிப்பு அற்ற ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக–சூரணை -268-

ஆனால் இவன் அன்றோ இப்படி ஹ்ருதய சோதன அர்த்தமாக உபாயந்தரங்களை உபதேசித்தவன் –
வேத புருஷன் அவற்றை விதிப்பான் என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆப்த தமனான வேத புருஷன் -விஞ்ஞாய  ப்ரஞ்ஞாம் குர்வீத –
ஒமித்யாத்மானம்  த்யாயத ஆத்மானமேவ லோகமுபாசீத
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்யோ  நிதித்யா சிதவ்ய-இத்யாதிகளாலே
உபாயாந்தரங்களை மோஷ சாதனமாக விதித்தது –

பட்டி தின்று திரிகிற பசுவுக்கு இடைஞ்சு வசப்படுகைக்காக கழுத்திலே தடியை கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகார வச்யனாய் களித்து திரிகிற இவனுக்கு –
ஜன்மான் தரசஹஸ்ரேஷூ  தபோ ஞான சமாதிபி -என்கிறபடி

காய க்லேச ரூபமான கர்ம அனுஷ்டானம் -இந்த்ரிய ஜெயம் -முதலான
அரும் தேவைகளாலே செறுப்பு உண்டு அந்த களிப்பு போய் -பகவத் பாரதந்த்ர்யம் ஆகிற
ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக -என்கை –

——————————————————–

சந்நியாசி முன்பு உள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்
இவற்றை விட்டால் குற்றம் வாராது –சூரணை -269-

ஆனால் இப்படி ஸ்வரூப ஞான உதய ஹேதுவான இவற்றை விட்டால் குற்றம் ஆகாதோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
சரம ஆஸ்ரமத்திலே அந்விதன் ஆனவன் பூர்வாஸ்ரம தர்மங்களை விடுமா போலே -அந்ய உபாயங்களினுடைய
ஸ்வரூப விரோதித்வாதிகளாலே -சித்த உபாயத்தில் இழியும் படி இவ்வளவான ஞான பாகம் பிறந்தவன் –
இவ் உபாயந்தரங்களை விட்டால் தோஷம் ஆகாது -என்றபடி –

————————————————————-

இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் –சூரணை -270-

இவை தான் ஆகாரந்தரத்தாலே அன்விதங்கள் ஆகையாலே இவற்றில் இவன் தனக்கு
ஸ்வரூப த்யாகம் இல்லை -என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சாதனாந்தர பரித்யாக பூர்வகமாக சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணின இவ் அதிகாரி தான் –
கர்ம ஞானாதிகள் ஆகிற  இவை தன்னை ஸ்வரூபேண த்யஜித்து இலன் -என்கை –

———————————————————-

கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –
அது எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –சூரணை-271-=

அதாவது
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்-

நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே-
ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும் –

(நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-)

பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே –
போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான
ருசியிலே அந்தர்பவிக்கும் –

சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே -அத்யந்த
பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-

———————————————————

ஒரு பலத்துக்கு அரிய  வழியையும் -எளிய வழியையும் உபதேசிக்கையாலே –
இவை இரண்டும் ஒழிய -பகவத் ப்ரசாதமே உபாயமாகக் கடவது –சூரணை -272-

பக்தி பிரபத்திகள் இரண்டையும் கழித்தால்
இவன் தனக்கு பல சாதனம் ஆவது எது -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது-
பகவத் ப்ராப்தி ஆகிற ஒரு பலத்துக்கு –
ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
அநேக ஜன்மங்களிலே கர்ம ஞானாதிகள் ஆகிற அங்கங்களாலே சாதிக்கப் படுமதாகையாலே
அரிதாய் இருந்துள்ள பக்தி மார்க்கத்தையும் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சக்ரு தனுஷ்டேயம் ஆகையாலே -எளிதாய் இருந்துள்ள பிரபத்தி மார்க்கத்தையும் -உபதேசிக்கையாலே
சாதனா கௌரவ லாகவங்களில் தாத்பர்யம் அன்றிக்கே தத் வயாஜேன பல பிரதானாக
நின்றுள்ள அவனுடைய ப்ரசாதமே பிரதானம் ஆகையாலே –
பக்தி பிரபத்திகள் ஆகிற இவை இரண்டும் ஒழிய
பகவானுடைய  ப்ரசாதமே உபாயமாக கடவது -என்கை –

——————————————————————

பேற்றுக்கு வேண்டுவது விலக்காமையும் இரப்பும்-சூரணை -273-

ஆனாலும் பேற்றுக்கு இவன் பக்கலிலும் ஏதேனும் உண்டாக வேண்டாவோ –
என்ன அருளிச் செய்கிறார்

அதாவது
பலசித்திக்கு சேதனன் பக்கல் உண்டாக வேண்டுவது –
ஸ்வ யத்னத்தாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காது ஒழிகையும் –
அது புருஷார்த்தம் ஆகைக்கு உறுப்பான இரப்பும் -என்கை-

———————————————————————-

சக்கரவர்த்தி திரு மகன் பாபத்தோடு வரிலும் அமையும்
இவன் புண்யத்தைப் பொகட்டு வர வேணும் என்றான் –சூரணை -274-

இங்கன் அன்றிக்கே இவன் பக்கலிலும்  சில ஸூக்ருதம் உண்டானால் ஆகாதோ -என்ன
உபாய பூதனுக்கு அநிஷ்டம் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ராமோ விக்ரகவான் தர்ம -என்கிற சக்கரவர்த்தி திரு மகன் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று பபிஷ்டனான ராவணன் தான் ஆகிலும்
அழைத்து வாரும் -என்கையலே -பாபம் பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கு உடல் அல்லாமையலே
பாபத்தோடு வரிலும் அமையும் -என்றான் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று இவன் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே
பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடலான புண்யத்தை பொகட்டு  வர வேணும் என்றான் -என்கை
ஆகையால் சகாயாந்தர சம்சர்க்க அசஹனான -உபாய பூதனுக்கு இவன் பக்கல் ஸூக்ருதம் அநிஷ்டம் என்று கருத்து –

———————————————————————–

ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-

இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய
மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –

அதாவது –
இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய்
இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ –
என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –
என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

———————————————————————–

வ்யவாசாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம் -ஆமத்தில் போஜனம் போலே –சூரணை -276-

வ்யவசாய ஹீனனுக்கு இதில் அந்வயம் விநாசத்துக்கு உடலாம் என்னுமத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது –
இதில் சொல்லுகிற  த்யாக ஸ்வீகாரங்களுக்கு ஈடான வ்யவாசயம் இல்லாதவனுக்கு
இதில் உண்டான அந்வயம் அஜீர்ண தசையில் பண்ணின போஜனம் மரண ஹேதுவாமா போலே
விநாச ஹேதுவாய் பர்யவசிக்கும் -என்கை –

—————————————————————–

விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் –சூரணை -277-

இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
செம்மை உடைய திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –நாச்சியார் திரு மொழி –11-10-என்று கரண த்ரயத்தாலும் -செவ்வியராய் –
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாய்க் கொண்டு -கோவிலிலே சாய்ந்து அருளினவர் தாம் –
அர்ஜுன வ்யாஜ்யத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த
யதார்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்கிற வார்த்தையை
பெரிய ஆழ்வார் கேட்டு -தந் நிஷ்டராய் இருபபார்-என்கிறபடி -இவ் அர்த்தத்துக்கு
அதிகாரிகள் இது கேட்டால் இதன் படியே நியதராய் இருக்குமவர்கள் -என்கை –

(செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-)

—————————————————————

வார்த்தை அறிபவர் -என்கிற பாட்டும்
அத்தனாகி -என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அநு சந்தேயம் –சூரணை -278-

இவ் அர்த்த நிஷ்டரான ஆழ்வார்கள் உடைய திவ்ய ஸூக்தி யில் இதுக்கு
அர்த்தமாக அநு சந்திக்க படுமவற்றை அருளி செய்து -இது தன்னை
நிகமிக்கிறார் –

அதாவது-
வார்த்தை அறிபவர் பேர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளி உற்று
மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -திரு வாய் மொழி -7-5-10–என்று –

மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்ற நல் வார்த்தையை அறியும் அவர்கள்
பரணி கூடு வரிந்தால் போலே -இவ் ஆத்மாவை சூழப் பொதிந்து கிடக்கிற ஜன்மங்களோடும்-
அவை புக்க இடத்தே புகக் கடவதான வ்யாதியோடும் –
அங்கனே ஆகிலும் சிறிது நாள் செல்லாத படி இடி விழுந்தால் போல் வரும் ஜரையோடும் –
அங்கனே ஆகிலும் இருக்க ஒண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான-வினாசமுமாகிற -இவற்றை –
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி -அவை போன்ற அநந்தரம் வரக் கடவதான –
கைவல்யம் -ஆகிற மகா துக்கத்தை சவாசனமாகப் போக்கி –

பாத ரேகை போலே தன் திரு அடிகளின் கீழ் சேரும் படி பண்ணி –
புனராவ்ய வசிதராய் கொண்டு தங்களுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு –
விரோதி நிவர்தகனான ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆள் ஆவாரோ –
என்று நம் ஆழ்வார் அருளிச் செய்த –வார்த்தை அறிபவர் -திரு வாய் மொழி -7-5-10-என்கிற பாட்டும் –

முத்தனார் முகுந்தனார் ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் புகுந்து -நம்முள் மேவினார் -ஏழை நெஞ்சமே
எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று

ஹேய ப்ரத்ய நீகர் ஆகையாலே -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தபூமி பிரதர் ஆனவர் –
சகல தேக வர்திகளான ஆத்மாக்களும் ஞான ஏக ஆகாரதையா ஒத்து -தேவாதி பேதத்தலே
ஒவ்வாமல் இருக்கும் பல வகைப் பட்ட ஜன்மங்களைப் போக்கி –

நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை நித்ய ஸூரிகள் கொள்ளும் அடிமையைக் கொள்ளுகைக்காக
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும்  பிதாவாகவும் –
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவாகவும் -அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமி யாயும் –
இப்படி சர்வ வித பந்துமாய் –
நம்முடைய தண்மையையும்-தம்முடைய பெருமையும் பாராதே -நம்முடைய சர்வ பரத்தையும்
தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக ஹேயமான நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினர் –

அறிவிலியான நெஞ்சே -நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஞ்ஞராயோ -அவன் அஞ்ஞனாயோ
ஹிதத்தை ப்ரவர்த்திப்பைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்கைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று உபகரிக்கும் அவனே இருக்க –
எத்தாலே நீ துக்க சாகரத்தில் கிடக்கிறது -என்று
திரு மழிசைப் பிரான் அருளி செய்த –அத்தனாகி -திரு சந்த விருத்தம் -115- என்கிற பாட்டும்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக அநு சந்தேயம் -என்கை –

—————————————————————-

ஆக -இத்தால் –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் -சர்வ தரமான்-
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் -பரித்யஜ்ய –
அந்த தர்ம த்யாக பூர்வகமாக பற்றும் விஷயத்தின் உடைய சௌலப்யாதி குண யோகத்தையும் -மாம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவினுடைய-சகாய அசஹத்வ லஷணமான நைர பேஷத்தையும் -ஏகம்-
நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் -சரணம்-
அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் -வ்ரஜ –
ஸ்வீக்ருதமான உபாயத்தின் உடைய ஞான சக்த்யாதி குண யோகத்தையும் -அஹம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் -த்வா –
அதிகாரிக்கு விரோதியான பாப சமூகத்தையும் -சர்வ பாபேப்யோ –
அப் பாப விமோசன பிரகாரத்தையும் -மோஷ இஷ்யாமி –
அப் பாப விமோசகனைப் பற்றின அதிகாரி உடைய நைர்பர்யத்தையும்-மா ஸூச -என்று
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –254–262–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

மோஷ இஷ்யாமி -முக்தனாம் படி பண்ணக் கடவன் –சூரணை -254-

அநந்தரம் –
சதுரத்த பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மோஷ இஷ்யாமி-என்று -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்

அதாவது –
இவற்றில் நின்றும் விடப் பட்டவனாம் படி பண்ணக் கடவன் -என்கை-

—————————————

ணி-ச்சாலே -நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டு
போம் காண் -என்கிறான் –சூரணை -255-

அதாவது – இஷ்யாமி -என்கிற ணிச்சாலே ஸ்வயம் கர்த்தா வாகை அன்றிக்கே –
தான் பிரயோஜக கர்த்தாவாய் விடுவிக்கக் கடவேன் -என்கையாலே
நானும் இதுக்கு ஒரு யத்னம் பண்ண வேண்டா –
நீயும் இதுக்கு பிரார்த்திக்க வேண்டா –
நீ என்னை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே -உன்னைக் கண்டு தாமே
பயப்பட்டு -கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு அந்தாதி -54-
என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம் காண்
என்று அருளிச் செய்கிறான் -என்கை-

(வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-)

———————————————————-

என்னுடைய நிக்ரஹ பலமாய் வந்தவை
நான் இரங்கினால் கிடக்குமோ -என்கை –சூரணை -256-

இப்படி அருளிச் செய்ததின் கருத்தை வெளி இடுகிறார் –
அதாவது –
பாபங்கள் ஆகிறன-குப்பையிலே ஆமணக்கு போலே மிடற்றை பிடிப்பது
ஒன்றன்று இறே  -சேதனன் பண்ணின கர்மங்கள் ஷண த்வம்சிகள் ஆகையாலே –
அப்போதே நசித்துப் போம் -அஞ்ஞன் ஆகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போக –
ஸ்வதஸ்  சர்வஞனாய் ஓன்று ஒழியாமல் உணர்ந்து இருந்து ப்ராப்த காலங்களிலே
தப்பாமல் நிறுத்து அனுபவிக்கிற என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -அந்த நிக்ரஹ
பலமாய் வந்தவை -நிக்ரஹத்துக்கு பிரதி கோடியான அனுக்ரஹத்தை நான் பண்ணினால்
அவ் விஷயத்தின் பின்னே கிடக்குமோ -என்கை- இதுக்கு கருத்து என்கிற  படி –

—————————————————————-

அநாதி காலம் பாபங்களைக் கண்டு நீ பட்ட பாட்டை
அவை தாம் படும் படி பண்ணுகிறேன் –சூரணை -257-

தன்னடையே விட்டு போம் என்கிற இடத்தில் அபிப்ராயத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
அநாதியான காலம் எல்லாம் துக்க அவஹமான பாபங்கள் வந்து மேலிடப் புக்கால் –
அவற்றைக் கண்டு நீ நடுங்கின நடுக்கம் எல்லாம் -மத் ஆஸ்ரயண ராஜ குல மகாத்மயம் உடைய –
உன்னைக் கண்டு அவை தான் குடல் கரிந்து நடுங்கும் படி பண்ணக் கடவேன் -என்கை –

அவை தானே விட்டு போம்படி பண்ணுகையாவது-இவை நமக்கு  முன்பு உண்டாய் –
கழிந்தது என்று  தோற்றாத படி போக்கை-அதாகிறது -இவை ஸ்ம்ருதி விஷயம் ஆனாலும் –
தன்னுடைய ஸ்வபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே இவை
நமக்கு வந்தேறி யாய் கழிந்தது என்று இருக்கையும் -ஸ்ம்ருதியாலே துக்கம் அநு வர்த்தியாய் இருக்கையும் –
என்று தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்தது இவ் இடத்திலே அனுசந்தேயம் –

————————————————————

இனி உன் கையிலும் உன்னை காட்டித் தாரேன் -என் உடம்பில் அழுக்கை
நானே போக்கிக் கொள்ளேனோ –சூரணை -258-

மோஷ இஷ்யாமி -என்கிற உத்தமனில் அபிப்ரேதமான
ஓர் அர்த்த விசேஷத்தை இனி அருளிச் செய்கிறார் –

அதாவது —
இத்தனை காலமும் — நம் கார்யத்துக்கு நாம் கடவோம் -என்று நீ திரிகையாலே
தன் கார்யம் தானே செய்து கொள்கிறான் -என்று இருந்த இத்தனை போக்கி –
எனக்கு நீ சரீரிதையா சேஷம் -என்று அறிந்து என் பக்கலிலே நியஸ்த பரனான  பின்பு –
உன்னுடைய பாப விமோசன அர்த்தமான யத்னம் நீ பண்ணிக் கொள் என்று –
உன் கையிலும் உன்னைக் காட்டி தாரேன் –
எனக்கு சரீர பூதனான உன்னுடைய அவித்யா ரூப மாலின்யத்தை
சரீரியான நானே போக்கிக் கொள்ளேனோ என்கை –
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைகாக-

ஆகையால் உன்னுடைய விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும்
பலமாய் இருக்க -ஒன்றைச் சொல்லுவான் என் என்னில் மற்றையது தன்னடையே வருகையாலே
சொல்லிற்று  இல்லை -மாமேவைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய
இவ் உபாயதுக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –

ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் -அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தமாய் இருக்கையாலே -தனித்துச் சொல்ல  வேண்டா இறே –
என்று ஸங்க்ரஹேண ஸ்ரீ யப்பதி படி ரஹஸ்யத்திலும்-விஸ்தரேண -பரந்த படி  தனி சரமங்களிலும் அருளிச் செய்த
சங்கா  பரிகாரங்கள் இவ் இடத்தில் அனுசந்தேயம் –

————————————————

மாஸூச -நீ உன் கார்யத்தில் அதிகரியாமையாலும் –
நான் உன் கார்யத்தில் அதிகரித்துப் போருகையலும் –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண்-என்று
அவனுடைய சோக நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கிறான் –சூரணை-259-

அநந்தரம் –
சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மா ஸூச -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
நீ உன் கார்யத்தில் அதிகரித்து நின்றாய் ஆகில் -நம் கார்யத்துக்கு என் செய்வோம் -என்று
கரைந்து சோகிக்க ப்ராப்தம் –
நான் உன் கார்யத்தில் அதிகரியாது இருந்தேன் ஆகில் -நம் கார்யத்தில் இவன் உதாசீனனாய்
இரா நின்றான் -நாம் எங்கனே உஜ்ஜீவிக்க போகிறோம் -என்று சோகிக்க ப்ராப்தம் –
இங்கன் இன்றிகே யத்ன பலித்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாத படியான
ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து -நீ உன் உடைய ரஷண  கார்யத்தில் அதிகரியாது ஒழிகை யாலும் –
உன்னுடைய ரஷணத்தில் யத்ன பலித்வங்கள் இரண்டும் என்னதாம் படி ஸ்வாமியான நான்
உன் பக்கலில் தடை அறுக்கையாலே-உன்னுடைய ரஷண கார்யத்தில் அதிகரித்து கொண்டு போருகையாலும் –
உனக்கு சோகிகைக்கு  நிமித்தம் இல்லை காண் என்று -முன்பு சோக விசிஷ்டனாய் நின்ற அவனுடைய
சோகத்தின் உடைய நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான் -என்கை

இத்தால் -அஹம் -த்வா-என்கிற பதங்களால் சொல்லப்  பட்ட -ரஷக ரஷ்ய பூதரான –
இவருடைய ஸ்வபாவத்தையும் அனுவதித்துக் கொண்டு சோகாபநோதனம் பண்ணின படியை –
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————-

நிவர்தக ஸ்வரூபத்தைச் சொல்லி -நிவர்த்யங்கள் உன்னை வந்து மேலிடாது என்று சொல்லி –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண் -என்கிறான் –சூரணை -260-

இனிமேல் நிவர்தகனாக தன்னுடையவும் -நிவர்தங்களான பாபங்களின் உடையவும்
ஸ்வபாவங்களைச்  சொல்லி சோகாபநோதனம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அஹம் என்று -சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய்க் கொண்டு -விரோதி நிவர்தகனாய் இருக்கிற –
தன் ஸ்வரூபத்தை சொல்லி –
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று ணி ச்சால் நிவர்த்யங்களான  பாபங்கள் உன்
தன்னைக் கண்டு தானே அஞ்சி ஓடி போம் ஒழிய -என்னையே உபாயமாக ஸூவீகரித்து இருக்கிற உன்னை
வந்து மேலிடாது என்னும் இடம் சொல்லி –
அநந்தரம் -மாஸூச -என்கையாலே –
இப்படி யான பின்பு உனக்கு சோகிக்க நிமித்தம் இல்லை -என்கிறார்-என்கை –

———————————————————

எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்கிறான்
இத் தலையில் விரோதியைப் போக்குகைக்கு தான் ஒருப்பட்டு நிற்கிற படியை அறிவித்து –
இவனுடைய சோகத்தை போக்குகிறமையை-அபியுக்த யுக்தியை  நிதர்சனம் ஆக்கிக் கொண்டு
அருளிச் செய்கிறார் –சூரணை -261

அதாவது –
திரு மழிசை பிரான்-எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே-திரு சந்த விருத்தம் -115- என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வேஸ்வரன் இத்தலையில் விரோதியை போக்கி அடிமை கொள்வதாக ஏன்று கொண்டு
வந்து புகுந்து இருக்கிற படியைச் சொல்லி -இனி எதுக்காக நீ துக்க சாகரத்தில் அழுந்துகிறாய்-என்றால் போலே
ஈஸ்வரனும் இப்போது இத் தலையில் சகல பாபங்களையும் போக்குவதாக தானே ஏறிட்டு கொண்டமையை
அறிவித்து -இனி எதுக்காக சோகிக்கிறாய்-என்று இவனை குறித்து அருளிச் செய்கிறான் -என்கை

(அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-)

—————————————————————–

பாபங்களை நான் பொறுத்து -புண்யம் என்று நினைப்பிடா நிற்க –
நீ சோகிக்க கடவையோ –சூரணை -262-

இனி இவனுடைய சோகம் மறுவலிடாமல் போக்குகைக்கு உறுப்பானதொரு பகவத் அபிப்ராய
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ செய்த பாபங்கள் நான் முந்துற என்னுடைய ஷமா விஷயமாக்கி –
அவ்வளவும் அன்றிக்கே -பின்னை உன் பக்கல் எனக்கு உண்டான -வாத்சல்யத்தாலே –
செய்த குற்றம் நற்றமாகவே  கொள் -திரு சந்த விருத்தம் -111
செய்தாரேல் நன்றே செய்தார் –பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-
என்கிறபடியே அவை தன்னை பாபமாக நினையாதே
புண்யம் என்று நினைப்பிடா நிற்க இனி நீ சோகிக்க கடவையோ -என்கை-

ஆக
இவ் உத்தர அர்த்தத்தில் அஞ்சு பதத்தாலும் –
நிவர்த்தக ஸ்வரூபத்தையும் –
நிவர்த்திய ஆஸ்ரயத்தையும்-
நிவர்தங்களான பாபங்களையும் –
அவற்றினுடைய நிவ்ருத்தி பிரகாரத்தையும் –
தத் கார்யமான சோக நிவ்ருத்தியையும்-
சொல்லிற்று ஆயிற்று –

(வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-)

(தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –236–253–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

சரணம் -உபாயமாக-சூரணை -236

இனி பஞ்சம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம்
அருளிச் செய்கிறார் -உபாயமாக -என்று –

——————————————-

இந்த சரண சப்தம்
ரஷிதாவையும்
க்ருஹத்தையும்
உபாயத்தையும்
காட்டக் கடவதே ஆகிலும் இவ் இடத்தில் உபாயத்தையே காட்டுகிறது –
கீழோடு சேர வேண்டுகையாலே –சூரணை -237-

அர்த்தாந்தரங்களையும் காட்டவற்றாய் இருக்க -இவ் இடத்தில் இது உபாயத்தையே காட்டுகிறமையை –
சஹேதுகமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
உபாயே க்ருக ரஷித்ரஸ் சப்தஸ் சரண மித்யாயம் வர்த்ததே -என்கிறபடி
சரண சப்தமான இது -ரஷிதாவையும்  க்ருஹத்தையும் உபாயத்தையும்
காட்டக் கடவதே ஆகிலும் -சாம்ப்ரதம் சைஷ உபாயர்த்தைக வாசக -என்கிறபடி –
இந்த ஸ்தலத்திலே உபாயத்தையே காட்டுகிறது –
சர்வ தர்மங்களையும் விட்டு தன்னையே பற்றச் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலே –
கீழோடு சேர வேண்டுகையாலே -என்கை –

—————————————————

வ்ரஜ-புத்தி பண்ணு –சூரணை -238-

இனி ஷஷ்ட பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -வ்ரஜ -என்று –
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -புத்தி பண்ணு -என்று –

——————————————–

கத்யர்த்தமாவது புத்த்யர்தமாய் -அத்தியவசி என்ற படி –சூரணை-239-

அது தன்னை விசதீகரிக்கிறார் –

அதாவது
வ்ரஜக தவ்–என்கிற தாதுவிலே -கத்யர்த்தமாய் -கத்யர்த்தா  புத்த்யர்தா -என்கிற ந்யாயத்தாலே
கத்யர்த்தமாவது புத்யர்த்தமாய் -அத்தியவசி -என்றபடி -என்கை-
இந்த புத்தி ஆகிறது த்யாஜ்யகோடியிலே உத்தீர்ணமாய் -உபாய கோடியிலே அதனு பிரவிஷ்டமாய் –
பிரபகாந்தர பரித்யாக பூர்வமாய் -பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் -சைதன்ய ஹேதுவாய்-
ஸ்வரூப அநு ரூபமாய் -வியபிசார விளம்ப விதுரமாய் -இருப்பதொரு அத்யவசாயாத்மாக ஞான விசேஷம் –
என்று பரந்த படியிலே இவர் அருளிச் செய்த இது இவ் இடத்திலே அநு சந்தேயம் –

———————————————————-

வாசிக காயிகங்களும் இதுக்கு அபேஷிதங்களாய் இருக்கச் செய்தேயும்
ஞானான் மோஷம் ஆகையாலே மானசமான அனுஷ்டானத்தைச் சொல்கிறது –சூரணை-240–

சாமான்யேன கதி வாசியான இது -மானச வாசக காயிக ரூபமான -கதி த்ரயத்தையும்
காட்டவற்றாய் இருக்க -மானசமான அத்யவசாய மாத்ரத்திலே ஒதுக்குகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்  -திரு வாய் மொழி -6-5-11–என்கிறபடி
கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வீகாரம் அதிகார பூர்த்திக்கு உடலாகையாலே –
வர்ணோக்தி ரூபமான வாசிகமும் –
அஞ்சலியாதி ரூபமான காயிகமும் –
இந்த ஸ்வீகாரத்துக்கு அபேஷிதங்களாய் இருக்க செய்தேயும் -ஞானான் மோஷ –
ஆகையாலே -அவை இரண்டையும் ஒழிய மானசமான அனுஷ்டான மாத்ரத்தைச்
சொல்லுகிறது -என்கை –
ஆக பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

(சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-)

————————————————————-

ஆக -த்யாஜ்யத்தைச் சொல்லி –
த்யாக பிரகாரத்தைச் சொல்லி –
பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி –
உபாய நைரபேஷ்யம்  சொல்லி –
உபாயத்வம் சொல்லி –
உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது –சூரணை -241-

இனி பூர்வார்த்தத்தால் சொல்லுகிற அர்த்தத்தை அநுவதித்து நிகமிக்கிறார் –
அதாவது –
ஆக பூர்வ அர்த்தத்தால் –
சர்வ தர்மான் -என்று த்யாஜ்யத்தைச் சொல்லி –
பரித்யஜ்ய -என்று த்யாக பிரகாரத்தைச் சொல்லி –
மாம்-என்று பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி –
ஏகம் -என்று உபாய நைரபேஷயம் சொல்லி –
சரணம் -என்று உபாயத்வம்  சொல்லி –
வ்ரஜ -என்று உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது -என்கை

—————————————————

அஹம்-சூரணை -242

அனந்தரம் உத்தர அர்த்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாகக் கோலி-அதில்
பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அஹம் -என்று –

——————————————————-

ஸ்வ க்ருத்யத்தை அருளிச் செய்கிறான் –சூரணை -243

இவ் உத்தர அர்த்தத்தில் ஈஸ்வரன் செய்து அருளுகிற அம்சத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அதிகாரி க்ருத்யம் இறே பூர்வ அர்த்தத்தில்  சொல்லிற்று –
உபாய பூதனான தன்னுடைய க்ருத்யத்தை அருளிச் செய்கிறது இதிலே இறே-

———————————————-

சர்வஞ்ஞானாய் -சர்வ சக்தியாய் -ப்ராப்தனான -நான் –சூரணை -244-

இனி இப் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -என்கிறபடியே -சர்வத்தையும் அறியுமவனாய் –
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்கிறபடி எல்லா சாமர்த்தத்தையும்
உடையனாய் -சேஷி ஆகையாலே -ப்ராப்தனாய் இருக்கிற நான் -என்கை-

————————————————-

இவன் கீழ் நின்ற நிலையும்-
மேல் போக்கடியும் அறிகையும் –
அறிந்தபடி செய்து தலைக் கட்டுகைக்கும் –
ஏகாந்தமான குண விசேஷங்களையும் –
தன் பேறாக செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
பந்த விசேஷத்தையும் காட்டுகிறது –சூரணை -245-

அல்லாத குணங்கள் எல்லாம் கிடக்க -இந்த குண விசேஷங்களை -இவ் அஹம் சப்தம் –
காட்டுகிற இதுக்கு பிரயோஜனம் அருளிச் செய்கிறார் –

அதாவது
இச் சேதனனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளை பண்ணும் அளவில் –
இவன் பூர்வத்தில் நின்ற நிலையும் –
மேலே போக தக்க வழியும் அறிகைக்கும் –
அறிந்த படி அவற்றை செய்து தலைக் கட்டுகைக்கும் –
தக்கவையாய் இருந்துள்ள-சர்வஞ்ஞ்த்வ சர்வ சக்தித்வங்கள் ஆகிற குண விசேஷங்களையும் —
இவன் கார்யம் செய்யும் இடத்தில் இவனுக்காக அன்றிக்கே தன் பேறாகச் செய்து
தலைக் கட்டுகைக்கு ஈடான சேஷத்வ ரூப பந்த விசேஷத்தையும் –
பிரகாசிப்பிக்கிறது -என்கை –

மாம்-என்கிற இடத்தில் ஆஸ்ரயண த்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்கள் பிரகாசித்தால் போலே –
அஹம்-என்கிற இடத்திலும் கார்ய கரத்வத்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்கள் பிரகாசிக்கும் இறே –
வாத்சல்யாதிகள் -இல்லாத போது ஆஸ்ர்யணம் கூடாது போலே -ஞான சக்த்யாதிகள் இல்லாத போது –
கார்ய கரத்வம் கிடையாமையாலே -இவ் இடத்தில் ஞான பிராப்தியும் சொன்ன இது பூர்த்திக்கும் உப லஷணம்-

————————————————————

தனக்காகக் கொண்ட சாரத்திய வேஷத்தை
அவனை இட்டுப் பாராதே -தன்னை இட்டுப் பார்த்து –
அஞ்சின அச்சம் தீர -தானான தன்மையை –
அஹம் -என்று காட்டுகிறான் –சூரணை -246-

இப் பதத்தில்-மாம் -என்கிற இடத்தில் சாரதியாய் நின்ற பாரதந்த்ர்யத்துக்கு எதிர்த் தட்டான
அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தமையை அருளிச் செய்கிறார் –

அதாவது –
மாம் -என்ற சாரத்திய வேஷத்தோடே நிற்கிற தன்னைப் பற்றிச் சொன்ன போது –
அர்ஜுனன் தன்னுடைய ரஷண அர்த்தமாக ஏறிட்டு கொண்ட சாரத்திய வேஷத்தை –
சர்வதிகனானவன் இப்படி தாழ நின்றது தன் குணத்தாலே இறே -என்று அவனை இட்டுப் பாராதே –
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிறவன் அன்றோ -என்று தன்னை இட்டுப் பார்த்து –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்னா நின்றான் -இது என்னாகக் கடவது -என்று
அஞ்சின அச்சம் தீர ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருதிகனாய்க் கொண்டு –
நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை -அஹம் -என்று
தர்சிப்பிக்கிறான் -என்கை –

———————————————

கீழில்  பாரதந்த்ர்யமும் இந்த ஸ்வாதந்த்ர்யத்தின் உடைய எல்லை நிலம் இறே –சூரணை-247-

ஏதம் பூதனானவன் பரதந்த்ரன் ஆனதும் தனக்கு ஸ்வரூபமாய்  செய்தது அன்று
என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
கீழ் சாரதியாய் நின்ற பாரதந்தர்யமும் -நினைத்தது செய்யும் அளவில் தனக்கொரு
நிர்வாகர் இல்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்யத்தின் உடைய ஸீமா பூமி இறே -என்கை –

——————————————————–

த்வா -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அப்ராப்தனாய்-என்னையே
உபாயமாகப் பற்றி இருக்கிற  உன்னை –சூரணை -248-

அநந்தரம் த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -த்வா -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
உன் கார்யங்கள் அறிகைக்கு தக்க ஞானம் இல்லாதவனாய் –
அறிந்தாலும் செய்து தலைக் கட்டிக் கொள்கைக்கு சக்தி இல்லாதவனாய் –
அது தான் உண்டானாலும் உன் உடைய ரஷணத்தில் உனக்கு பிராப்தி இல்லாதவனாய் –
இப்படி இருக்கையாலே –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னையே நிரபேஷ உபாயமாக பரிக்ரஹித்து இருக்கிற உன்னை -என்கை –

—————————————————–

சர்வ பாபேப்யோ -மத் ப்ராப்தி ப்ராபகங்கள் என்று
யாவை யாவை சில பாபங்களைக் குறித்து அஞ்சுகிறாய்-
அவ்வோ பாபங்கள் எல்லாவற்றிலும் நின்று –சூரணை -249-

அநந்தரம் த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -சர்வ பாபேப்யோ -என்று –
இதுவும் -பாபமும் -பஹூ வசனமும்- சர்வ சப்தமுமாய் -த்ரி பிரகாரமாய் -இருக்கையாலே –
இம் மூன்றையும் உள் கொண்டு -இப் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
பாபம் ஆகிறது -இஷ்ட விரோதியாயும் அநிஷ்ட ஹேதுவாயும்-இருக்கும் அது ஆகையாலும் –
மோஷ பிரகரணம் ஆகையாலே இவ் இடத்தில் இஷ்ட விரோதிகள் ஆகிற பகவத் லாப
விரோதிகள் ஆகையாலும் –
அதில் ஞான விரோதியும் -ருசி விரோதியும் உபாய விரோதியும்- பண்டே நிவ்ருத்தம் ஆகையாலும் –
இனி உள்ளது ப்ராப்தி விரோதி ஆகையாலே நீ என்னை பிராபிக்கைக்கு பிரதி பந்தகங்கள் என்று
யாவை யாவை சில பாபங்களை உத்தேசித்து பயப்படுகிறாய் –
அந்த அந்த பாபங்கள் எல்லாவற்றிலும் நின்று -என்கை –

—————————————————————–

பொய் நின்ற ஞானமும் -பொல்லா ஒழுக்கும் -அழுக்கு உடம்பும் –
என்கிறபடியே
அவித்யா கர்ம வாஸநா ருசி பிரகிருதி சம்பந்தங்களைச் சொல்லுகிறது –சூரணை -250-

அதில் பஹூ வசன விவஷிதங்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்று
உத்பத்தி விநாசாதி-யோகத்தாலே -அசத்திய சப்த வாச்யனான அசேதன விசேஷத்தில் ஆத்ம ஞானமும்
அந்த தேக ஆத்ம அபிமானம் அடியான -சாம்சாரிக துஷ்கர்ம ப்ரவர்த்தியும் –
அந்த கர்மம் அடியாக வரக் கடவதான -மாம்ச அஸ்ருகாதி மல ரூப தேக சம்பந்தமும் –
என்று சொல்லுகிறபடியே –
அவித்யையும் -கர்மமும் -வாசனையும் -ருசியும் -பிரகிருதி சம்பந்தமும்
ஆகிற அவற்றைச் சொல்லுகிறது -என்கை –
இவற்றில் அவித்யை ஆவது -ஞான அனுதய ரூபமாயும் -அன்யதா ஞான ரூபமாயும்-
விபரீத ஞான ரூபமாயும் -மூன்று வகைப் பட்ட அஞ்ஞானமும்
கர்மம் ஆவது -புண்ய பாவம் -மோஷத்தைப் பற்ற பாபத்தோபாதி புண்ணியமும் த்யாஜ்யமாம் –
புண்ய பாபே விதூயே -என்னக் கடவது இறே –
வாசனை ஆவது -அஞ்ஞான வாசனையும் -கர்ம வாசனையும் -பிரகிருதி சம்பந்த வாசனையும் –
ருசியும் -விஷய பேகத்தாலே பஹூ விதையாய் இருக்கும் –
பிரகிருதி சம்பந்தம் ஆவது -ஸ்தூல சூஷ்ம ரூபமாய் இருந்துள்ள அசித் சம்பந்தம் –

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–)

——————————————————————-

தருணச் சேத கண்டூ யநாதிகளை போலே –
பிரகிருதி வாசனையாலே -அநு வர்த்திக்கும் அவை என்ன –சூரணை -251-

லோகாபவாத பீதியாலும் -கருணையாலும் -கலக்கத்தாலும் -செய்யும் அவை என்ன –
எல்லாவற்றையும் நினைக்கிறது –
இனி சப்த விவஷிதத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
துரும்பு நறுக்குகை -தினவு தின்ற இடம் சொரிகை -தொடக்கமானவை போலே –
அபுத்தி பூர்வகமாக பிரகிருதி வாசனையாலே அநு வர்த்திக்கும் உத்த ராகங்கள் என்ன –
நாம் இவற்றைச் செய்யாத போது -லோகம் நம்மை அபவாதம் சொல்லுமே -என்கிற பயத்தாலும் –
நம்மை கண்டு லௌகிகர் இவற்றைத் தவிருவர்கள் ஆகில் அவர்களுக்கு விநாசம் ஆமே -ஐயோ -என்ற
கிருபையாலும் செய்யும் நித்ய நைமித்திய கர்மங்கள் என்ன –
ரஜஸ் தமஸ் ஸூக்களால் கலங்கி த்யக்த உபாயங்களில் அன்வயித்தல் -புன பிரபத்தி பண்ணுதல் –
செய்யும் அவை என்ன -எல்லாவற்றையும் நினைக்கிறது -என்கை –

—————————————————————–

உன்மத்த பிரவ்ருத்திக்கு க்ராம ப்ராப்தி போலே -த்யஜித்த உபாயங்களிலே இவை
அன்விதங்கள் ஆமோ -என்று நினைக்க வேண்டா –சூரணை -252-

சாதனா புத்த்யா செய்யாதவையும் -வஸ்துகத்யா  சாதனா கோடியிலே அன்வயிக்கும்-
என்னுமத்தை சங்கா பூர்வமாக அருளி செய்கிறார் –

அதாவது –
உந்மாதச்  சித்த விப்ரம-என்கிற படியே சித்த விப்ரமம் பிறந்தான் ஒருவன் –
இன்ன ஊருக்குப் போகிறோம் -என்ற நினைவு இன்றிக்கே ஒரு வழியே போகா நின்றால்-
அவ்வழிக்கு  ஓர் ஊரூடே சம்பந்தம் உண்டாய் இருக்கையாலே அவ்வூரிலே சென்று சேருமா போலே –
சாதனா புத்தி ரஹிதமாக லோகாபவாத பீத்யாதிகளாலே செய்யப் படுகிற இவை –
விட்ட உபாயங்களிலே அன்விதங்கள் ஆமோ -என்று நினைக்க வேண்டா –
அன்விதங்களாயே விடும் என்ற படி –

ஆன்ரூ சம்சய பிரதானராய் அனுஷ்டித்தாலும் ஏறிட்ட கட்டி ஆகாசத்திலே நில்லாதது போலே
அவையும் ஒரு பலத்தோடே சந்திப்பிக்கக் கடவது –
ஆகையால் அவையும் பாப சப்த வாச்யமாகக் கடவது -என்று இறே
தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்கிறார் –

————————————————-

கலங்கி உபாய புத்த்யா பிரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும் –சூரணை -253-

அது தானே ஆகிறது -புன ப்ரபத்திக்கு தோஷம் எது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
சக்ருத் அனுஷ்டானம் ஒழிய புனர் அனுஷ்டானத்தை சஹியாத பிரபத்தி
ஸ்வாபத்தை அறியாதே கலங்கி அநிஷ்ட நிவ்ருத்திகாக வாதல் -இஷ்ட ப்ராப்த்திக்காக வாதல் –
உபய புத்த்யா மீண்டு பண்ணும் பிரபத்தியும் -அத பாதக பீதஸ்த்வம்-என்று
உபாயாந்தரம் போலே பாதக சமம் -என்கை –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –211–235–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

மாம்-சர்வ ரஷகனாய் –
உனக்கு கை ஆளாய் –
உன் இசைவு பார்த்து –
உன் தோஷத்தை போக்யமாக் கொண்டு –
உனக்கு புகலாய்-
நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும் போதும் விடமாட்டாதே ரஷிக்கும்
என்னை –சூரணை-211-

அநந்தரம்-த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
நம்முடைய ரஷணம் இவன் பண்ணுமோ  -பண்ணானோ -என்று சம்சயிக்க வேண்டாதபடி
சர்வருடைய ரஷணத்தில் தீஷிதனாய் -தன் பெருமையும் நம் சிறுமையும் பார்த்து நம்மோடு
கலப்பற்று இருக்குமோ -என்ன வேண்டாதபடி –

சேநயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய-என்று ஏவிக் கொள்ளலாம் படி உனக்கு கையாளாய் –
உன்னை ரஷிக்கையில் உண்டான நசையால்-ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்கிற படியே

ரஷ்ய பூதனான உன் இசைவு பார்த்து -நம் குற்றம் கண்டு இகழுமோ -என்று அஞ்ச வேண்டாத படி –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்மாதி யாகுலனான -உன் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
அசரண்ய சரண்யன் ஆகையால் ஜலம் ஔஷண்யத்தைப் பஜிக்குமா  போலே அபராத ஷாமணம் பண்ணி
கடிப்பிக்கும் புருஷகார பூதரே -தாமரையாள் ஆகிலும் சித குரைக்குமேல்-என்கிறபடியே

குற்றத்தைக் காட்டி அகற்றும் போதும் விட ஷமண் அன்றிக்கே -என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து ஒருதலை நின்று ரஷிக்கும் என்னை-என்கை-

————————————————————-

இத்தால் பர வ்யூஹங்களையும்
தேவதா அந்தர்யாமித்வத்தையும்
தவிர்க்கிறது –சூரணை -212-

மாம்-என்று விபவ ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப் படுகிறவற்றை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
என்னை -என்று அவதரித்து
கண்ணுக்கு இலக்காகாய்  அணுகி நிற்கிற தன்னை
வரணி யனாகச் சொன்ன இத்தால் -தேச விப்ரக்ருஷ்டதையாலே -காணவும் கிட்டவும்
ஒண்ணாத படி இருக்கிற பர வ்யூஹங்களையும் –
அசாதாரண விக்ரக யுக்தம் அன்றிக்கே -உபாயாந்தர நிஷ்டருக்கு உத்தேச்யமாய் இருக்கிற
அக்நி இந்த்ராதி தேவத அந்தர்யாமித்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது -என்கை –

—————————————————————–

தர்மம் சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே -சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று -என்கையாலே -சாஷாத் தர்மம் தானே என்கிறது –சூரணை -213-

தர்மங்களை எல்லாம் விட்டு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமான
தொரு அர்த்த விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்ம சம்ஸ்தபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்கிறபடியே –
ஸ்வ ப்ராப்திக்கு உடலான தர்மத்தை ஸ்தாபிக்கப் பிறந்தவன் தானே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று மோஷ சாதனதயா சாஸ்தர சித்தங்களான
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று -என்று சொல்லுகையாலே –
அவை சாஷாத் தர்மங்கள் அன்று –
ஸ்தாப நீயமான சாஷாத் தர்மம் க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்று
சனாதன தர்மமான தானே என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

———————————————————-

இத்தால் விட்ட ஸ்தானங்களில் ஏற்றம் சொல்லுகிறது –சூரணை -214-

இத்தால் என் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி சொன்ன இத்தால் கீழ் விட்ட ஸ்தானங்களில் காட்டில் இந்த
சாதனத்துக்கு  உண்டான ஏற்றம் சொல்லுகிறது -என்கை –

——————————————————-

அதாவது
சித்தமாய்-பரம் சேதனமாய்-சர்வ சக்தியாய்-
நிர் அபாயமாய்-ப்ராப்தமாய்-சஹாயாந்தர நிர் அபேஷமாய்-இருக்கை –சூரணை -215-

அது தான்  எது -என்ன-அருளிச் செய்கிறார் –
இத்தால் கீழ் விட்ட சாதனங்களில் காட்டில் இதுக்கு ஏற்றம் ஆவது-
சேதன பிரவ்ருத்தியாலே தன ஸ்வரூப சித்தி யாம்படி இருக்கை அன்றிக்கே –
சனாதன தர்மம் ஆகையாலே -சித்தமாய் –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொல்லுகிற
சர்வஞ்ஞ விஷயம் ஆகையாலே
பரம சேதனமாய் –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்கிறபடியே

சர்வ சக்தியாய்
சேதன சாத்யமாய்
நடுவே அபாயங்கள் புகுருகைக்கு அவகாசம் உண்டாகும் படி இருக்கை அன்றிக்கே
சித்த வஸ்துவாய் இருக்கையாலே
நிர் அபாயமாய்
பர தந்த்ரனான இச் சேதனனுடைய ஸ்வரூபத்துக்கு அப்ராப்தமாய் இராதே
ப்ராப்தமாய் –
கீழ்ச் சொன்ன பரம சேதனத்வாதிகளாலே சஹாயாந்தர நிர் அபேஷமாய் இருக்கை -என்ற படி-

————————————————————–

மற்றை உபாயங்கள் சாத்தியங்கள் ஆகையாலே –
ஸ்வரூப சித்தியில் சேதனனை அபேஷித்து இருக்கும் –
அசேதனங்களுமாய்-அசக்தங்களாய் -இருக்கையாலே கார்ய சித்தியிலே
ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் அவற்றுக்கு எதிர் தட்டாய் இருக்கையாலே
இதர நிர பேஷமாய் இருக்கும்-சூரணை -216-

மற்றை உபாயங்கள் -என்று தொடங்கி- மேல் மூன்று வாக்யத்தாலே
அதாவது –

இத்தை ஒழிந்த உபாயங்கள் சேதன பிரவ்ருத்தியாலே சாதிக்கப் படுமவை யாகையாலே –
தம்முடைய ஸ்வரூப சித்தியில் பிரவ்ருத்தி கரனான சேதனனை அபேஷித்து இருக்கும் –
இவனுக்கு செய்ய வேண்டுமவை அறிகைக்கும்
அது தன்னை செய்து தலைக் கட்டுகைக்கும்
யோக்யதை இல்லாத அசேதனங்களுமாய் -அசக்தங்களுமாய் -இருக்கையாலே

சேதனனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமான கார்யத்தினுடைய சித்தியில் –
பலமத  உபபத்தே -என்கிறபடியே பல பிரதத்வ உப யோகியான சர்வ சக்தித்வாதி
உபபத்தி உடையவனான ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் சித்தத்தவ -பரம சேதனத்வ-சர்வ சக்தித்வங்களாலே அவற்றுக்கு
எதிர் தட்டாய் இருக்கையாலே அந்ய நிர பேஷமாய் இருக்கும் -என்கை –

——————————————————————

இதில் வாத்சல்ய -ஸ்வாமித்வ-சௌசீல்ய -சௌலப்யங்கள் -ஆகிற
குண விசேஷங்கள் நேராக பிரகாசிக்கிறது –சூரணை -217-

இனி இப் பதத்தில் ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான குண விசேஷங்கள் எல்லாம்
பிரகாசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அதாவது
அதர்ம புத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனனுக்கு குற்றம் பாராதே –
அபேஷித்த அர்த்தங்கள் அருளிச் செய்கையாலே -வாத்சல்யம் பிரகாசிக்கிறது –
தன்னுடைய பரத்வத்தை பலகாலம் அருளிச் செய்த அளவன்றிகே அர்ஜுனன்
பிரத்யஷிக்கும் படி பண்ணுகையாலே -ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது –

ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி
இவனோடு கலந்து பிரியமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி
பண்ணுகையாலே -சௌசீல்யம் பிரகாசிக்கிறது –

அப்ராக்ருதமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி பண்ணுகையாலே
சௌலப்யம் பிரகாசிக்கிறது -என்கை-

குண விசேஷங்கள் -என்றது ஆஸ்ரயணதுக்கு அபேஷிதங்கள் ஆனவை என்று
தோற்றுகைக்காக-
நேராக பிரகாசிக்கிறது -என்றது -ஸ்புடமாக பிரகாசிக்கிறது -என்றபடி-

—————————————————–

கையும் உழவு கோலும்
பிடித்த சிறு வாய் கயிறும்
சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும்
தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –சூரணை -218-

இவை எல்லாவற்றிலும் வைத்து கொண்டு மிகவும் அபேஷிதம் சௌலப்யம் ஆகையாலே
அவதார பிரயுக்தமான சௌலப்யத்து அளவு அன்றிகே -சாரத்திய அவஸ்திகனாய் நிற்கிற
சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பத்தமையை அருளிச் செய்கிறார் –

அதாவது –

குதிரைகளை பிரேரித்து நடத்துகைக்காக திருக் கையிலே தரித்த உழவு கோலும்
அவற்றை இடவாய் வலவாய் திருப்புகைக்காகவும்
நிறுத்தருள வேண்டும் இடத்தில் தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறு வாய் கயிறும் –
திருமுடியில் ஓன்று ஆச்சாதியாமல் நிற்க்கையாலே சேநா தூளியாலே புழுதி படைத்த திரு குழலும்
தேர் தடவிய பெருமான் கனை கழல் -திரு வாய் மொழி -3-6-10–என்கிறபடியே
சாத்தின சிறு  சதங்கையும் தானுமாக தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை-என்னை-என்று காட்டுகிறான்-என்கை –
ஆக
த்ருதீய பதார்த்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

(கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-)

———————————————————–

ஏகம்–சூரணை -219-

அநந்தரம் சதுர்த்திய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -ஏகம்-என்று –

———————————————————–

இதில் -ஏக -சப்தம் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணத்தைக் காட்டுகிறது –சூரணை -220-

அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் உபாய விசேஷத்தை சொல்லும் இடங்களில் பல இடங்களிலும் அவதாரண பிரயோகம்
உண்டு ஆகையாலே -உகாரம்-போலே இந்த சப்தமும் -ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணம் ஆகிற
அர்த்தத்தைக் காட்டுகிறது -என்கை-

————————————————————–

மாம் ஏவ  யே  ப்ரபத்யந்தே –
தமேவ சாத்யம்-
த்வமே வோபாய பூதோ மே பவ –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-என்றும்
சொல்லுகிறபடியே-சூரணை -221-

இவ் உபாயத்தை நிர்த்தேசித்த அநந்தரம் அவதாரண பிரயோகம் பண்ணின வசனங்கள்
பலவற்றையும் இதுக்கு உதாரணமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
மாமேவ யே ப்ரபத்யந்தே -பகவத் கீதை –7-14-என்று என்னையே யாவர் சிலர்
பிரபத்தி பண்ணுகிறார்கள் என்றும் –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -பகவத் கீதை -15-4–என்று
அந்த புருஷனையே பிரபத்தி பன்னுகிறேன் என்றும் –
த்வமே வோபாய பூதோ மே பவ -என்று நீயே எனக்கு உபாயமாக வேணும் என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திரு வாய் மொழி -5-7-10–என்று எனக்கு
உபாயம் தருகிற இடத்தில் -உன் திரு அடிகளையே உபாயமாக தந்தாய் -என்றும்
சொல்லுகிற இவ் இடங்களில் -மாமேவ -தமேவ -த்வமேவ -நின் பாதமே -என்று
ஸ்வீகார வஸ்து நிர்த்தேச அநந்தரம் அவதாரணத்தை சொல்லுகிற பிரகாரத்தில் -என்கை-

(ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-)

———————————————————————-

இத்தால் -வ்ரஜ-என்கிற ஸ்வீகாரத்தில்  உபாய பாவத்தைத் தவிர்க்கிறது –சூரணை -222-

ஏதத்-வ்யாவர்த்தம் எது -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
உபாயாந்தரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் பௌநருக்த்யம் பிரசங்கிக்கை ஆகையாலும் –
தேவதாந்த்ரங்கள் வ்யாவர்த்தமம் அளவில் -மாம்-என்று அசாதாரண ஆகாரத்தைச் சொல்லுகையாலே –
அது கீழே சித்தம் ஆகையாலும் -இந்த அவதாரணத்தால் -வ்ரஜ-என்று மேல் சொல்லுகிற -ஸ்வீகாரத்தில்
உபாய பாவத்தைக் கழிக்கிறது-என்கை –
இந்த ஸ்வீகாரம் தானும் அந்வய வ்யதிரேகத்தாலே சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே
இதன் சாதனத்வம் அவசியம் கழிக்க வேணும் இறே-

———————————————————

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

————————————————————

அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

———————————————————-

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை

——————————————————————

அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

——————————————————————-

கீழ் தானும் பிறருமான நிலையைக் குலைத்தான் –
இங்கு
தானும் இவனுமான நிலையைக் குலைக்கிறான்-சூரணை -229-

இனி -மாம் -என்கிற பதத்துக்கு கீழும் -இங்கும் -ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற இடத்தில் சகல உபாயங்களையும் விடச் சொல்லுகையாலே
பல பிரதானனான தானும் உபாயாந்தரங்களுமாய்  கூடி நிற்கிற நிலையைக் குலைத்தான் –
ஏகம்-என்கிற இடத்தில் ச்வீகாரத்தில் உபாய பாவத்தை கழிகையாலே-உபாய பூதனான தானும்
தான் ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணி நிற்கிற இவனுமான நிலையைக் குலைக்கிறான் -என்கை
உபயாந்தரங்களை பிறர் என்றது -உன்னால் அல்லால் யாவராலும் –திரு வாய் மொழி –5-8-3-என்றால் போலே

(என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-)

———————————————————

அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

—————————————————

மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சிற்ற வேண்டா–சூரணை -233

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

————————————————————-

நிவ்ருத்தி கீழே சொல்லிற்று–சூரணை -234-

இதுதான் இஸ் ஸ்லோகம் தனக்குள்ளே சொல்லிற்று என்கிறார் –

அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி யினுடையவும் நிவ்ருத்தி யினுடையவும்
நிவ்ருத்தியே இவனுக்கு வேண்டுவது என்னும் இடம் கீழே சொல்லிற்று -என்கை –

———————————————————–

உபகார ஸ்ம்ருதியும் சைதன்யத்தாலே வந்தது –
உபாயத்தில் அந்தர்பவியாது –சூரணை-235-

ஆனால் உபகார ஸ்ம்ருதி தான் வேணுமோ -அது உபாயத்தில் முதலிடாதோ-என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது
என்னை தீ மனம் கெடுத்தாய் -திரு வாய் மொழி 2-7-8-
மருத் தொழும் மனமே தந்தாய் – திரு வாய் மொழி -2-7-7
இத்யாதியாலே இவ் உபாய விஷயத்தில் இவன் பண்ணும் உபகார ஸ்ம்ருதியும்
இவனுடைய சைதன்ய பிரயுக்தமாய் வந்தது இத்தனை -இது உண்டாகை யாலே அன்றோ
ஈஸ்வரன் கார்யம் செய்தது என்று உபாயத்தில் உள் புகாது -என்கை
ஆக சதுரத்த பதார்த்தத்தை  அருளிச் செய்தார் ஆயிற்று –

(வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-)

(திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –199–210–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

பரித்யஜ்ய –சூரணை -199-

அநந்தரம்-த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார்-

———————————————

த்யாகம் ஆவது –
உக்த உபாயங்களை அநு சந்தித்து சுக்திகையிலே ரஜதா புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
விபரீத திசா கமனம் பண்ணுவாரைப் போலேயும் –
அநு பாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்கிற புத்தி
விசேஷத்தோடே த்யஜிக்கை –சூரணை-200-

இதுவும் த்யாகமும் ல்யப்பும் உபசர்க்கமுமாய் -த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே –
அதில் த்யாக வேஷத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் விடத்தில் சொல்லுகிற  த்யாகம் ஆவது -கேவலம் விடுகை அன்று –
கீழ் சொல்லப் பட உபாயங்களின் படியை அநு சந்தித்து –
ரஜதமல்லாத சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
ஸ்வ கார்ய சித்திக்கு உடலான ஒரு திக்கிலே போகக் கோலி தத் விபரீதமான
திக்கை அதுவாக நினைத்து போவாரைப் போலேயும் –
பகவத் ப்ராப்தி உபாய அபேஷரான நாம் -உபாயம் அல்லாதவற்றில் உபாய புத்தி பண்ணினோம்
என்கிற புத்தி விசேஷத்தோடே விடுகை -என்றபடி-

———————————————————————-

பரி -என்கிற உபசர்க்கத்தாலே -பாதகதிகளை விடுமா போலே –
ருசி வாசனைகளோடும்
லஜ்ஜையோடும் கூடே
மறுவலிடாத படி விட வேணும் என்கிறது –சூரணை -201-

இனி உபசர்க்கார்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
பரி சாகல்யே -என்று சாகல்ய பரமாக கொள்ளும் அளவில் அது சர்வ -சப்தத்திலே
உக்தம் ஆகையாலே -அபேஷிதம் அல்லாமையாலே -மிகுதிக்கு வாசகமான -பரி-என்கிற இந்த
உபசர்க்கத்தாலே -ப்ரஹ்மஹத்யா -சூராபானம் ஸ்தேயம் குர்வங்கனாமாக -என்கிற பாதகங்கள்
முதலானவற்றை விடும் அளவில் அவற்றில் புனர் அன்வயதுக்கு உருப்பான ருசி வாசனைகளோடு
கூடே -நாம் இதைச் செய்வதே -என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு விடுமா போலே –

(மிகுதிக்கு வாசகமான–அவ்யயாநாம் அநேகார்த்தத்வாத் –என்கிற நியாயத்திலே -பரி சேஷ என்று சேஷத்வத்துக்கு வாசகமான என்றபடி)

அத பாதக பீதஸ் த்வம் -என்று தர்ம தேவை பாதகமாகச் சொன்ன உபாயாந்தரங்களை விடும் அளவில் –
புத்தி பூர்வகமாக அவற்றில் ப்ரவர்த்திக்கைக்கு உறுப்பான ருசியும் –
அபுத்தி பூர்வகமாக மூளுகைக்கு உறுப்பான வாசனையும் ஆகிற அவற்றோடே கூட
பகவத் ஏக சாதன தைக வேஷமான  ஸ்வ ஸ்வரூபத்துக்கு அத்யந்த வ்ருத்தமானவற்றை நாம் செய்வதே –
என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு மீளவும் அவற்றில் அந்வயம் வாராத படி விட வேண்டும் என்று
சொல்லுகிறது -என்கை –

———————————————————————–

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே
உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202

இனி லயப் அர்த்தத்தை அருளி செய்கிறார் –

அதாவது –
பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் –
என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற
நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

—————————————————————

சசால சாபஞ்ச முமோச வீர -என்கிறபடியே இவை அநு பாயங்களான மாத்ரம் அன்றிக்கே
கால் கட்டு -என்கிறது –சூரணை -203-

இப்படி விட்டே பற்ற வேணும் என்கிற அதன் கருத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -யோ வஜ்ர பாதாச நிசன்னி பாதான் ந சுஷுபே சசால சாபஞ்ச முமோச வீர -என்கிற
ஸ்லோகத்தில் -ராவணன் ராம சரங்களால் மிகவும் ஈடு பட்டு நிலை கலங்கிப் போக
பார்த்த அளவிலும் -கையில் வில் இருக்கும் அளவும் பெருமாள் போக ஒட்டாமையாலே –

பின்பு பொகட்ட வில்லு கையில் இருந்த  போது பிரதி பஷ ஜெயத்துக்கு சாதனம்
ஆகாத மாத்ரம் அன்றிக்கே- கச்ச நு ஜாமி-என்று பின்பு பண்ணின அனுமதி -பெருமாள்
அப்போது பண்ணக் காணாமையாலே -போகவும் ஒண்ணாத படி கால் கட்டு ஆனமையை
சொல்லுகிற படியே -உபாயாந்தரங்களான இவற்றிலே -ஈஷத்  அந்வயம் கிடக்கிலும் -இவை-

——————————————————————–

சக்கரவர்த்தி போலே இழைக்கைக்கு  உறுப்பு –சூரணை-204-

இன்னமும் இவற்றில் அந்வயம் இழவுக்கு உடலாம் என்னுமத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
முன்பே வர பிரதானத்தைப் பண்ணி வைத்து -இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று
ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று -ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற
பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே –
ஆபாசமான உபாயாந்தரங்களில் அன்வயித்து நிற்கை ஆகிறது –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயதோடே கூடி
வாழுகை யாகிற பேற்றை இழைக்கைக்கு உறுப்பாய் விடும் -என்கை-

————————————————————–

சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -சிலர் -அதர்மங்கள் புகுரும் –
என்றார்கள் –சூரணை -205-

இனி இங்கு சொன்ன சர்வ தர்ம பரித்யாகத்தின் கருத்து அறியாதார் சொல்லும்
தூஷணத்தை பரிஹரிக்கைக்காக தத் பஷத்தை உத்ஷேபிக்கிறார் –

அதாவது
த்யாஜ்யமான தர்மம் தான் -இதம் குரு இதம் மாகர்ஷீ -என்று விதி  நிஷேததாத்மகமாய்
இருக்கையாலே -சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -விஹித அனுஷ்டானத்தோபாதி
நிஷித்த பரிஹாரமும் ஒக்கத் தள்ளுண்ணும் அளவில் -அடைத்த கதவைத் திறந்தால்-நிஹீன பதார்த்தங்கள்
புகுருமா போலே -அதர்மங்களான நிஷித்த பிரவ்ருத்திகள் புகுரும் என்று சிலர் சொன்னார்கள்-என்கை-

—————————————————

அது கூடாது -அதர்மங்களை செய் -என்று சொல்லாமையாலே –சூரணை -206-

அத்தை பரிஹரிக்கிறார் –

அதாவது
சர்வ தர்மங்களையும் விடச் சொன்ன இத்தால் அதர்மங்கள் புகுரும் என்கிற இது
சம்பவியாது -தர்மங்களை விடச் சொன்ன மாத்ரம் ஒழிய -அதர்மங்களை செய் -என்று
சொல்லாமையாலே -என்கை –

—————————————————–

தன் அடையே சொல்லிற்று ஆகாதோ என்னில் –சூரணை -207-

அதர்ம நிவ்ருத்தியும் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே அத்தை விடச் சொன்னால் –
அதர்மத்தை செய் என்னும் இடம் அர்த்தாத் உக்தமாகாதோ -என்கிற
பிரதிவாத யுக்தியை அனுவதிக்கிறார் –

————————————————–

ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருதியைக் காட்டாமையாலே –சூரணை -208-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்மங்களை விடச் சொன்ன இத்தால் -அதர்மங்களை செய்-என்னும் இடம் தன்னடையே
சொல்லிற்று ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்யாதி அங்க சஹிதமாய் பிரதானமாய் இருந்துள்ள
விஹித அனுஷ்டானத்தை காட்டுமது ஒழிய -சாமான்யேன அதர்ம நிவ்ருத்தி மாத்ரத்தைக் காட்டாமையாலே -என்கை

———————————————————

காட்டினாலும் அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை –சூரணை -209-

அதர்ம நிவ்ருத்திக்கு தர்ம சப்த வாச்யத்வம் விசேஷண பூதமான இது தன்னையும்
காட்டாதோ -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
அப்படி காட்டிற்று ஆகிலும் அது இவ் இடத்தில் விவஷிதம் அல்லாமையாலே-அத்தை ஒழிந்த
விஹித அனுஷ்டான ரூப தர்மங்களானவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை -என்கை –

———————————————————–

தன்னையும் -ஈஸ்வரனையும் -பலத்தையும் பார்த்தால் அது புகுர வழி இல்லை –சூரணை -210-

இங்கன் ஒதுக்குகிறது என் கொண்டு -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது
அதர்ம அனுஷ்டானம் சேஷிக்கு அநிஷ்டம் ஆகையாலே -அவனுக்கு அதிசயகரமாவது
ஒழிய அநிஷ்டகரனாகை சேராதபடியான ஸ்வரூபத்தை உடைய தன்னைப் பார்த்தாலும் –
சஹாயாந்தர சம்சர்க்க அசஹை ஆகையாலே இத்தலையில் ஸ்வ யத்ன நிவ்ருத்தி ஒழிய
பிரவ்ருத்யம்சத்தில் ஒன்றையும் பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும் –
இவனுடைய பிரவ்ருத்திக்கு பலம் அவனுடைய ப்ரீதி ஆகையாலே தாத்ருசமான பலத்தைப் பார்த்தாலும் –
இம் மூன்றுக்கும் விருத்தங்களான அவை புகுர வழி இல்லை என்கை –

ஆகையால் தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்தியை காட்டிறிற்று ஆகிலும் அத்தை ஒழிந்தவற்றை
சொல்லிற்றாகக்  கொள்ள வேணும் என்று கருத்து –

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –185–198–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

அவதாரிகை –
மத்யம ரகஸ்யமான த்வயத்தின் உடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம் –
அதில் பூர்வ வாக்யத்தில் சொல்லுகிற உபாய வர்ணம் சர்வேஸ்வரன் தானே விதிக்கையாலே –

தத் அபிமதம் -என்னும் அத்தையும் –
வரண அங்கமான சாதனாந்தர பரித்யாகத்தையும் –
வரணத்தில் சாதனத்வ புத்தி ராஹித்யத்தையும் –
சாப்தமாக -பூர்வ அர்த்தத்தாலே பிரதிபதிக்கையாலும் –

உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தையும்
உத்தர அர்த்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கையாலும் –

த்வயதுக்கு விவரணமாய் –
பஞ்சம வேத சார பூத கீதோ உபநிஷத் தாத்பர்யமாய் –
சரம ரஹஸ்யமாய்
இருந்துள்ள சரம ஸ்லோகத்தின் உடைய அர்த்தத்தை
சம்சயம்  விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –

இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று -நம்பி தாமும் இதில் அர்த்தத்தின் உடைய
கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்து இறே -இவருடைய
ஆஸ்திக்ய ஆதா பரீஷார்த்தமாக பல கால் நடந்து துவளப் பண்ணி சூளுரவு கொண்டு -மாச உபவாசம் கொண்டு –
அருமைப் படுத்தி அருளிச் செய்து அருளிற்று –

(உடையவர் பெரிய நம்பி திருமாளிகைக்கு எழுந்து அருளி தண்டம் சமர்ப்பித்து ஆளவன்ஹார் திரவடிகளிலே சேவியாத இழவு எல்லாம் தீர்க்கும்படி
தேவரீர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பெற்றேன் -தேவரீர் திரு உள்ளத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை அடியேனுக்குப் பிரஸாதித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் அப்படியே யாகிறது என்று மந்த்ர ரத்னமான த்வயார்த்தைத்ப் ப்ரஸாதித்து அருளி இன்னமும் சில அர்த்த விசேஷங்கள் உண்டு
அவற்றை ஆளவந்தார் அபிமான பூத அந்தர் பூதரான திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை சென்று கேளும் என்று அருளிச் செய்ய

ராமானுஜரும் அப்படியே நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று சேவித்து ரஹஸ்யார்த்த விசேஷங்களை எல்லாம் பிரஸாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இவருடைய ஆஸ்திக ஆதர பரிஷார்த்தமாக 18 ஆர்த்தி நடத்தி திருமந்த்ரார்த்தை அருளிச் செய்தாராய் இருக்க
இங்கு சரம ஸ்லோக அர்த்தமாக அருளிச் செய்தது -அப்போதே அநந்தரம் வாரீர் எம்பெருமானாரே இன்னும் ஒரு சரம ரஹஸ்யார்த்த விசேஷம்
சொல்லுவதாகப் பாரா நின்றோம் -இவ்வளவில் நீர் திருப்பித்தராகா நின்றீர் -உம்முடைய அத்யவசாயத்தைச் சொல்லிக் காணீர் -என்ன
எம்பெருமானாரும் -தவறீர் அருளிச் செய்த அர்த்தத்தை மேல் ஓர் அர்த்தம் உண்டு என்று இருந்தேனாகில் அவிஸ்வாசி ஆவேன்

கேளாது இருந்தேனாகில் அருளிச் செய்த அர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லை விரகு அறியாமல் ஸ்ரோதவ்ய சாபேஷனாய் இரா நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இப்போது போய் ஏகாந்தமாக ஒருவராய் வாரும் என்ன எம்பெருமானாரும் ஒருவராய் வந்து நம்பி பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து நிற்க
நம்பியும் கையைப் பிடித்துக் கொண்டு போய் ஏகாந்தமான மேல் தளத்திலே படிக்கதவை விழ விட்டு எழுந்து அருளி இருந்து ஒருவருக்கும் செல்லாதபடி
திருவடிகளைத் தொடுவித்து சூழரவு கொண்டு தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸர்வ குஹ்ய தர்மமான சரம ஸ்லோகார்த்தத்தை அருளிச் செய்து
பகவத் விமுகரான நாஸ்திகர் செவிப்படாத படி பேணிக்கொண்டு போரும் என்று நியமித்து அருளி
இவரும் அப்படிப்பட்டவருக்குச் சொல்லக் கடவேன் அல்லேன் பகவத் ப்ரவணரான கூரத்தாழ்வானுக்குச் சொல்லாமல் நிற்க்க கூடாது என்று விண்ணப்பம் செய்ய

நம்பியும் இவ்வர்த்தம் கேட்க்கைக்கு அதிகாரம் உண்டாகில் ஸூஸ் ருஷை கொண்டு சொல்லும் என்று நியமித்து அருளினார்
18 தடவை நடத்தியது 18 அத்தியாயத்தில் அர்த்தம் ப்ரசாதிக்கைக்காக என்று கருத்து
ஆகவே இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று என்று அருளிச் செய்தது
இதில் அர்த்தத்தின் உடைய கௌரவத்தையும்–என்றது ஏதத் வை மஹோ உபநிஷதம் தேவா நாம் குஹ்யம் -என்ற கௌரவத்தையும்—என்றபடி)

நிஷ்க்ருஷ்ட சத்வ நிஷ்டனாய் –
பரமாத்மநி ரக்தனாய் –
அபராதமநி வைராக்கியம் உடையனாய் –
பிரமாண பரதந்த்ரனாய் –
பகவத் வைபவம் ஸ்ருதமானால் அது உபபன்னம் என்னும் படியான
விஸ்ரம்ப பாஹுள்யம் உடையனாய் –
ஆஸ்திக அக்ரேசனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில்
அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டானதுக்கு அதிகாரி ஆகையாலே –
அதிகாரி  துர்லபத்வத்தாலும்
அர்த்த கௌரவத்தாலும் –
இத்தை வெளி இடாதே மறித்து கொண்டு போந்தார்கள்-எம்பெருமானார்க்கு முன்பு உள்ளார் –

சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி கிருபை கரை புரண்டு இருக்கையாலே –
அர்த்தத்தின் சீர்மை பாராதே அனர்ததத்தையே பார்த்து வெளி இட்டு அருளினார் எம்பெருமானார் –

அப்படி உபதேசித்து விடுகிற மாதரமும் இன்றிக்கே -இவ் அர்த்தத்தை எல்லாரும் அறிந்து
உஜ்ஜீவிக்க வேணும் என்னும் பரம கிருபையாலே -இது தன்னை பல
பிரபந்தங்களிலும் -ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண இவர் அருளிச் செய்தது –

மற்று உள்ள  பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் போல் அன்றிக்கே -ஸ்திரீ பாலர்களுக்கும் –
அதிகரிக்கலாம் படி தெளிய அருளிச் செய்தது இப் பிரபந்தத்தில் இறே –

————————————————————-

கீழே சில உபாய  விசேஷங்களை உபதேசிக்க அவை துச் சகங்கள் என்றும் –
ஸ்வரூப விரோதிகள் என்றும் -நினைத்து சோக விசிஷ்டனான அர்ஜுனனைக்
குறித்து -அவனுடைய சோக நிவ்ருத்தி அர்த்தமாக -இனி இதுக்கு அவ் அருகு இல்லை –
என்னும் படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் என்று
இதுக்கு பேராய் இருக்கிறது–சூரணை -185-

இதில் பிரதமத்தில் இந்த ஸ்லோக அர்த்தத்தினுடைய கௌரவத்தை எல்லாருடைய
நெஞ்சிலே படுதுக்கைக்காக -இது தனக்கு சரம ஸ்லோகம் என்று திரு நாமம் ஆகைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இந்த ஸ்லோகத்துக்கு கீழே அநேக அத்யாயங்களிலே கர்ம ஞாநாதிகளான சில
உபாய விசேஷங்களை -ஸ்வ ப்ராப்தி லஷண மோஷ சாதனமாக விஸ்தரேண-
இந்திரிய ஜெயம் அரிதாகையாலும்
சாவதானமாக சிர காலம் சாதிக்க வேண்டி இருக்கை யாலும் –

(கர்ம ஞாநாதிகளான சில–உபாய விசேஷங்களை–இங்கு ஆதி பதத்தாலே அவதார ரஹஸ்ய ஞானமும் புருஷோத்தம வித்யையும் சொன்னவாறு)

அவை அனுஷ்டிக்க அசக்யங்கள் என்றும் –
ஸ்வ சரீரத்வ கதநாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு  ஸ்வ யத்ன
ரூபங்களான இவை விரோதிகள் என்று புத்தி பண்ணி -இவற்றாலே எம்பெருமானைப் பெற எனபது
ஓன்று இல்லை -இனி இழந்தே போம் இத்தனை ஆகாதே என்கிற சோகத்தால் ஆவிஷ்டனான அர்ஜுனனைக் குறித்து –
அவனுடைய அந்த சோகம் போகைக்காக –

ஸூசகத்வாலும் ஸ்வரூப அநு ரூபதையாலும் இனி இதுக்கு மேல் இல்லை –
என்னும்படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் -என்று இதுக்கு
திருநாமமாய் இருக்கிறது -என்கை-

—————————————————————-

இதில் பூர்வ அர்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச் செய்கிறார் –சூரணை-186-

அதாவது –
அர்த்த த்வயயாத்மகமான இந்த ஸ்லோகத்தால் பூர்வ அர்த்தத்தாலே இவ் உபாயதுக்கு
அதிகாரி ஆனவன் செய்யும் அம்சத்தை அருளிச் செய்கிறான்-

உத்தர அர்த்தத்தாலே -உபாய பூதனான தான் இவருக்கு செய்யும் அம்சத்தை
அருளிச் செய்கிறான் -என்கை-

—————————————————–

அதிகாரிக்கு  க்ருத்யமாவது -உபாய பரிக்ரஹம் –சூரணை -187-

அதிகாரி க்ருத்யமாவது என் -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
அதிகாரி ஆனவனுக்கு இங்குச் செய்யத் தக்கது
இவ் உபாயத்தை ஸ்வீகரிக்கை-என்கை-

—————————————

அத்தை சாங்கமாக விதிக்கிறான் –சூரணை -188

ஆனால் அவ்வளவை விதியாதே உபாயாந்தர பரித்யாகம் சொல்லுவான் என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
அந்த உபாய ஸ்வீகாரத்தை உபாயாந்தர பரித்யாகமாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான் -என்கை
ப்ரஷால்ய பாதா வாசா மேத் ஸ்நாத்வா விதி வதர்ச்ச யேத் ஸ்தித்வார்க்யம்
பானவே தத்யாத் த்யாத்வா தேவம் ஜபேன்மனும்-என்று
ஆசமநாதிகளுக்கு அங்கமாகச் சொன்ன -பாத ப்ரஷாலாநதி ஒழிய அவை அனுஷ்டிக்க
ஒண்ணாது போலே இங்கும் -ல்யபந்த பதத்தாலே அங்கமாகச் சொல்லுகிற உபாயாந்தர த்யாகத்தை
ஒழிய ஸ்வீகாரம் அநு பபன்னம் என்னும் இடம் சித்தம் இறே-

ஆகையால்-சர்வ தர்மான் பரித்யஜ்ய ஸ்தி தச்சேத்-என்று துஷ்கரத்வ புத்தியாலே –
ஸ்வத ப்ராப்தமான உபாயாந்தர பரித்யாகத்தை அனுவதித்து -சித்தோ உபாய ஸ்வீகாரத்தை
விதிக்கிறது என்கிற அநு வாத பஷம் ஆயுக்தம் -என்றது ஆயிற்று –

——————————————————-

ராக ப்ராப்தமான உபாயம் தானே வைதமானால் கடுக பரிக்ரகைக்கு உடலாய் இருக்கும் இறே –சூரணை -189-

ஆனால் ஸூசகத்வாதிகளாலே ராக ப்ராப்தமான இதுக்கு விதி தான் வேணுமோ -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
போக்யதையாலே ராக ப்ராப்தமான ஷீரத்தை பித்த ரோகத்துக்கு மருந்தாகக் கொடுக்கச்
சொல்லி விதித்தால் சீக்கிரம் கைக் கொள்ளுகைக்கு உடலாமா போலே -உபாயாந்தரங்களில் காட்டில் இதுக்கு
உண்டான வைலஷண்யத்தாலே -சேதனுடைய ராகத ப்ராப்தமாய் இருந்துள்ள உபாயம் தானே இத்தை
ஸ்வீகரி என்னும் விதி பிரயுக்தமுமானால் சீக்ரமாக ஸ்வீகரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே -என்கை-

————————————————————

இதில் பூர்வார்த்தம் ஆறு பதம்–சூரணை -190 

இனி இதுக்கு பிரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாக -பூர்வார்த்த
பத சங்கையை அருளிச் செய்கிறார் –

————————————————

சூரணை -191
சர்வ தர்மான்-

எல்லா தர்மங்களையும் –
அதில் பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –

————————————————-

சூரணை -192
தர்மம் ஆவது பல சாதனமாய் இருக்குமது –

இது தான் தர்மமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் –
த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே -இம் மூன்றுக்கும் அர்த்தம்
அருளிச் செய்வதாக -ப்ரதமம் தர்ம லஷணத்தை அருளிச் செய்கிறார் –

—————————————————-

சூரணை -193
இங்குச் சொல்லுகிற -தர்ம -சப்தம் -த்ருஷ்ட பல சாதனங்களைச் சொல்லுகை அன்றிக்கே
மோஷ பல சாதனங்களைச் சொல்லுகிறது –

தர்ம சப்தம் த்ருஷ்ட பல சாதனத்திலும் வ்யாப்தம் ஆகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் –

அதாவது –
பூர்வ உபாயங்கள் தன்னை உபதேசிக்கிற போதே த்ருஷ்ட பல சாதனங்கள் வ்யாவ்ருத்தம் ஆகையாலும் –
மோஷ உபாயங்களை உபதேசித்து வருகிற பிரகரணம் ஆகையாலும் –
இவ் இடத்தில் சொல்லுகிற -தர்ம-சப்தம் –
புத்ர பச்வந்தாதி ஐ ஹிகமாகவும்
ஸ்வர்க்காதி ஆமுஷ்மிகமாயும் –
இருந்துள்ள த்ருஷ்ட பலங்களுக்கு சாதனங்கள் ஆனவற்றை சொல்லுகை இன்றிக்கே –
பகவத் ப்ராப்தி ரூபமான மோஷ பலத்துக்கு சாதனமாய் உள்ளவற்றைச் சொல்லுகிறது -என்கை-

———————————————————-

சூரணை -194
அவை தான் ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய் -பலவாய் இருக்கையாலே
பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது -என்கை –

இனி மேல் பஹு வசன அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அந்த மோஷ பல சாதனங்கள்  தாம் பல -உப ப்ரஹ்ம உப ப்ரஹ்மணங்களாய்
இருந்துள்ள ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே விஹிதங்களாய்க் கொண்டு -அநேகங்களாய் இருக்கையாலே –
தர்மான்-என்று பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது –

————————————————————

சூரணை -195
அவை யாவன –
கர்ம ஞான பக்தி யோகங்களும் –
அவதார ரகஸ்ய ஞானமும் –
புருஷோத்தம வித்யையும் –
தேச வாசம்
திரு நாம சங்கீர்த்தனம் –
திரு விளக்கு எரிக்கை –
திரு மாலை எடுக்கை –
தொடக்கமான உபாய புத்தியா செய்யும் அவையும் –

அப்படி இருந்துள்ளவை தாம்  எவை என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
கீழ் பலவாக சொல்லப் பட்ட அவை யாவன –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜநகாதய
தஸ்மாத் அசக்தஸ் சததம் கார்யம் கர்ம சமாசார -என்று
ஸ்வதந்திர சாதனமாக உக்தமான கர்ம யோகமும்

(கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜநகாதய-ஜனகர் முதலானோர்
கர்மணைவ -ஞான யோகத்தால் அல்லாமல் கர்மயோகத்தாலேயே
ஹி ஸம் ஸித்திம் ஆஸ்திதா -ஆத்ம பிராப்தி யாகிய பயனைப் பெற்றார்கள் அன்றோ–.
லோக ஸங்க்ரஹம் ஏவ-சாமான்ய ஜனங்களை இசையை வைக்கும் வழியாகிய லோக ஸங்க்ரஹம் ஒன்றையே
ஸம் பஸ்யந் அபி -கருத்தில் கொண்டும்
கர்துமர்ஹஸி—-நீ கர்மத்தையே செய்வது தக்கது –

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –)

சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே-என்றும்
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரமிஹா வித்யதே-என்றும்
ஞாநாக்னிஸ் சர்வ கர்மாணி பச்மசாத் குருதே ததா -என்றும் சொல்லப்பட்ட
கர்ம சாத்தியமான ஞான யோகமும் –

(ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாத் ஜ்ஞாந யஜ்ஞ பரந்தப.–
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே—৷৷4.33৷৷

பரந்தப–எதிரிகளை அழிப்பவனே
த்ரவ்ய மயாத் –பொருள்களால் செய்யப்படும் கிரியைகளை முக்கியமாகக் கொண்ட
யஜ்ஞாத் –கர்மயோக அம்சத்தைக் காட்டிலும்
ஜ்ஞாந யஜ்ஞ .–கர்மயோகத்தில் உள்ள ஞான அம்சம்
ஸ்ரேயாந் –சிறந்தது
பார்த்த-குந்தீ புத்ரனே
ஸர்வம் -எல்லாப் பிரகாரங்களுடன் கூடியதாய்
அகிலம் -எல்லா அங்கங்களுடன் கூடியதான
கர்ம -கர்ம வடிவமான அம்சம்
ஜ்ஞாநே -ஸாத்யமான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தில்
பரி ஸமாப்யதே—முடிவடைகின்றது அன்றோ –

எதிரிகளை அழிப்பவனே -த்ரவ்ய சாத்தியமான கிரியைகளை முக்கியமாகக் கொண்ட கர்ம யோக
அம்சத்தைக் காட்டிலும் -கர்ம யோகத்தில் உள்ள ஞான அம்சமே சிறந்தது -குந்தீ புத்திரனே –
சர்வம் எல்லா பிரகாரங்களோடு கூடியதாய் -எல்லா அங்கங்களோடும் கூடியதான கர்ம ரூபமான அம்சம்)

(ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே.—
தத் ஸ்வயம் யோக ஸம் ஸித்த காலேநாத்மநி விந்ததி—৷৷4.38৷৷

இஹ -இவ்வுலகில்
ஜ்ஞாநேந ஸத்ருஸம் –ஆத்ம ஞானத்தை ஒத்ததாக
பவித்ரம் -சுத்தி அளிப்பதாக
ந வித்யதே.—வேறே ஒன்றும் இல்லையே
தத் –அத்தகைய ஞானத்தை
ஸ்வயம் யோக ஸம் ஸித்த -முற் கூறிய கர்மயோக ஸித்தி பெற்றவன்
காலேந-காலக் கிரமத்தில்
ஆத்மநி –தன் ஆத்மாவைப் பற்றி
விந்ததி—அடைகிறான் –

இவ் உலகில் ஆத்ம ஞானத்தை ஒத்ததாக சுத்தி அளிப்பது வேறு ஒன்றும் இல்லை –
அத்தகைய ஞான யோகத்தை கர்ம யோக சித்தி பெற்றவன் காலக் கிரமத்தில் தன் ஆத்மாவில் அடைகிறான்
கொளுத்தும் -அக்னி -பாவானத்வமும் உண்டே -புனிதமாக்கும் -மங்களம் உண்டாக்கும் -தானே நடக்கும் –)

(யதைதாம் ஸி ஸமித்தோக்நிர் பஸ்ம ஸாத்குருதேர்ஜுந—
ஜ்ஞாநாக்நி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத்குருதே ததா—-৷৷4.37৷৷

அர்ஜுந–அர்ஜுனா
ஸமித்தோக்நிர்-கொழுந்து விட்டு எரியும் நெருப்பு
ஏதாம் ஸி -விறகுகளை
யதா பஸ்மஸாத் குருதே—எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
ததா -அப்படியே
ஜ்ஞாநாக்நி -ஞானம் ஆகிற அக்னி
ஸர்வ கர்மாணி -எல்லாக் கர்மங்களாகிற விறகுகளையும்
பஸ்மஸாத் குருதே— சாம்பல் ஆக்குகிறது

அர்ஜுனா கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
அப்படியே ஞானம் ஆகிய நெருப்பு எல்லாக் கர்மங்கள் ஆகிய விறகுகளை சாம்பல் ஆக்குகிறது
கடலை தாண்டினால் திரும்ப வரலாமே சங்கை வந்தது -ஒரு வினாடி ஞானத்தால் இவை போகுமோ –
விறகு கட்டை போலே பாபங்கள் -திரும்பாதே -பஸ்மம் ஆகுமே -தீயினில் தூசாகும் செப்பு –)

பக்த்யா த்வனன்யாசக்யா-
மன்மனா பவ மத் பக்த -இத்யாதிகளாலே சொல்லப் பட்ட
கர்ம ஞான சஹ்ருதமான பக்தி யோகமும் -ஆகிற இவையும் –

(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

பார்த்த –குந்தீ புத்ரனே
பூதாநி–எல்லாப் பொருள்களும்
யஸ்ய-எந்தப் பரம புருஷனுடைய
அந்தஸ்தாநி –உள்ளே இருக்கின்றனவோ
யேந -எவனால்
ஸர்வமிதம் -இவை அனைத்தும்
ததம்–வியாபிக்கப்பட்டுள்ளதோ
புருஷ ஸ பர து -அந்தப் பரம புருஷனோ என்னில்
பக்த்யா அநந்யயா.–வேறு பயன் கருதாத பக்தியினால்
லப்யஸ்–அடையத் தக்கவன்

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்)

(பக்த்யாத் த்வ அநந்யா ஸக்ய அஹமேவ விதோர்ஜுந ஞாதும் த்ரஷ்டும் சதத்வேந பிரவேஷ்டும் ச பரத ருஷப
அநந்ய யான பக்தியாலேயே அறியவும் காணவும் அடையவும் ஸக்யன்)

(மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

மந்மநா பவ -என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக
மத் பக்தோ பவ-அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி யுடையவனாக ஆவாயாக
மத் யாஜீ பவ–அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
மாம் நமஸ்குரு.–என்னை வணங்குவாயாக
மத் பராயண–என்னையே மேலான ஆஸ்ரயமாய்க் கொண்டவனாய்
ஏவம் -இவ்வண்ணமாக
ஆத்மாநம் யுக்த்வா –நெஞ்சைப் பழக்குவதன் மூலம்
மாமேவைஷ்யஸி —என்னையே அடைவாய்)

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யாக்வா
தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சொர்ஜுனா-என்று
விரோதி நிவ்ருத்தி பூர்வமான பகவத் ப்ராப்திக்கு சாதனமாகச் சொல்லப் பட்ட
அவதார ரகஸ்ய ஞானம்

(ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –)

ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் கருத க்ருத்யச்ச பாரத -என்று
அபிமத பல லாபத்தாலே -க்ருதக்ருத்யனாய் ஆகும் என்கிற புருஷோத்தம வித்யை –

(இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே-இவளை போல் இங்கு இதம்
குஹ்ய தமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத் தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த-இவளை போல் இங்கு இதம் -மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.-செய்த வேள்வியர் ஆவாய் –)

தேசோயம் சர்வ காம துக் -என்று சர்வ காம பல பிரதமாகச் சொல்லுகிற புண்ய ஷேத்திர வாசம் –

சர்வ பாப விசுத்தாத்மா யாதி பிரதம சனாதனம் -என்று
சர்வ பாப விமோசன பூர்வகமான பகவத் ப்ராப்தியை பலமாகச் சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனம் –

க்ருதேன வாத தைலேன தீபம் யோ ஜ்வாலயேன் நர விஷ்ணவே
விதிவத் பக்த்த்யா தஸ்ய புண்ய பலம் ஸ்ருணு விஹாய சகலம் பாபம்
சஹஸ்ர ஆதித்ய சன்னிப ஜ்யோதிஷ்மதா விமோநேன விஷ்ணு லோகே மகீயதே -என்று
பாப நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படுகிற திரு விளக்கு எரிக்கை –

அப்படி -விரோதி நிவ்ருத்தி பூர்வக பகவத்  ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படும் -திரு மாலை எடுக்கை
முதலாக சாதனா புத்த்யா செய்யப் படும் அவையும் -என்கை-

(எப்பொழுதும் எழுந்து இருந்து நாம ஸஹஸ்ரத்தாலே ஸ்தோத்ரம் பண்ணுகிற புருஷனானவன் வாஸூ தேவனை ஆஸ்ரயித்து
வாஸூ தேவ பராயணனாய் ஸர்வ பாபங்களையும் விட்டு பரி ஸூத்தமான ஸ்வரூபத்தை யுடையனாய்க் கொண்டு
ஸ நாதனமான ப்ரஹ்மத்தைப் பிராபியா நிற்கும்
சாதன புத்தியா செய்யுமவை என்பதால் கைங்கர்ய புத்தியா பண்ணுமவற்றை வ்யாவிருத்திக்கிறது)

————————————————-

சர்வ சப்தத்தாலே அவ்வவ சாதன விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில்
அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது –சூரணை-196-

இனி சர்வ சப்தார்த்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்ம விசேஷணமான-சர்வ சப்த்தாலே -பஹு வசநோக்தமான அவ்வோ சாதன
விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில் –
சந்த்யாஹின அசுசிர் நித்யம் அனர்ஹஸ் சர்வ கர்மஸூ -என்கிறபடியே
அயோக்யன் ஆகாமல் தன்னை அனுஷ்டிக்கையாலே அவற்றுக்கு யோக்யனாகையை
உண்டாக்கிக் கொடுக்கும் –
சந்த்யா வந்தன பஞ்ச மகா யஞ்ஞாதிகளான-நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது -என்கை –

(பஞ்ச மகா யஞ்ஞம் -ப்ரஹ்ம -தேவ -பிதா -பூத -மனுஷ்ய யஞ்ஞங்கள்)

————————————–

ஆக ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய் -நித்ய நைமித்திகாதி ரூபங்களான
கர்ம யோகாத்ய உபாயங்களை -என்ற படி –சூரணை -197-

உக்தத்தை நிகமிக்கிறார் –

அதாவது
கீழ் சொன்ன எல்லாவற்றாலும் சோதனா லஷண அர்த்தோ தர்ம -என்று
சோதனை யாகிற விதி வாக்யத்தை பிரமாணமாக உடைத்தான அர்த்தம் தர்மம் -என்கையாலே –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆகிற பிரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய் –
நித்யம் நைமித்திகம் முதலானவற்றை வடிவாக உடைதான கர்ம யோகம் தொடக்கமான
உபாயங்களை என்றபடி -என்கை –

————————————————————

இவற்றை -தர்மம் -என்கிறது பிரமித்த அர்ஜுனன் கருத்தாலே –சூரணை -198-

ஸ்வரூப வ்ருதத்வாத் அதர்மமாகச் சொல்ல வேண்டும் அவற்றை -தர்மம்-
என்கிறதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது
பாகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற உத்தேச்யத்துக்கு விரோதியாய் இருக்கையாலே –
அதர்ம சப்த வாச்யங்களாக -அப்ராப்தங்களாய் இருக்கிற இவற்றை தர்மம் என்று சொல்லுகிறது –
ஸ்வ தர்மமான யுத்தத்தை அதர்மம் என்றும்
இவற்றை தர்மம் என்றும்
பிரமித்த அர்ஜுனனுடைய நினைவாலே இத்தனை -என்கை –

(யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்கிறபடியே ஸாமான்ய விசேஷ ஞானவானான கிருஹனன் தர்மம் எண்டு சொல்கிறது)

ஆக-பிரதம பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –160–184–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

இனி உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் –

உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது –சூரணை -160-

ப்ராப்யமாவது –
ஸ்ரீ யபதியாய்-சர்வ ஸ்வாமியாய் -இருக்கிற சர்வேஸ்வரன் திரு அடிகளில் பண்ணும் கைங்கர்யம் –

———————————————————

பிராபக வர்ணம் அநந்தரம் ப்ராப்யம்  சொல்லுகிற இதுக்கு அபிப்ராயம் அருளிச் செய்கிறார் 

ப்ராப்யாந்தரத்துக்கு அன்று என்கை-சூரணை -161-

பூர்வ வாக்யத்தில் பிரதி பாதிதமான சாதனம் பல சதுஷ்டய சாதாரணம் ஆகையாலே –
கீழ் பண்ணின பிராபக வர்ணம் ப்ராப்யாந்தரதுக்கு அன்று என்னும் இடம் சொல்லுகை -இப்போது
ப்ராப்யம் சொல்லுகிற  இதுக்கு பிரயோஜனம் என்றபடி –

——————————————————

ப்ராப்யாந்தரங்களை விட்டு இந்த ப்ராப்யத்தை அபேஷிக்க வேண்டுவான் என் என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தை பற்றினார் போலே
உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்தியை அர்த்திக்கிறது –சூரணை -162-

அதாவது
உபாய வர்ணம் பண்ணுகிற அளவில் அநந்ய சரணத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக கர்ம ஞான பக்திகளாகிற உபயாந்தரங்களை விட்டு சரமமான சித்தோ உபாயத்தைப் பற்றினாப் போலே –
உபேய பிரார்த்தனை பண்ணுகிற அளவிலும் அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு சரமமான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது -என்கை –

——————————————————

நினைவறியும் ஈஸ்வரன் பக்கல் பிரார்த்தனை மிகை என்று இருப்பார் பண்ணும்
பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-

இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ -என்னில்–சூரணை -163-

இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில் -என்று
தனியாக ஏதும் இல்லை-

——————————————-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் –சூரணை -164–

அதாவது
ருக்ணதை ஆகையாலே சோற்றில் ஆசை அற்று கிடந்த பிரஜை ரோகம் தீர்ந்து –
பசி விளைந்து -சோறு-என்று அபேஷிக்கும் பாசுரம் கேட்டால் பெற்ற தாய் உகக்குமாப் போல் –
அநாதி காலம் ப்ராப்யாந்தர ப்ராவண்யம் ஆகிற நோய் கொண்டு இந்த ப்ராப்யத்தில்
நசை அற்றுக் கிடந்தவன் -இதிலே ருசி பிறந்து -தன் பக்கலிலே வந்து -இத்தை
அபேஷிக்கிற பாசுரம் கேட்டவாறே -சேஷியான அவன் திரு உள்ளம் உகக்கும் –
அதுக்காக அர்த்திக்கிறான் இத்தனை -என்கை-

———————————————-

இனி இவ் வாக்யத்துக்கு பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம்
பற்றி பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –
அதுக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –

ஸ்ரீ மதே-பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ளவனுக்கு –சூரணை -165-

பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்து உள்ளவனுக்கு என்று இங்கும் ஸ்ரீ சப்தத்துக்கு
பூர்வ வாக்யத்தில் சொன்ன வ்யுத்புத்தி த்வ்யமும் -அதில் அர்த்தமும் -மதுப்பர்த்தமான
நித்ய யோகமும் அனுசந்தேயம் –

———————————————————-

இரண்டு இடத்திலும் நித்ய யோகம் ஒத்து இருக்கச் செய்தே அவ்வவதச அநு குணமாக
இவள் இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் – 

அவன் உபாயமாம் இடத்தில் தான் புருஷ காரமாய் இருக்கும் –
அவன் ப்ராப்யனாம் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் -கைங்கர்ய வர்த்தகையுமாய் -இருக்கும் –சூரணை -166-

அதாவது
அவன் சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட ப்ராப்திகளுக்கு உபாயமாம் இடத்தில்
சஹாயாந்தர சம்சர்க்கத்தை சஹியாமையால்-தானுபாய பாவத்தில் அன்வயம் இன்றிக்கே 
சாபராத சேதனருடைய அபராதங்களைப் பார்த்து அவன் சீரும் அளவில் -அத்தை சஹித்து
அங்கீகரிக்கும் படியாக பண்ணும் புருஷாகாரமாய் இருக்கும் –

அவன் சேதனருக்கு கைங்கர்ய பிரதி சம்பந்திதயா ப்ராப்யனாம் இடத்தில்
அவனோபாதி கைங்கர்ய பிரதி சம்பந்தயாய்க் கொண்டு தான் ப்ராப்யையுமாய் –
இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை அவன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி
உகப்பிக்கையாலே கைங்கர்ய வர்தகையுமாய் இருக்கும் -என்கை-

இது தன்னை பரந்தபடியில் -பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தம் சேதனருடைய அபராதத்தையும் –ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் கண்டு -இவர்கள் அவனுடைய குரோதத்துக்கு விஷய பூதராய் நசித்துப் போகாதே -இவனைக் கிட்டி உஜ்ஜீவித்துப் போக வேணும் -என்று சாபராதமான சேதனரை ஈஸ்வரனோடு சேர்க்கைக்கான என்றுமொக்க விடாதே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

இங்குத்தை ஸ்ரீ மச்  சப்தம் -கைங்கர்ய பிரதி சம்பந்த்வத்தை  பற்றவும் -இவர்கள் பண்ணும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாக படுத்துகைக்காகவும் -அனுபவ விச்சேதத்தில் தனக்கு சத்தா ஹானி பிறக்கும் படி இருக்கையாலே -நிரந்தர சம்ஸ்லேஷதுக்காகவும் -அவனை ஷண காலமும் பிரியாதே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டயாய்  இருக்கும் -இருப்பைச் சொல்கிறது -என்று விஸ்தரேண அருளிச் செய்தார் 

———————————————————

திரு மந்த்ரத்தில் உத்தர பதத்துக்கு இவ்  உத்தர வாக்கியம் விவரணமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

இதிலே திரு மந்த்ரத்திலே சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –சூரணை-167-

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடத்தை சாப்தமாக பிரதிபாதிக்கிற
இந்த வாக்யத்திலே -நாராயணா -என்று கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடம் ஆர்த்தம்  ஆகையாலே -அவிசதமாக சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது -என்கை-

அங்கு -நாராயணனுக்கே அடிமை செய்ய பெறுவேனாக வேணும் -என்கிற இவ்வளவு ஒழிய அடிமை கொள்ளுமவன் ஸ்ரீ மானாகாக வேணும் -என்றும்
அடிமை செய்பவன் நிர்மமனாக வேணும் -என்றும் சொல்லாமையாலும் -அவை இரண்டும்
இங்குச் சொல்லுகையாலும் இறே அந்த பதத்துக்கு இவ் வாக்கியம் விவரணம் ஆயிற்று –

————————————————-

இம் மிதுனத்திலே  அடிமை செய்ய வேணும் என்ற நிர்பந்தம் தான் ஏன் –என்ன
அருளிச் செய்கிறார்

இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்கை முறை –சூரணை -168-

அதாவது
பவாம்ஸ் து சஹா வைதேஹ்யா கிரி ஸாநிஷூ ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் தே -என்று
பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே –
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை இவ் வாத்மாவுக்கு ஸ்வரூப ப்ராப்தம்-என்கை
மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால் மிதுன கைங்கர்யம் இறே ஸ்வரூப ப்ராப்தம் –

———————————————————–

இன்னும் அச் சேர்த்தியிலே அடிமை செய்யும் அளவில் உள்ள வாசியை அருளிச் செய்கிறார் 

அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் இச் சேர்த்தியிலே –சூரணை -169-

அதாவது –
ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் உபேஷியாமல் கைங்கர்யம் கொண்டு அருளும் படி
பண்ணுமவள் இவள் ஆகையாலே –
சீதாமுவாச சீதாசமஷம் காகுத்ஸ்தமிதம் வசனம் அப்ரவீத் -என்று
இவள் முன்னிலையாக தம்முடைய ஸ்வரூப அநு ரூபமான அடிமையை
அபேஷித்துப் பெற்ற இளைய பெருமாளைப் போலே -இவன் ப்ரார்த்திக்கிற அடிமை தான்
சித்திப்பதும் -மாதா பிதாக்கள் இருவருமான சேர்த்தியிலே ஸூஸ்ருஷை பண்ணும்
புத்ரனுக்குப்  போலே -செய்கிற அடிமை ரசிப்பதும் -பிராட்டியும் அவனும் ஆன சேர்த்தியிலே என்கை –

————————————————-

இனி இரண்டாம் பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நாராயணாய -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்

நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு –சூரணை-170-

நாரயணத்வம்-உபய விபூதி நாதத்வம் ஆகையாலே -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு -என்கிறார் –கைங்கர்ய ப்ரதி சம்பந்தியாவான் சேஷி இறே –

————————————————

கைங்கர்யம் தான் அனுபவ ஜனித ப்ரீதி கார்யம் ஆகையாலும் -அந்த ப்ரீதி தான்
அனுபாவ்ய விஷய அதீனை ஆகையாலும் -அனுபாவ்ய விஷயம் சொல்ல வேண்டுகையாலே அருளிச் செய்கிறார் –

இதில் திரு மேனியையும் குணங்களையும் சொல்லும்–சூரணை -171-

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற இப் பதத்தில் கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாய் இருக்கும் அனுபவத்துக்கு விஷயமான திவ்ய மங்கள விக்ரகத்தையும் -கல்யாண குணங்களையும் -சொல்லும் -என்கை –
சதா பஸ்யந்தி-என்றும் –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
திவ்ய மங்கள விக்கிரகமும் கல்யாண குணங்களும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்கிற ஸ்வரூபதோ  பாதி –
கைங்கர்ய வர்தகங்களுமாய்-போக்யங்களுமாய் இறே இருப்பது –

குணங்கள் என்று சாமான்யேன சொல்லுகையாலே -ஞான சக்த்யாதிகளோடு –
வாத்சல்யாதி குணங்களோடு -ஸௌர்யாதி  குணங்களோடு -வாசி அற எல்லா குணங்களும் –அனுபாவ்யங்களாய் இருக்கையாலே -பூர்வ வாக்யத்தில் -நாராயண  பதத்தில் -உபாய வர்ணத்துக்கு உபயுக்த்தயா அநு சந்தேயங்களான குண விசேஷங்களும் -இப் பதத்தில் ப்ராப்யதயா அநு சந்தேயங்கள் –

ஆஸ்ர்யமான ஸ்வரூபத்துக்கு ஆகார த்வயம் உண்டாய் இருக்கிறார் போலே -ஆஸ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகார த்வ்யமும் உண்டாய் இறே இருப்பது –
இவை எல்லாம் பரந்தபடியில் அருளிச் செய்தார்

—————————————————–

இனி இப் பதத்துக்கு தாத்பர்யம் இன்னதிலே என்கிறார் –

சேஷித்வத்திலே நோக்கு –சூரணை -172-

அதாவது –
அநுபாவ்யத்வம் அவிசிஷ்டம் ஆகையாலே சகல குணங்களும் பிரதிபாதிதமாய் இருந்ததே ஆகிலும் சதுர்த்தி அம்சத்தில் சொல்லுகிற வ்ருத்தி விசேஷத்துக்கு மிகவும் அந்தரங்கமாய் இருப்பது சேஷித்வம் ஆகையாலே அது இப்  பதத்துக்கு நோக்கு -என்கை-

—————————————————–

இந்த சேஷித்வ கதனத்துக்கு  பிரயோஜனம் அருளிச் செய்கிறார் –

ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் இறே ரசித்து இருப்பது –சூரணை -173-

அதாவது
சர்வம் பரவசம் துக்கம்-என்றும் –
சேவா ஸ்வ வ்ருத்தி -என்றும்-சொல்லுகிற படி
நிஷித்தமான அப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் போல் அன்றிக்கே –
சாயா வா சத்வ மநு கச்சேத்-என்றும்
சா கிமர்த்தம் ந சேவ்யதே-என்றும் சொல்லுகிற படியே
விஹிதமான ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் இறே இவன் ரசிப்பது -என்கை –

——————————————–

இனி இப் பதத்தில் விபக்தி அம்சத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

இந்த சதுர்த்தி கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –சூரணை -174-

அதாவது –
சேஷத்வ ஞான கார்யமான உபாய பரிக்ரஹதுக்கு அநந்தரம் ப்ராப்தமாய் உள்ளதாகையாலே – தாதர்யா பிரதி பாதகம் அன்றிக்கே -இந்த சதுர்த்தி பரிக்கிரஹித்த உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தைப் பிரதி பாதிக்கிறது -என்கை –

கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கை ஆவது -கைங்கர்ய பிரார்த்தனையைப் பிரதி பாதிக்கை கைங்கர்யம் ஆவது -பகவன் முக விகாச ஹேதுவான வ்ருத்தி விசேஷம் –
இக் கைங்கர்யம் தான் -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்றும்
நம இத்யேவ வாதின -என்றும் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிற படியே -வாசிக காயிக ரூபமாய் இருக்கும்-

(ஏதத் சாம காயன் நாஸ்தே–தொடங்கி அஹம் விஸ்வம் புவநம் அபய பவாம் என்னும் அளவும்
இந்த ஸாம கானத்தைப் பாடிக்கொண்டே இருக்கும்
ஹாவு ஹாவு ஹாவு என்று ஆச்சர்யப்படும்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று போக்யதையைப் பலகாலும் சொல்லா நிற்கும்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று தனது அப்ரதான போகத்தருவத்தையும் பலகாலும் சொல்லா நிற்கும்
நான் ஸூஹ்ருதத்துக்கு முற்பாடானாக நின்றேன் என்றும்
நித்ய ஸூரிகளுக்கு முன்னே நடுவாக நின்றேன் என்னும்
நான் எல்லா புவனத்தையும் அமுக்கி மேலானேன் என்றும் இப்படிகளால் ஆச்சர்யப்பட்டு ஸ்தோத்ரம் பண்ணினபடி சொல்கிறது)

(யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி–ஸர்வேச்வரன் யாதொரு நினைவாலே நடக்கிறான்-அந்த நினைவோடு கூட நடவா நிற்பன்)

——————————————-

இக் கைங்கர்யம் பிரார்தன ஆதீனம் ஆகையாலே -காதாசித்தம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

கைங்கர்யம் தான் நித்யம் –சூரணை -175-

அதாவது
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலும் –
அகிஞ்சித்கரஷ்ய சேஷத்வ அநு பாபத்தி -என்கிறபடி கிஞ்சித்காரபாவத்தில் அது தான்
அநு பபன்னம் ஆகையாலும் கைங்கர்யம் ஆத்மாவுக்கு நித்யம் -என்கை
ஆகையால் இறே -நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷ இஷ்யாமி -என்றும்
நித்ய கிங்கரோ பவானி -என்றும்
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது-

————————————————

நித்தியமாய் இருக்குமாகில் பிரார்த்திக்க வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –

நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் –சூரணை -176-

அதாவது –
விஷயம் உத்துங்கமாய் இருக்கையாலும் -ஆஸ்ரய பூதனான சேதனன் அத்யந்த
பரதந்த்ரனாய் இருக்கை யாலும் -பிரார்த்தனா விசேஷம் இல்லாத போது கைங்கர்யம்
சித்தியாமையாலும் -நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் -என்கை-

———————————————

இது நித்ய பிரார்த்தனை அநீயமாக்கைக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு
ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும் –சூரணை -177-

அதாவது
ந கிஞ்சித் குர்வதச் சேஷத்வம் -என்கிறபடியே
சேஷிக்கு அதிசயகரம் இல்லாத வஸ்துக்கு சேஷத்வம் இல்லாமையாலே –
சேஷியான ஈஸ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விசேஷங்களாலே
ப்ரீதி ரூபமான அதிசயத்தை விளைக்க சேஷ பூதனானவனுக்கு தன் ஸ்வரூப லாபமாய்
அவனுடைய முகோல்லாசானுபவதுக்கு உறுப்பாய் இருக்கையாலே ப்ராப்யமுமாயுமாய் இருக்கும் -என்கை
ஆகையால்-நித்ய ப்ராதனநீயமாய் இருக்கும் என்று கருத்து–

—————————————————————

நம-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –சூரணை-178-

அநந்தரம் சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நம -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
நமஸ்-சப்தம் சாமான்யேன அஹங்கார மமகாரங்களை  கழிக்கையாலே-
திரு மந்த்ரத்தில் மத்யம பதமான -நமஸ் சப்தம் போலே -ஸ்வரூப உபாய புருஷார்த்த –
விரோதிகள் மூன்றையும் கழிக்க வற்றாய் இருந்ததே ஆகிலும் -இங்கு -அங்கன் இன்றிக்கே கைங்கர்ய பிரார்தன அனந்தரோக்தம் ஆகையாலே -இந்த கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது -என்கை-

————————————————

கைங்கர்யத்துக்கு களை எது -என்ன -அருளிச் செய்கிறார் –

களை யாவது தனக்கு என்னப் பண்ணும் அது –சூரணை -179-

தனக்கு என்னப் பண்ணுகையாவது-போக்தாஹம்  மம போகோயம்-என்கிறபடியே
இத்தை தன்னுடைய ரசத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை –
பகவன் முக விகாச ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி
ஒழிய -இதில் போக்த்ருத்வ பிரதி பத்தியும் -மதீயத்வ பிரதி பத்தியும் -நடக்குமாகில் –
அபுருஷார்தமாய் இறே இருப்பது –

—————————————————–

இன்னம் இந்த கைங்கர்ய ப்ராப்திக்கு விரோதிகள் ஆனைவையும் இதிலே தள்ளுண்ணும் என்கிறார் –

இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் –சூரணை -180-

அதாவது
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந் நமஸ்சிலே-
அநாத் மன்யாத்ம புத்திர் யா அஸ்வே ஸ்வ மிதி யா மிதி
அவித்யா தரு சம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம் -என்கின்றபடியே

அநாத்மன்யாத்மா புத்யாதிகளை -வடிவாக உடைத்தாய் -கர்மோத்புத்தி காரணமாய் இருந்துள்ளஅவித்யையும் -தத் கார்யமான கர்மங்களும் –
தத் கார்யமாக வரும் பிரகிருதி சம்பந்தமும் -எல்லாம் கழி உண்ணும் -என்கை –

ஆகை இறே -த்வய விவரணமான கத்யத்தில் நமஸ் சப்தார்த்தை அநு சந்தித்து அருளுகிற அளவிலே –
மநோ வாக் காயை  -இத்யாதி சூர்ணையாலே-அக்ருத்ய கர்ணாத்யகில கர்ம நிவ்ருத்தியையும்  –
அநாதி கால ப்ரவ்ருத்த -இத்யாதி சூர்ணையாலே -அவித்யா நிவ்ருத்யையும் –
மதீயாநாதி இத்யாதி சூர்ணையாலே -பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியையும் –
பாஷ்யகாரர் பிரசாதித்து அருளிற்று –

(மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥)

(அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥)

(மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய ।)

———————————————————

ஆனாலும் இதுக்கு பிரதான அர்த்தம் கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி ஆகையாலே –
அத்தை உபபாதிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் கைங்கர்யம் பண்ணும் போது நாம் எப்படியாக வேணும் என்ன -அருளிச் செய்கிறார் –

உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்னும்படியே ஆக வேணும் –சூரணை -181-

அதாவது –
கைங்கர்யம் பண்ணும் அளவில் -உனக்கே நாம் ஆள் செய்வோம் –திருப்பாவை -29-என்று
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கும் இருப்பைத் தவிர்ந்து –
உனக்கே உகப்பாக நாங்கள் அடிமை செய்ய வேணும் -என்கிறபடியே –
சேஷிக்கே உகப்பாக பண்ண வேணும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திரு வாய் மொழி –2-9-4-என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது –

(சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்–29-)

(மனக்கே ஆட்செய்எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்துஇடை வீடுஇன்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.–2-9-4)

—————————————————

இனி இந்த கைங்கர்யத்துக்கு விக்னங்களை அருளிச் செய்கிறார் –

சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே –சூரணை -182-

அதாவது –
அவனுடைய விக்ரஹ சௌந்தர்யமும் சித்த அபஹாரியாய் கை சோரப்
பண்ணுகையாலே -கைங்கர்யத்துக்கு விக்னம் –

இந் நமஸுக்கு கீழே சதுர்த்தியில் சொன்ன கைங்கர்யமும் -அபிமத விஷய
பரிசர்யை போலே ஸ்வ ரசத்துக்கு உடலாய் இருக்கையாலே அவனுடைய முக மலர்த்தியே
பிரயோஜனம் ஆக இருக்கும் அதுக்கு அதுவும் விக்னம் -என்கை-

——————————————————

இப்படி ஆகையால் இவ் விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனை இடை விடாமல்
நடக்கும்படியே அருளிச் செய்கிறார் –

கைங்கர்ய பிரார்த்தனை போலே -இப் பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு –சூரணை -183-

அதாவது –
சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனை காதா சித்தம் அன்றிக்கே –
நித்தியமாய் செல்லுமா போலே -இப் பதத்தில் சொல்லுகிற கைங்கர்ய விரோதி
நிவ்ருத்த பிரார்த்தனையும் -இங்கு இருக்கும் காலத்தோடு -ப்ராப்ய பூமியில்
போன காலத்தோடு வாசியற எல்லா காலமும் நடக்கக் கடவதாய் இருக்கும் -என்கை .

——————————————————–

கந்தல் கழிந்த அந் நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்வ உதயம் உண்டாமோ என்ன -அருளிச் செய்கிறார் –

மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு-திரு வாய் மொழி -9-3-4–என்னா நின்றது இறே –சூரணை -184-

அதாவது –
உன்னுடைய அனுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு ஸ்வ போக்த்ருத்வ புத்தியை விளைத்து -ஸ்வரூபத்தை அழியாதபடி சாத்மிப்பிக்கும் பேஷஜம் ஆனவனே -என்று நித்ய ஸூரிகள் பேசும் பாசுரமாக சொல்லா நின்றது இறே -என்கை –

(மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-)

ஆகையால் -அவ் விஷய வைலஷண்ய பிரயுக்தமாய் வரும் ஸ்வ போக்த்ருத்வ புத்தி
அங்கும் விளைகையாலே -இப் பதத்தில் பிரார்த்தனை என்றும் உண்டு என்னும் இடம்
சித்தம் என்றது ஆயிற்று –
ஆகை இறே முக்தருக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில் -நம இத்யேவ வாதின -என்றது –

ஆக –
புருஷகாரதையும்
தந் நித்ய யோகத்தையும்
தத் உத்பாவிதமான வாத்சல்யாதி குணங்களையும்
அந்த குண பிரகாசமான திவ்ய மங்கள விக்ரகத்தையும்
குண விக்ரக விசிஷ்ட வஸ்துவினுடைய உபாயத்வத்தையும்
அவ் உபாய ஸ்வீகாரத்தையும்
தத் பலமான கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் அத்தையும்
அவ் வஸ்துவினுடைய சர்வ சேஷித்வத்தையும்
தத் விஷய கைங்கர்யத்தையும்
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும்
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –