Archive for December, 2025

ஸ்ரீ அருளிச் செயல்களில் -வாழ்ச்சியும் -தாழ்ச்சியும் -பத பிரயோகங்களும் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்-

December 24, 2025

வாழ்ச்சியும் -தாழ்ச்சியும்

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே
–3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–-இரண்டாம் திருவந்தாதி23-த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட அவன் –
பூமியை அளந்து தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் -வேணும் என்று இருப்பாரைப் பெற்றால் விடுமோ –-ஞாலம் அளந்து அடிக்கீழ் கொண்ட –உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் ––இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் –

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –
-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை   யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும் கேழ்ந்த அடித்தாமரை மலர்மேல் –கிளர்ந்த வடித் தாமரை –பருத்த தாளை யுடைய தாமரை-இத்தால்
பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கத் தாமரை பொறுக்கை –எழுச்சியையும் அழகையும் யுடைத்தான தாமரை -என்றுமாம் –ஸ்ரமஹரமாய்ச் சிவந்த நிறத்தை யுடைத்தான தாமரை–என்றுமாம் –இப்படிப் பட்ட தாமரைப் பூவிலே எழுந்து அருளி இருப்பதும் செய்து நித்ய யௌவனத்தை யுடையளான பெரிய பிராட்டியாருக்கு –அவளுக்கு போக்தாவானவன் –அவளுடைய திருக் கைகளாலே தொடும் போதும் கூசித் தொடும் படியான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை–-அடித் தாமரை யாமலர் – திருவடித் தாமரை யாகிற அலர் தழும்பாம் பூத் தழும்பு ஆகாதோ –இத்தால் நித்ய ஸூரிகளுக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் உபாஸ்யம் ஒரு மிதுனம் -என்றபடி-கேழ்த்த வடித் தாமரை மேல் மங்கை மணாளன் அடித் தாமரையா மலர் வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வாங்கத் தழும்பாமே
என்று அந்வயம் –

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி 11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி-

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு
-என்று அந்வயம்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவசரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

———————————-

வாழ்ச்சி

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2-உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கும் இவள் -அகலகில்லேன் இறையும் -என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அமங்களங்கள் உண்டோ -என் பயப் படுகிறீர் என்ன –
தேவரீரும் பிராட்டியுமான சேர்த்தி நித்யமாக செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்-வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது-அப்ரமேயம் ஹிதத்தேஜோ ய்ஸ்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை எனக்கு என்று இட்டுப் பிறந்த தத்வத்தோடு எதிரிட்டு வெல்ல நினைக்கிறாயோ- என்றான் இறே மாரீசன்-ஸ்ரத்தயாதேவோ தேவத்வமஸ் நுதே -என்னக் கடவது இறே-ஆனால் இவளாலே இவனுக்கு உத்கர்ஷம் ஆகில் அவனுடைய சேஷித்வம் குலையாதோ என்னில் -மாணிக்கம் ஒளியாலே பெரு விலையனாம் காட்டில் மாணிகத்தின் உடைய ப்ரதான்யம் அழியுமோ -பூ மணத்தால் பெரு விலையனாம் காட்டில் பூவுக்கு ப்ரதான்யம் அழியுமோ-வடிவாய் ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்-நின் வல மார்பினில் சர்வாதிகனான உன்னுடைய வல மார்பினில் -சர்வ யஞ்ஞமயமாய் -யோகீ சிந்த்யமாய் இறே-வடிவு இருப்பது வல மார்பினில் அணைக்கைக்கு அணித்தாய் இருக்கை-வாழ்கின்ற மார்பில் இருப்பு தான் நித்தியமாய் போக ரூபமாய் இருக்கை அம் மார்விலே இருக்கச் செய்தேயும் -இறையும் அகலகில்லேன்-என்று அதி சங்கை பண்ணும்படி இறே போக்யதை இருப்பது மங்கையும்
யுவதிஸ்ஸ குமாரிணி -என்கிற பருவத்தை சொல்கிறது யுவா குமாரா -என்று இவ் விரண்டு அவஸ்தையும் உண்டு அவனுக்கு இவளுக்கு கௌமார அவஸ்தையால் வந்த மௌக்த்யமே உள்ளது – யுவதியும் ஆகக் கடவள் -எங்கனே என்னில் -போக ஸ்ரோதச்சில் வந்தால் இவள்
தளர்த்திக்கு அவன் கை கொடுக்க வேண்டும்படி யான மௌக்த்யத்தை சொல்லுகிறது
மங்கையும் –ச சப்தத்தாலே மகிஷ்யந்தரத்தை சொல்லுதல் மங்கள ஆவஹையான இவளும் ஆசார்ஸ்யை என்னுதல் பல்லாண்டு கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்-வாழ் ஆள் -என்று
நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது-சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி -நாய் தொழில் –என்னக் கடவது இறே-சேஷத்வம் துக்க ரூபம் உலகில் -அபிமத விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே —
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -உபாசக நிஷ்டர் –அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும் துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –
இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் – என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த பரிதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –

பட்டு -என்பது-உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு-ஓடினேன் ஓடி –பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –கிருபாவசப் பட்டு -கர்மவசம் தவிர்ந்து -வாழாள் பட்டால் நின்றீர் கூழாள் பட்டு திரிந்து என்றவாறு-உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இறே இருப்பது–வாசுதேவாஸ் சர்வம் இதி மகாத்மா -ஸ்ரீ கிருஷ்ண சித்தாந்தம் -ஸூ துர்லப – பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே -நம்மாழ்வார் -திருவவதாரம் -திருக் குருகைப் பிள்ளான் சாதிப்பாராம்
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார் தேட்டமாய் இறே இருப்பது –இந்த யதி–ஆல் -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை – துர்வர்க்கம் களித்து வர்த்திக்கும் தேசம்-இவர்கள் அபிப்ராயத்தால் வாழும் –புறம்பே போய் பர ஹிம்சை பண்ணி -குளவிக் கூடு போலே திரண்டு -கடலையும் மதிளையும் அரணாக்கி அமணக் கூத்தடிக்கும் தேசம் என்கை

தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – -4- 4-1 –பகவத் பாகவத கைங்கர்யங்களுக்கு ஏகாந்தமான பிரதேசங்களை நெருங்க அனுசந்தித்து –
வேத பிரதிபாத்ய வஸ்துவை கண்ணாலே கண்டு அனுபவிக்கிறவர்கள்
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -என்னக் கடவது இறே

செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – 4-4- 2-செற்றம் ஆவது பொறாமை-அதாவது-பர சம்ர்த்தய அசஹதை-ஒன்றும் இல்லாமையாவது – முதலிலே அதிலே அந்வயம் இன்றிக்கே இருக்கை-கீழ் சொன்னவை எல்லாம் உண்டாகிலும்
உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது –வண் கை யினார்கள்-உதாரமான கொடையை உடையவர்கள்-அதாவது ஒருவருக்கு ஒன்றை கொடுக்கும் இடத்தில்
கொள்ளுகிறவன் சிறுமையையும் கொடுக்கிறவன் சீர்மையையும் பாராமல் கொடுக்குமவர்கள் -என்கை த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஒக்கும் இறே இவர்களுக்கு இது –வாழ் திருக் கோட்டியூர்-இத் தேச வாசம் தானே இவர்களுக்கு வாழ்வு
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் (நாச்சியார் )-என்றும்-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் ( நாச்சியார் ) -என்றும் சொல்லக் கடவது -இறே-இப்படி இருக்கிறவர்கள் வர்த்திக்கிற திருக் கோட்டியூரில்

கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து -3-8- 7– நாலாயி:303/3-இவளைக் கொண்டு தன்னுடைய குடி வாழ்க்கை எல்லாம் வாழ்ந்து –அதாவது –இவள் முகப்பாக தன்னுடைய க்ர்ஹ க்ர்த்யம்  எல்லாம் நடத்தி -என்கை-கோப குலத்துக்கு ஸ்வாமி-என்று தன் மகிஷி யானமை தோற்ற பட்டம் கட்டி-பண்டே பட்டம் கட்டி -தனக்கு மகிஷிகளாய் இருக்கிறவர்கள் முன்னே-அந்த புரக் காவலில் வைக்குமோ-

பூதம் ஐந்தோடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் –  4-4-6-பூதம் ஐந்தோடு –-இத்தால் பஞ்ச பூத ஆரப்தமான தேஹத்தை சொல்லுகிறது–மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு வுலாவும் ஆகாசமுமாம் புண்ணார் ஆக்கை -இறே  –இத்தோடே-வேள்வி ஐந்து –பஞ்ச மகா யக்ஞங்கள்-புலன்கள் ஐந்து –சப்தாதிகளான விஷயங்கள் ஐந்து-புலன் -என்று புலப்படும் விஷயங்களை சொல்லுகிறது-பொறிகள்-என்று-ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது-இவற்றால் ஏதம் ஒன்றும் இலாத –-இவற்றோடு கூட இருக்கச் செய்தே தோஷம் இன்றிக்கே இருக்கை-( நான்கிலும் –பூதம் ஐந்து-வேள்வி ஐந்தும்-புலன்கள் ஐந்தும்-பொறிகள் ஐந்தும்-மூன்று-ஏதம்-ஏதம் இன்றிகே இருக்கை-ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஆக 12- விஷயங்கள் சாதிக்கிறார் மேல் )
பூதம் ஐந்து ஏதம் ஓன்று இலாத  –-ஏதம்-தேகத்தை தனக்கு என்று இருக்கை-ஏதம்
ஏதம் இன்றிகே இருக்கைஈஸ்வரனுக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை
ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-வேள்வி ஐந்தும் ஏதம் ஓன்று இலாத–ஸ்வர்காதி சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம்-மோஷ சாதனமாக அனுஷ்டிக்கை-ஏதம் இன்றிகே இருக்கை-பகவத் பாகவத ப்ரீதி என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இன்றிகே இருக்கை யாவது-புலன்கள் ஐந்தும் ஏதம் ஓன்று இலாத –சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்களை தனக்கு என்று இருக்கை-ஏதம் இவற்றை பகவத் விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் இன்றிகே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-பொறிகள் ஐந்தும் ஏதம் ஒன்றும் இலாத-இந்திரியங்களை இதர விஷயங்களில் மூட்டுகை -ஏதம்-பகவத் விஷயத்தில் மூட்டுகை -ஏதம் இன்றிக்கே இருக்கை-பாகவத விஷயத்துக்கு என்று இருக்கை -ஏதம் ஒன்றும் இலாத இருக்கை யாவது-வண் கையினார்கள் –அதாவது ஒவ்தார்யம்-அதாவது பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி -என்கிறபடி-அப்பதார்தங்கள் நசியாதபடி வாங்குகையும்–இவற்றை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கொடுக்கையும்

ஈஸ்வரனையும் உள் படப் பறித்து இறே பாகவத கைங்கர்யம் பண்ணிற்று திரு மங்கை ஆழ்வார்-அதற்க்கு உபாயமாக இறே ஈஸ்வரன் திரு மந்த்ரத்தை உபதேசித்தது- –துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றைதான் துற்றிய தெற்றெனவும் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இடாதே தானே உண்டான் என்று இறே ஆழ்வார் கர்ஹித்தது -பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்டக்கால் சிதையாரோ உன்னோடு (நாச்சியார் )-என்று ஸ்ரீ பாஞ்சசன்ய ஆழ்வாரையும் உள்பட கர்ஹித்தாள் இறே பெண்மகள்-அவ்வளவும் அன்றிகே –சாதுக் கோட்டியுள் கொள்ளப்படுவாறே – என்கிறபடியே – தங்கள் திரளில் கூட்டாதே பாஞ்ச சந்யத்தை பத்ம நாபனோடு கூட்டி வைத்தது-அவதாரத்தில் உண்டான இழவு தீர இறே –அர்ச்சாவதாரத்தில் அமுது செய்தால் போல் குறையாமல் கொடுக்கிறது –வாழ்–கண்ணாலே கண்டு அனுபவிக்க பெற்றவர்கள்-ஸ்ரீ வைகுண்ட நாதன் -திருப் பாற் கடல் நாதன் -என்பதிலும் –திருக் கோட்டியூர் நாதன் -எனபது இறே ஏற்றம்

திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:366/2–4-4-7–வேதத்துக்கு திருத்தம் ஆவது-பகவத் ஸ்வரூபாதிகளை உள்ளபடி பிரதிபாதிக்கை
நான் மறைரயோருக்கு திருத்தம் ஆவது –இதில் இவர்கள் செய்வது-குண விக்ரக அனுபவத்துக்கு ஏகாந்தமான பிரதேசங்களில் சொல்லுகிறபடியே அனுஷ்டிக்கை-இராப் பகல் ஏத்தி –வேறு அந்ய பரதை இல்லாமையாலே இது மாறாமல் நடக்கும்-வாழ் –
அநந்ய பிரயோஜனர் ஆகையாலே இது தானே பலமாக இருக்கும்-திருக் கோட்டியூர்
அவர்கள் வர்த்திக்கிற தேசம்-

தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/2-4-4 -10-யஜஸ் கரமான  வார்த்தைகளை படைக்கும்-அதாவது-இருந்தார் இருந்த இடங்களிலே -தங்களுடைய ஒவ்தார்யம் கிருபை முதலான குணங்களை சொல்லிக் கொண்டாடும்படி யாகை –இவர்கள் புகழை நச்சி செய்யாது இருந்தாலும் தன்னடையே வந்து உண்டாமிறே இது-உதாரமான கையை உடையவர்கள்-அதாவது-உள்ளது எல்லாம் பரார்த்தமாகவே விநியோக்கிக்க வேணும் -என்னும் ஒவ்தார்ய கையை  உடையவர்கள்-என்கை-வாழ் திருக் கோட்டியூர் –இப்படி இருந்துள்ளவர்கள் இத் தேச வாசமே தங்களுக்கு வாழ்வாகக் கொண்டு வர்த்திக்கிற திருக் கோட்டியூர்-

சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4–4-8-2 –வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் –பகவத் சமாராதனத்தையும்-அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே –

புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று –– 5-3-3- –- நாலாயி:455/3-புனத்தில் புதுத் தினையை முறித்து -ஹவிஸ்சுக்கு காட்டி –புதியது அமுது செய்யப் பண்ணி இப்படி அமுது செய்யப் பண்ணினால் வேண்டிக் கொள்ளும் படி ஏது என்னில்  -இந்த தேசம் தான் –அமுது செய்திடப் பெறில் பின்னும் ஆளும் செய்வன் -என்னும் தேசம் இறே –

வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3-2-10-வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-5-1-என்னுடைய சோகத்து அடியான அக் குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும் நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே-எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-

காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் – நாலாயி:547/4–—5-3-பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –
காமரம்
 -என்ற பண்ணைப் பாட – அதுக்கு செவி தாழ்த்து-மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே

பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – –59-நாலாயி:553/2ஒ குயிலே என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே அவ் விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்-ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்–9-4- – நாலாயி:590/1-பரந்த பொழிலிலே வர்த்திக்கிற குயில்காள் உங்களுக்கு சோலை நோக்கித் தருவார் யார் –
ஏக தேச வாசித்வமே ஹேதுவாக பாதகமாகா நின்றி கோளீ

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – 12-8–நாலாயி:624/1-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –-திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-பசுக்களை மேய்க்கையை உகந்தான் –-அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ்
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் –
-2-1– நாலாயி:658/1,2–தாமே வந்து ஸூலபராம் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் காண ஒண்ணாது என்கை-ய ஆத்மதா பலதா-என்னுமா போலே – தன்னையும் கொடுத்து –
தன்னை அனுபவிக்கைக்கு ஈடான பலத்தையும் கொடுக்கும் தேன்-ஸ்பர்ஹணீயமான ஸ்ரீ திருவரங்கத்திலே நித்ய வாஸம் பண்ணுமவனாய்- திரு மேனியின் ஸ்பர்சத்தாலே-
ஒருக்காலைக்கு ஒரு காலை செவ்வி செவ்வி பெறுமாய்த்து இட்ட திருமாலை –வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறபடியே அவளும் இவனும் சேர்ந்த சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணி

மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1-மெய் என்றும் -பொய் என்பது நில்லாமையும் -நிலை நிற்குமத்தையும் சொல்லுகிறது – நிலை நில்லாததிலே -நித்யமான ஆத்ம வஸ்துவைப் பண்ணும் பிரதிபத்தியைப் பண்ணும் என்னுதல் –
மெய்யிலே உண்டான வாழ்க்கை – என்னுதல் –அதாகிறது பிரகிருதியைப் பற்றி வரும் ப்ராக்ருத போகங்கள் இறே

தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ – திருச்சந்த விருத்தம்-68-நாலாயி:819/4–சர்வேஸ்வரத்வ ஸூ சுகமாய் -தொடை செறிந்து ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயாலே அலங்க்ர்தனாய் -சௌலப்யாதி கல்யாண குண உக்தனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து வாழும் கோள்-நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -இத்யாதிகளைச் சொல்லிப் புகழ்ந்து யாவதாத்மபாவி ஆநந்த நிர்பரராய் இரும் கோள்-ஏஷஹ் யேவா நந்த யாதி -என்னக் கடவது இறே-

பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே –திரு மாலை-13 நாலாயி:884/4-இந்த்ரியங்களுக்கு குடி மக்களாய் வர்த்திக்கிற லீலா விபூதி –எல்லா அவஸ்தையிலும் தப்பாத படி தங்களுக்குள் அகப்படுத்திக் கொள்ள வற்று ஆகையாலே-பொறி -என்று இந்த்ரியங்களை சொல்லுகிறது-நரகம் –அவிவிவேகிகளுக்கு நரகம் யமனுடைய தண்டல்
அறிவுடையார்க்கு நரகம் –சம்சாரம்–லீலா விபூதி கட்டடங்க தரிசாய்ப் போம் இறே –நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்னக் கடவது இறே-

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – -23-நாலாயி:894/4-இவ் விஷயத்தை கண்டு அனுபவிப்பதற்கு முன்பாகிலும் மறக்கவுமாம் –கண்டு அனுபவித்த பின்பு இனித் தான் எந்த பிரகாரத்தாலே மறப்பது –வாழ்கேன் –இவ் விஷயத்தை விட்டுப் போய் மணலை முக்கவோ –அனுபவித்தால் மறக்க ஒண்ணாது-ஏழையேன் ஏழையேனே-நானோ அத்யந்த சபலனாய் கிட்டினால் அனுபவிக்க மாட்டே-முன்பு இதர விஷயங்களிலே அகப்பட்டு சிதிலராய் இருப்பார் இப்போது பகவத் விஷயத்தில் அகப்பட்டு புறம்பு கால் வாங்க மாட்டாதே இருப்பார் –அது கர்மத்தாலே வந்த சைதில்யம்-இது விஷய வை லஷண்யத்தாலே வந்த சைதில்யம்

வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் -6-– நாலாயி:932/2–லோகத்தில் பிரதாநர் ஆனவர்கள் ப்ரஹ்ம ஹத்தியைப் பண்ணி அலைந்து கொடு கிடக்கப்
புக்கவாறே -தான் கடக்க நிற்க ஒண்ணாது என்று -இவர்களுடைய ரஷண அர்த்தமாக
கிட்ட வந்து கண் வளர்ந்து அருளுகிற உபகாரகன் –அழகிய சிறகை உடைத்தான வண்டுகள் வாழா நின்ற சோலை சூழ்ந்த பெரிய கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பிதாவானவன்-வண்டு வாழ் பொழில் –வண்டுகள் அவன் பக்கல் செல்லாது –திருச் சோலையின் போக்யதையிலே இள மணல் பாய்ந்து கால் வாங்க மாட்டாதே நிற்கும் –
அவ் வண்டுகளைப் போலே தம்மை அனுபவித்து விடாய் கெடுத்தான் -என்கிறார் –

வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை -–2-1-3– நாலாயி:1050/3-வண்டுகள் ஆனவை மது பாநத்தைப் பண்ணி மத்தமாய் கொண்டு வாழா நின்றுள்ள திருமலையைத் தனக்கு நித்ய வாஸத்துக்கு ஸ்தானமாகக் கொண்டு உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு ––ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு -வெறும் அண்டம் என்னில்
ஸ்வர்க்காதிகளிலும் ஏறும் என்று மீமிசை அண்டம் என்று பரம பதத்தை சொல்லுகிறது
மஹா ஆகாசம் பரம ஆகாசம் -என்னக் கடவது இறே உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –

அருள் நடந்து இ ஏழ்உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – -3-10-1-நாலாயி:1238/2,3 -இப்படி இருக்கிற இவன் அல்லது லோகத்திலே வேறு ஆஸ்ரயணீயர் அல்ல என்று ஏழு வகைப்பட்ட லோகங்கள் உள்ளாறும் அடைய ஆஸ்ரயிக்க தேவர்களுக்கும் கூட கால் பொருந்த அரிதாம்படியான
இஸ் சம்சார விபூதியிலே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் பொருந்தி ஆஸ்ரயிக்கும் படியாக இருக்கிற தேசம் –பெரும் புகழ் வேதியர் வாழ்-தரும் இடங்கள்-
இவனை அனுபவிக்கையே யாத்ரையாம் படி இருக்கையாலே மிக்க புகழை உடைய ப்ராஹ்மனர் வர்த்திக்கிற இடங்களை உடைத்தாய் –வாழ் தரும் இடங்களிலே உண்டாய்
அவர்களுக்கு உறுப்பாய்-சமாராதனத்துக்கு ஸாமக்ரியையாக – இருக்கிற மலர்கள்
மிகு கைதைகள் தொடக்கமான வற்றை உடைத்தாய் இருக்கிற திரு நாங்கூர்-பூக்கள் மிக்கு இருந்துள்ள தாழைகள்-செங்கழுநீர் -தாமரைகள் – இவை பரந்த பொய்கைகள் தோறும்
அவகாசங்கள் தோறும் விளங்க இங்கு இடம் இல்லாமையாலே சோலையானது ஆகாசத்தில் பரப்படைய இடம் அடைத்துக் கொண்டு ஓங்கி அழகு விளங்கா நின்றுள்ள
அருமிடம் என்று ஸூஷ்மதையைப் பற்ற ஆகாசத்தை சொல்லுகிறது –

அள்ளி அம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – 4-10-7-நாலாயி:1344/3 -அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய் அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல் அன்றிக்கே அளியை அள்ளி என்னுதல்  -அத்தாலே தண்ணளி யாய் குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து ஹரி ஹரி என்னுமா போலே திரு நாம  சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து (மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து அங்குத்தை திர்யக்குகளுக்கும் –

பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே – 5-1-8-நாலாயி:1355/4 -வேதத்தால் அக்னி த்ரயத்தையும் வளர்க்கும் மாறாத புகழால் ஔதார்யத்தால் ஷமையால்
இவை எல்லா வற்றாலும் மிக்கு இருந்துள்ள பிராமணர் வர்த்திக்கிற தேசம் –புள்ளம் பூதங்குடி தானே  –

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை மருவுமூர் போல்- 5-2-8-நாலாயி:1365/1 –கலைகளானவை பிணை யோடு -மானோடே அணைந்து வாழா நின்றுள்ள
திரு நீர் மலையைத் தனக்கு வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன் அத் தேசமும் தனக்கு உண்டாய்  இருக்க பொருந்தி வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –புருஷோத்தமன் தான் இந்தப் பெண்கள் உடன் ஸம்ஸ்லேஷிக்க குருகுல வாசம் திரு நீர்மலை மான் இடம் கற்றுக் கொண்டானாம்

முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – 5-4-6-நாலாயி:1383/2 –யசோதை பிராட்டியைப் போலே அலங்கரித்துக் கொண்டு கலையை உடுத்து அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடைய-யசோதை பிராட்டியில் இவளுக்கு ஓர் ஏற்றம் -வன்மை யாய்த்து-யசோதை பிராட்டியைப் போலே பரிவு எல்லாம் தோற்ற ஒசழக்காக தூக்கி எடுத்து இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் அவள் உயிரை முடித்தவன்–இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள் –

துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – -–5-4-7-நாலாயி:1384/2 –திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே திருவடிகளாலே அழியச் செய்தவன் வர்த்திக்கிற தேசம் -என்பர்கள்-

நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே -6-7-7- நாலாயி:1514/4 இவையே யாத்ரையாம் படி கை வந்து இருக்கிற  பிராமணர் வர்த்திக்கிற தேசம்-தங்களை நோக்குகைக்காக-தங்கள் உடைய வித்யா  வ்ருத்தங்களால் அவன் தன்னையும் நோக்க வல்லார்கள் ஆயத்து –(ஸ்வரூப ரக்ஷணம் -மங்களா சாசனம் செய்தல் இது அன்றோ வாழ்கை )

நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே6-7-8-– நாலாயி:1515/4 -தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய பிராமணர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – -–6-7-10-நாலாயி:1517/1 -அநந்ய பிரயோஜனரான பிராமணர் வர்த்திக்கிற திரு நறையூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கல்யாண குண பூரணன் ஆனவனை  –

மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – 6-8-10-நாலாயி:1527/1 –சித்தாஸ்ரமமாய் ஸ்ரீ வாமனன் இருந்து தபஸ்ஸூ பண்ணி ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் வன்னியம் அறுத்து படை வீடு செய்து சர்வேஸ்வரன் தான் உகந்து வந்து அவதரித்து ஆனை படும் அடவி ( காடு ) போலே
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –ஸ்ரீ வசுதேவர் உடைய சத்தைக்கு நிமித்த பூதனாய் உள்ளவனை  –இவனைக் கண்டு அத்தாலே உளராய்த்துத் திரிவது –

திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா –  -7-6-7-நாலாயி:1604/1 -ஸ்வ வ்யதிரிக்தர் உடைய ஐஸ்வர்யத்துக்கு-நிதான பூதையான பிராட்டி-அகலகில்லேன் -என்று விரும்பி வர்த்திக்கும் படியான மார்வு படைத்தவனை –-ஈசேசி தவ்ய வைஷம்ய நிம்னோன் நத மிதஞ் ஜகத் நமஸ் ஸ்ரீ ரெங்க நாயக்யை யத்ப்ரூவி ப்ரமபேததா    -என்னக் கடவது இறே-

ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே – 8-5-5–நாலாயி:1692/4-ஆதித்யன் ஆனவன் தான் தோற்றின கடலிலே புக்கு அஸ்தமிக்க-ஆஸ்வாச கரனான அவனை இழந்து பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற பிராணங்களை முடிப்பதாக அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –

பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2-தமப்பன் தாய் புத்ரர்கள் உறவு முறையார் சம்பந்திகள் என்று இங்கனே பற்றிக் கொடு நிற்கிற
பந்தகமான யாத்ரையை –மாதா பிதா ப்ராதா -என்கிறபடியே அவன் ஒருவனே சர்வ வித பந்துவாய் இருக்க சோபாதிக பந்துக்களை நிருபாதிக பந்துக்களாக நினைத்து போருகிற பந்தகமான யாத்ரையை அனுசந்தித்து வெறுத்து ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவுக்கு இது அவத்யாஹம் என்று புத்தி பண்ணினாய் ஆகில் –


நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று – 10-3-3–நாலாயி:1870/3-கூற்றமாய் வந்த படி கண்டு அஞ்சி – நாங்கள் போக்கற்ற வழி மாதரம் அல்ல உங்கள் சம்ருத்தி எங்களுக்கு பிரயோஜனமாம் படி ஆனோம் –எங்களை கொல்லுகைக்கு ஒரு பிரயோஜனம் உண்டோ –கண் படைத்த பிரயோஜனம் பெறும்படி இத்தைக் காணல் ஆகாதோ –

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று -10-3-7– நாலாயி:1874/3-வலியை உடையனாகையைப் பிறப்பே யுடைய திருவடி வாழ்வான் என்று – பரிகரம் அடைய   அவன் பக்கலிலே ப்ராவண்யம் – இவனை வாழ்த்தவே கொல்லுவார் இல்லை –

ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – -11-8-1-நாலாயி:2022/3 – நீ பிறப்பித்த ஜ்ஞானத்துக்கு பலம் இதுவோ –சைதன்யத்தால் கொள்ளும் கார்யம் பய ஸ்தானம் -என்கை-ஆறு பெருகித்  தன் வேரை அகழ்ந்து   பொகடா நின்றால்-பேர நிற்றல் பரிஹரித்துக் கொள்ளுதல் கூப்பிடுதல் செய்வது அறியாது இறே-பயத்தில் வந்தால் சேதனன் ஆகியும்
பரிஹாரத்தில் வந்தால் அசித் சமனாகையும்-ஆயிற்று இவனுக்கு ஸ்வரூபம் – பயமே இறே இவனுக்கு உள்ளது –அஹம் பீதோஸ்மி -(ஜிதந்தா ஸ்தோத்ரம் )-நன்றும் அஞ்சுவன் –(திருவாய் )-மாஸூச -என்பான் வேறு ஒருவன் இறே பரிஹரிக்கை -அஹம் -என்கை இறே
உன்னுடைய அஹம் புத்தியை நினைத்து அஞ்சினாய் ஆகில் என்னுடைய அஹம் புத்தியை அனுசந்தித்து ஆறி இருக்கப் பாராய் -என்றான் இறே –

ஊனிடை குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே – நாலாயி:2039/4-த்ருடம் இன்றியே அப்போது போயிற்று இப்போது போயிற்று என்றும் மின்னிலும் நிலை அற்று இருக்கிற இச் சரீரத்துக்கு பூண் கட்டவே தேடுவர்கள் 

தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த -மூன்றாம் திருவந்தாதி—100– நாலாயி:2381/2 -திருத்துழாய் மாலையைத் தோளிலே யுடையனானவன் –சர்வ ஐஸ்வர்ய ஸூசகமான திருத்துழாய் மாலையை யுடைத்தாய் – மலை போலே இருக்கிற திரு மார்வை யுடையவனான தானே –போக உபகரணமான திருத்துழாயை யுடையவன் தானே முயங்கும் முயங்குகை -தழுவுகை –-அபி நிவேசித்து சம்ச்லேஷிக்கும் -என்றபடி-அவள் உடம்பு கொடுத்திடும் -அத்தனை –இப்படி இருக்கிற தான் –அவளை -அகலகில்லேன் -என்னப் பண்ணும் தான் –அவளை -அகலகில்லேன் -என்னும் –தாயுடைய பர்த்ரு வால்லப்யம் அடைய பிரஜைக்கு உடல் இறே 

வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே — 72– நாலாயி:2549/4-திருத்துழாயினுடைய பூந்தாரினுக்கு ஈடுபட்ட நெஞ்சை யுடைய மிக்க தனிமையை
யுடையேனான என்னுடைய –ஸ்வா பாவிகமான நிறத்துக்கு வாழ்ச்சி யுண்டாகிற பிரகாரம்-முன் இருளிலும் கனத்த இந்த இளம்பிறை வந்து தோன்றிற்று இதுவும் போழ்க-வாலிமையாவது சீர்மையாய் கனத்தைச் சொல்லுகிறது-அன்றியே பிறையின் வெளுப்பு ஆகவுமாம்-இத்தால் போக ஸித்தி பெறாமையாலே வந்த மோஹ அந்தகாரத்திலும்
மோஹத்தை அமுக்கி மேல் இடுவதான விஷய வைலக்ஷண்ய ஞான சந்த்ர உதயம் தானும்
அலாப தசையில் மிகவும் பாதகம் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – -16-நாலாயி:2806/4-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே –பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –

மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் – 96-நாலாயி:2763/1 இது விளைத்த
மன்னன் –-இத்தலை அப்படியாக தான் உஜ்ஜ்வலனான படி –நறுந்துழாய்-இப்படிப் படுத்துகைக்கு பிரஹ்மாஸ்திரம்-வாழ் மார்பன் –தானும் திருத் துழாயோ பாதி வாழ நினைக்கிறாள் –

மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் –141- நாலாயி:2787/7 -ராஜாக்கள் அடையத் திரண்டு கிடக்கிற பேர் ஒலக்கத்தின் நடுவே -தூதனாய் தன்னை வாழ்வாகவும்
துணையாகவும் தோழனாகவும் தூதனாகவும் உடையராய் இருக்கிற பாண்டவர்கள் உடைய தூதனாய்

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று – 2-3-1-நாலாயி:3031/1 —ஊன் என்று சரீரமாய் -வாழ்க்கையாவது வர்த்திக்கிறதாய் -சரீரத்திலே-வர்த்திக்கிற – வசிக்கிற உயிரே!
இவ் விளியால்,
-பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? மாம்ச பிரசுரமான சரீரத்தில் இருந்து வைத்து வாழுகிற உயிரே சரீரத்தைப் பற்றி வாழ்ந்து போந்த உயிரே -என்றுமாம்-பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று -மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  ‘சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ என்று பொருள் கூறலுமாம்.–இவ்விளியால்,‘நெடு நாள்-பிராகிருத போகங்களை – இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ,-அப்ராக்ருத போகத்துக்கு- அவ்வுலக இன்பத்துக்குக் கை தர நிற்பதே!’ என்ற தொனிப் பொருள் தோன்றும்.-இப் பொருளில் வாழ்தல் – அனுபவித்தல்.–வாழ்கை -வர்த்தனமும் விஷய ஸூக அனுபவமும் -நித்ய முக்தர் போல் பகவத் அனுபவ ஏக ஸூகமும்

தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் – -–2-3-5-நாலாயி:3035/3 -எனக்கு இப் பேற்றுக்கு அடியான பிரதம ஸூ க்ருதத்துக்கு உத்பாதகன் ஆனவனே பந்துக்கள் நடுவே இருக்கிறவர் -தனியேன் -என்கிறார் இறே வழி பறிக்காரர் நடுவே நின்றால் அவர்கள் துணை யாகார் இறே -பிராட்டி-ஏக அஷ- ஒற்றைக் கண்ணள், -ஏக கர்ணி- ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், தனியேன்’-என்கிறார் – எனக்கு என்று இருப்பார் நடுவே இருக்கை இறே இவருக்கு தனிமை -நம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கை இறே இவருக்கு வாழ்வு

அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள ––2-5-1- நாலாயி:3053/2 -அழகிய மாலை வாழா நின்றுள்ள முடி -வாள் -என்று ஒளியாய் -அழகிய மாலையும் ஒளியையும் உடைத்தான் திரு அபிஷேகம் என்றுமாம் –-‘வாண்முடி’ என்பது பாடமாயின், வாள்-என்று ஒளியாய் -நிரவதிக தேஜோ ரூபமான – ‘எல்லை அற்ற ஒளி உருவமான முடி’ என்று பொருள்-தாமம் -தேஜஸ் ஆகவுமாம்-இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலை யாண்டான் அருளிச் செய்வர். -இனி, இதற்கு எம்பெருமானார்,-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்-அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.

போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே
-3-1-6– நாலாயி:3126/3
–வேதங்களும் கூட ஏங்குவது இளைப்பதாகா நிற்க நான் இச் சேர்த்திக்கு பாசுரமிட்டு ஏத்தவோ –பூவை உடைத்தாய் தன் நிலத்திலே நின்றால் போலே செவ்வி பெற்று வாழா நின்றுள்ள திருத் துழாயை திரு அபிஷேகத்திலே உடையவனே-திருத் துழாய்ப் பூ முடி சூடி வாழா நிற்கிறது -இவ்வொப்பனை என்னால் பேசலாய் இருந்ததோ –சிந்து பூ மகிழும் -விஷ்வக் சேனர் எடுத்து திரு வேங்கடவனுக்கு சமர்ப்பிப்பார் என்கிறார் –-பூவிலே வர்த்திக்கிற பிராட்டி உன் சுவடு அறிந்த பின்பு அப்பூ நெருஞ்சி முள்ளாம் படி மார்பு படைத்தவனே —பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்கும் அன்றாயிற்று இவளும் இம்மார்வை விட்டு பிறந்தகமான தாமரையை நினைப்பது –-பிராட்டி பிரிந்து இருக்கில் இறே வைத்த வளையம் சருகாவது –
இவ்வொப்பனையை ஒப்பனை யாக்கும் அவளோட்டை சேர்த்தி தான் என்னாலே பேசலாய் இருந்ததோ ––சர்வேஸ்வர சிஹ்னமான திருத் துழாய் ஆகையால் அவ் வைஸ்வர்யத்தைப் பேசவோ –பிராட்டி யோட்டைச் சேர்த்திக்கு நான் பாசுரம் இட்டுச் சொல்லவோ –

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே –3-2-4– நாலாயி:3135/4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

———————————-

மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ4-1-5- – நாலாயி:3235/4-நீல ரத்னம் போலே ஒளியை யுடைத்தான திரு மேனியை யுடையவனாய்-ஆனபின்பு பக்தா நாம் என்று இருக்குமவன் உடம்பை பற்றுங்கோள்-ஏஷ சர்வஸ்வ பூதஸ்து -ஸூ லபமாய் நிரவாதிக தேஜோ ரூபமான வடிவை உடையவன்-நம்-ஆஸ்ரிதரான நமக்குத் தன்னை அனுபவிப்பிக்கும்-மாயவன் –ஆஸ்ரித விஷயத்தில் செய்தது போராது என்று இருக்குமவன்-பேர் சொல்லி வாழ்மினோ.–ஆச்சர்ய பூதனுடைய திரு நாமங்களைச் சொல்லி ஆனந்திகள் ஆகுங்கோள்-திரு நாமத்தைச் சொல்லி நிரதிசய போகத்தில் அந்வயின்கோள் –செய்ய வேண்டிய முயற்சி இவ்வளவே; பின்னை வாழ்வோடே தலைக்கட்டும். வாழ்க்கைக்கு ஒரு பேரோ!‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்னும்படி அன்றோ இது தன்னுடைய இனிமை இருப்பது?பேரே வாழ்க்கை என்றவாறு -பேர் சொல்வது உபாயம் இல்லையே-கெடும் இடராய –கேசவா என்ன -நாளும் கொடு வினை –தமரும் குறுககில்லார்

ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை -–4-9-8– நாலாயி:3326/2 –பஞ்ச பூதங்களையும் -சமேத்ய அந்யோன்ய சம்யோகம் என்கிறபடியே த்ரிவ்ருத்திகரித்து-சமைத்து வைத்த-ப்ரஹ்மாதிகளுக்கு போக ஸ்தானமாய் -ஈஸ்வரோஹம் -என்று வன்னியம் செய்கிற தேசமாய் அத்விதீயமான வை லக்ஷண்யத்தை உடைத்தான் அண்டமாகிற அரணின் நின்றும் புறப்பட விட்டு – புக்காருக்கு புறப்பட ஒண்ணாத அரண் இறே

தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு–5-7-3- – நாலாயி:3409/3 –வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்-நித்ய ஸூரிகளை போலே திரள் திரளாக பகவத் குண அனுபவம் பண்ணி வர்த்திக்கிறவர்கள்-இத் தலையில் சாதனமும் இல்லை -செய்யலாவதொரு பிரதியுபகாரமும் இல்லை என்று பகவத் குண அனுபவமே யாத்ரையாய் இருக்குமவர்கள்

வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே–5-8-6- – நாலாயி:3423/3 –விஸ்லேஷ கந்தம் இல்லாத படி உன்னை அனுபவிக்கை யாகிற ஸ்லாக்யமான புகழை யுடையவர்களதான -திருக் குடந்தை -பழையதான புகழ் என்றுமாம் -எனை நாள் அகன்று இருப்பன் என்ன வேண்டாதவர்கள் -விஷய சந்நிதி தனக்கும் அவர்களுக்கும் ஒத்து இருக்க அவர்கள் வாழுகிற படி எங்கனே என்னில் -தம்மைப் போலே கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம் பெற்றார்கள் என்று இருக்கிறார்

பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் —–6-3-6- நாலாயி:3478/2 -ஸ்ரீ யும் –அஸ்ரீயும் -தவ்வை – அஸ்ரீ -பிராட்டி கடாக்ஷத்தால் வந்த புகழாய்-அ ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த பழியாய்-திருமகளும் திருமகள் அல்லாதவளுமாய்.-தவ்வை – திருமகள் அல்லாதவள்.-திருமகளினுடைய கடாக்ஷ முடையார்க்கு வரும் புகழ்,-தவ்வையினுடைய கடாக்ஷமுடையார்க்கு வரும் பழி.

மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – -6-3-10-நாலாயி:3482/3 -மழலை பேச்சையுடைய வண்டுகள் தம்தாம் அபிமதங்கள் பெற்று வாழ்கிற ஊர்-பருவத்தின் இளமையாலே இனிய பேச்சுக்களை யுடைத்தான வண்டுகள் வாழா நின்றுள்ள திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன்.

நிற்கும் நால்மறைவாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் -–6-5-4- நாலாயி:3498/1–அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் -நித்தியமான நான்கு வேதங்கள்.-நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சார்யமாணத்வம்.-ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே குற்றமற்ற தாயிருக்குமன்றோ.–வேதங்கள் தங்கள் இட்ட வழக்காய் செல்லுகையாலே வ்யாஸ பதம் செலுத்த வல்லவர்கள்-வாழ் தொலை வில்லி மங்கலம்-வேத தாத்பர்ய பூதனானவனைக் கண்டு நித்ய அனுபவம் பண்ணுகிற வூர் -(காட்சி இருந்தாலே வாழ்ச்சி தானே )–ஸ்வாத்யாயாத் யோகம் ஆஸீத -என்னும் அளவு அன்றிக்கே -யோகாதி ஸ்வாத் யாயமா மநேத் -என்று ஆரூட யோகமாய் இருக்குமவர்கள்-“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ் வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக் கடவன்” என்னுமளவன்றியே,–ஓதுவார் ஒத்து எல்லாம் –நின் புகழே–ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்” என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2.-ஆரூட யோகர் – சித்தித்த யோகத்தை யுடையவர்.“அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேத பாகங்களின் பொருள்களைக் கண்டு
மனனம் செய்ய வேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள்.

இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் ––6-5-8– நாலாயி:3502/2-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர்

ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் ––6-10-4– நாலாயி:3553/1-அ ஸூ ரர்கள் உடம்பில் அன்றிக்கே அவர்கள் ஆயுசிலே யாயிற்று அம்பு தைப்பது –இவர்கள் வாழ்வதற்குக் காரணமான காலத்தை நலிகை-

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள் கொடுக்கும் – -–6-10-11–நாலாயி:3560/1-தன் திருவடிகளின் கீழே அநந்ய பிரயோஜனராகப் புகுந்து ஸ்வரூப ஞானம் உடையோர் வாழுங்கோள் என்று முத்திரையால் அருளிச் செய்கிறாப் போலே யாயிற்று நின்று அருளுவது -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -மா ஸூ ச -என்றால் போலே யாயிற்று நிற்பது-சேஷபூதர்கள் -உங்கள் உத்தேஸ்யம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக் கிருத்தியராய்ப் போங்கோள் என்று,-அடியார்கள் விஷயத்தில் அருள் கொடுக்கும் ஸ்வபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேஸ்வரனை.“மாஸுச: – துக்கப் படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு.-கொடுத்த -என்னாமல் -கொடுக்கும் வர்த்தமானம் -இப்பாசுரம் அநுஸந்திக்கும் நமக்கும் இப்பேறு உண்டு 

பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே
–7-10-3– நாலாயி:3662/3,4-அவனுடைய கல்யாண குணங்களை பாடா நின்றுள்ள நாலு வேதங்கள்-பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் -ஷடங்கங்கள் இவற்றை பயின்றவர்கள் -வேத தாத்பர்யம் கைப் பட்டவர்கள் -நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் -எஃகிக் கரை கண்டு இருக்குமவர்கள்.
போதயந்த பரஸ்பரம் -‘ஓருவர்க்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு’ என்னும்படி, அவ்வூரிலுள்ளாரோடு சென்று கூடவேணும்.–ஒக்கத்தை யுடைய பொழில் சூழ்ந்த திருவாறன் விளையிலே புக்கு அங்கு உள்ள வைஷ்ணவர்களோடே கூடி அனுபவிக்க காலம் எல்லாம் இங்கனே யாக வற்றோ –

திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் —–8-3-7-– நாலாயி:3699/2-திருப் பரிசாரத்தில் இருப்புக்கு மங்களா சாசனம் பண்ண வேணும்-என்-திரு வாழ் மார்வற்கு-அதுக்கு மேலே பிராட்டியோட்டை சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ண வேணும் –பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-என்ற இளைய பெருமாளை போலே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் படி யாயிற்று இங்குத்தை இருப்பு-என்-திரு வாழ் மார்வற்கு-என் ஸ்வாமி நி சந்நிதி யாகையாலே சொன்ன வார்த்தை விலை செல்லும் கிடீர்-ஸ்ரீ பீடம் -ருக் வேதம் ஸ்ரீ நிவாஸன் –ஸ்ரீ பீடஸ்ய -க்ரீம் கச்ச -என்று சொல்லுமே-அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமசி -ருக்கு -8-அஷ்டகம் -8-அத்யாயம் -13-வர்க்கம் –முதல் ருக்கு மந்த்ரம்
த்வயி அராயி சதி –குழந்தாய் நீ இஹ லோக பரலோக ஐஸ்வர்யம் இல்லாமல் இருந்தாயானால்
த்வயி காணே சதி -நீ வெளிக்கண்ணும் உள் கண்ணும் இல்லாதவனாய் இருந்தால்
த்வயி விக்டே சதி -நீ ஆத்யாத்மீகம் -ஆதி பவ்திக்கம் -ஆதி தைவிகம் -தாப த்ரயங்களால் பீடிக்கப் பட்டு இருந்தாயாகில் —கடம் -தாஹம்
த்வயி ஸதான்வே சதி -புருஷார்த்தங்களை பெற முடியாமல் பிரதிபந்தகங்கள் இருந்தால்
ஸ்ரீம் பீடஸ்ய -திருமகளுக்கு திரு மார்பினால் பீடமாகிய ஸ்ரீ நிவாசனுடைய
கிரிம் -திருமலையைக் குறித்து
ஸ்ரீம் பிடஸ்ய சத்த்வபி கச்ச -ஸ்ரீ நிவாசனுடைய பக்தர்களோடு சென்று சேர்
தேபி -அவர்கள் மூலமாகவே
த்வா ஸ்ரீம் பீடஸ்ய ஸாதயாமசி -நீ ஸ்ரீ நிவாஸனை வேண்டிக் கொள்ள தகுதி பெற்று இருக்கிறாய்–சமர்பிக்கத் தகுதி பெற்று இருப்பாய்

மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே –
–8-4-6- நாலாயி:3709/3,4-ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு கடவராய் பிரதானரான மூவரும் செய்யக் கடவ காரியத்தை ஓர் ஒருத்தரே செய்ய வல்லராம் படி யாயிற்று இவர்கள் சக்தி இருக்கும் படி-அதிகாரி புருஷர்களில் இவர்களுக்கு உண்டான ஏற்றம் –

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன்
வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8- – -9-1-8-நாலாயி:3788/3–அவன் குணங்களை அனுசந்தித்து -வாழுமதே கிடி கோள் யுக்தம் –-அந்தோ-கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே இவர்களை அபேக்ஷிக்க வேண்டுவதே எனக்கு –ஆச்சர்யமான ஸுந்தர்ய சீலாதிகளை யுடைய வனுடைய திருவடிகளை ப்ரீதியாலே அக்ரமமாக ஏத்தி அத்தாலே கால ஷேபம் பண்ண வேணும் என்று அத்யசிக்க வல்லரான அநந்ய பிரயோஜனர்க்கு--புன்மை யிலாதவர்கள்–சீரியவர்கள் –வுள்ள கிற்கை-உள்ள வல்லராகை –அத்யவசிக்க வல்லராகை ––கண்ணாலே கண்டு அனுபவிக்கைக்காக –அஹம் வோ பாந்தவோ ஜாத -என்கிறபடி துணையாக வந்து பிறந்தவன் -பரித்ராணாய ஸாதூ நாம் -என்று இறே அவதாரத்துக்கு பிரயோஜனம் இருப்பது –கல்யாண குணங்களையே ஆசைப்படும் துணையாக பற்றும் இது போக்கி – வீழ் துணை-ஆசைப்படும் துணை -தாம் வீழ்வார் -என்ன காட்டுவதே ஆசா யுக்தரை –யாதுமில்லை மிக்கதே–இதில் காட்டில் மேல் பட்டது வேறு ஒன்றும் இல்லை –

காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் 9-1-9-– நாலாயி:3789/2-பகவத் வ்யதி ரிக்தமாய் இருப்பது ஒன்றைப் பற்றி இது ஒழிய வேறு ரக்ஷகமாய் இருபத்தொரு ஒன்றும் இல்லை என்று சொல்லி அத்தை ரக்ஷகமாகப் பற்றி -சமர்த்தோ த்ருச்யதே கச்சித -என்கிற பிரதிபத்தியை அதிலே வேணும் என்று பண்ணி இருக்கை –காது பெருக்கப் புக்கு பண்டு உள்ள யோக்கியதையும் கெடுத்து கூதை யாக்கினால் போலே-தண்ணிய முறையான வாழ்க்கையும் அழியும் -ஆபத்தில் அது ரக்ஷகம் ஆகாது –அதின் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே தான் செய்து கொள்ளும் அத்தையும் இழக்கும் –

நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர் -10-1-2— நாலாயி:3892/3-–ஆன்ரு ஸம்சயமே வேதார்த்தம் -என்று வேத தாத்பர்யம் கை வந்து இருக்குமவர்களாய் -வேத நிர்வாஹகரானவர்கள்-நித்ய அனுபவம் பண்ணுகிற தேசம் –அருளுடைமையே வேதாந்தம் -என்று வேதங்களின் கருத்து-கை வந்து இருக்குமவர்களாய் வேதத்துக்கு வ்யாபதேசம் செலுத்த வல்லவரானவர்கள் வசிக்கிற தேசம்-அவ் ஊரில் வசிப்பதே வாழ்ச்சியாம்–அத்தேச வாசத்தாலே ஆஸ்ரித சம்ரக்ஷணமே பரம தர்மம் -என்று ஈஸ்வரனுக்கு அதிலே நிஷ்டனாக வேண்டி இருக்கும் தேசம் -அவ்வூரில் ஆஸ்ரயிக்க சென்றாரை -அஸ்மாபிஸ் துல்ய பவது -நம்மோடு ஒத்தவர்கள் ஆகுக -என்னுமவர்கள் –

வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -–10-4-8– நாலாயி:3931/4-வாழி-மேல் சொல்லப் புகுகிற காரியத்தை நினைத்து -ஆயுஷ்மன் -என்னுமா போலே –நடுவே மங்களா சாசனம் செய்கிறார் –-உனக்கு இது நித்யமாய்ச் செல்ல வேணும் என்கிறார் –மறவாது வாழ் கண்டாய் சொல்வதற்கு முன்பு வாழ் நெஞ்சே என்கிறார் –-புறம்பு உள்ளாரை சுமை எடுத்து தன் வழியே கொடு போகா நிற்க -முறையிலே நின்று என் வழியே நின்ற நெஞ்சே -நாட்டார்க்கு பந்தமாகா நிற்க -எனக்கு மோக்ஷ ஹேதுவான நெஞ்சே –இதர விஷயங்களில் போல் அன்றியே விஸ்மரிக்கை ஸ்வரூப நாசம் என்னும் படியான விஷயம் கிடாய் -சா ஹானி –என்னக் கடவது இறே –வாழ் கண்டாய்–உன் பேற்றுக்கு இறே நான் கால் பிடிக்கிறது –பால் குடிக்க கால் பிடிக்கிறேனோ அன்றோ –புறம்பு போய் மணலை முக்க ஒண்ணாதே-பாது காக்க வல்லானைப் பற்ற வேண்டுமே–பாது காப்பதற்கு வேண்டிய சாதனங்களை உடையவன் பாது காப்பவனாக வேண்டுமே-அநந்ய பிரயோஜனர்கள் ஸ்வரூபம் ஸ்திதி அனைத்தைக்கும் நிர்வாஹகன் ஆனவன்-பாது காக்குமவனாக வேண்டும் ஒருக்கால் உளனாவது இலனாவது ஆகா நிற்கிறவனுக்கு-என்றும் உளனானவன் பாதுகாக்க வேண்டுமே- இவை இல்லாத அன்று உண்டாக்கினவன் பாதுகாக்குமவனாக வேண்டும்-உண்டான அன்று பாது காப்பவன் ஆகைக்கு-தம்மை பாது காப்பதில் குறைய நின்றனவற்றையும் நோக்குமவன்-பாது காப்பவனாக வேண்டும்-இருந்தபடியாமாகில் மறந்து காண் -உன்னாலே மறக்கப் போகாதே –

மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – -10-8-3- நாலாயி:3970/2-தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்–மடித்தேன் -மடிக்கை -திரிய விடுகை –-கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் பிறவி புக்க இடத்தே புகக் கூடிய-பிணியைக் கிட்டேன் ––மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை மடித்தேன் –ஸூஷ்ம சரீர விமோசனம் –இவ் உலக வாழ்கையில் நிற்கைக்கு அடியான மாயை உண்டு -மூல பிரகிருதி-அதனைத் திரிய விடுவித்தேன்-நிவர்த்தம் ஆக்கினேன் –ஸூஷ்ம சரீரத்தின் நாசம் சொன்னபடி –தொடருகிற பாம்பினைத் திரிய விடுவிப்பாரைப் போலே-எம்பெருமானார் -உலாவி அருளுகிறவர் முடியப் போகாதே-நடுவே மீண்டு அருள-எம்பார் கதவினை ஒருச்சரித்து-திருமால் இரும் சோலை ஆகாதே திரு உள்ளத்தில் ஓடுகிறது-என்ன-ஆம் அப்படியே -என்று அருளிச் செய்தார் –

நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன் – -10-8-11-நாலாயி:3978/2-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது -நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பிநல்லார் நவில் குருகூர் -திரு விருத்தம் -100-அன்றோ-சர்வதா அபிகத சத்பி சமுத்ர இவ சிந்துபி-ஆர்ய சர்வ சமச்சைவ சதைக பிரியதர்சன -ஸ்ரீ சங்ஷேப ராமாயணம்–நதிகளால் அடையப் படுகின்ற கடல் போன்று சத் புருஷர்கள் ஆகிய பெரியோர்களால் அடையப் படுகின்றவர் என்றபடி – திருச் சங்கணித் துறை சத்வ குணம் உள்ளார் சேரும் திரு நகரி –

வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே-–10-9-1- – நாலாயி:3979/4–வாழ் புகழ் நாரணன்ஆஸ்ரிதரை வாழும் படி பண்ண வற்றான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –அவன் தன்னைக் கண்டாலோ என்னில் –தாமரைக் கண்டு –அவன் கேட்க்கும் என்னும் பீதியாலோ என்னில் –உகந்தே-ப்ரீதி ப்ரேரிதராய் —

முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்–10-10-9- – நாலாயி:3998/3-விகாரங்களுக்கு எல்லாம் அத்விதீய மான காரணமாய் அவை தன்னை எங்கும் வியாபித்து – வாழ் பாழாய்-சேதனர்க்கு போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான நிலமாய் யுள்ள பிரகிருதி தத்துவத்துக்கு ஆத்மாவாய் –முதன்மை பெற்றதாய்-உபமானம் இல்லாததாய்-அங்கும் இங்குமான மகத் தத்துவங்கள் முழுவதிலும் பரந்து- மக்களுக்கு போகங்களையும் மோஷத்தையும் விளைத்துக் கொள்ளுகைக்கு ஈடான-கருநிலமாய் உள்ள மூலப் பகுதிக்கு ஆத்மாவாய்-ஆய் -சரீர ஆத்மா காரண கார்ய நிபந்தமான சாமா நாதி கரண்யம் –

—————————————————————————————————–

தாழ்ச்சி

தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட –-1-6 2- –- நாலாயி:76/2-தன்னுடைய திருவரையில் சாத்தின பொன்னரை நாணோடு கோவைப்பட்ட மாணிக்கக் கிண்கிணி சப்திக்க அத்வீதியமான சுட்டியானது-திருக் குழலில் சாத்திய-உங்கள் தமப்பனராய் இடையர்களுக்கு அரசரான ஸ்ரீ நந்த கோபருடைய மடியில் இருந்து –இத்தால்-தன் மடியில் இருந்து சப்பாணி கொட்டுகிறதிலும்-அவர் மடியில் இருந்து சப்பாணி கொட்டக் காண்கை தனக்கு உகப்பு ஆகையாலே அத்தை செய்ய வேணும் என்று அபேஷித்தாராய் ஆய்த்து-

தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் –-1-9 4- –- நாலாயி:111/2-நாந்தகம் என்னும் பேரை உடைத்தான -திருக்குற்றுடை வாளை-ஆஸ்ரித ரஷணத்தில் விளம்ப அசஹதையாலே -சர்வ காலமும் பூ ஏந்தினால் போல் –திருக் கையில் தரித்து கொண்டு -ரஷிக்கைக்கு ஈடான குணங்களால் -பூர்ணனாய் இருக்கிற நீ ரஷகனாக வேணும் என்று –பிரபதனம் செய்த அர்ஜுன பஷ பாதியாய்-பூமியில் உள்ள ராஜாக்கள் எல்லாரும் அர்ஜுனன் அளவில் பஷ பாதத்தையும் தேரை நடத்துகிற சாமர்த்தியத்தையும் கண்டு – நாம்  இனி ஜீவிக்கை எனபது ஓன்று உண்டோ – என்று நெஞ்சு உளுக்கும்படியாக அர்ஜுனனுடைய அழகியதாய் –
திண்ணியதான தேரை சாரதியாய் நின்று நடத்தினவன் – என்னைப் புறம் புல்குவான் –

போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் –  2-3 1- நாலாயி:139/1–பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –அன்றிக்கே –போய் –என்ற இது –மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் ) ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே – -3-6-9- –நாலாயி:283/2-சிவந்த செந்தாமரைப் பூவை சூழப் படிந்த வண்டினுடைய திரள் போலே 
சுருட்சியும்  மிருட்சியும்  உடைத்தான திருக் குழல்கள் தாழ்ந்த திரு முகத்தை உடையவன் –

முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் –6-6– நாலாயி:561/2–முத்து மாலை நிரைகளானவை தலையிலே வந்து தாழ்ந்த பந்தலின் கீழே(இன்றும் யானை வாஹனம் பொழுது முத்துக் கொடை கொண்டே புறப்பாடு –மற்ற நாள்களில் ஸ்வர்ணம் கொடை -யானை வாகனமும் ஆறாம் நாள் நடக்கும் 

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – 6-2-நாலாயி:699/3-மேல் பண்ணின வியாபாரங்கள் ஒரு மஹா பாரதம் இறே—ஊர் எங்கும் அடி ஒத்தித் திரியும் இறே -தனியே நின்று தயிர் கடைவார் உண்டோ என்று –ஒருத்தி தனியே நின்று தயிர் கடையக் கண்டவாறே அலாப்ய லாபம் பெற்றானாய்-ஓடிச் சென்று புக்கான் –நீ தனியே நின்று தயிர் கடையில் -ஒருக்காலும் வெண்ணெய் பட்டதாகப் படாது —
சடக்கென வெண்ணெய் படுவது நானும் ஒருதலைப் பற்றி கடையில் யாய்த்து என்று
அன்று தேவரசுரர் வாங்க -என்று பிறர் கை விட்டால் கடிவது பிறர் கார்யம் ஆகில் இறே
இங்கும் இவளும் ஒரு தலைப் பற்றில் இறே தன் பிரயோஜனம் ஆவது -இவன் கள்ள விழி –
அவள் கெண்டை ஒண் கண் மடவாள்-நோக்கும் நினைவும் செயலும் -சொல்லும் ஒருபடிப் பட்டு இருக்கும் அவளுக்கு-இவனுக்கு நோக்கு ஒரு படியும் நினைவு ஒரு படியும் சொல்லு ஒரு படியும் செயலும் வேறு ஒரு படியுமாய் இருக்கும் – இவன் நோக்காலே எல்லாம் மெய் என்று அவள் விஸ்வசித்தாள் யாய்த்து–வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ-உன் குழலை விஸ்வசித்த வண்டுகள் என் பட்டனவோ 

சரங்கள் ஆண்ட தண் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – –7-3-4-நாலாயி:1571/4–கடல் சூழ்ந்த அரணை உடைத்தாய் இருக்கிற இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக எடுத்து விட்டு  அம்புகளை நடத்தின புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு அல்லது –ஆஸ்ரிதர்க்காக சாரத்தியம் பண்ணியும்-மார்விலே அம்பு ஏற்றும் உபகரிக்கும் அவனுக்கு அல்லது வேறு சிலர் விஷயமாக என்னுடைய ஹிருதயத்தில் தாழ்ச்சி பிறவாது –

தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ -8-4-2– நாலாயி:1679/4-பூத்துச் செவ்வியை உடைத்தாய் இருக்கிற திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –

தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ-–8-4-4- – நாலாயி:1681/4-பூமிக்கு ஸ்ரமஹரமாய் இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்து ஊத வேணும் –(கிருஷ்ணன் கிருஷ் பூமி வாச -கிருஷ்ண துளஸீ –சாத்திக் கொண்ட தாலேயே கறுத்த திருமேனி என்றும் –அவன் ஸ்பர்சத்தாலே இதுவும் கறுப்பானது )

தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-5–நாலாயி:1682/4-பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாயிலே தாழ்ந்தூதாய் –

தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – -8-4-6–நாலாயி:1683/4-ஆதி ராஜ்ய பிரகாசமான திரு அபிஷேகத்தின் மேலே உண்டான செவ்வியை உடைத்தான திருத் துழாயிலே படிந்து இங்கே வந்தூதப் பாராய் –(இவனே தேவாதி ராஜன் கோள் சொல்லிக் கொடுக்குமே )

தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – ––8-4-7–நாலாயி:1684/4-மாலையாய்
பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய் –

தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் ––8-5-2– நாலாயி:1689/2–ஒரு பிரயோஜனத்துக்காக போகில் இறே அத்தைக் கொடு போகல் ஆவது –
வரை போலே இருக்கிற திரு மார்பிலே இரண்டருகும் அருவி விழுந்தால் போலே இட்ட மாலையைப் பெற வேணும் என்னும் ஆசையாலே போன நெஞ்சானது ஒரு கால் மீளுகை அன்றிக்கே அங்கே அதி மாத்ர பிராவண்யத்தை  உடைத்தாய்க் கொண்டு கால் தாழ்ந்தது –

கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – 9-5-4-நாலாயி:1791/1–கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற ஒரு மணி யாய்த்து –மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –

தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – -திரு நெடும் தாண்டகம்–-25-நாலாயி:2076/2–இத்தால் ஒப்பனை அழகு சொல்கிறது-தன்னிலத்தில் காட்டில் செவ்வி பெற்று அதி பரிமளிதமான திருத் துழாயாலே அலங்க்ருதமான வளையத்தின் கீழே –வைத்த வளையத்தின் கீழே திருத் தோள் அளவும் வரத் தாழ்ந்து பரபாக ரூபத்தாலே விளங்கா நின்றுள்ள திரு மகரக் குழையும் காட்டி –பிரிந்ததுக்கு மேலே –திருவடி திருத் தோளிலே ஏறி இவள் முன்னே சாரிகை வந்து -(புள்ளூறும் கள்வா கீழே உண்டே ) தனக்கு உள்ளதை அடையக் காட்டி இங்குள்ளத்தை அடையக் கொண்டான் -என்கிறாள் –இத்தால் ஒப்பனையோடு ஆபரணத்துக்கு உண்டான சேர்த்தி அழகு சொல்லுகிறது-

தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து – இரண்டாம் திருவந்தாதி –-22-நாலாயி:2203/4-பொய்கையிலே புக்கு பூவைப் பறித்த அவ்வளவில் முதலையாலே நோவு பட்டு
பூவில் செவ்வி மாறுவதற்கு முன்னே அவன் திருவடிகளிலே இடப் பெற்றிலோம் என்னும் இழவு தீர அவன் தான் அரை குலையத் தலை குலைய இவ்வளவும் வந்து இத்தை எடுத்துக் கொடு போய் குளிர்ந்த கரையிலே வைக்க அப்போதே அவன் திருவடிகளிலே பணிமாறித் தன் விரோதியையும் போக்கப் பெற்றது   இல்லையோ – ஆன பின்பு அதிலும் ஒரு குறையில்லை –

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்–23--நாலாயி:2204/1–த்விதா பஜ்யேயமபி ந நமேயம் -யுத்த -36-11-என்கிற நிர்பந்தத்தை யுடையர் அன்றிக்கே –அவன் திருவடிகளிலே வணங்கி –இத்வயத்துக்குச் சேர்த்தி இல்லையே -அஜ் ஜென்மங்களுக்கு யுண்டாகை ஒழிய இறுமாப்பு தவிர்ந்து திருவடிகளிலே விழுகை –வரம் கொண்டு –இனி என்னுடைய அபிமத லாபம் என்னாலே பெறக் கடவேன் அல்லேன் -உன்னாலே பெறக் கடவேன் -என்று அவன் பிரசாதத்தைக் கை தொடுமானமாய்க் கொண்டு -ஒரு நாள் தாழ்ந்து விடுகை அன்றிக்கே முடியத் தாழும்படி வரம் கொடுக்கை அவன் பணி இறே  –தக்க வகைகளால்-இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிரகாரங்களினாலே ஆஸ்ரயித்து-என்னுதல் –சாஸ்த்ரங்களில் சொல்லுகிற பிரகாரங்களாலே -என்னுதல் அதிகார அனுகுணமாக -என்னுதல்-தாழ்ந்து வரம் கொண்டு என்பான் என் என்னில் –
ஐஸ்வர் யாதிகளுக்கு ஐஸ்வர்ய விசிஷ்டனாக அனுசந்திக்கவும் பக்தி பண்ணவும் அந்திம ஸ்ம்ருதியும் வேணும் கேவலனுக்கு ஸூத்தியை அனுசந்திக்க வேணும்
பகவத் பிராப்திக்கும் கல்யாண குண விசிஷ்டனாக அனுசந்திக்க வேணும்-வாழ்ந்து கழிவாரை -வாழ்விக்கும் –வாழ்ந்ததாய்த் தலைக் கட்ட வேணும்  என்று இருப்பாரை வாழ்விக்கும் –இது தானே வாழ்வாகக் காலத்தைப் போக்குவாரை ரஷிக்கும்-தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை-யாதொரு யாதொரு புருஷார்த்தங்களை பெற வேண்டும் என்றால் அவ்வோ புருஷார்த்தங்களைக் கொடுத்து வாழ்விக்கும் -உதாரா -ஸ்ரீ கீதை -7-18-என்று தரும் –இப்படி நினைத்து இருந்தாலும் தனக்கு விரோதியும் யுண்டாய் -அது தானும் செய்து தலைக் கட்டுகை அரிதாய் இருக்கில் செய்வது என் என்னில் –அக் குறைகளும் அவனே பரிஹரித்து தரும் என்கிறது –

தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த – நாலாயி:2331/2

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது
–53- நாலாயி:2234/1,2–புறம்புத்தை அந்ய பரத்தையடைய அற்றுத் திருமலை   யாழ்வார்  பக்கலிலே அனுசந்தானத்தை யுடையராய்க் கொண்டு வழி பட ஆஸ்ரயிக்கிற வர்களுடைய குழல் கற்றையிலே –அங்குத்தைப் பூங்கொடிகள் ஆனவை -இவர்கள் சலியாதே மூச்சு விடுதல் –உடம்பு ஆடுதல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு சில சேதனர் என்று புத்தி பண்ணாதே —இவை சில சிறு மலைகள் என்று பார்த்து முன்னின்று பின்னே வந்து படர்ந்து –முன்னின்று பின்னே தாழ்ந்த குழல் கற்றை யுடைய நெறியார் பக்கலிலே என்னவுமாம் –அதாகிறது-தங்கள் பெருமையாலே தன்னிலே ஒன்றாக முன்னும் தாழ்ந்த குழல் கற்றையை யுடையர் என்றுமாம் –

புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி –மூன்றாம் திருவந்தாதி-70– நாலாயி:2351/1-மஸ்தகஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றில் நின்றும் பாய்த்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே –மதம் மிகைத்துக் கொண்டு வாயிலே புகுவதொரு அவஸ்தை யுண்டாய் இருக்கும் இறே – அப்போதை ஆசனம் ஆக்கவுமாம் -கீழே தாழ்ந்த அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தைக் கொண்டு கால் கழுவி

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே
-கேழ்ந்த
அடித்தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்
அடித்தாமரை யாமலர் –-மூன்றாம் திருவந்தாதி-96- – நாலாயி:2377/2–வாழ்துகையே ஸ்வரூபமான வாயை   யுடையரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ணப் பட்ட வாயை  யுடையராய் – வாழ்த்திய வாய் -தழும்பேறிக் கிடக்கும் –இவர்கள் மகுடம் தாழ்த்தி வணங்குவது பொறாமல் தழும்பாம் ப்ரஹ்மாதிகள் ஐஸ்வர்ய ஸூசகமான அபிஷேக யுக்தமான தலைகளைத் தாழ்த்தி ஆஸ்ரயிக்கத் தழும்பாய் இருக்கும்

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–நான்முகன் திருவந்தாதி 11– – நாலாயி:2392/2-வாயாலே வாழ்த்துங்கோள் –கண்ணாலே காணுங்கோள் –செவியாலே கேளுங்கோள்-அபிமானத்தின் மிகுதியாலே முடி சூடினாப் போலே இருக்கிற தலையைத் தாழ்த்து
அழகிய புஷ்பாதிகளைக் கொண்டு வணங்குங்கள்-சூழப் பட்ட திருத் துழாய் மன்னா நிற்பதும் செய்து ஐஸ்வர்ய ஸூசகமான திரு வபிஷேகத்தையும் யுடையனாய் இவ் வழகாலே என்னை அடிமை கொண்ட சர்வேஸ்வரனை நினைத்து நிரந்தரமாகத் தொழுகைக்கு-பாங்கான கைகளைக் கூப்பி-வழா –வழுவாதேநழுவாதே -என்றபடி

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–பெரிய திருவந்தாதி-84- – நாலாயி:2668/2-(மனஸ்ஸூ ஒத்துழைத்தால் தானே கைகளைக் கூப்புவோம் –தலையைத் தாழ்த்துவோம் -திருவடிகளில் பூ புனைவோம் -வாயால் ஏத்துவோம் -ஆகவே இவற்றை அதுக்கே உபகரணமாகக் கொண்டு அருளிச் செய்கிறார்-ஆழ்வாருக்கு சத்தையே இவைகள்-நமக்கும் இப்படியே இருக்க வேண்டும் என்று நெஞ்சை வியாஜ்யமாகக் கொண்டு உபதேசிக்கிறார் )பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து
உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே(தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )எங்குச் சென்றாகிலும் கண்டு -திருவாய் –6-8-5-என்னும்படி ஆதரத்தோடே அவனை ஏத்தாத நெஞ்சமே அவனைப் பற்றாதே கால் பாவலாம் ஆகில் தங்கு-பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்-என்னெஞ்சமே யவனடியைப் பூ புனைந்து வாழ்த்தி
நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாதே எங்குற்றான் என்றவனை ஏத்தாத தங்க தான் ஆம் ஏலும் தங்கு
-என்று அந்வயம்

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே
யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையை சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுசன் என்னும் மா முனியே – -16 – – நாலாயி:2806/1-அகில ஜகன் மாத்ர்த்வத்தால் வந்த குடல் துடக்கை உடைத்தான -அவளுடைய ஸ்வபாவிகமான கிருபையாலே –வாழ்கின்ற –அவளுடைய கிருபையிலே காணும் இவருடைய வாழ்வு எல்லாம் -எம்பெருமானார் சரணா கதி பண்ணும் போது –ஸ்ரீ ரெங்க நாயகியார் உடைய சந்நிதியிலே -அழகிய மணவாளன் சேர்த்தி கொடுத்து இருக்க செய்தே – பகவன் நாராயண அபிமத அநு ரூப -என்று தொடங்கி முந்துற முன்னம் அவள் திருவடிகளில் பிரபத்தி பண்ணிற்று-பிரசித்தம் இறே –வள்ளல்-இப்படி அவள் முன்னிலையாக அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணி தாம் பெற்ற பலத்தை இந்த லோகத்தில் எல்லாருக்கும் கொடுத்த பரமோதாரன் –காலத்ர யேபி கரண த்ரய நிர்மிதாதி பாபக்ரியச்ய சரணம் பகவத் ஷமைவசரஸ்த்வைகமலா ரமேனேர்த்திதா யத்ஷேமஸ் யேவஹீயதேந்திர பவத் ஸ்ரிதானாம்-என்று இந்த சௌந்தர் யத்தை – ஜீயரும் அருளிச் செய்தார் இறே -என்றும்-மா முனி –இப்படி பரமோதாரர் ஆகையாலே சர்வ காலத்திலும் ஸ்வ ஆஸ்ரித
ரக்ஷணத்தில் தானே மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –இராமானுசன் –எம்பெருமானார் –தாழ்வு ஒன்றும் இல்லா மறை-வேதத்துக்கு தாழ்வு ஒன்றும் இல்லாமையாவது –ப்ரமப்ரமாத விப்ரலம்பாதி தர்ம விசிஷ்டத்வம் புருஷ ப்ரநீதத்வம் -ஸ்வ ப்ராமான்யே அந்ய சாபேஷத்வம் அநித்யத்வம் -தொடக்கமான வற்றில் ஓன்று இன்றிக்கே -யதா பூதவாதியாய் -அபௌருஷேயமாய்-நித்யமுமாய் இருக்கை-மறை தாழ்ந்து –இப்படிப் பட்ட வேதமானது -ஈர்ஷ்யாடம்பரான பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆதல் – கலி தோஷத்தாலே யாதல் -அபிபூதமாய்க் கொண்டு இழிவு பட்டு -கலி யுகமானது வேதத்தை
சந்கோசிப்பித்து அழித்தபடி -ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் ஸ்ரீ மத் பாகவதத்திலும் விஸ்த்ரேண உபபாதிக்கப் பட்டது இறே–நிஷித்த மார்க்கத்தை நடப்பித்துக் கொண்டு -போருகிற கலி தோஷத்தாலே -வேத மார்க்கமானது மூலையடியே நடந்து –
தல முழுதும் கலியே ஆள்கின்ற நாள் –தீப சங்கோசத்தில் -திமிரவ்யாப்தி போலே -இருள் தரும் மா ஞாலமான பூமிக்கு -கலி யுகமானது தனிக் கோல் செல்லும்படி -சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்தில் – தேச காலங்கள் சமீசீ நன்களானால் திருத்தி ரஷிக்கலாம்–அப்படி இன்றிக்கே தேசமோ அநேக பூயிஷ்டமானது –காலமோ தத் வசருக்கு வர்த்தகமானது
-வந்து –இப்படி அதி க்ரூரங்களான தேச காலங்களிலே பரம பதத்தில்-நின்றும் இந்த விபூதியிலே -ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து அருளி-அளித்தவன் காண்மின்
-உத்தரிப்பித்து இந்த-லோகத்தை ரஷித்தவர் காணும் கோள்-எல்லாரும் இவரை ரஷகர் என்று தெளிந்து -ஆஸ்ரயித்து உஜ்ஜீவியும் கோள் என்று கருத்து –கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னக் கடவது இறே –

தற்கச் சமணரும் சாக்கிய பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
-99- நாலாயி:2889/1,2-தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் -தன்னை ஈஸ்வரன் என்று பிரமித்து லோகம் எல்லாம்-ஆராதிக்க வேண்டும் என்று -அதுக்கு தகுதியாக தீர்க்க ஜடையைத் தரித்து கொண்டு -சாதனா-வேஷத்தோடு இருந்து -மோஹா சாஸ்தராணி காராய -என்கிறபடியே -பகவத் அனுமதியாலே மோஹா சாஸ்த்ரத்தை-பிரவர்த்திப்பித்த ருத்ரனுடைய  வசனமான ஆகமத்தை அதிகரித்து போந்து -அதி தாமசராய் இருக்கும் பாசுபதரும் –பௌ த்தரை எடுத்த உடனே பாசுபதரை எடுத்தது –அவர்களோபாதி  இவர்களும் வேத பாஹ்யர் என்னும் இடம்  தோற்றுக்கைக்காக –

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது —–2-10-2– நாலாயி:3111/1-சதிரிள மடவார் விஷயமாக நீங்கள் பண்ணும் தாழ்ச்சியை ஒன்றாக புத்தி பண்ணாதே -என்னுதல்
சதிரிள மடவார் தாங்கள் பண்ணும் தாழ்ச்சியை மதியாதே -என்னுதல்-கிளர் ஓளி இளமையை உடையவர்களை இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள் –கலவியால் வந்த ரசம் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க த்ரவ்யத்து அளவிலே உடம்பு கொடுக்குமவர்கள் –இவ்வஞ்ஞானம் ஆகிற அநாத்ம குணத்தைக் கண்டு -அல்லென் -என்ன ஒண்ணாத படி பருவத்தை இட்டு மருட்டுவர்கள்-ஸ்த்ரீகள் பக்கல் உங்களுக்கு உண்டான ப்ராவண்யத்தை பிரயோஜனமாக நினையாதே -என்னுதல்-அவர்கள் பிரவணை களாக பாவிக்கும் அத்தை மதியாதே என்னுதல்-பிரயோஜனம் இல்லாமையே அன்று -மேல் நரகம் -இங்கு பிறர் நாக்கு வளைக்கை-பக்தாநாம் தவம் -என்று நிரதிசய போக்யமாம் இருக்கும் விஷயம் அன்றே

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3-3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து.‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி.-நின் தாளிணைக் கீழ்-வாழ்ச்சி-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் –வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே -‘இரண்டு இடங்களிலும் ப்ராவண்யம் ஒத்திருந்தும்,-சர்வம் பரவசம் துக்கம்-‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், சேவா ஸ்வ வ்ருத்தி-பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும்-விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும்,சாயா வா சத்த்வம் அநு கச்சேத்- வாஸூதேவா தருச்சியா –என்னக் கடவது இறே -நிழலானது பொருள்களைத் தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச் செய்கிறார்.- யான் சேரும் வகை யருளாய் வந்தே – இதுக்கு முன்பு புதியது உண்டு அறியாத நான் -சேரும் வகை அருள வேணும் – அது செய்யும் இடத்து முகம் தோற்றாதே அந்தர்யாமித்வத்தால் ஒண்ணாது – வந்து அவதரித்து உன் குண சேஷ்டிதங்களாலே புறம்பு போகாத படி பண்ணிச் சேர்த்து அருள வேணும் –

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப – 4-7-10–நாலாயி:3306/1-திரு வாழியைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவனே -என்று இவ்வுக்தியோடே தரைப்பட்டு இவருடைய அவசாதனத்தினுடைய எல்லை காண்பது கண்ண நீரிலே யாயிற்று 

மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –5-5-8– நாலாயி:3392/4-தர்ச நீயமாக கண்டால் மறக்கப் போகாத குழல்கள் வந்து அலை எறியா நிற்பதாய் அணைக்கப் பாங்கான தோளும்-மொய் -அழகு-பாவியேன் -முன்னே நில்லா நிற்க அனுபவ யோக்யம் அல்லாத பாபத்தைப் பண்ணினேன் -கண் வட்டத்தில் தோற்றா நிற்க அணைக்க எட்டாது இருக்கிறதே –அநுபவத்திற்குத் தகுதி யில்லாதவை முன்னே நிற்கை யாகிறது மிகுந்த கிலேசத்திற்குக் காரணமாய் இருப்பது ஒன்றே அன்றோ.‘முன் நிற்கும்’ என்னா நிற்கச் செய்தே அன்றோ ‘பாவியேன்’ என்கிறது.-கண்களுக்குத் தோற்றா நிற்கச் செய்தே யானைக்குக் குதிரை வையா நின்றது.

செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்
-7-3-3- – நாலாயி:3585/1,2–பிரிகிற போது தன் ஆற்றாமையும் வரவ தாழாமையும் தொடக்கமான -தாழ்வு சொல்லுகிற திருவதரத்தில் பழுப்பிலே யாயிற்று நெஞ்சு தோற்றது -அப்போதை தாழ்வுகள் ஒரு மஹா பாரதத்துக்கு போரும் என்கை -தர்ச நீயமாய் உபய விபூதிக்கும் கவித்த முடியை காட்டி யாயிற்று -என்னை எழுதிக் கொண்டது -தன் சேஷித்வத்தின் எல்லையைக் காட்டி யாயிற்று சேஷத்வத்தில் நிறுத்திற்று -பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி
இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் -8-5-11– நாலாயி:3725/2–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷண தனியன்கள்–

December 24, 2025

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்-

லஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் –

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹத தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோ பகவத தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –

மாதா பிதா யுவதய தநயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மத் அன்வயானாம்
ஆத்யஸ்ய ந குலபதே வகுளாபிராமம்
ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா

பூதம் சரஸ் ச மகாதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீ பக்திசார குல சேகர யோகி வாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்திர மிஸ்ரான்
ஸ்ரீ மத் பராங்குச முநிம் பிரண தோஸ்மி நித்யம்

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்“ தொடங்கி பொதுத் தனியன்கள் ஸேவித்த பின்…

லோக குரும் குருபிஸ் ஸஹ பூர்வை: கூர குலோத்தம தாஸம் உதாரம் |
ஸ்ரீநகபதி அபிராம வரேசௌ தீப்ரசயாந குருஞ்ச பஜேஹம் (தீப்ரசயம் வரயோகி நமீடே) ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸாதித்தது

அடியேன் பிள்ளை லோகாசார்யர், மஹா காருணிகரான கூர குலோத்தம தாஸர், திருமலை ஆழ்வார் (திருவாய்மொழிப் பிள்ளை), அழகிய மணவாள பெருமாள் பிள்ளை (மாமுனிகளின் தாய்வழிப் பாட்டனார்/மாதாமஹர்), திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதர் (மாமுனிகள் திருதகப்பனார்) ஆகிய பூர்வாசார்யர்களை வணங்குகிறேன்

லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஈயுண்ணி மாதவப் பெருமாள் திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள்  அருளிச் செய்தது. இதன் திரண்ட பொருள்: வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருக்குமாரரும், ஸம்ஸாரப் பாம்பினால் கடியுண்டு கட்டுண்டவர்களின் உயிர் காக்கும் மருந்தும் ஆகிய அடியேன் ஆசார்யர் பிள்ளை லோகாசார்யரை வணங்குகிறேன்.

லோகாசார்ய க்ருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||
-ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை அருளியது

ஸ்ரீ பிள்ளை லோகாசாயார்யாரின் க்ருபைக்குப் பாத்ரரானவரும்,கௌண்டிந்ய குலத்துக்கு அணிகலனுமான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்.

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது

குந்தீ நகரம் (இப்போது கொந்தகை) எனும் ஊரில் திருவவதரித்தவரும், ஸ்ரீசைலநாதர் (திருமலை ஆழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை) எனும் திருநாமம் கொண்டவரும், கைங்கர்ய ஸ்ரீயினால் எப்போதும் ப்ரகாசமாய் ஜ்வலிப்பவரும் ஆன அடியேன் ஆசார்யரை வணங்குகிறேன்.

லோகாசார்ய பதாம்போஜ ராஜஹம்ஸாயிதாந்தரம் |
ஜ்ஞான வைராக்யஜலதிம் வந்தே ஸௌம்ய வரம் குரும் ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது

செந்தாமரையில் சேர்ந்த ராஜ ஹம்ஸ பக்ஷி போல் பிள்ளை லோகாசார்யர் திருவடியில் பணிந்த (மாதாமஹரான) ஞான வைராக்யங்களில் கடல் போன்ற அழகிய மணவாள பெருமாள் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ சாஸ்த்ர விதம் |
ஸுந்தர குருவர கருணாகந்தளித ஜ்ஞாந மந்திரம் கலயே ||
-ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிச் செய்தது

அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளையின் திவ்ய க்ருபையால் பேணப் பட்டவரும் குற்றமற்ற சாஸ்த்ர ஞானம் பெற்றவரும் ஆன திகழக் கிடந்தான் திருநாவீறுடைய பிரான் தாதரை வணங்குகிறேன்.

ஸ்ரீவசன பூஷணத்துக்கே உரிய விசேஷத் தனியன்கள்-ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆறு ப்ரகரணங்களாகவும் (பகுதி), ஒன்பது ப்ரகரணங்களாகவும் பகுக்கும் க்ரமத்தை இந்தத் தனியன்கள் விளக்குகின்றன:

புருஷகார வைபவம் ச ஸாதநஸ்ய கௌரவம்
தததிகாரி க்ருத்யம் அஸ்ய ஸத் குரூப ஸேவநம் |
ஹரி தயாம் அஹைதுகீம் குரோருபாயதாஞ்ச யோ
வசன பூஷணே வதஜ் ஜகத் குரும் தமாஸ்ரயே ||

1-எம்பெருமான் சேதனரை ஏற்கும்படி சிபாரிசு செய்யும் பிராட்டியின் மஹிமைகள்
2-பகவானை அடைய பகவானே உபாயம் எனும் ஸித்தோபாயப் பெருமை
3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றிய அதிகாரிகள் இயல்பு-செயல்கள்
4-இந்த அதிகாரிகள் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
6-ஆசார்யன் அறுதி உபாயம் (வழி) என்பது–விஷயங்களை ஸ்ரீவசன பூஷணத்தில் கருணையுடன் விளக்கிய பிள்ளை லோகாசார்யரை நான் சரணடைகிறேன்.

பேறு தருவிக்குமவள் தன் பெருமை (1) ஆறு (2) பெறுவான் முறை (3)
அவன் கூறு குருவைப்பனுவல் (4) கொள்வதிலையாகிய குளிர்ந்த அருள்தான் (5)
மாறில்புகழ் நற்குருவின் வண்மை (6) யொடெலாம் வசன பூடணமதில்
தேறிட நமக்கருள் முடும்பை இறையவன் கழல்கள் சேரென்மனனே

மனமே! முடும்பை குலம் வந்த வள்ளல் லோகாசார்யர் திருவடிகளை சரணம் பற்றி உஜ்ஜீவனம் அடைவோம். அவர் அருளிய நூலின் ஆறு விஷயங்களாவன:
1-புருஷகாரம் செய்யும் பிராட்டியின் பெருமை
2-எம்பெருமானே உபாயமாய் இருக்கும் ஸித்தோபாயப் பெருமை
3-எம்பெருமானையே உபாயமாகப் பற்றினோர் பெருமை
4-அத்தகையோர் தங்கள் ஆசார்யனிடம் செய்யும் ஸேவை
5-எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா விசேஷம்
6-ஆசார்யனே அறுதி உபாயம் என்பது

ஸாங்காகில த்ரவிட ஸம்ஸ்க்ருத ரூப வேத ஸாரார்த்த ஸங்க்ரஹ மஹா ரஸ வாக்ய ஜாதம் |
ஸர்வஜ்ஞ லோக குரு நிர்மிதம் ஆர்ய போக்யம் வந்தே ஸதா வசந பூஷண திவ்ய சாஸ்த்ரம் ||

ஸர்வஜ்ஞரான ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸாதித்ததும் கற்றறிந்த ஞானிகளுக்கு மகிழ்வூட்டுவதும் வேத வேதாந்த விஷயங்களை மிகச் சில சொற்களிலேயே எளிதாக விளக்குவதுமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தை அடியேன் எப்போதும் வணங்குகிறேன்.

அகுண்டோத் கண்ட வைகுண்ட ப்ரியாணாம் கண்ட பூஷணம் |
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசந பூஷணம் ||

பேரின்பம் விளைக்கும் பரம பதம் அடைய விழையும் முமுக்ஷுக்களின் பேச்சுக்கு ஆபரணம் போன்றது லோக குருவாகிய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷணம்.

திருமாமகள் தன் சீரருளேற்றமும் (1) திருமால் திருவடி சேர்வழி நன்மையும் (2)
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (3) மெய்வழியூன்றிய மிக்கோர் பெருமையும் (4)
ஆரணம் வல்லவர் அமரு நன்னெறியையும் (5) நாரணன்றாள் தரு நற்குருநீதியும் (6)
சோதிவானருள் தூயமாகுருவின் பாதமாமலர் பணிபவர் தன்மையும் (7)
தீதில் வானவர் தேவன் உயிர்களை ஏதுமின்றி எடுக்கும்படியையும் (8)
மன்னியவின்பமும் மாகதியும் குருவென்னு நிலை பெறும் இன்பொருள் தன்னையும்
அசைவிலாதவேதமதனுள் அனைத்தையும் (9) வசனபூடண வழியாலருளிய
மறையவர் சிகாமணி வண்புகழ் முடும்பை இறையவன் எங்கோன் உலகாரியன்
தேன்மலர்ச்சேவடி சிந்தைசெய்பவர் மாநிலத்து இன்பமது எய்தி வாழ்பவரே

ஸ்ரீ முடும்பை வந்த வள்ளல் ஆசார்ய ஸ்ரேஷ்டர்,வேத விற்பன்னர்களின் முடியில் ரத்னமாக இருப்பவரோ, சாஸ்த்ரத்தின் ஸாரார்த்தங்களை ஸ்ரீவசன பூஷணத்தின் மூலம் வெளியிட்டாரோ, அத்தகைய ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் தேன் போன்ற திருவடிகளை யார் த்யானம் செய்கிறாரோ அவர் இவ்வுலகிலேயே பேரின்பமான பகவத் பாகவத அனுபவம் மற்றும் கைங்கர்யத்தைப் பெறுவார். ஸ்ரீ வசன பூஷண சாஸ்த்திரத்தில் அருளிய பொருள்களாவன:
1-ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் ஏற்றம்
2-எம்பெருமானை அடைய அவனே உபாயமாய் இருப்பதின் ஏற்றம்
3-கர்ம ஞான பக்திகளாகிற பிற உபாயங்களின் தாழ்ச்சி
4-எம்பெருமானே உபாயம் என்றுள்ள ப்ரபந்நர் ஏற்றம்
5-ப்ரபந்நர் நித்யாநுஷ்டானம்
6-சீரிய ஆசார்யனின் குணங்களும் அவர் அநுஷ்டானங்களும்
7-நல்ல சிஷ்யனின் இயல்புகள்
8-நித்ய ஸூரிகள் தலைவன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபா
9-ஆசார்யன் உபாயமும் உபேயமும் எனும் சரம பர்வ நிஷ்டை

(1-திரு மா மகள் தன் சீர் அருள் ஏற்றமும்-(1-22)
2-திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும் (23-114 )
3-அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும் (115-141 )
4-மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும் (142-242 )
5-ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும் (ப்ரபந்ந தினசர்யா 243-307 )
6-நாரணன் தாள் தரு நல் குரு நீதியும் (சதாசார்ய லக்ஷணம் – 308-320 )
7-சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர் பணிபவர் தன்மையும் (ஸச் சிஷ்ய லக்ஷணம் -321-365 )
8-தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும் (நிர்ஹேதுக தயை 366-406)
9-மன்னிய இன்பமும் மா கதியும் குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும் (407-469 )
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன் எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்)

லோகாசார்ய க்ருதே லோக ஹிதே வசன பூஷணே |
தத்வார்த்த தர்சினோ லோகே தந்நிஷ்டாச்ச ஸுதுர்லபா: ||

லோகாசார்யரால் ஜீவர் உத்தரணத்துக்காக அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீ வசனபூஷணத்தை நன்கு அறிந்தோரும் அதை அநுஷ்டிப்போரும் காண அரிது.

த்ராவிட ஸ்ருதி குஹ்யா நாம் அந்தர் ஜ்வரம் அஸீஸமத் தம் லோகார்ய குரும் வந்தே யோ அவதாரஸ் ஸ்ரீ யப்பதே

திவ்ய ப்ரபந்தங்களுடைய குஹ்யங்களான ரஹஸ்ய த்ரய ஜ்வரத்தை ஆற்றியவர் –
ஸ்ரீ பெரும் தேவியார் மணாளன் – ஸ்ரீ பேர் அருளாளன் -அவதாரம்
அந்த ஸ்ரீ பிள்ளை உலகாரியனை சேவிக்கிறேன் என்றவாறு

ஜகதாசார்ய ரசிதே ஸ்ரீமத்வசநபூஷணே |
தத்த்வஜ்ஞாநாஞ்ச தந்நிஷ்டாம் தேஹிநாத யதீந்த்ரமே ||

ஜகதாசார்யரான யதிராஜரே! பிள்ளை லோகாசார்யரால் அருளப்பட்ட ஸ்ரீமத் வசன பூஷண திவ்ய சாஸ்த்ர ஞானம் பெறவும் அதை அநுஷ்டிக்கவும் அடியேனுக்கு க்ருபை செய்தருள்வீராக!

அவிஸ்த்ருதா ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிரஸ் தர்ச யந்து ப்ரஸாதேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம் -ஸ்ருத பிரகாசிகை
இதே போலவே ஸ்ரீ சைலேச குரோர் கிரஸ் -விஸ்தாரமாக இல்லாமல் -அதே சமயம் ஆழ்ந்த பொருள்கள் உள்ள திரு வாக்கு

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–

1–புருஷகார வைபவஞ்ச—அவதாரிகை முதல் -4—ஸூ த்ரங்கள் -5-முதல் -22-ஸூத்ரங்கள்-மேல்- -18-ஸூத்ரங்கள் புருஷகார வைபவம்-

2– சாதனச்ய கௌரவம்—உபாயமான பெருமான் மேன்மை -57-ஸூத்ரங்கள் –23- முதல் -70 -ஸூ த்ரங்கள் -வரை / 71-79-ஸூத்ரங்கள்-பிராசங்கிகம்-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114

3-உபாயாந்தர தோஷம் -115–141

4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-

5-6-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –இதுவரை -பூர்வ பாகம் – த்வயார்த்தம் -இவை அனைத்தும்
இந்த -307-ஸூ த்ரங்களில் -பூர்வ த்வய வார்த்தார்த்தம் -155-உத்தர த்வய வார்த்தை அர்த்தம் -148-மேலே உத்தர பாகம் ஆச்சார்யர் பிரபாவம் –

7–அஸ்ய சத்குரு உபசேவனம்–58–ஸூத்ரங்கள் –308-முதல் -365-ஸூத்ரங்கள் வரை
8–ஹரிதயாம் அஹேதுகீம்–வரவாறு ஒன்றும் இல்லை -ஹேது இல்லாமல் தானே அவன் தயை —41 –ஸூத்ரங்கள் –366–முதல் -406 –வரை
9–குரோர் உபாயதாஞ்ச யோ–ஆச்சார்யர் அபிமானம் உத்தாரகம் —57-ஸூத்ரங்கள் -407-முதல் -463-ஸூத்ரங்கள் வரை –

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .-

ஸ்ரீ திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

December 21, 2025

அக்காக்காய் – சிறுபிள்ளைகளுக்குக் குழல் வாருவார்
சீராட்டாகச் சொல்லும் பாசுரம். பெரியாழ்.
2-5-1-10
அக்காணி – ஸ்தூல சரீரம், பெரியாழ். 5-2-3.
அக்காரம்- வெல்லம், அக்ஷாரம் பெரியாழ்.2-4-5.
அக்காரம்- கருப்புக்கட்டி, இக்குரஸம், (இக்குரஸம் – கரும்புச்
சாறு) பெரியாழ். 2-9-7.
அக்காரக்கனியே- சருக்கரைக்கனியே. திருவாய். 2-9-8.
அக்காரவடிசில் சர்க்கரைப் பொங்கல். நாச்சி, 9-6.
அக்கு – எலும்பு, உருத்திராக்கம். பெரிய. 9-6-1. தே 6.76.7 புத்தூர்.
அக்குவடம் – சங்குமணி மாலை. பெரியாழ். 1-7-2
அகடு – வயிறு, நடுவிடம். பெரிய. 1-2-1.
10 அகப்பணி – அந்தரங்ககைங்கரியம். திருவாய். 10-2-6.
அகம் – சித்தம். நெஞ்சு,இடம்,பெரியாழ். 5-1-5:
இரண்டாம் திரு.22.
அகம்படி -உள்ளிடம். பெரிய. 11-6-89. தே. 4-1-7,8 அதிகை
5-91-1 தனித்திருக் குறுந்தொகை
அகம்படியர் – அந்தரங்கர். திருப். வியாக்.4.
அகமகந்தோறும் நின்ற இடங்கள் தோறும். திருவாய். 10-3-2
தே. 4-104-5. அதிகை.
15 அகமேனி ஆத்மஸ்வரூபம்.திருவாய். 9-7-10.
அகலம்-பரப்பு, மார்பு.மூன்றாம் திரு. தே. 1-43-3 கற்குடி.
அகலிடம் – பூமி. பெரிய 5-3-9.
அகலில்கலும் திருவாய்.1-7-10
அகவலை – வலையின் உள்ளிடம். திருவாய். 6-2-9
20 அகவலைப்படுத்தல் – வசப்படுத்தல். திருவாய். 6-2-9.
அகாரியம் – செய்யத் தகாததொழில். பெரியாழ். 4-4-1.
அகைப்பு – மதிப்பு. நாச்சி. 38.
அங்கம் ஆறு சிக்ஷை.வியாகரணம், சந்தசு, நிருத்தம்,
சோதிடம்,கல்பம்,திருமா.43. தே. 1-65-9
பல்லவனீச்சரம்; 5-67-4 வாஞ்சியம்.
அங்காத்தல் – வாய்திறத்தல். பெரியாழ். 1-1-6.
25 அங்கி – அக்கினி. இராமாநுஜ 2, தே. சூரியன், 1-36-9. ஐயாறு.
அங்குத்தை – அங்கு உண்டாகும் செயல். பெரியாழ். 3-8-10; 4-1-3.-அங்குற்றேனல்லன் – அவ்விடத்தும் புகுந்தவனல்லேன்.
திருவாய், 5-7-2.
அங்கையில் வட்டு- உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டி.
பெரிய. 10-9-3. வட்டு – கருப்புக்கட்டி.)
அச்சன் -நாதன், சுவாமி. பெருமாள். 29 (மலை நாட்டுச் சொல்).
30அச்சுதன் – அடியார்களை நழுவவிடாதவன்,
அழிவில்லாதவன்.திருமா. 2.
2
அச்சோ- அணைத்துக்கொள். பெரியாழ். 1-8-1. ஆச்சரியம்.
அச்சோ ஒருவரழகியவா.பெரிய . 9-2-1 அச்சோ.
பத்து. திருவாசகம். திருவால்.பொன்னனையாளுக்கு
அருள்புரிந்த திருவிளையாடல்செய்.15,17.
அசும்பு- நீர்ப்பெருக்கு, சேறு, கல்மஷம். பெரியாழ். 5-4-8.
அசுரர் – தேவர்களுக்கு விரோதிகள். பிரமன் தொடையில்
உதித்துப் பிரமனைப் பெண்ணாக நினைத்து
விரும்பியமையால் அசுரர் ஆயினர் . பெருமாள்.10-10.
அசோகின் இளந்தளிர் – அசோகமரத்தின் இளந்தளிர்கள்.
பெரிய. 3-5-1.
35 அஞ்சலோதி -ஐம்பால் . அஞ்சு+ அல்+ ஓதி. சுருட்சி,நீட்சி,
குளிர்ச்சி, அழகு, பரிமளம்,என்ற ஐந்து
வகையான தன்மைகளையுடைய கருமையான
கூந்தல், பெரிய. 10-2-4.
40
அஞ்சனத்தினீறு – மையின் சுண்ணம். அஞ்சனம் மை. சிறிய
திரு. 10
அட்டகில்லேன் – வார்க்கமாட்டேன். திருவாய்4-7-9
அட்டல்- வார்த்தல், சமைத்தல். பெரியாழ். 3-5-1. அட்டி -இட்டு. (போஜனம் பெரியாழ். 1-6-5.
அட்டுக்குவி சோற்றுப்பருப்பதம் – சமைத்துக் குவிக்கப்பட்ட
சோறாகிய மலை. பெரியாழ். 3-5-1
அட்டைகள் – சுவைப்பர். திருவாய்.9-1-2.
அடம்பு – ஒருவகைக் கடம்பு. பெரிய. 6-7.9.
அடல்- வலிமை, போர், கொல்லல், சமைத்தல். முதல் திரு 71. தே. அடல், போர். 3-107-1 வலஞ்சுழி.
அடலாழி கொண்டான் மாட்டன்பு – பராக்கிரமம் பொருந்திய
சக்கரத்தைக் கையிலே கொண்டுள்ள பெருமானிடத்தில்
செலுத்திய அன்பு. முதல் திரு.71
45 அடிக்கண்ணி சூடிய மாறன் – திருவடிகளாகிற பூமாலையை
முடிக்கு அணிந்த நம்மாழ்வார். திருவிருத்தம். 100. (மாறன்=உண்டியே உடையே உகந்தோடும் உலகத்தாருடைய
இயற்கைக்கு மாறு பட்டு “உண்ணும்
சோறு பருகுநீர், தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன்” என்று இருந்ததனால்
ஆழ்வார் மாறன் என்ற திருநாமம்
பெற்றார். என்பது அண்ணங்கராசாரி
யார் சுவாமி உரை.)
அடிகள் – சுவாமி. திருவாய். 6-1-8.
அடிக்கொட்டிட- அடியைச் சேர நாச்சி. 4-1.
அடிச்சி – அடியவள்(வெள்ளாட்டி) சிறிய திரு.54.
அடிச்சியோம் தலைமிசை- உன் அடியவர்களாகிய எங்களுடைய
தலையின் மேல். திருவாய். 10-3-5,6.
50 அடிதாறு அடிக்கு அளவாக இருத்தல், பாதுகை, பாதரேகை
பெரிய திரு. 32.
55
அடிநிலை ஈந்தான் – திருப்பாதுகைகளை அளித்தவன்.
பெரியாழ். 3-9-6.
அடிநீறு- அடிப்பொடி. திருவாய். 5-9-2.
அடிநீறு கொண்டு -ஸ்ரீபாத தூளியைக் கொண்டு. பெரியாழ், 4-6-6.
அடியுறை – ஸ்ரீ பாத காணிக்கை. பெரியாழ். 4-3-9.
அடியேன் மனம் புகுந்ததேனே – அடியேனுடைய மனத்தில்
புகுந்த தேன் போல்
இனியவளே, பெரிய. 7-2-9.
அடிவீழ்ச்சி – அடியாட்டி, அடியாள். நாச்சி. 9-7.
அடுதல் – சமைத்தல், கொல்லுதல், வருத்துதல். திருவாய்.
7-7-4,6., 8-1-1.
அடை – இலை. பெரியாழ். 2–3-1.
அடைக்காய் – வெற்றிலைப்பாக்கு, பெரியாழ். 2-3-1.
60 அடைபுடை – அகோராத்திரம். (இரவும் பகலும்) பெரிய. 4-10-3.
அண்டம் – அண்டகபாலம், மேலுலகம். திருவாய்.7-4-1.
அண்டர் – இடையர், நித்யசூரிகள், பெரியாழ், 1-1-5
அண்ணல் – பெருமையுடையவன். பெரியாழ். 4-10-6. தே. 1-49-9.
நள்ளாறு.
அண்ணா-தலைவா. பெரிய. 1-9-6; 1-10-1. தே 4-62-1. ஆலவாய்,
1-89-3 எருக்கத்தம்புலியூர்.
65 அண்ணிக்கும் – தித்திக்கும். கண்ணிநுண். 1. தே.6-54-3
புள்ளிருக்குவேளூர்; 6-52-2. வீழிமிழலை; 5-61-5.
அரிசிற்கரை புத்தூர்.-அணங்காடு மிளந்தெய்வம் – தெய்வ ஆவேசங்கொண்டு
ஆடுகின்ற அற்ப தெய்வம்.
திருவாய். 4-6-2.
அணங்கு – தெய்வமகள், வருத்தம். திருவாய்மொழி. 4-6-2.
புறநா.52. சீவக. 162, 171, 353, 1473, 2444. முருகு. 289.
சிலப். வேட்டுவவரி. அடி. 42, அகநா. 98. குறுந்,
136, 204, 308.
அணர் -மோவாய்க்கட்டை. பெரியாழ். 3-6-2.
அணவி -அணைந்து.திருவாய். 592; பெரியாழ். 4-8-9
அணார் – கழுத்து, கழுத்துக்கீழ் உறுப்பு. பெரியாழ். 3-5-8.
அணில் அணை கட்டியது – திருமா. 27.
அணுக்கர் சமீபத்திலிருப்பவர். பெரியாழ்.5-4-11.
அணுக்கன் – அந்தரங்கன். பெரியாழ். 3-2-5.
அணை – படுக்கை. பெருமாள். 1-1.
75 அத்தன் – மிடுக்கன். பெரியாழ். 2-1-7,
அத்தாணிச்சேவகம் – பிரியாமல் நெருங்கிச் செய்யும் சேவை.
அருகான இடம், ஆஸ்தானம். திருப்பல். 8
அத்திரம் அம்பு.பெரியாழ். 3–10-6.
அதக்கி – அடக்கி. பெரியாழ். 5-2-3.
அதகன் – பகைவரைக் கொல்லுவோன். பெரியாழ். 2-1-9.
80 அதர் – வழி. (புழுதி ) பெரிய. 4-3-6.
அதவி – அடர்த்து. இரண்டாம் திரு. 89.
அதவுதல் – நெருக்குதல். இரண்டாம் திரு. 89.
அதள்- தோல். பெரிய.9-6-1. தே. 4-22-5. கோயில்.
அந்தகன் – குருடன், இயமன். பெரிய. 2-3-7.
85 அந்தணர்களொரு மூவாயிரவர் பெருமாள்.10-2. தே. 7-90-7
கோயில்.
அந்தணர்தஞ்சிந்தையான் – திருநெடுந். 14. தே6-1-1- கோயில்.
அந்தணன் தோட்டம்- அக்கினி ஹோத்திரியான அந்தனுடைய தோட்டம். பெரிய, 10-9-9
அந்தண்மை பிராமணத் தன்மை.திருமா.25.
அந்தது – அப்படிப்பட்ட பிராப்யவஸ்து. திருவாய். 10-10-3.
90 அந்தமிழின் இன்பப்பாவினை. பெருமாள். 1-4 அந்தமில்பேரின்பம் – முடிவில்லாத பேரின்பம். திருவாய்.
10-9-10. சிலப் வரந்தரு. அடி. 182, கீர்த்தித்திரு அகவல். 101.அந்தரம் – இடையூறு, தாமதம், இடைவெளி. பெரியாழ். 1-5-6.
அந்தரி – துர்க்கை. நாச்சி. 6-3. சிலப் வேட்டுவவரி. 21.
புறஞ்சேரி. அடி.104.
அந்தாதியோராயிரத்துள். திருவாய். 5-3-11, 7-3-11.
95 அந்தாதியோராயிரம். திருவாய். 10-5-11.
அந்தி – மாலைப்பொழுது. பெரிய. 4-2-9; சந்தியாவந்தனம்.
முதல் திரு. 33. சிலப். அந்திமாலைச். அடி -23.
சந்தியாதேவி. சீவக 313.
அந்தி காலவன் பெரிய. 8-5-1. சந்திரன்.
அந்தி மூன்று -காலை, உச்சி, மாலை. பெரிய. 7-5-1.
அந்தியம் போது – சந்தியாகாலம் பெரிய. 2-8-1.
100 அந்நான்று அக்காலம், அன்று.பெரிய. 6-5-7. நான்முகன்.1 ,
பெரிய திரு. 52.
அநகன் – குற்றமற்றவன்.)
அநங்கதேவா . காமதேவனே. நாச்சி. 11.
அநந்தன் – ஆதிசேஷன். பெருமாள். 1-1.
அநுராகம் – ஆசை. திருவாய். 8-8-8.
105 அப்பா பெரிய. 1-9-5. தே. 6-95-1. பொது 3-47. ஆவடுதுறை.
அப்பில்- நீரில், நாச்சி.3.
அபிமான துங்கன் அகங்காரத்தால் உயர்ந்தவன்,
பெரியாழ். 4-4-8. திருப்பல். 11.
அம்பரம்-ஆடை, ஆகாயம். திருப்.17, பெரியாழ். 3-6-6.
அம்பு- நீர். சீவக.2332.
110 அம்புதம் – மேகம். பெரிய. 2-8-3.
அம்புயம் – தாமரை. பெருமாள், 7-1.
அம்புலி -சந்திரன். பெரியாழ். 1-4-3.
அம்மணி – அரை (இடுப்பு) பெரியாழ். 1-6-3.
அம்மமுண்ண – முலைப்பால் பருக. பெரியாழ்.2-2-1.
115 அம்மணைமார் – தாய்மார். நாச்சி. 33.
அம்மா- சுவாமியே. பெருமாள். 5-2.
அம்மா நின்பாதத்தருகு – ஸ்வாமி தங்களுடைய திருவடிகளின்
சமீபத்தில். பெரியதிரு .7.)
அமணர்-சைனர். பெரிய.7-4-5.
அமம் சூழ்ந்து வியாபித்து. மூன்றாம் திரு.98.
120 அமரர்களதிபதி – தேவராசன், நித்திய சூரியர் தலைவன்,
திருவாய், 1-1-1-அமருலகு – தேவருலகு, பரமபதம். பெரியதிரு, 6.7.
அமுக்கி – நன்றாகப்பூசி. பெரியாழ். 1-6-5.
அமுதிலுமாற்றவினியன் – அமிர்தத்தைக்காட்டிலும் மிக்க
இனியவன். திருவாய். 1-6-6.
அமை – மூங்கில்.
125 அயர்வில் அமரர்களாதிக் கொழுந்து – நித்ய சூரியகளுக்குக்
காரணமான
தலைவன். திருவாய். 1-7-4.
அயராப்பாய் – மறவாதிருக்கில் இரு. பெரிய திருவந். 83.
அயன்வாளி பிரமாத்திரம்.
அயில்- வேல், கூர்மை.
அரக்க நில்லா – அரக்க-அடக்க, நாச்சி. 3-4.
அரக்கன் போல்வானை – மாவலியை. இரண்டாம் திரு. 52.
அரக்கிலச்சினை – அரக்குமுத்திரை. திருவிருத், 76.

அரசிப்படுதி – அரசியின் தன்மை அடைகிறாய், கோபியா
நின்றாய். பெரியாழ். 2-9-10.
அரட்டன் – தீம்பன், மிடுக்கன். பெரிய. 3-4-10. தே. அரட்டர்
5-7-5.ஆரூர், திருவிசைப்பா.37.
அரட்டமுக்கி- சத்துருக்களை அமுங்கச் செய்வர். பெரிய.
3-4-10. தே. 5-100-10. ஆதிபுராணம்.
அரணம் – ரக்ஷகம், புகல். திருவாய், 9-1-4
அரந்தை- துக்கம். எழுகூற்றிருக்கை. 12.
145 அரம்பா -தீம்பனே. பெரியாழ். 3-1-6.
அரம்பையர் – தேவமாதர். பெருமாள். 4-2.
அரவதண்டம்-யமதண்டனை. பெரியாழ். 4-5-3,9. திருப்புகழ். 19.

அர்த்த பஞ்கசம்- ஸ்வஸ்ரூபம், பரஸ்வரூபம்,புருஷார்த்த
ஸ்வரூபம், உபாய் ஸ்வரூபம், உபாய
விரோதி ஸ்வரூபம். திருவாய். தனி.
அரக்கர் – ராட்சஸர். பெரிய. 4-3-5.

அரக்கு வழித்தது அரக்கு, செந்நிறம் வழித்தது. பூசியது.
பெரியாழ், 2-6-2.
அரக்கும் – அழுத்தும். பெரிய. 2-7-3 தே. 2-75-8. சீகாழி.
அரங்கத்தம்மா – திருப்பள்ளி. 1-9.
அரங்குதல் – அழிதல். திருச்சந் 32.49.
அரசாணி – அரசங்கொம்பு. பெரியாழ். 3-8-3.

அரவப்பகையூர்தி – கருடனைவாகனமாக உடைய கண்ணன்.
பெரியாழ். 3-5-11.
அரவு – பாம்பு. பெரியாழ். 3-5-11, திருவாய். 2-1-6.
150 அரனே – உருத்திரனுடையதே.திருவாய். 2-5-2.
அரி – திருமால். திருவாய். 1-3-6.
அரிகுரல்- தழுதழுத்த குரல். பெரிய. 8-5-9.
அரிகுலம் – குரங்குக் கூட்டம். பெரிய. 1-2-2.
அரிசினம்- மிக்க கோபத்தினால் .பெருமாள். 5-1.
155 அரியயனரன் – திருமால், பிரமன், சிவன். திருவாய். 1-3-6.
அருகல் சமீபம், சுருங்கல், திருவாய். 1-9-2,3.
அருத்தி – ஆசை. திருப்பா.25.
அருத்தித்தல். பிரார்த்தித்தல். திருப்பா. 20. தே. 4-92-8. ஐயாறு
7-47-8. பொது
அருபொருளை- அரியபொருளை. நான்முகன்
160 அருவித் தின்றிட – அலைத்துத்தின்ன. பெரிய. 7-7-1. தே. 7-16-1
கலய நல்லூர். (அருவ)
அருவிவேங்கடம் – அருவிகளையுடைய திருமலை நான் முகன் 40
அரைத்தொடர். அரைவடம். பெரியாழ். 1-3-4.
அல்குல்- அரை, நிதம்பம்.திருப்பா- 11, பெருமாள். 9-7
பெரியாழ். 1-7-8. தே. -54-3. ஓத்தூர்.)
அல்லல்-பாவம்,துக்கம். நாச்சி 13-10 சிவபுராணம் -91.
சீவக. 343. திருவிசைப்பா. 6-10.
165 அல்லி – அகவிதழ்.தாமரை, திருநெடுந் 12, பெருமாள் 2-10,
திருவிசைப்பா 19-3. சீவக. 162, 355, 606, 1422.
அல்லிமாதர் – இலக்குமி. பெரிய 1-7-9. தே. 2-101-11. ஆரூர்.
அலக்கண்- துன்பம். பெரிய
அலக்கழித்து – கிலேசப்படச்செய்து. பெரிய. 4-10-3. தே. 5-73-1
மங்கலக்குடி
170) அலகு விதை.முதல்திரு. 49.
அலங்கெழுதடக்கை – அலம்- கலப்பை. பெரிய. 2-7-8.
அலம்பிவண்டு- (அலம்பி- கிண்டி ) திருவாய்.9-9-10.
திருவிசைப்பா. 22.2.
அலம்புதல் – அலையச்செய்தல். பெரியாழ். 4-2-1.
அலத்தல்- கிலேசப்படுதல், கதறிஅழுதல், பெரியாழ். 4-5-1
175 அலந்தலை – கலக்கம் பெரியாழ். 3-7-1.
அலப்பாய் – அலமந்து. திருவாய். 5-8-4.
அலம்- கலப்பை பெரிய. 4-4-3.அலமருதல் சுழலுதல். திருவாய். 3-2-9. திருவிசைப்பா. 26-4,10.
அலர் மலர். திருவாய். 6-10-10 மணிமேகலை. பக். 46.
180 அலர்மேல் மங்கை- திருமகள். திருவாய். 6-10-10.
அலவலை – கண்ணன். கூடார்த்தங்களைச் சொல்பவன்
பெரியாழ், 2-1-2.
185
அல்வலைமை- அற்பத்தனம், அலைச்சல் தன்மை, பெரியாழ். 435
அலவன் ஆண்நண்டு, பெரிய. 6-7-7.
அலவை- வஞ்சகமுள்ளவள். பெரிய. 10-5-8.
அலவைப் பெண்- கெட்டவளான பூதனை. பெரிய. 10-5-8.
அலற்றி வாய்விட்டுக்கூவி, திருவாய். 4-4-9, 5-5-11, 6-4-1,6-7-11.
அலற்றி முறைகெடக்கூவி, கூப்பிட்டுநின்று, திருவாய்8-3-1.
அலற்றிய கூப்பிட்ட திருவாய். 9-7-11.
அலற்றும் – கூப்பிடும். திருவாய் 4-9-2.
190 அலற்றுவதென் – கூப்பிடுவதனால் என்னபயன்.திருவாய். 4-7-4.
அலற்றுவதே – துதிப்பதே, திருவாய். 3-5-9.
அலற்றுவன்-முறைமாறி அவன் குணங்களை வாயாலே
சொல்லுவேன்.திருவாய்1-3-10- கூவுகின்றேன். திருவாய். 1-57.
அலறி கதறிக்கூப்பிட்டு, பெரியாழ். 3-5-3.
அலி – நபும்ஸகம். திருவாய். 2-5-10.
195 அலைப்பூணுண்ணும்- அலைப்புண்ணுதலை அனுபவிக்கும்
அலைப்பூண் – அலைக்கப்படுகிற. திருவாய். 3-2-10.
அலோகம் காணப்படாத உலகம். திருவாய்.2-9-6. சீவக, 3082.
அவத்தங்கள் – பொல்லாங்குகளான யுத்தங்கள், திருவாய்.10-3-9.
அவத்தம்- அபத்தம். (பொல்லாங்கு) திருவாய், 10-3-9, பெரிய. 2-5-2.
அவபிருதம் – யாகத்தின் முடிவில் செய்யும் மங்களஸ்நானம்.
பெரியாழ். 4-7-6, திருப்பள்ளி 4.
200 அவம்- வீண். நான்முகன் திரு. 19, திருவிசைப்பா, வீழிமிழலை – 6.
அவலம்- துன்பம். பெரிய. 2-7-7,
அவனியாள் – பூமிதேவி. பெரியாழ். 1-3-8.
அவா. ஆசை. திருவாய். 10-10-11.
அவி- அவிஸ். யாகங்களில் தேவர்களுக்குக் கொடுக்கப்படும்
உணவு, நாச்சி. 1-5.
205 அவுணன்- ராட்சசன். பெரியாழ். 1-5-2. திருவிசைப்பா.
கோயில். 27.3
அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு.பெரியாழ். 4-8,10 அழக்காடி – பேய்ப்பெண். பூதனை. திருவாய், 2-10-9.அழகியான் – அழகுடையவன். நான்முகன் திரு. 22.
அழகு – சௌந்தர்யம். பெரிய திரு31.
210 அழல்- நெருப்பு. பெரியாழ். 4-7-3. பெரிய. 3-2-6, நாச்சி. 13-8.
அழலம்புகவூதி – அழலிற்புக, திருவாய். 4-8-8.
அழன்-பேய், பிணம், திருவாய், 2-10-9. தொல். எழுத். 354.
அழிப்பன் – சத்ருதுக்களை அழிப்பவனாகிய எம்பெருமான்
பெரியாழ். 4-8-6.
அழுந்தூர் மேற்றிசை நின்ற அம்மானே. பெரிய. 7-6-1-10,
சோழநாட்டில் மாயூரத்தை அடுத்துள்ளது.
உபரிச்ரவசு என்னும் அரசன் தனது தபோ
வலிமையினால் விமானத்துடன் ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் தன்மையுடையவன், ஒரு சமயம்
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் நேர்ந்த
விவாதத்தில் பட்ச பாதகமாக இவ்வரசன் தீர்ப்புச்
சொன்னமையால் முனிவர்களால் சபிக்கப்
பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர்
அழுந்தப் பெற்ற இடமாதல் பற்றி இதற்கு
அழுந்தூர் என்று பெயர் வந்தது. கம்பர் பிறந்த
இடம். தேவாரப்பாடல் பெற்றதலமுமாகும்.
215 அழுந்தை – பெரிய. 6-6-9. தே. 2-20-1-11 திருவழுந்தூர்.
அழும்புதல் – மிக நெருங்குதல். திருவாய். 1-7-9.
அள்ளல்- குழைசேறு, நெருக்கம், திருவிருத். 100.
அள்ளல் பயலை – அடர்த்தலையுடைய பசலை நிறம்.
திருவிருத் 12.
220
அள்ளியம் பொழில்வாய் – குளிர்ச்சி பொருந்திய அழகிய
சோலைகளில். பெரிய. 4-10-7.
அளகைக்கோன் – குபேரன். பெரிய. 2-10-8.
அளம்பு – உபமானம். பெரிய. திரு. 24.
அளறு -சேறு. திருப்பா.14 (வியாக்
அளி – கிருபை,வண்டு. பெருமாள். 1-6.
அளியத்த மேகங்காள் – தயையையுடைய மேகங்களே.
225 அளியத்தாய்- அருமந்தநீ எல்லோராலும் கிருபை
பண்ணத்தக்க நீ. திருவாய். 2-1-9.
அளை- வங்கு. பெரிய 1-2-5.
அற்கம்- அடக்கம். திருவாய். 6-5-4.
அற்புதன் – ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடையவன்.
திருவாய், 8-6-10.
அற்றம்- அறுதி. பெரியாழ். 5-2-6. பெரிய. 10-1-10.அற்றேன் வந்தடைந்தேன். பெரிய. 1-9-9.
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார் – தருமமே சுவராக நிற்கிற
அரங்கனார். திருமா.6
அறவன்- தருமஸ்வரூபி. திருவாய். 1-7-1.
அறிகண்டாய் – தெரிந்துகொள். பெரிய. திரு. 66.
அறுகால்- ஆறுகால்கள். பெரியாழ். 4-2-8.
235 அறுசுவை கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, தித்திப்பு,
துவர்ப்பு. திருவாய். 4-1-7. சீவக.193. நச்.உரை.
பெருங்.இலாவாண. கடிக்கம்பலை.80.
கட்டிலேற்றியது. 24. மணி. 28.116,241.
அறுதல்- சீரணித்தல். பெரியாழ். 1-4-6. (அறா}
அறுதி – முடிவு, வரை. பெரியாழ். 410-9.
அறுதொழில்- ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல். எழுகூற், அடி14. பெருங். 2.3.9.
புறநா. 397.20.
அறை- பாறை. பெரிய. 2-5-5.
240 அறைகை – சொல்லுதல், அடித்தல், ஒலித்தல், திருப்பா. 16.
அறையிடுதல் – அறைகூவுதல். திருவிருத். 19
245
அறையோ-ஐயம். பெரியாழ். 3-5-8, முறையிடும் சொல்.
திருவிருத். 10.
அறையோ – முறையோ முறையோ. பெரியாழ். 3-5-5,
திருவாய்.5-1-1.
அன்றிக் கொண்டு சீறிக்கொண்டு, நான்முகன், 29.
அன்றில்- அன்றிற் பறவை. கிரவுஞ்சப்பறவை. பெரிய. 11-2-5
தே. 1-60-7 தோணிபுரம், ஆரூர். 2-50-1 ஆமாத்தூர்.
அன்றிற்கூடு- அன்றில் பறவையின் கூடு. பெரிய. 11-2-1. அன்றிற்பேடைகாள் – திருவாய். 9-5-2,3.
அன்றுதல்- சீறுதல். திருவிருத் 18, பெரிய.8.3-8. அன்னமதாயிருந்து அறநூலுரைத்தது. பெரிய. 11-4-8.
250 அன்னமாய் மறையை வெளிப்படுத்த. திருநெடுந்.30.
அன்னவசம் செய்கை- உண்ட உணவிற்கு ஏற்ப இடம் வலங் கொள்ளுதல், தூங்குதல், திருவாய். 3-7-10. அன்னன்ன – அப்படிப்பட்ட. திருவிருத். 29. அனந்தல்- சோம்பல். திருப்.10.
அனன்றுண்ட நீர் – (இரும்பானது) பழுக்கக்காய்ச்சப் பெற்று
உட்கொண்டநீர். திருக்குறுந். 13.அனுங்குதல் – நோவுபடுதல்,வருந்துதல், நாச்சி. 14-2, பெரிய
7-8-3.
260
ஆக்கம்- செல்வம், பேறு, திருவாய். 9-1-2, 1-6-8. திருவாசகம்.
சிவ, 41.
ஆக்கை- சரீரம். நான்முகன். 93. திருவாசகம்.
திரு அண்டப்பகுதி. 137.
ஆகமவாதிகள். சைவர். இராமாநுஜ.91.
ஆதரம்- அன்பு . திருமா. 16.
ஆதன்மையால் – ஆன தன்மையால், அதனால்
ஆட்பட்டதனாலே.பெரிய. 2-4-8,9.
ஆதானும் யாதானும். பெரியதிரு. 25, 59.
ஆதித்தியன் – சூரியன். திருப். 22.
ஆது – யாது, பெரிய 939 தே 6-20-9 நள்ளாறு.
ஆதும் – யாதும். நாச்சி. 11-3, பெரிய. 10-7-10,
திருவாய். 3-4-10, 8-2-11.
265 ஆதுமில்காலம் – ஒன்றும் இல்லாத காலம். ஒரு துணையும்
இல்லாத சம்சாராவஸ்தை. திருவாய்.
3-4-4.
ஆதுமில்லை – யாதுமில்லை. பெரிய. 10-7-10. தே. 2-84-8.
நனிபள்ளி.
ஆநிரை- பசுக்கூட்டம். பெரியாழ். 3-4-4.
ஆப்பங்கொழியவும் சரீரம் ஒழியவும். நான்முகன். 93.
ஆப்பு -கட்டு. முதல்திரு. 75.
270 ஆப்புண்ட-யாப்புண்ட. பெரிய. 8-2-5.
ஆப்புண்டிருந்தவனே- கட்டுண்டிருந்தவனே. பெரிய. 5-6-1.9.
ஆம்பல் – இலைக்குழல். பெரிய. 9-5-8.
275
ஆம்பற்கழியும் இலைக்குழலோசைக்கு அழிவாள்.
பெரிய. 5-6-10.
ஆமருவி – பசுக்களை விரும்பி. (மருவுதல் விரும்புதல்)
பெரிய. 5-6-10.
ஆமுகம் (ஆ- ஐயோ). நாச்சி. 11-1.
ஆமைத்தாலி – ஆமைவடிவமாகச் செய்யப்பட்ட தாலி
பெரியாழ். 1-7-2, 2-6-1.
ஆய்க்குலம் – இடைக்குலம், திருப். 28. திருவிருத் 61.
ஆய்ந்தேத்த வல்லார் – ஆராய்ந்து துதிக்க வல்லவர்கள்.
நாச்சி.. 7-10.
ஆய்ப்பாலர் – இடைச்சியர்கள். பெரியாழ். 2-3-1.ஆயப்பிள்ளை – கண்ணன். பெரியாழ். 3-4-9.
ஆயம்-தோழியர் கூட்டம், வேலைத்திறம். சிநேகம்.
திருவாய். 8-2-1.
ஆயர்குலம் இடைக்குலம். பெரியாழ். 1-7-11,3-1-8, திருப்பா.5.
ஆயர்கொழுந்து கோபாலருக்குச் சிரோபூஷணம்,
நப்பின்னை. திருவாய். 5-6-11.
ஆயர்கொழுந்தே- இடைக்குலத்தலைவனே. பெரியாழ். 2-3-3.
285 ஆயர்பாடி -இடைச்சேரி. நாச்சி. 14-2; பெரியாழ். 2-2-5.
ஆயர்பாவை நப்பின்னை – இடை மகளான நப்பின்னை.
பெரிய. 2-3-5.
ஆயிரம் பேருடையவாளன் – ஆயிரம் பெயர்களையுடைய
பெருமான். பெரிய. 6-6-9.
ஆயிரவர் நலனேந்து திருவல்லவாழ் – ஆயிரம் பேர்
தன்னுடைய கலியாண குணங்களைக்
கொண்டாடும் படியாகத் திருவல்ல
வாழில் எழுந்தருளியிருக்கின்றவன். திருவாய் 5-9-10. இத்திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற
திருக்கோலம். நாச்சியார் செல்வத்
திருக்கொழுந்து. கிழக்கு நோக்கிய சந்நிதி.
பெருமான்கோலப்பிரான்.
ஆயோ – கிளி முதலிய பறவைகள் வந்து தானியங்களை
அழிக்காதபடி அவற்றை வெருட்டுவதாக
ஆயல் இடுகிற சொல். அதுவோ என்று
வினவுகிறபடி, திருவிருத் 10. தே. 7-9-4. சீபருப்பதம். சூளாமணி . 1658. ஆர்த்த- கட்டிய. முதல் திரு. 22. ஆரவாரம் செய்தல்.
பெரிய. 1-5-5
ஆர்தல் – நிறைதல். திருப்பா. 1, சிறிய -69, திருவாய். 4-1-6
ஆர்ப்பு -பேரொலி. ஸ்ரீவசனபூஷணம். சூ. 77. ஆர்படுவான்நேமி கூர்மை. மூன்றாம் திரு. 80.
ஆர்வம் அன்பு. பெரியாழ் 4-5-3. இரண்டாம் திரு. 1. திருவிசைப்பா. 25-8.
295 ஆர்வினவிலும் -எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும், பெரியாழ். 4-5-3.
ஆரல் – ஒருவகை மீன். பெரிய. 5-1-5.
ஆராமம் – உபவனம் சிறிய திரு. 71ஆராமை – திருப்தி பெறாமை.
ஆராவமுதம் தெவிட்டாத அமிர்தம். சிறிய. திரு. 7.
300 ஆராவமுது திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கின்ற
எம்பெருமான்.திருவாய். 5-8-1.
ஆராவமுதே – திருமலையில் எழுந்தருளியிக்கின்ற
எம்பெருமானே.பெரிய. 1-10-3.
ஆரியன்-ஆசாரியன். உபதேசரத்தினமாலை. 64.
சிவபுராணம். 64. கீர்த்தித்திரு அகவல். 22.
ஆல்- தண்ணீர் . ஆலமரம். திருவாய். 9-10-1.
ஆலநிழலில் அறம் நால்வர்க்கு உரைத்து- ஓர் ஆலமரத்தின்
நிழலில் நான்கு முனிவர்களுக்கு உபதேசித்தவன் ருத்திரன்.
நான்முகன் திரு. 17. (நான்கு முனிவர்கள்: அகத்தியர்,
புலத்தியர், தக்ஷர், மார்க்கண்டேயர்) என்று அண்ணங்
கராசாரிய சுவாமிகள் உரை காண்கின்றார். நால்வர்
என்பது சனகர், சனந்தனர், சனாதனர்,சனத்குமாரர்
இவர்களைத்தான் எல்லா நூல்களும், பாகவதமும்
கூறுகின்றன. அப்படியிருக்க சுவாமிகள் கண்ட உரைக்கு
ஆதாரம் யாதோ? திருச்சாழல். 16.
ஆலமரத்தின் சிறப்பு: நூறுயோஜனை தூரம் உயரம்
உள்ளது எழுபத்தைந்து யோஜனை நீளமுள்ள கிளைகளை
யுடையது. எங்கும் நிழலையுடையது. தாபமற்றது. உயர்ந்த
யோகத்தின் ஸ்வரூபம் . மோட்சமடைய விருப்பமுள்ள
வர்களுக்கு ஆசிரயமுமானது
305 ஆலி – சிறுதுளி. பெரிய. 11-1-8. 1-2-1.
ஆலித்தல் – ஆரவாரஞ்செய்தல். பெரியாழ். 3-4-7.
திருவிசைப்பா. 29-9.
ஆலிநகர்க்கதிபதியே- திருவாலி நகர்க்கு தலைவனே.
பெருமாள். 8-7. இத்திருப்பதி சோழ நாட்டில்
சீகாழியிலிருந்து ஆறுகல் தொலைவில் உள்ளது.
திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று. இவ்வூருக்கு
அருகிலுள்ள வேதராஜபுரத்தில் பங்குனி
உத்திரத்தில் திருமங்கையாழ்வார் திருமாலை
வழிபறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது.
எம்பிரான் வயலாலி மணவாளன்.
ஆலிவளநாடன் திருவாலி நாட்டிற்க்குத் தலைவன்.
பெரிய.8-3-10.
ஆலிலை யன்னவசம் செய்யும்- ஆலிலையிலே தூங்குகின்ற
திருவாய். 7-1-4; 4-2-1.ஆலுதல் – ஆடுதல் கூவுதல், சப்தித்தல், பொருந்துதல்.
ஆவத்தனம் ஆபத்துக்காலத்தில் உதவும் செல்வம்.
(ஆவத்தனம் . ஆபத்தனம்). பெரியாழ்.
ஆவர் -யாவர், பெரிய. 3-3-7.
ஆவலிப்பு – பலம்,கர்வம். திருமா. 1
ஆவித்தல் – நெடுமூச்சுவிடுதல். கொட்டாவி கொள்ளுதல்.
பெரிய. 1-2-8. சீவக. 2426.
315 ஆழ்பொருள்- எளிதில் அறிய முடியாத பொருள்.
நான்முகன். 1.
ஆழ்தல் – மூழ்குதல். ஆழமாதல்.பெரிய. 6-3-4,
திருவாய். 4-7-5. 4-1-6.
ஆழமோழைமோழை- கீழ்த்திசையில் பெருகும் ஆறு. பெரியாழ். 3-7-4.
ஆழாந்து-ஆழ்ந்து, ஈடுபட்டு,திருவாய். 2-1-8. ஆழி-சக்கராயுதம், கடல், சூரியன், வட்டவடிவம்,
பெரிய. 5-7-8, திருவாய். 8-10-6. திருவிருத். 34.
4-2-6.
320 ஆழியான் ஆழ்ந்து தேறியவன். பெரியாழ். 1-9-7, திருவெம். 8. ஆள்- ஆண்மகன், காலாள். முதல்திரு. 81 ஆளம்வைத்தல் – ஆலாபித்தல், பெரியாழ். 4-8-6.
ஆளரி- நரசிங்கம். பெரியதிருமடல். 127 ஆளி – சிங்கம். பெரிய. 7-3-4.
325 ஆற்றங்கரை மரம். பெரிய. 11-8-1. நீத்தல். விண்ணப்பம். 3. ஆற்றல் – பராக்கிரமம். (கீர்த்தித்திருவகவல். 103.) ஆறு – விதம். திருவாய். 5-10-6.
ஆறுசமயம் சார்வாகம், பெளத்தம், க்ஷபணம், வைகம்,
14
சாங்கியம், பாசுபதம், திருவாய். 9-48. அண்டப்பகுதி,79. ஆறுபொதி சடை கங்கைனயத்தரித்த சடை. திருவெழுகூற். 20.
330 ஆன் – பசு. திருச்சந்.40. பெரியாழ். 2-7-1, திருவாய். 1-8-8.
335
ஆனாத- அழியாத. பெருமாள். 4-2 ஆனாய் – ஆனையே .பெரிய. 1-9-2, தே. 3-55-7. வான்மியூர். ஆனாயன் – மாட்டிடையன். பெரிய. 5-5-3. திருவாய். 1-8-8. ஆனாயனாகி – மாடுமேய்க்கும் இடைக்குலத்தவனாகி . பெரிய. 11-5-4.
ஆனெய்- பசுவின் நெய். திருச்சந். 40 ஆனைச்சாத்தன் பாரத்துவாசம், வலியன். திருப். 7. இகல்- பகை, போர். திருவாய். 6-46-இகுளாய் – தோழியாய். திருவாய்.6 -3-9.
இங்குத்தை – இவ்விடத்திய. நாச்சி. 12-4.
340 இங்குத்தை நின்றுந்துரப்பன் – இவ்விடத்தினின்றும் உன்னை
ஓட்டி விடுவேன். நாச்சி. 5-10.
345
350
355
இங்குற்றேனல்லேன் – இங்கு நிற்கமாட்டேன்.)
( பிறரோடு பொருந்துகிறதில்லை என்று
கூறினும் பொருந்தும் ) திருவாய். 5-7-2
இங்கே- இங்கு. நாச்சி. 14-1.
இசலி – இகலி. பெரிய. 3-9-3.
இசலுதல் – பேரொலிசெய்தல். ஈடு.4-10.6.
இசித்தல் – இழுத்தல். பெரிய. 1-2-6.
இசை – இராகம், உடன்பாடு. திருவாய். 2-4-11.
திருவண்டப்பகுதி . 35
இசைகாரர் – பாடுபவர். திருவாய். 1-5-6.
இட்டம்- இஷ்டம். விருப்பம், நாச்சி. 14-1, திருவாய். 1-8-8.
இட்டாதெய்வம் – இஷ்டமான தேவதை. திருவாய். 3-9-6.
இட்டிடை சிறிய இடுப்பு. திருச்சந்.13, திருவெம்பாவை. 16.
இட்டீடு – பரிகாசச்சொல்.திருப். 18. வியாக்.
இட்டீறு – களிப்புடன் செய்யும் விளையாட்டு. நாச்சி 14-1
இட்டு வெந்நீரைக் காய்ச்சுதல். பெரியாழ். 2-4-3. (உரை)
இடங்கை இடக்கை. இரண்டாந்திரு. 71.
இடங்கொள்ளுதல்-வியாபித்தல். திருவாய். 5-2-4.
இடத்தல் – பிளத்தல். இரண்டாந்திரு. 94.
இடம் – வசிக்குமிடம். நான்முகன் திரு. 66.
இடம் பெறுதல் – இடம் பெற்றிருத்தல். திருவாய். 1-3-9.
இடமுடைமை விசாலமானதாயிருத்தல். பெரிய. 11-5-3.
360 இடர் – துன்பம். பெரிய. 6-9-1.
இடராட்டியேன் – துன்பமுடையநான். திருவாய். 8-2-2.
இடவகை- வசிக்குமிடம். பெரியாழ். 5-4-10.
இடவணரை – இடத்தோளோடு சாய்த்து. பெரியாழ். 3-6-2.
இடவன்- மண்கட்டி, பெரியாழ். 3-5-5.
365 இடற தட்டித் திரியும்படி. பெரியாழ். 3-2-6.
இடறி- கடந்து. திருவாய். 6-7-2 (தே) 6-27-1, 10 ஆரூர்
திருவிசைப்பா. 26.6.
இடறுதல் துன்புறுதல், திருவாய். 4-1-7.இடறும்- சுழலானின்ற. திருவாய்.4-7-7.
இடிசேர் – இடியை. ஒத்த – திருவாய்.4-1-3.
இடித்தல் – தகர்த்தல். திருவிருத்.36.
இடிதல் – கட்டுக்குலைதல். திருவாய். 9-6- 2.
இடுக்குண்ட – நெருக்குற்ற. பெரியதிருவந். 21.
இடுகை- கொடுக்கை. பெரிய. 1-6-5.
இடும்பை- துன்பம். பெரிய. 1-6-5.
இடைகழி இடைக்கட்டு. முதல் திரு. 86.
இடையனெறிந்த மரமே யொத்திராமே பெரிய. 11-8-6.
சீவக. 1914. பழமொழி.314. இடையில்லை- அவசாசமில்லை. திருவாய். 8-2-8, 9-5-5.
இடையுவா பௌர்ணமி. – நாச்சி. 7-3.
இடைவீடின்றி – இடைவிடாமல். திருவாய். 1-10-8, 2-9-4.
இண்டைக்குலம் நெருங்குதலையுடைய கூட்டம். திருப்பல். 5.
இண்டைகொண்டு பூமாலைகொண்டு. பெரியாழ். 3-2-10. (தே)5-7-3. ஆரூர். இண்டைச்சடை முடியீசன் – மாலையையும், ஜடையையும்,
கிரீடத்தையும் உடைய உருத்திரன்.
திருவாய். 7-5-7. (தே). 5-6-9, ஆரூர், இணக்கம்- சகவாசம், பொருத்தம், திருவாய். 6-2.8. இணர் – பூங்கொத்து. பெரிய திருவந். 29.
இணைந்து – கலந்து. திருவாய். 6-1-4. இணைவனாம்- சமனாகியிருப்பான். திருவாய். 2-8-1. இத்தனை – இவ்வளவு. திருவாய். 9-5-1. இதணம் பரண், பெரிய. 1-8-8. இதழுக்குக்கமுகம்பழம் திருவாய். 8-9-6.
390 இது வென்னிது வென்னிது வென்னோ. (ஊடல்). பெரிய. 10-8-1,9.
இந்தளூரீரே – பெரிய. 4-9-1,3,4,5,6,7,8,9, இந்திரகோபம் – தம்பலப்பூச்சி, நாச்சி, 91. இந்திர ஞாலங்கள் -பொய்யான வித்தைகள். திருவாய். இந்திரலோகம் – இந்திரனது உலகம். திருமா. 2.
395 இந்திரன் சிறுவன – அருச்சுனன். பெரிய. 2-3-6. இந்து- சந்திரன். பெரிய. 4-2-9. திருப்பூவல்லி.4. இமம்-பனி. மூன்றாம் திரு. 98.-இமவந்தம்- இமயமலை. பெரியாழ். 4-7-4.
இமில்- கழுத்து. திருவிருத்.21.
இமையவர் – தேவர். பெரியாழ். 4-7-4.
இயக்கர் – யக்ஷர். திருப்பல். 9.
இயக்கு – துன்பம். திருச்சந்த.120
இயங்கல்- செல்லுதல். முதல்திரு. 8.
இயத்தல்-கடத்தல். திருவாய். 1-3-6.
இயந்த- இகந்த.திருவாய். 1-3-6.
இயல்- இலட்சணம். இராமாநுஜ.
இயல்வு- விரகு. முதல்திரு 12,13; இராமாநுஜ 26 திருவிருத் 24.
இரண்டத்தில் இரண்டில். சிறியதிரும.59.
இரண்டுதறுகண் இரண்டுதிருக்கண்கள் . பெரிய. 11-4-4.
410 இரந்தார் – யாசிப்பவர். பெரிய, 1-9-3.
415
இரவியர் – சூரியர். திருப்பள். 6.
இராக்கதி- ராக்ஷஸி.பெரிய. 10-6-9.
இராகம் – இசைப்பாட்டு,ஆசை. திருவாய். 1-6-5.
இராவணாந்தகன் – இராவணனைக் கொன்றவன். பெரிய. 2-3-7
இரிதல் – ஓடுதல். பெருமாள். 1-1
இரிய – ஆரவாரித்து. திருவாய். 5-2-3.
இரீஈ- இருத்தி. திருவாய். 2-7-9.
இருக்கு- வேதம். பெரியாழ். 5-1-6, திருவிருத்.64.
இருடீ கேசன் இந்திரியங்களையடக்கியாள்பவன்.
பெரியாழ். 5-4-5 திருவாய். 2-7-10, நாச்சி. 5-6,
420 இருந்தில் – கரி. பெரிய. 2-10-3.
இருபாடெரி கொள்ளியின் உள்ளெறும்பே போல்- பெரிய
11-8.4. திருவாசகம், நீந்தல் விண்ணப்பம். செய்.சு,
சீவக . நாமகள் 243, தே 4-75-6.
இரும்பு நான்றுண்ட
நீர்போல். திருக்குறுந்5.
இரும்புபோல் வலிய நெஞ்சம். திருமா. 17.
இரைதேரும் புதாவினங்காள். பெருநாரை, திருவாய். 6.8.9.
425 இல்லம்- வீடு. பெரியாழ். 3-8-1.
இல்லம் வெறியோடிற்று வீடு வெறிச்சென்றிருக்கிறது.
இல்லறமல்லேல் துறவறமில் நான்முகன். 72.
இல்லி- சிறுவழி. பெரியதிரும. 87.
இலக்கு – குறி. பெரிய திரும. 87-இலகுதல் – விளங்குதல். திருவாய். 8-8-1.
இலச்சினை – அடையாளம், முத்திரை. பெரியாழ். 1-7-6.
இலட்டுவம் – வட்டு. பெரியாழ். 2-9-9,
இலிங்கியர் – இலிங்கப்பிரமாணவாதியரான அனுமானியர்.
திருவாய். 4-10-4.
இலைக்குடை நீழல். இலையாகிற குடையின் நிழல்
பெரிய 9-1-5.
435 இலைக்குழலூதி – இலையினால் ஆகிய ஊது குழல்.
பெரிய. 10-7-6.
இலையம்- இலை. பரியாழ். 3-4.8-
இவரித்தல் – எதிர்த்தல். பெரிய. 8-8-9.
இவரித்து – ஏறி. பெரிய. 8.8.9.
18
இவள்பரமே-இவளிடம் உண்டாகக் கடவதோ. திருவிருத். 60.
இவையா இவை இருக்கிறபடிபாராய். பெரியாழ். 2-3-2.
440 இழந்ததுகட்டே லோக மரியாதையை இழந்தாள்.
திருவாய். 6-6-10.
445
450
இழந்தது கற்பே- தன்னுடையச் சாயே-காந்தி திருவாய். 6-6-7.
இழந்தது மாமை நிறமே அழகிய நிறத்தை இழந்தாள்.
திருவாய். 6-6-2.
இழுக்காய்த்து குற்றமாகியது. பெரிய. 4-9-4.
இழிசிய – எழுதப்பட்ட. பெரிய. 2-8-7.
இள்கி- வஞ்சித்து. பெரியாழ், 3-7-4.
இளக – இல்லையாக. பெரியதிருவந். 18.
இளங்கோ- பெருமாள். 9-2.
இளங்கோயில் இரண்டாந்திரு. 54 தே. 6-70-5. க்ஷேத்திரக்
கோவை.
இளநீர் குலை தாழ்கிடங்கின் கூடலூர். பெரிய 5-2-8
இளம்படி – மிருதுஸ்வபாவம் . பெரிய. 2-7-2.
இளைதே – பிள்ளைத்தனமே. திருவாய். 6-2-6.
இளமையாடும் பால்யசேஷ்டைகளைச் செய்யும்.பெரிய
11-2-2. சீவக. 2491
455 இளையவரேசாமுன் – பெரிய. 1-3-2.
இளையாப்பாய் – தளராதொழிவாய் பெரிய திருவந் 23.
இற்றைப்பறை கொள்வான் – பிரயோசனம் திருப்பா. 29. இறப்பு – மரணம்,மோட்சம் திருவாய். 4-1-10.
இறவு – முடித்தல். பெரியாழ். 5-4-2-இறுகல்-அழுந்தல் திருவாய். 41-10.
இறுத்தல் – செலுத்துதல் திருவாய். 5-2-8.
இறை- சிறிது, அரசன், கடவுள், கப்பம். பெரிய 5-10-4
திருவாசகம். திருச்சதகம.செய். 57.
இறைகளவை – சரீரங்களாகிய அவை. பெரிய. 5-10-4.
இறைஞ்சென்- மனனே. பெரிய. 11-4-1.
465 இறைநிலை- பரமாத்ம ஸ்வரூபம். திருவாய்.தனியன். 1-1-5.
இறையான்- சிவன். பெரியாழ்வார். 518. முதல் திரு. 28.
இறையிறை யுருகும் வண்ணம்- கொஞ்சம், கொஞ்சம்
திருமா. 17.
470
இறைவன் குறை யிரப்ப மார்பு வாசநீர் அளித்தான்.
பெரிய 6-9-9.
இன்பமாரி- இன்பத்தையுண்டாக்கும் மேகம்.
இன்மை- இல்லாமை.. திருவாய். 6-3-4.
இன்னாமை- துன்பம். திருக்குறள். 630.
இன்னாரினையார் – இவர் இப்படிப்பட்டவர். நாச்சி. 7-5.
இனமலரெட்டுமிட்டு – செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி,
பாதிரி,புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை
அஷ்டவித புஷ்பம். ஆசார்ய ஹ்ருதயம். பெரிய. 1-2-7.
இனவேற்கண். திருவாய்மொழி. 5-6-6.
475 இனிதிரை – இனிதுதிரை கடைக்குறை. திரை இனிது –
அலைகள் இனிதாக. திருமா. 18.
இனியெம்பரமே – பரம் – வசம்.திருவாய். 6-2-4.
ஈசன்- சிவன். பெரிய. 2-10-1, நான்முகன்- திரு. 96.
கீர்த்தித்திருவகவல். 25, திரு அண்டப்பகுதி,46.
திருவிசைப்பா. 4-1, 25-9. தே. 4-65-3. சாய்க்காடு.
ஈசிபோமின் – சீசீ போங்கள். பெரிய. 1-3-8.
ஈட்டம் – கூட்டம். பெருமாள். 2-1.
480 ஈட்டுதல் – திரளுதல், திருவிருத்.21
ஈடுமெடுப்புமிலீசன்- குற்றம் பார்த்துத் தள்ளுகையும், குணம்
பார்த்துக் கொள்ளுகையும் இல்லாத
எம்பெருமான். திருவாய். :-6- 3.
ஈப்பாய்- ஈவாய். நான்முகன் திரு. 19.
ஈர்த்தல் – இழுத்தல். நாச்சி. 14.4. சிவபுராணம். 74.
ஈர்மை அறுக்குந்தன்மை. திருவாய். 9-6-3.
485 ஈர்மை கொள்தேவர் – அன்புடைய தேவர்கள். 2-8-10.
ஈர்மைசெய்து- ஈடுபடுதல்செய்து. திருவாய். 9- 6-3.-ஈரியாயிருப்பாள்- அன்புள்ளவளாய் இருப்பாள்
திருவாய். 6-7-9.
ஈவிலாத தீவினைகள் – நாசமில்லாத தீவினைகள்
திருவாய். 4-7-3.
ஈவு- நாசம்.திருவாய். 47-3.
490 ஈளை- கோழை. பெரிய. 6-4-1. தே. 1-67-6, 2-100-8.
கோவலூர்வீரட்டம்.
ஈளையேங்கி- கோழையாலே இளைத்து. பெரிய, 1-3-6.
ஈற்றுத்தாய் பெற்றதாய் . பெரிய. 3-9-2.
ஈன்துழாய்- போக்கியமான திருத்துழாய். பெரியதிரும.60.
495 ஈன்துழாயானை – இனிய துளசிமாலையையுடைய திருமால்
முதல்திருவந். 26.
ஈனமர் சாபம் – தன்மைபொருந்திய சாபம். பெரிய, 5-9-4.
உக்கம்- ஆலவட்டம். திருப்பா. 20.
உகட்டுண்டு- உகட்டு- உவட்டு, திருவாய். 3-5-4.
உகவை- சந்தோஷம். திருவாய். 6-2-8.
500 உகிர் – நகம். பெரிய. 10-9-8.
உகைத்தல் – உபேக்ஷித்தல். நான்முகன் திரு. 38. உச்சிமணிச்சுட்டி – தலையிலே அணியத்தக்க ஒரு ஆபரணம்.
பெரியாழ். 1-3-8.
உட்கண் – ஞானக்கண். பெரியதிருவந். 28. உட்கு – பெருமை, அச்சம்.
505 உடல் உள் அவிழ்ந்து சரீரமும், மனமும் நெகிழ்ந்து.
பெரியாழ். 3-6-1.
உடலையுள் – உடலுள். பெரிய. 10-1-5.
உடன் – ஒருங்கு. பெரிய, 11-2-10.
உடுக்கை- உடைத்தோல். திருவாய், 4-8-4.
உடைமணி – அரையில் கட்டிய மணிகள். பெரியாழ். 1-7-1.
510 உணங்கல் உலர்தல். (புழுக்கப்பட்ட நெல் ) திருவாய். 4-6-7. உணர்வத்தொடு – ஞானத்தோடு. திருவாய். 4-1-10. உத்தரவேதி – யாகசாலை. பெரியாழ். 1-9-6. உத்தானம் எடுத்தல். பெரியாழ். 1-8-1. உதரம்- வயிறு. அம .4.
515 உந்தி – கொப்புழ். பெரிய. 5-4-1. உந்தி பறக்கை- மகளிர் குழாம் உந்தி விளையாட்டு ஆடுதல். பெரியாழ். 3.9-11.-உபகாரம் கொள்ளாது – உபகாரத்தைக் கொள்ள முயலாமல்.
(தொண்டுகள் செய்கையாகிற உதவியைப் பெறமுயலாமல்)
பெரிய திருவந்.39.
உம்பர் -மேலிடம், தேவர். பெரிய. 7-8-10; திருவாய். 10-8-7.
திருச்சதகம். 64,66.
உம்பர்கோன் – இந்திரன். பெரிய. 5-4-5.
520 உமர் – உம்மைச் சேர்ந்தவர். திருவாய்.8-1-4.
உய்வு – பிழைப்பு. திருவாய். 4-3-11.
உயர்த்துணவு -ஞானம் . மூன்றாந்திருவந். 94
உயிர்நிலை – சீவாத்மஸ்வரூபம். திருவாய். தனியன். . உயிர்ப்பு – மூச்சு.நாச்சி. 5-2.
525உயோகுதுயில் – யோகநித்திரை.எல்லாவற்றையும் அறிந்து
கொண்டே தூங்குதல். பெரியாழ். 1-5-1.
உரப்புதல் அதட்டுதல். சிறிய திரும. 37.
உரப்பாள் – அதட்டாள். நாச்சி. 3-9.
உரம் – பலம், மார்பு. திருவாய். 1-3-1.
உரவு- விஷம். திருவாய். 6-4-1.
530 உரு – ரூபம், தேகம். பெரிய. 1-4-2.
உருப்பன் – உருக்குமன். பெரியாழ். 4-3-1.
உருப்பிணி – உருக்குமிணி. பெரியாழ். 3-9-3, 4-3-1.
உருப்பொலிகை – தழும்பேறுதல். பெரியாழ். 5-4-7.
உருமகம்- நரமேத யாகம். பெரியாழ். 4-8-3.
535 உருவறை – அவலக்ஷணம். பெரியாழ். 3-8-2.
உருவெண்ணும் – கணக்கெண்ணும். முதல்திரு. 33.
உரைக்கியம் – சொல்லுவம். திருவிருத்.55.
உரோடம் – ரோஷம். பெரியாழ். 2-6-5. நாச்சி. 2-5.
உரோமகூபம் – மயிர்ச்சிலிர்ப்பு. பெரியாழ். 5-1-7.
540 உலக்க ஒதுவனே -எப்படி முடியச் சொல்லுவன்.
திருவாய். 3-1-5.
உலக்க- முடியக் கண்டு திருவாய்.8-3-10.
உலங்கு- பெரு நுளம்பு- பெருங்கொசுகு. நாச்சி. 8-6.
உலங்குண்ட விளங்கனி – பெருங்கொசுக்கள் உண்ட
விளாம்பழம். நாச்சி. 8-6.
உலப்பு – வறட்சி, அழிவு. திருவாய்.6-10-1.
545 உலாகின்ற – கெண்டை- உலாவுகின்ற. திருவிரு . 75.
உலோபாய்- உலோபமற்றிரா நின்றாய். பெரியாழ். 2-7-6.
(தே.6-35-7. வெண்காடு)
உவணம்-கருடப்பட்சி முதல்திரு. 22.-உவரி – கடல் . நான்முகன். 56.
உவலையாக்கை – அருவருப்பான உடம்பு. திருவாய் 1-5-8.
550 உவனியம்-உபநயனம். பெரிய. 5-8-7.
உழக்குண்டு – துன்பப்பட்டு. நாச்சி. 13-4.
உழலையென்பு -உழலைத்தடி கோத்தாற்போலேயிருக்கின்ற
எலும்புகள். திருவாய்5-8-11.
உழறா நெகிழ்ந்தாய் -கலங்கி. பெருமா . 6-8.
உழறியுண்ண- துகைத்து. பெரிய. 9-5-2.
555 உழறுதல் – துகைத்தல். கலங்குதல். பெருமாள்.6-3.
திருவிருத்.58. (தே.3-47-7.ஆலவாய். உழறுமேல்’ தக்க. 32. உழிதருதல் – அலைதல். திருநெடுந். 9, திருமா.1, திருச்சதகம்.8. (திருவாசகம்.5,7)
560
22
உழுவை – புலி. பெரியாழ். 1-7-6. (திருச்சதகம். 7. அச்சப்பத்து. 8 )
உழை – புள்ளிமான். பெரியாழ். 5-1-2.
உள்ளுதல் – நினைத்தல். திருமா. 84.
உற்றாரிலி- கண்டு கிட்டினாரில்லாத. திருவாய். 5-6-7.
உறகல்- உறங்கல், உறங்கவேண்டா. பெரியாழ். 5-2-9. உறகுதல்- உறங்குதல். பெரியாழ்5-2-9.
உறல்- ஸ்பரிசம். திருவாய். 3-6-6.
உறிகள் போல் மெய் நரம்பெழுந்து – உடலிலுள்ள நரம்பகள் உறிகளைப் போல வெளியே தெரியும்படி. பெரிய. 1-3-3.
565உறுகை- கிட்டுகை, சேருகை, திருவாய். 4-9-10.
570
உறுவது – உற்றது. திருவாய். 4-10-6. உறைக்கும் பொல்லாதாய் முடியும். நாச்சி. 2-9. உறைப்பன் – மிடுக்கன். பெரியாழ். 4-8-2. உன்மத்தர் பைத்தியம் பிடித்தவர், பெருமாள். 3-4.
உன்னி – நினைத்தற்குரியவன். பெரிய. 10-1-3. உன்னித்து- நினைத்து, அனுசந்தித்து. திருவாய். 4-6-9. உன்னுடைய சுண்டாயம் நானறிவன் – உன்னுடைய வஞ்சகத்தை நான் அறிவேன். திருவாய் 6-2-11
சுண்டாயம் – விளையாட்டு.திருவாய். 7-8-7. உன்னை என்னுள்ளே குழைத்தாய்-என்னோடு ஒன்றாகக் கலந்தாய். திருவாய். 2-6-9. உனக்கேயறக் கொட்டு – உனக்கென்றேயற்றொழிய.
திருவாய். 7-8-5.
575 ஊக்கம் – முயற்சி, உயர்ச்சி, மிடுக்கு, பெரிய. 10-9-1. ஊட்டம்-உணவு, நாச்சி. 1-9. (திருவாசகம்) திருச்சாழல். 14.-ஊட்ட முதல் இலேன் தினந்தோறும் ஊட்டி வளர்க்கத்தக்க
கைப்பொருள் என்னிடம் இல்லை. பெரியாழ். 3-3-8
ஊடல் பிரண கலகம்.நாச்சி, 4-11.
ஊடாடுதல் நடுவேதிரிதல். திருவாய். 1-4-9
580 ஊத்தை அசுத்தம். பெரியாழ். 4-6-10)
ஊத்தைவாய் அசுத்தமானவாய். பெரியாழ். 4-4-3.
தே 2.38.10 சாய்க்காடு.
ஊமனார் கண்ட கனவினும் பழுதாய். பெரிய1- 1-3
ஊர்தல் – நடத்தல். பரவுதல்,ஒழுகுதல், திருநெடுந். 23.
ஊரவர் கவ்வை- ஊராருடைய ஆரவாரம். திருவாய். 5-3-1,2,3,4
55 ஊரவர் கவ்வை எருவிட்டு – ஊரார் கூறும் பழியாகிற
எருவை இட்டு. திருவாய். 5-3-4
590
595
ஊரா – ஊர்ப்பசு. திருவிருத். 94.
ஊராமிலைக்க – ஊர்வந்து சேர்ந்த கண்தெரிந்த பசுக்கள்
கனைக்க. திருவிருத். 94.
ஊழ்-முறை,விதி.
ஊழ்த்தல் – கனிதல். பெரிய.
ஊழ்மை. முறைமை. திருவாய 4-6.9
ஊழி கல்பம், பெரிய. 8-5-6 திருவாய் 5-4-8
திரு அண்டப்பகுதி 9.
ஊழி- விலக்ஷண காலம். திருவாய், 2-1-4, 5. பெரிய 1-4.9
திருப்பா. 4.
ஊழிலை – முற்றிப்பழுத்து விழுந்த இலை. சருகு.
ஊளியெழ – சப்தம் எழ. திருவாய். 7-4-4
ஊற்றம் -உறுதி. அனுசந்தானம். திருப்பா.21.
ஊறல்-ஊறிவந்த ஸாரம், நாச்சி. 10-9
ஊறு – தீமை. திருவாய். 7-4-2.
ஊன் -மாமிசம். பெருமா. 41. பெரிய. 1-4-2
ஊனகரகர் – பிறரைக்கொண்டு தீமை செய்பவர். திருமா.41.
600 ஊனக்குரம்பை. மாமி தேகம். முதல்திரு.91.
ஊனில்வாழ் உயிரே – மாம்சரூபமான சரீரத்தில் வாழ்கின்ற
நெஞ்சமே. திருவாய் 231.
எஃகு – எஃகினாற்செய்த சூலம். பெரியதிரும்.94.
எக்கல்-மேடு. திருவாய். 4-1-4
எக்கே – இது என்ன கஷ்டமோ, பெரிய. 10-8-8எக்கம் ஒரு தந்தியையுடைய வாத்தியம்,தாளம்.
பெரியாழ். 3-4-1.
எங்கள் குடிமுழுது எங்களுடைய குடியிலுள்ளார்
எல்லாரையும். பெரியாழ். 3-4-1.
எட்டினோடிரண்டு- பத்து, திருச்சந்த 83. திருச்சதகம். 49.
எடுப்பு-உயர்வு. திருவாய். 1-6-3. ஈடு 8-1-3.
எடுவிய – எடுத்த. பெரிய. 8-7-3.
610 எண் கண்ணான் – பிரமன். நான்முகன்திரு.73
எங்கு-கரடி. பெரிய. 6-10-6.
எண்டிசை எட்டுத்திக்கு. பெரியாழ். 2-9-11.
எண்டோளினாள் துர்க்கை. பெரிய. 2-10-6.
எண்டோளீசற்கு எழின்மாடமெழுபது செய்து
உலகாண்டவன் -கோச்செங்ணான். பெரிய. 6-6-8.
615 எதிர்தல் ஒப்பாதல் . நான்முகன். திரு. 84.
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை – பத்துத்
தலைமுறை. பெரிய. 7-2-6.
எந்தை- என் சுவாமி. பெரிய. 2-3-5. (சிவபுராணம். அடி. 11)
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை நமக்கே
உற்பத்திப் பரம்பரையில் முதல்வனான
சம்பந்தத்தையுடையவன். திருவாய். 3-3-2.
எந்தை தந்தை தம்பெருமான் – குலநாதனான பெருமான்.
பெரிய 2-2-4, 2-3-5.
24
620 எந்தை தந்தை தம்மானென்று எம்முடைய குலநாதனென்று.
பெரிய. 4-9-9.
எம்பரத்தல்லார் – என்னைப்போலே அடிமை செய்யார்.
பெருமாள்.3-6 (தே 7-100-4, நொடித்தான்மலை. 6-95-8 பொது எம்பிராக்கள் – எம்பிரான். பெரிய. 10-5-2.
எம்மனா – எமது குல தெய்வமே. பெரியாழ். 5-4-3. எம்மாவீடு – எமக்காகத் தருகிற விலஷணமானமோட்சம்
625 எம்மையுடைமாடு கொண்டான் -எனது ஆடை செல்வம்
எல்லாம் கொண்டான். நாச்சி. 10-7. எம்மோய் எனதுதாய். பெருமாள். 7-6. எய்க்கை-இளைக்கை. திருவாய். 8-8-7. பெரிய. 1-3-6. எய்த்தாது – போராதொழிவது. பெரிய. 11-3-6. எய்ப்பினில் வைப்பு – தளர்ந்த காலத்தில் உதவும் செல்வம்.
பெரிய. 7-10-4. நீத்தல் விண்ணப்பம். 39.-எரி – ஒளி. திருவிருத் 82.
எரிதி – தீ. பெரிய. 8-7-7.
எரியன கேசரம் – தீயைப்போன்ற உளைமயிர். பெரிய. 2-8-1.
எரிவு – கோபம். பெரியாழ். 1-2-4.
எருக்கிலைக்காக வெறிமழு வோச்சல் – எருக்கிலையை
உதிர்ப்பதற்கு மழுப்படை கொண்டு
ஓங்கி அடித்தல். பெரிய. 10-9-6.
635 எருத்துக் கொடியுடையான்- இடபக் கொடியையுடையவன்
பெரியாழ். 5-3-6.
எல்லி- இரவு. பெரிய . திருவந். 19.
எல்லே – என்னே,தோழி பெரியாழ். 3-2-1-10; திருப்பா.15;
நாச்சி. 3-3; திருவாய் 2-1-3. 5-4-1.
எல்லேபாவம் – என்ன மகாபாவம். திருநெடுந். 24.
எவ்வதெவ்வத்துள் – எவ்வகைப்பட்ட சத்துரு சமுகம்.
திருவாய். 5-7-5.
640 எவ்வம் – துன்பம். பெரிய. 9-10-2. திருச்சதகம். 41.
எவ்வும் – துன்பப்படுத்தல். பெரிய. 1-7-4. (தே). 7-31-10
இடைமருது.
எவஞ் செய்கேன் – என்ன உபகாரத்தைப் பண்ணுவேன்.
திருவாய். 9-9-6.
எழநண்ணி – போக்கிலே ஒருப்பட்டு. திருவாய். 9-5-10.
எழப்பாய்ந்து – உயரக்கிளம்பி. பெரியாழ். 1-4-7.
645 எழில் – அழகு. மூன்றாம் திருவந். 86, சிவபுராணம் 22,
கீர்த்தித்திருஅகவல். 3.
எழுநரகம் – எழுவகையான நரகங்கள். ஒன்றாந்திருவந்.87.
எழுமை – ஏழு பிறப்பு. திருவாய். 3-6-7.
எள்கல் – ஏய்த்தல். பெரியாழ். 3-7-4, திருவாய். 2-6-4.
எள்கலல்லால் – வருந்துதலே அல்லாமல். திருவிருத் 92.
650 எள்காது – இகழாமல். திருவிருத். 89.
எள்கி -மெலிந்து. பெரிய. 2-10-3. 1-3-3.
எள்கி- ஈடுபட்டு. பெரியாழ். 3-7-4; பெரிய. 9-3-6.
எள்கியுரைத்த – ஈடுபட்டுரைத்த. பெருமாள்.6-10; (தே) 4-82-2.
கழுமலம். 2-6-2. ஐயாறு.
எள்கினாள் – ஈடுபட்டாள். பெரிய. 8-2-7.
655 எள்கு நிலையும் பையாந்து நிற்கும் நிலை.
பெருமாள் 7- 8. (தே.) 4-82-2. கழுமலம்.-எளிவே – எளிமை. திருவாய். 1-3-1.
எற்றே- என்னே; ஆச்சரியக் குறிப்பு. பெரியதிருவந்.5.
எறிஞர் – பகைவர். பெரிய. 6-10-1.
என்கடவேன் -என்ன செய்ய வல்லேன். பெரிய. 10-10-7.
திருச்சதகம். 12.
660 என்சொல்லி-என்னையும் ஒரு பொருளாகக்கொண்டு.
திருவாய். 7-9-2.
என்பிலெள்கி-எலும்பிலே தட்டும்படி சரீரம் சிதிலமாய்
திருச்சந்த. 76.
என்றும் எப்போதும் – சர்வகாலமும் சர்வாவத்தையும்.
பெரிய.7-3-1.
என்றேய என்னில் – ஏனென்னில். திருவிருத். 30.
என்னம்மம்- முலைப்பால். பெரிய. 10-4-1.
665 என்னம்மா – எனக்குச் சுவாமியே. திருவாய். 7-1-8.
என்னானை – எனது ஆனை. பெரிய. 1-10-6; 4-8-3.
திருவாய். 3-9.1. (தே.) 6-79-8. தலையாலங்காடு; 7- 38-8
அதிகை. திருவெம்பாவை. 7.
என்னுசாகோ – எதனை வினாவுவேன். திருவாய். 7-3-4. என்னுயிர் உண்டமாயனால். திருவாய். 9-6-7. என்னுயிரை யறவிலை செய்தனன் சோதீ – அறுதிக்கிரயம் செய்து விட்டேன். திருவாய். 8-1-10.
670 என்னெற்றியுளானே -என் நெற்றியிலே புகுந்து நின்றான்.
திருவாய். 1-9-9.
என்னே என்பாரும் இல்லை – ஐயோ என்பாரும் இல்லை.
திருவாய். 9-1-3.
என்னைத்தன்னாக்கி – என்னைத் தன்பக்கலிலே ஞானம்
அன்பு முதலியவைகளை உடையேனாம்படி
செய்து. திருவாய். 7-9-1.
என்னைமார் – எங்கள் தமையன்மார். நாச்சி. 3-5; 6-9.
எனக்காய் – எனக்குத் தாயாகியும். திருவாய். 6-3-9
675 எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் எனக்கு எப்போதும் பெருமானுடைய திருநாமம் தேனும், பாலும், அமுதும் போல பரம போக்கியமானது.
பெரிய 6-10-6. எனக்கென்ன மனப்பரிப்பே – எனக்கு என்ன மனத்துயரம் உள்ளது? திருவாய். 6-4-6. எனக்கேல் – எனக்கு. ஏல் இடைச்சொல். திருவாய். 9-10-9,10.-எனைத்தோர் பலநாள்- பலகாலம் நாள்தோறும் திருவாய் 8-7-1.
எனையூழி-காலம்உள்ளளவும். திருவாய். 2-1-7.
ஏக சிந்தையனாய் -ஒரே நினைவாய். திருவாய். 5-10-1.
ஏச்சு- பழிப்பு. பெரியாழ். 3-8-2; நாச்சி. 12-8.
ஏசறுகை – துக்கப்படுதல். திருவாய். 5-3-1.
ஏடி-தோழி. பெரியாழ் 3-4-4; பெரிய. 10-8-9. திருச்சாழல். 1-20.
ஏண் -எல்லை. திருவாய். 2-8-8.
685 ஏடு – சூக்கும சரீரம். திருப்பல்.4.
ஏடு ஏறு பெருஞ்செல்வம் – ஏடு – புத்தகங்கள். பெரிய. 4-1-7.
ஏண்- நிலை, வலிமை. பெரிய. 1-6 1- (திருச்சதகம். 84.)
ஏணி ஏறு கருவி. பெரியாழ். 4-9-3.
ஏத்துதல் – புகழ்தல். இரண்டாம்திரு. 10,12.
690 ஏதம் – குற்றம், துன்பம். இரண்டாம்திரு. 37.
ஏதலன் – பகைவன். பெரிய. 1-7-4.
ஏதிலர் – பகைவர், நான்முகன்திரு. 71. (அண்டப்பகுதி.104.)
ஏந்தல் – தேங்கல், தாங்குதல், திருச்சந்த. 6
695
ஏமத்தூடி- நடுராத்தியில் ஊடி.பெருமாள். 6-10.
ஏமப்பட்டாளோகாவலிடப்பட்டாளோ.திருப்பா. –
ஏமாற்றம் – துன்பம். பெரியாழ். 2-7-8.
ஏய்த்தல் – ஒத்தல். திருவாய். 1-5-11.
ஏயான் – இரப்புக்குத்தகாதவன். பெரிய, 1-5-6.
ஏர் – அழகு, ஒப்பு. திருப்பா. 1
700 ஏர்விலா – தகுதியில்லாத.திருவாய். 7.9-5,8.
ஏலம் – வாசனை. பெரிய. 1-2-1.
ஏலும் – ஏற்கும். இரண்டாம் திரு. 16.
ஏவல்ல – எய்யவல்ல. இரண்டாம் திரு. 73.
ஏவலம் – அம்பின் திறமை. பெரிய. 9-5-8; 9-10-6.
705 ஏழ் – எழ. திருவாய்.1-5-1, எழுச்சி. 8-10-4.
ஏழ்ச்சி- விரிதல். திருவாய். 3-2-4.
ஏழ்படிகால்.ஏழுதலைமுறை. திருப்பல். 6 (தே.) 7-52-9.
ஆலங்காடு.
ஏழ்மைப்பிறப்பு -ஏழுபிறப்பு. திருவாய். 1-6-9.
ஏழளவும் . ஏழுதலைமுறையாக. பெரிய. 4-9-9.
710 ஏழிசை – தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி,
கைக்கிளை, திருவாய். 10-8-8; பெரிய. 3-10-1.-ஏழுதல் – பிரகாசித்தல். திருவாய். 1-5-1.
ஏழுமால் வரை ஏழுகுல பர்வதங்கள், கைலை. இமயம்
மந்தரம், விந்தியம்,நிஷதம், ஏமகூடம்
நீலகிரி என்பன 5 -2.
ஏழுலகும் தாள்வரையும் ஏழுத்வீபங்களும் பக்கத்திலுள்ள
சிறுமலைகளையுடைய பெரிய மலைகளும்.
ஏழுத்வீபங்களாவன. 1 நாவலந்தீவு, இறலித்தீவு,
இலவந்தீவு, கிரவுஞ்சத்தீவு, குசைத்தீவு, தேக்கந்தீவு,
புட்கரத்தீவு, பெரிய. 4-4-9.
ஏழுழியாய் -ஏழு கற்பங்களாகி. திருவாய். 5-4-8.
715 ஏழெழு பிறப்பு – ஏழு பிறப்புக்களிலும். ஏழுவகைப்
720
725
730
பிறப்புக்கள். 1 தேவர் 2. மனிதர், 3. மிருகம்,4. பறவை

ஊர்வன 6. நீர்வாழ்வன. 7. தாவரம். திருவாய். 2-7-1,4. ஏழை – அறிவில்லாதவன். பெரிய. 5-8-1. (கம்ப கங்கைப்.6 )
ஏற்பன – தக்கன.திருப்பள்ளி. 8.
ஏற்றான்- சிவபெருமான், எருதையுடையவன். முதல்திரு. 97.
ஏற்றை – தலைவனை. திருவாய். 3-6-6.
ஏறக்கொலோ – ஆவேசித்தானாகக்கூடுமோ. திருவாய்.
ஏறு – ஆண்சிங்கம். இரண்டாந்திருவந்.63. ஏறேழுடனே – ஏழு காளைகளை ஒரு க்ஷணநேரத்தில்.
பெரியதிருவந். 48.
ஏறேறி – சிவபெருமான். இரண்டாந்திரு. 63 ஏன்றேன்- பொருந்தினேன். நான்முகன்திரு. 95.
5-6-1,10.
ஏனம் – பன்றி. மூன்றாம்திரு. 89.
ஏனமுழுசாலில் தினைகள் – காட்டுப்பன்றிகள் நன்கு
உழுத சால்களிலே புதிய தினைகளை விதைத்த. மூன்றாந்திருவந். 89. (தே.) 2-114-5 கேதாரம். ஏனாகி – பன்றியாகி. பெரிய. 5-6-2.
ஏனொருவனாய் -ஏனம் ஒருவனாய்.(எதுகை)
நான்முகன்திரு. 70.
ஏனோர் – மற்றையோர். பெரிய. 1-5-7. போற்றித்திரு அகவல். 117.
ஐ – கோழை. பெரிய. 1-3-7 திருவாய். 2-9-3. ஐங்கனாணவில்லி – மன்மதன். பெரிய 9-5-7. ஐதுநொய்து – மெல்லிது. பெரியாழ். 5-4-8. ஐந்தழல் – பஞ்சாக்கினி. உதராக்கினி, சூரியதாபாக்கினி, தவாக்கினி, நிதாககாலாக்கினி. இரவிகாந்தாக்கினி. பெரிய. 5-5-9.ஐந்துநோய் – ஐந்து விஷயங்களாகிய நோய், சப்தாதிகளாகிற
நோய். திருவாய். 7-1-5.
ஐம்படை -பஞ்சாயுதமாகிய அணி. பெரியாழ்.1-3-5; 1-5-9, 10.
ஐம்பால் – ஐந்துவகையாக முடிக்கும் கூந்தல். பெரிய. 7-5-3.
ஐம்புலன் – பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகை உணர்ச்சிகள்.
திருவாய். 1-9-9.
ஐம்பூதம் – பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாயம்.
பெரிய. 4-69; இரண்டாம்திரு. 26.
ஐயம் – தியாகம் உபாதானம் இடுதல். திருப்பா. 2.
740 ஐயறிவும் கொண்டானுக்கு- ஐம்பொறி ஞானம். பெரிய. 7-4-7
ஐவர் -பஞ்சேந்திரியங்கள். பெரிய. 1-6-8; 9-6-5.
ஐவர்குமைக்கும் சிற்றின்பம் – பஞ்சேந்திரியங்களும்
பீடிக்கும்படியான சாரமற்ற விஷயங்கள். திருவாய். 6-9-9.
குமைக்கும் – நலிகிற.
ஐவரால் குமைத்தீற்றி நலிவுண்ணும்படிபண்ணி. திருவாய். 6 7-1.
ஒக்கலித்திட்டு – நடைபழகி. பெரிய. 3-3-1.
745 ஒக்கலை – மருங்கு. பெரியாழ். 1-4-4; திருவாய். 1-9-5.
ஓசித்தல் – ஒடித்தல். முதல்திரு. 27, திருவாய். 1-9-5.
ஓசிதல் – தளர்ச்சியடைதல், முறிதல் திருவிருத்.37.
ஒட்டார். பழிப்பார். நாச்சி. 3-3,சம்மதியார். 3-7.
ஒட்டி – இசைந்து, பொருந்தி. திருவாய். 1-7-7.
750 ஒட்டுகை- இசைகை, திருவாய். 1-7-7.
ஒட்டுவனோ – இசைவேனோ. திருவாய் 1-7-7.
ஒண்ணுதல் – பிரகாசமான நெற்றியையுடைய பெண்.
திருவிருத்50.
ஒத்து அணிவகை. பெரியாழ். 1-2-2.
ஒருக்கருத்து – ஒருமைப்படப்பிடித்து. திருவாய். 8-6-2.
755 ஒருக்கா – அடக்கமாட்டாமல். திருவிருத். 64.
ஒருகாலிருகாற்சிலைவளைய. பெரிய. 1-5-4.
(திருக்கோவையார். 152).
ஒருங்கப்பிடித்து ஒருமிக்கப்பிடித்து. திருவாய்.5-8-8.
ஒருங்க மல்லரைக் கொன்று – பெரிய.4-2-4. (தே. 4-32-9.
பயற்றூர்
ஒருங்கிற்று – சேர்ந்தது. பெரியதிருவந்.54.
760 ஒரு தாரா ஒரு மாலையாக. பெரிய. 8-10-2.
ஒரு நான்று ஒரு நாள். நாச்சி. 13-9; ஒருகால்.திருவாய். 6-2-7.ஒருப்படுத்த – ஒருமைப்பாட்டோட சமைத்த. திருவாய். 5-10-5.
ஒருபாடு -ஒருபக்கம். திருவாய். 8-3-7.
ஒருவன் என்று ஏத்த நின்ற – ஒப்பற்ற கடவுள் என்று
அடியார்கள் துதிக்கும்படி நின்ற. திருவாய். 3-4-8.
765 ஒல்குதல்- நாணங்கொண்டு கூசுதல்.
ஒல்லை- விரைவு. திருப்பா.15.
ஒலிகள்- பாடல்கள். பெரிய. 2-7-10; 4-5-10; 9-1-10.
ஒலி ஐந்துமைந்தும் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பத்துப் பாசுரங்களும். பெரிய. 2-10-10.
770
775
780
785
ஒலிசெய்த அருளிச்செய்த. பெரிய. 8-8-10
ஒலிமாலை – அருளிச் செய்தபாமாலை. பெரிய. 1-3-10;
3-10-10; 5-10-10. 8-10-10. (தே.) 3-54-8. பொது திருப்பாசுரம். ஒளிவட்டம் கண்ணாடி. பெரியாழ், 1-4-3.
ஒற்கம் – ஒடுக்கம். திருவாய். 1-8-4.
ஒற்றைப்பிறை – ஒரு கலையையுடைய சந்திரன். திருவாய். 1-9-10. ஒன்றிரண்டு கண்ணினான் மூன்று கண்களையுடைய
சிவபெருமான். திருச்சந்.7.
ஒன்று இடக்கிலேனொன்றட்ட கில்லேன்- பிடிசோற்றை இடேன் ஒருமிடறு தண்ணீரை வார்க்க மாட்டேன்.
திருவாய். 4-7-9.
ஓஒ உலகினதியல்வே – ஹாஹா என்ன ஆச்சரியம் உலகினது
தன்மை. திருவாசிரி. 6. ஓகெடுவினையேன் – மகாபாபி. பெருமாள். 7-6. ஒக்குதல் – உயர்த்துதல். இரண்டாந்திருவந்59. ஓசலித்தல் – அசைதல். பெரியாழ். 4-9-1.
ஓசனையான் – கும்பகர்ணன். (கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு யோசனை உள்ளது பற்றி. நான்முகன்திரு.29 ஒட்டருதல் – ஓடிவருதல். பெரிய, 4-3-9.
ஓட்டைமாடம் – நிலையற்ற உடல்.திருமா. 6. ஓணவிழவு – திருவோணத் திருநாள். நான்முகன்திரு. 41. ஒத்து – வேதம். பெரிய. 5-9-6. இரண்டாந்திருவந்.39.
ஒத்தொலி மறையொலி. பெரிய. 5-9-6.
(தே.) 1-41.5. திருப்பாம்புரம்.
ஓதம் – குளிர்ச்சி, அலை, முதல்திருவந். 16. ஓதி – கூந்தல். முதல்திருவந். 33.-ஓர்ப்பால் – ஆராய்ந்தறிகையால். திருவாய். 4-6-1.
ஓராமை-ஆராய்ந்தறியாமை சிறியதிரும. 10, 11.
790 ஓரீற்றுப்பிடி ஒரு குட்டியை ஈன்றபெண்யானை . பெரியாழ். 3-5-2.
ஓலமிடல் – அபயக்குரலிடுதல். திருவாய். 4-3-6.
ஓவி – சித்திரம் பெரிய, 2-8-7.
ஓவுதல் – ஒழிதல். திருவாய். 3-2-8.
ஒளித்துகிற்படலம் -ஒழுங்கு பெற்ற கொடிச்சீலை.
பெரிய. 6-9-4.
795 கங்கு -எல்லை, இராத்திரி – திருவாய். 5-4-7.
கங்குல்- இரவு. திருப்பள்ளி – 5, திருவாய்- 7-1-11, 7-2-1.
கச்சங்கம் – பிரதிக்ஞை, வியவஸ்தை – நாச்சி. 5-8.
கச்சி – காஞ்சிபுரம், மூன்றாம் திருவந். 26, பெரிய. 2-6-5,
கசிகை- ஈடுபாடு-கசிகையும் வேட்கையும். திருவாய். 10-3-8.
800 கஞ்சு – கஞ்சன் – நாச்சியார் 13-3, பெரிய. 2-6-7, மூன்றாந்
திருவந். 4.
805
கஞ்சை- கஞ்சனை. மூன்றாந்திரு. 34.
கட்கண்(உட்கண்). பெரியதிருவந். 28.
கட்கிலீ – கண்ணுக்குக் காணவொண்ணாதவன்.திருவாய். 7-2-3.
கட்டம்- கஷ்டம். திருவாய். 7-2-4, திருச்சதகம். 48.
கட்டழித்தல் நிலை குலைத்தல். திருச்சந்த.
கட்டி – வெல்லம். நாச்சி. 1-7.
கட்டு – அரண். திருவாய். 6-6-10,
கட்டுப்படுத்திரேல் – சிறிய திரும.19.
கட்டுரை – நற்செயல். திருவாய். 3-1-1.
54.
810 கட்டுவிச்சி – திருநெடுந். 11. சிறியதிரு. 20; திருவாய். 4-6-3.
கட்டேறி – தெய்வ ஆவேசம் கொண்டு. சிறிய திரும. 20.
கடம்- காடு, மதநீர், பாபபலம்,அவசியம் செயற்பாலது
நான்முகன்திரு. 52.
கடமை – கடன். திருவாய். 3-3-6.
கடல் கடைந்து அமுதம் கொண்ட. திருவாய். 3-4-9.
அழகர் கிள்ளை. கண்ணி. 73.
815 கடலே – உவர், நன்னீர், பால்,தயிர்,நெய், கருப்பஞ்சாறு. பெரியாழ்.
கடவன் – கடமைப்பட்டவன், எசமானன்.
கடாகின்று – கடாவுக இன்று. திருவிருத். 50.கடாய் -பாதுகாக்கப் பெற்ற. திருவிருத். 49.
தடாயன – உபயோகிக்கத்தக்கன. திருவிருத். 6.
கடாரம் பெரிய பாத்திரம். பெரியாழ். 1-1-6, 2-4-3.
கடாவுதல் – செலுத்தல், திருவாய். 7-3-1.
கடி- காவல், மதிள், வாச னை. பெரிய. 10-2-6.
கடிகாவையிறுத்து – அசோகசவனத்தை அழித்து. பெரிய.
10-2-6.
கடிகைத்தடங்குன்று சோளசிங்கபுரம். பெரிய. 8-9-4.
825 கடிப்பு – ஒருகாதணி. பெரியாழ். 2-3-2.
கடிறு களிறு. ளகரத்துக்கு டகரம் வந்துள்ளது.
பெரியாழ். 3-2-6.
கடுவன் – ஆண்குரங்கு. மூன்றந்திரு. 68; புறநா. 158.
அடி. -23, 200-2; குறுந். 26,278.
கடுவினை – தீவினை. திருவாய். 10-2-8. கடைகயிறு – தயிர் கடைகின்ற கயிறு. பெரியாழ். -3- -8.
830 கடைக்கொண்டு – பெரியாழ். 4-4-7, கடைத்தலை- திருவாசல் – திருவாய்-10-2-7; திருமா. 38.
கடையா – மூங்கிற்குழாய் திருவாய்- 4-8-4.
கண்- இடம் – பெரிய- 7-10-6. கண்களுக்கற்றுத்தீர்ந்து – புறம்பேபற்றற்று அனந்யர்ஹமாயிருக்கிற திருவாய் 7-3-3.
835 கண்டகர் – முன்போலக் கொடிய ராக்ஷஸர் – பெரியாழ். 4-8-4. குலாப்பத்து. 86.)
840
கண்டம் தேவப் பிரயாகை- பெரியாழ். 4-7. கண்டல்-தாழை.
கண்டாய்-கிடாய்- இரண்டாந்திரு.51.
கண்டீர் – கண்டு, கேட்டு. இரண்டாந்திரு. 75.
கண்டுரைத்த தமிழ்மாலை – பெரிய. 3-6-10. கண்ணநீர் – திருவாய். 678. கண்ணறாய்- தயவில்லாதவனே. திருமா. 44. கண்ணாலங் கோடித்து- கலியாணம்- நாச்சி.- கண்ணாளன் – பெரிய 11-6-7.
11-9.
845 கண்ணிக்கயிறு- முடிகளையுடையகயிறு திருவிருத்.91. கண்ணியார் குறுங்கயிற்றால்- முடிகளார்ந்த குறுங்கயிறு பெரிய. 5-9-7- 11-5-5. கண்ணுதல் கூடிய அருத்தனை- பெரிய, 7.10-7. கண்ணுறக்கம் நித்திரை – பெரிய. 4-5-5.-கண்படை- தூங்குதல் முதல்திரு- 19; நாச்சி- 4-9-10;
திருவாய்-4-9-10.
850 கண்புதைத்தல் மறைத்தல். (திருக்கோவையார். 43: சீவக. 1982.
கண்முகப்பே- கண்ணுக்கெதிரில் – திருவாய்-47-4;6-4-11;9-2-7-8.
கண்முதலியவை – பெரிய-11-7-1-9.
கண்மூன்றத்தானும் – சிவன். நான் முகன்திரு-42.
கணகணப்ப- கணகண என்று ஒலிப்ப. பெரிய. 4-4-8-(தே)
1-21-7 சிவபுரம், 4-28-1அதிகை.
855 கணபுரம் பெருமாள். -8-1-11, திருநெடுந் -16; பெரியதிருவந் 90.
சிறிய திரு. 72.
கணவலரும் அலரியும் – பெரிய. 11-7-6.
கணி -சோதிடன். பெரிய.
கணைநாண் – அம்புவிடுங்கயிறு.
கணைபாரித்து – அம்புகளைப் பிரயோகித்து. பெரியாழ். 4-3-7.
860 கத்தக்கதித்து- மிகவும் கொழுத்து- பெரியாழ் – 1 -9-6.
கத்திரபந்து – க்ஷத்ரபந்து- க்ஷத்திரியர்களுள் அதமன். திருமா. 4.
கத்திரியர் – க்ஷத்திரியர். பெரியாழ். 1-9-6.
கதவி – கோபித்த. இரண்டாந்திரு. 99.
கதலி-வாழை. பெரிய. 3-9-3. 4-10-1.
865 கதிரவன் – சூரியன். திருப்பள்ளி. .
கதுவப்படுதல் – கவ்வப்படுதல். நாச்சி. 8-2.
கதுவாய் – புண்பட்டவாய். பெரியாழ். 3-5-5.
கதுவாய்ப்படுதல் – வடுப்படுதல், வெறுந்தரையாம்படி.
பெரியாழ். 3-5-4.
கந்தாரம் – தேவ காந்தாரி ராகம் – பெரிய. -3-9-1.
870 கந்து – கந்தம். பெரிய. 6-7-8.
கப்பம் தவிர்க்கும் கலியே- நடுக்கத்தைப் போக்கும்
கண்ணனே .திருப்பா.20.
கப்பு – தோள். பெரியாழ். 3-1-5; காம்பிலடியிலுண்டானகிளை.
கபாலநன்மோக்கம் – பிரமகபாலத்தையொழித்தல்.
திருவாய். 4-10-4.
கபாலி – சிவன்; துர்க்கை. பெரியாழ். 2-8-8.
875 கபிலை- பசு. படிமைக்கலம் – திருப்பள்ளி.
கபோதம் – புறா, கொடுங்கு – பெரிய. 3-8-2.
கம்பம்-நடுக்கம். பெருமாள். 4-5-கம்பக் கபாலி – நடுக்கத்தைக் கொடுக்கவல்ல துர்க்கை.
ருத்ரனுமாம். பெரியாழ் -2-8–8
கமலத்திலை போலுந்திருமேனி – திருவாய்.9-7-3.
880 கமுகு – பாக்குமரம் – பெரிய. 2-10-7; 3-1-94-2-1.
கமுகம்-பாக்குமரம் பெரிய -3-10-4.
கமை- ( மை .பொறுமை. பெரியாழ்வார். 4-7-4.
கயம்-தடாகம், க்ஷயரோகம், யானை. பெரிய. 8-5-4. 8-7-1.
கயல்-கயல்மீன் – பெரிய. 1-8-10, 2-7-5, 3-2-9, 3-9-1. 8-7-3
885 கயவர் -மூடர்
34
கயிறு மாலை கயிற்றில் தொடுத்த பூமாலை – பெரியாழ் -3-6-1.
கரண்டம் – நீர்க்காக்கை, திருச்சந்த. 62.
கரணப்பல்படை – போர்க்கு உபகரணமாகிய பல்படை-
திருவாய்- 8-3-2.
கரத்தல் – ஒளித்தல் திருவாய்-1-1-7.
890 கரம்- கை, உறுதி. திருவாய். 7-8-9. திருச்சந்த. 25.
கரம் விற்கிலும்- நெல்விற்கும்படியான துர்பி காலத்திலும்.
பெரிய. 4-4-10.
கரா – கராம்- முதலை.
கரிமுகத்தான்-யானைமுகமுடைய விநாயகன்.
கரிய நாழிகை- அந்திக்காலம் பெரிய- 8-5-6.
895 கரியவாகி -அம.8.
900
905
கரு- கல்பிரதிமை,கர்ப்பம்.
கருக்காய் பிஞ்சு.கருக்காய் கடிப்பவர் திருவிருத்.64.
கருந்தேவன் – திருவாய். 9-3-4
கருநாயிறு – கருமை நிறமுடைய சூரிய மண்டலம்
திருவிருத்-17, திருவாய் -8-5-2.
கருநெல்- கருவடைந்த நெற்பயிர்- பெழி. 10-1-1.
கருப்புச் சிலை – கரும்பு வில்.
கரும்பு கண்வளரும். பெரிய. 2-10-4.
கருமாணிக்கம் கரிய மாணிக்கம் போன்ற வடிவுடையவன்.
திருவாய். 2-7-4,
கருமுகை – இருவாட்சி, சிறுசண்பகமுமாம். திருவாய். 9-9-10.
கருமேந்திரியம் ஐந்து – உபஸ்தம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு.திருவாய். 10-7-10.
கருவரங்கத்துள் – கர்ப்பஸ்தானத்தில் – முதல்திரு- 6. கருவிருந்தநாள் – கர்ப்பத்திலிருந்தநாள்- நான் முகன்திரு- 92.

கருவிளை மலர்காள் – காக்கணம் பூக்களே- நாச்சி- 9-3.
கருவூர்- பெரிய. 2-9-7.
910 கருளக்கொடி கருடக்கொடி- பெரியாழ். 5-1-1; நாச்சி-5-4.
கரை ஓசை. பெரிய- 8-3-1.
கரையாய் காக்கைப் பிள்ளாய் – பெரிய-10-10-2.
கல் (ஏவல்)- கற்றுக்கொள் – பெரியதிருவந்- 67.
ஒலி. பெரிய -2-7-3-10.
கல்கி- குதிரை முகத்துடன் அவதரிக்கும். பெருமாள்.7-6.
915 கல்வி- சாதுர்யம் – பெரியாழ்-2-9-1.
920
கல்விச்சிலை – தனுர்வேதம் பெரிய-8-6-3.
கலக்கழிய கட்டுக்குலைய. பெரியாழ்-2-2-4, 2-8-7; திருப்பா-6.
கலம்பகம் – திருப்பள்ளி. 5.
கலவர் – மரக்கலத்தினுள்ளேயிருப்பவர் – பெரிய – 11-8-2.
கலவி-கலத்தல். பெருமாள்- 1-6. திருவாய்-8-10-7.
பெரிய-9 -8-1.
கலவிருக்கை கொலுவிருத்தல் பெரியாழ் – 4-9-7.
கலாய்- கலந்து. திருவாய்-4-6-8.
கலி- காலதோஷம், கலி புருஷன் – இராமா நுஜ – 16,34.
திருவாய் 5-2-1.
கலிகன்றி- திருமங்கையாழ்வார் – பெரிய தனியன்-1
பெரிய. 11-6-10;2-5-10.
925 கலிங்கம்- ஆடை. பெரிய. 10-8-1.
கலுழி – கலங்கல், வெள்ளம் திருநெடுந் – 6.
கலை – ஆடை, சாஸ்திரம்,அம்சம், பக்கம். பெரிய-9-1-10.
கலைப்பாகி – ஆண்மானை வாகனமாகவுடைய துர்க்கை.
பெரியாழ்வார்-1-3-9.
கவ்வை- பழிச்சொல் – திருவாய் – 5-3-4; பெரிய-4-5-2.
930கவண் – கல்லெறி கயிறு.
கவந்தம் – தலையற்ற உடல். பெரிய. 9-8-5.
கவரி செய்வார் சாமரை வீசுதல் முதலான
கைங்கரிங்களைச் செய்வார்கள் – திருவாய்-7-6-11
கவரிப் பிணா – சாமரம் வீசுகின்ற பெண்கள் – நாச்சி- 1-4.
கவளமால் யானை- (எதுகை விசேடம்) – திருமா.45.
935 கவாடம்-கதவு பெரியதிரும 73.
கவி – குரங்கு- மூன்றாம்திரு 84.-கவிஞர் – வித்துவான்கள்.
கவிதை- பாட்டு- பெரிய-7-2-2.
கவின்- அழகு பெரிய. 3-1-6.
940 கவுட்கொண்ட நீராம் – பெரிய – 10-9-8.
கவுள் – கன்னம்- பெரிய – 10-9-8.
கவை- பிளவு 3-2-4.
கவையின் மனமின்றி வேறொன்றிற்புகும் மனமின்றி.
திருவாய் 9-8-3.
கடிகண்டு- தீம்பு . இது ‘கழகு” எனவும் வழங்கு.
பெரியாழ்வார்-2-4-6. (தே.) -5-13-8 வீழிமிழலை.
945 கழகம் – கூட்டம் “கழகமேறேல் – திருவாய் – 6-2-6.
கழல் விளையாட்டுக் கருவி.
கழல்கமவம் – திருவடித்தாமரை.
கழல்வளை (கை வளைக்கும் கழல்வளையென்று
இடுகுறிப்பெயர், நாச்சி11-2.
கழறல்- கிலேசப்பட்டுச் சொல்லுகை- பெரிய – 3-2-10.
950 கழறாநிற்றிர் – நியமியாநின்றீர் – திருவாய் 7-7-9.
கழிகோல் வீசுகோல், கன்றின் வாயில் கட்டும்
கொறுக்கோல். திருவாய்4-8-4.
கழி நேர்மை கழிவையுடைத்தான நுண்மை- திருவாய்- 8-8-2.
கழுது – பேய், பூதனை. பெரிய. 3-8-6.
கழுதை உதடாட்டங்கண்டு என்பயன் – திருவாய்-4-6-7.

கழை -மூங்கில்.
36
கள்கின்ற – திருடுகின்ற -(எதுகை) திருவாய்7-7-9.
கள்வங்களே கிருத்திரிமவியாபாரங்கள். திருவாய்-9-6-5-6, 10-4-5.
கள்ளமே காதல் செய்து- திருமா-24.
களகம்- அன்னம், சாந்து, நெற்கதிர் – பெரிய – 6-9-10.
960 களகமதின் – சாந்தையுடையமதிள் – பெரிய. 6-9-10. (தே)1-102-3.
களவம்- களா. யானைக்கன்று பெரிய. 11-6-4.
களவே – களவு பிரகாசிக்கும்படி-திருவாய் -1-5-1.
களனிழைத்து – தேவாந்திர சன்னிதானம்- திருவாய்-4-6-4. களிதாகிய சிந்தையனாய்- மிகுகளிப்பையுடைய. திருவாய்-10-8-4.
965 களிறட்ட பொன்னாழிக்கையென்னம்மான் -திருவாய். 8-10-6,10;
களைகண்-ரக்ஷகர், பற்றுக்கோடு. திருவாய். -5-8-3,8, கற்பகத்தின் வல்லி- திருவாய் -7-7-1,-கற்பம்- வேதாங்கங்களில் ஒன்று.
கற்பார் புரிசை- பெரிய. 5-1-4.
கற்புவானிடறி- பெண்மைக்குணம். திருவாய்-6-7-2.
கற்பு – அறிவுடைமை, இழந்ததுகற்பே- திருவாய். 6-6-5.
கற்றமொழியாகிக் கலந்து- நான் முகன்திரு. 81.
கற்றா -கன்றையுடைய பசு – பெரிய -5-1-10.
கற்றினம் – கன்றுகளின் கூட்டம் நாச்சி-12-8; பெரியாழ்.2-5-5;
பெரிய-8-10-3.
975 கற்றைக்குழல் – பெரிய. 2-6-7.
கறங்குதல் – ஒலித்தல்.
கறந்த பாலுள் நெய்யே போல் – திருவாய்.8-5-10.
கறவு -கப்பம். பெரிய. 10-7-10.
கறவை கறக்கும்பசு. திருப்பா.11,28.
980 கறி- மிளகு. பெரிய.
கறு- கோபம். பெரியாழ். 2-8-6.
கறையார் நெடுவேல்- பெரிய. 6-4-10.
கறையினார் துவருடுக்கை திருவாய். 4-8-4.
கன் பறை கறங்க-பெரிய. 11-5-6.
985 கன்றுகள் இல்லம் – பெரியாழ். 2-8.2.
கன்றுகள் காதில் கட்டெறும்பு பிடித்துவிடல் – பெரியாழ். 3-8-2.
கன்னல் – கருப்பஞ்சாறு. பெரியாழ். 2-9-9.
(கன்னலிலட்டுவத்தோடு சீடைகாரெள்ளின் உருண்டை).
கன்னார்மதிள் – தொழில் நிரம்பிய மதில். திருவாய். 5-8-3.
தே. 2-40-11 பிரமபுரம்.
கன்னி – இளம்பெண், அழியாமை. பெரியாழ். 3-1-6.
990 கன்னிமதிள் – பெரிய. 6-7-10.
கனகக்கடிப்பு – பொன்னால் செய்த ஒரு காதணி
கனங்குழை – கனமான குண்டலம்.
கனகம்- பெரியாழ். 1-3-8.
கனியிலிருந்தனைய செவ்வாய் -திருமா.18.
995 கா- சோலை- திருவாய். 6-5-6.
காஅடியேன் – இரண்டாந்திரு. 10. கா – வினைமுற்று.
காகுத்தன்- இராமன். சூரிய குலத்தரசன். திருவாய். 5-4-3;
நான்முகன்திரு. 53; அம. 2; பெருமாள். 9-4
காசையாடை -காஷாய ஆடை. பெரிய. -2-2-1.
காட்சி – தோற்றம். (தே. 3-45-10 ஆரூர் )-காண் – அழகு. திருவாய். 7-4-5.
காண்கின்றனகளும் -காணப்படுகின்ற செய்கைகளும்.
திருவிருத்8.
காண்டவம்- காண்டவ்வனம்.பெரிய. 2-5-2.
காணக்ொடாள்-காண இடம் தருகின்றிலள்.
திருவாய். 5-5-7-10;
காத்தனே – காத்தவனே. பெரிய. 4-6-7-
1005 காதணி (காதலிமார் குழையும்) மாங்கல்யம் போல்வது.
பெரிய. 4-4-1 மதுரைக் கலம்பகம்.”நம்பா”
காதல் – அன்பு .பெருமாள். 10-6.
காதலன் – கணவன். பெருமாள்5-2.
காதுகள் தூரும் – குத்தப்பட்ட காதுகள் தூர்த்துவிடும்.
பெரியாழ். 2-3-8,9.
காது செய்வான் – செவி செய்பவன். திருவாய். 9-1-9.
1010 காந்தப்பர் – கந்தருவர்கள். பெரியாழ். 3-6-6.
காப்பு -பாதுகாவல், ரட்சை.திருப்பல் 1.
காபாலி -பிரமகபாலத்தைக் கையிலேந்திய சிவன்.
பெரிய. 1-3-2.
காம்பற – தொற்றற, சம்பந்தமற. திருமா. 38. காம்பு – சிறுகாம்பன்சேலை. பெரியாழ். 1-3-8.
1015 காமம் – அபீஷ்டம்.(விருப்பம்). திருப்பா. 29. காமதேவா – மன்மதா. நாச்சி. 1 -3-4,6,8
காமரங்களிசை பாடும் – காமரம் என்னும் இசையைப்
பாடுகின்ற. பெருமாள். 8-4.
காமரானவாறும் – ஸ்திரீகள் தன்னை விரும்பியிருந்த
படியையும் பெரிய. 7-6-5. காய்தல் – கோபித்தல், பெரிய. 7-6-5.
1020காயகாயா. குறுக்கல் விகாரம். பெரியாழ் – 5-6.
கார் – சினை, பெருமை, நாச்சி. 9-2. பெரிய. 8-4-5. கார்க்கண்டன் -சிவன். நான்முகன்திரு. 87.
கார்க்கலி- அஞ்ஞானமாகிய தோஷம். கார்க்கோடற் பூச்சூடுதல் பெரியாழ். 3-3-3.
1025 கார்த்தல் – அரும்புதல். திருவிருத் 68. கார்த்தனவே – கருவடைந்து அரும்பின.திருவிருத். 68. கார்த்திகையான் – சுப்பிரமணியன். இராமாநுஜ. 22.காரார்புறவின் மங்கை- பெரிய. 1-5-10.
காரிகை – அழகுடைய பெண். திருவிருத் 19.
1030 காரேழ் – சம்வர்த்தம். ஆவர்த்தம், புஷ்கலாவர்த்தம்,
துரோணம். காளமுகி,நீலவர்ணம்.
கால்- காற்று, சக்கரம், நுனி. நாச்சி. 1-8.
காலசக்கரம் – காலத்தை நடத்துகிற திருமொழி
திருவாய். 4-3-5,6, 7-2-7.
காலம் பெற . தாமதமாகாதபடி. திருவாய். 5-2-1, 7-3-5,6.
காலம் பெறச் சிந்தித்து காலந்தாழ்த்தாமல் உடனேயே
நினைத்து. திருவாய். 4-1-1.
1035 காலன் – யமன்.
காலாழும் -கால் அழுந்தும். பெரிய திருவந். 34.
காலி – பசுக்கூட்டம். பெரியாழ். 1-5-2,-2-6-7, 3-4-10.
காவவன் – அரசன். பெருமாள்.7-11.
காவி – நீலோற்பலம். திருவாய். 5-4-2, 1-9-8.
1040 காவு -விளையாட்டுச்சோலை – திருவாய். 6-3-5.
காள நன் மேனியினன் – திருவாய்-9- 3-1.
காளம் -வாத்திய விசேடம், கறுப்பு.
காற்றத்திடைப்பட்ட கலவர்மனம். பெரிய. 11-8-2.
காறை-கழுத்திலணியும் ஆபரணம் பெரிய. 3-7-8.
1045 கான்- காடு, வாசனை – பெரிய. 2-3-9.
கானதர் – காட்டுவழி- பெரிய. 3-2-3
கானகம்படியுலாவி – பெரியாழ். 3-6-4.
கானவர் -காட்டில் திரியும் வேடர் .
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூ – திருப்பா- 22.
1050 கிஞ்சுகம் – கிளி. பெரிய- 3-7-7.
கிடங்கு – அகழ் – பெரிய. 5-2-8. முதல்திருவந். 77.
கிதயுகம்- கிருதயுகம் – திருவாய். 5-2-3.
கிதி – கிரியை (நிகழ்காலச் செய்கை) திருவாய்- 5-6-4.
கிரமாலங்காரம் – பெரிய- 2-10-2, 3-4-1, 3-8-4, 4-2-2, 6-7-7.
1055 கிரிசை – கிரியா- திருப்பா- 2, நான்முகன்திரு – 95, திருவாய். 2-7-2.
கில்லேன்- மாட்டேன் பெரியாழ் -2-3-12, 2-9-8. நாச்சி-1-5,
திருவாய். 3-9-7.
கிழி -பணமுடிப்பு பெரியாழ்தனி – 1,2.
கிலிர்தல்- விளங்குதல் பெரியாழ். 4-8-6.
கிளரிக்கிளரி வருந்தி எடுத்தெடுத்துக் கூறி திருவிருத் – 8311060 கிளப்பைதலே – (பைதல் இளையது). திருவாய். -9-5-6.
கிளியைக் கைமேற்கொள்ளல் – பெரிய. 4-4-6.
கிற்கின்றியேன் – சக்தியற்றவன். பெரிய. -9-5.
கிற்பன்கில்லேன் – வல்லேன் மாட்டேன். திருவாய். 3-2-6.
கிற்றி – வல்லை – நாச்சி- 5-8.
1065 கிறி – தந்திரம் பெரிய. 3-8-2, திருவிருத்91.
சிறுபவளவடம். பெரிய . 192, திருவாய்.2106.
கிறிக்கொண்டு-உபாயத்தைக் கொண்டு. திருவாய். 2-3-8, 2-10-6.
கிறியம்மான் – நல்விரகையுடைய சர்வேசுவரன் – திருவாய்
4-8-6.
கின்னரம் – தேவ வாத்தியம் – பெரியாழ். 3-6-5.
கீசுகீக -ஓர் ஒலிக்குறிப்பு,ஒரு சார் பறவையொலி.
திருப்பா.7.
1070 கீர்த்தித்த – துதித்த – திருவாய். 7-9-2. கீழ்க்கன்று- தம்பி நாச்சி. 14-1. கீழ்து பிளந்த கீழதாம்படி திருவாய். -7-4-6. கீழ்மேல் ஏழெழு பிறப்பும் – கீழும் மேலுமாகிய ஏழெழு பிறப்புக்களிலும் திருவாய். 2-7-1. கீழையகம் – கீழைவீடு – பெரிய 10-7-1.
1075 குக்கர் – சண்டாளரிற்றண்ணியர் – திருமா.
குக்கூடல் – முட்டாக்கு பெருமாள்-6-5.
குஞ்சி – ஆண்தலை மயிர் – பெருமாள்.89. குட்டநாடு – திருவாய். 8 -9-1.
குட்டம் – மடு பெரிய. 3-5 -7, பெரிய. 11-4-4.
1080 குட்டன் – குமாரன் – பெரிய் – 1-4-2.
குட்டேற்றை சேங்கன்றை- நாச்சி- 14-2. குடக்கூத்தனுக்கு திருவாய். 4-10-10.
குடக்கூத்தனை – திருவாய்ப்.3-6, 3-7.
குடக்கூத்து பெரிய. 2-7-7, நாச்சி. 3-6
39.
1085 குடங்கலந்தாடி பலகுடங்களைச் சேர்த்து எடுத்தாடி- பெரிய. 9-8-6.
குடங்கள் தலை மீதெடுத்துக் கொண்டாடி- பெரிய திருவந். 31. குடங்கால் மடி, முழங்கால்- திருநெடுத் 11, பெரிய, 5-5-1, 10-4-3. நான் முகன்திரு. 44
குடங்கை – உள்ளங்கை பெருமாள். 7-7 திருவிருத். 11,24. குடதிசை மேற்குத்திசை – திருமா. 19.1090 குடந்தைகிடந்தார் – பெரியாழ்- 2-6-6.
குடமாட்டும் – குடக்கூத்து – பெருமாள்- 7.9.
குடமாடி – குடக்கூத்தாடி- நாச்சி- 13-2, பெரிய 5-5-6, 6-9-4.
திருவிருத் 38, பெரியதிரும- கண்ணி. 143. இரண்டாந்திரு. 98.
குடமாடிய கூத்தனை – குடக்கூத்தாடினவன் – பெரிய- 7-3-3.
குடமா – பெரிய- 3-6-8, 6-3-9.
1095 குடமாடுதடமார்வர் – குடக்கூத்தாடினவனும்
மார்பையுடையவனும் ஆகிய பெருமாள். பெரிய 5-10-1.
குடமிரண்டு ஏந்தியாடுமது சிறிய திரும-12.
குடமூக்கில் – கும்பகோணக்ஷேத்திரம்- இரண்டாந்திரு -97
குடுமி மலையுச்சி. திருவாய்- 2-10-2.
குடைந்து – அமிழ்ந்து- திருப்பா- 13.
1100 குடையேற – குடை முதலாக நான்முகன்திரு- 43.
குண்டர்- நீசர், ஆழம், தாழ்ச்சி,நீசம் – பெரிய -2-6-5.
குண்டிகை – கமண்டலம்- நாச்சி- 9.
குண்டு- ஆழம் நாச்சி – 2-3.
குணதிசை – கிழக்குத்திக்கு – திருமா. 19.
1105 குணாலமாடுதல் – குணாலைக்கூத்து தலைகீழாக
ஆடுவதொரு கூத்து பெரிய- 4-6-9.
குணில்- குறுந்தடி- திருப்பா- 26.
குணங்குநாறி முடைநாற்றம்நாறி – பெரிய- 2-4-1, நாச்சி 14-2.
குத்தாலொக்கும் – குத்தினாற் போலேயிராநின்றது- திருவாய். 95-9.
குத்து விளக்கு – திருப்பா. 19.
1110 குதற்று மிடுக்குக்கள் – திருவாய்- 10-1-5.
குதிரியாய்- (குஸ்திரி)- அடங்காதவள் – திருவாய்-5-3-9.
குதுகலிப்ப – ஆசைப்பட – பெரியாழ்- 3-6-1.
குதைகை – தடுமாறுகை – நான் முகன்திரு-21.
குதையும் வினை – அலையப்பண்ணுகிற துஷ்கருமம்.
நான்முகன்திரு. 81
1115குந்தி – குந்திக்கொண்டு, வினையெச்சம் – பெரிய-4-2-9.
குப்பாயம்- சட்டை- பெரிய. 3-5-6, நாச்சி. 14-4,
பெரியாழ். 3-5-6, நாச்சி. 14-4.
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை – குப்பையைக்
கிளறினாற்போலத் தோஷமே தோன்றும்படியான
செல்வமுடையாரை திருவாய். 3-9-5.
கும்மாயம் – புழுக்கிய பச்சைப் பயறோடு சருக்கரை

குழகி – விளையாடி -திருவாய். 6-2-6.
குழகு – அழகு திருவாய். 5-10-2.
குழகேலே விளையாடாதே – திருவாய்.6-2-5.
1045 குழமணன் கொண்டு- மரப்பாவை கொண்டு- திருவாய் -6-2-6.
குழமணி தூரமே – குணாலைக்கூத்துப் போலே தோற்றார்
தோல்விக்கீடாக ஆடுவதொரு கூத்து. பெரிய -10-3-1-10.
குழல் – கூந்தல் – பெருமாள். 6-2.
குழல் முழஞ்சுகளின் ஊருகுமிழ்த்து – வேய்ங்குழலினுடைய
துளைகளிலே நீர்க்குமிழி வடிவாய்க்கிளர்ந்து.
பெரியாழ். 3-6-11.
குழாவரிவண்டு – குழாமாகியவரி வண்டு-பெரிய. 2-10-4.
1150 குழிய – குழவிய – கூடிய – திருவிருத் 84.
குள்ளக்குளிர – மிகக் குளிர்ந்திருத்தல். திருப்பா -13.
குளப்பு கூறுகொள்ளப்பட்டு- துகைத்து மிதித்த இடத்திலே
மிதிக்கப்பட்டு. நாச்சி- 13-6.
குறந்து – சிக்குவிடுத்து – பெரியாழ் -2-5-8.
குறளை – பொய். திருப்பா-2.
1155 குறிக்கொள்ளே – திருவுளம் பற்றுக – திருவாய் -2-3-7.
குறிக்கோலொன்றிலாமையினால்- (குறிக்கோள் – நம்பிக்கை)
பெரிய -1-9-3.
குறிஞ்சித்திணை ஒழுக்கம் – பெரியாழ் -3-8-6.
குறிஞ்சியிசை தவருமாலோ – குறிஞ்சிப் பண்துளைக்கும் –
திருவாய்-9-9-1.
குறுங்குடி – இத்திருப்பதி திருநெல்வேலி இரயில்
சந்திப்பிலிருந்து 27 கல் தொலைவில் உள்ளது.
குறுகியவனான வாமனனது திருத்தலமாதலால் குறுங்குடி
எனப்பெயர் பெற்றுள்ளது. பெரிய – 1-6-8.
1160 குறுந்தலை- நீசர்வகுப்பில் முதல் நின்ற – பெரியாழ் -3-7-2. குறையிரந்த – குறைவாளனாயிருந்த- பெரிய -4-4-7. குன்றெயிற்றென்னவன் -மலை போன்ற மதிள்களையுடைய
நாட்டுக்கரசன் – பெரிய. 2-9-5.
கூகிற்றியாகில் – கூவவல்லையானால்- நாச்சி -5-6.
கூகின்றது – கூவுகின்றது – பெரிய -11-2-6.
1165 கூசம் – கூச்சம்- பெரியாழ் -3-7-7, திருவாட் -10-2-4,
தேவாரம் 7-7-7, எதிர்கொள்பாடி. 3-107-8;
நாரையூர், 6-65-2- ஏகம்பம்.

தோற்கருவி – பெரிய. 3-5-8.
கேயத்தீங்குழலோதி – பாட்டுடன் மதுரமாகிய
வேய்குழலையூதி – திருவாய். 6-4-2.
கேவலமன்று – சாமானியமன்று – பெரிய. 9-5-8.
கைசெய்தல் – ஒழுங்குபடுத்தல் – பெரிய. 2-6-5, 1-8-3, 2-1-1,
3-9-5, 4-1-7, பெரிய -1-8-4, திருவாய் 5-10-1.
-7-4-3. 1200 கைத்தலத்தா – அழகிய கையையுடையவனே – பெரிய
கைத்தலம் – பாணிக்கிரஹணம் நாச்சி -6-6.
கைத்தால் – நெஞ்சம் கசந்துபோனால் – நாச்சி – 2-8.
கைதவம் – கபடம் – திருவாய்-6-3-5, (பெருங். மகத -15-18)
கைதைத் தோடாரும் -தாழை மடல்களில் பொருந்தியுள்ள
பெரிய -3-4-9.
1205 கைதைமலர்க்குக்குருகு – பெரிய – 5-2-9.
கைந்நாகம் – கைம்மா – துதிக்கையையுடைய யானை.
கைப்பற்றுதல் – பாணிக்கிரஹணம் – பெரியாழ் -3-8-6.
கையறைபோழ்து- கை வகுத்துப் பொருத போழ்து
திருவாய். 7-4-5.
கைவலம் – கைம்முதல்.
1210 கொங்கு – வாசனை. பெரியாழ் -2-6-2.
கொங்கை வன்கூனி – பெரியாழ்-2-1-8.
கொட்டாய் பல்லிக்குட்டி – (தணி கௌளி) கொட்டாய்-
ஒலிசெய்- பெரிய. 10-10-4.
கொட்டை பஞ்சுச்சுருள் – திருவிடைமருதூர் மும்மணி
கோவை பெரியாழ் -3-5-1.
கொடிக்கோழி கொண்டான் -சுப்பிரமணியன் – திருவாய். 7-4-8.
1215 கொடிமூக்கு – நீண்டமூக்கு- பெரியாழ் -7-4-3. சிறிய.
திருமடல் -40, ஒழுகுபொற் கொடிமூக்கும் (சீவக. 165)
பெருங் -2-15:85, 5-8:16, கூர்ம – பலவகைத் -17.
கொடியேறு செந்தாமரைக்கை – பெரியாழ் -3-5-10.
கொடுங்கோளால் – திருவாய் -4-8-6.
கொடுவுலகம் – கொடியதாகிய உலகத்தை- திருவாய் -4-9-7.
கொண்டல் – காளமேகம் – பெரியாழ் -2-9-4.
1220 கொண்டற்கு- கொண்டதற்கு- பெரிய. 2-9-3.
கொத்துத் தலைவன் – கூட்டங்களுக்குத் தலைவனாகிய
துரியோதனன் – பெரியாழ் -1-9-3.
கொந்தக்குழல் – நெறிப்பையுடைய கூந்தல் – பெரியாழ் -2-5-8.கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.

கூடல் – ன்கன்சிரு -39, பெரிய -9-2-5, (தே. 5-64-4-
கோழம்பம்).
கூடலர் – பகைவா – பெருமாள்.1-11. 7-18-10- வேள்விக்
குடியும் துருத்தியும்.
கூடலித்தல் – பெரியாழ் -3-6-8.
கூடலூர் – அப்பக்குடத்தான் சந்நதி – பெரிய -5-2-1, 1-10.
1170 கூடார் – பகைவர் – திருப்பா-27.
கூத்தன் – சிவன் – பெரியதிரும-71, நாச்சி -4-4.
கூத்தர் குடமெடுத்தாடில் -திருவாய் -4-5-4.
கூதல் – குளிர் – பெருமாள் -6-1, தே. 1-130-3. ஐயாறு.
கூதை – மூளி (கூதைசெய்து) திருவாய் -9-1-9.
1175 கூந்தல் – கேசி (ஓரசுரன் – இரண்டாந்திரு -93.
கூம்பு-பாய்மரத்தின் நுனி பெருமாள் 55.
கூர்வேல் – கூர்மையான வேலாயுதம் -பெருமாள் -4-11.
கூயேகொள் – அழைத்துக் கொள் – திருவாய் -4-9-7.
கூவாய் பூங்குயிலே- பெரிய – 10-10-3.
1180 கூவிளை – வில்வம் – பெரிய -11-7-6.
கூழ்ப்பு- சந்தேகம் – திருவாய் -8-2-6.
கூழேன்மின் – சந்தேகப்படாதீர் – திருவாய்-3-6-9.
கூழை- கூந்தல் பெரிய. 2-6-7, திருவாய் -9-4-3. (தே) 5-64-8,
கோழம்பம்,
கூழைப்பார்வை – கள்ளப்பார்வைபெரிய -9-6-3.
1185 கூழைமைசெய்கை-அவரவர்க்குத் தக்கபடி பரிமாறுகை.
பெரிய. 6-3-2,5.
1190
கூற்றுச் சொல்ல- திருவாய் -5-1-2.
கூற்றுத்தாய் – பெரிய. 3-9-4.
கூறை -ஆடை,பெரிய. 4-5-5.
கூறையுடை – பரியட்டத்தின் உடுப்பு- பெரிய -3-3-1.
கூனின் மேல் உண்டையோட்டியது – பெரிய -10-6-2.
திருவாய் – 1-5-5, திருச்சந் -49. கூனே சிதையவுண்டைவில் நிறத்தில் தெளித்தாய்.
கெருடர்கள். திருப்பள்ளி. 9.
கேசம்- தலைமயிர். பெரியாழ். 1-2-2-1. கேசரம் உளை மயிர் – பெரிய -2-8-1.
திருவாய் -1-5-5.
44
1195 கேட்.டேயும் – கேட்கும்போதே, கேட்டாலும் – பெரிய திருவந்-34.
கேடகம் – ஆயுதத்தைத் தடுப்பதற்குக் கையில் கொள்ளும்

முதலியன கூட்டி ஆக்கப்படுவதொரு சிற்றுண்டி.
பெரியாழ்- 3-1-3, மணிமேகலை காதை – 27-185.
(ஸ்ரீ மணவாள மாமுனிகள் ‘குழையச் சமைத்த
பருப்பு என்று பொருள் செய்திருக்கின்றனர்’
” பயற்றது கும்மாயம்” நன். சூ 299, மயிலை மேற்)
குமரதண்டம் – சேனாசமூகம்- திருப்பள்ளி. 6.
1120 குமரி – கன்னி – பெரியாழ். 3-8-3.
குமுதம் – அல்லி. பெரிய, 4-2-6, 7-5-10.
குமுறுதல் – வாய்விட்டுச் சொல்லமாட்டாது உள்ளே
முறுகுதல் – திருவாய்.6-5-1.
குமைக்கும் – நலிகிற, வருந்தும். திருவாய். 6-9-9, 5-1-6, 7-1-1.
குயிற்பைதல்காள் – குயில்பிள்ளைகளே. திருவாய். 9-5-8.
1125 குரம்பை – குடிசை- பெரிய . 4-4-3.
குரவம் – ஒருவாசனை மரம்.
குரவிற்கொடி முல்லைகள் நின்றுறங்கும் – பெரியாழ். 3-5-11.
குரவை கோத்த குழகனை – திருவாய் 3-6-3.
குரவை கோத்ததும் – பெருமாள். 7-9, பெரிய. 7-8-8, 2-5-4,
திருவாய். 3-6-3.
குரவை பிணைந்து – குரவைக் கூத்தாடி – பெரிய -1-8-4, பெருமாள். 7-9. பெரியாழ்வார். 2-3-5.
1130 குரவையாச்சியரோடு கோத்ததும் திருவாய். 6-4-1. குராப்போது – மணம்மிக்க மலர் (பூசைக்குரியது) – இரண்டாம்திரு. 31. குருக்கள்குல மதலை குருவமிசத்துப் பிறந்து அருச்சனன்
பெரியதிரும. 56.
குருடன் திருதராட்டிரன் பெரிய. 2-3-6. குருந்தம் அசுரன் ஆவேசித்திருந்த ஒரு குருந்தமரம். முதல்திரு – 54, 62 நான் முகன்திரு. 57.
1135 குருத்தமொசித்து குருந்த மரத்தை முறித்து. பெரிய. 3-8-5. குருத்திடைக் கூறைபணியாய் – குருந்தமரத்தின் மேலுள்ள
ஆடைகளை தந்தருள்வாய் நாச்சி. 3-4. குருந்தொசித்த மூன்றாம்திரு. 32. குருமணி – சிறந்த இரத்தினம். பெரிய. 3-10-2. குலாகின்ற – வளைகிற. திருவிருத். 75
1140 குலை – கரை – பெருமாள். 10-7.
குழகன் – எல்லாரோடுங்கலந்திருப்பவன் – பெரியாழ். 1-4-5, பெருமாள். 7-7, திருவாய். 3-6-3

கொந்து- கொத்து – மூன்றாந்திரு -87.
‘கொந்தார்தடந்தோள்’ திருக்கோ.391.
கொந்தளம் – சிறுகிடுகை நாச்சி-12-3.
1225 கொம்பராவு நுண்ணேரிடை – கொம்பிலும்
அராவிலுநுண்ணிய – திருவாய்-1-10-3.
கொம்பினன்ன இடை – வஞ்சிக்கொம்போடு ஒத்த
நுண்ணியஇடை – பெரிய -1-8-8.
கொம்மைப்புயம் – பெரியபுயம் – பெரியாழ் -3-5-3.
கொயல்வாய்மலர் -பறிக்கப்படுதல் பொருந்தினபூ.
திருவிருத் -24.
கொல்லி காவலன். பெருமாள் -2-11, 7-11.
1230 கொல்லி நகர்க்கிறை – பெருமாள் -6-10.
கொல்லியம்பாவை- கொல்லி மலையிலுள்ள அழகிய
பதுமை. பெரிய -2-7-1.
கொல்லைமை-வரம்பழிந்தசெயல் – திருவாய் -4-2-2, 6-7-4.
கொழுந்து – தலைவன், திருவாய் 7-2-8.
கொழுந்தை – சிரோபூதன் – திருவாய் -1-7-4.
1235 கொள்ளி மேலெறும்பு போல் – கொள்ளிக் கட்டையில்
அகப்பட்டுக் கொண்ட எறும்பு போல. திருக்குறுந். – 9.
கொள்ளியினுள்ளெறும்பு – பெரிய -11-8-4.
தே. 4-75-6. தனித்திரு நேரிசை.
கொன்றை- கொன்றை மரங்கள் – பெரியாழ் – 4-3-1. கொன்றைச் சடையன் – சிவன்- திருவாய் -7-2-10. கொன்றை மாலைகள் போன்றேன். நாச்சி. 9-9.
1240 கொன்றையஞ் செஞ்சடையாய் – திருவாய் -7-6-3.
கோகு உகட்டு – அடைவுகேடு.திருவாய் -3-5-4; (தே) 4-52-6 ஆரூர். அக்கிரமமான ஆரவாரம். தலைமண்டையிட்டு.
கோகுலம் – பசுக்கூட்டம் – பெரிய-2-5-4.
கோசரம் – விஷயமாதல் திருவாய்-1-9-6. கோட்டம் – கோடுதல் – அநீதி – பெரியாழ். 4-3-8.
1245 கோட்டுக் காற்கட்டில் – திருப்பா19. கோடல் – காந்தள் – நாச்சி-10-1.
46
கோடாலம் – பிறைபோல் வளைந்த ஆரம் – ஆரம்.
ஆலமென்றாயிற்று பெரியாழ் -3-3-1. (தே) -6-17-1. இடைமருதூர்.
கோடி – புத்தாடை – பெரியாழ். 4-5-8. கோடித்து பாரிப்புக்களைப்பண்ணி. நாச்சி. 11-9.1250கோடிமூடி எடுத்தல். பெரியாழ் -4-5-8.
கோடு – தந்தம், கரை,
கோணை – பிரயாசம், மிடுக்குக்கள் திருவாய் -2-5-10; 5-3-9.
கோத்துக்குரவை பிணைந்த – ராசக் கிரீடை செய்தருளின
பெரிய 1-8-4.
கோதா – கௌதுகலத்தைச் செய்பவனே – பெரிய -6-2-9.
1255கோது – சாரமற்றது – திருவிருத் – 26.
கோதுகுலமுடையபாவை – திருப்பா – 8.
கோ துகுலமுடைக்குட்டனே – எல்லாராலும் விரும்பத்தக்க
குணங்களையுடையவனே. பெரியாழ். 2 – 9-6.
கோமளம் – பேரழகு, மிருதுவான தன்மை திருவாய்.
7-2-7; பெரிய – 10-8-9.
கோமிறைசெய்து – அரசன் செய்யக்கடவ மிடுக்குகள்.
நாச்சி-10-7.
1260கோயில் – ஸ்ரீரங்கம் – திருநெடுந் – 22.
கோயிலினுள்ளேமன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை
பெரிய – 4-3-8.
கோயின்மை – அநீதி, ஆராய்ச்சியில்லாத செயல். பெரிய – 8-
2 – 8; 11 – 1 – 4; 11 – 2 -3; திருவாய் – 6 – 2 -6.
கோரம்பு – தீம்பு- பெருமாள்.6-4.
கோல் கழிந்தான் மூலைபோல் – பெரியாழ் – 3 – 7 – 7.
1265கோல்துணையா – ஊன்றுகோலைச் சகாயமாகக் கொண்டு
பெரிய-1-3-1.
கோல் தும்பீ – பெரிய – 8 -4 – 1,10.
கோல்தேடியோடுங் கொழுந்தே போன்றது – இரண்டாம்
திரு- 27.
கோலாடி -ஆஞ்ஞை செல்லுமிடம் – பெரிய. 5 – 4 – 4.
கோவலப் பட்டம் கவித்து – இடைக்குலத்துத் தலைவி என்று
பட்டம் கட்டி. பெரியாழ். 3 – 8 – 7.
1270கோவலர் ஸ்ரீநந்தகோபர் – பெரியாழ். 1 -2 – 13, பெரிய-9-2-5.
கோவலூர் – பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் மூவரும்
பகவத் ஸ்வரூபத்தை நன்கறிந்து அநுபவித்த
திருப்பதி.திருநெடுந் – 17.
கோவாய் – நிர்வாகர்களாய் – பெரிய – 7-7-9.
(தே. 4 -96 – 1. சத்தி முற்றம் )
கோவி நாயகன் – கோபீஜன வல்லபன் – பெரிய – 2-1-4.
கோவைமணாட்டி நீ – கோவைக் கொடியாகிய மங்கையே.
நாச்சி- 10 – 3.1275கோவயின்றமிழ் பாடுவார் – பெரிய – 9-10-9.
கோழம்பம் – குழப்பம், கலக்கம் பெரியாழ் – 3 -4 – 5.
கோழி -உறையூர் – பெரிய -9-2-5.
கோழி கூவெனல்- பெரிய – 10 – 10-6.
கோழிமுட்டைக்குக் குறுந்தடியென் செய்வது. பெரிய. 10-9-7.
1280கோழியும் கூடலுங்கோயில் கொண்ட – பெரிய – 9-2-5.
கோள்- சிறை, கிரகம், குற்றம்,துன்பம்,கொள்கை.
பெரியாழ் – 5 – 1 – 3, 9.
கோளூர் – திருவாய்- 8-3-5.
இத்திருப்பதி ஆழ்வார் திருநகரியிலிருந்து ஒரு கல்
தொலைவில் உள்ளது. நவநிதிகள் இங்கே ஒளிந்து
கொண்டிருக்கின்றன என்று அதர்மம் குபேரனுக்குக் கோள்
சொல்லிய இடாமாதல் பற்றிக் கோளூர் என்று பெயர்
வந்தது என்பர். மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம்.
கோறம்பு – திலகம், குறம்பம் என்ற ஆபரணம்.
பெரியாழ்- 3 -4 – 6.
கோனேரி திருவேங்கட மலைமேல் உள்ள புஷ்கரிணி.
பெருமாள். 4 – 1.
1285கோனோக்கி வாழுங்குடி உவமை – பெருமாள். 5-3.
கௌத்துவம் – மணி . பெரியாழ் – 4 – 5 – 8.
சக்கரச் செல்வன் – திருவாழியாலே அழகுபெற்றவன்.
பெரிய -5-9-5.
சக்கரப் பொறி ஒற்றுதல் – பெரியாழ்-5 -4-1;
சக்கரபாணி. திருச்சந்.14.
திருப்பல்லாண்டு. 7.
1290 சகடம்-வண்டி-பெரியாழ் – 1 -2 11. சங்கத்தழகர் – திருவாய் – 2 – 10 -2.
சங்கையாகி சம்பந்தமுடையளாகி- பெரியாழ் – 3 – 7 – 3. சடகோபனறிந்துரைத்த – திருவாய் – 7-8-11.
சண்டம்- உக்கிரம் – திருச்சந் 67.
1295 சண்டாள சண்டாளர்கள் – திருவாய். 3-7-9. சண்ணம் – ஆண்குறி – பெரியாழ். 1 – 8- 10 சாத்தியங்காண்மின் – திருமா. 7. சத்துருக்கனன் – பெரிய – 2 – 3 – 7.
சதிரா – அத்தாட்சியாயிருக்கும் தன்மை – பெரியாழ் – 5 -4 – 1.
1300 சதிர்த்தேன் – சதிரையுடையேன் – கண்ணிநுண். 5 (தே) சதிர்வு 1 – 1 -7 பிரமபுரம்.

1330சாடுதல் – தள்ளி அழித்தல், அடித்தல் – பெரியாழ். 3 -1-3.
சாத்து-சமூகம், தீர்த்தயாத்திரைக்குச் செல்வோர் கூட்டம்.
பெரிய. 1-7-2.
சாத்தன் – பெரியாழ். 2 -9 – 8; சிறியதிரும. 17.
சாதித்தல்-கொல்லுதல் – திருவாய். 3 -5-5
சாதி மாணிக்கம் – திருவாய். 3-4-4.
1335சாதியந்தணர்கள் – திருமா. 43.
சாது ஜனங்கள் – திருவாய்- 3-5-4.
சாதுவராய் -நான்முகன்திரு – 68.
சாதுவாய் – திருவாய் – 3-1-6.
சாந்தினிற் பஞ்சமம் வைத்து – திருவாய் – 8-9-8.
1340சாந்தினிக்குப் புத்திரனை அழைத்தது – பெரியாழ். 4-8 – 1.
சாம்பவான் – பெரிய – 10 -2-9
சாம நிறத்தன் – திருவாய் – 9-5 -6.
சாமம்- சாமத்தினிறங்கொண்டதாடாளன் – நாச்சி – 8-2.
சாமத்திருமேனி -சியாமளமான சரீரம் – திருவாய். 8 – 5 – 1.
1345 சாமமாமேனியன் – நீலநிறத்தையுடைய சிறந்த
சரீரத்தையுடையவன் பெரிய. 9-1-1.
சாமரை கவரிமானின் மயிரால் அமைந்த அரச சின்னம் –
பெரிய. 3-8-3.
சாமவேதகீதன் சாமவேதத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டவன் –
திருச்சந். 14.
சாமவேதி – பெரிய. 5-5-9.
சாமவேதியன் -சாமவேதத்தை முதலில் அத்தியயனம்
செய்தற்கு உரிமை பெற்றவன் – பெரிய . 7 – 7-2.
1350சாமாறு பணி கண்டாய் – சரீர விச்லேஷத்தைப் பெறும்படி
பார்த்தருள வேணும். திருவாய். 4-9-1.
சாமியப்பன்- சிவன் – பெரிய. 2 – 2-7.
சாய்-ஆச்சரியப்படும்படியான அழகு. திருவாய். 8-2-1.
சாயை- தேஜஸ். ஒப்பு- பெரியாழ். 5-3-3.
சார்கொடான் – அணுக ஒட்டான். திருவாய். 1 -10-6.
1355சார்ங்க முதைத்த சரமழை- வில்லால்விடப்பட்ட அம்பு
மழை. திருப்பா. 4.
சாரிகைப்புள்ளர் – விரைந்த நடையையுடைய. திருவிருத்.19.
சாலகம்- பலகணி. பெரியாழ். 3-4-1.
சாலேகம்- சன்னல். பெரியதிரும. 31.
சாழலேதோழியே. – சாழல் – மகளிர் விளையாட்டில்
ஒன்று. திருவாசகம். சாழல். பெரிய. 11-5-1-10.

1360 சாளக்கிராமம். பெரிய. 1-5-1.10; 4-7-9; பெரியாழ். 2-9-5.
சாற்றிச் சொன்னேன் – வற்புறுத்திச் சொல்லுகிறேன்.
பெரியாழ். 2-2-5.
சாற்றினேன் தடம் பொங்க – பெரிய. 10-2-10.
சாறுபட -உற்சவமுண்டாக, (விழவுபட) திருவாய். 7-4-2.
சிக்கென- உறுதியாக . விரைவாக. பெரியாழ். 2-7-6, 4-1-2,
4-5-9, பெரிய. 1-1-5. திருவாய். 2-6-1, 10-2-3. (தே)
5-71-9 விசயமங்கை. 4-59.1. பருப்பதம்.
1365 சிங்கப்பிரான், நரசிங்கமூர்த்தி. திருவாய். 2-8-9.
பெரியாழ். 5-2-4.
சிங்கவேள் குன்றம் – அஹோபிலம். பெரிய. 1-7-1-10.
சிங்கம் உறங்கிவிழித்தல் உவமை. திருப்பா.23
சிங்காமை – சங்கோசியாமல். பெரிய. 10-6-1.
சிசுபாலன்- வசுதேவனுக்கு உடன்பிறந்தவளும் அதனால்
கண்ணனுக்கு அத்தையுமான சுருதசிரவை
என்பவளுடைய மகன். திருவாய். 7-5-3.
1370 சிசுபாலன் – தலையைச்சிரைத்திட்டது. பெரியாழ். 3-9-3.
சிணுங்கி- முக்கால முதல். பெரிய. 10-5-1.
சித்தர் – அஷ்டமாசித்தியடைந்தோர். திருப்பள்ளி. 9.
சித்திர குப்தன்- இயமராசனது கணக்கன். பெரியாழ். 5-2-2.
சித்திரகூடப்பொருப்பு – சித்திரகூடமலை. பெரியாழ். 2-6-7.
1375 சித்திரகூடம் – இராமன் வனவாச காலத்தில் தங்கியிருந்த
ஒரு மலை. பெரியாழ்.3-10-6; பெருமாள். 10-5.
சிதகு – கடுஞ்சொல், குற்றம். பெரியாழ். 4-8-4; 4-9-2.
சிதைகிய – உடைந்த. திருவாய். 4-1-1.
சிந்தாமணி – நினைத்த மாத்திரத்தில் விரும்பியவற்றைத்
தரக்கூடிய மணி. பெரிய. 1-10-9.
சிந்து பூமகிழும் திருவேங்கடம்- தூவினமலர்கள் அழகு
கெடாதிருக்கப்பெற்ற திருமலை. திருவாய். 3-3-2.
1380 சிந்துரம் நெற்றியிலணியும் பொடி. பெரியாழ். 3-4-6.
சிமயம் – சிகரம். திருவிருத். 31.
சிரமம் தீர்தல் – இளைப்பாறப்பெறுதல். பெரியாழ். 5-4-8.
சிரமப்பட்டோம்-கஷ்டப்பட்டுச் செய்தோம். நாச்சி. 2-3.
சிரீதரன் – திருமால். திருவாய். 2-7-9.
1385 சிரீதரன் மூர்த்தி திருவாய். 4-4-2.
சிரீவர மங்கல நகர் – திருவாய். 5-7-1-11.

சிரைத்திட்டான்-பெரியாழ். 3-9-3.
சிரைத்து அழித்து. பெரியாழ். 3-9-3.
சில்லி – சில்லெனல், சிள்வீடு.பெரிய. 1-7-9.
1390 சில்லென்றழையேன்மின் – சிலுகிடாதே அழையுங்கோள்.
திருப்பா.15.
சில்லென்றொல்லறாத – சில்லென்ற ஓசை மாறாத.
பெரிய. 1-7-9.
சில்லை – சிலுகுசெய்தல். திருவாய். 6-7-4.
சிலம்பாறு. பெரியாழ். 4-2-1; 4-3-9. நாச்சி. 9-10.
சிலம்பியலாறு சிலம்பு என்று கூறப்படுவது நூபுரகங்கை.
பெரிய. 9-9-9.
1395 சிலாதலம் – கற்பாறை. மூன்றாந்திரு. 58.
சிலிங்காரம் – சிருங்காரம். பெரியாழ். 3-4-9.
சிலுகு – சண்டை, கூச்சல். திருப்பா. 15. (வியாக்) சிலுப்பி- கையால் சிலிப்பித்து.பெரிய. 10-8-2.
சிலும்ப- முழங்க. பெரியதிரும. 69.
1400 சிலை – ஒளி. பெரிய. 3-9-4. (தே.1-116.3.பொது.)
சிவசாபம் தவிர்த்தது பிரமனால் சிவனுக்கு ஏற்பட்ட
பிரம்மஹத்தி சாபத்தைப் போக்கினது. பெரிய. 1-4-8. 1-5-8; 4-2-8; 6-9-1, திருச்சந். 42.
சிவப்பட்டார் – சைவர். நாச்சி. 6
சிவபெருமான் பங்கத்தாய் – சிவபிரானை வலது
52
பக்கத்திலுடையவனே. திருநெடுந். 9. சிவளிகைக்கச்சு – கட்டுங்கச்சு, பொன் எழுதினகச்சு.
பெரிய. 8-1-7.
1405 சிவன் ஆலநீழல் அறம்பகர்ந்தது – ஆலமரத்தின் நிழலிலே அகத்தியர், புலத்தியர் தக்ஷர், மார்க்கண்டேயர்
என்கிற நால்வருக்கு அறம் உரைத்தது முதல் திருவந்.4. சிவன்கூத்து வகை – பெரியதிரும. 68.71. சிவனுக்கு எழுபது மாடம் செங்கணான் செய்தது. பெரிய. 6-6-8.
சிற்ற- ஆயாசப்பட. திருவாய். 9-1-7. சிற்றங்சிறுகாலே- குளிர்போதில். திருப்பா. 29.
1410 சிற்றவை – சிறிய தாயார் பெருமா. 8-6. சிற்றாடை – சிறிய ஆடை. பெரியாழ். 3-3-5. சிற்றாதே -அசையாமல்.திருப்பா.11.

சிற்றாற்றங்கரையில் மூவாயிரவேதியர். திருவாய். 8-4-8.
சிற்றுதல்-ஆயாசப்படல். திருவாய். 9-1-7. திருப்பா . 11.
1415 சிறுக்கண் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-7.
சிறுக்கன்று – இளங்கன்று பெரியாழ். 2-6-3.
சிறுக்குட்டன் – சிறுபிள்ளை. பெரியாழ். 1-4-2; 3-3-5.
சிறுக்கை – சிறியகை. பெரியாழ். 1-4-2,7.
சிறுகால் நெறி – சிற்றடிவழி. பெரியாழ். 4-2-8.
1420 சிறுகாலே – விடியற்காலையில், திருப்பா. 29. பெரியாழ். 3-3-2.
சிறுச்சண்ணம் – சிறிய ஆண்குறி. பெரியாழ். 1-8-10
சிறுச் சிறிது கொஞ்சம் கொஞ்சமாக. திருப்பா. 22.
சிறுச் சேவகம்- பாலபராக்கிரமம்.திருவாய். 5-10-3.
சிறுத்தாம்பு – சிறிய கயிறு, கண்ணிநுண் 1.
1425 சிறுத்தேவி – பருவம் நிரம்பாதவள். திருவாய். 6-7-5.
சிறுதூதை – மண் முதலியவற்றால் இயன்ற சிறுகலம்
நாச்சி. 2.8.
சிறு தொண்டீர்- நீசர்களே. பெரிய. 7-9-3.
சிறுநோன்பியர் – அற்பவிரதங்களைக் கொண்டவர்.
சிறுப்பத்திரம் சிறியவாள். பெரியாழ். 3-3-5.
1430 சிறுபுலியூர்ச் சலசயனம் பெரிய. 7-9-1-10.
1435
சிறுபுறம் பேசுதல் – அற்பமான குற்றங்களை மறைவில்
சொல்லுதல்.
சிறு பேரழைத்தல் – சிறுபேர் நாராயண நாமம். திருப்பா. 25.
சிறுமனிசர் – அற்ப மனிதர். திருவாய் 1-5-8; 8-10-3.
சிறுமானிடவர் – நீச மனிதர்கள். நாச்சி. 12.4
சிறுமியின் நிலைமை பெரியாழ். 3-7-1-10.
சிறு வீடு – சிறுகாலையில் விடுதல். திருப்பா. 8.
சிறை- க்ஷயம். பெரிய. 11-8-7.
சின்மொழி – சிலபேச்சு.திருவிருத். 22.
சின்ன நறுந்தாது – சிறிய மணமுள்ள தாதுக்கள். பெரிய
திரும. 32.
1440சின்ன நறும்பூந்திகழ்வண்ணன் – சிறிய மணமிக்க பூப்போல்
விளங்குகின்ற நிறத்தையுடையவன். பெரியதிரும. 97.
சின்ன மலர்க்குழலும் – துகள்களையுடைய மலாகளை
அணிந்த கூந்தலையும். பெரிய திரும. 45.
சீடை – உருண்டை வடிவமுள்ள சிறு பண்ணிகாரவகை.
பெரியாழ். 2-9-9

சீதனையே. (ஸ்ரீதரனை) – குளிர்ந்த தன்மையுடையவன்.
சீதை- உழுபடைச்சால், நிலத்தை ஜனகமகாராசன்
யாகத்திற்காக உழும்பொழுது தோன்றியதால்
பிராட்டிக்குச் சீதை என்று பெயராயிற்று.
திருவாய்.4-2-8; பெரிய. 7-8-7. இரண்டாந்
திருவந். 15, பெரியாழ். 3-3-5.
1445சீமாலிகன் – கண்ணனுடைய தோழன். பெரியாழ். 2-7-8.
சீய்க்கை- திருவலகிடுகை. திருவாய். 10-2-7.
சீயம் – சிங்கம்.
சீரரசாண்டு – சிறப்பாக ராச்சியபரிபாலனம் செய்து.
திருவிருத்.80.
சீராம விண்ணகரம்-இத்திருப்பதி சோழநாட்டில் சீகாழியிலிருந்து அரை கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். பெரிய. 3-4-1-10.
1450 சீலைக்குதம்பை – சீலைத்தக்கை (காதுவளர்தற்பொருட்டு
இடுவது) பெரியாழ். 3-3-1.
சுக்கிரன் கண்ணைத்தர்ப்பத்தின் நுனியால் குத்தியது. பெரியாழ். 1-8-7.
சுக வெள்ளம் – இன்பக்கடல். திருவாய். 10-2-1. சுகிர்ந்திட்ட – கழித்திட்ட திருவாய் 7-7-9.
சுகிர்ந்து- பிளந்து மூன்றாந்திருவந். 95.
1455 சுட்டி – ஒரு நெற்றியணி. பெரியாம். 1-6- 1-7-10, பெருமாள் 7-5.
சுடரடி – தேவராசன் திருவடி. 1-1-1.
சுண்டாயம் விளையாட்டு,வஞ்சனை. திருவாய்.
6-2-1, 7-8-.7,8.
சுணங்கையெறிந்து – மயிர்கிளர்த்து திருவாய். 4-6-7.
சுணம் – சுணங்கு (சுண்ணம் முலைமேல் தோன்றும் நிற வேறுபாடு. பெரியாழ். 2-3-4.
1460சுந்தரத்தோளன் – அழகிய தோளையுடையவன். பெரியாழ். 1-3-6.
சுந்தரர் – கந்தருவர். திருப்பள்ளி.7.
சுந்தரன் – அழகன். நாச்சி. 9-10. சும்மெனாதே- மூச்சுவிடாதே. பெரியாழ். 5-4-3. சுமடு -சும்மாடு. திருவாய். 7-1-10.
1465 சுமந்திரன் – தசரதருக்கு மந்திரியும், சாரதியும் ஆனவர். பெருமாள்.9-7.
சுமாலி – விஷ்ணுவின் சக்கரத்தால் கொல்லப்பட்டவன். .
திருச்சந்த. 107.

சுரவி – பசு. திருவிருத்.73.
சுரிகை அணைத்து – உடைவாளைத் தரித்துக்கொண்டு.
பெரிய. 10-8-5.
சுரிகையும் தெறிவில்லும், செண்டுகோலும்
உடைவாளையும், சுண்டுவில்லையும், பூச்செண்டு
வில்லையும். பெரியாழ். 3-4-3.
1470சுரியேறுசங்கு- சுழித்தலையுடையசங்குட மூன்றாந்திரு.49.
சுருக்கே- சங்கிரகமாகச் சொல்லலாவது, திருவாய். 9-1-6.
சுருப்பு- சுரும்பு வண்டு. பெரியாழ். 1-3-21.
சுரும்பலற்றும் – வண்டுகள் ரீங்காரம் செய்தல்.
திருவாய். 10-2-1.
சுருள்பங்கி நேத்திரத்தாலணிந்து – சுருண்ட குழல்களைக்
கட்டி பீலிக்கண்களாலே அலங்கரித்துக் கொண்டு
பெரியாழ். 3-4-5.
1475சுலாய் – சுற்றி. திருவாய். 7-4-2.
சுலாவிநிற்றல் – சூழ்ந்து கொண்டு நின்று.
இரண்டாந்திருவந்.40.
சுவடு-அடையாளம். பெரியாழ். 4-1-4,7 திருச்சந். 41,
பெரிய திருவந்.8.
சுவேதன் – அர்ச்சுனன். நான்முகன்திரு. 24.
சுழலை – சூழ்வலை நாச்சி. 9-1.
1480 சுழலை – சுழன்று கழன்று வருகிற ஆறு. துன்பங்கள்
இவ்வுடலைச் சூழ்ந்து கொண்டிருப்பதனால் அவற்றைச்
சுழலாயாக உருவகப்படுத்தினார். பெரியாழ். 5-3-1.
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனன். ஆலோசனையுடைய
துரியோதனன். பெரியாழ். 1-8-5. ‘சூழலை’ என்பதன்
குறுக்கல் விகாரம். சூழல் – ஆலோசித்தல்.
சுளகு -முறம். நாச்சி. 2-8.
சுளை கொண்ட பலங்கனி – சுளைகளையுடைய
பலாப்பழம். பெரிய. 6-9-3.
சுற்றத்தவர் – உறவினர்கள். திருவாய். 9-1-1.
1485சுறவ நற்கொடிகள் – சுறாமீனையுடைய நற்கொடிகள்
நாச்சி. 1-4.
சுனை – தன் இடமானசுனை (மலையூற்று) திருவாய். 10-5-10.
சூடகம் – கைவளை. திருப்பா. 27.
சூடாமணி – தலையில் அணியும் இரத்தினம்.
பெரிய திரும. 77.
சூடிக்கொடுத்தாள். இராமாநுஜ. 66

1490 சூதகம் – தேமாமரம். பெரிய. 4-2-1:5-3-8.
சூது – உபாயம், காரணம். நான்முகன்திரு. 64; பெரிய
திருவந்.19; திருவாய். 2-10-10.
சூர் – பேய், தெய்வப்பெண். முதல்திருவந். 3.
சூர்ப்பணகா – இராவணனுடைய தங்கை. பெரிய
திரும. 145; பெரியாழ். 3-9-8.
சூரியமண்டலத்தினூடே செல்லல். பெரியாழ். 4-9-3;
பெரிய. திரும. 16,17.
1495சூலம் மாளிகையில் வைத்தல். பெரிய. 7-5-6; மாடத்துச்சி
மிசைச் சூலம். 3-9-4.
சூலிகை – சூலம். பெரிய. 8-3-3. (தே. சூளிகை 1-129-4. கழுமலம்
2-34-2. பழுபூர்; 3-92-10 நெல்வேலி; 2-50-1. ஆமாத்தூர்.
சூழ்தல் – ஆராய்தல், எண்ணல். திருவிருத். 81.
சூழ்போகி- கொல்லும் வகைகளை ஆராய்ந்து பெரியாழ். 4-3-3.
சூழல் – தந்திரம்,மணம், வட்ட வடிவமான பூமி, பெரியாழ்.
2-9-10; 4-1-4.
1500 சூழறும் ஆணையற்ற. நாச்சி. 2-7.
சூனியவாதர் நிரீசுவரவாதிகள், இராமாநுஜ. 99. செக்கஞ் செக – நினைவுகெட. திருவாய்.1-9-5
செக்கர் -சிவப்பு. திருவாசிரியம். 1; பெரியாழ். 1-7-2
செக்கிலிட்டுத் திரித்தல். திருவாய். 7-1-5.
1505 செக-போக. திருவாய். 1-9-5.
செகில்- சிவப்பு. திருவிருத்தம். 69.
செங்கண்மால் -திருமால், பெரியாழ். 3-8-4.
செங்கண்ணா. மூன்றாந்திரு. 47.
செங்கணான். பெரிய. 6-6-1,5.
1510 செங்கலங்கல் – சிவந்தவெள்ளம். பெரிய. 4-4-7. செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து – செங்கழுநீர்ப்பூக்கள் மலர. திருப்பா.14. சிலப். அந்திமாலைச் சிறப்புச்செய்காதை. அடி. 64. செங்களம் – சிவந்த யுத்த பூமி. திருவிருத். 77. செங்கற் பொடிக்கூறை காவியில் தோய்த்த ஆடை. திருப்பா. 14.
செங்கீரை – தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்தாடுவிப்பதொரு
நிருத்தவிசேடம். பெரியாழ். 15.110
1515 செங்குறிஞ்சித்தாரார் சிறிய திரும.16. செங்கோல் வலவன் – சோழன். பெரிய. 6-4-3.

செஞ்சொல்மாலை. பெரிய. 1-7-10.
செஞ்சொற்கவிகள். திருவாய். 10-7-1.
செஞ்சோற்றொடு கஞ்சி மருவிப் பிரிந்தவர்- சமணர். பெரிய 7-9-2
1520 செடியாக வல்வினைகள் -பாபம்.பெருமாள். 4-9.
செடியராக்கை- (சம்சாரமாகிற) பெருங்காடு நிறைந்த
சரீரசம்பந்தத்தை. திருவாய். 1-5-7.
செண்டன் – பூச்செண்டு. பெரிய. 4-8-3.
செண்டுகோல் பந்தடிக்கும் கோல்; நுனியில் பூக்கள்
வைத்துக்கட்டிய கோல்.பெரியாழ். 3 -4 – 3.
செண்டு சிலுப்பி- செண்டைக் கையிற்சலிப்பித்துக்கொண்டு.
பெரிய. 10-8-2.
1525 செந்தமிழ் பாடுவார்தாம் வணங்கும் தேவர். பெரிய. 2-8-2.
செந்தமிழ் மாலை. இரண்டாம்திரு. 13.
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் – அந்தணர்.
பெரிய 7-8-7.
செந்திறத்த தமிழோசை. திருநெடுந்.4.
செந்நெ இ – செவ்வனேநிறுத்தி. முதல்திருவந். 30,47.
திருவாய். 5-2-6.
1530 செந்நெல்கவரிவீசும்.திருவாய்.5-8-1; 7-3-6.செப்பம் –
செப்பம் – செவ்வை. திருவாய். 2- 9-1. திருப்பா. 20
செப்பாடு – செம்மையான குணம். பெரியாழ். 3-5-6.
செம்பாடு- செம்மண்தரை. பெருமாள். 10-2.
செம்பியன் கோச்செங்கணான் – ஓரரசன். இவன் ஈசற்கு
எழில்மாடம் எழுபது செய்தவன். பெரிய. 6-6-1.
1535 செம்பினாலியன்ற பாவை -செம்பினால் செய்யப்பட்ட
பிரதிமை. பெரிய. 1-6-4.
செம்பொன் செய்கோயில். பெரிய. 4-3-1,10
செம்பொன் இலங்குவாளி – விளங்குகின்றபொன்னால்
செய்யப்பப்பட்ட அம்பு பெரிய. 2-8-3.
செம்போத்துத் திருத்துதல். பெரிய. 10-10-1.
செம்மாது பிராட்டி. பெரியதிருவந். 7.
1540 செம்மாந்திரே – செவ்வனே. பெரியாழ். 3-8-5.
செம்மாபாத பற்பம் – செவ்விய சாமளமான பாதபத்மம்
திருவாய். 2-9-1.

செம்மாய் நிற்றல் – நேர்மையாய் நிற்றல். திருவாய். 9-6-6.
செம்மி- அடைத்து. மூன்றாந்திரு. 12.
செய்கிறுதி – செய்கிறாய். பெரியதிருவர். 83.
58
1545 செய்குன்றம் – செல்வமக்கள் விளையாடல் பொருட்டு
அமைக்கப்படும்கட்டுமலை. பெரிய. 5-1-4.
செய்தனகள் – செய்தவகைகள். பெரிய. 5-5-1-10.
செய்ந்நன்றி குன்றேன்மின் – செய்த நன்றியை மறவாதீர்கள்.
பெரிய. 1161.
சிலப். வரந்தருகாதை. அடி. 191.
செய்மிறை – செய்யுநடுக்கம். திருவாய்.7-5-8.
செய்யப் பெறாய் – செய்யாய் – பெரிய.10 -7 – 1 – 8.
1550 செய்வானின்றகளும் எதிர்காலத்திலுள்ள செயல்களும்.
திருவாய். 5-6-4.
செய்வினை – முற்பிறப்பில் செய்த கருமம் .திருவாய். 4-7-1. செருந்திப்பொழில் – சுரபுன்னைச்சோலை. திருநெடுந். 25. செருநுதல் போர்முகம். பெரிய. 11-4-6.
செல்சார்வு – அடைதற்குரிய இடம். திருவாய். 8-4-2.
1555 செல்லா நல்லிசையாய் அழியாத புகழையுடையவனே
பெரிய. 6-3-9.
செல்வக் கொழுந்து. பெரியாழ். 2-8-10. செல்வவிபீடணற்கு – அழியாத செல்வமாகிய
பக்தியுடைமைபற்றி செல்வ விபீடணன் என்று சிறப்பிக்கின்றார். பெரிய. 6-8-5. செல்வரிப்போதில்லை – உங்களுக்கு வேண்டியவற்றைச் கொடுக்கவல்ல செல்வர்கள் இல்லை. திருவாய். 3-9-6. செல்வன் – சிறந்த குணங்கள் பொருந்திய செல்வநம்பி பெரியாழ். 4-4-8 திருப்பல்.11.
1560செல்வு-செல்வம். பெரியாழ். 1-5-1; பெருமாள்.4-7. செலக்காண்கிற்பார் – முன்புபெற்ற ஞானம்போதாது என்று மேன்மேலும் ஞானத்தைப் பெருக்கிக் கொண்டு காணவல்லார். திருவாய். 5-8-4. செவ்வி அழகு. திருப்பல். 1. செவிப்பூ – மகளிர் அணி. திருப்பா.27. செவியில் கட்டெறும்பு பிடித்திட்டு விளையாடுதல். பெரியாழ். 2-4-2.
1565 செற்றம் பகைமை, கோபம், பொறாமை, திருமா.30. செற்றலேறி – ஈமுட்டையிட்டு. பெரியாழ். 4-5-2.

செற்றார்- பகைவர். திருப்பா. 11.
செற – சீறிக்கோபிக்க பெரிய. 5-10-1.
செறுதல்- அழித்தல். பெரிய.
செறுப்பனாகில் – கோபித்துக்கொள்வேனாயின். நாச்சி. 12-9. (தே.) 1.134.4. பறியலூர்.
1570 செறுவாரு நட்பாகுவர் – பகைவரும் நண்பராவர்.
திருவிருத், 27.
சென்னி – நெற்றி. பெரியாழ். 3-6-3.
சே அதக்குதல் – கிட்டிகட்டி அடித்தல். பெரியாழ். 4-5-7 5-2-3.
சேக்கழுத்தின் மணிக்குரல் – இடபத்தின் கழுத்தில்
கட்டப்பட்டுள்ள மணிஒசை. பெரியாழ். 1-7-7.
சேட்டை- மூதேவி. திருமா. 10.
1575 சேடர் இளம்பருவமுள்ளவர். பெரிய. 9-2-2.
சேடார்பொழில்-இளமைபொருந்திய சோலை.
பெரிய. 6-8-4.
சேடு- சேண்.பெரிய. 3-3-1. (சேடு – கரை . தே.6.76-4.
திருப்புத்தூர்; 1-61-8. செங்காட்டங்குடி.
சேடேறுபொழில் இளமைபொருந்திய சோலை. பெரிய.
4-1-7.
சேது – திருவணை. நான்முகன்திரு. 28.
1580 சேது பந்தனந்திருத்தினாய் – அணை கட்டுதலை நன்றாகச் செய்தவனே.நாச்சி. 2-7.
சேமம்-எப்போதும் ரட்சகன். பெரிய. 6-5-10.
சேமம் செங்கோனருளே – நம்மைப் பாதுகாப்பது
எம்பெருமானது திருவருள். இ
திருவிருத்.27.
சேமவைப்பு – சேமித்து வைத்த தனம். இராமாநுஜ.22.
சேய். முருகன். பெரிய.
1585 சேர்கொடான் – அகப்படும்படி பண்ணான். பெரிய. 7-3-3. திருவாய். 2-7-3.
சேரிகையேறும்- ஊரில்பரவும். திருவிருத். 19.
சேவகங் கொள்ளுதல்- அடிமை கொள்ளுதல். பெரியாழ். 4-4-8. சேவகம்- வீரப்பாடு. திருப்பா. 24.
சேவகன்-வீரன். பெருமாள். 8-8; பெரியாழ். 5-4-4.

1590 சேவகனார் – பெருமாள். திருமா . 11.
சேவடி- சிவந்த பாதம். பெரியாழ். 5-4-7.
சேவையதக்கி – இடபங்களை அடக்கி. பெரியாழ். 5-2-3.
சேவியேன் – வணங்கமாட்டேன். திருமா. 35.
சேழுயர்ந்த மணிமாடம் – மிகவும் உயர்ந்த அழகிய
மாடங்கள். பெரிய. 4-4-9.
1595 சேறை-பஞ்ச ஸார க்ஷேத்திரம். சிறியதிரும. 72;
பெரியதிரும. 115; பெரிய. 7-4-1-10; 10-1-6.
சைவர் – சிவ தீட்சை பெற்றுச் சிவனைவழிபடுவர்.
இராமாநுஜ.99.
சொட்டுச் சொட்டெனல். பெரிய. 1-9-1.
60
சொட்டைநம்பி – ஆளவந்தார் குமாரர் மணக்கால் நம்பியை
ஆச்ரயித்தவர்.
சொப்பட – நன்றாக. பெரியாழ்.2-4-5.
1600 சொல்லாய் பைங்கிளியே. பெரிய 10-10-5.
சொன்மாலை இரண்டாந்திரு. 85; திருவாய்.9-4-5.
சோத்தம் – அஞ்சலி பண்ணுமவர்கள் அதற்கு அனுகூலமாகத்
தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு (பாசுரம்)
சப்தவிசேஷம். பெரியாழ். 2-3-4,5; தாழ்ந்தார்
சொல்லும் சொல். பெரிய. 2-3-6 8-10-6
சோத் தெம்பிரான். பெரியாழ் 2-4-5; பெரிய. 10-7-8; சோத்தென: பெரிய. 10-5-5.
சோத்து – சோத்தம். பெரிய. 9-5-9; 10-5-5.
சோதிவட்டங் கொல்முகம்-சோதிமண்டலமோ.
திருவாய். 7-7-8.
1605 சோதிவெள்ளம் – அழகுவெள்ளம். திருவாய் 5-5-10. சோப்பூண்டு- அடிபட்டு. பெரியாழ். 2-1-5. சோம்பர்-சோம்பேறிகளாய்த் திரிபவர்கள். சோம்பியிருப்பவர்கள். திருமா.38.
சோம்பாது – பின்வாங்காமல் பெரிய திருவந். 18.
1610 சோமு சோமயாகம். பெரிய. 2-10-1; 6-7-5. சோரேல் கண்டாய் – நழுவவிடாதே. திருவாய். 9-3-4,5. சோலுதல் – கவர்ந்து கொள்ளுதல். திருவிருத். 35.
சோலை – திருமாலிருஞ்சோலை. பெரிய. 4-9-23 மூன்றாந்திரு. 61.
சோழன் செங்கணான். பெரிய. 6-6-1-10.

1615 சோற்றை நாய்க்கிடுதல். திருமா. 14.
சோறு நியதமுமத்தாணிச் சேவகம், கையடைக்காய்,
கழுத்துக்குப்பூண், காதுக்குக் குண்டலம், சாந்தம்.
இவை அடியார்களுக்குக் கோயிலில் கிடைப்பவை.
திருப்பல் 8.
ஞானக்கை – ஞானமாகியகை. திருவாய். 2-9-2.
ஞானச்சுடர்விளக்கு – அறிவாகிய பிரகாசமான தீபம்.
இரண்டாந்திரு. 1.
ஞானத்தமிழ் – அறிவைக் கொடுக்கக்கூடிய திருவந்தாதிப்
பிரபந்தம். இரண்டாம்திரு 1.
1620 ஞானமேபடை -அறிவே கருவி. திருவாய். 3-1-9.
ஞானப்பிரான் – அறிவைக் கொடுக்கும் எம்பெருமான்.
திருவிருத். 99.
ஞானமும் முடமும் அறிவும் அறிவில்லாமையும். திருவாய்.
6-4-3.
ஞானிக்கும் அறிவாளிக்கும். திருவாய். 4-1-10.
தக்கணை தணை. பெரியாழ். 4-8-1. 4-9-5. பெரிய. 11-7-2.
1625 தகவிலி – ஈரநெஞ்சில்லாதவன். பெரிய. 10-2-3.
தகளி – அகல். முதல்திருவந். 1; இரண்டாந்திரு 1.
தசக்கீரீவற்கிளையோன் – இராவணன் தம்பி. விபீஷணன்
பெரிய. 8-6-7.
தசாவதாரம் – பத்து அவதாரம். பெரிய. 11-4-1. 10.
தஞ்சுடையாளர் – தஞ்சமாகவுடையவர். பெரிய. 9-2-6.
1630 தஞ்சை – தஞ்சை மாமணிக்கோயில். இரண்டாந்திரு. 70
தஞ்சையாளி – தஞ்சை மாமணிக் கோயிலை ஆள்பவன்.
பெரிய. 7-3-9.
தட்ட- அடைத்த, தடுத்த. பெரிய. 8-9-3.
தட்டு – இதழ். பெரிய. 7-3-6.
தட்டுளுப்பு – தடுமாற்றம். பெரியாழ். 3-7-3. (திருவாசகம்
திருத்தோணோக்கம். 6.)
1635 தட்டொளி – கண்ணாடி. திருப்பா.20.
தடம் பொங்கத் தம் பொங்கோ- ஐய சூசகவாத்தியத்தின்
சப்தாநு ராகம். பெரிய. 10-2-1.
தடவந்து – பரிசித்த. பெரிய. 8-5-1.
தடவிற்று- பரிசித்தது. திருவிருத். 56.
தடா- ஒருவகை நவபாண்டம். நாச்சி. 3-6.

1640 தடாவிய – பரந்த, மூன்றாந்திரு.75; வளைந்த. திருவிருத்.6
தடாவியதே – கோடியது. திருவிருத். 5.
தடித்தல் – பெருத்தல். பெரிய. 2-1-6.
தடிப்ப- துடிப்ப. பெரிய. 10-5-2.
தடிபிணக்கு – தடிக்கொண்டு பிணங்கும்படியாகும். திருவாய்.
6-2-7.
1645 தடு குட்டமாய் -தலைகீழாய். திருவாய். 3-5-3.
தண்கடல் வட்டம் – குளிர்ந்த கடலால் சூழப்பட்ட
பூமண்டலம்.திருவாய். 3-5-1,2.
தண்கால். திருநெடுந்.17; இரண்டாந்திரு.70; சிறியதிரும. 71 )
பெரியதிரும. 120
தண்டகாரணியம் – தக்கணதேசத்தில் துறவிகள் வசித்துவந்த
ஒருவனம். பெரிய. 10-2-3.
தண்டம்- சேனை, தண்டனை. திருப்பள்ளி. 6. பெரிய.
11-1-2,7.
1650 தண்டவரக்கன் – இராவணன். நான்முகன்திரு. 44.
தண்டு காலாவூன்றி – தடியைக் காலாகக் கொண்டு ஊன்றி.
பெரிய. 1-3-5.
தண்ணாவது – தாமதியாமல். திருவாய். 4-9-1.
தண்ணுமை – மத்தளம், வேறுவேறு. திருப்பள்ளி. 9. தண்ணெனவு – மென்மைத் தன்மை. பெரியாழ். 4-10-6.
1655 தணர்தல் – பிரிதல். பெரிய. 9-3-5.
தணிகிடாய் – தணித்துக்கொள். நாச்சி 2-2.
தத்து – ஸ்வீகாரம் பெரியாழ் 2-1-7. தத்துவப்பாடல்கள் – திருவாய். 8-8-5,9. தத்துவமன்று தகவு – தகவு அன்று தத்துவம் – நீ இப்படி இருப்பது உனக்குத் தகுதி அன்று,
இஃது உண்மை. திருப்பா. 19.
1660 தத்துவமிலி-உண்மை இல்லாதவன்.நாச்சி. 1-3. தத்துவன் – எனது தன்மை உள்ளவன். நாச்சி. 5-6. தத்துறல் – கிட்டுதல். பெரியாழ். 5-1-7. தத்துறுமாகில் கிட்டுமாகில். பெரியாழ். 5-1-6. ததர்கை – நெரிகை. திருவாய். 7-4-5.

1670 தகர்த்தாதே – நோவு படுத்தாதே.நாச்சி. 5-10.
ததைத்துக் கொண்டு- நெருங்கிக்கொண்டு. நாச்சி. 10-8.
தந்தச்சீப்பு- தந்தத்தினால் செய்த சீப்பு. பெரியாழ். 2-5-8.
தந்தம் மக்கள் – தங்கள் தங்களுடைய பிள்ளைகள்.
பெரியாழ். 2-2-3.
தந்துவன்-தந்து – கொணர்ந்து. உவன் – நடுத்தரமாய்
இருப்பவன். பெரியாழ். 1 – 3 – 3.
1675 தந்தை காலில் பெரு விலங்கு – பெரிய. 7-5 – 1.
தம்பகமாய் – புதராய். பெருமாள். 4-5.
தம்பர மல்லன – தம்மால் தாங்க முடியாதவற்றை
பெரிய. 10-7-13.
தம்மன்னை – தாய். பெரியாழ். 4 -5 – 1 – 9.
தம்மனை- தாய். பெரியாழ். 1 – 5-3.
1680 தம்மையுகப்பாரைத் தாமுகப்பர் என்னுஞ் சொல்
கொண்டாடுவர் – ஒரு பழமொழி. நாச்சி. 11 – 10.
தமப்பன்மார் – தகப்பன்மார். பெரியாழ். 3-1- 9.
தமர் – உறவினர். திருவாய். 4-6-6.
தமருகந்த தெவ்வுருவம் ஆச்ரிதர்களால் விரும்பப்பட்ட
உருவம் எதுவோ. முதல் திருவந் 44.
தமனகம் -தவனம். பெரியாழ். 2-7 – 3.
1685தமியாட்டி – தனிமையையுடையவள். திருவிருத். 73
தமிழ்த் தலைவன் – இராமாநுஜ.10.
தமிழ் நல்மாலை- தமிழ்மொழியினால் ஆகிய நல்ல சொல்
மாலைகள். இரண்டாம் திரு. 74.
தமிழ் நன்னூற்றுறைகள் அஞ்சு. பெரிய. தனியன்.
தமிழரிசைகாரர் பத்தர், திருவாய்.1 -5 – 11.
1690 தமிழொரு மூன்று முணர்ந்தவன். இராமாநுஜ. 44 தமிழோசை வட சொல்லாகி – தமிழ் வேதத்தாலும்,
வடமொழி வேதத்தாலும் பிரதிபாதிக்கப்படுகிறவன்.
திருநெடுந். 4.
தயங்குதல் – அசைதல். பெரிய. 8 – 5 – 4.
தரணி – பூமி. பெரியதிரும. 136.
தரு- மரம். திருவாய். 9- 8 – 8.
1695தருக்கு – அகங்காரம், ஹிம்சை. பெரிய. 2 – 1 – 7.
தருக்குகை வருத்துகை, சுளிக்கை. பெரியதிருவந். 22.
தருமன்- யமன். முதல் திருவந். 67.

தலைக் கணத்துக்கட்குழம்பு. திருச்சந். 16.
தலைச்சங்கம் – தலைச்சங்காடு; (தலைச் சங்க
மேற்றிசையுள்) பெரிய. 8 -9- 9.
1700 தலைச் சிரைத்து வாழ்தல் – திருவாசலிலே காவலாளராக
இருந்து வாழ்தல். திருமா. 38.
தலை நிலாப்போது – குழந்தைப் பருவம். பெரியாழ். 2 – 3-7.
தலைப்பழியெய்தல் – பெரும் நிந்தைகளைப் பெறுதல்.
நாச்சி 12,9
தலைப்புகழ் – சிறந்த புகழ். நாச்சி. 1 – 7.
தலைப் பெய்திடல் – சேர்ந்துவிடல். பெரியாழ். 5 – 3 -5.
1705 தலை மறிதல் நீங்கல். நாச்சி. 12.2.
தலையல்லாற் கைம்மாறில்லேனே – நாச்சி. 5 – 6.
தலைவன்பொற்படந்தலைவிக்குத் தந்துபோதல். பெரிய. 9-5-9.
தலைவிளாக்கொள்ளுதல் – முழுதும் வியாபித்தல் திருமா. 35.
தவராசா – மகா தபஸ்வியே. பெரிய தனியன்.
1710 தவளப் பொடி கொண்டு – சுத்தமான தூளி கொண்டு
திருவாய். 4-6 – 5.
தவிவு- விச்சேதம். திருவாய். 3 – 4-4.
தழல் மூன்று நால்வேதம். பெரிய. 4 – 2 – 2.
த இக் கோளியார் – தழுவிக்கொண்டவர். திருவாய். 4 – 2-5. தழுத் தொழிந்தேன் – தழுதழுக்கும் படியானேன்.
பெரிய. 1-1 5,
தழுவி முழுசி – முழுவித்தழுவி. நாச்சி. 13 – 5.
1715 தழை – தொங்கல், பீலிக்குடை விசேஷங்கள். பெரியாழ். 3-4-1. தழை – திரள். திருவாய்.7-7-9.
தழைக்கா – குடையாகிற சோலை.
பெரியாழ். 1 – 9-5; 3-4-6, 7. தழைகள் – மயில் தோகைக் குடைகள். பெரியாழ். 3 -4 -5. தள்ளம் பாறி தடுமாறி. பெரியாழ். 1-7-10 (உரை).
1720 தளர் நடை-காலூன்றி நடக்கும் பருவம், அன்றிக்கே. நடக்கின்ற தசை ஆகையாலே தள்ளம்பாறி நடக்கும் நடை. பெரியாழ். 1 – 7-10. தளர் நடையிடுதல். பெருமாள். 6 – 4.
தளைக் காலன் – விலங்கு பூட்டப்பட்ட
கால்களையுடையவன். சிறியதிரும. 67. தற்பு – தத்துவம், யதார்த்தம். நான்முகன் திருவந். 76.

1725 தன் தாமமேவியது (இராமன்) பெருமாள் . 10-10.
தன் பேரிட்டு – கோவர்த்தனன் என்ற தனது பெயரை
மலைக்கு வைத்து. பெரியாழ். 3-5-9.
தன்ம பாவம்-தருமமும், பாவமும். திருவாய். 6 -2-7.
தன்னடியார் மனத்தென்றும் தேனாகியமுதாகித்
திகழ்ந்தானை. பெரிய. 5 -6 – 3.
தன்னானார்- தன்னைப் போன்றவர். திருவாய். 8 – 4-9.
1730 தன்னுடைச் சோதி – தன்னுடைய விக்கிரகம். திருவாய். 3 – 10 -5.
தனஞ்செயன் – அருச்சுனன். பெரியாழ். 1 -9-4.
தனிக் காளை – ஒப்பற்ற யுவாவான கண்ணன்.
பெரியாழ். 4 – 3 – 4.
தாசரதி – இராமபிரான். (தத்திதாந்த நாமம் ) பெரிய. 8 -4-1-10.
தாடகை – சுகேதுவின் பெண், சுந்தனுடைய மனைவி.
விசுவாமித்திரர் ஏவலால் இராமன் இவளைக்
கொன்றான். பெரிய. 9-8 – 4; பெருமாள். 10-2.
1735 தாடாளன் – மேன்மையுடையவன். பெரிய. 3 – 4-1; 6-10-2;
77-6. நாச்சி. 8 -2.
தாபதர் – இருடிகள்
தாமம் -ஸ்தானம். திருவாய். 6-4.10; பெருமாள். 10 10.
தாய் – தாவி.திருவாய். 6 – 9 – 6.
தாய்சொல்லுக் கொள்வது தருமங் கண்டாய்.
பெரியாழ். 2 – 9 – 8.
1740 தாய் நாடு கன்றேபோல் (உவமை) முதல் திருவந்.3 .
தாய் மனத்திரங்கி – தாய் போல மனமிரங்கி. பெரிய. 4 – 3 – 5.
தாயப் பதி-பழமையாய் இருக்கின்ற ஸ்தானங்கள்.
திருவாய். 8-6-9.
தாயம்-பங்கு. பெரியாழ். 3 – 1 – 7.
தாயர்வாய்ச்சொல் – தேவகியின் வாய்ச்சொல்.
தாயிருக்க
பெரியாழ் 2-2-5.
மணை நீராட்டுதல் – பெற்ற தாய்க்கு ஒரு
உபசாரமும் பண்ணாமல் அறிவற்ற மணைக் கட்டைக்கு
உபசாரம் செய்தல். பெரிய. 11 – 6 – 6, திருவாசி. 6.
1745 தாயைக் குடர் விளக்கஞ் செய்தல். திருப்பா.5.
தாயோன் -தாவியவன், தாயானவன். திருவாய். 1-5-3.
தார்க்கிளந் தம்பிக்கு – பரதன். பெரியாழ். 3-9-8.
தாரகை – பூமி. நான்முகன் திரு. 57.
தாரா – ஒரு பறவை. பெரிய 1 – 5 – 4; 10; 9-6-8.

750 தாரா கணம் – நக்ஷத்திரக் கூட்டம் நாச்சி. 14 – 7.
தாராயினும் வேராயினும் வீசுமினே. திருவிருத்53.
தாரித்து – தரித்து; நீண்டு கிடக்கிறது.
பெரியாழ். 1 – 6 – 6; 2-3-10.
தாலேலோ – ‘தாலேலோ தாலேலோ’ என்றது குழந்தையைத்
தாலாட்டுவார் கூறும் ஒருவகை வாய்பாடு.
தால்-நா. பெரியாழ் 1 – 3 – 1 – 10; பெருமாள் 8.
தாலொலித்திடும் – தாலாட்டும். பெருமாள். 7-1.
1755 தாவடியிடல் – தாவியடியிடல். பெரியாழ். 2 – 10 – 7.
தாவளந்துலகம் -தாவித்திரிந்து. பெரிய. -6-1.
தாழ் சடையும்- தாழக்கட்டின சடை. மூன்றாம்திருவந். 63.
தாழ்வர் – பரிபந்தம். பெரிய. 9-3-2.
தாழ் பீலி-வாத்தி வகை. பெரியாழ் 3 -4-1.
1760 தாழம் – தாழ்த்தல், தாழ்ச்சி. பெரிய. 10 -2-7.
தாள் கொளுவி – பூட்டைத் தொடுத்து. மூன்றாந்திருவந். 12.
தாளால் உலகமளந்த வசைபு. திருவாய். 8 – 3-5.
தாளும் தடக்கையும்- கால்களையும், கைகளையும்.
திருவாய்.3-7-2.
தாறு – அளவு; ரேகை. பெரிய திருவந்.31.
66
1765 தன்றாம் மேவி -பரமபதத்திற்குச் சென்று. பெருமாள். 10 – 10.
தான் – ஸ்வரூப நிரூபணம். திருவாய்.107-1.
தானத்தே வைத்தல் – இருந்த இடத்தில் வைத்தல்.
பெரியாழ். 2 – 10 – 9.
தானவன் – அரக்கன். பெரிய. 2 – 2 – 2.
தானாக நினையானேல் – அவன் தானாக என்னை
நினைக்கா விட்டாலும்.பெரிய.8-7-7.
1770 திங்கள் சிறை விடுத்து – சந்திரனை ரோகமாகிய
சிறையிலிருந்து விடுவித்து. பெரிய. 11 – 8 -7. திங்களம் பிள்ளை – பிறைச் சந்திரனாகிய அழகிய பிள்ளை. திருவிருத். 77.
திங்களைக் கோள் விடுத்து – சந்திரனுடைய ஓளியை
விரித்து. திருவாய். 4-6-2. திசைக்கும் – அறிவழியா நிற்பள். திருவாய்.5 -5-3. திசைப்ப- திகைப்ப, அறிவு கெடும்படி. பெரிய. 2 – 9-5, 3 – 9 – 2,5-7 – 4, 7 – 8 – 2, 11 – 4 -8.
1775 திசை முகனனைய மறையோர் – பிரமனைப் போன்ற
அந்தணர்கள். திருவாய். 7-2-3.

திட் கொடி – அவிழ்த்துக் கட்டாத கொடி. திருவாய்7 – 2-3.
திடரே -ஸ்திரப்பட்டவர். திருவாய். 1 – 1 – 6.
திண்டிறலார் – மிக்க பலசாலிகள். பெரிய. 4-1 -5
திண்ணம்- திருடம். பெரியாழ். 41-9, பெரிய. 8 – 2 – 2.
திண்ணார் மதிள் – வலிமைபொருந்திய மதில். பெரிய. 4 – 7 – 1.
1780 திண்ணார் மாடங்கள் -வலிமை மிக்க மாடிவீடுகள்.
பெரிய. 1-9- 1:0. தே. 1.64.11. பூவணம்.
திண்ணெவு – வலிமை. பெரிய. திரும. 146.
திண்ணை – மேட்டிடம். பெரியாழ். 1-7-2.
திணர்த்த வண்டல்கள் – இறுகலையுடைத்தான திருவாய்.6-1-5.
திணரார் மேகம் – திண்மை மிக்க மேகங்கள் திருவாய். 6-10-5.
1785திணிம்பு – செறிவு. திருவிருத். 72.
திரி காதுக் கிடுதல் – நூல்திரியைக் காதுக் கிடுதல்.
காதுகுத்தி நூல்திரியை இட்டுக்காதின்
துளை பெரிதான பின்பு காதணி இடுதல்
பெரியாழ். 2 – 3 – 2 -, 5.
திரிசுடர் சூழும் மலை- இடைவிடாது சஞ்சரிக்கின்ற சந்திர
சூரியர்கள் பிரதணம் பண்ணுகின்ற
மலை. பெரியாழ். 4-3-8.
திரிதர்வேன் – திரிந்து கொண்டிருந்தேன். பெரிய. 1 – 1-8.
திரி மூர்த்தி- மும் மூர்த்திகள் (பிரமன், விஷ்ணு, ருத்திரன்
பெரிய. 2-10 – 1.
1790திரி விக்கிரமன் – திருமால். பெரிய, 9 -9-5. திருவாய். 2-7-7.
திருக்கடித்தானம் – அம்பலப்புழாவிலிருந்து 23 கல்
தொலையில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 8 – 6 – 1.
திருக்கண்ணங் குடி இத்திருப்பதி கீவளுர் இரயில்
நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது.
இத்தலத்தைப் பற்றி, தீரா வழக்கு திருக்கண்ணங்குடி’
என்ற பழமொழி உண்டு. பெரிய. 9-1 – 1.
இத்திருப்பதி திருவாருக்கு நான்கு கல் தொலைவில்
உள்ளது.
திருக்காலாண்ட பெருமானே – திருவடியைக் காரியம்
கொண்ட. திருவாய். 6 – 9 – 4.
1795திருக் குடந்தை – இது சோழ நாட்டுத் தலம்.
திருவாய். 5 – 8 – 1 – 10.
திருக்குருகூர் – இத்திருப்பதி ஆழ்வார் திருநகரி இரயில்
நிலையத்தின் அருகில் உள்ளது.
திருவாய். 4-10 – 1 – 10.1

திருக்குறளன் -ஸ்ரீவாமனன். திருவாய். 9-8 -10 – 3.
திருக்கூடல் கூட இழைப்பன் – சகுனம் பார்க்கும் வகையில்
இஃது ஒருவகை . நான்முகன்திரு.
(திருக்கோவையார் செ.186)
திருக்கோட்டி -பாண்டி நாட்டுத் திருப்புத்தூருக்கு,
21 கல் தொலைவில் உள்ளது. இரண்டாந்திரு.46,87
1800 திருக் கோவலூர் -இத்திருப்பதி திருக்கோயிலூர்
நிலையத்திற்கு மேற்கே2 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 2-10-10.
திருக்கோவலூரில் துர்க்கை வாழ்தல் பெரிய 2.10.6.;
திருநெடுந்.7.
திருச் சாழல் – பெரிய. 10 -5 – 1 – 10.
திருச்சிற்றாறு – திருச்செங்குன்றூரிலுள்ள ஒரு நதி
திருவாய். 8-4 – 10.
திருத் தண்கால் – இது ஸ்ரீ வில்லி புத்தூருக்கு அருகில்
உள்ளது. தண்கால் என்பதற்குக் குளிர்ந்த காற்று என்று
பொருள். சீதவாதபுரம் என்பர். பெரிய; 5 6-2.
1805 திருத்தன் – திருப்தியாக இருப்பவன். பெரிய: 7-10 – 7.
திருத்தாய் – நீ திருத்த வேண்டும். பெரிய. 10-10-1.
திருத்திப் பணி கொள்ளல் – விரோதிகளைத் திருத்தி அடிமை
கொள்ளுதல். திருவாய். 3 -5 – 11. திருத்தெற்றியம்பலம் – திருநாங்கூரின் ஒரு பகுதியாகிய
திருத்தெற்றியம்பலம் என்னும் திருப்பதி.
பெரிய. 4-4 – 1 – 10.
திரு நறையூர் – நாச்சியார் கோவில்.
பெரிய. 6 – 3-3: 6-4 – 1 – 10: 7-4 – 1 – 10; 7- 1 – 3,
பெரியதிரும. 73; திருநெடுந். 16.
1810திரு நாம மிடுதல் ஊர்த்துவ புண்ட்ரம் இடுதல், பெரியாழ். 3 -4-8. திருநாமம் எட்டெழுத்து – “ஓம் நமோ நாராயணாய என்னும் அஷ்டர்ட்ச மந்திரம். பெரிய : 1 – 8 – 9. திருநாவாய்- இது செறு வண்ணூர் கள்ளிக் கோட்டை இரயில் பாதையில் திருநாவாய் நிலையத்திற்குத் தெற்கே பாரத் புழை என்ற ஆற்றங்கரையிலுள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்: 9 – 8 – 1 – 10. திருநின்ற பக்கந்திறவிது – திருமகள் இருக்கின்ற வலப்பக்கமே சிறந்தது. நான்முகன்திரு. 62. திருநீர் மலை- நீரானது அரண்போலச் சூழப்பெற்ற
மலையாதல் பற்றி இது திருநீர்மலை என்றாயிற்று. பெரிய: 5-8 – 2, 6-8 -4.

1815 திருப்பாதகேசம்- வடசொல் தொடர். பெரியாழ்.1 – 2 – 21
திருப்புகழ்கள் – கீர்த்திகள் பெருமாள். 1 -9.
திருமணி கூடம் – இத்திருப்பதி சீகாழிக்கு ஐந்துக்கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
பெரிய. 4-5-1-10.
திருமல்லி நாடி – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சார்ந்த நாடு.
நாச்சி தனியன்.
திருமலை – திருப்பதி. திருக்குறுந்: 7,மூன்றாம் திரு. 62.
1820 திருமழிசை- திருமழிசைப்பிரான் அவதரித்த தலம்.
திருச்சந் – தனியன்.
திருமறு மார்வன் – பிராட்டியையும், ஸ்ரீவத்ஸம் என்னும்
மறுவையும் உடைய மார்பன். திருவாய்: 3 – 4 – 3.
திருமாலிருஞ்சோலை – நாச்சி. 9-1,3,5.
பெரிய. 7-3-67-979-9-1-10; 11 – 7-9.
திருமூழிக்களம் – எர்ணாகுளம் செறு வண்ணூர் இரயில்
பாதையில் கருக்கட்டி நிலையத்திற்கு நான்கு
கல் தொலைவில் உள்ளது. பெரிய. 7-1-6
திருநெடுந்.10.
திருமெய்யம் – சத்யகிரி என்ற சொல்லேதிருமெய்யமலை
என்றும், அத்திருப்பதி திருமெய்யம் என்றும்
வழங்கப்பெறும் எம்பெருமான் பெயர்
சத்தியகிரிநாதர் பெரிய. 3 – 6 – 9, பெரிய திரும. 126.
1825 திருமோகூர் – இத்தலம் மதுரைக்கு 7 கல் தொலைவில்
உள்ளது.வடமொழியில் மோகனபுரம் எனப்படும்.
இறைவன் பால் மோகத்தை (பக்தி) அருளும் ஊர்
என்பது மோகூர் ஆயிற்று. சிறிய திரும. 74.
திருவடி – சுவமி. திருவாய். 4-9-11, 7- 5 – 3, 8 – 4 – 7,
10-3-7, நான்முகன்திரு. 68. இரண்டாம் திரு. 87.
திருவடி பிடித்தல் – திருவாய். 9-2-10.
திருவயிந்திர புரம் – அஹீந்திரன் என்னும் அநந்தாழ்வான்
பூசித்த தலமாதல் பற்றி இதற்கு அயிந்திரபுரம்
என்னும் பெயர், பெரிய. 3 – 1 – 1 – 10.
1830 திருவரங்கம் – ‘ரங்கம்’ என்று விமானத்திற்குப் பெயர்.
அதுவே ல ணையால் திவ்யதேசத்திற்குத்
திருநாமமாயிற்று. முதி.6,மூதி. 62, தி. சூ 7,
திநெ 11, 23, பெரியாழ். 4 – 9 – 10,
பெரிய. 5-5-4-65-8-1 – 10.

திருவரங்கத்தமுது – இராமாநுஜ தனி.
திருவரங்கர் பள்ளி கொண்ட நிலை – திருமா. 19.
திருவல்லவாழ் – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 36 கல்
தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம்.
திருவாய். 5-9 – 1 – 10
திருவல்லிக்கேணி – இத்தலப் புஷ்கரணி அல்லிமலர்
நிறையப் பெற்றதனால் திருவல்லிக்கேணி
என்று பெயர் பெறும். தீர்த்தத்தின் பெயரே
தலத்திற்குப் பெயராயிற்று. மூன்றாம்திரு. 16.
1835 திருவழுந்தூர் -சோழநாட்டில் மயிலாடுதுறையை
அடுத்துள்ளது. கம்பர் பிறந்த ஊர்.
தேவாரப்பாடல் பெற்ற தலம். சிறிய திரும 12.
திருவன்- அழகள் இரண்டாம் திரு. 84
திருவாகாரம் – திருமகள் இருக்கு மிருப்பு. பெரிய 4 -4 – 8.
திருவாய் கருப்பூர நாறுதல் – பெரியாழ் 1 – 5-9.
திருவாலியிருந்தான். – திருமகள் எம்பெருமானை ஆலிங்கனம்
செய்தமையால் ‘ஆலி’ ஆயிற்று
வீற்றிருக்கிற திருக்கோலம்.
1840 திருவாழ் மார்பன் – திருமகள் இருந்து வாழப்பெற்ற
திருமார்பையுடையவன். பெரிய. 7-6 -7.
திருவாளன் – திருமால் பெரிய 5-5-1,6-9-1.
திருவாறன்விளை – இத்தலம் கொட்டாரக்கராவிலிருந்து 37
கல் தொலைவில் உள்ளது. நின்ற திருக்கோலம். திருவாய்.7 10 – 1 – 10.
திரு விண்ணகர் (விஷ்ணு நகர் விண்ணகர்) இப்பதி சோழநாட்டில் திருநாகேசுவரம் இரயில் நிலையத்திலிருந்து
ஒரு கல் தொலைவில் உள்ளது. பெரிய 6 – 2 – 1 – 10,6-3 –
1-10, திருவாய், 6 – 3-1-11.
1845 திருவில்லாத்தேவரைத் தேறேன் மின் – நான்முகன்திரு – 53. திருவுக்குந் திருவாகிய செல்வா- பெரிய 7-7-1.
திருவுடை மன்னர்- செல்வத்தையுடைய அரசர்கள் திருவாய்4 – 4 — 8.
திருவுறுக – திருமேனி அழகு விளங்கட்டும். பெரியதிரும.46. திருவெட்டெழுத்து – ஓம் நமோநாராயணாய. பெரிய. 8-10-3.
1850 திருவெவ்வுள் திருமால் சாலிஹோத்திர மகரிஷிக்குப்
பிரத்யக்ஷமாகி உறைதற்குரிய உள் ‘எவ்வுள்’
என வினவியதனால் திருவெவ்வுள் என்று பெயராயிற்று. நான்முகன்திரு. 36.

திருவெள்ளக்குளம் – இப்பதி சீர்காழியை அடுத்து நான்குகல்
தொலைவில் உள்ளது.நின்ற
திருக்கோலம்.பெரிய 4 -7 – 1 – 10.
திருவேங்கடத்தான் – திருமலையில் உள்ளவன். பெரிய. 6 – 8-1.
திருவேங்கடப் பொருப்பர். திருமலையில் உள்ள பெருமாள்.
பெரிய.5-3-4.
திருவேங்கடம் – அழிவற்ற ஐசுவரியம். பெரிய 1 -8 – 1 – 10,
1-9-1 – 10, 4 – 7 – 5, திருவாய். 2-6-9, 6-
10, பெரியாழ் 2 – 7-2, 5 -4 1, பெருமாள்
4 – 2. சிறியதிரும் 67, முதல் திருவந். 76,77.
1855 திருவோணத்தான் – சிரவண நட்சத்திரத்தில் அவதரித்தவன்
பெரிய. 1-1-3.
திருவோணத்திரு விழவு – சிரவண நட்சத்திரத் திருநாள்.
திருப்பல். 6, 9.
திருவோணத்தில் மங்கையரை முளையட்டிப் பல்லாண்டு
கூறுவித்தல். பெரியாழ். 3 – 3 – 9
திருவோணமின்று நீராட வேண்டும் பெரியாழ் 2 – 4 -2.
திருவோணம் பன்னிரண்டு அக்காரம் அட்டேன்.
(அக்காரம்- யஸம்,பக்ஷணம்,முதலிய.ை திரட்டுப்பால்
எனவும் கூறலாம்) பெரியாழ். 2-9-7.
திருவோணமின்றேழுநாள் பெரியாழ் – 3-3-9.
திரேத(யுகம்) நான்கு யுகங்களுள் இரண்டாவது பெரிய -7-7-6.
திரேதை – த்ரேதாயுகம். திருநெடுந். 3
தில்லை மூவாயிரவர் – தில்லையில் இருக்கின்ற மூவாயிரம்
அந்தணர்கள். பெரிய. – 3 – 2 – 8, பெருமாள். 10-2.
திலதம் – திலகம்.திருவாய். 6-10-1
திலோத்தமை நாடகத்தெய்வ மகளிர் எண்பதின்மருள்
ஒருத்தி. பெரியாழ். 3-6-4.
திவம் – பரமபதம். பெரிய – 7 – 10-2.
திவளுதல் – ஒளிவிடுதல். பெரிய. 2 – 7 – 1.
திளை – பருமை. பெரிய. 6 – 9 – 3.
திறவிது -பரதத்துவம். நான்முகன்திரு. 62.
1870 தீங்கவி மதுரமான கவி. திருவாய். 7-9-7.
தீத்தொழில் – அக்கினி ஹோத்திரம் பெரிய. 4-5 – 3.
தீதில் நன்னெறி – குற்றமில்லாத நல்வழி. பெருமாள். 2-6; 3-5.
தீப்பப் பூடுகள் – கொடிய பூண்டுகள். பெரியாழ்3 – 6 -4.
தீமனம் கெடுத்தல் – தீயமனத்தைக் கெடுத்தல். திருவாய். 2-7-8.

1875 தீம் பலங்கனி – மதுரமான பலாப்பழம். பெரிய. 5 – 3-4.
தீயிணக்கிணங்காடி – களவுப் புணர்ச்சி செய்து.
பெரியாழ். 3-7-2
தீயில் மூன்று – சப்தம், ஸ்பர்சம்,ரூபம்.திருச்சந். 1
72
தீயினில் தூசாகும் – நெருப்பிலிட்ட பஞ்சுபோல் உருவழிந்து
போகும். திருப்பா- 5.
தீ யோங்க வோங்க – அக்கினி காரியங்கள் வளர வளர.
பெரிய – 3-2-2.
1880 தீர்த்தகரர் – பரிசுத்தப் படுத்துவோர். இரண்டாந்திரு.14.
தீர்த்தன் – பரிசுத்தன். திருவாய் – 2 – 8 -6.
1885
தீரா மாற்றாக பரிகாரமில்லாத செயலாக. திருப்பா- வியாக்
தீ வலஞ் செய்தல்- ஏழடி நடந்து அக்கினியை வலம்
வருதல். நாச்சி – 6 – 7.
தீவிகை-விளக்கு. (தீ பிகை) பெரிய – 2 – 10 – 3.
தீ விழித்தல் – நெருப்புப்பொறி பறக்கும்படி கண்கை
விழித்தல். திருப்பா- 23.
தீ விளி விளிதல் மிகக் கொடுமையான வார்த்தைச்
சொல்லுதல். திருமா. 30.
தீ வினைக்கரு நஞ்சை – கொடிய துன்பத்தை உண்டு
பண்ணுகிற தீய செயல்களை எம்பெருமான்
எளிதில் போக்குபவன்.திருவாய்7 – 1 -8-9.
தீற்றி – உண்ணப் பண்ணி. திருவாய்.71-7.
1890 துக்கக் சூழலை – துக்கங்களாகிற சுழலாறு. பெரியாழ். 5-3-1.
துங்கார் – துங்கம் – ஓக்கம். பெரிய – 9 – 6-2. தே. 7 – 42 -9.
வெஞ்சமாக் கூடல்.
துக்கு – துங்கம். (வடமொழி) பெரிய – 9 -6-2.
துச்சோதனன் – துரியோதனன் தம்பி. பெரியாழ். 1 – 8 – 5. துடியிடையார் உடுக்கைபோன்ற இடையையுடைய
பெண்கள். திருப்பள்ளி. 10.
1895 துண்ணென – சீக்கிரமாக. பெரிய. 4-6-2.
துணரி – பூங்கொத்து. பெரிய – 4-6-2.
துணிவதுசூதே – காரணம். திருவாய். 2 – 10 – 9.
துதம் – ஸ்துதம், ஸ்தோத்திரம். பெருமாள்.1 – 2.
துந்தி – திருநாபி. திருவாய். 1 – 3-9.
1900 துப்பம் – நெய். (கன்னட மொழி) பெரியாழ். 2 – 1 -6. துப்பரவாம்- சக்தியையுடைவனான் திருவாய். 7 – 9 – 9.

துமிலம்- பெரிய ஆரவாரம். பெரியாழ். 3-8-3.
துயக்கு – கலக்கம். திருவாய்.1 – 3-9.
துயராட்டியேன் – துன்பத்தையுடைய நான். திருவாய். 7-7-1.
1905 துரகம் வாய் பிளந்தது – குதிரை வடிவு கொண்ட கேசி
என்னும் அசுரனுடைய வாயைப் பிளந்தது.
மூன்றாந்திரு. 47, 98. தே. 7-87 – 7. பனையூர்.
துரிசன் – கள்ளன். திருமா. 31 – 32.
துலை கொண்டு – துலைத்தலைக் கொண்டு. திருவிருத். 51.
துலையாய் – பரிமாணமாகி. திருவாய். 7-8-7; தே. 1-47-8
சிரபுரம். 6-19-10 ஆலவாய்.
துவக்கற – ஸ்பரிசம் அற. பெரியாழ். 2 – 10 – 6.
1910 துவர்தல் – உலருதல். திருவாய்.8 -5 – 2.
துவர்ப்பு- (மாந்தளிர்) துவர்ப்பென்னும் ரசம். பெரிய. 5-3-4.
துவராபதி – துவாரகை. பெரியாழ. 5 -4-10; நாச்சி. 9-8;12-9.
துவரித்தவுடையார் – காவித்துணிகட்டித் திரியும் பெளத்தர்.
பெரிய. 5-6-8.
துவரியாடையார் -காவியுடை அணிந்தவர்கள். பெரிய. 2-1-6.
1915 துவர்ந்து துவர்ந்து மிகவும் உலர்ந்து. திருவாய். 4-7-5.
துவராடையுடுத்து- காவியூட்டிய ஆடையை உடுத்து.
பெரிய. 10-8-2 (தே) 3-56-10 பிரமபுரம். துவரிக் கனிவாய் – இலவம்பூ. பெரிய. 8 -8-9.
துவருடுக்கை – காவியுடை. திருவாய்.4 – 8 – 4.
துவரை – துவாரகை. பெரியாழ். 4-1 – 6; 4 – 7 – 9.
1920 துவாதசியில் மாதர் தூபமேந்தி வேங்கடவனை வணங்கல்.
முதல் திருவந். 82.
துவாபரயுகம் – யுகங்கள் நான்கனுள் மூன்றாவது. பெரிய. 7-7-6.
துழதி – சுழற்சி. திருவாய்.2 -7 – 8. துழதிப்படாதே – துக்கப்டாதேயிருங்கள். நாச்சி. 12-5.
துழாய் -துழாவி.மூன்றாந்திரு. 23.
1925 துழாய் மாலை – துளசி மாலை. மூன்றாந்திரு.
துள்ளம் – துளி. பெரியாழ். 5 -7-7
துளக்கம் – சலிப்பு, இடைவீடு.
துளம்-மாதுளம், பீலிக்காம்பு பெரிய. 2-7-2.
துளம் – களைக் கொட்டு. பெரிய. 8 – 7 – 3.
23.
1930 துளவுத் தொண்டு – திருத்துழாய்த் தொண்டு. திருமா. 45.
துளவும் கூடையும் பொலிந்து திருத்துழாயும்,
பூக்குடலையும் விளங்க. திருப்பள்ளி. 10

துளும்பு- அலைய. திருவாய். 6 – 7 – 8.
துற்று- உணவு. (கவளமாக ) பெரியாழ். 4 -4 – 2.
பெரிய. 7 – 1 – 2, 1 – 6 – 5.
துற்றற்றா -ஒரு கவளத்திற்கும் போதாது. திருவாய். 2-8-8.
74
1935 துற்றிய – உண்ட. பெரிய. 7-1-2; பெரியதிரும 141.
துற்றுவார் – புசிப்பார். திருவாய். 4-1-7.
துறவி – துறந்தவன். திருவாய்.1-7-1.
துன்றோளித்துகிற் படலம் ஒழுங்கு, கொடிகள். பெரிய.6-9-4.
தூங்கார் – அசைவு பெரிய – 11-8-3.
1940 தூசனம் – தூஷணம் பெரிய – 6-7-4.
தூது வந்த குரங்கு – அநுமன். பெரிய -10 -26.
தூதை – சிறு சோறு சமைக்குமட் பாத்திரம், விளையாட்டுக்
கருவி. பெரியாழ். 1 – 2 – 19; 3-7-1.
தூம்புடைப் பனைக்கை வேழம். பெரிய. 4-5 – 1.
தூராக்குழி தூர்த்தல்.திருவாய்.5-8 – 6.
1945 தூரியம் – வாத்தியம்.
தூவிக் குருகு – வெள்ளைக் குருகு. திருவாய். 6-8-8.
தூற்றித்து – தூற்றின அதுவே. திருவாய். 7-3 – 8.
தூறுகள்- புதர்கள் பெரியாழ். 5-4 – 3.
தெக்கு – தெற்கு. பெரியாழ். 4 – 2 – 3.
1950 தெட்டப்பழம் – பக்குவமான பழம். பெரிய. 3 – 4 – 8. தெட்டித் திளைக்கும் – முற்றிக்களியா நிற்கும். பெரியாழ். 4-2-10. தெப்பராவர் – அற்பர். திருவாய். 9 – 1 -4. தெய்வச் சிலையான் – திருப்புல்லாணி இறைவன் பெயர்.
பெரிய. 9-4-3.
தெய்வத்தைச் சுவர்மிசைச் சாத்தியும் வைத்துத் தொழுதல், முதல் திருவந்14.
1955 தெய்வ நன்மாலை – திவ்வியமான நல்ல சொல்மாலை.
பெரிய. 1 – 1 – 10. தெய்வ நாயகன் – திருவயிந்திரபுர இறைவனின் பெயர்.
பெரிய 3 – 1 – 3.
தெய்வ நாறுதல் – நல்ல வாசனை வீசுதல். பெரிய – 5-3-3.
தெய்வப் புள்ளேறி வருவான் – (தெய்வப்புள் – கருடன்) பெரிய 3 – 3 – 6. தெய்வவாள் வலங்கொண்ட சோழன். பெரிய. 6 – 6 – 3.

1960 தெருவிற்றிரி நோன்பியர் – தெருவில் திரிகின்ற சமணர்
பெரிய 7-9-2.
தெழ்கு- இடைச்சுரிகை பெரியாழ். 1 – 3 -2.
தெள்கி- இளைத்து பெரிய. 3 -4-7.
தெள்ளிய சிங்கம் – திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள
அழகிய சிங்கப் பெருமாளுக்குத் தெளிசிங்கப்
பெருமாள் என்று திருநாமம் வழங்கப்
பெறுகின்றது. பெரிய. 2 3 8.
தெள்ளியர் கை தொழும் தேவனார் – பெரிய – 9-7-9; 8-10-4;
நாச்சி. 4-1.
1965 தெளி விசும்பு கடிதோடி – நிர்மலமான ஆகாசத்திலே
விரைவாக ஓடி, திருவாய்.9 -7-5.
தெளிவிலாக் கலங்கனீர் சூழ் – தெளியாமல் கலங்கியிருக்கிற
காவிரியாலே சூழப்பெற்ற. திருமா. 37.
தெற்றல் – வலிமை. பெரிய -11-11-9.
தெற்றியம்பலம் – சீகாழியிலிருந்து ஐந்துகல் தொலைவில்
உள்ளது. தெற்றி அம்பலம் என்பதற்குக்
கோயில் மேட்டிடமாக அமைந்த மன்றம்
என்பது பொருள். பெரிய 4 – 4-10.
தெற்றெனவு ” தெளிவு, பெருமை. பெரியதிரும – 141.
1970 தெறிவில் – சுண்டுவில். பெரியாழ். 3 – 4-3.
தென் குடந்தை – திவ்விய திருப்பதி, திருக்குடந்தை.
மூன்றாந்திரு. 62.
தென் குளந்தை – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஏழு கல்
தொலைவில் உள்ளது. திருவாய். 8 – 2 – 4
தென் கொள் திசைக்கும் திலதம். திருவாய். 10 – 7 – 4.
தென் கொள் திசைக்கும் திலதம் – தெற்குத்திக்குத் திலகம்
போல். பெரிய. 4-8-8.
1975தென் தில்லைச் சித்திர கூடம் – கோவிந்தராசன் சந்நிதி
என்பர். இராமனுக்கு வடநாட்டுச் சித்திர கூடத்தைப் போல இத்தலமும் உகந்த திருப்பதி. தென்புலக் கோன் – இயமன். பெரியாழ் -5 -2 – 2.
தென்புலர் யமபடர். பெரிய – 7 -3 – 3.
தென்றமிழன் – தெற்கிலுள்ள தமிழ்நாட்டுக்கரசன். பெரிய. 6-6-5. தென்றி – சிதறி. பெரியாழ். 2 – 4-2; (தே 1 – 68 -5 கயிலாயம்.
1980 தென்றிருப்பேரை – ஆழ்வார் திருநகரியிலிருந்து 3 கல்
தொலைவில் உள்ளது. திருவாய் 7 – 3 – 1 – 10.

தென்றுதல் – சிதறுதல் பெரிய. 5 – 3-9.
தென்னரங்கன் – அரங்கநாதன் பெரியாழ்2 – 9 – 11.
தென்னவன்-யமன், பாண்டியன். பெரிய 2-9-2;
பெரியாழ் 4-5-7.
தென்னவென்று- தென்ன தென்ன என்று ஆளத்திவைக்க.
பெரிய. 9-1-9.
1985 தென்னன் – மலையத்துவச பாண்டியன். திருவாய். 5-5-2;
பெரியாழ்4-2-7.
தென்னன் குருகூர் – தெற்குத்திக்கிலுள்ள திருநகர்.
திருவாய். 4-3 – 11; 5-2-11
76
தென்னன் குறுங்குடி – குறுகியவனான வாமநனது
க்ஷேத்திரமாதல் பற்றிப் பெயர் பெற்றது.
பெரிய திரும. 114.
தென்னன் திருமாலிருஞ் சோலை – இத்திருப்பதி மதுரையிலிருந்து 12 கல் தொலைவில் உள்ளது.
நின்ற திருக்கோலம். திருவாய். 10-7-3.
தென்னன் தொண்டையர்கோன்- தொண்டைமான்
என்பவன் தென்னவனுடைய வமிசத்தில்
தோன்றினமை பற்றித் தென்னன் தொண்டையார்கோன்
என வழங்கப்பெற்றான். பெரிய. 2-3-10.
1990 தென்னன் பொதியில் – பாண்டியனுடைய பொதிய
மலையில். பெரிய திரும. 40, 83. தென்னனுயர் பொருப்பு – திருமாலிருஞ் சோலைமலை.
பெரியதிரும.6.
தென்னனோட வடவர சோட்டங்கண்ட – சோழனும்
தோற்று ஒடும்படியாகச் செய்த. பெரிய. 4 – 5-6. தென்னாடன் – தென் தேசத்தரசன் பெரிய. 6 – 6- 6. தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்.
பெரியாழ். 4 -9 – 11.
1995 தென்னா தெனா வென்று – தாளச் சொற்கட்டு.
திருவாய். 3 – 9-1. சிலப். 3. 26 உரை. தென்னானாய் – தெற்கே உள்ள ஆனை. திருமாலிருஞ்
சோலை மலையில் நின்ற யானை போன்றவனே. தென்னுரை தமிழுரை. பெரிய. 39. தேக்கம் -தாமதம். பெரியாழ், 2 -9-3. தேசம்- புகழ் (தேஜஸ்). திருப்பா.7; பெரிய. 1 -9-9; திருவாய்3 – 3-4.

2000 தேசமறியவுமக்கே ஆளாய் – உலகமெல்லாம் அறியும்படி.
உமக்கே தொண்டராய். பெரிய. 4 – 9 – 4.
தேதென வெனல்- தென்னதென்ன என்று. பெரிய. 4 – 1 – 1.
தேர்வழி தூல் -தேர் போன வழியை அழித்திடாதே.
‘தேர்வழி தூரல்’ என்பது ஒரு துறை. திருவிருத். 17.
தேராழியால் மறைத்தார் – சக்ராயுதத்தால் சூரியனை
மறைத்த பெருமான். நான்முகன்திரு. 16.
தேவர் காரியம் – பகவதாராதனம். பெரியாழ். 4 – 4 – 1.
2005 தேவகி சிங்கமே – தேவகி வயிற்றில் தோன்றிய சிங்கக்
குட்டியே. பெரியாழ். 1 – 3 – 4.
தேவிமை தகுவார் – உம்மோடு, ஒக்க முடி சூடுகைக்குத்
தகுதியாக இருப்பவர். திருவாய். 6 – 2 – 6.
தேவில் – கோயில் திருவாய். 4 -4-8.
தேவை – அடிமை. பெரியாழ். 1 – 4 – 8.
தேற்றன்மை – தெளிவு. பெரிய. 10 -9 – 9.
2010தேனித்து – இனித்து. பெரியாழ். 4 -61; திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம் – 9.
தேனுகன் கதை. திருச்சந்த. 80, 107, பெரியாழ்.
1-5-4; 2-10-4, 3-6-4; பெரிய. 3-10-7, நாச்சி. 11-9.
தேனும் பாலுங் கலந்தன்னவர்- தேனும் பாலும் ஒன்றாகச்
சேர்ந்தாற்போல ஏகரசமாக இருக்கின்ற பக்தர்கள்.
பெரிய. 5 – 4 – 8.
தைத்திரியன் – தைத்திரீய உபநிடதத்தினால்
சொல்லப்படுகிறவன். பெரிய. 5 – 4 – g.
தையில் தரை விளக்கி மாசியில் தெருவணிந்து நோற்றல்.
நாச்சி. 1 – 1.
2015தைவருகை தடவுதல். திருவாய். 5 – 4-8.
தொங்கல் – மாலை, பீவிக்குடை விசேடம். பெரியாழ். 3-4-1. தொடர் – தொடர் சங்கிலி. பெரியாழ். 1-7-1, 1-9-1.
தொடுப்புண்ணுதல் – திருடியுண்டல். பெரியாழ். 2-3-9. தொடுப்புண்ட- ஒளித்துண்ட. பெரியாழ். 2 – 3 – 9.
2020தொடுவுண்ட – கனவினால் உண்ட. திருவாய். 1-5-1; 3-8-3.
தொடுவுண்ண – களவினால் உண்ண. திருவிருத் – 21.
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
திருவாய். 9 – 4 – 9.
தொண்டர் கைத்தண்டு. பெரிய. 10 – 9-4.
தொண்டர் தம்மை நீசர்களை. பெரிய. 7 – 2 – 2.

2025 தொண்டர் தொண்டர் தொண்டன். திருவாய். 7-1-11; 8-9-11.
தொண்டரைப் பாடும்- தொண்டர் என்ற சொல் இங்கு
நீசர்களைக் குறிக்கின்றது. பெரிய. 1 – 1 – 7.
தொண்டனேன் -அடியேன். பெரிய. 1 – 6 – 3.
தொண்டையர் கோன் செய்ததொண்டைமான்
சக்கரவர்த்தி செய்த. பெரிய. 2 – 3-10.
தொழு-தொழுவத்தில். திருவாய். 10-3 -4.
2030 தொழுகுலம்- வணங்குதற்குரிய குலம். திருவாய். 3 – 7-8.
தொழுத்தனில் – தொழுவில். திருவாய்.10- 3-4.
தொழுத்தைமார் – அடிமை செய்யுமவர்கள்.
பெரியாழ். 2-9-8.
தொழுதுவனாய்- அஞ்சலி செய்து கொண்டு முன்நிற்றல்
பெரியாழ். 1 – 3 – 5.
தொழும்பர் – நீசர். திருமா. 5.
2035 தொளி – வீதி. பெரிய. 2 – 10-5.
தொறுப்பாடி – ஆய்ப்பாடி, பெரியாழ். 2 – 1 -6.
தோக்கை- முன்தானை. பெரிய. 4 -4 -3.
தோகைமயில், பெரியாழ். 1 -5 – 7.
தோண்டல் – ஊற்றுக்கள். பெரியாழ். 4 – 3 – 6.
2040 தோத வத்தி – தோய்த்து உலர்த்தின வஸ்திரம். பெரியாழ். 4-8-1.
தோரணவாயில் – தெருவில் கட்டும் அலங்காரத் தொங்கலை
உடைய வாசல். திருப்பா – 16.
தோழமை-நட்பு. பெரியாழ். 3 -10-4;நாச்சி.55.
தோள் குலைக்கப்படுதல் – தோள்கள் அசைந்தாடப்படுதல்.
திருவாய். 4-6 – 7, 10
தோள் விசிறி – தோள்வீசி. பெரிய. 3 – 7-5.
2050 தோளாத மாமணி – துளை பட்டு ஒளி மழுங்காத, நீலமணி, பெரிய – 11-7-2.
நக்கபிரான் – சிவபெருமான். திருவாய். 3-10-9; 4-10-8.5-3-10. நகந்தாய் (நகத்தாய்) நகத்தையுடையவனே. திருவாய். 9-4 -7. நகரிழைத்து – கோயில் கட்டி. இரண்டாம் திரு.4. நங்கைமீர்கள் – பெண்காள். பெரியாழ். 3 -6 -1.
2055 நச்சிலை கொல்-நஞ்சு வடிவாயிருப்பதோர் இலையே.
திருவாய். 7 – 7-7.
நச்சுமாமருந்தம் – விரும்பப்படுகிற சிறந்த மருந்து.
திருவாய். 3-4-5.

நச்சுவார் முன்னிற்கு நாராயணன். பெரியாழ். 1-8 – 11.
நச்சுவாருச்சிமேனிற்கு நம்பி – பெரிய. 7 – 10-8.
நஞ்சு- நைந்து. பெரிய. 11 – 2 – 8.
2060 நடுவு பாட்டு – நடுவிடம். பெருமாள். 1 -11, திருமா. 23.
நண்ணம் – சிறிது. திருச்சந் – 46.
நண்ணார் முனை – பகைவர்களுடைய யுத்தத்தில். பெரிய. 4-7-1
நந்தி பணி செய்த நகர்- ஒரரசன். பெரிய -5 – 10 – 7.
நப்பின்னை – திருப்பா 19, 20; பெரிய. 1 – 5 – 7, 2-4-9.
2065 நம்பர் – விசுவனீயர். பெரிய. 9 – 2-4.
நம்பரமன்று- நம்மால் எம்பெருமான் பெருமைகளைப் பேசி
முடிக்க முடியாது. பெரியாழ். 4 – 5 – 1.
நம்பன் -திருமால்.பெரிய. 5-10-3.
நம்பி- நற்குணங்களால் நிறைந்தவன். பெரிய. 6 – 10 – 1;
திருநெடுந். 12.
நம்பிமீர் – உலகினரே. திருமா. 10.
2070 நம்புதல் விரும்புதல்,பெரிய. 6 – 3-9.
நம்மன்-பூதப்பிரேத பிசாசங்கள். பெரியாழ். 5 – 4 -3.
நம்மை- தங்களை, பெரியாழ்.4 -9-1.
நமர்-நம்மைச் சேர்ந்தவர். பெரியாழ் -1 – 1 – 6.
நமவென்ன- நமோ வாசகம். திருவாய்- 3-3-6.
2075 நமன் சூழ் – யமனைத் தலைவனாகக் கொண்ட
மூன்றாந்திரு. 98.
நமன்று-வணங்கி, திருவாய். 3-3-7.
நமனார் பாடியைப் பெரிதும் – யம பட்டணம்.பெரிய. 1-6-6.
நமுக- குழையும்படி, திருவாய் – 9 -9 – 3.
நமுசி – மகாபலியின் குமாரன். பெரியாழ் – 1 – 8 – 8.
நமையாமல் – உபத்திரவம் செய்யாமல்.முதல்திருவந். 32.
நமோ நாரணம். பெரிய, 6 – 10 – 1 – 10.
நயவேன் ஆசைப் படேன். முதல் திருவந். 64
நயாசலன் – நீதிக்குக் குலைதலில்லாதவன். பெரியாழ். 4-4-8.
2080 நரகநாசன் நரகத்தை ஒழித்தருளுகிறவன். பெரியாழ். 4-4-4.
நரகம் – ஸம்ஸாரம். (விவேகிகள் ஸம்ஸாரத்தை நரகம் என்ற
பெயரால் வழங்குவர்) பெரிய. 11.8-9.
நரகன் – நரகாசுரன். பெரியாழ். 1-5-4; 4-3-3, பெரிய. 3-9-8.
நரசிங்கன் – நரசிம்மன். திருவாய் – 2 -4 -1; பெரியாழ்4 -4-6,9
நரத்திலும் – மனுஷ்ய யோனியிலும். திருச்சந். 29.

2085 நர நாராயணர் – திருமால் அவதாரமான இரு முனிவர்.
பெரிய. 7 – 1-5; 7 – 7 – 3; 11 – 4-4
நரம் – நரசென்மம்.திருச்சந்த. 29.
நரியாயரக்கர் – நரிபோல அரக்கர்கள். திருவாய்.7-6 – 8.
நல்கல் – கொடுத்தல். திருவாய். 1-4-5.
நல்குவான் – கொடுப்பான். பெரிய திருவந். 23.
2090 நல்லரன் – சிவபெருமான். பெரிய. 2 – 9-1.
நல்லனகள் – நன்றாய். திருவாய். 6 -7 – 9.
நலங்கழல் ருசி ஜனகமான திருவடி. திருச்சங்.78.
கலியாண நலந்திகழ் நாரணன் குணத்தையுடைய
நாராயணன். பெருமாள். 1-11; 10, 10; பெரிய 9-9 – 9.
நலமந்த மில்லதோர் நாடு – அளவுகடந்த ஆனந்தம்
இருப்பதான நாடு. திருவாய் – 2-8-4.
2095 நவிலுகை – சொல்லுகை. திருவிருத்50.
நள்ளி – பெண்நண்டு. பெரிய. 6 – 7 – 6.
நளிர்ந்த- சீதளமான பெரிய. 4-4-8, திருவாய். 9-2-4.
நளிர் மதிச்சடையன் – சிவபெருமான்.திருவாய். 3-4-8
திருவாசி – 7, பெரிய திருவந் – 43.
நற்கிரிசை -நல்ல வியாபாரம். நான்முகந்திரு. 96.
2100நற்றம் -நன்மை. பெரியாழ் – 4-5-8.
நறையூர் – திருநறையூர் என்றது நாச்சியார் கோயிலைப்
பற்றியது. கும்பகோணத்திற்கு ஆறுகல் தொலைவில்
உள்ளது. பெரிய திரும. 73. திருநெடுந். 17,
பெரிய -4-9-2, 10-1-5, சிறியதிரும – 71.
நன்புருகி -ஞானம்,நன்மை. இரண்டாம் திரு-1
(தே.) 3-125-3. நல்லூர்ப் பெருமணம்.
நன்னடுவுள் – நன்றான நடுவுள். பெரிய. 4-3-1, 2,3,4,10.
நன்னாளால் நல்ல நாளும். திருப்பாவை.1.
2105 நாக்கு நீளுதல் – அளவுகடந்து பேசுதல். திருவாய். 4-7-6.
நாக்கொண்டு – நாவினால். நான்முகந்திரு. 75, திருவாய். 3-9-9.
நாக கன்னிகையை அருச்சுனன் மணந்தது. பெரிய திரும. 55-59.
நாகணை ஆதி சேஷனாகிய படுக்கை. நாச்சி – 10-9.
நாகராயன் மடப்பாவை – அருச்சுனன் மனைவி.
பெரியதிரும. 57.
2110 நாகரிகர் – ரஸிகர். பெரிய – 9-2-4, பெருங்கதை. 1-41 அடி. 83.
நாகு கன்றுள்ளினாற் போல் – இளங்கன்று தன் தாயை நினைத்துக் கத்துமா போல். பெரிய 7-1-1.
நாகை -நாகப்பட்டினம் என்பதன் மரூஉ. பெரிய – 9-2-1-10.

நாகையழகியார் – நாகையில் எழுந்தருளியுள்ள சௌந்தர
ராஜப் பெருமாள். பெரிய – 9-2-10.
நாங்கூர் – திவ்விய தலம். பெரிய – 3-8-10, 10-1-3;
பெரிய திரும. 131.
2115 நாங்கை – மயிலாடுதுறைக்கு வடகிழக்கிலுள்ள திருப்பதி,
பெரிய. 4-8-1-10.
நாட்காலே நீராடல் – விடியல் காலத்தில் நீராடுதல்.
திருப்பா. 3.
நாட்டு மானிடத் தோடெனக் கரிது. எனக்கு நாட்டிலுள்ள
மனிதர்களோடு வசிப்பது என்பது அரிது. பெரியாழ். 5-1-5.
நாடகத்தொலி நடனத்தினுடைய ஓசை. பெரிய. 4-10-3.
நாண் மட மச்சம் -இவை பெண்களுக்குரிய குணங்கள்.
நாணமாவது தகாத காரியத்தில் மனம்
ஒடுங்கி இருப்பது. மடமாவது எல்லாம்
அறிந்தும் அறியாது போன்றிருத்தல்.
அச்சமாவது மிகச்சிறிய காரணத்தினாலும்
மனம் நடுங்குதல். பெரிய. 9-5-6.
2120 நடுங்குதல். பெரிய. 9-5-6.
நாணற் படுத்துப் பரிதி வைத்தல் – பசுமையான
நாணற்புற்களை அக்னிக்கு நான்கு புறங்களிலும்
வைத்தல். நாச்சி – 6 – 7.
நாதானை – நாதனாய் இருப்பவன்.(சர்வ சேஷியாய்)
நான்முகன் திரு-64; தே. 1-30-5 புகலி
நாந்தகம் – திருமாலின்வாள். பெரியாழ். 4-7-4.
2125 நாமங்கை- சரசுவதி. பெரிய. – 2-10-6.
நாமதேயம் – பெயர். திருச்சந்- 14.
நாய்கூழை வாலாற் குழைக்கின்றது போல். திருவாய். 9-4-3.
நாரணம் – ஓம் நமோ நாராயணாய’ என்றும்
அஷ்டாக்ஷரமந்த்ரத்தைக் குறிக்கும். திருவாய்.10-5 – 1.
நாராயணா என்னும் நாமம் -அஷ்டாக்ஷர மகாமந்த்ரம்
பெரிய, 1-1-10.
2130 நால்வேதம் -ருக், யஜுஸ், ஸாமம், அதர்வணம்.
முதல் திருவந். 11; 31; 68.
நாலிரு மூர்த்தி – அஷ்டாக்ஷர ஸ்வரூபி. பெரியாழ். 4-3-11.
நாலு மாறும்பத்து. பெரிய. -9-10-10.
நாலு மூர்த்தி – பிரதாநம்,புருஷன், அவ்யக்தம்,காலம்
என்னும் இவற்றைச் சரீரமாகக் கொண்ட
நாலுமூர்த்தியாய். திருச்சந். 17.

நாலைந்து திங்களில் சகடம் சாடியது- நான்கு ஐந்து
மாதத்தில் சகடாசுரனை அழித்தது. பெரியாழ். 1-2-11.
2135 நாவகாரியம் – நாவினால் சொல்ல வொண்ணாத
பெரியாழ். 4-4-1.
நாவல் – தோற்றவர்கள் முன்னே ஜயித்தவர்கள்
சொல்லுஞ்சொல்அறையோவறை யென்னுமாப்
போல. திருமா. 1.
நாவழித்தல் – நாக்கை வழித்தல். பெரியாழ் – 1-1-6.
நாவாய் -பாரத்புழை என்ற ஆற்றங்கரையில் உள்ளது
இத்திருப்பதி. நின்ற திருக்கோலம்.பெரிய – 6-8-3; 10-1-9.
நாழ்-சாமர்த்தியம். நானென்னும் செருக்கு. அகங்காரம்,
அர்த்தமில்லாத வார்த்தை. பெரிய திருவந். 10;
இரண்டாம் திருவந். 65. திருவிரு .71.
2140 நாழ்மை – ஏற்றம். திருவாய்-4-6-9.
நாழம் – குற்றம். பெரியாழ் – 4-3-5.
நாழல்-கோங்கு. பெரிய. 3-5-7.
நாழிவளோ – நாழ் – சுதந்திரமாய் நடக்கும் செருக்கு.
பெரியதிருவந்.10,11.
நாளோலக்க மருளுதல் சபையிலிருந்து அருள்பாலித்தல்.
திருப்பள்ளி. 9.
2145 நான்முகன் பிரமன். திருவாய். 10-10-1.
நான்முகனை நாராயணன் படைத்தான். நான் முகந்திரு – 1. நான்று-காலத்தில். நான்முகன் திரு – 5, திருவிருத் – 5. நானப்புதலில் – மஞ்சள் தூற்றில். பெரிய – 6-5-3.
நானம் – சந்தனம், கத்தூரி, கர்ப்பூரம் முதலான சுகந்த திரவியம். மஞ்சள். பெரியாழ் – 1-3-9; பெரிய. 6-5-3.
2150 நானாவிதம் – பலவிதம். பெரிய – 1-9-2. நானிலம் – பூமி. திருவிருத் -26. நிச்சித்து – நிச்சயித்து. திருவாய் 10-4-4,5.
நிமியும் வாய் – நெளிந்தவாயையுடையவள். திருவாய். 1-5-2. நியதம் எப்பொழுதும். திருப்பல்.8.
2155 நிரந்தரம்- இடைவிடாமை. திருச்சந்த 101, தே.7-61-8. ஏகம்பம்
நிரந்தவர் – பகை அரசர்கள். பெரிய. 2-9-3. நிருமித்தல் – சங்கற்பித்தல். திருவாய் -4-8-1. நிறைகோளுழவர் – பசுக்களை ஹிம்சிப்பதையே

தொழிலாகவுடையவர். திருவிருத் -37.
நிரைப் பொற்பூ- ஒழுங்கான பொற்பூ. பெரியாழ் 1-3-8.
2160 நில்லாப்பாய்- பின்தொடரா தொழியிலுமொழி. பெரிய.
திருவந் -60.
நில – நிலா. பெரிய -7-8-3.
நிலத்தேவர் குழு அந்தணர் தொகுதி. திருவாய் -5-1-8.

நிலந்தரஞ்செய்யும் – தரைமட்டமாக்கிவிடும். பெரிய -1-1-9.
(தே) 6-34-7. ஆரூர்.
நிலாகின்ற- விளங்கி வாழப் பெற்ற. திருவிருதி -75.
2165 நிலாத் திங்கள்துண்டத்தாய் – காஞ்சிபுரத்திலிருந்து ஒருகல்,
தொலைவில் உள்ளது.
நின்றகோலம்.திருநெடுந் -8.
நிவர்தல்-ஒங்குதல். இரண்டாந்திருவந்- 78.
நிவந்த – உயர்ந்த. அம -2.
நிவந்து-உயர்ந்து. இரண்டாந்திருவந் -78.
நிவா – வெள்ளாறு. பெரிய -3-2-9; தே2-90-1-10
நெல்வாயிலரத்துறை.
2170 நிவா – வலங்கொள்தில்லை. பெரிய. 3-2-7.
நிழலுமடிதாறும் – பாதநிழலாகவும், பாதரேகையாகவும்.
பெரிய திருவந் – 31.
நிழறுதொல்படையாய் – நிழறு – ஒளியைச் செய்கிற
திருவாய். 6-2-5.
நிழறுதல் ஒளிவிடுதல் திருவாய் -6-2-5.
நிறம் – வெளிது. மூன்றாம் திருவந் -56.
2175 நிறை – பெண்தன்மை. பெரிய -2-4-4.
நிறைமொழி – வேதம். பெரிய 11-6-3.
நின் திருவானை – உனது பிராட்டியின் மேலாணை.
பெரியாழ் -5-3-2.
நின்புள்ளுவ மறியாதவர்க்கு புள்ளுவம். வஞ்சனை.
திருவாய் 6-2-3.
நின்றவூர் – இப்போது திண்ணனூர் என்று வழங்குகிறது.
சென்னை அரக்கோணம் பாதையில் உள்ளது.
பெரிய. 2-5-2, பெரிய -7-10-5.
2180 நின்றான் இருந்தான் – திருருநிறையூரில் நின்ற திருக்கோலம்
திருவாலியில் வீற்றிருந்த திருக்கோலம்.
நின்னையே வேண்டி – உன்னையே விரும்பி. பெருமாள். 5-9.

நினை தொறும் நினைக்கும்தோறும் திருவாய். 9- 6-1.
நீர்கள் – நீங்கள். திருவாய் 7-3-9.
நீர்ப்பூ நிலப்பூ. திருவிருத் – 55
84
2185 நீர்மலை பல்லாவரத்திலிருந்து 3 கல் தொலைவில் உள்ளது.
எம்பெருமான் நாமம். பொன்மாணிக்கம். சிறிய
திரும.73;பெரிய திரும-130; பெரிய -2-4-1-10;
2-7-8; 8-2-3, 10-1-1.
நீரகம்-காஞ்சிபுரத்திலிருந்து முக்கால் கல் தொலைவில்
உள்ளது . திருநெடுந் – 8.
நீராட வாராய் – நீராடுவதற்கு வரவேணும்.
பெரியாழ் -2-4-1, 10.
நீலன் – திருமங்கையார், வானரர் தலைவன். இராமநுஜ – 17;
பெரிய – 10-3-3.
நீலார் கண்டத்தம்மானும் – கருமை. திருவாய் -6-10-8.
2190 நீற்கண்டன்-நீலகண்டன். (நீலம் என்ற சொல்அம் கெட்டு
நீல் என நின்று லகரம் றகரமாயிற்று) நான்முகன்திரு – 15. நீறாடிதான் – சிவன். திருமுகன்திரு.-15.
நீறு – சுண்ணம், தூளி. சிறிய திரும-10; திருவாய் -4-6-6. நீறு செவ்வேயிடக்காணில் – நீறு பஸ்மம். திருவாய் -4-4-7.
நீறுபூசி – திருநீற்றைப்பூசி. பெரிய -6-7-9.
2195 நுண்பு – நுண்மை. பெரிய திருவந்-8.
நுணுக்கிய மஞ்சள் – அரைத்த மஞ்சள். பெரியாழ். 1-2-15.
நுளைப் பாவையர் – குறத்திகள். பெரிய 387.
நூக்க – தள்ள. திருமா – 27.
நூல்- ஆகமம். முதல் திருவந். 5.
2200 நூலாட்டி – லக்ஷ்மிநாதன். நான்முகன் திரு .40 நூலிழத்தல் – மாதர் மாங்கல்யமிழத்தல். பெரிய -2-3-6. நூற்றவள் – (விசாரித்தவள்) கைகேயி. பெரியாழ் -3-9-8. நூற்றவர் – துரியோதனாதியர். பெரியாழ். 2-1-2.
நூறு தடா நிறைந்த வக்கார அடிசில் – தடா – பானை.)
நாச்சி -9-6.
2205 நூறு தடாவில் வெண்ணெய்- நூறு பானைகள் நிறைய வெண்ணெய். நாச்சி – 9-6. நெக- கழல. பெரிய -8-5-9. நெஞ்சகம்பால் சுவர் – நெஞ்சு என்றும் சுவரில். பெரியாழ். 5-4-6.

நெஞ்சறவறப்பாடும் பாட்டை – பிரிவு பிரியும்படி.
திருவாய் -9-9-9.
நெஞ்சிடிந்துகும் – நெஞ்சு சிதிலமாய். திருவாய் -9-6-2.
2210 நெஞ்சென்னும் பொன் வண்டு – நெஞ்சாகிய அழகியவண்டு.
இராமாநுஜ – 100.
நெடுஞ்சொலால் மறுத்த நீசனேன் – நீண்டசொற்களாலே
மறுத்த நீசனான நான். பெரிய – 1-6-5.
நெடு நோக்குக் கொள்ளுதல் – நீண்ட நோக்குடன்
எதிர்பார்த்தல். நாச்சி -12-6.
நெடும்புரிசை – உயர்ந்த மதில். பெருமாள். 10-3.
நெடுமறுகில் – பெரியவீதியில். பெரிய. 2-6-10.
2215 நெடுமாலடியார் -திருமாலுக்குத் தொண்டு செய்பவர்கள்.
திருவாய். -4-5-7.
நெய்ச்சுவைத்தேறல் என்கோ – நெய்போலும் சுவையை
யுடைய தேன் என்று
சொல்லுவேனோ.
திருவாய். 3-4-5.
நெய் தொடுவுண்டு – நெய்யைக் கவர்ந்து உண்டு. திருவிருத்54.
நெல்லி- நெல்லி இலை. பெரியாழ் -2-4-3.
நெல்லி மல்கி- நெல்லி மரங்கள் நிறைந்து. பெரிய. 1-7-9.
2220 நெற்று – வாகை மரத்தின் நெற்று. பெரிய 1-7-8.
நெறியெல்லாம் – சகல உபாயங்களையும். திருவாய் -4-8-6.
நெறு நெறென – இரட்டைக்கிளவி. பெரிய -5-10-4; (தே)
6-18-11 பூவணம்.
நென்மெலி -ஒருபடை வீடு. பெரிய -2-9-8.
நென்னல் நேற்று. பெரிய திரும. 130.
2225 நேச பாசம் ஆசாபாசம். திருச்சந் 107.
நேத்திரம் – பீலிக்கண். பெரியாழ்.3-4-5-7-8.
நேர்ந்து பராவி வைத்தல் வேண்டி வணங்கி நிற்றல்.
நாச்சி. 9-6.
நேர்ப்பம் பிரகிருதி. திருவாய் -8-1-6.
நேரா- அறுத்துப் போட்டு. பெரியாழ் – 3-9-10.
2230 நைமி சாரணியம் – வடநாட்டில் நிம்சார் என்னும் இரயில்
நிலையத்திலிருந்து ஒருகல் தொலைவில்
உள்ளது .நின்ற திருக்கோலம்.
பெரிய 1 – 6 – 1 – 10.

நையாடல்-எண்ணெய் விளையாட்டு. திருப்பா. 4 வியாக்;
நைவளம்-நவிற்று பொழில் குறிஞ்சிப்பண். பெரிய. 5-10-2.
நொக்கென – விரைவாக. திருவாய் -4-1-3.
நோன்பியர் -சமணர். பெரிய. 2-1-5.
பக்க நிற்க நின்ற பண்பர். பெரிய. 9-6-1.
பகடு விண்டலறல் – யானைபோல் ஒலித்தல். பெரிய 5-7-4.
பகர்தல் பிரகாசித்தல். பெரியாழ். 1-7-8.

பத்திராகாரன் – விலக்ஷணமான வடிவுடையவன்.
பெரியாழ் – 1 -9- 6.
பத்து – பக்தி. திருச்சந் – 79.
2285 பத்துடையடியவர்க்கு – பக்தியையுடைய அடியார்களுக்கு.
திருவாய்-1 -3-1.
பதக முதலை – துன்பம் தரும் முதலை. பெரியாழ் -2 -1-9.
பதலைக் கபோதம் (பதலை – கும்பம், கபோதம் -புறா)
பெரிய -3-8-2.
பதவிய-மிருதுவான. திருவாய் -7-9-10.
பதவியாய் – நீர்மையை உடையவனாய்க் கொண்டு. இரண்டாந்திரு – 89.
2290 பதியம் – பாசுரம். திருப்பா. தனியன்.
பதிற்றைந் திரட்டி – நூற்றுவரான துரியோனாதிகள்.
பெரிய – 2-4-4.
பதினொரு விடையர் – ஏகாதசருத்திரர்கள். திருப்பள்ளி 6. பந்தணைந்த மெல்விரலாள் – பெரிய -2-2-4.
பந்தனை – அனுக்கம், பிள்ளைக்கு வரும் வியாதி. திருப்பல் 6.
2295 பந்தார் மெல்விரல் – பந்துபொருந்திய விரலினையுடையவள். இ
பெரிய -7-7-2; திருப்பா -18.
பந்து தூதை – சிறு முட்டி, பூங்குலைகள். திருவாய் -6-7-3.
பப்ப – ஒலிக்குறிப்பு. பெரிய -1-3-7; தே. 4-5-6. ஆரூர். பம்பை-வடபாலை. திருவாய் – 6-1-10.
பயந்தேன் -பசந்தேன். பெரிய – 9-4-2.
2300பயலை – பசலை வர்ணியம். நோய். பெரிய. 2-7-9; 8-1-1, திருவாய். 2-1-1; பெரிய – 3-6-2; திருவிருத் – 70. தே 1-60-3,9 தோணிபுரம்.
பயலோவிலீர் – பாகமுடையீரல்லீர், திருவிருத் -15. பரக்கழித்து பழிவிளைத்து. நாச்சி. 12-3, தே. 5-86-10 வாட்போக்கி.
பரக்கழிந்தாள் – அடக்கமழிந்தாள். பழிக்கு அஞ்சாளானால் பெரிய -3-7-9; 4-8-5.
பரக்கழிந்து பழியஞ்சாதே, மிகவும் கழிவுமாம். பெரிய.3-7-3.
2305 பரகாலன் எதிரிகளுக்கு யமன் போன்றவன்.
பெரிய. 3-4-10; 3-9-10: 7-4-10; 7-5-10. பரங்குன்று இமயமலைகள் உள்ள திருப்பிரிதி. பெரிய. 7-1-6. பரசுராமன் – ஜமதக்னி முனிவருடைய மைந்தன்.
பெரிய. 8-5-8. திருவாய். 6-2-10.

பரண்மேல் – மச்சின்மேல். திருவாய் 8-4-1.
பரத்தர் – பெருமாள்.3-6.
2310 பரத்தை – பெரியாழ்வார்.3-5-9.
பரத நம்பி- பரதாழ்வான். பெரியாழ்வார்-3-9-6, 3-10-5,
பெருமாள்8.5.
பரதன் – இராமனின் தம்பி. பெரியாழ்-2-1-8. பெரிய -2-3-7.
பரதனுக்கு – பெருமா. 10-4.
பரம் – பொறுக்க ஒண்ணுதல் பெரியாழ். 4-5-1,
திருவிருத் . 2-9-3 (மழபாடி-7-100-4. நொடித்தூன்மலை.)
2315 பரம்பரமாய் – ஒன்றுக்கு ஒன்றுமேலாய் – திருவாய்
8-8-5.(திருவாசகம். கீர்த்தி -119)
பரம்பரன் – பெரிய. 1-5-1, திருவாய்,4-3-9, 8-8-2.
பரம்புருடன் – உத்தம புருஷன் – திருவாய்–4-8-3.
பரம்புருடா -புருஷோத்தமனே – பெரியாழ்.5-4-2.
பரமகவிகள் – திருவாய் – 7-9-6.
2320 பரமசோதி -பரஞ்சோதி – திருக்குறுந் – 11.
பரமே – வசமோ. திருவாய்.6-2-6.
பரமேச்சுரவிண்ணகரம் – பெரிய – 2-9-1-10.
பரமேட்டி – திருப்பல் -12. திருவாய். 9-1-8.
பராங்கதி – சிறந்த பதவி – திருமா – 4.
2325 பரிப்பு – பரிவு. துக்கம் – திருவாய் -6-4-6.
பரிபவம் -அவமானம் – பெரியாழ் -2-9-2.
பரிமாற -வியாபரிக்க – பெரியாழ் – 3 – 6 – 8.
பரிமுகமானவன் -ஹயக்ரீவாவதாரமெடுத்தவன் –
பெரிய -5-3 -2.
பரிமேற்கற்கி – கற்கியவதாரம் – பெரிய-2-5-3.
2330 பரிதிவட்டத்தூடுபோய் – சூரிய மண்டலத்தின் வழியாகச்
சென்று. அர்ச்சராதி மார்க்கம்.
4-5-10.
பரிவேடம் – சந்திரனைச்சுற்றிச் சில காலங்களில்
காணப்படும் கோடு .ஊர்கோள்- பெரியாழ்-1-7-3.
பருங்கிப்பறித்தல்-கொன்றுமுறித்தல். பெரியாழ்-1-2-7.
தே. 3-69-3. காளத்தி.
பருக்குதல் – பருகச் செய்தல். நாச்சி- 13-4.
பருகுநீர் – குடிக்கின்ற தண்ணீர்- பெரியாழ் -4-4-4.

2335 பருச்செவி – பருமனானகாது பெரியதிருவந் – 63
பருப்பதம் – மகாமேரு பருவதம் பெரியாழ்-5-4-7.
பல்லவர் கோன் பணிந்ததில்லை – பெரிய -3-2-3.
பல்லவன் – பல்லவ அரசன். பெரிய -2-9-2.
பல்லாண்டிசைத்தல் – மங்களாசாகனம் செய்தல்.
பெரியாழ்-1-9-5.
90
2340 பல்லாண்டு திருவோணத்தில் கூறுவித்தல்- மங்களாசாசனம்
திருவோண நட்சத்திரத்தில் செய்வித்தல்.
பல்லி சொற்கொள்ளல் – திருவிருத் – 48.
பல்லிநுண்பற்றாக – பல்லியானது சுவரிலே இடைவெளி
யின்றிப் பற்றியிருப்பது போல.
பெரியாழ்-3-4-2.
பலங்கனி – பலாப்பழம் – பெரிய -3-1-5,3-10-3,5-3-5. பலதேவன் – பலராமன். நாச்சி14-1.
2345பவர் – பரப்பு- திருவாய் -2-2-6.
பவித்திரன்-தூயவன், பரிசுத்தமூர்த்தி. திருவாய். 2-3-9.
பவத்தர் – பௌத்தர்கள். நான்முகன்திருவந். 6.
பழநடை – முன்பு செய்து போதருங்கிரமம் பெரிய-2-3-4. பழிகாப்பு- கெட்டபேரைக்காப்பது- நாச்சி-12-3.
2350பழுக்காய் – பழுத்தபாக்கு – பெரிய-6-9-8. பள்ளிக்கட்டில். கிருப்பா 22
பள்ளிக்குறிப்பு – தூக்கக்குறிப்பு (கொட்டாவி
விடுதல் முதலியன)பெரிய-10-4-6.
பள்ளிகமலம் தாமரைப்பூவாகிறபடுக்கை. பெரிய.6-7-6.
பள்ளிகோள்- கோள்முதனிலைதிரிந்த தொழிற்பெயர். கோள். கொள்ளுதல்பெரியாழ்-5-4-9).
2355 பள்ளியிலோதி வந்த சிறுவன் – பிரகலாதன். பெரிய-2-3-8 பற்பநாபன்-பத்மநாபன்.திருச்சந்23, பெரியாழ்-2-3-2. பற்பபாதன்- தாமரைமலர் போன்ற மென்மையான பாதங்களையுடையவன் திருச்சந்த. 32. பற்பபாதா. விளி திருவாய் -7-6-1. பற்றுமஞ்சள் நிறம்பிடிக்கும் பூச்சுமஞ்சள். பெரியாழ்-3-2-2.
2360பற்றையை பயனற்ற பொருளை. திருவாய். 3-9-7. பற – உந்திபற பெரியாழ்-3-9-1-10.
பறியோலைச் சயனத்தர் – தாழை ஓலைகளினாற் செய்த படுக்கையையுடையவர்.பெரியாழ்-1-1-5,
திணைமாலை-113,குறுந் -221,அகநா-94, நற்-142,

பறை-நோன்புக்கு அங்கமானதொரு வாத்திய விசேடம்.
திருப்பா- 8, 24 – 28.
பறை தரும் – புருஷார்த்தத்தைத் தரும் – திருப்பா10.
2365 பன்னிரண்டா நாள் சிசுவுக்கு உத்தானம் செய்தல்.
உத்தானம் – குழந்தையைப் பிரசவ அறையிலிருந்து
வெளிக்கொணரும் சடங்கு. பெரியாழ்-1-1-8.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் – பன்னிரண்டு
திருவோணத் திருநாளளவும் சமைத்தேன். பெரியாழ்-2-9-7.
பன்னிருதிங்கள்- பன்னிரண்டு மாதம். பெரியாழ்-3-2-8.
பன்னிருநாமம் – திருமாலினுடைய பன்னிரண்டு பெயர்கள்
ஒவ்வொரு செய்யுளிலும் வந்துள்ளது. திருவாய். 2 – 7-1 – 10.
பனங்கனி தலைக்குவமை திருச்சந்-80.
2370பனங்கனிபோலப்பருமுடியுதிர – பெரிய 9-1-7-
பனிவரை – திருவேங்கடமலை திருநெடுந் 9.
பனுவல் – நூல் பெரிய – 10-4-10.
பாக்கியம் – அதிர்ஷ்டம் – இரண்டாந்திரு – 34.
பாகுடம் – உபகாரம், பச்சை- பெரியாழ். 4-5-8.
2375பாசனம் – மரக்கலம் திருச்சந் – 100.
பாசறவு -பசுமையழிவு திருவாய் – 6-8-7,8.
பாசி தூர்த்துக்கிடந்த பார்மகள் – பாசி படிந்து கிடந்த
பூமிப்பிராட்டி நாச்சி-11-8.
பாசிலை நாணல்-பசுமையான நாணற்புற்கள் நாச்சி-7-7.
பாஞ்சசன்னியம் -எம்பெருமான்கையிலுள்ள சங்கு.
பெரியாழ். 3-3-5.நாச்சி-7-10
2380பாஞ்சாலி பாஞ்சாலதேசத்து அரசன் மகள் –
பெரியாழ். 4-3-6. (தத்திதாந்த நாமம்)
பாஞ்சாலி கூந்தல் – பெரிய -6-7-8.
பாட்டும் முறையும் – இயலும். இசையும்- நான்முகன்திரு – 76.
பாடகம்-பாடகம் என்னும் திருப்பதி திருப்பா-27
மூன்றாந்திரு-30 திருச்சந்-63, இரண்டாந் திருவந்-94,
பெரியதிரும்127, பெரிய-4-8-7,6-10-4.
பாடல் பத்தும் வல்லார் நாச்சி -4-11.
2385பாடி – திருவாய்ப்பாடி மூன்றாந்திரு – 26,
பாடிப்பறைகொண்டு- பிராப்பியத்தைப் பெற்று. திருப்பா-27,
பாடுகாவலிடுமின் அருகுகாவலிடுங்கள். பெரியாழ்-3-7-5.
பாடுசாரா – அருகுவாரா திருவாய். 9-10-10.
பாடையிடுதல் பாடையில் படுக்க வைத்தல் பெரியாழ். 4-5-8.

2390பாண் -பாட்டு மூன்றாம் திருவந் – 35,55.
பெரிய. 6-2-5, 6-10-3.
பாண்டியர் குலபதி – பாண்டிய வம்சத்து அரசன்.
பெரியாழ் – 5-4-7.
பாண்டிவடம்-பிலம்பனைப்பலதேவன் வென்றவிடம்
நாச்சி–12-7.
பாணன்-கடகன், ஆசாரியன்- பெரிய – 8-2-2.
பாதமத்தாலெண்ணினான்-பாதமத்தால் -பாதத்தால்
முதல்திருவந்.45.
2395 பாதமூலம் திருவடிகள் – திருமா – 29.
பாதுகம் -மரவடி. பெருமாள்- 10-4.
பாந்தட்பாழியில் அனந்தாழ்வானாகிற படுக்கை.
பெரிய. 10-1-7.
பாம்புடைப்பல்லவர் கோன் – பாம்பைக் கொடியிலேயுடைய
பல்லவ அரசன் – பெரிய-2-9-5.
பாம்பு போல் நாவும் – நாச்சி, – 10-3.
2400பாமரு – பரப்பையுடைத்தான் – திருவாய்.7-6-1. பார்த்தசாரதி – கண்ணன் – பெரிய -2-3-1. 2-10-8.
பார்த்தன் – அருச்சுனன் – பெரியாழ் – 2 -6 – 5, 6, பெரிய -5-7-8 9-9-8.
பார்த்தன் பரத்வம் தெளிந்தது. திருவாய். 2-8-6.
பார்த்தன்பள்ளி – சீகாழியிலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது. பெரிய 4-8-1-10.
2405 பார்ப்பனச்சிட்டர்கள் – நாச்சி – 6-4-.
பார்மன்னர் – பூமிக்கு அரசர் – பெரிய – 7-7-4. பார்மன்னு பல்லவர்கோன் – பூமியில் நெடுங்காலம் வாழ்ந்தபல்லவ அரசன் – பெரிய. 2-9-2,10. பாரசிநாள் – துவாதசி. முதல் திருவந் – 82. பாரதங்கையெறிந்தான் – பாரதயுத்தத்தை உறுதிப்படுத்தி வந்தவன். பெரியாழ்.-2-6-4.
2410பாரதப்போர். திருவாய் -3-2-3, பெரிய-4-6-6. பாரதம் – பெரிய திரும -72. பெரிய-7-3-4, 7-5-2,9-9-8,11-1-10.
பாரத மாபெரும்போர். பெரிய-9-2-9. பாரதவெம்போர் – மூன்றாந்திரு -28. பாரிசாதாபகரணம் பாரிஜாத மரத்தைத் தேவலோகத் திலிருந்து கண்ணன் சத்யபாமையின்
பொருட்டு அபகரித்து வந்தது. பெரியாழ். 1 – 9 – 9. 3 – 9-1.

2415 பாரித்த – முயற்சி செய்த – மூன்றாந்திருவந் -44.
பெரியாழ்-1-6-6. (தே) 4-70-10.நனிபள்ளி, 5-54-9-
அதிகை வீரட்டம்.
பாரிப்பு – பரப்பு- திருவிருத் 67.
பாரோர் – உலகத்தவர்கள். திருப்பா- 1.
பால்பொன் பசப்புக்கார் – வெண்மை, சிவப்பு, பசுமை,
கறுப்பு. நான்முகன்திரு.24.
பால்சோர – பால்பெருக. திருப்பா-12.
2420 பால்வாய் – பால்மணம் மாறாதவாய். திருவிருத். 35.
பாலகன்-உவப்பினால் ஆகிய பால்வழுவமைதி.
பெரியாழ்-3-7-4-.
பாலப்பிராயம்- குழந்தைப்பருவம். பெரியாழ்2-6-6.
பாலன்றனதுருவாய் – சிறுகுழந்தை வடிவம் கொண்டு
முதல்திருவந் 69.
பாலேய்தமிழரிசை காரர்- பால்போன்ற இனிய இயற்றமிழ்
அறிவாரும், இசையறிந்து பாடவல்லாரும். திருவாய். 1-5-11.
2425 பாலை – பாலைப்பண் பெரிய -7-3-7.
பாவக்காடு – பாவசமூகம் பெரியாழ் -5-4-2.
பாவகாரிகள் – தீயசெயல்களைச் செய்கிறவர்கள்
பெரியாழ்-4-4-1.
பாவநாச நாதன் – திருச்சந்த – 27.
பாவை- நோன்பு – திருப்பா- தனி.
2430 பாவைக்குச் சாற்றி நீராடுதல் – நோன்புக்கென்று சங்கற்பித்து
நீராடுதல் – திருப்பா.3.
பாழ் – மூலப்பிரகிருதி. திருவாய்- 10-10-10.
பாழி படுக்கை பரமபதம் -பெரிய – 10-1-7,
இரண்டாந்திருவந்-13.
பாழிமை – பெரியமேன்மை. பெருமிடுக்கு- பெரிய-11-2-6.
திருவாய்-2-1-5. தே. 5-92-1 காலபாசம்.
பாளைமுத்தும் – பாளையில் உண்டான முத்துக்கள் –
பெரிய. 6-9-8.
2435 பாற்கடல் – திருப்பாற்கடல், மூன்றாந்திருவந் 31,61,72.
பாற்றுதல் – சிதறவடித்தல் பெரிய -4-7-5.
பாறு பாறாக்கினான் – துண்டுதுண்டாகச் செய்தான் –
பெரிய திருவந் 33.
பான்மதிக்கிடர் தீர்த்தவன் – சந்திரனுக்கு க்ஷய ரோகத்தைப்

போக்கியவன் – பெரிய-1-8-6,
பானல் – மருதநிலம், கடல் – பெரிய -6-7-2
2440 பிச்சச் சிறுபீலி – மயிலிறகு. பெரிய -2-4-8,2-6-5,
பிச்சைதானம் – – திருப்பா -2.
பிச்சைக்குறை – நாச்சி -11-4.
பிஞ்சுகள் – உருத்திரன் – பெரிய-2-6-9.
பிண்டத்திரள் – பித்ருக்களுக்கு இடும்பிண்ட உருண்டை
பெரியாழ்.2-5-7.
2445 பிண்டமாய்- மூலகாரணமாய் – மூன்றாந்திருவந் – 46,
பிண்டியார் – ஜைநர்கள். பெரிய-9-7-9.
பிண்டியுடைநோன்பியர் – அசோகமரத்தைத் தஞ்சமாக
உடைய அமணர். பெரிய. 2-1-5.
பிணத்தின் மடவார் – பிணங்களைத்தின்கின்ற பெண்
பேய்கள். பெரிய 2-4-8.
பிணம்படுத்தல் – சவமாக்கி ஒழித்து அருளல் பெரியாழ்-5-3-4.
2450 பிணா – பெண்பால் பொதுப்பெயர். நாச்சி.1 – 4. பிதற்றும்- பெரியாழ். 3-7-8. திருவாய் – 10-4-1.
பிதற்றுமின் – திருவாய். 3-5-10.
பிதிர் – அதிசயம், மிச்சம். நான்முகன் திரு -83. பிது (பிதா) – பெரிய. திருவருந் -70.
2455 பிதுவை – தந்தையை. திருவிருத் 95. பிரகலாதன் – திருவாய். 2-8-9.
பிரகிருதி- சுபாவம். திருவாய்-10-7-10.
பிரமகுரு – பிரம்மோபதேசம் செய்யத்தக்க ஆசாரியன். பெரியாழ். 5-2-8.
பிரமபரம்பரன்- இந்திராதிகளில் ஏற்றமுடைய பிரமாவாகிற பராத்பரன். திருவாய்-8-4-9,
2460) பிரமமுதல் வித்தாய் – பிரமமாகிற பிரதான
பீசமாய் – திருவாய்-8-10-7.
பிராக்கள் – உபகாரிகள் – திருவாய் -3-7-5. 9-1-11. பிரிதி – ஒருதலம் – பெரிய – 1-2-1-10.
பிலம்பன் – பிரலம்பாசுரன் – பெரியாழ். 3-6-4. 4-9-3. பிழக்குடையவசுரர் – தீமைகளைச் செய்கின்ற அசுரர். பெரியாழ். 4-8-7.
2465 பிள்ளைக்குழாம் பிள்ளைகளின் திரள் – திருவாய்-7-3-1. பிளவெடுத்து கிழித்துப்போகட்ட. பெரிய -1-5-7.

பிற்காலும் – மேலும்- இரண்டாந்திரு. – 93.
பிறப்பிலி- பிறத்தல் இல்லாதவன். பெரிய – 1-8-7.
பிறப்பு – திருப்பா-7.
2470 பிறவியில் மாண்ட பிள்ளைகள் – பெரிய -4-8-2.
பிறை -ஓரணி பெருமாள் -7-4.
பிறைதங்குகடையான- சிவன் – பெரிய-3-4.
பின்னை – நப்பின்னை. திருச்சந்- 13. 33, நான்முகன்திரு. 33
மூன்றாம் திருவந் -49.85, பெரிய-3-10-7,4-4-4.
4-5-3, திருவாய்- 4-8-4. 5-9-8. 4-2-5.
பின்னைக்கு மணவாளன் – நப்பின்னைப்பிராட்டியின்
மணவாளன் – பெரிய -6-6-9.
2475 பீர் – வெளுப்பு – திருவாய் – 1-5-8.
பீலிசூடி -மயில் தோகையைச்சூடி. பெருமாள். 6-9.
பீலித்தழை – மயில்தோகை. பெரியாழ் -2-6-1.
பீளையோடீளை – நேத்திரமலம். பெரிய -6-4-1.
பீற -பிறக்க- நான்முகன் திருவந் – 49.
2480 பீனத்தெட்டபழம் பருத்து நன்றாகப் பழுத்த
பலாப்பழங்கள். பெரிய -3-4-8.
புகழ் மங்கை – கீர்த்தியாகிற மங்கை- பெரிய -3-2-5.
புகா – உணவு – பெரிய திருவந் – 42.
புட்கவ்வக்கிடத்தல் – பறவைகள் கவ்விக்கொள்ளும்படி
கிடத்தல். திருமா -6,
புட்குழி – காஞ்சீபுரத்திலிருந்து ஏழுகல் தொலைவில் உள்ளது
இருந்த திருக்கோலம். பெரிய -2-7-8.
2485 புட்டியிற்சேறு – இடையில் படிந்த சேறு திருவாய் -6-3-4.
புண்ணி புளிப்பெய்தல் – புண்ணின் மேல்புளிச்சாற்றைப்
பெய்தல்- பெரியாழ் -2-9-1 நாச்சி -13-1
புணர்ப்பு – படைப்பு, சம்பந்தம், சூழ்ச்சி முதல் திருவந் – 61.
திருவாய் – 2-8-2. பெரியாழ் -4-5-2.
புணைவன் – மரக்கலமாயிருப்பன் – திருவாய் -2-8-1.
2490 புத்து – புத்தர் திருமா -7.
புதஞ்செய்தல் – தாவுதல் – பெரிய -9-3-7.9-10-1.
புதம் – அம்புதம் – பெரிய -9-10-1,
புதமிகு விசம்பு-மேகம். பெரிய. 9-8-8.
புதாவினம் – புதா பெருநாரை – திருவாய் -6-8-9.

2495 புதியதுண்கை – முதல் விளைந்த விளைவை நல்லவேளையில்
சமைத்து உண்ணுதல். பெரிய. 9-3-7.
புதுக்கணிப்பு – வடிவிலுண்டான புதுமை – திருவாய்- 8-9-5.
புதுவிரை – மணம் – பெரிய – 9-1-3.
புதுவைக்கோன் -ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவன்.
பெரியாழ்-5-3-10,நாச்சி-3-10.
புதுவைப்பட்டன் – பெரியாழ் – 1-2-21, 1-3-10.
2500 புதுவை மன்னன் – பெரியாழ். 2-3-13, நாச்சி -5-11.
புயக்கற்றது- கைவிட அப்பியஸியா நின்றது. திருவாய். 9-5-10.
புரந்தரன் – இந்திரன் . பெரிய.4 – 6 – 8,
புரமெரிய அம்பானது – முப்புரம் அழிய திருமால்
அம்பானது. பெரிய.6-1-3.
புரவி முகஞ்செய்து- குதிரைமுகம் போலத் தலைவணங்கி.
பெரியாழ்.4-1-10.
2505 புராணர் – பழையவர். பெரிய. 1-8-1.
புருடோத்தமன் – திருமால். பெரியாழ். 4 – 7 – 2.
புருவ வட்டம் – வட்டமான புருவங்கள். நாச்சி. 14-6.
புரைபுரை – வீடுதோறும். பெரியாழ். 2-9-1.
புல்குதல் – தழுவுகை. பெரியாழ். 1-9-1.
2510 புல்லாணி – திருப்புல் அணை என்பதன் சிதைவு. வடமொழியில் தர்ப்பசயனம் என்பர். இப்புண்ணியத்
தலம் இராமநாதபுரத்திற்குத் தென்கிழக்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. புல்லாரண்ய மகரிஷிக்கும், சமுத்திரராஜனுக்கும் அசுவத்த நாராயணனுக்கும்
அருள்பாலித்த இடம். பெரிய. 9-3-1-10. புல்லெழுந்தொழிதல் புல்முளைத்து அழிதல். திருமா. 13. புலம்- அழகு. திருவிருத்57.
புலமங்கை பூமிப்பிராட்டி. பெரிய. 3-2-5.
புலரி – விடியற்காலம். திருப்பள்ளி. 5.
2515 புலவர் – சர்வஞ்ஞர் பெரிய -1-1-7. புலாகின்ற மீன்நாற்றம் வீசப்பெற்ற. திருவிருத் . 75. புலையர் – சண்டாளர். திருமா.43. புழுதிக் காப்பிடுதல் ஸ்ரீபாததூளியைக் கொண்டு ரட்சை செய்தல். சிறிய திரு.16.
புள்ளரையன் கோயில்- கண்ணன் கோயில். திருப்பா.6.

2520 புள்ளுப்பிள்ளை. (புள்ளு- பறவை.) பெரிய.5-1-2.
புள்ளுவன் – வஞ்சகம். பெருமாள்.10 – 74.
புள்ளுவம் பேசுதல் – வஞ்சகமாகப் பேசுதல். பெரியாழ் 5-1-3.
புள்ளைக்கடாகின்றவாற்றை- பெரிய திருவடியை நடத்துகிற
விதத்தை .திருவாய். 7-3-1.
புளிங்குடி – ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இரண்டு
கல்தொலைவில் உள்ளது. சயனத்திருக்கோலம்.
திருவாய். 8-3-5, 9-2-1.
2525 புளிப்பழம் – புளிப்புச் சுவையையுடைய ஒருவகைப்பழம்.
பெரியாழ். 2-4-1.
புளியட்டி புளிப்பழத்தைக் கொண்டு நீராட்டி.
பெரியாழ். 2-5-8.
புற்கு- புன்மை. திருவாய். 3-1-2.
புற்பா முதலா – பரவிய புல்முதலாக. திருவாய்.7-5-1.
புற்றுமறிந்தன – புற்றும் சிதைந்தன. பெரிய. 3-4-7.
2530 புறக்கிட – புறங்காட்ட திருவாய். 8-4-1.
புறம் சுவர்கோலம் செய்தல் – உடலை அவங்கரித்தல்.
திருமா 6.
புறப்பாடின்றி- வெளிப்படுதலில்லாமல், திருவாய்.7.
புறம்புல்குதல் முதுகைக்கட்டிக்கொள்ளுதல்.
பெரியாழ். 1-9-1-10.
புறமலை- திருமலைக்குப்புறம்பானமலை. திருவாய். 2-10-5
2535 புறவம் – புறா பெரிய. 3-8-2.
புன்புலவழி- அற்பமான சப்தாதி விஷயங்களிலே ஐம்பொறிகள்
செல்வதற்குரிய வழி. திருச்சந்.76.
புனக்கொள்காயா – தன்னிடத்திலே நிலையையுடைத்தான
காயா . திருவாய் -9-7-8.
புனிதம் – பரிசுத்தம். திருமா.23.
புனிதர் – புனிதரே.பெரிய. 10-8-8.
2540 புனை – புன்னை. பெரிய. 9-9-2.
பூகம் – பாக்குமரம். பெரிய. 7-8-4-8. (தே.) 1-30-10. புகலி.
பூங்கொத்து மலரின் தொகுதி. பெருமாள்.6-9.
பூச்சிகாடடி. பெரியாழ் 2-1-1-10.
பூசல்- போர். நாச்சி. 7-8.
2545 பூணித்தொழு – பூணி -பசு. பெரியாழ். 2-4-9.
பூணிபேணும் ஆயன். பசுக்களை மேய்க்கும் இடையன்.
திருச்சந்.26.

பூணிமேய்க்கும் பசுக்களை மேய்க்கும். பெரியாழ். 3-6-7.
பூதத் திருவடி – பூதத்தாழ்வார் திருவடி, இராமாநுஜ.9.
பூதனை – கம்சனால் கண்ணனைக் கொலைசெய்ய ஏவப்பட்ட
அரக்கி. பெரிய. 3-10-7.10-10-1.
2550 பூந்தண்துழாய் – அழகிய குளிர்ச்சி பொருந்திய துளசி.
திருவாய். 6-1-5,2-8-2.
பூந்தண்புனல் -பூவையுடைய குளிர்ந்த நீர். திருவாய். 2-8-2.
பூந்தாமம்- அழகிய மாலை. திருவாய்.2-8-6.
பூநிலாய ஐந்து – பூமியில் உள்ள ஐந்து குணங்கள். திருச்சந். 1
பூம்பாடகம் – பெரிய காஞ்சிபுரத்திலுள்ள பாண்டவதூதர்
சந்நிதி. இக்கோயில் கட்டு வெட்டுக்களில் எம்
பெருமான் பெயர் தூதுஹரி என்றுள்ளது.
இரண்டாந்திரு. 94.
2555 பூம்பாவை – பெரியபிராட்டி – திருவாய். 2-8-1.
பூமிபாரங்கள் – பூமிக்குச் சுமையான பாலிகள்.
பெரியாழ். 4-4-5.
பூரணபொற்குடம் – தீர்த்தம் நிறைந்த பொன்னாலான குடம்
திருவாய். 10-9-2. நாச்சி .6-1.
பூரிப்ப – பூரணமாக. திருவாய்.5-9-9, மூன்றாந்திரு. 44.
பூரியர் – நீசர்கள். இராமாநுஜ – 3.
2560 பூவியேல்- தள்ளிவிடாதே. பெரியதிருவந் – 40
பூவை – நாகணவாய்ப்புள். திருவாய். 6-2-5
பெட்டைக்கெடுத்தல் – பொய்ப்பேச்சுக்களைக் கண்டித்து
ஒழித்தல். இராமாநுஜ. 93. பெண்டாட்டி – பெண்பிள்ளை. திருப்பா – 11.
பெண்டுகள் – பெண்கள். பெரியாழ். 2-3-1.
2565 பெண்ணாகி – மோகினியவதாரம் எடுத்து. பெரிய. 2 – 6 – 1. பெண்ணைத் தென்பால் – பெண்ணையாற்றின்
தென்கரையில் பெரிய. 2 – 10 – 1.
பெண்ணைமேல் அன்றில் பனைமரத்தின் மேல் அன்றில்
பறவை. பெரிய. 11 – 1 – 6; 11 – 2-19 – 4 -1. பெய்தகாவு – உண்டாக்கின சோலை. திருவாய்.6- 3-5. பெய்தறியா பெற்றறியாத. பெரியாழ். 1 – 7 – 8.
2570 பெரிய கோயில் – ஸ்ரீ ரங்கம், திருமா. 11. பெருங்கிறியான் – திருமால். திருவிருத். 91. பெருந்தமிழன் – சிறந்த தமிழ்மொழியில் வல்லவன்.)
இரண்டாந்திரு. 74

பெருந்தேவன் – பரதேவதை திருவாய்.4-6-4.
பெருந்தேவி – சீதை. பெரியாழ். 3-10-4.
2575 பெருநிலம்- வீடு. பெரிய. 1 – 1 – 9.
பெருப்பெருத்த கண்ணாலங்கள் – மிகவும் விசேஷமான
கலியாணங்கள். பெரியாழ் – 3 – 7-10.
பெரும்பாழ் – பிரகிருதி. திருவாய். 8 – 8 – 6, 10-1-7.
பெரும்பாழ்க்காலத்து – உலகம் அழிந்து கிடக்கின்ற காலத்து.
திருவாய் 10 – 1 – 7.
பெரும்பாழி சூழ்ந்த – பாழி படுக்கை. முதல்திரு. 80.
2580 பெரும்புணர்ப்பு – பெரிய வியாபாரம். திருவாய். 2-8 – 3.
பெரும்புறக்கடல் – இந்த அண்டகோளத்துக்கு
அப்பாற்பட்டுச் சுத்த நீராக உள்ள கடல். பெரிய. 7-10-1.
பெரும்பொருள் சிறந்த அர்த்தம். இரண்டாந்திரு.- 64.
பெருமக்கள் – பரமசேஷிகள். திருவாய். 3 – 7-4.
பெருவழி நாவற்கனியினும் எளியள் – பெரிய வழியில் விழுந்து
கிடக்கின்ற நாவல்கனியினும் இனியள். பெரிய. 10 9 – 5.
2585 பெற்றம் – பசு. பெரிய – 10 – 1 – 10.
பெற்றமாளியை- பசுக்களை ஆளப் பிறந்தவன்.
பெரிய. 10 – 1 – 10.
பெற்றார் – தாய் தந்தையர். பெரிய. 8 – 9 – 7.
பெறுத்தி- பெறச் செய்து. பெரியாழ். 2 – 9 – 9,
திருவாய். 3-10 – 10.
பெறுத்து – உண்டாக்கி. திருவாய். 3 – 7 – 7.
2590 பேச்சும் அலைந்தலையாய் – பொருந்தாத பேச்சையும்
உடையவளாய். பெரியாழ். 3 – 7-1.
பேசுதல் – ஒலித்தல். பெரிய. 8 – 2-7.
பேதுறுவனே – கலங்காநின்றேன். திருவாய். 9 -4 – 3.
பேயரே – பைத்தியக்காரர்களே. பெருமாள்.3 – 8.
பேர் – திருப்பேர். பெரியாழ். 2 – 5 – 1; 2 – 6-2.
2595 பேரகத்தாய் – திருப்பேர்நகர். திருநெடுந் – 8; சிறிய திரும.70.
பேரீஞ்ஞூறு பெயர் ஆயிரம். இரண்டாந்திரு. 77.
பேரெழுதி – திருநாமத்தை எழுதி. நாச்சி. 1 – 2 – 3.
பேழ்வாய் – பெரியவாய். பெரிய. 2 – 3-8.
பைங்கூழ்கள் – பசுமையுடைய பயிர்கள். பெருமாள். 5-7.

2600 பைதல் – இளையது. திருவாய்.9 -5 – 6.
பைதல்காள் – குயிற்பிள்ளைகளே.திருவாய்.9-5 -8.
பொங்கத்தம் பொங்கோ – தோற்றவர் தோல்வியாலே
பறையடிக்க ஆடுவது தொருகூத்து.
பெரிய. 10-2-1-10.
பொங்கேழ் புகழ்கள் – பொங்கிக் கிளம்புகிற புகழ்கள்.
திருவாய். 8 – 10-4.
பொட்ட -சடக்கென . பெரியாழ். 3-5 – 1; 3-7-6.
2605 பொடியாடி பஸ்மதாரியானசிவன். பெரிய திரும. – 71.
100
பொத்த -துவாரப்படுத்திய. பெரியாழ். 1 – 9-7.
பொத-துளைத்த. திருச்சந்.73; பெரிய திருவந். 22.
பொதியறை – காற்றோட்டமில்லாத கீழறை. பெரிய. 10 – 7-4.
பொதுக்கோ-பொதுக்கென – சடக்கென. பெரியாழ். 2 – 5-4.
2610 பொது நாயகம் – சர்வ நிர்வாககத்துவம். பெரியாழ். 4 -9 – 4.
பொதும்பிடை பொந்துகளின் நடுவே.பெரிய. 4 – 10-2.
பொதும்பு – சோலை. நாச்சி -5 – 1.
பொய்கைப் பிரான் – பொய்கையாழ்வார். இராமாநுஜ – 8.
பொய்ச்சரம் காட்டுதல் – பொய்யாக அஞ்சினவன் போல்
நடித்தல். பெருமாள். 6 – 8.
பொய்ச்சுற்றம் – மனப்பூர்வமாக இன்றி உறவு முறை
கொண்டாடுதல். பெரியாழ். 5 – 3-4.
2615 பொய்ச்சூது – க்ருத்ரிமமான சூது. பெரியாழ். 2 – 1-1.
பொய்ந்நிலம் – தரை காண ஒண்ணாத சோறு.திருவிரு 100. பொய்ந்நூலை பிறமத நூல்களை. பெரிய. 2-5-2.
பொய்மொழி – பொய்யுரை. பெரிய. 6 -6 – 10.
2620 பொய்யறைவாய் – கிருத்ரிமமாகச் செய்யப்பட்ட நிலவறை.
பெரிய. 2-5-5.
பொய்யாதா – சாத்தியவாதிகள் நாக்கு. பெரிய. 5 -1 -5.
பொரி முகந்து அட்ட- நெற்பொரியை எடுத்துச் சேர்க்க.
(லாஜஹோமம்) நாச்சி. 6 -9. பொருட்டாயம் பொருள் தாயம் பொருட்பங்கு.
பெரியாழ். 3 – 1 – 7.
பொருதவனார் பொருதவன். நாச்சி – 8 – 8.
2625 பொருநல் தாமிரபரணி. திருவாய். 6 – 7-8.9-2 – 11. பொருநற்சங்கு திருப்பொருநலில் சங்குகள். திருவாய்-10-3 – 11.

பொருளின்பமென – பெரிய. 6- 2 – 1. திருவிருத். 73.
பொலிக பொலிக பொலிக – சாந்தி. சாந்தி. சாந்தி.
திருவாய். 5 – 2 – 1.
பொழிலேழும் – ஏழு உலகங்களையும். திருவாய். 1 – 4 – 5.
2630 பொள்ளை – துளை, பெரிய. 5 – 1 – 2.
பொள்ளை கரத்த போதகம் – துளைக்கையையுடைய
கஜேந்திரன். பெரிய. 5 – 1 – 2.
பொற்சுரிகை – பொன்னால் செய்த உடைவாள்.
பெரியாழ். 1 -3 -8.
பொற்றாமரை – குடந்தையில் உள்ள புண்ணிய நீரையுடைய
புஷ்கரிணி. திருநெடுஞ். 19.
பொற்றை – மலைக்கும், யானைகள் பலதிரிகின்ற காட்டுக்கும்
பெயர். திருச்சந் .52.
2635 பொன் பெயரோன் – இரணியன். பெரிய. 1 – 7-4, 3-3-8,
4-2-7,7 – 3 – 9, மூன்றாந்திரு. 23
பொன்பெற்றார் – வசிட்டர் முதலிய ஆசிரியர்கள்.
பெருமாள்.9 – 8.
பொன்முடியன் – அழகிய திருமுடியையுடையவன்.
திருவாய். 3 – 7 – 4.
பொன்மேனி – அழகிய சரீரம். மூன்றாந்திரு 1.
பொன்வட்டில் – தங்கக்கிண்ணம். பெருமாள். 4 – 3
2640பொன்வயிறு -அழகிய வயிறு. பெரிய. 1 – 8 – 6
பொன்னன் – இரணியாசுரன். பெரிய. 3 – 4 – 4.
பொன்னி – காவிரி. பெரிய. 3 -8 – 3.4 – 6 – 1.
பொன்னித் தென்பால் – காவிரியின் தென்கரையில்.
திருவாய். 10-8-1.
பொன்னி நாடன் – காவிரியையுடைய
பெரிய. 6-5 – 7.
நாட்டுக்குத் தலைவன்.
2645 பொன்னூலினன் – அழகிய யக்ஞோபவீதத்தையுடையவன்.
திருவாய். 3-7-4.
பொன்னை – தங்கம். பெரிய. 5 – 4 – 5
போக்கு-போக்கிலே.திருவாய்.10 – 3 – 1.
போக மூழ்கி- போகத்திலீடுபட்டு. திருவாய். 6 – 1 – 4.
போகலொட்டேன். போகவொட்டேன். பெரிய. 7 – 2-5
2650போகு – போவாய். பெருமாள். 6 – 7, 9 – 4,
திருவாய். 6-2-7.

போகே என்று- போய்ச்சேர் என்று அறிவித்து.
நாச்சி. 12 – 6, பெரியாழ். 3 – 9 -4.
போட்கன் – முறைகேடன். வெட்கம் கெட்டவன்.
நாச்சி.13 6, திருமா. 33.
போத்தந்த – வரவிட்ட பெரியாழ். 1 – 2- 1, 1 – 3-4,
போத – போதுக. பெரிய. 3 – 7 – 1.
7,8.
2655 போதர்கண்டாய் – விரைந்து ஓடிவா. பெரியாழ். 2 -9-6.
போதரேன் – வரமாட்டேன். பெரியாழ். 2 – 9 – 6.
போதியார் – பௌத்தர்கள். பெரிய. 9 – 7-9.
போதியும் – அரசமரத்தையும். பெரிய. 2 -1 – 5.
போதொடு நீரேந்தி – மலரோடு தீர்த்தத்தையும் எடுத்துக்
102
கொண்டு.முதல்திருவந்.43. (தே,) 4 -3-1. ஐயாறு.
2660 போய்ப்பாடுடைய – மிகவும் இடமுடையன, மிகவும்
புகழுடையன திருப்பா. 26.
போயினாலறையோ. விட்டுப்போக நினைத்தாய் ஆகில்
அறையோ அறை.அறையோ – முறையிடும்
சொல். அறையோவிதறிவரிதே
திருவிருத்10
ஜய சந்தோஷங்களைப்பற்றி வரும் குறிப்புச் சொல்.
போர்க்கதவம் – இரட்டைக்கதவு. முதல் திருவந்.4.
போரவிடாய் – தந்தருள வேண்டும். நாச்சி. 3-7.
போரவைத்தாய் – மிகவும் இட்டுவைத்தாய். திருவாய். 5-1-5.
2665 போருங்கொல் – மீண்டுவருவாளோ. திருவ. 6-7-2.
போல்- அசை.பெரிய. 5 – 2 – 1-9.
போழ்க்கனேன் – முறைகேடனான அடியேன். திருமா. 33.
(தே .) ‘போழம்பலபேசி’ 1-45-11. ஆலங்காடு.
பெளவம்-கடல். பெரிய 5 – 5-9,7-7-2.
பெளழியன்- ரிக்வேதி.பெரிய, 5 – 5 – 9, 7 – 7-2.
2670 மக்கள் பெறாத மலடன் – பிள்ளை பெறாதவன்.
பெரியாழ். 1 -4 -4.
மக்கள் வயது நூறு மக்களுக்குவேத சாத்திரப்படி விதிக்கப்
பட்ட வயது நூறு. திருமா. 3.
மக்கள் அறுவர் – கண்ணனுக்கு முன் பிறந்த ஆறுபிள்ளைகள் . பெரியாழ். 5 – 3 – 1.
மகள் பேசுதல் – மணமகளாகச் சொல்லி. நாச்சி. 6 – 3. மகரக்குழை சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட
காதணி. பெரிய திரும. 39.

2675 மகன்றில்காள் – ஆண் அன்றில்களே (அன்றில் – கிரவுஞ்ச
பட்சி) திருவாய்.1 – 4-4.
மகிழ்மாலை மகிழம்பூமாலை. திருவாய். 4-10-11.
மங்கைகுலவேந்தன் – திருமங்கை நாட்டுக்குத் தலைவன். பெரிய. 6-6 – 10.
மங்கைதன் பங்கன் -சிவபெருமான். பெரிய. 7 -10 – 3.
மங்கையர் கோன் – திருமங்கையாழ்வார்.பெரிய தனியன். 1, 3.
மங்கை வேந்தன் பரகாலன் – திருமங்கையாழ்வார். பெரிய. 7-5-10.
2680 மச்சணி மாடங்கள் -மேல்தளத்தை அலங்காரமாகவுடைய
மாடங்கள். திருவாய். 5-9-4.
மச்சணி மாடம்-மேல் தளம். நாச்சி. 11-4.
மச்சாவதாரம் – அசுரர் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டு
அருளினதும் மச்சாவதாரம். பெரிய. 11-4-1.
மச்சொடு மாளிகை -மேல் மாடம். பெரியாழ். 2-7-3.
மசுமையிலி- இலச்சையில்லாதவனே.நாச்சி. 3-9.
மஞ்சரி – தோரணம். பெரிய திரும. -26.
2685 மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் வாசிகை மாலை
பெரியாழ். 2-4-4.
மஞ்சளும் மேனியும் – பற்று மஞ்சள் மயமான சரீரம்.
பெரியாழ். 3-4-3
மஞ்சனம் – நீராட்டம். பெரியாழ்வார். 2-4-3, 6-7-9-10.
மஞ்சு- மேகம், அழகு, ஆபரணம். பெரிய. 1-1-10.
மட்டித்து – வீசி. நாச்சி -6-10, பெரிய திரும -68.
தே 4-53-10. ஆரூர்.
2690 மட்டையர் – மொட்டையர். பெரிய. 2-1-6. தே. 2-34-10.
பழுவூர்.
மடநாகு – இளம்பசு. பெரிய. 7-1-1.
மடப்பாவையிடப்பால் கொண்டவன். திருநெடுந். 9.
மடல்- பனை முதலியவற்றின் ஏடு. சிறிய திரும. 78.
மடலூர்தல் – தான் விரும்பிய தலைவியை அடைய வேண்டி
பனை மடலால் செய்யப்பட்ட குதிரையின்
மீது தலைவன் ஏறி ஊர்தல் – திருவாய்.5-3-9, 10.
2695 மடவார் கேள்வன் – பெண்களுக்கு விரும்பத் தகுந்தவன்.
பெரிய. 6-10-10.
மண்கோட்டுக் கொண்டான் மலை – பூமியைப்
கோரப்பல்லின் மீது எடுத்துக் கொண்டு வந்த
பெருமானுடைய திருமலை. மூன்றாந்திரு. 45.

மண்டை- பிச்சைக்கலம். பெரியாழ். 1-8-9.
மண்டோதரி- இராவணன் மனைவி. பெரிய -10-2-8.
மண்டோதரி காதலன் – இராவணன். பெரிய. 5-4-5.
2700 மண்ணரசும் வேண்டேன் -இப்பூமியை அரசாளும்
ஆட்சியை யான் விரும்ப மாட்டேன். பெருமாள். 4-2.
மண்ணி-மண்ணியாறு. பெரிய. 4-10-4.
மண்ணியின் தென்பால் – மண்ணியாற்றின் தென்கரை.
பெரிய. 4-10-1.
மண்ணை – ஒரு படை வீடு, ஒரு நதி சிற்றூறு போல.
பெரிய. 2-9-3.
2705 மண்மதியிற் கொண்டுகந்தான் – பூமியை தனது புத்தி|
சாமர்த்தியத்தினால் மாவலியிடம் பெற்று
உவந்தான். மூன்றாந் திரு. 58.
104
மணத்தூண் திருமணத்தூண். அழகிய மணவாளன்
சந்நிதியில் கர்ப்பகிரகத்திற்குப் பக்கத்திலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திருமணத்தூண்” என்று பெயர். வடமொழியில் ஆமோதஸ்தம்பம் என்று வழங்கும். ஆமோதம் -மணம்.பெருமாள். 1-2.
மணவாளீர் – மணவாளப் பிள்ளாய். பெரிய. 10-8-7.
மணாட்டுப் புறம் திருமணமுறை. பெரியாழ். 3-8-4. மணிக்கதவம் – அழகிய கதவு.(அம் – சாரியை) திருப்பா-16.
2710 மணிமாடக் கோயில். பெரிய திரும. -132.
மணி மாடம் – திரு நறையூர். பெரிய. 6-6-1-10.
மணிமேகலை- நவமணிகள் பதித்த அரைஞாண். பெரியாழ். 3-2-3.
மணி வயிறு – அழகிய வயிறு. பெருமாள். 8-1.
மணை நீராட்டி – கட்டை (பெற்ற தாயிருக்க மணை வெந்நீராட்டுதிரோ) (பழமொழி) பெரிய. 11-6-6.
2715 மத்தகம் – சிரம். பெரியாழ். 4-5-2.
மத்தணி – வாச்சியம். திருப்பள்ளி. 9.
மத்த மலர் – மதமத்தம்பூ. நாச்சியார். 1-3.
மத்தளி – வாத்திய வகை. பெரியாழ்.3-4-1. மதலைத் தலை – தூண் மேலுள்ள சிறுதூண். பெரிய – 3-8-2.
2720 மதிக் கண்டாய்- புத்தி பண்ணிகிடாய். இரண்டாந்திரு.51. மதி கோள் விடுத்தல் – சந்திரனுடைய துன்பத்தைப் போக்கி
அருளுதல். நான்முகன்திரு. 12.

மதிகோள்விடுத்து – யம். பெரிய -8-3-3.
மதுகரம் -வண்டு. பெரிய. 8-7-4.
மது கைடவர்கள் – திருமாலின் நாபிகமலத்தில் இரண்டு
நீர்த்துளிகள் இருந்தன. அவற்றைத் திருமால்
நோக்க இரண்டு அசுரர்கள் ஆயினர். இவர்கள்
ஹயக்ரீவரால் கொல்லப்பட்டனர். பெரிய. 10-6-3.
2725 மதுசூதன் – திருமால். பெரிய. 5-5-6; திருவாய். 2-1-5, 10-4-7.
மதுரையார் மன்னன் – கண்ணன். நாச்சியார். 6-5.
மந்தக் கோவை -செவ்வியழியாத தொடையல்.திருவாய். 9-9-8.
மந்த முழவு ஓசை -வாத்தியங்களின் மந்தமான ஓசையை
பெரிய -5-10-7.
மந்திரக் கோடியுடுத்தி – நிச்சயதார்த்தச் சீலையை
அணிவித்து. நாச்சியார். 6-3.
2730 மந்திரப் படுதல் – மந்திரத்தால் கட்டுப்படுதல். திருப்பா -9.
மயக்கு – மயக்கத்தைச் செய்யும் பொருட்கள். முதல் திரு. 7.
மயர்வறுத்தேனே – அஞ்ஞானத்தை அறுத்தேன்.
திருவாய் 1-7-3.
2735
மயிர்க் கூச்சு – புளகம். பெரியாழ். 5-3-5.
மயிரும் முடி கூடிற்றில மயிரும் சேர்த்து முடிக்கும்படி
கூடவில்லை. பெரியாழ் -3-7-2.
மரக்காற் கூத்து – மரத்தைக் காலிலே கட்டிக் கொண்டு
ஆடுவதொரு கூத்து. பெரிய -11-5-6.
மரங்கள் போல் வலிய வஞ்ச நெஞ்சனேன் – மரங்களைப்
போலக் கடினமான நெஞ்சையுடையனாய்
வஞ்சனையே தொழிலாகவுடையவனாம். திருமா. 27.
மரவடியைத் தம்பிக்கு – பாதுகைகளைப் பரதனுக்குக்
கொடுத்து. பெரியாழ். 4-9-1.
மருத்துவப் பதம் – வைத்தியம் செய்யும் மருந்தின் பக்குவம்.
பெரியாழ்-3-7-10
மருத்துவன் சுடினும்- வைத்தியன் சூடு போட்டாலும்.
5-4. பெரிய. 9-4-3
மருதஞ்சாய்த்தது – இரட்டை மருதமரங்களை முறித்துத்
தள்ளினது. மூன்றாந்திரு. 51
2740 மருதர் மருத கணங்களான நாற்பத்தொன்பதின்மர்.
திருவாய் – 10-9-7; திருப்பள்ளி – 6, தே. 2-110-6
மாந்துறை, 7-50-2 புனவாயில்.
மருதரும் வசுக்களும் – மருத்கணங்கள் ஒன்பதின்மரும்.

அட்டவசுக்களும். திருப்பள்ளி -6.
மருந்தம் – மருந்து. திருவாய் -3-4-5.
மருமகன் சந்ததியை உயிர்மீட்டது -அபிமன்யுவினுடைய
புத்திரனான பரிக்ஷித்தை மறுபடியும்
பிழைப்பித்தது. பெரியாழ் -4-8-3.
மருவலர் – பகைவர். பெரிய -3-9-10.
2745 மருள் பாடுதல் – மயங்கும்படி ஒருவகைப் பாட்டைப்
பாடுதல். நாச்சியார். 9-8.
மல்லிகை வெண் சங்கூதும் – மல்லிகைப் பூவாகிய
வெண்மையான சங்கை ஊதும். பெரியாழ். 4-8-8.
மல்லி நாடி – திருமல்லி நாட்டை ஆண்டவள். நாச்சியார்
தனியன்.
மல்லை – திருக்கடல் மல்லை. திருநெடுந் -9, திருக்குறுந் -19.
மல்லைச் செல்வம்-தனக்கு மேலில்லாத செல்வம்.
திருவாய். 8-9-8.
2750 மல்லை மாநகர் – செல்வம் நிறைந்த பெரிய நகரமாகிய
வடமதுரை. பெருமாள்-7-11.
மல்லை மா முந்நீர் செல்வம் நிறைந்த பெரிய கடல்.
பெரிய. 4-3-6, 4-8-4, 8-6-4.
மல்லையர்கோன் – மல்லாபுரி என்னும் திருக்கடல்
மல்லையுள்ளார்க்குத் தலைவன். பெரிய. 2-9-1.
மலக்க மெய்த – கலங்கும்படி. திருவாய். 8-3-10.
2755 மலக்கு நாவுடையேற்கு – மிகு களிப்பாலே சுழலப்
பண்ணுகிற. திருவாய் -6-4-9.
மலங்க – அழிய. பெரிய -5-7-8.
மலடன் – மகப் பெறாதவன். பெரியாழ் -1-4-4.
மலரெட்டுமிட்டு- கருமுகை, கற்பகம், சௌகந்தி,
செங்கழுநீர், தாமரை, கைதை – பெரிய. 3-5-6. தே. 5-54-1. 10,
அதிகை வீரட்டம்; 4-18-8 – விடந்தீர்த்த பதிகம்.
மலினம் – தோஷம், குற்றம். திருவாய் -5-1-4.
2760 மலைத்த – தகையப்பட்ட. பெரிய -1-7-2.
மலைப் பண்டம் – மலையில் விளையக் கூடிய பல பொருள் பெரிய -3-8-3.
மலையரசன் – மலையமான். திருநெடுந் -7. மலையில் மிளிர்ந்து மின்னும் – பெரிய மலையின்
கொடுமுடியில் விளங்குகின்ற. பெரியாழ். 5-4-10. மலையேழும் – சப்தகுலாசலம். இரண்டாந்திரு -49.

2765மழலை – இளமை. திருவாய் -5-8-11.
மழறு – இனிமை. திருவாய். 6-2-5.
மழுவாளி – சிவபிரான், பரசுராமன். திருவாய். 9-3-10,
பெருமாள். 9-9.
மழுவேந்தி – பரசுராமன். திருநெடுந். 7.
மழைக் கண்ணி – நீர்த்தாரைகள் பெருகப்பெற்ற
கண்களையுடையவள். பெரிய. 2-7-8.
2770மழையே மழையே – ஓ மேகமே. நாச்சியார் -10-8.
மற்கடம் – குரங்கு. பெரிய -5-8-2.
மற்றிண்டோண் – மல்யுத்தத்தில் வலிமையான, தோள்கள்.
திருவாய். 10-4-11.
மறந்த காலத்தும் – மழை பெய்யாமல் போனாலும்.
பெருமாள். 5-7.
மறியோடுதல் – கன்றுகளைத் திருப்புவதற்காக முன்னே
ஓடுதல். பெரியாழ் -3-3-6.
2775 மறுக்கம் – மனக்கலக்கம். பெரியாழ். 3-3-6.
மறுக்கேலே – கலங்கப் பண்ணாதே. திருவாய். 4-9-5.
மறுகாலின்றி – மறுதரமின்றியே. திருவாய். 6-9-10.
மறையாளன் – அந்தணன். பெரிய- 5-8-5.
மறைவலார் – வேதத்தை நன்கு கற்றவர்கள். பெரிய -9-7-10.
278 மறை வாணர்கள் – அந்தணர்கள். திருவாய் -10-8-10.
மன்றது பொலியத்திருமால். பெரிய. 4-3-8.
மன்றாடிகள் – இரந்து கேட்டல். பெரியாழ். 4-5-7.
மன்றில் – நாற்சந்தி. பெரியாழ் -2-8-2.
மன்றில் தூற்றல் வெளியில் அயலாரை விட்டுத் தூற்றுதல்.
திருவிருத் 41.
2785 மன்றிலார புகழ் மங்கை – நாற்சந்தியிலும் பரவிய
புகழையுடைய வரும் திருமங்கை
நாட்டையுடையவர். பெரிய. 11-1-10.
மன்றில் குரவை – நாற்சந்தியில் கைகோத்துக் குரவை
கூத்தாடுதல். பெரிய. 11-2-1.
மன்று- வெளிநிலம். பெரிய. 9-6-4.
மன்று – நாங்கூர்ச் செம்பொன் கோயில். பெரிய. 4-3-8.
மன்னர் குருதி கொண்டு – அரசர்களின் இரத்தத்தாலே
பெரிய. 3-4-5.
2700மனக் குற்ற மாந்தர் – கெட்ட இதயத்தையுடைய மனிதர்.
இராமாநுஜ-5.

மனிசப் பிறவி -மானிடப்பிறவி. பெரிய -1-10-6.
மனிசர் – மனிதர். பெருமாள் 1-10; திருமா-32, நான்முகந்திரு. 38.
மனிசர்க்கா – மனிதர்க்காக. திருவாய். 1-5-8.
2795 மனு குலத்தார் – மநு வம்சத்தில் பிறந்த அரசர்கள்.
பெருமாள்.9-10.
மாக்கோல் – குதிரையை நடத்துகிற கோல். திருவாய். 3-2-3.
மாகம்- பெரிய ஆகாயம். பெரிய. 9-10-5.
மாகாயமாய் நின்றமால் – திரிவிக்கிரமனாய் நின்ற திருமால்.
மூன்றாந்திரு.13.
மாசதிரிது பெற்று- மா சதிர் இது திருவாய் -2-7-1.
2800மாசுடம்பின் வல்லமணர் – அழுக்குப் படிந்த
உடம்பையுடையவராய் வலியவந்து வாது
செய்பவர்களான சைனர்கள். பெரிய 7-4-5.
மாகுணாதோ – அழுக்கடையாதோ,திருவாய். 1 -5-2.
மாசூணும் – அழுக்கடையச் செய்யும். முதல் திருவந்.82.
மாடக் கவாடம் – சந்நிதியின் திருக்காப்பு. பெரிய திரும,73.
மாடக் கோயில்- மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக்
கோச்செங்கணான் கட்டிய கோயில். பெரிய திரும. 132,133.
2805 மாடத்துச்சி மிசைச் சூலம் – மாளிகைகளின் முடிமேலே
இருக்கிற சூலங்கள். பெரிய. 3-9-4
மாட நெற்றி மாளிகைகளின் முகங்கள். பெரிய. 3 – 8-2.
மாடு- செல்வம். பெரியாழ் -3-7-9. பெரிய திருவந் – 58.
மாண்- அழகு, மாணி. பெரிய -7-4-10, எழுகூற்றிருக்கை8,
திருவாய்-1-4-3, 1-8-6, 8-4-4.
மாணிக்கப் பண்டாரம் – மாணிக்க நிதிபோல் இனியவன்.
பெரிய – 5-2-5.
2810மாணிக்க மொட்டு – இந்திர நீலமயமான அரும்பு.
பெரியாழ் -1-9-1.
மாணுருவாய் வாமன ரூபி. பெரிய. 2-9-7.
மாத்தடுப்ப – பசுக்களை வெளியே போகாதபடி தடுப்ப.
பெரியாழ். 3-5-2.
மாத்தமர் பாகன் – யானைப்பாகன். பெரிய -4-6-7
மாதர்க்காய் – சத்தியபாமைக்காக. பெரிய. 6 – 8 – 7
2815 மாதாபிது – தாய் தந்தை. பெரிய திருவந். 70
மாதாவினைப் பிதுவை – தாய் போன்றவனும், தந்தை போன்றவனும். திருவிருத். 95.

மாதுளம் பூ- அணிவகை. பெரியாழ். 1-3-2, 1-5-10.
மாந்தேர் – மாத்தேர். பெரிய 1-5-2.
மாமணி மண்டபம் – மாணிக்க மண்டபம். திருவாய் 10-9-11.
2820 மா மருந்தம் – மருந்து. திருவாய். 3-4-5.
மாமழை மொக்குள் பெருமழைக் குமிழி. திருவாய். 4-1-6.
மாமான் மகளே- அம்மான் பெண்ணே. திருப்பா– 9
“மாமான்” சீவக. 484.
மாமி தன் மகனாப் பெறுதல். நாச்சியார். 2-1.
மாமீர் – அம்மாமீர் திருப்பா. 9.
2825 மாமுனி கொணர்ந்த கங்கை. பெரிய -1-4-8.
மாமை- நிறம். திருவாய். 7-3-4.
மாயக்கவி – கிருத்திரிமக் கவி. திருவாய். 10-7-1.
மாய வலவை – கபடியான கட்டுவிச்சி. திருவாய். 4-6-4.
மாயிருஞ்சோலை – திருமாலிருஞ்சோலை மலை. திருக்குறுந். 3.
2830 மார்க்கண்டன் – மிருகண்டு முனிவரின புத்திரன். நான்முகன்
திரு-15.
மார்வனை ஆர்வத்தால் மார்வம் – மார்பு. பெரிய. 11-7-4.
தே -2-113-3 சீகாழி.
மாரதர் – பெரிய தேர் வீரர். திருச்சந்த .89, பெரிய -2-1-2.
மாரன் – மன்மதன். இரண்டாந்திரு -23.
மாருதி – அனுமன். பெருமாள். 10-6.
2835 மாலபாதம் -எம்பெருமானுடைய திருவடிகள். திருச்சந்த.
மாலவன் – கரியன். பெரிய. 10-5-2.
மாலி -மாலி என்னும் அரக்கன். பெரிய. 2-10-4.
திருச்சந்த. 28. திருவாய் 9-2-6.
மாலிமான் – சுமாலி. திருச்சந்த. 28.
112.
2840 மாலிருஞ் சோலை – பெரிய. 2-7-7,9-2-8, 9-8-1-10,11-2-8
நாச்சியார் -4-1, சிறியதிரும. 74, பெரிய திரும. 125,
திருவாய் -2-10-1-10, பெரியாழ் -3-4-5.
மாவரும் திண்படை (மா – குதிரை) பெரிய -3-4-5.
மாவலவன் – ஆடலமாவென்னும் குதிரையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய. 10-2-10.
மாவலி – அசுரசக்கரவர்த்தி, பிரகலாதன் பேரன்
மூன்றாந்திரு – 18, முதல் திருவந். 50, சிறிய திரும. 46,
நாச்சியார் -4-93 8-6, பெரிய -1-5-6, 4-10-7,7-8-6, 8-8-5, 10-6-4,
11-5-10, 11-7-2, இரண்டாந்திரு.89, பெரியதிரும- 108,

திருவாய், 3-8-9.
மாழாந்து- ஒளி மழுங்கி. திருவாய். 2-1-6.
110
2845 மாற்றாண்மை- பகைத் தன்மையை யாளுகை. திருவாய். 2-1-7.
மாற்றரசர் – பகைவரான துரியோதனன் முதலிய அரசர்கள்.
பெரிய. 4-4-1.
மாற்றிலி பிரதி உபகாரத்தை விரும்பாமல் உதவி செய்தல்.
பெரியாழ் – 4-4-10.
மாற்றிலிசோறிடுதல் – உதவியை எதிர்பார்க்காமல்
விருந்தினர்களுக்கு அன்னம் அளித்தல். பெரியாழ். 4-4-10.
மாற்றுத்தாய் – சுமித்திரை. பெரியாழ்-3-9-4.
2850 மாறன் – நம்மாழ்வார். இராமாநுஜ. 19. திருவாய் -4-10-11.
மாறன் பசுந்தமிழ் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்
மொழி. இராமாநு – 64.
மாறன் பணித்த மறை நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதம்.
இராமாநு -46.
மாறனடி பணிந்துய்ந்தவன் – நம்மாழ்வாருடைய திருவடிகளைப்
பணிந்து உஜ்ஜீவித்த இராமாநுஜர். இராமாநுஜ-1.
மான் கொண்டதோல் – கிருஷ்ணாஜினம். பெரிய -6-8-1.
2855 மானம்- பெருமை. பெரிய -4-10-10.
மானவேற் கலியன் – சிறந்த வேற்படையையுடைய
திருமங்கை மன்னன். பெரிய -4-10-10, 9-1-10.
மானிடம் பாடல் என்னாவது – மனிதர்களைப் பாடுதலால்
என்ன பயன். திருவாய். 3-9-3.
மானிடம் பாட வந்த கவியேனல்லேன். திருவாய்.3-10-9.
மானிடம் பாடேன் – மனிதர்களைப் பாடமாட்டேன்.
நான்முகன் திருவந் – 75
2860 மிடுக்கு – சத்தி. பெரியாழ். 1-1-9, (தே) 7-17-10 நாவலூர்.
மிண்டர்- மூர்க்கர். திருமா -14. தே. 1-133-10. கச்சியே
கம்பம் 2.104.10. கடிக்குளம்.
மிண்டுதல் செறிதல். பெரிய -4-10-2.
மிலைக்க – கனைக்க. திருவிருத் – 94.
மிழற்றுதல் . இன்சொல்கூறல், சேஷ்டிதங்களைச் செய்தல், பெரியாழ். 4-5-9.
2865 மிளிர்ந்து பாய்ந்து. திருவிருத் -14.
மிளை – சிலுபுதல். பெரிய, 8-7-3. மிறை- மிடுக்குக்கள். நாச்சியார். 10-7.

மிறைத்து மேடாணித்து. பெரிய – 3-4-10.
மினுங்கநின்று -விளங்கும்படி நின்று. நாச்சியார். 14-2.
2870 மீட்சி – திரும்பி வருதல்.
2875
மீதியன் – மேற்பட்டவன்
மீமீதாடாவுலகத்து- மேலே செல்லாத உலகத்தில்.
நாச்சியார். 13-7.
முக்கட்பிரான் – சிவபெருமான். திருவாய். 7-6-1.
முக்கணம்மான் – சிவபெருமான். திருவாய் 10-7-7.
முக்கி- பெரிதும் வருந்தி. பெரிய திருவந். 69
முகத்துச் சுட்டி சுட்டி – நெற்றியணி. பெரியாழ். 1-4-1.
முகப்படாயெனனும் எதிர்ப்படாதிருக்கிறாய். திருவாய் -7-2-2.
முகப்பு – முன்பு. இரண்டாந்திரு -50, பெரிய – 10-6-10.
முகப்பே- முன்னே. பெரிய.4-8-4, 10-2-4, பெரியாழ். 4-1-8,
இரண்டாந்திரு. 69, திருவாய் -4-7-4, 6-3-11, 8-5-9, 9-2-8.
முகப்பே கூவி – சந்நிதி. திருவாய். 8-5-7.
2880 முசுக்கணங்கள் – முசு என்ற சாதிக் குரங்குகளின்
கூட்டங்கள். பெரியாழ் – 3-5-9.
முடித்தன்றே- நிறைவேற்றிக் கொண்டது அன்றே.
இரண்டாந்திரு. 22.
முடிவட்டம் – திருவபிஷேகம். மூன்றாந்திரு. 13
முண்டம் – சுபாவம். பெரியாழ். 1-8-9, பெரிய – 3-9-3, 5-1-8.
முண்டர் – சைவர். திருமா- 8.
2885 முத்கலன் – ஒரு புண்ணிய புருஷன்.
முத்தப்பன்- முத்துப் பால போக்கியன்.திருவாய். 6-3-9.
முத்தம் – அதரம். பெரியாழ். 3-3-2.
முத்தி வளர்த்து மோந்து. பெரிய – 10-7-12.
முத்திறத்து நீர் – கடல், திருச்சந்த – 82.
2890 முத்திறத்து வாணியத்து -சாத்விக, ராஜஸ, தாமசங்களான
பலன்கள், திருச்சந்த – 68.
முத்தின் குப்பாயம் – முத்தினாலான போர்வை.
நாச்சியார். 14-4.
முத்தின் கோடாலம் முத்தாலே தொடுக்கப்பெற்ற
வளைவான மாலை (ஆரம்- ஆம் ) பெரியாழ் -3-3-1.
முத்தீயர் – கார்கபத்தியம், ஆகவனீயம்,
தக்கிணாக் நிகளையுடையவர். பெரிய – 3-8-4
முத்தீ நான்மறை- முத்தீ-கார்கபத்தியம்,

ஆகவனீயம், தக்ககிணாக்கிநி, நான்மறை- ருக், யசுஸ்,
சாமம், அதர்வணம், எழுகூற் -13-14.
முத்தோ- சந்தோஷமோ. பெரிய திருவந். 27.
2895 முதல் – பாக்கியம். நாச்சியார். 10-7.
முதலையின் பல்விடம் – முதலையினுடைய பல் விஷம்.
திருப்பள்ளி. 2.
முதுகத்திடை – முதுகின்மேல். பெரியாழ். 4-4-5.
முதுகயம் – கடல். பெரிய – 8-5-6.
முது புணர்ப்பு – பழைய நிலைமை. நான்முகந்திரு. 54.
2900 முந்நீர் ஞாலம் – ஆற்றுநீர், ஊற்று நீர்,மழை நீர்
திருவாய். 3-2-1.
முந்தை- முற்பட்டவர். திருவாய் -3-3-2.
முப்பத்து முவரமரர் – முப்பத்து முக்கோடி தேவர்.
திருப்பா.20.
முப்புரி நூல் -பூணூல். பெரிய – 6-5-7.
மும்மதப்புனல் இருகபோலமும் மேட்ரமுமாகிற
மூன்றினின்றும் வடியும் மத ஐலம். பெரியாழ். 1-7-1.
2905 மும்மூர்த்தியுருவானவர்-திருமால். திருவாய் -7-6-3.
முயல் விட்டுக் காக்கை பின் போவதே. சிறியதிரும. 8,
தே 4-5-2. ஆரூர். பழமொழி
முயற்றி – உற்சாகம். பெரிய 1-8-5.
முயற்றியவாய் – முயற்சியையுடையவாய். பெரியதிருவந்.85.
முரன் – நரகாசுரன் மந்திரி. திருச்சந்த, 59, 104, மூன்றாந்திரு, 78, பெரியாழ். 1-5-4.
2910 முரி சுரியேறு பெரிய சுழித்தலையுடைய. மூன்றாந்திரு. 49. முல்லைப் பிராட்டி- முல்லைக் கொடி, பெண்பிள்ளை. பெரிய.5-2-7.
முழுவி -முத்தம். நாச்சியார். 13-5.
முழு சிவண்டாடிய துழாய்- வண்டு முழுசி ஆடிய துழாய். வண்டுகள் தேனிலே முழுகிக் கூத்தாடிய துளசி. பெரிய. -2-8-7.
முழுசுதல்- முழுகுதல், பெரிய. 2-8-7; 8-7-6. பெருமாள். 9-6.
2915 முழுவுதல் – முத்தமிடுதல். (திருக்கோவையார். 227.) முள் முளரிக் கூடு -தாமரைத் தண்டால் செய்த கூடு. பெரியதிரு. -84. முள்ளிச் செழுமலரோர் தூரான் – திருமங்கையாழ்வார்.

முளரிக் குரம்பை – தாமரையிலைகளையும், பூக்களையும்
கொண்டு வந்த செய்த கூடு. திருவிருத் -83.
முளரிக் கூட்டகம் – தாமரைப் பூவாலும், தண்டினாலும்
செய்யப்பட்ட கூடு. பெரிய – 11-1-6.
2920 முளிந்தீந்த வெங்கடம் – உலர்ந்து தீய்ந்து போன கொடிய
பாலைவனம். பெரிய -6-3-8.
முளையட்டி – திருமணத்தின் அங்கமாக நவதானியங்களைக்
கொண்டு பலிகை வைத்தல். பெரியாழ் -3-3-9.
முற்கலன் – ஓரடியான். விஷ்ணு தர்மத்தில் கண்டது இந்த
உபாக்கியானம்.திருமா. 12.
முற்றமூத்து – மிகவும் கிழத்தனத்தை அடைந்து. பெரிய -1-3-1.
முற்றல் யானை – குவலயாபீடம் என்னும் யானை.
திருச்சந்- 52.
2925 முற்றாவுருவாகி – முதிராத வடிவையுடையையாகி.
திருவாய். 8-3-4.
முற்றில் – சிறு முறம். பெரியாழ் -3-7-1, 1-2-19.
முற்றும் – முற்றுதும் என்பதன் குறுக்கல். தன்மைப் பன்மை
வினைமுற்று. பெரியாழ். 2 – 10 – 1-9.
முன்றிலெழுந்த முருங்கையிற்றோனாம். (பழமொழி)}
பெரிய. 10-9-2.
முன்றிற் பெண்ணை-வாயில். பெரிய. 11-2-1.
2930 முன்னல் – முன்னர். பெரியாழ் – 1 – 7 – 5.
முன்னுரை – பாரதம். பெரியதிரும. 59.
முனி – திருமால். திருவாய். 10 – 10 – 1.
முனிவர் வேங்கையின் அணார் சொறிதல் – பெரியாழ் -3-5-8.
முனைவன் – முக்கியமானவன், தலைவன்.
2935 மூக்கின்று – மூக்கின்றது. பெரிய திரும. 92
மூக்குறிஞ்சி – மூக்கை உறிஞ்சிக் கொண்டு. பெரியாழ். 2-2-2.
இராமாநுஜ தனியன்.
மூடநெய்- பால்சோறு மறையும்படி நெய் ஊற்றி. திருப்பா. 27
மூத்தவை – பெரிய அவை. பெரியாழ். 1 – 9-8.
மூத்திரப் பிள்ளை – அசுத்தனான பிள்ளை. பெரியாழ். 4-6-9.
3940 மூதறியும் அம்மனைமார் – பழம்பாடல்கள் தெரிந்த
பாட்டிமார்கள். சிறிய திரும. 19.
மூதுரை – பழமொழி. பெரியாழ். 3-7-4.
மூதுவர் – முற்பட்டவர். திருவிருத்2

மூப்புப்பற்றிய பதிகம். பெரிய. 6 -4 – 1 – 10.
மரி – மிடுக்கு. பெரிய. 6 – 3 – 8. மூலமாகிய ஒற்றையெழுத்து – ஓம் என்ற பிரணவம்.
பெரியாழ். 4-5-4.
மூவாயிர நான்மறையாளர் – தில்லை வாழ் அந்தணர்கள்.
பெரியாழ். 3-2-8.
மூவுருவும் – அரி, அயன், அரன். நெடுந்தாண்டகம். 2.
மூவெழுகால் -இருபத்தோரு படிகள். இராமாநுஜ 56.
பெரிய. 5-3-1, 6-7-2-8-8-6-9-1-6.
மூழ்க்கச்சூழ்ந்து- அறிவையழுத்த. திருவாய். 10-3-2.
2950 மூழ்த்த நாள் – பிரளய காலம் .பெரிய 6 – 8-2.
மூழை- அகப்பை.பெரியாழ் – 3-7-4.
மூன்று என்ற எண்ணுள்ளபொருள்கள் . திருச்சந். 2, 4, 77.
மூன்று தண்டர் – துறவிகள். திருச்சந்த – 52.
மூன்று நாட்டரசராகவும் கூறப்படுதல்,பெருமாள். 2 – 10.
114
2955 மூன்றெழுத்துடைய பேர் – கோவிந்தன் என்ற பெயர், திருமா. 4. மூன்றேழுத்துள்ள மந்திரங்கள் – ஓம் என்னும் விரணம்.
பெரியார் 4 – 7 – 10.
மெச்ச ஊது – மெச்சூது. அகரம் – தொகுத்தல் விகாரம்.
பெரியாழ்2 – 1 – 1.
மெத்தை – படுக்கை. பெரியாழ். 5 – 1 -7. மெய்ஞ்ஞானம் – தத்துவ அறிவு. நான்முகன்திரு – 71.
2960 மெய்த்தன் – மெய்யே. திருச்சந்85.
மெய் நாவன் – உண்ைைம பேசுபவன். பெரியாழ். 4-9-11. மெய்ப்பிணக்கிடுதல் – உடல் சேர்க்கைசெய்தல்.
நாச்சியார். 2 -9. மெய்யடியார்கள் – உண்மையான அன்பையுடைய
பாகவதர்கள் பெருமாள். 2 – 1 – 10. மெய்யடியான் – உண்மையான தொண்டு செய்பவன்.
பெரியாழ். 4 -9 – 11
2965 மெய்யம் – இத்திருப்பதி திருமயம் இரயில் நிலையத்திலிருந்து
அரைகல் தொலைவில் உள்ள. பூசித்துப் பேறு பெற்றோர் – சத்திய தேவதையும். அனந்தனும். சயனத்திருக்கோலம். பெரிய. 2-5-8; 9-2-3; 10-1-5. மெய்ய மலையாளன் – மெய்யமலையை இருப்பிடமாகக்
கொண்டவன். பெரிய. 5 – 5 – 2; 11 – 7-5.
மேகக் குழாங்கள் மேகக் கூட்டங்கள். திருவாய். 9-5-7.

மேகின்ற – விரும்பித தழுவுகின்ற. திருவிருத் – 83.
மேகின்றாய்- மேவி நின்றாய். திருவாய் – 2 -6 – 10.
2970 மேம் பொருள் – ஜனங்கள் விரும்புகின்ற பொருள். (லௌகிக
பதார்த்தங்கள்) திருமா – 38.
மேய்க்கிய – மேய்க்க. திருவாய்.10 – 3-7.
மேய்க்கின்று – மேய்க்கும்பொழுது. திருவாய்- 10 -3 – 7.
மேல் தோன்றி – செங்காந்தள். நாச்சியார். 10 – 1.
மேலாப்பு – விதானம், மேற்கட்டி. நாச்சியார் – 8 – 1.
2975 மேலெழுந்ததோர் வாயு – ஊர்த்துவ உச்சுவாசம் (மேல்
4-5-4. மூச்சுக் காற்று பெரியாழ்
மேலெழப் பாய்ந்திட்டு – காளியன் என்னும் பாம்பின் தலை
மீது நின்று. பெரியாழ் – 2 – 10 – 3.
மேலையகம் – யசோதையின் வீட்டிற்கு மேலண்டை வீடு.
பெரியாழ் – 2 – 9 – 5, பெரிய. 10-7-2.
மேற்கிளைக் கொண்டிருமி – மேலான த்வனியோடு இருமல்
மேலிட்டு, பெரிய. 1 – 3 – 2.
மேன்மக்கள் – நித்திய சூரிகள். திருவாய். 4 -3 – 9.
2980 மேனகை – தேவலோகத்து மகளிருள் ஒருத்தி.
பெரியாழ்- 3 -6 -4.
மேனிக்குப் பூசுஞ் சாந்து – திருமேனிக்குப் பூசத் தகுந்த
பரிமள திரவியம் திருவாய் – 4-3-1.
மைத்த சோதி -மையின் தன்மைவாய்ந்த ஒளி.
பெரிய – 1 – 3 -6.
மைத்துனன்மார் – அத்தைபிள்ளைகள், பெரியாழ் -4-9-6.
மைதிலி- சீதை, பெரிய. 3 -1-8. பெருமாள். 8-4.
2985 மைந்தன் – கண்ணன். நாச்சியார் -5-1.
மைப்படி – கரிய திருமேனி. திருவிருத். -94.
மையன்மை – மயக்கம். பெரியாழ். 2-3-3, 3-1-4.
மையாக்கும் – மோகியர் நிற்பாள். திருவாய். 4-4-6, 7-2-3.
மொக்குள் – மொக்கல், நீர்க்குமிழி.
2990 மொட்டு- அரும்பு.
மொய்குழல் – நெருங்கிய கூந்தல்.
மொய்ம்பு – வலிமை.
மோக்கம் – மோட்சம். திருவாய். 3-4-7.
மோடி காளி. – திருச்சந். 53, இராமாநுஜ.22.

2995மோடு பருப்பார் – வயிறு பருப்பவர்கள். திருவாய். 3-5-7.
மோய் -தாய் . பெருமாள் -7-6, 9-9.
மோழை – குமிழி, நீர்ப்பெருக்கு, கீழாறு, துவாரம்.
பெரியாழ் 3-7-4, பெரிய -4-4-9, திருவாய் -7-4-1,
தே. 7-7-8. எதிர்கொள்பாடி
மௌவல்- மல்லிகையில் ஒருவகை.
யமுனைக்கரை – நாச்சியார். 12.
யமுனைத்துறைவன் ஆள வந்தார். இராமாநுஜ.21.
3000 யவர் -எவர். திருவாய் – 3-4-9-10.
யவரும்- எல்லாச் சேதனரும். திருவாய் – 2-2-6.
யாய் – தாய். பெரிய -10-5-8.
யார் முகப்பும்-எல்லார் முன்பும். இரண்டாந்திரு -50.
யாவகையுலகம் -எவ்வகைப்பட்ட உலகம். திருவாசி.
3005யோகம் – மருந்து. கண்ணுக்கு விஷயமாகிய வஸ்து.
நாச்சியார் -12-5.
-4-7.
116
யோகு செய்தல் – உலகைக் காப்பாற்ற உபாயஞ் செய்தல்.
திருவாய் -5-4-11; 7-8-4; தே -5-81-10 பாண்டிக் கொடுமுடி
வக்கரன் வாய்முன் கீண்ட – தந்தவக்ரனுடைய வாயைக்
கிழித்த. பெரிய. 5-9-5.
வக்கரனைக் கொன்றான் கண்ணன். மூன்றாந்திரு. 21.
தே 4-56-6. ஆவடுதுறை.
வகுக்கின்று – வகுப்பதாயிருக்க. திருவாய். 1-4-9.
3010 வங்கக் கடல் – கப்பல்களையுடைய திருப்பாற்கடல்.
திருப்பா- 30.
வங்கத்தின் கூம்பேறு பறவை – கப்பற்காகம். பெருமாள்.5-5.
வசவு- நிந்தனை. நாச்சியார் -12-8.
வசிட்டன் – இக்குவாகு வம்சத்துப் புரோகிதர். பெருமாள். 9-7.
வசுக்கள் – அஷ்ட வசுக்கள். திருச்சந். 6. திருவாய். 10-9-7. வசுதேவர் – இவர் சூரசேனன் என்பவனுடைய புதல்வர். இவரது மனைவி பெயர் தேவகி. திருமால் இவருக்கு மகனாகத் தோன்றினார். பெரிய -6-8-10. வட்கு – லஜ்ஜை. திருவாய் -7-2-3.
வட தடம் – வடக்குத்திக்கிலுள்ள திருப்பாற்கடல்.
பெரியாழ். 5-4-10.
வடபுலக் கோன் வடநாட்டு அரசன். பெரிய 6-6-5.
வட மரத்திலை மேல் பள்ளி – ஆலமரத்தின் இலைமேல்
பள்ளி கொண்டவன். பெரிய. 6-6-1,
தே. 1-20-5 வீழிமிழலை

3020 வட மலை – திருவேங்கட மலை. பெரிய- 5-6-7.
வண்டமிழ் – அழகிய தமிழ். பெரிய – 1-8-10.
வண்டமிழ் நூல் – திருவாய் மொழி. திருவாய். 4-5-10.
வண்டமிழ் மாமுனி – அகத்தியர். பெருமாள். 10-5.
வணங்கேனேலும் – வணங்கேனாயினும் திருவாய். 4-3-4.
3025 வதரி – பதரி என்ற வடசொல் வதரி என்று திரிந்தது. பதரி –
இலந்தை. இத்திருப்பதி இமயமலையிலுள்ளது. பதரீ
நாராயணன் என்னும்நாராயணன் ஆவார். சிறிய
திரு. 74, பெரிய. -1-3-1-10. பெரியாழ். 4-7-9.
வதரியாச்ரிராமம்- பெரிய. 1-4-1-10.
வதுவை -மணம் .நாச்சியார். 6-2.
வதை செய்தல் – கொலை செய்தல். நாச்சியார் – 8-9.
வந்திக்கு மற்றவர் – பலாத்காரமாக அபகரிக்க. பெரிய. 7-4-5.
3030 வந்தி பற்றும் வழக்கு- வருத்தி அபகரித்துக் கொண்ட
நியாயம். நாச்சியார் -9-3.
வந்தீயாய் – வந்து கண்களுக்கு உன்னைக் காட்டியருள
வேணும். திருவாய் -4-7-2.
வம்பர் -புதியர். திருவாய் -3-5-3.
வயிச்சிரவணன் – குபேரன். பெரியாழ். 1-3-5.
வயிரக்கடிபிட்டு- வச்சிரகுண்டல மணிந்து. பெரியாழ். 2-3-4.
3035 வயிரமேகன் – ஓரரசன். பெரிய. 2-8-10.
வயிர வழக்கு – சத்துருத்வ முறை. நான்முகன்திரு. 25.
வயிற்றினகம் படியில் – திருவயிற்றின் உட்புறத்தில்.
பெரிய. 11-6-8,9.
வயிற்றிற்றொழுவைப் பிரித்து – கர்ப்ப வாசத்தைக் கழித்து.
பெரியாழ். 5-2-3.
வயிறசைதல் – வயிறு தளர்தல். பெரியாழ். 2-2-1.
3040 வயிறடித்தல் – வயிற்றில் மோதிக் கொள்ளுதல்.
சிறிய திரும. 34.
வயிறு மறுக்குதல் – வயிற்றைக் கலக்குதல். பெரியாழ். 3-3-6.
வரகுண மங்கை – ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 1 /2 கல்
தொலைவில் உள்ளது. அக்னி தேவனுக்கு அருள
புரிந்தவன். வீற்றிருக்கும் திருக்கோலம். திருவாய்.9-2-4.
வரண்ட – தள்ளப் பெற்ற. பெரிய -4-5-10.
வராகவதாரம் – திருமால் காட்டுப்பன்றி வடிவம் எடுத்து
நீரிலே மூழ்கியிருந்த நிலமகளை வெளியில்
கொண்டு வந்தார். பெரிய -11-4-3.

3045 வருத்தித்தல் – சிருஷ்டித்தல். திருவாய் -2-2-8.
வருமை- பரலோகம், மறுமை. திருவாய். 3-7-5.
வல்லரட்டன் – பெருமிடுக்கன். திருவாய். 10-1-9.
வல்லவாழ் – திருவல்லா என வழங்கும் திருப்பதி
கொட்டாரக்கராவிலிருந்து 36 கல் தொலைவில்
உள்ளது. பெரிய. 9-7-2.
வல்லாளன் – கருடன். முதல்திரு. 80.
118
3050 வலவை பிறர் ஏற்றுக் கொள்ளும்படி பேசுபவன்.
திருவாய். 4-6-4.
வலி செய்ய- பீடிக்க. பெரிய. 3-6-4.
வலிப்படுதல் – பலாத்காரத்திற்கு உட்படுதல். பெரியாழ். 3-5-2.
வழுவிலாவடிமை – குற்றமில்லாத அடிமை. திருவாய். 3-3-1.
வள்ளி கொடி.பெரியாழ். 3-2-7.
3055 வள்ளி கொழுநன் – முருகன். பெரிய. 6-7-6.
வள்ளி நுண் மருங்குல் – கொடி போன்று நுட்பமான
இடை. பெரிய 2-7-5.
வளர்ந்தவன் – கண் வளர்ந்தவன். பெரிய – 5-6-4.
வளைவணன் – பலராமன் – பெரிய – 8-5-2.
வற்பு – வலி. பெரிய. 5-1-4.
3060 வன மாலை – திருத்துழாய் மாலை, காட்டிலே பூப்பறித்துக்
கட்டிய மாலை. நாச்சியார். 13-3, 14-2.
பெரிய. 3-4-9, 5-5-6, பெருமாள் 69.
வளாய்க் கொள்ள – சூழ்ந்து கொள்ள. திருவாய் -8-7-7.
வளை கொண்ட வண்ணத்தன் – சங்குபோல
வெண்மையான நிறத்தையுடையவன். பெரிய -6-9-3. வளைத்து வைத்தேன் – தடையிட்டு. திருவாசகம்.
வாகை நெற்று – வாகை மரங்களின் நெற்றுக்களானவை.
பெரிய. 1-7-8.
3065 வாசிகை – முத்து மாலை, திருவிருத், 50,68 பெரியாழ் 1-3-7; 2-4-4.
வாசி வல்லீர்- தாரதம்மியம் அறிய வல்லீர், வேறுபாடு
அறியவல்லீர். பெரிய -4-9-4; 4-9-9. தே. 1-92- வீழி மிழலை, 1-3-10 வலிதாயம்.
வாட்டாறு – திருவனந்தபுரத்திலிருந்து 28 கல் தொலைவில் உள்ளது. இத்திருப்பதி வாட்டாறு என்னும்
நதியால் பெயர் பெற்றது. திருவாய் 10-6-1-10. வாணபுரம் வாணாசுரனுடைய நகரம். திருவாய். 7-10-7.

வாணன்- பலியின் குமரன். இவனது நகரம் சோணிதபுரம்.
கம்சனுக்கு நண்பன் . இவனுடைய மகள் உஷை.
இவன் பூசித்த லிங்கம்பாணலிங்கம். திருநெடுந். 20,
மூன்றாந்திரு. 80, 92, நான்முகந்.56, திருவிருத். 78,
திருச்சந் 53,70,71, பெரியாழ். 5-3-9, பெரிய 3-4-3,
5-1-7, 6-7-6; 9-7-3; 11-4-5, திருவாய் 2-4-2, 3-8-9,
3-10-4, 4-8-9, 6-4-8.
3070 வாணன் மகள் – உஷை. பெரிய திரும. 60,64.
வாணாள் – வாழ்நாள் என்பது வாணாள் என மருவிற்று.
பெரிய – 1 – 1-6.
வாணிபம் – பயன். பெரியாழ் – 3 -7-9. தே, 7 – 35-3.
புறம்பயம்.
வாணியம் வாணிபம். திருச்சந்த 68.
வாத மா மகன் – அனுமன். பெரிய – 5 -8-2.
3075 வாதித்தல் – பாதித்தல். நாச்சியார் – 2-3.
வாதிப்புண் – துன்பமடைந்த. பெரியாழ், 2 – 10 – 8.
வாதை- பாதை துன்பம். நாச்சியார் – 2-3.
வாமனன் – காசியபருக்கு அதிதியிடம் அவதரித்தவர்.
விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம், இவர் மாவலியின்
செருக்கடக்க மூவடி மண் வேண்டினார். மூன்றாந்திரு – 18.
வாமான்றேர்ப் பரகாலன் தாவுதலையுடைய குதிரைகள்
பூட்டிய தேரையுடைய திருமங்கையாழ்வார். பெரிய. 7-4-10.
3080 வாய்க்கோட்டம் – வாக்கின் அநீதி. பெரிய. 4 – 3 – 8.
வாய் கொண்டு மானிடம்பாடுதல் – வாக்கைக் கொண்டு
மனிதரைப் பாடுதல். திருவாய். 3 – 9 – 9
வாய்த்த நன்மக்கள் – சிறந்த சீடர்கள். பெரியாழ். 1 – 9 – 10.
நாச்சியார் – 6 – 11.
வாய் நேர்ந்து – கொடுப்பதாக விண்ணப்பித்து. நாச்சியார் 9-6.
3085 வாயுறை – அறுகம்புல். திருப்பள்ளி. 8.
வாரம் அன்பு – பெருமாள். 2 -7. 5,
பெரிய. 2 – 10 – 5.
வாரமாக ஓதுதல் – திருவஷ்டாக்ஷரத்தை அன்புடன்
சொல்லுதல். திருச்சந்த 78
வாராகம் – பன்றி. பெரிய – 4 – 7 – 8.
வாலாட்டுதல்- செருக்கான செய்கை.(அஹங்காரம்)
நான்முகன் திருவந் 38.

3090 வாலி – இந்திரன் குமாரன். இவன் தம்பி சுக்ரீவன்.
நாள்தோறும் எண்திசைக்கடலிலும் தீர்த்தமாடிச்
சிவபூசை செய்பவன். நான்முகந்திரு. 85, பெருமாள் 10 -6.
வாலிதன்றன் – வாலியின் தம்பியான சுக்கிரீவன். திருச்சந் – 81.
வாலோலை கட்டி -வாலிலே ஓலையைக் கட்டி.
பெரியாழ். 4-7-5.
வாளி – அணிவகை. பெரியாழ். 1-5 – 10.
3095
3100
வானமாமலை – நாங்கு நேரியில் கோயில் கொண்டுள்ள|
பெருமாள்(சிறப்புப் பொருள்; பரமபதத்திலே பெரிய
மலைபோல வீற்றிருக்கும் திருமால) திருவாய். 5 -7 – 6.
வானரக்கோன் – வாலி. நான்முகன்திரு. 85.
வானவர்கோன் பாழி – திருமாலின் இருப்பிடமான பரமபதம்.
வானவர் தமக்கு- தேவர்களுக்கு. பெரிய -5-7-9.
வானிளவரசு -பரமபத இளவரசு . பெரியாழ் – 3 -6-3.
விக்கிரமம்- வீரச்செயல். பெரியாழ் – 5 – 4 -6.
விகிர்தம் – ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல். திருவாய். 3-10-9. விகிர்தமாதர் – வேறுபட்ட ஸ்திரீகள். பெரிய – 3 – 4-5.
விச்சாதரர் – வித்யாதரர்கள். திருப்பள்ளி -7.
விச்சைக்கிறை – சர்வஞ்ஞன். சமணர்கள் சர்வஞ்ஞர் என்று
ஒரு தெய்வமே கல்விக்குக் கடல் என்று
பணிவார்கள். பெரிய – 2 – 6 – 5.
3105 விசாதி -வியாதி.திருவாய்.5-2-6, நான்முகன் திரு. 52.
விசித்திரப்படுதல் – அமைத்தல். நாச்சியார். 2 – 5.
விசித்திரம் – அழகு. திருவாய் – 7 – 8-2.
விசும்பிலார் – பிரமன் முதலியோர். முதல் திருவந். 79. விசுவாமித்திரர் – காதியின் புத்திரர். ரிக் வேதத்தின் மூன்றாவது கண்டத்தில் அடங்கியிருக்கின்ற
கீதங்களுக்கெல்லாம் கர்த்தா. திருப்பள்ளி – 4.
3110 விட்டு – விஷணு. பெரியாழ் – 2-3 -5.
விட்டு சித்தன் – கருடாம்சம். புரச்சூடவைணவருடைய
மகனார் . கோதையின் வளர்ப்புத் தந்தை.
நாச்சியார் – 14 -10.
விடத்தேள் எறிதல் – விஷத்தையுடைய தேள் கொட்டுதல்.
நாச்சியார். 3 – 6.
விடமங்கள் – வைஷம்யங்கள். நேர்மையான
காரணமில்லாமல் வேறுபடுத்துதல். திருவாய். 7-8-3.

விடிவை சங்கொலிக்கும் – காலையில் சங்குமுழங்கும்.
திருவாய். 6 – 1 – 9.
3115 விடைக்கொடி – பாம்புக் கொடியோன். (பல்லவன்
நாகலோகம் சென்று வந்ததன் காரணமாக
“பாம்புக் கொடியோன்” என்றும வரலாறு
உள்ளது .பெரிய. 2 -9-6.
விடைச்செறுமணியோசை – எருதின் க்ருரமான மணிஓசை.
பெரிய. 8-5-7-9.
விடைமணிக்குரல் – எருதுகளின் கழுத்தில் கட்டியுள்ள
மணிகளின் ஓசை. திருப்பள்ளி – 4.
விடையான் – சிவன். பெரிய. 7 – 6 – 3.
விடையேழ் அடர்த்தது – இரண்டாந்திரு. 63, திருச்சந். 92,
பெரிய திருவந். 48, திருவாய். 1 – 5 – 1, 3 – 5 – 4, 4 – 2-5.
3120 விண்களகத்திமையவர் – பரமபதத்தில் உள்ள நித்திய
சூரிகள். பெரிய . 6 – 9-10.
விண்ட குன்று. பெரியாழ் -1 – 1-5.
விண்ணகர் பரமபதம். மூன்றாந்திரு – 61, முதல்திருவந். 77.
பெரிய திரும – 113, பெரிய – 6 – 1 – 1 – 10, 10 – 1 – 8
(ஒப்பிலியப்பன் சந்நிதி)
விண்ணகரம் – ஒப்பிலியப்பன் சந்நிதி. மூன்றாந்திரு – 62,
சிறிய திரும. 72.
விண்ணப்பம் – வேண்டுகோள். நாச்சியார் – 8 – 7, 10.
3125 விண்ணி – வெண்ணி. பெரிய – 6 – 6 – 3,4.
விண்ணுளார் – திருவாய். 7-1 – 6.
விண்மிசை – பரமாகாசம்.திருவாய். 6 – 4-10.
விததகன் விட்டுசித்தன் – பெரியாழ் – 1 – 4-10.
வித்துமிட வேண்டுங்கொலோ – நான்முகன்திரு. 23.
3130 வித்துவக்கோடு -பட்டாம்பி இரயில் நிலையத்திலிருந்து
ஒருகல் தொலைவில் உள்ளது. பெருமாள். 5.
விதலைத் தலை – நடுங்கிக் கிடந்த சமயம். பெரிய – 3 -8 – 2.
விதி பாக்கியம். திருமா – 8.
விதிர் விதிர்த்து – உடம்பு நடுங்கி, பெரியாழ்4-5 -4.
விதிவாய்க்கின்று – பகவானுடைய தயை கிட்டுமிடத்து
திருவாய். 5 – 1 – 1.
3135 விந்தமேய கன்னி -விந்திய மலையில் வீற்றிருக்கின்ற
துர்க்கை. திருநெடுந் – 7.

விபரீதம் – பிரதி கூலம்.திருவாய் 6 -2 -3.
விபீடணன் – விச்சிரவசு முனிவரின் மகன். இராவணன் தம்பி
அயோத்தியிலிருந்து திரும்பும் போது
ஸ்ரீரங்கத்தில் திருமாலைப் பிரதிட்டை செய்தான்.
பெரியாழ் -4 -9 – 2. பெரிய – 6-8-5.
வியவு -வேறுபாடு.திருவாய். 7-8-3.
வியாழம்- பிரகஸ்பதி. திருப்பா. 13.
3140 வியூகம்- படைவகுப்பு பெரிய, 6 – 5 – 8.
விராது விராதன். பெருமாள். 10-5.
விருத்தம் – கூட்டம். நாச்சியார் 14 -7.
விருந்தாவனம் – துளசி வனம்.யமுனைக்கரையில் கண்ணன்
இளமையில் விளையாடிய காடு. நாச்சியார் 14 – 1-10.
வில்லவன் – வில்லவன் என் பகை அரசன். பெரிய – 2-9-8.
3145 வில்லார் மலி வேங்கடம்- வேடர்கள் நிறைந்த
திருவேங்கடம். பெரிய – 1 – 10 – 10.
வில்லார் விழவு – கம்சன் செய்ததநுர்யாகம். பெரிய – 6-7-5.
வில்லி புதுவை நகர் – ஸ்ரீவில்லி புத்தூர். நாச்சியார் – 13 – 10.
வில்லி புத்தூர் கோன் – பெரியாழ்வார். நாச்சியார். 6 – 11. விலங்கு நூலர் – பூணுலைத் தரித்தவர். திருச்சந். 56.
3150 விலாவறச் சிரித்திடுதல் – அளவு கடந்து சிரித்தல். திருமா 34. விலைக்காட்படுதல் – வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு
அடிமைப்படுதல் . நான்முகன்திரு. 52. விலையாள் – அடியவள்(வேலைக்காரி). பெரிய. 5 – 5-2. விழலுகுத்தல் – விசுவாமித்திரத்தைக் கயிறாகத் திரித்துக் கட்டுதல் பெருமாள். 9 -7. விழிக்குங் கண்ணிலேன் – உன்னைத் தவிர வேறு
ஒருவரையும் ரக்ஷகமாக மதிக்கவில்லை.
பெரியாழ். 5 – 1 – 2.
3155 விள்கை விள்ளாமை – விட்டுப் போதல், விடாது ஒழிதல். திருவாய். 1 – 6 – 5.
விளங்கனி – கபித்தாசுரன். பெரிய. 3 – 9-7.
விளரிக்குரல் – விளரி என்னும் இசைக்குரல். விளரி
என்பதற்கு மத்யமஸ்வரம் என்று பொருள் கொள்ளலாம். திருவிருத். 83.
விளவின்காய் – இரண்டாந்திரு – 19,23,100; பெரிய. 9 – 8 – 6. விளிந்தீய்ந்த மாமரம்- தள்ளப்பட்டுக் கெட்டுப்போன பெரிய மரம். பெரிய. 6 – 3 – 8.

3160 விளையாட்டம்- விளையாடுதல் பெருமாள். 7 – 9.
விற்பெருவிழவு தநுர்யாகம் என்ற சிறந்த உற்சவம்.
பெரிய. 2-3-1.
வினதைச் சிறுவன் – கருடன். நாச்சியார். 14 – 3.
வினவப்பெறுதல் – ஆராய்தல். பெரிய. 10 – 6 – 5.
வினையாட்டியேன் – பாவத்தையுடையேன்.
திருவாய். 6-8 – 1,7 – 7-3, 6 -8-7.
3365 வீடுதரும் மோட்சத்தைத் தரும். திருவாய். 3 – 3 -7.
வீதியார வருவானை – தெரு நிறைந்து வருகின்ற கண்ணன்.)
நாச்சியார் – 14 -5.
வீரணிதொல்புகழ்- வீரத்தை ஆபரணமாக உடையவரும்,
நிலையான புகழை உடையவருமான
பெரியாழ்வார். பெரியாழ். 4 -6-10,
வீழ்ச்சி- விழுந்து. நாச்சியார். 8 – 7.
வெஃகணைக் கிடந்தது – திருவெஃகா என்னும் திருப்பதியில்
சயனத்திருக்கோலம். திருச்சந். 63,64
3170 வெஃகா – காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. சயனத் திருக்கோலம். திருநெடுந். 8,13,14,
பெரிய திரும. 70,128. மூன்றாந்திரு. 26,62,64,76.
பெரிய 10 – 1 -, முதல்திரு 77, நான்முகந்.36.
வெங்கலி – கொடிய கலி. பெரியாழ். 4 – 7-10.
வெங்கடத்துக் களிறு -கொடிய பாலைவனத்திலுள்ள
யானை. பெரிய – 6-3-8.
வெட்டென்றிருத்தல் – இசைந்திருத்தல். பெரிய. 5 -9 – 7.
வெண்கலப் பத்திரம் வெண்கலத்தால் செய்த இலை.
(பத்திரம் – இலை.) பெரியாழ். 1 – 9-5.
3175 வெண்ணிப்போர் – பெரிய. 6-6 – 3, 4.
6-51-4 வீழிமிழலை; 5-17 – 2, 3. வெண்ணியூர். 5 -65 – 4.
பூவனூர்.
வெண்ணெய் தொடுவுண்ட வெண்ணெயை வஞ்சனையால்
எடுத்து உண்ட. திருவிருத். 91
வெண்ணெற்கு- வெண்மையான நெல். பெரிய – 3 – 8 – 7.
வெந்தாரென்பும் – பிரேதங்களின் எலும்பு. பெரிய – 1 -5 -8.
வெள்கி- வெட்கப்பட்டு.திருமா – 34.
3180 வெள் வரைப்பு – கிழக்கு வெளுக்கை. பெரியாழ்.3 – 8 – 9.
நாச்சியார். 1 -2.
வெள்ளச்சுகம் – அளவு கடந்த சுகம்.திருவாய் 7- 3-1

வெள்ளறை- வெண்மையான பாறைகளால் இயன்றமலை.
(சுவேதாத்ரி எனப்படும்) சிறிய திரும. 70, பெரியாழ்.
1-5-8, 2 – 8 – 4, 5 பெரிய திரும – 117.
வெள்ளித்தலை வெள்ளித்தண்டு. பெரியாழ்- 1 – 2 – 3.
வெள்ளிப் பெருமலை- பெரிய வெள்ளிமலை.
பெரியாழ். 1 – 7-5.
3185 வெள்ளியார் – சுக்கிரன். பெரிய. 4-10 – 7, 9 – 7-9.
வெள்ளியெழுந்து -சுக்கிரன் உதயமாகி. திருப்பா. 13.
வெள்ளுயிராக்குதல் – சாத்துவிக்னாக ஆக்குதல். திருப்பல். 8.
வெள்ளெனல் – வெளுத்தல். திருப்பா – 8.
வெள்ளேறன் – வெண்மையான ரிஷபத்தையுடைய உருத்திரன். திருவாய். 2 – 2 – 10.
3190 வெள்ளை நுண்மணல்- வெண்மையான நுட்பமான மணல்.
நாச்சியார் – 1 – 2.
வெள்ளை விளி சங்கு – வெண்மையானதும் எல்லோரையும் அழைப்பதுமாகிய சங்கு. திருப்பா – 6. பெரியாழ். 4 – 1 – 7.
வெளிய நீறு – அஞ்சன சூர்ணம். திருவாய் – 4-5 – 6. வெற்பு சம்பந்தமான திருமால் செயல். திருச்சந். 39. வெறி -வெறியாட்டு. திருவாய் – 4 – 6 – 11, திருவிருத் – 20.
3195 வெறியோடிற்று வெறிச்சென்று இருக்கிறது.
பெரியாழ். 3 -8 – 1, திருவாய். 4 – 6 – 1, 10. வேகவதி – காஞ்சிபுரத்தில் முன்னாளில் ஒடிய ஓர் ஆறு நான்முகன் செய்த வேள்வியை அழிக்கவர நான்முகன் திருமாலைக் கொண்டு அடக்கினான். பெரிய திரும – 52 – 55.
வேங்கடத்தான் திருமலலையில் எழுந்தருளியிருப்பவன். இரண்டாந்திரு . 28,45, மூன்றாந்திரு. 39,40. வேங்கடநாடர் – திருமலையை நாடியவர். நாச்சியார். 10-5.
3200 வேங்கடம் – நாச்சியார். 8 – 4 – 2, 10 – 8, பெரிய – 1 – 10-1 – 10, 2-1-1-10,5-5-1,7-3-5, 8-2-3,9-7-4, முதல்திரு 26,99, இரண்டாந்திரு – 46,53, மூன்றாம்திரு. 14,26,30,32,45,59,61,62,68,69,
திருச்சந் 60-81.திருவிருத். 60,81, பெரிய திரும. 124. வேங்கடமலை – பெரிய. 4 3-8.
வேங்கடவன் – இரண்டாந்திரு – 72, நாச்சியார். 1 – 1. வேங்கடவாணன் திருவேங்கடமலையில் இருப்பவன். பெரியாழ். 1 – 4 – 3, 1 – 8-8, 2 – 6 – 9,

3205 வேங்கடவேதியன் – வேங்கடமலையிலுள்ள ஸ்ரீனிவாசன்.)
பெரிய – 9-9-9.
வேங்கை கழுத்திற் சொரிய உறங்கல். பெரியாழ் – 3-5-8.
வேட்டத்தைக் கருதாது – ஆசைப் பெருக்கத்தைக் கருதாமல்.
பெரிய – 10-9-10.
வேடர் தெழிப்பு -வேடர்களின் ஆரவாரம். பெரிய- 1 – 7 – 2.
வேடர் மறக்குலத்தவரின் மணவகை. பெரியாழ். 3 -8-6.
3210 வேடார் திருவேங்கடம் வேடர்கள் நிறைந்த திருமலை.
பெரிய – 4-7-5.
3215
வேடுமுடை வேங்கடம் – வேடர்கள் நிறைந்த திருமலை,
நான்காந்திரு – 47.
வேதகீதன் – வேதத்தினால் புகழ்ந்து பாடப்படுபவன்.
திருச்சந்த – 117.
வேதத்தினுட் பொருள் – திருவாய் மொழியில் நிற்கப்
பாடியது. கண்ணிநுண்- 9.
வேதநாவர் – அந்தணர்கள். திருச்சந் – 23.
வேதநான்கைந்து தீ வேள்வி-நான்கு வேதம், ஐந்து அக்கினி,
ஐந்து மகா யக்ஞம். பெரிய – 9-7-6.
வேதநூற் பிராயம் நூறு – வேதநூல் பிரகாரம் மனிதர்களுக்கு
வயது நூறு. திருமா – 3.
வேதப்பிரானார் எம்பெருமான். பெரியாழ் – 5 – 2 – 1.
வேதாந்த விழுப்பொருள் -வேதாந்தங்களில்
சொல்லப்டுகின்ற சிறந்த அர்த்தங்கள். பெரியாழ். 4-3 – 11.
வேம்பின் புழு – வேப்பமரத்திலுண்டான புழு. பெரிய – 11-8-7.
3220 வேம்புங்கறியாதல் -வேப்பிலையும் கறியமுதாகும். நான்
முகந்திரு – 94.
வேய்-புல்லாங்குழல். பெரிய -8-5-3.
வேயர் – அந்தணர். நாச்சியார் தனியன்,
பெரியாழ். 1 – 7 – 11, 4 – 10 – 10, 5-4 – 11.
வேயர் தங்கள் – அந்தணர்களுடைய. பெரியாழ் – 5 -4 – 11.
வேல் வலவன் – வேற்படையில் வல்லவன். பெருமாள்-9 – 11.
3225 வேல்வலவனாலிநாடன் – வேற்படையை ஆளுகின்ற
திருவாலி நாட்டுக்கதிபன். பெரிய. 4-4 – 10.

வேல வெறியாட்டாளனே. திருவிருத் – 20.
வேலால் துன்னம் பெய்தல் வேலால் துளைத்தலை
இடுதல். நாச்சியார் -13 – 2.
126
வேலை மோதும் மதிள் – கடல் அலைகள் வந்து
மோதுகின்ற மதிள். திருவாய். 9 – 10 – 1.
வேழப் போதகம் அன்னவன் – யானைக்குட்டி போன்றவன்.
பெருமாள். 7 – 1.
3230 வேள் – முருகன். மன்மதன். திருநெடுந். 7.
வேள்வு – வேள்வி-யாகம். பெரிய. 6 – 4 – 8.
வேளுக்கை காஞ்சிபுரத்திலிருந்து இரண்டுகல் தொலைவில்
உள்ளது. நின்ற திருக்கோலம். மூன்றாந்திரு. 34, 62.
வேளுக்கைப்பாடி – வேளுக்கை என்ற திருப்பதி.
மூன்றாந்திரு. 26.
வேளுஞ்சேயுமனையார். வேள்- மன்மதன்,சய்- முருகன்.
பெரிய. 6 – 7 – 1.
3235 வேனிலஞ்செல்வன் – சூரியன். திருவிருத். 25.
வைகுந்தக் குட்டன் – நித்திய சூரிகளுக்குப் பரிந்து
நோக்கும்படியான பருவத்தை
உடையவன். பெரிய. 3 – 6 – 3.
வைகுந்தம் – ஸ்ரீவைகுண்டம். பெரியாழ். 4 – 7 – 9.
வைகுந்த விண்ணகர்- திருநாங்கூரிலே உள்ள வைகுந்த
விண்ணகரம் என்னும் திருப்பதி. 3-9 – 1 – 10. வைட்டணவர். வைஷ்ணவர். திருவாய். 5-5 – 11.
3240 வைத்தநாள் – ஈசுவரன் நியமித்த ஆயுள். திருவாய். 6 – 7-11. வைதிகன் – வேதநெறிப்படி ஆசார அனுஷ்டானமுள்ளவர்.
திருவிருத் 94.
வைதேகி – சீதை. (தத்திதாந்த நாமம்) பெருமாள். 10-6. வைப்பு – புதையல். திருவாய். 1 – 7-2.
வையத்தேவர் – அந்தணர், அடியார். திருவாய்.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ எம்பெருமானார் வைபவம் -ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ வார்த்தா மாலையில் வார்த்தை -441-

December 17, 2025

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ் வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார் 

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்-எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்) 

(ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது -எம்பார் பட்டருக்கு அருளிச் பெய்த-10 வார்த்தைகள் அடுத்து பார்க்கப் போகிறோம் -அதில் தொடக்கத்தில் உள்ளவை ––)

பரம காருணிகரான ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீ சரமோபாய நிர்ணயத்தில் ஸ்ரீ ஸூக்திகள்-

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத் திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே-“பொலிக பொலிக” வந்தவாறே பூத பவிஷ்யத்வர்த்தமான கால த்ரய பர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே-உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று“இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவராலே நாடு அடங்க வாழப் போகிறது”
என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய,

அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து,”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை
அவ்யக்தியினுடைய ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டி யருள வேணும்” என்று ப்ரார்த்திக்க

அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்ன முகேந ஆழ்வார் எழுந்தருளி
த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப் பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோ ரூபமான திருமேனியும்,
“மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக் கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி
‘அவ்யக்த்தி யிருக்கும்படி இது காணீரே’
என்றருளிச் செய்து,
இவ்யக்தி அடியாக ப்ரபந்ந குல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து
‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய,
ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று
மற்றை நாள் ராத்திரி ஸ்வ விக்ரஹத்துக் கடவ சில்ப வம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டி யருளி
“நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹார நித்ரை யின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக் கொடுக்க,
அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ் விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி –

“ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ இலக்குவன் ராமனுடைய வலது கை போன்றவன். (ரா-அ-34-13)என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும்.-இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும்.
இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம்.
உம்முடைய குலத்திலே ஒருவர் இவ் வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார்.

அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது,-இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டு கொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள,
அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ் ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பர ஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் ஶரணம் ப்ரபத்யே ||

எந்த நம்மாழ்வார் கருணை மிக்கவராய், அடியேன் தூங்கும் போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்ரஹத்தை எனக்கு காட்டியருளினாரோ, காரியாரின் பிள்ளையான அவரை ஶரணமடைகிறேன். (நாதமுனிகளருளியது) என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று
நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர்.-இவ்வர்த்தம் ஓராண் வழியாய்ப் பரம குஹ்யமாய் வந்ததென்றும் அருளிச் செய்வர்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்-வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பொலிக பொலிக பொலிக-
சம்ருத்தம் யாயிற்று -முக்கால் அருளிச் செய்கிறது -வைதிகமான மங்களா சாசனமும் -சாந்தி சாந்தி சாந்தி -என்று முக்கால் சொல்லுகையாலே–நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும், நீடூழி வாழ வேண்டும்.“சாந்தி: சாந்தி: சாந்தி:” என்று வைதிகமான மங்களாசாசனங்கள் மும் முறை சொல்லக் கடவதாயிருக்குமே யன்றோ?
ஆதலால், ‘பொலிக பொலிக பொலிக’ என்கிறார்.
‘பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –அப்படியே யன்றோ செய்தது,
“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;-பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்-
உயிரினுடைய வலிய பாபமானது போயிற்று –பாபம் ஆகிறது -அவித்யா கர்மா வாசனா ருசிகள் –இத்தை சாபம் என்கிறது அனுபவித்தால் அல்லது போகாமையாலும் -ஆகந்துகம் ஆகையாலும்-
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை-
கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –
சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா வி றே –
கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –
நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை
அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இ றே -அதுவும் இல்லை இ றே இவர்களுக்கு –
கலியுங் கெடும் கண்டு கொண்மின் –
அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே-அந்தக் கலி காலமும் அழிந்து போகும். மேலே சொல்லிக் கொண்டு போந்தவற்றை இறந்த காலத்திலே ஆக்கி, ‘கலியும் கெடும்’ என்ற இதனை எதிர் காலத்திலே ஆக்கி நிர்வஹிக்கவுமாம்.-அன்றிக்கே, இவையும் எல்லாம் போயிற்றன, ‘கலியும்’ நசித்தது என்றே இருக்க அமையும் என்று, இங்ஙனே ஒரே ரீதியாகச் சொல்லவுமாம்.-நன்று; கலிக்கு அடைத்த காலமாய் இருக்கச் செய்தே, ‘கெடும்’ என்பது என்? என்னில்,-கண்டு கொண்மின்-அநுபவத்தால் அறியுமதற்கு உபதேசம் வேணுமோ? நீர் ‘இது கெடும்’ என்று சொல்லுகிறது என் கொண்டு? என்னில்,‘கடல் வண்ணன்’ என்று தொடங்கி, விடை அருளிச் செய்கிறார் மேல்:“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே, நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம் உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் – ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் – பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்-
பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று
பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
மண் மேல் – அழகுக்கு தோற்று இருப்பார் – உள்ளது பரம பதத்திலேயாய் இருக்க -அதுக்கு சம்பாவனை இல்லாத பூமியிலே -அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –மண் பிடி எடுத்து காட்டுகிறார் – பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-அவர்களுக்கு அளவு என் என்னில் –
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–
அடியார் குழாங்கள் என்னும் படி நெருங்கப் புகுந்து –ஏதத் சாம காயன் நாஸ்தே -என்னும் படியே பாடி இருந்த இடத்தில் இருக்க மாட்டாதே ஆடி –
உழி தரக் கண்டோம்.–-சஞ்சரிக்கக் கண்டோம் -போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த -நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை -கலியும் கெடும் -கண்டு கொண்மின் -பொலிக பொலிக பொலிக –

——————–

ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலைநம்பி

(அனைத்து உலகும் வாழப் பிறந்த ராமானுஜ நம்பி
ஏகலைவனுக்கும் மேலே இவருக்கே -ஆ முதல்வன் இவன் என்றும் ஆளவந்தார் கடாஷித்து – பேர் அருளாளனை சரண் அடைந்த பரகத ஸ்வீகாரம் இவருக்குத்தான் -)

இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய ஸூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷஸூ –
என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –-(பெரியநம்பி ஆளவந்தாரை கண்டேனோ சேவித்தேன் என்பதால் இந்த வார்த்தையும் ராமானுஜரின் மஹிமையைக் காட்டுமே)

ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி (அரங்கன் உகந்த அருளின திவ்யதேசமாய் இருந்தாலும் நம்பியோ ராமானுஜர் வாஸம் செய்யும் ஊர் புக்கு வருகிறேன் என்றார்)
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் –
நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி

என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி -(அரங்கனும் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்-நம்மளவும் மோக்ஷம் வாங்கிப் பெற்ற ஹஸ்தம் அன்றோ-“முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்-இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்-இராமா நுசனை ஈன்ற தன்றோ?“-பாரதிதாசன்-அறிவுடையார் எல்லாம் உடையரென்றார் வள்ளுவனார்ஆழ நினைந்தால், எதனை அறிவதெனும் செறிவுடைய கேள்வி வரும்; சிந்தித்தால் விடை தெரியும்; சித்தத் தெளிவுக்கு வித்தான ‘உடையவரை’ அறிவதினும் பெரிய அறிவுண்டோ? )
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
(பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் என்றவாறு)
வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
(த்ருஷ்ட்வோ தர்ம வ்யதிக்ரம ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோ விஸேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -கௌதம தர்ம-1-3-4-பூர்வர்களான பெரியவர்கள் சில சமயங்களில் தர்மத்துக்கு மாறுபட்ட கார்யங்களையும் ஸாஹஸமான கார்யங்களையும் செய்திருப்பதைக் காண்கிறோம் -மிகுதியான தேஜஸ்ஸு உண்டாகையாலே அவர்களுக்கு அவை தவறில்லை -)

பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்

ஆழ்வான் -இஷ்ட சித்தி வாசிக்கிற வர்களோடு இருந்து தாழ்த்து வர ஆழ்வானுக்கு உடையவர் சொன்ன வார்த்தையை அனுசந்திப்பது –இஷ்ட சித்தி -என்பது-சாங்க்ய வாசஸ்பதி என்று பேரான சாங்க்ய சாஸ்திரம் –நீ இஷ்ட ஸித்தியை என் நினைத்து இருந்தாய் என்றும் ஆழ்வார் கேட்க – பிதற்று என்றே இருந்தேன் என்று ஆழ்வான் சொல்லி இருக்க வேண்டும் –ஆழ்வானுக்கு சொன்ன வார்த்தை யாவது-இத்தனை போது விளம்பித்தது என் என்ன ஆழ்வான் இவ் விருத்தாந்தத்தை அருளிச் செய்ய-கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பாரோ -என்று அருளிச் செய்து-புனஸ் ஸ்நானம் பண்ணுவித்து அருளிஸ்ரீ பாத தூளியும் இடுவித்து அருளினாராம் உடையவர்–பாஹ்ய குத்ர்ஷ்டிகள் சத்தயா அசஹ்யமாகையும் பகவத் விஷயம் சத்தயா தாரகமாயும் இறே-தர்சன நிஷ்டை -யாவது -திரு மாலை-7-வியாக்யானத்தில் ஐதிஹ்யம் – –

அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்(சேஷ பிரசாதம் பெறாமல் இத்தனை நாளும் இழந்தேன் -மடத்தை இடித்து எம்பெருமானாரை அண்டை கொண்ட பலன் இது-அன்னக் கெடு -பாட பேதம் -அப்பொழுது விஷ அன்னம் என்று பொருள் )
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி -(ஆச்சார்ய கைங்கர்யம் இழந்ததனால் அருளிச் செய்த வார்த்தை)
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் -(பாகவதர்கள் திரு உள்ளத்தைப் பின் பற்றியே நடக்க வேண்டும் என்று தேவரீர்)அருளிச் செய்யும் வார்த்தையும் பொய்யோ என்ன-
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
(ஆபரணங்களை இட்டு வைக்கும் செப்பு-அசித்வத் பாரதந்தர்யம் காட்டி இருக்க வேண்டுமே)நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி(ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர் -சத்ருக்ந ஆழ்வான் மதுரகவி நிஷ்டை -வடுகநம்பி நிலையை எனக்கு அருள வேண்டும் மா முனிகள் பிரார்த்தனை)

விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்(வாரிக்கொண்டு விழுங்குவன் -பாய்ந்து பாரிப்பை வெளிமானால் வெளி மணல் வெளியில் நம் பெருமாள் பக்கலில் காணலாம் -ததீய சேஷத்வம் -கரிய கோலத்திரு உருவம் காண்பன்)
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் -(சம்சாரமும் செல்வமும் நெருப்பு -வெக்காயம் குறைய நீர்வண்ணன் தருச்சாயையில் ஒதுங்க வேண்டும்)

நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்(பிறர் நன் பொருள் -ஆத்ம அபஹாரம்)
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் -(மனம் மொழி காயம் -முக்கரண ப்ரவ்ருத்தி பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தாவிர்த்திப்பது மிக்க சிரமம்)

பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே
இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்
என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

(வார்த்தை -303-அம்மங்கிக்கு பெரிய முதலியார் (ஆளவந்தார் ) அருளிச் செய்த வார்த்தை உன்னுடைய பால்யத்தைப் பாராமல் பகவத் விஷயம் சொன்னோம் – விபூதி என் படக் கடவதோ என்று அறிகிலோம்-விஷயம் கேட்க ஸ்த்ரீகளும் வருவார்கள் அன்றோ-நீரும் பால்யம்-உடம்பை இட்டு வெறுக்காதே உயிருக்கே இறை தேட வேண்டும் -காம சுகம் அற்று உடம்பை பட்டினி போட்டு –ஆத்ம ஸ்வரூபம் பார்க்க வேண்டும் -உடம்பை வெய்யில் வைத்து வாஸூதேவ தருச்சாயை யாகிய நிழலிலே வைக்க வேண்டும் –)

——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

நம் வர்த்தமான ஸ்வாமி ஸ்ரீ அப்பன் பிரணதார்த்திஹராச்சார்யர் ஸ்வாமிகளுடைய தனியன்-வாழித் திருநாம பாசுரங்கள்–

December 17, 2025

நம் வர்த்தமான ஸ்வாமி -ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹராச்சார்யர் ஸ்வாமிகள் தனியன்

வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

————–

மார்கழியில் விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
மாவளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேரருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகரப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்துதித்தான் வாழியே
ஆர்வமுடன் அருளிச்செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க் கோதை சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
பூவார் மனம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்துதித்த வள்ளல் வாழியே
தெண் திரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தானுகந்த எதிராசன் கழல் தொழுமவன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

அப்பன் ப்ரணதார்த்தி ஹராசார்யர் நாள் பாட்டு
கண்ணபுரம் கண்ணனையே கருத்தமைத்து ஓங்கிடு நாள்
கந்தாடை குலம் விளங்கக் காசினியில் தோன்றிடு நாள்
அண்ணிக்கும் அமுதூறும் ஆழ்வார்கள் அனுக்ரஹித்த
அருளிச்செயல் அனுதினமும் ஆதரிக்க வந்திடு நாள்
அண்ணல் அருளாளன் அடி தொழு நம் தேசிகராம்
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் அவதாரம் செய்திடு நாள்
வண்மை மிகு வாதூல குலமோங்க வந்திடு நாள்
மார்கழியில் விசாகம் சேர் மா வளரும் நன்னாளே

திரு முடி வர்க்கம்

1-எம்பெருமானார் -திரு நக்ஷத்ரம் – சித்திரை திருவாதிரை
2-முதலியாண்டான் -திரு நக்ஷத்ரம் – சித்திரை -புனர்வசு –
3-கந்தாடையாண்டான் -திரு நக்ஷத்ரம் -மாசி புனர்வசு –
4-துன்னு புகழ் கந்தாடைத் தோழப்பர்–திரு நக்ஷத்ரம் -ஆடி பூரட்டாதி
5-ஈயான் ராமானுஜாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -திருவோணம்
6-திருக் கோபுரத்து நாயனார் -திரு நக்ஷத்ரம் -மாசி -கேட்டை
7-தெய்வங்கள் பெருமாள் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -திருவோணம்
8-தேவராஜ தோழப்பர் -திரு நக்ஷத்ரம் –சித்திரை- ஹஸ்தம்
9-பெரிய கோயில் கந்தாடை அண்ணன்-திரு நக்ஷத்ரம் -புரட்டாசி -பூரட்டாதி

10-பெரிய கோயில் கந்தாடை அப்பன் -திரு நக்ஷத்ரம் -புரட்டாசி மகம்
தீர்த்தம் -கார்த்திகை சுக்ல பஞ்சமி

11-அப்பு வய்ங்கார் -திரு நக்ஷத்ரம் -வைகாசி -திருவோணம்
தீர்த்தம் -மார்கழி கிருஷ்ணாஷ்டமி
12-அப்பூவின் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -சித்திரை – மூலம்
தீர்த்தம் –மாசி -கிருஷ்ண பக்ஷ த்ருதீயை
13-அப்பூவின் அண்ணன் வேங்கடாச்சார்யார்-திரு நக்ஷத்ரம் -சித்திரை -விசாகம் –
14-சாரீரிக தர்ப்பணம் அண்ணன் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆனி -ஸ்வாதி –
15-பிரணதார்த்தி ஹராச்சார்யர் –
16-வேங்கடாச்சார்யார் –
17-அப்பூர்ண அப்பங்கார் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -ஆனி -அனுஷம்
18-அப்பூர்ண அப்பங்கார் வரதாச்சார்யர் –
19-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஸ்வாதி –
20-வரதாச்சார்யர்

22-வேங்கடாச்சார்யார்
23-வரதாச்சார்யர்
24-பிரணதார்த்தி ஹராச்சார்யர்
25-பெரிய அப்பன் வேங்கடாச்சார்யார் -திரு நக்ஷத்ரம் -சித்திரை -கார்த்திகை –
26-பெரிய அப் பூர்ண அப்பயங்கார் வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆடி -விசாகம்
27-வேங்கடாச்சார்யார் –
28-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -பங்குனி மகம்
29-பெரிய ஸ்வாமி வேங்கடாச்சார்யார் -ஆனி ரோஹிணி
30-பிரணதார்த்தி ஹராச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -ஆவணி -உத்திரட்டாதி
தீர்த்தம் -மார்கழி சுக்ல பக்ஷ பிரதமை

31-வரதாச்சார்யர் -திரு நக்ஷத்ரம் -மாசி -மூலம்
தீர்த்தம் -புரட்டாசி -சிக்கலை பக்ஷ தசமி

32-அப்பன் ராமானுஜாசார்யார்–திரு நக்ஷத்ரம்-மார்கழி மூலம்

ஐப்பசி சுக்ல பக்ஷ சதுர்தசி – கோவில் கந்தாடை வதுல தேசிக அப்பன் ராமானுஜாச்சார் ஸ்வாமி தீர்த்தம்

அவதார ஸ்லோகம்
ஸ்ரீ மத் கைரவணீ சரோ வரதடே ஸ்ரீ பார்த்த ஸூத உஜ்ஜ்வல
ஸ்ரீ லஷ்ம்யாம் யுவவத்சரே சுப தனுர் மூலே வதீர்ணம் புவி
ஸ்ரீ வாதூல ரமா நிவாஸ ஸூகுரோ ராமாநுஜாக்யம் குணை
ப்ராஜிஷ்ணும் வரதார்ய சத் தனய தாம் பிராப்தம் பஜே சத் குரும்

ஸ்வாமி தனியன் –
வாதூல அந்வய வார்தீந்தும் ராமானுஜ குரோ ஸூதம்
தத் ப்ராப்த உபாய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

ஸ்ரீ மத் வாதூல வரதார்ய குரோஸ் தனூஜம்
ஸ்ரீ வாஸ ஸூரி பத பங்கஜ ராஜ ஹம்ஸம்
ஸ்ரீ மந் நதார்த்தி ஹாரா தேசிக பவுத்ர ரத்னம்
ராமானுஜம் குரு வரம் சரணம் ப்ரபத்யே

ஸ்வாமி வாழித் திரு நாமம்
சீர் புகழும் பாஷியத்தின் சிறப்புரைப்போன் வாழியே
செய்ய பகவத் கீதை திறன் உரைப்பான் வாழியே
பேர் திகழும் ஈடு நலம் பேசிடுவோன் வாழியே
பெற்ற அணி பூதூருள் பிறங்கிடுவோன் வாழியே
பார் புகழும் எட்டு எழுத்தின் பண்பு உரைத்தோன் வாழியே
பண்பு மிகு மூலச் சீர் பரவ வந்தோன் வாழியே
ஆர்வமுடன் சீடர்க்கே அருள் புரிவோன் வாழியே
அன்பு மிகு ராமானுஜர் அடியிணைகள் வாழியே

ஸ்வாமி நாள் பாட்டு –

பூ மகளின் நாதன் அருள் பொங்கி மிக வளர்ந்திடும் நாள்
பூதூர் எதிராசா முனி போத மொழி பொலிந்திடு நாள்
நேம மிகு சிட்டர் இனம் நேர்த்தியாய்த் திகழ்ந்திடு நாள்
நீள் நிலத்துள் வேத நெறி நீடூழி தழைத்திடு நாள்
பா மனம் சூழ் மாறன் எழில் பாடல் இங்கு முழங்கிடு நாள்
பார் புகழும் வயிணவத்தின் பண்பு நிதம் கொழித்திடு நாள்
சேம மிகு ராமானுஜர் தேசிகர் இவண் உதித்த
செய்ய தனுர் மதி மூலம் சேர்ந்த திரு நன்னாளே —

—————

ஸ்ரீ ஸ்வாமி திருக்குமாரர்கள் மூவர்

33-ஜ்யேஷ்ட திருக்குமாரர் -ஸ்ரீ பிரணதார்த்தி ஹராச்சார்யர் –திரு நக்ஷத்ரம் -மார்கழி -விசாகம் –

ஸ்ரீ ப்ரணார்த்தி ஹரா சாரியார் –நம் வர்த்தமான ஸ்வாமி திரு நக்ஷத்ரம் -மார்கழி விசாகம்

தனியன்
வாதூலான்வய வார் தீந்தும் ராமானுஜ குரோஸ் ஸூதம்
தத் ப்ராப்த உபய வேதாந்தம் ப்ரணதார்த்தி ஹரம் பஜே

மார்கழி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே
மா வளரும் பூதூரான் வண் கழல் பணிந்தோன் வாழியே
பேர் திகழும் பேர் அருளாளன் பதம் பணிவோன் வாழியே
மறையோர் தொழும் தக்கானை மனனம் செய்வோன் வாழியே
ஆராமம் சூழ் அரங்க நகர் அப்பன் போற்றுமவன் வாழியே
ஈங்கு வாதூல குலத்து வந்து உதித்தோன் வாழியே
ஆர்வமுடன் அருளிச் செயலை ஆதரிப்போன் வாழியே
ஆர்த்த புகழ் ப்ரணதார்த்தி ஹரர் அடியிணைகள் வாழியே

வண் புதுவை நகர்க்கோதை சீர் அருளைச் சேர்ந்து இருப்பான் வாழியே
பூவார் மணம் கமழும் புல்லாணி தொழுது எழுவோன் வாழியே
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
தனுர் விசாகத்தில் வந்து உதித்த வள்ளல் வாழியே
தெண்டிரை சூழ் திருவல்லிக்கேணியில் அவதரித்தோன் வாழியே
தான் உகந்த எதிராசன் கழல் தொழுவோன் வாழியே
அண்ணல் அருளாளன் அடி அடைந்தோன் வாழியே
அப்பன் ப்ரணதார்த்தி ஹரர் திருவடிகள் அவனியில் வாழியே

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் வாழித் திரு நாமம்

எந்தை மணவாள மா முனி இணை அடியோன் வாழியே
எழில் கந்தாடை அப்பனுக்கு ஹிதம் உரைத்தான் வாழியே
அந்தமில் சீர் திருவரங்கத்து அமர்ந்த செல்வன் வாழியே
ஆர்ந்த புகழ் சடகோபன் அருள் பெறுவோன் வாழியே
கந்தாடைக் குலம் விளங்கும் கருணை வள்ளல் வாழியே
கன்னியில் பூரட்டாதி கனிந்து உதித்தோன் வாழியே
பந்தம் அறும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே
பாராள் கந்தாடை அண்ணன் பதம் இரண்டும் வாழியே

———

நாள் பாட்டு

சீர் மலி நான்மறை அந்தணர் சிந்தை சிறந்து மகிழ்ந்திடு நாள்
தென் அரங்கம் முதல் நல் பதி கண் மிகு தேசு பொலிந்திடு நாள்
பார் தனிலே வர மா முனி தன்னருள் பாத்திரமாகிய நாள்
பாடியமும் திரு மந்த்ரமும் தினம் பாயொளி மேவுறு நாள்
தார் மலி மார்பர் அழைத்து வாழ்வித்தவர் சதிர் மிக ஓங்கிய நாள்
தக்க புகழ் வாதூலர் குலத்தவர் சந்ததம் வாழ்வுறு நாள்
கார் மலி வண் கைக் கருணையில் அப்பன் காசினியில் தோன்றிய நாள்
கன்னி தனில் திரு மா மகம் என்னும் கவினுறு தனி நாளே

———

வெண்பா

மந்திரங்கள் வாழ மணவாள முனி வாழ யுயர்
எந்தை எதிராசன் எழில் வாழ சந்தமுடன்
மன்னு புகழ்க் கந்தாடை மன்னன் எனும் அப்பனே
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சார ஸங்க்ரஹம்-வார்த்தை -456-

December 17, 2025

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-தாமரைப் பூவை பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ மஹா லஷ்மியானவள் விரும்பும்படியான பெறுவதற்கு அறிய நம் ஸ்வாமியானவன்-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி  அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம் பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-நித்ய ஸூரிகள் ஜீவனம் இருக்கிற படி–‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.-மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்-அவளுக்கு மிடுக்கானவன்.-இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –தர்மத்தினுடைய பரம பிரயோஜனமான திருமகளார்-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?-அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி-சுவையன் –-ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே-திருவின் மணாளன் –இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்-அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்-புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நித்ய யவ் வன ஸ்வ பாவனை—மைந்து -மிடுக்கு இனிமை அழகு கெடுவாய், இவ் விஷயத்தைச் சிலரால் விடப் போமோ?–நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்?

—————

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ -அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –ஸூலபனுக்கு என்னவுமாம்-ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-அவர்களை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –தன் மேன்மை பாராதே -சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு இவற்றின் சத்தையை நோக்கி நிற்கும் வத்சலன் ஆனவனாலே –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்-கேசவன் தமர் ஆனார்கள் -மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாநாராயணனாலே என்கிற இடம் மா சதிரினுடைய உபபாதனம்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-அர்த்தத்தை சொல்லுகைக்காக சப் தத்தை உபாதானம் பண்ணுகிறார் -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை  அருளிச் செய்கிறார் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே-வேத மயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் நாராயணனையே குறிக்கும் –

—————-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-நிரதிசய போக்யமான திருவடிகளை—செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.-வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.-மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு –அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –நிலத்தைச் சொல்லுகிறது.-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும் அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.-செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது-சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.-இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி. இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.-மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.-‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

———————

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-4-11-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-5-4-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர்
தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்-சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்-கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்–அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.-சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?-பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-சரத்தின் பலம் -வாய் வலி –யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.-ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்-சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி-முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11–அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே–என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை—தொல் வினை தீர -அநாதி யான அவித்யாதிகள் நீங்கி-இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய ஸூரிகள் உய்வு பெறும்படி.-வீற்றிருப்பாரே –-அவன் இறைவனாம் தன்மைக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்.-‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,-‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு. ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘ வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்-லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்-க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.-‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது-பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் -கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,-அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,-இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.-கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –-பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி-அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன் -அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம் செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்–சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம் படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து-அழைத்துக் கொள் -ஆதி -மநோ வியாதி என்றவாறு -வியாதி தேக வியாதி–கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி—எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் —யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று—திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை –அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –-அது ஏது என்னில்-ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?-‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.-இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?-திருவடியில் என்ன ப்ராவண்யம் –-

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-–4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து ––இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.-அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்-

—————–

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு—தமியேனுக்கு –1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ-இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு–2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர ஸூன்யன்-அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே-நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.–பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –தமியேன்-3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,-இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை செய்ய வேண்டுவது என் என்ன-ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”– ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.-அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே-அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.-விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.தேவோ நாம சஹஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-பாரதம். என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்—-‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேஸ்வரன்.-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட–புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே-ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே – ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.-புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய், பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் –தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

————–

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை -ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.-திருமாமகள் – செல்வம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8–வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளைக் கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இறே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது-ஒசிந்த நுண்ணிடை-இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.-ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.-பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.-அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.-ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.-திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-என் ஸ்வாமிநி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு-எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே

————————–

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ர்வ கந்த: ஸர்வ ரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு –துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –‘அவன் குப்பைக்காலன் காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?(குப்பைக்காலன்-நல்லவன் விபரீத லக்ஷணை)இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்த மயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இறே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி –ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இறே –இந்த லோகங்களுக்கு ஸூகம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற-எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இறே

——————

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் ச ரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது-அடியேன் என்று நான் சொல்ல நீ ஈஸ்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை-எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி-மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்-பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய-திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –-நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –-ஆக-இப் பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்- இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —

——————–

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்
பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே -என்னடியார் யது செய்யார் –என்னும் உன் கடாக்ஷமும் –நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து-உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் – உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும்-இவ் வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே–அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம் யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் –மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று —துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-சீரியது அடிமை செய்யுமது என்று–உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இறே-உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ-என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து –என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே –கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் –கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-நித்ய ஸூரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ

————-

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண-வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் –பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி –விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் – –என்னக் கடவது இறே-நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்-க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார் –என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் –யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபாலி ஸ்ம்ருதி –எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே- -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –அப்ராப்த விஷயத்துக்கு இறே அதிகாரி சம்பத்து வேண்டுவது –கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது -சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்–சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி –
பெரிய திருவந்தாதி -54-–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –-திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் ––பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இறே–இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –-இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –-ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக-பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன-சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்–சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன--தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்- உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண்
–இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –-ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்–இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –வியக்தமாக -மதிநலம் அருளப் பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா -அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே10-4-3-துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய்தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே-இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் -தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் -கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று–அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ 

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே–இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ-தானே--புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –அவை யாவன-பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3—தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்-பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின –பாரதம் மோஷம் -என்கிறபடியே –-அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்-யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே மேலைத் தொண்டு –-அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –

———————–

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் – இரண்டாம் பாதம் -தர்க்க பாதம்-ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

December 14, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

அவிரோத அத்யாயம் -பர ப்ரஹ்மமே நிகில ஜகத் ஏக காரணம் -இந்தப் பொருளோடு எந்த முரண்பாடும் இல்லை என்றும் இதில் நிரூபணம் -எந்த விதத்தாலும் அசைக்க முடியாதது-ஸர்வ பிரகார துர் தர்ஷணம் –

2-2-1-ரசநாநுப்பத்த்யதி₄கரணம் தர்க்க பாதத்தின் தொடக்கம்

ஏன் மற்ற மதங்களைக் கண்டிக்க வேண்டும்?
முதல் அத்யாயத்தில் ப்ரஹ்மம் தான் உலகம் அனைத்துக்கும் ஒரே காரணம்-நிகில ஜகத் ஏக காரணம்-. என்று வேத வ்யாஸர் நிரூபித்தார்-அந்த முடிவில் தவறுகள் உள்ளன என்று மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்மிருதிகளின் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்ப, அவற்றுக் கெல்லாம் இரண்டாவது அத்யாயத்தின் முதல் பாதத்தாலே விடை அளித்து, முதல் அத்யாயத்தில் நாம் எடுத்த முடிவு சரி தான் என்று நிரூபித்தார். அதற்கு மேல் தற்போது இரண்டாவது அத்யாயத்தின் இரண்டாவது பாதத்தில் மற்ற மதங்களில் எல்லாம் என்னென்ன தோஷங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்.
ஒருவர் தன்னுடைய பக்ஷத்தை முன் வைத்து, அதில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அல்லது தோஷங்களுக்கு விடையளித்தாலே தன்னுடைய பக்ஷத்தை நன்றாக நிலை நாட்டி விட முடியும். பிறகு ஏன் மற்றவர்களின் மதங்களை தவறென்று சொல்ல வேண்டும்? அதில் இருக்கும் குற்றங்களை ஏன் எடுத்துக் காட்ட வேண்டும்?என்கிற சந்தேகம் நமக்கு எழும்.
அதன் ப்ரயோஜனத்ணத ஸ்வாமி ராமானுஜர் காட்டுகிறார்
-நம்முடைய மதம் சரியானது என்பதை மட்டும் காட்டி நிறுத்தி விட்டால், சிறந்த பண்டிதர்கள் எல்லா மதங்களையும் சீர் தூக்கிப் பார்த்து செயல்படும் பொழுது,அவர்களும் வேதாந்தத்தின் கருத்து தான் சரியானது- மற்ற மதங்கள் தவறானவை என்று புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் சாதாரணமான பாமர மக்கள், மற்ற மதங்களைப் பார்க்கும் போது, அவற்றில் சரியான யுக்திகள் இல்லை என்று புரிந்து கொள்ளாமல், ஒரு வேளை இந்த மதங்களும் சரியாக இருக்கலாம் என்கிற எண்ணத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்ததென்றால், வைதிகமான வேதாந்தத்தில் சொல்லப்பட்ட சித்தாந்தத்தை அறியாமல் பின்பற்றாமல் போய் விடுவார்கள். அதனால் வாழ்க்கையில் அவர்களுக்கு பேரிழவு ஏற்படும். அதனால் மக்களின் நன்மைக்காக தன்னுடைய பக்ஷத்தை சரி என்று சொல்வவதாடு நிறுத்தாமல்,
வேதத்துக்கு புறம்பான மற்ற மதங்களிலும் யுக்திகளின் அடிப்படையில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை வேதவ்யாஸர் இந்த பாதத்தில் காட்டுகிறார்
.
இந்த பாதத்துக்கு தர்க்க பாதம் என்று பெயர். தர்க்கம் என்றாலே யுக்திகளின் அடிப்படையில் செய்யப்படும் வாதம். அப்படி யுக்திகளால் மற்ற மதங்களை இந்த பாதத்தில் தகர்க்கிறார்.

ஸாங்க்ய மதத்தின் சுருக்கம்
2-2-1-ரசநாநுப்பத்த்யதிகரணம் – இ
ந்த பாதத்தின் முதல் அதிகரணம், ரசனானுபத்தி அதிகரணம். இந்த அதிகரணத்தில் ஸாங்க்யர்களின் மதத்தில் இருக்கும் தோஷங்களை எல்லாம் வேத வ்யாஸர் எடுத்துக் காட்டுகிறார்.
ஸங்கதி –
ஏன் முதலில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்க வேண்டும்? பௌத்தம், ஜைனம், முதலான மற்ற மதங்கள் எல்லாம் இருக்கின்றனவே ? என்றால் – ஸாங்க்ய மதத்தில் தான் வேதாந்தம் மதத்தோடு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 24 அசேதன தத்துவங்களை ஏற்கிறார்கள். ஸத் கார்ய வாதத்தை ஏற்கிறார்கள். அதனால் இதுவும் சரியான மதம் தான் என்கிற ஒரு மயக்கம் மக்களுக்கு ஏற்படுவது சுலபம். அதனால் முதல் முதலில் அந்த
மதத்தைத் தான் தவறு என்று நிரூபிக்கிறார்.

முன்னமே முதல் பாதத்திலேயே ஸாங்க்ய மதத்தைத் தவறு என்று சொல்லி இருந்தாலும், அதற்கும் இதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது.ஸ்மிருதி பாதத்தில் வேத வாக்கியங்களே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்லுகின்றன என்று அவர்கள் கேள்விகளை எழுப்ப, அந்த வேத வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை என்பது வரை மட்டும் தான் நிரூபித்திருந்தார். இப்போதுதான் ஸாங்க்ய மதத்திலேயே என்ன தோஷங்கள் இருக்கின்றன என்பதை வேதவ்யாஸர் காட்டுகிறார். ஸாங்க்யர்களின் மதத்தைச் சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்.
இந்த உலகத்தில்இரண்டே பொருட்கள் தான் இருக்கின்றன: பிரதானம் அல்லது மூலப் ப்ரக்ருதி என்று அழைக்கப் படுகிற அறிவற்ற அசேதனப் பொருள் ஒன்று. புருஷன் என்று அழைக்கப் படுகிற ஞானமே வடிவமான ஆத்மாக்கள் இரண்டாவது வகை
இதில் உலகத்தைப் படைப்பது ப்ரக்ருதி. ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று பொருட்களும் சமமான அளவில் சேர்ந்து இருக்கும் போது, அதற்குப் ப்ரக்ருதி -பிரதானம் என்கிற பெயர் வழங்கப்படுகிறது.(நாம் இவற்றை குணங்கள் பண்புகள் -சாங்க்யர் பொருள்கள் என்கிறார்கள் ) சிருஷ்டியின் போது இந்த சத்துவம், ரஜஸ், தமஸ் என்பவை சம நிலையை இழந்து, ஏற்றத் தாழ்வுகளோடு இருக்கின்றன. அதனால் தான் ப்ரக்ருதியிலிருந்து மகான், அதிலிருந்து அஹங்காரம், அந்த அஹங்காரத்தில் ஸாத்விகமான அஹங்காரத்திலிருந்து 11 இந்திரியங்கள். தாமஸமான அஹங்காரத்திலிருந்து ஐந்து தன்மாத்திரங்களும், ஐந்து பூதங்களும் உண்டாக்கப் படுகின்றன. ஆக, மொத்தம் அசேதனப் பொருட்கள் 24 வகைகளை உடையவை .

ஸாங்க்ய மதத்தின் கண்டனம்
புருஷன் என்பவர் ஜ்ஞானமே வடிவமானவர். எந்த மாறுபாடுகளும் இல்லாதவர். எந்த செயல்களையும் செய்யாதவர்.எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். ஒவ்வொரு சரீரத்தை இயக்குவதற்கும் ஒவ்வொரு ஆத்மா, அதாவது புருஷன் இருக்கிறான் என்று கூறுகிறார்கள்.
சம்சாரம் –ப்ரக்ருதியும் புருஷனும் மிகவும் நெருக்கமாக சேர்ந்து இருக்கிறபடியாலே , புருஷனிடம் இருக்கக் கூடிய அறிவு ப்ரக்ருதியில் ஏறிடப்படுகிறது. ப்ரக்ருதியில் இருக்கும் செயல்படும் தன்மை புருஷனிடம் ஏறிடப்படுகிறது. எப்படி ஒரு சிவப்பான புஷ்பத்தை வெள்ளை பளிங்கு கல்லுக்கு அருகிலே கொண்டு வந்தால், அந்த சிவப்பு நிறம் பளிங்குக் கல்லில் இருப்பது போல் தோற்றம் அளிக்குமோ , அதே போல் தான். இதற்கு அத்தியாசம் என்று பெயர். இதன் காரணமாகத் தான் நான் பார்க்கிறேன். நான் ஓடுகிறேன். நான் நிற்கிறேன். நான் அறிவாளி. முதலான எல்லா அறிவுகளுமே ஏற்படுகின்றன.இது தான் சம்சாரம் என்று சொல்லப்படுகிறது.
மோக்ஷம் –
எப்போது ஒரு ஆத்மா நான் வேறு ப்ரக்ருதி வேறு, எனக்கு இந்த தன்மைகள் எதுவுமே கிடையாது, நான் தனித்து இருக்கக் கூடியவன். என்று புரிந்து கொள்ளுகிறானோ , அப்போது முக்தியை அடைகிறான் என்று கூறுகிறார்கள்.

(பரம அணு ஜகத் காரணம் -நியாய வைசேஷிகர் மதம்-bottom up -இதில் –அந வஸ்தா தோஷம் வரும் – சம்யோகம் சேர்க்கைக்கு ஆறு கோணங்கள் அம்சங்கள் பார்ஸ்வம் இருக்க வேண்டுமே -பரம அணுவுக்கு இவை இல்லையே —சுகம் துக்கம் மோகம் இவை கொண்ட உலகப்பொருள்களைக் காண்கிறோம் -இது போல் தானே காரணப் பொருளும் இருக்க வேண்டும்ப்ரக்ருதி தான் காரணம் -பிரிந்து பொருள்கள் உண்டாகின்றன -top down–நாமும் இதுவே -ஆனால் ப்ரஹ்மாத்மக பிரகிருதி என்கிறோம்)

இந்த மதத்தை 9 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் வ்யாஸர் கண்டிக்கிறார்.
1–ரசநா அனுபபத்மே: ச ந அநுமானம் ப்ரவ்ருத்மே: ச
ந அநுமானம் –
அநுமானத்தால் அறிப்படும் ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல
ரசநா அனுபபத்மே: ச- ஒரு சேதனனால் இயக்கப் படாத அசேதனப் பொருள் எதையும் உண்டாக்க இயலாதபடியாலும்
ப்ரவ்ருத்மே: ச – சேதனனால் இயக்கப்படும் போது மட்டுமே அசேதனம் கார்யம் செய்வதைக் காண்கிற படியாலும்
ஒரு கல் தானாக வீடாக மாறுவதில்லை , கட்டை தானாக நாற்காலியாக மாறுவதில்லை . ஜ்ஞாநமுடைய ஒரு சேதனன் அதை இயக்கினால் தான் எதையும் அசேதனத்தால் உண்டாக்க முடியும் என்று உலகத்தில் நாம் காண்கிறோம். அதனால் யாராலும் இயக்கப்படாத ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி இவ்வுலகைப் படைத்திருக்க இயலாது.
மேலும், பல பொருட்கள் ஜகத் காரணமாக இருந்தால் தோஷம் ஏற்படும், அதனால் ப்ரக்ருதி என்ற ஒரே பொருள் தான் ஜகத் காரணமாக இருக்க வேண்டும் என்று ந்யாய மதத்தைக் கண்டிக்கும் நீங்களே , ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று பொருட்களை ஜகத் காரணம் என்கிறீர்கள். இது உங்கள் கூற்றுக்கே முரண்பட்டது.

(இரண்டு இடத்திலும் தர்சனம் -அந்வயம் வ்யதிரேகம்–சேதனனால் இயக்கப்படும் மூலப் பிரக்ருதியில் இருந்து ஸ்ருஷ்டிக்கப் படுவதையும் செயல்படுவதையும் காண்கிற படியாலும்-சேதனனால் இயக்கப்படாத மூலப் பிரக்ருதியில் இருந்து ஸ்ருஷ்டிக்கப் படுவதையும் செயல்படுவதையும் காண்கிறது அல்லாத படியாலும்)

கேள்வியும் பதிலும்
2-பயோம்பு₃வத் சேத் தத்ராபி –
“பால் மற்றும் தண்ணீரைப் போல என்றாால், அங்கும் கூட”
இங்கு பூர்வ பக்ஷி ஒரு கேள்வி எழுப்புகிறார் – உலகத்தில் பால் தயிராக மாறுவது தானாகத் தான் நடக்கிறது. எந்த சேதனனும் அதில் முயல்வதில்லை – அதே போல், மழை நீர் ஒரே ரசத்தோடு வானத்திலிருந்து கீழே விழுந்தாலும், அது தேங்காய், எலுமிச்சை , புளி, முதலான வெவ்வேறு பொருள்களுக்குள் செல்லும் போது, வெவ்வேறு ரசங்களை அடைகிறது. இதுவும் தானாக நடக்கக் கூடிய மாறுபாடு தான். அதனால், சேதனனால் இயக்கப் படாத போதும், பாலும் தண்ணீரும் மாறுபாடுகளை அடைவது போல், மூலப்ப்ரக்ருதியும் எந்த ஒரு சேதனனாலும் இயக்கப்படாமலேயே உலகத்தைப் படைக்கலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

பயோம்புவத்பயஸ் என்றால் பால், அம்பு என்றால் தண்ணீர், பயோம்புவது – பாலையும் தண்ணீரையும் போல்.
இதுவரை பூர்வ பக்ஷியின் கேள்வி.
சேத் – “என்று நீ சொன்னாய் என்றால்” என்று வேத வ்யாஸர் இதை அனுவாதம் செய்கிறார்.
தத்ராபி –இது வ்யாஸரின் பதில். “அங்கும் கூட” என்று பொருள். அதாவது, பால், தண்ணீர் முதலானவற்றுக்கும் சேர்த்து தான் இப்போது விவாதம் நடத்தப்படுகிறது. எந்த ஒரு அசேதனப் பொருளும் சேதனனின் ஈடுபாடு இல்லாமல் முயற்சி இல்லாமல் ஒரு மாறுபாட்டை அடைய முடியாது என்று தான் சொல்லுகிறோம். அதனால், இதுவரை பாலோ ,தயிரோ , தானாக மாறுகிறதா? ஒரு சேதனனால் இயக்கப் படுகிறதா? என்பது முடிவு ஆகாத படியால், அதை எடுத்துக் காட்டாகச் சொல்லி தற்போது ப்ரக்ருதி தானாக படைக்கலாமே என்று சொல்வது பொருந்தாது.
ஸந்தேகம் – முன்னால் உப ஸம்ஹார தர்சனாதிகரணத்தில் இதே பால் முதலானவை வேறு துணையை எதிர் பார்க்காமல் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்வது போல் பரமாத்மாவும் ஸஹ காரி காரணங்கள் (துணைகளும்) இல்லாமலேயே உலகத்தைப் படைக்கக் கூடும் என்றார். இப்போது பால் தானாக படைக்க முடியாது என்கிறாரே ?
பதில் – மண் குடமாக மாற வேண்டும் என்றால், ஒரு சக்கரத்தின் தேவை உண்டு. நூலைத் துணியாக மாற்ற வேண்டும் என்றால், தரி என்கிற எந்திரத்தின் தேவை உண்டு. அதைப்போல், பாலுக்கு தயிராக மாறுவதற்கு வேறு எந்த அசேதனப் பொருளின் தேவையும் இல்லை என்று அங்கு சொல்லப்பட்டது. இந்த அதிகரணத்தில் சேதனனான பரமாத்மாவால் இயக்கப் பட்டு தான் பால் மாறுகிறது என்று வேத வ்யாஸர் கூறுகிறார். அதனால், இதில் எந்த முரண்பாடும் இல்லை

2.2.1 ரசநாநுப்பத்த்யதி₄கரணம்-ஸாங்க்ய மதத்தை நிராகரித்தல்-பரமாத்மாவால் இயக்கப்படாமல் ப்ரக்ருதி படைக்க இயலாது-ரசநாநுபபத்த்யதிகரணத்தில் ஸாங்க்ய மதத்தை நிராகரித்து வருகிறார் வேத வ்யாஸர்.

3-வ்யதிரேக அநவஸ்தி₂தே : ச அநபேக்ஷத்வாத்
அநபேக்ஷத்வாத்
– உலகைப் படைப்பதற்கு ப்ரக்ருதி பரமாத்மாவை எதிர்பார்க்காது (தானே படைக்கும்) என்றால்
வ்யதிரேக – ஸ்ருஷ்டி நிலைக்கு எதிரான ப்ரளய நிலையே இருக்க வேண்டிய படியால்
அநவஸ்தி₂தே : ச – இப்போது நாம் பார்க்கும்படி உலகம் இருக்காமல் போக வேண்டும்
ப்ரதானம் அறிவற்றதானபடியால் ஒரு காலத்தில் ப்ரளயம் பிறகு ஒரு காலத்தில் ஸ்ருஷ்டி என்பது பொருந்தாது.-பரமாத்மாவால் இயக்கப்படும் போது தான் இந்த வேறுபாடுகளும் பலவிதமான ஸ்ருஷ்டிகளும் பொருந்தும்

4-அந்யத்ர அபா₄வாத் ச ந த்ருணாதி₃வத்
அந்யத்ர
–வேறு இடங்களில்
அபா₄வாத் இல்லாததால்
ந த்ருணாதி₃வத் ச புல் -முதலான வற்றைப் போலும் அல்ல
பூர்வபக்ஷீ – ஒரு பசு மாட்டால் உண்ணப்பட்ட புல்லானது தானாகவே தான் பாலாக மாறுகிறது. அங்கு எந்த ஜீவனாலும் அந்த புல் இயக்கப்படுகிறது (அதிஷ்டானம் செய்யப்பட்டுள்ளது) என்று சொல்ல முடியாது. அந்த பசுவின் உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மாவுடன் தொடர்பு மட்டும் தான் புல்லுக்கு இருக்கிறது, ஆனால்
இயக்கப்படுவதில்லை . அதே போல் ஜீவாத்மாவால் இயக்கப்படாத போதும் ஜீவாத்மாவின் தொடர்பால் மட்டுமே ப்ரக்ருதி உலகத்தை படைக்கிறது என்று கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார்-அதிஷ்டானம் வேண்டாம் ஸந்நிதானம் தொடர்பே போதுமே என்பர்
ஸித்தாந்தி – இந்த எடுத்துக் காட்டே தவறானது. புல்லை பசு மாடு உண்டால் தான் அது பாலாக மாறுகிறதே தவிர காளை உண்டாலோ அல்லது பூமியில் போடப்பட்டிருந்தாலோ அது பாலாக மாறுவதில்லை . எனவே இதைப் போன்ற இடங்களிலும் ஈஸ்வரனால் அதிஷ்டானம் செய்யப்பட்டு இயக்கப்படுகிற புல் தான் பாலாக மாறுகிறது,-அவர் தான் அப்படி மாற வைக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும். அதனால் இதே போல் ப்ரக்ருதி உலகத்தைப் படைக்கலாமே என்ற கேள்வியும் பொருந்தாது. ஒரு ஜீவனால் இயக்கப்படாக மூல ப்ரக்ருதி உலகத்தை உண்டாக்கவே முடியாது.

நெருக்கம் மட்டும் போதாது, இயக்கம் வேண்டும்
5–புருஷ அச்மவத் இதி சேத் ததா₂பி –
“புருஷன் மற்றும் கல் போல் என்றால், அப்போதும்கூட”
சைதந்யம் இல்லாத மூல ப்ரக்ருதியும் சைதந்யமே வடிவான ஜீவாத்மாவுடன் உள்ள தொடர்பால் மட்டுமே இயங்கலாம் என்று நிரூபிக்க பூர்வபக்ஷீ இரண்டு எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார்.
புருஷ அச்மவத் – கண் தெரியாத ஒரு மனிதன் தானாக இயங்க முடியாது.-ஆனால், கண் தெரியக் கூடிய காலில்லாத வேறொரு மனிதரின் உதவி யிருந்தால் அவருடைய ஜ்ஞானத்தைப் -பார்வையைப் பயன்படுத்தி கண் தெரியாதவரும் இயங்க முடியும். அதே போல் ஒரு இரும்புத் துண்டு தானாக நகர முடியா விட்டாலும் ஒரு காந்தம் அருகில்
வந்ததென்றால் அதனுடைய ஈர்ப்பால் அதன் உதவியோடு நகர்வதைப் பார்க்கிறோம். அதே போல் சைதன்யமே வடிவமான ஜீவாத்மாவின் உதவியால் ப்ரக்ருதி இயங்கலாமே என்று பூர்வ பக்ஷீ கேட்க்கிறார்.
ததா₂பி – இது வ்யாஸரின் விடை
. “அப்போதும் கூட ப்ரக்ருதி இயங்க முடியாது என்று முன்னால் சொன்ன தோஷம் அப்படியே தான் இருக்கும்” என்று பொருள்
கண் தெரியாதவன் காலில்லாதவனுடைய உதவியை எடுத்துக் கொள்ளும் பொழுது காலில்லாதவன் வழியைப் பார்த்து அதை உபதேசிக்க வேண்டும்; அதைக் கண் தெரியாதவன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்; பிறகு இருவரும் சேர்ந்து நடந்து செல்லலாம். அதே போல் இரும்புத் துண்டை இழுக்கும் பொழுது அந்த காந்தம் ஓரளவுக்கு அருகிலே எடுத்து வரப்பட வேண்டும்; பிறகு தான் ஈர்க்கும். அதே போல ஜீவாத்மாவின் உதவியால் ப்ரக்ருதி இயங்குகிறது என்றால், ஜீவாத்மா அதற்காகச் சில செயல்களைச் செய்ய வேண்டும். ஆனால் உங்கள் மதத்திலோ ஜீவாத்மா எந்தச் செயலும் செய்யாதவர் என்று சொல்கிறீர்கள். அதனால் அவருடைய உதவியால் ப்ரக்ருதி இயங்குவது என்பது பொருந்தாது.
ஜீவன் எந்த உதவியும் செய்ய வேண்டாம், அவர் இருப்பதே போதும் ப்ரக்ருதியை இயங்க வைக்க என்று சொன்னால், ஜீவனுக்கும் ப்ரக்ருதிக்கும் இருக்கும் தொடர்பு நித்யமானதானபடியால் எப்போதுமே ஸம்ஸாரம் தான் இருக்க வேண்டும், என்றைக்குமே மோக்ஷம் என்பதை இந்த ஜீவன் அடையவே முடியாது. அல்லது இந்த ஜீவன் எப்போதுமே முக்தனாகத் தான் இருக்கிறார், இவருக்கு ஸம்ஸாரக் கட்டுப்பாடு என்பதே ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இது இரண்டுமே உங்கள் ஸித்தாந்தத்திற்கு முரண்பட்டது. அதனால் நீங்கள் சொன்ன எடுத்துக் காட்டுகளின் படி ஜீவனின் உதவியால் ப்ரக்ருதி இயங்குகிறது என்று சொல்வதும் பொருந்தாது

மேலும் சில தோஷங்கள்
6-அங்கி₃த்வ அநுப்பத்தே : ச
– அங்கி₃த்வம் பொருந்தாத படியாலும்
இந்த ஸூத்ரத்தில் வ்யாஸர் ஸாங்க்ய மதத்தில் இருக்கும் மற்றொரு ஒவ்வாமையைக் காட்டுகிறார்.
உங்கள் மதத்தில் – ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணக்களுக்குள்ளே ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், அதில் எந்த குணம் உயர்ந்திருக்கிறவதோ அது அங்கி, மற்ற இரண்டும் அதற்கு அங்கங்களாக இருக்கின்றன. இப்படி அங்கம்-அங்கி என்ற தன்மையோடு கூடிய முக்குணங்கள் தான் உலகத்தில் எல்லா செயல்பாடுகளுக்கும் காரணம் -என்று சொல்கிறீர்கள். ஆனால் ப்ரளய காலத்தில் மூலப் ப்ரக்ருதியில் ஸத்த்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களும் சமமான நிலையிலேயே இருக்கின்றன என்று நீங்கள் சொல்கிற படியால், அப்போது ஒரு குணத்தை அங்கி என்றும் மற்றவற்றை அங்கம் என்றும் சொல்லவே முடியாது, ஏற்றத் தாழ்வுகளே இல்லாததால். அதனால் அங்கம் -அங்கி என்ற தன்மை இல்லாதபோது மூலப் ப்ரக்ருதி இயங்கியிருக்கவே கூடாது, அதிலிருந்து
இந்த உலகம் உண்டாகியிருக்கவே முடியாது.
பிரளய காலத்திலும் முக்குணங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்று சொன்னால், அப்போது அந்த காலத்திலும் ஸ்ருஷ்டி தான் நடந்திருக்க வேண்டும், எப்போதுமே ஸ்ருஷ்டி தான் நடந்து கொண்டிருக்க வேண்டும், ப்ரளயம் என்ற ஒரு நிலையே ஏற்படாமல் போய்விடும்.

7-அந்யதா அநுமிபதௌ ச ஜ்ஞநா சக்தி வியோகா₃த்
அந்யதா₂ அநுமிபதௌ ச –
இதுவரை சொல்லப்பட்டதை விட வேறு விதமாக, வேறு தன்மைகளை உடையதாக நீங்கள் மூல ப்ரக்ருதியை அநுமானம் செய்தாலும் கூட
ஜ்ஞநா சக்தி வியோகா₃த் – அப்போதும் அதற்கு ’அறிவுடைமை ’ என்ற சக்தி இல்லாதபடியால் இதுவரை சொன்ன தோஷங்கள் அனைத்துமே அந்த ப்ரக்ருதிக்கும் பொருந்தும். அதாவது, அறிவற்ற ப்ரக்ருதியால் எப்போது ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இயலாது, பல விதமான பொருள்களைக் கொண்ட உலகைப் படைக்க இயலாது, ஒரு காலத்தில் மறுபடியும் ப்ரளயம் ஏற்படும் என்றும் சொல்ல இயலாது அதற்குக் காரணம் காட்ட முடியாதபடியால். இந்த தோஷங்கள் அனைத்தும் அந்த மதங்களிலும் இருக்கவே செய்யும் என்று பொருள்

முரண்பாடுகளின் மூட்டை
8-அப்யு ₄பக₃மே அபி அர்தா₂பா₄வாத்
– “ஏற்றுக் கொண்டாலும் பயனில்லாத படியால்”அநுமானத்தால் நீங்கள் சொன்னபடி ப்ரதானம் – மூல ப்ரக்ருதி என்ற ஒரு பொருளை நிரூபிக்க முடியும் என்று ஒப்புக் கொண்டாலும்கூட, அப்படி ஒரு ப்ரக்ருதியை நிரூபிப்பதால் எந்தப் ப்ரயோஜனமும் (பயனும்) இல்லாதபடியால் அதை ஏற்கத் தேவையில்லை என்று வ்யாஸர் கூறுகிறார்.
ஸாங்க்ய மதத்தின்படி மூல ப்ரக்ருதியின் பயன் என்பது “ஜீவாத்மாவை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்துவதும், அவன் மோக்ஷம் அடைவதற்கு உதவுவதும்” என்று கூறுகிறார்கள். ஆனால் இது பொருந்தாது. ஜ்ஞாநமே வடிவெடுத்தவராய், எந்த செயல்பாடுகளும் அற்றவராய், மாறுபாடுகள் இல்லாதவராய், தூய்மையாக இருக்கும் ஜீவாத்மாவுக்கு
ஸம்ஸாரத்தில் கட்டுப்படுதல் என்பதும் பொருந்தாது, அதிலிருந்து விடுபட்டு முக்தி அடைவது என்பதும் பொருந்தாது. அவர் எப்போதுமே முக்தராக (விடுபட்டவராக) தான் இருக்க வேண்டும். பிறகு ப்ரக்ருதியின் பயன் என்ன உள்ளது?
9-விப்ரதிஷேதா₄த் ச அஸமஞ்ஜஸம் – “முரண்பாடுகள் உள்ள படியாலும் பொருத்தமற்றது”
ஸாங்க்ய மதத்தில் பல இடங்களில் முரண்பட்ட கருத்துகளைக் கூறுகிறார்கள்.
1-புருஷன் எனப்படுகிற ஜீவாத்மா முக்தியடைவதற்கு மூலப் ப்ரக்ருதி கருவியாக இருக்கிறது என்று ஓரிடத்தில் சொல்கிறார்கள். ஆனால் மற்றொரிடத்தில், புருஷன் எந்த விதமான மாறுபாடுகளும் அற்றவரான படியால் அவர் எந்தச் செயல்களையும் செய்வது கிடையாது. அவருக்கு முக்தி என்பதே இயற்கையான தன்மை . மாறாக ப்ரக்ருதி தான் இந்த
ஸம்சாரத்தில் கட்டுப்படுகிறது, அதிலிருந்து விடுதலை அணடவதற்கான முயற்சிகளையும் ப்ரக்ருதி தான் செய்ய முடியும், இறுதியில் மோக்ஷமும் ப்ரக்ருதிக்குத் தான் என்றும் சொல்கிறார்கள். இவை இரண்டும் முரண்பட்டவை –
2-எப்போதும் செயல்படாத, மாறுபடாத ஜீவாத்மா ப்ரக்ருதிக்கு ஸாக்ஷியாகவும், அதைப் பார்ப்பவராகவும், அதை அனுபவிப்பவராகவும் தன்னைத்தானே ப்ரமிக்கிறார் (நினைத்துக் கொள்கிறார்) என்று சொல்லுவதும் பொருந்தாது. எந்தச் செயலையும் செய்யாதவர் ’ப்ரமம்’ என்று சொல்லப்படுகிற ஒரு வித ஜ்ஞானத்தையும் அடைய முடியாது.
3-இந்த ப்ரமம் ப்ரக்ருதிக்குத் தான் ஏற்படுகிறது என்றும் சொல்ல முடியாது, ஜ்ஞானமுடையவரான ஒருவருக்குத் தான் ப்ரமம் ஏற்பட முடியும், அறிவற்ற ப்ரக்ருதிக்கு இது பொருந்தாது.
இதைப் போல் எத்தனையோ இடங்களில் முரண்பாடுகள் இருக்கிறபடியாலும் ஸாங்க்ய மதம் பொருத்தம் அற்றது.

—-

2.2.2 மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம்-பரமாணுக்களால் உலகைப் படைக்க முடியாது

(கணாதர் – -வைசேஷிக மதம்-கௌதமர்- நியாய மதம் -இரண்டும் சேர்ந்து இப்பொழுது நியாய மதமாகிறது)

பரமாணுக்களே ஜகத் காரணம் என்னும் வாதம்
2-2-2-மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம் – ஸங்கதி –
முன் அதிகரணத்தில் அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதி என்னும் பொருள் தான் உலகத்தைப் படைக்கிறது என்று சொன்ன ஸாங்க்யர்களின் மதம்
தவறென்று நிரூபிக்கப்பட்டது. அதை அடுத்து, அநுமானத்தால் அறியப்படும் பரமாணுக்கள் தான் உலகத்துக்குக் காரணம் என்று சொல்லும் வைஸேஷிகர்களின் மதம் நிராகரிக்கப் படுகிறது.
பரமாணுக்களை அநுமானத்தால் நிரூபிக்கிறார்கள் வைஸேஷிக மதத்தைச் சேர்ந்தவர்கள் –

1-குடம், மேஜை , புத்தகம், துணி முதலான கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் அனைத்துமே பகுதிகளை உடையவையாகத் தான் உள்ளன. அதனால் “எதெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ
அதெல்லாம் பகுதிகளை உடையது” என்று வ்யாப்தியைத் தெரிந்து கொள்கிறோம்.

2-உலகத்தில் கண்ணுக்குத் தெரியும் பொருள்களுக்குள் மிக நுண்ணியது எதுவோ அதை எடுத்துக் கொள்வோம். அதுக்குத் த்ர்யணுகம் என்று பெயர். அதுவும் கண்ணுக்குத் தெரிகிறதால்
பகுதிகளால் ஆக்கப் பட்டிருக்க வேண்டும். அந்த கண்ணுக்குத் தெரியாத பகுதிகளுக்கு த்₃வ்யணுகங்கள் என்று பெயர்.

3-அந்த த்₃வ்யணுகங்களுக்கும் பகுதிகள் இருக்க வேண்டும். அவை தான் பரமாணுக்கள். அவை தான்
மிக நுண்ணியவை .பரமாணுக்கள் நித்யமானணவ -அதாவது உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை . ப்ரளயம் ஏற்பட்டால் கூட அழியாதவை . அவற்றை விட சிறிய பொருளே கிடையாது,
அவற்றுக்குப் பகுதிகளும் கிடையாது.

4–இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுகம் உண்டகும்.மூன்று த்₃வ்யணுகங்கள் சேர்ந்தால் த்ர்யணுகம் உண்டாகும். இப்படித் தான் உலகத்தில் நாம் காணும் எல்லாப் பொருள்களும் உண்டாக்கப் படுகின்றன என்பது வைஸேஷிகர்களின் மதமாகும்.-(அணு – தீர்க்கம் -க்ரஸ்வம்- மஹத் -நான்கு நிலைகள் என்பர்)

பரமாணுக்கள் சேரவே முடியாது
ஸித்தாந்தம் – இந்த மதத்தை இவ் வதிகரணத்தில் 7 ஸூத்ரங்களால் வ்யாஸர் கண்டிக்கிறார்.
1– மஹத் ₃தீ₃ர்க₄வத் வா ஹ்ரஸ்வ பரிமண்டலாப்₄யாம்
ஹ்ரஸ்வ பரிமண்டலாப்₄யாம் – ’பரி மண்டலம்’
எனப்படும் பரமாணுவிடமிருந்தும் ’ஹ்ரஸ்வம்’ எனும்
த்₃வ்யணுகத்திலிருந்தும்
மஹத்₃தீ₃ர்க₄வத் – ’மஹத்₃தீ₃ர்க₄ம்’ எனப்படும் த்ர்யணுகம் உண்டாகிறது என்பது
(அஸமஞ்ஜஸம்) – பொருந்தாது (இந்தச் சொல் முன் ஸூத்ரத்திலிருந்து இங்கு சேர்க்கப்படுகிறது-அனுஷங்கம்)
வா – (etc)இது போல் இவர்கள் சொல்லும் மற்ற பல வாதங்களும் பொருந்தாதவை-

வ்யாஸரின் கருத்து – இரண்டு பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுகம் உண்டாகிறது என்று சொல்கிறீர்கள்.-இரண்டு பொருள்கள் தொட்டுக் கொள்ள வேண்டும்-சன்யோகம்– -சேர வேண்டும் என்றால் ஒரு பொருள் தனக்கு இருக்கும் 6 பக்கங்களில் (முன், பின், இடது, வலது, மேல், கீழ்) ஏதோ ஒரு பக்கத்தால் மற்றொரு பொருளைத் தொட வேண்டும். அப்போது தான் பகுதிகளை விட பெரிய அளவுடைய ஒரு பொருள் உண்டாக முடியும்.

ஆனால் பரமாணுக்களுக்கோ பகுதிகளே கிடையாது என்று நீங்கள் சொல்வதால் அதற்கு இந்த 6 பக்கங்களும் இருக்க முடியாது. எனவே பரமாணுக்கள் சேர்ந்து த்₃வ்யணுக்கத்தை உண்டாக்குவதே
பொருந்தாத ஒன்று. பகுதிகள் இல்லாமல் சேர்ந்தால், எல்லா பரமாணுக்களும் ஒரே இடத்தில் தான் இருக்க முடியும், அப்படியானால் தன்னை விடப் பெரிதான ஒரு பொருளை உண்டாக்க முடியாது.
எனவே வைஸேஷிகர்கள் சொல்லும் இந்த வாதம் பொருந்தாது.

பரமாணுக்களில் செயலே ஏற்படாது
2- உப₄யதா₂பி ந கர்ம அத: தத₃பா₄வ:
உப₄யதா₂பி –
இரண்டு வழிகளிலும்
ந கர்ம – உலகத்தை உண்டாக்கும் பரமாணுக்களுக்கு இடையில் சேர்க்கையை உண்டாக்கும்
செயல் ஏற்பட முடியாது
அத: தத₃பா₄வ: – ஆகையால் பரமாணுக்கள் சேர்ந்து உலகத்தை உண்டாக்குவது என்பது இல்லை

எந்த இரண்டு பொருள்கள் சேர வேண்டும் என்றாலும் அவற்றில் ஒரு அசைவு – நகர்பு-செயல் உண்டாக வேண்டும். (இங்கு கர்மம் செயல்பாடு)அதைப் போல் பரமாணுக்கள் சேர வேண்டும் என்றால், அவற்றில் ஒரு செயல் உண்டாக வேண்டும். அது எந்தக் காரணத்தால் உண்டாகிறது என்பதற்கு வைஸேஷிகர்கள் கூறுவது –’அத்ருஷ்டத்தால் ஏற்படுகிறது’ என்று.(அக்னி மேல் நோக்கியே எரிகிறது -வாயு சஞ்சரிக்கும் காரணம் தெரியாது -அதே போல் முதல் செயல்பாட்டுக்கும் காரணம் தெரியாது -அத்ருஷ்டம் என்பர் ) அந்த அத்ருஷ்டம் யாரிடம் இருக்கிறது என்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம், ஆனால் இரண்டிலும் ஒவ்வாமை உள்ளது.

1-அத்ருஷ்டம் பரமாணுவிலேயே இருக்கிறது, அது செயலை உண்டாக்குகிறது – இது பொருந்தாது.
ஜீவாத்மா செய்யும் செயல்கள் அவரிடம் தான் பாபம் -புண்யம் என்ற அத்ருஷ்டத்தை உண்டாக்க முடியும். பரமாணுவில் உண்டாக்க முடியாது

2-அத்ருஷ்டம் ஜீவாத்மாவிடமே இருக்கிறது, அது பரமாணுக்களில் செயலை உண்டாக்குகிறது – இதுவும் பொருந்தாது, ஜீவாத்மாவிடம் இருக்கும் அத்ருஷ்டம் அவரிடம் தான் ஒரு விளைவை ஏற்படுத்த முடியுமே தவிற பரமாணுவில் ஏற்படுத்த முடியாது.

ஆகையால், இரண்டு வழிகளும் பரமாணுக்களைச் சேர வைக்கும் செயல் உண்டாக வாய்ப்பில்லை .
எனவே பரமாணுக்கள் ஒன்று சேர்ந்து தான் உலகத்தை உண்டாக்குகின்றன என்ற தத்துவமே பொருத்த மற்றது.

2.2.2 மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம்-வைசேஷிக மதத்தில் உள்ள தவறுகள்

ஸம்வாயம் என்றால் என்ன?
2-2-2-மஹத்₃தீ₃ர்கா₄தி₄கரணம் – முதல் இரண்டு ஸூத்ரங்களாவே பரமாணுக்கள் உலகத்தை உண்டாக்குகின்றன என்று வைஸேஷிகர்கள் கூறும் கருத்தைத் தவறென்று நிரூபித்தார் வ்யாஸர். இனி வேறு சில தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
3ஆவது மற்றும் 4ஆவது ஸூத்ரங்களால் வைஸேஷிகர்கள் ஏற்கக் கூடிய ’ஸமவாயம்’ என்ற ஒன்றைக் கண்டிக்கிறார். ஸமவாயம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

வைஸேஷிகர்கள் ஸமவாயம் என்று ஒரு ஸம்பந்தத்தை ஏற்கிறார்கள். ஸம்பந்தம் என்றால் இரண்டு
பொருட்களுக்கிடையே இருக்கும் தொடர்பு என்று பொருள். இரண்டு த்ரவ்யங்கள் ஒன்றொடு ஒன்று தொட்டுக் கொண்டிருந்தால் அந்த ஸம்பந்தத்துக்கு ஸம்யோகம் என்று பெயர். எடுத்துக் காட்டுக்கு, நாம் கை கூப்பும் பொழுது இரண்டு கைகளும் ஒன்றை ஒன்று தொடுகின்றன. அப்போது அவற்றுக்கிடையே ஸம்யோகம் என்ற தொடர்பு உள்ளது. அதற்குப் பிறகு கைகளைப் பிரித்து விடுகிறோம்.
ஒரு த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால், அதில் சில பண்புகள் (குணங்கள்), சில செயல்கள், ஜாதி முதலானவை இருப்பதைக் காண்கிவறோம். ஒரு புஷ்பத்தில் நிறம் இருக்கும், மணம் இருக்கும். ஒரு பந்து கீழே விழும் பொழுது ’விழுதல்’ என்கின்ற செயல் அந்தப் பந்திலிருக்கும். மாட்டிடம் மாட்டுத் தன்மை , மனித உடலில் மனிதத் தன்மை. குடங்களில் குடத் தன்மை என்கிற ஜாதிகள் உள்ளன. இப்படி பண்புகள், செயல்கள், ஜாதிகள் அந்தந்த பொருட்களில் இருப்பதைக் காண்கிறோம்.

அவற்றுக்கும் அந்த த்ரவ்யத்துக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதமான தொடர்பு இருக்க வேண்டும். இந்த மணம் இந்த புஷ்பத்தில் தான் உள்ளது, வேறு இடத்திலில்லை என்று தோன்றுகிறபடியால் கண்டிப்பாக அவற்றுக்கிடையே ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அந்தத் தொடர்பு ஸம்யோகம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஸம்யோகம் பிரியக் கூடிய இரண்டு த்ரவ்யங்கள் ஒன்றை ஒன்று தொடும் போது மட்டும் தான் ஏற்படும். ஒரு த்ரவ்யத்துக்கும் அதிலிருக்கும் குணம் -செயல் -ஜாதிக்கும் இடையே ஸம்யோகம் என்கிற தொடர்பு இருக்காது, அதனால் புதியதாக வேறொரு விதமான தொடர்பை வைஸேஷிகர்கள் கல்பிக்கிறார்கள். அதற்குத் தான் ஸமவாயம் என்று பெயர்.
இரண்டு பொருட்கள் பிரிக்க முடியாதபடி சேர்ந்து இருந்தால் அவற்றுக்கு இடையில் ஸமவாயம் என்கிற தொடர்பு இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு புஷ்பத்திலிருந்து அதன் மணத்தைப் பிரிக்க முடியாது. ஒரு வேஷ்டியிலிருந்து அதன் நிறத்தைப் பிரிக்க முடியாது. ஒரு குடத்திலிருந்து குடத் தன்மை என்கிற அதன் ஜாதியைப் பிரிக்க முடியாது. அப்படி பிரிக்க முடியாமல் சேர்ந்திருக்கும் பொருட்களுக்கு இடையே இருக்கும் தொடர்பு ஸமவாயம் என்று சொல்கிறார்கள்

(இப்படிப் பிரிக்க முடியாத இவற்றில் ஸம்பந்தமே ஸமவாயம் -அனுமானம் பண்ணியே அறியலாம் -பிரத்யக்ஷமாக பார்க்க முடியாத ஓன்று இது -ஆகவே ஸம்யோகம் வேறு ஸமவாயம் வேறு-)

ஸமவாயத்தை ஏற்றுக் கொள்வதில் உள்ள குறைகள்
இனி இந்த ஸமவாயம் என்பதை வ்யாஸர் கண்டிப்பதைப் பார்ப்போம்.
3-ஸமவாய அப்₄யுபக₃மாத் ச ஸாம்யாத் அநவஸ்தி₂தே :
ஸமவாய அப்₄யுபக₃மாத் ச (அஸமஞ்ஜஸம்)
– ஸமவாயத்தை ஏற்கிற படியாலும் (இந்த மதம் பொருத்த மற்றது)
ஸாம்யாத் – ஸமமான படியாலும்அநவஸ்தி₂தே : : – முடிவில்லாத படியாலும்

குணம் செயல் ஜாதி முதலானவை ஒரு பொருளில் இருப்பதாகத் தோற்றமளிப்பது ஸமவாயம் என்ற ஸம்பந்தத்தால் என்று சொன்னீர்கள். அது பொருந்தாது. அந்த ஸமவாயமும் குணம்-செயல்-ஜாதியோடு ஸமமானபடியால். அதாவது, குணம் செயல்-ஜாதிக்கு எப்படி அந்த த்ரவ்யத்தோடு ஒரு தொடர்பு தேவைப்பட்டதோ , அதே போல் ஸமவாயத்துக்கும் கூட அந்த த்ரவ்யத்வதாடு ஒரு தொடர்பு
கண்டிப்பாக தேவைப்படும். இது தான் ’ஸாம்யம்’ (ஸமத்தன்மை – ஒற்றுமை ) என்று சொல்லப்படுகிறது.
சரி, ஸமவாயத்துக்கும் அந்தத் தேவை இருந்தால் என்ன? என்று கேட்டால் – அநவஸ்தி₂தே : என்று பதில். மணத்துக்கும் புஷ்பத்துக்கும் இடையில் ஸமவாயம் என்கிற தொடர்பு உள்ளது; அந்த ஸமவாயத்துக்கும் அந்தப் புஷ்பத்துக்கும் இடையில் வேறொரு இரண்டாவது ஸமவாயத்தை (தொடர்பை ) ஏற்க வேண்டும். அந்த இரண்டாவது ஸமவாயத்துக்கும் அந்த புஷ்பத்துக்கும்
இடையில் மூன்றாவதாக ஒரு ஸம்வாயத்தை ஏற்க வேண்டும், இப்படி முடிவில்லாமல் கல்பித்துக் கொண்டே போக வேண்டும். இந்த தோஷத்துக்கு அநவஸ்தா₂ என்று பெயர். ஆகையால் ஸமவாயம் என்பதை ஏற்க இயலாது என்கிறார் வ்யாஸர்.

சரி, மணம் புஷ்பத்தோடு ஒரு தொடர்பை எதிர்பார்ப்பது போல் ஸமவாயம் அப் புஷ்பத்தோடு எந்தத் தொடர்பையும் எதிர்பார்க்காது, தானாகவே இயற்கையாக அதிலிருக்கும் என்று கொள்ளலாமே ? என்று பூர்வ பக்ஷி கேட்கலாம். அதற்கு வ்யாஸர் கூறுகிறார் – இப்படிச் சொல்வதற்கு பதிலாக ’மணம் முதலானவையே இயற்கையாக புஷ்பத்தில் உள்ளன’ என்று முதலிலேயே ஏற்றிருந்தால் ஸம்வாயம்
என்கிற ஒரு புது பொருளை ஏற்றிருக்கவே வேண்டாமே (
அப்ருதக் ஸித்தம் என்றும் நம் ஸம்ப்ரதாயப்படியே சொல்லலாம் அன்றோ). அதனால் எவ் விதத்திலும் ஸமவாயத்தை ஏற்பது பொருத்தமற்றது.

4- நித்யமேவ ச பா₄வாத் – “(இவ் வுலகம்) நிரந்தரமாகவே இருக்க வேண்டிய படியாலும்”
வைஸேஷிகர்கள் ஸமவாயம் என்ற தொடர்பு நித்யமானது,உண்டாவதுமில்லை அழிவதுமில்லை என்கிறார்கள்.-புஷ்பத்துக்கும் மணத்துக்கும் இடையே உள்ள ஸமவாயம் நிரந்தரமானது என்றால், புஷ்பமும் மணமும் கண்டிப்பாக நிரந்தரமாக இருக்க வேண்டும். இதே போல் உலகில் அனைத்துப் பொருட்களும் நித்யமானவை என்று ஆகி விடும்.
அப்படியானால் இந்த உலகமும் அதிலிருக்கும் பொருள்கள் அனைத்தும் நித்யமானவையாக (நிரந்தரமானவையாக) இருக்க வேண்டும். ஆனால் உலகத்தில் அனைத்தும் அழிவதைக் காண்கிறோம். ஆகவே ஸமவாயம் ஏற்கப்பட முடியாது.

வேறு சில தவறுகள்
அடுத்த இரண்டு ஸூத்ரங்களால் வேறொரு கருத்தைக் கண்டிக்கிறார்.
வைஸேஷிகர்கள் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு விதமான பரமாணுக்கள் உள்ளன, அவற்றில் நிறம், சுவை , மணம், ஸ்பர்ஸம் என்ற குணங்கள் உள்ளன என்கிறார்கள். அதைக் கண்டிக்கிறார் வ்யாஸர் –
5–ரூபாதி ₃மத்த்வாத் ச விபர்ய்ய: த₃ர்ஸநாத்
ரூபாதி₃மத்த்வாத் ச –
(பரமாணுக்கள்) நிறம் முதலான பண்புகளை உடையபடியால்
விபர்ய்ய: – நீங்கள் சொல்வதற்கு நேர் மாறாகத் தான் பரமாணுக்கள் இருக்க வேண்டும்
த₃ர்ஸநாத் – அப்படியே உலகத்தில் காண்கிற படியால்
நீங்கள் பரமாணுக்கள் நித்யமானவை , மிக நுண்ணியவை , பகுதிகள் அற்றவை என்று சொல்கிறீர்கள். உலகத்தில் எந்த ஒரு பொருள் நிறம், சுவை முதலான குணங்கவளாடு இருந்தாலும், அது-அநித்யத்வம் -ஸ்தூலத்வம் -ச அவயவத்வம்- அழியக் கூடியதாக, பெரியதாக, பகுதிகளை உடையதாகத் தான் காணப்படுகிறது. எனவே , பரமாணுக்களை அநுமானம் செய்யும் போது, அவற்றுக்கும் நிறம் முதலானவை உண்டு என்றால், அவையும் அழியக் கூடியவை , பெரிதானவை , பகுதிகளோடு கூடியவை என்று தான் ஆகும். இது நீங்கள் சொல்வதற்கு நேர் முரணானது. எனவே நீங்கள் சொல்வது பொருந்தாது.

6–உப ₄யதா₂ ச தோ₃ஷாத் – “இரண்டு விதத்திலும் தோஷம் உள்ளபடியால்”
முன் ஸூத்ரத்தில் சொன்ன தோஷத்திலிருந்து தப்பிக்க பரமாணுக்களில் நிறம், சுவை முதலானவை இல்லை என்று சொன்னால், அப்போது பரமாணுக்களிலிருந்து உண்டான புஷ்பம், வேஷ்டி முதலான பொருட்களில் நிறம், சுவை முதலானவை இருக்கவே முடியாது. நூலில் இருக்கும் தன்மை தான் வேஷ்டியில் வர முடியும். அதனால் தோஷம்.

இதிலிருந்து தப்பிக்க நிறம் முதலானவற்றை ஒப்புக் கொண்டால், முன் ஸூத்ரத்தில் உள்ள தாேஷம் வந்து சேரும். எனவே , இரண்டு பக்கமும் தாேஷம் உள்ளபடியால், பரமாணு என்பதே ஏற்கப்பட முடியாதது.

7–அபரிக்₃ரஹாத் ச அத்யந்தம் அநபேக்ஷா
அபரிக்₃ரஹாத் ச
– பெரியோர்கள் யாரும் வைஸேஷிக மதத்தை சிறிதளவும் எடுத்துக் கையாளாதபடியால்
அத்யந்தம் முழுவதுமாக
அநபேக்ஷா முக்தி விரும்புபவர்களால் இந்த மதம் புறக்கணிக்கப் பட வேண்டும்

(சாங்க்ய யோக மதங்களில் சிலவற்றை சித்தாந்தித்தில் கொள்கிறோம் -அப்படி வைசேஷிக மதத்தில் ஒன்றுமே கொள்ள வில்லையே —முமுஷுக்கள் புறக்கணிக்க வேண்டும் -என்றபடி -)

இவ்வாறு வைஸேஷிக மதம் தவறென்று இந்த அதிகரணத்தில் நிரூபிக்கப் பட்டது.


2.2.3 ஸமுதா₃யாதி₄கரணம்-பௌத்₃த₄ மதத்தின் உட்பிரிவுகள்2-2-3-ஸமுதா₃யாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் பரமாணுவே ஜகத்காரணம் என்று சொல்லக் கூடிய வைஸேஷிகர்களின் மதம் கண்டிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இந்த அதிகரணம் தொடங்கி பௌத்தர்களின் மதம் கண்டிக்கப் படுகிறது. இவர்களும் பரமாணுக்களே ஜகத்துக்கு காரணம் என்று சொல்கின்றபடியால் வைஸேஷிகர்களுக்கு அடுத்து இவர்களை வேத வியாஸர் கண்டிக்கிறார்.

பௌத்த மதம் நான்கு உட்பிரிவுகளை உடையது – வைபாஷிகர்கள், ஸௌத்ராந்திகர்கள், யோகாசாரர்கள், மாத்யமிகர்கள் என்று அந்த நான்கு வகைகளுக்கும் பெயர்.
வைபாஷிகர்கள் மதம் –
(1) ஆத்மா உண்மையானவர், ஜ்ஞானமே வடிவமானவர். ஆத்மா ஜ்ஞானம் உடையவர் அதாவது அறிவாளி அல்ல;அறிவே தான் ஆத்மா.
(2) உலகத்தில் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கு விதமான பூதங்கள் தான் உள்ளன. ஆகாஸம் என்று தனியாக ஒரு பொருள் கிடையாது. நிலம் முதலானவை இல்லாமை தான் ஆகாஸம் என்று
சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பூதங்களின் பரமாணுக்களின் சேர்ந்து குடம், மேஜை , புஷ்பம் முதலான உலகப் பொருட்கள் உண்டாக்கப் படுகின்றன.
(3) அந்தப் பொருட்களும் உண்மை யானவை . ஆத்மா உலகப் பொருட்களைப் புலன்களின் மூலம் அதாவது ப்ரத்யக்ஷத்தாலே அறிகிறது.

(காற்றில் ஸ்பர்சம் மட்டுமே -நெருப்பு -கண்ணாலும் பார்க்கலாம் -தண்ணீருக்கு ஸ்பர்சம் கண்டு ருசி மூன்று குணங்கள் உண்டு – -பிருத்விக்கு-மணத்துடன் சேர்த்து நான்கு குணங்கள் -என்பர் -)

ஸௌத்ராந்திகர்கள் மதம் –
வைபாஷிகர்கள் சொல்லும் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும், ஆனால் உலகப் பொருள்களை புலன்களால் அறிய முடியாது, அனுமானத்தால் தான் அறியலாம் என்கிறார்கள்.

யோகாசாரர்கள் மதம் –
இவர்கள் ஆத்மாவை மட்டும் தான் உண்மை என்று ஏற்கிறார்கள். உலகப் பொருள்கள் அனைத்துமே பொய்யானவை , கனவில் நாம் காணும் பொருள்கள் போல் என்கிறார்கள்.

மாத்யமிகர்கள் மதம் –
இவர்கள் ஆத்மா உள்பட உலகில் அனைத்துமே பொய்யானது என்கிறார்கள்.(ஸர்வம் சூன்யம்-ஆகாசத் தாமரை -முயல் கொம்பு – மத்யமம் -நடுத்தரம் -என்றவாறு -)

நால்வருக்கும் பொதுவான கருத்துகள் –
(1) பொருள்கள் எல்லாமே க்ஷணிகங்கள், அதாவது ஒரு க்ஷணம் மட்டுமே இருக்கக் கூடியவை . ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு பொருளும் அழிகிறது, அதே போல் மற்றொரு பொருள்
உண்டாகிறது என்கிறார்கள்.(திரி எரிந்து முன் ஜ்வாலை அழிந்து புதியதாக ஜ்வாலை பிறந்து நித்தியமான ஜ்வாலை போல் தோற்றுவது போல்)
(2) அறிவே தான் ஆத்மா. ஆனால் அது தன்னைத் தவறாக ’அறிவுடையவன்’ – ’அறிவாளி’ என்று நினைத்துக் கொள்கிறது

இதில்,உலகப் பொருள்களை ஏற்கும் ஸௌத்ராந்திகர்களையும் வைஸேஷிகர்களையும் இவ்வதிகரணத்தில் கண்டிக்கிறார்-மேல் இரண்டு அதிகரணங்களாலும் மற்ற புத்த மதங்களையும் நிரஸிக்கிறார்-

ஸமுதாயங்கள் உண்டாகவே முடியாது
1–ஸமுதா₃யே உப₄ய ஹேதுகே அபி தத₃ப்ராப்தி:
உப₄ய ஹேதுகே
– இரண்டு காரணங்களிலிருந்து உண்டாகும் ஸமுதா₃யே அபி – ஸமுதாயங்களிலும்
தத₃ப்ராப்தி: – அதுவே ஏற்படாது, அதாவது அந்த ஸமுதாயங்களே ஏற்பட முடியாது

உலகில் இரண்டு விதமான ஸமுதாயங்கள் (கூட்டங்கள் – திரள்கள்) உண்டாகின்றன.
(1) பரமாணுக்கள் ஒன்று கூடி நிலம் நீர் முதலான பூதங்கள் உண்டாகின்றன
(2) பூதங்கள் ஒன்று கூடி குடம், வேஷ்டி முதலான பௌதிகங்கள் (உலகப் பொருள்கள்) உண்டாகின்றன.
இந்த இரண்டு விதமான ஸமுதாயங்களும் உண்டாகவே முடியாது என்கிறார் வ்யாஸர்.
பரமாணுக்கள் சேர்ந்து ஸமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் அதற்குச் சில நிலைகள் உள்ளன –
(1) பரமாணுக்கள் சேர்வதற்காக நகர்ந்து வர வேண்டும்
(2) பரமாணுக்கள் தொடர்படைந்து சேர வேண்டும்
(3) உண்டாக்கப்பட்ட ஸமுதாயம் அறியப் பட வேண்டும்
(4) அப் பொருள் பயன்படுத்தப் பட வேண்டும்

பரமாணுக்களே க்ஷணிகங்கள் என்று சொல்வதால், நகர்ந்து வரும் பரமாணுக்கள் சேர்வதற்குள் அவையே அழிந்து விடுகின்றன, பிறகு எப்படி ஸமுதாயம் உண்டாக முடியும்? ஸமுதாயம் உண்டாக்கப் பட்டாலும் அது அறியப் படுவதற்குள் அழிந்து விடும், அறியப் பட்டாலும் பயன் படுத்துவதற்குள் அழிந்து விடும். ஆகவே பரமாணுக்குள் சேர்ந்து தான் உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் உண்டாகுகின்றன, அவையே அறியப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது.
மேலும், ஆத்மா ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால்
(1) அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட வேண்டும்
(2) ஆத்மா அப் பொருளை அறிய வேண்டும்
(3) ஆத்மா அப் பொருளைப் பயன்படுத்த வேண்டும்.

அதுவரை அந்தப் பொருளே இருக்காது, ஒரு க்ஷணத்தில் அழிந்து விடும் என்றால், ஆத்மா எந்தப் பொருளையும் அறியவே இயலாது.

அறிவால் பொருளா? பொருளால் அறிவா?
2–இதரேதர ப்ரத்யயத்வாத் உபபந்நம் இதி சேத் ந ஸங்கா₄த பா₄வ அநிமித்தத்வாத்
இதரேதர ப்ரத்யயத்வாத்
ஒன்றுக்கொன்று காரணமான படியால்
உபபந்நம் ஸமுதாயமுண்டாவது பொருந்தும்
இதி சேத் ந – என்று நீங்கள் கூறினால் அது தவறு
ஸங்கா₄தபா₄வ அநிமித்தத்வாத் –ஸமுதாயம் உண்டாவதற்கு அது காரணமல்லாதபடியால்

பவ்த்தர்களின் கேள்வி – அவித்₃யை எனப்படும் விபரீத ஜ்ஞாநம் (தவறான புரிதல்), அதிலிருந்து -ஸம்ஸ்காரம்-விருப்பு வெறுப்புகள், அதிலிருந்து -விஞ்ஞானம் சித்த உணர்வு-ஆத்மாவின் செயல்பாடு, அத்தால் வெவ்வேறு விதமான எண்ணங்கள், அதிலிருந்து நிலம் நீர் தீ முதலானவை , அதிலிருந்து புலன்கள், அதிலிருந்து உடல், அதிலிருந்து பிறவி,அதிலிருந்து இன்ப துன்பங்கள், அதிலிருந்து மீண்டும் அவித்யை என்பது தான் ஸம்ஸாரத்தில் வழக்கம்.-(ப்ரத்யயத்வாத்-ஹேதுத்வாத் என்றபடி)
எனவே அவித்யையால் ஜந்மம், ஜந்மத்தால் அவித்யை என்று இவை இரண்டும் ஒன்றுக்கொன்று காரணமாக உள்ளன. பரமாணுக்கள் சேர்ந்து ஸமுதாயங்கள் உண்டாகா விட்டால் இந்த சங்கிலித் தொடரே பொருந்தாமல் போகும். எனவே கண்டிப்பாக ஸமுதாயம் உண்டாக முடியும் என்று ஏற்க வேண்டும்.

வ்யாஸரின் பதில் – ஜ்ஞாநத்தால் உலகப் பொருள்கள் உண்டாகின்றன என்று சொன்னது சற்றும் பொருந்தாது. -அப்படி உண்டாகுமானால், ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறியும் பொழுது அங்கு பாம்பு உண்டாக வேண்டும்! அப்படி உலகத்தில் கண்டதில்லை – எனவே ஜ்ஞாநத்திலிருந்து நிலம் நீ முதலானவை ஏற்படுகின்றன என்று நீங்கள் சொல்வது பொருந்தாது. எனவே ஸமுதாயங்கள் உண்டாகவே இயலாது.
மேலும், ஆத்மாவே ஸ்திரமானவர் அல்ல என்பதால், அவருக்கு எப்படி அவித்யையால் விருப்பு வெறுப்புகள் உண்டாக முடியும்? அதற்குள் அவரே அழிந்து விடுவார்.
மேலும் 8 ஸூத்ரங்களால் வ்யாஸர் பௌத்த மதத்தில் பல தாேஷங்களைக் கூறுகிறார்.

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந- பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –சார்வாக சைலாச நி –சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்- பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –ஜைநே பகண்டீரவ – ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்- மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி – ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர் சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்குகின்றார் –ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார் பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

க்ஷணிகத்வம் பொருந்தாது
2-2-3-ஸமுதாயாதிகரணத்தின் முதல் இரண்டு ஸூத்ரங்களால் பரமாணுக்கள் க்ஷணிகமானணவ என்று பௌத்தர்கள் சொல்வதால் அவர்கள் மதத்தில் ஸமுதாயங்களே உண்டாக முடியாது, எனவே உலகமே உண்டாக முடியாது எனப்பட்டது. இனி மேலுள்ள ஸூத்ரங்களால் மேலும் பற தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

3-உத்தரரோத் பாதே ₃ ச பூர்வ நிரோதா₄த் – “அடுத்தது உண்டாகும் போது முந்தையது அழிவதால்”
பௌத்த மதத்தில் குடம் முதலான எல்லாப் பொருட்களுமே ஒவ்வொரு வினாடியும் அழிகின்றன, அடுத்த வினாடியில் அதைப் போலவே வேறொரு குடம் உண்டாகிறது என்று கூறுகிறார்கள். இதைக் கண்டிக்கிறார் வ்யாஸர்.

உலகத்தில் எந்த ஒரு பொருள் உண்டாகும் போதும், அது உண்டாகும் வினாடியில் அதன் காரணங்கள் இருக்க வேண்டும்.-ஆனால் நீங்கள் சொல்லும்படி முதல் வினாடியில் இருந்த குடம் இரண்டாவது வினாடியில் உள்ள குடம் உண்டாகும் போது அழிந்து விடுகிற படியால் அந்த இரண்டாவது குடத்துக்கு முதல் குடம் காரணமாக இருக்க முடியாது. முன் வினாடியில் காரணம் இருந்தாலே போதும் என்று நீங்கள் வாதிட்டாலும், முதல் வினாடியில் உள்ள குடம் அடுத்த வினாடியில் உலகிலிருக்கும் எல்லாக் குடங்களுக்கும் காரணமாகலாமே என்கிற கேள்வி எழும். அதைப் போக்க
ஓர் இடத்தில் முதல் வினாடியில் இருந்த குடம் அதே இடத்தில் அடுத்த வினாடியில் உண்டாகும் குடத்துக்குத் தான் காரணம்” என்று நீங்கள் சொன்னால், அப்போது ஒரு கேள்வி – “இடம்” அதாவது “தேசம்” என்பது ஸ்திரமானது என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? அதுவும் க்ஷணிகம் தான் என்றால் “அதே இடத்தில்” என்று நீங்கள் சொன்னதே பொருந்தாது, குடம் ஒவ்வொரு வினாடியும் மாறுவது போல் இடமும் ஒவ்வொரு வினாடியும் மாறுகிற படியால்.

(குடத்தில் இருந்து அனைத்தும் பொருள்களும் உண்டாகலாமே என்னில் அதே ஜாதீயமாக இருக்க வேணும் என்பர்- பின்பு ஸ்தானம் மாறுபட்டு அங்குள்ள குடம் அழிந்த பின்பும் எங்கும் உள்ள குடங்களுக்குக் காரணமாகலாமே என்னில் -அந்த ஸ்தானம் இடமும் மாறாமல் இருக்க வேண்டுமே -ஆகவே ஒவ்வாதே -)

4-அஸதி ப்ரதிஜ்ஜோபரோத₄: யௌக₃பத்₃யம் அந்யதா₂
அஸதி –
முதல் குடம் இல்லாமலேயே இரண்டாவது குடம் உண்டாகலாம் என்றால்
ப்ரதிஜ்ஜோபரோத₄: – முதல் குடம் இரண்டாவது குடத்துக்குக் காரணம் என்று நீங்கள் சொல்வது பொருந்தாது
அந்யதா ₂ – இரண்டாவது குடம் உண்டாகும் வினாடியில் முதல் குடமும் அழியாமல் உள்ளது என்று சொன்னால்
யௌக₃ பத்₃யம் – அந்த இரண்டாவது வினாடியில் இரண்டு குடங்கள் கண்ணுக்குத் தெரிய வேண்டும், எல்லாப் பொருள்களும் க்ஷணிகம் என்று நீங்கள் சொன்னதும் தவறாக ஆகி விடும்.
ஆகவே , நீங்கள் சொன்ன க்ஷணிகத்வம் எந்த விதத்திலும் பொருத்தமற்றது

(ஒரு பொருள் உண்டாகும் நான்கு காரணங்கள்- 1-அதிபதி புலன்கள் 2-சஹஹாரி வெளிச்சம்–3- ஆலம்பனம் -4-சமநாந்தர ஞானம் முன் ஞானம் அடுத்த ஞானத்துக்கு காரணம் -என்பர் புத்த மதஸ்தர் -அனைத்துமே ஒவ்வாது)

நீங்கள் சொல்லும் அழிவு பொருந்தாது
5–ப்ரதிஸங்க்₂யா -அப்ரதிஸங்க்₂யா-நிரோத₄-அப்ராப்தி: அவிச்சே₂தா₃த்
ப்ரதிஸங்க்₂யா -அப்ரதிஸங்க்₂யா -நிரோத₄ –
ப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் அப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் என்னும் இரண்டுமே
அப்ராப்தி: – ஏற்பட முடியாது
அவிச்சே₂தா₃த் – ஒரு பொருளே இடைவிடாமல் தொடர்கிறபடியால்

நிரோத₄ம் என்றால் அழிவு. பௌத்த மதத்தில் இரண்டு விதமான அழிவுகள் சொல்லப்படுகின்றன –
1-ப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் – இதை ’அறியப்படும் அழிவு’ என்று கொள்ளலாம். ஒரு குடத்தைக் கட்டையால் அடித்து உடைத்தால் அது அழிந்து போகிறது, அடுத்த வினாடியிலிருந்து குடம் இருக்காது, அதன் துகள்கள் தான் இருக்கும்.-இவ் விடத்தில் குடத்தின் அழிவு தெளிவாகக் காணப்படுகிறது.
2-அப்ரதிஸங்க்₂யா நிரோத₄ம் – இதை ’அறியப்படாத அழிவு’ என்று கொள்ளலாம். எல்லாப் பொருள்களும் க்ஷணிகமான படியால் ஒவ்வொரு வினாடியுமே நம் கண்முன் இருக்கும் குடம் முதலானவை அழிந்து, அதே போல் வேறொரு குடம் தான் உண்டாகிறது. இந்த அழிவு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை .

இந்த இரண்டு விதமான அழிவுமே பொருந்தாது. ஆரம்பணாதிகரணத்திலேயே ’ஒரே பொருள் தான் வேவ்வேறு நிலைகளை அடைகிறதே தவிற, எந்தப் பொருளும் புதிதாக உண்டாக்கப் படுவதுமில்லை அழிக்கப் படுவதுமில்லை என்று நிரூபித்து விட்டோம். ஆகவே , ஒரு பொருள் அழிந்து விட்டது, வேறொரு பொருள் (மற்றொரு குடமோ , குடத்தின் துகள்களோ ) தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது பொருத்தமற்றது.

6- உ ப₄யதா ₂ ச தோ₃ஷாத் – “இரண்டு காரணங்களாலும் தோஷம் உள்ள படியால்”
துச்சம் என்றால் ’இல்லாத பொருள்’ என்று பொருள். பௌத்த மதத்தில் ’துச்சத்திலிருந்து (இல்லாததிலிருந்து) குடம் உண்டாகிறது’ என்றும், ’குடம் அழிந்து துச்சமாக (இல்லாததாக) ஆகிறது’ என்றும் கூறுகிறார்கள்.
உலகில் மண்ணிலிருந்து உண்டான பொருள் மண்ணாகவே இருப்பதைக் காண்கிறோம். எந்தப் பொருள் அழிந்தால் மண்ணாக ஆகுமோ அப் பொருளும் மண்ணாகவே இருப்பதைக் காண்கிறோம்.
அந்த முறைப்படி பார்த்தால் துச்சத்திலிருந்து உண்டாகி, அழிந்து துச்சமாகப் போகும் உலகப் பொருள்கள் எல்லாமே இடைப்பட்ட காலத்திலும் துச்சமாகத் தான் இருக்க வேண்டும், உண்மைப் பொருளாக இருக்க இயலாது.

மேலும் சில தவறுகள்
7-ஆகாசே ச அவிஸேஷாத் –“
ஆகாசத்திலும்கூட; வேறுபாடு இல்லாத படியால்”
பௌத்தர்கள் நிலம், நீர், தீ, காற்று என்ற ஆகாஸம் தவிர்ந்த 4 பூதங்களைத் தான் ஏற்கிறார்கள், அதைக் கண்டிக்கிறார் –“ஆகாஸத்திலும் துச்சத்வம் (இல்லாமை ) சொல்வது பொருந்தாது, மற்றவற்றைப் போலவே உள்ளபடியால்” என்று.

நிலம் முதலானவற்றை ஏற்கக் காரணம் என்ன?(அபாத ப்ரதீதாத் )
(1) அவை தோற்றமளிக்கின்றன-2-அவை பொய்யானவை என்று எந்தப் ப்ரமாணமும் சொல்லவில்லை . அதே அளவுகோலின்படி பார்த்தால் ஆகாஸமும் தோற்றமளிக்கிறது – ’இங்கு கழுகு பறக்கிறது’ என்று கண்ணால் காணும் போது ’இங்கு’ என்று ஆகாஸத்தையே நாம் பார்க்கிற படியால். ஆகாஸம் பொய்யானது என்று காட்டும் எந்தப் ப்ரமாணமும் இல்லை . எனவே மற்ற பூதங்களோடு எந்த வேறுபாடும் ஆகாஸத்துக்கு இல்லாதபடியால் அதையும் ஏற்க வேண்டும்.-பஞ்சீகரணம் என்ற செயலால் பகவான் ஐந்து பூதங்களையும் ஒன்றோடொன்று கலந்து விடுகிற படியால் ஆகாஸத்திலும் நிறம் உள்ளது, எனவே நாம் அதைக் கண்ணால் காண முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

8-அநு ஸ்ம்ருதே : ச – “முன்னால் பார்த்த விஷயத்தைப் பற்றின ஜ்ஞாநத்தாலும்”
இந்த ஸூத்ரத்தால் பௌத்தர்கள் கூறும் க்ஷணிகத்வம் என்பது தவறு, உலகப் பொருட்கள் ஸ்திரமானவையே என்கிறார்.

“இது குடம்” என்ற அறிவு ப்ரத்யக்ஷம், கண்ணால் ஏற்படுகிறது. “நேற்று குடம் வாங்கினேன்” என்கிற அறிவு ஸ்மரணம் அதாவது நினைவு மட்டுமே . “நேற்று நான் வாங்கின குடம் தான் இது” என்று ஒரு சிறப்பான ஜ்ஞாநம் உண்டாகிறது.
இதில் முன் நாம் அறிந்த ஒரு பொருளையே மறுபடியும் அறிகிறோம். இதற்கு ப்ரத்யபி₄ஜ்ஞா என்று பெயர். இப்படிப்பட்ட ப்ரத்யபி₄ஜ்ஞா என்கிற ஜ்ஞாநம் தான் நமக்கு உணர்த்துகிறது – நேற்று வாங்கப்பட்ட குடமும் இன்று காணப்படுகிற குடமும் ஒன்று தான் என்று. எனவே , அந்தக் குடம் நேற்றும் இன்றும் உள்ளபடியால் அது ஸ்திரமானது தான், ஒவ்வொரு வினாடியும் அழியக் கூடியதல்ல என்று நாம் அறிகிறோம்.
அதே போல் “நேற்று வாங்கின நான் இன்று பயன்படுத்துகிறேன்” என்று சொல்லும் போது நான் என்கிற ஆத்மாவும் நேற்றும் இன்றும் ஒருவரே என்று தெரிகிறது. அதனால் ஆத்மாக்களும் ஸ்திரமானவர்கள் தான், க்ஷணிகர்கள் அல்ல.

(வியவாசயம் -இது குடம் என்று அறிவது -ப்ரத்யக்ஷம் -மற்ற ஓன்று –ஸ்மரணம் -நினைவு -மூன்றாவது –ப்ரத்யபிஞ்ஞா -இரண்டுக்கும் தொடர்பு படுத்தி -அன்று பார்த்த இவரே –அநு ஸ்ம்ருதி இதுவே)

மேலும் சில தவறுகள்
9-ந அஸத: அத்₃ருஷ்டத்வாத்
– “இல்லாத பொருளினுடையது அல்ல, காணப் படாத படியால்”
முன் ஸூத்ரங்களில் – பொருள்கள் க்ஷணிகங்கள் என்று கொண்டால், அவற்றை அறிவதே என்பதே பொருந்தாது. மேலும், ஒரு ஜ்ஞாநம் ஏற்பட வேண்டுமானால், புலன்களுக்கும் அந்தப் பொருளுக்கும் தொடர்பு ஏற்பட்டு, பிறகு அடுத்த வினாடியில் தான் அறிவு உண்டாகும். அதற்குள் முதல் வினாடியில் இருந்த பொருள் அழிந்து விட்டது. எனவே “புலன்களால் ஏற்படும் ஜ்ஞாநம் கூட அந்த வினாடியில் இல்லாத பொருளைப் பற்றியது” என்று ஆகி விடும். இது பொருந்தாது என்று கூறி யிருந்தார்.

ஸௌத்ராந்திகர்கள் கூறுகிறார்கள் – குடம் என்ற பொருள் தன் வடிவத்தை ஜ்ஞாநத்திடம் ஸமர்ப்பித்து விட்டுத் தான் அழிந்து விட்டது என்று. இது தவறு. ஒரு பொருளின் தன்மை அதனிடம் தான் இருக்க முடியுமே தவிற, அதன் அழிவுக்குப் பின் வேறொரு பொருளிடம் பெயர்ந்து செல்வதென்பது பொருந்தாது. அப்படி உலகத்தில் காணப்பட்டதே இல்லை . எனவே உங்கள் மதத்தில் நமக்கு தினசரி ஏற்படும் அறிவுகளே பொருந்தாமல் போய் விடும்.

10-உதா₃ஸீநாநா ம் அபி ச ஏவம் ஸித்₃தி₄: –-“முயலாதவர்களுக்கும் கூட இப்படி பயன் கிட்டும்”
எல்லாமே க்ஷணிகம், காரணமே இல்லாமல் ஒவ்வொரு வினாடியும் அழிகிறது, துச்சத்திலிருந்து உண்டாகிறது என்று கொண்டால் உலகில் எந்த முயற்சியும் எடுக்காதவர்களுக்குக் கூட முயற்சியின் பயன்கள் கிடைத்து விடும் என்ற அநீதி ஏற்படும்.(வைபாஷிகனுக்கும் ஸுந்த்ராதிகனுக்கும் பொதுவான தோஷம் இந்த ஸூத்ரத்தில் கூறப்படுகிறது)

பொதுவாக ஸ்வர்கம் -மோக்ஷம் வேண்டும் என்று ஆசைப்படுபவன் யாகம் -த்யானம் என்ற வழிகளைப் பின்பற்றினால் அதனால் பிற் காலத்தில் அப் பயனை அடையலாம். ஆனால் உங்கள் மதத்தில் எல்லாம் க்ஷணிகம், எந்தச் செயல் செய்தாலும் அது எவ் விதத்திலும் அடுத்த வினாடியில் கூட இருக்காது. பிறகு யாகம் -த்யானம் என்ற உபாயத்தைச் செய்தவர் அடுத்த வினாடியே அழிந்து விட்டார், பல ஆண்டுகள் கழித்து பயனை அடைபவர் வேறு ஒரு ஜீவன் ஆவார்.-எனவே , எந்த முயற்சியும் செய்யத் தேவை இல்லாமலேயே இவ் வுலக இன்பங்கள் மற்றும் மோக்ஷம் கிடைக்கும் என்றாகி விடும்.

இப்படி பல விதமான குற்றங்கள் உள்ள படியால், பௌத்த மதத்தின் உட் பிரிவுகளுக்குள் உலகம் உண்மையானது என்று ஏற்கும் ஸௌத்ராந்திகர்கள் மற்றும் வைஸேஷிகர்களில் மதங்கள் தவறானவை என்பது இவ் வதிகரணத்தின் கருத்து –

2-2-4-உபலப்₃த்₄யதி₄கரணம்-யோகாசார்களைக் கண்டித்தல்

யோகாசார மதத்தின் சுருக்கம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில், பௌத்தர்களுக்குள் உலகம் உண்மையானது என்று ஏற்கக்கூடிய சவ்த்ராந்திகர்களையும் வைபாஷிகர்களையும் கண்டனம் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த அதிகரணத்தில் அடுத்த பிரிவான யோகாசாரர்கணைக் கண்டிக்கிறார். இவர்களின் மதம் என்ன என்று பார்ப்போம்.

பொதுவாக உலகில் பலவிதமான ஜ்ஞாநங்கள், (அறிவுகள்) உண்டாவதை நாம் அனுபவிக்கிறோம். “இது குடம்”,“இது மேஜை ”, “இது புத்தகம்”, “இது புஷ்பம்” என்று வெவ்வேறு விதமான அறிவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன. இந்த அறிவுகள் இருக்கும் வேறுபாடு தான் வைசித்ர்யம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று ஆராயும் போது – உலகத்தில் பலவிதமான பொருட்கள் இருக்கின்றன.-அவற்றை இந்த ஒவ்வொரு அறிவும் காட்டிக் கொடுக்கிறது. அதனால் அறிவிலிருக்கும் வேறுபாட்டிற்குக் காரணம் அறியப்படும் பொருட்களில் இருக்கும் வேறுபாடு தான் என்று பொதுவாக நாம் கூறுகிறோம்.

ஆனால் யோகாசாரர்கள் இதை ஏற்க வில்லை – ஞான வைச்சித்தரியமே ந அர்த்த வைசித்ரியம்அறிவு மட்டுமே உண்மை, அதைத் தவிர உலகத்தில் எந்தப் பொருளுமே கிடையாது என்று சொல்கிறார்கள். அப்போது நாம் பார்க்கக் கூடிய பண்புகள், நிறம், மணம், சுவை , அளவு, வடிவம் இவை யெல்லாம் எங்கு இருக்கின்றன? என்று கேட்டால், இந்த ஆகாரங்கள் (பண்புகள்) ஜ்ஞாநத்திலேயே இருக்கின்றன என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் யுக்தி – உலகத்திலிருக்கும் பொருள்களிலும் நிறம், சுவை , மணம் முதலான பண்புகள் இருக்கின்றன. அதை அறிவு நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அந்த அறிவிலும் கருப்பு, வெள்ளை , மணம், சுவை முதலான பண்புகள் தோன்றுகின்றன. எனவே பொருள்களிலும் பண்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஜ்ஞாநத்திலும் பண்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. அறிவு, அறியப்படும் பொருள் என்று இரண்டு இருந்து இரண்டிலும் இந்த பண்புகள் இருந்தால் இரண்டு முறை பண்புகள் தோற்றமளிக்க வேண்டும். ஆனால் ஒரு முறை தான் தோற்றுகின்றன. அதனால் உலகப் பொருட்களே கிடையாது, அதில் ஆகாரங்களும் கிடையாது,-ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அந்த ஜ்ஞாநத்துக்கே ஆகாரங்கள் இருக்கின்றன. அந்த ஆகாரங்கள் மாறும் பொழுது தான் வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்-

அறியப்படும் பொருள் கிடையாது என்பது போலவே அறிபவர் -அறிவாளி -ஜ்ஞாதா என்று ஒருவரும் கிடையாது என்று தெரிவிக்கிறார்கள். ஆத்மா என்பது ஜ்ஞாநமே தான். ஜ்ஞாநம் உடையவர் அல்லர்
ஆனால் நமக்கு உலகத்தில் எப்படி தோன்றுகிறது? “நான் குடத்தை அறிகிறேன்”, “நான் புஷ்பத்தைக்
காண்கிறேன்” என்று அறிவு ஏற்படும் பொழுது நான் என்பவன் அறிவை உடையவன் என்று தோன்றுகிறது. ஆனால் இது தவறு. நான் என்பவன் ஜ்ஞாநமே . ஜ்ஞாநத்தை உடையவன் அல்லன் என்று கூறுகிறார்கள். பிறகு ஏனிப்படி தோற்றம் அளிக்கிறது என்றால், அதுதான் ப்ரமம் (மயக்கம்). அது தான் ஸம்சாரத்தின் விளைவு என்று தெளிவிக்கிறார்கள்.-எனவே ஜ்ஞாநம் ஓன்றே உண்மை . ஜ்ஞாநத்தால் அறியப்படும் பொருள்களும் பொய்யானவை . ஜ்ஞாநத்தை உடையவர் என்ற ஒருவரும் பொய்யானவர்.

(1-பொருள் 2-அதைப் பற்றிய ஞானம் 3-ஞானமுடையவன் – 1-ஜ்ஜேயம்-2-ஞானம்-3-ஜ்ஞாதா – மூன்றும் நாம் கொள்கிறோம் -இவர்களோ ஞானம் மட்டுமே உண்மை என்கிறார்கள்)

சரி, ஜ்ஞாநத்திலேயே ஆகாரங்கள் (பண்புகள்) இருக்கட்டும், அந்தப் பண்புகள் மாறுபடுவதற்கு காரணம் என்ன? ஏன் “இது புஷ்பம்” என்கிற ஜ்ஞாநம் மாறி “இது புத்தகம்” என்று வேறொரு ஆகாரத்தைக் கொண்ட ஜ்ஞாநம் உண்டாகிறது? அதற்கு வாசனா (பதிவுகள்) என்று ஒன்றை ஏற்கிறார்கள். இந்த வினாடியிலிருக்கும் ஜ்ஞாநம் அடுத்த வினாடியில் வேறொரு ஜ்ஞாநத்தை உண்டாக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட பதிவோடு கூடிய ஜ்ஞாநத்தை உண்டாக்குமாம். அந்த ஜ்ஞாநம் அதற்கடுத்த ஜ்ஞாநத்தில் ஒரு பதிவை உண்டாக்கும். அந்த ஜ்ஞாநம் அதற்கடுத்த ஜ்ஞாநத்தில் மற்றுமொரு பதிவை உண்டாக்கும். இப்படியே வாசனை என்பது தொடர்ந்து வருவதால் தான் ஒரு கால கட்டத்தில் புஷ்பத்தைப் பற்றின ஜ்ஞாநம் மாறி புத்தகத்தைப் பற்றின ஜ்ஞாநம் ஏற்படுகிறது. இதற்குக் காரணமான குறிப்பிட்ட பதிவு இதற்கு முன்னால் வரை இல்லாதபடியால் இந்த மாற்றம் ஏற்படவில்லை . எனவே இதற்கெல்லாம் வாசனை என்கிற பதிவுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

உலகப் பொருட்கள் உண்மை யானவையே -அவர்கள் பக்ஷத்தை வ்யாஸர் 3 ஸூத்ரங்களால் இந்த அதிகரணத்தில் கண்டிக்கிறார்.

1–ந அபா₄வ : உபலப்₃தே ₄: – “இல்லை என்பதல்ல; தோற்றுவதால்”
அபா₄வ : – ஜ்ஞாநத்தைத் தவிற மற்ற உலகப் பொருள்கள் எதுவுமே இல்லை – கிடையாது
– என்பது தவறு
உபலப்₃தே ₄: – ஒரு பொருளை ஒரு ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுப்பதாகவே ஜ்ஞாநம் தோற்றுவதால்

உலகத்தில் அறிவு என்கிற பொருள் நமக்கு எப்படி தோற்றமளிக்கிறது என்று பார்க்க வேண்டும். “நான் குடத்தை அறிகிறேன்” என்று ஏதோ ஒரு பொருளை நான் என்ற ஆத்மாவுக்கு காட்டிக் கொடுக்கக் கூடியதாக அறிவு என்ற பொருள் அறியப் படுகிறது. இதன் அடிப்படையில், கண்டிப்பாக அறிவுக்கு விஷயமாக அறியப்படும் பொருள் என்று ஒன்று இருந்தே ஆக வேண்டும். அதே போல் அறிவை உடையவர் என்கிற ஆத்மா அதாவது நாமும் உண்மை யாகவே இருக்க வேண்டும். “நான் குடத்தை அறிகிறேன்” என்ற ஜ்ஞாநத்தை எடுத்துக் கொண்டு இதில் குடம் என்பதும் பொய்-,அறிவாளி என்பதும் பொய், -அறிவு என்பது மட்டுமே உண்மை யானது என்று சொல்லுவது பொருந்தாத ஒரு வாதமாகும்

(ஞானமே விஷயமாகாதே -விஷயம் பற்றிய அறிவே ஞானமாகும் -விஷயம் -ஞானம் -ஞானத்துக்கு ஆஸ்ரயம் ஞாதா மூன்றும் இருக்க வேண்டும் -)

மேலும் வாசனை என்று ஒன்று முன் ஜ்ஞாநத்தாலே அடுத்தடுத்த ஜ்ஞாநத்தில் உண்டாக்கப் படுகிறது என்று கூறினீர்கள், அதுவும் பொருந்தாது. ஒரு பொருள் மற்றொரு பொருளில் ஒரு பதிவை உண்டாக்க வேண்டுமென்றால் அந்த இரண்டு பொருட்களும் ஏதோ ஒரு விநாடியிலாவது சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் மதத்திலோ முதல் விநாடியிலிருந்த ஜ்ஞாநம் இரண்டாவது விநாடியில் அழிந்து போய் விடுகிறது. அப்போது தான் இரண்டாவது ஜ்ஞாநம் உண்டாகிறது.

ஆகையால் ஜ்ஞாநத்திலிருக்கும் வேறுபாடுகளுக்குக் காரணம் உலகப் பொருட்களிலிருக்கும் வேறுபாடு என்று தான் ஏற்க வேண்டும். அந்த ஜ்ஞாநத்துக்கும் அந்தந்தப் பொருளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கிற படியால் தான் அந்தப் பொருளிலிருக்கும் பண்புகள் இந்த ஜ்ஞாநத்தின் மூலம் ஆத்மாவுக்கு காட்டப் படுகின்றன. ஜ்ஞாநத்துக்கும் பொருளுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு ஸம்யோகம் என்பதே . நாம் கை கூப்பும் பொழுது நம்மது இரண்டு கைகளுக்கும் யோகம் எப்படி உண்டாகிறதோ , அதே போல் நம்முடைய ஜ்ஞாநம் என்கின்ற ஒரு த்ரவ்யம் புத்தகம் என்கின்ற த்ரவியத்தைத் தொடும் பொழுது யோகம் என்கிற தொடர்பு ஏற்படுகிறது. அதனால் தான் இந்த அறிவு
புத்தகத்தைப் பற்றின அறிவு என்று ஆகிறது – என்று வ்யாஸர் கூறுகிறார்.

(ஆத்மாவும் ஞானமும் த்ரவ்யங்கள் -ஸம்யோகம் -பொருள்களை பற்றிய அறிவும் பொருள்களில் உள்ள பண்புகளையும் சேர்ந்து தானே அறிகிறோம்)

கனவும் விழிப்பும்
2- வைத₄ர்ம் யாத் ச ந ஸ்வப்நாதி₃வத் –
“வேறுபாட்டால் ஸ்வப்நத்தைப் போல அல்ல”
யோகாசாரர்கள் ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அறியப்படும் பொருட்கள் எல்லாம் பொய்யானவை என்று
நிரூபிப்பதற்கு கனவில் ஏற்படும் ஜ்ஞாநத்தை எடுத்துக் காட்டாகக் கூறுகிறார்கள். கனவு காணும் போது செல்வம், தேர், யானை , புலி, பாம்பு முதலான எத்தனையோ பொருட்களை அறிகிறோம். ஆனால் அந்த அறிவு மட்டும் தான் உண்மை — பொருட்கள் எல்லாம் பொய்யானவை . அதே போல் விழித்த பிறகு ஏற்படும் ஜ்ஞாநத்திலும் அறிவு மட்டுமே உண்மை -பொருட்கள் பொய்யானவை என்று வாதிடுகிறார்கள். அந்த வாதத்தை இந்த ஸூத்திரத்தில் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.

“விழித்திருக்கும் போது ஏற்படும் ஜ்ஞாநம் ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநத்தைப் போல் அல்ல. வேறுபட்டபடியால்” என்று ஸூத்ரத்தின் பொருள். கனவு காணும் பொழுது ஏற்படும் ஜ்ஞாநம் நித்ரா
(தூக்கம்), தமோ குணம் என்கிற தோஷங்களோடு கூடிய மனதால் உண்டாக்கப் படுகிறது
. எனவே அந்த
ஜ்ஞாநம் பொய்யான பொருட்களைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால் விழித்திருக்கும் போது ஏற்படும் ஜ்ஞாநம் தோஷமற்ற மனதால் உண்டாக்கப் படுகிறபடியால் அதில் அறியப்படும் பொருட்களும் உண்மை யாகத்தான் இருக்க வேண்டுமே தவிர பொய்யாக இருக்க முடியாது.

மேலும் விழித்த உடன் “நாம் கனவில் கண்ட பொருட்கள் எல்லாம் பொய்யானவை ” என்று நாமே அறிந்து கொள்கிறோம். இதைத் தான் ’பா₃த₄ம்’ என்பார்கள். ஆனால் அது போல் உலகப் பொருட்களில் நமக்கு எந்த அறிவும் ஏற்படுவதில்லை . “இதுவரை நான் பார்த்த புத்தகம், குடம், விளக்கு முதலானவை அனைத்தும் பொய்யானவை ” என்று எங்காவது எப்போதாவது யாருக்காவது ஜ்ஞாநம் ஏற்படுகிறதா? அப்படி காணப்படுவதில்லை . அதனால் அறியப்படும் உலகப் பொருட்கள் பிற்பாடு பொய்யென்று அறியப் படாத படியால் அவை உண்மை யானவையாகத் தான் இருக்க வேண்டும் என்பது வ்யாஸருடைய கூற்று –

(கெட்டுப்போன பாலால் செய்த இனிப்பு நன்றாக இல்லை -நல்ல பாலால் செய்த இனிப்பும் நன்றாக இருக்காதே என்றும் சொல்லலாமோ -வேறு பாடு இருப்பது போல் -தோஷம் உள்ள மனசில் பதிந்த ஸ்வப்ன ஞானம் போல் அல்லவே தோஷம் அற்ற மனசில் பதிந்த ஞானம் -பொய்யான விஷயம் கனவில் கண்டதை அறிகிறோம் -அது போல் கண்ணாலே பார்த்துக்கொண்டு இருக்கும் பொருள் பின்பும் பார்க்கும் படியாகவே இருப்பதால் வேறு பாடு உண்டே–)

கனவைப் பற்றின உண்மை
3-ந பா₄வ : அநுபலப்₃தே ₄:
– “பொருளே இல்லாத ஜ்ஞாநம் கிடையாது, காணாதபடியால்”
யோகாசாரர்கள் ஜ்ஞாநம் மட்டுமே உண்மை , அதால் அறியப்படும் பொருள்களும் பொய்யானவை , அறிவை உடையவர் என்பவரும் பொய்யானவர் என்று கூறுகிறார்கள். அதை இந்த ஸூத்ரத்தில் கண்டிக்கிறார்.-“எந்தப் பொருளையும் காட்டிக் கொடுக்காத-பொருளே இல்லாத அறிவு என்பது இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஒரு அறிவு உலகத்தில் எங்கும், காணப் படாதபடி யால்” என்று ஸூத்ரத்திற்குப் பொருள்.

அதாவது, உலகத்தில் எந்த ஒரு அறிவை எடுத்துக் கொண்டாலும், “நான் புத்தகத்தைப் பார்க்கிறேன்”, “நான் குடத்தை அறிகிறேன்” என்று ஒரு பொருளை ஒரு ஆத்மாவுக்கு காட்டிக் கொடுப்பதாகத் தான் ஜ்ஞாநம் அறியப் படுகிறது. அறிவாளியும் இல்லாமல், அறியப்படும் பொருளும் இல்லாமல் எந்த ஒரு ஜ்ஞாநத்தையுமே நாம் உலகத்தில் கண்டதில்லை. அதனால், அப்படியொரு அறிவு இருக்கிறது என்று சொல்வது பொருந்தாது என்று வ்யாஸர் கூறுகிறார்.

இங்கு ஒரு கேள்வி எழும் – முன் ஸூத்ரத்தில் ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநம் உண்மை யானது, ஆனால் அதில் அறியப்படும் பொருள்கள் பொய்யானவை என்று யோகாசாரர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, ஆனால் விழித்திருக்கும் போது வரும் ஜ்ஞாநம் அப்படிப்பட்டதல்ல என்று கூறினார் வ்யாஸர். அப்படியானால், ஸ்வப்னத்தில் வரும் ஜ்ஞாநம் பொருள் அற்றது தானே ? பிறகு இந்த ஸூத்ரத்தில் “எந்த ஜ்ஞாநமுமே பொருள் அற்றதாக இருக்க முடியாது” என்று எப்படி கூறலாம்

இதற்குப் பதில் – முன் ஸூத்ரத்தில் அவர்கள் ஸ்வப்ன ஜ்ஞாநத்தைப் பற்றிச் சொன்னதை ஏற்றுக் கொண்டு வாதம் செய்தார். ஆனால் உண்மையில் ஸ்வப்ந ஜ்ஞாநத்தைப் பற்றி நம் ஸித்தாந்தம் என்ன என்பதை இந்த ஸூத்ரத்தில் வ்யாஸர் வெளியிடுகிறார். ஸ்வப்னத்தில் ஏற்படும் ஜ்ஞாநம் கூட பொருள் உடையது தான். கனவில் செல்வம், தேர், குதிரை , பாம்பு, மாளிகை என்று எதை யெல்லாம் காண்கிறோமோ , அவை யெல்லாம் கற்பனை யானவை அல்ல,-அவையும் உண்மையான பொருட்கள் தான். அந்தந்த ஆத்மாவாலே அந்தந்த சமயத்தில் மட்டும் அறியப் படக் கூடியதாக பகவான் அந்தந்தப் பொருட்களைப் படைக்கிறார் என்று உபநிஷத் தெளிவாகக் காட்டுகிறது. இதை மேலே வரப் போகிற ஒரு அதிகரணத்தில் தெளிவாக வ்யாஸரும் நிரூபிக்கப் போகிறார்.

ஆகவே பொருளே இல்லாத ஜ்ஞாநம் என்று ஒன்று உலகத்திலேயே கிடையாது என்று யோகாசாரிகளுடைய மதத்தை முழுவதுமாக கண்டிக்கிறார் வ்யாஸர்-

2-2-5-ஸர்வதா₂நுபபத்த்யதி₄கரணம் அனைத்தும் பொய்யாக இருக்க முடியாதுமாத்யமிக மதத்தின் சுருக்கம்–ஸங்கதி – பௌத்த மதத்தின் மொத்தம் நான்கு உட்பிரிவுகள் உள்ளன. அதில்
ஸௌத்ராந்திகர்களும் வைபாஷிகர்களும் உலகம் உண்மையானது என்று ஏற்றுக் கொள்கிறார்கள். யோகாசாரர்களோ ஜ்ஞானம் மட்டுமே உண்மை , உலகம் பொய்யானது என்று கூறுபவர்கள். அந்த மூன்று மதங்களையும் முன் இரண்டு அதிகரணங்களாலே வேதவ்யாஸர் கண்டித்தார். அதைத் தோடர்ந்து இந்த அதிகரணத்தில் மீதமிருக்கும் நான்காவது மதமான மாத்யமிகர்களின் மதத்தை வேதவ்யாஸர் கண்டிக்கிறார்.

மாத்யமிகர்களின் மதம் – இந்த உலகத்தில் அனைத்துமே பொய்யானது. உலகப் பொருள்களும் சரி, ஜ்ஞானம் என்று சொல்லப்படும் ஆத்மாவும் சரி, அனைத்துமே சூன்யம் அதாவது பொய்யானது. அது தெரியாமல் இவை உண்மை யானவை என்று நினைப்பது தான் ஸம்ஸாரம், மயக்கம். எனவே அனைத்தும் பொய்யானது என்று புரிந்து கொண்டு இல்லாமல் போவது தான் மோக்ஷம். இது தான் புத்தருடைய உண்மையான அபிப்ராயம் என்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் வாதத்தைப் பார்க்கலாம். ஒரு பொருள் உண்மையானது என்றால் அது எதிலிருந்து உண்டாயிற்று என்று ஆராய வேண்டும். ஒரு உண்மைப் பொருளை ஏற்றுக் கொண்டால், அது (1) மற்றொரு இருக்கும் பொருளிலிருந்து உண்டாயிற்றா அல்லது (2) இல்லாத பொருளிலிருந்து உண்டாயிற்றா? என்ற கேள்வி எழும்.

இருக்கும் பொருளிலிருந்து இந்தப் பொருள் உண்டாகி யுள்ளது என்று கூற முடியாது, ஏனெனில் அப்படி நாம் உலகத்தில் காண்பதே இல்லை . மண் கட்டி இருக்கும் போதே குடம் உண்டாவதை நாம் காண்பதில்லை . மண் கட்டி அழிந்தால் தான் குடம் உண்டாகிறது. குடம் அழிந்தால் தான் துண்டுகள் ஏற்படுகின்றன. தங்கக் காசு அழிந்தால் தான் மோதிரம் உண்டாகிறது. எனவே ஒரு பொருள் அழியும் போது தான் மற்றொரு பொருள் உண்டாகிறது என்று நாம் காண்கிற படியால் இருக்கும் பொருளிலிருந்து மற்றொரு பொருள் உண்டாகிறது என்று சொல்வது அநுபவத்துக்கு முரண்பட்டது.

இல்லாத பொருளிலிருந்து இந்தப் பொருள் உண்டாகலாமே என்றால், இல்லாத பொருளிலிருந்து உண்டானது உண்மையாக இருக்க முடியாது, தானும் இல்லாததாகத் தான் இருக்க முடியும். அதனால், இரண்டு விதத்தில் பார்த்தாலும் உலகத்தில் உண்மையான பொருள் என்று ஒன்றும் இருக்க முடியாது. உண்மையாக இருப்பதற்கு காரணம் எதுவும் இல்லா விட்டால், பிறகு அந்தப் பொருள் பொய்யானது தான் என்று தானாகவே கிடைக்கும், அதற்குத் தனியாக யுக்திகளைச் சொல்லத் தேவை இல்லை .

அதே போல், ஒரு பொருள் உண்டாகும் பொழுது தன்னிடத்திலிருந்தே உண்டாகிறதா, வேறொரு
பொருளிடத்திலிருந்து உண்டாகிறதா என்றும் கேள்வி எழும். தன்னிடத்திலிருந்து தான் உண்டாவதற்கு பயன் எதுவும் இல்லை . தான் முன்னமே இருந்த படியால் எதற்காக உண்டாக வேண்டும் மறுபடியும்?
மற்றொன்றிலிருந்து மற்றொரு பொருள் உண்டாகிறதென்றால், அனைத்திலிருந்தும் அனைத்தும்
உண்டாகலாமே ?
நூலிலிருந்தும் குடம் உண்டாகலாம், மண்ணிலிருந்தும் துணி வரலாம் என்று கேள்வி
எழும், அதனால் எந்த ஒரு பொருளும் உண்மை யானதல்ல. எல்லாமே பொய்யான பொருட்கள் தான்.இது உண்மை , இது பொய், இது இருக்கிறது, இது இல்லை என்று சொல்வதெல்லாமே ப்ரமம் அதாவது மயக்கம். அது தான் ஸம்ஸாரத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறதுசூன்யத்தை சூன்யம் என்று அறிந்து சூன்யமாவதே மோக்ஷம் என்கிறார்கள்

கேள்வி – எப்போதும் ஒரு ப்ரமம் (தவறான புரிதல்) ஏற்பட வேண்டும் என்றால், அதற்கு அடிப்படையில் ஒரு உண்மைப் பொருள் தேவைப் படுகிறது. ஒரு கயிற்றைப் பார்த்து “இது பாம்பு” என்று பிரமிக்கிறோம். அந்த பாம்பு பொய்யானது, ஆனால் அந்த ப்ரமத்துக்கு அடிப்படை விஷயமாக இருக்கும் கயிறு உண்மை யானதுதானே ? கயிறும் பொய்யாக இருந்தால் இப்படி ஒரு ப்ரமம், இது பாம்பு என்ற ப்ரமம் ஏற்படவே முடியாது. அதனால் அதிஷ்டானம் என்று சொல்லப்படுகிற ஏதோ ஒரு உண்மைப் பொருளை யாவது ஏற்க வேண்டும்.

மாத்யமிகர்களின் பதில் – ப்ரமம் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு குற்றம் (தோஷம்) நம்மிடத்தில் இருக்க வேண்டும். அந்த தோஷம் பொய்யானது என்றும், அந்த தோஷத்தாலே பாதிக்கப்பட்ட அறிவாளியும் பொய்யானவர் என்றும் நீங்களும் ஏற்கிறீர்கள். பிறகு அதிஷ்டானம் மட்டும் ஏன் உண்மையாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம்? தோஷமும் தோஷத்தை உடையவரும் பொய்யாக இருந்தாலும் ப்ரமம் ஏற்படி ஏற்படலாமோ அதே போல் அதிஷ்டானம் பொய்யாக இருந்தாலும் ப்ரமம் ஏற்படலாம். அதில் எந்த தவறும் இல்லை ஆகையால் உலகத்தில் அனைத்துமே சூன்யம், இல்லாதது, பொய்யானது என்று வாதிடுகிறார்கள்.

(அத்வைதிகள் பரமாத்மா மட்டுமே உண்மை -ஞானம் மட்டுமே -ஞாதாவும் இல்லை -மற்ற எல்லாமே மித்யை -ப்ரஸன்ன பவுத்தர்கள் இவர்கள்)

இல்லை என்றாலும் இருப்பதே
இந்த மதத்தை வேதவ்யாஸர் இந்த அதிகரணத்தில் ஒரே ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்.
1– ஸர்வதா ₂ அநுபபத்தே : ச –
“எல்லா விதத்திலும் பொருந்தாத படியால்”

“நீங்கள் கூறும் ஸர்வ சூன்யத்வம் அதாவது எல்லாமே பொய்யானது என்ற தத்துவம் தவறானது, முற்றிலுமாகப் பொருந்தாத படியால்” என்று ஸூத்ரத்திற்குப் பொருள். -எல்லா விதத்திலும் பொருந்தாது என்று சொன்னால்
(1) பொருள்களை ஆராய்ந்து பார்த்தாலும் பொருந்தாது
(2) ப்ரமாணங்கணள ஆராய்ந்து பொருந்தாது என்று பொருள்.

மாத்யமிகர்களைப் பார்த்து வேத வ்யாஸர் கேட்கிறார் – நீங்கள் உங்கள் மதத்தைச் சொல்லும் பொழுது “உலகத்தில் அனைத்துமே உண்மை யானது” என்று சொல்வீர்களா? அல்லது “பொய்யானது இல்லாதது” என்று சொல்வீர்களா?-

இருப்பது, இல்லாதது என்று எந்தச் சொல்லைப் பயன் படுத்தினாலும் அது ஒரு பொருள் இருப்பதைத் தான் குறிக்கும் என்று வ்யாஸர் கூறுகிறார். அது எப்படிப் பொருந்தும்? “குடம் இருக்கிறது” என்று சொன்னால் குடம் உள்ளது என்று பொருள். “குடம் இல்லை ” என்று சொன்னால் அது குடத்தின் இல்லாமையைத் தானே காட்டும்? எப்படி ஒரு பொருளின் இருப்பைப் காட்டும்? என்று ஸந்தேகம் ஏற்படும். இதற்கு விடையை முன்னமே ஆரம்பணாதிகரணத்தின் நான்காவது ஸூத்ரத்தில் “அஸத்₃வ்யபதே ₃சாத் ந இதி சேத் ந த₄ர்மாந்தரேண வாக்ய ஸேஷாத் யுக்தே : சப்₃தா₃ந்தராத் ச” (2.1.6.4) என்ற ஸூத்ரத்தில் வேதவ்யாஸர் விடை யளித்திருக்கிறார்.

(அஸத்₃வ்யபதே₃சாத் ந – இது பூர்வ பக்ஷியின் வாதம். வேதம் ஸ்ருஷ்டியைப் பற்றி உபதேசிக்கும் போது ’அஸத்₃வா இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ அதாவது ’இந்த உலகனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் அஸத்தாகவே இருந்தது’ என்று கூறுகிற படியால், முன்னால் இல்லாத உலகம் தான் உண்டாக்கப் படுகிறது என்று அஸத் கார்ய வாதமே சரியானது.
இதி சேத் ந – இவ்வாறு நீ கூறினால், அது தவறு
தா₄ர்மாந்தரேண– வேறு ஓரு தர்மத்தை (பண்பை ) வைத்து (உலகத்தை அஸத் என்று சொல்கிறபடியால்)“உலகம் அஸத்தாக இருந்தது” என்ற விடத்தில் அஸத் என்ற சொல் முயல் கொம்பு, ஆகாசத் தாமரை போல் இல்லாத வஸ்துவைக் குறிக்கவில்லை . உலகம் இப்போது எந்தப் பண்புகளோடு உள்ளதோ அதற்கு முரண்பட்ட பண்புகளோடு ப்ரளய காலத்தில் இருந்தபடியால், அஸத் அதாவது இது மாதிரி இல்லாதது எனப்படுகிறது. -எப்படி இப்படிப்பட்ட பொருளை அறிந்து கொள்ளலாம் எனில் –
1- வாக்ய சேஷாத் – “மிச்சமிருக்கும் வாக்கியத்தால்”. உபநிஷத்தில் அவ்விடத்திலேயே
(தத₃ஸதே₃வ ஸந் மந: அகுருத ஸ்யாமிதி) அதாவது-’அந்த அஸத் என்ற பொருள் எண்ணியது’ என்று உள்ளதால்,-இங்கு சொல்லப்பட்டது ஒரு இருக்கும் பொருள் தான், இல்லாத பொருள் எப்படி ஸங்கல்பம் செய்ய முடியும்?
2-யுக்தே : 
– “யுக்தியால்”. யுக்திகளால் ஆராய்ந்தாலும் ஸத்த்வம் (இருத்தல்) என்பதும் அஸத்த்வம் (இல்லாமை ) என்பதும் –இருக்கும் ஒரு பொருளின் பண்புகள் என்று தான் தோற்றுகிறது. மண்ணானது குடத்தின் வடிவத்தோடு இருந்தால்“குடம் இருக்கிறது” என்கிறோம். வேறு வடிவத்தோடு இருந்தால் “குடம் இல்லை ” என்கிறோம்.
3-சப்₃தா₃ந்தராச்ச – (தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந் நாம ரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ) என்று ’அஸத்’ என்ற சொல்லை ’அவ்யக்ருதம்’ அதாவது ’பெயராலும் உருவத்தாலும் வேறுபடாதது’ என்று வேறொரு சொல்லால் வேதமே விவரிக்கிறது.
எனவே , இப்போது இருப்பது போல் வெவ்வேறு பெயர்களோடும் உருவங்களோடும் ஜகத் ப்ரளய காலத்தில் இருப்பதில்லை என்பதால் அஸத் என்று அழைக்கப்படுகிறது)

ஒரு பொருள் இல்லை என்று சொன்னால் அது “முற்றிலுமாக இருந்ததே கிடையாது” – “அது பொய்யானது” என்று பொருளல்ல. இப்போது இல்லை , இங்கில்லை , இந்த உருவத்திலில்லை என்று தான் ஆகுமே தவிர, என்றைக்கும் இருந்ததில்லை என்று பொருள் படாது. ஒரு மனிதருடைய சிறு வயது நண்பர் ஒருவர் வயதான பிறகு அவரை ஸந்திப்பதற்காக வீட்டுக்கு வருகிறார். “அவர் இருக்கிறாரா” என்று கேட்டதற்கு வீட்டில் இருந்தவர்கள் “அவர் இல்லை ” என்று கூறினார்கள். உடனடியாக “ஓ! இப்படி ஒரு மனிதனே இருந்தது கிடையாது! அவர் பொய்யானவர்! நானாக கற்பனை செய்து கொண்டேன்!” என்றா அந்த நண்பன் நினைக்கிறார்? இப்போது வீட்டிலில்லை என்று தானே பொருள்படும் –

சூன்யத்வம் எங்குள்ளது?
அதே போல் குடம் இல்லை என்று சொன்னால் இப்போது குடம் இல்லை , இந்த இடத்தில் குடம் இல்லை அல்லது இப்போது குடம் என்ற உருவத்தோடு இல்லை , அது உடைந்து மண் துண்டுகளாக ஆகி விட்டது
என்பது போல் தான் பொருள்படுமே தவிர முன்னாலும் குடம் என்ற பொருள் இருந்ததே கிடையாது, குடமே பொய்யானது என்று இந்தச் சொற்றடருக்கு ஒரு நாளும் பொருளாகாது

அதனால் ஒரு பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் அது இருப்பைத் தான் குறிக்கும். இல்லை என்று சொன்னாலும் அதுவும் வேறு ஒரு விதத்தில் அந்தப் பொருள் இருக்கிறது என்பதைத் தான் குறிக்கும். அதனால் நீங்கள் என்ன வாதம் செய்தாலும் உலகப் பொருட்களைப் பொய்யானவை என்று நிரூபபிக்கவே முடியாது.

அதே போல் ப்ரமாணங்களை ஆராய்ந்தாலும், அனைத்தும் பொய்யென்று சொல்ல முடியாது. ஏனென்றால் உலகத்தில் அனைத்தும் சூன்யம் – இல்லாதது என்று சொல்ல வேண்டும் என்றால் அந்த சூன்யத் தன்மையை ஏதோ ஒரு இடத்தில் நீங்கள் பார்த்து விட்டு அதை உலகத்தில் அனைத்துப் பொருளிலும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த சூன்யத்துவம் என்பதை எங்கு பார்த்தீர்கள்? எந்த ஜ்ஞானத்தாலே பார்த்தீர்கள்? அந்த ஜ்ஞானம் பொய்யானதென்றால் அப்போது சூன்யத்துவம் என்ற விஷயமே பொய்யானது. அப்படிப் பட்ட ஓரு விஷயமே கிடையாது. அந்த ஜ்ஞானம் உண்மையானதென்றால் அப்போது அனைத்தும் பொய் என்ற உங்கள் மதம் பட்டுப் போய் விட்டது. ஒரு ஜ்ஞாநம் உண்மை யானது என்றாலும் அனைத்தும் பொய் என்று நீங்கள் கூறுவது தவறு தான்

அதனால் எல்லாமே பொய்யானது என்று உங்கள் மதம் எந்த விதத்திலும் நிரூபிக்கப் பட முடியாதது. அதனால் உலகப் பொருட்கள் உண்மையானவை தான். அதைக் காட்டிக் கொடுக்கும் அறிவும் உண்மை யானது தான். அறிவை உடையவரான ஆத்மாவும் உண்மையானவர் தான். இதைத் தான் வேதாந்தம் காட்டுகிறது. அதனால் பௌத்த மதம் ஏற்கத் தகுந்ததுல்ல என்ற கூறி இந்த அதிகரணத்தை நிறைவு செய்கிறார்.

(உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-


2.2.6 ஏகஸ்மிந் ந ஸம்ப₄வாதி₄கரணம்-ஜைந மதத்தின் கண்டனம்

ஜைந மதத்தின் சுருக்கம்-ஏகஸ்மிந் ந ஸம்ப₄வாதி₄கரணம் – ஸங்கதி -பரமாணுவை உலகுக்குக் காரணமாகச் சொல்லும் பௌத்தர்கள் கண்டித்த பிறகு, அவ்வாறே வாதிடும் ஜைநர்களைக் கண்டிக்கிறார் வ்யாஸர்.
ஜைனர்களின் மதத்தைச் சுருக்கமாக முதலில் பார்க்கலாம். அவர்கள் சொல்வது – ஜீவன், அஜீவன் என்று இரண்டு விதமான பொருட்கள் உலகத்திலே உள்ளன. ஜீவர்கள் என்பவர்கள் நம்மைப் போன்ற ஆத்மாக்கள். அஜீவம் என்பது ஜீவனைக் காட்டிலும் வேறுபட்டவையான அறிவற்ற உலகப் பொருட்கள். இந்த இரண்டையும் தவிர ஈஸ்வரன் என்று ஒருவர் கிடையாது என்பது அவர்களின் கருத்து.
அடுத்ததாக உலகத்தில் இருக்கும் பொருட்களை ஆறு த்ரவ்யங்களாகப் பிரிக்கிறார்கள்.
(1) ஜீவன் – அவர்கள் ஸம்ஸாரத்தில் கட்டுபட்டவராகவோ, யோகத்தாலே ஸித்திகளை அடைந்தவராகவோ அல்லது முக்தியடைந்தவராகவோ இருக்கலாம்.
(2) தர்மம் – இது உலகில் எங்கும் பரந்து விரிந்து இருக்கும். ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு இது தான் உதவி செய்யும்.
(3) அதர்மம் – இதுவும் உலகிலெங்கும் வ்யாபித்திருக்கும். அது நம்முடைய நகர்வைத் தடுக்கக் கூடியது, தடை செய்யக் கூடியது.
(4) புத்கலம் – நிறம், சுவை , மணம் முதலான பண்புகளை உடைய உலகப் பொருட்கள் அனைத்தும் இந்த வகைக்குள் வருகின்றன.
(5) காலம் – இது அணுவானது. எனவே உலகத்தில் பல காலப் பொருள்கள் உள்ளன என்கிறார்கள்.
(6) ஆகாசம் -இதுவும் எங்கும் பரந்து விரிந்த ஓன்று மேலும்,

மோக்ஷம் அடையும் கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்த்தோம் என்றால் அப் போது ஏழாக இதைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்.
(1) ஜீவன்
– இவர் ஜ்ஞானம், ஸுகம், திறல் முதலானவற்றைப் பண்புகளாக உடையவர்.
(2) அஜீவம் – இது உலகத்தில் நாம் அனுபவிக்கக் கூடிய எல்லாப் பொருள்களையும் குறிக்கும
(3) ஆஸ்ரவம் – உலகப் பொருட்களை அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் புலன்கள் அதாவது இந்திரியங்கள்,
(4) பந்தம் – ஸம்ஸாரத்தில் நம்மைக் கட்டி வைக்கக் கூடிய நாம் செய்த கர்மங்கள்
(5) நிர்ஜரம் – ஜைனர்களின் மதத்தின் படி மோக்ஷம் அடைவதற்கு வழியான தவம்
(6) ஸம்வரம் – இந்திரியங்களை முழுமையாக அடக்கி ஸமாதி நிலையில் தியானம் செய்வது
(7) மோக்ஷம் விருப்பு, வெறுப்பு முதலானவற்றைக் கழித்த தூய்மையான ஆத்மாவின் நிலை . இப்படியும் ஒரு பாகுபாட்டைச் சொல்லுகிறார்கள்–உலகில் ஒரே விதமான பரமாணுக்களே உள்ளன. அவை தான் வெவ்வேறு பண்புகளை அடையும் போது நிலம், நீர், தீ, காற்று என்றெல்லாம் சொல்லப்படுகின்றன – என்கிறார்கள்.

அடுத்ததாக, அவர்களின் மதத்தில் முக்கியமான பகுதி ஸப்த பங்கீ வாதம் என்று சொல்லப்படுகிறது.
எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அதை ஏழு விதமாகச் சொல்லலாம் என்று கூறுகிறார்கள் –
(1) ஸ்யாதஸ்தி – இருக்கலாம்,
(2) ஸ்யாத் நாஸ்தி – இல்லாமல் இருக்கலாம்
(3) ஸ்யாத அஸ்தி ச நாஸ்தி ச – இருந்து கொண்டே இல்லாமல் இருக்கலாம்
(4) ஸ்யாத அவக்தவ்யம் – சொல்ல முடியாமல் இருக்கலாம்
(5) ஸ்யாத் அஸ்தி ச அவக்தவ்யம் ச – இருந்து கொண்டு சொல்ல முடியாததாக இருக்கலாம்
(6) ஸ்யாத் நாஸ்தி ச அவக்தவ்யம் ச – இல்லாமல் சொல்ல முடியாததாக இருக்கலாம
(7) ஸ்யாத் அஸ்தி ச நாஸ்தி ச அவக்தவ்யம் ச – இருப்பதாக இல்லாததாக சொல்ல முடியாததாக இருக்கலாம்.

எனவே எந்தப் பொருளைப் பற்றியுமே முடிவாக சொல்லவே முடியாது.
எல்லாப் பொருள்களுமே வெவ்வேறு நிலைகளை அடைகின்றன. பொருள் என்று பார்த்தால் ஒன்று தான், ஆனால் நிலைகளாகப் பார்த்தால் வெவ்வேறு தான். எனவே இரண்டு பொருட்களை
வெவ்வேறு (பி₄ன்னம்) என்றும் சொல்லலாம், ஒன்றே (அபி₄ன்னம்) என்றும் சொல்லலாம். அதே போல்
பொருள்களை நித்யமானவை என்றும் சொல்லலாம், அவற்றில் நிலைகள் மாறுகிற படியால் அவற்றை
அநித்யமானவை என்றும் சொல்லலாம். எனவே முரண்பட்டவை என்று நாம் உலகில் சொல்லும் பண்புகள் கூட ஒரே பொருளில் ஒரே காலத்தில் இருக்கின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸப்த பங்கீ வாதம் பொருந்தாது-ஸித்தாந்தம் –
1- ् ந ஏகஸ்மிந் அஸம்ப₄வாத் –
“பொருந்தாது; ஒன்றில் முடியாததால் ”
ஜைந மதம் பொருந்தாது; ஒரு பொருளில் இருத்தல் இல்லாமை முதலான முரண்பட்ட பண்புகள் ஒரே காலத்தில் இருக்க முடியாததால்” என்று ஸூத்ரத்தின் பொருள்.
இத்தால் ஜைநர்கள் சொல்லும் ஸப்த ப₄ங்கீ வாதத்தைக் கண்டிக்கிறார் வ்யாஸர். அஸ்தித்வம் என்றால் இருத்தல். நாஸ்தித்வம் என்றால் இல்லாமை . இவை முரண் பட்டவை . நித்யத்வம் என்றால் அழியாமை , அநித்யத்வம் என்றால் அழியும் தன்மை . இவையும் ஒரே பொருளில் சேர்ந்து இருக்க இயலாது. வேறுபட்ட பொருள்கள் ஒன்றாக இருக்க முடியாது. இப்படி முற்றிலும் முரண்பட்ட பண்புகள் எல்லாம் ஒரே பொருளில் ஒரே காலத்தில் இருக்கவே முடியாது. எனவே இரண்டும் உள்ளன என்று கூறும் உங்கள் மதம் பொருத்தமற்றது.

மேலும், காலம் அணுவானது என்று சொன்னீர்கள். அப்படி யென்றால் பல காலப் பொருள்கள் உலகில் இருக்க வேண்டும். ஆனால் அநுபவத்தில் காலம் என்ற ஒரே பொருளில் உலகப் பொருள்கள் பல இருப்பது போலத் தான் ஏற்படுகிறது. இதற்கு முரண்பட்டதாக நீங்கள் வாதிடுகிறீர்கள்.-6 த்ரவ்யங்கள் என்று பிரித்துச் சொன்னதால், ஜீவன் தர்மம் அதர்மம் ஆகியவை வேறுபட்டு தான் இருக்க வேண்டும், ஒன்றாக இருக்க முடியாது. எனவே உலகத்தில் எல்லாமே ஒன்றென்றும் சொல்லப்படலாம் வேறென்றும் சொல்லப்படலாம் என்று நீங்கள் கூறியது தவறு. அசேதனப் பொருட்களான பரமாணுக்கள் பரமாத்மாவால் இயக்கப் படாமலேயே உலகைப் படைக்கின்றன என்று சொல்வதில் உள்ள குற்றங்கள் எல்லாம் முன் அதிகரணங்களிலேயே விவரிக்கப் பட்டு விட்டன. அவையும் உங்கள் மதத்தில் வந்து சேர்கின்றன.

ஆத்மா உடலின் அளவுடையவரல்ல
2-ஏவம் ् ச ஆத்ம அகார்த்ஸ்ந்யம் –
“இவ்வாறென்றால் , ஆத்மாவின் முழுமையின்மை ஏற்படும்”
ஜைந மதத்தில் ஆத்மாவின் அளவை ஆராயும் பொழுது இவ்வாறு கூறுகிறார்கள் – ஆத்மா விபூ, அதாவது எங்கும் பரந்திருப்பவர் என்று கொள்ள முடியாது; ஏன் எனில் உடலுக்கு வெளியே ஆத்மாவை நாம் எங்கும் உணர்வதில்லை-அதே போல் ஆத்மா அணுவானவர், அதாவது மிகவும் நுண்ணியவர் என்றும் கொள்ள முடியாது. அப்படி ஆனால் உடலில் எல்லா இடங்களிலும் நமக்கு ஏற்படும் உணர்ச்சி பொருந்தாமல் போய் விடும். ஆகையால் இந்த ஆத்மா -தேஹ பரிமாணம் போல் ஆத்மாவும் என்கிறார்கள் -உடலின் அளவை உடையவர் என்று ஜைநனர்கள் வாதிடுகிறார்கள்.

அந்த வாதத்தை இந்த ஸூத்ரத்தால் கண்டிக்கிறார்.
இவ்வாறு ஆத்மா உடலின் அளவை உடையவர் என்று நீங்கள் சொன்னால், அப்போது எந்த தோஷங்களைத் தவிர்க்கப் பார்த்தீர்களோ , அந்த தோஷங்களே உங்கள் மதத்தில் வந்து விடும். அதாவது ஆத்மாவின் முழுமை யின்மை ஏற்பட்டு விடும் என்று கூறுகிறார்.
ஒரு யானையின் உடலில் இருக்கும் ஜீவாத்மா, அதை விட்டு எறும்பின் உடலை எடுத்துக் கொள்ளும் பொழுது யானை அளவுக்கு பெரியதானதாக இருக்கும் அந்த ஆத்மா எறும்பின் உடலுக்குள் முழுமையாக பிடிக்க முடியாது. அதனால் உடலுக்கு வெளியே இருப்பதாக ஆகும். இதுவே ஆத்மாவின் முழுமை இன்மை என்கிற தோஷமாகும். அதே போல் எறும்பின் உடலுக்குள் இருந்த ஜீவாத்மா ஒரு யானையின் உடலை எடுத்துக் கொள்ளும் பொழுது, சிறிய ஜீவாத்மா பெரிய உடலுக்குள் நுழைகிறபடியால் யானை உடலின் பல பகுதிகளில் ஜீவாத்மா இல்லை என்பதால் உடலெங்கும் ஏற்படும் உணர்ச்சிகள் போருந்தாமல் போய் விடும்.-ஆக, ஆத்மா உடலின் அளவை உடையவர் என்பதே பொருந்தாது

ஆத்மா வளரவோ சுருங்கவோ முடியாது
3- ந ச பர்யாயாத் அபி அவிரோத₄: விகாராதி₃ப்₄ய:

“நிலை மாறு பாட்டாலும் முரண்பாடின்மை ஏற்படாது, மாறுபாடு முதலானவை ஏற்படுகிற படியால்”
முன் ஸூத்ரத்தில் சொன்ன தோஷத்துக்கு பதிலளிப்பதற்காக ஜைநர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் – ஆத்மாவால் வளரவும் சுருங்கவும் முடியும். யானையின் உடலிலிருந்து எறும்பின் உடலுக்குள் புகும் பொழுது ஆத்மா சுருங்கி விடுகிற படியால் முழுமையாக எறும்பின் உடலுக்குள்ளேயே இருந்து விடுவார். எறும்பின் உடலை விட்டு யானையின் உடலை அடையும் பொழுது ஆத்மாவே விரிவடைகிற படியால் யானை யுடைய உடலுக்குள்ளும் முழுமையாகப் வ்யாபித்து விடுவார். அதனால் முன் சொன்ன தோஷங்கள் எதுவுமே இல்லை என்று அவர்களின் வாதம்.

இதற்கு வ்யாஸர் பதில் கூறுகிறார் – இப்படிக் கொண்டால் ஆத்மாவுக்கு விகாரம் அதாவது மாறுபாடு என்கிற தோஷமும் –விகாரம் இருந்தாலே கூட இருக்கக் கூடிய அழிவு முதலான தோஷங்களும் ஏற்பட்டு விடும்- அதனால் ஆத்மா வளரவோ சுருங்கவோ முடியாது.

4–அந்த்ய அவஸ்தி₂தே : ச உப₄ய நித்யத்வாத் அவிசேஷ:
“இறுதியானது இருப்பதாலும் இரண்டும் நிரந்தரமானதாலும் (முன்னும்) வேறுபாடில்லை ”

ஒரு ஆத்மா முக்தி அடையும் பொழுது கடைசியாக எந்த உடலை எடுத்துக் கொண்டிருந்தாரோ அந்த அளவு மாறாமல் தான் முக்தி அடைந்த நிலையிலும் இருப்பார் என்று கொள்ள வேண்டும். ஆனால் முக்தி நிலையில் இருக்கும் பண்புகள் தான் ஆத்மாவுக்கு இயற்கை யானவையாக இருக்க வேண்டும். அதற்கு முன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது ஏற்பட்ட பண்புகள் செயற்கை யானவையாக இருக்க வேண்டும். எனவே இந்த ஆத்மா இறுதியாக இருந்த உடலில் எந்த அளவோடு இருந்தாரோ அந்த
அளவோடு தான் முக்தியிலும் இருப்பார் என்றால் அதுவே அவருக்கு இயற்கையான அளவாக இருக்க வேண்டும். அப்படிக் கொண்டால் அந்த ஆத்மா அதற்கு முன்பு எத்தனை பிறவிகளை எடுத்துக் கொண்டிருந்தாலும் அவற்றிலும் அந்த இயற்கையான அளவு மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆகவே என்றுமே ஜீவாத்மா தான் எடுத்துக் கொள்ளும் அந்தந்த உடலின் அளவுக்கு இருப்பார் என்றும் வாதம் பொருந்தாதது.

இப்படி ஜைந மதத்தில் பல விதமான குற்றங்கள் இருக்கிற படியால் இதுவும் தள்ளத் தகுந்தது என்று வேத வ்யாஸர் முடிக்கிறார்.


2.2.7 பசுபத்யதி₄கரணம் –பாசுபத மதத்தின் கண்டனம்-பாசுபத மதத்தின் சுருக்கம் – ஸங்கதி – இதுவரை ஸாம்க்ய மதம், வைஸேஷிக மதம், பௌத்த மதம், ஜைன மதம் என்பவற்றை வேத வ்யாஸர் கண்டித்தார். அவற்றில் முரண்பாடுகள் உள்ளன, அவை வேதத்தோடும் முரண்படுகின்றன, அதனால் மோக்ஷத்தை விரும்பும் அதிகாரிகள் அவற்றை ஆதரிக்க வேண்டாம் என்று கூறினார். அதே போல் பசுபதியால் பறப்பட்ட மதமும் வேதத்துக்கு முரண் பட்டதாக இருக்கிறபடியால் அதையும் ஆதரிக்க வேண்டாம் என்று இந்த அதிகரணத்தில் கூறுகிறார்.

பசுபதியால் பறப்பப்பட்ட மதம் நான்கு உட்பிரிவுகளோடு காணப்படுகிறது –
(1) காபாலர்கள், (2) காலாமுகர்கள்,
(3) பாசுபதர்கள், (4)ஸைவர்கள்

இந்த மதங்களில் சொல்லக் கூடிய தத்துவங்களின் முறையும், இவ்வுலகத்திலும் மற்ற உலகங்களிலும் மோக்ஷத்திலும் ஆனந்தம் அடைவதற்கு இவர்கள் சொல்லும் முறைகளும் வேதத்துக்கு முரண்பட்டவையாக இருக்கின்றன. அதனால் இந்த மதங்களை ஏற்கக் கூடாது என்று வேத வ்யாஸருடைய அபிப்ராயம்.-தத்துவங்களைச் சொல்லும் பொழுது – உலகத்துக்கு உபாதான காரணம் (மூலப்பொருள்) ப்ரதானம் என்ற அறிவற்ற அசேதனப் பொருள்; நிமித்த காரணம் அதாவது உண்டாக்குபவர் பரம சிவன் என்று கூறுகிறார்கள். மோக்ஷம் அடைவதற்கான வழியைச் சொல்லும் பொழுது ஒவ்வொரு உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு விதமாக வர்ணிக்கிறார்கள்.

பாசுபத மதத்தின் சுருக்கம்
காபாலர்கள் கூறுவது –கண்டி₂கா ருசகம் சைவ குண்ட₃லம் ச சிகா₂மணி: । ப₄ஸ்ம யஜ்ஜோபவீதம் ச முத்₃ராஷட்கம் ப்ரசக்ஷதே ॥ ஆபி₄: முத்₃ரிததே ₃ஹஸ்து ந பூ₄ய இஹ ஜாயதே ।ப₄கா₃ஸநஸ்தம் ஆத்மாநம் த்₄யாத்வா நிர்வாணம் ருச்ச₂தி-
-அதாவது, ஆறு முத்திரைகளை தரித்துக் கொண்டு ப₄கா₃ஸநத்தில் அமர்ந்து ஆத்மாவை த்யானிப்பவன் மோக்ஷம் அடைகிறான். ஆறு முத்திரைகள் ஆவன – கண்டிகை என்ற கழுத்தின் ஆபரணம், ருசகம் என்ற மோதிரம், காதில் குண்டலம், சிகாமணி என்று தலையில் ஓராபரணம், பஸ்ம என்ற சாம்பல், யஜ்ஜோபவீதம் என்ற பூணூல்.

காலாமுகர்கள் சொல்வது – கபாலம் அதாவது மண்டை ஓட்டை பாத்திரமாகக் கொண்டு உணவு உண்ணுதல், பிணத்தை எரித்து அந்த சாம்பலில் நீராடுவது, சாம்பலை உண்ணுவது, லகுடம் என்கிற தடியை கையில் பிடித்துக் கொள்வது, ஸுராகும்பம் என்கிற கள்ளுக் குடத்தை வைத்து அதற்குள் இருக்கும் தெய்வத்தைப் பூஜை செய்வது, இவை அனைத்தும் தான் மோக்ஷம் அடைவதற்கான வழிகள் என்று கூறுகிறார்கள்.
சைவ ஆகமத்திலோ – கையில் கங்கணமாக ருத்ராக்ஷத்தை அணிவது, தலையில் சடை முடி, கபாலம்,
சாம்பலில் குளிப்பது இவை யெல்லாம் தான் மோக்ஷத்திற்கான வழிகள் என்று சொல்லப்படுகின்றன.
இப்படி ஒவ்வொரு உட்பிரிவிலும் வெவ்வேறு வழிகள் மோக்ஷம் அடைவதற்கு வர்ணிக்கப் பட்டுள்ளன.

பாசுபத மதத்தில் முரண்பாடுகள்
ஸித்தாந்தம் – இந்தப் பசுபதியின் மதத்தை 4 ஸூத்ரங்களால் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
1- பஸ்யு அஸாமஞ்ஜஸ்யாத் –
“பசுபதியும் மதமும் தள்ளத் தகுந்த்து,-(பஸ்யு-பசு பாசம் பந்தம் ) பொருந்தாதபடியால்”
முன் அதிகரணத்தில் முதல் ஸூத்ரத்திலிருந்து ’ந’ என்ற போல் இங்கும் சேர்க்கப்பட வேண்டும். அத்தால் ’தள்ளத் தகுந்தது’ என்கிற பொருள் கிடைக்கிறது.
அஸாமஞ்ஜஸ்யம் –-அதாவது பொருந்தாமையாவது – அதிலிருக்கும் உட்பிரிவுகளுக்கும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறபடியாலும், இவர்கள் சொல்லும் அனைத்துமே வேதத்தோடு முரண்படுகிறபடியாலும்.

வேதத்தில் உலகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ஒன்று தான், அதுவும் நாராயணன் தான் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது –
(ஸதே₃வ ஸோம்யேத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்), (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்), (நாராயண பரம் ப்₃ரஹ்ம) முதலான வாக்கியங்களால். எனவே ப்ரதானமே உபாதானம் என்றும் சிவன் நிமித்த காரணம் என்றும் அவர்கள் சொல்வது பொருந்தாது.

மோக்ஷத்திற்கான வழி பக்தியோகம் என்கிற த்யானம் தான் என்று வேதம் ஸந்தேஹமின்றிக் கூறுகிறது –(தமேவம் வித்₃வான் அம்ருத இஹ ப₄வதி நாந்ய: பந்தா₂: அயநாய வித்₃யதே ),
(நிதி₃த்₄யாஸிதவ்ய:)
முதலான வாக்கியங்களால்.–ஆக பசுபதியின் சொல்லப்படும் வழிகள் தவறானவை .அந்த த்யானத்துக்கு உதவக் கூடிய கர்மங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தின் படி விதிக்கப் பட்டவையே என்றும் வேதம் சொல்கிறது. ஆக வேதத்துக்கு முரணாக இவர்களால் சொல்லப்படும் ஆசாரங்களும் கர்மங்களும் ஏற்கத் தகுந்தவை யல்ல

2-அதி₄ஷ்டா₂ந அநுபபத்தே : – “அதி₄ஷ்டா₂நம் (இயக்குவது) பொருந்தாத படியாலும்”
அநுமானத்தைக் கொண்டு உலகைப் படைக்கும் நிமித்த காரணமான ஈஸ்வரனை நிரூபிக்கிறார்கள் பசுபதியின் மதத்தைச் சேர்ந்தவர்கள். உலகத்தில் குயவன் முதலானவர்கள் சக்கரம் முதலானவற்றை அதி₄ஷ்டா₂நம் செய்து (இயக்கி) குடம் முதலானவற்றை உண்டாக்குவதைக் காண்கிறோம்.இதனடிப் படையில் தான் இந்த உலகத்தைப் படைப்பதற்காக ப்ரதானம் என்கிற மூல ப்ரக்ருதியை அதி₄ஷ்டா₂நம் செய்ய (இயக்க) ஓர் ஈஸ்வரன் இருக்க வேண்டும் என்று அநுமானம் செய்கிறார்கள். ஆனால் அப்படிக் கொண்டால் குற்றம் உள்ளது.

பாசுபத மதத்தில் முரண்பாடுகள்
உலகத்தில் சக்கரம் முதலானவற்றை இயக்கும் குயவன் முதலானவர்கள் அனைவருமே உடலோடு கூடியவர்களாகத் தான் காணப்படுகிறார்கள். எனவே இதனடிப் படையில் ஈஸ்வரனை அநுமானம் செய்தால், அவரும் ப்ரக்ருதியை இயக்கும் பொழுது ஒரு சரீரத்தை உடையவராக இருக்க வேண்டும். ஆனால் உங்கள் மதத்தில் பசுபதிக்கு சரீரம் உண்டு என்பதை ஏற்க வில்லை . மேலும், அப்படியே சரீரம் இருப்பதை ஏற்றாலும், அது நித்யமானது என்று கூறினால், பல பகுதிகளைக் கொண்ட ஒரு பொருள் நித்யமானதாகவும் இருக்கலாம் என்று ஆகி விடும். அவ்வாறாயின், இந்த உலகமும் அதே போல் நித்யமானது என்றே கூறி விடலாம், எதற்காக இது படைக்கப் பட்டது என்று ஏற்க வேண்டும்? என்கிற கேள்வி எழும். அந்த சரீரம் அநித்யமானது என்று கொண்டால், அதைப் படைக்க ஈஸ்வரனுக்கு மற்றொரு சரீரம் வேண்டும், அதைப் படைக்க மற்றொரு சரீரம் வேண்டும் என்று முடிவில்லாமல் சொல்ல வேண்டியபடியால் அநவஸ்தா₂ என்கிற தோஷம் ஏற்படும்.

(ஆத்ம யோனித்வ அதிகரணம் -1-1-3- கீழேயே பார்த்தோம் – உடம்பு நித்தியமாக இருக்க முடியாதே -படைக்கப் பட்டது என்றாலே அநித்யமாகவே இருக்க வேண்டும் -)

3–கரணவத் சேத் ந போ₄கா₃தி₃ப்₄: – “கருவியைப் போல் என்றால், அது பொருந்தாது; போகம்
முதலானவை ஏற்படுகிற படியால்”

அவர்கள் கேட்கிறார்கள் – உடல் இல்லாமலேயே ஜீவாத்மா தன் உடலையும் புலன்களையும் இயக்குவது போல் பசுபதி ப்ரதானத்தை இயக்கலாமே ? என்று. இதற்கு வ்யாஸரின் பதில் – ஜீவாத்மா உடலை இயக்குவது பாப-புண்யம் என்கிற கர்மத்தின் காரணமாக. எனவே அதுபோல் பசுபதிக்கு உடல் உள்ளது என்று சொன்னால் அவருக்கும் பாப புண்யங்கள் வந்து விடும். அதன் விளைவாக, உலகத்தில் இன்ப துன்பங்களையும் அவர் அநுபவிக்க வேண்டி வரும்.

4- அந்தவத்வம் அஸர்வஜ்ஞதா ச – “முடிவுடைமையும் அஸர்வஜ்ஞதையும் ஏற்படும்”
பசுபதிக்கு புண்ய-பாபங்கள் என்கிற கர்மங்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொண்டால், அப்போது அவருக்கும் ஜீவாத்மாவைப் போல் பிறப்பிறப்புக்கள், ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் முதலான குறைபாடுகள் ஏற்பட்டு விடும். மேலும் அவர் ஸர்வஜ்ஞன் (அனைத்தையும் அறிபவர்) என்று சொல்வதும் பொருந்தாது, ஜீவாத்மாவைப் போல் ஆனபடியால்.
ஆக, பல விதமான முரண்பாடுகள் இந்த மதங்களில் உள்ளபடியால் இவை தள்ளத் தகுந்தவை என்கிறார் வ்யாஸர்.


2.2.8 உத்பத்த்யஸம்ப₄வாதி₄கரணம்-பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மை -அதிகரண த்தின் ஸங்கதி-இதுவரை இந்தப் பாதத்தில் ஸாங்க்யர்கள், வைசேஷிகர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பாசுபதர்கள் என்பவர்களின் மதங்களை எடுத்து அவற்றில் இருக்கும் குற்றங்களையும் பொருந்தாமைகளையும் வேத வ்யாஸர் காட்டினார். இந்த பாதத்தின் இறுதியான இவ்வதிகரணத்தில் பாஞ்ஜராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை வேத வ்யாஸர் நிரூபிக்கிறார்.

ஸந்தேகம் – இந்த பாதத்திலேயே ஒவ்வொரு அதிகரணத்திலும் வேதத்துக்கு முரண்பட்ட மற்ற மதங்களை கண்டனம் செய்து கொண்டு வருகிறார் வேத வ்யாஸர். அந்த வரிசையில் பார்த்தால், இந்த அதிகரணத்திலும் பாஞ்சராத்ர ஆகமத்தைக் கண்டிக்கத்தானே வேண்டும்? எப்படி அதன் உண்மைத் தன்மையை நிரூபிப்பது இந்த பாதத்தில் செய்யப்படமுடியும்?

பதில் – இந்தப் பாதத்தின் குறிக்கோள் வேதத்துக்கு முரண்பட்ட மதங்களை கண்டிப்பது என்பதே அல்ல –
முதல் அத்தியாயத்தில் உபநிஷத் வாக்கியங்களை ஆராய்ந்து வேத வ்யாஸர் ஒரு முடிவுக்கு வந்தார் –
“உலகமனைத்துக்கும் முழு முதற்காரணம் பரமாத்மாவே ” என்று. அந்த முடிவை வலுப் படுத்துவது தான் இந்தப் பாதத்தினுடைய குறிக்கோள். அதில் முதல் ஏழு அதிகரணங்களாலே இந்த முடிவுக்கு முரண்பட்ட மதங்களை எடுத்து அவற்றை தவறு என்று நிரூபிப்பதன் மூலம் நாம் எடுத்த முடிவு சரியானது தான் என்று வலுப்படுத்தினார். இந்தக் கடைசி அதிகரணத்திலும், பாஞ்ச ராத்திர ஆகமம் உண்மையானது என்று நிரூபிப்பதன் மூலம் அந்த பாஞ்சராத்ர ஆகமத்திலும் பரமாத்மாவே உலகத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகிறபடியால் நாம் வேதாந்தத்திலிருந்து அடைந்த முடிவு மேலும் வலுவடைகிறது. ஆகையால் இந்த அதிகரணமும் இந்தப் பாதத்தில் இடம் பெறுவதில் எந்த முரண்பாடும் இல்லை . மற்ற மதங்களைக் கண்டிப்பதும் சரி, பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை நிலை நாட்டுவதும் சரி, இரண்டுமே பரமாத்மாவே ஜகத்துக்குக் காரணம் என்ற முடிவை வலுப்படுத்து வதற்காகத்தான்.

(ஆகம பிராமாண்யம் -ஆளவந்தார் -இத்தையே கை விளக்காகக் கொண்டு நிரூபணம்-இரண்டு பூர்வபக்ஷ ஸூத்ரங்கள் -இரண்டு ஸித்தாந்த ஸூத்ரங்கள்)

பூர்வ பக்ஷியின் வாதம்
பூர்வ பக்ஷம் – இவ்வதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷத்தைக் கூறுகின்றன.
1-உத்த்பத் யஸம்பவாத் –

“ (ஜீவாத்மாவுக்கு) உண்டாக்கம் இருக்க முடியாதபடியால் (பாஞ்சராத்ரம் உண்மையானதல்ல)”
பாஞ்சராத்ர ஆகமத்தில் இவ்வாறு ஒரு வாக்கியம் உள்ளது –
பரம காரணாத் பர ப்₃ரஹ்ம பூ₄தாத் வாஸுதே₃வாத் ஸங்கர்ஷண : நாம ஜீவ: ஜாயதே | ஸங்கர்ஷணாத்
ப்ரத்₃யும்ந ஸம்ஜ்ஞம் மந: ஜாயதே | தஸ்மாத் அநிருத்₃த₄ ஸம்ஜ்ஞ: அஹங்கார: ஜாயதே |

இதன் பொருள் – “முழு முதற் காரணமான பர ப்ரஹ்மமான வாஸுதேவனிடமிருந்து ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார். அவரிடமிருந்து ப்ரத்யும்னன் என்ற மனது உண்டாகிறது. அதிலிருந்து அநிருத்தன் என்ற அஹங்காரம் உண்டாகிறது”
இதில் “வாஸுதேவனிடமிருந்து ஜீவாத்மா உண்டாகிறார்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேதாந்தத்திலோ (्ந ஜாயதே | ம்ரியதே வா விபஶ்சித்) அதாவது ஜீவாத்மா உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை -அவர் நித்யமானவர் என்று கூறப்படுகிறது. எனவே இக் கருத்துக்கு முரண்படும் பாஞ்சராத்ரம் உண்மையானதல்ல,

2- ந ச கர்து: கரணம் – “கர்த்தாவிடமிருந்து கரணம் உண்டாகாத படியாலும்”
கர்த்தா என்றால் செயல்களைச் செய்பவரான ஜீவாத்மா. கரணம் என்றால் அதற்குப் பயன்படும் கருவியான மனது. இந்த வாக்யத்தின் அடுத்த பகுதியில் “ஜீவனிடமிருந்து மனது உண்டாகிறது” என்று சொல்லப்படுகிறது. இதுவும் வேதத்துக்கு முரணானது. வேதத்தில் ஸாத்த்விக அஹங்காரம் என்ற அசேதனப் பொருளிலிருந்து தான் மனது உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது, ஜீவாத்மாவிடமிருந்தல்ல. எனவே பாஞ்சராத்ரத்தில் உள்ள இக் கருத்தும் தவறானது தான்.

ஆக இப்படி பல இடங்களில் வேதத்தோடு முரண்படுகிறபடியால் பாஞ்சராத்ரமும் ஸாங்க்யம், பாசுபதம் முதலான மற்ற தந்த்ரங்கள் போல் தள்ளத் தகுந்ததே , இது ப்ரமாணமாக இருக்க முடியாது என்பது பூர்வ பக்ஷம்.

வேதத்தோடு முரண்பாடு இல்லை
ஸித்தாந்தம் – இந்தப் பூர்வ பக்ஷத்தை அடுத்த இரண்டு ஸூத்ரங்களால் வேத வ்யாஸர் கண்டிக்கிறார்.
3-விஜ்ஞாநாதி₃ பா₄வே வா தத₃ப்ரதிஷேத₄:

“பரமாத்மாவாகவே இருக்கிற படியால் பாஞ்சராத்ர ஆகமத்தின் ப்ராமாண்யம் (உண்மைத்தன்மை ) கண்டிக்கத் தகுந்ததல்ல”
தத் – பாஞ்சராத்ர ஆகமத்தின் உண்மைத் தன்மையை
அப்ரதிஷேத₄: – கண்டிக்க முடியாது
விஜ்ஞாநாதி₃ பா₄வே – (ஸங்கர்ஷணன் முதலான வடிவங்கள்) பரமாத்மாவாகவே இருக்கிறபடியால்.

விஜ்ஞாநம் என்றால் அறிவே வடிவமானது. ஆதி₃ என்றால் உலகத்தையே உண்டு ஸம்ஹாரம் செய்யக் கூடியவர்.-எனவே ’விஜ்ஞாநாதி₃’ என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது. பா₄வம் என்றால் அவரது தன்மை , அவராக இருத்தல். விஜ்ஞாநாதி₃பா₄வம் என்றால் பரமாத்மாவாகவே இருத்தல்.-ஸங்கர்ஷணன் ப்ரத்யும்னன் முதலானவர்கள் பரமாத்மாவாகவே இருக்கிறபடியால் இதில் வேதத்துக்கு முரணாக ஜீவாத்மாவுக்கோ மனதுக்கோ உண்டாக்கம் சொல்லப்படவே இல்லை . எனவே பாஞ்சராத்ர ஆகமம் ப்ரமாணம் அல்ல என்று கூற முடியாது என்கிறார் வ்யாஸர்.

பூர்வபஷி காட்டிய வாக்கியங்களின் பொருளை உண்மையாகப் புரிந்து கொள்வதற்கு முதலில் பாஞ்சராத்ர ஆகமத்தின் அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். ஆகமம் என்று சொன்னாலே அதில் சாதுராத்ம்யம் என்பதைப் பற்றின உபாஸனம் சொல்லப்பட்டிருக்கும். சாதுராத்ம்யம் என்றால் பகவான் தன்னையே நான்கு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டு இருக்கும் நிலை –வாஸுதேவன் என்ற பரமாத்மா வைகுந்தத்தில் பரரூபம் என்ற வடிவத்தோடு எப்போதும் இருக்கிறார். அதற்கடுத்ததாக, உலகத்தைப் படைத்து, காத்து அழிப்பதன் பொருட்டு தானே வ்யூஹ மூர்த்திகள் என்ற நான்கு வடிவங்களை எடுத்துக் கொள்கிறார். அவையாவன வ்யூஹ வாஸுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அனிருத்தன் என்பவை –

(கண்ணனின் திருக் குமாரர் திருப் பேரானார் இதே பெயரான ப்ரத்யும்னன் அநிருத்தன் -அவர்கள் வேறு -இவர்கள் வ்யூஹ மூர்த்திகள் -)

ராமன், கண்ணன் என்றெல்லாம் எப்படி பகவான் அவதரிக்கிறாரோ , அதே போல் நான்கு வ்யூஹ மூர்த்திகளாகவும் அவரே தான் அவதாரங்களை எடுக்கிறார், அதாவது வடிவங்களை எடுத்துக் கொள்கிறார். அப்படி இருக்கும் நாலு வடிவங்களை உபாஸிப்பது என்பது பாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு முக்கியமான கோட்பாடு.

(விபவங்களை பூஜிக்க பூஜிக்க -வ்யூஹ மூர்த்திகளை பூஜிக்கத் தொடங்கி -மேல் பர வாஸூதேவனைப் பூஜிக்கத் தொடங்குவோம் -இதுவே படிக்கட்டு–உபாஸனத்துக்கு எளிதாக ஆகவே வ்யூஹ அவதாரங்கள் –

ஆகையால் இந்த வாக்யத்திலும் முழு முதற் காரணமான வாஸுதேவனிடமிருந்து ஸங்கர்ஷணன் உண்டானார் என்று சொல்வது ஜீவனுடைய உண்டாக்கத்தைப் பற்றிப் பேசவே இல்லை – பகவான் ஸங்கர்ஷணன் என்று அவதாரம் எடுப்பதைச் சொல்கிறது. அவரிடமிருந்து ப்ரத்யும்னன் உண்டானார் என்று சொல்வது மனதின் உண்டாக்கத்தைப் பற்றிப் பேசவே இல்லை –அடுத்த அவதாரமான ப்ரத்யும்னன் என்கிற வடிவத்தைப் பற்றிச் சொல்கிறது. ஆகவே இந்த வாக்கியங்களில் எங்கும் ஜீவாத்மாவோ மனதோ உண்டாக்கப்படுவதைப் பற்றின பேச்சே இல்லை – ஆகையால் வேதத்தோடு இந்த வாக்கியங்கள் முரண்படுகின்றன என்று சொல்லுவது தவறானது.

கேள்வி – அப்படி இருப்பின் “ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார்”, “ப்ரத்யும்னன் என்கிற மனது
உண்டாகிறது” என்று ’ஜீவன்’, ’மனது’ முதலான சொற்கள் எப்படிப் பொருந்துகின்றன? பரமாத்மாவின்
வடிவங்களான ஸங்கர்ஷணனும் ப்ரத்யும்னனும் ஜீவனாகவோ மனதாகவோ இருக்க முடியாதே ?

பதில் – இந்த ஆகமத்திலேயே இதற்கு விடை உள்ளது. ஸங்கர்ஷணன் என்ற அவதாரம் தான் ஜீவாத்மாக்களை எல்லாம் அதிஷ்டானம் செய்து இயக்கக் கூடியவர். அதனால் “ஸங்கர்ஷணன் என்ற ஜீவன் உண்டாகிறார்” என்ற வாக்யத்துக்கு “ஜீவர்களை இயக்கக் கூடியவரான ஸங்கர்ஷணன் உண்டாகிறார்” என்று பொருள். “ப்ரத்யும்னன் என்கிற மனது உண்டாகிறது” என்ற வாக்யத்துக்கு “மனதை இயக்கக் கூடியவரான ப்ரத்யும்னன் உண்டாகிறார்” என்று பொருள். “அனிருத்தன் என்கிற அஹங்காரம் உண்டாகிறது” என்ற வாக்கியத்துக்கு “அஹங்காரத்தை இயக்கக் கூடியவரான அனிருத்தன் உண்டாகிறார்” என்று பொருள். ஆகையால் நீங்கள் சொன்னபடி வேதத்துக்கு
முரண்பட்ட கருத்து இந்த இடத்தில் எதுவும் சொல்லப்படவில்லை . அதனால் பாஞ்சராத்ர ஆகமத்தின்
உண்மைத் தன்மையை கண்டிப்பது தகாதது.

வேதத்தோடு ஒற்றுமை
4–விப்ரதிஷேதா₄த் ச –
“(ஜீவாத்மாவின் உண்டாக்கத்தை பாஞ்சராத்ர ஆகமம்) கண்டிக்கிற படியாலும்”
பாஞ்சராத்ர ஆகமத்திலேயே இவ்வாறு மூல ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மாக்களின் தன்மைகள் சொல்லப் படுகின்றன –
அசேதநா பரார்தா₂ ச நித்யா ஸதத விக்ரியா । த்ரிகு₃ணா கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே ॥
அறிவற்றது, பிறருக்காக இருப்பது, நித்யமானது, எப்போதும் மாற்றம் அடைவது, ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொ ண்டது, ஜீவாத்மாவுக்கு ஷேத்ரமாக (விளை நிலமாக) இருப்பது – இதுவே ப்ரக்ருதியின் ஸ்வரூபம்.

வ்யாப்தி ரூபேண ஸம்ப₃ந்த₄: தஸ்யாஶ்ச புருஷஸ்ய ச । ஸ ஹி அநாதி₃: அநந்தஶ்ச பரமார்தே₂ந நிஶ்சித: ॥ அந்தப் ப்ரக்ருதிக்கும் புருஷனுக்கும் உடைய தொடர்பு வ்யாப்தி வடிவமானது, அதாவது ஜீவாத்மா ஒவ்வொரு அசேதனப் பொருளுக்குள்ளும் வ்யாபித்து (புகுந்து) இருக்கிறார். அந்த ஜீவாத்மா ஆதி (தொடக்கம் / உண்டாக்கம்) இல்லாதவர், அந்தம் (முடிவு / அழிவு) இல்லாதவர் – இவ்வாறு உண்மையாக நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆக இவ்வாறு ஜீவாத்மா நித்யமானவர் என்று வேதம் சொல்லும் கருத்தையே பாஞ்சராத்ர ஆகமமும் சொல்கிறபடியால், இதில் ஜீவாத்மா உண்டாவதாகச் சொல்லப்படுகிறது என்று பூர்வபஷி எழுப்பிய கேள்வியே தவறானது. ஆகவே , வேதத்தோடு எந்த முரண்பாடும் இல்லாதபடியாலும், இதை நாராயணனே நேரடியாக ஐந்து இரவுகளில் ரிஷிகளுக்கு உபதேசித்தபடியாலும் ஶ்ரீபாஞ்சராத்ர ஆகமம் முழுமையாக ப்ரமாணமே – அந்த பாஞ்சராத்ர ஆகமத்தில் பரமாத்மாவே உலகமனைத்துக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறபடியால், நாம் முதல் அத்யாயத்தில் உபநிஷத் வாக்யங்களை ஆராய்ந்து எடுத்த முடிவு சரியானது என்று மேலும் உறுதி செய்யப்படுகிறது. அதற்காகத் தான் வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தை இந்தப் பாதத்தில் அமைத்தார்.

இதோடு தர்க்க பாதம் முடிவடைகிறது.

சாண்டில்யர் வேதங்களைப் படித்து புரிந்து கொள்ள இயலாமல் -பாஞ்சராத்ரம் அருளிய வேத சாரத்தைப் படித்து புரிந்து கொண்டார்-தெளிவடைந்தார் -மஹா பாரதத்திலும் பல வாக்யங்களைக் காட்டி வேதத்துடன் ஒத்து உள்ளமை பற்றி அருளுகிறார் –

பாதே அஸ்மின் -காபில –கணபுக் –(வைசேஷிக ) யோகாசாரர் -சூன்ய வாத நிரஸனம் -அர்ஹ சித்தாந்த -உபரோதம் சித்வா -தடைகளைத் தள்ளி —ஸ்ருதி மார்க்கம் வலுவூட்டப்படுகிறது -பாரதம் பஞ்சமோ வேதம் -வ்யாஸர் நிலைநாட்டுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வார்த்தா மாலை -ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள்

December 11, 2025

ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை  பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –

இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –

(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)

(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)

இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –-ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –

—————

முதல் வார்த்தை (பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத்
(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர்-காரார் திருமேனி காணும் அளவும் -சீரார் திருவேங்கடம் -எங்கும் போவார் – –எங்கனே வரும் என்று அறியாமையால் திக்குகள் தோறும் பார்த்து கண் பசை அற யுணர்ந்து -கண்ண நீர் கைகளால் இறைக்கும்-என்கிற தசையும் கழிந்தது -கூப்பிட்டு நாவும் பசை அற யுலர்ந்தது-அத்தலையிலே அவத்யம் நம்மதாம் படியான சம்பந்தத்தை யுடைய நான் லஜ்ஜித்து -இவனை நாட்டார் என் சொல்லுகிறார் என்று லஜ்ஜித்து என்னுதல் -பிரயோஜனார்த்தியாய் கூப்பிடுகை அன்றிக்கே -முறை அறிந்து காண்கைக்கு கூப்பிட்ட நமக்கு உதவின படி அழகிதாய் இருந்தது என்று லஜ்ஜித்து என்னுதல் –அநந்த கிலேச பாஜநம் ஆகையால் விபரீத லக்ஷணை யாதல் -விஷய அனுபவத்தால் களித்து வர்த்திக்கிற தேசம் என்னுதல் -தம்மைப் போலே கூப்பிடக் காணாமையாலே அவனை பெற்று இருக்கிறார்கள் என்னும் நினைவாதல் –இது பிள்ளான் நிர்வாஹம் -விபரீதமாக -குத்தலாக -கூப்பிடாமல் உண்டியே உடையே உகந்து போகிறார்களே -கூப்பிட வில்லை என்றால் அடைந்தார்கள் அன்றோ ––அலமந்தால் -தடுமாறினால் –இரங்கி-உனக்கு அபேக்ஷை இல்லா விட்டால் பர அநர்த்தத்துக்கு இரங்க வேண்டாவோ -ரிஷிகளுக்கு உள்ள ஆன்ரு சம்சயமும் இல்லையோ –யொருநாள் -பல நாள் வேணும் என்கிறேனோ –-நீ -கண்டு கொண்டு நிற்க வேண்டும் வை லக்ஷண்யத்தை யுடைய நீ-யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜ னார்த்தியாய் அழைக்கிறேனோ –-கரு நாயிறுதிக்கும்-கறுத்து இருக்கிற ஆதித்யன் உதிக்கிற-கருமா மாணிக்கம்-நாள் நன்மலைபோல்-அவ்வாதித்யனுடைய உதய கிரி இருக்கிற படி –நீலமாய் பெரு விலையனான ரத்ன பர்வதம் போலே – நாள் மலை -நாள் பூ -என்னுமா போலே தர்ச நீயமான மலை-சுடர்ச் சோதி முடி-மிக்க புகரை யுடைய மயிர் முடி -கறு நாயிறு உதிக்கும் -என்கிற த்ருஷ்டாந்த பலத்தால் –முடி என்று மயிர் முடி யாகிறது –
சேர் சென்னி -அதுக்கு ஆஸ்ரயமான திருமேனி நீல ரத்ன பர்வதம் போலே யாயிற்று இருப்பது –யம்மானே–ஸர்வேஸ்வரனே -நித்ய துக்கியாய் பேர்ந்த சம்சாரி முக்தனாய் சென்றால் தாப ஹரமாக அவனுக்கு செய்வது திருக் குழலை பேணும் அத்தனை –கிம் த்வயா நார்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -என்பது பிரமாணம்- –

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-உறங்கக் கடவ இரவோடு -உறங்காமைக்கு கண்ட பகலொடு வாசி அற நித்திரை என்பது ஓன்று அறிகிறிலள் -கண் துயிலாள் என்னாதே அறியாள் என்கிறது நித்திரையை அறிந்து விரோதி என்று கை விட்ட இளைய பெருமாளின் வாசி சொல்கிறது -இளைய பெருமாளுக்கு முன்பு இல்லை யாகிலும் ஜென்மத்தில் மெய்ப்பாட்டாலே பற்றி விட வேண்டிற்று -இவளுக்கு-பிரணயி நிகள் பகல் உறங்குவர்கள் -இப்படி உபய வ்யாவ்ருத்தமாய் இரவும் பகலும் உறங்காதபடி ஆனாள்-அநித்ரஸ் சததம் ராம -என்கிற உம்முடைய படியை இவள் உடையாள் ஆனாள்-கண் உறங்காமையாலே போது போக்கு அரிதாய் -அதினாலே கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று -இவ்வாற்றாமையில் அவன் வாராது ஆழியான் -என்று அத்யவசித்து -வரும் போது காண்கைக்கு கண்ண நீர் பகையாக ஒண்ணாது என்று அத்தை மாற்றப் பாரா நின்றாள் -கடலைக் கையாலே இறைக்கத் தொடங்குவாரைப் போலே இது என்ன சாஹசம் என்கிறாள் -கடல் கொண்ட கண்ணீர் அறிவி செய்யா நிற்கும் இறே -இவள் கண்ணும் கண்ண நீரும் தாயாருக்கு சுபாஸ்ரயமாய் யாயிற்று இருக்கிறது –கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் –இவள் தர்சன விரோதி என்று மாற்றப் பார்க்கிறாள் இத்தனை –சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;-வந்து தோற்றும் படி – –கூரரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் என்று சொல்லக் கருதி முடியச் சொல்ல மாட்டாமையாலே -விடாய்த்தார் ஹஸ்த முத்திரையால் தண்ணீர் வேண்டுமா போலே அஞ்சலியாலே குறையும் தலைக் கட்டா நின்றாள் -இன்னார் என்று அறியேன் -என்று அறிவு அழிப்பனவும் இவை –செரு ஒண் சக்கரம் சங்கு என்று அறியப் பண்ணும் அவையும் இவை –சங்கு சக்கரம் என்று இயல் ஆனாலோ என்று பிள்ளை திரு நறையூர் அரையர் -பஹு வசனத்துக்கு பொருள் கண்டிலோமீ என்ன –இசையில் தூக்கின இடத்து இரண்டும் இசைந்து கிடைக்கையாலே சொல்லிப் போருகிற படியே சங்கு சக்கரங்கள் என்ன அமையும் -என்று ஆப்பான் நிர்ணயித்தார்–இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை ஏறி கிற கண்களின் அழகை இடைவிடாதே சொல்ல நினைத்து தளரா நின்றாள் -தாமரைக் கண்களால் நோக்காய் -என்கிறபடியே திருக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்று உபக்ரமித்து -ஹஸ்த சேஷ்டையாலும் தலைக் கட்ட மாட்டாதே தளரா நின்றாள் -ராமம் ரக்தாந்த நயன மபஸ்யந்தீ ஸூ துக்கிதா -இங்கனம் தளரலாமோ-தத் தஸ்ய என்று இருக்க வேண்டாவோ என்ன –என்னும்;-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ -அநந்தரம் வரக் காணாமையாலே-இரு நிலம் கைதுழா இருக்கும்;-இம் மஹா பிருத்வி எல்லாம் கைகளால் துழாவா நின்றாள் இறே -பூமிப பரப்பு அடங்க ஒரு பாஜனத்துக்கு உட்பட்ட சந்தனம் போலே யாயிற்று இவள் கைக்கே படுகிறது -சர்வ சக்தியே வேண்டா வாகாதே பூமியை அளக்க -ஆற்றாமையாலும் அளக்கலாம் ஆகாதே –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!-ஜல சர தத்துவங்களும் கூட ஹர்ஷத்தாலே களிக்கும் படியான கோயிலிலே உள்ளவனே -செங்கயல் -இளமையாலே சிவந்த புகரை யுடைய கயல்-இவள் திறந்து –அந்த சத்தவங்களுக்கு ஜலத்தை ஒழிய செல்லாதாப் போலே உம்மை ஒழிய செல்லாத இவள் திறத்து –நிறமும் இழந்து -சஞ்சாரமும் அற்று இறே இவள் கிடக்கிறது –ஏஹி பஸ்ய சரீராணி என்று வடிவைக் காட்டுகிறாள்-திருவரங்கத்தாய்-என் செய்கின்றாயே?-பரமபதத்தில் இருப்பிலோ கேட்க்கிறது-கண்ணுக்கு விஷயமான இடத்தே அன்றோ சாய்ந்து அருளிற்று -இவள் நிறம் பெற்று செருக்கி நடக்கும்படி பண்ணப் பார்த்ததோ -தவிரப் பார்த்ததோ – இவளை அவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ இவ் வூர்ப் படியாகப் பார்த்தாயோ –

சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10-வருகைக்கு சம்பாவனை உண்டான திகைப்பு பார்த்தே நின்று-அலந்தேன்;-வெறுத்தேன் -பரம ஆபதாமபன்ன-என்னும் அளவு இறே-பாவியேன் காண்கின்றிலேன்; ஆபத் சகனாய் இருக்க மஹா பாபியாகையாலே நான் காணப் பெறுகிறிலேன்-காணப் பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம் படி நெஞ்சில் பிரகாசியாது ஒழியத் தான் பெற்றேனோ –பரிபூரணமான ஞானத்தையே ஸ்வரூபமாக யுடைய வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை-எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது
மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

——————————

இரண்டாம் வார்த்தை –(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)
அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன்  இனிப் போய் ஒருவன்
தனக்கு  பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்

புனத்  தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர்  புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3-3- –1-முதலில் சேஷத்வ ஞானம் பிறந்து -(உனக்கு )2-பின்பு சேஷ விருத்தியிலே ஆசை பிறந்து -(பணி )
3-கைங்கர்யமே யாத்ரையாய் -(பணி செய்து-வர்த்தமானம் )-4-அது செய்யாத போது சத்தை குலையும் படியாய் இருக்கும் (பணி செய்து இருக்கும்)-இவை நாலும் சம்சாரிகளுக்கு இல்லை-தவம் உடையேன் –உன் பிரசாதம் உடையேன்-இந்நாலு தசையும் பிறந்த பின்பு –
இவற்றை பொகட்டு புறம்பே போய் –இந்திர ஞாலங்கள் காட்டி புறம்பே தள்ளினாய் ஆகிலும்-பிரம்மா முதலாக பிபீலிக அந்தமாக அதி ஷூத்ரர் இறே –அவர்களிலே ஒருத்தனுக்கு கடைத்தலை நிற்கை –உன் கடைத்தலை இருந்து வாழும் -என்கிற செயலை
அங்கே செய்கை உனக்கு அவத்யம் இறே-உனக்கு தேஜோ ஹானி இறே -எனக்கு இது புதுமை அன்று –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9-நானும் உனக்கு பிரகாரமே –அஹம் மநுரபவம் ஸூர்யச்ச–ப்ருஹத் உபநிஷத் –என்னா நிற்பார்கள் யாயிற்று முக்தர்-மத்தஸ் சர்வமஹம் சர்வம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-85 -என்னா நிற்பார் சம்சாரத்திலே தெளிவுடையார்
அஹம் பிரஹ்மாஸ்மி-நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் என்னலாம் படி இறே சம்பந்தம் இருக்கும் படி-ஸ வாஸூ தேவ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-5-என்றது வாஸூ தேவ சரீரம் என்றபடி இறே–என் உடைமையும் உனக்கு பிரகாரமே–யஸ்யைத தஸ்ய தத்தனம் -ஸ்ரீ மகா பாரதம் –என்னுமா போலே நானே மனு நானே சூர்யன் -சர்வம் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -பிரகார -பிரகாரி பாவ நிபந்தன சாமாநாதி கரண்யம்-என்னிடத்தில் இருந்து தான் எல்லாம் தோற்றிற்று -பிரகலாதன் –ப்ரஹ்ம பிரகாரா அஹம் அஸ்மி -என்று தானே சம்பந்தம் இருக்கும் படி-வாஸூ தேவனே -ஏகம் சதா ஏகம் -அந்யத் அஸ்தி வேறு பட்டது இல்லை லோகம் எல்லாம் அவர் -சரீர சரீரி ஆத்மா பாவ சாமாநாதி கரண்யம்-அனைத்தும் அவனது சொத்து –-வானில் உள்ளார் முறை அறிந்து ஏத்த-நீ -சேஷியான உத்கர்ஷத்தோடே இருக்குமவன் அல்லையோ–மாஞ்சா க்ரோசந்தி போலே -எம் என்று தமக்கும் அவர்களோடே பிராப்தி உண்டாய் இருக்கிற படி-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் -என்கிறார் –

அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-என்னுடைய பிராணன் அவன் கையதே –நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் -மிதுனமானால்-உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –உங்களுக்கு இது அறியப் படாததோ- உங்களுக்கு இது அவ்யுத் பன்னமோ –அஸ்யா தேவ்யா-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-உம்முடைய பிரணயித்வத்தால் நோக்கும் எல்லை கழிந்தது இறே – ஸ்வரூப பிரயுக்தமான கிருபையாலே -அல்லது நோக்க ஒண்ணா தாய்  வந்து விழுந்தது – ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்சி மீளும் எல்லையும் கழிந்தது-தத் தஸ்ய சத்ரு சம்பவேத் –என்று இருக்கும் நிலை கழிந்து –கூப்பிட்டுப் பெற வேண்டும் தசையேயாய் வந்து விழுந்தது -இப்பாட்டால் ஸ்வரூபத்தாலே பெற இருக்கை அன்றிக்கே – ஸ்வரூபத்தை அழித்தாகிலும் பெற வேண்டும்படி -ஆற்றாமை கரை புரண்டபடி சொல்லுகிறது –

சேமம் செம் கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்கள் தோறும் எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து  தண் என்றதே –27-இவ் ஆத்மாவுக்கு வகுத்த சேஷியான ஸர்வேஸ்வரனுடைய கிருபையே இதுக்கு ரஷை-அவனே இதுக்கு ரஷையாமோபாதி– இவன் தானும் தனக்கு  அநர்த்த அவஹானாய் இருக்கும்-எங்கனே என்னில் —ஜகத்தை உண்டாக்குகையும் ,-சேதனருக்கு கரண களேபராதிகளை கொடுத்து
பக்த்யாதி உபாயங்களை உண்டாக்கி திரு மலை தொடக்கமாக உகந்து அருளின தேசங்களிலே-சந்நிஹிதனாய் நிற்கச் செய்தேயும் இத்தை கால் கடை கொண்டு ,
தேக ஆத்மா அபிமானம்-பண்ணும் படி இறே தன் படி இருப்பது-மாமேகம் -என்று
தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அத்தை அறுத்து விழ விடும் அவனாய் இறே  இருப்பது அவன் படி-இவன் சைதன்யம் -தன் கழுத்தில் தாம்பை இட்டு கொள்ளும் அளவில்-அவன் சைதன்யம்-உளன் கண்டாய் நல் நெஞ்சே –முதல் திரு அந்தாதி -69-என்னும் படி-இவ் அளவில் இவனை எடுத்துக் கொள்ளுகைக்காய் இருக்கும்–தான் தனக்கு தஞ்சம் அல்லாதவோபாதி பிறரும் தனக்கு தஞ்சம் அன்று-அவன் கிருபை அல்லது இல்லை —
அவ் வருள் அல்லன அருளும் அல்ல —-இடையீடான பக்தியாதிகளும் வேண்டா-

கைத் தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்து கொண்டு  என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த் தலை எழு நாற்றுப் போலே   அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே – 3-7-9-செய்த் தலையிலே விளைந்த நாற்று உடையவன் வேண்டினபடி விநியோகம் கொள்ளுமா போலே இவளையும் அவன் வேண்டினபடி செய்து கொள்ள-கழுத்தே கட்டளையாக நீரை பருகையாலே கறுத்து பெருத்து இருந்துள்ள மேகம் போலே இருக்கிற வடிவை உடையவன் பக்கலிலே இவள் வளரும்படியாக நீங்களே சேர்த்து விடும் கோள்-என்று இப்படி பந்துக்கள் சொன்னார்கள்

————————————-

மூன்றாம் வார்த்தை –
இப்பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை எனபது –

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68–பரிஹர மதுசூதன பிரபன்னான் -என்கிறபடியே
ஸ்வாமி யினுடைய திரு நாமத்தை மறக்கவுமாம் – தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிகை
இவன் பிரபன்னன் ஆகையாவது – பர்த்தாவின் பக்கல் அனுகூல்யம் கிரமத்தாலே பிறக்கவுமாம் –பர்தரந்தர பரிக்ரகம் இறே அவனுக்கு ஆகாமைக்கு அடி-

சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-உன்னை ஒழிந்த விஷயங்களில் பிராவண்யத்தைத் தவிர்ந்து -நீ அன்றிக்கே ஒழிய அமையும் நான் மேல் விழுகைக்கு-வகுத்த திருவடிகளில் அனுபவத்தை -தாழ்ச்சி என்னாதே -வாழ்ச்சி -என்கிறார் – வகுத்த விஷயமுமாய் போக்யமுமாய் இருக்கையாலே –ச்சாயா வா சத்துவம் அநு கச்சேத்–வா ஸூ தேவா தருச்சியா –என்னக் கடவது இறே-சர்வம் பரவசம் துக்கம் -என்று விஷயாந்தரம் அப்ராப்தம் ஆகையால் துக்க ரூபம் என்று இட்டு தாழ்ச்சி என்கிறார்-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய்!
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-காட்டும் இடத்திலும் ஒப்பனையோடே காட்ட வேணும் -பிரதிபக்ஷத்தின் மேலே ஏவ சாணையில் இட்டால் போலே கூர்மை மிக்கு இருக்கிற திரு வாழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் வெளுப்போடே திரு வாழி யிலே கூர்மையோடு வாசி அற இவருக்கு அழகுக்கு உறுப்பாய் இருக்கிறது இறே –ஜகதாகாரத்தையைக் காட்டின இத்தால் அதிருப்தனாய் நிர்பந்திக்கும் படி பாபத்தைப் பண்ணின என் பக்கலிலே -செய்தபடி கண்டு இருக்கக் கடவதாய் இருக்க அத்யபி நிவேசத்தை பண்ணுகை இறே பாபம்-அசாதாரண விக்ரஹத்தைக் காட்ட வேணும் -திவ்யாயுதங்களோடே காட்ட வேணும் -நீயே வந்து காட்ட வேணும் -என்கிறார்

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே— 5-2-தானும் அவனும் அறிந்ததாகப் பிறக்கும் பிரணய கலஹங்களுக்கும்-பரிஹாரங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே- அப்படி அன்றியே இவர்கள் கார்யம் கொண்டு கார்யம் இல்லாத உதாசீனரும் இகழும் படிக்கு ஈடான அசஹ்யங்களை அவன் பண்ணினாலும்-பிரேமத்தை யிட்டு நிரூபிக்க வேண்டு இருக்குமவன்-இவ்வருகு அவன் பண்ணும் அபகாரங்களை காற்கடைக் கொண்டு சம்பந்தத்தில் முதல் அடியிலே நினைத்து இருக்குமவளைப் போலே-அக்னிக்கு அந்தர்யாமியான ஸ்ரீ சர்வேஸ்வரனை சாஷியாக கொண்டவனை அல்லது அறியாதவளைப் போலே-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே -பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

———————

நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுமரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத்தேவர் தம் துவக்கைப் பாரது ஒழிவதே (
சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே)-என்றும் –
பரம் தாமத்தை பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதி யாம் போலேயும்
ஸ்தா லீஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும்
(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய் இருக்கிற திருக் கடல் மல்லையிலே-ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து-இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம் பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு செய்ய அடுப்பது –இது செய்யாதே இருப்பாரை –அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –இறைப் பொழுதும் எண்ணோமே– எண்ணப் பெற்றிலோம் என்ற அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )அவஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே-வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .(அவஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-பகவத் ஜ்ஞானமும் வேண்டா –வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா-அ வைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

——————–

ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-அநந்ய பிரயோஜனர் வர்த்திக்கும் தேசம்-மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர் வாழ்-திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் -4-8-2-என்னக் கடவது இறே-அத்தேசம் வாஸம் தானே வாழ்ச்சி –வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் –8-9-என்னக் கடவது இறே –நளிர் அரங்கம்நளிர் -குளிர்த்தி -ஸ்ரமஹரமாய் -தாப த்ரயங்களும் தட்டாத தேசம்-நாகணையான்-அனந்த சாயி-என்னை ஒழியவும் படுக்கை பொருந்துவதே –

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-அற்ற பற்றர் -என்றும் பாட பேதம் -புருஷார்த்தாந்தரங்களிலும் சாதநாந்தரங்களிலும் பற்று அற்று-பெரிய பெருமாளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று இருக்குமவர்கள் –த்ரிதண்ட தாரிகளாய் பகவத் விஷயத்தில் ஏகாந்த ஹ்ர்தயராய்-பகவத் வ்யதிர்க்தங்களை த்ரணமாக புத்தி பண்ணும் சந்நியாசிகள் என்றுமாம்-சுற்றி வாழும் –சர்வ அவஸ்தையிலும் விடாதே கோயில் வாசமே வாழ்வாக இருக்குமவர்கள் என்னுதல் -தேச ஸம்ர்த்தியை மநோரதித்து அதுவே போக்யமாக நினைத்து இருக்குமவர்கள் என்னுதல் –சுற்றல்-எண்ணல்-அம் தண் நீர் அரங்கமே ––தர்சநீயமாய் ஸ்ரமஹரமான ஜல ஸம்ர்த்தியை வுடைய கோயில் –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே-அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-மா முகில்காள்-ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே- அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே-பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் – புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ -6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்பாம்பணையான் வார்த்தை என்னே- படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–என்னாயனுடைய மலை மேல்
என்னாயனுடைய ஸ்லாக்யமான ஸ்ரீ திருமலையிலே-ஏதேனும் ஆவேனே – ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும்-அது என் என்னில் –சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை-அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –நாம் அறிய வேண்டா
திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா
ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

————

ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா -என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(
பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-தெருளுதியாகில்-அறிவுடைய யாகில் -ஞான இந்திரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான ஏற்றம் உண்டாகில் நெஞ்சே வணங்கு –-உபகாரகனான அவன் திருவடிகளில் விழப் பார்-இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாக புத்தி பண்ணு அறிந்து-அவன் விட அடான் என்று அறிந்து-உனக்கு ஒரு போதாக அயோக்யதா அனுசந்தானத்தாலே அகல நினைப்பதொரு அறிவு கேடு உண்டு -அவ்வளவிலும் விடாதே கிடாய்-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே-முன்பு உபகரித்து நின்ற படி கண்டாயே
இவ்விஷயத்தை விட்டால் எத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்க –

————————

ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

——————–

எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் -விரித்துரைத்த வெநநாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான்  போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல்திருவந்தாதி -33- என்றும் இருக்கை –

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே-14-அவன் தங்களுக்காக வந்து கண் வளரா நிற்க – அவன் இருந்த தேசத்தை வாயாலே சொல்லவும் கூட மாட்டாத மூர்க்கர் –விழுக்காடு அறியாதவர்கள்-அதாகிறது-நரக வாசம் கர்ப்ப வாசம் -முதலானவை பிடரியைப் பிடித்துக் கொண்டு நிற்க கேவலம் தேக போஷண பரராய் இருக்குமவர்கள் –திருவரங்கம் என்ன மாட்டாத மூர்க்கராய் இருப்பார் ஜீவிக்கிறது வழி அல்லா வழியே அபஹரித்து ஜீவிக்கிறார்கள் இத்தனை – அத்தை விலக்கி நாய்க்கு இடும்கோள்-தங்களை உத்தேசித்து வந்து கண் வளர்ந்து அருளுகிற அந்த உபகாரத்தை
அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி ஒரு நாள் ஒரு பிடி சோறு இட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்கும் அத்தனை க்ருதஞ்ஞமான நாய்க்கு இடும் கோள்-இது தான் –“நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.-தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிறஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப் பற்றிக் கிடக்குமத்தனை நன்றி யறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.-நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;
அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;
பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு? என்று மங்கிக்க வேண்டாயோ-அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று-அஸத்துக்களின் பொருளைப் பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திரா நின்றதிறே;-இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாந பர்யந்தம் வெளிக் காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.
——————-

ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு  நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும் –
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –
-(தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-நிரதிசய ஸூக ரூபமான வ்ர்த்தியைச் சொல்லுகிறது-வ்யதிரிக்த விஷயங்களில் அடிமை -துராராதனம் ஆகையாலும் -துஸ்சகம் ஆகையாலும் –அத்யல்ப பலம் ஆகையாலும் -துக்க ரூபமாய் இறே இருப்பது
சர்வம் பரவசம் துக்கம் -சேவாஸ் ஸ்வவ்ருத்தி –நாய் தொழில் -என்னக் கடவது இறே
இவ்விஷயம் தன்னிலும் ப்ரயோஜனாந்த பரராய் இழிந்தால் பலம் பந்தகம் ஆகையாலும்
அநந்ய பிரயோஜநரோ பாதி -அநவரத பாவனையும் -அந்திம பிரத்யமும் -வேண்டுகை யாலும்-துக்க ப்ராயமுமாய் இருக்கும் -சாதனாந்தர நிஷ்டனுக்கும் கர்த்தவ்ய புத்தியாலே ரசம் இல்லை –இக்குறைகள் ஒன்றும் இன்றிக்கே -ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர ச்ம்ர்த்தியை ஆஸாசிக்க-சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் –என்று ப்ரீதனாக -இவனுக்கு அந்த ப்ரீதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –பட்டு -என்பது- உவரிக்கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற சம்சாரத்திலே பகவத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்-நின்றீர்- வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் ச்ம்ர்த்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –உள்ளீரேல்-ஸ மஹாத்மா ஸூ துர்லப -என்று அநந்ய பிரயோஜனரை கிடையாது என்று சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரம் ஆகையாலே மங்களா சாசனத்துக்கு ஆள் தேட்டமாய் இ றே இருப்பது-நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும் பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்தேட்டமாய் இறே இருப்பது –-இந்த யதி -சப்தத்தாலே -சம்சாரத்தில் வைஷ்ணத்வம் துர்லபம் என்றது ஆய்த்து-அநந்ய பிரயோஜனரான வைஷ்ணவர்களும் -நம்மை விரும்புவார் சிலர் உண்டாவதே -என்று சந்நிஹிதராக வந்து அவர்களுடைய ஸ்வரூப ஸ்வாபவம் ஆராய்வதற்கு முன்பே அவர்களோடு கலந்து கொடு நிற்க வேண்டும்படியான த்வரை சொல்கிறது

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2—கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர,
பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்-பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே -என்னும் பாகவத விஷயத்திலே சபலர் எல்லாரும் திரளுங்கோள்-இந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய கூட்டத்தை அநுபவிப்பதற்கு அநுகூலர் எல்லாரும் வாருங்கோள் என்கிறார்.-காணப் பெற்றோம். பிரீதியின் மிகுதியாலே, பலகாலும் சொல்லுகிறார்.

எல்லே இளங்கிளியே யின்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே யுன்வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-15-உங்களை ஒழிய எனக்கு ஒரு ஸூகம் உண்டோ –நம்மில் சிலர் உறங்கிக் கிடக்க போக ஒண்ணாது என்னும் இன்னாப்பாலே சொன்னேன் அத்தனை அன்றோ –உணர அறியாத சிறு பெண்களும் உணர்ந்தால் புறப்படுவதாக இருந்தேன் –எல்லாரும் உணர்ந்து புறப்பட்டார்களோ என்ன-போந்தார்
கிருஷ்ண விரஹத்தாலே துவண்ட பெண்கள் அடைய உன்னைக் காண்கைக்கு
உன் வாசலிலே வந்து கிடந்தார்கள் என்ன-ஆகில் உள்ளேபுகுர விடுங்கோள் -என்ன –போந்து எண்ணிக் கோள் –புறப்பட்டு மெய்ப்பாட்டுக் கொள்-மெய்க்காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம்-தனித் தனியே பார்க்கையும் அனுபவிக்கையும் 

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே
?—1-10-ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து – அத் திக்கைப் பார்த்து கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாளுடைய உள்ளில் திரு முற்றத்திலே-நிரதிசய ஆனந்த உக்தராய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைக் கண்டு-அபிஷிர்த ஷத்ரியன் -என்று என்னை நினையாதே அவர்களிலே ஒருவனாக இசைந்து-என்னைச் சிலர் சேவிக்க நான் நியாமகனாய் இருக்கும் இருப்பை ஒழிந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளிலே சேவித்து இருப்பது என்றோ –

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-
உபகரிக்கும் இடத்தில் அத்விதீயாரான பரதேவதை யுடைய ஸூ குமாரமான திருவடிகளின் கீழே புகுகை தவிர்ந்து -தான் இல்லாத வன்று ஹிதம் பார்த்த உபகாரகனாய் -போக்ய பூதனானவனுடைய திருவடிகளை பற்றுகை இறே பிராப்தம் -அது எனக்கு வேண்டா -வேண்டுவது தான் எது என்னில்-அவன் அடியார்-அவனுடைய குணங்களிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய-நனி மாக் கலவி இன்பமே-மிக்க வேண்டற்பாடு யுடைத்தான சம்ச்லேஷ ஸூ கமே– –நனி -மிகுதி – மா -வேண்டற்பாடு-நாளும் வாய்க்க -நாள் தோறும் வாய்க்க வேணும் என்னுதல் -பகவத் பிராப்தி யுண்டானாலும் இதுவே வாய்க்க வேணும் -என்னுதல் –நங்கட்கே–புருஷார்த்தத்தில் சரமாவதியை அர்த்தித்த நமக்கு -அவனை அணைக்க வேண்டா -அவன் காலைத் தலையிலே வைக்க அமையும் -என்னுமா போலே –

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
-8-10-3-ஸ்ரீ வாமனனுடைய மிக்க நல்ல பரிமளத்தை யுடைய நாட் பூ போலே இருக்கிற திருவடிக் கீழ் புகுகை உறுமோ எனக்கு -பகவத் விஷயத்தில் வெளிறு கழிந்த அம்சமான இதுவாயிற்று -பாகவத புருஷார்த்தத்தை குறித்து இவருக்கு கழிப்பனாகிறது-அன்றி -அத்தை தவிர்ந்து –அவன் அடியார்-ஸ்ரீ வாமனனுடைய ஸுந்தர்ய சேஷ்டிதாதிகளிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்-சிறுமா மனிசராய் -ப்ரபாவங்களைப் பார்த்தால் -பரிச்சேதிக்கப் போகாதே -வடிவைப் பார்த்தால் நம்மோடு ஒக்கச் சொல்லலாம் படி இருக்கை -சர்வேஸ்வரன் மனுஷ்ய சஜாதீயனாய் முகம் கொடுத்து கொண்டு இருக்குமா போலே யாயிற்று இவர்களும் -சிறுமை பெருமை யாகிற விருத்த தர்ம த்வய சமாவேசம் ஏக வ்யக்தியில் கூடுமோ -என்று பட்டர் ஆழ்வானைக் கேட்க -நம்மோடு ஓக்க அன்ன பானாதிகள் தாரகம் என்னலாய்-பகவத் விஷயத்தில் அவகாஹனம் பார்த்தால் -நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள் என்னலாம் படி இருக்கிற -ஆண்டான் -அருளாளப் பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ கோவிந்த பெருமாளார்-இவர்கள் காண் சிறு மா மனுசர் ஆகிறார் -என்று பணித்தான் -என்னை அடிமை கொண்டவர்கள் –என்னை யாண்டார்-இங்கே திரியவே-கண் வட்டத்தில் சஞ்சரியா நிற்க –அன்றி-அவர்களைத் தவிர்ந்து —நறு மா விரை நாள் மலரடிக் கீழ்—உறுமோ பாவியேனுக்கு–இவருடைய கண்ணி நுண் சிறுத் தாம்பு இருக்கிற படி -ஸ்ரீ மதுரகவிகளுக்கும் அடி இது இறே –பொய் நின்ற ஞானம் தொடங்கி முனியே நான்முகன் அளவும் அனுவர்த்தித்த விடத்து ஆழ்வார் தமக்கு பிரயோஜன ரூபமாக சொன்ன பயிலும் சுடர் ஒளி-நெடுமாற்கு அடிமையே தமக்கு தஞ்சமாக பற்றினார் -யான்யஸ்மாகம் ஸூ சரிதாநி -என்னக் கடவது இறே –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-குறைவற்ற ஐஸ்வரியங்களையுடைய இராசாக்களைக் காணில், ‘திருமகள் கேள்வனை ஒருபடி காணப் பெற்றேனே’ என்பாள்.-நாதமுனிகள், இராஜா சாமந்தன் தலையிலே அடியை இட்டு யானைக் கழுத்திலே புக்கபடியைக் கண்டு, சர்வேசுவரன் பிரமன் முதலியோர் தலையிலே அடியிட்டுப் பெரியதிருவடியை மேற்கொள்ளும்படி இதுவாகாதே!’ என்னா-மோகித்தார் என்பது பிரசித்தமே அன்றோ? இராஜா தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச்செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளிலே சேவித்திருக்கச் செய்தே, பெண்பிள்ளை வந்து, ‘நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாய் வந்து புகுந்தார்கள்,’ என்றவாறே, ‘பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திரவியாகரண பண்டிதனும்’ என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய்,
முன்னே போகின்றவர்கள் ‘போகின்றார்கள், போகின்றார்கள்’ என்னக் கேட்டுக் கீழை வாசலிலே சென்றவாறே, ‘இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ?’ என்று வாசலில் அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்கள் ‘கண்டிலோம்’ என்ன, அதுவே காரணமாகத் திருநாட்டிற்கு எழுந்தருளினார் அன்றோ?-காணும் அளவும் போனாரே

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை   இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்    அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“-வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று- ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்–வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல்
-என்று- பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார்–தவம் –ஸூஹ்ருதம்–பெரியாழ்வார் -ஆண்டாள்-நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்-ராமானுஜர் -வடுக நம்பி-உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்திலே-யவாதாத்ம பாவியாய் நிரதிசயமான ஆனந்தத்தை யுடையராய்க் கொண்டு -ஆனந்த நிர்ப்பரராய்க் கொண்டு –சம்சாரத்தில் துக்கத்துக்கு எல்லை யுண்டாகில் யாய்த்து -அஸ் ஸூகத்துக்கு அவதி சொல்லலாவது –அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்று ஆசைப் பட்ட படியே இருந்தமையை -அவர்களும் தங்களுக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு துணை தேடி இறே இருப்பது-

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத
ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் )அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

——————

பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து
செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும்
(எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ))-எம்பாரைப் போலவும் (எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை
(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)

இப்பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப்பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிகே பட அனுசந்திப்பான்
இப்பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –
வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
சிலர் அர்த்திக்க வன்றிக்கே தம் அபி நிவேசத்தாலே அருளிச் செய்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் கையது மீட்சி இன்றி வைகுந்த மா நகர்-நச புனராவர்த்ததே என்கிற பரமபதமும் அவர்களுக்கு ஸூலபம்
பகவத் பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்-ஞான பல ரூபமான பரிமாற்றத்துக்கு ஏகாந்த தேசமும் அவர்களுக்கு ஸூலபம்-மற்றது என்று சம்சாரத்துக்கு ப்ரத்ய நீகமான தேசம் என்னுதல் -அவ்யயமாகக் கிடத்தல் -பாஹ்ய குத்ருஷ்டிகள் இல்லாமையால் உபதேசிக்க வேண்டாதே அனுபவமே யாய் செல்லும் தேசத்திலே புகப் பெறுவர்-

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாராயணனே ஸ்ரீ ராமர் -ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான்–

December 7, 2025

நாராயணனே ராமன்: பரமபத நாதனாகிய நாராயணனே இராமனாக அவதரித்தான் என்ற செய்தியைக் கம்பநாடன் காவியத்தில் பல இடங்களில் பெற வைக்கின்றான். இராமனது அவதாரத்தைக் கூறும் கவிஞன்

ஒரு பகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
அரு மறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திரு வுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை
” (பால-திருவ 2 – 10 – 3)

பிரளயகாலத்தில் எல்லாவுலகங்களையும் தன் திருவயிற்றில் மறைத்து வைப்பவன் நாராயணன்; உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 – 10 – 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 – 2 – 1] நான்மறைகளாலும் உணர முடியாத அவனை, அந்த அஞ்சனக் கருமுகிலை, கோசலை மகனாகப் பெற்றாள்-

எழுதரிய திருமேனிக் கருங் கடலைச் செங்கனி வாய்க் கவுசலை யென்பாள் பயந்தாள்” [பால – குலமுறை 20]

“கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
அராவணை யில்துயில் வோயென அந்நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
‘இராமன்’ எனப்பெயர் ஈந்தனன் அன்றே” [பால – திருவ 119]
” [பால – குலமுறை 20

கராம் – முதலை; கைக்கரி – யானை; அராவணை – பாம்புப் படுக்கை]-முதலை வாயில் அகப்பட்ட களிறு ‘ஆதிமூலமே’ எனக்கூவ, அதனை முன்வந்து அளித்த திருமாலே இராமனாகப் பிறந்தான் என்பது ஈண்டு மீண்டும் வலியுறுத்தப் பெறுவதைக் காண்க. இதே கருத்து விராதன் வாய்மொழியாகவும்,

“கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்
” [ஆரணி, விராதன் வதை 49]

சனகன் மாளிகையில் இராமன் திருப்பள்ளி எழுதலைக் கூறவந்த கவிஞன்,

கொல்லாழி நீத்தங்கோர் குனி வயிரச் சிலை தடக்கைக் கொண்ட கொண்டல்” [பால – மிதிலை 154]ஆழி – சக்கரப்படை] பாற்கடலில் துயிலும் பரந்தாமனே சக்கரப் படையை நீத்துவிட்டு, கோதண்டத்தைத் திருக் கையில் கொண்ட முகில்வண்ணன்-

“பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளி சேர் அஞ்சன வண்ணனே இராமன்” [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]-என்று சங்கரன் கொடுத்த வாளால் இராவணனால் சிறகொடிக்கப் பெற்ற சடாயு வாக்கில் வைத்துக் கூறப்பெற்றுள்ளதை எண்ணி உணர்க

“சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே
” [கிட்கிந் – நட்புகொள் 79]-திருமாலே இராமனாக அவதரித்துள்ளான் என்பதை,அநுமன் வாக்கிலும் வந்துள்ளமை காண்க.

“தோற்றம் என்பதொன்று உனக்கில்லை” [யுத்த – மீட்சி 107]–“மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்” [யுத்த – நாகபாசப் 222]அவதார் இரகசியம். -“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய் 2 – 9 – 5]-கம்ப நாடன் இதனை நான்முகன் வாக்காக.

“மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
யாரையும் அறையா
” [யுத்தமீட்சி 101]-மறைகளின் தலைகள் – உபநிடதங்கள்–தேவர்களின் வேண்டுகோட்கிணங்க நான்முகன் இராமனது உண்மைச் சொரூபத்தை விளக்குகின்றான்.

முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா
:” [யுத்தமீட்சி 113]-என்பதால் திருமாலே முதற்கடவுள் என்றும், சீதையே உலக அன்னையென்றும் உறுதி செய்வன்

“நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
வேராய்முழு முதற்காரணப் பொருளாய்
” [யுத்த – நிகும்பலை 141]

“உற்றொடு தனியே தானே தன்கணே
உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்
” [யுத்த வருணனை வழி 63]

நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே” [யுத்த வருணனை வழி 67]

மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு
” [சுந்தர – உருக்காட்டு 71]-சீதை அநுமனைக் குறிப்பிடும் பாடற் பகுதி

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்
” [சுந்தர – பிணிவீட்டு 80]-அநுமன் வாய்மொழி

“மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி”
[யுத்த – கும்பகருணன் வதை 150]-கும்பகருணன் வாய்மொழி

“மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே
” [ஆரணி – கவந்த 44]ஞான ஒளி தட்டுப்பட்ட கவந்தனும்,இராமன் முதற் பொருள் என்று கூறுவதைக் காண்க

“மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா
” [ஆரணி – விராதன் வதை 59]-[மெய் – நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி – பரமசிவன்; ஐயம் – பிச்சை, சந்தேகம்-பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்” [திருவாய் 4 – 10 – 4]

“அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?
” [ஆரணி-விராதன் வதை 60]-முன்னுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு  வீடும் அறியாது
என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னையும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்த்து இவ் வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவது நம்மை யாளும் அரசே
–11-4-8-

 இதில் நாராயணனே ஊழிக்குப் பிறகும் நிலைபெற்று நிற்பவன் என்ற கருத்து வற்புறுத்தப் பெற்றுள்ளமை காண்க. மேகநாதன் ஏவிய நான்முகன் கணையால் இலக்குவன் அறிவொடுங்கி அயர்ந்தபோது தம்பி இறந்தான் என்று புலம்புகின்றான் இராமன். பின் அறிவு சோர்ந்து துயருறுகின்றான். அப்போது வந்த தேவர்கள், “முன்பு பின்பு நடு இல்லாய்!” [யுத்த – பிரமாத்திரப் 227] என்று விளித்துப் பேசுவதிலும் இதைக் காணலாம். நிகும்பலையைக் குலைக்கும்போது மேகநாதன் தன்னை இகழ்ந்து பேசியபோது, மறுமாற்றம் உரைக்கும் வீடணனின் பேச்சில்,-“மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்”
[யுத்த நிகும்பலை யாகப் 175]-“மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத் தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்” [அயோத். கைகேசி சூழ்வினை 62][தேவ தேவர் – சிவன்; சேவகர் – இராமன்]

இராமன் கோலம் புனைதலைக் கூறும் இடத்தில் இராமனைக் கவிஞன்,-முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை” [பால. கடிமணப் 69]-காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்” [அயோத். கைகேயி சூழ்வினை 91]-முடிசூடப் போகும் இராமனின் திருமேனியைக் (திவ்வியமங்கள விக்கிரகத்தைக்) கண்டு ஊரார் வாய்மொழி-

“சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடலாடுதல் நன்றரோ”

[புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன்.

“ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார் அலகில்லன உள்ளன வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் பாதமல்லது பற்றிலர் பற்றிலார்

 —————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

மாதந்தோறும் வரும் ஏகாதசிகளின் பெயர்கள்–

December 5, 2025

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்’ என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். பகவானும் பிரம்ம தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஏகாதசி விரதம் ஆரம்பிப்பதும், முடிப்பதும் –
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை ஸூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம் -ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று கடைசி உணவை ஸூரிய அஸ்தமனத்திற்குள் உட்கொண்டு விரதம் ஆரம்பிக்கலாம்-அதே போல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தம் உட் கொண்டும், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்தியமாக செய்யப்பட்ட தானிய உணவை உட்கொள்வதுமாகும்-ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதாகும்.

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்:

1. உற்பத்தி (ஏகாதசி) – மார்கழி – க்ருஷ்ண (பக்‌ஷம்) – சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச – மார்கழி – சுக்ல – வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா – தை – க்ருஷ்ண – பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா – தை – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா – மாசி – க்ருஷ்ண – அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா – மாசி – சுக்ல – பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா – பங்குனி – க்ருஷ்ண – ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ – பங்குனி – சுக்ல – கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா – சித்திரை – க்ருஷ்ண – பாபங்கள் அகலும்

10. காமதா – சித்திரை – சுக்ல – நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் – வைகாசி – க்ருஷ்ண – ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி – வைகாசி – சுக்ல – பாவம் நீங்கும்

13. அபார – ஆனி – க்ருஷ்ண – குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) – ஆனி – சுக்ல – எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது – பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ – ஆடி – க்ருஷ்ண – நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ – ஆடி – சுக்ல – தெய்வ சிந்தனை அதிகமாகும் – திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா – ஆவணி – க்ருஷ்ண – விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா – ஆவணி – சுக்ல – புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா – புரட்டாசி – க்ருஷ்ண – இழந்ததைப் பெறலாம் – அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா – புரட்டாசி – சுக்ல – பஞ்சம் நீங்கும்

21. இந்திரா – ப்பசி – க்ருஷ்ண – பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா – ப்பசி – சுக்ல – கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா – கார்த்திகை – க்ருஷ்ண – உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் – கார்த்திகை – சுக்ல – பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 – கமலா – (சில வருடங்களில் மட்டும்) – மகாலட்சுமி அருள் கிடைக்கும்

மாதந்தோறும் வரும் ஏகாதசிகளின் பெயர்கள்

  • சித்திரை: காமதா, பாபமோசனிகா
  • வைகாசி: மோகிநீ, வருதிநீ
  • ஆனி: நிர்ஜலா, அபரா
  • ஆடி: சயிநீ, யோகிநீ
  • ஆவணி: புத்ரகா, காமிகா
  • புரட்டாசி: பத்மநாபா, அஜாரகா
  • ஐப்பசி: பாபங்குகா, இந்திரா
  • கார்த்திகை: பிரபோதினீ (கைசிக), ரமா
  • மார்கழி: மோட்ச (வைகுண்ட), உற்பத்தி
  • தை: புத்ரதா, சபலா
  • மாசி: ஜயா, ஷட்திலா
  • பங்குனி: ஆமலகீ, விஜயா 

மார்கழி

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். இதற்கு மோட்சதா என்று வேறு ஒரு பெயரும் உண்டு. இறைவன் அனுக்கிரகம் செய்து காட்டும் அத்யயனோத்ஸவம் இந்த நாளில் கொண்டாடப்படும்.

தை

தை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு சபலா என்று பெயர். இது பல மடங்கு பலன் தரவல்லது.

தை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரதா என்று பெயர். இந்நாளில் விரதம் இருப்பவர்களுக்கு பித்ருசாபம் விலகும். நல்ல குழந்தைகள் பிறக்கும்.

அன்றைய தினம் எள் கலந்த நீரில் நீராடித் தலையில் கொஞ்சம் எள்ளைப் போட்டுக் கொண்டு எள்ளால் ஹோமம் செய்து எள்ளையே ஆகாரமாகக் கொண்டு, எள்ளைத் தானம் செய்வது போன்ற காரியங்களை எள்ளினால் செய்வார்கள்.

மாசி

மாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு ஐயா என்று பெயர். இது எல்லாவிதமான பாவங்களையும் நீக்க வல்லது.

பங்குனி

பங்குனி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு விஜயா என்று பெயர். ஸ்ரீராமபிரான் கடலைக் கடக்க இந்த விரதம் அனுஷ்டித்ததாகப் பத்மபுராணம் கூறுகிறது.

பங்குனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு குமலீக என்று பெயர்.

சித்திரை

சித்திரை மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு காமதா என்று பெயர்.இது வேண்டுவோருக்கு வேண்டியதைக் கொடுக்க வல்லது.

வைகாசி

வைகாசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு வருதீனீ என்று பெயர்.

வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு மோகினி என்று பெயர். இந்த வைகாசி தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் புண்ணியமும், பத்ரீதர்சன பலனும் கிடைக்கும்.

ஆனி

ஆனி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா என்று பெயர்.இதை அனுஷ்டிப்பவர்கள் யமலோகம் காணமாட்டார்கள்.

ஆடி

ஆடி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு யோகினி என்று பெயர். இது இலட்ச பிராம்மண போஜன பலனைத் தரவல்லது.

ஆடி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு தேவஜைனீ என்று பெயர். இன்றுதான் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது அரிதுயில் கொள்வதால் இதை “சயனம்” என்றும் சொல்வார்கள்.

ஆவணி

ஆவணி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு புத்ரா என்று பெயர்.

புரட்டாசி

புரட்டாசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு அஜா என்று பெயர்.

புரட்டாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு பரிவர்தீனி என்று பெயர்.இதை வாமன ஜயந்தி ஏகாதசி என்றும் சொல்வர். இது சிரவண நட்சத்திரம் கூடியவர்களுக்கு ஏற்றமுடையது.

ஐப்பசி

ஐப்பசி மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு இந்திரா என்று பெயர்.

ஐப்பசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு பராங்குசா என்று பெயர்.

கார்த்திகை

கார்த்திகை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு பிரபோதீனி என்று பெயர். இதை உத்தான ஏகாதசி என்றும் சொல்வர். இதைக் கைசிக ஏகாதசி என்றும், துளசி கல்யாண வைபவத்தால் பிருந்தாவன ஏகாதசி என்றும் கூறுவர்.

பலன்கள்

ஏகாதசியன்று பட்டினி இருந்து வைகுண்டவாசனைத் தரிசித்து, விரதமிருப்பவர்களுக்கு இறப்பிற்குப் பின் வைகுண்டம் கிடைக்கும் என்பது வைணவ நம்பிக்கை.மாதமிரண்டு ஏகாதசி வீதம் 24 ஏகாதசிகள் உண்டு. 24 ஏகாதசிகளும் விரதமிருக்க முடியாதவர்கள் பரந்தாமனின் உதயகாலத்தில் வைகுண்ட வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது பட்டினி கிடந்து இரவு கண்விழித்து நாராயணனை பூஜிக்க வேண்டும். அப்படிச் செய்தால் 24 ஏகாதசிகளுக்கான பலன்களும் கிட்டும்.

பாத்ம புராணத்தில் உத்தர காண்டத்தில் இந்த இருபத்தைந்துக்கும் தனித்தனிப் பெயர் சொல்லி, அதை அநுஷ்டிக்க வேண்டிய முறை, அதனால் பயனடைந்தவர்களின் கதை, ஆகியவற்றை விவரமாகச் சொல்லியிருக்கிறது.

தநுர்மாஸ (மார்கழி மாத) க்ருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று ஆரம்பித்திருக்கிறது. இதற்கு ‘உத்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அடுத்ததுதான் அந்த மாஸ சுக்லபக்ஷத்தில் வரும் பிரஸித்தமான வைகுண்ட ஏகாதசி. ‘மோக்ஷ ஏகாதசி’ என்று இதற்குப் பாத்ம புராணத்தில் பேர் கொடுத்திருக்கிறது. அம்ருதம் கடைந்தெடுத்தது அன்றுதான். க்ருஷ்ண பரமாத்மா கீதோபதேசம் என்று உபநிஷத்துக்களைக் கடைந்தெடுத்து ஞானாம்ருதமாகக் கொடுத்ததும் அன்றுதான் என்பதாலேயே அன்றைக்கு ‘கீதா ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாஸ சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’என்று எட்டு ஏகாதசிகள் வருகின்றன. பீமன் வருஷத்தில் ஒரே ஒரு தரம் சுத்தோபவாஸமிருந்தது ‘நிர்ஜலா’ என்ற இந்த ஆனி மாஸ சுக்லபக் ஏகாதசியன்றுதான். இதோடு பதினாலு ஏகாதசிகள் ஆகிவிட்டன. பதினைந்தாவதாக ஆடி க்ருஷ்ண பக்ஷத்தில், ‘யோகினி’ என்பது. அடுத்தது ஆடி சுக்ல பக்ஷத்தில் மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி*. அதற்கு ‘சாயினி’ என்று பெயர். அப்புறம் ஆவணி, புரட்டாசி. ஐப்பசி மாஸங்களில் வரும் ‘சாமிகா’ ‘புத்ரதா’ (முன்னையே தையில் ஒரு ‘புத்ரதா’வந்து விட்டது. இங்கே மறுபடியும் அதே பெயர்தான் போட்டிருக்கிறது) , ‘அஜா’, ‘பத்மநாபா’, ‘இந்திரா’, ‘பாபாங்குசா’ என்ற ஆறு ஏகாதசிகளின் போதும், கார்த்திகையில் க்ருஷ்ண பக்ஷத்திலே வரும் ‘ரமா’என்ற ஏகாதசியின் போதும் பகவான் நித்திரை பண்ணிக் கொண்டேயிருக்கிறார். இருபத்து நாலாவதாக வருகிற கார்த்திகை சுக்லபக் ஏகாதசியன்று அவர் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்தகு ‘ப்ரபோதினி’ என்றே பெயர் மறுநாளோடு சாதுர்மாஸ்யம் பூர்த்தி.

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு ‘கமலா’ என்று பெயர்.

————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –