Archive for the ‘முதல் திரு அந்தாதி’ Category

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி–அவதாரிகை -ஸ்ரீ ஸூதர்சன ஸ்தாபகர் கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீ நிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் –

August 29, 2022

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யானாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —

யத் கடாஷா தயம் ஜந்துர் புனர் ஜென்மதாம் கத-வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்

கலிவைரி க்ருபா பாத்ரம் காருண்யைக மஹா ததிம்
ஸ்ரீ கிருஷ்ண பிரவணம் வந்தே க்ருஷ்ண ஸூரி மஹா குரும்-

கலி வைரி தாஸர் -நம்பிள்ளை கருணைக்குப் பாத்ரபூதர்
காருண்யத்துக்கு ஒரே கடல்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஈடுபட்ட ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகளை வணங்குகிறேன் –

தன்மை சிங்கம் ரோகிணி நாள் தழைக்க வந்தோம் வாழியே
தாரணியில் சங்க நல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழ் உரைப்பான் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மன் புகழ் சேர் சடகோபர் வளம் உரைப்பான் வாழியே
மறை நாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைத்தான் வாழியே
அன்புடன் உலகாரியர் தம் அடி யிணையோன் வாழியே
அபய பிரத ராசர் தாள் அனவரதம் வாழியே –

————————————————————–

துலாயாம் ஸ்ராவணே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்சன வாரி ஜாத்
த்வாபரே பாஞ்ச ஜன்ய அம்சம் ஸரோ யோகி நமாஸ்ரயே

செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே
திருக்கச்சி மா நகரம் செழிக்க வந்தோம் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே
வநச மலர்க் கருவதனில் வந்த மைந்தன் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற் பதமும் வாழியே
பொன் முடியும் திரு முகமும் பூதலத்தில் வாழியே

முக்தி தரும் நகர் எழில் முக்யமாம் கச்சி
காசி முதலாய நன்னகரி எல்லாம் கார் மேனி அருளாளர் கச்சி நகருக்கு ஒவ்வா
ஸத்ய விரத ஷேத்ரத்தில் சொன்ன வண்ணம் செய்த -யதோத்தகாரீ ஸந்நிதியில் பொற்றாமரைக் குளத்திலே பதும மலரில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சமாக
ஐப்பசி திருவோணத் திரு நாளில் திரு அவதரித்தவர்

எம்பெருமானும் அவனுடைய பாரி ஷதர்களும் வருவதை படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச ஜன்யம் போல்
மற்ற ஆழ்வார்கள் திரு அவதரித்து அருளப் போவதை காட்டி அருளினார்

ஸ கோஷா தார்த்ரஷ்டாராணாம்

ஹ்ருதயாநி வயதாரயத் -பரமதஸ் தர்களின் ஹ்ருதயங்களைப் பேதித்து பரத்வ நிர்ணயம் செய்து அருளினார்

யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹ்ணோதி தஸ்மை -பத்மத்தில் அவதரிப்பித்து -தமிழ் மறைகளை உபதேசித்து அருள

பரகால கலியினால் –செந்தமிழ் பாடுவார் –
உலகம் படைத்தான் கவி -(திருவாய் -3-9-10-)படைத்தான் கவியாகிய நம்மாழ்வாரால் –செஞ்சொற் கவிகாள் -என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள் என்றும் பாடப்பட்ட பெருமையும்
முதல் ஆழ்வார்கள் மூவரில் முதல்வரான பெருமையும்

(முதலாவார் மூவரே -அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் போலவே பொய்கையை நிரூபகமாக உடையவர்)
திரு வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே -பெரியாழ்வார் -பெருமையும் கொண்டவர் –

ஓடித் திரியும் பரம யோகி –யோக அப்யாஸத்தால் நீண்ட காலம் எழுந்து அருளி –

மண்ணுய்ய -மண்ணுலகில் மனுஷர் உய்ய -வன் பெரு வானகமும் உய்ய -அமரர் உய்ய
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை பரவச் செய்து -ஞான பிரதமரான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலவே ஞானச் சுடர் விளக்கு ஏற்றி வாழ்வித்து அருளினார்

அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ என்று பாரித்து புலவர் நெருக்கு உகந்த அச்சுதன் திருமகளும் தானுமாகக் கூடி இருந்த பொழுது
அவர்கள் முன்னிலையிலே திருப்பல்லாண்டு போலவே பாடப் பெற்ற முதல் திவ்ய பிரபந்தம் அன்றோ

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டிய சொல்மாலை என்ற பெருமை -ஆராயும் சீர்மைத்தோ –
புற மதஸ்தர் பிடறியைப் பிடித்துத் தள்ளி ஜந்மாத் யஸ்ய யத -ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ குண பூர்ணன்
வையம் வார் கடல் இத்யாதியால் லீலா விபூதியும்
சுடர் ஆழியான் -இத்யாதியால் நித்ய விபூதியும் அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்வமும்
பா மாலை பாடிக் கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தம்
நெறி வாசல் தானேயாய் நின்றான் -உபாய உபேயமும் அவனே
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயுமாவான் -ஸர்வ ஸரீரியாய் இருப்பவனே பரம புருஷோத்தமன் –
வாய் அவனை அல்லாதது வாழ்த்தாது —காணா கண் கேளா செவி -என்றும்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் -என்றும்
மறந்தும் புறம் தொழாமை யாகிய ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

ஸ்ரீ மன் நாராயணன் பெருமையையும் அதற்கு எதிர்த்தட்டாக எடுக்கப் படும் எருத்துக் கொடியானுடைய எளிமையையும்
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில்
வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஓன்று -என்று
ரூபமே வாஸ்யை தன் மஹிமா நம் வ்யாஸஷ்டே –உண்மையை உருவமே உணர்த்துமே
காணிலும் உருப்பொலார் -போல் அன்றே-

ரூபமே வாஸ்யை தன் மஹிமா நாம் வ்யாசஷ்டே -உண்மை மகிமைகளை உருவமே உணர்த்துமே
பச்சை மா மலை போல் மேனி இத்யாதி –விக்ரஹ வைலக்ஷண்யம்

கலி வைரி கிருபா பாத்ரம் காருண்ய ஏக மஹோ ததிம்
ஸ்ரீ கிருஷ்ண ப்ரவணம் வந்தே கிருஷ்ண ஸூரிம் மஹா குரும்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையே இதுக்கு இரண்டு வியாக்கியானங்கள் அருளிச் செய்துள்ளார் –

வையம் தகளியா -என்று தொடங்கி ஞானம் பிறந்த நிலையை வெளியிட்டு அருள
அன்பே தகளியா-என்று அந்த ஞானமே முற்றி பகுதியாகும் நிலையை அருளி –
அதுவே முற்றி அவனை விட்டு தரியாத பரமபக்தி விளைந்து இருக்கும் நிலையை வெளியிட்டு அருளினான்
மூன்றும் ஞான பக்தி சாஷாத்காரங்களை சொன்னவாறு –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூதர்சன ஸ்தாபகர் கீர்த்தி மூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீ நிவாஸ ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்ரீ முதல் திருவந்தாதி தனியன் -ஸ்ரீ நம்பிள்ளை–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள்- ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த – வியாக்யானம் —

April 21, 2022

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த
பொய்கைப் பிரான் கவிஞர் போரேறு –வையத்
தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி
படி விளங்கச் செய்தான் பரிந்து —-ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த தனியன் –

கைதை சேர் –தாழைகள் நெருங்கிச் சேர்ந்து இருக்கிற
படி விளங்கச் செய்தான் பரிந்து –படி -பூமியிலே -அன்புடன் கூடியவராய் -பிரகாசிக்கும் படி செய்து அருளினார் –
அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

————-

ஸ்ரீ நம்பிள்ளை வியாக்யானம்

அவதாரிகை-

பூமியையும் -ஜலத்தையும் -தேஜஸ் சையும் -மூன்றையும் சொல்லி
இவை தன்னை அஞ்சுக்கு உப லஷணம் ஆக்கி
அவ் வஞ்சாலும் இந்த பூமி தொடக்கமாக இழியும் இடத்தில்
இதுக்கு பிரதான குணமான காடின்யத்தையும்
ஜலத்தின் உடைய த்ரவத்தையும்
தேஜஸ் சினுடைய ஔஷ்ண் யத்தையும் சொல்லிக் கொடு போந்து
இவ் வழியாலே லீலா விபூதி யடங்க நினைத்து –

நித்ய விபூதி அடங்க உப லஷணமாக
திரு வாழி ஆழ்வானைச் சொல்லி

ஆக
இத்தனையாலும் உபய விபூதி யுக்தன்  என்னும் இடத்தைச் சொல்லி

இப்படி அவனுடைய சேஷித்வத்தையும்-
தம்முடைய சேஷத்வத்தையும் சொல்லி

அதுக்கு அநு கூலமாக அவன் திருவடிகளிலே பரிசர்யையும் பண்ணி
அவன் உகப்பே இவர் தமக்கு உகப்பாக நினைத்து இருக்கையாலே
இவர் செய்தது எல்லாம் தனக்கு அலங்காரமாகவும் போக்யமாகவும் நினைத்து இருக்கிற படியையும் சொல்லி

இப்படிப் பட்ட  அடிமை செய்யப் பெறாமையாலே வந்த ஸ்வரூப ஹானியைப் பரிஹரிக்கைக்காக –
அடிக்கே சூட்டினேன் சொன் மாலை -என்றதாதல்

அன்றிக்கே
இங்கனே இருப்பதோர் அறிவு நடையாடாமையாலே
சம்சாரம் இங்கனே நித்யமாய்ச் சொல்லுகிறது என்று பார்த்து
அதுக்காக செய்தாராய் இருக்கிறது –

———-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் – வியாக்யானம்

க இதி ப்ரஹ்மணோ நாம தேன தத்ராஞ்சிதோ ஹரி —
தஸ்மாத் காஞ்சீ தி விக்யாதா புரீ புண்ய விவர்த்த நீ –என்னும் படியான
ஸ்ரீ காஞ்சீ புரத்திலே-
புஷ்கரணீயிலே புஸ்கரத்திலே-
விஷ்ணு நஷத்த்ரத்திலே ஆவிர்பவித்து
திவ்ய பிரபந்த தீப முகேன லோகத்தில் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி
வாழ்வித்த படியைச் சொல்கிறது இதில் –

கைதை சேர் பூம் பொழில் சூழ் கச்சி நகர் வந்துதித்த-பொய்கைப் பிரான்–
இத்தால் இவர் ஜென்ம வைபவம் சொல்கிறது

கைதை-
கேதகை –தாழை-

கைதை வேலி மங்கை –பெரிய திருமொழி -1-3-10–என்றும்
கொக்கலர் தடந்தாழை வேலி –திருவாய் -4-10-8—என்றும் சொல்லுமா போலே —
அது தானே நீர் நிலங்களிலே யாயிற்று நிற்பது –

தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் –பெரியாழ்வார் -4-10-8–என்னும் படி –
அம் பூம் தேன் இளஞ்சோலை —திருவிருத்தம் -26–

சூழ்ந்த கச்சி வெஃகாவில் -பொய்கையிலே
எம்பெருமான் பொன் வயிற்றிலே பூவே போன்ற பொற்றாமரைப் பூவிலே
ஐப்பசியில் திருவோணம் நாளாயிற்று இவர் அவதரித்தது

பத்மஜனான பூவனைப் போலே யாயிற்று
பொய்கையரான இவர் பிறப்பும் –

வந்து உதித்த என்கையாலே
ஆதித்ய உதயம் போலே யாயிற்று இவர் உதயமும் –

வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் -என்னக் கடவது இறே –

பொய்கையிலே அவதரிக்கையாலே அதுவே நிரூபகமாய் இருக்கை –
அது தான் ஸரஸ்வதீ பயஸ்விநியாய் ப்ரவஹித்த ஸ்தலம் யாயிற்று
தத்தீரமான பொய்கை என்கை –

பொய்கைப் பிரான் –
மரு பூமியில் பொய்கை போலே எல்லார்க்கும் உபகாரகராய் இருக்கை
தீர்த்த கரராய்த் திரியுமவர் இறே

கவிஞர் போரேறு -ஆகையாவது
கவி ஸ்ரேஷ்டர் -என்றபடி –
ஆதி கவி என்னும்படி அதிசயித்தவர்-

உலகம் படைத்தான் கவியாலும்–திருவாய் -3-9-10- -பரகால கவியாலும் –
செஞ்சொற் கவிகாள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும் கொண்டாடப் படுமவராய் –
நாட்டில் கவிகளுக்கும் விலக்ஷண கவியாய் இருப்பர்

இது பொய்கையார் வாக்கினிலே கண்டு கொள்க -என்று இறே தமிழர் கூறுவது –
அந்த ஏற்றம் எல்லாம் பற்ற கவிஞர் போரேறு -என்கிறது –

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடையவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழும் படி ஸ்நேஹத்தால்
விலக்ஷண பிரமாண நிர்மாணம் பண்ணின படி சொல்கிறது –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி-படி விளங்கச் செய்தான் பரிந்து -என்று –

வையத்தடியவர்கள் -ஆகிறார் –
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அவர்கட்கே இறே வாழ வேண்டுவது
வானத்து அணி அமரர்க்கு -இரண்டாம் திரு -2–வாழ்வு நித்தியமாய் இறே இருப்பது –

இத்தால்
இவர்கள் வாழுகையாவது —
சேஷத்வ வைபவத்தை ஸ்வ அனுசந்தானத்தாலே உண்டாக்குமதான பிரபந்தம் -என்கை

நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னக் கடவது இறே –
இவ்வநுஸந்தானமே வாழ்வு -என்னவுமாம் –

அரும் தமிழ் நூற்றந்தாதி-ஆவது –
அர்த்த நிர்ணயத்தில் வந்தால் -வெளிறாய் இருக்கை அன்றிக்கே அரிதாய்
தமிழான பிரகாரத்தாலே ஸூலபமாய் –
அது தான் நூறு பாட்டாய் –
அந்தாதியாய் இருக்கை-

அன்றிக்கே –
வையத்-தடியவர்கள் வாழ அரும் தமிழ் நூற்றந்தாதி–என்று
வையத்து அடியவர்வர்கள் வாழ வருமதான தமிழ் நூற்றந்தாதி என்றுமாம் –

நூற்றந்தாதி படி விளங்கச் செய்கையாவது —
வையம் தகளியாய் -என்று தொடங்கி –
ஓர் அடியும் சாடுதைத்த முடிவாக அருளிச் செய்த
திவ்ய பிரபந்த தீபத்தாலே
பூதலம் எங்கும் நிர்மலமாம் படி நிர்மித்தார் என்கை –

வருத்தும் புற விருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி
ஒன்றத் திரித்து அன்று எரித்த திரு விளக்கு யாகையாலே –
படியில் -பூமியிலே
பிரகாசிக்கும் படி செய்து அருளினார் என்றாகவுமாம்

அன்றிக்கே –
படி -என்று உபமானமாய் –
திராவிட வேதத்துக்கு படிச் சந்தமாய் இருக்கும் படி செய்து அருளினார் என்றுமாம் –

விளக்கம் -பிரகாசம்
படி என்று விக்ரஹமாய் –
திவ்ய மங்கள விக்ரஹம் -திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றபடி
கண்டு அறியும் படி செய்து அருளினார் என்றுமாம் –

செய்தான் பரிந்து –
பரிவுடன் செய்கை யாவது –
சேர்ந்த விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல் –
பர விஷய ஸ்நேஹத்தாலே -என்னுதல்

செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்றார் இறே –
ஸ்நேஹத்தாலே இறே விளக்கு எரிவது

இத்தால்
அவர் திவ்ய பிரபந்த உபகாரகத்வத்தாலே வந்த உபகார கௌரவம் சொல்லி ஈடுபட்டதாயிற்று –

——–

ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

கைதை சேர் பூம் பொழில்
தாழைகள் மிகுதியாக சேர்ந்து இருக்கப் பெற்ற அழகிய சோலைகள்-
கேதகீ -வடசொல்-

படி விளங்கச்
இப் பூமி யானது இருள் நீங்கி ஞான ஒளி பெற்று விளங்கும்படியாக

படி –
உபமானத்துக்கும்
திருமேனிக்கும் வாசகம்

வருத்தும் புறவிருள் மாற்ற என் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திரு விளக்கைத் தன திரு வுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமானுசன் எம்மிறையவனே

பரிந்து –
எம்பெருமான் மேல் காதல் கொண்டு

கவிஞர் போரேறு –
புருஷ சிம்ஹ -புருஷ வயாக்ர-புருஷ புங்கவ -புருஷர்ஷப
சிங்கம் புலி எருது -மிடுக்குக்கு வாசகம்

அருந்தமிழ் அந்தாதி -பாட பேதம்

இன்கவி பாடும் பரம கவிகள் என்றும்
செந்தமிழ் பாடுவார் என்றும்
இவர்கள் திரு வவதரித்தது ஒரோ தேசங்களிலே யாகிலும்
காலப் பழைமையாலே-அச்சுப் பிழை இது –
ஞானப் பெருமையாலே-இருந்து இருக்க வேண்டும் – – இன்னவிடம் என்று நிச்சயிக்கப் போகாது -பெரியவாச்சான் பிள்ளை
யுகாந்திரத்தில் திருவவதாரம்
ஆழ்வார்கள் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான
அவகாஹனத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும் நித்ய சூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் -என்று
அருளிச் செய்து இருப்பதால்
அடியார்கள் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே -என்கிற சங்கை என்னவுமாம்
அத்ரி ஜமதக்னி பங்க்த்ரித வஸூ நந்த ஸூ நுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ
வ்யாசாதிவத் ஆவேசமோ
மூதுவர் கரை கண்டோர் சீரியரிலே ஒருவரோ
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ என்று
சங்கிப்பர்கள் -ஆச்சார்ய ஹிருதயம் நம் ஆழ்வார் விஷயம் போலே இங்கும் சங்கை

கால பழைமையால் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை இன்னவிடம் தெரியாது எனபது திரு உள்ளமாகில்
எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர்
வண்மை மிகு கச்சி மலை மா மயிலை -என்றும்
பொய்யில்லாத மணவாள மா முனிகள் அருளிச் செய்து இருக்க மாட்டாரே-

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 18, 2021

கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம்
ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப் பேசி யநுபவிக்கிறார்.

ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —-91-

பதவுரை

ஊனக் குரம்பையின்–மாம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு–உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி–(நினைக்கிற அஜ்ஞாநமாகிற) இருட்டைப் போக்கி
ஞானம்–தத்வ ஜ்ஞாநமாகிற
சுdடர்–விளக்கை
கொளீஇ–ஏற்றி
ஏனத்து உரு ஆய்–வராஹ ரூபியாகி
உலகு இடந்த–(பிரளயங்கொண்ட) பூமியைக் குத்தி யெடுத்துக் கொணர்ந்த ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
நாள் தோறும்–எப்போதும்
மருவாதார்க்கு–ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ–பரம பதம் கிடைக்குமோ?[கிடைக்க மாட்டாது.]

“ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது-
“தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று
பரம ஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டும் இருக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி.
இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்;
சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க.
அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார்.
ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப் பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து
ஞானப் பிரானது திருவடிகளை யடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்;
மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை.
உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தை யழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன்
என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.

————–

உலகமுண்ட பெருவாயனான யுனக்கு ஓரிடைச்சி கடைந்து வைத்திருந்த வெண்ணெயை வாரி விழுங்கி யுண்டவளவால்
பசி தீர்ந்ததாகுமோ? என்றவிதன் கருத்து யாதெனில்;
அவாப்த ஸமஸ்த காமனானவுனக்குப் பசி என்பதில்லை; வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டதெல்லாம்
பசி நீங்கி வயிறு நிறைவதற்காக வன்று; ஆச்ரிதருடைய ஹஸ்த ஸ்பர்சம் பெற்ற வஸ்துவை உட்கொண்டாலன்றித்
தரிக்க முடியாமையினால் உண்டாயத்தனை என வெளியிட்டபடியாம்.

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-

“வானாகி… மாருதமாய்” என்று இங்கே நான்கு பூதங்களைச் சொன்னது ஐந்தாவது பூதத்துக்கும் உபலக்ஷணம்;
இத்தால், பஞ்ச பூதங்களாற் சமைந்த இவ்வண்டத்திற்குள்ளிருக்கும் பதார்த்தங்கட்கு நிர்வாஹகனானவனே! என்றதாயிற்று.

தேனாகிப் பாலாந்திருமாலே! என்றது-பரமபோக்யனான உன்னை ஞனிகள் உட்கொள்ளக் கருதா நிற்க
நீ வேறொரு வஸ்துவை போக்யமாக நினைத்து உட்கொள்ளுவது என்னோ? என்ற குறிப்பு.

———–

புஷ்பத்தைக் காட்டிலும் மிகவும் ஸுகுமாரமான திருக்கையினால் முரட்டுடம்பனான இரணியனைத்தொட்டுப் பிடித்திழுத்து
ஆச்ரிதர்கட்கு ப்ராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக்கொண்டு மார்வைப் பிளந்தொழித்த பின்பும் பிரானே!
நீ உனது பற்கள் வெளித்தெரியும்படி நாவை மடித்துக்கொண்டிருந்தது ஏதுக்காக?
ஆச்ரித விரோதி முடிந்துபோன பின்பும் வெகு நாழிகை வரையில் சீற்றம் மாறாதேயிருந்தது ஏன்! என்று
கேட்கிறவிதன் கருத்து யாதெனில்;
எம்பெருமான் ஆச்ரித விரோதிகளின் மீது கொள்ளும் கோபமே சாணகதர்க்குத் தஞ்சமாவது என்ற அர்த்தத்தை காட்டினபடியாம்.

திருமங்கையாழ்வாரும் “கொடியவாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றமொன்றுண்டுளதறிந்து
உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே!” என்றருளிச்செய்தது காண்க:

அவ்விடத்து வியாக்யானத்திலே “தரித்ரனானவன் தநிகனையடையுமாபோலே ‘ சீற்றமுண்டு’ என்றாய்த்து இவர் பற்றுகிறது–
விரோதி நிரசநத்துக்குப் பரிகரமிறே சீற்றம்” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச் செய்துள்ளதும் குறிக்கொள்ளத்தக்கது.

வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக  வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக்  கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று ——–93-

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த–புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையை யுடையவனே!
வயிறு அழல–(என்ன தீங்கு நேருமோ வென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை–வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச–(அவன் உன் வடிவத்தைக் கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்–உனது திருவடிகளின் மேலே
(போட்டுக்கொண்டு)
பொறி உகிரால்–நாநா வர்ணமான நகங்களினால்
ஈடழிய செற்று–கட்டுக் குலைந்து போம்படி கொன்று
(பின்னையும் சீற்றம் மாறாமையால்)
எயிறு இலக–பற்கள் வெளித்தெரியும்படி
நீ வாய் மடித்தது–நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்–ஏதுக்காக?.

எயிறிலகவாய்மடித்ததென்? என்ற இக்கேள்விக்கு வாய்த்த உத்தரம்:-
ஆச்ரித விரோதி விஷயதிலுண்டான இப்படிப்பட்ட அளவு கடந்த சீற்றமே உலகட்கெல்லாம் தஞ்சமென்று
மற்றும் பல பக்தர்களுக்குக் காட்டுதற்காகவாம் என்பது.

“பொன்னாழிக் கையால்” என்றும் பாடமாம்.

————-

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-

பதவுரை

எழுந்து–(அநியாயம் மேலிட்டபடியால் லெளகிக பதார்த்தங்களை யெல்லாம் அடியோடு அழிக்கப் பெருமுயற்சியோடு) கிளம்பி
தீ விழித்து–(உள்ளே கொண்ட கோபம் வெளிக்குத் தெரியும்படி) நெருப்பெழ விழித்துப் பார்த்து
இந்த ஏழ் உலகும்–இவ் வுலகங்களை யெல்லாம்
செற்று–அழித்து
மற்று–பின்பு
இவை–“பிரளயத்தில் அழித்த இப் பதார்த்தங்கள்
சென்ற–(என்னிடத்து) அடங்கிக் கிடக்கின்றன “ (என்று சொல்லி)
ஆ என்று வாய் அங்காந்து–ஆ வென்று வாயைத் திறந்து
முற்றும்–ஸகல ஜகத்தையும்
மறையவற்கு–வைதிகனான மார்க்கண்டேய மஹர்ஷிக்கு
காட்டிய–(முன் போலவே யிருப்பதைக்) காட்டி யருளிய
மாயவனை அல்லால்–ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமானைத் தவிர்த்து
(வேறொருவனை)
என் நா–எனது நாவானது
இறையேனும்–சிறிது
ஏத்தாது–துதிக்க மாட்டாது

கால கதியைக் கடந்து என்றும் பதினாறாக நீடூழி வாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம்புரிந்து நரநாராயணரது ஸேவையைப் பெற்று
‘யான் பிரளயக் காட்சியைக் காணுமாறு அருள்புரிய வேண்டும்’ என்று பிரார்த்திக்க,
அவ்வாறே அவர்கள் அநுக்ரஹித்துச் சென்ற பின்பு, மாயவன் மாயையால் மஹாப்ரளயந் தோன்ற,
அப்பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு வருந்திய மார்க்கண்டேயன் அவ்வெள்ளத்தில்
ஆலிலையின் மீது ஒரு குழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற ஸ்ரீமந் நாராயணனைக் கண்டு
அப்பெருமானது திருவயிற்றினுட்புகுந்து அங்கிருந்த உலகங்களையும் ஸகல சராசரங்களையும் கண்டு
பெருவியப்புக்கொண்டனன் என்ற இதிஹாசம் அறியத்தக்கது.

பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கத்தந்தாதியுலும் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியிலும் “
எய்த்த மார்க்கண்டன் கண்டிடவமலைக்கு முலகழியாதுள்ளிருந்த தென்னே” என்றும்
“ஆலத்திலை சேர்ந்தழியுலகை யுட்புகுந்த காலத்திலெவ்வகை நீ காட்டினாய்… வேதியற்கு மீண்டு” என்றும் பேசினவை காண்க

யுகந்த காலத்திலே உலகத்திலே அக்ரமம் விஞ்சி அதனால் எம்பெருமான் உக்கிரங்கொண்டு இவ்வுலகங்களை யெல்லாம்
அழித்துத் தன்னிடத்திலே யடக்கிக் கொள்வனென்னும் நூற்கொள்கை காட்டப்பட்டது முதலடியில்,
சென்ற- சென்றன என்றபடி; அன்சாரியை பெறாத வினைமுற்று.

————–

இவ்வுலகில் எல்லாருமே நற்கதி பெறுதற்கு யாதொரு தடையுமில்லை;
எளிதில் அநுஸந்திக்கக்கூடிய திருவஷ்டாக்ஷரம் ஸித்தமாயிருக்கின்றது;
அதைச் சொல்லுவதற்குக் கருவியான நாவும் கடவுளால் படைக்கப்பட்டிருக்கின்றது;
இப்படி இம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நாவைக் கொண்டு எம்பெருமானை ஏத்துகைக்கென்று ஏற்பட்ட நானக் கொண்டு
எம்பெருமானை ஏத்தாதே உபயோகமற்ற விஷயங்களைச் சொல்லுகைக்கு இதை கருவியாகக்கொண்டு
உலகத்தார் அநர்த்தப்படுகின்றார்களே! இஃது என்ன ஆச்சரியம்! என்று ஆழ்வார் வியக்கின்றார்.
“நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்திநீ, ததாபி நரகே கோரே பத்ந்தீதி கிமத்புதம்,” என்ற
புராண ச்லோகத்தின் பொருளை இப்பாட்டால் அநுஸந்தித்தாராயிற்று

நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-

பதவுரை

நா–(ஸ்தோத்ரம் பண்ணுவதற்குக் கருவியான) நாக்கானது
(ச்ரமப்பட்டுத் தேடவேண்டாதபடி )
வாயில் உண்டே–ஒவ்வொருவருடைய வாயிலும் படைக்கப்பட்டிருக்கின்றதே;
ஓவாது–(ஸஹஸ்ராக்ஷரீமாலா மந்த்ரம்போலே இடையிடையே) விட்டு விட்டுச் சொல்லாமல்
உரைக்கும்–( எளிதாக ஒரு மூச்சிலே) சொல்லக்கூடிய
நமோ நாரணாய என்று உரை–திருவஷ்டாக்ஷர மந்த்ரம்
உண்டே–ஸித்தமாயிருக்கின்றதே;
மூவாத–கிழத்தன்மையற்ற [திரும்பிவருதலில்லாத]
மா கதிக்கண்–பரமப்ராப்யமான மோக்ஷத்திலே
செல்லும் வகையுண்டே–சென்று சேர்வதற்கேற்ற உபாயம் உண்டே;
(இப்படியிருக்கவும் உஜ்ஜீவிக்காமல்)
தீக்கதிக்கண்–விநாசத்துக்குக் காரணமான கெட்ட வழிகளிலே சிலர்
செல்லும் திறம் என்–போய் விழுகிறபடி என்னோ!.

முதலடியில் “நமோ நாரணா வென்று “ என்றே பெரும்பான்மையான நவீந பாடம் வழங்கிவரக் காண்கிறது;
இப்பாடத்தில் வெண்டளை பிறழ்தலால் “நமோ நாரணாய வென்று” என்ற ப்ராசீன பாடமே கொள்ளத்தகும்.
இனி நவீந பாடத்தையும் பொருந்தவிடலாம்; ‘நாரணா வென்றோவாதுரைக்கும்’ என்று ஸந்தியாக்காமல்
‘ந்மோநாரணாவென்று ஓவாது ’ என்று ஸந்தியாக்குக: குற்றியலுகரத்துக்கு முன் உடம்படுமெய் வந்த்தாகக் கொள்க.

ஓவாது உரைக்கும் உரை- ஸஹஸ்ரரக்ஷரீமாலா மந்த்ரத்தைச் சொல்லவேணுமானால் இடையில் மூச்சுவிடவும் முடியாதே;
நெடுமுயற்சிகொண்டும் ஓய்ந்து ஓய்ந்து சொல்லவேண்டிய அருமை யுண்டு; திருவஷ்டாக்ஷரம் அப்படியன்று;
இடையில் ஓய்வை அபேக்ஷியாமல் ஒரு காலே சொல்லி இளைப்பாறலாம் படியான மந்த்ரமிது.
இவ்வளவு ஸுலபமான மந்த்ரம் கைப்பட்டிருக்கவும் அந்தோ! சிலர் இழக்கிறார்களே! என்ன கொடுமை!

—————–

அந்தோ! சிலர் அநியாயமாக நரகவழி நோக்குகின்றனரே! என்று கீழ்ப்பாட்டில் உலகத்தாரைப் பற்றிக் கவலையுற்ற ஆழ்வார்,
இப்பாட்டில், அவர்கள் எங்ஙனே கெட்டொழிந்தாலும் ஒழிக;
நெஞ்சே! நீ மாத்திரம் ஸர்வநிர்வாஹகன் அப்பெருமானொருவனே யென்று நான் சொல்லுவதில் ஒரு போதும்
விப்ரதிபத்தி கொள்ளாமல் இதுவே பரமார்த்த மென்று உறுதிகொண்டிரு-என்று திருவுள்ளத்தை நோக்கி உபதேசிக்கின்றனர்.

திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான்  புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய்  கடைக்கட் பிடி –96–

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!
அறம் பாவம் என்ற இரண்டும் ஆவான்–புண்யம் பாபம் எனப்படுகின்ற இருவகைக் கருமங்களுக்கும் நிர்வாஹகன்
செம் கண் மால் கண்டாய்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானே யாவன்;
இம்மண் தான்–இந்தப்பூமியும்
மறி கடல் தான்–அலையெறிகிற கடலும்
மாருதம் தான்–வாயுவும்
வான்–ஆகாசமும்
புறம் தான்–இவை தவிரவுள்ள மஹாந்முதலிய தத்துவங்களும்
(ஆகிய எல்லாவற்றுக்கும் நிர்வாஹகன்)
தானே கண்டாய்–அந்தத் திருமாலேயாவன்;
கடைக்கண்–முடிவாக ஆராய்ந்து பார்க்குமளவில்
(இதுவே உண்மையென்பதை)
திறம்பாது–தவறாமல்
பிடி–உறுதியாகக்கொள்.

————–

கீழ்ப்பாட்டில் “ அறம்பாவ மென்றிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு.
புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்காயிருக்குமென்றிறே கீழ்ப்பாட்டிற்சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன,
இரண்டுக்கும் இரண்டு வ்ருத்தாந்தங்கள் காட்டுகிறாரிதில்;

பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை  மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–

பதவுரை

பிடிசேர் களிறு–பேடையோடு சேர்ந்து விஷய போக பரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த–காத்தருளின
பேராளா–மஹாநுபாவனே!
பொடி சேர்–(தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான்–அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல்–ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த–(அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல்–ஜலமயமான
கங்கை என்னும் பேர்–கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன்–சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து–உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள் அன்றே–(பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ

ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம்.
அக்களிறு பூர்வஜந்மவாஸநையினால் பகவத்பக்தி மாறாதிருக்கப் பெற்றாலும் மற்றுள்ள காட்டானைகள் போலே
விஷயப்ரவணமுமாய்த் திரிந்துக்கொண்டிருந்தமை பற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடி- யானையின்பேடை.]
சாபத்தின் பலனாகப் பாபயோநியிற் பிறவிபெற்ற அவ்யானைக்கும் அருள் செய்யக் காண்கையாலே
பாபம் அவனிட்ட வழகாயிருக்குமென்பது பெறப்பட்டது.

பாபிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந் தன்மை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே
புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது.
“ஆனின் மேயவைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [ சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள்
முதன்மையாகக் கூறப்படுகிற ’பஞ்சகவ்யமும் பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது] என்றார் திருமழிசைப்பிரான்;
‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே
‘ கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸக்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது

————

கீழ்ப்பாட்டில், எம்பெருமானது திருவடியில் தோன்றிய கங்கையைச் சடைமேலே தரித்துக் கொண்டதனாலே
ருத்ரன் பாதகம் நீங்கிப் பரிசுத்தனாயினானென்றது; இப்படி ஏன் சொல்லவேண்டும்?
இதனால் ருத்ரனுக்கொருகுறை சொல்லலாமோ? அவனும் ஒரு ஸம்ஹாரக் கடவுளென்று பேர்பேற்று ஈச்வரனென்று
நாட்டில் கெளரவிக்கப் படவில்லையா? என்றொரு கேள்வி பிறக்க,
அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமானுக்கு சரீர பூதனாகையாலே வந்ததித்தனையொழிய
இயற்கையாக இல்லையென்பதை மூதலிக்கக் கருதி இப்பாட்டருளிச் செய்கிறார்.

பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-

பதவுரை

பொன் திகழும் மேனி–பொன்போல விளங்குகின்ற உடலையும்
புரி சடை–பின்னின சடைமுடியை யுமுடையவனாய்
அம்–அழகிய,
புண்ணியனும்–(ஸாதநாநுஷ்டானமாகிற ) புண்ணியத்தை யுமுடையனான ருத்ரனும்
நின்று உலகம் தாய நெடு மாலும்–நின்று உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஸர்வேச்வரனும்
என்றும்–எக் காலத்திலும்
இருவர் அங்கத்தால் திரிவர் ஏலும்–இருவராகி வெவ்வெறு வடிவத்தைக் கொண்டு இருந்தார்களே யானாலும்
ஒருவன்–சடை புனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து–நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும்–எப்போதும்
உளன்–ஸத்தை பெற்றிருப்பன்.

அரியும் அரனும் தனித்தனி இரண்டு சரீரங்களை யுடையவராய்த் திரியா நின்றாலும்
அரனானவன் அரியினது திருமேனியின் ஒருபுறத்திலே யொதுங்கி ஒரு வஸ்துவாக ஸத்தை பெறுகிறான் என்றதாயிற்று.
“ பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே” என்றார் நம்மாழ்வாரும்.

“புரிசடையம்புண்ணியன்” என்ற தொடரில் இவனுடைய வேஷமே இவன் ஈச்வரனல்ல னென்பதைக் காட்டுமென்ற கருத்தும்,
“ நின்றுலகம் தாயநெடுமாலும் “ என்ற தொடரில், ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசியற
எல்லார் தலையிலுமாகத் தனது தாளை நீட்டியவனென்பதால்
அவனே ஸர்வேச்வரனென்ற கருத்தும் ஸ்பஷ்டமாக விளங்குதல் காண்க

ஒருவன் ஒருவனங்கதென்றுமுளன் – “வலத்தனன் திரிபுரமெரித்தவன் “ என்ற திருவாய்மொழியுங் காண்க.
“ஒருவனங்கத்து” என்பதற்கு. –ஸ்ரீமந் நாராயணனாகிய ஒருவனுடைய சரீரத்தின் ஏகதேசத்திலே என்றும்,
சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்வர்.

———–

தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார். திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு
வாஸஸ்தலங்களாயினும் அவ்விடங்களில் எம்பெருமான் வஸிப்பதானது
ஸமயம் பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற் காகவேயாம்.
ஸ்ரீவாநபூஷனத்தில்— “திருமாலிருஞ்சோலைமலையே என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைத் தேகத்திலே பன்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதாநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்;
‘கல்லுங் கனைகடலும்’ என்கிறபடியே இதுஸித்தித்தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீஸூக்திகள் காண்க.

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்;
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் ( நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்;
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன்–நித்யவாளம்
கண்டாய்–பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின் உள்ளானும்–திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும்–திருமலையிலே நிற்பவனும்
உள்ளத்தின் உள்ளான் என்று–இப்போது நம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து நித்யவாஸம் பண்ணுகிறானென்று
ஓர்–தெரிந்துகொள்.

நெஞ்சே! ஸர்வரக்ஷகனான ஸர்வேச்வரன் திருப்பாற்கடல் திருமலை முதலிய இடங்களில் வந்து தங்கினது
விலக்காதார் நெஞ்சில் வந்து புகுவதற்காகவேயாதலால் அவன் இப்போது நம்முடைய நெஞ்சில்
ஆதரவோடு நித்யவாஸம் பண்ணலானான், இதனை நீ அறிந்து உவந்திரு என்கிறார்.

இதோ, நன்னெஞ்சே! என்று நெஞ்சை விளித்து ‘உள்ளத்தினுள்ளா னென்றோர்’ என்றது எங்ஙனே பொருந்தும்?
நெஞ்சமும் உள்ளமும் ஒன்றுதானே; நெஞ்சுக்கும் ஒரு உள்ளமிருப்பதுபோலச் சொல்லியிருக்கிறதே, இஃது ஏன்? என்னில்;
இது மிகச் சிறிய கேள்வி; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்தி விளிப்பது
அதைத் தனிப்பட்ட வொரு வ்யக்தியாக ஆரோபணம் செய்துகொண்டேயாதலால் இதுவும் ஒரு ஆரோபணமேயாம்.
நெஞ்சு தவிர உசாத்துணையாவார் வேறொருவரு மில்லாமையால் நெஞ்சை விளித்துச் சொல்லுகிறதித்தனை.

————

எம்பெருமானுடைய திருவடிகளை நாம் ஸாக்ஷாத்கரிக்கப் பெறவேண்டில்
அதற்கு அவனையே உபாயமாகக் கொள்ள வேணுமென்கிறது.
“மாயவனையே மனத்து வை” என்றது எம்பெருமானொருவனையே உபாயமாகக் குறிக்கொள் என்றபடி.
அப்படி அவனையே உபாயமாகக் கொண்டால் அவனுடைய உபய பாதங்களையும் ஸேவிக்கப் பெறுகை நமக்கு எளிதாம் என்றாராயிற்று.

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–எம்பெருமானையே
மனத்து வை–மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

இப்பாட்டின் முதலிலுள்ள ‘ஓரடியும்’என்பதற்கு ‘உலகளந்த ஒரு திருவடியும்’ என்று பொருளுரைத்தது-
மேலே “ஓரடியின் தாயவனை” என்பதற்கேற்ப. கீழும் மேலும் பரவி இரண்டு திருவடிகளுமே உலகளந்தன வாதலால்
அத்திருவடியிணையை யெடுத்துக்கூறாது சகடாஸுரனை யுதைத்துத் தள்ளின திருவடியைக் கூட்டிக்கொண்டதென் னென்னில்;
விரோதி நிரஸநஞ் செய்யும் வல்லமையுடைமை தோற்றுதற்காக வென்க.
உலகளந்த திருவடியானது எல்லார் தலையிலும் ஏறி வீற்றிருந்து இஷ்டப்ராப்தி செய்வித்தது;
சாடுதைத்த திருவடியானது சகடாஸுரனுடைய வஞ்சனையில் நின்றும் (கண்ணபிரானாகிய ) தன்னைத் தப்புவித்த முகத்தால்
அநிஷ்ட நிவ்ருத்தி செய்வித்தது;
ஆகவே இஷ்டத்தை நிறைவேற்றுவித்து அநிஷ்ட்த்தை ஒழித்திடவல்ல திருவடிகளையுடையன் எம்பெருமான் என்று காட்டினாராயிற்று.

எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் த்ரிவிக்ரமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமுமே இவ்வாழ்வார் தாம்
மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே உலகளந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப்
பிரபந்த்த்தை முடித்தருளினாரென்று பெரியோர் நிர்வஹிக்கும்படி.
பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்றது காண்க.

உபாயமும் உபேயமும் எம்பெருமானே;
சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே நமக்கு வேண்டியது-என்று அருளிச்செய்து
தலைக்கட்டினாராயிற்று.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

ப்ரயோஜநாந்தர பரர்கட்குங்கூடத் தன் திருமேனி நோவக் கடல் கடைந்து அமுதத்தை யெடுத்துக் கொடுத்து
அத்தேவர்கட்கு அஸுரஜாதியால் யாதொரு தீங்கும் நேரிடாதபடி ரஷித்தருளு மெம்பெருமானுடைய
திருநாமமே ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் உத்தாரகம் என்கிறார்.

ஆளமர் வென்றி யடு களத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி  வரை நட்டு நீளவரைச்
சுற்றிக் கடைந்தான் பெயரன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை -81-

பதவுரை

ஆள் அமர்–யுத்த வீரர்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும்
வென்றி–ஜெயத்தை யுடையதுமான
அடு களத்துள்–(எதிர்த்தவரைக்) கொல்லுகின்ற யுத்த களத்திலே
அஞ்ஞான்று–(அசுரர்களைத் தேவர்கள் மேல் விழுந்து நலிந்த) அக் காலத்திலே
வாள் அமர் வேண்டி–(அநுகூலரான தேவர்கட்கு வெற்றி யுண்டாகும்படி) மதிப்புடைய யுத்தத்தை விரும்பி.
(அதற்கு ஏற்ப)
வரை நட்டு–(தண்ணீரில் அமிழக்கூடிய, மந்த்ர) பர்வதத்தை மத்தாக நாட்டி.
நீள் அரவை சுற்றி–உடல் நீண்ட வாசுகி நாகத்தைக் கடை கயிறாகச் சுற்றி
கடைந்தான்–அமுத முண்டாகும்படி திருப்பாற் கடலைக் கடைந்தவனுடைய
பெயர்–திரு நாமம் (எப்படிப்பட்ட தென்றால்)
பற்றி–(ஸம்ஸாரிகளை) வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போய்
தொல் நரகை–பழமையாயிருக்கிற (ஸம்ஸாரமென்னும்) நரகத்தை
கடத்தும்–தாண்டு விக்கின்ற
படை–ஸாதனம்.

கடல்கடையுங்காலம் தேவாஸுரர்கள் பரஸ்பரம் பெரிய போர் புரியுங்காலமா யிருந்ததனால்
“ஆளமர் வென்றியடு களத்துள்” எனப்பட்டது;
“ஆராத போரி லசுரர்களுந் தானுமாய்க், காரார் வரை நட்டு நாகங்கயிறாகப், பேராமல் தாங்கிக் கடைந்தான்” என்று
சிறிய திருமடலிலுமருளிச் செய்யப்பட்டுளது.

நரகு என்றது ஸம்ஸாரத்தை.

———–

பெண் பிறந்தாரும் அநாயாஸமாக ஆச்ரயிக்கும்படி எம்பெருமான் திருமலையிலே
நித்ய வாஸம் பண்ணுகிறபடியை அநுஸந்திக்கிறார்.

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

பதவுரை

மேல் ஒருநாள்–முன்னொரு காலத்திலே [ஸ்ரீராமாவதாரத்திலே]
மான்–மாரீசனாகிற மாய மான்
மாய–இறந்து விழும்படி
எய்தான்–அம்பு தொடுத்து விட்ட இராமபிரான் (நித்திய வாஸஞ்செய்கின்ற)
வரை–மலையாவது,
படை ஆரும் வாள் கண்ணார்–வேலாயுதம் போன்று ஒலி பொருந்திய கண்களையுடைய பெண்கள்
பாரசி நாள்–த்வாதசியன்று
பை பூ தொடையலோடு–பசிய (வாடாத) மலர்களைத் கொண்டு தொடுத்த மாலையோடு கூட
ஏந்திய–திருவேங்கட முடையானுக்கு ஸமர்ப்பிக்கும்படி) ஏந்தியுள்ள
தூபம்–தூபமானது
இடை இடையில் மீன்–(ஆகாசத்தில்) நடுவே நடுவெ தோன்றுகின்ற நக்ஷத்ரங்கள்
மாய–மறையும்படி
மாசூணும்–மாசு ஏறும்படி பண்ணா நிற்கிற
வேங்கடமே–திருமலையே யாகும்.

திருமலையில் நாள்தோறும் நானாவகை யடியவர்கள் வந்து ஆச்ரயியா நிற்க,
‘படையாரும் வாள் கண்ணார்’ என்று ஸ்த்ரீகளை மாத்திரமும்
‘பாரசிநாள்’ என்று த்வாதசீ தினத்தை மாத்திரமும் விசேஷித்து எடுத்துச் சொன்னதன் கருத்து யாதெனில்;
அறிவொன்று மில்லாத பெண்களுங்கூட வந்து பணியுமாறு ஸர்வ ஸமாச்ரயணீயனாக இருக்குமிருப்பு விளங்குதற்காகப்
படையாரும் வாள் கண்ணர்’ என்றார்;
சிற்றஞ் சிறுகாலையில் தானே பாரணை செய்யும்படி விடிவதற்கு முன்னே வைஷ்ணவர் யாவரும் தொழுவதற்கு ஏற்ற
நாளாதல் பற்றி ஸத்வோத்தரமான த்வாதசிநாளை யெடுத்தருளிச் செய்தனர்.

‘த்வாதசீ’ என்னும் வடசொல் பாரசியெனச் சிதைந்தது. தூபம் – வடசொல்.

திருவாராதந உபகரணமான தூபத்தின் கமழ்ச்சியே திருமலையெங்கும் பரவிக் கிடக்கின்றதென்பது மூன்றாமடியின் கருத்து

————

ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் –83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக்கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மதுகைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும் அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத்தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்றவா  றேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

எம்பெருமானே! ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பதுமாகிய இரண்டு காரியங்கள் உனக்கு உண்டு;
ஆச்ரித விரோதிகளை சிக்ஷிப்பது தானே ஆச்ரித ரக்ஷணமாகத் தேறுமாதலால் விரோதிகளைத் தொலைப்ப தென்கிற
ஒரு காரியமே போதுமாயிருக்கின்றது; அக்காரியஞ் செய்ய உனக்கு முக்கியமான ஸாதநம் திருவாழி;
அத்திருவாழியைக் கொண்டே ஆச்ரித விரோதிகளைப் பொடிபடுத்துகின்றாய்;
மதுகைடபர் முதலிய துஷ்ட வர்க்கங்களைப் பொடிபடுத்தின அவ்வாயுதம் கையிலேயிருக்கவும்,
ஆநிரையைக் காக்க மலையை யெடுப்பதும் நப்பின்னையைக் காக்க விடையேழடர்ப்பதும் முதலியனவாக
உடம்பு நோவக் காரியஞ்செய்த்து என்னோ?
திருவாழியை ஏவினால் இந்திரனது தலை அறுபடுமே; கல்மழை ஓயுமே; ஆயர்களும் ஆநிரைகளும் இனிது வாழ்ந்து போமே;
மலையை யெடுத்துப் பரிச்ரமப் பட்டிருக்க வேண்டாவே;
இங்ஙனமே, நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்கு விரோதியாயிருந்த எருதுகளின் மேலும்
திருவாழியைப் பிரயோகித்திருந்தால் உனக்கொரு சிரமமின்றியே காரியம் இனிது நிறைவேறி யிருக்குமே;
இப்படி அநாயாஸமாக ஆச்ரித விரோதிகளை நிரஸிக்கும் முகத்தாலேயே ஆச்ரித ரக்ஷணத்தை மிக எளிதாகச்
செய்யலாமாயிருக்கவும் நீ உடம்புநோவக் காரியஞ்செய்தது வெறுமனேயோ?
ஆச்ரித பாரதந்திரியத்தால் அவர்கள் காரியத்தைச் செய்வதைப் பெறாப்பேறாக நினைப்பதனாலன்றோ? – என்று
ஆழ்வார் எம்பெருமானது ஆச்ரித பாரதந்திரியத்திலீடுபட்டுப் பேசினரென்க.

மூன்றாமடியில் ‘நேரான’ என்றிருக்க வேண்டிய பெயரெச்சம் ‘நேரா’ என்றிருக்கிறது.

‘நிசாசரர்’- வடசொல்; இரவில் திரிகின்றவர்கள் என்று காரணக்குறி.

————

எம்பெருமானே ‘நீ பெரிய வடிவு கொண்டு உலகளந்த காலத்து மிக விசாலமான அத் திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த
பூமியானது வராஹாவதார காலத்தில் எயிற்றின் ஏக தேசத்திலும் அடங்காதிருந்ததென்று
புராணம் வல்லார் வாய்க் கேள்விப்படுகின்றோம்; இப்படியிருத்தற்கு ஹேதுவான உனது பெருமை
ஸர்வஜ்ஞனான உன்னால் தான் அறியமுடியுமோ முடியாதோவென்று ஸந்தேஹிக்கும்படியா யிராநின்றதே யன்றி
உன்பெருமை ஒருவராலு மறியக்கூடியதா யில்லை காண் என்றாராயிற்று.
உன்னால் முயர்வற மதிநலமருளப் பெற்ற என் போல்வார் உன் பெருமையை ஒருகால் கண்டறியக் கூடுமல்லாமல்
ஸ்வ யத்நத்தாலுணர விரும்புவார்க்கு ஒருநாளும் காணமுடியாதென்று கூறுதலும் உள்ளுறையுமென்ப.

பிரானுன்  பெருமை பிறர் ஆர் அறிவார்
உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி –84-

பதவுரை

பிரான்–உபகாரகனே!
உலகு–லோகத்தை
உராய் அளந்த நான்று–எங்கும் ஸஞ்சரித்து அளந்த காலத்தில்
எந்தை–எனது ஸ்வமியான வுன்னுடைய
அடிக்கு–திருவடிகட்கு
அளவு போந்த–அளப்பதற்குப் போந்திருந்த
படி–பூமியானது
வராகத்து–வராஹ ரூபியான உன்னுடைய
எயிறு–திரு வெயிற்றின்
அளவு–ஏக தேசத்தளவும்
போதா–போதாதாக இருந்த
ஆறு–விதம்
என் கொல்–எங்ஙனேயோ?
உன் பெருமை பிறர் ஆர் அறிவார்–உனது பெருமையை யறிவார் யாருமில்லை

இரண்டாமடியில், உராய்-உலாய் [உலாவி] என்றபடி;
ரகர லகரங்கட்கு அபேதங்கொள்ளும் மரபினால் இவ்வாறு பொருள் கூறுதல் பொருந்தும்.
சிறிதும் சிரமமின்றி என்று கருத்து. இது பட்டருடைய நிர்வாஹம்.
இனி, ‘உரையாய்’ என்னும் முன்னிலையே வலொருமை வினைமுற்று ‘உராய்’ எனத் திரிந்திருப்பதாகக் கொள்ளலாமென்றான் ஒரு தமிழன்; ‘
சொல்லு’ என்று ‘பொருளாம்; அது வேண்டா. உராய்- உரோசிக் கொண்டு; எல்லாரோடும் தீண்டிக் கொண்டு என்றுமாம்.

————

கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராரறிவார்” என்று ஆழ்வார்ருளி செய்யவே,
அவரது நெஞ்சானது “பிறராரறிவாரென்று சொல்லுவானேன்? நானறிந்திருக்கிறேனே:” யென்று அபிப்ராயங்காட்ட;
நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்ரயணத்திலே இழிந்தாயத்தனை யல்லது இன்னமும் அவன் படிகளை
ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றாயில்லையே; அப்படி ஸாக்ஷாத் கரித்திருப்பாயேல்,
அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்ரித ரக்ஷணார்த்தமாக
எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற்றாயோ? அன்றி,
அவன் திருவனந்தாழ்வா நநுபவிக்குபடி தனது திருமேனியைத் தந்த வண்ணமாக யோக நித்திரை
செய்தருளும்படியை ஸேவிக்கப்பெற்றாயோ? ஏதேனும் ஸேவிக்கப்பெற்ற துண்டாகில் சொல்லிக்காண் என்கிறார்.

இதனால், எம்பெருமான் கருடாரூடனாயும் சேஷசயனனாயும் ஸேவை ஸாதிக்கப் பெறுதலில்
தமக்கு ஆசை கரை புரண்டிருக்கும் படியை வெளியிட்டாராகிறார்.

படி கண்டு அறிதியே பாம்பணையினான் புட்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி யைந்து முள்ளடக்கிப்   போதொடு நீரேந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ –85-

பதவுரை

பொறி ஐந்தும்–பஞ்சேந்திரியங்களையும்
(வெளியில் மேயவொட்டாதபடி)
வடிவில் உள் அடக்கி–சரீரத்திற்குள்ளே அடங்கி யிருக்கச் செய்து
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக் கொண்டு
நெறி–ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே
நின்ற–நிலைத்து நின்ற
நெஞ்சமே–மனமே!
நீ–நீ
பாம்பு அணையினான்–சேஷ ஷாயியான பெருமானுடைய
புள் கொடி–கருடப் பறவை யாகிற த்வஜத்தை
கண்டு–ஸேவித்து
அறிதியே–அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி)
படி–அவனது திருமேனியை
கண்டு அறிதியே–ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ?
கூறாய்–சொல்லு

—————-

“பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாலிரவின், மூவருநெருக்கி
மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் [பொய்கையார், பூதத்தார், பேயார்]
மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதி பாடின தலம் திருக்கோவலூர் என்பது ப்ரஸித்தம்.
இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு.

பிரானே! நானும் மற்றையாழ்வார்க ளிருவரும் ஓடித் திரியும் யோகிகளாய் க்ராமைக ராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில்
உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவலூரில் நெருக்கமானதொரு இடைகழியிலே வந்து சேர,
அங்கே நீ திருமகளோடு வந்து புகுந்து நெருங்கினாயே இஃது என்ன திருவருள்! என்று ஈடுபடுகின்றார்.

திருக்கோவலிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீமந்நாராயணனுடைய நீலமேக ச்யாமலமான திருமேனியையும்
காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணாலே கண்டு அநுபவித்தபடியை
இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது]

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தைக் குறித்து ‘நீ அவனை சாக்ஷாத்கரித்து அநுபவிக்கப் பெற்றாயில்லை’ என்று
சொன்னது பொறுக்க மாட்டாமல்
இவரிருந்த விடத்திலே எம்பெருமான் பிராட்டியுந் தானுமாகவந்து நெருக்க,
அதைக் கண்டு அனுபவிக்கிறார் என்று இப்பாட்டுக்கு அவதாரிகை கூறுதல் பரம ரஸம்,
“ இவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து ‘ஸாக்ஷாத் கரித்திலையிறே’ என்னைத் தரியானிறே அவன்” என்ற
பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையும் அநுபவிக்கத்தக்கது.
முன்னே நடந்த திருக்கோவலிடை கழி நெருக்கத்தை எம்பெருமான் மீண்டும் அநுபவிப்பித் தருளினன் போலும்.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்
கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல்
இடை கழியே பற்றி இனி —86-

பதவுரை

குன்று–கோவர்த்தன மலையை
எடுத்து–வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த–மேலே வந்து சொரிகிற மழையை மேலே விழாமல் தடுத்த
பண்பாளா–குண சாலியே!
காமர் பூ கோவல்–விரும்பத் தக்க அழகிய திருக் கோவலூரில்,
வாசல் கடை–திருவாசலுக்கு வெளியே.
கழியா–வெளிப் பட்டுப் போகாமலும்
உள் புகா–உள்ளே புகாமலும்
இடை கழியே–நடுக் கட்டான இடை கழி யிடத்தையே
(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)
பற்றி–விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்–நீயும் பிராட்டியுமாக
இனி–இப்போது
நின்றாய்–நின்றருளினாய்;
ஆல்–ஆச்சரியம்!

குன்றெடுத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்ற வக்காலத்து
இடையரிடைச்சிகளோடும் பசுக் கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றாற்போலே யன்றோ
எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. ‘பனி மறைத்த’ என்றும் சிலர் பாடமோதுவர்.

வடமொழியில் ‘தேஹளீ’ என்னப்பட்டும், உலக வழக்கில் ‘ரேழி’ என்னப் பட்டும் வருகிற ஸ்தானமே
இடை கழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ளே உபாஸகனான ரிஷியுமா யிருக்கையாலே
அநந்ய ப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிடமே எம்பெருமான் தான் உவந்து சாருமிடமாகப் பற்றினானென்ப.

———–

கீழ்ப்பாட்டில் ஆழ்வாருடைய திருவுள்ளம் ஆநந்த்த்தின் எல்லையிலே நின்றது;
திருக்கோவலூரிடை கழியிலே பெருமானோடும் பிராட்டியோடும் நெருக்குண்டிருக்கும் நிலைமையிலேயே
இருப்பதாகத் தம்மை யநுஸந்தித்தார்;
இனித் தாம் உலகத்தாரை யெல்லாம் உபதேசங்களாலே நன்கு திருத்திப் பணி கொள்ளலாமென நிச்சயித்தார்.
அப்படியே எல்லாரும் திருந்தி எம்பெருமான் திருவடிகட்கு ஆட்பட்டுவிட்ட்தாகவும் பாவநா ப்ரகர்ஷத்தாலே அநுஸந்தித்தார்;
இனி எல்லாரும் ஈடேறி விட்டதாகவும் நரகத்துக்குச் செல்ல ஆள் கிடையாதாகவுங்கருதி
“நமன் தமர்காள்! நீங்கள் நரகவாசலை யடைத்துவிட்டு ஓடிபோகலாம்; இனி உங்கள் நாட்டுக்கு அதிதிகளாக வருவாராருமில்லை;
உங்கட்கும் காரிய மொன்றுமில்லை; இங்ஙனே உண்மையை எடுதுரைக்கின்ற என்மேல் நீங்கள் கோபங் கொள்ளவேண்டா”
என்று யம பரர்களை நோக்கி அதி கம்பீரமாக அருளிச் செய்கிறார்.

ஆழ்வாரருளிச் செயல்கள் நடமாடும் இந்த ஜம்பூத்வீபமே நாடு; மற்ற இடம் காடு என்ற பொருள் இதில் தொனிக்கும்.

” பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கி யாதொன்றுமில்லை”
என்ற திருவாய்மொழிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத் தகும்.

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித் தாள் கோமின் கனிசாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேச்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம் (அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பதுதானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழுவகைப்பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனிமேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யமகிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்கமுடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்.

ஈற்றடியில், அறிந்த- அன்சாரியை பெறாத வினைமுற்று; அறிந்தன என்றபடி.
நாட்டிலுள்ளவர்கட்கெல்லாம் இனி விரைவில் பகவத் விஷய ஜ்ஞாநம் உண்டாகியே விடும் என்ற நம்பிக்கையினால்
எதிர்காலச் செய்தியை இறந்த காலச் செய்தியாகவே கூறிவிட்டாரென்க.

எழுநரகம்- நரகங்கள் பல பல கிடக்கின்றனவே; ஏழுதானோவுள்ளது என்னில்;
கொடிய நரக வகைகளைப்பற்றி எழுநரகமென்றது;
அவை “ பெருங்களிற்று வட்டம் பெருமணல் வட்டம், எரியின் வட்டம் பூகையின் வட்டம், இருளின் வட்டம் பெருங்கீழ் வட்டம்,
அரிபடை வட்டமென எழுவகை நரகம்” என ஓரிடத்திலும்,
“கூட சாலங் கும்பீ பாகம், அள்ளலதோகதி யார்வம்பூ, செந்துவென்றேழுந் தீநரகப்பெயர்” என வேறோரிடத்திலும்
இன்னும் வரிவகையாகவும் தமிழ் நூல்களிற் கூறப்பட்டுள்ளன.
இனி, ரெளரவம், மஹாரெளரவம், தமச், நித்ருந்தநம், அப்ரதிஷ்டம், அஸிபத்ரம், தப்தகும்பம் என்று கூறுவாரும்
வேறுவகையாகக் கூறுவாரு முலர்.
இனி, “எழுநரகம்” என்ற இத்தொடர்க்கு-
எழுகிற நரகம் = சம்ஸாரிக லடங்கலும் சென்று புகுகிற நரகம் என்றும்,
கிளர்த்தியையுடைய நரகமென்றும் பொருள் கூறுதலுமுண்டு.

முனியாது – நரக வாசலில் எப்போதும் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தாங்கள் கை சலிக்க நலியுமாறு
எந்தப் பாவி வரப் போகிறானென்று எதிர்பார்த்த வண்ணமா யிருக்கின்ற யம படர்களை நோக்கி
“ மூரித்தாள் கோமின் = கதவுகளைக் கெட்டியாகப் பூட்டிக்கொண்டுஒழிந்து போங்கள்” என்றால்
அவர்களுக்குக் கோபம் உண்டாவதற்கு ப்ரஸக்தியுள்ளதனால் ’முனியாது’ என்கிறார்.
உண்மை யுரைப்பவன் மீது கோபங்கொள்ளலாகா தென்கை.
மூரித்தாள் — மிக்க வலிமையுள்ள தாழ்ப்பாள். கோமின் என்ற வினைமுற்றில், கோ- வினைப்பகுதி;- தொடுத்தல்.

நாவல் நாடு – ஜம்பூத்வீபம்; அதிலுள்ள பிராணிகட்கு இடவாகு பெயர்.

————–

கீழ்ப் பாட்டில் “இனியார் புகுவாரெழுநரக வாசல்“ என்று கம்பீரமாக அருளிச் செய்து விட்டாலும்,
உண்டியே உடையே உகந்தோடுமிம் மண்டலத்தவர்கள் திருந்தி உய்வதென்பது எளிதன்றே;
அநாதி துர் வாஸநையை அற்ப காலத்தில் அகற்றப்போமோ?

நரகத்துக்கு ஆளில்லாமற் போகும்படி எம்பெருமான் அருகேயுள்ள திருக்கோவலூரி லெழுந்தருளி யிருக்கவும்
அவனைப் பற்றாமல் நரகத்துக்கு ஆளாகும்படி ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களிலேயே மண்டித் திரிகிறபடியைக் கண்டாராழ்வார்;
தாமும் அவர்களைப் போல ஆகாதபடி தமது மநோ வாக் காயமென்னும் த்ரிகரணங்களும் அவ்வெம்பெருமான் விஷயத்திலேயே
ஊன்றி இருக்குமாற்றை உவந்து நினைந்து
’நாட்டில் உள்ளார் இவனை பெற்றாலென்? பெறாவிடிலென்? நான் நல்லபடியே ஈடேறலானேனே!’ என்று சொல்லி
தம் நிலைமைக்கு தாம் மகிழ்கிறார்.

“ நாடிலும் நின்னடியே நாடுவன்” என்றதானால் மநோவ்ருத்தியும்,
“பாடிலும் நின் புகழே பாடுவன்” என்றதனால் வாக்வ்ருத்தியும்
“சூடிலும் பொன்னாலியேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு” என்றதனால் சரீர வ்ருத்தியும் சொல்லப்பட்டனவாதலால்,
தமது மன மொழி மெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே அவகாஹித்தபடியை அருளிச் செய்தாராயிற்று.

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவதுதொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

ஈற்றடியில் “என் ஆகில்” என்பதற்கு- எனது கரண த்ரயமும் எம்பெருமானைப் பற்றின பின்பு நான்
இங்கு இருந்தால்தான் என்ன? பரமபதத்திற்கு போனால்தா னென்ன?
எல்லாம் எனக்கு ஒன்றே-என்பதாகக் கருத்துரைதலுமாம்.

‘சூடுவேற்கு’ என்பதே சூடுகின்ற எனக்கு ‘ என்று பொருள்பட விருந்தாலும்
ஈற்றடியில் “எனக்கு’ என்று தனியே பிரயோகித்துள்ளதனால்
சூடுவேற்கென்பது விசேஷணமாக மாத்திரம் பொருள்பட்டு நிற்கக் கடவது: சூடுகின்ற என்று பொருள்.
இங்ஙனமே பலகவிகளும் பிரயோகிப்பதுண்டு.

———–

இப்பாட்டும் கீழ்ப்பாட்டிற்கு சேஷபூதம். கீழ்ப்பாட்டில் ஓடின மகிழ்ச்சிப் பெருக்கே இதனிலும் பொலியும்.
த்ரிகரணங்களும் எம்பெருமான் திறத்தி லீடுபட்டு அடிமைச் சுவையைப் பூர்ணமாக அறிந்த தமக்கு
ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்கிறார். தமக்குண்டான ஏற்றத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்;-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் –89-

பதவுரை

எனக்கு–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்திர பூதனான எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்?
[எவருமில்லை;]
எம்பெருமான்–அந்த ஸர்வேச்வரனும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தானே தனக்கு ஒப்பாவானே யல்லாமல்
மற்று–அவன் தானும் எனக்கு ஒப்பாக வல்லனோ?
(இப்படி நீர் சொல்லும்படி உமக்கு வந்த ஏற்ற மென்ன? என்னில்)
புனம் காயா பூமேனி–தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும் பூவைப் பூ–காணக் காணக் கட்டவிழா நிற்கும் பூவைப் பூவின் நிறமும்
வரம்–சிறந்ததான
மா மேனி–(அவனது) கரிய திருமேனியை
காட்டும்–எனக்குக் காட்டா நிற்கும்.
[ஆகையாலே, போலியான பொருள்களைக் கண்டும் அவனைக் கண்டதாகவே நினைந்து மகிழ்கிற
எனக்கு ஒருவரும் ஒப்பாகார் என்றது.]

காயாம்பூ, பூவைப்பூ முதலியவற்றைக் கண்டால் ஸாமாந்ய ஜனங்கள்
‘இவை சிலகாட்டுபூக்கள்’ என்று எண்ணி யொழிகின்றனர்;
அப்புஷ்பங்களை நான் கண்டாலோ அப்படி எண்ணுவதில்லை;
‘ இவை ஸாக்ஷாத் எம்பெருமானது திருவுருவம்’ என்றே நினைக்கின்றேன்;
ஆகவே, இப்படி போலியான பொருள்களைக் கண்டவளவிலும் அப்பெருமானையே கண்டதாக நினைந்து களிக்கின்ற எனக்கு
இவ்விபூதியில் நிகராவார் ஆருமில்லையே;
எம்பெருமானும் தனக்கு தான் நிகரானவனேயன்றி எனக்கு நிகரல்லன் – என்றாராயிற்று.

இப்படி எம்பெருமானது அடிமையி லீடுபட்டு அதன் மூலமான செருக்கைக் கொல்லுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான்
“ எனக்கினியார் நிகர் நீணிலத்தே” என்றும்
“எனக்காரும் நிகரில்லையே என்றும் மற்றையோரு மருளிச்செய்வது.
இவ்வஹங்காரம் ஹேயமன்று ; உபாதேயமேயாம்.

“பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலரென்றுங் காண்டோறும்,
பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவே யென்று” என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தகும்

—————-

எம்பெருமான் தன்னளவிலே ஆஸுர ப்ரக்ருதிகள் எத்தனை அபசாரப் பட்டாலும் அதனால் சிறிதும் திருவுள்ளம் சீற மாட்டான்;
தன்னடியவர் பக்கல் அபசாரப் படுமளவில் அவ்வபராதிகளைப் பங்கப்படுத்தியே தீருவன் – என்கிற அர்த்தம்
இப்பாட்டிலருளிச் செய்யப் படுகிறது
“மாதவனே!, நீ இரணியனை ஊனிடந்ததானது (அவன்) நின் பாதம் சிரத்தால் வணங்கானா மென்றே?” என்ற வினாவினால் –
இரணியன் உன் பக்கலிலே விமுகனாய்க் கிடந்தானென்னுங் காரணத்தினால் அவனை நீ கொன்றொழித்தாயல்லை;
பரம பாகவதனான ப்ரஹ்லாதன் திறத்திலே அவன் பொறுகொணாக் கொடுமைகளைப் புரிந்தானென்பது பற்றியே
அவனை யொழித்தாய் என்ற ஸமாதாநம் வெளியிடப்பட்டதாகும்.

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமை யென்று ஜீயரருளிச் செய்வர்”
என்று ஸ்ரீவசநபூஷணத்திற் பாசுரம். அதாவது-
ஸங்கல்ப மாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்க வல்ல ஸர்வ சக்தியான ஸர்வேச்வரன்
தன்னை யழிய மாறி இதர ஸஜாதீயனா யவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரஸந ரூபமான
அதிமாநுஷ க்ருத்யங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் முதலான பாகவதர் திறத்தில் அவ்வவர் பண்ணின
அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிசெய்வராம். இவ்வர்த்தமே இப்பாட்டி லருளிச்செய்யப்படுகிறது.

எம்பெருமான் தன்னளவிலே தீரக்கழிய அபராதப் படுமவர்களைபற்றி ஒன்றும் கணிசியான்;
ஆச்ரிதர் விஷயத்தில் ஸ்வல்பாபராகம் பண்ணுவானுண்டாகிலும் அவனை அப்போதே தலையறுத்துப்
பொகடுவானென்பது இதிஹாஸ புராண ப்ரஸித்தம்

[”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயாமம”] இராமபிரான் எழுந்தருளி நிற்கச்செய்தே
இராவணன் கோபுர சிகரத்திலே வந்து தோற்றினவாறே ‘ராஜத்ரோஹியான இப்பயல் பெருமாள் திருமுன்பே நிற்கையாவதென்? ‘
என்று ஸுக்ரீவ மஹாராஜர் அவன்மேலே பாய்ந்து வென்று வந்தபோது அவரை நோக்கிப் பெருமாள் இங்ஙனே அருளிச்செய்கிறார்;—
நீர் மஹாராஜரான தரம்குலைய [உம்மைத் திரஸ்கரித்து] அந்த ராக்ஷஸப்பயல் ஒருவார்த்தை சொன்னானாகிற் பிறகு
ஸீதைதானும் எனக்கு ஏதுக்கு?, என்றார்.
ஆச்ரித விஷயத்திலே; எம்பெருமானுடைய பக்ஷபாதம் இப்படியன்றோ இருப்பது.

தன் உயிர்நிலையான பாகவதர்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால், தனக்குத் தீங்குநேரும்போது பிறக்கும் சீற்றம்
அற்பமென்னும்படி சீற்றம் பெருகிச்செல்லும். தான் ஸமுத்ரராஜனை சரணம் புகச்செய்தேயும் அவன் முகங்காட்டிற்றில்லனாக,
“ கோபமாஹாரயத் தீவ்ரம்” என்னும்படி சீற்றத்தை வரவழைத்துக் கொண்டார் பெருமாள்;
பின்பு இராவணனாலே அனுமான் நோவுபட்டபோது
“ததோ ராமோ மஹாதேஜா: ராவனேநக்ருதவ்ரணம் – த்ருஷ்ட்வா ப்லவக சார்தூலம் கோபஸ்ய வசமேயிவாந்.” என்னும்படி
கோபமிட்ட வழக்கானார். இங்ஙனேயிறே பாகவத விஷயத்திலே எம்பெருமானுக்குள்ள பரிவின் மிகுதியிருப்பது-

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

இரணியன் எம்பெருமான் திறத்திலே நேராக அபசாரப்பட்டுத் திரிந்த நாள்கள் எண்ணிறந்தவை யுண்டு;
அந் நாட்களிலே எம்பெருமானுடைய திருவுள்ளம் அவ்வரக்கனளவிலே சிறிதும் விகாரப்படவில்லை;
பள்ளியிலோதி வந்த தன் சிறுவன் வாயிலோராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போத ஆங்கதனுக்கு ஒன்றுமோர்
பொறுப்பிலனாகிப் பிள்ளையைச் சீறிவெகுண்டு நலிந்தானென்று அறிந்தவாறே
“நம்மளவிலே எத்தனை தீம்பனயிருந்தாலும் பொறுத்திருப்போம்;
நம்முடையனான சிறுக்கனை நலிந்தபின்பும் பொறுத்திருக்கவோ” என்று ஆறியிருக்க மாட்டாதே
அப்போதே வந்துதோன்றிப் புடைத்தானாயிற்று .

இப் பாட்டில் வினா மாத்திரமே யுள்ளது; விடை யில்லை; அதனை வரதராஜஸ்தவத்தில் கூரத்தாழ்வான் வெளியிட்டருளினர்.
“யதபராதஸஹஸ்ரம்” என்ற அறுபதெட்டாம் ச்லோகம் இப் பாசுரத்திகே விவரணமாக அவரித்ததென்க.

”வரத்தால் வலி நினைந்து” என்ற தொடரில் –இரணியன் தனக்கு வரங்கிடைத்ததைப் பெரிதாக நினைத்தானே யல்லாமல்
வரங்கொடுதவர்களின் சக்தி ஸ்ரீமந்நாராயணனுடைய அதீநம் என்பதை நினைத்தானில்லை- என்ற கருத்துத் தோன்றும் .
ஈர் அரி-பெரிய சத்ரு என்றுமாம்.
ஓர் அரி-ஓர்தல்-தியானித்தல்;
(பக்தர்களால்) தியானிக்கப்படுகின்ற நரசிங்கம் என்னவுமாம்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

பகவத் விஷய வாஸநையே யறியாத நாட்டார்க்கு உபதேசித்தார் கீழ்ப் பாட்டில்;
அரஸிகர்களான உலகத்தவர்க்கு உபதேசிப்பதைவிட பகவத் விஷய ரஸமறிந்த நமது நெஞ்சுக்கு உபதேசிப்பது நன்று
என்று கொண்ட ஆழ்வார் இப்பாட்டில் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.

பரமைஸ்வர்யமாயினும் கைவல்ய மோக்ஷமாயினும் அல்லது அவ்விரண்டுமே யாயினும் உனக்குக் கிடைப்பதாயிருந்தாலும்
அவற்றை நீ உதறித் தள்ளி விட்டு நம்முடைய விரோதிகளைப் போக்கி ந்ம்மைப் பாதுகாப்பதற்காகவே
எப்போதும் கையந்திருவாழி யுமாயிருக்கிற எம்பெருமானை மறவாமல் அவனிடத்தில் அன்பை உறுதியாகக்கொள் என்று
பால் குடிக்கக் கால் பிடிப்பாரைப்போலே தமது நெஞ்சை வேண்டுகின்றார்.

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழிகொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

பிணி மூப்புக் கையகற்றி – பிணியையும் மூப்பையுஞ் சொன்னது மரணத்துக்கும் உபலஷணம்;
“ஜராமரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே” என்று பகவத்கீதையில் சொல்லியிருப்பது காண்க.
பிறப்பதும் பிணிகளால் வருந்துவதும் கிழத்தனமடைவதும் இறப்பதுமாகிய ஸம்ஸார ஸ்வபாவங்கள்
கைவல்ய நிஷ்டனுக்குக் கழிந்து போகிற படியால் இப்பாட்டின் முதலடியில் கைவல்ய மோக்ஷம் விவக்ஷிதம்.
அந்த மோக்ஷம் உனக்குக் கிடைத்தாலும் அது பகவதநுபவ ஆநந்தத்தில் மிகச் சிறிதென்றுகொண்டு அதனை விட்டுத்தொலை என்றபடி.
பரமைச்வரியம் கிடைத்தாலும் அது அஸ்திரமென்று அதனையும் விட்டுதொலை என்கிறார் இரண்டாமடியில்.
இவ்விரண்டும் பகவானை மறப்பதற்குக் காரணமாதல்லால் அவற்றை வெறுக்கச்சொல்லுகிறாரென்க.

‘ ஆண்டாலும் ‘ என்ற உம்மையில், அவற்றில் தமக்கு விறுப்பமில்லை யென்பதும் தொனிக்கும்.
விடல் எதிர்மறை வினைமுற்று.
ஆழி நெஞ்சமே! = இந்தப் பிரார்த்தனையை உனக்கு நான் பண்ண வேண்டியதில்லை; நீயே பகவதநுபவத்தில் ஆழ்ந்தவன்;
ஆனாலும் ஏதோ சொல்லி வைத்தேன் என்பது கருத்து.

கண்டாய் – முன்னிலை யசைச்சொல்.

————

ஆசார்ய சிஷ்ய க்ரமம் மாறாடுகிறது இப்பாட்டில்.
கீழ்ப்பாட்டில் ‘நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்‘ என்று ஆழ்வார் தாம் நெஞ்சுக்கு ஆசார்யராய் நின்று உபதேசித்தார்.
இவர் உபதேசிப்பதற்கு முன்னமே இவருடைய ஸகல கரணங்களும் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருந்தமையால்
அவை தாமே தனித்தனி ஆசார்யபதம் நிர்வஹிக்கக் கடவனவாய் இவர் தமக்கு உபதேசிக்க முற்பட்டபடியைப் பேசிகிறாரிதில்.

அன்பாழி  யானை   யணுகு என்னும் நா வவன் தன்
பண்பாழித்  தோள் பரவி யேத்து என்னும் முன்பூழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூணாரம் பூண்டான் புகழ் ——–72-

பதவுரை

அன்பு—பகவத்பக்தியே வடிவெடுத்தது போன்றிருக்கிற எனது நெஞ்சானது
ஆழியானை–ஸர்வேச்வரனை
அணுகு என்னும்–கிட்டி அனுபவி’ என்று எனக்கு உபதேசிக்கின்றது
நா–வாக்கானது
அவன் தன் பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும்–அப்பெருமானது ஸெளந்தர்ய ஸாகரமான திருத் தோள்களைப் பேசித் துதி என்று உபதேசிக்கின்றது;
கண்–கண்களானவை;
முன்பு ஊழி காணானை காண் என்னும்–நாம் தன்னை வந்து ஆச்ரயிப்பதற்கு முன்பிருந்த காலத்திலுள்ள
விபரீத நிலைமையை நெஞ்சாலுமெண்ணாத பெருமானை ஸேவி என்று உபதேசிக்கின்றன;
செவி–காதுகள்
பூண் ஆரம் பூண்டான் புகழ் கேள் என்னும்–‘ ஆபரணமான ஹாரம் முதலியவற்றை அணிந்து கொண்டிருக்கிற
அப்பெருமானுயைய திருக் குணங்களைக் கேள்’ என்று தூண்டுகின்றன.

அன்பு ஆழியானையணுகென்னும் – இங்கு ‘அன்பு’ என்ற சொல்லால் நெஞ்சைக் குறித்தனர்;
அன்பு என்பது வேறொரு வஸ்துவாகவும் அதனையுடைய நெஞ்சு என்பது வேறொரு வஸ்துவாகவும் தோன்றாமல்
அன்பு தானே நெஞ்சாக வடிவெடுத்து வந்திருக்கின்றதென்னலாம்படி யிருத்தலால் நெஞ்சுக்கு ‘அன்பு’ என்றே வாசகமிடுகிறார்.

பண்பாழித்தோள் – பண்பு ஆழி என்றும், பண் பாழி என்றும் பிரிக்கலாம்.
பண்பு என்று அழகுக்குப் பெயர்; அழகுக்குக் கடல் போன்ற தோள் என்றும்,
பண் –அழகையும் பாழி- வலிமையையு முடைய, தோள் என்றும் உரைக்க.

முன்பூழிகாணானை –ஊழி என்று காலத்துக்குப்பெயர்: முன்புள்ள காலத்தைக் காணாதவனென்றால் என்ன தாற்பரியம்?
மஹாபராதியான ஒரு சேதநன் வந்து தன்ளை ஆச்ரயித்தால், நேற்று வரையில் அவன் எப்படியிருந்தான்,
என்னென்ன பாபங்கள் பண்ணினான் என்று முற்கால நிலைமைகளைச் சிறிதும் ஆராயாதவன் எம்பெருமான் என்று தாற்பரியம்.

————-

“சஞ்சலம் ஹி மந:கிருஷ்ண!” என்றும்
“நின்றவா ரில்லாநெஞ்சு” என்றுஞ்சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறி மாறி கொண்டே யிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார்,
‘நெஞ்சே! நீ எப்போதும் ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமாயிருந்தாலும் சரி;
நிலைமாறிச் சிசுபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி;
நீ எது செய்தாலும் அவனுடைய பெரு மேன்மைக்குக் குறைவு நிறைவுகள் வாராது காண்’ என்று
தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார் பின்னடிகளில்,

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா  யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே -திகழ் நீர்க்
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் ——-73-

பதவுரை

நெஞ்சே–(நல்லது கெட்டதுகளை ஆராயக்கூடிய ) மனமே!
நீ–நீ
பூந்துழாயானை–அழகிய திருத்துழாய் மாலை யணிந்த பெருமானை
புகழ்வாய்–ஸ்தோத்ரம் பண்ணினாலும் பண்ணு;
(அன்றியே)
பழிப்பாய்–நிந்திப்பதானாலும் நிந்தி;
(அன்றியே)
இகழ்வாய்–அநாதரித்தாலும் அநாதரி;
(அன்றியே).
கருதுவாய்–ஆதரித்தாலும் ஆதரி; (நீ உனக்கு இஷ்டமானபடி செய்;)
திகழ் நீர் கடலும்–விளங்குகின்ற ஜலபூர்த்தியையுடைய ஸமுத்ரமும்,
மலையும்–பர்வதங்களும்
இரு விசும்பும்–பரம்பிய ஆகாசமும்
காற்றும்–வாயுவும்
உடலும்–(தேவாதி) சரீரங்களும்
உயிரும்–(அந்தந்த சரீரங்களிலுள்ள) (பிராணிகளும் ஆகிய இவற்றையெல்லாம் )
ஏற்றான்–தரித்துக் கொண்டிருப்பவன் அவ் வெம்பெருமானே காண்.

எம்பெருமான் கார்ய காரண ரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக் கொண்டிருப்பவன் என்று அவனுடைய
ஸர்வ தாரகத்வத்தை சொன்னதானது நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க.
ஏற்றான் – எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.

இரண்டாமடியில் “கருதுவாய் என் நெஞ்ச்சே!” என்றும் பாடமோதுவர்;தளைபிறழாது.

————-

எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் ஸ்ரீமந்நாராயண னென்றார் கீழ்ப்பாட்டில்:
ருத்ரனை அப்படிப்பட்டவனாகச் சிலர் சொல்லுகின்றார்களே! அஃது என்ன? என்று கேள்வி பிறக்க,
ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி,
சிவனும் எம்பெருமானுடைய ஆளுகையிலே அடங்கினவனே யென்றார்.

ஏற்றான் புள்ளூர்ந்தான் எயில் எரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்றொரு பால்
மங்கையான் பூ மகளான் வார் சடையான் நீண் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு  —-74-

பதவுரை

ஏற்றான்–ரிஷபத்தை வாஹனமாக வுடையவனும்
எயில் எரித்தான்–த்ரிபுர ஸம்ஹாரம் பண்ணினவனும்
நீற்றான்–சாம்பலைப் பூசிக் கொண்டிருப்பவனும்
கூறு ஒருபால் மங்கையான்–தனது உடம்பின் ஒரு பக்கத்திலே பார்வதியைத் தரித்துகொண்டிருப்பவனும்
வார் சடையான்–நீண்ட ஜடையைத் தரித்துள்ளவனும்.
கங்கையான்–(அச்சடை முடியில்) கங்கையைத் தாங்கிக் கொண்டிருப்பவனுமான ருத்ரன்.
புள் ஊர்ந்தான்–கருடனை வாஹநமாக வுடையவனும்
மார்வு இடந்தான்–இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனும்
நிழல் மணி வண்ணத்தான்–நீல ரத்நம் போலே குளிர்ந்த வடிவை யுடையவனும்
பூ மகளான்–பெரிய பிராட்டியைத்திவ்ய மஹிஷியாக வுடையவனும்
நீள் முடியான்–நீண்ட கிரீடத்தை அணிந்துள்ளவனும்
நீள் கழலான்–நீண்ட திருவடிகளை யுடையவனுமான சர்வேச்வரனுடைய
காப்பு–ரக்ஷணத்தில் அடங்கினவன்.

ஏற்றானாயும் எயிலெரித்தானாயும் நீற்றனாயும் கூற்றொருபால் மங்கையானாயும் வார்சடையானாயும்
கங்கையானாயு மிருக்கிறரு ருத்ரன் –
புள்ளூர்ந்தானாயும் பார்விடந்தானாயும் நிழல்மணி வண்ணத்தானாயும் பூமகளானாயும் நீண்முடியானாயும்
நீள்கழலானாயு மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அந்வயிப்பது.
காப்பு- ரக்ஷ்ய வர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி.

சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம்பெருமானுடைய, விசேஷணங்களை வரிசையாக இட்டு,
இன்னான் இன்னானுடைய காப்பு- என்று அடைவுபடச் சொல்லலாமாயிருக்க ,
அப்படிச் சொல்லாமல் விஷ்ணு ருத்ரர்களை மாறி மாறித் தொடுத்திருப்பது இருவர்க்குமுள்ள வாசி உடனுக்குடனே தெரிய வேணுமென்பதற்காக.

தமோ குணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயு முள்ள ரிஷபத்தை வாஹநமாக வுடையவன் அவன்;
வேதஸ்வரூபியான பெரிய திருவடியை வாஹநமாகவுடையவன் இவன்;
தன்னை ஆச்ரயித்தவர்களின் குடியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெரித்தவன் அவன்;
ஆச்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனிவன்;
தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீறுபூசின ஸர்வாங்கத்தையு முடையான் அவன்;
ச்ரம ஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன் இவன்.
தன் உடலின் பாதி பாகத்தை ஸ்த்ரீரூபமாக ஆக்கிக்கொண்டவன் அவன்;
உலகுக்கெல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாகவுடையவன் இவன்;
தன் குறையைத் தீர்த்துக்கொள்ளும் வண்ணம் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லர்க்குந் தெரியும்படி சடை புனைந்தவன் அவன்;
ஸர்வேச்வரத்வ ஸூசகமான திருவபிஷேகத்தையுடையவன் இவன்;
தான் பரிசுத்தனாவதற்குக் கங்கையைத் தரிப்பவன் அவன்;
அந்தக் கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன் – என்று சொல்லுமழகு காண்மின்.

எயில் – மதிள்; த்ரிபுரத்துக்கு இலக்கணை.

—————–

திருமாலே! ஸர்வ ரக்ஷகனான வுன்னை அநுஸந்திப்பவர்களுக்கு எல்லாப் பிரதிபந்தகங்களும் நீங்கிப்
பிரகிருதி ஸம்பந்தமும் நீங்கி திவ்ய லோக ப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார்.
பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்ம வச்யராகாரெபந்தை முன்னடிகளாலும்,
பரமசாம்யா புத்தியை அடைவார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச் செய்கிறார்.

காப்புன்னைக்  யுன்னக் கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன வவிழ்ந்து  ஒழியும் மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி  ———–75-

பதவுரை

திருமாலே–லக்ஷ்மீ நாதனே!
உன்னை–(பரமபுருஷனான) உன்னை
உன்ன–ரக்ஷகனாக ஆநுஸந்திக்கு மளவில்
காப்பு–பிரதிபந்தகங்கள்
கழியும்–விட்டு நீங்கும்;
உன்னை உன்ன–உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு–போக்க முடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும்–அவிழ்ந்து போம்;
உன்னை சிந்திப்பார்க்கு–உன்னை த்யானிப்பவர்களுக்கு
மூப்பு இல்லை–கிழத்தனம் முதலிய ஷட்பாவ விகாரங்களும் இல்லையாம்;
நின் அடியை வந்திப் பார்–உன் திருவடிகளை ஆச்ரயிக்கு மவர்கள்
வழி–அர்ச்சிராதி மார்க்கத்தை
காண்பர்-கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள்.

முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருலாதலால் .
அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம்.
அவராவார் – ஸூர்யன் சந்திரன் வாயு அக்நி த்யுலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன்
அஹஸ்ராத்ரி இரண்டு ஸந்த்யைகள் தர்மதேவதை என்ற இவராவர்.
*“ஆதித்ய சந்த்ராவநிலோநலச்ச த்யெளர்ப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச- அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே
தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்.“ என்ற மஹாபாரத ச்லோகமுங் காண்க.
உன்னை யநுஸந்திப்பவர்கள் செய்யுங்கருமங்களை எம்பெருமானா லேற்படுத்தப்பட்டுள்ள கர்ம ஸாக்ஷிகளும் ஆராயக் கடவரல்லர் என்றவாறு.

வழி காண்பர்- நரகத்தை போலே பொல்லாததான வழியைக் காணுதலின்றியே நித்ய விபூதிக்கிப் போம் வழியைக் காண்பரென்றவாறு

——————–

எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலை தானே தன்னைப் பற்றினார்க்கு நற்கதியைத் தரும் வல்லமை யுடையதாயிருக்கையில்,
எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதி பெறுவாரென்று நாம் பெரிதாக எடுத்துச் சொல்லவேணுமோ? என்கிறார்.
கைமுதிக நியாயம் தோற்றப் பேசின பாசுரம் இது.

மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராத வண்ணம் விண் கொடுக்குமதாயிருக்க,
நின்னை வழிநின்று தொழுமவர்கள் வழுவாமொழி நின்ற மூர்த்தியராவரென்பது விசேஷித்துச் சொல்ல வேண்டிய விஷயமோ என்றவாறு.

எம்பார் இப்பாசுரத்தை நாடோறும் சிற்றஞ் சிறுகாலையில் அநுஸந்திப்பது வழக்கமாம்.
“எம்பார் விடிவோறே அநுஸந்திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வருளிச்செயல்

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் -76-

பதவுரை

வழி நின்று–பக்தி மார்க்கத்திலே நிலைத்து நின்று
நின்னை தொழுவார்–உன்னை ஆச்ரயிக்கு மவர்கள்
வழுவாமொழி நின்ற மூர்த்தியரே ஆவர்–உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிற ஸ்வரூப, ஆலிர்ப்பாவத்தை உடையவராகவே ஆவார்கள்;
(இதைப் பற்றிச் சொல்ல வேணுமோ?)
மண் அளந்த சீரான் திருவேங்கடம்–உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளி யிருக்கிற திருமலையே
பழுது ஒன்றும் வாராத வண்ணமே–ஒரு குறையு மில்லாதபடி
விண் கொடுக்கும்–(ஆச்ரிதர்களுக்கு) மோஷமளிக்கக் காண்கிறோமன்றோ.

———-

எம்பெருமான் ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் எழுந்தருளி யிருக்கிறபடிகளை நாம் அநுஸந்தித்தால்
நமது இடரெல்லாம் நீங்கிவிடுமென்கிறார்.
அவன் திருப்பதிகளில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் நடப்பதுமான படிகளை நாம் சொல்ல,
நாம் நின்றுமிருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் தன்னடையே போகுமென்றபடி.

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் ———77-

பதவுரை

வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்

நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பரம பதமும் ஒன்றாதலால் இங்கு ‘விண்ணகரும்’ என்று அத்திருநாடு கூறப்பட்டது.
உப்பிலியப்பன் ஸந்நிதி யென்கிற திருவிண்ணகரைச் சொல்லுவதாகக் கொண்டால்
அங்கு வீற்றிருந்த திருக்கோலமில்லையாதலால் மிடிபடும்.
கச்சிமாநகரிலுள்ள பரமேச்சுர விண்ணகரைச் சொல்லுவதாகக் கொள்ளினும் குறையில்லை.
உலகளந்த திருக்கோலமாக ஸேவை ஸாதிக்குமிடத்தை நடந்த கோலத் திருப்பதியாக அநுஸந்திப்பதுண்டாதலால்
‘பூங்கோவல் நடந்தான்’ என்றார்.

———

எம்பெருமான் நமக்காகச் செய்த செயல்களை நாம் அநுஸந்திபோமாகில் அவனது திருவடிகளில் அடிமை செய்தே
நிற்க வேண்டியதாகுமே யன்றி ஒரு நொடிப் பொழுதும் வெறுமனிருக்க முடியாது;
நாம் அப்பெருமானை ஆச்ரயிக்கவே துக்கங்களெல்லாம் தொலைந்து போம்; துக்கப்படுகைக்கு ஆளில்லை;
ஒருகால் நமக்கு துக்கம் வந்தாலும் அது கஜேந்திராழ்வானைத் தொடர்ந்த முதலை பட்டது படும் என்றாராயிற்று.

இடரார் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர்வான் கொடு முதலை சூழ்ந்த படமுடைய
பைந்நாகப் பள்ளியான் பாதமே கை தொழுதும்
கொய்ந்நாகப் பூம் போது கொண்டு -78-

பதவுரை

நெஞ்சே–மனமே!
வேழம் தொடர்–கஜேந்திராழ்வானை (விழுங்குவதாகத்) தொடர்ந்து வந்த
வான்–பெரிய
கொடு–(நெஞ்சில் இரக்கமின்றியே) கொடுமை பூண்ட
முதலை–முதலையை
சூழ்ந்த–(தப்பிப் போகாதபடி) எண்ணி கொன்றவனும்
படம் உடைய பைநாகம் பள்ளியான்–படத்தையும் பசுமை நிறத்தையுமுடைய திருவனந்தாழ்வானைத் திருப்பள்ளி மெத்தையாக வுடையனுமான எம்பெருமானது
பாதம்–திருவடிகளை
கொய் நாகம் பூ போது கொண்டு–கொய்யப்பட்ட புன்னையின் அழகிய மலர்களைக் கொண்டு
கை தொழுதும்–தொழுவோம்;
எழு–எழுந்திரு;
(அவனுக்கு இவ்வாறு அடிமை செய்யாமல்)
இடர்–துக்கத்தை
படுவார் ஆர்–அநுபவிக்க யாரால் முடியும்? (என்னால் முடியாது.)

இரண்டாமடியில், சூழ்ந்த என்ற பெயரெச்சம் பள்ளியா நென்பதைக் கொண்டு முடியும்.

முதலையை முடித்து கஜேந்திரனைக் காத்த கதை ப்ரஸித்தம்.

ஈற்றடியில், நாகம் ‘ புந்நாகம்’ என்ற வடசொற்சிதைவு.

————-

எம்பெருமான் ஆச்ரித ரக்ஷணத்திற்காகத் தன் ஸ்வரூபத்தை மாறாடிக் கொண்டும் காரியம் செய்பவன்
என்பதை மூதலிக்க வேண்டி, மஹாபலியினிடத்தில் வாமநனாய்ச் சென்று மூவடி மண் வேண்டிப் பெற்றுத்
திரிவிக்கிரமனாகித் தன் விபூதியை அப்பெருமான் மீட்டுக் கொண்டதை உதாஹரணமாகக் காட்டி,
இப்படி ஆச்ரிதர்கள் பொருட்டாக அப்பரமன் அரும்பாடுபட்டும் அதனை யறியவல்லார் ஸம்ஸாரத்தில்
ஒருவருமில்லாத்து பற்றிக் கவலைப் படுகிறாரிப்பாட்டால்.

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  -79-

பதவுரை

மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை
அம் கை==(தனது) அழகிய திருக்கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறிவந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

மாவலியானவன் தன்னதல்லாத்தைத் தன்னதென்று அபிமாநித்துக் கொண்டு செருக்குற்றிருந்ததற்காக இராவணனை போலவே
அவனையுங்கொல்ல வேண்டியிருந்தும் அவனிடத்தில் ஒளதாரியமென்ற ஒரு சிறந்தகுண மிருந்ததனால்
தன்னதான விபூதியை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து நீரேற்று வாங்கிக் கொண்ட மஹாகுணம் பொருந்தியவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட மஹாகுணத்தில் யாராவது ஈடுபடுவாருண்டோ?
வஞ்சனென்றும், ஸர்வஸ்வாபஹாரியென்றும், தனக்கு தானஞ்செய்தவனைப் பாதாளத்திலே தள்ளினவனென்றும்
சில பழிச்சொற்களைச் சொல்லி அப்பெருமானை உலக மடங்கலும் பழிக்கின்றதேயன்றி,
தன்னதல்லாததைத் தான் தந்ததாக நினைக்கிற மாவலியை பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும்
அஹங்காரியென்றும் ஆஸுரப்ரகிருதியென்றும் அவனுடைய குற்றங்களையிட்டுச் சொல்லுவார் இந்த ஸம்ஸாரத்தில் யாருமில்லையே!;
குற்றத்தைக் குணமாக்கியும், குணத்தைக் குற்றமாக்கியுஞ் சொல்லும்படியன்றோ ஸம்ஸாரிகளின் ஸ்வபாவமிருபதென்பது ‘
கொண்டானையல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்?’ என்பதன் கருத்து.

தோய- செயவெனெச்சம் உடனிகழ்ச்சிப் பொருளது.
நீர் கைதோய நீள்விசும்பிலார் அங்கை தோய அடுத்து நிமிர்ந்திலையே – மாவலி தாரைவார்த்த உதகமும்

ப்ரஹ்மாதிகள் திருவடிவிளக்கின உதகமும் ஏகோதகமென்னலாம்படி அத்தனை விரைவாக நீ வளரவில்லையோ? என்றபடி.

‘நீள்விசும்பிலார் அங்கை தோய” என்பதற்கு- விசும்பிலுள்ள தேவர்கள் (எனது) திருத்தோளிலே வந்து அணையும்படியாக என்றும்,
“ நீள்விசும்பில் ஆரம் கைதோய” என்றெடுத்து, பரந்த விசும்பிலே (உனது திருமார்பிலணிந்திருந்த
முக்தாஹாரமும் திருக்கையும் பொருந்தும்படி (ஓங்கி) என்றும் பொருள் கொள்ளலாம்.

———–

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -80-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

கீழ்ப் பாட்டில், அவ்வெம்பெருமானைத் தவிர்த்து உயிர்களெல்லாம் தாமே தமக்கு வேண்டிய நன்மையைத்
தேடவறியாது என்றருளிச்செய்த ஆழ்வார், இப்பாட்டில் அவை தமக்குவேண்டிய நன்மையைத் தேட அறியாதிருக்கையிலும்
எம்பெருமானே நன்மையைத் தேடுகிறதற்குக் காரணம் இச்சராசரங்களை யெல்லாம் அப்பெருமான் பேரருள் கொண்டு
தன் ஸங்கல்பத்தினால் படைத்த ரக்த ஸம்பந்தமேயாகு மென்கிறார். பெற்றவனை யொழிய வளர்ப்பவரில்லை யென்றதாயிற்று.

சேதநங்கள் இறகொடிந்த பக்ஷிபோல மூலப்ரக்ருதியிலேயே லயித்துக் கிடவாமல் தன்னை யடைந்து உஜ்ஜீவிக்குமாறு
நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்தினால் அப்பரமன் கரசரணாதி அவயவங்களையும்,
தன்னை யுணருமாறு சாஸ்தரங்களையும் கொடுத்தருளின னென்பது நூற்கொள்கை.
இவையறியாத காலத்திலும் அவனே ஸ்ருஷ்டிக்கையாலே இப்போது உபாயமறிவானும் அவனே யென்று
கீழ்ப் பாட்டோடே சேர்த்துப் பொருள் பெறுத்திக் கொள்க.

உலகும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியிலாய புணர்ப்பு ——-61-

பதவுரை

உலகும்–பூமி முதலிய லோகங்களும்
உலகு இறந்த ஊழியும்–இவ்வுலகம் யாவும் அழிந்து கிடக்கிற பிரளய காலமும்
ஒண் கேழ் விலகு–அழகிய நிறத்தோடு அலை யெறிகிற
கரு கடலும்–கரு நிறத்ததான ஸமுத்ரமும்
வெற்பும்–மலைகளும்.
உலகினில் செம் தீயும்–இவ்வுலகத்திலுள்ள செந்நிறமான் தேஜஸ் பதார்த்தங்களும்
மாருதமும்-காற்றும்
வானும்–ஆகாயமும்
(ஆகிய இவையாவும்)
திருமால் தன்–லக்ஷ்மீபதியான எம்பெருமானுடைய
புந்தியில்–ஸங்கல்ப ஞானத்திலால்
ஆய–படைக்கப்பட்ட
புணர்ப்பு–படைப்புக்களாம்.

————

கீழ்ப்பாட்டில், சராசரங்கள் யாவும் எம்பெருமானுடைய படைப்பு என்றார்,
இப்படி உலகங்களை யெல்லாம் உண்டாக்கின பின்பு தான் தூரஸ்தனாய் நின்று விடாமல் உலகுக்கு உண்டாகின்ற
களைகளைப் பிடுங்கிப் பாதுகாப்பதும் செய்கிறானென்பதை இப்பாட்டில் வெளியிடுகின்றார்.

புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ்   செற்று கணம் வெருவ
ஏழுலகத்    தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-

பதவுரை

புணர் மருதின் ஊடு போய்–ஒன்றோடொன்று இணைந்திருந்த (இரட்டை) மருதமரத்தின் நடுவே தவழ்ந்து சென்று
[பின் பொருகாலத்தில்]
பூங்குருந்தம் சாய்த்து–(இலையும் கொம்புந் தெரியாதபடி) பூக்கள் நிரம்பியிருந்த குருந்த மரத்தை தள்ளிப் போட்டு
(மற்றுமொரு காலத்தில்)
மணம் மருவ–(நப்பின்னைப் பிராட்டியோடு) விவாஹம் நிறைவேறுதற்காக
மால் விடை ஏழ் செற்று–பெரிய வடிவையுடைய ஏழு ரிஷபங்களையும் முடித்து
(இன்னமொரு காலத்தில்)
கணம் வெருவ–எல்லாப் பிராணிகளும் நடுங்கும்படி
ஏழ் உலகும் தாயினவும்–மேலேழுலகங்களில் தாவிச் சென்றவையும்
எண் திசையும் போயினவும்–எட்டுத் திக்குக்களிலும் போய்ப் பரவியவையும்.
[எவையென்றால்]
சூழ் அரவம் பொங்கு அனையான் தோள்–(பரிமளம் குளிர்த்தி மென்மை என்னும் குணங்கள்) நிரம்பிய திருவனந்தாழ்வானை
சிறந்த படுக்கையாகவுடையனான ஸர்வேச்வரனது திருத்தோள்களேயாம்.

இதில் தோள் என்றது திருக்கைகளை இரட்டை மருதமரத்தினிடையே தவழ்ந்து சென்ற போது
கைகளைத் தரையிலே ஊன்றித் தவழ்ந்ததனால் மருதம் முறிந்ததைக் கைகளின் மே லேற்றிக் கூறினரென்க.
மருதினூடுபோய் என்றது மருதமரங்களை முறித்துத் தள்ளினமையைச் சொன்னபடி.
கூட்டமென்னும் பொருளதான வடசொல் கணமெனத் திரிந்தது:
அநுகூலர் பிரதிகூலர் என்கிற வேறுபாடின்றி எல்லாப் பிராணிகளும் என்கை.

“சூழரவப் பொங்கணையான் தோள்” என்ற சொல்லாற்றலால், பரிமளம் குளிர்த்தி முதலிய குணங்களுக்கெல்லாம்
எல்லை நிலமாயிருக்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையையும் பொறாத ஸெளகுமார்யத்தையுடைய
அப்பெருமான் அப்படுக்கையில் கண்வளரப் பெறாமல் இப்படி அல்லாடித் திரிவது பற்றி வயிறெரிகின்ற
இவ்வாழ்வாரது பொங்கும்பரிவு விளங்கும்.
பிரஜைகளைப் பாதுகாப்பதில் கருத்தூன்றியவர்கள் ஓரிடத்தில் தங்கியிருக்கப் பெறாமல் அலைந்து திரிவர்களன்றோ.
இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டுள்ள சரித்திரங்களெல்லாவற்றிலும் எம்பெருமானுடைய தோள் வலிமையே
தெற்றென விளங்குமென்றுகொண்டு தோளின் மேலேயே எல்லா செயலையும் ஏற்றிக் கூறினரென்க….

————

தம்முடைய எல்லா இந்திரியங்களும் எம்பெருமான் பக்கலிலேயே ஊன்ற பெற்ற படியை அருளிச்செய்கிறார்.

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என்செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான
இன்மொழியே–இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும்–கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள்தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்பு வாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரைத் தொழும்படி நான் சொன்னாலும் என் கைகள் தொழமாட்டோமென்கின்றன;
இதர சப்தங்களைக் கேட்போமென்று நான் பாரித்தாலும் எனது காதுகளானவை பகவத் கதைகளைத் தவிர்த்து
வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோமென்கின்றன!
நாவினால் விஷயாந்தரங்களைப் பேசுவோமென்று நாம் பார்த்தாலும் பகவத் பாதாரப்விந்தத்தையன்றி
மற்றும் எதையும் னச நா எழுகின்றதில்லை;
இப்படி எனது இந்திரியங்களெல்லாம் ஒரே உறுதியாயிருக்கவே, நானும் நாணங்கொண்டு
இதர விஷயங்களைக் காறியுமிழ்ந்தேன் என்றாராயிற்று.

இரண்டாமடியில், கேள்- உறவு;
“ சேலேய் கண்ணியரும் பெருஞ் செலவமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
ஸகலவித பந்துவுமான எம்பெருமானுடைய என்றபடி
இன்மொழி-கீர்த்தி நாகஅணை, ‘நாகவணை’ என வரவேண்டுவது நாகணை யென வந்தது தொகுத்தல் விகாரம்.
குரைகழல்—வினைத் தொகையன் மொழி என்னலாம்: நாணாமை – எதிர்மறை வினையெச்சம்.
நயம் – நயக்கப்படுவது நயம்; ஆசைப்படத் தக்க விஷயாந்தரங்கள்.
“நயந்தரு பேரின்பமெல்லாம்” என்ற இராமாநுச நூற்றந்தாதித் தனியன் பிரயோகமுங் காண்க.

————

கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தமக்கும் தம்முடைய இந்திரியங்கட்கும் விஷபாந்தரங்களைக் கண்ணெடுத்துப் பாராதபடி
எம்பெருமானிடத்தில் ஊற்றமுண்டானபடியை அருளிச் செய்யவே
விஷயாந்தரங்கள் துரவாஸநையால் வந்து மேல்விழுந்து உம்மை இழுத்து க்கொண்டு சென்றால் என்ன செய்வீர்?’
என்று ஒரு கேள்வி பிறக்க ,
எம்பெருமானுடைய அநுக்ரஹத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறேனாதலால் அப்படி நிகழ ஹேது வில்லை யென்கிறார்.

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

பதவுரை

பிறர் பொருளை–பரம புருஷனுடைய பொருளான ஆத்ம வஸ்துவை
நயவேன்–(என்னுடையதென்று) விரும்ப மாட்டேன்;
கீழாரோடு–ஸம்ஸாரிகளோடு
நள்ளேன்–ஸ்நேஹம் கொள்ள மாட்டேன்;
உயர்ந்தவரோடு அல்லால்–சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்களோடு தவிர (மற்றவர்களோடு)
உய்வேன்–காலக்ஷேபம் பண்ணமாட்டேன்.
திருமாலை அல்லது–எம்பெருமானை யன்றி (தேவதாந்தரங்களை)
தெய்வம் என்று ஏத்தேன்–தெய்வமாகக் கொண்டு துதிக்க மாட்டேன்;
வியவேன்-(இப்படியிருப்பதற்கு ஹேதுவான ஸத்வ குணம் எனக்குத் தானுள்ளதென்று அஹங்கரித்து என்னைப் பற்றி நானே) ஆச்சரியப்படவும் மாட்டேன்;
(இப்படியான அறிமாட்டார்கள். பின்பு)
என் மேல்–எம்பெருமானுடைய அநுக்ரஹத்திற்கு இலக்கான என் மேலே
வினை–அவனது நிக்ரஹ ரூபமான ) பாபம்
வரும் ஆறு என்–வரும் விதம் ஏது? [வரமாட்டாது]

பிறர் பொருளை= “உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேதி உதஹ்ருத:” என்னும் பிரமாணத்தை அடி யொற்றி
இங்கு எம்பெருமானை ‘பிறர்’ என்ற சொல்லால் குறித்தனர் சேதநாசேதநங்களிற்காட்டில் விலக்ஷணன் என்றபடி.
அவனுடைய பொருள் ஆத்ம வஸ்து
(கண்ணிநுண் சிறுத்தாம்பில் “ நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்” என்ற விடத்திற்கு வியாக்கியானமுங் காண்க.)
ஸர்வேச்வரனுக்குக் கெளஸ்துபஸ்தாநீயமாகி அப்பெருமான் ‘தன்னது’ என்று அபிமாநித்திருக்கும் இவ்வாத்ம வஸ்துவை
’என்னது’ என்று நினைத்தல் இராவணனது செயலோடொக்கு மாதலால் “நயவேன் பிறர்பொருளை” என்றார்.
இராவணனுடைய செய்கைக்குத் துணையாயிருந்த மாரீசன் போல்வாரோடு நட்புக் கொள்ள மாட்டேனென்பது ‘நள்ளேன் கீழாரோடு’ என்றதன் கருத்து.

”திருமாலையல்லது வியவேன் “ என்று கூட்டி – திருமாலைக் கண்டாலன்றி ( தேவதாந்தரங்களைக் கண்டால் அதனால்)
மநஸ்ஸில் சிறிதும் மகிழ்ச்சிகொள்ள மாட்டேன் என்பதாக உரைத்தலுமாம்.

வருமாறென் என்மேல் வினை? = “அவச்யமநுபோக்தவ்யம் க்ருதம் கர்மகபாசுபம்”
[ அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளின் பலன்களை அவரவர் அநுபவித்தே தீரவேணும் ] என்கிற
சாஸ்த்ரம் பகவத் பக்தர்கள் விஷய்த்தில் விலைச்செல்ல மாட்டாதென்று காட்டுகிறபடி.

“வருமாறென் நம் மேல்வினை” என்ற பாடமுமுண்டு;
அப்போது, கீழெல்லாம் நயவேன், நள்ளேன், உயவேன், வியவேன். ஏத்தேன், என்று ஒருமையாகவந்து இங்கே
நம் என்று பன்மையாக வந்தது- ஒருமையிர் பன்மைவந்த வழுவமைதி யென்னவேண்டும் .
தம்மோடு ஸம்பந்தம் பெற்றவர்களையுங் கூட்டிக்கொண்டு நம் மேலென்கிறாரென்றலும் பொருந்தும்.

இரண்டாமடியில், உயவேன் என்றது உசாவேன் என்றப்டி:
உசாவுதலாவது ஒருவருக்கொருவர் வார்த்தையாடிப் போது போக்குதல்;
”உசாத் துணை” என்ற ஆன்றோர்களின் ஸ்ரீ ஸூக்தியுங்காண்க.

————–

வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக் கண் செல்லார் நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம் பேர்ச் செங்கட்
கரியானைக் கை தொழுதக்கால்   ——-65–

பதவுரை

நினைதற்கு அரியானை–(ஸ்வ ப்ரயத்நத்தாலே) நினைப்பதற்குக் கூடாதவனும்
சேயானை–(நெஞ்சுக்கு விஷயமாகாதபடி) மிக்க தூரத்திலிருப்பவனும்
ஆயிரம் பேர்–ஆயிரம் திருநாமங்களை யுடையவனும்
செம் கண் கரியானை–சிவந்த திருக் கண்களையும் கறுத்த வடிவை யுமுடையனுமான பெருமானைக் குறித்து
கை தொழுதக்கால்–அஞ்சலி பண்ணினால்
(அப்படி அஞ்சலி பண்ணினவர்கள்)
வினையால்–நல் வினை தீ வினைகளால்
அடர்ப் படார்–நெருக்கு பட மாட்டார்கள்;
வெம் நரகில்–கொடிய சம்ஸாரமாகிற நரகத்தில்
சேரார்–(மீண்டும்) சென்று கிட்ட மாட்டார்கள்;
தினையேனும்–சிறிதளவும்
தீ கதிக்கண்–கெட்ட வழிகளில்
செல்லார்–போக மாட்டார்கள்.

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தாம் ஒழுங்குபட நிற்கும் நிலைமையை யருளிச் செய்தார்.
இப்படிப்பட்ட நிலைமை மற்று எல்லார்க்கும் உண்டாகவில்லையே, அஃது ஏன்? என்று ஒரு கேள்வி பிறக்க;
இந்த நிலைமை எல்லார்க்கும் உண்டாகக் கூடியதே ;
எம்பெருமானைக் கைதொழுதால் இஃது எல்லார்க்கும் தன்னடையே உண்டாகும் என்கிறார் இப்பாட்டில்.

வினையால் அடர்ப்படார்= ‘வினை’ என்னும் பொதுச் சொல்லானது நல்வினை தீவினை என்ற இருவினைகளையும் இங்குக் குறிக்கும்;
உபநிஷத்தில் [முமுக்ஷு மோக்ஷத்துக்குப் போம் போது புண்யம் பாபம் என்ற இருவினைகளையும் உதறி விட்டுக்
கல்மஷமற்றவனாய்ப் பரமஸாம்யத்தை அடைகின்றான்] என்று ஓதி வைத்திருக்கையாலே
மோக்ஷமார்க்கத்திற்குப் பாபம் எப்படி இடையூறோ அப்படி புண்யமும் இடையூறென்பது நூற்கொள்கை.
பாபம் நரகத்திலே கொண்டு தள்ளும்; புண்யம் ஸ்வர்க்காதி லோகங்களில் கொண்டு தள்ளும்;
ஆகவே, பாபம் இரும்பு விலங்கு போன்றதென்றும் புண்யம் பொன்விலங்கு போன்ற தென்றும் சமத்காரமாகச் சொல்லுவதுமுண்டு.

இனி, “வினையாலடர்ப்படார்” என்றவிதற்கு- இங்கே யநுபவிக்க நேரும் பாப பலன்களினால் துன்பப்படமாட்டார்கள்
என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.

வெம் நரகில் சேரார்=[ எம்பெருமானோடு கூடி யிருத்தல் ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருத்தல் நரகம் ] என்று
ஸ்ரீராமயணத்திற் சொன்னபடியே எம்பெருமானைப் பிரிந்து வருந்துகையாகிற நரகாநுபவம் பண்ணமாட்டார்களென்கை.

———–

“உலகமென்பது உயர்ந்தோர் மாட்டே” [உலகம் என்னுஞ்சொல் மிகப்பெரிய மஹான்களைக் குறிக்கும் ] என்று
கூறியிருப்பதனால், இப்பாட்டின் முதலடியிலுள்ள உலகம் என்னுஞ்சொல் ‘ உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்’ என்னும்
பொருளிலே பிரயோகிக்கப்பட்ட்து. அறிவு நிரம்பிய பெரியோர்கள் எம்பெருமானது திருவடிகளையும்
அவனது திருநாமங்களையுமே காண்பதுங் கேட்பதுமாயிருப்பர்களென்கிறார் இப் பாட்டில்.

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66-

பதவுரை

உலகம்–உயர்ந்தவர்களான முமுக்ஷுக்கள்
காலை எழுந்து–(ஸத்வ குணம் வளரக் கூடிய ) விடியற் காலையில் துயில் விட்டெழிந்து
கற்பனவும்–அப்யஸிப்பனவும்,
கற்று உணர்ந்த மேலை தலைமறையோர்–படித்து அறிவு நிரம்பிய வைதி கோத்தமர்கள்
வேட்பனவும்–ஸாக்ஷாத்கரிக்க ஆசைப்படுவனவும்.
(எவையென்றால்)
வேலைக்கண் ஓர் ஆழியான்–திருப்பாற்கடலில் ஒப்பற்ற திருவாழியை யுடையனாய்ப் பள்ளி கொண்டிருக்கும் பெருமானுடைய
அடியே–திருவடிகளேயாம்;
ஓதுவதும்–மஹான்களால் ச்ரவணம் பண்ணப் பெறுவனவும்
ஓர்ப்பனவும்–மநநம் பண்ணப் பெறுவனவும்
(எவையென்றால்)
பேர் ஆழி கொண்டான்–பெரிய கடல் போன்ற திருமேனியைக் கொண்ட அப்பெருமானுடைய
பெயர்–திருநாமங்களேயாம்.

மேலைத் தலைமறையோர்- கீழ்வேதமென்றும் மேல்வேதமென்றும் வேதம் இருவகைப்படும்:
கீழ்வேதமென்பது கர்மகாண்டம்; மேல்வேதமென்பது ப்ரஹ்மகாண்டம் (உபநிஷத்பாகம்);
ஆகவே, மேலைத் தலைமறையோரென்றது வேதாந்திகளென்றபடி.

———–

ஞானமென்பது உலகிற் பலவிதம் ;
தர்க்க சாஸ்திரம் படித்து வாதங்கள் செய்யத் தேர்ச்சி பெற்றவனும் தன்னை ஞானியென நினைக்கிறான்;
ஆயுர்வேதம் ஜோதிடம் மந்த்ரம், தந்த்ரம் முதலியவற்றில் கைதேர்ந்தவனும் தன்னை ஞானியென நினைக்கிறான்;
இப்படி ஒவ்வொரு யோக்யதை பெற்றவனும் தன்னை ஞானியென நினைத்துக்கொண்டால் உண்மையான ஞானம் எது?
வாஸ்தவத்தில் ஞானியென்பான எவன்? என்கிற கேள்விக்கு சாஸ்த்ரங்கள் சொல்லும் உத்தரமாவது
எம்பெருமானை அறிகிற அறிவு ஒன்றுதான் ஞானமெனப்படும் என்பதே.

“ஒந்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” என்கிற வாக்கியமே இப்பாட்டின் முக்கிய விஷயம்.
மற்றவை த்ருஷ்டாந்த கோடியிலே அருளிச் செய்யப்பட்டவை.

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –67-

பதவுரை

ஆறு–ஆறுகளானவை
பெயரும் கரு கடலே நோக்கும்–பொங்கி கிளர்கின்ற மஹா ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்லும்;
ஒண் பூ–அழகிய தாமரைப் பூவானது
உயரும்–உயர்ந்த ஸ்தாநத்திலே [ஆகாசத்திலே] இருக்கிற
கதிரவனே–ஸூர்யனையே
நோக்கும்–கண்டு மலரும்;
உயிரும்–பிராணனும்
தருமனையே நோக்கும்–யம தர்ம ராஜனையே சென்று சேரும்;
[இவை போலவே]
உணர்வு–ஞானமானது
ஒண் தாமரையாள்–அழகிய தாமரைப் பூவிற்
கேள்வன்–பிறந்த பிராட்டிக்கு
ஒருவனையே–வல்லபனான பெருமானொருவனையே
நோக்கும்–சென்று பற்றும்

ஆறுகளானவை ஸமுத்ரத்தையே நோக்கிச் செல்வதும், – தாமரைப்பூ ஸூர்யனை நோக்கியே மலர்வதும்,
பிராணன்கள் யமதர்ம ராஜனையே சென்று கிட்டுவதும் எப்படிநியதமாக நிகழ்கின்றனவோ
அப்படியே ஜ்ஞாநமென்பதும் திருமாலைப்பற்றியல்லது வேறு விஷயங்களைப்பற்றி நில்லாது என்றது-
எம்பெருமானைத் தவிர்த்து இதர விஷயங்களைப் பற்றியுண்டாகும் அறிவு அறிவல்ல; அது அஜ்ஞாநபர்யாயமே என்றவாறு .

“தொக்கிலங்கியாறெல்லாம் பரந்தோடித்தொடு கடலே, புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்,
மிக்கிலங்குமிகில் நிறத்தாய் வித்துவக்கோட்டம்மா, உன்புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே!” என்ற
பெருமாள் திருமொழிபாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கத்தக்கது.

பிள்ளைலோகாசர்யாருளிச்செய்த முமுக்ஷுப்படியில் திருமந்தரப்ரகரனத்தில் 73 “ இத்தால்-
*தாமரையாள் கேள்வ நொருவனையே நோக்கு முணர்வு என்றதாயிற்று” என்னும் ஸூத்ரத்திற்கு
மணவாளமாமுனிகளருளிச்செய்துள்ள வியாக்கியான சைலியை நோக்குங்கால்,
இப்பாட்டில் உணர்வு என்பது ஜ்ஞாநமயனான ஆத்மா என்று பொருள்படிகிறதென்று கொண்டு,
ஜ்ஞாநைக நிரூபணீயனான ஆத்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷபூதனென்பதை
இப்பாட்டு உணர்த்துவதாகக் கருத்துக்கொள்ளவும் இடமேற்படுகின்றது; அதுவும் ஒரு நிர்வாஹமாகும்.

இப் பாட்டால் மூன்று வகையான சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன்;
1. எம்பெருமானைப்பற்றி யுண்டாகிற ஞானமே ஞானம் .
2. ஆத்மா எம்பெருமானுக்கே உரியவன்.
3. ( தாமரையாள் கேள்வனென்று பிராட்டி ஸ்ம்பந்தம் தோற்றச் சொல்லியிருக்கையாலே) மிதுந சேஷத்வமே ஜீவாத்மலக்ஷணம் –
என்னு மிப்பொருள்கள் மூன்ருமாம்.

“உயிரும் தருமனையே நோக்கும் “ என்றவிடத்தில் ஒரு விசாரமுண்டு:
அவைஷ்ணவர்களுடைய பிராணன் யமதர்மராஜனுக்கு வசப்படுமேயன்றி
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிராணான் அப்படி யமனைசென்று கிட்டமாட்டாதே; அப்படியிருக்க,
“ உயிரும் தருமனையே நோக்கும்” என்றுபொதுவாக எப்படி அருளிச்செய்யலாம்? என்று.

இதற்கு அப்பிள்ளையுரையில் “ உயிரும்-பகவத் பரரல்லாத நாட்டிற் பிராணிகளடங்கலும்” என்றுரைத்திருக்கக் காண்கையாலே
இந்த சங்கை வேண்டா என்பர் சிலர்.
வைஷ்ணவர்களானாலும் சரி, அவைஷ்ணவர்களானாலும் சரி; எல்லாருடைய பிராணனும் பகவதாஜ்ஞையின் படி
யமதர்ம ராஜனிடத்திலேயே சென்று சேரும்;
ஸித்தாந்தத்தில் ஆத்மா’ வேறு, பிராணன் வேறு; வைஷ்ணவாத்மா எம்பெருமானைச் சென்று சேர்ந்தாலும்
அவனுடைய பிராணன் யமனைத்தான் சென்று சேரும் என்பர் சிலர்.
மற்றுஞ் சிலர் “ யமோவைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹருதி ஸ்தித” என்றும்
“ க்ருஷ்ணம் தர்ம்ம் ஸநாதநம்” என்றும் எம்பெருமானையே யமனாகவுஞ் சொல்லியிருக்கையாலே
“ உயிரும் ‘தருமனையே நோக்கு” மென்கிற விவ்விடத்திற்கும் அவ்வெம்பெருமானே பொருள் என்பர். நிற்க.

———————

திருமாலை யறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார்,
அறிவுக்கு எல்லை நிலம் எம்பெருமானல்லது இல்லை என்னும்படி யிருந்தாலும்
அவன் தன்மை அறிவார் தான் இல்லை என்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.
இவ்வாறிருப்பது வஸ்துவின்ஸ்வபாவமேயொழிய அறிவின் குறைவன்றென்பதும் அறியத்தக்கது.”உணர்வாரார்? ‘ என்ற வினாவினால்
ஸர்வஜ்ஞ்னான உன்னாலும் உன் தன்மை அறியமுடியாதென்பதும் ஸூசிப்பிக்கப்படும்
“ தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்றார் நம்மாழ்வாரும்.

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

பதவுரை

விண்ணகத்தாய்–பரமபதத்திலெழுந்தருளி யிருப்பவனே!
மண்ணகத்தாய்–இந்த மண்ணுலகில் திருவவதரிப்பவனே!
வேங்கடத்தாய்–திருமலையில் நின்றருள் பவனே!
பண் நால் வேதம் அகத்தாய்–ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!
உன் பெருமை–(இப்படிப்பட்ட) உன்னுடைய பெருமையை
ஊழி தோறு ஊழி–காலமுள்ளதனையும்
(இருந்து ஆராய்ந்தாலும்)
உணர்வார் ஆர்–அறியக் கூடியவர் யாவர்?
உன் உருவம் தன்னை–உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தைத்தான்
உணர்வார் ஆர்–அறியக்கூடியவர் யாவர்?
நீ கிடந்த பால்–(ஆர்த்த ரக்ஷணத்துக்காக ) நீ பள்ளி கொண்டிருக்கப் பெற்ற திருப்பாற்கடலைத்தான்
உணர்வார் ஆர்–அறிய வல்லாரார்? [எவருமில்லை.]

———–

இப்பாட்டு ஒரு சமத்காரமான கேள்வியாயிருக்கிறது
மஹாப்ரளயத்திலே இந்த விபூதி அழியாதபடி திருவயிற்றிலே இதனை வைத்துக் கொண்டு அப்ராக்ருதமான உனது
திருமேனியைச் சிறுக்கி ஒரு சிறுகுழந்தை வடிவத்தைக் கொண்டவனாகி,
சயனிப்பதற்குச் சிறிதும் பற்றாத ஒரு ஆலந்தளிரில் நீ பிரளய காலத்தில் சயனித்தருளினாயென்று
பரம ஆப்தர்களான முனிவர் மொழிகின்றனர்; ‘ எத்திறம்!’ என்று நினைந்து நைந்து ஈடுபடும்படியான இச்செயலானது—
முன்பு கிருஷ்ணாவதாரத்தில் ஏழுபிராயத்தில் ஏழுநாள் ஒருசேரக் கோவர்த்தந மலையையெடுத்துக் குடையாகப் பிடித்த
அருஞ்செயலைக்காட்டிலும் அதிக ஆச்சரியமாயிருக்கின்றது;
நீ கண்வளர்ந்த அந்த ஆல் பிரளய ஸமுத்திரத்தில் தோன்றியதோ?
அன்றி, பிடிப்பொன்றுமில்லாத ஆகாசத்தில் தோன்றியதோ?
அன்றி, பிரளயத்தில் கரைந்துபோன மண்ணிலிருந்துதான் தோன்றியதோ?
இதன் வரலாற்றை விளங்கச் சொல்லவேணுமென்று கேட்கிறார்.
இவ்வதிசயம் ஸர்வஜ்ஞனான வுன்னாலும் கண்டுபிடித்துச்சொல்லமுடியாத தென்றும்
அகடிதகடநாஸாமர்த்தியத்தினால் நேரும் அதிமாநுஷ சேஷ்டிதங்களின் குதர்க்கங்கள் பண்ணுவது தகாதென்றும் வெளியிடுதலே
இப்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பதவுரை

சோலை சூழ் குன்று எடுத்தாய்–சோலைகளால் சூழப்பட்ட கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்தவனே!
நீ பாலன் தனது உருஆய்–நீ சிறுகுழந்தை வடிவு கொண்டு
ஏழ் உலகு–எல்லா வுலகங்களையும்
உண்டு–திருவயிற்றிலே வைத்து
ஆல் இலையின் மேல்–ஓர் ஆலந்தலிரின் மேல்
அன்று–பிரளயகாலத்தில்
வளர்ந்த–கண் வளர்ந்த செயலை
மெய் என்பர்–(வைதிகர்கள் யாவரும்) ஸத்யமென்கிறார்கள்.
அன்று-(எல்லாம் அழிந்து கிடந்த) அக்காலத்தில்
ஆல்–அந்த ஆலானது
வேலை நீர் உள்ளதோ–வெள்ளங் கோத்துக்கிடக்கிற பிரளய ஸமுத்திரத்தின் ஜலத்திலுள்ளதோ?
(அல்லது)
விண்ணதோ–(நிராலம்பமான) ஆகாசதில்லுள்ளதோ?
மண்ணதோ–(பிரளய ஜலத்திலே கரைந்து போன) பூமியிலுள்ளதோ?
சொல்லு–இவ் வாச்சரியத்தை நீயே சொல்ல வேணும்.

———

எம்பெருமான் விசித்ரசக்தி வாய்ந்தவனென்பதைக் கீழ்ப்பாட்டில் தெரிவித்து இப்படிப்பட்ட பெருமானை
உலகத்திலுள்ளீ ரெல்லீரும் பணிந்து வாழுங்கோளென்று பரோபதேசத்தில் மூளுகிறாரிப்பாட்டில்.

சொல்லும் தனையும் தொழுமின் விழுமுடம்பு
செல்லும் தனையும் திருமாலை -நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால்  ஏத்துதிரேல் நன்று —–70-

பதவுரை

திருமாலை–பிராட்டியோடு கூடின பெருமானை
நல் இதழ் தாமத்தால்–அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்
வேள்வியால்–யாகம் முதலிய ஸத் கரு மங்களாலும்
தந்திரத்தால்–(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்
மந்திரத்தால்–(க்ரியா கலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்
விழும் உடம்பு செல்லும் தனையும்–அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்
தொழுமின்–தொழுங்கள்;
(இவற்றை செய்ய சக்தி யில்லா விட்டால்)
சொல்லும் தனையும்–(உங்களுக்குச்) சொல்லக் கூடிய சக்தியுள்ள வரையிலும்
நாமத்தால்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்துதிர் ஏல்–புகழ்ந்தீர்களாகில்
நன்று–அது மிகவும் நல்லது.

“ விழுமுடம்பு செல்லுந்தனையும் நல்லிதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் திருமாலைத் தொழுமின்;
சொல்லுந்தனையும் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று” என்று அந்வயிப்பது.
இந்த சரீரம் என்றைகாவ தொருநாள் சரிந்தே போகப் போகிறது;
“இதம் சரீரம் பரிணாம பேசலம் பதத்யவச்யம் சலதஸந்தி ஜர்ஜரம்” (முகுந்தமாலை) என்றபடியே
தவறாமல் நசித்தே போகக் கடவதான இவ்வுடல் உள்ளவரையில் சிறந்த புஷ்பங்களைக் கொண்டும்
யாகம் முதலிய வைதிக கருமங்களைக்கொண்டும் மந்தர தந்த்ரங்களைக் கொண்டும் எம்பெருமானைப் பணியுங்கள்;
சரீரத்தால் சிரமப்பட்டுச் செய்யக்கூடிய அக்காரியங்களில் கைவைப்பது கஷ்டமாயிருந்தால்,
வெறும் வாயினால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவு திருநாமங்களைச் சொல்லி ஏத்தினாலும் போதுமானது- என்றாராயிற்று.

தாமம், தந்திரம், மந்திரம், நாமம் – வடசொற்கள்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 17, 2021

எம்பெருமானுடைய திருநாமங்களைப் பரம போக்யமாக நாம் வாயாரச் சொல்லவே,
அப்பெருமான் ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைத் தொலைத்துத் தன்னைக் கொடுத்தாப் போலே
நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னைத் தந்தருள்வனென்கிறார்.

எளிதில் இரண்டடியும்   காண்பதற்கு என்னுள்ளம்
தெளியத் தெளிந்து ஒழியும் செவ்வே கனியில்
பொருந்தாவனைப் பொரலுற்று அரியா
யிருந்தான்    திருநாமம் எண்——-51–

பதவுரை

என் உள்ளம்-எனது நெஞ்சே!(நீ)
தெளிய–கலக்கம் தீர்ந்து தெளிவு பெற்றால்
(அந்த எம்பெருமானும்)
செவ்வே தெளிந்தொழியும்–மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்;
(ஆகையினால்)
களியில்–அஹங்காரத்தாலே
பொருந்தாதவனை–அடி பணியாதிருந்த ஹிரண்யாசுரனோடு
பொரல் உற்று–போர் செய்யத் தொடங்கி
அரி ஆய் இருந்தான்–நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய
திரு நாமம்–திருநாமங்களை,
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு–(அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு
எண்–சிந்திப்பாயாக.

என்னுள்ளம் என்றது அண்மைவிளி; என்னுள்ளமே! என்றபடி. நீ எம்பெருமானுடைய திருவடியிணையை ஸேவித்து
அநுபவிப்பதற்கித் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸந்நனாய் அருள்புரிவன்;
நீ தெளிவுற்றிருக்கிறாயென்பது நன்குவிளங்குமாறு ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக் கொண்டிரு.

————

அஹங்காரிகளான முப்பத்து மூவரமரர்களும் எம்பெருமானை யடி பணிந்தே சிறப்புற்றிருக்கின்றனரென்கிறார்.

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி யோவாது எப்போதும்
திரு மாலைக் கை தொழுவர் சென்று —-52–

பதவுரை

எண்மர்–அஷ்ட வஸுக்களும்
பதினொருவர்–ஏகாதச ருத்ரர்களும்
ஈர் அறுவர்–த்வாதசாதித்யர்களும்
ஓர் இருவர்–இரட்டையரான அச்விநீ தேவதைகளும்
(ஆகிய முப்பத்து மூவரான தேவர்களும்)
வைகலும்–நாள் தோறும்
வண்ணம் மலர் ஏந்தி–நாநா வர்ணங்களை யுடைய புஷ்பங்களை யெடுத்துக் கொண்டு
நண்ணி–(எம்பெருமானைக்) கிட்டி
ஒரு மாலையால்–ஒப்பற்ற புருஷ ஸூக்தமாகிற சொல் மாலையைக் கொண்டு
ஓவாது–இடைவிடாமல்
எப்போதும்–எல்லா வேளைகளிலும்
பரவி–துதிசெய்து
திருமாலை சென்று–திருமகள் கொழுநனைக்கிட்டி
கை தொழுவர்–வணங்குவர்கள்

முதலடியில் முப்பத்து மூன்று தேவர்களை எடுத்துக் காட்டினது முப்பத்து முக்கோடி தேவர்களெனப்படுகிற
அனைவரையும் எடுத்துக்காட்டினமைக்குப் பர்யாய மென்க.
நம்மாழ்வாரும் பெரிய திருவந்தாதியில் “ இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர். எட்டோடொரு நால்வர் ஓரிருவர்” என்றருளிச்செய்தது காண்க.

—————-

திருவனந்தாழ்வானைப்போல எம்பெருமானுக்கு எல்லாக் காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும்
செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ்வார்
அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை யெடுத்தருளிச் செய்கிறார்.

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53-

பதவுரை

திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பாம்பிணை யுடலிலே
(சயனிக்கும்போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

எம்பெருமான் உலாவியருளும் போது மழை வெயில் படாதபடி குடையாக வடிவெடுப்பன்;
எழுந்தருளீ யிருந்த காலத்தில் திவ்ய ஸிம்ஹாஸந ஸ்வரூபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்;
திருப்பாற்கடலில் திருக்கண்வளர்ந் தருளும்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்;
ஏதேனு மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்;
சாத்திக்கொள்ளும்படி திருப்பரிவட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்;
சாயந்தருளும்போது தழுவிகொள்வதற்குரிய உபதாநமுமாவன்.

நீள்கடலுள் புணையாம் – திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலாம் .
புல்கும் அணையாம் –எம்பெருமான் பிரணய கலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரிய நேர்ந்தால் அப்போது விரஹ துக்கம்
தோன்றாத படிக்குத் திருவனந்தாழ்வானைத் தழுவிக் கொள்வனாம்.

மூன்றாமடியில் “ மணி விளக்காம்” என்றும் பிரிக்கலாம்

—————-

ஆச்ரித விரோதிகளைப் போக்க வேண்டில், கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி தன் நினைவுக்குத் தகுதியாக
எல்லா வடிமைகளையுஞ் செய்கிற திருவனந்தாழ்வானாகிற படுக்கையுலும் பொருந்த மாட்டாமல் இந்த லீலாவிபூதியில்
வந்து பிறந்து களைபிடுங்கித் தன்விபூதியைப் பாது காப்பவன் என்று அவனது திருக்குணத்தை அநுஸந்தித்து
அதற்கேற்ற சில திவ்ய சேஷ்டிதங்களை யநுபவிகிறாரிப்பாட்டில்.

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம்  புள்வாய்
குரவை குட முலை மற்  குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–

பதவுரை

செம் கண் அவன்–செந்தாமரைக் கண்ணனாகிய அப்பெருமான்
கரவு இன்றி–மறைவு இல்லாமல் [ஸர்வலோக ப்ரஸித்தமாம்படி]
அரவம்–காளிய நாகத்தை
விட்டு–விட்டடித்தும்
அடல் வேழம்–பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து–(தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன்–பசுக்களை
மேய்த்து–(வயிறு நிரம்ப) மேய்த்தும்
குருந்தம்–அஸுரா வேகமுடைய குருந்தமரத்தை
ஒசித்து–ஒடித்துப் பொகட்டும்
புள்வாய்–பகாசுரனுடைய வாயை
கீண்டு–கிழித்தும்
குரவை–ராஸக்ரீடையை
கோத்து–(இடைப் பெண்களோடு) கை கோத்து ஆடியும்
குடம்–குடங்களைக் கொண்டு
ஆடி–கூத்தாடியும்
முலை–பூதனையின் முலையை
உண்டு–(அவளுடைய உயிரோடு) உறிஞ்சி யுண்டும்
மல்–(கம்ஸனால் ஏவப்பட்ட) மல்லர்களை
அட்டு–கொன்றும்
குன்றம்–கோவர்த்தன மலையை
எடுத்த–(குடையாக) எடுத்துப் பிடித்த இச் செயல்கள்
(என்ன ஆச்சரியம்!..)

கண்ணபிரானது காளியமர்த்தநம் முதலிய அரிய செயல்களை அனுஸந்தித்த ஆழ்வார் அவற்றில் உள் குழைந்து ஈடுபட்டு
மேலொன்றும் சொல்ல மாட்டாமையால் ஒரு வினைமுற்றுச் சொல்லவும் மாட்டாது விட்டனர்;
ஆச்சர்ய கரமான விஷயங்களைக் கூறும்போது அவற்றுக்கு வினை முற்றுத் தந்து முடியாது நிறுத்துவதைப்
பல கவிகளின் வாக்குகளிலும் காணலாம்.

ஈற்றடியில் எடுத்த என்றது –’ அன்’ சாரியை பெறாத பலவின்பாற்பெயர்; சாரியை பெறின் ‘எடுத்தன’ என நிற்கும்.
இப்பாட்டில், அரவுமுதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறையாம்;
இதை வடமொழியில் ‘யதாஸங்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில்’ நிரனிறையணி’ என்றும் அலங்கார சாஸ்திரிகள் கூறுவர்.

காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும்,
குவலயா பீடமென்னும் கம்ஸனது யானையைக் கொம்புமுறித்து முடித்ததும் ,
தன் மேன்மையைப் பாராமல் தாழநின்று பசுக்களைமேய்த்ததும்,
அஸுரன் ஆவேசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும்,
பகாஸுரன் வாயைக் கீண்டொழித்ததும்,
இடைப்பெண்களோடே குரவைக் கூத்தாடியதும்,
குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும்,
தன்னைக் கொல்லுமாறு தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும்,
மல்லர்களைக் கொன்றதும்,
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேந்தி நின்றதுமாகிய
இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டுப் பேசினாராயிற்று.

————-

யமபடர்கள் பாகவதர் திறத்திலே அஞ்சி யிருக்கும் படியை அருளிச் செய்கிறார்.

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

பதவுரை

அரவு அணைமேல்–சேஷ சயனத்தின் மீது வாழ்கிற
பேர் ஆயற்கு–இடைத் தனத்தில் குறைவின்றிப் பூர்ணமாயிருக்கிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு
ஆட்பட்டார் பேர்–அடிமைப் பட்டவர்களின் திரு நாமத்தை வஹிக்குமவர்களும்
நமன் தமரால்–யம படர்களாலே
“அவன் தமர் எவ்வினையர் ஆகிலும்–“ அந்த சர்வேச்வரனுடைய பக்தர்கள் எவ்வகையான செயலை யுடையவராயிருந்தாலும்
எங்கோனவன் தமரே”–எம்பெருமானுடைய பக்தர்களன்றோ”
என்று–என்று கொண்டாடிக் சொல்லி
ஒழிவது அல்லால்–(தாங்கள்) விலகிப் போவது தவிர,
ஆராயப்பட்டு அறியார்–ஆராயப் பட்டிருநக்க அறிய மாட்டார்கள்

யமன் நாட்டிலுள்ளாருடைய பாவங்களையெல்லாம் ஆராய்வதற்கு அந்த ஸர்வேச்வரனால் நியகிக்கப்பட்டவனே;
ஆனாலும் தனக்கும் நியாமகனான அந்த ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் நற்காரியங்களைத் தவிர்ந்து
தீய காரியங்களையே செய்து வந்த போதிலும் அவர்களை யம கிங்கரர்கள் “நமது யஜமாநனான யமனையும் நியமிக்கும்
வல்லமை யுடையவர்களன்றோ இந்த பாகவதர்கள்” என்று கொண்டாடி வணங்கி அப்பால் போய்விடுவார்களே தவிர,
அவர்களுடைய குணா குணங்களை ஒருபோதும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்: ஏனெனில்;
அப்படிப்பட்டவர்களை ஸம்ரக்ஷிப்பதில் புருஷகார பூதையான பிராட்டியும் ஒருகால் ஏதேனும் குறை சொல்லிலும் அதையும் லக்ஷியஞ்செய்யாமல்

“ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று சொல்லிக் கொண்டு ஸர்வேச்வரன் பரிந்து ரக்ஷிப்பவனன்றோ?
இப்படிப் பெரிய பிராட்டியாராலும் குறை கூறக் கூடாதவர்கள் விஷயத்தில் நம்மால் அணுகவும் முடியுமோ? என்கிற பயத்தினாலென்க.
அன்றியும், யமன் தன்படர்களை நோக்கி ‘நீங்கள் வைஷணவர்கள் திறத்தில் அபசாரப்பட வேண்டா;
அவர்களைக் கண்டால் அநுவர்த்தித்திருங்கள்’ என்று கட்டளை யிட்டிருக்கின்றானென்பதை,

“ திறம்பேன்மின் கண்டீர், திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்- இறைஞ்சியும் சாதுவராய்ப்
போதுமின்களென்றான் நமனும் தன் , தூதுவரைக் கூவிச் செவிக்கு.” என்ற நான்முகந்துருவந்தாதிப் பாசுரத்தாலும்,
* ஸ்வபுருஷ மபிவீக்ஷ்ய பாசஹஸ்தம்வததி யம : கில தஸ்ய கர்ணமூலே – பரிஹர மதுஸூதந ப்ரபந்நாந்
ப்ரபுரஹமந்யந்ருணாம் . ந வைஷ்ணவாநாம்.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசநத்தாலும் அறிக.

“கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன, நாளுங் கொடுவினைசெயுங் கூற்றின் தமர்களுங் குறுககில்லார்” என்ற திருவாய்மொழியும்,
“வென்றி கொண்ட வீரனார், வேறு செய்து தம்முளென்னை வைத்திடாமையால் நமன், கூறுசெதுகொண்டு இறந்த குற்ற மெண்ணவல்லனே” என்ற
திருச்சந்தவிருத்தமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

இப்பாட்டில் “ பேராயற்கு ஆட்பட்டார்பேர்” என்ற ஈற்றடிக்கு வேறுவகையாகவும் பொருளுரைக்க இடமுண்டாயினும்,
அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்த திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானத்தில்
ஆழிமழைக்கண்ணா வென்னும் நாலாம் பாட்டின் அவதாரிகையில்,
“ அவன்தமரெவ்வினையராகிலும் இத்யாதி” என்று இப்பாசுரத்தையெடுத்து
[” அரவணைமேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் ஆராயப்பட்டு அறியார் கண்டீர்= ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது,
அவனையும் யமன் கோஷ்டியில் பட்டோலை பார்க்கப்பெறாது”] என்று வியாக்கியானித்தருளியிருக்கக் காண்கையாலே
‘பேராய்ற் காட்பட்டார்பேர்’ என்னுமளவை ஒருசொல்லாகக்கொண்டு (அன்மொழித் தொகையாகப் பாவித்து)
எம்பெருமானுக்கு ஆட்பட்டவர்களுடைய பேரை யுடையவர்கள் எனப் பொருள் கொள்ளூதல் சிறக்கும்

————-

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான் கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-

பதவுரை

[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]
பேரே–எம்பெம்மானது திருநாமமாகவே
வர–வரும்படியாக
பிதற்றல் அல்லால்–பிதற்றுவதைத் தவிர
எம்பெம்மானை–[அந்த] எம்பெருமானை
ஆரே–ஆர் தான்
அறிவார்–(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?
அது நிற்க–அந்த விஷயம் இருக்கட்டும்;
அயன்–பிரமனானவன் .
கடி–பரிமளம் மிகுந்த
கமலத்துள்–(அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து)
நேரே இருந்தும்–(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக் கொண்டிருந்தும்
கண்ணன் அடி கமலம் தன்னை–அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை
காண்கிலான்–ஸேவிக்கப் பெற்றானில்லை.

எம்பெருமானுடைய பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டறிய முடியாதது; கடற்கரையில் குடிசை கட்டிக்கொண்டிருப்பவர்க்கும்
அந்தக் கடலினுடைய ஆழம் அறிய முடியாமற் போவதுபோலவே அவனுடைய திருநாபிக்கமலத்தில் தோன்றின
நான்முகக்கடவுள் எப்பொழுதும் அவ்விடத்தே வாஸஞ்செய்து கொண்டிருந்தும் அவனுக்கும் அப்பெருமானுடைய பெருமை
அளவிட்டறியக் கூடாததாயிராநின்ற தன்றோ; ஆகையினால் ‘எம்பெருமான் உணர்வதற்கு முடியாதவன் ’என்று
நாம் உணர்ந்து அவனது திருநாமங்களை வாயில் வந்தபடியெல்லாஞ் சொல்லிக் கூப்பிடுவது செய்யலாமத்தனையொழிய,
அவனது மஹிமையை உள்ளபடியறிந்து எவராலும் சொல்லப்போகாது என்றவாறு.

சாஸ்திரங்களில் பலபேர்களைக் குறித்து ‘ப்ரஹ்மஜ்ஞாநி’ என்று சொல்லியிருப்பதெல்லாம்-
பரப்ரஹ்மத்தை உள்ளபடி அளவிட்டறிந்தமையைச் சொன்னதன்று;
‘எம்பெருமான் அளவிட முடியாதவன்’ என்ற இவ்வுண்மையை அறிந்தவர்களே ப்ரஹ்ம வித்துக்களெனப்படுவார் என்றறிக.

கன்றுகுட்டியானது ஓரிடத்திலிருந்துகொண்டு தன் தாயைக்காணாமல் அம்மே! என்று கத்தினால் அக்கத்துதல்
தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இரங்கிக் கன்றின் பக்கத்தில் வந்து நிற்பதுபோலவே,
எம்பெருமானை உள்ளபடி அறியாவிட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால்
அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த்துணரத்தக்கது.

பெம்மான் – ‘பெருமான்’ என்பதன் மரூஉ. நிற்க- வியங்கோள்முற்று.
இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக் கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால் )
எம்பெம்மானை ஆரேயறிவார்? என்று கைமுதிக நியாயம்படக் கூறியிருத்தலால் தொடர்நிலைச்செய்யுட் பொருட்பேறணியாம்.

———-

பலவகைக் கொடிய பாவங்கள் என்னிடத்தில் நெருங்கிக் கிடப்பதைக் கண்டு ‘இப்பாவங்கள் இன்னமும் முன்போலவே
மேல்விழுந்து நலிந்தால் நாம் என்ன செய்வது!’ என்று பயப்பட்டேன்;
‘எம்பெருமானது திருவடிகளிற் சென்று சேர்ந்துவிட்டால் பாவங்கள் அடியோடு நீங்கப்பெற்று நாம் உஜ்ஜீவிக்கப் பெறலாம்’
என்று துணிந்து, உன் திருவடிகளில் வந்து சேரும்விதம் யாது? என்று ஆராய்ந்து பார்த்தேன்;
நமது வாய் மொழிகளை உன் விஷயத்தில் உபயோகிப்பதே அதற்குச் சிறந்தவழி என்று நிச்சயித்து,
திருமந்திரத்தின் பொருளை விவரிப்பதான இப் பிரபந்தத்தைப் பாடினேன்;
இதனால், பாவங்களுக்கு அஞ்சின அச்சம் தீர்ந்து உஜ்ஜீவநமும் பெற்றேன் என்றாராயிற்று.

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன்மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது ——57-

பதவுரை

அயல் நின்ற–(என்) அருகிலேயே இருந்து கொண்டு (என்னை) இடைவிடாமல் ஹிம்ஸித்துக் கொண்டே யிருக்கிற
வல் வினையை–மிகக் கடினமான பாவங்களைக் குறித்து
அஞ்சினேன்–பயப்பட்டேன்;
அஞ்சி–(இப்படி) பயப்பட்டு
உய–(இந்தப் பாப ஸம்பந்தம் நீங்கி) உஜ்ஜீவிக்கும் பொருட்டு
நின்–உன்னுடைய
திரு அடியே–திருவடிகளில் தானே
சேர்வான்–வந்து கிட்டுகைக்காக
நயம் நின்ற–இன்பம் பொருந்திய
நல் மாலை கொண்டு–சிறந்த இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு
தொழுது–(உன்னை) ஆச்ரயித்து
நமோ நாரணா என்னும் சொல் மாலை–திருமந்திரத்தின் பொருளை
கற்றேன்–அப்யஸித்தேன்.

சேர்வான்= வான் விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.
“நயம்நின்ற” என்பதற்கு- ‘திருமந்த்ரார்த்தத்தை நயப்பித்தலில் நோக்கமாயுள்ள’ என்று பொருள் கூறுதலும் பிரகரணத்திற்குப் பொருந்தும்,
எம்பெருமானுடைய ஸ்வரூபம், அவனை அடைதற்குரிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெற வேண்டிய பேறு,
அடைவதற்கு இடையூறாகவுள்ள விரோதிஸ்வரூபம் ஆகிய இவ்வைந்து விஷயங்களே திருமந்திரத்தின் அர்த்தமாதலாலும்,
இவையே இப்பிரபந்தத்திலும் விவரிக்கப்படுகின்றன வாதலாலும் இதுகூடும்.

———-

நெஞ்சே! நாம் பகவத் விஷயத்தை விட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்க வழியில்லை;
நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யஸிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி
வேறொரு பிரயோஜனத்திற்காக வன்றே; ஆனபின்பு, தூப தீப புஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு
அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம். எழுந்திரு; இனிநாம் தாமஸித்திருப்பதற்கு அவகாசமேயில்லை – என்று
தம் திருவுள்ளத்தை த்வரைப் படுத்துகிறார்.

தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கை தொழுவான்
அந்தரம் ஒன்றில்லை யடை——58-

பதவுரை

நெஞ்சே–மனமே!
மலர் கொண்டு–புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்
தூபம்–தூபத்தை
கை ஏந்தி–கையிலே ஏந்திக் கொண்டும்.
தொழுது–(எம்பெருமானை ) வணங்கி
எழுதும்–உஜ்ஜீவிப்போம்;
எழு–நீ புறப்படு;
வாழி–(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]
மந்திரங்கள்–பகவந் மந்த்ரங்களை
பழுது இன்றி கற்பனவும்–முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்
மால் அடி கை தொழுவான் ஏ–ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:
ஆனபின்பு]
அந்தரம் ஒன்று இல்லை–(நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;
அடை–(அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.

“மலர் கொண்டு தூபம்கையேந்தி- தொழுது எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும்
அதற்கு அநுகூலப்பட்டிருக்கவே “வாழி நெஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க;
இந்த ஆநுகூல்யம் உனக்கு ஒருநாளும் மாறாதிருக்க வேணுமென்றவாறு.

பழுது இன்றி = குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது;
அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுலவாஸம் பண்ணி] என்றபடி.
அந்தரம் ஒன்று இல்லை –’பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிதுமில்லை.

————

நாம் நல்ல வழியிற் போதுபோக்க வேணுமானால் பகவானை ஆச்ரயிப்போம்;
அப்படி அவனை ஆச்ரயிக்குமிடத்து ஆச்ரயிக்க வொட்டாமல் இடையூறாக அருவினை அல்லல் நோய் பாவம்
முதலியவை குறுக்கே நிற்கின்றனவே! அவற்றைப் போக்கும்வழி யாது? என்று சங்கை பிறக்க,
நமது பிரதிபந்தநங்களை இரு துண்டமாக்குவதற்கு உபாயமாக ஸ்ரீராமபிரானைச் சரணம் புகுதல் நன்று என்கிறார்.

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-

பதவுரை

அடைந்த–அடியே பிடித்துப் பற்றிக் கிடக்கிற
அரு–போக்குவதற்கு அருமையான
வினையோடு–பழவினைகளும்
அல்லல்–(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத் துன்பங்களும்
நோய்–சரீர வியாதிகளும்
பாவம்–இப்போது செய்கிற பாவங்களும்.
மிடந்தவை–[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை
மீண்டு ஒழிய வேண்டில்–வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்
முன்–முன்பொருகால்,
நுடங்கு இடையை–மெல்லிய இடையை யுடையளான பிராட்டியை
இலங்கை வைத்தான்–லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய
முரண் அழிய–மிடுக்கு அழியும்படி
முன் ஒரு நாள்–ஸ்ரீராமனாய்ப் பிறந்தவொரு காலத்து
தன் வில்–தன்னுடைய வில்லை
அம்கை–அழகிய திருக்கையிலே
வைத்தான்–எடுத்துப் பிடித்தவனான பெருமானே
சரண்–உபாயமாவான்.

இத்தால், எம்பெருமானுக்கு போக்யமாயிருந்துள்ள ஆத்மவஸ்துவை என்னுடைய தென்று செருக்குற்றிருக்குமவர்கள்
ராவணாதிகள் பட்டது படுவாரென்னுமிடமும், இவ்வாத்வைஸ்து அவனுடையது’ என்று அநுகூலித்திருக்குமவர்களுக்கு
வரும் விரோதகளை அப்பெருமான் பிராட்டியின் துயரத்தைப் பரிஹரித்தது போலே
பரிஹரித்தருள்வனென்னும்மிடமும் தெரிவிக்கப்பட்டனவாம்.

—————-

உலகத்தில் பொதுவாக ஒரு நியாயமுண்டு; எவன் பலனை அநுபவிக்கிறானோ அவன் அதற்கு உரிய உபாயத்தை
அநுஷ்டிக்க வேணுமென்று. அந்த நியாயத்தைக் கொண்டு பார்க்கும் போது, எம்பெருமானைப் பெறுதலாகிற பயனை அநுபவிப்பவன்
சேதநனாயிருக்க அதற்குரிய உபாயமும் இவனிடத்திலன்றோ இருக்க வேண்டும்;
‘எம்பெருமானே உபாயம்’ என்று, முறையிடுவது எங்ஙனே பொருந்தும்? என்று ஒருசங்கை தோன்ற,
அஜ்ஞனாய் அசக்தனான இவனால் செய்யக் கூடியதொன்று மில்லாமையினால்,
ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான அவனே உபாயமாயிருக்க வேண்டியது ஆவச்யகமாயிற்றென்கிறார்.

பலனை அநுபவிப்பவனும் எம்பெருமானே, அதற்கு உபமா நுஷ்டாநம் செய்பவனும் எம்பெருமானே என்கிற
ஸத்ஸம் ப்ரதாய ஸித்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.

கைதவறி போன பொருளைத் தேடிபிடித்து அநுபவிப்பதும் அதனால் ஆநந்தமடைவதும்
ஸொத்தையுடைய ஸ்வாமியின் காரியமேயொழிய ஸொத்தின் காரியமல்லவே;
இதுபோல அப்பரம புருஷனுடைய ஸொத்தாகிய நாம் அவனை விட்டுத் தப்பித் தவறியிருக்கிறோமாயின்,
நம்மைத் தேடிப்பிடித்து ஆட்கொள்ளப் பெருதலும் பெற்று மகிழ்தலும் அவனுக்கே உரியனவாதலால்
பலனை அநுபவிக்குமவனான தானே உபாயாநுஷ்டாநம் செய்கிறானென்க.
ஸ்ரீபாஷ்யத்தில் முடிவான ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் “பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்ற ஸ்வாரஸ்யமுணர்க.

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–

பதவுரை

சரண் ஆம் மறை–(எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின
தாமரையானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்டபிராண் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.
அறியாது–அறியமாட்டார்கள்.

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தம் வேதங்களில் ஸித்தமானது என்பதைத் தெரிவிக்கவே
“சரணாமறைபயந்த” என்ற விசேஷணம் தாமரையானுக்கு இடப்பட்டது.

அரணாய’ என்பதை பேராழி கொண்ட பிரானுக்கு விசேஷணமாகப் பலர் மயங்கி மொழிவர்;
அது விசேஷணமன்று; இரண்டாம் வேற்றுமைச்சொல்: ‘அரணானவற்றை’ எனப் பொருள் படுதலால் பயனிலை.
பிரமன் முதல் எறும்பு ஈறாகவுள்ள ஸகல ஜந்துக்களுக்கும் உபாயமானவற்றை எம்பெருமான் அறிவனே யல்லது
அற்பஞானிகளான உலகத்தவர்கள் அறிய மாட்டார்கள் என்றவாறு.

ஆழி சூழ்ந்த வுலகமானது மன்னுயிர்க்கெல்லாம் அரணாயிருக்கிற பேராழி கொண்ட பிரானை யன்றி
மற்றதொன்றையும் அறியாது – என்றும் பொருள் சொல்லலாமே என்று முற்காலத்தில் ஒருவர் சொன்னாராம்;
உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்திருப்பதால் ‘உலகானது பிரானையன்றி மற்றறியாது’ என்கிற
விப்பொருள் இணங்காது என்று கொண்டு நஞ்சீயர், “உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே” என்றிருப்பதால்
இவ்விடத்தில் உலகு என்பதற்கு ‘சிறந்த மாஞானிகள்‘ என்று பொருள் கொண்டால்,
‘மஹான்கள் பேராழிகொண்ட பிரானையன்றி மாற்றறியார்கள்’ என்னும் பொருள் இணங்கி விடலாம் என்று அபிப்ராயம் கொண்டாராம்;

இதை பட்டர் கேட்டருளி, “ இவ்விடத்தில் ‘ஓராழி சூழ்ந்தவுலகு’ என்றிருப்பதை நோக்க வேணும்;
‘ஆழிசூழ்ந்த’ என்கிற விசேஷணம் இல்லாதிருந்தால் நீர் சொல்லும் பொருள் ஏற்கும்;
’கடலால் சூழப்பட்ட மஹான்கள்’ என்று பொருள் சொல்லப்
போகாமையாலே, ‘கடல் சூழ்ந்த இவ்வுலகமானது தனக்கு அரணானவற்றை அறிய மாட்டாது,
பேராழிகொண்ட பிரானே அறிவான்’ என்றே பொருள் கொள்ள வேணும்” என்று உபபாதித்து உரைத்தருளினராம்.

இங்ஙனே நிர்வஹித்து பட்டரருளிச்செய்தபோது நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டிருந்தார்கள்;
ஆனாலும் இதனை ஒருகால் நஞ்சீயர் மறந்திட, நம்பிள்ளை ஞாபகப்படுத்தினர் என்றும்
பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்தனர்.

இப் பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப் பிரதிகளில் சில பதங்களும் வாக்கியங்களும்
விடுபட்டிருப்பதை ஒலை ஸ்ரீகோசங்களைக்கொண்டு பரிஷ்கரித்துக்கொள்க.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முதல் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50 -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் —

August 16, 2021

எம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்திலீடுபட்டுப் பேசுகிறார்–

குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்
இன்று  முதலாக வென்னெஞ்சே -என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு  –41-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
என்றும்–எப்போதும்
புறன் உரையே ஆயினும்–(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தை யாயிருந்தாலும்
பொன் ஆழி கையான் திறன் உரையே–சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே
சிந்தித்து இரு–அநுஸந்தித்துக் கொண்டிரு;
(அப்படியிருந்தால்)
இன்று முதலாக–இன்று தொடங்கி
குன்று அனைய குற்றம் செய்யினும்–மலை போல் (பெருப் பெருத்த குற்றங்களைச் செய்தாலும்
குணம் கொள்ளும்–(அவற்றை யெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன்

நெஞ்சே!, ஆந்தரிகமான அன்பின் மிகுதியினாலே சொற்களைத் தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார் பலருண்டு;
அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால் கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்ல வல்லோம்;
அப்படி மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் அது பகவானைப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின் பயன்படும்.
எம்பெருமான் ‘மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந’ [ ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன் ]
என்று சொன்னவனாகையாலே நாம் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையையும் அவன் கனத்ததாகத் திருவுள்ளம் பற்றித்
தன்னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாய விடுவன்;
நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்”
என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்;
அவன் நமது ஆபிமுக்யத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனாதலால் நாம் மேலுக்குச் சொல்லும் வார்த்தையும்
அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுங்காண் – என்றாராயிற்று.

————

நாம் மலை போன்ற குற்றங்களைச் செய்தாலும் எம்பெருமான் அவற்றைக் குணமாகத் திருவுள்ளம் பற்றுவன் என்றார் கீழ்ப்பாட்டில்.
அப்படி குற்றத்தையும் குணமாகத் திருவுள்ளம் பற்றவேண்டிய காரணம் ஏதென்ன,
பிராட்டிமார் மூவரும் கூடவே குடியிருக்கை தான் காரணமென்கிறாரிதில்.

திருமகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் திரு மகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் –42-

பதவுரை

பால் ஓதம் சிந்த–திருப்பாற்கடலில் சிறு திவலைகளானவை சிதறி விழுந்து ஸுகப்படுத்த,
படம் நாக அணை கிடந்த–படமெடுத்த பாம்பினணையிற் பள்ளிகொண்ட
மால் ஓதம் வண்ணர்–பெரிய கடல் போன்ற வடிவை யுடையனான எம்பெருமானது
திரு மகள் மேல் மனம்–பெரிய பிராட்டியார் மேல் (காதல் கொண்ட) திருவுள்ளமானது.
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்–ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி மூவரோடும் கலந்து பரிமாறும் போது
திருமகட்கே தீர்ந்த ஆறு என் கொல்–பெரிய பிராட்டி யொருத்தியின் மேலே அற்றுத் தீர்ந்திருக்கிற விதம் என்னோ?

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்னும் மூன்று பிராட்டிமார்களும் கூடியிருக்கும் படியை முதலடியிலருளிச் செய்கிறார்.

பாலோதம் சிந்தப் படநாகணைக்கிடந்த மாலோதவண்ணரது திருமகள் மேல் (வைத்து) மனமானது
திருமகட்கே தீர்ந்தவாறு ஏன்கொல்? என்கிறார்.
இப்பாட்டுக்கு இரண்டு படியான நிர்வாஹங்களுண்டு;
தீர்ந்தவாறென்கொல் என்பதை நாச்சிமார் மூவரிடத்திலும் கூட்டி,
திருமகட்கே தீர்ந்தவாறென்கொல், மண் மகட்கே தீர்ந்தவாறென்கொல், ஆய் மகட்கே தீர்ந்தவாறென்கொல்
என்று திருமலை அனந்தாழ்வான் நிர்வஹிப்பராம்.

இங்ஙனன்றிக்கே பட்டருடைய நிர்வாஹம் – திருமகட்கே தீர்ந்தவாறென்கொல்? = திருமகளோடு கலந்து பரிமாறும்போது
மண்மகள் முதலிய மற்ற பிராட்டிமார்கள் போகத்திற்கு உபகரணமாயிருப்பர்கள்;
திருமகளோடு ஸம்ச்லேஷிப்பதைத் தங்கற் முலையோடும் தோளோடும் ஸம்ச்லேஷிப்பது போலவே நினைத்திருப்பர்கள்.
ஆகையாலே மற்ற தேவிமார்களை உபகரண கோடியிலேயாக்கித் திருமகள் பக்கலிலேயே பிரதான போகம் கொள்வது என்கொல்? – என்று.

தீர்ந்தவாறு – தீருகையாவது – ஒரு வஸ்துவை விட்டு மற்றொரு வஸ்துவில் சிறிதும் நெஞ்சு செல்லாமல்
அந்த ஒரு வஸ்துவிலேயே ஆழங்காற்பட்டிருக்கை.
“ தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங் காண்க.

————-

கீழ்ப் பாசுரத்திலருளிச் செய்தபடி பிராட்டிமார்கள் இடைவிடாது கூடி யிருக்கையாலே ஒருவரும்
தங்கள் குற்றங்களை நினைத்துப் பின்வாங்க வேண்டுவதில்லை; ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த கிஞ்சித்காரங்களிலே அந்வயிக்கலாம் ;
அப்படி அந்வயிக்கவே தீமைகளெல்லாம் தொலைந்து நன்மைகள் கைகூடுமென்கிறார்.

மனமாசு  தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீரேந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -43–

பதவுரை

புனம் மேய பூ துழாயான் அடிக்கே–தன்னிலத்தி லிருப்பது போலவே செல்வி குன்றாதிருக்கிற
திருத் துழாயை அணிந்துள்ள எம்பெருமான் திருவடிகளில்
போதொடு நீர் ஏந்தி–(திருவாராதநத்துக்கு உப கரணமான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு
தொழா நிற்பார் தமர் தாம்–வணங்குமவர்களான பாகவதர்களுக்கு
மனம் மாசு தீரும்–மனக் குற்றங்கள் விட்டு நீங்கும்
அருவினையும் சாரா–(ஸ்வ ப்ரயத்நத்தால்) நீக்க முடியாத தீ வினைகளும் அணுக மாட்டா:
தனம் ஆய–(பக்திமான்களுக்கு செல்வமாகிய பரம பக்தி முதலியவைகளும்
தானே கைகூடும்–தனக்குத் தானே வந்து கை புகுரும்

ஸர்வரக்ஷகன் என்பது விளங்கத் தனிமாலை யிட்டிருக்கிற எம்பெருமானுடைய திருவடிகளில் திருவாராதன
உபகரணங்களான புஷ்பம் தீர்த்தம் முதலியவற்றை யேந்திக்கொண்டு வந்து பணிமாறி வழிபடுமவர்களுக்கு –
மநஸ்ஸைப் பற்றிக் கிடக்கிய அஜ்ஞாநம் விஷய ராகம் முதலான தோஷங்களடங்கலும் தன்னடையே விட்டுக் கழலும்;
இவற்றுக்கு மூல காரணமான துஷ்கருமங்களும் கிட்டவராதபடி தொலைந்து போம்;
ஸ்வரூபாநுரூபமான செல்வமாகிய பரமபக்தி முதலியவைகளும் தனக்குத்தானே வந்து கைபுகுரும் என்றாராயிற்று.

மனம் , தனம் – வடசொல் விகாரம். பாகவதர்களுக்கு பகவத் பக்தியே பெருஞ்செல்வமாதலால் ‘ தனமாய்’ என்றார்.

———–

கீழ்ப்பாசுரத்தி லருளிச்செய்தபடி ஆச்ரிதர்கள் அடிமை செயுமளவில், எந்த ரூபத்தையும் எந்த நாமத்தையும்
இதரர்கள் உகந்திருப்பார்களோ அந்த ரூப நாமங்களையே யுடையனாகத் தன்னை அமைத்துக்கொண்டு
அர்ச்சாவதார ரூபியாய் இங்கே அடிமைகொள்வனென்கிறார்.
தமர்கள் கல்லையோ மண்ணையோ லோகங்களையோ எதை உருவமாக்கினாலும் அதையே தனக்கு அஸாதாரண விக்ரஹமாகப்
பரிக்ரஹித்து அதிலே ஸந்நிதாநம்பண்ணி யெழுந்தருளியிருப்பன்.
‘அந்த விக்ரஹத்தில் தமர்கள் எந்த திருநாமத்தையிட்டு வழங்குவர்களோ அந்தத் திருநாமத்தையே
நாராயணாதி நாமங்கள் போல விரும்பிக் கொண்டிருப்பன்.
மற்றும் குணம் சேஷ்டிதம் முதலியவற்றில் எந்த குணசேஷ்டிதங்களை அநுஸந்தித்து அநவரதபாவநை பண்ணுவர்களோ,
அவற்றையே கொண்டிருப்பன். – என்று அர்ச்சாவதார ஸெளலப்யத்தை யருளிச் செய்தாராயிற்று.

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் -44–

பதவுரை

ஆழியான்–திருவாழி யாழ்வான் முதலிய நித்திய ஸூரிகளைப் பரிஜநமாகவுடைய எம்பெருமான்,
தமர் உகந்தது எவ்வுருவம்–ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட உருவம் எதுவோ,
அவ்வுருவம் தானே ஆம்–அவ்வுருவமாகத்தான் பரிணாமமடைவன்;
தமர் உகந்த்து எப்பேர்–ஆச்ரிதர்களால் உகக்கப்பட்ட திருநாமம் எதுவோ
அப்பேர் ஆம்–அந்தத் திருநாமமே தனக்காம்படி யிருப்பன்;
தமர்–ஆச்ரிதர்கள்
உகந்து–உகப்புடனே
எவ் வண்ணம் சிந்தித்து–குணம் சேஷ்ட்டிதம் முதலியவற்றில் யாதொரு விதத்தை அநுஸந்தித்து
இமையாது இருப்பர்–ஓயாமல் பாவநை பண்ணிக் கொண்டிருப்பார்களோ
அவ் வண்ணம் ஆம்–அவ் வண்ணமே யாவன்

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் சில ஐதிஹ்யங்கள் அருளிச் செய்யப் பட்டிருக்கின்றன்: –
“எம்பெருமானார் மாதுகரத்துக்கு எழுந்தருளாநிற்க, சில பிள்ளைகள் காலாலே கீறி
‘உம்முடைய எம்பெருமான் திருமேனி’ என்று காட்ட, பாத்ரத்தை வைத்துத் தண்டனிட்டருளினார்.”
[எம்பெருமானார் பிக்ஷைக்காகத் திருவீதியில் எழுந்தருளா நிற்கையில் தெருப் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்த
சிறு பிள்ளைகள் திருவாழி திருச்சங்கு முதலியவற்றோடே ஒரு உருவத்தைத் தரையிலே கீறி
‘உடையவரே! உம்முடைய பெருமாள் பார்த்தீரா? ‘ என்றழைத்துக்காட்ட,
உடையவரும் “ தமருகந்த தெவ்வுருவமவ்வுருவந்தானே’ என்ற இப்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி
அந்தக்கீறலை மெய்யே பகவதி விக்ரஹமாகப் பிரதி பத்திபண்ணி தண்டனிட்டருளினார்.]

“கோயிலிலே சில பிள்ளைகள் விளையாடுகிறவர்கள் திருவீதியிலேயிருந்து பெருமாளும் நாய்ச்சிமாரும்
பெரிய திருமண்டபமும் கற்பித்துப் பெருந்திருப்பாவாடையும் அமுது செய்வித்து .’ எம்பெருமானார் ! ப்ரஸாதப்படும்’ என்று
மணலைக் கையாலே முகந்தெடுக்க தத்காலத்திலே மாதுகரத்துக் கெழுந்தருளுதிறவுடையவர்,
அவ்விடத்திலே அது கேட்டருளித் தெண்டளிட்டு அவர்களெடுத்த ப்ரஸாதத்தை பாத்ரத்திலே ஏற்றார் என்று ஜீயரருளிச் செய்தார்’
[= நம்பெருமாள் ஸந்நிதியில் நடக்கிற ரீதிகளை அப்படியே அபிநயித்துத் தெருப்புழுதியில் ஓரு நாள் விளையாடிக் கொண்டிருந்த
சிறுபிள்ளைகள் ஒரு கொட்டங்குச்சியில் மண்ணைவாரி யெடுத்துக்கொண்டு, ஸந்நிதியில் அருளிப்பாடுகள் சொல்லுகிற க்ரமத்திலே
சொல்லிக் கொண்டு வரும்போது “ஜீயோ! “ என்று அருளிப்பாடு சொல்லிக் கூவ, அந்த ஸமயத்தில் யாத்ருச்சிகமாக
பிக்ஷைக்கெழுந்தருளிக் கொண்டிருந்த உடையவர் இவ்விளையாட்டொலியைக் கேட்டு மெய்யே ப்ரதிபத்தி பண்ணீ
‘ நாயிந்தே!’ என்று சொல்லிக் கொண்டே போய் ஸேவித்து அந்த மண்ணைச் சிக்கத்தில் ஏற்றுக்கொண்டார்..]

“எங்களாழ்வார் பாடே ஆயர்தேவு சென்று நாவற்பழம் வேண்ட, ‘நீயார்?” என்று அவர்கேட்க,
ஜீயர்மகனான ஆயர்தேவு என்ன, ஜீயரக்கண்டு உம்முடைய பிள்ளை எங்களைக்குடியிருக்க வொட்டுகிறிலன் என்றார்.”
[ – நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று திருநாமம்.
அப்பெருமாள் , திருக் குருகைப் பிரான் பிள்ளானுடைய சிஷ்யரான எங்களாழ்வானுக்கு ஸ்வப்நத்திலே ஸேவை ஸாதித்து,
தான் இன்னானென்று தெரிவித்து நாவற்பழம் யாசிக்க, மறுநாள் எங்களாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
‘உங்கள் பெருமாள் நாவற்பழத்துக்காக என்பிராணனை வாங்குகிறாரே’ என்று விநோதமாக ஸாதித்தாராம்.
கண்ணபிரானான விபவத்தில் உகந்திருந்த நாவற்பழத்தை அர்ச்சையிலும் உகந்தபடி சொல்லிற்றென்க.]

————

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

இப்பாட்டின் பின்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத் கதை மூன்றாந்திருவந்தாதியில்-
“ ஆய்ந்தவருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில், வாய்ந்த குழவியாய் வாளரக்கன்- ஏய்ந்த,
முடிப்போது மூன்றேழென்றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண். “என்ற எழுபத்தேழாம் பாட்டிலும்,

நான்முகன் திருவந்தாதியில் – “ கொண்டுகுடங்கால் மேல்வைத்த குழவியாய், தண்டவரக்கன் தலைதாளாற்
பண்டெண்ணிப் – போங்குமரன்….. “என்ற நாற்பத்துநாலாம் பாட்டிலும்
பேயாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது.

முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக் கொண்டு நான்முகனிடஞ் சென்று வரம் வேண்டிக்
கொள்ளுமளவிலெம்பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து
‘இவன் பத்துத் தலைகளை யுடைய இராவணன்; ஸ்வ ஸ்ரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து
வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான்; இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்’ என்று
தெரிவிப்பவன் போன்று தன் திருவாயால் அவ்விராவணனுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் –
என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது. இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை;

பெரியாழ்வார் திருமொழியில் –“சீமாலிக னவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய்,
சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் “ என்றும் —
‘ எல்லியம் போதினி திருத்தலிருத்ததோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மோரடையாலம்” என்றும்
அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல்
ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்று நம் பூருவாசாரியர்கள் நிர்வஹித்திருப்பது போலவே
இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியோர் கூறுவர்.
இனி, இதற்கு இதிஹாச புராணங்களில் ஆகர முண்டேல் கண்டு கொள்க: விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தாலெண்ணினானான எம்பெருமானுடைய
குணங்களைத் தேவர்களால் அறிய முடியாது;
எம்பெருமானுடைய திருவருளாலே தெளியக் காணவல்ல நாமே அறிய வல்லோம் – என்பது ஒரு பொருள்;
தேவர்களே அறிய மாட்டாத போது நாமோ அறியக் கடவோம் என்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்வதாக மற்றொரு பொருள்.

பாதமத்தால் – பாதத்தால் என்றபடி.

———–

பிரமனுக்கு அருள் செய்தமையைக் கீழ்ப்பாட்டிற் சொன்னார்,
சிவனுக்கு அருள் செய்தமையைச் சொல்லுகிறாரிதில்.

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் —46-

பதவுரை

பண் புரிந்த நான்மறை யோன்–ஸ்வரங்களோடு கூடின நால் வேதங்களை நிரூபமாக வுடையனான பிரமனுடைய
சென்னி–தலையில்
[கிள்ளி யெறிந்ததனால் கையிலொட்டிக் கொண்ட கபாலத்தில்]
பலி ஏற்ற–பிச்சை யெடுத்துத் திரிந்தவனும்
வெண் புரி நூல் மார்பன்–வெளுத்த யஜ்ஞோ பவீத்த்தை மார்பிலே அணிந்தவனுமான ருத்ரனுடைய
வினை–ப்ரஹ்மஹத்தி பாபமானது
தீர–நீங்கும்படியாக
[ரக்த ஜலத்தை எடுத்துக் கொடுப்பதற்காக]
புண் புரிந்த ஆகத்தான்–தன்னுடைய திரு மார்பைப் புண்படித்தி கொண்டவனுடை எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணிவார்–ஆச்ரயிக்குமவர்கள்
அமரர்தம் போகத்தால்–நித்ய ஸூரிகளின் போகமாகிய பரமபதாநுபவத்தோடு
பூமி–இந்த லீலா விபூதியை
ஆள்வார்–ஆட்சி புரிவர்கள்.

சிவனுடைய வினையைத் தீற்பதற்காகத் தனது திருமார்பை நகத்தால் கீறி புண்படுத்திக் கொண்டது பற்றி
புண்புரிந்த ஆகத்தான் என்றார். இப்படி பரோபகார சீலனான பெருமானுடைய திருவடிகளைப் பணியுமவர்களே
உபய விபூதியையும் ஆலவள்ள பாக்யசாலிகள் – என்றாராயிற்று.
“வையம்மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வார் மண்ணூடே” என்று திருவாய் மொழிப் பாசுரம் இங்கு நினைக்கத் தகும்.

போகம் – பூமி- வட சொற்கள்

——————-

கீழ்ப்பாட்டில் “ புண் புரிந்த வாகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம் போகத்தால் பூமியாள்வார்” என்றார்;
எம்பெருமானது தாள்களைப் பணிதல் யார்க்குக் கை கூடும்? என்று கேள்வி யுண்டாக,
இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்களே எம்பெருமான் திருவடியைப் பணிதற்குப் பாங்குடையர் என்கிறாரிதில்

வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேலொரு நாள்
கைந்நாகம் காத்தான் கழல் —–47–

பதவுரை

மதம் களிறு ஐந்தைனையும்–மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும்
வாரி சுருக்கி–ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப் பிடித்து.
சேரி திரியாமல் செம் நிறீஇ–கண்ட விடங்களிலும் திரிய வொட்டாமல் செவ்வையாக நிலை நிறுத்தி
கூரிய–மிகவும் ஸூக்ஷ்மமான
மெய் ஞானத்தால்–உண்மையான பக்தி ரூபா பந்ந ஜ்ஞானத்தாலே
உணர்வார்–(அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள்
மேல் ஒரு நாள்–முன்பொரு காலத்திலே
கை நாகம் காத்தான்–கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய
கழல்–திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள்.

இந்திரியங்களை அடக்கி யாளுதல் மிகவும் அரிது என்பது தோன்ற, அவ்விந்திரியங்களை மதம் பிடித்த
யானையாக உபசரித்துக் கூறுகின்றார்.
யானைகள் நீர்நிலையில் புகுந்தால் முதலை முதலிய ஜல ஜந்துக்களால் துன்பம் நேரிடுவது ஸம்பாவிதமாதலால்
அங்குப் போகாதபடி சுருக்க வேணும் யானையை;
அப்படியே, பிரகிருதத்தில் நீர்நிலையாவது – விஷயாங்தரங்கள்; இந்திரியங்களாகிற மதயானைகள்
சப்தாதி விஷயங்களினருகிற் சென்றால் துன்பம் நேரிடுவது திண்ணமாதலால் அவற்றில் நின்றும் சுருக்க வேணும் இவற்றை;
இதுவே “ வாரிசுருக்கி” என்பதன் கருத்து.

வாரி என்னும் வடசொல்லுக்கு ‘நீர்’ என்று பொருள்; நீரானது எப்படி விடாயைப் பிறப்பிக்குமோ
அப்படி விஷயங்களும் விடாயைப்பிறப்பிக்கின்றன என்பதுபற்றி விஷயங்களை ‘வாரி’ என்ற சொல்லாற் குறித்தன ரென்க.
“வாரி சுருக்கி” என்றதே போதுமாயிருக்க, மறுபடியும் “ சேரிதிரியாமல் செந்நிறீஇ” என்றது-
பலாத்கரித்தாகிலும் இந்திரிய மதயானைகளை விஷய வீதிகளில் நின்றும் மடக்கியடக்கி ஆளவேண்டுவது
அவசியம் என்பதற்காக வென்க. நிறீஇ- சொல்லிசையளபெடை.

ஆக விப்படி இந்திரியங்களை வென்று பாரமார்த்திகமான பக்தி ரூபாபந்நஜ்ஞாநத்தாலே அவனை உள்ளபடி
உணரக் கூடியவர்கள் யாரோ, அவர்கள் அவனுடைய திருவடிகளை ஸேவிக்கப்பெறுவர்கள் – என்றாராயிற்று.
“ கைந்நாகங்காத்தான் கழல்” என்ற சொல்லாற்றலால் ஸ்ரீகஜேந்திரவாழ்வான் போல்வார்
இப்படிப்பட்ட அதிகாரிகள் என்பது ஸூசிக்கப்பட்டதாம்.

—————-

உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று
திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.

கழலொன்று  எடுத்தொரு கை சுற்றியோர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு வாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்ந்து -48–

பதவுரை

ஆழி நெஞ்சே–கம்பீரமான மனமே!
[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]
ஒரு கழல்–ஒரு திருவடியை
எடுத்து–மேலுலகங்களிலே செல்ல நீட்டி
ஒரு கை–ஒரு திருக் கையாலே
சுற்றி–[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றி யெறிந்து
ஓர் கை மேல்–மற்றொரு திருக்கையிலே.
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான்–இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற
[அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்]
அழலையுமிழ்கிற யுத்த சாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய
சே அடிக்கே செல்ல–திருவடிகளிலே சென்று கிட்டும்படி
மருவு–பொருந்துவாயாக;
மகிழ்–இதை ஆனந்த ரூபமாக ஏற்றுக் கொள்.

———–

தேவயோநிகளென்றும் மநுஷ்யயோநிகளென்றும் திர்யக்யோநிகளென்றும் பலவகைப்பட்ட யோநிகளில்
பிறப்பதும் இறப்பதுமாகிற ஸம்ஸாரத்தைத் தொலைத்துக் கொள்ள விருப்பமுடையவர்களுக்கே
எம்பெருமானைக் காணுதல் கைகூடுமென்கிறார்.

மகிழல கொன்றே போல் மாறும் பல்யாக்கை
நெகிழ முயகிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது –49–

பதவுரை

மகிழ் அலகு ஒன்றே போல்–(கணக்கில் நிபுணனான ஒருவனால் வைக்கப்பட்ட) ஒரு மகிழும் விதையே
காணி ஸ்தாநத்திலும் கோடி ஸ்தாநத்திலும் மாறி மாறி நிற்பது போல
மாறும் பல் யாக்கை–மாறி மாறிப் பலவகையாக வருகின்ற சரீரங்கள்
நெகிழ–தன்னடையே விட்டு நீங்கும் படியாக
முயலகிற்பார்க்கு அல்லால்–முயற்சி செய்யக் கூடியவர்களுக்குத் தவிர
ஆர்க்கும்–மற்ற எவர்க்கும்
முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடுமுடி எம் ஆதி காண்பு–விண்டு விருந்த தேஜஸ்ஸைப் போல்
தோன்றுகிற தேஜஸ்ஸையுடைய அழகிய பெரிய திருவபிஷேகத்தை யுடையனான எம்பெருமானைக் காண்பது
அரிது–கூடாத காரியம்.

பலகறை, மகிழம் விதை முதலியவற்றைக் கொண்டு கணிதம் பார்க்கிற முறைகள் சிலவுண்டு;
அந்த கணிதத்தில் காணிஸ்தாநமென்றும் கோடிஸ்தாநமென்றும் பாகுபாடுகளுமுண்டு;
காணிஸ்தானமென்பது மிகத்தாழ்ந்த ஸ்தாநம்; கோடிஸ்தானமென்பது மிகவுயர்ந்தஸ்தாநம்.
கணிதம் பார்க்கிற வகையில் ஒரு மகிழம் விதையே சற்றுபோது கணி ஸ்தாநத்திலும்
சற்றுபோது கோடிஸ்தாநத்திலுமாக மாறிமாறி வந்துகொண்டிருக்கும்; (இது கணிதஸாமர்த்தியத்தைப் பொறுத்ததுமாம்.)

அது போல பகவத் ஸங்கல்பத்தாலே கர்மாநுகுணமாக (உத்க்ருஷ்டமாகவும் அபக்ருஷ்டமாகவும்) பலவகைப்பட்டு
மாறிமாறி வாரக்கூடிய (பிரமன் முதற்கொண்டு எறும்பு ஈறாகவுள்ள) சரீரங்கள் தொலைந்து
நித்யாந்ந்தமநுபவிக்க வேணுமென்று ஆசை கிளரிந்து அதற்குரிய முயற்சியைச் செய்யுமவர்களுக்குத் தவிர
மற்று யார்க்கும் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பது அரிதாகும்.

நான்காமடியை “ ஆதிகான்பு ஆர்க்கும் அரிது” எனப்பிரித்து உரைக்கப்பட்டது
காண்பு – காணுதல். இனி “ காண்பார்க்கும் “ என்று ஒரு சொல்லாகவே கொண்டு உரைக்கவுமாம்
காணவேணு மென்னும் விருப்பமுடையவர்களுக்கும் எம் ஆதி அரிது ( அருமைப்படுவன்)என்க.

இப்பாட்டில் முதலடிக்குச் சார்பாக ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சதகத்திலுள்ள
“படுநைவராடிகேவ க்ல்ப்தா ஸ்தலயோ: கரகணிகாஸுவர்ண கோட்யோ:.” என்ற ச்லோகம்
ஒருபுடை ஒப்புமையாக ஸ்மரிக்கத்தக்கது.

————–

விஷயாந்தரங்களில் பற்றற்று அன்புடன் அவனை ஆச்ரயிகுமவர்களூக்கு
அவனைக் காண்பதில் அருமையேயில்லை யென்கிறார்.

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது -50-

பதவுரை

அரிய–அடக்க முடியாத
புலன் ஐந்து–பஞ்சேந்திரயங்களையும்
அடக்கி–கட்டுப் படுத்தி,
ஆய்–ஆராயந்தெடுக்கப்பட்ட
மலர்–புஷ்பங்களை
கொண்டு–கையில் ஏந்திக் கொண்டு
ஆர்வம் புரிய பரிசினால்–அன்பு மிகுந்த விதத்தினாலே
புல்கில்–கிட்டப் பார்த்தால்
பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்–‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தை யுடையனாய்
தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலி யிடத்தில்
வண் கை–உதாரமான தனது திருக் கையாலே
நீர் ஏற்றானை–உதக தாநம் வாங்கின பெருமானை
காண்பது–ஸேவிப்பது
எளிது–ஸுலபமாகும்.

செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஜ்ஞாநேந்திரயங்களைத்தையும் விஷயாந்தரங்களில் போக வொண்ணாதபடி அடக்கி,
பகவதாராதனைக்கு உரிய நன் மலர்களைச் சேகரித்துக் கொண்டு மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால்,
மாவலியின் மதமொழித்த பெருமானைக் கண்டநுபவிப்பது மிகவும் எளிதாகும்.

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –