Archive for the ‘Srirengam’ Category

ஸ்ரீ ஆச்சார்யர்கள் அனுபவித்த ஸ்ரீ திரு வரங்கன்

March 21, 2024

அக்னி ரூபத்தில் அந்தணர்களுக்கு

அஹம் -அக்னி ஜாடரக்னி -பாசம் அன்னம் நாலு வித அன்னம் கீதை –

ஹிருதயத்தில் யோகி –

அனைத்திலும் -பிரம தர்சிகளுக்கு -சம தர்சனம் -காண்பவர் -நிச்க்ருஷ்ட ஆத்மா வேஷம் –

ஞானத்தால் ஆனந்தத்தால் அடிமை தனத்தால் -ஆத்மா -அனைவரும் சமம் –

ஒரே நெல்-கணக்கு-ஒரே வகை-போல் –

முக்த ஆத்மா ஸ்வரூபம்-தடைகள் நீங்கி சமமான ஆகாரம் –

மூன்று கோஷ்டி-

குளித்து மூன்று அனலை ஓம்ப வில்லை-மூன்றிலும் இல்லை

அப்படி பட்டவர்களுக்கு பிரதிமா வடிவில்– -விக்ரக வடிவில் -அர்ச்சை –

ஆழ்வார்கள் -பிரதிமா உருவில் சேவித்து மங்களா சாசனம் செய்ய –

அப்ரபுத்தி உள்ளவர்களுக்கும் அறிவு அற்றவர்களுக்கும் -மட்டும் இல்லை –

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-  சௌலப் யத்தில்  ஈடு பட்டு –

திரு விளக்கு தீ வெட்டி-போல்-பிரதி தரை குறைவு இல்லை-

தீபத்தில் இருந்து உத்பன்னம் ஆன பிரதீபம் –

பூர்த்தியையும் ச்வாதந்த்ரையும் குறைத்து கொண்டு நமக்காக இருக்கிறான்-

அரசாக பராதீனன்-அகிலாத்ம ஸ்திதி-பூர்த்தி குலைத்து நம் இடம் எதிர் பார்த்து –

அர்ச்சையில் மண்டி –

நம் ஆழ்வார் 5 பிரபத்தி நான்கில் அர்ச்சை வான மா மலை ஆரா அமுதன் திரு வல்ல வாழ் திரு வேம்கடம்

ஒன்றில் விபவம்

திரு மங்கை ஆழ்வாரும் அர்ச்சையில்

மூ வகை பட்டவர்

அஞ்ஞானத்தால் பிரபத்தி அஸ்மாத்தாதிகள்

ஞானாதிக்கத்தால் பிரபன்னர்கள் ஆச்சார்யர்கள் -உடையவன்-உடைமை அறிந்து

ஆழ்வார்கள் பக்தி பாரவச்யத்தால் பிரபன்னர்கள்-கால் ஆளும் கண் சுழலும் மோகித்து –

மூன்று தத்து பிழைத்து -உருகுமால் நெஞ்சம்-திரு காட் கரை மாயன் நினைவு தோறும்

நவநீத  சோரம் –எத் திறம்

திரு அடிகேள்; இருத்தும் வியந்து -பொருத்தமுடை வாமனன் பார்த்து கொண்டே இருந்தானாம்

நின்றவாறும்  நினைப்பரியன -ஆவி ஈரும் –

-இவர்கள்- ஆழ்ந்து பாரவச்யத்தால் பிரபன்னர்கள் –

இட்ட கால் இட்ட கை கலை இருக்கும் -இவள் திறத்து என் செய்திட்டாய்

அனுபவத்தில் ஆழ்ந்து நம்மையும் ஆழ்த்துவார்கள்

திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆள் படுத்த அனுப்பினான் –

தீர்த்தக்காரர் களாக திரிந்து -பாடி -திருத்தினார்கள்-

தாங்களும் ஆழ்ந்து போனார்கள்-

தன்னை மறைத்து பூச்சி காட்டி -அனுபவம்முக்கியம்-

கால சக்கரத்தாய் ஆம் ஆறு அறியும் பிரானே அணி அரங்கதே கிடந்தாய் –

அவன் லீலை-அனுபவம் கொடுத்து -என் நன்றி செய்வன் என் நெஞ்சில் திகழவே

திரு மால் இரும் சோலை மலை என்றே என்ன

திரு மால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே -யுக்தி மாத்ரம் –

என் வாய் முதல் அப்பன் -என் நாவில்-முன் உரு சொல்ல பின் உரு சொன்னேன் –

பட்டர் பிராட்டி இடம் நீரே பாடி பட்டர் கை எழுது நீரே போடும் –

உபதேச பதிகம் உண்டு -நம்மை பார்த்து விலகி போவார் –

ஒழுகல் ஓடம் -உடன் இருந்து மூழ்காமல்-

அனுபவம் செய்ததுக்கு இதுவே காரணம்

மூலம் கொடுக்க வைத்தான் –

த்வாபர-கலி  யுகம் சாந்தி தொடக்கி கலி யுகம் 500 வரை ஆழ்வார்கள் -248 பாசுரம் பார்த்தோம் –

3500 வருஷம் போன பின்பு -திவ்ய பிரபந்தம் நடம் ஆடாமல் –

ஆச்சார்யர்கள்-

ஸ்ரீ ரெங்க நாத முனி -தானே -நாத முனி -நாத யாமுன மத்யமாம் –

அனைத்து உலகும் உய்ய ராமானுஜர் –

சூல் கொண்டார் முன்பு -வந்த ஆச்சார்யர்கள்-

5112 கலி தொடங்கி -ஆனது

மதி விகர்ப்பால்-வேதாந்தம் ஸ்தாபிக்க ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம்-

உயர்ந்த பிறவிக்கு தாய் கர்ப்பம்- எவ் உயிர் க்கும் தாய் அரங்கன் பலரை கொண்டு திட்டம் இட்டு

ஏரியிலே தண்ணீர் தேங்கும் படி -ஆம் ஆறு அறியும் பிரான் -விதிக்க மரபை ரசித்தி

823 – நாத முனி அவதாரம் 917 /918 வரை-பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் நம் பிள்ளை சிஷ்யர்

கருட வாகன பண்டிதர் திவ்ய சூரி சரிதம்

வார்த்தா மாலை

எதிராஜ  வைபவம் வடுக நம்பி

பெரிய திரு முடி அடைவு

கடலில் இருந்து முத்து எடுக்க முடியாது கடல் கரையில் இருந்து இதோ கடல் காட்டலாம்

லஷ்மி நாதன்-கருணை கடல்-ச்வதந்த்ர்யம் கோபம் உப்பு கரிக்கும்

மழை மேகம் போல் நம் ஆழ்வார் -கண்ணன் என்னும் கரும் கடலில் புகுந்து

கருணை மழை பொழிய

சடரிபு ஜலதாக

பிராப்ய காருண்யா

நாத முனி மலை மேல்  பொழிய

மலை அருவிகள் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி

மலை அருவிகள்

யாமுனாச்சர்யர் காட்டு ஆறு வெள்ளம் ஓட

யதீந்திர -ஐந்து வாய்க்கால் வழியாக

ராமானுஜர் பெரிய ஏரி

74 மதகுகள் மூலம் சிம்காசதிபதிகள் -நாடு முழுவதும் –

வைராக்கியம் -பக்தி பெருகி –

கருணை ஒன்றே மோஷம்-குரு பரம்பரை திட்டம்-

ராமானுஜர் என்ற ஏரி காத்த ராமன் மதுராந்தகம்

நம் போல்வார் அனுபவிக்க –

தாழ்வாது மில் குரவர்கள் தாம் வாழி –

வேதம் சாம்யம் பெற்று கொடுத்தவர் நாத முனி -நடை முறை படுத்தி

காட்டும் மன்னார் கவில் வீர நாராயண புரம்-

நாட்டுக்கு மன்னார் மன்னார் குடி

நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் காட்டும் மன்னார்

நாத முனிகள்/ஆள வந்தார் இருவரும்

அவரால் தான் அத்யயன உத்சவம்-

எண் திசையும் அறிய இயம்புகேன்-மதுர கவி ஆழ்வார் சூழ் உரைக்க

பரப்பி -லோகத்தர் அறியும் படி –

பராங்குச தாசர் -யோகி-உண்டோ தென் குரு குருகூருக்கு ஒப்பு –

நடு பட்ட காலம் இருந்தவர்-

நாத முனிகள் -ஆரா அமுதே -பதிகம்-5 -8 பாட -சீர்மை இனிமை அறிந்து –

அநந்ய கதி -சாஸ்திரம் -நேர் எதிராக சுலபம்-காட்டும் பதிகம் -குரு கூர் சடகோபன்-

பேய்ச்சி உயிர் உண்டன்-கழல்கள் அவையே சரணாக கொண்ட -குழலில் மலிய சொன்ன –

தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்-கேட்டு ஆரார்  வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே

அவன் புல்லாம்குழல் விட இனிமை -ஆரா அமுதன் பாசுரம் என்பதால் அமிர்தம்

ஆயிரத்தில் இப்பத்து உள்ளதே -குருகூர் எங்கே விசாரித்து போனார் –

இருண்ட காலம்-ஆழ்வார்கள் யாரையும் அறியாத

பராங்குச தாசர் -கண்டு -கேட்க -ஆயிரம் அறியோம் –

வேற 11 அறிவேன் -எம் குல தலைவர் நம் ஆழ்வார் பற்றி பாடிய

12000 உரு சொல்ல -சூல் கொண்ட பெருமான் திருப்தி பட்டு -ஆழ்வார் அனுக்ரகித்து

தோள்கள் நான்கா இரண்டா சேமம் குருகையோ–பேர் உவகை-

சாம வேத சாரம் அறிந்தார் -தலை அல்லால் கைம்மாறு -பெற்றோம்

கேட்காமலே -கொடுக்கிறோம் -மீதி தாம் அருளிய பிரபந்தங்கள்-

வேதம் தமிழ் செய்த மாறன் அறிந்தார் -புறப்படலாமா -இன்னும்

மீது உள்ள -அவயவ ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள்-

இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும் மற்ற எண்மர் –

நாதனுக்கு நால் ஆயிரமும் அருளினான் வாழியே

பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம்- ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஸ்ரீ ரெங்க ஸ்ரீ  பிர பத்தி ஸ்ரீ  -வளர்க்க –

மேலை அகத்து ஆழ்வான் கீழை அகத்து ஆழ்வான்-

தேவ கானத்தில் வல்லுவர் நாத முனிகளும் இவர்களும் –

சீலம் கொள் நாத முனிகளை –

வேத வியாசர் ஒப்பார்  இவர்-சாகை பிரித்து போல் –

முதிர்ந்த வயசில் ஸ்ரீ ரெங்கம் வந்தவர்

அரையர் சேவை இன்றும் இவர் வம்சம்

திரு நெடும் தாண்டகம் அருளி திரு மங்கை ஆழ்வார் திரு வாய் மொழி கேட்டு அருள —

பேர் உவகை கொண்டு மண்டபம் நிர்மாணித்து -தானே தொடங்கி –

இன்றும் திரு நெடும் தாண்டகம் தொடங்கி -மின்னு மா மழை -திரு அரங்கம் நம்மூர் என்றார் –

அங்கி நம் ஆழ்வார் எழுந்து அருள பண்ண -அனத்ய காலம்-ஏற்பட திரு கார்த்திகை அனுப்ப -அத்யயன உத்சவம்-

கார்த்திகை-திரு நெடும்தாண்டகம் வரை-

தேய்ந்து போக -இடைப் பட்ட காலம்-

தாயார் அத்யயன உத்சவம் முடிந்து

தை ஹஸ்தம் -வரை-

அன்று அவை எனக்கு பட்டினி நாளே இருள் அருளி செயல் சொல்லாமல் இருந்தால்

இரப் பகல் உத்சவம் நடந்ததை  கேட்டு நாத முனிகள் -ஆழ்வார் அனைத்தையும் தனக்கு அருளியதால்-

-பெரிய திரு நாள் -உத்சவம்-

கோவில் ஒழுகு -தாளம் இசைத்து தானே சேவிக்க –

-இருவருக்கும் பெயர் நம்பெருமாள் கொடுக்க

மதியாத–அரையர் – நாத வினோத அரையர் – குல்லா பிரசாதம் -ஆழ்வாருக்கு அருளியது போல் –

திரு மஞ்சன கைலி மாலை பிரசாதம் -அரசன்-விண்ணப்பம் செய்வார் -அரையர்-

திரு செவி சாத்தி அர்ஜுனன் மண்டபம் -பகல் பத்து -திரு வாய் மொழி மண்டபம் இரா பத்து

நம் பாடுவானை வீட்டிலே விட்டு வா ஆணை —

தொங்கு பரிவட்டம் பிரசாதம் பெற்று மகிழ்ந்து

கம்பர் அரங்கேற்றம்

கம்ப நாட்டு ஆழ்வான் பட்டம் நாத முனிகள் கொடுத்தார்

நம் ஆழ்வார் விக்ரகம் பிரதிஷ்டை செய்து திரு அடி தொழ –

பரம ஸ்ரீ வைஷ்ண சம்பந்தம் -நாத முனிகள் இருப்பதால் -இங்கு

௧௦௦௦௦ பாடல்கள் –

தில்லை தங்கி 3000 கூடி அங்கீகாரம்- சொப்பணம் -பாம்பு கடித்து இறந்த பிள்ளை

நிந்திக்க -படலம் பாட பிள்ளை உயிர் -பத்திரிகை கொண்டு

அரங்கேற்றம்-ராமனை பாடினேன்-ராமன் பற்றி அருளிய ஆழ்வார் பாட – சட கோபர் அந்தாதி பாடி –

வேதத்தின் முன் செல்வான்-நோய் போம் மருந்து என திரு வாய் மொழி –

தாயார் சந்நிதி முன் -கேள்வி பதில்-பின் அரங்கேற்றம்-ஹிரண்ய வதம் படலம்-

விபீஷணன் -ராவணன் இடம் தூண் தட்டி

அளந்திட்ட தூணை அவன் தட்ட -மேட்டு அழகிய சிங்கர் அட்ட காச சிரிப்பு –

கேட்டு நீர் கம்ப நாட்டு ஆழ்வார் -நாத முனிகள் -அருள –

நாத முனிகள் உய்யக்  கொண்டார் -மணக்கால் நம்பி ஆள வந்தார் மூலம் ராமானுஜரை வரும் –

நாத முனிகள் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ நாத முனிகள் கைங்கர்யம் கொண்டு என்னை

பிரசீத அருளுவாய் –

மத் விருத்தம் பார்க்காமல் -ஆள வந்தார் –

தோஷம் பார்த்து அனுக்ரகம் செய்ய மாட்டாய் என்ற கருத்து இல்லை –

சொட்டை குலம் பெருமை பெற்றது ஆழ்வாருக்கு காதல் –

அதனால் அவனுக்கும் காதல் –

உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி -அனுபவம் முதலில் பார்ப்போம் –

உய்யக் கொண்டார் 886

மணக்கால் நம்பி   928

 976 ஆளவந்தார் அவதாரம்-நேராக நாத முனிகள் மூலம் பெற விலை

ஓர்  ஆண் வழியாக -பெற்றார் –

சத்ய பாமை பாமை போல் ஸ்ரீ ரெங்க நாத முனி -நாத முனி –

ஈஸ்வர முனிகள் குமாரர்

முனி த்ரயம்-நாத முனி -ஆள வந்தார் -ராமானுஜர்

நாத முனி யதிகளா –

தேசிகன்- இறுதி காலத்தில் நாத முனிகள் சன்யாசம் -கொண்டார் –

அனுஷ்டானம் வைத்து கொண்டாலும் முனி சப்தம்-இடம் சுட்டி பொருள் போல் –

உய்யக் கொண்டார் புண்டரீ காஷர் -நாதா முனிக்கு பின் குரு பரம்பரை பீடம்

-சித்தரை கார்த்திகை திரு வெள்ளறை –அவதாரம்

ராம மிஸ்ரர் மணக்கால் நம்பி -அடுத்து –

குருகை காவல் அப்பன் -கங்கை கொண்ட சோழ புரம் சந்நிதி உண்டு யோகம்

அஷ்டாங்க யோக மகிமையால் நம் ஆழ்வார் நாத முனிகளுக்கு நாள் ஆறாயிரமும் பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம் அருளி

யோக சாஸ்திரமும் உள்ளம் கை நெல்லி கனி போல்

உய்யக் கொண்டார் -பிணம் கிடக்க மணம் கொள்வர் உண்டோ

-தழுவி கொண்டு நம்மை உய்யக் கொண்டீரே ஆனார்

திரு வெள்ளறை பெருமாள் பெயரால் முதலில்

யோகத்தால் அனுபவிப்பது தனி அனுபவம்-

திரு மணம் போல் –

சம்சாரிகள் தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து

கைங்கர்யமுமிழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றி

பிணம் -போல் தனித்து நான் மணம் புரிய வேண்டாம்

 அவன் பேரும் தார்களும் பிதற்ற வேண்டும் –

பிரபன்னனும் த்யானம் -யோக மார்க்கம் இல்லை -சித்த வேண்டா சிந்திப்பே அமையும்

புலன் கட்டு பட த்யானம் வேண்டும் -யோக சாஸ்த்ரம்பதஞ்சலி முறை படி -குருகை காவல் அப்பன் பெற்றார் –

ஒட்டர் -கலிங்கர் -தேசம்-ஓடியா மன்னர் படை 1223 1225 வரை சரித்ரம் படி -1470 ஆக்கிரமிப்பு

சாதுல நரசிம்கன் விரட்டி -நம் பெருமாள் ௧ வருஷம் திரு மால் இரும் சோலை

1323 உலூக்கன்-படை எடுப்பு -நம் பெருமாள் 1371 திரும்பி வர 48 வருஷம் இல்லை

கோவில் ஒழுகு உய்யக் கொண்டார் காலத்தில் ஒட்டர் -ஆக்கிரமிப்பு –

மற்ற ஆறு சமயத்தார் வீடு கட்டி வாழ -இந்த சமயத்தில்

வைகானச கோவில் -திரு மால் இரும் சோலை –

பாஞ்சராத்ர ஆகமம் –

ரெங்க மண்டபம் வைகானச -திரு வேம்கடம் -திரு வல்லி கேணி –

இரண்டையும் இரண்டு கண்கள் போல் –

ராமானுஜர் -மாற்ற வில்லை- வைகானச முறை மாற -மீண்டும் -பழைய முறை ஸ்தாபித்தார் –

ராஜ ராஜ சோழன்-சுந்தர சோழன் காலம் உய்யக் கொண்டார் -படை எடுப்பு நடந்து இருக்காது என்பர் –

உய்யக் கொண்டார் தனியன்-அன்ன வயல் புதுவை அரங்கர்க்கு  -சூடிகொடுத்த  இரண்டையும் சமர்ப்பித்து –

அனைத்தும் அரங்கனுக்கும் -ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் பட்டர் –

முப்பதும் அரங்கனுக்கு -விபவம் சொல்லி -பாசி -திரு அரங்க செல்வனார் பேசி இருப்பன

திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பேரு வார்த்தை –

என் அரங்கத்து இன் அமுதர் -ஆண்டாள் திரு வாக்கு

சென் கோல் உடைய திரு அரங்க செல்வன் –

அரங்கர்க்கு பண்ணு திரு பாவை

சூடி -வேம்கடவர்க்கு -விதி என்று பாடின ஆண்டாள் –

மேக விடு தூது-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்-நித்ய வாசம் ஆசை பட்டால்

அரங்கனே திரு வேம்கடம் உடையான் –

ஆகம பிரமாண்யம்-ஆள வந்தார் அருளி-கால கட்ட தேவை படி-

கோ செம்கனான் சேர்ந்த கோவில்-ஆழ்வார் முக் காலமும் அறிந்தவர்கள்-

லவ குசர் ஸ்ரீ ராமாயணம்-௧௧௦௦௦ வருஷம் நடக்கும் தன உடை சோதி எழுந்து அருளும் சரித்தரமும் சொல்ல –

சிங்காசனம் உட்கார்ந்து  தன் சரிதை கேட்டு இருக்க -முக் காலமும் அறிந்து பாடிய

அது போல்-இங்கும் –

நெருடல் இல்லை-

வால்மீகி பூமி காது போல் ஆண்டாள் பூமி பிராட்டி –

5100 வருஷம் தான் நிறைய ஆராய்ச்சி உண்டு

லால் குடி பக்கம் மணக்கால் நம்பி -இவரால் பெற்ற பெயர்

ராம மிஸ்ரர் -மாசி மகம் -அவதாரம் -தீர்த்த வாரி கடலாடுதல்- நிறைய திவ்ய தேசங்களில் –

வேலை மோதும் மதிள்-திரு கண்ணா புரம் ஏழு மதிள்கள் உண்டு –

மகாயாம் – மகரே மாசம் -சக்கராம்சம் மகீஷாம் -பக்திசாரம் -எப்பொழுதும் சொல்லு -தந்தை சொல்லி

காவேரி கரை திரு குமாரிகளை கூட்டி போக –

முதுகை நகத்தி போக -கால் பதிந்து -உயக் கொண்டார் -பரிவு -மணல் கால் பொழிய தோன்றியதால்

கைங்கர்யம் கொண்டே பெயர் பூர்வர்களுக்கு பிடித்த பெயர்

பல்லாண்டு பாடும் பான்மையர் -விஷ்ணு சித்தர் –

பட்டர் திரு குமாரர்கள் விளையாட -தலை சிடுக்கு நாறுகிறது என்று பூம் தோட்டம் வைக்க வில்லை

ஆச்சார்யர் கைங்கர்யத்துக்கு போக மீதி தான் அரங்கனுக்கு –

அனந்தாள்வன் போல் ஆச்சார்யர் கைங்கர்யம்

நாலாவது ராமன் ராம மிஸ்ரர் –

கீதை -நால் ஆயிரம் அர்த்தம் கொடுக்க -யாமுனாச்சர்யர் -யமுனை துறைவன் –

நாதா முனிகள் வட தேச யாத்ரை -கோவர்த்தனம்-கண்ணன் திரு அடி பட்ட இடம்-

கைங்கர்யம்-சந்ததி விளங்க -ஆள வந்தார் –

இங்கும் இரண்டு கருத்து -அவர் காலத்தில் -என்பர் –

தாத்தா சொல் படி வைத்த பெயர் –

மகா பாஷ்ய பட்டர் இடம் சாமான்ய சாஸ்திரம் கற்று வந்தார்

 -ஆக்கி ஆழ்வான் -கப்பம் -வாத போர் -மூன்று கேள்வி

தி மலடி அல்லள்-உசித பதில் சொல்லி -அரசன் ராணி ஏற்பாடு –

நாட்டில் பாதி எழுதி வைக்க ராணி நம்மை ஆள வந்தீரோ –

கம்பர் -ராமன்-திரு மால் தானே -ஆதி கவி தழுவி பத்தர் பித்தர்பேதையர் பேசின நைசயம்

சமயமும் இலக்கியமும் சேர்ந்தே –

அரசு கிடைத்த ஆளவந்தார் -மணக்கால் நம்பி பச்சை இட்டு -தூதுவளைகீரை –

நிறுத்தி -கேட்க வைத்து -வாங்கி போக வில்லை கொடுத்து போக வந்தேன்-

த்யாகம் மனப்பான்மை கொண்டவனே பணக்காரன்

மூன்று அடி திருப்தி -இல்லை என்றாள் மூன்று  லோகத்தாலும் திருப்தி இல்லை –

கீதா சாஸ்திரம்- தேக ஆத்மா அபிமானம் ஆள வந்தார் இருப்பதை அறிந்து –

கேட்டு -உணர்ந்தார் -ஆத்மா உஜ்ஜீவனதுக்கு வழி தேடாமல் தேக ஜீவனத்துக்கு வழி

ஆத்மா சொன்னீர் ஏன் துக்கம் -மீதி சொல்கிறேன்

துக்க சுழல் தாண்ட பக்தி -மாம் நமஸ்குரு

முக் கரண பக்தி மகாத்மயம் –கர்ம ஞான பக்தி யோகம் அறிந்து

பக்தி வளர என்ன செய்ய -விபூதி யோகம்-விஸ்வரூப தர்சனம் –

அடைய சரணா கதி ஒன்றே வழி –

கீதையால் சொல்ல பட்ட கண்ணன் விஷயம் காட்டும் -சொல் எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே –

ஆத்மா சம சக அர்ஜுனன் கண்ணன் அருளியது போல் இவரும் காட்ட

ஸ்ரீ ரெங்கம் தெற்கு வாசல் வழியே புகுந்து காட்ட -சொல்ல –

கண்ணனை தேடி போக -கற்றினம் மேய்த்த காலினை -உம்மது தானே

திரு பாண் ஆழ்வாருக்கு நீரே விரும்பி காட்டியது போல் காட்ட

லோக யாத்ரை துரந்தார் சன்யாச ஆஸ்ரமம் கொண்டார்

பரமாச்சார்யர்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் திரு குமாரர் –

ஆடி உத்தராடம் திரு அவதாரம் ஆள வந்தார்

திரு கடஷாதால் -அசேஷ கல்மஷம் தொலைந்து

வஸ்துவாக இல்லாத என்னை -பொருள் தன்மை அடைந்தேன் -ராமானுஜர்

கீதார்த்த சன்க்ரகம் -அருளி -பகவத் வாக்கியம் குழப்பம்- ஆழ்வார்கள் குழப்பம் இன்றி –

ஆச்சார்யர் தெளிவாக —

32 ஸ்லோகம் -முதல் ஸ்லோகம் 700 சுருக்கம்- நாராயணனை சொல்ல வந்த கீதை பக்தி அங்கம்-

முதல் ஷட்கம்-இரண்டாவது மூன்றாவது -அத்யாயம் சுருக்கம்18

மீதி 10 ஸ்லோகம் சொல்லாமல் விட்டது

கீதார்த்த சங்கராக ரஷை தேசிகன் -அருளி –

கீதா பாஷ்யம்

தாத்பர்ய சந்த்ரிகா தேசிகன் –

ஸ்ரீ ரங்கத்திலே  எழுந்து அருளி இருந்தார் -ஆளவந்தார் –

சிந்தையாலும் -தேவ பிரானை-பதிகம் –  திரு தொலை வில்லி மங்கலம்

மழை பெய்தால் ஒக்கும் -காட்டினீர் -தொழும் திசை உற்று நோக்கியே –

கொண்டு புக்கு -காட்டினீர் -அன்று இருந்து -ஆழ்வார் –

மங்களா சாசனம் உத்சவம் 5 நாள் அடுத்து பிரியா விடை இன்றும்

-இரட்டை திரு பதி -பெருமாள் போகும் திசையே நோக்கி ஆழ்வார் –

நாயக்கர் மண்டபம் வரை கண் பார்வை இறுகும் வரை யாரும் -தொழும் அத் திசை உற்று நோக்கி

வைத்த கண் விடாமல்-மழை கண் நீர் அகற்றி –

வியாக்யானம்-ஆளவந்தார் நிலை இது போல் -முதலில் சேவித்த அன்றே -ஆழ்வார் விட ஆள வந்தாருக்கு –

அதை பார்ப்பது பாக்கியம்-மணக்கால் நம்பி -உருகும் பகவதனை பார்ப்பதே புருஷார்த்தம் –

வலம் வரும் பொழுது -திரு மாலை 19 கிழக்கு பக்கம் ஒரு வீடு விடாமல்

ஆள வந்தார் அறிந்து இருப்பார் திரு அடி நீட்டி இருக்கும்திசை

மேற்கு பக்கம் துரி யோதனன் திக்கு -கற்ப பெண் நடப்பது  போல் போவாராம் –

திசை படைத்ததே தாளும் தோளும் சமன் இலாது பரப்பி கிடக்க தானே –

அத்ர பரத்ரா -நித்ய சூரிகளுக்கு என்ன பயன்-அக்னி -அர்ச்சா -பிரதி -ரூபத்தில்- இறங்கி வந்து கைங்கர்யம் செய்வார்

-வானவர் வானவர் கோன் உடன் -சிந்து பூ மகிழும் –

மாதா பிதா -தனியன் சாதித்து ஸ்தோத்ர ரத்னம் –

10 -1திரு மோகூர் பதிகம்-அடுத்து திரு அனந்த புரம் -பதிகம்-

நடமினோ –அரையர் -பெருமாள் ஆள வந்தார் பார்த்து சொல்ல -உடனே புறப் பட்டு

கண்ணும் கண்ண நீரும்  பாவ சுத்தி -போனதால் யோகம் சாஸ்திரம் இழந்தார் –

குருகை காவல் அப்பன்- யாரேனும் சொட்டை குலத்தில் வந்தீர் உண்டோ –

பிராட்டி மார் -அழுத்தினாலும் என்னை

பின்னை கொல்  நில மகள் கொல் மலர் மகள் கொல் — சொட்டை குலம் –

அன்று குறித்த நாள்- ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே –

கற்ப ஸ்திரீ -வெளியில் நின்றார்

பிரயோஜனாந்த பரர் -அநந்ய பிரயோஜனராக ஆக்க அரங்கன்-

இருவரும் ஓன்று போல் போகாமல்–அவனுக்கு தர்ம சங்கடம்-

சகவாசம் முக்கியம் -கருத்து –

சிஷ்யர் -அந்திம காலத்துக்கு தஞ்சமாக வார்த்தை

கோவில் ஆழ்வாரே தஞ்சமே

பெரிய பெருமாளே -கோவில் அல்வார் -இல்லத்து மடத்து பெருமாள் போல் தன் கோவில் ஆழ்வார் -நினைவு

ரகஸ்ய திரைய காலஷேபம் கேட்க

ஸ்ரீ ரெங்கம் திரு மந்த்ரம்

காஞ்சி துவயம் –

புஷ்ப மண்டபம் -சரம ஸ்லோகம்

என்பாராம்

அந்திம காலம் – ஆணை – வீணையும் கையுமாக இருக்கும் திரு பாண் ஆழ்வாரை சேவித்து இருங்கள்-

திரு அடி முதல் திரு முடி வரை -செவித்திருங்கள்-

திரு வேம்கடம் உடையான்  உயிர் நிலை அறிந்த -குறும்பு அறுத்த  நம்பி ‘பற்றி

திரு கச்சி தேவ பெருமாள் உயிர் நிலை அறிந்து இருந்த திரு கச்சி நம்பியையும் –

உபாய உபேயம்-திரு அரங்க பெருமாள் அரையர்

பிறப்பித்த ஆணை -125

976 – திரு நாடு எழுந்த பின் நிலை

பிரிவில் விவேகம் அற்ற நிலை செய்தால்-பெருமாள் ஆணை இட –

பரம பதம் போவதில் விருப்பம் இல்லையா -கேட்டு இது –

பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கு நடுவில் திரு ஆராதானம் பொறுக்காமல் இருப்பவர் உடன் ஒக்கும் –

திரு அரங்க பெருமாள் அரையர் -பெரிய திரு மஞ்சனம் கண்டு அருளி உத்சவம் –

உடுத்து முடித்து சாத்து பொடி அருளி -தளிகை திரு திரை நீக்க பின்பு

திருஒலக்கத்தில்

அரையருக்கு அருள் பாடிட்டு அருள

சேவிக்கும் அடைவுக்கு மாறாக -சூழ் விசும்பு -தாமரை கண்டு உகந்தே –

முதலிகள் அறிந்தார் ஆள வந்தார்   திரு நாடு அலங்கரிக்க

இது ஏதோ அறிகிலோமே

வியந்து -பெரிய பெருமாள் திரு நெற்றி மாலை அறுந்து விழ

பிரசாதம் அருள –சடாரி மரியாதை சாதித்து தேவரீர் எண்ணம் நிறை வேறிற்று –

வைகாசி ப்ரமொத்சவம் –

திரு அடி திரு முடி -திரு பாண் பெருமாளையும் சேவித்து

திரு தளிகை விடை கொடுத்து அனுப்பினார் –

நம் ராமனுசனை கூட்டி வாரும்-பெரிய நம்பி அனுப்பி –

வட திரு காவேரி தெற்கு கரையில்- ஆள வந்தார் படி துறை –

தவராசன் படி துறை

வெள்ளம் வந்து -திரு நாராயண ஜீயர் –

மடங்கிய திரு விரல்கள்-

ஆள வந்தாரை சேவிக்க வந்தோம் இழந்தோம்

பிரணய ரோஷத்துடன் திரும்பினார் பெரிய பெருமாளை சேவிக்காமல்

பெரிய நம்பிகள் திரு மாளிகை -இன்று இருப்பது

கூரத் ஆழ்வான் திரு மாளிகை ஒரு பக்கம்

முதலி ஆண்டான் திரு மாளிகை அடுத்த பக்கம்

ஆளவந்தார் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

மகா பூர்ணர் பெரிய நம்பி -ஸ்ரீ ரெங்கத்தில் திரு அவதாரம் –

ஐவர் -பிரதானம் பெரிய நம்பி மார்கழி கேட்டை -997

823 நாதமுனிகள்-926 ஆள வந்தார் 1017 ராமானுஜர் -1137

125 திரு நஷத்ரங்கள் இல்லை 65 வருஷம்-ஆள வந்தார்

 -23 திரு நஷதரத்தில்  ராமானுஜர் எழுந்து அருளி இருந்தார் என்று சொல்லுவாரும் உண்டு –

கமலா பதி கல்யாண குண அமுதம் உண்டு களித்த பூர்ணர் பெரிய நம்பி –

நம்மை நினைக்க தோஷம் துக்கம்-அவன் குணம் அனுபவித்து ஆனந்தம்

பூர்ண காமாய -நிறைவு -கொண்டு -சததம் -பூர்ணாய மகாதே நாம –

பராங்குச தாசர் -திரு நாமம்-இயல் பெயர் -அனுபவித்து மகா பூர்ணர் பெரிய நம்பி –

பிரமசூத்தரம் ஸ்ரீ பாஷ்யம் -மனோ ரதம் ஆள வந்தாருக்கு –

நம் ஆழ்வார் திரு நாமம் –

பராசரர் திரு நாமம்  –

மூன்று விரல்கள் –

துரோனாச்சர்யர் எகலைவன்போல் ராமா நுஜர் ஆள வந்தார் -தேசிகன் தம்மை ராமா நுஜர் –

பெரிய நம்பி அனுப்பி ராமானுஜரை –

தேவகி யசோதை -அயோதியை காடு போல் காஞ்சி-ஸ்ரீ ரெங்கம்

பெற்று -அங்கு அனுபவம்

முதலில் இளைய ஆழ்வார் பூர்வ பஷ கிரந்தங்கள் யாதவ பிரகாசர் -இடம் கற்க –

அற்ற பற்றார் சுற்றி வாழும் -அனைத்து திவ்ய தேசங்களையும் சேவிக்க வேண்டும்

கரிய மாணிக்க பெருமாள் – சந்ததி -திரு கச்சி நம்பி -மூலம் ஆள வந்தார் கடாஷித்து –

ஆ முதல்வன் – இவன் என்று தத்தேதி-வாய் முதல் அப்பன் –போல் –முதல்வன் ஆம் –

அவச்து ஆக இருந்த என்னை வஸ்து ஆக்கினார் -ராமானுஜர் அருள

தேவ பெருமாள் இடம்-அலம் புரிந்த நெடும் தட கை

காண் தகு தோள் அண்ணல்-அத்தி கிரி அத் திகிரி -அர்திதார்த்த சர்வ பூத சுக்ருதம்-

சம்ப்ரதாயதுக்கு சரண்-ஆ முதல்வன் ஆக்க -பொறுப்பு தேவ பெருமாள் இடம் விட –

அனந்த சரஸ் -புண்ய கோடி விமானம்-சன்யாச ஆஸ்ரமம் ஆனா பின்பு ராமானுஜர் –

சாலை கிணறு தீர்த்த கைங்கர்யம்-மாமா கைங்கர்யம் மறு மகன்

கம்சன்-கண்ணன் தேர் ஒட்டி /பெரிய திரு மலை நம்பி ஆகாச கங்கை தீர்த்த கைங்கர்யம்

ஸ்தோத்ர ரத்னம் ஸ்லோகம்-யஸ்ய மகிமை பெரும் கடலில் துளி சமம் இல்லை பிரமாதி தேவர்கள்

ஸ்லோகம் அனுகரிதவர்கள் யார் -காட்டுகிறேன் –

தூது வளை கீரை -வத்தல் அமுது செய்கிறார் -ஆளவந்தார் திரு நஷத்ரம் இன்றும்

திரு கோஷ்டியூர் நம்பி –திரு மந்த்ரம்-சரம ஸ்லோக அர்த்தம்

/திரு மாலை ஆண்டான்-திரு வாய் மொழி

-பெரிய நம்பி துவைய அர்த்தம்

திரு அரங்க பெருமாள் அரையர் 3000

பெரிய திரு மலை நம்பி -ஸ்ரீ ராமாயணம்

திரு விளக்கு பிச்சன்-பெரிய பெருமாள்

திரு கச்சி நம்பி காஞ்சி ஆலவட்ட கைங்கர்யம்

தொண்டைமான் சக்கரவர்த்தி -திரு வேம்கடம் உடையான் –

அர்ச்சை சமாதி குலைத்து பேசுவர்

ஆறு வார்த்தை -அஹம் ஏவ பர தத்வம் –

தர்சனம் பேத ஏவச -அபேதம் இல்லை-வேதத்தின் கருத்து சரீர ஆத்மா பாவம் –

உபாயேஷு பிரபத்திச்யாதி

அந்திம ஸ்மரதி வர்ஜனம்

தேகவாசேனே முக்தி

பூர்ணச்சர்யா சமாஸ்ரையே –

ஏரி காத்த ராமர் சந்நிதியில் -ஸ்ரீ ராமானுஜரே ஏரி -ரசித்து கொடுத்த

மகிழ மரம் அடியில்- சங்கு சக்கர திரு இலச்சினை -மது ராந்தகத்தில் –

மின்னின் நிலையிலே மன் உயர் ஆக்கைகள் -இங்கேயே நிதி கொடுக்க

பிரார்த்திக்க -தனம் பெற்று -காஞ்சியில் பிணக்கு ஏற்பட –

தேவிமார் உடன் ஸ்ரீ ரெங்கம் திரும்ப

எதிராசர் அவன் பிள்ளை தன கார்யம் நடக்க தன குடும்ப பிள்ளை விட

பிரஜை முக்கியம்

ஜகம் திருத்த லீலை –

அனந்த சரஸ் புண்ணிய கோடி விமானம் சன்யாச ஆஸ்ரமம் ச்வீகாரம் கொண்டார்

ஆள வந்தார் நியமனம் நடத்த நம் பெருமாள்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -மூலம் –

ஸ்ரீ ரெங்கம் ரஷிக்க-மணல் ரஷை மந்திர ரஷை  -இவருக்கே தெரியும்

பிரமரஜஸ் அடக்கினவர் -சைவர் பின் வர ரஷை இட்டவட் மேல் நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுது

பெரிய நம்பி மணல் எடுத்து -சிஷ்யர் -நிழல் போல நினைப்பவர் வேண்டும்-

கூரத் ஆழ்வான் -நிழல் தனித்து போகும் எண்ணம் இன்றி தொடர்ந்து போவது போல்

ச்வாதந்த்ரம் அபிமான்யம் அகங்காரம் இன்றி -மொழியை கடக்கும்

பெரும் புகழான் — வஞ்ச முக் குறும்பு அறுக்கும் -தனம் பிறப்பு வித்தை -மூன்றும்

நிழலும் அடிதாரும் போல் -நம்மை தேர்ந்து எடுத்து

குருஷ்மம் -லஷ்மணன் போல்

திரு அடி இடம் கணை ஆழி கொடுத்தது போல் பாக்கியம் என்று கூரத் ஆழ்வான்

7 -10 இன்பம் பயக்க -திரு வாறன் விளை

பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணையான்-இந்த -ஐதிகம் இங்கே இருக்கிறது வேத வியாசர் சுகர் வசிஷ்டர்  விஸ்வாமித்ரர் போல்வார் இருக்க ஆழ்வார் -திரு குருகூர் –

இன்பம் பயக்க -துணை கேள்வி -ஞான பக்தியால் எப்படி பிள்ளை பாடுகிறான்

என்னை பார்த்து பாசுரம் விடாதீர் -துணை கேள்வி

மற்றவை தனி கேள்வி –

பலர் அடியார் இருக்க என்னை கைங்கர்யம் -கூரத் ஆழ்வான் இதை சொல்லி பின் செல்ல –

மணல்திரித்து ரஷை இட்டு காத்து கொடுத்தார்

மாறனேர் நம்பி -ஆளவந்தார் சிஷ்யர் -தேவனுக்கு இட்ட புரோடோசம் நாய்க்கு –

பெரிய நம்பி -சம்ஸ்காரம் செய்து -வர்ணாஸ்ரம தர்மம் விடாமல் செய்ய வேண்டும் –

ராமானுஜரை விண்ணப்பம் செய்ய -பெரிய நம்பி இடம் கேட்க -அவர் திரு வாக்கள் பெற

ஆழ்வார் பாசுரங்கள் கடலோசை -இல்லையே -நெடு மார்க்கு அடிமை

தேட்டறும் திறல்- பயிலும் சுடர் ஒளி -அவர் எனக்கு பரமரே

-அர்த்தம் உள்ளது என்று நம்பினீர் ஆனால் நான் செய்தது தப்பு இல்லை –

நால்வரான -ராமன்-ஜடாயு-விதுரர் -தர்ம புத்ரர் அசரீ வாக்கியம் கேட்டு செய்தார்

ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர் -மூன்று நம்பிகளில் இவர் முற்பட்டவர்

ஆழ்வார் பாசுரங்கள் அர்த்தம் நடத்தி காட்டினார் –

ஆளவந்தார் எழுந்து அருளின வீதி பார்த்து கொண்டே நினைத்து கொண்டே இருக்க –

ராமானுஜர் தம் சிஷ்யர் உடன் வர -கீழே விழுந்து தண்டம் இட்டு -அடியேன் தாசன்

கண்டும் கண்டு கொள்ளாமல் போக -இருவர் இடமும் கேட்க

ராமானுஜர் பிரதி வந்தனம் செய்தால் ஏற்று கொண்டதாக இருக்கும்

குழந்தை அரசன் நெஞ்சை திரு அடி கொண்டு கன்னத்தில் கொள்ள -ஸ்வதந்த்ரம் ஆதிக்யம்

அது போல் தான் இதுவும்

குழந்தை கேட்காதே –

ஒன்றும் புரியாமல்-இருக்க

பாசுரம்-முளை கதிரை -அரங்க மேய -வளர்த்ததனால் பயன் பெற்றேன்

வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே

 பவ்யமான கிளியை -புரியாமல் வெட்கி இருந்தது போல் –

கிளி போல் நாமும் செய்தோம் –

பெரிய நம்பி -ஸ்ரீ ரெங்கம் வீதி ஆளவந்தார் வருகிறார் என்றே தெண்டம் அவர் பாவ சுத்தி –

திரு புன்னை மரம்-பிருந்தாவனம் புன்னை மரம்

கிளை தாவி கண்ணன் –

திரு வாய் மொழி -பலி சாதிக்கும் -பேரர் வர -பெரிய நம்பிகள் நிறுத்த –

கூட்டம் கலக்கியாரை யார் வர சொன்னார் -பலி சாதிக்காத திவ்ய தேசம் போவோம்

நம் பெருமாள் பேரர் வேண்டாம் ஆணை -பயந்து நிறுத்தினார் .

ஆச்சர்யர்களை தன் தேசம் விட்டு இழக்க மனம் இன்றி

காஷாயம் தரித்து கூரத் ஆழ்வான் –

ராமானுஜர் உடன் எப் பொழுதும் -கூரத் ஆழ்வான் போவாரே –

பெரிய நம்பி கூரத் ஆழ்வான் போல்

திரு கச்சி நம்பி காஞ்சி வரதர் சேவித்து உடன் திரும்பிய ஐதிகம் –

இருவரும் கண் இழக்க

ஐயம் பேட்டை கள்ளர் பசுபதி கோவில் -அருகில்- அது துளையும் கூட வர

கடுக்க நன்கு அடி வைத்தால் ஸ்ரீ ரெங்கம் –

அங்கு உயிர் விட்டால் தான் மோஷம் தப்பாக -அநந்ய சாத்தியம்

ததைக ஈச்வரனே உபாயம் –அங்கேயே ஆச்சார்யர் திரு அடிகள்

வேட்டை வியாஜ்யம் -ஜடாயு பெருமாள் மடியில்

விட்டது போல் கூரத் ஆழ்வான் மடியில் –

காட்டில் கைங்கர்யம் –அநாதர் யாரும் இல்லை

ஸ்ரீ நாத்ஜி -மீரா பாய் க்கு நாத தவறாக -ஸ்ரீ ரெங்க நாத மம நாத

பராந்தகன் -நாவல் கொடி அம்மாள் -உதவ

-இன்றும் மரியாதை நடக்கும் -கோவில் ஒழுகு –

திரு கோஷ்டியூர் நம்பி -கோஷ்டி பூர்ணர்

தேவர்கள் மந்திர ஆலோசனை

சௌம்யா நாராயண பெருமாள் உரக்க மெல்லனையான் நரக நாசன் வெள்ளி திரு மேனி

987 வைகாசி ரோகிணி திரு அவதாரம் முப்புரி ஊட்டிய திரு நஷத்ரம்

திரு வோணம் போல் –

சீர் திருத்தம் செய்வது -பத்து கொத்து -பிரித்து

பொறுக்காமல்- மாதுகரம்-பிஷை –விஷம் கலந்து கொடுக்க –

பசு மாடு பால் கறக்கும் நேரம்தான் -7 வீட்டில் 1 வீட்டில் மறைத்து பிஷை இட

குறிப்பால் உணர்த்தினாள்

சந்நியாசி சாப்பிட கூடாது

i மாசம் உபவாசம் இருந்தார்

திரு கோஷ்டியூர் நம்பி வர

வெய்யில் கீழே விழுந்து சேவிக்க

எழுந்து  இரு சொல்ல வில்லை

கிடாம்பி ஆச்சான் -பார்த்து -நரகம் கிடைத்தாலும் -அள்ளி எடுத்து மடியில் கொள்ள

வாரீர் ஆச்சான் -நம்ப தகுந்த ஒருவர் வேண்டும்

உம்முடைய கை சோறே உண்பார் –

இப்படி பட்ட பூர்வர் சேவித்த பெருமாளை நாமும் சேவிக்க பாக்கியம் –

ஊர் புக்கு வருகிறேன்-சொல்லி விட்டு அடிக்கடி வருவாராம்

ஊர் என்பது இரண்டாவது உண்டோ

திரு அரங்கம் நம்மூர் ஆழ்வார் பாசுரம்

 ரகஸ்ய த்ரய காலஷேபம் செய்தார் இங்கே -ராமானுஜருக்கு –

ஆயிர கால் மண்டபம் -ஏகாந்தமாக -பக்கம் குறட்டை விட்டு தூங்க –

இன்று இல்லை-பரிட்ஷை பண்ணி தான் அன்று வழங்குவார்

அடுத்து இவரே தேடி வந்து வெய்யிலில் வந்து அருள

திரி தண்டம் கொண்டு உடனே தனித்து எழுந்து அருள –கூரத் ஆழ்வான் திரு மாளிகை –

தனம் உடனே வழங்க –

திரு மலை ஆண்டான் -திரு வாய் மொழி அர்த்தம்-

ரசமாக படாமல் குனிந்து -அறியா காலத்து -பாசுரம்-

விஸ்வாமித்ரர் சிருஷ்டி இன்று இல்லையா –

௧௧ பாசுரங்களில் இது போல் ராமானுஜர் நிர்வாகம் உண்டு

கால ஷேமம் நிறுத்த -ஆள வந்தருக்கு தொடராத அர்த்தம்

இதை நான் கேட்டு இருக்கிறேன்

நினைவு தான் படுத்துகிறோம் வசிஷ்டர் -ராமர் சாந்தீபன் கண்ணன் போல்

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -உத்தர வீதி செம் தமிழ் பாடும் வீதி -விண்ணப்பம் செய்வார்

 திரு வைகாசி கேட்டை 1017 -எம்பெருமானார் -அவதரித்த வருஷம் 80 வருஷம் இருந்தார்

காஞ்சி -சென்று -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம்

தேவராஜா அஷ்டகம் -ராமா நுஜர் சொல்லி கொண்டு இருக்க –

திரு கச்சி நம்பி கேள்வி பட்டு -தெண்டம் சமர்ப்பிக்க

ஸ்தோத்ர ரத்னம் கொண்டு மங்களா சாசனம் க புருஷோத்தமன் -நீயே பரத்பரன்-

தேவாதி ராஜன் ஆனந்தம் அடைந்து என்ன வேணுமோ கேள் -நம்முடைய பெண் பிள்ளை தவிர

நம் ராமானுசனை தந்து அருள கூடாதோ -நம் பெருமாள் சொல்லி

சந்ததி நில்லா –

தேசிகன் இல்லா ஓதுகை போலே

இந்திரன் இல்லா லோகம் போலே

செம் தழல் இல்லா ஆகுதி போலே

சந்தரன் இல்லா தாரகை போலே

பிறந்தகம் இருந்து புக்ககம் போகும்

திக்கு நோக்கிதிரும்பி திரும்பி

தேவராசர் தம் கோவில் நோக்கி நோக்கி

செக்கர் மேனி

சோர்ந்த கண்ணீர் பனி நீர்

பெரும் கோவில் வழியே

வேத நல்ல மறையோர் தம்முடனே

போயினர் பெரும் பூதூர் முனியே –

அரங்கன் வரவேற்ப்பு -சேனை முதலியார் -இட்டு வரவேற்று –

எதிர் கொண்டு வர வேர்க -அருள் பாடு இட்டு அருளி –

திரு அரங்க பெருமாள் அரையர் இடம் திரு வாய் மொழி அர்த்தம்

கைங்கர்யம் செய்து

உத்தர வீதி அரையர் 3000 பேர் இருந்தார்களாம்

மேல் தட்டில் நடை போடுவார்களாம் -இங்கு இருந்து கொண்டாட்டம்-கீழ் இருந்து கைங்கர்யம்

செம் தமிழ் பாடுவார் வீதி

திரு மஞ்சள் காப்பு சமர்பிக்க

குறிப்பால் உணர்ந்து

சர்வத்தையும் பறிக்க -செய்கிறீரா

அரையர் பிரியராய்

ஆச்சர்யனே உபாய உபயம்

லஷ்மண முனி திரு நாமம் சாத்த

திரு முளை -மிருத் சந்க்ரகம் செய்வாராம்-அரையர் ஓத

ஒழிவில் காலம் -இசை உடன் பாட -காலம் எல்லாம் மீண்டும் மீண்டும்

தாளம் தட்டி அழ -இழந்த காலம் சேர்த்து கைங்கர்யம் வேண்டுமே -இழவு மனசில் பட –

கேட்ட ராமானுஜர் கண்ணும் கண்ணீராக

முன்னை அமர-வான் துவாரபதி மன்னன் -அகப்பட்டேன் வாசு  தேவன் வலை யுள்ளே –

கயற்று வலை இல்லை கண் வலை காட்ட -பேர் ஆச்சர்யம்-கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு வேர பாசுரம் –

வட நாட்டு வித்வான் வர -புன்னை மரத்தடி -பாட -ஆழ்ந்து ஆனந்த கீர்த்தனை கானம் –

அரையர் -நடந்து வந்தவனுக்கு ஏற்ற சம்பாவனை –

கை தல சேவை- மூன்று அர்ச்சகர் -நாலு கொம்பு தூரம் -௭௦௦ காதம் தூரம் வந்ததாக சொன்னீர் போதுமா

அழகிய மணவாளன் -திருஷ்டி தோஷம் கூடாது பல்லாண்டு

நின்றவாறும் -பாசுரம்-நினைப்பு அரியன –

திரு புளின்குடி -நின்றது -பாடகம்

மன்னாதன் பார்த்த சாரதி தெள்ளிய சிங்கம்

கண்ணன் தொட்டிலில் வெண்ணெய் வருகிறதா இருந்து சயனிக்க

காட்ட –

அரையர் -இதை

ராமன்-வாலி முடித்து /சித்ர கூடம் பஞ்சவடி/திரு புல்லாணி

பிள்ளை தேவ பெருமாள் அரையர் -திரு புளின்குடி ௯-௨

பண்டை நாளில் -நோக்காய் -சோதி வாய் -தாமரை கண்களால் நோக்காய் -நிர்பந்தம் படுத்தி

ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர் -அவர் கடாஷத்தால் தானே இத்தனை அனுபவம் –

கூரத் ஆழ்வான் -புற வீடு விடுதல்-அரையர் திரு மாளிகை சென்று பரம பதம் –

அரையர் -சரம தசை-ஸ்ரீ ரெங்கம் திரு அரங்கம் – சேர்த்தி வார்த்தை அழகு எதிலும் இல்லை –

திரு அரங்கர் சப்தத்தில் உஊற்றம் போல் இருக்க வேண்டும்

திரு மாளிகை -ஆலி நாடன் திரு வீதி பார்த்த சாரதி கோவிலில் கை தாளம் அனுமதி பெற்று

கை தாளம் =நாத முனி –

பெரிய  திரு மலை நம்பி -தனியன் அமலனாதி பிரான்

திரு மாலை ஆண்டான் -அனுபவம் பார்த்து

பொன் அரங்கம் என்றால் மயலே பெருகும்ராமானுசன் அனுபவம் அடுத்து பார்ப்போம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

-ராமானுஜருக்கு வேண்டியவர் -இருந்தாலும் நல்லவர் -நுழைய வில்லை

தொடர்பை விட்டு கொடுத்து வருந்தி

திரு மால் இரும் சோலை

சோதனை காலம் -நம் பெருமாளும் -ராமன் பழக்கம் -கை பிடித்த சீதை விட்டதுபோல்

அயோதியை விட்டு தண்டகாரண்யம் சென்றது போல்

பஞ்ச ஸ்தவம் -அருளி -கள் அழகர் இடம் மறு படியும் ஸ்ரீ ரெங்க தாமினி -ஆபத்து தொலைய

ராமானுஜர் திரு அடி நிழலில் இருக்க அருளி -போக்கி கொடுத்தார்

ஸ்ரீ ரெங்க ஸ்ரீ மேலும் வளர –

வரதராஜ ஸ்தவம் அப்புறம் அருளினார் என்பர்

-முன்பே அருளி மறுபடியும் காஞ்சி -ஆணை கண் கேட்க்க -நேத்க்ரா சாத்குறு

தேவரீரை கண்ணுக்கு விஷயமாக -முக்தி நாலூரானுக்கும்முக்தி கொடுத்தோம்

வீட்டையும் கேட்டோம் -உம்மையும் ராமானுஜனையும் மட்டும் காண -யாரையும் சேவிக்க தேவை இல்லை -அமுதனார் -புரோகித கைங்கர்யம்

பெற்று கூறத் ஆள்வான் இடம் கொடுக்க

இயற்ப்பா கைங்கர்யம் அமுதனார் –

சப்த ஆவரணம் -புறப்பாடு -ராமானுஜ நூற்று அந்தாதி கேட்க விருப்பம் –

சுவாமி மடத்தில் விட்டு -வாத்தியம் நிறுத்தி –

புறப்பாடல் திரு செவி சாய்த்து -ராமானுச /நாராயண -இரண்டும் நான்கு எழுத்துகள்

அசட்டு சமத்து நான்கு எழுத்துகள் என்பர்

மோஷம் மட்டுமே கொடுக்கும் சாமர்த்திய எழுத்து

பெரிய நம்பி -ஆளவந்தார் -திரு மளிகை

அண்டம் எல்லாம் -திரு அடி கீழ் நின்று நின் திரு அடி பிரியாமல்

ஆள் செய் -வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் மண்ணும் ஆண்டு

பிரம ரதம் திரு மஞ்சனம் -திரு கரம்பனூர் -திரு மஞ்சனம் -ஞான பொடியால்

சோடச உபாகாரம் -காஷாய -யுவராஜா பட்டாபிஷேகம் பராசர பட்டருக்கு –

திரு பரி வட்டம் திவ்ய வன மாலை –

வசிஷ்டர் ராமனுக்கு பண்ணியது போல்

ஸ்ரீ பாஷ்யம் -பக்தி யே உபாசனமே உபாயம் -கீதா பாஷ்யத்திலும்

தொடங்க பாபம் இருக்கும்

பிராய சித்தம் செய்து கழிக்க முடியாமல் -அங்கமாக பிரபத்தி இருக்கும் –

சரணா கதி கத்யம்-நேராக பிரபத்தி -ஸ்வதந்திர பிரபத்தி –

அந்தரங்கர்களுக்கு அருள -கத்ய த்ரயம்

சரணாகதி கத்யம் –

ஸ்ரீ ரெங்க கத்யம் அடுத்து -திரு அரங்கன் திரு அடிகளில்

ஸ்ரீ வைகுண்ட கத்யம் -அடுத்து -பிராப்யம் ஸ்ரீ வைகுந்தம்

வந்தே வேதாந்த -தனியன் -உபநிஷத் சொல்லிய வழிதான்

-ச்வாதந்த்ர்யா அபிமானம் இல்லாத -ஞாசம் இதி பிரம -பர நியாசம் சரணா கதி

ரஷிக்கும் பொறுப்பு நம் இது இல்லை அவனது –

யதிராஜர் திரு அடி பற்றி -ஸ்ரீ மாதவான்க்ரி-காமாதி தோஷம்

மூர்த்நா -திரு அடி பற்றி காமம் முதலான தோஷம் போக்கி மோஷம் பெற்று

ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம்புஜ -ராஜ ஹம்சம் இவர் -அரசர் அன்ன பறவை

ஷீர நீர் விவாகம் பிரித்து -கொடுக்கிறார்

பராங்குச பதாம்புஜ பருங்க ராஜம்-ராணி தேனீ –

அவன் திரு அடிகளே உபாயம்-மாறன் காட்டிய வலி -காட்டி கொடுத்தார்

கால த்ரஎபி காரண த்ரேயம்-நிர்மிதி -அதி பாபம் -கிரியச்ய சரணம்

பகவத் ஷமைபி -நீரே அன்றே பண்ணி வைத்தீர்

கமலா ரமணன் திரு அடியில் அனுஷ்டித்து –

சம்பந்தம் உள்ள அனைவருக்கும் -கேட்டு -ஆஸ்து தி -சங்கை போகாமல்-

கண்ணனோ -ராமன் -கிடந்த பெரிய பெருமாள் -இல்லை –

நின்ற நம் பெருமாள் ராமன் தானே -இரண்டு வார்த்தைகள் இல்லை -உறுதி –

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ -இதனால் தான் தினம் அனைவரும் –

துவயம் அர்த்தானுசந்தானம் -ஸ்ரீ ரெங்கத்தில் -அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுக மாஸ்வே –

இருப்பே சுகம் வாழ்வு தானே –

தமர் உகந்த -எவ் உருவம் –

ஐ தீகம்-வார்த்தா மாலை -உபநிஷத் சாத்தின திரு நாமங்கள்-பல இருக்க –

நாம் சாத்தின திரு நாமங்களும் கொள்கிறான் மதுரையார் மன்னர் -பிடித்த அடி நிலை தொட்டு -ஆழ்வார் –

நஞ்சீயர் விஷயம்–சதங்கை அழகியார் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை திரு ஆராதன பெருமாள் –

சிறு குழந்தைகளும் ஸ்ரீ ரெங்கத்தில் ஈடு பாடு -காவேரி கரையில் உத்சவம் –

பெரிய திரு பாவாடை உத்சவம்- ஜேஷ்ட அபிஷேகம் அடுத்த நாள்-அன்ன கூட உத்சவம் –

வசுதேவர் -1000 போர் காசு தானம்-சொல்லி கொண்டார் நகி வாசோ தரித்ரக —

முற்ற தான் துற்றிய -குழந்தைகள்-மணலை பிரசாதம் -கண்டு அருள பண்ணி -அருள பாடு இட்டு -நம் ஜீயா –

ஸ்வாமி அங்கு எழுந்து அருள -பிரசாதம் வாங்கி கண்ணில் ஒத்தி -பிள்ளை வருவதற்குள்-தமர் உகந்த பாசுரம் பொய்யோ –

பத்து கொத்து பரிவாரம் –

சாத்தின -சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்

திரு பதியார் -ஸ்தானத்தார் -விண்ணப்பம் செய்வார் –

தானியம் அளப்பார் சிற்பியர் நெசவாளர் படகோட்டி –

தலை இடுவார் திரு மாலை

திரு வாசல் காக்கும் ஆரியர்கள் பட்டு இருந்த வாசல்- படுகாடு இருந்து

நாழி கேட்டான் வாசல் திரு வணக்கம் திரு வாசல் –

திரு சோலை- புண்டரீகர் –

சீலை தெய்ப்பவர் வண்ணான் பாதுகை நெசவாளர் குயவர்கள்- நித்யம் கூன் –

தலையாரிகள்-வீதி வலம் வந்து -செப்பன் இட்டு –

திரு மஞ்சனம் வழி -காவேரி கரை காப்பர்

பொன் தாம்பரம் -ரதம் கோபுரம் தச்சர் –

அப்பொழுது அப்பொழுது  சீர் திருத்தி கல் தச்சர்

வணிகர்- மாட்டு வண்டியில்-

கோபாலர்கள்-

உள் திரை -திரு விளையாடல்- நஞ்சை புஞ்சை-காணி நிலம் ஓலை சுவடியில்

ராமானுஜ முத்தரை-வைத்து செலவு வகைக்கு

பரதன்-ஒன்பது மடங்கு -செலவு பாதுகை தான் ராஜா -போல் -வரவு சேர

த்ரவ்யங்கள் சேர்ப்பித்து எட்டு நாளைக்கு ஒரு முறை -வாங்கி -புதியது –

கஸ்தூரி -சந்தன கட்டை நிரப்பி

திரு ஆபரானங்களில் இடை ஆட்டம் -நெல் அளவை இன்றும் உண்டு –

வஸ்த்ரங்கள்-நானாவித -முத்தின் குடை –

முத்துகள் போதித்த வஸ்த்ரம் -தூப ராசி -சுவர்ண ராசி பருப்பு -நெல்லிக்காய்

முதிர்ந்த விறகு கட்டு

பங்கய செல்வி திரு மடை பள்ளி தானே சுத்தம் செய்ய

திரு வெள்ளறை -பங்கய செல்வி -தாயார் பெயரை வைத்து –

அப்பம் கலந்த சிற்றுண்டி கன்னல் -வித வித சீடை –

திரு பவளதுக்குஇனிய

வாத்தியங்கள் பல -கான சொரூபி -யாழ் வீணை –

கலம்பகம் திரு மாலை வைஜயந்தி மாலை நீட்டுவாரையும்

சாத்து போடி நீட்டுவாரையும்

அடைக்காய் பானகம் வடை பருப்பு நீட்டு வாரியும் -தட்டி உபயம் –

பஞ்ச பாத்ரம் உத்தரணி திரு விளக்கு சோதித்து -வாகனங்களையும் கடாஷித்து

கிளி -மண்டபம்-கிளி கொண்டு வளர்த்து பெரிய பிராட்டி பெரிய பெருமாள் -தூது போய் பேசி கொள்ள

ஆடுவார் பாடுவார் சேம களம் சின்ன பெரிய மேளம் -திரு சின்னம்

நெய் அளவு மேல் வஸ்த்ரம் –

நெய் அமுது தொட்டில்-இன்றும் முப் பொழுதும் கடைந்த வெண்ணெய் -உண்டவன்-

ஏரார் இடை நோவ -எத்தனையோர் போதுமாய் —

அளக்கும் படி அளவும் -மாவு இடிக்கும் யந்திரம் சீர் பார்த்து –

அவல் அமுது இடிக்க -நித்யம் அமுது உண்டாம் –

போக தளிகை ராஜாங்கம் நெல் சம்பா நெல் -சீரார் செந்நெல்-என் திரு மகள் சேர் மார்பன் –

பாசுரம் படி வகை வகை விதமான நெல் –

திரு சுற்றும் சோதித்து -பால் என்கோ-பசுக்களுக்கு கருப்பம் சாற்று கொடுக்க வைத்து –

எருதுளால்-தளிகை சாமான் யானை குதிரைகள்

காராம் பசு விஸ்வரூபம் –

16 நாளிகை வட்டில் காரர் -மணிய காரர் -இது கொண்டு -திரு மாளிகை வர நினைவு

நித்யம் வெள்ளி குடம்- ஐப்பசி தங்க குடம் –

பெரு பெருத்த கண்ணாலம் –

ஸ்ரீ பாதம் தாங்க -மணல் வெளியில் நடை பயில -ஹம்ச கதி கருட கதி மஸ்தக கதி –

புறப்பாடுக்கு ஏற்பாடு அனைத்தையும் -ஆடல் பாடல் –

செஷாசனர் -அமுது செய்த பின் தம் முன் வைக்க

இவற்றில் ஒரு பிடி அமுது செய்ய வேண்டாமா –

நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் நித்யம் –

கூரத் ஆழ்வான் ஸ்ரீ தனம் முன்பு பார்த்தோம்

முதலில் -திரு குமாரர் உண்டு பரம பதம் -போக விருதரான பின்பு –

அரவணை பிரசாதம்-வந்த விருத்தாந்தம் -ஆண்டாள் நீர் அபசாரம் பட்டாயா -கேட்டார் –

ஈஸ்வர பிரக்ருதைக்கு கரைவது நாம் யார் -ஸ்ரீ பண்டாரம் பிரசாதம் போக வேண்டும் –

இரண்டு உருண்டை சுவீகரித்து ஸ்ரீ பராசர வேத வியாச பட்டார் 90 திரு நஷத்ரங்கள் –

ஸ்ரீ ரெங்க நாச்சியார்க்கு ச்வீகாரம் கொடுக்க ஸ்வாமி ஏற்ப்பாடு -திரு விருத்தம் வியாக்யானம் –

மஞ்சள் குடி நீர் பிரசாதம் உண்டு வளர்ந்த பிள்ளை -இவர் பெரிய பிராட்டியார் மகன் அன்றோ -அனந்தாழ்வான் –

அவரே இவர்-மேலக் கோட்டை மிதிளா புரி சாளக்ராமம் எழுந்து அருள

-ஸ்ரீ புத்தூர் -தோள் மேல் வைத்து எங்கள் குடிக்கு அரசே கொண்டாடி -அனந்தாழ்வான்

கிடம்பி ஆச்சான் -நாமே இவர் ராமானுஜர் அருள –

திரு கல்யாணமும் -ஆண்டாள் -விண்ணப்பம் செய்ய சொல்ல

குறிப்பு அறிந்து பெருமாள் கேட்க -நம் பிள்ளைகளுக்கு

பிற்றை நாளிலே மதநியாரை கொண்டு சேர்த்து வைத்தார்கள்-

பெரிய நம்பி வம்சம்

உன்னால் அல்லால் யாவர் ஆலும் குறை வேண்டேன் —

வராத ராஜ சத்வம்-இங்கு பாட பட்டு பின்பு காஞ்சி

இருவர் இடமும் -முக்தி பெற்றார்

நாலூரானுக்கும் சம்பந்த சம்பந்திகளுக்கும்

கேட்டதும் மேல் உத்தரீரம் போட்டு  கொண்டாட -அரவான்ஜோ-ஸ்லோகம்-

யாரால் நமக்கு மோஷம்- திரு அடி திரு முடி சம்பந்தத்தால் –அப்படி பட்ட  அவரே கூரத்  ஆழ்வான் –

மல்லிகை பூ சூட்ட வாராய் – அன்பே தகளியாய் அனுசந்தித்து  நெய்யால் திரு விளக்கு

திரு அந்திகாப்பு -திருஷ்டி -திரு ஆராதனம் இரவும் செய்து -கருட கொடி திருத்தி

 சயன பேரரை தாயார் சந்நிதி எழுந்து அருள பண்ணி – உறகல்-பள்ளி அறை குறிக் கொள்மின் –

அனைத்து பள்ளி கொள்ளும் இடத்து –அனைவருக்கும் –

மடம்-வர சொலி பரிவுடன் இருக்க சொல்லி -அனைவரும் -ஏகாந்த வீணை சப்தம் கூடாதே –

கைங்கர்ய பரரையும் பக்தர்களையும் – அர்ச்சை திரு மேனியில் பரிவு வேன்ம்டும்

சிஷ்யர் நடந்த கால்கள் நொந்தவோ பேசு எதிராசனே -எம்பார் ஆழ்வான் ஆண்டான் -அடியவர் திரு அடி வருட –

-பட்டினி பெருமாள் ஸ்வாமி -திரு முடி -பார்சவத்தில் -ஏகாந்தமாக இருந்து

எம்பெருமானார் அங்கீகரித்ததை அனுசந்தித்து யோகிகள் போல் இருக்க

கள்வர்கள் -இவரை பார்த்து -அது மரம் போல் பல நாள் இருக்கிறது

-இதை தற் செயலாக கேட்ட எம்பெருமானார் –யோக நிலை பெருமை-

திரு பாவை நித்யம் அனுசந்தானம் -உந்து மத களிற்றின் -பெரிய நம்பி திரு குமரி அத்துழாய்

திரு கொஷ்டியூரில் என்பர் சிலர் -பாசுரம் அனுசந்தானமாய் இருந்து இருக்கும் -திரு பாவை ஜீயர் –

அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான் -மெச்சூதி-பாசுரம்-எம்பார் -சங்கு சக்கரங்கள் உடன் காட்டி -மறைத்து கொள்வான்

காற்றில் கடியனாய் ஓடி அகம் புக -எம்பாரே இருந்தீரோ-

எம்பெருமானார் தரிசனம் -நம் பெருமாள் உகந்து பேர் இட்டார்

வைதிக தர்சனம் -பெரு விலையனான ரத்னம் -இரண்டு பக்கமும் ஒளி –

நம் ராமானுசன் உடையார் -பெரிய நம்பிகள் தொடக்கமான -திரு முடி சம்பந்தம் –

தொண்டு எல்லாம் –நின் அடியே தொழுது உய்யுமாறு கண்டு -கண்ண புரம் பாசுரம்

காஞ்சி தீர்த்த கைங்கர்யம் கொண்டு இங்கு வந்தது போல் -பெரியவாச்சான் பிள்ளை-

சுப்பிரமணிய பட்டார் -ராமானுஜர் -பெருமாள் சேவித்து உன்னை தொழ கூடாதே

அரசர் சேவகர் பாதுகை தொழுவது போல் -பாதுகை போல் நான் -வாய் அடைத்து போனான் –

அடி அடையாதாள் போல் -இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே -பாசுர நிர்வாகம் –

முடிந்து போனாள் முற் பட்டவர்

வெள்ளை சுரி சங்கோடு சேராதே மீதி பாசுரங்கள் உண்டே

ஆனந்த பதிகம் அடுத்து -இருக்கிறார் –

இவள் அணுகி -அடைந்தாள் -தாய் பாசுரம் மாறி மகள் பாசுரம் ஆனந்தமாக அடுத்த பதிகம் என்பதால்-

தாளம் கொல்லை பாகவதர் -பிரசாதத்தால் வள

கல்யாணம் ஆனா பின்பும் அதே அளவு கொடுக்க –

தற் செயலாக எம்பெருமானார் -பெரிய பெருமாளை நம்புகிறாரா என்னை நம்புகிறீரா

மூன்று மாசம் கழித்து பார்க்க -மறந்ததை நினைத்து

ரெங்க ராஜ ஐ யங்கார் தினம் பிரசாதம் கொடுத்து

நாம் விடுதியாக வார்த்தை சொல்ல –

பால் கொடுத்த -ஓலை சுவடி பெற்று திரு வேம்கடமுடையான்-தும்பையூர் பெண்மணி

ராமோ துவிர் நகி பாஷையே

இரண்டு வார்த்தை இல்லை ராமானுஜருக்கும்

மேல் வீடு போக ஆசை கொண்டு 200 வருஷம் ஆணை ௧௨௦ வருஷம் திரும்ப

பிரார்த்திக்க நாள் யேல் அறியேன்- பிரார்த்திக்க

7 நாள் பேரு வீடு தந்தோம் 3 நாள் அப்புறம் சொல்ல

வேர் அற்ற மரம் போல் சாய்ந்து -கூரத் ஆழ்வான் முன்பே பூர்ண கும்பம் தான் வரவேற்க –

எம்பார் தலைமையில் பட்டார்

பிள்ளான் கிடாம்பி ஆச்சான் -எம்பெருமானார் திரு மேனி பிரதிஷ்டை செய்ய பிரார்த்தித்தும்

மீதி உள்ள அனைத்து திவ்ய தேசங்களிலும்

அனைவரையும் அழைத்து -அபசாரம் மனம் வாக்கு செயல் செய்து இருக்கலாம்

ஷமித்து அருள வேண்டும்

துவயம் நெஞ்சில் அனுசந்தித்து கொண்டு திரு நாட்டை அலங்கரித்தார்

பெரிய நம்பி திரு அடி பிரார்த்தி கொண்டு –

சரம திரு மேனி திரு பள்ளி படுத்த பிள்ளான் –

மாசி சுக்ல தசமி சனி கிழைமை திரு ஆதிரை நடு பகலில்

ஆர்த்ரா அடியாரை பற்றி நனைந்து காரே ய்  கருணை ராமானுசா

எனை போல் பிழை செய்வ்வார் வல்லார் இல்லை

அதிகாரம் இல்லாதவர்க்கு  தான் நீர் இரங்க வேண்டும்

கண்ணன் தன உடை சோதி எழுந்து அருளியது போல்

சுருள் அமுதும் அமுது செய்யாமல் நம் பெருமாள்-ராமன் லஷ்மணன்

செவ்வாய் அக்ரமானதே

தான் சாத்தி கொண்ட அனைத்தையும் –

ஆதி சேஷன் தானே அனைத்தும்

சென்றல் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் –

பிள்ளான் கொண்டு சம்கரித்து

௭௦௦ ஜீயர் உபநிஷத் ஓத

பரிவுடன்

அரையர் 700 தம்பிரான் தாளம் இசைத்து திரு வாய் மொழி

பட்டர் பிள்ளான் ஸ்தோத்ரம்

சாமரம் வெள்ளம் வட்டம் இட

அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போல்

நம் வசந்த மண்டபம்

விக்ரகத்தை ஆசைகொண்டு

அந்த புர மகிஷி -ராமா னுசன் என்னும் மா நிதி –

சேம வைப்பு -அப்புறம் தான் வசந்த மண்டபம் –

கந்தாடை ஆண்டான் -கீழே திரு பள்ளி படுத்தி மேலே தானன திரு மேனி

திரு அரங்க செல்வம் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ திருத்தி வைத்தான் வழியே

ஸ்ரீ ராமானுஜர் -சிஷ்யர் அனுபவம் இனி 

எதி புனர் அவதாரம்- ஆதி சேஷன்- கோவில் மணவாள மா முனிகள் –

ஸ்ரீ ரெங்கம்-பராசர பட்டர் -அழகிய மணவாளன் –

திரு தொலை வில்லி மங்கலம் -நம் ஆழ்வார் 

திரு கண்ண புரம் -திரு மங்கை ஆழ்வார் 

சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் 

1o56கிடம்பி ஆச்சான் -திரு மேனி சம்பந்தம் 

மடப்பள்ளி மணம் திரு மலை நம்பி மூலம் –

ததீயாரதனம்-காவேரி தீர்த்தம் -வாயிலே சேர்த்து 

சாய் கரம்-சமைத்த மதுவும் சாய் கரமும் ஆச்சர்ய கிருதயம் –

ஒரு ஸ்வாமி இடம் பக்க வாட்டில் சாதிக்க -எம்பெருமானார் -வருந்த -தனிமையில் அழைத்து சொல்ல –

இதையும் பார்த்து — அருளியதால் -பிழையாமே அடியேனை பணி கொண்ட –

திரு பேரனார் கிடம்பி அப்புள்ளார்  மரு மகன் தேசிகன் –

ஸ்ரீ பாஷ்யம் ஓலை சுவடி பெற்று காஷ்மீரம் ஸ்ரீ பண்டாரம் சரஸ்வதி தேவி ஸ்ரீ பாஷ்யம் பெயர் சூயா 

1027 முதலி ஆண்டான் புருஷ மங்கலம் சித்தரை புனர்வசு 

ராமனே தாசரதி -லஷ்மணன் -ராமானுஜர் -கைங்கர்யம் திருப்பி செய்ய –

எதிராஜர் பாதுகை-விட்டு பிரியாத மரு மகன்- முதலி தவிர மற்றதை விட்டேன் –

பத சாயை-எம்பார் திரு அடி நிழல் 

திரி தண்டம் -கூரத் ஆழ்வான் –

திக் விஜயம் 25 வருஷம் ராமானுஜர் -கோவில் நிர்வாகம்- பெரிய பெருமால்முன் நிறுத்தி –

மடம் கோவில் பத்து கொத்து பரிவாரம் 

முதலி ஆண்டான் வம்சம் -மணிய காரர் –

-நம் கோவில் பிள்ளையை சுணங்காமல் பார்த்து கொள்ள -ஒன்றே நோக்கம் எம்பெருமானாருக்கு –

மேல் கோட்டைக்கும் ஸ்வாமி உடன் -சென்று மிதிளா புரம் சாள கிராமம் –

திரு அடி சம்பந்தத்தால் -வைபவம் உணர்த்தி 

கந்தாடை ஆண்டான் -அனுமதி கேட்க –

ஆஸ்ரம ச்வீகாரம் அனுமதி -கைங்கர்யம் குறைவற செய்ய –

கிரகஸ்தராக தான் இருக்க வேண்டும் -எம்பெருமானார் ஆணை –

அக்னி தொட்டு -சங்கு சக்கர லாஞ்சனை -வாட்டி பண்ண -சன்யாசிக்கு அதிகாரம் இல்லை–

சுயம் ஆச்சர்ய புருஷர்கள்–ஆச்சர்ய குமாரர் பிரதான ஆச்சார்யர் –

கந்தாடையார்கள் –

முதலி ஆண்டானுக்கு சன்யாச ஆஸ்ரமம் மறுத்தது போல்  

கோவில் அண்ணன் திரு குமரர் மா முனிகள் இடம் கேட்டு மறுத்தார் –

அவ்வயப தேசன் -கிருமி கண்ட சோழன்-பிள்ளை -ஸ்ரீ ரெங்க ஸ்ரீ சமர்ப்பிக்க 

தான சாசனம் கல் வெட்டு வைத்து கை எழுத்து இட்டு –

அவன் சொத்தை வாங்க தான் தான சாசனம் 

அவனது என்று ஏற்று கொள்வதுபோல் ஆகும் -யோசிக்க 

எம்பெருமானார் –வந்தவன் நல்லவன் -ஏற்று கொள் -உள்ளத்து தூய்மையே வேணும் –

9 -2 பண்டை -திரு புளின்குடி 8 பாசுரம் வியாக்யானம் -சரித்ரம் 

வங்கி புரத்து நம்பி -இடையர் கோஷ்டி போக -கடாஷம் முக்கியம் போனேன் –

தயிர் பால் வெண்ணெய் சமர்ப்பிக்க -பால் உண்பீர் பொன்னாலே பூணூல் கொள்வீர் -பல்லாண்டு இரும் நூறு பிராயம் புகுவீர் 

நான் விஜயீ பவ -அழகான தமிழ் -அவர்கள் சொல்ல முரட்டு சமஸ்க்ருதம் உமக்கு -முதலி ஆண்டான் –

ஈர சொல்லில் -ஆழ்ந்து -அபரியாப்த அமிர்தம்- ஆரா அமுதன் -ஐதீகம் –

தெரு கோடியில் நின்று நின்று போவாராம் பாசுரம் அனுசந்தித்து கொண்டு 

தன் சரிதை கேட்டு பெருமாள் நின்றது போல் -நின்றீர் எம்பெருமானார் –

எம்பார் அனுபவம் இனி 

1021 மதுர மங்கலம் திரு அவதாரம் -கோவிந்த பெருமாள் 

சிறிய கோவிந்த பெருமாள் சகோதரர் 

ஒய்வு எடுக்கும் நிழல் ராமானுஜ பத சாயை- 

பட்டர் கைசிக புராணம் வாசிக்க –எம்பார் –

ஜனகானாம் குல கீர்த்தி -சீதா பிராட்டி 

பிரபன்ன குலத்துக்கு பெருமை போல் பட்டர் ஆனந்த பட்டார் 

சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -பாசுரம் –

சங்கை-நிழல் பாடுமா -கேட்டதும் -திருஅடி சுவடு அணிந்து -அர்த்தம் 

பாட வல்லார் தாமும் சாயை போல அணுக்கர்களே -அர்த்தம் சாதித்தார் 

எம்பாரே இருந்தீரோ -உய்ந்த பிள்ளை அப்பூச்சி பாசுரம் -முன்பு பார்த்தோம் 

 இன்னும் என் கை அகத்து வருவரேல் -என் சினம் தீர்வன் நானே குலசேகரர் -அரசர்-காதல் வசம் பட்டு ஊடுகிறார் 

அடித்தால்-கண்ணன் -ஸ்பர்சம் பட்டது என்று சந்தோஷம் தானே  -பெரும் பரிசு 

சினம் தீர்ப்பது முகம் திருப்பி ஜாடை அரையரை காட்ட சொல்ல –

பட்டருக்கு ஆச்சார்யர் -எம்பார் –

திரு கண்ண மங்கை ஆண்டான் நாதா முனி சிஷ்யன் –

இது போல் பலர் அனுபவம் உண்டு 

சொட்டை நம்பி ஆள வந்தார் திரு குமரர் 

ஸ்ரீ வைகுண்டம்-அரங்கன்போல் சேவை அரையர் சேவை இருக்குமா -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே 

திரும்ப வருவேன்-நாசா புன ஆவர்ததே 

விட்டுடும் சர்வ சக்தன்-குத்தி கொண்டு வருவேன் இது போல் பட்டரும் சாதித்தார் 

கந்தாடை ஆண்டான் முதலி ஆண்டான் திரு குமாரர் –

அசங்காமல் சயனம்பெரிய பெருமாள் உதாசீனரா -கேள்வி கேட்க –

முதல் அடியில் குறுக்க வரவில்லை-

பெருமாள் ஆட்டு வாணியன் இல்லை 

மாட்டு வண்டி காரன் மாடு ஓட்டுவது போல் இல்லை-ச்வாதந்த்ர்யம் கொடுத்து இருக்கிறான் 

தப்பு செய்து -அவர் தலையில் போட கூடாது-

பொதுவான காரணம் அவன் –

அவன் ஆளுகைக்கு உள் பட்டு –

பிரபத்திக்கு வேண்டிய புத்தியையும் சரீரத்தையும் கொடுத்து –

அரையர் சேவை 20 நாளும் நடக்கிறது -நித்யம் சேவிக்க வேண்டியது -நம் கடமை –

ஆர்த்த பிரபத்தியில் உதாசீனர் -ஈடு படாமல் இருக்கிறார் –நாடு நிலைமை

நகரும் பொழுது அனுமதிக்கிறார் -ஒன்றும் அவர் அனுமதி இன்றி நடக்காதே 

ராவணன் தப்பு பண்ணும் பொழுதும் -உடன் சென்று -ஜீவா ச்வாதந்த்ரம் கொடுத்து –

கை காட்டி -இப்படி போனால் தப்பு அப்படி போனால் நல்லது -சாஸ்திரம் –

தடுத்து நிறுத்த மாட்டார் -சட்டம்  அறியாமல் தப்பு செய்தாலும் தண்டனை உண்டே –

பட்டர் -காட்டு மார்க்கம்-கைங்கர்யம் செல்ல -சகஸ்ரநாமம் சொல்லி காத்து கொண்டால் பிரபத்தி இல்லை-

நாம் செய்கிறோம் எண்ணம் கூடாது –

மலங்க விளித்து பெரிய வாய திரு கண்கள்-

முதலி ஆண்டான் -கேட்டு -எம்பெருமானார் சொல்லிய பதில் கந்தாடை ஆண்டான் 

இரவு தூங்கும் பொழுது இடி  விழுந்தால் பாம்பு வந்தால் -எப்படி காத்து கொள்ள -பகவான் தான் ரஷிக்க வேண்டும் 

விழித்து இருக்கும் பொழுது ரஷிக்க மாட்டேன் சொன்னாரா -கண்களை சுருக்காமல் தயார் நிலையில்-

அயர்வு ஒன்றும் இல்லா சுகம் வளர -ரஷிக்கிறான் –

மன அழுத்தம் பதட்டம் காரணம் -இது தானே –

குரங்கு கூட்டம் ஆயாசத்தில் தூங்க பெருமாள் அம்பரா துணி கொண்டு சுற்றி வந்தானே –

சடை முடி விரதம்-காட்டை காக்க -காக்கும் இயல்பினன் கண்ண பிரான் –

வில் சொல் இருக்கும் வரை நானே ரஷகன் -சரீரம் பாது காத்து -பவான் நாராயண -ஆத்மாநாம் நாராயணன் -மனுஷ்யன்- உயிர் கொடுக்க –

ராஷச சரீரத்துக்கும் கேட்டாரே பெருமாள் -கடலில் வீசி -இழந்தார்கள் –

சர்வக்ஜன் -சர்வ சக்தன் -அறிந்து நிவர்த்திக்கும் சக்தி உண்டே –

பெருமாள் திரு கண் பார்வைக்குள் -இருக்கும் என்று உணர்ந்து -நிம்மதி யாக இருக்க வேண்டும் –

பட்டர் -வைகாசி அனுஷம் -தேஜஸ்வி ரூபம் –

எம்பார் குழந்தைகள்  எம்பெருமானார் இடம் கொடுக்க -துவயம் வாசனை -வீச –

காப்பு போல் அருளினாராம்-ஜப்தவ்யம் -நீரே ஆச்சார்யர் விதித்தார் –

சர்வக்ஜ பட்டர் நுழைய -விருது சொல்லி கொண்டு வர -குழைந்தை பல்லக்கை நிறுத்த –

கேள்வி-கை மணல் எடுத்து எவ்வளவு மண் -கேட்டார் -பிடி மணல் சொல்ல தெரியாதா –

ஆண்டாள் இடம் ஒப்படைத்து திருஷ்டி –

மஞ்சள் குடி நீர் அருந்தி வளர்ந்த 

கமலா -மடியில் முதுகில் தட்டி 

அமுது பாறை -கையால் அலைந்த பின்பு தான் 

திரு மண தூண்களில் தொட்டில் 

சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் பட்டர் அடுத்து தேசிகன் –

குடம்-பாம்பு போட்டு மூடி -என்ன இருக்கிறது 

நம் உடைய திரு அரன்கேசர் வெண் கொற்ற குடை இருக்கும் 

சென்றால் குடையாம்- ஆதி சேஷன் தானே குடை –

வீர சுந்தர பிரம ராயன் -ஆபத்து -கூரத் ஆழ்வான் சிஷ்யன் இவன் 

திரு மதிள் கைங்கர்யம் 

பிள்ளை பிள்ளை ஆழ்வான் திரு மாளிகை -விட்டு கட்ட சொல்ல –

கட்டும் மதிள் பெரிய   பெருமாளுக்கு காப்பு இல்லை 

மங்களா சாசனம் தான் ரஷை 

தொண்டர் அடி பொடி ஆழ்வார் தோட்டம் விட்டு திரு மங்கை ஆழ்வார் ஒதுக்கி கட்டினார் 

இடித்தான் -பிணக்கு திரு கோஷ்டியூர் சென்றார் 

சமஸ்தானம் வர சொன்னார் பட்டர் குறடு -அடங்கு எழில் சம்பத்து அடங்க கண்டு -திரு அடி பற்றி –

அவன் சம்பந்தம் என்று உணர்ந்து -உள் பட்டவன் பணிவு வேண்டும் -வெளி ஆள் அலை தள்ளும் அடங்கி இருக்க வேண்டும் –

பட்டர் குறடு ஐதீகம்- வைத்த அஞ்சல்திரு கை -திரும்பினாலும் -ரஷகன் இல்லை -பட்டர் குறடு விட்டு 

உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் 

வீர சுந்தர பிரம ராயன் இறந்த செய்தி கேட்டு திரும்பும் பொழுது ஸ்ரீ ரெங்க ராஜ சத்வம் 

ஸ்ரீ குணா ரத்னம் 

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்லோகம் 7 ஸ்லோகம் 

ஆண்டாள் அழுதாளாம் -பட்டர் அபசாரம் 

கூரத் ஆழ்வான் சிஷ்யர் -சம்பந்தம் மோஷம்- நரகம் -அபசாரம் பட்டர் மறந்தாலும் பெரிய பெருமாள் மறக்க மாட்டாரே –

நாச்சியார் இடம் ஒதுங்கி -என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் 

-அணையில் சாய்ந்து நஞ்சீயர் சொல்ல 

ஆனந்தமாககேட்டு -ஸ்ரிய பதியான பகவானே என் ஆவி 

அழகிய மணவாளனே என்று மனையில் சாய்ந்தார் 

வெளியில் போ போனீர் வா வந்தீர் 

போ சொல்லும் பொது தேவ தேவனும் திவ்ய மகிஷி வா சொன்னால் பெற்றோர் 

சக்கரவர்த்தி -இயைந்து சொன்னார் 

நாச்சியார் திரு கோலம் –ஸ்ரீ ரெங்க நாயகி திரு கண் விழிக்க ஒண்ணாது –

பூரித்து கவசம் வெடிக்கும் ஸ்லோகம் தோறும் –

முடி சோதியாய்- உன் முக சோதி மலர்ந்ததுவோ –திரு மாலே கட்டுரையே 

-திருவே மாலா மாலே திருவா -கேள்வி 

புருஷ பார்வை -அனுக்ரக பார்வை இல்லை 

துல்ய சீல வயோ விருத்தாம்-போல் –

நஞ்சீயர் -சந்திர புஷ்கரணி -குளத்து கரையில் 

ஆனையின் துயரம் தீர -மடுக்கரை -நாராயணா -கூப்பிட பொழுது வந்தார் 

கூப்பிடாத பொழுது வந்தார் இவர் -ஜீயா நாம் கூப்பிடாமல் வந்த இவர் ஏற்றம் 

சாமான்ய தர்மம் சந்தா வந்தனம் -விசேஷ தர்மம் -புறப்பாடு -கைங்கர்யமே முக்கியம் –

கிரீடம் வலது திரு கையால் காட்டி ஒன்றால் திரு அடி காட்டி 

தாயார் ரஷிக்க குழந்தை -கை பிடித்து 

பசி தாகம் -பால் மார்பை வைத்து –இரண்டையும் 

ரஷிக்க கிரீடம் உபாயம்பிராபகம் காக்குமா போல் 

திரு அடி -மார்பகம் -புருஷார்த்தம் கைங்கர்யம் காட்டுகிறான் –

கிரீட சூட -ரத்ன -நாபி படைத்தது -திரு மார்பு பிராட்டி திரு வாய் சரம ஸ்லோகம் 

திரு கண் செம்தாமரை கண் கடாஷம் ரசிக்கும் 

32 /51 வயசில் பரம பதம் 

படிக் கட்டு கட்டி இருப்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் –

திரு நெடும் தாண்டகத்தில் அதீத ஆசை -அதை கொண்டு நன்ஜீயரை திருத்தி –

எம்பார் சொல்ல திருத்தி பணி கொண்டார் –

மாதவாச்சார்யர் -ததீயரதனம் -தர்கா பிஷை -திரு நெடும்தாண்டகம் கற்றவரா-

அனந்தாழ்வான்-நன்ஜீயரை -கைங்கர்யம் செய்ய தொந்தரவு என்று 

க்ராகச்தருக்கு சந்நியாசி -விரோதம் இருந்தால் திரி தண்டம் ஒடிப்பேன்

திரு நெடும் தாண்டகம் பெரிய பெருமாள் பெரு வீடு தந்தோம் –

அம்மா அடியேன் வேண்டுவது ஈதே 

ஆண்டாள் ஆசீர்வாதம் -அந்தமில் பேர் இன்பம் நான்காக வாழ –

நஞ்சீயர் கணவனை இழந்த பெண் போல் காவேரி நீராடி வந்தாராம் .

ஸ்ரீ பராசர பட்டர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம்

குணா ரத்ன கோசம்

அஷ்ட ஸ்லோகி

பகவத் குண தர்பணம் வியாக்யான கிரந்தம்

நின்றவாறு -நம் பெருமாள் கிடந்தவாறு -பெரிய பெருமாள் -இருந்தவாறு ஸ்ரீ ரெங்க நாச்சியார் –

ஸ்ரீ வைகுண்ட நாதன் இரண்டு திரு கைகளா நான்கு திரு தோள்களா -அரங்கனையே சேவிப்போம் –

கண்ணை மூடி சேவிக்காமல் அமுதம் வாரி பருகுவது போல் -சேவிக்க

மரம் செடி கொடி -திரு அருள் -கமுக பழுத்தது -தண்ணீரால் இல்லை கடாஷத்தால் தான் வளர்ந்தன ஸ்ரீ ரெண்கத்தில்

ஆச்சான் திரு வலுத்து நாடான் தாசார் மரம் வெட்டாமல் திரு மாளிகை கட்ட

1122 திரு அவதாரம் 1174 பரம பதம்

உத்சவ மூர்த்தி பெருமை பட்டரால்

மூலவருக்கு தான் ஆழ்வார் அருளி செயல் –

பொலிந்து நின்ற பிரான்-நின்ற ஆதி பிரான் நிற்க -சில இடங்களில் தான் –

திவ்ய தேச வாழ் ஆசை கொண்ட பெண்மணி குற்றம் இல்லை –

ஸ்ரீயை-திரு கண் பார்த்து -நடை போட்டு காட்டி திரு கை தல சேவை -பராங்குச நாயகிக்கு இன்று

இட்ட கால் -கட்டமே காதல் மூர்ச்சிக்கும் -7 திருநாள் 7 பத்து அரையர் சேவை -கங்குலும் பகலும் பிராட்டி இன்று திருநாமம்

பரகால நாயகி-கள்வன் கொல் பிராட்டி அங்கு -பிரத்யேக சேவை மாலை 4 மணிக்கு -ஏசல் கண்டு அருளி-திரு கை தல சேவை –

பெரிய பிராட்டி கண் பார்வை பட்டால் அங்கீகாரம் உல்லாச-மங்கள தீபரேகம்

கடாஷ லேசத்தால் ஜகம் வாழ்ந்து போக

வேதாந்தம் தத்வ விராசம் முடிக்க -பத சின்னம் கண்டு –

சமம் -தாழ்ந்த -உன்னைவிட உயர்ந்த ஸ்ரீயை ஸ்ரீ -ரெண்கேசய-

கவசம் வெடிக்க வெடிக்க பாட போகிறேன்

ரதி மதி சரஸ்வதி -திருதி சமர்த்தி சித்தி ஸ்ரிய ஏழும் கரையை அழித்து ஓடும் –

நான் முன்னே நான் முன்னே -கடாஷத்துக்கு நமஸ்காரம் –

தனியாக சேவை இல்லை-மூலவர்- நடுவில் -அன்னியர் படை எடுப்பில்–மண் எடுக்கும் மரம்-உள்ளே உத்சவர்

இரு முறை ஆபத்து -ஒரு தடவை பெருமாள் உடன்

கல் திரை -தேவி -சாயம் இவை நிழல் போல் பூமி தேவி நீளா தேவி –

நெருங்கிய தொடர்பு-கடாஷம்பட -பிரமம் ஆகுகிறார் -தன்மை அடைகிறாராம்-

மாரீசன் அப்ரமேய -சீதா ராமன் –

விஷ்ணுவுக்கு சொத்து -கடன் வாங்கி மிளிர்கிறார் குறை இன்றி -ரத்னம்-ஒளி – போல் –

பிரிக்க முடியாதே -சார்ந்தே இருக்கும்

அலங்காரம் செய்ய -தோழிமார்கள் -பார்க்கும் முன்பே -சிவந்து போக -மார்தவம் –

திரு அடி குத்தி செம் பஞ்சு குழம்பு

அர்ச்சனை கும்குமம் சிகப்பு கண்டு தான் வேதாந்தம் விசாரணை நிறுத்த

ராஷசிகள்- மாதர் மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி -திரு அடி -சரணடையாதவர்களையும் ரஷித்து

அழகிய மணவாளன்- ஸ்திரீ தனம் நான் -உம் நிழலில் ஒதுங்கி இருக்கிறோம் –

பிதா -தப்பு பண்ண போவேன் கோபித்து -உசிதமான வார்த்தை அருளி -திருத்திபணி கொள்ள

ஸ்ரீ ரெங்க தாமினி -ஜனன பவனம் பார் கடலில் பிறந்து -பெருமை குறையாமல்

புக்ககம் ஸ்ரீ வைகுந்தம் பெருமை சேர்த்து -இரண்டையும் மறந்து -ஆனந்தமாக

தாழ்ந்த அடியேனை ரசிக்க

ஐஸ்வர்யம் அஷரம்கதிம் பரம பதம் அனைத்தையும் கொடுத்து -இன்னும் கொடுக்க முடிய விலை -லஜ்ஜை –

தலை  குனிந்து -வள்ளல் தன்மை

கிருபை -கொண்டு ரஷித்து பல்லாண்டு வாழ அருளி முடிக்கிறார்

எம்பாரை வணங்கி தொடங்குகிறார்

கலி கோலாகலம் ஒலித்த ராமானுஜரை வணங்கி

தாயார் கடாஷம் கொண்டே சிருஷ்டி பிரமாணம்

அனந்த போகி மாணிக்கம் -ஸ்ரீ ஸ்தனம் ஆபரணம்-சிந்தாமணி –

சதா பஞ்சாயுதம்-பக்தர்களுக்கு -என்றே

காவேரி தீர்த்தம் ஆடி திரும்ப

கர்மம் கிலேசம் ஒழியும் கிருபா வேகம் கிட்டும்

கங்கையில் புனிதம்

கலங்கி மேற்கில் இருந்து வர -சீர் கொண்டு வருகிறாள் -சந்தானம் அகில் புகை முத்து உருட்டி புரட்டி கொண்டு

புலி நகம்  மாலை சேவித்தோம் –

யானை -யானையும் சிங்கமும் சண்டை போட்டு -யார் கைங்கர்யம் -மாலை போட்டு போட்டு கொள்ள –

சிரிக்கிறாள் நுரை -பரிகாசம் கங்கை- நித்யம் திரு அடி

நந்தவனம் அனைதைக்கும் – வீதி  சுத்தி பண்ணி -ஸ்நான தீர்த்தம் –மணல் மேட்டில் தூக்கி சேவை பண்ணி வைத்தேன் –

அலை கரத்தால் மரமசைத்து -பூம் கொத்து ஆட -வண்டுகள் தூங்க –

பாக்கு வாழை தென்னை வளர தேன் பருகி –

மதிள் கருடன் போல் சிறகுகள் சுவர் -நோக்கி வணங்கி இருக்கும் –

புத்த  விகார சொர்ணமும் -பாவனம் -திரு மங்கை

விமானம் -வெளுப்பு -கருமை வீச -பக்தாஞ்சனம்-

சந்திர புஷ்கரணி -புன்னை புஷ்பம் பறித்து சூட்டி விட –

உயர்ந்த புன்னை மரம்- திரு வாய் மொழி கேட்டு –

சூத்ரவதி -விஷ்வக் சேனர் -சேர்ந்து வணங்குகிறார்

ஹனுமான் விபீஷணன் -ஸ்ரீ வைகுந்தம் வேண்டாம் என்று -சேர்ந்து சேவை –

உன் கண் முன்னால் இருக்கும் பெரிய பெருமாளை சேவித்து கொள் தம் கண்ணை பார்த்து

தாமரை தடாகம்- திரு கண்கள் கோல நீள் கொடி மூக்கு அக் கமலத்து இலை போலும் திரு மேனி அடிகளே –

மந்த ஸ்மிதம் சம்பாஷன –

குழி விழுந்த உதடுகள்-கனிவு மாறாத திரு கண்கள்

கற்பக மரம் கிளைகள் போல் திரு தோள்கள்

பூம் கொத்து போல் திவ்ய ஆயுதங்கள்

திரு அடி -ஆசன பத்மம்-போட்டி

ஆசனபத்மத்தில் அழுத்தின திரு அடிகள்-கிஞ்சித் தாண்டவம் –

பீதாம்பரம்-கபாய் சல்லாய் துணி -விஸ்ரான்தரம் திவ்ய ஆயுதங்கள்

அமுது போல் நின்று -நாச்சிமார்கள் அமர கருடன் அமர ஆதி செஷன் கிடக்க

கண்களால் பருகி முடியாமல் –

ரஷா பரம் தாங்க சங்கு சக்கரம்

திரு அடி விழுந்தவர் அஞ்சேல் என்ற திரு   கைகள்

வாயாலே கண்ணாலே தலை கட்டி –

வட தல -வேதாந்த -தேவகி வயற்றில் சடகோபன் திரு வாக்கு ரெங்கன்

யானை மலை புதரில்- சந்தரன்-மேக கூட்டம் மலையில் போல் பெருமாள்

திரு மார்பு லஷ்மி லலித கிருகம்-அந்த புரம் -சந்தானம் /தாமம் புஷ்பம் விதானம் ஹாரங்கள்

கௌஸ்துபம் விளக்கு கோலம் ஏழு ரிஷபம் கொம்பு -வஞ்சி கொம்பு திருமணம்

கோவை வாயாள் பொருட்டு -கீறல் கோலம் போட்டது போல் –

கிரீட சூட ரத்ன ராஜி -கொலுசு போல் நெற்றி கட்டில்-அசைந்து -ஜல்பிதம்-

பரதேவதை முழு முதல் கடவுள்

திரு கண்கள்-திரு மேனி முழுவதும் -நாடு பிடிக்க காது திவ்ய ஆயுதம் சேர்த்து கொண்டு

மூக்கு சண்டை போட்டு புருவம் தடுத்து

கீழே போகாது -மகரம் –

திரு முகம் குளம்- பாசி படர்ந்து குழல் கற்றை மீன்கள் -குண்டல ஒளி

திரு கழுத்து-கை வளையல் தழும்பு

திரு மார்பில் துளசிபிராட்டி கௌஸ்துபம்-பரே சப்தம்

கூர்ம வியாக்ரி கொழு மோர் அச்சு தாலி யானை முடி புலி நகம் -சுலபன் –

ஸ்ரீ ரெங்க பர்தா -திரு அடிகள் சிவந்து கிரீட மாணிக்கம் -அரசர்கள் சேவிக்க

பக்தர் ஆசை சிகப்பா -சடகோபம் ஆசை காதல் பக்தி அமர்ந்து சிகப்பா

கூசி பிடிக்கும் மெல்லடி

தாண்டவம் எங்கே கற்று கொண்டன திரு அடிகள்

பிருந்தாவன பண்டிதம் -கோலை தட்டி வெண்ணெய் கடையும் சப்தம் கொண்டு பழகிய

ஆடு மாடு கோழி கால ஷேமம்

ராசா க்ரெடி ஆடிய திரு அடி ராமனாக நடந்து சிவந்த திரு அடிகள்

உத்தர பாகம் சதகம் –ஸ்ரீ பாஷ்ய சாரம்

விட்டில் பூச்சி போல் பிற சமயர்

ஈஸ்வரன் தன்மை-குணம் உசந்து -தாழ்ந்த ஜகத் -தூக்கி விட வேண்டும்

ஸ்தோத்ரம்

சப்த பிரகார மத்யே -ரெங்க நாதம் பஜே

ஏழு பிரகாரம்-நடுவில் பிரனாவார விமானம் –

ஆதி செஷன்மடியில் படுத்து கொண்டே நாட்டியம்- திரு அபிஷேகம் காட்டி பர தெய்வம் திரு அடி காட்டி பற்ற சொல்ல

கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள் காது காப்பு வரை நீண்ட திரு கண்கள்

முராரே நாராயணா சொல்லி துதிக்க

புனிதம்-புரசோலை வாழ்ந்து சேவிக்க

நாய்-புறப்பாடு லகு சம்ரோஷனம்-நான் தினம் வந்திருக்கிறேன்-சாந்தி

நன்றி இல்லாத நாய் நான்

ராமானுஜம் -ஒருவர்க்காக பொறுத்து

திரு குமாரர் சத் சிஷ்யர்

52 வருஷம் இருந்து திரு அடி -படி கட்டு கட்டி போனார் –

நஞ்சீயர்-தந்தி -வேதாந்தி ஆக்கி

1113 திரு அவதாரம் 1138  ஸ்ரீ ரெங்கம் வந்தார் ஸ்ரீ ரெங்கம் 1208 வரை இருந்தார்

ஜீயா துவயம் பரிசு –

திரு மஞ்சனம் திரை விளக்கி -தழும்பு -ஆஸ்ரித சுலபன் பார்க்க –

உள் சாத்து -வெளி சாத்து -கோபிகள் தழும்பு பார்த்து சிரிக்க அன்று -அது முதல் இரண்டும்

திரு வல்ல வாழ் சரண் -ஊருக்குள் செல்ல வில்லை -நாயிகா பாவத்தில் இங்கு மட்டும் தான் –

பிராட்டி முன் இட்டு சரணுலகம் உண்ட பெரு வாயா –

பிறந்தவரும் விபவத்தில் சரணாகதி -மூன்று வகை நாலும் ஒன்றும் –

திடம் இல்லை சோலையிலே அமர்ந்து வருத்ததுடன் சரண்

மேல கோட்டை சென்று இருந்தேன்

திரும்பி வர -காவேரி வெள்ளம்-வடக்கு பக்கம் இருந்து பதித்து கொண்டு இருந்தார்

ஆழ்வார் பட்ட பாடு பட்டு அனுபவம்

புனம்  மேவிய பூம் தண்  துழாய் அலங்கல் சாத்தி கொண்டு -3 பாசுரம் -கையார் சக்கரத்துக்கு புறப்பாடு போல்

ஹாரத்தி -மணி சப்தம் வரும் -பாராம்கள் ஆகோ யாரும் இல்லை ஆக பதில் சப்தம் -ஹாரத்தி முடியும்

அதனால் சப்தம் -இது போல் பல உண்டு

விஷ்வக் சேனர் -வீதி ஆர வருவானே -வீதியில் வர்ண மாலை சாத்தி கொண்டு

மன்றமர -குடமாடு கூத்தன்-பறை கட்டி கொண்டு குடம்போட்டு ஆட –

கூத்தாடி மகிழ்ந்தாய் -ஆட்டம் முடிந்தாலும் மன்றம் அமர -இருந்து கொண்டே இருக்கும் படி ஆடி போனான் –

வட திரு வேம்கடம் மேய மைந்தா என்னும்

100 தடவை ஸ்ரீ வாய்மொழி காலஷேபம் செய்தார் 75 வருஷங்களுக்குள்

நம்பிள்ளை நூறு அர்த்தங்களையும் தேக்கி கொண்டார் -நம்மூர் வரதாசார்யர் –

1147 அவதாரம் 1252 வரை இருந்தார் -நஞ்சீயர் ஒன்பதினாராயிரம்

பட்டோலை செய்ய நம்பிள்ளை இடம் கொடுக்க

ஆற்று வெள்ளத்தில் அடித்து போக

ஆச்சார்யர் திரு அடி நினைந்து -மீண்டும் எழுத நம் பிள்ளை அவர் ஏற்றத்தால் அன்புடையார் சாத்தும் திரு நாமங்கள்

ஈடு -கேட்க்க ஆசை அரங்கனுக்கு

கார்த்திகை கார்த்திகை-திரு கலிகன்றி தாசர் -இவர்

கண்ண பெருமான் பெரிய வாச்சான் பிள்ளை ரோகிணி

24000 படி பெரிய வாச்சான் பிள்ளை –

கால ஷேமம் சொல்லிய பிரக்ரியை-வடக்கு திரு வீதி பிள்ளை பட்டோலை கொள்ள

அவர் அனுமதி இன்றி

நம் பெருமாள் புறப்பாடு கோஷ்டியோ நம் பிள்ளை கால ஷேப கோஷ்டியோ

திரு விளக்கு பிச்சன் –காயத்ரி மண்டபம் தாண்டனும் -வாசல் பாடியில் கண் இங்கு காது அங்கு

மொசு மொசு பெரிய பெருமாள் -தள்ள -விபவம் இல்லை அர்ச்சை -ஆசை பட்டான் அவனும்

படி =32 எழுத்துகள்

126000 படி -வேண்டாம் நடுவில் திரு வீதி பிள்ளை எழுதி -படி போல் ஆகும் பரம பதம் –

கட்டி உள்ளே 200 வருஷம் -யாருக்கும் கிடைக்காமல்

ஈய் உன்னி மாதவாச்சர்யர் கொடுக்க

பத்மனபாச்சர்யார் நாலூர் பிள்ளை நாலூர் –ஆச்சான் பிள்ளைக்கு கொடுக்க -ஓர் ஆண் வழி யாக வந்தது

மீண்டும் பேர் அருளாளன் ஈடு பெருக்கம் வைக்க அருளினார்

ஈடு இணை அற்று -ஈடு படுத்த வைக்கும் ஆழ்வார் ஈடு பாடு

லோகாச்சர்யர் நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர்

புறப்பாடு -தாமசம் கந்தாடை தோழப்பர் -ஐதீகம்- அவர் கொடுத்த திரு நாமம் லோகாச்சர்யர்

சேர பாண்டியான் தம்பிரான் பதக்கம்

சேர பாண்டியன் சிங்காசனம்

கோப்புடைய சீரிய சிங்காசனம்- சேர பாண்டியன்

ராஜெந்த்ரன் அரவணை

சோழே ந்திர   சிங்கன் யானை பரிசு

ராஜ மகேந்திர பதக்கம்

இவை நம் பிள்ளை வியாக்யானங்களில் உண்டு

பெரிய வாச்சான் பிள்ளை

செம்கனூர் சங்க நல்லூர்  திரு வெள்ளியம் குடி அருகில் ரோகிணி ஆவணி

1167 1262 வரை 95 திரு நஷத்ரங்கள்

கிருஷ்ணனே மீண்டும் அவதாரம் –

ஸ்ரீ பராசர பட்டர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ வைஷ்ணவ -ரகஸ்ய த்ரயம் -சார தமம் –

அருளி செயல்- வேதாந்தம் –

இரண்டு கண்கள்-காட்சி ஓன்று -பரம் பொருள்-ஸ்ரீ மன் நாராயணன் –

சர்வம் அஷ்டாஷரம்-மூன்றே பதங்கள் -எட்டு எழுத்துகள்-

வேதாந்த பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் -விருத்தி கிரந்தம் -பிரம சூத்திரம் –

அருளி செயல்-வியாக்யானங்கள்-

உபநிஷத் ரெங்க ராமானுஜ முனி வியாக்யானம்

திரு குருகை பிரான் பிள்ளான்–எம்பெருமானார் ஏவி விட முதல் வியாக்யானம் -அருளி –

ஆராயிர படி-அபிமான புத்ரர் –சகோதரி-ஆண்டாள் -மருமகன்- முதலி ஆண்டான் -சன்யாச குல சக்கரவர்த்தி எதிராஜர்

ஆத்மா பந்துகள்

 -6 /9 /24 /36 /12 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் இறுதியில் சாதித்து –

அரிய அருளி செயலின் பொருளை -ஆழ்ந்த அனுபவம் -வியாக்யானங்கள் கொண்டே அறியலாம்

வடக்கு திரு வீதி பிள்ளை-பட்டோலை 1167 திரு அவதாரம் — 1264 வரை 97 திரு நஷத்ரங்கள் –

போறாது என்று 36000 படியா கோபித்து -ஈய் உண்ணி -மாதவாச்சர்யர்   -ஓர் ஆண் வழியாக

வாதி கேசரி ஜீயர்-மடப்பள்ளி கைங்கர்யம் -பெரிய வாச்சான் பிள்ளை திரு மாளிகையில் –

உலக்கை கொழுந்து பற்றி பேசி கொண்டு இருக்கிறோம் -கேலியாக பேச -உமக்கு சிஷிப்போம் –

பரம காருன்யரான பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யான சக்கரவர்த்தி

-பகவான் காருண்யன் என்பர் இவரையோ பரம காருண்யன்

மோஷம் ஒன்றே ஹேது -இதே பெயரில் நூலையும் எழுதி –

பத பதார்த்தம் அறிய 12000 படி –

பதவரை இதில் தான் –

உயர்வற உயர் நலம் -உயர்வு அறுந்து போகும் படி ஆசாத் சமம் படி உயர்நலம்

அவரே விஞ்சி விஞ்சி பெரும் காதல் -அடுத்த -தடவை-சபரி -குகன்-பத பதார்த்தம் –

உளன் எனில் உளன் -பாசுரம் எதை பிரிப்பது -அவன் உருவம் இவ் உருவுகள்

அருவம் என்றால் என்ன -புத்த மத கண்டனம் -சீர் பிரித்து -அர்த்தம்-

சொல் முன் பின் வைத்து -யாப்பு இலக்கணம் படி

அறிகிலேன் -தன்னுள் அனைத்து உலகும்நிற்க – அறிகிலேன் பின் சேர்த்து அர்த்தம் –

ரகஸ்ய த்ரயம் -வியாக்கினங்கள் -சார தமம் -சிறப்பு -நெருடல் விலகி -ஒருங்க விட –

அதிகிரிதா அதிகாரம்-ஸ்திரீகள் சோதரர்

பழுதிலா ஒழுகல்  ஆறு வேண்டும் – ப்ரக்மண்யம் -உபாசன மார்க்கம்-வேதத்துக்கு அருகதை உள்ளவர்

கர்ம ஞான அங்கம் பக்தி -பெருமானை உபாயமாக கொண்டுபோகலாம் -பிரபத்தி -அனைவருக்கும் –

இந்த நெருடல் இல்லை அருளி செயல்-அனைவருக்கும்

தமிழ் -அது ரிஷிகள்-சமஸ்க்ருதம்-அருளியவர் தாழ்வாக நினைத்தால் சென்று அணுக கூசி திரி –

பாணர் குலம்-திருடர்-பெருமை உண்டா வைபவம் -நெருடல்-

பிரணவம் -கடைந்து எடுத்து -ரகஸ்ய த்ரயம்-தோல் புரையே போம் அதுக்கு பழுதிலா ஒழுகல் ஆறு வேணும் –

கர்மங்கள் பற்றி பேசாமல் பிரமத்தையே உபாயம்- இதற்க்கு ஸ்ரத்தை உறுதி ஆவல் ஆர்த்தி ஒன்றே வேண்டும் –

திரு மந்த்ரம்-அனைவருக்கும் -ஆச்சார்யர் உபதேசம் மூலம்-தனி சிறப்பு

அஷ்ட ஸ்லோகி பட்டர் -சுருக்கம்-சமஸ்க்ருத ஸ்லோகம் –

த்ராஷை தோட்டம்-போல் கூரத் ஆழ்வான்  ஸ்தவங்கள் -தேங்காய் பால் போல் பட்டர் –

ஸ்ரீ ராமாயண ஸ்லோகம் அதி சுலபம் ஸ்ரீ கீதையும் -அனுஷ்டுப் சந்தஸ் -சு லலிதம் -உரு போட்டால் உருப்படலாம்

ஸ்ரீ பாகவதம் ஸ்லோகம் பெரியவை –

மனம் உடையீர் என்ற இதற்க்கு சரத்தையே அமையும்

கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர்

நாராயண அடக்கிய திரு மந்த்ரம்

பிள்ளைலோகாச்சர்யர் -ஐப்பசி திரு வோணம்-முப்புரி ஊட்டிய நஷத்ரம்

ரோகிணி/புனர்வசு/திரு வோணம் /உலகு ஆண்டார் -லோகாச்சர்யர் -பிள்ளை-

நம் பிள்ளைக்கு வீறு கொண்டு எழுந்தது -கந்தாடை தோழப்பர் -கந்தாடை ஆண்டான் திரு குமரர் –

பின்பு அழகிய பெருமாள் ஜீயர் ஆராயிர படி குரு பரம்பரை நம் பிள்ளை உடன் முடியும்

அப்புறம்-யதீந்திர பிரவணம் -பிள்ளை லோகம் ஜீயர் -தனியன் வியாக்யானம் –

நம்பிள்ளை –பின்பு அழகிய பெருமாள் ஜீயர் -நோவு சாத்திக் கொள்ள -ஆழி எழ -பிரபந்தம்

சொல்லி சரி பண்ணி கொள்ள -புரட்சி -காவேரி ஸ்நானம் விருப்பம்/ஸ்ரீ ரெங்க வாசம்/நம் பில்லைகாலஷேமம்/ஸ்ரீ ரெங்கன் புறப்பாடு

நான்கும் இல்லை

வேர்வை உடன்-வர திரு ஆலவட்டம்கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்-

நம்பிள்ளை -பக்கத்து வீட்டில் மூதாட்டி -வைகுண்டத்தில் -இடம் -கை எழுத்து போட்டு கொடுக்க -மம்பூர் வரதாச்சர்யர்

கொடுத்து புறபட்டாள்

வடக்கு திரு வீதி பிள்ளை-இல்லற நாட்டம் இல்லை-பன்றி ஆழ்வான் சந்நிதி -மா முனிகள் திரு அரசு -ஆதி கேசவ பெருமாள் சந்நிதி

அம்மி -திரு தாயார் -நம் பிள்ளையிடம் பிரார்த்திக்க -புத்திர பாக்கியம்-பகவத் விஷயம் சொத்து –

ஆச்சார்யர் பெயர் வைத்து லோகாச்சர்யர் பிள்ளை–மருவி பிள்ளை லோகாச்சர்யர் –

கிருஷ்ணா பாதர் -வடக்கு திரு வீதி பிள்ளை

சம்சார பாம்பு கடிக்கு ஜீவா ஜீவாது -இவை -அஷ்டாதச கிரந்தங்கள் –

வரதன் -காஞ்சி -வாச்த்ய வரதன் நடாதூர் அம்மாள் -ஐந்து நிலை ஸ்தோத்ரம்-எங்கள் ஆழ்வான்=அம்மாள் ஆச்சார்யர்

திரு வெள்ளறை சோழியன் தினவு கெட சொல்வான் -விஷ்ணு சித்தர் –

நான் செத்து வாரும் -அகங்காரம் -செத்து -அடியேன் -தாசன்-சொல்லி உபதேசம் பெற்று –

மூன்றாவது வரதன் நம்மூர்  வரதன் -வரதனே பிள்ளை லோகாச்சர்யர்

மணப்பாக்கம் நம்பி ஐ தீகம் -அவரோ நீர் -ஆம் அவரே நாம் -இரண்டு ஆற்றுக்கு நடுவே போம்

காட்டு அழகிய சிங்கர் சந்நிதி -ரகசியம் விளைந்த மண் -கிரந்தம் படுத்த வரதன் ஆணை –

மணப்பாக்கம் நம்பி ஸ்ரீ வசன பூஷணம் பட்டோலை கொண்டு அருளி –

ஆழ பொருளை அறிவர் ஆர் அனுஷ்டிப்பார் ஓர் இருவர் உண்டாகில்-மா முனிகள்

1205 திரு அவதாரம்

பெரிய பெருமாள் அனுக்ரகத்தால் அழகிய மணவாள பெருமாள் நாயனார் மார்கழி அவிட்டம் 1207

பார்த்த சாரதி சந்நிதி பக்கம் இருவரும் -திரு நட்ஷத்ரம் அன்று வாசிப்பார்கள்-ஆனந்த அனுபவம் –

பிள்ளை லோகாசார்யர் திரு அடி நிலையே நாயனார் –

தனி விக்ரகம் இல்லை திரு அடி நிலையில்

நைஷ்டிக ப்ரக்மாசாரி விகித விஷய  நிவ்ருத்தம் தன் ஏற்றம்

ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்

புருஷகார வைபவம் -/சாதனச்யகுரவம்

தத் அதிகாரி கிருத்யமச்ய சத் குரு சேவனம் ஹர தயை ஒன்றே உபாயம்-நிர்கேதுக பிரசாதம்

கருணை பீரிட்டு குரு -பிரதி பத்தி இன்றி நேராக பெருமாள் இடம்கார்யம் ஆகாது

8 ரகஸ்ய த்ரய  கிரந்தங்கள்-

தத்வ த்ரயம்

சாம்ப்ரதாய விஷயம் -அக 18 —

நம் பெருமாளை காத்து அருளி -பிள்ளை லோகாச்சர்யர்

12000 முடி திருத்திய பன்றி ஆழ்வான் கலக்கம் 1311 /1323

1311 மாலிக்கா பூர் -1313 -நான்கு வருஷம் 1323 உலூக் கான் துக்ளக்

வீர பாண்டியன் கலியுக ராமன்-சதுர வேத மங்கலம் ஏற்படுத்தி -வேதம் வல்லார் -௧௩௧௧படை எடுப்பில் தங்க விமானம்

பொன் மேய்ந்த பெருமாள்-கண்ணாடி அரை-ஸ்வர்ண விக்ரகம்-சேர குல வல்லி -சுல்தான் அரண்மனை

நாச்சியார் போக வில்லை

1313 கேரளா மன்னன்-படை எடுப்பு-1317 துரத்தி –

1323 இருவரும் -பங்குனி உத்தரம் உத்சவம் நடை பெற்ற சமயம்  எல்லை கரைக்கு

கல் திரை -தெற்கு நோக்கி

ராமன் போல் ஆவும் அழுத –உத்தம நம்பி சக்கராயர் -இருந்து கைங்கர்யம் –

ஆனை மலை -ஜோதிஷ்குடி-குகை-கை தாளம்-விண்ணப்பம்-

கள்ளர் பயம்படை எடுப்பு பயம்-1325 ஜோதீஸ் குடி ஸ்ரீ பரம பதம்

சம்பந்த சம்பந்தி களுக்கும் மோஷம் -118 சம்வஸ்த்ரம்

எறும்பு மரம் செடி அனைத்தையும் ஸ்பரசத்தி போவாராம் –

போக மண்டபம்-கல்லணை மேல் கண் துயில கற்றினையோ காகுத்தா -கரிய கோவே

வியன் கான மரத்தின் நீழல்- நிழல் இல்லாத மரத்தின் கீழ் -வியர்வை பரவ –

நம் பெருமாள்  திரு முகத்தில் -விசிற சொல்லி -திரு வாய் மொழி பிள்ளை திரு தாயார் –

இவை எல்லாம் -கையிலே பிடித்த திவ்ய ஆயுதங்களும்

வாத்சல்யம் ஸ்வாமித்வம் –இவர் வசனம் நம் பெருமாளை அனுபவிக்க –

தெற்கு நோக்கி -பால கொடு கோழி கொடு -திரு மலை ரெங்க மண்டபம்–

செஞ்சி -கோபன்ன ராயன் -3000 பேர் 30000 பெயரை எதிர்த்து

48 வருஷம் பிறகு திரும்ப  -சித்தரை உத்சவம் கிராம மக்கள் முதலில் நடந்ததால் -அரசர் கூப்பிட வந்தவர்கள்

நாயனார் -ஆச்சர்ய ஹிருதயம்-நம் ஆழ்வார் திரு உள்ளம்

அருளி செயல் ரகசியம்

ஆராயிர படி திரு பாவை

பெரிய திரு மடல் அமலனாதி பிரான் கண் நுண் சிறு தாம்பு

வியாக்யானங்கள் அருளி இருக்கிறார்

விசத வாக் சிகாமணி –

சாதி வேறு பாடு இல்லை ஆத்மா ஆச்சர்ய அனுஷ்டானம் கொண்டே

விதுரர் தர்மர் -பாகவதர் பாக்கள் ஜன்ம நிரூபணம்

கொந்தளிப்பு -வர்ணாஸ்ரமம் கெடுகிறார் –

அடியேன் சமாதானம் நாயனார் –

புறப்பட்டு கண்டு அருள -நான்கு வீதி நான்கு பிரகரணம்

75  இன்ப  மாரியில் ஆராய்ச்சி முக்கியம்

வாசுதேவ -அந்தரங்கரை -பாகவத பிரபாவம் -இன்ப பா /பாஷா ஆராய்ச்சி

இன்ப மாரி–ஆதித்ய ராம திவாகர -வகுள பூஷண பாஸ்கர உதயோத்ததிலே –

மணி வண்ணற்கு உள் கலந்தார் -நம் பெருமாள் ஏற்று கொண்டார் –

நாயனார் 2 ஆண்டுகள் முன்பே பரம பதம் -ஆழ பொருளை உரைப்பார் யார் லோகாச்சர்யரே வருத்தம்

அழகிய மணவாள நாயனார் திரு அடிகளே சரணம்—பிள்ளை லோகாசார்யர் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிரம்பிய ஸ்ரீ மான் வேங்கடார்யா-வேதாந்த  தேசிகன் –

1205 -தொடக்கி 120 ஆண்டுகள் பிள்ளை லோகாச்சர்யர்

1268 /புரட்டாசி சரவணம் 100 திரு நஷத்ரங்கள் 1369 வரை -தேசிகன் –

அனைத்திலும் ஈடு பட்டவர் -தேசிகன்-

காஞ்சி -திரு தண்கா- தீப பிரகாசர் -விளக்கு ஒளி எம்பெருமான் -திரு அவதாரம்-குளிர்ந்த காற்று –

தாபம் போக்க -விளக்கு -இருள் போக்கும் -திரு மணி அம்சம்-வேங்கட நாதன் –

அனந்த சூரி தந்தை -சிறுமா மனிசராய் என்னை   ஆண்டார் இங்கே திரியவே – பாகவத பிரபாவம் –

கீர்த்தியில் பெருமைவயசில் இளையவர் -20 வயசில் அனைத்தையும் கற்றார்

தொண்டை நாடு பெற்று –கொடுக்கும் -மற்றவர்க்கு ஸ்ரீ ரெங்கத்துக்கு –

கிடாம்பி ஆச்சான் -மடப் பள்ளி கைங்கர்யம்

கிடாம்பி அப்புள்ளார் ஹம்ச -வாதி மேகம் போல் அடக்கி -ஆர்த்ரைய கோத்தரம்

மருமான் -வேதாந்த தேசிகன்-நடாதூர் அம்மாள் இடம் -மடியில் உச்சி முகந்து ஆ முதல்வன்-

ஆச்சார்யர் கடாஷம் —

நஞ்சீயர் -கிரந்தம் ஒருவர் எழுதி கொண்டு வர ஆழ்வார் திரு உள்ளம் உகந்ததாய் இருக்கும் –

தனியாக கொண்டாட வில்லை–ச்வாதந்த்ர்யம்-அகங்காரத்துக்கு தீனி போட கூடாது –

உயர்ந்த நிஷ்டை–கிடாம்பி அப்புள்ளார் தான் ஆச்சார்யர் இவருக்கு -நடாதூர் அம்மாள் ஆக்ஜை படி –

ஹயக்ரீவர் திரு ஆராதனை –

திரு மங்கையார் -மனைவி-பொருள் செல்வம்-இல்லற செல்வம் ஆசை கொண்டு –

பிரசாரக கைங்கர்யம்- விதரான்யர்-சமஸ்தானம் -வர சொல்ல –

தேவ பெருமாள்-தனம்-பிதாமகர் -யாக குண்டம் வளர்த்து தேடி வைத்த -தனம்-

இது போல் பட்டர் முன்பு பார்த்தோம் -குறடு விட்டு -போகாமல்-

வைராக்ய பஞ்சகம் –28 ஸ்தோத்ரங்கள் இது போல் பல அருளி –

உஞ்ச விருத்தி -இரிசத்தை -களத்து நெட்டில் போர் அடித்து -உயர்ந்த –

நெல் மணி உடன் தங்க மணி கொடுக்க -எடுத்து தூர -வைராக்கியம் மிகுந்து

கவி தார்கிக கேசரி-கவிதை தர்க்கம் இரண்டுக்கும் சிங்கம் போல் –

மறை முடி தேசிகன் -சர்வ தந்திர ஸ்வதந்த்ரர் இவரும்

கருட மந்த்ரம்-கருட பஞ்சாயத் – த்யானித்து -திரு வகிந்திர புரம்-

ஹயக்ரீவ மந்த்ரம் -பெற்று –திரு நாவில் -திரு அடியை பெருமாள் கொண்டாடினது போல்

வாக்மி- ஸ்ரீமான் -சொல்லின் செல்வன் -கவி கேசரி –

தர்க்கம் செய்ய தான் ஸ்ரீ ரெங்கம் எழுந்து அருளி

தேவ நாயக பஞ்சாயுத்

நியாசம் -சரணாகதி நான்கு

14 வேதாந்த 32 ரகஸ்ய 1 நாடகம்  4காவ்யம் பாதுகா சகஸ்ரமம் –

வரதராஜ பஞ்சாயத்

அஷ்ட பூஜை

வேளுக்கை ஆள் அரி

தேகலீச ஸ்தோத்ரம்

அச்சுத சதகம்-பெண்கள் சமஸ்க்ருத -நாயக பாவனை

சாமான்ய பாஷை -இதையே மீண்டும் -அருளி  –

நியாச தசகம்-நித்ய அனுசந்தானம் -வரதன் இடம் -சரண்

விரித்து நியாச விம்சதி –

நியாச திலகம் திரு அரங்கன் -நம் பெருமாள் திரு அடியில் -அபய முத்தரை -ஹஸ்தம் ரஷிக்கட்டும் –

வாதம் –தொண்டை நாட்டு பண்டிதர் -சோழ நாட்டு பண்டிதர்

ஓலை அனுப்பி இவரை கூப்பிட -தசாவதார ஸ்தோத்ரம் அருளி-

பத்து அவதாரங்களும் அரங்கன்- தர்மி ஐக்கியம் –

ஷோடச ஆயுத ஸ்தோத்ரம்

சுதர்சன அஷ்டகம்

அவதாரங்களிலும் நாயகி உடன்-நித்ய அனபாயினி -குணம்-அவதாரம் உடன் சேர்த்து

ஒரே ஸ்லோகம் பத்து அவதாரம் -திரு மங்கை ஆழ்வார் நிர்வகித்த

மத்ஸ்ய -இச்சை-கண்களால் கடாஷிக்க  நம் பெருமாள் கடாஷம் -சீர்மை –

விகார ஆமை-பெரிய விளையாட்டு -இந்த்ரியங்கள் அடக்க கீதை இதை காட்டி அருளியது போல் –

சகஸ்ரபத்மம்- கூர்ம பீடம்-ஆதி சேஷ பர்யங்கம்- தரிக்க -விகாரககச்சாபா

பெரிய வராகம் -பிரளய சாகரம்- நம் பெருமாள் சம்சார சாகரம் -ஒரு தடவை பிற பத்தி செய்தால் போதும் –

மகா விசுவாசம் வேண்டும் -சக்ருதேவ -விரதம் -அபயம் சர்வ பூதேப்யோ -பயம் வர நினைவு கொள்ளலாம் –

போக்கியம் -அனுபவிக்க –

மருந்தே விருந்து —

போருமே சொல்லும் படி திரு கைகள் முத்தரை -ஸ்ரீ ரெங்க பர்தா ஹஸ்தம் –

எதிர்ச்சா ஹரே -நரசிம்கர் -காட்டு மேட்டு அழகிய சிங்கர் -எதைச்சையாக –

பிரகலாதன் இச்சை -இரண்டு தூண்கள் நடுவில்-ரஷா வாமன் -சொத்தை மீட்டி –

சேராதன உளவோ பெரும் செல்வருக்கு

ரோஷ ராமர் -பரசுராமர் -முனி வாகனர் -லோக சாரங்கர் இடம் முனிந்த

கருணா காகுஸ்தன்-இரண்டாவது வார்த்தை இல்லை-நம் பெருமாள் அருளி -கண்ணன் இல்லை-

ராமோ தவிரன பாஷா

ஹெலகலிம் கலப்பை கொண்டு அதீத சக்தி -சங்கர்ஷணன்-ஒரு பிறவியில் இரு பிறவி ஆன பல ராமன் –

கிரீட வல்லப -கொண்டால் வண்ணனாய் -விளையாட்டு கூடிய பெரிய பெருமாள் -கல்கி –

புவனம் மங்களம் ஆக்கும் -செவிப்பவர் புண்ணிய கடை விரித்து –

திரு அடி தொடக்கம் -திரு முடி வரை அனுபவித்து –பகவத் த்யான –

முநிவாகன போகம்-ஒரே வியாக்யானமஅருளி செயல் களுக்கு

திரு மேனி அனுபவித்து –யோகத்ருஷ்டி –

-ரெங்க மத்யே -யோகிகள் கண்ணுக்கு சாத்திய கருப்பு அஞ்சனம்  –

சிந்தாமணி -சிந்தனைக்கு விருப்பம்- சிந்தையில் கேட்டது அனைத்தையும் அருளும் –

தீனர்களுக்கு நாதன் –

பகவத் த்யான சோபனம் –

பாவனை வளர -நினைவே தாமரை குளம்-திரு அடி தாமரை -நிரம்பி –

ஆர்த்தி தண்ணீர் -பிரமாதி தேவர்கள் வணங்க -வேதம் பேசி முடிக்க முடியாமல்-

ஹம்சம்-பெருமாள்- மானசரோவர் -திரு பிரிதி அங்கே இருப்பதாக சொல்வர் – வெள்ளி குளம்-

மனசில் ஞானத்தில் பக்தியில் உஊனம் இன்றி

ஆழ்வார்கள் ஹம்சம்

தாயார் திரு கைகள் இவன் திரு  அடி வருட -தாமரையே தாமரை வருட

திரு மார்பு-வாரமாய –வாரமாக்கி -கௌஸ்துபம் -பதக்கம் சேவித்து -பிராட்டி சேவித்து –

திரு அடியால் துகைத்து -மத்த மாதங்கம் ஹம்ச கதி தாயாருக்கு

வனமாலை தட்டி திரு அடி சிவக்க -பர கால – தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றளால் –

இதை அடி ஒட்டி ஸ்லோகம் -உழுத நிலம் போல் பண்பட்டு நாச்சியார் அணைக்க ஏது வாகி –

திரு கை வர்ணிக்கிறார் -வலது திரு கை பற்ற இடது திரு கையால் திரு அடி காட்டி

திரு முக மண்டலம் -அனைத்து அவயவ பாசுரம்

மணல் திட்டில் எழுந்து அருளினவர் -ஹிருதய தட்டில் எழுந்து அருளுவர் பல ஸ்லோகம் –

த்யானிக்க படிக்கட்டு -தான் கஷ்டப்பட்டு பெற்றதை இதை சொல்லி பெறலாம் –

1269 அவதாரம் -உளுகான் படை எடுப்பு -54 திரு நஷத்ரம்-

பிரமேயம்  பிரமாணம் இரண்டையும் – ரஷிக்க –பிரமாதா -ஆழ்வார் ஆச்சார்யர்கள்-யோசிக்க –

சேஷித்வம் என்று ஸ்ரீ பாஷ்யம் -சுத பிரகாசிகை–விபுல வியாக்யானம்-சுத பிரகாசிகா பட்டர் –

பிள்ளை லோகாச்சர்யர்

மேற்கு நோக்கி -ஓலை சுவடி -சுத பிரகாசர் -திரு குமாரர் கூட்டி மேல கோட்டை -காத்து கொடுத்த வள்ளல்-

ஆபத்து நீங்க அபீதி ஸ்தவம் -நடுவில் அருளி-சம்சார பீதி தீங்க நாம் சொல்லி கொள்ளலாம்

அவரை நினைக்க பயம் நீங்க -நம்மை பார்க்க பயம் வளர -பீத ராக குரோதம் தொலைத்து -கீதை

பயம் இன்றி -இருக்க -உபத்ரவம் -நிறைய இருந்த காலம்–நம்பிள்ளை நஞ்சீயர் -பொற் காலம்–

புவியில் மோஷம் கொடுக்க வல்ல -பயம் சமய ரெங்க தாமணி ஸ்ரிறேங்க ஸ்ரீ வளர –

ஹம்ச சந்தேசம் தூது விட்டார் -கதை போல்

அசுரர்க்கு தீமை செய் குந்தா –

பாதுகா சகஸ்ரம்-ஒரே இரவுக்குள் -விதிக்குள் கொண்டு – ஸ்ரீ ரெங்கநாத மணி பாதுகை பிரபாவம் –

ஆகாசம் காகிதம்–அபூத உபமானம் -சொல்லி -சப்தார்ணவம் மசி -ஆதி சேஷன் -பேச

சடாரி -32 பந்திகள்- துவந்த இரட்டை -பாபம் போக்க புண்யம் கொடுக்க –

இந்திர நீல பந்தத்தி -ஒலி ஒளி -மின்னி கொண்ட ஆழிசங்க ஒலி -இரண்டும் சேர்ந்து ஆபத்துவிலக

பாதுகையே உபாயம் பிராப்யம்

நான் முன்னே நான் முன்னே முந்தி கொண்டு வந்து ரஷிக்க

வேதாந்தம்- ஆழ்வார் -பாதுகை சடாரி சம்பந்தம் -திராவிட -வேதாந்தம்

பரத சாம்யம் ஜேஷ்ட ராம பக்தன்

சதா தூஷணி சண்ட மாருதம் தொட்டாச்சர்யர் -ஸ்ரீ நிவாசம் மகா குரு –

தத்வம்- நியாச சித்தான்ஜனம் ஆகார நியமம் -ரஷை -மீமாம்சை

த்ரவிடோ உபநிஷத் சாரம்-தாத்பர்ய ரத்னா வளி

தேவ பெருமாளையே —முதல் பத்து -அயர்வறும் அமரர் அதிபதி- இமையோர் தலைவா –

அதிகரண -ஸ்ரீ பாஷ்யம் -சுருக்க கருத்து ஸ்லோகம் –

தத்வ தீபிகை –

 ஸ்ரீ ராமானுஷர் -திரு அடி பட்ட மண் துலாக பிறக்க ஆசை கொண்டார் –

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திரு அடிகளே சரணம் .

சாதனத்தில் வழி உபநிஷத் /வேதங்கள்

பொருப்பிடையே நின்றும் -தபஸ் உபாசனம் போல்

அடைய முடியாது -என்றும் சொல்லும்

அலம்க்ருத்ய சிறை சேதம்

யக்ஜம் யாகம் ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -சாத்தியம் சாதித்து கொடுக்காது

பகவானே சாத்தியம் சாதனம் -அவனையே உபாயமாக பற்று

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் -சாத்யத்திலே கண் வைத்து -திரு அடிபற்றி -அடைந்து –

ரிஷிகள் -லஷ்யம் சாதனம்- துன்பம் –

ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-சாத்தியம்-இன்ப மயம்

சாதனமும் அவனே சாத்தியமும் அவனும் -நினைவே அவன் மேல்-விருந்தே மருந்து –

மாத்ரா பலம் -திரு மந்திர -துவயம்-சரம ஸ்லோகம்-

தமிழ் பாசுரங்கள்-தமிழ் வியாக்யானங்கள்-

செம் தமிழும் வட கலையும் திகழ்ந்த நாவர் –

மணி பிரவாளம் –

1269 -1369 ஸ்ரீ தேசிகன்-கவி தார்கிக கேசரி –

1370 -கோவில் ஸ்ரீ  கோவில் மணவாள மா முனிகள்  திரு அவதாரம் 1444 வரை –

ஐப்பசி மாசம் மூலம்-சாதாரண வருஷம்

தை ஹஸ்தம் இந்த வருஷம் -இறுதி-நால் ஆறாயிரம் தொடக்கம் கிரகத்தில் –

திருவாய் மொழி பிள்ளை ஆணை ஸ்ரீ பாஷ்யம் ஒரு தடவை

அருளி செயல் பிரசாரம் -ஸ்ரீ மணவாள மா முனிகளுக்கு –

சாத்தியம் பற்றி பேசியதை சாத்தியமே கேட்டு உகந்தது –

பிள்ளை பெருமாள் ஐயங்கார் -அஷ்ட பிரபந்தம் –

பராசர பட்டார் சிஷ்யர்

திரு அரங்கம் அந்தாதி-திருஅரங்க – மாலை -திரு அந்தாதி கலம்பகம் மூன்று

அழகிய மணவாள தாசர் இயல் பெயர்

தெளிவாக பேசி-திரு மழிசை ஆழ்வார் போல் ராஜாங்க வேலை -செய்து கொண்டு இருந்தார்

துணி கசக்கி -ஸ்ரீ ரெங்க திரு தேர் சீலை -லகு சம்ரோஷனம்-

சுவாமி மகானுபாவர் -அரசர் புரிந்து கொண்டு -ஸ்ரீ ரெங்கம் இருக்க -ஆசை –

சாதனம் பொறுப்பை அரசன் இடம் -விட்டு -பெற்றார் –

திரு வேம்கட மலை அந்தாதி

திரு அழகர் மலை அந்தாதி

திரு ரெங்க நாயகி ஊசல்

திரு அரங்கா உறை மார்பா -இருப்பிடமாக -திசை முகன்செவிப்ப –

கந்திருவர் பாடும் படி -ஆதரித்து இன் இசை பாட திரு கண் வளர் திரு அரங்க

அனுக்ரகம்பண்ண எழுந்திரு அரங்கா -எழுது இரு அறம் காதலித்தேன் –

மூன்று அர்த்தம்-சீர் பிரித்து

நாளும் பெரிய பெருமாள் -துணை வரும்-அவயவ வருணனை-நிற்க பாடி ஏன் நெஞ்சுள் நிறுத்தினான் –

நகை முகம்–தோளும் -தொடர்ந்து ஆளும் விழியும் –

துழாய் மணக்கும் தாழும் கரமும்கரத்தில் சங்கு ஆழியும் -ரேகை சேவித்து –

அவன் காட்ட கண்டவர் –

மறை பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –

துறை பாற் படுத்தி –அமுதம்

கரை பாம்பனை பள்ளியான் அன்பர் ஈட்டம் கழித்து அறிந்த

நிறைப்பான் அடிகளே நிழல் —

அனைத்தும் அரங்கந்திரு முற்றத்து அடியாருக்கு இவர்

பட்டர் முகில் வண்ணனுக்கு  என்று அருள –இவரோ அவர் சிஷ்யர் –

கரை புரை ஓடிடும் காவேரி ஆறே

ஆற்றிடை கிடப்பதோர் ஐந்தலை அரவே

அவ் அரவம் சுமப்பதே அஞ்சன மலை யே –

அம் மலை பூத்ததோர் அரவிந்த வானமே

அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –

பூ லோகம் அளந்த மேல் லோக்லம் அளந்த திரு அடி திரு நாபி கமலம் திரு மார்பு தாமரை பிராட்டி

கழுத்து அபத் சகத்வம் திரு வாய் ,மா சுச

திரு கண்கள்- அடியேனை கடாஷித்து பாட வைத்தன -பெரிய ஏற்றம்

சிந்தாமணி -அனந்த போகி -ஆதி செஷன் -பட்டர்

தூது விட நாயகி பாவம்

நீர் இருக்க –மட மங்கைமீர் கிளிகள் -நாம் இருக்க

வண்டுகள்-மதுகரம் இருக்க  -மட அன்னம் இருக்க உறையாமல் நான் –

என் நெஞ்சம் அற்றதோர் வஞ்ச அற்ற துணை இல்லை என்ற

தூது விட்ட பிழை கோவில் மணவாள மா முனி -ஆழ்வார் திரு நகரி -திரு அவதாரம்

ஆதி சேஷ அவதாரம்-

ராமானுச முனி வேழம்-வலி மிக்க சீயம்-பொழுது போக்கே அருளி செயல்

உரு பெரும் செல்வமும் -செம் தமிழ் ஆரணமே என்று அறி தர நின்ற ராமானுசன்

வேதாந்த கால சேமம்-புற சமையர் வென்று –

1371 நம்பெருமாள் திரும்பி வர -சூர்யோதயம் 48 வருஷம் பின்பு

அருணா உதயம் போல் மா முனிகள் -திரு அவதாரம்-சாதாரண ஐப்பசி மூலம்-

மூலம்-ஆதாரம்-காரணம்

ஸ்ரீ சைல தயா தனியன் ஆனி மூலம்

திகழ கிடந்தான் திரு நாவு வீறு உடையான்

திரு மலை ஆழ்வார் -வைகாசி விசாகம் -1301 –1406 வரை

அரசாங்க வேலை செய்து வந்தார்

பிள்ளைலோகாச்சர்யர் 1325 -ஜோதிஷ்குடி –

கூர குலோதம தாசர் -நாலூர் பிள்ளை இருவருக்கும் சொல்லி –

ஈய் உண்ணி மாதவாச்சர்யர் -ஈய் உண்ணி பத்மநாபா சாரார் -நாலூர் பிள்ளை -நாலூர் ஆச்சான் பிள்ளை ஈடு பெருக்கிய வழி

திரு வாய் மொழி பிள்ளையை கூர குலோதம தாசர்திருத்தி

திரு கணாம்பி ஆழ்வார் -செல்ல நம் பெருமாள் திரு மணை-நம் சடகோபனை

நம் பக்கத்தில் எழுந்து அருள பண்ண சொல்லி –

திரு அரங்க மாளிகையார் -இடைகாலத்து உத்சவர்

யாக சாலை தேர் -பவித்ர-இவரை எழுந்து அருள பண்ணி முதல் நாள் மட்டும் நம் பெருமாள் கடாஷிது –

நம் பெருமாள்–நம் ஆழ்வார் நம் ஜீயர் நம் பிள்ளை -அவர் அவர் தம் ஏற்றத்தால் என்பர் -பிரித்து அருளி

இங்கே தான்திரு கணாம்பி அருளிய வார்த்தையால்-

 முத்து சட்டை மாலை பிரசாதம் அருளி-

திரு அடி சேர்த்து -அனைத்தும் திரு வாய் மொழி மண்டபத்தில் –

விதிக்க சரத்தை உடன் -ஒற்றை மாலை -தபஸ் -கோர மா தவம்-

ஒரு நாள் ஆழ்வாருக்கு-ஆபரணம் ஆழ்வாரே கிடைக்க –

திருப்தி -நாளை எதிர் பார்ப்பு இன்று போகய பாக த்வரை உடன் இன்று –

திரு மலை ஆழ்வார் அரசர்

குந்தி நகர் -குந்தி நகர ஜன்மனே -மதுரை பக்கம் -திரு விதாங்கூர் மன்னர் ஓலை

தோழப்பர் கூட்டத்தார் -பட்டகம் காட்ட -சங்கிலி இழுத்து நம் ஆழ்வார் -மலை முகடு தட்டி

ரசித்து திரு மேனி த்யஜித்தார் –

மண் மூடி போனதே -அதை சீர் பண்ணி

கிளி சொல்லி ஸ்ரீ ரெங்கம்-கிளி சோழன் -கைங்கர்யம் –

ராமானுஜ சதுர வேத மங்கலம்-பவிஷ்ய ஆசார்யர்

நம் ஆழ்வார் பிரதிஷ்டை

1406 -திகழ கிடந்த -நா வீரர் தாதர் அன்னர் -திரு குமரர் -மா முனிகள் 36 திரு நட்ஷத்ரம் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வளர்க்க

தொண்டர்க்கு அமுது உன்ன சொல் மாலை -திரு வாய் மொழி கால ஷேமம் –

அழகிய மணவாள-ரம்யா ஜா மாதா -15 திரு கல்யாணம் –

அழகிய வரதர் -சிஷ்யர் -பொன் அடிக்கால் ஜீயர் -ராமானுஜ ஜீயர் ஆஸ்ரயமா ச்வீகாரம்

1413 ஸ்ரீ ரெங்கம்  எழுந்து அருள

திரு மாலை தந்த -பெருமாள் பட்டர் -மூலம்-பெரியபெருமாளை சேவிக்க -ஆ முதல்வன் கடாஷித்து –

ரகசியம் விளைந்த மண்-காடு அழகிய சிங்கர் சந்நிதி -பிள்ளை லோகச்சர்யர் திரு மாளிகை

கோட்டூரில் அண்ணன் திரு மாளிகை இருந்து

திரு வேம்கடம்-காஞ்சி ஸ்ரீ பெரும் பூதூர் -யதொதகாரி- உபதேச திரு மேனி -ஸ்ரீ பாஷ்யம் சாதித்த இடம்

கிடாம்பி நாயனார் -ஸ்ரீ பாஷ்யம் கேட்டு கொண்டார்

நிஜ ஆகாரம் காட்டி –மூவருக்கு காட்டினார் மா முனிகள்

யதீந்திர பிரவனர் -ஆதி சேஷ -அவதாரம் –

ராமானுஜர் தொண்டனூர் கரையில் காட்டிய படி

ஆஸ்ரம 1425 ச்வீகாரம் -ஆள் கொண்ட வல்லி ஜீயர் மடம்-இருந்து திரு வாய் மொழி கால ஷேமம் -கூடம்

திரு மலை ஆழ்வார்

மண் விட்டு –

பிறையில் ஆதி செஷன் உருவம் -ஸ்ரீ வைகுந்தம்போகும் பொழுது நிஜ ஆகாரம் -காட்டி –

ரகஸ்ய கால ஷேமம்- ரகச்யம்விளைந்த மண் -ஆதாரத்துடன் –

பால் சேர்த்து வைக்கும் இடம்- நித்யம் த்யானம் செய்து -இன்றும் சேவை-

சட கோப கோடரி அம்மையார் பார்த்து -யாருக்கும் சொல்லாதே கொள்

உத்தம நம்பி சங்கைபட வெளுத்த திரு மேனி -இவரே அவர் -நம் பெருமாள் சொல்லி

தூணுக்கு இரண்டு பக்கமும் சேவை

பொன் அடி கால் ஜீயர் -இவர் பாதுகை

முதலி ஆண்டான் வம்சம் – அண்ணன் சுவாமி -வராத நாராயண

120 பேர் சுத்த சத்வம் அண்ணா சுவாமி சிறு புலியூர்

அஷ்ட திக் கஜங்கள்-

சிங்கரையர்-காய் கறி கொடுத்து -இரவில் சொப்பணம்-எதி புனர் அவதாரம்-

வாடா தேச யாத்ரை- திரு வேம்கடம்-சிறிய கேள்வன் அப்பன் ஜீயர் சுவாமி –

பொட்டு கூடை புஷ்பம் சுமந்து -தடம் குன்றமே

தோ மாலை சேவை முக்கியம் -ஜீயரஎடுத்து சமர்பிக்க –

துளசி தளமும் எடுத்து கொடுக்க -சாது ராமானுஜ ஜீயர் சுமந்து மா மலர் -நமக்கு ஆழ்வார் சாதித்த பாசுரம் –

ஹனுமான் முத்தரை அவர்

சின்ன ஜீயர் சுவாமி சிறிய கேள்வன் அப்பன் -ராமானுஜ முத்தரை மோதிரம்

ஆழ்வாரை சேவிக்க -மா முனிகள்-

ஆழ்வாருக்கு பட்டயம்-தங்க பட்டயம்-

திரு முடி சேவை -பொலிந்து நின்ற பிரான் கட்டில் தோறும்

என்னை முன்னம் பாரித்து முற்ற பருகினான்

நம் மா முனி ஏற்பாடு பட்டயம்

நல்லதோர் -பரிதாபி ஆண்டிலேயே -ஈடு கேட்க ஆசை –

ஆவணி 31 ஸ்வாதி பவித்ர உத்சவ சாத்து முறை அன்று பெரிய மண்டபத்துக்கு மா முனிகளை –

கண்ணன் சாந்தீபன்- ராமன்- விஸ்வாமித்ரர் போல் நம் பெருமாள் மா முனிகள்-குறை தீர்த்து கொள்ள –

தாரை -சொல்லி லஷ்மனன்கேட்டு -விஸ்வாமித்ரர் கதை-

சந்தன மண்டபம்-சித்திரம்-ஈடு கால ஷேப கோஷ்டி

நான் யார் -அரங்கன் தானாக அழைத்து இராய்த்தார்

அமர்ந்து கேட்க ஒரு வருஷம் உத்சவம் நிறுத்தி

ஆவணி ஸ்வாதி தொடக்கி ஆனி மூலம் வரை திரு செவி சத்தி அருளி தானியம் சமர்ப்பிக்க

யதிராஜ விம்சதி சமர்பித்தார் – எதிராசன் திரு அடியே உபயம்

ஆர்த்தி பிரபந்தம் வாழி எதிராசன் சொல்பவர் விண்ணோர் வணங்குவர் கைங்கர்யமும் எதிராசன்

மன்னிய சீர் மாறன் கலையே உணவு

மதுரகவி நிலை பெற்றோம்

ஸ்ரீ ரெங்கம் இருப்பு பெற்றோம்

உபதேச ரத்ன மாலை  -எதிராசன் இன் அருளுக்கு இலக்காகி

திரு வாய் மொழி நூற்று அந்தாதி -மாறன் சொல் வேராகவே விளையும் வீடு –

வியாக்யானங்கள் -அருளி-

ஞான சாரம் பிரேம சாரம்

ரெங்க நாயகம் ஐந்து பிள்ளை

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்

தீ ஞானம் பக்தி நிறைந்த கடல்

தனியன் எங்கும் சொல்ல ஆணை பிறப்பித்து –

வேற மூன்றும் –

பிரதி பாத பயங்கர அண்ணா –

தேறும் படி உரைக்கும் சீர் -பொய்யிலாத மணவாள மா முனியே வாழியே

கோவில் அத்யாபகம் தனி சிறப்பு –

மா முனி வாழ்வதே ஒன்றுக்கும் காரணம்

அடியார்கள் வாழ–அரங்க நகர் வாழ -இதற்காகவே -இடை வெளி இட்டு

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

எறும்பி அப்பா -ஸ்ரீமத் அரங்கம்  ஜயது-பரமம்- தான தேஜோ நிதானம்-

ஸ்ரீ ரெங்க ஸ்ரீ வாழ காலே காலே வர வர மினி வாழ –

பூர்வ தின சரியா

உத்தர தின சரியா

வரவர மினி சதகம் இரண்டு எறும்பி அப்பா பிரதிவாத பயங்கர அண்ணா இருவரும் –

லஷ்மி நாத -தொடங்கி-மா முனிகள்  குரு பரம்பரை ரத்னம்

அந்திமோபாய நிஷ்டை வர வர முனி சிஷ்யர்

மதம் மானம் இன்றி முக் குறும்பு அறுத்து

அதிகத பரமார்த்த

அர்த்த காம விட்டு

நிர்ஜித க்ரோம

அஸ்துமே நித்ய யோக

மாசி கிருஷ்ணா துவாதசி நிஜ வடிவு கொண்டு தீர்த்த உத்சவம்

திரு அத்யயன கைங்கர்யம் –நம் பெருமாள் -நடத்தும் உத்சவம் –

விசத வாக் சிகாமணி -விரித்து -உரைத்து கைங்கர்யம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .’

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த ஸ்ரீ திரு வரங்கன் -1-

March 21, 2024

ஸ்ரீ ரெங்க அனுபவம்-கடல் கரை இருந்து கடலை அனுபவிப்பது போல் –பூலோக வைகுண்டம்–இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் –ஆசைப் பட்ட அனைத்தையும் முக்தியையும் கொடுக்கும் திவ்ய தேசம் –

நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்-அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ –மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்-வேர் பற்று-போலே -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்  வாழ –அற்ற பற்று -உள்ளவர் வாழும் -திரு அரங்கம்-

தொண்டை நாட்டில்- பெற்று கொடுத்த பெருமை-

தேவகி பெற்று பேர் இழக்க யசோதை -கண்ணன்

அயோதியை பெற்று காடு வாழ -பெருமாள்

ஆச்சார்யர்கள் அனைவரும் -இங்கேயே மண்டி ராஜதானியை பாதுகாத்து .-

அத்ரைவ ஸ்ரீ ரெங்கே சுகம் ஆஸ்வே -பெரிய பெருமாள் உடையவர் இடம் அருளி -விதிக்கிறான்

பங்குனி உத்தரம்-ஷமித்து-அனுபவம்-கைங்கர்யம்-ப்ரீதி –

ஸ்ரீரெங்கம் ஆஸ்வே -சுகம் ஆஸ்வே -இரண்டு விதி இல்லை -நன்றாக சாப்பிடு -அக்கார வடிசில்-

வாழ்வே சுகம் தானே -தாழ்ச்சி மற்று எங்கும் -உன் திரு வடி கீழ் வாழ்ச்சி

அடிக் கீழ் அமர்ந்து  புகுவீர் அடியீர் வாழுமின்  என்று  -அமர்ந்தேன் -புகுந்தேன் -ஆழ்வார் சொல்ல –

அவன் -அருளும் வார்த்தை–ஒரே விதி தான் -இங்கும்

வாழ்ச்சி தன்னடையே கிட்டும்

தொழுது எழு -தொழுதாலே எழுவது தான் –

திவ்ய தேச வாழ்வே மகிச்சி –

ஊரிலேன் காணி இல்லை-உறவு மற்று ஒருவரும் இல்லை- திவ்ய தேசத்தில் இருப்பவர் என் உறவு இல்லை-

திருவரங்கம் வாசம் தனி சிறப்பு

சுயம் வியக்த ஷேத்ரம் எட்டு -தேவர் சித்தர் மனுஷ்யர்

தோட்டம் பிரகாரம் மலை -எனக்காகா இருப்பது நினைத்து சீல குணம் -பட்டர்

தோத்தாத்ரி ஸ்ரீ மூஷ்ணம் ஸ்ரீ ரெங்கம் திரு வேம்கடம் -சுயம் வியக்த ஷேத்ரம் நம் நாட்டில்

அமர்ந்த திரு கோலம்-எண்ணைக் காப்பு -நித்யம்-முளகாய் சேர்க்காமல் -வானமா மலை

பூ வராக -தனி -விக்ரகம்-ஏக மூர்த்தி -ஸ்ரீ மூஷ்ணம்-இடுப்பில் கை வைத்து –

வதரி வணங்குதுமே -தவ திரு கோலம் – நர நாராயண -சித்தரை திருவாதிரை-அஷய திருதியை திறந்து

ஆறு மாசம்–தப்த குண்டம்-உண்டு-சாளக்ராமம் -அடை நெஞ்சே -கண்டகி நதி-பிரார்த்தனை-சாளக்ராமம்-கர்பத்தில் இருக்க –

த்வாரகா சிலா உண்டு-நெஞ்சை அடைய சொல்ல -புஷ்கரம் -நைமிசாரண்யம் -இந்த நான்கும் –

காட்டு ரூபம்

தீர்த்த ரூபம் -புஷ்கரம்

தீர்த்தனுக்கு அற்ற பின் -தீர்தங்களே என்று

தீர்த்தன் உலகு அளந்த திருவடி

பாவனத்வம் -தீர்த்த மனத்தனனாகி –

காயத்ரி தேவி பிரமனனுக்கு கோவில் உண்டு இங்கு –

அதில் முக்கியம் இங்கு –

சாளக்ராம திரு மேனி -இங்கு எல்லாம்-கிடந்த ஒரே -தேசம்

நின்ற திரு கோலம்-ஸ்ரீ மூஷ்ணம் திரு வேங்கடம்

அமர்ந்த மூன்றும்

ஒரே சயனம்-அத்வதீயம் இதிலும் .-பிரதானம் –

கோவில் திரு மலை பெருமாள் கோவில் திரு நாராயண புரம்-நித்யம்

போக புஷ்ப த்யாக ஞான மண்டபங்கள் இவை  -இதிலும் முதல் ஸ்தானம் –

பெரிய பெருமாள் பெருமாள் பெரிய பிராட்டி நம்பெருமாள் -என்றே -அனைத்தும் பெரிய –

பதின்மர் பாடும் பெருமாள்-ஒருவரே –

கருட புராணம்-பாத்ம புராணம் -மகிமை சொல்லும் –

ரதி -ஆசை உடன் சேர்ந்து வந்த -ரதிம் க -ரெங்கம்

அரங்கம்-நாட்டிய மேடை-ஸ்ரீ =பெரிய பிராட்டி –

நாட்டியம் ஆடி களிக்கும் தேசம்–

பிராட்டியால் தான் பெருமை –

பெரிய கோவில் நம்பி-சீர் திருத்த -நம் பரிக்ரமம் –

என் திரு மகள் சேர் மார்பன் என்றும் –

ஸ்திரீ தனம்-பட்டர்

நேரடி தொடர்பு இல்லை

பிராட்டி மடியில் ஒதுங்கி —

திவ்ய தேசம் பற்றி நிறைய குறிப்புகள் வியாக்யானங்களில் உண்டு –

அரசன்-பிரஜை போல் உறவு –

அபராஜிதா -ஜெயிக்க முடியாத -அயோத்யை-பாதுகாவல் உடன் -முதலில் ஸ்ரீ வைகுண்டம் –

28 சதுர் யுகம் முன்பு சொன்னதை-மனு -இஷ்வாகு வம்சம் -கர்ம யோக மகிமை -சொன்னான் கீதையில்-

பகல் விளக்கு போல் சத்ய லோகத்தில் இருக்க வேண்டுமா -பிரார்த்தி பெற்றார் இஷ்வாகு அரசன்-

கருடனே பிராத்தித்து -திரு பாற்கடலில் இருந்து -சத்ய லோகம்-அயோத்யை -ஸ்ரீ ரெங்கம்

எங்கும் நதி உண்டே -விரஜை-சரயு-திரு காவேரி -அவனே பிரசாதம் நமக்கு –

திலீபன் -பகீரதன் கட்டுவாங்கன் அம்பரிஷன் காகுஸ்தன் -போல்வார் அஜன்-தசரதன்-பெருமாள் –

திரு ஆராதனம் -அவர் பெருமைக்கு ஏற்று பண்ண-அபராசாரம் -உபச்சாரம் என்று 32 வித அபசாரம் –

பூத சுத்தி பண்ணியே செய்ய வேண்டும்-ஸூவ ஆராதன் -எளியன் ஆராதனைக்கு —

பட்டாபிஷேகம் முடிந்ததும் -விபீஷணன் -ஜகன்னாதன்-ஆராதனப் பெருமாள்-கொடுத்து அருளி-

செல்வ விபீஷணனுக்கு -வேறாக நல்லான் -பிரகலாதன் விதுரர் விபீஷணன் மூவரும் ஆழ்வார் கோஷ்டி –

பங்குனி ப்ரமோத்சவம்-வர -சேஷ பீடம்-காத்து இருக்க -காவேரி தாய் -இரண்டு கரம் குலித்து மணல் தட்டு உயர்ந்து –

வண்டுகள் முரலும் -மயில்கள் ஆலும்-சோலை –

புராண ராஜா -தர்ம வர்மா -வேண்டிக் கொள்ள -பெருமாள் அனுமதி –ஆனந்தமாக -இங்கே வந்த –

விஜுர-பெருமாள்- அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ள -குழந்தை நோக்கி பள்ளி கொண்டான் –

மனுகுல மணிபால -பாஞ்சராத்ர ஆகமம் படி-

வந்து சேர்ந்த பெரிய பெருமாள்-சேஷ பீடத்தில் –

ஸூயம் வியக்தம் திரு பாற்கடலில் –

விபீஷணன் -எழுந்து அருளப் பண்ணி-

அத்தர் பத்தர் சுத்தி வாழும் திருவரங்கம்-

சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென்-

சேஷ சேஷி சம்பந்தம்

பரகத அதிசய –ஆதான இச்சையா -அவன் பெருமை சேர்க்க ஒன்றே செய்யும் கார்யம்

அவன் உகப்புக்கு -கைங்கர்யம்

பிரணவாகார விமானம் –

பிரபத்யே -பிரணவாகாரம்-ஸ்ரீ பாஷ்யம்-ரெங்கநாதனே சேஷி  -சேஷித்வம் காட்டும் -இரண்டுமே

அதிர்ஷ்டம்-கண்ணால் காண முடியாதவன் –

தேகம் ஆத்மா விவேகம் அறிந்து -சேஷத்வம் உணர்ந்து –

சேவை பண்ணுவது நாய் தனம்-தப்பாக –

நம்பியை-குண பூரணன்

தென்குருங்குடி நின்ற -அருகில்

அழகன்-அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி -சுட்டு உரைத்த -நின் திரு மேனி ஒளி ஒவ்வாது

மேன்மையும் உண்டே -உம்பர் வானவர் ஆதி அம் சோதியை

எம்பிரானை -உபகாரகன்-அசத் சமமாக இருத்த பொழுதுகரணம்-சாஸ்திரம் கொடுத்து

என் சொல்லி நான் மறப்பனோ –

சேஷி சேஷ பூதன்-

காளி தாசன்-உகந்த விஷயத்தில் தாஸ்யம்-

அடியேன் -ராம தூதன்-ராம தாசன்-தாசோகம் கோசலேந்த்ரஸ்ய

-கேட்டதும் கண்டானே பிராட்டியை உணர்ந்தார் பெருமாள்

அடி நாயேன் நினைந்திட்டேனே

ஆலி நாடன் -பரகாலன்-கலிகன்றி –

ஓம் என்ன வாயும் வேல் அணைத்த கையும் -கலியன் ஆணை ஆணையே –

எதிராசர் வடி வழகு என் இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் –

பட்டர்-லகு சம்ப்ரோஷனம் -நடக்க -நித்யம் வந்து –ஐதீகம் –

ஆழ்வார்கள் அருளி செயலும் சேஷத்வம் சொல்ல வந்தவை தான் ..-247 பாசுரங்கள் உண்டு –

லஷ்யம் -பெரிய பெருமாளுக்கு சேர்த்தி அறிவோம்-

47 திவ்யதேசம் திரு மங்கை ஆழ்வார் மட்டும் மங்களாசாசனம்

நாயனார் -பிள்ளை லோகாசார்யர் -திரு பாதுகை -ஜீவாது -சம்சாரம் நோய் தீர்க்கும் மருந்து –

பெரும் புறக் கடலும் -சுருதி சாகரமும் -சாய்கரமும் -மான மேய சரமம் -சூத்ரம்

பக்த்ராவி பெருமாள்-திரு கண்ண மங்கை பெருமாள்-கடல் கொண்ட பெயர் -க்ருபா சமுத்திர பெருமாள்- அருமா கடல் அமுதன்

வேத கடல்-சுருதி சாகரம்

இரண்டும் பகவானை சொல்லும் –

உப்பு கடலில் மணி முத்து கிடைக்கும்

அவனுக்குள் குணம் ரத்னம்

வேதம்-சொல் சப்த கடல்

ஐந்து நிலைகள்

புறம-அண்ட கடாகம் புரம்- மூல பிரகிருதி -விரஜை தாண்டி ஸ்ரீ வைகுண்ட நாதன்

அலைந்து -வியூகம்

ஆழ்ந்து அந்தர்யாமி

விண் மீது இருப்பாய் –

 பெரும் புற கடல் அலைந்து ஆழ்ந்து ஓடும் -முடு முடு விரைந்தோட -விபவம்

அயோக்யதர்க்கு -நம் போல்வார்-இவற்றுக்கு தகுதி இல்லை

தேசாந்தரம் தேகாந்த்ரம்-ஸ்ரீ வைகுண்டம்

திரு பாற்கடல் -அலைந்து -பார்க்கிற கடல் தான்

உள்ளே இருப்பவர்-யோகிகள்-ஆழ்ந்த  நிலையம்

விபவம்-அயோதியை வட மதுரை -காலத்தால் இழந்தோம் –

பிரமேயம் -நான்கு நிலை சமைத்த மடு -அர்ச்சை –

விரஜை -ஆவரண ஜலம் சரஸ்வதி அந்தர்யாமி-காட்டு ஆறு -சமைத்த மடு

மேய சரமம் இது-இறுதி பிரகாரம்-நிலை –

சுருதி சாகரம்-வைகுண்ட நாதனை சொல்லும் வேத கடல்

இதற்கும் ஐந்து நிலைகள்  பிரகாரம்

வேத வேத்ய  நியாயம் பாஞ்ச ராத்ர ஆகமம்- நமோ பகவதே வாசுதேவாயா –

மனு தர்ம சாஸ்திரம் -அந்தர்யாமி

இதிகாசம் பிராணம் -விபவம் சொல்லும் -வேத உப பிராமணம்

இதிலும் அயோக்யர் நாம் -வேத சாகைகள் அநேகம் -அத்யயனம் பண்ணும் அதிகாரிகள் நாம் இல்லை

கைக்குஎட்டா கனி -பாஞ்சராத்ர ஆகமம்-ரஷை -தேசிகன் அருளி-

மனு தர்ம சாஸ்திரம்-கடைப்பிடிக்க யோக்யதை இல்லை

இதிகாச புராணம்-சமஸ்க்ருதம்

சமைத்த மடுவும்- சாய் கரகம் –

கை ஏந்தி வாய் திறந்தால் போதும் -கால் எடுத்து அடி வைக்க வேண்டாமே

மான சரமம்-பிரமாண -அருளி செயல் .இதில் தான் நமக்கு யோக்யதை

எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் –

அளவு/இனிமை/தமிழ் -பிரமாணம் உள் பட்டு தான் பிரமேயம்-

அவனை அனுபவிக்க இவை அறிந்து -ஆனந்தம்

வேர் -திரு அரங்கம் -அனைவரும் பள்ளி கொள்ளும் இடம் -கூடல் பதிகம்-

முத்து குறி -அரையர் சேவை -அடி கொட்டிட கூடுமாகில் கூடிடு கூடலே

ஆன்ற தமிழ்கள் ஆயிரமும் –முகில் வண்ணன்  வன் புகழ் மேல் –

சரண் அடைந்தது -திரு வேம்கடம் -மாரி மாறாத தண் அம் மலை –அவன் கிருபையாலே தான் திரு வாய் மொழி –

தென் திரு அரங்கம் கோவில் கொண்டான்-

திரு வேம்கடத்தான் அடிக் கீழ் புகுந்து -அங்கேயே இருந்து அருளிச் செய்த பதிகம் தான் -கங்குலும் பகலும் -அருளி ..-

என் திரு மகள் சேர்வேன் –தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே -ரெங்க மண்டபம் உண்டே அங்கெ

அசேஷ –சேஷசாயினே-எம்பெருமானார் -திரு வேம்கடத்தில் -மலையே திரு உடம்பு –

அவனுக்கு -உடம்பு வால் பகுதி-அகோபிலம் சிம்காசலம் – ஸ்ரீ சைலம்-மூன்றும் சேர்ந்த மலைத்தொடர் –

ஆழ்வார் பாசுரங்கள்-பெரிய பெருமாள் -பட்டரால் நம் பெருமாள் பெருமை –

இவை பத்து -ஈந்த பத்து –அமுது பாறையில் அனைத்தையும் கொட்டி-இப்பத்தை -கொடுப்பது –

73 பாசுரம்-திரு மங்கை ஆழ்வார்

பொய்கை ஆழ்வார் 1 பாசுரம் -ஓடித் திரியும் யோகிகள்

பகவத் விஷயம் பொலிந்து

கர்ப ரெங்கத்தில் இருந்து அரங்கன்-யோனி சம்பந்தம் இன்றி ஆவிர்பவிதவர்கள்

பரவாசுதேவன்-இலக்கு இவர்களுக்கு -திரு மழிசை-அந்தர்யாமி

குலசேகர-பெருமாள் இடம் ஈடுபட்டு

நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள்-கண்ணுக்கு

அர்ச்சையிலே -மண்டி-திரு மங்கை

அர்ச்சா விசேஷம் திரு அரங்கத்தில் திரு பாண்- தொண்டர் அடி பொடி

தேவு மற்று அறியேன்-மதுரகவி

ஒன்றும் மறப்பு அறியேன் -முதல் திரு அந்தாதி -6

ஓத நீர் வண்ணனை -இன்று மறப்பனோ -ஏழைகாள் –

அன்று -கரு வரங்கத்து உள்  கிடந்தேன் -கண்டேன் கை தொழுதேன் –

திரு வரங்கத்து  மேயம் திசை-ஸ்வரூபம் ரூபம் குணம்  விபதி சேஷ்டிதம் அனைத்தையும் –

ஒன்றும் மறந்து அறியேன் –

பிரகலாதன் போல் -ஒன்பது வித பக்தி-சரவணம் கீர்த்தனம் –

மறப்பற என்னுள்ளே மன்னி –

மறுப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலேன்

மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு -மறப்பற

என்னுள்ளே மன்னினான் தன்னை

மறப்பனோ இனி நான் என் மணியையே -ஆழ்வார் –

நானோ கருவரங்கத்தில்- அவனோ திருவரங்கத்தில்

அரங்கம் மேய அந்தணனை- அளப்பரிய ஆரமுது இவன் தானே

கண்டு கை தொழுத பின்பு ஒன்றும் மறந்து அறியேன்-

ஓத நீர் வண்ணன்–தேஜஸ் அடியரோர்க்கு அகலலாமே –

அரவின் அணை மிசைமேய மாயனார் –

சாஸ்திரம் கற்று மறக்காமல் இல்லை

ரூபம்- அழகன்- மேகம் போல் அனைவருக்கும் பொலியுமே –

மின்னு மேக குழாம் காட்டேன்மின் உம் உரு -கோட்டிய வில்லோடு –

என் உயிர்க்கு அது காலன் –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை சேவிப்பாராம்-வாழி கனை இருளே

கண்ணனைக் காத்து கொடுத்ததே

கண்டேன் கை தொழுதேன் -இவரோ கை தொழுதேன் கண்ட பின்பு –

அவன் காட்டவே கண்டார்கள்- சேஷ்டிதம் வரிசை க்ரமும் மாறி இருக்கும் —

பெற்ற ஞானம் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினை –

பாடி -பின்பு கண்டார் -தெரிந்து பாடவில்லை –பாட பாட உணர்ந்து –

பரம்ஜோதி-ஸ்வரூபம்-அழகையும் குணங்களும் சேஷ்டிதம் அனைத்தையும் –

மறக்காமல் இருந்தேன் –

மது சூதனன்-கடாஷம்-சாத்விகன்-கர்பத்தில்- இருக்கும் பொழுதே –

அவன் தான் மோஷம் இச்சை கொண்டு இருப்பான் –

ஆன்மிகம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் –

பக்தி வளர அனைத்து கல்வியும் தானே வளரும்

ஏழைகாள்- நம்மை கூப்பிடுகிறார் -இந்த குணம் ஸ்வரூபம் ரூபம் போன்ற இவற்றை இழந்து இருக்கிறோம் .

முதல் ஆழ்வார்கள் நிலை மூன்றும் –

கரும்பு  சாறு போல் மூன்று பிரபந்தங்கள் –ஆயனை கண்டமை காட்டும்

நெருக்கு உகந்த பெருமாள் –

அறிய அடைய காண -பக்தி ஒன்றே வழி –

ஞானத்தாலே முக்தி சாஸ்திரம்

ஞானமே முதிர்ந்து பக்தி

பக்திச்த ஞான விசேஷ -பர பக்தி-பர ஞானம் -பரம பக்தி

ஞான தர்சன பிராப்தி -மூன்று நிலை

சம்ஸ்லேஷ இன்பம் விஸ்லேஷ துன்பம் அறிவு -பர பக்தி

நேராக காண்பது போல் காட்ஷி-எப்பொழுதும்-தர்சன சமானாகாரம் -அறிவு முறிந்த நிலை

அங்கு தானே பிரத்யஷ அனுபவம்-இங்கு சாஸ்திரம் ஒன்றாலே

மூன்றாவது நிலை- நித்ய யுத்த -யோக ஷேமம் வகாம் யகம் –

சேர்ந்து இருக்க விருப்பம் கொண்டவர்கள் –

கண்ணன்-கரும்பை- மூவரும் -பிழிந்து மூன்று திரு அந்தாதி –

விசேஷித்து அருளி-நோக்கம்-ஆழ்வார்களுக்கு –

குணம் காட்டி-வியூக சொவ்ஹார்தம்-நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-போல்வன –

கர்ப்ப ஸ்ரீ மான்-பார்த்தோம்

கருவிலே திரு இல்லாதீர் காலத்தை கழிக்கின்ற்றேரே -ஏழைகாள்

இழந்தோம் என்ற இழவும் இன்றி -இதையே –

அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் -ஆழ்வார்

சம்சார பெரும் கடலில் நோவு படுகிறோம் .

பூதத் ஆழ்வார் -திரு கடல் மல்லை-புண்டரீகன் ரிஷி-கலங்கினால் தான் பக்தன்

விதுரர் தான் போட்ட மனை தடவி-மகா மதி -வியாசர் கொண்டாட –

ஆபோ நாராயண -தண்ணீரை ஆஸ்ரயமாக கொண்டவனே நாராயணன் –

எப்படி சேவிக்க ஆசை பட்டாலும் அப்படி காட்ஷி கொடுப்பானே –

படுக்கை விட்டு தரையிலே -ஜலம்-ஆதிசேஷன் -விட்டு -ஸ்தல சயன பெருமாள்-

நான்கு பாசுரங்கள்

28 /40 /70 /88

விண் மீது இருப்பாய்-அவன் இவன் என்று கூளேன் மின் –

நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே –

சுரம் பார்த்து சொல்ல எம்பெருமானார் அருளிய ஐதீகம் –

ஏத்தி வைத்து ஏணி வாங்கி-அவன் பெருமை -நாம் பார்க்காத

தேகாந்தரத்தே காலாந்தரத்தே தேசாந்தரத்தே

இவன்-அவன் என்று கூளேன் மின்

மனத்துள்ளான் -வேம்கடத்தான்-மா கடலான் -ஒரே சொல் –

மற்றும் -நீள் -இரட்டை சம்பாவனை போல் -இரண்டு அர்ச்சை அனுபவம் இங்கு –

நினைப்பரிய நீள் அரங்கத்தில் உள்ளான் –

வைகுண்ட நாதனே ஸ்ரீ ரெங்கநாதன் சொல்ல வந்தவர்

அர்ச்சா அவதார வேர் பற்றும் ஸ்ரீ ரெங்கநாதன் –

அடை மொழி இங்கு மட்டும் -ஐந்து பிரகாரங்களும் இங்கு -நினைப்பு அறிய -வாசாம் அகோசரம்

தேவாதி தேவன் எனப் படுவான்

முன்னொரு நாள் மா வாய் பிளந்த மகன்

கேசி -துரங்கம் வாய் கீண்டு -உகந்தானது தொன்மை ஊர் அரங்கம் -கலியன்-

பேணும் ஊர்  பேணும் அரங்கனே –மா வாய் பிளந்த -விபவம் சொல்லப் பட்டது –

தேவி -தாது -காந்தி -விளையாட்டு -இன்புறு இவ் விளையாட்டு உடையவன்

தேவாதி தேவன்-அயர்வறும் அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் –

நெஞ்சுக்கு -தொழுது எழு என் மனனே–தயா நிதிம் -தேவராஜம்-

தியாக ராஜன்-தேவ பெருமாள்-ராமானுஜரை அருளி

வேகவதி நதியில் கலியனுக்கு

அருளாள பெருமாள் எம்பெருமானார் -சித்தி த்ரயம் காட்டி –

உழைத்து அவர் -இவர் அனுபவத்துக்கு –

கபிஸ்தலம் -ஆற்றம் கரை கிடக்கும் கண்ணன் -கோழியும் கூடலும் -ஒரே சொல்-பெற்று –

கூடல் மா நகர் -அனைவரும் சாம்யம்

நினைப்பு அரிய -நீள் -இரண்டும் சொல்லி-அரங்கனின் பெருமை –

ஆழ்வார் திரு உள்ளம் புக–ஏஷ நாராயண ஸ்ரீமான்-ஸ்ரீர்ணவ -மதுராம் புரிம் –

அந்தர்யாமி-அனைத்துக்குள்ளும் -யோகிகள்-த்யானம்-

விக்ரக விசிஷ்டன்-லஷ்மி விசிஷ்டன்-உண்டே -நின்றும் அமர்ந்தும் கிடந்தும் -உள்ளே காட்ஷி தருவானே –

இவனே வைகுந்தம் கொடுப்பனே -தேவாதி தேவனுக்கும் அரங்கனுக்கும் தொடர்பு

சொவ்ஹார்தம் -சு ஹிருதயம்-நல்ல உள்ளம்- வியூக மூர்த்தி போல்

வன் பெரு வானவர் உய்ய -அனைவரும் உய்ய

கண்ணனே இவனே -கொண்டல் வண்ணன் கோவலன்

கற்றினம் மேய்த்தவன் இவன் –

அகில புவன ஜன்மே -பரமனே ஸ்ரீனிவாச -ஸ்ரீ பாஷ்யம்-

வேதார்த்த சங்க்ரகம்-சேஷ சாயின -திரு வேங்கடம் உடையானை சேவித்து

வேங்கடத்தான்-நீள் அரங்கத்தான்-தொடர்பு –

இருப்பிடம் வைகுண்டம் வேம்கடம்-பாலாலயம்-மனத்துள்ளான்-மகாலயம் –

குலைந்த ஆழ்வார் நம் ஆழ்வாரை ஆழ்வார் திரு நகர் மக்கள்-பெரியவன்

விச்வச்ய ஆயதனம்

நெஞ்சமே நீள் கடலாக –தஞ்சனே

மனத்துள்ளான் -ஆரம்பித்து -அதன் பெருமை காட்டுகிறார் –

விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்

அரவத்து அமளி யோடு  அரவிந்த பாவை-பாற் கடலோடு -கடல் சப்தம் கேட்குமாம்

கருடன் குழம்பு ஓசை ஆழ்வார் -புள்ளை கடாகுவற்றை காணீர் -தென் திருப்பேரை கருட உத்சவம்-

ஏசல் உத்சவம் ஆழ்வார் மனசில்-பெரிய திரு உள்ளம்-

அவன் நம்மை பிரியாமல் இருக்கிறான் -காட்டுகிறார் இதில் –

அடங்குக உள்ளே -அடங்கு எழில் சம்பத்து –

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்

46 பாசுரம் பயின்றது அரங்கம்-பல திவ்ய தேசம்

மணி -வள்ளல் -தடக் கை மால்- மணிவண்ணன்-வண் தடக்கை-

திரு மேனி-வள்ளல் தன்மை–ரூபத்தாலும் ஒவ்தார்யா குணத்தால்

மனசையும் கண்ணையும் பறிக்கிறான் -பெருமாள் -ரூப ஒவ்தார்ய சித்தம் அபகரித்தது போல்

திரு மேனி கொடுத்த வள்ளல் தன்மை

பயின்றது =வாழ்ந்தது -நம்மை கொள்வார் உண்டோ கேட்டு இருக்கிறான்

அரங்கத்தில் சயனித்து கொள்வார் உண்டோ -இருக்கிறானே –

அங்கும் இங்கும் வானவர் தானவர் -உன்னை அறிய கிலாது அலற்றி-

உன்னை உனக்கு என்று வராமல்-

பயின்றது அரங்கம் திரு கோட்டி-அஷ்டாங்க விமானம் அங்கு பிரணவாகார விமானம் இங்கு

வெள்ளியில்-உரக மெல்லனையான்-கோஷ்டிபுரம்- செல்வ நம்பி தேசம்–மூன்று நிலையில்

ஸ்ரீஜயந்தி உத்சவம் -கண்டு வண்ண மாடங்கள் பாசுரம்

பண்ணால் பயின்றதும் வேம்கடம்-ஆனந்த நிலையும்-

ஆச்சார்யர் -மந்த்ரம் -பெருமாள்- வைகுந்தம் -மற்றது கை அதுவே

திரு கோட்டியூர் சொல்லாத மனிசன்-நாவில் கொண்டு அழையாத -பாபம்

அணி நீர் மலையே -அங்கும் அரங்கன்-மாமலையாவது நீர் மலை-வால்மீகி-பெருமாள்

நின்றான் இருந்தான் நடந்தான் கிடந்தான்-நீர்மை-

திரு வல்லிக்கேணி -அனைவரும் பாசுரம் பெற்று-ஐவரும்-பறந்து நின்று நடந்து இருந்து கிடந்தது –

மணி திகழும் வண் தடக் கை மால்-வியாமோகம்-திரு மேனி காட்டி கொண்டு இருக்கிறானே

மாலே மாயப் பெருமானே -பாலேய்  தமிழர் –ஆழ்வார்

இரண்டு திருக்கை-கிரீடம் காட்டி-தொட்டு அர்த்தம் -தானே சர்வேஸ்வரன்

அடுத்து திரு அடி-தாழ்ந்த நீசர் அடைக் கலம் —

ஆஜானுபாஹு-

நம் பெருமாள்-கற்பக விருஷம்-பூ கொத்துப்போல் திவ்ய ஆயுதங்கள்-அபயம் கரே

வைத்த அஞ்சல் என்ற திரு கைகள்

ஜாடை காட்டி -போருமே -வருத்தி கொள்ள வேண்டாமே –

கோவில் ஆழ்வார் போல் நம் அலங்காரம் –

70 பாசுரம்

நல்லாருக்கு -சேவை –

தமர் உள்ளம் தஞ்சை- டேவல்ல எந்தை இடம்-

ஏவரு வெஞ்சிலை பெருமாள்

தஞ்சை ஆளி- மணி குன்ற

தலை அரங்கம்-பிரதானம் -திரு தண்கா-தன் பொறுப்பு வேலை

மா மல்லை கோவல்-மதில் குடந்தை

எந்தைக்கு இடம்

உள்ளம் வந்து சேர

திரு கடித்தானம்-என்னுடை சிந்தையும் -ராம சந்திரனாக ஆழ்வார்

சாத்திய  ஹிருதயஸ்தன்-சாதனம் ஒருக்கடுக்கும் –

தாயப் பதி- தபஸ் பண்ணி ஆழ்வாரை பிடிக்க –

ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்-நன்றி மறக்காமல்-

பெற்று கொடுத்ததால் -அது போல் இங்கும் -பாசுரம்-தமர் உள்ளும் -முக்ய வாசகம் இங்கு

வேதாந்தம் மேல்-ஆழ்வார் திருமுடி-திரு முடி சேவை உண்டே -பொலிந்து நின்ற பிரான் –

திரு தொலை வில்லி மங்கலம் அத்யயன உத்சவம்-ஆழ்வார் திருப்பி போன பின்பு –

கண்ணன் என் உச்சி உளானே –

திரு அடி தாமரைக்கு எதில் பிரித்து

ஹஸ்தி கிரியிலா பக்தர் உள்ளத்திலா -கூரத் ஆழ்வான் –

அநந்ய பிரயோஜனர் இருந்தால் சேவை சாதிப்பான் நம் உள்ளத்தில்

88 பாசுரம்

திறம்பா வழி -கடி நகர வாசல் கதவு

சொந்த முயற்சியால் -வைகுந்தம் அடைய

திறம்பிற்று-மூடினது

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை

திறம்பா வழி- சரணாகதி மார்க்கம்-இழக்க மாட்டார்கள்

திரும்பும் வழி- உபயாந்தரங்கள்-இடையூறு நிறைய

திறம்பா செடி நரகம் நீக்கி -சம்சாரம்-நீக்கி

தாம் செல்வதன் முன்னம்-திறம்பிற்று –

அவனை சரண் அடைய அருளுகிறார்

சரம ஸ்லோகம்-அர்த்தம்-

சர்வ பாபேப்யோ-மோஷஇஷ்யாமி -சடக்கென  -அனைத்தையும் போக்கி –

ஆறு வார்த்தைகள்-தேகம் தொலையும் பொழுது -தேக அவசானே முக்தி

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –

திருவடிகளே உபாயம்-உபேயம்–

பரம பக்தி கொண்டவர்களே -மாக வைகுந்தம் காண்பதற்கு ஏக எண்ணும் மனம் -ஆழ்வார்

பேய் ஆழ்வார் 1

திரு மழிசை -14 பாசுரங்கள் –

மேலே பார்ப்போம்-வேத சதுஷ்டயம்..இரும் தமிழ் நூல் பனுவல் ஆறும்-உபாங்கன் மற்ற எண்மரும்

அங்கி அங்க பாவம் -இவற்றுக்கு அங்க உபாங்கம் பதினான்கு –

வேதம் தமிழ் படுத்திய ஆழ்வார்கள் –

பிரணவம் கீழ் இருக்கும் அரங்கனையே சொல்ல வந்தவை .

ஸ்மார்த்தர்-ஸ்மரதி-சொன்ன படி செய்யும் கர்ம

ஸ்மார்த்த ஸ்மிர்த்தி விதி விகித  -நித்யம் சொல்கிறோம் -வேத உப அங்கம்

வேதாந்தம் அறுதி இடுவது ஸ்மிர்த்தி இதிகாச புராணங்களாலே .

கோவலூர் -ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவர் பேய் ஆழ்வார்

மாதவன் பூதங்கள் மண் மேல் மலிய புகுந்து -திரு நாம சங்கீர்த்தனம்-அடியார்கள் –

ஓன்று-இரண்டு பாசுரம் சொல்வார் அரங்கனுக்கு –

மிக்கானை மறைய-தக்கானை-அக்கார கனியை

கடிகாசலம்- திவ்ய தேசம்

எக்காலத்து எந்தை-அக்காரக் கனி-திவ்ய தேச பாசுரம் இல்லை

மிக்கார் வேத -விரும்பும் அக்கார கனி –

ஆற்றங்கரை கிடக்கும் -ரமா மணி தாயார் -கஜேந்திர வரத்தான் -கபிஸ்தலம்

கொடு வினையும் சாரா கீதை சொன்னவன்-பரம காருண் யார்

61 /62 -இரண்டும்

அதிலும் i பாசுரம்-பேய் ஆழ்வார் அருளி –

ஸ்ரீ பாஷ்யம்-ஆழ்வார் பாசுரம்  தொடர்பு காட்டி இருக்கிறார் .

பண்டு எல்லாம் வேம்கடம்-இளம் குமரன் தன் விண்ணகர் –

ஒப்பிலியப்பன்- தன் -ஸ்ரீ வைகுண்டம்- அப்புள்ளார் /பெரியவாச்சான் பிள்ளை

இரண்டிலும் சேர்த்து கொள்வார்கள் .

ஆஸ்ரித அர்த்தமாக -எழுந்து இருக்கிறார் –

பரிஜன-சகலம் ஏதது -பக்தர்களுக்கு  -கூரத் ஆழ்வான்-

திருக்கல்யாண குணங்கள் திரு பரிவட்டம் திவ்ய ஆயுதம் திவ்ய ஆபரணம் எல்லாம் பக்தருக்கு

 ந தே ரூபம் -பக்தர்க்கு பிரகாசிக்குமே

கொண்டு அங்கு உறைவார்க்கு -கோவில் போல்-இருப்பிடம்

திரு அரங்கம்- இரண்டு அர்த்தம்–வண் பூம் கடிகை-

இளம் குமரன்-யுவ குமாரன்-எப்பொழுதும் -திரு விண்ணகர்-

பொன் அப்பன் – மணி அப்பன் -என் அப்பன்–

அடுத்த பாசுரம்- சௌலப்யாதிகள்-ஆச்ராயண சௌகர்யம்-ஆபாதாக /ஆஸ்ரித கார்ய ஆபாதாக குணங்கள்

விண்ணகரம் -திரு அரங்கம்- தன் குடம்கை நீர் ஏற்றேன் தாழ்வு

வாமனன் -சுசீலன்-அழித்து கொண்டு கார்யம் -தாழ விட்டு கொண்டவனே இங்கு

விண்ணகரம்-வெக்கா -சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

அவர் அனுக்ரகத்தால் பொய்கை ஆழ்வார் -அவதரித்து நாலாரயிரமும் பெற்றோம் –

இவை எல்லாம் நம்பெருமாள் பக்கல் காணலாம்- மா முனிகள் அரங்கன்/நம்முடைய பெருமாள் இருவரையும் கொள்ளலாம்

வேளுக்கை-மண்ணகத்த மா மாடம்-ஆளரி எம்பெருமான் -காமாதி அஷ்டகம் தேசிகன் –

பிழிந்து வளைந்த உகிரானே

தென் குடந்தை தேனார் திரு அரங்கம்-பரம போக்கியம்-தென் கோட்டி

சௌசீல்யம் சௌலப்யம் கண்டு கொண்டேன் என்கிறார் இங்கு எல்லாம் –

திரு மழிசை- மகம் திரு ஆழி அம்சம் -பக்தி சாரர்

உறையில் இடாதவர்-நாக்கு தான் வாள்-தீஷணமாக

10 திரு சந்த விருத்தம் – 4 நான்முகன் திருஅந்தாதி

21 /49 /50 -55 ஆறும் 99 119

ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்து -இவன் செய்து பேர் மற்றவருக்கு கொடுத்தான்

ரஷகன்- சூர்ய மண்டலம் ஷீராப்தி துறந்து அரங்கம் வந்து சேவை

அரங்கனே -நின்ன சூரர் என்ன செய்தார் –

வேறு இது நீ கூறு -எழுந்து இருந்து பேச சொன்னார் ஆரா அமுதன் இடம்

ஆமாறு அறியும் பிரான்

சாகரன்- குமரர் தோண்டி-சாகரம்- முன்னோர் ராமனுக்கு வழி விடாதா –

குரங்குகளுக்கு பேர் கொடுக்க –கடலில் அணை

அன்று குன்று சூழ் -அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே -வென்றி தரும்பத்தும் -மேவி கற்பார்க்கு –

துர்வாசர் சாபம்-நஷ்ட ஸ்ரீ -தேவர்கள் இழக்க -அலைகடல்

கருடன் மந்திர பர்வதம் கொண்டு வர சொல்லி

தன் படுக்கையை தானே கலக்கி -ஆஸ்ரித பஷ பாதி –  ஓல்லை நான் கடைவன் –

அண்ணல் செய்து அலைகடல்- தாமோதரா மெய் அறிவன் நான் -குலசேகரர் –

சேர்ந்து கடைய இங்கு-கரஸ்பர்சம்-நானும் கடைவன் -அங்கு பிரயோஜனான்தரர்

நின்ற சூரர் என்ன செய்தார்- விபரீத லஷணை –

குரங்கை ஆள் உகந்த எந்தை – அரங்கனே கூறு –

மாத்ருசா ரஷண-பிறந்த புகுந்த இடம் விட்டு ஸ்ரீரெங்கம் வந்து அருளுகிறான்-

சமோகம் சர்வ பூதேஷு-சொல்லி கொண்டாலும் – ஆஸ்ரித பஷ பாதி –

49 அடியார் அகங்காரம் தொலைகிறான்

கூன் நிமிர்த்து

ஒடுங்கி -இருந்ததை நிமிர்த்து

நிமிர்ந்த நம்மை குனிய

கொண்டை கொண்ட— கூனி -கொண்டாடுகிறார்

கொண்டை கொண்ட கோதை மீது -தேன்-உலாவு -கூனி

அழகு-புஷ்பம்-தேன்-வண்டு

ராம லீலை –

  நாதனூர் பேரும் அரங்கமே –

கூனே சிதைய உண்டை வில் -கோவிந்தா -ஆழ்வார்

ராமர் பஷ பாதி-பட்டர் -கண்ணன் தலையில்-

போம் பழி எல்லாம் அமணன் தலையில் போம்

கன்ன சுவர் திருடி – ஈர சுவர் தாண்டிய திருடன்-இறக்க -சித்தாள்-குயவன்-ஸ்திரீ

வண்ணான் -பிச்சூ-மௌந சந்நியாசி

தலையை வெட்ட சொல்லி போல்-

குழந்தை மோர் குழம்பை குடித்த கதை -ஈட்டில் உண்டு –

நண்டை உண்டு நாரை பேர -வாளை பாய -நீலமே -கெண்டை நிழலில் ஒதுங்க –

ஆனந்தமாக

நண்டு=விஷயாந்தர பிராவண்யம்

நாரை=நித்ய சம்சாரி

பேர -அகங்காரம் கொண்டு பெயர்ந்து திரிய

வாளை =உபாயாந்தர நிஷ்டர் -இன்னும் சுபிரயத்தனம் ஈடு பட்டு

பாய

நீலம்- நீல மேனி ஐயோ -பெரிய பெருமாள்

கெண்டை =அவனே உபாயம் – பிரபன்னர்கள் -வாழ்ந்து போவார்கள்-

அந்தர விரோதி போக்கி -பாதக பதார்த்தம் -இவர் நிழலில் ஒதுங்கி தப்பிக்கலாம்

ஆமை -கூட்டுக்குள் -சம்சாரம் விரோதி -பெரிய பெருமாள் ஓடு போல்

50 -பாசுரம்- பாக்ய வெளி விரோதி

வெண் திரை கரும் கடல் -சீர் அரங்கம்-லன்கேச்வரனை முடித்து

சிவந்து வேவே முன்னோர் நாள்

சிலை கை வாளி -சிகப்பாக ஆக்கி –

தீர்த்த நீர் -பாவனத்வம்-

வண்டு திரைத்த சோலை-போக்கியம்

இரண்டும் கொண்ட காவேரி-ஆத்ம குணம் வளர்த்து அனுபவம் கொடுக்கும் –

இவனே ராமன்

சர்வ சக்தி மய-புண்ய மய  திவ்ய தேசம் –தீர்த்த மயம் காவேரி –

ஒன்பது ஸ்ரீ ராமர் சந்நிதிகள் இங்கே உண்டே –

வில்லில் புறப்படும் பொழுது அம்பாக -தீ கங்குகளாக வஜ்ரம் வாயு வேகம்

ஒருவர் இருவர் மூவர் -உறவு கரந்து -கிள்ளி களைந்தான்

வில்லாண்டான் தன்னை-வில் இருத்து மெல் இயல் தோய்த்தான்

ராமோ த்விர் ந பாஷையே -இரண்டாவது வார்த்தை இல்லை

51 பாசுரம்

செல்வர் மன்னு -அரங்கர் -நான் முகத்து அயன் பணிந்த கோவில்

வீரன் நித்ய வாசம் செய்கிறான் இங்கு

சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த -செல்வர் மன்னு பொன் இடம்-

ரஷகனுக்கு ரஷகர் தேட்டம்- ரஷகர் ரஷகரை தேட்டம் -பொன் இடம் –

சதுர -தலை பத்து உத்திர ஒட்டி

தான் போலும் என்று எழுந்தான் தரணி யாளன்

 அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கன் தங்கள்  கோன் -போலும்-ராவணன் வார்த்தை இது வரை –

என்று எழுந்த -குன்றம் அன்ன இருபது தோள்களை -தடித்த தாசரதி –

மனசு-ராவணன்-10 புலன்கள்-விவேக ஞானம் அம்பு -சர ஜாலம்-கொண்டு அடக்கி –

ஷீராப்தி -பானு மண்டலம்-யோகி ஹிருதயம் விட்டு சேருமூர் அரங்கம்

நம் போல்வாரை ரஷிக்க

52 சன்யாசிகள் வாழும்

குவலயாபீடம்-அற்ற பற்றார் சுற்றி வாழும்

உபாயாந்தர பிராப்யாந்த பற்று அற்ற

அம் தண்  நீர்

ஆளவந்தார் எதிராஜர் -போல்வார் -மா முனிகள்

மூங்கில் -சிற்று -பல் உள்ள மூங்கில் -முற்றல் மூங்கில் மூன்று  தண்டர் ஒன்றினார் –

கொற்றை உற்ற -யானை மறுப்பு ஒசித்த பாகனூர் -விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசம்

சாத்விக தண்டம்-சித் அசித் ஈஸ்வரன்

த்ரயம் பல -நம் சம்ப்ரதாயம் –

காட்டை அளிக்கும் வஜ்ர தண்டம்-பாஷாண்டிகள் காட்டை வெட்டி

மந்திர பர்வதம் -மாயாவதி கடல் கலைக்கும்

வேதாந்த சாரம் தீப ஸ்தம்பம் போல்

திரி தண்டம்-முக்கோல் தன அழகும் -முக்கோல் பகைவர்

சுற்றி வாழும் -அரங்க நகர் வாழ மனோ ரதம் உடன்வாழும் –

திக் பலம் ஷத்ரிய பலம்-ஏகேப பிரம தண்டம்-

53

மோடியோடி -வாணன் கரம் -நேர் சேர்ந்தான்-வெட்கி அனைவரும் ஓட –

998 கரம் வெட்டி -வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் புனிதன்

ஆதிமால்- ஆழி வல்லானுக்கு பல்லாண்டு -கூடும் நீர் -காவேரி பல நதிகள் கூடும்

போக விரோதி போக்கி -திருஅடி

54

சந்தனம்-காவேரி கொண்டு கொட்டும்-யானை நகம் புலி நகம் –

சீர் கொண்டு -கைங்கர்ய சு பக்த புத்தி

பிரபல தர விரோதி –

55

அழகை காட்டி அங்கீகரித்தான் –

தாமரை அவயவங்கள்

மா மலர் கிழத்தி-பட்ட மகிஷி

வைய மங்கை -ஆயர் மங்கை

மூவருக்கும்

உன்ன பாதம் என் சிந்தை மன்ன வைக்க இருக்கிறாய் –

நல்கினாய் -புண்டரீகன் அல்லையே

93

இரும்பு போல் சரங்கள்-

கரும்பு இருந்த கட்டி – -கடல் கிடைந்த வண்ணனே

தேன் இடை கருபப்பம் சாற்றை -வரை இடை -தேனை கொண்டு கரும்பை வளர்த்து

வண்டு ஆழ்ந்த துளசி பட்டதும் அலர்ந்த பாதம்

அனுபவம் வேண்டும் இறைஞ்சி -அனுக்ரகிக்க வேண்டும்

அச்சுதன் அமலன் என்கோ -அச் சுவை கட்டி என்கோ

நச்சுவை  மருந்து என்கோ பால் என்கோ -தேன் என்கோ

சக்கரை -அக்கார கனி-விதை யாக வைத்து மரம் வளர்ந்து கனி –

119 -மாய கேள்-பொன்னி சூழ் அரங்கம்மேய –

காவேரி -மாலை போல் -பூவை வண்ண மாய கேள்

வல்வினை- ஆத்மா -ஸ்ரத்தை சற்றே பிறந்து -கொழு மலர் போல உன் திரு மேனி ஆசை -கொண்டு வாட்டம் இன்றி

திரு மேனி கூட்டி போய் அனுபவிக்க வைத்ததே -ஸ்வரூபம் குணம் விபூதி எல்லாம் .

ருசி விளைந்தார்க்கு சரணமே கதி –

திரு மழிசை ஆழ்வார் நான் முகன் திரு அந்தாதி 4 பாசுரங்கள்

நம் ஆழ்வார் 12

பின்பு அனுபவிப்போம் .

உண்டோ வைகாசிக்கு ஒப்பு

சடகோபருக்கு ஒப்பு உண்டோ

திரு வாய் மொழிக்கு உண்டோ ஒப்பு

தென் குருகூருக்கு உண்டோ ஒப்பு –

விஸ்வக்சேனர் அவதாரம் ஆழ்வார்

12 பாசுரங்கள் அரங்கனுக்கு நேரடியாக அருளி

நான் முகன்திரு அந்தாதி 4 பாசுர-மொத்தம் 96 பார்த்து மேலே பார்ப்போம்

பகவானே ரஷகன் -நம் கண்ணன் கண் அல்லத்து இல்லை கண்ணே -நால்வர்

அருளியதையும்-காரணத் வன்-நாராயணனே -அவனே ரஷகன் –

பெரிய திரு அந்தாதி -87 பாசுரம்-நான்பெரியன்

இனி நான் முகன் திரு அந்தாதி நான்கு பாசுரங்களை அனுபவிப்போம்

3 பாலில் கிடந்தத்வும் -மெய் பொருளை -யார் அறிவார் என்னை போல்

சாத்விக அகங்காரம் -வேண்டுமே -அவன் அருளி அறிந்து -ஞானம் சக்தி பெருமை –

மாறுளதோ இம் மண்ணின் மிசையே

யார் நிகர் அகல் ஞாலத்தே

காட்ட கண்டு இருக்கிற படியில் –

பண்டு அரங்கம் மேயதவும்-கொள்ளுவார் உண்டோ-அவனையேகேட்ப்பார் உண்டோ –

கூப்பீடு கேட்க்கும் இடம் -பாற்கடல் பள்ளி

வியூக மூர்த்தியே -பண்டு -முன்பே இங்கு சயனம் –

ஆலில் துயின்றதுவும்-கரார விந்தென –

இங்கும் ஒற்றுமை ஆழ மாமரத்தின் மேல் பாலகனாய் –ஞாலம் உண்ட

விழுங்கிய வற்றுக்குள் இது சேர்ந்ததா –

சேராததை சேர்த்து -அகடிகடாத சாமர்த்தியம்

அந்தர்பக்ச்த சத் சர்வம்-வெளியில் வியாபித்து

தாரக நியமனம் -ஜீவாத்மா அணு -அவனோ விபு -எப்படி புகுந்தான் –

ஒளி மற்று ஒரு ஒளியை தடுக்காதே -சூர்யா ஒளி பிடித்த குடுவை மேலும் ஒளியை தடுக்காதே –

தேஜஸ்-ஞானம் மற்று ஒன்றை தடுக்காதே -ஆல் இலை -மண் உளதோ வேர் உளதோ  –

யார் அறிவார்-ஞாலத்து ஒரு பொருள்-ஏக காரணம்

வானவர் மெய் பொருள்-சேவித்து சத்தை பெறும்படி

அப்பில் அரும் பொருளை –

ஆர் உயிர் யேயோ -பெரிய நீர் படைத்து மனிசர்க்கு தேவர் போல்

பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து -அது கடைந்து -அடைத்து -உடைத்து –

அவனே தனுஸ் கோடி-வில்லில் நுனியால் உடைத்து புண்ய ஷேத்ரம் ஆக்கினது நிறைய பேர் அறியார்

பெருமாள் பிராட்டிக்கு காட்டி கொண்டு போகும் பொழுது அருளியது –

கால் கொண்டு நடக்க கூடாது என்று வில்லில் நுனியால்பெயர்த்து –

ஆபோ நாராயண -நார -தண்ணீர் அயனமாக கொண்டவன் -விஷ்ணு புராண ஸ்லோகம்

புனிதத்தன்மை- புனலுருவா –

அனலுருவு புனல் உரு -தன் உரு –

30 பாசுரம்

அவன் என்னை ஆளி-அரங்கம் ஆளி –

அரங்கில் என்னை எய்தாமல்-நாடக அரங்கம்-சம்சாரம்

அரங்கத்து அம்மான் காப்பான்-

உள்ளத்தில் வந்து அவசர பிரதீஷனமாக வந்தான்

உள்ளத்து நின்றான் -இருந்தான் -கிடந்தான் -கிடக்குமே வெள்ளத்து அரவணை மேல் –

ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வந்த நம்பி

பிறவி மா மாய கூத்து -அவன் அனுக்ரகத்தால் தான் -மம மாயா துரத்தா –

உபாயம் அறியாமல் நின்றான்-இருந்தான் கிடந்தான்-

வரவாறு ஓன்று இல்லையால்வாழ்வு இனிதாம் –

இள நீருக்குள் தண்ணீர் போன வழி தேட வேண்டாமே -அனுபவிக்க தானே வேண்டும் –

இளம்கோவில் கை விடேல் –

36 பாசுரம்

நாகத்து ஆணை குடந்தை -அணைப்பார் கருத்தாம்

நினைவில் நெடியானை-காலத்தால் வந்த நெடுமை- நெடும் காலம் நினைவு கொள்வான்

செடியாய வல்வினைகள்-நெடியானே -சமன் கொள் வீடு கொடும் தடம் குன்றமே

நம-அவன் கடன் என்று -தன்னையே ஒக்க அருள் செய்து –

அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தாலும் நினைவில் கொண்டான்

நின் அருளே புரிந்து இருந்தேன்

சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி -நெடு காலம் நினைவு கொள்வான் -நெடு மால் –

சொட்டு மருந்து குழந்தைக்கு அறியா பருவத்தில் -சமாஸ்ரயநியமும் அது போல் ரஷகம்

அறியா காலத்தில் -ஆழ்வார் -திரு ஆராதனா யோக்யதை கிட்ட –

குடந்தை உத்தியோக அர்த்த சயனம்-ஆரா அமுத ஆழ்வான்-திருமழிசை பிரான் –

திரு வெக்கா-சொன்ன வண்ணம் செய்த பெருமான்

திரு எவ்வுள்-எங்கு சயனம்-சாலி யோக மகரிஷி —

ஆயாசம் தீர -அரங்கம்-நீண்ட பிராயாணம் –சல சல காவேரி நீர் திரு அடி தீண்ட –

சிசுரோபசாரம்

பேர் அன்பில்- -சௌந்திர ராஜ பெருமாள் –

திரு பாற்கடல்-

எனக்கு ஒரு தன்மை உள்ளது -நீ தான் காக்க வேண்டும்

60 பாசுரம்

ஆள் பார்த்து உழி தரும் தன்மை-கைங்கர்யம் செய்ய

நீரும் ஆள் பார்த்து இருக்குறீர்-கைங்கர்யம் கொள்ள –

கண்டு கொள்-கேட்பார்க்கு அரும் பொருளாய் நிற்கும் அரங்கன்- விள்ளேன் மனம் -விலக மாட்டேன் –

கண்டு கொள் -நின் தாள் பார்த்து உழி தர வேண்டும் –

பிராப்யமும் உபாயமும் திரு அடி

அத்தை தின்று அங்கே கிடக்கும்

கேட்பார்க்-வேதாந்தம் – அரும் பொருளாய் -நின்ற அரங்கனே -என் போன்ற கண்களுக்கு

-சு பிரயோஜனம் இன்றி சு எத்தனம் இன்றி –

விள்ளேன் மனம்- மனம் ஒத்து வரவேண்டுமே –

மனம் தான் நண்பன் விரோதி –பற்று உள்ள மனம் விரோதி -பற்று அற்ற மனம்நண்பன்

கீதை–அனுஷ்டுப் ஸ்லோகம் -எளிமை-விடாமல் அர்த்தம் அறியாமல் சொன்னாலும் பெருமை

2 /  4 /15 /18 தனி சிறப்பு

தேக ஆத்மா விவேகம் -அவதார ரகசியம் -புருஷோர்த்த வித்தை -சரணாகதி சொல்லுமே –

உருப் போட்டான் உரு படுவான்- உருபோடாதவன் உருப் படமாட்டான் –

உகப்பே-முகப்பே  கூவி பணி தருவாய் -தாள் பார்த்து -அடியேன்-கைங்கர்யம் சரண் திரு அடிகளில் தானே

லோக விக்ராந்த சரண்- நின் சரண் அல்லால் சரண் இல்லை

அடிக் கீழ் அமர்ந்து -நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் .

திரு மங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

இனி ஆழ்வார்

பெருமாள்-வந்து பாசுரம் பெற்று

தென் குருகூர் -திசை நோக்கி கை கூப்பி –

வண்  தமிழ் மா முனி பின் தெற்கு வாழ ஆழ்வார் –

பிரமாதா இங்கு-அவன் அவதாரங்கள் அங்கு –

 -ஆகஸ்தியமும் அநாதி

பக்தி சாகாரம்-வகுளாபரணர் -வேதார்தம் தமிழ் ஆக்க வந்த

சட கோப வாக் -ஆல் இலை /தேவகி வயிற்றில்/வட தல –

1000 சாகை-சாந்தோக்யம் சமம் –

திரு விருத்தம்-விரிவு திரு வாய் மொழி -கேசவன் தமர்- பன்னிரு -௧௧௦௨ திரு வாய் மொழி

ரிக் வேதம் சுரம் சேர்த்து சாம வேதம் -பரம்பி

திரு விருத்தம் -28 பாசுரம்- விரிவு கங்குலும் பகலும் –

பண்டு உளவோ –

கிளவி துறை –

பிரிவாற்றாமையால் துடிக்க -ராஜாதி ராஜன்-

அனைவரும் ஆணைக்கு அஞ்சி வாயு சூர்யன்-வாடை காத்து நாயகி துன்ப படுத்த

உன் ஆணை உள் பட்ட -இவை உலாவி

துழாய் இன்பம் கிடைக்காமல்

நீர் -மீன் நாரை -அலைகள் வீசி -நத்தை காக்க -வரவைகள் இடம் இருந்து

உன்னை ஆஸ்ரயித்த என்னைகாக்க வேண்டாமா -விரக தாபம் இருந்து –

இது போல் கை விட்டது யாரும் இல்லை

சீதை கஜேந்த்திரன் -எனக்கும் நாள் குறித்து அருள்

காலை மாலை கோபிகள்

நாள் அறியேன் –

போக்யத்வம்-அனந்யார்க்க சேஷத்வம் -விட்டு கூட அனுபவிக்க வேண்டியது –

இனிமை விட முடிய வில்லையே –

கங்குலும் பகலும் -அவதாரிகை-

தாய் பாசுரம் மிகவும் தளர்ந்து

சரணாகதி பலித்த பின்பு -தளர்ச்சி எதற்கு –

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -ஸ்ரீ வைகுண்டம் போனது போல் அனுபவம்

பார்த்தால்- நித்ய சம்சாரிகள்

ஐவரால் குமை தீர்த்தி -சேரும் ஐம் புலன்கள்

பாத பங்கயம் நண்ணிலா வகை -அழுதார் –

மேலில் பிரபந்தம் கிடைக்க வந்துசமாதானம் பண்ண -11 பாசுரம்-

தளர்ச்சி மிகுந்து ஆண் பாவம் மாறி பெண் பாவம்-அதிலும் மிக தளர்ந்து தாய் பாசுரம்

உற்ற நல் நோய் -கடல் வண்ணர் இது செய்தால் காப்பார் யாரே

மயங்கி-அவளால் பேச முடிய வில்லை

தோழிகளும் மயங்க

திரு மணத் தூண்கள் நடுவில் இட்டு -நீ என் நினைந்து

நீயே மருந்து

10 பாசுரங்களில் 1000 பாசுரங்களும் அடக்கம்

பத்து குணங்களும் உண்டு இதில்

பரத்வம் காரணத்வம் -சத்ய காமத்வம்-போன்ற 10 குணங்களும்

பரத்வம்-வடி உடை வானோர் தலைவனே -என்னும்-

காரணத்வம்-முன் செய்து இவுலகம்

வியாப்பகத்வம்-கட்கிலி உன்னை காணுமாறு அருளாய்

நியந்த்ருத்வம்-கால சக்கரத்தாய்

காருணிகன்-இவள் திறத்து அருளாய்

சரண்யன்-பற்றிலார் பற்ற நின்றானே

சக்தி மாதவம்-அலை கடல் கடைந்த ஆரமுதே

சத்ய காமத்வம்-என் திருமகள் சேர் மார்பன் -அன்பனே என்னும் –

ஆபத் சகத்வம்-உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்

ஆர்த்தி கரத்வம்-முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி

ஸ்திதி -பத்தியையும் வளர்த்து -பத்து பத்தாக

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-

இது போல் பரகால நாயகி-திரு இட எந்தை-நீ என்ன நினைந்து இருந்தாய் -2 -7 அது இது 7 -2

ஆதனும் பத்தி நீங்கும் விரதம்-நாம் மறப்போம் இது கூட

இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –

உன் மனத்தால்- பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு –

பட்டர்-ஆழ்வாருக்கு ஓடும் தசை சொல்ல முடிய வில்லை-தலை மேல் கை வைத்து

அனுபவித்து ஆனந்தம் அடைவோம்

உன்னுடையே புதுசாக ஒன்றும் வர வேண்டாம்- என்னிடமும் இல்லாத நீச குணம் இல்லை

எதற்கு நாள் கடத்தணும் –

பரதனுக்கு 14 வருஷம்- நமக்கு ஏற்காது

உம்மை பட்டினி இட்டு ஜனங்களுக்கு அமுதம் கொடுக்க –

உபதேசிக்க -இருக்க மாட்டேன்-இனி இனி -கதறும் நீரே யோக்யதை படைத்தவர் –

இருபதின் கால்-இனி யாம் உறாமை-இனிஒன்றும் மாயம் செய்யேல் வரை –

ராமன் மயங்கினால்-லஷ்மணன் போல் தயார் விளித்து பெரிய பெருமாள் இடம் கேட்க

பிரபன்ன குலம்-சாதக பறவை போல்-ஆகாசமே நோக்கி-அழும் தொழும் தேரும் திசைக்கும் –

ஐதீகம்-கூரத் ஆழ்வான்-பஞ்சாங்க சரவணம்-இன்றும் வேத வியாசர் வம்சம் –

மூத்த வயசில்- திரு பிரசாதத்தால் அவதரித்த இரண்டு பட்டரும் –

எதையும் கேட்க்காமல்-பரம விரக்தர்-

தயங்கி நிற்க- -பிள்ளைகளுக்கு கல்யாணத்துக்கு பெண்-ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைவது யார் –

கேட்டு பழக்கம் இல்லை-வாய் வராதே –

எந்த சின்ன விஷயத்துக்கும் தன் இடம் வந்தால் பரம திருப்தி அவனுக்கு –

பார்ப்போம்-அடுத்த நாள் மதனி சேர்த்தார் பெரிய நம்பி வம்சம் –

பட்டர்- மதிள் காவல் இல்லை-தோட்டம் ஒதுக்கி திரு மங்கை ஆழ்வார் –

துரட்டி-அருள் மாரி-பெயர்

காவல் -பல்லாண்டு அருளுவது தான்

பட்டர் குறடு பிரசித்தம்-வீர பிரமராயன் –

ரஷகன் இல்லை கை மாறினாலும் குறட்டை விட்டு- அவனையே எதிர் பார்த்து இருப்பார் பூர்வர் .

இவள் திறத்து என் செய்கிறாயே –

கண் துயில் அறியாள் –கங்குலும் பகலும் –

உம்மை தொகை- துயில் கொள்ளாள் –

இளைய பெருமாள் போல் இல்லை

கண்ணா நீர் கைகளால் இறைக்கும் –

மயங்கி இருந்தாலும் -அவன் வரும் பொழுது சரியாக பார்க்க

சங்கு சக்கரங்கள் உடையவன் -முழுவதும் சொல்ல முடிய வில்லை

சங்கு சக்கரங்கள் மேல் சொல்ல முடிய வில்லை-என்றுகை கூப்பி அபிநயம் செய்து தலை கட்டுகிறாள்

தாமரை கண் என்றே-ஆழ்வான் வரை வளர்ந்து இருக்குமே

சண்டை போட்டு வளர -இரண்டு திரு கண்களும் -நாடு பிடிக்க –

நீண்ட அப் பெரிய வாய கண்கள் –

காது வரை சென்றதும் – – திவ்ய  ஆயுத ஆழ்வார் வரை

தாமரை கண்களால் நோக்காய்-அரையர் ஐதீகம்

நோக்கி தான் அரையர் கைங்கர்யம் –

குளிர கடாஷித்து மந்த ஸ்மிதம் -ஜிதந்தே புண்டரீகாஷம்

உன்னை விட்டு எங்கனே தரிக்கேன்-

மீன் தண்ணீரை விட்டு-இருக்குமா –

உத்தவர்-கண்ணன் இடம் கேட்டது போல் –

இரு நிலம் கை தோலா நிறுக்ம் -பூமியில் இருந்து வருவானா

கயல் பாய் -நாரத்தை பற்றியே மீன் வாழ

அயனத்தை பற்றிய பராங்குச நாயகி -விரக தாபம் படுத்தும்  பெண்ணின் உடம்பை காட்டி-

ரிஷிகள் பெருமாள் இடம் தங்கள் திரு மேனி காட்டியது போல் –

ஸ்ரீ ராமனே அனைத்துமாக கொண்டவர் -குலசேகர பெருமாள்

நம் பெருமாள் உத்சவர்-ராமன் பிரதிநிதி

பெரிய பெருமாள்-கண்ணன் பிரதி நிதி

பின்னானார் வணங்கும் சோதி

உண்ணும் சோறு -எல்லாம் ராமன்-

ராமோ ராமோ -ராம பூதோ -தன்மையி பாவம்-

திரு வஞ்சி களம்-மாசி- புனர்வசு –

முடி வேந்தர் சிகாமணி-ஷத்ரியர்-

31 பாசுரங்கள் -முதல் மூன்று பதிகங்கள்

திரு குமாரத்தி -திரு கல்யாணம்-

ஸ்ரீ ராம நவமி -சேர குல வல்லி நாச்சியார் சந்நிதி -சேர்த்தி –

பெருமாள் திரு மொழி-விஷயமும் பெருமாள்- அருளியவரும் பெருமாள் –

ராமானுஜர் அருளிய தனியன்.

தென் அரங்கம் பாட வல்ல சீர் பெருமாள்

இன்னமுதம் ஊட்டுகிறேன் -இங்கே வா பைம் கிளி –

சிலை சேர் நுதலியர்- வளைந்த நேற்று படைத்த

நித்ய வில் பிடித்த மன்னர் அனைவருக்கும் ராஜா

எங்கள் குலசேகரன் என்று கூற சொல்கிறார் –

ஸ்வாமிக்கே  நாயகி பாவம்–ஆச்சார்யர்-ஞானம்

அச்சுத சதகம்- தேவ நாதன்-அடியார்க்கு மெய்யன்-தாச சத்யன்

தேசிகன்- ஆண் பாவனை மாறி-பெண்கள் பேசும் சமஸ்க்ருதம் பாடி-

புரியாது என்று பொதுவான சமஸ்க்ருதம் மீண்டும் அருளி –

ஜகதாச்சர்யர் ஞானம் மிக்கு பிரேம நிலையில்-இவர் ராம பக்தி இப்படி பண்ண வைத்தது

பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் ராமானுஜர்

அடுத்த நிர்வாகம்-கிளி ஸ்தானத்தில் கூரத் ஆழ்வானை

அமுதம்- த்வயம் சொல்லி -தருகிறேன் மீண்டும்

ஸ்ரீ வச்தம்  அம்சம்–இவர் -கௌ ஸ்துபம் குலேசேகரர் -அண்டை வீட்டு காரர்கள் –

திருவேம்கடம்-திரு வித்துவ கோடு-திரு கண்ண புரம்- திரு சித்ர கூடம்-தில்லை –

கை தல சேவை -திரு கண்ண புரம் –

தென் அரங்கம்-பாட -தொடக்கம் இங்கு-சேர்த்து பாடுகிறார் வேறு திவ்ய தேச பதிகங்களிலும் –

யாவரும் வந்து வணங்கும் படி தென் அரங்கம் துயில்கிறவனே -திரு கண்ண புர பதிகம்-

தினே தினே ஸ்ரீ ரெங்க யாத்ரை-ஒலிக்கும் -அங்கு அனைவரும் இப்படி

பேரும் தார்களும் ஊரும் நாடும் பிதற்ற -தன்னை போல் ஆக்கி –

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் -சேர சோழ பாண்டிய மூன்றையும் –

அரசர்-பரம பக்தர் -இதுவே காலஷேமம் -ஆக கொண்டு-

நினைவே போதும்-கீதை அர்த்தத்தோடு சொல்பவனுக்கும் கர்ம ஞான பக்தி யோகி போல் மோஷம் கிட்டும்-கீதை

அவன் திரு உள்ளம் உகப்பே காரணம் –

சக்கரவர்த்தி -வேண்டாம்-கைங்கர செய்ய எதேனுமாக –

பிரம தேசம்மன்னார் கோவில்- திரு நெல்வேலி -பக்கம் -திரு அரசு-

குலசேகரன் படி கட்டு-படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –

அணைய ஊர புனைய -அடியும் பொடியும் படபர்வத பவனன்களிலே -உத்தவர் சுகர் பிரார்த்தது போல் –

திர்யக் ஸ்தாவர  ஜன்மங்களை பரிகிரித்து பாரிப்பார்கள்-

அனந்தாழ்வான் -கட்டு பிரசாதம் ஐதீகம்-நித்ய சூரி-எறும்பாக –

ஆளவந்தார் -பவனம் -புழுவாக ஆசை கொண்டாரே

ஏதேனும் ஆவேனே -குலசேகரர்-பொன் மலையில்-

ச்வாதந்திர அரச பிறவி கூடாது பாரதந்திர ஜன்மம் வேண்டும்

இந்த ஞானம் -ச்வார்ததா விட்டு பாரதந்தரர் ஆக வேண்டும்

11 /10 /9 -யாவரும் வந்து அரங்க நகர் துயில்வான் 8 பதிகம் –

என்று கண்களால் சேவிக்க போகிறேனோ-

இருள் போகும் படி -ஆதி சேஷன்-நீல ரத்னம்- 1000 தலையிலும் –

இன -இரட்டை- அணி பணம்-படம்-பணா மண்டலம்-அரவரச -பெரும் ஜோதி அனந்தன் –

அந்தம் அற்றவனை தன்னுள் சயன வைத்த இவரே அனந்தன்

வெள்ளை அணை- ஆதி சேஷன் -கருப்பாக இருக்கிறதே –

ஸ்ரீ ரெங்க விமானமும் வெளுப்பு -ஆதி சேஷன்

மரகத சுகுமாரன்-உள்ளே சயனித்து -பச்சை நீலம் கருப்பு -மான் தளிர் பச்சை-

வீசி -கருப்பாக ஆக்கி -திரு மேனி காந்தி வீசியதால்-

ச்யாமா ஜீமூத -சகல ஜலதி குடித்த மேகம் போல்-கருப்ப்ப்பு மேகம் போல்  -பட்டர்

 -நம் கண்ணுக்கு பக்தி சித்தாந்ஜனம் இது தான் –அழுக்கு போக்கி ஒளி பிறக்க-பாவனம் கொடுக்க –

நீலக் கடல் கிடந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ-வெள்ளை கடலை நீலமாக்கி போல்

அனந்த போகி இவன்-மாணிக்கம்-உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்து -ரஷித்து கொண்டு –

திரு வரங்க பெரு நகர் தெண்ணீர் பொன்னி -தெளிந்த

தெளிவிலா கலங்கல் நீர் -தொண்டர் அடி பொடி –

சத்வ குணம்-அற்ற பற்றர் சுற்றி வாழும் -அணி அரங்கம்-தெளிந்து தான் இருக்கும்

செயற்கையாக கலங்கி-மாப்பிள்ளை பார்க்க வந்த பொன்னி

தாப த்ரயம் போக்கி-அவனுக்கு சிசுரோபசாரம் காவேரி –

கருமணியை கோமளத்தை-மேன்மை-

ஆதி செஷனுக்கு மட்டும் தான் சேவை

கண்டு கொண்டு

சோற்றை கண்டு மேல் விழும் பட்டினி  இருக்கும் பிரஜை போல் கண்டு கொண்டு –

நாடி நாண் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

அடுத்து -மேல் கட்டி விதானம் ஆதி சேஷன்-

திரு மண தூண் பிடித்து வாயால் தித்திக்க

காயத்ரி மண்டபம் 24 தூண்கள் -பிரணவாகார -9 கலசம்-

ஹரி -ஹ ரி இரண்டு திரு மண தூண்கள்-பாபம் அபகரிக்கும் –

சந்தனம் மண்டபம்

யுகாதி பின் மண்டபம்

கிளி மண்டபம்

 பகல்  பத்து மண்டபம்

ரேவதி மண்டபம்

பல மன்னர்கள் கட்டி-

மேல் கட்டி இருந்தால் தான் நம்பெருமாள் நிற்ப்பார் –

ஆதி சேஷன் அவரே மேல் கட்டி- உமிழ்ந்த செந்தீ -விதானமே போல்

உறகல் உறகல்-இவரை தூங்காதே -பொங்கும் பரிவு

ஹாவு ஹாவு-அசுரர் வார்த்தை நெருப்பு கக்கி மேல் கட்டி

காயம் பூ போல் அன்ன மால்-கடி அரங்கம்-வாயார வாழ்த்த என்று கொலோ –

மண தூணை பற்றி நின்று –

ஸ்ரீமான் சுக துக்க பரந்தப -பெருமாள்- சீதை பிராட்டி-

மூன்றாவது பாசுரம்

பிரமன் போல்வார் வாழ்த்த -அடியவர் உடன் சேர்ந்து வாழ்த்த

ஈர் இரண்டு முகம்-தொழுது ஏத்தி

அடி கீழ் அலர்கள் இட்டு அடியவர் உடன் அணுகும் நாள் என்றோ

அடுத்து

கைகள் மலர் தூவி -கேசி வாய் பிளந்து உகந்த –வேலை வண்ணனை –என் கண்ணனை

குன்றம் ஏந்தி ஆவினை உய கொண்ட மால் ஆயர் ஏறு சௌலப்யம்

அமரர் அதிபதி பரத்வம்

அம் தமிழ் இன்ப பா வட மொழி , இவன் தான்

பற்று அற்றார்கள்-இவனை தவிர வேறு எங்கும் பற்று இன்றி –

கை கூப்பும் நாள் என்றோ ‘

ஜிக்வே கேசவ கீர்த்தனம் முகுந்த மாலை ஸ்லோகம் போல்

அவயவம்  அனைத்தும் -படைக்க பட்ட அவனுக்கு கைங்கர்யம் செய்ய தானே –

மயில் தோகை கண் போல் –அவனை பார்க்க விடில் கேளா செவிகள் செவி இல்லை-பாம்பு புற்று போல்

போகாத கால் மரத்தின் வேர் போல்

தலை வணங்க தானே -கிரீடம் வைக்க இல்லை

அடுத்து இதை சொல்கிறார்

கொண்டு ஏத்த -வேத ஸ்தோத்ரம் கொண்டு-

மதில் உள் பக்கம் சாய்ந்து கோவில்நோக்கி-கருடன்-சிறகு விரிப்பது போல் –

அடுத்து -உள்ளம் என்று உருகும்-பாவனை சொல்கிறார்

அயன் இந்திரன்/நித்யர்/அப்சரஸ்/முனிகள்

/கர்ம பாவனை –பிரம பாவனை-உபய பாவனை-

சனகாதிகள்-மானச புத்ரர் -பிரம பாவனை மட்டும் –நான்முகன்-உபய பாவனை-

ஒளி மதி சேர் திரு முகம் கண்டு கொண்டு

அடுத்து -கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்று

அதர்மம் மனசு ஒழித்து -வஞ்சம்-பிரதி கூலம் மாத்தி

இரு முப்பொழுது ஏத்தி-பஞ்சகால பராயனர்

அறம் திகழும் மனம்-உள்ளோருக்கு கதி –

சாஸ்திரம்-இப்படி கண்ணீர் விடும் பக்தனை சேவிப்பதே பிராப்யம்

அடுத்து –

சூழ்ந்து அவனை காக்க கைங்கர்யம்-பஞ்ச ஆயுதம் போல்-கருடன் போல்

வெற்றி புள்-கொற்றை புள்-கடும் பறவை-காவேரி-முயல் செல் கயல்கெண்டை- திவ்ய தேசம் ரஷித்து –

ரஷகன் அவன் தான் -இதுவும் அவையும் ஒன்றே

இன்ப கலவி எய்து வாழ என்றோ –

அடுத்து

பூதலத்தில் புரளும் நாள் என்றோ –

சித்தரை உத்தர -வீதி சப்த பிரகாரம்-இருந்ததே –

வேலை மோதும் திரு கண்ண புரம்-அங்கும் சப்த பிரகாரம் –

காவேரி பெருக்கால் உள்ளே வந்தார்கள்

ஆராத மனம் -உடன் அழுத கண்ணீர் ததும்ப -புரண்டு-அங்க பிரதட்ஷனம் -வீதியிலே –

அடுத்து உய்ய -தொண்டர் வாழ-அடியார் குழாம் கண்டு இசைந்து இருக்க பெறுவேனோ –

வானகம் அமரர் மண் உய்ய -துயர் அகல-சுகம் வளர –

தென் திசை நோக்கி அன்புடன் பள்ளி கொள்ளும் –

அணி அரங்கன் திரு முற்றம்–இசைந்து அகங்காரம் தொலைந்து –

அடுத்து

கண்ணார கண்டு உகக்கும் காதல்-நாரணன் நலம் திகள் -நாரணன் அடி கீழ் -நண்ணுவார்கள்

வான் புகழ் நாரணன்-வாள் புகழ் நாரணன்-

மணல் திட்டு-காவேரி புலினம்-காத்து இருந்ததாம் இவனுக்கு

நுரை கங்கை பார்த்து சிரிக்கிறாள்–நித்யம் திரு அடி வருடி-தீர்த்தம்-புனிதம்-ஆக்கி

சோலைகளை பராமரித்து -வீதி அலம்பி விட்டு-ஸ்நானம் பாநி தீர்த்தம்-வேத ரகஸ்ய பெருமாளை தூக்கி காட்டும் காவேரி –

மறை க்குள் மறைந்தவனை திடர் விளங்கு  கர பொன்னி-தூக்கி காட்டுகிறதே -ஸ்பஷ்டமாக சேவை

கடல் விளங்கு கரு மேனி -கண்டு உகக்கும் காதல்-குடை விளங்கும் விரல் தானை

-கொடை வள்ளல் -பாசுரம் கொடுத்த வள்ளல் தன்மை

நடை விளங்கு தமிழ் மாலை –

குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பெரி ஆழ்வார் அனுபவம் பார்ப்போம்

இருவரும் திரு குமாரிகளை திரு மணம்- ஸ்ரீ சேர குல வல்லி நாச்சியார் -ஸ்ரீ ஆண்டாள்

பகவத் அனுகூல்யம் நிலைத்து நிற்க அடியார் சேர்க்கை வேண்டுமே -அடுத்த பதிகம் -இதில் அனுபவம்

ததீய சேஷத்வம்-நம  சப்தம் -ஆழ்ந்த யாதாத்மிக அர்த்தம் –

நழுவினாலும் -பகவான் திறுஅடிகளில் விழுவோம்

அங்கே விஷயாந்தங்களில் விழுவோம்

மூன்றாவது பதிகம்- அபாகவாத சகவாசகம் இன்றி -என்பதை அருளுகிறார் .

அவனுக்கு -ஞானிகள் நித்ய யுக்த-என் ஆத்மா -அவனுக்கு பிரியம் என்பதால்

மம பிராணாக பாண்டவ -ஞானி  என் ஆத்மா  இது என் மதம் -பக்தராவி பெருமாள்

பக்தரை ஆவியாக கொண்டு -என்னது உனதாவியிலே அறிவார் ஆத்மா அவன் மதம் தோன்றும்

அறிவார்களுக்கு உயிர் –

இவரோ ஞானி தனக்கு ஆத்மா -கிருஷ்ணா சித்தாந்தம் இது -உபநிஷத் அவன் பரமாத்மா –

மகாத்மாக்கள் விரகம் சகியாமை–மார்த்வம்-வளத்தின் களத்தில் பூரிக்கும்

திரு மூழிக் களம் -பெருமான் காட்டிய திரு குணம்

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே -அன்றே புனித தன்மை அடைகிறோம்

உச்சிஷ்டம் சு பாவனம்

கலத்தது இட்டு –போல்

அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே–என்- துற லாபம் அனைவருக்கும்

உங்கள் நாவுக்கு கண்ணன் சொல்லியே இனிக்க விலை

அவர் கூட -கண் நுண் சிறு தாம்பு-கட்டுன்ன பண்ணிய பெரு மாயனில்-என் அப்பன் – ஈடு பட

அப்பனில்-சொல்லி நினைவு வர –தென் குருகூர் நம்பி –

பக்தர் பக்தன் பின் அவனே

காண வாராய் ஆழ்வார் கதற –

நாத முனி பாட -நதாயா முனியே அதாக பகவத் பக்தி சிந்தையே

ஸ்தோத்ர ரத்னம்- சரணாகதி பண்ண இவர்கள் மூலம்-

தங்கம்-வெள்ளி-ஆச்சார்யர் -பகவான் –

வெள்ளி தானம் கொடுத்த வைபவம்

தங்க தானம் கொடுத்த வைபவம் –

தேட்டறும் திறல் -மெய் அடியார்கள் ஈட்டம்

வன மாலை மார்பனை-வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் -இவரும்

தென் அரங்கன்- தேட்டறும் -நம்மால் -இன்றி காட்டவே காணலாம் –

மணல் வெளியில் -கூட்டம்-நடை பயின்று -நம்மை பார்த்து சேவை-ஸ்ரீ பாதம் தாங்கி-அனைவர்க்கும் தனி அனுபவம் –

திரு மாது வாழ்- வனமாலை-கௌ ஸ்துபம்–துளசி -திரு ஆர மார்பு -பரத்வம்-

ஸ்ரீ வஸ்தம்-மரு -பீடம்-திரு மரு மார்பன் தன்னை சிந்தையுள் வைத்து

தேகம் சரீரம்-கேசம்-ரோமம்-

அச்சு தாலி ஆமை தாலி -ரஷிக்குமாம் உன்னை-சௌலப்யம்

வாட்டமில் மாலை-சாத்தி கொண்டு-

மால் கொள் சிந்தை யாராய் –

பிளந்தது தூணும் -கிளம்பியது செம்கண் சீயம் -மேட்டு அழகிய சிங்க பெருமாள்-

பத்தர் பேசின பித்தர் பேசின பேதையர் பேசினும் -கம்பர்

ஆட்டம் ஏறி-ஆடி ஆடி -சொல்லி பாடி எழுந்தும் பாடி துள்ளி –

கும்பிடு நட்டம் -கை தட்டுவதே -தாளம்-உலோகம் சிரிக்க நின்று ஆடி –

பீத ராக குரோத -விட்டு நித்ய யுக்த சததம் கீர்த்த யந்த

பிரகலாதன்- சீயம் கண்டு ஆடி-மெய்யடியார் -அயர்வு எய்தும் -ஈட்டம் கண்டிட கூடுமேல்

அதுதான் கண் பயன் ஆவதே

கங்கை தீர்த்தம்-ஆசை விட்டு-தொண்டர் அடி பொடி ஆட நாம்பெறில்-வேட்கை விட்டார் இது பெற்றதும்

கடு வினை களையும் –

அவன் செஷ்டிதம் சொல்லி சொல்லி பாகவதர் பிரபாவம் சொல்கிறார்  -இவையே -நினைந்து

ஏவ காரம் ஆடி பாடி அரங்கா சொல்பவர் ஸ்ரீ பாத தூளி பெற்றால் போதும் –

மூன்று நாள் தங்கி சேவிக்க வேண்டும் திவ்ய தேசம் தோறும்

கங்கை கீதை கோவிந்தா காயத்ரி-புனர் ஜன்ம பிராப்தி

வேட்கை என்னாவதே என்கிறார் –

கொன்றை மலர்-பாததுழாய் -கலந்து இழி புனல்

தேவ பிரயாகை இரண்டு வர்ணம் -கங்கை சொன்னாலே ஏற்றம்-பெரி ஆழ்வார்

பாசுரம் சொல்லியே

வில்லி புத்தூர் விருப்புற்று குளித்து இருந்த கணக்காமே

அதே பலன் பெறுவோம்

ஸ்ரீ பாத தூளி மகிமை

திரு முற்றம் சேறு -சென்னிக்கு அணிவனே -அடுத்து

சொல்லி பாடி-பின்னை சரித்ரம்- வராக -ராமன்- மண் அளந்த -அனுபவம் நிரம்ப

பொன்னி பேர் ஆறு போல்

கண்ணா நீர் கொண்டு மண் -கோலம் -சேறு -சென்னிக்கு அணிவனே

மாயன் தமர் அடி –

வெண்ணெய்  உடன் உண்ட ஆய்ச்சி கண்டு –

ஆர்த்த -கண்டு கொண்டாள்- கட்ட கட்ட -தோள்களில் வெண்ணெய் தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி

-நா தளும்ப – அம்மே என்று ஆசை உடன் கூபிடுவதுபோல் நாரணா என –

அடியவர்கள் சேவடி ஏத்தி வாழ்த்தும் -நெஞ்சமே

கரைசல் -கண்டு-

அவனை நினைந்து -திண்ணமான மதிள் -மெய் சிலிர்பவரை நினைந்து

தென் அரங்கன் என்னும் மேகம் திரு உள்ளத்தில் இருக்கும்

ரிஷி பெருமாள வந்தார்

வானமே நீலமாக மாற -மனசு -சிலிர்க்க உருக -ஊற்று வாய்

எற்றைக்கும் எழ ஏழு பிறவிக்கும் அடியாரை ஏற்ற –

தாள்கள் வணங்கி நாள் கடலை களிமினே –

ஆதி அந்தம் அனந்தன் அற்புதன்-

பக்தி இல்லாத பாவிகளும் உய்ந்திட தீதிலா நல் நெறி-சரணாகதி

காதல் செய்யும் என் நெஞ்சமே

தீதில்லாத -நல்- நெறி -சுலபம்- ச்வரூபதுக்கு அனுரூபம்

ச்வாதந்த்ரம் இன்றி -சுலபம்-

எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சம்

அநந்ய பிரயோஜனர் —

வரக்கூடிய மானம் வருமானம் தவிர்க்கும் பிரான்-திரு கண்ண புர பாசுரம்

குந்தி தேவி-வருத்தம் கொடு

அனுக்ரகிக்க சொத்தைபிடிங்கி கொள்வான்

சேர்ந்து கசிந்து -வார நிற்பவருக்கு வாரமாகும் என் நெஞ்சம்

அணுக்கராக -செய்ய வாய் -ஆர மார்பன் –

கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் -தேவ ராஜன்-

கரு நீல மலை-அருவி-ஒளி பட்டு –

புன்னகை–அருவி -வஷச்தலம்-பச்சை ஹாரம்-வெள்ளை மாலை- இடுப்பு –

சுழல்-சௌலப்யம் சௌந்தர்யம்-நாபி கமலம்-தாண்டி போகாமல்–விஷமா கதி

சேர்ந்து கசிந்து காண நீர்களாய் –

கிரீட மகுட சூடாவதம்சம்- மூன்றும் –

சலங்கை-முத்து -ஜல்பிதம்-ஆதி ராஜ்ய ஜல்பிதா -இவனே பர தேவதை -சொல்லி கொண்டே

எளியவன் -கிரீடம் -பரத்வம் ஸ்பஷ்டமாக காட்ட –

மாலை இட்டு இடும் தொண்டர் வாழ்வுக்கு மால் பித்து பிடித்து

அரச வாழ்வு பிடிக்காமல் அடியார் –

வண்டு கிண்டு நறும் துழாய் -தாமரை கண்ணனை -ஆடி பாடி –

கருணை ஆறு பெருக -திரு கண்களில் இருந்து -கரை உடைத்து –

புருவம் மேல் தடுக்க -காதுகளும் தடுக்க –

பிரசன்ன சீத மான திரு கண்கள் –

-மொய்த்து -என் அத்தன் அச்சன் -அரங்கனுக்கு -அடியார்களாகி -பித்தர்

ஆழ்வார் -அமரர் கோன் அர்சிக்கின்று –

பேய் பெண்ணே -பித்தர் ஆம் அவர் பித்தர் அல்லரே -மற்றை யாவரும் பித்தரே –

வாதம்பித்தம் கபம் -மூன்றும் -முறையாக படுத்தும் சரீரம் –

சொல்லின் இன் தமிழ் வல்லார்-தொண்டர் தொண்டர் ஆவார் பலன்

காஷ்டை நிலை அடைய பெர்வார் -எல்லையில் அடிமை திறன் –

அடுத்து -மூன்றாவது பதிகம்

பிரகலாதன்- விபீஷணன்- திருத்த பார்த்து -விலகி

கர்ணன் போல் -இன்றி -நெருப்பு பற்றி -குதித்து தப்புவது போல்

ஆபாச பந்து விட்டு பிராப்த பந்து அடைந்து –

அது போல் குலசேகரரும்–பிரயோஜனாந்த பரர விட்டு -ளைகிகர் விட்டு –

தடுப்பு நீங்க சத் சங்கம் வேண்டும்

தேக ஆத்மா அபிமானி-ச்வாதந்திர புத்தி விட்டு –

விஷயாந்த ஆசை கூடாமல்-

சேர்வதை முன்பு சொல்லி சேராதவரை

வையம் தன்னோடு கூடுவது இல்லை-

மெய்யில் வாழ்க்கையை-நித்யம் இல்லையே -மாறு பட்டு கொண்டே இருக்குமே –

வஸ்து நித்யம்-நிலை தானே மாறும் -அசேதனம் -மாறி கொண்டே இருக்கும் -இதை மெய் என கொள்ளும் வையம் –

யட்ஷன்-தர்ம புத்திரன்- ஆச்சர்யம் எது -பரம ஆச்சர்யம் எது -சேஷாகா -மிச்சம் இருப்பவன்-தூக்கி போகிறவனும் தான் நித்யம் –

மெய்யில் வாழ்கையை மெய்யாக கொள்ளும்

ஐ யனே -நிருபாதிக சுவாமி -ஆசை கொண்டேன்

இடையார் திறத்து நிற்கும்-மின்னிடை மடவார் -கூட மாட்டேன்

அரங்கன் மேல் காமம் வேண்டும் -இடையில் நிற்கிறான்-ஸ்ரீ பூதேவி நடுவில்

சீதா மத்யே சுமத்யமா -அழகிய இடை கொண்டவள் சீதை

பொய்யோ என்னும் இடையாளுடன் இடையில் உடன் போனான் -கம்பர்

மால் இழந்து ஒழிந்தேன் என் தன் மாலுக்கு

நரகாந்தரன் நல் நாரணன் இடம் பித்து கொண்டு -பாரினார் உடன் கொடாமல் –

இச்சா மோகி-மந்திர புஷ்பம்-பீதாம்பர -சாஷாத் மன்மத மன்மத சொல்லி –

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பாருடன் சேராமல் –

வாழ்வதற்கு உண்டு-உண்பதற்கு வாழாமல்

யோகி போகி -ரோகி–கழுத்துக்கே கட்டளையாக –

உண்டி உடையே -கூடும் மண்டலம்-சாருவாக மதம்-முதலில் கண்டனம் -ஈட்டில் –

அண்ட வாணன்-இதை படைத்தவன்–இடம் ஆசை கொண்டு-உன்மத்தம்-காண்பனே

தீதில் நல் நெறி நிற்க -பேதை மணவாளன் தன் பித்தனே -புருஷகாரம் –

சாஸ்திரம் புறம்பாக போவார் இடம் சேராமல் –

ஆதி அரங்கன்-

எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே –

என்னை போல் அல்லாதவர் உடன் சேராமல்

அநந்ய சேஷத்வம் அநந்ய போக்யத்வம் அநந்ய உபாயத்வம்-அறிந்த

யாரோடும் கூடும் சித்தம் தவிர்த்த உபகாரன் —

அவனே அவனே என்று பைத்தியம் பிடிக்க வைத்த உபகாரம் –

அரசனாய் இருந்து இழந்தவனை -தொண்டர் தொண்டர் ஆக்கி –

பித்தனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கு

பேயனாய் ஒழிந்தேன் -பேயரே எனக்கு யாவரும் –

யானும் ஒரு பேயனே இவர்க்கும் -பேசி என் –

சிறை சாலை உள்ளம் வெளியிலும் நடுவில் கம்பி —

ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் –

தனி பெரும் பித்தனாய்  அருளிய இந்த பதிகம் சொல்ல –

-ஏதம் ஒன்றும் சாராது பலன் சொல்லி நியமிக்கிறார்

அவர் பட்ட விசனமின்றி

தங்கு சிந்தை-அநந்ய கதித்வம் –

தேவரையும் அசுரரையும் திசைகளையும்  படைத்தவனே

யாவரும் வந்து அடிவணங்க -அரங்கனாக –

-ஏவரும் வெஞ் சிலை வலவா 8 -10

திக்கு படைத்ததே தான் சயனிக்க தானே -மேலை கீழை வீடு இரண்டையும் சேர்த்து அருளி –

நடந்து காட்ட -அங்கு-சேவை சாதிக்க –

குலசேகர ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ பெரி ஆழ்வாருக்கு நித்தியமே -திரு மஞ்சனம்

நித்தியமே திரு பல்லாண்டு அருளுவார் –

பொங்கும் பரிவு -பட்டர் பிரான்- விஷ்ணு சித்தர்

பட்டார்=வித்வான்கள்-பரத்வம் நிர்ணயம் செய்து உபகாரம் அருளிய பிரான்

விஷ்ணுவை சித்தத்தில் வைத்து –

36 பாசுரம்-4 உதிரி பாசுரங்கள் –

4 -8 /9 /10  மூன்றுமே திரு அரங்கம்

4 -7 தேவ பிரயாகை மங்களா சாசனம்

வல்லப தேவன்-சங்கை தீர்த்து-பரதவ நிர்ணயம் –

ஆடி சுவாதி கருடன் அம்சம்

வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார்

ஆனை மேல்- விஜய கோஷத்துடன் வலம்-

குழந்தை காண கருட வாகனன்-பிராட்டி உடன் வந்து அருள –

திரு பல்லாண்டு

462 பெரிய ஆழ்வார் திரு மொழி பிள்ளை தமிழ்

உன்னுடைய விக்கிரமம் -ஓன்று விடாமல் அனுபவித்து

குழந்தையாக -தாய் பாவத்தில் —

விசேஷமாக அரங்கனுக்கு 36 பாசுரங்கள் அருளி –

சூடி கொடுத்த நாச்சியார் -பெருமாளுக்கே பிரான்-ஆனார்

சுசுரம் அமர வந்தம்–அமரர்கள் அதிபதிக்கு இவரே மாமனார் –

அந்தணர் குலம்-

அன்னம் நடை- ஆசாரம்-ஒழுக்கம் அனுஷ்டானம் –

போகத்தில் வழுவாத -விஷ்ணு சித்தன் –

ஆசார பிரதானன் பெருமாளும் -நம் பெருமாளும்-இவரும் –

கிளி அறுத்தான்-சொன்னாலே -கீழ்மை போகும் வழி அறுப்போம் -தனியன்

பூ சூடல் பதிகம் -இரண்டு பாசுரம்

புழுதி அழைந்த பொன் மேனி-காண அழகு தான்

இவரே தீர்த்தன்-நப்பின்னை காணில் சிரிக்குமே –

கார்த்திகை கார்த்திகை-உடம்பு விட்டு தலை குளிக்க -இவர் அன்றும் இல்லை –

அலங்கார பிரியன் விஷ்ணு -அபிஷேக பிரியன் சிவன்-தலையிலே கங்கை –

மன கமழும் மல்லிகை பூ-அரங்கனை –

நீர் உண்ட கார் மேகம் போல் -ஆதி செஷன்-மலை போல் பள்ளி

கண்காண வந்தாய்-திரு உடையாள் மணவாளா -ஜகத்துக்கு ஈசானி விஷ்ணு பத்னி –

திருவுக்கும் திரு வாகிய செல்வன் –

ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்வாபமும் உன்னால் தானே -அந்தர் பூதை

விட்டு பிரியாமல் அவனுக்குபெருமை சேர்த்து கொண்டு

மாணிக்கம் -ஒளி /புஷ்பம்-மணம் -ச்வாதந்த்ர்யதுக்கு குறை இல்லை-மற்றவற்றால் குணம் என்ற குறை இல்லை

அவனை விட்டு பிரியாமல் -இருப்பதால்

எட்டு புஷ்பம்-அஹிம்சா இந்திரிய நிக்ரக-எண்பகை பூவும் கொணர்ந்தேன்

ஞானம் தபம் சத்யம் அஷ்ட வித புஷ்பம் -விஷ்ணுக்கு பிரிதி கொடுக்கும் இவை –

சீமாலி -அணி அரங்கத்தே கிடந்தாய்- இருமாட்சி பூ-விசேஷம் இங்கு –

ஆறு மாலை-மணியகாரர் மாடு –

நாலு வேளையிலும் மாலை சாதி -கொள்வான் -யார் யாருக்கு நிர்ணயம் உண்டு –

சீமாலிகன்-ஸ்ரீ மாலிகன்-உகந்த தோழன் என்பதால் ஸ்ரீ சப்தம்-

சாமாறு -தன்னையே கண்ணன்-துர் அபிமானம் கொண்டவன் –

அஸ்வத்தாமா பிரம அச்த்ரம்வாங்கி கொள்ள அறியாதது போல் –

சக்கரத்தால் தலை கொண்டாய்

ஆம் ஆறு-அனைத்தயும் அறிந்தவன்-

மா முனிகள்- பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இல்லாத பகுதிகள் மட்டுக்கும் அருளி –

ஏமாற்றம்-அவனுக்கு என்ன ஆகுமோ எண் கவலை போகி –

பத்து புஷ்பம்-அருளி-

அனந்தாழ்வான்  தொண்டர் அடி பொடி குறும்பு அறுத்த நம்பி பெரி ஆழ்வார் மாலாகாரர்

புஷ்ப கைங்கர்யம்

நம்பெருமாள்- சுகுமார திவ்ய மேனி

2 -9 -11 -வண்டு -பாகவதர் இணை அடியேன் தலை மேல்

கிரீடை கள் அருளி -தென் அரங்கன்-பண்டு செய்த கிரீடை-கிருஷ்ணா அவதார

ஸ்ரீ மாலிகன்-இவர் நெஞ்சகம் பால்  சுவர் வழி எழுதி கொண்டார் -புராணங்களில் இல்லை –

வெண்ணெய் விழுங்கி-கண்ணபிரான் பெற்ற கல்வி -பொய் கோபம் யசோதை-

மண்ணை உண்டாய வெண்ணெய் உண்டாயா

வெறும் கலம்-வெற்பிடை இட்டு- இவனே உண்டு –

பாத்ரம் காலியா சப்தம்-ஓசை கேட்டு உகக்கும் கண்ண பிரான் கற்ற கல்வி

நெருப்பு -மேலை அகத்தே வாங்க சென்றேன் -இறைப் பொழுது பேசி நின்றேன்

சாய்த்து பருகிட்டு –

ஜாடையில் மயங்கி இங்கிதம் -கோபி -இதில்மயங்கி கூரத் ஆழ்வான் –

அது உன் செய்கை நைவிக்கும் -அதி பிரியங்கம்

சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து   பருகிட்டு

சாளக்ராம திவ்ய தேச பாசுரமில்லை

நம் கிருக சாலக்ரமம் பாசுரம்-

வளையலும் காணும் –

எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்

3 -3 -2

குடையும் செருப்பும் கொடாமே அனுப்பி-

கோபால வேஷம்-தூசிகள் படிந்த குழல் அழகன் -மாடுகள் மறித்து திரிய –

காதில் -துணி திரி -சீல குதம்பை-துந்து போகாமல் இருக்க –

யசோதை நந்த கோபாலன்-கற்பவதி ஆண் யசோதை பெண் நந்தன்

திரு ஆபரணம் இரண்டும் -இரண்டையும் சாத்தி-பெண் ஜாடை இருக்கிறதே -சாமுத்ரிகா லஷனம் –

குண்டலம்-தோடு மன்னார் குடி இன்றும் சேவை —

கன்னி நன் மா -உன்னை இளம் கன்று -என் குட்டனே முத்தம் தா –

கடை யாவும் -துவர் உடுக்கை

காதில் கடிப்பிட்டு கலிங்கம் உடுத்தி -இவர் யார் இது என் –

என்னின் மணம் வலியால் பெணில்லை-

தர்ம வர்மா திரு சுற்று -கார்த்திகை திறப்பார்கள்-முதல்

ராஜ மகேந்தரன் குலசேகரர்

நான்காவது ஆழி நாடன்-மண்டபம் சமைத்து

உள் திரை வீதி மாட மாளிகை சூழ்

உத்தர

மதிள்களால் சுரஷிதம் என்று -மகிழ்ந்தார் பெரி ஆழ்வார்-அத்தத்தின் பாத்தா நாள் –

எழு திங்களில் -நல் ஐந்து திங்களளவில் காலை உதைத்து சகடம் உதைத்து -கம்ச பயம்-

பொங்கும் பரிவு –

மணிய காரர் -இன்றும் தீர்த்தம் சூடு-திரு அன்னம் –

4 -8 பதிகம்-

அனைவரும் இங்கே -தேனார்திரு கோட்டி-பள்ளிகொள்ளும் இடம்

மாலிரும் சோலை மணாளனும் இங்கே

புனல் அரங்கம்-ஆசார சீலர் வாழும் திவ்ய தேசம் தூய மறையோர் –

ஆள வந்தார் படி துறை -தவராசன் படி துறை-மா முனிகள் திரு அரசு

-பன்றி ஆழ்வான் சந்நிதி 12000 பேர் வெட்டி -முடி திருத்திய –

பாடிய வாளன் படி துறை-அந்திம -சம்ஸ்காரம்

வாள் வலியால் மந்த்ரம் கொண்டவரே வாள் வீச –

மாதவத்தோன் புத்திரன்-உஜ்ஜைன்-சாந்தீபன்-ஆய கலைகள் 64 -கற்று –

ஓதுவித்த தக்கணை-பூர்வ சரீரத்தோடு கொடுக்க -ஸ்ரீ ரெங்க ஆபத்து நீங்க கூரத் ஆழ்வான்

திரு மால் இரும் சோலை-132 ஸ்லோகம் அருளி-

வைதிகன் பிள்ளை மீட்ட சரித்ரம் அடுத்து –

பிறபபகத்தே-இறைப் பொழுது -ஒருப்படுத -உறைப்பநூர் –

மறைபெரும் தீ வளர்த்து -வெளி அடையாளம்-தடுக்கும் போக கூடாத இடம் போவதை –

வரு விருந்து அளித்து இருப்பார்கள்-சிறப்புடைய மறையவர் -காம்ய கர்மம் செய்யாதவர் வாழும் –

பந்து பரிபாலனம்- மருமகன் சந்ததி-பரிஷத்-புனல் அரங்கம் என்பதுவே

அர்ஜுனன்-அபிமன்யு-பரிஷித்–உத்தரை-கற்பம் திரு அடி தீண்டி–

பிரமச்சாரி-சத்யம்-பிரதிக்ஜை-செய்து -குரு முகமாய்காத்தான்-கீதாச்சர்யனாக -ஞான பிச்சையும்

திரு முகமாய் செம் கமலம்-திரு நிறமாய் கரும் குவளை –

புண்டரீகம் தடாகம்-பருகி கொள் பட்டர்

ஞானிகள் ரஷித்து -ரிஷிகள்- பெருமாள் அனுபவம்-நம் பெருமாள் தானே -பெருமாள் –

முன்பு கண்ணன்-பெரிய பெருமாள்

ஆபத்துகளையும் முள்ளை களைவது 1323 1371 வரை நம் பெருமாள்-சுற்றி -பெருமாள் போனது போல் –

லோகம் ரஷிகிறார் அடுத்து -என் திருமால் சேர்விடம் திருவரங்கம்-

கோங்கு அலர குயில் கூவும் –நீர் பதிலாக தேன் குடிக்கும் – மகம் -வண்டினம் முரலும் சோலை –

புராண பிரசித்த தேசம்-

பிரயோஜனந்தர பரர்களை ரஷிக்க-யாழின் இசை வண்டினங்கள்-

தேன் குடித்துதென தென் ரீங்காரம் ஆலத்தி ரெங்கா -கொடுத்து -திருத்துவான் –

மனசு நெருடுமே -வாங்கி கொண்ட பின் –

விடாமல் சேவை கொடுத்து –

தாழம்பு வெண்மை பொடி பூசி வந்து வெண்மை பக்தர் வருவதுபோல்

காவேரி வந்து அடி தொழும்

சந்தனம் சமர்ப்பித்து -தடவரை பால் ஈர்த்து கொண்டு-

பாபம்-அகங்காரம் மம காரம் விரோதி போக்கி

ஜட பொருள்களும் உத்தேசம்-இங்கு

எம்பெருமான் குணம் பாடும்-வண்டுகள்-

நரசிங்கனும் வராகனும் இவனே -மேட்டு அழகிய சிங்கர் காட்டு அழகிய சிங்கர்

நிறமுடைய நெடுமாளூர்

குன்றாடு கொழு முகில் போல் /குவளைகள் போல்

குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்

நான்கும் -குளிர்ந்து –மேகம்- குவளை நெய்த்து- கடல்-இருட்சி-செருந்து

மயில் -பள பளப்பு –புகர்ப்பு பக்தி

நான்கையும் கண்டேன் பெரிய பெருமாள் இடம் –

காற்று மணம் கொண்டு-மன்றூடு தென்றல்-வீச

திருவாளன் திருப்பதி-ஏத்த வல்லார் -அவர்களுக்கு அடியார் –

இதில் ராவணனை முடித்த திவ்ய தேசம்-என்கிறார்

திருஷ்டி தோஷம் பயந்து

பிறர் மினுக்கம்

பெருமாள் விட பலம் மிக்க திவ்ய தேசம் என்று இதை பாடுகிறார் .

அவனுக்கு இதன் நாதன் என்ற பெருமை-

போற்றி-பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி -த்ருஷ்டியால் அங்கும் –

திரு அரங்க தமிழ் மாலை -ஒவ் ஒருபாசுரத்திலும்

நாகை -அச்சோ ஒருவர் அழகிய வா

நாகை அழகியாரை ஒரே பாசுரத்தில் –

ராமானுசா -ஒவ் ஒரு பாசுரங்களில் நாமங்கள் சொல்வது போல் -நாமத்தை மட்டும் சொல்லி

ஒன்றே சொல்லி முடிக்க வில்லை

இரு அரங்கம் எரித்தான் மது கைடபர் .

பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்

பூமி பிராட்டி -நமக்கு உபதேசம் செய்யவே -ஆண்டாள் அவதாரம்-

11 பாசுரங்கள்-அரங்கனுக்கு கோவில் திரு அரங்கம்-பெயர் இல்லை

ஐதிகம் கொண்டு -இதையும்-திரு பாவை-

நம்பெருமாள் நடை அழகை மனசில் கொண்டு -உன் கோவில் நின்று இங்கனே போந்து அருளி –

சிம்க வியாக்ர கஜ ரிஷப சர்ப கதி -ஐந்தும் –

நரசிம்கன்-ராகவ சிங்கன்–யாதவ சிங்கம் -ரன்கேந்தர சிங்கன் -நாம் அறிந்த சிங்கன் –

நம் பெருமாள் பக்கல் காணலாம் –

நிழல் போல்வர் -பூ தேவி நீளா தேவி -எடுத்து கை நீட்டிகள்-வியாக்யானம் –

மல்லி நாடு ஆண்ட மட மயில்-மல் இயலால்- ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு

11 பதிகம்-அரங்கன்

கூடல் இளைத்தல் பாசுரம்-

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் –வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம்

முத்து குறி – தட்டில் அரசி நெல் சோழி பரப்பி-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்

பள்ளி கொள்ளும் இடம்-பிள்ளை அழகிய மணவாள அரையர் –பட்டர் அருளி செய்வார் என்று  சொல்வதாக -ஐதீகம் –

நம் கோவில் திரு அரங்கம் -இதையும் சேர்த்து கொள்ளலாம் –

11 -1 –

விசனம்-அனுக்ரகம் இல்லையே என்று –

இறுதி பாசுர பலன்-நான் பட்ட கஷ்டம் படவேண்டாம்-

ஆழ்வார் பற்றிய நமக்கு சுலபன் –

காரை பூணும் கண்ணாடி பூணும் -அவனுக்கு ஏற்ற அழகி –தன கையில் வளை குலுக்கும் –

கழல் வலை-தனி சிறப்பு -கழலாத வளையல் -கழல் வளையே ஆக்கினரே –

கொள் வளை கொண்டார்-விசனம்

தாம் உகக்கும்-தன் கையில் போலாவோ -என் கை சங்கம் கொள்ளட்டும்

-அவன் கை சங்கம் ஆசை பட்டால் கொடுக்காமல் -இருக்கிறானே –

 -ஆ முகத்தை நோக்காரேல் அம்மனே அம்மனே –

சங்கம் கொடுத்தோமே-பிரணயித்வம்-அவனுக்கு இல்லையா –

கொடுதததுக்கு மறு உதவி

தீ முகத்து -ஆதி செஷன்-பூ முகத்து -நாகணை மேல் -ஒரே பள்ளியில்-படின்று தீ விளித்து எரிக்க

ராம லஷ்மணர் ஒரே குரு

பெயர் மட்டும் திரு அரங்கர்-நண்பனோ தீ முகத்து நாகணை –

பீஷ்மர்-சரபடுக்கைஇருக்கும் பொழுது -கண்ணன் நினைக்க -என் முகம் நோக்க வில்லையே  –

கற்பூரம் நாறுமோ-சங்கரையா உன் செல்வம் சால சிறந்ததே –

வட்ட வாய் நேமி வலம் கையா -கருதும் இடம் பொருதும்

இதுவோ விலகாமல்

உண்பது சொல்லில்-கண் படை கொள்ளில்-வாயது கையது-

சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமல்-அகலகில்லேன் இரையும்

யாமி-வளையல் உடைய -போகிறேன்-ந யாமி -நானே போக வில்லை உன்னை கூட்டி போகிறேன்

பூரிப்பில் பருத்து உடைய -அது போல் இன்றியே -நித்யே வேஷா ஜகன் மாதா –

அல்லி நாட்டு ..ஆரணங்கின் இன் துணைவி நாமோ-

அடுத்து குழல் அழகர்-எம்மானார் என்னுடைய கழல் வலையை கழல் வளையே ஆக்கினரே

இடுகுறி பெயராக இருந்ததை காரண பெயர் ஆக்கினார்

விசனத்திலும் -என் அரங்கத்து இன் அமுதர் –

விட்டு எங்கும் போக முடியாதே –

என்-தேவர் அமுதம்

இன் அமுதம்-தாழ்ந்த

என் அரங்கத்து -இதை கொண்டு அமுதம் கடைய

கண்ணால் பருக-கால்கள் பரப்பிட்டு செவி ஆட்டகில்லா பசுமாடுகள்-கான அமிர்தம் காது குடிக்க அங்கும்

கண் அழகர்-குழல்-வாய்- கொப்பூழில் எழில் கமல அழகர் –

கண்களால் முதலில் ஈடு பட்டு-பின் போக குழலில் சேர

அது சுருண்டு வாய் கரையில் சேர்க்க- மாசுச-வார்த்தை மயங்கி

திரு அடியில் விழ -நடுவில் நாபி கமலம் தடுத்து -தூக்கி-

அரவாகி சுமத்தியால்-பூமகளை – இது அறிந்தால் சீறாளோ திரு மகள்-

விராதன் ஸ்தோத்ரம்-பெருமாளை

உண்பதோ தரிப்பதோ -கோரி பல்லால் ஏந்தி -ஈர் அடியால்-

ஒரு வாயால் ஒழித்தியால்-விராதனுக்கு உயர் கதி கொடுத்தான் -உடனே –

எம்மான்-சுவாமி -அழகை காட்டி அடிமை சாசனம் எழுதி  கொடுத்தேன்

தெள்ளியீர் -வளையல் கொண்டு போனது தகுமோ-கண்ண புர பாசுரம்

அடுத்து-செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்

என் கோல் வளை பெற்றதும் தான் உபய விபூதி கொண்டது போல் -ஆனதாம் –

செங்கோல் இருப்பதை மறந்து என் கோல்

மூலவர்–செங்கோல் -உத்சவம் பொழுது உத்சவர் -முக்கோல் பிடித்த பகைவர் -புறப்பாடு உத்சவர்

ஆஸ்தானம்- மூலவர் இடம் போகும்

உபய விபூதி நாதன்-உடையவர் –

பந்தும் கழலும் கொடுத்து போகு நம்பி-ஆழ்வார்

பந்தாட்டம் நிறுத்தாமல்-பேச-ஈஸ்வர இச்சையால் அவன் இடம் போக

என்னுடைய பந்தும் கழலும் –

நம்மதுஎன்றால் ஏற்று கொள்ள மாட்டார்

இங்கு ஆழ்வார் உடையது என்பதால் அபிமத விஷயம் –

தர்மம் அறியா குறும்பன் –மகா ஞானிகள்-வெண்ணெய் கர ஸ்பர்சம்-சாத்விக அபிமானம் –

என் கோல் வளையால் இடர்  தீர்வர் தாமே -இங்கும் –

புவனியும் பொன் உலகும் -அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற -எம் பெருமான்-

சேர மாட்டேன் என்று உடைய என்னையும் -சேர்த்து கொண்டானே

செம் கோலே ஆள்கிறது உபய விபூதியும் –

அடுத்து -பெய் வளையில் இச்சை உடையவர்-பிச்சை எடுத்து உலகம் கொண்டானே

தெரு வழியாக -அருளாத -வீதி வழியே -கருட வாகனம்

அருளாத நீர் -பட்டம்-அருளி-அவர் ஆவி துவராமுன் -முகத்தில் விழிக்க வேண்டாம்-வீதி வழியாக போனால் போதும்-

அடியேன் சேவித்து கொள்கிறேன்-

–  இடை ஆற்று குடி நம்பி–புறப்பாடு சேவித்து -அங்கேயே -திரு அடி சேர்ந்து -ஐதீகம்

தொட்டாசார்யர்-அக்கார கனியை அடைந்து-தக்கான் குளம் -1543 -1607 மாசி உத்தராடம்-ஸ்ரீ மூஷ்ணம் பரம பதம்

சண்ட மாருதம் அருளி -இன்றும் கருட சேவை-வையம் கண்ட வைகாசி திரு நாள்-

சோரமே ஆள்கின்ற -வீணாகி போக விடாமல்

செம்கோல் ஆளும் –

அடுத்து வாமனன்-போல் என்னை தக்க வைத்து கொள்வார்

வளையல் கொடுத்து மகா பலி பெற்ற-காமரு சீர் அவுணன்-கொண்டாடுகிறார் –

கிருஷ்ணா தர்சனம்பெற சிசுபாலன் கூட ஆகலாமே –

மச்சணி மாடம்-கட்டிட கலை அறிந்தவன்காதல் கற்க வில்லை

பச்சை பசும் தேவர் -தாம் பண்டு நீரேற்ற -பிச்சை குறையாகி –

வளையல் வேண்டும்-அபிமானம்-இச்சை உடையறேல் இத் தெருவே போதேரோ-

வீதிகள்- சித்தரை -அந்த அத்தெருவில் அந்த அந்த உத்சவம் –

திரு தேர் இரங்கி-அதன் வழியே எழுந்து அருளுவார் –

அடுத்து

பொல்லா குறள் உருவாய் -இல்லாதோம் கை பொருள்-

கையில் இல்லாதவள் இடம் கொள்ளை கொள்ள வந்தான்

சாதனான்தரம் இல்லை

ஆதி சேஷ பர்யங்கம் ஏற பாக்கியம் இல்லாதோம்

கேசவ நம்பியை கால் பிடிக்க-

கார்பாண்யம்-கை முதல் ஒன்றும் இல்லை-

அவனை ஒழிய ஒன்றும் இல்லாதோம் –

பொல்லா குறள்-கரி பூசி திருஷ்டி தோஷம்-

அழகு -ஒப்பு சொல்ல ருஷி கரி பூசுகிறார்

தாமரைக் கண்-கரி பூசுவதாம் –பொறாமை வராமல்

சின்னகால் காட்டி-பொல்லா

அளந்தான்-கொண்டான்-அரங்கம்-நாகனை-ஆயாசம் தீர

நல்லார் வாழும்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் என்று இருப்பவர்

சாதநந்தர பிராப்யாந்தரர் இன்றி –

அற்ற பற்றர் சுற்றி வாழும் –அரங்கம்-

மற்று ஒன்றை காணா நினைவு வேண்டும் –

நிஷ்டை மகா விசுவாசம் வேண்டும் –

வரி பருக வேண்டும் -அழகனை –

ரென்கேது ரெங்கன் சந்தரன் போல் –

நளிர அரங்கன்

சொற் பொருளாய் நின்றார் -வேத வேதாந்தம்

மெய் பொருள்- சரீரமும் என்னையும் கொண்டார்

கை பொருள் முன்னமே கை  கொண்டு

வளையலை கொண்டு போன பின்பு

அழுது கொண்டு இருக்கிறாயா பார்க்க வந்தேன் –

காவேரி-ரஷிக்கும் -தன்னுடையவள் இடம் திருடுகிறான் இவன்

தாழ்ந்த பொருளுக்கும் உள்ளே சுலபன்-

நளிர் அரங்கம்- படு கொலை படுத்த -அரங்கன்

புண்ணியம்-பலம் அனுபவித்து கொண்டு இருப்பவர்

[பிராப்ய வஸ்து -கையில்

பரம பதம் வருள் செய்வது ஏன் –

பழகாத இடம் இல்லை

அச்சுவை பெறினும் வேண்டேன்

பட்டரை-வாராய் -அஞ்சினாயோ –

நீர் -பரம பதம் -ஓலை சுவடு கை பொருளாய் -குக்ளிர்ந்த முகம் -இழக்க -அஞ்சுவேன்

கஸ்தூரி நாமம் –

இது ஒரு வளையமே இது ஒரு முறுவலோ

படை வீட்டில் ராஜ்ய சேவை பண்ணி இருந்தாரே-ஆள வந்தார் –

நீ நினைக்க கிடக்கிறது ஏன்

உன் நினைவில் -ஆள வந்தார் ஸ்ரீ பாத -குளிர்ந்து இருந்து இல்லை என்றால் முறித்து கிண்டு வர கடவேன் .

நாசா புன ஆவர்ததே -இடறி தூக்கி போட்டு வரும் நல்ள்ளார்

தாப த்ரயம் போக பரம பதம் போக வேண்டாம் –

காவேரி செய் வளர

அவனே பிராபகம் பிராப்யம் –

தீர்த்தம் ஆடுவதே அனுபவம்

சுயம் பிரயோஜனம்

சீதைக்காகா ரஷித்து -அலைகடலை

இவளை சிரமம் படுத்தி-பெருமை கொண்டவர்-அதற்க்கு நான்தான்

சேராத உளவோ பெரும் செல்வருக்கு –இரண்டு பட்டமும் வாகி கொண்டு

உண்ணாது உறங்காது -ஒழி கடலை உஊடருத்து

பெண் ஆக்கை ஆப்புண்டு -தான் புற்ற பேது எல்லாம்

எண்ணாதே -துன்பம் கொடுத்த அளவை பட்டியல்-பட்டம்-

பூமி போல் பொறுமை/அசங்காத தைர்யம் ஹிமாசலம் போல்

வீரம்-ராவணனை கொண்டு -ஆண்டாள் கதறினாலும் அசங்காமல்

பாசி தூர்த்த -தேசுடைய செல்வனார் பேசி உரைப்பனவும்

பேர்க்கவும்-கல் வெட்டு போல்

பாற் மகள்க்கு பண்டு ஒருநாள்-மாசுடம்பில் நீர் வாரா –

ஈஸ்வர கந்தம் இன்றி-மானமிலா பன்றி

மாய மான்- ராஷச கந்தம் வீச -மான்கள் கிட்டே வரவில்லை –

பன்றி தன்மையும் அவனது -ஈஸ்வர தன்மை போல் –

அபிமானம் உபமானம் இல்லா இரண்டு அர்த்தமும் மானமிலா பன்றிக்கு

தாயார் போல் இவனும் இருக்க -பாசி தூர்த்த அவள்

தேசுடைய தேவர்-விளையாட்டு போல்

ஸ்திதே -அஹம் ச்மாராமி மத பக்தம்-பராம்கதிம்

விபூதி தனக்கு -நத்யஜேயம் கந்தந்த –

கைபிடிக்கும் பொழுது விடமாட்டேன் சொன்ன வார்த்தை

மறக்கவும் இல்லாமல் மனசை கொண்டு

கடியன்- கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்

அடுத்து கண்ணாலம் கோடித்து -பெண்ணாளன் பேணுமூர்

திரு கல்யாணம் –

விரதம் எல்லாம் அவனே செய்து -இதற்க்கு கண்ணன் வந்து –

பெண்ணாளன்-அழகிய மணவாள பெருமாள்

பெரிய பிராட்டி நாட்டிய அரங்கம்

அடுத்து

செம்மை உடைய -நேர்மை-தாம் பணித்த சுக்ருதம் சர்வ பூதானம்-

மெய்ம்மை பெருவார்த்தை- விஷ்ணு சித்தர் கேட்டு-அதன் படி -இருப்பார்

நிர் பரராறாக இருப்பார் -தம்மை உகப்பார் தாம் உகப்பார் மத்யமர்

தன்னை வெருப்பாரை உகப்பார்-உத்தமர் –

சாதிப்பார் யார் இனி

நான் வெறுத்தாலும் ரஷிக்க வேண்டும் –

நல்லாருக்கு தீயன் பட்டன் வாங்காமல் நல்லாருக்கு நல்லான் பட்டம் வாங்கி கொள்

அவன் திரு அடி தீண்டி -குலக் கொடி-கோதாம் அநந்ய சரண்யாம்

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .

ஸ்ரீ அரங்கனை மட்டுமே பாடி

விபர நாராயணர் -இயல் பெயர் இன்றி -தொண்டர் அடி பொடி -இயல் பெயராக ஆசை கொண்டு-

மார்கழி-கேட்டை–வைஜயந்தி -வனமாலை அம்சம்-

கோதண்ட தனுர் மாசம்-மார்கழி

-திரு மண்டம் குடி-அவதாரம்

வேதசாச்த்ரம் கற்று-கைங்கர்யம்-புஷ்ப -பெரிய ஆழ்வார் போல்

ஐதீகம்-அரையர் கொண்டாட்டம்-

கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள்

பதின்மர் பாடும் பெருமாள்-தகாதே-

பத்து புராணங்களில் பாட பட்ட திரு வேம்கடத்தான் –

ஈசி போமின் -இங்கு இரேன்மின் -இருமி இழைத்தீர் -நாசமான பாசம் விட்டு நமன்தமர் அணுகா முன் –

தங்க வட்டில்-பிராட்டி தூண்ட ஆழ்வார் ஆக்க -பிள்ளை பிரதிநிதி என்று சொல்லி கொடுக்க –

அரசன் கனவில் காட்ட -காலில் விழுந்து –

பரம பக்தர் ஆனார் கேட்டதும்-லோக விஷய வைராக்கியம் பெற்று-

அழுகை -கதறி–பாசுரங்கள்-55 -இரண்டு பிரபந்தங்கள்

பக்த அங்காரி ரேணு -தொண்டர் அடி பொடி

திரு நாம சங்கீர்த்தன மகிமை-

திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதார்-

த்யானம் கிருத

யாக யக்ஜம்

அர்ச்சனை

திரு நாம சங்கீர்த்தனம்-கலி-யுகம்-நேராக சேவிக்க முடியாமலதே ஆனந்தம் திரு நாம சங்கீர்த்தனம்

கேசவா ஓன்று சொல்லி கிலேசங்கள் ஆயின எல்லாம் போகுமே

நித்ய நைமித்திக கர்மங்கள் விடாமல்-கால ஷேபதுக்கு திரு நாம சங்கீர்த்தனம்  –

குணம்-நினைவு -பெருமை அறிந்து-பிரபன்னர் –

நளிர் மதிசடையன் என்கோ-முனியே நான் முகனே முக்கண் அப்பா -குழப்பம் இன்றி –

தாள் சடையும் -இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து–ஆராயாமல் அர்த்தம் சொல்ல வாய்ப்பு உண்டு

நாட்டினால்-காட்டினான் உய்பருக்கு

சேவகனார் மருவிய கோவில் -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்

குழப்பம் இல்லை –

வியூகம் விபவம் அர்ச்சை-தெளிவிலும் தெளிவு -அரங்கன் ஒருவனையே அருளி-

தனி மா தெய்வம்

மிகவும் சுருக்கம் இன்றி- மிகவும் விரிவு இன்றி-அடுத்த சிறப்பு –

திருமாலை-பேடிக விவாகம்-

முதல் மூன்று சுய அனுபவம்

அடுத்த 11 பரோ உபதேசம்

அடுத்து 10 எங்கு கிடந்தேன் எங்கு இருக்கிறேன் உபகாரன் நன்றி அறிதல் 15 -24 வரை

அடுத்து பத்து நல்லத்து இல்லை 5 /தீயது நிறைய உண்டு 5 பாசுரம் -இரண்டையும் சொல்லி-

நல்லது இல்லை மட்டும் இல்லை தீமைகள் பல –

நைச்ச்ய அனுசந்தானம்-அவனுக்கு -விட முடியாமல் பதறி- காட்டி கொடுத்தான் மூன்று சரித்ரம்

திரி விக்ரமன்/கோவர்த்தனம்/

38 பாசுரம்-மேம் பொருள் —வாழும் சோம்பரை-த்வய மகா மந்த்ரம்-திரு மாலை ஆகிறது இப் பாட்டு –

அடுத்து ஆறு பாசுரங்கள் -த்வயம் அறிந்த பாகவத பிரபாவம்

சாதி நிஷ்டை பார்க்காமல்-

45 பாசுரம்-பலன் சொல்லி நிகமிக்கிறார் –

காவலில் புலனை வைத்து –நாம பலம் -நாமி பலம் வாலி-

சுக்ரீவன் –

நம் நாமம் சொல்லி வருவார் உண்டா சயனதித்து –

ரஷகம்-திரு நாம சங்கீர்த்தனம் முதலில் சொல்லி -யம பயம் நீக்கி

பச்சை மா மலை-போக்கியம்-

பவள வாய் கமலா செம்கண்-அச்சுதா -அழகன்-நழுவாமல்-

அமரர் ஏறு-இச் சுவை -அச் சுவை பெறினும்  வேண்டேன் -அடையும் இல்லை பெரிய பெருமாள் கொடுக்க போக மறுத்தார்

அங்குள்ளார் இங்கு வந்து சேவிக்க –நான் அங்கு போக வேண்டேன்-

வேத நூல்-பிறவி வேண்டேன்-

பேதை பாலகன் அதாகும்-பெயர் கூட சொல்ல முடியாத இளமை-

இரண்டு விபூதியும் வேண்டாம்

பூ லோக வைகுண்டம்-திரிதிய விபூதி

குழந்தை அன்ன பிராசம் -சிசுவில் சம்பந்தம்

செல்வர் எழுந்து அருளுவதை அனுகரிக்க

இளமை பெண்தேட கோவில்

முதுமை-அரங்கனே வீதியார வருவான்-சம்பந்தம் விடாமல்-

அடுத்து பரோ உபதேத்தில் இலிய 11 பாசுரங்கள் 4 -14 வரை

மொய்த்த வால் வினையும் நின்ற -மூன்று எழுத்துடைய பேரால்-

ஷத்ர பந்து -பராம் கதிபெற்று -திரு நாமம் சொல்ல சொல்ல நல்லவனாக -மாறி-

எந்த மூன்று – ஸ்ரீதர கேசவ மாதவ கோவிந்த -ஆசை தூண்ட -அருளி –

மந்தரத்தால் இல்லை பேரால்-அம்மா கூப்பிட யோக்யதை வேண்டாமே

நியமம் ஆச்சர்ய அனுஷ்டானம் இன்றி ‘

கண்ணன் கழலினை–எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே

திரு மந்த்ரம் சொல்ல வில்லை ஆழ்வாரும் –

எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கம் -நாராயணனே நாரணமே -சொன்னாலும்காட்ட —

ஏன கேவென-கத்யம் –

சுருக்கி சொல்லியும் -பலன் கிட்டுமே –

இத்தனை எளியன்–பித்தனை பெற்றும் அந்தோ -சுரம்-கூட்டி-

நம் அரங்கனாய-நமக்கு என்று கிடக்கிறானே -வசிஷ்டாதிகள் கோகுலா ஸ்திரீகளுக்கு இன்றி –

அரங்கத்திலும் பித்து அடியார்கள் இடமும் பித்து –

அடுத்து -பெண்டிரால்-தொழும்பர் சோறு உகக்குமாறே –

அவன் கொடுத்த சரீரம் அவனுக்கு உபயோகிக்கால்- -இடும்பை பூண்டு-

உண்டியே -மண்டலத்தோடு கூடுவது இல்லையே –

தமர் களாய்  பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதமுண்ணா –

கும்ப கர்ணன்-அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-விபீஷணன்-

அந்த பேரு இப் பிறவியில் இல்லை

அச்சுவை கட்டி என்கோ அடிசில் என்கோ

மரம் சுவர் -ஓட்டை மாடம்- புள் கவ்வ கிடக்கின்றீரே

அறம் =தர்ம சுவர்-சாஷாத் தர்மம் அரங்கன் -ஆள் செய்யாமல்-

மருமைக்கே வெறுமை பூண்டு-

திண்-தர்மம் சம்ஸ்தாபனார்த்த –

விசேஷ தர்மமாக தன்னையே ஸ்தாபித்து

மாம் ஏகம்- விட்ட தர்மம் எல்லாம் தானே சாஷாத் தர்மம்-அறம் சுவர் –

புள் உண்ண கிடக்கின்றீரே -இல்லை

கவ்வ-

அரங்கா சொல்லாத சரீரம் வேண்டாம்-

ஐயனே அரங்கா என்று

நீச சமயங்கள்-புற சமயம்-காண்பரோ கற்பரோ

ராமனே தேவன்-தலை அறுத்து- சத்யம்-

தலையை அறுப்பதே கர்மம் -குறிப்பு என கடையுமாகில்-நோயதாகி போவதே -விலகி போவோம் –

உபன் யாசம்-அருகில் கொண்டு வைத்தல்- கிரந்த காலஷேபம் அடிப்படை

அடுத்து அருளி செயல்-ஆழ்ந்த வேதாந்த கிரந்தங்கள் –

ரஷிக்க தான் -பஞ்ச ஆயுதம் கொண்டு

அவன் அல்லால் தெய்வம் இல்லை -கற்றினம்மேய்ந்த எந்தை கழலினை பணியும்

பரம் திறம் அன்றிபல் உலகீர் வேறு யாரும் இல்லை –

திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்து ஆயர் தேவு –

நாட்டினான் தெய்வம் எங்கும்–கொடியை கொழு கொம்பு நடத்தி பந்தலில் ஏற்றுவது போல் –

-கருட வாகனனும் நிற்க -நல்ல அருளினால் தன்னை காட்டினான்

சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கிறீர்களே –

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்-

செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோவில்-ஆசை பட்டு-

கருவிலே திரு இல்லா -மதிள் திரு அரங்கம் சொல்லாமல் –

நமனும்முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கமாகும்-நின்றார்கள் கேட்க –

-இவ்வளவு பிரபாவம் இருந்தும் -கேசவ-கிலேச நாசன் சொல்லாமல்-இழக்கிறீர்கள்

நாமங்கள் உடைய நம்பி -அவனதூர் அரங்கம் சொன்னாலே போதும் –

பொறியில் வாழ் நரகம் எல்லாம் புள் எழுந்து ஒழியும்

சரத்தை ஒன்றே போதும்-அறிவிலா மனிசர் எல்லாம்-

அறிவிலா மனிசர் -பக்தர் வித்வான் இல்லை- மனிசராக பிறந்தாலு போதும்

வண்டினம் முரலும் சோலை-விலக்கி நாய்க்கு இடுகின்றீரே

ஹாவு ஹாவு போல் ரீங்காரம்

மேகம் கூடினது போல் பிரமித்து மயில் இனம் ஆவும் சோலை

இதை பாத்து மேகம் கூட -கொண்டல் மீது அணவும் சோலை

குயில் இனம் கூவும் சோலை- பித்தர்கள் அனைவரும்

அண்டர் கோன் அமரும் சோலை-அணி திரு அரங்கம் -என்னாது –

மிண்டர் பாய்ந்து -வெட்கம்நன்றி இன்றி-விலக்கி நாய்க்கு

புல்லை திணிமின் இவர்க்கு -மிருகம் தானே -இவர்கள்-

பரோ உபதேசம் முடிய உபகார பரம்பரை அருளுகிறார் அடுத்து

மெய்யர்க்கே மெய்யன்-ஆகும் விதி இலா என்னை போலே

பொய்யற்கே பொய்யனாகும்-ஏ காரம் -வாயால் உடலால் இன்றி-சிந்தையினால் இகழ்ந்த -இரணியனை

உளம் தொட்டு -வார்த்து-மனசு அளவில் நல்ல எண்ணம் இல்லையா -கை விட

மெய்யர்-இப்படி இல்லை- நாவினால் நவிற்று

வெறுப்பு இன்றி அத்வேஷம் இன்றி இருந்தால் போதும்

அழகனூர் அரங்கன்

ஐயப் பாடு அழகை காட்டி போக்கி –

அடுத்து -சூதனாய் கள்வனாய் -மக்களை ஏமாற்றுவது=சூது

அவனை ஏமாற்றுவது =கள்வன் -அறிவுக்கு அப்பால் பட்டவன்-சொல்லி -இங்கு இங்கு -நான் அறிவேன்- சொல்லி

-தூர்த்தரோடு இசைந்த காலம் –

தன் பால் ஆதாரம் பெருக வைத்த

அக வலை படாமல் சுக வலை பட்டு- போதரேல் என்று சொல்லி-புந்தியுள் புகுந்து

அடுத்து -விரும்பி ஏத்தாமல்- கரும்பினைகண்டு கொண்டு

திரு மேனி தரிசனம் பெரிய உதவி -இரும்பு போல் வழிய நெஞ்சம்-

கரும்பு சாறு-பிசுக்கு பிசுக்கு இருக்குமே -வேண்டாம் –

கல்கண்டு-செயற்கை-அதனால் கரும்பு

இனிது இறைத்து திவலை மோத-திரு அடியில் சேர்த்து –

தனி கிடந்தது அரசு செய்யும்-தாமரை கண்ணன் அம்மான் –

அத்வீதியம்-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-

கண்ணனை கண்ட கண்கள்-என் செய்கேன் பாவியேனே –

குண திசை- திக்குகளை ஸ்ருஷ்டிததே இந்த சயனத்துக்கு தான்

உடல் எனக்கு உருகுமாலோ-என் செய்கேன் உலகத்தீரே —

உருக்கம் தூண்டு விட்டவன்-அவன் இடம் கேட்க முடியாதே

மற்ற ஆழ்வார்கள் கேட்க முடியாதே -அவர்களும் உருகுவார்கள்

வடக்கு -திடமான -முன்னிலும் பின்னழகு பெருமாள் –

மாயனார்- திரு நன்மார்பும் மரகத உருவம்

தூய -கமலக் கண்ணன்-அமலங்களாக விளிக்கு -தூய தாமரை கண்கள்

முடியும் தேசும் அடியேற்கு அகலலாமே —

பணிவினால்-மனம் ஒன்றி-அணி-ஜகத்துக்கு

மணியனார்-

நினைக்காத பொழுதும் உபகாரம்

பேசத்தான் முடியுமோ-

பேசினார் பிறவி நீத்தார்- பிறவி முடியலாம் பேசி முடிக்க

ஆசற்றார் உபாயான்தரம் இன்றி

மாசற்றார் -பிரயோஜனந்த பரர் இன்றி

கங்கையில் புனிதமாய காவேரி—எங்கனம் மறந்து வாழ்வேன் –

கங்கா சாம்யம்- ரெங்கன் சயனித்த பின்பு கங்கையில் புனிதமாய –

கிடந்த்ததோர் கிடக்கை கண்ட பின்-

கள்வனார் கிடந்தவாறு-ஏமாற்றி நம்மை கொள்ள –

முகமும் முறுவலும் சேவித்து மீள முடியாதே

கர்ம ஞான பக்தி யோகம் சம்பந்தமே இல்லை-

குளித்து மூன்று அனலை—பிராமணியம் மறந்தேன் –

நின் கண் பக்தன் இல்லேன்-களிப்பது எது கொண்டு நம்பி -கதறுகின்றேன்-

ஒன்றும் இல்லா நீசருக்க தான் இங்கே சயனம் –

போது எல்லாம் போது கொண்டு-பொழுது புஷ்பம்-தீதிலா மொழிகள் கொண்டு – -நெஞ்சம் கலந்திலேன்

அது தன்னாலே ஏதிலன்-

அடுத்து குரங்கள் மலையை நூக்க-அணில்கள் செய்த கைங்கர்யங்களும் செய்ய வில்லை-

நிறைய குரங்குகள்-மலை குறைவு- நூக்கி போயின-

குளித்து தாம் புரண்டிட்டு ஓடி–அணில்கல்குரங்கை விரட்ட -கொத்தனார் சிற்றாள் –

மரங்கள் போல் வலிய நெஞ்சம்–அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அயர்கின்றேன்

கஜேந்த்திரன் கூக்குரல் போல் கூட செய்ய வில்லை-

வியர்த்தமாக தோன்றினேன் —

ஊரிலேன் காணி இல்லை- திவ்ய தேச -உறவுகளும் இல்லை-

கார் ஒளி வண்ணனே  கண்ணனே -கதறுகின்றேன் –

நிர்கேதுகமாக அருள்வாய்

தீமைகள் பலவும் உண்டே –

தூய்மை இல்லை இன் சொல் இல்லை-ரஷனதுக்குதனி மாலை சாத்தி

கோவே -தவத்துளார் தன்னில் அல்லேன் -தனம் தான தர்மம்செய்ய வில்லை-

அவத்தமே பிறவி-நீ தான் கொடுத்தாய் கர்மம் அடியாக பிறந்தாலும் –

தாய் கிணற்றில் விழும் குழந்தை தடுக்காமல்

மூர்கனே மூர்கனே -நான்–வந்து நின்றேன்-

ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் –

லஜ்ஜை இன்றி-

அடுத்து – உள்ளத்தே உறையும் மால்-உடனிருந்து அறுதி என்று விலவற ச்ரித்திட்டேனே –

அழகன்- இது வரை சொன்னது எல்லாம் பொய்-தொண்டுக்கே கோலம் பூண்டு -வேள்வி பொய் –

திரி விக்ரமன்-தாவி -அனைவரையும் தீண்டி –

சிக்கனே செம்கண் மாலே -ஆழ்வார் கண்ணனுக்கு சொன்ன மா சுச -செம் கண் மால் ஆனான் இதனால்

ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் –

கோவர்த்தனம்-அனைவரையும் -அன்று வரை-சோலை சூழ் குன்று -முன் ஏந்தும் மைந்தனே

மதுர ஆறே -நம் இடம் தேடி வரும்கடல் நாம் போகணும்.-உன்னை அன்றே அழைக்கின்றேன்-ஆதி மூர்த்தி நீ தான்

அளியல் நம் பையல்-என்ன அம்மவோகொடியவாறே –

தந்தையும் தாய் ஆவார் –

மணக்கால் நம்பி திரு மகிழ் மாலை மார்பன்-ஐதீகம் -உள்ளே கூப்பிட்டு ரகஸ்ய த்ரயம் கால ஷேமம் செய்தார் –

பெட்டி போல் இது வரை -37 பாசுரங்களும்

அடுத்து மேம் பொருள்  பாசுரம் -ரத்னம் -திரு மாலை ஆகிறது இப் பாசுரம்-

த்வய அர்த்தம் அருளி –

மேல் உள்ள பாசுரங்கள் மூடி போல் –

பருப் பயத்து கயல் -போதித்த பாண்டியர் குல பத்தி போல்

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-

பிரார்திக்காமலே கொடியை நாட்டி- நன்றி தெரிவிக்க வில்லை –

அரையர் ஸ்ரீ சடாரி சாதித்து -மேல் தொடர்வார் –

மேகம் போல் உயர்வு தாழ்வு இன்று பொழியும் போல்-

கோவர்த்தனம்-குன்ற எடுத்த பிரான்  அடியாரோடும் ஒன்றிய சடகோபன்

சமாதானம் அடைந்து -தந்தை தாய் -ஏற்று கொண்டார் –

அடுத்து சரணா கதி பாசுரம் –

வேதாந்தம் போல் சாஸ்திரம்/நாராயணன்/சத்யம்/துவா மகா மந்த்ரம்-ஷேம கரம் வேற இல்லை-தேசிகன்

ஓன்று -சமம் இல்லை

இரண்டு வாக்கியம்

மூன்று கண்டங்கள் -தத்வ த்ரயம்

நான்கு புருஷார்த்தம் -நான்காவது மோட்ஷம் கொடுக்கும்

அர்த்த பஞ்சகம் விளக்கும்

ஆறு சொற்கள் கொண்டது –

எளுய் கடல் மகிமை

எட்டு எழுத்து திரு மந்த்ரம் விளக்கும்

ஒன்பதாவது ஷாந்தி ரசம் கொண்டது -ஆக 1 -9 வரை சொல்லலாம்-தேசிகன் –

ரகஸ்ய த்வ்யத்தால் வியக்தம் ஆகாத ஸ்ரீ சம்பந்தம் –

வாக்ய த்வ்யத்தால் வியக்தம் –

மாம் ஏகம்-ஒருவனையே -ஸ்ரீ விலக்க வில்லை-சேர்த்தே இருக்கும் தத்வம் –

உபநிஷத் -சர்வம் பூர்ணம் சேர்த்து -குணசாலி -சொலி –பூர்வாசார்யர் -இதையே த்வயம் ஆக்கி

சரணாகதி -கைங்கர்யம்  -பிராட்டி சம்பந்தம் இரண்டு இடத்திலும் -உண்டு –

ஒழிவில்-உலகம் உண்ட பெருவாயா

கறைவைகள் -சிற்றம் சிறுகாலே -க்ரமம் படி –

பின் வாக்கியம் சொல்லி முன் வாக்கியம்

வஸ்துவின் ஏற்றம் சொல்லி-சீர்மை அறிந்து அனைவரையும் இழுக்க –

பலம் சொல்லி-பின்பு சரணாகதி

வாழும் சோம்பரை உகத்தி போலும்–

 மேம் பொருள்–அகத்து அடக்கி-வரை ஒரு பகுதி-

மேவுகின்ற பொருள்-மேம் பொருள்-சரீரம்

மெய்மை உணர்ந்து -ஆத்மா தத்வம் உணர்ந்து

ஆம் பரிசு-பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் கைங்கர்யம் -புருஷார்த்தம் இது தானே –

குணங்கள் அனுபவம்–அன்பு மிக -பீரிட்டு எழ -கைங்கர்யம் செய்வது -பரம புருஷார்த்த லஷண மோஷம் இது தான்

ஸ்ரீமதே நாராயண ஆய நாம –

சர்வதேச சர்வ கால சர்வ பிராகாரங்களிலும் சகல வித கைங்கர்யங்களையும் உம் ஆனந்தத்துக்கு செய்ய கடவோம் –

ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம்-பிரபத்யே -திரு அடிகளையே உபாயமாக பற்றி-உறுதி கொள்கிறேன்-புத்தி பண்கிறேன்-

சரணாகதி பல பலன்-வஸ்த்ரம்/கர்ப்பம் காக்க /நாடு பெற /கைங்கர்யம்

அவனுக்கு  நாம் சொல்லும் –மா சுச போல் -கைங்கர்யம் கேட்பது –மிதுனத்தில் –

வழு இலா அடிமை செய்ய -நாம-உன் ஆனந்தத்துக்கு இதுவும் –

பூர்வ உத்தர வாக்கியம்

மேம் பொருள் போக விட்டு–மெய்மையை உணர்ந்தேனே -வேறு பிரயோஜனம் இன்றி

ஆம் பரிசு அறிந்து கொண்டு

ஐம் புலன் அகத்து அடக்கி-பிரபலதர விரோதி இது தான்-

பரண சாலை கட்ட-ஜல வசதி -இட வச்திள்ள இடமாக பார்த்து -சீதை  ஆனந்தம்-என்  ஆனந்தம் -உனக்கு ஆனந்தம் கட்டு-

பெருமாள் சொன்னதும் அழுதானே -நம சப்தார்தம்-

முதல் பாதி பார்த்தோம்-உத்தர வாக்கியம் அர்த்தம் இது வரை-

காம்பற தலை சிரைத்தல்-சரணா கதி –ச்வாதந்த்ர்யம் இன்றி அவனே உபாயம்-தலை சிரைத்தல் -நான் பற்றினேன் –

காம்பற -என்றது -நான் பற்றினேன்- சொல்லாமல்- இந்த துளியும் விட்டு-ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்தல்

அவனே அவன் அடியவனை திரு அடிகளில் சேர்த்து கொண்டான்

உன் கடைத் தலை -இருந்து -வாழும் சோம்பர்

தாழும் சோம்பர்-இன்றி–ஒன்றுமே செய்யாமல் –

கைங்கர்யம் செய்வார்-மோஷம் உபாயமாக செய்யாமல்-

நிவ்ருத்தி மார்க்கம்-மோஷம் உபாயத்தில் நிவ்ருத்தி -கைங்கர்யமாக செய்ய வேண்டும் –

அந்தரங்கரமாக -அர்த்தம் அருளுவர் ரகஸ்ய த்ரயங்களுக்கும் –

அடுத்த ஆறு பாசுரங்கள்-சண்டாளனாக இருந்தாலும் த்வய அர்த்தம் அறிந்தவர் –

அடியரை உகத்தி போலும் -மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை –

அடிமையில் குடிமை இல்லா-சதுர வேதம் -அர்ந்தவர் ஆக இருந்தாலும் -அயல் சதுர் பேதிமார் –

அடிமை தனம் அறிந்தவரே ஞானத்தால் சிறந்தவரைவிட உகத்தி –

விஷ்ணு பக்தி இல்லாமல் சாஸ்திரம் கற்றால்- பிராமணியம் வராது

இடைச்சி பாவம்-29 பாசுரங்கள்-அருளி-அருள் கிட்டும் பிறவியே வேண்டும் –

அடுத்து

மருவிய மனத்தர் ஆகில்-அருவினை பயனது உய்யார் –

பக்தன் -நிந்தித்தால் பொருது கொள்ள மாட்டான்

திரு மரு மார்ப -உன்னை சிந்தித்து —

மாநிலத்து உயிர் கள் எல்லாம்-கொன்று சுட்டு பெற்ற வினைகளையும் பொறுத்து கொண்டு –

பாபானாம் வா -பிராட்டி -வாக்கியம் -திரு அடிகள் இடம்-ராஷசிகளை –

பாபம் செய்யாதவர் யார் -இருப்பவர்களை ஏற்று கொள்ள வேண்டும்

மாதர் மைதிலி -லகுதர ராமஸ்ய கோஷ்டி -சரண் அடையாதவரையும் காத்து –

அருவினை பயன் உய்யார் -இங்கும்

அடுத்து-போனகம் தருவரேல் -புனிதம் அடைவோம் -உயர்ந்த நிலை இன்னும் –

இயற்கை வாசம்- ஊசி போனதை உண்ணக்கூடாது உச்சிடம் கூடாது -ராமானுஜர் கீதா பாஷ்யம்-

விளக்கி-பரம பாகவதர் ஆச்சார்யர்-தந்தை பிள்ளை -அண்ணன்-தம்பி உண்ணலாம்

தருவரேல்-அன்றே புனிதம் -கிட்டும் –

தேவர்களும் அறிவதற்கு அரியவன் -துளவ மாலை சென்னியா -என்பாராகில்-

ஸ்தோத்ரம்-பிறவி விருத்தம் தாழ்வாக இருந்தாலும் போனகம் தருவரேல் –

சரணம் அடைந்த பின் தெரிந்தே செய்த குற்றம் மன்னிக்க மாட்டான்-

சரணம்-பிடிக்காதவை செய்யாமல்- பிடிப்பதை செய்வதே –

விஷ்வக் சேனர் சேஷா அசனர் -சேஷ போஜி-

-திரு முளை-தாயார் சன்னதிக்கு சேனை முதலியாரும் ஆஞ்சநேயரும் -நியமனம் என்ன –

ஸ்ரீ ரெங்கம் செல்வம் சேர்ப்பார்கள் இருவரும்-

அடுத்து –

இழி குலத்து  அவர்கள் ஆகிலும்–நும் அடியர்வர்கள்-ஆகில்-

தொழுமினீர் -கொள்மின் கொடுமின் -நினொக்க வழிபட -ஞானம் பரிமாற்றம் செய்ய –

மிலேசன்னாக இருந்தாலும் -அஷ்ட வித புக்தி-எனக்கு சமமாக -பூஜிப்பாய் அவனே ரிஷி –

தர்ம வியாசன்-மாமிஸ வியாபாரம்-ருஷிகள் -சங்கை கேட்பார்கள்

பாண கவி விஷம்-திரு பாண் ஆழ்வாரை-லோக சாரங்க முனிவர் தூக்கி

அடுத்து –

சாதி அந்தணர்கள் ஏலும் -நுமர்களை பழிப்பர் ஆகில் -புலையர் தாழ்ந்தவர் ஆவார் –

வசுதா-பூமி பிராட்டி -என் இடம் அபசாரம்மன்னிப்பேன்

பக்தன் இடம் ஒரு நிமிஷம் அபசாரம் செய்து பல கோடி அர்ச்சனை செய்தாலும் -மன்னிக்க மாட்டேன் –

பாகவத அபசாரம் அநேக விதம்-அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம்-மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும் –

பெண்ணுலாம் சடை -பிரமனும் -உன்னை காண்பான் -தவம்செய்து -வெள்கி நிற்ப

விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த

அத துவரைக்கு நமஸ்காரம் -சென்று நின்று ஆழி தொட்டானை-

சப்த சக -அடியார் கூக்குரல் கேட்குமா -வாரணம் காரணம் நாரணம் -கஜேந்த மோஷ கதை சுருக்கம்

ஆதி மூலமே -காரணம் -கூப்பிட -லோக விக்ராந்த சரணவ் சரணம்-

மணி பாதுகை சேவை-நம் பெருமாள்-

வைகுந்தமே பதட்டம்-நலம் அந்தமில் நாடு-கும்காரம்-மாட்டு வண்டி காரன் போல்-க ஜம் -குதித்து –

கஜேந்திர வரதன்-அரை குலைய தலை குலைய -முதலைக்கு-நீர் புழு –

மழுங்காத ஞானமே படையாக -தொழும் காதல் களிறு -இந்த அலங்காரம் ரொம்ப அழகாக இருக்கே -பட்டர்-

திரு ஆபரணம் மாறி -கருடனையும் தூக்கி-இந்த வேகத்துக்கு பல்லாண்டு -பகவத் துராயஸ் நம-

ரிஷிகள்-வியப்ப -தபஸ் பண்ணாமல் முதலை வாயில் காலை கொடுக்க வேண்டும் -வெள்கி நிற்ப –

ஆஸ்ரித பஷ பாதி – ஆணை காத்து ஆணை கொன்று-மாயம் என்ன மாயமே –

இதைநம்பி தான் நாம் வாழ்கிறோம் –

பலம் சொல்லி-

கண்ணனை அரங்க மாலை-

பூதனை-கேசி-வில் விழா -மதுரை மா நகரம் தன்னுள்

கவள மால் யானை கொன்ற –பாகமும் மல்லும் தானும்வீழ –

போதை மருந்து உண்டு மதம் பிடித்த குவலையா பீடம்-

துளவ – தொண்டைய தோல் சீர் தொண்டர் அடி போடி -அரசு பட்டம்

இளைய புன் கவிதையேலும் -எட்டாவது ஆழ்வார் -இளைய

புன் கவிதை-வேதாந்தம் அறியாதவன் –

கைங்கர்யம் வைத்தே -சுந்தரபாண்டியம் பிடிப்பார்திரு கண்ணாடி –

தெளிவான பாசுரம்-புன் கவிதை –

எம்பிராற்கு இனியவாறே -உங்களுக்கு பாட வில்லை

குழந்தை மழலை சொல்லை கேட்க ஆசைப் பட்டான் அரங்கன் –

ப்ரீதனாக இருந்தார் -பலன் -எம்பிராற்கு இனியவாறே –

வேறு என்ன பலன் வேண்டும்-பரம பிரயோஜனம் இது தானே

ராமாயணம்-படித்து ராமன் ப்ரீத்தி

திரு மலை-ராமனும் கண்ணனும் ப்ரியம் அடைகிறான்

தூங்கும் அரங்கனை எழுந்த இவர் திரு பள்ளி உணர்த்தும் –

பர வாசுதேவன்-ரென்கேசயன்- எதி ராஜா -போல் -ரெங்க ராஜாவாக கொண்டு –

பிரபோதனம் =எழுப்புதல் சூக்தி மாலை –

 திரு மண்டம்குடி -மன்னிய சீர்-வண்டுகள் சூழ்ந்த வயல் சூழ்ந்த

பள்ளி உணர்த்தும் பிரான்-

விஸ்வாமித்ரர் -ராமனுக்கு

உத்திஷ்ட ஹரி -சாஸ்திரம்

அம்மம் உண்ண துயில் எழாய் -பெரிய ஆழ்வார்

உறங்குவான் போல் யோகு செய்யும் பிரான்-

தசரதன்-கைகேயி-அன்று இரவும் பெருமாள் தூங்க வில்லை

இருந்தும் -காலையில் ராஜா எழுப்ப- வவந்தே கிங்கரர்கள் பாட –

கொடுத்த கைங்கர்யம் செய்வதே செயல்-

கதிரவன் -குண திசை-விஸ்வரூபம்

உதய கிரி-எழு சிகரம்-கண இருள் அகன்றது அந்தகாரம் தொலைய

எதிர் திசை நிறைந்த -தெற்கு திக்கு-வானவர் அரசர்கள் அனைவரும் –

பிரதம கடாஷம் பெற

களிறு-பிடியோடு முரசும்-பசு மாடு-குதிரை நிற்க –

அலை கடல் ஆர்பரிக்க -போல் இருக்கும் –

அடுத்து -ஆனையின் அரும் துயர் கெடுத்த –

குண திசை மாருதம் வீச -முல்லை மணம் கிரகித்து –

அடுத்து-தாரகை ஒளிகுறைய -சூர்ய கிரணங்கள் பரவ –

அம் திகிரி அம் தடக் கை- சக்கர தாழ்வான் -காவேரி தீர்த்தம்-சங்கூதி –

கைலி வைத்து யானை மேல் வெள்ளி குடையும் சாமரமும் –

ஐப்பசி மாசம் தங்க குடம்-

நிர்மால்ய சேவை-அபிமான பங்கமாய் -செம் கண் சிறி சிறிதே எங்கள் மேல் விழியாவோ

பஞ்சாங்க ஸ்ரவணம் விஸ்வரூபம் அப்புறம் -உத்சவம் விபரம்-பக்த பிருந்த கடாஷம் தயார் ஆகுகிறார்

மேதியர்-எருமை மாடுகள்-விடை மணி குரல்-எருதுகள் மணி

சுரும்பு இனம் -வண்டுகள் கூட்டம் –

புலரி=காலை

கலம்பகம்=மாலை

இலங்கையர் கோன் வழிபாடு செய் கோவில்- விபீஷணன்

இரவியர்-ஆதித்யர் விடையவர் -ருத்ரர்கள்

ஸ்கந்தனும் –குமர தண்டம்=கூட்டமான சேனை

12 /11 /8 /2 முப்பத்து முக் கோடி -ஆதித்யர் ருத்ரர் அஷ்ட வசுக்கள் அஸ்வினி தேவர் –

இந்திரனும் யானையும் –

சுந்தரர் கந்தர்வர்கள் நெருக்க -விச்சாதரர் நூக்க –

இயக்கர்=யஷர்கள் -அந்தரம்- இனி மேல் இடம் இல்லை –

சங்க பத்ம நிதி வாயுறை-அருகம் புல்-கண்ணாடி-காட்டி-

படிமக்கலம் -பஞ்ச பாத்ரம் போல்வன -தும்புரு நாரதர் இசை பாட

விண்ணப்பம் செய்வாரும் வீணை வாசிப்பாரும்

இசை திசை கெழுமி-நட்டு முட்டு பல வாத்தியங்கள்- ஓசை வைத்தே அறியலாம்-

திருவடி தொழுவான்  -மயங்கி இருந்து –

நாலோலக்கம் அருள-அவர்களை எழுப்ப -ராஜ தர்பாரில் விற்று இருந்து –

சேர பாண்டியன் வார்த்தை- என்ன சொன்னாலும் நடக்கும் ராஜ சிம்மாசனம்

கதிரவன்-கடி மலர் கமலங்கள் மலர –

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து -தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி –

என்னும் அடியன்அடியவர்க்கு ஆள் படுத்துவாய் –

தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .

காட்டவே கண்ட பாத கமலம்– பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –

திரு அரங்கன் திரு மேனி அழகை தானும் அனுபவித்து நாமும் அனுபவிக்க அருளினார் –

அமலனாதி பிரான்

கார்த்திகை- ரோகிணி -உறையூர் – மிதிளா புரி –

நம் பாடுவான் போல் -பாணர் குலம்-கைசிக புராணம்-

லோக சாரங்க முனிவர்-பக்த அபசாரம்

ரென்கேந்திர சிம்கம்–கோபித்து -முனி ஏறி தனி புகுந்து –முனி வாகன போகம்–

ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பாசுரம்- திரு பிரம்பு -உள்ளே இறுதி பாசுரம்-

நித்ய விபூதி உள்ளே -லீலா விபூதி வெளியில் –

ஊரையும் போரையும் பலம் சொல்லாமல் -முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வார் போல் –

ராமானுச நூற்று அந்தாதி -பாசுரக்ரமம் இதனால்-வருத்தும் புற இருள்-பொய்கை

அடுத்துபூதத்/பேய் ஆழ்வார்/சீரிய நான் பொருள்-பாண் /இடம் கொண்ட கீர்த்தி-திரு மழிசை –

இவர் கோஷ்டியில் சேர்க்க நடுவில் வைத்து –

பூமாதிகரணம்-எதை கண்டால் கண் வேறு காணாதோ -போல் –

என் அமுதினை கண்ட கண்கள்மற்று ஒன்றை காணாவே –

இதனால் பல சுருதி இன்றி-நாம் கண்ணில் படவில்லையே –

பலம்-நாமும் மற்று ஒன்றைகாணாமல் இருப்போம் –

சீரிய நான் மறை  செம் பொருள் –செம் தமிழால் அளித்த -புகழ் பாண் பெருமாள் –

வேதார்த்த -கை விளக்கு -இவர் பாசுரம்-கொண்டே அருளி –

காண்பனவும் உரைப்பதுவும் மற்று – ஒன்றி இன்றி

கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் பாண் பெருமாள் பாடல் பத்தும்

 -பழ மறையின் பொருள் என்று பரவுகிறோம்

திரு மந்த்ரம்-ஓம்கார பிரபவா வேதம்-அர்த்தம் சொல்லவே –

முதல் மூன்று பிரணவம் -அமலன் உவந்த மந்தி -அடி வரவிலே -அர்த்தம்-

அடுத்து நம -சதுர மா -திரு வாயிற்று உத்தர பந்தம்-நடுவில்-

மத்திய சப்த அர்த்தம் -வாய்த்தக திரு மந்த்ரத்தில் மத்யமாம் பதம் போல்

5 -10 நாராயண

உயர்வற /மயர்வற /உத் கீத பிரணவத்தை பிரணவத்தில் மாறாடி –

மார்கழி வையத்து ஓங்கி -போல் அடி வரவிலே ரசம்-

அன்யாபதேச பேச்சு தூது விடுதல்–அநுகாரம் -போல்வன இன்றி-நம்மை பார்க்காமல்-அவனையே பார்த்து

இவர் அனுபவமே பாசுரம் –

திரி மூர்த்தி சங்கை இன்றி-சாமானாதிகரணம் இன்றி தீயாய் நிலனாய் -பாசுரம்-

ஆகாசம் த்யானம் செய்-பிரமம் எங்கு-குழம்பாமல் –கண் கண்ட அரங்கனே -தெளிவாக

திரு மாலைக்கும் தெளிவு உண்டு

லாபம் அலாபம் பேசுவார்-அழுகைக்கு இடம் இல்லை

திரு பல்லாண்டு-மூன்று வகை பட்டவரையும்

நம்மை பார்க்காமல் இவர் பேசி

எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் -பெரிய ஆழ்வார் -இவர் அனைவரையுமே –

அரங்கனே பரவாசுதேவன்-வியூக –

சரீரேச -பய ஜனகம் இன்றி -திரு பாணர் -குலம்-

பகவத் பந்து -சிறந்தவன்-

இருவரும் பக்தர் -பிராமணர் அல்லாதவர்-அகங்காரம்-ஹேது இன்றி-

அடிமை நினைவுடன்-ச்வாதந்த்ரம் அகம்காரம் இன்றி -ஜன்ம சித்த நைசயம் –

ஆரூரட பதிதன் ஆகையால்-மேல் மாடி இருந்து விழாமல்-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் இன்றி –

ஆண்டாள்-பெண் தன்மை ஏற் இட்டு கொள்ள வேண்டாமே -ஜன்ம சித்த ஸ்ரீத்வம்

இதர நிரசனம் இன்றி -திருத்த முயலாமல்-கண்ணை பெரிய பெருமாள் இடம்நோக்கி-

அவரை அனுபவித்து -அந்த அனுபவ சீர்மை அறிந்து அனைவரும் திருந்த வழி –

உள்ளே இருந்து அவனே உபதேசித்து திருத்துவானே -சர்வ வியாபகன்-

பாவோ நான்யச்ச கச்சதி-சிநேகன் பரம -என்கிற படி -அரையர் -அருளுவது புரிய வியாக்யானம் –

என்னை விட சிநேகம் பெரியது -எந்தன் அளவில்-விட பெரிய  உனது அன்பு –அதனில் பெரிய என் அவா –

 பிரமாணம் சொல்லி பாசுரம் கொத்து -அரையர் அருளும் அர்த்தம் புரிய

வியாக்யானங்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும் .-பகவத் விஷயம்-மற்றவை அல்பம்-

என் சிநேகம் பெரியது -தத்வ த்ரயம் விட பெரியது என் தன அளவு அன்று யானுடைய அன்பு –

சேவிக்காமலே அவா பெருகி திரு பாண் ஆழ்வாருக்கு –

விபீஷணன்- சுக்ரீவன் போல் ஒருவர் மூலம் தான் அங்கீகாரம்-இவருக்கும் –

பாகவதர் மூலம் தான் அவனை -அவனும் பாகவதர் மூலமே -சுக்ரீவனை விட்டே அவனை கூப்பிட –

ராவணனே வந்து இருந்தாலும் -கூப்பிட்டு வா -எங்கள் அனைவர் மேல் வைத்த அன்பு எல்லாம் அவர் இடம் காட்டு –

லோக சாரங்க முனிவர் மனசை மாற்றி-இவரைகூப்பிட்டு வர –

கடி மலர் கமலங்கள்–அடியன் என்று அடியார்க்கு ஆள் படுத்தாய் -இங்கு நிறைவேற்றி –

ஆழ்வார்கள்-பேசித்தே பேசும் ஏக கண்டார்கள்-

பொய்கை-திரு மங்கை-துல்யமாக சொல்லி வைத்ததே பேசி-

அடியார்க்கு என்னை ஆள் படுத்திய விமலன் –

ஆபாத சூடம் அனுபூய –மத்யே கவேரே-சயானம் ஹரிம் -ஆனந்த பட்டார் திரு பாண் ஆழ்வார் –

இந்திரியங்களை வசத்தில் கொண்டு வர -மயி சர்வாணி -சுத்த சத்வ மய திரு மேனியில் வைத்து –

பஞ்ச சக்தி உபநிஷத் மயம் -கீதையில்-மிஸ்ர சத்வம்–அனுக்ரகத்தால் ரஜஸ் தமஸ் கழிந்து சத்வம்- முக்தர்

ஞான்பம் மலரும் சுத்த சத்வ திரு மேனி நினைக்க நினைக்க -த்யானம் திரு மேனி

எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்தில் உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்

ஸ்ரீ வைகுண்டமே சுயம் பிரகாசம்- சுத்த சத்வ மயம்-

ரூப ஒவ்தார்யம் திருஷ்டி  சித்த அபகாரம்-அத த்ர்ஷ்டயாம்-மற்றவை கண்ணில் படாமல்-

மனவை-அவரை ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்-பாணர் தாள் பரவினோமே

காட்டவே -அவரே காட்டி -தேர்ந்து எடுத்து -ஸ்வாம் தனு- திரு மேனி விரும்பினவர்க்கு -கண்ட -திரு பாணர் கண்டார் –

பாத கமலம்/நல் ஆடை /உந்தி –

தேட்டறும் உத்தர பந்தம்-

திரு மார்பு கண்டம் செவ்வாய் திரு கண்கள் –

மொத்த திரு மேனி ஒரு பாசுரம் -நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சே

கொண்டல் வண்ணனை  -மற்று ஒன்றை காணாவே

முதல் பாசுரம்- திரு அடி தாமரை-தாயார் மார்பகம் குழந்தைக்கு போல் திரு அடி-பிரபன்னனுக்கு –

திரு ஆபரண மூட்டை சுக்ரீவன்  காட்டி– பெருமாள் கண்ணீர் –

இளைய பெருமாள் -நூபுரம்- மட்டும் அறிந்து -திரு கமலா பாதம்

வந்து என் கண்ணின் உல் ஒக்கின்றதே

திரு சுற்றுகள் தாண்டி உறையூர் -ஆழ்வார்

நான் செம்பளித்த கண்ணை திறந்து -பரகத ச்வீகாரம்-அடைவதும் ஆனந்த படுவதும் அவன் –

அடுத்து சென்றதாம் என் சிந்தனையே –

அமலன்-விமலன்-நிமலன்-நின்மலன் –

தனக்கு என்னை ஆள் படுத்தி அமலன்-

அடியார்க்கு என்னை ஆள் படுத்தி -விமலன்

/பிரார்த்திக்காமல் ஆள் படுத்தி -நிமலன்

/ தன பேறாக -ஆள்படுத்தி -நின்மலன்

அமலன்-குற்றம் போக்கி மோஷ பிரதான்-

ஜகத் காரண வஸ்து -தான் மோஷம் கொடுப்பான்-அதனால் ஆதி -முக் காரணம்

படைத்தல் அழித்தல் காத்தல்- மூன்றுக்கும் –

பிரான்-உபகாரன்-இதை காட்டி கொடுத்ததால் -அடியார்க்கு ஆள் படுத்தி -கேட்காமலே –

வாசு தேவ தனுர் சாயை -போல் ராமானுஜர் சித்தாந்தம் –

சங்கை அனைத்தையும் அழித்து பிரான் –

தூ மணி -போல் நல்ல வஸ்து அடியார்க்கு -துவளில் மா மணி தனக்கு வைத்து கொள்வான்-

தன் பேறாக செய்து கொண்ட -நின்மலன்-

விண்ணவர் கோன்-அளப்பரிய ஆரமுது-விரக்தி-திரு வேம்கடம்-வடக்கு வாசல் வழியாக உள்ளே புகுந்தார் –

ஸ்ரீ வைகுந்தம்-மதுரை-ஆய்ப்பாடி

வைகுந்தம்- திரு வேம்கடம்-திரு அரங்கம்

நீதி வானவர் -சேஷத்வம் பாரதந்த்ர்யம் அறிந்தவர் இருக்கும் பரம பதம்

நீள் மதிள் அரங்கத்து அம்மான் –

திரு பாதம்-பரம பாவனம்

கமல பாதம்-போக்கியம் -சிவந்த திரு அடிகள்-

பிராட்டி- அடி வருட-

அரசர் கிரீடம் ரத்ன ஒளி பட்டு ஏறி-சிவந்து

பிராட்டி-செய்யாள்- திரு கை சிகப்பு ஏறி

ஆழ்வார் திரு உள்ளம்-ராகம்-பக்தி-சிகப்பு -மனோ நிவாசம் -சிகப்பு ஏறி –

கமல பாதம் இதனால்  ஆனதாம் -இயற்க்கை நீளம் –

அரை சிவந்த ஆடை இழுக்க – என் ஒளி வீசி தான் சிவந்தது

உவந்த உள்ளத்தனாய் -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்-

புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –

முதலில் அ காரம்-ரஷிகிரான்-நீதி வானவன்

உ காரம்- அவனே உலகம் அளந்த அண்டம் -நிமிர்ந்த நீள் முடியன்-

திரு முடி பல்லாண்டு -யார் காலில் விழ -சறேவேச்வரன்-இவன் தான் கட்டும் திரு அபிஷேகம் –

கிரீட மகுட சூடாவதம்ச

சபரி கொண்டை /பாண்டியன் கொண்டை/ ஒவ் ஒருநாளும் ஒரு வித திரு முடி

திரு விக்ரமன்–சேஷ சேஷி பாவம்-காட்டிய

நேர்ந்த நிசாசரரை-கவர்ந்த

ஆயாசத்தால்-சிரமம் தீர அரங்கத்து அம்மான்-

காவேரி அலைகள் தட்டி சிச்ருஷை — பொழில் குளிர வைக்க -ஆராமம்-சூழ்ந்த அரங்கம்-

மின்னல் ஒட்டியொளி- திரு பரிவட்டம் பட்டு தெறிக்க

நூபுரம்- வீர கழல்- அகங்காரம் -படபடக்குமாம் -கரு நீலம் -கரும் பச்சை- பீதக ஆடை –

செவ்வரத்த உடை யாடை -அதன் மேல்  ஓர் சிவளிகை கச்சு   என்கின்றாளால்  -பொருந்தி -இத்துடனே தோன்றியது போல் –

முடி சோதியாய் முக சோதி –

படி சோதி ஆடையோடும் -பல் கலனே -திரு மாலே கட்டுரையே

உந்தி தாமரை- இழுக்க -பாட ஸ்ருஷ்டிததே நான்

மந்தி பாய் -எழில் உந்தி மேல்

வட வேம்கட மாமலை- வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரங்கத்து அரவின் அணையான்-

இன்னும் பழையது பிடித்து இழுக்க -அந்தி போல்நிறத்து ஆடையும்-அதன்மேல்- இழுத்து

-அயனை அடைத்த தோர் எழில் உந்தியோ

பிரசவிக்க பிரசவிக்க எழில் கூட -பூவின் நான் முகனை படைத்த தேவன் –

சென்றது உள்ளத்தின் உயிரே  –

அரையர் ஐதிகம் -வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரவின் அணை-அவனே நீர் –

கடல் கரையில் சயநித்தது போல்- முமுஷு கிட்டுவானா –

திரு மார்பு பிடித்து இழுக்க –

உதர பந்தனம் -எளியவன் தாமோதரன்-உந்தி தாமரை பரத்வன் –

என் உள்ளத்துள் வந்து உலாவுகின்றதே

தலை பத்து உதிர ஒட்டி- ஓத வண்ணன் –

வண்டு பாட மா மயில் ஆட -பாட்டு ஹாவு ஹவுபோல் வண்டுகள்-ரீங்காரம்-

மூன்று மடிப்புகள் உத்தரத்தில்- த்ரிவித  தத்வம்-பக்த முக்த நித்ய –

பிரத விபூஷணம்-உதர பந்தம்-பட்டம்-பரம சுலபன்-

நஞ்சீயர் திரு திரை நுழைந்து பார்த்த ஐதீகம்-தாம்பு தழும்பு -பார்க்க –

திரு மார்பு -பரத்வமும் சொவ்லப்யமும் பிராட்டி சம்பந்தத்தால்-

லோக நாத மாதவ பக்த வத்சல்யன்

மா மாயன் மாதவன் வைகுந்தன்

பழ வினை பற்று அறுத்து -என்னை தன் வாரமாக்கி-பிராட்டி பக்கம் வைத்து

வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்

கோர மா தவம் செய்தனன் கொல்- அவன் செய்த தவம்  ஆற்றம்கரை -சயனித்து –

திரு ஆற மார்பு-ஹாரம் போல் திருவே அவனுக்கு  திரு ஆபரணம்

அடுத்து கழுத்து -ஆபத் சகத்வம்- முழுங்கி –

கனக வளை முத்ரை-விஸ்வரூபம் -சேவிக்கும் பொழுது –

முற்றும் உண்ட கண்டம் கண்டீர் என்னை உயக் கொண்டதே

பிறையன்- ருத்ரன் கபால சாபம் தீர்த்து

பிறையின்- சந்திர தோஷம் தீர்த்து

முமுஷு -தயார்- சிறகுகள் கொண்ட வண்டுகள்-ஞான கர்ம ஆச்சார்யர்கள் நிறைந்த அரங்கம்-

சப்த குல பர்வதம் சேர்த்து உன்பிட கண்டார்

திரு வாய் -மாசுச சொன்னது /வராக -ஸ்திதே /ராம சக்ருதேவ –

செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்தது-அனுபவிக்க இருந்த நெஞ்சம் போனதே

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளை -ரேகை/காட்ட கண்டாரே

 நான்கு திரு தோள் உடன் சேவை-

அணி அரங்கனார்- அரங்கம் பூமிக்கு அணி-அரங்கன் அரங்கத்துக்கு அணி

மாயனார்-எப்படி -சயனம் அறிய முடியாத மாயம் –

சரம ஸ்லோகம் சொல்லமுடிந்தது இங்கு தானே

கண்கள் பிடித்து இழுக்க -அமலாய தீஷன  –

தூது செய்ய -அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் –

வாய் பொய் சொல்லும்-கண் சொல்லாதே –

நீண்ட அப் பெரியவாய கண்கள்-

வரம் கொடுத்து கொழுக்க வைத்த பரியனாக வந்த அவுணன்- உடல் கீண்ட –

ஆதி பிரான்-முதலில் ஆதி-

நரசிம்கன்-ஒரு தூணில் ஒரு பிரகலாதனுக்கு  ஒரு நிமிஷத்து தோன்றிய -நரசிம்கன் –

நீலமேனி ஐயோ- தம் கண் எச்சில் படுமே –

லாவண்யம்- கப்பல் போல் தானேகூடி போய் காட்டும்

மணி ஆரமும் முத்து தாமமும் -முடிவில்லதோர் எழில் மேனி –

திரு -பிரம்புக்கு உள்ளே

கொண்டல் வண்ணன்-கோவலன்-வெண்ணெய் உன்னட வாணன் –

அணி அரங்கன் என் அமுது

கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா

காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி –

அழகு/ஒவ்தார்யம் இல்லையா/கோவலன்-சௌசீல்யம்

வெண்ணெய் உண்ட வாயன்- நெஞ்சம் அபகரித்தவன்

அண்டர் கோன் பரத்வன்

அரங்கன் சௌசீல்யம்

அமுது போக்கியம்

எதனால் விடுவது -காரணம் இல்லையே

திரு மங்கை ஆழ்வார் 73  பாசுரங்கள்  இனி அனுபவிப்போம் .

திரு பாண் பெருமாள் திரு அடிகளே சரணம் .

திரு மங்கை ஆழ்வார் அரங்கன் அனுபவம்

திரு குறையலூர் -நீலன் இயல் பெயர் –

மங்கை நாடு-ஆலி நாடன்-கள்ளர் குலம்

86 திவ்ய தேசம் மங்களா சாசனம் செய்து –

47 இவர் ஒருவரே மங்களா சாசனம்

திரு வெள்ள குளம்-அண்ணன் கோவில்-ஸ்வேத புஷ்கரணி –

குமுத மலர் கொண்டு-தேவ ஸ்திரீ -வைத்தியர் -வளர்க்க -குமுத வல்லி பெயர் இட்டு –

பஞ்ச சம்ஸ்காரம்–ஒரு ஆண்டு ததீயாரதனம் -செய்து –

ஆடல் மா குதிரை-பர காலன்-பரனுக்கே காலன் –

ஸ்ரீ தேவி-திரு வெள்ளறை

நீளா தேவி-நாச்சியார் கோவில்-திரு நறையூர்

ஆண்டாள்-பூ தேவி  நாச்சியார்

வாடினேன் வாடி தொடக்கம் இன்று  -அரையர் சேவை-தொடக்கம்-

திரு நறையூர் -ஒத்தின திரு கைகள் உடன் சேவை இன்றும்-

மங்கை மடம்-தினம் திரு ஆராதனம்-நடந்த -வாழை இலை திருத்தின இடம்

-திரு மணம் கொல்லை – வேத ராஜ புரம் -வேடு புரி-செய்தி சொல்லும் உத்சவம் –

தேவ பெருமாள் சொப்பணம்-சிறையில் இருந்த பொழுது -வேகவதி ஆற்றம் கரையில் காடஈ கொடுக்க

மண்ணை திரட்டி பொன் ஆக -அரசன் இவர் மகிமை உணர்ந்தான் –

நீர் மேல் நடப்பான்-நிழல் மேல் நடப்பான் -தாள் ஊதுவான் தோளா வழக்கன்-நால்வர் –

௧௧-௫௫ கோவில் கதவு திறந்து -செய்தி கிட்டி- விரைவாக பறந்து போவார் தீ பந்தத்துடன்-

மூன்று பிரதஷினம்-பல்லக்கு கீழே -கத்தி எடுத்து -திரு ஆபாரணம்-பல்லால் கடித்து -நம் கலியனோ-மிடுக்கு-

மந்திர வாதம்-சொல்லு -வாள் வழியால் மந்த்ரம் கொண்டவர் –

கொடுக்கத்தான் வந்தோம் –

அரச மரம்-தெய்வ அரசு-ஆலி நாட்டுக்கு அரசர்-மந்திர அரசு-திரு மந்த்ரம் ஓத

மடி ஒதிக்கி -அணைத்த வேலும் தொழுத கையும் -செவி சாய்த்து –ச்வாதந்த்ரம் காம தொலைந்து

சேஷத்வம் பாரதந்த்ர்யம்–வாடினேன் வாடி-நாடினேன் நாடி யூஅ நான் கண்டு கொண்டேன் நாராயண நாமம்

குலம் தரும் -1084 பாசுரங்கள்-பெரிய திரு மொழி-ஆறு அங்கன்கங்கள்-

கார்த்திகை கார்த்திகை-

திரு பிரிதி-பதரி காச்ரமம்-20 பாசுரங்கள் -/சாளக்ராமம்/–திரு வேம்கடம் -40 /–திரு அரங்கம்-

58 பாசுரங்கள் அரங்கன் மேல் பெரிய திரு மொழி -5 பதிகம் 5 -4 /சேர்ந்த 5 -8 வரை -மீதி உதிரி -மின்பு 2 பாசுரங்கள்-பின்பு 6

திரு குறும் தாண்டகம்-4-திரு எழுகூற்று இருக்கை-சரண் ஆரா அமுதன்-/தாபம் ஆர்த்தி விரகம் வெடித்து

சிறிய திரு மடல்-விபவம் அழிக்க-பெரிய திரு மடல் அர்ச்சை அழிக்க -ஒவ் ஒன்றிலும் ஓன்று –

திரு நெடும் தாண்டகம் -9 பாசுரங்கள்

ஆக மொத்தம் 73 பாசுரங்கள்-

இரட்டை சம்பாவனை திரு நறையூர் -திரு கண்ண புரம் -100 பாசுரங்கள்-

இவர் கண்ண புரம் சொல்லி -எம்பெருமானார் சோமாசி ஆண்டான் திரு வேம்கடம்-அனந்தாழ்வான்

பட்டார்-அழகிய மணவாளன் -தொலை வில்லி மங்கலம்-நம் ஆழ்வார் போல்

பாடுவித்த முக் கோட்டை இருக்கிற படி -கீழ வீடு-ஸ்ரீ ரெங்கம் மேல் வீடு  -காட்டில் வேம்கடம் –

1 -8 -2 –

பள்ளி யாவது பாற்கடல் அரங்கம்–திரு வேம்கடம் சேர்ந்து அனுபவம் இதில்-

இலங்கை  அரக்கன் வென்ற ராமனாக புகுந்த -அரங்கன்-தெற்கு வாசல்- வழியாக புகுந்து

வடக்கு வாசல் வழியாக புகுந்தார் திரு வேம்கடத்தில் இருந்து –

பாற் கடல் வியூக வாசுதேவன்-அரங்கன்- வியூக சொவ்கார்தம் பிரதானம் இங்கும் -பூலோக ஸ்ரீ வைகுண்டம்-திவ்ய தேசம்-

பெருமாள் வியூக வாசுதேவன்- யோகு செய்து கொண்டே பள்ளி கொண்டவன்

பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை–வளர்ந்த இடம்-திரு வேம்கடம்

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்- என்று எண்ணி நாள் தோறும் தெள்ளியார் -வணங்கும் மலை திருவேம்கடம்-

பாலின் நீர்மை–நீல நீர்மை /நிறம் வெளிது பாசுரங்கள்  போல் –

3 -8 -2 திரு ஆலி பதிகம்-நாயிகா பாவம் -பாசுரம்-

கள்வன் கொல் யான் அறியேன்–அணி ஆலி புகுவர் கொலோ –

என் துணை -என்று எடுதேற்க்கு இறை யேனும் இறங்கிற்று இலள்-

தன் துணை -முகம் காட்டாத அவன் -வந்ததும் உடன் சென்றாள் –

வந்தது கர்மாதீனம் போவது கிருபாதீனம்

அனுபவித்தே ஆக வேண்டும் –

அடி தோறும் அர்ச்சை சேர்ப்பார் பிடி தோறும் நெய் சேர்ப்பது போல் –

மென்மை-மலையாள ஊட்டு போல் நம் ஆழ்வார் -தூது விடுதல் முழுவதும் முடியாது

தூ விரிய -நான்கு பாசுரங்கள் அடுத்து நேராக பார்த்து -ஒ மண் அளந்த தாடாளா – கூக்குரல் இட்டு கதறுவார் –

அரங்கத்து உறையும் இன் துணை உடன் -ஆலி புகுவர் கொலோ

இன் துணை போக்யத்வம் உறையும் -நித்ய வாசம் -சௌலப்யம் சாந்நித்யம் –

மதிள் கைங்கர்யம்-பகல் பத்து ஏற்பாடு செய்து -நான்காவது திரு சுற்று-ஆலி நாடன் அமர்ந்து உறையும் திரு வீதி –

திரு நெடும் தாண்டகம் -அரையர்-பெரிய பெருமாள்  முன்பு விண்ணப்பம் செய்து -தொடங்கும் –

பராங்குச நாயகி திருகோலம்-7 நாள் -/பரகால நாயகி கேட்ட படி-திரு கை தல சேவை இரண்டும்-

தொண்டைக்கு எண்ணெய் காப்பு -சாத்தி-அத்யயன உத்சவம்-

திரு பல்லாண்டு -தொடக்கம்-தை ஹஸ்தம் -நவ திருப்தி-அத்யயனம் பின்பு -உத்சவர் திரும்பி போனதும் –

ரா பத்து நடக்க -நாத முனி -பகல் பத்து –

வாள் எறிந்து -உயர் கதி- பாடிய வாளன் துறை-தசாவதார சந்நிதி ஏற்படுத்தி

–5 -4 -1 –

உந்திமேல் நான்முகனைபடைத்தான்-வயல் சூழ் தென் அரங்கம்-

உலகு உண்டவன்-எந்தை பெம்மான்-இமையோர்கள் தாதைக்கு இடம்

நித்ய சூரிகள் நாயகனே திரு அரங்கத்தில் சயனம் -ஆபத்சகன் –

அடுத்து வையம் உண்டு -இடம் என்பரால்-ஆஸ்ரித செஷ்டிதன்-ஆல் இலை உள்ளா –

ஆல் இலைமேவும் மாயம்-மணி நீள் முடி-பை கொள் நாகத்து அணையான் -திரு முடி ஸ்பர்சத்தால் பணைத்த –

சீர் சேர்க்க காவேரி தாயார்

பண்டு -நீர் கொண்ட குறளன்-வையம் அளப்பான்-

ஆழி தடக்கை-குறளன்-சுதர்சன்- ஆழ்வார் பிடித்த கையா இப் பொழுது  பிச்சை எடுப்பது –

சக்கரம்-சொல்லி குறளன் சொன்னது – – சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளிய சக்கர கையன் –

மாணியாய் நிலம் கொண்ட மாயன்-

விளைத்த   வெம் போர் விறல் வாள் அரக்கன் -சந்த்ரகாசம்-ராவணன்

வளைத்த வில்-ராவணன் உடல் பட்டணம் அழித்து -மனச -இந்திரியங்கள்-அகங்காரம் மம காரம் ஒழித்து

 -நாள் வாள் கொண்ட அகங்காரம் -வாணன் –

வம்புலாம்  கூந்தல் மண்டோதரி-காதலன் வான் புக -அம்பு தன்னால் முடித்த அழகன்-வீரன்-

அழகுக்கு தோற்றாவது ராவணன் உய்ந்து இருக்கலாமே –

அன்புடன் காதலிக்க வந்த சூர்பனகை காத்து மூக்கு வெட்டனுமா மடலில் கேட்டார் –

புருஷோத்தமன்-பெருமாளால் கை விட பட்ட கோஷ்டி என்று கூட்டு சேர்க்கிறார் –

உம்பர் கோனும் வந்து சேவிக்கும் அரங்கம்-

சு தட விஷபராசி-மரங்கள்-கதலி -போல்வன -காவேரி கொண்டு சேர்க்கும் திரு அரங்கம்-

தனக்கே -என்று முலை கொடுத்தாள் உயிர் கொண்டவன் -பால்ய சேஷ்டிதம்-செய்ய விட்டில் பூச்சி போல் அரக்கர்

ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு –

தாய்-பே முலை வாய் வைத்த பித்தர் என்றே பிறர் எச நின்றாய்

உழலை என் பின் பேய்ச்சி –

வினை போக்கி கொடுக்கும் திரு அடி-மஞ்சு சேர்-ஆகாசம் வரை போகும்மாளிகை –

அகில் புகை- வேள்வி புகையும்-சேர்ந்து ஆகாசம் மறைக்கும்

கஞ்சன் நெஞ்சும் –சகடாசுரன்-அவனுக்கும் ரஷகம் அவன் திரு அடிகள் தானே -திரு காலாண்ட பெருமான் –

அவதாரம் சேவிக்க இழந்தவர்-தேன் பால் கன்னல்  அமுதும் கலந்த -இன்பம்- அவதாரங்கள் அனைத்தும் அரங்கன்-

மீனாய் -அரியும் சிறு குறளும் தானுமாயா -தென் அரங்கமே -சஜாதீய விஷயங்கள் கலந்த –

சேயன் என்னும்-மிக பெரியன்-மாயை அறியா -உள்ளும் புறமும் வியாபித்து இருக்கும் மாயம்-

ஒருவனை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே -நீக்கமற நிறைந்து –

தென் ஆனை வட ஆனை மேற்கும் கிழக்கும் ஆனை- எல்லை காவல்-

உடன் மிசை உயிர் என்ன கரந்து எங்கும் பரந்துளன் –

இப்படிஇருந்தும் நம சொல்லாமல் தப்பி -நாம் இருக்கிறோம் –

வழியார முத்து இறைக்கும் காவேரி-

பலம் சொல்லி -உலகாண்டு பின் வான் உலகம் ஆழ்வாரே –

அல்லி மாதர் அமரும் திரு மார்பன்-ஸ்ரீ வத்ச லஷ்மி உண்டு -ஸ்தாபித்து சம்ப்ரோஷனம் –

அடுத்து தாய் பாசுரம்

 வெருவாதாள் -வேம்கடமே வேம்கடமே என்கின்றாளால் -பட்டர் ஐதீகம்-

வெம் பள்ளி ஆனது -வண்டார் கொண்டல் உருவாளன்-வானவர் தம் உயிர் ஆளன்

என் மகளை செய்தன

கலை யாளா -இடுப்பில் -நிற்க வில்லை-அகல்குள் கை வளையும் வளை ஆளா –

என் ஜீவனம் இதுஎன்றோ -பாகவத பெண்- முகத்தை கழற்றி வைத்து கூட்டி போய் இருக்க கூடாதா –

அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ=-சேஷத்வம் நிறம் பெற கைங்கர்யம் கொடுப்பாயா

விலையாளா -என் தம்மை விற்க்க்கவும்பெருவர் –

அத்யவாச்யம்-மிக்கு -கிடைக்குமா துடிக்கத்வ்ரைமிக பண்ணி

பிராப்யத்தில் த்வரை –

என் மகளை செய்தனகள் அறிகிலேன்–

வெண்ணெய் களவு போல் பரகாளி களவு கொண்டான்-

தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற -இதற்கே நந்தன் பெற்ற –

சூட்டு நன் மாலைகள்-வெண்ணெய் உண்ண தான் –

தாய் வாய் சொல் கேளாள்– எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்- நிருபாதிக பந்து

வெளியில் இருந்து பாடும் பாசுரம்-

என்மகளை செய்தனகள் அறியேன்

பூவை பேணாள்-எத்தைனையும் திரு அரங்கம் எங்கே என்னும்

ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அறியேன் -இறங்க வில்லை-இரங்கவும் இல்லை

தாழ விட்டு கொள்ள வில்லை கருணையும் காட்ட வில்லை –

துஷ்கரம் க்ருதவான் -ராமம்-சீதை கண்டதும்-பிரபு ஆனா படியால்-

 மற்றவர் வருத்தம் அறியாத ரெங்க பிரபு

பெண்ணின் வருத்தம் அறியாத பிரான் –

வனமாலை தாரானோ-தூதன் செய்தனகள்-

அலரல் காதில் விழாமல்–யாதானும் ஓன்று உரைக்கில்-

நங்காய் நம் குடிக்கு  நன்மை  இல்லை சொன்னதும் —நறையூரும் பாட சொல்கிறாள்-

மாது ஆளன்-குடமாடி-பேராளன் பேர்  அல்லால் பேசாள் –

இப்படி பெண்ணை பெற்றேன் பெருமை படுகிறாள்-தாயார்-

என் சிறகில் கீழ் அடங்கா பெண் -நான் பெற்ற பாக்கியம்

மறவாமல் எப்பொழுதும் மாயவனே -என் மகளை செய்வனகள்- சிந்த யந்தி போல் –

ரேழி பிடித்து -வருந்தி பாபம் போக- ஆனந்தம் பட்டு புண்ணியம் போக்கி -பரமம் சாம்யம் –

ரேழி பிடித்து போக முடியவில்லை-காதல் அறியாள்-

மண் ஆளன் பெண் ஆளன்-ரஷிதா ஜீவா லோகஸ்ய –

பந்தோடு—பைம் கிளியும் பால் ஊடாமல்   அந்தோவந்து என் மகளை செய்தனகள்-

சந்தோகன்-சாமவேதி-சர்வக்ஜ்னன் அக்ஜ்னன் போல் என் பெண்ணை படுத்தி –

சேல் உகளும் சிந்தை செய்த -மாலை சேர் மன்னவராய் வாழ்வார்கள்-

அவனும் மாலை திவ்ய தேசமும் காவேரி மசாலை –

தாய் பேச -ஒலி வல்லார் –

முதல் ஆழ்வார் பரத்வம்-திரு விக்ரமன்

திரு மங்கை- யோகி-அந்தர்யா,மி

குலசேகரர்-ராமர் ஈடுபாடு

பெரி ஆழ்வார் ஆண்டாள் நம் ஆழ்வார் -கிருஷ்ணன்  அனுபவம்

திரு மங்கை அர்ச்சை சாமான்யம்

கிருஷ்ணா காமமே புருஷார்த்தம்-ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –

ஆரா அமுதம் அங்கு எய்து வாராது -ஒழியுமாம்-சூர்ய மண்டலம் தாண்டி போகணுமாம்

ஆரா அமுதன் இங்கே இருக்க —

நைமிசாரண்யம்-தாயே தந்தையே -திரு வேம்கடத்தில் சரண் அடைந்து –

அரங்கன் இடம் சரணா கதி இறுதியில் ஏழை எதலன்-அடி இணை அடைந்தேன் அரங்கத்து அம்மானே –

தாய் பாசுரம்-விசனம் அதிகம் ஆக -முன் பதிகம் பார்த்தோம் –

உமக்காக அந்தோ திரு அரங்கம் நித்ய வாசம் செய்கிறோம்–சமாதானம் அடைந்து -அடுத்து பாடுகிறார் –

கௌ சலா தேவியார் சமாதானம் இருந்து ஆரி இருந்தது போல்-

அடைவிப்பான் என்று உறுதியும் வேணும்-அடையா த்வரையும் வேண்டும் –

அவரை பார்த்தால் சம்சாரம் கண்டு த்வரை –

உபதேசம் கேட்டு-அம்மானை யான் கண்டது அணி நீ தென் அரங்கத்து

நேராக சேவித்தேன் -ஓலை புறத்தில் இருக்கும் என்று இல்லை-வழக்கத்தில் சமுதாயத்தில்-

வேதம் சொல்லும்-அதை கொண்டே அடைய முடியாதே -கண் காண வந்து நம்மை கொள்கிறான்-

கைம்மான -களிற்றை- கடல் கிடந்த கரு மணியை-உயர்ந்த முந்தானையில் கொண்டு ஆளும் படி-

அழகன்-மதிப்பு-எளிமை -பக்தியால் முடிந்து –

மைம்மான மரகதத்தை-ஒளி சொலப்பட்டது –

பரத்வம் சௌலப்யம் சௌந்தர்யம்-

மறை உரைத்த திருமாலை-பரத்வம்-

எம்மானை-எனக்கு ஸ்வாமி உபகாரன்

எனக்கு என்று இனியானை

பனி காத்தான்-பனி மறைத்த பண்பாளன்-குன்று எடுத்து –

கடல் குடித்த மேகம் போல் அனைவர் உள்ளத்தையும் கொண்டு ஆதி செஷனில் மலையில் மேகம்

யானைகள் அசைந்து குகை போல் சயநித்தது போல்-

கமல பத -கமல கர அசாம்-தாமரை காடு-பட்டர் –

பேரானை –ஆராது இருந்தது கண்டது அரங்கத்தில்-உண்டு உமிழ்ந்து -நெருக்கி புக -தேவதைகள்-

முற்றும் உண்ட கண்டம் – பேரானை -அப்பால் அரங்கன்-குருங்குடி எம்பெருமானை-திரு தண் கால் -எதோத்த காரி –

கரம்பனூர் உத்தமனை–

உலகமுண்டும் போறாது -ஆபத் சகத்வம்-

விழுங்கி ஆல் இலை சயனம் -உபசேசனம் போல் மிர்துயு தேவதையும் சேர்த்து உண்டு –

அடுத்து ஏனாகி உலகு இடந்து -திரு குருங்குடி-கைசிக -வராக புராணம் நினைவால்-

தானாய பெருமானை-தன் அடியார் மனத்து என்று -தென் அமுது போல் திகழ்ந்து

ஆனாயன்-தலைவன்-கண்ணன்-அவனே அரங்கன்-

வம்ச பூமிகளை உத்தரிக்க வராகா கோபாலரை-யது குலம்-பூமா தேவி தூக்கி விட -சாம்யம்-

தென் அரங்கத்தில்-சம்சாரத்தில் மக்னராக விழுந்த நம்மை

ஈன சொல் ஆயினுமாக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்டது நல்லதுவே -ஈன சொல் ஆகவுமாம் –

மத்ஸ்யம் -அவரே

கூர்மம்-மந்தர பர்வம் அழுந்தி

கழுத்துக்கு மேலொன்று கீழ் நரசிங்கன்

சின்ன கால் காட்டி பெரியகாலால் அளந்து

பரசுராமன்-ரோஷ

வராகனே உத்தாரகர் -ஸ்திதே -மனசே-தேசிகன்-தர்மி ஐக்கியம்-

வளர்ந்தவனை தடம் கடலுள்- பாற் பாடலில் –

நாற்றம் கால் நட்டு கதிர்  வளருமா போலே –அவதார பீஜம் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான்-ஸ்ரீராப்தி –

சகடம் உதத்தவனை

தரியாது ஹிரண்யனை பிளந்தவனை-தன் பக்தன் மேல் பைட்ட அபசாரம்

-பரம பக்தனுக்கு மட்டும் இன்றி பிரயோஜனாந்த பரர்-இந்திரனுக்கு கூட

பெரு நிலம் ஈரடி  கொண்டு நீட்டி பண்டு ஒரு நாள் அளந்தவனை-சொத்து கை கொள்ள –

யான் கண்டது அணி தென் அரங்கத்தே +

அடி தோறும் அர்ச்சை சேர்த்து -விபவம் சொல்லி பின்னானார் வணங்கும் சோதி திரு மூழி களத்து-

நீர் அழலாய்  நெடு நிலனாய்-பஞ்சீகரணம் செய்பவன் – –நின்றானை-கண்டது தென் அரங்கத்தே –

பஞ்ச பூதங்களையும் சரீரமாய் கொண்டவன்- -பூநிலாய ஐந்துமாய் -நின்ற ஆதி தேவனே –

அரக்கனூர் அழலால் உண்டான்- அம்ப்களே நெருப்பு கக்கும்-திரு அடி

கண்டார் பின் காணாமே -பேர் அழலாய் -ஆர் அழலால் உண்டானே -பஞ்ச அக்னி-ஹவிர் பாகம்

அஹம் சர்வ ய்க்ஜா போக்தா -இங்கே கண்டேன்-

யோகிகள் எதை கண்டாலும்-கரந்த பாலுள் நெய்யே போல் காண்பர் –

த்ரஷ்டவ்யா -கேட்டு மனனம் இடைவிடாமல்சிந்தித்து -காண்பர் –

யான் கண்டது தென் அரங்கத்தே –

தன் சினத்தை–அம் சிறை புள் பாகனை -கண்டது —

கொற்ற புள் ஓன்று ஏறி- நம் பெருமாளை பார்த்து இருக்கும் கருடன்-

அடுத்தது என்ன கேட்கிறார் -வேதம் -இதோ காட்ட முயல- கருடன் பிரத்யட்ஷமாக காட்டி-

வேதாத்மா விதகேச்வர -ஆயாசம் தீர ஆனந்தமாக அமர்ந்து –

கருட வாகனம் மேல் பீடம் இல்லை இங்கு –

பெரிய வாகனம் இங்கு -திரு மேனி சேவிக்க -புன் சிரிப்பை உதிர்ந்து –

ந இதி ந இதி -வேதம் சொல்ல-அதிர்ஷ்டம்-இல்லை இல்லை சொல்ல -மற்று ஒன்றை போல் இல்லை ஆகிவிடும்-

உயரமா அம் சொன்னால் குள்ளம் இல்லை- ஆகுமே -இதோ ஹச்திகிரீசனாக காட்டி- வேள மலை காட்டி கொடுத்ததே –

அம் சிறை– நோக்கி கூட்டி வரும் பொழுது– வெம் சிறை புள்- விச்லேஷத்தில் –

தவ நெறி- உபாயம் -அவனே -தம் சினத்தை தவிர்ந்து அடைந்த

கோபம் தாபம் விட்டு அடி அடைந்தவர்களுக்கு

கஞ்சனை கொன்று உலகு உண்டு உமிழ்ந்த கற்பகத்தை –

திரு கரம்-கிளைகள்- பூ கொத்து போல் திவ்ய ஆயுதம்-பட்டர் –

சிந்தனையை தவ நெறியை-அந்தணனை நான் கண்டது

பிராப்யம் பிராபகம்

வட மலையை-மலையே திரு உடம்பு -பிரியாது மனத்து இருந்த

சிந்தனை  யை -பிராப்யம்

தவ நெறி -உபாயம் -பிராபகம் –

திருமாலை-சேர்த்து -ஸ்ரீ மன் நாராயணனே -மிதுநமே உத்தேசம்-

திருமாலை சிந்தனையை–திருமாலை தவ நெறியை –

திரு வேம்கடம் சேவித்தும்-உலகு அளந்த திரு விக்ரமன்- நினைவு-கோவலூர்

வரி வண்டார் -அந்தணனை-பிரமச்சாரி வாமனன் –

அடுத்து — அருளில்லா  அருளானை-

வேதம் ஒத்து கொல்பவனுக்கு அருளுவான்

வேத பாக்யர் குதிர்ஷ்டிகர் அருள் இல்லாதவன்

-ஏழு ஏழு பிறவிகளுக்கும் அனுக்ரகம் செய்பவன் அரங்கன்-

எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் -எமர்க்கும் அடியேற்கும்-பக்தர் சொல்லி அடியேனை –

திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன்-அடிமை தனம் பழையதா   -ஜீவாத்மா பழையதா –

உபகாரகன்  அரங்கன்

பொய் வண்ணம்-அகற்றி-புலன் ஐந்தும் செல வைத்து

மெய் வண்ணம் நினைத்தவர்க்கு- உண்மை/கருமை நினைத்தவர்-

வித்தகன்

மை வண்ணம் கரு முகில்- போல் திகள் வண்ணம் பள பள நிகு நிகு கரு கரு –

ஆ மருவி  நிரை மேய்த்த அணி அரங்கன்-கோவலனாய் வெண்ணெய் உண்ட ஆயனே அரங்கன் –

சாரா தீ வினைகள்-பலன் சொல்லி –

நா மருவு தமிழ் மாலை-நீங்காமல் இருந்தால்-

அடுத்த பதிகம்-

பரத்வனே அரங்கன்-அவரை பற்றி நாமும் உய்யலாம்

பண்டை நான் மறையும்- அனைத்துமாக நின்ற எம்பெருமான் அரங்கன் –

சாமானாதி கரண்யம் -சொல்லும் பாசுரம்-

நீராய் நிலனாய் போல் –

அனைத்தும் அவனே -காரண பொருளும் காரண பொருளும்

தங்க சங்கிலி /மண் குடம் போல் –நூல் வேஷ்டி -பகவானே லோகம்-

சரீரம் சொலும் சொல் ஆத்மா வரைக்கும் பர்யவிசிக்கும் –

பண்டை நான் மறையும்–வேள்வியும்–கேள்வி பதங்களும் -பதங்களின் பொருளும்

பிண்டமாய் விரிந்த -அசித் சமஷ்டி -பிறங்கொளி அனலும் புலன் கொண்டல் மாருதமும்

மலைகளும் விசும்பும் –திட விசும்பு-அனைத்தும் வாழ இடம் கொடுக்கும்-முதலில் பசித்து கடையில் அழிந்து –

அண்டமும் தானே நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –

இந்திரன் பிரமன் ஈசன்- என்று இவர்கள்-எண்ணில் பல் குணங்கள் பாட

தந்தையும் தாயும்மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்ற –

பந்தமும் -பந்தம் அறுக்கும் மருந்தும் -விருந்தாகவும்

-பான்மை-பிராப்யம் பல் உயிர் க்கு எல்லாம் அந்தமும் -லயம் அடையும் -பிரளயம்-

-அந்தமும் வாழ்வுமே -ஆய எம்பெருமான்-சுகம் ஆக இருக்கிறவன் –

அரங்கமா நகர் அமர்ந்தானே -இருக்கிறான்-வசிக்கிறான் –

64 அபிநயம்-அரையர்- முன்பு -செய்வார்களாம் இன்று ௩௬ வரை –

சந்தானம் ஆனந்தம் கொடுக்கும் ஆனந்த மாயம் இல்லை

அந்தமும் வாழ்வும் இவன் ஆனந்த மயம்

இதை அறிந்து கொள்ள வேதம்-அதையும் அருளினவன் அவன் அடுத்து –

 -அன்னமாய் அங்கு அருமறை -பயந்து

அதிர்ஷ்டம்-புலன்களுக்கு வசம் இன்றி-

அபூர்வமாக சொல்லும் வேதம்- உண்மையை சொல்லும் புதியதை சொல்லும் வேதம்-

யதார்த்தம் -உண்மை -ஆனால் அறியாத வற்றை சொல்லும் -வேதம் –

மற்றவை கொண்டு அறிய முடியாததை சொல்லும் –

சூஷ்ம தசை துன்னுமா இருளாய் -தமஸ் தமஸ் எங்கும்-தொல்லை நான் மறைகளும் மறைய –

படைக்கிறார் காக்கிறார் அழிக்கிறார் -தப்பு- தன்னுள் கிரகித்து கொள்கிறார்

கடல் அலை உள்ளே போவது போல்–சுருங்கி பிரமதுடன் ஒன்றி இருக்கும்

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி -பிற்றங்கி இருள் நிறம் கெட

ஒரு நாள் அன்னமாய் அங்கு அரு மறை நூல் பயந்தான்

பிரம்மாவுக்கு உபதேசித்து -நான்கு முகம் கொடுத்து –

அடுத்து –

அலை கடல் கடிந்தான்- படைத்து வளர்த்தான்-அமுதம் கேட்டது குழந்தை

குன்றம் ஓன்று மத்தாக –பவ்வம் படு விண்டு அலற -படு திரை விசும்பு

திங்களும் சுடரும் தேவரும் திசைப்ப

கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான்-

ஆயிரம் தோள்கள் உடன் அலை கடல் கடிந்தான்

வேகம் கண்டு ஆயிரம் போல்

ராமன் ஒருவர் இருவர் மூவர் என்று கரந்து போல் –

பெற்ற குழந்தைக்கு அமுதம் கொடுக்க தன் படுக்கை கடைந்து –

ஸ்ரீ ரெங்க நாச்சியாரை கொள்ள அந்தரங்கர்

பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் கொடுத்து உகந்த இல்லை-

அடுத்து -விரோதிகளை முடித்து திரு அடி சேர்த்து கொள்பவன் –

அரி உருவாய் -காட்டு அழகிய சிங்கர் –

நிர்வாணம் பேஷஜம் பிஷசு அவனே –

சம்சாரம் சரணாகதி வைத்தியர் ஒன்றே –

ஹிரண்யன் ஆகம்-பொங்கு வெம் குருதி-செக்கர் வானம்-கண் சிகப்பு

அருவி ஒத்து இழிய-கோப பிரசாதம்-ஹிரண்யன்-பிரகலாதன்-

மேட்டு அழகிய சிங்கர் –

ஆயிரம் குன்றம்-ஆயிரம் சுடர் வாய் அரவு-

கார்த்த வீர்யார்ஜுனன் ஆயிரம் தோள்களை துணித்த பரசுராமன்-அடல் மழு பற்றி-

பகிஷ்மதி பட்டணம்-ராவணன் பூச்சி போல் தொங்க வைத்தான்-

ஆயிரம் பேரால் தேவர் பாட-வியூகம்-சொவ்ஹார்ததுடன் அரங்கம்

அடுத்து பாலம் சேது -அங்கே சேர்க்கும் -கலசாமல் பார்த்து

லீலா விபூதி நித்ய விபூதி கலவாமல் இருப்பான் –தேவை -சரண் அடைவிக்கிரவரை தாண்டுவிக்கிறார் –

சேது கட்டிய பெருமாளே அரங்கன்

திரு வினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன்-மணி முடி பொடி செய்து

மலையால் அரி குலம் -சேவகனார் மருவிய பெரிய கோவில்-

சரித்ரம் சொல்லி அரையர் அபிநயம்-

ஆழியால் மறைத்தான்-ஆஸ்ரிதர்க்கு மெய் பொய் ஆக்கி

அப்படி இப்படி ஆக்கிணவனே இங்கு -ஜெயத்ரதன்-சூர்யனை மறைத்து -அர்ஜுனனை வெல்ல –

ஆஸ்ரித பஷ பாதி ஓமத்து உச்சியை -ஒரு கால் தேர் -சூர்ய மத்திய வர்த்தி –

பார்த்தனுக்கு அருளி-

அடுத்து ஆபத் ரஷகன்-அரங்கன்-ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் –

கோவர்த்தன -பெரு நிலம் விழுங்கி உமிழ்ந்த வாயனே

உண்டு உமிழ்ந்ததை சேவிக்க முடியாது -வாயை சேவிக்கலாம்-வெண்ணெய் உண்ட வாயன்-

வில்லை ஆண்ட தொலை/உலகம் அளந்த திரு அடியை செவிக்கலாமே

சிந்தையில் வெம் துயர் அறுக்கும் ஆயனே அரங்கன்

பலன்- பொன்னும் மா மணியும் சுமந்து -தீர்த்தங்கள் சூழ

பொழில் சூழ -மான வேல் கலியன் வாய் ஒலிகள்-பன்னிய பனுவல் பாடுவார் நாளும்

-பழ வினை பற்று அறுப்பார்கள்-

தத்வ த்ரயம் உணர்ந்தார் -சரண் அடைவதே யுத்தம்-

அர்ச்சையில் சரண்

தஞ்சை மா மணி கோவில் சூழ் புனல் குடைந்தை சரண் அடைந்து முன்பு –

சரண் நேராக சொல்லாமல் பலர் செய்வதைசொல்லி

உன்னை கேட்க்கும் எனக்கு உதவ மாட்டாயா –

ஏழை எதலன்–கீழ் மகன் என்னாது இரங்கி -குறை என்று நினைக்காதவன் –

மற்று அவர்க்கு இன் அருள் சுரந்து -காம தேனு போல் -மட நோக்கி உன் தோழி-

உம்பி எம்பி என்று ஒழிந்திலை-கை விட வில்லை -உள்ளே சேர்த்து –

உகந்த தோழன் நீ -என்று சொன்னாயே -அன்று குகனோடு நீ கொண்ட தோழமை ஓர் அடையாளம்

கதை சொல்லி மனம் உறுதி பட்டு -நீயே போய் விஷயீகரித்த இடம் உண்டே

ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் -அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே –

அடுத்து விலங்கினம்-ஹனுமான் -வாத மா மகன்-இரு மாப்பு உண்டே தேவதை பிள்ளை –

-மற்கடம் -விலங்கு- மற்று ஓர் சதி-

அதே காதல் எனக்கு வேண்டும் -ஆலிங்கனம் செய்தாயே –

கைங்கர்யம் கொடுத்தாயே –இல்லை கைம்மாறு சொன்னாயே -அவன் இடம்-

கோதில் வாய்ம்மை-பேச்சில் -உடனே உண்பன்-நான் என்கிற ஒண் பொருள் வேண்டும் –

திரு மேனி ருசி ஜனகம் -கைங்கர்யம் கேட்டார்

அடுத்து தடங்கல் போக்கி கைங்கர்யம்-கஜேந்த்திரன் சரித்ரம்-

கடி கொள் -காமரு பொய்கை வைக்கு தாமரை வாங்கிய வேழ

 முழு முதலை பற்ற மற்றது உன் சரண் நினைப்ப

கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –கோபத்தாலே விரோதி முடிந்ததே –

பக்தன் அபசாரம் ஏற் இட்டு கொண்ட சீற்றம்

உள் விரோதிகள் முடிக்க அடுத்து –

சுமுகன்-கருடன்-கதை-பசி கோபம்-

விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம் புலன்கள் –

வெஞ்சின அரவம் -வெருவி வந்து -அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –

அஞ்சி வந்து அடி இணை அடைந்தேன்-உள் பகைவர்களை ஒழித்து ரஷித்து கொடு –

அடுத்து -சம்சார ஆசை போக்க-கடமை ஆற்ற -படைத்தவன் தானே நீர் கொடுப்பான் உணராமல் –

கோவிந்த ஸ்வாமி-மா மறையாளன் -ஆர்த்த பிரபன்னர் -நமக்காக சொல்கிறார்

போகம் அனுபவித்து பின் நம் இடம் சேர்வாய் -அடைவாய் -சொல்வதை-

அடுத்து ஸ்வரூப அநுரூப கைங்கர்யம் கேட்டார்

-மார்கண்டேயர்-கால தேவனுக்கு பயந்து சரண் அடைய –

உன் திரு அடி பிரிய வண்ணம் செய்தாயே -மார்கண்டேயர் திவ்ய தேசங்கள் தோறும்-

பேர் அருள் எனக்கும் அன்னதாகும் -கூடவே இருந்து செய்யும் கைங்கர்யம்-

ஆறு பாசுரங்களிலும் -கேட்க வேண்டியது எல்லாம் கேட்டார் –

என்ன தாமசம் என்று மேல் நான்கு பாசுரங்கள்

சர்வ சக்தன் -நீ

அந்தணன் புதல்வன்-சாந்தீபன்-காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய்

கோதில் வாய்ம்மை- இதையும் இவர் இடம்கேட்ட கோதில் வாய்ம்மை -குறை முடித்து

அவன் சிறுவனை கொடுத்தாய் -கடல் கொண்ட வஸ்து மீட்டி -சம்சாரம் கொண்ட என்னை அருள்வாய் –

அடுத்து அந்தணர் நான்கு பிள்ளைகளை மீட்டி கொடுத்து –

நாச்சியார் செய்த லீலை உடலோடு மீட்டு கொடுத்தாயே

கடலுக்குள் அங்கு காலந்தரம் தேசாந்தரம் தேகாந்தரம்

சர்வ சக்தி நினைவு -இங்கு இருக்கும் என்னை அங்கு கூட்டி போ என்ற பிரார்த்தனை

அடுத்து

தொண்டர் மன்னவன்-உலகம் அளந்த பொன்னடி

ஏழே நாழிகையில் ஏழு அர்த்தம் அருளி

சங்கு சக்கரம்-அப்பனுக்கு சாபங்களை அளித்தவன்

உளம் கொள் அன்போடு இன் அருள் சுரந்து –

தேக ஆத்மா விவாகம்

ச்வாதாந்த்ரன் -இன்றி

மற்றவர் -அவனுக்கே சேஷ பூதன்

சு பிரயோ -அவன் பிரயோஜனத்துக்கு

மற்ற பந்து  இன்று அவனே சகல வித பந்து

கைங்கர்யமே -அவனுக்கு கைங்கர்யமே புருஷார்த்தம்

பாகவதர் -ததீஎய சேஷத்வம்

வளம் கொள் மந்த்ரம்-திரு மந்த்ரம்-

திரு வேம்கட சரித்ரம் சொல்லி வடக்கு திரு வாசல் வழியாக வந்து கிடக்கிறான்

இந்த பாவ சுத்தி இன்றி -நாமும் இதை சொல்லி –

இதுவே பவ சுத்தி கொடுத்து –

நீடு தோள் புகல் -ஆழி வல்லானை-நெடுமாலை நினைந்து

பாட நும்மிடை பாவம் நில்லாதே

திரு நறையூர்

திரு கண்ண புரம்

அனுபவத்தில் மற்ற திவ்ய தேசங்களையும் சேர்ந்தே மங்களா சாசனம் செய்கிறார்

இவர் மட்டும் 47 திவ்ய தேசங்கள்-மங்களா சாசனம்

ஐந்து பிரகாரம் 6 -6 -9

தாராளன் தண்  அரங்க -மாட கோவில் திரு நறையூர் -கல் கருட சேவை-

கோ செம்கனான் சோழ மன்னவன் வணங்கிய கோவில் –

பின்னைக்கு மன வாளன் –விபவம்

தண் அரங்க ஆளன் -அர்ச்சை –

பூ மேல் தனி ஆளன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -அத்வதீயன் –

முனியாளர் ஏத்த நின்ற பேராளன்- வியூகம்

ஆயிரம் பேர் உடையவன்-அந்தர்யாமி

இவனே -திரு நறையூர் மணி மாட -வந்சுளா வள்ளி நீளா தேவி பிரதானம் –

திரு மந்த்ரம் -பெற்ற – திவ்ய தேசம் —

பிரபத்யே -பிரனாவாகார விமானம் -ஸ்ரீ பாஷ்யம்-அவன் ஒருவனுக்கே சேஷ பூதன் -பிரணவத்தில் அர்த்தம் –

7 -3 –

அரங்கமாளி என் ஆளி  –தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் -வேறு எங்கும் தாழ்ந்து நில்லாது

வந்த நம்பியை தம்பி தன்னோடும் -கேட்காமலே கொடுத்தார் தசரதன்-

அஹம் வேதமி மகாத்மா -உஊன சோட வருஷ  மே ராம –ராஜீவ லோசன

-இரவில் ராஷசர் பலம்-தாமரை கூம்பி இருக்கும் நேரம் -பார்கவா ராமன் இல்லை மே ராம -12 வயசு தான் ஆகிறது –

இலங்கை நீராக சரங்கள் ஆண்ட -பெருமாள்-வில்லாண்டான் தன்னை-

இது கொண்டு அடிக்காமல் அடக்குவதே -ஆண்மை-

ஐ வர்க்காக  -தேரை -இரங்கி இன் அருள் செய்யும் –

பாண்டவ தூதன் பார்த்த சாரதி ஆக தாழ்ந்து ஆஸ்ரித பஷ பாதன்

அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி -மூன்றும் –

ஸ்ரீ ரெங்க நாத -மம நாத –

தத்வ மஸி– தத் துவம் அஸி –பிரமத்துக்கு உடல் சரீரம் சொரூப ஐக்கியம் இல்லை –

ஜகத்துக்கு யார் காரணமோ அது தன் உனக்கு காரணம் சரீர ஆத்மா பாவம் -கொண்டு சமன்யவ படுத்தி –

கடக சுருதி தேடி பிடித்து -சேர்த்து -யஸ்ய ஆத்மா சரீரம்

-ஒன்றே எண்ணில் ஒன்றே ஆம் பலவே எண்ணில் பலவே யாம் -கம்பர் –

அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி

அரங்கம் கண்ணில் பட முதலில்/தான் இங்கே /இழந்த அவர்களுக்கும் ஆளி –

8 -2 -7 -திரு கண்ண புரம் பாசுரம்-

தெள்ளியீர் -விண்ணும் ஆழ்வார் -பூ லோகத்தில் ஆனந்தம் -பலன்

அரையர் அபிநயம்- தெள்ளியீர் அனுபவம் அங்கு இல்லை –

திரு அரங்கத்தில் திரு கண்ண புரத்தில் தான்

அரங்கமே தொன்மையூர் -விரகத்தில் திரு கண்ண புரம் என்கிறாள்-

பிரிந்தார் கூடுவது  இரங்குவது நெய்தல்நிலத்தில் –

இருள் சப்தம் இவனை நினைவு படுத்த –

கண புரம் கை தொழும் பிள்ளை-

கோகுல மக்கள் த்வாரகை இகழ சொல்வார் கண்ணனை பிரித்தால் –

நகர ஸ்திரீகள் வசம்-மதுரை -துவாரகை -பசப்பு மொழி பேசி மயக்குவார்கள் –

அலங்காரம் செய்து கொண்டே போனான் கண்ணன்-

9 -9 திரு குரும்குடி –

தாயார் பாசுரம்-முனைவனை-உபதேசம் உருவாக்கிய அரங்கன் –

மூ உலகும் படைத்த முதல் மூர்த்தி -த்ரி வித -சிருஷ்டி சதி சம்காரம்/உபாதான நிமித்த சக காரி

வேர் முதலாய் வித்தாய் -திரு மால் இரும் சோலை-கள் அழகர் -கள்ளர் குல அழகர்

பிரதி கூலருக்கு அழகை காட்டாத கள் அழகர்

11-3 –

கை வளை கண்ணன் கூட இருக்கும் பொழுதே

என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத -ஆழ்வார் -பொருள்குற்றம் கேட்டு இரங்கி

காதலன் பக்கத்தில்  இருந்தால் வெளுக்காதே -கேள்வி படலாம்-கேட்டுஇரங்கி-நம் பிள்ளை

பாசுரம் சொல் மாற்ற எலும்பு உரம் இல்லை-காதலர் தோடு உளி தோடு உளி நீங்கி -பாசி தட்டினதும் நீங்கும்

புல்கி கிடந்தேன் புடை பெயர்ந்தேன் –இருக்க அணைக்க கை தளர்த்தி இருக்க -தளர்ந்தது தாங்காமல் வெளுக்க –

நினைவாலே -பாதுக சகஸ்ரம்-மேல் பக்கம் விரிந்து கீழ் விரிந்து நடு சுருங்கி -திரு அடி சம்பந்தம் பட்டு பருத்து –

என் நீர்மை கண்டு இரங்காதா- இவை என்ன மாயங்கள்-அண்ணல் மேயும் திரு வேம்கடம் திரு அரங்கம் தேடி போவோம் –

அர்ச்சை தேட -விபவம் போய் தேட முடியாது –

அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா –

அஞ்சுகின்றேன்-கதறுகின்ற

8 பாசுரம்- நின் அருள் அல்லது துணியேன் –

அழகிய மணவாளன் -அரங்கம் சொல்லி -அவனை

நிர்பாதுக பந்து -காரணம் பற்றி இன்றி -திவ்ய தேசம் அனைத்தையும் கொடுக்கும்

உஜ்ஜீவன உபாயம் கொடுக்கும் –

ஆர் எனக்கு நின் பாதமே தந்து ஒளியாய்

மாசுச ஒரு வார்த்தை சொல்

 -திரு குறும் தாண்டகம் 4 பாசுரங்கள்

இம்மையை -தலை மிசை மன்னுவாறே

திரு அரங்கம் சேவிப்பவர்

திரு சேறை பாசுரம் போல் -தாள் என் தலை மேல் –

எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை

திரு அரங்கம் மேய

இம்மையை மறுமையை -நான்குடன்-சேர்த்து -பிராப்யமே இங்கு வாசம்

செம்மையை கருமை தன்னை-யுகம் தோறும் வர்ணம் மாறும்

திரு மலை ஒருமை தன்னை அத்வீதியன்-அனைவருக்கும் சமம் -சர்வ பூதானாம்

குரங்குக்கும் வேடருக்கும் வானோர்க்கும்

ஆஸ்ரித பாரதந்த்ர்யம் நினைவார் என் தலை மிசை மன்னுவார் -7 பாசுரம்

ஆவியை 12 பாசுரம்-கண்ணை திறந்து -நிர்பந்தம் படுத்தி

காவி போல் வண்ணர் வந்து என் கண் உள்ளே தோன்றினாரே –

ஆவியை -அரங்க மாலை–கட்கிலி உன்னை காணுமாறு அருளாய் போல்

ஆவி பார்க்க முடியாது அரங்க மாலை -சகல மனுஷ விஷயம் ஆவானே

ஆவியை-அரங்க மாலை -அழுக்கு உடம்பு எச்சில் வாய் -தூய்மையில் தொண்டனேன் –

உன்னை ஏமாற்ற சொன்ன வார்த்தை தொண்டேனேன் –

சொல்லினேன் தொல்லை நாமம் -பாவியேன் -பிளைதவாறு -என்று அஞ்சினேர்க்கு அஞ்சேல்-

வைத்த அஞ்சேல் என்ற கைகளும் திரு முடி ஸ்வாமி

கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் –

சக்தன்-திவ்ய ஆயுதம்

குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம்-

கார்யம் செய்வான் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம்-திரு முடி

ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் -முகமும் முறுவலும்

கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -ஆசன பத்மத்தில் அழுத்திய திரு அடிகள் –

காவி போல் வண்ணர் வந்து -அபாய ஹஸ்தம்-வைரம் முத்து –

இரும்ப-இரும்பு போல் வழிய நெஞ்சம்- தண்ணீர் குடித்து –

கரும்பினை கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே

கண்களால் சாப்பிடும் கரும்பு

பேசி வைத்தது போல் தொண்டர் அடி பொடி ஆழ்வாரும் இதே வார்த்தைகள்-

௧௯ பிண்டியார்   மண்டை எந்த்கி -மண்டினார்க்கு உயல் அல்லால்

தம் கொள்கை முத்தரை பதிகிறார் திரு மங்கை ஆழ்வார் –

அர்ச்சையில் மண்டியே உய்யலாம்

திரு கதம்பனூர் நாச்சியார் ஹர சாப விமோசனர்  திரு கண்டியூர் –

கண்டியூர் அரங்கம் –மண்டினார் உயலாம் -மற்று யாரும் உய்ய முடியாது

திரு நெடும் தாண்டகம் 11

சாஸ்திரம்-பராசர பட்டர் ஈடு பட்ட பிரபந்தம்-

மாதவாசார்யர் -நன்ஜீயராக ஆகிய மகிமை-

பெரும் பணக்காரர் தினம் 1000 பேருக்கு ததீயாராதனம்

நீர் தான் அந்த திரு நெடும் தாண்டக வல்லீரோ –

பட்டு உடுக்கும் -எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் –

அயர்த்து இரங்கும் பாவை பேணாள்-

தாய் பாசுரம்-

கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே –

கட்டுவிச்சி -மெய்யே சொல்-சொல் என்ன சொன்னாள் –

வேலி பயிரை மேய்ந்தால் –பெரிய பெருமாள் செய்தார்

கடல் கொண்ட வஸ்து கிடைக்குமா –

கடல் வண்ணர்-யார்-

அவர் வருவர் என்று பட்டு உடுக்கும் -முடியாமல் அயர்த்து இரங்கும்

பிராட்டி-அழிக்க உரிமை இல்லை-ஸ்வாமி தாசன்-

கண்ண நீர் -மருந்தும் விருந்தும் மருத்துவனும் அவனே –

சிறிய திரு மடல்-பேர் ஆயிரம் உடையவன்-மேகம் போல்வான்-வலம் புரி கொண்டவன்-

யாரால் கடல் நீர் கடைய பட்டது-அடையாளம் காட்டி-கடல் வண்ணர் இது செய்தார் காப்பார்

எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும் -இதையே பிதற்றி –

குடம்கால் இருக்காமல்-பிள்ளைகளை   தாய் தந்தை கள் இடம் பிறிக்கும் -உற்ற நல் நோய் –

கடித கடிக்க விகுணம்-இரட்டை திருப்பதி -போல் -திரு தொலை வில்லி மங்கலம் -சேவித்தால் உங்களை மறப்பாள்-

மகர நெடும் குழை காதன்–என் நெஞ்சிநாறும் அங்கே ஒழிந்தார் யாரை கொண்டு என் உசாகோ –

எம்பெருமான்-எமக்கு -பெருமான்- பெயர் கேட்கவில்லை-

பிரியேன் பியில் தரியேன் என்றார் –

ஊர் எது கேட்டேன்-நம்மூர் திரு அரங்கம் என்றான் -கோவில் திரு அரங்கம் சொன்னது போல் நினைவு –

ஸ்ரீ ரெங்கத்தில் இருப்பவன் நம்ப தக்கவன் என்று காதலித்தேன் –

கலக்கத்தில் மயங்கி -திக் பரமம் -திசை அறியாமல் எங்கே என்னும் –

12 பாசுரம்

நெஞ்சு உருகி -அணி அரங்கம் ஆடுதுமோ –

சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் இரு நிலத்தோர் பழி-

நன் பெற்றவள் என்றே நம்ப வில்லை

மாத்ரு தேவோ பவ -பெருமாள் தான் தாய் தந்தை –

உருகி கண் பனிப்ப -நஞ்சரவில் -படுக்கை இருக்கு –

ஸ்ரீ ரெங்கம் போய் தீர்த்தம் ஆடலாமா -பிரமம் அனுபவம்-

என் சிறகின் கீழ் அடங்கா பெண்–தேம்பாகா சொல்லி கொள்கிறாள் -ஏ பாவமே –

14

அரங்க மேய அந்தணனை-வளர்த்ததனால் பயன் பெற்றேன்

கிளி -உதவ -சந்தை -திரு நாமம் சொல்ல சொல்ல –

கை தூக்க முடியாமல் மயங்கி இருக்க –

முளை கதிரை–குரும்குடியில் முகிலை/ஆராமுதை/பாடி மூஞ்சி பார்த்து

அளப்பரிய ஆரமுதை அரங்கமேய -அந்தணனை தெளிவி கண்டு

பாட கேட்டு கை கூபப

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக

என்று மடக் கிளியை கை கூப்பி

கண்டும் காணாமல் இருந்ததாம்

பெரிய நம்பி ஐதீகம் -ஆள வந்தார் தோன்ற -பாவ சுத்தி –

அந்தணர் தம் சிந்தை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லாமல் பெயர்

சுத்தன் -சுத்தி பண்ணுபவன் –

வைகுண்ட அமுத கடலே அரங்கத்தில் –

18

கார்வண்ணம் —கமல வண்ணம்

பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் பாவைக்கு

பாவம்செய்தேன்

எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும்

நிறை அழிந்தார் நிலை

சேஷி முறைமை உணர்த்தினார் -சம்சார பயம் நீங்க

துடிக்க வேண்டாம் என்று -அதுவே துடிப்பு காரணம்

19

அணி அரங்கம் ஆடுதுமோ-

உங்கள் பெண் இப்படி இல்லையா –

கல்யாணம் ஆனவனை விரும்பி –

திரு மார்பில்-பாவை மாயன் -அகலத்து உள் இருப்பாள் அது கண்டும் –

ஆசை இரட்டிப்பு ஆனதாம்-உறுதி புருஷகாரம்-உண்டே –

நாச்சியாரை சேவித்த பின்பு வேதாந்தம் தத்வ சிந்தனை நீங்க –

நன்கே நம் குடிக்கு இது

நறையூரும் பாடுவாள்-

அவனுக்கே ஆல் படுவேன் –

பொற்றாமரை காயம் நீராட போனாள்

தாய் பெண் பார்த்து

புத்ரர்கள் சிஷ்யர்கள் ஆகவுமாம் -கௌரவிக்க படுவார்கள்

22

-நைவளமும் -நாரா நம்மை நோக்கா -மயங்க வில்லை நாணினர் போல் –

அடியேன் சொன்னான்-இறையே -மனமும் கண்ணும் ஓடி திரு அடி கீழ் அனைய

இப்பால் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கண மகர குழை இரண்டும்

எம்பெருமான் கோவில் எவ்வளவு உண்டு-கோவில்=திரு அரங்கம்-நெருக்கம்-எத்தனை தூரம் கேட்டதும்

திரு ஆலி பெருமான் -இது அன்றோ -எழில் ஆலி –

காதில் கடிப்பிட்டு ஊடல் எதுக்கு இது என் இது என்னோ-

கலிகச்சு கட்டு செண்டு சிலுப்பி –

சங்கீதம் பாட நட்ட பாடை நாட்டு குறிஞ்சி

என் பக்தி நிற்கும் இடமே எழில் ஆலி -நெருக்கம்-

குனிந்து கால் கட்டை விரலை காட்டி எழில் ஆலி

முடிந்தே போனேன்

23

சிந்தை நோய் எனக்கே தந்த —

 திரு அரங்கம் நம் மூர்  என்ன –

வளையல் பெண்மை நிறம் கொண்டு போய் -கலந்து தேன் உடன் உண்டு-

திரு அரங்கம் நம்   மூர் –

சேர்ந்த பின் -நம் மூர் –

அற்ற பற்றார் சுற்றி வாழும் நமக்கு எல்லாம்

தன்னை பிரிக்காமல்

உன் நூர் பார தந்த்ரதுக்கு கொச்சை

பக்தர்களுக்கு தான் இருக்கிறான்

இருவருக்கும் நன்மை சேஷி சேஷன்

உபய பிரதானம் பிரணவம் போல்

கனவிடத்தில் காண்பான்

24

இரு கையில் சங்கு இவை நில்லா -அவன் கையில் சங்கு -நாதம் கேட்டதும் –

கரு முகில் போல் வண்ணம் -புலவி தந்து –

புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே

பின் தொடர்ந்து போனேன் –

25

மின் இலங்கு திரு உருவும் திரு வடிவும்

சிந்தை நிறை வளை ஆளும் கொண்டு

பொழில் ஊடே புனல் அரங்கம் -ஊர் என்று போயினாரே

ஸ்ரமகரமனே -திரு நகரி -புறப்பட்டு காள மேகம்- பச்சை அங்கே ஒட்டி போனது

ஸ்ரீ தனம் பறித்து பிள்ளை வீட்டுக்கு போனான் –

ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திரு மடல்-

தோட்டம் -சூழ்ந்த திவ்ய தேசங்களே தோட்டம்-

மன்னு அரங்கத்து என் மா மா மணியை பிரியாமல்

அற்ற பற்றார் சுற்றி வாழும்

திரு நாள் சேவிக்க  என்று வந்து

பின்பு அழகும் -பிறகு வாலியும் அழகும்

கொகுவாயும் கூட்டமும் மெய்யடியார் கூட்டங்கள் கண்டு இங்கேயே கிடந்தது –

பெரிய பெருமாள் கிடந்த கிடக்கை

அணைத்து மாணிக்கமும் வந்து சேர்ந்த

ஆழ்வார்கள் மணி அரங்கன் மா மணி

திரு மங்கை ஆழ்வார் திரு வடிகளே சரணம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள் -ஸ்ரீ திருவரங்கம்-

March 21, 2024

ஸ்ரீரங்கம்

மூலவர் ஸ்ரீ ரங்கநாதன், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ அழகிய மணவாளன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள்
தாயார் ஸ்ரீ ரங்கநாயகி-ஸ்ரீ பெரிய பிராட்டியார் =
தீர்த்தம் ஸ்ரீ சந்திரபுஷ்கரணி
விமானம் ஸ்ரீ ப்ராணாவாக்ருதி விமானம்
நாமாவளி ஸ்ரீ ரங்க நாயகீ-ஸ்ரீ பெரிய பிராட்டியார் – ஸமேத ஸ்ரீ ரங்க நாதாய நமஹ

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-—–

அம்பச்யாபரே புவனச்ய மத்யே நாகச்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் சுக்ரேண ஜ்யோதீம்ஷி
ஸ மனுப்ரவிஷ்ட  பிரஜாபதி சரதி கர்பே அந்த ….வேத வாக்யம்..

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் ….பிரபந்தம்..–ஏவம் பஞ்ச பிரகாரோகம்..அவன் வாக்கியம் .

பகல் ஓலக்கம் இருந்து கருப்பு உடுத்து சோதித்து காரியம் மந்திரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி ..ஆசார்ய ஹ்ருதயம்..
பரம் வ்யூகம்  விபவம் ஹார்த்தம் அர்ச்சை  ..இவை ஐந்தையும் இப்படி சொல்லும் ..

நீர்மைக்கு எல்லை அர்ச்சை ….
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணமேவ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் சகோம்….

ஆஸ்ரித காரிய ஆபாத குணங்கள் — ஞான சக்தி பிராப்த்தி பூர்த்திகளும், ஆச்ரயண சௌகர்ய ஆபாதாக குணங்கள்–
வாத்சல்ய ஸ்வாமித்வ சௌசீல்ய சௌலபாதிகளும்.. புஷ்கலங்கள் ..

ஆராமம் சூழ்ந்த அரங்கம் வேர்பற்றான திவ்ய தேசம் ..
அதனால் ஸ்ரீமந் ஸ்ரீ ரெங்க ச்ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்தய  என்று நித்யம் பிரார்த்திக்கிறோம்
வேரில் நீரிட்டால் செடி வாழுமா போல..

வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் ஸ்ரீ ரெங்கம் என்று
சகல திவ்ய தேச பெருமாளும் பள்ளி கொள்ளும் இடம் இதுவே
பதின்மர் பாடும் பெருமாளும் இவனே
திரு வேம்கடமுடையான் இரு மருங்கிலும் பால் கொடுத்து இரட்டை குழந்தைகளை ரஷிக்கும் மாத்ரு போல்வான்  .

கோயில்  திரு மலை பெருமாள் கோயில் –மூன்றையுமே திரு விருத்தத்தில் நம் ஆழ்வார் மங்களா சாசனம் செய்வதால் –

பொரு நீர் திருவரங்கா அருளாய் – 28-
மாயோன் வட வேங்கடநாட -10 –
பெருமாள் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-
விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுது- – 26-

திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப் பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர் போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப் பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய
திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்த லோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக் கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள்.
இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

காமகோஷ்ணீம் புரீம் காஞ்சீம் காவேரீம் ச ஸரித்வராம்
ஸ்ரீரங்காக்யம் மஹாபுண்யம் யத்ர ஸந்நிஹிகோ ஹரி:–ஸ்ரீமத் பாகவதம் (ஸ்கந்தம் 10: அத்யாயம் 79: ச்லோகம் 14)

(பலராமன்) காமகோடி எனப்படும் புண்ணிய நகரான காஞ்சீபுரத்தையும், நதிகளில் சிறந்த காவேரியையும்,
எங்கு ஸ்ரீஹரி மிகவும் ஸாந்நித்யமாக உள்ளானோ அந்த மஹாபுண்ய க்ஷேத்ரமான ஸ்ரீரங்கத்தையும் அடைந்தார்.

ஸ்ரீ ரெங்க மந்த்ரம்–

ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜ முகுளோத்பா ஸமானே விமானே

காவேரீ மத்ய தேசே ம்ருது தர பணீராட் போக  பர்யங்க பாகே |

நித்ரா முத்ராபி ராமம் கடி நிகட சிரஸ்:பார்ஸ்வ விந்யஸ்த ஹஸ்தம்

பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் ||-ஸ்ரீரங்கநாத ஸ்தோத்ரம்–01

ஏழு ப்ராகாரங்களின் (மதிள்கள்) நடுவில் தாமரை மொட்டுப் போல-விளங்குகின்ற விமானத்தில், திருக் காவிரியின் நடுவில், மிக மென்மை படைத்த திருவநந்தாழ்வானாகிற கட்டிலிலே (அரவணையில்) உறங்குவது போன்ற குறிப்பினால் அழகானவரும் இடுப்பிலும் சிரஸ்ஸின் அருகிலும் கைகளை வைத்திருப்பவரும் மலர் மகளாலும், நிலமகளாலும் கைகளால் அடி வருடப் படுகின்றவருமான ஸ்ரீரங்கநானைத் தியானிப்போம்..!

திருவரங்கனும் மா முனிகளும் —

திருவரங்க சோலை –
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்  மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை -திரு மாலை -14
வண்டு -மயில் -மேகம் குயில் பதங்கள் மா முனியையும் -அரங்கனையும்
குறிப்பனவாக அமைந்து உள்ளன
வண்டினம் முரலும் சோலை-
1-நம் ஆழ்வார் எம்பெருமானை -வண்டாக –தூயிவம் புள்ளுடைத் தெய்வ வண்டு -என்று அருளுகிறார் –
2-மலர்கள் வண்டுகளின் வரவை எதிர்பார்த்து வாசனையை தினம் தோறும் வீசி நிற்கும்
அது போலே ஆழ்வாரும் ஆர்வுற்று இருக்க -அவரினும் முன்னம் பாரித்து தான் அவரை முற்றப் பருகினான்
3-ஆறு கால்கள் கொண்ட வண்டு -ஷட் பதம் –பகவான் இடத்தில் பக -சப்தம் ஆறு கல்யாண குணங்களைக் குறிக்கும்
ஞானம் -பலம் -ஐஸ்வர்யம் -வீர்யம் -சக்தி -தேஜஸ்

4- லஷ்மீ கல்பல தோத்துங்க ஸ்தனச்தப கசஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ  ப்ருங்கோ மே ரமதாம் மாந சாம்புஜே — ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் 1-10-
திருமகளாம் கற்பகக் கொடியின் வாராளும் இளம் கொங்கையாம் பூம் கொத்தில்
சுழன்று வரும் அணி அரங்கன் என்னும் மணி வண்டு அடியேன் உள்ளக் கமலத்து
அமர்ந்து களித்திடுக
மா முனிகள் -வண்டு –
வண்டுகளை வட  மொழியில் –த்விரேப -அதாவது இரண்டு ர எழுத்துக்களை தன பெயரில்
கொண்டுள்ளது -ப்ரமர -என்பது -இது போல் வர வர முனி என்ற பெயரிலும் இரண்டு ரே பம் உள்ளது –
பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் வர வர முனி சதகம் –
ராமாநுஜார்ய சரணாம் புஜ சஞ்சரீகம்
ரம்யோ பயந்த்ருயமிநம் சரணம் ப்ரபத்யே — 1- எம்பெருமானார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் –
மஹ தாஹ்வய பாத பத்மயோ
மஹது த்தம் சித யோர் மது வரதம் — 43- -பேயாழ்வார் திருவடித் தாமரைகளில் வண்டு -என்றும் சடா ராதி ஸ்ரீ மத் வத ந சரஸீ ஜாதமிஹரே
ததீய ஸ்ரீ பாதாம்புஜ மதுகர தஸ்ய வசஸாம் – 53-  நம் ஆழ்வார் திருவடித் தாமரைகளில்  படிந்த வண்டு என்றும் –
தமநுதி நம் யதீந்த்ர பத பங்கஜப் ருங்க வரம்
வர முனி மாஸ்ரயாஸய  விஹாய தத் அந்ய ருசிம் -85 -எம்பெருமானார் திருவடித் தாமரைகளில்
படிந்த வண்டாகிய மா  முனிகளை -நெஞ்சே ஆஸ்ரயி -என்று அருளிச் செய்து இருப்பது
நோக்கத் தக்கது
ஆச்சார்ய ஹிருதயம் -சூரணை -152-
என் பெறுதி என்ன ப்ரமியாதி உள்ளத்து ஊறிய மது வ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு
குழல்வாய் வகுளத்தின் ஸாரம்  கிரஹித்து –
வண்டுகள் வகுளம் முதலிய சாரமாம் தேனைப் பருகுதல் இயல்பே –
மா முனிகளும் வகுளாபரணர்  சொல் மாலைகள் சாரம் கிரஹித்து -திருவாய் மொழி நூற்றந்தாதி -அருளி –
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம் -என்று தாமே அருளி செய்துள்ளாரே -மயிலினம்  ஆலும் சோலை –
ப்ரலய  சமய ஸூ ப்தம் ஸ்வம்  சரீரை கதேசம்
வரத  சித சிதாக்யம் ச்வேச்சயா விச்த் ரு ணா ந
கசிதமிவ கலாபம் சித்ர மாதத்ய தூந்வன்
அநு சிகிநி ஸி கீவ க்ரீடசி ஸ்ரீ ஸ மஷம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் – 2-44-
பேரருளா -தோகை விரிக்கின்ற பொறியார்  மஞ்சை பேடை மயில் முன் -அணி மா நடம் பயின்று
ஆடுவது போலே -ஊழி காலத்து உறக்கம் கொண்டவை போல் நின் திரு உடம்பில் ஒரு கூறாய்
ஒன்றி நின்ற -அனைத்தையும் மழுங்காத ஞானத்தினால் -பல்வகை பெரு விறல் உலகமாய்ப் பரப்பி
திருமடந்தை முன்பே நீ விளையாடுதீ –
மயில் தன்  உடலில் அடங்கிய கலாபத்தை விரிப்பது போன்று –மா முனிகளும் தமது திரு உள்ளத்தில்
கிடந்த கலைகளை வியாக்யானம் அருளும் பொழுது விரித்து சிறந்தனர் –
மயில்கள் ஆலித்தல் அழைத்தல் போன்று மா முனிகளும் முகில் வண்ணனைக் கண்ணாரக் கண்டு
கொண்டு ஆட்டமேவி அலந்து அழைத்து அயர்வெய்திய  மெய்யடியார் யாவார் –

கொண்டல் மீதணவும் சோலை  –
சிஞ்சேதி  மஞ்ச ஜனம் இந்தி ரயா தடித்வான்
பூஷா மணித் யுதிபி ரிந்த்ரத  நுர்த தா ந
ஸ்ரீ ரெங்க தாமனி தயாரதச நிர்பரத்வாத்
அத்ரவ் சயாலுரிவ ஸீ தல காள மேக –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் – 1-82-
பூ மன்னு  மாது என்னும் மின்னில்  பொலிவதாய் –
இழை பலவற்றில் பதித்த பன் மணிகளின் ஒளி யாகிற ககன  வில் ஓன்று ஏந்தியதாய் –
நல்லருள் என்னும் நீர் நிரம்ப பெற்றமையால் –
திருவரங்க  பெரு நகருள் வரை மேல் –
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை  மேவி –
பள்ளி கொள்ளுவதான குளிர்ந்து உறைகின்ற
கார்முகில் அடியேனை யும் நனைத்து அருளுக –
இதனை அடி யொற்றி  திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
காவிரிவாய்ப்  பாம்பணை  மேல் கரு முகில் போல் கண் வளரும் கருணை வள்ளல்
பூ விரியும் துழாய் யரங்கர் பொன்னடியே தஞ்சமென பொருந்தி வாழ்வார்
யாவரினும் இழி குலத்தோர் ஆனாலும் அவர் கண்டீர் இமையா நாட்டத்
தேவரினும் முனிவரினும் சிவன் அயன் என்ற  இருவரினும்  சீரியரே -திருவரங்க கலம்பகம் – 100-

குயிலினம் கூவும் சோலை –
கயல் துளு காவிரி சூழ் அரங்கனை குயில் என்றது நிற ஒற்றுமை ஒன்றினால் அன்று –
குயிலுக்கு வட மொழியில் –வநபிரிய -என்று பெயர் உண்டு –
சோலையில் விருப்புடையது -என்று இதற்குப் பொருள் –
அரங்கனும் வனப் பிரியனே -ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் இருப்பதால் –
குயில் மா மரம் ஏறி மிழற்றும் இயல்பு உடைத்தாதலின் -மா -வின் இடத்தில் இதற்கு பெரிய
விருப்பு  உணரப்படும்-அரங்கனோ எனில் –அல்லி  மலர்மகள் போக மயக்குகள் ஆகியும்
நிற்கும் அம்மான் -என்றபடியே -மா -திரு மா மகள் இடம் பேரன்பு உடையவன்

குயில் பஞ்சம ஸ்வரத்தில் இனிமையாக பாட வல்லது
பாரத பஞ்சமோ வேத-என்று மகா பாரதம் புகழ் பெற்றது போலே
ஐந்தாம் மறை  என்னும்படியான ஸ்ரீ ஸூத்திகளை அருளிச் செய்த மா முனிகள் குயிலினை ஒப்பார் –
மேலும் -ஸ்வை ராலாபை ஸூ லபயசி தத் பஞ்சமோபாய தத்தவம் -வரவர முனி சதகம் – 11
எறும்பி அப்பா அருளியது போல் -பஞ்சமோபாயத்தை  உணர்த்தி அருளியவர் –
குயில் பரப்ருதம் -மா முனிகளும் பராபிமானத்தில் -எம்பெருமானார் அபிமானத்தில் ஒதுங்கியவர்

இதம் ஹி ரெங்கம் -ஆதி சங்கரர் -இங்கே பிறந்தால் வேறு பிறவி இல்லை
ராஜ தானி -எல்லா ஆச்சார்யர்களும் வாழ்ந்து கைங்கர்யம் செய்த திய்வய தேசம்
54 சந்நிதிகள் -நடை அழகு –கஜ சிம்ம புலி ஏறு சர்ப்பம் -1323 -1378 -வெளியே சென்று -திருமலையிலே ஸ்ரீ ரெங்க மண்டபம் –
பங்குனி உத்தரம் சேர்த்தி -சேர குல வாலி சேர்த்தி -ஸ்ரீ ராம நவமி -உறையூர் சேர்த்தி -மூன்றும் உண்டே –

ரங்கவிமான ரகஸியம்
ரங்க விமானம்-மூலஸ்தானம், ரங்க விமானம் எல்லாம் தர்மவர்மா என்ற கிளிச்சோழன் கட்டியதே!-திருமங்கை மன்னன் நாகப்பட்டிணம் தங்க புத்த விக்ரஹத்தை உருக்கி வேய்ந்த பொன் விமானமே
இன்றும் காணப்படும் பொன் ரங்க விமானம்.

நான்கு வேதங்கள் நான்கு கலசங்கள் – தெற்கு – வடக்கில்
ஐந்து கலசங்கள் – ஐம்பூதங்கள் – கிழக்கு – மேற்காக
ஆய கலைகள் 64கும் தாமரை இதழ்களாகக் காட்டப்படுகின்றன.
மூலஸ்தானத்தின் வெளியே காயத்ரி மந்த்ரத்தை உணர்த்தும் வகையில் அதன் 24 சப்தங்களைக் கொண்ட 24 கற்றூண்கள் உள.

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.
• மதில் சுற்றுகள் (ஏழு உலகங்கள்)
1.மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று( பூலோகம்)
2.திரிவிக்ரம சோழன் திருச்சுற்று (புவர்லோகம்)
3.அகளங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று (ஸுவர்லோகம்)
4.திருமங்கை மன்னன் திருச்சுற்று (மஹர்லோகம்)
5.குலசேகரன் திருச்சுற்று (ஜநோலோகம்)
6.ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று (தபோலோகம்)
7.தர்ம வர்ம சோழன் திருச்சுற்று (ஸத்யலோகம்)
ஏழு திருமதில்களை அடைவதற்கு முன்னால் 8வது திருச்சுற்று ஒன்று
தற்போது ஏழு மதில்களை உள்ளடக்கியதாய் அடைய வளையப்பட்டுள்ளது.

ஸ்ரீ நம்பெருமாள் -பன்னிரு நாச்சிமார் பரவும் பெருமாள் –

1- ஸ்ரீ வக்ஷஸ்தல மஹா லஷ்மி

வெள்ளிக்கிழமை தோறும் ஏகாந்த பட்டர் திருமஞ்சனம் செய்ய கோயில் ஜீயர் பட்டருக்கு சாமரம் வீசுவார்

2-3- உபய நாச்சிமார்கள் -ஸ்ரீ தேவி பூ தேவி

ஸ்ரீ ரெங்கத்திலே மட்டும் உபய நாச்சியாரும் ஆண்டாளும் பன்னிரண்டு தாயார்களும் அமர்ந்த திருக்கோலம்
நின்று அனுபவிக்க முடியாத எழில் அழகர் அன்றோ நம்பெருமாள்-

4- கருவூல நாச்சியார்

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சந்நிதி கருவூலம்
ஆபரணங்கள் பாத்திரங்கள் கணக்கு வழக்குகளை ரக்ஷித்து அருளும் தாயார்
திருக்கார்த்திகை அன்று பக்கத்து வீடு உத்தம நம்பி பெரிய சந்நிதியில் இருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றப்படுகிறது

5-ஸ்ரீ சேர குல வல்லித்தாயார்

அர்ஜுனன் மண்டபத்தில் -பகல் பத்து உத்சவ மண்டபத்தில் துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சந்நிதி
ஸ்ரீ ராம நவமி அன்று திருக்கல்யாண உத்சவம் நடக்கும்

6- ஸ்ரீ துலுக்க நாச்சியார்

பின் சென்ற வல்லி நாட்டிய பெண்ணுடன் இசை நாட்டிய குழுவாக 60 பேர் சுல்தான் இடம் சென்று மீட்டுப் போக
இளவரசி ஸ்ரீ ரெங்கம் சென்று நம்பெருமாளைக் காணாமல்
கோயில் மூடி இருப்பதைக் கண்டு
மயக்கம் அடைந்த இறக்க ஒளி மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றதை பார்த்தார்கள்
முகமதியருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சித்திரமாக மட்டும் வரைந்து துலுக்க நாச்சியாராக இன்றும் சேவிக்கலாம்

காலையில் லுங்கி போன்ற வஸ்திரமும் அணிவித்து வெள்ளம் கலந்த இனிப்பான ரொட்டி வெண்ணெய் அமுது செய்து அருளுகிறார்
திருமஞ்சனம் வெந்நீரிலே நம்பெருமாள் கண்டு அருள்கிறான்
இடையில் 4 அல்லாது 5 தடவை கைலி மாற்றமும் உண்டு

பகல் பத்து உத்ஸவ படி ஏற்ற சேவை இந்த துலுக்க நாச்சியார் சந்நிதி முன்பே நடக்கும் –
இந்த படி ஏற்ற சேவையைக் காண கண் கோடி வேண்டும்

7- ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் -ஸ்ரீ தான்ய லஷ்மி –
தான்யம் கோயில் மாடு

8- ஸ்ரீ பெரிய பிராட்டியார்
பங்குனி உத்தர சேர்த்தி உத்சவம்

9- ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி
பெரியாழ்வார் நாச்சியாரை கூட்டிக் கொண்டு வந்து தங்கிய இடம்
காவேரிக் கரையாகவே அப்போது இருந்தது
வெளி ஆண்டாள் சந்நிதி
திருட்டு பயம் காரணமாக உத்சவர் மட்டும் உள்ளே இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்ற அதுவே உள் ஆண்டாள் சந்நிதி

10- ஸ்ரீ உறையூர் கமலவல்லி நாச்சியார்

வாசவல்லித் தாயார் -செங்கமல வல்லித்தாயார் -நந்த சோழன் திருமகள் –
பங்குனி உத்சவம் ஆறாம் நாள் சேர்த்தி உத்சவம் பிரசித்தம்
தீ வட்டிகள் தலை கீழாக வைத்து தொலைத்த ஒன்றை தேடுவதாக நடக்கும்
திரும்பும் பொழுது மாலை மாற்றல் வெளி ஆண்டாள் சந்நிதியில் நடக்கும்

11- ஸ்ரீ திருக் கவேரித் தாயார்
ஆடிப்பெருக்கு உத்சவம்
அம்மா மண்டபத்துக்கு எழுந்து அருளி சேவை

12- ஸ்ரீ பராங்குச நாயகித் தாயார்
மார்கழி ஏழாம் நாள் கங்குலும் பகலும்
கைத்தல சேவை ப்ரஸித்தம்

————

திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும், வைத்த அஞ்சல் என்ற கையும், கவித்த முடியும்,-முகமும் முறுவலும், ஆஸநபத்மத்திலே யழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையே நமக்கு தஞ்சம்” –(முமுஷுப்படி-142).

ஆராத அருளமுதம் பொதிந்த கோவில்!
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்கு அளித்த கோவில்!
தோலாத தனிவீரன் தொழுத கோவில்!
துணையான வீடணற்குத் துணையாம் கோவில்!
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோவில்!
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோவில்!
தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்!
திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!

வன் பெரு வானகம் முதல் உய்ய இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற
திருவாளன் திருப்பதி
வடிவுடை கடலிடம் கட்கிலீ (காகுத்தா) என்னும் அவற்றில் இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வியூஹ சௌஹார்தம் பிரதானம் —சூரணை-159-

(அவற்றில் -நான்கிலும் உள்ள நான்கு குணங்களுக்குள் -பல குணங்களுக்குள் ஸுவ்ஹார்த்தம் பிரதானம் என்றபடி
நாம் விழித்து இருக்கும் போதும் அவனை மறந்து உள்ளோம் -அவன் உறங்குவான் போலே யோகு செய்து
நம்மை உஜ்ஜீவிக்க விரகு காணும் ஸுவ் ஹார்த்தம் கொண்டவன் அன்றோ )

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ:
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம் -ஸ்ரீராமாயண பாராயணக்ரமம்-

திருக்காவேரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும். வேண்டிய காலங்களில்
இந்திரன் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றிபெற்று வாழட்டும். திருவரங்கச் செல்வம் வளரட்டும்!

———————————–

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் –247–பாசுரங்கள் மங்களாசாசனம்

——————-

ஸ்ரீ பெரியாழ்வார் -35-பாசுரங்கள் மங்களாசாசனம்

கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 

உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் –2-7-2-
சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 
ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.–2-7-8-
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2)-2-9-11
கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*–3-3-2-
மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 
தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)–4-8-1-
பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.-4-8-2-
மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 
திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே–4-8-3-
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 
கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.-4-8-4
பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 
குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.–4-8-5-
கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*
தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.–4-8-6-
கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 
தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.–4-8-7-
வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.–4-8-8-
குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 
குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.–4-8-9-
பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)–4-8-10-
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*
திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)-4-9-1-
தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 
மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)–4-9-2-
கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 
இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.–4-9-3-
பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 
புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.-4-9-4-
ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 
சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.–4-9-5-
மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 
பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.–4-9-6-
குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 
எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.–4-9-7-
உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*
உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட*
வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே–4-9-8-
தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 
சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.–4-9-9-
செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 
இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.–4-9-10-
கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)–4-9-11-
துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)–4-10-1-
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 
போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!-4-10-2-
எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்* 
அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!–4-10-3-
ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-4-
பைய அரவின் அணை பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி யுந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே – 4-10-5-
தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-6-
செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-7-
நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-8-
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 
நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!–4-10-9-
மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)–4-10-10-
——-

ஸ்ரீ ஆண்டாள் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

தாம் உகக்கும் தம் கையிற்*  சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 
தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  –11-1-
எழில் உடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
குழல் அழகர் வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 
எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே*–11-2-
பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 
செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)–11-3-
மச்சு அணி மாட*  மதில் அரங்கர் வாமனனார்* 
பச்சைப் பசுந் தேவர்*  தாம் பண்டு நீர் ஏற்ற* 
பிச்சைக் குறையாகி*  என்னுடைய பெய்வளை மேல்* 
இச்சை உடையரேல்*  இத் தெருவே போதாரே?*  –11-4-     
பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 
நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே* –11-5-
கைப் பொருள்கள் முன்னமே*  கைக்கொண்டார்* 
காவிரிநீர் செய்ப் புரள ஓடும்*  திருவரங்கச் செல்வனார்* 
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்*  எய்தாது*
நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்*  என் மெய்ப்பொருளும் கொண்டாரே*.–11-6-
உண்ணாது உறங்காது*  ஒலிகடலை ஊடறுத்துப்* 
பெண் ஆக்கை யாப்புண்டு*  தாம் உற்ற பேது எல்லாம்* 
திண்ணார் மதில் சூழ்*  திருவரங்கச் செல்வனார்* 
எண்ணாதே தம்முடைய*  நன்மைகளே எண்ணுவரே* –11-7-
பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 
தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)    –11-8- 
கண்ணாலம் கோடித்துக்*  கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* 
திண் ஆர்ந்து இருந்த*  சிசுபாலன் தேசு அழிந்து* 
அண்ணாந்து இருக்கவே*  ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
பெண்ணாளன் பேணும் ஊர்*  பேரும் அரங்கமே*.   –11-9-
செம்மை உடைய*  திருவரங்கர் தாம் பணித்த* 
மெய்ம்மைப் பெரு வார்த்தை*  விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 
தம்மை உகப்பாரைத்*  தாம் உகப்பர் என்னும் சொல்* 
தம்மிடையே பொய்யானால்*  சாதிப்பார் ஆர் இனியே!* (2) –11-10-  
———–

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -31-பாசுரங்கள் மங்களாசாசனம்

இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)-1-1-
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! -1-2-
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே–1-3-
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே–1-4-
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே –1-5-
அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே–1-6-
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே–1-7-
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்*  கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்*  கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*  வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே–1-8-
தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித்*  திருப்புகழ்கள் பலவும் பாடி* 
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்*  மழை சோர நினைந்து உருகி ஏத்தி*  நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்*  பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!–1-9-
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)–1-10-
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்*  கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்*  கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்*  நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே  (2)–1-11-
தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் அரங்கனைத்*  திருமாது வாழ் 
வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*
ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்* 
ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது காணும் கண் பயன் ஆவதே  (2)–2-1-
தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
நீடு மா மரம் செற்றதும்*  நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*
ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை*  என் ஆவதே?  –2-2-
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்*  முன் இராமனாய்* 
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்*  சொல்லிப் பாடி*  வண் பொன்னிப் பேர்- 
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* அரங்கன் கோயில்-திருமுற்றம்* 
சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே–2-3-
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்*  உடன்று ஆய்ச்சி கண்டு* 
ஆர்த்த தோள் உடை எம்பிரான்*  என் அரங்கனுக்கு அடியார்களாய்*
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து*  மெய் தழும்பத் தொழுது 
ஏத்தி*  இன்பு உறும் தொண்டர் சேவடி*  ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே–2-4-
பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்*  போர்-அரவு ஈர்த்த கோன்* 
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்*  திண்ண மா மதில்-தென் அரங்கனாம்*
மெய் சிலைக் கருமேகம் ஒன்று*  தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே–2-5-
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன*  வானவர் தம்பிரான்* 
பாத மா மலர் சூடும் பத்தி இலாத*  பாவிகள் உய்ந்திடத்*
தீதில் நன்னெறி காட்டி*  எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்*  காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-
கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த*  வெண்ணகைச் செய்ய வாய்*
ஆர-மார்வன் அரங்கன் என்னும்*  அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து*  கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே–2-7-
மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப*  ஏங்கி இளைத்து நின்று* 
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து*  ஆடிப் பாடி இறைஞ்சி*  என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு*  அடி யார்கள் ஆகி*  அவனுக்கே 
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்*  மற்றையார் முற்றும் பித்தரே  –2-9
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10–
மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
வையம்தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)–3-1-
நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா*  அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே–3-2-
மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
நாரணன்*  நரகாந்தகன் பித்தனே–3-3-
உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்
மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*
அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*
உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே–3-4-
தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
பேதை மா மணவாளன்*  தன் பித்தனே–3-5-
எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*
எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே-3-6-
எத் திறத்திலும்*  யாரொடும் கூடும்*  அச்
சித்தந்தன்னைத்*  தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே–3-7-
பேயரே*  எனக்கு யாவரும்*  யானும் ஓர்
பேயனே*  எவர்க்கும் இது பேசி என்*
ஆயனே!*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே–3-8-
அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)–3-9-
தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் படைத்தவனே* 
யாவரும் வந்து அடி வணங்க*  அரங்கநகர்த் துயின்றவனே* 
காவிரி நல் நதி பாயும்*  கணபுரத்து என் கருமணியே* 
ஏ வரி வெஞ்சிலை வலவா*  இராகவனே தாலேலோ (2)–8-10-
————–

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் -14-பாசுரங்கள் மங்களாசாசனம்

அரங்கனே! .தரங்கநீர்*  கலங்க அன்று குன்றுசூழ்,* 

மரங்கள் தேய மாநிலம் குலுங்க*  மாசுணம் சுலாய்,*
நெருங்கநீ கடைந்தபோது*  நின்றசூரர் என்செய்தார்?* 
குரங்கையாளுகந்த எந்தை!* . கூறுதேற வேறிதே.*–21-
கொண்டைகொண்ட கோதைமீது*  தேன்உலாவு கூனிகூன்,* 
உண்டைகொண்டு அரங்கஓட்டி*  உள்மகிழ்ந்த நாதன்ஊர்,*
நண்டைஉண்டு நாரைபேர*  வாளைபாய நீலமே,* 
அண்டைகொண்டு கெண்டைமேயும்*  அந்தண்நீர் அரங்கமே. –49-
வெண் திரைக் கருங்கடல்*  சிவந்துவேவ முன்ஒர்நாள்,* 
திண் திறல் சிலைக்கைவாளி*  விட்டவீரர் சேரும்ஊர்,*
எண் திசைக் கணங்களும்*  இறைஞ்சிஆடு தீர்த்தநீர்,* 
வண்டுஇரைத்த சோலைவேலி*  மன்னுசீர் அரங்கமே. –50- 
சரங்களைத் துரந்து*  வில் வளைத்து இலங்கை மன்னவன்,* 
சிரங்கள் பத்துஅறுத்து உதிர்த்த*  செல்வர் மன்னு பொன்இடம்,*
பரந்து பொன்நிரந்துநுந்தி*  வந்துஅலைக்கும் வார்புனல்,* 
அரங்கம்என்பர் நான்முகத்து அயன்பணிந்த*  கோயிலே.  –51-
பொற்றைஉற்ற முற்றல்யானை*  போர்எதிர்ந்து வந்ததைப்,* 
பற்றிஉற்று மற்றதன்*  மருப்புஒசித்த பாகன்ஊர்,*
சிற்றெயிற்று முற்றல்மூங்கில்*  மூன்று தண்டர் ஒன்றினர்,* 
அற்றபற்றர் சுற்றிவாழும்*  அந்தண்நீர் அரங்கமே.  –52-
மோடியோடு இலச்சையாய*  சாபம்எய்தி முக்கணான்,* 
கூடுசேனை மக்களோடு*  கொண்டுமண்டி வெஞ்சமத்து-
ஓட*  வாணன் ஆயிரம்*  கரங்கழித்த ஆதிமால்,* 
பீடுகோயில் கூடுநீர்*  அரங்கம்என்ற பேரதே.  -53-
இலைத்தலைச் சரம்துரந்து*  இலங்கை கட்டழித்தவன்,* 
மலைத்தலைப் பிறந்துஇழிந்து*  வந்துநுந்து சந்தனம்,*
குலைத்துஅலைத்து இறுத்துஎறிந்த*  குங்குமக் குழம்பினோடு,* 
அலைத்துஒழுகு காவிரி*  அரங்கம்மேய அண்ணலே.–54-
மன்னு மாமலர்க் கிழத்தி*  வையமங்கை மைந்தனாய்,* 
பின்னும் ஆயர் பின்னைதோள்*  மணம்புணர்ந்து அதுஅன்றியும்,*
உன்னபாதம் என்ன சிந்தை*  மன்னவைத்து நல்கினாய்,* 
பொன்னி சூழ் அரங்கம்மேய*  புண்டரீகன் அல்லையே?–55
சுரும்புஅரங்கு தண்துழாய்*  துதைந்துஅலர்ந்த பாதமே,* 
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு*  இரங்கு அரங்க வாணனே,*
கரும்புஇருந்த கட்டியே!*  கடல்கிடந்த கண்ணனே,* 
இரும்புஅரங்க வெஞ்சரம் துரந்த*  வில் இராமனே!  –93-
பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*
உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)–119-
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-
அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
——————–
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -55-பாசுரங்கள் மங்களாசாசனம்
காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*
மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)–1-
பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)–2-
வேத நூல் பிராயம் நூறு*  மனிசர் தாம் புகுவ ரேலும்,*
பாதியும் உறங்கிப் போகும்*  நின்றதில் பதினையாண்டு,*
பேதை பாலகனதாகும்*  பிணி பசி மூப்புத் துன்பம், *
ஆதலால் பிறவி வேண்டேன் *  அரங்கமா நகர் உளானே.*–3-
மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*
இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  –4-
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*
தண்டுழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி யாடி,* 
தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!–5-
மறம்சுவர் மதிளெடுத்து*  மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
புறம்சுவர் ஓட்டை மாடம்*  புரளும்போது அறிய மாட்டீர்,*
அறம் சுவராகி நின்ற*  அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,* 
புறம்சுவர் கோலம் செய்து*  புள் கவ்வக் கிடக்கின்றீரே! –6-
புலையறம் ஆகிநின்ற*  புத்தொடு சமண மெல்லாம்,* 
கலையறக் கற்ற மாந்தர்*  காண்பரோ கேட்பரோதாம்,*
தலை அறுப்புண்டும் சாவேன்*  சத்தியம் காண்மின் ஐயா,* 
சிலையினால்  இலங்கை செற்ற*  தேவனே தேவன் ஆவான்.   –7-
வெறுப்பொடு சமணர் முண்டர்*  விதியில் சாக்கியர்கள்,*  நின்பால்- 
பொறுப்பரியனகள் பேசில்*  போவதே நோயதாகி* 
குறிப்பெனக் கடையும் ஆகில்*  கூடுமேல் தலையை*  ஆங்கே,- 
அறுப்பதே கருமம் கண்டாய்*  அரங்கமா நகருளானே!  –8-  

மற்றுமோர் தெய்வம் உண்டே*  மதியிலா மானி டங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்*  ஒருவன் என்று உணர மாட்டீர் ,*
அற்றம்மேல் ஒன்று அறியீர் *  அவனல்லால் தெய்வ  மில்லை,*
கற்றினம் மேய்த்த  எந்தை*  கழலிணை பணிமின் நீரே.--9-

நாட்டினான் தெய்வம் எங்கும்*  நல்லதோர் அருள் தன்னாலே.* 
காட்டினான் திருவரங்கம்*  உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,* 
கேட்டிரே நம்பிமீர்காள்!*  கெருட வாகனனும் நிற்க,* 
சேட்டை தன் மடியகத்துச்*  செல்வம் பார்த்து இருக்கின்றீரே.  –10-
ஒருவில்லால் ஓங்கு முந்நீர்*  அடைத்து உலகங்கள் உய்ய,* 
செருவிலே அரக்கர் கோனைச்*  செற்ற நம் சேவகனார்,*
மருவிய பெரிய கோயில்*  மதில் திருவரங்கம் என்னா,* 
கருவிலே திருவிலாதீர்!*  காலத்தைக் கழிக்கின்றீரே.  –11-
நமனும் முற்கலனும் பேச*  நரகில் நின்றார்கள் கேட்க,* 
நரகமே சுவர்க்கம் ஆகும்*  நாமங்கள் உடையன் நம்பி,*
அவனது ஊர் அரங்கம் என்னாது*  அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,* 
கவலையுள் படுகின்றார் என்று*  அதனுக்கே கவல்கின்றேனே!  –12
எறியுநீர் வெறிகொள் வேலை*  மாநிலத்து உயிர்கள்எல்லாம்,* 
வெறிகொள் பூந்துளவ மாலை*  விண்ணவர் கோனை ஏத்த,*
அறிவிலா மனிசர் எல்லாம்*  அரங்கமென்று அழைப்பராகில்,* 
பொறியில்வாழ் நரகம் எல்லாம்*  புல்லெழுந்து ஒழியுமன்றே?–13-
வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 
கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  –14-
மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போல,
பொய்யர்க்கே பொய்யனாகும், புட்கொடி உடைய கோமான்,
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஓருவன் என்று உணர்ந்த பின்னை,
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. திருமாலை 15
சூதனாய்க் கள்வனாகித்*  தூர்த்தரோடு இசைந்த காலம்,* 
மாதரார் கயற்கண் என்னும்*  வலையுள் பட்டு அழுந்துவேனை,*
போதரே என்று சொல்லி*  புந்தியுள் புகுந்து தன்பால்- 
ஆதரம் பெருக வைத்த*  அழகனூர் அரங்கம் அன்றே? –16-
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்*  விதியிலேன் மதியொன்றில்லை,* 
இரும்புபோல் வலிய நெஞ்சம்*  இறை-இறை உருகும் வண்ணம்,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு*  என் கண்ணினை களிக்கு மாறே!      –17-
இனிதிரைத் திவலை மோத*  எறியும்தண் பரவை மீதே,* 
தனிகிடந்து அரசு செய்யும்*  தாமரைக் கண்ணன் எம்மான்,*
கனியிருந்து அனைய செவ்வாய்க்*  கண்ணனைக் கண்ட கண்கள்,* 
பனிஅரும்பு உதிருமாலோ*  என்செய்கேன் பாவியேனே!  –18-
குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*
கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)–19-
பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*
தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  –20-
பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,* 
துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*
அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 
மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? –21-
பேசிற்றே பேசல் அல்லால்*  பெருமை ஒன்று உணரலாகாது,* 
ஆசற்றார் தங்கட்குஅல்லால்*  அறியலா வானும்மல்லன்,*
மாசற்றார் மனத்துளானை*  வணங்கி நாம் இருப்பதல்லால்,* 
பேசத்தான் ஆவதுண்டோ?*  பேதை நெஞ்சே!நீ சொல்லாய். –22-

கங்கையிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*
பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*
எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!–23-

வெள்ளநீர் பரந்து பாயும்*  விரிபொழி லரங்கந் தன்னுள்,*
கள்ளனார் கிடந்த வாறும்*  கமலநன் முகமும் கண்டு*
உள்ளமே! வலியைப் போலும்*  ஒருவனென் றுணர மாட்டாய்,*
கள்ளமே காதல் செய்துன்*  கள்ளத்தே கழிக்கின் றாயே!–24-

குளித்துமூன் றனலை யோம்பும்*  குறிகொளந் தணமை தன்னை,*
ஒளித்திட்டே னென்க ணில்லை*  நின்கணும் பத்த னல்லேன்,*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
அளித்தெனக் கருள்செய் கண்டாய்*  அரங்கமா நகரு ளானே!–25-

போதெல்லாம் போது கொண்டுன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டுன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*
காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலே னதுதன் னாலே,*
ஏதிலே னரங்கர்க்கு எல்லே!*  எஞ்செய்வான் தோன்றி னேனே!–26-

குரங்குகள் மலையை தூக்கக்*  குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
தரங்கநீ ரடைக்க லுற்ற*  சலமிலா அணிலம் போலேன்,*
மரங்கள்போல் வலிய நெஞ்சம்*  வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே*  னயர்க்கின் றேனே!–27-

உம்பரா லறிய லாகா*  ஒளியுளார் ஆனைக் காகி,*
செம்புலா லுண்டு வாழும்*  முதலைமேல் சீறி வந்தார்,*
நம்பர மாய துண்டே?*  நாய்களோம் சிறுமை யோரா,*
எம்பிராற் காட்செய் யாதே*  எஞ்செய்வான் தோன்றி னேனே!–28-

ஊரிலேன் காணி யில்லை *  உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்*  பற்றிலேன் பரம மூர்த்தி,*
காரொளி வண்ண னே!(என்)*  கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைக ணம்மா!*  அரங்கமா நகரு ளானே!–29-

மனத்திலோர் தூய்மை யில்லை*  வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்*  தீவிளி விளிவன் வாளா,*
புனத்துழாய் மாலை யானே!*  பொன்னிசூழ் திருவ ரங்கா,*
எனக்கினிக் கதியென் சொல்லாய்*  என்னையா ளுடைய கோவே!–30-

தவத்துளார் தம்மி லல்லேன்*  தனம்படத் தாரி லல்லேன்,*
உவர்த்தநீர் போல*  வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*
துவர்த்தசெவ் வாயி னார்க்கே*  துவக்கறத் துரிச னானேன்,*
அவத்தமே பிறவி தந்தாய்*  அரங்கமா நகரு ளானே!–31-

ஆர்த்துவண் டலம்பும் சோலை*  அணிதிரு வரங்கந் தன்னுள்,*
கார்த்திர ளனைய மேனிக்*  கண்ணனே! உன்னைக் காணும்,*
மார்க்கமொன் றறிய மாட்டா*  மனிசரில் துரிச னாய,*
மூர்க்கனேன் வந்து நின்றேன்,*  மூர்க்கனேன் மூர்க்க னேனே.–32-

மெய்யெலாம் போக விட்டு*  விரிகுழ லாரில் பட்டு,*
பொய்யெலாம் பொதிந்து கொண்ட*  போட்கனேன் வந்து நின்றேன்,*
ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
பொய்யனேன் வந்து நின்றேன்*  பொய்யனேன் பொய்ய னேனே.–33-

உள்ளத்தே யுறையும் மாலை*  உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*  தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*  உடனிருந் தறிதி யென்று,*
வெள்கிப்போ யென்னுள் ளேநான்*  விலவறச் சிரித்திட் டேனே!–34-

தாவியன் றுலக மெல்லாம்*  தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
சேவியே னுன்னை யல்லால்*  சிக்கெனச் செங்கண் மாலே,*
ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
பாவியே னுன்னை யல்லால்*  பாவியேன் பாவி யேனே.–35-

மழைக்கன்று வரைமு னேந்தும்*  மைந்தனே மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம்*  உடையவர் வலையுள் பட்டு,*
உழைக்கின்றேற் கென்னை நோக்கா*  தொழிவதே,உன்னை யன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!*  அரங்கமா நகரு ளானே!–36-

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*
எளியதோ ரருளு மன்றே*  எந்திறத் தெம்பி ரானார்,*
அளியன்நம் பையல் என்னார்*  அம்மவோ கொடிய வாறே!–37-

மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*
காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!–38-

அடிமையில் குடிமை யில்லா*  அயல்சதுப் பேதி மாரில்,*
குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்ப ரேலும்,*
முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற் கன்பு செய்யும்,*
அடியரை யுகத்தி போலும்*  அரங்கமா நகரு ளானே!–39-

திருமறு மார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்த ராகில்*  மாநிலத் துயிர்க ளெல்லாம்,*
வெருவரக் கொன்று சுட்டிட்*  டீட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயன துய்யார்*  அரங்கமா நகரு ளானே!–40-

வானுளா ரறிய லாகா*  வானவா! என்ப ராகில்,*
தேனுலாந் துளப மாலைச்*  சென்னியாய்! என்ப ராகில்,*
ஊனமா யினகள் செய்யும்*  ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனித மன்றே?–42-

பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!–42-

அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*
நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!–43-

பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*
விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)–44-

வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*
துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)–45-

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)–1-
கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.–2-  
சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  –3-
மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*  வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,* 
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*  இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.–4-
புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*  போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,* 
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*  அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*  எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.–5-
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி’*
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. –6-
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   –7-
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.–8-
ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே. –9- 
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)–10-
—————-

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் 10-பாசுரங்கள் மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

உவந்த உள்ளத்தனாய்*  உலகம் அளந்து அண்டம் உற,* 
நிவந்த நீள்முடியன்*  அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்*  கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்* 
சிவந்த ஆடையின் மேல்*  சென்றதுஆம் என சிந்தனையே (2)–2-
மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,- 
சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,* 
அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்* 
உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)–3-
சதுரமா மதிள்சூழ்*  இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர ஓட்டி,*  ஓர் வெங்கணை*  உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட*  மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,*  திருவயிற்று- 
உதர பந்தம்*  என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.–4-
பாரமாய*  பழவினை பற்றுஅறுத்து,*  என்னைத்தன்-
வாரம்ஆக்கி வைத்தான்*  வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல்  அறியேன்*  அரங்கத்து அம்மான்,*  திரு-
வார மார்பத‌ன்றோ*  அடியேனை ஆட்கொண்டதே*–5-
துண்ட வெண்பிறையன்*  துயர் தீர்த்தவன்*  அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்*  அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட‌ பகிரண்டத்து*  ஒரு மாநிலம் எழுமால்வரை,*  முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்*  அடியேனை உய்யக் கொண்டதே.–6-
கையினார்*  சுரி சங்கனல் ஆழியர்,*  நீள்வரை போல்-
மெய்யனார்*  துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
ஐயனார்,*  அணிஅரங்கனார்*  அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ!*  என்னைச் சிந்தை கவர்ந்ததுவே–7-
பரியனாகி வந்த*  அவுணன் உடல்கீண்ட,*  அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்*  அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து*  மிளிர்ந்து செவ்வரிஓடி*  நீண்டவப்‍- 
பெரிய வாய கண்கள்*  என்னைப் பேதைமை செய்தனவே!–8-
ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)–9-
கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)–10-
————

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -73-பாசுரங்கள் மங்களாசாசனம்

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-

உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.   –(2)-5-4-1-
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.-5-4-2-
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 
வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே. –5-4-3-   
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 
துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.   –5-4-4-     
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 
உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.–5-4-5-
கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*
குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.   –5-4-6-  
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 
மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே–5-4-7-
ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*
வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே–5-4-8-
சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  -5-4-9–
அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 
நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.–5-4-10-
வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!’ என்கின்றாளால்* 
மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!–5-5-1-
கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?’ என்னும்*  மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!–5-5-2-
மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!–5-5-3-
தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!–5-5-4-
பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!–5-5-5-
தாது ஆடு வன மாலை தாரானோ?’ என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்’ என்னும்*  பூமேல்-
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? –5-5-6-
வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? –5-5-7-
உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!’ என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   –5-5-8-
பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?’ என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!–5-5-9-
சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.–5-5-10-
கைம்மானம் மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே -5-6-1-
பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை யெழ் இவ்வுலகு யெழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-2-
ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 
தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே. –5-6-3-
வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 
பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  -5-6-4-
நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.  –5-6-5-  
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 
வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  –5-6-6-
சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-
கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.    –5-6-7-
துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே–5-6-8-
பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*
மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   –5-6-9-
ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*
நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.      –5-6-10-
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.–5-7-1-
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.–5-7-2-
மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  –5-7-3-
மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*
சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     –5-7-4-
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  –5-7-5-  
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. –5-7-6-
சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.-5-7-7-
ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.–5-7-8-
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச
சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-9-
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*
மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.  -5-7-10-   
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே–5-8-1-
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-2-
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-3-
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-4-
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-5-
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .5-8-6-
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-7-
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. –5-8-8-
துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.–5-8-9-
மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.–5-8-10-
தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே–6-6-9-
உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.–7-3-4-
தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    –8-2-7-
புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை   நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே  -9-9-2-
கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.–11-3-7-
அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*
மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)–11-8-8
இம்மையை மறுமை-தன்னை*  எமக்கு வீடுஆகி நின்ற,* 
மெய்ம்மையை விரிந்த சோலை*  வியன் திருஅரங்கம் மேய,*
செம்மையை கருமை தன்னை*  திருமலை ஒருமையானை,* 
தன்மையை நினைவார் என்தன்*  தலைமிசை மன்னுவாரே   –திருக்குறுந்தாண்டகம் – 7
ஆவியை அரங்க மாலை*  அழுக்குஉடம்பு எச்சில் வாயால் 
தூய்மைஇல் தொண்டனேன் நான்*  சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறுஎன்று*  அஞ்சினேற்கு அஞ்சல்என்று 
காவிபோல் வண்ணர் வந்து*  என் கண்ணுளே தோன்றினாரே. –திருக்குறுந்தாண்டகம் – 12
இரும்புஅனன்றுஉண்ட நீரும்*  போதரும் கொள்க,*  என்தன்- 
அரும்பிணி பாவம் எல்லாம்*  அகன்றன என்னை விட்டு,*
சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
கரும்பினைக் கண்டு கொண்டு* என்  கண்இணை களிக்குமாறே.   –திருக்குறுந்தாண்டகம் – 13-
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-
பட்டுஉடுக்கும் அயர்த்துஇரங்கும் பாவை பேணாள்*  பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,* 
எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்*  எம்பெருமான் திருவரங்கம் எங்கே?’ என்னும்* 
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*  மடமானை இதுசெய்தார் தம்மை,*  மெய்யே- 
கட்டுவிச்சி சொல்’, என்னச் சொன்னாள் ‘நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?’–திருநெடுந்தாண்டகம் – 11
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்*  நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ!  என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்*  அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்*  இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே!     –12-
முளைக் கதிரைக் குறும் குடியுள் முகிலை
மூவா மூ வுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆராமுதை யரங்கமேய யந்தணனை
யந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தைத் திருத் தண் காவில்
வெக்காவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று
மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே –14-
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?–18-
முற்றாரா வன முலையாள் பாவை மாயன்
மொய்யகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறைவு இழந்தாள் ஆவிக்கின்றாள்
அணி யரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர்பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொருவற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே –19-
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்- 
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே   –21-
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்- ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்* கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே? –23-
இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்- 
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!–24-
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே! –25-

பேராலி தண் கால் நறையூர் திருப் புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை –சிறிய திருமடல் – 71

மன்னு மரங்கத்து எம் மா மணியை – வல்லவாழ் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை –பெரிய திருமடல் – 118

———————

ஸ்ரீ நம்மாழ்வார் -12-பாசுரங்கள் மங்களாசாசனம்

தண் அம் துழாய்*  வளை கொள்வது யாம் இழப்போம்,*  நடுவே-
வண்ணம் துழாவி*  ஓர் வாடை உலாவும்,*  வள் வாய் அலகால்-
புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்*  
எண்ணம் துழாவுமிடத்து,*  உளவோ பண்டும் இன்னன்னவே? –திருவிருத்தம் – 28
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   –7-2-1-
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?–7-2-2-
வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*
கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?–7-2-3-
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? –7-2-4-
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!–7-2-5-
மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. –7-2-6-
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே–7-2-7-
கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?-7-2-8-
என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*
அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)-7-2-9-
முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே–7-2-10-
முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)–7-2-11-
————-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் மங்களாசாசனம்

ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 

இன்று மறப்பனோ ஏழைகாள்* – அன்று-
கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை.–முதல்திருவந்தாதி – 6-
———–

ஸ்ரீ பூதத்தாழ்வார் 4-பாசுரங்கள் மங்களாசாசனம்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79–

————–

ஸ்ரீ பேயாழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண் டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். –மூன்றாம் திருவந்தாதி – 61

விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.–மூன்றாம் திருவந்தாதி – 62

——————-

நான்முகன் திருவந்தாதி

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-
அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-
பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-
முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  – சொல் நின்ற-
தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-
நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   
——————

சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என்
சோர்வந்த சொல்லில் சுருங்குமோ ஆர்வம்
ஒருவர் அங்கு அங்கு ஒயில் உகந்து அவரை ஆள்வான்
திரு அரங்கம் கோயில் சிறப்பு -1-ஸ்ரீ திரு நின்றவூர் திருமலை அத்தங்கி தாதாச்சார்யர் தொண்டன் அருளிச் செய்த நூற்று எட்டுத் திருப்பதி அந்தாதி —

ஆர்வம் ஒருவர் அங்கு அங்கு ஒயில் -ஒருவர் அந்த அந்த விஷயங்களில் பலவகையான உலகப் பற்றுக்களில் ஆசை ஒழிந்தால் –
உகந்து அவரை ஆள்வான் -அவ்வாறு பற்று அற்ற அன்பரை விரும்பி அடிமை கொள்ளும் எம்பிரான் உடைய
திரு அரங்கம் கோயில் சிறப்பு -பெருமையை
சீர் வந்த உந்தித் திசை முகனால் அல்லாது என் சோர்வந்த சொல்லில் -குற்றம் பொருந்திய சொற்களில் -சுருங்குமோ
நான்முகன்-முதலில் வழிபட்ட திருவரங்கம் என்பதாலும் எம்பெருமான புதல்வன் என்பதாலும் -சீர் வந்த உந்தித் திசை மகன் என்கிறார் –

சீதரனே யயன் விபீடணன் தர்மன் சிவன் பரவித்
தீதல புன்னைச் சசி வாவி வேத ஸ்ருங்கம் திகழ்
ஒதரு மானத்து அரங்க மின்னூடு தெற்கு ஓர்ந்து துயில்
மாதவன் அரங்கத்து அரங்கர் சொல் வரன் அருளே –

தர்மன் -தர்ம வர்மன்
புன்னை தலவிருஷம்
சசி வாவி -சந்த்ர புஷ்கரணி
வேத ஸ்ருங்கம் திகழ் ஒதரு மானம் -வேத ஸ்ருங்கம் எனும் ப்ரணவாக்ருதி விமானம்
அரங்கமின் -ஸ்ரீ ரெங்க நாச்சியார் -ஸ்ரீ பெரிய பிராட்டியார்
சேவை சாதிக்கும் திக்கு -தெற்கு
சயனத் திருக்கோலம்

எட்டு ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரங்களில் முதன்மையானது ஸ்ரீமந் நாரயணன், அரங்கனாய் அருளும் திருவரங்கம்.
(மற்றவை – ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி எனும் திருவேங்கடம், முக்திநாத், திருநைமிசாரண்யம்,
தோதாத்திரி எனும் வானமாமலை, புஷ்கரம் மற்றும் பத்ரிநாத்).

எம்பெருமான் பள்ளி கொண்ட திருக்கோலத்தினையே தனது பெயராகக் தாங்கி, ” திருச் சீரங்கன் பள்ளி ” என அழைக்கப்பட்டது.
பின்னர் அதுவே நாளடைவில் மருவி “திருச்சிராப்பள்ளி” என்றானது

ஏழு மதில்களும் ஏழு உலகங்களின் பெயர்களையே தாங்கி நிற்கின்றன.
இவற்றை தன்னுள் அடக்கி காட்சி தருகின்றது 8 – வது திருச்சுற்று.
இச் சுற்றில்தான் ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமான ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் பிரதான நுழைவு வாயிலாக நம்மை வரவேற்கின்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் -13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட, 236 அடி உயர மிகப் பிரம்மாண்டமான இக் கோபுரம்,
மன்னர் கிருஷ்ண தேவ ராயரால் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இது “ராயர் கோபுரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆசியாவிலேயெ மிக உயரமான கோவில் கோபுரம் என்ற பெருமையுடைய இக் கோபுரம் பல இன்னல்களை தாண்டி,
ஆந்திர அஹோபில மடத்தின் 41 வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் பெரும் முயற்சியால் 1987 – ல் நிறைவடைந்தது.

ஸ்ரீரங்கத்தின் ஏழு திருமதில்களும் – 7 வது திருமதிலின் பெயர் பூலோகமாகும்.
இதற்கு ராஜ வீதி, சித்திர வீதி, மாட வீதி எனப் பல பெயர்கள் உண்டு.
இங்கு ் கண்ணன் சந்நதயும், ஆஞ்சனேயர் திருக்கோவிலும், வானமாலை மண்டபமும் காணப்படுகின்றன.
7 மதிகளை உள்ளடக்கிய 8 வது சுற்றுக்கு “அடயவளைத்தான் சுற்று” என்று பெயர்.
2 வது திருமதிலின் பெயர் “புவர்லோகம்”. இச் சுற்று திருவிக்கிரமன் திருவீதி என்றும் அழைக்கப்படுகின்றது.
பெருமாள் திருவாகனங்கள் உலாப் போகும் இதற்கு உத்திர வீதி என்ற பெயரும் உண்டு.
ஸ்ரீமான் இராமானுஜர் தங்கியிருந்து ஸ்ரீரங்கத்தை நிர்வகித்ததும், மணவாள மாமுனிகள் தன் அவதார ரகசியத்தை
உத்தம நம்பி எனும் தன் சீடருக்கு காட்டியருளியதும் இங்குதான்.
அஹோபில மடமும், யானை கட்டும் மண்டபமும் இங்கேயே உள்ளன.

ஸூவர்லோகம் என்பது 3 வது திருமதில். நான்முகன் கோட்டை வாசல், அகளங்க சோழன் கட்டியதால்
அகளங்கன் சுற்று என்றும் அழைக்கப்படகிறது. தாயார் சந்நதியும்,, ஆண்டாள் சந்நதியும்,
அழகிய மேட்டு சிங்கர் எனும் நரசிங்கப் பெருமாள் சந்நதியும், எட்டு கரங்களுடன் வரப்பிரசாதியாய் காட்சி தரும் சக்கரத்தாழ்வார் சந்நதியும்,
பேரழகு வாய்ந்த வேணு கோபால கிருஷ்ணர் சந்நதியும், வசந்த மண்டபமும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

கம்பர் பெருமான் தன் இராமாயணத்தை அரங்கேற்றிய கம்பர் மண்டபம் தாயார் சந்நதியின் எதிரே அமைந்துள்ளது.
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசியன்று துவங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடைபெறும்.
அரையர் சேவையும் இங்கிருந்தே துவங்கும். இராமானுஜரின் “தானான திருமேனி” உள்ளதும் இங்குதான்.
அரங்கனுக்கு மலர் கைங்கர்யம் செய்திட்ட தொண்டரடிப்பொடியார், பிள்ளை லோகாச்சார்யார், திருப்பாணார்,
கூரத்தாழ்வார் போன்றோரது சந்நதிகளும் இத் திருச்சுற்றிலேயே அமைந்துள்ளன.

“திரு அந்திக் காப்பு” நடைபெறுவதும் இவ்விடமே. பெருமாள் வீதி் உளா முடித்து வந்ததும்,
சிறு குடத்தின் மீது கிண்னம் ஒனறு வைத்து, அச் சிறியதொரு கீன்ணத்தில் நெய்யிட்டு திருவிளக்கேற்றி
அரங்கனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்வே திரு அந்திக் காப்பு எனும் விஷேஷ நிகழ்வு.
ஸ்ரீரங்க விலாச மண்டபம் அமைந்துள்ளது் இத் திருசுற்றிலேயே.

நடுநாயகமாய் விளங்கும் மஹர்லோகம் எனும் 4 வது சுற்று. இதனை கட்டுவித்த திருமங்கையாரின் பெயர் தாங்கி
“திருமங்கை மன்னன் சுற்று” என்று அழைக்கப்படுகின்றது. ஆலிநாடன் வீதி என்ற பெயரும் உண்டு.
இதன் நுழை வாயிலுக்கு கார்த்திகை கோபுர வாசல் என்று பெயர். அரங்கனை தன் இருகைகள் கூப்பித் தொழுதவாறு,
மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி அருளும் 20 அடி உயர கருடாழ்வாரின் சந்நதி இத் திருச்சுற்றிலேயே அமைந்திருக்கின்றது.

கருட சந்நிதியின் எதிரில் அமைந்துள்ள பரமன் மண்டபச் சிற்பங்கள் கலை நுணுக்கம் வாய்ந்தவை.
முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சந்நதிகளும்,
வேறெங்கும் காண இயலாத தன்வந்திரி ப்கவான் சந்நதியும், சந்திர புஷ்கரணியும் அமைந்துள்ளது
இத் திருச்சுற்றின் தனிப் பெரும் சிறப்புகள். சொர்க்க வாசல் திறக்கப்டுவதும் இவ்விடமே.
திருக்கோவில் பிரசாத விற்பனையும் இங்குதான் நடைபெறுகிறது.

ஜநோலோகம் என்பது 5 வது திருச்சுற்றின் பெயர். முன்னொரு சமயம் ஆரியர்கள் எனும் வட நாட்டு அந்தணர்கள்
இத் திரு வாயிலை காவல் புரிந்து வந்ததால் இதற்கு ஆர்யபடவாசல், குலசேகரன் திருச்சுற்று எனறும் அழைக்கப்படுகின்றது.
விஜய நகர மன்னர்களால் உருவாக்கப்பட்ட, 108 தங்கத் தகடுகள் பதித்த கொடிமரமும், உள் கோடை மண்டபமும்,
பரமபத வாசலும் இங்கேயே அமைந்துள்ளன. ஊஞ்சள் உற்சவம் நடைபேறுவதும் இவ்விடமே.

தபோலோகம் என்பது 6 வது திருச்சுற்றின் பெயர். மன்னன் ராஜ மகேந்திர சோழனால் கட்டப்பட்டதால்
இதற்கு ராஜ மகேந்திரன் திருச்சுற்று என்ற பெயரும் உண்டு. இதன் நுழைவாயிலுக்கு “நாழிகேட்டான் வாசல்” என்ரு பெயர்.
இங்கு துலுக்க நாச்சியார் சந்நதி, சேனை முதலியார் சந்நதி, கண்ணாடி அறை, திருப்பரிவட்டாரங்கள் வைக்கும் அறை,
யாக சாலைகள் போன்றவை அமைந்துள்ளன. இங்குள்ள கிளி மண்டபம் திருமங்கையாரால் கட்டப்பட்டது.

கற்பூர படியேத்தம் எனும் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று
இச் சுற்றிலேயே நடைபெறும். ஒரு சமயம் இந் நிகழ்ச்சியை காண வேண்டி விஜய ரங்க சொக்கநாதர் தன் குடும்பத்துடன் வர,
அதற்குள் வைபவம் நிறைவுற்றது. தவறாது இதனை காண வேண்டும் என்ற பேராவலில் விஜயரங்க நாயக்கர்
இங்கேயே ஓராண்டு காலம் தங்கியிருந்து அடுத்த ஆண்டு இந் நிகழ்ச்சியை கண்டுகளிததே தன் நாடு திரும்பினார்..

சத்தியலோகம் எனும் முதலாம் திருச்சுற்றை உண்டாக்கியது சோழ மன்னன் தர்ம வர்மன்.
இதன் நுழை வாயிலுக்கு திரு அணுக்கன் திருவாசல் என்று பெயர். கருவறை எனும் மூலவர் சந்நதியில்,
பேரழகுடன் சத்தியலோக பெருமாள் ஆதிஷேஷ அனந்தனின் மீது சயனித்திருப்பது இங்குதான்.
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்திற்கு ரங்க மண்டபம் என்று் பெயர்.
இங்குள்ள 24 தூண்களும் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாய் கொண்டு வணங்கப்படுகின்றது.

ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, வேறெங்கும் காண இயலாத வண்னம் தன் இரு புறமும் சுக்கிரீவனையும்,
அங்கதனையும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் 20 அடி உயர கருடாழ்வார்,
உடையவர் ஸ்ரீமான் ராமானுஜர் சந்நதிகள் இச் சுற்றல் உள்ளன. மூலவரை தரிசித்த பின்னர் தரிசிக்க வேண்டிய
“ப்ரணவாக்ருதி விமானம்”, அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் தங்க விக்ரஹம்” போன்றவை ஸ்ரீரங்கத்தின் சிறப்புகள்.

அழகிய சிங்க பெருமாள் அங்கீகரித்த கம்ப ராமாயணம் – கம்பர் பெருமான் தனது கம்ப ராமாயணத்தை இவ்விடமே இயற்றினார்.
கம்பர் மணடபம் தாயார் சந்நதிக்கருகே அமைந்துள்ளது.
கம்பர் தனது ராமாயணத்தில் ஹிரண்யணை வதம் செய்த வரலாற்றை விளக்குகின்றார்.
அது சமயம் இங்கிருந்த பல சமய வல்லுனர்கள் ராமாயணத்தில் ஹிரண்ய சம்ஹாரம் வருவதால்,
இவ்விடம் ராமாயண அரங்கேற்றத்தினை ஏற்கமாட்டோம் என மறுதலித்தனர்.
அவ்வாறயின் எம்பெருமான் முன்பு இக் காவியத்தை அரங்கேற்றுவோம்.
எம்பெருமான் ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் இதனை ஏற்போம்” எனக் கூறி கம்பர் பெருமான்
தனது ராமாயணத்தினை இத் திருக்கோவிலில் அரங்கேற்ற, அது சமயம் சந்நதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள
அழகிய சிங்க பெருமாள் ” கம்பரின் ராமாயண காவியத்தினை யாம் அங்கீகரித்தோம் ” என
சிம்ம கர்ஜனையுடம் பெரு முழக்கம் செய்து ஏற்றுக் கொண்டார்..

ஆழ்வார்களும், ஸ்ரீரங்கமும் – ஆழ்வார்களுக்கும் , ஸ்ரீரங்கத்திற்குமான பிணைப்பு மிக தாத்பரியமானது.
பங்குனி மாத திருவிழாக்களின் பொழுது, அரங்கன் உறையூர் சென்று கமலவல்லியை மணம் புரிந்ததை அறிந்த
ஸ்ரீரங்கத்து பிராட்டியார் அவனுடன் பிணக்கு கொண்டு தவடைப்பார். அது சமயம் நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்திடுவார்.
இந் நிகழ்ச்சி ப்ரணய கலஹம் என திருவரங்க பங்குனி மாத உற்சவங்களில் கொண்டாடப்படுகிறது.

திருமங்கையாழ்வார் திருவரங்கத்திற்கு திருமதில் எழுப்பினார். திருநறையூர் சாரநாதன் மீது திருமடல் பாடினார்.
தமக்கு மதில் எழுப்பியதால் மகிழ்ந்த அரங்கன், திருமங்கையாரை அழைத்து தீர்த்தம், சடாரி, மாலை, பரிவட்டம் போன்றன தந்து
“எமக்கும் மடல் உரைக்கலாகாதோ ” என்று கேட்டார். அதற்கு திருமங்கையாரோ “மதில் இங்கே மடல் அங்கே ” என்றாராம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கத்தில் அரங்கனுக்காக சிறு நந்தவனம் ஒன்றமைத்து அனுதினமும் அரங்கனுக்கு பூமாலை சாற்றி வந்தார்.
திருமங்கையார் கோவிலுக்கு திரு மதில் எழுப்பிக் கொண்டிருந்த சமயம் அது. இடையில் நந்தவனம் குறுக்கிட,,
அதனை ஒதுக்கி விட்டு மதில் எழுப்பலானார். மகிழ்ந்த தொண்டரடியார் தனது மலர் கொய்யும் ஆயுதத்திற்கு,
திருமங்கையின் பெயர்களில் ஒன்றான “அருள்மாரி” எனப் பெயரிட்டு நன்றி கூர்ந்தார்

பெரியாழ்வார் அரங்கனுக்கு தன் பெண்ணையே கொடுத்தார். திருமங்கையார் திருமதில் கொடுத்தார்.
தொண்டரடிப்பொடியாரோ தினம் தினம் மலர் கொடுத்தார். திருப்பாணர் அவன்தன் திருவடி கலந்தார்.
மதுரகவியார், அரங்கனுக்காக அவன் விரும்பியவாறு நம்மாழ்வாரை இவ்விடம் கொணர்ந்தார்.
நம்மாழ்வார் பெருமானுக்கும், பிராட்டிக்கும் ஆண்டுதோறும் சமாதானம் செய்கின்றார்.
என்னே அரங்கனின் மாண்பும், ஆழ்வார்களின் பிணைப்பும்.

திருவரங்கத்தில் அனைத்தும் பெரியவைகளே – திருக்கோவில் மிகப் பெரிது.
அதனாலேயே பெரியகோவில் ஆயிற்று. 20 அடி உயர கருடாழ்வார் மிகப் பிரம்மாண்டம். 7 மதில்களும் சுற்றி அமைந்துள்ள தூண்களும் பெரியன.
அரங்கன் பெரிய பெருமாள். தாயார் பெரிய பிராட்டி. இங்கிருந்த நம்பிகள் பெரிய நம்பி.
இங்கு சமர்ப்பிக்கும் தளிகை பெரிய தளிகை. வாத்யம் பெரிய மேளம். பக்ஷசணங்கள் பெரிய திருப்பணியாரங்கள்.
பெண் கொடுத்தவர் பெரியாழ்வார்.

இரு புறம் ஓடும் நதிகளான காவிரியும், கொள்ளிடமும் பெரிய நதிகள்.
ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெரிய மங்களாசாசனங்கள். 11 ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற பாசுரங்கள் 247.
ராயர் கோபுரம் எனும் தெற்கு கோபுரம் 13 நிலைகள், 13 கலசங்கள் கொண்ட 236 அடி உயர ஆசியாவின் மிக உயரமான கோபுரம்.
மூலவரை தரிசித்து வெளி வந்த பின்னர் தரிசிக்க வேண்டிய “ப்ரணவாக்ருதி விமானமும்”
அதில் தெற்கில் அமைந்துள்ள “பரவாஸுதேவர் விக்ரஹமும்” ஸ்ரீரங்கத்தின் தனிப் பெறும் சிறப்புகள்

கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது. இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்:

சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது.

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-

March 20, 2024

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-—–

—————

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவு அற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து
ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால்
அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

————-

—————

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-
இன்று (12.12.23)
திருநெடுந்தாண்டகம்!

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, இன்று இரவு திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில் அரையர் ஸ்வாமிகளால் தாளத்துடன் சேவிப்பர்!

தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றலுக்கு பெரியபெருமாளே ஊன்றுகோல் என்பதை ஆழ்வார் இந்த பிரபந்தத்தில் அறுதியிடுகிறார்!

மேல்நாட்டு வேதாந்தியை (நஞ்சீயர்) வாதத்தில் வென்று, அவரை திருத்திப்பணி கொண்டு திரும்பிய தம் திவ்ய குமாரர் பராசர பட்டரிடம், வேதாந்தியை எப்படி வென்றீர் எனக்கேட்க, பட்டர் திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் உள்ள ப்ரமாணங்களைக் கொண்டு வென்றதாக விண்ணப்பித்து தம்முடைய வாதங்களையும் சமர்ப்பித்தார் பெரியபெருமாளிடம்!

இந்த வைபவத்தையே நம்பெருமாள், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் திருநாளாக அன்வயிக்கிறார்!

மற்ற திவ்யதேசங்களில் திருஅத்யயன உற்சவம் அமாவாஸ்யைக்கு அடுத்த பிரதமையன்று திருப்பல்லாண்டுடன் தொடங்குவர்.

ஶ்ரீரங்கத்தில் மட்டும் ஒருநாள் முன்னரே, அமாவாஸ்யையன்று “திருநெடுந்தாண்டகத்துடன்” தொடங்குவர் – ஶ்ரீபராசர பட்டரின் பெருமையைக் கொண்டாடும் விதமாக!!

“மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்;
விளக்கொளியாய், முளைத்தெழுந்த திங்கள் தானாய்;
பின்னுருவாய், முன்னுருவிற் பிணி மூப்பில்லாப்,
பிறப்பிலியாய், இறப்பதற்கே எண்ணாது எண்ணும்;
பொன்னுருவாய், மணியுருவில் பூதமைந்தாய்ப்,
புனலுருவாய், அனலுருவில் திகழுஞ்சோதி;
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை,
தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே!”
-திருநெடுந்தாண்டகம் (முதல் பாசுரம்)

தேக ஆத்மா அபிமானத்தைப் போக்கி, நான்கு வேதங்களையும் தந்து, அஞ்ஞானத்தை அகற்றி, ஜ்ஞான விளக்கேற்றி, நீர்மை குணத்தோடு ஸர்வ சுலபனான எம்பெருமான் என்னுள்ளத்தில் எழுந்தருளி, தம் குளிர்ந்த திருவடிகளை என் சென்னியில் சாற்றினான்!
🙏🙏

இரண்டாம் நாள் ஶ்ரீரங்கம்
நம்பெருமாள் திருநாரணன் முடி, முத்தரசன் கொரடு அணிந்து
சிகப்பு கல் அபய ஹஸ்தம்,
மகர கர்ண பத்திரம்,
கண்டபேரண்ட பக்ஷி பதக்கம்,
வெள்ளைக்கல் அட்டிகை,
வில்வ பத்திரபதக்கம்,
நெல்லிக்காய் மாலை,
காசு மாலை
அடுக்கு பதக்கங்கள் அணிந்து ;
பின் சேவையாக
புஜ கீர்த்தியுடன்;
சிகப்புக்கல் தாமரை பதக்கம் அணிந்து;
வெண்பட்டு உடுத்தி அர்ஜுன மண்டபத்தில் நேரலையாக சேவை சாத்திக்கிறார் 🙏ரங்கா ரங்கரங்கா

———–

நம்பெருமாள் ரத்தின நீள் முடி,ரத்தின அபயஹஸ்தம் மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்

மூலஸ்தானத்தில் இருந்து, சிம்ஹ கதியில், புறப்பட்டு,ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் திருச்செவி சாத்தியருளி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள் கிறார்.இராப்பத்து 2 ஆம் நாளிலிருந்து 6 ஆம் நாள் வரையும்,9 ஆம் நாளும் ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் சேவிக்கப்படும்.

உடையவர் காலத்தில், இந்த வீதியில் 700 அரையர்கள் வசித்து வந்ததாக, “ராமாநுஜார்ய திவ்யசரிதை”,என்னும் நூலில்,பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகுறிப்பிட்டுள்ளார். இப்போது 12 அரையர்களே (இரு குடும்பங்களாக நாதமுனி அரையர்கள், திருவரங்கப் பெருமாள் அரையர்கள் என்று) உள்ளனர்!!

சிறிய தாளமும்,பெரிய மணியும்
அரையர்களின் எண்ணிக்கை, குறைந்து வந்த காலகட்ட த்தில், அவர்கள் உபயோகித்து வந்த தாளங்கள் உருக்கப் பட்டு,ஒரு பெரிய திருமணியாக வார்க்கப்பட்டது.அந்தப் பெரியமணி அர்ச்சுன மண்டபத்துக்குச் செல்லும் வழியில் நின்று, ப்ரணவாகார (தங்க)விமானம் சேவிக்கும் இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.அந்தப் “பெரியமணியின்”ஓசையைக் கேட்டுக்கொண்டே, இரவில், கோயிலின் நடை சாற்றப்படுமுன், பெரிய பெருமாள் ‘அரவணைத் தளிகை’ கண்டருளுகிறார்.
( இரவு சுமார் 10 மணிக்கு இந்த மணி(அரவணை மணி) சேவிக்கப்படுகிறது.)

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா .

இதையொட்டி, நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், கர்ணபூசம், பவள மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு மேலப்படி வழியாக வெளிவந்து இரண்டாம் பிரகாரம் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக காலை 7.45 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.

காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர்.

மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

பகல்பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

இதேபோல், பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள்  நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு எழுந்தருள்வார்.

சொர்க்கவாசல்  பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

சொர்க்கவாசல் திறப்பு தினமான முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளில்  நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளில் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளில் தீர்த்தவாரியும்,  நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

18 விதமான வாத்தியங்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தினந்தோறும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழாக் காலங்களில் மட்டும் 18 விதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். இதில், பெரியமேளம், நாதஸ்வரம், சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும்.

ஒன்பதாம் நாளன்று காலையில் நம்பெருமாள் முத்துக்குறிக்காக, முத்து பாண்டியன் கொண்டை,முத்து அபயஹஸ்தம் காதுகாப்பு,முத்தங்கி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின் தொடர பிரகாரங்களில் வலம் வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்

நாத முனிகள் ஆழ்வாரை சாஷாத் கரித்து பெற்று
மேலை அகத்து கீழ் அகத்து ஆழ்வார் கொண்டு-
அரையர் சந்ததி-ஸ்ரீ ரெங்கம் பிரதானம்
ஸ்ரீ வில்லி புத்தூர் ஆழ்வார் திரு நகரி-ஆரம்பம் மட்டும்
கைசிக -திரு குறுங்குடி அரையர் சேவை உண்டு
21 நாள் இயற்ப்பா
அப்புறம் திரு பல்லாண்டு
திரு நெடும் தாண்டகம் சேவை உடன் தொடக்கம் -இங்கு
ஐதீகம் முன்னிட்டு-
உடையவர்-திருத்தி பணி கொண்டார்
யாதவ பிரகாசர் /யக்ஜா மூர்த்தி-அருளாள பெருமாள் எம்பெருமானார்
வேதாந்தி-திருத்தி  பணி கொள்ள பட்டரை நியமிக்க -திரு நெடும் தாண்டக சாஸ்திரம் கொண்டு-
அனந்தாழ்வான்-திரு புத்தூர் -ஸ்ரீ ரெங்க பட்டணம் சமீபம் -பரிகரம் விட்டு -தேசாந்தி போல்
ததீயாரதனை-தீர்த்தம் சாதிக்கும் பொழுது பார்க்கலாம் அவரை நேராக -நின்றுகொண்டே இருக்க-
பிஷைக்காக வந்தேன்-தர்க்க பிஷை-ந அன்ன பிஷை-அவரோ நீர்-ஆம்-முன்பே கேள்வி பட்டதால்
அத்யயன உத்சவம் ஆரம்பம் என ஸ்ரீ ரெங்கம் வர- போனகார்யம் பற்றி-கேட்டு இதை கேட்க ஆசை கொண்டு
பட்டர் சந்ததிகள் அரையரிடம் -ஆரம்பம்-கொண்டாட்டம் ஆரம்பம்-அபிநயம்- வியாக்யானம்
மாலை 6 மணிக்கு ஆரம்பம் 2 மணி நேரம் ஆகும்
ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார்
விஷயந்தரங்களில் மண்டி- சாஸ்திரம் கொண்டு திருத்த ஒண்ணாது
அழகாய் காட்டி கொடுக்க
உன் சேவடி அன்று நயவேன்-
சம்பந்த ஞானம் பூர்வமாக -திரு மந்த்ரம்- அர்த்தம்-எல்லை நிலம் திரு பத்தி காட்டி
இவையே பிரப்யம் பிராபகம் போக்கியம்
அனுபவிக்க புகுந்து நான் கண்டு கொண்டேன் நாராயண எனும் நாமம் ஒன்பது கால் சொல்லி
தான் உகந்து அருளியநிலமே பிரப்யம் என்று மண்டி இருந்தார்
சாகரம் சோஷம் இஷ்யாமி-போல் மடல் எடுத்து
முகம் காட்டி இவரை தரிப்பிக்க
அவா அற்று வீடு பெற்ற வழியை தெரிவிக்கிறது திரு நெடும் தாண்டகம் பிர பந்தம்
மின்னுருவாய்-எந்தை தளிர் புரையும் திரு அடிகள் என் தலை மீதே
இதை பாட i மணி  ஆகும்-இசை கூட்டி –
மை வண்ண -அவரை தேவர் என்று அஞ்சினோம்
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் யாரே
பரதன் சித்ர கூடம்–கண்டவாறே மயங்கி-வியாதி உண்டானது போல் பேசினது
அது போல் இங்கும் கட்டுவிச்சி-எங்கும் திரிந்து –யார் இங்கு அழைத்தது
குடந்தை -பேர் அன்பில்-கிடந்தது யெங்கும் திரிந்து யார் இங்கு அழைத்தது
நண்ணுவேன் நம் பெருமாளையே -பழையதோர் கலை கொண்டு வா –குறி பார்த்து
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரேவெண்ணெய் விழுங்கி – வெறும் கலத்தை அதன் ஓசை கேட்க்கும் –யசோதை நங்காய் உன் மகனை கூவாய்

வருக வருக நம்பி –காகுத்த நம்பி வருக இங்கே –பரிபவம் பேச தரிகி கில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே
வாழ ஒட்டான் மது சூதனனே
கோவிந்தன் தன அடியார்கள் ஆகி எண் திசையும் விளக்காக்கி இருப்பார்
கோவில் திரு மொழி என்பர் பெரி ஆழ்வார் திரு மொழி
ஆற்றில் இருந்து விளையாடு வோங்களை—இன்று முற்றும்
உச்சியுள் நின்றானே இன்று முற்றும்
ஆநிரை காத்தனாய் இன்று முற்றும்
அங்கு ஆப்பு உண்டனாய் -அழுது உண்டு அழுதானே இன்று முற்றும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி—தரணி இடந்தானாய் இன்று முற்றும்
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஓன்று இல்லையே
சிக்கன வந்து பிறந்து–திரு மால் இரும் சோலை எந்தாய்
இனி போகல் ஒட்டேன்-உன் திரு ஆணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் –உன் பொன்னடி வாழ்க என்று இன குறவர்
உன் பாத நிழல் அல்லால்-வேறு ஒன்றும் காண கில்லேன்-..எந்தாய்
உடல் சோர்ந்து நடுங்கி-நீள் சுனை சூழ்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா
அக்கரை என்னும் அனர்த்த கடலுள் அழுந்தி-இக்கரை-சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீத உடையும் –எந்தாய்
இனி உன்னை போகல் ஒட்டேன்–திரு மால் இரும் சோலை எந்தாய்
இன்று வந்து இங்கு உன்னை கண்டு கொண்டேன்-
நின்ற பிரான் அடி மேல் அடி–விண்ணப்பம் செய்–புதுவையர் கோன் விட்டு சித்தன்-உலகம் அளந்தான் தமரே
ஆழ்வார் பக்தர் பரவும் பெருமாள்
தெய்வ சிகா மணி பெருமாள்
மூன்றாம் நாள்-
சென்னி யோங்கு –நின் அருளே புரிந்து இருந்தேன்
வியாக்யானம் சேவிப்பார்கள்
ஏழாவது பாட்டு வரை
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்
ஆழ்வார் பரவும் பெருமாள்
பதின்மர் பாடும் பெருமாள்
தெய்வ சிகா மணி பெருமாள்
மரியாதை
அரையர் ஆழ்வார் ஸ்தானம் -ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
அடுத்து மருப்பு  ஒசித்தாய் –தொடர்ந்து ஆரம்பிப்பார்கள்
திரு பாவை அடுத்து
ஆழ்வார் ஆச்சர்யர் மரியாதை
அந்த ஆழ்வாருக்கு தனி பட்ட மரியாதை
ஆண்டாள் ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் எழுந்து அருளி அலங்கரிப்பாள்
பெரி ஆழ்வாருக்கு -மரியாதையை
திரு பாவை ஜீயர்-எம்பெரும்மானருக்கு -உகந்து சாத்துவார்கள் ஸ்ரீ ரெங்கத்தில்
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்டி -பாடி சேவிப்பார்கள்
வாட்டம் தணிய வீசீரே
பரமன் வலைப் பட்டு இருந்தேனை–கோலால் நிரை மேய்த்து —
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கோவில் வாழும் நம் பெருமாள் தெய்வ சிகா மணி பெருமாள்
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி
கஞ்சை காய்ந்த  கரு வில்லி ‘
நம் பெருமாள் கம்ச வதம் கதை சொல்வார்கள்
பூதனை -கூனி -மல்லர் வதம்
கஞ்சன் குஞ்சி பிடித்து
2 -4 வரை மாலைநடக்கும்
கஞ்சை காய்ந்த  கரு வில்லி ‘கடைக் கண் என்னும் சிறைக் கோலால்
நெஞ்சு ஊடுருவ வே யுண்டு  நிலையம் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னாவான் ஒருவன் அவன் மார்பு அணிந்த வன மாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே
நாட்டை படை என்று –வேட்டை ஆடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே
பருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை — பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பாரே
ஆழ்வார்கள் இறைஞ்சும் பெருமாள்
மகிழ்ந்து ஏத்தும் பெருமாள்
காரி மாறன் அனு தினம் ஏத்தும் பெருமாள்
பூ மாலை சூடியே பொங்கும் பெருமாள்
பூ  கொண்டு போற்றும் பெருமாள்
வாள் கலியன் வாய் கொண்டு வாழ்த்தும் பெருமாள்
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி-
பெரிய திரு அத்யயன உத்சவம்
திரு வாய் மொழி இரவு ஒரு நூறு
ஸ்ரிய பதியாய் அவாப்த சமஸ்த காமனாய் ..தொடங்கி–
இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-கரை மரம் சேரும் ஏதோ என்று சிந்தித்து
தான் திரு அவதாரம் செய்த இடத்திலும் –
மூட-ஜன்ம கர்மா -பெறற்கு அறிய
சஜாதீயர் கொண்டு திருத்த
ஆவாரார் என்று nal திசையும் திரு கண் விட
தெற்கு திசை ஆக்கையில் உழன்று
எங்கும் பக்க நோக்கு அறியா -நம் மேல் ஒருங்கே புரள வைத்தார்

நாயினேன்-தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலை சொல்லும் படி ஆ முதல்வன்
உலகம் உய்ய நான் உய்ய நீயும் உய்ய -நெருஞ்சி காட்டை பிருந்தாவனம் -ஆக்கிய கண்ண பிரான்- ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் ஆக்கி -பயன் நன்றாகிலும் திருத்தி பணி கொள்வான் ஆழ்வாரை நியமித்து
பத்து பத்திலும் பத்து குணம் காட்டி–காரணத்வம் தொடங்கி ஆர்த்தி ஹரத்வம் வரை -அருளி-
அவா அற்று வீடு பெற்றார்
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –தொழுது எழு என் மனனே –
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –தொழுது எழு என் மனனே –
வள எழ உலகம் –கள்வா என்பேன் -எந்தாய் என்பான் நினைந்து நைந்தே
செல்வா நாரணன் சொல் கேட்டலும்-
நம்பியை -அச் செம் போனே திகழும் திரு மூர்த்தியை –என் சொல்லி மறப்பனோ-
மறப்பனோ என் நன் என் மணியை
மணியை-தென் குரு கூர் சட கோபன் சொல்-கல்வி வாயுமே
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் பரவும் தம்பிரான்
இரண்டாம் நாள்
வேதாந்தத்தில் -காரணம் -தேயதா-காரணமே தியானிக்க
ஜகத் காரண வஸ்து ஏது என்ன-
ஏதோ வயஸ்து-பிரம வாக்கியம்-சாமான்யம்- விசேஷம் அபெஷித்து
சதேவ -ஏக மேவ-சத் -சப்தமும் சாமான்ய வாசகம் விசேஷம்
மேலே சென்றவாறே எகோகை நாராயண ஆஸீத் ந பிரம்மா -நாராயணனே ஜகத் காரணன் தலை கட்ட
திரி வித உபபாதன   சக காரி நிமித்த காரணம் –
 தான் ஓர் வேர் முதல் தனி வித்தாய்
வித்தாய் -நிமித்த
தனி வித்தாய் -சக காரி
தான் ஓர் வேர் முதல் தனி வித்து-தானே
இரண்டாம் பத்தில் அதி முதல் அந்தம் அருளி
எப் பொருளுக்கும் ஆதியம் சோதிக்கே முதலில்
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
காரணத்வம் உப க்ரமித்து உப சம்கரித்து
முதலிகள் நிர்வகிப்பது ‘
நீயும் திரு மாலால் நெஞ்சம் கொள் படையே
அந்தாமத்து  அன்பு —
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோவில்
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்-தாள் அணிவிக்கும் முடித்தே
ஆழ்வார்கள் பரவும் பெருமாள்
துதிக்கும் பெருமாள்
பதின்மர் பாடும் பெருமாள் நம் தெய்வ சிகா மணி பெருமாள்
மூன்றம் நாள்
மருளில் வன் குரு கோர் சடகோபன்
அனுதயம்/சம்சயம்/விபரீதம்
மருள் இல்லாமை-சங்கை
அனுதயம் -ஞானம் அடியோடு இன்றி
சங்கை- நிச்சயம் இன்றி -சம்சயம்
விபரியம்-விபரீதம் -வித்பத்தி- பிறவா இன்றி இருக்கை
-ஆத்மா உபாயம் உபயம் விஷயம் மறந்து -விஸ்மயம்
மயர்வற மதி நலம் அருளி- இந்த நான்கும் இன்றி-
பிரமாத -வாய் தவறி-பேசுவது கவனிப்பு இன்றி-
விப்ரவித்த-ஏமாற்றுவது-
இவை இன்றி அனுக்ரகம் அருளினார்
மருளில்-சங்கை உண்டானது ஆழ்வாருக்கு
முடி சோதியாய் -உனது முக சோதி மலர்ந்ததுவோ
–கட்டுரையே
ஆழ்வாருக்கு இதில் சங்கை-திரு மால் இரும் சோலை பெருமாளை கேட்கிறார்
கிரீடம்-அன்று- திரு முக மண்டல தேஜஸ் தான் -அது தானா -அனுபவ ரூபமான சங்கை -கர்மத்தால் இல்லை
கிரீட சூட  ரத்ன ராசி .ஆதி ராஜ்ய ஜல்பித-முகேந்த காந்தி -பட்டர்
மாயா எனக்கு உரை யாய் — மறை நான்கின் உளாயோ திரு புலியூர் உளாயோ —-மனதுளாயோ-போல்
ஆசன பத்மம்-இல்லை திரு அடி தேஜஸ் தான் கீழே பரவி-
திரு அரை -பீதாம்பரம் தேஜஸ் -பட்டர் இதையும்
திரு மாலே கட்டுரையே
மழுங்காத –தொழும் காதல் களிறு அளிப்பான் –உன் சுடர் சோதி மறையாதே –
ஒழிவில் காலம் –தந்தைக்கே
ஈசன் வானவர்க்கு என்பன்-என்றல் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு
 -கானமும் வேடும் உடை வேம்கடம்-
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்- என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே –
கல்லும் கனை கடலும்  வைகுண்ட மா நாடும்
-புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம்
நிறம் கரியான்
..உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
கேடில் விழுப் புகழ்–வீடும் பெறுத்தி தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே
நான்காம் நாள்
ஒன்றும் தேவும் அவதாரகை சேவிப்பார்கள்
கோவில் திருவாய் மொழி-வியாக்யானம் பரத்வம் நிர்ணயம்
உயர்வற திண்ணன் வீடு  அணைவது அரவு ஆணைமேல்
ஒன்றும் தேவு நான்கும்
உயர்வற-பரத்தே பரத்வம்-வேத பிரகிரீயை – உளன் சுடர் மிகு சுருதியுள்-
திண்ணன் வீடுதிரு அவதாரத்தில் பரத்வம்- விபவம்–இதி காச பிரக்ரீயை
அணைவது அரவு ஆணைமேல் –மோட்ஷ பிரத்வ ரூபமான பரத்வம்-
உபநிஷத் -சிருஷ்டி சதி சம்காரம் மூன்றையும் -சொல்லி தனி பட மோட்ஷ பிரதானம் நான்காவது கிரியை
வீடாம் தெளிவர நிலைமையன்
ஒன்றும் தேவும் –அர்ச்சை-பரத்வம்

ஐந்தாம் நாள் இரப் பத்து
கையார் சக்கரம்-பிறந்த வாரும் வரை
நாலாம் பத்தில்-வேரி மாறாத பூ  மேல் இருப்பாள் வினை தீர்க்குமே
நலம் அந்தம் இல்ல தோர் நாட்டில் புக- ஒண் தொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப -சேர்த்தியிலே ஈடு பட்டு சேர்த்தி அழகை சம்சாரிகளும் அனுபவிக்க -பரத்வம் அறியாமை -ஒன்றும் தேவும்-பரத்வம் மூதலித்தார்
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்
பொலிக தேவர் குழம்களுக்கு காப்பு இடுகிறார் –எம்பெருமானார் நிர்வாகம்
திரு மாலை ஆண்டான் -ஸ்ரீ வைஷ்ணவர் காண வந்த  ஸ்ரீ வைகுண்ட வாசிகளை
ஸ்வேதா தேப வாசிகளையும்  பல்லாண்டு பாடுகிறார்
கருணை எல்லை நிலம் அர்ச்சை
கலி இன்றி-தர்மம் கழிந்து பெரிய கருத யுகம் வந்தது பேசி மகிழ்கிறார்
கடல் வண்ணன் பூதங்கள் மலிய புகுந்து இசை பாடி ஆடி
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
மாதவன் பூதங்கள் பரந்து திரிகின்றனவே
கடல் வண்ணன் பூதங்கள்–எங்கும் இடம் கொண்டனவே
நாங்கள் கோல திரு குரும் குடி நம்பியை நம் கண்ட -சென்றது என் நெஞ்சமே
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-
கொள் என்று கிளர்ந்து எழுந்த செல்வம் நெருப்பாக -தனம் வெறுத்தார்
 உலகில் ஏந்து பலன்- பெரும் செல்வத்தராய் திரு மால் அடியார்களை பூசிக்க நோற்றர்களே –
இங்கு பலன் சொல்கிறார் தனம் உபாதேயம்-பகவத் பாகவத
நண்ணா அசுரர் நலிவு எய்த- அசுரர் தொலைய நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
நல்ல அமரர் பொலிவு எய்த-சமன்வயம்-
அவயபதேசனுக்கு  அனந்தரத்தில் அவன் பிள்ளை   வார்த்தை ஸ்மர்ப்பிதது
பெயர் இது சொல்ல தகாத கிருமி கண்ட சோழன் பிள்ளை-சொன்ன வார்த்தை-
ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் இருக்கும் வரை கோவில்களை இடித்து என் ஆகும்
எம்பெருமானை காப்பது இவைதான் கோவில்கள் இல்லை
-இதை தான் நண்ணா அசுரர் நலிவு செய்த -நல் முனிவர் இன்பம் தலை சிறப்ப என்கிறார்
தனம் உபாதேயம்-அறம் செய்ய பொருள்–கண்ணனுக்கே ஆம் அது காமம் -அமுதனார் –
மோஷத்துக்கு காமம் வேண்டும்-
தெப்ப உத்சவம் மாசி மதம்-கொள் என்று -நெருப்பாக -நீராக -போட்டீர் தண்ணீரில் போட்டாரம்
தனம் படைத்தாரும் அல்லேன்-தவத்துளார் தம்மில் அல்லேன்-தொண்டர் ஆடி பொடி-
திரு மங்கை ஆழ்வார் தனம் கொண்டு-மணி மண்டபம்-பிரகாரம் பரகால கவி-கோபுரம் அனைத்தும் கைங்கர்யம்-
பட்டார் ஸ்ரீ சுக்தி இன்றும் பறை சாற்றி கொண்டு இருக்கும் திரு மங்கை ஆழ்வாரின் கைங்கர்யத்தை

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீரெங்க ராஜ சரிதபாணம் –ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரும்‌ ஸ்ரீ பங்குனி உத்தரமும்‌ —

October 23, 2023

ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைப் பற்றி இது வரையில்‌ கிடைத்த ஆதாரங்கள்‌ ஐந்து
இவைகளில்‌ ஸ்ரீ ரங்க நாதனுடைய பங்குனி உத்ஸவம்‌ முழுவதும்‌, அவர்‌ ஸ்ரீ உறையூர்‌ நாச்சியாரைக்‌ கல்யாணம்‌ பண்ணிக் கொண்ட விவரமும்
நன்றாய்ச்‌ சொல்லப்‌ படுவதால்‌ அவை உள்ளபடியே இங்கு எழுதப்படுகன்‌றன.–

1. நிசுளாபுரி மாஹாத்மியம்‌
இந்த மாஹாத்மியம்‌ காகிதத்தில்‌ எழுதிய பிரதி ஒன்று தான்‌ கிடைத்தது
சென்னையிலும்‌ தஞ்சாவூரிலுமுள்ள ராஜாங்க புஸ்‌தக சாலைகளில்‌ இது கிடைக்கவில்லை. மூன்று அத்தியாயமாயுள்ள இது பரீதாவி வருஷத்தில்‌ ஸ்ரீரங்கம்‌ கீதா பாஷ்யம்‌ ரங்காசாரியரால்‌ தமிழில்‌ எழுதி அச்சிடப்பட்‌டிருக்கிறது. -இதிலுள்ளபடி. நாச்சியாரின்‌ சரித்திரம்‌ பின்வருமாறு-

1-ம்‌ அத்‌யாயம் –
திரி சரனுடைய திரிசிர பர்வதமென்னும்‌ திருச்சி மலைக் கோட்டையைச்‌ சுற்றியுள்ள ப்ரதேசம்
கரன் என்னும்‌ ராக்ஷஸனுடைய வாஸஸ் ஸ்தானமாய்‌ காரண்யமாயிருக்தது —
அகஸ்‌தியர்‌ கரனை வடக்கே அனுப்பி அவ்விடத்தை ரிஷிகளின்‌ தபஸ்‌ஸுக்கு விரோதமில்லாமல்‌ செய்தார்‌.

2-ம்‌ அத்‌,–
பிரம்மா, விஷ்ணு, சிவன்‌–இம்‌ மூவரில்‌ யார்‌ பெரியவர்‌–என்று அறிவதற்காக பிருகு மஹரிஷி காலையில்‌ சிவனிடம்‌ போனார்‌.
அவர்‌ பார்வதியோடு கிரீடித்துக் கொண்டு ரிஷிக்குத் தரிசனம்‌ கொடுக்க: வில்லை.
ரிஷி பிரம்மாவினிடம்‌ போய்‌, அவர்‌ கர்மானுகுணமாக ஸ்ருஷ்டி செய்து கொண்டே யிருப்பது கண்டு
அவரும்‌ பரவஸ்‌து வல்லவென்று நிச்சயித்து,ஸாயங்‌ காலம்‌ விஷ்ணுவினிடம்‌ போனார்‌.
விஷ்ணு பிருகுவை உபசரித்து, வந்த காரியம்‌ வினவுகையில்‌, தனியாய்த்‌. தெரிவிக்க வேண்டுமென்றார்‌ ரிஷி.
எல்லாரும்‌ அப்பால்‌ செனறார்கள்‌. காந்தனோடு எகாந்தமாயிருக்கும்‌ ஸமயம்‌ ௮து தானென்று கண்ட லக்ஷ்மி பிருகுவை அப்பால்‌ போகச்‌ சொன்னாள்‌.
பிருகு கோபித்துக்கொண்டு, மனுஷிய ஜாதியில்‌ பிறப்பாய்‌ என்று சபித்து, விஷ்ணுவே பர தத்வம்‌ என்று சொல்லிக் கொண்டு. போனார்‌,
லக்ஷ்மி ரிஷியின்‌ சாப்த்தினால்‌ மிகவும்‌ கவலைப்‌. பட்டாள்‌,

விஷ்ணு–பிருகு சாபம்‌ தப்ப முடியாது, பூலோகத்தில்‌ பிறந்திரு, நானும்‌ அங்கே வந்து உன்‌ னைக்‌ கலியாணம்‌ செய்துகொள்கிறேன்‌.
கொஞ்ச நாள்‌ பூலோகத்திலிருர்து இங்கே வருவோம்‌.

லக்ஷ்மி கேவலமான மனுஷ்யனுக்கு நான்‌ எவ்‌விதம்‌ பிறப்பது

விஷ்ணு–கராஸூரனை அகஸ்தியர்‌ வடக்கே அனுப்பிக்‌ கராரண்யத்தை ரிஷி வாஸத்துக்குத்‌ தகுதி யாக்கிய பிறகு,
சோழ. ராஜனான தர்மவர்மா என்னும்‌ பக்தன்‌ கும்ப கோணத்தை விட்டுக்‌ காவேரியின்‌ தென்‌ கரையில்‌ நகரம்‌ ஸ்தாபித்து
தன்‌ பத்தினி நிசுளையின்‌ பெயரால்‌ நிசுளாபுரி எனப்‌ பெயரிட்டு அரசு செலுத்துகிறான்
அவனும்‌ மனைவியும்‌ ஸந்ததி யில்லாக்‌ குறையினால்‌ லக்ஷிமீ தந்த்ரம்‌ என்னும்‌ சாஸ்‌திரத்‌தின்படி உன்னைப்‌ பூஜிப்பார்கள்‌,
நீ அவர்களுக்குப்‌ பெண்ணாய்‌ப் பிற–நானும்‌ அங்கே வருகிறேன்‌.

3-ம்‌ அத்‌–அப்படியே நிசுளாதேவியின்‌ கர்பத்‌தில்‌ சித்திரை, சுக்ல துவாதசி , உத்தரம்‌-கூடிய வெள்‌ளிக்‌ கிழமையில்‌ லக்ஷ்மி அவதரித்தாள்‌.
அவளுக்கு வாஸ லக்ஷ்மி எனப்‌ பெயரிடப்பட்ட, .பிறகு சந்திர திலகன்‌ என்ற புத்திரன்‌ பிறந்தான்‌.
தர்ம வர்மா ரங்ககாதனிடம்‌ உத்தமமான பக்தனாயிருக்தான்‌.
வாஸ லக்ஷ்மி ரங்க நாதனையே விரும்பிக்‌ கலியாணம்‌ செய்து கொண்டாள்

மீனாக்ஷி ஸூந்தரம்‌ பிள்ளை எழுதிய உறையூர்ப் புராணம்‌
உறையூர்‌ நாச்சியாரைப் பற்றியதல்ல வாகையால்‌ இங்கு சேர்க்‌கப் பட வில்லை.
அது பஞ்சவர்ண ஸ்வாமி காந்திமதி யம்மன்‌ விஷயம்‌.

2. திவ்ய ஸூரி சரிதம்‌
தர்ம வர்மாவின்‌ வம்‌ஸத்தவனான நந்த சோழனுக்கு உறையூர்‌ நாச்சியார்‌ கிடைத்ததாகக்‌ கோயிலொழுகு ;
தர்ம வர்மாவுக்குக்‌ கிடைத்ததாக திவ்ய ஸூரி சரிதம்‌-7-ம்‌ ஸர்கம்‌. மற்றை விவரம்‌ கோயிலொழுகு போலே.
உடையவர் காலத்தில்‌ உத்தம நம்பி வம்சத்தில் இருந்து கருட வாஹன பண்டிதரால்‌ ஆழ்வார்‌ ஆசார்யர்களின்‌
சரித்ரம்‌ இந்தக்‌ காவ்யமாக எழுதப் பட்டது.

3- கோயிலோழுகு
“ நிகளாபுரியிலே தர்ம வர்மாவின்‌ வம்சரான நந்த சோழன்‌ ராஜ்யம்‌ பண்ணுகிற காலத்தில்‌ பகுகாலம்‌ அநபத்யனாயிருந்து
ஸ்ரீரங்க நாயகரிடத்தலே ௮திப்‌ பிரவணனாய்‌ தபஸ்ஸைப்‌ பண்ணி, அந்த தபோ பலத்‌தினாலே ஒருநாள்‌ தாமரை ஓடையில்‌
தாமரைப் பூவிலே ஒரு சிசுவாக ஸ்திரீ ப்ரஜை இருக்கக் கண்டு, அந்த ராஜா ஹ்ருஷ்டனாய்‌, அந்தக்‌ குழந்தையைத்
தம்முடைய கிருஹத்திலே கொண்டு வந்து கமல வல்லி யென்று நாம கரணம்‌ பண்ணி வளர்க்குமிடத்தில்‌,
அந்தக் குழந்தையும்‌ வளர்ர்து பெரியவளாய்‌ ஒத்த பெண்களுடனே விளையாடும்‌ காலத்‌திலே,
ஒருநாள்‌ தோழிகளுடனே லீலோத்யாநத்தில்‌ புஷ்பாப௪யம்‌ பண்ணுகிற ஸமயத்‌திலே,–
ஸ்ரீரங்கராஜர்‌ குதிரை நம்பிரான் மேலே ஏறி யருளி பலாச தீர்த்தத்துக்கு (சியர் புரத்‌துக்கு) வேட்டை எழுந்தருளாகிறவர்‌.
அந்தக்‌ கமல வல்லிக்கு அதி ஸுந்‌தரராய்‌ விபவாவதாரமாக ஸேவை சாதிக்க, கமலவல்லி கண்டு மோஹித்து
மஹா பிரயத்னத்தினாலே தோழிமார்‌ தேற்றத் தேர்ந்து , தன்‌ விடுதியிலே வந்து உன்மத்தை போலேயிருக்க,
அந்த ராஜாவும்‌ கமல வல்லியைக் கண்டு மன்மத விகாரம்‌ என்று கணிசித்து ,
* உனக்கு ஆர் மேலே மனஸ்ஸு இருக்கறது *– என்‌று கேட்க ,கமலவல்லி தனக்கு * ஸ்ரீரல்கராஜன்‌ அன்றியிலே ஒருத்தரிடத்‌திலேயும்‌ மனஸ்ஸூ இல்லை;
தன்னை * ஸ்ரீரங்கராஜருக்குப்‌ பாணி கிரஹணம்‌ பண்ணுவியும்‌’–என்று சொல்ல,
ராஜாவும்‌ ஸந்துஷ்டனாய் தனது மந்திரிகள் உடனே ஆலோசித்து , தம்முடைய குமாரத்தி கமல வல்லியை ஸ்ரீரங்க.ராஜருக்கு கன்னிகா ப்‌ரதானம்‌
பண்ணுவித்து பெண்ணைக்‌ கோயிலுக்கு அனுப்பும்‌ போது, ஸ்திரீ தனமாக முன்னூற்றுப் பதின்கலம்‌ தங்க
அமுதுபடியும்‌, அதுக்கு வேண்டின பருப்பமுதும்‌, கொம்பஞ்சு கொடியஞ்சு கறியமுதும்‌, அதுக்கு வேண்‌டின சம்பாரங்களெல்லாம்‌
தங்கக்தாலே பண்‌ணுவித்‌து அது களையும்‌, ஸ்‌த்ரீகளுக்கு ஸமங்களமான நூறு பரிசாரிகைகளையும்‌ கொடுத்தனுப்பி வைக்க,–
அத்தக் கமல வல்லியும்‌ கோயிலிலே வந்து திரு மண்ணுக்குள்ளே-(திரு மணத் தூணுக்குள்ளே ) புகுந்து அத்ருத்யை யாக, -அத்தைக் கண்டு ராஜாவும்‌ அதி ஸந்துஷ்டனாய்‌
அநபத்யனாகையாலே தம்முடைய ஸர்வஸ்வத்தையும்‌ பெருமாளதீனம்‌ பண்ணி,–
திரு மா மணி மண்டபங்களும்‌, திருமதிள்களும்‌, திருக் கோபுரங்களும்‌, திரு தந்தவனங்கள்‌ முதலானதுகளையும்‌ கட்டிவைத்து
தம்முடைய பட்டணமான உறையூரிலேயும்‌ தம்முடைய குமாரத்தியையும்‌ அதி ஸுந்தர ரூபத்‌தினாலே
வஸீ கரித்தபடி யாலே அழகிய மணவாளப் பெருமாளையும்‌ பிரதிஷ்டிப்பிக்து,
விமான கோபு மண்டப பிரகாராதிகளையும்‌ விஸ்த்ருதமாகக்‌ கட்டி வைத்து அனைத்து அழகும்
கண்டருளப் பண்ணிக் கொண்டி ருந்தான்‌.”

4. லக்ஷ்மீ காவ்யம்‌
இது உறையூர்‌ நாச்சியார்‌ விஷயமாயும்‌ ரங்கநாதன்‌ விஷயமாயும்‌ ஏற்பட்ட காவ்யம்‌. இது உத்தமநம்பி திரு மலாசாரியரால்‌ எழுதப்பட்டது.
இவர்‌ தன்‌ பெயரையும்‌ வம்சத்தையும்‌ ஒவ்வொரு ஸர்கத்தின்‌ முடிவில்‌ முத்ரையாகச்‌ சொல்லுவது தவிர இரண்டு மூன்று இடங்களிலும்‌ சொல்லுகிறார்‌.

ஸ்ரீரங்கத்திலிருந்த பூர்வாசாரியர்களையும்‌, கைங்கர்ய பரர்களையும்‌ சொல்லும்‌ கவி தன்‌ வம்சத்தில்‌
தனக்கு முன்‌ தன்னைப் போலொரு காவியம்‌ எழுதின திவ்ய ஸூரி சரித்‌ர காரைச்‌ சொல்லவேயில்லை. உறையூர்‌ திருப்பாணாழ்வார்‌ அவதரித்த இடமென்றும்‌ இவர்‌ சொல்ல வில்லை.
இதில்‌ கந்தாடை ராமானுஜ அய்யங்காரைப் பற்றிச்‌ சொல்லுவதால்‌ கவி ௮வர் காலத்துக்குப்‌ பிற்பட்டவராவார்‌.
இந்தக்‌ காவியம்‌ இருப்பதாக குரு பரம்பரையிலிருந்து தெரிந்து சேடினதில்‌ பிராசீன வித்யா பிருஹஸ்பதி
கும்ப கோணம்‌ காலேஜ்‌ தமிழ்ப் பண்டிதர்‌ சடகோப ராமானுஜாசாரியாரிடத்திலும்‌, சென்னையிலும்‌, அடையாரிலும்‌ இருப்பதாகத் தெரிந்தன,.
இதையே வெகு நாளாகச்‌ தேடிக் கொண்டிருந்த திவான்‌ பஹதூர்‌ ஸ ர்‌. டி. தேசிசாரியாரிடம்‌ தெரிவித்ததும்‌,
அவர்‌ சடகோப ராமானுஜாசாரியாருடைய புஸ்தகத்தை வர வழைத்து எழுதுவதற்கும்‌, சென்னையிலுள்ள
புஸ்‌தகங்களோடு ஒத்துப் பார்ப்பதற்கும்‌ வேண்டிய செலவைக்‌ கொடுத்து சேகாம் செய்து அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்‌.
உறையூர்‌ நாச்சியார்‌. சரித்திரமூம்‌ ரங்க நாதனுடைய ஆதி ப்ரம்மோத்ஸவமும்‌ லஷ்மீ காவ்யகத்தில்‌ வர்ணித்‌திருக்கும்‌
கிரமத்திலேயே சுருக்கமாய்‌ எழுதப்படுகின்றன.

1-ம்‌ ஸர்‌–
நித்ய ஸூரிகள்‌, வியாஸர்‌, ஆழ்வார்‌கள்‌, பெருமாள்‌ நாச்சியார்‌, ஊர்‌, கோபுரம்‌ மண்டபம்‌,
கோயில்‌, பூர்வாசாசியர்கள்‌, கைங்கரிய பரர்கள்‌—வர்‌ணிக்கப் பட்டிருக்கிறார்கள் ,
[ விஷ்வக்ஸேனர்‌, ஸுூத்ரவதி, கஜானனன்‌, ஜயத்‌ஸேனன்‌, ஸிம்மவக்தரன்‌, காலன்‌, ஆதிசேஷன்‌, கருடன்‌,
ருத்ரை ஸூகீர்த்கிகள்‌, பஞ்சாயுதங்கள்‌, கெளஸ்‌துபம்‌,ஸரஸ்வதி , ஹயக்ரீவன்‌, வியாஸர்‌, நம்மாழ்வார்‌,
திருமங்கை யாழ்வார்‌, உடையவர்‌, பெருமாள்‌, நாச்சியார்‌, கிருஷ்ணார்‌ ஜுனர்கள்‌, துவஜ கருடன்‌, கோபுர நர ஸிம்ஹன்‌, கோபுர விநாயகர்‌,
கங்கை யமுனை, நான்முக கோபுரம்‌, தாமோதர கோபுரம்‌, ராமாயண மண்டபம்‌, ஆயிரம் கால்‌ மண்டபம்

சந்‌திரபுஷ்கரிணி, பார்த்தஸாரதி , சக்காத்தாழ்வான்‌, வீர ஹனுமான்‌, ஸ்ரீரங்க நாராயண ஜீயர்‌, பராசர வியாஸ பட்டர்‌கள்‌,
பெரியநம்பி, மணவாளமாமுணி, வாதூல தேசிகர்‌, எம்‌பார்‌, திருவேங்கட தாதாசாரியார்‌, பிரதிவாதி பயங்காம்‌ அண்ணா,
கந்‌தாடை ராமானுஜ அய்யங்கார்‌, உத்தம நம்பி,திருப்பணி செய்வார்‌, பாகவத நம்பி, ஹரித கோத்ரிகளான பாரிகர்கள்‌?,
அரையர்‌, திருமஞ்சனக் கரரர்‌, புரோஹிதர்கள்‌,ஆரியபடர்கள்‌, வைத்தியர்கள்‌, புண்டரீக தாஸர்கள்‌, கணக்‌குப்பிள்ளை,
சேர்வைகாரன்‌, உறையூர்‌ வல்லி கூட்டத்தாரான தாஸிகள்‌–இவர்கள்‌ வர்ணிக்கப்பட்டிருக்கறார்கள்‌.]

2-ம்‌ ஸர்‌–
ஆலிலையில்‌ பள்ளிகொண்டவனும்‌ கிருஷ்ணன்‌ வரையுள்ள எல்லா அவதாரங்களையும் எடுத்‌தவனுமான
ஸர்வேஸ்வரனே ரங்கநாதனாக வந்து ஜகம்‌ முழுவதையும்‌ ஆனத்திப்பிக்கிறான்‌.
ரங்க நாதனுக்கு லக்ஷ்மி, பூமி, நீளை, ஆண்டாள்‌–நால்வர்‌ தவிர, சேர சோழ பாண்டியர்‌–முதலான ராஜ புத்திரிகளும்‌ பத்‌னிகளாயிருந்தார்கள்‌,
ரங்கநாதன்‌ வஸந்த ருதுவில்‌ காவேரி முதலிய இடக்களிலும்‌, கிரிஷ்ம ருதுவில்‌ குளங்களிலும்‌,
வருஷ ருதுவில்‌ சயன கிருஹத்‌திலும்‌ பத்னிகளோடு வினோதமாய்க்‌ காலம்‌ கழித்தார்‌;–
கார்த்திகை பூர்ணிமையில்‌ திபோத்ஸவம்‌ கண்டருளினார்‌;
ஹேமந்தத்தில்‌ மார்கழி முதல் நாள்‌ திவ்ய ஸூக்‌தியான திருப்பள்ளி யெழுச்சியினால்‌ பள்ளியுணர்ந்து , ஆராதனம்‌ கண்டருளி,
பிராம்மணர்களுக்கு நித்ய தானம்‌ பண்ணி வேத பாராயணம்‌ சேட்டு, சகீத ந்ருத்யங்களோடு மண்டபம்‌ போய்‌,
நம்மாழ்வார்‌ முதலானோர்‌ களால்‌ ஸேவிக்கப்பட்டு அவர்களின்‌ ஸூக்‌திகளையும்‌,
அவற்றிலுள்ள சரித்ரத்தின் ௮பி நயத்தையும்‌ ௮னுபவித்து ஸாயங்காலம்‌–நின்ற போது நாட்டியமும்‌ போகும்
போது வாத்யமுமாய் உள்ளே எழுந்து அருளினார்

ஓன்பது நாளும்‌ இப்படியே நடந்தது; பத்‌தாம்‌ நாள்‌ மாயா நாராயணீ ரூபம்‌ தரித்தார்‌, பதினோராம் நாள் வேத பாராயணம்‌ கேட்டருளி,
வடக்குவாசல்‌ வழியாகப்போய்‌, நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌, உடையவர்‌ மூவரையம் பாதுகைகளால்‌ அனுக்ரஹித்து
மண்டபத்திலிருந்து நம்மாழ்வாருடைய பிரபந்தத்தையும்‌ ந்ருத்த கீதங்களையும்‌ கேட்டருளி, கடைசி நாள்
அவருடைய சரணாகதியையும்‌ அங்கீ கரித்தார்‌–
தை முதல்‌ நாளின்‌ உத்வைத்தையும்‌ ஆயிரம் கால்‌ மண்ட. பத்தில்‌ உபய நாயகி மாரகளோடு மத்தியானம்‌ வரையில்‌
அனுபவித்து உள்ளே எழுந்தருளினார்‌;- சிசிர ருதுவிலும்‌ தகுந்த ஸுகங்களை அனுபவித்தார்‌,

[ திருக்கார்த்‌திகையன்‌று திருமுகப் பட்டையம்‌ அனுப்புவதைக்‌ கவி எழுதவில்லை.
மார்கழித் திருகாள்‌ முதல்‌ தேதி ஆரம்பமானது போலே எழுதப்பட்டிருக்கிறது ]

3-ம்‌ ஸர்‌–
பெருமாள்‌ சயனித்‌ இருக்கையில்‌ பாடகர்கள்‌ வந்து–
தாமோதரன்‌ கோபுரத்தில்‌ வெயில்‌ வந்து விட்டது; சந்தன மண்டபத்தில்‌ வெயில்‌ வந்து: விட்டது .” என்று பாடி. எழுப்பினார்கள்‌,
பெரு.மாள்‌ எழுந்திருந்து காலைக்‌ காரியங்களை நடத்‌தினார்‌,
பிரம்மா, சிவன்‌, ஸுப்‌ரம்மணியன்‌, இந்திரன்‌, கணே
சன்‌–எல்லா தேவர்களும்‌ வந்து பெருமாளை ஸ்தோத்‌திரம்‌ செய்தார்கள்‌,

4-ம்‌ ஸர்க்கம்
ரங்கநாதன்‌ ஸந்தோஷித்து வந்த காரியம்‌ வினவினார்‌. உம்முடைய ஆஜ்ஞையினால்‌. நான்‌ ஸ்ருஷ்டித்த இந்த பரபஞ்சத்தின்‌ ஷேமத்துக்காக.
சுபமான இந்தப்‌ பங்குனியில்‌ துவஜாரோஹண பூர்‌வகமாக யாத்ரோத்ஸவத்தை நீர்‌ அனுபவிக்க வேண்‌டும்‌.
சோழ ராஜனக்குத்‌ தபஸ்ஸினால் பிறந்த லக்ஷ்மியின்‌ ௮ம்சமான லக்ஷ்மியை நீர்‌ கலியாணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.
நீலீ வனத்திலிருக்கும்‌ வியாக்ரா ஸுரனையும்‌ வதம்‌ செய்ய வேண்டும்‌.” என்று பிரார்த்‌தித்தார்பிரம்மா, பெருமாள்‌ அங்கீ கரித்தார்‌.
எல்லாரும்‌ அனுமதி பெற்றுக்கொண்டு சந்திர புஷ்கரிணியில்‌ மாத்யாந்ஹிகம்‌ பண்ணி, நாச்சியாரைத் தர்சித்துப் போனார்கள்‌.
பெருமாளுடைய ஆஜ்ஜையின் பேரில்‌ விஷ்வக்ஸேனர்‌ பங்குனி பரணியில்‌ ௮ங்குரார்ப்பணம்‌
செய்து, கார்த்திகையில்‌ ஹோமம்‌, பலி, கருட பிர திஷ்டை முதலியவற்றை நடத்தி, பரிவாரங்களோடு நகர சோதனை செய்தார்‌.
[இப்பொழுது நகர சோதனை முன்னும்‌ கருட ப்‌ரதிஷ்டை பின்னுமாக நடக்கிறது .]

5-ம்‌ ஸர்‌–
முதல்‌ திருநாள்‌–ரோஹிணியன்று நல்ல முஹுர்‌த்தத்தில்‌ உத்ஸவத்தை ஆரம்பிப்பதற்‌காக ரங்கநாதன்‌ புறப்பட்டு,
அன்னமூர்த்தி இருக்கும்‌ மண்டபத்‌திலிருந்து ஸங்கீதங்களைக் கேட்டுக் கொண்டே த்வஜாரோஹணம்‌ நடத்தி, மத்தியானம்‌ உள்ளே போனார்‌ ;
ஸாயங்கால்ம்‌ உபய நாச்சி மார்களோடு பூச்‌சப்பரத்தில்‌ எழுந்தருளி, உத்ஸவத்துக்கு வந்த ராஜாக்‌களோடும்‌ சைன்யங்களோடும் புறப்பட்டு,
மூலை தோறும்‌ ந்ருத் யங்களை அனுபவித்‌துக் கொண்டே வீதி வலம்‌ வந்து, ஆரியபடாள்‌ வாசலில்‌ ராஜாக்கள்‌ முதலானோரை நிறுத்தி உள்ளே போய்‌,
திருவந்திக்‌ காப்பு கண்டருளி, யாகசாலையில்‌ திரு மஞ்சனம்‌ செய்து கொண்டு, ஹோமம்‌ முதலியன ஆனதும் உள்ளே போனார்‌.
[அன்னமூர்த்தி துவஜாரோஹண மண்டபத்திலேயே இப்பொழுது பின்னமாய்க்‌ கிடக்கிறார் .
பெருமாள்‌ கண்ணாடி. யறை எழுந்தருளின தாகச்‌ சொல்லப்படவில்லை.
கண்ணாடி. யறை பின்காலத்தில்‌ சேர்க்கப்பட்டதென்று அந்தக்‌ கட்ட டமே தெரிவிக்‌கிறது ]

இரண்டாம்‌ திருநாள்‌–மிருகசீர்ஷத்தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ மேலூர்‌ புன்னாக தீர்த்தத்துக்கருகே யுள்ள மண்டபத்துக்குப்‌ புறப்பட்டு,
வழியே பத்ர காளி கோயிலையும்‌ பயங்கரமான ஷுத்ர தேவதைகளையும்‌ பார்த்துக்கொண்டே போய்‌ சாயங்காலமம் திரும்பினார்
சந்திரசேகரன்‌ :சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்‌துக்கு வந்து ௮னுக்ர ஹிக்கவேண்‌டும்‌ என்று பிரார்த்‌தித்தான்‌.
பெருமாள்‌ அங்கீ கரித்து ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளினர்‌.[ சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமம் கிளியனூராயிருக்கலாம்‌.]

6-ம்‌ ஸர்‌. மூன்றாம்‌ திருகாள்‌–திருவாதிரையன்று காலையில்‌ ரங்கநாதன்‌ குதிரையேறி வீரர்களோடும்‌,
அரசர்களோடும்‌, பக்தர்களோடும்‌ புறப்பட்டு மூங்கில்‌காடு வழியாகவும்‌ காவேரிக் கரை வழியாகவும்‌
ஸு*ப்‌ரமண்யன்‌ தபஸ்‌ செய்த ஈசானமங்கலம்‌ என்னும்‌ கிராமம்‌ போய்‌, அங்கே தென்கரையிலுள்ளவர்களரல்‌ உபசரிக்கப்பட்டார்
[ஸுப்ரம்மண்யன்‌ சீயர்புரத்தில்‌ தபஸ்‌ செய்த விருத் தாந்தம் நம்மால் வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்ம்யத்தில் பார்க்க.
சீயர் புர கிராமத்துக்கே ஏற்பட்ட ஈசானமங்கலம்‌ என்னும்‌ பெயர்‌ இப்பொழு ஈசான்ய மண்டபம்‌ என்னு
மண்டபத்தின்‌ பெயராக மாறியிருக்கிறது.
இங்கு அம்மையார்‌ தண்ணீர்ப்பந்தல்‌ விருத்தாந்தம் கவியினால்‌ சொல்லப்பட வில்லை]

பிறகு, ஸ்நானம்‌ செய்‌து கொண்டிருக்த உறையூர்‌ நாச்சியாரின்‌ கூந்தவிலிருந்து பூக்கள்‌ விழும்‌ காவேரியின்‌ தென் கரை வழியாக
ரங்க நாதன்‌ கொஞ்சதூரம்‌ வந்து .காவேரியிலிறங்‌கி வடகரை போனார்‌. அவர்‌ கையிலிருந்த மோதிரம்‌ ஜலத்தில்‌ வீழ்ந்த்து ; அதை அவர்‌ கவனிக்கவில்லை ;வடகரை போய்‌, வடக்கு முகமாகவே நெடுந்தூரம் வினேதமாக சவாரி” செய்து, நேற்று அழைத்த சுகப்ரியம்‌ என்னும்‌ கிராமத்தில்‌ சிறிது நேரம் தங்கித்‌ திருவெள்ளறை வரையிலும்‌ போய்‌ நீலிவனம்‌ (திருப்பைங்‌கிலி) சென்றார்
அங்கு இருந்த வியாக்‌.ராஸுரன்‌ ரங்க நாதனைக் கண்டு ஒளிந்தான் -அங்கே வெகுநேரம்‌ வேட்டையாடி,
கந்தஸ்தம்பேசருடைய ளெளம்ய ஜாமாத்ருமங்கலம்‌ (திருமணத் தூண்‌ நம்பிவசமுள்ள அழகிய மணவாளம்‌ கிராமம்‌) ,
காவேரி தீரத்‌திலுள்ள வகுள தீர்த்தம்‌ (திருவாசி), இவற்றைப்‌ பார்வையிட்டுக்கொண்டே. ஊருக்குள்‌ பிரவேசித்து மேல வாசல்‌ வந்ததும் மழை வெகு
கடுமையாகப்‌ பெய்தது .
மழை ஓயும்‌ வரையில்‌ பெருமாள்‌ உத்தம நம்பி திருமாளிகையில்‌ தங்கி உபசாரங்களைப்‌ பெற்றுக் கொண்டு சந்நிதிக்குள் போய்‌ வாஹனத்தை விட்டு இறங்கினார்
(பங்குனி மூன்றாம்‌ திரு நாள் குகிரைவாஹனம்‌ இந்த மழைக்குப்பிறகு உத்தமநம்பியால்‌ பல்லக்காக மாறின
விவரம்‌ கோயிலொழுகு 124-ம்‌ பக்கத்தில்‌ இருக்கிறது

7-ம்‌ ஸர்‌. நாலாம்‌ திரு-புனர்வஸூ -*வன்று காலையில்‌ ரங்கராசன்‌ புறப்பட்டு உத்தம நம்பி பிராமணர்களுக்குக்‌
கொடுத்த ௮க்ரஹா.ரத்தின்‌ வழியாக காவேரிக்கரையிலுள்ள கருட வாஹன மண்டபம்‌ போய்‌ உல்லாஸமாயிருந்தார்‌.
மத்தியானம்‌ ஒரு தாஸி லஷமிக்குப்‌ பெருமாளிடமுள்ள காதலை லக்ஷ்மீ நாடகத்திலுள்ளபடி.யே அபிநயித்‌தாள்‌.
அப்பொழுது ஸூர்ய வம்சத் வனான உறையூர்‌ ராஜாவினால்‌ அனுப்பப்பட்ட புரோஹிதர்‌
பெருமாளிடம்‌ வந்து விக்ஞாபனம்‌ பண்ணினார்‌ :–

தர்மவர்மாவின்‌ வம்சத்தவனான நிசுளாபுரி” ராஜா கரிகால்‌ சோழன்‌ சந்திரவம்௪த்தில்‌ பிறந்த
தர்மதை என்னும்‌ மனைவியோடு ஸந்தானத்துக்காக நெடுநாள் லக்ஷ்மியை தியானித்து தபஸ்‌ செய்தான்‌.
லக்ஷ்மி பிரத்யகூமாகி * நானே உனக்குப்பெண்ணாய்‌ பிறக்கிறேன்‌… – என்று அனுக்ரஹித்தாள்‌.
அப்‌:படியே கொஞ்சநாளில்‌ பெண்‌ குழந்தை பிறக்து லஷ்கி யெனப் பெயரிடப்பட்டஅு. லஷ்மி இப்பொழு கல்‌யாணப்‌ பருவத்‌தில் இருக்கிறாள்‌,
அவளுடைய ஸ்வயம்‌ வர த்துக்காக தேவர்களும்‌ ராக்ஷஸர்களும்‌ வந்‌து .இருக்‌கிறார்கள் –
ஸ்வயம்வரத்துக்கு உம்மை அழைத்து வருமாறு நான்‌ ராஜனால்‌ அனுப்பப்பட்டு வந்தேன்‌.
லஷ்மியும்‌ தன்னுடைய தோழி ஹரிலேகையை- அனுப்பியிருக்கறாள்‌. அவள்‌ எல்லா விஷயங்களையும்‌:
சொல்லுவாள்‌, ”–என்று சொல்லி விடையெற்றுச்‌ சென்றார்‌ புரோஹிதர்‌.

6-ம்‌ ஸர்‌–ஹரிலேகை வந்தாள்‌. அவன்‌ விரும்‌பியபடி எல்லாரும்‌ வெளியே அனுப்பப்பட்டார்கள்‌…-
அவள்‌ ரங்கநாதனுக்கெதுரில்‌ உட்கார்க்து ஏகாந்தமாய்ச்‌ சொல்லுகிறாள்‌.
” சோழ ராஜ புத்ரியான லஷ்மி தோழிகளோடு
,காவேரியில்‌ விளையாடிக் கொண்டி ருக்கையில்‌, நீர்‌ ஸைனயங்களோடு குதிரை மேலேறிப்‌ போய்க் கொண்டி.ருந்தீர்‌,
உம்முடைய அழகைப் பார்‌த்து அவள்‌ மோஹித்துக்‌ இடக்கிறாள்‌. உம்முடைய மோதிரம்‌ காவேரி ஜலத்தில்‌ அகப்பட்டது.
இந்த மோதிரத்தை உமக்குக்‌ கொடுக்‌கச் சொன்னாள்‌. ”–என்று . சொல்லி மோதிரத்தைக்‌ கொடுத்தாள்‌.
அதில்‌ லஷ்மி என்று எழுதி யிருந்தது கண்டு ரங்கநாதனுக்கு மோஹமமும்‌ மகிழ்ச்சியும்‌ மிகுந்தது
ஹரிலேகை–நான்‌ லஷ்மியினிடம்‌. என்ன “சொல்லுகிறது ?
ரங்கநாதன்‌–புஷ்யத்தன்று அவளுடைய ராஜ தானிக்கு வருகிறேன்‌.
ஹரிலேகை விடைபெற்று லஷ்மியினிடம்‌ போனாள்‌.

9-ம்‌ ஸர்‌-.-ரக்கநாதன்‌ கருடவாஹனத்‌தில் ஏறிப்‌ புறப்பட்டு வீதி வலம்‌ வந்து ஸன்னிதிக்குள்‌ சென்றார்‌.

10-ம்‌ ஸர்‌–5-ம்‌ திருநாள் –புஷ்யத்தன்று காலையில்‌ நான்காம்‌ ஜாமத்தில்‌ ரங்கநாதன்‌ ஸைன்யத்தோடும்‌
௮ரசர்களோடும்‌ பல்லக்கிலேறிப்‌ புறப்பட்டுக்‌ காவேரிதாண்டி உறையூர்‌ சேர்ந்தார்‌.
கரிகால்‌ சோழன்‌ வந்து அடி.பணிந்து ரங்கநாதனுக்கு உடத்தியானத்தில்‌ இடம்‌ கொடுத்து உபசரித்தான்‌,
ஸ்வபம் வரத்துக்கு தில்லை நடராஜன்‌, ஜம்பூபதி, ஏகாம்பர நாதன்‌, மத்யார்ஜுனேசன்‌ முதலான எல்லா சைவ மூர்த்திகளும்‌ வந்திருந்தார்கள்‌.

11-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ ஸ்வயம்வர மண்டபத்‌துக்குப்போக சித்தமாயிருக்கையில்‌ சோழ ராஜா வந்து அழைத்தான்‌.
ரங்கநாதன்‌ யானை மேலேறிப் புறப்பட்டு வந்து எல்லா தேவர்களுக்குமிடையே ஆஸனத்‌திலமர்ந்தார்‌,i

12-ம்‌ ஸர்‌–ராஜா மஹோதயன்‌ என்னும்‌ மந்திரியை அனுப்பி, பெண்ணை ஸ்வயம்வர மண்டபத்‌துக்கு வரவழைத்து,
ஒவ்வொரு க்ஷேத்திரத்திலிருந்து வந்திருக்கும்‌ சிவா மூர்த்தி விஷ்‌ணு மூர்த்திகளின்‌ பெயர்‌ இருப்பிடம்‌, வைபவம்‌ முதலியவற்றைச்‌ சொன்னான்‌.
[ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்தில்‌ திவ்ய ஸூரி சரிதக்‌காரர்‌ 108 திருப்பதியிலுள்ள விஷ்ணு மூர்த்‌திகளை மட்டுமே வர்ணித்திருக்கறார்‌.
இந்தக் கவி சிவ மூர்த்திகளையும்‌ சேர்த்து வர்ணிக்கிறார்‌. ]

சோழராஜன்‌ கடையில்‌ ரங்க நாதனிடம்‌ வந்து
அவருடைய பெருமையை வர்ணித்தான்‌.
லக்ஷ்மி எல்‌லாருக்கும்‌ மத்தியில்‌ ரங்க நாதனுக்கே மாலையிட்டாள்‌,

13-ம்‌ ஸர்‌– ராஜா முறைப்படி உறையூர்‌ வல்லிக்‌ கும்‌ ரங்கநாதனுக்கும்‌ அக்னி ஸாக்ஷிகமாகக்‌ கலியாணம்‌ செய்து வைத்தான்‌.
அந்த ஸ்வயம் வரத்தில்‌ அத்தனை மூர்‌த்திகளுக்கு இடையில்‌ ரங்கநாதனையே அழகான மாப்‌பிள்ளையாக
உறையூர்‌ வல்லி தீர்மானித்ததால்‌ அவரும்‌ அழகிய மணவாளனானார்‌.
ராஜா அநேக விதமான சீர்களையும்‌ ௮னேகம்‌ சேடிகளையும்‌ கொடுத்து , ரங்கநாதனையும்‌ உறையூர்‌ வல்லியையும்‌ ஊருக்கு அனுப்‌பினான்‌,
வழியில்‌ வியாக்ராஸூரன்‌ ஸைன்யத்தோடு சூழ்ந்து கொண்டான்‌. விஸ்வக்ஸேன பரிகரமான கஜானனன்‌ வியாக்ராஸுரனிடம்‌ பேரய்‌ “இரண்டு நாள்
முன்னரே உன்னை நீலி வனத்தில்‌ வேட்டையாட வேண்டி யிருந்தது. நீ ஒளிந்துசொண்டாய்‌, இப்போது
கலியாணமாகி பட்டணப் ப்ரவேசம்‌ சேய்வதற்கு உன்னை பலியிடுகிறேன்‌.” என்று சொல்லி,
ரங்க நாதனை ஸாக்ஷியாக வைத்துக் கொண்டு, ராஷஸ ஸைன்யத்தோடு கோரமாக யுத்தம் பண்ணி, வியாக்ராஸூரனையும்‌ அவ னுடைய ஸைந்யத்தையும்‌ வதம்‌ செய்து ஒழித்தான்‌.

(ரங்கநாதன்‌ ‘ வியாக்ராஸுரனை வதம்‌ செய்ததால்‌ அவருக்கு ** வ்யாக்ராஸூர நிஷுதந – என்ற பெயர்‌ ஏற்பட்டிருக்கிறது .
ரங்கநாகன்‌ ராமாவதாரதத்துக்கும் முன்‌னமே வியாக்ராஸுரனை வதம்‌ செய்வதற்காகக்‌ காவேரி வந்து
ரிஷிகளுக்கு தரிசனம்‌ கொடுத்துத்‌ திரும்பிய விவரம்‌ நம்மால்‌ வெளியிடப்பட்ட ஸ்ரீரங்க மஹாத்மியத்தில்‌ காண்க, நெடுநாள் முன்‌ நடந்த வியாக்ராஸுரன் வதத்தை உறையூர்‌ நாச்சியார் கல்யாணத்தோடு சேர்த்தது யுத்த வர்ணனத்துக்கு அவகாசம கொடுப்பதற்கான கவி சாதுர்யம.
இந்து மதியைக்‌ கல்யாணம்‌ செய்‌து கொண்டு புறப்படும்‌ ௮ஜ மஹா ராஜாவுக்கும்‌ ஸ்வயம் வரத்துக்கு வந்த ராஜாக்களுக்கும்‌
யுத்தம் நடந்ததாக ரகு வம்‌ஈத்தில்‌ காளிதாஸ கவி வர்ணித்திருக்‌கிறார்‌.
ரகுவம்சத்தையே அனுஸரித்து எழுதப்பட்ட திவ்ய ஸுூரி சரித்ரத்திலும்‌ ஆண்டாள்‌ ஸ்வயம்வரத்‌துக்குப்‌ பிறகு
திருமங்கையாழ்வார்‌ வேடர் பறியாக வந்து அ ரங்கநாதனை எதிர்த்ததாக வர்ணிக்கப்பட்டிருக்டுறது .
ஸ்வயம்வரத்துக்கு வந்த மூர்த்திகளை திவ்யஸூரி சரிதத்திலும்‌ லக்ஷ்மீ காவியத்‌திலும்‌ வாணித்தது கூட
இந்துமதி ஸ்வயம்வரத்தில்‌ காளிதாஸ கவி ஒவ்வொரு ராஜாவையும்‌ வர்ணித்ததை அனுஸரித்ததாகும்‌.

14-ம்‌ ஸர்‌ – ரங்க நாதன்‌ பல்லக்கோடு வந்து சக்கரத்தாழ்வான்‌ ஸன்னிதிக்கருகிலுள்ள வாஹன மண்ட
பத்தில்‌ இறங்கி வேறு ஆஸனத்திலேறி உள்ளே போனார்‌.
[4-ம்‌ திருநாள் கருட வாஹனம்‌ வாஹன மண்டபத்தில்
இறங்கினதாகக்‌ கவி சொல்லாமல்‌ இன்று பல்லக்கு இறங்கினதாகச்‌ சொல்லுறார்‌.
புஷ்யத்தில்‌ கலியாணமெனறு கவி -வியக்‌தமாகச்‌ சொல்லுவதால்‌ பெருமாள்‌ உறையூர்‌ எழுந்‌தருள வேண்டியது 5-ம்‌ திருநாள் .
இப்பொழுது 6-ம்‌ திரு நாள்‌ ஆயில்யத்தன்று எழுந்தருளுகிறார்‌. உறையூர்‌ நாச்சியார்‌ பிறகு யாதாயினள்‌ என்று கவி சொல்லவில்லை.]

15-ம்‌ ஸர்‌–ஆறாம்‌ திரு நாள் –ஆயில்யத்தன்று காலையில்‌ பெருமாள்‌ புறப்பட்டு தாமோதர கோபுரத்தின்‌
வழியாகப்‌ பல்லவராஜன்‌ தோட்டம்‌ போய்‌,
ஸாயம் காலம்‌ யானை வாஹனத்‌துக்கேற்ற உடைகளோடு வந்‌து யானையேற்று மண்டபத்தில்‌ யானையேறி வீதி வலம்‌ வந்து,
வாஹனத்திலிருந்கவாறே திருவந்திக்காப்பு கண்டருளி, யானையை விட்டிறங்கி உள்ளே போய்‌
திருமஞ்சனம்‌ செய்து கொண்டார்‌.
[பெருமாளோடு யானை மேல்‌ அர்ச்சகர்‌ உட்காருவதும்‌, யானையை விட்டிறங்கி ஆண்டாளும்‌ பெருமாளும்‌ மாலை
மாற்றிக் கொள்வதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
மணவாள மாமுனி ஸன்னிதிக்குப்‌ பல்லவராயன்‌ மடம்‌ என்று பெயர்‌.
கோயிலை ஆஸ்ரயித்திருக்கும்‌ தேசாந்தரி ஜியர்களுக்காக ௮து பல்லவ ராயனால்‌ கட்டப் பட்டதென்று அங்குள்ள சிலா சாஸனமே சொல்லுகிறது .
இவனே கிழக்கே பல்லவ ராஜன்‌ தோட்டம்‌ என்று பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகத் தெரிகிறது. ]

16-ம்‌ ஸர்‌—ஏழாம்‌ திரு நாள் –மகத்தன்று ரங்க நாதன்‌ .வஸந்த வேஷம்‌ தரித்துக்கொண்டு உபய நாச்சிமாரோடு-சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டார்‌.
எல்லோரும்‌ ஒருவர்மேலொருவர்‌ மஞ்சள்‌ பொடியைக்‌ தூவி விளையாடினர்‌.
Iரங்க நாதன் ஸாயங்காலம்‌ புறப்பட்டுக்‌ கொட்டார வாசலில்‌ நெல்‌ அளவு கண்டருளி, ப்ர தஷிணமாக நாச்சியார்‌ கோயில் போய்‌,
இரு புறமும்‌ வரிசையாய்‌ நிற்கும்‌ தாஸிகள்‌ மூலம்‌ திருவந்திக்காப்பு செய்து கொண்டு, ஸிம்ஹா ஸனத்தில்‌ வீற்றிருந்து
திரு மஞ்சனம்‌ முதலியவற்றை அனுபவித்து, பூந் தேரில்‌ புறப்பட்டு, மூலை தோறும்‌ நர்த்தனங்களைப்‌ பார்த்துக்‌
கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே போனார்‌,

[இப்பொழுது .பூந்தேர்‌ முன்னும்‌ திருமஞ்சனம்‌ பின்னுமாக நடக்கிறது. கவியின்‌ காலத்தில்‌ நடந்த விதம்‌ எப்‌பொழுது மாறினதோ?
பாஞ்சராத்‌திரப்படி நடக்கிற ஜல க்ரீடை இங்கு சொல்லப்படவில்லை:]

எட்டாம்‌ திரு நாள் –பூரத் தன்று காலையில்‌ ரங்கநாதன்‌ ஸ்ரீரங்கத்தின்‌ எல்லையைப்‌ பார்ப்பதற்காகப்‌ புறப்பட்டு
பத்‌ர . ஸுபத்ரர்கள்‌ உள்ள (நாழிகேட்ட)) வாசல்‌ வந்து, பஞ்ச கோபுரங்களையும்‌ தாண்டி. வாமனாஸ்ரமத்தைப்‌
பார்‌த்துக் கொண்டே தென்‌ திருக் காவேரியின்‌ ௨டகரை சென்றார்‌.
[வாமனப்‌ பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில்‌ உபநயனம்‌ நடந்ததாக பாஞ்சராத்‌ர பாரமேஸ்வர
ஸம்‌ஹிதையிலிருக்கும்‌ விவரம்‌ நம்முடைய ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.
கவி பஞ்ச கோபுரங்களுக்கும்‌ வேளியே என்று கணக்கிட்ட ரீதியில்‌ தெற்கு ராயகோபுரத்துக்கு உள்பட்ட
திருக் குறளப்பன்‌ ஸன்னிதியே வாமனாஸ்ரமம்‌ என்று தெரிகிறது .
இந்த ஸன்னிதி புராண ப்ர ஸித்தம் என்று கோயிலொழுகிலும்‌ ‘சொல்லப் பட்டிருக்கிறது .]

ரங்கநாதன்‌ காவேரிக்‌ கரையிலிருந்து கிழக்கே போய்‌, வடக்கே திரும்பி, ஸ்ரீரங்கத்துக்கும்‌ மாதங்க
வனத்துக்கும்‌ (திருவானைக் காவலுக்கும்‌)  உள்ள எல்லைக்‌ கல்லையும்‌, வழியிலிருந்த ஜம்பூபதி ஸைன்யத்தையும்‌, தாமோதர கோபுரத்தையும்‌ பார்த்துக் கொண்டே கின்னர .கிம் புருஷ கந்தர்வர்கள்‌ வஸிக்கும்‌ ச்வேதாங்‌கணம்‌ என்னும்‌ பில்வ தீர்த்தம் போய்‌, வடதிருக்‌ காவேரி தாண்டி,
கதம்ப தீர்த்தத்தின்‌ வழியாகத்‌ திரு மங்கையாழ்வாருடைய மண்டபம்‌ போனார்‌;
ஸாயங்‌ காலம்‌ குதிரை யேறிப்‌ புறப்பட்டு, காவேரியில்‌ விளையாடி, வடக்கு வாசல்‌ வழியாக ப்‌ரவேசித்து, மூலை
களில்‌ .ந்ருத்தங்களை அனுபவித்துக் கொண்டே விதி வலம்‌ வந்து உள்ளே எழுந்தருளினார்‌.
[கதம்ப தீர்த்தம்‌ திருமங்கை யாழ்வாருடைய ஸ்தானம்‌.-இன்னும்‌ அவர்‌ பேரிலேயே பட்டா இருக்றது .
எல்லைக்‌ கரை ஆஸ்தான மண்டபம்‌ லஷ்மீ காவ்யத்துக்குப் பிறகு கொள்ளிடத்தின்‌ தென்‌ கரையில்‌ ஏற்பட்டதால்‌
பெருமாள்‌ கதம்ப தீர்த்தத்‌துக்கு மாசி உத்ஸவத்தில்‌ எழுந்தருளுகிறார்‌.
ஸ்ரீ ரங்கத் தாருக்கும்‌ திருவானைக் காவலாருக்கும்‌ நேர்ந்த எல்லைச்‌ சண்டை இங்கு சொல்லப்படவில்லை யாகையால்‌
இந்தக்‌ காவியத்துக்குப் பிறகு ௮து நேர்ந்து இருக்க வேண்டும்‌.]

நாள் 17-ம்‌ ஸர்‌–9-ம்‌ திரு –உத்தரத்தன்று காலையில்‌
பெருமாள்‌ ரத யாத்திரை செய்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போனார்‌.
[இப்பொழுது நாச்சியார் கோயிலுக்குப்‌ போவது முன்‌னும்‌ ரத யாத்திரை பின்னுமாய்‌ நடக்கிறது,
நாச்சியார்‌ கோயிலில்‌ பிரணய கலஹம கத்யத்ரய கோஷ்டி முதலியன்‌ இங்கு சொல்லப்படவில்லை. |

16-ம்‌ ஸர்‌–ரங்கநாதன்‌ திர்த்தவாரிக்காக வட திருக் காவேரி போய்‌ வருண ஸூக்தம்‌ சொல்லும்‌ ரித்‌ விக்குகளோடு ஸ்நானம்‌ செய்தார்‌.
கூட வந்தவர்கள்‌ எல்லாரும்‌ ஸ்நானம்‌ செய்தார்கள்‌.–ரங்கநாதன்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளினார்‌. ;
[இப்பொழுது பெருமாள்‌ நாச்சியார் கூடவே இருந்து விடுவதால்‌ தீர்த்‌த வாரிக்கு செல்வர்‌ மட்டும்‌ வட திருக் காவேரி எழுந்தருளுகிறார்‌.]

10-ம்‌ திரு நாள் –ஹஸ்தத்தன்று மத்தியானத்‌து க்கு
மேல்‌ பெருமாள்‌ மண்டபத்தில்‌ திருமஞ்சனம்‌ செய்து
கொண்டு பாஞ்சராத்ர முறைப்படி புஷ்பயாகம்‌ செய்தார்‌.
பிறகு மேள வாத்தியங்களோடு ஸப்‌த ஆவரணங்களையும்‌ பிர,தஷிணம்‌ செய்வதற்காக வெளியே போய்‌
ஐந்து பிரகாரங்களை ப்ரதக்ஷிணம் செய்து, ஆர்ய
படாள்‌ கோபுரத்துக்கு நேராக வடக்கே பார்த்து
நின்று,
பூர்வ ராஜாக்களாலும்‌ வர்த்தமான ராஜாக்களாலும் செய்யப்பட்ட கைங்கரியங்களைப் பற்றிய ஸ்ரீஸூக்‌தியைக்கேட்டு,
தீர்த்தம்‌, துளஸி, சந்தனம்‌, மாலை முதலியன அனுக்ரஹித்து தேவதை முதலானோரை உத்வாஸனம்‌ பண்ணி,
பத்ர ஸுபத்ரர்கள்‌ உள்ள கோபுரம்‌ (நாழி கேட்ட வாசல்‌) தாண்டி, கருட விஷ்வக்‌ஸேனர்கள்‌ இருக்கும்‌ பிரகாரத்தையும்‌, துர்கை கஜானனர்களிருக்கும்‌ பிராகாரக்தையும்‌ பிர தக்ஷிணம் செய்து கொண்டு ரங்கநாதன்‌ உள்ளே எழுந்தருனினார்‌.
[பெருமாள்‌ திருவிண்ணாழியையும்‌ பீரதஷிணம்‌ செய்த தாகவும்‌ ஸப்த ப்ராகாரங்களிலும்‌ மேள வாத்தியங்களோடும்‌ எழுந்தருளினதாகவும்‌ தெரிகிறது .
ராமானுஜ நூற்றந்தாதிக்காக மேளமில்லாமல்‌ எழுந்து அருளுவதும்‌, உடையவர்‌ ஸன்னிதிக்கு எழுந்தருளுவதும்‌ இங்கு சொல்லப்படவில்லை.
ஸப்த ஆவரணத்தோடு காவியம்‌ பூர்த்தியாகிறது. ஆடும்‌ பல்லக்கு சொல்லப்படவில்லை.]

————

5. ஸ்ரீரங்கராஜ சரித பாணம்‌

[பாணம்‌ என்பது நாடகம் போலுள்ள ஒரு ரசனை, இது கெளண்டின்ய கோத்ரியான ஸ்ரீனிவாஸ கவியால்‌ எழுதப்‌ பட்டது .
இவருடைய காலம்‌ தெரியவில்லை. இந்தப்‌ புஸ்‌தகம்‌ 1881, 1891-ம்‌ வருஷங்களில்‌ கிரந்த எழுத்தில்‌ அச்சு இடப் பட்டிருக்கிறது.
ரங்கநாதன்‌ ஒவ்வொரு நாயகியோடும்‌ கிரீடித்துக் கொண்டு உறையூர்‌ நாச்சியாரிடம்‌ போய்‌, அவளைக் கலியாணம்‌ செய்‌து கொள்வதையும்‌,
அவளுக்குப்‌ பெருமாளிடம்‌ காதல்‌ உண்டான விவரத்தையும்‌, பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்க நாச்சியாருக்கு உண்டாகும்‌ பிரணய ரோஷத்தையும்‌ இந்தக்‌ கவி வெகு ரஸமாகச்‌ சொல்லுகிறார்‌.
இந்த கிரந்தத்தில் உள்ள கடைசி இரண்டு விஷயங்கள்‌ மட்டும்‌ இங்கு அவஸ்யமாதலால்‌ எழுதப்படுகின்‌றன-

[ரங்க நாதன் உறையூர்‌ வல்லியைக்‌ கலியாணம்‌ செய்து கொண்டு அவளை மடியில்‌ வைத்து விளையாடிக் கொண்டிருக்‌கிறார்‌.
அப்பொழுது அவளுடைய தாய்‌ நிசுளையும்‌ பெரு மாளும்‌ இவ்வாறு பேசுகிறார்கள்‌.]

நிசுளை–உம்முடைய கருணையினாலேயே நீர்‌ எங்களுக்கு மணவாளப்‌ பிள்ளையாக வாய்த்தீர்‌, இவளுடைய செய்தியைச்‌ செல்லுகிறேன்‌ ; கேளும்‌ :–
பதினெட்டாம்‌ பெருக்கன்ரூ காவேரிக்குப்‌ பொட்‌டும்‌ புடவையும்‌ விடுத்துக்‌ கரையில்‌ நின்ற உம்மழகைப்‌ பார்த்து இவள்‌ ஆசைப்பட்டாள்‌.

நீர்‌ குறுத்‌துக்களால்‌ அலங்கரிக்க பல்லக்கிகே ஏறி ஒரே மூச்சிலோடி, ஆண்டாளிடம்‌ போய்‌ அவளுடைய
மாலையை வாங்கிச்‌ சூடியது கண்டு_-
**இவர்‌ எனக்கு என்ன மாகக்‌ கிடைப்பார்‌”,–என்று என்‌ பெண்‌ கவலை கொண்டாள்‌.

ரங்கநாதன்‌–இதற்கு முன்னேயே இவ்ளுடைய ஆசையை நான்‌ தெரிந்து கொண்டேன்‌, எப்போ என்‌றால்‌–
௮னேக கலச தீர்த்‌தங்களினால்‌ நான்‌ ஜேஷ்டாபிஷேகம்‌ செய்து கொண்டு உபய நாச்சியாரோடு திருப்‌ பாவாடை யன்று
ஏராளமான ப்‌ரஸாதங்களைப்‌ பார்த்‌துக் கொண்டிருக்கையில்‌ இவள்‌ என்‌ மனதைக்‌ கவர்ந்து விட்டாள்‌.

நிசுளை–பவித்ரோச்ஸவத்தில்‌ 360 தரம்‌ திருவாராதனம்‌ செய்து கொண்டு ஆச்‌சரியமான முக காந்தி யோடு
நீர்‌ பவிதர உத்ஸவ மண்டபத்தில் இருந்த படியே இவள்‌ மனதில்‌ பிரவேஸித்து விட்டீர்‌.
[பவித்ர உத்ஸவத்தன்௮ பெருமாள்‌ யாக சாலையி லிருந்து உள்ளே எழுந்தருளுகிறார்‌.
கவியின்‌ காலத்தில்‌ மண்டபம்‌ எழுந்தருளினார் போலத்‌ தோன்று கிறது .]

ரங்கநாதன்‌–அந்த மாஸத்திலேயே உறியடி. யன்று நான்‌ நாச்சிமார்களோடு வீதி வருகையில்‌ இவள்‌
அடிக்கடி என்னை ஸந்தோஷ்மாகப்‌ பார்த்தாலும்‌ ஓரோர்‌ ஸமயத்தில்‌ பார்வை கோபத்துடனிருந்தது

நிசுளை–அடுத்த மாஸம்‌ நவ ராத்ரியில்‌ நாச்சியார்‌ பூஜித்த குதிரைமேலேறி நீர்‌ சமீ விருஷ்த்தினிடம்‌
போனதைப்‌ பார்த்து இவள்‌ மெய்‌ மறந்தாள்‌
ஐப்பசி மாஸத்தில்‌ தாஸிகளின்‌ பாடலைக்‌ கேட்டுக்‌ கொண்டே ஊஞ்சலாடும்‌ உம்முடைய பக்கத்‌திலிருந்த
நாச்சிமார்களைப்‌ போலிருக்க இவள்‌ ஆசைப்பட்டாள்‌,

ரங்கநாதன்‌–இத்தளையும்‌ என்னுடைய பெருமையைக் கண்டு உண்டான ஆசை தானே!
நிசுளை–கார்த்திகை யன்று நீர்‌ தீப ஸ்‌தம்பத்தைப்‌ பார்த்து விட்டு, திரும்பவும்‌ ஆஸ்தானத்‌திலிருந்‌து
கலியன்‌ பாட்டுக்‌ கேட்ட களிப்பால்‌ ஆழ்வாருக்கு எல்லாவற்றையும்‌ கொடுத்து ஒன்றுமேயில்லாமல்‌ :
உள்ளே கடந்‌து போனதை நினைத்து நினைத்து இவள் தூங்கவேயில்லை.

ரங்கநாதன்‌–இக்த மாஸத்திலேயே உன்‌ பெண்‌ செய்த காரியத்தைச்‌ சொல்லுகிறேன்‌
கைசிகத்‌தன்று நான்‌ போர்வை சாத்திக்கொண்டு கைசிக புராணம்‌ கேட்கையில்‌ இவளைப்‌ பார்த்தேன்‌ ;
உடனே எனக்கு எல்லாம்‌ நூதனமாகிப்‌ புராணமென்பதே இல்‌லாமல்‌ போயிற்று 1 .

நிசுளை–இன்னொரு ௮திசயம்‌ கேளும்‌. மரர்கழி
மாஸத்தில்‌ நீர்‌ சித்திர மண்டபத்தில்‌ ஆழ்வார் ஆசாரியர்களோடு விற்றிருந்து
பெரியாழ்வார்‌ பிரபந்தம்‌ முதலாக பத்து நாளும்‌ பானம்‌ பண்ணின அமிருதத்தை எல்லாருக்கும்‌ கொடுப்பகற்காக
தரித்துக் கொண்ட மோஹினி ரூபத்தைக் கண்டு இந்தப்‌ பெண்‌ வெட்டுப்‌ போனாள்‌.
முக்த சேதனன்‌ அர்ச்சிராதி மார்க்கமாய்ப்‌ போவதை ஏகாதசி முதல்‌ அனுகரித்து பக்தர்களை அநுக்ரஹிப்பதற்காக நீர்‌
ஆயிரக்கால்‌ மண்டபம்‌ போய்‌ ஆழ்வாருடைய பிரபந்தத்தைக் கேட்டு அவரை ஆனந்‌திப்‌ பித்த குணத்தையே இவள்‌ பாடிக்கொண்டிருக்கிறாள்‌.

இதிலேயே நீர்‌ எட்டாம்‌ திரு நாள் குதிரை மேலேறி வையாளி விளையாடுகையில்‌ கூட்டமாய்‌ வந்து
எதிர்த்து வழிப்பறி செய்த கலியனை அனுக்ரஹித்ததைக் கண்டு இவள்‌ ஆச்சரியப்படுகிறாள்‌,

இந்த உத்ஸவத்திலேயே நீர்‌ நித்தியம்‌ ராத்திரி ஏகாந்தத்தில்‌ ஸங்கீதம் கேட்பதற்காகக்‌ கூட்டமில்லாமல்‌ உள்ளே போய்‌,
வீணை வாத்‌தியத்தைக்‌ கேட்டுக்‌ கொண்டே. படியேற்றம்‌ கண்டருளினதைப்‌ பார்த்து இவள்‌ திகைத்துப் போனாள்

தை மாஸத்‌தில்‌ முதல்‌ திருநாள் நீர்‌ உபய நாச்சியாரோடிருந்‌து மற்றை நாளில்‌ ஹம்ஸம்‌, ஸிம்மம்‌, ௧ருடன்‌, ஹனுமான்‌, யானை–வாஹனங்களேறி,
ஏழாம்‌ நாள்‌ உபய நாச்சிமாரோடு சூர்ணாபிஷேகம்‌ செய்து கொண்டு, எட்டாம்‌ நாள்‌ குதிரையேறி விளையாடி,
ஒன்பதாம்‌ நாள்‌ நாச்சிமாரோடு தேரிலிருந்ததைப்‌ பார்த்து இவள்‌ மோஹித்துப்‌ போனாள்‌,

இந்தச்‌ தேரன்று ராத்‌ரி நாச்சியார் கோயிலில்‌ உபசாரங்களைப்பெற்று, உபய நாச்சியாரைத் தனித்தனியாகப்‌ பல்லக்கில்‌ வைத்து
நீர்‌ வீதி வலம்‌ வந்த வைபவத்தைக்‌ கண்டு இவள்‌ பூரித்துப்‌ போனாள்‌.

கனுவன்று நீர்‌ முத்து நகை பூண்டு மாலைப்‌ போதில்‌ குதிரை யேறி வேட்டை. விளையாடினதைப்‌ பார்த்து இவள்‌ மகிழ்க்தாள்‌.

மாசி மாஸக்தில்‌ கதம்பம்‌,வகுளம்‌, ஆம்ரம்‌ முதலிய: தீர்த்தங்களில்‌ உத்ஸவம்‌ பண்ணிக்‌ கடைசி நரள்‌
பெரிய தெப்பத்தில்‌ நாச்சிமாரோடு நீர்‌ விளையாடினது கண்டு இவளும்‌ விளையாட விரும்பினாள்‌.”
[க,தம்பம்‌ ஆம்‌சம்‌-இவ்விரண்டு தான்‌ இப்பொழுது மாசி உத்ஸவத்தில்‌ நடக்கின்றன.
தீர்தங்களில்‌ உத்ஸவம்‌ கடக்கும்‌ விவரத்தை ஸ்ரீரங்க மாஹாத்மியத்தில்‌ காண்க.]

பங்குனி உத்தரத்‌தில்‌ நீர்‌ உபய நாச்சிமார்களை கர்ப க்ருஹத்திலேயே விட்டு பெரிய பிராட்டியாரோடு
ஏக ஆஸனத்தில் இருப்‌பதைப் பார்த்து இவள்‌ தானும்‌ உம்‌ மோடு வீற்றிருக்க விரும்பினாள்‌.

[கவி இங்கு பிரணய கலஹத்தைச்‌ சொல்லாதது . இவளுடைய கல்யாணம்‌ பூர்த்தியாகாததால்‌.]
இன்னொரு விஷயம்‌ நினைவுக்கு வந்தது :–இந்த உச்ஸவத்திலேயே மூன்றாம்‌ திருநாள்‌ சத்‌ர சாமராதிகளோடும்‌, ஸைன்யங்களோடும்‌,
பெரிய கூட்டத்‌தோடும்‌, மஹா வைபவத்துடன்‌ புறப்பட்டு அகண்ட. காவேரியில்‌ நீர்‌ அம்மையாரை நினைத்துக் கொண்டு அவளுடைய தண்ணீர்ப் பந்தலில்‌ போய்‌ உட்கார்ந்ததைப் பார்த்து.-
*இவ்வளவு இறு பிள்ளையாயிருப்பவர்க்கு அம்மையாரிடம்‌ ஆசை உண்டாயிற்றே,”.- என்று சொல்லி என்‌ பெண்‌ சிரித்தாள்‌.
[லக்ஷ்மீ காவ்யக்காரர்‌ சொல்லாத அம்மையார்‌ தண்ணீர்ப்‌ பந்தலை இந்தக் கவி சொல்லுகிறார்‌,]

சித்திரை மாஸத்தில்‌ நீர்‌ த்வஜ ஆரோஹணம்‌ பண்ணி, நாளுக்கு மண்டபமாகப்‌ போய்‌, வித:விதமான
நைவேத்தியங்களை அனுபவித்து உச்ஸவம்‌ செய்து கொண்ட அழகையும்‌ என்‌ பெண்‌ பார்த்தாள்‌.

ரங்கநாதன்‌–௮ம்மா- நான்‌ ஒன்று சொல்லுகிறேன்–இந்த மாஸத்திலேயே பச்சைக்‌ கர்ப்பூரம்‌ குங்குமப்பூ, கஸ்தூரி,
முதலிய வாஸனை த்ரவியங்‌களாலும்‌ பூக்களாலும்‌ சைத்யோபசாரம்‌ செய்து சொண்டு, பானகம்‌ முதலியவற்றால்‌
நான்‌ ஸந்‌தோஷப்‌படுகையில்‌ இவள்‌ தினங்தோறும்‌ என்னெதிரிலிருந்து எனக்கு நேத்ர ஆநந்தத்தைக்‌ கொடுத்தாள்‌,

நிசுளை-வைகாசி மாஸத்தில்‌ ஜலம்‌, நிறைந்த: அகழி நடுவே மண்டபத்தில்‌ நாச்சிமாரோடு ஊஞ்சலில்‌
நர்த்தனம்‌ செய்யும்‌ தாஸிகள் சூழ நீர்‌ உட்கார்ந்‌து இருப்‌பதைப் பார்த்து மெச்சினாள்‌.
ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ சந்த்ர புஷ்கரணியில்‌ – நீர்‌ தீர்த்வாரி நடத்துவதையும்‌,

பத்தாம்‌ திரு நாள் .
புஷ்ட யாகத்துக்குப் பிறகு வீதி வந்து. உபகார ஸ்மிருதியாக உடையவர்‌ ஸன்னிதி த்வாரத்துக்குப்‌ போவதையும்‌, படிப்புக்‌ கேட்பதையும்‌, கொடி யிறக்குவதையும்‌- பார்தது இவள்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ சொரிந்தாள்‌,
[உடையவர்‌ ஸன்னிதி விஷயம்‌ வக்ஷ்மீ காவியக்காரரால்‌ சொல்லப் படவில்லை.]

ஸ்லாமி ! ஒவ்வொரு உத்ஸத்திலும்‌ ஏழாம்‌ திரு நாள் உபய நாச்சிமார்களோடு நீர்‌ நெல்‌ அளவிட்டு
இவ்வளவென்று சொல்வதற்குப்போல நாச்சியார் கோயில்‌ போனதைக் கண்டு இவள்‌ மோஹித்தாள்‌..

ஒவ்வொரு உத்ஸவத்திலும்‌ எட்டாம்‌ திருநாள்‌ நீர்‌ எல்லையெல்லாம்‌ சுற்றி.மண்டபத்திலிருக்து
குதிரை யேறிக்‌ காவேரி வழியாய்த் திரும்பும் போது இவளும்‌ கூட வந்தாள்‌,
[இத்தால்‌ எல்லைக் கரை எழுந்து அருளுவது இப்போது
போலப்‌ பங்குனியில்‌ மட்டுமில்லாமல்‌ ஒவ்வொரு யாத்ர உத்ஸவச்திலும்‌ உண்டென்று தெரிகிறது -.
கோயிலுக்கு “வெளியே உள்ள்‌ மண்டபத்துக்கு எழுந்து அருளுவது கூட இப்‌பொழுது கோயிலுக்குள்ளேயே ஏற்பட்டுவிட்டது .]

ஒவ்வொரு உத்ஸவத்துலும்‌ முதல்‌ நாள்‌ ராத்திரி நீர்‌ யாக சாலையிலிருந்து வந்து பெரிய பெருமாளுக்கெதிராக உட்கார்ந்து பிரதி ஸரம்‌ கட்டிக்கொண்டு, வெகு வேகமாகத்‌ திரும்பி எழுந்தருளின அழகைக்‌ கண்டு இவள்‌ ஆச்சரியப்பட்டாள்‌,
மத்தளம்‌, தாளம்‌, எக்காளம்‌ முதலிய கோஷத்‌தோடும்‌, ஸ்‌துதி பாடகர்கள்‌ சொல்லும்‌ கட்டியத்தோடும்‌, கைகூப்பி நிற்கும்‌ ஜனங்களினிடையில்‌,
சாமரங்‌களுக்கு நடுவே, திருமுகத்துக்‌ குடையின்‌ கீழ்‌ நீர்‌ திருவந்திக்‌ காப்பு கண்டருளும்போது உம்முடைய முக
ஜோதியைப்‌ பார்க்கப்‌ பார்க்க இவளுக்கு அலுக்கவே யில்லை,
தீபாவளியன்றும்‌ யுகாதியன்றும்‌ நீர்‌ சந்தன மண்‌டபத்‌திலிருந்து நம்மாழ்வார்‌ முதலானோரை வெகுமதி யளித்‌.து அனுப்பி,
ஷண நேரம்‌ தங்கி விட்டு உடனே உள்ளே எழுந்தருளின அழகையே இவள்‌ பாடிக்‌ கொண்டிருக்கிறாள்‌,

ஸங்கிராந்தி முதலான தினங்களில்‌ மேனி முழும்‌ நீர்‌ சந்தனம்‌ பூசிக்கொண்டு ஸஹஸ்‌ர தாரைத் தீர்த்தத்தினால்‌
திருமஞ்சனம்‌ செய்துகொள்ளும்‌ போது உம்மூடைய கன்னத்தின்‌ அழகைக் கண்டு இவள்‌ முத்தமிடப்‌ புறப்பட்டாள்‌.

ரங்க நாதன்‌–உன்‌ பெண்‌ தன்னுயிராலேயே
என்னை அங்கீ கரித்து விட்டாள்‌.

நிசுளை–ஒன்று மாத்திரம்‌ பெண்‌ புத்தியால்‌ கேட்டுக் கொள்கிறேன்‌ : உம்முடைய மற்றை மஹிஷிகளைப் போல இவளையும்‌ பாவிக்க வேண்டும்‌,

ரங்ககாதன்‌–இந்த ஸபையில்‌ இப்படி. ப்‌ரதிக்ஞை பண்ணித்‌ தருகிறேன்‌ : இவள்‌ எனக்கு லக்ஷ்மியைப்‌ போல பிரியாத பத்தினி,
லக்ஷ்மியைப்‌ போல இவளையும்‌ தனிக் கோயிலில்‌ வைத்‌து இவளுக்கு ஸகல போகம்‌களையும்‌ கொடுக்கிறேன்‌.
வருஷத்துக்‌கு ஓருமுறை இந்த நகரம்‌ வந்து ஒரு நாள்‌ ‘இவளோடிருக்கிறேன்‌.

[ரங்க நாதன்‌ ஸ்ரீரங்கம்‌ வந்து நாச்சியார் கோயிலுக்குப்‌ போய்‌ கதவைக்‌ தட்டிக்‌ கூப்பிடுகிமுர்‌.] ்‌
கண்ணே யார்‌ அங்கே? ரங்க ரஸிகன்‌ ;
இங்கென்ன போம்‌ 1] நான்‌ உன்னுடைய காந்தன்‌;
அவர்‌ இங்கில்லை–விளையாடப்‌ போயிருக்கிறார்‌ ;
உன்னை விட்டு அவர்‌ எங்கே விளையாடுவது ?
பாக்யசாலியான ப்ரியை எங்‌கே யிருக்கிருளோ 7
உன்னைவிட அவருக்கு ப்ரியை யார்‌?
நிசுளைக்கு நாதனுடைய கன்யா ரத்னம்‌ இருக்‌கிறாளே]|

[ரங்க நாதன்‌ கதவைத் திறந்து உள்ளேபோய்‌ நாச்சியாரிடம் உட்கார்ந்து . ௮வளை ஸமாதானப்படுத்‌தி னார்‌. ]
நாச்சியார்‌–உம்முடைய மேனி மிக்க மிருது வென்று நான்‌ கெட்டியாகக் கூட கட்டி யணைந்த தில்லை;-அழுத்தமாயும்‌ முத்தமிட்ட தில்லை,
கொஞ்சம்கூட தயவேயில்லாமல்‌ யார்‌ உம்மை இப்படிக்‌ காயப்‌ படுத்தியது?

ரங்கநாதன்‌–அப்படி நினையாதே, நேற்று ராத்‌ரியே நான்‌ ஊரைவிட்டு நீலீவனம்‌ போய் ராக்ஷஸனைக்‌
கொன்று ரிஷிகளை ஸந்தோஷப்படுத்தி , இப்போது தான்‌ வருகிறேன்‌.
சத்துரு புலியாயிருந்தாலும்‌ இடம்‌ காடாயிருந்தாலும்‌ யுத்தத்‌தில்‌ உடம்பெல்லாம்‌: காயமாயிற்று,
நான்‌ நிஜத்தைச் சொல்லுகிறேன்‌.-பொய்‌ சொன்னதுமில்லை ண: சொல்லட் போகிறதுமில்லை,

நாச்சியார்‌–(கடகடவென்று சிரித்‌துக் கொண்டு):
வியாக்ராஸூரனை இன்று கொன்றதும்‌ நிஜம்‌ ! நீலீ வனத்தில்‌ முள்‌ இருப்பதும்‌ நிஜம்‌ |

ரங்கநாதன்‌–நம்பிக்கை யில்லையானால் தேவர்களின்‌
முன்னால்‌ ஸத்தியம்‌ பண்ணுகிறேன்‌; நெருப்பைக்‌ கையிலேந்துகிறேன்‌.
கொடிய பாம்பையும்‌ கையில்‌ பிடிக்கறேன்‌; ஸ்ரீயான நீதான்‌ எனக்கு ப்ரியமானவள்‌.

நாச்சியார்‌–நீரே ஸத்யமான பரம புருஷன்‌.-
தேவர்கள்‌ உம்முடைய துளி மாயையாலும்‌ வஞ்சிக்கபடுவார்கள்‌.
உம்முடைய முகமே நெருப்பு, பாம்பே உமக்குப்‌ படுக்கை, நீர்‌ ஸ்ரீ ய : ஸ்ரீ -ஸ்ரீ க்கும் ஸ்ரீ யாய் இருப்பவர்யிருப்பவர்‌).

ரங்கநாதன்‌–பதில்‌ சொல்ல இடமில்லாமல்‌ பேசுகிறாளே ! குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக்‌ கேட்க வேண்டியது தான்‌. “
(என்று மன்னிப்புக்‌ கேட்‌கிறார்‌. நாச்சியாரும் மன்னித்தாள்‌.)

————-

6–ஆதி ப்ரஹ்ம உத்ஸவம்

விபீஷணன்‌ ரங்க விமானத்தை அயோத்தியில் இருந்து லங்சைக்குக்‌ கொண்டு போகையில்‌ மாத்யாந்ஹிகத்துக்‌காக புஷ்கரிணிக்‌ கரையில்‌ வைத்தான்‌.
அப்பொழுது உறையூரில்‌ ராஜாவாயிருந்த தர்மவர்மா விபிஷணனை உபசரித்து இங்கேயே சில நாள் இருக்கும் படியாகப்‌.ப்‌ரார்த்தித்தான்‌.
மறுநாள்‌ பிரம்மா ஏற்படுத்தின உத்ஸவத்தை நடத்த வேண்டிய தினமாகையால்‌ லங்கைக்குப்‌ போக விரும்பின விபீஷணன்‌ தர்மவர்மாவின்‌ பிரார்த்தனையினால்‌ இவ்விடமே உச்ஸவத்தை நடத்தினான்‌.
(ஸ்ரீரங்க மாஹாத்மியம்‌ பார்க்க) ஸ்ரீ ரங்கமாஹாத்மியத்திலும்‌ லக்ஷ்மீ காவ்யத்திலும்‌ சொன்ன
ப்ரகாரமே பங்குனி ரோஹிணியில்‌ த்வஜ ஆரோஹணம் ஆகி பத்து நாள் உத்ஸவம்‌ இப்பொழுதும்‌ நடக்‌கிறது
இந்த உத்ஸவத்தின்‌ விவரம்‌ ஈருக்கமாகப்‌ பின்வருமாறு,

1-ம்‌ திரு–த்வஜாரோஹணம்‌, பேரி தாடனம்‌,
உபய நாச்சியாரோடு திருவீதி , யாக சாலையில்‌ பெருமாளுக்குத் திரு மஞ்சனம்‌,
பஞ்சகுண்டஹோமம்‌, ஸன்‌னிதி வாசலில்‌ யாத்ரா தானம்‌,

2-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில் வீதி எழுந்து அருளுவதில்லை. அம்பட்ட மண்டபத்துக்கு எழுந்தருளுவதாக ஐதிஹ்யம்‌.
ஆனால்‌ கருட மண்டபத்திலேயே மண்டபப்படியாகி சீக்கிரம்‌ உள்ளே எழுந்தருளுவார்‌.
இன்றைய மண்ட பப்படி.செலவு மட்டும்‌ திருச்சி பரியாரி’களுடையது.

3-ம்திகு–சீயர்‌ புரத்துக்காக ராத்ரியே பெருமாள்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு ப்‌ரதக்ஷிணமாய்‌ வடக்கு வாசல்‌ வழியாக மேலூர்‌ போய்‌,
விருஷி தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து, கொள்ளிடத்திலிறங்கி -சிலையாத்தி போய்‌, மீண்டும்‌ கொள்ளிடத்‌ திலிறங்‌கி, காவேரியையும்‌ தாண்டி
இரவெல்லாம்‌ வழி நடந்து, உதயம்‌ சீயர் புரம் அம்மையார்‌ தண்ணீர்ப் பந்தலில்‌ தத்யோகனமும்‌ மாங்‌காய்‌ ஊறுகாயும்‌ அழுது செய்து, மண்டபத்தில்‌ ஆராதன நைவேத்தியம்‌ : கண்டருளி,ஸாயங்காலம்‌ புறப்பட்‌டுக்‌ காவேரி தாண்டி,
மேலூர்‌ வழியாக வந்து வடக்கு வாசல்‌ பிரவேசித்து, வீதி எழுந்தருளி உள்ளே போவார்‌,

4-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்‌பட்டு கொள்ளிடம்‌ இறங்கி , நொச்சியத்துக்கு மேற்கில்‌
ஸ்ரீரங்கராஜ புரத்திலுள்ள செட்டி ராயர்‌ மண்டபத்திலிருந்து ஸாயங்காலம்‌ கருட வாஹனகத்தில்‌ புறப்பட்டு.
விதி யெழுந்தருளி உள்ளே போவார்‌.

5-ம்‌ திரு–காலை சேஷ வாஹனத்தில்‌ வீதி யெழுந்தருளி, மத்தியானம்‌ சேஷ ராய மண்டபத்திலிருந்து
ஸாயங்காலம்‌ கல்ப விருக்ஷத்தில்‌ வீதி யெழுந்தருளி உள்ளே போய்‌, விடியற்காலையில்‌ புறப்பட்டு உறையூர் எழுந்தருளுவார்‌.

6-ம்‌ திரு–உறையூருக்குப்‌ பெருமாள்‌ எழுந்தருளும்போது 10 மணியாகும்‌. பெருமாள்‌ பல்லக்கோடு சந்தன மண்டபத்தில்‌ எழுந்தருளுவார்‌.
திருக்காப்பு சேர்த்து வெளியே தாஸிகள்‌ பாட்டும்‌ மேள வாத்தியமும்‌ முழங்கும்‌.
ஸன்னிதிக்‌கெதிரில்‌ பல்லக்கோடு எழுந்தருளின பெருமாள்‌ பல்லக்கிலேயே நாச்சியாருக்கு நேராக எழுந்தருளி,
புது வஸ்திரம் . சந்தனம்‌, திலகம்‌, மாலை முதலியன சாத்திக் கொண்டு, களைந்த மாலையை நாச்சியாருக்கு அனுப்புவார்‌.
நாச்சியார்‌ மாலை யணிந்து கொண்ட பிறகு, ஏகாந்த ப்ரஸாதம்‌ நிவேதனமாகும்‌.
முதலில்‌ பெருமாளும்‌ பிறகு நாச்சியாரும்‌ வெளி மண்‌ டபத்தில்‌ எழுந்தருளி, திருவாராதனம்‌ முதலியன ஆகும்‌.
ராத்திரி 10 மணி வரையில்‌ பெருமாள்‌ எல்‌லாருக்கும்‌ ஸேவை ஸாதித்து, நாச்சி யாரை உள்ளே அனுப்பிப்‌ புறப்பட்டு, ஸ்ரீரங்கம்‌ வந்து வெளியாண்டாளோடு மாலை மாற்றிக் கொண்டு உள்ளே எழுந்தருளுவார்‌.

7-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ வீதி எழுந்தருளுவதில்லை; ,ஸாயங்காலம்‌ உபய நாச்சிமாரோடிருந்து
ஜலக்ரீடை,, சூர்ணாபிஷேகம்‌, நெல்‌அளவு–இவை ஆனதும்‌ வீதி யெழுந்தருளி, நாச்சி யார் கோயிலில்‌ திருமஞ்‌சனம்‌ செய்து கொண்டு உள்ளே போவார்‌,

8-ம்‌ திரு–பெருமாள்‌ காலையில்‌ திரு வீதி எழுந்‌தருளாமலே தெற்கு வாசல்‌ வழியாகக்‌ கிழக்கே போய்‌,
அசுவத்த தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து-வேலேந்து தாஸருக்கு ஆனை ஏற்றம் அனுக்ரஹித்து வழியில் அவ்வோ இடங்களில்‌
ஸ்தலத்தார்களையும்‌ அனுக்ரஹித்து , பில்வ தீர்த்தத்தில்‌ தீர்த்தம்‌ ஸாதித்து எல்‌லைக் கரை மண்டபம்‌ போய்‌, எல்லைக் கரை ராமானுஜனையும்‌ ஸ்ரீரங்க நாரயண ஜீயரையும்‌ ௮நுக்ரஹிப்பார்‌;
ராத்திரி குதிரை வாஹனத்‌தில்‌ புறப்பட்டுக்‌ கொள்‌ளிடம்‌ இறங்கி வடக்கு வாசல்‌ வழியாக ஊருக்குள்‌
பிரவேசித்து , கோரதத்தினடி.யில்‌ வையாளி யாகி உள்ளே எழுந்தருளுவார்‌.

9-ம்‌ திரு. பங்குனி உத்தரம்‌–பெருமாள்‌ காலையில்‌ பல்லக்கில்‌ புறப்பட்டு சித்திரை வீதி உள்‌ திரு வீதிகளில்‌ வலம்‌ வந்து
நாச்சியார்‌ ஸன்னிதிக்குள்‌ போகையில்‌ கதவுகள்‌ சாற்றப் பட்டு, தாஸிகள்‌ புஷ்பங்களையும்‌ பழங்களையும்‌ எறிந்து பெருமாளைத்‌ தடுக்து வெளியே நிறுத்தி வைப்பார்கள்‌.
கதவு திறக்கும் போது பெருமாள்‌ உள்ளே போவதும்‌ கதவு சாற்றும் போ.து பெருமாள்‌ பின்னால்‌ ஒதுங்குவதுமாயிருக்கும்‌.
பெருமாள்‌ நாச்சிமார்களுக்கு ஸமாதானம்‌ பண்ணி வைப்பதற்‌காக நம்மாழ்வார்‌ வருவார்‌.
பெருமான்‌ தான்‌ சொல்ல வேண்டியவைகளை அரையரிடம்‌ சொல்லி ஆழ்வாரை மத்தியஸ்‌தமாகக்‌ கொண்டு நாச்சியாரிடம்‌ தெரிவிப்‌பதற்காக இருவரையும்‌ அனுப்புவார்‌,
அரையர்‌ ஆழ்‌வாரோடு உள்ளே போய்‌ நாச்சியாருடைய பரிகரமான பண்டாரியினிடம்‌ பெருமாள்‌ சொன்னதைச்‌ சொல்லி
பண்டாரி சொல்லும்‌ நாச்சியார் வார்த்தையைப்‌ பெருமாளிடம்‌ – ஆழ்வாரோடு வந்து சொல்லுவார்‌,
பெருமாள்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை, நாச்சியார்‌ சொல்லுவது அஞ்சு வார்த்தை,
இந்தப்‌ பத்து வார்த்‌தைக்குப்‌ பத்து பாட்டு வெகு ௮ழகாக முன்னோரான அரையர்களால்‌ செய்யப்பட்டு இப்பொழுதும்‌ சொல்லப்‌ படுகிறது.
பாட்டு அரையர்களிடமே இருக்கிறது,–வார்த்தை மட்டும்‌ * மட்டையடி” என்னு விகாரமாகப்‌ பெயர் பெற்ற புஸ்தகமாய்‌ வெளியாயிற்று, அத்த வார்த்தை பின்‌ வருமாது :—

நாம்‌ உத்ஸவார்த்தமாகப்‌ புறப்பட்டருளி, திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷிக்க,
ப்‌ராம்மணர்களெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம்‌ பண்ண,—இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்தில்‌ வந்தால் ,
தாங்களெப்போதும்‌ எதிரே விடை கொண்டு திருக் கை கொடுத்து, உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்மாஸனத்திலேறி யருளப் பண்ணி, திருவடி விளக்‌க, திரு வொத்து வாடை சாத்தி, திருவால வட்டம்‌ பரிமாறி, மங்களாலத்தி கண்டருளப் பண்ணி, சுருளமுது
திருத்தி ஸமர்ப்பித்‌து , –இப்படி ௮னேக உபசாரங்களெல்லாம்‌ நடக்குமே.
இன்றைக்கு நாமெழுந்தருளின விடத்திலே திருக் காப்பு சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்‌ திருப்பிக் கொண்டு, திருச் சேவடிமார்‌கள்‌ கைகளாலே
பந்துகளாலும்‌ பழங்களாலும்‌ விட்டெ.றிவித்‌து , இப்படி யொரு நாளும்‌ : பண்ணாத ௮வமானங்களை யெல்லாம்‌ இன்றைக்குப்‌ பண்ண வந்த காரியம்‌
ஏதென்று. கேட்டு வரச்‌ சொல்லிப்‌–பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌,

தாம்‌ எப்போதும் போல எழுந்தருளினதே மெய்‌யானால்‌—திருக் கண்களெல்லாம்‌ சிவந்து இருப்பானேன்‌?
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேன்‌ ?
கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந் திருப்பானேன்‌ ? திருவதரம் வெளுத்திருப்பானேன்‌ ? திருக் கழுத்தெல்லாம்‌
நக க்ஷதங்களா யிருப்பானேன்‌ ? திருமேனியெல்லாம்‌ குங்குமப்பொடிகளாக யிருப்பானேன்‌ ?
திருப்பரிவட்‌டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேன்‌ ?திருவடிகளெல்லாம்‌ செம்மஞ்சக்‌ குழம்பா யிருப்பானேன்‌?
இப்படிப்பட்ட அடையாளங்களைப்‌ பார்த்து . நாச்சியாருக்கு மிகவும்‌ திருவுள்ளம்‌ கலங்கி யிருக்கிறது,
ஆன படியினாலே , உள்ளே யிருக்கிறவர்களை வெளியிலே விட வேண்டாமென்றுல்‌, வெளியிலே யிருக்கிறவர்களை
உள்ளே விட வேண்டாமென்றும்‌– இப்படி, கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற ஸமயத்திலே உள்ளே விண்‌ணப்பம் செய்ய ஸமயமில்லை, ஆன படியினாலே நேற்றைக்‌ கெழுக்தருளின விடத்திலே தானே இன்றைக்கும் எழுந்து அருளச் சொல்லி– நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

திருக் கண்‌ சிவந்து இருப்பான் என் என்றால்‌ நாம்‌ செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வரானபடியினாலே
கவிரி முடித்து, கல்கச்சை சட்டி, வல்லய மேந்தி,குதிரை நம்பிரான்‌ மேலே ராத்திரி முழுவதும்‌ நித்திரை
யின்‌றி ஜகத்‌ ரக்ஷணார்‌த்தமாக ஜாக ரூகனாயிருந்த படியினாலே திருக்கண்‌ சிவந்து போச்சுது .,
திருக் குழல்‌ கற்றைகளெல்லாம்‌ கலைந்திருப்பானேனென்றால்‌–காற்‌றடித்து கலைந்து போச்சுது -, கஸ்தூரி திருமண்‌ காப்பு கரைந்திருப்பானேனென்றால்‌–௮தி கடோரமான ஸுரிய கிரணத்தால்‌ கரைந்து போச்சுது –திருவதரம்‌ வெளுத்திருப்பானேனென்றால்‌-௮ஸூர நிரசனார்த்தம்‌
தேவதைகளுக்காக சங்கத் வானம்‌ பண்ணின படியினாலேவெளுத்துப்‌ போச்சுது .
திருக் கழுத்தெல்லாம்‌ நக க்ஷதமாயிருப்பானே னென்றால்‌—௮தி ப்ரயாஸமான காடுகளிலே போகிற போது பூ முள்ளு கிழித்தது.
திருமேனி யெல்லாம் குங்குமப் பொடிகளா யிருப்பானேனென்றால்‌- தேவதைகள்‌ புஷ்ப வர்ஷம்‌ வர்ஷித்த படியினாலே புஷ்ப ரேணு படிந்தது. திருப் பரிவட்டங்களெல்லாம்‌ மஞ்சள்‌ வர்ணமா யிருப்பானேனென்றால்‌-ஸந்த்யா ராகம்‌ போலே யிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள்‌ கண்ணுக்கு மஞ்சள்‌ வர்ணமாகசத் தோன்றுகிறது ,
திருவடி.கனெல்லாம்‌ செம்மஞ்‌சக் குழம்பாயிருப்பானேனென்றால்‌–குதிரை நம்பிரான்‌
மேலேறி ௮ங்கவடிவமேல்‌ திருவடிகளை வைத்துக் கொண்டு போனபடியினாலே திருவடிகள்‌ சிவந்து போயின.
இப்படிப்பட்ட அடையாளமே யொழிய வேறில்லை.–ஆனால் போது கழித்து வருவானேனென்‌றால்‌–வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே திருமங்கை யாழ்வானென்பவன்‌ ஒருவன்‌ வந்து ஸர்வ ஸ்வாபஹாரத்தையம்‌ பண்ணிக் கொண்டு போனான்‌,
அவனைச்‌ சில நல்ல வார்த்தைகளைச்‌ சொல்‌லித்‌ திருவாபரணங்களை மெள்ள வாங்கிக் கொண்டு
போய்‌ கருகூலத்தில்‌ எண்ணிப்‌ பார்க்குமிடத்தில்‌ ௧னையாழி மோதிரம்‌ காணாமல்‌ போச்சுது.
அதற்காக விடிய பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி திருவீதிகளெல்லாம்‌ வலம் வந்து, கணையாழி மோதிரத்தைக் கண்டு
எடுத்துக் கொண்டு  மீள வாரா நிற்கச் செய்தே,௮ப்‌பொழுது தேவதைகள்‌ பாரிஜாத புஷ்பங்கள்‌ கொண்டு ஸேவிக்க வந்தார்கள்‌,
நாம்‌ நம்முடைய பெண்டுகளன்‌றியிலே சூடுகிறது இல்லை யென்று நமக்கு முன்னமே வரக்காட்டி. நாமும்‌ பின்னே எழுந்தருளினோம்‌.
ஆன படியினாலே நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக்‌ கொண்டு நம்மையும்‌ உள்ளே அழைக்கச்‌ சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாரம்‌

கணையாழி மோதிரம்‌ காணாமல் போனதே மெய்‌யானால்‌–விடிய’ பத்து நாழிகைக்குப்‌ புறப்பட்டருளி உறையூரிலே போய்‌,
மின்னிடை மடவார்‌ சேரியெல்‌லாம்‌ புகுந்து யதா மநோ ரதம் அனுபவித்து உண்டாயிருக்கிற அடையாளங்களெல்லாம்‌
திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்‌தேயும்‌, அவ் வடையாளங்களையும்‌ அந்யாதவாகக்‌ கொண்டு, நாங்கள்‌ ஏழைகளானபடி.யினாலே
இப்படிப்பட்டிருக்கிற வஞ்சந உக்‌திகளை யெல்லாம்‌ நேற்றைக்‌ கெழுந்தருளின விடத்தில்‌ தானே
சொல்லிக் கொண்டு இன்றைக்கும்‌ அங்கே. தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டது மில்லை; காதாலே கேட்டதுமில்லை. துஷ்டர்களா யிருக்கிறவர்களும்‌
மனதுக்குச்‌ சரிப்போனபடி சொன்‌னால்‌ நீரும்‌ அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்‌ கொண்டு நம்மையும்‌ ஒரு நாளும்‌ பண்ணாத அவமானன்‌களெல்லாம்‌ பண்ணலாமா ?
நீங்கள்‌ ஸ்‌த்ரீகளானபடி.யினாலே முன்பின்‌ விசாரியாமல்‌ பண்ணினீர்களாமென்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத்‌ தேவை யில்லை.
ஆனபடியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்‌பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைக்‌கச் சொல்லிப்‌ பெருமாளருளிச்‌ செய்த ப்ரகாசம்‌.

முந்தா நாள் அழகிய மணவாளப் பெருமாள்‌ வேட்டையாடி. வேர்த்து விடாய்த்து எழுந்தருளினார் என்று அடியோங்கள்‌ அதி ப்ரீதியுடனே
எதிரே விடைகொண்டு, திருக்கை கொடுத்து, உள்ளே யெழுந்தருளப்‌ பண்ணிக் கொண்டு போய்‌, திவ்ய ஸிம்ஹாசனத்திலே
ஏறி யருளப் பண்ணி, திருவடி விளக்கி , திரு வொத்து வாடை. சாத்தி, திருவாலவட்டம்‌ பரிமாறினோம்‌.
அப்‌போது ௮தி௧ ஸிரமத்தோடே எழுந்தருளி யிருந்தார்‌.
ஆனால்‌, இளைப்போ வென்று வெந்நீர்த்‌ திருமஞ்சனம்‌ சேர்த்து ஸமர்ப்பித்தோம்‌.
அதை நீராடினது பாதியும்‌ நீராடாதது பாதியுமாக எழுந்தருளி யிருந்தார்‌,
ஆனால்‌, இளைப்போவென்று திருவறைக்குத் தகுதியான திவ்ய பீதாம்பரம்‌ கொண்டு வந்து ஸமர்ப்பித்‌தோம்‌, அதையும்‌ எப்போதும்‌ போல சாத்‌திக் கொள்‌ ளாமல்‌ ஏதோ ஒரு விதமாக சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று கஸ்தாரித்‌ திருமண் காப்பு சேர்த்து ஸமமர்ப்பித்தோம்‌. அதையும்‌ எப்போதும்‌
போல சாத்திக் கொள்ளாமல்‌ திரு வேங்கடமுடையான்‌
திருமண்காப்பு போல கோணாமாணாவாய்ச்‌ சாத்தியருளினார்‌.
ஆனால்‌, இளைப்போவென்று தங்கப் பள்ளயத்தில்‌ அப்பம்‌ கலந்த சிற்றுண்டி யக்காரம்‌ பாலில் கலந்து,
வர்க வகைகள்‌ முதலானதுகளைச்‌ சேர்தது ஸமர்ப்பித்‌தோம்‌.
அதையும்‌ அமுது செய்தது பாதியும்‌ அமுத செய்யாதது பாதியுமாய்‌ எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌ இளைப்போவென்று
சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்‌தோம்‌. அசையும்‌ ௮முது செய்யாதபடி தானே எழுந்தருளியிருந்தார்‌. ஆனால்‌, இளைப்போவென்று
திருவநந்தாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன்‌ மேலே திருக் கண்‌ வளரப் பண்ணி அடியோங்கள்‌ திரு வடிகளைப்‌ பிடித்துக்கொண்டிருந்தோம்‌.
தாம்‌ வஞ்‌சகரான படியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை யுண்டாக்‌கி , எங்கள்‌ கருகூலம்‌ திறந்து, எங்கள்
ஸ்த்ரீ தனங்களான அம்மானை பந்து கழஞ்சி பீதாம்பரங்களையும்‌ கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. எழுந்தருளுகிறோமென்றும்‌ சொல்லாதபடி. எழுந்தருளினார்‌.
அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள்‌ ௮ச்சமுடன்‌ திடுக்கிட்டெழுந்திருந்து, திருப்படுக்கையைப்‌ பார்க்கு மிடத்தில்‌,
பெருமாளைக்‌ காணாமையாலே கை நெரித்து வாயடித்து ௮ணுகவிடும்‌ வாசற்‌ காப்பாளரை யழைத்‌துக் கேட்குமளவில்‌,–
அவர்கள் வந்து , அம்மானை பந்து கழஞ்சு பீதாம்பாமான ஸ்திரீ தனத்தையும்‌ கைக்‌ கொண்டு, இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி. யெழுந்தருளினார் என்று சொல்ல வந்தார்கள் –அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க
பரிஜனங்களாயிருக்கிற திருச்சேவடி.மார்களை யழைப்‌பித்தோம்‌.
அவர்கள்‌ வந்து அடிபிடித்து அடிமிதித்‌துக் கொண்டு போனவிட த்‌ திலே, உறையூரிலே கொண்டு போய் விட்டது .
௮ங்கே மச்சனியென்று ஒருத்‌திக்கு முறைமை சொல்லி, மற்றொருத்தியை மடியைப் பிடித்தும்
கச்சணி பொன்‌ முலை கண்ணா லழைத்ததும்‌, கனி வாய்‌ கொடுத்ததும்‌,
கையில்‌ நகக் குறி மெய்யங்கமானதும்‌, கார் மேனி யெங்கும்‌ பசுமஞ்சள்‌ பூத்ததுமாகக்‌
கரும்புத்‌ தோட்டத்தில்‌ யானை ஸஞ்சரிக்கிறாப் போலே,. தேவரீர்‌ ஸஞ்சரிக்கிறிர் என்று நாங்கள்‌ உசிதமாகப்‌
போக விட்ட தூதியோடி அங்கே உள்ளபடி. வந்து சொன்னாள்‌.
உம்மாலே எங்கள்‌ மனது உலை மெழுகாயிருக்றது -ஒன்‌றும்‌ சொல்லாதே போம்‌ போமென்று நாச்சியாரருளிச்‌ செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌, அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்திலுல்‌ தீராமற்போனால்‌, ப்‌ரமாணத்தாலே தீர்த்‌துக் கொள்வார்கள்‌.
அந்தப்படி ப்‌ரமாணம்‌ பண்ணித்‌ தருகிறோம்‌. நாம்‌ தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித் தருகிறோம்‌.
ஸமுத்திரத்திலே முழுகுகிறோம்‌. அக்நி ப்ரவேசம்‌ பண்ணுறோம்‌. பாம்புக்‌ குடத்‌திலே கையிடுகிறோம்‌,
மழுவேந்துகிறோம்‌. நெய்க்‌ குடத்திலே கையிடுகிறோம்‌. இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும்‌ வாங்கிக்
கொண்டு, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிச்‌ சூட்‌டிக் கொண்டு, நம்மையும்‌ உள்ளே யழைக்கச்‌ சொல்லிப்‌
பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

ஒருவருக்கொருவர்‌ ஸம்சயப்பட்டால்‌ அந்த ஸம்சயம்‌ ஒரு ப்ரகாரத்தாலும்‌ தீராமற் போனால்‌: ப்‌ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள்‌.
லோகத்திலே ப்ராம்மணனுக்கும்‌ ப்‌ராம்மணனுக்கும்‌ வாக்‌கு வாதம் வந்தால்‌ ப்ராம்மணன்‌ ப்ராம்மணனைத் தாண்டிக் கொடுப்பான்‌.
தாம்‌ தேவாதி தேவனான படியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோம் என்று சொல்ல வந்தீரே !
அந்த தேவகைகள்‌ தம்முடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம்‌ ! எப்போ காணப் போகிறோம்‌ ! –என்று ஸதா பிரார்த்தித்துக்‌ கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோம் என்றால்‌ வேண்டா மென்பார்‌களா –
ஸமுத்‌ரத்திலே முழுகுகிறோம் என்று சொல்ல வந்தீரே !ப்‌ரளய காலத்திலே ஸகல லோகங்களையும்‌ திரு வயிற்றிலே வைத்‌து ரக்ஷித்து
ஒரு ஆலிலைத்‌ தளிரிலே கண்வளர்ந்த உமக்கு ஸமுத்திரத்தலே முழுகிறது அருமையா ?
அக்நி ப்‌ரவேசம்‌ பண்ணுகிறோமென்று சொல்ல வந்தீரே ! ப்‌ரம்மாவுக்காக உத்தர வேதியில்‌ ஆவிர்ப்பவித்‌த தமக்கு அக்நியில்‌ முழுகுகிறோமென்‌றால்‌ அக்நி சுடுமா ?
பாம்புக்குடத்‌திலே கையிட்டுத் தருகிறோம் என்று சொல்ல வந்தீரே ! சென்றாற்‌ குடையாம் இருந்தால் சிங்காதனமாம்
என்று ஸதா ஸர்வ காலம்‌ திரு வானந்தாழ்வான் மேலே திருக் கண்‌ வளர்ந்து இருக்கிற
தமக்குப்‌ பாம்புக்‌ குடத்திலே கையிட்டால்‌ பாம்பு கடிக்குமா
மழுவேந்துகிறோ மென்று சொல்ல வந்தீரே! கோடி ஸூர்ய ப்‌ரசாசமான திருவாழியாழ்‌வானை ஸதா திருக்கையிலே தரித்‌துக் கொண்டி.ருக்கிற
தமக்கு ௮ப்ரயோஜகமான இரும்பு மழு வேந்துகிறது அருமையா?
நெய்க்‌ குடத்திலே கையிடுகிறது அருமையா? இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்‌.ரமாணங்களை யெல்லாம்‌ சரிப் போன விடத்திலே தானே
பண்‌ணிக் கொண்டு இன்றைக்கும்‌ ௮ங்கே தானே யெழுந்த ருளச்‌ சொல்லி நாச்சியாரருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ உச்ஸவார்‌த்தமாகப்‌ புறப்பட்டருளி திரு வீதிகளெல்லாம்‌ வலம்‌ வந்து, தேவதைகள்‌ புஷ்பவர்‌ஷம்‌ வர்ஷிக்க,
ப்ராம்மணர்க ளெல்லாரும்‌ ஸ்தோத்‌திரம் பண்ண, இப்படி பெரிய மநோ ரதத்தோடே தங்களிடத்‌தில்‌ வந்தால்
தங்கள் எப்போதும் போலே ஆதரியாமல் படிக்கு அபராதங்களைப்‌ பண்ணினோம் என்‌றீர்கள்‌.
நாமானால்‌ உறையூரைக்‌ கண்ணாலே கண்டதுமில்லை, காதாலே கேட்டதுமில்லை யென்று சொன்னோம்‌.
அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்‌.
ஆனால்‌, ப்‌ரமாணம்‌ பண்ணித் தருகிறோம் என்று சொன்‌னோம்‌. -அத்தைப்‌ பரிஹாஸ ப்ரமாணமென்று சொன்‌னீர்கள்‌.
இப்படி நாம்‌ எத்தனை சொன்ன போதிலும்‌ அத்தனையும்‌ அந்யதாவாகக்‌ கொண்டு சற்றும்‌ திருவுள்‌ளத்தில்‌ இரக்கம்‌ வராமல்‌,
கோபத்தாலே திருவுள்ளம்‌ கலங்கத் திருமுகமண்டலம்‌ கறுத்துத்‌ திருக்கண்கள்‌ சிவந்து இப்படி. யெழுந்தருளியிருந்தால்‌ நமக்கென்ன கதி யிருக்கிறது?
௮ழகிய மணவாளப்‌ பெருமாள்‌ ஸ்ரீரங்க நாச்சியார்‌ ஸந்நிதி வாசலிலே தள்ளுபட்டுக்‌ கொண்டிருக்கிறாராம் என்ற அவமானம்‌ உங்களுக்கே யொழிய நமக்குத் தேவை யில்லை.
ஆன படியினாலே, நாம்‌ கொடுத்த புஷ்பத்தையும்‌ வாங்கிக் கொண்டு நம்மையும்‌ உள்ளே யழைச்கச் சொல்லிப்‌ பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்‌.

நாம்‌ வருஷா வருஷம்‌ அடமாயெழுந்தருளியிருந்து தமக்குச்‌ சரிப் போன படி நடந்து போட்டு, பின்னும்‌ இங்கே வந்து
நாமொன்று மறியோமென்றும்‌, ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும்‌–பரிஹாஸங்‌களைப்‌ பண்ணி இப்படிப் பட்டிருக்கிற
அக்ருத்யங்‌களைப்‌ பண்ணிக் கொண்டு வருகிறீர்‌.-நாமானால்‌ பொறுக்‌கிறதில்லை. நம்முடைய அய்யா நம்மாழ்வார்‌ வந்து
மங்களமாகச்‌ சொன்ன வாய்‌ மொழியினாலே பொறுத்‌தோம்‌. உள்ளே எழந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்‌ரகாரம்‌.

முதல்‌ ஏகாந்தம்‌–நாச்சியாரால்‌ அனுமதிக்கப்‌ பட்டு பெருமாள்‌ ஸன்னிதி வாசலில்‌ எழுந்தருளி ஆழ்வாரை மரியாதை செய்து அனுப்புவார்‌.
உறையூரில்‌ நடந்தது போலவே ஏகாக்தம்‌, தளிகை நிவேதனம்‌ நடந்து பெருமாள்‌ பங்குனி உத்தர மண்டபம்‌
எழுந்து அருளுவார்‌.-நாச்சியாரும்‌ பெருமாளிடம்‌ போய்‌ வீற்றிருப்பாள்‌,

இரண்டாம்‌ ஏகாந்தம்‌– செல்வர்‌ பெரிய கோயிலி.லிருந்து புறப்பட்டு வட திருக் காவேரியில்‌ தீர்த்தம்‌ ஸாதித்துப்‌ பெருமாளிடம்‌ வந்ததும்‌,
கத்ய த்ரயம்‌.ஸேவிக்கப்படும்‌. -கத்ய த்ரயம்‌ என்னும்‌ கிரந்தம் இன்றைய தினமே அவதரித்தது,
கத்ய த்ரய சாற்று முறைக்காக இரண்டாம்‌ ஏகாந்தத் தளிகை நிவேதனம்‌ ஆனதும்‌ செல்வர்‌ பெரிய கோயில்‌ எழுந்தருளுவார்‌.

மூன்றாம்‌ ஏகாந்தம்‌. பெருமாள்‌ நாச்சியார்‌ இருவருக்கும்‌ பதினெட்டு ஆவ்ருத்தி திருமஞ்சனம்‌ ஆகும்‌.
மூன்றாம்‌ ஏகாந்தத்‌ தளிகை நிவேதனம்‌ முதலியவை ஆனதும்‌ நாச்சியார்‌ உள்ளே எழுந்து அருளுவாள்‌,
பெருமாள்‌ கோரதத்தில்‌ திரு விதி எழுந்தருளி: உள்ளே போய்‌ கண்ணாடி யறையில்‌ திருமஞ்சனம்‌: செய்து கொள்வார்‌.

10-ம்‌ திரு–பெருமாள்‌ திருமஞ்சனம்‌ செய்து ‘கொண்டு ஸாயங்காலம்‌ மேளமில்லாமல்‌ உலாப்பாட்டும்‌
ராமானுஜ நூற்றந்தாதியும்‌ கேட்டுக் கொண்டே வீதி யெழுந்தருளி, உடையவர்‌ ஸன்னிதி வாசலில்‌ உடை யவரை அனுக்ரஹித்து,
அவர்‌ செய்‌து வைக்கும்‌ சைத்யோபசாரங்களையும்‌ பெற்றுக் கொண்டு, துவஜ ஸ்தம்பத்‌தினடியில்‌
படிப்புக்‌ கேட்டு ஸன்னிதிக்குள்‌ எழுந்தருளுவார்‌. பிறகு ரக்ஷா விஸர்ஜனமும்‌ துவஜ அவரோஹணமும்‌ ஆகும்‌.
மறு நாள் ராத்திரி விடாயாற்றியாக ஆடும்‌ பல்லக்கில் பெருமாள்‌ வீதி எழுந்தருளுவார்‌.
பெருமாள்‌ பங்குனி உத்தரத்தன்று நாச்சியார்‌ ஸன்‌னிதிக்கு எழுந்தருளச்‌ காரணம்‌ என்ன? ஸ்ரீரங்கத்தில்‌
பங்குனி உத்தரம்‌ என்பது தந்த்ரோத்ஸவம்‌ -அதாவது-இரண்டு உத்ஸவம்‌.
உத்ஸவம்‌ அவ.வர்களுடைய நக்ஷத்‌திரத்தில்‌ ஆரம்பமாக வேண்டும்‌ ; ௮ல்லது , முடிய வேண்டும்‌.
பெருமாளுக்கு ரோஹிணி நக்ஷத்‌திரமாகையால்‌ அன்று இந்த உத்ஸவம்‌ ஆரம்பமாகி உத்தரத்தில்‌ முடிகிறது;
நாச்சியாருக்கும்‌ ரோஹிணியில்‌ ஆரம்பமாகி அவளுடைய நக்ஷத்ரமான உத்தரத்தில்‌ முடிகிறது -.
பெருமாளுக்கு காலை யிலும்‌ ராத்‌திரியிலும்‌ உத்ஸவம்‌ நடக்க வேண்டி யிருப்பதால்‌ நாச்சியார் உத்ஸவம்‌ தனியாக
நடக்க முடியாமல்‌ பாவனையாக நடக்கிறது .-உத்தாம்‌ இருவருடைய உத்ஸவத்துக்கும்‌
கடைசி நாளாதாகையால் நாச்சியாருடைய சேர்த்‌தியில் இருப்‌பதற்காகப்‌ பெருமாள்‌ இன்று அங்கெ போகிறார்‌.
பிரளய கலஹ உத்ஸவம்‌ பண்ண வேண்டுமென்ற ஆகம விதிப்படி. அதற்கும்‌ உறையூர்‌ நாச்சியார்‌ ஸம்பந்தம்‌ அனுகூலமான ஸந்தர்பமாய்‌ வாய்த்தது.

77- உறையூர்ச் சரித்திரம்

உறையூர்‌ சோழர்களின்‌ ராஜ தானியாயிருக்தது — திருச்‌சினாப்பள்ளி கெஜடீர்‌ 27, 30, 49 பக்கங்களில்‌ பார்க்க,
உறையூர்‌ ராஜாவான பராந்தகன்‌, திரிசிர மலையில்‌ ஸரம முனி பயிராக்கின சிவந்திப்பூவை அபஹரித்த தோட்டக்‌.காரனை மன்னித்ததால்‌
சிவன்‌ கோபித்துக் கொண்டு உறையூரை மண்‌ மாரியால்‌ அழித்தார்‌.கெஜடீர்‌ 337-ம்‌ பக்கத்தில்‌ காண்க. கலி யுகத்திலே_ பகுகாலம்‌ சென்ற அனத்தரம்‌,. ஒரு கால விசேஷத்திலே ஒரு சோழனுடைய பாப விசேஷத்தினாலே மண் மாரி பெய்து பட்டணம்‌ முழுகிப் போயிற்று,
அநந்தரம் , ௮து முதலாக சோள தேசாதி பதிகள்‌ கங்கை கொண்டானிலே வாஸம்‌ பண்ணுகையில்‌,
கால விசேஷச்திலே உறையூரிலே கொஞ்சமாகக்‌ கோயில்‌ கட்டி பெருமாளையும்‌ நாச்சியாரையும்‌ ஒரு சோழன்‌ பிரதிஷ்டிப்பித்‌தான்‌, என்று கோயிலொழுகு 5-ம்‌ பக்கத்தில்‌ இருக்‌கிறது
இது எந்த சோழனுடைய என்ன பாபத்‌தினாலே : மண் மாரி பெய்தது என்றும்‌, எந்தச் சோழன்‌ ஊரைப்‌ புனருத்‌தாரணம்‌ பண்ணினான்‌ என்றும்‌ தெரியவில்லை .
ஸுந்தர பாண்டியன்‌ சோழ ராஜாக்களை ஐயித்‌து அவர்‌களுடைய பட்டணங்களான தஞ்சாவூர்‌ உறையூர்‌ இரண்‌டையும்‌ எரித்த பிறகு
அவர்களுக்கே கொடுத்து விட்டதாக தன்னுடைய ஸ்ரீரங்கம்‌ சாஸனத்தில்‌ சொல்லும்‌ விவரம்‌ கெஜடீர்‌ 45 ஆம் பக்கத்திலிருக்கிறது .
உறையூர்‌ 1820ம்‌ வருஷத்துக்கு முன்பு துருப்புக்கள் தங்குமிடமாயிருந்தது ..–கெஜடீர்‌ 336 ம்‌ பக்கம்‌,

இப்படிப்‌ பல தடவை உறையூருக்கு ஆபத்து வந்த காலத்தில்‌ கோயிலை ரக்ஷிக்க முடியாமல்‌
நாச்சியாரை மட்டும்‌ ஸ்ரீ ரங்கத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினதாகச்‌ சொல்லப்படுகிறது .
உறையூர்‌ கமல வல்லித்‌ தாயாரை ஸ்ரீரங்கத்திலேயே கூர நாராயண ஜீயர்‌ பிரதிஷ்டிப்பித்த விவரம்‌ கோயிலொழுகு 112ம்‌ பக்கம்‌,
உறையூர்க் கோயிலைச்‌ சேர்ந்த இடங்கள்‌ இப்பொழுது குடிகளாலும்‌ அன்ய மதத்தினராலும்‌ ஆக்‌ரமிக்கப்பட்டு விட்டன.
கோயிலுக்‌ கெதிரிலிருந்த தெப்பக் குளம்‌ இப்‌பொழுது அன்னியர்களால்‌ ஆக்ரமிக்கப்பட்டதாய்த்‌ தெரிகிறது இப்படி ஸ்தலங்கள்‌ “பறி கொடுக்கப் பட்டதால்‌
நாச்சியாருக்குத் தெப்பம்‌ நடத்த இடமில்லாமல்‌ கோயிலுக்‌குள்ளே யிருக்கும்‌ சிறு புஷ்கரிணிக்குள்ளேயே தெப்பம்‌ நடந்து கொண்டிருக்கிறது
நம்முடையதை அன்யர்களுக்கு அபஹரித்துக்‌ கொடுக்கும்‌ விஷயத்‌தில்‌ சட்டமும்‌ அதிகாரமும்‌ செல்லுன்றனவே யன்றி
அன்யர்களால்‌ ஆக்ரமிக்கப்‌பட்ட நம்முடைய ஸ்தலத்தை நமக்கு மீட்டுக் கொடுக்க எதுவும் பயன்படுகிறது இல்லை.
அன்யர்களுக்குள்‌ மதாபிமானமும்‌ நமக்குள்‌ ௮து இல்லாததுமே இம்மாதிரி துர்கதிக்குக் காரணம்‌.
தெப்பத்தன்று கோயில்‌ கிணற்றில்‌ தெப்பம்‌ சுற்றின பிறகு மற்றை நாளில்‌ வெளி வராத நாச்சியார்‌
அன்றும் அடுத்த நாள்‌ பந்தக் காட்சி யன்றும்‌ வீதி வருவதைக்‌ கொண்டே ஆதியில்‌ தெப்பக்குளம்‌ வெளியே இருந்ததாகத்‌ தீர்மானிக்கலாம்‌.
உறையூர்க் கோயிலில்‌ மணவாளப்‌ பிள்ளை யாக நின்ற திருக் கோலமாய்‌ ரங்க நாதனும்‌ அவருக்கு அருகில்
உறையூர்‌ நாச்சி யாரும்‌ த்ருவ பேரங்களாக எழுந்தருளி ‘ யிருக்கிறார்கள்‌.
நாச்சியாரின்‌ உத்ஸவ மூர்த்தி முன்னால்‌ பெருமாளுடைய திருவடி. நிலைகளுக்குக் கீழ்‌ பிரதிஷ்டிக்கப்‌ பட்டிருக்கிறது ஸ்ரீரங்கத்‌துக்கு அபி முகமாயிருக்க வேண்‌டியதால்‌ இந்த ஸன்னிதி வடக்குப்‌ பார்த்திருக்கிறது
எதிரில்‌ குளமும்‌ அப்பால்‌ காவேரியுமாய்‌ வெகு அழகாயுள்ள ஸன்னிவேசத்தை எதிரில் வீடுகள்‌ சூழ்ந்து விகாரப்படுத்தி விட்டன

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு–ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர்

February 3, 2023

ஸ்ரீ திருவரங்கம் திருக்கோயிலின் பெருமைமிகு வரலாறு

இக்ஷ்வாகு காலம்தொடங்கி இருபத்து ஒன்றாம் 21m நூற்றாண்டின் முற் பகுதி வரை

ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணாமாசார்யர்

ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்யதேசங்களில் முதன்மையானது திருவரங்கம். மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்றைய ஆழ்வார்களாலும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைக்கப்படும் கோதை நாச்சியாராலும் பாடப்பெற்ற (ஸ்ரீவைஷ்ணவர்கள் ‘மங்களாசாஸனம் செய்தருளிய’ என்று குறிப்பிடுவர்). ஒரே திவ்யதேசம் திருவரங்கமாகும். திருமலையப்பனுக்கு பல பெருமைகள் அமைந்துள்ள போதிலும் அவனை அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்யவில்லை. தொண்டரடிப் பொடியாழ்வார் என்று அழைக்கப்படும் விப்ர நாராயணர் திருவேங்கடமுடையானை தமது பாசுரங்களால் கொண்டாடவில்லை. பதின்மர் பாடிய பெருமாள் என்ற கொண்டாட்டத்திற்கு உரியவர் திருவரங்கநாதனே ஆவார்.

திருவரங்கத்தை பெரிய கோயில் என்றே குறிப்பிடுவர் பெரியோர்கள். இங்கே பள்ளி கொண்டு அருள்பவன் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார். அவர் பத்தினியும் “பெரிய பிராட்டியார்” என்று அழைக்கப்படுகிறார். மதியம் ஸமர்ப்பிக்கப்படும் தளிகைக்கு “பெரிய அவசரம்” என்று கூறுகின்றனர் இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு “பெரிய திருநாள்” என்ற பெயர் வழங்குகிறது. இராமானுசருக்கு பிறகு திருக்கோயில், நிர்வாகம் முறையை சீரமைத்த ஸ்ரீமணவாள மாமுனிகளை “பெரிய ஜீயர்” என்று கொண்டாடுகிறோம்.

ஏழு திருச்சுற்றுகளையும், அடைய வளஞ்சான் திருமதிலையும் உடைய ஒரே கோயில் திருவரங்கமே ஆகும். அடையவளந்தான் திருசுற்றின் நீளம் 10,710 அடிகள் ஆகும். அனைத்து மதிள்களின் மொத்த நீளம் 32592 அடிகள் அல்லது 6 மைல்களுக்கும் மேல் ஆகும். திருவரங்கம் பெரிய கோயில் மொத்தம் 156 சதுர ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. திருவரங்கநாதன் திருவடிகளில் காவிரி ஆறு திருவரங்கத்தின் இரு மருங்கிலும் பாய்ந்து சென்று திருவடியை வருடிச் செல்கின்றது. தென்கிழக்கு ஆசியாவிலேயே 216 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் 13 நிலைகள் கொண்டது இந்த திருத்தலத்தில் தான் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தின் வரலாறும் மிகப் பெரியதாகும். இந்த திருக்கோயிலில் சுமார் 650 கல்வெட்டுகளை மட்டுமே தொகுத்து தொல்லியல் துறை தனித்தொகுப்பாக வெளியிட்டு உள்ளது. South Indian Inscriptions Volume XXIV-24 என்ற தலைப்பில் வெளிவந்து உள்ளன. இந்த தொல்லியல் துறை புத்தகத்தில் இடம்பெறாத சில கல்வெட்டுகள் இந்த திருக்கோவிலில் அமைந்துள்ளன. அவை 20-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும்.

திருவரங்கத்தின் வரலாற்றினை கல்வெட்டுகள் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. இந்தக் திருக்கோயிலில் பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், கொய்சாளர்கள், சங்கம, சாளுவ, துளுவ மற்றும் ஆரவீடு வம்சங்களைச் சார்ந்த விஜயநகர மன்னர்கள், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஒருசில கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான ஆய்வுக் கட்டுரைகள் Epigraphia-Indica வில் காணப்படுகின்றன. இந்தத் தொடர் கட்டுரைகளின் நோக்கம் கல்வெட்டுகள் வழியும், 19, 20ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த உரிமை வழக்குகளின் அடிப்படையிலும் திருவரங்கம் பெரியகோயில் வரலாற்றைத் தர உள்ளேன்.

கோயிலொழுகு, மாஹாத்மியங்கள், இதிகாச புராணச் செய்திகள், குருபரம்பரை நூல்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் அடிப்படையில் திருவரங்கம் பெரிய கோயிலின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள கூடுமாகிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மிகைப்பட கூறப்படுகின்றன. மேலும், அந்தச் செய்திகளை ஒரு கால வரிசைப்படி அறிந்து கொள்ள முடிவதில்லை. பல்வேறு ஆண்டுகள் ஆய்வு செய்து கோயிலொழுகு நூலை அடியேன் பதிப்பித்தேன். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்திகள் எந்தெந்த இடங்களில் கல்வெட்டுகளுடன் முரண்படாமல் அமைந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். 18 தொகுப்புகள் கொண்டதும், 7200 பக்கங்கள் நிறைந்துள்ளதுமான கோயிலொழுகு திருவரங்க கோயிலுக்கு ஓர் அரணாக அமைந்துள்ளது. திருவாய்மொழியும், ஸ்ரீராமாயணமும் ஆகிய இரு நூல்கள் இருக்கும் வரை ஸ்ரீவைஷ்ணவத்தை யாரும் அழிக்க முடியாது, ‘என் அப்பன் அறிவிலி’ என்று 2-ம் குலோத்துங்கனின் (ஆட்சி ஆண்டு 1133-1150) மகனான 2-ஆம் ராஜராஜன் (ஆட்சி ஆண்டு 1146-1163) கூறினானாம். இவனுக்கு வீழ்ந்த அரிசமயத்தை மீண்டெடுத்தவன் என்ற விருது பெயர் அமைந்து உள்ளது. அதுபோல 7200 பக்கங்கள் கொண்ட கோயிலொழுகு இருக்கும் வரை வரலாற்றிற்கு புறம்பாகவோ, குருபரம்பரை செய்திகளை திரித்தோ, திருவரங்கம் பெரியகோயிலின் வரலாற்றை அவரவர் மனம் போனபடி திரித்துக் கூறமுடியாது. திருவரங்கம் பெரிய கோயில் வரலாறு என்பது ஒரு தனி மனிதனின் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. இந்த நாட்டை ஆண்ட மன்னர்களும், நம் முன்னோர்களும் 18-ஆம் நூற்றாண்டு வரை  திருக்கோயில் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளனர். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணிகளைப் பற்றிய செய்திகள் மிக குறைந்த அளவில் அமைந்துள்ளன. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் திருக்கோயிலில் பணிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கிடையே எழுந்த உரிமைப் போராட்டங்களே அதிக அளவில் அமைந்துள்ளன.

பல்லவர்கள் காலத்து கல்வெட்டுகள் திருவரங்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள திருவெள்ளறை, உச்சிப் பிள்ளையார் கோயில் உய்யக்கொண்டான் திருமலை, ஆகிய இடங்களில் அமைந்துள்ள போதிலும், யாது காரணங்களாலோ திருவரங்கத்தில் காணப்படவில்லை. திருவரங்கத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது, முதலாம் பராந்தக சோழனின் 17-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். (பராந்தகனின் ஆட்சி ஆண்டு 907-953) சோழர்களுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்கள், ஹொய்சாளர்கள் கால கல்வெட்டுகள், அவர்கள் அளித்த நிவந்தங்கள், கட்டிய மண்டபங்கள், கோபுரங்கள் ஏற்படுத்தி வைத்த நந்தவனங்கள், சந்திகள் (ஒவ்வோர் வேளையும் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கப்படும் திரு ஆராதனங்கள், சிறப்புத் தளிகைகள் போன்றவற்றை தெரிவிப்பன).

கி.பி. 1310 வரையில் திருவரங்கம் பெரிய கோயில் மிகச் செழிப்பான நிலையில் இருந்து வந்தது. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைப்பெற்ற திருவரங்கத்தின் மீதான மூன்று படையெடுப்புகள் திருவரங்க மாநகரை நிலைகுலையச் செய்துவிட்டது. கி.பி. 1310-ல் மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்தான். அதற்குக் காரணம் 2-ஆம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (ஆட்சி ஆண்டு 1277-1294) தனது ஆட்சிக் காலத்தில் ப்ரணாவாகார விமானத்திற்கு பொன்வேய்ந்தான். பொன் வேய்ந்த பெருமாள் மற்றும் சேரகுல வல்லி ஆகியோருடைய பொன்னாலான விக்ரஹங்களை சந்தன மண்டபத்தில் பிரதிஷ்டை செய்திருந்தான். (காயத்ரி மண்டபத்திற்கு முன் ஸந்நிதி கருடன் அமைந்திருக்கும் இடமே சந்தன மண்டபம். இதிஹாஸ கால சந்தனுக்கும் இந்த மண்டபத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

திருவரங்கத்தில் ‘பாட்டி காலத்து கதைகள்’ (Grandma Stories) அதிக அளவில் வழங்கி வருகின்றன. உடையவர் அவருடைய ஸந்நிதியில் அமர்ந்த திருக்கோலத்தில், பஞ்ச பூதங்களாலான திருமேனியுடன் ஸேவை சாதித்து அருள்கிறார். அந்தத் திருமேனியை பச்சை கற்பூரம், குங்குமப்பூ கொண்டு பாதுகாக்க முடியாது. எம்பெருமான் திருவுள்ளப்படி கீழ்க்கண்ட திவ்ய தேசங்களில் ஜீவாத்மா பிரிந்த பிறகு பஞ்ச பூதத்தாலான இந்தத் திருமேனிகள் கோயில் வளாகத்தில் பள்ளி படுத்தப்பட்டுள்ளன(புதைக்கப்பட்டுள்ளன).

1-ஆழ்வார் திருநகரில் (திருக்குருகூர்)நம்மாழ்வாருடைய திருமேனி.

2-ஸ்ரீமந் நாதமுனிகளின் சிஷ்யரான திருக் கண்ண மங்கை ஆண்டான் ஸ்ரீபகவத்சலப் பெருமாள் திருக்கோவினுள்.

3-திருவரங்கத்தில் அகளங்கன் திருச்சுற்றில் அமைந்திருந்த வசந்த மண்டபத்தில் இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்டார்.

இந்த மூன்று இடங்களிலும் திருமேனிகள் பள்ளிப்படுத்தப்பட்டவேயொழிய உயிரோடு உட்கார்த்தி வைக்கப் படவில்லை.

இதுபோன்று பல கற்பனைக் கதைகள் திருவரங்கத்தில் செலாவணியில் உள்ளன.

இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பொன்னாலான கொடிமரம் மற்றும் கொடியேற்ற மண்டபத்தில் அமைந்துள்ள மரத்தாலான தேருக்கு பொன் வேய்ந்தான். இவற்றைத் தவிர பெருமாளுக்கும், தாயாருக்கும் துலாபாரம் (கஜதுலாபாரம்) சமர்ப்பித்து ஏராளமான தங்க நகைகளை அளித்து இருந்தான்.

வ்யாக்ரபுரி என்றழைக்கப்படும் சிதம்பரத்தை கொள்ளையடித்த மாலிக்காஃபூரிடம் சில ஒற்றர்கள் திருவரங்கத்தில் ஏராளமான செல்வம் குவிந்து கிடப்பதாக கூறினர். நாகப்பட்டினம் வழியாக மேற்கு கடற்கரைக்கு செல்லவிருந்த மாலிக்காஃபூர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டு யாரும் எதிர்பாராத வேளையில் கோயிலைத் தாக்கினான். அளவிட முடியாத அளவிற்கு செல்வத்தை சூறையாடினான். அப்போது வெள்ளை யம்மாள் என்ற தாஸி மாலிக்காஃபூரின் படைத்தலைவனை தன் அழகால் மயக்கி தற்போதைய வெள்ளைக் கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று அந்த படைத்தலைவனை கீழே தள்ளிக் கொன்றாள். அவளும் கீழே விழுந்து உயிர் விட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளை வண்ணத்தில் கோபுரம் மாற்றம் பெற்று “வெள்ளைக் கோபுரமாயிற்று”.

கி.பி. 1953ஆம் ஆண்டு தாஸிகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளை யம்மாள் நினைவாக நினை வாக தாளிகள் வீட்டில் இறப்பு நேரிட்டால் திருக்கோயில் மடைப்பள்ளியில் இருந்து இறந்த தாஸியின் உடலை எரியூட்டுவதற்காக “நெருப்பு தனல்” அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கம் 1953ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது.

இந்த திருக்கோயிலில் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும் போதும், வஸந்தோற்சவ காலங்களிலும் தாஸிகள் கோலாட்டம் அடித்துக் கொண்டு நம்பெருமான் முன்பு செல்வர் என்பதை தெற்கு கலியுகராமன் கோபுரத்தில் விதானப் பகுதியில் காணப்படும் நாயக்கர் காலத்து சுவர் ஓவியங்கள் (Mதணூச்டூ கச்டிணtடிணஞ்ண்) வழி அறியப்படுகிறது.

இந்த வெள்ளைக் கோபுரத்தின் மேலே ஏறி விஜயநகர சாளுவ நரசிம்மன் காலத்தில் (ஆட்சி ஆண்டு 1486-1493) இரண்டு ஜீயர்களும் அழகிய மணவாள தாஸர் என்ற திருமால் அடியாளும் திருவானைக்காவை தலைநகராகக் கொண்டு திருச்சிராப்பள்ளி சீமையை ஆண்டு வந்த கோனேரி ராயன் என்பானுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி பின்னர் விவரிக்கப்படும்.

மாலிக்காஃபூரின் படைவீரர்கள் திருக்கோயிலில் இருந்த பல விக்ரஹங்களை உடைத்து எறிந்தனர். படைத் தலைவன் கொல்லப்பட்டதால் இந்த அட்டூழியம் கட்டுக்குள் வந்தது. அழகிய மணவாளரை கரம்பனூரில் இருந்து வந்த ஒரு பெண்மனி யாருக்கும் தெரியாமல் வடக்கு நோக்கி எடுத்துச் சென்றாள். மாலிக்காஃபூரின் படைவீரர்கள் அளவற்ற செல்வத்தை பல யானைகள் மீது எடுத்துச் சென்றனர் என்று இபின் பட்டுடுடா என்பவரின் நாட்குறிப்பில் இருந்து அறியப்படுகிறது. வடக்கே எடுத்துச் செல்லப்பட்ட நம்பெருமாள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அரையர்களால் மீட்கப்பட்டார். மாலிக்காஃபூரின் படைவீரர்கள் தெற்கு நோக்கி சென்ற பிறகு அழகிய மணவாளன் கர்ப்பக்ருஹத்தில் காணப்படாமையால் புதிதாக நம்பெருமாள் போன்ற விக்ரஹம் உருவாக்கப்பட்டது. அவருக்கு திருவாராதனங்கள் நடைபெற்று வந்தன. கோயிலொழுகு தெரிவிக்கும் குறிப்புகளின்படி டெல்லி பாதுஷா-வின் அந்தப்புரத்தில் அழகிய மணவாளன் இருந்ததாகவும், சுரதானி என்ற பெயர் கொண்ட அவன் மகள் அழகிய மணவாளனனைத் தனது அந்தப்புரத்தில் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்ததாக குறிப்பிடுகிறது. அழகிய மணவாளனைத் தேடிச்சென்ற அரையர்கள் டெல்லி பாதுஷா விரும்பி பார்க்கும் ஜக்கினி நாட்டிய நாடகத்தை அபிநயித்தார்கள். இதனால் பெருமகிழ்ச்சி கொண்ட டெல்லி பாதுஷா அந்தப்புரத்தில் இருக்கும் அழகிய மணவாளனை எடுத்துச்செல்லும்படி அனுமதியளித்தான். அவர்களும் சுரதானிக்கு தெரியாமல் அழகிய மணவாளனை எடுத்துக்கொண்டு திருவரங்கம் நோக்கி விரைந்து சென்றனர். தன் காதலனை பிரிந்ததால் சுரதானி நெஞ்சுருகி கலங்கி நின்றாள். தன் மகளின் துயரத்தினைக் காணப்பொறுக்க மாட்டாத டெல்லி பாதுஷா சில படை வீரர்களுடன் சுரதானியை திருவரங்கத்திற்கு அனுப்பி வைத்தான். ஆனால் அதற்குள் அரையர்கள் அழகிய மணவாளனை கருவறையில் கொண்டு சேர்த்தனர். திருவரங்கத்தை சென்றடைந்த சுரதானி இந்த செய்தியை அறிந்தவுடன் கிருஷ்ணாவதாரத்து சிந்தயந்தி போல, அவள் ஆவி பிரிந்தது. அர்ச்சுன மண்டபத்தில் கிழக்குப் பகுதியில் துளுக்க நாச்சியார்” என்ற பெயரில் சுரதானி இன்றும் சித்திர வடிவில் காட்சியளித்துக் கொண்டு இருக்கிறாள்.

புராதனமான யுகம் கண்ட பெருமாளான அழகிய மணவாளன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளியதால் அவருக்குப் பதிலாக திருவாராதனம் கண்டருளிய புதிய அழகிய மணவாளன் திருவரங்க மாளிகையார் என்ற பெயரில் யாக பேரராக இன்றும் அழகிய மணவாளனுக்கு இடது திருக்கரப் பக்கத்தில் இன்றும் எழுந்தருளி உள்ளார். யாக சாலையில் ஹோமங்கள் நடைபெறும் போது யாக பேரரான திருவரங்க மாளிகையார் எழுந்தருள்வதை இன்றும் காணலாம். அர்ச்சுன மண்டபத்திற்கு அழகிய மணவாளன் எழுந்தருளும் போதெல்லாம் துலுக்க நாச்சியாருக்கு படியேற்ற ஸேவை அரையர் கொண்டாட்டத்துடன் நடைபெறும். இது துளுக்க நாச்சியாருக்காக நடைபெறும் ஓர் மங்கள நிகழ்ச்சியாகும்.

மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பிறகு கரம்பனூர் பின் சென்ற வல்லி அழகிய மணவாளனை எடுத்துச் சென்றது, டெல்லி பாதுஷாவின் மகளான சுரதானி அந்தப்புரத்தில் அழகிய மணவாளனுடன் விளையாடியது. அரையர்கள் எடுத்துச் சென்றது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரலாற்றுச் சான்றுகள் காணக் கிடைக்கவில்லை. அது போன்று திருவரங்க மாளிகையார் யாக பேரராக அழகிய மணவாளனை ஒத்த திருமேனி கொண்டிருப்பதற்கும் வரலாற்று சான்றுகளோ, கல்வெட்டுகளோ காணப்படவில்லை. அந்தந்த காலங்களில் இன்று நாட்குறிப்பு எழுதுவது போல் பண்டைய காலங்களில் செயற்பட்டு வந்த ஸ்ரீவைஷ்ணவ வாரியம் மற்றும் ஸ்ரீபண்டார வாரியத்து கணக்கர்கள் எழுதி வைத்த குறிப்புகளே கோயிலொழுகு ஆகும். திருவரங்க பெரிய கோயில் பற்றிய செய்திகளை ஆராய்ந்து தொகுக்கும் போது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரித்திர சான்றுகளோ அல்லது கல்வெட்டுக்களையோ ஆதாரமாக கொடுக்கவியலாது. திருக்கோயில் பழக்க வழக்கங்களும், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்துக் கூறும் சுவடிகளும் பல பயனுள்ள செய்திகளை தருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் வெள்ளையம்மாள் வரலாறு திருவரங்க மாளிகையாரின் பிரதிஷ்டை, துளுக்க நாச்சியாரின் திருவுருவப்படம் இடம் பெற்றிருப்பது ஆகியவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கி.பி. 1310 ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பிறகு கி.பி. 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக் என்று அறியப்படும் உலூக்கானுடைய படையெடுப்பு நடைபெற்றது. கோயிலொழுகு தரும் செய்திகளின் அடிப்படையில் அந்த நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்படுகின்றன. அழகிய மணவாளன் பங்குனி ஆதி ப்ருஹ்மோற்சவத்தில் 8ஆம் திருநாளன்று கொள்ளிடக் கரையில் அமைந்திருந்த பன்றியாழ்வார் (வராகமூர்த்தி) ஸந்நிதியில் எழுந்தருளி இருந்தார். உலூக்கான் படைகளோடு திருவரங்கத்தை நோக்கி வருவதை ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) பிள்ளைலோகாச்சாரியரிடம் தெரிவித்தான்.

பிள்ளைலோகாச்சாரியர் வடக்கு திருவீதிப்பிள்ளை என்னும் ஆசார்யரின் முதற் புதல்வர் ஆவார். இவர் விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை விவரிக்கும் 18-ரகஸ்யங்களை (மறைப்பொருள் நூல்கள்) இயற்றியவர். அவர் வாழ்நாள் முழுவதும் ப்ரும்மச்சாரியாகவே வாழ்ந்து வந்தார். அவர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். பெரும் படையுடன் வரும் உலூக்கானால் திருவரங்கத்திற்கு பெரிய ஆபத்து நிகழப் போகிறது என்பதை அறிந்து அழகிய மணவாளனை திருவரங்கத்தில் இருந்து எங்கேயாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிள்ளைலோகாச்சாரியர் சில அந்தரங்க கைங்கர்யபரர்களோடும், திருவாராதனத்திற்குரிய பொருட்களோடும் உபய நாச்சிமார்களையும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செய்வததறியாது தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

திருவரங்கத்திற்குள் நுழைந்த உலூக்கானும் அவனது படையினரும் அந்த மாநகரின் பங்குனி விழாவிற்கு ஒட்டி கூடியிருந்த பன்னீராயிரம் திருமால் அடியார்களின் தலையைச் சீவினர். எங்கும் ரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கருவறை வாசல் கற்களால் மூடப்பட்டது. ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதியில் எழுந்தருளியிருந்த மூலவர் விக்ரஹம் வில்வ மரத்தடியின் கீழ் புதைக்கப்பட்டார். உற்சவ ஸ்ரீரங்கநாச்சியாரைப் பற்றி கோயிலொழுகில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. பிள்ளைலோகாச்சாரியர் அழகிய மணவாளன் உடன் ஸ்ரீரங்கநாச்சியாரையும் எழுந்தருள பண்ணிக்கொண்டு சென்றிருக்கலாம் என யூகித்துக் கொள்ளலாம்

வடகலை குருபரம்பரையின்படி நிகமாந்தமகா தேசிகன் ச்ருதப்ராகாசிகையை (பிரும்ம சூத்திரங்களுக்கு இராமானுசர் இட்ட விரிவுரைக்குப் பெயர் ஸ்ரீபாஷ்யம் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீபாஷ்யத்திற்கு ச்ருதப்ராகாசிகா பட்டர் அருளிச்செய்த விளக்க உரையே ச்ருதப்ராகாசிகை ஆகும்). பிணங்களின் ஊடே படுத்திருந்து சுவடிகளை காப்பாற்றினார் என்று கூறுகிறது. வேத வ்யாஸ பட்டர் வம்சத்தில் பிறந்த இளவயதினர் இரண்டு பேரையும் அவர் காப்பாற்றி அழைத்துச் சென்றார் என்றும் அறியப்படுகிறது.

ஆனால் உலூக்கான் படையெடுப்பை பற்றி விவரிக்கும் கோயிலொழுகில் நிகமாந்த தேசிகனைப் பற்றியோ, அவர் ச்ருதப்ராகாசிகையை காப்பாற்றியது பற்றியோ எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. உலூக்கானுடைய படைவீரர்கள், மருத்துவமணையாய் இயங்கி வந்த தன்வந்த்ரி ஸந்நிதியை தீக்கிரையாக்கினர். இதன் நோக்கமாவது மருத்துவர்கள் யாரும் காயம் அடைந்த திருமாலடியார்களுக்கு உரிய மருத்துவ பணியை மேற்கொள்ளக் கூடாது என்பதாகும். தன்வந்த்ரி ஸந்நிதி தீக்கிரையாக்கப்பட்ட செய்தியும், தன்வந்த்ரி ஸந்நிதி புனர் நிர்மாணம் செய்யப்பட்டதையும், அங்கே ஆதூரசாலை (மருத்துவமணை) செயல்பட துவங்கியதையும், 16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இறந்த காலம் எடுத்த உத்தம நம்பி காலத்து கல்வெட்டு எண் (வீரராமநாதன் காலத்திய கல்வெட்டு எண் – 226 (அ.கீ. Nணி: 80 ணிஞூ -1936-1937) தெரிவிக்கின்றது.

தெற்கு நோக்கி அழகிய மணவாளனுடன் சென்ற பிள்ளைலோகாச்சாரியர் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது. அடர்ந்த காடுகள் வழியே அழகிய மணவாளனை எழுந்தருள பண்ணிக்கொண்டு சென்ற போது கள்ளர்கள் ஆபரணங்கள் பலவற்றை கொள்ளையடித்தனர். சில நாட்கள் சென்ற பிறகு அழகிய மணவாளன், பிள்ளைலோகாச்சாரியர், அவருடன் சென்ற 52 கைங்கர்யபரர்கள் ஆகியோர் மதுரை செல்லும் வழியில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஓர் குகையினை சென்று அடைந்தனர். சில மாதங்கள் அழகிய மணவாளன் உபய நாச்சிமார்களோடு அந்தக் குகையிலேயே எழுந்தருளியிருந்தார். வயது முதிர்வின் காரணமாக தன் அந்திமக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார் பிள்ளைலோகாச்சாரியர். தென் தமிழகம் முழுவதும் முகமதியருடைய கொடுங்கோல் ஆட்சி நிலவியிருந்த காலம் அது. தனக்குப் பிறகு ஆசார்ய பீடத்தை அலங்கரிக்க மதுரை மன்னனின் மந்திரியாய் இருந்து வந்த திருமலையாழ்வார் என்பாரை வற்புறுத்தி ஆசார்ய பீடத்தை அலங்கரிக்க ஆவண செய்வதற்கு உரிய நபராக தன் சீடர்களில் ஒருவரான கூரக்குலோத்தம தாஸரை நியமித்தார் பிள்ளைலோகாச்சாரியர்.

இவ்வாறு கூரகுலோத்தம தாஸரை நியமித்தருளிய பிறகு தன் சிஷ்யர்களில் ஒருவனான மரமேறும் இனத்தைச் சார்ந்தவரான விளாஞ்சோலை பிள்ளை என்பாரை தாம் பணித்த உன்னதமான, ஒப்புயர்வற்ற நூலான “ஸ்ரீவசனபூஷணத்தின்” சுருக்கமான பொருளை அனைவரும் அறிந்து கொள்ளும்படி ஓர் நூலாக எழுதி உலகத்தோரை நல்வழிப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொண்டார் பிள்ளைலோகாச்சாரியர். சில நாட்களிலே அவர் பரமபதித்து விட்டார். அவருடைய பூத உடல் அழகிய மணவாளன் தங்கியிருந்த குகைக்கு அருகில் திருப்பள்ளிபடுத்தப்பட்டது (புதைக்கப்பட்டது). அந்த திருவரசை இன்றும் நாம் சென்று சேவிக்கலாம்.

முகமதிய படைவீரர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதாலும், பிள்ளைலோகாச்சாரியர் பரமபதித்து விட்டதாலும் அச்சம் கொண்ட கைங்கர்யபரர்கள் அழகிய மணவாளனையும், உபயநாச்சிமார்களையும் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு திருமாலிருஞ்சோலை (அழகர் மலை) திருக்கோயிலின் வெளிப்புற மதில்சுவர் ஓரத்தில் யார் கண்ணிலும் படாதபடி வைத்துக் காப்பாற்றி வந்தனர். அவருடைய திருவாராதனத்திற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றை இன்றும் நாம் பார்க்கலாம். திருமாலிருஞ்சோலை முகப்பில் இருந்து நுபுர கங்கைக்கு செல்லும் மலைப்பாதையில் சாலையின் இடது பக்கம் சப்த கன்னியர் கோயில் அமைந்துள்ளது. அதன் எதிர்ப்புறத்தில் மதில்சுவர் ஓரம் அழகிய மணவாளனுக்காக உண்டாக்கப்பட்ட கிணற்றை நாம் காணலாம். சில மாந்த்ரிகர்கள் சப்த கன்னியருக்கு பரிகாரபூஜை செய்த பொருட்களை இந்தக் கிணற்றில் சேர்ப்பதின் பயனாக துர்நாற்றம் வீசுகிறது.

சில மாதங்கள் அங்கே எழுந்தருளியிருந்த அழகிய மணவாளன் பாலக்காடு வழியாக கோழிக்கோட்டை சென்று அடைந்தார். மற்றைய பகுதியில் முகமதியருடைய கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்து வந்த காலத்தில் கோழிக்கோடு சமஸ்தானத்தை ஆண்டு வந்த மன்னர்கள் நல்லாட்சி புரிந்து வந்த காலத்தில் பல்வேறு இடங்களில் இருந்த “அர்ச்சா திருமேனிகள்” கோழிக் கோட்டை சென்றடைந்தன. பிள்ளைலோகாச்சாரியரின் ஆணைப்படி “கூரக்குலோத்தும தாஸர்” மந்திரி பதவியில் இருந்து வந்த திருமலையாழ்வாரை சந்திக்க இயலவில்லை. செய்வதறியாது திகைத்து நின்ற கூரக்குலோத்தும தாஸர் ஓர் உபாயத்தைக் கையாண்டார். திருமலையாழ்வார் தமிழ்மொழிபால் மிகுந்த பற்றுக் கொண்டவர் என்பதை அறிந்து கொண்டார். தினந்தோறும் திருமலையாழ்வார் தனது திருமாளிகையின் உப்பரிகையில் (மாடியில்) உட்கார்ந்து கொண்டு திருமண் காப்பு சாற்றிக் கொள்வார். இன்று தமிழர் நாகரிகத்தின் மிக உயர்ந்த அடிச்சுவடிகளை தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் கீழடி, மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் கண்டறிந்துள்ளனர். அத்தகைய இடங்களில் ஒன்றான கொந்தகையில் அவதரித்த திருமலையாழ்வார் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கியதில் எந்த வியப்பும் இல்லை.

ஒருநாள் கூரகுலோத்தம தாஸர் யானை மேலேறி கையில் தாளத்துடன் நம்மாழ்வாரின் திருவிருத்தப் பாசுரங்களை பொருளோடு எடுத்துரைத்துக்கொண்டு வந்தார். இதனைச் செவியுற்ற திருமலையாழ்வார் கூரகுலோத்தமதாஸரை தன்னுடைய திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். அவரைத் தண்டனிட்டு தனக்கு திருவிருத்தத்தின் ஆழ்பொருளை தினந்தோறும் உபன்யஸிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தமது மந்திரி பதவியையும் துறந்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவிருத்தத் ஆழ்பொருளை கற்றுக் கொள்வதில்லை. திருவிருத்தத்தை உபன்யஸிக்கிறவனும், அதன் பொருளை கேட்பவனும் இறந்து விடுவர் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இதைச் “சாவுப்பாட்டு” என்றே பெயர் இட்டுள்ளனர். அதாவது இறப்பு நிகழ்ந்த வீட்டில் “ஸ்ரீசூர்ணபரிபாலனம்” என்று பெயரளவில் ஒரு சடங்கு நடைபெறும். ஏனெனில், பிராமண ஸ்ரீவைஷ்ணவர்கள் இல்லத்திலும், இடுகாட்டிலும் ஸ்ரீசூர்ணபரிபாலன முறைப்படி சடங்குகள் நடைபெறுவதில்லை. இந்த முறை மாற வேண்டும். ஆழ்வார்களின் கீதத் தமிழ் வேத வேதாந்தங்கள் உபநிஷத்துக்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். திருவிருத்தத்தின் நூறு பாட்டுக்களை 1102 பாடல்கள் கொண்ட திருவாய்மொழியாய் விரிந்தது என்று கூறிவிடுகிறோம். அத்தகைய பெருமை வாய்ந்த திருவிருத்தத்தின் ஆழ்பொருளை தமிழ் அக இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் அறிந்து கொள்ள வேண்டாமா?

திருவிருத்தத்திற்கு உரிய சிறப்பை ஸ்ரீவைஷ்ணவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். பூமி, தட்டையாய் உள்ளதென்று இன்றும் வாதிடுவர் உளர். தொல்காப்பியத்தை படிக்காதே, திருக்குறளைப் படிக்காதே? கம்ப ராமாயணத்தைப் படிக்காதே என்று உபதேஸிக்கும். மகா வித்வான்களும் நம்மிடையே உளர். இத்தகைய சம்ஸ்க்ருத வெறியர்கள் தம்மை உபய வேதாந்திகள் எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள். “பேச்சுப் பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்; பிறவி பார்க்கில் அஞ்சாம் ஓத்தும் அறுமூன்றும் கழிப்பனாம்”. (ஆசார்ய ஹ்ருதய நூற்பா – 76) இதன் பொருளாவது சம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட நூல்களே உயர்ந்தன என்ற எண்ணம் கொண்டவர்கள், பௌத்தர்களும், ஜைனர்களும் இயற்றிய பொய் நூல்களான அவற்றை சமஸ்க்ருதத்தில் இயற்றப்பட்டது என்பதற்காகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர் குலத்தோர் செய்த நூல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையோர் செய்த நூல்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிடுபவர்கள் பராசர முனிவருக்கும், மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர் வேதவியாசர். அவர் செய்த ஐந்தாம் வேதம் எனப்படும் மஹாபாரதத்தை வேதவ்யாசரின் பிறப்பை ஆராயுங்கால் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதுபோலவே இடைச்சாதியில் பிறந்த கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பகவத்கீதையையும் ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மகாபாரதத்தையோ, கீதையையோ நாம் சான்றாதார (ப்ரமாணங்களாய்) நூல்களாய் ஏற்றுக்கொண்டு உள்ளோம். வேளாளர் குலத்துதித்த நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களாகிய, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகிய தமிழ் நூல்களை நாம் சான்றாதாரங்களாய்க் கொள்ள வேண்டும் என்பது இந்த நூற்பாவின் தேறிய பொருளாகும்.

திருமலையாழ்வார் தம்மை திருவாய்மொழிப்பிள்ளை என்று கூறிக்கொள்வதில் பெருமை கொண்டார். நம்பிள்ளை அருளிச்செய்த திருவாய்மொழிக்கான உரை காஞ்சிபுரத்தில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் திருநாராயணபுரத்தை சென்றடைந்தது. திருவாய்மொழிப்பிள்ளை தமது இருப்பிடத்தை இராமநாதபுரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிக்கில் கிடாரம் என்ற ஊருக்கு மாற்றிக் கொண்டார். தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரையும், சிக்கில் கிடாரத்தில் ஓர் திருமாளிகை அமைத்து அவரை குடியமர்த்தி அனைத்து ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு பொருள் கேட்டறிந்தார். சிக்கில் கிடாரத்தில் அவர் பரமபதித்த பிறகு திருவாய்மொழிப்பிள்ளை தனது ஆசார்யனான கூரக்குலோத்தும தாஸரை திருப்பள்ளிப்படுத்தி, ‘திருவரசு’ என்ற நினைவு மண்டபமும் கட்டி வைத்தார். சிக்கில் கிடாரம் செல்பவர்கள் கூரக்குலோத்துமதாஸர் திருவரசை கண்டு ஸேவிக்கலாம். மேலும் திருவாய்மொழிப்பிள்ளை வாஸம் செய்த திருமாளிகையின் மிகப் பெரியதான அடித்தளத்தைக் காணலாம். இந்த சிக்கில் கிடாரத்தில் தான் ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருத்தகப்பனாரான திருநாவீருடைய தாதர்அண்ணர் வாஸம் செய்து வந்தார்.

திருவாய்மொழிப்பிள்ளையின் தமிழ்ப் பற்றுக்கு மற்றுமோர் உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். திருவாய்மொழிப் பிள்ளையின் அந்திம தசையில் (மரணிக்கும் தருவாயில்) தமது சிஷ்யரான அழகிய மணவாளனிடம் (இவரே கி.பி. 1425ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டபின் “மணவாள மாமுனிகள்” என்று அழைக்கப்படுகிறார்). ஓர் சூளுரையைப் பெற்றார். “ஸ்ரீபாஷ்யத்தை ஒருகால் அதிகரித்து பல்கால் கண்வையாமல்” ஆழ்வார்கள் அருளிச்செயலையே பொழுது போக்காகக் கொண்டிரும் என்றாராம். ஸ்ரீமணவாளமாமுனிகள் சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை இயற்ற வல்லமை படைத்தவரேனும் தம் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மாறன் கலையாகிய திருவாய்மொழியையே உணவாகக் கொண்டிருந்தார்.

சில ஆண்டுகள் கோழிக்கோட்டில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த காலத்தில் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் நிகழ்ந்த முகமதியர்களின் படையெடுப்பின் காரணமாக நம்மாழ்வாரின் அர்ச்சா விக்ரஹகத்தை கைங்கர்யபரர்கள் கோழிக்கோட்டுக்கு எடுத்துச் சென்றனர். பாலக்காட்டில் இருந்து மல்லாப்புரம் வரை படைகளோடு வந்த முகமதிய படைவீரர்கள் கோழிக்கோட்டை தாக்கக்கூடும் என்ற அச்சத்தினால் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் கோழிக்கோட்டுக்கு அண்மையில் உள்ள உப்பங்கழியைத் தாண்டி (ஆச்ஞிடு ஙிச்tஞுணூண்) கர்நாடக மாநிலத்திற்குள் எடுத்துச் செல்ல முயன்றனர் கைங்கர்யபரர்கள்.

அவ்வாறு படைகள் செல்லும்போது நம்மாழ்வாருடைய அர்ச்சா விக்ரஹம் உப்பங்குழி தவறி விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. விக்ரஹத்தை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து நின்றபோது கருடபட்சி ஆழ்வார் இருக்கும் இடத்திற்கு மேலே வட்டமிட்டுக் காட்டியது. அந்த இடத்தில் நம்மாழ்வாரை நீரின் அடியில் இருந்து கைங்கர்யபரர்கள் கண்டெடுத்தார்கள். அதன்பிறகு கர்நாடகப் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த மரங்கள் நிறைந்த முந்திரிக்காடு என்னும் பள்ளத்தாக்கில் மிக ஆழமான பள்ளம் தோண்டி அந்த நிலவறைக்குள் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் எழுந்தருளப் பண்ணி அங்கேயே திருவாராதனம் கண்டருளினர். அந்தப் பள்ளத்தின் மேலே மரப்பலகைகளை வைத்து, செடி, கொடிகளை அதன்மேல் இட்டு, சில ஆண்டுகள் அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் காப்பாற்றி வந்தனர்.

நம்மாழ்வாருடன் முந்திரிக் காட்டிற்கு வந்த தோழப்பர் என்பார் ஒருநாள் நிலவறைக்கு சென்று திருவாராதனம் ஸமர்ப்பித்த பிறகு மேலிருந்து கீழே விடப்பட்ட கயிற்றினை பிடித்துக் கொண்டு மேலே வரும்போது கயிறு அறுந்து கீழே விழுந்த தோழப்பர் பரமபதித்தார் (இறந்தார்). இந்த செயலின் அடிப்படையில் தோழப்பர் வம்சத்தவர்களுக்கு ஆழ்வார் திருநகரியில் “தீர்த்த மரியாதை” அளிக்கப்படுகிறது.

சில ஆண்டுகள் கழித்து அழகிய மணவாளனையும், நம்மாழ்வாரையும் திருக்கணாம்பி என்ற மலைப்பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றன. அங்கே இருந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலினுள் எழுந்தருளப் பண்ணினர். சுமார் 10 ஆண்டுகள் திருக்கணாம்பியில் அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் எழுந்தருளி இருந்தனர். இந்தத் திருக்கணாம்பி எனும் ஊர் தற்போதைய மைசூர் சத்தியமங்கலம் மலைப்பாதையில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. நம்மாழ்வார் எழுந்தருளிய இடத்தை வட்டமணை இட்டு, இன்றும் அடையாளம் காண்பிக்கிறார்கள்.

இவ்வாறு நம்மாழ்வார் திருக்கணாம்பியில் எழுந்தருளி இருந்த காலத்தில் திருவாய்மொழிப்பிள்ளை மறைந்து வாழ்ந்து வந்த பாண்டிய மன்னனின் படை வீரர்களோடு திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில் காடு மண்டி இருந்ததாலும், தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் மணல்மூடிக் கிடந்திருந்த ஆழ்வார் மற்றும் பொலிந்து நின்ற பிரான் ஸந்நிதிகளை புனர் நிர்மாணம் செய்தார். நம்மாழ்வார் திருக்கணாம்பியில் எழுந்தருளி இருப்பதாக ஒற்றர்கள் மூலம் திருவாய்மொழிப்பிள்ளை அறிந்து திருக்கணாம்பிக்குச் சென்று நம்மாழ்வாரை மீண்டும் திருக்குருகூரில் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜ சதுர்வேதி மங்கலத்தை நிர்மாணித்து அங்கே இராமானுசரை ப்ரதிஷ்டை செய்தார். வேதம் வல்ல திருமாலடியார்களை அந்த சதுர்வேதி மங்கலத்தில் குடியமர்த்தினார். எம்பெருமானார் ஸந்நிதியில் கைங்கர்யங்களை மேற்பார்வை செய்வதற்காக ஜீயர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த எம்பெருமானார் ஜீயர்மடத்தின் 7வது பட்டத்தை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமியிடம் கி.பி. 1425ஆம் ஆண்டு ஸ்ரீமணவாள மாமுனிகளின் சந்நியாஸ ஆச்ரமத்தை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஹோபில மடத்தை அலங்கரித்த முதல் ஜீயரிடம் ஸ்ரீமணவாள மாமுனிகள் துறவறத்தை ஏற்றுக் கொண்டார் என்று கால ஆராய்ச்சியின் அடிச்சுவடு கூட தெரியாதவர்கள் கூறி வருகிறார்கள். அஹோபில மடம் விஜயநகர துளுவ வம்சத்து, கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான் தோன்றியது. கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலம் 1509-1529 ஆகும். மணவாள மாமுனிகள் சந்நியாஸ ஆச்ரமம் ஏற்றுக்கொண்டது 1425. ஆகவே அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமணவாள மாமுனிகளுக்கு சந்நியாஸ ஆச்ரமம் அளித்தார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

திருக்கணாம்பியில் எழுந்தருளியிருந்த “அழகிய மணவாளன்” எம்பெருமானார் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்ததும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஐம்பத்திருவர் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்ததுமான திருநாராயணபுரம் எனப்படும் மேலக்கோட்டைக்கு எழுந்தருளினார் தற்போதைய தேசிகன் ஸந்நிதியில் முன் மண்டபத்தில் அழகிய மணவாளன் எழுந்தருளப் பண்ணப்பட்டார். முகமதியர்களை எதிர்த்து போராடி வந்த ஹொய்சாள அரச மரபில் வந்த 3ஆம் வீர வல்லாளன் (ஆட்சி ஆண்டு கி.பி. 1291-1342) முகமதியர்களால் கொல்லப்பட்டான். முகமதியர்கள் மேலக்கோட்டை மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் கொண்ட திருவரங்கத்து கைங்கர்யபரர்கள் (திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட 52 கைங்கர்யபரர்களில் பலர் பல இடங்களில் இறந்து விட்டனர். திருநாராயணபுரத்தில் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலரே). அழகிய மணவாளனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு திருமலையடிவாரத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் பாதுகாத்து வந்தனர். இதன் பிறகு அழகிய மணவாளன் எவ்வாறு திருவரங்கத்தை சென்றடைந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் விஜயநகர பேரரசின் தோற்றமும் அதன் வளர்ச்சியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கி.பி. 1323ஆம் ஆண்டு நடந்த உலூக்கான் படையெடுப்பின் விளைவாக தமிழகம் முழுவதும் காஞ்சிபுரத்தைத் தவிர முகமதியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. உலூக்கான் தனது அந்தரங்கத் தளபதியான ஷரீப் ஜலாலுதீன்அஸன்ஷாயிடம் தமிழகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு டில்லிக்கு விரைந்து சென்றான். 48 ஆண்டுகள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் மதுரை சுல்தான்கள். அவர்களை எதிர்த்துப் போரிட்ட ஹொய்சாள மன்னனான வீர வல்லாளன் போரில் கொல்லப்பட்டான். அவனது இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தனது கோட்டை வாசலில் தொங்க விட்டான். சுல்தான்களை எதிர்ப்பவர்கள் இந்த கதியைத் தான் அடைவார்கள் என்று முரசு கொட்டி தெரிவித்தான். மதுரை செல்பவர்கள் கோரிப்பாளையம் என்ற பேருந்து நிறுத்தத்தை காண்பார்கள். அங்கே தான் சுல்தான்களின் அரண்மனை இருந்தது. வீரவல்லாளனின் உடல் தொங்க விடப்பட்டிருந்ததால் அந்த இடம் கோரிப்பாளையம் என அழைக்கப்படலாயிற்று. (கோரி என்ற ஹிந்தி சொல்லுக்கு காணச் சகிக்க இயலாத என்பது பொருள்).

தமிழகம் முழுவதும் மதுரை சுல்தான்களுடைய கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வந்தது. கி.பி. 1336ஆம் ஆண்டு துங்கபத்திரை நதிக்கரையில் சங்கம குலத்தைச் சார்ந்த ஹரிஹரர் அவருடைய தம்பி புக்கர் ஆகிய இருவரும் சிருங்கேரி சாரதா பீடத்தைச் சார்ந்த வித்யாரண்யர் என்பாருடைய ஆசியுடன் விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தனர். அவர்களிடம் இருந்தது ஒரு சிறு படையே. இந்த படைபலத்தைக் கொண்டு மதுரை சுல்தான்களை எதிர்த்துப் போராடமுடியாது என்ற எண்ணத்துடன் தமது படைபலத்தை பெருக்கலாயினர். விஜயநகர பேரரசின் தோற்றத்திற்குப் பிறகு சில ஆண்டுகளில் ஹரிஹரர் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு அவரது தம்பியான முதலாம் புக்கர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். முதலாம் புக்கரின் மூத்த குமாரன் வீரக்கம்பண்ண உடையார் ஆவர்.

புக்கரின் ஆணைப்படி கி.பி. 1358ஆம் ஆண்டு  36 ஆயிரம் படை வீரர்களோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டான் வீரக்கம்பண்ண உடையார். இதனிடையே திருப்பதிக் காடுகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகிய மணவாளனை செஞ்சி மன்னனான கோபணாரியன் திருமலையில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஸந்நிதியில் முகப்பு ராஜகோபுரத்திற்கு உட்புறம் உள்ள மண்டபத்தில் கொண்டு சேர்த்தான். திருமலையிலிருந்து திருவரங்கம் நோக்கி புறப்பட்ட போது செஞ்சிக்கு அண்மையில் உள்ள சிங்கபுரத்திற்கு (தற்போதைய பெயர் சிங்கவரம்) அழகிய மணவாளன் எழுந்தருளினார்.  அங்கே அழகிய மணவாளனுக்கு அத்யயன உத்சவம் (அழகிய மணவாளனுக்கு ஆழ்வார்களுடைய ஈரச் சொற்களை கேட்பதே இன்பம். நீண்ட நாட்கள் அழகிய மணவாளன் திவ்யப்பிரபந்த பாசுரங்களை செவிமடுத்தாததால் திருமேனியில் வாட்டம் காணப்பட்டது. அதைப் போக்குவதற்காக ஆழ்வார்களுடைய பாசுரங்களை கேட்பிக்கும் (அத்யயன உத்வசத்தை கொண்டாடினர்).

மலையில் ஒரு கோயிலை எழுப்பி அழகிய மணவாளனை சில காலம் ஆராதித்து வந்தான் கோபணாரியன். திருமலையில் அழகிய மணவாளன் எழுந்தருளியிருந்த மண்டபமே தற்போது “ரெங்க மண்டபம்” என்று அழைக்கப்பட்டு வருகிறது. தெற்கு நோக்கி படையெடுத்த வந்த வீரக்கம்பண்ண உடையார் சில ஆண்டுகள் கழித்தே காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த சம்புவராயர்களை வெற்றி கொள்ள முடிந்தது. சம்புவராயர்கள் நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்து வந்தனர். அவர்கள் ஆட்சிப் பரப்பில் அமைந்திருந்த கோயில்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆயினும் தமிழகத்தின் தென்பகுதியில் மக்களுக்குச் சொல்ல ஒண்ணாத துயரங்களை விளைவித்து வந்த மதுரை சுல்தான்களை எதிர்த்து சம்புவராயர்கள் போர் தொடுக்கவில்லை. தென் தமிழகம் முழுவதும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வர விரும்பி புக்கர், சம்புவராயர்களை போரில் வென்றிடுமாறு ஆணைபிறப்பித்தான். சம்புவராயர்களை போரில் வென்ற வீரக்கம்பண்ண உடையார் தற்போது “சமயபுரம்” என்றழைக்கப்படும் கண்ணனூரில் மதுரை சுல்தான்களோடு போரிட்டார். மதுரை அரண்மனை தகர்த்தெறியப்பட்டது. கன்னியாகுமரி வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினார் வீரக்கம்பண்ணர். இவ்வாறு தென் தமிழகம் முகமதியர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.

செஞ்சியில் எழுந்தருளியிருந்த அழகிய மணவாளன் மற்றும் உபயநாச்சிமார்கள் செஞ்சி மன்னனான கோபணாரியரின் தலைமையில் ஒரு சிறு படையோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார். அப்போது, சுல்தான்களுடனான போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருந்ததால் சில நாட்கள் கொள்ளிடம் வடகரைக்கு வடக்கே ஒரு கிராமத்தில் எழுந்தருளியிருந்தார். அந்த கிராமமே தற்போது அழகிய மணவாளன் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழுதுபட்ட நிலையில் சில நாட்கள் அழகிய மணவாளன் தங்கியிருந்த திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சம்ப்ரோஷணமும் (கும்பாபிஷேகம்) செய்யப்பட்டது. இந்த ஊரில் ஓடும் ராஜன் வாய்க்கால் கரையில் பல நூற்றாண்டுகளாக திருமாலடியார்கள் 1323ஆம் ஆண்டு படையெடுப்பின் போது உயிர்நீத்த திருமாலடியார்களுக்கு எள்ளும், நீரும் இறைத்து பொதுமக்கள் “தர்ப்பணம்” செய்கிறார்கள். தர்ப்பணம் எனும் நீத்தார்கடனை செய்து வருகின்றனர் ஊர் பொதுமக்கள்.

கண்ணனூர் போரில் வீரக்கம்பண்ணர் வெற்றிக்கொண்ட பின் 48 ஆண்டுகள் கழிந்து அழகிய மணவாளன் உபயநாச்சிமார்களோடும், ஸ்ரீரங்க நாச்சியாரோடும் திருவரங்கம் திருக்கோவிலை சென்று அடைந்தார். அந்த நாள் கி.பி. 1371ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி மாதம் 17ஆம் நாள் ஆகும். (வைகாசி 17 என்பது ஜூன் மாதம் 2 அல்லது 3ஆம் தேதியைக் குறிக்கும்.) படையெடுப்புகளின் விளைவாக பொன்வேய்ந்த ப்ரணாவாகார விமானம் (கர்ப்பக்ருஹ விமானம்) இடிந்து விழுந்ததனால் ஆதிசேஷனுடைய பணாமங்களின் கீழ் அரங்கநகரப்பன் துயில் கொண்டிருந்தான். பல மண்டபங்கள், ஆரியபட்டாள் வாசல் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டதால் இடிந்து விழுந்த நிலையில் காணப்பட்டன.

அழகிய மணவாளனை தற்போது பவித்ரோற்சவம் கண்டருளும் சேரனை வென்றான் மணடபத்தில் கோபணாரியன், சாளுவ மங்கு போன்ற படைத்தலைவர்கள் எழுந்தருளப் பண்ணினர். திருவரங்க மாநகரில் பலர் கொல்லப்பட்டதாலும் மற்றும் ஆசார்ய புருஷர்களும், முதியோர்களும் அச்சம்கொண்டு திருவரங்க மாநகரைத் துறந்து, வெளி தேசங்களுக்குச் சென்று வாழ்ந்து வந்தனர். பராசர பட்டர் வம்சத்வர்களும், முதலியாண்டான் வம்சத்தவர்களும் வடதிசை நோக்கி அடைக்கலம் தேடிச்சென்றனர். பெரிய நம்பி வம்சத்தவர்கள் தெற்கு நோக்கி அடைக்கலம் தேடிச் சென்றனர்.

தற்போது திருவரங்க நகரை வந்தடைந்த அழகிய மணவாளன் உடன் 1323ஆம் வருடம் அழகிய மணவாளன் உடன் சென்றவர்களில் மூவரே மிஞ்சியிருந்தனர். அவர்களாவர் திருமணத்தூண் நம்பி, திருத்தாழ்வரை தாஸன் மற்றும் ஆயனார். தற்போது எழுந்தருளியிருப்பவர் முன்பு கர்ப்பக்ருஹத்தில் ஸேவை சாதித்த யுகம்கண்ட பெருமாள் தானா? என்ற ஐயம் கூடியிருந்த மக்களிடைய நிலவி இருந்தது. அதை நிரூபிக்க ஊரில் முதியவர்கள் யாரும் இல்லாததால் முடியவில்லை. அப்போது வயது முதிர்ந்த கண் பார்வையற்ற ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவன் படையெடுப்புக்கு முன்னர் அழகிய மணவாளன் உடுத்துக் களைந்த பரியட்டங்களை (ஆடைகளை) தினந்தோறும் சலவை செய்து சமர்ப்பித்திடுவான். இந்த ஈரங்கொல்லி, அழகிய மணவாளன் உடுத்துக்களைந்த ஆடைகளை தவிர வேறு யாருடைய ஆடைகளையும் சலவை செய்ய மாட்டான். அழகிய மணவாளனும் ஈரங்கொல்லி கொண்டு வருகின்ற வஸ்திரங்களை மறுபடியும் நீரில் நனைக்காமல் அப்படியே சாற்றிக் கொள்வார். (இந்த ஈரங்கொல்லிகளைப் பற்றிய மேலும் பல மகிழ்வூட்டக்கூடிய நிகழ்ச்சிகள் பின்வரும் நிகழ்ச்சித் தொகுப்பில் குறிப்பிடப்படவுள்ளது).

அந்த ஈரங்கொல்லி “என் கண்பார்வை போய்விட்டதால்” என்னால் இவர்தான் அழகிய மணவாளனா அல்லது வேறு ஒரு பெருமாளா என்று கண்டுபிடிக்க ஒரு யுக்தி உள்ளது என்றார்.

வஸ்திரங்களை துவைப்பதற்கு முன்பு நீரிலே நனைத்து அந்த ஈர ஆடையில் வெளிப்படும் நீரைப் பருகுவேன் இப்போது இந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பித்து அந்த ஈர ஆடையைப் பிழிந்து வெளிப்படும் நீரை பருகும்போது என் நாவின் சுவை கொண்டு இவர் தான் முன்பு எழுந்தருளி இருந்த அழகிய மணவாளன் என்று என்னால் கூற முடியும். அவ்வாறு அழகிய மணவாளனுக்கு திருமஞ்சனம் ஸமர்ப்பிக்கப்பட்டு அந்த ஈரங்கொல்லிக்கு ஈர ஆடை தீர்த்தம் ஸாதிக்கப்பட்டது  (கொடுக்கப்பட்டது). அதைப் பருகியவுடன் அந்த ஈரங்ககொல்லி “இவரே நம்பெருமாள், இவரே நம்பெருமாள்” என்று கூவினான். அன்றிலிருந்து அழகிய மணவாளனுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் அமையப்பெற்றது. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று மகிழ்ச்சி பொங்க கூறிய இந்த பெயர் நிலைத்து விட்டது. அவரை அழகிய மணவாளன் என்று தற்போது யாரும் கூறுவதில்லை.

ஒரு சிலர் பிள்ளைலோகாச்சாரியருடைய “இவையெல்லாம் நமக்கு நம்பெருமாள் பக்கலிலே காணலாம். முமுக்ஷுப்படி த்வய பிரகரணப் நாராயண ஸப்தார்த்தம் 141ஆம் நூற்பா”. ஈரங்கொல்லி நம்பெருமாள் என்று கூறியது அழகிய மணவாளன் 48 ஆண்டுகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று திரும்பிய பிறகு சூட்டிய பெயராகும். பிள்ளைலோகாச்சாரியர் 141வது நூற்பாவில் நம்பெருமாள் என்று குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டும். நம்பெருமாள் திருவரங்கத்திற்கு மீண்டும் வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை மீண்டு வந்து ப்ரதிஷ்டை கண்டருளிய நிகழ்ச்சியை ராஜ மகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் காணலாம். இந்தக் கல்வெட்டை தொல்லியல் துறை படியெடுத்து. ”South Indian Temple Inscription Volume 24″ – À R number 288 (A.R. No. 55 of 1892).

ஸ்வஸ்திஸ்ரீ: பந்துப்ரியே சகாப்தே (1293)

ஆநீயாநீல ச்ருங்கத் யுதி ரசித ஜகத்

ரஞ்ஜநாதஞ்ஜநாத்ரே:

செஞ்ச்யாம் ஆராத்ய கஞ்சித் ஸமயமத

நிஹத்யோத்தநுஷ்காந் துலுஷ்காந் >

லக்ஷ்மீக்ஷ்மாப்யாம் உபாப்யாம்

ஸஹநிஜநகரே ஸ்தாபயந் ரங்கநாதம்

ஸம்யக்வர்யாம் ஸபர்யாத் புநரக்ருத

¯÷\õதர்ப்பணோ கோபணார்ய: >>

(புகழ் நிறைந்த கோபணார்யர் கறுத்த கொடுமுடிகளின் ஒளியாலே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து ரங்க நாதனை எழுந்தருளப்பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிதுகாலம் ஆராதித்து ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி பூதேவிகளாகிய உபயநாச்சிமார்களோடு கூட திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.)

இந்தக் கல்வெட்டை பிள்ளைலோகம் ஜீயர் தம்முடைய “யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாள ஜீயர், பிள்ளைலோகம்ஜீயர் போன்ற பெருமக்கள் தங்கள் நூல்களில் தொல்காப்பியம், சங்க இலக்கியம், வரலாற்று குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர். ஆனால், நம்மிடையே வாழும் சில கிணற்று தவளைகள் “திருக்குறளைப் படிக்காதே, கல்வெட்டுகள் சான்றுகள் அல்ல” என்றெல்லாம் பிதற்றி வருகின்றனர். நம்பிள்ளை 17 இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். ஒரு திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளையும், பிள்ளைலோகம் ஜீயரும் பல இடங்களில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, நம்பி அகப்பொருள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஜைனன் ஒருவன் எழுதிய சம்ஸ்க்ருத நூலான அமரகோசத்தை பயிலும் இந்த வித்வான்கள் ஸ்ரீவைஷ்ணவர்களை தொல்காப்பியத்தைப் படிக்காதே, திருக்குறளைப் படிக்காதே, சங்க இலக்கியங்களைப் பயிலாதே என்றெல்லாம் பிதற்றலாமா? தங்களை மோட்சத்திற்கும் படிகட்ட வந்திருப்பவர்களாக கூறிக்கொள்ளும் இவர்கள் ஆழ்வார் பாசுரங்களில் பொதிந்துள்ள அக இலக்கிய கோட்பாடுகளை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். உபய வேதாந்திகளாய் இருக்க வேண்டிய ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்ஸ்க்ருத மொழியே உயர்வு தமிழில் ஆழ்வார் பாசுரங்களைத் தவிர மற்றைய தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை கற்க முன் வராதது. ஏன்? இவர்கள் திருந்தினாலே ஒழிய மிக உன்னதமான வைணவ நெறிகளை “பிறந்த வீட்டின் பெருமையை அண்ணனும், தங்கையும் கொண்டாடிக் கொள்வதற்கு” இணையாகும்.

இராமானுசரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டங்கள் மிகுந்த பணச் செலவில் நாடெங்கும் கொண்டாடினோமே தவிர வைணவத்தைச் சார்ந்திராத பிற சமயத்தினர் நம் பக்கலில் இழுத்துக்கொள்ள முடிந்ததா? என்பது கேள்விக்குறியே. திருவரங்கத்தின் மீதான மூன்றாம் படையெடுப்பு கி.பி. 1328ஆம் ஆண்டு குரூஸ்கான் என்பவனால் நிகழ்த்தப்பட்டது. ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட திருவரங்க மாநகரில் உலூக்கானால் எடுத்துச் சொல்லப்படாத பொருட்கள் இவனால் கொள்ளையடிக்கப்பட்டன. இவனுடைய படையெடுப்பைப் பற்றிய மேலும் விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

அழகிய மணவாளன் 1371ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருவரங்க நகருக்கு 48 ஆண்டுகள் கழித்து திரும்ப எழுந்தருளியதை ஒரு பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கோ திருவரங்க மாநகரை காப்பாற்றுவதற்காக நாங்கள் இராமானுசரால் நியமிக்கபட்டோம் என்றுக் கூறிக்கொள்ளும் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் ஆகியோரும் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இராமன் காட்டுக்குச் சென்றது 14 ஆண்டுகள் இராமனால் ஆராதிக்கப்பட்ட அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் செய்தார். 49 ஸ்ரீவைஷ்ணவர்களும் பிள்ளைலோகாச்சாரியரும் அழகிய மணவாளனைக் காக்கும் பணியில் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள். பிள்ளைலோகாச்சாரியர் தமது 119வது வயதில் அர்ச்சாவதார எம்பெருமானை காக்கும் பணியில் தன்இன்னுயிரை நீத்தார். இன்றைக்கும் அல்லூரி வேங்கடாத்ரீ ஸ்வாமி சமர்ப்பித்த ஆபரணங்களை மாசி மாதத்தில் ஒருநாள் நம்பெருமாளுக்குச் சாற்றி மகிழ்கிறார்கள். ஆனால் இந்த நம்பெருமாள் பல ஆபத்துக்களை தாண்டி காடுமேடுகளையெல்லாம் கடந்து வந்த வரலாறு நூற்றுக்கு தொண்ணூற்றிதொன்பது சதவீதம் மக்களுக்குத் தெரியாது. ஏதோ சில தனி நபர்கள் தாங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டதுபோல் பறைச்சாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நம்பெருமாளை காப்பாற்றும் முயற்சியில் 50 பேருக்கு மேல் தியாகம் செய்துள்ளனர். பன்னீராயிரவர் தலை கொய்யப்பட்டது. எதைச்சொன்னாலும் “இது வழக்கம் இல்லை, இது வழக்கம் இல்லை, இது வழக்கம் இல்லை” என்று தடுப்பணைபோடும் அடியார்கள்? இதை உணரவேண்டும்.

திருவரங்கம் திருமதில்கள்:

1.     பெரிய கோயிலின் ஏழு திருச்சுற்றுகட்கு அமைந்த பெயர்களையும் அவற்றை நிர்மாணித்தோர் அல்லது செப்பனிட்டோர் பற்றிய குறிப்பினை இந்தப் பாடல் கூறுகின்றது.

மாடமாளிகை சூழ் திரு வீதியும் மன்னு சேர் திருவிக்கிரமன் வீதியும்

ஆடல் மாறன் அகளங்கன் வீதியும் ஆலிநாடன் அமர்ந்துறை வீதியும்

கூடல்வாழ் குலசேகரன் வீதியும் குல விராசமகேந்திரன் வீதியும்

தேடரிய தர்மவர்மாவின் வீதியும் தென்னரங்கர் திருவாவரணமே.

வரலாற்று அடிப்படை கொண்டு நோக்கின் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக அமைந்து உள்ளது. ஆனால், புராதனமாக அமைந்திருந்த திருவீதிகளைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டவர்கள் பெயரால் வழங்கப்படுகிறது என்று கொள்ள வேண்டும். இந்தப் பாடல் ஏழாம் திருச்சுற்றுத் தொடங்கி, முதலாம் திருச்சுற்று வரை அமைந்துள்ள திருச்சுற்றுக்களின் பெயர்களைக் கூறுகின்றது.

ஏழாம் திருச்சுற்று – மாடமாளிகை சூழ்த் திருவீதி: இந்தத் வீதிக்கு தற்போதைய பெயர் சித்திரை வீதி. இந்த வீதியினைக் கலியுகராமன் திருவீதி என்றும் அழைப்பர். கலியுகராமன் என்று பெயர்கொண்ட மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1297-1342) இந்த வீதியைச் செப்பனிட்டான் என்று அறியப்படுகிறது.

ஆறாம் திருச்சுற்று –  திருவிக்கிரமன் திருச்சுற்று, ஐந்தாம் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று – முதலாம் குலோதுங்கனுடைய மகன் விக்ரமசோழன் (கி.பி.1118-1135) இவன் பெயரிலே இந்தத் திருவீதி அமைந்துள்ளது. அடுத்த ஐந்தாம் திருச்சுற்றுக்கு அகளங்கன் திருவீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்கிரமசோழனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் அகளங்கன் என்பதுவும் ஒன்றாகும். இவனுக்கே உரியவையாய் வழங்கிய இரண்டு சிறப்புப் பெயர்கள் கல்வெட்டுகளிலும் விக்கிரம சோழன் உலாவிலும் காணப்படுகின்றன. அவை, ‘தியாக சமுத்திரம்,’ ‘அகளங்கன்’ என்பனவாகும். இம்மன்னன் தன் ஏழாம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் சென்றிருந்த போது, அந்நகரைச் சார்ந்த ‘வண்ணக்குடி’ என்ற ஊரைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித் திருவிடை மருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக அளித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது.  (ARE 272, 273 of 1907, 49 of 1931) (விக்கிரம சோழன் உலாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ula-II, 431, 632.)

‘அகளங்கன்’ என்னும் சிறப்புப்பெயர் ஜயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் காணப்படினும் அதன் பாட்டுடைத் தலைவனான முதலாம் குலோத்துங்கனை குறிப்பதன்று. (The Kalingattupparani calls Kulantaka Virudarajabhayankara, Akalanka, Abhaya and Jayadhara. Ref: The Colas – K.A.N.Sastri, p.330). அது விக்கிரம சோழனுக்கே வழங்கிய சிறப்புப் பெயர் என்பது கல்வெட்டுகளால் நன்கு தெளிவாகிறது. கல்வெட்டுகளில் குலோத்துங்கனுக்கு அப்பெயர் காணப்படவில்லை. ஒட்டக் கூத்தர் தனது ‘விக்கிரமசோழன் உலாவில்,’ 152, 182, 209, 256, 284, முடிவு வெண்பா ஆகிய கண்ணிகளில்  விக்கிரமனை அகளங்கன் என்று கூறியிருப்பது கொண்டு, அப்பெயர் இவனுக்கே சிறப்புப் பெயராக வழங்கியது என்பதை அறியலாம்.

‘எங்கோன் அகளங்கன் ஏழுலகும் காக்கின்ற செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள்’ என்று அவர் குறிப்பிடுவதால் விக்கிரம சோழனே அகளங்கன் ஆவான். இவனது சிறப்புப் பெயரில் ஒரு திருச்சுற்றும், இயற்பெயரில் ஒரு திருச்சுற்றும் இவனே நிறுவினான் என்றும் கொள்வதே பொருத்தமுடையது.

திருவரங்கம் கோயிலில் விக்ரமசோழன் காலத்துக் கல்வெட்டுகள் பதினான்கு அமைந்துள்ளன.

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த திருந்நெடுந்தாண்டகம் வியாக்யானத்தில் விக்ரமசோழனைப் பற்றிய குறிப்பொன்று அமைந்துள்ளது –  திருநெடுந்தாண்டகம் 25-ஆம் பாட்டு ‘மின்னிலங்கு’.

“விக்கிரம சோழ தேவன் எனும் அரசன்  தமிழிலக்கியங்களில் மிகவும் ஈடுபாடுடையவன். சைவ வைணவப் புலவர்கள் பலர் அவனது சபையில் இருந்தனர். அவ்வப்போது அவரவர்களுடைய சமய இலக்கியங்களைப் பற்றிக் கூறச் சொல்லிக் கேட்பதுண்டு. ஒரு சமயம் அவன், ‘தலைமகனைப் பிரிந்த வருத்தத்தோடு இருக்கிற தலைமகள் கூறும் பாசுரங்கள் சைவ வைணவ இலக்கியங்களில் எப்படி இருக்கிறது? என்று கூறுங்கள் கேட்போம்” என்றான்; உடனே சைவப் புலவர், சிவனாகிய தலைமகனைப் பிரிந்த நாயகி “எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்” என்று வெறுப்புத் தோற்ற, சிவனைப் பற்றிக் கூறும் நாயன்மார் பாடல் ஒன்றைக் கூறினார். வைணவப் புலவரோ, எம்பெருமானைப் பிரிந்த வருத்தத்தில் பரகாலநாயகி கூறுகின்ற ‘மின்னிலங்கு திருவுரு’ என்ற திருநெடுந்தாண்டகப் பாசுரத்தைக் கூறினார். இரண்டையும் கேட்ட விக்கிரமசோழ தேவன், ‘தலைமகனைப் பிரிந்து வருந்தியிருப்பவள், கூடியிருந்தபோது தன் காலில் விழுந்த தலைமகனைப் பற்றிக் கூறும்போதும், ‘மின்னிலங்கு  திருவுரு’ என்று புகழ்ந்து கூறியவளே சிறந்த தலைமகள். ‘எலும்பும் சாம்பலும் உடையவன்’ என்று கூறிய மற்றொரு தலைமகள் பிணந்தின்னி போன்றவள்” என்றானாம். (பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த வியாக்யா னத்தின் விவரணம், பதிப்பாசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், 2003ஆம் ஆண்டுப் பதிப்பு, பக்.442)

இவனுடைய திருவரங்கக் கல்வெட்டுகளில் சிதம்பரத் தில் நடராஜருடைய விமானத்திற்குப் பொன்வேய்ந்ததைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கல்வெட்டு எண். 119, (ARE No.340 of 1952-53).மூன்றாம் திருச்சுற்றில் சேரனை வென்றான் மண்டபம் என்றழைக்கப்படும் பவித்ரோத்ஸவம் நடைபெறும் மண்டபத்தில் அமைந்துள்ளது.

(1) “ஸ்வஸ்தி ஸ்ரீ: பூமாலை மிடைந்து பொந்மாலை திகழ்த்தா (பா)மாலை மலிந்த பருமணி(த்) திரள்புயத் திருநிலமடந்தையொடு ஜயமகளிருப்பத் தந்வரை மார் வந்தனக் கெநப் பெற்ற திருமகளொருதநி யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்ந்த (க)ற்பிநளாகி விருப்பொடு நாவகத் திருப்ப திசைதொறும் தி – …………………………………………………………………….”.

(4) மண்முழுதும் களிப்ப மநுநெறி வள(ர்)த்து தந் கொற்றவாசல்ப் புறத்து மணிநாவொடுங்க முரைசுகள் முழங்க விஜையமும் புகழும் மேல்மேலோங்க ஊழி ஊழி (இ)ம்மாநிலங்காக்க திருமணிப்பொற்றெட்டெழுது புத்தாண்டு வருமுறை முந்நம் மந்நவர் சுமந்து திறை நிரைத்துச் சொரிந்த செம்பொற் குவையால் தந் குலநாயகந் தாண்டவம் புரியும்.

(5) செம்பொந் அம்பலஞ்சூழ் திருமாளிகை கொபுரவாசல் கூட(சா)ளரமும் உலகு வலங்கொண்டொளி விளங்கு நெமிக் குலவரை உதையக் குன்றமொடு நின்றெனப் பசும்பொந் மெய்ந்து பலிவளர் பிடமும் விசும்பொளி தழைப்ப விளங்கு பொந் மேய்ந்து இருநிலந் தழைப்ப இமையவர் களிப்பப் ö(ப)ரிய திருநாள்ப் பெரும் பி(ய)ர் விழா –

(6) வெநும் உயர் புரட்டாதியில் உத்திரட்டாதியில் அம்பலம் நிறைந்த அற்புதக் கூத்தர் இந்பர்வாழ எழுந் தருளுதற்கு(த்) திருத்ö(÷)த(ர்)க் கொயில் செம்பொந் மெய்ந்து பருத்திரள் முத்திந் பயில் வடம் பரப்பி (நி)றைமணி மாளிகை நெடுந்தெர் வீதி தந்திருவளர் பெரால் செய்து சமைத்தருளி பைம் பொற் குழித்த பரிகல முதலால் செம்பொற் கற்பகத்தெ(ரெ)õடு பரிச்சிந்நம் அளவி(ல்லா) –

(7) (த)ந ஒளிபெற வமைத்து பத்தாமாண்டு சித்திரைத் திருநாள் அத்தம் பெற்ற ஆதித்த வாரத்து(த்) திரு(வளர் பதியில் திர) யொத3‡ப்பக்கத்து இந்நந பலவும் இநிது சமைத்தருளி தந் ஒரு குடை நிழலால் (தரணி) முழுதும் தழைப்ப செழியர் வெஞ்சுரம் புக செரலர் கடல் புக அழிதரு சிங்கணர் அஞ்சி நெஞ்சலமர கங்கர் திறையிட கந்நிடர் வெந்நிட கொங்க ரொதுங்க கொ(ங்கண) –

இரண்டாம் இராசேந்திரன் புதல்வி மதுராந்தகியே முதலாம் குலோத்துங்கனின் மனைவி. முதலாம் குலோத்துங்கனுடைய ஏழு புதல்வர்களில் விக்கிரமசோழன் நான்காமவன். (Ref: The Colas by K.A.N.Sastri, p.332).

நான்காம் திருச்சுற்று – ஆலிநாடன் திருச்சுற்று:  திருமங்கையாழ்வார் ஆடல்மா என்ற குதிரையின் மீதேறிச் சென்று பகைவர்களை வென்றார். பல திவ்யதேசங்களை மங்களா சாஸனம் செய்தருளி திருவரங்கத்திலே பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்து திருமதில் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.  அவரால் ஏற்படுத்தப்பட்ட திருமதிலுக்கு உட்பட்ட திருச்சுற்றிற்கு ஆலிநாடன் திருவீதி என்று பெயர்.  பாட்டின் இரண்டாம் அடியில் ஆடல்மாறன் அகளங்கன்  என்னும் சொற்றொடரில் உள்ள ஆடல்மா என்ற சொல் ஆலி நாடன் அமர்ந்துறையும் என்ற சொல்லோடு கூட்டிக் கொள்ள வேண்டும். இவருடைய கைங்கர்யங்களைப் பற்றிய விரிவான செய்திகள் பின்வரும் பகுதிகளில் தெரிவிக்கப்படும்.

மூன்றாம் திருச்சுற்று – குலசேகரன் திருச்சுற்று : குலசேகராழ்வார் தமது பெருமாள் திருமொழியில் முதன் மூன்று பத்துக்களாலே (30 பாசுரங்கள்) கொண்டு திருவரங்கனை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

“அன்பொடுதென்திசைநோக்கிப்பள்ளிகொள்ளும்

அணியரங்கன்திருமுற்றத்து* அடியார்தங்கள்

இன்பமிகுபெருங்குழுவுகண்டு யானும்

இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும்நாளே?”– பெருமாள்திருமொழி 1-10

என்று அணியரங்கன் திருமுற்றத்தை குறிப்பிடும் குலசேகராழ்வார், மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றினை அமைத்தார் என்று கொள்வது பொருத்தம். மூன்றாம் பிரகாரத்தில் சேனை வென்றான் மண்டபம் கட்டி அந்தப் பிரகாரத்தினை நிர்மாணம் செய்தார்.

இரண்டாம் திருச்சுற்று – இராசமகேந்திரன் திருச்சுற்று:  இவன் முதலாம் இராசேந்திரனுடைய மூன்றாவது மைந்தன். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி.1058-1062. மும்முடிச் சோழன் என்ற பெயர் பெற்றவன். இராசமகேந்திரன், ஆகமவல்லனை (முதலாம் சோமேƒவரன்) முடக்காற்றில் புறமுதுகிட்டு ஓடும்படி செய்த பெருவீரன் என்று, அவன் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. “பனுவலுக்கு முதலாய வேத நான்கிற் பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண், மனுவினுக்கு மும்மடி நான் மடியாஞ்சோழன் மதிக்குடைக் கீழ் அறந்தளிர்ப்ப வளர்ந்தவாறும்” என்று கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடப்பட்ட மும்முடிச் சோழனே இராசமகேந்திரன் என்று கருத இடமிருக்கிறது.

அன்றியும் “பாடரவத் தென்னரங்கமே யாற்குப் பன்மணியால் ஆடவரப்பாயல் அமைத்தோனும்” என்னும் விக்கிரம சோழன் உலா (கண்ணி – 21) அடிகளால் இவன் திருவரங்கநாதரிடம் அன்பு பூண்டு, அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணை ஒன்று அமைத்தான் என்பதும் அறியப்படுகின்றது.

முதலாம் திருச்சுற்று – தர்மவர்மா திருச்சுற்று: தர்மவர்மா என்ற சோழமன்னன் இந்தத் திருச்சுற்றினை அமைத்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த மன்னனைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.

இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று அறிவதற்கில்லை. கோயிலொழுகு “பூர்வர்கள் திருவரங்கம் திருப்பதியை இவ்வாறு அனுபவித்தார்கள்” என்று குறிப்பிடுகிறது. திருக்கோயில் அமைப்பில் உத்தமோத்தம லக்ஷணமாக ஏழு பிரகாரங்கள் கொண்ட கோயிலைக் கொள்கிறார்கள். எந்த திருக்கோயிலுக்கும் அமைந்திராத பெருமை ஸ்வயம்வ்யக்த (தானாகத்தோன்றின) க்ஷேத்திரங் களுள் தலைசிறந்ததான திருவரங்கம் ஸப்தபிரகாரங்களைக் கொண்டிருப்பது அதன் பெருமையைக் காட்டுகின்றது.

இதிகாச புராணச் செய்திகள்:

(2) இவ்வாறு ஏழுவீதிகளின் திருப்பெயர்களைத் தெரிவித்த பின்னர் ஒவ்வொருடைய கைங்கர்யத்தைப் பற்றி கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

கருடபுராணத்தில் 108 அத்தியாயமுள்ள சதாத்யாயீ, பிரமாண்ட புராணத்தில் 11 அத்தியாயமுள்ள தசாத்யாயீ ஆகிய இரு பகுதிகளிலும் ஸ்ரீரங்க மாஹாத்மியம் சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான பாரமேஸ்வர ஸம்ஹிதையில் 10ஆம் அத்தியாயம் ஸ்ரீரங்க மாஹாத்மியத்தைச் சொல்லுகிறது.  புராணங்களில் கண்டுள்ளபடி ப்ரஹ்மா நெடுங் காலம் தவம் இருந்து ஸ்ரீரங்க விமானத்தைத் திருப்பாற்கடலில் இருந்து பெற்றான். ஸ்ரீரங்கவிமானத்தையும் ஸ்ரீரங்கநாதனையும் தமது இருப்பிடமான ஸத்யலோகத்தில் ஆராதித்து வந்தான். இக்ஷ்வாகு அந்த விமானத்தையும் ஸ்ரீரங்கநாதனையும் பிரஹ்மாவிடம் இருந்து பெற்றுத் தனது தலைநகரமான அயோத்தியில் ஆராதித்து வந்தான். சக்கரவர்த்தி திருமகனான ஸ்ரீராமன் ஸ்ரீரங்கநாதனை ஆராதித்து வந்தான்.

ஸ்ரீபராசர பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தர சதகம் 77-78 ஆகிய இரு ச்லோகங்களில் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கெல்லாம் ஸ்ரீரங்கநாதனே ஆராத்ய தேவதையாய் இருந்து வந்தபடியை அருளச் செய்துள்ளார்.

“மநுகுலமஹீ பாலவ்யாநம்ரமௌலிபரம்பரா

மணிமகரிகாரோசிர் நீராஜிதாங்க்ரிஸரோருஹ: >

ஸ்வயமத விபோ! ஸ்வேந ஸ்ரீரங்கதாமநி மைதிலீ

ரமணவபுஷா ஸ்வார்ஹாண்யாராதநாந்யஸி லம்பித: >> ”  – (77)

(எம்பெருமானே!, மநுகுலத்தவர்களான சக்ரவர்த்திகளினுடைய வணங்கின கிரீட பங்க்திகளிலுள்ள (கிரீடத்தில் அமைந்துள்ள வரிசைகளில்) மகரீஸ்வரூபமான (மீன் வடிவிலான) ரத்னங்களின் ஒளிகளினால் ஆலத்தி வழிக்கப்பட்ட திருவடித்தாமரைகளையுடைய தேவரீர் பின்னையும் ஸ்ரீராமமூர்த்தியான தம்மாலேயே ஸ்ரீரங்க விமானத்தில் தமக்கு உரிய திருவாராதனங்களை தம்மாலேயே அடைவிக்கப்பட்டீர்.)

(மநுகுல) இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கெல்லாம் ஸ்ரீரங்கநாதனே ஆராத்யதேவதையாக இருந்து வந்தபடியை இதனாலருளிச் செய்கிறார். ஸத்யலோகத்தில் நான்முகனால் ஆராதிக்கப்பட்டு வந்த திவ்யமங்கள விக்ரஹம் அவனால் இக்ஷ்வாகுவுக்கு அளிக்கப்பட்டு, பிறகு அநேக சக்ரவர்த்திகளால் பரம்பரையாய் ஆராதிக்கப்பட்டு வந்து, கடைசியாய் ஸ்ரீராமபிரனால் ஆராதிக்கப்பட்டு, பட்டாபிஷேகத்திற்குப் பிறகு ஸுக்ரீவ ப்ரமுகர்களான அன்பர்கட்குப் பரிசளிக்கும் அடைவிலே விபீஷணாழ்வானுக்கு இந்த திவ்யமங்கள விக்ரஹம் பரிசளிக்கப்பட்டு, லப்த்வா குலதநம் ராஜா லங்காம் ப்ராயாத் விபீஷணா: என்கிறபடியே அவரும் இத்திருக்கோலத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருமளவில் காவிரிக்கரையிலே பெருமாளை எழுந்தருளப் பண்ணிவிட்டு நித்யாநுஷ்டாங்களை நிறைவேற்றிக் கொண்டு பெருமாளை மீண்டும் எழுந்தருளப் பண்ணிக்கொள்ள முயலுகையில் அவ்விடம் பெருமாளுக்கு மிகவும் ருசித்திருந்ததனால் பேர்க்கவும் பேராதபடியிருந்து விபீஷணனுக்கு நியமநம் தந்தருளி, அவனுடைய உகப்புக்காகவே “மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத்திசை நோக்கி மலர்க்கண்வைத்த” (பெரியாழ்வார் திருமொழி 4-9-2) என்கிறபடியே தென்திசை இலங்கை நோக்கி சயநித்தார் என்பது புராண வரலாறு. பூர்வார்த்தத்தினால் ஸ்ரீராமபிரானுக்கு முற்பட்ட சக்ரவர்த்திகள் ஆராதித்தமையை ஒரு சமத்காரமாகப் பேசுகிறார். நவமணிகள் பதித்த கீரீடமணிந்த மநுகுல மஹாராஜர்கள் முடியைத் தாழ்த்தி வணங்கும்போது அந்த முடிகளில் அழுத்தின ரத்னங்களின் ஒளி வீசுவதானது பெருமாள் திருவடிவாரத்திலே ஆலத்தி வழிக்குமாப் போலேயிருப்பதாம். (மணிமகரிகா) மகரவடிவமாக ரத்னங்கள் அழுத்தப் பெற்றிருக்கும் என்க. மகரிகா என்று ஸ்த்ரீலிங்க நிர்த்தேசம் – ஆலத்தி வழிப்பதாகிய காரியம் ஸ்திரீகளுடையது என்கிற ப்ரஸித்திக்குப் பொருந்தும்.

(ஸ்வயமத விபோ இத்யாதி) அந்த அரசர்கள் வணங்கி வழிபாடு செய்தது பெரிதன்று; ஸாக்ஷாத் பெருமாளும் பிராட்டியுமே ஸ்ரீராமனாகவும் ஸீதையாகவும் அவதரித்திருந்த அந்த திவ்ய தம்பதிகள் ஆராதித்த பெருமையன்றோ வியக்கத்தக்கது என்று காட்டுகிறபடி. ஸ்ரீசக்ரவர்த்தி திருமகனார் தம்மைத்தாமே தொழுவார்போல் தொழுது அர்ச்சித்த திவ்ய மங்கள விக்ரஹம் இதுகாணீர் என்கிறார்.

ஸ்வயம், ஸ்வேந என்ற இரண்டனுள் ஒன்று போராதோவென்னில், ஸ்ரீரங்கநாதனான ஸ்ரீமந்நாராயணமூர்த்தி தாமே ஸ்ரீராமபிரானாக அவதரித்தப் படியைக் காட்டுகிறது ஸ்வேந என்பது. அவர்தாமும் ஆளிட்டு அந்தி தொழாதே தாமே ஆராதித்தபடியைச் சொல்லுகிறது ஸ்வயம் என்பது. ஸ்வார்ஹாணி என்றவிடத்தில் ஸ்வசப்தத்தினால் ஆராத்யமூர்த்தியையும், ஆராதகமூர்த்தியையும் குறிப்பிடலாம். ஆசிரியர்க்கு இரண்டும் திருவுள்ளமே. –

மந்வந்வவாயே த்ரூஹிணே ச தந்யே விபீஷணேநைவ புரஸ்க்ருதேந >

குணைர் தரித்ராணமிமம் ஜநம் த்வம் மத்யேஸரிந்நாத! ஸுகாகரோஷி >> (78)

(ஸ்ரீரங்கநாதரே!, மநுகுலமும் க்ருதார்த்தனான பிரமனும் (இருக்கச் செய்தேயும்) திருவுள்ளத்திற்கு இசைந்த விபீஷணனாலேயே திருக்காவேரியினிடையே (ஸந்நிதிபண்ணி) ஒரு குணமுமில்லாத அடியேன் போல்வாரை மகிழ்விக்கின்றீர்)

(மந்வந்வவாயே) நான்முகக்கடவுளுக்கு ஸுலபனாயிருந்த இருப்பையும், மநுவம்சத்து மஹாராஜர்களுக்கு ஸுலபனாயிருந்த இருப்பையும்விட்டு, ஒரு விபீஷணாழ்வான் மூலமாக உபயகாவேரீ மத்யத்திலே அடியோங்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டு இன்பம் பயக்குமிது என்னே! என்று ஈடுபடுகிறார். (விபீஷணேநைவ புரஸ்க்ருதேந) புரஸ்க்ருதேந விபீஷணேந என்று அந்வயிப்பது. வானர முதலிகள் திரண்டு விரோதித்தவளவிலும் ஒரு தலை நின்று ஸ்வகோஷ்டியில் புரஸ்காரம் அடைவிக்கப் பெற்ற விபீஷணாழ்வானாலே என்றபடி. அந்த மஹாநுபாவன் ஆற்றங்கரையிலே இங்ஙனே ஒரு தண்ணீர்ப்பந்தல் வைத்துப்போனானென்று அவனுடைய பரமதார்மிகத்வத்தைக் கொண்டாடுகிறபடி. (குணைர்தரித்ராணமிமம் ஜநம்) எம்பெருமானை ஆழ்வான் ஸ்வஸத்ரு ச தரித்ரம் என்றார். இவர் தம்மை குணைர்தரித்ரம் என்கிறார். இவ்வகையாலே பரமஸாம்யாபத்தி இந்நிலந்தன்னிலே பெற்றபடி. குணலேசவிஹீநனான (நற்குணம் ஒன்றும் இல்லாத) அடியேனை என்றவாறு. –

ஸ்ரீராமபிரான் மைதிலியோடு ஸ்ரீரங்கநாதனை ஆராதனம் பண்ணின வைபவத்தை “ஸஹ பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயண முபாகமத்” என்று ஸ்ரீராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவிபீஷணாழ்வானுக்குத் தக்க பரிசு ஒன்றை தந்திட விரும்பிய சக்ரவர்த்தி திருமகன் தம்முடைய குலதனமான ஸ்ரீரங்க விமானத்தைக் அவனுக்குக் கொடுத்தருளினார். ஸ்ரீவிபீஷணாழ்வானும் ஸ்ரீரங்கவிமானத்தைத் தன்னுடைய தலையிலே எழுந்தருளப் பண்ணிக்கொண்டு இரண்டு திருக்காவிரி நடுவிலே சந்திரபுஷ்கரணி கரையிலே கொண்டுவந்து தர்மவர்மாவிடம் சேர்ப்பித்தான்.  வால்மீகி ராமாயணம் உத்திரகாண்டத்தில் விபீஷணன் ஸ்ரீராமனிடமிருந்து அவனுடைய குலதனமாகிய ஸ்ரீரங்கவிமானத்தைப் பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.

“கிஞ்சாந்யத் வக்துமிச்ச்சாமி ராக்ஷஸேந்த்ர மஹாபல, ஆராதய ஜகந்நாதம் இக்ஷ்வாகுகுலதைவதம்” – என்று உத்திர ஸ்ரீராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாத்ம புராணத்தில் யாவத் சந்த்ரச்ச ஸூர்யச்ச யாவத் திஷ்ட்டதி மேதிநீ, தாவத் ரமஸ்வராஜ்யஸ்த்த: காலே மம பதம் வ்ரஜ, இத்யுக்த் வா ப்ரததௌ தஸ்மை ஸ்வவிச்லேஷா ஸஹிஷ்ணவே, ஸ்ரீரங்கசாயிநம் ஸ்வார்ச்சயம் இஷ்வாகு குலதைவம், ரங்கம் விமாந மாதாய லங்காம் ப்ராயாத் விபீஷண: என்றும் தெளிவாக உள்ள வசநங்கள் மஹேச தீர்த்தாதிகளான ஸ்ரீராமாயண வ்யாக்யாதாக்களாலே உதாஹரிக்கப்பட்டவை. “மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த, என்னுடைய திருவரங்கற் கன்றியும்” என்றார் பெரியாழ்வாரும்.

திருவாலங்காடு, திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலச் செப்பேடுகள் சோழர்கள் மனுகுல வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகின்றன. சோழர்களின் முன்னோர்களாக இக்ஷ்வாகு, சிபி, பகீரதன், வளவன் ஆகியோரை இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

இக்ஷ்வாகுவின் வம்சத்தினர் சோழர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் வசிட்டர் இக்ஷ்வாகுவை நோக்கிக் கூறும் போது  “விபீஷணனால் கொண்டு செல்லப்படும் விமானம் காவிரி தீரத்திலுள்ள சந்திரபுஷ்கரிணியை அடையும். அங்கு உம்முடைய வம்சத்தினராகிய சோழ அரசர்களால் ஆராதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

நிஹமாந்தமஹாதேசிகன் அருளிச் செய்துள்ள ‘ஹம்ஸஸந்தே†ம்’ என்னும் நூலில் ‘ஸ்ரீரங்கம் என்னும் பெயர் பெரிய பெருமாள் இங்கு எழுந்தளிய பிறகு ஏற்பட்டது. அவர் இவ்விடத்திற்கு வருமுன் சேஷபீடம் என்ற பெயர் இவ்வூருக்கு வழங்கி வந்தது. சந்திரபுஷ்கரணிக்கு அருகில் அச்சேஷபீடம் அமைந்திருந்தது. ஸ்ரீரங்க விமானம் அங்கு வந்ததற்குப் பின் ஸ்ரீரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது” போன்ற செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சேஷபீடத்தைப் பற்றி அந்நூலில் “அழகிய தோழனே, அந்தச் சந்திரபுஷ்கரணிக் கரையில் சேஷபீடம் என்ற ஓர் அடித்தளம் உள்ளது. அதை அங்குள்ள மனிதர்கள் சேவித்துக் கொண்டிருப்பார்கள். நீயும் மிக்க ஸ்ரத்தையுடன் உன் உடலை நன்கு குனிய வைத்துக்கொண்டு அந்தப் பீடத்தை வணங்க வேண்டும். அந்தப் பீடத்தை வணங்கக் காரணம் உள்ளது. இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த எங்களின் பரம்பரைச் சொத்தாக உள்ள ஸ்ரீரங்கவிமானம் நெடுங்காலமாக அயோத்தியில் எழுந்தருளியுள்ளது. அந்த விமானம் பிற்காலத்தின் அந்த சேஷபீடத்தின்மேல் அமரப்போவதாக மஹரிஷிகள் கூறியுள்ளார்கள்” என்று இலங்கையில் இருக்கும் சீதையிடம் அன்னத்தைத் தூதுவிடுமிடத்தில் அன்னத்திடம் ராமன் கூறுவதாகத் தேசிகன் கூறுகிறார்.

ஸ்ரீரங்கராஜஸ்வதவம் பூர்வ சதகத்தில் (35) ஸ்ரீபராசர பட்டர் கோயிலைச் சுற்றி ஸப்த பிரகாரங்கள் இருப்பது ஸப்த சாகரங்களை ஒக்கும் என்று அருளிச் செய்துள்ளார்.

ப்ராகாரமத்யாஜிரமண்டபோக்த்யா

ஸத்வீபரத்நாகர ரத்நசைலா >

ஸர்வம்ஸஹா ரங்கவிமாநஸேவாம்

ப்ராப்தேவ தந்மந்திரமாவிரஸ்தி >>

(யாதொரு ஸ்ரீரங்க மந்திரத்தில் திருமதிள்கள், இடைகழி, திருமண்டபங்க ளென்னும் வியாஜத்தினால் ஸப்தத்வீபங்களோடும் ஸப்த ஸாகரங்களோடும் மஹாமேருவோடுங் கூடின பூமிப் பிராட்டியானவள் ஸ்ரீரங்கவிமான ஸேவையை – அடைந்தனள் போலும்; – அந்த ஸ்ரீரங்க மந்திரம் கண்ணெதிரே காட்சி தருகின்றது.)

ஸ்ரீரங்கமந்திரம் பூமிப்பிராட்டி போன்றிருக்கிறதென்கிறார். ஸ்ரீரங்க விமானத்தை ஸேவிப்பதற்காகப் பூமிப்பிராட்டி தன் பரிவாரங்களோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள் போலும். கடல்களும் கடலிடைத்தீவுகளும் சிறந்த மலைகளும் பூமிப்பிராட்டியின் பரிவாரங்களாம். கோயிலைச்சுற்றி ஸப்தப்ராகாரங்கள் இருப்பது ஸப்த ஸாகரங்களை ஒக்கும்; ஒவ்வொரு திருமதிலுக்கும் இடையிலுள்ள ப்ரதேசம் ஸப்த த்வீபங்கள்போலும். திருமண்டபங்கள் ரத்நபர்வதங்கள் போலும். ஆக இப்பரிவாரங்களுடனே பூமிப்பிராட்டி வந்து சேர்ந்து ஸ்ரீரங்க விமானஸேவையைப் பெற்றிருப்பதுபோல் மந்திரம் தோன்றுகின்ற தென்றாராயிற்று.

ஸ்ரீரங்க விமானத்தை நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த  ரிஷிகளும், தர்மவர்மாகிய அரசனும் விமானத்தையும், ஸ்ரீரங்கநாதனையும் சேவித்தார்கள். விபீஷணன் காவிரியில் நீராடி, பிறகு சந்திர புஷ்கரிணியிலும் நீராடிப் பெருமாளுக்கு வேண்டிய பலவிதமான புஷ்பம், தளிகை, பணியாரம் வகைகளை ஸமர்ப்பித்தான். மறுநாள் ஆதிபிரஹ்மோத்ஸவம்  ஆரம்பிக்க வேண்டிய தினம், இலங்கை சேரவேண்டுமென்றுப் பிரார்த்தித்துப் புறப்பட விரைந்தான் விபீஷணன். தர்மவர்மாவும், ரிஷிகளும் ஸ்ரீரங்க விமானத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் உத்ஸவத்தைக் காவிரி தீரத்திலேயே நடத்திவிட்டு, பிறகு இலங்கை சேரலாம் என்று கேட்டுக் கொண்டதற்கேற்ப, பிரஹ்மோத்ஸவம் நடத்தப்பட்டது. இந்த உத்ஸவம்தான் இன்றும் பௌர்ணமியில் பங்குனி உத்தரத்தன்று நடைபெறுகிறது. இந்த உத்ஸவத்தின் பெயரும் ‘நம்பெருமாள் ஆதி பிரஹ்மோத்ஸவம்’ என்று இன்றும் வழக்கில் உள்ளது. உத்ஸவம் முடிந்து விபீஷணன் இலங்கைக்குப் புறப்பட்டுச் செல்ல ஸ்ரீரங்கவிமானத்தை எடுக்கப் போனான். எடுக்க முடியவில்லை. தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அசைக்கமுடியாமல் பெரிய பெருமாளிடம் சென்று கதறினான்.

பெரிய பெருமாளும் விபீஷணனைத் தேற்றி, தாம் முன்பே காவிரிக்கு வரம் கொடுத்திருப்பதை அருளிச்செய்து, தனக்குக் காவிரி தீரத்தில் தங்க விருப்பமென்றும், விபீஷணனுக்கு இலங்கை அரசினையும், அளவில்லாத செல் வத்தையும், நீண்ட ஆயுளையும் ஸ்ரீராமன் கொடுத்திருப்பதால், அவைகளைப் பரிபாலித்துக் கொண்டு வரும்படி நியமித்து, தான் தெற்கு முகமாய் நோக்கி இலங்கையை எப்பொழுதும் கடாக்ஷித்து விபீஷணனுக்குச் சேவைசாதிப்பதாகச் சொல்லித் தேற்றி விபீஷணனுக்கு விடை கொடுத்தார். விபீஷணனும் தண்டனிட்டு விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான். அதுமுதல் தர்மவர்மா திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளைச் சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தான். அதற்கனுகூலமாக திருமதிள் கோபுரம், திருவீதிகள், மண்டபங்களும் கட்டிவைத்து, வெகுகாலம் ஆராதித்து மோக்ஷமடைந்தார்.

இவ்வாறு பெரிய பெருமாள் “திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப்பள்ளி கொண்டிருக்கிற” வைபவத்தை ஆழ்வார்கள் பதின்மரும் 247 பாசுரங்களாலே மங்களாஸாசனம் செய்துள்ளனர்.

1. பொய்கையாழ்வார்

(முதல் திருவாந்தாதி)

பொய்கையாழ்வார் ஒரு பாசுரத்தால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

2. பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் தம்முடைய இரண்டாம் திருவந்தாதி 28, 46, 70 மற்றும் 88 ஆகிய 4 பாசுரங்களில் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

3. பேயாழ்வார்

பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதி 61, மற்றும் 62 ஆகிய 2 பாசுரங்களில் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

4. திருமழிசை ஆழ்வார்

திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்கள்  இரண்டு. அவை முறையே திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியன. இவற்றுள் திருச்சந்தவிருத்தம் முதலாயிரத்திலும், நான்முகன் திருவந்தாதி மூன்றாம் ஆயிரத்திலும் இடம்பெற்றுள்ளன. திருச்சந்த விருத்தம் 21, 49, 50, 51, 52, 53, 54, 55, 93, 119, நான்முகன் திருவந்தாதி 3, 30, 36, 60 ஆகிய 14 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

5. நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவிருத்தம் 1, திருவாய்மொழி 11, ஆக 12 பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

6. குலசேகராழ்வார்

குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

7. பெரியாழ்வார்

பெரியாழ்வார், பெரியாழ்வார் திருமொழியில் 35 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

8. சூடிக்கொடுத்த நாச்சியார்

சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியில் 10 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

9. தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை 45 பாசுரங்களிலும், திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்களாலும் மொத்தம் 55 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

10. திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் 10 பாசுரங்களால்  திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

11. திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 73 பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார்.*****

——————————-

சித்திரை விருப்பன் திருநாள்-1
1) சிருங்கேரி மடத்தைச் சார்ந்தவரான மாதவவித்யாரண்யர் என்பவரின் அருளாசியுடன் கி.பி. 1336ஆம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யம் துங்கபத்ரா நதிக்கரையில் நிறுவப்பட்டது. அதன் தலைநகரமாக ஹம்பி விளங்கியது.
2) விஜயநகரசாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர்கள் சங்கமனுடைய இரு குமாரர்களான முதலாம் ஹரிஹரரும், புக்கரும் ஆவர். புக்கரின் புதல்வர்களில் ஒருவர் வீரகம்பண்ண உடையார்.
3) இந்த வீர கம்பண்ண உடையாரே, செஞ்சி மன்னனான கோணார்யன், சாளுவ மங்கு ஆகியோருடைய உதவியுடன் அழகிய மணவாளனை (கி.பி. 1371ஆம் ஆண்டு) பரீதாபி ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் நாள் 48ஆண்டுகள் கழிந்து மீண்டும் ப்ரதிஷ்டை செய்தான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு ( அ.கீ. Nணி. 55/1892) ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
4) அழகிய மணவாளன் ‘நம்பெருமாள்’ என்ற சிறப்புத்திருநாமத்தைப் பெற்றது கி.பி.1371ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்தத் திருநாமம் ஈரங்கொல்லி என்று அழைக்கப்படும் ஒரு வண்ணானால் அளிக்கப்பட்டது.
5) முதலாம் புக்கரின் பேரனும் 2ஆம் ஹரிஹர ராயரின் மகனும், ராம பூபதியின் பெண் வயிற்றுப் பேரனுமாகிய விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையார் நம்பெருமானால் மீண்டும் ப்ரதிஷ்டை கண்டருளிய ரேவதி நக்ஷத்ரத்தில் திருத்தேர் உத்ஸவம் ஏற்படுத்தி வைத்தான்.
6) இந்த விருபாக்ஷன் எனப்படும் விருப்பண்ண உடையாரின் வளர்ப்புத்தாயான கண்ணாத்தை என்பாள் இந்த உத்ஸவம் நடைபெறுவதற்கு பொற்காசுகள் தந்தமை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.
7) கி.பி. 1371ஆம் ஆண்டு அழகிய மணவாளன் ஆஸ்தானம் திரும்பிய போதிலும் ப்ரணவாகார விமானமும் பெரும் பாலான மண்டபங்களும் கோபுரங்களும் பாழ்பட்ட நிலையில் காணப்பட்டன. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், குறுநில மன்னர்கள், படைத்தளபதிகள் ஆகியோருடைய உதவி கொண்டு இந்தக் கோயிலை மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கு 12 ஆண்டுகள் ஆயின.
8) கர்ப்பக்ருஹமும் மற்றைய மண்டபங்களும் பாழ்பட்ட நிலையில் இருந்ததால் அவற்றையெல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (கி.பி. 1377) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு சீரமைக்கப்பெற்று கி.பி. 1383இல் 60 ஆண்டுகளுக்குப்பின் நம்பெருமாள் உத்ஸவம் கண்டருளினார்.
9) கி.பி. 1383ஆம் ஆண்டுதான் 60 ஆண்டுகளுக்குப்பிறகு பெரியதொரு விழாவான விருப்பந்திருநாள் கி.பி. 1383ஆம் ஆண்டு மே மாதம் அதாவது சித்திரை மாதத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
10) தேவஸ்தான நிதிநிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாலும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு விழா நடைபெற இருப்பதாலும் திருவரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் உள்ள அனைவரும் தம்மால் இயன்ற தானியங்களையும், மாடு போன்ற விலங்கினங்களையும் தானமாகக் கோயிலுக்குத் தந்துதவ வேண்டுகோளின்படி பல மண்டலங்களிலிருந்த பாமர மக்கள் தங்களுடைய விளைபொருள்கள், பசுமாடுகள் ஆகியவற்றைத் தானமாகத் தர முற்பட்டனர்.
11) அதன் தொடர்ச்சியாகத்தான் நம்மால் “கோவிந்தா கூட்டம்” என்று அழைக்கப்படும் பாமர மக்கள் இன்றும் பல்வேறு  வகைப்பட்ட தான்யங்களையும் பசுமாடுகளையும் திருவரங்கநாதனுக்கு ஸமர்ப்பித்து வருகின்றனர்.
12)  கோயிலைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. மேலும் விருப்பண்ண உடையார் 52 கிராமங்களை திருவிடையாட்டமாகத் தந்தார். அவருடன் வந்த குண்டு ஸாளுவையர் நம்பெருமாள் கொடியேற்றத்தின்போது எழுந்தருளும் மண்டபமாகிய வெண்கலத் திருத்தேர்த்தட்டினைப் பண்ணுவித்தார்.
13) தற்போது இந்த இடத்தில் மரத்தினாலான மண்டபமே உள்ளது. ஆயினும் வழக்கத்தில் கொடி யேற்றத்தின்போது நம்பெருமாள் எழுந்தருளும் இந்த மண்டபத்திற்கு வெண்கலத் தேர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
14) இந்த விழாவில் கொடியேற்றத் திருநாளன்று (03.05.2010 திங்கட்கிழமை விடியற்காலை) கோயில் கணக்குப்பிள்ளை நம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் கிராமத்தை குத்தகைக்கு விட்டதாகப் பட்டயம் எழுதுதல் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
15) மேலும் சக்கிலியர்களில் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ஒருவர் பெரியபெருமாளுக்கு வலது காலணியையும், மற்றொருவர் இடதுகாலணியையும் கோயில் கொட்டாரத்தில் கொண்டு வந்து சேர்ப்பர்.
16) வலது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் இடது காலணியைக் கொண்டு வருபவர்க்கும் எவ்விதத் தொடர்பும் இருக்காது. அவரவர்களுக்குப் பெரியபெருமாள் காட்டிக் கொடுத்த அளவில் காலணியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

———-

நித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவிதப் புஷ்பங்களை ஏராளமாகப் பரப்பி அதன் மேல் நின்றவாறே கந்தாடை ராமானுசனுக்கும் (தற்போது இந்தப் பட்டத்தை யாரும் அலங்கரிக்கவில்லை) சாத்தாதவர்களுக்கும் ஸேவை மரியாதைகளை அனுக்ரஹிப் பார். நம்பெருமாள் யாகசாலை எழுந்தருளியதும் திருவாரா தனம். இங்கு வேதபாராயணம் பண்ணும் பாத்தியமுள்ள தென்கலையார் வந்து பாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும். பவித்திரோத்ஸவம் நித்திய பூஜா லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்கிய பாத்தியத் துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கும். 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடா மல் நடந்து கொண்டிருக்கும்.
முதலில் நாராயண உபநிஷத்து தொடங்கிப் பிறகு சந்தோமித்ர;,(சரிபார்க்க) அம்பஸ்ய பாரே என்ற உபநிஷத்து பாகமும் அச்சித்ர அச்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும். திருவாராதனம் ஆனபிறகு திருமஞ்சனமும் தளிகை நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும். ரக்ஷா பந்தனமாகி உத்ஸவருக்கெதிரே வேதபாராயணத்துடன் பவித்திரப் பிரதிஷ்டையாகும். பவித்திரத்தை ஸ்வஸ்தி வாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும், பிறகு எல்லா மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும். தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார். பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும் திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில் அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம் —

October 27, 2022

ஸ்ரீ ரெங்கம் கோயில் நிர்வாஹகராயும் ரக்ஷகராயும் இருந்தருளிய ஸ்ரீ உத்தம நம்பி வம்ச ப்ரபாவம்

ஸ்ரீ உத்தம நம்பி பரம்பரைக்கு கூடஸ்தர் ஸ்ரீ பெரிய திருவடி ஐயன் உத்தம நம்ப ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருப்பேரானார்
ஸ்ரீ பெரியாழ்வார் முதல் 90 தலைமுறையில் இருந்த உத்தம நம்பிகளின் வைபவம் காணப்படுகிறது

பெரியாழ்வார் தம்முடைய திரு மகளாரான ஆண்டாளை ஸ்ரீ ரெங்கநாதனுக்கு பாணி கிரஹணம் பண்ணிக் கொடுத்து
ஸ்ரீ ராமாண்டார் என்னும் திருக்குமாரரும் தாமுமாக அவளை திரு ஆபாரணங்கள் முதலிய வரிசைகளுடன் ஸ்ரீ கோயிலிலே கொண்டு விட
அவள் பெரிய பெருமாள் திருவடிகளில் ஐக்கியமாக –பெரிய பெருமாள் திரு உள்ளம் உகந்து அவளது ஐயரான பெரியாழ்வாரை ஐயன் என்றும்
அவரது திருக் குமாரரான ராமாண்டானை பிள்ளை ஐயன் என்றும் அருளப்பாடிட்டு அழைத்து தீர்த்தம் பறியாட்டங்களை ப்ரஸாதித்து அருளி
தம்முடைய ஆதீனங்களை நிர்வஹித்துக் கொண்டு சொத்துக்களுக்கு எல்லாம் கருட முத்ரை இடச்சொல்லி ஸ்ரீ ரெங்கத்திலேயே நித்ய வாஸம் பண்ணும்படி நியமித்து அருளினார் –

பெரியாழ்வார் பெரிய திருவடி நாயனார் குலத்திலே முகுந்த பட்டருக்கு திருக்குமாரராக
கலி பிறந்த 46 மேல் செல்லா நின்ற க்ரோதன நாம ஸம்வத்சரத்திலே -ஆனி மாஸம் -9 தேதி ஸ்வாதி திரு நக்ஷரத்திலே திரு அவதரித்தார்
கலி -105-ஸம்வத்ஸரத்தில் -அரங்கன் ஆண்டாள் திருக்கல்யாணம் -அதுக்கு எழுந்து அருளப் பண்ணி வந்த
பெரிய திருவடியும் ஆண்டாளும் அரங்கனுக்கு சேர்ந்தே இன்றும் ஸேவை ஸாதித்து அருளுகிறார்
ஆகவே தான் கருட முத்ரை இலச்சினை செய்ய அரங்கன் அருளிச் செய்தார்
இன்றும் கோயில் கருவூல அறைக்கும் திரு ஆபரண பெட்டிகளுக்கும் உத்தம நம்பியை முத்ர அதிகாரியாக்கி கருட முத்ரையே வைக்கப்படுகிறது

பெரியாழ்வார் திருக்குமாரரான ராமாண்டரான பிள்ளை ஐயன் அவர்களின் திருக்குமாரர் பெரிய திருவடி ஐயன் –
இவரைப் பெருமாள் உத்தம நம்பிள்ளை என்று அருளப்பாடிட்டு அழைத்தார்
பிள்ளை ஐயன் திருக்குமாரரான உத்தம நம்பிள்ளைக்கு -பிள்ளை ஐயன் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
அவரது திரு மாளிகை ஐயன் திருமாளிகை என்று வழங்கப்பட்டு வருகிறது –

———————————

வம்ஸ பரம்பரை

1-பெரியாழ்வார் -ஐயன் -110 வருஷங்கள்
2-ராமாண்டார் -பிள்ளை ஐயன் -70 வருஷங்கள்
3-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பிள்ளை -(1)-பிள்ளை ஐயன் உத்தம நம்பி-60 வருஷங்கள்
4-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்களுக்கு 4 மாதங்களும் 16 நாள்களும்
5-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(2)-65-வருஷங்கள்

6-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(1)-50 வருஷங்கள்
7-பெரிய ஐயன் உத்தம நம்பி -(1)-40 வருஷங்கள் 2 மாதங்கள் -14 நாள்கள்
8-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(3)-50 வருஷங்கள்
9-சின்ன ஐயன் உத்தம நம்பி -(1)-69- வருஷங்கள்
10-அநந்த ஐயன் உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்

11-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
12-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(1)-70-வருஷங்கள்
13- வரதராஜ உத்தம நம்பி -(1)-60 வருஷங்கள் -1 மாதம் -15-நாள்கள்
14-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(3)-60-வருஷங்கள்
15-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்

16-பெரிய ஐயன் உத்தம நம்பி -(2)-50-வருஷங்கள்
17-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-99-வருஷங்கள்
18-அநந்த ஐயன் உத்தம நம்பி -(2)-70-வருஷங்கள்
19-ஸ்ரீ ரெங்க ராஜ உத்தம நம்பி -(1)-60-வருஷங்கள்
20-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி -(3)-56-வருஷங்கள் -3 மாதங்கள் -3 நாள்கள்

21-வரதராஜ உத்தம நம்பி -(2)-57-வருஷங்கள்
22-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி -(2)-67-வருஷங்கள்
23-அநந்த ஐயன் உத்தம நம்பி -(3)-62-வருஷங்கள்
24-சின்ன ஐயன் உத்தம நம்பி -(2)-59-வருஷங்கள்
25-திருமலை நாத உத்தம நம்பி -(1)-65-வருஷங்கள்

26-முத்து ஐயன் உத்தம நம்பி என்கிற ரெங்கராஜ உத்தம நம்பி -(2)56-வருஷங்கள்
27-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி -(1)-70 வருஷங்கள்
28-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி -(3)-66-வருஷங்கள்
29-வரதராஜ உத்தம நம்பி -(3)-59 வருஷங்கள் -ஐந்து மாதங்கள் 4 நாள்கள்
30-அநந்த ஐயன் உத்தம நம்பி -(4)-55 வருஷங்கள்

31-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி -(3)-65 வருஷங்கள்
32-பெரிய பெருமாள் உத்தம நம்பி -70 வருஷங்கள் -9 மாதங்கள் -25 நாள்கள்
33-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி -(4)-60 வருஷங்கள்
34-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி -(4)-61 வர்ஷன்கள் -7 மாதங்கள் -1 நாள்
35-ரகுநாத உத்தம நம்பி -(1)-55 வருஷங்கள் -3 மாதங்கள் -12 நாள்கள்

36-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி -(1)-53 வருஷங்கள் -2 மாதங்கள்
37-அனந்த ஐயன் உத்தம நம்பி -5-60 வருஷங்கள்
38-வரதராஜ உத்தம நம்பி–(4-)49 வருஷங்கள்
39- ஸ்ரீ ரெங்க உத்தம நம்பி -61- வருஷங்கள் -3 மாதங்கள் -9 நாள்கள்
40-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி -(1)-61 வருஷங்கள்

41-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி -(1)-57 வருஷங்கள் -2 மாதங்கள் -8 நாள்கள்
42-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (5)–30 வருஷங்கள்
43-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (5)–44 வருஷங்கள்
44-ஸ்ரீ ரெங்கராஜ உத்தம நம்பி (4)–30 வருஷங்கள் 3 மாதங்கள் 3 நாள்கள்
45-திருமலை நாதன் ஐயன் உத்தம நம்பி (4)-40 வருஷங்கள்

46-குமார வரதராஜ ஐயன் உத்தம நம்பி (5)-50 வருஷங்கள் -9 மாதங்கள் –
47-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (2 )-49 வருஷங்கள்
48-ரெங்கநாத உத்தம நம்பி (5)–59 வருஷங்கள்
49-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (2)-42 வருஷங்கள் -6 மாதங்கள் -9 நாள்கள்
50-பெருமாள் ஐயன் உத்தம நம்பி -58 வருஷங்கள் -3 மாதங்கள் -13 நாள்கள்

51-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (6) –47 வருஷங்கள் -2 மாதங்கள் -5 நாள்கள்
52-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (@) 49 வருஷங்கள்
53-திருமலை நாத ஐயன் உத்தம நம்பி (5) 56 வருஷங்கள் நான்கு மாதங்கள் 7 நாள்கள்
54-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (3) 57 வருஷங்கள்
55-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (6)-37 வருஷங்கள் 10 மாதங்கள்

56-திருவடி ஐயன் உத்தம நம்பி -62 வருஷங்கள்
57-சொல் நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (7)-53 வருஷம் -237 நாள்கள்
58-சின்ன ஐயன் உத்தம நம்பி (3)-37 வருஷங்கள்
59-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (7)-49 வருஷங்கள்
60-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (4) 61 வருஷங்கள் 2 மாதங்கள் 3 நாள்கள் –

61-ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (3) 55 வருஷங்கள்
62-ரகுநாத உத்தம நம்பி (2) 38 வருஷங்கள்
63-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (8) 50 வருஷங்கள்
64-கோவிந்த ஐயன் உத்தம நம்பி -39 வருஷங்கள்
65-தெய்வ சிகாமணி ஐயன் உத்தம நம்பி (2) 66 வருஷங்கள் 3 மாதங்கள் 7 நாள்கள்

66-வரதராஜ உத்தம நம்பி (6)–59 வருஷங்கள்
67-ஸ்ரீ ரெங்க நாத உத்தம நம்பி (9) 50 வருஷங்கள்
68-அநந்த ஐயன் உத்தம நம்பி (6) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 10 நாள்கள்
69-கிருஷ்ண ஐயன் உத்தம நம்பி (3) 56 வருஷங்கள் 2 மாதங்கள் 17 நாள்கள்
70-பெரிய ஐயன் உத்தம நம்பி (3)60 வருஷங்கள்

71-ஸ்ரீ ரெங்கநாத உத்தம நம்பி (10)-52 வருஷங்கள்
72-திருவேங்கட நாத ஐயன் உத்தம நம்பி (5)63 வருஷங்கள்
73-பெரிய ஐயன் உத்தம நம்பி (5) 67 வருஷங்கள் 1 மாதம் 1 நாள்
74-மஹா கவி ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி (4)-கருட வாஹந பண்டிதர் -கவி வைத்ய புரந்தரர் -69 வருஷங்கள்
75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (1)43 வருஷங்கள்

76-வரதாச்சார்ய உத்தம நம்பி –40 வருஷங்கள்
77-ராமாநுஜர்சார்ய உத்தம நம்பி -53 வருஷங்கள் இ மாதம் 7 நாள்கள்
78-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (1)-31 வருஷங்கள்
79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ண ராய உத்தம நம்பி –79 வருஷங்கள்
80-வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்கிற ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி(2) -68 வருஷங்கள்

81-ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி -72 வருஷங்கள்
82-திருமலை நாத உத்தம நம்பி (2) 67 வருஷங்கள்
83-குடல் சாரவாளா நாயனார் என்கிற சின்ன க்ருஷ்ணராய உத்தம நம்பி –52 வருஷங்கள் 1 மாதம் 8 நாள்கள்
84-பெரிய திருவடி ஐயன் உத்தம நம்பி (6) 53 வருஷங்கள்
85-குழந்தை ஐயன் ஸ்ரீ ரெங்கராஜா உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்

86-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (2) 40 வருஷங்கள்
87-நம்பெருமாள் ஐயன் உத்தம நம்பி (8) 45 வருஷங்கள் 7 மாதங்கள்
88-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி (3)
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி (3) 18 வருஷங்கள்
90-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -ஸ்வீ காரம்

91- உத்தம நம்பி ஸ்ரீ நிவாசார்யர்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யர்
93-உத்தம நம்பி தாதாச்சாரியர்
94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்

——————-

இவர்கள் செய்து அருளின கைங்கர்யங்கள்-

3-முதல் முதலாக ஸ்ரீ ரெங்க ஸ்ரீ நிர்வாஹம்
4- தேவராஜ மஹா ராஜர் மூலமாய் -முத்துக்குடை தங்க ஸிம்ஹாஸனம் போன்றவை சமர்ப்பித்தார்
11- நவரத்ன அங்கி சமர்ப்பித்தார்
13– நவரத்ன கிரீடம் சமர்ப்பித்தார்
15- தங்க வட்டில்கள் சமர்ப்பித்தார்
21- வெள்ளிக்குடம் சமர்ப்பித்தார்
27- கோபுர மண்டப பிரகார ஜீரண உத்தாரணம் பண்ணினார்
28- ஸ்தலத்துக்கு வந்த இடையூறுகளைத் தீர்த்தார்
35-த்வஜ ஆரோஹண மண்டப ஜீரண உத்தாரணம் பண்ணினார்
39- திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
47-திரு ஆபரணங்கள் சமர்ப்பித்தார்
54- பெருமாள் உபய நாச்சிமார்களுக்கு தங்கக் கவசங்கள் கிரீடங்கள் சமர்ப்பித்தார்
ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கும் கவசம் கிரீடம் சமர்ப்பித்தார்

57-இவர் காலத்தில் தேசாதிபதியான பிரபு ஸ்ரீ ரெங்க நாச்சியாரைத் திரு வீதி எழுந்து அருளப் பண்ணி உத்சவம் நடத்த வேணும் என்று சொல்ல
இவர் கூடாது என்ன
பிரபுவும் அப்படியே நடத்த வேணும் என்று பலவந்தம் பண்ண
கழுத்தை அறுத்துக் கொண்டார்
உடனே தாயார் அர்ச்சக முகேந ஆவேசமாகி தமக்கு விருப்பம் இல்லாமையை அறிவித்து தடை செய்தாள்
நாச்சியாரால் இவரது சொல் நிலை நாட்டப்பட்டது படியே இவருக்கு இது பட்டப்பெயர் ஆயிற்று

63- நாச்சியார் கோயில் சந்தன மண்டபம் முதலியவற்றை ஜீரண உத்தாரணம் பண்ணினார்
64- பெருமாள் சந்நிதி வாசலுக்கும் அதற்கு உட்பட்ட திரு அணுக்கன் திரு வாசலுக்கும் தங்கம் பூசவித்தார்
70-ஆதி சேக்ஷனுடைய சிரஸ் ஸூ க்களுக்கு தங்கக் கவசம் சமர்ப்பித்தார்

74- கருட வாஹந பண்டிதர்
இவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தவர்
ஸ்ரீ நிவாஸ உத்தம நம்பி இவர் திரு நாமம்
இவர் சிறந்த கவியாய் இருந்ததால் ஸ்ரீ நிவாஸ மஹா கவி என்றும்
சிறந்த வைத்தியராயும் இருந்ததால் கவி வைத்ய புரந்தரர் என்றும் சொல்லப் படுபவர்

உடையவரை பெரிய பெருமாள் நியமனப்படி எதிர்கொண்டு அழைத்து -வரிசைகளை சமர்ப்பித்தார்
அவருக்கு அந்தரங்க கைங்கர்ய பரராயும் இருந்தார்

இவரையே பெரிய பெருமாள் பெரிய அவஸர அக்கார அடிசிலை கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு கொண்டு கொடுக்க நியமித்து அருள
அதில் இரண்டு திரளை ஸ்வீ கரித்து ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ ராமப்பிள்ளையும் அவதரித்தார்கள்

முதலியாண்டான் தத்தியானத்துடன் நாவல் பழம் சமர்ப்பிக்க -இவரைக் கொண்டே தன்வந்திரி சாந்நித்தியை ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்

இவரே திவ்ய ஸூரி சரிதம் பிரசாதித்து அருளினார்

75-ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி

கருட வாகன பண்டிதருக்குப் பின்பு ஸ்ரீ ரெங்க ஸ்ரீ கார்யம் நிர்வஹித்தவர்-உடையவர் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது இவர் காலத்திலேயே –
உடையவர் இருக்கும் பொழுதே கருட வாஹந பண்டிதர் திரு நாட்டுக்கு எழுந்து அருளி விட்டார்
ஆகவே திவ்ய ஸூரி சரிதம் உடையவர் திரு நாட்டை அலங்கரித்தது பற்றிக் குறிப்பிட வில்லை
உடையவரின் சரம கைங்கர்யங்களை செய்தவர் இவரே

79-எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற கிருஷ்ண ராயர் உத்தம நம்பி

இவர் காலத்துக்கு முன் கி பி 1310 ல் மாலிக் கபூர் படை எடுத்து ஸ்ரீ ரெங்கத்தைப் பாழ் படுத்தினான் –
செஞ்சி ராஜா கொப்பண உடையார் திருமலையில் இருந்து எழுந்து அருளப்பண்ணி செஞ்சியிலேயே பூஜை பண்ணிக் கொண்டு இருந்தார்
கிபி 1371ல் இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜயநகர ராஜாவைக் கொண்டு துலுக்கப் படையை ஜெயித்து விரட்டிவிட்டு
விஜய நகர இரண்டாம் அரசரான புக்க ராயர் -அவரது குமாரரான ஹரிஹராயர் இருவரையும் ஸ்ரீ ரெங்கத்துக்கு அழைத்து வந்தார்
செஞ்சி ராஜா கொப்பண உடையாரும் இவருக்கு உதவியாய் இருந்து துலுக்கர்களை வென்று பெருமாளை ஸ்ரீ ரெங்கத்துக்கு எழுந்து அருளிப் பண்ணிக் கொண்டு வந்தார்
புக்கராயர் காலத்தில் கன்யாகுமரி வரை ராஜ்ஜியம் பரவி இருந்தது
சோழ பாண்டிய மன்னர்கள் இவருக்குக் கப்பம் செலுத்தி வந்தார்கள்

இந்த கிருஷ்ண ராய உத்தம நம்பியால் மேல் உள்ள அரசர்களால் தாராதத்தமாக 17000 பொன் தானம் பெற்று கோயிலுக்கு 106 கிராமங்கள் வாங்கப் பட்டன
மேலும் சகாப்தம் 1304-கிபி 1382-மேல் -ருதி ரோத்காரி வருஷம் முதல் ஈஸ்வர வருஷம் வரையில்
ஹரிஹர ராயர் மஹா ராயர் -விருப்பண உடையார் -கொப்பண உடையார் -முத்தய்ய தென்நாயகர் -தம்மண்ண உடையார் -பிரதானி சோமப்பர் -காரியத்துக்கு கடவ அண்ணார்
முதலானார்கள் இடம் 5000பொன் வாங்கி அதன் மூலம் 13 க்ராமங்கள் வாங்கப்பட்டன –
சகாப்தம் 1207-கிபி 1375-ல் திருவானைக் காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் எல்லைக் சண்டை உண்டாகி -விஜய நகர மன்னர் அறிந்து அவர் தம் குருவான வ்யாஸ உடையார் முதலானவர்களை மத்தியஸ்தம் பண்ண அனுப்பினார்
பெருமாளுக்கு ஸ்தான அதிபதியான உத்தம நம்பி ஈரப்பாவாடை உடுத்தி கையில் மழு ஏந்தி கண்ணைக் கட்டிக்கொண்டு எந்த வழி போகிறாரோ அந்த வழியே பெருமாளும் எழுந்து அருள வேண்டியது என்று மத்யஸ்த்தர்கள் நிச்சயித்தார்கள் –
திருவானைக்காவலாரும் அதை சம்மதிக்க அஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஜபித்துக் கொண்டு எல்லை ஓடியதால்
இவருக்கு எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்ற பட்டப்பெயர் ஆயிற்று
தான் எல்லை ஓடி நின்ற இடத்தில் 16 கால் மண்டபமும் இரண்டொரு சிறு மண்டபங்களும் இவர் கட்டி வைத்தார்
பெருமாள் நாச்சிமார்களுடைய ஒவ்வொரு உத்சவத்தின் கடைசி நாளில் இன்றைக்கும் திருத்தாழ்வாரை தாசர் விண்ணப்பம் செய்யும் திருப்பணிப்பு மாலையில் உத்தம நம்பிக்க ஏற்பட்ட
மல்ல நிலையிட்ட தோள் அரங்கேசர் மதிளுள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போல் அல்ல -நீதி தன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தம நம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கும் எட்டு எழுத்தே –என்ற பாசுரத்தில்
எல்லை நிலை இடுகைக்கு ஆதாரமாய் இருந்த அஷ்டாக்ஷரத்தின் சிறப்பும்
59 வது உத்தம நம்பி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அனுக்ரஹத்தால் தம்முடைய சொல்லை நிலையிட்ட விவரமும் தெரிகிறது

இப்போது உள்ள ஸ்ரீனிவாச நகர் பள்ளிக்கூடமே முன்பு 16 கால் மண்டபமாக இருந்த இடம் –
பங்குனி 8 நாள் எல்லைக்கரை நம்பெருமாள் எழுந்து அருளும் போது
இப்போதும் அங்கே வெறும் தரையில் உத்தம நம்பி ஐயங்கார் வ்யாஸ ராய மடத்தார் முதலானோர் பெற்றுக் கொள்கிறார்கள் –

இந்த கிருஷ்ணராய உத்தம நம்பி விஜய நகர அரசர் புக்க உடையார் உதவியுடன் துலா புருஷ மண்டபம் கட்டி வைத்தார்
ஹரிகர ராயர் விருப்பண்ண உடையார் துலா புருஷன் ஏறிக் கொடுத்த பொன்னைக் கொண்டு ரெங்க விமானத்தைப் பொன் மேய்ந்தார்
நம்பெருமாளும் அப்போது செஞ்சியில் இருந்து எழுந்து அருளினார்
விருப்பண்ண ராயர் பெயரில் சித்திரை திரு நாள் நடத்து வைத்து ரேவதியின் திருத்தேர் -செய்ததும் இந்த உத்தம நம்பியே

துலுக்கர் கலஹத்தில் யானை ஏற்று மண்டபம் ஜீரணமாக இந்த உத்தம நம்பி ஜீரண உதாரணம் பண்ணி வைத்தார்
யானை மேல் வைக்கப்படும் பூ மாங்குத்தி -என்ற புஷ்ப அங்குசம் உபஹார ஸ்ம்ருதியாக வாஹந புறப்பாடுக்குப் பின் இன்றும் உத்தம நம்பி பரம்பரையில் உள்ளாருக்கு அனுக்ரஹிக்கப் படுகிறது
இவர் ஹரிஹர ராயர் பேரால் திருப்பள்ளிக்கட்டில் என்னும் திவ்ய ஸிம்ஹாஸனம் சமர்ப்பித்தார்
இப்போதும் திருக் கார்த்திகை அன்று திருமுகப் பட்டயம் செல்லுகையில் –நாம் –ஹரிஹர ராயன் திருப் பள்ளிக் கட்டிலின் மேல் வீற்று இருந்து -என்றே பெருமாள் அருளிச் செய்கிறார்
இவர் கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டு 99 வருஷங்கள் இருந்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்

—————

80- வழி அடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பி என்னும் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் எல்லை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பியின் திருக்குமாரர்
சகாப்தம் -1329-கிபி 1406 மேல் ஸர்வஜித்து வருஷம் முதல் பிரமோதூத வருஷம் வரையில்
44 வருஷங்களில் நான்கு தடவை விஜய நகரம் சென்று பெருமாளுக்கு திருவிடையாட்ட கிராமங்கள் வாங்க -18000 பொண்ணுக்கு 101 கிராமங்கள் வாங்கினார்
இவர் காலத்தில் பெரிய ஜீயர் -மணவாள மா முனிகள் சன்யாசித்து கோயிலுக்கு எழுந்து அருள
பெருமாள் நியமனப்படி பல்லவ ராயன் மடத்தில் எழுந்து அருளப் பண்ணினார்
இவர் ஜீயருடைய வெள்ளை திருமேனியை தரிசித்து தேற மாட்டாமல் பெருமாளை சேவித்துப் பரவசராய் இருக்க
அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் அணையான் திருவனந்த ஆழ்வானைத் தொட்டுக் காட்டி
இவர் கிடீர் ஜீயராக அவதரித்து அருளினார் – அவர் வண்ணம் வெளுப்பு என்று விஸ் வசித்து இரும் என்று அருளிச் செய்தார்
இவரும் பீத பீதராய் கோயில் அன்னான் உடன் ஜீயர் இடம் சென்று தெண்டம் சமர்ப்பித்துப் பிரார்த்திக்க
அப்பொழுது சாதித்த சேவை இன்றும் ஒரு கம்பத்தில் மேற்கு முகமாக சித்திர ரூபமாகவும் இரண்டு பக்கமும் உத்தம நம்பியும் கோயில் அண்ணனும் எழுந்து அருளி உள்ளார்கள்

ஜீயரின் நியமனம் படி அண்ணனுக்கு ஆச்சார்ய புருஷ வரிசையாக பெரிய நம்பிக்குப் பிறகு தீர்த்தமும் -கந்தாடை அண்ணன் என்ற அருளப்பாடும் உத்தம நம்பியால் ஏற்பட்டது
திருக்கார்த்திகை அன்று ஆழ்வாருக்கு திருமுகப்பட்டயம் கொண்டு போகும் தழை யிடுவார் கைங்கர்யம் -தம்முடையதாய் இருந்ததை உத்தம நம்பி அண்ணனுக்கு கொடுத்தார்
பூர்வம் வல்லப தேவன் கட்டி வைத்த வெளி ஆண்டாள் சந்நிதியையு ம் -தம்முடையதாய் இருந்ததை -அண்ணனுக்கு கொடுத்தார்
இன்றும் அண்ணன் வம்சத்திலேயே இருந்து வருகிறது –

சகாப்தம் 1354-கிபி 1432-பரிதாபி வருஷம் -அனுமந்த தேவர் கோயில் -திருப்பாண் ஆழ்வார் உள்ள வீர ஹனுமான் கோயில் தக்ஷிண சமுத்ராதிபதி தென்நாயகன் கைங்கர்யமாக கட்டி வைத்தார்
கிபி 1434-திருவானைக்காவலுக்கும் ஸ்ரீ ரெங்கத்துக்கும் இடையில் மதிள் கட்டி வைத்தார்
இந்த உத்தம நம்பி காலம் வரையில் வசந்த உத்சவம் திருக்கைவேரிக்கரையிலே நடந்து வந்தது
ஒரு வைகாசியில் வெள்ள ப்ரவாஹத்தால் இது நடவாமல் போக கோயிலுக்கு உள்ளே ஒரு பெரிய குளம் வெட்டி -கெடாக் குழி – அதில் மய்ய மண்டபம் சுற்று மண்டபம் பெரிய மண்டபமும் போடுவித்து
இப்பொழுதும் அந்த வம்சத்தார் கைங்கர்யமாகவே நடைபெற்று வருகிறது
இவர் 68 திரு நக்ஷத்திரங்கள் எழுந்து அருளி இருந்தார்
தம்முடைய தம்பிக்கு சக்ர ராயர் பட்டப்பெயர் வாங்கிக் கொடுத்து தனியாக அவருக்கு ஆதீனம் மரியாதை ஏற்படுத்தினார்

————-

பூ சக்ர ராயர்
சக்ர ராயருடைய பாண்டித்யத்துக்கு ஏற்க பூ மண்டலத்துக்கே ராயர் என்னும் படி பூ சக்ர ராயர் என்று முடி சூட்டி ஸ்ரீ ரெங்கத்தில் தனி ஆதீனமும் உண்டாக்கினார் அரசர்
பிள்ளை ஐயன் என்ற பேராய இருந்த உத்தம நம்பி கோசம் இவர் காலத்துக்குப் பின்னர் இரண்டாக்கப் பிரிந்து பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -என்று தேவ ஸ்தான கணக்குகளில் முறை வீதம் இரண்டாக இன்றைக்கும் எழுதப்படுகிறது –

சகாப்தம் 1337-கிபி 1415-மன்மத வருஷத்தில் -பெரிய திரு மண்டபத்தில் -கருட மண்டபத்தில் -கருடன் கலஹத்தில் பின்னமான படியால்
அழகிய மணவாளன் திரு மண்டபத்தில் சந்நிதி கருடனை ஏறி அருளப் பண்ணினார்
மன்மத வருஷே ஜ்யேஷ்ட்ட்டே ரவி வாரசே ரேவதீ தாரே
ஸ்ரீ சக்ர ராய விபுநா ஸ்ரீ மான் கருட ப்ரதிஷ்டிதோ பூத்யை -என்று தர்மவர்மா திரு வீதியிலே இந்த வ்ருத்தாந்தம் சிலா லிகிதம் பண்ணப்பட்டது –

பூர்வம் சோழன் ப்ரதிஷ்டையான சக்ரவர்த்தி திரு மகனையும் ஜீரண உத்தாரணம் பண்ணி வைத்து
அதிலே உள்ளாண்டாள் நாச்சியார் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் – ப்ரதிஷ்டிப்பித்து அருளினார்-

————

திம்மணார்யர்
இவரும் வழி யடிமை நிலையிட்ட பெருமாள் உத்தம நம்பிக்கு திருத்தம்பி
இவர் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஸ்ரீ ராமானுஜ பீடமான ஸ்ரீ ரெங்க நாராயண ஜீயர் பட்டத்தில் எழுந்து அருளி இருந்தார் –

————

51- ராஜாக்கள் பெருமாள் உத்தம நம்பி என்கிற கிருஷ்ணமாச்சார்ய உத்தம நம்பி
இவர் நிர்வஹித்த காலத்தில் பங்குனி ஆதி ப்ரஹ்ம உத்சவம் 3 நாள் ஜீயர் புரத்துக்குப் போக வர குதிரை வாஹனம் ஏற்பட்டு இருந்தது
மழை பெய்ததால் மேல் உத்தர வீதியில் உத்தம நம்பி திருமாளிகையிலே நம் பெருமாள் எழுந்து அருளி இருந்தார்
ஆ வ்ருஷ்டி பாத விரதே -மழை ஓயும் வரையிலே –
இனி தூர புறப்பாட்டுக்கு வாஹனம் கூடாது என்றும் பல்லக்கு தான் உசிதம் என்றும் ஏற்பாடு செய்தார்
இவரே நான்கு பக்கங்களிலும் நான்கு நூற்று கால் மண்டபங்களைக் கட்டி வைத்தார்
அக்னி மூலையிலே ஸ்ரீ பண்டாரம் -நைருதியில் கொட்டாரம் -வாயுவில் முதல் ஆழ்வார் வாஸூ தேவன் சந்நிதி -ஈஸான்யத்தில் ராமர் சந்நிதி கட்டப் பட்டன
இந்தக் கைங்கர்யத்தை பெரிதும் உகந்து -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று அவருக்குப் பட்டப்பெயரும் அருளினார்
அத்யயன உத்சவ மேலப்படி மரியாதை உத்தம நம்பிக்கு நடக்கையில் இந்த அருளப்பாடு வழங்குகிறது

இவ்வாறு பல கைங்கர்யங்களையும் பண்ணிக் கொண்டு 72 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார்

———–

82- திருமலை நாத உத்தம நம்பி
இவர் லஷ்மீ காவ்யம் அருளிச் செய்துள்ளார்
பெரிய திரு மண்டபத்துக்கு கிழக்கே கிளி மண்டபம் என்னும் நூற்றுக் கால் மண்டபம்
இவரது முன்னோர் 81 உத்தம நம்பி தொடங்கியதை பூர்த்தி செய்தவராவார் –
இதில் ஜ்யேஷ்டாபிஷேகமும் ஸஹஸ்ர கலச அபிஷேகமும் -பகிரங்கமாக நடைபெற்று வந்தது
இப்பொழுது பரம ஏகாந்தமாய் விமான ப்ரதக்ஷிணத்தில் நடைபெறுகிறது
ப்ரஹ்ம உத்சவம் 8 திரு நாள் எல்லைத்த திருநாளாகவே நடைபெறுகிறது
இவர் 37 திரு நக்ஷத்ரம் எழுந்து அருளி இருந்தார் –

————–

83-குடல் சார வாளா நாயனார் என்கிற சின்ன கிருஷ்ண ராய உத்தம நம்பி
இவர் கோயில் நிர்வகிக்கும் பொழுது கர்ணாடக நாயகர்கள் மதுரையில் அரசாண்டு இருந்தார்கள்
1534-ஜய வருஷத்தில் ஷாமம் வரவே கோயில் திருக்கொட்டாரத்தில் இருக்கும் நெல்லைக்கு கொடுக்க கேட்டார்கள்
உத்தம நம்பி -அரங்கன் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது என்று ஹிதம் சொல்லியும் நாயகர் பலவந்தம் பண்ணினார்
நீர் கூடை பிடித்தால் நான் மரக்கால் பிடித்து அளக்கிறேன் என்று சொல்லி
முதல் மரக்காலுக்கு திருவரங்கம் என்று அளந்து மறு மரக்காலுக்கு -பெரிய கோயில் -என்று சொல்லி
தம் குடலை அளந்து பிராண தியாகம் பண்ணினார்
ராஜாவும் வெளியே வந்து -குடல் சாரா வாளா நாயனார் -என்ற பட்டம் சூட்டினார்
அது முதல் வேறே காரியங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நிஷ்கர்ஷம் ஆயிற்று
த்ரவ்யம் அளக்கும் பொழுதும் திருவரங்கம் -பெரிய கோயில் -மூன்று என்று சொல்லியே அளக்கும் வழக்கமும் வந்தது
கூர நாராயண ஜீயர் பிரதிஷ்டை செய்த செங்கமல வல்லித்தாயார் -தான்ய லஷ்மி எழுந்து அருளி இருக்கும் திரு மதிள் கட்டினார்
இவர் 32 திருநக்ஷத்ரம் 1 மாதம் 8 நாள்களுக்குப் பின் திருநாட்டை அலங்கரித்தார் –

——————

86- ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
கிபி 1662-1692- வரை ஆண்ட நாயக்கர்களின் ஏழாமவரான கர்ணாடக ஷோக்கா நாத நாயகர் பெருமாள் உத்சவங்களுக்காக பல கிராமங்களை சமர்ப்பித்து தம்மை ஆசீர்வதிக்க சாசனம் இவருக்கு தெலுங்கில் எழுதிக் கொடுத்தாட்ர்

————

88- ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி
இவர் காலத்தில் ஸ்ரீ ரெங்கம் மஹாராஷ்டிரர்களுக்கு அதீனமாயிற்று -திருச்சியில் முராரிராவ் நீதி செலுத்தி வந்தார்
கிபி 1748க்கு மேல் திருச்சிராப்பள்ளி நவாப் ஷீரஸ்வதீன் தேவுல்லா மஹம் மதலிகான் பஹதூர் வசமாயிற்று

———–
89-ஸ்ரீ நிவாசார்ய உத்தம நம்பி
இவர் ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பியின் திருக்குமாரர் –
இவர் நிர்வாகத்துக்கு வரும் பொழுது அதி பால்யமாய் இருந்தார்
அப்போது அமீர் முறாம் பகதூர் நவாப் நிர்வாகத்துக்கு ஒரு அமுல்தாரனையும் நியமித்தார்

18 திரு நக்ஷத்ரத்திலேயே இவர் ஆச்சார்யர் திருவடி சேர ஸ்வீ காரம் மூலம் 90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பி நிர்வாஹத்துக்கு வர
அப்பொழுது ஆங்கிலேயர் வசமாயிற்று

இவர் நிர்வாகத்துக்கு வந்த பின்னர் அவருடைய தாயாதியான சக்ரராய ஸ்ரீ ரெங்க ராஜருக்கும் விவாதம் உண்டாகி நியாய ஸ்தலம் போக வேண்டிற்று
அதுக்கும் மேலே 1830க்கு மேல் உத்தம நம்பி திரு மாளிகையில் தீப்பற்றி ஓரந்தங்களும் சொத்துக்களை பற்றிய ஆவணங்களும் எரிந்து போயின
இவ்வாறு பல காணி பூமி சந்நிதி மிராசுகளை இழக்க வேண்டிற்று
இவ்விதமாக குடும்பம் சோர்வுற்றது
1842 வரை சர்க்கார் நிர்வாகத்திலே கோயில் இருக்க பரம்பரை தர்மகர்த்தாவாக 90 உத்தம நம்பி நியமிக்கப் பட்டார்
1859 திரு நாடு எழுந்து அருளினார்

90 ஸ்ரீ ரெங்காச்சார்ய உத்தம நம்பிக்கு ஐந்து திருக் குமாரர்கள்
ஜ்யேஷ்டர் சிங்கு ஐயங்கார்
இவர் சந்ததி விருத்தி யாகவில்லை
இவர் தம்பி உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர் -உத்தம நம்பி ரெங்க ஸ்வாமி ஐயங்கார் சந்ததியார்களே இப்பொழுது உள்ளார்கள்

91-உத்தம நம்பி நரசிம்ஹாச்சார்யர்–1872 திருநாடு அலங்கரித்தார்
92-உத்தம நம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார் -67 திரு நக்ஷத்திரங்கள்
92-உத்தம நம்பி தாத்தாச்சாரியார் -61 திரு நக்ஷத்திரங்கள்

94-உத்தம நம்பி சடகோபாச்சார்யர்
1898-கார்த்திகை பூரம் ஜனனம்
93-உத்தம நம்பி தாதாச்சார்யருக்கு சந்ததி இல்லாமையால் இவர் 1903 ஸ்வீ காரம்
தர்ம கர்த்தாவாக ஆறு தடவை 1924 முதல் 1949 வரை இருந்தார்
இவர் திருத்தமையானாரான ஸ்ரீ நரஸிம்ஹா சார்யர் இந்த வம்சப் ப்ரபாவம் அருளிச் செய்துள்ளார்

அத்யயன உத்சவம் இராப்பத்தில் மேலப்படியில் -உத்தம நம்பிள்ளை -பிள்ளை ஐயன் -சக்ர ராயர் -பெருமாள் சாமந்தர் -அரங்கர் சாமந்தர் -என்று
அருளப்பாடு சாதித்து தொங்கு பட்டு பரிவட்டம் சாதிக்கப்படுகிறது

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உத்தம நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நம்பெருமாள் -பன்னிரு நாச்சிமார் பரவும் பெருமாள் –

October 1, 2022

1- ஸ்ரீ வக்ஷஸ்தல மஹா லஷ்மி

வெள்ளிக்கிழமை தோறும் ஏகாந்த பட்டர் திருமஞ்சனம் செய்ய கோயில் ஜீயர் பட்டருக்கு சாமரம் வீசுவார்

2-3- உபய நாச்சிமார்கள் -ஸ்ரீ தேவி பூ தேவி

ஸ்ரீ ரெங்கத்திலே மட்டும் உபய நாச்சியாரும் ஆண்டாளும் பன்னிரண்டு தாயார்களும் அமர்ந்த திருக்கோலம்
நின்று அனுபவிக்க முடியாத எழில் அழகர் அன்றோ நம்பெருமாள்-

4- கருவூல நாச்சியார்

பிரகாரத்தில் கோயில் கருவூலத்தை ஒட்டி இருக்கும் சந்நிதி கருவூலம்
ஆபரணங்கள் பாத்திரங்கள் கணக்கு வழக்குகளை ரக்ஷித்து அருளும் தாயார்
திருக்கார்த்திகை அன்று பக்கத்து வீடு உத்தம நம்பி பெரிய சந்நிதியில் இருந்து விளக்கு எடுத்துப் போய் இங்கும் ஏற்றப்படுகிறது

5-ஸ்ரீ சேர குல வல்லித்தாயார்

அர்ஜுனன் மண்டபத்தில் -பகல் பத்து உத்சவ மண்டபத்தில் துலுக்க நாச்சியாருக்கு வலப்பக்கம் இருக்கும் சந்நிதி
ஸ்ரீ ராம நவமி அன்று திருக்கல்யாண உத்சவம் நடக்கும்

6- ஸ்ரீ துலுக்க நாச்சியார்

பின் சென்ற வல்லி நாட்டிய பெண்ணுடன் இசை நாட்டிய குழுவாக 60 பேர் சுல்தான் இடம் சென்று மீட்டுப் போக
இளவரசி ஸ்ரீ ரெங்கம் சென்று நம்பெருமாளைக் காணாமல்
கோயில் மூடி இருப்பதைக் கண்டு
மயக்கம் அடைந்த இறக்க ஒளி மட்டும் கோயிலுக்கு உள்ளே சென்றதை பார்த்தார்கள்
முகமதியருக்கு உருவ வழிபாடு இல்லை என்பதால் சித்திரமாக மட்டும் வரைந்து துலுக்க நாச்சியாராக இன்றும் சேவிக்கலாம்

காலையில் லுங்கி போன்ற வஸ்திரமும் அணிவித்து வெள்ளம் கலந்த இனிப்பான ரொட்டி வெண்ணெய் அமுது செய்து அருளுகிறார்
திருமஞ்சனம் வெந்நீரிலே நம்பெருமாள் கண்டு அருள்கிறான்
இடையில் 4 அல்லாது 5 தடவை கைலி மாற்றமும் உண்டு

பகல் பத்து உத்ஸவ படி ஏற்ற சேவை இந்த துலுக்க நாச்சியார் சந்நிதி முன்பே நடக்கும் –
இந்த படி ஏற்ற சேவையைக் காண கண் கோடி வேண்டும்

7- ஸ்ரீ செங்கமல வல்லித் தாயார் -ஸ்ரீ தான்ய லஷ்மி –
தான்யம் கோயில் மாடு

8- ஸ்ரீ பெரிய பிராட்டியார்
பங்குனி உத்தர சேர்த்தி உத்சவம்

9- ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி
பெரியாழ்வார் நாச்சியாரை கூட்டிக் கொண்டு வந்து தங்கிய இடம்
காவேரிக் கரையாகவே அப்போது இருந்தது
வெளி ஆண்டாள் சந்நிதி
திருட்டு பயம் காரணமாக உத்சவர் மட்டும் உள்ளே இருக்கும் ராமர் சந்நிதிக்கு மாற்ற அதுவே உள் ஆண்டாள் சந்நிதி

10- ஸ்ரீ உறையூர் கமலவல்லி நாச்சியார்

வாசவல்லித் தாயார் -செங்கமல வல்லித்தாயார் -நந்த சோழன் திருமகள் –
பங்குனி உத்சவம் ஆறாம் நாள் சேர்த்தி உத்சவம் பிரசித்தம்
தீ வட்டிகள் தலை கீழாக வைத்து தொலைத்த ஒன்றை தேடுவதாக நடக்கும்
திரும்பும் பொழுது மாலை மாற்றல் வெளி ஆண்டாள் சந்நிதியில் நடக்கும்

11- ஸ்ரீ திருக் கவேரித் தாயார்
ஆடிப்பெருக்கு உத்சவம்
அம்மா மண்டபத்துக்கு எழுந்து அருளி சேவை

12- ஸ்ரீ பராங்குச நாயகித் தாயார்
மார்கழி ஏழாம் நாள் கங்குலும் பகலும்
கைத்தல சேவை ப்ரஸித்தம்

————

ஸ்ரீ ரெங்கத்தில் துலுக்க நாச்சியார்
இது இராமானுஜர் காலத்தில் நடந்ததல்ல
திருநராயணபுரம் செல்லப்பிள்ளை கதை இதுவல்ல
இது சுமார் 200 வருடங்கள் கழித்து நடந்த ஒரு சம்பவம்.
ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள், அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி, தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள்.
அதுமட்டுமல்ல, அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.
இவ்வாறு அரங்கன், ஆக்கிரமிப்பாளர்களுடன் செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி, திருக் கரம்பனூரைச் சேர்ந்தவள்.
தானும் அவர்களைப் பின் தொடர்ந்தாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது.
இவ்வாறு, அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை ‘பின் சென்ற வல்லி’ என்று போற்றி, வைணவம் பாராட்டுகிறது.
அதை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் ‘பின்சென்ற வல்லி’ என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள்.
தன் மகளிடம் இருப்பவர் தான் அழகிய மணவாளன் என்பதை அறிந்த மன்னர் அனுமதி தருகிறார்.
அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.
ஆனால் இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமா யில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை, பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து, அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள்.
இளவரசி கண்விழித்து, தன் அறையில் அரங்கனைக் காணாமல், தொலைந்ததறிந்து, பதறி நோய்வாய்ப் படுகிறாள்.
மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார்.
அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்தி ருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிட்டாள்.
ஆனால், தலைமை பட்டரோடு சிலர், தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு, அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர்
ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல், கோவில் மூடியிருப்பதைக் கண்டு, தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள்.
அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள்.
அதன்பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.
முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென் பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து ‘துலுக்க நாச்சியார்’ என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது.
அரங்கமாநகரின் இதயமாம் பெரியபெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள்
மதம் கடந்த அந்தக் காதலின் அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து, அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள்.
இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும்.
மிக மிக மெல்லியதாக சுவையானதாக இருக்கும். தொட்டுக் கொள்ள வெண்ணை.
திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம்.
மற்ற கோயில்களுக்கு இல்லாத இன்னொரு சிறப்பு, அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். இதன் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.
இடையில் 4, 5 தடவை கைலி மாற்றி கைலியைக் கட்டுவார்கள்.
சில குறிப்பிட்ட திருமஞ்சனங்களின் இறுதியில் அரையர் அந்த கைலி வஸ்திரங்களைப் பிழிவார். அந்தத் தீர்த்தத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். ஈரவாடைத் தீர்த்தம் என்று பெயர்.
வெற்றிலைக்கு எப்பொழுதுமே இஸ்லாமியர்கள் போல் வெற்றிலையின் மேல்ப்பக்கம் சுண்ணாம்பு தடவுவார்கள்.
மார்கழி மாத பகல்பத்து உற்சவம் பத்து நாட்களும் துலுக்க நாச்சியாரைத் தரிசிக்க(அல்லது அவர் இவரை தரிசிக்க) அந்த சன்னதியின் முன்பான படிவழியாக ஏறித்தான் ‘அருச்சுனன் மண்டபம்’ செல்வார்.
அரையர், ‘ஏழைகளுக்கிரங்கும் பெருமாள்… ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்… பன்னிரு நாச்சியார் பரவும் பெருமாள்…’ என்று இழுத்து இழுத்துப் பாட மெதுவாக ஆடி ஆடி அந்தப் படியில் ஏறும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.
அரங்கனது நடை ஒவ்வொரு இடத்துக்கும், நேரத்துக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசமானது.
‘திருப்பதி வடை, காஞ்சி குடை, அரங்கர் நடை’ என்றே ஒரு சொலவடை உண்டு.
எல்லாவற்றிலும் துலுக்க நாச்சியார் படியேற்றம் விசேஷமானது.
‘படியேற்ற ஸேவை’ என்றே இதற்குப் பெயர்.
————–
உத்ஸவம்

1-உத் ஸூதே ஹர்ஷம் இதி ச தஸ்மாத் ஏவ மஹா உத்ஸவ மஹா ப்ரீதிர் யேந உத்ஸவேந பவிஷ்யதி
2- உத்க்ருஷ்ட நாள்கள் -உத்க்ருஷ்டோ அயம் யதஸ் தஸ்மாத் உத்ஸவஸ்த்விதி கீர்த்யதே
3- உலகோர் கஷ்டங்களைப் போக்கடிக்கும் -ஸவ இத்யுச்யதே து கம் வித்வத்பு சமுதாரஹ்ருதம்
உதகத ஸஸவோ யஸ்மாத் தஸ்மாத் உத்ஸவ உச்யத
4- பாகுபாடுகள் அகற்றப்படுகின்றன -தஸ்மாத் அஸ் ப்ருஸ்யஸ் பர்சம் ந தோஷாய பவேத்

————-

18 படிகள்
முமுஷு –
1-ஸம்ஸார வித்து நசிக்க வேண்டும்
2-ஸம்ஸார வித்து நசிந்தால் அஹங்கார மமகாரங்கள் விலகும்
3-அவை விலக தேஹ அபிமானம் விலகும்
4-அது நீங்கினால் ஆத்ம ஞானம் பிறக்கும்
5-ஆத்ம ஞானம் பிறக்க ஐஸ்வர்ய போகங்களில் வெறுப்பு உண்டாகும்
6-அதனால் எம்பெருமான் பக்கல் ப்ரேமம் உண்டாகும்
7-அது உண்டானால் விஷயாந்தர ருசி நீங்கும்
8-அத்தால் பாரதந்தர்ய ஞானம் உண்டாகும்
9-அதனால் அர்த்த காம ராக த்வேஷங்கள் பிறக்கும்
10-அவை நீங்கவே ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஸித்திக்கும்
11-அத்தாலே சாது சங்கம் கிடைக்கும்
12-அத்தாலே பாகவத ஸம்பந்தம் கிட்டும்
13-அத்தாலே பகவத் சம்பந்தம் உண்டாகும்
14-அத்தாலே ப்ரயோஜனாந்தரங்களில் வெறுப்பு உண்டாகும்
15-அத்தாலே பகவத் அநந்யார்ஹத்வம் பிறக்கும்
16-அத்தாலே எம்பெருமானையே ஒரே புகலாகக் கொள்வான்
17-அத்தாலே திரு மந்த்ரார்த்தம் கேட்க யோக்யதை பிறக்கும்
18-அத்தாலேயே திருமந்த்ரார்த்தம் கை கூடும் –

—————–

1-மாட மாளிகைகள் சூழ் திரு வீதியும்
2-மன்னு சீர் திரு விக்ரமன் வீதியும்
3-குல விராச மகேந்திரன் வீதியும்
4-ஆலி நாடன் அமர்ந்து உறை வீதியும்
5-கூடல் வாழ் குலசேகரன் வீதியும்
6-தேடரிய தர்ம வர்மாவின் வீதியும்
தென்னரங்கன் திரு ஆரணமே

யதண்டம் அண்டாந்தர கோசரம் ச யத்
தஶோத்தராண்யாவரணாநி  யாநி  ச |
குணா: ப்ரதாநம் புருஷ: பரம் பதம்
பராத்பரம் ப்ரஹ்ம ச தே விபூதய: ||–ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 17 –

இதில் ஆளவந்தார் பகவானாலே நிர்வஹிக்கப்படும், -அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்துக்கு
உட்பட்ட பலவிதமான வஸ்துக்களை அருளிச்செய்கிறார்.
1) ப்ரஹ்மாவின் ஆளுகைக்குட்பட்ட, 14 லோகங்கள் கொண்ட ப்ரஹ்மாண்டம்,
2) அந்த அண்டத்துக்குள் இருக்கும் வஸ்துக்கள்,
3) ஒவ்வொரு அண்டத்தை மூடிக் கொண்டிருக்கும், முந்தைய ஆவரணத்தைப் போலே பத்து மடங்கு அளவுள்ள, ஸப்த ஆவரணங்கள்,
4) ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள்
5) மூல ப்ரக்ருதி
6) இவ் வுலகில் இருக்கும் பத்தாத்மாக்கள் (கட்டுப்பட்ட ஆத்மாக்கள்),
7) ஸ்ரீவைகுண்டம்
8) (தேவதைகளை விட உயர்ந்தவர்களான) முக்தாத்மாக்களை விட உயர்ந்தவர்களான நித்ய ஸூரிகள்
9) உன்னுடைய திய்வ மங்கள விக்ரஹங்கள் ஆகிய எல்லாம் உனக்கு சரீரங்களே.

———–

முதல் திருவாய் மொழி -உயர்வற – ப்ரஹ்ம ஸ்வரூபம்
இரண்டாம் திருவாய் மொழி அவனே நாராயணன் -வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
மூன்றாம் திருவாய் மொழி -ஸ்ரீயப்பதி -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
என் அமுதம் சுவையன் திரு மணாளன்
மலராள் மைந்தன்
திரு மகளார் தனிக்கேள்வன்
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
மலராள் மணவாளன்

—————–

ஸ்ரீ மத் பாகவதம் -11-ஸ்கந்தம் -அத்தியாயங்கள் 27-28-29- அர்ச்சாவதார ஏற்றம் சொல்லும்

தப்தஜாம்பூ³னத³ப்ரக்²யம்ʼ ஶங்க²சக்ரக³தா³ம்பு³ஜை꞉ .
லஸச்சதுர்பு⁴ஜம்ʼ ஶாந்தம்ʼ பத்³மகிஞ்ஜல்கவாஸஸம் .. -27-38..

ஸ்பு²ரத்கிரீடகடககடிஸூத்ரவராங்க³த³ம் .
ஶ்ரீவத்ஸவக்ஷஸம்ʼ ப்⁴ராஜத்கௌஸ்துப⁴ம்ʼ வனமாலினம் .. 27-39..

அப்⁴யர்ச்யாத² நமஸ்க்ருʼத்ய பார்ஷதே³ப்⁴யோ ப³லிம்ʼ ஹரேத் .
மூலமந்த்ரம்ʼ ஜபேத்³ப்³ரஹ்ம ஸ்மரன் நாராயணாத்மகம் .. 27-42..

த³த்த்வாசமனமுச்சே²ஷம்ʼ விஷ்வக்ஸேனாய கல்பயேத் .
முக²வாஸம்ʼ ஸுரபி⁴மத்தாம்பூ³லாத்³யமதா²ர்ஹயேத் .. 27-43..

அர்சாதி³ஷு யதா³ யத்ர ஶ்ரத்³தா⁴ மாம்ʼ தத்ர சார்சயேத் .
ஸர்வபூ⁴தேஷ்வாத்மனி ச ஸர்வாத்மாஹமவஸ்தி²த꞉ .. 27-48..

ஏவம்ʼ க்ரியாயோக³பதை²꞉ புமான் வைதி³கதாந்த்ரிகை꞉ .
அர்சன்னுப⁴யத꞉ ஸித்³தி⁴ம்ʼ மத்தோ விந்த³த்யபீ⁴ப்ஸிதாம் .. 27-49..

மத³ர்சாம்ʼ ஸம்ப்ரதிஷ்டா²ப்ய மந்தி³ரம்ʼ காரயேத்³த்³ருʼட⁴ம் .
புஷ்போத்³யானானி ரம்யாணி பூஜாயாத்ரோத்ஸவாஶ்ரிதான் .. 27-50..

பூஜாதீ³னாம்ʼ ப்ரவாஹார்த²ம்ʼ மஹாபர்வஸ்வதா²ன்வஹம் .
க்ஷேத்ராபணபுரக்³ராமான் த³த்த்வா மத்ஸார்ஷ்டிதாமியாத் .. 27-51..

ப்ரதிஷ்ட²யா ஸார்வபௌ⁴மம்ʼ ஸத்³மனா பு⁴வனத்ரயம் .
பூஜாதி³னா ப்³ரஹ்மலோகம்ʼ த்ரிபி⁴ர்மத்ஸாம்யதாமியாத் .. 27-52..

அயம்ʼ ஹி ஸர்வகல்பானாம்ʼ ஸத்⁴ரீசீனோ மதோ மம .
மத்³பா⁴வ꞉ ஸர்வபூ⁴தேஷு மனோவாக்காயவ்ருʼத்திபி⁴꞉ ..29- 19..

ய ஏததா³னந்த³ஸமுத்³ரஸம்ப்⁴ருʼதம்ʼ
ஜ்ஞானாம்ருʼதம்ʼ பா⁴க³வதாய பா⁴ஷிதம் .
க்ருʼஷ்ணேன யோகே³ஶ்வரஸேவிதாங்க்⁴ரிணா
ஸச்ச்²ரத்³த⁴யாஸேவ்ய ஜக³த்³விமுச்யதே .. 29-48..

ப⁴வப⁴யமபஹந்தும்ʼ ஜ்ஞானவிஜ்ஞானஸாரம்ʼ
நிக³மக்ருʼது³பஜஹ்ரே ப்⁴ருʼங்க³வத்³வேத³ஸாரம் .
அம்ருʼதமுத³தி⁴தஶ்சாபாயயத்³ப்⁴ருʼத்யவர்கா³ன்
புருஷம்ருʼஷப⁴மாத்³யம்ʼ க்ருʼஷ்ணஸஞ்ஜ்ஞம்ʼ நதோ(அ)ஸ்மி ..29- 49..

ஸர்வாத்ம பூதனாய் வாஸூ தேவனே நம் ஹ்ருதய தாமரையில் அமர்ந்து நம்மை வழி நடத்தி அருள்கிறான்
என்று அறிவதே அர்ச்சையில் பகவத் ஆராதனத்தின் பரம பிரயோஜனம்

ஸ்வயம் வ்யக்த ஸ்தலங்கள்
திருவரங்கம்
திருவேங்கடம்
தோத்தாத்ரி
சாளக்கிராமம்
பத்ரிகாஸ்ரமம்
நைமிசம்
ஸ்ரீ முஷ்ணம்

ஸ்தல மஹாத்ம்யம் -நைமிசம் -பத்ரிகாஸ்ரமம்

புஷ்கரம் –தீர்த்த மஹாத்ம்யம்

—————

திருக்கோயில்களின் பிரகாராதிகள் எல்லாமே தத்துவங்களை விளக்குவதற்காகவே யோகீந்த்ரர்கள் சொல்வார்கள் –
மூல ஸ்தானம் -சிரப் பத்ம ஸ்தானம்
அடுத்த அந்தராளம் – முகம்
அடுத்த ஸ்தானம் சுக நாஸி -இது கண்ட ஸ்தானம்
அடுத்த அர்த்த மண்டபம் -மார்பும் தோள்களும் கூடிய ஸ்தானம்
இவை சூழ்ந்த பிரகாரம் -துடைகளும் முழம் தாள்களும்
கோபுரம் -பாதம்

பஞ்ச-ஆவரண – பிரகார ஆலயங்கள் –
தாமஸ பூத பஞ்சீகரணத்தால் ஆக்கப்பட்ட ஸ்தூல சரீரம் அன்னமய கோசம்-முதலாவது பிரகாரம் -ஆவரணம் –
பிராணன் பிராண வ்ருத்திகள் -கர்ம இந்திரியங்கள் -இவை கூடியது ப்ராண மய கோசம் -இது இரண்டாவது ஆவரணம்
அந்தக்கரண வ்ருத்திகளாகிற -மனம் புத்தி சித்தம் அஹங்காரம் -ஞான இந்திரியங்கள் இவை சேர்ந்தது மநோ மாயம் -இது மூன்றாவது ஆவரணம்
அந்தக்கரண ப்ரதிபிம்ப ஜீவனும் அதன் வ்ருத்திகளும் ஞான இந்திரியங்களும் கூடியது -விஞ்ஞான மய கோசம் -இது நான்காவது ஆவரணம்
பிராண வாயுவும் ஸூஷுப்தியும் கூடி நிற்பது ஆனந்த மய கோசம் -இது ஐந்தாவது ஆவரணம்

த்வஜ ஸ்தம்பம் -தேகத்தில் வீணா தண்டம் போல் மூலாதாரம் முதல் ப்ரஹ்மரந்தரம் வரை மேல் நோக்கிச் செல்லும் ப்ரஹ்ம நாடி
இந்திரியங்களை அடக்கி -பிரபஞ்ச விஸ்ம்ருதியும் ஆத்ம சாஷாத்காரமும் -அதற்கு மேல் ப்ரஹ்ம ஆனந்தமும் தோன்றும்

மடப்பள்ளி ஜடர அக்னி ஸ்தானம்

பஞ்ச பேரங்கள்
த்ருவ பேரம்
உத்ஸவ பேரம்
ஸ்நபன பேரம்
கௌதுக பேரம்
பலி பேரம்

இவை கமல ஆலய ஆகாரத்தை உணர்த்துவது போல்
தாமரைத் தடாகம் புஷ்பம் -இலை -கொடி -கிழங்கு போல்
மூல ஸ்தானம் தடாகம்
உத்ஸவ பேரம் புஷ்பம்
த்ருவ பேரம் -கிழங்கு
மற்றவை -இலை -கொடி

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ரெங்கம் பற்றி அறிய வேண்டியவை —

August 30, 2022

ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சந்நதிக்கு வெளியே இருக்கும் ஐந்து குழி மூன்று வாசல் பற்றிய விளக்கம்

பலர் இந்த இடத்தில் தாயார் தன் ஐந்து விரல்களை வைத்து பெருமாள் தாயார் சன்னதி நோக்கி எழுந்தருள்வதை ஆவலுடன் பார்கிறாள் என கூறுவது வழக்கம். ஆனால் இந்த இடத்தின் தாத்பர்யம் வேறு:

1. ஸ்ரீரங்கம் தாயார் படி தாண்டாப் பத்தினி. எனவே வெளியே வந்துபார்த்திருக்கச் சாத்தியமில்லை.

2. பெருமாள் இவ்வழியில் தாயார் சன்னதிக்கு வருவது வழக்கம் இல்லை. ஒருநாள் மட்டுமே இந்த வழியாக எழுந்தருள்வார். மற்ற நேரங்களில் ஆழ்வான் திருசுற்று (5வது பிரகாரம்) வழியாகத்தான் எழுந்தருள்வார்.

இந்த ஐந்து குழி அர்த்தபஞ்சக ஞானத்தைக் குறிப்பதாகும். மூன்று வாசல் தத்வத்ரயத்தைக் குறிப்பதாகும்.

இந்த ஐந்து குழிகளில் ஐந்து விரல்களை வைத்துத் தெற்குப் பக்கம் பார்த்தால் பரமபதவாசல் தெரியும்.

ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவை இந்தத் தத்துவங்களைக் கொண்டு அடைந்தால் அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம் நிச்சயம் என்பதுதான் இதன் பொருள்.

————

தாயார் சந்நிதியில் சேவை செய்து வைக்கும்போது மூன்று தாயார்கள் – ரெங்கநாயகி , ஸ்ரீதேவி , பூதேவி எனக் கூறுவார். ஆனால் மூலவர் இருவரும் ஒருவரே.

ஸ்ரீரங்கம் உலுஹ்கான் படையெடுப்பினால் கிபி 1323 இல் முழுவதுமாக சூறையாடப்பட்டு பெருமாளும் கோவிலைவிட்டு வெளியேறி கிபி 1371 மீண்டும் திரும்பினார். இந்த படையெடுப்பின்போது மூலவர் சந்நிதி கல்திரை இடப்பட்டது. இதனால் பின்னால் இருக்கும் தயார் மறைக்கப்பட்டுவிட்டார்

கோவிலை விட்டு துலுக்கர்கள் வெளியேறியபின் ( 20 – 30 ஆண்டுகள்) உள்ளூர் மக்கள் மூலவர் தயார் காணவில்லை என நினைத்து புதிதாக ஒரு மூலவரை ப்ரதிஷிட்டை செய்தனர். அவரே இப்போது முதலில் இருக்கும் மூலவர்.

பிற்காலத்தில் அரையர் ஒருவர் தாலம் இசைத்து பாசுரம் சேவித்தபோது ஜால்ராவின் ஓசை வித்தியாசமாக வருவதை உணர்ந்து மூலவருக்குப் பின்னால் ஏதோ ஒரு அரை உள்ளது எனக் கூறினார். இதன் பின்னர் அதைத் திறந்து பார்த்தபொழுது பழைய மூலவர் இருப்பது தெரிந்தது. அன்று முதல் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

————

காவேரி விராஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம் 
ஸ வாஸூதேவோ ரங்கேஸே ப்ரத்யக்ஷம் பரமம் பதம்–

விமாநம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புவம்
ஸ்ரீரெங்கசாயீ பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸஹா-

ப்ரணவாகார விமானம் ஓம் என்னும் வடிவத்தில் இருக்கும்.ஓம் எனும் சப்தத்தில் 3 (அ ,உ,ம) எழுத்துக்கள் உள்ளன. உட்சாஹ சக்தி (அ) , ப்ரபூ சக்தி (உ), மந்திர சக்தி (ம) ஆகிய 3 சக்திக்களுடன் பெரியபெருமாள் பிரகாசிக்கிறார்.

இந்த விமானத்தில் கிழக்கு மேற்காய் 4 கலசங்களும், தெற்கு வடக்காய் 4 மற்றும் 1 கலசம் முன்னதாக மொத்தமாக 9 கலசங்கள் இருக்கும். இந்த 9 கலசங்களும் நவக்கிரகங்கள் ஆராதிப்பதாகக் கூறுவர்.

தர்மவர்மா திருச்சுற்று (முதல் பிராகாரம்/ திருவுண்ணாழி பிரதக்க்ஷணம்) இதில்தான் காயத்ரி மண்டபம் உள்ளது. ஏன் இந்த மண்டபத்திற்கு இந்தப் பெயர்?

காயத்ரி மந்திரத்தில் 10 சப்தங்கள் – இந்த 10 சப்தங்கள்தான் விமானத்தின் 10 திக்குகள்

காயத்ரி மந்திரத்தில் 24 எழுத்துக்கள் – இந்த மண்டபத்தில் 24 தூண்கள்

இந்த மண்டபத்தின் 24 தூண்கள் – 24 தேவதைகள் ஆவாகனம் (கேசவாதி த்வாதச நாமங்கள் 12 தூண்களுக்கு,வாசுதேவ – சங்கர்ஷண – பிரத்யும்ன – அநிருத்த ஆகிய நால்வரின் 3 நிலைகள் = 12)

காயத்ரி மந்திரத்திற்குப் பின்னால் வரும் ஸ்லோகத்தின் 9 சப்தங்கள் 9 கலசங்கள்

உள்ளே உள்ள 2 திருமணத்தூண்கள் ஹரி எனும் 2 எழுத்துக்கள் ப்ரணவாகார விமானத்தைத் தாங்குகின்றது.

காயத்ரி மண்டபத்தின் நடுவில் இருப்பது அமுது பாறை. பெருமாள் மூலஸ்தானிலிருந்து புறப்பாடு கண்டருளும்போது இங்கிருந்துதான் கிளம்புவார். இந்தத் திருச்சுற்றின் வாசலின் பெயர் அணுக்கன் திருவாசல்.

அமுதுபாறையின் இருபுறமும் கண்ணாடிகள் உள்ளன. பெருமாளுக்கு அலங்காரம் சாற்றி அர்ச்சக்கரகள் இந்த கண்ணாடிகளில் பெருமாள் திருமேனி அழகைக் கூட்டுவர். அமுது பாறை பொதுவாக பெருமாள் அமுது செய்யும்போது பிரசாதம் வைக்கும் இடம்.

அடுத்தமுறை மூலவர் சேவித்தபின்னர் தீர்த்தம் கொடுக்கும் இடத்தில் 2 நிமிடங்கள் நின்று தீர்த்தம் கொடுப்புவருக்கு பின்னால் சற்று பார்க்கவும். அப்போது 3 விஷயங்கள் தெரியும்:

1) பெருமாள் திருவடி வெளிப்புற தங்க கவசம்

2) மேலே ப்ரணவாகார விமானம்

3) கீழே சிறிய அகழி (3 அடி ஆழம்)

பெருமாளுக்குப் பின்னால் இருக்கும் இந்த பிரகாரம் யாருக்கும் அனுமதியில்லை. இந்தத் திருச்சுற்றின் 2 மூலைகளில் வராகரும், மற்ற மூலைகளில் வேணுகோபாலனும், நரசிம்மனும் சேவைசாதிப்பர். பெருமாளுக்கு வலதுபுறம் விஷ்வக்க்ஷேனரும் இடதுபுறம் துர்கையும் விமானத்தின் சுவற்றில் கீழே சுவற்றில் சேவைசாதிப்பர்.

விமானத்தின் கீழே இருக்கும் சிறிய அகழியின் சிறப்பு:

ராமானுஜர் பெரிய ஆசாரியன் மற்றும் இல்லை. அவர் தலைசிறந்த நிர்வாகி மற்றும் பெருமாளின் திருமேனியின் மீது பறிவுகொண்ட மகான். கீழ்வரும் கைங்கரியம் அவர் ஆரம்பித்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது: (செவிவழி செய்தி)

கோடைக் காலத்தில் பெருமாளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க செய்யப்பட்டதுதான் இந்த அகழி. கோடைக் காலத்தில் தினமும் இந்த அகழியில் தண்ணீர் நிரப்பினால் அது விமானம் மற்றும் பெருமாளை சுற்றியுள்ள சுவற்றின் வெப்பத்தை இழுத்து பெருமாளை குளிர்விக்கும் (இயற்கை குளிர்சாதனம்). ஆனால் தினமும் இங்கு அவ்வளவு தண்ணீர் எப்படி கொண்டுவருவது?

இரண்டாம் திருச்சுற்றில் விமானத்தின் பின்னால் ஒரு சிறிய கிணறு உள்ளது. அந்த கிணற்றிலினருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ஒரு குழாய் (உள்ளே செல்ல மற்றும் வெளியே வர ஒரே குழாய்) மூலம் விமானத்தின் கீழேயிருக்கும் அகழி தினமும் மதியம் நிரப்பப்பட்டு இரவு அரவணைக்கு பிறகு வெளியேற்றப்படும்.

இந்த கைங்கரியத்தின் பெயர் #கோடைஜலம்

இந்தக் கிணற்றில் கீழே ஒருவரும், நடுவில் ஒருவரும், மேலே ஒருவரும் மண் பானைகளில் தண்ணீர் எடுத்து (கயிறு இல்லாமல் கையில்) ஒரு அண்டாவில் தினமும் 1008 பானைகள் அளவு நிரப்புவர். அதை சிறுவர்கள் எடுத்து மேலேயுள்ள தொட்டியில் ஊற்றுவர். அந்தத் தண்ணீர் முதல் திருச்சுற்றின் அகழியில் நிரம்பும். இந்த கைங்கர்யம் பூச்சாற்று உற்ஸவம் தொடக்கத்தன்று (சித்ராபௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்னால்) தொடங்கி 48 நாட்கள் நடக்கும்.

இந்த கைங்கரியம் சிறுவர்களுக்கு அரங்கனிடம் ஈடுபாட்டுக்கு ஆரம்பக்கட்டம். அடியேனுக்கும் இந்த கைங்கரியத்தை செய்ய ரெங்கன் அருளினார்.

—————-

அரங்கன் திருபாதரக்க்ஷையும் (செருப்பு) மற்றும் சக்ளியன் கோட்டைவாசலும்

கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்!!!

இந்த காலணிகள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகிய காலணி செய்து வாழும் மக்களின் சமர்ப்பணம்.

அடுத்தமுறை அரங்கநாதன் கோயிலுக்கு செல்லும்போது 4ஆம் திருச்சுற்றில் (ஆரியப்படாள் வாசலுக்கு முன்னர் இடதுபறத்தில்) இருக்கக்கூடிய திருக்கொட்டாரத்திர்கு செல்லவும்.

என்ன பக்தி இருந்தால் இந்த பாகவதருக்கு பெருமாள் கடாக்க்ஷம் அருளியிருப்பர்🙏

பக்தருக்க்கு அரங்கநாதன் சொப்பனத்தில் இட்ட கட்டளை:

1. பாதரக்க்ஷை அளவு-2. அதன் வர்ணம்3. செலுத்தும் நாள் 4. கோவிலுக்கு வரவேண்டிய வாசல்

மேற்கு சித்திரை வீதிக்கும் மேற்கு உத்திரை வீதிக்கும் இடையில் இருக்கும் கோபுரத்தின் பெயர் சக்லியன் கோட்டை வாசல். பெருமாள் திருபாதரக்க்ஷை இந்த வழியாகத்தான் எடுத்து வரும்படி ஆணையிட்டான்.

எப்ரல் 2017ல ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கன் கனவில் வந்து சொல்லி இதை செய்து கொண்டுவந்தாதாக சொல்லுகிறார்கள்.

இதில் மற்றொரு அதிசயம் உண்டு. சில சமயங்களில் பெருமாள் தனது இரு பாதங்கள் அளவை இருவேறு பக்தர்களுக்கு அளித்து இருவரும் ஓரே நாளில் வந்து சமர்ப்பிக்கவும் செய்வார்.

நாம் ஒவ்வொருவரும் அரங்கனின் அருள் மற்றும் கருணை மழையை அறிந்து உணர தூய பக்தி மட்டுமே போதும் என்றும் அதற்குக் சாதி பேதம் இல்லை என உணர்த்தும் சம்பவம் இது 

——————-

பரமன் திருமண்டபம் மற்றும் சந்தனு மண்டபம்-யார் இந்த பரமன்?-எந்த ராஜ்ஜியத்தின் அரசன் – சேரனா? சோழனா? பாண்டியனா? ஹொய்சாலனா? விஜயநகர அரசனா?பரமன் இந்த மண்டபத்தை தயார் செய்த தச்சனின் பெயர்.-

பரமன் திருமண்டபம் மிகுந்த மர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கும் மண்டபம். எட்டு தூண்களுடன் மூன்று அடுக்குகளுடன் தேரின் மேல் பகுதி போல் காணப்படும் மண்டபம் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது.

வாலநாதராயர் எனும் விஜயநகர அரசின் பிரதானி தச்சன் பரமனை கொண்டு கட்டியது. அவரது வேலைப்பாடுகள் எல்லாரும் அறிய , அந்த அரசர் தனது பெயரை விடுத்து, ஒரு தச்சனின் பெயரை சூட்டினார்.

சந்தனு மண்டபத்தின் தெற்கு பக்கத்தில் மூன்று அறைகள் உள்ளன.தென் மேற்கு மூலையில் இருப்பது கண்ணாடி அறை.பெருமாள் தை பங்குனி மற்றும் சித்திரை மாத உத்சவத்தின் போது பத்து நாட்கள் தினமும் இங்கு தான் எழுந்தருள்வார்.இந்த கண்ணாடி அறை விஜயரங்க சொக்கநாதர் (இராஜ மகேந்திரன் திருசுற்றில் கண்ணாடி கூண்டில் இருக்கும் நான்கு சிலைகளுள் ஒருவர்) ஆட்சியில் சமர்ப்பிக்க பட்டது.

நடுவில் இருக்கும் அறையில் சன்னதி கருடன் எழுந்தருளியுள்ளார். கருட விக்கிரகம் வாலநாதராயரால் முகலாய படையெடுப்பிற்கு பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூன்றாவது அறை (தென் கிழக்கு மூலையில் இருப்பது) காலி அறை. இந்த அறையில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பிரதிஷ்டை செய்த பொன் மேய்ந்த பெருமாள் (தங்கச் சிலை) விக்கிரகம் முகலாய படையெடுப்பின் போது பறிகொடுத்தோம்.

சந்தனு மண்டபம் அணுக்கன் திருவாசலுக்கு வெளியே இருக்கும் பெரிய திருமண்டபம். ஆகும சாஸ்திரத்தின்படி மகாமண்டபம்.–

அழகியமணவாளன் திருமண்டபம் என்ற பெயரும் இந்த மண்டபத்தைத்தான் குறிக்கும்.

பெரிய திருமண்டபத்தில்தான் பெருமாள் தினமும் பசுவும் யானையும் த்வாரபாலகர்கள் முன்னே நிற்க விஸ்வரூபத்துடன் காலை நமக்கு சேவைசாதிக்க தொடங்குகிறார்

இந்த மண்டபத்தின் மற்ற தகவல்கள்

•தென்மேற்க்கே மரத்தினாலான பரமன் மண்டபம்

•கிழக்கு – மேற்காக இருபுறமும் 10க்கும் மேற்பட்ட படிகளுடன் உயர்த்து நிற்கும் மண்டபம் ( நம்பெருமாள் கிழக்குக்கு / கீழ்ப்படி படியேற்ற சேவை காணொலியில் பரமன் மண்டபம் மற்றும் சந்தனு மண்டபத்தை காணலாம்)

•தென்புறத்தில் மூன்று அறைகள் – கண்ணாடி அறை, சன்னதி கருடன், மற்றும் காலி அறை

•இந்த மண்டபம் ஐந்து வரிசைகளில் ஆறு தூண்களுடன் விஜயநகர கட்டிடக்கலையில் அமைந்திருக்கும் மண்டபம்

நம்பெருமாள் பரமன் திருமண்டபத்தில் வருடத்திற்கு இரு முறை எழுந்தருள்வார்:-1) தீபாவளி-2) யுகாதி

இவ்விரு நாட்களிலும் பெருமாளுக்கு நேர் எதிராக கிளி மண்டபத்தில் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எழுந்தருள்வர். அமாவாசை, ஏகாதசி, கார்த்திகை ஆகிய நாட்களில் இந்த பெரிய திருமண்டபத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

இதே திருமண்டபத்தில் தான் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை ஈடு காலக்ஷேபம் செய்ய பணித்து ஓர் ஆண்டு காலம் தினமும் கேட்டருளினார். இதனால் தான் இந்த படம்  இப்போதும் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைபவம் 16.09.1432 முதல் 09.07.1433 வரை நடைபெற்றது.

——————-

பெரிய பெருமாளுக்கு முன் இருக்கும் உற்சவர் அழகிய மணவாளன். அடுத்த முறை ரங்கநாதரை சேவிக்கும் போது சற்று கூர்ந்து அவரின் திருவடியை சேவித்தால், அங்கே மற்றொரு உற்சவர் சேவை சாதிப்பார். இவர் உற்சவ காலங்களில் யாக சாலையில் எழுந்தருளி இருப்பார்.

பொதுவாக எல்லா திவ்ய தேசங்களிலும் யாகபேரர் (யாக சாலை பெருமாள்) சிறிய மூர்த்தியாக இருப்பார். இங்கோ இவர் அழகிய மணவாளனின் நிகரான உயரத்தில் இருப்பார்.

யார் இந்த உற்சவர்? எப்போது திருவரங்கத்திற்க்கு எழுந்தருளப்பட்டார்?-இவரின் திருநாமம் திருவரங்கமாளிகையார்

இந்த சரித்திரத்தை அறிய நாம் 640 ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். 1323ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் எட்டாம் திருநாள் முகலாய அரசன் உலுக் கான் திருவரங்கத்தின் மேல் படையெடுத்து 12000 ஸ்ரீவைஷ்ணவர்களை வதம் செய்தான். முகலாய படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளனை பாதுகாக்க பிள்ளை லோகாச்சாரியர் உற்சவரை தெற்கே எழுந்தருள செய்து திருவரங்கத்தை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்பு மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளுக்கு கல் திரை சமர்ப்பித்து தாயார் வில்வ மரத்தின் கீழ் புதைத்து விட்டு சென்றார். இதே சமயத்தில் தான்  தேசிகன் அந்த 12000 ஸ்ரீவைஷ்ணவர்களின் சடலங்களுன் இருந்து ஷருத்தபிரகாசிகை (பிரம்ம சூத்திரத்திற்க்கு விளக்கம் அருளிய சுவடி) மற்றும் பட்டரின் குழந்தைகளை காப்பாற்றி மைசூர் அருகே இருக்கும் சத்யகலத்திற்க்கு சென்று விட்டார்.

அழகிய மணவாளன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை வழியாக கேரளா சென்று பின்னர் மைசூர் வந்து திருமலைக்கு சென்றார். கடைசியாக செஞ்சிக்கோட்டைக்கு வந்து பின்னர் மீண்டும் திருவரங்கத்திற்க்கு வந்து சேர்ந்தார்.

1323ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவரங்கத்தை விட்டு வெளியேறிய பெருமாள் 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1371ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ஆம் தேதி வந்தடைந்தார். (இதற்கு சான்று இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டு)

கல்கல்வெட்டில் கூறப்படும் சக ஆண்டு 1293. சக ஆண்டிற்க்கும் நம் நாட்காட்டிக்கும் 78 ஆண்டுகள் வித்தியாசம். எனவே 1293+78 = 1371.

கொடவர் (பெருமாளை பல ஆண்டுகளாக பாதுகாத்தவர்) அழகிய மணவாளனுடன் வந்தார். பெருமாளை மீண்டும் திருவரங்கம் எழுந்தருள செய்த முயற்சியில் கோபன்ன உடையார் பங்கு சிறந்தது.

இந்த 48 ஆண்டுகளுக்குள் அழகிய மணவாளன் உற்சவ மூர்த்தி என்ன ஆனார் என்று தெரியாததால் ஒரு புதிய உற்சவரை பிரதிஷ்டை செய்து விட்டனர்.(எந்த ஆண்டு என்று குறிப்பு இல்லை).

48 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் அழகிய மணவாளனை, சேவித்த குடிமக்கள் இறந்து போய்விட்டதாலும், அதற்குப் பிறகு வந்தவர்கள் திருமேனியைச் சேவித்து அறியாதவர்களானதாலும், அழகிய மணவாளனைக் கோயிலில் எழுந்தருள மறுத்து விட்டனர். பழைய அழகிய மணவாள பெருமாளை சேவித்தவர் யாரும் எஞ்சி இல்லாததால் இரண்டு உற்சவர்களுள் எவர் முன்னால் இருந்த அழகிய மணவாளன் என்று சர்ச்சை எழுந்தது.

அப்போது மிக வயதான ஒருவர் தான் பழைய அழகிய மணவாளனை சேவித்தது உண்டு என்றும் ஆனால் அவருக்கு கண் பார்வை போய் விட்டது என்றும் கூறினார்.

அழகிய மணவாளனும் புதிதாக எழுந்தருளப்பட்ட உற்சவரும் காண்பதற்கும் உயரத்திலும் அங்க முத்திரைகளிலும் ஒரே போல் இருப்பர் என்பது வியப்பான ஒன்று.இந்த முதியவர் தன்னை ஒரு ஈரங்கொல்லி (வணத்தான்) கண் பார்வை இல்லாமையால், திருமேனி சேவிக்கவில்லை என்றாலும், அழகிய மணவாளன் சாற்றியிருந்த ஈரவாடை தீர்த்தம் (திருமஞ்சனம் போது சாற்றப்படும் வஸ்த்திரம்) சாப்பிட்டுக் கைங்கர்யம் பண்ணி பழகி இருப்பதைச் சொல்லி, அதன்மூலம் அழகிய மணவாளனைக் கண்டறிய முடியும் என்றார். அதன்படியே, அழகிய மணவாளன் திருமேனிக்கும், திருவரங்கமாளிகையார் திருமேனிக்கும், திருமஞ்சனம் செய்து, ஈரவாடை தீர்த்தம் சாதிக்குமாறு சொன்னார்.

அதனால் இரண்டு உற்சவ மூர்த்திகளுக்கும் திருமஞ்சனம் செய்து தமக்கு தீர்த்தம் தருமாறு வேண்டினார். ஊர் பெரியோர்களும் அவ்வாறே செய்தனர்.

அனுமன் சீதையை கண்ட பின்னர் “கண்டேன் சீதையை!!” என ராமரிடம் கூறியது போல் அழகிய மணவாளப் பெருமாள் ஈரவாடை தீர்த்தம் பெற்றதும் “கண்டேன் பெருமாளை” என்றும் “இவரே நம்பெருமாள்” என்றும் கூறினார்.

அன்று முதல் அழகிய மணவாளன் என்ற திருநாமத்தை விட நம்பெருமாள் என்ற திருநாமமே பிரசித்தம் ஆனது. புதிதாக வந்த உற்சவருக்கு “திருவரங்க மாளிகையார் ” என்று திருநாமம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவ வன்னாத்தனுக்கு மரியாதை சமர்ப்பிக்கப்பட்டது.

————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேச ப்ரஹ்மோத்சவ விவரணம் —ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

May 4, 2022

ஸ்ரீ ரெங்கம் விருப்பன் திருநாள் – 21.04.22 முதல் 01.05.22 முடிய

திருமுளை 19.04.22
நகரசோதனை – 20.04.22

21.04.22 – முதல் திருநாள் – காலை: துவஜாரோஹணம்
மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடு .

22.04.22 – இரண்டாம் திருநாள் – காலை: பல்லக்கு
மாலை : கற்பகவிருட்சம்.

23.04.22 – மூன்றாம் திருநாள் – காலை: சிம்ம வாகனம்
மாலை : யாளி வாகனம்

24.04.22 – நான்காம் திருநாள் -காலை : இரட்டை பிரபை
மாலை : கருட சேவை.

25.04.22 – ஐந்தாம் திருநாள் – காலை : சேஷ வாகனம்
மாலை : ஹனுமந்த வாகனம்.

26.04.22 – ஆறாம் திருநாள் – காலை : தங்க ஹம்ஸ வாகனம்
மாலை : யானை.

27.04.22 – ஏழாம் திருநாள் – மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன்
திருச்சிவிகையில் புறப்பாடு. (பூந்தேர்)

28.04.22 – எட்டாம் திருநாள் – காலை : வண்டலூர் சப்பரம்.
வெள்ளி குதிரை வாகனம்.
மாலை : தங்க குதிரை வாகனத்தில் வையாளி…

29.04.22 – ஒன்பதாம் திருநாள் – காலை : திருத்தேர். .

30.04.22 – பத்தாம் திருநாள் – மாலை : சப்தாவரணம்.

01.05.22- பதினோராம் திருநாள் இரவு : ஆளும் பல்லக்கு

———–

நாலாம் நாள் மாலை கருட உத்சவம்
மாசி கருடன் வெள்ளி கருடன்
மற்ற தங்க கருடன்
தங்க ஹம்ச வாஹனம் சித்திரை -விருப்பம் திரு நாள் -ஆறாம் நாள்
வெள்ளிக்குதிரை சித்திரை
ஒரே நாள் இரண்டு குதிரை வாஹனம் எட்டாம் நாள் -தங்க குதிரை வாஹனம்
வையாளி தங்க குதிரையில்
திரு ஆபரணங்கள் சாத்தி வெள்ளிக்குதிரை வாஹனம்
காலையில் வெள்ளிக் குதிரை வாஹனம் மாலையில் தங்க குதிரை வாஹனம்

பங்குனி ப்ரஹ்மோத்சவம் விபீஷணன் மட்டும் எழுந்து அருளி மிருத ஸங்க்ரஹம்
மற்றவற்றில் திருவடியும் சேர்ந்து எழுந்து அருளிச் செய்வார்
ஐப்பசி திருவோணத்தில் திருப்பாற்கடலில் தோன்றியவர்
முன்பும் ஐப்பசி ஸ்ரவண ப்ரஹ்மோத்சவமும் பிள்ளை லோகாச்சார்யார் காலம் வரை நடந்து வந்ததாம்

ஐப்பசி திருவோணம் -திருப்பாற்கடலில் ஆவிர்பாவம்
முன்பு ப்ரஹ்மோஸ்த்வம் நடந்ததாம்
ரோஹிணி -பிரதிஷடை -பங்குனி ரோஹிணி தொடங்கி உத்தரம் முடியும்
தீர்த்தவாரிக்கு அடுத்த நாள் திருத்தேர்
சித்திரை ரேவதி தீர்த்தவாரி-திருத்தேர் -மீண்டும் பிரதிஷ்டை 1371 வைகாசி ரேவதி
தண்டோரா போட்டு துலா பாரம் -செய்து பொருள் சேர்த்து 12 வருஷம் சரிப்படுத்தி
60 வருஷம் கழித்தே நடந்ததாம் –
வெங்கல திருத்தேர் தட்டு -குண்டு சார்வன் காட்டியது -அங்கு எழுந்து அருளி கொடி ஏற்றம் நடக்கும்
தை புனர்வசு -பூபதி ராஜா நக்ஷத்ரம் -1413 தொடங்கி நடக்கிறது –
மா முனிகள் வந்த இதே வருஷம் -மா முனிகள் அனுமதி உடன் தொடங்கிற்றாம்
கதிர் அலங்காரம் தாயார் சந்நிதியில் -நடக்கும் –

————

கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்தில்– இன்று ஸ்ரீராமநவமி….

ஸ்ரீரங்கம் அரங்கனாதருக்கு ஏழு நாச்சிமார்கள்…
1) ஸ்ரீதேவி.,
2) பூதேவி.,
3) துலுக்க நாச்சியார்.,
4) சேரகுலவல்லி நாச்சியார்.,
5) கமலவல்லி நாச்சியார்.,
6) கோதை நாச்சியார்.,
7) ரெங்க நாச்சியார் ஆகியோர்….

இன்று சித்திரை வளர்பிறை, நவமி….
ஸ்ரீராமபிரான் அவதார திருநாள்.
இன்று தான்
ஸ்ரீரங்கம் பெரிய கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடப் படுகிறது.
(மற்ற திவ்ய தேசங்களிலும் கோவில்களிலும் பங்குனி மாதத்திலேயே கொண்டாடப் படுகிறது)

இன்றைய சேர்த்தி ஸேவையில் அரங்கனும் சேரகுலவல்லித் தாயாரும்……!!!*

அரங்கனோடு அற்புதமாகச் சேர்ந்தவர்கள்…

பெரிய பிராட்டியார் ஸ்ரீரங்கநாயகித் தாயார்
உறையூர் கமலவல்லித் தாயார்
சேரகுலவல்லி நாச்சியார்
பூமிப்பிராட்டி ஆண்டாள்
துலுக்கநாச்சியார்
மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர்.
குலசேகராழ்வாரின் திருமகள்
சேரகுலவல்லி நாச்சியார்

ஸ்ரீராமபிரான் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் .
இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான புனர்வசு அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது.
இராமாயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்து விடுவார்.சில கட்டங்களில் மெய்ம்மறந்து,கொதித்தெழுந்து
தன் சேனைகளுடன், இராவண சேனையுடன் யுத்தம் செய்யப் புறப்பட்டிருக்கின்றார்.
இத்தனைக்கும் இவருக்கு திடவ்ரதன் என்று பெயர்.. மாமன்னன்..!
சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.

இராம என்னும் நாமம் இவரை மெய்மறக்கச் செய்தது. அனைத்தையும் மறந்து, அவர் ஒருவரை மட்டுமே
சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள்.
இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள்.
இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் பெருமாள் திருமொழி என்றே அழைக்கப்படுகின்றது.

இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்!
மற்ற ஆழ்வார்க்கு இல்லாத பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப் பெருமாள்!
இவர் பாடிய முதல் பாசுரமே அரங்கன் மீது தான்!

இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளை
அணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு
என்கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே?

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடையகாவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால்
இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில்,
இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும்,
மாணிக்கக் கற்கள் பொருத்தியுள்ள நெற்றி யினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு
நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மை
நிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை,
என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானதுஎந்நாளோ? என்றவாறு
அரங்கனைநினைத்து ஏங்குகிறார். அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம்.

இந்த தாபம்/பாரிப்பு இருந்தால் போதும்…
பெருமாள் அழைத்துக் கொள்வார்.

ஆழ்வாரின் திருமகள் சேரகுல வல்லி நம்பெருமாளையே ஸ்ரீராமபிரானாக வரித்து
ஆழ்ந்த பக்தியில் லயித்திருந்தார்.

(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திலும்,
நம்பெருமாளை ஸ்ரீராமராகவும்
பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளை
ஸ்ரீகிருஷ்ணராகவும் வழிபடும் வழக்கம் உள்ளது)

அரங்கனை அனுதினமும் தரிசித்த குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை.
யாரை எண்ணி எண்ணி, அவரும் அவரது மகளான சேரகுலவல்லியும் ஏங்கினார்களோ
அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறு பெற்றார்.
அரங்கன் மனமுவந்து ஏற்ற பக்தை இந்த சேரகுலவல்லி!

நம்பெருமாள்-சேரகுலவல்லித் தாயார் சேர்த்தி:

ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தார் அரங்கன்.
இன்று கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சுன மண்டபத்தில் சேர்த்தி! 🙏

அரையர்கள் பெருமாள் திருமொழி சேவிக்க, அடியார்கள் சூழ்ந்திருக்க, இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று
ஏக ஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள்!
சேரகுலவல்லி நாச்சியார் சந்நிதி அர்ச்சுன மண்டபத்தின் வலது(மேற்குப்) புறத்தில் உள்ளது.

நம்பெருமாள் வருடத்தில் மூன்று சேர்த்தி கண்டருள்கிறார்

1-பங்குனி ஆயில்ய நட்சித்திரத்தில் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி
2-பங்குனி உத்திரத்தில் பெரியபிராட்டியாருடன் சேர்த்தி
3-சித்திரை ஸ்ரீராமநவமியில் சேரகுலவல்லி நாச்சியாருடன் சேர்த்

————

ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் திருநீர்மலை

முதல் நாள் -மாலை அங்குரார்ப்பணம் –
ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் போல் சித்திரை திருவோணம் தீர்த்தவாரி

இரண்டாம் நாள் –
காலை துவஜ ஆரோஹணம்
காலை -தோளுக்கு இனியான்
இரவு -தோளுக்கு இனியான்

மூன்றாம் நாள்
காலை -ஸிம்ஹ வாஹநம்
மாலை -ஹம்ஸ வாஹநம்

நான்காம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -ஹனுமந்த வாஹநம்

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு
மாலை -சேஷ வாஹநம்

ஆறாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -கருட சேவை

ஏழாம் நாள்
காலை -சூர்ண உத்ஸவம்
மாலை -யானை வாஹநம்

எட்டாம் நாள்
காலை -திருத்தேர்

ஒன்பதாம் நாள் –
காலை -பல்லக்கு
மாலை -திருமஞ்சனம்
மாலை -குதிரை வாஹநம்

பத்தாம் நாள்
காலை -பல்லக்கு -தீர்த்த வாரி
மாலை -த்வஜ அவரோஹணம்

பதினோராம் நாள்
மாலை -தோளுக்கு இனியான் -துவாதச ஆராதனம்

பன்னிரண்டாம் நாள்
மாலை -விடையாற்றி உத்ஸவம்

———-

சித்திரை திருவோணம்
ஸ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் -மயிலாப்பூர்
த்வஜ ஆரோஹணம்

————-

ஸ்ரீ பார்த்தசாரதி ப்ரஹ்மோத்சவம்

முதலில் இரவில் -செல்வர் உத்சவம் -புஷ்ப பல்லாக்கு
அடுத்த நாள் -மாலை -அங்குரார்ப்பணம் –சேனை முதன்மையார்

முதல் நாள்
காலை –தர்மாதி பீடம்
மாலை –புன்னை மர வாஹனம்

இரண்டாம் நாள்
காலை –சேஷ வாஹனம் –பரமபத நாதன் திருக்கோலம்
மாலை -ஸிம்ஹ வாஹனம்

மூன்றாம் நாள்
காலை -கருட சேவை
பகல் -ஏகாந்த சேவை
மாலை -ஹம்ஸ வாஹனம்

நான்காம் நாள்
காலை –ஸூர்ய ப்ரபை
மாலை –சந்த்ர ப்ரபை

ஐந்தாம் நாள்
காலை -பல்லக்கு -நாச்சியார் திருக்கோலம்
மாலை -ஹனுமந்த வாஹனம்

ஆறாம் நாள்
காலை -ஸூர்ணாபிஷேகம்
காலை -ஆனந்த விமானம்
மாலை -யானை வாஹனம்

ஏழாம் நாள்
காலை –திருத்தேர்
இரவு –தோட்டத் திருமஞ்சனம்

எட்டாம் நாள்
காலை -வெண்ணெய் தாழிக் கண்ணன்
மாலை -குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள் -சித்திரை திருவோணம்
காலை -ஆளும் பல்லாக்கு
மதியம் -தீர்த்தவாரி
மாலை -கண்ணாடி பல்லாக்கு

பத்தாம் நாள்
மதியம் -துவாதச ஆராதனம்
இரவு -சப்தாவரணம் -சிறிய தேர்

பிரதி தினம் மாலை -பத்தி உலாத்தல்

விடையாற்று உத்சவம் -பத்து நாள்கள்

————–

ஸ்ரீ கனக வல்லி ஸமேத ஸ்ரீ வீர ராகவ பர ப்ரஹ்மணே நம

வீஷாவநே விஜய கோடி விமான மத்யே வேதாந்தம் ருக்யமபி நித்யம் அசேஷ த்ருஸ்யம்
ஹ்ருத் தாப நாஸந ஸரஸ் தடே பாரிஜாதம் ஸ்ரீ வீர ராக்வம் அஹம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீ பூமிலாலித பதம் ஸ்ரித சேஷ தல்பம் கல்பாந்த யோக்ய புவந யோக நித்ரம்
ஸ்ரீ சாலி ஹோத்ர சிரஸா த்ருத ஹஸ்தம் ஸ்ரீ வீர ராகவா விபும் ஸ்ரயதாம் மநோ மே

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைக்க
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர் கோன்
தனியன் சேயன் தான் ஒருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன்
எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே –

சுபக்ருத் வருஷம் சித்திரை -23-வெள்ளிக்கிழமை ஆரம்பம்
வைகாசி மாதம் -1-ஞாயிற்றுக்கிழமை
முதல் நாள்-
6-5-2022– மே -வெள்ளி – –
காலை 4-45- மேஷ லக்கினம் த்வஜ ஆரோஹணம்
தங்கச்சப்பரம் காலை 5 மணிக்குப் புறப்பாடு
பக்தி உலா காலை 9-30-
திருமஞ்சனம் காலை -11 -00
இரவு
பக்தி உலா -மாலை 5 மணி
புறப்பாடு -ஸிம்ஹ வாஹனம் -7 மணி

இரண்டாம் நாள் காலை -ஹம்ஸ வாஹனம் -5-00 மணி
பக்தி உலா காலை 8-00 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
இரவு
பக்தி உலா -மாலை 5 -00 மணி
புறப்பாடு -7-00 மணி -ஸூர்ய பிரபை

மூன்றாம் நாள்
காலை 4-00 மணி கோபுர தர்சனம்
கருட சேவை புறப்பாடு -காலை 5-30-மணி
திருமஞ்சனம் 12-00 மணி

பக்தி உலா -5-00-மணி
புறப்பாடு -7-30- மணி ஹநுமந்த வாஹனம்

நான்காம் நாள்
காலை -புறப்பாடு -5-00 மணி சேஷ வாஹனம்
பரமபத நாதன் திருக்கோலம்
பக்தி உலா -8-00 மணி
திருமஞ்சனம் -காலை -10-00 மணி

இரவு –
பக்தி உலா மாலை -5-00 மணி
புறப்பாடு –7-00 மணி -சந்த்ர பிரபை –

ஐந்தாம் நாள்
புறப்பாடு -காலை 4-00 மணி நாச்சியார் திருக்கோலம்
திருமஞ்சனம் -காலை 10-30 மணி
ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம்

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -7-00 மணி -யாளி வாஹனம்

ஆறாம் நாள்
வேணுகோபாலன் திருக்கோலம்
சூர்ணாபிஷேகம் காலை 5-00 மணி
புறப்பாடு -காலை -6-00 மணி வெள்ளி சப்பரம்
திருமஞ்சனம் -காலை -11 மணி

இரவு
பக்தி உலா -மாலை 5-00 மணி
புறப்பாடு -யானை வாஹனம் -7-00 மணி

ஏழாம் நாள்
காலை திருத்தேர்
மீனா லக்கினம் -காலை 4-00 மணிக்கு தேருக்கு எழுந்து அருளுதல்
7-30 மணி திருத்தேர் புறப்பாடு

மாலை 5-00 திருத்தேரில் இருந்து எழுந்து அருளுதல்
திருமஞ்சனம் -மாலை 6-30-மணி
கோயிலுக்கு பெருமாள் எழுந்து அருளுதல் இரவு 9-30 மணி

எட்டாம் நாள்
காலை 9-30 மணி திருமஞ்சனம்
திருப்பாதம் சாடி
திருமஞ்சனம் மாலை -3-00 மணி
பக்தி உலா மாலை 4-30 மணி
புறப்பாடு -இரவு 7-30 மணி குதிரை வாஹனம்

ஒன்பதாம் நாள்
காலை -4-00 ஆள் மேல் பல்லக்கு
தீர்த்தவாரி -காலை -10-30 மணி
திருமஞ்சனம் -காலை 9-30 மணி
பக்தி உலா 5-30-
புறப்பாடு 7-00 மணி விஜயகோடி விமானம்
திருவாய் மொழி சாற்றுமுறை

பத்தாம் நாள்
காலை 9-30 திருமஞ்சனம்
துவாதச ஆராதனம் -காலை -10-30
பக்தி உலா -இரவு 7-00 மணி
புறப்பாடு கண்ணாடி பல்லக்கு-9-0 மணி
த்வஜ அவரோஹணம் -இரவு 11-30மணி

————–

ஸ்ரீ வைகுண்டம் –
ஸ்ரீ திருக்கோஷ்டியூர் –
உத்தமர் கோயில்
ஆராவமுதாழ்வான்
திருப்புல்லாணி கல்யாண ஜெகந்நாதப்பெருமாள்
இதே சமயத்தில் ப்ரஹ்மோத்சவம்

—————–

ஸ்ரீ திவ்ய தேச கருட சேவைகள்

வையம் கண்ட வைகாசி திருநாள்-

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக புகழ் பெற்றிருக்கும் நகரம் காஞ்சி, ‘நகரேஷு காஞ்சி’ என்பர்.
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரி த்வராவதி சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற
வாக்கியத்தின்படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற
ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும்.
பெண்கள் இடையில் அணியும் ஒரு அணிகலனுக்கு காஞ்சி என்று பெயர்.
இந்த நகரம், அந்த அணிகலன் வடிவில் இருந்ததால் காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.
காஞ்சி ஒரு புண்ணிய பூமி.
தொண்டை மண்டலத்தில் உள்ள 22 திவ்ய தேசங்களில் 14 திவ்ய தேசங்களை காஞ்சியிலே காணலாம்.

பெரிய காஞ்சியில் 9 திவ்ய தேசங்களும்
(திருப்பாடகம், திருநிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திரு நீரகம், திருக்காரகம்,
திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம்-திருப்பச்சைவண்ணன், திருப்பரமேச்சுர விண்ணகரம்)
சின்னக் காஞ்சியில் 5 திவ்ய தேசங்களும்
(திருக்கச்சி, திருஅட்டபுயகரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருவெஃகா ) உள்ளன.

அனைவருக்கும் கேட்கும் வரமெல்லாம் கொடுப்பதால் எம்பெருமானுக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலை வடிவம் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றதால்,
இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

ஐராவதம் என்பது வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.

மலை மீது காட்சி தருவதால், மூலவருக்கு மலையாளன் என்ற திருநாமுமம் உண்டு.

இவர் பல யுகம் கண்ட எம்பெருமான்.
கிருத யுகத்தில் பிரம்மனும்,
திரேதாயுகத்தில் கஜேந்திரனும்,
துவாபர யுகத்தில் பிருஹஸ்பதியும்,
கலியுகத்தில் அனந்தனும் வழிபட்டு பல நற்பலன்களை அடைந்தனர்.
பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாகஐதீஹம்.
அதே போல் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேஷனுமும் இங்கு வந்து வழிபடுவதாக சொல்லப் படுகிறது.

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மலைகளால் ஆனது இந்த திருத்தலம்.
வாரணகிரி என்ற முதல் தளத்தில் நரசிம்ம அவதார அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர்
ஹரித்ரா தேவித் தாயாருடன் எழுந்தருளி உள்ளார்.
இரண்டாவது தளமான அத்திகிரியில் தேவப்பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.

இங்குள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன.
அதில் தெற்கில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்தி மரத்தால் ஆன
எம்பெருமானை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்து அடியார்கள் தரிசனத்திற்குப்
பிறகு மீண்டும் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திலேயே எழுந்தருள செய்கிறார்கள்.

இந்த குளக்கரையில் உள்ள சுதர்சன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார் சன்னதி மிகவும் விஷேசமானது.
மிக பெரியவடிவில், பதினாறு திருக்கரங்களுடன், காட்சி அளிக்கும் இந்த சக்கரத்தாழ்வாரை சுற்றி உள்ள
அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் புறப்பாடு,
ஒவ்வொரு ஏகாதசியும் எம்பெருமான் புறப்பாடு.
இரண்டும் சேர்ந்து வந்தால், இருவருக்கும் சேர்ந்து புறப்பாடு என்று அடியவர்களுக்கு ஆனந்தம்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாக கருட சேவை (3ம் நாள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதனை வையம் கண்ட வைகாசி திருநாள் என்று கொண்டாடுவர்.
இந்த கருட சேவையை குறிப்பிட்டு சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் கீர்த்தனை பாடி உள்ளார்.

உடையவர் திருமாளிகை என்று இராமானுஜர் இளமை காலத்தில் வாழ்ந்த இல்லம் இன்றும் இங்கு உள்ளது.
இந்த கோவிலின் பிரகாரத்தில் தான் ஸ்ரீஆளவந்தார் என்ற ஆச்சாரியார், இராமானுஜரை முதன் முதலில் கண்டு
ஆம், முதல்வன் இவன் என்று அருளியது.
ஸ்வாமி இராமானுஜரை திருவரங்கத்திற்கு தந்தருளியதும் இந்த தேவப்பெருமாள் தான்.

ஸ்தல வரலாறு

ஒரு முறை பிரம்மா எம்பெருமானிடம் தான் ஓர் அஸ்வமேதயாகம் நடத்த வேண்டும் என்று கேட்க,
அதற்கு எம்பெருமான், பிரம்மாவை சத்தியவ்ரத க்ஷேத்திரமான இந்த திருக்கச்சிக்கு வந்து யாகம் செய்ய சொன்னார்.
ப்ரம்மா சரஸ்வதி தேவி இல்லாமல் இந்த யாகத்தை காயத்திரி தேவியுடன் தொடங்கினார்.
இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, இந்த யாகத்தைத் தடுக்க பல தடைகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு முறையும் எம்பெருமான் அந்த தடைகளை உடைத்து,
பிரம்மாவின் யாகத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

சரஸ்வதி, இருள்மயமாக, யாக குண்டத்தை மாற்றியபோது,
திருத்தண்கா தீப பிரகாசராக (விளக்கொளிபெருமாள்) எம்பெருமான் வந்தார்.
சரஸ்வதி அரக்கர்களை அனுப்பி வைத்தார்.
அப்பொழுது எம்பெருமான் அஷ்டபுஜகரத்தானாக ஆதிகேசவ பெருமாளாக வந்து அரக்கர்களை விரட்டி அடித்தார்.

தொடர்ந்து, சரஸ்வதி யானைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்து இந்த யாகத்தை தடை செய்ய முயற்சித்த போது,
எம்பெருமான் வேளுக்கை யோகநரசிம்மராக வந்து யானைகளை விரட்டினார்.

சரஸ்வதி வேகவதி என்ற நதியில் வெள்ளமாக வந்தபோது,
சொன்ன வண்ணம் செய்த பெருமாளாக வந்து நதியின் குறுக்கே படுத்துக்கொண்டார்.

இப்படி, இங்குள்ள திவ்யதேச எம்பெருமான்கள் ஒரே காரணத்திற்காக ஒரே காலத்தில் எழுந்தருளி உள்ளனர்.

இப்படி எல்லா தடைகளையும் தாண்டியபின்,
பிரம்மாவின் யாககுண்டத்தில் இருந்து புண்ணியகோடி விமானத்துடன் தோன்றியவர் தான் இந்த திருக்கச்சி தேவப்பெருமாள்.
யாககுண்டத்தில் இருந்து அக்னி ஜுவாலைகளுக்கு மத்தியில் இருந்து வந்ததால் தான் இன்றும்
எம்பெருமானின் திருமுகத்தில் அக்னி வடுக்கள் இருப்பதை நாம் காணலாம்.
பிரம்மா அத்தி மரத்தால் வடித்த ஒரு எம்பெருமானை இங்கே அத்தி வரதர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு சிஷ்யர்கள், குருவிற்கு எடுத்துவைத்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து
இருந்ததை கவனிக்காததால், முனிவர் கோபம் கொண்டு அவர்கள் இருவரையும் பல்லியாக மாற சபித்தார்.
அவர்கள் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க, முனிவர் இந்திரன் திருக்கச்சிக்கு வரும்வரை காத்து இருந்தால்,
அவர்கள் மீண்டும் பழைய நிலை அடைவார்கள் என்று கூற அவர்களும், பல்லிகளாக திருக்கச்சியில் காத்து இருந்து,
பின் கஜேந்திரன் என்ற யானையாக இந்திரன் இங்கு நுழைந்த போது,
இருவரும் சாபம் தீர்ந்து பழைய நிலை அடைந்தார்கள் என்பது வரலாறு.
அந்த பல்லிகளே இன்று தங்க, வெள்ளி பல்லிகளாக பிரகாரத்தில் உள்ளன.
இவற்றை தரிசித்தால் எல்லா நோய்களும் அகலும் என்று நம்பிக்கை.

வைகாசி விசாக கருட சேவையைப் பற்றி ஒரு நிகழ்ச்சி.
சோளிங்கரில் வசித்த தொட்டாச்சார்யார் என்ற பக்தர் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரிசனத்தை காண்பார்.
ஒரு வருடம் உடல் நலம் குன்றியபோது அவரால் காஞ்சி வந்து இந்த திவ்ய சேவையை காண இயலவில்லை.
அதனால் அவர் சோளிங்கரில் உள்ள குளக்கரை அருகே வந்து நின்று எம்பெருமானிடம் உருகி
தன்னுடைய நிலையை சொல்லி வருந்தினார். எம்பெருமான் அவருக்கு உடனே அங்கேயே கருட சேவை காட்சியைக் கொடுத்தார்.
அதனால் இன்றும், காஞ்சியில் இந்த கருட சேவை போது, எம்பெருமானை ஒரு வினாடி குடைகளால் மூடி
அந்த அடியவருக்கு காட்சி கொடுத்ததை நடத்தி காண்பிப்பார்கள்.

பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியில் (96), அத்தியூரான் புள்ளை ஊர்வான் என்று பாடி இருப்பது,
இந்த திவ்யதேச எம்பெருமானான பேரருளாளன், கருட சேவையை முன்னிட்டு என்பதால் இன்றும் வரதனின் கருடசேவை பிரசித்தம்.

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியில் (26), நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் என்று திருக்கச்சிக்கு நிரந்தசீர் என்று
சிறப்பு அடைமொழி கொடுத்து உள்ளார்.
இதற்கு உரையாசிரியர், நிறைய திவ்யதேசங்களை உடைய காஞ்சி என்று விளக்கம் கொடுத்து உள்ளார்.

இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இந்த எம்பெருமானுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார்.
அதாவது பெருமாளுக்கு விசிறி வைத்து காற்று வீசுவார். திருக்கச்சி நம்பிக்கு காஞ்சி பூர்ணர் என்ற சிறப்பு பெயர் உண்டு.
எம்பெருமான், திருக்கச்சி நம்பிகள் தன்னுடன் நேரடியாக உரையாடும் அளவுக்கு அவருக்கு அருள் புரிந்து இருந்தான்.

ராமானுஜர், தம் முதல் குருவான யாதவப்பிரகாசருடன் வடநாட்டு யாத்திரை சென்ற போது, அவருக்கு எதிரான சதி,
அவரின் சித்தி பிள்ளை கோவிந்தபட்டர், (பின்னாளில் எம்பார் என்ற ஆச்சார்யர்) மூலம் தெரிய வந்ததால்
யாருக்கும் தெரியாமல் விந்திய மலையிலேயே தங்கிவிட்டார்.
பிறகு ஒரே இரவில், தேவப்பெருமாளும், பெரிய பிராட்டியும், வேடன், வேடுவச்சி வேடம் புனைந்து
ராமானுஜரை காஞ்சிக்கு அருகில் உள்ள சாலைக்கிணறு என்ற இடத்தில கொண்டு விட்டார்கள்.

தமக்கு உதவி புரிந்தது தேவப்பெருமாளும் தாயாரும் என்று உணர்ந்து கொண்ட ராமானுஜர்,
திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்றுக்கொண்டு, சாலைக் கிணற்றிலிருந்து தேவப்பெருமாளுக்கு
திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் கொண்டு வரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.
சுவாமி ராமானுஜருக்கு ஆரம்ப காலத்தில், நம் சம்பிரதாயத்தில் எழுந்த சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளுடன் பேசி,
தேவப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளை ராமானுஜருக்கு சொல்லியவர் திருக்கச்சி நம்பி ஆவார்.

இராமானுஜருக்கு அருளிய அந்த ஆறு வார்த்தைகள்.

1-அஹமேவ பரம்தத்வம் ஸ்ரீமந் நாராயணனே எல்லாவற்றிக்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்
2-தர்சனம் பேத ஏவச ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வெவ்வேறானவை.
3-உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத் மோட்சம் அடைய சரணாகதியே சிறந்தவழி
4-அந்திமஸ்ம்ருதி வர்ஜனம் இறுதி காலத்தில் எம்பெருமானை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை
5-தேஹாவஸானே முக்திஶ்யாத் அவனை உபாயமாகக் கொண்டவர்களுக்கு, பிறவி முடிந்ததும் மோக்ஷம் தருகிறார்.
6-பூர்ணச்யார்ய ஸமாச்ரய பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது

ஸ்ரீ இராமானுஜருக்காக கிருமி கண்ட சோழ மன்னனிடம் தன்னுடைய கண்களை இழந்த
கூரத்தாழ்வான், ராமானுஜரின் ஆணைப்படி வரதராஜ ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை இந்த எம்பெருமானுக்குகாக எழுதி,
அவர் முன்னே சொல்ல, உடனே இந்த எம்பெருமான் அவருக்கு மீண்டும் கண் பார்வையை அருளினார்.

வேதாந்த தேசிகரிடம் ஒரு ஏழை பிரம்மச்சாரி பையன் தன் திருமணத்திற்காக நிதி உதவி கேட்க,
அவர் பெருந்தேவி தாயார் சந்நிதியில், ஸ்ரீ ஸ்துதி என்ற இருபத்திஐந்து ஸ்லோகங்களை பாட,
தாயாரின் மனதை தொட்ட ஸ்லோகங்கள், அங்கே ஒரு பொன்மழையை கொட்ட செய்து அந்த பையனின் துயரைத் தீர்த்தது.
இது கனகதாரா ஸ்தோத்திரத்தின் மூலம் ஆதி சங்கரர் ஓர் ஏழைப் பெண்ணிற்காக தங்கமழை பெய்வித்ததைப் போலவே
இந்த திவ்யதேசத்தில் நடந்த சரித்திர நிகழ்ச்சி. இதனால் இந்த தாயாருக்கு தங்கத்தாயார் என்ற திருநாமமும் உண்டு.

———–

24 கருட சேவை
மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில் உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள்
வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி
ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை கொண்டாடப்படுகிறது.

————

12 கருட சேவை தரிசனம்

கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது 12 கருட சேவை தரிசனம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது திதியான
அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில்
உற்சவப் பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் பொதுமக்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

12 பெருமாள் சுவாமிகளையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஒரே இடத்தில் இந்த தரிசனம் காண கண் ஆயிரம் வேண்டும் என்பார்கள்.

விதியை மாற்றும் சக்தி திதிக்கு உண்டு. அந்த திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை என்று கருதப்படுகிறது.
இந்த திதியில் எந்தச் செயலை செய்தாலும் வெற்றி கிட்டும்.
எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பது புராணம் கூறும் ஐதீகம்.
குசேலன், குபேரன் ஆனதும் இந்த தினத்தில் தான்.
எனவே இந்த தினத்தில் தங்கம், வீடு, மனை, துணிகள் என எது வாங்கினாலும் இல்லத்தில் தங்கும் என்பது
பொதுமக்களிடையே சமீப காலமாக அதிகரித்து வரும் நம்பிக்கையாகும்.

அதன்படி அட்சய திருதியை நாளான மே-9 ம் தேதி கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில்
சாரங்க பாணி,
சக்கரபாணி,
ராமசுவாமி,
ராஜகோபாலசுவாமி,
ஆதிவராகபெருமாள்,
பட்டாபிராமர்,
சந்தான கோபாலகிருஷ்ணன்,
நவநீதகிருஷ்ணன்,
வேணு கோபாலசுவாமி,
வரதராஜபெருமாள்,
பட்டாச்சாரியார் தெரு கிருஷ்ணன்,
சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய
12 கோயில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்திலும்,
இந்த சுவாமிகளுக்கு நேரெதிரே ஆஞ்சநேயர் சுவாமியும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

————-

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில்
ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.
108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன.
மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.
தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.
நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள்,
அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர்,
செம்பொன்னரங்கர்,
பள்ளிகொண்ட பெருமாள்,
வண்புருடோத்தம பெருமாள்,
வைகுந்தநாதன்,
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள்,
திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள்,
கீழச்சாலை மாதவப்பெருமாள்,
பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள்,
திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.

ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார்.
அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி,
தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு.
அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.

பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார்.
அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று,
11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார்.
அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார்.
அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார்.
அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.

திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும்,
மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும்.
பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர்.
பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில்
தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது.
அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .