Archive for January, 2026

ஸ்ரீ ரத சப்தமி –

January 30, 2026

ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இது குறிப்பாக ஸூரிய தேவன் ஏழு குதிரைகள் (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன) பூட்டிய தனது ரதத்தை வடக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் ஸூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஸூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமி யன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், ஸூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ  பாவ காரியங்கள்  செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும்.

தை முதல் நாள்  தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள்  திதி ரத சப்தமியாகக்  கொண்டாடுகிறோம்.

இந்த  நாளை  சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம்

காஷ்யப ரிஷியின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்து ஒரு அந்தணன் பசிக்கு  உணவு கேட்க, அதிதி தான கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த அந்தணனுக்கு கொடுத்தாள். இதை தன்  மேல் செய்த உதாசீனம் என்று கோபித்த அந்தணன் ‘உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து பிறப்பான்’ என்று சாபமிட்டான். அதிதி முதலில் வருந்தினாலும், அவர்கள் நல்லுள்ளதின்படி ஒளி மாயமான சூரியன் அவர்களுக்கு மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் வரும் ஏழாவது நாள் சப்தமி விரதம் அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

ஸூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில்லைக் குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது ஸூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா ஸூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது

ஏக தினம் ப்ரஹ்மோத்சவம்
ஏழு வாஹனங்கள் திருமலை கோவிந்த ராஜர் திருச்சானூர் மூன்று இடங்களிலும் உண்டு -தீர்த்த வாரி மட்டுமே திருச்சானூரில் இல்லை –
ஸூர்ய சந்திர இரண்டு வாஹனங்கள் திருக்காஞ்சி திருக்குடந்தை போன்ற இடங்களிலே உண்டு

காலை 6:30 மணிக்கு வரதராஜ பெருமாள் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளி, மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6:00 மணியளவில் சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் மீண்டும் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.

ஸூர்ய பிரபையில் ஸூர்ய நாராயணன் திருக்கோலம் முதலில்-சின்ன சேஷ வாஹனம் -அடுத்து -பெருமாள் மட்டுமே புறப்பாடு -ரத சப்தமி அன்று திருமலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். அதனால் அன்றைய தினம் “சிறிய ப்ரஹ்மோத்சவம் ” என்று அழைக்கப்படுகிறது.

ரத சப்தமியன்று விடியற்காலை 5.30 மணியளவில், ஸூரிய பிரபை வாகனத்திலும், அதைத் தொடர்ந்து சின்ன ஆதி சேஷன் வாகனம் காலை 9 மணி யளவிலும், கருட வாகனம் 11 மணி யளவிலும், அனுமன் வாகனம் பிற்பகல் 1 மணி யளவிலும், சக்கர ஸ்நானம் பிற்பகல் 2 மணியளவிலும், கற்பகம் (மரம்) வாகனம் மாலை 4 மணி யளவிலும், சர்வ பூபால வாகனம் மாலை 6 மணி யளவிலும் திரு மாட வீதிகளில் ஊர்வலம் நடை பெறுகின்றன. அன்று இரவு 8 மணி யளவில் சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவதுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. திருப்பதி வேங்கடேஸ்வர ஸ்வாமி ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அன்றைய தினம் காலையில் ஸூரியனை பார்த்து ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று மூன்று முறை கூறி ஸூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மகா பாரத்தின் ஒரு வலிமை வாய்ந்த நாயகன் பீஷ்மர். வீதி வசத்தால் கௌரவர்கள் அணியில் போர் புரிய நேர்ந்தது. பீஷ்மருக்கு அவர் விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே. அப்போது அங்கே வந்த வேத வியாசரிடம் ஏன் இப்படி என்று கேட்க, அவர் கூறியது: ‘துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. நீங்களும் அங்கு இருந்தீர். அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் உடல் அளவில் மட்டும் அல்லாது, உள்ளமும் படாத பட்டு. அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும்’

வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார். எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று வியாசர்  சொல்ல , மெதுவாக பீஷ்மர் ரத சப்தமி அடுத்த நாளன்று சிறிது சிறிதாக தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

எனவேதான் ரத சப்தமி அன்று எருக்க இலை ஸ்நானமும், ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி  தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
ஸப்த  அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு  இட்டுகொண்டு  ஸங்கல்பம் செய்துகொண்டு  ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி  கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
திவாகர  க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்கியம்  இதமர்க்கியம், இதமர்க்கியம்.

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி

ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி

தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்

ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன

மம பாபம் வ்யபோஹய!

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -6-தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும்-உண்ணும் சோறு -6-7-

January 30, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

————–

இவள் கண்ணான அம்புக்கும் புருவமான வில்லுக்கும் அகப் பட்டார் தப்ப முடியாதே-இவள் ஞானமே அம்பு-மன்மதனும் இவளையே அபாஸ்ரயமாகக் கொண்டான் -காமம் வளர்க்க
நின் கண் வேட்கை எழுவிப்பேன் -என்று அன்றோ இவர் அவதரித்தார்-திருப்புளிய மரம் அருகில் வந்தாலே தப்ப முடியாதே-செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் போல்
அஹங்கார மமகாரங்கள் உள்ளார் அருகில் வந்தாலே அவை போகுமே-உயிரை யுடையார் நாராயணன் என்று அறிவார் இல்லையே அத்தை உணர்த்தவே ஆழ்வார் எம்பெருமானார் அவதாரங்கள்
கிளவித் தலைமகன் பாசுரம் -இது

காமம் சாரா வெறியதினிளமை காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை –(விருப்பப்பட்டது நடக்காத போது -பித்து பிடித்து-அவனது இனிமை இளமை போல்வன நலம் பாராட்டும் துறை )அதாவது சம்ஸ்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது-சாரா -கிட்டாமையால் உண்டான-வெறி உண்டு -பிச்சு அதனுடைய இளமையாவது
காட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்-மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்-நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை-கிளவித் துறை –காட்சி -இது தான் பிரதம த்ருஷ்ட்டி பந்தம் -கண்ணும் கண்ணும் கவ்விக் கொள்ளுதல்
16 வருஷம் யோக நிஷ்டையில் இருந்தாரே ஆழ்வார்-அம்பு போன்ற தெளிந்த ஞானத்தால் தர்சனம் கிட்டி பார்க்க மாட்டாமல் வெட்க்கி கண்ணைச் சுருக்க பார்ஸ்த்வத்தார் -இத்தைப் பார்த்து சொல்லும் பாசுரம் –
அநந்தரம்-மகிழ்தல்-மந்தஸ்மிதம் -இன்றும் மூலவர் இடம் சேவிக்கிறோமே-அருள் பார்வை -ஹர்ஷ வசனம்-மேல் நலம் பாராட்டுதல்-தலைமகன் தலைவியின் அழகு போல்வன சொல்லுதல் –
அஹங்கார மமகாரங்கள் உள்ளாருக்கு கூற்றம் ஆழ்வார் என்கிறார்-சாஷாத் மன்மதன் -காமக்கோல் நடத்திய கூற்றம் –பக்தியை விளைக்கவே ஆழ்வார்-மணிவல்லி யாக இருந்தாலும் அஹங்காரதிகளுக்குக் கூற்றம் போல் தானே ஆழ்வார்–உண்ணும் சோறு -6-7-இதன் விவரணம்-திருத் தாயார் இவள் ஸ்வ பாவம் பேசும் பதிகம்-அவன் விரும்பிய ஆழ்வார் தேக குணங்களும் ஆத்ம குணங்களும் உத்தேச்யம்-

நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன் தாம் தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார் இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –

ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவல்ல இவருக்கு வசப்படாமல் தப்பித் பிழையுங்கோள்-என்று பாகவதர்கள் ஆழ்வார் பிரபாவம் சொல்கிறார்கள் –-அனைவரும் ஸ்வதந்தர்களாக இல்லாமல் அநந்யார்ஹர் ஆவார்கள்-பிரசித்த மன்மதன் மிருத்யுவைத் தப்பினாலும் -இப்படி மிருதுவாய் தோன்றினாலும் இவருக்கு தப்ப முடியாதே–கீழே எம்பெருமானைத் தலைமகன் என்றவர் இதில் கிளவித் தலைமகன் -பாட்டுடைத் தலைமகன் -இரண்டு வகை-எம்பெருமானைப் போல் அடியார்கள் இடமும் இவருக்கு கூடி அனுபவிக்க அபி நிவேசம் உண்டே -மாயப்பிரான் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –

இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே
.–7-7-1-

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.
–7-7-4-

பெருமாளைப் பற்றி ஆழ்வார் அங்கு-இங்கு தலைமகன் இவளைப் பற்றி-ஞாலத்தில் உண்டியே உடையே உகந்து போகும் சம்சாரிகளுக்கு கூற்றம் ஆழ்வார் கடாக்ஷம் என்றவாறு

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
–6-தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –

தடாவிய வம்பும் –
பரந்த வாயம்பும்–காணாக் கோலாய் இருக்கை –-வில்லோடு கூட அடுத்துப் பிடித்த அம்பு–புடை பெறுத்து இருக்கை-தடாவிய -வளைவாயாம்பு-கோடி வருகிறது மர்மத்திலே படுகை-பிடித்த பிடியிலே பயங்கரமாய் இருக்கை –

முரிந்த சிலைகளும் –
அகர்மகமாய்–அகர்த்ருகமாய் இருக்கை –((வளைந்த-நான் பழத்தை நறுக்கினேன்-நான் -கர்த்தா-கர்மா இல்லை-விஷயம் இல்லை-ஆளும் இல்லை வளைத்தவனும் இல்லை -தானே வளைந்த என்றபடி )

அம்பும் சிலைகளும் -என்பான் என் என்னில்-அம்பு -என்கிறது ஜாதி பன்மையாலே (பார்வை கடாக்ஷம் )
சிலைகளும் -என்கிறது இரண்டாகையாலே-அம்பும் சிலைகளும் உபமானமாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில் –சர்வதா சாத்ருசம் உண்டாகையாலே –

போக விட்டு கடாயின கொண்டு-
(கடாயின-பயன் தரும் சாதனம் )-ஆர் எதிராக இவற்றை விடுவது என்று தன் பக்கலிலே இட்டு வைத்தது
தன்னுடைய ஸ்த்ரீத்வத்தோடே பாவம் –போக விட்டுக் கடாயின தடாவிய அம்பையும் முதிர்ந்த  சிலைகளையும் தன் பக்கலிலே ப்ரத்யா ஹரித்து  –-உபயோகம் அற்ற மன்மதன் அம்பு சிலைகள் பிராகிருத உபாயந்தரங்கள் -போலே அன்றே ஆழ்வாருடைய நிலை நின்ற ஞான பக்திகள்-

ஒல்கும் வல்லி ஈதேனும் –
ஒடுங்குகிற வல்லியே யாகிலும்-தனக்கு என்ன ஒரு கொள் கொம்பைப் பற்றி அல்லது நிற்க ஒண்ணாத அளவிலும் செயல்கள் இப்படியாய் இருக்கை –-ஆழ்வார் எம்பெருமானை பற்றி அல்லது தரியார் வல்லி -கொடி போல் எம்பெருமானைப் பற்றி அல்லாமல் தரிக்க மாட்டாத பராங்குச நாயகி

வளைந்த அம்பையும் முரி போன சிலைகளையும் தவிர்ந்து–தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்-வல்லி ஈதேனும்-இது ஒரு கொடி என்று சொல்லும்படி -ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து-அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –அம்பும் -என்றது ஜாதி ஏக வசனம்-சிலைகள் என்று-முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி

அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் –
பிரதிபஷம் முடியும்படிக்கு ஈடான மிடுக்கை உடைய பெரிய திருவடியை நடத்துக்கிற நிர்வாஹகன் –
சர்வேஸ்வரன் காண வந்த சோழரோபாதி எதிரிகளை முடிக்கைக்கு தானே அமையும் –
பறவையின் பாகன் -சர்வேஸ்வரத்வ ஸூசகம் 

இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்-அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்-அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்-பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே

மதன செங்கோல் நடாவிய –
இவளைப் பிராட்டியாக உடையவன்-காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்

அசுரர் மங்கக்கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்-
புற மதஸ்தர்கள் நிலை கெடும்படி வேத ஸ்தாபன ப்ரவர்த்தகாச்சார்யார்-வேத நாயகன் எம்பெருமான் பக்கலிலே வேட்க்கையை எழுவித்து முக்தராக்கி ஊழ்வினைத் தொடர்ச்சிக்கு யமன் போன்றவர் என்றவாறு

ஞானம் –கண் -குறி தவறாமல் எய்யும் அம்பு உவமை –எம்பெருமானை தவறாமல் பற்றும் தன்மையது என்பதால் –வில் –அம்பை விட சாதனம் -ஞானம் வளர –ஞான சாதனங்கள் –நிலை பெற்ற ஆழ்வார் திருவடியே சாதனம் –ஞானமாகிய அம்புக்கு வளைவாவது -விஷயாந்தரங்களிலே செல்லுதல்-
ஞான சாதனங்களாக விற்களுக்கு ஓடிவாவது -ஒரு கால் தவறிப் போதல்-கெடுதல் இல்லாத நிலை பெற்ற ஞான சாதனங்கள் யுடையவர் என்பதையே கடாவின கொண்டு-ஆழ்வாரை சேவிக்கவே ஸம்ஸாரம் அடி அற்றுப் போம் -என்பதையே-கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே-என்கிறார்-மன்மதன் ஐந்து புஷ்ப்ப பாணங்களிலும் ஒரு கரும்பு வில்லிலும்-இவளது இரண்டு கண் பார்வையும் இரண்டு புருவங்களும் வேட்க்கையை விளைவிப்பதில் ஸ்ரேஷ்டம் என்றவாறு –எம்பெருமான் அவதரித்து திருந்தாத சம்சாரிகளும் திருந்தி – கலியும் கெடும் கண்டு கொண்மின் -பொலிக பொலிக -என்பார் –-ப்ரத்யும்னன் மகன் மன்மதன் -பறவையின் பாகன் மதனன் –

கூற்றம் –
அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை என்கிறது –

கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–
ஜீவிக்க நினைத்து இருப்பார் தம் தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்–பிரதிகூலர் மங்கும் படி யுத்தத்தில் நடத்தும் திருவடிக்கு பாகனுக்கு சேஷ பூதனான -மகன் மன்மதன் யுடைய ஆணையை-செங்கோலை – நடத்திக் கொடுக்கும் கூற்றம் கிடிகொள்-சம்சாரத்தில் உள்ளார் உங்கள் பிராணனை நோக்கிக் கொள்ளுங்கோள் என்கிறான் தலைமகன் –ராமனுக்கு என்னிலையைச் செப்பும் என்னையும் உளள் –கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்-இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

திருவடியை இங்கு சொல்லிற்று-அசுர நிரசனத்துக்கு த்வரிக்குமா போல் காமன் ஆஜ்ஜை நடத்த இவள் -வேட்கை எழுவிப்ப மன்மதனையும்- பகவத் சம்பந்தம் இட்டே சொல்வது -இவள் இது -அல்லது அறிய மாட்டாளே-எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்களாக தலைமகனாகச் சொல்லலாமோ என்னில்
எம்பெருமான் பாட்டுடைத்தலைமகன் பிரதான சேஷி-இவர்கள் கிளவித் தலைமகன் த்வார சேஷிகள்

இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்-தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு-அம்பு என்று லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது
சிலை என்று ப்ரேரகமாகையாலே க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது-அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே அப்ராப்த விஷய அவகாஹநம்-சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை-(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல் ஸாஸ்த்ர ஞானம் கொண்டே –ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர் மதி நலம் அருளப்பெற்றவர் )ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு-கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்-அதாவது-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்-உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –

இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்-அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்-ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட-நித்யத்வ
அபவ்ருஷேயத்வ ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே மதன செங்கோல் நடாவிய நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான
கூற்றம்-பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்-கண்டீர் உயிர் காமின்கள்-கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்–இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்–ஞாலத்துள்ளே– ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 ) ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று-பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் – என்று அந்வயிக்கவுமாம் –

ஞாலத்துள்ளே–
இப்புண்ய பூமியிலே பிறந்த நீங்கள் உங்களை ரஷித்துக் கொள்ளுங்கோள்-அதாவது
அவர்கள் சத்ருக்கள் இவர்கள் என்று அத்யவசித்தும் ஹேயப்பட்டும்-அவனில் கோப்த்ருத்வ வரண யுக்த பராதி நிக்ஷேபத்தை நைர் பர்ய சிரஸ் கமாக உபாயத்வ ப்ரார்தனையோடு அபாய நிவ்ருத்தி பெற்றவர்களாய்ச் செய்கை –

ஸ்வா பதேசம் –
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார்-ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச் செல்லாதே கொள்ளுங்கோள்-என்கிறது –(அம்பு -கண் வில் புருவம்-அகர்கமாய் -தனக்கு விஷயம் இன்றிக்கே இருக்க-அகர்த்ருகமாய் -தன்னை வளைக்கக் கர்த்தாவும் இன்றிகே இருக்க
பெரிய திருவடி பாகன் -பக்தியை நடத்துகிற குடி -க்ருஹம் தடி ஷேத்ரம் –போகட்டு போக விட்டு –
ஆழ்வாரை சேவிக்க சம்சாரம் அடி அறும் )

பகவத் விரஹத்தாலே அவசந்தனையாய் இருக்கும் ஆழ்வாரைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சம்சாரத்தில் அஹம் மம -நீர் நுமது என்ற இவை வேர் முதல் வாய்க்க வல்லார்
–இவருக்கு பகவத் அலாபத்தால் வந்த அவசாதம் தீரும் படி -ஆச்வாஸம் ஏற்படுத்த சொன்ன பாடல்

இதில் தலை மகள் ஸ்ரீ வைஷ்ணவர்-இப்படி தலை மகள் பேதித்தால்-தலைவி ஒருத்தியே ஆழ்வார் தம்மதே திருப்புளி கீழே ஸ்ரீ வைஷ்ண ஸ்ரீ பொலிய வெற்றிச் செல்வம் கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தை-லோகத்தில் அஹங்காரம் மமகாராம் கொண்டு உலாவுவார் இங்கே வராதே கொள்ளுவீர்
ஐஸ்வர்யம் புருஷார்த்தம் அல்பம் அஸ்திரம் கண்டு அவ்வருகே போகலாம்
ஸ்திரமான ஆத்ம அனுபவம் பற்றினாருக்கு அவனையே அனுபவிக்க அவ்வருகே போகலாம்
பகவத் விஷயத்தில் நிற்கிறவன் பிரதம நிலை தாண்டி சரம நிலையான பாகவத விஷயம் போகலாம்-அதுக்கு மேல் போக முடியாதே குறை சொல்லி மேலே போக முடியாதே-பகவத் சேஷத்து அளவில் நின்றால் குறை உண்டே-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-அநந்யார்ஹ சேஷ ஞான அனுரூபமான விருத்தம் இவர்கள் அளவும் வர வேண்டுமே-ஆகவே கிளவுத் துறையில் பாடுகிறார் –

தாத்பர்யம்-இப் பாசுரத்தில் ஆழ்வார் பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு-கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும் உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை அப்ரதிஹதமாய் நடத்தக் கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள் பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-
நெடும் கண்கள் பனி மல்கவே
– நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ண நீர். – நெஞ்சுக்கு சைதில்யம் போலே கண்ணுக்கு கண்ணநீர்
ஆனந்தக் கண்ணீரோடு சோகக் கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ.
விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது;
த்ரஷ்டவ்ய -ஆஹ்லாத -கண்ணா நீர் மல்க -தேகம் பெற்ற பாக்யம்-
“காணத் தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.-திவ்ய தேசம் கண்டாலே இப்படி நைந்து இருக்க-அவனை நேரில் கண்டால் என்ன ஆகுமோ என்கிறாள்-

6-7-உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியிலே, மோகித்துக் கிடக்கிற தன் மகளுடைய துன்பத்தைக் கண்ட திருத் தாயாரானவள்,
‘அது போயிற்றது, இது போயிற்றது’ என்று அவன் திரு நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டு இவள் தானும் மோகித்தாள்;
அவன் திரு நாமத்தைச் சொல்லுகையாலே பெண் பிள்ளை உணர்ந்து எழுந்து புறப்பட்டுத் திருக்கோளூர் ஏறப் போனாள்;
திருத் தாயாரும் வாசனையாலே உணர்ந்து படுக்கையைப் பார்த்தாள்;
வெறும் படுக்கையாய்க் கிடந்தது; இனி,
1-இவள் என் வயிற்றிற் பிறப்பாலும்,
2-தன் தன்மையாலும்,
3-இங்கு இருந்த நாட்களில் தேக யாத்திரை இருந்த படியாலும்
இவள் திருக்கோளூர் ஏறப் புறப்பட்டுப் போயினாள் என்று அறுதி யிடுகிறாள்.

வளையம் முதலாயினவற்றை எல்லாம் இழந்தாளே யாகிலும் நாம் இவளை இழக்க வேண்டி இராது
என்றே இருந்தாள் மேல் திருவாய் மொழியில்.
இத் திருவாய்மொழியில், இவள் தன்னையும் இழந்தோம் என்று கூப்பிடுகிறாள்.

ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்ச வேண்டுவது” என்று கேட்க,
“இருவராகப் போனவர்கட்கு வயிறு எரிய வேணுமோ? தனி வழியே போனவளுக்கன்றோ வயிறு எரிய வேண்டுவது!” என்று
இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்ச வேணும்;
“கள்வன் கொல்” என்றது பெரிய திருமொழி, 3. 7 : 1. தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச் செய்தார்.
அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்:
அகலகில்லேனிறையும்”, “பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” என்பன ஈண்டு நினைக்கத் தகும்.

யதவாத் கிரி -சேர்ந்து புறப்பாடு -ஸ்ரீ பாஷ்யகாரர் கூடவே எழுந்து அருளுவார் -செல்லப் பிள்ளை -யதிராஜ சம்பத் குமாரர் பித்ரு ஸ்தானம்
தானே கூடி சென்று ரஷித்து அருளுகிறார்
இன்றும் பரகாலன் குமுதவல்லி நாச்சியார் உடனே சேவை -நம்மாழ்வார் அன்றும் தனி இன்றும் தனி

இவள் அங்கே புக்கல்லது தரியாள் என்பதாம். “அள்ளல் அம் பூங்கழனி அணி ஆலி புகுவர் கொலோ!”
அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர் கொலோ! என்றே அன்றோ அங்கே வயிறு பிடி.
ஆனாலும், எங்கேும் போகிலும் இருவராயல்லது இராது அங்கு;
‘தனியே சென்ற இவள் என்படுகிறாளோ?’ என்று மிகவும் நொந்து கூப்பிடுகிறாள் இவளுடைய திருத்தாயார்.

அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்கிறபடியே,
‘பகவத் கோஷ்டிக்கு இனி ஆளாக மாட்டாரே!’ என்னும்படி ஐம்புல இன்பங்களிலே கை கழிந்த இவர்,
‘சம்சாரிகளுக்கு இனி ஆளாக மாட்டார்’ என்னும்படி நாட்டாரோடு இயல்வு ஒழிந்து,
கொள்ள மாளா இன்ப வெள்ளத்தைப் புஜிக்கக் கை கழிந்த படி சொல்லுகிறது.

நரகத்திற்குக் காரணமான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகக் கடவ இவர்,
ஸ்வரூபத்திற்குத் தகுதியான விஷயத்தைப் பற்றிப் பிறர் அறியாமலே போகும்படி விழுந்தது.

க்ஷுத்ர விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதே போகக் கடவ இவர், குணாதிக விஷயத்தைப் பற்றிப் பழிக்கு அஞ்சாதபடி ஆனார்.

அல்பம் -நரகாவஹம் -குணம் இல்லாமல் தோஷம் மிக்கு விஷயாந்தரங்கள் -மூன்றையும் காட்டி அருளினார் –

‘என்னுடைமை புக்க இடத்திலே நானும் போய்ப் புக்கு அல்லது நில்லேன்’ என்கிறாள். –திருத்தாயார் –
அவள் உடமை பராங்குச நாயகி

-லக்ஷ்மணேந கதாம் கதிம்“நான் இப்பொழுதே இலக்குமணனால் செல்லப்பட்ட வழியிலேயே செல்லப் போகிறேன்”
“ப்ரவேஸயத ஸம்பாராந் மாபூத் காலாத்யயோ யதா
அத்யைவ அஹம் கமிஷ்யாமி லக்ஷ்மணேந கதாம் கதிம்”-என்பது, உத்தர ராமாயணம்.–என்றாற்போலே.
ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய – தான் பண்டு விரும்பியிருக்கும் அவற்றோடு பெற்றவர்களோடு வாசி அறப் பொகட்டுப் போனாள்.
‘மாண்டும் இவற்றிலே நசை பண்ணும்’ என்று தோற்றாதபடி விட்டாளாதலின் ‘பரித்யஜ்ய’ என்கிறது.

ஸர்வாந் போகாந் பரித்யஜ்ய பர்த்ரு ஸ்நேஹ பலாத் க்ருதா
அசிந்தயித்வா துக்காநி ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 19.

பர்த்ரு ஸ்நேஹ பலாத்க்ருதா – ஒரு விஷயத்தில் சிநேகமானது எல்லாவற்றையும் விடப் பண்ணும் அன்றோ.
தன் வசத்தால் போனாள் அல்லளாதலின் ‘பலாத் க்ருதா’ என்கிறது
அசிந்த யித்வா துக்காநி – விட்டனவற்றை நினையாவிட்டால், போய்ப் புகுகிற இடத்தில் மிறுக்கைத் தான் நினையா நின்றாளோ?
இவள் பெருமாளை ஒழியத் தன்னைக் காணில் அன்றோ துக்கத்தை நினைக்க வல்லளாவது.
ப்ரவிஷ்டா நிர்ஜ்ஜனம் வனம் – ‘போகத்துக்கு ஏகாந்தமான இடம்’ என்னுமதுவே கண்டீர் இவள் நெஞ்சிலே பட்டது.
“கன்னகு திரள் புயக் கணவன் பின் செல நன்னகர் ஒத்தது நடந்த கானமும்”-என்றார் கம்பநாடரும்.

புத்ர த்வய விஹீநம் தத்-சக்கரவர்த்தி, பிள்ளைகள் இருவரையும் தேடிப் போர நொந்தான்.
ஸ்நுஷயாச விவர்ஜிதம் – ‘மீண்டும் இவ்விடத்தை விரும்புவார்கள்’ என்று நினையாதபடி
புத்ர த்வய விஹீநம் தத் ஸ்நுஷயா ச விவர்ஜிதம்
அபஸ்யத் பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 42 : 31.
ஸ்நுஷயா-மாட்டுப்பொண்-குழை சரக்கு அறுத்துக்கொண்டு போனபடி.
அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் –
நிலவோடும் நக்ஷத்திர தாரா கணங்களோடும் கூட சந்திரன் குடி வாங்கின ஆகாசம் போலே கிடந்தது.
சந்தரன் பெருமாள் -நிலவு -சந்தரன் ஒளி சீதை –நஷத்ரங்கள் லஷ்மணன் –
(ராம சந்திரன் ஒளி போல் சீதை -நிலவு)
அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது.
“நல்லது ஓர் தாமரைப் பொய்கை” என்ற திருப்பாசுரத்திற் கூறியுள்ள படியே யாயிற்று இவள் திருமாளிகை கிடக்கிறது.

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறி ஓடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலொ.-என்பது, பெரியாழ்வார் திருமொழி, 3. 8 : 1.

திருத் தாயாரும் இம் மாளிகையைக் கண்டு வெறுத்து,
‘போகக் கடவதாகத் துணிந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போனால் ஆகாதோ?
தனி வழியே போவதே! நான் கூடப் போகாவிட்டால் அவனுடனே கூடப் போகவும் பெறாது ஒழிவதே!
இவள் தான் எங்ஙனே போகிறாளோ! நாடு அடங்க வாழ்வித்துக் கொண்டு போகிறாளோ!
அங்கே புக்கால் என்படுகிறாளோ! வழியிலுள்ளார் என் சொல்லுகிறார்களோ!
அங்கே புக்கால் அவ்வூரிற் சோலைகளையும் அங்குள்ள நீர் நிலைகளையும் அவன் குணங்களையும்
கண்டு உகக்கிறாளோ! கண்டு சிதிலை ஆகிறாளோ!
இவை எல்லாம் தாம் அங்கே சென்று புக்கால் அன்றோ என்றாற்போலே மனோ ரதித்துக் கொண்டு,
தன்னைப் பார்த்தல் எங்களைப் பார்த்தல் செய்யாதே,
இவற்றை எல்லாம் கடலிலே கவிழ்த்துப் போவதே!’ என்று
(தனது மார்த்வத்தைப் பாராமல்
எங்கள் விஸ்லேஷ அஸஹத்வத்தைப் பாராமல் )திருத்தாயார் இன்னாதாகிறாள்.-

திருப் பொருநல் தென் கரை -வைத்த மா நிதிப் பெருமாள் -சயனத் திருக்கோலம் -திருக் கோளூர் –
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவவதார திவ்ய தேசம் –
கருட அம்சம் -நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –
கண்ணி நுண் சிறுத்தாம்பு -நாலாயிரம் நாதனுக்கு அருளிச் செய்ய உரு துணை இதுவே அன்றோ
இவர் ஒருவரே ஆழ்வார் உடன் கூட இருந்து நமக்கு பெரும் நிதி கிடைக்க உதவினார் –
நவ நிதிகள் -குபேரன் சிவ பக்தன் –சிவன் பார்வதி -சேர்ந்து இருக்க பார்த்தாதால் பார்வது சபிக்க -இழந்தான் –
ரஷிக்க-வைத்த மா நிதி -பெருமாள் -நிதிகள் ஸூரஷிதம் -குபேரன் -ஒரு கண் போனதே -மேனி விகாரம் –
இவன் திருவடி பற்றி நிதி பெற -பார்வதி தேவி உபதேசிக்க –
குமுத வல்லி கோளூர் வல்லி -மரக்கால் -உடன் சேவை –
தர்ம தலை சாய –தர்மம் நிதியாக காத்து -தர்ம சம்ஸ்தாபனம் அர்த்தமாக -தர்ம தேவதை நீராடி -திருவடி பற்றி –
இதே தர்ம ஸ்தாபனமே மதுரகவி ஆழ்வார் திரு பிறப்பித்து நம்மாழ்வார் திருவடி சேர்க்க அருள் செய்தார்
வியாசர் சந்ததி தர்ம குப்தன் -சாபம் -தர்மம் செல்வம் இழக்க -பரத்வாஜர் குல ரிஷி சொல்ல
இங்கே வந்து -ஸ்ரீ கர விமானம் -இழந்தது பெற்றான் –

நமக்கு சொத்து பெருமாள் திருவடிகளே சொத்து என்று இருக்கும் ஆழ்வார் திருவடிகளே சொத்து என்று
இருக்கும் மதுர கவி ஆழ்வார் திருவடிகளே சொத்து என்று இருக்கும் இவ்வூர் உள்ளோர் திருவடிகளே சொத்து நமக்கு

கீழும் இதுவும் தாய் பாசுரம் -இதில் இவள் ஆற்றாமை விஞ்சி -இவளை இழந்தோம் -தனி வழியே போனாள்
என்று அன்றோ திருத் தாயார் நினைவு –
கைம் முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரில் சம்ருத்தம் -ஆச்சார்ய ஹ்ருதயம் –169-

ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் ஆத்மாத்மீய ஸ்வ பாவங்கள் எல்லாம் தத் அதீனமாம்படி அவற்றில் தமக்கு
ஸ்வாம்யநிவ்ருத்தி பிறந்த படியை அனுசந்தித்து அருளினவர்
அத்தலையில் தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தால் அதி த்வரித சித்தராய் –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் விஷயமாகத் தமக்கு த்வரை பிறக்கைக்கு அடியான
அவனுடைய தாரக போஷக போக்யத்வாதி ஆகாரத்தையும்
ஸர்வ லோக பிரசித்தமான நாமாதி யோகத்தையும்
அத்திரு நாமத்தினுடைய ஸர்வ உபயோக யோக்யதையையும்
ஐஸ்வர்ய அதிசயத்தையும்
அத்யந்த விலக்ஷணமான போக ஸ்த்தானவத்தையும்
ஆகர்ஷகமான அவயவ சோபையையும்
அனவதிக வ்யாமோஹத்தையும்
அதிசயித போக்யயான ஸ்ரீ லஷ்மீ விஷயத்தில் அபிமத தமத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
அகில ஜகத் ஸ்வாமித்வத்தையும்
அனுசந்தித்து -தமக்குப் பிறந்த த்வரா அதிசயத்தாலே அவனை பிராபிக்கையிலே உத்யோகித்து நடந்த இவருடைய அவஸ்தையை
அனுசந்தித்துப் பரிவரானவர்கள் ஈடுபட்ட பிரகாரத்தை நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
அத்யந்த த்வரா விஷ்டையாய்க் கொண்டு அவன் இருந்த திருக் கோளூரை நோக்கி
அபி சாரிகா விருத்தியைப் பண்ணிக் கை கழிந்த தலைவியைப் பற்ற
நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் 

———

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே
.–6-7-1-

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் –
இவள் அவ்வருகே ஒரு வாய் புகுநீர் -உன்மத்தக அனுபவம் -தேடிப் போனாளோ. என்றது,-
தேக யாத்ரை பார்க்க வேண்டுமோ இவள்-இங்கு இருந்த நாள் அந்நம் பானம் முதலியவைகளாலே தரித்து, அங்கே புக்கு அவனாலே தரிக்கப்போனாளோ என்றபடி.
“அஹம் அந்நம், அஹமந்நாதா: – நான் பகவானுக்கு இனியன், நான் பகவானாகிய இனிமையை அநுபவிக்கிறவன்” என்று இருப்பார்க்கும் -இங்கேயே பெற்று இருப்பார்க்கு -அவ்வருகு போக வேணுமோ?–அடைமொழிகட்குக் கருத்து-விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு-எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.-தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் “வாஸு தேவஸ் ஸர்வம்”-உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும்,-இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.

என்று என்றே – இது ஒழிய வேறு ஒன்றனைத் ‘தாரகம்’ என்று இருக்கில் அன்றோ மற்று ஒன்றினைச் சொல்லுவது;-இது தன்னையே மாறாதே சொல்லி. என்றது, ஒருகால் இதனைச் சொல்லிப் பின்பு ஊண் உறக்கத்தாலே போது போக்கலாம் விஷயம் அன்றே 

கண்கள் நீர் மல்கி--இவர்களுடைய உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் இருக்கிறபடி.-இவர்கள் -தோழி உடன் தாய் -ஊரும் நாடும் உலகமும் திருத்தி -அனைவரும் ஒரே கோஷ்டி –-இவள் முகத்தாலே காணும் இவர்களுக்கு ஜீவனம். -ஆழ்வார் த்வாரா -ஆழ்வார் திரு முக மண்டலம் – தன் ஜீவனத்துக்குப் போகிறவள் எங்கள் ஜீவனத்தைக் கொண்டு போக வேணுமோ?

நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன்.
அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது;-ஒரு திருவாய்மொழியைச் சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச் செய்வர்.

அனந்தாழ்வான் சோழ குலாந்தகனிலே பயிர்த் தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீவைஷ்ணவனைக் கண்டு, உம்முடைய ஊர் எது’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்?’ என்ன, ‘தேக யாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன, அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ?
நிலை நின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே யன்றோ! என்றானாம்.

அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று,
அவன் விரும்பின தேசமும் பிராப்யத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ.

வினவி--‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று எதிரே வந்தாரைக் கேட்டு,
அவர்கள் ‘இன்னதனை இடம் போரும்’ என்ன, அது தானே வழிக்குத் தோட்கோப்பாகப் போகை.
“தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானுடைய திரு நாம சங்கீர்த்தனமானது வழிக்குக் கட்டுச் சோறாகும்” பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தநாம்ருதம்.-என்றார் பிறரும்.
பூ அலரும் போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இடம் போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில் செவ்வி காணப் பெற்றிலேன் என்று காணும் திருத் தாயார் தான் நோவு படிகிறது.-

புகுமூர் –காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே,
சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ.-புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.
எம்பெருமானார் தெற்கே எழுந்தருளா நிற்க, எதிரே வருகிறாள் ஒரு பெண் பிள்ளையைக் கண்டு ‘எங்கும் நின்றும்?’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவராய் இருப்பர்களோ?’ என்று அருளிச் செய்தார்.

என் இள மான் மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே, இது திண்ணம் –
இவள் போய்ப் புகும் ஊர் திருக்கோளூரே, இது நிச்சயம்.
இவ் வூரில் பிள்ளைகளைக் காணா விட்டால், கோவிலுக்குள் தேடுமத்தனை அன்றோ.-

—————

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே
 –6-7-2-

இங்கு உள்ளாரை தன்னோடு -தான் பிறந்த ஊர் மட்டும் இன்றி -தோள் தீண்டியான நாடும் லோகமும் –ராமாவதாரம் ஊர் ஒன்றே திருந்திற்று-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-இங்கு குறை உண்டால் அங்கு தேடித் போனாளோ-தான் இருந்த இடத்தே செல்ல வேண்டுமவன் இவள் இருந்த இடத்தே வரும் படியைச் சொல்லி –-இங்கு பிறர் திருந்தும் படி இருக்கும் இவள் திருந்தின இடம் போவதே-பெற்ற என்னையும் விட்டு வேறு தேடி போகும் படி-பெற்ற தாய் விட்டு அகலுகை இந்த குடிக்கே ஸ்வ பாவம் போலே காணும்
கள்வன் கொல்-அணி யாலி புகுவர் கொலோ-நல்லதோர் தாமரை -பொய்கை -மதுரைப் புறம்–

பூவைகளே உரையீர் –சொல்லாது ஒழி கைக்கு பெற்ற குற்றம் இல்லையே உங்களுக்கு -நான் ஹிதம் சொல்லுகையாலே மறைத்தாள் ஆகிலும் -இன்ன இடத்துக்கு போகிறேன் என்றும் -அங்குப் போனால் செய்யுமவையும் உங்களுக்கு சொல்லிப் போகக் கூடும் இறே -சொல்லி கோள்-

————-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?
–6-7-3-

வேறு ஒன்று கொண்டு பொழுது போக்கும் பருவத்திலும் திருநாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கண்டீர் போனாள்.-இங்கு இருந்த நாள் மற்றொன்று தாரகமாய், அங்கே சென்று அவனாலே தரிக்கப் போனாளோ.-பூவை தொடக்கமான லீலையின் உபகரணங்களால் பிறக்கும் உவகை எல்லாம் துவயத்தின் படியே
ஸ்ரீய:பதி (திருமகள் கொழுநன்) என்கிற திருநாமத்தைச் சொல்ல அதனாலே உண்டாகா நின்றது.

“‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று, பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதை புட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன,
அங்ஙனேயோ என்று இசைந்து போனார்.-முதல் பூர்வ பக்ஷம் இது-

நன்று; அவன் திரு நாமங்களை இவற்றிற்கு இட்டு அழைத்ததாகக் கொண்டாலோ? என்னில்
“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கிற
அளவு கடந்த ஈடுபாட்டிற்கு இது சேராது.-இரண்டாம் பூர்வ பக்ஷம்

பெற்றி என்னும் பெரியார் ஒருவருடைய நிர்வாகத்தையும், அவர் கூறும் நிர்வாகம் பொருந்தாமையையும் காட்டுகிறார்
‘ஊரும் நாடும்’ என்று தொடங்கி. பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து என்றும்,-“எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.

அன்றிக்கே,-பூவை பைங்கிளிகள். . . . . .எழும் என்பதற்கு, திருநாமச் சுவடு அறிந்த பின்பு
விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல் இவளுக்குப் பொறுக்கக் கூடாத தாயிருக்கும் என்னுதல்.
இனி இரண்டாவது சித்தாந்தம்
திருமால் திருநாமங்களைக் கூவி, “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு” என்கிறபடியே,-பூவை தொடக்கமான எல்லாவற்றையும் இகழும் என் பாவை என்றபடி.
இங்கே, “எழும்” என்றதற்கு,-அவற்றை விட்டு எழும் என்று பொருள் கொள்க.-
எழும் -த்வேஷிக்கும் -எழ்கல் இராகம் இலாதான் -என்றவாறு –

என் செய்யும் கொலோ –-சொல்ல மாட்டாள், தவிர மாட்டாள்; அழாதொழிய மாட்டாள்; எங்ஙனே படுகிறாளோ?-நம்மையும் பிறரையும் விட்டு அவன் திரு நாமங்களை அநுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றோம்;
அவனையே கண்டு அநுபவிக்கிற போதை அழகு காணப் பெற்றிலோமே.
நினைக்கும் வேளையில் போலே அன்று, கண்டால் பிறக்கும் விகாரங்கள்;-அலாபத்தோடே இருக்கும் இருப்புக் கண்டேன்; இலாபத்தோடே இருக்கும் இருப்புக் காணப் பெற்றிலேன் என்கிறாள்-

———–

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.
–6-7-4-

சாதன விதியளவிலே நின்று தடுமாறுவர்களோ:-ஆத்ம ஸ்வரூபத்தைப் பார்த்துத் தெளிவர்களோ?-உபாய அம்சத்தைப் பற்றி நின்று, இது கடவது அன்று என்பர்களோ;
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் பேற்றின் ஸ்வரூபத்தையும் பார்த்து, இது கடவது என்பர்களோ?-ருசி ஸ்வபாவத்தாலும், விஷய ஸ்வபாவத்தாலும், ஆத்ம ஸ்வரூபத்தைப் பார்த்தாலும்’ என்று சொல்லப்படுகின்ற இவளுடைய பிராவண்யத்தின் மிகுதி,
விஷய வைலக்ஷண்யம், சேஷத்வ ஸ்வரூபம் ஆகிற காரணம் மூன்றாலும் இது
தக்கது என்கிற சித்தாந்தந் தன்னையே சொல்லுவர்களோ?’

செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே –அவன் வரவை வாராமைக்குச் சமம் ஆக்கினாள்.-முற்பாடனாய் வந்தவனை, தான் நாலடி இட்டுப் பிற்பாடனாம்படி செய்தாள்.
அவன் ஸ்வரூபத்தை அழித்தாள். பரத்துவம் வியூகம் முதலியவைகளை விட்டு இங்கு வந்து கிடக்கிறது இவளுக்கு முற்பாடனாய் உதவுகைக்கு அன்றோ-அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே,-இவள் வரவு பார்த்து அவன் காலம் பார்த்துக் கொண்டு கிடக்கிறான் ஆதலின் ‘அவன் கிடந்த’ என்கிறாள்.-ரஷகத்வம் – -அன்வயித்தால் தானே நியந்தா உடைய செல்வம் மல்கும் –ஸ்ரீ வைகுந்தம் செல்வம் மல்காதே –

மெல் இடை நுடங்க – அவன் ஸ்வரூப ஞானம் இல்லாவிட்டால், தன்னுடைய ஸ்வரூப ஞானமோ தான் இவளுக்கு உண்டாயிருக்கிறது.-இவளுக்கு விழுக்காடு அறியாமை எங்கும் ஒத்தது கண்டீர்! தன் இடையை அறிந்தாளாகில் தான் புறப்பட்டுப் போமோ?
நடுவே அறியாமல் புகுந்த பிழை அன்றோ. மிருதுவான இடையானது துவுளம் படியாக.
இந்த இடையைக் கொண்டு இவள் நடக்கப் புக்கால் எதிரே புறப்பட்டு வர வேண்டாவோ? -நமஸ் சப்தார்த்தம் அறியாமல் –-எதிரே புறப்பட்டு வராமல் செல்வக் கிடப்பாலே கிடந்தான் -குற்றம்-ரஷணம் முற்பாடனாய் இருக்க -நகராமல் கிடந்தது இருக்க வேண்டுமே -அவன் வரவு அசத்சமம் ஆக்கி -வந்தாளே-என்றுமாம்-

——————–

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
–6-7-5-

என் சிறுத் தேவி –தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத் தேவி’ என்று விசேடிக்கிறாள்.
அன்றிக்கே,-பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு
ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத் தேவி’ என்கிறாள் என்னுதல்,
‘என் பெண் பிள்ளை’ என்கிற நினைவு இல்லை காணும் இவளுக்கு.
“பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –, பெரிய திருமொழி.8. 2 : 9.—
இவளுக்கு நல் வார்த்தை சொன்ன நாக்கினைக் கழுவ வேணும் என்கிறாள்.

சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற முக்தனுக்குப் பிறந்த ஞானம்,
இவளுக்கு இங்கே இருக்கச் செய்தே பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ?

தன் திருமால் திருக் கோளூரில் – அவள் பக்கல் இருக்குமாறு போலே அன்றோ இவள் பக்கலிலும் அவன் இருக்கும்படி. –-தன் மால் -திருமால்–தன் திரு -தன் திருமால்
உலகத்தில் சேஷ சேஷி பாவம் போல் அன்றே காதலி பக்கல் பரிமாற்றம்.

அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு.
திவ்யாத்ம ஸ்வரூபத்துக்குப் பிரகாசகமான திவ்விய மங்கள விக்கிரஹம் போலே,
அவை இரண்டுக்கும் பிரகாசகமான கோயில்,
கோயிலைக் கண்ட போதே உள் உண்டான பொருளையும் அறுதி இடலாயிருக்கை.
உள்ளில் பொன்னுக்குத் தக்க செப்பாயிருக்கும் அன்றோ. கண்டு இங்கே இருந்து
மானச அநுபவ மாத்திரமேயாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு.

‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யா நிற்க, இட்ட அடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே திருக்குடந்தைக்கு நடக்கிற போது,
திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே,
திருப்பேர் நகரான் கோயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
‘சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.-(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )

———–

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.
–6-7-6-

சக்கரவர்த்தியைக் காட்டிலும் இவளுக்கு வேறுபாடு, பிரிந்தவுடனே அவன் முடிந்தான்;
இவள் முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே இருத்தல்.
இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நின்று தூங்குகின்றேன்’ என்று தொடங்கி. என்றது,
கொன்றைமாலை யாகையாலே அழகர்க்கும் ஆகாது;
அதுதான் திருமலையிலுள்ளதாகையாலே சைவரையும் பறிக்க ஒட்டார்கள்;
ஆக, இரண்டு இடத்துக்கும் ஆகாமல் நாலுமாறுபோலே, நானும்,
தம்முடைய சம்பந்தமே காரணமாகப் பந்துக்களும் ஆகாமல், தாமும் அங்கீகரிக்கப் பெறாமல் நடுவே நின்று தடுமாறா நின்றேன் என்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் போன்று, இவளும் தன்னோடேகூட இருக்கவும் பெறாமல் முடியவும் பெறாமல் நோவு படுகிறேன் என்கிறாள்

தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே-ஓர் ஆபரணம் தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே,
திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;

திருத் தாயார்க்கு அரிதாய்த் தோற்றுகிறபடி.
அவளுக்கு வழிப் போக்கோடு, ஊரில் புகுதியோடு, அவன் தன்னைக் காணுமதனோடு,
அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத் தக்கவனோடு வாசி அற எல்லாம் உத்தேசியமாய் இருக்குமன்றோ.
அர்ச்சிராதி கதியோடு, பரமபதத்தோடு, அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத் தக்கவனோடு
வாசியற பேற்றிலே சேர்ந்தனவாகக் கடவன வன்றோ.
பிராப்ய புத்தியாக பார்த்தால் எதுவும் ஸ்ரமம் இல்லையே –
உபாய புத்தியாக பார்த்தால் சிறியதும் அரியதாய் இருக்குமே –

தன் மால் என்னாமல் தன் திருமால் –-அவனுடைய பிராப்பிய வேஷந்தான் இலக்ஷ்மீபதியா யன்றோ இருப்பது. –-நீயும் திரு மாலால் கோட்பட்டாயே -வஞ்சிக்கும் பொழுதும் மிதுனமே –
விசிஷ்ட வேஷத்தில் அல்லது தன் எண்ணத்தைச் செலுத்த அறியாள்-

நெடும் கண்கள் பனி மல்கவே – நெஞ்சுக்கு உருகுதல் போலே காணும் கண்களுக்குக் கண்ண நீர். – நெஞ்சுக்கு சைதில்யம் போலே கண்ணுக்கு கண்ணநீர்
ஆனந்தக் கண்ணீரோடு சோகக் கண்ணீரோடு வாசி இல்லை அன்றோ.
விலக்குமவை எல்லாம் பாதகமாகக் கடவது;
த்ரஷ்டவ்ய -ஆஹ்லாத -கண்ணா நீர் மல்க -தேகம் பெற்ற பாக்யம்-
“காணத் தக்கவன்” என்னும் விஷயத்தை நான் அனுபவிக்கப் பெற்றிலேன்.-திவ்ய தேசம் கண்டாலே இப்படி நைந்து இருக்க-அவனை நேரில் கண்டால் என்ன ஆகுமோ என்கிறாள்-

—————

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–
6-7-7-

கண், மல்குநீர்க் கண்ணாயிற்று;-மனம், மையல் உற்ற மனமாயிற்று.
அகவாயும் இருண்டு, புறவாயும் இருண்டு இருக்க, இவள் எங்ஙனே போனபடி?
கண்ண நீராலே கண் தோற்றாது,-அன்பினாலே மூடப்பட்ட தாகையாலே நெஞ்சு இருண்டு தோற்றாது-மையல் உற்ற மனத்தினளாய் நெடுமால் என்று அழைத்து–நெஞ்சு ஒழியவே தான் கூப்பிட்டது.-

அவன் வரவு பார்த்து இவள் இருக்கை அன்றிக்கே, இவள் வரவு பார்த்து அவன் கிடக்கும்படி ஆவதே!-ஓர் அடியிலே பத்து அடி இட வேண்டும் படியாயிருக்கை.-ஒசிந்து – துவண்டு.-ஒடுங்கி ஒடுங்கி நடந்து, அது பொறாமல் துவண்டு, எங்ஙனே புகக் கடவளோ?-

—————–

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.
–6-7-8-

ஒசிந்த நுண் இடை – இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நுண்ணிடை மேல் கையை வைத்து – நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;-அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.
ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.
பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது,
இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து –-இப்படி விழுக்காடு அறியாதார் உளரோ!
நாயகன் கை வைக்கப் பொறுக்குமத்தனை போக்கித் தன் கை வைக்கப் பொறுக்குமோ?அடியே பிடித்துக் கரோபத்ரவம் கனத்தே அன்றோ இருப்பது.–கர உபத்ரவம் -அடியே -பொய் நின்ற ஞானம் தொடங்கி–அஷ்ட புஜ பெருமாள் ஓன்று பணித்தது உண்டு -நமஸ் சப்தம் ஆழ்ந்து அனுபவிக்க அவன் மேல் விழுந்து ரஷிப்பான்-கையுள் தன் முகம் வைக்கும் நையும் —பர பிரயத்தனமும் கூடாது ஸுவ பிரயத்தனமும் கூடாது-‘கையை வைத்து’ என்கிறாள், மலையை வைத்து என்னுமாறு போலே.கசிந்த நெஞ்சினளாய் – அன்போடு கூடின மனத்தை யுடையளாய். பற்றுகைக்கு அவ்வூரே ஆக அமையும்,-விடுகைக்குத் தாயாக அமையும்.

எம்மை நீத்த எம் காரிகை –அவளுக்கு இங்குள்ள எனது என்னும் செருக்குக் கழியக் கழிய,
அது தானே காரணமாகா நின்றது திருத் தாயார்க்குப் பற்றுகைக்கு.
பகவத் விஷயத்திலே இறங்கி மூழ்குதலும், வேறு பட்ட பொருள்களை விடுகைக்கு எல்லை இவ்வளவாகையும்,-இப்படி விட்டால் பின்பு அவர்கள் தாங்களே உத்தேஸ்யர் என்னும் இடமும் சொல்லுகிறது.-புறம்பே உள்ளவற்றை விடப் பண்ணுவித்துக் கொண்ட விஷயத்தில் ஞான லாபமே யன்றோ இவளுக்கு வேண்டுவது.
இவள் சம்பந்தமே அன்றோ திருத் தாயார்க்கு வேண்டுவது.
விடப் பட்டவர்களுக்கு விட்டவர்கள் உத்தேஸ்யர் –

கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகை திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லும் கொல் –
இவள் என்னை விடும்படி செய்து கொண்ட விஷயத்தில் ஈடுபாடானது அவ்வூரில் புகுதலையும் செய்து கொடுக்க வற்றோ?
‘எம்மை நீத்த’ என்று நிச்சயித்தாள்; ‘செல்லும் கொல்’ என்று ஐயப்படா நின்றாள்; இதற்குக் காரணம் என்? என்னில்,
பிரேமம் இரண்டனையும் செய்து கொடுக்குமே அன்றோ.
பரவசப்படும் தன்மையை விளைத்து இடையிலே பொகடிலும் பொகடும்;
அன்றிக்கே, கொண்டு போய்ப் பொகடிலும் பொகடும் அன்றோ.-

—————-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

பல் பழி தூஉய் இரைப்ப – தன்னை அவனுக்கு ஆக்கி வைத்தாள்: பின்னை அது தானும் மாட்டிற்றிலள்; புறப்பட்டுப் போனாள்; தாயைப் பார்த்திலள்; ஊரார் பழி பார்த்திலள்;
இத்தனையும் செய்தால் அவன் தான் எதிரே வரப் பெற்றது இல்லை என்று இப் புடைகளிலே
ஒரு கோடி யன்றோ சொல்லுவன.

நடந்தாள் – தன் பெண் பிள்ளையே யாகிலும், ‘திருக்கோளூரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை- இங்ஙனல்லது சொல்ல ஒண்ணாதே அன்றோ.
தன் மகளை எங்ஙனே கனக்க நினைத்திருக்கிறாள் தான்!
வயிற்றிற் பிறக்கவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேஸ்யராமித்தனை.

ஒரு நாள் நம் பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடி யருளி,
‘தன் சிஷ்யனைத் தான் கொண்டாட நின்றான்’ என்றிராதே கொண்மின்!
“கண புரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” –பெரிய திருமொழி, 8. 2 : 9.-என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச் செய்தார்.

அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டன் இடா நிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க,‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறிய வேணும்;
இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.

எம்மை ஒன்றும் நினைத்திலளே – வழிக்குத் துணையாகத் தான் கொடு போகா விட்டால், நினைக்கத் தான் ஆகாதோ? எதிர் கொள்வாரிலே சிலராகவாதல், வழித் துணையாவாரிலே சிலராக வாதல், ஏதேனும் ஓர் ஆகாரத்தாலே தான் நினைக்கலாகாதோ?என்பாள் ‘ஒன்றும் நினைத்திலன்’ என்கிறாள்.
‘அத் தலையில் நினைவே காரிய கரமாவது’ என்றிருக்கிறாள்.
பகவானிடத்தில் சம்பந்த முடையாருடைய அபிமானமே உத்தேஸ்யம்-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் திருவிட வெந்தை பிரானே –
ரசவாதி கையில் ரச குளிகை போலே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் –

————-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.
-6-7-10-

நெடும் கண் இள மான் இனிப் போய் –-விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்!
இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!

இனிப் போய் – யார் செய்யக் கூடியதை யார் தான் செய்கிறார்?
ஸ்வரூப ஞானம் உடைய -கண் படைப்பாளும் தானாய்ப் -புறப்பட்டுப் போவாளும் தானாவதே!
இத்தலை செல்லாதிருத்தற்குச் ஸ்வரூப ஞானமே அமையுமே யன்றோ.-ததேக உபாயத்வம் –பாரதந்த்ர்ய ஞானம் கண் உடையவள்-போகலாமோ -தாய் –
நெடும் கண் -ஸ்வ யத்ன நிவர்த்தகம் அத்யந்த பாரதந்த்ர்ய ஞானம் -இவள் கண் அழகில் அன்றோ அவன் ஈடுபடுவது

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனனை – இவ்வளவே காண் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது.-ஓர் உபய விபூதி மாத்திரம் கண்டீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது ;
அவன் தன்னையும் தோற்பிக்கும் கண் அன்றோ இவளது. -அனைத்து லோகம் தானே -ஒரு உபய விபூதி தானே
அவனையும் சேர்த்து அன்றோ இவளது –அவன் அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன்;

இவள் நெடுங்கண் இள மான். அவன், தானும் தன் விபூதியும் இவள் கண்ணிலே ஒரு மூலையிலே அடங்கும்படி யாயிருக்கை.
கண்ணில் அல்லாத பரப்பும் இவள் பருவமும் குமர் கிடந்து போமத்தனை.-
காலியாக உள்ள கண் இடம் அனுபவிக்க ஆள் இல்லை -நெடும் கண் –

தினைத்தனையும் விடாள் – நெகிழ்ந்து அணைக்கவும் பொறாள்.
இங்கு இருந்து பட்ட கிலேசத்தாலே ‘நின்னைப் பிரியேன்’ என்று சொல்லவும் நெஞ்சு கொடாள். காரியப் பாட்டாலே பிரியிலும் நெஞ்சு ஒழிந்து கேட்க வேணுமே.-

———–

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.
–6-7-11-

தளர்ந்தார் தாவளமாய், (ஆபத்துக்கு ரக்ஷணமாய் )
எய்ப்பினில் வைப்பாய்,
‘உண்டு’ என்ன, உயிர் நிற்கும் படியாய்,
உடையவன் காலிலே எல்லாரும் விழும்படியாய்,
உடையவனுக்கு அறவிட்டு ஜீவிக்கலாய்,
‘அற விட்டு ஜீவித்தான்’ என்று ஏசாதபடியாய்,
அவன் தனக்கு பெரு மதிப்பைக் கொடுப்பதுமாய்,
உடையவனுக்கு ஒன்றுக்கும் கரைய வேண்டாதபடியாய்,
எல்லாம் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
எல்லா ரசங்களும் போகங்களும் தன்னைக் கொண்டே கொள்ளலாய்,
இந்த விதமான குணங்களை யுடைத்தாயிருக்கையைப் பற்ற ‘நிதி’ என்கிறது.

மாநிதி என்றது,-அழியாத நிதி என்றபடியாய், அத்தால், தன்னைக் கொண்டே எல்லாம் கொள்ளா நின்றால்
தனக்கு ஒரு குறை அற்று இருக்கை. அல்லாத நிதி மாண்டு நிற்குமே.-ஆபன்னர்க்கு ரஷணம்--அஸ்தி ப்ரஹ்ம சேத் -ப்ரஹ்மம் உண்டு என்றதும் – நஷ்ட பிராணன் ஆன ஆத்ம சத்தை லாபம் பெறுமே

திகழ் பொன்னுலகு ஆள்வாரே –-ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே,
நித்தியாநுபவம் பண்ணலாம் நிலத்திலே புகப் பெறுவர்.
தனி வழி போகாதே, அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-

———-

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்
–57-

திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார்-தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்-ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -திரு விருத்தம்
–என்னக் கடவது இறே-இத்தால்-வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-
தானும் வாழும்படி போனாள் என்றது ஆயிற்று –இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம் ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்-அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய–மாயா வாமனனே -7-8-

January 30, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

————–

(ததீயத்வ)விபூதி ஆகாரத்தாலே -இங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாகரமாய் நலிகிற படி –
ஜ்ஞான சங்கோசம் அற்று –-ந ச புன  ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே போனால் ஸ்மாகரமாவை-
இங்கே ஸ்மாகரகமாம் படி  எங்கனே என்னில்–ஸ்வ எத்ன சாத்தியமான ஜ்ஞானம் அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே-பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே-இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –(இங்கு கர்மம் திரோதானம் நமக்கு -சரீர ஆத்ம பாவம் தெளிவாக அங்கு வருமே – ததீயத்வ ஆகாரம் பார்க்கும் ஞானம் இங்கேயே ஆழ்வாருக்கு-அப்ருதக் சித்த விசேஷணம் -இங்கேயே ஞான விளக்கம் -நிர்ஹேதுக விஷயீ காரத்தால் – அதனால் தான் துன்பப்படுகிறார்)

காற்றுக்கு குளிரக் கடவதாக ஈஸ்வரன் நியமித்ததும் அந்நியதாய் ஆகிறதே-ரக்ஷணத்துக்கு பிராட்டி மாற்றிய இடம் திருவடிக்கு அக்னி சுடக் கூடாதே –ஸீதா பவ -என்றாள் -அன்றோ-இங்கு மூவரும் இருக்க -அவன் இவளை சிஷிப்பதா –தடாவியதே –கூடுமோ மாறி விட்டதா வருத்தம் கலந்த வெறுப்பு சங்கை கவலை தோற்ற ஸ்வரம் -கேள்வி அல்ல-இது என் பெண் பிள்ளை நிமித்தமாக தாயார் இன்னாதாகிறாள் அவனால் ஆதாரத்துடன் அணைப்பவன் -இவளைப் படுத்துவதா மட்டும் அல்ல
அவன் ஸத்ய ஸங்கல்பம் பொய்யாகலாமோ
கூரத்தாழ்வானை விட்டுப் பிரிய திரு உள்ளம் இல்லாத எம்பெருமானார் ஈஸ்வரன் ஆணையைப் பேணி பாது காத்தால் போல் அன்றோ இதுவும்
பிரிவும் -12 ஆண்டுகள் மேல் கோட்டைக்குச் சென்றதும் -திரு நாட்டுக்கு எழுந்து அருளியதும் உண்டே
ஈஸ்வரன் ஆணையை உடையவர் நிமித்தமாக இல்லை யாக்கினான் என்று இருக்கக் கூடாதே
அதுக்காக திருத் தாயார் ஏங்குகிறாள்-இது தோழி வார்த்தையாகவுமாம்

இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

நாயகனும் தானும் கலந்து இருந்த சமயத்தில் அனுகூலமான வாடையானது அவனைப் பிரிந்து தனியிருக்கும் சமயத்திலே வெற்றிலை இடுவாரே கொல்லுமா போலே நலிய அத்தாலே நலிவு பட்டுத் தன் தசையைத் தான் அறியாதே-தன் தசையைத் தான் அறிவிக்க க்ஷமையும் இன்றிக்கே
நோவு பட்டுக் கிடக்க- அத்தைக் கண்டதோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மதுரகவி போல்வார் ஆழ்வார் நிலையை அருளிச் செய்கிறார்கள் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே
—வாடைக்கு வருந்தி மாமை இழந்த
தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –திருத்தாயார் பாசுரம் என்றுமாம்

குளிர்த்தியை இயல்பாக உடைத்த மந்த மாருதம் இக்காலத்தில் இவ்வூர் ஒன்றிலும்-ஆழ்வாருக்கு மட்டும் அல்ல குளிரும் ஸ்வ பாவம் தவிர்ந்து நெருப்பை வீசா நின்றது-அழகிய திருத் துழாயின் குளிர்த்தியிலே -அதன் பொருட்டு இவள் ஸ்வபாவம் இழந்து -ஆறி இருக்காமல் -அழகிய கண்களை உடைய இவள் -தன்மையும் மாறும்படி வர்ஷுக வலாஹம் போல் -முகில் வண்ணன் -வடிவை உடைய செங்கோல் இவ்வாறு செய்வதே-ஒரு நாள் இவ்வாறு விளைந்ததே-சார்ங்கம் சங்கல்பம் விடாதவன்
சோரா நின்ற தடம் கண்ணி

பனிப்பியல்வாக உடைய தண் வாடை –
குளிர்த்தியை ஸ்வ பாவகமாக உடைத்தான மந்த மாருதமும்–இரண்டு விசேஷணங்கள்–
தொழில் பண்பும் குணப் பண்பும் –
குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை–

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் –-இக் காலத்திலே-இத் தேசத்திலே-இதுக்கு ஸ்வபாவ பேதம் பண்ணுகின்றவன் ஆகையாலே- அவனுக்காக நின்றபடி-பதார்த்தங்கள்
ஸ்வ பாவ பேதமும்-ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும் இவளை அழிக்க நினைத்த படி-(தத்துவமும் தகவும் இல்லை -கிருபையும் ரக்ஷகத்வமும் இல்லையே அவனுக்கு )அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால் அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ

இக்காலம் இவ் ஊர்-
முன்பு இப்படி இல்லை -விஸ்லேஷத்திலே –ஆழ்வார் நிலை கண்டு ஊரெல்லாம் இப்பாடு படுவதால் இவ்வூர் –இக் காலத்திலும் இவ் வூரிலும்–காலாந்தரத்திலும் இல்லை–தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்–இவளுக்கு என்னாதே-இவ்வூருக்கு என்றது-இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு—எரி வீசும்-வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது-வீசும்-ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது

பத்ம கேசர சம்ஸ்ருஷ்டோ வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத
நிச்வாச இவ ஸீதாயா வாதி வாயுர் மநோ ஹர
–கிஷ்கிந்தா -1-71-

பத்மகேசர சம்ஸ்ருஷ்டோ -தாமரைப் பூவின் தாதுக்களோடு கலந்ததாய்
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத -மரங்களின் நடுவே இருந்து வெளி வருவதாய்
நிச்வாச இவ -மூச்சுக் காற்று போலே
ஸீதாயா-ஸீதா தேவி யினுடைய
வாதி -வீசுகிறது
வாயுர் -காற்று
மநோ ஹர -மனசை அபஹரிப்பதாய்-

பத்ம சௌகந்திக வஹம் சிவம் சோக விநாசநம்
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம்
-கிஷ்கிந்தா -1-115-

பத்ம சௌகந்திக வஹம் -தாமரை ஆம்பல் ஆகிய புஷ்பங்களின் மணத்தை தரித்து நிற்பதும்
சிவம் -பரிசுத்தம் ஆனதும்
சோக விநாசநம் -துன்பத்தை துடிப்பதையும்
தன்யா -பாக்யவான்களே
லஷ்மண-லஷ்மணா
சேவந்தே -அனுபவிக்கிறார்கள்
பாம்போ பவன மாருதம் -பம்பா சரஸ்சின் கரையில் உள்ள தோட்டத்தில் இருந்து வீசுகிற காற்றை-
(இந்த ஸ்லோக வியாக்யானம் நம்பிள்ளை ஈட்டில் விரிவாக அருளிச் செய்துள்ளார்)

அம் தண் அம் துழாய்-பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
சர்வேஸ்வரன் உடைய குளிர்ந்து அழகிதான திருத் துழாயை ஆசைப் பட்டு கண்ண நீர் சோரா நின்றாள் –தண் குளிர்ந்து உள்ள திருத் துழாய்-பனிப் புயல் -கண்ணீர் குளிர்ந்து இருக்காதே விஸ்லேஷத்தில்
இங்கு ஆனந்த அஸ்ரூ பொருந்தாதே-பனி -தர்ச நீயம் -என்ற அர்த்தம் இங்கு-இத்தை நம்பிள்ளை ஈட்டில் காட்டி அருளுகிறார் )

அம் தண் அம் துழாய்-அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு ) இந்த நெருப்பை ஆற்றலாவது-அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள் ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )

இக் குற்றம் செய்தாருக்கு பட வேண்டுவது இவ்வளவேயோ-இப் பரப்பு மாற ஏகார்ணவம் பெற்றாலும் போராது –இது வாயிற்று இவள் செய்த குற்றம் –
பிரகலாதன் எங்கும் உளன் கண்ணன் சொன்னது போல் திருத்துழாயை ஆசைப்பட்டதே இவள் குற்றம்
ஆகாசத்தில் இருந்து வாயோர் அக்னி தண்ணீர் பிருத்வி-பூநிலாய ஐந்தும் -தாய் குணம் பிள்ளைக்கும் வருமே-அக்னியிடம் வாயு குணம் இருக்கலாம்-இங்கு குழந்தை போல் தாயுக்கு -அக்னி குணம் வாயுவுக்கு )

மாமைத் திறத்துக்கு எலாம் –
இந் நிறத்தை அழிக்கைக்கு கிடீர் -இப்பாடு பட்டது

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே-நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்

பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே –
தாபத் த்ரயங்களும் போம்படி இருந்த படி –பனிப் புயல் வண்ணன் – நிர்ஹேதுக ஸ்வ பாவன்-குளிர்ந்த மேக வண்ணன் -என்றும்-மேக ஸ்வ பாவம் என்றுமாம் -கிருபா ஸ்வ பாவம் -குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்-ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்

செங்கோல்-
நாம் பட்ட படி படுகிறோம்-அத் தலையில் ஆஞ்ஞைக்கு ஒரு ஹானி வாராது ஒழிய வேணும்–ஒரு நான்று-இன்று தொடங்கி–தடாவியது –விலங்கிற்று-இவளை அழிக்க அன்றோ இவ் வொரு பொழுது நிலை குலைந்ததுசெங்கோல்-வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை–ஒரு நான்று தடாவியதே-ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது–பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்-செவ்வையே ஸ்வ பாவமான இது இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –

இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை –என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று-

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் –என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு-அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை-

எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே-பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )

அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று-

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி நேர் அறிவு கலங்கின படி-

மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி-

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும் ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –

பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே ஆர்த்தியினுடைய அதிசயம் –

இது தாயார் வார்த்தை –-காமம் சாரா வெறியதினிளமை   காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை
(விருப்பப்பட்டது நடக்காத போது -பித்து பிடித்து-அவனது இனிமை இளமை போல்வன நலம் பாராட்டும் துறை )-அதாவது-சம்ஸ்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது-சாரா -கிட்டாமையால் உண்டான-வெறி உண்டு -பிச்சு-அதனுடைய இளமையாவதுகாட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்-மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்-நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை-கிளவித் துறை

மந்த மாருதம் பராங்குச நாயகிக்கு தாபத்தை உண்டாக்கக் கடவது -என்றே சங்கல்பித்தான் போலும் –
என்று தோழி இரங்குகிறாள்- பெரிய திருவடியைக் கொண்டு நெஞ்சம் கவர்ந்த அனந்தரம் வாடையை அனுப்பி மேனி நிறத்தை கவர –மாமைத் திறத்துக் கொலாம் பனிப்புயல் வண்ணன்-வடிவும் ஸ்வபாவமும் மேகம் போல் இருக்க இப்படி விருத்த சங்கல்பம் பண்ணுவதே–வாடையை மட்டும் மாற்ற சங்கல்பம் கொள்ளாமல் தன் ஸ்வ பாவத்தையும் மாற்றிக் கொண்டானே-

நெடும் கடல் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நித்தலும் கால்
ஒடுங்கி நடப்பதும் தண் கார் பொழிவதும் ஊழி தன்னில்
கடும் கனல் பற்றிச் சுடாதே இருப்பதும் தும்பை புனைந்து
அடும் கனல் ஆழி அரங்கேசர் தம் திரு ஆணையினே
-திருவரங்கத்து மாலை –15-

(நம்பிள்ளை ஈட்டில் இவ்விடம் மூன்று விஷயங்கள் தன்மை மாறி
1-தத்வம் ஸ்வரூபம் ஸ்வ பாவம்
2-பெண்ணின் அழகு
3-ஸத்ய சங்கல்பம்
முதல் இரண்டும் த்ருஷ்டாந்தம்
நான்காவது
4-பிராட்டி சங்கல்பம் -பெருமாளாளாலும் கைவிடப் பட்டவனை ரஷிப்பேன் என்ற-தண்ணீரும் சுடுவது போல் -அவள் சங்கல்பம் மாறினதே –
பெருமாள் திரு உள்ளம் மாறாமல் இருக்க வேண்டி இருந்தாளோ –
விபீஷணனுக்கு-செய்தது போல் ராவணனையும் கை யாலாகாத தன்மைக்கு நிறுத்தி யதும் இவள் கார்யம் சரணாகதிக்கு கையில் ஒன்றும் இல்லாமல் இருக்க –செய்தாலும் மேலே கார்யகரம் ஆகாதது ராமன் திரு உள்ளம் மாறக் கூடாதே-இவன் சரணம் சொல்ல வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் இவள் செய்தாள்-அதே போல் இங்கும் நாயகிக்கு ஞான விபாக கார்யம் –-ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு பெருமாள் செய்யும் கார்யம் ஆகையால் அத்தை மீறக் கூடாதே )

தந்யைஸ் ஸ்ருதம் ததிஹ தாவக ராஸ காலே
கீதேந யேநஹி சிலாஸ் சவிலாம் பபூவஸ்
பஞ்சாபி கிஞ்ச பரிவ்ருத்த குணாநி பூதாநி
உர்வீ க்ருசாநு மருத் அம்பர சம்பராணி
–ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்46-இந்த பாசுரத்தைத் திரு உள்ளம் கொண்டே அமைக்கப்பட்ட ஸ்லோகம்–பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள் ஆழ்வார்கள் மட்டும் அல்லவே -ஆச்சார்யர்களும் கூடவே தானே-

இஹ -இந்த லோகத்தில்
தாவக ராஸ காலே –நீ குரவைக் கூத்து ஆடின போது
கீதேந யேந–யாதொரு வேணு கானத்தாலே
சிலாஸ்–கற்கள்
சவிலாம் பபூவஸ்-நீர்ப் பண்டமாயினவோ
கிஞ்ச-இன்னமும்
உர்வீ க்ருசாநு மருத் அம்பர சம்பராணி– பூமி அக்னி வாயு ஆகாசம் ஜலம்–என்கிற
பஞ்சாபி பூதாநி -பஞ்ச பூதங்களும்
பரிவ்ருத்த குணாநி -மாறுபட்ட குணங்களை யுடையவனாக
பபூவ –ஆயினவோ
தத் கீதம் தந்யைஸ் ஸ்ருதம் –அப்படிப்பட்ட கானமானது பாக்யாதிகர்களாலே செவி சாத்தப்பட்டது-

ராஸ க்ரீடை -திருக் குரவை-அங்கநாம் அங்கநாம் அந்தரே மதவோ மாதவம் மாதவம் ச அந்தரேணர் அங்கநா-அந்த சமயம் திருக் குழல் ஓசையால் கடின பதார்த்தங்களும் நீர்ப் பண்டமாய் உருகிப் போயினவே-பஞ்ச பூதங்களும் ஸ்வ ஸ்வ குணங்கள் தன்மைகள் மாறாடப் பெற்றனவே-பாக்ய சாலிகளாலே அந்த திவ்ய கானம் செவி சாத்தப் பட்டதே-கருவிலே திருவிலாத அடியேன் போல்வாருக்கு அந்த பிராப்தி கிட்டாதே)

ஸ்வ பாதேசம்
சம்சாரத்தில் பாஹ்ய விஷயங்களே எல்லாருக்கும் அனுகூலமாய் செல்லா நிற்க-தமக்கு எம்பெருமானோட்டை அல்லது செல்லாமல் பாஹ்ய விஷயம் நலியும்படி சொல்கிறது –விரஹிணியில் சேஷ்யந்தந்திரங்கள் எல்லாம் அவனைப் போலவே பின்ன ஸ்வ பாவராவர்-

தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்-இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் – அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க-அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத்துழாயில் ஆசைப்பட்டு –பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல் தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க-ரக்ஷகனான சர்வேஸ்வரன் தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி – தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று-வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!
-7-8-2-

உருவ வெளிப்பாடும் அவனைப் பார்க்க வேண்டும் -இப்பொழுது விபூதியைப் பார்க்கிறார் -துளசி கண்ணால் பார்க்கலாமே –-இதற்கு அந்தராத்மா என்று அன்றோ பார்க்கிறார் -அதனால் பாதிப்பு இல்லை -இதில் -ப்ரீதி அப்ரீதிகள் மாறி மாறி தானே இவருக்கு வரும் –சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!
–7-8-4-

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே!
அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி.

அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல்.
‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ?
அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. முடிச்சோதி யாய் -சங்கை போலே -பாதிப்பு -சம்சயித்து பட்ட கிலேசம் –

7-8-மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழி, உருவு வெளிப்பாடாய்ச் சென்றது.
கைக்கு எட்டாமையாலே உருவு வெளிப்பாடு என்று அறிவர் அன்றோ?
இனி. சர்வேஸ்வரன் தான் நினைத்த காரியம் செய்து தலைக் கட்டிக் கொள்ளுமளவும் நம்மை இங்கே
வைத்திருப்பான் என்னும் இடமும் அறிவரன்றோ?
ஆகிலும், அவனை ஒழியத் தரிக்க மாட்டாதவர் ஆகையாலே, இதனை நினைத்து ஆறி இருக்கவும் மாட்டாரே!
‘விரோதியைப் போக்கித் தரவேணும்’ என்று இவர் விரும்பினாலும்,
அவனும் இவரைக் கொண்டு தான் நினைத்த பிரபந்தங்களைத் தலைக்கட்டிக் கொள்ளாமளவும் இவர் விரும்பியதைச் செய்யானே!
இவர் விரும்பியதைச் செய்யாதிருக்கச் செய்தேயும், இவரை இங்கே வைத்து வாழ்விக்கும் உபாயங்களும் அறிந்திருக்குமே!

ஆகையாலே, சில பொருள்களை –மத்ஸ்யங்களை -உயிர் போகாதபடி ஒன்றிலே கோத்திட்டு வைக்குமாறு போலே,
முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து,
‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச் சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக் கொடு
போருகிற இவ் வாச்சரியத்தை எனக்கு அருளிச் செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க,(பாசங்கள் நீக்கி நிதான பாசுரம் )

வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது?
இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று
தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக் கொடுத்தான்.
அங்ஙனம் காட்டிக் கொடுத்த அது தானும் இவர் நினைத்தது அன்றே யாகிலும், அவன் காட்டிக் கொடுத்தது ஆகையாலே.
அதுவும் இவருடைய பிரீதிக்குக் காரணமாக இருக்கும் அன்றோ?

ஆக, இவர் ஒன்றைக் கேட்க, –
அதைத் தவிர -அவன் பல ஆச்சரியங்களைக் காட்டிப் பரிகரித்தான்.

அக்குரூரன், யமுனையிலே புக்கு முழுகினவாறே பிள்ளைகளை நீருக்குள்ளே கண்டு அஞ்சிக் கரையிலே பார்த்தான்:
அங்கேயும் கண்டான்;

நீரிற் புகுங்கண்டு தேரினைப் பார்க்கும் நிறுத்தியபொன்
தேரில் தொழும்பின்னை நீரினில் காணும் சிறந்தபச்சைக்
காரில் திறம்மெய் யரங்கனும் சேடனும் கஞ்சவஞ்சன்
ஊரிற் செலஉடன் போம்அக்கு ரூரன்தன் உண்மகிழ்ந்தே.’-என்ற திருவரங்கத்துமாலைச் செய்யுள் நினைத்தல் தகும்.

‘ஓ கிருஷ்ணனே! இந்த உலகமானது, மஹாத்துமாவான எவனுடைய மிகப் பெரிய ஆச்சரிய சொரூபமாயிருக்கிறதோ,
அப்படிப்பட்ட மிகப் பெரிய ஆச்சரியச் செயலை யுடைய உன்னோடு சேர்ந்தேன்,’ என்று கொண்டு

ஜகத் ஏதத் மஹாஸ்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத்மந:
தேந ஆஸ்சர்யவரேண அஹம் பவதா க்ருஷ்ண ஸங்கத:’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 19 : 7.

கண்டு,அவன் ஆச்சரியப்பட்டாற்போலே, இவரும்
அவனுடைய விசித்திரமான உலக உருவமாய் இருக்குந் தன்மையை அருளிச் செய்து ஆச்சரியமடைந்தவராகிறார்.
விஸ்மயம் வியப்பு விஸ்ம்ருதி மறப்பு

புகழும்நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியும், ‘நல்குரவும் செல்வும்’ என்ற திருவாய்மொழியும், இத்திருவாய்மொழியும்
பொதுவாக நோக்க ஒன்றாக இருந்தனவே யாகிலும் ஒவ்வொன்றற்கும் வேறுபாடு சிறிது உண்டு என்க.

புகழும் நல்ஒருவன்’ என்ற திருவாய்மொழி ஐயத்திலே – நோக்கு.–ஜெகதாகாரத்வம் –
‘நல்குரவும், செல்வும்’ என்ற திருவாய்மொழி மாறுபட்ட ஐஸ்வர்யத்திலே நோக்கு- -விருத்த ஆகாரம் அங்கு
இத்திருவாய்மொழி ஆச்சரியமாக உலக உருவமாய் இருக்குந்தன்மையிலே நோக்கு.-விசித்திர ஆகாரம் இங்கு-

எட்டாம் திருவாய்மொழியில் –
கீழ் உருவு வெளிப்பாடான பிரகாசம் நடக்கச் செய்தே அனுபவம் பெறாதபடி நிரோதித்து ஆர்த்தியை அதிசயிப்பித்த
வைசித்ரியம் கண்டவர் இந்த விசித்திர சக்தி யோகத்துக்கு ஹேது வானவனுடைய
ஆச்சர்யமாயுள்ள அர்த்தித்தவ ரூபத்தையும்
அபிமத சித்தியால் வந்த ஆதிக்யத்தையும்
அம்மேன்மை கிடக்கச் செய்தே உண்டான ஆஸ்ரித பவ்யதையையும்
உத்துங்க பவ்யதைகள் இரண்டுக்கும் ஸூ சகமான புண்டரீகாக்ஷத்வத்தையும்
அநந்ய ப்ரயோஜனர்க்கு அதிசயித போக்யனாம் படியையும்
சித்த பிராமகமான சேஷ்டிதாதிகளையும்
கர்மாத்யனுரூபமான துக்க ஜனகத்வத்தையும்
அதிசயித ஞானர்க்கும் அபோதகனார்ஹத்தையையும்
துரவபோதகத்வ ஹேதுவான ஸும்ஷ்ம்ய அதிசயத்தையும்
ஸூ த்ருட பிராமண ஸித்தமான ஸூஷ்மசித் அசித் பிரகாரத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பிரகார விசிஷ்டனான நீ ஒன்றுக்கு ஓன்று ஒவ்வாத விசித்திர ஆகாரமான ஜகத்தை விபூதியாகக் கொண்டு நிற்கிற
ஆச்சர்ய சக்தி யோகம் இருந்தபடி என் என்று புத்தி ஸந்நிஹிதனான ஈஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்து
தம்முடைய விரோதி நிவ்ருத்தியில் பணி இல்லாமை நினைத்து ஸந்துஷ்டாராகிறார் –

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று
 –68-தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால் அருளிச் செய்கிறார் –இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

————

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!
–7-8-1-

மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது.-மாயனை மன்னு-அங்கும் 30 பாட்டிலும் மாயன் அர்த்தம் கோத்து அர்த்தங்கள் உண்டே –மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது,
அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.–மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்ய வேண்டும்படி வார்த்தை அருளிச் செய்து, சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்து கொண்டு, இப்படிச் செய்த செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.-

நீயாய் – உலக உருவமாய் இருக்கும் அளவு அன்றே தனக்கே உரியதான விக்கிரகத்தோடு கூடி இருக்கும் இருப்பு?-இவர்க்குப் பரம பதத்திலே நித்திய ஸூரிகளுக்கு இனியனாய் இருக்கும் இருப்போடு, உலக உருவமாக நிற்கும் நிலையோடு வாசி அறப் போக்கியமாம்படி அன்றோ இவர்க்குப் பிறந்த ஞானத்தின் தெளிவு இருக்கிறபடி?-நீ நின்றவாறு– இப்படி இவை எல்லாமாய்க் கொண்டு நீ நின்ற பிரகாரம்.

முதல் திருவாய்மொழியிலே இவனுடைய இறைமைத் தன்மையை அனுபவித்திருக்கச் செய்தேயும், இதற்கு முன்பு கண்டறியாதாரைப் போலே புதியராய் அனுபவிக்கிறாராயிற்று.
குணானுபவத்தில் கணந்தோறும் புதுமை பிறந்து அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமாய் –திருவாய் 2. 5 : 4.- அனுபவிக்குமாறு போலேயாயிற்று, விபூதி அனுபவத்திலும் புதியராய் அனுபவிக்க வல்ல படி.-இவை என்ன நியாயங்கள் நீ அருளாய்-
இதனை அருளிச் செய்ய வேணும்.-அருச்சுனனுடைய சந்தேகத்தைத் தீர்த்தாற்போலே, என்னுடைய ஐயத்தையும் தீர்த்தருள வேணும்.-

———–

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!
-7-8-2-

உருவ வெளிப்பாடும் அவனைப் பார்க்க வேண்டும் -இப்பொழுது விபூதியைப் பார்க்கிறார் -துளசி கண்ணால் பார்க்கலாமே –-இதற்கு அந்தராத்மா என்று அன்றோ பார்க்கிறார் -அதனால் பாதிப்பு இல்லை -இதில் -ப்ரீதி அப்ரீதிகள் மாறி மாறி தானே இவருக்கு வரும் –சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

————

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–
7-8-3-

சித்திரம் தேர் வலவா – விசித்திரமாம்படியாகத் தேரை நடத்த வல்லவனே!
விசித்திரமாவது, துரோணன் கையும் அணியும் வகுத்து வாசலைப் பற்றி நிற்க,
அவனை வளைந்து அவனுக்கு அவ் வருகே தேரைக் கொடு போய் நிறுத்தி, அவன் போர் செய்தற்கு இடம் அறுத்தல்.-அன்றிக்கே,-‘வீடுமன் கையில் அம்பு தூரப்போய் விழும்; அருச்சுனன் கையில் அம்பு இவ் வருகே விழும்; ஆகையாலே, அவன் அம்பு விடப் புக்கவாறே தேரைப் பின்னே கழலக் கொடு போயும், இவன் அம்பு விடப் புக்கவாறே தேரைக் கிட்ட நிறுத்தியும், இப்படித் தேரை நடத்தும்படியை நோக்கி’ என்னவுமாம்.

ஒத்த வியவாய் ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் – ஓர் ஆகாரத்தாலே ஒத்தும், வேறு ஆகாரத்தாலே வேறுபட்டும் இருப்பனவுமாய், விலட்சணமுமான பல வகைப்பட்ட பொருள்கள் பலவற்றை யுடையையாய். என்றது, ‘தேவர் மனிதர் முதலிய சாதியாலே ஒத்தும், வடிவு வேறுபட்டாலே வேறுபட்டும் இருக்கிற பல பொருள்களுமாய்’ என்றபடி.-அன்றிக்கே, எல்லா ஆத்துமாக்களும் ஞானத்தாலே ஒத்திருக்கச் செய்தேயும் நான் நீ முதலிய வேறுபாட்டாலே வேறுபட்டவர்களாய் இருப்பர்கள் அன்றோ? அவற்றைத் தெரிவித்தபடி ஆகலுமாம்.-இவை என்ன விடமங்களே – இவை என்ன சேராச் சேர்த்தியான செயல்கள் தாம்?-

———–

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!
–7-8-4-

கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே!
அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி.

அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல்.
‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ?
அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. முடிச்சோதி யாய் -சங்கை போலே -பாதிப்பு -சம்சயித்து பட்ட கிலேசம் –

அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும்.
அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிற ரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது! அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச் செய்தாராம்.

உள்ளப் பல் யோகு செய்தி – திரு வுள்ளத்திலே இரட்சண சிந்தை பல செய்யா நிற்றி. ஆத்துமாக்கள் பல்வேறு வகைப்பட்டிருத்லைப்போலும் போருமாயிற்று,-அவன் செய்யும் இரட்சண சிந்தையில் பரப்பு.-இவன் தலையிலே இசைவு இன்றிக்கே இருக்கச் செய்தே,
‘இவன் நம்மைக் கிட்டினானாம் விரகு ஏதோ?’ என்று அதற்கு உறுப்பாக உபாய சிந்தை செய்து திருக் கண் வளர்ந்தருளுகிறபடி’-இவை என்ன உபாயங்களே – சேதநர் பலரானால் அவ்வவருடைய இரட்சணங்களும் பலவாயே அன்றோ இருப்பன? அதற்குத் தகுதியாக உபாயங்களையும் அறியுமே முற்றறிவினன் ஆகையாலே. இவை என்ன விரகுகளே!

————

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.
–7-8-5-

இத்திருவாய்மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது.-அதாவது, ‘மயர்வற மதிநலம் அருளி, பின்னையும் எனக்குப் பொருந்தாததான சம்சாரத்திலே என்னை வைத்து
வாழ்வித்துக் கொடு போகிற இவ்வாச்சரியம் இருந்தபடியை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்கிறார்.-

உனக்கே அறக் கொண்டிட்டு--துயர் அறு சுடர் அடி தொழும்படியாகச் செய்து.
‘பாசங்கள் நீக்கிற்றும் தனக்கே அறக்கொண்டதும் எதனைக் காட்டி?’ என்னில்,-வாசம் மலர்த் தண்துழாய் முடி மாயவனே – வைத்த வளையத்தில் அழகைக் காட்டியாயிற்று,புறம்பு உண்டான பற்று அறுத்ததும், தனக்கே யாம்படியாகச் செய்ததும்.-அருளாய் – இவ்வளவு புகுர நின்ற என்னை இங்கே இட்டு வைத்து நலியவோ?

பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி- உன் பக்கலிலே அறிவைப் பிறப்பித்து, பின்னையும் இதிலே பொருந்தாதபடியான என்னைச் சம்சாரத்திலே வையா நின்றாய்.-இவை என்ன மயக்குகளே–இவை என்ன தெரியாத செயல்கள் தாம்!-புறம்பு உண்டான பற்றை அறுத்து உன் பக்கலிலே அன்பைப் பிறப்பிக்கையாலே நீ அங்கீகரித்தாயோ என்று இரா நின்றேன்;
பின்னையும் இச் சம்சாரத்திலே வைக்கையாலே கைவிட நினைத்தாயோ என்று இரா நின்றேன்; இது என்ன மயக்கம்!

—————

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே
.–7-8-6-

விஸ்ம்ருதி  – விஸ்மரணம்  –தொடக்கமான விருத்த பதார்த்தங்களை விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அனுசந்தித்து விஸ்மிதர் ஆகிறார் –-இவை என்ன துயரங்களே – உனக்கு இவற்றில் அருமை இன்றியே விளையாட்டாய் இரா நின்றது; எங்களுக்கு அவை தாம் துக்கத்தைக் கொடுக்கக் கூடியவையாய் இரா நின்றன.-

———–

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே
.–7-8-7-

துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச் செயக் கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில்,-‘முடிச்சோதி’ என்ற திருவாய் மொழியிற் கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று.-அடியவனான நான்’ என்கிற அபிமானம் அடிக் கழஞ்சு பெற்றிருக்கும்.- இன்பம் செய்யும் மானம் அன்றோ இது -சோஹம்-கூடாதே -தாஸோஹம் -கூடுமே-இவை என்ன சுண்டாயங்கள்- உனக்கு விளையாட்டாக இரா நின்றது, எங்களுக்குத் துக்கத்திற்குக் காரணமாக இராநின்றது.-

———-

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே
–7-8-8-.

எல்லா உலகங்களையும் படைத்து உள்ளும் புறம்பு பரந்து இப்படி நிர்வகித்து வைத்து அறிய
முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.-என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா –-என்ன விளையாட்டுகளை யுடையையாய் நிற்கிறாய், என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே! இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற அரியை –-எங்கனே நின்றிட்டாய் -பெரியவாச்சான் பிள்ளை
இன்ன படிப்பட்ட தன்மையை யுடையை என்று, எல்லாப் பொருள்களுக்கும் காரணனாய் இருக்கிற உன்னை, எத்தனையேனும் மிகுதியுற்ற ஞானத்தை யுடையவர்களாலும் அறிய ஒண்ணாதபடி நிற்புத்தி:-இவை என்ன இயற்கைகளே–உனக்கு இவை தாம் விளையாட்டாக இரா நின்றன; எங்களுக்கு இவை தாம் ஆச்சரியமாக இரா நின்றன-

————-

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே
.–7-8-9-

ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஐம்புலன்களும் அவனுக்கு விபூதியாக இருக்கிற இருப்பை அருளிச் செய்கிறார்.-உன்னுடைய பெருமையையும் ஸூஷ்மத்தையையும் அனுசந்திக்கப் புக்கால் உன்னுடைய வை லக்ஷண்யத்துக்கு முடிவு இல்லை-

———

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே
 –7-8-10-

வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் –காரணாமாய் –அதி சூக்ஷ்மமாயிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும் விபூதியாக வுடையவனாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.

இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் –
இதனைக் காட்டிலும் வேறு சூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி.
அதாவது,-இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே பிரமத்தினுடைய நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச வேண்டும்படி,
காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு.-ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று.-

அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப- பரமபதத்தை யுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது.-அல்லியை யுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமார்பினையுடையவனே!-அச்சுதனே –-அவ்விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரமபதத்திலே எழுந்தருளி யிருக்கிற இருப்பை எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!

வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் –-இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்: ‘இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சொல்லிற்றாமத்தனை போக்கியல்லது, உனக்கு ஓர் அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்; அப்போதைக்கு, அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – -‘அது அன்று என்கிறது’ என்னுதல்.

அன்றிக்கே, உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவு இன்றிக்கே, இருந்தார்களாகிலும், அவர்கள் ஒன்றைச் சொன்னால், ‘ஸ்ரீவைகுண்டத்திலே நித்திய சூரிகள் நடுவே அவர்களுக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்றிக்கே
இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே, இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.

———

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே
.–7-8-11-

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை -இன்னபடிப்பட்டது ஒரு தன்மையையுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று.-வேதங்களும் மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று.

ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது,
அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ?

வண்ணம் –பா.-அன்றிக்கே, வண்ணம் என்று ஓசையாய், ‘நல்ல ஓசையை யுடைய செந்தமிழ்’ என்னுதல்.

ஆம் வண்ணத்தால் உரைப்பார் –-பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப் பெற்று அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில், அத் தேவை எல்லாம் ஆழ்வார் தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும்.-அமைந்தார் தமக்கு என்றைக்கும் –-அவர்களுக்கு இவ் வாத்துமா உள்ளதனையும், ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா; ஆழ்வார் அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்வாமி எம்பார் வைபவம்-ஸ்ரீ மதுரமங்கலம்-திரு அவதார ஸ்தலம்.-

January 29, 2026

விஶ்வாவஸூ ௵ தை ௴ புனர்பூசம் ஸ்ரீ எம்பார் ஆயிரமாவது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் –திரு அவதார ஸ்தலம் :  ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

ஸ்ரீ ராமானுஜ பதாச்சாய கோவிந்தா ஆஹ்வான பாயிநீ
ததாயத்த ஸ்வரூபாஸா ஜீயான் மத் விஸ்மரஸ் தலீ

புஷ்யே புனர் வஸூ தினே ஜாதம் கோவிந்த தேஸிகம்
ராமானுஜ பதாம்புஜ ராஜ ஹம்ஸம் ஸமாஸ்ரயே

மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம்
த்யாயேயம் யாமுநார்யம் மம ஹ்ருதி தாநவை ராமமேவாபியாயாம்
பத்மாஷம் ப்ரேஷிஷீய ப்ரதமமபி முநிம் நாதமீடே சடாரிம்
ஸ்தௌமி ப்ரேஷேய லஷ்மீம் சரணம் சரண ஸ்ரீ தரம் சம்ஸ்ரயேயம்–ஸ்ரீ குரு பரம்பரா வணக்கம்

வந்தே கோவிந்த தாதௌ முநிமத மநவை லஷ்மணார்யம்-மஹாந்தம் த்யாயேயம் –
ஆச்சார்யரான ஸ்ரீ கோவிந்தர் என்னும் ஸ்ரீ எம்பார் -தந்தையான ஸ்ரீ கூரத்தாழ்வான் –
த்வந்த ஸமாஸம் -சம பிரதானம் இல்லை -அர்த்த கௌரவத்தால் கோவிந்த முதலில்
இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -பிரபலம் போல் இங்கும்

ஸ்ரீ கோவிந்த பட்டரையும்
என் பிதாவான ஸ்ரீ வத்ஸாங்க மிஸ்ரரையும்
வந்தனம் செய்கிறேன்
அதன் பிறகு ஸ்ரீ மத் ராமானுஜ முனிவரை எப்போதும் சிந்திக்கக் கடவேன்
பெரிய நம்பியை த்யானம் செய்வேன்
யாமுனாச்சார்யரை ஹ்ருதயத்தில் வைக்கக் கட வேன்
ராம மிஸ்ரரை அடையக் கடவேன்
புண்டரீகாக்ஷரைப் பார்க்கக் கடவேன்
சம்பிரதாயத்துக்கு பிரதம ஆச்சார்யரான ஸ்ரீ மன் நாதமுனிகளை ஸ்துதிக்கிறேன்
நம்மாழ்வாரைப் புகழ்கிறேன்
ஸ்ரீ மஹா லஷ்மியைத் தர்சிக்கக் கடவேன்
வேறு சரணம் இல்லாதவனாய் ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார்–குழந்தை பிறந்த உடனேயே ஆச்சார்யரான பட்டர் தொழும் எம்பார் -வாழித்திருநாமம் –பட்டரை எம்பெருமானாராகவே திரு உள்ளம் பற்றி இருக்கும் முதலிகள் -கூரத்தாழ்வானால் தனக்கும் பேறு -அர்வாஞ்சோ இத்யாதி போல் இருவரும் -இல்லை எனக்கு எதிர் -சாத்விக அஹங்காரம் -பட்டருக்கும் எம்பாருக்கும் இருக்குமே-

ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல் நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –அதாவது – இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் – சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ – என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

பெரிய திருவடி அம்சம் இவர் என்பர் -எண்ணற்கரிய வைபவம் இவருக்கு –திருவடி பெருமாளுக்கு போல் எம்பெருமானாருக்கு எம்பார் -=கருடத்வஜன் -பார்த்த சாரதியை எம்பெருமானார் -அவர் கருடனான எம்பாரை சிந்திக்க -அவர் த்வய மந்த்ரம் சொல்லி குழந்தைகளைக் கூட்டி வர -த்வயம் பரிமளித்ததே -பெருமாளுக்கு திருவடி போல் கைங்கர்யம் செய்ய ஆசை கொண்டு பெரிய திருவடி எம்பராகி எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்தார் அன்றோ –

சிஷ்யன் ஆச்சார்யன் தேஹம் ரக்ஷணம் பண்ணக் கடவன் -ஆச்சார்யன் சிஷ்யன் ஆத்ம ரக்ஷணம் பண்ணக் கடவன் -எம்பார் எம்பெருமானை யாதவப்ரகாசரிடம் இருந்து ரஷித்த விருத்தாந்தமும் திருமலை நம்பி மூலம் எம்பாருடைய ஆத்ம ரஷணம் பண்ணி அருளியதும் பிரஸித்தம் அன்றோ –

திருமலை நம்பி இவருக்கு சமாஸ்ரயணம் பண்ணி இவருக்கு ஆச்சார்யராக இருக்க எம்பெருமானாரை ஆச்சார்யராக கொள்ளுவான் என் என்னில் -தாரை வளர்த்துக் கொடுத்த பின்பு-விற்ற மட்டுக்கு புல்லிடுவார் உண்டோ -என்றாரே –

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா  நபாயிநீ |
ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஸ்ரமஸ்தலீ 
||–ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப் பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்ப வராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.–எம்பார் நமக்கு நிழல் தருபவர் -எம் விஸ்ரமஸ்தலீ 

திருமழிசை ஆழ்வாரும் எம்பாரும் ஒரே சந்நிதியில் ஸ்ரீ ரெங்கத்தில் இன்று சேவிக்கலாம் -ஒரு பிறவியிலே இரு பிறவியானார்கள் -இருவரும் பல சம்ப்ரதாயம் இருந்து விட்டு வந்தவர்கள் –
எம்பாரின் திருநக்ஷத்ரமும் எம்பெருமானாரை திரு நக்ஷத்ரமும் அடுத்தடுத்து -குரு பரம்பரையிலும் அடுத்தடுத்து -உள்ளார்கள் -நமக்கு காக்கும் நிழலாக இருப்பவர்

சாயா -பல அர்த்தங்கள்-மதுரம்- தாப ஹரத்வம் -தொடர்ந்து வரும் நிழல்–சாயா க்ரஹம் –உருவாக்குவது ஸூர்யன்-ராமானுஜ திவாகரன் அன்றோ- -ராகு கேது -சாயா கிரஹங்கள் -ஸாத்ருஸ்யம் -பிரதிபிம்பம் -ஸன்யா தேவி ஸூர்யன் பத்னி -வைஸ்வந்த மனு -யமன் -யமி -மூவரும் பிறந்தார்கள் -வெப்பம் தங்கள் விஸ்வகர்மா தந்தையிடம் சென்று-பெண் குதிரையாகஇருக்க ஸூர்யன் ஆண் குதிரையாக இவர்களுக்கு அஸ்வினி குமாரர்கள் பிறந்தார்கள் -பிரதிபிம்பம் இங்கு வைத்துப் போனாள் -சனி பகவான் பிறந்தார் -மெதுவாக நகரம் -30 வர்ஷம் -குரு ஒரே வருஷம் –

அறிவோமாய் வல் வினை தீர்ப்பான் நிழலும் அடி தாறுமானோம்-பெரிய திருவந்தாதி -தொடர்ந்து சேஷப்பட்டு இருக்கும்-நிழல் அநந்யார்ஹ சேஷத்வம் –அடி தாறு-பாதுகையும் ரேகையும் -சாயாயிவ -பூமி தேவியும் நீளா தேவியும் பெரிய பிராட்டியாருக்கு நிழல் போல்வனர்-மரத்தின் நிழல் தஞ்சமாக இருக்கும் –வாஸூ தேவ தருச்சாயா-கற்பக வ்ருஷ வாஹனம் -பாஹுச்சாயா அவஷ்டாப்யாம் ஸீதா தேவி – -எம்பார் நிர்வாஹகங்கள் -வார்த்தா மாலை -கால ஷேபம் செய்து இளைப்பாறலாம் -ராகு கேது -மனம் வேறுபாடு -உள்ளங்கை நாயனார் -பரம விரக்தரானார் அன்றோ –பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -வைராக்ய நிதி -ஆகவே சாயா க்ரஹமும் பொருந்தும்-நிஜம் அல்ல நிழல் என்ற எண்ணம் -பெரிய நம்பி உடன் கூரத்தாழ்வான் சென்ற ஐதிக்யம் –பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை அப்பன் -எம்பெருமானாரை விட்டு தனித்து இல்லாமல் இருந்தார் அன்றோ-
சாத்ருஸ்யம் -இருவரும் இன்றும் அர்ச்சா திருமேனிகளில் சாத்ருஸ்யம் சேவிக்கிறோம் -அருளிச் செயலில் அனுபவத்திலும் சாத்ருஸ்யம் -காண்கிறோம் –

பெருமாள் ஆச்சார்ய சிஷ்ய ரக்ஷணம் மூன்றையும் செய்து அருளியவர் எம்பார்-தர்மம் ரக்ஷணம் -வேசி வ்ருத்தாந்தம்-எவ்வுலகத் எவ்வவையும் காக்கும் எம்பெருமானுக்கு மூன்று ஆபத்துக்கள் வந்து கழிந்தன என்று எம்பார் அருளிச்செய்வார்.பாஞ்சாலியும், கஜேந்திரனும், ப்ரஹ்லாதனும் எம்பெருமானை அழைத்த போது, எம்பெருமானுக்கு தான் ஆபத்து ஏற்பட்டது என்பது எம்பாரின் திருவுள்ளம்.ஆகவே எம்பெருமான் இவர்களுக்கு, இருக்குமிடங்களில் இவர்களுக்கு வந்த ஆபத்தை போக்கி, தனக்கு வந்த ஆபத்தையும் போக்கிக் கொண்டான் என்று எம்பார் அருளிச்செய்வார்.

கொம்பினார் பொழில் வாய் குயில் இனம் கோவிந்தன்  குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று  ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4- 9-எம்பார் அருளி செய்யும் வார்த்தை –ஈஸ்வரனுக்கு மூன்று ஆபத்து வந்து கழிந்தது -என்று அருளிச் செய்வர் –
அதாவது-திரௌபதிக்கும்-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கும் -ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கும்
உதவிற்றிலன் ஆகில் -சம்சாரிகள் ஈச்வர தத்வம் இல்லை என்று எழுத்து இடுவர்கள் இறே-ஆழ்வாரும் –எங்கனம் தேறுவர் தமர் -என்று தம்முடைய இழவிலும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் அத்யாவசாயம் குலைகிறதோ -என்று இறே அஞ்சுகிறது – பிழைக்கின்றது அருள் (திருவாய்-9-4-3 )-என்று இறே அஞ்சுகிறது பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவன்-என்று தம்முடைய இழவுக்கு நோகை அன்றியிலே ஈஸ்வரன் அருளுக்கு இறே இவர் நோவுவது

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3-அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று-
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது-ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது-
ஆனபின்பு-பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த-இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ-என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பிப் போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்-
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்-

முதல் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
இரண்டாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் யாளி வாஹனமும்
மூன்றாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் மங்களகிரியிலும்
நான்காம் நாள் காலையில் ஸிம்ஹ வாஹனமும் மாலையில் ஹம்ஸ வாஹனமும்
ஐந்தாம் நாள் காலையில் பல்லக்கிலும் மாலையில் சந்திர பிரபை வாஹனமும்
ஆறாம் நாள் காலையில் குதிரை வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஏழாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் யானை வாஹனமும்
எட்டாம் நாள் காலையில் பல்லக்கு வாஹனமும் மாலையில் மங்களகிரி வாஹனமும்
ஒன்பதாம் நாள் திருத்தேரும்
திருவவதார திரு நக்ஷத்ரம் காலையில் சாற்று முறையும் மாலையில் மங்களகிரி வாஹனமும் இரவில் புஷ்ப பல்லக்கு வாஹனமும்
அடுத்த நாள் காலையில் சாற்று முறை தீர்த்த கோஷ்டியும் ஸ்கந்தப் பொடி உத்ஸவமும் நடைபெறும்

தை புஷ்ப பிரஸாதம் வருஷா வர்ஷம் எம்பெருமானார் எம்பாருக்கு அனுப்பி அருள்கிறார்

விஷ்ணு த்வீதீயர்-கருட பஞ்சாசத் தேசிகர் –ஏக -பார்த்தசாரதி எம்பெருமானாராக -த்வீதீயர் -எம்பார் -பெரிய திருவடி அம்சம் -குருபரம்பரையிலும் எம்பெருமானருக்கு அடுத்த ஸ்தானம் -இவருக்கே -இவர் திருவடி நிலையில் பட்டரையும் நாம் ஸேவிக்கலாம்

ஆச்சார்ய அபிமான துங்கனாக -எம்பார்
எம்பெருமானாரை ரஷித்துக் கூட்டி வந்ததால் தேவப்பெருமாளின் அபிமானம் பெற்றவர்
பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே-பிராட்டியார் அபிமானம் ஸ்பஷ்டம்
பெரிய திருமலை நம்பி ராமானுஜர் அபிமானம் இவர் சரித்ரத்திலே ஸ்பஷ்டம் –

ஞானக்கை தா –முதலியாண்டான் -எம்பார் -இவரும் ஒரு முதலியாண்டான் சிஷ்யரை கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள-அபராத ஷாபனம் கொள்ள -கீழே விழுந்தவனை இருவரும் கைக்கொள்ள கரையேறுவது ஸூலபம் அன்றோ -என்றாராம்

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –-10-2-

இதுக்கு திருமலை நம்பி பணிக்கும் படி —
தான் பிரிவாலே நொந்த படியாலே –ஜரா மரண மோஷாயா-ஸ்ரீ கீதை -7-29–என்று
ஆஸ்ரயிக்கும் திரளின் நடுவே என்னைக் கொடு போய் வைக்க வல்லையே -என்கிறாள் -என்று அருளிச் செய்வர்-பகவத் அனுபவம் பண்ணுமதிலும் துக்க நிவ்ருத்தி தேட்ட மான படியாலே சொல்லுகிறாள் என்று —கைவல்ய கோஷ்டியில் –மாற்றோலை பட்டவர் –ஓலை மாறப்படுகை கேவலர் -முக்தர் இருவருக்கும் ஒக்கும் –மாற்றுகை -நீக்குகை-பகவத் அனுபவத்துக்கு மாற்றோலை -கேவலர்
சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர் என்றுமாம்

கேவலர் தனித் தனியே யாய்த்து அனுபவிப்பது —திரளாய் இருக்கக் கூடாது -என்று –
எம்பார்
 அருளிச் செய்யும் படி
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாகிறது -அடியார்கள் குழாங்களாய்-என்னை அத்திரளின் நடுவே கொடு போய் வைக்க வல்லையே என்கிறாள் என்று —சம்சாரத்தில் ஓலை மாற்றப் பட்டவர்கள் –
நாம் ரஹஸ்யத்திலும் அனுசந்திப்பது சம்சார நிவ்ருத்தி -நமஸ் சப்தார்த்தம் -பூர்வகமாக அனுபவிக்கும் அனுபவத்தை இறே-சதுர்த்தியாலும் நாராயண சப்தார்த்தத்தாலும் –இங்கே பகவத் அனுபவம் உண்டானாலும் காதாசித்கம் இறே-சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக பெறும் அன்று இறே பரிபூர்ண கைங்கர்யத்தைப் பெறலாவது-

அங்கன் அன்றிக்கே கூரத் ஆழ்வான் சிஷ்யர் ஆப்பான் பணிக்கும் படி –
ஆழ்வான் பணிக்கக் கேட்டிருக்கவுமாம் இறே – அவன் கொடு வரச் சொன்னவர்களைத் தவிர்ந்து –
மாற்றோலைப் பட்டோம்
 என்று அவர்கள் திரளிலே என்னை வைக்க வல்லையே -என்கிறாள் –
அவன் தானே நலிய கூட்டி வரச் சொல்லும் சிஸூ பாலாதிகள் திரளில் வைத்தாலும்
அவனை பார்க்கும் பாக்கியம் பெறுவேனே- அவர்கள் நடுவே இருந்து நலிவு படுவதிலும் கொடியதாய் உள்ளதே உங்கள் நலிவு என்றுமாம் –


வீர சுந்தரனோடே எம்பார் விரோதித்து இருக்க , அவ் ஊரில் உள்ளான் ஒருவன் அவனுடைய எதிரியாய் அவனுக்கு அஞ்சி , எம்பார் திரு அடிகளில் சரணம் புக , ஸ்ரீ பாதத்திலே வர்திக்கிறவர்கள் அவனுடன் பண்டே விரோதம் உண்டாய்  இருக்கச் செய்தே இவனையும் கைக் கொள்ளக் கடவதோ என்ன
நம்மை -சரணம்-என்று புகுந்தவனை நாம் கை கொண்டால்சரணா கதி தர்மமே எல்லா வற்றையும் ரஷிக்க வல்லது காண் என்று அருளி செய்தார்-

வைராக்யம் -ராஸிக்யம் -ஒவ்வொன்றிலும் ஸீமா பூமியாக இருந்தவர் என்பதை விளக்கும் ஐதிஹ்யங்கள் பலவுண்டு

நம்பனை நரஸிம்ஹனை — -பிரகலாதன் -கஜேந்திரன் -திரௌபதிக்கு ஆடை சுரந்தது -மூன்று பரீஷைகளிலும் தேறின தத்வம்-என்பாராம் எம்பார் ஸ்வாமிகள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் 

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வே யூதி
பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான்
-2-1 1- –

இவ் விடத்தை  ஸ்ரீ உய்ந்த பிள்ளை-ஸ்ரீ திரு வரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீ எம்பெருமானார்
காலத்தில் எழுந்து அருளி இருந்தார் ஒரு அரையர் – பாடா நிற்க –
திரு வோலக்கத்திலே
அத் தூதன் என்று -பெருமாளை காட்டுவது –
அப் பூச்சி என்று கண்ணை இறுத்து கொண்டு வருவதாக அபிநயிக்க –

ஸ்ரீ உடையவர் பின்னே சேவித்து எழுந்து அருளி இருந்த ஸ்ரீ எம்பார் –
திருக் கைகளை திருத் தோள்களோடு சேர்ந்து காட்ட –
அவரும் அப்படியே அபிநயித்து கொண்டு வர –
இதுக்கடி என் என்று விசாரித்து புரிந்து பார்த்து அருளி –
ஸ்ரீ கோவிந்த பெருமாள் இருந்தீரோ -என்று அருளிச் செய்தார்-என்று பிரசித்தம் இறே –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
36–ஒருத்திக்காக கடலை யடைத்து- இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும் எழுத்து வெட்டின அம்புகளை புக விட்டு குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய இந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே
-38-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –யோகிகள் யோக அப்யாசம் பண்ணும் போது யோகம் சாத்மிக்கைக்காக லோக யாத்ரையிலே ஒன்றுவார்கள்— அது போல் இவரும் பகவத் அனுபவம் சாத்மிக்கைக்காக லோகங்களில் பதார்த்தங்களின் மேல் கண் வைததார் –அவையும் பகவத் விஷயத்துக்கு ஸ்மாரகமாய் நலிகிறபடி –
மயர்வற மதி நலம் அருள பெற்றவர் ஆகையாலே –நம்மை லோக யாத்ரையின் நின்றும் வேத (வைதிக )யாத்ரையில் மூட்டும் தனை அருமை போரும்-ஆழ்வார்களை – வேத (வைதிக )யாத்ரையில் நின்றும்
லோக யாத்ரையிலே மூட்டுகை –நம்மை சம்சாரத்தில் உண்டான ருசி வாசனையை தவிர்த்து பகவத் விஷயத்தில் உண்டாக்குக்கைக்கு உள்ள அருமை போரும்-ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் ருசி வாசனையை தவிர்த்து –சம்சாரத்தில் உண்டாக்குக்கைக்கு – இரண்டும் எம்பார் அருளி செய்தார் –

பத்து நிர்வாஹகங்கள் திருவாய்மொழியில் உண்டு -அர்த்தபஞ்சக பாரமாக ஒவ்வொன்றிலும் இரண்டு நிர்வாஹகங்கள்

மிக்க இறை நிலை பற்றிய இரண்டு நிர்வாஹகங்கள்–2-4-5-/4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
 –2-4-5-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

4-3-கோவை வாயாள் பொருட்டு ப்ரவேஸம்-இதுதனக்கு மூன்று படியாக நிர்வஹிப்பர்கள் நம் முதலிகள்;
ஒன்றை கேட்டால் -வேறு ஒன்றைக் காட்டி சமாதானம் பண்ணுவது-அத்தையே கொடுப்பதாகச் சொல்லுவது – அத்தையே கொடுப்பது -என்ற மூன்று நிலைகளும் மூவரும் அருளுவார்கள் –எம்பார், “அம்புலி அம்மானைப் பிடித்துத் தரவேண்டும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் –
உடைத்த தேங்காயைக்-கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே, வேறு ஒரு குணத்தைப் -காதற்குணத்தை.- பிரகாசப்படுத்தி அனுபவிப்பிக்க அனுபவிக்கிறார்,’ என்று அருளிச்செய்வர்.

மெய்யா உயிர் நிலையும் –4-5-வீற்று இருந்து -4-6-தீர்ப்பாரை யாம் இனி–மோர் உள்ளதனையும் சோறோ -அசங்கதி ஏவ சங்கதி -என்பாராம் எம்பார்அசங்கதி ஏவஎம்பெருமான் சேராததால் வந்த துக்கம் தன்னடையே வந்தது என்றவாறு

மெய்யா உயிர் நிலையும்8-8-சரீர ஆத்ம பாவம் -ஆத்ம வஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே-பற்றுக் கோடான தன்னைக் காட்டி பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர் -அன்றிக்கே-ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே – இரண்டரை பாசுரங்களாலும்-இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறியகலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –

தக்க நெறி–வீடுமின் முற்றவும் -அவதாரிகை –தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது-அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே- உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

தக்க நெறி5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்–பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள் மனத்திலே நிலை பெற்று மிகவும் நலிய, அதனாலே நெருக்குண்டு நோவு படுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச் செய்கிறார்’ என்று எம்பார் அருளிச் செய்வர்.– உன் திருவடிகளிலே வந்து சேர்ந்து உன்னைக் கிட்டி அநுபவிக்கும்படி–காயிக அனுபவம்-எம்பார் நிர்வாகம், “என் கண் கட்குத் திண் கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது.

விரோதி ஸ்வரூபம்ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம் விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

விரோதி ஸ்வரூபம்மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே
 –3-2-8-சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ -‘ஒரு கொசுக் கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?-என்கிறார்.-ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார்.

வாழ்வு-தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே
.–3-2-10-இவர் நசை யற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப் பிராப்தி -பற்றாதார் -பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெரு விடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத் திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந் நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.-‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு-சஜாதீயமான – ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, அவ்வோபாதி கிலேசம் – ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால்-விஸ்லேஷத்தால் –
உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி.

இனி,‘பகவான் கைவிட்ட பின்னர்-பகவத் அலாபமே யான பின்பு – யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ?-அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

வாழ்வு-4-9–நண்ணாதார் முறுவலிப்ப–ப்ரவேஸம்-உடம்பு வேண்டா; உயிர் வேண்டா,’ என்று இவற்றை வெறுத்துப் பார்த்தார், தாம் ‘வேண்டா’ என்றவாறே தவிரும் என்று நினைந்து. அவை தவிர்ந்தன இல்லை. ஒன்றனைப் பெறுகைக்கு மாத்திரமே அன்றி முடிகைக்கும் உன் தரவு -சீட்டு-வேண்டுமாகில்
அதனைத் தந்தருள வேண்டும்,’ என்கிறார் இத் திருவாய் மொழியில். இந்த அமங்கள வார்த்தையைத் -பணி கண்டாய் சாமாறே – திரு முன்பே விண்ணப்பஞ் செய்ய வேண்டும்படியாகக் காணும் இவர் இவ்வுலக வாழ்வினை வெறுத்தபடி. –புருஷார்த்தம் பெற உனது சங்கல்பம் லோக யாத்ரையை நினைத்து -இவை கண்டு இராதே திருவடி சேர்த்து கொள்ள வேண்டும் -எனபது பொருந்தாதே –
விச்லேஷத்தில் துக்கிக்கார் -அத்தைப் போக்கி கேட்க வேணுமே -முதலில் -இதுவே தான் பிரகரணம்
இதற்கு இரண்டு வழிகளில் எம்பார் கூரத் ஆழ்வான் நிர்வாகங்கள் -மேலே வைராக்ய சீலர் எம்பார் -காமத்துக்கு இருள் தேட்டம் -அவன் எங்கும் நிறைந்து இருப்பதால் ஒளி மயமே எங்கும் என்பார் -மற்றவற்றைப் பார்க்காமல் கூரத் ஆழ்வான் -தவளையும் பார்த்து ஜீவ காருண்யம் அதிகம் அவர் நோக்கு வேற எம்பார் நோக்கு வேறே –

எம்பார்,-
உன்னைப் பிரிந்திருந்து படுகிற துன்பத்தின் அளவு அன்று, உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இம்மக்கள் நடுவே இருக்கிற இருப்பால் படுகிற துன்பம்;
இதனைத் தவிர்த் தருள வேண்டும் என்கிறார்,’ என்று அருளிச் செய்வர்

கதையைக் கையிலே யுடையவனாய் நான்கு மந்திரிகளோடு உயர எழுந்தான்,’ என்கிறபடியே,
இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப்பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தான் ஆயிற்று.-ந நமேயம் என்னாதது கதை ஒன்றே ஆயிற்று -அத்தை எடுத்து தோளில் வைக்க வேண்டும் – அதுவும் வேண்டாத படி நால்வரும் –இவன் கைகள் கால்கள் போல நால்வரும்-இத்தால், ஒருவன் ‘பகவானிடத்தில் பகைமை கொண்டு அதிலே நிலை நின்றான்’ என்று அறிந்தானாகில் தன்னைக் கொண்டு அகல அன்றோ அடுப்பது என்பது போதருகின்ற தன்றோ?-
கர்ணன் இந்த தப்பித் தானே பண்ணினான் –
ஆத்மா உஜ்ஜீவனம் பார்க்காமல் செஞ்சோற்று கடன் என்று தேக யாத்ரை பார்த்தானே –
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் –தாழ்வாக நினைப்பார்கள் -பக்கல் நெஞ்சே கூசித் திரி –
அசோகா வனம் பிரிவு –வால்மீகி ஆஸ்ரமம் பிரிவில் அவ்வளவு துயரம் இல்லையே –
ராம விரஹத்துக்கு மேலே ராஷசி கணங்கள் கூட இருப்பது அதில் -சாதுக்கள் கோஷ்டியில் அன்றோ இது –

உன்னை ஒழியப் புறம்பே பேறும் இழவுமாய் இருக்கிற இவர்கள் நடுவினின்றும்
என்னை முன்னம் வாங்க வேண்டும்,’ என்ன, ‘
முன்பே உம்மை வாங்கினோமே! சமுசாரிகளோடு பொருந்தாதபடி செய்தோமாகில்,
இவ்வுலக வாழ்வினை நினைத்த நினைவாலே வந்த துன்பம் எல்லாம் போகும்படி உம்முடைய இருப்பு இது காணும் என்று பரமபதத்தில் அயர்வு அறும் அமரர்கள் அடிமை செய்யப் பிராட்டியாரும் யாமுமாக வேறுபாடு தோன்ற இருக்கும் இருப்பைக் காட்டித் தந்து அங்கே உம்முடைய மனம் ஈடுபடும்படி செய்தோமாகில், இனி, உமக்குப் பேற்றுக்குக் குவால் உண்டோ? நாம் செய்ய வேண்டுவது என்?’ என்ன,
இவை இரண்டனையும் நினைத்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகிறார்,’ என்று பணிக்கும் ஆழ்வான்.-ஆழ்வான், தாம் ஓரிடத்திலே வழியிலே போகா நிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்; இவ்வாழ்வான் தன்மைக்குச் சேருமே இவர் நிர்வாஹமும். ஆழ்வார் தயாளு ஆழ்வான் பரம தயாளு என்பதற்கு சேர இந்த நிர்வாஹம் –

—-

என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே
– 6-8-

ஸ்ரீ உஞ்சப் பிள்ளை பாடா நிற்க ஸ்ரீ எம்பார் பார்த்து எழுந்து அருளி இருக்க இவ்விடத்துக்கு
அபி நயிக்கிறார்-காலாலே பாய்ந்து தள்ளுவதாகக் காட்ட -அது கைக் கொண்டு அருளி –
கெடுவாய் அங்கனே செய்தாள் ஆகில் அவனுக்குப் பொல்லாதோ –
அவனுக்கு அது அன்றோ தேட்டம் -அங்கன் அன்று காணும் -என்று
கையை இட்டு முகத்தை மறைத்து திரிய வைத்து அருளக் காட்டினார் –

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே
-5 -4-11 –

ஸ்ரீ எம்பாரை சிலர் -இப் பத்துக்கு பொருள் என் -என்று கேட்க –நான் ஸ்ரீ உடையவர் ஸ்ரீ பாதத்தில் இது கேட்டிலேன் –ஆகிலும் நீங்கள் கேட்ட இவ் அர்த்தம் போராது என்ன ஒண்ணாது – இப்பொழுதே கேட்டு உங்களுக்கு சொல்ல ஒண்ணாதபடி ஸ்ரீ உடையவரும் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தேற எழுந்து அருளினார் –ஆகிலும் இப்பொழுதே உங்களுக்கு சொன்னேன் ஆக வேணும் -என்று
ஸ்ரீ உடையவர் திருவடி நிலைகளை எடுத்து தம் திரு முடியிலே வைத்துக் கொண்டு –
இப்பொழுது ஸ்ரீ உடையவர் எனக்கு அருளிச் செய்தார் கேட்கல் ஆகாதோ -என்று
பாட வல்லார் -சாயை போலே -தாமும் -அணுக்கர்களே -என்று அருளிச் செய்தார் –
(ராமானுஜ பதச்சாயை தாமே இவ்வர்த்தம் அருளிச் செய்யும் படி ஆய்த்தே )

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –-கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்
-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ் மீதி ஸ யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்  யேதத் வ்ரதம் மம
–யுத்த -18-33-

ஸக்ருதேவ ப்ரபன்னாய-
ஸக்ருச் சப்தத்துக்கு -சஹஸா ஆதேஸமாய் –சஹ சைவ ப்ரபன்னாய -உடனே-என்கிறபடி
அதாகிறது -தன் அயோக்யதையைப் பார்த்து சடக்கென -இது ஆழ்வான் நிர்வாஹம் –
கீழ் அநாதி காலம் சம்சரித்துப் போந்தவன் மேல் அநந்த காலம் பல அநு பவம் பண்ணப் புகுகிறவன் ஆகையாலே யாவதாயுஷம் அநு வர்த்தித்தாலும் -சக்ருத் -என்கைக்கு போரும் அத்தனை அன்றோ -என்று எம்பார் நிர்வாஹம் –
ஈஸ்வர விஷயீ காரத்துக்கு ஒரு கால் அமையும்-ஆவர்த்திக்கிறது உபாய வைபவத்தால் வந்த ரஸ்யதை யாகையாலே -என்று பட்டர் நிர்வாஹம் –
ஸக்ருதேவ -என்கையாலே உபாயத்துக்கு விஹிதமான அசக்ருதா வ்ருத்தியை வ்யாவ்ர்த்திக்கிறது –
தவாஸ் மீதி ஸ யாசதே –
இதுக்கு மேல் உனக்கு அடியேனாக வேணும் என்று உபேயத்தையும் ப்ரார்த்திக்குமவனுக்கு –
ஸக்ருதேவ ப்ரபன்னாய -என்கிறது பிரபத்தி
தவாஸ் மீதி ச யாசதே -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தால் -அநவரத பாவநா ரூபமான பக்தியைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு-

1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?
–6-7-5-

ஆவி உள் குளிர – இவ் விடத்தைப் பட்டர் அருளிச் செய்யா நிற்கச் செய்தே மேல் எழ அருளிச் செய்தாராய்,-அங்கே இருந்தவரான சீராமப்பிள்ளை,
சீயா! எம்பார் அருளிச் செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச் செய்தார்.
கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறு நனையும்படி யாயிருக்கை.
-(சீயா-உயர்ச்சியாக நவில்கிறார் )


இவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும், மேலும் அவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரே தஞ்சம் என்று அடைந்து அவருக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர்-கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயர்  கொண்ட இவர் எம்பெருமானின் குணங்களில் உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருக்க,  இவருக்கு இராமானுசரே, எம்பார் என்னும் பெயரைச் சூட்டி, அவருக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலியவற்றை அருளினார்.-தையில் மகத்திற்கு” ஏற்றமளித்த திருமழிசை ஆழ்வாரும், தன் வாழ்க்கையில் முதல் 1000  ஆண்டுகள் (இவர் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர்) பிற மதங்களில் புகுந்து, பின் சைவ மதத்தில் சேர்ந்து, சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சிவனைப் பாடியும் போற்றியும் வணங்கிவர, எம்பெருமான் பேயாழ்வாரைக் கொண்டு இவரைத் திருத்திப் பணிகொள்ள விருப்பப்பட்டு, பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்பட்டு, திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ள, ஆழ்வாரும் எம்பெருமானே பரதெய்வம் என்பதை நன்கு உணர்ந்து, பின்னர் 3700 வருடங்கள் எம்பெருமானுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைப்போல், கோவிந்தப் பெருமாளான எம்பாரும் சிவனைப் போற்றும் சைவராய் இருக்க, இவர் பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்

இராமானுச முனிக்கும் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷத்தால் விரோதிகள் கழிந்தன.  அதாவது, இவரது ஸ்ரீவைஷ்ணவத் தொண்டின்மீது பொறாமை கொண்ட பலர் இவரை கொன்று விடத் துணிய, ஆசாரியர்களின் அருளாலும், சீடர்களின் உதவியாலும்,  விரோதிகள் இவரை விட்டு விலக, இவர்  ஸ்ரீவைஷ்ணவத்துக்கே  விளக்காய் இருந்து, அது எங்கும் பரவி, உலகோர் அனைவருக்கும் எம்பெருமானே அடையப்பட வேண்டியவன் என்ற அறிவைப் பெற்று உய்யும்படி செய்தவர். இப்படி உலகோர் உய்ய உதவி செய்த இராமானுசர், தம் சகோதரரான கோவிந்தப் பெருமாள் சைவராய் இருப்பதைப் பொறுக்க மாடாமல்,தம் ஆசாரியரான ஆளவந்தாரைப் பிரார்த்தித்து, நமக்கு உசாத் துணை (உதவி) உண்டாக வேண்டுமே என்று மனதில் விசாரித்தார். ஏனென்றால்,  கோவிந்தப்பெருமாள் சாஸ்திரங்களைப் புரையறக் (குறைவின்றி) கற்றவர்; நமக்கு ஹிதம் (நன்மை) கோருபவர்; அவரை நம்மோடு சேர்ப்பார் யாரோ? இப்போது அவர் வேறு தெய்வ வழிபாடு உடையவராக இருக்கிறார். அவரைப் பாங்காக்குபவர்  (திருத்துபவர்)  யாரோ என்று புழுங்கினார்  பிறகு, இதைச் செய்யத் தக்கவர்,தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பியே என்று தெரிந்து, அவர் பக்கலுக்கு (பக்கம்) ஒரு ஸ்ரீவைஷ்ணவரை நியமித்து, “வட்டமணி கோவிந்தரைத் திருத்தித் தேவரீர் திருவடிக்கு அடிமை கொள்ள வேண்டும்” என்று விண்ணப்பிக்கும்படி அவரிடம் விவரம் சொல்லி அனுப்பினார்.   கோவிந்தருக்கும் பெரிய திருமலை நம்பியே தாய்மாமன் ஆவார்.

இளையாழ்வாரின் ஆணையின்படியே அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலைக்குச் சென்று பெரிய திருமலை நம்பிகளிடம் விவரத்தைச் சொல்ல, அவரும் “இது நம்முடைய கடமை என்றிருந்தோம்;ராமானுஜ முனியின் எண்ணமும் கலந்ததே” என உகந்து (மகிழ்ந்து) உடனே அவ்வைஷ்ணவரையும் தம்மைச் சேர்ந்தாரையும் அழைத்துக்கொண்டு காளஹஸ்திக்கு எழுந்தருளி, குளக்கரையில் அமர்ந்திருந்தார்.  அப்போது லிங்கம் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரான கோவிந்தப்பெருமாள் அங்கு நீர்கொண்டு செல்ல வந்தார். அச்சமயம் பெரிய திருமலை நம்பிகள், “கொன்றைச் சடையானைக் குளிர நீராட்டினால், உனக்குண்டாகும் பயனென்ன? என்று கூறினார். அதுகேட்டு முறுவலித்து, எதுவும் பதில் பேசாமல் போனார் கோவிந்தர். அதுகண்டு திருமலை நம்பிகள் இந்தி நம்மால் ஒன்றும் ஆகாது; இனிஅவனை ( கோவிந்தரை)  எம்பெருமான் தான் திருத்தி அருளவேண்டும் என்று பிரார்த்தித்து,  திருமலைக்குத் திரும்பினார் –

சிலநாள் கழித்துத் திருமலை நம்பிகள் மறுபடியும் காளஹஸ்திக்கு வந்து ஆளவந்தார் அருளிய “ஸ்தோத்ர ரத்னத்தில்” இளையாழ்வாரை (இராமானுசர்) வசீகரித்த  “நாராயணனே பிரமன், சிவன், இந்திரன் இவர்களிலும் மேலானவனாயும்,வினையின் நீங்கியவனாயுமுள்ள முக்தாத்மா ஆகிய இவர்களெல்லாரும் எந்த உன் பெருமைக் கடலில் துளிகள் ஆகின்றனரோ, அந்த உன்னிடத்தில் இயற்கையானதும், எல்லையற்ற பெருமையை உடையதுமான ஐஸ்வர்யத்தை எவன்தான் பெறாதவன் ஆவான்? என்கிற 11ஆவது ஸ்லோகத்தை ஒரோலையில் எழுதி, கோவிந்தர் வரும் வழியில் போட்டு வைத்தார் -எதிர்பார்த்தபடி கோவிந்தரும் அவ்வழியே வந்தவர், அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு,அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்.  மறுபடியும் நீர்கொண்டு திரும்பும்போது, அந்த ஒளியைத் தேடி எடுத்து மறுபடியும் வாசித்துப் பார்த்தார். அதன் பொருள் அவரை மாற்றியிருக்க வேண்டுமென அவர் தோற்றம் காட்டிற்று.  அவ்வோலையைக் கையில் கொண்டு, “உங்களிடமிருந்து நழுவிய பொருள் இதுவோ?”என்று நம்பிகளிடம் கேட்க, நம்பியும், “எங்கள் பொருள் நழுவுவதல்ல” (எங்கள் பொருளான எம்பெருமான் ஒழிக்க ஒழியா உறவு உடையவன் ஆகையாலே, நாங்கள் விட்டாலும் தான் விடான் ஆகையாலேயே, எங்களைவிட்டு நழுவாது) என்று இப்படிப் பலபடி பதிலுக்குப் பதிலாக அருளி, அவர் மனத்தில் மாற்றம் உண்டாக்கினார்.  கோவிந்தர் அதற்கும் பதில் கூறாமல் சென்றார் 

நம்பிகள் மறுபடியும் திருமலை சென்று பெருமாள் திருவடி தொழுது மீண்டும் காளஹஸ்திக்கு வந்து சோலையில் தம் சிஷ்ய கோடிகளோடு திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார்.  அப்போது கோவிந்தர் ஒருமாதிரி மரத்தினின்றும் பூப்பறித்துக் கொண்டிருந்தார்  அச்சமயம், பெரிய திருமலை நம்பிகள் “திண்ணன் வீடு” என்ற பதிகத்துக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்  நாலாம் பாட்டில், “தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன்” என்றவரை விஸ்தாரமாகப் பொருள் விரித்து, “தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனை ஆகுமே” என்று சொன்னதும் கோவிந்தர், முன்னுள்ள பாட்டுக்களின் பொருள் நெஞ்சில் உறுத்தி இருந்தமையால்,  சடக்கென மரத்தினின்றும் குதித்து, “தகாது தகாது என்று சொல்லிக் கொண்டே,  பூக்கூடையை வீசி எறிந்துவிட்டு, தான் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு, நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் “அந்தோ! லோக நாயகன் என்று முடி சூடியவன் இருக்க, நாயகனை உபாசிக்கும் வேடமுடைய விரிசடையானை (பரமசிவனை) விரும்பினேனே! அழகான தாமரைக் கண்ணன் இருக்கத் தழல் (நெருப்பு) வீசும் பொறிக்கண்ணனை பூசித்தேனே! கல்லெடுத்துக் கல்மாரி காத்த கையன் இருக்க, கபாலம் ஏந்திய கையை வணங்கினேனே! திருவிருந்த மார்பன் இருக்க, திருவில்லாத் தேவனை நாடினேனே! என்று இப்படியெல்லாம் நொந்துகொண்டு, “இந்த ஆத்மாவை அடிமைகொண்டு வாழச் செய்யவேண்டும் என்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கிடந்தார் 

அவரை முடி பிடித்து எடுத்து, குளிர நோக்கித் தடவிக் கொடுத்தார் நம்பிகள். மேலும் நல் வார்த்தைகள் சொல்லி, “ஆளவந்தார் கிருபைக்குக் குறை ஏதும் இல்லை” என்று எண்ணி நெஞ்சு நெகிழ்ந்தார்.  இவ்விவரம் அறிந்த காளஹஸ்தி நாதனை உடையார் பலரும் ஓடிவந்து நம்பிகளைப் பார்த்து, “அம்மான் பொடித் தூவினீரோ?” என்றார்கள்.  அதற்கு நம்பிகள், “அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.-அவர்களும் கோவிந்தரின் கையைப் பிடித்து, “வாரும் கோவிந்தரே”! என்றழைக்க, “என் கையை இனித் தொடவேண்டாம்; உங்களோடு எனக்கு இனி உறவில்லை” என்று கருவூலச் சாவி, இலச்சினை, மோதிரம் முதலியவற்றை அவர்களிடம் வீசிவிட்டு நம்பிகளின் பின் போனார். அவர்களும், “நேற்றே காளஹஸ்தி நாதன்” எங்கள் கனவில், தேவாம்சங்களான இவர் (கோவிந்தர்) முதலானவர்கள் பாஷண்ட, பௌத்த (பிற சமயங்கள்) நாஸ்திகங்களைப் போக்கித் திருமாலிடம் உறவை வளர்க்கத் தோன்றியவர்கள் என்று கூறியிருந்ததற்கு ஏற்ப நடந்தது” என்று சொல்லிப் போனார்கள்.

பெரிய திருமலை நம்பிகளும் கோவிந்தப் பெருமாளைத் திருமலைக்கு அழைத்துச் சென்று, பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஸ்ரயனம்) முதலிய செய்து அவரைத் திருத்தி,  அடிமை கொண்டு, திராவிட வேதங்களையும் (திவ்யப்ரபந்தங்கள்) மற்றும் சம்பிரதாய இரகசியங்களையும் தெளிவுற அருளிச் செய்து கொண்டிருந்தார்.  கோவிந்தப் பெருமாளும் அவர் திருவடியள்ளது வேறு அறியாதவராக வாழ்ந்திருந்தார்.

உடையவரின் தம்பியும் “எம்பார்” என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊறு (தீங்கு) விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.

மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார்.

ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார்.   நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.

உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் (சோளிங்கூர் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “-உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக் கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அணைத்துக் கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல,  எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.

முக்காலத்திலும் எம்பெருமானாரையே (இராமானுசர்) நோக்கி அவர் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்றிருந்த கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள்(பெரியவள் ஆனாள்);அவளோடு தனித்திருக்க வேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம், இருட்டும் தனியாய் இருக்கும் போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன்  என்றாராம். பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து,”கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்-கோவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார்.-இதுகண்ட அவர் தாய் இப்படிச்செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்;அப்படி இருக்கும் போது, அவன்முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்து கொண்டு எம்பெருமானார், “இல்லறமில்லேன் துறவறம் இல்லை” (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை “எம்பார்” என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

ஸ்வாமி எம்பாருக்கு ஒரு குறை இருந்ததாம்–ராமானுஜ-என்றழைத்து அத்திருநாமத்தின் அமுதச்சுவையை பருக தமக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம்-இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாமி எம்பாரை அழைத்து அழகான திருவாழி திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தமது உபபாத்ரத்தை அவருக்குத் தந்தருளி, “இத்தை நமது பெயரால் அழைப்பீராக” என்று நியமிக்க, எம்பாரும் அப்பாத்திரத்தை நிதியெனப் பெற்றுக்கொண்டு அதை  “ராமானுஜம்” என்று அழைத்து வந்தார். அது முதலாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்ரத்தை  ராமானுஜம் என்றே அழைத்து வருகின்றனர்

ஆசார்ய கைங்கர்யமே பரம  பிரயோஜனமாக தம்மைப்  பேணாமையும், ஆசார்ய விஷயத்தில் விற்கவும் பெறும்படி பணிந்திருக்கையும், ஆசார்யன் திறத்தில் நிழல்போல பரதந்தரனாய் இருப்பும், ஆசார்யனைப் பிரிந்தறியாத அனுஷ்டானமும் எம்பாருக்கே அமைந்த சிறப்புகள்.

பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும் அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!(“தூவிரிய”பதிகம், 3.6.2)–அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார்.. எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர். அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா  செய்யப்போகிறது. வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை. வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்

சங்கை கெடுத்தாண்ட தவராசா -பொங்குபுகழ் 
மங்கையர்க்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும் 
தங்குமனம் நீ எனக்குத் தா.  –பெரிய திருமொழித் தனியன் இட்டவர் இவர்.

பற்பமெனத் திகழ் பைங்குழலும் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புறி நூலொடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலை யழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!–வடிவழகுப் பாட்டு) இயற்றி, அவரைப் புகழ்ந்தவர் இவர்.

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப்பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ச்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநு பவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹாவிஹாரபடுநா ஸ்ரீசைல் ச்ருங்கோல்லஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹநந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்மபேதநமஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதிஸார்வ பெளமஹரிணா வர்த்தே ப்ருசம் நிர்ப்பய .
-இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் வி ஹரிக்கும். தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதியிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்’‘ என்ற மஹாபாரத ச்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத ” என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச்சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ச்ருங்கோல்லஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்லது ஸிம்ஹமேயாகும்.அப்படியே இந்த ராமாநுஜஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கடமுடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணாவவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலைமேய, கோணாகணையாய்’ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க. அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங்காட்டில் சஞ்சரிக்குமே யொழியச்சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹபக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்கவல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்றுவ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவபர பேதத்தை ஸாதிக்கவல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது. ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’-

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு
போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க –
இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக் க்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து – ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன – தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தை உடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –இரு நூற்று பத்தாம் வார்த்தை

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

எம்பார் சரம தசையிலே -கணியனூர் சிறியாச்சான் -சட்டம்பள்ளி ஜீயர் ஈச்சம் பாடி ஜீயர் போன்ற சிஷ்யர்களுக்கு உடையவர் சாதித்து அருளிய அர்த்தங்களை ஸாதித்தருளி அவர்களுக்கு பட்டர் திருவடியைக் காட்டிக் கொடுத்து உடையவருடைய திருவடித்தாமரைகளை தியானித்துக் கொண்டு அவர் திருவடி சேர்ந்தார்


எண்ணற்கரிய எம்பார் ! எம்பெருமானுடைய மற்றொரு திருவுருவமாகவே அத்விதீயரான கருடன் போற்றப்படுகிறார். வேதாந்தாசாரியர் கருட பஞ்சாஶத்தில் ஒரு ச்லோகத்தில் ஏக: என்று கருடனை அத்விதீயர் அதாவது ஒப்பற்றவர் என்றும்; விஷ்ணோ: த்விதீய: என்று பகவானுக்கு அடுத்தவர் என்றும் அவர் ( பகவான்) தாமே கொண்ட மற்றோர் வடிவம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார். கருடாம்ஶரான எம்பாரும் ஆசார்யர்களுக்குள்ளே ஒப்புயர்வற்றவர். அதனால் தான் அவரைப் பெறுதற்கு ஸகலவித முயற்சிகளையும் எம்பெருமானார் செய்தார். ( திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தராம் எம்பாரைத் திருத்திப் பணி கொண்டார்.. ஆசார்ய ப்ரஸாதமாக திருமலை நம்பிகளிடமிருந்து எம்பாரைப் பெற்று தம்முடன் அழைத்துக் கொண்டு வந்தார் ) ..

விஷ்ணுவிற்கு அடுத்தவர் கருடன் என்றதாலே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு பொருளும் இங்குள்ளது. விஷ்ணுவே; அதாவது ஸ்ரீபார்த்தஸாரதியே இராமானுசராகத் தோன்றினார் என்பது ஸம்ப்ரதாயம். கேஶவாசார்யர் ( இராமானுசரின் திருத்தகப்பனார் ) திருவல்லிக்கேணியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அவருக்குத் தானே பிள்ளையாகப் பிறப்பதாக வாக்குறுதி தந்தான் பார்த்தஸாரதி எம்பெருமான். அதன் படியே ‘ சித்திரையில் செய்ய திருவாதிரையில்’ ‘ சிறந்த பெரும்பூதூரில் சீமான் இளையாழ்வாராக’ வந்து தோன்றினான் இறைவன். ஆக விஷ்ணுவே; அதாவது கண்ணனே இராமானுசரென்ப. ‘ஸ்ரீபதிர் வா இதி ஸாத்த்விகை: விதர்க்க்யாய மஹா ப்ராஜ்ஞை: பாஷ்யகாராய மங்களம்’ என்றதும் காண்க. அறிவாளிகள் ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய அவதாரமாகவே எம்பெருமானாரைக் குலாவுகின்றனர். ஶமிதோதய ஶங்கராதி கர்வ: என்கிற யதிராஜ ஸப்ததி ஶ்லோகத்தாலும் இராமானுசர் கண்ணனே என்பது விஶதம். கருடன் எப்படி விஷ்ணுவிற்கு அடுத்த ஸ்தானமோ; அவ்விதமே கருடாம்ஶரான எம்பாரும் விஷ்ணுவினுடைய அம்ஶ பூதரான எம்பெருமானாருக்கு அடுத்த ஸ்தானத்தை வஹிக்கிறார். ஆம் ஓராண்வழி குருபரம்பரையில் எம்பெருமானாருக்கு அடுத்தவர் எம்பாரே ! ஆக விஷ்ணோ: த்விதீய: என்பது எம்பாரையே நமக்கு உணர்த்தி நிற்கும் என்றவாறு.

இன்னமும் கேளீர்! எம்பெருமானார் மிகச் சிறந்த மந்திரவாதியாகத் திகழ்கிறார். விஷத்தை முறிப்பதற்குரிய மந்த்ரங்களிலே நல்ல தேர்ச்சி பெற்றவராய்; நிபுணராக அவர் போற்றப்படுகிறார். தேசிகன் சாதிக்கிறார்.. ஸந்மந்த்ரவித் க்ஷிபதி ஸம்யமிநாம் நரேந்த்³ர: ஸம்ஸார ஜிஹ்மக³ முகை²: ஸமுபஸ்த்தி²தம் ந: l விஶ்வக்ததம் விஷய லோப⁴ விஷம் நிஜாபி⁴: கா³டா³நுபா⁴வ கருட³ த்³வஜ பா⁴வநாபி⁴: உலகவின்பங்களிலே பற்றுதல் என்பது ஒரு கொடிய விஷம். அது எங்கிருந்து புறப்படுகிறதெனின்; ஸம்ஸாரமாகிற ஸர்ப்பத்தின் வாயிலிருந்து புறப்பட்டு நாற்திசையிலும் அது பரவியிருக்கிறதாம். விஷத்தைத் தணிப்பதற்காக ‘க³ருட³ம் ஆத்மாநம் த்⁴யாயீத’ என்று மந்திர சாத்திரங்களிற் சொல்லியபடி தன்னை கருடனாக எண்ணிக் கொண்டு கருட த்வஜனான பகவானை எண்ணிடவே நமக்கு நன்மை உண்டாம். எம்பெருமானாராகிற கருடத்வஜர் ( கருளக் கொடி உடையவனான எம்பெருமான் ) எம்பாராகிற கருடனைச் சிந்தித்து; அவரையே கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான பராசர பட்டர் & வேத வியாஸ பட்டர் ஆகியோருக்கு (ஸம்ஸார ஸர்ப்பத்தின் கொடிய விஷம் துன்புறுத்தாமைக்காக) ஆசார்யனாக நியமித்தமை ப்ரஸித்தமிறே! ஆழ்வான் திருமாளிகைக்கு எம்பெருமானார் எழுந்தருளுகிறார். எம்பார் உள்ளே சென்று ஆழ்வான் திருக்குமாரர்களை ( குழந்தைகளை ) கைகளில் ஏந்தி வருகிறார்..உடையவர் எம்பாரிடம் குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கிறதே ! என் செய்தீர் என்று வினவவும்; குழந்தைகளுக்குக் காப்பாக ( ரட்சையாக) துவயத்தைச் சொல்லி குழவிகளைக் கொண்டு வந்தேன் என்றார் எம்பார். ஸத் மந்த்ர வித்- ஆகையால் குழந்தைகளிடமிருந்து புறப்பட்ட த்வயத்தின் பரிமளத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார் உடையவர்.

இதிலே ஒரு ஸ்வாரஸ்யம் உண்டு. விஷத்தை முறிப்பவர்கள் தங்களை கருடனாக எண்ணிக் கொண்டு; கருடத்வஜனாம் விஷ்ணுவை த்யானிக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் மேற்சொன்ன ஐதிஹ்யத்தில் கருடத்வஜனாம் விஷ்ணுவின் அவதாரமான உடையவர் கருடனாகிற எம்பாரை த்யானித்து ( நினைத்து ) அவரைக் கொண்டு கூரேச புத்திரர்களை ஸம்ஸார ஸர்ப்பம் தீண்டாதவாறு ரக்ஷித்தார். இந்த முரணில் உள்ள ஸ்வாரஸ்யம் ரசிக்கத் தகுந்ததாம். மேலும் பிற மதங்களாகிற சேற்றில் அழுந்தி அல்லலுற்ற எம்பெருமானை ரக்ஷித்தவர் எம்பெருமானார். கரக்ரஹ விசக்ஷணோ ஜயதி லக்ஷ்மணோயம் முநி: என்பர் தேசிகன். எம்பெருமானைக் காப்பாற்றுகிற எம்பெருமானாரையே விந்தியமலைத் தொடர் காடுகளிலிருந்து ரட்சித்தவர் எம்பார் !

இன்னொன்றும் கேளீர் ! வீர ஸுந்தரனால் தொந்தரவிற்காளான பெண்பிள்ளை ஒருத்திக்கு அபயம் கொடுத்து தம்முடைய மடத்திலே இடமளித்திருந்தார் எம்பார். இதனால் வீர ஸுந்தரனாலே நமக்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றெண்ணிய உடையவர் அவளை மடத்திலிருந்து வெளியே அனுப்பச் சொல்லுகிறார். சரணம் என்று வந்தவளை ரட்சித்தால் அந்த தருமமே நம்மைக் காக்கும் என்று உறுதியாக அவளைக் காத்து நிற்கிறார் எம்பார். விந்திய மலைத் தொடரில் எம்பாரைப் பார்த்து உடையவர் சரணம் என்று சொல்லாமலிருக்கச் செய்தே அவரை ரட்சித்த பெருந்தகையாம் எம்பார் சரணம் என்று வந்தவளையா கை விடுவர் ! பாம்பின் வாயில் தைத்திருந்த முள்ளை அகற்றி அந்த ஜீவனுக்கு இரங்கியதாகட்டும்.. வைராக்கியத்திலாகட்டும்.. பகவத் குணாநுபவத்திலாகட்டும்..ஆசார்ய பக்தியிலாகட்டும்.. எம்பாருக்கு நிகர் எம்பாரே ! அவர் தம் திருநட்சத்திர நன்னாளான இன்று அன்னாரை வணங்கி மகிழ்வோமாக !


(மதுரமங்கலம்)எம்பார் ஸ்வாமிகளின்  (எம்பெருமானார் என்கிற கோவிந்த பட்டர் ) அவதார ஸ்தலம்.

தூரம் : சென்னையில் (கிண்டியில்) இருந்து 57 KM-வழி : சென்னை – பெங்களூர் ஹைவேயில் சுங்குவார் சத்திரம் ( 49  KM )அடைந்தவுடன் வலது புறம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். சுமார் 8  KM தொலைவில் மதுரமங்கலம் உள்ளது. – மழலைமங்கலமாக இருந்த இவ்வூர் காலப்போக்கில் மதுர மங்கலமாக மருவி இருப்பதாகக் கூறப்படுகிறது. எம்பார் சுவாமிகள் திருவாராதனம் செய்த பெருமாள் இங்கு  உள்ள  ஸ்ரீ வைகுண்டப்  பெருமாள்.

மூலவர்         : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-உத்சவர்        : ஸ்ரீ வைகுண்டப் பெருமாள்-தாயார்           : கமலவல்லி-புஷ்கரணி    : கருட புஷ்கரணி

எம்பார் சுவாமிகள் பெரிய திருவடி கருடாழ்வாரின்  அவதாரமாகக் கருதப்படுகிறார்.  ஆகையாலே  இங்கு உள்ள புஷ்கரணி கருட புஷ்கரணி  என்றழைக்கப்படுகிறது.   இக் கோவில் சுமார் 1000  ஆண்டு பழமையானது என்றும்  தொண்டை மண்டல மன்னர் சுபர்ணா என்பவரால் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.-சித்திரை மாதத்தில் ஸ்ரீ வைகுண்டப்  பெருமாளுக்குப் பிரமோத்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி

கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்தபிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.

பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார்

கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார்.இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.

கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல் 

திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 

தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்

மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குனஸிந்தவே |-மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர்நித்ய மங்களம் ||

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மா வளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே

பாரத்வாஜே வதீர்ணாய புண்டரீகாசக்ஷ ஜன்மனே
அஸ்மத் குலஸ்ய நாதாய கோவிந்தார்யாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண குருணா ராமா வ்ரஜ யோகினே
தத்தாய உதக பூர்வம் ஸ்யாத் கோவிந்தார்யாய மங்களம்

பட்டார்யாய ஸ்வ சிஷ்யாய வேதாந்த த்வய தாயினே
ப்ரபத்திம் ஸோபதி ஸதே கோவிந்தார்யாய மங்களம்

ஆத்மா வ்ரஜ கோவிந்த தத் தனூஜம் குருகாதிபம்
ஸ்வ வம்ஸா க்ரியம் க்ருதவதே கோவிந்தார்யாய மங்களம்

ஸ்ரீ சைல பூர்ண வ்யாக்யாதி ஸூக்தம் ஸ்ம்ருத்வ சடத்விஜ
தம் குரும் ஸம்ஸ்ரிதாயாஸ்து கோவிந்தார்யாய மங்களம்

ஸடாரி ஸூக்தி ஸ்ரோதவ்யே ஸதா ஸந்துஷ்ட சேதஸே
வைராக்யம் ஸோபதிஸதே கோவிந்தார்யாய மங்களம்

ராமாநுஜார்யாத் வேதாந்த த்ரமிட உபநிஷத் கிராம்
ரஹஸ்யார்த்தாநர்த்த வதே கோவிந்தார்யாய மங்களம்

மங்களம் தேஸி கேந்த்ராய மங்களம் குண ஸிந்தவே
மங்களம் கோவிந்தார்யாய நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் –ஓடும் புள்ளேறி -1-8-

January 29, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

————–

தன் நிகர் அற்ற அத்விதீயமான நெஞ்சு-ஒரே மனஸ்ஸூ -ஒன்றே ஓன்று என்றுமாம்
முன் -அவரது திருவடி -அவனுக்கே சேஷம் -கவர்ந்து சென்றார் –
இனி அவனது குளிர்ந்த -வியர்வை கமழும் திருத்துழாய்க்கு கவர நம்மிடம் நெஞ்சம் இல்லையே
மூன்றாவது மாருதம் -தனியாக வராமல் -துழாய் வாசனையைக் கொண்டு வீச
நேர் சம்பந்தம் உள்ள துழாக்கே இல்லையே-நீ குறுக்கே வந்தாயே -கருடன் துழாய் நான் -எங்கள் நடுவே
பூதனா சம்ஹாரம் பண்ணி அருளிய கண்ணன் திருமுடியில் சூடும் திருத்துழாய் -பனி வாசனை கவர்ந்து வந்தாயே – கவர்ந்து போக ஒன்றும் இல்லையே-உனக்கும் எனக்கும் -உனக்கும் அவனுக்கும் -நேர் தொடர்பு இல்லையே-சஜாதீயர் –ஆவி பிராணன் -மாருதம் -நீ நலிய வரலாமோ கருடன் துழாய் விஜாதீயர் -நலிவது போல் நீயும் நலிய வேண்டுமோஇமையோர் தலைவா -என்னும்படியே
நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

ப்ராப்ய விஷயத்திலே பிரமாண அதீனமாக நெஞ்சு பற்றி–அத்தால் ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும் அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த் தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார்

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
  —-4—-தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது
விலக்ஷணமான நெஞ்சை முன் அவர் புள்ளே கவர்ந்தது-முன்பு வேறே சிலருக்கு சேஷியாத படி -முழுவதுமாக -பிரித்துக் கொண்டான்-பருந்து இறாஞ்சிக் கொண்டது

தனி நெஞ்சம் –
பாத்யத்தின் அளவன்றிக்கே பாதகம் இருக்கிற படி –(இங்கு மூவர் பாதகர் அன்றோ –ஒவ்வொருவரும் பலிஷ்டம் –திருவடி திருத் துழாய் காற்று நெஞ்சு தனி ஒன்றே -ஸ்தூலம் அன்றோ -)

முன்னவர் புள்ளே கவர்ந்தது-
திருவடி மேலே இருக்கிற  இருப்பிலே-தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
அவ்வளவும் கிட்டுவதற்கு முன்பே ஒரு திருவடி வழி பறித்துக் கொண்ட படி(சாடு -திருவடி -பாதம் -ஸூசகம் கொடுக்கும் இயல்பான உள்ள திருவடி பறித்துப் போவதே )

அவர் புள் – அங்குத்தைக்கு அசாதாராணம் என்று -தான் ஈடுபட்ட படி(கோபத்தால் மட்டும் அல்ல -அபகரித்ததும் அவனுக்கு அசாதாரணம்-திருவல்ல வாழ் கோனாரை அடியேன் போல் -அங்கு அநந்யார்ஹம் சொல்ல ஏவகாரம் இல்லை –அவர் புள்ளே என்றது-வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் ) வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே-தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்-வேதமே பெரிய திருவடி வடிவம் )

இங்கு அவர் புள்ளே-உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சியார் –காது தோடு -பாகவதர்கள் அபகரித்த வ்ருத்தாந்தம் )புள்ளே –-சஜாதீயருக்கும் வையாது ஒழிந்த படி (திருத் துழாய்க்கும் வைக்காத படி )கவர்ந்தது-தனக்கும் அரை வயிறாய் இருந்த படி–கவர்ந்தது என்று-வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை-முன் -திருத் துழாய்க்கு முன்னே திருவடி முற்பட்ட படி –நிர் விசேஷமாக அப் புள்ளே விழுங்கிற்றே-இது வேத மார்க்க அநு சாரிகளை -தத் விரோதிகள் பாதிக்க வர உலகு உண்டவனைப் போலே-இத்தை -நம்மை நம்பி வந்ததே -என்று உகந்து அபிமானித்துத் தன் திரு வயிற்றிலே வைத்துக் கொள்ளுகை

தண்ணம் துழாய்க் கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
அவனோடு ஸ்பர்சம் உண்டான திருத்துழாய்க்கு கவர்வதற்கு நெஞ்சு இங்கே இல்லையே–குளிர்ந்த திருத் துழாய்க்கு-இனி நெஞ்சம்–மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ-ஓரடி முற்பட பெற்றது இல்லை-ஒப்பூணாக உண்ணலாயிற்று-உங்கள் அபேஷிதம் இல்லை(ஸாயுஜ்யம் -ஸோ ஸ்னுதே -அங்கு குணம் அனுபவம் சேர்ந்து – அது போல் இங்கு இல்லையே )-இங்குக் –-விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்-கவர்வது யாமிலம் – திருவடி பாடே போம் இத்தனை-பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்-தண்ணம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம்  இனி இங்கே உடையோம் அல்லோம்–இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில் அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை
என்று கருத்து-அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே -இனி கவர்வது யாமிலம் –என்று ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

கீழே அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே -சொன்னது திட்டமானது
வேத பிராமண வழியிலே இவர் திரு உள்ளம்-ஊன்றி இருந்தமை காட்டப்படுகிறது
தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சு இங்கு இலம் என்று பிரகிருதி இனி ஆக்கிரமிக்க இயலாது என்றபடி-அன்றிக்கே 
பிரிவில் அவன் சம்பந்தம் உள்ள திருத் துழாய் தடவி வந்த தண் காற்றும் தமக்கு அஸஹ்யம் என்று
அருளிச் செய்கிறார் என்னவுமாம்-நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில் திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
பாத்ய பாதக தொடர்பு இல்லாத நீ-சம்பந்த சத்ருச சம்பந்தம் துழாயுக்கும் திருவடிக்கு போல் காற்றுக்கு இல்லையே-நேர் அடித் தொடர்பு இல்லையே-ததீய சம்பந்த ஏற்றம் எனக்கே என்று காற்று வந்து
பண்டே நோவு பட்டு இருக்கிற எங்கள் பிராணனை நோவு படுத்தாமல் போ-திருத் துழாய் ஆழ்வார் -மரம் போலே திமிர்த்து இருந்தார் என்று பார்த்து(திருத்துழாய் ஆழ்வார் ஒன்றும் கிடைக்காமல் மரம் போல் நிற்க ) அவ்வளவிலே –கால் கடுகி  வந்து(கால் காற்று வேகமாக காலால் ஓடி என்றும் சாடு )அசாதாரணர் பட்டினி விடா நிற்க -உனக்கு என் -என்கிறாள் நீ நடுவே என்று-ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

அங்கு சம்பந்தம் உண்டாதல் இங்கு விஷயம் உண்டாதல் அன்றியே நடுவே –(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே ) அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம் நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து (பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )-கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே-அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும் கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிவை யுடைய பூதனைக்கு பண்பு முன்பு-இங்கு முனிந்து சீறிச் சுவைத்து அவளை முடித்த கண்ணன் திருமுடியில் சூட்டப்பட்ட குளிர்ச்சி யுடைய பாதகமான திருத்துழாய் தடாவி-ததீய சம்பந்தம்-திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

முனி வஞ்ச –
பூதனை முலையை நஞ்சைக் கலந்து வந்தது போல்-இங்கு திருத்துழாய் உடைய பரிமளம் கலந்த மாருதம்-முனி வஞ்சப் பேய்ச்சி-முனியையும் க்ரித்ரிமத்தையும் உடைய பூதனை –

முலை சுவைத்தான் –
தன் நாவில் பசை கொடுத்துச் சுவைத்தான்-பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கு உண்ட வாயான்(வதரி வணங்குதுமே கலியன் )–சுவைத்தான் -சுவை மிக்கு இருந்தது போல் அனுபவித்தான் –

வஞ்சகப் பேய் போல்வாரை முடிக்கும் ஸ்வ பாவம் அவனுக்கு – இப்பொழுது அன்பு பூண்ட அடியேனை முடிக்க முயல்வதே-வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே (ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )-பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு–அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது-முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்-

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி
-(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும்
என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று-முடி சூடு துழாய்-இத்தால் ஸத் குண சீலரை சிரஸா வஹிக்குமவன் என்றதாயிற்று

முடி சூடு துழாய்ப் –
அத் தலையில் உள்ளத்தைக் கொண்டு வந்து வாயு பிரேரிக்கிற படி (அத்தலையில் -அவன் இடத்தில் -அவன் திருமுடியில் சாடு ) சஹ்யத்திலே நீரை ஆகாசத்திலே முகந்து நின்று இறைக்குமா போலே-திருத் துழாயை முடித்து வந்து போலே காணும் பூதனையை முடித்தது –திரு அபிஷேகத்திலே திருத் துழாய் என்று அறிந்த படி என் தான்-பனி நஞ்ச மாருதமே–குளிர்ந்த காற்று அகவாய் நஞ்சாய் இருக்கிற படி

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்-தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –அந்தத் துழாயில் தங்கின பனி யாகிற நஞ்சு மயமான மாருதமே-அவளோடும் அத் துழாயோடும் சீலித்த நீ என்னைப் பாதிக்கத் தகுவையோ என்றபடி

எம்மதாவி- சென்று அற்று இருக்கிறபடி-பாதகங்களின் கையிலே அகப்பட்டு அவ சேஷித்த பிராணன் –
(நெஞ்சு கிடைக்காததால் மீதம் உள்ள பிராணனை திருத்துழாயும் மருதமும் நலிந்த படி )-நெஞ்சு போனால் போலே ஆவியும் அவன் இடம் போய் ஒழியக் கூடாதோ – அவ்வளவு துணிவு இல்லாத பாழும் உயிர் என்கிறாள்-

பனிப்பியல்வே  –நடுங்குகை ஸ்வ பாவமே விசஜாதியர் செய்யுமத்தை சஜாதீயமான நீ செய்யக் கடவையோ–அனைவர் தாபத்தை தீர்க்கும் நீ இப்பொழுது நெஞ்சு இழந்த என்னை வாட்டுவதே-

எம்மதாவி பனிப்பியல்வே —
பண்டே நோவு பட்டு இருக்கிற ஆழ்வார் -போல்வார்-முன்பே கவரப்பட்ட -மேலும் திருத் துழாயால் நலிவு படுத்தப்பட்ட எம்மை நீயும் நலிய வேண்டுமோ-இது உனக்குத் தக்கதோ -இயல்பு இல்லையே–தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்-ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே அத் தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –

முன்னவர் புள் –என்று பன்மையிலும்– சுவைத்தான்  என்று ஒருமையிலும் — பிரிந்து போன கோபத்தால் அவர் -என்றும் பூதனா நிரசனத்தால் தமக்கு செய்து அருளிய உபகாரம் அனுசந்தித்தவாறே இயல்பாக சுவைத்தான் -ஒருமை –

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது-மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை-(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

ஸ்வாபதேசம்
துக்கப் பட்ட மனஸ்ஸுக்கு சர்வம் அஸஹ்யம் எத்தையும் தாங்காதே –-பகவத் விஸ்லேஷத்தாலே சர்வமும் அஸஹ்யமான படியை அருளிச் செய்கிறார் –

தாத்பர்யம்-இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக அலாபத்தால் பாதகமான படியை-நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்-விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது-இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை- நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்-தத்துவம் அன்று தகவும் அன்று ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

—-

1-8-ஓடும் புள் -பிரவேசம் –

கீழில் திருவாய்மொழியில் நிரதிசய போக்யன் என்றார்; 
அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத் திருவாய்மொழியில்.
‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில் ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. 
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. 
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. 

‘சௌசீல்யம்-ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப் படினும், வேறு வேறு என்பதே
நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். 
ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

இத் திருவாய்மொழி சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யம் கூறுகிறது என்பாரும்  
ஈச்வரத்வ லக்ஷணம் கூறுகிறது என்பாரும் –
கீழ் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர்.
‘ஆயின்’  இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே ஸ்ரீ பட்டருடைய  திருவுள்ளம்.

இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி
‘ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய்மொழியில்’ என்கிறார்.
இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’ என்பது முதலான
திருப் பாசுரங்களை நோக்கிப்‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர்.
‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம் அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப் பாசுரங்களை நோக்கி
ஈச்வரத்வ லக்ஷணம் கூறுகிறது, என்பர்.
‘அம்மான் சீர் கற்பன் வைகலே என்ற திருப் பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.
ஸ்ரீ பட்டர் ‘நீர் புரை வண்ணன்’ என்பது முதலான திருப் பாசுரங்களைக் கடாக்ஷித்து,
ஆர்ஜவ குணத்தைக் கூறுகிறது’ என்று அருளிச் செய்வார்.

இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய லீலா விபூதி சம்பந்தம் அடியான
செவ்வைக் கேட்டைச் செவ்வையாம் படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக -அதுக்கு
1-பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும் –
2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும் –
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும் -4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும் –
-5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும் –
6-இது சகல சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும் –
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம் படி கலக்கும் என்னும் இடத்தையும் —
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும் —
9–அவதாரங்கள் ஆஸ்ரித அனுபாவ்யமான அசாதாரண சிஹ்னங்கள் என்னும் இடத்தையும் –
10-ஏவம்வித ஸ்வ பாவன் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான அவனுடைய ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

—————

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே
 –1-8-1-

நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லையே?
அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவ குணம் எற்றிற்கு?’ என்னில்,
அவர்கள் பலராய் இருத்தலானும், அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும்,
அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவ குணம் வேண்டும்.

ஓடும் புள்ளேறி-திருவடி ‘இப்பொழுது அடியேன் மேல் எழுந்தருள வேண்டும்’ என்று விரும்பினால், ‘வேண்டா’ என்னாது மேற்கொள்ளும் ஆர்ஜவமாம்.-பெரிய திருவடியை மேற்கொள்ளுமது தான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய ஸ்வரூப லாபத்துக்காகவும் இருக்கும்.-சூடும் தண் துழாய் -திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும்-அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள-சைதன்யமே – அறிவுத் தன்மையே கழியப் பெறுவர்.-அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி.-பரம பதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.-எல்லார்க்கும் விஷயம் ஒன்றேயாகிலும், அவ் விஷயந்தன்னில் விருத்தி பேதத்தால் ருசி பேதம் உண்டாம்.ஆடும் –சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது, விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது,‘அவை ஆடும்’என்கிறார். அம்மானே--நித்திய ஸூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும்-சர்வாதிகனாய் இருந்து வைத்து – அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்-

———

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே 
–1-8-2-

நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.-அவ் வவதாரத்தோடு முடிவு பெறுதல் இன்றிப்–பஹுநி ‘பல படியாகப் பிறக்கிறேன்’ என்கிறபடியே, அதற்கு மேல் பல அவதாரங்களை எடுத்தான்.-பரத்துவத்திலும்-மனுஷத்வே பரத்வம் – மனித உருவத்தால் வந்த பரத்துவத்தினது அழகை, ஈண்டு ‘மாண்பு’ என்கிறார்.-மாண்பு என்று திருவவதாரங்களை சொல்லுகிறது-

————

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
 –1-8-3-

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்திய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)

கண்ணாவான்-சஷுர் தேவா நாம் உதமர்த்யாநாம் ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-கண்ணாமவன் என்றபடி.
இனி, இதற்குக் நிர்வாஹகானாவான் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம்.
கண்ணாகைக்காக -என்னுதல்-மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்து கொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.-விண்ணோர் வெற்பன்--‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார்.-இரண்டு உலகத்தில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானே யாகிலும், திருமலை தான் நித்திய ஸூரிகளுடையது என்றபடி.-விண்ணோர் வெற்பன் என்கிற இடம் நித்ய ஸூரிகள் அபிப்ராயத்தாலே
விண்ணோர் எங்களது -என்று அபிமானிக்கும் படியான தண்ணார் வேங்கட வெற்பை உடையவன் 

————–

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
 –1-8-4-

அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.-சீர் கற்பன்-
அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து,-குணைர் தாஸ்யம் உபாகத  ‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று ஸ்ரீ இளைய பெருமாள் கூறியது போன்று,-அவனுடைய கல்யாண குணங்களை அந்த நற்குணங்களாலே -பிரேரிதனாய் தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன்.-அப்யசிப்பேன்-வைகலே- ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்;
விபன்யவ -‘எப்பொழுதும் ஸ்துதித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்திய ஸூரிகளைப் போன்று நானும் இதுவே தொழிலாக இருப்பன்.

——–

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே 
–1-8-5-

நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று,-அவனும் என்னை விட்டு எனது தேகத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.‘கற்பன் வைகலே’ என்கிறபடியே, எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் -அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார்.அழுக்குடம்பு’ என்று யான் வெறுக்கும் ‘இச் சரீரம் இறைவனுக்கு -ஆதரணீயம் -விரும்பத் தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார்.
இதனால், அவன் மேல் விழ மேல் விழ -தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று
அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று –

—————

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே 
–1-8-6-

இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன்;
என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-
என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய நற் ஜீவனைக் கொண்டான் -அவ்வளவேயோ? –நாதன்-‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான்.
‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான்.புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே — ஸர்வேந்த்ரிய அபஹார ஷமமான குறள் வடிவைக் காட்டி மஹா பலியிடம் நிலம் கொண்டால் போலே – ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை.

————-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே
 –1-8-7-

தன் பக்கல் உண்டான என்னுடைய மநோ ரதத்தை என் பக்கலிலே தான் பண்ணினான் -ஆவி நலம் கொண்ட அளவேயோ? நித்ய விபூதியில் -பரம பதத்தில் செய்யும்
ஆதாரத்தை -அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

உண்டான் ஏழ் வையம்--பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான்.

தண் தாமம் செய்து – குளிர்ச்சியை யுடைத்தான பரம பதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான்.
இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு,  இவ் வுலகில் இருக்கிற என்னைப் பரம பதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ -தத் விபூதிகனாகவே – என்று பொருள் கூறலுமாம்

என் எண் தான் ஆனானே – நான் மநோரதித்தபடியே விரும்பியபடியே எனக்குக் கை புகுந்தான்.
அன்றிக்கே ‘என் மநோ ரதத்தைத் தான் கைக் கொண்டான்,’ என்று கூறலுமாம்.
அதாவது, ‘மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’ 
‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே,
ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சேறல் வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட,
ஸ்ரீ திருநகரிக்கு ஏறப் போக வேண்டும்;
ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.-என் எண்ணிலே தன் கை புகுந்தான் -என்றுமாம் 

———

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
 –1-8-8-

என் பக்கல் சங்காதிசயத்தாலே என்னைப் பற்ற அவன் பட்டதுக்கு ஓர் அளவில்லை -என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.தானாய சங்கே-என் பக்கல் தனக்கு உண்டான-சங்காதிசயத்தாலே – அன்பின் மிகுதியே.
இனி, இதற்கு, ‘என்னைக் குறித்துத் தான் எடுத்த அவதாரங்கள்-மஹா ஸங்க்யை –
மகாசங்கம் என்னும் அளவே,’ என்று கூறலுமாம்.
இனி, ‘சங்கே’ என்பதற்கு, ‘மகாசங்கம் என்னும் அளவேயோ! முடிவு உண்டோ!
பஹு நி  ‘பல’ என்னும் இத்தனை’ என்று கூறலும் ஒன்று.

——–

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே 
–1-8-9-

இப்படி அவதரிக்குமிடத்து ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே அடையாளங்களோடே
வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.-சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள் தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கும்

———–

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே
 —1-8-10-

அவன் நீர்மையைப் பேசப்புக்கு -நம்மால் பேசப்போமோ – கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார்-நாதன்-முதல் பாட்டில் சொன்ன சேஷித்வத்தை யுடையவன்-ஞாலம் கொள் பாதன்-இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார ஸுலப்யத்தை யுடையவன்-என் அம்மான்-எனக்கு கிட்டலாம் படி திருமலையில் வந்து அடிமை கொண்டவன் –
மூன்றாம் பாட்டில் -கண்ணாவான் -என்றத்தை நினைக்கிறார்-ஓதம் போல் கிளர் வேத நீரனே – இவனுடைய இந் நிலைமைகளைப் பேசும் போது-கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதி பாதிக்கப்பட்ட நீர்மையை யுடையவன் – நீர்மையாவது -ஆர்ஜவம் –எம்பெருமானுடைய படி வேதைக ஸமதி கம்யம்-என்கிறார் –

————–

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –
1-8-11-

அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்த இடத்திலே கொடு போகலான நீரின் தன்மையை உடையவனுடைய குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ –என்கிறார்.-நீர் புரை வண்ணன் சீர் –நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.-சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை என்பதாம்.இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.

—————-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை-————-8-

ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத்த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன் என்கிற –ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும் நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அருளிச் செய்தார் -என்கை–இப்படி உரை செய்த –ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த
ஆழ்வார் என்று அனுசந்திக்க –ஸ்வரூப அனுரூபமான சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி
சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி நிலை நிற்கும் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருகை நாதனும் ஸ்ரீ கூரநாதனும்-ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்-

January 29, 2026

ஆழ்வார் திறத்திலே கூரத்தாழ்வானுடைய ஈடுபாடு அபரிமிதம்.-ஆழ்வானுடைய பஞ்ச ஸ்தவம் முழுவதும் ஆழ்வாரருளிச் செயல் மயம். ஆயினும் அவருடைய இரண்டு ஸ்லோகங்கள் போதும்.

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2-

ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தின் இரண்டாவது ஸ்லோகமிது. இதன் பொருள் வருமாறு-யாதொரு நம்மாழ்வார் திருவடி பிணையானது, பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமா யிருக்கின்றதோ, யாதொரு திருவடியிணையே ஸர்வ காலமும் ஸாத்விகர்களுக்கு ஸகலைஸ்வர்யமுமாக இருக்கின்றதோ, யாதொரு திருவடி யிணையே புகலொன்றில்லா தவர்களுக்குத் தஞ்சமா யிருக்கின்றதோ, அப்படிப்பட்ட பரம பாவநமான நம்மாழ்வாருடைய திருவடி யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்.-

தத்வகுளாபரணங்க்ரியுக்மம் ஸம்ச்ரயேம்]  மகிழ்மாலை மார்பினன் என்று தாமே பேசிக் கொள்ளலாம்படி வகுளமாலையை நிரூபகமாக வுடையரான நம்மாழ்வாருடைய அப்படிப்பட்ட திருவடித் தாமரை யிணையை ஆஸ்ரயிக்கக் கடவோம். எப்படிப்பட்ட தென்னில், சில விசேஷணங்களை யிட்டு அத் திருவடிகளின் அதிசயத்தை விளக்குகிறார்.

[யத்த்ரைவித்ய வ்ருத்த ஐநமூர்த்த விபூஷணம்] த்ரைவித்ய வ்ருத்தர்களாகிறார் ஸ்ரீ மதுரகவிகள் போல்வார். அவர்களுடைய சிரஸ்ஸுக்கு பூஷணமாக இருக்குமாய்த்து ஆழ்வார் திருவடிகள்;

மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே? என்றும் குருகூர் நம்பி! முயல்கின்றேனுன்றன் மொய்கழற் கன்பையே-என்றும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அத்திருவடிகளையே யிறே தங்கள் தலைக்கு அணியாகக் கொள்வது;

கோலமா மென் சென்னிக்கு உன் கமல்மன்ன குரைகழலே என்றும் –அரசமர்ந்தானடி சூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே என்றும் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை சிரோ பூஷணமாகக் கொள்ள நினைப்பாரிற் காட்டிலும் அந்த பகவத் பாதாரவிந்த ஸ்வரூபியான ஆழ்வாருடைய திருவடிகளை சிரோ பூஷணமாகக் கொள்ளுமவர்களிறே சீரியராவர்.

த்ரை வித்ய வ்ருத்த சப்தம் முக்கியமாக நம்மிராமாநுசனையே கருத்தில் கொண்டதாகும் . ருக் யஜூஸ் ஸாமங்களாகிற வேத வித்யா த்ரயத்திலும் வல்லவ ரென்றபடி –சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை யில்லா வறநெறி யாவும் தெரிந்த விராமாநுசனைப் போன்ற மஹநீயர்களைக்கொள்க.

[ஸாத்விக ஐநஸ்ய நித்யம் யதேவ ஸம்பந்] தனத்தாலு மேதுங் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று என்றிறே ஸாத்விகர்கள் அத்யவஸித்திருப்பது. லௌகிகர்கள் ஸம்பத்தாக நினைத்திருக்கும் வஸ்துவானது வஸ்து ஸ்திதியில் விபத்தாயிருக்கும்மாயிற்று. உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்ய முடையார் இட்ட வழக்காயிருக்குமென்கை.

* பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடேக இந்யாதி. மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்’ என்றருளிச் செய்த ஆளவந்தார் போல்வாரை யாயிற்று இங்கு [ஸாத்விக ஐந மென்கிறது.

[நித்யம்] இந்த விபூதியில் உள்ள போதோடு அந்த விபூதியில் செல்லும் போதோடு வாகியற ஸர்வ காலத்திலு மென்றபடி.அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் என்னுமா போலே

(யத்வா சரண்யம் அசரண்ய நஸ்ய] அநாதர்களுக்குப் புகலிடமாயிருக்கும்- ஆழ்வார் திருவடிகள். எம்பெருமான் தன்னாலும் திருத்த வொண்ணா தென்று கைவிடப் பட்டவர்களாயிற்று அசரண்யர்கள்; அப்படிப்பட்டவர்களையும் வலியப் பிடித்திழுத்துத் திருத்திப் பணி கொண்டவர் ஆழ்வாரே யிறே
[புண்யம்] புநாதீதி புண்யம். பரம பாவன மென்றபடி. *பொய் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி ஸகலாத்மாக்களையும் பரிசுத்தமாக்க வல்ல தென்கை. புண்யம் ஸுந்தரமென்று பர்யாயமுமாகையாலே அழகிய திருவடிகளென்பாருமுளர். பாவநார்த்தகத்வமே பாங்கு. ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கினபடி சொல்லிற்றாயிற்று.

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–3-என்பது அந்யாத்ருசமான விந்யாஸம். இந்த ஸ்லோகம் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் மூன்றாவது ஸ்லோகமாகும்.

இந்த ஸ்லோகத்தாலே ஆழ்வார்க்கு மங்களாசாஸநம் பண்ணுகிறார் ஆழ்வான். ஆழ்வாரை ஒரு கடலாக ரூபணம் பண்ணிப் பேசுகிறாரிதில். பயோ நிதியாக ரூபணம் பண்ணுகைக்குப் பொருத்தமான ஒளசித்யங்களை நான்கு விசேஷணங்களினால் நிரூபிக்கிறார். பயோ நிதிக்கு இருக்கக் கடவ தன்மைகளெல்லாம் ஆழ்வார் பக்கலில் குறையற்றிருக்கிற படியை ஒவ்வொரு விசேஷணமும் மூதலிக்கின்றது.

(பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸார ரஸௌகபூர்ண :] கடலானது ரஸெளக சப்த வாச்யமான ஜல ப்ரவாஹத்தாலே பரிபூர்ணமாயிருக்கும்; ஆழ்வாரோ வென்னில், ஸ்ருங்கார வீர கருணாத்புத ஹாஸ்ய பயாநக ரெளத்ர பீபத்ஸ பக்தி ரஸங்களாலே பரிபூர்ணரா யிரா நின்றார். இப்படிப்பட்ட ரஸ விசேஷங்கள் ஆழ்வார் பக்கலிலே விளைந்தமைக்கு நிதாநமே தென்னில், விலக்ஷணமான பக்தி விசேஷத்தாலே ஆச்சரியமான பாவ பந்தங்களுண்டாகி அந்த பாவ பந்தங்கள் தலை தலைத்து நாநா ரஸ பரிபாகங்களாயின வென்கிறார்.

[பக்தி ப்ரபாவ] ஆழ்வாருடைய பக்திக்கு ஒப்புச் சொல்லலாவதில்லை; *காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி யென்று முதலில் கடல் போலேயாய், பிறகு*கொண்ட வென் காத லுரைக்கில் தோ ! மண்டிணி ஞாலமு மேழ் கடலும் நீள் விசும்புங் கழியப் பெரிதால்‘ என்றாய், அநந்தரம் *சூழ்ந்ததனிற் பெரிய வென்னவா என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய் ஆக விப்படி மேன்மேலும் பெருகிச் செல்லு தான பக்தியின் ப்ரபாவத்தினாலே. (பவத் அத்புத பாவபந்த/ உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே. அதாவது – அந்த பக்தி தானே ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமித்து தலைமகள் பாசுரமாகவும் தாய் பாசுரமாகவும் தோழி பாசுரமாகவும் பேசும்படிக் கீடான பலவகைப்பட்ட ஆச்சர்ய பாவ பந்தங்களை யுண்டாக்கி நிற்கு மென்கை. [ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண:] அப்படிப் பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரஸத்தை வளரச் செய்யுமாயிற்று.

*உயர்வற வுயர் நலம் வீடுமின் முற்றவும் பத்துடை யடியவர்க் கெளியவன் பிறவித்துயரறம் பொருமாநீள்படை என்னுமிவைபோல்வனவான திருவாய்மொழிகளில் ஸாதாரண பக்தி ரஸம் விளங்கு மத்தனையல்லது ப்ரணய ரஸம் விளங்கமாட்டாதிறே.

*அஞ்சிறையமடநாராய் மின்னிடை மடவார்கள் * வேய்மருதோளிணை* முதலான திருவாய்மொழிகளிலே யாயிற்று அத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணய ஸாரம் விளங்குவது. அப்படிப்பட்ட ப்ரணயம் மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீஸூக்திகளில் நவ ரஸமும் பொலிய நிற்குமிறே.

நவரஸங்களுள் ஸ்ருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயானகம் சாந்தி (பக்தி) ஆகிற இந்த ரஸங்கள் ஒரோ திருவாய்மொழிகளில் பரதானமாகப் பொதிந்திருக்கும்; மற்ற ஹாஸ்ய பீபத்ஸ ரௌத்ரரஸங்கள் ஓரோவிடங்களிலே மறைய நின்று சிறிது சிறிது தலைகாட்டி நிற்கும்.

*வீடுமின்முற்றவும் சார்வேதவநெறிக்கு * கண்ணன் கழலிணை முதலான திருவாய்மொழிகளிலே பக்திரஸம் தலையெடுத்திருக்கும்.

மின்னிடை மடவார்கள் நங்கள் வரிவளை * வேய்மரு தோளிணை முதலான திருவாய்மொழிகளிலே ஸ்ருங்கார ரஸம் தலையெடுத்திருக்கும்.

மாயாவாமனனே புகழு நல்லொருவன் * நல்குரவுஞ் செல்வும் முதலான திருவாய்மொழிகளிலே அத்புதரஸம்.

உண்ணிலாவிய வைவரால் இத்யாதிகளிலே பயாநக ரஸம்.

* ஊரெல்லாந்துஞ்சி × வாயுந்திரை யுகளும் ஆடியாடி யகங்கரைந்து இத்தியாதிகளிலே கருணரஸம்.

குரவை யாய்ச்சியரோடு கோத்ததும் வீற்றிருந்தேழுலகும் * இத்தியாதிகளிலே வீரரஸம்,

ஆக இங்ஙனே நாநா ரஸங்கள் பொதிந்த ஸ்ரீஸூக்தி ராசிகளை யருளிச் செய்யும் முகத்தாலே ரஸௌக பரிபூர்ண ராயிருப்பராய்த்து ஆழ்வார்.

வேதார்த்த ரத்ந நிதி: கடல் ரத்நாகரமாகையாலே ரத்ந நிதியாயிருக்கும்.பராங்குச பயோ நிதியும் அப்படியே யிருக்கிறபடி ஓதம் போல் கிளர் வேத மென்றும்.ஸ்ருதி ஸாகர மென்றும் சொல்லுகிறபடியே கடல் போன்றுள்ள வேத சாஸ்த்ரங்களிலே அல்ப ஸாரமாயும் ஸாரமாயும் ஸார தரமாயு மிருக்கின்ற அர்த்தங்கள் போக ஸார தமங்களாகவுள்ள அர்த்தங்களே ரத்நமாகும்.

த்ரைகுண்ய விஷயா வேதா:என்கிறபடியே எல்லாம் கலந்த கட்டியாயிருக்கும் வேதங்கள். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களாகிற மூன்று குணங்களிலும் ஊன்றினவர்களுக்கு அபேக்ஷிதங்களான விஷயங்களை யெல்லாம் வெளியிடுமவையிறே வேதங்கள்,

மாற்றங்களாய்ந்து கொண்டு மதுசூதபிரானடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன சொற்களிலே ஸாரதமமான பொருள் தவிர வேறொன்றும் அவகாசம் பெறாமையாலே எல்லாம் ரத்னங்களாயிருக்கும். அப்படிப்பட்ட ரத்நங்களுக்கு நிதியாயிருப்பராய்த்து ஆழ்வார் *வேதத்தமிழ் செய்த மாறனிறே.

[அச்யுத திவ்யதாம மாலுங் கருங்கடலே! என்னோற்றாய்? வையக முண்டு ஆலினிலை துயின்ற வாழியான்-கோலக் கருமேனிச் செங்கண்மால் கண் படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப் பெற்றும் (முதல் திருவந்தாதி) என்கிறபடியே எம்பெருமானுக்கு திவ்யாலயமாயிருக்கும் கடல்; ஆழ்வாரும் அப்படியேயாயிருப்பர்.

கல்லுங் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல்-ஏபாவம்! வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்? கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண்சங்கதை வாளாழியா னொருவன் அடியேனுள்ளானே என்கிறபடியே ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாயிருப்பரிறே. இவையு மவையு முவையுமென்கிற திருவாய்மொழியிலே விசதமாகக் காணலாம்.

[அஸீம பூமா] ப்ருஹத்த்வ மென்றபடி. ஸ்ரீபாஷ்யத்தி லருளிச் செய்தபடியே ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமா யிருக்குமிறே ப்ருஹத்த்வம். பெரிய மலை. பெரிய குளம், பெரிய மாளிகை என்றால் அங்கே விவக்ஷிதமான பெருமை ஆகாரத்தி னாலாகும். பெரிய மனிசர் என்று சில மஹா புருஷர்களைச் சொல்லுவோமாகில் குணங்களினாலாகிய பெருமையே அங்கு விவக்ஷிதமாகும்.

ஆக இப்படி இருவகைப் பட்டபெருமையில் ஆகார ப்ரயுக்தமான பெருமை கடலுக்கு ஆனாப் போலே குண ப்ரயுக்கு மான பெருமை ஆழ்வார்க்காயிற்று. “அருள்கொண்டாயிர மின்தமிழ் பாடினானருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே என்னும்படியாய் எல்லை காண வொண்ணாத க்ருபாகுண மொன்றின் பெருமை போதுமே.

ஆக நான்கு விசேஷணங்களினால் நம்மாழ்வார்க்கும் கடலுக்கும் ஸாதர்மியம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று. இப்படிப்பட்ட பராங்குச பயோதி: ஜீயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணு மென்றதாயிற்று.

———-

ஸ்ரீ எம்பாருடைய ஸ்ரீ பகவத் ராமாநுஜ ஸிம்ஹாநுபவம்

இராமாநுச நூற்றந்தாதியில் கலிமிக்க செந்நெல் என்னும் பாசுரத்தில் எம்பெருமானார் சீரிய சிங்கமாக அருளிச் செய்யப் பட்டுள்ளார். அதே போன்று எம்பார் தாம் பணித்த முக்தக ஸ்லோக மொன்றில் ஸ்வாமியைச் சிங்கமாக அநுபவித்துள்ளமை காட்டுதும்.

வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்
மாயா கேஸரி மாநிதேந கஹந ந்யாயாட வீசாரினா
கம்பீரேண பராத்ம பேதந மஹா நாதேந் நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பெளம ஹரிணா வர்த்தே ப்ரும் நிர்ப்பய .

இதில் ஸிம்ஹத்தோடே ஸ்வாமிக்கு ஸாம்யம் ஐந்து விசேஷணங்களினால் அற்புதமாக நிர்வஹிக்கப்படுகிறது.

[வேதோத்தம்ஸ குஹா விஹார படுநா] ‘மலை முழஞ்சில் மன்னிக்கிடந் துறங்கும் சீரிய சிங்கம்” என்ற திருப்பாவையின் படியே சிங்கம் பர்வத குஹைகளில் விஹரிக்கும். ஸ்ரீராமாநுஜ ஸிம்ஹமோ வென்னில்; வேதங்களாகிற பர்வதங்களின் உபநிஷத் பாகமாகிற குஹைகளில் விஹரிக்கும்.

தைத்திரியயர் ப்ராஹ்மண- காடகத்தில் “‘பரத்வாஜோ ஹ த்ரிபிராயுர்ப்பிர் ப்ரஹ்மசர்ய முவாஸ” என்று தொடங்கியுள்ள உபாக்கியானத்தில் தேவேந்திரன் பரத்வாஜ முனிவர்க்கு வேதங்களை மலைகளாகக் காட்டினனென்று ஓதி யிருக்கையாலே வேதம் மலையாகக் குறையில்லை. “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்ற மஹாபாரத ஸ்லோகத்தின்படி தருட்பம் பொதிந்திருக்குமிடம் குஹையாகக் கருதப்படுகையாலே உபநிஷத் பாகங்களை குஹையாகக் கூறினது பொருத்தம். அதிலே விஹாரம் செய்கிறார் ஸ்வாமி யென்றது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம: பரமோ மத “ என்றும் ”சொல்லுமவிடு சுருதியாம்” என்றும் சொல்லுகிறபடியே விளையாட்டாகச் சொல்லும் வார்த்தையும் சிறப்புற்றிருக்கு மென்றவாறு.

(ஸ்ரீசைல ஸ்ருங்கோல்ல ஸந்மாயா கேஸரி மாநிதேந.) ஸிம்ஹத்தைக் கொண்டாட வல்லது ஸிம்ஹமே யாகும்.அப்படியே இந்த ராமாநுஜ ஸிம்ஹத்தைக் கொண்டாடவல்ல ஸிம்ஹம் திருவேங்கட முடையானாகிற ஸிம்ஹமேயாம். திருமங்கையாழ்வார்’ தூணாதனூடு அரியாய் வந்து தோன்றிப், பேணா வவுண்னுடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோணாகணையாய்‘ என்கிற பாசுரத்தினால் திருவேங்கடமுடையானை ஸிம்ஹமாக வநுபவித்திருப்பது காண்க.அந்த ஸிம்ஹம் இந்த ஸிம்ஹத்தை அபிமானித்த விஷயம் ஸ்ரீ வேங்கடாசல் இதிஹாஸ மாலையில் பரக்கக் காணத் தக்கது.

(கஹந ந்யாயாடவீ சாரிணா] ஸிம்ஹம் பெருங் காட்டில் சஞ்சரிக்குமே யொழியச் சிறு காட்டில் காணக் கிடைக்காது. இந்த யதிராஜ ஸிம்ஹமோ வென்னில்; சாஸ்த்ரீய ந்யாயங்களாகிற அடவிகளிலே ஸஞ்சரிக்குமது. (கம்பீரேண]சிங்கத்தின் தோற்றம் அதிகம்பீர மென்னுமிடம் சொல்லவேண்டா.
ஸ்வாமியினுடைய காம்பீர்யம் ஸ்ரீஸுக்திகளிலும் திருவுருவத்திலுமாகும்.

(பராத்ம பேதநமஹா நாதே ) இந்த விசேஷணத்தில் சிலேடை அமைந்துள்ளது.ஸிம்ஹ பக்ஷத்தில் “பரேஷாம் ஆத்மானம் பிநத்தீதி பராத்ம பேத :; ததாவித:மஹாநாதோ யஸ்ய” என்கிற வ்யுத்பத்தி கொள்ளத் தக்கது. ஸிம்ஹத்தின் பெரு முழக்கம் இதர ஜந்துக்களின் உயிரை மாய்க்க வல்ல தென்கை. இனி யதிராஜ ஸிம்ஹ பக்ஷத்திலோவென்னில், “பரச்ச ஆத்மானச் ச பராத்மா ; தாந்பிநத்தீதி பராத்ம பேதந , ததாவிதோ மஹா நாதோ யஸ்ய” என்று வ்யுத்பத்தி கொள்ளக் கடவது. பரம புருஷனுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிற விமத வாதிகளைக் கண்டித்து ஜீவ பர பேதத்தை ஸாதிக்க வல்ல திருமிடற்றோசையை யுடையவரன்றோ பகவத் ராமாநுஜர் ! நூற்றந்தாதியில் “உயிர்கள் மெய்விட்டா திப்பரனோடு ஒன்றாமென்று சொல்லுமவ்வல்ல லெல்லாம் வாதில் வென்றான் எம்மிராமா நுசன் மெய்ம்மதிக் கடலே” என்றருளியது இங்கு நோக்கத்தக்கது.

ஆக இத்தகைய பொருத்தங்களினால் ஸிம்ஹ மென்று போற்றத் தக்க எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கிடக்கிற நாம் நிர்ப்பயமான வாழ்ச்சியை யுடையோம் என்றதாயிற்று.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக ஸித்தாந்த ஸாரம்–

January 29, 2026

நிகமாந்த குரூத்தம ஸக்திததீ நிகமாஞ்சல யுக்ம மஹார்த்த மயீ
நிகமாந்த யுகாம்புதி மக்ந் ஹ்ருதாம் ஹ்ருதயே நிததே ரஸிகா:! பி/பத
–உபய வேதாந்தக் கடலில் ஆழ்ந்த பொருள்களை எடுத்துரைக்குமவையான ஸ்ரீமந் நிகமாந்த மஹா குருவின் ஸ்ரீஸூக்திகளை உபய வேதாந்த ஸாகர பாரங்கதர்களின் உள்ளத்தில் பதிய வைக்கிறேன். ரஸிகர்கள் அநுபவிக்க வேணுமென்கை

வேதக் கடல் கடைந்த வேதாந்த வாசிரியன்
போதக் கடலாய்ப் புனிதமாய்க் கோதற்ற
தேன் மொழிகள் தந்தருளித் தீய பொருள் திரளைத்
தானொழித்தான் தாளே சரண்.

தேசார்ந்த தேசிகனார் தேர்ந்தருளிச் செய்த பல
வாசா மகோசரமாம் வாய் மொழியால்-மாசார்ந்த
தீயபொரு ளனைத்தும் தீயினில் தூசாகிப்
போயின் வென்பதுரைப் போம்.

“நாதோபஜ்ஞம் ப்ரவருத்தம் பஹு பிருபசிதம் யாமுநேய ப்ரபந்தை.
த்ராதம் ஸம்யக் யதீந்த்ரை ரிதமகில தம: கர்சநம் தர்சநம் ந:”
என்கிற தேசிக ஸூக்திப் படியே,நம்மாழ்வார் திருவருளால் ஸகலார்த்த விசேஷங்களையும் நிதி பெற்றாற்
போலே பெற்று வாழ்ந்த ஸ்ரீமந்நாதமுனிகள் அநுஸந்தித்துக் கொண்டிருந்த ஸத்
ஸம்ப்ரதாயார்த்தங்களை மணக்கால்நம்பி வழியாக லபிக்கப் பெற்ற ஆளவந்தார்
அவ்வர்த்த விசேஷங்களைத் தம்முடைய திவ்யகடாக்ஷ மூலமாகவும் பெரிய நம்பி
திருமலைநம்பி திருக்கோட்டியூர்நம்பி திருமாலையாண்டான் முதலான ஸ்வசிஷ்ய
வர்க்க மூலமாகவும் எம்பெருமானார் பக்கலிலே தேக்கி யருள, அவை எம்பார் ஆழ்வான் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை முதலான ஆசாரியர்களின் வழியாகவும், திருக் குருகைப் பிரான் பிள்ளான் கிடாம்பி யாச்சான் எங்களாழ்வான் நடாதூரம்மாள்-முதலான ஆசார்யர்களின் வழியாகவும் பரவஹித்து அஸ்மதாதி ஸம்ஸாரி சேதந் ஸமுஜ்ஜீவந் ஸாதனங்களாய் விளங்கி வாரா நின்றன.

மேலே நிர்தேசித்த ஆசார்யவர்யர்கள் பேசிற்றே பேசும் ஏக கண்டர்களாகையாலே இவர்களின் திவ்ய ஸூக்திகளிலே அர்த்த பேதம் காண்கைக்கு அவகாசமில்லை. ஸ்வல்ப யோஜனா பேதம் கண்டால் காணலாமத்தனை. இது ஸம்ப்ரதாய பரிசுத்தியில்- “ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை. வாக்ய யோஜநா பேதமே யுள்ளது. தேச காலா வஸ்தா விசேஷங்களாலே வரும் அநுஷ்டான வைஷம்யம் சாஸ்த்ராநுமதம்” என்கிற ஸ்ரீ ஸூக்தியினாலும் விசதம். இவ் வுண்மையை யுணராதார் சிலர், வேதாந்த வாசிரியர் தனிப்பட்டிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாரென்றும், நம்பிள்ளை, பிள்ளை லோகாசாரியர் முதலானார் கொண்டிருந்த கொள்கைகளை அசாஸ்த்ரீயங்களென்று கண்டித்து விட்டாரென்றும் சொல்லிப் போருவது ஆதாரமற்ற தென்பதையும், நவீநர்கள் ஆதரித்து வருகிற அர்த்தங்களுக்கும் ஆசரித்துப் போருகிற அனுஷ்டானங்களுக்கும் வேதாந்த தேசிக க்ரந்தங்களில் ஆதார மில்லை யென்பதையும் ஸாரமாகவும் ஸம்பேமாகவும் உபபாதிப்போமிதில்.

பகவத் க்ருபை நிர்ஹேதுகமென்று கொண்டால் ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வருமென்றும் வைஷம்ய நைர்க்கண்யாபத்தியைப் பரிஹரிக்கின்ற “வைஷம்ய நைர்க்ருண்யேந ஸாபேக்ஷத்வாத்” என்கிற ப்ரஹ்ம ஸூத்ரம் விரோதிக்குமென்றும் சில வாதங்கள் கிளம்புவதுண்டு. உலகத்திலுள்ள ஸகல ப்ராணிகளிடத்திலும் எம்பெருமான் நிர்ஹேதுகமாகவே அருள் செய்வதாகக் கூறினால் தான் மேற் சொன்ன வாதங்களுக்கு ப்ரஸக்தியுண்டு.அப்படி யாரும் கொள்வதில்லை. அதிகாரி விசேஷங்களிடத்தில் நிர்ஹேதுகமாக அருள் செய்கிறா னென்றே ஸகலாசார்யர்களு மருளிச்செய்வது. இக் கொள்கையில் தேசிகன் வேறுபாடு கொண்டவரல்லர். நிர்ஹேதுக க்ருபையைப் பற்றிப் பல விடங்களிற் பேசுகிறார். சில விடங்கள் காட்டினால் போதுமன்றோ.

பரம பத ஸோபாநத்தில்—“அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்ய புத்தி மூல க்டுத விசேஷங்களை வியாஜமாகக் கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி என்றருளிச் செய்தார். இதில் “வ்யாஜமாகக் கொண்டு” என்றதையும் ஸஹியாமல் அவ்யாஜ க்ருபையையும் அருளிச் செய்து போந்தார். அது எங்கே யென்னில்; திருவாய்மொழியில் முதற்பத்தில் பொருமா நீள் படை யென்கிற பத்தாவது பதிகத்திற்கு ஆறாயிரப்படியிலில்லாத விஷயம் அவ்வாறாயிரப்படிக்குப் பிற்பட்ட வியாக்கியானங்களிலுள்ளது. அதாவது, இப் பதிகத்தினால் ஆழ்வார் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவத்தை யநுபவிக்கிறாரென்று பட்டர் நிர்வஹித்தருளினதாகக் காட்டப்பட்டது. அந்த நிர்வாஹத்தையே தேசிகன் ஆதரித்து த்ரமிடோபநிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் ஆதாவித்தம் பரத்வம் ‘ என்கிற ஸ்லோகத்தில் “அவ்யாஜோதாரபாவாத்” என்றருளிச் செய்தார். நிர்ஹேதுக க்ருபா விசிஷ்டனாகையாலே என்றபடி. இவ்விடத்தில் இரண்டு விசேஷங்கள்-(1) எம்பெருமானை நிர்ஹேதுக க்ருபாவானாகச் சொன்னது ஒன்று; (2) இவ் விஷயம்-ஆறாயிரப்படியில் இல்லாமல் அதற்குப் பின் தோன்றிய வியாக்கியானங்களில் மட்டும் விளங்கா நிற்கவும் இதையே ஆதரித்துப் பரிக்ரஹித்தது மற்றொன்று. இங்கு முன்னமெடுத்துக் காட்டிய பரமபத ஸோபாந ஸ்ரீ ஸூக்தியானது, ஸ்ரீவசந பூஷணம் நான்காவது ப்ரகரணம் ஆரம்பத்திலுள்ளதான ”த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க…… என்னுரைச்சொன்னாய் என் பேரைச்சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக் கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்னுமாபோலே சிலவற்றை ஏறிட்டு…..ஐந்ம பரம்பரைகள் தோறும் யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருத விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் ” என்கிற ஆச்சரியமான சூர்ணையை தேசிகன் அநவரதம் சிந்தனை செய்து போந்தவரென்பதைப் பேதையரு மறியும்படி அமைந்துள்ளது.

பொரு மா நீள் படை –ஆறாயிரப்படி –1-10–பிரவேசம் –
இப்படி எம்பெருமான் தம்மோடு கலந்த கலவையால் தமக்குப் பிறந்த நிரவதிகமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார் –

இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சி யுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப் போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;-என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;-மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரவாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று – உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று, கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம்
-11-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்-ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

தயா சதகத்தில் நிஷாதாநகும் நேதா கபி குலபதி: காபி சபரீ குசேல: குப்ஜா ஸா வர யுவதயோ மால்ய க்ருதிதி, அமீஷாம் நி நத்வம் வருஷகிரிபதேருந்நதிம பிப்ரபூதை: ஸ்ரோதோபி : ப்ரஸப மநுகம்பே! ஸமய * என்கிற ஸ்லோக ரத்நத்தின் பொருளை உபந்யஸிக்கப் புக்கால் குஹப் பெருமாள் ஸுக்ரீவ மஹாராஜர் சபரி குசேலர் கூனி ஆய்ச்சியர் மாலாகாரர் என்னுமிவர்கள் இராமபிரானுடையவும் கண்ணபிரானுடையவும் நிர்ஹேதுக கருணைக்கு இலக்கானவர்கள் என்றல்லது வேறொன்று சொல்லிப் பிழைக்க வொண்ணாதாயிற்று.ஸ்தோத்ர க்ரந்தங்களில் பணிப்பது ரசம்ஸைக பரமாதலால் அது தன்னை சாஸ்த்ரார்த்தமாகக் கொள்ள வொண்ணா தென்று கூறவருவர்கள். முநி வாஹந போகமென்று பெயரிட்டு ரஹஸ்ய கரந்தமாகப் பணித்த அமலனாதி பிரான் வியாக்கியானத்தின் உபக்ரம ஸ்ரீ ஸூக்தி இது காணீர்;–“காரண விசேஷம் இன்னதென்று அறுதி யிட அரிதாயிருப்பதொரு பகவத் கடாக்ஷத்தாலே அத்ந லப்தமான……என்று. இவ்விஷயத்தில் இவ்வளவே போதும்.

“ஈஸ்வரனுக்குத் தான் சேதன லாபம் புருஷார்த்தம்” என்பது ஸித்தாந்த ஸாரம். தேசிகனுடைய திருவுள்ளமும்-சேதந லாபம் ஈஸ்வரனுக்குப் பேறு என்பதேயாம். இதனை அவர் கீதா பாஷ்ய
தாத்பர்ய சந்திரிகையில் வெகு அழகாகக் காட்டி யுள்ளார். கீதையில் ஒன்பதாம
த்யாயத்தின் முடிவிலுள்ள *மந் மநா பவ” என்கிற ஸ்லோகத்தின் பாஷ்யத்திற்கு
விவரண மெழுதுகையில்- “(“ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே “) என்றருளி யிருக்கிறர்.-“அஹமந்ந மஹமந்ந மஹமந்நம்” என்பது முக்தனுடைய முதல் வார்த்தை. ‘பகவானுக்கு நான் அன்னமாகிறேன்’ என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக இதில் சொல்லுகிறது. இதனால், ஈஸ்வரனானவன் சேதனனைப் பெற்று அனுபவிக்க வேணுமென்று பெரும் பசி கொண்டிருந்தா னென்றும், அப் பசி முக்தாத்மாவால் முதலில் தீருகிறதென்றும் ஸ்பஷ்டமாகிறது. இல்லை யாகில், அஹமந்தம்” என்று ஓத வேண்டிய தில்லை யன்றோ?-ஆளவந்தார் * கதாஹமைகாந்திக நித்ய கிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: * என்றார். இதில் ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற க்ரியா பதம் ஆச்சரியமாக அமைந்தது.உனக்குத் தொண்டு செய்து நான் எப்போது ஆநந்திக்கப் போகிறேனென்னாமல் நான் எப்போது உன்னை ஆநந்திப்பிக்கப் போகிறேன்‘ என்றர். ணிஜந்தப்ரயோகம் நோக்குக. இங்கு வியாக்கியானத்தில்- “தன்னுடைய அநுவருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷமேயிறே சேதநனுக்கு ப்ராப்யம்” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்ததை ஸ்தோத்ர பாஷ்யத்தில் தேசிகன் மொழிபெயர்த்தார் “[ப்ரஹர்ஷயிஷ்யாமி] த்வத்தாஸ பூதஸ்ய மே த்வத் ப்ரஹர்ஷ ஏவ ரதாநம் ப்ரயோஜ நமிதி பாவ ‘‘ என்று. இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது ‘ந ச பரம புருஷ : ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா கதாசிதாவர் தயிஷ்யதி” என்கிற ஸ்ரீபாஷ்ய ஸூக்தி. இதில் ”பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றது உயிரான ஸூக்தியன்றோ? இதையே தேசிகன் பலவிடங்களில் பல முகமாக விவரித்தருளி னாராயிற்று.

சேதநன் தான் எம்பெருமானைப் பற்றுவது ஸ்வகத ஸ்வீகாரமென்றும், எம் பெருமான் தானே சேதநனை வரிப்பதானது பரகத ஸ்வீகார மென்றும் வழங்கப் படுகின்றது. முறையே மர்க்கட கிசோர ந்யாய மென்றும் மார்ஜார கிசோர ந்யாய மென்றும் வழங்குவர்.கீதையில் எட்டாவது அத்யாயத்தில் பதினான்காவது ஸ்லோகம் –அநந்ய சேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச:
தஸ்யாஹம் ஸு லப: பார்த்த! நித்ய யுக்தஸ்ய யோகிந:)
என்பது.-” ஞாநீ து ஆத்மைவ மே மதம்” என்று பகவான் தான் தனக்கு உயிர் நிலையாகக் கொண்டாடும் ஞானியானவன் தன்னை உபாஸிக்க வேண்டியபடியையும் பேறு பெறும் பரிசையும் இனி யருளிச் செய்கிறான் (கண்ணபிரான்) என்று அவதாரிகை யிட்டு ஸ்லோகத்தை வியாக்கியானித் தருளியுள்ளார் பாஷ்யகாரர்-

இதில் [தஸ்யாஹம் ஸுலப:– ‘அவனுக்கு நான் ஸுலபன்’ என்கிற பகுதிக்கு பாஷ்யம் செய்தருளி யிருக்கின்ற வகையாவது,
(தஸ்ய நித்ய யுக்தஸ்ய – நித்ய யோகம் காங்க்ஷமாணஸ்ய யோகி ந:, அஹம் ஸுல : -அஹமேவ ப்ராப்ய:; ந மத் பாவ ஐஸ்வர்யாதிக: ஸுப்ராபச்ச,தத் வியோக மஸஹமாந: அஹமேவ தம் வ்ருணே. மத் ப்ராப்த் யநுகுணோபாஸந விபாகம் தத் விரோதி நிரஸநம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம்ச அணமேவ ததாமீத்யர்த்த: * யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: இதி ஹி ஸ்ரூயதே. வ யதி ச தேஷாம் ஸ்தத யுக்தாநாம்…-இதி.-என்னோடு எப்போதும் கூடியிருக்க வேணுமென்கிற விருப்ப முடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன். மிக எளிதாக அடையத் தகுந்தவனு மாகிறேன்நான். (அதாவது) அவனுடைய பிரிவைப் பொறுக்க மாட்டாதவனாய் [அவனைப் பிரிந்து தரித்திருக்க மாட்டாதவனாய்] நானே அவனை வரிக்கிறேன். என்னை யடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும், அதற்குற்ற இடையூறுகள் நீங்குதலையும், என்னிடத்தில் அதிகமான ப்ரீதி முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன்.* நாயமாத்மா ஸ்ருதியில் இவ் வர்த்தம் ப்ரஸித்தமாயிருப்பதோடு இந்த கீதையிலே மேலே பத்தாவது அத்யாயத்தில் 10, 11 ஸ்லோகங்களாலும் சொல்லப்படுகின்றது – என்பதாம்.

தத் வியோகம் அஸஹமாந : அஹமேவ தம் வருணே *] ஞானியான சேதநனைப் பிரிந்திருப்பதை எம்பெருமான் தான் பொறுத்திருக்க மாட்டாதவனாய்த் தானே அந்த சேதநனை வரிப்பதாகக் கூறுகின்ற விதுதான் பரகத ஸ்வீகார மென்பது.இந்த வாக்கியமானது ஸ்வகத ஸ்வீகாரப் பற்றசை நன்றகக் கழிக்கிறது.-இத் தலையில் விளைவதெல்லாம் எம்பெருமானுடைய க்ருஷி பலமாக விளைகின்றதே யன்றி இவன் தலையாலே விளைவித்துக் கொள்ளுமது ஒன்றுமில்லை என்கிற
ஸத் ஸம்பிரதாய ஸாரார்த்தம் தெளிவிக்கப்பட்டது. இந்தஇடத்தில் நாயமாத்மா ஸ்ருதியையும் எடுத்துக் காட்டி யருளின பாஷ்யகாரர், பரகத ஸ்வீகாரத்திற்கு அதுவே பிரமாணமென்று நிரூபிக்கிற முகத்தாலே பிறருடைய அசட்டு வாதங்களை அகற்றினாராயிற்று.-

இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையில் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்துள்ள திவ்ய ஸுக்திகள் தேனே பாலே கன்னலே யமுதே யத்தனை; [உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ சங்காவ்யுதாஸாய ஸ்ருதி மூலதாமாஹ யமேவேதி] என்றருளிச் செய்திருப்பது ஆழ்ந்து நோக்கத் தக்கது.-் பிறர் எழுதியுள்ள அபார்த்தங்களுக்கு இடமில்லாதபடி செய்தருளி யிருக்கிறர் ஸ்வாமி தாத்பர்ய சந்த்ரிகையில்.
சேதநன் தலையிலே ஒன்றையும் வைத்திடாமல் அஹமேவ தம் வருணே…… அஹமேவ ததாமீத்யர்த்த:’‘ என்று ஒவ்வொன்றையும் எம்பெருமான் தலையிலே யாக்கிய பாஷ்யகாரர் அருளிச்செய்திருப்பதை அக்காலத்தில் சிலர் அதிவாதமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் போலும்.அது தேசிகன் திருச்செவியில் விழுந்தபடியால் அதை ஸஹித்திருக்க மாட்டாமல் “உக்தஸ்ய அதிவாத மாத்ரத்வ
சங்கா யுதாஸாய ஸ்ருதி மூலதாமாஹ -யமேவேதி
‘ என்று ப்ராமாணிகமான அவதாரிகையை இட்டருளினார். பரகத ஸ்வீகாரமென்பது உபநிஷத் ஸித்தமான அர்த்தமாகையாலே அதிவாதமென்று நெஞ்சாலும் நினைக்கத்தகாது என்று வெட்டொன்று துண்டிரண்டாக அருளிச் செய்தாராயிற்று தேசிகன்.-“த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே” என்றும் புகலொன்றில்லா வடியேன் உன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே என்றும் நாம் பற்றுகிறோமாகக் காட்டிக் கொண்டு திருவடிகளிலே விழுந்தாலும், இது நாம் பற்றின பற்றன்று; எம்பெருமான் தானே பற்றுவித்தானத்தனை; அவன் நெடு நாளாகப் பண்ணிப் போந்த க்ருஷி பலித்ததத்தனை’-என்கிற அநுஸந்தானம் ஊடுருவச் செல்ல வேணு மென்பதேயாம்.

தனக்கு உபாயத்வமுண்டென்று சொல்லுமவர்களை முக்கியமாகக் கண்டிப்பவர் நிகமாந்த மஹா குருவேயாவர். மேலே உதாஹரித்த கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோக வியாக்கியானத்தில்(ரக்ஷையில்) தேசிகனருளிச் செய்வது காணீர் :--“ஸ்வயம் ஸ்வாதுத்வாத் க்ஷணிகஸ்ய காலாந்தர பாவி பல ஸாதநத்வா னுபபத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வ வ்யாபாரே மோஷோபாயதா புத்தி ரபிஸ்யாதிதி பாவ:. அத: தைஸ்தைராராத்தோ பகவாநேவ ஹி ஸர்வத் ரோபாய? என்று.-*உபபத்தேச்ச(3-2-34) *பலமத உபபத்தே. (3-2-37.) என்கிற ப்ரஹ்ம ஸத்ரங்களின் ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி விபுலமாக அருளிச் செய்திருக்கும் ஸ்ரீஸூக்திகளின் ஸாரமாகவே மேலே உதாஹரித்த கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷா ஸூக்தி அமைந்தது.-

ந்யாஸ தசகத்தில் “ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந் நிர்பரம், ஸ்வ தத்தஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந் ந்யஸ்யதி மாம் ஸ்வயம்.” என்னும் ஸ்லோகத்தில் ஒன்பதின்கால் ஸ்வ சப்த ப்ரயோகம் செய்தருளி யுள்ளார் தேசிகன். இதனால் சேதனனுடைய முயற்சி நாற்றம் வேரறுக்கப் படுகின்றமை யறிந்தால் உபாயமென்றும் ஸாத்யோபாய மென்றும் வாய் திறக்க வழியில்லை. ஸாத்யோபாயமென்றால் யாரால் பாதிக்கப்படுமுபாயம்? என்று கேள்வி வரும். சேதநனால் ஸாதிக்கப்படுவதாகச் சொல்லியாக வேணும். இச்சொல்லை ஒன்பது வாள்கள் கொண்டு கண்டிக்கின்றதன்றோ கீழே காட்டிய தேசிக ஸ்லோகம் !-

ஸ்வாமிந் ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப் பரம்
ஸ்வ தத்த ஸ்வ தியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நிஸ்யஸி மாம் ஸ்வயம். (3)

[ஸ்வாமிந் — ஸ்வத்வத்தை உடையவரே! ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனே !
ஸ்வ சேஷம் — தேவரீருடைய ஸொத்தாகவும் தேவரீருக்குச் சேஷ பூதனாயும்;
ஸ்வ வசம் — தேவரீருக்கு அதீநனாயும் இருக்கிற, தேவரீருக்கு உட்பட்டவனும் ஆன; மாம் -அடியேனை;
ஸ்வதத்த ஸ்வதியா — தேவரீரால் கொடுக்கப் பெற்றதான தேவரீரைக் குறித்ததான புத்தியினால்,
தேவரீரால் அளிக்கப் பெற்ற தேவரீருடைய புத்தியால், இச்சரீர ப்ரதாநம் முதல் ஸதாசார்ய ஸம்ச்ரயணம் பண்ணி வைத்து-த்வயோச்சாரணம் வரையில் உள்ள ஜ்ஞாநத்தினால்;
ஸ்வார்த்தம் — தேவரீருக்காகவே, தேவரீருடைய லாபத்துக்காகவே;
நிர்ப்பரம் — அடியேனுக்குச் சுமையில்லாதபடி, அடியேனுக்கு ஒரு பொறுப்பும் இல்லாதபடி;
ஸ்வ பரத்வேந — செய்யவேண்டிய கார்யங்கள் தேவரீருடைய பரமாக, தேவரீருடைய பொறுப்பாகவே;
ஸ்வஸ்மிந் — தேவரீரிடத்தில்; ஸ்வயம் — தேவரீரே; ந்யஸ்யஸி — வைத்துக் கொள்ளுகின்றீர்.]

அடியேனை ஸொத்தாக வுடைய பெருமாள், தனக்கு அடிமை யானவனும், தன்வசமா யிருப்பவனும்,
தன்னிடம் பரத்தை வைத்து விட்டபடி யாலே எல்லா வித பரமும் நீங்கினவனுமான அடியேனுக்குத் தன்னைப் பற்றிய ஞானத்தைத் தானே கொடுத்து, தான் அளித்த தன்னறிவாலே தனக்காகவே தன்னிடத்தில் தானே அடியேனை வைத்துக் கொள்ளுகிறார்.

நியாய ஸித்தாஞ்ஜநத்தில் ஸ்பஷ்டமாக வருளிச் செய்கிறார். (அதில் ஜீவ பரிச்சேதத்தில்)”இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வ ப்ரத்யயாத்மிகா, ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தேகிம் புநஸ் ஸஹ காரிணாம்’ என்கிற ஸ்லோகம் ஸித்தாஞ்ஜனமேயாகும். இந்த ஸ்லோகத்தினால் ப்ரபத்தியின் அநுபாயத்வம் தர்மிக்ராக ப்ரமாண ஸித்தம் என்று சிலா லிகித மாக்கினபடி சாஸ்த்ரஜ்ஞர்களில் தலைவரான தேசிகன் சாஸ்த்ரகதி விருத்தமாக ப்ரபத்தி உபாயமென்று நெஞ்சாலும் நினைக்க மாட்டாரன்றோ?*ஹேதுர் வைதே விமர்சே என்கிற ஸ்லோகம் காண்க. இதன் கருத்தாவது-ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் உபாயமென்று சொல்ல வேண்டி யிருந்தாலும் இங்கு அப்படிக் கொள்ள வேண்டா; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெருமானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக் கடவதா யிருக்கிற கணக்கில இந்த ப்ரபத்தி வித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் (பிறிதொன்றை எதிர்பாராத உபாயத்வம் ) அறியத்தக்க ரூபமாதலால்- என்று இந்த ஸ்லோகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ரஹஸ்யங்களிலும் இஃது உள்ளது.இசைவித் தென்னை யுன் தாளிணைக் கீழிருத்து மம்மானே என்பது போன்ற பல பாசுரங்களைக் கண்டால் இது நம்முடைய முயற்சியால் ஸாத்யமன்றிக்கே ஸர்வேஸ்வரனுடைய க்ருஷி பலமாகவே விளையுமதாக உண்மை தெரிவதால் ஸாத்யோபாய மென்கிற வ்யபதேசமும் இதற்கு ஏலாது.-இவ் விஷயமான “ஸ்வீகாரந் தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம்” என்ற பிள்ளை லோகாசார்யருடைய ஸ்ரீஸூக்திக்குச் சார்பாக தேசிகன் நிதானம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:* என்று ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஒன்பதாவதான உபாய விபாகாதிகாரத்தின் முகப்பில் ஸாதித்துள்ள ஸ்லோகம் வடிக் கட்டின சாஸ்த்ரார்த்தமாக வன்றோ விளங்குகின்றது-)

உபாய: ஸ்வ ப்ராப்தே: உபநிஷததீ தஸ் ஸ பகவாந்
ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதன நிதித்யாஸநகதீ.
ததாரோஹ: பும்ஸாம் கூக்ருத பரிபாகே ந மஹதா
நிதாநாம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:.
-என்பதாம் அந்த ஸ்லோகம். இதன் பொருளை நாம் விவரிக்க வேண்டுமோ?
அக்ஷர லப்யமான பொருளை யாரும் மாறுபடுத்த முடியாது. அவனைப் பெறுதற்கு அவனே உபாயமென்னுமிடம் உபநிஷத் ஸித்தம். பக்தி ப்ரபத்திகளானவை அவன் திருவுள்ள முகக்கைக்காக வாமத்தனை. அந்த பக்தி ப்ரபத்திகள் அமைவது மஹத்தான ஸுக்ருத பரிபாகத்தினால் தான். அந்த க்ருதந்தானும் எலியெலும்பனான சேதநனடியாக விளைவதன்று; நிகில நிர்மாண நிபுணனான பரமபுருஷன் தானே அதற்கும் மூல காரணமாவன்-என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

இதில் *நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண: * என்கிற நான்காம் பாதமானது லோகாசார்ய ஸித்தாந்த ஸர்வஸ்வமென்று கொள்ளக் கடவது.
சேதனன் தலையிலே சிறு நாற்றத்தையும் ஸஹியாதே அறவே துடைத் தொழிக்கும் வார்த்தை யன்றோ விது!-நிதாநமென்கிற சொல்லுக்கு என்ன பொருளென்பதை அமர கோசங் கொண்டு அறிவது.நிதாநம் து ஆதி காரணம் ‘ என்றான் அமர ஸிம்ஹன்.-சேதநன் தலையிலுள்ளதாக எந்த ஹேத்வாபாஸத்தைக் காட்டினாலும் அதுவும் பரம புருஷனடியாக வந்ததே யொழிய இத் தலையாலே வந்தது லவ லேசமுமில்லை யென்று தேசிகன் கல் வெட்டாக்கி வைத்திருக்க, இதற்கு நேர் விருத்தமாகச் சொல்லிக் கொண்டு போராடுவது என்னோ? “ஸ்ருஷ்ட் யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம் ” என்ற பிள்ளை லோகாசார்யருடைய ஸ்ரீ ஸூக்தியே“நிதாநம் தத்ராபீத்யாதி ஸ்ரீ ஸூக்தியாக மொழி பெயர்ந்தது என்பதில் ஸந்தேஹமுண்டோ?

தேசிகனுடைய திவ்ய ஸக்திகளில் ” குண தலிபிக்ரமாது பநிபாதிநபா ந: * என்பது ஆச்சரியமான வொரு ஸூக்தி.-நாம் எம்பெருமானிடத்திலே சென்று சேருவதானது நம் இச்சையினாலே யன்று; குணாக்ஷர ந்யாயத்தாலே யாமத்தனை. அந்த நியாயமாவதென் னென்னில்; புழுவானது நேராகச் செல்ல மாட்டாது; சுருங்கியும் மடங்கியும் குடிலமாகச் செல்லுவதே அதன் இயல்வு.அங்ஙனம் செல்லுவதை நாம் உற்று நோக்கில் ஏதேனுமொரு பாஷையிலே சில எழுத்துக்கள் எழுதினாற் போல் தேறும். எழுத்து எழுத வேணு மென்கிற நினைவு அதற்கு இருக்க ப்ரஸக்தியில்லை.ஆயினும் யாத்ருச்சிகமாக எழுத்துத் தேறுகின்ற தென்பதைக் காணா நின்றோம். இது தான் குணாக்ஷர ந்யாயமென்பது. குணக்ஷத லிபிக்ரமாத்” என்று ஸ்வாமி ஸாதித்ததும் இதுவே யாம். நம்பிள்ளை பெரியாவாச்சான் பிள்ளைகள் “புழு குறித்தது எழுத்தாமாப் போலே” என்றருளிச் செய்திருப்பதையே ஸ்வாமி தேசிகன் இங்ஙனம் மொழி பெயர்த்தாரென்னத் தட்டில்லை. இந்த நியாயத்தைக் கொண்டு ஸ்வாமி என்ன ஸாதிக்கிறாரென்னில் லிபிக்ரமாத் உபநிபாதி : ந பாதி ” என்கிறார். புழு குறித்தது எழுத்தாகிற க்ரமத்திலே உபநிபாதிந -தன்னிடம் வந்து சேருமவர்களான, ந-நம்மை, பாதி – எம்பெருமான் காப்பாற்றி யருள்கிறான் என்று ஸாதித்துள்ளார். புத்தி பூர்வகமாக வன்றிக்கே கடலலை வழியாகக் கரையிலே தள்ளுண்டு வந்து சேரும் துரும்பு போலே யாத்ருச்சிகமாகத் தன் பக்கலிலே வந்து சேருமவர்களை எம்பெருமான் தன்னுடைய இயற்கை யின்னருளாலே குளிரக் கடாக்ஷித்து அருள் செய்கின்றா னென்கிற பரமார்த்தம் இதனால் தெரிவிக்கப் பட்டதாயிற்று ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் விபுலமாக ஸாதித்தவற்றை ஸாரமாக வெடுத்துரைப்பதென்னுங் காரணத்தினால் இதற்கு ஸார ஸார மென்றே திருநாமமிட்டனர். அதில் சரம ஸ்லோகாதிகாரத்தில்”இப்படி விதேயமான ப்ரபதநத்தைச் சிலர் அதிகாரி விசேஷணம் ஸம்பந்த ஜ்ஞாந மாத்ரம் ஸித்தோபாய ப்ரதிபத்தி மாத்ரம் அநிவாரண மாத்ரம் அநுமதி மாத்ரம் அசித் வ்யாருத்தி மாத்ரம் சைதந்தை க்ருத்யம் சித்த ஸமாதாநம் என்றாற் போலே சொல்லுமதுவும் இவ் விதிக்கும் இத்தை விஸ்தரிக்கிற சாஸ்த்ரங்களுக்கும் இவற்றுக்குச் சேர்ந்த உபபத்திகளுக்கும் பாஷ்ய கத்யாதிகளுக்கும் நிபுண ஸம் ப்ரதாயங்களுக்கும் அநுகுணமாக வேண்டுமாகையாலே * நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேனென்று நிற்கிற நம்மை ஈஸ்வரன் ரக்ஷிக்கிற விடத்தில்,*வந்தடைந்தேனென்று நாம் பண்ணுகிற அல்பமான வசீகரண யத்நம்* அதுவுமவன தின்னருளே * இசைவித்தென்னை இத்யாதிகளிற் படியேஅவன் தானே காட்டி ப்ரவர்த்திப்பித்ததொரு வ்யாஜமாத்ர மன்றோவென்று ஸித்தோபாய ப்ராதாந்யாநு ஸந்தானத்தில் அவர்களுக்கு தாத்பர்யம்.” என்றருளிச் செய்திருப்பது காணீர். உண்மையான சாஸ்த்ரார்த்தம் எதுவோ அதைத் தான் இங்கு வெளியிட்டருளினார். ” அவர்களுக்கு தாத்பர்யம் ” என்றவிதனையே பல விடங்களில் தம்முடைய தாத்பர்யமாக வெளியிட்டிருப்பதைக் கீழே காட்டியுள்ளோம். யாதவா யுதயமென்னும் மஹா காவ்யம் ஸ்வாமி தேசிகன் பணித்தது; இதில் பன்னிரண்டாவது ஸர்க்கம் ருக்மிணிப் பிராட்டி விஷயமானது. அதில் 1,2.ஸ்லோகங்களினால் ஸாக்ஷாத் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ருக்மிணிப் பிராட்டியாகத் திருவவதரித்ததாய்ச் சொல்லப்பட்டது. உடனே மூன்றவது ஸ்லோகம் [ சிகண்டகம் நிஷ்ப்ரதிமம் ச்ருதீநாம் சருங்கார லீலோபம விச்வக்ருத்யம், அதீயதே தந்மிதுநம் ஸ்வபாவாத் அந்யோந்ய ஜீவாது மநந்ய போக்யம்”.] என்பதாகவுள்ளது. இதற்கு மேலுள்ள ஸ்லோகங்களெல்லாம் ருக்மிணிப் பிராட்டியை மாத்திரமே நோக்கியவை. முதலிரண்டு ச்லோகங்களும் அப்படிப் பட்டவை. இடையில் மூன்றாவதான ஸ்லோகமொன்று மாத்திரம் மிதுநம் என்கிற நிர்தேசத்தை யுட் கொண்டு தோன்றியுள்ளது. இந்த ஸ்லோகத்தில், ஸ்ருங்கார வீலோபம விஸ்வ க்ருத்யம் என்பதற்கு வியாக்கியான மென்ன வென்றால், ”ஸ்ருங்கார லீலாவத் அநாயாஸ ஸாத்ய -விநோத ரூப-ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதி க்ருத்யம்” என்பதேயாம். இப்படிப்பட்ட க்ருத்யத்தைப் பிராட்டியினிடத்தில் தனியாக இட்டுப் பேசுவதற்குத் திருவுள்ள மில்லாமையினாலேயே தேசிகன் மிதுநம் என்கிற பதத்தை ப்ரயோகித்து இடையிலே இந்த வொரு ஸ்லோகத்தை விலக்ஷணமாக அமைத்தார். முன்னும் பின்னும் பிராட்டியை மாத்திரமே குறித்து ஸ்லோகங்களை யருளிச் செய்து போருகிறவர் இவ்வொரு ஸ்லோகத்தில் மிதுநம் என்று இருவரையும் சேர்த்தருளிச் செய்ததை உற்று நோக்கினால் ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதிகளில் பிராட்டிக்குத் தனிப்பட்ட அன்வய மில்லை யென்று தேசிகன் நிச்சயித் திருப்பது திடமாக விளங்கும். ஸ்ரீஸ்து தியிலும், யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹி ந்யமீஷாம் ஜந்மஸ்தேம ரலயரசநா ஐங்கமாஜங்கமாநாம்; தத் கல்யாணம் கிமபி யமிநாம்
ஏக லக்ஷ்யாம் ஸமாதெள பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவதீபாத லாக்ஷாரஸாங்கம்.
என்கிற இவ்வொரு ஸ்லோகமே போதும் பிராட்டி விஷயத்தில் தேசிகன் திரு வுள்ளத்தை உள்ளபடி யுணர. பிராட்டியை ஸ்துதிக்க இழிந்தவர் பிராட்டியினிடத் துள்ளதை யன்றோ பேச வேண்டும். “ஐங்கமா ஜங்கமா நாம் ஜந்ஸ்தேம ப்ரலயரசநாம் இந்திரே த்வம் கரோஷி*என்று ஸ்லோகமியற்ற அருமை யில்லையே. இப்படிச் சொன்னாலன்றோ பிராட்டியின் ஸ்துதியாகும் உண்மையில் இவளிடத்திலில்லாததை இருப்பதாக வைத்து எங்ஙனே கவி பண்ணுவர்? கூரத்தாழ்வான் முதலான பூர்வாசார்யர்கள் * ஆபவர்க்கிகபதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி: யஸ்யாவீக்ஷ்ய முகம் ததிங்கிதபர தீநோ விதத்தே இத்யாதியாக அருளிச் செய்ததைப் பின்பற்றியே தான் தேசிகனு மருளிச் செய்கிறாரென்பது ஸ்பஷ்டம். ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்திலும் பரிபூர்ண ப்ரஹ்மா நுபவாதிகாரத்தில் “ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன ஜகத் காரணத்வ- மோக்ஷ ப்ரதத்வ-ஸர்வாதாரத்வ- ஸர்வ நியந்த்ருத்வ – ஸர்வ சேஷித்வா-ஸர்வ சரீரத்வ-ஸர்வ சப்த வாச்யத்வ – ஸர்வ வேத வேத்யத்வ – ஸர்வ லோக சரண்யத்வ -ஸர்வ பல ப்ரதத்வ-லக்ஷ்மீ ஸஹாயத்வாதிகள் ப்ரதி நியதங்கள்’ என்றருளிச் செய்யப்பட்டது. இந்த மஹா வாக்யத்தில் ஜகத் காரணத்வத்தை முந்துறச் சொல்லி முடிவில் லக்ஷ்மீ ஸஹாயத்வத்தைச் சொல்லி யிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீ ஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதமோ அப்படியே ஜகத் காரணத்வமும் அவளுக்கு அஸம்பாவிதமென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்து மென்றும் காட்டப்பட்டதாயிற்று. இப்படி யருளிச் யெய்ததும் ஸ்ரீ பாஷ்யத்தில் “விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே என்றவிடத்து ஸ்ருத ப்ரகாசிகையில் “ஜகத் காரணத்வ மோக்ஷ ப்ரதத்வேஹி ராஜ்ச் சத்ர சாமரவத் ப்ரஹ்மண: அஸாதாரண சிஹ்நம்.” என்றருளிச் செய்திருப்பதைப் பின் பற்றியதே முனிவா ந போகத்தில் ஆதி என்றவிடத்தும் இப்படியே தானுள்ளது. ந்யாயஸித்தாஞ்ஜந ஜீவ பரிச்சேதத்திலுமிப்படியே தான். தேசிகன் சில்லரை ரஹஸ்யங்களென்றும் சில ரஹஸ்யங்கள் ஸாதித்திருக்கிறார். அவற்றை ஸேவித்தால் நல்ல தெளிவு உண்டாகும்.ரஹஸ்ய ரத்நாவளி யென்று ஒரு சிறு ரஹஸ்யம். அதில் “ஸ்ரீமானான நாராயணனொருவனுமே ஸர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம் ஸர்வ ஸ்வாமிநியாய் ஸர்வேஸ்வரனுக்கு சேஷமாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்”என்றருளிச் செய்து இதை ரஹஸ்ய ரத்நாவளீ ஹ்ருதய மென்கிற அடுத்த ரஹஸ்யத்தில் தாமே விவரித்தருளினார். உண்மையில் விவரணாபேக்ஷையே யில்லாத வாக்யமன்றோவிது. இப்படி நிஸ்ஸந்தேஹமாக வருளிச் செய்த விடங்கள் ஒன்றிரண்டல்ல, பலபல விடங்களுண்டு. சதுஸ் ஸ்லோகியில் மூன்றாவது ஸ்லோகத்தின் பாஷ்யத்தில் “மோக்ஷ ப்ரதே பகவதி முமுக்ஷணாம் கடக தயா ஏஷா திஷ்ட்டதீதி ஸர்வ ஸம்மதம் ” என்றருளிச் செய்ததொன்று போதுமே.”எம்பெருமான் தான் மோக்ஷ மளிப்பவன்; அதனைப் பெறுவிப்பவளாக மாத்திரம் பிராட்டி இராநின்றாள்” என்பது இந்த ஸம்ஸ்க்ருத ஸ்ரீ ஸூக்தியின் பொருள்-அதற்கு மேலுள்ள ஸ்ரீஸூக்திகளும் பிராட்டிக்கு உபாயத்வமில்லை யென்பதையே நிலைநாட்டுவன- த்வயத்தில் பூர்வ கண்டத்தில் பிராட்டிக்கு உபலக்ஷணத்வமா? விசேஷணத்மா ? என்று ஒரு விவாதத்தைக் கிளப்பிக் கொண்டு உபலக்ஷணத்வமென்று சிலர் சொல்லுவதாக வைத்து. அதைக் கண்டித்து விசேஷணத்வமே யுக்தமென்று ஸ்தாபிக்கப்படுகிறது ரஹஸ்ய த்ரய ஸாரத்தில். இது நம்முடைய பூர்வாசார்யர்களின் திருவுள்ளத்தைக் கண்டிப்பதென்று நவீனர்கள் மருண்டிருப்ப துண்டு. இது மிகத் தவறு. இங்குப் பிராட்டிக்கு விசேஷணத்வ மில்லை யென்று ஒரு ஆசார்யரும் உரைத்ததில்லை . முமுக்ஷப்படியில் த்வய ப்ரகரணத்தில் “இப்போதிவளைச் சொல்லுகிறது புருஷகாரமாக ” என்ற சூர்ணையின் வியாக்கியானத்திலே மணவாளமாமுனிகள் – (புருஷகாரமாக) என்கையாலே உபாய வஸ்து விசேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு முபாயத்வத்தில் அந்வயம் சொல்லும் பக்ஷம் நிரஸ்தம்” என்றருளிச் செய்திருக்குமிடத்து விசேஷணத்வத்தைக் கண்டோக்தியாகவே யருளிச் செய்திருப்பது காண்க. இங்கு உபலக்ஷணத்வம் கொண்டாலும் விசேஷணத்வம் கொண்டாலும் வாசி சிறிதுமில்லை யென்பதை சாஸ்த்ர மர்மஜ்ஞர்கள் உணர்வர்கள். பிராட்டிக்குப் புருஷகாரத்வமுண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்வமுமுண்டு என்று வாய்திறக்க வழியே கிடையாது. உபாயத்வமாவது தானே கொடுக்க சக்தியுடைத்தாகை. அஃதிருக்குமாகில் புருஷகார க்ருத்யத்திலே நின்று துவள வேண்டிய ப்ரஸக்தியே கிடையாதாகையால் நவீனர்களின் உத்வேல ப்ரஸங்கமெல்லாம் உதறித் தள்ளப்பட்டன.பிராட்டிக்குப் புருஷகார க்ருத்யம் தவிர, தனியே மோக்ஷ ப்ரதாத்ருத்வ முண்டென்பதை தேசிகன் நெஞ்சாலும் நினைத்தவரல்லர். அப்படியே அவளுக்குத் தனியே ஜகத் காரணத்வமுண்டென்றும் நினைத்தவரல்லர். சதுஸ்ஸ்லோகீ பாஷ்யத்தில் * “ஸ லக்ஷ்மீகஸ்ய ஸாம்ராஜ்யம் ஸர்வதா ஸு ப்ரதிஷ்டிதம்” என்றருளிச் செய்திருப்பதை உணர்வாராருமிலர். இதற்கு என்ன பொருள் தெரியுமோ? எவ்விதமான பெருமை சொல்ல வேணுமானாலும் தனிப்படச் சொல்லாதீர்கள், பிராட்டியோடு கூடிய பெருமானுக்குச் சொல்லுங்கள். “இவளோடே கூடியே வஸ்துவினுடைய உண்மை” என்று பிள்ளை லோகசார்யர் முமுக்ஷப்படியிலருளிச் செய்தபடியே ஸலக்ஷ்மீகனான ஸர்வேஸ்வரனுக்கே ஸாமராஜ்யம் ஸுஸங்கதமாம். என்று கட்ட குட்யாம் ப்ரபாதமான கணக்கிலே சொல்லித் தலைக்கட்டியான பின்பு பிராட்டியைத் தனியே பிடித்துக் கொண்டு மன்றாட இடமேது? நியாயஸித்தாஞ்ஜநத்தில் ஜீவ பரிச்சேதத்தின் தொடக்கத்தில் ‘அத ஜீவ அல்ப பரிமாணத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம்; சேஷத்வே ஸதி ஜ்ஞாத்ருத்வம், இத்யாதி தல் லக்ஷணம்.’ என்றருளிச் செய்தார் தேசிகன். ஜீவாத்மாவுக்குச் சொன்ன இந்த லக்ஷணமானது பிராட்டியிடத்திலும் ஸமந்வயமடைகின்ற தென்பதில் ஐயமில்லை.”ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்த்தே ப்ராமயமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ கருபா காப்யுபஜாயதே.” என்கிற ஆர்ஷ ஸ்லோகம் ஸுப்ரஸித்தம். துக்கப்படுகிற ஸம்ஸாரி சேதநனிடத்திலே எம்பெருமானுக்கு க்ருபை யுண்டாகிறதென்று இதில் சொல்லிற்று. இதை யடி யொற்றி “‘அசிதவிசேஷிதாந்ரளய மநி ஸம்ஸரத:” என்கிற ஸ்லோகமருளிச்செய்த பட்டர் * தயமாநமநா: * என்றுமட்டுமருளிச் செய்தார். இவ்விரண்டையும் விவரித்தருளா நின்ற தேசிகன் தயா சதகத்தில் “அசிதவிசிஷ்டாந் ரலயே ஜந்தூநவலோக்ய ஜாத நிர்வேதா” என்றருளிச் செய்தார். அந்த ஸ்துதியில் தயாளுவான எம்பெருமானை நோக்கிச் சொல்ல வேண்டிய வார்த்தைகளையே தயையை நோக்கிச் சொல்லுகிறாரென்பது நிர்விவாதமாகையாலே ஸம்ஸாரிகளை நோக்கி எம்பெருமான் ஜாத நிர்வேதனாகிறானென்று ஸ்பஷ்டமாகச் சொன்னாராயிற்று. துக்காபிநயம் காட்டினபடியே யொழிய வேறில்லை யென்னில் அவதார சேஷ்டிதங்களெல்லாம் அபிநய மாத்ரமே யென்று சொல்லி இதிஹாஸ புராணங்களைக் கட்டி உள்ளே வைத்திட வேண்டுமத்தனை. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அநுஸந்தித் திருக்கின்ற திருக் குணங்களை உபபாதிக்குமாசாரியர்கள் ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்ரீராமாயணாதி ஸ்லோகங்களைக் கொண்டே உபபாதிக்கக் காண்கிறோம். இதை ஸ்தோத்ர பாஷ்யாதிகளிலும் காணலாம். அவ் விதிஹாஸ புராணங்களில் எம்பெருமான் காட்டி யருளின சரிதைகளைக் கொண்டு “ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீரஹந்தா ராமோ முஹுர்த்தம் விம நாப வ.” இத்யாதி ஸ்லோகங்கள் அவதரித்தன. அந்த ஸ்லோகங்களை * உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்து உடம்பெலாம் கண்ண நீர் சோர நின்று உபந்யஸிக்கிறார்கள் குண வித்தர்கள்– ஸாரத்தில் * செஞ்சொற் கவிகாள் பதிகத்தின் ஸாரத்தைக் கூறுமிடத்து “ஸ்வ ஜநதநுக்ருதாத் யாதரம் ப்ராஹ சாந்தே”என்றார்.எம்பெருமான் தம்முடைய திருமேனியில் வ்யாமோஹம் செய்தபடியை ஆழ்வார் அருளிச் செய்திருக்கிறாரே யொழிய மற்றையோர்களுடைய உடம்பில் வ்யாமோஹம் செய்திருப்பதாகப் பேசியிருக்க வில்லை. அதற்குச் சேர ஸ்வ தநு விநிஹிதாத்யாதரம் என்று ஸ்லோகமிட வேண்டியிருக்க* ஸ்வ ஜந தனு க்ருதாத்யாதரம் * என்று ஸ்லோகமிட்டிருக்கிறார். இங்கு ஸ்வாமியின் தாத்பர்யமென்னவென்றால், ஆழ்வார் தம்முடைய அழுக்குடம்பிலுள்ள வழுக்களை விரும்பி அவன் வ்யாமோஹித்திருப்பதாகச் சொன்னவிது தம் விஷயத்தோடு நிற்பதன்று; தன்னடியார்களெல்லாருடைய வுடலிலும் இப்படி விருப்பம் செய்து போருமவன் என்றதாகக் காட்டின படியென்று திருவுள்ளம் பற்றியே தேசிகன் ‘ஸ்வஐந’ என்று பணித்தார். “ஒளதந்வதே மஹதிஸத்மநி பாஸமாநே ஸ்லாக்க்யே ச திவ்யஸதநே தமஸ: பரஸ்தாத், அந்த: களேபரமிதம் ஸுஷிரம் ஸுஷ்மம் ஜாதம் கரீச கதமாதரணாஸ்பதம் தே” என்கிற ஸ்லோகத்தினால் தம் பக்கலிலும் அப்படிப்பட்ட பரிமாற்றம் நிகழ்ந்த படியைப் பேசினார். இதில் ஆதரணாஸ்பதம் என்கிற வாசகம் விசேஷித்து நோக்கத்தக்கது. ‘என்னுடைய ஹேயமான களேபரத்தில் நீ எப்படி வஸிக்கிறய்?’ என்று கேளாதே பலாப்பழத்தை ஈ மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும் தண்டாமரையின் தேனை வண்டுகள் மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலேயும் பரமாதரம் காட்டிக் கொண்டு கிடைக்கிறாயே!இது என்னே! என்று வியந்து கேட்கிறபடி கண்டீரே. க்ருஹஸ்தாச்ரம தருமமாக விஹித விஷய போகம் ப்ராப்தமே யானாலும் அது விசிஷ்டாதிகாரிக்கு குப்ஸநீயமேயென்று. ஆகவே இவ்விஷயத்திலும் ஸத் ஸம்ப்ரதாய ஸித்தாந்தம் நிரவத்யமென்றுணர்க. இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையை நன்கு ஸேவிப்பது.

ததா₂விதா₄நந்த₃மஹாபயாேத₄:
தரங்க₃வ்ரு’த்த்யா ப₄ஜதோ அவதாராந்
அஸேஷ ரூபேஷ்வநுரூபரூபா
தே ₃வீ ஜக₃ந் நேதுரநுப்ரஜஜ்ஜே — 12.1 —

ஸா தஸ்ய நித்யோதி ₃ததி ₃வ்யதா₄ம்ந:
பத்யு: ப்ரியா பா₄நுமத: ப்ரபே₄வ
அத்₄யாஸி துர் த்₃வாரவதீ மதூ₃ராத்
வ்யக்திம் ஶுபா₄ம் ப்ராப வித₃ர்ப₄தே₃ஸே —ஸ்ரீ யாதவாப்யுதயம்
12.2 —

ஶிக₂ண்ட₃கம் நிஷ்ப்ரதிமம் ஶ்ருதீநாம்
ஶ்ரு’ங்கா₃ர லீலோபம விஶ்வ க்ரு’த்யம்
அதீ₄யேத தந்மிது₂நம் ஸ்வபா₄வாத்
அந்யோந்ய ஜீவாது மநந்யே போ₄க்₃யம் –12.3 —

ஈஸ்வரனுக்கு சத்ர சாமராதிகளைப் போலே லஷணமாக சொன்ன –
ஜகத் காரணத்வ -மோஷ ப்ரதத்வ –சர்வ ஆதாரத்வ -சர்வ நியந்த்ருத்வ -சர்வ சேஷித்வ -சர்வ சரீரத்வ –
சர்வ சப்த வாச்யத்வ -சர்வ வேத வேத்யத்வ -சர்வ லோக சரண்யத்வ-சர்வ முமுசூபாச்யத்வ-சர்வ பலப்ரதத்வ – சர்வ வ்யாப்த ஜ்ஞானானந்த ஸ்வரூபத்வ-லஷ்மி சஹாயத்–வாதிகள் பிரதி நியதங்கள்-
அதிகாரம் -22–பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –

ஆதி –
ஏஷ கர்த்தா ந க்ரியதே -இத்யாதிகளில் படியே சர்வ ஜநதேக காரண பூதன்
இத்தால் காரணந்து த்யேயய–காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாக பற்றப்படுமவன் என்று பலிதம்
(முமுஷுவால் பற்றப்படுபவர் நாராயணன் என்றதாயிற்று )
இக் காரணத்வமும் மோஷ பிரதத்வமும் ( ராஜாவுக்கு )சத்ர சாமரங்கள் போலே சர்வ லோக
சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள்-
முநி வாஹன போகம்–

ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே–ரகஸ்ய ரத்னாவளி 

1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்-—ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ-3—*ஸக்ருத்₃விபா₄தா ஸர்வார்தி ஸமுத்₃ர பரிஸோஷிணீ , *ப₄வப₄ங்கா₃ பஹாரிணீ ,
*பர நிர்வாணதா₃யிநீ,((ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில ) *ஜ்யோதிஷ் மத்யம்ருதாவஹேத்யாதீ₃நி । வைஷ்ணவே
ச * ஆத்ம வித்₃யா ச தே ₃வி த்வம் விமுக்தி ப₂லதா₃யிநீதி( –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்) । அத்ர விமுக்தி ப₂லதா₃யித்வஸ்ய ஆத்ம வித்₃யா விஸேஷணத்வே (அ)பி
தாத்₃ருஸ வித்₃யா யாஸ்தத₃தீ₄நத் வோக்த்யா ப்ரக்ருத ஸித்₃தி₄꞉ ।மாேக்ஷ க்ஷேது பூ₄தாத்ம கு₃ண ஸித்₃தி₄ஶ்ச தத₃தீ₄நேதி தத்ர தத்ர உக்தம் । ஏவம்
ஸ்தி₂தே க₃த்₃யாரம்போ₄க்தந்யாயேந மோக்ஷ உபாய-தத₃தி₄காரயோ ꞉ தாவத்
ஏதந் மூலத்வம் து₃ரபஹ்நவம் । மாேக்ஷ ப்ரதே ₃ ப₄க₃வதி முமுஷணாம்
க₄டகதயா ஏஷா திஷ்ட₂தீதி ச ஸர்வ ஸம்மதம் । பரிபூர்ணாநுப₄வ ப்ரதா₃ந
ஸங்கல்பஸ்து ப₄க₃வத: ஸ்வஸ்யைவ வா ஸ பத்நீகஸ்ய வேதி
யதா₂ப்ரமாணம் ப₄வது । ஸர்வதா₂ வைஷ்ணவாத்₄ வஸ்ரேய꞉ப்ரத₃த்வமஸ்யா
இக்ஷோச்யமாநம் ந விருத்₃த₄மிதி ॥ 3-(அவனே இவள் புருஷகாரம் மூலம் என்றோ இருவரும் சேர்ந்தே பரிபூர்ண அனுபவ ப்ரீதிக்கு ஸங்கல்பம் செய்கிறார்கள் என்றோ கொள்ளலாம்)

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவல்லிக்கேணி அத்யாபக கோஷ்ட்டி 760 ஆண்டு விழா மலர் -1982-

January 29, 2026

ப்ருந்தாரண்ய நீவாஸாய பல ராமாநுஜாய ச ருக்மிணீ பிராண நாதாய பார்த்த ஸூதாய மங்களம்

Swami Vivekananda ‘s letter -20-8-1983-Go now this minute to the Temple of Sri Parthasarathy and bow to him who was friend to the poor and lowly cowherds of Gokul -Parthasaarathy is ready to be our Sarathy and his name with eternal faith shall suffice for our salvation

760 ஆண்டு விழா மலர் -1982-April 9-18-உத்ஸவம் கொண்டாட்டம்-வேத பிரபந்த கோஷ்ட்டி விமரிசையாக நடக்கும் விவரங்கள் தினமணி-27-3-1982- கோஷிக்கிறது-அதாவது கிபி 1223 இருந்து ஆரம்பம்-(வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவவதாரம் -கிபி 1217- பெரியவாச்சான் பிள்ளை திருவவதாரம் -1228)

ஸ்ரீ மணவாள மா முனி காலத்துக்கு முன்பிருந்தே அத்யாபக கைங்கர்யம் -760 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று Hindu -9-4-82—என்றும்-700 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்று remarks oj Judge in suit no cs-349 of 1923-சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்த அறுபதாம் ஆண்டு விழாவும் இதுவே-

கஜேந்திர வரதர் பரத்வம் -மந்நாதப்பெருமாள் வ்யூஹம் -சக்ரவர்த்தி திருமகள் வைபவம் -தெள்ளிய சிங்கர் அந்தர்யாமி -இவ்வாறு நான்குக்கும் நான்கு பாசுரங்கள் -பார்த்தசாரதியை திருவல்லிக்கேணியில் கண்டேனே என்று அர்ச்சாவதாரம் ஐந்து பாசுரங்கள் என்று திருமங்கையாழ்வார் மங்களா ஸாஸனம்-பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவ அவசிஷ்யதே ஸர்வம் பூர்ணம் ஸஹோம் -பின்னானார் வணங்கும் சோதியான சர்ச்சையில் தானே ஸமஸ்த கல்யாண குண புஷ்கலம்

ஸ இதாநீ மபிமுநே த்ருஸ்யதே தத்ரமா நவைஸ்
ருக்மிண்யா ச அநிருத்தேந ப்ரத்யும்நே நச ஸேவித
ஹலாயுதேந ஸஹிதஸ் ததா சாத்யகிநா ஸஹ
பார்த்த சாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜெகதீ பதி
-ஆத்ரேயர் ஸூமதி ரிஷிகளுக்கு ஸேவை

ஆத்ரேய த்வம் மஹா பாக கத்வா பிருந்தாவனம் சுபம்
கமதேராஸ்ரமம் ஸவ்மய வஸநேந மஹாத்மநா
தத்ர ரம்யே வநோ த்ருஸே ஸம் ஸ்தாப்ய ப்ரதிமாம் இமாம்
வைகாநஸேந விதிநா ஸ்மர்ச்சய ஜகத்குரும்
-வ்யாஸ மஹரிஷியின் சிஷ்யனான ஆத்ரேயர் ப்ரதிஷ்டை

ஸததர்ச விமா நஸ்ய மத்யே பாஸ்கர ரோசிஷ ஆஸீநம் பரமம் தேவம் நரஸிம்ஹ ஸ்வரூபிணம் -அத்ரி முனிவருக்கு ஸேவை தெள்ளிய சிங்கர்

மகா மாஸே மஹா தேஜாஸ் த்வாதஸ்யாம் ஸஹரிஸ் ஸ்வயம்
ப்ராதுராஸே ப்ருகோஸ்தாஸ்ய ஹ்யாஸ்ரமே புண்ய கர்மண
யதோ மந்நாத இத்யாஹ வேத வல்லீ ஸூசிஸ்மிதா
ததோ மந்நாத இத்யேவ விஸ்ருதோ புவந த்ரய –
பிருகு புத்ரி -மாசி த்வாதஸி -வேதவல்லி ஸமேத மன்னாதான்

ததஸ்மிந் திநேரஸ்து ப்ருந்தாரண்யே மஹாமதி மந்நாதம் பிரணமேத் விப்ர ஸ யாதி பரமம் பதம் -ப்ரஹ்மாண்ட புராணம்

யா த்ருகா ஸீத் புரா ராம ராஞ்ஜோ தசரதஸ்ய ஹி
ப்ராத்ருபிஸ் ஸஹிதஸ் தாத்ருக் ஸ ஸீதஸ் ப்ரத்யய த்ருஸ்யதே
–மதுதான் ரிஷிக்கு ஸஹ குடும்பத்துடன் ஸேவை

ஸோபி ஸம் ப்ரதி ஸர்வேஷாம் ப்ராணிநாம் கோஸரீ பவந்
வரதோ நாம தேவேஸ் த்ருஸ்யதே தத்ரவை ஹரி
–சப்தரோமா மகரிஷிக்கு கருடாரூடனாக ஸேவை

ந தேவா யஷ்டி மாதாயா ரஷந்தி பசு பாலவத்
யம்ஹி ரஷிதம் இச்சந்தி புத்யா ஸம் யோஜயந்தி தம்
-பற்றலர் வீயக்கோல் கைக்கொண்டு தேர் முன் நின்றானை -மாதலி தேர் முன்பு கோல் கொள்ள -ஆண்டாள்

ஆராதனாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் யேநகேந விஷ்ணோர் அர்ச்சனம் உத்தமம் ஆத்மாத்ர்த்தம் வா பரார்த்தம் வா க்ருஹ தேவாலயேபி வா அர்ச்சனம் வாஸூ தேவஸ்ய லக்ஷ கோடி குணம் பவேத் -அர்ச்சன நவநீத ஸ்லோகம்

ஆழ்வார்கள் கண்ட அல்லிக்கேணி -ஸ்ரீ நல்லான் சக்ரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் -1951-திருவல்லிக்கேணியில் வெளியிட்டு அருளி கோஷ்ட்டி ஊர்வலம் -வை மு கோபல க்ருஷ்ணமாச்சார்யார் ஸ்வாமிகளும் கலந்து கொண்டார்-

பேயார் திருமழிசைப் பெம்மான் அருட் கலியன்
வாயாரச் சொன்ன வளங்கவியில் -மேயான்
திருவல்லிக்கேணியான் சீர் அருளே வாளாம்
கருவல்லிக் காலறுக்குங் கால்

எறி கடல் வந்தலைக்கும் எழில் அல்லிக்கேணி கண்ட
அறிவுடை யாழ்வார் பாடற்கு அனைவரும் அறிய ஆன்றோர்
முறையிலே பிறழாது ஏகி மூண்ட பேரன்பினாலே
சிறியேன் உரை செய்தேனால் சீர் திருமலை நல்லானே

ஆயர் விளக்கு–என்பதே மருவி ஆயிரம் விளக்காயிற்று
ஆழ்வார் பேட்டை -முதல் ஆழ்வார்கள் திருமழிசைப்பிரான் -ஆள்வார் பேட்டை ஆயிற்று
ஆனைக்குளம் -கஜேந்திர வரதரின் முந்தைய ஸ்தானம் –

அந்தமிலா மறை ஆயிரத்து ஆழ்ந்த அரும் பொருளைச்
செந்தமிழாகத் திருத்திலனேல் நிலத்தேவர்களும்
தம்தம் விழாவும் அழகும் என்னாம் தமிழார் கவியின்
பந்தம் விழா ஒழுகும் குருகூர் வந்த பண்ணவனே
-கம்பர்

கோயில் திருமலை பெருமாள் கோயில் பிரசித்தம் –திருமந்திரம் சரம ஸ்லோகம் த்வயம் போல் இம் மூன்றும் –திருவிருத்தம் மங்களா ஸாஸனம் இவற்றுக்கு என்பதால்-இமையோர் தலைவா –அமரர்கள் அதிபதி -பிரதம சதகே வீஷ்யே வரதம் -துயரறு சுடரடி -தொழுது எழு என் மனனே –பெருமாள் கோயில் விசேஷணம் இது ஒன்றுக்கே -தினமும் ஐம்பது பாசுரங்களான வருஷத்தில் ஐந்து ஆறு ஆவ்ருத்தி நாலாயிரம் அருளிச் செயல்களை செவி சாத்தி அருளுகிறவன்-இயல் தொடங்கும் பொழுது பிடாத்தை விழவிட்டு அத்யாபகர்கட்க்கு ஸர்வ ஸ்வதானம் செய்யும் முறையில் அவகுண்டத்தைக் களைந்து ஸேவை ஸாதித்து அருளுகிறவன்

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் இளம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

பகாரோ பாப நாஸாயீ விகாரோ விக்ந சாந்தயே த்ருகாரம் த்ராணந ப்ரோக்தம் இதி பவித்ரஸ்ய லக்ஷணம் -பவித்ரா உத்ஸவ மஹிமை

ரதஸ்தம கேஸவம் த்ருஷ்டா புநர் ஜென்ம ந வித்யதே

பார்த்தசாரதிக்கு சித்ர ஸ்ரவண தீர்த்தவாரி -தெள்ளிய சங்கருக்கு ஆனி ஸ்ரவண தீர்த்தவாரி

ப்ருந்தே த்வ யக்ஷர யுக்மஞ்ச துளஸீத் யக்ஷர த்ரயம் ஸங்கீர்த்தயதி யோநாம தஸ்ய புண்யம் அநந்தகம்

பஞ்ச தீர்த்த ஸமாயுக்த மீத்ரு ஸீம்தாம் ஸரோவராம் ஸ்நாநாயாத் கைரவணீம் விப்ரயதீச்சதி ஹரேபேதம் -இந்திர சோம அக்னி மீன விஷ்ணு தீர்த்தங்கள் மத்தியில் பாவனையாக கைரவணி தீர்த்த ஸ்பரிஸமே சர்வபாபேயோய மோக்ஷ ஹேதுவாகும்-

சைத்ரே மாஸே ஸிதே பக்ஷே சதுர்தஸ்யாம் திதவ் முநே
ஸோபநே ஹஸ்த நக்ஷத்ரே ரவிவார ஸமந்விதே
வபோ ஹோமே ப்ரவ்ருத்தே து ப்ராதஸ் ஸவந காலிகே
தாதுத்தர வேத்யந்த ப்ராதுர் ஆஸீத் ஜநார்த்தன
-சித்திரை ஹஸ்தம் தேவராஜன் திருவவதாரம் -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்

வேகவத் யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரத ஸர்வ பூதாநாம் அத்யாபி பரித்ருஸ்யதே

வஸிஷ்டர் வாமதேவர் ஸூ யஜ்ஞர் ஜாபாலி கஸ்யபர் கௌதமர் மார்க்கண்டேயர் காத்யாயனர் விசயர் -நவ ரிஷி ரத்தினங்கள் சக்ரவர்த்தி திருமகனை ரக்ஷிக்கும் அரண் போல் இருந்தார்கள்

அத்ரி ப்ருகு குத்சர் வஸிஷ்டர் கௌதமர் கஸ்யபர் ஆங்கீரஸர் -பிரஸித்த ஸப்த ரிஷிகள்
இப்போது நடப்பது ஏழாவதான வைவஸ்வத மன்வந்த்ரம் -முந்தியவை –1-ஸ்வாயம்பூ -2- ஸ்வா ரோசிஷ -3-ஒவ்த்தம -4-தாமஸ -5-ரைவத -6-சாஷுஷ மந்வந்தரங்கள்

அல்லித் தாமரையாள் -திரு உகந்த அல்லிக்கேணி -ஸ்ரீ வேதவல்லித்தாயாரின் பிறந்தகம் -மந்நாதனின் ஸ்வசுர க்ருஹம்-மாமனார் திருமாளிகை –

வைரம் இனி இல்லை மண்ணில் பிறப்பில்லை
கைரவிணி நம் கருத்துளதால் -பையரவில்
மன்னாதன் சிங்கன் பரதன் இராமன் கண்ணன்
இந் நாள் அருள் பெய்வர் இங்கு

அபஹர மம துரிதாநி ப்ரதிஸ த்வம் நிருபமாம் யஸோ லஷ்மீம்
பகவதீ கைரவணீ த்வாம் ப்ரணமாமி ஜனார்த்தந ப்ரியே ஸூபகே
—வஸிஷ்ட பகவான் -கைரவம் என்பது செவ்வல்லி -ஆம்பலின் வகை

பூதம் சரஸ்ய மஹதாஹ்வய பட்ட நாத ஸ்ரீ பக்தி சார குலசேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான் ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரணாதோஸ்மி நித்யம்-மஹதாஹ்வய –மகாதாஹ்வயர்-ஆகிறார் -மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி -என்னும்படியான அத்தேசத்துக்கு சமமாய் இருந்துள்ள-மாட மா மயிலையில் –மா வல்லிக் கேணியில்செவ்வல்லிப் பூவிலே அவதரித்து-யானுமோர் பேயன் – பித்தர் என்றே பிறர் கூர
என்று பேசும்படியான பெயர் –

——–

கமப்யாத்யம் குரும் வந்தே கமலா க்ருஹ மேதிநம்
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பாஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
-புராணம் வேதம் வேதாந்தம் சாங்க்யம் யோகம் ஸாஸ்திரங்கள் அனைத்தும் இதம் எதிரில் இரவாகின்றன
பஞ்சாயுத அம்சமான ஒவ்பகாயனர் சாண்டில்யர் பரத்வாஜர் கௌசிகர் மௌஞ்யாயனர் -ஐவருக்கும் ஐந்தும் தினங்களில் தானே உபதேசித்து அருளினார் –
ஆகமம் பரதம் சில்பம் வைத்தியம் ஜ்யோதிஷ மேவ ச
பஞ்ச சாஸ்த்ராணி ஸம் யோகாத் பாஞ்சராத்ரம் இதி ஸ்ம்ருதம்

ஸூ ரூபாம் ப்ரதிமாம் விஷ்ணோ ப்ரஸந்ந வதந ஈஷணம்
க்ருத்வா ஆத்மந ப்ரீதிகரிம் ஸூவர்ண ரஜதாதிபி
தாம் அர்ச்சயேத் தாம் பிரணமேத்தாம் விசிந்தயேத்
விசத்ய பாஸ்த தோஷஸ்து தாமேவ ப்ரஸ்ம ரூபிணாம்
–ஸுநகபகவான்

108 ஸம்ஹிதைகள் கொண்டதும் பாஞ்சராத்ர ஆகமம் -இவற்றுள் ரத்ன த்ரயம் -சாஸ்வத பவ்ஷ்கர ஐயாக்ய ஸம்ஹிதைகளால் திருநாராயண புரம் திருவரங்கம் காஞ்சிபுரம் இவற்றில் திரு ஆராதனம்-திருவேங்கடமுடையான் வைகாநஸ ஆகமத்தினால் திருவாராதனம் கண்டு அருளுகிறான்

த்வாம் பாஞ்ச ராத்ரிகந யேந ப்ருதக் விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாரா
சம்ஜ்ஞா விசேஷ நியமேன சமர்ச்ச யந்த ப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தன்யா
-சரணாகதி தீபிகா–32–வெவ்வேறு வகைப் பட்ட பாஞ்ச ராத்ர மார்க்கத்தாலும் வைகானச மார்க்கத்தாலும் அதிகார நியதி யுள்ளவர்கள் வாஸூ தேவாதி சம்ஜ்ஞா விசேஷ நியமத்தோடு உன்னை பக்தியோடு திருவாராதனம் செய்து ஸூ க்ருதிகளாய்க் காலத்தை சபலமாகக் கழிக்கிறார்கள்–

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கலியனும் ஸ்ரீ ராமானுஜரும் -ஸ்ரீ திருக்குடந்தை உ. வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்-

January 28, 2026

ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்த நவ ரத்ன க்ரந்தங்களுக்கும் அடி இப்பதிக 9 பாசுரங்கள் -சமத்காரமாக ஸ்வாமியின் நவரத்ன க்ரந்தங்களும் இப்பதிக பாசுரங்களின் அடிப்படையில் அருளிச் செய்து இருப்பதாகக் காட்டி அருளுகிறார்

ஸ்ரீ ராமானுஜர் கலியன் சம்பந்தம் மூன்று பாடல்களில் அமுதனார் காட்டி அருளுகிறார் -இதில 7 பாசுரத்திலேயே திருமங்கை ஆழ்வாருக்கு இனியவராக ராமானுஜர் -பவிஷ்ய ஆச்சார்ய விக்ரஹம் சேவித்து இருப்பாரே கலியனும் –

கள்ளார் பொழில் தென் னரங்கன் கமலப் பதங்கள்நெஞ்சிற்
கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக் கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன்
மிக்க சீலமல்லால்
உள்ளாதென் னெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே.-2-குறைகள் இல்லாத ஆழ்வார் -திவ்யதேசங்கள் விடாமல் -நான்கு கவிகள் -மதிள் கைங்கர்யம்-வாள் வீசி படித்துறை -நம் போல்வாருக்கும் -உஜ்ஜீவிக்க அருளிய பிரான் –இராம பிரானுக்கும் குறையல் பிரானுக்கும் தென் அரங்கன் கமலப் பதங்கள் கீழ் விள்ளாத அன்பு – ராமானுசனுக்கோ-லஷ்மண னுக்கோ -இராம பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு – இவ் விராமானுசக்கோ குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பு-
திருநகரியில் இன்றும் திருமங்கை ஆழ்வார் அடிக்கீழ் எம்பெருமானாரை சேவிக்கிறோமே –

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ண மங்கை நின் றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண் டமிழ் செய்த நீலன் றனக் குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனை
வந் தெய்தினரே.–17-நீலன் பத்தராவிப் பெருமாளையே கண்களார அளவும் நின்று -கண்ண மங்கையுள் காண வேண்டும்படியான காதல் விஞ்சியவராய் -காணாது பிரிந்து இருப்பதையே துன்பமாகவும் -கண்டு கொண்டு கிட்டி இருப்பதையே
இன்பமாகவும் கொண்டு இருத்தலின் -ப்ராக்ருதமான -தேக சம்பந்தத்தால் ஆன-முனிவும் கனிவும் அற்றவர் ஆனார் –-எம்பெருமானாரும் அந்நீலன் தண் தமிழ் இன்பத்திலேயே மூழ்கி -அவருக்கு இனியராய் -அத்தகையரானார்--அவரைப் பற்றினவர்களும் தண் தமிழ் இன்பத்தைக் காட்டின நீலனுக்கு இனிய ஆசார்யன் திறத்து உரிமைப் பட்டு-இருத்தலாம் பேரின்பத்திலே திளைத்து -அத்தகையார் ஆனார் -எய்தினர் முனியார் மனம் கனியார் -என்று கூட்டிப் பொருள்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் னுள்ளம் தடித்து, அதனால்
வலி மிக்க சீயம் இராமா னுசன்
மறை வாதியராம்
புலி மிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.-88–மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் . எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று-ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி


பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை
முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-=வேதார்த்த ஸங்க்ரஹம் -அசேஷ ஜகக தித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்ம இதி கர்தவ்யதாக பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி அத்யர்த்தப் பிரிய 

மெய்ந் நலத் தவத்தைத் திவத்தைத் தரும் மெய்யை பொய்யினைக் கையிலோர் சங்குடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலைப் பகலை யிற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை யாண்டினைக்
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக் கண்ண  மங்கையுள்  கண்டு கொண்டேனே —7-10-2-ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம–அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும் அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும் ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும் எவ்விதமான தோஷமும் அற்றவனும் ஆனந்த ஸமுத்ரமுமாகவும் உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதி யந்தவழ்
மங்குலைச் சுடரை வட மா மலை யுச்சியை நச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப்  பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே—7-10-3-அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா

பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையைத் தெள்ளியார் வணங்கப் படும் தேவனை
மாயனை மதிள் கோவலிடைக் கழி மைந்தனை யன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை யிலங்கும் சுடர்ச் சோதியை  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைய்ப்பினைக்
காசினை மணியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-4-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு- ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி -நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

ஏற்றினை இமயத்துள் எம் மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை யண்டத்தப் புறத்து உய்த்திடும் ஐயனைக் கையில் ஆழி ஓன்று ஏந்திய
கூற்றினைக் குரு மா மணிக் குன்றினை நின்றவூர்  நின்ற நித்திலத் தொத்தினைக்
காற்றினைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-5-॥ ஶ்ரீரங்க³க³த்³யம் ॥–அபாரகருணாம்பு³தே⁴! * அநாலோசித விஶேஷ * அஶேஷலோகஶரண்ய! * ப்ரணதார்த்திஹர-* ஆஶ்ரித வாத்ஸல்யைக மஹோத³தே⁴! அநவரதவிதி³த நிகி²ல பூ⁴த ஜாத * யாதா²த்ம்ய!* அஶேஷசராசரபூ⁴த * நிகி²லநியமநிரத * அஶேஷ சித³சித்³ வஸ்து ஶேஷிபூ⁴த * நிகி²லஜக³தா³தா⁴ர* அகி²லஜக³த்ஸ்வாமிந் * அஸ்மத்ஸ்வாமிந் * ஸத்யகாம * ஸத்யஸங்கல்ப * ஸகலேதரவிலக்ஷண* அர்தி²கல்பக * ஆபத்ஸக² * காகுத்ஸ்த² * ஶ்ரீமந்நாராயண * புருஷோத்தம * ஶ்ரீரங்க³நாத² * மம நாத², நமோঽஸ்துதே ॥

துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச் சுடர் வான் கலன் பெய்ததோர்
செப்பினை திருமங்கை மணாளனைத் தேவனைத் திகழும் பவளத்தொளி
யொப்பனை யுலகேழினை   யூழியை ஆழி ஏந்திய கையனை யந்தணர்
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-6—ஶரணாக³தி க³த்³யம் ॥-ௐ ப⁴க³வந் நாராயணாபி⁴மதாநு ரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்
நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம்
அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்தனை யரியைப் பரி கீறிய அப்பனை யப்பிலார் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ண மங்கையுள் கண்டேனே—7-10-7-॥ ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ॥சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே * பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே * ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக் கன்று வீசிய வீசனை பேய் மகள் துஞ்ச
நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியைக்
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த
வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டேனே —7-10-8-அழித்த அசுரர்கள் பட்டியல்-கீதா பாஷ்யம் தொடக்கம் -பூதனை -அகங்கார மமகார –கர்மங்களைப் போக்கவே அவதாரம்-பூபார அவதரண தேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாஸ்ரயணித்வாத் அவதிர்யோர்வ்யாம்
சகல மனுஷ நயன விஜயதாம் கத பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி
திவ்ய சேஷ்டிதானி குர்வன்-பூதநா சகட யமளார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த
அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை- விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்   நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-திருவாராதனம் யாகம் -யாக பூமி கச்சேத் நோக்கி போவதாக நித்ய கிரந்தம்-ததீயாராதனம் கண்ணாலே பார்க்கலாமே–பகவந்த மநுஸ்ம்ருத்ய தந்மந்த்ரேண பகவத் பர்யந்தாபி தாயிநா மூல மந்த்ரேண ஜலம் பீத்வாசம்ய ப்ரோக்ஷ்ய ! பரிஷிச்ய| உதகாஞ்சலி மாதாய| பகவத் பாதார விந்தயோர் நிக்ஷிப்ய ப்ராணா நாயம்ய பகவந்தம் த்யாத்வா – அஷ்டோத்தர ஶதம் மூலமந்த்ராவர்த்ய பரிக்ரம்ய| நமஸ்க்ருத்ய ஆதார ஶக்த்யாதி ப்ருதிவ்யந்தம் தர்ப்பயித்வா| ஸ்ரீவைகுண்டாதி பார்ஷதாந்தம் தர்பயித்வா | தேவாந் ருஷீந் பிதுரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்ய ஶுசௌ தேஶே வஸ்த்ரம் ஸம்பீட்யாசம்ய ! ஆவாஹித தீர்த்தம் ஆத்மநி மூல மந்த்ரேண ஸமாஹ்ருத்ய| யாகபூமிம் கச்சேத்|

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-ஐஸ்வர்ய ஸூசகமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கையிலே உடைய சர்வாதிகனே உனக்கும் இதில் ஆதாரம் உண்டாகில் எனக்கு சிஷ்யனாய்-உனக்கும் அதிகரிக்க வேண்டும்படி யாயிற்று இதன் உள்ளீட்டின் கணம் இருக்கிறபடி –திரு உள்ளமாகில் –ஸ்வதஸ் சர்வஞ்ஞனாய் இறுமாந்து இருந்தால் போகாது
என்னோடு அதிகரிக்கில் அறியலாம்-ஒரு வசிஷ்டனோடே ஒரு சாந்தீபனோடே தாழ நின்று அதிகரிக்கக் கடவ அவனுக்கு திரு மங்கை ஆழ்வார் உடன் அதிகரிக்கை தாழ்வோ –கலிகன்றி தாஸர் ஸ்ரீ நம்பிள்ளையிடம் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை கேட்டு அருளிச் செய்த வியாக்யானங்கள் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -3-குழல் கோவலர் மடப் பாவையும் –வெள்ளைச் சுரி சங்கு -7-3-

January 28, 2026

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

————–

அவதாரிகை –
கீழில் பாட்டில்-பிரிவின்  பிரதம அவதி யாகையாலே- (முதல் நிலையும் முதிர்ந்த நிலையும் இரண்டு பாட்டுக்கள் ) தன்னுடைய தசையை (வெட்கத்தை) ஸ்த்ரீத்வத்தாலே ஒழித்தாள்
அங்கன் அன்றிக்கே
தோழிக்கு சொல்லித் தரிக்க வேண்டும்படிக்கு ஈடான தசா விபாகத்தாலே அவன் பின்னே போன நெஞ்சானது வருமோ -அங்கனே போமோ -என்று தோழியைக் கேட்கிறாள்   –

முதல் இரண்டும் பகவத் சேஷத்வம் -பாகவத சேஷத்வம் இதில் -அப்புள்ளின் பின்னே அன்றோ நெஞ்சு போயிற்று–சம்பந்த ஸத்ருச பதார்த்தங்கள் -பாதகம் ஆகும் விஸ்லேஷத்தில்-ராமம் மே அநு கதா த்ருஷ்ட்டி -சக்ரவர்த்தி-இருவருக்கும் நிழல் -பெருமானுக்கு நிழல் போல் -நமக்கும் நிழல் – மானஸ அனுபவம் கிட்டியது -பாஹ்ய அனுபவம் கிட்டுமா திருமலை நம்பி அருளிச் செய்ததாக பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வதாக -நம்பிள்ளை ஈடு -இதுக்கு சங்கதி-பிராகிருத சம்பந்தம் போனது -சாஷாத்காரம் பெற்றது -சாத்மிக்குமா- நிலைக்குமா–நம்மால் அனுபவிக்க முடியுமா –என்றுமாம் -இப்படி மூன்று சங்கதிகள் இப்பாட்டுக்கு

குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே
—3-பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் –தசரதன் -கண் பின்னே போனது போல் ஆழ்வார் நெஞ்சு போனதே-

குழற் கோவலர் மடப் பாவையும்
குழலை–அழகிய மயிர் முடியை யுடைய கோவலருக்கு உடைய மடப்பத்தை யுடைய –ஆத்ம குண சம்பன்னையான எம்பெருமானுக்கு அதி ஸ்லாக்த்யையான நப்பின்னைப் பிராட்டியும்-குழலை உடையவளுமாய் -அவர்களுக்கு பவ்யையுமாய் இருந்துள்ள நப்பின்னை பிராட்டி –-நப்பின்னைப் பிராட்டியும்- குழலூதும் கோவலர் என்றுமாம்–குழலை உடைய கோவலர் -என்றபடி- பிராமணர்க்கு சந்த்யா வந்தாதிகள் போலே இவர்களுக்கு இது ஜாதி பிரயுக்தம் –அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான கோப குலத்திலே பிறக்கையாலே தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய் மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

மண் மகளும்
ஷமா தத்துவமான பூமிப் பிராட்டியும்–கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

திருவும்
எம்பெருமானுக்கு சம்பத்தான பெரிய பிராட்டியார்-தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்-

1-ஆஸ்ரிதர் குற்றத்தை பொறுக்கும் பிராட்டி –
2-குற்றம் காண்பான் என் பொறுப்பான் என்-என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி
3-நப்பின்னை பிராட்டி ஷமை தான் ஒரு வடிவாய் இருக்கும் –

1-பெரிய பிராட்டியார் இவனுக்கு சம்பத்தாய் இருக்கும் –
2-ஸ்ரீ பூமிப் பிராட்டி -அது விளையும் தரை
3-நப்பின்னை பிராட்டி அதனை அனுபவிக்கும் போக்தா –

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று
-நப்பின்னைப் பிராட்டியை முதலில் சொல்வதானால் மேன்மையை விட நீர்மைக்கு உள்ள மேம்பாட்டு சொல்லிற்று

நிழற் போல்வனர் கண்டு
அவனுக்கும் ஒதுங்கும் படி சாயை- ஆஸ்வாச கரம்-ஒருவருக்கு ஒருவர் நிழல்-ஸ்ரீ தேவிக்கு அடங்கி –சாயாம் இவ (பட்டர்)-பவ்யமானவர் -பரதந்த்ரர்=இரண்டு அர்த்தங்களும் உண்டே-நிழற் போல்வனர்-என்கையாலே-ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

1-இவர்கள் மூவரும் அவனுக்கு நிழல் போலே இருப்பவர்கள் –
2-ஒருவருக்கு ஒருவர் நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம்
3-ஆஸ்ரயித்தாருக்கு நிழல் போலே இருப்பவர்கள் -என்றுமாம் –

நிற்கும் கொல் மீளும் கொல்
அவ்விடத்தே விடாதே நிற்குமோ அல்லது மீண்டும் வருமோ-1-இப் படிகளைக் கண்டு
இதுவே பற்றாசாக தரித்து நிற்குமோ-2-இம் மேன்மையைக் கண்டு கடலிலே துரும்பு போலே எழ வீசுமோ –அடங்க எழில் ஸம்பத்து ஈசன் என்ற எண்ணத்தால் உள்ளே அடங்குமோ -திருவுக்கும் திருவாகிய செல்வன் -பரத்வம் கண்டு மீளுமோ–இப்பிராட்டிமார் அவனை விட்டு நீங்காது இருப்பது போலே தமக்கும் கிட்டுமோ -என்கிறார்–ராமம் மே அநுகதா த்ருஷ்டிர் அத்யாபி ந நிவர்த்ததே -ந த்வயாமி பஸ்யதேகண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே-இப்படி மஹிஷீ பூஷண பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ- விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் அழற் போலே முடியா நின்றுள்ள
திரு ஆழியை உடைய சர்வேஸ்வரன் –உபமானம் சொல்லும் போது அவ் வருகு இட்டுச் சொல்லும் படி பகவத் விஷயத்தை  அவஹாகித்த படி அனுகூல பிரதிகூல விபாகம் இல்லை திரு ஆழிக்கு-
அனுகூலர்க்கேயாய் இருக்கும் திருத் துழாய்–திருத்துழாய் எரியுமே விஸ்லேஷத்திலே – வெப்பம் போல் ஆழியும் சுடும் இவளுக்கு-திருத்துழாய் அனுகூலருக்கு விஸ்லேஷத்தில் சுடுவது போல் சுடும் திருவாழி-அண்ணல் திரு ஆழி பிடிக்கும்  போது  பேராத படி பிடிக்கும் இச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன் –தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே–1-போக்யத்வமும்–2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்–3-ஸ்வாமித்வமும் ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம்
என்று தோற்றிற்று

விண்ணோர் தொழக் கடவும்
கையையும் திருவாழியையும் கண்டு அயர்வறும் அமரர்கள் தொழும் படிக்கு நடத்தும்–நித்ய ஸூரிகள் தொழும் படி பெரிய திருவடியை நடத்துக்கிற –அவர்கள் தொழுது உளராவார்கள்- அவர்களைத் தொழுவித்துக் கொண்டு  உளனாம் அவன் –கடவும் என்கையாலே-காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று–விண்ணோர் தொழ -என்கையாலே விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று–விண்ணோர் தொழக் கடவும்-என்பதனால் வேத பிராமண பலத்தாலே தேவர்கள் யாவரும் சேஷ பூதர் -இவன் ஒருவனே பரம சேஷீ 

தழற் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—
நெருப்புப் போலே கோபம் -வெஞ்சினத்த -காய்ச்சின-அவனை இங்கே நின்றும் கொண்டு போன
மெய்ப்பரிவை யுடைய திருவடி -ஜகத் ரக்ஷணம் -ஹேதுவாக அன்றோ கூட்டிச் செல்கிறான் –வேத ஸ்வரூபி -வேதத்தை திரு உள்ளம் அனுசந்திக்கிறது –வேத பிரமாணம் புற மத நிரசன சமர்த்தியம்-
க்ரூரரான அக்ரூர பின்னே போனவர் போல்-ஸ்வ தந்திரமான நெஞ்சு-கீழே ஸஹாயம் இல்லாத நெஞ்சு பார்த்தோம் –தென் திருப்பேரை யில் சேர்வன் -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -அங்கும் புள்ளின் போனதே

தழற் போல் சினத்த-
அஸ்தானே பய சங்கிதனாய்க் கொண்டு அருளுகிறார் –கத கத என்னா நிற்கும் –
(மங்களா ஸாஸன பரர் –அருளாழி புள் -அங்கு பரிவர் உண்டே என்று விஸ்லேஷத்திலும் மகிழ்கிறாள் இவள் கத கத என்னும் அவனையும் குளிரப் பண்ணிப் புறப்படுமே இவன் )-பரிகர பூதனான ஆழ்வானிலும் பரிகரவானான ஈஸ்வரனிலும் விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –அப் புள்ளின் பின் போன-என்று நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கும் ராஜ குமாரனை காலம் கண்ட கிழ மந்திரி கூட்டிச் செல்லுமாப் போல் தன்னிடம் இருந்து பிரித்துக் கூட்டிச் சென்ற அப்புள்

அப் புள்ளின் பின் போன –
தன் இழவு பாராதே அத் தலைக்கு பரிவர் உண்டு என்று கொண்டாடுகிறாள் – அவனிலும் அவனுக்கு பரிந்த புள்ளின் பின்னே தன் நெஞ்சு போனபடி –அப்புள் -என்கையாலே-ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று-தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

தனி நெஞ்சமே –
ஸ்வ தந்த்ரமான நெஞ்சு-வேண்டா -என்றால் மீள மாட்டாத நெஞ்சு –ஆழ்வார் வேதங்களில் அவகாஹித்து திருமாலை அனுபவிக்கத்  தொடங்கி இந்நிலை விடாமல் இருக்க வேண்டுமே என்கிறார் -ஆழ்வார் திரு உள்ளம் வேதங்களினுள்ளே பிரவேசித்து அனுபவிக்கத் தொடங்கி
இவ்வனுபவம் நித்யமாய் இருக்குமோ இருக்காதோ என்ற சங்கையைச் சொன்னபடி-

ஸ்வாபதேசம்
எம்பெருமானுடைய ஐஸ்வர்யத்தைத் தரித்து நின்று அனுபவிக்கப் போகுமோ-பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்குமோ கிடைக்காதோ என்றுமாம்–பிராட்டிமாரையும் நித்ய ஸூரிகளையும் சொல்லுகையாலே
சர்வ ஸ்மாத் பரனாய்-ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிற இருப்பிலே தமக்கு பாவ பந்தம் பிறந்தது
என்னும் இடம் சொல்லுகிறது  –
இதில் இப்புள் வேதமயனாகையாலே மந்த்ரார்த்த ஞானமுடையவன் வேத மார்க்கத்தையே அநுசரிக்கக் கடவன் என்றதாயிற்று –

தாத்பர்யம்–இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால் திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும் அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை-என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன-இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல் நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் ) தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி – பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே — (கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால் ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே ) அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க- தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –-அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல் திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்- -7-3-1-‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி-நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,-இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.-நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.-காணீர் –-காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ? உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.-காணீர்- உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது? என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!

ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி

என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –7-3-4–அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?நெஞ்சினார்’-அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –-பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி –இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் – நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார். சல்ய சாரத்யம் -போலே -வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே,-வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார்.-நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.-இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் -புஷ்கலம் -நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.-போவார் போவார் எல்லாரும் இத்தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது! அவன் தானே ‘இத்தலையில் ஊற்று-அபிநிவேசம் அதிசயிக்க — இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’-இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று.-புக்கார் மீளாத தேசமான பின்பு. அங்கே ஒழிந்தார் –

—-

7-3-வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி-ப்ரவேஸம்-

மேல் திருவாய்மொழியில், ‘இட்ட கால் இட்ட கை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க,
இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட, திருத் தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து
அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர இப் பெண்பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது.

அதற்கு அடி:
‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான,
இவளுக்குப் பற்றாசான குணங்களையும் அழகு முதலான விக்கிரஹ குணங்களையும்
இவள் தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள்.
போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது?

இவ்விடத்திலே,
‘இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதம் ஆஹ’-என்ற
ஸஹஸ்ரநாம பாஷ்ய வாக்கியத்தை நினைப்பது.

‘அவித்த ஜம்புலத்தவ ராதியாயுள
புவித்தலை யுயிரெலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்றுரைக்கவே களித்த தாலது
செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’-என்பது, கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

மேல் திருவாய்மொழியில் பிறந்த மோகமுந்தெளிந்து பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய்,
பின்பு, ‘அவனைக் கிட்டியல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே துக்கமுடையவளாக,
இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத் தென்திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு
கடைக்கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தை யுடையவளாய்,
அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட,

பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து,
உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன,

நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாக மாட்டாது. நான் அவன் பக்கலிலே சென்ற மனத்தை யுடையவள் ஆனேன்;
ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடு போய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’
என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

அங்ஙன் அன்றிக்கே,
பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஆகையாலே, பிரியா விடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ்வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும்
ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே பிரிவைப் பற்றிப் பேசினான்;

பேச, இவளும் பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே,
‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்;
இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திரு அணுக்கன் திருவாசல் அளவும் ஒருப்படுத்தி மீண்டாள்:

எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ?
பின் இவள் நோவு படப்புக. இதனைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க,
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும்
கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்;

அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன,
அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

சம்ஸ்லேஷம் -இருந்தால் வேறு சேர்ந்து அனுபவித்த திருவாய்மொழி இருக்க வேண்டுமே –
அதனால் இந்த நிர்வாகம் கொஞ்சம் அஸ்வாரஸ்யம் –

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.
அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

‘திருத் தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேடம்:
தலை மகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேடம்:
அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின்,

அவற்றுள், விலகுகின்ற திருத் தாயார் முகத்தாற் சொல்லுகிறது,
ஸ்வரூபமான பிராவண்யம் உபாயத்திற் சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது;

பெண்பிள்ளை கருத்தாற் சொல்லுகிறது. ‘உபாயம் அவனே யாகில் பிராவண்யம் ஸ்வரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது.

ஆக, இவ்விரண்டு அர்த்தத்தையும் -உபாய அத்யாவ சாயத்தையும் பிராப்ய த்வரையும் இரண்டு முகத்தாலே
ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது.
மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத் திருவாய்மொழிக்கு ஏற்றம்.-

ஸ்ரீ பேரி-தென் திரு பேரியில்-மஹா லஷ்மி இடத்தை எடுத்துக் கொண்டு பூமா தேவி -தபஸ் -அரவாகி சுமத்தியால் —எயிற்றில் ஏந்தி –
வாயில் விழுங்கி —விராட ஸ்தோத்ரம் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
துர்வாசர் -சாபம் -செய்யாளாக-மாறி -ஸ்ரீ பேரம் -திருமேனி கிடைத்தது -தாமிர பரணி தென் கரை
மஸ்த்ய மகர தீர்த்தம் -மகர குண்டலங்கள் -கிடைக்க –
மகர பூஷணரோ-சாபம் தீர்ந்து கரும் பச்சை நிறம் பெற்றாள் -தென் திருப்பேரை
ஸுந்தர்யம் மா நகரில் கோஷிக்கும் -சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுத்து -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்து-
மகர நெடும் குழைக் காதர் –கோஷிக்கும் தொனிகள்- நெஞ்சில் -புள்ளைக் கடாவும் -வேத ஒலியும்-விளையாட்டு ஒலி-

தென் திருப்பேரையில் என்ற திவ்ய தேச திரு நாமம் – தென் திருப்பேரை மருவி உள்ளது
நிகரில் முகில் வண்ணன் பெருமாள் திரு நாமம் –

மூன்றாம் திருவாய் மொழியில் -கீழ் -பெரிய பெருமாளுடைய உதார குண அனுசந்தானத்தாலே ஆஸ்வஸ்தரான இவர்க்கு –
பாஹ்ய அனுபவ அபி நிவேசம் அநு வர்த்திகையாலே அத்யந்தம் ஆர்த்தராய் -அந்த ஆர்த்தி சமிக்கைக்கு
அவன் ஆசன்னமாகத் திருப் பேரையிலே எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்து –
ஆந்திர அனுபாவ்யமான அவனுடைய திவ்ய ஆயுயாதி வை லக்ஷண்யத்தையும்
அதிசயிதமான பரத்வ ஸுலப்யங்களையும்
ஆகர்ஷகமான திவ்ய அவயவாதி சோபையையும்
அனுபாவ்யமான ஆச்சர்ய குணாதி யோகத்தையும்
அநிஷ்ட வர்க்க நிரசனத்தையும்
உதார குண அதிசயத்தையும்
பிரபல பிரதிபந்தக பங்கத்தையும்
ப்ரக்ருஷ்ட பக்தி வர்த்தகத்தையும்
பிரளய ஆபத் ஸகத்வத்தையும்
ஆஸ்ரித விரோதி நிவர்ஹணத்தையும்
சிந்தித்து -ஏவம் பூதனானவன் எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே செல்லுகையில் யுண்டான த்வரா விசேஷத்தைக் கண்ட
பார்ஸ்வஸ்த்தரான ஸூஹ் ருத்துக்களுக்கும் பரிவாக்கும் பிராப்தி ஜெனித வியவசாயத்தை அறிவித்த பிரகாரத்தை
நாயகனான மகர நெடும் குழைக் காத்தான் எழுந்து அருளி இருக்கிற தென் திருப் பேரையிலே செல்லுகையில் த்வரையை யுடைய
நாயகியானவள் -இது அநு ரூபம் அன்று -என்று விலக்கத் தேடுகிற தோழிமார் தாய்மார் முதலானவரைக் குறித்து
நான் அத்தேசத்தில் செல்லல் தவிரேன் -நீங்கள் கொடு போய் விடுங்கோள் -இல்லையாகில் நானே போவேன் -என்று
தன் துணிவை வெளியிட்ட பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி –‘தவள ஒண் சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
‘கூரார் ஆழி வெண் சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,‘சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு-கைவிடாதே இவரைத் தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும், அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி,

தாமரைக் கண்ணன்-‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’-இவ் விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர். –-ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இரண்டு தோள்களா நான்கு தோள்களா —-கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத்துக்கு திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.-ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரண கோடியிலே இருப்பார்கள்.
கை செய்தல் –- அலங்கரித்தல்.-சகாயம் செய்தல் -யுத்தம் செய்தல்

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்- ‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி-நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,-இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.-நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.-காணீர் –-காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ? உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.-காணீர்- உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது? என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!

ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு-‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;-ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’

உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை.-இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லை காணும்!-என் சொல்லிச் சொல்லுகேன் – நான் வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்ல மாட்டேன். விஷயம் இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது;
எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பரிகரம் இல்லாமையாலே சொல்லத் தான் வேண்டா.

அவன் வீற்றிருந்த –-‘இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த் தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது,-இத் தலையைத் துடிக்க விட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான சுகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,-இத் தலையைத் தோற்பித்த தன் வெற்றி எல்லாம் அவ் விருப்பிலே தோற்றும்படி இருக்கிறபடி என்னுதல்.-அவன் மெய் மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய் மறந்திருக்கவோ?-மெய் -வை லக்ஷண்யம் –-நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ? அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?

பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள்.-அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகர நெடுங்குழைக் காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவா நிற்பர்கள்.

திருப்பேரெயில் சேர்வன் நானே-வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?-தாமரைக் கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ?
ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.-

————————–

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே
.–7-3-2-

அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பல காலம் போகச் செய்தேயும், உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே.
இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை? அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்க வேணுமே.-‘சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர், தங்கள் தங்களுடைய துக்கத்தைப் பாரார்களே அன்றோ?-பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் தம்மைப் பேணிக் கொண்டு தரித்து இருக்குமாறு போலே. இளைய பெருமாள் தாம் பரம் போகி அன்றோ?

தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!- தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே இருப்பது ஒரு நிலையும், தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு நிலையும், தானும் தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதே இருப்பது ஒரு நிலையுமாயிற்று இருப்பது; அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி. பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயிருக்க, பிரதி கூலர்க்குங்கூட அருள் பண்ண வேண்டும்படி காணும் இவளுடைய துன்ப நிலை.

நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்--‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம் உண்டோ முறை தப்புகைக்கு நான்?-நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி.-இத் தனி நெஞ்சம்– உங்களில் நான் வேறுபட்டவள் ஆனாற்போலே யாயிற்று, என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி. என்றது,-‘சொல்லிற்றுக் கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி.-என் வசம் அன்று இது--என் செய்வோம், தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்?

வீற்றிருந்த-பரமபதத்தில் இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை.
அவ்விடம் போன்றது அன்றே இவ்விடம்? ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ?
அவ்விடத்தைப் போன்று இவ்விடத்தையும் திருத்திக் கொண்டிருக்கிற இடம் அன்றோ?வானப் பிரான் –இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது.-தென்திருப்பேரெயில் வீற்றிருந்த வானப்பிரான் –-ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன்.-மணி வண்ணன்–மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி.-கண்ணன் – அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டு இருக்கிறவன்.

ஆக,-‘மேன்மை அளவிடவோ?-வடிவழகு அளவிடவோ? நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

செங்கனி வாயின் திறத்ததுவே –-கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப் போலே, வாய்க் கரையிலே அகப்பட்டது; -வாயின் மேலே அதரத்திலே-என்றவாறு –ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?-சிவந்து கனிந்து திருப் பவளத்தின் இடையாட்டத்தது;-இது மீள நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?-

————-

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.
–7-3-3-

செங்கனி வாயின் திறத்ததாயும் –-‘பிரிந்து கடக்க இருக்கில் என்? உன் கண் வட்டத்திலே கிடக்கில் என்? இது உன் சரக்கு அன்றோ?’ என்று சொல்லத் தொடங்கி, தழுதழுத்து வருகிற திருவதரத்திலே அகப்பட்டபடி.-அதிலும், அதரத்தில் பழுப்புக்குள் இழிய மாட்டுகிறது இல்லை.-வாயின் திறத்ததாயும் –-அதுதான் ஒரு மஹா பாரதத்துக்குப் போரும் ஆகாதே? (நென்னலே வாய் நேரந்தான் போல் )-செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் –-பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,
வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.-தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’

என் நெஞ்சம்- அவனுடைய உபகாரமும் அழகு முதலானவைகளும் வயிர உருக்கு ஆகை.
நெஞ்சினுடைய வன்மை அறிதி அன்றோ?-நெஞ்சம் அவனும் ஒரு கோவையிலே அடைப்பு உண்டபடி. (அவன் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போல் நெஞ்சும் பகவத் விஷயத்தில் ஸ்நக்தனாய் இருக்குமே )-நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் –ஸ்ரீராகவனுக்குத் தகுந்தவள் ஸ்ரீஜனகராஜன் திருமகள்’ என்னுமாறு போலே.-ராகவோர்ஹதி வைதேஹீம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 16:5.–நங்கள் பிரானுக்கு-பர வ்யூஹ விபவங்கள் போலே அன்றிக்கே உகந்து அருளின தேசம் -அவற்றுக்கு பிற்பாடார் ஆகையால் நமக்கு உபகரிக்கைக்காக என்கை –-என் நெஞ்சம் தோழீ –-நெஞ்சினைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதி அன்றோ’-இப்போது நீயுங்கூட எதிர்த் தலையாம்படி யன்றோ வாய்த்தது?-நாணும் நிறையும் இழந்ததுவே –-இது இழவாதது உண்டோ!-அரைக்கணம் அவன் பேர நின்று படுத்தின பாடு எல்லாம் என் தான்!-நான், தன்னை இழந்தேன்:-தாய்மார் தோழிமார்கள், என்னை இழந்தார்கள்:-நெஞ்சு, நாணும் நிறையும் இழத்தது.-

———–

இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.
–7-3-4-

என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –-அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?நெஞ்சினார்’-அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –-பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி –இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் – நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார்.
சல்ய சாரத்யம் -போலே -வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே,-வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார்.-நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.-இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் -புஷ்கலம் -நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.-போவார் போவார் எல்லாரும் இத்தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது!
அவன் தானே ‘இத்தலையில் ஊற்று-அபிநிவேசம் அதிசயிக்க — இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’-இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று.-புக்கார் மீளாத தேசமான பின்பு. அங்கே ஒழிந்தார் –

ஆரைக் கொண்டு என் உசாகோ – சரீரத்தையே ஆத்துமாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ?
பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்திய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத்தலையை உரிசூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?

மாயத்து ஆழ்ந்தேன் – அவனுடைய புன்முறுவல் கடைக் கண் நோக்கம் முதலியவைகளிலே மீள ஒண்ணாதபடி அகப்பட்டேன்.-அன்னையர்காள் என்னை என் முனிந்தே – சம்பந்தம் உண்டு என்னாச் சீறுமத்தனையோ?-சீற்றத்துக்கு எதிர்த் தலையும் வேண்டாவோ? தர்மி உண்டாய் முனிய வேணுமே!- -பிராப்தியும் மூப்பையும் கொண்டு முனிய அமையுமோ -பிரயோஜனம் வேண்டாவோ -அழகிலே ஈடுபட்டாரை ஹிதம் சொல்லி மீட்கவோ–மாயத்து ஆழ்ந்தேன் என்னை என் முனிந்தே – ஸ்வாதீனமுள்ளவரை அன்றோ முனிந்தால் பிரயோஜனமுள்ளது!-

————-

முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என்செ ய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே
.–7-3-5-

அழியுமற்றையும் அழித்தான்: அழியாததனையும் -ஸ்த்ரீத்வம் -அழித்தான்.
வன்மையாலே அழித்தான் அவற்றை; மேன்மையாலே அழித்தான் இவளை.-விரோதி வர்க்கத்தை அழியச் செய்த ஆண் பிள்ளைத் தனத்தை காட்டி ஒரு காலும் அழியாத ஸ்த்ரீத்வத்தை அழித்தான்-அவற்றின் கையிலே தான் அகப்படாமல் தப்பித் தன்னைத் தந்த உபகாரத்துக்கு எழுதிக் கொடுக்கிறாள் காணும் ‘பிரானுக்கு’ என்று, சேஷியான தன்னை உண்டாக்கி, என்னைச் சேஷத்துவத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான்.

முன்னி அவன் வந்து வீற்றிருந்த –உபகாரத்தில் முற்பாடன் அவன் காணுங்கோள்.
முன்னி – முற்பாடனாய் நின்று;-‘பூர்வஜ-முன்னே உண்டாவனவனே’ என்னும்படியே, என்னைப் பெறுகைக்குக் காலத்தை எதிர் நோக்கினவனாய்க் கொண்டு தன் வேறுபாடு தோற்ற இருக்கிற.-கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே – கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; அங்குள்ளன எல்லாம் பக்குவ பலமாக இருக்கும். கனிந்த மரம் கண்டால், ‘அசுர ஆவேசம் உண்டு’ என்று அஞ்ச வேண்டாத சோலை.-காலம் பெற என்னைக் காட்டுமினே –
இக் குடிக்கும் எனக்கும் பரிஹாரம் ஒன்றே அன்றோ?-பின்னையும் என்னை அங்கே கொண்டு போய் விடுதலைத் தவிரீர்கோள்;-நான் உளேனான போதே அதனைச் செய்யப் பாருங்கோள்.-பின்பு கதே ஜலே சேது பந்தம் -தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டப் பாராமல், நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்-

————–

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே
.–7-3-6-

ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த –தூரத்தே சென்று காண வேண்டாதபடி பரமபதத்தில் ஐஸ்வரியம் எல்லாம் இங்கே தோற்றும்படி இருந்த.-திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் –-என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள்.
அன்றிக்கே,-‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே,
இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.-

—————-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங் குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே
.–7-3-7-

பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன் – அவன் இருந்த திருப்பேரெயிலே புக்குத் தேடி என் நெஞ்சமானது ஓரிடத்திலும் மீண்டு வரக் காண்கின்றிலேன்.-மீள ஒண்ணாத இலங்கையிலே புக்க திருவடியும் மீண்ட வந்தான்;
அணித்தான இவ்வூரிலே புக்க என் நெஞ்சமானது மீண்டு வரக் காண்கின்றிலேன்!
நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்லா வேண்டா அன்றோ?
நெஞ்சினது வரவு பார்த்துக் கண் மறைந்து காணும் இவள் நிற்கிறது.
அன்றிக்கே,-‘கண்டு ஜீவியாமல் நான் இங்ஙனே முடிந்து போமித்தனையன்றோ?’ என்னுதல்.

என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நெஞ்சினை மீட்கைக்கு நீ வேணுமோ? நெஞ்சினை அவனுக்கு ஆக்கின நீ வேணுமே எனக்கு ஆக்கும் போதும்;
உன் நிலை இது; உனக்குக் கால்கள் நடை தாரா:-அல்லாதார்க்குக் ‘கூட்ட வேணும்’ என்னும் விரைவு இல்லை: யார் நெஞ்சினை அழைப்பார்?-ஆரை இனிக் கொண்டு என் சாதிக்கின்றது–யாரைக் கொண்டு தான் சாதிப்பது? இனிச் சாதிக்க வேண்டுவது தான் ஏது?
நெஞ்சும் அவனும் வந்தால் இனி நான் தான் உண்டாக வேணுமே?இங்கு வெறுந்தரையாய் அன்றோ கிடக்கிறது?-நெஞ்சு மீளாதே வ்ருத்த கீர்த்தனத்துக்கும் ஆள் இன்றிக்கே ஒழிந்தது ஆகில் , செய்யப் பாரத்தது என்?’ என்னில், என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே-மீளாதே நெஞ்சு போன வழியே போகப் பார்த்தேன்.-

————

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ்கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே
.–7-3-8-

மண் திணி ஞாலமும் ஏழ்கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது –-‘காதல், கடலின் மிகப் பெரிதால்’ என்ற இடம் ஓராதே சொன்னோம்;-‘ஆனால், எங்ஙனே சொல்லும்படி?’ என்னில், பெரியவற்றில் பெரியது என்னுமித்தனை யல்லது,-ஒரு பாசுரமிட்டுச் சொல்லலாவது இல்லை.-மண்ணாலே நெருங்கின பூமியும், அதனைச் சூழ்ந்த கடல் ஏழு, அவற்றுக்கெல்லாம் இடம் தருகின்ற ஆகாசமும் என்னுமிவை இத்தனைக்கும் அவ்வருகுப் பட்டிருக்கை.-‘இப்படிக் காதல் கரை புரண்டால் செய்யப் பார்த்தது என்?’ என்ன,-தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சென்று சேர்வன் –-இந்தக் காதல் மறு நனையும் படியான விஷயம் இருந்த இடத்தே போய்ப் புகுமத்தனை.-அனுபவத்திற்குத் தகுதியான தேசத்திலே போய்ப் புகக் கடவோம்.-சேர்வன் சென்றே –-இனிப் பகட்டால் தீராது, புக்கு அல்லது விடேன்.-ஆள் விடுதல்,-அவன் வரவு பார்த்திருத்தல் செய்யேன்.-சென்று சேர்வன் –இனி எதிரே அவன் வரிலும் மீளேன்.-அவனைச் சேர்தல் அன்று உத்தேசியம்,
அங்கே சென்று கிட்டுகை.-

—————

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே
.–7-3-9-

எனக்காக இருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றும் சொல்ல வேண்டா.-தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லை காணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு.-அறிவில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்?இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்;
அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள்.
உபாயத்தில் கண் வைக்காமல் பிராப்ய ஏக பரராகவே இருக்க வேண்டுமே
பற்றிற்று எல்லாம் பற்றி அவனை பற்றுதல் பக்தி யோகம் உபாயாந்தரம்
விடுவது எல்லாம் விட்டு தம்மையும் விடுகை பிரபத்தி -நாம் பற்றும் பற்றும் பற்று அல்லவே –

நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;-அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள்.-மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டுவைக்கும் கலம்.-நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம்படியோ அவன் படி -திருமேனி அழகு -இருக்கிறது?-கார் வண்ணன் –-தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாத படியாக வடிவைப் படைத்தவன். ‘வெறும் வடிவழகேயோ உள்ளது?’ என்னில்,-கார்க் கடல் ஞாலம் உண்ட –-‘தளர்ந்தார் தாவளம்,-ஆதாரம் – ஆபத்து வந்தால் காப்பாற்றி விடும் அத்தனையோ?’ என்னில்,-கண்ண பிரான் –-தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன்.-வந்து வீற்றிருந்த--தன் செல்வம் எல்லாம் -அழகு ஆபத் சகத்வம் ஸுலப்யம் உபகாரத்வம் -தோற்றும்படி இருந்த.-திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேன்.
உங்கள் தடைக்கு மீளுதல்,-அவ்வழியில் நிற்றல் செய்யேன்.-என்னைத் தேற்ற வேண்டா.’

————

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே
–7-3-10-

நிகர் இல் முகில் வண்ணன்- ஒப்பில்லாத காளமேகம் போலே இருக்கிற வடிவழகு.
இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவழகு’ என்கை.-நேமியான் 
அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தை யுடையவன்.-திருவாழியைக் கொண்டு வீடுமன் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ?-நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் – துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய்,-பாண்டவர்கள் துன்பம் தீர மழை பெய்து நின்றபடி.-என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு? வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலத்தான்?-மாசறு சோதி அக்காலமே போயிற்றே -ஆனபின்பு நாண் எனக்கு இல்லை -பழி சொல்லுவார் தேட்டம் எனக்கு –எனை ஊழியானே –பல கல்பங்கள் உண்டு. துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினார் போலே, என் நெஞ்சினைக் கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே
.–7-3-11-

கையும் திருவாழியுமான அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி.
அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை;
இது கை மேலே அனுபவித்துக் காணலாமே.-அவர் அடிமைத் திறத்து ஆழியாரே –
அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-திறம் -வர்க்கம் சமூகம் என்றபடி –அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.திறம்-யத்னம் –ஊற்றம்-என்றபடி-

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –