அக்காக்காய் – சிறுபிள்ளைகளுக்குக் குழல் வாருவார்
சீராட்டாகச் சொல்லும் பாசுரம். பெரியாழ்.
2-5-1-10
அக்காணி – ஸ்தூல சரீரம், பெரியாழ். 5-2-3.
அக்காரம்- வெல்லம், அக்ஷாரம் பெரியாழ்.2-4-5.
அக்காரம்- கருப்புக்கட்டி, இக்குரஸம், (இக்குரஸம் – கரும்புச்
சாறு) பெரியாழ். 2-9-7.
அக்காரக்கனியே- சருக்கரைக்கனியே. திருவாய். 2-9-8.
அக்காரவடிசில் சர்க்கரைப் பொங்கல். நாச்சி, 9-6.
அக்கு – எலும்பு, உருத்திராக்கம். பெரிய. 9-6-1. தே 6.76.7 புத்தூர்.
அக்குவடம் – சங்குமணி மாலை. பெரியாழ். 1-7-2
அகடு – வயிறு, நடுவிடம். பெரிய. 1-2-1.
10 அகப்பணி – அந்தரங்ககைங்கரியம். திருவாய். 10-2-6.
அகம் – சித்தம். நெஞ்சு,இடம்,பெரியாழ். 5-1-5:
இரண்டாம் திரு.22.
அகம்படி -உள்ளிடம். பெரிய. 11-6-89. தே. 4-1-7,8 அதிகை
5-91-1 தனித்திருக் குறுந்தொகை
அகம்படியர் – அந்தரங்கர். திருப். வியாக்.4.
அகமகந்தோறும் நின்ற இடங்கள் தோறும். திருவாய். 10-3-2
தே. 4-104-5. அதிகை.
15 அகமேனி ஆத்மஸ்வரூபம்.திருவாய். 9-7-10.
அகலம்-பரப்பு, மார்பு.மூன்றாம் திரு. தே. 1-43-3 கற்குடி.
அகலிடம் – பூமி. பெரிய 5-3-9.
அகலில்கலும் திருவாய்.1-7-10
அகவலை – வலையின் உள்ளிடம். திருவாய். 6-2-9
20 அகவலைப்படுத்தல் – வசப்படுத்தல். திருவாய். 6-2-9.
அகாரியம் – செய்யத் தகாததொழில். பெரியாழ். 4-4-1.
அகைப்பு – மதிப்பு. நாச்சி. 38.
அங்கம் ஆறு சிக்ஷை.வியாகரணம், சந்தசு, நிருத்தம்,
சோதிடம்,கல்பம்,திருமா.43. தே. 1-65-9
பல்லவனீச்சரம்; 5-67-4 வாஞ்சியம்.
அங்காத்தல் – வாய்திறத்தல். பெரியாழ். 1-1-6.
25 அங்கி – அக்கினி. இராமாநுஜ 2, தே. சூரியன், 1-36-9. ஐயாறு.
அங்குத்தை – அங்கு உண்டாகும் செயல். பெரியாழ். 3-8-10; 4-1-3.-அங்குற்றேனல்லன் – அவ்விடத்தும் புகுந்தவனல்லேன்.
திருவாய், 5-7-2.
அங்கையில் வட்டு- உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டி.
பெரிய. 10-9-3. வட்டு – கருப்புக்கட்டி.)
அச்சன் -நாதன், சுவாமி. பெருமாள். 29 (மலை நாட்டுச் சொல்).
30அச்சுதன் – அடியார்களை நழுவவிடாதவன்,
அழிவில்லாதவன்.திருமா. 2.
2
அச்சோ- அணைத்துக்கொள். பெரியாழ். 1-8-1. ஆச்சரியம்.
அச்சோ ஒருவரழகியவா.பெரிய . 9-2-1 அச்சோ.
பத்து. திருவாசகம். திருவால்.பொன்னனையாளுக்கு
அருள்புரிந்த திருவிளையாடல்செய்.15,17.
அசும்பு- நீர்ப்பெருக்கு, சேறு, கல்மஷம். பெரியாழ். 5-4-8.
அசுரர் – தேவர்களுக்கு விரோதிகள். பிரமன் தொடையில்
உதித்துப் பிரமனைப் பெண்ணாக நினைத்து
விரும்பியமையால் அசுரர் ஆயினர் . பெருமாள்.10-10.
அசோகின் இளந்தளிர் – அசோகமரத்தின் இளந்தளிர்கள்.
பெரிய. 3-5-1.
35 அஞ்சலோதி -ஐம்பால் . அஞ்சு+ அல்+ ஓதி. சுருட்சி,நீட்சி,
குளிர்ச்சி, அழகு, பரிமளம்,என்ற ஐந்து
வகையான தன்மைகளையுடைய கருமையான
கூந்தல், பெரிய. 10-2-4.
40
அஞ்சனத்தினீறு – மையின் சுண்ணம். அஞ்சனம் மை. சிறிய
திரு. 10
அட்டகில்லேன் – வார்க்கமாட்டேன். திருவாய்4-7-9
அட்டல்- வார்த்தல், சமைத்தல். பெரியாழ். 3-5-1. அட்டி -இட்டு. (போஜனம் பெரியாழ். 1-6-5.
அட்டுக்குவி சோற்றுப்பருப்பதம் – சமைத்துக் குவிக்கப்பட்ட
சோறாகிய மலை. பெரியாழ். 3-5-1
அட்டைகள் – சுவைப்பர். திருவாய்.9-1-2.
அடம்பு – ஒருவகைக் கடம்பு. பெரிய. 6-7.9.
அடல்- வலிமை, போர், கொல்லல், சமைத்தல். முதல் திரு 71. தே. அடல், போர். 3-107-1 வலஞ்சுழி.
அடலாழி கொண்டான் மாட்டன்பு – பராக்கிரமம் பொருந்திய
சக்கரத்தைக் கையிலே கொண்டுள்ள பெருமானிடத்தில்
செலுத்திய அன்பு. முதல் திரு.71
45 அடிக்கண்ணி சூடிய மாறன் – திருவடிகளாகிற பூமாலையை
முடிக்கு அணிந்த நம்மாழ்வார். திருவிருத்தம். 100. (மாறன்=உண்டியே உடையே உகந்தோடும் உலகத்தாருடைய
இயற்கைக்கு மாறு பட்டு “உண்ணும்
சோறு பருகுநீர், தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன்” என்று இருந்ததனால்
ஆழ்வார் மாறன் என்ற திருநாமம்
பெற்றார். என்பது அண்ணங்கராசாரி
யார் சுவாமி உரை.)
அடிகள் – சுவாமி. திருவாய். 6-1-8.
அடிக்கொட்டிட- அடியைச் சேர நாச்சி. 4-1.
அடிச்சி – அடியவள்(வெள்ளாட்டி) சிறிய திரு.54.
அடிச்சியோம் தலைமிசை- உன் அடியவர்களாகிய எங்களுடைய
தலையின் மேல். திருவாய். 10-3-5,6.
50 அடிதாறு அடிக்கு அளவாக இருத்தல், பாதுகை, பாதரேகை
பெரிய திரு. 32.
55
அடிநிலை ஈந்தான் – திருப்பாதுகைகளை அளித்தவன்.
பெரியாழ். 3-9-6.
அடிநீறு- அடிப்பொடி. திருவாய். 5-9-2.
அடிநீறு கொண்டு -ஸ்ரீபாத தூளியைக் கொண்டு. பெரியாழ், 4-6-6.
அடியுறை – ஸ்ரீ பாத காணிக்கை. பெரியாழ். 4-3-9.
அடியேன் மனம் புகுந்ததேனே – அடியேனுடைய மனத்தில்
புகுந்த தேன் போல்
இனியவளே, பெரிய. 7-2-9.
அடிவீழ்ச்சி – அடியாட்டி, அடியாள். நாச்சி. 9-7.
அடுதல் – சமைத்தல், கொல்லுதல், வருத்துதல். திருவாய்.
7-7-4,6., 8-1-1.
அடை – இலை. பெரியாழ். 2–3-1.
அடைக்காய் – வெற்றிலைப்பாக்கு, பெரியாழ். 2-3-1.
60 அடைபுடை – அகோராத்திரம். (இரவும் பகலும்) பெரிய. 4-10-3.
அண்டம் – அண்டகபாலம், மேலுலகம். திருவாய்.7-4-1.
அண்டர் – இடையர், நித்யசூரிகள், பெரியாழ், 1-1-5
அண்ணல் – பெருமையுடையவன். பெரியாழ். 4-10-6. தே. 1-49-9.
நள்ளாறு.
அண்ணா-தலைவா. பெரிய. 1-9-6; 1-10-1. தே 4-62-1. ஆலவாய்,
1-89-3 எருக்கத்தம்புலியூர்.
65 அண்ணிக்கும் – தித்திக்கும். கண்ணிநுண். 1. தே.6-54-3
புள்ளிருக்குவேளூர்; 6-52-2. வீழிமிழலை; 5-61-5.
அரிசிற்கரை புத்தூர்.-அணங்காடு மிளந்தெய்வம் – தெய்வ ஆவேசங்கொண்டு
ஆடுகின்ற அற்ப தெய்வம்.
திருவாய். 4-6-2.
அணங்கு – தெய்வமகள், வருத்தம். திருவாய்மொழி. 4-6-2.
புறநா.52. சீவக. 162, 171, 353, 1473, 2444. முருகு. 289.
சிலப். வேட்டுவவரி. அடி. 42, அகநா. 98. குறுந்,
136, 204, 308.
அணர் -மோவாய்க்கட்டை. பெரியாழ். 3-6-2.
அணவி -அணைந்து.திருவாய். 592; பெரியாழ். 4-8-9
அணார் – கழுத்து, கழுத்துக்கீழ் உறுப்பு. பெரியாழ். 3-5-8.
அணில் அணை கட்டியது – திருமா. 27.
அணுக்கர் சமீபத்திலிருப்பவர். பெரியாழ்.5-4-11.
அணுக்கன் – அந்தரங்கன். பெரியாழ். 3-2-5.
அணை – படுக்கை. பெருமாள். 1-1.
75 அத்தன் – மிடுக்கன். பெரியாழ். 2-1-7,
அத்தாணிச்சேவகம் – பிரியாமல் நெருங்கிச் செய்யும் சேவை.
அருகான இடம், ஆஸ்தானம். திருப்பல். 8
அத்திரம் அம்பு.பெரியாழ். 3–10-6.
அதக்கி – அடக்கி. பெரியாழ். 5-2-3.
அதகன் – பகைவரைக் கொல்லுவோன். பெரியாழ். 2-1-9.
80 அதர் – வழி. (புழுதி ) பெரிய. 4-3-6.
அதவி – அடர்த்து. இரண்டாம் திரு. 89.
அதவுதல் – நெருக்குதல். இரண்டாம் திரு. 89.
அதள்- தோல். பெரிய.9-6-1. தே. 4-22-5. கோயில்.
அந்தகன் – குருடன், இயமன். பெரிய. 2-3-7.
85 அந்தணர்களொரு மூவாயிரவர் பெருமாள்.10-2. தே. 7-90-7
கோயில்.
அந்தணர்தஞ்சிந்தையான் – திருநெடுந். 14. தே6-1-1- கோயில்.
அந்தணன் தோட்டம்- அக்கினி ஹோத்திரியான அந்தனுடைய தோட்டம். பெரிய, 10-9-9
அந்தண்மை பிராமணத் தன்மை.திருமா.25.
அந்தது – அப்படிப்பட்ட பிராப்யவஸ்து. திருவாய். 10-10-3.
90 அந்தமிழின் இன்பப்பாவினை. பெருமாள். 1-4 அந்தமில்பேரின்பம் – முடிவில்லாத பேரின்பம். திருவாய்.
10-9-10. சிலப் வரந்தரு. அடி. 182, கீர்த்தித்திரு அகவல். 101.அந்தரம் – இடையூறு, தாமதம், இடைவெளி. பெரியாழ். 1-5-6.
அந்தரி – துர்க்கை. நாச்சி. 6-3. சிலப் வேட்டுவவரி. 21.
புறஞ்சேரி. அடி.104.
அந்தாதியோராயிரத்துள். திருவாய். 5-3-11, 7-3-11.
95 அந்தாதியோராயிரம். திருவாய். 10-5-11.
அந்தி – மாலைப்பொழுது. பெரிய. 4-2-9; சந்தியாவந்தனம்.
முதல் திரு. 33. சிலப். அந்திமாலைச். அடி -23.
சந்தியாதேவி. சீவக 313.
அந்தி காலவன் பெரிய. 8-5-1. சந்திரன்.
அந்தி மூன்று -காலை, உச்சி, மாலை. பெரிய. 7-5-1.
அந்தியம் போது – சந்தியாகாலம் பெரிய. 2-8-1.
100 அந்நான்று அக்காலம், அன்று.பெரிய. 6-5-7. நான்முகன்.1 ,
பெரிய திரு. 52.
அநகன் – குற்றமற்றவன்.)
அநங்கதேவா . காமதேவனே. நாச்சி. 11.
அநந்தன் – ஆதிசேஷன். பெருமாள். 1-1.
அநுராகம் – ஆசை. திருவாய். 8-8-8.
105 அப்பா பெரிய. 1-9-5. தே. 6-95-1. பொது 3-47. ஆவடுதுறை.
அப்பில்- நீரில், நாச்சி.3.
அபிமான துங்கன் அகங்காரத்தால் உயர்ந்தவன்,
பெரியாழ். 4-4-8. திருப்பல். 11.
அம்பரம்-ஆடை, ஆகாயம். திருப்.17, பெரியாழ். 3-6-6.
அம்பு- நீர். சீவக.2332.
110 அம்புதம் – மேகம். பெரிய. 2-8-3.
அம்புயம் – தாமரை. பெருமாள், 7-1.
அம்புலி -சந்திரன். பெரியாழ். 1-4-3.
அம்மணி – அரை (இடுப்பு) பெரியாழ். 1-6-3.
அம்மமுண்ண – முலைப்பால் பருக. பெரியாழ்.2-2-1.
115 அம்மணைமார் – தாய்மார். நாச்சி. 33.
அம்மா- சுவாமியே. பெருமாள். 5-2.
அம்மா நின்பாதத்தருகு – ஸ்வாமி தங்களுடைய திருவடிகளின்
சமீபத்தில். பெரியதிரு .7.)
அமணர்-சைனர். பெரிய.7-4-5.
அமம் சூழ்ந்து வியாபித்து. மூன்றாம் திரு.98.
120 அமரர்களதிபதி – தேவராசன், நித்திய சூரியர் தலைவன்,
திருவாய், 1-1-1-அமருலகு – தேவருலகு, பரமபதம். பெரியதிரு, 6.7.
அமுக்கி – நன்றாகப்பூசி. பெரியாழ். 1-6-5.
அமுதிலுமாற்றவினியன் – அமிர்தத்தைக்காட்டிலும் மிக்க
இனியவன். திருவாய். 1-6-6.
அமை – மூங்கில்.
125 அயர்வில் அமரர்களாதிக் கொழுந்து – நித்ய சூரியகளுக்குக்
காரணமான
தலைவன். திருவாய். 1-7-4.
அயராப்பாய் – மறவாதிருக்கில் இரு. பெரிய திருவந். 83.
அயன்வாளி பிரமாத்திரம்.
அயில்- வேல், கூர்மை.
அரக்க நில்லா – அரக்க-அடக்க, நாச்சி. 3-4.
அரக்கன் போல்வானை – மாவலியை. இரண்டாம் திரு. 52.
அரக்கிலச்சினை – அரக்குமுத்திரை. திருவிருத், 76.
அரசிப்படுதி – அரசியின் தன்மை அடைகிறாய், கோபியா
நின்றாய். பெரியாழ். 2-9-10.
அரட்டன் – தீம்பன், மிடுக்கன். பெரிய. 3-4-10. தே. அரட்டர்
5-7-5.ஆரூர், திருவிசைப்பா.37.
அரட்டமுக்கி- சத்துருக்களை அமுங்கச் செய்வர். பெரிய.
3-4-10. தே. 5-100-10. ஆதிபுராணம்.
அரணம் – ரக்ஷகம், புகல். திருவாய், 9-1-4
அரந்தை- துக்கம். எழுகூற்றிருக்கை. 12.
145 அரம்பா -தீம்பனே. பெரியாழ். 3-1-6.
அரம்பையர் – தேவமாதர். பெருமாள். 4-2.
அரவதண்டம்-யமதண்டனை. பெரியாழ். 4-5-3,9. திருப்புகழ். 19.
அர்த்த பஞ்கசம்- ஸ்வஸ்ரூபம், பரஸ்வரூபம்,புருஷார்த்த
ஸ்வரூபம், உபாய் ஸ்வரூபம், உபாய
விரோதி ஸ்வரூபம். திருவாய். தனி.
அரக்கர் – ராட்சஸர். பெரிய. 4-3-5.
அரக்கு வழித்தது அரக்கு, செந்நிறம் வழித்தது. பூசியது.
பெரியாழ், 2-6-2.
அரக்கும் – அழுத்தும். பெரிய. 2-7-3 தே. 2-75-8. சீகாழி.
அரங்கத்தம்மா – திருப்பள்ளி. 1-9.
அரங்குதல் – அழிதல். திருச்சந் 32.49.
அரசாணி – அரசங்கொம்பு. பெரியாழ். 3-8-3.
அரவப்பகையூர்தி – கருடனைவாகனமாக உடைய கண்ணன்.
பெரியாழ். 3-5-11.
அரவு – பாம்பு. பெரியாழ். 3-5-11, திருவாய். 2-1-6.
150 அரனே – உருத்திரனுடையதே.திருவாய். 2-5-2.
அரி – திருமால். திருவாய். 1-3-6.
அரிகுரல்- தழுதழுத்த குரல். பெரிய. 8-5-9.
அரிகுலம் – குரங்குக் கூட்டம். பெரிய. 1-2-2.
அரிசினம்- மிக்க கோபத்தினால் .பெருமாள். 5-1.
155 அரியயனரன் – திருமால், பிரமன், சிவன். திருவாய். 1-3-6.
அருகல் சமீபம், சுருங்கல், திருவாய். 1-9-2,3.
அருத்தி – ஆசை. திருப்பா.25.
அருத்தித்தல். பிரார்த்தித்தல். திருப்பா. 20. தே. 4-92-8. ஐயாறு
7-47-8. பொது
அருபொருளை- அரியபொருளை. நான்முகன்
160 அருவித் தின்றிட – அலைத்துத்தின்ன. பெரிய. 7-7-1. தே. 7-16-1
கலய நல்லூர். (அருவ)
அருவிவேங்கடம் – அருவிகளையுடைய திருமலை நான் முகன் 40
அரைத்தொடர். அரைவடம். பெரியாழ். 1-3-4.
அல்குல்- அரை, நிதம்பம்.திருப்பா- 11, பெருமாள். 9-7
பெரியாழ். 1-7-8. தே. -54-3. ஓத்தூர்.)
அல்லல்-பாவம்,துக்கம். நாச்சி 13-10 சிவபுராணம் -91.
சீவக. 343. திருவிசைப்பா. 6-10.
165 அல்லி – அகவிதழ்.தாமரை, திருநெடுந் 12, பெருமாள் 2-10,
திருவிசைப்பா 19-3. சீவக. 162, 355, 606, 1422.
அல்லிமாதர் – இலக்குமி. பெரிய 1-7-9. தே. 2-101-11. ஆரூர்.
அலக்கண்- துன்பம். பெரிய
அலக்கழித்து – கிலேசப்படச்செய்து. பெரிய. 4-10-3. தே. 5-73-1
மங்கலக்குடி
170) அலகு விதை.முதல்திரு. 49.
அலங்கெழுதடக்கை – அலம்- கலப்பை. பெரிய. 2-7-8.
அலம்பிவண்டு- (அலம்பி- கிண்டி ) திருவாய்.9-9-10.
திருவிசைப்பா. 22.2.
அலம்புதல் – அலையச்செய்தல். பெரியாழ். 4-2-1.
அலத்தல்- கிலேசப்படுதல், கதறிஅழுதல், பெரியாழ். 4-5-1
175 அலந்தலை – கலக்கம் பெரியாழ். 3-7-1.
அலப்பாய் – அலமந்து. திருவாய். 5-8-4.
அலம்- கலப்பை பெரிய. 4-4-3.அலமருதல் சுழலுதல். திருவாய். 3-2-9. திருவிசைப்பா. 26-4,10.
அலர் மலர். திருவாய். 6-10-10 மணிமேகலை. பக். 46.
180 அலர்மேல் மங்கை- திருமகள். திருவாய். 6-10-10.
அலவலை – கண்ணன். கூடார்த்தங்களைச் சொல்பவன்
பெரியாழ், 2-1-2.
185
அல்வலைமை- அற்பத்தனம், அலைச்சல் தன்மை, பெரியாழ். 435
அலவன் ஆண்நண்டு, பெரிய. 6-7-7.
அலவை- வஞ்சகமுள்ளவள். பெரிய. 10-5-8.
அலவைப் பெண்- கெட்டவளான பூதனை. பெரிய. 10-5-8.
அலற்றி வாய்விட்டுக்கூவி, திருவாய். 4-4-9, 5-5-11, 6-4-1,6-7-11.
அலற்றி முறைகெடக்கூவி, கூப்பிட்டுநின்று, திருவாய்8-3-1.
அலற்றிய கூப்பிட்ட திருவாய். 9-7-11.
அலற்றும் – கூப்பிடும். திருவாய் 4-9-2.
190 அலற்றுவதென் – கூப்பிடுவதனால் என்னபயன்.திருவாய். 4-7-4.
அலற்றுவதே – துதிப்பதே, திருவாய். 3-5-9.
அலற்றுவன்-முறைமாறி அவன் குணங்களை வாயாலே
சொல்லுவேன்.திருவாய்1-3-10- கூவுகின்றேன். திருவாய். 1-57.
அலறி கதறிக்கூப்பிட்டு, பெரியாழ். 3-5-3.
அலி – நபும்ஸகம். திருவாய். 2-5-10.
195 அலைப்பூணுண்ணும்- அலைப்புண்ணுதலை அனுபவிக்கும்
அலைப்பூண் – அலைக்கப்படுகிற. திருவாய். 3-2-10.
அலோகம் காணப்படாத உலகம். திருவாய்.2-9-6. சீவக, 3082.
அவத்தங்கள் – பொல்லாங்குகளான யுத்தங்கள், திருவாய்.10-3-9.
அவத்தம்- அபத்தம். (பொல்லாங்கு) திருவாய், 10-3-9, பெரிய. 2-5-2.
அவபிருதம் – யாகத்தின் முடிவில் செய்யும் மங்களஸ்நானம்.
பெரியாழ். 4-7-6, திருப்பள்ளி 4.
200 அவம்- வீண். நான்முகன் திரு. 19, திருவிசைப்பா, வீழிமிழலை – 6.
அவலம்- துன்பம். பெரிய. 2-7-7,
அவனியாள் – பூமிதேவி. பெரியாழ். 1-3-8.
அவா. ஆசை. திருவாய். 10-10-11.
அவி- அவிஸ். யாகங்களில் தேவர்களுக்குக் கொடுக்கப்படும்
உணவு, நாச்சி. 1-5.
205 அவுணன்- ராட்சசன். பெரியாழ். 1-5-2. திருவிசைப்பா.
கோயில். 27.3
அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு.பெரியாழ். 4-8,10 அழக்காடி – பேய்ப்பெண். பூதனை. திருவாய், 2-10-9.அழகியான் – அழகுடையவன். நான்முகன் திரு. 22.
அழகு – சௌந்தர்யம். பெரிய திரு31.
210 அழல்- நெருப்பு. பெரியாழ். 4-7-3. பெரிய. 3-2-6, நாச்சி. 13-8.
அழலம்புகவூதி – அழலிற்புக, திருவாய். 4-8-8.
அழன்-பேய், பிணம், திருவாய், 2-10-9. தொல். எழுத். 354.
அழிப்பன் – சத்ருதுக்களை அழிப்பவனாகிய எம்பெருமான்
பெரியாழ். 4-8-6.
அழுந்தூர் மேற்றிசை நின்ற அம்மானே. பெரிய. 7-6-1-10,
சோழநாட்டில் மாயூரத்தை அடுத்துள்ளது.
உபரிச்ரவசு என்னும் அரசன் தனது தபோ
வலிமையினால் விமானத்துடன் ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் தன்மையுடையவன், ஒரு சமயம்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நேர்ந்த
விவாதத்தில் பட்ச பாதகமாக இவ்வரசன் தீர்ப்புச்
சொன்னமையால் முனிவர்களால் சபிக்கப்
பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர்
அழுந்தப் பெற்ற இடமாதல் பற்றி இதற்கு
அழுந்தூர் என்று பெயர் வந்தது. கம்பர் பிறந்த
இடம். தேவாரப்பாடல் பெற்றதலமுமாகும்.
215 அழுந்தை – பெரிய. 6-6-9. தே. 2-20-1-11 திருவழுந்தூர்.
அழும்புதல் – மிக நெருங்குதல். திருவாய். 1-7-9.
அள்ளல்- குழைசேறு, நெருக்கம், திருவிருத். 100.
அள்ளல் பயலை – அடர்த்தலையுடைய பசலை நிறம்.
திருவிருத் 12.
220
அள்ளியம் பொழில்வாய் – குளிர்ச்சி பொருந்திய அழகிய
சோலைகளில். பெரிய. 4-10-7.
அளகைக்கோன் – குபேரன். பெரிய. 2-10-8.
அளம்பு – உபமானம். பெரிய. திரு. 24.
அளறு -சேறு. திருப்பா.14 (வியாக்
அளி – கிருபை,வண்டு. பெருமாள். 1-6.
அளியத்த மேகங்காள் – தயையையுடைய மேகங்களே.
225 அளியத்தாய்- அருமந்தநீ எல்லோராலும் கிருபை
பண்ணத்தக்க நீ. திருவாய். 2-1-9.
அளை- வங்கு. பெரிய 1-2-5.
அற்கம்- அடக்கம். திருவாய். 6-5-4.
அற்புதன் – ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடையவன்.
திருவாய், 8-6-10.
அற்றம்- அறுதி. பெரியாழ். 5-2-6. பெரிய. 10-1-10.அற்றேன் வந்தடைந்தேன். பெரிய. 1-9-9.
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார் – தருமமே சுவராக நிற்கிற
அரங்கனார். திருமா.6
அறவன்- தருமஸ்வரூபி. திருவாய். 1-7-1.
அறிகண்டாய் – தெரிந்துகொள். பெரிய. திரு. 66.
அறுகால்- ஆறுகால்கள். பெரியாழ். 4-2-8.
235 அறுசுவை கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, தித்திப்பு,
துவர்ப்பு. திருவாய். 4-1-7. சீவக.193. நச்.உரை.
பெருங்.இலாவாண. கடிக்கம்பலை.80.
கட்டிலேற்றியது. 24. மணி. 28.116,241.
அறுதல்- சீரணித்தல். பெரியாழ். 1-4-6. (அறா}
அறுதி – முடிவு, வரை. பெரியாழ். 410-9.
அறுதொழில்- ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல். எழுகூற், அடி14. பெருங். 2.3.9.
புறநா. 397.20.
அறை- பாறை. பெரிய. 2-5-5.
240 அறைகை – சொல்லுதல், அடித்தல், ஒலித்தல், திருப்பா. 16.
அறையிடுதல் – அறைகூவுதல். திருவிருத். 19
245
அறையோ-ஐயம். பெரியாழ். 3-5-8, முறையிடும் சொல்.
திருவிருத். 10.
அறையோ – முறையோ முறையோ. பெரியாழ். 3-5-5,
திருவாய்.5-1-1.
அன்றிக் கொண்டு சீறிக்கொண்டு, நான்முகன், 29.
அன்றில்- அன்றிற் பறவை. கிரவுஞ்சப்பறவை. பெரிய. 11-2-5
தே. 1-60-7 தோணிபுரம், ஆரூர். 2-50-1 ஆமாத்தூர்.
அன்றிற்கூடு- அன்றில் பறவையின் கூடு. பெரிய. 11-2-1. அன்றிற்பேடைகாள் – திருவாய். 9-5-2,3.
அன்றுதல்- சீறுதல். திருவிருத் 18, பெரிய.8.3-8. அன்னமதாயிருந்து அறநூலுரைத்தது. பெரிய. 11-4-8.
250 அன்னமாய் மறையை வெளிப்படுத்த. திருநெடுந்.30.
அன்னவசம் செய்கை- உண்ட உணவிற்கு ஏற்ப இடம் வலங் கொள்ளுதல், தூங்குதல், திருவாய். 3-7-10. அன்னன்ன – அப்படிப்பட்ட. திருவிருத். 29. அனந்தல்- சோம்பல். திருப்.10.
அனன்றுண்ட நீர் – (இரும்பானது) பழுக்கக்காய்ச்சப் பெற்று
உட்கொண்டநீர். திருக்குறுந். 13.அனுங்குதல் – நோவுபடுதல்,வருந்துதல், நாச்சி. 14-2, பெரிய
7-8-3.
260
ஆக்கம்- செல்வம், பேறு, திருவாய். 9-1-2, 1-6-8. திருவாசகம்.
சிவ, 41.
ஆக்கை- சரீரம். நான்முகன். 93. திருவாசகம்.
திரு அண்டப்பகுதி. 137.
ஆகமவாதிகள். சைவர். இராமாநுஜ.91.
ஆதரம்- அன்பு . திருமா. 16.
ஆதன்மையால் – ஆன தன்மையால், அதனால்
ஆட்பட்டதனாலே.பெரிய. 2-4-8,9.
ஆதானும் யாதானும். பெரியதிரு. 25, 59.
ஆதித்தியன் – சூரியன். திருப். 22.
ஆது – யாது, பெரிய 939 தே 6-20-9 நள்ளாறு.
ஆதும் – யாதும். நாச்சி. 11-3, பெரிய. 10-7-10,
திருவாய். 3-4-10, 8-2-11.
265 ஆதுமில்காலம் – ஒன்றும் இல்லாத காலம். ஒரு துணையும்
இல்லாத சம்சாராவஸ்தை. திருவாய்.
3-4-4.
ஆதுமில்லை – யாதுமில்லை. பெரிய. 10-7-10. தே. 2-84-8.
நனிபள்ளி.
ஆநிரை- பசுக்கூட்டம். பெரியாழ். 3-4-4.
ஆப்பங்கொழியவும் சரீரம் ஒழியவும். நான்முகன். 93.
ஆப்பு -கட்டு. முதல்திரு. 75.
270 ஆப்புண்ட-யாப்புண்ட. பெரிய. 8-2-5.
ஆப்புண்டிருந்தவனே- கட்டுண்டிருந்தவனே. பெரிய. 5-6-1.9.
ஆம்பல் – இலைக்குழல். பெரிய. 9-5-8.
275
ஆம்பற்கழியும் இலைக்குழலோசைக்கு அழிவாள்.
பெரிய. 5-6-10.
ஆமருவி – பசுக்களை விரும்பி. (மருவுதல் விரும்புதல்)
பெரிய. 5-6-10.
ஆமுகம் (ஆ- ஐயோ). நாச்சி. 11-1.
ஆமைத்தாலி – ஆமைவடிவமாகச் செய்யப்பட்ட தாலி
பெரியாழ். 1-7-2, 2-6-1.
ஆய்க்குலம் – இடைக்குலம், திருப். 28. திருவிருத் 61.
ஆய்ந்தேத்த வல்லார் – ஆராய்ந்து துதிக்க வல்லவர்கள்.
நாச்சி.. 7-10.
ஆய்ப்பாலர் – இடைச்சியர்கள். பெரியாழ். 2-3-1.ஆயப்பிள்ளை – கண்ணன். பெரியாழ். 3-4-9.
ஆயம்-தோழியர் கூட்டம், வேலைத்திறம். சிநேகம்.
திருவாய். 8-2-1.
ஆயர்குலம் இடைக்குலம். பெரியாழ். 1-7-11,3-1-8, திருப்பா.5.
ஆயர்கொழுந்து கோபாலருக்குச் சிரோபூஷணம்,
நப்பின்னை. திருவாய். 5-6-11.
ஆயர்கொழுந்தே- இடைக்குலத்தலைவனே. பெரியாழ். 2-3-3.
285 ஆயர்பாடி -இடைச்சேரி. நாச்சி. 14-2; பெரியாழ். 2-2-5.
ஆயர்பாவை நப்பின்னை – இடை மகளான நப்பின்னை.
பெரிய. 2-3-5.
ஆயிரம் பேருடையவாளன் – ஆயிரம் பெயர்களையுடைய
பெருமான். பெரிய. 6-6-9.
ஆயிரவர் நலனேந்து திருவல்லவாழ் – ஆயிரம் பேர்
தன்னுடைய கலியாண குணங்களைக்
கொண்டாடும் படியாகத் திருவல்ல
வாழில் எழுந்தருளியிருக்கின்றவன். திருவாய் 5-9-10. இத்திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற
திருக்கோலம். நாச்சியார் செல்வத்
திருக்கொழுந்து. கிழக்கு நோக்கிய சந்நிதி.
பெருமான்கோலப்பிரான்.
ஆயோ – கிளி முதலிய பறவைகள் வந்து தானியங்களை
அழிக்காதபடி அவற்றை வெருட்டுவதாக
ஆயல் இடுகிற சொல். அதுவோ என்று
வினவுகிறபடி, திருவிருத் 10. தே. 7-9-4. சீபருப்பதம். சூளாமணி . 1658. ஆர்த்த- கட்டிய. முதல் திரு. 22. ஆரவாரம் செய்தல்.
பெரிய. 1-5-5
ஆர்தல் – நிறைதல். திருப்பா. 1, சிறிய -69, திருவாய். 4-1-6
ஆர்ப்பு -பேரொலி. ஸ்ரீவசனபூஷணம். சூ. 77. ஆர்படுவான்நேமி கூர்மை. மூன்றாம் திரு. 80.
ஆர்வம் அன்பு. பெரியாழ் 4-5-3. இரண்டாம் திரு. 1. திருவிசைப்பா. 25-8.
295 ஆர்வினவிலும் -எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும், பெரியாழ். 4-5-3.
ஆரல் – ஒருவகை மீன். பெரிய. 5-1-5.
ஆராமம் – உபவனம் சிறிய திரு. 71ஆராமை – திருப்தி பெறாமை.
ஆராவமுதம் தெவிட்டாத அமிர்தம். சிறிய. திரு. 7.
300 ஆராவமுது திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான்.திருவாய். 5-8-1.
ஆராவமுதே – திருமலையில் எழுந்தருளியிக்கின்ற
எம்பெருமானே.பெரிய. 1-10-3.
ஆரியன்-ஆசாரியன். உபதேசரத்தினமாலை. 64.
சிவபுராணம். 64. கீர்த்தித்திரு அகவல். 22.
ஆல்- தண்ணீர் . ஆலமரம். திருவாய். 9-10-1.
ஆலநிழலில் அறம் நால்வர்க்கு உரைத்து- ஓர் ஆலமரத்தின்
நிழலில் நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தவன் ருத்திரன்.
நான்முகன் திரு. 17. (நான்கு முனிவர்கள்: அகத்தியர்,
புலத்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர்) என்று அண்ணங்
கராசாரிய சுவாமிகள் உரை காண்கின்றார். நால்வர்
என்பது சனகர், சனந்தனர், சனாதனர்,சனத்குமாரர்
இவர்களைத்தான் எல்லா நூல்களும், பாகவதமும்
கூறுகின்றன. அப்படியிருக்க சுவாமிகள் கண்ட உரைக்கு
ஆதாரம் யாதோ? திருச்சாழல். 16.
ஆலமரத்தின் சிறப்பு: நூறுயோஜனை தூரம் உயரம்
உள்ளது எழுபத்தைந்து யோஜனை நீளமுள்ள கிளைகளை
யுடையது. எங்கும் நிழலையுடையது. தாபமற்றது. உயர்ந்த
யோகத்தின் ஸ்வரூபம் . மோட்சமடைய விருப்பமுள்ள
வர்களுக்கு ஆசிரயமுமானது
305 ஆலி – சிறுதுளி. பெரிய. 11-1-8. 1-2-1.
ஆலித்தல் – ஆரவாரஞ்செய்தல். பெரியாழ். 3-4-7.
திருவிசைப்பா. 29-9.
ஆலிநகர்க்கதிபதியே- திருவாலி நகர்க்கு தலைவனே.
பெருமாள். 8-7. இத்திருப்பதி சோழ நாட்டில்
சீகாழியிலிருந்து ஆறுகல் தொலைவில் உள்ளது.
திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று. இவ்வூருக்கு
அருகிலுள்ள வேதராஜபுரத்தில் பங்குனி
உத்திரத்தில் திருமங்கையாழ்வார் திருமாலை
வழிபறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது.
எம்பிரான் வயலாலி மணவாளன்.
ஆலிவளநாடன் திருவாலி நாட்டிற்க்குத் தலைவன்.
பெரிய.8-3-10.
ஆலிலை யன்னவசம் செய்யும்- ஆலிலையிலே தூங்குகின்ற
திருவாய். 7-1-4; 4-2-1.ஆலுதல் – ஆடுதல் கூவுதல், சப்தித்தல், பொருந்துதல்.
ஆவத்தனம் ஆபத்துக்காலத்தில் உதவும் செல்வம்.
(ஆவத்தனம் . ஆபத்தனம்). பெரியாழ்.
ஆவர் -யாவர், பெரிய. 3-3-7.
ஆவலிப்பு – பலம்,கர்வம். திருமா. 1
ஆவித்தல் – நெடுமூச்சுவிடுதல். கொட்டாவி கொள்ளுதல்.
பெரிய. 1-2-8. சீவக. 2426.
315 ஆழ்பொருள்- எளிதில் அறிய முடியாத பொருள்.
நான்முகன். 1.
ஆழ்தல் – மூழ்குதல். ஆழமாதல்.பெரிய. 6-3-4,
திருவாய். 4-7-5. 4-1-6.
ஆழமோழைமோழை- கீழ்த்திசையில் பெருகும் ஆறு. பெரியாழ். 3-7-4.
ஆழாந்து-ஆழ்ந்து, ஈடுபட்டு,திருவாய். 2-1-8. ஆழி-சக்கராயுதம், கடல், சூரியன், வட்டவடிவம்,
பெரிய. 5-7-8, திருவாய். 8-10-6. திருவிருத். 34.
4-2-6.
320 ஆழியான் ஆழ்ந்து தேறியவன். பெரியாழ். 1-9-7, திருவெம். 8. ஆள்- ஆண்மகன், காலாள். முதல்திரு. 81 ஆளம்வைத்தல் – ஆலாபித்தல், பெரியாழ். 4-8-6.
ஆளரி- நரசிங்கம். பெரியதிருமடல். 127 ஆளி – சிங்கம். பெரிய. 7-3-4.
325 ஆற்றங்கரை மரம். பெரிய. 11-8-1. நீத்தல். விண்ணப்பம். 3. ஆற்றல் – பராக்கிரமம். (கீர்த்தித்திருவகவல். 103.) ஆறு – விதம். திருவாய். 5-10-6.
ஆறுசமயம் சார்வாகம், பெளத்தம், க்ஷபணம், வைகம்,
14
சாங்கியம், பாசுபதம், திருவாய். 9-48. அண்டப்பகுதி,79. ஆறுபொதி சடை கங்கைனயத்தரித்த சடை. திருவெழுகூற். 20.
330 ஆன் – பசு. திருச்சந்.40. பெரியாழ். 2-7-1, திருவாய். 1-8-8.
335
ஆனாத- அழியாத. பெருமாள். 4-2 ஆனாய் – ஆனையே .பெரிய. 1-9-2, தே. 3-55-7. வான்மியூர். ஆனாயன் – மாட்டிடையன். பெரிய. 5-5-3. திருவாய். 1-8-8. ஆனாயனாகி – மாடுமேய்க்கும் இடைக்குலத்தவனாகி . பெரிய. 11-5-4.
ஆனெய்- பசுவின் நெய். திருச்சந். 40 ஆனைச்சாத்தன் பாரத்துவாசம், வலியன். திருப். 7. இகல்- பகை, போர். திருவாய். 6-46-இகுளாய் – தோழியாய். திருவாய்.6 -3-9.
இங்குத்தை – இவ்விடத்திய. நாச்சி. 12-4.
340 இங்குத்தை நின்றுந்துரப்பன் – இவ்விடத்தினின்றும் உன்னை
ஓட்டி விடுவேன். நாச்சி. 5-10.
345
350
355
இங்குற்றேனல்லேன் – இங்கு நிற்கமாட்டேன்.)
( பிறரோடு பொருந்துகிறதில்லை என்று
கூறினும் பொருந்தும் ) திருவாய். 5-7-2
இங்கே- இங்கு. நாச்சி. 14-1.
இசலி – இகலி. பெரிய. 3-9-3.
இசலுதல் – பேரொலிசெய்தல். ஈடு.4-10.6.
இசித்தல் – இழுத்தல். பெரிய. 1-2-6.
இசை – இராகம், உடன்பாடு. திருவாய். 2-4-11.
திருவண்டப்பகுதி . 35
இசைகாரர் – பாடுபவர். திருவாய். 1-5-6.
இட்டம்- இஷ்டம். விருப்பம், நாச்சி. 14-1, திருவாய். 1-8-8.
இட்டாதெய்வம் – இஷ்டமான தேவதை. திருவாய். 3-9-6.
இட்டிடை சிறிய இடுப்பு. திருச்சந்.13, திருவெம்பாவை. 16.
இட்டீடு – பரிகாசச்சொல்.திருப். 18. வியாக்.
இட்டீறு – களிப்புடன் செய்யும் விளையாட்டு. நாச்சி 14-1
இட்டு வெந்நீரைக் காய்ச்சுதல். பெரியாழ். 2-4-3. (உரை)
இடங்கை இடக்கை. இரண்டாந்திரு. 71.
இடங்கொள்ளுதல்-வியாபித்தல். திருவாய். 5-2-4.
இடத்தல் – பிளத்தல். இரண்டாந்திரு. 94.
இடம் – வசிக்குமிடம். நான்முகன் திரு. 66.
இடம் பெறுதல் – இடம் பெற்றிருத்தல். திருவாய். 1-3-9.
இடமுடைமை விசாலமானதாயிருத்தல். பெரிய. 11-5-3.
360 இடர் – துன்பம். பெரிய. 6-9-1.
இடராட்டியேன் – துன்பமுடையநான். திருவாய். 8-2-2.
இடவகை- வசிக்குமிடம். பெரியாழ். 5-4-10.
இடவணரை – இடத்தோளோடு சாய்த்து. பெரியாழ். 3-6-2.
இடவன்- மண்கட்டி, பெரியாழ். 3-5-5.
365 இடற தட்டித் திரியும்படி. பெரியாழ். 3-2-6.
இடறி- கடந்து. திருவாய். 6-7-2 (தே) 6-27-1, 10 ஆரூர்
திருவிசைப்பா. 26.6.
இடறுதல் துன்புறுதல், திருவாய். 4-1-7.இடறும்- சுழலானின்ற. திருவாய்.4-7-7.
இடிசேர் – இடியை. ஒத்த – திருவாய்.4-1-3.
இடித்தல் – தகர்த்தல். திருவிருத்.36.
இடிதல் – கட்டுக்குலைதல். திருவாய். 9-6- 2.
இடுக்குண்ட – நெருக்குற்ற. பெரியதிருவந். 21.
இடுகை- கொடுக்கை. பெரிய. 1-6-5.
இடும்பை- துன்பம். பெரிய. 1-6-5.
இடைகழி இடைக்கட்டு. முதல் திரு. 86.
இடையனெறிந்த மரமே யொத்திராமே பெரிய. 11-8-6.
சீவக. 1914. பழமொழி.314. இடையில்லை- அவசாசமில்லை. திருவாய். 8-2-8, 9-5-5.
இடையுவா பௌர்ணமி. – நாச்சி. 7-3.
இடைவீடின்றி – இடைவிடாமல். திருவாய். 1-10-8, 2-9-4.
இண்டைக்குலம் நெருங்குதலையுடைய கூட்டம். திருப்பல். 5.
இண்டைகொண்டு பூமாலைகொண்டு. பெரியாழ். 3-2-10. (தே)5-7-3. ஆரூர். இண்டைச்சடை முடியீசன் – மாலையையும், ஜடையையும்,
கிரீடத்தையும் உடைய உருத்திரன்.
திருவாய். 7-5-7. (தே). 5-6-9, ஆரூர், இணக்கம்- சகவாசம், பொருத்தம், திருவாய். 6-2.8. இணர் – பூங்கொத்து. பெரிய திருவந். 29.
இணைந்து – கலந்து. திருவாய். 6-1-4. இணைவனாம்- சமனாகியிருப்பான். திருவாய். 2-8-1. இத்தனை – இவ்வளவு. திருவாய். 9-5-1. இதணம் பரண், பெரிய. 1-8-8. இதழுக்குக்கமுகம்பழம் திருவாய். 8-9-6.
390 இது வென்னிது வென்னிது வென்னோ. (ஊடல்). பெரிய. 10-8-1,9.
இந்தளூரீரே – பெரிய. 4-9-1,3,4,5,6,7,8,9, இந்திரகோபம் – தம்பலப்பூச்சி, நாச்சி, 91. இந்திர ஞாலங்கள் -பொய்யான வித்தைகள். திருவாய். இந்திரலோகம் – இந்திரனது உலகம். திருமா. 2.
395 இந்திரன் சிறுவன – அருச்சுனன். பெரிய. 2-3-6. இந்து- சந்திரன். பெரிய. 4-2-9. திருப்பூவல்லி.4. இமம்-பனி. மூன்றாம் திரு. 98.-இமவந்தம்- இமயமலை. பெரியாழ். 4-7-4.
இமில்- கழுத்து. திருவிருத்.21.
இமையவர் – தேவர். பெரியாழ். 4-7-4.
இயக்கர் – யக்ஷர். திருப்பல். 9.
இயக்கு – துன்பம். திருச்சந்த.120
இயங்கல்- செல்லுதல். முதல்திரு. 8.
இயத்தல்-கடத்தல். திருவாய். 1-3-6.
இயந்த- இகந்த.திருவாய். 1-3-6.
இயல்- இலட்சணம். இராமாநுஜ.
இயல்வு- விரகு. முதல்திரு 12,13; இராமாநுஜ 26 திருவிருத் 24.
இரண்டத்தில் இரண்டில். சிறியதிரும.59.
இரண்டுதறுகண் இரண்டுதிருக்கண்கள் . பெரிய. 11-4-4.
410 இரந்தார் – யாசிப்பவர். பெரிய, 1-9-3.
415
இரவியர் – சூரியர். திருப்பள். 6.
இராக்கதி- ராக்ஷஸி.பெரிய. 10-6-9.
இராகம் – இசைப்பாட்டு,ஆசை. திருவாய். 1-6-5.
இராவணாந்தகன் – இராவணனைக் கொன்றவன். பெரிய. 2-3-7
இரிதல் – ஓடுதல். பெருமாள். 1-1
இரிய – ஆரவாரித்து. திருவாய். 5-2-3.
இரீஈ- இருத்தி. திருவாய். 2-7-9.
இருக்கு- வேதம். பெரியாழ். 5-1-6, திருவிருத்.64.
இருடீ கேசன் இந்திரியங்களையடக்கியாள்பவன்.
பெரியாழ். 5-4-5 திருவாய். 2-7-10, நாச்சி. 5-6,
420 இருந்தில் – கரி. பெரிய. 2-10-3.
இருபாடெரி கொள்ளியின் உள்ளெறும்பே போல்- பெரிய
11-8.4. திருவாசகம், நீந்தல் விண்ணப்பம். செய்.சு,
சீவக . நாமகள் 243, தே 4-75-6.
இரும்பு நான்றுண்ட
நீர்போல். திருக்குறுந்5.
இரும்புபோல் வலிய நெஞ்சம். திருமா. 17.
இரைதேரும் புதாவினங்காள். பெருநாரை, திருவாய். 6.8.9.
425 இல்லம்- வீடு. பெரியாழ். 3-8-1.
இல்லம் வெறியோடிற்று வீடு வெறிச்சென்றிருக்கிறது.
இல்லறமல்லேல் துறவறமில் நான்முகன். 72.
இல்லி- சிறுவழி. பெரியதிரும. 87.
இலக்கு – குறி. பெரிய திரும. 87-இலகுதல் – விளங்குதல். திருவாய். 8-8-1.
இலச்சினை – அடையாளம், முத்திரை. பெரியாழ். 1-7-6.
இலட்டுவம் – வட்டு. பெரியாழ். 2-9-9,
இலிங்கியர் – இலிங்கப்பிரமாணவாதியரான அனுமானியர்.
திருவாய். 4-10-4.
இலைக்குடை நீழல். இலையாகிற குடையின் நிழல்
பெரிய 9-1-5.
435 இலைக்குழலூதி – இலையினால் ஆகிய ஊது குழல்.
பெரிய. 10-7-6.
இலையம்- இலை. பரியாழ். 3-4.8-
இவரித்தல் – எதிர்த்தல். பெரிய. 8-8-9.
இவரித்து – ஏறி. பெரிய. 8.8.9.
18
இவள்பரமே-இவளிடம் உண்டாகக் கடவதோ. திருவிருத். 60.
இவையா இவை இருக்கிறபடிபாராய். பெரியாழ். 2-3-2.
440 இழந்ததுகட்டே லோக மரியாதையை இழந்தாள்.
திருவாய். 6-6-10.
445
450
இழந்தது கற்பே- தன்னுடையச் சாயே-காந்தி திருவாய். 6-6-7.
இழந்தது மாமை நிறமே அழகிய நிறத்தை இழந்தாள்.
திருவாய். 6-6-2.
இழுக்காய்த்து குற்றமாகியது. பெரிய. 4-9-4.
இழிசிய – எழுதப்பட்ட. பெரிய. 2-8-7.
இள்கி- வஞ்சித்து. பெரியாழ், 3-7-4.
இளக – இல்லையாக. பெரியதிருவந். 18.
இளங்கோ- பெருமாள். 9-2.
இளங்கோயில் இரண்டாந்திரு. 54 தே. 6-70-5. க்ஷேத்திரக்
கோவை.
இளநீர் குலை தாழ்கிடங்கின் கூடலூர். பெரிய 5-2-8
இளம்படி – மிருதுஸ்வபாவம் . பெரிய. 2-7-2.
இளைதே – பிள்ளைத்தனமே. திருவாய். 6-2-6.
இளமையாடும் பால்யசேஷ்டைகளைச் செய்யும்.பெரிய
11-2-2. சீவக. 2491
455 இளையவரேசாமுன் – பெரிய. 1-3-2.
இளையாப்பாய் – தளராதொழிவாய் பெரிய திருவந் 23.
இற்றைப்பறை கொள்வான் – பிரயோசனம் திருப்பா. 29. இறப்பு – மரணம்,மோட்சம் திருவாய். 4-1-10.
இறவு – முடித்தல். பெரியாழ். 5-4-2-இறுகல்-அழுந்தல் திருவாய். 41-10.
இறுத்தல் – செலுத்துதல் திருவாய். 5-2-8.
இறை- சிறிது, அரசன், கடவுள், கப்பம். பெரிய 5-10-4
திருவாசகம். திருச்சதகம.செய். 57.
இறைகளவை – சரீரங்களாகிய அவை. பெரிய. 5-10-4.
இறைஞ்சென்- மனனே. பெரிய. 11-4-1.
465 இறைநிலை- பரமாத்ம ஸ்வரூபம். திருவாய்.தனியன். 1-1-5.
இறையான்- சிவன். பெரியாழ்வார். 518. முதல் திரு. 28.
இறையிறை யுருகும் வண்ணம்- கொஞ்சம், கொஞ்சம்
திருமா. 17.
470
இறைவன் குறை யிரப்ப மார்பு வாசநீர் அளித்தான்.
பெரிய 6-9-9.
இன்பமாரி- இன்பத்தையுண்டாக்கும் மேகம்.
இன்மை- இல்லாமை.. திருவாய். 6-3-4.
இன்னாமை- துன்பம். திருக்குறள். 630.
இன்னாரினையார் – இவர் இப்படிப்பட்டவர். நாச்சி. 7-5.
இனமலரெட்டுமிட்டு – செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி,
பாதிரி,புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை
அஷ்டவித புஷ்பம். ஆசார்ய ஹ்ருதயம். பெரிய. 1-2-7.
இனவேற்கண். திருவாய்மொழி. 5-6-6.
475 இனிதிரை – இனிதுதிரை கடைக்குறை. திரை இனிது –
அலைகள் இனிதாக. திருமா. 18.
இனியெம்பரமே – பரம் – வசம்.திருவாய். 6-2-4.
ஈசன்- சிவன். பெரிய. 2-10-1, நான்முகன்- திரு. 96.
கீர்த்தித்திருவகவல். 25, திரு அண்டப்பகுதி,46.
திருவிசைப்பா. 4-1, 25-9. தே. 4-65-3. சாய்க்காடு.
ஈசிபோமின் – சீசீ போங்கள். பெரிய. 1-3-8.
ஈட்டம் – கூட்டம். பெருமாள். 2-1.
480 ஈட்டுதல் – திரளுதல், திருவிருத்.21
ஈடுமெடுப்புமிலீசன்- குற்றம் பார்த்துத் தள்ளுகையும், குணம்
பார்த்துக் கொள்ளுகையும் இல்லாத
எம்பெருமான். திருவாய். :-6- 3.
ஈப்பாய்- ஈவாய். நான்முகன் திரு. 19.
ஈர்த்தல் – இழுத்தல். நாச்சி. 14.4. சிவபுராணம். 74.
ஈர்மை அறுக்குந்தன்மை. திருவாய். 9-6-3.
485 ஈர்மை கொள்தேவர் – அன்புடைய தேவர்கள். 2-8-10.
ஈர்மைசெய்து- ஈடுபடுதல்செய்து. திருவாய். 9- 6-3.-ஈரியாயிருப்பாள்- அன்புள்ளவளாய் இருப்பாள்
திருவாய். 6-7-9.
ஈவிலாத தீவினைகள் – நாசமில்லாத தீவினைகள்
திருவாய். 4-7-3.
ஈவு- நாசம்.திருவாய். 47-3.
490 ஈளை- கோழை. பெரிய. 6-4-1. தே. 1-67-6, 2-100-8.
கோவலூர்வீரட்டம்.
ஈளையேங்கி- கோழையாலே இளைத்து. பெரிய, 1-3-6.
ஈற்றுத்தாய் பெற்றதாய் . பெரிய. 3-9-2.
ஈன்துழாய்- போக்கியமான திருத்துழாய். பெரியதிரும.60.
495 ஈன்துழாயானை – இனிய துளசிமாலையையுடைய திருமால்
முதல்திருவந். 26.
ஈனமர் சாபம் – தன்மைபொருந்திய சாபம். பெரிய, 5-9-4.
உக்கம்- ஆலவட்டம். திருப்பா. 20.
உகட்டுண்டு- உகட்டு- உவட்டு, திருவாய். 3-5-4.
உகவை- சந்தோஷம். திருவாய். 6-2-8.
500 உகிர் – நகம். பெரிய. 10-9-8.
உகைத்தல் – உபேக்ஷித்தல். நான்முகன் திரு. 38. உச்சிமணிச்சுட்டி – தலையிலே அணியத்தக்க ஒரு ஆபரணம்.
பெரியாழ். 1-3-8.
உட்கண் – ஞானக்கண். பெரியதிருவந். 28. உட்கு – பெருமை, அச்சம்.
505 உடல் உள் அவிழ்ந்து சரீரமும், மனமும் நெகிழ்ந்து.
பெரியாழ். 3-6-1.
உடலையுள் – உடலுள். பெரிய. 10-1-5.
உடன் – ஒருங்கு. பெரிய, 11-2-10.
உடுக்கை- உடைத்தோல். திருவாய், 4-8-4.
உடைமணி – அரையில் கட்டிய மணிகள். பெரியாழ். 1-7-1.
510 உணங்கல் உலர்தல். (புழுக்கப்பட்ட நெல் ) திருவாய். 4-6-7. உணர்வத்தொடு – ஞானத்தோடு. திருவாய். 4-1-10. உத்தரவேதி – யாகசாலை. பெரியாழ். 1-9-6. உத்தானம் எடுத்தல். பெரியாழ். 1-8-1. உதரம்- வயிறு. அம .4.
515 உந்தி – கொப்புழ். பெரிய. 5-4-1. உந்தி பறக்கை- மகளிர் குழாம் உந்தி விளையாட்டு ஆடுதல். பெரியாழ். 3.9-11.-உபகாரம் கொள்ளாது – உபகாரத்தைக் கொள்ள முயலாமல்.
(தொண்டுகள் செய்கையாகிற உதவியைப் பெறமுயலாமல்)
பெரிய திருவந்.39.
உம்பர் -மேலிடம், தேவர். பெரிய. 7-8-10; திருவாய். 10-8-7.
திருச்சதகம். 64,66.
உம்பர்கோன் – இந்திரன். பெரிய. 5-4-5.
520 உமர் – உம்மைச் சேர்ந்தவர். திருவாய்.8-1-4.
உய்வு – பிழைப்பு. திருவாய். 4-3-11.
உயர்த்துணவு -ஞானம் . மூன்றாந்திருவந். 94
உயிர்நிலை – சீவாத்மஸ்வரூபம். திருவாய். தனியன். . உயிர்ப்பு – மூச்சு.நாச்சி. 5-2.
525உயோகுதுயில் – யோகநித்திரை.எல்லாவற்றையும் அறிந்து
கொண்டே தூங்குதல். பெரியாழ். 1-5-1.
உரப்புதல் அதட்டுதல். சிறிய திரும. 37.
உரப்பாள் – அதட்டாள். நாச்சி. 3-9.
உரம் – பலம், மார்பு. திருவாய். 1-3-1.
உரவு- விஷம். திருவாய். 6-4-1.
530 உரு – ரூபம், தேகம். பெரிய. 1-4-2.
உருப்பன் – உருக்குமன். பெரியாழ். 4-3-1.
உருப்பிணி – உருக்குமிணி. பெரியாழ். 3-9-3, 4-3-1.
உருப்பொலிகை – தழும்பேறுதல். பெரியாழ். 5-4-7.
உருமகம்- நரமேத யாகம். பெரியாழ். 4-8-3.
535 உருவறை – அவலக்ஷணம். பெரியாழ். 3-8-2.
உருவெண்ணும் – கணக்கெண்ணும். முதல்திரு. 33.
உரைக்கியம் – சொல்லுவம். திருவிருத்.55.
உரோடம் – ரோஷம். பெரியாழ். 2-6-5. நாச்சி. 2-5.
உரோமகூபம் – மயிர்ச்சிலிர்ப்பு. பெரியாழ். 5-1-7.
540 உலக்க ஒதுவனே -எப்படி முடியச் சொல்லுவன்.
திருவாய். 3-1-5.
உலக்க- முடியக் கண்டு திருவாய்.8-3-10.
உலங்கு- பெரு நுளம்பு- பெருங்கொசுகு. நாச்சி. 8-6.
உலங்குண்ட விளங்கனி – பெருங்கொசுக்கள் உண்ட
விளாம்பழம். நாச்சி. 8-6.
உலப்பு – வறட்சி, அழிவு. திருவாய்.6-10-1.
545 உலாகின்ற – கெண்டை- உலாவுகின்ற. திருவிரு . 75.
உலோபாய்- உலோபமற்றிரா நின்றாய். பெரியாழ். 2-7-6.
(தே.6-35-7. வெண்காடு)
உவணம்-கருடப்பட்சி முதல்திரு. 22.-உவரி – கடல் . நான்முகன். 56.
உவலையாக்கை – அருவருப்பான உடம்பு. திருவாய் 1-5-8.
550 உவனியம்-உபநயனம். பெரிய. 5-8-7.
உழக்குண்டு – துன்பப்பட்டு. நாச்சி. 13-4.
உழலையென்பு -உழலைத்தடி கோத்தாற்போலேயிருக்கின்ற
எலும்புகள். திருவாய்5-8-11.
உழறா நெகிழ்ந்தாய் -கலங்கி. பெருமா . 6-8.
உழறியுண்ண- துகைத்து. பெரிய. 9-5-2.
555 உழறுதல் – துகைத்தல். கலங்குதல். பெருமாள்.6-3.
திருவிருத்.58. (தே.3-47-7.ஆலவாய். உழறுமேல்’ தக்க. 32. உழிதருதல் – அலைதல். திருநெடுந். 9, திருமா.1, திருச்சதகம்.8. (திருவாசகம்.5,7)
560
22
உழுவை – புலி. பெரியாழ். 1-7-6. (திருச்சதகம். 7. அச்சப்பத்து. 8 )
உழை – புள்ளிமான். பெரியாழ். 5-1-2.
உள்ளுதல் – நினைத்தல். திருமா. 84.
உற்றாரிலி- கண்டு கிட்டினாரில்லாத. திருவாய். 5-6-7.
உறகல்- உறங்கல், உறங்கவேண்டா. பெரியாழ். 5-2-9. உறகுதல்- உறங்குதல். பெரியாழ்5-2-9.
உறல்- ஸ்பரிசம். திருவாய். 3-6-6.
உறிகள் போல் மெய் நரம்பெழுந்து – உடலிலுள்ள நரம்பகள் உறிகளைப் போல வெளியே தெரியும்படி. பெரிய. 1-3-3.
565உறுகை- கிட்டுகை, சேருகை, திருவாய். 4-9-10.
570
உறுவது – உற்றது. திருவாய். 4-10-6. உறைக்கும் பொல்லாதாய் முடியும். நாச்சி. 2-9. உறைப்பன் – மிடுக்கன். பெரியாழ். 4-8-2. உன்மத்தர் பைத்தியம் பிடித்தவர், பெருமாள். 3-4.
உன்னி – நினைத்தற்குரியவன். பெரிய. 10-1-3. உன்னித்து- நினைத்து, அனுசந்தித்து. திருவாய். 4-6-9. உன்னுடைய சுண்டாயம் நானறிவன் – உன்னுடைய வஞ்சகத்தை நான் அறிவேன். திருவாய் 6-2-11
சுண்டாயம் – விளையாட்டு.திருவாய். 7-8-7. உன்னை என்னுள்ளே குழைத்தாய்-என்னோடு ஒன்றாகக் கலந்தாய். திருவாய். 2-6-9. உனக்கேயறக் கொட்டு – உனக்கென்றேயற்றொழிய.
திருவாய். 7-8-5.
575 ஊக்கம் – முயற்சி, உயர்ச்சி, மிடுக்கு, பெரிய. 10-9-1. ஊட்டம்-உணவு, நாச்சி. 1-9. (திருவாசகம்) திருச்சாழல். 14.-ஊட்ட முதல் இலேன் தினந்தோறும் ஊட்டி வளர்க்கத்தக்க
கைப்பொருள் என்னிடம் இல்லை. பெரியாழ். 3-3-8
ஊடல் பிரண கலகம்.நாச்சி, 4-11.
ஊடாடுதல் நடுவேதிரிதல். திருவாய். 1-4-9
580 ஊத்தை அசுத்தம். பெரியாழ். 4-6-10)
ஊத்தைவாய் அசுத்தமானவாய். பெரியாழ். 4-4-3.
தே 2.38.10 சாய்க்காடு.
ஊமனார் கண்ட கனவினும் பழுதாய். பெரிய1- 1-3
ஊர்தல் – நடத்தல். பரவுதல்,ஒழுகுதல், திருநெடுந். 23.
ஊரவர் கவ்வை- ஊராருடைய ஆரவாரம். திருவாய். 5-3-1,2,3,4
55 ஊரவர் கவ்வை எருவிட்டு – ஊரார் கூறும் பழியாகிற
எருவை இட்டு. திருவாய். 5-3-4
590
595
ஊரா – ஊர்ப்பசு. திருவிருத். 94.
ஊராமிலைக்க – ஊர்வந்து சேர்ந்த கண்தெரிந்த பசுக்கள்
கனைக்க. திருவிருத். 94.
ஊழ்-முறை,விதி.
ஊழ்த்தல் – கனிதல். பெரிய.
ஊழ்மை. முறைமை. திருவாய 4-6.9
ஊழி கல்பம், பெரிய. 8-5-6 திருவாய் 5-4-8
திரு அண்டப்பகுதி 9.
ஊழி- விலக்ஷண காலம். திருவாய், 2-1-4, 5. பெரிய 1-4.9
திருப்பா. 4.
ஊழிலை – முற்றிப்பழுத்து விழுந்த இலை. சருகு.
ஊளியெழ – சப்தம் எழ. திருவாய். 7-4-4
ஊற்றம் -உறுதி. அனுசந்தானம். திருப்பா.21.
ஊறல்-ஊறிவந்த ஸாரம், நாச்சி. 10-9
ஊறு – தீமை. திருவாய். 7-4-2.
ஊன் -மாமிசம். பெருமா. 41. பெரிய. 1-4-2
ஊனகரகர் – பிறரைக்கொண்டு தீமை செய்பவர். திருமா.41.
600 ஊனக்குரம்பை. மாமி தேகம். முதல்திரு.91.
ஊனில்வாழ் உயிரே – மாம்சரூபமான சரீரத்தில் வாழ்கின்ற
நெஞ்சமே. திருவாய் 231.
எஃகு – எஃகினாற்செய்த சூலம். பெரியதிரும்.94.
எக்கல்-மேடு. திருவாய். 4-1-4
எக்கே – இது என்ன கஷ்டமோ, பெரிய. 10-8-8எக்கம் ஒரு தந்தியையுடைய வாத்தியம்,தாளம்.
பெரியாழ். 3-4-1.
எங்கள் குடிமுழுது எங்களுடைய குடியிலுள்ளார்
எல்லாரையும். பெரியாழ். 3-4-1.
எட்டினோடிரண்டு- பத்து, திருச்சந்த 83. திருச்சதகம். 49.
எடுப்பு-உயர்வு. திருவாய். 1-6-3. ஈடு 8-1-3.
எடுவிய – எடுத்த. பெரிய. 8-7-3.
610 எண் கண்ணான் – பிரமன். நான்முகன்திரு.73
எங்கு-கரடி. பெரிய. 6-10-6.
எண்டிசை எட்டுத்திக்கு. பெரியாழ். 2-9-11.
எண்டோளினாள் துர்க்கை. பெரிய. 2-10-6.
எண்டோளீசற்கு எழின்மாடமெழுபது செய்து
உலகாண்டவன் -கோச்செங்ணான். பெரிய. 6-6-8.
615 எதிர்தல் ஒப்பாதல் . நான்முகன். திரு. 84.
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை – பத்துத்
தலைமுறை. பெரிய. 7-2-6.
எந்தை- என் சுவாமி. பெரிய. 2-3-5. (சிவபுராணம். அடி. 11)
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை நமக்கே
உற்பத்திப் பரம்பரையில் முதல்வனான
சம்பந்தத்தையுடையவன். திருவாய். 3-3-2.
எந்தை தந்தை தம்பெருமான் – குலநாதனான பெருமான்.
பெரிய 2-2-4, 2-3-5.
24
620 எந்தை தந்தை தம்மானென்று எம்முடைய குலநாதனென்று.
பெரிய. 4-9-9.
எம்பரத்தல்லார் – என்னைப்போலே அடிமை செய்யார்.
பெருமாள்.3-6 (தே 7-100-4, நொடித்தான்மலை. 6-95-8 பொது எம்பிராக்கள் – எம்பிரான். பெரிய. 10-5-2.
எம்மனா – எமது குல தெய்வமே. பெரியாழ். 5-4-3. எம்மாவீடு – எமக்காகத் தருகிற விலஷணமானமோட்சம்
625 எம்மையுடைமாடு கொண்டான் -எனது ஆடை செல்வம்
எல்லாம் கொண்டான். நாச்சி. 10-7. எம்மோய் எனதுதாய். பெருமாள். 7-6. எய்க்கை-இளைக்கை. திருவாய். 8-8-7. பெரிய. 1-3-6. எய்த்தாது – போராதொழிவது. பெரிய. 11-3-6. எய்ப்பினில் வைப்பு – தளர்ந்த காலத்தில் உதவும் செல்வம்.
பெரிய. 7-10-4. நீத்தல் விண்ணப்பம். 39.-எரி – ஒளி. திருவிருத் 82.
எரிதி – தீ. பெரிய. 8-7-7.
எரியன கேசரம் – தீயைப்போன்ற உளைமயிர். பெரிய. 2-8-1.
எரிவு – கோபம். பெரியாழ். 1-2-4.
எருக்கிலைக்காக வெறிமழு வோச்சல் – எருக்கிலையை
உதிர்ப்பதற்கு மழுப்படை கொண்டு
ஓங்கி அடித்தல். பெரிய. 10-9-6.
635 எருத்துக் கொடியுடையான்- இடபக் கொடியையுடையவன்
பெரியாழ். 5-3-6.
எல்லி- இரவு. பெரிய . திருவந். 19.
எல்லே – என்னே,தோழி பெரியாழ். 3-2-1-10; திருப்பா.15;
நாச்சி. 3-3; திருவாய் 2-1-3. 5-4-1.
எல்லேபாவம் – என்ன மகாபாவம். திருநெடுந். 24.
எவ்வதெவ்வத்துள் – எவ்வகைப்பட்ட சத்துரு சமுகம்.
திருவாய். 5-7-5.
640 எவ்வம் – துன்பம். பெரிய. 9-10-2. திருச்சதகம். 41.
எவ்வும் – துன்பப்படுத்தல். பெரிய. 1-7-4. (தே). 7-31-10
இடைமருது.
எவஞ் செய்கேன் – என்ன உபகாரத்தைப் பண்ணுவேன்.
திருவாய். 9-9-6.
எழநண்ணி – போக்கிலே ஒருப்பட்டு. திருவாய். 9-5-10.
எழப்பாய்ந்து – உயரக்கிளம்பி. பெரியாழ். 1-4-7.
645 எழில் – அழகு. மூன்றாம் திருவந். 86, சிவபுராணம் 22,
கீர்த்தித்திருஅகவல். 3.
எழுநரகம் – எழுவகையான நரகங்கள். ஒன்றாந்திருவந்.87.
எழுமை – ஏழு பிறப்பு. திருவாய். 3-6-7.
எள்கல் – ஏய்த்தல். பெரியாழ். 3-7-4, திருவாய். 2-6-4.
எள்கலல்லால் – வருந்துதலே அல்லாமல். திருவிருத் 92.
650 எள்காது – இகழாமல். திருவிருத். 89.
எள்கி -மெலிந்து. பெரிய. 2-10-3. 1-3-3.
எள்கி- ஈடுபட்டு. பெரியாழ். 3-7-4; பெரிய. 9-3-6.
எள்கியுரைத்த – ஈடுபட்டுரைத்த. பெருமாள்.6-10; (தே) 4-82-2.
கழுமலம். 2-6-2. ஐயாறு.
எள்கினாள் – ஈடுபட்டாள். பெரிய. 8-2-7.
655 எள்கு நிலையும் பையாந்து நிற்கும் நிலை.
பெருமாள் 7- 8. (தே.) 4-82-2. கழுமலம்.-எளிவே – எளிமை. திருவாய். 1-3-1.
எற்றே- என்னே; ஆச்சரியக் குறிப்பு. பெரியதிருவந்.5.
எறிஞர் – பகைவர். பெரிய. 6-10-1.
என்கடவேன் -என்ன செய்ய வல்லேன். பெரிய. 10-10-7.
திருச்சதகம். 12.
660 என்சொல்லி-என்னையும் ஒரு பொருளாகக்கொண்டு.
திருவாய். 7-9-2.
என்பிலெள்கி-எலும்பிலே தட்டும்படி சரீரம் சிதிலமாய்
திருச்சந்த. 76.
என்றும் எப்போதும் – சர்வகாலமும் சர்வாவத்தையும்.
பெரிய.7-3-1.
என்றேய என்னில் – ஏனென்னில். திருவிருத். 30.
என்னம்மம்- முலைப்பால். பெரிய. 10-4-1.
665 என்னம்மா – எனக்குச் சுவாமியே. திருவாய். 7-1-8.
என்னானை – எனது ஆனை. பெரிய. 1-10-6; 4-8-3.
திருவாய். 3-9.1. (தே.) 6-79-8. தலையாலங்காடு; 7- 38-8
அதிகை. திருவெம்பாவை. 7.
என்னுசாகோ – எதனை வினாவுவேன். திருவாய். 7-3-4. என்னுயிர் உண்டமாயனால். திருவாய். 9-6-7. என்னுயிரை யறவிலை செய்தனன் சோதீ – அறுதிக்கிரயம் செய்து விட்டேன். திருவாய். 8-1-10.
670 என்னெற்றியுளானே -என் நெற்றியிலே புகுந்து நின்றான்.
திருவாய். 1-9-9.
என்னே என்பாரும் இல்லை – ஐயோ என்பாரும் இல்லை.
திருவாய். 9-1-3.
என்னைத்தன்னாக்கி – என்னைத் தன்பக்கலிலே ஞானம்
அன்பு முதலியவைகளை உடையேனாம்படி
செய்து. திருவாய். 7-9-1.
என்னைமார் – எங்கள் தமையன்மார். நாச்சி. 3-5; 6-9.
எனக்காய் – எனக்குத் தாயாகியும். திருவாய். 6-3-9
675 எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் எனக்கு எப்போதும் பெருமானுடைய திருநாமம் தேனும், பாலும், அமுதும் போல பரம போக்கியமானது.
பெரிய 6-10-6. எனக்கென்ன மனப்பரிப்பே – எனக்கு என்ன மனத்துயரம் உள்ளது? திருவாய். 6-4-6. எனக்கேல் – எனக்கு. ஏல் இடைச்சொல். திருவாய். 9-10-9,10.-எனைத்தோர் பலநாள்- பலகாலம் நாள்தோறும் திருவாய் 8-7-1.
எனையூழி-காலம்உள்ளளவும். திருவாய். 2-1-7.
ஏக சிந்தையனாய் -ஒரே நினைவாய். திருவாய். 5-10-1.
ஏச்சு- பழிப்பு. பெரியாழ். 3-8-2; நாச்சி. 12-8.
ஏசறுகை – துக்கப்படுதல். திருவாய். 5-3-1.
ஏடி-தோழி. பெரியாழ் 3-4-4; பெரிய. 10-8-9. திருச்சாழல். 1-20.
ஏண் -எல்லை. திருவாய். 2-8-8.
685 ஏடு – சூக்கும சரீரம். திருப்பல்.4.
ஏடு ஏறு பெருஞ்செல்வம் – ஏடு – புத்தகங்கள். பெரிய. 4-1-7.
ஏண்- நிலை, வலிமை. பெரிய. 1-6 1- (திருச்சதகம். 84.)
ஏணி ஏறு கருவி. பெரியாழ். 4-9-3.
ஏத்துதல் – புகழ்தல். இரண்டாம்திரு. 10,12.
690 ஏதம் – குற்றம், துன்பம். இரண்டாம்திரு. 37.
ஏதலன் – பகைவன். பெரிய. 1-7-4.
ஏதிலர் – பகைவர், நான்முகன்திரு. 71. (அண்டப்பகுதி.104.)
ஏந்தல் – தேங்கல், தாங்குதல், திருச்சந்த. 6
695
ஏமத்தூடி- நடுராத்தியில் ஊடி.பெருமாள். 6-10.
ஏமப்பட்டாளோகாவலிடப்பட்டாளோ.திருப்பா. –
ஏமாற்றம் – துன்பம். பெரியாழ். 2-7-8.
ஏய்த்தல் – ஒத்தல். திருவாய். 1-5-11.
ஏயான் – இரப்புக்குத்தகாதவன். பெரிய, 1-5-6.
ஏர் – அழகு, ஒப்பு. திருப்பா. 1
700 ஏர்விலா – தகுதியில்லாத.திருவாய். 7.9-5,8.
ஏலம் – வாசனை. பெரிய. 1-2-1.
ஏலும் – ஏற்கும். இரண்டாம் திரு. 16.
ஏவல்ல – எய்யவல்ல. இரண்டாம் திரு. 73.
ஏவலம் – அம்பின் திறமை. பெரிய. 9-5-8; 9-10-6.
705 ஏழ் – எழ. திருவாய்.1-5-1, எழுச்சி. 8-10-4.
ஏழ்ச்சி- விரிதல். திருவாய். 3-2-4.
ஏழ்படிகால்.ஏழுதலைமுறை. திருப்பல். 6 (தே.) 7-52-9.
ஆலங்காடு.
ஏழ்மைப்பிறப்பு -ஏழுபிறப்பு. திருவாய். 1-6-9.
ஏழளவும் . ஏழுதலைமுறையாக. பெரிய. 4-9-9.
710 ஏழிசை – தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி,
கைக்கிளை, திருவாய். 10-8-8; பெரிய. 3-10-1.-ஏழுதல் – பிரகாசித்தல். திருவாய். 1-5-1.
ஏழுமால் வரை ஏழுகுல பர்வதங்கள், கைலை. இமயம்
மந்தரம், விந்தியம்,நிஷதம், ஏமகூடம்
நீலகிரி என்பன 5 -2.
ஏழுலகும் தாள்வரையும் ஏழுத்வீபங்களும் பக்கத்திலுள்ள
சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும்.
ஏழுத்வீபங்களாவன. 1 நாவலந்தீவு, இறலித்தீவு,
இலவந்தீவு, கிரவுஞ்சத்தீவு, குசைத்தீவு, தேக்கந்தீவு,
புட்கரத்தீவு, பெரிய. 4-4-9.
ஏழுழியாய் -ஏழு கற்பங்களாகி. திருவாய். 5-4-8.
715 ஏழெழு பிறப்பு – ஏழு பிறப்புக்களிலும். ஏழுவகைப்
720
725
730
பிறப்புக்கள். 1 தேவர் 2. மனிதர், 3. மிருகம்,4. பறவை
ஊர்வன 6. நீர்வாழ்வன. 7. தாவரம். திருவாய். 2-7-1,4. ஏழை – அறிவில்லாதவன். பெரிய. 5-8-1. (கம்ப கங்கைப்.6 )
ஏற்பன – தக்கன.திருப்பள்ளி. 8.
ஏற்றான்- சிவபெருமான், எருதையுடையவன். முதல்திரு. 97.
ஏற்றை – தலைவனை. திருவாய். 3-6-6.
ஏறக்கொலோ – ஆவேசித்தானாகக்கூடுமோ. திருவாய்.
ஏறு – ஆண்சிங்கம். இரண்டாந்திருவந்.63. ஏறேழுடனே – ஏழு காளைகளை ஒரு க்ஷணநேரத்தில்.
பெரியதிருவந். 48.
ஏறேறி – சிவபெருமான். இரண்டாந்திரு. 63 ஏன்றேன்- பொருந்தினேன். நான்முகன்திரு. 95.
5-6-1,10.
ஏனம் – பன்றி. மூன்றாம்திரு. 89.
ஏனமுழுசாலில் தினைகள் – காட்டுப்பன்றிகள் நன்கு
உழுத சால்களிலே புதிய தினைகளை விதைத்த. மூன்றாந்திருவந். 89. (தே.) 2-114-5 கேதாரம். ஏனாகி – பன்றியாகி. பெரிய. 5-6-2.
ஏனொருவனாய் -ஏனம் ஒருவனாய்.(எதுகை)
நான்முகன்திரு. 70.
ஏனோர் – மற்றையோர். பெரிய. 1-5-7. போற்றித்திரு அகவல். 117.
ஐ – கோழை. பெரிய. 1-3-7 திருவாய். 2-9-3. ஐங்கனாணவில்லி – மன்மதன். பெரிய 9-5-7. ஐதுநொய்து – மெல்லிது. பெரியாழ். 5-4-8. ஐந்தழல் – பஞ்சாக்கினி. உதராக்கினி, சூரியதாபாக்கினி, தவாக்கினி, நிதாககாலாக்கினி. இரவிகாந்தாக்கினி. பெரிய. 5-5-9.ஐந்துநோய் – ஐந்து விஷயங்களாகிய நோய், சப்தாதிகளாகிற
நோய். திருவாய். 7-1-5.
ஐம்படை -பஞ்சாயுதமாகிய அணி. பெரியாழ்.1-3-5; 1-5-9, 10.
ஐம்பால் – ஐந்துவகையாக முடிக்கும் கூந்தல். பெரிய. 7-5-3.
ஐம்புலன் – பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகை உணர்ச்சிகள்.
திருவாய். 1-9-9.
ஐம்பூதம் – பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாயம்.
பெரிய. 4-69; இரண்டாம்திரு. 26.
ஐயம் – தியாகம் உபாதானம் இடுதல். திருப்பா. 2.
740 ஐயறிவும் கொண்டானுக்கு- ஐம்பொறி ஞானம். பெரிய. 7-4-7
ஐவர் -பஞ்சேந்திரியங்கள். பெரிய. 1-6-8; 9-6-5.
ஐவர்குமைக்கும் சிற்றின்பம் – பஞ்சேந்திரியங்களும்
பீடிக்கும்படியான சாரமற்ற விஷயங்கள். திருவாய். 6-9-9.
குமைக்கும் – நலிகிற.
ஐவரால் குமைத்தீற்றி நலிவுண்ணும்படிபண்ணி. திருவாய். 6 7-1.
ஒக்கலித்திட்டு – நடைபழகி. பெரிய. 3-3-1.
745 ஒக்கலை – மருங்கு. பெரியாழ். 1-4-4; திருவாய். 1-9-5.
ஓசித்தல் – ஒடித்தல். முதல்திரு. 27, திருவாய். 1-9-5.
ஓசிதல் – தளர்ச்சியடைதல், முறிதல் திருவிருத்.37.
ஒட்டார். பழிப்பார். நாச்சி. 3-3,சம்மதியார். 3-7.
ஒட்டி – இசைந்து, பொருந்தி. திருவாய். 1-7-7.
750 ஒட்டுகை- இசைகை, திருவாய். 1-7-7.
ஒட்டுவனோ – இசைவேனோ. திருவாய் 1-7-7.
ஒண்ணுதல் – பிரகாசமான நெற்றியையுடைய பெண்.
திருவிருத்50.
ஒத்து அணிவகை. பெரியாழ். 1-2-2.
ஒருக்கருத்து – ஒருமைப்படப்பிடித்து. திருவாய். 8-6-2.
755 ஒருக்கா – அடக்கமாட்டாமல். திருவிருத். 64.
ஒருகாலிருகாற்சிலைவளைய. பெரிய. 1-5-4.
(திருக்கோவையார். 152).
ஒருங்கப்பிடித்து ஒருமிக்கப்பிடித்து. திருவாய்.5-8-8.
ஒருங்க மல்லரைக் கொன்று – பெரிய.4-2-4. (தே. 4-32-9.
பயற்றூர்
ஒருங்கிற்று – சேர்ந்தது. பெரியதிருவந்.54.
760 ஒரு தாரா ஒரு மாலையாக. பெரிய. 8-10-2.
ஒரு நான்று ஒரு நாள். நாச்சி. 13-9; ஒருகால்.திருவாய். 6-2-7.ஒருப்படுத்த – ஒருமைப்பாட்டோட சமைத்த. திருவாய். 5-10-5.
ஒருபாடு -ஒருபக்கம். திருவாய். 8-3-7.
ஒருவன் என்று ஏத்த நின்ற – ஒப்பற்ற கடவுள் என்று
அடியார்கள் துதிக்கும்படி நின்ற. திருவாய். 3-4-8.
765 ஒல்குதல்- நாணங்கொண்டு கூசுதல்.
ஒல்லை- விரைவு. திருப்பா.15.
ஒலிகள்- பாடல்கள். பெரிய. 2-7-10; 4-5-10; 9-1-10.
ஒலி ஐந்துமைந்தும் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பத்துப் பாசுரங்களும். பெரிய. 2-10-10.
770
775
780
785
ஒலிசெய்த அருளிச்செய்த. பெரிய. 8-8-10
ஒலிமாலை – அருளிச் செய்தபாமாலை. பெரிய. 1-3-10;
3-10-10; 5-10-10. 8-10-10. (தே.) 3-54-8. பொது திருப்பாசுரம். ஒளிவட்டம் கண்ணாடி. பெரியாழ், 1-4-3.
ஒற்கம் – ஒடுக்கம். திருவாய். 1-8-4.
ஒற்றைப்பிறை – ஒரு கலையையுடைய சந்திரன். திருவாய். 1-9-10. ஒன்றிரண்டு கண்ணினான் மூன்று கண்களையுடைய
சிவபெருமான். திருச்சந்.7.
ஒன்று இடக்கிலேனொன்றட்ட கில்லேன்- பிடிசோற்றை இடேன் ஒருமிடறு தண்ணீரை வார்க்க மாட்டேன்.
திருவாய். 4-7-9.
ஓஒ உலகினதியல்வே – ஹாஹா என்ன ஆச்சரியம் உலகினது
தன்மை. திருவாசிரி. 6. ஓகெடுவினையேன் – மகாபாபி. பெருமாள். 7-6. ஒக்குதல் – உயர்த்துதல். இரண்டாந்திருவந்59. ஓசலித்தல் – அசைதல். பெரியாழ். 4-9-1.
ஓசனையான் – கும்பகர்ணன். (கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு யோசனை உள்ளது பற்றி. நான்முகன்திரு.29 ஒட்டருதல் – ஓடிவருதல். பெரிய, 4-3-9.
ஓட்டைமாடம் – நிலையற்ற உடல்.திருமா. 6. ஓணவிழவு – திருவோணத் திருநாள். நான்முகன்திரு. 41. ஒத்து – வேதம். பெரிய. 5-9-6. இரண்டாந்திருவந்.39.
ஒத்தொலி மறையொலி. பெரிய. 5-9-6.
(தே.) 1-41.5. திருப்பாம்புரம்.
ஓதம் – குளிர்ச்சி, அலை, முதல்திருவந். 16. ஓதி – கூந்தல். முதல்திருவந். 33.-ஓர்ப்பால் – ஆராய்ந்தறிகையால். திருவாய். 4-6-1.
ஓராமை-ஆராய்ந்தறியாமை சிறியதிரும. 10, 11.
790 ஓரீற்றுப்பிடி ஒரு குட்டியை ஈன்றபெண்யானை . பெரியாழ். 3-5-2.
ஓலமிடல் – அபயக்குரலிடுதல். திருவாய். 4-3-6.
ஓவி – சித்திரம் பெரிய, 2-8-7.
ஓவுதல் – ஒழிதல். திருவாய். 3-2-8.
ஒளித்துகிற்படலம் -ஒழுங்கு பெற்ற கொடிச்சீலை.
பெரிய. 6-9-4.
795 கங்கு -எல்லை, இராத்திரி – திருவாய். 5-4-7.
கங்குல்- இரவு. திருப்பள்ளி – 5, திருவாய்- 7-1-11, 7-2-1.
கச்சங்கம் – பிரதிக்ஞை, வியவஸ்தை – நாச்சி. 5-8.
கச்சி – காஞ்சிபுரம், மூன்றாம் திருவந். 26, பெரிய. 2-6-5,
கசிகை- ஈடுபாடு-கசிகையும் வேட்கையும். திருவாய். 10-3-8.
800 கஞ்சு – கஞ்சன் – நாச்சியார் 13-3, பெரிய. 2-6-7, மூன்றாந்
திருவந். 4.
805
கஞ்சை- கஞ்சனை. மூன்றாந்திரு. 34.
கட்கண்(உட்கண்). பெரியதிருவந். 28.
கட்கிலீ – கண்ணுக்குக் காணவொண்ணாதவன்.திருவாய். 7-2-3.
கட்டம்- கஷ்டம். திருவாய். 7-2-4, திருச்சதகம். 48.
கட்டழித்தல் நிலை குலைத்தல். திருச்சந்த.
கட்டி – வெல்லம். நாச்சி. 1-7.
கட்டு – அரண். திருவாய். 6-6-10,
கட்டுப்படுத்திரேல் – சிறிய திரும.19.
கட்டுரை – நற்செயல். திருவாய். 3-1-1.
54.
810 கட்டுவிச்சி – திருநெடுந். 11. சிறியதிரு. 20; திருவாய். 4-6-3.
கட்டேறி – தெய்வ ஆவேசம் கொண்டு. சிறிய திரும. 20.
கடம்- காடு, மதநீர், பாபபலம்,அவசியம் செயற்பாலது
நான்முகன்திரு. 52.
கடமை – கடன். திருவாய். 3-3-6.
கடல் கடைந்து அமுதம் கொண்ட. திருவாய். 3-4-9.
அழகர் கிள்ளை. கண்ணி. 73.
815 கடலே – உவர், நன்னீர், பால்,தயிர்,நெய், கருப்பஞ்சாறு. பெரியாழ்.
கடவன் – கடமைப்பட்டவன், எசமானன்.
கடாகின்று – கடாவுக இன்று. திருவிருத். 50.கடாய் -பாதுகாக்கப் பெற்ற. திருவிருத். 49.
தடாயன – உபயோகிக்கத்தக்கன. திருவிருத். 6.
கடாரம் பெரிய பாத்திரம். பெரியாழ். 1-1-6, 2-4-3.
கடாவுதல் – செலுத்தல், திருவாய். 7-3-1.
கடி- காவல், மதிள், வாச னை. பெரிய. 10-2-6.
கடிகாவையிறுத்து – அசோகசவனத்தை அழித்து. பெரிய.
10-2-6.
கடிகைத்தடங்குன்று சோளசிங்கபுரம். பெரிய. 8-9-4.
825 கடிப்பு – ஒருகாதணி. பெரியாழ். 2-3-2.
கடிறு களிறு. ளகரத்துக்கு டகரம் வந்துள்ளது.
பெரியாழ். 3-2-6.
கடுவன் – ஆண்குரங்கு. மூன்றந்திரு. 68; புறநா. 158.
அடி. -23, 200-2; குறுந். 26,278.
கடுவினை – தீவினை. திருவாய். 10-2-8. கடைகயிறு – தயிர் கடைகின்ற கயிறு. பெரியாழ். -3- -8.
830 கடைக்கொண்டு – பெரியாழ். 4-4-7, கடைத்தலை- திருவாசல் – திருவாய்-10-2-7; திருமா. 38.
கடையா – மூங்கிற்குழாய் திருவாய்- 4-8-4.
கண்- இடம் – பெரிய- 7-10-6. கண்களுக்கற்றுத்தீர்ந்து – புறம்பேபற்றற்று அனந்யர்ஹமாயிருக்கிற திருவாய் 7-3-3.
835 கண்டகர் – முன்போலக் கொடிய ராக்ஷஸர் – பெரியாழ். 4-8-4. குலாப்பத்து. 86.)
840
கண்டம் தேவப் பிரயாகை- பெரியாழ். 4-7. கண்டல்-தாழை.
கண்டாய்-கிடாய்- இரண்டாந்திரு.51.
கண்டீர் – கண்டு, கேட்டு. இரண்டாந்திரு. 75.
கண்டுரைத்த தமிழ்மாலை – பெரிய. 3-6-10. கண்ணநீர் – திருவாய். 678. கண்ணறாய்- தயவில்லாதவனே. திருமா. 44. கண்ணாலங் கோடித்து- கலியாணம்- நாச்சி.- கண்ணாளன் – பெரிய 11-6-7.
11-9.
845 கண்ணிக்கயிறு- முடிகளையுடையகயிறு திருவிருத்.91. கண்ணியார் குறுங்கயிற்றால்- முடிகளார்ந்த குறுங்கயிறு பெரிய. 5-9-7- 11-5-5. கண்ணுதல் கூடிய அருத்தனை- பெரிய, 7.10-7. கண்ணுறக்கம் நித்திரை – பெரிய. 4-5-5.-கண்படை- தூங்குதல் முதல்திரு- 19; நாச்சி- 4-9-10;
திருவாய்-4-9-10.
850 கண்புதைத்தல் மறைத்தல். (திருக்கோவையார். 43: சீவக. 1982.
கண்முகப்பே- கண்ணுக்கெதிரில் – திருவாய்-47-4;6-4-11;9-2-7-8.
கண்முதலியவை – பெரிய-11-7-1-9.
கண்மூன்றத்தானும் – சிவன். நான் முகன்திரு-42.
கணகணப்ப- கணகண என்று ஒலிப்ப. பெரிய. 4-4-8-(தே)
1-21-7 சிவபுரம், 4-28-1அதிகை.
855 கணபுரம் பெருமாள். -8-1-11, திருநெடுந் -16; பெரியதிருவந் 90.
சிறிய திரு. 72.
கணவலரும் அலரியும் – பெரிய. 11-7-6.
கணி -சோதிடன். பெரிய.
கணைநாண் – அம்புவிடுங்கயிறு.
கணைபாரித்து – அம்புகளைப் பிரயோகித்து. பெரியாழ். 4-3-7.
860 கத்தக்கதித்து- மிகவும் கொழுத்து- பெரியாழ் – 1 -9-6.
கத்திரபந்து – க்ஷத்ரபந்து- க்ஷத்திரியர்களுள் அதமன். திருமா. 4.
கத்திரியர் – க்ஷத்திரியர். பெரியாழ். 1-9-6.
கதவி – கோபித்த. இரண்டாந்திரு. 99.
கதலி-வாழை. பெரிய. 3-9-3. 4-10-1.
865 கதிரவன் – சூரியன். திருப்பள்ளி. .
கதுவப்படுதல் – கவ்வப்படுதல். நாச்சி. 8-2.
கதுவாய் – புண்பட்டவாய். பெரியாழ். 3-5-5.
கதுவாய்ப்படுதல் – வடுப்படுதல், வெறுந்தரையாம்படி.
பெரியாழ். 3-5-4.
கந்தாரம் – தேவ காந்தாரி ராகம் – பெரிய. -3-9-1.
870 கந்து – கந்தம். பெரிய. 6-7-8.
கப்பம் தவிர்க்கும் கலியே- நடுக்கத்தைப் போக்கும்
கண்ணனே .திருப்பா.20.
கப்பு – தோள். பெரியாழ். 3-1-5; காம்பிலடியிலுண்டானகிளை.
கபாலநன்மோக்கம் – பிரமகபாலத்தையொழித்தல்.
திருவாய். 4-10-4.
கபாலி – சிவன்; துர்க்கை. பெரியாழ். 2-8-8.
875 கபிலை- பசு. படிமைக்கலம் – திருப்பள்ளி.
கபோதம் – புறா, கொடுங்கு – பெரிய. 3-8-2.
கம்பம்-நடுக்கம். பெருமாள். 4-5-கம்பக் கபாலி – நடுக்கத்தைக் கொடுக்கவல்ல துர்க்கை.
ருத்ரனுமாம். பெரியாழ் -2-8–8
கமலத்திலை போலுந்திருமேனி – திருவாய்.9-7-3.
880 கமுகு – பாக்குமரம் – பெரிய. 2-10-7; 3-1-94-2-1.
கமுகம்-பாக்குமரம் பெரிய -3-10-4.
கமை- ( மை .பொறுமை. பெரியாழ்வார். 4-7-4.
கயம்-தடாகம், க்ஷயரோகம், யானை. பெரிய. 8-5-4. 8-7-1.
கயல்-கயல்மீன் – பெரிய. 1-8-10, 2-7-5, 3-2-9, 3-9-1. 8-7-3
885 கயவர் -மூடர்
34
கயிறு மாலை கயிற்றில் தொடுத்த பூமாலை – பெரியாழ் -3-6-1.
கரண்டம் – நீர்க்காக்கை, திருச்சந்த. 62.
கரணப்பல்படை – போர்க்கு உபகரணமாகிய பல்படை-
திருவாய்- 8-3-2.
கரத்தல் – ஒளித்தல் திருவாய்-1-1-7.
890 கரம்- கை, உறுதி. திருவாய். 7-8-9. திருச்சந்த. 25.
கரம் விற்கிலும்- நெல்விற்கும்படியான துர்பி காலத்திலும்.
பெரிய. 4-4-10.
கரா – கராம்- முதலை.
கரிமுகத்தான்-யானைமுகமுடைய விநாயகன்.
கரிய நாழிகை- அந்திக்காலம் பெரிய- 8-5-6.
895 கரியவாகி -அம.8.
900
905
கரு- கல்பிரதிமை,கர்ப்பம்.
கருக்காய் பிஞ்சு.கருக்காய் கடிப்பவர் திருவிருத்.64.
கருந்தேவன் – திருவாய். 9-3-4
கருநாயிறு – கருமை நிறமுடைய சூரிய மண்டலம்
திருவிருத்-17, திருவாய் -8-5-2.
கருநெல்- கருவடைந்த நெற்பயிர்- பெழி. 10-1-1.
கருப்புச் சிலை – கரும்பு வில்.
கரும்பு கண்வளரும். பெரிய. 2-10-4.
கருமாணிக்கம் கரிய மாணிக்கம் போன்ற வடிவுடையவன்.
திருவாய். 2-7-4,
கருமுகை – இருவாட்சி, சிறுசண்பகமுமாம். திருவாய். 9-9-10.
கருமேந்திரியம் ஐந்து – உபஸ்தம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு.திருவாய். 10-7-10.
கருவரங்கத்துள் – கர்ப்பஸ்தானத்தில் – முதல்திரு- 6. கருவிருந்தநாள் – கர்ப்பத்திலிருந்தநாள்- நான் முகன்திரு- 92.
கருவிளை மலர்காள் – காக்கணம் பூக்களே- நாச்சி- 9-3.
கருவூர்- பெரிய. 2-9-7.
910 கருளக்கொடி கருடக்கொடி- பெரியாழ். 5-1-1; நாச்சி-5-4.
கரை ஓசை. பெரிய- 8-3-1.
கரையாய் காக்கைப் பிள்ளாய் – பெரிய-10-10-2.
கல் (ஏவல்)- கற்றுக்கொள் – பெரியதிருவந்- 67.
ஒலி. பெரிய -2-7-3-10.
கல்கி- குதிரை முகத்துடன் அவதரிக்கும். பெருமாள்.7-6.
915 கல்வி- சாதுர்யம் – பெரியாழ்-2-9-1.
920
கல்விச்சிலை – தனுர்வேதம் பெரிய-8-6-3.
கலக்கழிய கட்டுக்குலைய. பெரியாழ்-2-2-4, 2-8-7; திருப்பா-6.
கலம்பகம் – திருப்பள்ளி. 5.
கலவர் – மரக்கலத்தினுள்ளேயிருப்பவர் – பெரிய – 11-8-2.
கலவி-கலத்தல். பெருமாள்- 1-6. திருவாய்-8-10-7.
பெரிய-9 -8-1.
கலவிருக்கை கொலுவிருத்தல் பெரியாழ் – 4-9-7.
கலாய்- கலந்து. திருவாய்-4-6-8.
கலி- காலதோஷம், கலி புருஷன் – இராமா நுஜ – 16,34.
திருவாய் 5-2-1.
கலிகன்றி- திருமங்கையாழ்வார் – பெரிய தனியன்-1
பெரிய. 11-6-10;2-5-10.
925 கலிங்கம்- ஆடை. பெரிய. 10-8-1.
கலுழி – கலங்கல், வெள்ளம் திருநெடுந் – 6.
கலை – ஆடை, சாஸ்திரம்,அம்சம், பக்கம். பெரிய-9-1-10.
கலைப்பாகி – ஆண்மானை வாகனமாகவுடைய துர்க்கை.
பெரியாழ்வார்-1-3-9.
கவ்வை- பழிச்சொல் – திருவாய் – 5-3-4; பெரிய-4-5-2.
930கவண் – கல்லெறி கயிறு.
கவந்தம் – தலையற்ற உடல். பெரிய. 9-8-5.
கவரி செய்வார் சாமரை வீசுதல் முதலான
கைங்கரிங்களைச் செய்வார்கள் – திருவாய்-7-6-11
கவரிப் பிணா – சாமரம் வீசுகின்ற பெண்கள் – நாச்சி- 1-4.
கவளமால் யானை- (எதுகை விசேடம்) – திருமா.45.
935 கவாடம்-கதவு பெரியதிரும 73.
கவி – குரங்கு- மூன்றாம்திரு 84.-கவிஞர் – வித்துவான்கள்.
கவிதை- பாட்டு- பெரிய-7-2-2.
கவின்- அழகு பெரிய. 3-1-6.
940 கவுட்கொண்ட நீராம் – பெரிய – 10-9-8.
கவுள் – கன்னம்- பெரிய – 10-9-8.
கவை- பிளவு 3-2-4.
கவையின் மனமின்றி வேறொன்றிற்புகும் மனமின்றி.
திருவாய் 9-8-3.
கடிகண்டு- தீம்பு . இது ‘கழகு” எனவும் வழங்கு.
பெரியாழ்வார்-2-4-6. (தே.) -5-13-8 வீழிமிழலை.
945 கழகம் – கூட்டம் “கழகமேறேல் – திருவாய் – 6-2-6.
கழல் விளையாட்டுக் கருவி.
கழல்கமவம் – திருவடித்தாமரை.
கழல்வளை (கை வளைக்கும் கழல்வளையென்று
இடுகுறிப்பெயர், நாச்சி11-2.
கழறல்- கிலேசப்பட்டுச் சொல்லுகை- பெரிய – 3-2-10.
950 கழறாநிற்றிர் – நியமியாநின்றீர் – திருவாய் 7-7-9.
கழிகோல் வீசுகோல், கன்றின் வாயில் கட்டும்
கொறுக்கோல். திருவாய்4-8-4.
கழி நேர்மை கழிவையுடைத்தான நுண்மை- திருவாய்- 8-8-2.
கழுது – பேய், பூதனை. பெரிய. 3-8-6.
கழுதை உதடாட்டங்கண்டு என்பயன் – திருவாய்-4-6-7.
கழை -மூங்கில்.
36
கள்கின்ற – திருடுகின்ற -(எதுகை) திருவாய்7-7-9.
கள்வங்களே கிருத்திரிமவியாபாரங்கள். திருவாய்-9-6-5-6, 10-4-5.
கள்ளமே காதல் செய்து- திருமா-24.
களகம்- அன்னம், சாந்து, நெற்கதிர் – பெரிய – 6-9-10.
960 களகமதின் – சாந்தையுடையமதிள் – பெரிய. 6-9-10. (தே)1-102-3.
களவம்- களா. யானைக்கன்று பெரிய. 11-6-4.
களவே – களவு பிரகாசிக்கும்படி-திருவாய் -1-5-1.
களனிழைத்து – தேவாந்திர சன்னிதானம்- திருவாய்-4-6-4. களிதாகிய சிந்தையனாய்- மிகுகளிப்பையுடைய. திருவாய்-10-8-4.
965 களிறட்ட பொன்னாழிக்கையென்னம்மான் -திருவாய். 8-10-6,10;
களைகண்-ரக்ஷகர், பற்றுக்கோடு. திருவாய். -5-8-3,8, கற்பகத்தின் வல்லி- திருவாய் -7-7-1,-கற்பம்- வேதாங்கங்களில் ஒன்று.
கற்பார் புரிசை- பெரிய. 5-1-4.
கற்புவானிடறி- பெண்மைக்குணம். திருவாய்-6-7-2.
கற்பு – அறிவுடைமை, இழந்ததுகற்பே- திருவாய். 6-6-5.
கற்றமொழியாகிக் கலந்து- நான் முகன்திரு. 81.
கற்றா -கன்றையுடைய பசு – பெரிய -5-1-10.
கற்றினம் – கன்றுகளின் கூட்டம் நாச்சி-12-8; பெரியாழ்.2-5-5;
பெரிய-8-10-3.
975 கற்றைக்குழல் – பெரிய. 2-6-7.
கறங்குதல் – ஒலித்தல்.
கறந்த பாலுள் நெய்யே போல் – திருவாய்.8-5-10.
கறவு -கப்பம். பெரிய. 10-7-10.
கறவை கறக்கும்பசு. திருப்பா.11,28.
980 கறி- மிளகு. பெரிய.
கறு- கோபம். பெரியாழ். 2-8-6.
கறையார் நெடுவேல்- பெரிய. 6-4-10.
கறையினார் துவருடுக்கை திருவாய். 4-8-4.
கன் பறை கறங்க-பெரிய. 11-5-6.
985 கன்றுகள் இல்லம் – பெரியாழ். 2-8.2.
கன்றுகள் காதில் கட்டெறும்பு பிடித்துவிடல் – பெரியாழ். 3-8-2.
கன்னல் – கருப்பஞ்சாறு. பெரியாழ். 2-9-9.
(கன்னலிலட்டுவத்தோடு சீடைகாரெள்ளின் உருண்டை).
கன்னார்மதிள் – தொழில் நிரம்பிய மதில். திருவாய். 5-8-3.
தே. 2-40-11 பிரமபுரம்.
கன்னி – இளம்பெண், அழியாமை. பெரியாழ். 3-1-6.
990 கன்னிமதிள் – பெரிய. 6-7-10.
கனகக்கடிப்பு – பொன்னால் செய்த ஒரு காதணி
கனங்குழை – கனமான குண்டலம்.
கனகம்- பெரியாழ். 1-3-8.
கனியிலிருந்தனைய செவ்வாய் -திருமா.18.
995 கா- சோலை- திருவாய். 6-5-6.
காஅடியேன் – இரண்டாந்திரு. 10. கா – வினைமுற்று.
காகுத்தன்- இராமன். சூரிய குலத்தரசன். திருவாய். 5-4-3;
நான்முகன்திரு. 53; அம. 2; பெருமாள். 9-4
காசையாடை -காஷாய ஆடை. பெரிய. -2-2-1.
காட்சி – தோற்றம். (தே. 3-45-10 ஆரூர் )-காண் – அழகு. திருவாய். 7-4-5.
காண்கின்றனகளும் -காணப்படுகின்ற செய்கைகளும்.
திருவிருத்8.
காண்டவம்- காண்டவ்வனம்.பெரிய. 2-5-2.
காணக்ொடாள்-காண இடம் தருகின்றிலள்.
திருவாய். 5-5-7-10;
காத்தனே – காத்தவனே. பெரிய. 4-6-7-
1005 காதணி (காதலிமார் குழையும்) மாங்கல்யம் போல்வது.
பெரிய. 4-4-1 மதுரைக் கலம்பகம்.”நம்பா”
காதல் – அன்பு .பெருமாள். 10-6.
காதலன் – கணவன். பெருமாள்5-2.
காதுகள் தூரும் – குத்தப்பட்ட காதுகள் தூர்த்துவிடும்.
பெரியாழ். 2-3-8,9.
காது செய்வான் – செவி செய்பவன். திருவாய். 9-1-9.
1010 காந்தப்பர் – கந்தருவர்கள். பெரியாழ். 3-6-6.
காப்பு -பாதுகாவல், ரட்சை.திருப்பல் 1.
காபாலி -பிரமகபாலத்தைக் கையிலேந்திய சிவன்.
பெரிய. 1-3-2.
காம்பற – தொற்றற, சம்பந்தமற. திருமா. 38. காம்பு – சிறுகாம்பன்சேலை. பெரியாழ். 1-3-8.
1015 காமம் – அபீஷ்டம்.(விருப்பம்). திருப்பா. 29. காமதேவா – மன்மதா. நாச்சி. 1 -3-4,6,8
காமரங்களிசை பாடும் – காமரம் என்னும் இசையைப்
பாடுகின்ற. பெருமாள். 8-4.
காமரானவாறும் – ஸ்திரீகள் தன்னை விரும்பியிருந்த
படியையும் பெரிய. 7-6-5. காய்தல் – கோபித்தல், பெரிய. 7-6-5.
1020காயகாயா. குறுக்கல் விகாரம். பெரியாழ் – 5-6.
கார் – சினை, பெருமை, நாச்சி. 9-2. பெரிய. 8-4-5. கார்க்கண்டன் -சிவன். நான்முகன்திரு. 87.
கார்க்கலி- அஞ்ஞானமாகிய தோஷம். கார்க்கோடற் பூச்சூடுதல் பெரியாழ். 3-3-3.
1025 கார்த்தல் – அரும்புதல். திருவிருத் 68. கார்த்தனவே – கருவடைந்து அரும்பின.திருவிருத். 68. கார்த்திகையான் – சுப்பிரமணியன். இராமாநுஜ. 22.காரார்புறவின் மங்கை- பெரிய. 1-5-10.
காரிகை – அழகுடைய பெண். திருவிருத் 19.
1030 காரேழ் – சம்வர்த்தம். ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம்,
துரோணம். காளமுகி,நீலவர்ணம்.
கால்- காற்று, சக்கரம், நுனி. நாச்சி. 1-8.
காலசக்கரம் – காலத்தை நடத்துகிற திருமொழி
திருவாய். 4-3-5,6, 7-2-7.
காலம் பெற . தாமதமாகாதபடி. திருவாய். 5-2-1, 7-3-5,6.
காலம் பெறச் சிந்தித்து காலந்தாழ்த்தாமல் உடனேயே
நினைத்து. திருவாய். 4-1-1.
1035 காலன் – யமன்.
காலாழும் -கால் அழுந்தும். பெரிய திருவந். 34.
காலி – பசுக்கூட்டம். பெரியாழ். 1-5-2,-2-6-7, 3-4-10.
காவவன் – அரசன். பெருமாள்.7-11.
காவி – நீலோற்பலம். திருவாய். 5-4-2, 1-9-8.
1040 காவு -விளையாட்டுச்சோலை – திருவாய். 6-3-5.
காள நன் மேனியினன் – திருவாய்-9- 3-1.
காளம் -வாத்திய விசேடம், கறுப்பு.
காற்றத்திடைப்பட்ட கலவர்மனம். பெரிய. 11-8-2.
காறை-கழுத்திலணியும் ஆபரணம் பெரிய. 3-7-8.
1045 கான்- காடு, வாசனை – பெரிய. 2-3-9.
கானதர் – காட்டுவழி- பெரிய. 3-2-3
கானகம்படியுலாவி – பெரியாழ். 3-6-4.
கானவர் -காட்டில் திரியும் வேடர் .
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூ – திருப்பா- 22.
1050 கிஞ்சுகம் – கிளி. பெரிய- 3-7-7.
கிடங்கு – அகழ் – பெரிய. 5-2-8. முதல்திருவந். 77.
கிதயுகம்- கிருதயுகம் – திருவாய். 5-2-3.
கிதி – கிரியை (நிகழ்காலச் செய்கை) திருவாய்- 5-6-4.
கிரமாலங்காரம் – பெரிய- 2-10-2, 3-4-1, 3-8-4, 4-2-2, 6-7-7.
1055 கிரிசை – கிரியா- திருப்பா- 2, நான்முகன்திரு – 95, திருவாய். 2-7-2.
கில்லேன்- மாட்டேன் பெரியாழ் -2-3-12, 2-9-8. நாச்சி-1-5,
திருவாய். 3-9-7.
கிழி -பணமுடிப்பு பெரியாழ்தனி – 1,2.
கிலிர்தல்- விளங்குதல் பெரியாழ். 4-8-6.
கிளரிக்கிளரி வருந்தி எடுத்தெடுத்துக் கூறி திருவிருத் – 8311060 கிளப்பைதலே – (பைதல் இளையது). திருவாய். -9-5-6.
கிளியைக் கைமேற்கொள்ளல் – பெரிய. 4-4-6.
கிற்கின்றியேன் – சக்தியற்றவன். பெரிய. -9-5.
கிற்பன்கில்லேன் – வல்லேன் மாட்டேன். திருவாய். 3-2-6.
கிற்றி – வல்லை – நாச்சி- 5-8.
1065 கிறி – தந்திரம் பெரிய. 3-8-2, திருவிருத்91.
சிறுபவளவடம். பெரிய . 192, திருவாய்.2106.
கிறிக்கொண்டு-உபாயத்தைக் கொண்டு. திருவாய். 2-3-8, 2-10-6.
கிறியம்மான் – நல்விரகையுடைய சர்வேசுவரன் – திருவாய்
4-8-6.
கின்னரம் – தேவ வாத்தியம் – பெரியாழ். 3-6-5.
கீசுகீக -ஓர் ஒலிக்குறிப்பு,ஒரு சார் பறவையொலி.
திருப்பா.7.
1070 கீர்த்தித்த – துதித்த – திருவாய். 7-9-2. கீழ்க்கன்று- தம்பி நாச்சி. 14-1. கீழ்து பிளந்த கீழதாம்படி திருவாய். -7-4-6. கீழ்மேல் ஏழெழு பிறப்பும் – கீழும் மேலுமாகிய ஏழெழு பிறப்புக்களிலும் திருவாய். 2-7-1. கீழையகம் – கீழைவீடு – பெரிய 10-7-1.
1075 குக்கர் – சண்டாளரிற்றண்ணியர் – திருமா.
குக்கூடல் – முட்டாக்கு பெருமாள்-6-5.
குஞ்சி – ஆண்தலை மயிர் – பெருமாள்.89. குட்டநாடு – திருவாய். 8 -9-1.
குட்டம் – மடு பெரிய. 3-5 -7, பெரிய. 11-4-4.
1080 குட்டன் – குமாரன் – பெரிய் – 1-4-2.
குட்டேற்றை சேங்கன்றை- நாச்சி- 14-2. குடக்கூத்தனுக்கு திருவாய். 4-10-10.
குடக்கூத்தனை – திருவாய்ப்.3-6, 3-7.
குடக்கூத்து பெரிய. 2-7-7, நாச்சி. 3-6
39.
1085 குடங்கலந்தாடி பலகுடங்களைச் சேர்த்து எடுத்தாடி- பெரிய. 9-8-6.
குடங்கள் தலை மீதெடுத்துக் கொண்டாடி- பெரிய திருவந். 31. குடங்கால் மடி, முழங்கால்- திருநெடுத் 11, பெரிய, 5-5-1, 10-4-3. நான் முகன்திரு. 44
குடங்கை – உள்ளங்கை பெருமாள். 7-7 திருவிருத். 11,24. குடதிசை மேற்குத்திசை – திருமா. 19.1090 குடந்தைகிடந்தார் – பெரியாழ்- 2-6-6.
குடமாட்டும் – குடக்கூத்து – பெருமாள்- 7.9.
குடமாடி – குடக்கூத்தாடி- நாச்சி- 13-2, பெரிய 5-5-6, 6-9-4.
திருவிருத் 38, பெரியதிரும- கண்ணி. 143. இரண்டாந்திரு. 98.
குடமாடிய கூத்தனை – குடக்கூத்தாடினவன் – பெரிய- 7-3-3.
குடமா – பெரிய- 3-6-8, 6-3-9.
1095 குடமாடுதடமார்வர் – குடக்கூத்தாடினவனும்
மார்பையுடையவனும் ஆகிய பெருமாள். பெரிய 5-10-1.
குடமிரண்டு ஏந்தியாடுமது சிறிய திரும-12.
குடமூக்கில் – கும்பகோணக்ஷேத்திரம்- இரண்டாந்திரு -97
குடுமி மலையுச்சி. திருவாய்- 2-10-2.
குடைந்து – அமிழ்ந்து- திருப்பா- 13.
1100 குடையேற – குடை முதலாக நான்முகன்திரு- 43.
குண்டர்- நீசர், ஆழம், தாழ்ச்சி,நீசம் – பெரிய -2-6-5.
குண்டிகை – கமண்டலம்- நாச்சி- 9.
குண்டு- ஆழம் நாச்சி – 2-3.
குணதிசை – கிழக்குத்திக்கு – திருமா. 19.
1105 குணாலமாடுதல் – குணாலைக்கூத்து தலைகீழாக
ஆடுவதொரு கூத்து பெரிய- 4-6-9.
குணில்- குறுந்தடி- திருப்பா- 26.
குணங்குநாறி முடைநாற்றம்நாறி – பெரிய- 2-4-1, நாச்சி 14-2.
குத்தாலொக்கும் – குத்தினாற் போலேயிராநின்றது- திருவாய். 95-9.
குத்து விளக்கு – திருப்பா. 19.
1110 குதற்று மிடுக்குக்கள் – திருவாய்- 10-1-5.
குதிரியாய்- (குஸ்திரி)- அடங்காதவள் – திருவாய்-5-3-9.
குதுகலிப்ப – ஆசைப்பட – பெரியாழ்- 3-6-1.
குதைகை – தடுமாறுகை – நான் முகன்திரு-21.
குதையும் வினை – அலையப்பண்ணுகிற துஷ்கருமம்.
நான்முகன்திரு. 81
1115குந்தி – குந்திக்கொண்டு, வினையெச்சம் – பெரிய-4-2-9.
குப்பாயம்- சட்டை- பெரிய. 3-5-6, நாச்சி. 14-4,
பெரியாழ். 3-5-6, நாச்சி. 14-4.
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை – குப்பையைக்
கிளறினாற்போலத் தோஷமே தோன்றும்படியான
செல்வமுடையாரை திருவாய். 3-9-5.
கும்மாயம் – புழுக்கிய பச்சைப் பயறோடு சருக்கரை
குழகி – விளையாடி -திருவாய். 6-2-6.
குழகு – அழகு திருவாய். 5-10-2.
குழகேலே விளையாடாதே – திருவாய்.6-2-5.
1045 குழமணன் கொண்டு- மரப்பாவை கொண்டு- திருவாய் -6-2-6.
குழமணி தூரமே – குணாலைக்கூத்துப் போலே தோற்றார்
தோல்விக்கீடாக ஆடுவதொரு கூத்து. பெரிய -10-3-1-10.
குழல் – கூந்தல் – பெருமாள். 6-2.
குழல் முழஞ்சுகளின் ஊருகுமிழ்த்து – வேய்ங்குழலினுடைய
துளைகளிலே நீர்க்குமிழி வடிவாய்க்கிளர்ந்து.
பெரியாழ். 3-6-11.
குழாவரிவண்டு – குழாமாகியவரி வண்டு-பெரிய. 2-10-4.
1150 குழிய – குழவிய – கூடிய – திருவிருத் 84.
குள்ளக்குளிர – மிகக் குளிர்ந்திருத்தல். திருப்பா -13.
குளப்பு கூறுகொள்ளப்பட்டு- துகைத்து மிதித்த இடத்திலே
மிதிக்கப்பட்டு. நாச்சி- 13-6.
குறந்து – சிக்குவிடுத்து – பெரியாழ் -2-5-8.
குறளை – பொய். திருப்பா-2.
1155 குறிக்கொள்ளே – திருவுளம் பற்றுக – திருவாய் -2-3-7.
குறிக்கோலொன்றிலாமையினால்- (குறிக்கோள் – நம்பிக்கை)
பெரிய -1-9-3.
குறிஞ்சித்திணை ஒழுக்கம் – பெரியாழ் -3-8-6.
குறிஞ்சியிசை தவருமாலோ – குறிஞ்சிப் பண்துளைக்கும் –
திருவாய்-9-9-1.
குறுங்குடி – இத்திருப்பதி திருநெல்வேலி இரயில்
சந்திப்பிலிருந்து 27 கல் தொலைவில் உள்ளது.
குறுகியவனான வாமனனது திருத்தலமாதலால் குறுங்குடி
எனப்பெயர் பெற்றுள்ளது. பெரிய – 1-6-8.
1160 குறுந்தலை- நீசர்வகுப்பில் முதல் நின்ற – பெரியாழ் -3-7-2. குறையிரந்த – குறைவாளனாயிருந்த- பெரிய -4-4-7. குன்றெயிற்றென்னவன் -மலை போன்ற மதிள்களையுடைய
நாட்டுக்கரசன் – பெரிய. 2-9-5.
கூகிற்றியாகில் – கூவவல்லையானால்- நாச்சி -5-6.
கூகின்றது – கூவுகின்றது – பெரிய -11-2-6.
1165 கூசம் – கூச்சம்- பெரியாழ் -3-7-7, திருவாட் -10-2-4,
தேவாரம் 7-7-7, எதிர்கொள்பாடி. 3-107-8;
நாரையூர், 6-65-2- ஏகம்பம்.
தோற்கருவி – பெரிய. 3-5-8.
கேயத்தீங்குழலோதி – பாட்டுடன் மதுரமாகிய
வேய்குழலையூதி – திருவாய். 6-4-2.
கேவலமன்று – சாமானியமன்று – பெரிய. 9-5-8.
கைசெய்தல் – ஒழுங்குபடுத்தல் – பெரிய. 2-6-5, 1-8-3, 2-1-1,
3-9-5, 4-1-7, பெரிய -1-8-4, திருவாய் 5-10-1.
-7-4-3. 1200 கைத்தலத்தா – அழகிய கையையுடையவனே – பெரிய
கைத்தலம் – பாணிக்கிரஹணம் நாச்சி -6-6.
கைத்தால் – நெஞ்சம் கசந்துபோனால் – நாச்சி – 2-8.
கைதவம் – கபடம் – திருவாய்-6-3-5, (பெருங். மகத -15-18)
கைதைத் தோடாரும் -தாழை மடல்களில் பொருந்தியுள்ள
பெரிய -3-4-9.
1205 கைதைமலர்க்குக்குருகு – பெரிய – 5-2-9.
கைந்நாகம் – கைம்மா – துதிக்கையையுடைய யானை.
கைப்பற்றுதல் – பாணிக்கிரஹணம் – பெரியாழ் -3-8-6.
கையறைபோழ்து- கை வகுத்துப் பொருத போழ்து
திருவாய். 7-4-5.
கைவலம் – கைம்முதல்.
1210 கொங்கு – வாசனை. பெரியாழ் -2-6-2.
கொங்கை வன்கூனி – பெரியாழ்-2-1-8.
கொட்டாய் பல்லிக்குட்டி – (தணி கௌளி) கொட்டாய்-
ஒலிசெய்- பெரிய. 10-10-4.
கொட்டை பஞ்சுச்சுருள் – திருவிடைமருதூர் மும்மணி
கோவை பெரியாழ் -3-5-1.
கொடிக்கோழி கொண்டான் -சுப்பிரமணியன் – திருவாய். 7-4-8.
1215 கொடிமூக்கு – நீண்டமூக்கு- பெரியாழ் -7-4-3. சிறிய.
திருமடல் -40, ஒழுகுபொற் கொடிமூக்கும் (சீவக. 165)
பெருங் -2-15:85, 5-8:16, கூர்ம – பலவகைத் -17.
கொடியேறு செந்தாமரைக்கை – பெரியாழ் -3-5-10.
கொடுங்கோளால் – திருவாய் -4-8-6.
கொடுவுலகம் – கொடியதாகிய உலகத்தை- திருவாய் -4-9-7.
கொண்டல் – காளமேகம் – பெரியாழ் -2-9-4.
1220 கொண்டற்கு- கொண்டதற்கு- பெரிய. 2-9-3.
கொத்துத் தலைவன் – கூட்டங்களுக்குத் தலைவனாகிய
துரியோதனன் – பெரியாழ் -1-9-3.
கொந்தக்குழல் – நெறிப்பையுடைய கூந்தல் – பெரியாழ் -2-5-8.கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.
கூடல் – ன்கன்சிரு -39, பெரிய -9-2-5, (தே. 5-64-4-
கோழம்பம்).
கூடலர் – பகைவா – பெருமாள்.1-11. 7-18-10- வேள்விக்
குடியும் துருத்தியும்.
கூடலித்தல் – பெரியாழ் -3-6-8.
கூடலூர் – அப்பக்குடத்தான் சந்நதி – பெரிய -5-2-1, 1-10.
1170 கூடார் – பகைவர் – திருப்பா-27.
கூத்தன் – சிவன் – பெரியதிரும-71, நாச்சி -4-4.
கூத்தர் குடமெடுத்தாடில் -திருவாய் -4-5-4.
கூதல் – குளிர் – பெருமாள் -6-1, தே. 1-130-3. ஐயாறு.
கூதை – மூளி (கூதைசெய்து) திருவாய் -9-1-9.
1175 கூந்தல் – கேசி (ஓரசுரன் – இரண்டாந்திரு -93.
கூம்பு-பாய்மரத்தின் நுனி பெருமாள் 55.
கூர்வேல் – கூர்மையான வேலாயுதம் -பெருமாள் -4-11.
கூயேகொள் – அழைத்துக் கொள் – திருவாய் -4-9-7.
கூவாய் பூங்குயிலே- பெரிய – 10-10-3.
1180 கூவிளை – வில்வம் – பெரிய -11-7-6.
கூழ்ப்பு- சந்தேகம் – திருவாய் -8-2-6.
கூழேன்மின் – சந்தேகப்படாதீர் – திருவாய்-3-6-9.
கூழை- கூந்தல் பெரிய. 2-6-7, திருவாய் -9-4-3. (தே) 5-64-8,
கோழம்பம்,
கூழைப்பார்வை – கள்ளப்பார்வைபெரிய -9-6-3.
1185 கூழைமைசெய்கை-அவரவர்க்குத் தக்கபடி பரிமாறுகை.
பெரிய. 6-3-2,5.
1190
கூற்றுச் சொல்ல- திருவாய் -5-1-2.
கூற்றுத்தாய் – பெரிய. 3-9-4.
கூறை -ஆடை,பெரிய. 4-5-5.
கூறையுடை – பரியட்டத்தின் உடுப்பு- பெரிய -3-3-1.
கூனின் மேல் உண்டையோட்டியது – பெரிய -10-6-2.
திருவாய் – 1-5-5, திருச்சந் -49. கூனே சிதையவுண்டைவில் நிறத்தில் தெளித்தாய்.
கெருடர்கள். திருப்பள்ளி. 9.
கேசம்- தலைமயிர். பெரியாழ். 1-2-2-1. கேசரம் உளை மயிர் – பெரிய -2-8-1.
திருவாய் -1-5-5.
44
1195 கேட்.டேயும் – கேட்கும்போதே, கேட்டாலும் – பெரிய திருவந்-34.
கேடகம் – ஆயுதத்தைத் தடுப்பதற்குக் கையில் கொள்ளும்
முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி.
பெரியாழ்- 3-1-3, மணிமேகலை காதை – 27-185.
(ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த
பருப்பு என்று பொருள் செய்திருக்கின்றனர்’
” பயற்றது கும்மாயம்” நன். சூ 299, மயிலை மேற்)
குமரதண்டம் – சேனாசமூகம்- திருப்பள்ளி. 6.
1120 குமரி – கன்னி – பெரியாழ். 3-8-3.
குமுதம் – அல்லி. பெரிய, 4-2-6, 7-5-10.
குமுறுதல் – வாய்விட்டுச் சொல்லமாட்டாது உள்ளே
முறுகுதல் – திருவாய்.6-5-1.
குமைக்கும் – நலிகிற, வருந்தும். திருவாய். 6-9-9, 5-1-6, 7-1-1.
குயிற்பைதல்காள் – குயில்பிள்ளைகளே. திருவாய். 9-5-8.
1125 குரம்பை – குடிசை- பெரிய . 4-4-3.
குரவம் – ஒருவாசனை மரம்.
குரவிற்கொடி முல்லைகள் நின்றுறங்கும் – பெரியாழ். 3-5-11.
குரவை கோத்த குழகனை – திருவாய் 3-6-3.
குரவை கோத்ததும் – பெருமாள். 7-9, பெரிய. 7-8-8, 2-5-4,
திருவாய். 3-6-3.
குரவை பிணைந்து – குரவைக் கூத்தாடி – பெரிய -1-8-4, பெருமாள். 7-9. பெரியாழ்வார். 2-3-5.
1130 குரவையாச்சியரோடு கோத்ததும் திருவாய். 6-4-1. குராப்போது – மணம்மிக்க மலர் (பூசைக்குரியது) – இரண்டாம்திரு. 31. குருக்கள்குல மதலை குருவமிசத்துப் பிறந்து அருச்சனன்
பெரியதிரும. 56.
குருடன் திருதராட்டிரன் பெரிய. 2-3-6. குருந்தம் அசுரன் ஆவேசித்திருந்த ஒரு குருந்தமரம். முதல்திரு – 54, 62 நான் முகன்திரு. 57.
1135 குருத்தமொசித்து குருந்த மரத்தை முறித்து. பெரிய. 3-8-5. குருத்திடைக் கூறைபணியாய் – குருந்தமரத்தின் மேலுள்ள
ஆடைகளை தந்தருள்வாய் நாச்சி. 3-4. குருந்தொசித்த மூன்றாம்திரு. 32. குருமணி – சிறந்த இரத்தினம். பெரிய. 3-10-2. குலாகின்ற – வளைகிற. திருவிருத். 75
1140 குலை – கரை – பெருமாள். 10-7.
குழகன் – எல்லாரோடுங்கலந்திருப்பவன் – பெரியாழ். 1-4-5, பெருமாள். 7-7, திருவாய். 3-6-3
கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.1250கோடிமூடி எடுத்தல். பெரியாழ் -4-5-8.
கோடு – தந்தம், கரை,
கோணை – பிரயாசம், மிடுக்குக்கள் திருவாய் -2-5-10; 5-3-9.
கோத்துக்குரவை பிணைந்த – ராசக் கிரீடை செய்தருளின
பெரிய 1-8-4.
கோதா – கௌதுகலத்தைச் செய்பவனே – பெரிய -6-2-9.
1255கோது – சாரமற்றது – திருவிருத் – 26.
கோதுகுலமுடையபாவை – திருப்பா – 8.
கோ துகுலமுடைக்குட்டனே – எல்லாராலும் விரும்பத்தக்க
குணங்களையுடையவனே. பெரியாழ். 2 – 9-6.
கோமளம் – பேரழகு, மிருதுவான தன்மை திருவாய்.
7-2-7; பெரிய – 10-8-9.
கோமிறைசெய்து – அரசன் செய்யக்கடவ மிடுக்குகள்.
நாச்சி-10-7.
1260கோயில் – ஸ்ரீரங்கம் – திருநெடுந் – 22.
கோயிலினுள்ளேமன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
பெரிய – 4-3-8.
கோயின்மை – அநீதி, ஆராய்ச்சியில்லாத செயல். பெரிய – 8-
2 – 8; 11 – 1 – 4; 11 – 2 -3; திருவாய் – 6 – 2 -6.
கோரம்பு – தீம்பு- பெருமாள்.6-4.
கோல் கழிந்தான் மூலைபோல் – பெரியாழ் – 3 – 7 – 7.
1265கோல்துணையா – ஊன்றுகோலைச் சகாயமாகக் கொண்டு
பெரிய-1-3-1.
கோல் தும்பீ – பெரிய – 8 -4 – 1,10.
கோல்தேடியோடுங் கொழுந்தே போன்றது – இரண்டாம்
திரு- 27.
கோலாடி -ஆஞ்ஞை செல்லுமிடம் – பெரிய. 5 – 4 – 4.
கோவலப் பட்டம் கவித்து – இடைக்குலத்துத் தலைவி என்று
பட்டம் கட்டி. பெரியாழ். 3 – 8 – 7.
1270கோவலர் ஸ்ரீநந்தகோபர் – பெரியாழ். 1 -2 – 13, பெரிய-9-2-5.
கோவலூர் – பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும்
பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்த
திருப்பதி.திருநெடுந் – 17.
கோவாய் – நிர்வாகர்களாய் – பெரிய – 7-7-9.
(தே. 4 -96 – 1. சத்தி முற்றம் )
கோவி நாயகன் – கோபீஜன வல்லபன் – பெரிய – 2-1-4.
கோவைமணாட்டி நீ – கோவைக் கொடியாகிய மங்கையே.
நாச்சி- 10 – 3.1275கோவயின்றமிழ் பாடுவார் – பெரிய – 9-10-9.
கோழம்பம் – குழப்பம், கலக்கம் பெரியாழ் – 3 -4 – 5.
கோழி -உறையூர் – பெரிய -9-2-5.
கோழி கூவெனல்- பெரிய – 10 – 10-6.
கோழிமுட்டைக்குக் குறுந்தடியென் செய்வது. பெரிய. 10-9-7.
1280கோழியும் கூடலுங்கோயில் கொண்ட – பெரிய – 9-2-5.
கோள்- சிறை, கிரகம், குற்றம்,துன்பம்,கொள்கை.
பெரியாழ் – 5 – 1 – 3, 9.
கோளூர் – திருவாய்- 8-3-5.
இத்திருப்பதி ஆழ்வார் திருநகரியிலிருந்து ஒரு கல்
தொலைவில் உள்ளது. நவநிதிகள் இங்கே ஒளிந்து
கொண்டிருக்கின்றன என்று அதர்மம் குபேரனுக்குக் கோள்
சொல்லிய இடாமாதல் பற்றிக் கோளூர் என்று பெயர்
வந்தது என்பர். மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.
கோறம்பு – திலகம், குறம்பம் என்ற ஆபரணம்.
பெரியாழ்- 3 -4 – 6.
கோனேரி திருவேங்கட மலைமேல் உள்ள புஷ்கரிணி.
பெருமாள். 4 – 1.
1285கோனோக்கி வாழுங்குடி உவமை – பெருமாள். 5-3.
கௌத்துவம் – மணி . பெரியாழ் – 4 – 5 – 8.
சக்கரச் செல்வன் – திருவாழியாலே அழகுபெற்றவன்.
பெரிய -5-9-5.
சக்கரப் பொறி ஒற்றுதல் – பெரியாழ்-5 -4-1;
சக்கரபாணி. திருச்சந்.14.
திருப்பல்லாண்டு. 7.
1290 சகடம்-வண்டி-பெரியாழ் – 1 -2 11. சங்கத்தழகர் – திருவாய் – 2 – 10 -2.
சங்கையாகி சம்பந்தமுடையளாகி- பெரியாழ் – 3 – 7 – 3. சடகோபனறிந்துரைத்த – திருவாய் – 7-8-11.
சண்டம்- உக்கிரம் – திருச்சந் 67.
1295 சண்டாள சண்டாளர்கள் – திருவாய். 3-7-9. சண்ணம் – ஆண்குறி – பெரியாழ். 1 – 8- 10 சாத்தியங்காண்மின் – திருமா. 7. சத்துருக்கனன் – பெரிய – 2 – 3 – 7.
சதிரா – அத்தாட்சியாயிருக்கும் தன்மை – பெரியாழ் – 5 -4 – 1.
1300 சதிர்த்தேன் – சதிரையுடையேன் – கண்ணிநுண். 5 (தே) சதிர்வு 1 – 1 -7 பிரமபுரம்.
1330சாடுதல் – தள்ளி அழித்தல், அடித்தல் – பெரியாழ். 3 -1-3.
சாத்து-சமூகம், தீர்த்தயாத்திரைக்குச் செல்வோர் கூட்டம்.
பெரிய. 1-7-2.
சாத்தன் – பெரியாழ். 2 -9 – 8; சிறியதிரும. 17.
சாதித்தல்-கொல்லுதல் – திருவாய். 3 -5-5
சாதி மாணிக்கம் – திருவாய். 3-4-4.
1335சாதியந்தணர்கள் – திருமா. 43.
சாது ஜனங்கள் – திருவாய்- 3-5-4.
சாதுவராய் -நான்முகன்திரு – 68.
சாதுவாய் – திருவாய் – 3-1-6.
சாந்தினிற் பஞ்சமம் வைத்து – திருவாய் – 8-9-8.
1340சாந்தினிக்குப் புத்திரனை அழைத்தது – பெரியாழ். 4-8 – 1.
சாம்பவான் – பெரிய – 10 -2-9
சாம நிறத்தன் – திருவாய் – 9-5 -6.
சாமம்- சாமத்தினிறங்கொண்டதாடாளன் – நாச்சி – 8-2.
சாமத்திருமேனி -சியாமளமான சரீரம் – திருவாய். 8 – 5 – 1.
1345 சாமமாமேனியன் – நீலநிறத்தையுடைய சிறந்த
சரீரத்தையுடையவன் பெரிய. 9-1-1.
சாமரை கவரிமானின் மயிரால் அமைந்த அரச சின்னம் –
பெரிய. 3-8-3.
சாமவேதகீதன் சாமவேதத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டவன் –
திருச்சந். 14.
சாமவேதி – பெரிய. 5-5-9.
சாமவேதியன் -சாமவேதத்தை முதலில் அத்தியயனம்
செய்தற்கு உரிமை பெற்றவன் – பெரிய . 7 – 7-2.
1350சாமாறு பணி கண்டாய் – சரீர விச்லேஷத்தைப் பெறும்படி
பார்த்தருள வேணும். திருவாய். 4-9-1.
சாமியப்பன்- சிவன் – பெரிய. 2 – 2-7.
சாய்-ஆச்சரியப்படும்படியான அழகு. திருவாய். 8-2-1.
சாயை- தேஜஸ். ஒப்பு- பெரியாழ். 5-3-3.
சார்கொடான் – அணுக ஒட்டான். திருவாய். 1 -10-6.
1355சார்ங்க முதைத்த சரமழை- வில்லால்விடப்பட்ட அம்பு
மழை. திருப்பா. 4.
சாரிகைப்புள்ளர் – விரைந்த நடையையுடைய. திருவிருத்.19.
சாலகம்- பலகணி. பெரியாழ். 3-4-1.
சாலேகம்- சன்னல். பெரியதிரும. 31.
சாழலேதோழியே. – சாழல் – மகளிர் விளையாட்டில்
ஒன்று. திருவாசகம். சாழல். பெரிய. 11-5-1-10.
1360 சாளக்கிராமம். பெரிய. 1-5-1.10; 4-7-9; பெரியாழ். 2-9-5.
சாற்றிச் சொன்னேன் – வற்புறுத்திச் சொல்லுகிறேன்.
பெரியாழ். 2-2-5.
சாற்றினேன் தடம் பொங்க – பெரிய. 10-2-10.
சாறுபட -உற்சவமுண்டாக, (விழவுபட) திருவாய். 7-4-2.
சிக்கென- உறுதியாக . விரைவாக. பெரியாழ். 2-7-6, 4-1-2,
4-5-9, பெரிய. 1-1-5. திருவாய். 2-6-1, 10-2-3. (தே)
5-71-9 விசயமங்கை. 4-59.1. பருப்பதம்.
1365 சிங்கப்பிரான், நரசிங்கமூர்த்தி. திருவாய். 2-8-9.
பெரியாழ். 5-2-4.
சிங்கவேள் குன்றம் – அஹோபிலம். பெரிய. 1-7-1-10.
சிங்கம் உறங்கிவிழித்தல் உவமை. திருப்பா.23
சிங்காமை – சங்கோசியாமல். பெரிய. 10-6-1.
சிசுபாலன்- வசுதேவனுக்கு உடன்பிறந்தவளும் அதனால்
கண்ணனுக்கு அத்தையுமான சுருதசிரவை
என்பவளுடைய மகன். திருவாய். 7-5-3.
1370 சிசுபாலன் – தலையைச்சிரைத்திட்டது. பெரியாழ். 3-9-3.
சிணுங்கி- முக்கால முதல். பெரிய. 10-5-1.
சித்தர் – அஷ்டமாசித்தியடைந்தோர். திருப்பள்ளி. 9.
சித்திர குப்தன்- இயமராசனது கணக்கன். பெரியாழ். 5-2-2.
சித்திரகூடப்பொருப்பு – சித்திரகூடமலை. பெரியாழ். 2-6-7.
1375 சித்திரகூடம் – இராமன் வனவாச காலத்தில் தங்கியிருந்த
ஒரு மலை. பெரியாழ்.3-10-6; பெருமாள். 10-5.
சிதகு – கடுஞ்சொல், குற்றம். பெரியாழ். 4-8-4; 4-9-2.
சிதைகிய – உடைந்த. திருவாய். 4-1-1.
சிந்தாமணி – நினைத்த மாத்திரத்தில் விரும்பியவற்றைத்
தரக்கூடிய மணி. பெரிய. 1-10-9.
சிந்து பூமகிழும் திருவேங்கடம்- தூவினமலர்கள் அழகு
கெடாதிருக்கப்பெற்ற திருமலை. திருவாய். 3-3-2.
1380 சிந்துரம் நெற்றியிலணியும் பொடி. பெரியாழ். 3-4-6.
சிமயம் – சிகரம். திருவிருத். 31.
சிரமம் தீர்தல் – இளைப்பாறப்பெறுதல். பெரியாழ். 5-4-8.
சிரமப்பட்டோம்-கஷ்டப்பட்டுச் செய்தோம். நாச்சி. 2-3.
சிரீதரன் – திருமால். திருவாய். 2-7-9.
1385 சிரீதரன் மூர்த்தி திருவாய். 4-4-2.
சிரீவர மங்கல நகர் – திருவாய். 5-7-1-11.
சிரைத்திட்டான்-பெரியாழ். 3-9-3.
சிரைத்து அழித்து. பெரியாழ். 3-9-3.
சில்லி – சில்லெனல், சிள்வீடு.பெரிய. 1-7-9.
1390 சில்லென்றழையேன்மின் – சிலுகிடாதே அழையுங்கோள்.
திருப்பா.15.
சில்லென்றொல்லறாத – சில்லென்ற ஓசை மாறாத.
பெரிய. 1-7-9.
சில்லை – சிலுகுசெய்தல். திருவாய். 6-7-4.
சிலம்பாறு. பெரியாழ். 4-2-1; 4-3-9. நாச்சி. 9-10.
சிலம்பியலாறு சிலம்பு என்று கூறப்படுவது நூபுரகங்கை.
பெரிய. 9-9-9.
1395 சிலாதலம் – கற்பாறை. மூன்றாந்திரு. 58.
சிலிங்காரம் – சிருங்காரம். பெரியாழ். 3-4-9.
சிலுகு – சண்டை, கூச்சல். திருப்பா. 15. (வியாக்) சிலுப்பி- கையால் சிலிப்பித்து.பெரிய. 10-8-2.
சிலும்ப- முழங்க. பெரியதிரும. 69.
1400 சிலை – ஒளி. பெரிய. 3-9-4. (தே.1-116.3.பொது.)
சிவசாபம் தவிர்த்தது பிரமனால் சிவனுக்கு ஏற்பட்ட
பிரம்மஹத்தி சாபத்தைப் போக்கினது. பெரிய. 1-4-8. 1-5-8; 4-2-8; 6-9-1, திருச்சந். 42.
சிவப்பட்டார் – சைவர். நாச்சி. 6
சிவபெருமான் பங்கத்தாய் – சிவபிரானை வலது
52
பக்கத்திலுடையவனே. திருநெடுந். 9. சிவளிகைக்கச்சு – கட்டுங்கச்சு, பொன் எழுதினகச்சு.
பெரிய. 8-1-7.
1405 சிவன் ஆலநீழல் அறம்பகர்ந்தது – ஆலமரத்தின் நிழலிலே அகத்தியர், புலத்தியர் தக்ஷர், மார்க்கண்டேயர்
என்கிற நால்வருக்கு அறம் உரைத்தது முதல் திருவந்.4. சிவன்கூத்து வகை – பெரியதிரும. 68.71. சிவனுக்கு எழுபது மாடம் செங்கணான் செய்தது. பெரிய. 6-6-8.
சிற்ற- ஆயாசப்பட. திருவாய். 9-1-7. சிற்றங்சிறுகாலே- குளிர்போதில். திருப்பா. 29.
1410 சிற்றவை – சிறிய தாயார் பெருமா. 8-6. சிற்றாடை – சிறிய ஆடை. பெரியாழ். 3-3-5. சிற்றாதே -அசையாமல்.திருப்பா.11.
சிற்றாற்றங்கரையில் மூவாயிரவேதியர். திருவாய். 8-4-8.
சிற்றுதல்-ஆயாசப்படல். திருவாய். 9-1-7. திருப்பா . 11.
1415 சிறுக்கண் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-7.
சிறுக்கன்று – இளங்கன்று பெரியாழ். 2-6-3.
சிறுக்குட்டன் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-2; 3-3-5.
சிறுக்கை – சிறியகை. பெரியாழ். 1-4-2,7.
சிறுகால் நெறி – சிற்றடிவழி. பெரியாழ். 4-2-8.
1420 சிறுகாலே – விடியற்காலையில், திருப்பா. 29. பெரியாழ். 3-3-2.
சிறுச்சண்ணம் – சிறிய ஆண்குறி. பெரியாழ். 1-8-10
சிறுச் சிறிது கொஞ்சம் கொஞ்சமாக. திருப்பா. 22.
சிறுச் சேவகம்- பாலபராக்கிரமம்.திருவாய். 5-10-3.
சிறுத்தாம்பு – சிறிய கயிறு, கண்ணிநுண் 1.
1425 சிறுத்தேவி – பருவம் நிரம்பாதவள். திருவாய். 6-7-5.
சிறுதூதை – மண் முதலியவற்றால் இயன்ற சிறுகலம்
நாச்சி. 2.8.
சிறு தொண்டீர்- நீசர்களே. பெரிய. 7-9-3.
சிறுநோன்பியர் – அற்பவிரதங்களைக் கொண்டவர்.
சிறுப்பத்திரம் சிறியவாள். பெரியாழ். 3-3-5.
1430 சிறுபுலியூர்ச் சலசயனம் பெரிய. 7-9-1-10.
1435
சிறுபுறம் பேசுதல் – அற்பமான குற்றங்களை மறைவில்
சொல்லுதல்.
சிறு பேரழைத்தல் – சிறுபேர் நாராயண நாமம். திருப்பா. 25.
சிறுமனிசர் – அற்ப மனிதர். திருவாய் 1-5-8; 8-10-3.
சிறுமானிடவர் – நீச மனிதர்கள். நாச்சி. 12.4
சிறுமியின் நிலைமை பெரியாழ். 3-7-1-10.
சிறு வீடு – சிறுகாலையில் விடுதல். திருப்பா. 8.
சிறை- க்ஷயம். பெரிய. 11-8-7.
சின்மொழி – சிலபேச்சு.திருவிருத். 22.
சின்ன நறுந்தாது – சிறிய மணமுள்ள தாதுக்கள். பெரிய
திரும. 32.
1440சின்ன நறும்பூந்திகழ்வண்ணன் – சிறிய மணமிக்க பூப்போல்
விளங்குகின்ற நிறத்தையுடையவன். பெரியதிரும. 97.
சின்ன மலர்க்குழலும் – துகள்களையுடைய மலாகளை
அணிந்த கூந்தலையும். பெரிய திரும. 45.
சீடை – உருண்டை வடிவமுள்ள சிறு பண்ணிகாரவகை.
பெரியாழ். 2-9-9
சீதனையே. (ஸ்ரீதரனை) – குளிர்ந்த தன்மையுடையவன்.
சீதை- உழுபடைச்சால், நிலத்தை ஜனகமகாராசன்
யாகத்திற்காக உழும்பொழுது தோன்றியதால்
பிராட்டிக்குச் சீதை என்று பெயராயிற்று.
திருவாய்.4-2-8; பெரிய. 7-8-7. இரண்டாந்
திருவந். 15, பெரியாழ். 3-3-5.
1445சீமாலிகன் – கண்ணனுடைய தோழன். பெரியாழ். 2-7-8.
சீய்க்கை- திருவலகிடுகை. திருவாய். 10-2-7.
சீயம் – சிங்கம்.
சீரரசாண்டு – சிறப்பாக ராச்சியபரிபாலனம் செய்து.
திருவிருத்.80.
சீராம விண்ணகரம்-இத்திருப்பதி சோழநாட்டில் சீகாழியிலிருந்து அரை கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். பெரிய. 3-4-1-10.
1450 சீலைக்குதம்பை – சீலைத்தக்கை (காதுவளர்தற்பொருட்டு
இடுவது) பெரியாழ். 3-3-1.
சுக்கிரன் கண்ணைத்தர்ப்பத்தின் நுனியால் குத்தியது. பெரியாழ். 1-8-7.
சுக வெள்ளம் – இன்பக்கடல். திருவாய். 10-2-1. சுகிர்ந்திட்ட – கழித்திட்ட திருவாய் 7-7-9.
சுகிர்ந்து- பிளந்து மூன்றாந்திருவந். 95.
1455 சுட்டி – ஒரு நெற்றியணி. பெரியாம். 1-6- 1-7-10, பெருமாள் 7-5.
சுடரடி – தேவராசன் திருவடி. 1-1-1.
சுண்டாயம் விளையாட்டு,வஞ்சனை. திருவாய்.
6-2-1, 7-8-.7,8.
சுணங்கையெறிந்து – மயிர்கிளர்த்து திருவாய். 4-6-7.
சுணம் – சுணங்கு (சுண்ணம் முலைமேல் தோன்றும் நிற வேறுபாடு. பெரியாழ். 2-3-4.
1460சுந்தரத்தோளன் – அழகிய தோளையுடையவன். பெரியாழ். 1-3-6.
சுந்தரர் – கந்தருவர். திருப்பள்ளி.7.
சுந்தரன் – அழகன். நாச்சி. 9-10. சும்மெனாதே- மூச்சுவிடாதே. பெரியாழ். 5-4-3. சுமடு -சும்மாடு. திருவாய். 7-1-10.
1465 சுமந்திரன் – தசரதருக்கு மந்திரியும், சாரதியும் ஆனவர். பெருமாள்.9-7.
சுமாலி – விஷ்ணுவின் சக்கரத்தால் கொல்லப்பட்டவன். .
திருச்சந்த. 107.
சுரவி – பசு. திருவிருத்.73.
சுரிகை அணைத்து – உடைவாளைத் தரித்துக்கொண்டு.
பெரிய. 10-8-5.
சுரிகையும் தெறிவில்லும், செண்டுகோலும்
உடைவாளையும், சுண்டுவில்லையும், பூச்செண்டு
வில்லையும். பெரியாழ். 3-4-3.
1470சுரியேறுசங்கு- சுழித்தலையுடையசங்குட மூன்றாந்திரு.49.
சுருக்கே- சங்கிரகமாகச் சொல்லலாவது, திருவாய். 9-1-6.
சுருப்பு- சுரும்பு வண்டு. பெரியாழ். 1-3-21.
சுரும்பலற்றும் – வண்டுகள் ரீங்காரம் செய்தல்.
திருவாய். 10-2-1.
சுருள்பங்கி நேத்திரத்தாலணிந்து – சுருண்ட குழல்களைக்
கட்டி பீலிக்கண்களாலே அலங்கரித்துக் கொண்டு
பெரியாழ். 3-4-5.
1475சுலாய் – சுற்றி. திருவாய். 7-4-2.
சுலாவிநிற்றல் – சூழ்ந்து கொண்டு நின்று.
இரண்டாந்திருவந்.40.
சுவடு-அடையாளம். பெரியாழ். 4-1-4,7 திருச்சந். 41,
பெரிய திருவந்.8.
சுவேதன் – அர்ச்சுனன். நான்முகன்திரு. 24.
சுழலை – சூழ்வலை நாச்சி. 9-1.
1480 சுழலை – சுழன்று கழன்று வருகிற ஆறு. துன்பங்கள்
இவ்வுடலைச் சூழ்ந்து கொண்டிருப்பதனால் அவற்றைச்
சுழலாயாக உருவகப்படுத்தினார். பெரியாழ். 5-3-1.
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனன். ஆலோசனையுடைய
துரியோதனன். பெரியாழ். 1-8-5. ‘சூழலை’ என்பதன்
குறுக்கல் விகாரம். சூழல் – ஆலோசித்தல்.
சுளகு -முறம். நாச்சி. 2-8.
சுளை கொண்ட பலங்கனி – சுளைகளையுடைய
பலாப்பழம். பெரிய. 6-9-3.
சுற்றத்தவர் – உறவினர்கள். திருவாய். 9-1-1.
1485சுறவ நற்கொடிகள் – சுறாமீனையுடைய நற்கொடிகள்
நாச்சி. 1-4.
சுனை – தன் இடமானசுனை (மலையூற்று) திருவாய். 10-5-10.
சூடகம் – கைவளை. திருப்பா. 27.
சூடாமணி – தலையில் அணியும் இரத்தினம்.
பெரிய திரும. 77.
சூடிக்கொடுத்தாள். இராமாநுஜ. 66
1490 சூதகம் – தேமாமரம். பெரிய. 4-2-1:5-3-8.
சூது – உபாயம், காரணம். நான்முகன்திரு. 64; பெரிய
திருவந்.19; திருவாய். 2-10-10.
சூர் – பேய், தெய்வப்பெண். முதல்திருவந். 3.
சூர்ப்பணகா – இராவணனுடைய தங்கை. பெரிய
திரும. 145; பெரியாழ். 3-9-8.
சூரியமண்டலத்தினூடே செல்லல். பெரியாழ். 4-9-3;
பெரிய. திரும. 16,17.
1495சூலம் மாளிகையில் வைத்தல். பெரிய. 7-5-6; மாடத்துச்சி
மிசைச் சூலம். 3-9-4.
சூலிகை – சூலம். பெரிய. 8-3-3. (தே. சூளிகை 1-129-4. கழுமலம்
2-34-2. பழுபூர்; 3-92-10 நெல்வேலி; 2-50-1. ஆமாத்தூர்.
சூழ்தல் – ஆராய்தல், எண்ணல். திருவிருத். 81.
சூழ்போகி- கொல்லும் வகைகளை ஆராய்ந்து பெரியாழ். 4-3-3.
சூழல் – தந்திரம்,மணம், வட்ட வடிவமான பூமி, பெரியாழ்.
2-9-10; 4-1-4.
1500 சூழறும் ஆணையற்ற. நாச்சி. 2-7.
சூனியவாதர் நிரீசுவரவாதிகள், இராமாநுஜ. 99. செக்கஞ் செக – நினைவுகெட. திருவாய்.1-9-5
செக்கர் -சிவப்பு. திருவாசிரியம். 1; பெரியாழ். 1-7-2
செக்கிலிட்டுத் திரித்தல். திருவாய். 7-1-5.
1505 செக-போக. திருவாய். 1-9-5.
செகில்- சிவப்பு. திருவிருத்தம். 69.
செங்கண்மால் -திருமால், பெரியாழ். 3-8-4.
செங்கண்ணா. மூன்றாந்திரு. 47.
செங்கணான். பெரிய. 6-6-1,5.
1510 செங்கலங்கல் – சிவந்தவெள்ளம். பெரிய. 4-4-7. செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து – செங்கழுநீர்ப்பூக்கள் மலர. திருப்பா.14. சிலப். அந்திமாலைச் சிறப்புச்செய்காதை. அடி. 64. செங்களம் – சிவந்த யுத்த பூமி. திருவிருத். 77. செங்கற் பொடிக்கூறை காவியில் தோய்த்த ஆடை. திருப்பா. 14.
செங்கீரை – தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்தாடுவிப்பதொரு
நிருத்தவிசேடம். பெரியாழ். 15.110
1515 செங்குறிஞ்சித்தாரார் சிறிய திரும.16. செங்கோல் வலவன் – சோழன். பெரிய. 6-4-3.
செஞ்சொல்மாலை. பெரிய. 1-7-10.
செஞ்சொற்கவிகள். திருவாய். 10-7-1.
செஞ்சோற்றொடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்- சமணர். பெரிய 7-9-2
1520 செடியாக வல்வினைகள் -பாபம்.பெருமாள். 4-9.
செடியராக்கை- (சம்சாரமாகிற) பெருங்காடு நிறைந்த
சரீரசம்பந்தத்தை. திருவாய். 1-5-7.
செண்டன் – பூச்செண்டு. பெரிய. 4-8-3.
செண்டுகோல் பந்தடிக்கும் கோல்; நுனியில் பூக்கள்
வைத்துக்கட்டிய கோல்.பெரியாழ். 3 -4 – 3.
செண்டு சிலுப்பி- செண்டைக் கையிற்சலிப்பித்துக்கொண்டு.
பெரிய. 10-8-2.
1525 செந்தமிழ் பாடுவார்தாம் வணங்கும் தேவர். பெரிய. 2-8-2.
செந்தமிழ் மாலை. இரண்டாம்திரு. 13.
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் – அந்தணர்.
பெரிய 7-8-7.
செந்திறத்த தமிழோசை. திருநெடுந்.4.
செந்நெ இ – செவ்வனேநிறுத்தி. முதல்திருவந். 30,47.
திருவாய். 5-2-6.
1530 செந்நெல்கவரிவீசும்.திருவாய்.5-8-1; 7-3-6.செப்பம் –
செப்பம் – செவ்வை. திருவாய். 2- 9-1. திருப்பா. 20
செப்பாடு – செம்மையான குணம். பெரியாழ். 3-5-6.
செம்பாடு- செம்மண்தரை. பெருமாள். 10-2.
செம்பியன் கோச்செங்கணான் – ஓரரசன். இவன் ஈசற்கு
எழில்மாடம் எழுபது செய்தவன். பெரிய. 6-6-1.
1535 செம்பினாலியன்ற பாவை -செம்பினால் செய்யப்பட்ட
பிரதிமை. பெரிய. 1-6-4.
செம்பொன் செய்கோயில். பெரிய. 4-3-1,10
செம்பொன் இலங்குவாளி – விளங்குகின்றபொன்னால்
செய்யப்பப்பட்ட அம்பு பெரிய. 2-8-3.
செம்போத்துத் திருத்துதல். பெரிய. 10-10-1.
செம்மாது பிராட்டி. பெரியதிருவந். 7.
1540 செம்மாந்திரே – செவ்வனே. பெரியாழ். 3-8-5.
செம்மாபாத பற்பம் – செவ்விய சாமளமான பாதபத்மம்
திருவாய். 2-9-1.
செம்மாய் நிற்றல் – நேர்மையாய் நிற்றல். திருவாய். 9-6-6.
செம்மி- அடைத்து. மூன்றாந்திரு. 12.
செய்கிறுதி – செய்கிறாய். பெரியதிருவர். 83.
58
1545 செய்குன்றம் – செல்வமக்கள் விளையாடல் பொருட்டு
அமைக்கப்படும்கட்டுமலை. பெரிய. 5-1-4.
செய்தனகள் – செய்தவகைகள். பெரிய. 5-5-1-10.
செய்ந்நன்றி குன்றேன்மின் – செய்த நன்றியை மறவாதீர்கள்.
பெரிய. 1161.
சிலப். வரந்தருகாதை. அடி. 191.
செய்மிறை – செய்யுநடுக்கம். திருவாய்.7-5-8.
செய்யப் பெறாய் – செய்யாய் – பெரிய.10 -7 – 1 – 8.
1550 செய்வானின்றகளும் எதிர்காலத்திலுள்ள செயல்களும்.
திருவாய். 5-6-4.
செய்வினை – முற்பிறப்பில் செய்த கருமம் .திருவாய். 4-7-1. செருந்திப்பொழில் – சுரபுன்னைச்சோலை. திருநெடுந். 25. செருநுதல் போர்முகம். பெரிய. 11-4-6.
செல்சார்வு – அடைதற்குரிய இடம். திருவாய். 8-4-2.
1555 செல்லா நல்லிசையாய் அழியாத புகழையுடையவனே
பெரிய. 6-3-9.
செல்வக் கொழுந்து. பெரியாழ். 2-8-10. செல்வவிபீடணற்கு – அழியாத செல்வமாகிய
பக்தியுடைமைபற்றி செல்வ விபீடணன் என்று சிறப்பிக்கின்றார். பெரிய. 6-8-5. செல்வரிப்போதில்லை – உங்களுக்கு வேண்டியவற்றைச் கொடுக்கவல்ல செல்வர்கள் இல்லை. திருவாய். 3-9-6. செல்வன் – சிறந்த குணங்கள் பொருந்திய செல்வநம்பி பெரியாழ். 4-4-8 திருப்பல்.11.
1560செல்வு-செல்வம். பெரியாழ். 1-5-1; பெருமாள்.4-7. செலக்காண்கிற்பார் – முன்புபெற்ற ஞானம்போதாது என்று மேன்மேலும் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு காணவல்லார். திருவாய். 5-8-4. செவ்வி அழகு. திருப்பல். 1. செவிப்பூ – மகளிர் அணி. திருப்பா.27. செவியில் கட்டெறும்பு பிடித்திட்டு விளையாடுதல். பெரியாழ். 2-4-2.
1565 செற்றம் பகைமை, கோபம், பொறாமை, திருமா.30. செற்றலேறி – ஈமுட்டையிட்டு. பெரியாழ். 4-5-2.
செற்றார்- பகைவர். திருப்பா. 11.
செற – சீறிக்கோபிக்க பெரிய. 5-10-1.
செறுதல்- அழித்தல். பெரிய.
செறுப்பனாகில் – கோபித்துக்கொள்வேனாயின். நாச்சி. 12-9. (தே.) 1.134.4. பறியலூர்.
1570 செறுவாரு நட்பாகுவர் – பகைவரும் நண்பராவர்.
திருவிருத், 27.
சென்னி – நெற்றி. பெரியாழ். 3-6-3.
சே அதக்குதல் – கிட்டிகட்டி அடித்தல். பெரியாழ். 4-5-7 5-2-3.
சேக்கழுத்தின் மணிக்குரல் – இடபத்தின் கழுத்தில்
கட்டப்பட்டுள்ள மணிஒசை. பெரியாழ். 1-7-7.
சேட்டை- மூதேவி. திருமா. 10.
1575 சேடர் இளம்பருவமுள்ளவர். பெரிய. 9-2-2.
சேடார்பொழில்-இளமைபொருந்திய சோலை.
பெரிய. 6-8-4.
சேடு- சேண்.பெரிய. 3-3-1. (சேடு – கரை . தே.6.76-4.
திருப்புத்தூர்; 1-61-8. செங்காட்டங்குடி.
சேடேறுபொழில் இளமைபொருந்திய சோலை. பெரிய.
4-1-7.
சேது – திருவணை. நான்முகன்திரு. 28.
1580 சேது பந்தனந்திருத்தினாய் – அணை கட்டுதலை நன்றாகச் செய்தவனே.நாச்சி. 2-7.
சேமம்-எப்போதும் ரட்சகன். பெரிய. 6-5-10.
சேமம் செங்கோனருளே – நம்மைப் பாதுகாப்பது
எம்பெருமானது திருவருள். இ
திருவிருத்.27.
சேமவைப்பு – சேமித்து வைத்த தனம். இராமாநுஜ.22.
சேய். முருகன். பெரிய.
1585 சேர்கொடான் – அகப்படும்படி பண்ணான். பெரிய. 7-3-3. திருவாய். 2-7-3.
சேரிகையேறும்- ஊரில்பரவும். திருவிருத். 19.
சேவகங் கொள்ளுதல்- அடிமை கொள்ளுதல். பெரியாழ். 4-4-8. சேவகம்- வீரப்பாடு. திருப்பா. 24.
சேவகன்-வீரன். பெருமாள். 8-8; பெரியாழ். 5-4-4.
1590 சேவகனார் – பெருமாள். திருமா . 11.
சேவடி- சிவந்த பாதம். பெரியாழ். 5-4-7.
சேவையதக்கி – இடபங்களை அடக்கி. பெரியாழ். 5-2-3.
சேவியேன் – வணங்கமாட்டேன். திருமா. 35.
சேழுயர்ந்த மணிமாடம் – மிகவும் உயர்ந்த அழகிய
மாடங்கள். பெரிய. 4-4-9.
1595 சேறை-பஞ்ச ஸார க்ஷேத்திரம். சிறியதிரும. 72;
பெரியதிரும. 115; பெரிய. 7-4-1-10; 10-1-6.
சைவர் – சிவ தீட்சை பெற்றுச் சிவனைவழிபடுவர்.
இராமாநுஜ.99.
சொட்டுச் சொட்டெனல். பெரிய. 1-9-1.
60
சொட்டைநம்பி – ஆளவந்தார் குமாரர் மணக்கால் நம்பியை
ஆச்ரயித்தவர்.
சொப்பட – நன்றாக. பெரியாழ்.2-4-5.
1600 சொல்லாய் பைங்கிளியே. பெரிய 10-10-5.
சொன்மாலை இரண்டாந்திரு. 85; திருவாய்.9-4-5.
சோத்தம் – அஞ்சலி பண்ணுமவர்கள் அதற்கு அனுகூலமாகத்
தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு (பாசுரம்)
சப்தவிசேஷம். பெரியாழ். 2-3-4,5; தாழ்ந்தார்
சொல்லும் சொல். பெரிய. 2-3-6 8-10-6
சோத் தெம்பிரான். பெரியாழ் 2-4-5; பெரிய. 10-7-8; சோத்தென: பெரிய. 10-5-5.
சோத்து – சோத்தம். பெரிய. 9-5-9; 10-5-5.
சோதிவட்டங் கொல்முகம்-சோதிமண்டலமோ.
திருவாய். 7-7-8.
1605 சோதிவெள்ளம் – அழகுவெள்ளம். திருவாய் 5-5-10. சோப்பூண்டு- அடிபட்டு. பெரியாழ். 2-1-5. சோம்பர்-சோம்பேறிகளாய்த் திரிபவர்கள். சோம்பியிருப்பவர்கள். திருமா.38.
சோம்பாது – பின்வாங்காமல் பெரிய திருவந். 18.
1610 சோமு சோமயாகம். பெரிய. 2-10-1; 6-7-5. சோரேல் கண்டாய் – நழுவவிடாதே. திருவாய். 9-3-4,5. சோலுதல் – கவர்ந்து கொள்ளுதல். திருவிருத். 35.
சோலை – திருமாலிருஞ்சோலை. பெரிய. 4-9-23 மூன்றாந்திரு. 61.
சோழன் செங்கணான். பெரிய. 6-6-1-10.
1615 சோற்றை நாய்க்கிடுதல். திருமா. 14.
சோறு நியதமுமத்தாணிச் சேவகம், கையடைக்காய்,
கழுத்துக்குப்பூண், காதுக்குக் குண்டலம், சாந்தம்.
இவை அடியார்களுக்குக் கோயிலில் கிடைப்பவை.
திருப்பல் 8.
ஞானக்கை – ஞானமாகியகை. திருவாய். 2-9-2.
ஞானச்சுடர்விளக்கு – அறிவாகிய பிரகாசமான தீபம்.
இரண்டாந்திரு. 1.
ஞானத்தமிழ் – அறிவைக் கொடுக்கக்கூடிய திருவந்தாதிப்
பிரபந்தம். இரண்டாம்திரு 1.
1620 ஞானமேபடை -அறிவே கருவி. திருவாய். 3-1-9.
ஞானப்பிரான் – அறிவைக் கொடுக்கும் எம்பெருமான்.
திருவிருத். 99.
ஞானமும் முடமும் அறிவும் அறிவில்லாமையும். திருவாய்.
6-4-3.
ஞானிக்கும் அறிவாளிக்கும். திருவாய். 4-1-10.
தக்கணை தணை. பெரியாழ். 4-8-1. 4-9-5. பெரிய. 11-7-2.
1625 தகவிலி – ஈரநெஞ்சில்லாதவன். பெரிய. 10-2-3.
தகளி – அகல். முதல்திருவந். 1; இரண்டாந்திரு 1.
தசக்கீரீவற்கிளையோன் – இராவணன் தம்பி. விபீஷணன்
பெரிய. 8-6-7.
தசாவதாரம் – பத்து அவதாரம். பெரிய. 11-4-1. 10.
தஞ்சுடையாளர் – தஞ்சமாகவுடையவர். பெரிய. 9-2-6.
1630 தஞ்சை – தஞ்சை மாமணிக்கோயில். இரண்டாந்திரு. 70
தஞ்சையாளி – தஞ்சை மாமணிக் கோயிலை ஆள்பவன்.
பெரிய. 7-3-9.
தட்ட- அடைத்த, தடுத்த. பெரிய. 8-9-3.
தட்டு – இதழ். பெரிய. 7-3-6.
தட்டுளுப்பு – தடுமாற்றம். பெரியாழ். 3-7-3. (திருவாசகம்
திருத்தோணோக்கம். 6.)
1635 தட்டொளி – கண்ணாடி. திருப்பா.20.
தடம் பொங்கத் தம் பொங்கோ- ஐய சூசகவாத்தியத்தின்
சப்தாநு ராகம். பெரிய. 10-2-1.
தடவந்து – பரிசித்த. பெரிய. 8-5-1.
தடவிற்று- பரிசித்தது. திருவிருத். 56.
தடா- ஒருவகை நவபாண்டம். நாச்சி. 3-6.
1640 தடாவிய – பரந்த, மூன்றாந்திரு.75; வளைந்த. திருவிருத்.6
தடாவியதே – கோடியது. திருவிருத். 5.
தடித்தல் – பெருத்தல். பெரிய. 2-1-6.
தடிப்ப- துடிப்ப. பெரிய. 10-5-2.
தடிபிணக்கு – தடிக்கொண்டு பிணங்கும்படியாகும். திருவாய்.
6-2-7.
1645 தடு குட்டமாய் -தலைகீழாய். திருவாய். 3-5-3.
தண்கடல் வட்டம் – குளிர்ந்த கடலால் சூழப்பட்ட
பூமண்டலம்.திருவாய். 3-5-1,2.
தண்கால். திருநெடுந்.17; இரண்டாந்திரு.70; சிறியதிரும. 71 )
பெரியதிரும. 120
தண்டகாரணியம் – தக்கணதேசத்தில் துறவிகள் வசித்துவந்த
ஒருவனம். பெரிய. 10-2-3.
தண்டம்- சேனை, தண்டனை. திருப்பள்ளி. 6. பெரிய.
11-1-2,7.
1650 தண்டவரக்கன் – இராவணன். நான்முகன்திரு. 44.
தண்டு காலாவூன்றி – தடியைக் காலாகக் கொண்டு ஊன்றி.
பெரிய. 1-3-5.
தண்ணாவது – தாமதியாமல். திருவாய். 4-9-1.
தண்ணுமை – மத்தளம், வேறுவேறு. திருப்பள்ளி. 9. தண்ணெனவு – மென்மைத் தன்மை. பெரியாழ். 4-10-6.
1655 தணர்தல் – பிரிதல். பெரிய. 9-3-5.
தணிகிடாய் – தணித்துக்கொள். நாச்சி 2-2.
தத்து – ஸ்வீகாரம் பெரியாழ் 2-1-7. தத்துவப்பாடல்கள் – திருவாய். 8-8-5,9. தத்துவமன்று தகவு – தகவு அன்று தத்துவம் – நீ இப்படி இருப்பது உனக்குத் தகுதி அன்று,
இஃது உண்மை. திருப்பா. 19.
1660 தத்துவமிலி-உண்மை இல்லாதவன்.நாச்சி. 1-3. தத்துவன் – எனது தன்மை உள்ளவன். நாச்சி. 5-6. தத்துறல் – கிட்டுதல். பெரியாழ். 5-1-7. தத்துறுமாகில் கிட்டுமாகில். பெரியாழ். 5-1-6. ததர்கை – நெரிகை. திருவாய். 7-4-5.
1670 தகர்த்தாதே – நோவு படுத்தாதே.நாச்சி. 5-10.
ததைத்துக் கொண்டு- நெருங்கிக்கொண்டு. நாச்சி. 10-8.
தந்தச்சீப்பு- தந்தத்தினால் செய்த சீப்பு. பெரியாழ். 2-5-8.
தந்தம் மக்கள் – தங்கள் தங்களுடைய பிள்ளைகள்.
பெரியாழ். 2-2-3.
தந்துவன்-தந்து – கொணர்ந்து. உவன் – நடுத்தரமாய்
இருப்பவன். பெரியாழ். 1 – 3 – 3.
1675 தந்தை காலில் பெரு விலங்கு – பெரிய. 7-5 – 1.
தம்பகமாய் – புதராய். பெருமாள். 4-5.
தம்பர மல்லன – தம்மால் தாங்க முடியாதவற்றை
பெரிய. 10-7-13.
தம்மன்னை – தாய். பெரியாழ். 4 -5 – 1 – 9.
தம்மனை- தாய். பெரியாழ். 1 – 5-3.
1680 தம்மையுகப்பாரைத் தாமுகப்பர் என்னுஞ் சொல்
கொண்டாடுவர் – ஒரு பழமொழி. நாச்சி. 11 – 10.
தமப்பன்மார் – தகப்பன்மார். பெரியாழ். 3-1- 9.
தமர் – உறவினர். திருவாய். 4-6-6.
தமருகந்த தெவ்வுருவம் ஆச்ரிதர்களால் விரும்பப்பட்ட
உருவம் எதுவோ. முதல் திருவந் 44.
தமனகம் -தவனம். பெரியாழ். 2-7 – 3.
1685தமியாட்டி – தனிமையையுடையவள். திருவிருத். 73
தமிழ்த் தலைவன் – இராமாநுஜ.10.
தமிழ் நல்மாலை- தமிழ்மொழியினால் ஆகிய நல்ல சொல்
மாலைகள். இரண்டாம் திரு. 74.
தமிழ் நன்னூற்றுறைகள் அஞ்சு. பெரிய. தனியன்.
தமிழரிசைகாரர் பத்தர், திருவாய்.1 -5 – 11.
1690 தமிழொரு மூன்று முணர்ந்தவன். இராமாநுஜ. 44 தமிழோசை வட சொல்லாகி – தமிழ் வேதத்தாலும்,
வடமொழி வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன்.
திருநெடுந். 4.
தயங்குதல் – அசைதல். பெரிய. 8 – 5 – 4.
தரணி – பூமி. பெரியதிரும. 136.
தரு- மரம். திருவாய். 9- 8 – 8.
1695தருக்கு – அகங்காரம், ஹிம்சை. பெரிய. 2 – 1 – 7.
தருக்குகை வருத்துகை, சுளிக்கை. பெரியதிருவந். 22.
தருமன்- யமன். முதல் திருவந். 67.
தலைக் கணத்துக்கட்குழம்பு. திருச்சந். 16.
தலைச்சங்கம் – தலைச்சங்காடு; (தலைச் சங்க
மேற்றிசையுள்) பெரிய. 8 -9- 9.
1700 தலைச் சிரைத்து வாழ்தல் – திருவாசலிலே காவலாளராக
இருந்து வாழ்தல். திருமா. 38.
தலை நிலாப்போது – குழந்தைப் பருவம். பெரியாழ். 2 – 3-7.
தலைப்பழியெய்தல் – பெரும் நிந்தைகளைப் பெறுதல்.
நாச்சி 12,9
தலைப்புகழ் – சிறந்த புகழ். நாச்சி. 1 – 7.
தலைப் பெய்திடல் – சேர்ந்துவிடல். பெரியாழ். 5 – 3 -5.
1705 தலை மறிதல் நீங்கல். நாச்சி. 12.2.
தலையல்லாற் கைம்மாறில்லேனே – நாச்சி. 5 – 6.
தலைவன்பொற்படந்தலைவிக்குத் தந்துபோதல். பெரிய. 9-5-9.
தலைவிளாக்கொள்ளுதல் – முழுதும் வியாபித்தல் திருமா. 35.
தவராசா – மகா தபஸ்வியே. பெரிய தனியன்.
1710 தவளப் பொடி கொண்டு – சுத்தமான தூளி கொண்டு
திருவாய். 4-6 – 5.
தவிவு- விச்சேதம். திருவாய். 3 – 4-4.
தழல் மூன்று நால்வேதம். பெரிய. 4 – 2 – 2.
த இக் கோளியார் – தழுவிக்கொண்டவர். திருவாய். 4 – 2-5. தழுத் தொழிந்தேன் – தழுதழுக்கும் படியானேன்.
பெரிய. 1-1 5,
தழுவி முழுசி – முழுவித்தழுவி. நாச்சி. 13 – 5.
1715 தழை – தொங்கல், பீலிக்குடை விசேஷங்கள். பெரியாழ். 3-4-1. தழை – திரள். திருவாய்.7-7-9.
தழைக்கா – குடையாகிற சோலை.
பெரியாழ். 1 – 9-5; 3-4-6, 7. தழைகள் – மயில் தோகைக் குடைகள். பெரியாழ். 3 -4 -5. தள்ளம் பாறி தடுமாறி. பெரியாழ். 1-7-10 (உரை).
1720 தளர் நடை-காலூன்றி நடக்கும் பருவம், அன்றிக்கே. நடக்கின்ற தசை ஆகையாலே தள்ளம்பாறி நடக்கும் நடை. பெரியாழ். 1 – 7-10. தளர் நடையிடுதல். பெருமாள். 6 – 4.
தளைக் காலன் – விலங்கு பூட்டப்பட்ட
கால்களையுடையவன். சிறியதிரும. 67. தற்பு – தத்துவம், யதார்த்தம். நான்முகன் திருவந். 76.
1725 தன் தாமமேவியது (இராமன்) பெருமாள் . 10-10.
தன் பேரிட்டு – கோவர்த்தனன் என்ற தனது பெயரை
மலைக்கு வைத்து. பெரியாழ். 3-5-9.
தன்ம பாவம்-தருமமும், பாவமும். திருவாய். 6 -2-7.
தன்னடியார் மனத்தென்றும் தேனாகியமுதாகித்
திகழ்ந்தானை. பெரிய. 5 -6 – 3.
தன்னானார்- தன்னைப் போன்றவர். திருவாய். 8 – 4-9.
1730 தன்னுடைச் சோதி – தன்னுடைய விக்கிரகம். திருவாய். 3 – 10 -5.
தனஞ்செயன் – அருச்சுனன். பெரியாழ். 1 -9-4.
தனிக் காளை – ஒப்பற்ற யுவாவான கண்ணன்.
பெரியாழ். 4 – 3 – 4.
தாசரதி – இராமபிரான். (தத்திதாந்த நாமம் ) பெரிய. 8 -4-1-10.
தாடகை – சுகேதுவின் பெண், சுந்தனுடைய மனைவி.
விசுவாமித்திரர் ஏவலால் இராமன் இவளைக்
கொன்றான். பெரிய. 9-8 – 4; பெருமாள். 10-2.
1735 தாடாளன் – மேன்மையுடையவன். பெரிய. 3 – 4-1; 6-10-2;
77-6. நாச்சி. 8 -2.
தாபதர் – இருடிகள்
தாமம் -ஸ்தானம். திருவாய். 6-4.10; பெருமாள். 10 10.
தாய் – தாவி.திருவாய். 6 – 9 – 6.
தாய்சொல்லுக் கொள்வது தருமங் கண்டாய்.
பெரியாழ். 2 – 9 – 8.
1740 தாய் நாடு கன்றேபோல் (உவமை) முதல் திருவந்.3 .
தாய் மனத்திரங்கி – தாய் போல மனமிரங்கி. பெரிய. 4 – 3 – 5.
தாயப் பதி-பழமையாய் இருக்கின்ற ஸ்தானங்கள்.
திருவாய். 8-6-9.
தாயம்-பங்கு. பெரியாழ். 3 – 1 – 7.
தாயர்வாய்ச்சொல் – தேவகியின் வாய்ச்சொல்.
தாயிருக்க
பெரியாழ் 2-2-5.
மணை நீராட்டுதல் – பெற்ற தாய்க்கு ஒரு
உபசாரமும் பண்ணாமல் அறிவற்ற மணைக் கட்டைக்கு
உபசாரம் செய்தல். பெரிய. 11 – 6 – 6, திருவாசி. 6.
1745 தாயைக் குடர் விளக்கஞ் செய்தல். திருப்பா.5.
தாயோன் -தாவியவன், தாயானவன். திருவாய். 1-5-3.
தார்க்கிளந் தம்பிக்கு – பரதன். பெரியாழ். 3-9-8.
தாரகை – பூமி. நான்முகன் திரு. 57.
தாரா – ஒரு பறவை. பெரிய 1 – 5 – 4; 10; 9-6-8.
750 தாரா கணம் – நக்ஷத்திரக் கூட்டம் நாச்சி. 14 – 7.
தாராயினும் வேராயினும் வீசுமினே. திருவிருத்53.
தாரித்து – தரித்து; நீண்டு கிடக்கிறது.
பெரியாழ். 1 – 6 – 6; 2-3-10.
தாலேலோ – ‘தாலேலோ தாலேலோ’ என்றது குழந்தையைத்
தாலாட்டுவார் கூறும் ஒருவகை வாய்பாடு.
தால்-நா. பெரியாழ் 1 – 3 – 1 – 10; பெருமாள் 8.
தாலொலித்திடும் – தாலாட்டும். பெருமாள். 7-1.
1755 தாவடியிடல் – தாவியடியிடல். பெரியாழ். 2 – 10 – 7.
தாவளந்துலகம் -தாவித்திரிந்து. பெரிய. -6-1.
தாழ் சடையும்- தாழக்கட்டின சடை. மூன்றாம்திருவந். 63.
தாழ்வர் – பரிபந்தம். பெரிய. 9-3-2.
தாழ் பீலி-வாத்தி வகை. பெரியாழ் 3 -4-1.
1760 தாழம் – தாழ்த்தல், தாழ்ச்சி. பெரிய. 10 -2-7.
தாள் கொளுவி – பூட்டைத் தொடுத்து. மூன்றாந்திருவந். 12.
தாளால் உலகமளந்த வசைபு. திருவாய். 8 – 3-5.
தாளும் தடக்கையும்- கால்களையும், கைகளையும்.
திருவாய்.3-7-2.
தாறு – அளவு; ரேகை. பெரிய திருவந்.31.
66
1765 தன்றாம் மேவி -பரமபதத்திற்குச் சென்று. பெருமாள். 10 – 10.
தான் – ஸ்வரூப நிரூபணம். திருவாய்.107-1.
தானத்தே வைத்தல் – இருந்த இடத்தில் வைத்தல்.
பெரியாழ். 2 – 10 – 9.
தானவன் – அரக்கன். பெரிய. 2 – 2 – 2.
தானாக நினையானேல் – அவன் தானாக என்னை
நினைக்கா விட்டாலும்.பெரிய.8-7-7.
1770 திங்கள் சிறை விடுத்து – சந்திரனை ரோகமாகிய
சிறையிலிருந்து விடுவித்து. பெரிய. 11 – 8 -7. திங்களம் பிள்ளை – பிறைச் சந்திரனாகிய அழகிய பிள்ளை. திருவிருத். 77.
திங்களைக் கோள் விடுத்து – சந்திரனுடைய ஓளியை
விரித்து. திருவாய். 4-6-2. திசைக்கும் – அறிவழியா நிற்பள். திருவாய்.5 -5-3. திசைப்ப- திகைப்ப, அறிவு கெடும்படி. பெரிய. 2 – 9-5, 3 – 9 – 2,5-7 – 4, 7 – 8 – 2, 11 – 4 -8.
1775 திசை முகனனைய மறையோர் – பிரமனைப் போன்ற
அந்தணர்கள். திருவாய். 7-2-3.
திட் கொடி – அவிழ்த்துக் கட்டாத கொடி. திருவாய்7 – 2-3.
திடரே -ஸ்திரப்பட்டவர். திருவாய். 1 – 1 – 6.
திண்டிறலார் – மிக்க பலசாலிகள். பெரிய. 4-1 -5
திண்ணம்- திருடம். பெரியாழ். 41-9, பெரிய. 8 – 2 – 2.
திண்ணார் மதிள் – வலிமைபொருந்திய மதில். பெரிய. 4 – 7 – 1.
1780 திண்ணார் மாடங்கள் -வலிமை மிக்க மாடிவீடுகள்.
பெரிய. 1-9- 1:0. தே. 1.64.11. பூவணம்.
திண்ணெவு – வலிமை. பெரிய. திரும. 146.
திண்ணை – மேட்டிடம். பெரியாழ். 1-7-2.
திணர்த்த வண்டல்கள் – இறுகலையுடைத்தான திருவாய்.6-1-5.
திணரார் மேகம் – திண்மை மிக்க மேகங்கள் திருவாய். 6-10-5.
1785திணிம்பு – செறிவு. திருவிருத். 72.
திரி காதுக் கிடுதல் – நூல்திரியைக் காதுக் கிடுதல்.
காதுகுத்தி நூல்திரியை இட்டுக்காதின்
துளை பெரிதான பின்பு காதணி இடுதல்
பெரியாழ். 2 – 3 – 2 -, 5.
திரிசுடர் சூழும் மலை- இடைவிடாது சஞ்சரிக்கின்ற சந்திர
சூரியர்கள் பிரதணம் பண்ணுகின்ற
மலை. பெரியாழ். 4-3-8.
திரிதர்வேன் – திரிந்து கொண்டிருந்தேன். பெரிய. 1 – 1-8.
திரி மூர்த்தி- மும் மூர்த்திகள் (பிரமன், விஷ்ணு, ருத்திரன்
பெரிய. 2-10 – 1.
1790திரி விக்கிரமன் – திருமால். பெரிய, 9 -9-5. திருவாய். 2-7-7.
திருக்கடித்தானம் – அம்பலப்புழாவிலிருந்து 23 கல்
தொலையில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 8 – 6 – 1.
திருக்கண்ணங் குடி இத்திருப்பதி கீவளுர் இரயில்
நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது.
இத்தலத்தைப் பற்றி, தீரா வழக்கு திருக்கண்ணங்குடி’
என்ற பழமொழி உண்டு. பெரிய. 9-1 – 1.
இத்திருப்பதி திருவாருக்கு நான்கு கல் தொலைவில்
உள்ளது.
திருக்காலாண்ட பெருமானே – திருவடியைக் காரியம்
கொண்ட. திருவாய். 6 – 9 – 4.
1795திருக் குடந்தை – இது சோழ நாட்டுத் தலம்.
திருவாய். 5 – 8 – 1 – 10.
திருக்குருகூர் – இத்திருப்பதி ஆழ்வார் திருநகரி இரயில்
நிலையத்தின் அருகில் உள்ளது.
திருவாய். 4-10 – 1 – 10.1
திருக்குறளன் -ஸ்ரீவாமனன். திருவாய். 9-8 -10 – 3.
திருக்கூடல் கூட இழைப்பன் – சகுனம் பார்க்கும் வகையில்
இஃது ஒருவகை . நான்முகன்திரு.
(திருக்கோவையார் செ.186)
திருக்கோட்டி -பாண்டி நாட்டுத் திருப்புத்தூருக்கு,
21 கல் தொலைவில் உள்ளது. இரண்டாந்திரு.46,87
1800 திருக் கோவலூர் -இத்திருப்பதி திருக்கோயிலூர்
நிலையத்திற்கு மேற்கே2 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 2-10-10.
திருக்கோவலூரில் துர்க்கை வாழ்தல் பெரிய 2.10.6.;
திருநெடுந்.7.
திருச் சாழல் – பெரிய. 10 -5 – 1 – 10.
திருச்சிற்றாறு – திருச்செங்குன்றூரிலுள்ள ஒரு நதி
திருவாய். 8-4 – 10.
திருத் தண்கால் – இது ஸ்ரீ வில்லி புத்தூருக்கு அருகில்
உள்ளது. தண்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று
பொருள். சீதவாதபுரம் என்பர். பெரிய; 5 6-2.
1805 திருத்தன் – திருப்தியாக இருப்பவன். பெரிய: 7-10 – 7.
திருத்தாய் – நீ திருத்த வேண்டும். பெரிய. 10-10-1.
திருத்திப் பணி கொள்ளல் – விரோதிகளைத் திருத்தி அடிமை
கொள்ளுதல். திருவாய். 3 -5 – 11. திருத்தெற்றியம்பலம் – திருநாங்கூரின் ஒரு பகுதியாகிய
திருத்தெற்றியம்பலம் என்னும் திருப்பதி.
பெரிய. 4-4 – 1 – 10.
திரு நறையூர் – நாச்சியார் கோவில்.
பெரிய. 6 – 3-3: 6-4 – 1 – 10: 7-4 – 1 – 10; 7- 1 – 3,
பெரியதிரும. 73; திருநெடுந். 16.
1810திரு நாம மிடுதல் ஊர்த்துவ புண்ட்ரம் இடுதல், பெரியாழ். 3 -4-8. திருநாமம் எட்டெழுத்து – “ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டர்ட்ச மந்திரம். பெரிய : 1 – 8 – 9. திருநாவாய்- இது செறு வண்ணூர் கள்ளிக் கோட்டை இரயில் பாதையில் திருநாவாய் நிலையத்திற்குத் தெற்கே பாரத் புழை என்ற ஆற்றங்கரையிலுள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்: 9 – 8 – 1 – 10. திருநின்ற பக்கந்திறவிது – திருமகள் இருக்கின்ற வலப்பக்கமே சிறந்தது. நான்முகன்திரு. 62. திருநீர் மலை- நீரானது அரண்போலச் சூழப்பெற்ற
மலையாதல் பற்றி இது திருநீர்மலை என்றாயிற்று. பெரிய: 5-8 – 2, 6-8 -4.
1815 திருப்பாதகேசம்- வடசொல் தொடர். பெரியாழ்.1 – 2 – 21
திருப்புகழ்கள் – கீர்த்திகள் பெருமாள். 1 -9.
திருமணி கூடம் – இத்திருப்பதி சீகாழிக்கு ஐந்துக்கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
பெரிய. 4-5-1-10.
திருமல்லி நாடி – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த நாடு.
நாச்சி தனியன்.
திருமலை – திருப்பதி. திருக்குறுந்: 7,மூன்றாம் திரு. 62.
1820 திருமழிசை- திருமழிசைப்பிரான் அவதரித்த தலம்.
திருச்சந் – தனியன்.
திருமறு மார்வன் – பிராட்டியையும், ஸ்ரீவத்ஸம் என்னும்
மறுவையும் உடைய மார்பன். திருவாய்: 3 – 4 – 3.
திருமாலிருஞ்சோலை – நாச்சி. 9-1,3,5.
பெரிய. 7-3-67-979-9-1-10; 11 – 7-9.
திருமூழிக்களம் – எர்ணாகுளம் செறு வண்ணூர் இரயில்
பாதையில் கருக்கட்டி நிலையத்திற்கு நான்கு
கல் தொலைவில் உள்ளது. பெரிய. 7-1-6
திருநெடுந்.10.
திருமெய்யம் – சத்யகிரி என்ற சொல்லேதிருமெய்யமலை
என்றும், அத்திருப்பதி திருமெய்யம் என்றும்
வழங்கப்பெறும் எம்பெருமான் பெயர்
சத்தியகிரிநாதர் பெரிய. 3 – 6 – 9, பெரிய திரும. 126.
1825 திருமோகூர் – இத்தலம் மதுரைக்கு 7 கல் தொலைவில்
உள்ளது.வடமொழியில் மோகனபுரம் எனப்படும்.
இறைவன் பால் மோகத்தை (பக்தி) அருளும் ஊர்
என்பது மோகூர் ஆயிற்று. சிறிய திரும. 74.
திருவடி – சுவமி. திருவாய். 4-9-11, 7- 5 – 3, 8 – 4 – 7,
10-3-7, நான்முகன்திரு. 68. இரண்டாம் திரு. 87.
திருவடி பிடித்தல் – திருவாய். 9-2-10.
திருவயிந்திர புரம் – அஹீந்திரன் என்னும் அநந்தாழ்வான்
பூசித்த தலமாதல் பற்றி இதற்கு அயிந்திரபுரம்
என்னும் பெயர், பெரிய. 3 – 1 – 1 – 10.
1830 திருவரங்கம் – ‘ரங்கம்’ என்று விமானத்திற்குப் பெயர்.
அதுவே ல ணையால் திவ்யதேசத்திற்குத்
திருநாமமாயிற்று. முதி.6,மூதி. 62, தி. சூ 7,
திநெ 11, 23, பெரியாழ். 4 – 9 – 10,
பெரிய. 5-5-4-65-8-1 – 10.
திருவரங்கத்தமுது – இராமாநுஜ தனி.
திருவரங்கர் பள்ளி கொண்ட நிலை – திருமா. 19.
திருவல்லவாழ் – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 5-9 – 1 – 10
திருவல்லிக்கேணி – இத்தலப் புஷ்கரணி அல்லிமலர்
நிறையப் பெற்றதனால் திருவல்லிக்கேணி
என்று பெயர் பெறும். தீர்த்தத்தின் பெயரே
தலத்திற்குப் பெயராயிற்று. மூன்றாம்திரு. 16.
1835 திருவழுந்தூர் -சோழநாட்டில் மயிலாடுதுறையை
அடுத்துள்ளது. கம்பர் பிறந்த ஊர்.
தேவாரப்பாடல் பெற்ற தலம். சிறிய திரும 12.
திருவன்- அழகள் இரண்டாம் திரு. 84
திருவாகாரம் – திருமகள் இருக்கு மிருப்பு. பெரிய 4 -4 – 8.
திருவாய் கருப்பூர நாறுதல் – பெரியாழ் 1 – 5-9.
திருவாலியிருந்தான். – திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று
வீற்றிருக்கிற திருக்கோலம்.
1840 திருவாழ் மார்பன் – திருமகள் இருந்து வாழப்பெற்ற
திருமார்பையுடையவன். பெரிய. 7-6 -7.
திருவாளன் – திருமால் பெரிய 5-5-1,6-9-1.
திருவாறன்விளை – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 37
கல் தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்.7 10 – 1 – 10.
திரு விண்ணகர் (விஷ்ணு நகர் விண்ணகர்) இப்பதி சோழநாட்டில் திருநாகேசுவரம் இரயில் நிலையத்திலிருந்து
ஒரு கல் தொலைவில் உள்ளது. பெரிய 6 – 2 – 1 – 10,6-3 –
1-10, திருவாய், 6 – 3-1-11.
1845 திருவில்லாத்தேவரைத் தேறேன் மின் – நான்முகன்திரு – 53. திருவுக்குந் திருவாகிய செல்வா- பெரிய 7-7-1.
திருவுடை மன்னர்- செல்வத்தையுடைய அரசர்கள் திருவாய்4 – 4 — 8.
திருவுறுக – திருமேனி அழகு விளங்கட்டும். பெரியதிரும.46. திருவெட்டெழுத்து – ஓம் நமோநாராயணாய. பெரிய. 8-10-3.
1850 திருவெவ்வுள் திருமால் சாலிஹோத்திர மகரிஷிக்குப்
பிரத்யக்ஷமாகி உறைதற்குரிய உள் ‘எவ்வுள்’
என வினவியதனால் திருவெவ்வுள் என்று பெயராயிற்று. நான்முகன்திரு. 36.
திருவெள்ளக்குளம் – இப்பதி சீர்காழியை அடுத்து நான்குகல்
தொலைவில் உள்ளது.நின்ற
திருக்கோலம்.பெரிய 4 -7 – 1 – 10.
திருவேங்கடத்தான் – திருமலையில் உள்ளவன். பெரிய. 6 – 8-1.
திருவேங்கடப் பொருப்பர். திருமலையில் உள்ள பெருமாள்.
பெரிய.5-3-4.
திருவேங்கடம் – அழிவற்ற ஐசுவரியம். பெரிய 1 -8 – 1 – 10,
1-9-1 – 10, 4 – 7 – 5, திருவாய். 2-6-9, 6-
10, பெரியாழ் 2 – 7-2, 5 -4 1, பெருமாள்
4 – 2. சிறியதிரும் 67, முதல் திருவந். 76,77.
1855 திருவோணத்தான் – சிரவண நட்சத்திரத்தில் அவதரித்தவன்
பெரிய. 1-1-3.
திருவோணத்திரு விழவு – சிரவண நட்சத்திரத் திருநாள்.
திருப்பல். 6, 9.
திருவோணத்தில் மங்கையரை முளையட்டிப் பல்லாண்டு
கூறுவித்தல். பெரியாழ். 3 – 3 – 9
திருவோணமின்று நீராட வேண்டும் பெரியாழ் 2 – 4 -2.
திருவோணம் பன்னிரண்டு அக்காரம் அட்டேன்.
(அக்காரம்- யஸம்,பக்ஷணம்,முதலிய.ை திரட்டுப்பால்
எனவும் கூறலாம்) பெரியாழ். 2-9-7.
திருவோணமின்றேழுநாள் பெரியாழ் – 3-3-9.
திரேத(யுகம்) நான்கு யுகங்களுள் இரண்டாவது பெரிய -7-7-6.
திரேதை – த்ரேதாயுகம். திருநெடுந். 3
தில்லை மூவாயிரவர் – தில்லையில் இருக்கின்ற மூவாயிரம்
அந்தணர்கள். பெரிய. – 3 – 2 – 8, பெருமாள். 10-2.
திலதம் – திலகம்.திருவாய். 6-10-1
திலோத்தமை நாடகத்தெய்வ மகளிர் எண்பதின்மருள்
ஒருத்தி. பெரியாழ். 3-6-4.
திவம் – பரமபதம். பெரிய – 7 – 10-2.
திவளுதல் – ஒளிவிடுதல். பெரிய. 2 – 7 – 1.
திளை – பருமை. பெரிய. 6 – 9 – 3.
திறவிது -பரதத்துவம். நான்முகன்திரு. 62.
1870 தீங்கவி மதுரமான கவி. திருவாய். 7-9-7.
தீத்தொழில் – அக்கினி ஹோத்திரம் பெரிய. 4-5 – 3.
தீதில் நன்னெறி – குற்றமில்லாத நல்வழி. பெருமாள். 2-6; 3-5.
தீப்பப் பூடுகள் – கொடிய பூண்டுகள். பெரியாழ்3 – 6 -4.
தீமனம் கெடுத்தல் – தீயமனத்தைக் கெடுத்தல். திருவாய். 2-7-8.
1875 தீம் பலங்கனி – மதுரமான பலாப்பழம். பெரிய. 5 – 3-4.
தீயிணக்கிணங்காடி – களவுப் புணர்ச்சி செய்து.
பெரியாழ். 3-7-2
தீயில் மூன்று – சப்தம், ஸ்பர்சம்,ரூபம்.திருச்சந். 1
72
தீயினில் தூசாகும் – நெருப்பிலிட்ட பஞ்சுபோல் உருவழிந்து
போகும். திருப்பா- 5.
தீ யோங்க வோங்க – அக்கினி காரியங்கள் வளர வளர.
பெரிய – 3-2-2.
1880 தீர்த்தகரர் – பரிசுத்தப் படுத்துவோர். இரண்டாந்திரு.14.
தீர்த்தன் – பரிசுத்தன். திருவாய் – 2 – 8 -6.
1885
தீரா மாற்றாக பரிகாரமில்லாத செயலாக. திருப்பா- வியாக்
தீ வலஞ் செய்தல்- ஏழடி நடந்து அக்கினியை வலம்
வருதல். நாச்சி – 6 – 7.
தீவிகை-விளக்கு. (தீ பிகை) பெரிய – 2 – 10 – 3.
தீ விழித்தல் – நெருப்புப்பொறி பறக்கும்படி கண்கை
விழித்தல். திருப்பா- 23.
தீ விளி விளிதல் மிகக் கொடுமையான வார்த்தைச்
சொல்லுதல். திருமா. 30.
தீ வினைக்கரு நஞ்சை – கொடிய துன்பத்தை உண்டு
பண்ணுகிற தீய செயல்களை எம்பெருமான்
எளிதில் போக்குபவன்.திருவாய்7 – 1 -8-9.
தீற்றி – உண்ணப் பண்ணி. திருவாய்.71-7.
1890 துக்கக் சூழலை – துக்கங்களாகிற சுழலாறு. பெரியாழ். 5-3-1.
துங்கார் – துங்கம் – ஓக்கம். பெரிய – 9 – 6-2. தே. 7 – 42 -9.
வெஞ்சமாக் கூடல்.
துக்கு – துங்கம். (வடமொழி) பெரிய – 9 -6-2.
துச்சோதனன் – துரியோதனன் தம்பி. பெரியாழ். 1 – 8 – 5. துடியிடையார் உடுக்கைபோன்ற இடையையுடைய
பெண்கள். திருப்பள்ளி. 10.
1895 துண்ணென – சீக்கிரமாக. பெரிய. 4-6-2.
துணரி – பூங்கொத்து. பெரிய – 4-6-2.
துணிவதுசூதே – காரணம். திருவாய். 2 – 10 – 9.
துதம் – ஸ்துதம், ஸ்தோத்திரம். பெருமாள்.1 – 2.
துந்தி – திருநாபி. திருவாய். 1 – 3-9.
1900 துப்பம் – நெய். (கன்னட மொழி) பெரியாழ். 2 – 1 -6. துப்பரவாம்- சக்தியையுடைவனான் திருவாய். 7 – 9 – 9.
துமிலம்- பெரிய ஆரவாரம். பெரியாழ். 3-8-3.
துயக்கு – கலக்கம். திருவாய்.1 – 3-9.
துயராட்டியேன் – துன்பத்தையுடைய நான். திருவாய். 7-7-1.
1905 துரகம் வாய் பிளந்தது – குதிரை வடிவு கொண்ட கேசி
என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்தது.
மூன்றாந்திரு. 47, 98. தே. 7-87 – 7. பனையூர்.
துரிசன் – கள்ளன். திருமா. 31 – 32.
துலை கொண்டு – துலைத்தலைக் கொண்டு. திருவிருத். 51.
துலையாய் – பரிமாணமாகி. திருவாய். 7-8-7; தே. 1-47-8
சிரபுரம். 6-19-10 ஆலவாய்.
துவக்கற – ஸ்பரிசம் அற. பெரியாழ். 2 – 10 – 6.
1910 துவர்தல் – உலருதல். திருவாய்.8 -5 – 2.
துவர்ப்பு- (மாந்தளிர்) துவர்ப்பென்னும் ரசம். பெரிய. 5-3-4.
துவராபதி – துவாரகை. பெரியாழ. 5 -4-10; நாச்சி. 9-8;12-9.
துவரித்தவுடையார் – காவித்துணிகட்டித் திரியும் பெளத்தர்.
பெரிய. 5-6-8.
துவரியாடையார் -காவியுடை அணிந்தவர்கள். பெரிய. 2-1-6.
1915 துவர்ந்து துவர்ந்து மிகவும் உலர்ந்து. திருவாய். 4-7-5.
துவராடையுடுத்து- காவியூட்டிய ஆடையை உடுத்து.
பெரிய. 10-8-2 (தே) 3-56-10 பிரமபுரம். துவரிக் கனிவாய் – இலவம்பூ. பெரிய. 8 -8-9.
துவருடுக்கை – காவியுடை. திருவாய்.4 – 8 – 4.
துவரை – துவாரகை. பெரியாழ். 4-1 – 6; 4 – 7 – 9.
1920 துவாதசியில் மாதர் தூபமேந்தி வேங்கடவனை வணங்கல்.
முதல் திருவந். 82.
துவாபரயுகம் – யுகங்கள் நான்கனுள் மூன்றாவது. பெரிய. 7-7-6.
துழதி – சுழற்சி. திருவாய்.2 -7 – 8. துழதிப்படாதே – துக்கப்டாதேயிருங்கள். நாச்சி. 12-5.
துழாய் -துழாவி.மூன்றாந்திரு. 23.
1925 துழாய் மாலை – துளசி மாலை. மூன்றாந்திரு.
துள்ளம் – துளி. பெரியாழ். 5 -7-7
துளக்கம் – சலிப்பு, இடைவீடு.
துளம்-மாதுளம், பீலிக்காம்பு பெரிய. 2-7-2.
துளம் – களைக் கொட்டு. பெரிய. 8 – 7 – 3.
23.
1930 துளவுத் தொண்டு – திருத்துழாய்த் தொண்டு. திருமா. 45.
துளவும் கூடையும் பொலிந்து திருத்துழாயும்,
பூக்குடலையும் விளங்க. திருப்பள்ளி. 10
துளும்பு- அலைய. திருவாய். 6 – 7 – 8.
துற்று- உணவு. (கவளமாக ) பெரியாழ். 4 -4 – 2.
பெரிய. 7 – 1 – 2, 1 – 6 – 5.
துற்றற்றா -ஒரு கவளத்திற்கும் போதாது. திருவாய். 2-8-8.
74
1935 துற்றிய – உண்ட. பெரிய. 7-1-2; பெரியதிரும 141.
துற்றுவார் – புசிப்பார். திருவாய். 4-1-7.
துறவி – துறந்தவன். திருவாய்.1-7-1.
துன்றோளித்துகிற் படலம் ஒழுங்கு, கொடிகள். பெரிய.6-9-4.
தூங்கார் – அசைவு பெரிய – 11-8-3.
1940 தூசனம் – தூஷணம் பெரிய – 6-7-4.
தூது வந்த குரங்கு – அநுமன். பெரிய -10 -26.
தூதை – சிறு சோறு சமைக்குமட் பாத்திரம், விளையாட்டுக்
கருவி. பெரியாழ். 1 – 2 – 19; 3-7-1.
தூம்புடைப் பனைக்கை வேழம். பெரிய. 4-5 – 1.
தூராக்குழி தூர்த்தல்.திருவாய்.5-8 – 6.
1945 தூரியம் – வாத்தியம்.
தூவிக் குருகு – வெள்ளைக் குருகு. திருவாய். 6-8-8.
தூற்றித்து – தூற்றின அதுவே. திருவாய். 7-3 – 8.
தூறுகள்- புதர்கள் பெரியாழ். 5-4 – 3.
தெக்கு – தெற்கு. பெரியாழ். 4 – 2 – 3.
1950 தெட்டப்பழம் – பக்குவமான பழம். பெரிய. 3 – 4 – 8. தெட்டித் திளைக்கும் – முற்றிக்களியா நிற்கும். பெரியாழ். 4-2-10. தெப்பராவர் – அற்பர். திருவாய். 9 – 1 -4. தெய்வச் சிலையான் – திருப்புல்லாணி இறைவன் பெயர்.
பெரிய. 9-4-3.
தெய்வத்தைச் சுவர்மிசைச் சாத்தியும் வைத்துத் தொழுதல், முதல் திருவந்14.
1955 தெய்வ நன்மாலை – திவ்வியமான நல்ல சொல்மாலை.
பெரிய. 1 – 1 – 10. தெய்வ நாயகன் – திருவயிந்திரபுர இறைவனின் பெயர்.
பெரிய 3 – 1 – 3.
தெய்வ நாறுதல் – நல்ல வாசனை வீசுதல். பெரிய – 5-3-3.
தெய்வப் புள்ளேறி வருவான் – (தெய்வப்புள் – கருடன்) பெரிய 3 – 3 – 6. தெய்வவாள் வலங்கொண்ட சோழன். பெரிய. 6 – 6 – 3.
1960 தெருவிற்றிரி நோன்பியர் – தெருவில் திரிகின்ற சமணர்
பெரிய 7-9-2.
தெழ்கு- இடைச்சுரிகை பெரியாழ். 1 – 3 -2.
தெள்கி- இளைத்து பெரிய. 3 -4-7.
தெள்ளிய சிங்கம் – திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள
அழகிய சிங்கப் பெருமாளுக்குத் தெளிசிங்கப்
பெருமாள் என்று திருநாமம் வழங்கப்
பெறுகின்றது. பெரிய. 2 3 8.
தெள்ளியர் கை தொழும் தேவனார் – பெரிய – 9-7-9; 8-10-4;
நாச்சி. 4-1.
1965 தெளி விசும்பு கடிதோடி – நிர்மலமான ஆகாசத்திலே
விரைவாக ஓடி, திருவாய்.9 -7-5.
தெளிவிலாக் கலங்கனீர் சூழ் – தெளியாமல் கலங்கியிருக்கிற
காவிரியாலே சூழப்பெற்ற. திருமா. 37.
தெற்றல் – வலிமை. பெரிய -11-11-9.
தெற்றியம்பலம் – சீகாழியிலிருந்து ஐந்துகல் தொலைவில்
உள்ளது. தெற்றி அம்பலம் என்பதற்குக்
கோயில் மேட்டிடமாக அமைந்த மன்றம்
என்பது பொருள். பெரிய 4 – 4-10.
தெற்றெனவு ” தெளிவு, பெருமை. பெரியதிரும – 141.
1970 தெறிவில் – சுண்டுவில். பெரியாழ். 3 – 4-3.
தென் குடந்தை – திவ்விய திருப்பதி, திருக்குடந்தை.
மூன்றாந்திரு. 62.
தென் குளந்தை – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏழு கல்
தொலைவில் உள்ளது. திருவாய். 8 – 2 – 4
தென் கொள் திசைக்கும் திலதம். திருவாய். 10 – 7 – 4.
தென் கொள் திசைக்கும் திலதம் – தெற்குத்திக்குத் திலகம்
போல். பெரிய. 4-8-8.
1975தென் தில்லைச் சித்திர கூடம் – கோவிந்தராசன் சந்நிதி
என்பர். இராமனுக்கு வடநாட்டுச் சித்திர கூடத்தைப் போல இத்தலமும் உகந்த திருப்பதி. தென்புலக் கோன் – இயமன். பெரியாழ் -5 -2 – 2.
தென்புலர் யமபடர். பெரிய – 7 -3 – 3.
தென்றமிழன் – தெற்கிலுள்ள தமிழ்நாட்டுக்கரசன். பெரிய. 6-6-5. தென்றி – சிதறி. பெரியாழ். 2 – 4-2; (தே 1 – 68 -5 கயிலாயம்.
1980 தென்றிருப்பேரை – ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கல்
தொலைவில் உள்ளது. திருவாய் 7 – 3 – 1 – 10.
தென்றுதல் – சிதறுதல் பெரிய. 5 – 3-9.
தென்னரங்கன் – அரங்கநாதன் பெரியாழ்2 – 9 – 11.
தென்னவன்-யமன், பாண்டியன். பெரிய 2-9-2;
பெரியாழ் 4-5-7.
தென்னவென்று- தென்ன தென்ன என்று ஆளத்திவைக்க.
பெரிய. 9-1-9.
1985 தென்னன் – மலையத்துவச பாண்டியன். திருவாய். 5-5-2;
பெரியாழ்4-2-7.
தென்னன் குருகூர் – தெற்குத்திக்கிலுள்ள திருநகர்.
திருவாய். 4-3 – 11; 5-2-11
76
தென்னன் குறுங்குடி – குறுகியவனான வாமநனது
க்ஷேத்திரமாதல் பற்றிப் பெயர் பெற்றது.
பெரிய திரும. 114.
தென்னன் திருமாலிருஞ் சோலை – இத்திருப்பதி மதுரையிலிருந்து 12 கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். திருவாய். 10-7-3.
தென்னன் தொண்டையர்கோன்- தொண்டைமான்
என்பவன் தென்னவனுடைய வமிசத்தில்
தோன்றினமை பற்றித் தென்னன் தொண்டையார்கோன்
என வழங்கப்பெற்றான். பெரிய. 2-3-10.
1990 தென்னன் பொதியில் – பாண்டியனுடைய பொதிய
மலையில். பெரிய திரும. 40, 83. தென்னனுயர் பொருப்பு – திருமாலிருஞ் சோலைமலை.
பெரியதிரும.6.
தென்னனோட வடவர சோட்டங்கண்ட – சோழனும்
தோற்று ஒடும்படியாகச் செய்த. பெரிய. 4 – 5-6. தென்னாடன் – தென் தேசத்தரசன் பெரிய. 6 – 6- 6. தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்.
பெரியாழ். 4 -9 – 11.
1995 தென்னா தெனா வென்று – தாளச் சொற்கட்டு.
திருவாய். 3 – 9-1. சிலப். 3. 26 உரை. தென்னானாய் – தெற்கே உள்ள ஆனை. திருமாலிருஞ்
சோலை மலையில் நின்ற யானை போன்றவனே. தென்னுரை தமிழுரை. பெரிய. 39. தேக்கம் -தாமதம். பெரியாழ், 2 -9-3. தேசம்- புகழ் (தேஜஸ்). திருப்பா.7; பெரிய. 1 -9-9; திருவாய்3 – 3-4.
2000 தேசமறியவுமக்கே ஆளாய் – உலகமெல்லாம் அறியும்படி.
உமக்கே தொண்டராய். பெரிய. 4 – 9 – 4.
தேதென வெனல்- தென்னதென்ன என்று. பெரிய. 4 – 1 – 1.
தேர்வழி தூல் -தேர் போன வழியை அழித்திடாதே.
‘தேர்வழி தூரல்’ என்பது ஒரு துறை. திருவிருத். 17.
தேராழியால் மறைத்தார் – சக்ராயுதத்தால் சூரியனை
மறைத்த பெருமான். நான்முகன்திரு. 16.
தேவர் காரியம் – பகவதாராதனம். பெரியாழ். 4 – 4 – 1.
2005 தேவகி சிங்கமே – தேவகி வயிற்றில் தோன்றிய சிங்கக்
குட்டியே. பெரியாழ். 1 – 3 – 4.
தேவிமை தகுவார் – உம்மோடு, ஒக்க முடி சூடுகைக்குத்
தகுதியாக இருப்பவர். திருவாய். 6 – 2 – 6.
தேவில் – கோயில் திருவாய். 4 -4-8.
தேவை – அடிமை. பெரியாழ். 1 – 4 – 8.
தேற்றன்மை – தெளிவு. பெரிய. 10 -9 – 9.
2010தேனித்து – இனித்து. பெரியாழ். 4 -61; திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் – 9.
தேனுகன் கதை. திருச்சந்த. 80, 107, பெரியாழ்.
1-5-4; 2-10-4, 3-6-4; பெரிய. 3-10-7, நாச்சி. 11-9.
தேனும் பாலுங் கலந்தன்னவர்- தேனும் பாலும் ஒன்றாகச்
சேர்ந்தாற்போல ஏகரசமாக இருக்கின்ற பக்தர்கள்.
பெரிய. 5 – 4 – 8.
தைத்திரியன் – தைத்திரீய உபநிடதத்தினால்
சொல்லப்படுகிறவன். பெரிய. 5 – 4 – g.
தையில் தரை விளக்கி மாசியில் தெருவணிந்து நோற்றல்.
நாச்சி. 1 – 1.
2015தைவருகை தடவுதல். திருவாய். 5 – 4-8.
தொங்கல் – மாலை, பீவிக்குடை விசேடம். பெரியாழ். 3-4-1. தொடர் – தொடர் சங்கிலி. பெரியாழ். 1-7-1, 1-9-1.
தொடுப்புண்ணுதல் – திருடியுண்டல். பெரியாழ். 2-3-9. தொடுப்புண்ட- ஒளித்துண்ட. பெரியாழ். 2 – 3 – 9.
2020தொடுவுண்ட – கனவினால் உண்ட. திருவாய். 1-5-1; 3-8-3.
தொடுவுண்ண – களவினால் உண்ண. திருவிருத் – 21.
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
திருவாய். 9 – 4 – 9.
தொண்டர் கைத்தண்டு. பெரிய. 10 – 9-4.
தொண்டர் தம்மை நீசர்களை. பெரிய. 7 – 2 – 2.
2025 தொண்டர் தொண்டர் தொண்டன். திருவாய். 7-1-11; 8-9-11.
தொண்டரைப் பாடும்- தொண்டர் என்ற சொல் இங்கு
நீசர்களைக் குறிக்கின்றது. பெரிய. 1 – 1 – 7.
தொண்டனேன் -அடியேன். பெரிய. 1 – 6 – 3.
தொண்டையர் கோன் செய்ததொண்டைமான்
சக்கரவர்த்தி செய்த. பெரிய. 2 – 3-10.
தொழு-தொழுவத்தில். திருவாய். 10-3 -4.
2030 தொழுகுலம்- வணங்குதற்குரிய குலம். திருவாய். 3 – 7-8.
தொழுத்தனில் – தொழுவில். திருவாய்.10- 3-4.
தொழுத்தைமார் – அடிமை செய்யுமவர்கள்.
பெரியாழ். 2-9-8.
தொழுதுவனாய்- அஞ்சலி செய்து கொண்டு முன்நிற்றல்
பெரியாழ். 1 – 3 – 5.
தொழும்பர் – நீசர். திருமா. 5.
2035 தொளி – வீதி. பெரிய. 2 – 10-5.
தொறுப்பாடி – ஆய்ப்பாடி, பெரியாழ். 2 – 1 -6.
தோக்கை- முன்தானை. பெரிய. 4 -4 -3.
தோகைமயில், பெரியாழ். 1 -5 – 7.
தோண்டல் – ஊற்றுக்கள். பெரியாழ். 4 – 3 – 6.
2040 தோத வத்தி – தோய்த்து உலர்த்தின வஸ்திரம். பெரியாழ். 4-8-1.
தோரணவாயில் – தெருவில் கட்டும் அலங்காரத் தொங்கலை
உடைய வாசல். திருப்பா – 16.
தோழமை-நட்பு. பெரியாழ். 3 -10-4;நாச்சி.55.
தோள் குலைக்கப்படுதல் – தோள்கள் அசைந்தாடப்படுதல்.
திருவாய். 4-6 – 7, 10
தோள் விசிறி – தோள்வீசி. பெரிய. 3 – 7-5.
2050 தோளாத மாமணி – துளை பட்டு ஒளி மழுங்காத, நீலமணி, பெரிய – 11-7-2.
நக்கபிரான் – சிவபெருமான். திருவாய். 3-10-9; 4-10-8.5-3-10. நகந்தாய் (நகத்தாய்) நகத்தையுடையவனே. திருவாய். 9-4 -7. நகரிழைத்து – கோயில் கட்டி. இரண்டாம் திரு.4. நங்கைமீர்கள் – பெண்காள். பெரியாழ். 3 -6 -1.
2055 நச்சிலை கொல்-நஞ்சு வடிவாயிருப்பதோர் இலையே.
திருவாய். 7 – 7-7.
நச்சுமாமருந்தம் – விரும்பப்படுகிற சிறந்த மருந்து.
திருவாய். 3-4-5.
நச்சுவார் முன்னிற்கு நாராயணன். பெரியாழ். 1-8 – 11.
நச்சுவாருச்சிமேனிற்கு நம்பி – பெரிய. 7 – 10-8.
நஞ்சு- நைந்து. பெரிய. 11 – 2 – 8.
2060 நடுவு பாட்டு – நடுவிடம். பெருமாள். 1 -11, திருமா. 23.
நண்ணம் – சிறிது. திருச்சந் – 46.
நண்ணார் முனை – பகைவர்களுடைய யுத்தத்தில். பெரிய. 4-7-1
நந்தி பணி செய்த நகர்- ஒரரசன். பெரிய -5 – 10 – 7.
நப்பின்னை – திருப்பா 19, 20; பெரிய. 1 – 5 – 7, 2-4-9.
2065 நம்பர் – விசுவனீயர். பெரிய. 9 – 2-4.
நம்பரமன்று- நம்மால் எம்பெருமான் பெருமைகளைப் பேசி
முடிக்க முடியாது. பெரியாழ். 4 – 5 – 1.
நம்பன் -திருமால்.பெரிய. 5-10-3.
நம்பி- நற்குணங்களால் நிறைந்தவன். பெரிய. 6 – 10 – 1;
திருநெடுந். 12.
நம்பிமீர் – உலகினரே. திருமா. 10.
2070 நம்புதல் விரும்புதல்,பெரிய. 6 – 3-9.
நம்மன்-பூதப்பிரேத பிசாசங்கள். பெரியாழ். 5 – 4 -3.
நம்மை- தங்களை, பெரியாழ்.4 -9-1.
நமர்-நம்மைச் சேர்ந்தவர். பெரியாழ் -1 – 1 – 6.
நமவென்ன- நமோ வாசகம். திருவாய்- 3-3-6.
2075 நமன் சூழ் – யமனைத் தலைவனாகக் கொண்ட
மூன்றாந்திரு. 98.
நமன்று-வணங்கி, திருவாய். 3-3-7.
நமனார் பாடியைப் பெரிதும் – யம பட்டணம்.பெரிய. 1-6-6.
நமுக- குழையும்படி, திருவாய் – 9 -9 – 3.
நமுசி – மகாபலியின் குமாரன். பெரியாழ் – 1 – 8 – 8.
நமையாமல் – உபத்திரவம் செய்யாமல்.முதல்திருவந். 32.
நமோ நாரணம். பெரிய, 6 – 10 – 1 – 10.
நயவேன் ஆசைப் படேன். முதல் திருவந். 64
நயாசலன் – நீதிக்குக் குலைதலில்லாதவன். பெரியாழ். 4-4-8.
2080 நரகநாசன் நரகத்தை ஒழித்தருளுகிறவன். பெரியாழ். 4-4-4.
நரகம் – ஸம்ஸாரம். (விவேகிகள் ஸம்ஸாரத்தை நரகம் என்ற
பெயரால் வழங்குவர்) பெரிய. 11.8-9.
நரகன் – நரகாசுரன். பெரியாழ். 1-5-4; 4-3-3, பெரிய. 3-9-8.
நரசிங்கன் – நரசிம்மன். திருவாய் – 2 -4 -1; பெரியாழ்4 -4-6,9
நரத்திலும் – மனுஷ்ய யோனியிலும். திருச்சந். 29.
2085 நர நாராயணர் – திருமால் அவதாரமான இரு முனிவர்.
பெரிய. 7 – 1-5; 7 – 7 – 3; 11 – 4-4
நரம் – நரசென்மம்.திருச்சந்த. 29.
நரியாயரக்கர் – நரிபோல அரக்கர்கள். திருவாய்.7-6 – 8.
நல்கல் – கொடுத்தல். திருவாய். 1-4-5.
நல்குவான் – கொடுப்பான். பெரிய திருவந். 23.
2090 நல்லரன் – சிவபெருமான். பெரிய. 2 – 9-1.
நல்லனகள் – நன்றாய். திருவாய். 6 -7 – 9.
நலங்கழல் ருசி ஜனகமான திருவடி. திருச்சங்.78.
கலியாண நலந்திகழ் நாரணன் குணத்தையுடைய
நாராயணன். பெருமாள். 1-11; 10, 10; பெரிய 9-9 – 9.
நலமந்த மில்லதோர் நாடு – அளவுகடந்த ஆனந்தம்
இருப்பதான நாடு. திருவாய் – 2-8-4.
2095 நவிலுகை – சொல்லுகை. திருவிருத்50.
நள்ளி – பெண்நண்டு. பெரிய. 6 – 7 – 6.
நளிர்ந்த- சீதளமான பெரிய. 4-4-8, திருவாய். 9-2-4.
நளிர் மதிச்சடையன் – சிவபெருமான்.திருவாய். 3-4-8
திருவாசி – 7, பெரிய திருவந் – 43.
நற்கிரிசை -நல்ல வியாபாரம். நான்முகந்திரு. 96.
2100நற்றம் -நன்மை. பெரியாழ் – 4-5-8.
நறையூர் – திருநறையூர் என்றது நாச்சியார் கோயிலைப்
பற்றியது. கும்பகோணத்திற்கு ஆறுகல் தொலைவில்
உள்ளது. பெரிய திரும. 73. திருநெடுந். 17,
பெரிய -4-9-2, 10-1-5, சிறியதிரும – 71.
நன்புருகி -ஞானம்,நன்மை. இரண்டாம் திரு-1
(தே.) 3-125-3. நல்லூர்ப் பெருமணம்.
நன்னடுவுள் – நன்றான நடுவுள். பெரிய. 4-3-1, 2,3,4,10.
நன்னாளால் நல்ல நாளும். திருப்பாவை.1.
2105 நாக்கு நீளுதல் – அளவுகடந்து பேசுதல். திருவாய். 4-7-6.
நாக்கொண்டு – நாவினால். நான்முகந்திரு. 75, திருவாய். 3-9-9.
நாக கன்னிகையை அருச்சுனன் மணந்தது. பெரிய திரும. 55-59.
நாகணை ஆதி சேஷனாகிய படுக்கை. நாச்சி – 10-9.
நாகராயன் மடப்பாவை – அருச்சுனன் மனைவி.
பெரியதிரும. 57.
2110 நாகரிகர் – ரஸிகர். பெரிய – 9-2-4, பெருங்கதை. 1-41 அடி. 83.
நாகு கன்றுள்ளினாற் போல் – இளங்கன்று தன் தாயை நினைத்துக் கத்துமா போல். பெரிய 7-1-1.
நாகை -நாகப்பட்டினம் என்பதன் மரூஉ. பெரிய – 9-2-1-10.
நாகையழகியார் – நாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தர
ராஜப் பெருமாள். பெரிய – 9-2-10.
நாங்கூர் – திவ்விய தலம். பெரிய – 3-8-10, 10-1-3;
பெரிய திரும. 131.
2115 நாங்கை – மயிலாடுதுறைக்கு வடகிழக்கிலுள்ள திருப்பதி,
பெரிய. 4-8-1-10.
நாட்காலே நீராடல் – விடியல் காலத்தில் நீராடுதல்.
திருப்பா. 3.
நாட்டு மானிடத் தோடெனக் கரிது. எனக்கு நாட்டிலுள்ள
மனிதர்களோடு வசிப்பது என்பது அரிது. பெரியாழ். 5-1-5.
நாடகத்தொலி நடனத்தினுடைய ஓசை. பெரிய. 4-10-3.
நாண் மட மச்சம் -இவை பெண்களுக்குரிய குணங்கள்.
நாணமாவது தகாத காரியத்தில் மனம்
ஒடுங்கி இருப்பது. மடமாவது எல்லாம்
அறிந்தும் அறியாது போன்றிருத்தல்.
அச்சமாவது மிகச்சிறிய காரணத்தினாலும்
மனம் நடுங்குதல். பெரிய. 9-5-6.
2120 நடுங்குதல். பெரிய. 9-5-6.
நாணற் படுத்துப் பரிதி வைத்தல் – பசுமையான
நாணற்புற்களை அக்னிக்கு நான்கு புறங்களிலும்
வைத்தல். நாச்சி – 6 – 7.
நாதானை – நாதனாய் இருப்பவன்.(சர்வ சேஷியாய்)
நான்முகன் திரு-64; தே. 1-30-5 புகலி
நாந்தகம் – திருமாலின்வாள். பெரியாழ். 4-7-4.
2125 நாமங்கை- சரசுவதி. பெரிய. – 2-10-6.
நாமதேயம் – பெயர். திருச்சந்- 14.
நாய்கூழை வாலாற் குழைக்கின்றது போல். திருவாய். 9-4-3.
நாரணம் – ஓம் நமோ நாராயணாய’ என்றும்
அஷ்டாக்ஷரமந்த்ரத்தைக் குறிக்கும். திருவாய்.10-5 – 1.
நாராயணா என்னும் நாமம் -அஷ்டாக்ஷர மகாமந்த்ரம்
பெரிய, 1-1-10.
2130 நால்வேதம் -ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்.
முதல் திருவந். 11; 31; 68.
நாலிரு மூர்த்தி – அஷ்டாக்ஷர ஸ்வரூபி. பெரியாழ். 4-3-11.
நாலு மாறும்பத்து. பெரிய. -9-10-10.
நாலு மூர்த்தி – பிரதாநம்,புருஷன், அவ்யக்தம்,காலம்
என்னும் இவற்றைச் சரீரமாகக் கொண்ட
நாலுமூர்த்தியாய். திருச்சந். 17.
நாலைந்து திங்களில் சகடம் சாடியது- நான்கு ஐந்து
மாதத்தில் சகடாசுரனை அழித்தது. பெரியாழ். 1-2-11.
2135 நாவகாரியம் – நாவினால் சொல்ல வொண்ணாத
பெரியாழ். 4-4-1.
நாவல் – தோற்றவர்கள் முன்னே ஜயித்தவர்கள்
சொல்லுஞ்சொல்அறையோவறை யென்னுமாப்
போல. திருமா. 1.
நாவழித்தல் – நாக்கை வழித்தல். பெரியாழ் – 1-1-6.
நாவாய் -பாரத்புழை என்ற ஆற்றங்கரையில் உள்ளது
இத்திருப்பதி. நின்ற திருக்கோலம்.பெரிய – 6-8-3; 10-1-9.
நாழ்-சாமர்த்தியம். நானென்னும் செருக்கு. அகங்காரம்,
அர்த்தமில்லாத வார்த்தை. பெரிய திருவந். 10;
இரண்டாம் திருவந். 65. திருவிரு .71.
2140 நாழ்மை – ஏற்றம். திருவாய்-4-6-9.
நாழம் – குற்றம். பெரியாழ் – 4-3-5.
நாழல்-கோங்கு. பெரிய. 3-5-7.
நாழிவளோ – நாழ் – சுதந்திரமாய் நடக்கும் செருக்கு.
பெரியதிருவந்.10,11.
நாளோலக்க மருளுதல் சபையிலிருந்து அருள்பாலித்தல்.
திருப்பள்ளி. 9.
2145 நான்முகன் பிரமன். திருவாய். 10-10-1.
நான்முகனை நாராயணன் படைத்தான். நான் முகந்திரு – 1. நான்று-காலத்தில். நான்முகன் திரு – 5, திருவிருத் – 5. நானப்புதலில் – மஞ்சள் தூற்றில். பெரிய – 6-5-3.
நானம் – சந்தனம், கத்தூரி, கர்ப்பூரம் முதலான சுகந்த திரவியம். மஞ்சள். பெரியாழ் – 1-3-9; பெரிய. 6-5-3.
2150 நானாவிதம் – பலவிதம். பெரிய – 1-9-2. நானிலம் – பூமி. திருவிருத் -26. நிச்சித்து – நிச்சயித்து. திருவாய் 10-4-4,5.
நிமியும் வாய் – நெளிந்தவாயையுடையவள். திருவாய். 1-5-2. நியதம் எப்பொழுதும். திருப்பல்.8.
2155 நிரந்தரம்- இடைவிடாமை. திருச்சந்த 101, தே.7-61-8. ஏகம்பம்
நிரந்தவர் – பகை அரசர்கள். பெரிய. 2-9-3. நிருமித்தல் – சங்கற்பித்தல். திருவாய் -4-8-1. நிறைகோளுழவர் – பசுக்களை ஹிம்சிப்பதையே
தொழிலாகவுடையவர். திருவிருத் -37.
நிரைப் பொற்பூ- ஒழுங்கான பொற்பூ. பெரியாழ் 1-3-8.
2160 நில்லாப்பாய்- பின்தொடரா தொழியிலுமொழி. பெரிய.
திருவந் -60.
நில – நிலா. பெரிய -7-8-3.
நிலத்தேவர் குழு அந்தணர் தொகுதி. திருவாய் -5-1-8.
நிலந்தரஞ்செய்யும் – தரைமட்டமாக்கிவிடும். பெரிய -1-1-9.
(தே) 6-34-7. ஆரூர்.
நிலாகின்ற- விளங்கி வாழப் பெற்ற. திருவிருதி -75.
2165 நிலாத் திங்கள்துண்டத்தாய் – காஞ்சிபுரத்திலிருந்து ஒருகல்,
தொலைவில் உள்ளது.
நின்றகோலம்.திருநெடுந் -8.
நிவர்தல்-ஒங்குதல். இரண்டாந்திருவந்- 78.
நிவந்த – உயர்ந்த. அம -2.
நிவந்து-உயர்ந்து. இரண்டாந்திருவந் -78.
நிவா – வெள்ளாறு. பெரிய -3-2-9; தே2-90-1-10
நெல்வாயிலரத்துறை.
2170 நிவா – வலங்கொள்தில்லை. பெரிய. 3-2-7.
நிழலுமடிதாறும் – பாதநிழலாகவும், பாதரேகையாகவும்.
பெரிய திருவந் – 31.
நிழறுதொல்படையாய் – நிழறு – ஒளியைச் செய்கிற
திருவாய். 6-2-5.
நிழறுதல் ஒளிவிடுதல் திருவாய் -6-2-5.
நிறம் – வெளிது. மூன்றாம் திருவந் -56.
2175 நிறை – பெண்தன்மை. பெரிய -2-4-4.
நிறைமொழி – வேதம். பெரிய 11-6-3.
நின் திருவானை – உனது பிராட்டியின் மேலாணை.
பெரியாழ் -5-3-2.
நின்புள்ளுவ மறியாதவர்க்கு புள்ளுவம். வஞ்சனை.
திருவாய் 6-2-3.
நின்றவூர் – இப்போது திண்ணனூர் என்று வழங்குகிறது.
சென்னை அரக்கோணம் பாதையில் உள்ளது.
பெரிய. 2-5-2, பெரிய -7-10-5.
2180 நின்றான் இருந்தான் – திருருநிறையூரில் நின்ற திருக்கோலம்
திருவாலியில் வீற்றிருந்த திருக்கோலம்.
நின்னையே வேண்டி – உன்னையே விரும்பி. பெருமாள். 5-9.
நினை தொறும் நினைக்கும்தோறும் திருவாய். 9- 6-1.
நீர்கள் – நீங்கள். திருவாய் 7-3-9.
நீர்ப்பூ நிலப்பூ. திருவிருத் – 55
84
2185 நீர்மலை பல்லாவரத்திலிருந்து 3 கல் தொலைவில் உள்ளது.
எம்பெருமான் நாமம். பொன்மாணிக்கம். சிறிய
திரும.73;பெரிய திரும-130; பெரிய -2-4-1-10;
2-7-8; 8-2-3, 10-1-1.
நீரகம்-காஞ்சிபுரத்திலிருந்து முக்கால் கல் தொலைவில்
உள்ளது . திருநெடுந் – 8.
நீராட வாராய் – நீராடுவதற்கு வரவேணும்.
பெரியாழ் -2-4-1, 10.
நீலன் – திருமங்கையார், வானரர் தலைவன். இராமநுஜ – 17;
பெரிய – 10-3-3.
நீலார் கண்டத்தம்மானும் – கருமை. திருவாய் -6-10-8.
2190 நீற்கண்டன்-நீலகண்டன். (நீலம் என்ற சொல்அம் கெட்டு
நீல் என நின்று லகரம் றகரமாயிற்று) நான்முகன்திரு – 15. நீறாடிதான் – சிவன். திருமுகன்திரு.-15.
நீறு – சுண்ணம், தூளி. சிறிய திரும-10; திருவாய் -4-6-6. நீறு செவ்வேயிடக்காணில் – நீறு பஸ்மம். திருவாய் -4-4-7.
நீறுபூசி – திருநீற்றைப்பூசி. பெரிய -6-7-9.
2195 நுண்பு – நுண்மை. பெரிய திருவந்-8.
நுணுக்கிய மஞ்சள் – அரைத்த மஞ்சள். பெரியாழ். 1-2-15.
நுளைப் பாவையர் – குறத்திகள். பெரிய 387.
நூக்க – தள்ள. திருமா – 27.
நூல்- ஆகமம். முதல் திருவந். 5.
2200 நூலாட்டி – லக்ஷ்மிநாதன். நான்முகன் திரு .40 நூலிழத்தல் – மாதர் மாங்கல்யமிழத்தல். பெரிய -2-3-6. நூற்றவள் – (விசாரித்தவள்) கைகேயி. பெரியாழ் -3-9-8. நூற்றவர் – துரியோதனாதியர். பெரியாழ். 2-1-2.
நூறு தடா நிறைந்த வக்கார அடிசில் – தடா – பானை.)
நாச்சி -9-6.
2205 நூறு தடாவில் வெண்ணெய்- நூறு பானைகள் நிறைய வெண்ணெய். நாச்சி – 9-6. நெக- கழல. பெரிய -8-5-9. நெஞ்சகம்பால் சுவர் – நெஞ்சு என்றும் சுவரில். பெரியாழ். 5-4-6.
நெஞ்சறவறப்பாடும் பாட்டை – பிரிவு பிரியும்படி.
திருவாய் -9-9-9.
நெஞ்சிடிந்துகும் – நெஞ்சு சிதிலமாய். திருவாய் -9-6-2.
2210 நெஞ்சென்னும் பொன் வண்டு – நெஞ்சாகிய அழகியவண்டு.
இராமாநுஜ – 100.
நெடுஞ்சொலால் மறுத்த நீசனேன் – நீண்டசொற்களாலே
மறுத்த நீசனான நான். பெரிய – 1-6-5.
நெடு நோக்குக் கொள்ளுதல் – நீண்ட நோக்குடன்
எதிர்பார்த்தல். நாச்சி -12-6.
நெடும்புரிசை – உயர்ந்த மதில். பெருமாள். 10-3.
நெடுமறுகில் – பெரியவீதியில். பெரிய. 2-6-10.
2215 நெடுமாலடியார் -திருமாலுக்குத் தொண்டு செய்பவர்கள்.
திருவாய். -4-5-7.
நெய்ச்சுவைத்தேறல் என்கோ – நெய்போலும் சுவையை
யுடைய தேன் என்று
சொல்லுவேனோ.
திருவாய். 3-4-5.
நெய் தொடுவுண்டு – நெய்யைக் கவர்ந்து உண்டு. திருவிருத்54.
நெல்லி- நெல்லி இலை. பெரியாழ் -2-4-3.
நெல்லி மல்கி- நெல்லி மரங்கள் நிறைந்து. பெரிய. 1-7-9.
2220 நெற்று – வாகை மரத்தின் நெற்று. பெரிய 1-7-8.
நெறியெல்லாம் – சகல உபாயங்களையும். திருவாய் -4-8-6.
நெறு நெறென – இரட்டைக்கிளவி. பெரிய -5-10-4; (தே)
6-18-11 பூவணம்.
நென்மெலி -ஒருபடை வீடு. பெரிய -2-9-8.
நென்னல் நேற்று. பெரிய திரும. 130.
2225 நேச பாசம் ஆசாபாசம். திருச்சந் 107.
நேத்திரம் – பீலிக்கண். பெரியாழ்.3-4-5-7-8.
நேர்ந்து பராவி வைத்தல் வேண்டி வணங்கி நிற்றல்.
நாச்சி. 9-6.
நேர்ப்பம் பிரகிருதி. திருவாய் -8-1-6.
நேரா- அறுத்துப் போட்டு. பெரியாழ் – 3-9-10.
2230 நைமி சாரணியம் – வடநாட்டில் நிம்சார் என்னும் இரயில்
நிலையத்திலிருந்து ஒருகல் தொலைவில்
உள்ளது .நின்ற திருக்கோலம்.
பெரிய 1 – 6 – 1 – 10.
நையாடல்-எண்ணெய் விளையாட்டு. திருப்பா. 4 வியாக்;
நைவளம்-நவிற்று பொழில் குறிஞ்சிப்பண். பெரிய. 5-10-2.
நொக்கென – விரைவாக. திருவாய் -4-1-3.
நோன்பியர் -சமணர். பெரிய. 2-1-5.
பக்க நிற்க நின்ற பண்பர். பெரிய. 9-6-1.
பகடு விண்டலறல் – யானைபோல் ஒலித்தல். பெரிய 5-7-4.
பகர்தல் பிரகாசித்தல். பெரியாழ். 1-7-8.
பத்திராகாரன் – விலக்ஷணமான வடிவுடையவன்.
பெரியாழ் – 1 -9- 6.
பத்து – பக்தி. திருச்சந் – 79.
2285 பத்துடையடியவர்க்கு – பக்தியையுடைய அடியார்களுக்கு.
திருவாய்-1 -3-1.
பதக முதலை – துன்பம் தரும் முதலை. பெரியாழ் -2 -1-9.
பதலைக் கபோதம் (பதலை – கும்பம், கபோதம் -புறா)
பெரிய -3-8-2.
பதவிய-மிருதுவான. திருவாய் -7-9-10.
பதவியாய் – நீர்மையை உடையவனாய்க் கொண்டு. இரண்டாந்திரு – 89.
2290 பதியம் – பாசுரம். திருப்பா. தனியன்.
பதிற்றைந் திரட்டி – நூற்றுவரான துரியோனாதிகள்.
பெரிய – 2-4-4.
பதினொரு விடையர் – ஏகாதசருத்திரர்கள். திருப்பள்ளி 6. பந்தணைந்த மெல்விரலாள் – பெரிய -2-2-4.
பந்தனை – அனுக்கம், பிள்ளைக்கு வரும் வியாதி. திருப்பல் 6.
2295 பந்தார் மெல்விரல் – பந்துபொருந்திய விரலினையுடையவள். இ
பெரிய -7-7-2; திருப்பா -18.
பந்து தூதை – சிறு முட்டி, பூங்குலைகள். திருவாய் -6-7-3.
பப்ப – ஒலிக்குறிப்பு. பெரிய -1-3-7; தே. 4-5-6. ஆரூர். பம்பை-வடபாலை. திருவாய் – 6-1-10.
பயந்தேன் -பசந்தேன். பெரிய – 9-4-2.
2300பயலை – பசலை வர்ணியம். நோய். பெரிய. 2-7-9; 8-1-1, திருவாய். 2-1-1; பெரிய – 3-6-2; திருவிருத் – 70. தே 1-60-3,9 தோணிபுரம்.
பயலோவிலீர் – பாகமுடையீரல்லீர், திருவிருத் -15. பரக்கழித்து பழிவிளைத்து. நாச்சி. 12-3, தே. 5-86-10 வாட்போக்கி.
பரக்கழிந்தாள் – அடக்கமழிந்தாள். பழிக்கு அஞ்சாளானால் பெரிய -3-7-9; 4-8-5.
பரக்கழிந்து பழியஞ்சாதே, மிகவும் கழிவுமாம். பெரிய.3-7-3.
2305 பரகாலன் எதிரிகளுக்கு யமன் போன்றவன்.
பெரிய. 3-4-10; 3-9-10: 7-4-10; 7-5-10. பரங்குன்று இமயமலைகள் உள்ள திருப்பிரிதி. பெரிய. 7-1-6. பரசுராமன் – ஜமதக்னி முனிவருடைய மைந்தன்.
பெரிய. 8-5-8. திருவாய். 6-2-10.
பரண்மேல் – மச்சின்மேல். திருவாய் 8-4-1.
பரத்தர் – பெருமாள்.3-6.
2310 பரத்தை – பெரியாழ்வார்.3-5-9.
பரத நம்பி- பரதாழ்வான். பெரியாழ்வார்-3-9-6, 3-10-5,
பெருமாள்8.5.
பரதன் – இராமனின் தம்பி. பெரியாழ்-2-1-8. பெரிய -2-3-7.
பரதனுக்கு – பெருமா. 10-4.
பரம் – பொறுக்க ஒண்ணுதல் பெரியாழ். 4-5-1,
திருவிருத் . 2-9-3 (மழபாடி-7-100-4. நொடித்தூன்மலை.)
2315 பரம்பரமாய் – ஒன்றுக்கு ஒன்றுமேலாய் – திருவாய்
8-8-5.(திருவாசகம். கீர்த்தி -119)
பரம்பரன் – பெரிய. 1-5-1, திருவாய்,4-3-9, 8-8-2.
பரம்புருடன் – உத்தம புருஷன் – திருவாய்–4-8-3.
பரம்புருடா -புருஷோத்தமனே – பெரியாழ்.5-4-2.
பரமகவிகள் – திருவாய் – 7-9-6.
2320 பரமசோதி -பரஞ்சோதி – திருக்குறுந் – 11.
பரமே – வசமோ. திருவாய்.6-2-6.
பரமேச்சுரவிண்ணகரம் – பெரிய – 2-9-1-10.
பரமேட்டி – திருப்பல் -12. திருவாய். 9-1-8.
பராங்கதி – சிறந்த பதவி – திருமா – 4.
2325 பரிப்பு – பரிவு. துக்கம் – திருவாய் -6-4-6.
பரிபவம் -அவமானம் – பெரியாழ் -2-9-2.
பரிமாற -வியாபரிக்க – பெரியாழ் – 3 – 6 – 8.
பரிமுகமானவன் -ஹயக்ரீவாவதாரமெடுத்தவன் –
பெரிய -5-3 -2.
பரிமேற்கற்கி – கற்கியவதாரம் – பெரிய-2-5-3.
2330 பரிதிவட்டத்தூடுபோய் – சூரிய மண்டலத்தின் வழியாகச்
சென்று. அர்ச்சராதி மார்க்கம்.
4-5-10.
பரிவேடம் – சந்திரனைச்சுற்றிச் சில காலங்களில்
காணப்படும் கோடு .ஊர்கோள்- பெரியாழ்-1-7-3.
பருங்கிப்பறித்தல்-கொன்றுமுறித்தல். பெரியாழ்-1-2-7.
தே. 3-69-3. காளத்தி.
பருக்குதல் – பருகச் செய்தல். நாச்சி- 13-4.
பருகுநீர் – குடிக்கின்ற தண்ணீர்- பெரியாழ் -4-4-4.
2335 பருச்செவி – பருமனானகாது பெரியதிருவந் – 63
பருப்பதம் – மகாமேரு பருவதம் பெரியாழ்-5-4-7.
பல்லவர் கோன் பணிந்ததில்லை – பெரிய -3-2-3.
பல்லவன் – பல்லவ அரசன். பெரிய -2-9-2.
பல்லாண்டிசைத்தல் – மங்களாசாகனம் செய்தல்.
பெரியாழ்-1-9-5.
90
2340 பல்லாண்டு திருவோணத்தில் கூறுவித்தல்- மங்களாசாசனம்
திருவோண நட்சத்திரத்தில் செய்வித்தல்.
பல்லி சொற்கொள்ளல் – திருவிருத் – 48.
பல்லிநுண்பற்றாக – பல்லியானது சுவரிலே இடைவெளி
யின்றிப் பற்றியிருப்பது போல.
பெரியாழ்-3-4-2.
பலங்கனி – பலாப்பழம் – பெரிய -3-1-5,3-10-3,5-3-5. பலதேவன் – பலராமன். நாச்சி14-1.
2345பவர் – பரப்பு- திருவாய் -2-2-6.
பவித்திரன்-தூயவன், பரிசுத்தமூர்த்தி. திருவாய். 2-3-9.
பவத்தர் – பௌத்தர்கள். நான்முகன்திருவந். 6.
பழநடை – முன்பு செய்து போதருங்கிரமம் பெரிய-2-3-4. பழிகாப்பு- கெட்டபேரைக்காப்பது- நாச்சி-12-3.
2350பழுக்காய் – பழுத்தபாக்கு – பெரிய-6-9-8. பள்ளிக்கட்டில். கிருப்பா 22
பள்ளிக்குறிப்பு – தூக்கக்குறிப்பு (கொட்டாவி
விடுதல் முதலியன)பெரிய-10-4-6.
பள்ளிகமலம் தாமரைப்பூவாகிறபடுக்கை. பெரிய.6-7-6.
பள்ளிகோள்- கோள்முதனிலைதிரிந்த தொழிற்பெயர். கோள். கொள்ளுதல்பெரியாழ்-5-4-9).
2355 பள்ளியிலோதி வந்த சிறுவன் – பிரகலாதன். பெரிய-2-3-8 பற்பநாபன்-பத்மநாபன்.திருச்சந்23, பெரியாழ்-2-3-2. பற்பபாதன்- தாமரைமலர் போன்ற மென்மையான பாதங்களையுடையவன் திருச்சந்த. 32. பற்பபாதா. விளி திருவாய் -7-6-1. பற்றுமஞ்சள் நிறம்பிடிக்கும் பூச்சுமஞ்சள். பெரியாழ்-3-2-2.
2360பற்றையை பயனற்ற பொருளை. திருவாய். 3-9-7. பற – உந்திபற பெரியாழ்-3-9-1-10.
பறியோலைச் சயனத்தர் – தாழை ஓலைகளினாற் செய்த படுக்கையையுடையவர்.பெரியாழ்-1-1-5,
திணைமாலை-113,குறுந் -221,அகநா-94, நற்-142,
பறை-நோன்புக்கு அங்கமானதொரு வாத்திய விசேடம்.
திருப்பா- 8, 24 – 28.
பறை தரும் – புருஷார்த்தத்தைத் தரும் – திருப்பா10.
2365 பன்னிரண்டா நாள் சிசுவுக்கு உத்தானம் செய்தல்.
உத்தானம் – குழந்தையைப் பிரசவ அறையிலிருந்து
வெளிக்கொணரும் சடங்கு. பெரியாழ்-1-1-8.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் – பன்னிரண்டு
திருவோணத் திருநாளளவும் சமைத்தேன். பெரியாழ்-2-9-7.
பன்னிருதிங்கள்- பன்னிரண்டு மாதம். பெரியாழ்-3-2-8.
பன்னிருநாமம் – திருமாலினுடைய பன்னிரண்டு பெயர்கள்
ஒவ்வொரு செய்யுளிலும் வந்துள்ளது. திருவாய். 2 – 7-1 – 10.
பனங்கனி தலைக்குவமை திருச்சந்-80.
2370பனங்கனிபோலப்பருமுடியுதிர – பெரிய 9-1-7-
பனிவரை – திருவேங்கடமலை திருநெடுந் 9.
பனுவல் – நூல் பெரிய – 10-4-10.
பாக்கியம் – அதிர்ஷ்டம் – இரண்டாந்திரு – 34.
பாகுடம் – உபகாரம், பச்சை- பெரியாழ். 4-5-8.
2375பாசனம் – மரக்கலம் திருச்சந் – 100.
பாசறவு -பசுமையழிவு திருவாய் – 6-8-7,8.
பாசி தூர்த்துக்கிடந்த பார்மகள் – பாசி படிந்து கிடந்த
பூமிப்பிராட்டி நாச்சி-11-8.
பாசிலை நாணல்-பசுமையான நாணற்புற்கள் நாச்சி-7-7.
பாஞ்சசன்னியம் -எம்பெருமான்கையிலுள்ள சங்கு.
பெரியாழ். 3-3-5.நாச்சி-7-10
2380பாஞ்சாலி பாஞ்சாலதேசத்து அரசன் மகள் –
பெரியாழ். 4-3-6. (தத்திதாந்த நாமம்)
பாஞ்சாலி கூந்தல் – பெரிய -6-7-8.
பாட்டும் முறையும் – இயலும். இசையும்- நான்முகன்திரு – 76.
பாடகம்-பாடகம் என்னும் திருப்பதி திருப்பா-27
மூன்றாந்திரு-30 திருச்சந்-63, இரண்டாந் திருவந்-94,
பெரியதிரும்127, பெரிய-4-8-7,6-10-4.
பாடல் பத்தும் வல்லார் நாச்சி -4-11.
2385பாடி – திருவாய்ப்பாடி மூன்றாந்திரு – 26,
பாடிப்பறைகொண்டு- பிராப்பியத்தைப் பெற்று. திருப்பா-27,
பாடுகாவலிடுமின் அருகுகாவலிடுங்கள். பெரியாழ்-3-7-5.
பாடுசாரா – அருகுவாரா திருவாய். 9-10-10.
பாடையிடுதல் பாடையில் படுக்க வைத்தல் பெரியாழ். 4-5-8.
2390பாண் -பாட்டு மூன்றாம் திருவந் – 35,55.
பெரிய. 6-2-5, 6-10-3.
பாண்டியர் குலபதி – பாண்டிய வம்சத்து அரசன்.
பெரியாழ் – 5-4-7.
பாண்டிவடம்-பிலம்பனைப்பலதேவன் வென்றவிடம்
நாச்சி–12-7.
பாணன்-கடகன், ஆசாரியன்- பெரிய – 8-2-2.
பாதமத்தாலெண்ணினான்-பாதமத்தால் -பாதத்தால்
முதல்திருவந்.45.
2395 பாதமூலம் திருவடிகள் – திருமா – 29.
பாதுகம் -மரவடி. பெருமாள்- 10-4.
பாந்தட்பாழியில் அனந்தாழ்வானாகிற படுக்கை.
பெரிய. 10-1-7.
பாம்புடைப்பல்லவர் கோன் – பாம்பைக் கொடியிலேயுடைய
பல்லவ அரசன் – பெரிய-2-9-5.
பாம்பு போல் நாவும் – நாச்சி, – 10-3.
2400பாமரு – பரப்பையுடைத்தான் – திருவாய்.7-6-1. பார்த்தசாரதி – கண்ணன் – பெரிய -2-3-1. 2-10-8.
பார்த்தன் – அருச்சுனன் – பெரியாழ் – 2 -6 – 5, 6, பெரிய -5-7-8 9-9-8.
பார்த்தன் பரத்வம் தெளிந்தது. திருவாய். 2-8-6.
பார்த்தன்பள்ளி – சீகாழியிலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது. பெரிய 4-8-1-10.
2405 பார்ப்பனச்சிட்டர்கள் – நாச்சி – 6-4-.
பார்மன்னர் – பூமிக்கு அரசர் – பெரிய – 7-7-4. பார்மன்னு பல்லவர்கோன் – பூமியில் நெடுங்காலம் வாழ்ந்தபல்லவ அரசன் – பெரிய. 2-9-2,10. பாரசிநாள் – துவாதசி. முதல் திருவந் – 82. பாரதங்கையெறிந்தான் – பாரதயுத்தத்தை உறுதிப்படுத்தி வந்தவன். பெரியாழ்.-2-6-4.
2410பாரதப்போர். திருவாய் -3-2-3, பெரிய-4-6-6. பாரதம் – பெரிய திரும -72. பெரிய-7-3-4, 7-5-2,9-9-8,11-1-10.
பாரத மாபெரும்போர். பெரிய-9-2-9. பாரதவெம்போர் – மூன்றாந்திரு -28. பாரிசாதாபகரணம் பாரிஜாத மரத்தைத் தேவலோகத் திலிருந்து கண்ணன் சத்யபாமையின்
பொருட்டு அபகரித்து வந்தது. பெரியாழ். 1 – 9 – 9. 3 – 9-1.
2415 பாரித்த – முயற்சி செய்த – மூன்றாந்திருவந் -44.
பெரியாழ்-1-6-6. (தே) 4-70-10.நனிபள்ளி, 5-54-9-
அதிகை வீரட்டம்.
பாரிப்பு – பரப்பு- திருவிருத் 67.
பாரோர் – உலகத்தவர்கள். திருப்பா- 1.
பால்பொன் பசப்புக்கார் – வெண்மை, சிவப்பு, பசுமை,
கறுப்பு. நான்முகன்திரு.24.
பால்சோர – பால்பெருக. திருப்பா-12.
2420 பால்வாய் – பால்மணம் மாறாதவாய். திருவிருத். 35.
பாலகன்-உவப்பினால் ஆகிய பால்வழுவமைதி.
பெரியாழ்-3-7-4-.
பாலப்பிராயம்- குழந்தைப்பருவம். பெரியாழ்2-6-6.
பாலன்றனதுருவாய் – சிறுகுழந்தை வடிவம் கொண்டு
முதல்திருவந் 69.
பாலேய்தமிழரிசை காரர்- பால்போன்ற இனிய இயற்றமிழ்
அறிவாரும், இசையறிந்து பாடவல்லாரும். திருவாய். 1-5-11.
2425 பாலை – பாலைப்பண் பெரிய -7-3-7.
பாவக்காடு – பாவசமூகம் பெரியாழ் -5-4-2.
பாவகாரிகள் – தீயசெயல்களைச் செய்கிறவர்கள்
பெரியாழ்-4-4-1.
பாவநாச நாதன் – திருச்சந்த – 27.
பாவை- நோன்பு – திருப்பா- தனி.
2430 பாவைக்குச் சாற்றி நீராடுதல் – நோன்புக்கென்று சங்கற்பித்து
நீராடுதல் – திருப்பா.3.
பாழ் – மூலப்பிரகிருதி. திருவாய்- 10-10-10.
பாழி படுக்கை பரமபதம் -பெரிய – 10-1-7,
இரண்டாந்திருவந்-13.
பாழிமை – பெரியமேன்மை. பெருமிடுக்கு- பெரிய-11-2-6.
திருவாய்-2-1-5. தே. 5-92-1 காலபாசம்.
பாளைமுத்தும் – பாளையில் உண்டான முத்துக்கள் –
பெரிய. 6-9-8.
2435 பாற்கடல் – திருப்பாற்கடல், மூன்றாந்திருவந் 31,61,72.
பாற்றுதல் – சிதறவடித்தல் பெரிய -4-7-5.
பாறு பாறாக்கினான் – துண்டுதுண்டாகச் செய்தான் –
பெரிய திருவந் 33.
பான்மதிக்கிடர் தீர்த்தவன் – சந்திரனுக்கு க்ஷய ரோகத்தைப்
போக்கியவன் – பெரிய-1-8-6,
பானல் – மருதநிலம், கடல் – பெரிய -6-7-2
2440 பிச்சச் சிறுபீலி – மயிலிறகு. பெரிய -2-4-8,2-6-5,
பிச்சைதானம் – – திருப்பா -2.
பிச்சைக்குறை – நாச்சி -11-4.
பிஞ்சுகள் – உருத்திரன் – பெரிய-2-6-9.
பிண்டத்திரள் – பித்ருக்களுக்கு இடும்பிண்ட உருண்டை
பெரியாழ்.2-5-7.
2445 பிண்டமாய்- மூலகாரணமாய் – மூன்றாந்திருவந் – 46,
பிண்டியார் – ஜைநர்கள். பெரிய-9-7-9.
பிண்டியுடைநோன்பியர் – அசோகமரத்தைத் தஞ்சமாக
உடைய அமணர். பெரிய. 2-1-5.
பிணத்தின் மடவார் – பிணங்களைத்தின்கின்ற பெண்
பேய்கள். பெரிய 2-4-8.
பிணம்படுத்தல் – சவமாக்கி ஒழித்து அருளல் பெரியாழ்-5-3-4.
2450 பிணா – பெண்பால் பொதுப்பெயர். நாச்சி.1 – 4. பிதற்றும்- பெரியாழ். 3-7-8. திருவாய் – 10-4-1.
பிதற்றுமின் – திருவாய். 3-5-10.
பிதிர் – அதிசயம், மிச்சம். நான்முகன் திரு -83. பிது (பிதா) – பெரிய. திருவருந் -70.
2455 பிதுவை – தந்தையை. திருவிருத் 95. பிரகலாதன் – திருவாய். 2-8-9.
பிரகிருதி- சுபாவம். திருவாய்-10-7-10.
பிரமகுரு – பிரம்மோபதேசம் செய்யத்தக்க ஆசாரியன். பெரியாழ். 5-2-8.
பிரமபரம்பரன்- இந்திராதிகளில் ஏற்றமுடைய பிரமாவாகிற பராத்பரன். திருவாய்-8-4-9,
2460) பிரமமுதல் வித்தாய் – பிரமமாகிற பிரதான
பீசமாய் – திருவாய்-8-10-7.
பிராக்கள் – உபகாரிகள் – திருவாய் -3-7-5. 9-1-11. பிரிதி – ஒருதலம் – பெரிய – 1-2-1-10.
பிலம்பன் – பிரலம்பாசுரன் – பெரியாழ். 3-6-4. 4-9-3. பிழக்குடையவசுரர் – தீமைகளைச் செய்கின்ற அசுரர். பெரியாழ். 4-8-7.
2465 பிள்ளைக்குழாம் பிள்ளைகளின் திரள் – திருவாய்-7-3-1. பிளவெடுத்து கிழித்துப்போகட்ட. பெரிய -1-5-7.
பிற்காலும் – மேலும்- இரண்டாந்திரு. – 93.
பிறப்பிலி- பிறத்தல் இல்லாதவன். பெரிய – 1-8-7.
பிறப்பு – திருப்பா-7.
2470 பிறவியில் மாண்ட பிள்ளைகள் – பெரிய -4-8-2.
பிறை -ஓரணி பெருமாள் -7-4.
பிறைதங்குகடையான- சிவன் – பெரிய-3-4.
பின்னை – நப்பின்னை. திருச்சந்- 13. 33, நான்முகன்திரு. 33
மூன்றாம் திருவந் -49.85, பெரிய-3-10-7,4-4-4.
4-5-3, திருவாய்- 4-8-4. 5-9-8. 4-2-5.
பின்னைக்கு மணவாளன் – நப்பின்னைப்பிராட்டியின்
மணவாளன் – பெரிய -6-6-9.
2475 பீர் – வெளுப்பு – திருவாய் – 1-5-8.
பீலிசூடி -மயில் தோகையைச்சூடி. பெருமாள். 6-9.
பீலித்தழை – மயில்தோகை. பெரியாழ் -2-6-1.
பீளையோடீளை – நேத்திரமலம். பெரிய -6-4-1.
பீற -பிறக்க- நான்முகன் திருவந் – 49.
2480 பீனத்தெட்டபழம் பருத்து நன்றாகப் பழுத்த
பலாப்பழங்கள். பெரிய -3-4-8.
புகழ் மங்கை – கீர்த்தியாகிற மங்கை- பெரிய -3-2-5.
புகா – உணவு – பெரிய திருவந் – 42.
புட்கவ்வக்கிடத்தல் – பறவைகள் கவ்விக்கொள்ளும்படி
கிடத்தல். திருமா -6,
புட்குழி – காஞ்சீபுரத்திலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது
இருந்த திருக்கோலம். பெரிய -2-7-8.
2485 புட்டியிற்சேறு – இடையில் படிந்த சேறு திருவாய் -6-3-4.
புண்ணி புளிப்பெய்தல் – புண்ணின் மேல்புளிச்சாற்றைப்
பெய்தல்- பெரியாழ் -2-9-1 நாச்சி -13-1
புணர்ப்பு – படைப்பு, சம்பந்தம், சூழ்ச்சி முதல் திருவந் – 61.
திருவாய் – 2-8-2. பெரியாழ் -4-5-2.
புணைவன் – மரக்கலமாயிருப்பன் – திருவாய் -2-8-1.
2490 புத்து – புத்தர் திருமா -7.
புதஞ்செய்தல் – தாவுதல் – பெரிய -9-3-7.9-10-1.
புதம் – அம்புதம் – பெரிய -9-10-1,
புதமிகு விசம்பு-மேகம். பெரிய. 9-8-8.
புதாவினம் – புதா பெருநாரை – திருவாய் -6-8-9.
2495 புதியதுண்கை – முதல் விளைந்த விளைவை நல்லவேளையில்
சமைத்து உண்ணுதல். பெரிய. 9-3-7.
புதுக்கணிப்பு – வடிவிலுண்டான புதுமை – திருவாய்- 8-9-5.
புதுவிரை – மணம் – பெரிய – 9-1-3.
புதுவைக்கோன் -ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவன்.
பெரியாழ்-5-3-10,நாச்சி-3-10.
புதுவைப்பட்டன் – பெரியாழ் – 1-2-21, 1-3-10.
2500 புதுவை மன்னன் – பெரியாழ். 2-3-13, நாச்சி -5-11.
புயக்கற்றது- கைவிட அப்பியஸியா நின்றது. திருவாய். 9-5-10.
புரந்தரன் – இந்திரன் . பெரிய.4 – 6 – 8,
புரமெரிய அம்பானது – முப்புரம் அழிய திருமால்
அம்பானது. பெரிய.6-1-3.
புரவி முகஞ்செய்து- குதிரைமுகம் போலத் தலைவணங்கி.
பெரியாழ்.4-1-10.
2505 புராணர் – பழையவர். பெரிய. 1-8-1.
புருடோத்தமன் – திருமால். பெரியாழ். 4 – 7 – 2.
புருவ வட்டம் – வட்டமான புருவங்கள். நாச்சி. 14-6.
புரைபுரை – வீடுதோறும். பெரியாழ். 2-9-1.
புல்குதல் – தழுவுகை. பெரியாழ். 1-9-1.
2510 புல்லாணி – திருப்புல் அணை என்பதன் சிதைவு. வடமொழியில் தர்ப்பசயனம் என்பர். இப்புண்ணியத்
தலம் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. புல்லாரண்ய மகரிஷிக்கும், சமுத்திரராஜனுக்கும் அசுவத்த நாராயணனுக்கும்
அருள்பாலித்த இடம். பெரிய. 9-3-1-10. புல்லெழுந்தொழிதல் புல்முளைத்து அழிதல். திருமா. 13. புலம்- அழகு. திருவிருத்57.
புலமங்கை பூமிப்பிராட்டி. பெரிய. 3-2-5.
புலரி – விடியற்காலம். திருப்பள்ளி. 5.
2515 புலவர் – சர்வஞ்ஞர் பெரிய -1-1-7. புலாகின்ற மீன்நாற்றம் வீசப்பெற்ற. திருவிருத் . 75. புலையர் – சண்டாளர். திருமா.43. புழுதிக் காப்பிடுதல் ஸ்ரீபாததூளியைக் கொண்டு ரட்சை செய்தல். சிறிய திரு.16.
புள்ளரையன் கோயில்- கண்ணன் கோயில். திருப்பா.6.
2520 புள்ளுப்பிள்ளை. (புள்ளு- பறவை.) பெரிய.5-1-2.
புள்ளுவன் – வஞ்சகம். பெருமாள்.10 – 74.
புள்ளுவம் பேசுதல் – வஞ்சகமாகப் பேசுதல். பெரியாழ் 5-1-3.
புள்ளைக்கடாகின்றவாற்றை- பெரிய திருவடியை நடத்துகிற
விதத்தை .திருவாய். 7-3-1.
புளிங்குடி – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இரண்டு
கல்தொலைவில் உள்ளது. சயனத்திருக்கோலம்.
திருவாய். 8-3-5, 9-2-1.
2525 புளிப்பழம் – புளிப்புச் சுவையையுடைய ஒருவகைப்பழம்.
பெரியாழ். 2-4-1.
புளியட்டி புளிப்பழத்தைக் கொண்டு நீராட்டி.
பெரியாழ். 2-5-8.
புற்கு- புன்மை. திருவாய். 3-1-2.
புற்பா முதலா – பரவிய புல்முதலாக. திருவாய்.7-5-1.
புற்றுமறிந்தன – புற்றும் சிதைந்தன. பெரிய. 3-4-7.
2530 புறக்கிட – புறங்காட்ட திருவாய். 8-4-1.
புறம் சுவர்கோலம் செய்தல் – உடலை அவங்கரித்தல்.
திருமா 6.
புறப்பாடின்றி- வெளிப்படுதலில்லாமல், திருவாய்.7.
புறம்புல்குதல் முதுகைக்கட்டிக்கொள்ளுதல்.
பெரியாழ். 1-9-1-10.
புறமலை- திருமலைக்குப்புறம்பானமலை. திருவாய். 2-10-5
2535 புறவம் – புறா பெரிய. 3-8-2.
புன்புலவழி- அற்பமான சப்தாதி விஷயங்களிலே ஐம்பொறிகள்
செல்வதற்குரிய வழி. திருச்சந்.76.
புனக்கொள்காயா – தன்னிடத்திலே நிலையையுடைத்தான
காயா . திருவாய் -9-7-8.
புனிதம் – பரிசுத்தம். திருமா.23.
புனிதர் – புனிதரே.பெரிய. 10-8-8.
2540 புனை – புன்னை. பெரிய. 9-9-2.
பூகம் – பாக்குமரம். பெரிய. 7-8-4-8. (தே.) 1-30-10. புகலி.
பூங்கொத்து மலரின் தொகுதி. பெருமாள்.6-9.
பூச்சிகாடடி. பெரியாழ் 2-1-1-10.
பூசல்- போர். நாச்சி. 7-8.
2545 பூணித்தொழு – பூணி -பசு. பெரியாழ். 2-4-9.
பூணிபேணும் ஆயன். பசுக்களை மேய்க்கும் இடையன்.
திருச்சந்.26.
பூணிமேய்க்கும் பசுக்களை மேய்க்கும். பெரியாழ். 3-6-7.
பூதத் திருவடி – பூதத்தாழ்வார் திருவடி, இராமாநுஜ.9.
பூதனை – கம்சனால் கண்ணனைக் கொலைசெய்ய ஏவப்பட்ட
அரக்கி. பெரிய. 3-10-7.10-10-1.
2550 பூந்தண்துழாய் – அழகிய குளிர்ச்சி பொருந்திய துளசி.
திருவாய். 6-1-5,2-8-2.
பூந்தண்புனல் -பூவையுடைய குளிர்ந்த நீர். திருவாய். 2-8-2.
பூந்தாமம்- அழகிய மாலை. திருவாய்.2-8-6.
பூநிலாய ஐந்து – பூமியில் உள்ள ஐந்து குணங்கள். திருச்சந். 1
பூம்பாடகம் – பெரிய காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர்
சந்நிதி. இக்கோயில் கட்டு வெட்டுக்களில் எம்
பெருமான் பெயர் தூதுஹரி என்றுள்ளது.
இரண்டாந்திரு. 94.
2555 பூம்பாவை – பெரியபிராட்டி – திருவாய். 2-8-1.
பூமிபாரங்கள் – பூமிக்குச் சுமையான பாலிகள்.
பெரியாழ். 4-4-5.
பூரணபொற்குடம் – தீர்த்தம் நிறைந்த பொன்னாலான குடம்
திருவாய். 10-9-2. நாச்சி .6-1.
பூரிப்ப – பூரணமாக. திருவாய்.5-9-9, மூன்றாந்திரு. 44.
பூரியர் – நீசர்கள். இராமாநுஜ – 3.
2560 பூவியேல்- தள்ளிவிடாதே. பெரியதிருவந் – 40
பூவை – நாகணவாய்ப்புள். திருவாய். 6-2-5
பெட்டைக்கெடுத்தல் – பொய்ப்பேச்சுக்களைக் கண்டித்து
ஒழித்தல். இராமாநுஜ. 93. பெண்டாட்டி – பெண்பிள்ளை. திருப்பா – 11.
பெண்டுகள் – பெண்கள். பெரியாழ். 2-3-1.
2565 பெண்ணாகி – மோகினியவதாரம் எடுத்து. பெரிய. 2 – 6 – 1. பெண்ணைத் தென்பால் – பெண்ணையாற்றின்
தென்கரையில் பெரிய. 2 – 10 – 1.
பெண்ணைமேல் அன்றில் பனைமரத்தின் மேல் அன்றில்
பறவை. பெரிய. 11 – 1 – 6; 11 – 2-19 – 4 -1. பெய்தகாவு – உண்டாக்கின சோலை. திருவாய்.6- 3-5. பெய்தறியா பெற்றறியாத. பெரியாழ். 1 – 7 – 8.
2570 பெரிய கோயில் – ஸ்ரீ ரங்கம், திருமா. 11. பெருங்கிறியான் – திருமால். திருவிருத். 91. பெருந்தமிழன் – சிறந்த தமிழ்மொழியில் வல்லவன்.)
இரண்டாந்திரு. 74
பெருந்தேவன் – பரதேவதை திருவாய்.4-6-4.
பெருந்தேவி – சீதை. பெரியாழ். 3-10-4.
2575 பெருநிலம்- வீடு. பெரிய. 1 – 1 – 9.
பெருப்பெருத்த கண்ணாலங்கள் – மிகவும் விசேஷமான
கலியாணங்கள். பெரியாழ் – 3 – 7-10.
பெரும்பாழ் – பிரகிருதி. திருவாய். 8 – 8 – 6, 10-1-7.
பெரும்பாழ்க்காலத்து – உலகம் அழிந்து கிடக்கின்ற காலத்து.
திருவாய் 10 – 1 – 7.
பெரும்பாழி சூழ்ந்த – பாழி படுக்கை. முதல்திரு. 80.
2580 பெரும்புணர்ப்பு – பெரிய வியாபாரம். திருவாய். 2-8 – 3.
பெரும்புறக்கடல் – இந்த அண்டகோளத்துக்கு
அப்பாற்பட்டுச் சுத்த நீராக உள்ள கடல். பெரிய. 7-10-1.
பெரும்பொருள் சிறந்த அர்த்தம். இரண்டாந்திரு.- 64.
பெருமக்கள் – பரமசேஷிகள். திருவாய். 3 – 7-4.
பெருவழி நாவற்கனியினும் எளியள் – பெரிய வழியில் விழுந்து
கிடக்கின்ற நாவல்கனியினும் இனியள். பெரிய. 10 9 – 5.
2585 பெற்றம் – பசு. பெரிய – 10 – 1 – 10.
பெற்றமாளியை- பசுக்களை ஆளப் பிறந்தவன்.
பெரிய. 10 – 1 – 10.
பெற்றார் – தாய் தந்தையர். பெரிய. 8 – 9 – 7.
பெறுத்தி- பெறச் செய்து. பெரியாழ். 2 – 9 – 9,
திருவாய். 3-10 – 10.
பெறுத்து – உண்டாக்கி. திருவாய். 3 – 7 – 7.
2590 பேச்சும் அலைந்தலையாய் – பொருந்தாத பேச்சையும்
உடையவளாய். பெரியாழ். 3 – 7-1.
பேசுதல் – ஒலித்தல். பெரிய. 8 – 2-7.
பேதுறுவனே – கலங்காநின்றேன். திருவாய். 9 -4 – 3.
பேயரே – பைத்தியக்காரர்களே. பெருமாள்.3 – 8.
பேர் – திருப்பேர். பெரியாழ். 2 – 5 – 1; 2 – 6-2.
2595 பேரகத்தாய் – திருப்பேர்நகர். திருநெடுந் – 8; சிறிய திரும.70.
பேரீஞ்ஞூறு பெயர் ஆயிரம். இரண்டாந்திரு. 77.
பேரெழுதி – திருநாமத்தை எழுதி. நாச்சி. 1 – 2 – 3.
பேழ்வாய் – பெரியவாய். பெரிய. 2 – 3-8.
பைங்கூழ்கள் – பசுமையுடைய பயிர்கள். பெருமாள். 5-7.
2600 பைதல் – இளையது. திருவாய்.9 -5 – 6.
பைதல்காள் – குயிற்பிள்ளைகளே.திருவாய்.9-5 -8.
பொங்கத்தம் பொங்கோ – தோற்றவர் தோல்வியாலே
பறையடிக்க ஆடுவது தொருகூத்து.
பெரிய. 10-2-1-10.
பொங்கேழ் புகழ்கள் – பொங்கிக் கிளம்புகிற புகழ்கள்.
திருவாய். 8 – 10-4.
பொட்ட -சடக்கென . பெரியாழ். 3-5 – 1; 3-7-6.
2605 பொடியாடி பஸ்மதாரியானசிவன். பெரிய திரும. – 71.
100
பொத்த -துவாரப்படுத்திய. பெரியாழ். 1 – 9-7.
பொத-துளைத்த. திருச்சந்.73; பெரிய திருவந். 22.
பொதியறை – காற்றோட்டமில்லாத கீழறை. பெரிய. 10 – 7-4.
பொதுக்கோ-பொதுக்கென – சடக்கென. பெரியாழ். 2 – 5-4.
2610 பொது நாயகம் – சர்வ நிர்வாககத்துவம். பெரியாழ். 4 -9 – 4.
பொதும்பிடை பொந்துகளின் நடுவே.பெரிய. 4 – 10-2.
பொதும்பு – சோலை. நாச்சி -5 – 1.
பொய்கைப் பிரான் – பொய்கையாழ்வார். இராமாநுஜ – 8.
பொய்ச்சரம் காட்டுதல் – பொய்யாக அஞ்சினவன் போல்
நடித்தல். பெருமாள். 6 – 8.
பொய்ச்சுற்றம் – மனப்பூர்வமாக இன்றி உறவு முறை
கொண்டாடுதல். பெரியாழ். 5 – 3-4.
2615 பொய்ச்சூது – க்ருத்ரிமமான சூது. பெரியாழ். 2 – 1-1.
பொய்ந்நிலம் – தரை காண ஒண்ணாத சோறு.திருவிரு 100. பொய்ந்நூலை பிறமத நூல்களை. பெரிய. 2-5-2.
பொய்மொழி – பொய்யுரை. பெரிய. 6 -6 – 10.
2620 பொய்யறைவாய் – கிருத்ரிமமாகச் செய்யப்பட்ட நிலவறை.
பெரிய. 2-5-5.
பொய்யாதா – சாத்தியவாதிகள் நாக்கு. பெரிய. 5 -1 -5.
பொரி முகந்து அட்ட- நெற்பொரியை எடுத்துச் சேர்க்க.
(லாஜஹோமம்) நாச்சி. 6 -9. பொருட்டாயம் பொருள் தாயம் பொருட்பங்கு.
பெரியாழ். 3 – 1 – 7.
பொருதவனார் பொருதவன். நாச்சி – 8 – 8.
2625 பொருநல் தாமிரபரணி. திருவாய். 6 – 7-8.9-2 – 11. பொருநற்சங்கு திருப்பொருநலில் சங்குகள். திருவாய்-10-3 – 11.
பொருளின்பமென – பெரிய. 6- 2 – 1. திருவிருத். 73.
பொலிக பொலிக பொலிக – சாந்தி. சாந்தி. சாந்தி.
திருவாய். 5 – 2 – 1.
பொழிலேழும் – ஏழு உலகங்களையும். திருவாய். 1 – 4 – 5.
2630 பொள்ளை – துளை, பெரிய. 5 – 1 – 2.
பொள்ளை கரத்த போதகம் – துளைக்கையையுடைய
கஜேந்திரன். பெரிய. 5 – 1 – 2.
பொற்சுரிகை – பொன்னால் செய்த உடைவாள்.
பெரியாழ். 1 -3 -8.
பொற்றாமரை – குடந்தையில் உள்ள புண்ணிய நீரையுடைய
புஷ்கரிணி. திருநெடுஞ். 19.
பொற்றை – மலைக்கும், யானைகள் பலதிரிகின்ற காட்டுக்கும்
பெயர். திருச்சந் .52.
2635 பொன் பெயரோன் – இரணியன். பெரிய. 1 – 7-4, 3-3-8,
4-2-7,7 – 3 – 9, மூன்றாந்திரு. 23
பொன்பெற்றார் – வசிட்டர் முதலிய ஆசிரியர்கள்.
பெருமாள்.9 – 8.
பொன்முடியன் – அழகிய திருமுடியையுடையவன்.
திருவாய். 3 – 7 – 4.
பொன்மேனி – அழகிய சரீரம். மூன்றாந்திரு 1.
பொன்வட்டில் – தங்கக்கிண்ணம். பெருமாள். 4 – 3
2640பொன்வயிறு -அழகிய வயிறு. பெரிய. 1 – 8 – 6
பொன்னன் – இரணியாசுரன். பெரிய. 3 – 4 – 4.
பொன்னி – காவிரி. பெரிய. 3 -8 – 3.4 – 6 – 1.
பொன்னித் தென்பால் – காவிரியின் தென்கரையில்.
திருவாய். 10-8-1.
பொன்னி நாடன் – காவிரியையுடைய
பெரிய. 6-5 – 7.
நாட்டுக்குத் தலைவன்.
2645 பொன்னூலினன் – அழகிய யக்ஞோபவீதத்தையுடையவன்.
திருவாய். 3-7-4.
பொன்னை – தங்கம். பெரிய. 5 – 4 – 5
போக்கு-போக்கிலே.திருவாய்.10 – 3 – 1.
போக மூழ்கி- போகத்திலீடுபட்டு. திருவாய். 6 – 1 – 4.
போகலொட்டேன். போகவொட்டேன். பெரிய. 7 – 2-5
2650போகு – போவாய். பெருமாள். 6 – 7, 9 – 4,
திருவாய். 6-2-7.
போகே என்று- போய்ச்சேர் என்று அறிவித்து.
நாச்சி. 12 – 6, பெரியாழ். 3 – 9 -4.
போட்கன் – முறைகேடன். வெட்கம் கெட்டவன்.
நாச்சி.13 6, திருமா. 33.
போத்தந்த – வரவிட்ட பெரியாழ். 1 – 2- 1, 1 – 3-4,
போத – போதுக. பெரிய. 3 – 7 – 1.
7,8.
2655 போதர்கண்டாய் – விரைந்து ஓடிவா. பெரியாழ். 2 -9-6.
போதரேன் – வரமாட்டேன். பெரியாழ். 2 – 9 – 6.
போதியார் – பௌத்தர்கள். பெரிய. 9 – 7-9.
போதியும் – அரசமரத்தையும். பெரிய. 2 -1 – 5.
போதொடு நீரேந்தி – மலரோடு தீர்த்தத்தையும் எடுத்துக்
102
கொண்டு.முதல்திருவந்.43. (தே,) 4 -3-1. ஐயாறு.
2660 போய்ப்பாடுடைய – மிகவும் இடமுடையன, மிகவும்
புகழுடையன திருப்பா. 26.
போயினாலறையோ. விட்டுப்போக நினைத்தாய் ஆகில்
அறையோ அறை.அறையோ – முறையிடும்
சொல். அறையோவிதறிவரிதே
திருவிருத்10
ஜய சந்தோஷங்களைப்பற்றி வரும் குறிப்புச் சொல்.
போர்க்கதவம் – இரட்டைக்கதவு. முதல் திருவந்.4.
போரவிடாய் – தந்தருள வேண்டும். நாச்சி. 3-7.
போரவைத்தாய் – மிகவும் இட்டுவைத்தாய். திருவாய். 5-1-5.
2665 போருங்கொல் – மீண்டுவருவாளோ. திருவ. 6-7-2.
போல்- அசை.பெரிய. 5 – 2 – 1-9.
போழ்க்கனேன் – முறைகேடனான அடியேன். திருமா. 33.
(தே .) ‘போழம்பலபேசி’ 1-45-11. ஆலங்காடு.
பெளவம்-கடல். பெரிய 5 – 5-9,7-7-2.
பெளழியன்- ரிக்வேதி.பெரிய, 5 – 5 – 9, 7 – 7-2.
2670 மக்கள் பெறாத மலடன் – பிள்ளை பெறாதவன்.
பெரியாழ். 1 -4 -4.
மக்கள் வயது நூறு மக்களுக்குவேத சாத்திரப்படி விதிக்கப்
பட்ட வயது நூறு. திருமா. 3.
மக்கள் அறுவர் – கண்ணனுக்கு முன் பிறந்த ஆறுபிள்ளைகள் . பெரியாழ். 5 – 3 – 1.
மகள் பேசுதல் – மணமகளாகச் சொல்லி. நாச்சி. 6 – 3. மகரக்குழை சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட
காதணி. பெரிய திரும. 39.
2675 மகன்றில்காள் – ஆண் அன்றில்களே (அன்றில் – கிரவுஞ்ச
பட்சி) திருவாய்.1 – 4-4.
மகிழ்மாலை மகிழம்பூமாலை. திருவாய். 4-10-11.
மங்கைகுலவேந்தன் – திருமங்கை நாட்டுக்குத் தலைவன். பெரிய. 6-6 – 10.
மங்கைதன் பங்கன் -சிவபெருமான். பெரிய. 7 -10 – 3.
மங்கையர் கோன் – திருமங்கையாழ்வார்.பெரிய தனியன். 1, 3.
மங்கை வேந்தன் பரகாலன் – திருமங்கையாழ்வார். பெரிய. 7-5-10.
2680 மச்சணி மாடங்கள் -மேல்தளத்தை அலங்காரமாகவுடைய
மாடங்கள். திருவாய். 5-9-4.
மச்சணி மாடம்-மேல் தளம். நாச்சி. 11-4.
மச்சாவதாரம் – அசுரர் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டு
அருளினதும் மச்சாவதாரம். பெரிய. 11-4-1.
மச்சொடு மாளிகை -மேல் மாடம். பெரியாழ். 2-7-3.
மசுமையிலி- இலச்சையில்லாதவனே.நாச்சி. 3-9.
மஞ்சரி – தோரணம். பெரிய திரும. -26.
2685 மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் வாசிகை மாலை
பெரியாழ். 2-4-4.
மஞ்சளும் மேனியும் – பற்று மஞ்சள் மயமான சரீரம்.
பெரியாழ். 3-4-3
மஞ்சனம் – நீராட்டம். பெரியாழ்வார். 2-4-3, 6-7-9-10.
மஞ்சு- மேகம், அழகு, ஆபரணம். பெரிய. 1-1-10.
மட்டித்து – வீசி. நாச்சி -6-10, பெரிய திரும -68.
தே 4-53-10. ஆரூர்.
2690 மட்டையர் – மொட்டையர். பெரிய. 2-1-6. தே. 2-34-10.
பழுவூர்.
மடநாகு – இளம்பசு. பெரிய. 7-1-1.
மடப்பாவையிடப்பால் கொண்டவன். திருநெடுந். 9.
மடல்- பனை முதலியவற்றின் ஏடு. சிறிய திரும. 78.
மடலூர்தல் – தான் விரும்பிய தலைவியை அடைய வேண்டி
பனை மடலால் செய்யப்பட்ட குதிரையின்
மீது தலைவன் ஏறி ஊர்தல் – திருவாய்.5-3-9, 10.
2695 மடவார் கேள்வன் – பெண்களுக்கு விரும்பத் தகுந்தவன்.
பெரிய. 6-10-10.
மண்கோட்டுக் கொண்டான் மலை – பூமியைப்
கோரப்பல்லின் மீது எடுத்துக் கொண்டு வந்த
பெருமானுடைய திருமலை. மூன்றாந்திரு. 45.
மண்டை- பிச்சைக்கலம். பெரியாழ். 1-8-9.
மண்டோதரி- இராவணன் மனைவி. பெரிய -10-2-8.
மண்டோதரி காதலன் – இராவணன். பெரிய. 5-4-5.
2700 மண்ணரசும் வேண்டேன் -இப்பூமியை அரசாளும்
ஆட்சியை யான் விரும்ப மாட்டேன். பெருமாள். 4-2.
மண்ணி-மண்ணியாறு. பெரிய. 4-10-4.
மண்ணியின் தென்பால் – மண்ணியாற்றின் தென்கரை.
பெரிய. 4-10-1.
மண்ணை – ஒரு படை வீடு, ஒரு நதி சிற்றூறு போல.
பெரிய. 2-9-3.
2705 மண்மதியிற் கொண்டுகந்தான் – பூமியை தனது புத்தி|
சாமர்த்தியத்தினால் மாவலியிடம் பெற்று
உவந்தான். மூன்றாந் திரு. 58.
104
மணத்தூண் திருமணத்தூண். அழகிய மணவாளன்
சந்நிதியில் கர்ப்பகிரகத்திற்குப் பக்கத்திலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திருமணத்தூண்” என்று பெயர். வடமொழியில் ஆமோதஸ்தம்பம் என்று வழங்கும். ஆமோதம் -மணம்.பெருமாள். 1-2.
மணவாளீர் – மணவாளப் பிள்ளாய். பெரிய. 10-8-7.
மணாட்டுப் புறம் திருமணமுறை. பெரியாழ். 3-8-4. மணிக்கதவம் – அழகிய கதவு.(அம் – சாரியை) திருப்பா-16.
2710 மணிமாடக் கோயில். பெரிய திரும. -132.
மணி மாடம் – திரு நறையூர். பெரிய. 6-6-1-10.
மணிமேகலை- நவமணிகள் பதித்த அரைஞாண். பெரியாழ். 3-2-3.
மணி வயிறு – அழகிய வயிறு. பெருமாள். 8-1.
மணை நீராட்டி – கட்டை (பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதிரோ) (பழமொழி) பெரிய. 11-6-6.
2715 மத்தகம் – சிரம். பெரியாழ். 4-5-2.
மத்தணி – வாச்சியம். திருப்பள்ளி. 9.
மத்த மலர் – மதமத்தம்பூ. நாச்சியார். 1-3.
மத்தளி – வாத்திய வகை. பெரியாழ்.3-4-1. மதலைத் தலை – தூண் மேலுள்ள சிறுதூண். பெரிய – 3-8-2.
2720 மதிக் கண்டாய்- புத்தி பண்ணிகிடாய். இரண்டாந்திரு.51. மதி கோள் விடுத்தல் – சந்திரனுடைய துன்பத்தைப் போக்கி
அருளுதல். நான்முகன்திரு. 12.
மதிகோள்விடுத்து – யம். பெரிய -8-3-3.
மதுகரம் -வண்டு. பெரிய. 8-7-4.
மது கைடவர்கள் – திருமாலின் நாபிகமலத்தில் இரண்டு
நீர்த்துளிகள் இருந்தன. அவற்றைத் திருமால்
நோக்க இரண்டு அசுரர்கள் ஆயினர். இவர்கள்
ஹயக்ரீவரால் கொல்லப்பட்டனர். பெரிய. 10-6-3.
2725 மதுசூதன் – திருமால். பெரிய. 5-5-6; திருவாய். 2-1-5, 10-4-7.
மதுரையார் மன்னன் – கண்ணன். நாச்சியார். 6-5.
மந்தக் கோவை -செவ்வியழியாத தொடையல்.திருவாய். 9-9-8.
மந்த முழவு ஓசை -வாத்தியங்களின் மந்தமான ஓசையை
பெரிய -5-10-7.
மந்திரக் கோடியுடுத்தி – நிச்சயதார்த்தச் சீலையை
அணிவித்து. நாச்சியார். 6-3.
2730 மந்திரப் படுதல் – மந்திரத்தால் கட்டுப்படுதல். திருப்பா -9.
மயக்கு – மயக்கத்தைச் செய்யும் பொருட்கள். முதல் திரு. 7.
மயர்வறுத்தேனே – அஞ்ஞானத்தை அறுத்தேன்.
திருவாய் 1-7-3.
2735
மயிர்க் கூச்சு – புளகம். பெரியாழ். 5-3-5.
மயிரும் முடி கூடிற்றில மயிரும் சேர்த்து முடிக்கும்படி
கூடவில்லை. பெரியாழ் -3-7-2.
மரக்காற் கூத்து – மரத்தைக் காலிலே கட்டிக் கொண்டு
ஆடுவதொரு கூத்து. பெரிய -11-5-6.
மரங்கள் போல் வலிய வஞ்ச நெஞ்சனேன் – மரங்களைப்
போலக் கடினமான நெஞ்சையுடையனாய்
வஞ்சனையே தொழிலாகவுடையவனாம். திருமா. 27.
மரவடியைத் தம்பிக்கு – பாதுகைகளைப் பரதனுக்குக்
கொடுத்து. பெரியாழ். 4-9-1.
மருத்துவப் பதம் – வைத்தியம் செய்யும் மருந்தின் பக்குவம்.
பெரியாழ்-3-7-10
மருத்துவன் சுடினும்- வைத்தியன் சூடு போட்டாலும்.
5-4. பெரிய. 9-4-3
மருதஞ்சாய்த்தது – இரட்டை மருதமரங்களை முறித்துத்
தள்ளினது. மூன்றாந்திரு. 51
2740 மருதர் மருத கணங்களான நாற்பத்தொன்பதின்மர்.
திருவாய் – 10-9-7; திருப்பள்ளி – 6, தே. 2-110-6
மாந்துறை, 7-50-2 புனவாயில்.
மருதரும் வசுக்களும் – மருத்கணங்கள் ஒன்பதின்மரும்.
அட்டவசுக்களும். திருப்பள்ளி -6.
மருந்தம் – மருந்து. திருவாய் -3-4-5.
மருமகன் சந்ததியை உயிர்மீட்டது -அபிமன்யுவினுடைய
புத்திரனான பரிக்ஷித்தை மறுபடியும்
பிழைப்பித்தது. பெரியாழ் -4-8-3.
மருவலர் – பகைவர். பெரிய -3-9-10.
2745 மருள் பாடுதல் – மயங்கும்படி ஒருவகைப் பாட்டைப்
பாடுதல். நாச்சியார். 9-8.
மல்லிகை வெண் சங்கூதும் – மல்லிகைப் பூவாகிய
வெண்மையான சங்கை ஊதும். பெரியாழ். 4-8-8.
மல்லி நாடி – திருமல்லி நாட்டை ஆண்டவள். நாச்சியார்
தனியன்.
மல்லை – திருக்கடல் மல்லை. திருநெடுந் -9, திருக்குறுந் -19.
மல்லைச் செல்வம்-தனக்கு மேலில்லாத செல்வம்.
திருவாய். 8-9-8.
2750 மல்லை மாநகர் – செல்வம் நிறைந்த பெரிய நகரமாகிய
வடமதுரை. பெருமாள்-7-11.
மல்லை மா முந்நீர் செல்வம் நிறைந்த பெரிய கடல்.
பெரிய. 4-3-6, 4-8-4, 8-6-4.
மல்லையர்கோன் – மல்லாபுரி என்னும் திருக்கடல்
மல்லையுள்ளார்க்குத் தலைவன். பெரிய. 2-9-1.
மலக்க மெய்த – கலங்கும்படி. திருவாய். 8-3-10.
2755 மலக்கு நாவுடையேற்கு – மிகு களிப்பாலே சுழலப்
பண்ணுகிற. திருவாய் -6-4-9.
மலங்க – அழிய. பெரிய -5-7-8.
மலடன் – மகப் பெறாதவன். பெரியாழ் -1-4-4.
மலரெட்டுமிட்டு- கருமுகை, கற்பகம், சௌகந்தி,
செங்கழுநீர், தாமரை, கைதை – பெரிய. 3-5-6. தே. 5-54-1. 10,
அதிகை வீரட்டம்; 4-18-8 – விடந்தீர்த்த பதிகம்.
மலினம் – தோஷம், குற்றம். திருவாய் -5-1-4.
2760 மலைத்த – தகையப்பட்ட. பெரிய -1-7-2.
மலைப் பண்டம் – மலையில் விளையக் கூடிய பல பொருள் பெரிய -3-8-3.
மலையரசன் – மலையமான். திருநெடுந் -7. மலையில் மிளிர்ந்து மின்னும் – பெரிய மலையின்
கொடுமுடியில் விளங்குகின்ற. பெரியாழ். 5-4-10. மலையேழும் – சப்தகுலாசலம். இரண்டாந்திரு -49.
2765மழலை – இளமை. திருவாய் -5-8-11.
மழறு – இனிமை. திருவாய். 6-2-5.
மழுவாளி – சிவபிரான், பரசுராமன். திருவாய். 9-3-10,
பெருமாள். 9-9.
மழுவேந்தி – பரசுராமன். திருநெடுந். 7.
மழைக் கண்ணி – நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற
கண்களையுடையவள். பெரிய. 2-7-8.
2770மழையே மழையே – ஓ மேகமே. நாச்சியார் -10-8.
மற்கடம் – குரங்கு. பெரிய -5-8-2.
மற்றிண்டோண் – மல்யுத்தத்தில் வலிமையான, தோள்கள்.
திருவாய். 10-4-11.
மறந்த காலத்தும் – மழை பெய்யாமல் போனாலும்.
பெருமாள். 5-7.
மறியோடுதல் – கன்றுகளைத் திருப்புவதற்காக முன்னே
ஓடுதல். பெரியாழ் -3-3-6.
2775 மறுக்கம் – மனக்கலக்கம். பெரியாழ். 3-3-6.
மறுக்கேலே – கலங்கப் பண்ணாதே. திருவாய். 4-9-5.
மறுகாலின்றி – மறுதரமின்றியே. திருவாய். 6-9-10.
மறையாளன் – அந்தணன். பெரிய- 5-8-5.
மறைவலார் – வேதத்தை நன்கு கற்றவர்கள். பெரிய -9-7-10.
278 மறை வாணர்கள் – அந்தணர்கள். திருவாய் -10-8-10.
மன்றது பொலியத்திருமால். பெரிய. 4-3-8.
மன்றாடிகள் – இரந்து கேட்டல். பெரியாழ். 4-5-7.
மன்றில் – நாற்சந்தி. பெரியாழ் -2-8-2.
மன்றில் தூற்றல் வெளியில் அயலாரை விட்டுத் தூற்றுதல்.
திருவிருத் 41.
2785 மன்றிலார புகழ் மங்கை – நாற்சந்தியிலும் பரவிய
புகழையுடைய வரும் திருமங்கை
நாட்டையுடையவர். பெரிய. 11-1-10.
மன்றில் குரவை – நாற்சந்தியில் கைகோத்துக் குரவை
கூத்தாடுதல். பெரிய. 11-2-1.
மன்று- வெளிநிலம். பெரிய. 9-6-4.
மன்று – நாங்கூர்ச் செம்பொன் கோயில். பெரிய. 4-3-8.
மன்னர் குருதி கொண்டு – அரசர்களின் இரத்தத்தாலே
பெரிய. 3-4-5.
2700மனக் குற்ற மாந்தர் – கெட்ட இதயத்தையுடைய மனிதர்.
இராமாநுஜ-5.
மனிசப் பிறவி -மானிடப்பிறவி. பெரிய -1-10-6.
மனிசர் – மனிதர். பெருமாள் 1-10; திருமா-32, நான்முகந்திரு. 38.
மனிசர்க்கா – மனிதர்க்காக. திருவாய். 1-5-8.
2795 மனு குலத்தார் – மநு வம்சத்தில் பிறந்த அரசர்கள்.
பெருமாள்.9-10.
மாக்கோல் – குதிரையை நடத்துகிற கோல். திருவாய். 3-2-3.
மாகம்- பெரிய ஆகாயம். பெரிய. 9-10-5.
மாகாயமாய் நின்றமால் – திரிவிக்கிரமனாய் நின்ற திருமால்.
மூன்றாந்திரு.13.
மாசதிரிது பெற்று- மா சதிர் இது திருவாய் -2-7-1.
2800மாசுடம்பின் வல்லமணர் – அழுக்குப் படிந்த
உடம்பையுடையவராய் வலியவந்து வாது
செய்பவர்களான சைனர்கள். பெரிய 7-4-5.
மாகுணாதோ – அழுக்கடையாதோ,திருவாய். 1 -5-2.
மாசூணும் – அழுக்கடையச் செய்யும். முதல் திருவந்.82.
மாடக் கவாடம் – சந்நிதியின் திருக்காப்பு. பெரிய திரும,73.
மாடக் கோயில்- மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக்
கோச்செங்கணான் கட்டிய கோயில். பெரிய திரும. 132,133.
2805 மாடத்துச்சி மிசைச் சூலம் – மாளிகைகளின் முடிமேலே
இருக்கிற சூலங்கள். பெரிய. 3-9-4
மாட நெற்றி மாளிகைகளின் முகங்கள். பெரிய. 3 – 8-2.
மாடு- செல்வம். பெரியாழ் -3-7-9. பெரிய திருவந் – 58.
மாண்- அழகு, மாணி. பெரிய -7-4-10, எழுகூற்றிருக்கை8,
திருவாய்-1-4-3, 1-8-6, 8-4-4.
மாணிக்கப் பண்டாரம் – மாணிக்க நிதிபோல் இனியவன்.
பெரிய – 5-2-5.
2810மாணிக்க மொட்டு – இந்திர நீலமயமான அரும்பு.
பெரியாழ் -1-9-1.
மாணுருவாய் வாமன ரூபி. பெரிய. 2-9-7.
மாத்தடுப்ப – பசுக்களை வெளியே போகாதபடி தடுப்ப.
பெரியாழ். 3-5-2.
மாத்தமர் பாகன் – யானைப்பாகன். பெரிய -4-6-7
மாதர்க்காய் – சத்தியபாமைக்காக. பெரிய. 6 – 8 – 7
2815 மாதாபிது – தாய் தந்தை. பெரிய திருவந். 70
மாதாவினைப் பிதுவை – தாய் போன்றவனும், தந்தை போன்றவனும். திருவிருத். 95.
மாதுளம் பூ- அணிவகை. பெரியாழ். 1-3-2, 1-5-10.
மாந்தேர் – மாத்தேர். பெரிய 1-5-2.
மாமணி மண்டபம் – மாணிக்க மண்டபம். திருவாய் 10-9-11.
2820 மா மருந்தம் – மருந்து. திருவாய். 3-4-5.
மாமழை மொக்குள் பெருமழைக் குமிழி. திருவாய். 4-1-6.
மாமான் மகளே- அம்மான் பெண்ணே. திருப்பா– 9
“மாமான்” சீவக. 484.
மாமி தன் மகனாப் பெறுதல். நாச்சியார். 2-1.
மாமீர் – அம்மாமீர் திருப்பா. 9.
2825 மாமுனி கொணர்ந்த கங்கை. பெரிய -1-4-8.
மாமை- நிறம். திருவாய். 7-3-4.
மாயக்கவி – கிருத்திரிமக் கவி. திருவாய். 10-7-1.
மாய வலவை – கபடியான கட்டுவிச்சி. திருவாய். 4-6-4.
மாயிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலை மலை. திருக்குறுந். 3.
2830 மார்க்கண்டன் – மிருகண்டு முனிவரின புத்திரன். நான்முகன்
திரு-15.
மார்வனை ஆர்வத்தால் மார்வம் – மார்பு. பெரிய. 11-7-4.
தே -2-113-3 சீகாழி.
மாரதர் – பெரிய தேர் வீரர். திருச்சந்த .89, பெரிய -2-1-2.
மாரன் – மன்மதன். இரண்டாந்திரு -23.
மாருதி – அனுமன். பெருமாள். 10-6.
2835 மாலபாதம் -எம்பெருமானுடைய திருவடிகள். திருச்சந்த.
மாலவன் – கரியன். பெரிய. 10-5-2.
மாலி -மாலி என்னும் அரக்கன். பெரிய. 2-10-4.
திருச்சந்த. 28. திருவாய் 9-2-6.
மாலிமான் – சுமாலி. திருச்சந்த. 28.
112.
2840 மாலிருஞ் சோலை – பெரிய. 2-7-7,9-2-8, 9-8-1-10,11-2-8
நாச்சியார் -4-1, சிறியதிரும. 74, பெரிய திரும. 125,
திருவாய் -2-10-1-10, பெரியாழ் -3-4-5.
மாவரும் திண்படை (மா – குதிரை) பெரிய -3-4-5.
மாவலவன் – ஆடலமாவென்னும் குதிரையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய. 10-2-10.
மாவலி – அசுரசக்கரவர்த்தி, பிரகலாதன் பேரன்
மூன்றாந்திரு – 18, முதல் திருவந். 50, சிறிய திரும. 46,
நாச்சியார் -4-93 8-6, பெரிய -1-5-6, 4-10-7,7-8-6, 8-8-5, 10-6-4,
11-5-10, 11-7-2, இரண்டாந்திரு.89, பெரியதிரும- 108,
திருவாய், 3-8-9.
மாழாந்து- ஒளி மழுங்கி. திருவாய். 2-1-6.
110
2845 மாற்றாண்மை- பகைத் தன்மையை யாளுகை. திருவாய். 2-1-7.
மாற்றரசர் – பகைவரான துரியோதனன் முதலிய அரசர்கள்.
பெரிய. 4-4-1.
மாற்றிலி பிரதி உபகாரத்தை விரும்பாமல் உதவி செய்தல்.
பெரியாழ் – 4-4-10.
மாற்றிலிசோறிடுதல் – உதவியை எதிர்பார்க்காமல்
விருந்தினர்களுக்கு அன்னம் அளித்தல். பெரியாழ். 4-4-10.
மாற்றுத்தாய் – சுமித்திரை. பெரியாழ்-3-9-4.
2850 மாறன் – நம்மாழ்வார். இராமாநுஜ. 19. திருவாய் -4-10-11.
மாறன் பசுந்தமிழ் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்
மொழி. இராமாநு – 64.
மாறன் பணித்த மறை நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதம்.
இராமாநு -46.
மாறனடி பணிந்துய்ந்தவன் – நம்மாழ்வாருடைய திருவடிகளைப்
பணிந்து உஜ்ஜீவித்த இராமாநுஜர். இராமாநுஜ-1.
மான் கொண்டதோல் – கிருஷ்ணாஜினம். பெரிய -6-8-1.
2855 மானம்- பெருமை. பெரிய -4-10-10.
மானவேற் கலியன் – சிறந்த வேற்படையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய -4-10-10, 9-1-10.
மானிடம் பாடல் என்னாவது – மனிதர்களைப் பாடுதலால்
என்ன பயன். திருவாய். 3-9-3.
மானிடம் பாட வந்த கவியேனல்லேன். திருவாய்.3-10-9.
மானிடம் பாடேன் – மனிதர்களைப் பாடமாட்டேன்.
நான்முகன் திருவந் – 75
2860 மிடுக்கு – சத்தி. பெரியாழ். 1-1-9, (தே) 7-17-10 நாவலூர்.
மிண்டர்- மூர்க்கர். திருமா -14. தே. 1-133-10. கச்சியே
கம்பம் 2.104.10. கடிக்குளம்.
மிண்டுதல் செறிதல். பெரிய -4-10-2.
மிலைக்க – கனைக்க. திருவிருத் – 94.
மிழற்றுதல் . இன்சொல்கூறல், சேஷ்டிதங்களைச் செய்தல், பெரியாழ். 4-5-9.
2865 மிளிர்ந்து பாய்ந்து. திருவிருத் -14.
மிளை – சிலுபுதல். பெரிய, 8-7-3. மிறை- மிடுக்குக்கள். நாச்சியார். 10-7.
மிறைத்து மேடாணித்து. பெரிய – 3-4-10.
மினுங்கநின்று -விளங்கும்படி நின்று. நாச்சியார். 14-2.
2870 மீட்சி – திரும்பி வருதல்.
2875
மீதியன் – மேற்பட்டவன்
மீமீதாடாவுலகத்து- மேலே செல்லாத உலகத்தில்.
நாச்சியார். 13-7.
முக்கட்பிரான் – சிவபெருமான். திருவாய். 7-6-1.
முக்கணம்மான் – சிவபெருமான். திருவாய் 10-7-7.
முக்கி- பெரிதும் வருந்தி. பெரிய திருவந். 69
முகத்துச் சுட்டி சுட்டி – நெற்றியணி. பெரியாழ். 1-4-1.
முகப்படாயெனனும் எதிர்ப்படாதிருக்கிறாய். திருவாய் -7-2-2.
முகப்பு – முன்பு. இரண்டாந்திரு -50, பெரிய – 10-6-10.
முகப்பே- முன்னே. பெரிய.4-8-4, 10-2-4, பெரியாழ். 4-1-8,
இரண்டாந்திரு. 69, திருவாய் -4-7-4, 6-3-11, 8-5-9, 9-2-8.
முகப்பே கூவி – சந்நிதி. திருவாய். 8-5-7.
2880 முசுக்கணங்கள் – முசு என்ற சாதிக் குரங்குகளின்
கூட்டங்கள். பெரியாழ் – 3-5-9.
முடித்தன்றே- நிறைவேற்றிக் கொண்டது அன்றே.
இரண்டாந்திரு. 22.
முடிவட்டம் – திருவபிஷேகம். மூன்றாந்திரு. 13
முண்டம் – சுபாவம். பெரியாழ். 1-8-9, பெரிய – 3-9-3, 5-1-8.
முண்டர் – சைவர். திருமா- 8.
2885 முத்கலன் – ஒரு புண்ணிய புருஷன்.
முத்தப்பன்- முத்துப் பால போக்கியன்.திருவாய். 6-3-9.
முத்தம் – அதரம். பெரியாழ். 3-3-2.
முத்தி வளர்த்து மோந்து. பெரிய – 10-7-12.
முத்திறத்து நீர் – கடல், திருச்சந்த – 82.
2890 முத்திறத்து வாணியத்து -சாத்விக, ராஜஸ, தாமசங்களான
பலன்கள், திருச்சந்த – 68.
முத்தின் குப்பாயம் – முத்தினாலான போர்வை.
நாச்சியார். 14-4.
முத்தின் கோடாலம் முத்தாலே தொடுக்கப்பெற்ற
வளைவான மாலை (ஆரம்- ஆம் ) பெரியாழ் -3-3-1.
முத்தீயர் – கார்கபத்தியம், ஆகவனீயம்,
தக்கிணாக் நிகளையுடையவர். பெரிய – 3-8-4
முத்தீ நான்மறை- முத்தீ-கார்கபத்தியம்,
ஆகவனீயம், தக்ககிணாக்கிநி, நான்மறை- ருக், யசுஸ்,
சாமம், அதர்வணம், எழுகூற் -13-14.
முத்தோ- சந்தோஷமோ. பெரிய திருவந். 27.
2895 முதல் – பாக்கியம். நாச்சியார். 10-7.
முதலையின் பல்விடம் – முதலையினுடைய பல் விஷம்.
திருப்பள்ளி. 2.
முதுகத்திடை – முதுகின்மேல். பெரியாழ். 4-4-5.
முதுகயம் – கடல். பெரிய – 8-5-6.
முது புணர்ப்பு – பழைய நிலைமை. நான்முகந்திரு. 54.
2900 முந்நீர் ஞாலம் – ஆற்றுநீர், ஊற்று நீர்,மழை நீர்
திருவாய். 3-2-1.
முந்தை- முற்பட்டவர். திருவாய் -3-3-2.
முப்பத்து முவரமரர் – முப்பத்து முக்கோடி தேவர்.
திருப்பா.20.
முப்புரி நூல் -பூணூல். பெரிய – 6-5-7.
மும்மதப்புனல் இருகபோலமும் மேட்ரமுமாகிற
மூன்றினின்றும் வடியும் மத ஐலம். பெரியாழ். 1-7-1.
2905 மும்மூர்த்தியுருவானவர்-திருமால். திருவாய் -7-6-3.
முயல் விட்டுக் காக்கை பின் போவதே. சிறியதிரும. 8,
தே 4-5-2. ஆரூர். பழமொழி
முயற்றி – உற்சாகம். பெரிய 1-8-5.
முயற்றியவாய் – முயற்சியையுடையவாய். பெரியதிருவந்.85.
முரன் – நரகாசுரன் மந்திரி. திருச்சந்த, 59, 104, மூன்றாந்திரு, 78, பெரியாழ். 1-5-4.
2910 முரி சுரியேறு பெரிய சுழித்தலையுடைய. மூன்றாந்திரு. 49. முல்லைப் பிராட்டி- முல்லைக் கொடி, பெண்பிள்ளை. பெரிய.5-2-7.
முழுவி -முத்தம். நாச்சியார். 13-5.
முழு சிவண்டாடிய துழாய்- வண்டு முழுசி ஆடிய துழாய். வண்டுகள் தேனிலே முழுகிக் கூத்தாடிய துளசி. பெரிய. -2-8-7.
முழுசுதல்- முழுகுதல், பெரிய. 2-8-7; 8-7-6. பெருமாள். 9-6.
2915 முழுவுதல் – முத்தமிடுதல். (திருக்கோவையார். 227.) முள் முளரிக் கூடு -தாமரைத் தண்டால் செய்த கூடு. பெரியதிரு. -84. முள்ளிச் செழுமலரோர் தூரான் – திருமங்கையாழ்வார்.
முளரிக் குரம்பை – தாமரையிலைகளையும், பூக்களையும்
கொண்டு வந்த செய்த கூடு. திருவிருத் -83.
முளரிக் கூட்டகம் – தாமரைப் பூவாலும், தண்டினாலும்
செய்யப்பட்ட கூடு. பெரிய – 11-1-6.
2920 முளிந்தீந்த வெங்கடம் – உலர்ந்து தீய்ந்து போன கொடிய
பாலைவனம். பெரிய -6-3-8.
முளையட்டி – திருமணத்தின் அங்கமாக நவதானியங்களைக்
கொண்டு பலிகை வைத்தல். பெரியாழ் -3-3-9.
முற்கலன் – ஓரடியான். விஷ்ணு தர்மத்தில் கண்டது இந்த
உபாக்கியானம்.திருமா. 12.
முற்றமூத்து – மிகவும் கிழத்தனத்தை அடைந்து. பெரிய -1-3-1.
முற்றல் யானை – குவலயாபீடம் என்னும் யானை.
திருச்சந்- 52.
2925 முற்றாவுருவாகி – முதிராத வடிவையுடையையாகி.
திருவாய். 8-3-4.
முற்றில் – சிறு முறம். பெரியாழ் -3-7-1, 1-2-19.
முற்றும் – முற்றுதும் என்பதன் குறுக்கல். தன்மைப் பன்மை
வினைமுற்று. பெரியாழ். 2 – 10 – 1-9.
முன்றிலெழுந்த முருங்கையிற்றோனாம். (பழமொழி)}
பெரிய. 10-9-2.
முன்றிற் பெண்ணை-வாயில். பெரிய. 11-2-1.
2930 முன்னல் – முன்னர். பெரியாழ் – 1 – 7 – 5.
முன்னுரை – பாரதம். பெரியதிரும. 59.
முனி – திருமால். திருவாய். 10 – 10 – 1.
முனிவர் வேங்கையின் அணார் சொறிதல் – பெரியாழ் -3-5-8.
முனைவன் – முக்கியமானவன், தலைவன்.
2935 மூக்கின்று – மூக்கின்றது. பெரிய திரும. 92
மூக்குறிஞ்சி – மூக்கை உறிஞ்சிக் கொண்டு. பெரியாழ். 2-2-2.
இராமாநுஜ தனியன்.
மூடநெய்- பால்சோறு மறையும்படி நெய் ஊற்றி. திருப்பா. 27
மூத்தவை – பெரிய அவை. பெரியாழ். 1 – 9-8.
மூத்திரப் பிள்ளை – அசுத்தனான பிள்ளை. பெரியாழ். 4-6-9.
3940 மூதறியும் அம்மனைமார் – பழம்பாடல்கள் தெரிந்த
பாட்டிமார்கள். சிறிய திரும. 19.
மூதுரை – பழமொழி. பெரியாழ். 3-7-4.
மூதுவர் – முற்பட்டவர். திருவிருத்2
மூப்புப்பற்றிய பதிகம். பெரிய. 6 -4 – 1 – 10.
மரி – மிடுக்கு. பெரிய. 6 – 3 – 8. மூலமாகிய ஒற்றையெழுத்து – ஓம் என்ற பிரணவம்.
பெரியாழ். 4-5-4.
மூவாயிர நான்மறையாளர் – தில்லை வாழ் அந்தணர்கள்.
பெரியாழ். 3-2-8.
மூவுருவும் – அரி, அயன், அரன். நெடுந்தாண்டகம். 2.
மூவெழுகால் -இருபத்தோரு படிகள். இராமாநுஜ 56.
பெரிய. 5-3-1, 6-7-2-8-8-6-9-1-6.
மூழ்க்கச்சூழ்ந்து- அறிவையழுத்த. திருவாய். 10-3-2.
2950 மூழ்த்த நாள் – பிரளய காலம் .பெரிய 6 – 8-2.
மூழை- அகப்பை.பெரியாழ் – 3-7-4.
மூன்று என்ற எண்ணுள்ளபொருள்கள் . திருச்சந். 2, 4, 77.
மூன்று தண்டர் – துறவிகள். திருச்சந்த – 52.
மூன்று நாட்டரசராகவும் கூறப்படுதல்,பெருமாள். 2 – 10.
114
2955 மூன்றெழுத்துடைய பேர் – கோவிந்தன் என்ற பெயர், திருமா. 4. மூன்றேழுத்துள்ள மந்திரங்கள் – ஓம் என்னும் விரணம்.
பெரியார் 4 – 7 – 10.
மெச்ச ஊது – மெச்சூது. அகரம் – தொகுத்தல் விகாரம்.
பெரியாழ்2 – 1 – 1.
மெத்தை – படுக்கை. பெரியாழ். 5 – 1 -7. மெய்ஞ்ஞானம் – தத்துவ அறிவு. நான்முகன்திரு – 71.
2960 மெய்த்தன் – மெய்யே. திருச்சந்85.
மெய் நாவன் – உண்ைைம பேசுபவன். பெரியாழ். 4-9-11. மெய்ப்பிணக்கிடுதல் – உடல் சேர்க்கைசெய்தல்.
நாச்சியார். 2 -9. மெய்யடியார்கள் – உண்மையான அன்பையுடைய
பாகவதர்கள் பெருமாள். 2 – 1 – 10. மெய்யடியான் – உண்மையான தொண்டு செய்பவன்.
பெரியாழ். 4 -9 – 11
2965 மெய்யம் – இத்திருப்பதி திருமயம் இரயில் நிலையத்திலிருந்து
அரைகல் தொலைவில் உள்ள. பூசித்துப் பேறு பெற்றோர் – சத்திய தேவதையும். அனந்தனும். சயனத்திருக்கோலம். பெரிய. 2-5-8; 9-2-3; 10-1-5. மெய்ய மலையாளன் – மெய்யமலையை இருப்பிடமாகக்
கொண்டவன். பெரிய. 5 – 5 – 2; 11 – 7-5.
மேகக் குழாங்கள் மேகக் கூட்டங்கள். திருவாய். 9-5-7.
மேகின்ற – விரும்பித தழுவுகின்ற. திருவிருத் – 83.
மேகின்றாய்- மேவி நின்றாய். திருவாய் – 2 -6 – 10.
2970 மேம் பொருள் – ஜனங்கள் விரும்புகின்ற பொருள். (லௌகிக
பதார்த்தங்கள்) திருமா – 38.
மேய்க்கிய – மேய்க்க. திருவாய்.10 – 3-7.
மேய்க்கின்று – மேய்க்கும்பொழுது. திருவாய்- 10 -3 – 7.
மேல் தோன்றி – செங்காந்தள். நாச்சியார். 10 – 1.
மேலாப்பு – விதானம், மேற்கட்டி. நாச்சியார் – 8 – 1.
2975 மேலெழுந்ததோர் வாயு – ஊர்த்துவ உச்சுவாசம் (மேல்
4-5-4. மூச்சுக் காற்று பெரியாழ்
மேலெழப் பாய்ந்திட்டு – காளியன் என்னும் பாம்பின் தலை
மீது நின்று. பெரியாழ் – 2 – 10 – 3.
மேலையகம் – யசோதையின் வீட்டிற்கு மேலண்டை வீடு.
பெரியாழ் – 2 – 9 – 5, பெரிய. 10-7-2.
மேற்கிளைக் கொண்டிருமி – மேலான த்வனியோடு இருமல்
மேலிட்டு, பெரிய. 1 – 3 – 2.
மேன்மக்கள் – நித்திய சூரிகள். திருவாய். 4 -3 – 9.
2980 மேனகை – தேவலோகத்து மகளிருள் ஒருத்தி.
பெரியாழ்- 3 -6 -4.
மேனிக்குப் பூசுஞ் சாந்து – திருமேனிக்குப் பூசத் தகுந்த
பரிமள திரவியம் திருவாய் – 4-3-1.
மைத்த சோதி -மையின் தன்மைவாய்ந்த ஒளி.
பெரிய – 1 – 3 -6.
மைத்துனன்மார் – அத்தைபிள்ளைகள், பெரியாழ் -4-9-6.
மைதிலி- சீதை, பெரிய. 3 -1-8. பெருமாள். 8-4.
2985 மைந்தன் – கண்ணன். நாச்சியார் -5-1.
மைப்படி – கரிய திருமேனி. திருவிருத். -94.
மையன்மை – மயக்கம். பெரியாழ். 2-3-3, 3-1-4.
மையாக்கும் – மோகியர் நிற்பாள். திருவாய். 4-4-6, 7-2-3.
மொக்குள் – மொக்கல், நீர்க்குமிழி.
2990 மொட்டு- அரும்பு.
மொய்குழல் – நெருங்கிய கூந்தல்.
மொய்ம்பு – வலிமை.
மோக்கம் – மோட்சம். திருவாய். 3-4-7.
மோடி காளி. – திருச்சந். 53, இராமாநுஜ.22.
2995மோடு பருப்பார் – வயிறு பருப்பவர்கள். திருவாய். 3-5-7.
மோய் -தாய் . பெருமாள் -7-6, 9-9.
மோழை – குமிழி, நீர்ப்பெருக்கு, கீழாறு, துவாரம்.
பெரியாழ் 3-7-4, பெரிய -4-4-9, திருவாய் -7-4-1,
தே. 7-7-8. எதிர்கொள்பாடி
மௌவல்- மல்லிகையில் ஒருவகை.
யமுனைக்கரை – நாச்சியார். 12.
யமுனைத்துறைவன் ஆள வந்தார். இராமாநுஜ.21.
3000 யவர் -எவர். திருவாய் – 3-4-9-10.
யவரும்- எல்லாச் சேதனரும். திருவாய் – 2-2-6.
யாய் – தாய். பெரிய -10-5-8.
யார் முகப்பும்-எல்லார் முன்பும். இரண்டாந்திரு -50.
யாவகையுலகம் -எவ்வகைப்பட்ட உலகம். திருவாசி.
3005யோகம் – மருந்து. கண்ணுக்கு விஷயமாகிய வஸ்து.
நாச்சியார் -12-5.
-4-7.
116
யோகு செய்தல் – உலகைக் காப்பாற்ற உபாயஞ் செய்தல்.
திருவாய் -5-4-11; 7-8-4; தே -5-81-10 பாண்டிக் கொடுமுடி
வக்கரன் வாய்முன் கீண்ட – தந்தவக்ரனுடைய வாயைக்
கிழித்த. பெரிய. 5-9-5.
வக்கரனைக் கொன்றான் கண்ணன். மூன்றாந்திரு. 21.
தே 4-56-6. ஆவடுதுறை.
வகுக்கின்று – வகுப்பதாயிருக்க. திருவாய். 1-4-9.
3010 வங்கக் கடல் – கப்பல்களையுடைய திருப்பாற்கடல்.
திருப்பா- 30.
வங்கத்தின் கூம்பேறு பறவை – கப்பற்காகம். பெருமாள்.5-5.
வசவு- நிந்தனை. நாச்சியார் -12-8.
வசிட்டன் – இக்குவாகு வம்சத்துப் புரோகிதர். பெருமாள். 9-7.
வசுக்கள் – அஷ்ட வசுக்கள். திருச்சந். 6. திருவாய். 10-9-7. வசுதேவர் – இவர் சூரசேனன் என்பவனுடைய புதல்வர். இவரது மனைவி பெயர் தேவகி. திருமால் இவருக்கு மகனாகத் தோன்றினார். பெரிய -6-8-10. வட்கு – லஜ்ஜை. திருவாய் -7-2-3.
வட தடம் – வடக்குத்திக்கிலுள்ள திருப்பாற்கடல்.
பெரியாழ். 5-4-10.
வடபுலக் கோன் வடநாட்டு அரசன். பெரிய 6-6-5.
வட மரத்திலை மேல் பள்ளி – ஆலமரத்தின் இலைமேல்
பள்ளி கொண்டவன். பெரிய. 6-6-1,
தே. 1-20-5 வீழிமிழலை
3020 வட மலை – திருவேங்கட மலை. பெரிய- 5-6-7.
வண்டமிழ் – அழகிய தமிழ். பெரிய – 1-8-10.
வண்டமிழ் நூல் – திருவாய் மொழி. திருவாய். 4-5-10.
வண்டமிழ் மாமுனி – அகத்தியர். பெருமாள். 10-5.
வணங்கேனேலும் – வணங்கேனாயினும் திருவாய். 4-3-4.
3025 வதரி – பதரி என்ற வடசொல் வதரி என்று திரிந்தது. பதரி –
இலந்தை. இத்திருப்பதி இமயமலையிலுள்ளது. பதரீ
நாராயணன் என்னும்நாராயணன் ஆவார். சிறிய
திரு. 74, பெரிய. -1-3-1-10. பெரியாழ். 4-7-9.
வதரியாச்ரிராமம்- பெரிய. 1-4-1-10.
வதுவை -மணம் .நாச்சியார். 6-2.
வதை செய்தல் – கொலை செய்தல். நாச்சியார் – 8-9.
வந்திக்கு மற்றவர் – பலாத்காரமாக அபகரிக்க. பெரிய. 7-4-5.
3030 வந்தி பற்றும் வழக்கு- வருத்தி அபகரித்துக் கொண்ட
நியாயம். நாச்சியார் -9-3.
வந்தீயாய் – வந்து கண்களுக்கு உன்னைக் காட்டியருள
வேணும். திருவாய் -4-7-2.
வம்பர் -புதியர். திருவாய் -3-5-3.
வயிச்சிரவணன் – குபேரன். பெரியாழ். 1-3-5.
வயிரக்கடிபிட்டு- வச்சிரகுண்டல மணிந்து. பெரியாழ். 2-3-4.
3035 வயிரமேகன் – ஓரரசன். பெரிய. 2-8-10.
வயிர வழக்கு – சத்துருத்வ முறை. நான்முகன்திரு. 25.
வயிற்றினகம் படியில் – திருவயிற்றின் உட்புறத்தில்.
பெரிய. 11-6-8,9.
வயிற்றிற்றொழுவைப் பிரித்து – கர்ப்ப வாசத்தைக் கழித்து.
பெரியாழ். 5-2-3.
வயிறசைதல் – வயிறு தளர்தல். பெரியாழ். 2-2-1.
3040 வயிறடித்தல் – வயிற்றில் மோதிக் கொள்ளுதல்.
சிறிய திரும. 34.
வயிறு மறுக்குதல் – வயிற்றைக் கலக்குதல். பெரியாழ். 3-3-6.
வரகுண மங்கை – ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 1 /2 கல்
தொலைவில் உள்ளது. அக்னி தேவனுக்கு அருள
புரிந்தவன். வீற்றிருக்கும் திருக்கோலம். திருவாய்.9-2-4.
வரண்ட – தள்ளப் பெற்ற. பெரிய -4-5-10.
வராகவதாரம் – திருமால் காட்டுப்பன்றி வடிவம் எடுத்து
நீரிலே மூழ்கியிருந்த நிலமகளை வெளியில்
கொண்டு வந்தார். பெரிய -11-4-3.
3045 வருத்தித்தல் – சிருஷ்டித்தல். திருவாய் -2-2-8.
வருமை- பரலோகம், மறுமை. திருவாய். 3-7-5.
வல்லரட்டன் – பெருமிடுக்கன். திருவாய். 10-1-9.
வல்லவாழ் – திருவல்லா என வழங்கும் திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 9-7-2.
வல்லாளன் – கருடன். முதல்திரு. 80.
118
3050 வலவை பிறர் ஏற்றுக் கொள்ளும்படி பேசுபவன்.
திருவாய். 4-6-4.
வலி செய்ய- பீடிக்க. பெரிய. 3-6-4.
வலிப்படுதல் – பலாத்காரத்திற்கு உட்படுதல். பெரியாழ். 3-5-2.
வழுவிலாவடிமை – குற்றமில்லாத அடிமை. திருவாய். 3-3-1.
வள்ளி கொடி.பெரியாழ். 3-2-7.
3055 வள்ளி கொழுநன் – முருகன். பெரிய. 6-7-6.
வள்ளி நுண் மருங்குல் – கொடி போன்று நுட்பமான
இடை. பெரிய 2-7-5.
வளர்ந்தவன் – கண் வளர்ந்தவன். பெரிய – 5-6-4.
வளைவணன் – பலராமன் – பெரிய – 8-5-2.
வற்பு – வலி. பெரிய. 5-1-4.
3060 வன மாலை – திருத்துழாய் மாலை, காட்டிலே பூப்பறித்துக்
கட்டிய மாலை. நாச்சியார். 13-3, 14-2.
பெரிய. 3-4-9, 5-5-6, பெருமாள் 69.
வளாய்க் கொள்ள – சூழ்ந்து கொள்ள. திருவாய் -8-7-7.
வளை கொண்ட வண்ணத்தன் – சங்குபோல
வெண்மையான நிறத்தையுடையவன். பெரிய -6-9-3. வளைத்து வைத்தேன் – தடையிட்டு. திருவாசகம்.
வாகை நெற்று – வாகை மரங்களின் நெற்றுக்களானவை.
பெரிய. 1-7-8.
3065 வாசிகை – முத்து மாலை, திருவிருத், 50,68 பெரியாழ் 1-3-7; 2-4-4.
வாசி வல்லீர்- தாரதம்மியம் அறிய வல்லீர், வேறுபாடு
அறியவல்லீர். பெரிய -4-9-4; 4-9-9. தே. 1-92- வீழி மிழலை, 1-3-10 வலிதாயம்.
வாட்டாறு – திருவனந்தபுரத்திலிருந்து 28 கல் தொலைவில் உள்ளது. இத்திருப்பதி வாட்டாறு என்னும்
நதியால் பெயர் பெற்றது. திருவாய் 10-6-1-10. வாணபுரம் வாணாசுரனுடைய நகரம். திருவாய். 7-10-7.
வாணன்- பலியின் குமரன். இவனது நகரம் சோணிதபுரம்.
கம்சனுக்கு நண்பன் . இவனுடைய மகள் உஷை.
இவன் பூசித்த லிங்கம்பாணலிங்கம். திருநெடுந். 20,
மூன்றாந்திரு. 80, 92, நான்முகந்.56, திருவிருத். 78,
திருச்சந் 53,70,71, பெரியாழ். 5-3-9, பெரிய 3-4-3,
5-1-7, 6-7-6; 9-7-3; 11-4-5, திருவாய் 2-4-2, 3-8-9,
3-10-4, 4-8-9, 6-4-8.
3070 வாணன் மகள் – உஷை. பெரிய திரும. 60,64.
வாணாள் – வாழ்நாள் என்பது வாணாள் என மருவிற்று.
பெரிய – 1 – 1-6.
வாணிபம் – பயன். பெரியாழ் – 3 -7-9. தே, 7 – 35-3.
புறம்பயம்.
வாணியம் வாணிபம். திருச்சந்த 68.
வாத மா மகன் – அனுமன். பெரிய – 5 -8-2.
3075 வாதித்தல் – பாதித்தல். நாச்சியார் – 2-3.
வாதிப்புண் – துன்பமடைந்த. பெரியாழ், 2 – 10 – 8.
வாதை- பாதை துன்பம். நாச்சியார் – 2-3.
வாமனன் – காசியபருக்கு அதிதியிடம் அவதரித்தவர்.
விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம், இவர் மாவலியின்
செருக்கடக்க மூவடி மண் வேண்டினார். மூன்றாந்திரு – 18.
வாமான்றேர்ப் பரகாலன் தாவுதலையுடைய குதிரைகள்
பூட்டிய தேரையுடைய திருமங்கையாழ்வார். பெரிய. 7-4-10.
3080 வாய்க்கோட்டம் – வாக்கின் அநீதி. பெரிய. 4 – 3 – 8.
வாய் கொண்டு மானிடம்பாடுதல் – வாக்கைக் கொண்டு
மனிதரைப் பாடுதல். திருவாய். 3 – 9 – 9
வாய்த்த நன்மக்கள் – சிறந்த சீடர்கள். பெரியாழ். 1 – 9 – 10.
நாச்சியார் – 6 – 11.
வாய் நேர்ந்து – கொடுப்பதாக விண்ணப்பித்து. நாச்சியார் 9-6.
3085 வாயுறை – அறுகம்புல். திருப்பள்ளி. 8.
வாரம் அன்பு – பெருமாள். 2 -7. 5,
பெரிய. 2 – 10 – 5.
வாரமாக ஓதுதல் – திருவஷ்டாக்ஷரத்தை அன்புடன்
சொல்லுதல். திருச்சந்த 78
வாராகம் – பன்றி. பெரிய – 4 – 7 – 8.
வாலாட்டுதல்- செருக்கான செய்கை.(அஹங்காரம்)
நான்முகன் திருவந் 38.
3090 வாலி – இந்திரன் குமாரன். இவன் தம்பி சுக்ரீவன்.
நாள்தோறும் எண்திசைக்கடலிலும் தீர்த்தமாடிச்
சிவபூசை செய்பவன். நான்முகந்திரு. 85, பெருமாள் 10 -6.
வாலிதன்றன் – வாலியின் தம்பியான சுக்கிரீவன். திருச்சந் – 81.
வாலோலை கட்டி -வாலிலே ஓலையைக் கட்டி.
பெரியாழ். 4-7-5.
வாளி – அணிவகை. பெரியாழ். 1-5 – 10.
3095
3100
வானமாமலை – நாங்கு நேரியில் கோயில் கொண்டுள்ள|
பெருமாள்(சிறப்புப் பொருள்; பரமபதத்திலே பெரிய
மலைபோல வீற்றிருக்கும் திருமால) திருவாய். 5 -7 – 6.
வானரக்கோன் – வாலி. நான்முகன்திரு. 85.
வானவர்கோன் பாழி – திருமாலின் இருப்பிடமான பரமபதம்.
வானவர் தமக்கு- தேவர்களுக்கு. பெரிய -5-7-9.
வானிளவரசு -பரமபத இளவரசு . பெரியாழ் – 3 -6-3.
விக்கிரமம்- வீரச்செயல். பெரியாழ் – 5 – 4 -6.
விகிர்தம் – ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல். திருவாய். 3-10-9. விகிர்தமாதர் – வேறுபட்ட ஸ்திரீகள். பெரிய – 3 – 4-5.
விச்சாதரர் – வித்யாதரர்கள். திருப்பள்ளி -7.
விச்சைக்கிறை – சர்வஞ்ஞன். சமணர்கள் சர்வஞ்ஞர் என்று
ஒரு தெய்வமே கல்விக்குக் கடல் என்று
பணிவார்கள். பெரிய – 2 – 6 – 5.
3105 விசாதி -வியாதி.திருவாய்.5-2-6, நான்முகன் திரு. 52.
விசித்திரப்படுதல் – அமைத்தல். நாச்சியார். 2 – 5.
விசித்திரம் – அழகு. திருவாய் – 7 – 8-2.
விசும்பிலார் – பிரமன் முதலியோர். முதல் திருவந். 79. விசுவாமித்திரர் – காதியின் புத்திரர். ரிக் வேதத்தின் மூன்றாவது கண்டத்தில் அடங்கியிருக்கின்ற
கீதங்களுக்கெல்லாம் கர்த்தா. திருப்பள்ளி – 4.
3110 விட்டு – விஷணு. பெரியாழ் – 2-3 -5.
விட்டு சித்தன் – கருடாம்சம். புரச்சூடவைணவருடைய
மகனார் . கோதையின் வளர்ப்புத் தந்தை.
நாச்சியார் – 14 -10.
விடத்தேள் எறிதல் – விஷத்தையுடைய தேள் கொட்டுதல்.
நாச்சியார். 3 – 6.
விடமங்கள் – வைஷம்யங்கள். நேர்மையான
காரணமில்லாமல் வேறுபடுத்துதல். திருவாய். 7-8-3.
விடிவை சங்கொலிக்கும் – காலையில் சங்குமுழங்கும்.
திருவாய். 6 – 1 – 9.
3115 விடைக்கொடி – பாம்புக் கொடியோன். (பல்லவன்
நாகலோகம் சென்று வந்ததன் காரணமாக
“பாம்புக் கொடியோன்” என்றும வரலாறு
உள்ளது .பெரிய. 2 -9-6.
விடைச்செறுமணியோசை – எருதின் க்ருரமான மணிஓசை.
பெரிய. 8-5-7-9.
விடைமணிக்குரல் – எருதுகளின் கழுத்தில் கட்டியுள்ள
மணிகளின் ஓசை. திருப்பள்ளி – 4.
விடையான் – சிவன். பெரிய. 7 – 6 – 3.
விடையேழ் அடர்த்தது – இரண்டாந்திரு. 63, திருச்சந். 92,
பெரிய திருவந். 48, திருவாய். 1 – 5 – 1, 3 – 5 – 4, 4 – 2-5.
3120 விண்களகத்திமையவர் – பரமபதத்தில் உள்ள நித்திய
சூரிகள். பெரிய . 6 – 9-10.
விண்ட குன்று. பெரியாழ் -1 – 1-5.
விண்ணகர் பரமபதம். மூன்றாந்திரு – 61, முதல்திருவந். 77.
பெரிய திரும – 113, பெரிய – 6 – 1 – 1 – 10, 10 – 1 – 8
(ஒப்பிலியப்பன் சந்நிதி)
விண்ணகரம் – ஒப்பிலியப்பன் சந்நிதி. மூன்றாந்திரு – 62,
சிறிய திரும. 72.
விண்ணப்பம் – வேண்டுகோள். நாச்சியார் – 8 – 7, 10.
3125 விண்ணி – வெண்ணி. பெரிய – 6 – 6 – 3,4.
விண்ணுளார் – திருவாய். 7-1 – 6.
விண்மிசை – பரமாகாசம்.திருவாய். 6 – 4-10.
விததகன் விட்டுசித்தன் – பெரியாழ் – 1 – 4-10.
வித்துமிட வேண்டுங்கொலோ – நான்முகன்திரு. 23.
3130 வித்துவக்கோடு -பட்டாம்பி இரயில் நிலையத்திலிருந்து
ஒருகல் தொலைவில் உள்ளது. பெருமாள். 5.
விதலைத் தலை – நடுங்கிக் கிடந்த சமயம். பெரிய – 3 -8 – 2.
விதி பாக்கியம். திருமா – 8.
விதிர் விதிர்த்து – உடம்பு நடுங்கி, பெரியாழ்4-5 -4.
விதிவாய்க்கின்று – பகவானுடைய தயை கிட்டுமிடத்து
திருவாய். 5 – 1 – 1.
3135 விந்தமேய கன்னி -விந்திய மலையில் வீற்றிருக்கின்ற
துர்க்கை. திருநெடுந் – 7.
விபரீதம் – பிரதி கூலம்.திருவாய் 6 -2 -3.
விபீடணன் – விச்சிரவசு முனிவரின் மகன். இராவணன் தம்பி
அயோத்தியிலிருந்து திரும்பும் போது
ஸ்ரீரங்கத்தில் திருமாலைப் பிரதிட்டை செய்தான்.
பெரியாழ் -4 -9 – 2. பெரிய – 6-8-5.
வியவு -வேறுபாடு.திருவாய். 7-8-3.
வியாழம்- பிரகஸ்பதி. திருப்பா. 13.
3140 வியூகம்- படைவகுப்பு பெரிய, 6 – 5 – 8.
விராது விராதன். பெருமாள். 10-5.
விருத்தம் – கூட்டம். நாச்சியார் 14 -7.
விருந்தாவனம் – துளசி வனம்.யமுனைக்கரையில் கண்ணன்
இளமையில் விளையாடிய காடு. நாச்சியார் 14 – 1-10.
வில்லவன் – வில்லவன் என் பகை அரசன். பெரிய – 2-9-8.
3145 வில்லார் மலி வேங்கடம்- வேடர்கள் நிறைந்த
திருவேங்கடம். பெரிய – 1 – 10 – 10.
வில்லார் விழவு – கம்சன் செய்ததநுர்யாகம். பெரிய – 6-7-5.
வில்லி புதுவை நகர் – ஸ்ரீவில்லி புத்தூர். நாச்சியார் – 13 – 10.
வில்லி புத்தூர் கோன் – பெரியாழ்வார். நாச்சியார். 6 – 11. விலங்கு நூலர் – பூணுலைத் தரித்தவர். திருச்சந். 56.
3150 விலாவறச் சிரித்திடுதல் – அளவு கடந்து சிரித்தல். திருமா 34. விலைக்காட்படுதல் – வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு
அடிமைப்படுதல் . நான்முகன்திரு. 52. விலையாள் – அடியவள்(வேலைக்காரி). பெரிய. 5 – 5-2. விழலுகுத்தல் – விசுவாமித்திரத்தைக் கயிறாகத் திரித்துக் கட்டுதல் பெருமாள். 9 -7. விழிக்குங் கண்ணிலேன் – உன்னைத் தவிர வேறு
ஒருவரையும் ரக்ஷகமாக மதிக்கவில்லை.
பெரியாழ். 5 – 1 – 2.
3155 விள்கை விள்ளாமை – விட்டுப் போதல், விடாது ஒழிதல். திருவாய். 1 – 6 – 5.
விளங்கனி – கபித்தாசுரன். பெரிய. 3 – 9-7.
விளரிக்குரல் – விளரி என்னும் இசைக்குரல். விளரி
என்பதற்கு மத்யமஸ்வரம் என்று பொருள் கொள்ளலாம். திருவிருத். 83.
விளவின்காய் – இரண்டாந்திரு – 19,23,100; பெரிய. 9 – 8 – 6. விளிந்தீய்ந்த மாமரம்- தள்ளப்பட்டுக் கெட்டுப்போன பெரிய மரம். பெரிய. 6 – 3 – 8.
3160 விளையாட்டம்- விளையாடுதல் பெருமாள். 7 – 9.
விற்பெருவிழவு தநுர்யாகம் என்ற சிறந்த உற்சவம்.
பெரிய. 2-3-1.
வினதைச் சிறுவன் – கருடன். நாச்சியார். 14 – 3.
வினவப்பெறுதல் – ஆராய்தல். பெரிய. 10 – 6 – 5.
வினையாட்டியேன் – பாவத்தையுடையேன்.
திருவாய். 6-8 – 1,7 – 7-3, 6 -8-7.
3365 வீடுதரும் மோட்சத்தைத் தரும். திருவாய். 3 – 3 -7.
வீதியார வருவானை – தெரு நிறைந்து வருகின்ற கண்ணன்.)
நாச்சியார் – 14 -5.
வீரணிதொல்புகழ்- வீரத்தை ஆபரணமாக உடையவரும்,
நிலையான புகழை உடையவருமான
பெரியாழ்வார். பெரியாழ். 4 -6-10,
வீழ்ச்சி- விழுந்து. நாச்சியார். 8 – 7.
வெஃகணைக் கிடந்தது – திருவெஃகா என்னும் திருப்பதியில்
சயனத்திருக்கோலம். திருச்சந். 63,64
3170 வெஃகா – காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. சயனத் திருக்கோலம். திருநெடுந். 8,13,14,
பெரிய திரும. 70,128. மூன்றாந்திரு. 26,62,64,76.
பெரிய 10 – 1 -, முதல்திரு 77, நான்முகந்.36.
வெங்கலி – கொடிய கலி. பெரியாழ். 4 – 7-10.
வெங்கடத்துக் களிறு -கொடிய பாலைவனத்திலுள்ள
யானை. பெரிய – 6-3-8.
வெட்டென்றிருத்தல் – இசைந்திருத்தல். பெரிய. 5 -9 – 7.
வெண்கலப் பத்திரம் வெண்கலத்தால் செய்த இலை.
(பத்திரம் – இலை.) பெரியாழ். 1 – 9-5.
3175 வெண்ணிப்போர் – பெரிய. 6-6 – 3, 4.
6-51-4 வீழிமிழலை; 5-17 – 2, 3. வெண்ணியூர். 5 -65 – 4.
பூவனூர்.
வெண்ணெய் தொடுவுண்ட வெண்ணெயை வஞ்சனையால்
எடுத்து உண்ட. திருவிருத். 91
வெண்ணெற்கு- வெண்மையான நெல். பெரிய – 3 – 8 – 7.
வெந்தாரென்பும் – பிரேதங்களின் எலும்பு. பெரிய – 1 -5 -8.
வெள்கி- வெட்கப்பட்டு.திருமா – 34.
3180 வெள் வரைப்பு – கிழக்கு வெளுக்கை. பெரியாழ்.3 – 8 – 9.
நாச்சியார். 1 -2.
வெள்ளச்சுகம் – அளவு கடந்த சுகம்.திருவாய் 7- 3-1
வெள்ளறை- வெண்மையான பாறைகளால் இயன்றமலை.
(சுவேதாத்ரி எனப்படும்) சிறிய திரும. 70, பெரியாழ்.
1-5-8, 2 – 8 – 4, 5 பெரிய திரும – 117.
வெள்ளித்தலை வெள்ளித்தண்டு. பெரியாழ்- 1 – 2 – 3.
வெள்ளிப் பெருமலை- பெரிய வெள்ளிமலை.
பெரியாழ். 1 – 7-5.
3185 வெள்ளியார் – சுக்கிரன். பெரிய. 4-10 – 7, 9 – 7-9.
வெள்ளியெழுந்து -சுக்கிரன் உதயமாகி. திருப்பா. 13.
வெள்ளுயிராக்குதல் – சாத்துவிக்னாக ஆக்குதல். திருப்பல். 8.
வெள்ளெனல் – வெளுத்தல். திருப்பா – 8.
வெள்ளேறன் – வெண்மையான ரிஷபத்தையுடைய உருத்திரன். திருவாய். 2 – 2 – 10.
3190 வெள்ளை நுண்மணல்- வெண்மையான நுட்பமான மணல்.
நாச்சியார் – 1 – 2.
வெள்ளை விளி சங்கு – வெண்மையானதும் எல்லோரையும் அழைப்பதுமாகிய சங்கு. திருப்பா – 6. பெரியாழ். 4 – 1 – 7.
வெளிய நீறு – அஞ்சன சூர்ணம். திருவாய் – 4-5 – 6. வெற்பு சம்பந்தமான திருமால் செயல். திருச்சந். 39. வெறி -வெறியாட்டு. திருவாய் – 4 – 6 – 11, திருவிருத் – 20.
3195 வெறியோடிற்று வெறிச்சென்று இருக்கிறது.
பெரியாழ். 3 -8 – 1, திருவாய். 4 – 6 – 1, 10. வேகவதி – காஞ்சிபுரத்தில் முன்னாளில் ஒடிய ஓர் ஆறு நான்முகன் செய்த வேள்வியை அழிக்கவர நான்முகன் திருமாலைக் கொண்டு அடக்கினான். பெரிய திரும – 52 – 55.
வேங்கடத்தான் திருமலலையில் எழுந்தருளியிருப்பவன். இரண்டாந்திரு . 28,45, மூன்றாந்திரு. 39,40. வேங்கடநாடர் – திருமலையை நாடியவர். நாச்சியார். 10-5.
3200 வேங்கடம் – நாச்சியார். 8 – 4 – 2, 10 – 8, பெரிய – 1 – 10-1 – 10, 2-1-1-10,5-5-1,7-3-5, 8-2-3,9-7-4, முதல்திரு 26,99, இரண்டாந்திரு – 46,53, மூன்றாம்திரு. 14,26,30,32,45,59,61,62,68,69,
திருச்சந் 60-81.திருவிருத். 60,81, பெரிய திரும. 124. வேங்கடமலை – பெரிய. 4 3-8.
வேங்கடவன் – இரண்டாந்திரு – 72, நாச்சியார். 1 – 1. வேங்கடவாணன் திருவேங்கடமலையில் இருப்பவன். பெரியாழ். 1 – 4 – 3, 1 – 8-8, 2 – 6 – 9,
3205 வேங்கடவேதியன் – வேங்கடமலையிலுள்ள ஸ்ரீனிவாசன்.)
பெரிய – 9-9-9.
வேங்கை கழுத்திற் சொரிய உறங்கல். பெரியாழ் – 3-5-8.
வேட்டத்தைக் கருதாது – ஆசைப் பெருக்கத்தைக் கருதாமல்.
பெரிய – 10-9-10.
வேடர் தெழிப்பு -வேடர்களின் ஆரவாரம். பெரிய- 1 – 7 – 2.
வேடர் மறக்குலத்தவரின் மணவகை. பெரியாழ். 3 -8-6.
3210 வேடார் திருவேங்கடம் வேடர்கள் நிறைந்த திருமலை.
பெரிய – 4-7-5.
3215
வேடுமுடை வேங்கடம் – வேடர்கள் நிறைந்த திருமலை,
நான்காந்திரு – 47.
வேதகீதன் – வேதத்தினால் புகழ்ந்து பாடப்படுபவன்.
திருச்சந்த – 117.
வேதத்தினுட் பொருள் – திருவாய் மொழியில் நிற்கப்
பாடியது. கண்ணிநுண்- 9.
வேதநாவர் – அந்தணர்கள். திருச்சந் – 23.
வேதநான்கைந்து தீ வேள்வி-நான்கு வேதம், ஐந்து அக்கினி,
ஐந்து மகா யக்ஞம். பெரிய – 9-7-6.
வேதநூற் பிராயம் நூறு – வேதநூல் பிரகாரம் மனிதர்களுக்கு
வயது நூறு. திருமா – 3.
வேதப்பிரானார் எம்பெருமான். பெரியாழ் – 5 – 2 – 1.
வேதாந்த விழுப்பொருள் -வேதாந்தங்களில்
சொல்லப்டுகின்ற சிறந்த அர்த்தங்கள். பெரியாழ். 4-3 – 11.
வேம்பின் புழு – வேப்பமரத்திலுண்டான புழு. பெரிய – 11-8-7.
3220 வேம்புங்கறியாதல் -வேப்பிலையும் கறியமுதாகும். நான்
முகந்திரு – 94.
வேய்-புல்லாங்குழல். பெரிய -8-5-3.
வேயர் – அந்தணர். நாச்சியார் தனியன்,
பெரியாழ். 1 – 7 – 11, 4 – 10 – 10, 5-4 – 11.
வேயர் தங்கள் – அந்தணர்களுடைய. பெரியாழ் – 5 -4 – 11.
வேல் வலவன் – வேற்படையில் வல்லவன். பெருமாள்-9 – 11.
3225 வேல்வலவனாலிநாடன் – வேற்படையை ஆளுகின்ற
திருவாலி நாட்டுக்கதிபன். பெரிய. 4-4 – 10.
வேல வெறியாட்டாளனே. திருவிருத் – 20.
வேலால் துன்னம் பெய்தல் வேலால் துளைத்தலை
இடுதல். நாச்சியார் -13 – 2.
126
வேலை மோதும் மதிள் – கடல் அலைகள் வந்து
மோதுகின்ற மதிள். திருவாய். 9 – 10 – 1.
வேழப் போதகம் அன்னவன் – யானைக்குட்டி போன்றவன்.
பெருமாள். 7 – 1.
3230 வேள் – முருகன். மன்மதன். திருநெடுந். 7.
வேள்வு – வேள்வி-யாகம். பெரிய. 6 – 4 – 8.
வேளுக்கை காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. நின்ற திருக்கோலம். மூன்றாந்திரு. 34, 62.
வேளுக்கைப்பாடி – வேளுக்கை என்ற திருப்பதி.
மூன்றாந்திரு. 26.
வேளுஞ்சேயுமனையார். வேள்- மன்மதன்,சய்- முருகன்.
பெரிய. 6 – 7 – 1.
3235 வேனிலஞ்செல்வன் – சூரியன். திருவிருத். 25.
வைகுந்தக் குட்டன் – நித்திய சூரிகளுக்குப் பரிந்து
நோக்கும்படியான பருவத்தை
உடையவன். பெரிய. 3 – 6 – 3.
வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டம். பெரியாழ். 4 – 7 – 9.
வைகுந்த விண்ணகர்- திருநாங்கூரிலே உள்ள வைகுந்த
விண்ணகரம் என்னும் திருப்பதி. 3-9 – 1 – 10. வைட்டணவர். வைஷ்ணவர். திருவாய். 5-5 – 11.
3240 வைத்தநாள் – ஈசுவரன் நியமித்த ஆயுள். திருவாய். 6 – 7-11. வைதிகன் – வேதநெறிப்படி ஆசார அனுஷ்டானமுள்ளவர்.
திருவிருத் 94.
வைதேகி – சீதை. (தத்திதாந்த நாமம்) பெருமாள். 10-6. வைப்பு – புதையல். திருவாய். 1 – 7-2.
வையத்தேவர் – அந்தணர், அடியார். திருவாய்.
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்