Archive for the ‘Narasimhar’ Category

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி–ஸ்ரீ நரசிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்–

November 14, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
  3. ஓம் வஜ்ரிணே நம:
  4. ஓம் வஜ்ரதேஹாய நம:
  5. ஓம் வஜ்ராய நம:
  6. ஓம் வஜ்ரநகாய நம:
  7. ஓம் வாஸுதேவாய நம:
  8. ஓம் வந்த்யாய நம:
  9. ஓம் வரதாய நம:
  10. ஓம் வராத்மநே நம:
  11. ஓம் வரதாபயஹஸ்தாய நம:
  12. ஓம் வராய நம:
  13. ஓம் வரரூபிணே நம:
  14. ஓம் வரேண்யாய நம:
  15. ஓம் வரிஷ்டாய நம:
  16. ஓம் ஸ்ரீவராய நம:
  17. ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
  18. ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
  19. ஓம் பராத்பரபரேஶாய நம:
  20. ஓம் பவித்ராய நம:
  21. ஓம் பிநாகிநே நம:
  22. ஓம் பாவநாய நம:
  23. ஓம் ப்ரஸந்நாய நம:
  24. ஓம் பாஶிநே நம:
  25. ஓம் பாபஹாரிணே நம: 25
  1. ஓம் புருஷ்டுதாய நம:
  2. ஓம் புண்யாய நம:
  3. ஓம் புருஹூதாய நம:
  4. ஓம் தத்புருஷாய நம:
  5. ஓம் தத்யாய நம:
  6. ஓம் புராணபுருஷாய நம:
  7. ஓம் புரோதஸே நம:
  8. ஓம் பூர்வஜாய நம:
  9. ஓம் புஷ்கராக்ஷாய நம:
  10. ஓம் புஷ்பஹாஸாய நம:
  11. ஓம் ஹாஸாய நம:
  12. ஓம் மஹாஹாஸாய நம:
  13. ஓம் ஶார்ங்கிணே நம:
  14. ஓம் ஸிம்ஹாய நம:
  15. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  16. ஓம் ஜகத்வஶ்யாய நம:
  17. ஓம் அட்டஹாஸாய நம:
  18. ஓம் ரோஷாய நம:
  19. ஓம் ஜலவாஸாய நம:
  20. ஓம் பூதாவாஸாய நம:
  21. ஓம் பாஸாய நம:
  22. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
  23. ஓம் கட்கிநே நம:
  24. ஓம் கட்கஜிஹ்வாய நம:
  25. ஓம் ஸிம்ஹாய நம: 50
  1. ஓம் கட்கவாஸாய நம:
  2. ஓம் மூலாதிவாஸாய நம:
  3. ஓம் தர்மவாஸாய நம:
  4. ஓம் தந்விநே நம:
  5. ஓம் தநஞ்ஜயாய நம:
  6. ஓம் தந்யாய நம:
  7. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  8. ஓம் ஶுபஞ்ஜயாய நம:
  9. ஓம் ஸூத்ராய நம:
  10. ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
  11. ஓம் நிரஞ்சநாய நம:
  12. ஓம் நீராய நம:
  13. ஓம் நிர்குணாய நம:
  14. ஓம் குணாய நம:
  15. ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
  16. ஓம் நிர்வாணபதாய நம:
  17. ஓம் நிபிடாய நம:
  18. ஓம் நிராலம்பாய நம:
  19. ஓம் நீலாய நம:
  20. ஓம் நிஷ்கலாய நம:
  21. ஓம் கலாய நம:
  22. ஓம் நிமேஷாய நம:
  23. ஓம் நிபந்தாய நம:
  24. ஓம் நிமேஷகமநாய நம:
  25. ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
  1. ஓம் நிராஶாய நம:
  2. ஓம் நிஶ்சயாய நம:
  3. ஓம் நிஜாய நம:
  4. ஓம் நிர்மலாய நம:
  5. ஓம் நிபந்தாய நம:
  6. ஓம் நிர்மோஹாய நம:
  7. ஓம் நிராக்ருதே நம:
  8. ஓம் நித்யாய நம:
  9. ஓம் ஸத்யாய நம:
  10. ஓம் ஸத்கர்மநிரதாய நம:
  11. ஓம் ஸத்யத்வஜாய நம:
  12. ஓம் முஞ்ஜாய நம:
  13. ஓம் முஞ்ஜகேஶாய நம:
  14. ஓம் கேஶிநே நம:
  15. ஓம் ஹரீஶாய நம:
  16. ஓம் ஶேஷாய நம:
  17. ஓம் குடாகேஶாய நம:
  18. ஓம் ஸுகேஶாய நம:
  19. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  20. ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
  21. ஓம் ஜலேஶாய நம:
  22. ஓம் ஸ்தலேஶாய நம:
  23. ஓம் பத்மேஶாய நம:
  24. ஓம் உக்ரரூபிணே நம:
  25. ஓம் குஶேஶயாய நம: 100
  1. ஓம் கூலாய நம:
  2. ஓம் கேஶவாய நம:
  3. ஓம் ஸூக்திகர்ணாய நம:
  4. ஓம் ஸூக்தாய நம:
  5. ஓம் ரக்தஜிஹ்வாய நம:
  6. ஓம் ராகிணே நம:
  7. ஓம் தீப்தரூபாய நம:
  8. ஓம் தீப்தாய நம:
  9. ஓம் ப்ரதீப்தாய நம:
  10. ஓம் ப்ரலோபிநே நம:
  11. ஓம் ப்ரச்சந்தாய நம:
  12. ஓம் ப்ரபோதாய நம:
  13. ஓம் ப்ரபவே நம:
  14. ஓம் விபவே நம:
  15. ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
  16. ஓம் பாந்தாய நம:
  17. ஓம் ப்ரமாய நம:
  18. ஓம் அப்ரமிதாய நம:
  19. ஓம் ப்ரகாஶாய நம:
  20. ஓம் ப்ரதாபாய நம:
  21. ஓம் ப்ரஜ்வலாய நம:
  22. ஓம் உஜ்ஜ்வலாய நம:
  23. ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
  24. ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
  25. ஓம் ஜ்வாலிநே நம: 125
  1. ஓம் மஹோஜ்ஜவலாய நம:
  2. ஓம் காலாய நம:
  3. ஓம் காலமூர்த்திதராய நம:
  4. ஓம் காலாந்தகாய நம:
  5. ஓம் கல்பாய நம:
  6. ஓம் கலநாய நம:
  7. ஓம் க்ருதே நம:
  8. ஓம் காலசக்ராய நம:
  9. ஓம் சக்ராய நம:
  10. ஓம் வஷட்சக்ராய நம:
  11. ஓம் சக்ரிணே நம:
  12. ஓம் அக்ரூராய நம:
  13. ஓம் க்ருதாந்தாய நம:
  14. ஓம் விக்ரமாய நம:
  15. ஓம் க்ரமாய நம:
  16. ஓம் க்ருத்திநே நம:
  17. ஓம் க்ருத்திவாஸாய நம:
  18. ஓம் க்ருதஜ்ஞாய நம:
  19. ஓம் க்ருதாத்மநே நம:
  20. ஓம் ஸங்க்ரமாய நம:
  21. ஓம் க்ருத்தாய நம:
  22. ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
  23. ஓம் அரூபாய நம:
  24. ஓம் ஸரூபாய நம:
  25. ஓம் ஹரயே நம: 150
  1. ஓம் பரமாத்மநே நம:
  2. ஓம் அஜேயாய நம:
  3. ஓம் ஆதிதேவாய நம:
  4. ஓம் அக்ஷயாய நம:
  5. ஓம் க்ஷயாய நம:
  6. ஓம் அகோராய நம:
  7. ஓம் ஸுகோராய நம:
  8. ஓம் கோரகோரதராய நம:
  9. ஓம் அகோரவீர்யாய நம:
  10. ஓம் லஸத்கோராய நம:
  11. ஓம் கோராத்யக்ஷாய நம:
  12. ஓம் தக்ஷாய நம:
  13. ஓம் தக்ஷிணாய நம:
  14. ஓம் ஆர்யாய நம:
  15. ஓம் ஶம்பவே நம:
  16. ஓம் அமோகாய நம:
  17. ஓம் குணௌகாய நம:
  18. ஓம் அநகாய நம:
  19. ஓம் அகஹாரிணே நம:
  20. ஓம் மேகநாதாய நம:
  21. ஓம் நாதாய நம:
  22. ஓம் மேகாத்மநே நம:
  23. ஓம் மேகவாஹநரூபாய நம:
  24. ஓம் மேகஶ்யாமாய நம:
  25. ஓம் மாலிநே நம: 175
  1. ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
  2. ஓம் வ்யாக்ரதேஹாய நம:
  3. ஓம் வ்யாக்ரபாதாய நம:
  4. ஓம் வ்யாக்ரகர்மணே நம:
  5. ஓம் வ்யாபகாய நம:
  6. ஓம் விகடாஸ்யாய நம:
  7. ஓம் வீராய நம:
  8. ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
  9. ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
  11. ஓம் விஷ்வக்ஸேநாய நம:
  12. ஓம் ஸேநாய நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் பலாய நம:
  15. ஓம் விரூபாக்ஷாய நம:
  16. ஓம் வீராய நம:
  17. ஓம் விஶேஷாக்ஷாய நம:
  18. ஓம் ஸாக்ஷிணே நம:
  19. ஓம் வீதஶோகாய நம:
  20. ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
  21. ஓம் விதாநாய நம:
  22. ஓம் விதேயாய நம:
  23. ஓம் விஜயாய நம:
  24. ஓம் ஜயாய நம:
  25. ஓம் விபுதாய நம: 200
  1. ஓம் விபாவாய நம:
  2. ஓம் விஶ்வம்பராய நம:
  3. ஓம் வீதராகாய நம:
  4. ஓம் விப்ராய நம:
  5. ஓம் விடங்கநயநாய நம:
  6. ஓம் விபுலாய நம:
  7. ஓம் விநீதாய நம:
  8. ஓம் விஶ்வயோநயே நம:
  9. ஓம் சிதம்பராய நம:
  10. ஓம் வித்தாய நம:
  11. ஓம் விஶ்ருதாய நம:
  12. ஓம் வியோநயே நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் விகல்பாய நம:
  15. ஓம் கல்பாதீதாய நம:
  16. ஓம் ஶில்பிநே நம:
  17. ஓம் கல்பநாய நம:
  18. ஓம் ஸ்வரூபாய நம:
  19. ஓம் பணிதல்பாய நம:
  20. ஓம் தடித்ப்ரபாய நம:
  21. ஓம் தார்யாய நம:
  22. ஓம் தருணாய நம:
  23. ஓம் தரஸ்விநே நம:
  24. ஓம் தபநாய நம:
  25. ஓம் தரக்ஷாய நம: 225
  1. ஓம் தாபத்ரயஹராய நம:
  2. ஓம் தாரகாய நம:
  3. ஓம் தமோக்நாய நம:
  4. ஓம் தத்வாய நம:
  5. ஓம் தபஸ்விநே நம:
  6. ஓம் தக்ஷகாய நம:
  7. ஓம் தநுத்ராய நம:
  8. ஓம் தடிதே நம:
  9. ஓம் தரளாய நம:
  10. ஓம் ஶதரூபாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶத்தாராய நம:
  13. ஓம் ஶதபத்ராய நம:
  14. ஓம் தார்க்ஷ்யாய நம:
  15. ஓம் ஸ்திதயே நம:
  16. ஓம் ஶதமூர்த்தயே நம:
  17. ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
  18. ஓம் ஶாஶ்வதாய நம:
  19. ஓம் ஶதாத்மநே நம:
  20. ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
  21. ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
  22. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  23. ஓம் தேவாய நம:
  24. ஓம் திஶஶ்ரோத்ராய நம:
  25. ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
  1. ஓம் மஹாஜிஹ்வாய நம:
  2. ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
  3. ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
  4. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  5. ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
  6. ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
  7. ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
  8. ஓம் ஸ்தூலாய நம:
  9. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  10. ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
  11. ஓம் ஸுக்ஷுண்யாய நம:
  12. ஓம் ஸுபிக்ஷாய நம:
  13. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
  14. ஓம் ஸௌரிணே நம:
  15. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
  16. ஓம் தர்மாய நம:
  17. ஓம் லோகாத்யக்ஷாய நம:
  18. ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
  19. ஓம் ஶிக்ஷாய நம:
  20. ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
  21. ஓம் காலாத்யக்ஷாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணாய நம:
  23. ஓம் மூலாத்யக்ஷாய நம:
  24. ஓம் அதோக்ஷஜாய நம:
  25. ஓம் மித்ராய நம: 275
  1. ஓம் ஸுமித்ரவருணாய நம:
  2. ஓம் ஶத்ருக்நாய நம:
  3. ஓம் அவிக்நாய நம:
  4. ஓம் விக்நகோடி ஹராய நம:
  5. ஓம் ரக்ஷோக்நாய நம:
  6. ஓம் தமோக்நாய நம:
  7. ஓம் பூதக்நாய நம:
  8. ஓம் பூதபாலாய நம:
  9. ஓம் பூதாய நம:
  10. ஓம் பூதாவாஸாய நம:
  11. ஓம் பூதிநே நம:
  12. ஓம் பூதவேதாளகாதாய நம:
  13. ஓம் பூதாதிபதயே நம:
  14. ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
  15. ஓம் பூதஸம்யமிநே நம:
  16. ஓம் மஹாபூதவே நம:
  17. ஓம் ப்ருகவே நம:
  18. ஓம் ஸர்வபூதாத்மநே நம:
  19. ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
  20. ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
  21. ஓம் ஸர்வாதாராய நம:
  22. ஓம் ஶர்வாய நம:
  23. ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
  24. ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
  25. ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
  1. ஓம் ஸர்வாக்ஞாய நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் ஸர்வஶக்திதராய நம:
  4. ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
  5. ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
  6. ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
  7. ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
  8. ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
  9. ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
  10. ஓம் பிங்காக்ஷாய நம:
  11. ஓம் ஏகஶ்ருங்காய நம:
  12. ஓம் த்விஶ்ருங்காய நம:
  13. ஓம் மரீசயே நம:
  14. ஓம் பஹுஶ்ருங்காய நம:
  15. ஓம் லிங்காய நம:
  16. ஓம் மஹாஶ்ருங்காய நம:
  17. ஓம் மாங்கள்யாய நம:
  18. ஓம் மனோஜ்ஞாய நம:
  19. ஓம் மந்தவ்யாய நம:
  20. ஓம் மஹாத்மநே நம:
  21. ஓம் மஹாதேவாய நம:
  22. ஓம் தேவாய நம:
  23. ஓம் மாதுலுங்கதராய நம:
  24. ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
  25. ஓம் ப்ரஸ்துதாய நம: 325
  1. ஓம் மாயிநே நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் அநந்தரூபாய நம:
  4. ஓம் மாயிநே நம:
  5. ஓம் ஜலஶாயிநே நம:
  6. ஓம் மஹோதராய நம:
  7. ஓம் மந்தாய நம:
  8. ஓம் மததாய நம:
  9. ஓம் மதாய நம:
  10. ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
  11. ஓம் மாதவாய நம:
  12. ஓம் முராரயே நம:
  13. ஓம் மஹாவீர்யாய நம:
  14. ஓம் தைர்யாய நம:
  15. ஓம் சித்ரவீர்யாய நம:
  16. ஓம் சித்ரகூர்மாய நம:
  17. ஓம் சித்ராய நம:
  18. ஓம் சித்ரபாநவே நம:
  19. ஓம் மாயாதீதாய நம:
  20. ஓம் மாயாயை நம:
  21. ஓம் மஹாவீராய நம:
  22. ஓம் மஹாதேஜஸே நம:
  23. ஓம் பீஜாய நம:
  24. ஓம் தேஜோதாம்நே நம:
  25. ஓம் பீஜிநே நம: 350
  1. ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
  2. ஓம் சித்ரபாநவே நம:
  3. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் துஷ்டாய நம:
  5. ஓம் புஷ்டிகராய நம:
  6. ஓம் ஶிபிவிஷ்டாய நம:
  7. ஓம் ஹ்ருஷ்டாய நம:
  8. ஓம் புஷ்டாய நம:
  9. ஓம் பரமேஷ்டிநே நம:
  10. ஓம் விஶிஷ்டாய நம:
  11. ஓம் ஶிஷ்டாய நம:
  12. ஓம் கரிஷ்டாய நம:
  13. ஓம் இஷ்டதாயிநே நம:
  14. ஓம் ஜ்யேஷ்டாய நம:
  15. ஓம் ஶ்ரேஷ்டாய நம:
  16. ஓம் துஷ்டாய நம:
  17. ஓம் அமிததேஜஸே நம:
  18. ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
  19. ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
  20. ஓம் வைகுண்டாய நம:
  21. ஓம் விகுண்டாய நம:
  22. ஓம் கேஶிகண்டாய நம:
  23. ஓம் கண்டீரவாய நம:
  24. ஓம் லுண்டாய நம:
  25. ஓம் நிஶ்ஶடாய நம: 375
  1. ஓம் ஹடாய நம:
  2. ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
  3. ஓம் ருத்ராய நம:
  4. ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
  5. ஓம் ருதுத்வஜாய நம:
  6. ஓம் வஜ்ராய நம:
  7. ஓம் மந்த்ரராஜாய நம:
  8. ஓம் மந்த்ரிணே நம:
  9. ஓம் த்ரிநேத்ராய நம:
  10. ஓம் த்ரிவர்காய நம:
  11. ஓம் த்ரிதாம்நே நம:
  12. ஓம் த்ரிஶூலிநே நம:
  13. ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
  14. ஓம் த்ரிதேஹாய நம:
  15. ஓம் த்ரிதாத்மநே நம:
  16. ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
  17. ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
  18. ஓம் அக்ஷோப்யாய நம:
  19. ஓம் அநிருத்தாய நம:
  20. ஓம் அப்ரமேயாய நம:
  21. ஓம் பாநவே நம:
  22. ஓம் அம்ருதாய நம:
  23. ஓம் அநந்தாய நம:
  24. ஓம் அமிதாய நம:
  25. ஓம் அமிதௌஜஸே நம: 400
  1. ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
  2. ஓம் அபஸ்மார விகாதிநே நம:
  3. ஓம் அந்நதாய நம:
  4. ஓம் அந்நரூபாய நம:
  5. ஓம் அந்நாய நம:
  6. ஓம் அந்நபுஜே நம:
  7. ஓம் நாத்யாய நம:
  8. ஓம் நிரவத்யாய நம:
  9. ஓம் வேத்யாய நம:
  10. ஓம் அத்புதகர்மணே நம:
  11. ஓம் ஸத்யோஜாதாய நம:
  12. ஓம் ஸங்காய நம:
  13. ஓம் வைத்யுதாய நம:
  14. ஓம் அத்வாதீதாய நம:
  15. ஓம் ஸத்வாய நம:
  16. ஓம் வாகதீதாய நம:
  17. ஓம் வாக்மிநே நம:
  18. ஓம் வாகீஶ்வராய நம:
  19. ஓம் கோபாய நம:
  20. ஓம் கோஹிதாய நம:
  21. ஓம் கவாம்பதயே நம:
  22. ஓம் கந்தர்வாய நம:
  23. ஓம் கபீராய நம:
  24. ஓம் கர்ஜிதாய நம:
  25. ஓம் ஊர்ஜிதாய நம: 425
  1. ஓம் பர்ஜந்யாய நம:
  2. ஓம் ப்ரபுத்தாய நம:
  3. ஓம் ப்ரதாநபுருஷாய நம:
  4. ஓம் பத்மாபாய நம:
  5. ஓம் ஸுநாபாய நம:
  6. ஓம் பத்மநாபாய நம:
  7. ஓம் மாநிநே நம:
  8. ஓம் பத்மநேத்ராய நம:
  9. ஓம் பத்மாய நம:
  10. ஓம் பத்மாயா: பதயே நம:
  11. ஓம் பத்மோதராய நம:
  12. ஓம் பூதாய நம:
  13. ஓம் பத்மகல்போத்பவாய நம:
  14. ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
  15. ஓம் பூபத்மோத்தரணாய நம:
  16. ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
  17. ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
  18. ஓம் ப்ரஹ்மணே நம:
  19. ஓம் ப்ரஹ்மரூபாய நம:
  20. ஓம் பத்மநேத்ராய நம:
  21. ஓம் ப்ரஹ்மதாய நம:
  22. ஓம் ப்ராஹ்மணாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
  25. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
  1. ஓம் தேவாய நம:
  2. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
  3. ஓம் த்ரிவேதிநே நம:
  4. ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
  5. ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
  6. ஓம் அஶ்வஶிரஸே நம:
  7. ஓம் அதர்வஶிரஸே நம:
  8. ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
  9. ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் லோலாய நம:
  11. ஓம் லலிதாய நம:
  12. ஓம் லாவண்யாய நம:
  13. ஓம் லவித்ராய நம:
  14. ஓம் பாஸகாய நம:
  15. ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
  16. ஓம் லக்ஷாய நம:
  17. ஓம் லக்ஷணாய நம:
  18. ஓம் லஸத்தீப்தாய நம:
  19. ஓம் லிப்தாய நம:
  20. ஓம் விஷ்ணவே நம:
  21. ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
  22. ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
  23. ஓம் க்ருஷ்ணாய நம:
  24. ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
  25. ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
  1. ஓம் ஹாரிணே நம:
  2. ஓம் வநமாலிநே நம:
  3. ஓம் கிரீடிநே நம:
  4. ஓம் குண்டலிநே நம:
  5. ஓம் ஸர்வாங்காய நம:
  6. ஓம் ஸர்வதோமுகாய நம:
  7. ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
  8. ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
  9. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  10. ஓம் ஸதாதுஷ்டாய நம:
  11. ஓம் ஸமர்த்தாய நம:
  12. ஓம் ஸமரப்ரியாய நம:
  13. ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
  14. ஓம் பஹுயோஜந மாயதாய நம:
  15. ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
  16. ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
  17. ஓம் மஹாரூபாய நம:
  18. ஓம் மஹாவக்த்ராய நம:
  19. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  20. ஓம் மஹாபுஜாய நம:
  21. ஓம் மஹாநாதாய நம:
  22. ஓம் மஹாரௌத்ராய நம:
  23. ஓம் மஹாகாயாய நம:
  24. ஓம் மஹாபலாய நம:
  25. ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
  1. ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
  2. ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
  3. ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
  4. ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
  5. ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
  6. ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
  7. ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
  8. ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
  9. ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
  10. ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
  11. ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
  12. ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
  13. ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
  15. ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
  16. ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
  17. ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
  18. ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
  19. ஓம் புவநைகஸிம்ஹாய நம:
  20. ஓம் பவிஷ்ணவே நம:
  21. ஓம் ஸஹிஷ்ணவே நம:
  22. ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
  23. ஓம் ஜிஷ்ணவே நம:
  24. ஓம் ப்ருதிவ்யை நம:
  25. ஓம் அந்தரிக்ஷாய நம: 525
  1. ஓம் பர்வதாய நம:
  2. ஓம் அரண்யாய நம:
  3. ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
  4. ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
  5. ஓம் அஹோராத்ராய நம:
  6. ஓம் த்ரிஸந்த்யாய நம:
  7. ஓம் பக்ஷாய நம:
  8. ஓம் மாஸாய நம:
  9. ஓம் ருதவே நம:
  10. ஓம் வத்ஸராய நம:
  11. ஓம் யுகாதயே நம:
  12. ஓம் யுகபேதாய நம:
  13. ஓம் ஸம்யுகாய நம:
  14. ஓம் யுகஸந்தயே நம:
  15. ஓம் நித்யாய நம:
  16. ஓம் நைமித்திகாய நம:
  17. ஓம் தைநாய நம:
  18. ஓம் மஹாப்ரளயாய நம:
  19. ஓம் கரணாய நம:
  20. ஓம் காரணாய நம:
  21. ஓம் கர்த்ரே நம:
  22. ஓம் பர்த்ரே நம:
  23. ஓம் ஹர்த்ரே நம:
  24. ஓம் ஈஶ்வராய நம:
  25. ஓம் ஸத்கர்த்ரே நம: 550
  1. ஓம் ஸத்க்ருதயே நம:
  2. ஓம் கோப்த்ரே நம:
  3. ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
  4. ஓம் ப்ராணாய நம:
  5. ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
  6. ஓம் ஸுஜ்யோதிஷே நம:
  7. ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
  8. ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
  9. ஓம் ஸநாதநாய நம:
  10. ஓம் ஜ்யோதிஷே நம:
  11. ஓம் லோகஸ்வரூபாய நம:
  12. ஓம் ஜ்யோதிஷே நம:
  13. ஓம் ஜ்ஞாய நம:
  14. ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
  15. ஓம் ஸ்வாஹாகாராய நம:
  16. ஓம் ஸ்வதாகாராய நம:
  17. ஓம் வஷட்காராய நம:
  18. ஓம் க்ருபாகராய நம:
  19. ஓம் ஹந்தகாராய நம:
  20. ஓம் நிராகாராய நம:
  21. ஓம் வேகாகாராய நம:
  22. ஓம் ஶங்கராய நம:
  23. ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
  24. ஓம் ஓம்காராய நம:
  25. ஓம் லோககாரகாய நம: 575
  1. ஓம் ஏகாத்மநே நம:
  2. ஓம் அநேகாத்மநே நம:
  3. ஓம் சதுராத்மநே நம:
  4. ஓம் சதுர்ப்புஜாய நம:
  5. ஓம் சதுர்மூர்த்தயே நம:
  6. ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
  7. ஓம் சதுர்வேதமயாய நம:
  8. ஓம் உத்தமாய நம:
  9. ஓம் லோகப்ரியாய நம:
  10. ஓம் லோககுரவே நம:
  11. ஓம் லோகேஶாய நம:
  12. ஓம் லோகநாயகாய நம:
  13. ஓம் லோகஸாக்ஷிணே நம:
  14. ஓம் லோக பதயே நம:
  15. ஓம் லோகாத்மநே நம:
  16. ஓம் லோகலோசநாய நம:
  17. ஓம் லோகாதாராய நம:
  18. ஓம் ப்ரல்லோகாய நம:
  19. ஓம் லோகாலோகமயாய நம:
  20. ஓம் விபவே நம:
  21. ஓம் லோககர்த்ரே நம:
  22. ஓம் விஶ்வகர்த்ரே நம:
  23. ஓம் க்ருதாவர்த்தாய நம:
  24. ஓம் க்ருதாகமாய நம:
  25. ஓம் அநாதயே நம: 600
  1. ஓம் அநந்தாய நம:
  2. ஓம் அபூதாய நம:
  3. ஓம் பூதவிக்ரஹாய நம:
  4. ஓம் ஸ்துதயே நம:
  5. ஓம் ஸ்துதாய நம :
  6. ஓம் ஸ்தவப்ரீதாய நம:
  7. ஓம் ஸ்தோத்ரே நம:
  8. ஓம் நேத்ரே நம:
  9. ஓம் நியாமகாய நம:
  10. ஓம் கதயே நம:
  11. ஓம் மதயே நம:
  12. ஓம் பித்ரே நம:
  13. ஓம் மாத்ரே நம:
  14. ஓம் குரவே நம:
  15. ஓம் ஸக்யே நம:
  16. ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
  17. ஓம் மந்த்ர ரூபாய நம:
  18. ஓம் அஸ்த்ர ரூபாய நம:
  19. ஓம் பஹுரூபாய நம:
  20. ஓம் ரூபாய நம:
  21. ஓம் பஞ்சரூபதராய நம:
  22. ஓம் பஞ்சரூபாய நம:
  23. ஓம் ரூடாய நம:
  24. ஓம் யோகரூடாய நம:
  25. ஓம் யோகிநே நம: 625
  1. ஓம் ஸமரூபாய நம:
  2. ஓம் யோகாய நம:
  3. ஓம் யோகபீடஸ்திதாய நம:
  4. ஓம் யோககம்யாய நம:
  5. ஓம் ஸௌம்யாய நம:
  6. ஓம் த்யாநகம்யாய நம:
  7. ஓம் த்யாயிநே நம:
  8. ஓம் த்யேயகம்யாய நம:
  9. ஓம் தாம்நே நம:
  10. ஓம் தாமாதிபதயே நம:
  11. ஓம் தராதராய நம:
  12. ஓம் தர்மாய நம:
  13. ஓம் தாரணாபிரதாய நம:
  14. ஓம் தாத்ரே நம:
  15. ஓம் ஸந்தாத்ரே நம:
  16. ஓம் விதாத்ரே நம:
  17. ஓம் தராய நம:
  18. ஓம் தாமோதராய நம:
  19. ஓம் தாந்தாய நம:
  20. ஓம் தாநவாந்தகராய நம:
  21. ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
  22. ஓம் பேஷஜாய நம:
  23. ஓம் ஸீரத்வஜாய நம:
  24. ஓம் ஸீதாய நம:
  25. ஓம் வரதாய நம: 650
  1. ஓம் அப்ரமிதாய நம:
  2. ஓம் ஸாரஸ்வதாய நம:
  3. ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
  4. ஓம் அக்ஷமாலிநே நம:
  5. ஓம் அஸிதர்மதராய நம:
  6. ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
  7. ஓம் விகர்மாய நம:
  8. ஓம் ஸுகர்மாய நம:
  9. ஓம் பரகர்மவிதாயிநே நம:
  10. ஓம் ஸுகர்மணே நம:
  11. ஓம் மந்மதாய நம:
  12. ஓம் வர்மாய நம:
  13. ஓம் வர்மிணே நம:
  14. ஓம் கரிசர்மவஸநாய நம:
  15. ஓம் கராளவதநாய நம:
  16. ஓம் கவயே நம:
  17. ஓம் பத்மகர்பாய நம:
  18. ஓம் பூதகர்பாய நம:
  19. ஓம் க்ருணாநிதயே நம:
  20. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  21. ஓம் கர்பாய நம:
  22. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  23. ஓம் தூர்ஜடயே நம:
  24. ஓம் விஶ்வகர்பாய நம:
  25. ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
  1. ஓம் ஜிதாரயே நம:
  2. ஓம் ஹிரண்ய கர்பாய நம:
  3. ஓம் ஹிரண்ய கவசாய நம:
  4. ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
  5. ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
  6. ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
  7. ஓம் ஹிரண்யநயநாய நம:
  8. ஓம் ஹிரண்யரேதஸே நம:
  9. ஓம் ஹிரண்யவதநாய நம:
  10. ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
  11. ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
  12. ஓம் ஶ்ருங்கிணே நம:
  13. ஓம் பைரவாய நம:
  14. ஓம் ஸுகேஶாய நம:
  15. ஓம் பீஷணாய நம:
  16. ஓம் ஆந்த்ரமாலிநே நம:
  17. ஓம் சண்டாய நம:
  18. ஓம் ருண்டமாலாய நம:
  19. ஓம் தண்டதராய நம:
  20. ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
  21. ஓம் கமண்டலுதராய நம:
  22. ஓம் கண்டஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
  24. ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
  25. ஓம் பீதஸிம்ஹாய நம: 700
  1. ஓம் நீலஸிம்ஹாய நம:
  2. ஓம் நீலாய நம:
  3. ஓம் ரக்தஸிம்ஹாய நம:
  4. ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
  5. ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
  6. ஓம் மூலஸிம்ஹாய நம:
  7. ஓம் மூலாய நம:
  8. ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
  9. ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
  10. ஓம் பர்வதவாஶிநே நம:
  11. ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
  12. ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
  13. ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் சண்டஸிம்ஹாய நம:
  15. ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
  16. ஓம் அநந்தகதயே நம:
  17. ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
  18. ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
  19. ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
  20. ஓம் நரஸிம்ஹாய நம:
  21. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  22. ஓம் நரஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
  24. ஓம் ஸத்யாய நம:
  25. ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
  1. ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
  2. ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
  3. ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
  5. ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
  6. ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
  7. ஓம் ஸ்வச்சாய நம:
  8. ஓம் ஸ்வச்சரூபாய நம:
  9. ஓம் ஸ்வச்சந்தாய நம:
  10. ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
  11. ஓம் ஸுவேஷாய நம:
  12. ஓம் ஶ்ருதயே நம:
  13. ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
  14. ஓம் ஶுசிஸ்ரவாய நம:
  15. ஓம் ஶூராய நம:
  16. ஓம் ஸுப்ரபாய நம:
  17. ஓம் ஸுதந்விநே நம:
  18. ஓம் ஶுப்ராய நம:
  19. ஓம் ஸுரநாதாய நம:
  20. ஓம் ஸுப்ரபாய நம:
  21. ஓம் ஶுபாய நம:
  22. ஓம் ஸுதர்ஶநாய நம:
  23. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  24. ஓம் நிருக்தாய நம:
  25. ஓம் ஸுப்ரபாய நம: 750
  1. ஓம் ஸ்வபாவாய நம:
  2. ஓம் பவாய நம:
  3. ஓம் விபவாய நம:
  4. ஓம் ஸுஶாகாய நம:
  5. ஓம் விஶாகாய நம:
  6. ஓம் ஸுமுகாய நம:
  7. ஓம் முகாய நம:
  8. ஓம் ஸுநகாய நம:
  9. ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் ஸுரதாய நம:
  11. ஓம் ஸுதாய நம:
  12. ஓம் ஸாங்க்யாய நம:
  13. ஓம் ஸுரமுக்யாய நம:
  14. ஓம் ப்ரக்யாதாய நம:
  15. ஓம் ப்ரபாய நம:
  16. ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
  17. ஓம் கேடமுத்கரபாணயே நம:
  18. ஓம் ககேந்த்ராய நம:
  19. ஓம் ம்ருகேந்த்ராய நம:
  20. ஓம் நாகேந்த்ராய நம:
  21. ஓம் த்ருடாய நம:
  22. ஓம் நாக கேயூரஹாராய நம:
  23. ஓம் நாகேந்த்ராய நம:
  24. ஓம் அகமர்திநே நம:
  25. ஓம் நதீவாஸாய நம: 775
  1. ஓம் நக்நாய நம:
  2. ஓம் நாநாரூபதராய நம:
  3. ஓம் நாகேஶ்வராய நம:
  4. ஓம் நாகாய நம:
  5. ஓம் நமிதாய நம:
  6. ஓம் நராய நம:
  7. ஓம் நாகாந்தகரதாய நம:
  8. ஓம் நரநாராயணாய நம:
  9. ஓம் மத்யஸ்வரூபாய நம:
  10. ஓம் கச்சபாய நம:
  11. ஓம் யஜ்ஞவராஹாய நம:
  12. ஓம் நாரஸிம்ஹாய நம:
  13. ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
  14. ஓம் வாமநாய நம:
  15. ஓம் மஹௌஜஸே நம:
  16. ஓம் பார்கவராமாய நம:
  17. ஓம் ராவணாந்தகராய நம:
  18. ஓம் பலராமாய நம:
  19. ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
  20. ஓம் புத்தாய நம:
  21. ஓம் புத்தரூபாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
  23. ஓம் கல்கிநே நம:
  24. ஓம் ஆத்ரேயாய நம:
  25. ஓம் அக்நி நேத்ராய நம: 800
  1. ஓம் கபிலாய நம:
  2. ஓம் த்விஜாய நம:
  3. ஓம் க்ஷேத்ராய நம:
  4. ஓம் பஶுபாலாய நம:
  5. ஓம் பஶுவக்த்ராய நம:
  6. ஓம் க்ருஹஸ்தாய நம:
  7. ஓம் வநஸ்தாய நம:
  8. ஓம் யதயே நம:
  9. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  10. ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
  11. ஓம் தத்போக்த்ரே நம:
  12. ஓம் முமுக்ஷவே நம:
  13. ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
  14. ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
  15. ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
  16. ஓம் ஶிலாவாஸாய நம:
  17. ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
  18. ஓம் மஹாவாஸாய நம:
  19. ஓம் குஹாவாஸாய நம:
  20. ஓம் குஹ்யாய நம:
  21. ஓம் குப்தாய நம:
  22. ஓம் குரவே நம:
  23. ஓம் மூலாதிவாஸாய நம:
  24. ஓம் நீலவஸ்த்ரதராய நம:
  25. ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
  1. ஓம் ஶஸ்த்ராய நம:
  2. ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
  3. ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
  4. ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
  5. ஓம் துரந்தராய நம:
  6. ஓம் தூர்த்தாய நம:
  7. ஓம் துர்தராய நம:
  8. ஓம் தராய நம:
  9. ஓம் துர்மதாய நம:
  10. ஓம் துரந்தாய நம:
  11. ஓம் துர்தராய நம:
  12. ஓம் துர்நிரீக்ஷாய நம:
  13. ஓம் நிஷ்டாய நம:
  14. ஓம் துர்தர்ஶாய நம:
  15. ஓம் த்ருமாய நம:
  16. ஓம் துர்பேதாய நம:
  17. ஓம் துராஶாய நம:
  18. ஓம் துர்லபாய நம:
  19. ஓம் த்ருப்தாய நம:
  20. ஓம் த்ருப்தவக்த்ராய நம:
  21. ஓம் அத்ருப்த நயநாய நம:
  22. ஓம் உந்மத்தாய நம:
  23. ஓம் ப்ரமத்தாய நம:
  24. ஓம் தைத்யாரயே நம:
  25. ஓம் ரஸஜ்ஞாய நம: 850
  1. ஓம் ரஸேஶாய நம:
  2. ஓம் அரக்தரஸநாய நம:
  3. ஓம் பத்யாய நம:
  4. ஓம் பரிதோஷாய நம:
  5. ஓம் ரத்யாய நம:
  6. ஓம் ரஸிகாய நம:
  7. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  8. ஓம் ஊர்த்வரூபாய நம:
  9. ஓம் ஊர்த்வரேதஸே நம:
  10. ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
  11. ஓம் ஸிம்ஹாய நம:
  12. ஓம் ஊர்த்வபாஹவே நம:
  13. ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
  14. ஓம் ஶங்கசக்ராய நம:
  15. ஓம் கதாபத்மதராய நம:
  16. ஓம் பஞ்சபாணதராய நம:
  17. ஓம் காமேஶ்வராய நம:
  18. ஓம் காமாய நம:
  19. ஓம் காமபாலாய நம:
  20. ஓம் காமிநே நம:
  21. ஓம் காமவிஹாராய நம:
  22. ஓம் காமரூபதராய நம:
  23. ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
  24. ஓம் ஸோமபாய நம:
  25. ஓம் ஸோமாய நம: 875
  1. ஓம் வாமாய நம:
  2. ஓம் வாமதேவாய நம:
  3. ஓம் ஸாமஸ்வநாய நம:
  4. ஓம் ஸௌம்யாய நம:
  5. ஓம் பக்திகம்யாய நம:
  6. ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
  7. ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
  8. ஓம் பீஷ்மாய நம:
  9. ஓம் பீஷதாய நம:
  10. ஓம் பீமவிக்ரமணாய நம:
  11. ஓம் ம்ருகக்ரீவாய நம:
  12. ஓம் ஜீவாய நம:
  13. ஓம் ஜிதாய நம:
  14. ஓம் ஜிதகாரிணே நம:
  15. ஓம் ஜடிநே நம:
  16. ஓம் ஜாமதக்ந்யாய நம:
  17. ஓம் ஜாதவேதஸே நம:
  18. ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
  19. ஓம் ஜப்யாய நம:
  20. ஓம் ஜபிதாய நம:
  21. ஓம் ஜராயுஜாய நம:
  22. ஓம் அண்டஜாய நம:
  23. ஓம் ஸ்வேதஜாய நம:
  24. ஓம் உத்பிஜாய நம:
  25. ஓம் ஜநார்தநாய நம: 900
  1. ஓம் ராமாய நம:
  2. ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
  3. ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
  4. ஓம் ப்ரத்யும்நாய நம:
  5. ஓம் ப்ரமோதிநே நம:
  6. ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
  7. ஓம் ருத்ராய நம:
  8. ஓம் வீரபத்ராய நம:
  9. ஓம் சித்ரூபாய நம:
  10. ஓம் ஸமுத்ராய நம:
  11. ஓம் கத்ருத்ராய நம:
  12. ஓம் ப்ரசேதஸே நம:
  13. ஓம் இந்த்ரியாய நம:
  14. ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
  15. ஓம் இந்த்ராநுஜாய நம:
  16. ஓம் அதீந்த்ரியாய நம:
  17. ஓம் ஸாராய நம:
  18. ஓம் இந்திராபதயே நம:
  19. ஓம் ஈஶாநாய நம:
  20. ஓம் ஈட்யாய நம:
  21. ஓம் ஈஶித்ரே நம:
  22. ஓம் இநாய நம:
  23. ஓம் வ்யோமாத்மநே நம:
  24. ஓம் வ்யோம்நே நம:
  25. ஓம் வ்யோமகேஶிநே நம: 925
  1. ஓம் வ்யோமாதாராய நம:
  2. ஓம் வ்யோமவக்த்ராய நம:
  3. ஓம் அஸுரகாதிநே நம:
  4. ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
  5. ஓம் வ்யோமவாஸாய நம:
  6. ஓம் ஸுகுமாராய நம:
  7. ஓம் ராமாய நம:
  8. ஓம் ஶுபாசாராய நம:
  9. ஓம் விஶ்வாய நம:
  10. ஓம் விஶ்வரூபாய நம:
  11. ஓம் விஶ்வாத்மகாய நம:
  12. ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
  13. ஓம் ஜ்ஞாநாய நம:
  14. ஓம் விஶ்வேஶாய நம:
  15. ஓம் பராத்மநே நம:
  16. ஓம் ஏகாத்மநே நம:
  17. ஓம் த்வாதஶாத்மநே நம:
  18. ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
  19. ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
  20. ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
  21. ஓம் நித்யாய நம:
  22. ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
  23. ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
  24. ஓம் விரக்தாய நம:
  25. ஓம் பாவஶுத்தாய நம: 950
  1. ஓம் ஸித்தாய நம:
  2. ஓம் ஸாத்யாய நம:
  3. ஓம் ஶரபாய நம:
  4. ஓம் ப்ரபோதாய நம:
  5. ஓம் ஸுபோதாய நம:
  6. ஓம் புத்திப்ரியாய நம:
  7. ஓம் ஸ்நிக்தாய நம:
  8. ஓம் விதக்தாய நம:
  9. ஓம் முக்தாய நம:
  10. ஓம் முநயே நம:
  11. ஓம் ப்ரியம்வதாய நம:
  12. ஓம் ஶ்ரவ்யாய நம:
  13. ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
  14. ஓம் ஶ்ரிதாய நம:
  15. ஓம் க்ருஹேஶாய நம:
  16. ஓம் மஹேஶாய நம:
  17. ஓம் ப்ரஹ்மேஶாய நம:
  18. ஓம் ஸ்ரீதராய நம:
  19. ஓம் ஸுதீர்த்தாய நம:
  20. ஓம் ஹயக்ரீவாய நம:
  21. ஓம் உக்ராய நம:
  22. ஓம் உக்ரவேகாய நம:
  23. ஓம் உக்ரநேத்ராய நம:
  24. ஓம் உக்ரகர்மரதாய நம:
  25. ஓம் வ்யக்ராய நம: 975
  1. ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
  2. ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
  3. ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
  4. ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
  5. ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
  6. ஓம் வ்ருஷத்வஜாய நம:
  7. ஓம் வ்ருஷண்யாய நம:
  8. ஓம் வ்ருஷாய நம:
  9. ஓம் வ்ருஷபாய நம:
  10. ஓம் உக்ரஶ்ரவாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶ்ருதிதராய நம:
  13. ஓம் தேவதேவேஶாய நம:
  14. ஓம் மதுஸூதநாய நம:
  15. ஓம் புண்டரீகாக்ஷாய நம:
  16. ஓம் துரிதக்ஷயாய நம:
  17. ஓம் கருணாஸிந்தவே நம:
  18. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
  19. ஓம் நரஸிம்ஹாய நம:
  20. ஓம் கருடத்வஜாய நம:
  21. ஓம் யஜ்ஞநேத்ராய நம:
  22. ஓம் காலத்வஜாய நம:
  23. ஓம் ஜயத்வஜாய நம:
  24. ஓம் அக்நிநேத்ராய நம:
  25. ஓம் அமரப்ரியாய நம: 1000
  1. ஓம் மஹாநேத்ராய நம:
  2. ஓம் பக்தவத்ஸலாய நம:
  3. ஓம் தர்மநேத்ராய நம:
  4. ஓம் கருணாகராய நம:
  5. ஓம் புண்யநேத்ராய நம:
  6. ஓம் அபீஷ்டதாயகாய நம:
  7. ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
  8. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  9. ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
  10. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  11. ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

பரப்ரஹ்மணே நம:  1011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:

———-

ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:

இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே

மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்

ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.

ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்

ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்

ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.

ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே

வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்

நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம். 

நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே

ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச

கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்

த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே

நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே

ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்

ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.

ஸ்ரீ நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌

October 7, 2025

ஸத்யம்‌ ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம்‌ முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந்‌ ஜபத் யநுதிநம மரணே ருணீவ | பாஷாண காஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்‌” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌.
மனிதர்களே ! நான்‌ கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச்‌ சொல்லுகிறேன்‌. (ஊக்கமாகக்‌ கேளுங்கள்‌) யாவனொருவன்‌ ஜீவித்திருக்கும்‌ போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத்‌ தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும்‌ ஜபம்‌ செய்கிறானோ அவன்‌ திறத்தில்‌ நான்‌ கடன்‌ பட்டவன்‌ போல்‌ இருந்து, அவன்‌ மரணமடையும் போது, கல்லைப்‌ போன்றும்‌ கட்டையைப்‌ போன்றும்‌ நினைவற்றுக்‌ கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்‌, என்பது இதன்‌ பொருள்‌.

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த -ஸ்ரீ அம்ருத பலா வளி-22-

கடிகாசைல வன ப்ரிய – கடிகை மலைக்‌ காட்டை விரும்பி யுறையும்‌ பெருமானே ! பாக்ய லக்ஷ்மீ விரஹ – அத்ருவடமென்னும்‌ செல்வமில்லாமையின்‌, விலாஸ ஆத்த விக்ரியா: மநுஜா: – திருவிளை யாடலால்‌ மன வேறுபாடு கொண்ட மனிதர்கள்‌, ஸ்ரவண அம்ருதேஷு – செவிக்கு அமுதம்‌ போல்‌ இனிய, தே வசஸ்ஸு – தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகளில்‌, ஸ்ரத்தாம்‌ – நம்பிக்‌கயை, ந விதததி – வைப்பதில்லை.
பாக்யமற்றவர்கள்‌ மேன்மேலும் ஸம்ஸாரத்திலேயே வருந்துவதற்கு உறுப்பாகக்‌ காமம்‌ குரோதம்‌ முதலிய மாறுபட்ட எண்ணங்களையே எண்ணி நசித்துப் போகிறார்கள்‌. நரசிம்மப்‌ பெருமாளுடைய சரம ஸ்லோககத்தில்‌ நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து மோக்ஷம்‌ பெறுகிறார்களில்லை என்று கவி தம்முடைய வருத்தத்தைத்‌ தெரிவிக்கிறார்‌. இதனால்‌ “ஸத்யம்‌ ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம்‌ முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந்‌ ஜபத்யநுதிநம மரணே ருணீவ | பாஷாணகாஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்‌” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌.
மனிதர்களே ! நான்‌ கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச்‌ சொல்லுகிறேன்‌. (ஊக்கமாகக்‌ கேளுங்கள்‌) யாவனொருவன்‌ ஜீவித்திருக்கும்‌ போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத்‌ தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும்‌ ஜபம்‌ செய்கிறானோ அவன்‌ திறத்தில்‌ நான்‌ கடன்‌ பட்டவன்‌ போல்‌ இருந்து, அவன்‌ மரணமடையும் போது, கல்லைப்‌ போன்றும்‌ கட்டையைப்‌ போன்றும்‌ நினைவற்றுக்‌ கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்‌, என்பது இதன்‌ பொருள்‌. வசஸ்ஸு என்ற பஹு வசனத்தினால்‌ வராஹ சரம ஸ்லோகம்‌, ஸ்ரீராமசரம ஸ்லோகம்‌, ஸ்ரீக்ருஷ்ண சரம ஸ்லோகம்‌ ஆகியவற்றையும்‌ கொள்ளக்‌ குறையில்லை –

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-

 உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யுர் ம்ருத்யும் நமாம்யஹம்

உக்ரரூபமாய், வீரமானவராய், மஹாவிஷ்ணுவின் அவதாரமாய்,பிரகாசமானவராய் ,தன்சக்தி பரிமளிப்பவராய், மங்களகரமானவராய், அழிவுக்கு காரணமான விஷயங்களை அழிப்பவரான ந்ருஸிம்ஹரை வணங்குகிறேன்.

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

December 5, 2024

நாயிந்தே நாயிந்தே
த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
ஸோ அபி சாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
திருவடிகளை யுடையனான தேவரீர்

ஸூதா வல்லீ ஸமேதனாய்
திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
பக்தோசிதனே

பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
ஓம் ஜய விஜயீ பவ
ஸ்வாமீ எச்சரிக்கை

—————

திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
ஓம் சங்கு சக்ர தராய நம
ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

ஓம் கிரீடிநே நம
ஓம் அனா மயாய நம
ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
ஓம் கோமலா க்ருதயே நம
ஓம் ப்ரஸன்ன வதனாய நம

ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
ஓம் வன மாலிநே நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
ஓம் ஸிம்ஹ முகாய நம
ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

ஓம் ஜகதாம் கர்த்ரே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ப்ரேணத்ரே நம
ஓம் அநிந்திதாய நம

ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் கேஸரிணே நம
ஓம் நர கேஸரிணே நம
ஓம் விபவே நம
ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

ஓம் பீமாய நம
ஓம் கதா தராய நம
ஓம் அதீஸ்வராய நம
ஓம் வ்யக்தனனாய நம
ஓம் மஹோரஸ்காய நம

ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
ஓம் உன்னதஸ்ருதயே நம
ஓம் உத்ததாய நம
ஓம் உதக்ர நாஸாய நம

ஓம் உச்சண்ட காலாய நம
ஓம் உத்தம மஸ்தகாய நம
ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
ஓம் சிவ ஸேவிதாய நம
ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

ஓம் வய க்யாத நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் ஸிம்ஹ காமிநே நம
ஓம் ஈஸாநாய நம

ஓம் நிதயே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பிங்க லாஷாய நம
ஓம் ப்ருது க்ரீவாய நம

ஓம் விமலாய நம
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் புகதிதாய நம
ஓம் சாந்தாய நம

ஓம் தாந்தாய நம
ஓம் ஆனந்த கந்த லாய நம
ஓம் மந்தார மாலாபரணாய நம
ஓம் அஷ்ட பாஹவே நம
ஓம் மஹா உதாராய நம

ஓம் ஸநகாதி நுதாய நம
ஓம் தேவராஜ பூஜிதாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
ஓம் ஹ்ருதி வாஸிநே நம
ஓம் ஹநுமத் வந்திதாய நம
ஓம் லோக சங்கராய நம
ஓம் சங்கர ப்ரியாய நம

ஓம் பக்த அர்ச்சிதாய நம
ஓம் பக்தி தாயினே நம
ஓம் ஸூப தாயினே நம
ஓம் சடாலம் க்ருதாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் உக்ர சாஸநாய நம
ஓம் உத்ததாய நம
ஓம் விஸ்தீர்ண வதனாய நம
ஓம் தீன ரஷகாய நம
ஓம் ஸூர ரக்ஷகாய நம

ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
ஓம் ஹேமாங்காய நம
ஓம் ஹேம குண்டலாய நம

ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
ஓம் மாலாபரணாய நம
ஓம் தைத்ய ராஜவஸா நம
ஓம் ந்ருணாம் சரணாய நம

ஓம் உத்தமாய நம
ஓம் அநுத்தமாய நம
ஓம் தேவாய நம
ஓம் ராஜா நம
ஓம் ஆஜாநு பாஹு காய நம

ஓம் ஜகதாம் போஷணாய நம
ஓம் பூத பாவனாய நம
ஓம் பத்ரி வாஹனாய நம
ஓம் வேதாந்த வேத்யாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
ஓம் ஸம் ஸ்துதாய நம
ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
ஓம் பரமார்த்தயா நம
ஓம் மஹாஷாய நம

ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் அபராஜிதாய நம
ஓம் அஷோப்யாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் பராய நம
ஓம் பரம் நம
ஓம் அநேக ரூபாய நம
ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
ஓம் அக்ருத்ரிமாய நம

ஓம் ஹிரண்யாய நம
ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
ஓம் ப்ரபவே நம

ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

——————————-

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

————–

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கராவலம்ப ஸ்தோத்திரம்

November 25, 2024

ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 1 ||

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்ற பெருமாளே! ஒளிரும் நிறம் கொண்ட அழகிய திருமேனி உடையவரே! ரிஷி, முனிவர்களை காத்து அருள்பவரே! உம்மை சரணாகதி அடைந்த பக்தர்களையும் காக்கின்ற அருள் வடிவானவர் நீர்தானே! இந்த வாழ்க்கை எனும் பெருங்கடலை கடக்க படகாக இருந்து பாதுகாப்பு தருமாறு அருள்புரிய வேண்டுகிறோம் நரசிம்மரே!! என் கைபிடித்து தூக்கிவிட்டு அருள்புரிய வேண்டும்

ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 2 ||

ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 3 ||

ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 4 ||

ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 5 ||

ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 6 ||

ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 7 ||

ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 8 ||

ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 9 ||

ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 10 ||

ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 11 ||

பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 12 ||

லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம் || 13 ||

ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 14 ||

அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 15 ||

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 16 ||

லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம் || 17 ||

நரசிம்ம காயத்ரி

வஜ்ர நகாய வித்மஹே, தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத்.

Srimat Payonidhi Nikethana Chakra Pane,
Bhogeendra Bhoga Mani Rajitha Punya Moorthe,
Yogeesa Saswatha Saranya Bhabdhi Potha,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 1

Oh Great God Lakshmi Nrsimha,
Who lives in the ocean of milk,
Who holds the holy wheel as weapon,
Who wears the gems of the head,
Of Adhisesha as ornaments,
Who has the form of good and holy deeds,
Who is the permanent protection of sages,
And who is the boat which helps us cross,
This ocean of misery called life,
Please give me the protection of your hands.

Brahmendra, Rudra Arka Kireeta Koti,
Sangattithangri Kamala Mala Kanthi Kantha,
Lakshmi Lasath Kucha Saroruha Raja Hamsa,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 2

Oh Great God Lakshmi Nrsimha,
Whose feet is touched by the crowns,
Of Brahma, Indra, Shiva and Sun,
Whose shining feet adds to his effulgence,
And who is the royal swan playing,
Near the breasts of Goddess Lakshmi,
Please give me the protection of your hands.

Samsara Gora Gahane Charathe Murare,
Marogra Bheekara Mruga Pravardhithasya,
Aarthasya Mathsara Nidha Chain Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 3

Oh Great God Lakshmi Narsimha,
Oh Lord who killed the Asura called Mura,
I have been traveling in the dark forests of day to day life,
Where I have been terrified by the lion called desire,
And scorched by the heat called competition, and so,
Please give me the protection of your hands.

Samsara Koopam Adhi Ghora Magadha Moolam,
Samprapya Dukha Satha Sarpa Samakulasya,
Dheenasya Deva Krupana Padamagadasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 4

Oh Great God Lakshmi Narasimha,
I have reached the very dangerous and deep,
Bottom of the well of day to day life,
And also being troubled by hundreds,
Of miseries which are like serpents,
And am really miserable and have,
Reached the state of wretchedness and so,
Please give me the protection of your hands.

Samsara Sagara Vishala Karala Kala,
Nakra Graham Grasana Nigraha Vigrahasya,
Vyagrasya Raga Rasanormini Peedithasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 5

Oh Great God Lakshmi Nrsimha,
I have reached this wide unfathomable ocean of day to day life,
And I have been caught by black deadly,
Crocodiles called time which are killing me
And I am also afflicted by waves of passion,
And attachments to pleasures like taste and so,
Please give me the protection of your hands.

Samasra Vrukshamagha Bheeja Manantha Karma,
Sakha Satham Karana Pathramananga Pushpam,
Aroohasya Dukha Phalitham Pathatho Dayalo,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 6

Oh Great God Lakshmi Nrsimha,
I have climbed the tree of worldly life,
Which grew from the seed of great sin,
Which has hundreds of branches of past karmas,
Which has leaves which are parts of my body,
Which has flowers which are the result of Venus,
And which has fruits called sorrow,
But I am falling down from it fast and so,
Please give me the protection of your hands.

Samsara Sarpa Ghana Vakthra Bhyogra Theevra,
Damshtra Karala Visha Daghdha Vinashta Murthe,
Naagari Vahana Sudhabhdhi Nivasa Soure,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 7

Oh Great God Lakshmi Nrsimha,
Oh, Lord who rides on the enemy of snakes,
Oh, Lord who lives in the ocean of nectar,
The serpent of family life has opened,
Its fearful mouth with very dangerous,
Fangs filled with terrible venom,
Which has destroyed me and so,
Please give me the protection of your hands.

Samsara Dava Dahanathura Bheekaroru,
Jwala Valee Birathi Dhighdha Nooruhasya,
Thwat Pada Padma Sarasi Saranagathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 8

Oh Great God Lakshmi Nrsimha,
I have been scarred badly by the fire of daily life,
And even every single hair of my body,
Has been singed by its fearful flames,
And I have taken refuge in the lake of your lotus feet, and so,
Please give me the protection of your hands.

Samsara Jala Pathithasya Jagan Nivasa,
Sarvendriyartha Badisartha Jashopamasya,
Proth Ganditha Prachoora Thaluka Masthakasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 9

Oh Great God Lakshmi Nrsimha,
I have been caught in this net of daily life,
And all my organs are caught in that web,
And the five senses which is the hook,
Tears apart my head from me, and so,
Please give me the protection of your hands.

Samsara Bheekara Kareeendra Karabhigatha,
Nishpishta Marmma Vapusha Sakalarthi Nasa,
Prana Prayana Bhava Bhhethi Samakulasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 10

Oh Great God Lakshmi Nrsimha,
I have been struck by the fearful king of elephants,
Which is the worldly illusion, and my vital parts,
Have been completely crushed, and I suffer,
From thoughts of life and death, and so,
Please give me the protection of your hands.

Andhasya Me Viveka Maha Danasya,
Chorai Prabho Bhalibhi Rindriya Nama Deyai,
Mohanda Koopa Kuhare Vinipathathasya,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 11

Oh Great God Lakshmi Nrsimha,
I have become blind because, the sense of discrimination,
Has been stolen from me by the thieves of ‘senses’,
And I who am blind, have fallen in to the deep well of passion, and so,
Please give me the protection of your hands.


Baddhvaa Gale Yamabhataa Bahutarjayantah,
Karshhanti Yatra Bhavapaashashatairyutam Maam.
Ekaakinam Paravasham Chakitam Dayaalo
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 12

Oh Great God Lakshmi Nrsimha,
I have been tied by the soldiers of the God of death,
By numerous ropes of worldly attachments,
And they are dragging me along by the noose around the neck,
And I am alone, tired and afraid, and so Oh merciful one,
Please give me the protection of your hands.


Lakshmi Pathe Kamala Nabha Suresa Vishno,
Vaikunta Krishna Madhu Soodhana Vishwaroopa,
Brahmanya Kesava Janardhana Chakrapane,
Devesa Dehi Krupanasya Karavalambam 13

Oh King of Devas,
Who is the Lord of Lakshmi, who has a lotus on his belly,
Who is Vishnu, the lord of all heavenly beings, who is Vaikunta,
Who is Krishna , who is the slayer of Madhu,
Who is one with lotus eyes, Who is the knower of Brahman,
Who is Kesava, Janardhana, Vasudeva,
Please give me the protection of your hands.

Ekena Chakramaparena Karena Shamkha-
Manyena Sindhutanyaaamavalambya Tishhthan,
Vaame Karena Varadaabhayapadmachihnam,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 14

Oh Great God Lakshmi Nrsimha,
Who holds Sudarshana, the holy wheel in one hand,
Who holds the conch in the other hand,
Who embraces the daughter of ocean by one hand,
And the fourth hand signifies protection and boons, and so,
Please give me the protection of your hands.

Samsaara Saagara Nimajjana Muhyamaanam
Diinam Vilokaya Vibho Karunaanidhe Maam,
Prahlaada Kheda Parihaara Paraavataara
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 15

Oh Great God Lakshmi Nrsimha,
I am drowned in the ocean of day to day life,
Please protect this poor one, oh, Lord, Oh treasure of compassion,
Just as you took a form to remove the sorrows of Prahlada, and so,
Please give me the protection of your hands.

Prahlaada Naarada Paraashara Pundariika-
Vyaasaadi Bhaagavata Pungavah Rinnivaasa ,
Bhaktaanurakta Paripaalana Paarijaata,
Lakshmi Nrsimha Mama Dehi Karavalambam 16

Oh Great God Lakshmi Nrsimha,
Who dwells in the hearts of great sages like Prahlada,
Narada, Parashara, Pundarika and Vyasa,
Who loves his devotees and is the wish giving tree,
That protects them, and so,
Please give me the protection of your hands.

Lakshminrisimha Charana Abja Madhuvratena
Stotram Kritam Shubhakaram Bhuvi Shankarena
Ye Tatpathanti Manujaa Haribhakti Yuktaa-
Ste Yaanti Tatpada Saroja Makhandaruupam 17

This prayer which blesses earth with good things,
Is composed by Sankara who is a bee,
Drinking deeply the honey from the lotus feet of Lakshmi Nrsimha,
And those humans who are blessed with devotion to Hari,
Will attain the lotus feet of the Brahman.

Sri Lakshmi Narsimha Padarpanamasthu

Dedicated to the feet of Lord Lakshmi Narsimha !!

————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ பிராட்டியார் ஸமேத ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் உள்ளது)

January 18, 2024

ஸ்ரீ மார்க்கண்டேய உவாச-

1        ஏவம் யுத்தமபூத் கோரம் ரௌத்ரம் தைத்யபலைஸ் ஸஹ |

ந்ருஸிமஸ்யாங்க ஸம்பூதைர் நாரஸிம்ஹை ரநேகஶ ||

 

2        தைத்யகோட்யோ ஹதாஸ் தத்ர கேசித் பீதா: பலாயிதா: |

தம் த்ருஷ்ட்வாதீவ ஸங்க்ருத்தோ ஹிரண்யகஶிபுஸ்ஸ்வயம் ||

 

3        பூதபூர்வை ரம்யுத்யுர் மே இதி ப்ரஹ்ம வரோத்தத: |

வவர்ஷ ஶரவர்ஷேண நாரஸிம்ஹம் ப்ருஶம் பலீ ||

 

4        த்வந்த்வ யுத்த மபூதுக்ரம் திவ்ய வர்ஷ ஸஹஸ்ரகம் |

தைத்யேந்த்ர ஸாஹஸம் த்ருஷ்ட்வா தேவாஶ் கேந்த்ர புரோகமா: ||

 

5        ஶ்ரேய: கஸ்ய பவேதத்ர இதி சிந்தாபரா பவந் |

ததா க்ருத்தோ ந்ருஸிம்ஹஸ்து தைத்யேந்த்ர ப்ரஹிதான்யபி||

 

6        விஷ்ணுசக்ரம் மஹாசக்ரம் காலசக்ரம் ச வைஷ்ணவம் |

ரௌத்ரம் பாஶுபதம் ப்ராஹ்மம் கௌபேரம் குலிஶாஸநம் ||

 

7        ஆக்நேயம் வாருணம் ஸௌம்யம் மோஹநம் ஸௌர பார்வதம் |

பார்கவாதி பஹூந்யஸ்த்ரா ண்யக்ஷபயத கோபந: ||

 

8       ஸந்த்யாகாலே ஸபாத்வாரே ஸ்வாங்கே நிக்ஷிப்ய பைரவ: |

தத: கட்கதரம் தைத்யம் ஜக்ராஹ நரகேஸரீ ||

 

9        ஹிரண்ய கஶிபோர் வக்ஷோ விதார்யாதீவ ரோஷித: |

உத்த்ருத்ய சாந்த்ரமாலாஶச நகைர் வஜ்ரஸமப்ரபை: ||

 

10       மேநே க்ருதார்த்தமாத்மாநம் ஸர்வத: பர்யவைக்ஷத |

ஹர்ஷிதா தேவதாஸ் ஸர்வா: புஷ்பவ்ருஷ்டி மவாகிரந் ||

 

11       தேவதுந்துபயோ நேது: விமலாஶ்ச திஶோபவந் |

நரஸிம்ஹ மதீவோக்ரம் விகீர்ணவதநம் ப்ருஶம் ||

 

12       லேலிஹாநம் ச கர்ஜந்தம் காலாநல ஸமப்ரபம் |

அதிரௌத்ரம் மஹாகாயம் மஹாதம்ஷ்ட்ரம் மஹாருதம் ||

 

13       மஹாஸிம்ஹம் மஹாரூபம் த்ருஷ்ட்வா ஸம்க்ஷுபிதம் ஜகத் |

ஸர்வ தேவகணைஸ் ஸார்த்தம் தத்ராகத்ய பிதாமஹ: ||

 

14       ஆகந்துகைர் பூதபூர்வை: வர்த்தமாநை ரநுத்தமை: |

குணைர் நாம ஸஹஸ்ரேண துஷ்டாவ ஶ்ருதிஸம்மதை: ||

 

ஓம் நம: ஸ்ரீமத் திவ்யலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி: அநுஷ்டுப் சந்த: ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹோ தேவதா, பரமாத்மா பீஜம், லக்ஷ்மீர் மாயா ஶக்தி: ஜீவோ பீஜம், புத்திஶ் ஶக்தி: உதாநவாயுர் பீஜம், ஸரஸ்வதீ ஶக்தி: வ்யஞ்ஜநாநி பீஜாநி, ஸ்வரா: ஶக்தய: |

 

ஓம், க்ஷ்ரௌம், ஹ்ரீம் இதி பீஜாநி, ஓம் ஸ்ரீம் அம் ஆம் இதி ஶக்தய: விகீர்ண நக தம்ஷ்ட்ராயுதாயேதி கீலகம், அகாராதீதி போதகம்.

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ப்ரஸாத ஸித்யர்த்தே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம மந்த்ர ஜபே விநியோக: ||

 

ப்ரஹ்மோவாச—

 

ஓம் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹாய நம: – அங்குஷ்டாப்யாம் நம:

ஓம் வஜ்ரநகாய நம: தர்ஜனீப்யாம் நம:

ஓம் மஹாருத்ராய நம: — மத்யமாப்யாம் நம:

ஓம் ஸர்வதோமுகாய நம: — அநாமிகாப்யாம் நம:

ஓம் விகடாஸ்யாய நம: – கநிஷ்டிகாப்யாம் நம:

ஓம் வீராய நம: – கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

 

ஓம் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹாய நம: – ஹ்ருதயாய நம:

ஓம் வஜ்ரநகாய நம: ஶிரஸே ஸ்வாஹா

ஓம் மஹாருத்ராய நம: — ஶிகாயை வஷட்

ஓம் ஸர்வதோமுகாய நம: — கவசாய ஹும்

ஓம் விகடாஸ்யாய நம: – நேத்ராப்யாம் வௌஷட்

ஓம் வீராய நம: – அஸ்த்ராய பட் – ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: – இதி திக்பந்த:

 

ஓம் ஐந்த்ரீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஆக்நேயீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் யாம்யாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் நைர்ருதீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் வாருணீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் வாயவீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் கௌபேரீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஐஶாநீம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஊர்த்வாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் அதஸ்தாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

ஓம் ஆந்தரிக்ஷ்யாம் திஶம் ஸுதர்ஶநேந பத்நாமி, நமஶ்சக்ராய ஸ்வாஹா

 

த்யாநம்

ஸத்யஜ்ஞாந ஸுகஸ்வரூப மமலம் க்ஷீராப்திமத்யே ஸ்த்திதம் |

ஸ்வாங்காரூட ரமா ப்ரஸந்ந வதநம் பூஷா ஸஹஸ்ரோஜ்ஜ்வலம் ||

 

த்ர்யக்ஷம் சக்ரபிநாக ஸாபயகராந் பிப்ராண மர்க்கச்சவிம் |

சத்ரீபூத பணீந்த்ர மிந்துதவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே ||

 

உபாஸ்மஹே ந்ருஸிம்ஹாக்யம் ப்ரஹ்ம வேதாந்த கோசரம் |

பூயோ லாலித ஸம்ஸார ச்சேதஹேதும் ஜகத்குரும் ||

 

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ஷ்ரௌம்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ நாமஸஹஸ்ர ப்ராரம்ப:

 

1        ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே |

வஜ்ரதேஹாய வஜ்ராய நமோ வஜ்ர நகாய ச ||

 

2        வாஸுதேவாய வந்த்யாய வரதாய வராத்மநே |

வரதாபய ஹஸ்தாய வராய வரரூபிணே ||

 

3        வரேண்யம் வரிஷ்டாய ஸ்ரீவராய நமோ நம: |

ப்ரஹ்லாத வரதாயைவ ப்ரத்யக்ஷ வரதாய ச ||

 

4        பராத்பர பரேஶாய பவித்ராய பிநாகிநே |

பாவநாய ப்ரஸந்நாய பாஶிநே பாபஹாரிணே ||

 

5        புருஷ்டுதாய புண்யாய புருஹூதாய தே நம: |

தத்புருஷாய தத்த்யாய புராண புருஷாய ச ||

 

6        புரோதஸே பூர்வஜாய புஷ்கராக்ஷாய தே நம: |

புஷ்பஹாஸாய ஹாஸாய மஹாஹாஸாய ஶார்ங்கிணே ||

 

7        ஸிம்ஹாய ஸிம்ஹராஜாய ஜகத்வஶ்யாய தே நம: |

அட்ட ஹாஸாய ரோஷாய ஜலவாஸாய தே நம: ||

 

8        பூதாவாஸாய பாஸாய ஸ்ரீநிவாஸாய கட்கிநே |

கட்கஜிஹ்வாய ஸிம்ஹாய கட்கவாஸாய தே நம: ||

 

9        நமோ மூலாதிவாஸாய தர்மவாஸாய தந்விநே |

தநஞ்ஜயாய  தந்யாய நமோ ம்ருத்யுஞ்ஜயாய ச ||

 

10       ஶுபஞ்ஜயாய ஸூத்ராய நமஶ் ஶத்ருஞ்ஜயாய ச |

நிரஞ்ஜநாய நீராய நிர்குணாய குணாய ச ||

 

11       நிஷ்ப்ரபஞ்சாய நிர்வணாய பதாய நிபிடாய ச |

நிராலம்பாய நீலாய நிஷ்கலாய கலாய ச ||

 

12       நிமேஷாய நிபந்தாய நிமேஷ கமநாய ச |

நிர்த்வந்த்யாய நிராஶாய நிஶ்சயாய நிஜாய ச ||

 

13       நிர்மலாய நிபந்தாய நிர்மோஹாய நிராக்ருதே |

நமோ நித்யாய ஸத்யாய ஸத்காம நிரதாய ச ||

 

14       ஸத்யத்வஜாய முஞ்ஜாய முஞ்ஜகேஶாய கேஶிநே |

ஹரீஶாய ச ஶேஷாய குடாகேஶாய வை நம: ||

 

15       ஸுகேஶாயோர்த்வ கேஶாய கேஶி ஸம்ஹாரகாய ச |

ஜலேஶாய ச ஶேஷாய குடாகேஶாய வை நம: ||

 

16       குஶேஶயாய கூலாய கேஶவாய நமோ நம: |

ஸூக்திகர்ணாய ஸூக்தாய ரக்தஜிஹ்வாய ராகிணே ||

 

17       தீப்தரூபாய தீப்தாய ப்ரதீப்தாய ப்ரலோபிநே |

ப்ரச்சந்நாய ப்ரபோதாய ப்ரபவே விபவே நம: ||

 

18       ப்ரபஞ்ஜநாய பாந்தாய ப்ரமாயாப்ரமிதாய ச |

ப்ரகாஶாய ப்ரதாபாய ப்ரஜ்வலாயோஜ்ஜ்வலாய ச ||

 

19       ஜ்வாலாமாலா ஸ்வரூபாய ஜ்வலஜ்ஜிஹ்வாய ஜ்வாலிநே |

மஹோஜ்வலாய காலாய காலமூர்த்தி தராய ச ||

 

20       காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம: |

காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||
21       அக்ரூராய க்ருதாந்தாய விக்ரமாய க்ரமாய ச ||

க்ருத்திநே க்ருத்திவாஸாய க்ருதக்நாய க்ருதாத்மநே ||

 

22       ஸங்க்ரமாய ச க்ருத்தாய க்ராந்த லோகத்ரயாய ச |

அரூபாய ஸரூபாய ஹரயே பரமாத்மநே ||

 

23       அஜேயா யாதிதேவாய அக்ஷயாய க்ஷயாய ச |

அகோராய ஸுகோராய கோர கோரதராய ச ||

 

24       நமோ(அ)ஸ்த்வகோர வீர்யாய லஸத்கோராய தே நம: |

கோராத்யக்ஷாய தக்ஷாய தக்ஷிணார்யாய ஶம்பவே ||

 

25       அமோகாய குணௌகாய அநகாயாக ஹாரிணே |

மேகநாதாய நாதாய துப்யம் மேகாத்மநே நம: ||

 

26       மேகவாஹநரூபாய மேகஶ்யாமாய மாலிநே |

வ்யாள யஜ்ஞோபவீதாய வ்யாக்ரதேஹாய வை நம: ||

 

27       வ்யாக்ரபாதாய ச வ்யாக்ர கர்மிணே வ்யாபகாய ச |

விகடாஸ்யாய வீராய விஷ்டர ஶ்ரவஸே நம: ||

 

28       விகீர்ண நகதம்ஷ்ட்ராய நகதம்ஷ்ட்ராயுதாய ச |

விஷ்வக்ஸேநாய ஸேநாய விஹ்வலாய பலாய ச ||

 

29       விரூபாக்ஷாய வீராய விஶேஷாக்ஷாய ஸாக்ஷிணே |

வீதஶோகாய வீஸ்தீர்ண வதநாய நமோ நம: ||

30       விதாநாய விதேயாய விஜயாய ஜயாய ச |

விபுதாய விபாவாய நமோ விஶ்வம்பராய ச ||

 

31       வீதராகாய விப்ராய விடங்க நயநாய ச: |

விபுலாய விநீதாய விஶ்வயோநே நமோ நம: ||

 

32       சிதம்பராய வித்தாய விஶ்ருதாய வியோநயே |

விஹ்வலாய விகல்பாய கல்பாதீதாய ஶில்பிநே ||

 

33       கல்பநாய ஸ்வரூபாய மணிதல்பாய வை நம: |

தடித்ப்ரபாய தார்யாய தருணாய தரஸ்விநே ||

 

34       தபநாய தரக்ஷாய தாபத்ரய ஹராய ச |

தாரகாய தமோக்நாய தத்வாய ச தபஸ்விநே ||

 

35       தக்ஷகாய தநுத்ராய தடிதே தரலாய ச |

ஶதரூபாய ஶாந்தாய ஶததாராய தே நம: ||

 

36       ஶதபத்ராய தார்க்ஷ்யாய ஸ்திதயே ஶதமூர்த்தயே |

ஶதக்ரது ஸ்வரூபாய ஶாஶ்வதாய ஶதாத்மநே ||

 

37       நமஸ் ஸஹஸ்ரஶிரஸே ஸஹஸ்ரவதநாய ச |

ஸஹஸ்ராக்ஷாய தேவாய திஶஶ்ரோத்ராய தே நம: ||

 

38       நமஸ் ஸஹஸ்ரஜிஹ்வாய மஹாஜிஹ்வாய தே நம: |

ஸஹஸ்ர நாமதேயாய ஸஹஸ்ராக்ஷிதராய ச ||

 

39       ஸஹஸ்ரபாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச |

ஸஹஸ்ரார்க்க ப்ரகாஶாய ஸஹஸ்ராயுத தாரிணே ||

 

40       நம: ஸ்தூலாய ஸூக்ஷ்மாய ஸுஸூக்ஷ்மாய நமோ நம: |

ஸுக்ஷுண்யாய ஸுபிக்ஷாய ஸுராத்யக்ஷாய ஶௌரிணே ||

 

41       தர்மாத்யக்ஷாய தர்மாய லோகாத்யக்ஷாய வை நம: |

ப்ரஜாத்யக்ஷாய ஶிக்ஷாய விபக்ஷக்ஷய மூர்த்தயே ||

 

42       காலாத்யக்ஷாய தீக்ஷ்ணாய மூலாத்யக்ஷாய தே நம:

அதோக்ஷஜாய மித்ராய ஸுமித்ர வருணாய ச ||

43       ஶத்ருக்நாய ஹ்யவிக்நாய விக்நகோடி ஹராய ச |

ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம: ||

 

44       பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிநே |

பூதவேதாள காதாய பூதாதிபதயே நம: ||

 

45       பூதக்ரஹ விநாஶாய பூதஸம்யமிநே நம: |

மஹாபூதாய ப்ருகவே ஸர்வபூதாத்மநே நம: ||

 

46       ஸர்வாரிஷ்ட விநாஶாய ஸர்வஸம்பத் கராய ச: |

ஸர்வாதாராய ஶர்வாய ஸர்வார்த்தி ஹரயே நம: ||

 

47       ஸர்வது:க ப்ரஶாந்தாய ஸர்வ ஸௌபாக்யதாயிநே |

ஸர்வஜ்ஞாயா ப்யநந்தாய ஸர்வஶக்தி தராய ச: ||

 

48       ஸர்வைஶ்வைர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகார்ய விதாயிநே |

ஸர்வஜ்வர விநாஶாய ஸர்வ ரோகாபஹாரிணே ||

 

49       ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஶ்வைர்ய விதாயிநே |

பிங்காக்ஷாயைக ஶ்ருங்காய த்விஶ்ருங்காய மரீசயே ||

 

50       பஹுஶ்ருங்காய லிங்காய மஹாஶ்ருங்காய தே நம: |

மாங்கள்யாய மநோஜ்ஞாய மந்தவ்யாய மஹாத்மநே ||

 

51       மஹாதேவாய தேவாய மாதுலுங்க தராய ச |

மஹாமாயா ப்ரஸுதாய ப்ரஸ்துதாய ச மாயிநே ||

 

52       அநந்தாநந்தரூபாய மாயிநே ஜலஶாயிநே |

மஹோதராய மந்தாய மததாய மதாய ச  ||

 

53       மதுகைடப ஹந்த்ரே ச மாதவாய முராரயே |

மஹாவீர்யாய தைர்யாய சித்ரவீர்யாய தே நம: ||

 

54       சித்ரகூர்மாய சித்ராய நமஸ்தே சித்ரபாநவே |

மாயாதீதாய மாயாய மஹாவீராய தே நம: ||

 

55       மஹாதேஜாய பீஜாய தேஜோதாம்நே ச பீஜிநே |

தேஜோமய ந்ருஸிம்ஹாய நமஸ்தே சித்ரபாநவே ||

 

56       மஹாதம்ஷ்ட்ராய துஷ்டாய நம: புஷ்டிகராய ச |

ஶிபிவிஷ்டாய ஹ்ருஷ்டாய புஷ்டாய பரமேஷ்டிநே ||

 

57       விஶிஷ்டாய ச ஶிஷ்டாய கரிஷ்டா யேஷ்ட தாயிநே |

நமோ ஜ்யேஷ்டாய ஶ்ரேஷ்டாய துஷ்டாமித தேஜஸே ||

 

58       அஷ்டாங்க ந்யஸ்த ரூபாய ஸர்வதுஷ்டாந்தகாய ச |

வைகுண்டாய விகுண்டாய கேஶிகண்டாய தே நம: ||

 

59       கண்டீரவாய லுண்டாய நிஶ்ஶடாய ஹடாய ச |

ஸர்வோத்ரிக்தாய ருத்ராய ருக்யஜுஸ் ஸாமகாய ச ||

 

60       ருதுத்வஜாய வஜ்ராய மந்த்ர ராஜாய மந்த்ரிணே |

த்ரிநேத்ராய த்ரிவர்காய த்ரிதாம்நே ச த்ரிஶூலிநே ||

 

61       த்ரிகாலஜ்ஞாந ரூபாய த்ரிதேஹாய த்ரிதாத்மநே |

நமஸ் த்ரிமூர்த்தி வித்யாய த்ரிதத்வஜ்ஞாநிநே நம: ||

 

62       அக்ஷோப்யாயா நிருத்தாய ஹ்யப்ரமேயாய பாநவே |

அம்ருதாய ஹ்யநந்தாய ஹ்யமிதாயா மிதௌஜஸே ||

 

63       அபம்ருத்யு விநாஶாய ஹ்யபஸ்மார விகாதிநே |

அந்நதாயாந்ந ரூபாய ஹ்யந்நாயாந்ந புஜே நம: ||

 

64       நாத்யாய நிரவத்யாய வேத்யாயாத்புத கர்மணே |

ஸத்யோஜாதாய ஸங்காய வைத்யுதாய நமோ நம: ||

 

65       அத்வாதீதாய ஸத்வாய வாகதீதாய வாக்மிநே |

வாகீஸ்வராய கோபாய கோஹிதாய ஹவாம்பதே ||

 

66       கந்தர்வாய கபீராய கர்ஜிதாயோர்ஜிதாய ச |

பர்ஜந்யாய ப்ரபுத்தாய ப்ரதாநபுருஷாய ச ||

 

67       பத்மாபாய ஸுநாபாய பத்மநாபாய மாநிநே |

பத்ம நேத்ராய பத்மாய பத்மாயா: பதயே நம: ||

68       பத்மோதராய பூதாய பத்ம கல்போத்பவாய ச |

னமோ ஹ்ருத்பத்மவாஸாய பூபத்மோத்தரணாய ச ||

 

69       ஶப்தப்ரஹ்ம ஶ்வரூபாய ப்ரஹ்மரூப தராய ச |
ப்ரஹ்மணே ப்ரஹ்மரூபாய பத்மநேத்ராய வை நம: ||

 

70       ப்ரஹ்மதாய ப்ராஹ்மணாய ப்ரஹ்மப்ரஹ்மாத்மநே நம: |

ஸுப்ரஹ்மண்யாய தேவாய ப்ரஹ்மண்யாய த்ரிவேதிநே ||

 

71       பரப்ரஹ்மஸ்வரூபாய பஞ்ச ப்ரஹ்மாத்மநே நம:

நமஸ்தே ப்ரஹ்மஶிரஸே ததாஶ்வஶிரஸே நம: ||

 

72       அதர்வஶிரஸே நித்யம் அஶநிப்ரமிதய ச |

நமஸ்தே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய லோலாய ல்லிதாய ச: ||

 

73       லாவண்யாய லவித்ராய நமஸ்தே பாஸ்கராய ச |

லக்ஷணஜ்ஞாய லக்ஷாய லக்ஷணாய நமோ நம: ||

 

74       லஸத்தீப்தாய லிப்தாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே |

வ்ருஷ்ணிமூலாய க்ருஷ்ணாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம: ||

 

75       பஶ்யாமி த்வாம் மஹாஸிம்ஹம் ஹாரிணம் வநமாலிநம் |

கிரீடிநம் குண்டலிநம் ஸர்வாங்கம் ஸர்வதோமுகம் ||

 

76       ஸர்வத: பாணிபாதோரம் ஸர்வதோ(அ)க்ஷி ஶிரோமுகம் |

ஸர்வேஶ்வரம் ஸதா துஷ்டம் ஸமர்த்தம் ஸமரப்ரியம் ||

 

77       பஹுயோஜந விஸ்தீர்ணம் பஹுயோஜந மாயதம் |

பஹுயோஜந ஹஸ்தாங்க்ரிம்  பஹுயோஜந நாஸிகம் ||

 

78       மஹாரூபம் மஹாவக்த்ரம் மஹாதம்ஷ்ட்ரம் மஹாபுஜம் |

மஹாநாதம் மஹாரௌத்ரம் மஹாகாயம் மஹாபலம் ||

 

79       ஆநாபேர் ப்ரஹ்மணோ ரூபம் ஆகளாத் வைஷ்ணவம் ததா |

ஆஶீர்ஷாத் ருத்ரமீஶாநம் ததக்ரே ஸர்வதஶ் ஶிவம் ||

80       நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ

நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ |

நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ

நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ ||

 

81       நமோஸ்து நாராயண வ்யாக்ரஸிம்ஹ

நமோஸ்து நாராயண புச்சஸிம்ஹ |

நமோஸ்து நாராயண பூர்ணஸிம்ஹ

நமோஸ்து நாராயண ரௌத்ரஸிம்ஹ ||

 

82       நமோ நமோ பீஷண பத்ரஸிம்ஹ

நமோ நமோ விஹ்வல நேத்ரஸிம்ஹ |

நமோ நமோ ப்ரும்ஹித பூதஸிம்ஹ

நமோ நமோ நிர்மல சித்ரஸிம்ஹ ||

 

83       நமோ நமோ நிர்ஜித காலஸிம்ஹ

நமோ நம: கல்பித கல்பஸிம்ஹ |

நமோ நம: காமத காமஸிம்ஹ

நமோ நம்ஸ்தே புவநைக ஸிம்ஹ ||

 

84       த்யாவா ப்ருதிவ்யோ ரிதமந்த்ரம் ஹி

வ்யாப்தம் த்வயைகேந திஶஶ்ச ஸர்வா: |

த்ருஷ்ட்வாத்புதம் ரூபமுக்ரம் தவேதம்

லோகத்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மந் ||

 

85       அமீ ஹி த்வா ஸுரஸங்கா விஶந்தி

கேசித் பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி |

ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்தஸங்கா :

ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி: ||

 

 

86       ருத்ராதித்யோ வசவோ யே ச ஸாத்யா:

விஶ்வே தேவா மருதஶ்சோஷ்மபாஶ்ச |

கந்தர்வ யக்ஷாஸுர ஸித்தஸங்கா:

வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஶ் சைவ ஸர்வே ||

87       லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத்

லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி: |

தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்

பாஸஸ் தவோக்ரா: ப்ரதிபந்தி விஷ்ணோ ||

 

88       பவிஷ்ணுஸ் த்வம் ஸஹிஷ்ணுஸ் த்வம் ப்ராஜிஷ்ணுர் ஜிஷ்ணுரேவ ச

ப்ருத்வீ த்மந்தரிக்ஷஸ்த்வம் பர்வதாரண்ய மேவ ச ||

 

89       கலா காஷ்டா விலிப்தஸ் த்வம் முஹூர்த்த ப்ரஹராதிகம் |

அஹோராத்ரம் த்ரிஸந்த்யா ச பக்ஷமாஸர்த்து வத்ஸரா: ||

 

90       யுகாதிர் யுகபேதஸ் த்வம் ஸம்யுகோ யுகஸந்தய: |

நித்யம் நைமித்திகம் தைநம் மஹாப்ரளயமேவ ச : ||

 

91       கரணம் காரணம் கர்த்தா பர்த்தா ஹர்த்தா த்வமீஶ்வர : |

ஸத்கர்த்தா ஸத்க்ருதிர் கோப்தா ஸச்சிதாநந்த விக்ரஹ: ||

 

92       ப்ராணஸ்த்வம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மா த்வம் ஸர்வ தேஹிநாம் |

ஸுஜ்யோதிஸ் த்வம் பரம்ஜ்யோதி ராத்மஜ்யோதிஸ் ஸநாதந: ||

 

93       ஜ்யோதிர்லோக ஸ்வரூபஸ்த்வம் ஜ்யோதிர் ஜ்ஞோ ஜ்யோதிஷாம்பதி:

ஸ்வாஹாகார: ஸ்வதாகாரோ வஷட்கார : க்ருபாகர: ||

 

94       ஹந்தகாரோ நிராகாரோ வேகாகாரஶ்ச ஶங்கர: |

அகராதி ஹகாரந்த: ஓங்காரோ லோககாரக: ||

 

95       ஏகாத்மா த்வமநேகாத்மா சதுராத்மா சதுர்புஜ: |

சதுர்மூர்த்திஶ் சதுர்தம்ஷ்ட்ர: சதுர்வேத மயோத்தம: ||

 

96       லோகப்ரியோ லோககுரு: லோகேஶோ லோகநாயக: |

லோகஸாக்ஷீ லோகபதி: லோகாத்மா லோகவிலோசந: ||

 

97       லோகாதாரோ ப்ருஹல்லோகா லோகாலோகமயோ விபு: |

லோக கர்த்தா விஶ்வகர்த்தா க்ருதாவர்த்த: க்ருதாகம: ||

 

98       அநாதிஸ் த்வமநந்தஸ்த்வம் அபூதோ பூதவிக்ரஹ: |

ஸ்துதி: ஸ்துத்ய: ஸ்தவப்ரீத: ஸ்தோதோ நேதா நியாமக: ||

 

99       த்வம் கதிஸ் த்வம் மதிர் மஹ்யம் பிதா மாதா குருஸ் ஸகா: |

ஸுஹ்ருதஶ்சாத்ம ரூபஸ்த்வம் த்வாம் விநா நாஸ்தி மே கதி: ||

 

100      நமஸ்தே மந்த்ரரூபாய ஹ்யஸ்த்ர ரூபாய தே நம: |

பஹுரூபாய ரூபாய பஞ்சரூப தராய ச ||

 

101      பத்ரரூபாய ரூடாய யோகரூபாய யோகிநே |

ஸமரூபாய யோகாய யோகபீட ஸ்திதாய ச ||

 

102      யோக கம்யாய ஸௌம்யாய த்யாநகம்யாய த்யாயிநே |

த்யேய கம்யாய தாம்நே ச தாமாதிபதயே நம: ||

 

103      தராதராய தர்மாய தாரணாபிரதா ச |

நமோ தாத்ரே ச ஸந்தாத்ரே விதாத்ரே ச தராய ச ||

 

104      தாமோதராய தாந்தாய தாநவாந்தகராய ச |

நமஸ் ஸம்ஸார வைத்யாய பேஷஜாய நமோ நம: ||

 

105      ஸீரத்வஜாய ஶீதாய வாதாயாப்ரமிதாய ச |

ஸாரஸ்வதாய ஸம்ஸார நாஶநாயாக்ஷ மாலிநே ||

 

106      அஸிதர்ம தராயைவ ஷட்கர்ம நிரதாய ச |

விகர்மாய ஸுகர்மாய பரகர்ம விதாயிநே ||

 

107      ஸுகர்மணே மந்மதாய நமோ வர்மாய வர்மிணே |

கரிசர்ம வஸாநாய கராள வதநாய ச ||

 

108      கவயே பத்ம கர்ப்பாய பூதகர்ப்ப க்ருணாநிதே |

ப்ரஹ்மகர்ப்பாய கர்ப்பாய ப்ருஹத்கர்ப்பாய தூர்ஜடே ||

 

109      நமஸ்தே விஶ்வகர்ப்பாய ஸ்ரீகர்ப்பாய ஜிதாரயே |

நமோ ஹிரண்யகர்ப்பாய ஹிரண்ய கவசாய ச ||

110      ஹிரண்யவர்ண தேஹாய ஹிரண்யாக்ஷ விநாஶிநே |

ஹிரண்ய கஶிபோர் ஹந்த்ரே ஹிரண்ய நயநாய ச ||

 

111      ஹிரண்ய ரேதஸே துப்யம் ஹிரண்ய வதநாய ச |

நமோ ஹிரண்யஶ்ருங்காய நி:ஶ்ருங்காய ச ஶ்ருங்கிணே ||

 

112      பைரவாய ஸுகேஶாய பீஷணாயாந்த்ர மாலிநே |

சண்டாய ருண்டமாலாய நமோ தண்டதராய ச ||

 

113      அகண்ட தத்வரூபாய கமண்டலு தராய ச|

நமஸ்தே கண்டஸிம்ஹாய  ஸத்யஸிம்ஹாய தே நம: ||

 

114      நமஸ்தே ஶ்வேதஸிம்ஹாய பீதஸிம்ஹாய தே நம: |

நீலஸிம்ஹாய நீலாய ரக்தஸிம்ஹாய தே நம:

 

115      நமோ ஹாரித்ர ஸிம்ஹாய தூம்ரஸிம்ஹாய தே நம: |

மூலஸிம்ஹாய மூலாய ப்ருஹத் ஸிம்ஹாய தே நம: ||

 

116      பாதாளஸ்தித ஸிம்ஹாய நம: பர்வதவாஸிநே |

நமோ ஜலஸ்தஸிம்ஹாய ஹ்யந்தரிக்ஷஸ்திதாய ச ||

 

117      காலாக்நி ருத்ரஸிம்ஹாய சண்டஸிம்ஹாய தே நம: |

அநந்தஸிம்ஹ ஸிம்ஹாய ஹ்யநந்தகதயே நம: ||

 

118      நமோ விசித்ரஸிம்ஹாய பஹுஸிம்ஹ ஸ்வரூபிணே |

அபயங்கர ஸிம்ஹாய நரஸிம்ஹாய தே நம: ||

 

119      நமோஸ்து ஸிம்ஹராஜாய நரஸிம்ஹாய தே நம: |

ஸப்தாப்தி மேகலாயைவ  ஸத்யஸத்ய ஸ்வரூபிணே ||

 

120      ஸப்தலோகாந்தரஸ்தாய ஸப்தஸ்வர மயாய ச |

ஸப்தார்ச்சீ ரூபதம்ஷ்ட்ராய ஸப்தாஶ்வ ரதரூபிணே ||

 

121      ஸப்தவாயு ஸ்வரூபாய ஸப்தச்சந்தோமயாய ச|

ஸ்வச்சாய ஸ்வச்சரூபாய ஸ்வச்சந்தாய ச தே நம: ||

122      ஸ்ரீவத்ஸாய ஸுவேதாய ஶ்ருதயே ஶ்ருதிமூர்த்தயே |

ஶுசிஶ்ரவாய ஶூராய ஸுப்ரபாய ஸுதந்விநே ||

 

123      ஶுப்ராய ஸுரநாதாய ஸுப்ரபாய ஶுபாய ச |

ஸுதர்ஶநாய ஸூக்ஷ்மாய நிருக்தாய நமோ நம: ||

 

124      ஸுப்ரபாய ஸ்வபாவாய பவாய விபவாய ச |

ஸுஶாகாய வீஶாகாய ஸுமுகாய முகாய ச ||

 

125      ஸுநகாய ஸுதம்ஷ்ட்ராய ஸுரதாய ஸுதாய ச |

ஸாங்க்யாய ஸுரமுக்யாய ப்ரக்யாதாய ப்ரபாய ச ||

 

126      நம: கட்வாங்க ஹஸ்தாய கேடமுத்கர பாணயே |

ககேந்த்ராய ம்ருகேந்த்ராய நகேந்த்ராய த்ருடாய ச ||

 

127      நாக கேயூரஹாராய நாகேந்த்ராயாக மர்திநே |

நதீவாஸாய நக்நாய நாநாரூபதராய ச ||

 

128      நகேஶ்வராய நாகாய நமிதாய நராய ச |

நாகாந்தக ரதாயைவ நர நாராயணாய ச||

 

129      நமோ மத்யஸ்வரூபாய கச்சபாய நமோ நம: |

நமோ யஜ்ஞவராஹாய நரஸிம்ஹாய தே நம: ||

 

130      விக்ரமாக்ராந்த லோகாய வாமநாய மஹௌஜஸே |

நமோ பார்கவ ராமாய ராவணாந்த கராய ச ||

 

131      நமஸ்தே பலராமாய கம்ஸ ப்ரத்வம்ஸ காரிணே |

புத்தாய புத்தரூபாய தீக்ஷ்ணரூபாய கல்கிநே ||

 

132      ஆத்ரேயாயாக்நி நேத்ராய கபிலாய த்விஜாய ச |

க்ஷேத்ராய பஶுபாலாய பஶுவக்த்ராய தே நம: ||

 

133      க்ருஹஸ்தாய வநஸ்தாய யதயே ப்ரஹ்மசாரிணே |

ஸ்வர்காபவர்க தாத்ரே ச தத்போக்த்ரே ச முமுக்ஷவே ||

134      ஸாலக்ராம நிவாஸாய க்ஷீராப்தி ஶயநாய ச |

ஸ்ரீஶைலாத்ரி நிவாஸாய ஶிலாவாஸாய தே நம: ||

 

135      யோகி ஹ்ருத்பத்மவாஸாய மஹாஹாஸாய தே நம: |
குஹாவாஸாய குஹ்யாய குப்தாய குரவே நம: ||

 

136      நமோ மூலாதிவாஸாய நீலவஸ்த்ர தராய ச |

பீதவஸ்த்ராய ஶஸ்த்ராய ரக்தவஸ்த்ர தராய ச ||

 

137      ரக்தமாலா விபூஷாய ரக்த கந்தா நுலேபிநே |

துரந்தராய தூர்த்தாய துர்தராய தராய ச ||

 

138      துர்மதாய துரந்தாய துர்தராய நமோ நம: |

துர்நிரீக்ஷாய நிஷ்டாய துர்தர்ஶாய த்ருமாய ச ||

 

139      துர்பேதாய துராஶாய துர்லபாய நமோ நம: |

த்ருப்தாய த்ருப்தவக்த்ராய ஹ்யத்ருப்த நயநாய ச ||

 

140      உந்மத்தாய ப்ரமத்தாய நமோ தைத்யாரயே நம: |

ரஸஜ்ஞாய ரஸேஶாய ஹ்யரக்த ரஸநாய ச  ||

 

141      பத்யாய பரிதோஷாய ரத்யாய ரஸிகாய ச |

ஊர்த்வ கேஶோர்த்வ ருபாய நமஸ்தே சோர்த்வ ரேதஸே ||

 

142      ஊர்த்வஸிம்ஹாய ஸிம்ஹாய நமஸ்தே சோர்த்வ பாஹவே |

பரப்ரத்வம் ஸகாயைவ ஶங்கசக்ரதராய ச ||

 

143      கதாபத்ம தராயைவ பஞ்சபாண தராய ச |

காமேஶ்வராய காமாய காமபாலாய காமிநே ||

 

144      நம: காம விஹாராய காமரூபதராய ச |

ஸோமஸூர்யாக்நி நேத்ராய ஸோமபாய நமோ நம: ||

 

145      நமஸ் ஸோமாய வாமாய வாமதேவாய தே நம: |

ஸாமஸ்வநாய ஸௌம்யாய பக்திகம்யாய தே நம: ||

146      கூஷ்மாண்ட கணநாதாய ஸர்வ ஶ்ரேயஸ்கராய ச |

பீஷ்மாய பீஷதாயைவ பீமவிக்ரமணாய ச ||

 

147      ம்ருக க்ரீவாய ஜீவாய ஜிதாயாஜித காரிணே |

ஜடிநே ஜாமதக்ந்யாய நமஸ்தே ஜாதவேதஸே ||

 

148      ஜபாகுஸும வர்ணாய ஜப்யாய ஜபிதாய ச |

ஜராயுஜா யாண்டஜாய ஸ்வேதஜா யோத்பிஜாய ச ||

 

149      ஜநார்தநாய ராமாய ஜாஹ்நவீ ஜநகாய ச |

ஜராஜந்மாதி தூராய ப்ரத்யும்நாய ப்ரமோதிநே ||

 

150      ஜிஹ்வா ரௌத்ராய ருத்ராய வீரபத்ராய தே நம: |

சித்ருபாய ஸமுத்ராய கத்ருத்ராய ப்ரசேதஸே ||

 

151      இந்த்ரியா யேந்த்ரியஜ்ஞாய நமோஸ்த்விந்த்ராநுஜாய ச |

அதீந்த்ரியாய ஸாராய இந்திராபதயே நம: ||

 

152      ஈஶாநாய ச ஈட்யாய ஈஶிதாய இநாய ச |

வ்யோமாத்மநே ச வ்யோம்நே ச நமஸ்தே வ்யோமகேஶிநே ||

 

153      வ்யோமதராய ச வ்யோம வக்த்ராயாஸுர காதிநே : |

நமஸ்தே வ்யோமதம்ஷ்ட்ராய வ்யோமவாஸாய தே நம: ||

 

154      ஸுகுமாராய ராமாய ஸுபாசாராய வை நம: |

விஶ்வாய விஶ்வரூபாய நமோ விஶ்வாத்மகாய ச ||

 

155      ஜ்ஞாநாத்மகாய ஜ்ஞாநாய விஶ்வேஶாய பரமாத்மநே |

ஏகாத்மநே நமஸ்துப்யம் நமஸ்தே த்வாதஶாத்மநே ||

 

156      சதுர்விம்ஶதிரூபாய பஞ்சவிம்ஶதி மூர்த்தயே |

ஷட்விம்ஶகாத்மநே நித்யம் ஸப்தவிம்ஸதி காத்மநே ||

 

157      தர்மார்த்த காமமோக்ஷாய விரக்தாய நமோ நம: |

பாவஶுத்தாய ஸித்தாய ஸாத்யாய ஶரபாய ச ||

158      ப்ரபோதாய ஸுபோதாய நமோ புத்திப்ரியாய ச |

ஸ்நிக்தாய ச விதக்தாய முக்தாய முநயே நம: ||

 

159      ப்ரியம்வதாய ஶ்ரவ்யாய ஸ்ருக்ஸ்ருவாய ஶ்ரிதாய ச |

க்ருஹேஶாய மஹேஶாய ப்ரஹ்மேஶாய நமோ நம: ||

 

160      ஸ்ரீதராய ஸுதீர்த்தாய ஹயக்ரீவாய தே நம: |

உக்ராய சோக்ரவேகாய சோக்ரகர்மரதாய ச ||

 

161      உக்ரநேத்ராய வ்யக்ராய ஸமக்ர குணஶாலி நே |

பாலக்ரஹ விநாஶாய பிஶாசக்ரஹ காதிநே ||

 

162      துஷ்டக்ரஹ நிஹந்த்ரே ச நிக்ரஹா நுக்ரஹாய ச |

வ்ருஷத்வஜாய வ்ருஷ்ண்யாய வ்ருஷாய வ்ருஷபாய ச ||

 

163      உக்ரஶ்ரவாய ஶாந்தாய நம: ஶ்ருதிதராய ச |

நமஸ்தே தேவதேவேஶ நமஸ்தே மதுஸூதந ||

 

164      நமஸ்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே துரிதக்ஷய |

நமஸ்தே கருணாஸிந்தோ நமஸ்தே ஸமிதிஞ்ஜய ||

 

165      நமஸ்தே நரஸிம்ஹாய நமஸ்தே கருடத்வஜ |

யஜ்ஞநேத்ர நமஸ்தேஸ்து காலத்வஜ ஜயத்வஜ ||

 

166      அக்நிநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே ஹ்யமயப்ரிய |

மஹாநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே பக்தவத்ஸல ||

 

167      தர்மநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர |

புண்யநேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே(அ)பீஷ்ட தாயக ||

 

168      நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹரூப |

நமோ நமஸ்தே ரணஸிம்ஹரூப நமோ நமஸ்தே நரஸிம்ஹரூப ||

 

169      உத்த்ருத்ய கர்விதம் தைத்யம் நிஹத்யாஜௌ ஸுரத்விஷம் |

தேவகார்யம் மஹத் க்ருத்வா கர்ஜஸே ஸ்வாத்மதேஜஸா ||

170      அதிருத்ர மிதம் ரூபம் துஸ்ஸஹம் துரதிக்ரமம் |

த்ருஷ்ட்வா து ஸங்கிதஸ்ஸர்வா: தேவதாஸ்த்வாமுபாகதா ||

 

171      ஏதாந் பஶ்ய மஹேஶாநம் ப்ரஹ்மாணம் மாம் ஶசீபதிம் |

திக்பாலாந் த்வாதஶாதித்யாந் ருத்ரா நுரக ராக்ஷஸாந் ||

 

172      ஸர்வாந் ருஷிகணாந் ஸப்த மாத்ரூர் கௌரீம் ஸரஸ்வதீம் |

லக்ஷ்மீம் நதீஶ்ச தீர்த்தாநி ரதிம் பூதகணாநபி ||

 

173      ப்ரஸித த்வம் மஹாஸிம்ஹ உக்ரபாவமிமம் த்யஜ |

ப்ரக்ருதிஸ்தோ பவ த்வம் ஹி ஶாந்திபாவம் ச தாரய ||

 

174      இத்யுக்த்வா தண்டவத்பூமௌ பபாத ஸ பிதாமஹ: |

ப்ரஸித த்வம் ப்ரஸீத த்வம் ப்ரஸீத த்வம் புந: புந: ||

 

மார்க்கண்டேய உவாச –

175      த்ருஷ்ட்வா து தேவதாஸ் ஸர்வா : ஶ்ருத்வா தாம் ப்ரஹ்மணோ கிரம்

ஸ்தோத்ரேணாபி ச ஸம்ருஷ்ட: ஸௌம்யபாவ மதாரயத் ||

 

176      அப்ரவீந் நாரஸிம்ஹஸ்து வீக்ஷ்ய ஸர்வாந் ஸுரோத்தமாந் |

ஸந்த்ரஸ்தாந் பயஸம்விக்நாந் ஶரணம் ஸமுபாகதாந் ||

 

ஸ்ரீ ந்ருஸிம்ஹ உவாச –

177      போ போ தேவவராஸ் ஸர்வே பிதாமஹ புரோகமா: |

ஶ்ருணுத்வம் மம வாக்யம் ச பவந்து விகதஜ்வரா: ||

 

178      யத்ஹிதம் பவதாம் நூநம் தத் கரிஷ்யாமி ஸாம்ப்ரதம் |

ஏவம் நாமஸஹஸ்ரம் மே த்ரிஸந்த்யம் ய: படேத் ஸுதீ: ||

 

179      ஶ்ருணோதி வா ஶ்ராவயதி பூஜாந்தே பக்திஸம்யுத : |

ஸர்வாந் காமாநவாப்நோதி ஜீவச்ச ஶரதாம் ஶதம் ||

 

180      யோ நாமபிர் ந்ருஸிம்ஹாத்யை: அர்ச்சயேத் க்ரமஶோ மம |

ஸர்வதீர்த்தேஷு யத் புண்யம் ஸர்வதீர்த்தேஷு யத்பலம் ||

 

181      ஸர்வபூஜாஸு யத்ப்ரோக்தம் தத் ஸர்வம் லபதே பலம் |

ஜாதிஸ்மரத்வம் லபதே ப்ரஹ்மஜ்ஞாநம் ஸநாதநம் ||

 

182      ஸர்வபாப விநிர்முக்த: தத்விஷ்ணோ பரமம் பதம் |

மந்நாம கவசம் பத்வா விசரேத் விகதஜ்வர: ||

 

183      பூத வேதாள கூஶ்மாண்ட பிஶாச ப்ரஹ்மராக்ஷஸா : |

ஶாகிநீ டாகிநீ ஜ்யேஷ்டா நீலீ பாலக்ரஹாதிகா : ||

 

184      துஷ்டக்ரஹாஶ்ச நஶ்யந்தி யக்ஷராக்ஷஸ பந்நகா: |

யே ச ஸந்த்யாக்ரஹாஸ் ஸர்வே சாண்டாளக்ரஹ ஸம்ஜ்ஞகா: ||

 

185      நிஶாசர க்ரஹாஸ் ஸர்வே ப்ரணஶ்யந்தி ச தூரத : |

குக்ஷிரோகம் ச ஹ்ருத்ரோகம் ஶூலாபஸ்மார மேவ ச ||

 

186      ஐகாஹிகம் த்வயாஹிகம் ச சாதுர்த்திக மத ஜ்வரம் |

ஆதயோ வ்யாதயஸ் ஸர்வே ரோகா ரோகாதிதேவதா : ||

 

187      ஶீக்ரம் நஶ்யந்தி தே ஸர்வே ந்ருஸிம்ஹ ஸ்மரணாத் ஸுரா : |

ராஜாநோ தாஸதாம் யாந்தி ஶத்ரவோ யாந்தி மித்ரதாம் ||

 

188      ஜலாநி ஸ்தலதாம் யாந்தி வஹ்நயோ யாந்தி ஶீததாம் |

விஷாண்யம்ருததாம் யாந்தி ந்ருஸிம்ஹஸ்மரணாத் ஸுரா : ||

 

189      ராஜ்யகாமோ லபேத் ராஜ்யம் தநகாமோ லபேத் தநம் |

வித்யாகாமோ லபேத் வித்யாம் பத்தோ முச்யேத பந்தநாத் ||

 

190      வ்யாள வ்யாக்ர பயம் நாஸ்தி சோர ஸர்ப்பாதிகம் ததா |

அநுகூலா பவேத் பார்யா லோகைஶ்ச ப்ரதிபூஜ்யதே ||

 

191      ஸுபுத்ரம் தநதாந்யம் ச பவந்தி விகதஜ்வரா: |

ஏதத் ஸர்வம் ஸமாப்நோதி ந்ருஸிம்ஹஸ்ய ப்ரஸாதத: ||

 

192      ஜலஸந்தரணே சைவ பர்வதாரண்யமேவ ச |

வநே(அ)பி விசரந் மர்த்யோ துர்க்கமே விஷமே பதி ||

193      கலிப்ரவேஶநே சாபி நாரஸிம்ஹம் ந விஸ்மரேத் |

ப்ரஹ்மக்நஶ்ச பஶுக்நஶ்ச ப்ரூணஹா குருதல்பக: ||

 

194      முச்யதே ஸர்வபாபேப்ய: க்ருதக்ந: ஸ்த்ரீவிகாதக: |

வேதாநாம் தூஷகஶ்சாபி மாதாபித்ரு விநிந்தக: ||
195      அஸத்யஸ்து ததா யஜ்ஞ நிந்தகோ லோக நிந்தக: |

ஸ்ம்ருத்வா ஸக்ருந் ந்ருஸிம்ஹம்து முச்யதே ஸர்வகில்பிஷை: ||

 

196      பஹுநாத்ர கிமுக்தேந ஸ்ம்ருத்வா மாம் ஶுத்தமாநஸ: |

யத்ர யத்ர சரேந் மர்த்யோ ந்ருஸிம்ஹஸ் தத்ர ரக்ஷதி ||

 

197      கச்சந் திஷ்டந் ஸ்வபுந் புஞ்ஜந் ஜாக்ரந்நபி ஹஸந்நபி |

ந்ருஸிம்ஹேதி ந்ருஸிம்ஹேதி ந்ருஸிம்ஹேதி ஸதா ஸ்மரந் ||

 

198      புமாந் ந லிப்யதே பாபை: புக்திம் முக்திம் ச விந்ததி |

நாரீ ஸுபகதாமேதி ஸௌபாக்யம் ச ஸுரூபதாம் ||

 

199      பர்த்து: ப்ரியத்வம் லபதே ச வைதவ்யம் ச விந்ததி |

ந ஸபத்நீம் ச ஜன்மாந்தே ஸம்யஜ்ஜ்ஞாநீ பவேத் த்விஜ: ||

 

200      பூமிப்ரதக்ஷிணாத் மர்த்யோ யத் பலம் லபதே(அ)சிராத் |

தத் பலம் லபதே நாரஸிம்ஹ மூர்த்தி ப்ரதக்ஷிணாத் ||

 

மார்க்கண்டேய உவாச –

201      இத்யுக்த்வா தேவதேவஶோ லக்ஷ்மீமாலிங்க்ய லீலயா |

ப்ரஹ்லாதஸ்யாபிஷேகம் து ப்ரஹ்மணே சோபதிஷ்டவாந் ||

 

202      ஸ்ரீஶைலஸ்ய ப்ரதேஶே து லோகாநாம் ச ஹிதாய வை |

ஸ்வரூபம் ஸ்தாபயாமாஸ ப்ரக்ருதிஸ்தோ(அ)பவத் ததா ||

 

203      ப்ரஹ்மாபி தைத்யாராஜாநம் ப்ரஹ்லாத மப்யசேஷயத் |

தைவதைஸ் ஸஹ ஸுப்ரீதோ ஹ்யாத்மலோகம் யயௌ ஸ்வயம் ||

 

204      ஹிரண்யகஶிபோர் பீத்யா ப்ரபலாய ஶசீபதி: |

ஸ்வர்கராஜ்ய பரிப்ரஷ்டோ யுகாநா மேகவிம்ஶதி: ||

 

205      ந்ருஸிம்ஹேந ஹதே தைத்யே ஸ்வர்கலோக மவாப ஸ: |
திக்பாலாஶ்ச ஸுஸம்ப்ராப்தா: ஸ்வஸ்வஸ்தாந மநுத்தமம் ||

 

206      தர்மே மதிஸ் ஸமஸ்தாநாம் ப்ரஜாநா மபவத் ததா |

ஏவம் நாமஸஹஸ்ரம் மே ப்ரஹ்மணா நிர்மிதம் புரா ||

 

207      புத்ராநத்யாபயாமாஸ ஸநகாதீந் மஹாமதி: |

ஊசுஸ்தே ச ததஸ் ஸர்வலோகாநாம் ஹிதகாம்யயா ||

 

208      தேவதா ருஷயஸ் ஸித்தா யக்ஷவித்யாதரோரகா: |

கந்தர்வாஶ்ச மநுஷ்யாஶ்ச இஹாமுத்ர பலைஷிண: ||

 

209      யஸ்ய ஸ்தோத்ரஸ்ய பாடாத்தி விஶுத்த மநஸோ(அ)பவந் |

ஸநத்குமாரஸ் ஸம்ப்ராப்தோ பரத்வாஜோ மஹாமதி: ||

 

210      தஸ்மாதாங்கிரஸ: ப்ராப்த: தஸ்மாத் ப்ராப்தோ மஹாக்ரது: |

ஜைகீஷவ்யாய ஸப்ராஹ ஸோ(அ)ப்ரவீத் ச்யவநாய ச: ||

 

211      தஸ்மா உவாச ஶாண்டில்யோ கர்காய ப்ராஹ வை முநி: | க்ரதுஞ்ஜயாய ஸ ப்ராஹ ஜதுகர்ண்யாய ஸம்யமீ ||

 

212      விஷ்ணுவ்ருத்தாய ஸ ப்ராஹ ஸோ(அ)பி போதாயநாய ச |

க்ரமாத் ஸ விஷ்ணவே ப்ராஹ ஸ ப்ராஹோத்தாம குக்ஷயே ||

 

213      ஸிம்ஹதேஜாஶ்ச தஸ்மாச்ச ஸ்ரீப்ரியாய ததௌ ச ஸ: |

உபதிஷ்டோஸ்மி தேநாஹ மிதம் நாமஸஹஸ்ரகம் ||

 

214      தத்ப்ரஸாதா தம்ருத்யுர் மே யஸ்மாத் கஸ்மாத் பயம் நஹி : |

மயா ச கதிதம் நாரஸிம்ஹ ஸ்தோத்ர மிதம் தவ ||

 

215      த்வம் ஹி நித்யம் ஶுசிர் பூத்வா தமாராதய ஶாஶ்வதம் |

ஸர்வபூதாஶ்ரயம் தேவம் ந்ருஸிம்ஹம் பக்தவத்ஸலம் ||

 

216      பூஜயித்வா ஸ்தவம் ஜப்த்வா ஹுத்வா நிஶ்சலமாநஸ: |

ப்ராப்ஸ்யஸே மஹதீம் ஸித்திம் ஸர்வாந் காமாந் வரோத்தமாந் ||

 

217      அயமேவ பரோ தர்மஸ் த்விதமேவ பரம் தப: |

இதமேவ பரம் ஜ்ஞாநம் இதமேவ மஹத் வ்ரதம் ||

 

218      அயமேவ ஸதாசாரஸ் த்வயமேவ ஸதா மக: |

இதமேவ த்ரயோ வேதா: ஸச்சாஸ்த்ராண்யாகமாநி ச ||

 

219      ந்ருஸிம்ஹ மந்த்ராதந்யச்ச வைதிகம் ந து வித்யதே |

யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்வசித் ||

 

220      கதிதம் தே ந்ருஸிம்ஹஸ்ய சரிதம் பாப நாஶநம் |

ஸர்வமந்த்ரமயம் தாப த்ரயோபஶமநம் பரம் ||

 

221      ஸர்வார்த்த ஸாதநம் திவ்யம் கிம் பூயஶ் ஶ்ரோது மிச்சஸி |

 

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ந்ருஸிம்ஹர்ப்ராதுர்பாவே

ஸர்வார்த்தஸாதநம் திவ்யம் ஸ்ரீமத் திவ்யலக்ஷ்மீ

ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நாளை என்பது ஸ்ரீ நரசிம்மனிடம் இல்லை–முத்துக்கள் முப்பது–எஸ்.கோகுலாச்சாரி

May 6, 2023

பகவான் ஸ்ரீமந் நாராயணன் பிறப்பில்லாத பெருமான். ஆயினும் அவன் பிறவிகளை எடுக்கின்றான். அதை அவதாரங்கள் என்று சொல்வார்கள். அவதாரங்கள் என்றால், மேலிருந்து கீழே இறங்கி வருதல் என்று பொருள். வேதம், பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது.

இப்படி எடுத்த அவதாரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல; பற்பல அவதாரங்கள். அவற்றை ஆவேச அவதாரங்கள் என்றும், அம்ச அவதாரங்கள் என்றும், பூரண அவதாரங்கள் என்றும் பலபடியாகப் பிரிக்கிறார்கள். ஸ்ரீவிஷ்ணு புராணமும் பாகவதமும் இன்னும் பல நூல்களும் பகவான் நாராயணனின் அவதாரங்களைப் பேசுகின்றன. அந்த அவதாரங்கள் பலவாக இருந்தாலும் தசாவதாரங்களை மிகச் சிறப்பாகச் சொல்லுகின்றனர்.

1. ஏன் அவதாரம் எடுக்கிறான்?

பொதுவாக பகவான் அவதாரம் ஏன் எடுக்கின்றான் என்பதற்கான காரணத்தை ஸ்ரீ கீதையிலே சொல்லுகின்றான். தர்மத்தை அழியாது காப்பாற்றுவதற்காகவும் சாதுக்கள் நலியும்போது அவர்களைக் காக்கவும் துஷ்டர்களுடைய செயல் எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பகவான் நேரடியாக யுகங்கள் தோறும் அவதாரம் செய்கின்றான் என்பதை ஸ்ரீ கண்ணன் ஸ்ரீ பகவத்கீதையிலே அருளுகின்றார். இந்த அவதார வரிசையை ஆழ்வார்களும் பலவாறு கொண்டாடுகிறார்கள். வைகுந்தத்திலே தன்னுடைய இருப்பை வைத்துவிட்டு இந்த உலகத்தின் இருள் நீக்க ஒரு ஒளியாக தோன்றுகின்றான் என்று நம்மாழ்வார் அவதார விசேஷத்தைக் கொண்டாடுகின்றார்.

2. சிறந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்

இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதில் மிகச்சிறந்த அவதாரம் சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். பொதுவாக தன்னுடைய பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரத்தை பகவான் எடுத்தார் என்று கூறுவர். அதற்காக மட்டுமே பகவான் அவதாரம் எடுக்கவில்லை. பிரகலாதனை மறைவாக நின்று காப்பாற்றி அருளிய இறைவன், நிறைவு நிலையிலும்கூட அவனைக் காப்பாற்றி இருக்கலாம். அவனுக்கு மிகவும் தொல்லையைத் தந்த இரணியனைக் கூட சங்கல்பத்தினால் அழித்து தர்மத்தை நிலைநாட்டி இருக்கலாம். ஆனால், பிரகலாதனுடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தான்.

3. திட்டமிடாத அவதாரம்

பொதுவாக பகவான் அவதாரம் எடுக்கின்றபொழுது பாற்கடலில் யோகநிலையில் யோசிப்பான். ஒரு அவதாரத்தை எப்படி எடுத்து, எப்படி நிறைவு செய்வது என்பதைக் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வான். நரசிம்ம அவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் அப்படி எடுக்கப்பட்ட அவதாரங்கள். உதாரணமாக, மச்ச அவதாரம் எடுத்த பொழுது சத்திய விரதன் என்கிற அரசனிடத்திலே ஊழிக்கால முடிவிலே உலகமெல்லாம் நீரில் மூழ்கி இருக்கின்ற பொழுது, தான் ஒரு பெரிய மீனாக வருவேன்; அதிலே நீ ஏறிக்கொள்ள வேண்டும்; என்றெல்லாம் அவதார ரகசியத்தைக் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகின்றான். கூர்ம அவதாரத்தில், தான் ஒரு ஆமையாக வடிவம் எடுத்து பாற்கடலை கடைவதற்கு உதவுவேன் என்கின்றான்.

4. தீர்மானித்தது யார்? இரணியனா? பிரகலாதனா?

எல்லா அவதாரங்களும் ஏதோ ஒரு மனிதரின் பிரார்த்தனையாலோ, ஒரு பக்தனின் பிரார்த்தனையாலோ எடுக்கப்பட்ட அவதாரங்கள். நரசிம்ம அவதாரத்தில் இப் படிப்பட்ட முன் திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்கு பிள்ளையாக, எந்த இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பதைக் குறித்து பகவான் திட்டமிடவில்லை. எங்கே பிறக்கப் போகிறோம், எதில் பிறக்கப் போகிறோம், எத்தனை நாழிகை தன்னுடைய அவதாரம் இருக்கப்போகிறது என்பதைக் குறித்தும் பகவான் சிந்திக்கவில்லை. உண்மையில் நரசிம்ம அவதாரத்தைக் குறித்து தீர்மானித்தவன் பிரகலாதன் அல்ல.

இரணியன்தான். அவன்தான், “உன்னுடைய பகவான் ஹரி இந்த தூணில் இருக்கிறானா?” என்று, எந்த இடத்தில் இருந்து பகவான் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான்.” ஆம்; இருக்கிறான்” என்று பிரகலாதன் சொல்ல, அவனுடைய சத்திய வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தூணையே தன்னுடைய தாயாகக் கொண்டு, பகவான் அவதரிக்கிறான். எனவே மற்ற அவதாரங்களைவிட நரசிம்ம அவதாரம் சிறப்புடையது.

5. மனிதனும் மிருகமும்

பொதுவாகவே தசாவதாரங்களின் சிறப்பு பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்து உண்டு. பகவான் முதலில் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம். முதலில் உலக உயிர்கள் நீரில் இருந்துதான் தோன்றின என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படை. தண்ணீரில் வாழுகின்ற மீனாக அவதாரம் செய்த பகவான், அடுத்த அவதாரத்தில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற ஆமையாக அவதரித்தான்.

அதற்குப் பிறகு, நிலத்தில் வாழ்கின்ற வராகமாக அவதாரம் செய்தான். இந்த மூன்று அவதாரங்களும், விலங்கின் நிலையிலேயே செய்யப்பட்ட அவதாரங்கள். அடுத்த பரிணாமமான மனித வடிவம் எடுப்பதற்கு முன், மனிதனும் விலங்கும் கொண்ட ஒரு அவதாரமாக எடுத்த அவதாரம்தான் நரசிங்க அவதாரம். நரன் என்றால் மனிதன். சிங்கம் என்றால் விலங்குகளின் அரசன். இந்த இரண்டும் கலந்த கலவையாக எடுக்கப்பட்ட அவதாரம்தான் நரசிம்ம அவதார்.

6. ஆண்டாள் வர்ணித்த நரசிம்ம மூர்த்தி

ஆண்டாள் நாச்சியார், கண்ணனை, நரசிம்ம அவதாரம் போல வரவேண்டும் என்று ஒரு பாசுரத்திலே அருளிச் செய்கின்றாள். மலைக்குகையிலே தூங்குகின்ற சிம்மம், எழுந்து, தீவிழி விழித்து, பிடரி மயிர்களை எல்லாம் சிலிர்த்துக்கொண்டு, உடம்பை முறுக்கிக் கொண்டு, கர்ஜனை செய்து, வருவது போல கம்பீரமாக நடந்து வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றாள். நரசிம்ம அவதாரத்தை முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு ஆண்டாள் இந்தப் பாசுரத்தை அருளிச் செய்திருக்கிறாள்.

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோவில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கானத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளாலோர் எம்பாவாய்.

7. எங்கும் இருப்பவன்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் நாமம் பகவான் ஹரியைக் குறிப்பிடுகிறது. அந்த ஹரி நரஹரி என்று ஆச்சாரியார்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். காரணம் விஷ்ணு என்றால் எங்கும் பரந்து இருக்கின்றவன். எல்லா இடங்களிலும் கரந்து உறைபவன். அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்; வானிலும் இருப்பான்; மண்ணிலும் இருப்பான். இந்த நிலை தான் ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்கு பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,

கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே–என்று பாடினார்.

8. வேத வாக்கியம் சொல்லும் நரசிம்மன்

‘‘அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபி ஸந்’’ என்கிறது வேதம். அவன் பிறந்து விட்டதால் உண்டானவன் இல்லை. அதைப் போலவே அவன் மறைந்து விட்டதால் இல்லாதவன் இல்லை. ஈஸ்வரன் ஒருக்காலும் ஜீவனாகிவிட முடியாது. ஈஸ் வரன் அவதரித்தாலும் ஈஸ்வரன்தான். மச்ச, கூர்ம, வராக முதலிய எந்த அவதாரமும் ஒரு தாய் வயிற்றில் தோன்றியதல்ல, நரசிம்மாவதாரமும் அப்படி தோன்றியது அல்ல. அதனாலேயே `பஹுதா விஜாயதே’ என்று வேதம் கூறியது. அவன் தன்னுடைய கருணையினாலே திவ்ய மங்கள விக்கிரகத்தை எடுத்துக்கொள்ளுகின்றான்.

சாந்தோக்கியம் ‘‘ஆத்மா தேவானாம் ஜனிதா பிரஜானாம் ஹிரண்ய தம்ஷ்ட்ரோ பபசோ அனசூரி:’’ என்று அவரை வர்ணிக்கிறது. படைத்தவரும் தேவர்களுக்கு ஆத்மாவாகவும் உள்ள அந்த சர்வேஸ்வரன் பளபளப்பான கோரைப்பற்கள் உள்ளவராகவும் எல்லாவற்றையும் உண்பவராகவும் காணப்பட்டார் என்று நரசிம்ம அவதாரத்தை விளக்குகிறது. நரசிம்ம காயத்ரி மந்திரம் அவருடைய கூர்மையான நகங்களையும் வஜ்ரம் போன்ற கோரைப் பற்களையும் மிகச் சிறப்பாக சொல்லுகின்றது.

வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத் என்று தைத்திரிய நாராயண வல்லி நரசிம்மரை விவரிக்கிறது. அதர்வ வேதத்தைச் சேர்ந்த ந்ருஸிம்ம பூர்வ தாபனீய உபநிஷத் மனித வடிவும் சிங்க வடிவும் கொண்ட நரசிம்மனை சத்தியமாகவும் பரப்பிரம்மமாகவும் விவரிக்கிறது.

9. ஏன் இரண்யன் பெருமாளிடம் கோபம் கொண்டான்?

இரண்யாட்ஷன், இரண்யகசிபு என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்களுள் இரண்யாட்ஷன் வராக மூர்த்தியால் வதம் செய்யப்பட்டான். அதனால் விஷ்ணுவிடம் துவேஷம் அடைந்த இரண்யகசிபு பிரம்ம தேவனைக் குறித்து கடுமையான தவம் செய்து, தனக்கு எந்த விதத்திலும் மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கினான். தனக்கு கீழே மரணம் நேரக்கூடாது. மேலே மரணம் நேரக்கூடாது. பகலிலும் மரணம் நேரக் கூடாது. இரவிலும் மரணம் வரக்கூடாது. உள்ளும் மரணம் கூடாது. வெளியிலும் மரணம் கூடாது. உயிருள்ள பொருளாலும் மரணம் கூடாது.

உயிரற்ற பொருளாலும் மரணம் கூடாது. மனிதர்களால் மரணம் கூடாது. விலங்குகளால் மரணம் கூடாது. தேவர்களால் மனிதர்களால் மரணம் கூடாது. நோயால் மரணம் கூடாது. என்று ஒரு மரணம் எப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படி எந்த வகையிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்பதோடு, தன்னுடைய சக்தியையும் ஆயுளையும் அதிகப்படுத்திக் கொள்ளும் வரங்களைப் பெற்றான்.

ஆனால் எத்தனை புத்திசாலித்தனமாக வரம் வாங்கினாலும்கூட, அந்த புத்திசாலித்தனம் யாரால் கொடுக்கப்பட்டதோ, அவர் அதைவிட புத்தி சாலித்தனமாக அதை கையாளுவார் என்பதைக் காட்டுவதுதான் நரசிம்ம அவதாரத்தின் செய்தி. இரண்யகசிபுவின் மனைவியின் பெயர் கயாது. பிள்ளையின் பெயர் பிரகலாதன். விஷ்ணுவிடம் திடமான சிந்தனையோடு பக்தி செலுத்தினான் என்பதை யஜூர் வேத அஷ்டகம், பிரஹலாதோ ஹவை காயாயவ: என்று சொல்லுகின்றது.

10. திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்

இரண்யகசிபுவுக்கு பிரகலாதனைத் தவிர, கிலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதிலே பிள்ளை என்று போற்றப்படுவதாக இருந்தவன் பிரகலாதன். பள்ளியில் படித்து வந்தவுடன், “நீ படித்தது என்ன?” என்று தந்தையான இரண்யன் கேட்கின்ற பொழுது, ‘‘எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ, அதைத் தெரிந்து கொண்டேன்’’ என்று பிரகலாதன் பதில் சொல்கிறான். ‘‘என்னுடைய பெயரைத் தெரிந்து கொண்டாயா?’’ என்று கேட்கிறான்.

“இன்று இருந்து நாளை சாகும் உன்னுடைய பெயரைத் தெரிந்து, இந்த ஆத்மாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்வது சர்வ உலகத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனைத் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னவுடன் கோபம் ஏற்படுகின்றது. தன்னுடைய பிள்ளை என்றும் கருதாமல் அழிக்க நினைக்கின்றான். அழிக்க நினைத்த அவனே அழிந்து போனான் என்பதை திருவல்லிக்கேணி பாசுரத்திலே திருமங்கையாழ்வார் மிக அற்புதமாக விளக்குகின்றார்.

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே

இன்றைக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே தெள்ளிய சிங்கம் என்கிற திருநாமத்தோடு நாம் பெருமாளை தரிசனம் செய்யலாம். தெள்ளிய சிங்கம் என்பது தெளிசிங்கமாகி அவருடைய பெயரிலேயே தெளிசிங்கர் வீதி திருவல்லிக்கேணியில் இருக்கிறது.

11. ஆயுஷ் ஹோம மந்திரத்தில் நரசிம்மன்

ஆயுஷ் ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடையச் செய்யப்படுகின்ற ஹோமம் ஆகும். இதற்காக ஆயுஷ் சூக்தம் ஓதப்படுகிறது. ஆயுஷ் ஹோம மந்திரம் பல மந்திரங்களைக் கொண்டது. அதிலே பகவான் “நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும், மிருத்யுவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனைகள் வருகிறது.

அதிலே பகவானைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, ஸுவர்ண ரம்பக் கிருஹம் அர்சயம் என்கிற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத்தினாலான வாழைமரம் போல உள்ள தூண் யாருக்கு பிறந்த வீடாக மாறியதோ, அங்கே தோன்றியவன் என்று கூறுகிறது. இப்படி தங்கத் தூணில் இருந்து பிறந்தவன் நரசிம்மன் என்பதால் இந்த மந்திரத்தினுடைய அதிதேவதையாக நரசிம்மன் இருக்கிறார் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

12. பக்தர்களுக்குப் பிரியமான உருவம்

நரசிம்மன் பயங்கரமான ரூபத்தை எடுத்து இரண்யனை வதம் செய்தார். ஆனால், இந்த ரூபம் பக்தர்களுக்கு பிரியமானதாக இருக்கிறது. அழகானதாக இருக்கிறது. அதனால்தான் ஆழ்வார்கள் இந்த ரூபத்தைவர்ணிக்கின்றபொழுது அழகியான்தானே அரிவுருவம் தானே என்று வர்ணிக்கிறார்கள். தீயவர்களுக்கு பயங்கரமானதாகத் தெரிகின்ற ரூபம், பக்தர்களுக்கும், சரணாகதர்களுக்கும் ஆச்சரியமான, ஆனந்தமான உருவமாக இருக்கிறது.

ஒருமுறை பட்டர், நரசிம்ம அவதாரத்தைப் பற்றி விளக்கம் சொல்லுகின்ற பொழுது, பயங்கரமான ரூபம் பார்த்து குழந்தை பிரகலாதன் பயப்படவில்லையா? நரசிம்மரின் கோபம் பிரகலாதன் முதலியவர்களை தாக்கவில்லையா என்கின்ற கேள்வி எழுந்த பொழுது பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக்கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார்.

13. யாருக்கு முதல் பூஜை?

பொதுவாக நாம் பெருமாளுக்குப் பூஜை செய்ய வேண்டும். எந்த உணவை உட்கொள்வதாக இருந்தாலும், பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு உட்கொள்ள வேண்டும். சமர்ப்பணம் செய்துவிட்டால் சாதாரண சாதம்கூட பிரசாதமாக மாறிவிடும். நாம் பெருமாளுக்கு படைக்கிறோம், பெருமாளே அவதாரம் எடுத்து வந்தால் அவரும் பூஜை செய்ய வேண்டுமே, அவர் யாருக்கு படைப்பார்? ராம அவதாரத்திலே ராமன் தினசரி பூஜை செய்வார். அவர் பெருமாள். ஆனால் அவர் பூஜை செய்த பெருமாள் என்பதால் பெரிய பெருமாள் என்று வழங்கப்படுகிறார்.

திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளுக்கு பெரிய பெருமாள் என்று திருநாமம். அந்த பள்ளிகொண்ட பெருமாளே திருமலையில் ஸ்ரீனிவாச பெருமாளாக அவதாரம் செய்தார். அவருக்கு பத்மாவதி தாயாரோடு திருமண வைபவம் நடக்கிறது. வந்த தேவர்களுக்காக திருமண விருந்து தயாராகிறது. இந்த பிரசாதத்தை யாருக்கு படைப்பது என்கின்ற கேள்வி எழுகிறது.

சாட்சாத் பெரிய பெருமாளாகிய ஸ்ரீனிவாச பெருமாளுக்கு படைக்கலாமா? ஸ்ரீனிவாசப் பெருமாள் இதை நரசிம்மப் பெருமாளுக்கு படைத்துவிட்டு மற்றவர்களுக்கு பரிமாற வேண்டும் என்று சொல்லுகின்றார். பெரிய பெருமாளே தன்னுடைய ஆராதனை பெருமாளாகக் கருதிய பெருமாள் நரசிம்மன் என்பதால் வைணவத்தில் அவரை பெரிய பெரிய பெருமாள் என்று சொல்லும் வழக்கம் உண்டு.

14. முதல் பக்தன் பிரஹலாதன்

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

சிறந்த பக்தர்கள் வரிசையிலே பிரகலாதனுக்கு முதல் இடம் உண்டு. “முதலில் பாகவதனை நினை; பிறகு பகவானே நினை” என்கிற மரபு உண்டு. நரசிம்மப் பெருமாள் ‘‘நீ என்ன வரத்தைக் கேட்கிறாய். கேள் தருகிறேன்’’ என்று, மடியில் குழந்தை பிரகலாதனை அமர்த்திக்கொண்டு கேட்க, வைராக்கியமிக்க சின்னஞ் சிறுவனான பிரகலாதன், ‘‘எனக்கு வேறு என்ன வேண்டும்? எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை ஒரு கணமும் மறவாத வரத்தை நீ அருள வேண்டும்’’ என்றான். இந்த வரத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. பிரகிருதி மாயையால், இறைவனுடைய அருள் வெள்ளம் பாய்ந்தால் ஒழிய, இறைவனை நினைப்பது கூட சிரமம் தான். இதைத்தான் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொன்னார்கள்.

15. தந்தைக்கு நல்ல கதி வேண்டும்

பிரகலாதன் இறைவனை மறக்காத வரத்தைக் கேட்டவுடன், நரசிம்ம பெருமாள் அவனை உச்சி முகர்ந்து, ‘‘உனக்கு சர்வ மங்கலங்களும் உண்டாகட்டும். ஒரு மன்வந்திர காலம் இந்த பூவுலகில் ஆட்சிசெய்து பிறகு என்னை வந்து அடைவாயாக’’ என்றார். அதோடு அவன் இரண்டாவதாக ஒருவரத்தைக் கேட்டான். “தன்னைப் படைத்த பெருமானிடமே மோதி, பகவத் அபச்சாரமும், பாகவத அபச்சாரமும் ஒருங்கே செய்த தன்னுடைய தந்தை ஹிரண்யன் நல்ல கதி அடைய வேண்டும். அவரை மன்னிக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான். அதையும் நரசிம்ம பெருமாள் கனிவோடு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.

16. லட்சுமி நரசிம்ம கராவலம்பம்

ஆதிசங்கரர் நரசிம்மரைக் குறித்து இயற்றிய “லட்சுமி நரசிம்ம கராவலம்பம்’’ என்னும் ஸ்தோத்ரம் புகழ்பெற்றது.

ஸ்ரீ மத் பயோநித நிகேதன சக்ரபாணே,
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே,
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத,
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.

இந்த முதல் நான்கு வரி ஸ்லோகத்தைச் சொன்னால் போதும். எந்த வியாதிகளும், துர் மரணங்களும், தரித்திரமும் ஒருவரை அடையவே அடையாது. மனதில் எந்த கவலையும், அச்சமும் வராது. எந்த கொடிய விஷங்களும், கிரக தோஷங்களும் அவனை அணுகாது.

17. போட்டியில் ஜெயித்த நரசிம்மர்

திருமாலின் அவதாரங்களுக்குள் போட்டி நடந்ததாம் 1). மத்ஸ்ய, 2). கூர்ம, 3). வராஹ, 4). நரசிம்ம, 5). வாமன, 6). பரசுராம, 7). ஸ்ரீராம, 8) பலராம, 9). கிருஷ்ண, 10). கல்கி அவதாரங்களை, வரவழைத்தார்! முதல் சுற்றில். மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களும் முறையே. மீன், ஆமை, பன்றி ஆகிய மிருகங்களின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது! எனக் கூறி நிராகரித்து விட்டாராம் ஆழ்வார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை! “மகாபலியிடம் சிறிய பாதத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர்!’’ என்ற குறை வாமன மூர்த்தியிடம் இருந்ததாம். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அதுவும் குறையாயிற்று.

18. நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

பலராமன், கண்ணன் இருவரும் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்தான் பங்கேற்கலாம் என்று சொல்ல’’ தம்பிக்காகப் பல ராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், “நீங்கள் அவதரித்தபின் போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிரா கரித்துவிட்டார்! திருமழிசையாழ்வார். இறுதியாக, நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் கலந்து கொண்டார்கள். மூவரையும் பரீட்சித்து நரசிம்மர்தான் அழகு! என்று தீர்ப்பளித்தாராம் ஆழ்வார்.

ராமர் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார். கண்ணன் அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை! ஆனாலும் ஆபத்தில் ஓடோடி வந்து காப்பாற்றி யதுதானே அழகு. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து காத்த பெருமாள் நரசிம்மர்; எனவே அவரே அழகு!” என்று தீர்ப்பளித்தார் திருமழிசையாழ்வார்.

‘‘அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து’’

19. பரிபாடலில் நரசிம்ம அவதாரம்

சங்க இலக்கியங்களில் ஸ்ரீநரசிம்ம அவதாரத்தைக் குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. நான்காம் பரிபாடலில், கடுவன் இளவயினார், நரசிம்ம அவதாரத்தின் தோற்றத்தைக் குறித்து விவரிக்கிறார். ‘‘சிவந்த கண்ணையுடையோனே! பிரகலாதன் நின்னைப் புகழ, அது பொறாத இரணியனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினை உடையை.’’ என்று நரசிம்மரின் நகத்தைப் புகழ்கிறார். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் “மடங்கலாய் மாறட்டாய்” என்று பாடுகிறார் இளங்கோவடிகள்.

மடங்கல் என்பது சிங்கம். மாறு என்பது பகைவனாகிய இரணியனைக் குறிக்கும். அட்டாய் என்பது அவரை அழித்ததைக் குறிக்கும். சிங்க உருவம் எடுத்து, தன்னிடத்திலே மாறுபட்ட இரணியனை வென்றான் என்பது இப்பாடலின் கருத்து. ஒரே வரியிலேயே நரசிம்ம அவதாரத்தின் பெருமையை இளங் கோவடிகள் இப்பாடலில் சொல்லி இருக்கின்றார்.

20. கம்பன் இராமாயணத்தை அங்கீகரித்த அழகிய சிங்கர்

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நரசிம்மப் பெருமாளின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் தன்னுடைய கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கடைசியில் அவர் திருவரங்கத்தில் தாயார் சந்நதி முன் உள்ள மண்டபத்தில் புலவர்களைக் கூட்டி கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த நாற்கால் மண்டபத்துக்கு இடது புறம் நரசிம்மருடைய சந்நதி இருக்கிறது. அது சற்று மேடான பகுதியில் இருப்பதால் அவருக்கு மேட்டு அழகிய சிங்கர் என்கிற திருநாமம். கம்பராமாயணத்தில் இரணியன் வதைப் படலத்தில் நரசிம்மரின் தோற்றத்தை கம்பர் உணர்ச்சிகரமாக வர்ணித்த பொழுது, மேட்டழகிய சிங்கர் சிரக்கம்பம் செய்து அங்கீகரித்தார் என்பது வரலாறு.

21. இரணிய வதைப் படலம்

நரசிம்ம அவதாரத்தைக் குறித்து வேதங் களில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனை மிக அற்புதமாகப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பர் இராமனின் கதையைப் பாடுகின்ற பொழுது, இடையில் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையைக் கூறுவதற்கான மிகச் சரியான இடம் கிடைக்காமல், விபீஷணனின் மூலம், நரசிம்ம அவதாரத்தின் பெருமையைக் கூறினார். அதற்கென்றே இரணியன் வதை படலம் என்கின்ற பகுதியை இயற்றினார். அதை படித்தால் போதும். நரசிம்ம அவதார மகிமையை பூரணமாகத் தெரிந்து கொள்ளலாம்.

22. வைணவத் தத்துவப் பெட்டகமே நரசிம்ம அவதாரம்

ஸ்ரீமன் நாராயணனின் திருநாமங்களின் பெருமையைக் குறித்தும், பிரகலாதாழ்வானின் வைராக்கியமான பக்தியைக் குறித்தும் கம்பர் இரணிய வதைப்படலத்தில் மிகப் பரவசமாகப் பாடியிருப்பார். கிட்டத்தட்ட 175 பாடல்களிலே நரசிம்ம வைபவத்தை அவர் பாடி இருக்கிறார். பிரஹலாதன் வாய்மொழி மூலமாக எம்பெருமானின் பெருமைகளைப் பேசும் ஒவ்வொரு பாடலும் பாராயணம் செய்யும் தகுதி படைத்த தோத்திரப் பாடல்களாகும்.

எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும், தீர்க்க முடியாத சிக்கல்கள் வந்தாலும், விளக்கேற்றி வைத்து, இந்த இரணியன் வதைப்படலத்தை ஈடுபாட்டோடு படித்தால் நிச்சயமாக நரசிம்மப் பெருமாளுடைய பூரண அருள் கிடைத்து, அந்த சிக்கல்கள் விலகும். காரணம் வேதத்துக்கு நிகரான மந்திரச் சொற்கள் எல்லாம் பெய்து கம்பன் பாடி இருக்கிறார்.

23. அவனைத் தவிர வேறு யார் நாமமும் சொல்லமாட்டேன்

பிரஹலாதன் சொல்கின்றான்.‘‘நான் நாராயணனின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தையும் சொல்ல மாட்டேன். காரணம், அதுவே வேதத்தின் முடிவான இறைவனுடைய திருநாமம்.

வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த
போதத்தானும், அப் புறத்துள எப் பொருளானும்,
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன்;
ஓதிக் கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ?
நான் சொல்லுகின்ற நாமத்தைவிட சிறந்த நாமம் ஒன்று இல்லை என்கின்றான்.
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன்
மனக்கு வந்தனன்; வந்தன, யாவையும்; மறையோய்!

உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்’’ என உரைத்தான். தன் தந்தையிடம் “வேதம் படித்த தந்தையே, இந்த நாமம் உனக்கும் உரியது” என்று சொல்லும் நயம் கவனிக்க வேண்டும்.

24. நாராயண மந்த்ரம்

நரசிம்ம அவதாரத்தின் பெருமையைச் சொல்லுகின்ற பொழுது எட்டெழுத்து மந்திரத்தின் பெருமையை கம்பன் பிரகலாதன் வாய் வார்த்தையாக காட்டுகின்ற நயம் அற்புதமானது.

காமம் யாவையும் தருவதும், அப் பதம் கடந்தால்,
சேம வீடு உறச் செய்வதும், செந் தழல் முகந்த
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம்; அன்னது கேள்: நமோ நாராயணாய!

25. அதிர்ஷ்ட பலமாக நின்று காத்தவன் நரசிம்மன்

இரணியன் பிரகலாதன்மீது கோபம் கொண்டு பற்பல இடையூறுகளைச் செய்கின்றான். அத்தனை இடையூறுகளில் இருந்தும் பிரகலாதன் தப்பிக்கின்றான். இரணியன் செய்த அத்தனை கொடுமையிலிருந்தும் அதிர்ஷ்ட பலமாக நின்று (மறைமுகமாக) காத்தவன் நரசிம்மன். கடைசியில் இரணியன் சினம் எல்லை மீறிப் போகிறது. தன் பிள்ளை உயிரை எடுக்க முடியாத கவலை பெற்ற தந்தைக்கு வருகிறது. இரணியன் சொல்கின்றான். ‘‘எத்தனையோ செய்தும் உன் உயிரை என்னுடைய படைகளால் பறிக்க முடியவில்லை. தப்பிக்கும் விதத்தை தெரிந்திருக்கிறாய். இனி நானே உன்னுடைய உயிரைப் பறிக்கப் போகிறேன்” என்று சொன்னவுடன், பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அற்புதமானது.

வந்தானை வணங்கி, ‘‘என் மன் உயிர்தான்
எந்தாய்! கொள எண்ணினையேல், இதுதான்
உம் தாரியது அன்று; உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான்’’ எனலும்,

“தந்தையே என்னுடைய உயிர் உன்னுடைய வசத்தில் உள்ளதன்று. அது எம்பெருமானுடைய வசத்தில் உள்ளது. அவன் நினைத்தால் அன்றி, உன்னாலோ உன்னைச் சேர்ந்தவர்களோ என்னைக் கொல்ல முடியாது. என்ற அற்புதமான தத்துவத்தை அந்த இடத்திலே காட்டுகின்றான்.

26. எங்கும் நிறைந்தவன்

நிறைவாக அவன் ஒரு கேள்வி கேட்கின்றான். “நீ சொல்லுகின்ற கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா?” பிரகலாதன் பதில் சொல்லுகின்றான். அந்தப் பதில் அற்புதமானது. வேத கருத்துக்களின் சாரமானது. “இந்த தூணில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் அவன் நிறைந்திருக்கிறான். அதனால்தான் அவனை விஷ்ணு என்று சொல்லுகின்றோம்”

‘‘சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்’’ என்றான்; ‘‘நன்று’’ எனக் கனகன் நக்கான்.

27. காட்டவில்லையானால் உன்னைக் கொல்வேன்

“அப்படியானால் இந்தத் தூணில் நீ காட்டுகின்ற இறைவன் இல்லை என்று சொன்னால் உன்னுடைய உயிரை எடுப்பேன். உன் உடம்பிலிருந்து வரும் குருதியைக் குடிப்பேன். உன் உடலையும் தின்பேன்” ஆணவம் அதிகமாகின்ற பொழுது பேசும் பேச்சு எத்தனை விபரீதமாகும் என்பதை கம்பன் காட்டும் இடம் இது.

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென,நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்’’–என்றான்.

28. கடவுள் நம்பிக்கையின் ஆழம்

அப்பொழுது பிரகலாதன் சொல்லுகின்ற பதில் அதிஅற்புதமானது. “என்னுடைய உயிர் உன்னால் கொல்லப்படும் அளவிற்கு அத்தனை எளிமையானதா? உன்னையும் என்னையும் படைத்த பரம்பொருளான திருமால், நீ தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் இருப்பான். அப்படி அவன் தோன்றவில்லை எனில், என்னுடைய நம்பிக்கை போய் விட்டது. நீ என்ன என் உயிரை எடுப்பது? என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்.

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான்
முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றான் ஆயின்,
என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்’’ என்றனன், அறிவின் மிக்கான்

29. ஆஹா என்று சிரித்தது செங்கட் சீயம்

இரணியன் இகழ்ச்சியாக சிரித்து தன்னுடைய முறம் போன்ற கைகளினாலே தானே கட்டிய பொற்றூணை ஓங்கி அறைந்தான்.

அளந்திட்ட தூணைஅவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டுவாளுகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டுஇரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி

இரணியன் சந்தேகத்தைத் தீர்க்கும் படியாக அவனே கட்டிய தூணில் ஆவிர்பவித்தான். தூணில் எப்படி தோன்றினார் என்பதை கம்பன் வர்ணிப்பது போல வேறு எங்கும் நாம் பார்க்க முடியாது.

நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘‘நன்று, நன்று!” என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன, ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, செங் கண் சீயம்.

30. பிரஹலாதன் மகிழ்ச்சி

பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.

நரசிம்மரைப் பார்த்ததும் பிரகலாதனுடைய மகிழ்ச்சி எப்படி இருந்தது என்பதை கம்பனைத் தவிர வேறு யாரும் காட்டவில்லை. நரசிம்மபெருமாளின் சிரிப்பொலியைக் கேட்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினான். பொலபொலவென்று கண்ணீர் விட்டு அழுதான். இறைவனின் பல்வேறு விதமான நாமங்களைப் பாடி ஆரவாரம் செய்தான். தன்னுடைய சிவந்த கைகளை தலையில் வைத்து தொழுதான். ஆடினான். பாடினான். கீழே விழுந்து வணங்கினான். துள்ளிக் குதித்து ஓடினான். என்று கம்பன் பிரகலாதனுடைய அந்த உற்சாகத்தை அற்புதமாக காட்டுகின்றார்.

இந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கும் வரவேண்டும். வரும். பிரகலாதனை நினைத்து நாமும் அவனை சரணாகதி செய்வோம். நரசிம்ம ஜெயந்தி (4.5.2023) அன்று காலையில் அவனைப்பற்றிய பல்வேறு நாமங்களைக் கூறி, துளசி மாலையால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, பானகமோ பாலோ இருந்தாலும்கூட போதும், நிவேதனம் செய்து, அவனுடைய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவோம்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த -ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம் —

February 14, 2023

ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன் :

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர – அழகிய மணவாளமாமுனிகளின்‌, சரணாம் புஜ ஷட்பதம்‌ – திருவடித்‌ தாமரைகளில்‌ வண்டு போல்‌ படிந்து ரஸாநுபவம்‌ செய்பவரும்‌, திவ்ய ஜ்ஞாந ப்ரதம்‌ – தம்மை யண்டினவர்க்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞாநத்தை அளிப்பவரும்‌, சுபம்‌ – அறிவினாலும்‌ அனுஷ்டாநத்தாலும்‌ சோபிப்பவருமான, தேவராஜ குரும்‌ – தேவராஜ குருவென்னும்‌ எறும்பி யப்பாவை.

இவர் சர்வலோக சரண்யரின் திருக்குமாரர் -தேவராஜன் இயல் பெயர் –

ஆராதன பெருமாள் சக்ரவர்த்தி திரு மகன்

இப்பொழுது நம் கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருமாளிகையில் சேவிக்கலாம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி ரேவதி

அவதார ஸ்தலம்: எறும்பி

ஆசார்யன்: அழகிய மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: (திருமகனார்) பெரிய அப்பா, சேனாபதி ஆழ்வான்

நூல்கள்: பூர்வ தினசர்யா, உத்தர தின சர்யா, வரவரமுநி சதகம், விலக்ஷண  மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்ன மாலையில் கடைசிப் பாசுரம்

கனு அன்று இன்றும் பக்தலோசனன் எறும்பி க்ராமத்துக்கு எழுந்து அருளி சேவை சாதிக்கிறார்
மா முனிகள் இங்கே எழுந்து அருளி இருந்து கால ஷேபம்செய்து அருளினார்
எறும்பி க்ராமத்தையே வட திருவரங்கம் என்றும்
இங்கு உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களை -அழகிய மணவாள தாசர்கள் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்

இவ் வெறும்பியப்பா மணவாள மா முனிகளின்‌ சிஷ்யாக்ர கண்யர்களான அஷ்டதிக்கஜாசார்யர்களில்‌ ஒருவராவர்‌. இவர்‌ ‘ “தேவராஜகுரு ‘வென்றும்‌ ‘வரதராஜ கவி” என்றும்‌ வழங்கப்படுகிறார்‌. வானமாமலைஜீயர்‌ திருவேங்கடஜீயர்‌, பரவஸ்துபட்டர்பிரான்‌ ஜீயர்‌, கோயில்‌ கந்தாடையண்ணன்‌, எறும்பியப்பா , அப்பிள்ளை, அப்பிள்ளார்‌, ப்ரதிவாதி பயங்கரமண்ணா ஆகிய இவர்கள்‌ “அஷ்டதிக்கஜங்கள்‌ ‘ என்று ப்ரஸித்தர்களாயிருப்பர்‌. “பாராரு மங்கை திருவேங்கடமுனி பட்டர்பிரான்‌ ஆராமம்‌ சூழ் கோயிற்‌ கந்தாடையண்ணன்‌ எறும்பியப்பா ஏராருமப்பிள்ளை அப்பிள்ளார்‌ வாதீபயங்கரரென்‌ பேரார்ந்த திக் கஜஞ் சூழ்‌ வர யோகியைச்‌ சிந்தியுமே‘ – யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்

(“முனி என்பதனை முன்னும்‌ பின்னும்‌ கூடக்கூட்டி, பாராரு மங்கை (சிரீவரமங்கல) முனி, திருவேங்கட முனி, பட்டர்பிரான்முனி என்று கூட்டிப்‌ பொருள்‌ கொள்க. “எறும்பியப்பா (எம்பெருமானா।:ககு) வடுக நம்பியைப்‌ போலே தேவுமற்றறியாதே, ஜீயருக்கு (மணவாளமாமுனிகளுக்கு) அத்யந்தம்‌ அபிமதராயிருப்பர்‌” என்று யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ க்ரந்தம்‌ இவர் பற்றிக் கூறுவது காண்க.
இவர்‌ தாமும்‌, தாம்‌ மணவாளமா, . னிகளின்‌ சிஷ்யரென்பதை, இந்த அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்திரத்தின்‌ இறுதியான ஸ்லோகத்தில்‌ “பக்த்யா சவ்ம்ய வர கிங்கரோ பஹிதாம்‌ அம்ருதபலாவளிம்‌” (பக்‌தியுடன்‌ மணவாள மாமுனிகளின்‌ தாஸனான அடியேனால்‌ ஸமர்ப்பிக்கப்பட்ட அம்ருதபலாவளி என்ற ஸ்தோத்ரத்தை) என்று அருளிச் செய்துள்ளார் –

————

ஸ்ரீ அம்ருத பலா வளி என்னும் ஸ்ரீ கடிகாசல ந்ருஸிம்ம ஸ்தோத்ரம்-

ஸ்ரீ வேங்கடேச சரணவ் சிரஸீ கரோமி ஸ்மிதாப்ஜ ஸூஹ்ருதவ் தவ்
ப்ருது தரம் அபி பவ ஜலதிம் பிப்தி தராம் யத் ப்ராக ப்ரமாணு–1-மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிக்கிறார்

யத் பராக பரமாணு:- எந்தத் திருவடிகளால்‌ ஒட்டிக்‌ கொண்டிருக்கிற ஒரு சிறு மண் துகள்‌ கூட, ப்ருதுதரம்‌ – மிகப்பெரிதான-. பவ ஜலதிம்‌ – பிறவிக்‌ கடலையும்‌, பிபதிதராம்‌ – அடியோடு குடிக்க (வற்றச்‌ செய்ய) வல்லதோ, தெள – அத்தகைய, ஸ்மிதாப்ஜ ஸுஹ்ருதெள – மலர்ந்த தாமரைகளோடு ஒத்த- ஸ்ரீவேங்கடேச சரணெள திருவேங்கடமுடையானுடைய திருவடிகளை, சிரஸி – (எனது) தலையில்‌, கரோமி வைத்துக்‌ கொள்ளுகிறேன்-

ம முனிகள் திரு உள்ள உகப்புக்காக அவர் கைங்கர்யம் செய்த திரு வேங்கடத்தானையே –
இவர் தான் மா முனிகள் திரு நாமம் கேட்டுக்கொண்டே திருக்கண் விழித்து அருளுகிறார் நித்யமாகவே –

எறும்பியப்பா தாம்‌ இயற்ற நினைத்த “அம்ருதபலாவளி” என்ற கடிகாசல நரஸிம்ஹ ஸ்தோத்ரம்‌ இடையூறேதுமின்றி இனிதே முடிவடைவதற்காகத்‌ தமக்கு இஷ்ட தெய்வமான திருவேங்கடமுடையானுக்கு மங்கள ஸ்லோகமாக முதல்‌ ஸ்லோகத்தை அமைக்கிறார்‌.
நீரைத்‌ தூர்ப்பதற்கு நீரைவிட அதிகமான அளவுடைய மண்‌ தேவைப்படுவது உலகவியல்பு. திருவடியிலுள்ள மிகச்சிறிய மண்துகள்‌ தனது மகிமையினால்‌ ஸம்ஸாரமென்னும்‌ பெருங்கடலையும்‌ தூர்த்து விடுஃன்றதென்பது மிக ஆச்சரியமாகும்‌.

—–

ஸ்ரீத கடிகாசல ஸ்ருங்கம் ஸ்ரீ தல கருணா தரங்கித அபாங்கம்
மனஸி மம உல்லஸ தங்கம் வஸதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்–2-

ஸ்ரிதகடிகாசலஸ்ருங்கம்‌ – திருக்‌ கடிகைமலையின்‌ சிகரத்தை அடைந்ததும்‌, சீதள கருணாதரங்கித – அபாங்கம்‌ குளிர்ந்த கருணை யலை யெறிகிற கடைக்‌ கண்ணோக்கத்தை யுடையதும்‌, வாஸஸாபிங்கம்‌ – வஸ்த்ரத்தினால்‌ பொன்னிறங்‌ கொண்டதும்‌, உல்லஸத்‌ அங்கம்‌ – மிகவும்‌ விளங்குந்‌ திருமேனியைப்‌ பெற்றதுமான, கிமபி மஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸானது, மம மநஸி வஸதி – எனது மனதில்‌ உறைகின்றது.

திருக்கடிகை யெம்பெருமானாகிய ஒளி எனது மனதில்‌ உறைவதனால்‌ அஜ்ஞானமெனும்‌ இருள்‌ அகலப் பெற்றேன்‌. நன் ஞானமும்‌ பெற்றேன்‌. இனி அப்பெருமானை உள்ளபடி அறிந்து இந்த ஸ்தோத்ரத்தைச்‌ செய்து முடிக்க என்னால்‌ முடியுமென்று தமது ஆற்றலைக்‌ குறிப்பிட்டாராயிற்று இதனால்

—————-

வ்யத்யஸ்த சரண கமலாம் விநிஹித புஜ யுகல மித்ர ஜாநு யுகாம்
விலஸித ரதாங்க சங்காம் வ்யக்திம் உபாஸே விருத்தி ஜாதி மதீம்–3-

வ்யத்யஸ்தசரண கமலாம்‌ – -யோக நிலையில் அமர்ந்த திருக்கோலம்-(வீற்‌று இருந்த திருக்கோலத்தில்‌ இடது திருவடியை வலப் பக்கமாகவும்‌ வலது திருவடடியை இடப்பக்கமாகவும்‌) மாறுபட அமைத்த திருவடித் தாமரைகளை யுடையதும்‌, விநிஹீத புஜயுகள மித்ர ஜாநுயுகாம்‌ – வைக்கபட்ட இரண்டு திருக் கைகளுக்குத்‌ தோழர்களாக இரண்டு முழுந்தாள்களைக்‌ கொண்டதும்‌ (இரண்டு முழந்தாள்களின்‌ மேல்‌ சார வைக்கப்பட்ட இரண்டு திருக்கைகளைக்‌ கொண்டதும்‌)-திருக்கரங்கள் முழங்கால் பர்யந்தம் நீண்டு -, விலஸித ரதாங்க சங்காம்‌ – மிகவும்‌ விளங்கும்‌ சக்கர சங்குகளைப்‌ பெற்றதும்‌,-திருவாழி பாஞ்ச ஜன்ய ஆழ்வார்களுடன் விளங்கி -ஆழி யம் கை பிரான் அச்சோ ஒரு அழிகிய வா –விருத்த ஜாதிமதீம்‌ – ஒன்றோறு ஓன்று முரண்பட்ட “நரத்வம்‌ ஸிம்ஹத்வம்‌” என்னும்‌ இரண்டு ஜாதிகளை ஒருங்‌கே கொண்டதுமான, வ்யக்திம்‌ – வ்யக்தியை (தோன்றும்‌ ஓர்‌ உருவத்தை) உபாஸே -த்யானம் செய்கிறேன்-அழகியான தானே அரி உருவான தானே -அவனையே உபாஸிப்போம்

கடிகைத்தடங்குன்றின்‌ மிசையிருந்த அக்காரக்கனி யெனப்படும்‌ யோக நரஸிம்ஹ மூர்த்தியை நம்‌ கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த ஸ்லோக ரத்னம்

——————–

கலித தநு தநய பங்கம் கர கமலா ப்ரண வாரிஜ ரதாங்கம்
க்ருத கடிகாசல சங்கம் கிமபி மஹோ ஜயதி கேதந விஹங்கம் –4-

கலித தநு தநய பங்கம்‌ – தநுவின் தனயனா இரணியனைப் பிளந்ததும்‌, கர கமல ஆபரண – திருக்கைத்‌ தாமரைகளுக்கு ஆபரணமாகிய, வாரிஜரதாங்கம்‌ – -திரு சங்கு ஆழி ஆழ்வார்கள்-சங்கு சக்கரங்களை யேந்தியதும்‌, க்ருத கடிகாசல ஸங்கம்‌ – திருக் கடிகை மலையில்‌ பற்று வைத்துள்ளதும்‌, கேதந விஹங்கம்‌ – கொடியில்‌ கருடனைக்‌ கொண்டதுமான,-விநதா ஸூதனுக்கும் பல்லாண்டு பாடுகிறார் கிமபிமஹ: – ஒப்பற்ற தேஜஸ்ஸூ , ஜயதி – மேம்பட்‌டு விளங்குகிறது.-ஜய கோஷம் —கை வண்ணம் தாமரை -வடிவார் சோதி வலத்துறையும் ஆழியும் பல்லாண்டு-தேஜஸ் நிறைந்த திவ்ய தேசம்

கச்யப ப்ரஜாபதியின்‌ மனைவிகளில்‌ “தநு ” என்பவளுக்குப்‌ பிறந்த பிள்ளைகள்‌ தநுஜர்கள்‌ ( தானவர்கள்‌), “திதி” என்பவளுக்குப் பிறந்தவர்கள்‌ தைத்யர்கள்‌. இவர்கள்‌ இரு திறத்தாரும்‌ அசுரர்கள்‌. திதியின்‌ பிள்ளையான இரணியனை இங்கு தநுஜனாகக்‌ குறிப்பிட்டது அசுரத்துவம்‌ என்ற பொதுச்‌ தன்மையானது இரணியனுக்கும்‌ பொருந்துகையால்‌ ஆகும்‌. இங்ஙனம்‌ நூல்கள்‌, தைத்யர்களை தானவர்களாகவும்‌, தானவர்களை தைத்யர்களாகவும்‌ பல விடங்களில்‌. கூறப்பட்டுள்ளமை காணத் தக்கது

——————-

ஸர்வ ரஸ கந்த பரிதம் சங்க தமே கமபி ஸகல ஸாகாஸூ
அம்ருத பலம் அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி கடிகாத்ரவ் –5-

ஏகமபி – ஒன்றே யாயினும்‌, ஸர்வ ரஸ கந்த பரிதம்‌ – எல்லா வகையான சுவைகளாலும்‌ எல்லாவித நறு மணங்களாலும்‌ நிறையப் பெற்றது –ஸகல சாகாஸு ஸங்கதம்‌ – பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அகில பும்ஸாம்‌ – ஆத்மாக்களனைவர்க்கும்‌, ஆஸ்வாத்யம்‌ – சுவைத்து உண்ணத் தக்கதுமாய்‌. சித்ரம்‌ – (இங்ஙனம்‌) விசித்திரமான, அம்ருத் பலம்‌ – அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழம்‌ ஒன்‌று –கடிகாத்ரெள அஸ்தி – திருக்கடிகை மலையில்‌ உள்ளது.
இங்கு ஒரே பழம்‌ பலவகைச் சுவை நறு மணங்கள்‌ நிறையப் பெற்றதும்‌, பல கிளைகளில்‌ தொடர்பு கொண்டதும்‌, அனைவரும் சுவைத்துண்ண வுரியதுமாக இராதாகையால்‌ முரண்பாடு தோன்றும்‌. இதில்‌ அம்ருதம் போல்‌ தித்திக்கும்‌ பழமாக உருவகித்துக் கூறப்பட்ட கடிகை நரஸிம்ஹப் பெருமானாகிய திருமால்‌ ஒருவனே – சாந்தோக்யோபநிஷத்தில்‌ ஸர்வகந்த: ஸர்வரஸ: என்று எல்லா நறு மணங்களும்‌ எல்லா நற் சுவைகளும்‌ அமையப் பெற்றவனாகக்‌ குறிக்கப்‌ பட்டுள்ளமையினாலும்‌, வேதமாகிய மரத்தின்‌ கிளைகளாகிய ருக்‌ யஜுஸ்‌ ஸாம அதர்‌வணங்களென்னும்‌ எல்லாப் பிரிவுகளிலும்‌ பரம் பொருளாகக்‌ கூறப்படுவதனாலும் எல்லாரும்‌ தஞ்சம்‌ பற்றி அநுபவிக்கலாம்படி இருக்கையாலும்‌ முன்‌ தோன்றிய முரண்பாடு நீங்குதல்‌ காண்க. அதாவது உலகிலுள்ள எப்பழமும்‌ முற் கூறியபடி இராதாகிலும்‌ நரஸிம்ஹனாகிய பழம்‌ அப்படி யிருப்பதில்‌ தடை யொன்றுமில்லை என்றபடி.
இந்த ஸ்லோகத்தில்‌ அமுதம்‌ போல் இனிக்கும்‌ பழமென்று திருக் கடிகை யெம்பெருமான்‌ குறிக்கப்பட்டுள்ளான்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை – அக்காரக்கனி என்று அழைத்துள்ளார்கள்‌. எறும்பியப்பா அம்‌ருதபலம்‌ என்று பணித்தருளுகிறார்‌. அக்காரக்கனி என்பதற்கு இரண்டு பொருள்கள்‌. 1. –ஸஹகாரக்‌ (ஒட்டு மாங்கனி, ஸஹகார மென்னும்‌ ஸம்ஸ்க்ருத பதம்‌ தமிழில்‌ அக்காரமென்‌று ஆகும்‌. ஸந்த்யா என்பது அந்தியென்று ஆனது போல்‌ இதைக் கொள்க. 2. அக்காரம்‌ – சர்க்கரை. இது தமிழ்ச் சொல்‌. சர்க்கரையே மரமாக முளைத்து அம்மரம்‌ முதன்‌ முதலாகப்‌ பழுத்த பழத்தை அக்காரக்கனி என்பர்‌ வ்யாக்யான சக்ரவர்த்தியான பெரியவாச்சான்‌ பிள்ளை. இவ் விரண்டு வகையிலும்‌, கடிகை யெம்பெருமான்‌ ஒட்டு மாங்கனி போன்றும்‌ சர்க்கரை மரக்கனி போன்றும்‌ மிகமிக இனியவனாகையால்‌ – அம்ருதம்‌ போல் தித்திக்கும்‌ பழம்‌ என்றும் அருளிச் செய்தது மிகவும்‌ பொருந்தும்‌.

ஸர்வ ரஸ கந்த பரிதம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸ  -குழந்தைகளுக்கு ஏற்ற தம்மை அமைத்து அனுபவிக்குமவன் அன்றோ-ஏகமபி –ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் ஏக மேவ அத்விதீயம்
சங்க தம் ஸகல ஸாகா ஸூ-ஸகல உபநிஷத்துக்கள் சாகைகளும் இவ்வாறே கோஷிக்குமே
அம்ருத பலம் -அக்கார கனி என்றவாறு –ஸ்வயம் ப்ரயோஜன பக்தர்களுக்கு இருக்கும் இருப்பு-கறந்த பால் நெய்யே- நெய்யின் இன் சுவையே -கடலினுள் அமுதமே -அமுதினில் பிறந்த இன் சுவையே – பேர் ஆயன்
ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் காலே ஸ்ரீ நரஸிம்ஹா -நர லோக மநோபிராமம் என்றாளே
அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றியவனையே முதலில் கூப்பிடுகிறார்கள்
அகில பும்ஸாம் ஆஸ் வாத்யம் சித்ர மஸ்தி –நல்லை நெஞ்சே –நாம் தொழும் நம் பெருமான் அன்றோ இவன்

கறந்தபால் நெய்யே! நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே! சுவையது பயனே! பின்னைதோள் மணந்தபே ராயா!–8-1-7-

கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி.பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!,கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார்.

நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு.நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக் கொள்ளலாம்.

——————-

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக கோபி புண்ய க்ருது உபேய –6-

ஆரண்யக ஆப்த வாக்யை: – ஆ.ண்யகமென்கிற நம்பத் தக்க வேத புருஷனுடைய வாக்கியங்களால்‌, அவகம்ய: – உண்டென்று அறியப் படுவதும்‌, க்ராம்ய ஜந த்ருசாம்‌ (கிராம) பாமர மக்களின்‌ பார்வைகளுக்கு , அபதம்‌ – இலக்காகாததும்‌, புண்ய க்ருத்‌ உபேய: – புண்ணியம்‌ செய்தவர்களால்‌ அடையத் தக்கதுமான கோஃபி- ஒரு, பூருஷ ம்ருக: நர ம்ருகமானது (நரஸிம்ஹமானது). கடிகாசல அக்ரே – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸ்புரதி – பளபளவென்று விளங்குகிறது -இதிலிருந்து – கிராம மக்களால்‌ க்ராமத்தில்‌ காண முடியாத காட்டில் திரிகிற நம்பத் தக்க வேடர்‌ முதலியோர்களின்‌ பேச்சுக்களைக்‌ கொண்டு காட்டிலிருக்கிறதென்று அறிய வெளிய – புண்ணியம்‌ செய்தவர்களுக்குப்‌ பிடிபட்டு அடைய-தக்கதொரு ஆண்‌ சிங்கம்‌ கடிகை மலைச்‌ சிகரத்தில்‌ விளங்குகிறதென்று சாதாரணமானதோர் பொருளும்‌ அறிய இயலும்

ஆரண்யக அவாப்த வாக்யைர் அவகம்யோ க்ராம்ய ஜன த்ருஸாமப்தம் -வேடர்கள் க்ராம மக்களைப் பார்த்து சொன்னதாகவும்-பாமர மக்களுக்கு வேத புருஷன் காட்டிக் கொடுத்ததாகவும் கொள்ளலாம்
ஸ்புரிதி கடிகாசல அக்ரே புருஷ ம்ருக –ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் ஒளி விஞ்சி உள்ளாரே
கோபி புண்ய க்ருது உபேய —புண்யம் யாம் உடையோம் என்று ஆய்ச்சிகள் மகிழ்வார்கள் அன்றோ

———–

மஹதி கடிகாத்ரி விஷயே மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம்
தே தீப்யதே ஸ்திரோ அயம் திவ்யைர் முனிபி ப்ரவர்த்தித்தோ தீப –7-

மஹதி – பெரிய, கடிகாத்ரி விஷயே – கடிகை மலையாகிய இடத்தில்‌(அகலில்‌) மஹதா ஸ்நேஹேந – அதிகமான பக்தியுடன்‌ (நெய்யுடன்‌)… நிர்மல தசாயாம்‌ – மிகவும்‌ சுத்தமான ஸமயத்தில்‌ (அழுக்கற்ற திரியில்‌), திவ்யை: முநிபி: -மிகவுயர்ந்த ஸப்தருஷிகளால்‌, ப்ரவத்தித: – தோற்றுவிக்கப்‌ பட்டதாய்க்‌ (ஏற்றப்பட்டதாய்க்) கொண்டு, அயம்‌ தீப: – இந்த நரஸிம்ஹப்‌ பெருமானாகிய விளக்கு, ஸ்திர:தேதீப்யதே – நிலையாக ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறது.-சாதாரணவிளக்கு ஒரு மனிதனால்‌ அளவு பட்டதோர்‌ அகலில்‌ அளவான நெய்யிட்டுச் சில சாணளவுள்ள திரியில்‌ ஏற்றப்‌பட்டு நெய்யும்‌ திரியும்‌ மாண்டு போனால்‌ அணைந்து விடும்‌. அங்ஙனல்லாமல்‌, ஆற்றல்‌ மிக்க அத்திரி முதலிய முனிவர்களால்‌; கடிகை மலையாகில்‌ பெரிய அகலில்‌ மாளாத தமது பக்தியாகிய நெய்யை இட்டு, தமது நல்ல மனநிலையில்‌ அல்லது நல்ல நேரத்தில்‌ ஏற்றப்டட  நரஸிம்ஹப் பெருமானாகிய விளக்கு அணையாமல்‌ நிலை பெற்று எப்போதும்‌ ஜ்வலித்துக்‌ கொண்டிருக்கிறதென்க. ஸ்நேகம்‌ பக்தியும்‌ நெய்யும்‌, தசா – நேரமும்‌ திரியும்‌

மஹதி கடிகாத்ரி விஷயே –கடிகைத்தடம் குன்றமே அகலாக-மஹதா ஸ்நேஹேந நிர்மல தஸாயாம் —ஆர்வமே நெய்யாக -பக்தி -நீராய் அலைந்து உடலையும் உருக்குமே –
ஸூத்தமான மனஸே த்ரியாகவும்-திவ்யைர் முனிபி –ஆழ்வார்கள் தானே திவ்ய முனிகள்
தே தீப்யதே ஸ்திரோ அயம் -ஏற்றி வைத்த தீபத்தாலே-ப்ரவர்த்தித்தோ அயம் தீப–ஸ்ரீ அக்காரக்கனியே ஒளி விஞ்சி காட்சி தந்து அருளுகிறார்

———–

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத
ஆலோகதோ அகிலார்தன் அவகமயதி நித்யம் அச்யுதோ தீப –8-

கடிகாசலஸ்ய மூர்த்தி – கடிகை மலையின்‌ உச்சியில்‌, ஸம்பூத: – உண்டான, அச்யுத:தீப: – அச்யுதனென்று சொல்லப்பட்ட – அணையாத விளக்கானது, ஆலோகத: – தன்‌ பார்வையாலே – தன்‌ வெளிச்சத்தினாலே, ஜநாநாம்‌- மக்களுடைய, தம:– அஜ்ஞானத்தை-இருட்டை, முஷ்ணந்‌ – போக்குவதாய்க் கெண்டு, அகில அர்த்தாந்‌ -எல்லாப் புருஷார்த்தங்களையும்‌, நித்யம்‌ — போதும்‌, அவகமயதி – அனுபவிப்பிக்கிறது அறிவிக்கிறது.
விளக்கு தன் வெளிச்சத்தாலே புற விருளைப்‌ போக்கித்‌ தானிருக்குமிடத்திலுள்ள பொருள்களை நம்‌ கண்களுக்கு அறிவிக்கிறது. எம்பெருமானகிய விளக்கு தன்‌ கடாக்ஷத்தாலே தமோ குணம்‌ முதல்‌ அக விருளைப்‌ போக்கி (தன்னை தஞ்சமடையச்‌ செய்து) நமக்கு வேண்டிய ஸகல புருஷார்த்தங்களையும்‌ அனுபவிப்பிக்கிறது. தம: அக விருளும்‌ புறவிருளும்‌. அர்த்த:.புருஷார்த்தமும்‌ பொருளும்‌, ஸ்வயம்‌ ப்ரகாச ஸ்வரூபனான பகவான்‌ இவ்விரண்டு ஸ்லோகங்‌களிலும்‌ விளக்காக உருவகிக்கப்பட்டான்‌ என்கை. ‘நந்தா விளக்கே” என்றார்‌ கலியன்‌-

முஷ்ணம் ஸ்தமோ ஜநாநாம் -அஞ்ஞானம் போக்கி அருளி-மூர்தநி கடிகாலஸ்ய ஸம் பூத -நித்தியமாக எழுந்து அருளிய-ஆலோகதோ -கடாக்ஷ மஹிமையாலே-அகிலார்தன் அவகமயதி –வேண்டிய புருஷார்த்தங்களையும் அருளி நித்யம் -எப்பொழுதுமாக நிலை நிற்கும் படி அச்யுதோ தீப –நந்தா விளக்கு

———

ரஸ்யம் ஸக்ருது பஸேவ்யம் லப்யம் அபத்ய ஸஹம் அஸூஹித மமோகம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் ஸூத்தம் கடிகாத்ரி மௌலிஜம் மூலம் –9-

கடிகாத்ரி மெளளிஜம்‌ – கடிக மலைச்‌ சிகரத்தில்‌ உண்டான, ஸூத்தம்‌ மூலம்‌ நரஸிம்ஹப்‌ பெருமானாகிய தூய்மையான மூலிகையானது. ரஸ்யம்‌ – சுவைக்கத் தக்கது. லப்யம்‌ – கிடைக்கத்‌ தக்கது. அபத்யஸஹம்‌ – பாபமாகிய அபத்யம்‌ எவ்வளவு செய்தாலும்‌ பொறுத்துக் கொள்வது, அஸுஹிதம்‌ – எவ்வளவு உட் கொண்டாலும்‌ போது மென்று தோன்றாதபடி மேன்‌ மேலும்‌ உட் கொள்ளத்‌ தக்கது. அமோகம்‌ – வ்யர்த்தமாகாதது. ( பயனை யளித்தே தீருமது). ஸக்ருத்‌ உப ஸேவ்யம்ஸத்‌ – ஒரு தடவை மட்டுமே உட்கொள்ளப் பட்டதாய்க்‌ கொண்டு . பவார்த்திம்‌ – பிறவி யென்னும்‌ நோயை, த்வரிதம்‌ ஸரதி- விரைவில்‌ போக்குகிறது சாதாரணமாய்‌ மூலிகை – சுவை யுடையதன்று, எளிதில்‌ கிடைக்காது, அபத்யம்‌ செய்தால்‌ வேலை செய்யாது. ஒரு தடவை யுட்கொண்டால்‌ போதும்‌ போதுமென்ற எண்ணத்தை யுண்டாக்குமது. சில சமயத்தில்‌ பயனளிக்காமலும்‌ போமது. பல நாட்கள்‌ உட் கொண்டால் தான்‌ நோயைத்‌ தீர்க்குமது. எம்பெருமானாகிற மூலிகை இதற்கு நேர்‌ முரணானதென்று இதனால்‌ காட்டப்‌ பட்டதாயிற்று.ஸுஹிதம்‌த்ருப்தம்‌, அஸூஹிம்‌ – அத்ருப்தம்‌ – த்ருப்திக்கு விஷயமாகாதது. மூலம்‌-மூலிகை, மருந்து. “மருந்தும்‌ பொருளும்‌ அமுதமும்‌ தானே” என்று பேயாழ்வார்‌ அமுதமென்று ரஸ்யமாகவும்‌, மருந்தென்று மூலிகையாகவும்‌ எம்பெருமானைக்‌ குறித்தருளினார்‌.

ஸூத்தம்-ஸூத்த ஸத்வ மயம்-கடிகாத்ரி மௌலிஜம் மூலம் ரஸ்யம் –மருத்துவனாய் நின்ற மா மணி -பேஷஜம் பிஜக் –விருந்தாகவும் போக்யமாகவும்-ஸக்ருது பஸேவ்யம் -ஒரே தடவை கிருபா கடாக்ஷம் பட்டாலே போதுமே-லப்யம் -எளிதாகவே லபிக்குமே
அபத்ய ஸஹம் -பாபங்களை பாற்றி உரு மாய்ந்து போக வைக்கும்
அஸூஹித மமோகம் –ஆராவமுதம்
த்வரிதம் ஹரதி பவார்த்திம் –ஸம்ஸாரம் உடனே அறுக்குமே

————-

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் விச்சின்ன குசல சந்தானம்
ஸஞ்ஜீவனம் அபி கடிகாசைலஜ மூலம் கரோதி ஸாரூப்யம் –10-

கடிகாசைலஜ மூலம்‌ – கடிகைமலை யிலுண்டாகிய நரஸிம்மனென்னும்‌ மூலிகையானது, ஜகதாம்‌ – உலகிலுள்ளவர்களுக்கு, ஸ்திர சோகசல்யஹரணம்‌ நிலைநின்ற துன்பமாகிய – அம்பு தைத்த விரணத்தை ஆற்றுமதாய்‌, விச்சிந்நகுசல ஸந்தானம்‌ – முறிந்து போன க்ஷேமமாகிய எலும்‌பை ஒட்ட வைக்குமதாய்‌, ஸஞ்ஜீவநம்‌ நசிக்க விருக்கும்‌ ஆத்ம ஸ்வரூபமாகிய உயிரை நசியாமல்‌ பாதுகாக்குமதாய்‌ இருந்து, ஸாரூப்யம்‌ அபி கரோதி – (இறந்த பிறகு) பரம பதத்தில்‌ தன்னோடு ஒத்த திருமேனியை யுடைமையாகிய அழகிய உருவத்தையும்‌ உண்டாக்குகிறது.
சில மூலிகை அம்புபட்ட புண்ணை மட்டும்‌ மாற்றும்‌. இன்னும்‌ சில முறிந்து போன எலும்பைச்‌ சேர்த்து வைக்கும்‌. மற்றும்‌ சில போகுமுயிரை மீட்டுத் தரும்‌. வேறு சில அழகில்லாத உடலை அழகுடையதாக்கும்‌. அக்காரக் கனி யென்னும்‌ ஒரே மூலிகை இவை யெல்லாவற்றையும்‌ செய்யுமென்றார்‌ இதனால்‌. இவை முறையே “விசல்ய கரணீ ஸந்தாந கரணீ ஸஞ்ஜீவ கரணீ ஸாரூப்ய கரணீ’ எனப்படும்‌. இவ்விரண்டு ஸ்லோகங்களாலும்‌ எம்பெருமான்‌ மிக மிக வுயர்ந்த மூலிகையாக உருவகிக்கப் பட்டான்

விகல்ய கரணி -சாதாரண நோய்களுக்கு மருந்து
சந்தான கரணி -எலும்பு முறிவு போன்றவற்றுக்கு மருந்து
சஞ்ஜீவ கரணி -உயிர் போவதையும் மீட்டுக் கொடுக்கும் மருந்து
சாரூப்ய கரணி -கோர ரூபம் மாற்றி -அழகு ரூபம் கொடுக்கும் மருந்து
ஆயுர் வேதத்தில் லோகத்தில் நான்கு விதங்கள் உண்டு

ஸ்திர சோக ஸல்ய வ்யஹரணம் ஜகதாம் -சோகம் ஆகிய அம்பால் துன்புறும் லோக மக்களின் அனிஷ்டங்களைப் போக்கி அருளும்
விச்சின்ன குசல சந்தானம் -எலும்பு முறிந்த மக்கள் -செல்வம் இழந்த மக்களைக் காத்து அளிக்கும்
ஸஞ்ஜீவனம் அபி -உயர் போகும் நிலையில் நுகர்ந்தால் -ஆத்ம ஸ்வரூபம் நசிந்தாலும் -மீட்டுக் கொடுக்கும்
கடிகாசைலஜ மூலம்
கரோதி ஸாரூப்யம் —ஸாம்யாபத்தி -சாரூப்யம் சாலோக்யம் சாமீப்யம் ஸாயுஜ்யம் அளிக்கும்

————————–

அதி பல பவாஹி தஷ்டான் அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான்
கடிகா சிகரி நரேந்த்ர கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண –11-

கடிகா சிகரி நரேந்த்ர: – கடிகை மலையிலுள்ள நரஸிம்ஹனென்னும்‌ விஷ வைத்தியன்‌, அதிபல பவ அஹி தஷ்டாந்‌ வலிமைமிக்க – ஸம்ஸாராமாகிய பாம்பினால்‌ கடிக்கப் பட்டவர்களாய்‌, அபிலாஷ விஷ அக்நி மூர்ச்சநா நஷ்டாந்‌ ஆசை யென்னும்‌ நெருப்புப்‌ போன்ற விஷம்‌ ஏறியதனால்‌ மாய்ந்தவர்‌களான மனிதர்களை, கடாக்ஷ மாத்ரேண – தனது கடாக்ஷ மாத்திரத்தினால் , அஸுபி : – பிராணன்களோடு, கடயதி – சேர்த்து விடுகிறான்‌ (பிழைக்கச்‌ செய்கிறான்‌).
உலகில்‌ பிரசித்தரான விஷ வைத்தியர்கள்‌ பாம்பு கடித்து விஷமேறி மாயவிருக்கும்‌ அவர்களை, கடித்த விடத்தில்‌ மருந்து தடவியும்‌ உள்ளுக்கும்‌ மருந்து கொடுத்தும் உயிர்ப்பிக்கிறார்கள்‌. எம்பெருமானோ எனில்‌ பிறவி யென்னும்‌ பாம்பு தீண்டி ஆசையாகிய விஷமேறி ஆத்ம நாசமடையுமவர்களை மருந்தொன்றுமின்றித்‌ தன்‌ திருக் கண்‌ நோக்கத்தினால்‌ மட்டும்‌, உயிர்களுக்கு ப்ராணனாகிய தன்னோடும்‌, தனக்கு ப்ராணன்களாகிய நித்ய ஸுரிகளோம்‌ சேர்த்து உஜ்ஜீவிப்பிக்கிறான்‌. லெளகிக விஷ வைத்தியனுக்கும்‌ எம்பெருமானுக்‌கும்‌ இதுவே வாசி. நரேந்த்ர: – விஷ வைத்தியன் –

அதி பல பவாஹி தஷ்டான் -மிக்க பலமுள்ள ஸம்ஸார சர்ப்பம் கடியில் ஆழ்ந்த நம்மை
அபிலாஷ விஷாக்னி மூர்ச்சநா நஷ்டான் -அதுக்கும் மேல் விஷயாந்தர அபிநிவேச அக்னியாலும் தவிக்கும் நம்மை காமம் அடிப்படை -க்ரோதம் லோபம் போல் மேல் மாறுமே
கடிகா சிகரி நரேந்த்ர -இங்குள்ள அக்காரக்கனி எம்பெருமான்-கடயத்ய ஸூபி கடாக்ஷ மாத்ரேண -கடாக்ஷ லேசத்தாலேயே போக்கி அருளி நித்யர்களுடன் ஒரு கோவை யாக்கியும் அருளுகிறார் அன்றோ

நஷத்ர மாலிகை ஜீயர் நாயனார் ஆழ்வாரையும் இதே போல் ஸ்துதிக்கிறார் அன்றோ

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா
பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |
ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகம் 8

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் –காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்-விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதாயும் இருக்கிற ஸ்ரீ நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை) என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.

—————-

சோரம் ஸ்வதஸ் ச்யுதம் மாம் ஸ்வாமீ கடிகாத்ரிபோ விசின்வான
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத த்ருப்தம் அபத்நாத் தயா குணேந த்ருடம் –12-

ஸ்வாமீ கடிகாத்ரிப: – தலைவரான கடிகை மலை யரசன்‌, சோரம்‌ – தனது சொத்தான என்னை, எனது சொத்‌தென்று நினைத்துத்‌ திருடியவனாய்‌, த்ருப்தம்‌ கொழுப்புடையவனாய்‌, ஸ்வத:ச்யுதம்‌ தன்னிடமிருந்து நழுவிய, மாம்‌ – என்னை, விசிந்வாந: ஸந்‌ – ஒயாமல்‌ தேடிக்கொண்டே யிருந்து, குதோ5பி உபாயாத்‌ – ஏதோவொரு தந்திரத்தினால்‌, த்ருஷ்ட்வா – கண்‌டு கொண்டு, தயா குணேந – தயை யென்னும்‌ நற்பண்பாகிய கயிற்றால்‌, த்ருடம்‌ அபத்நாத்‌ – இறுக்கிக்‌ கட்டி விட்டான்‌.
அரசன்‌ தன்‌ சொத்தைத்‌ திருடிக்‌ கொண்டு ஓடியவனை ஏதோவொரு சூழ்ச்சி செய்து கண்டு பிடித்துக்‌ கயிற்றால்‌ கம்பத்தில் கட்டுவான்‌. எம்பெருமான்‌, ஸ்வதந்த்ரனாய்த்‌ தன்னை விட்டு அகன்ற கொழுத்த திருடனான ஜீவாத்மாவை, அஜ்ஞாத ஸுஹ்ருதமாகிய ஒரு தந்திரத்தைக்‌ கற்பித்து அவனைக் கடாக்ஷித்து, தனது தயையாகிய கயிற்றால்‌ தன்னோடு சேர்த்துக்‌ கட்டிக் கொண்‌டு விடுகிறான்‌. அவனைப்‌ பின்பு ஒரு காலும்‌ விடுவதில்லை.
அஜ்ஞாத ஸுஹ்ருதமாவது – பொல்லாத ஜீவாத்மா ஒருவன்‌ தனக்கும்‌ தெரியாமல்‌ செய்த நல்ல காரியம்‌. அதாவது பசுவைக் கொல்லுவதற்காக அதனைத்‌ துரத்திக் கொண்டு போய்‌, அப்பசு ஒரு கோயிலை வலம்‌ செய்‌து கொண்டு ஓடிப் போக, அதனைப்‌ பிடிக்கத் தானும்‌ அக் கோயிலை வலம்‌ செய்து கொண்டு செல்லுதல்‌ முதலியவை. எம்பெருமான்‌ இவனை இப்படியே விட்டு விட்டால்‌ மேலும்‌ இப்படியே கொடுந்தொழில்‌ புரிந்து கொண்டு தானும்‌ கெட்டு உலகையும்‌ அழித்து விடுவானென்று நினைத்துத்‌ தனது அபார கருணையினால்‌, இவன்‌ அக் கோயிலை வலம்‌ செய்ததை நல்ல காரியமாக – புண்ணியமாகக்‌ கணக்கிட்டு இவனைக்‌ கடாக்ஷித்து இவனுக்கு மோக்ஷம் அளித்துத்‌ தன்னோடு சேர்த்துக்‌ கொண்டு மறுபடியும்‌ அவனை இப்பூமண்டலத்தில் ஒரு நாளும்‌ திருப்பி யனுப்புவதில்லை என்னும்‌ விஷயம்‌ இந்த ஸ்லோகத்தில்‌ நூலாசிரியரால்‌ அருளிச் செய்யப்பட்டிருத்தல்‌ நோக்கத் தக்கது

சோரம் ஸ்வதஸ்ச்யுதம் மாம் த்ருபதம் -கள்வன் நானே அன்றோ -பிறர் நன் பொருளை அபகரித்தவன்-ஸ்வாமீ கடிகாத்ரி போ விசின்வான –உடையவன் அக்காரக்கனி -ஸர்வஞ்ஞன் அன்றோ
த்ருஷ்ட்வா குதோ அப்யுபாயாத –அப்போது ஒரு சிந்தை செய்து -என்னுள் புகுந்தான் –
ஆச்சார்யர்களைக் காட்டிக்கொடுத்து திருத்திப் பணி கொண்டு அருளினானே
அபத்நாத் தயா குணேந த்ருடம் —தயை என்னும் குணத்தாலே நன்றாக அவன் இடம் விலகாமல் கட்டி வைத்து-கைங்கர்யமும் கொண்டு அருளினானே-

——————

விமல கபி ஸேவ்ய மாநா விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா
கா அபி கடிகாத்ரி சிகரே கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –13-

விமல கபி ஸேவ்யமாநா – (கிழக்கில்‌) அழுக்கற்ற மனமுடைய ஆஞ்ஜநேயனென்னும்‌ குரங்காகிய – பளிச் சென்ற ஸூரியனாலே ஸேவிக்கப்‌ பெற்றதாய்‌ – (ஒளி வீசப் பெற்றதாய்‌) அதனாலே, விலஸித ஸந்நிஹித சங்க சக்ர அப்ஜா – மலர்ச்சி யடைந்த, தன்னிடமுள்ள சங்கு சக்கரங்களென்னும்‌ தாமரை மலர்களை யுடையதாய்‌, கருணா ரஸ பூர நிர்ப்பரா கருணை யென்னும்‌ நீர் வெள்ளம்‌ நிறையப்பெற்றதுமான, கா$பி ஸரஸீ – ஒரு குளம்‌, கடிகாத்ரி சிகரே – கடிகை மலைச்‌ சிகரத்தில்‌, அஸ்தி – இருக்கிறது.
குளத்தில்‌ நீர்‌ நிறைந்திருக்கும்‌ ஸூரிய க்‌ரணம்‌ பட்டு அதன்‌ கண்‌ உள்ள தாமரை மலரும்‌. எம்பெருமானிடம்‌ தயை நிறைந்திருக்கும் கிழக்கே சிறிய மலையில்‌ விளங்குகிற அனுமானாலே ஸேவிக்கப் பட்டு, எம்பெருமான்‌ கையில்‌ விளங்குகின்ற சங்கு சக்கரங்கள்‌ புத்துயிர்‌ பெற்று ஜ்வலிக்கும்‌ என்றபடி. இதில்‌ சிங்கப் பெருமான்‌ தாமரைத் தடாகமாக உருவகிக்கப்பட்டான்‌. கபி: – குரங்கும்‌, ஸூரியனும்

விமல கபி ஸேவ்ய மாநா —ஆச்சார்யர் போன்ற திருவடி யோக ரூப ஆஞ்சநேயர் -ஸேவை –
கிழக்கு புறம் இருந்து நரஸிம்ஹனை மங்களா ஸாஸனம் செய்து கொண்டே ஸேவை ஸாதித்து அருளுகிறார்
விலஸித சந்நிஹித சங்கு ஸக்ராப்ஜா –அதனாலேயே மலர்ந்த ஆழ்வாராதிகள் இவர் திருக்கரங்களில்
கா அபி கடிகாத்ரி சிகரே –அக்காரக்கனி எம்பெருமானே
கருணா ரஸ பூர நிர்பரா ஸரஸீ –கருணை வெள்ளம் தடாகம்-நீர்ப்பண்டமாக வருகிறதே
கபி -ஸூர்யன் என்று கொண்டு-கதிரவன் கிழக்கு திசையில் ஸேவிக்க வர தாமரைகள் மலரும் -சங்கு சக்கர ஆழ்வார்கள் விகசிதம் அடைந்தன என்றுமாம் –

————-

நிர் முக்த போக ஸூத்தான் நித்ய மஹீநாந் வஹந் நிஜா சக்தான்
பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ கோ அபி பரிமளீ ஸாகீ –14-

கடிகாத்ரி சிகரே – கடிகை மலையின்‌ சிகரத்தில்‌, (1) பரிமளீ – நறுமணம்‌ நிறைந்து, பத்ர ஸ்ரீ: – மங்கள கரையான ஸ்ரீமஹாலக்ஷமியை உடைய, ஸாகீ – வேத சாகைகளை ப்ரமாணமாகக்‌ கொண்ட, கோரூபி – ஒப்பற்ற எம்பெருமானாகிற, (2) பரிமளீ பரிமளம் மிக்கு, பத்ரஸ்ரீ: – சந்தன மரமாகிய கோபி ஸாகீ – ஒரு மரமானது (1) நிர்முக்த போக சுத்தாந்‌ – இஹுலோக பரலோக ஸூகங்களை விட்டதனால்‌ பரிசுத்தர்களாம்‌, நிஜஆஸக்தாந்‌ – தன்னிடம்‌ மிக்கபற்றுள்ளவர்களாய்‌, அஹீநாந்‌ – அவ்விரண்டும்‌ காரணமாகத்‌ தன்னால்‌ விடப்படாத பக்தர்களாகிய – (2) நிர்முக்த போக சுத்தாந்‌ தோலை யுரித்ததனால்‌ அழுக்கற்ற உடலைக்‌ . கொண்டவைகளாய்‌, நிஜ ஆஸக்தாந்‌ -தன்னோடு சேர்ந்தே யிருக்கிற (தன்னைச்‌ சுற்றிக்‌ கொண்டிருக்கிற) அஹி இநாந்‌ ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை, நித்யம்‌ வஹந பாதி – (1) எப்போதும்‌ பரம பதத்துக்கு அனுப்பிக்‌ கொண்டே விளங்குகிறது. (2) எப்பே தும்‌ சுமந்து கொண்டே விளங்குகிறது.
எம்பெருமானாகிய ஒரு மரம்‌ பக்தர்களாகிய ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்களை வஹித்துக் கொண்டே விளங்குகிறதென்று அந்வயித்துக்‌ கொள்க. எம்பெருமானுக்கும்‌ மரத்துக்கும்‌ பொதுவாக இடப்பட்ட விஸேஷணங்கள்‌ சிலேடை வகையில்‌ அமைந்துள்ளமை காண்க. போகம்‌ – அனுபவமும்‌ பாம்பின் உடலும்‌, அஹீநா: – தன்னால்‌ விடப் படாதவர்களும்‌ உயர்ந்த பாம்புகளும்‌, வஹந்‌ – அனுப்புபவனும்‌ சுமப்பதும்‌, பத்ரஸ்ரீ: – மங்களமான லக்ஷ்மியை உடையவனும்‌, சந்தன மரமும்‌, ஸாகீ – வேதத்தின்‌ பிரிவுகளாகிய ருக்‌ முதலியவைகளை ப்ரமாணமாகக்‌ கொண்டவனும்‌, கிளைகளையுடைய மரமும்‌. மற்றவை விளங்குமவையே –

நிர் முக்த போக ஸூத்தான் -போகி -அநந்தன் -போகீந்த்ர ஸாயி -அவன் -தோலை உரித்த பாம்புகள் -ஆச்சாரம் மிக்கு உள்ளன ப்ரபன்னர்கள் -ஸம்ஸார போகம் நீங்கினவர்கள் உள்ளார்கள்
நித்ய மஹீநாந் வஹந் -நிறைய பாம்பு இனங்கள் உள்ளன
நிஜா சக்தான் பாதி கடிகாத்ரி சிகரே பத்ர ஸ்ரீ –அக்காரக்கனி மேல் பற்றுதலை வைத்துள்ளார்கள் -இங்கு உள்ளார் அனைவருமே ப்ரபன்னர்கள்
அனைவரையும் வாழ வல்ல தாயார் -பத்ர ஸ்ரீ எழுந்து அருளி ஸேவை சாதிக்கிறாள்
கோ அபி பரிமலீ ஸாகீ –நறுமணம் மிக்க சந்தன மரங்களும் உள்ளன –அனைத்து கலைகளுமே மங்களா ஸாஸனம் பண்ணுமே -என்றவாறு –

—————-

கருண அம்ருத ரஸ வர்ஷைர் கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்
ஸம் சரணி தரணி தப்தம் ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் –15-

ஹே! கடிகாசல கடித க்ருஷ்ண மேக – வாராய்‌ கடிகை மலையில்‌ (வந்த) சேர்ந்த அல்லது ஸப்த ரிஷிகளால்‌ (கொண்டு) ஈர்க்கப்பட்ட கார் மேகமாகிய பெருமானே ! நிஜை: உனக்கு இயற்கையாக அமைந்த கருணா அம்ருத வர்ஷை: – கருணையாகிய அமுத மழையினால்‌ – ஸம்ஸரண தரணி தப்தம்‌ – ஸம்ஸாரமாகிய ஸூரியனால்‌ கொளுந்திச்‌ சாவியாகப் போன, இதம்‌ – இந்த, விநதஸஸ்யஜாலம்‌- (உனது) பக்தர்களாகிய பயிர்களின்‌ தொகுதியை, ஸஞ்ஜீவய – உயிர்ப்பிக்‌க வேண்டும்‌.
இதில்‌ எம்பெருமானை மேகமாவும்‌ அவனது கருணையை அமுத மழையாகவும்‌ பிறவித்‌ தொடர்ச்சியாகிய ஸம்ஸாரத்தை ஸூரியனாகவும்‌ பக்தர்களைப்‌ பயிராகவும்‌ உருவகித்துள்ளார்‌. ஸூரியன்‌ பயிர்களை வாட்ட, அப்போது அவை சாவியாகப்‌ போகாமல்‌ மேகம்‌ வந்து தோன்றி ஒரு பாட்டம் மழையைச்‌ சொரிந்து அப் பயிர்களை நனைத்து உயிர்ப்பிக்குமாப் போலே, எம்பெருமானே உன்னை வணங்கிய பக்தர்களாகிய அடியேன்‌ போன்றவர்கள்‌ ஸம்ஸாரத்தினால்‌ தபிக்கப் பெற்று ஸ்வரூப நாசமடையா நிற்க, நீ வந்து தோன்றி உனது இயற்கையான கருணை மழையைப்‌ பெய்வித்து உன்‌ பக்தர்களை உஜ்ஜீவிப்பித்தருள வேண்டும்‌ என்ற இதனால்‌ ப்ரார்த்தித்த படி

கருண அம்ருத ரஸ வர்ஷைர் –கருணா ரஸ பொய்கை கீழ் இங்கு மழை -கருணை பொங்கிய கண்ணினை வாழியே -இவர் மூலமே மா முனிகளுக்கு-கடிகாசல கடித க்ருஷ்ண மேகை நிஜைர்-அக்காரக்கனி கறுத்த மேகம்-ஸம் சரணி தரணி தப்தம் –தாபத்ரயங்களால் தபிக்கும் -ஸம்ஸார ஸூர்யன்-ஸஞ்ஜீவய விநதஸஸ்ய ஜால மிதம் —வாடி வதங்கி இருக்கும் பயிர் போல்வாரை இவற்றில் இருந்து காத்து அருளும் –

————

விமல தர பக்தி பூரே வ்யபகத பங்கே விகஸ்வராம்புருஹே
மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் –16-

ஹே! கடிகாத்ரி ராஜஹம்ஸ – கடிகை மலையிலுள்ள ராஜ ஹம்ஸமாகிய எம்பெருமானே ! பவாந்‌ – தேவரீர்‌, வ்யபகத பங்கே காமம்‌ குரோதம்‌ (ஆசை, கோபம்‌) முதலிய அழுக்காகிய சேறு நீங்கப் பெற்றதும்‌, விமலதர பக்திபூரே – மிகவும்‌ நிர்மலமான பக்தியாகிய நீர்‌ வெள்ளத்துக்கு இடமானதும்‌, விகஸ்வர அம்புருஹே – மலர்ந்த ஹ்ருதய கமலமாகிய தாமரை மலரை யுடையதுமாகிய, முநீநாம்‌ மானஸ ஸரஸி – முனிவர்களுடைய மனஸ்ஸாகிய மாநஸ ஸரஸ்ஸில்‌, ரமதே – விளையாடுகிறீர்‌.
ஹம்ஸம்‌, சேற்றுத்‌ தூய நீரை யுடையதாய் தாமரைகள்‌ மலரப் பெற்றதான மாநஸ ஸரஸ்ஸில்‌ விளையாடும்‌. எம்பெருமான்‌ காம க்ரோதாதிகள்‌ நீங்கப் பெற்றுத்‌ தூய்மையான பக்தியை யுடையதாம்‌ – ஹ்ருதய கமலம் மலரப் பெற்ற – முனிவர்களுடைய மனஸ்ஸில்‌ ஆசையோடு இருப்பான்‌ என்றதாயிற்று-மாநஸ ஸரஸ்: – (1) மனமாகிய ஸரஸ்ஸு (தடாகம்‌) (2) ஹிமய மலையிலுள்ள மாநஸ மென்கிற ஸரஸ்ஸூ , ராஜ ஹம்ஸம்‌- ஹம்ஸ ராஜம்‌ உயர்ந்த ஜாதி ஹம்ஸம்‌. அதன்‌ மூக்கும்‌ கால்களும்‌ சிவந்து உடல்‌ வெளுத்திருக்குமாம்

விமல தர பக்தி பூரே –நீராய் அலைந்து கரைய உருக்கும் பக்தி -உடல் எனக்கு உருகுமாலோ
வ்யபகத பங்கே -காமக்ரோதாதிகள் சேறு நீங்கப்பெற்ற-விகஸ்வராம்புருஹே -மலர்ந்த தாமரை-மாநஸ ஸரஸி முநீநாம் ரமதே –ஹ்ருதய ஸரோவரத்திலே கடிகாத்ரி ராஜ ஹம்ஸ பவாந் —அக்காரக் கனியே ஹம்ஸ ராஜா -தேவரீர் விளையாடுகிறீர்

—————–

ஸ்தம்போஹி விக்ந காரீ சந்த்ருஷ்டோ ஜகதி ஸர்வ கார்யேஷு
தாநவ விதாரணே தே தஸ்யைவ ஹரே கதம் நு ஸாசிவ்யம் –17

ஹரே ! – சிங்கப்பிரானே ! ஜகதி – உலகில்‌, ஸ்தம்ப: – கம்பமானது, ஸர்வ கார்யேஷு – எல்லாக்‌ காரியங்களிலும்‌, விக்நகாரீ ஹி – தடை செய்யுமதாக அல்லவா, ஸந்த்ருஷ்ட: காணப் பட்டுள்ளது. தே – உனக்கு, தாநவ விதாரணே – தானவனான ஹிரணியனைப்‌ பிளக்கும்‌ காரியத்தில்‌, தஸ்ய ஏவ – எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பத்திற்கே, ஸாசிவ்யம்‌ – ஸஹாயமாக இருக்கும்‌ தன்மை, கதம்‌ நு ஜாதம்‌ – ௭ப்படித்தான்‌ உண்டாயிற்று.
எல்லோருக்கும்‌ தடை செய்யும்‌ கம்பம்‌ நரசிங்கப்பெருமாளுக்கு ஹிரண்யனைக்‌ கொல்வதற்காக முன்பே ஒளிந்துகொள்ளும்படி இடங்கொடுத்து உதவி செய்ததே அது எப்படி என்று கேட்டாராயிற்று. “ஸ்தம்ப்‌ – ப்ரதிகாசே ‘ என்ற தாதுவிலிருந்து உண்டான “ஸ்தம்பம்‌ என்ற சொல்‌, தடை செய்வது என்ற பொருளைத்‌ தெரிவிக்கும்

ஜகதி ஸர்வ கார்யேஷு ஸ்தம்போஹி விக்ந காரீ -உலகில் அனைத்து கார்யங்களையுமே தடைப்படுத்தும் -ஸ்தம்பம் -கம்பம் -என்று ப்ரஸித்தம்-சந்த்ருஷ்டோ–எங்கும் உளன் கண்ணன் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -கரந்து எங்கும் பரந்துளன்
-நன்றாகக் கண்டான் ப்ரஹ்லாதாழ்வான்
தாநவ விதாரணே தே -ஹிரண்யனை நிரசிக்கவே நீர் திரு அவதரித்தீர் –ஜய தபாவர பாலகன் அன்றோ –பக்தனுடைய அனைத்துமே என்னைச் சேர்ந்ததே என்று காட்டி அருளவே உனது மடியில் அவனைப் போட்டுக் கொண்டாய்-அந்தியம் போதில் அழிக்கவே அரி யுருவாய் காத்துக் கொண்டு இருந்தாய் போலும் அந்தத் தூணில்
தஸ்யைவ ஹரே கதம் நு ஸா சிவ்யம் —தடையாகி உள்ள தூணே உனக்கு சஹாயம் பண்ணிற்றே -எவ்வாறு –

—————-

தேவத்வமாக மாத்தே ஸித்தம் திர்யக்த்வம் அபி நரத்வேந
ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் –18-

கடிகா ஸ்தாவர – கடிகைமலையில் ஸ்தாவரமாய்‌ அசையாது உறையும்‌ பெருமானே ! தே – உனக்கு, தேவத்வம்‌ – தேவராக இருக்கும்‌ தன்மை, ஆகமாத்‌ ஸித்தம்‌ வேதத்திலிருந்து அறியப்பட்டுள்ள; நரத்வேந ஸஹ திர்யக்த்வம்‌ அபி மனிதத் தன்மையோடு விலங்கின்‌ (சிங்கத்தின்‌) தன்மையும்‌, அத்ய – இப்போது, (உனது உருவத்தில்‌) த்ருஷ்டம்‌ – காணப் பட்டிருககிறது. ஸர்வாத்மகஸ்ய – தேவர்‌ விலங்கு மனிதர்‌ தாவரம்‌ ஆகிய எல்லாமுமாக (எல்லாவற்றையும்‌ சரீரமாகக்‌ கொண்டு) இருக்கிற, தே உனக்கு, கிம்‌அயுக்தம்‌– எது தான்‌ பொருந்தாதது.
இவ் வண்டத்திலுள்ள தேவ திர்யகே மநுஷ்ய ஸ்தாவரங்களெல்லாவற்றிலும்‌ உட்புகுந்து நின்று அவை யெல்லாம்‌ தானே என்னும் படியுள்ள திவ்யாத்ம ஸ்வரூபத்தை யுடைமையாகிய ஆச்சரியமான தன்மையை யுடைய நர சிங்கப் பெருமானுக்குத்‌ தன்‌ திருமேனி யொன்றில்‌ மட்டும்‌ முற்கூறிய நான்கு விதமான தன்மைகளைக்‌ காட்டிக்‌ கொண்டிருப்பது ஆச்சரியமானதன்று, பொருத்தமுடையதே என்றாராயிற்று

தேவத்வமாக மாத்தே ஸித்தம் -தேவாதி தேவனாக இருப்பது ஸித்தம் -ஆகமம் வேதங்கள் காட்டி அருளும்-திர்யக்த்வம் அபி நரத்வேந -அப்படிப்பட்டவர் திர்யக்க்காகவும் நர ஸிம்ஹமாகவும் உள்ளீர்-ஸஹ த்ருஷ்டமத்ய கடிகா ஸ்தாவர -ஸ்திரமாக இங்கேயே ஸேவை சாதித்து அருளுகிறீர்-ஸர்வாத்ம கஸ்ய கிமயுக்தம் —-அனைத்துக்குள்ளும் இருந்து அனைத்துமாகவும் உள்ளீரே -மிகவும் பொருந்துமே

————

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ அஸி கதஞ்ச விஸ்வ சாஷீதி –19-

பகவந்‌ – பரமபூஜ்யனான எம்பெருமானே, த்வம்‌ – தேவரீர்‌, பஞ்சாஸ்ய: ஏவ ஹி– ஐந்து முகமுடையவராகவே யன்றோ, ப்ரதித: – பிரசித்தராயிருப்பது, (அப்படி யிருக்க) ஸஹஸ்ர ஆஸ்ய: (இதி ஏதத்‌) ஆயிரமுகமுடையவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி ? – மேலும்‌, கடிகாத்ரி பக்ஷபாதீ த்வம்‌ – கடிகைமலையின் கண்‌ பக்ஷபாதம்‌ (ஒரு தலையில்‌ மட்டும்‌ வைக்கும்‌ அன்பு) உடைய தேவரீர்‌, விஸ்வஸாக்ஷீ இதி ஏதத்‌ – எல்லோரிடமும்‌ ஸமமான அன்பு வைத்து ஸாக்ஷி சொல்லுமவர்‌ என்னுமிது, கதம்‌ – எப்படி பொருந்தும்
ஐம்முக முடையவன்‌ ஆயிரமுக முடையனாவதில்‌ முரண்பாடு தோன்றும்‌. பஞ்சாஸ்ய: என்பதற்கு விசாலமான முகமுடைய ஸிம்ஹம்‌ என்று பொருள்‌. ஸிம்ஹமாக அவதரித்த விஷ்ணு ஆயிரமுக முடையவராக இருப்பதில்‌ முரண்பாடு ஏதுமில்லையென்று பரிஹாரம் -கடிகாசலத்தில்‌ பக்ஷபாதமுடையவன்‌, அதற்கு மட்டுமன்றோ ஸாக்ஷியாக இருக்க வேண்டும்‌ ? எல்லோருக்கும்‌ ஸாக்ஷியாக இருப்பது எங்கனமென்று விரோதம்‌ தோன்றும்‌, விஸ்வஸாக்ஷி என்பதற்கு எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்ப்பவர்‌ என்று பொருள்‌. கடிகை மலையில்‌ மட்டும்‌ பற்றுடைய பெருமான்‌ எல்லாவற்றையும்‌ நேராகப்‌ பார்க்க முடியுமாகையால்‌ விரோத பரிஹாரம்‌. சிலேடையுள்‌ள சொற்களை யமைத்து வேடிக்கையாகக்‌ கேள்வி கேட்டபடி இது

பஞ்சாஸ்ய ஏவஹி த்வம் ப்ரதிதோ -ஐந்து தலைகளைக் கொண்ட தேவரீர் -விசாலமான திருமுகம் கொண்ட நீர் –பகவன் கதம் ஸஹஸ்ராஸ்ய -ஆயிரம் தலைகளாகக் கொண்டவராக வேதம் எவ்வாறு சொல்ல முடியும்-ஆயிரம் தலைகள் வேண்டுமோ உமக்கு
கடிகாத்ரி பக்ஷ பாதீ க்யாதோ -இங்கு அக்காரக் கனியாக ஒரு தலைப் பக்ஷ பாதம் செய்து
அஸி கதம் ச விஸ்வ சாஷீதி –லோகங்களுக்கு பதியாக இருப்பது எவ்வாறு -ஜகன் நிர்வாஹம் பண்ணுகிறீர்-ஸங்கல்ப மாத்திரத்திலே அனைத்தும் செய்து அருளி இங்கு பிரியமாக உகந்து அருளி இருக்கிறீர் என்றவாறு –

————-

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாத் அத ஸ்திதம் பும்ஸ்த்வம்
மூர்த்தெள தாவத்ர ந்ரூ ஹரே முக்ய கோ வா அவகம்யதே அந்யேந–20-

ந்ருஹரே – நரசிங்கப் பெருமானே ! தவ அத்ர மூர்த்தெள – தேவரீருடைய இந்தத்‌ திருமேனியில்‌, அல்ப தேசாத்‌ – குறைந்த இடத்தில்‌ (தலையில்‌ மட்டும்‌) உள்ள, ஸிம்ஹத்வாத்‌ அபி – சிங்கத்தின்‌ தன்மையை விடவும்‌, அத:ஸ்திதம்‌ – தலையின்‌ கீழ்‌ (உடல்‌ முழுதும்‌) உள்ள, பும்ஸ்த்வம்‌ – புருஷனது தன்மை, பஹு தேசம்‌ – அதிகமான இடத்தில்‌ உள்ளது. (இப்படியிருக்க) அந்யேந – வேறொருவனால்‌, அத்‌ – இவ் விரண்டு தன்மைகளில்‌, கோ வா – எது தான்‌, முக்ய: – முக்கியமென்று அவகம்யதே -. – அறியப் படுகின்றது.
இக்கேள்விக்கு விடை:- தலையில்‌ மட்டும்‌ உள்ள ஸிம்ஹத்வத்தை விட உடல்‌ முழுதுமுள்ள புருஷத்வமே முக்கியமென்று தோன்றும்‌. ஆனால்‌ முக்யம்‌ என்பது முகத்திலுள்ளது என்று பொருள் பட்டு, முகத்திலுள்ளது ஸிம்ஹத்வமே யன்றிப்‌ புருஷத்வமன்று. அதனால்‌ ஸிம்ஹத்வமே முக்யம் என்று ஆராய்ந்தால்‌ தோன்றும்‌. மேலுள்ள ஸ்லோகத்தில்‌ இது தலைகீழாவது காணலாம் –

பஹு தேசம் அல்ப தேசாம் அபி ஸிம்ஹத் வாதத ஸ்திதம் பும்ஸ்த்வம் -ஸிம்ஹ தன்மை அல்பம் -மிக பெரிய பகுதி பும்ஸத்வம்-மூர்த்தவ் தாவத்ர -நேராகப் பார்க்கும் திவ்ய மங்கள விக்ரஹம் ந்ரூ ஹரே முக்ய கோவா அவகம்யதே அந்யேந -முக்கியம் எது என்று யாரால் அறிய முடியும்-பதிலும் இதிலேயே உள்ளதே-ஹிரண்யன் -பயந்தது ஸிம்ஹம் என்பதால் அன்றோ –

———–

பும் ஸூக்த பூர்வகைஸ்தை புருஷத்வம் முக்யமேவ தே விதிதம்
கதமியம் அமுக்யதா அஸ்மின் கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ -21-

கடிகாத்ரி மநுஜ ம்ருகராஜ – கடிகை மலை யிலுள்ள நரசிங்கப்‌ பெருமானே ! தை: -பிரசித்தமான, பும் ஸூக்த பூர்வகை: – புருஷ ஸூக்தி முதலிய வேத பாகங்களாலே, தே புருஷத்வம்‌ – தேவரீருடைய புருஷத்வமானது. முக்யமேவ – முக்கியமானதாகவே அறியப்பட்டுள்ளது. (இப்படியிருக்க) அஸ்மிந்‌ – இந்தப்‌ புருஷத்வத்தில்‌, இயம்‌ அமுக்யதா – இந்த அமுக்யத்வமானது, கதம்‌ – எப்‌படி, கடதே – பொருந்தும்‌ ?
முக்யத்வமானது – பிரதானமாயிருக்குந்‌ தன்மையென்றும்‌, முகத்திலுள்ளமை என்றும்‌ இரு வகைப்படும்‌. கீழ் ஸ்லோகத்தில்‌ முகத்திலுள்ளமை என்ற பொருளைக்‌ கொண்டு ஸிம்ஹத்வமே முகத்திலுள்ள படியால்‌ அதுவே முக்யமாயிருக்கத்‌ தகுமென்று குறிப்பாகக்‌ காட்டினார்‌. இந்த ஸ்லோகத்தில்‌ ப்ரதானத்வம்‌ என்ற பொருளை கைக் கொண்டு, புருஷ ஸூத்தாதிகளில்‌ கூறியபடியினால்‌ புருஷத்வமே முக்கியமென்று ஸ்பஷ்டமாகக்‌ காட்டினார்‌. ப்ரதானமான புருஷத்வமாவது – பக்த – முக்த – நித்யர்களிடமுள்ள புருஷத்வத்தைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த புருஷத்வம்‌ என்றபடி, புருஷோத்தமனிறே எம்பெருமான்‌. புருஷத்வத்திற்குப்‌ புருஷ ஸூக்தாதிகளில்‌ ப்ரதானத்வ ரூபமான முக்யத்வம்‌ கூறப்பட்ட போதிலும்‌ முகத்திலுள்ளமையாகிய முக்யத்வம்‌ ஸிம்ஹத்வத்திற்கே என்பதை இங்குக்‌ குறிப்பாகக்‌ காட்டியபடி. இவ்விரண்‌டு ஸ்லோகங்களிலும்‌ கவியின்‌ சமத்காராதிசயம்‌ தோன்றுவது காணலாம் –

பும் ஸூக்த பூர்வகைஸ்தை -புருஷ ஸூக்தாதிகள் புகழும்
புருஷத்வம் முக்யமேவ தே விதிதம் –பரத்வம் தானே முக்யம்-கதமியம் அமுக்யதா அஸ்மின் -புருஷத்வம் முக்கியம் அல்ல என்று எப்படி சொல்ல முடியும்
கடிகாத்ரி மனுஜ ம்ருக ராஜ – நீரே அருளிச் செய்ய வேண்டும்
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -நம்முடைய எம்பெருமான் -ஸர்வமும் முக்கியம் அன்றோ –

—————

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலா ஸாத்த விக்ரியா மநுஜா
ஸ்ரவண அம்ருதேஷு கடிகாஸைல வந ப்ரிய வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –22-

கடிகாசைல வன ப்ரிய – கடிகை மலைக்‌ காட்டை விரும்பி யுறையும்‌ பெருமானே ! பாக்ய லக்ஷ்மீ விரஹ – அத்ருவடமென்னும்‌ செல்வமில்லாமையின்‌, விலாஸ ஆத்த விக்ரியா: மநுஜா: – திருவிளை யாடலால்‌ மன வேறுபாடு கொண்ட மனிதர்கள்‌, ஸ்ரவண அம்ருதேஷு – செவிக்கு அமுதம்‌ போல்‌ இனிய, தே வசஸ்ஸு – தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகளில்‌, ஸ்ரத்தாம்‌ – நம்பிக்‌கயை, ந விதததி – வைப்பதில்லை.
பாக்யமற்றவர்கள்‌ மேன்மேலும் ஸம்ஸாரத்திலேயே வருந்துவதற்கு உறுப்பாகக்‌ காமம்‌ குரோதம்‌ முதலிய மாறுபட்ட எண்ணங்களையே எண்ணி நசித்துப் போகிறார்கள்‌. நரசிம்மப்‌ பெருமாளுடைய சரம ஸ்லோககத்தில்‌ நம்பிக்கை வைத்து அதன்படி நடந்து மோக்ஷம்‌ பெறுகிறார்களில்லை என்று கவி தம்முடைய வருத்தத்தைத்‌ தெரிவிக்கிறார்‌. இதனால்‌ “ஸத்யம்‌ ப்ரவீமி மநுஜா: ஸ்வய மூர்த்வ பாஹு: | யோ மாம்‌ முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தநேதி, ஜீவந்‌ ஜபத்யநுதிநம மரணே ருணீவ | பாஷாணகாஷ்ட ஸத்ருயாய ததாமி முக்திம்‌” என்பது நரஸிம்ஹப் பெருமானருளிய சரம ஸ்லோகம்‌.
மனிதர்களே ! நான்‌ கையை உயர்த்தித் தூக்கி ஸத்யமாகச்‌ சொல்லுகிறேன்‌. (ஊக்கமாகக்‌ கேளுங்கள்‌) யாவனொருவன்‌ ஜீவித்திருக்கும்‌ போது, என்னை – முகுந்த நரஸிம்ஹ ஜநார்த்தந (மோக்ஷ பூமியைத்‌ தருமவனே, நரஸிம்ஹனை, துஷ்ட ஜநங்களை யழிப்பவனே) என்று, தினந்தோறும்‌ ஜபம்‌ செய்கிறானோ அவன்‌ திறத்தில்‌ நான்‌ கடன்‌ பட்டவன்‌ போல்‌ இருந்து, அவன்‌ மரணமடையும் போது, கல்லைப்‌ போன்றும்‌ கட்டையைப்‌ போன்றும்‌ நினைவற்றுக்‌ கிடக்கிற அவனுக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்‌, என்பது இதன்‌ பொருள்‌. வசஸ்ஸு என்ற பஹு வசனத்தினால்‌ வராஹ சரம ஸ்லோகம்‌, ஸ்ரீராமசரம ஸ்லோகம்‌, ஸ்ரீக்ருஷ்ண சரம ஸ்லோகம்‌ ஆகியவற்றையும்‌ கொள்ளக்‌ குறையில்லை –

விதததி ந பாஹ்ய லஷ்மீ விரஹ விலாஸ -விசுவாசம் இல்லாமல் ஸந்தான லஷ்மி ஸுபாக்யம் கிட்டாமல் இழந்தே போகிறார்களே
ஆத்த விக்ரியா மநுஜா -அவனைப் பற்றிய த்யானம் இல்லாமல் ப்ரயோஜனாந்தர பரர்களாக
ஸ்ரவண அம்ருதேஷு -செவிக்கு இனிய செஞ்சொல்லாக
கடிகாஸைல வந ப்ரிய -தேவரீரே
வசஸ்ஸூ தே ஸ்ரத்தாம் –தேவரீரே அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் நம்பிக்கை கொள்ளாமல்
சத்யம் ப்ரவீத் மனுஷா ஸ்வயம் மூர்த்த பாஹு -திருக்கைகளை மேலே தூக்கி சத்யம் பண்ணினீரே
தே யோ மாம் முகுந்த ஜனார்த்தன அபி -இவ்வாறு திரு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு
புத்தி சுவாதீனம் இருக்கும் பொழுதே -அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -அனுதினம் யாவதாத்மா பாவி சொல்லிக் கொண்டு இருந்தால்
பாஷாண காஷ்டாம் ஸத்ருசாயா தாதாமி முக்திம் -பிராண பிரயாண சமயம் -கட்டை போல் கிடைக்கும் பொழுது முக்தி அளிக்கிறேன் என்று அருளிச் செய்தீரே-

———–

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த கம்ஸ ஹரணம் வா
அஹரஸ் த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம கிலாந்ய நர்த்த ஜாலாநி–23-

கடிகாசல லுப்த – கடிகை மலையில்‌ பற்றுள்ள பெருமானே ! கார்யம்‌ – உன்‌ காரியம்‌, ஹிரண்ய ஹரணம்‌ – ஹிரண்யனை அழிப்பது. அதவா – அல்லது, கம்ஸ ஹரணம்‌ கம்ஸனை மாய்ப்பது, இங்ஙனமிருக்க, த்வம்‌ – நீ, ஆஸ்ரிதாநாம்‌ – உன்‌னைத்‌ தஞ்ச மடைந்தவர்களுடைய, அநர்த்த ஜாலாநி அகிலாநி – துக்க ஸமூஹங்கள்‌ அனைத்தையும்‌, கிம்‌அஹர: – ஏன்‌ போக்கினாய்‌. ஹந்த – கஷ்டம்‌. ஹரணம்‌ – அழித்தல்‌.
உருவமுடைய அசுரரை மாய்ப்பது தகுதியுடையது. உருவற்ற துக்கத்தை மாய்ப்பது தகுதி யுடையதன்றே என்பது கேள்வி. உருவமுடையது உருவமற்றது என்பதில்‌ வாசியில்லை எம்பெருமானுக்கு, தன்னை யடைந்தவர்களுக்கு விரோதியான கம்ஸ ஹிரண்யாதிகளை அழித்தாப்‌ போல்‌, அவர்களுக்கு விரோதியான ஸம்ஸார துக்கத்தையும்‌ அழித்தானென்பது விடை. தஞ்சம்‌ பற்றிய பக்தர்களை மோஷமடைய வோட்டாமல்‌ தடை செய்கின்றதன்றோ அவர்கள்‌ அனுபவிக்கிற ஸம்ஸார துக்கம்‌.
இங்கு, லுப்தன்‌ – பேராசை கொண்டவன்‌, ஹிரண்யன்‌ – பொன்‌, கம்ஸம்‌ – வெண்கலம்‌, ஹரணம்‌ – திருடுதல்‌ என்று பொருள்‌ கொண்டால்‌. அடே பேராசை கொண்டவனே ! உன்‌ வேலை பொன்னைத்‌ திருடுதல்‌ அல்லது வெண்கலத்தைத்‌ திருடுதலாயிருக்க, ஐயோ துக்கத்தை ஏனப்பா திருடுனாய்‌ அதனால்‌ உனக்கு ஒரு லாபமுமில்லையே என்று வேடிக்கையாக மற்றொரு பொருளும்‌ தோன்றுதல்‌ காணலாம்

கார்யம் ஹிரண்ய ஹரணம் கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு
தங்கம் வெங்கலம் -உயர்ந்த ரிஷிகளுக்கு மட்டும் அனுக்ரஹம் செய்வதற்கா மட்டும் அல்ல
காலே நரஸிம்ஹ -ருக்மிணித் தாயார் ஸந்தேஸம் – இவனே கண்ணன்-ஹரி -அரித்தல் –
கடிகாசல லுப்த -இங்கே இருக்கவே பேராசை கொண்டு கம்ஸ ஹரணம் வா
அஹரஸ்த்வம் ஆஸ்ரிதாநாம் ஹந்த கிம் அகிலாந் யநர்த்த ஜாலாநி -ஆஸ்ரிதர்களுடைய அனைத்து துக்க ஸமூஹங்களையும் போக்கி அருளி-கண்ணுக்கு தெரிந்தே அசுரர்களை போக்கிய மாத்திரம் அல்ல -ஆஸ்ரிதர் ஹிம்ஸை பண்ணும் பிராக்ருதியையும் போக்கி அருளினீர்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் போன்ற அடியேன் போல்‌வாரையும் ரக்ஷித்து உனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவே அன்றோ இங்கு நித்ய வாஸம் உகந்து செய்து அருளுகிறீர் -என்றவாறு

——–

தோஷா மமாந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா
ததபி குணைஸ் த்வது பக ஸ்தாநே ஹீநாஸ்ரிதா ஜிதா தோஷா –24-

கடிகேந்த்ர – கடிகை மலை யரசனான, ஸ்வாமிந்‌ – ஸ்வாமியே, மம தோஷா: என்னுடைய குற்றங்கள்‌, அந்தரஹிதா – எல்லை யில்லாதவை. தாவகா: குணா: ச உன்னுடையவைகளான குணங்களும்‌ அந்த ரஹிதா: – எல்லை யில்லாதவை. தத்‌அபி ஆயினும்‌, த்வத்‌ உபகதை: – பெரியவனான உன்னை யடைந்த, குணை: – குணங்களால்‌, ஹீந ஆஸ்ரிதா: – தாழ்ந்தவனான ௭ன்னை யடைந்த, தோஷா: – குற்றங்கள்‌, ஜிதா:வெல்லப்பட்டன. ஸ்தாநே – இது யுக்தம்‌ தான்‌.
குணங்களும்‌ குற்றங்களும்‌ ௭ல்லை யற்றவை யென்றால்‌ ஒன்றை மற்றொன்று வெல்ல முடியாது. ஆயினும்‌ குணங்கள்‌ உன்னை அண்டை கொண்ட வலிமையால்‌ என்‌ தோஷங்களை வென்றன என்றபடி, அல்‌லது குணங்கள்‌ குற்றங்கள்‌ என்று சாதாரணமாக எடுத்துக்‌ கொண்டால்‌ குணங்களைக்‌ குற்றங்களே வலிமையுடையன. ஆகிலும்‌ குணங்கள்‌ உன்னைப்‌ பற்றி யிருக்கிற பெருமையினாலே வலிமை பெற்று, என்னைப்‌ பற்றி யிருக்கிற சிறுமையினாலே வலிவிழந்த குற்றங்களை வென்று விட்டன என்றும்‌ கொள்ளலாம்‌.

தோஷா மம அந்த ரஹித -எல்லை இல்லா தோஷங்கள் கொண்ட அடியேன்
அந்த ரஹித ஸ்வாமின் கடிகேந்த்ர தாவகாஸ் ச குணா –ஸகல குண பரிபூர்ண ஸம்பன்னன்

அடியேனின் ஸ்வாமி -சொத்து நான் என்று உணர்ந்து கொண்டேன்
ததபி -இப்படி இருந்தாலும்-குணைஸ் த்வது பகை ஸ்தாநே ஹீநா ஸ்ரிதா ஜிதா தோஷா —குணங்கள் போட்டி போட்டிக் கொண்டு உம்மை அணுகி ஆஸ்ரயம் பண்ண அனைத்து தோஷங்களும் தன்னடையே போயினவே

———–

பாதாம் புஜேந லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந
ஸ்ரயதாம் சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநாஸ் ஸகலா–25-

கடிகாசைலப – கடிகை மலைத் தலைவனே ! ப்ரஸ்ருமர மதுநா – பெருகுகின்ற தேனை யுடையதும்‌,  பரார்த்ய கந்தேந – சிறந்த நறுமணமுடையதும்‌ ஆகி, லஸதா விளங்குகிற, பாதஅம்புஜேந – திருவடித்‌ தாமரையினால்‌, ஸ்ரயதாம்‌ – உன்னைத்‌ தஞ்சமாகப்‌ பற்றியிருப்பவருடைய, ஸகலா: விபரீத வாஸநாஸ்– எல்லா வகையான – மாறுபட்ட விஷயப்‌ பற்றுகளையும்‌, சமயஸி– தணியச் செய்கிறாய்‌.
எம்பெருமான்‌, தேன்‌ வெள்ளமிடுவதும்‌ கம கம வென்று பரிமளிப்பதுமான தனது திருவடியை பக்தர்கள்‌ அனுபவிக்கும்படி செய்து அதில்‌ பற்றை யுண்டாக்கி, அப்பற்றுக்கு விரோதியாய்‌ இதற்கு முன்பிருந்த அவர்களுடைய துர் விஷயப்‌ பற்றாகிய துர்க் கந்தத்தைத்‌ தணிக்கிறான்‌ என்றபடி

பாதாம் புஜேந -திருவடித்தாமரைகளிலே-லஸதா ப்ரஸ்ருமர மதுநா ப்ரார்த்ய கந்தேந -நறு மணம் மிக்க தேன் பிரவஹிக்க-ஸ்ரயதாம் -ஆஸ்ரிதர்களுடைய-சமயஸி கடிகா ஸைலப விபரீத வாஸநா ஸகலா –காம க்ரோதாதிகள் துர்கந்தங்களைப் போக்கி அருளி
தன்னிடமே வைத்து அனுபவிப்பிக்கிறான் அன்றோ

—————

ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா நிபுணே ந பதவிதா க்ரதிதா
ஸூதராம் த்வயைவ கடிகா நாயக ஸோபேத ஸூக்தி ஹாரலதா –26-

கடிகா நாயக – கடிகை மலையில்‌ எழுந்தருளியுள்ள நாயகனே ! (தலைவனே )!) ப்ரகுண உதயம்‌ – சிறந்த (1) மென்மை, செவிக்கினிமை முதலிய (2) குளிர்த்தி, பளபளப்பு முதலிய – குணங்களின்‌ தோற்றத்தைப்‌ பெற்று: ப்ரஸாதம்‌ – (1) எளிமையாகப்‌ பொருள்‌ புரிதலை (2) அழுக்கற்றுத்‌ தெளிவாயிருத்தலை. ப்ராப்தா – அடைந்ததும்‌, நிபுணேந ஸமர்த்தனான, பதவிதா – (1) வ்யாகரண சாஸ்த்ர மறிந்தவனாலே (2) கோக்குமிடமறிந்தவனாலே, க்ரதிதா – (1) சொல்லோடு சொல்‌ (2) முத்தோடு முத்து சேர்க்கப்பட்டதுமான, ஸக்தி ஹாரலதா – அடியேனுடைய (நல் வார்த்தைகள்‌ பொருந்திய) (1) ஸ்லோக வரிசையாகிய (2) முத்து மாலையானது. த்வயா ஏவ – உன்னாலேயே, சோபேத – ஒளி பெறுவதாகும்‌.
கவி தாம்‌ இயற்றும்‌ ஸ்லோக வரிசையை முத்து மாலையாக உருவகம்‌ செய்கிறார்‌ இதனில்‌. இரண்டிற்கும்‌ உரிய அடைமொழிகளை சிலேடை வகையில்‌ அமைத்திருக்கிறார்‌. பதவுரையில்‌ (1) என்று குறித்தவற்றை ஸ்லோகங்களுக்கும்‌, (2) என்று குறித்தவற்றை முத்து மாலைக்கும்‌ தொடர்பு படுத்துக. ஸ்லோகத்திற்கு குண மாவன – கடகட வென்றிராமல்‌ மெத்தென்றிருத்தலும்‌ இனிமையும்‌ சப்தாலங்காரமும்‌ அர்த்தாலங்காரமும்‌ பிறவும்‌ ஆம்‌. முத்துக்குக்‌ குளிர்த்தியும்‌ அணியுமவர்‌ கழுத்தில்‌ உறுத்தாமல்‌ ம்ருதுவாயிருத்தலும்‌ பிறவும்‌ ஆம்‌. ப்ரஸாதமாவது தெளிவு. அது *லோகத்திற்கு எளிதில்‌ பொருள்‌ புரிந்து கொள்ளும்படி அமைந்திருத்தலும்‌, முத்துக்கு அழுக்கின்மையும்‌ ஆம்‌. அவை யிரண்டும்‌ பதவிதாக்ரதிதமாயிருக்கும்‌. ஸ்லோகம்‌ வியாகரண சாஸ்த்ர மறிந்தவனால்‌ தொகுக்கப்பட்டிருக்கும்‌. பதம்‌ வ்யாகரண சாஸ்த்ரம்‌. இனி முத்து மாலை கோக்குமிடமறிந்தவனாலே கோக்கப்பட்டதாய இருக்கும்‌. அதாவது முத்துக்களில்‌ சில பெரிதாயும்‌ சில சிறிதாயும்‌ சில நடுத்தரமாயும்‌ இருக்கும்‌. மாலையிலும்‌ முதல்‌ முடிவு நடு முதலிய சில இடங்கள்‌ இருக்குமல்லவா ? அதில்‌ எத்தகைய முத்தை எந்த இடத்தில்‌ வைத்துக் கோத்தால்‌ மாலை சோபையைப்‌ பெறுமோ அந்த இட மறிந்தவனாலே கோக்கப்பட்டதாயிருக்கு மென்றபடி. பதம்‌ – காக்குமிடம்‌. ஸூக்தி: நல் வார்த்தைகள்‌ அமைந்த ஸ்லோகம்‌. ஹாரலதா – முத்து மாலை. ஹாரம்‌ – முத்து. முத்து மாலை மெல்லியதாக லதை (கொடி) போன்றிருத்தலால்‌ “ஹாரலச ” எனப்பட்டது. இங்கு நாயக சப்தம்‌ பாட்டுடைத்‌ தலைவனையும்‌, ஹாரத்தில்‌ பத்ய மணியையும்‌ குறிக்கும்‌. சிறந்த பாட்டுத் தலைவனாகிய நரசிங்கப்‌ பெருமாளாலே இவ் வம்ருத பலாவளி என்னும்‌ ஸ்தோத்ரம்‌ சோபிக்கிறது. உயர்ந்த – நடுவில்‌ பதித்த மணியினால்‌ முத்து மாலை சோபிக்கிறது-

கடிகா நாயக-ப்ரகுண உதயம் ப்ரஸாதம் ப்ராப்தா -மென்மை பொருந்திய பா மாலை -எளிமையாக பொருள் சொல்லும் ஸ்ரீ ஸூக்திகள்-குளிர்த்தி -பள பளத்து -ஸூத்தியையும் அளிக்கும்-மா முனிகள் ஆச்சார்யர் ஆணையால் செய்யப்பட்டதால் தாமே மங்களா ஸாஸனம் பண்ணி அருளுகிறார்-நிபுணேந பதவிதா க்ரதிதா-வியாகரண சாஸ்திரத்தில் நிபுணரான தன்னால் சேர்க்கப்பட்ட முத்து மாலை போல் கோக்க ஸாமர்த்யம் மிக்கவரால் செய்யப்பட்டதே ஸூதராம் த்வயைவ -உம்மைப் பற்றிய இது உம்மாலேயே
ஸோபேத ஸூக்தி ஹாரலதா —சோபனம் ஒளி மிக்கு விளங்குகிறதே -அப்படியே விளங்கட்டும் நாயகனாய் -நடு நாயக எம்பெருமானாரே கடிகா நாயகர் என்றுமாம் –
இவரையே திரு உள்ளத்தில் வைத்து குரு பரம்பரா ஹாரத்துக்கு மங்களா ஸாஸனம் என்றுமாம் –

—————

ஸரஸ ஸூமநோ அபி ராமோ ஸாது ச ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸா
ஸமுபைதி ஸூக்தி லதிகா சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் –27-

அம்ருதபல – அம்ருதம் போல்‌ இனிக்கும்‌, அழியாத பழமாகிய அக்காரக் கனிப்‌ பெருமானே ! தவ ஸங்காத்‌ – உன்னுடைய ஸம்பந்தத்தாலே, ஸூக்தி லதிகா அடியேனுடைய (1) ஸூக்தியாகிற (2) கொடியானது, ஸாது – நன்றாக, ஸம்ஸ்கார ஸம்ப்ருத உல்லாஸா – (1) அடிக்கடி கவித்வம்‌ செய்வதால்‌ உண்டான பழக்கத்தாலே நிறைந்த ப்ரகாசத்தை யுடையதாகவும்‌ (2) நீர் விடுதல்‌ எருஇடுதல்‌ முதலிய சீர்படுத்துதலாலே நிறைந்த விளக்கத்தை யுடையதாகவும்‌, ஸரஸஸுமந:அபிராமா ச – (1) ரஸிகர்களான வித்வான்‌௧ளுக்கு இன்ப மூட்டுவதாகவும்‌ (2) தேனோடு கூடிய புஷ்பங்களாலே, பார்ப்பவர்க்கு இன்ப மூட்டுவதாகவும்‌ இருந்து, ஸாபல்யம்‌ – (1) மோக்ஷமாகிய பலத்தோடு புருஷார்த்தத்தோடு கூடியிருத்தலையும் (2) இனிமையான பழத்தோடு கூடியிருத்தலையும்‌, ஸமுபைதி ஹி – அடைகின்றதல்லவா ?
இது தன்னில்‌ தம்முடைய ஸ்ரீஸூக்தியை ஒரு கொடியாக உருவகப் படுத்துகிறார்‌. ஸ்ரீஸூக்தியானது கவித்வம்‌ செய்து பழகிய ஒரு கவியால்‌ செய்யப்பட்டதாகில்‌ மிகவும்‌ விளக்கம்‌ பெற்று ரஸிகர்களான வித்வான்களுக்கு உகப்பை யூட்டி, இறுதியில்‌ எம்பெருமானுடைய ஸம்பந்தத்தாலே, கவித்வம்‌ செய்தவனுக்கும்‌, அதைப் படிப்பவர்க்கும்‌ மோக்ஷமாகிய பலத்தைப்‌ பெறுவிக்கும் கொடியானது நீர்‌ விட்டு எருவிட்டுத்‌ திருத்தம்‌ செய்யப்பட்டால்‌ தேன்‌ நிறைந்த மலர்களோடு கூடியிருந்து கடைசியில்‌ நல்ல பழங்களையும்‌ நமக்குத்‌ தருமென்றபடி. இங்கும்‌ (1) என்று குறிப்பிட்டவற்றை ஸ்ரீஸூக்திக்கும்‌ (2) என்று குறிப்பிட்டவற்றைக்‌ கொடிக்கும்‌ பொருத்திக் கொள்க. இதிலும்‌ சிலேடையுள்ளமை காணலாம்

ஸரஸ ஸூ மநோ அபி ராமோ ஸாது ச –மனங்களை ஈர்க்கும் வண்ணமாயும் -லலிதமான பதங்களைக் கொண்டும் -ஸம்ஸ்கார ஸம் ப்ருதோல் லாஸூ –அர்த்த கௌரவமும் உல்லாஸமாக ஸ்துதி பண்ணவும்-ஸமுபைதி ஸூக்தி லதிகா -இந்த ஸ்லோகமும்
சங்கா தம்ருத பல தவ ஹி ஸாபல்யம் —-அக்காரக் கனியே -உமது சம்பந்தத்தால் இந்த ஸ்ரீ ஸூக்தியும் அம்ருதமானதே-அனுசந்திப்போர்க்கு உமது திருவடி இணைகளையே கொடுக்கும் என்பது திண்ணம் என்றவாற-சம்ஸ்காரம் -கொடி போல் படரும் –நீர் உரம் போல்-சேர்த்து ஆகர்ஷகமாக இருக்கும் -அம்ருத கனிகளையும் கொடுக்கும் அன்றோ -பொதுவான அர்த்தமும் உண்டே

————–

ஸத் பக்ஷ பாத ஸூபகம் ஸந் மாநஸ ஸரஸிகாம்புஜா ஸக்தம்
புவநாஸ்ரயம் விஸூத்தம் புத்யே கடிகா வநெள ஸம் ஹம்ஸம் –28-

ஸத்பக்ஷபாத ஸுபகம்‌ – (1) நல்லோர்களிடம்‌ பக்ஷபாதம்‌ – ஒரு தலையில்‌ பற்று உள்ளமையினால்‌ மனத்தைக்‌ கவருமவனும்‌, (2) அழகிய சிறகடித்தலாலே மனத்தைக் கவருமதும்‌, ஸந்மாநஸ ஸரஸிகா அம்புஜ ஆஸக்தம்‌ (1) நல்ல மனமுடையவர்களென்னும்‌ தடாகத்தில்‌ உள்ள ஹ்ருதய கமலத்தில்‌ மிக்க பற்றுடையவனும்‌ (2) நல்ல மானஸ ஸரஸ்ஸில்‌ முளைத்த தாமரை மலர்களிடம்‌ மிக்க பற்றுடையதும்‌, புவந ஆஸ்ரயம்‌- (1) பூமியை ஆதாரமாக உடையவனும்‌. (2) நீரை ஆதாரமாகவுடையதும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ பரிசுத்தனானவனும்‌, (2) மிகவும்‌ வெண்மை நிறமுடையதுமான, கடிகாவந ஓகஸம்‌ – (1) கடிகை மலைக் காட்டை இருப்பிடமாகவுடையவனுமான எம்பெருமானை, ஹம்ஸம்‌ – (2) ஹம்ஸமாக, புத்யே – கருதுகிறேன்‌.
இதில்‌ கடிகை மலை நாயகனை ஹம்ஸமாக உருவகிக்கிறார்‌. விசேஷணங்களை முன்பு போல்‌ எம்பெருமானுக்கும்‌ ஹம்ஸத்துக்கும்‌ பொருந்தும்படி அந்வயித்துக்‌ கொள்க. இது தன்னிலும்‌ சிலேடை காணத்தக்கது. புவனம்‌ – பூமி ஜலம்

ஸத் பக்ஷ பாத ஸூபகம் -நீர் நிலையைக் கண்டதும் சிறகு அடித்து மகிழ-அத்தைக் கண்டவர் மனம் வழங்குவார்கள் அன்றோ –ஆஸ்ரிதர் பக்கல் பக்ஷ பாதி எம்பெருமான் -மனத்தைக் கொள்ளை கொள்வான் -ஸந் மாநஸ ஸரஸி ஜாம்பு ஜா ஸக்தம் –நீர் நிலையில் தாமரை மேல் அபி நிவேசத்துடன் –நீராய் அலைந்து கரைந்து உருக்கும் மானஸ தாமரையில் மகிழ்ந்து இருப்பான்-புவநாஸ்ரயம் வி ஸூத்தம் புத்யே –நீரையே ஆச்ரயமாகக் கொண்டு வெண்மையாக –ஸம்ஸார கந்தமே இல்லாமல் -அமலன் ஆதி பிரான் -இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் -கடிகா வநவ் ஸம் ஹம்ஸம் –இந்த ஹம்சத்தையே ப்ரத்யஷிக்கிறோமே இங்கு –

—————

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம்
கமலாலய யாந்தரங்கம் கலய கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம் –29-

ஸுமநஸ்‌ ரஸ க்ருத ஸங்கம்‌ – (1) ஞானிகளுடைய பக்தியாகிற ரஸத்தில்‌ பற்று வைத்தவனும்‌, (2) புஷ்பத்தின்‌ ரஸமான தேனில்‌ பற்று வைத்துள்ளதும்‌. ஸ்வரண விசேஷேண – (1) தனது பேச்சாகிய ஒலியினாலே (2) தனது ரீங்காரமாகிய ஒலியினாலே, தோஷித அநங்கம்‌ – (1) மகிழ்விக்கப்பட்ட – ப்ராக்‌ருத சரீரமற்ற முக்தர்களை யுடையவனும்‌, (2) மகிழ்விக்கப்பட்ட மந்மதனை யுடையதும்‌, கமலாலயா அந்த ரங்கம்‌ – தாமரையை இருப்பிடமாகவுடைய பிராட்டியிடம்‌ மனத்தைச்‌ செலுத்துமவனுமான. கமல ஆலய அந்த: அங்கம்‌ – தாமரை மலராகிய வீட்டினுள்ளே தனது உடலை வைத்துள்ளதுமான, கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்‌ – கடிகை மலையில்‌ முளைத்த கற்பகத் தரு போன்று அனைத்தையும்‌ அனைவர்க்கும்‌ வழங்கும்‌ (1) பெருமானாகிய (2) வண்டை, கலயே – த்யானம்‌ செய்கிறேன்‌.
இதில்‌ கடிகைக் கற்பகமரமாக எம்பெருமானைக்‌ குறிப்பிட்டு அப்பெருமானையே வண்டாக உருவகித்துள்ளார்‌ அல்லது கடிகை மலையையே கற்பக மரமாகவும்‌ எம்பெருமானை அதில்‌ படிந்த வண்டாகவும்‌ உருவகிக்கிறாரென்றலும்‌ பொருந்தும்‌.
ஸுமநஸ: (1) புஷ்பங்கள்‌ (2) ஞாநிகள்‌. உலகிலுள்ள மக்களுக்குக்‌ காமத்தை யுண்டு பண்ணும்‌ மந்மதனுக்கு வண்டுகளின்‌ ரீங்காரவொலி உதவுகின்றமையால்‌, வண்டுகள்‌ மன்மதனுக்கு மகிழ்ச்சி யூட்டுவனவாம்‌. பரம பதத்தில்‌ எம்பெருமானுடைய பேச்சுக்கள்‌ முக்தி பெற்றவர்களுக்கு ஸந்தோஷத்தை விளைவிக்கும்‌. கதா மாம்‌ பகவாந்‌ ஸ்வகீயயா ஸ்நிக்த கம்பீர மதுரயா கிரா பரிசர்யாயாம்‌ ஆஜஞாபயிஷ்யதி (எப்போது அடியேனை)-பகவான்‌ தன்னுடையதான – அன்‌பு ததும்பி, கம்பீரமாய்‌ இனிமையான பேச்சாலே கைங்கர்யங்களில்‌ ஆணை யிடப்‌ போகிறார்‌ என்கிற ஸ்ரீவைகுண்ட கத்யம்‌ (சூர்‌ 4) காணத்தக்கது. அநங்க: (1) சிவனால் உடலழியப்‌ பெற்ற-மந்மதன்‌ (2) இந்த ஊன வுடல்‌ கழியப்பெற்ற முக்தன்‌. கமலாலயா – அந்தரங்கம்‌ என்று எம்பெருமான்‌ விஷயத்தில்‌ பிரிக்க. வண்டு விஷயத்தில்‌ கமலாலய – அந்த அங்கம்‌ என்று பிரிக்க –

ஸூ மநோ ரஸ க்ருத சங்கம் –ஆஸ்ரித ஹ்ருதயத்தில் பக்தி வெள்ள ரசத்தில் ஆழ்ந்து
வண்டு மதுகரம் -ரீங்காரம் -ஹரி சப்தம் -ஆச்சார்ய புருஷர்கள் –
ஸ்வரண விசேஷண தோஷிதா நந்கம் -இருப்பதையே கேட்டு -சரீரம் கழித்து
மன்மதன் அநங்கன் -உடல் அழிந்து -கரும்பு வில் மலர் பாணம்-அவனுக்கும் ஆனந்தம் கொடுக்கும்
கமலாலய யாந்தரங்கம் கலய –ஸ்ரீ அந்தரங்க பரிகரமாக தியானித்து அடைவோம்
வந்து தாமரையையே இருப்பிடமாக கொள்ளுமே-வண்டை த்யானம் பண்ணுவோம்
இவரே வண்டு -மா முனிகள் திருவடித் தாமரைகளையே பற்றி இருப்பாரே –
கடிகாத்ரி கல்ப தரு ப்ருங்கம்-நம்மை ஆக்கி தன்னையே தரும் கற்பகம்-

——————

துர்கதி துக்கித சித்தா துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸே வ்யாம்
பிராஜ்ஞா ப்ரயாந்தி நித்யாம் பூதிம் கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–30-

துர்கதி து:கித சித்தா: (1) ஸம்‌ஸாரமென்னும்‌ நரகத்தில்‌ வசிப்பதனால்‌ துன்புற்ற மனத்தையுடைய (2) வறுமையினால்‌ இன்புற்ற மனத்தை யுடைய, ப்ராஜ்ஞா: – (1) ஞானிகள்‌ (2) புத்தி சாலிகள்‌, துஷ்கர யோகாந்‌ – வருந்திச்‌ செய்ய வேண்டிய (1) கரும யோகம்‌ ஞான யோகம்‌ பக்தி யோகம்‌ முதலிய மோக்ஷோபாயங்களை, (2) உடலுழைப்பு வாணிபம்‌ முதலான பணம்‌ சம்பாதிக்கும்‌ ௨பாயங்களை, விமுச்ய – அறவே விட்டு விட்டு, கடிகாத்ரி பூபம்‌ – கடிகை மலை யரசனை, ஆலம்ப்ய – தஞ்சமாகப் பற்றி, ஸுகஸேவ்யம்‌ வருத்தமின்றி அனுபவித்தற்கு உறிய நித்யாம்‌ பூதிம்‌ – (1) நித்ய விபூதி யென்னும்‌ பரமபதத்தை (2) அழியாத செல்வத்தை. ப்ரயாந்தி– அடைகின்றனர்‌.
வறுமையினால்‌ வாடியவர்கள்‌ பணமீட்டும்‌ – வாணிபம்‌ முதலிய வருத்தந்தரும்‌ வழிகளை விட்டு கடிகைமலை யரஸை த்‌ தஞ்சமாகப் பற்றி நீண்ட நாள்‌ நீடித்திருக்கக் கூடிய செல்வத்தைப்‌ பெறுகிறார்கள்‌-இறப்பிறப்புத் தொடர்ச்சி யென்னும்‌ இவ் வுலக வாழ்க்கையினால்‌ வருந்தியவர்கள்‌ மோக்ஷத்திற்கு உரிய வருத்தம்‌ தருகின்ற கரும யோகாதிகளான உபாயங்களை விட்டு ஸித்தோபாயமான கடிகை மலை யரசனைச்‌ சரணமாகப் பற்றி, வருத்தமே யில்லாத ஸுகமே வடிவமான பரம பதத்தை அடைகிறார்கள்‌. இதனால்‌ கடிகை யெம்பெருமான்‌ ஐஸ்வர்யார்த்திகளாலும்‌, மோக்ஷார்த்திகளாலும்‌ சேவிக்கப் படுகிறான்‌ என்று, இரண்டு வகைப்பட்ட கருத்துக்களும்‌ ஒரே வகைச்‌ சொற்களால்‌ சிலேடை வகையில்‌ காட்‌டப்பட்டுள்ளமை காணத் தக்கது.
இங்கு ஸுக ஸேவ்யம்‌ என்று பாடமிருந்தால்‌ அது கடிகாத்ரி பூபம்‌ என்பதற்கு விசேஷணமாய்‌, கஷ்டமான உபாயங்களை விட்டு ஸுக ஸேவ்யனான எம்பெருமானைப்‌ பற்றி என்று பொருள்‌ தந்து சிறப்பைப்‌ பெறும்‌. மற்றை உபாயம்‌ கஷ்ட ஸாத்யம் எம்பெருமானாகிய உபாயம்‌ ஸுக ஸாத்யம்‌ என்‌றதன்றோ ஆசிரியருக்குக்‌ கருத்தாக இருக்க அடுப்பது. ப்ராஜ்ஞா:– (1) ஸுஃலபமான உபாயத்தை யறிந்த புத்திசாலிகள்‌ (2) ஞானிகள்

பிராஜ்ஞா துர்கதி துக்கித சித்தா –-நந்தா நரகம் -வெந்நரகம் -ஸம்ஸாரம் வெறுத்து இருக்கும் ஞானிகள்-ஐஸ்வர்யம் இழந்த துக்கம்-துஷ் கர யோகாந் விமுச்ய ஸூக ஸேவ்யாம்–உபயாந்தரங்கள் துஷ்கரம் –அப்ராப்யம் -என்று விட்டு —ப்ரீதி காரித கைங்கர்யம் செய்ய வழியாக ப்ரயாந்தி நித்யாம் பூதிம் -நித்ய விபூதி அளிக்கும்
புத்தியாசாலியாக இருந்தவர் செல்லும் வழியான பிரபத்தி மூலம் பெறலாமே
கடிகாத்ரி பூப்ம ஆலம்ப்ய–பூ பாலன் இங்கே நித்ய வாஸம் செய்ய -அவனை ஆஸ்ரயித்து –

—————–

கலயந்தி நைவ சந்தஸ் கா புருக்ஷத்வாரி காரணாத் கதநம்
கடிகா ஸிகரி முகுந்தம் கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –31-

ஸந்த: – எம்பெருமானுடைய பெருவள்ளல்‌ தன்மையை அறிந்த புத்திசாலிகள்‌. கடிகா ஸிகரி முகுந்தம்‌ – கடிகைமலையில்‌ எழுந்தருளியுள்ள முகுந்தனென்கிற, ஸுலபம்‌ எளிதில்‌ கிடைக்கத் தக்க, அநவதிம்‌ – எடுக்க எடுக்கக் குறையாத, கமபி – ஒப்பற்ற, நிதிம்‌ நிதியை – புதையலை, லப்த்வா – அடைந்து. (அதன் பிறகு) காபுருஷ த்வாரி இழிந்தவனுடைய வீட்டு வாசலில்‌, காரணாத்‌ – செல்வம்‌ காரணமாக, கதனம்‌ – (அவனைப்‌ பற்றிக் )கவி சொல்லுவதை, நைவ கலயந்தி – எண்ணவே மாட்டார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ – துஷ்கர யோகமென்னும்‌ – வருந்திச்‌ செய்யும்‌ உபாயத்தைக்‌ கூறியபடியால்‌ அதில்‌ சேர்ந்த உபாயமான – நீசர் தம் வாசல்‌ பற்றித் துதி சொல்லுதலையும்‌ புத்திமான்கள்‌ விட்டுவிட்டார்கள்‌ – எம்பெருமானைப்‌ பற்றிய பிறகு என்று இது தன்னில்‌ கூறி யருளினார்‌. முகுந்த:- (முஞ்ச, குஞ்ச, ததா )-மோக்ஷத்தையும்‌ இவ் வுலக வாழ்வையும்‌ கொடுப்பவன்‌ என்று பொருள்படும் –

கலயந்தி நைவ சந்தஸ் -நல்ல புத்தி சாலிகள் -அவனே உபாயம் உபேயம் என்று அறிந்தவர்கள்-கா புருக்ஷத்வாரி காரணாத் கத நம் -செல்வத்துக்கு கா புருஷன் வாசலில் நிற்காதவர் -விரும்பாவதவர்-கடிகாதி ஸிகரி முகுந்தம் -இவனே முக்தி தருபவன் -மோக்ஷமும் இஹ லோக பலன்களையும் அளிப்பவன்-கமபி நிதம் ஸூலபம் அநவதிம் லப்தவா –ஆராதனைக்கு எளியவன் –அள்ள அள்ள குறையா வைத்த மா நிதி இவனே –
இவனே நவ நிதி என்று மேல் ஸ்லோகம்

காரா காரே வரவரமுநே வர்த்தமானஸ் சரீரே |
தாபைரேஷத்ரிபிரபி சிரம் துஸ்தரைஸ் தப்யமாந: ||
இச்சந் போக்தும் ததபி விஷயானேவ லோக: க்ஷுதார்த்தோ |
ஹித்வைவ த்வாம் விலுடதி பஹிர்த்வாரி ப்ருத்வீ பதீநாம் ||-வர வர முனி சதகம் 68–மறந்தும் அஸேவ்ய ஸேவை செய்யேன் –மானிடம் கவி பாட வந்தேன் அல்லேன் –

ஹே வரவரமுநியே! உடல் என்னும் சிறையில் இருந்து கொண்டு தாண்ட முடியாத மூவகையான தாபங்களால் வெகு காலமாகத் தடுக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் இந்த ஜனம் விஷயங்களை அநுபவிப்பதிலே ஆசை கொண்டு பசியால் பீடிக்கப் பட்டவனாக உம்மை விட்டு அரசர்களுடைய வெளி வாயிற்படிகளில் புரளுகிறான்.

————————-

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் பத்ம மபி மஹா பத்மம்
குந்தம் அஸிதம் முகுந்தம் கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -32–

மகரம்‌ – மீனாக அவதரித்தவனும்‌, அத – மேலும்‌, கூர்ம ரூபம்‌ – ஆமை யுருவம்‌ கொண்டவனும்‌, வர சங்கம்‌ – உயர்ந்த சங்கை யுடையவனும்‌, பத்மம்‌ – தாமரை மலரைக்‌ கையிலேந்தியவனும்‌, மஹா பத்மம்‌ – பூஜிக்கத் தக்க ஸ்ரீமஹா லஷ்மியை (மனைவியாக) உடையவனும்‌, குந்தம்‌ – பாபத்தைப்‌ போக்குமவனும்‌, அஸிதம்‌ – நீல வர்ணமுடையவனும்‌, முகுந்தம்‌ – மோக்ஷ பூமியைத் தருமவனுமாகிய, கடிகாத்ரி நவநிதிம்‌ – கடிகாத்ரி எம்பெருமானென்னும்‌ – (மகரமும்‌ கூர்மமும்‌ உயர்ந்த சங்கமும்‌ பத்மமும்‌ மஹா பத்மமும்‌ குந்தமும்‌ அஸிதமும்‌ (நீலமும்‌) முகுந்தமும்‌ கர்வமுமாகிய) புதிய – அபூர்வமான நிதியை, கோ வா – எவன் தான்‌, ந பஜேத்‌ – அடையமாட்‌டான்‌.
இந்த ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஒன்பது வகையான நிதியாக அருளிச் செய்கிறார்‌. மஹா பத்மம்‌, சங்கம்‌, மகரம்‌, கச்சபம்‌, முகுந்கம்‌. குந்தம்‌, நீலம்‌, கர்வம்‌ என்று நிதிகள்‌ ஒன்பது. இவற்றில்‌ ஒன்று மற்றொன்றாக இராது. இவை யெல்லாமாகவும்‌ எம்பெருமானிருக்கிறானென்று அவனை நவநிதி (புதிய – எங்கும்‌ காணாத நிதி) என்கிறார்‌. ஒன்பது வகைப்பட்ட நிதியால்‌ கிடைக்கும்‌ பயனெல்லாம்‌ எம்பெருமானொருவனால்‌ கிடைக்குமென்றபடி. இந்த இரண்டு ஸ்லோகங்களிலும்‌ கடிகை மலை யரசனை நிதியாகக்‌ குறிப்பிடுகின்றமை காணத்தக்கது. இந்த ஸ்லோகத்தில்‌ எட்டு வகை நிதிகளையே குறித்துள்ளார்‌ அபி என்றதனால்‌, கர்வம்‌ என்ற நிதியையும்‌ சேர்த்துக்கொள்க. எம்பெருமான்‌ பக்ஷத்தில்‌ கர்வமென்பது வாமனனுக்கு வாசகமாகும் –

மகரமத கூர்ம ரூபம் வர சங்கம் -மீன் =மத்ஸ்ய மேல் கூர்மமாகவும் -உயர்ந்த சங்கு ஆழ்வானைக் கொண்டவனும்-பத்ம மபி மஹா பத்மம் -தாமரை மலரைக் கொண்டவனும்
திருவையும் திரு மார்பில் கொண்டவனும்
குந்தம் -பாபம் போக்கும் -பரசுராமன்-அஸிதம் -நீல மேக ஸ்யாமளன்
முகுந்தம் -மோக்ஷம் அளிக்கும் -ஸாஷாத் ஸ்ரீ மன் நாராயணன்
கோவா கடிகாத்ரி நவ நிதிம் நப ஜேத் -புதியதாக அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமும்-மஹா பத்ம பத்ம சங்க மகர சத்கப முகுந்த குந்த நீளா கர்வ –நவ நதிகள் புராணங்கள் சொல்லும்=ஒன்றுடன் வேறே நிதியைச் சேர்க்க முடியாது
இந்த தசாவதாரங்களை சேர்த்தாலும் அக்காரக்கனிக்கு ஒப்பு ஆகாதே இவனே சீரிய நிதி என்றவாறு –

———-

காஞ்சன மயே ஸ்புரந்தம் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே
கிருஷ்ண மணி மர்க ரஹிதம் கேவா ந விதந்தி க்ருத்ஸ்நதஸ் ஸ்லாக்யம் –33-

கடிகா மஹீப்ருத: – கடிகை யென்னும்‌ மலையினுடைய, காஞ்சந மயே பொன் மயமான, ஸிகரே – கொடு முடியில்‌, ஸ்புரந்தம்‌ – விளங்குகின்றதும்‌, அர்க்க ரஹிதம்‌– விலை மதிப்பற்றதுமான, ஞ்சந – ஒரு க்ருஷ்ணமணிம்‌ – கரு மணியை, க்ருத்ஸ்நத: எல்லா மணிகளைக்‌ காட்டிலும்‌, ஸ்லாக்யம்‌ – உயர்ந்ததாக, கே வா – அறிவு படைத்த யார் தான்‌, ந விதந்தி – அறிய மாட்டார்கள்‌.
இதில்‌ எம்பெருமானை நீல மணியாக வருணிக்கிறார்‌. தங்கத்தில்‌ அழுத்திய நீல மணி மிகவும்‌ சோபிக்கும்‌. அது போல தங்க மயமான கடிகைக் கொடு முடியில்‌ எழுந்தருளியுள்ள நீல மணி வண்ணனான எம்பெருமானும்‌ சோபிக்கிறான்‌. க்ருத்ஸ்நத: என்பதற்கு ஜாதியாலும்‌ ப்ரகாசத்தாலும்‌ பொன்னோடு சேர்ந்திருப்பதனாலும்‌ – என்றும்‌ பொருள்‌ கொள்ளல்‌ தகும்

காஞ்சன மயே -பொன் வண்ணமாக-ஸ்புரந்தம் -விளங்கும் கஞ்சன கடிகா மஹீ ப்ருத ஸிகரே -கனக கிரியில் காள மேகம்-கிருஷ்ண மணி மர்க ரஹிதம் -நீல மேக ஸ்யாமள ரத்ன மணி-கேவா ந விதந்தி க்ருத்ஸ் நதஸ் ஸ்லாக்யம் –உயர்ந்த ஒப்பற்ற இந்த செல்வத்தை அறிவாளிகள் யார் தான் அறிய மாட்டார்கள்
கீழ் நவ நிதி -இங்கு ஒப்பார் மிக்கார் இலையாய நீல மணி

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும்.-குபேர சம்பத்துக்களாக அவனருகில் இந்த நவநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்-அரிசி, கோதுமை துவரை, பயறு, கொள்ளு, உளுந்து, எள், காராமணி, கடலை என்பவை நவ தானியங்கள் எனப்படும்.-கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சரயூ, குமாரி, பயோஷ்னி என்பவை நவ நதிகள் எனப்படும்.-சூரியன் சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு கேது என்னும் நவக்கிரகங்களும் முறையே சிவன் உமை முருகன், திருமால், பிரம்மா, குரு, இந்திரன், எமன், பத்திரகாளி சித்திரகுப்தன் ஆகியோரே நவக்கிரகங்களின் நவ சக்தியாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.-கோமேதகம், நீலம், பவளம், முத்து, புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், வைடூரியும் என்பவை நவ மணிகள் எனப்படும்.

—————-

ஸம் ஸரண ஸரணி பாந்தா தாப த்ரய தரணி கிரண சந்தப்தா
ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீதளச்சாயம் –34-

ஸம் ஸரண ஸரணி பாந்தா:- ஸம்ஸாரமாகிய வழியில்‌ எப்போதும்‌ திரியும்‌ வழிப் போக்கர்களாய்‌, தாப த்ரய தரணி கிரண ஸந்தப்தா: – தாபத்ரய மென்கிற ஸூர்ய கிரணங்களினால்‌ மிகவும்‌ தபிக்கப்பெற்ற மனிதர்கள்‌, கடிகாத்ரெள – கடிகை மலையில்‌ (உள்ள), ஸீதளச்சாயம்‌ – குளிர்ந்த நிழலை யுடைய, ஹரி சந்தனம்‌ – ஹரி சந்தன மென்கிற தேவ லோக வ்ருக்ஷத்தை (எம்பெருமானை) ஏத்ய – அடைந்து, ஆஸ்வஸிதா:பவந்தி இளைப்பாறுகின்றனர்‌.
தாப த்ரயம்‌- ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம ஆதிதைவிகம்‌ என்ற மூன்று தாபங்கள்‌. மன வருத்தமும்‌ உடல்‌ நோயும்‌ ஆத்யாத்மிகம் . தேள்‌ பாம்பு புலி சிங்கம்‌ மனிதன்‌ ஆகியவற்றால்‌ உண்டாகும்‌ கஷ்டம்‌ ஆதி பெளதிகம்‌. மழை வெயில்‌ காற்று முதலியவற்றால்‌ பிறக்கும்‌ வருத்தம்‌ ஆதிதைவிகம்‌. இவற்றை ஸம்ஸாரமாகிற வழியில்‌ செல்லும்‌ வழிப் போக்கர்களுக்குத்‌ தாபமாகச்‌ சொன்னார்‌. ஸூரிய வெப்பத்தினால்‌ துக்கமடைந்தவன்‌, நிழல்‌ செய்யும்‌ மரத்தை அணுகித்‌ தாபந்தீரப்‌ பெறுவது போல்‌, இம்மூவகைத்‌ தாபங்களினால்‌ வருந்துமவன்‌ “வாஸுதேவ தரு” என்று ப்ரஸித்தமான எம்பெருமானை யடைந்து தாபந்தீரப்பெற்று மகிழ்கிறான்‌ என்கிறார்

ஸம் ஸரண ஸரணி பாந்தா –ஸம்ஸார சாகரம் பாலை வனம் -கொடு வெந்நரகம்
தாப த்ரய தரணி கிரண சந்தப்தா –தாபத்ரயங்களால் -ஆத்யாத்மிகம் -ஆதி பவ்திகம் -ஆதி தெய்விகம் -இவற்றால் நன்றாக தவிக்கும் நமக்கு-ஆஸ் வாஸிதா கடிகாத்ரவ் ஹரி சந்தந மேத்ய ஸீத லச்சாயம் –ஆஸ்வாஸம்-குளிர்ந்த சாயை -இங்கு தானே —ஹரி சந்தன வ்ருஷம் போல் கடிகாத்ரி அக்காரக்கனி எம்பெருமான்

—————-

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் சகடி காத்ரவ்
ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம்-35-

முக்தம்‌ – இயற்கையாகவே ஸம்ஸாரத்த்லிருந்து விடுபட்டதும்‌, நிஜ ஜந பத்தம்‌ தன்னுடைய பக்த ஜனங்களுக்குக்‌ கட்டுப்பட்டதும்‌, ஜகதாம்‌ – உலகங்களுக்கு, மூலம்‌ வேரானதும்‌ (காரணமானதும்‌) பலம்‌ ச – பழமானதும்‌ – பயனான புருஷார்த்தமானதும்‌, ஆகண்டம்‌ மநுஜம்‌ – காலிலிருந்து கழுத்த வரையிலும்‌ மனிதவுருப்‌ பெற்றதும்‌, ஆநநே ஸிம்ஹம்‌ – முகத்தில்‌ சிங்கமுமாகிய, மஹத்‌ அத்புதம்‌ – பெரிய ஆச்சரியமானதொரு பொருளை, கடிகாத்ரெள – கடிகைமலையில்‌, ஆகலயத– (சென்று) கைப் பற்றுங்கள்‌ அல்லது தியானியுங்கள்‌.
உலகில்‌ ஒரே சமயத்தில்‌ ஒரே வஸ்து, விடுபட்டதும்‌ கட்டுப்பட்டதுமாக இராது. ஒன்றே வேராகவும்‌ பழமாகவும்‌ இராது. ஒரே பொருள்‌ மனிதனாகவும்‌ சிங்கமாகவும்‌ இராது. அப்படி இங்கு அமைந்துள்ளதனால்‌ எம்பெருமானை மஹத்‌ அத்புதம்‌ என்றார்‌.

முக்தம் நிஜ ஜநப் பத்தம் மூலம் ஜகதாம் பலம் –வேர் பழம் முக்தன் பத்தன்
கண்ணி நுண் சிறுதாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
மூலம் காரணமாகவும் -அக்காரக்கனி யாகவும் உள்ளாயே
சகடி காத்ரவ் ஆகலய தாத்புதம் மஹதா கண்டம் மநுஜ மாநநே ஸிம்ஹம் -நர ஸிம்ஹ ரூபம்
அகடி கடநா சமர்த்தன் வழியாகவும் ப்ராப்யமாகவும் உள்ளாயே

——————–

பஸ்யந்தி நயந ஹரிணா ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்தகம் யாவத்
பரிசர சரைஸ்து தாவத் பாதக பதகை பலாயிதம் க்வாபி –36-

நயன ஹரிணா: – (அடியேனுடைய ) கண்களென்னும்‌ மான்கள்‌, கடிகாத்ரி லுப்தகம்‌ – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய வேடனை, யாவத்‌ – எது வரையிலும்‌, ஸ்பஷ்டம்‌ – தெளிவாக, பஸ்யந்தி – பார்க்கின்‌றவோ, தாவத்‌ – அதுவரையிலும்‌, பரிஸர சரை: (அடியேனுடைய) பக்கத்தில்‌ திரிந்து . கொண்டிருந்த, பாகத பதகைஸ்து – பாவங்களாகிய பறவைகளாலோ எனின்‌, க்வாபி -எங்கேயோ, பலாயிதம்‌ – ஒடிப் போதல்‌ ஆயிற்று. மஹத்‌ அத்புதம்‌ – (இது) பெரிய ஆச்சர்யம்‌.
முன்‌ ஸ்லோகத்திலிருந்து மஹத்‌ அத்புதம்‌ என்ற சொற்களை வருவித்துக்‌ கொள்க. எம்பெருமானை ஸேவித்தேன்‌, பாவங்கள்‌ பறந்தோடின – என்பதனை ஒரு சமத்காரமாகக்‌ கூறுகிறார்‌. வேடனை மான்கள்‌ பார்‌த்துக்‌ கொண்டிருந்தனவாம்‌. பறவைகள்‌ ஒடினவாம்‌. பார்த்த மான்கள்‌ ஓடவில்லை, பாராதவைகள்‌ ஓடின – என்பது பெரிய ஆச்சரியமன்றோ –

பஸ்யந்தி நயந ஹரிணா -மான்கள் -அடியேன் கண்கள்-ஸ்பஷ்டம் கடிகாத்ரி லுப்த கம் யாவத்-ஸ்பஷ்டமாக கண்டு-பரி சர சரைஸ்து தாவத் பாதகப்தகை பலாயிதம் கவாபி — பாபங்கள் ஆகிய பறவைகள் ஓடியே போயினவே-வேடுவனைப் பார்த்து மான் ஓடாது -பறவைகளோ ஓடுமே -அதே போல் இங்கு –-ஆனால் இவன் வேடுவன் போல் கொடியவன் அல்லவே என்று அடுத்த ஸ்லோகம்-

————

விமல மணி ஹேம கடகம் விலஸித வநமால யோல்ல சந் மௌலிம்
கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே காஞ்சந பீதாம் ஸூகா வ்ருதம் ப்ராம் ஸூம் –37-

விமலமணி ஹேமகடகம்‌ குற்றமற்ற ரத்தினங்கள்‌ அழுத்தப்பெற்ற பொன் வளையல்களை அணிந்தவனும்‌, விலஸித வநமாலயா – விளங்குகின்ற வனமாலையினால்‌, உல்லஸத்‌ மௌலிம் – ப்ரகாசிக்கின்ற திருமுடியை யுடையவனும்‌, காஞ்சந பீதாம்சுக ஆவ்ருதம்‌ – பொன் மயமான பீதாம்பர மணிந்தவனும்‌, ப்ராம் ஸூம்‌ உயரமானவனுமாகிய, கடிகாத்ரி ஸூஹ்ருதம்‌ – கடிகை மலையிலுள்ள நன் மனம்‌ படைத்த தோழனை, ஈடே – ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌.
முன் ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை வேடனென்றார்‌. வேடனாகில்‌ கொடியவனாக
இருப்பானோ என்று ஐயமெழ , கொடியவனல்லன்‌, நன் மனம்‌ படைத்த தோழனாகி யிருப்பவனென்று இதனால் ஐயத்தைப்‌ போக்கினாராயிற்று. ஸுஹ்ருத்‌ சோபநா சம் ஸிஹ்ருதயவாந்‌ –நன்மையை வேண்டும்‌ மனம்‌ படைத்தவன்‌-எம்பெருமானுடைய அகத்தின்‌ அழகை ஸுஹ்ருதம்‌ என்பதனாலும்‌, திருமேனியழகை மற்றுள்ள எல்லாப்‌ பதங்களாலும்‌ குறிப்பிட்டருளினார்‌. ஆபாதபத்மம்‌ யா மாலா வனமாலேதி ஸா மதா (தோளிலிருந்து பாதகமலம் வரை தொங்குகின்ற மாலை வனமாலையென்று கருதப்பட்டது) என்ற களிங்கரின் வாக்கின்படி வனமாலையாவது திருமேனியில்‌ சாத்தும்‌ மாலையாகக்‌ கூறியதற்குக்‌ காரணம்‌ அறிய முடியவில்லை. கண்டு கொள்வது. இவரிப்படி அருளுகின்றமையால்‌ இங்ஙனமும்‌ இருக்கத் தகும் –

விமல மணி ஹேம கடகம் -நிர்மல -தூ மணி பொன் வளையல்கள் அணிந்து
விலஸித வந மால-யோல்ல சந் மௌலிம் -ஜ்வலிக்கும் திரு அபிஷேகம்
காஞ்சந பீதாம் ஸூக ஆவ்ருதம் ப்ராம் ஸூகம் —முடிச் சோதி -கடிச் சோதி -அடிச் சோதி -பரஞ்சோதி மயம்-பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் பெருமாள் கடிகாத்ரி ஸூஹ்ருத மீடே -ஸூஹ்ருத தேவரை சரணம் அடைந்து ஸ்தோத்ரம் பண்ணுவோம்-

—————–

ஸத்பி பரிகதம மலை ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் ஹிரண்ய க்ருதம்
கடிகாத்ர் யுபரி ஸூமேரும் கலயே ஸத் வோத்தரம் ஸூரைஸ் ஸேவ்யம் –38-

அமலை: குற்றமற்ற, ஸத்பி: – முனிவர்கள்‌ முதலிய நல்லோர்களாலே, பரிகதம்‌ சூழப் பெற்றதும்‌, ஸம்ஸ்ரித ஸர்வம் ஸஹம்‌ – (1) அடைய பட்ட பூமியை உடையதும்‌ (பூமியில்‌ இருப்பதும்‌) (2) தன்னை யடைந்தவரின்‌ குற்றமெல்‌லாவற்றையும்‌ பொறுக்க வல்லதும்‌, ஹிரண்ய க்ருதம்‌ – (1) பொன்னால்‌ செய்யப்பட்டதும் (2) ஹிரண்யனைக்‌ கிழித்ததும்‌, ஸத்த்வ உத்தரம்‌ – அதிகமான ஸத்துவ குணம்‌ படைத்ததும்‌, ஸூரை: ஸேவ்யம்‌ – (1) தேவதைகளால்‌ ஸேவிக்கப்பட்டதும்‌, (2) தேவதைகளால் வசிக்கப் பெற்றதுமான, ஸுமேரும்‌ – மேரு மலையை, கடிகாத்ரி உபரி – கடிகை மலையின்‌ மேலே, கலயே – காண்கிறேன்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை மேரு மலையாக ரூபணம்‌ செய்கிறார்‌. மேருமலைக்கு இடப்பட்ட ஐந்து விசேஷணங்களில்‌ மூன்று சிலேடையினால்‌ இரண்டு பொருள்களைத் தருவன. மற்ற இரண்டும்‌ ஒரே பொருள் தந்து பிரசித்தமான மேருவுக்கும்‌ எம்பெருமானாகிய மேருவுக்கும்‌ பொதுவாய்‌ நிற்பன. ஸம்‌ஸ் ரிதா – ஸர்வம்‌ ஸஹா யேந ஸ: – என்கிற வ்யுத்பத்தியால்‌ பூமியில்‌ இருக்கும்‌ : மேருமலையைக்‌ குறிப்பிடுகிறது ஸம்ச்ரிதஸர்வம்‌ ஸஹ: என்பது. அதுவே – ஸம்‌ ச்ரிதாநாம்‌ ஸர்வம்‌ (தோஷம்‌) ஸஹதே என்னும்‌ வ்யுத்பத்தியாலே ஆஸ்ரிதர்களுடைய குற்றங்கள்‌ அனைத்தையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிற எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது. ஹிரண்ய க்ருதம்‌ என்பது ஹிரண்யேந க்ருத: என்ற வ்யுத்பத்தியாலே பொன்னாலான மேருவைக்‌ குறிக்கிறது. ஹிரண்யம்‌ க்ருந்ததி இதி – ஹிரண்யக்ருத்தம்‌, ஹிரண்ய க்ருதம்‌ என்ற வ்யுத்பத்தியால்‌ ஹிரணியனைக்‌ கிழித்த எம்பெருமானாகிய மேருமலையைக்‌ குறிக்கிறது; க்ருதீ – ஸ்சேதநே என்பது தாது.-ஸுரைஸ்ஸேவ்யம்‌ என்பதில்‌ “ஸேவ்யம்‌” என்பது வசிக்கத்தக்கது என்ற பொருளைத் தந்து மேருவைக்‌ காடடிகிறது. தேவர்கள்‌ மேருமலையில்‌ வசிப்பதனால்‌. அதுவே ஸேவிக்கத்தக்கது என்னும்‌ பொருளைக்‌ காட்டி தேவர்களால்‌ ஸேவிக்க (வணங்கத்தக்க எம்பெருமானைக்‌ காட்டுகிறது. பிரசித்தமான மேரு பூமியில்‌ இருக்கிறது. எம்பெருமானாகிய மேரு கடிகைமலையில்‌ விளங்குகின்றது என்பது இரண்டு மேருக்களுக்கும்‌ வாசி

ஸத்பி பரிகதம் அமலை –சாத்விகர் களால் சூழப்பட்ட
ஸம் ஸ்ரித ஸர்வம் ஸஹம் -பூமியை அடைந்து -நன்றாக ஆஸ்ரயம் அடைந்தவர்கள் அகம் பொறுத்து
ஹிரண்ய க்ருதம் -பொன் மயமான -ஹிரண்ய அசுரனைக் பாக்கியவான்
கடிகாத்ர் யுபரி -கடிகாத்ரி மலைக்கு மேல் உள்ள அக்காரக்கனியை –
ஸூ மேரும் கலயே -காண்கின்றேன்
ஸத் வோத்தரம் -ஸாத்விக குணம் மிக்கு
ஸூ ரைஸ் ஸேவ்யம் –தேவர்கள் இருப்பிடம் -ஸாத்விக குணம் உள்ள மலை –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே
அடுத்த ஸ்லோகத்தில் திருப் பாற் கடலுடன் ஸாம்யம் அருளிச் செய்கிறார் –

———–

ஸரஸம் ஸம்ப்லுத வேலம் சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம்
கம்பீரம் அமிதம் அமலம் காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் –39-

ஸரஸம்‌ – (1) ஆனந்தத்தோடு கூடியவனும்‌ (2) சுவையோடு கூடியதும்‌, ஸம்ப்லுத வேலம்‌ – (1) கரை போல்‌ மேட்டு மடையான நீசர்களிடமும்‌ (அருள்‌ செய்வதற்காக) செல்லுமவனும்‌ (2) கரையையும்‌ மூழ்கடிப்பதும்‌, ஸந்த்ருத மணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ (1) நன்றாக தரிக்கப்பட்ட கெளஸ்து மணி, ஸ்ரீமஹாலக்ஷ்மி, சங்கு இவற்றை உடையவனும்‌ (2) இவற்றை யுடையதும்‌, கம்பீரம்‌ (1) ஆழமான திருவுள்ளமுடையவனும்‌, (2) ஆழமுடையதும்‌, அமிதம்‌ – (1) தேச கால வஸ்துக்களால்‌ அளவுபடாதவனும்‌ (எல்லா தேசத்திலும்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ எல்லாப்‌ பொருளாகவும்‌ இருப்பவனும்‌) (2) பரந்ததும்‌ (விசாலமானதும்‌) அமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌, (2) அழுக்கற்றதும்‌ ஆகிய, கடிகாசலேச கலசாப்திம்‌ (1) கடிகைமலைத் தலைவனாகிய (2) திருப்பாற்‌ கடலை, காஹே – (1) அனுபவிக்கிறேன்‌ (2) குடைந்தாடுகிறேன்‌.
இதில்‌ எம்பெருமானைத்‌ திருப் பாற்கடலாக அருளிச் செய்கிறார்‌. ஸந்த்ருதமணிராஜ ஸரஸிஜா சங்கம்‌ என்பது, பாற்கடலைக்‌ கடைந்து கெளஸ்துபத்தையும்‌ ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்‌ எம்பெருமான்‌ கைப்பற்றியதனால்‌ கடைவதற்கு முன்பு பாற்கடலிலும்‌, கடைந்த பின்பு எம்பெருமானிடமும்‌ அவையிரண்டு முள்ளமையும்‌, எம்பெருமானிடமும்‌ பாஞ்சஜந்யமாகிய சங்கு உள்ளமையினாலும்‌, பாற்கடலில்‌ சங்குகள்‌ இருப்பதனாலும்‌, சங்குள்ளமையும்‌ எம்பெருமானிடமும்‌ பாற்கடலிலும்‌ பொருந்தும்‌. மற்றவை ஸ்பஷ்டம்

ஸ ரஸம் ஸம் ப்லுத வேலம் -பாற் கடல் -ரஸம் மிக்கு -கரை இருக்குமே
ஆனந்த ப்ரஹ்மம் -ஸம்ஸாரிகளுக்கும் ஆஸ்ரயிக்கும் படி
சந்த்ருத மணி ராஜ சரசிஜா சங்கம் -கௌஸ்துப -ஸிந்து கன்யா சங்கங்கள் தரித்து
கௌஸ்துப மணியையும் திருவையும் மார்பில் கொண்டவன் சங்கு ஆழ்வான் அனைத்தையும் தரித்து
கம்பீரம் -தேஜஸ் மிக்கு
அமிதம் -எல்லை அற்ற -கல்யாண குண ஏக ஸ்தானம்
அமலம் -நிர்மலம்
காஹே கடிகாசலேஸ கலஸாப்திம் —குடைந்து நீராடும் படி அக்காரக்கனி பாற் கடல் போல் உள்ளானே –

————-

விகத தமோ க்ரஹம் அசலம் வ்ருத்தி க்ஷய ரஹிதம் அநு தயாஸ்த மயம்
விலஸித மாநஸ கமலம் வீஷே கடிகாத்ரி விதும் அஹோ விமலம் -40-

விகத தமோ க்ரஹம்‌- (1) தமோ குணத்தினால் பிடிக்கப்படாதவனும்‌ (2) ராகுவினால்‌ உண்டாகும்‌ கிரஹணமில்லாதவனும்‌, அசலம்‌ (1) அழி வற்றவனும்‌ (2) அசைவில்லாதவனும்‌, வ்ருத்தி க்ஷய ரஹிதம்‌ – (1,2) வளர்வும்‌ தேய்வும்‌ இல்லாதவனும்‌, அநுதயாஸ்தமயம்‌ – (1,2) பிறப்பும்‌ இறப்புமற்றவனும்‌, விலஸித மாநஸ கமலம்‌ (யோகிகளின்‌) ஹ்ருதய கமலத்தை மலரச்‌ செய்பவனும்‌ (2) மாநஸ ஸரஸ்ஸிலுள்ள தாமரை மலரை மலரச் செய்பவனும்‌, விமலம்‌ – (1) குற்றமற்றவனும்‌ (2) களங்கமற்றவனுமாகிய. கடிகாத்ரி விதும்‌- கடிகை மலையிலுள்ள (1) (எம்பெருமானாகிய) (2) சந்திரனை, வீக்ஷே – ஸேவிக்கிறேன்‌. அஹோ – ஆச்சரியம்‌.
எம்பெருமானாகிய சந்திரன்‌ உலகிலுள்‌- சந்திரனுக்கு முரண்பட்டவனாக இருப்பதனால்‌, இப்படிப்பட்ட சந்திரனைக்‌ காண்‌பதில்‌ ஆச்சரியமடைகிறார்‌.
சந்திரனுக்கு – ராஹுக்ரஹணமும்‌ வளர்வும்‌, தேய்வும்‌, பிறப்பும்‌, இறப்பும்‌, களங்கமும்‌, தாமரை மலரைக்‌ கூம்பச்‌ செய்தலும் உண்டு. இவையில்லாத சந்திரன்‌ கடிகைமலை யெம்பெருமான்‌. எம்பெருமான்‌ பத்தில்‌ விசேஷணங்களுக்கு வேறு பொருளும்‌ காட்டப்பட்டமை காணத்தக்கது

விகத தமோ க்ரஹம் -தமோ குணங்கள் கிட்டாவே
அசலம் -ஸ்திரமாக
வ்ருத்தி க்ஷய ரஹிதம் -வளருதல் தேய்தல் இல்லையே
அநு தயாஸ்த மயம்-பிறப்பு மறைவு இல்லையே
விலஸித மாநஸ கமலம் வீஷே -ஹ்ருதய கமலத்தை விகஸிக்கும்
கடிகாத்ரி விதும் –அக்காரக்கனி சந்திரன் களங்கம் தீர்க்கும் -துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன்
அஹோ விமலம் –

————

நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா மம மநஸி வாரிதம் திமிரம்–41-

நிரவதிக நித்ய மஹஸா – எல்லை யற்ற அழியாத ஒளியை உடையதும்‌, நிர்மல முக்தா அநுபந்த ஸுபகேந – சுத்தமான முத்துக்களே சேர்ந்ததனால்‌ அழகுடையதும்‌, கடிகாத்ரிமகுடபாஜா – கடிகை மலையின்‌ சிகரத்தை அடைந்ததுமான, மணிநா எம்பெருமானாகிய ரத்தினத்தினொளியினால்‌. மம மநஸி – எனது மனஸ்ஸில்‌, திமிரம்‌ அறியாமையாகிய இருள்‌, வாரிதம்‌ – போக்கடிக்கப்பட்டது.
ரத்தினத்தினொளியினால்‌ புறவிருள்‌ நீங்கும் எம்பெருமானாகிய ரத்தினத்தினால்‌ அகவிருளாகிய அஜ்ஞானம்‌ நீங்கும்‌ ஜ்ஞானம்‌ உண்டாகும்‌. “மயர்வற மதிநலமருளினன்‌”, என்றாரிறே ஆழ்வார்‌. நிரவதிக நித்ய மஹஸா நிர்மல முக்த அநுபந்த ஸுபகேந என்ற இரண்டு விசேஷணங்களாலே – எல்லை யில்லாத நித்ய ஸூரிகளாலே ஒளிபெறுபவன்‌ என்றும்‌, ஸம்ஸார ஸம்பந்தமாகிய மலமறப்பெற்று முக்தியடைந்தவர்களோடு தொடர்பினால்‌ அழகுடையவன்‌ என்றும்‌ எம்பெருமான்‌ கூறப்படும்‌ பாங்கும்‌ அறியத் தக்கது –

நிரவதிக நித்ய மஹஸா –எல்லை அற்ற மஹத்வ தேஜஸ் -நித்ய ஸூரிகள் ஸமூஹம்
நிர்மல முக்த அநு பந்த ஸூப கேந –அழகிய முத்துக்கள் -முக்தாத்மாக்கள் சேர்ந்து
கடிகாத்ரி மகுட பாஜா மணிநா –அக்காரக்கனி யான ரத்ன தேஜஸ் ஸூ
மம மநஸி வாரிதம் திமிரம் -அஞ்ஞானம் போக்கி அருளட்டும் –சாஷாத்காரம் பெற்று அனுபவிக்கிறார்-அடுத்த ஸ்லோகம் மரகத அனுபவம் –

————–

அவிரள விஸ்ருமர க்ருணிநா ஹரி மணிநா சதத மாஹித ஒவ்ஜ்வல்ய
கநக நக கல்பிதோயம் கடகோ கடிகா மஹீ ப்ருதோ பாதி –42-

அவிரள விஸ்ருமர க்ருணிநா – இடைவிடாமல்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – பச்சைநிறமுள்ள மரகத ரத்தினத்தினால்‌, ஸததம்‌ – எப்பொழுதும்‌, ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – உண்டு பண்ணப்பட்ட பிரகாசத்தை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப்பட்ட, அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: கடக: – கடிகை மலை யரசனுடைய கை வளையல்‌, பாதி – விளங்குகிறது.
அவிரள விஸ்ருமர க்ருணிநா – நெருக்கமாகப்‌ பரவுகிற ஒளியை யுடைய, ஹரிமணிநா – ஹரியாகிற எம்பெருமானாகிற ரத்தினத்தினால்‌, ஸததம்‌ ஆஹித ஒளஜ்ஜ்வல்ய: – எப்போதும்‌ உண்டாக்கப்‌பட்ட பளபளப்பை யுடையதாக, கநகநக கல்பித: கட்டிப் பொன்னால்‌ செய்யப் பெற்ற (பொன் வர்ணமுள்ள) அயம்‌ – இந்த, கடிகாமஹீப்ருத: – கடிகையென்னும்‌ மலையினுடைய, கடக. – தாழ்வரை, பாதி – விளங்குகிறது.
ஹரி: – (1) எம்பெருமான்‌ (2) பச்சைநிறமுள்ளது. கடக: – (1) வளையல்‌ (2) தாழ்வரை. மஹீப்ருத்‌ – (1) அரசன்‌ (2) மலை.

அவி ரல விஸ்ரு மர க்ருணிநா –இடைவிடாத ஒளி பரவி-ஹரி மணிநா -மரகத ரத்னம் –நெருக்கமான ஒளி-சதத மாஹித ஒவ்ஜ்வல்ய —எப்பொழுதும் தேஜஸ் மின்னி
கிருபை கடாக்ஷம் வர்ஷம் பொழிந்து கொண்டே உள்ளான்
கநக நக கல்பிதோயம் கடகோ –தங்க -மயமான கட்டிப் பொன்னால் செய்த வளையல்
தாழ்வரை எங்கும் பரவி மின்னிக்கொண்டு உள்ளதே
கடிகா மஹீ ப்ருதோ பாதி —எம்பெருமானது -அக்காரக்கனி யுடைய திருக் கரங்களில் சாத்தி அருளுகிறார்

————–

ஸூ மநோ வ்ருதேந மதுநா ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா
மம கடிகாசல ஜநுஷா மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க –43-

ஸுமநஸ்‌ வ்ருதேந – (1) மலர்களிலிருந்து ஸ்வீகரிக்கப்பட்டதும்‌ (2) பண்டிதர்களாலே உபாயமாகவும்‌ உபேயமாகவும்‌ வரிக்கப் பட்டதும்‌, ஸுதராம்‌ மதுரேண – மிகவும்‌ இனிமை யானதும்‌, சுத்தி குண பாஜா – (1) கசண்டற்றுத்‌ தூய்மையானதும்‌ (2) பரிசுத்தமானதும்‌, கடிகாசல ஜநுஷா – கடிகை மலையில்‌ தோன்றியதுமான, மதுநா (எம்பெருமானாகிய) தேனாலே, மம அடியேனுடைய, மாநஸ நாமா ப்ருங்க: மனமென்னும்‌ வண்டானது, ஸமுத் ஸுக: ‘பவதி) மிகவும்‌ ஆசை யுடையதாகிறது. அந்தத்‌ தேனைப் பருக என்‌ மனம்‌ ஆசைப் படுகிறது என்றபடி.
தமது மனதை வண்டாகவும்‌ எம்பெருமானைத்‌ தேனாகவும்‌ வருணித்தாராயிற்று.
முதற் பொருள்‌ தேனுக்கும்‌ இரண்டாம்‌ பொருள்‌ எம்பெருமானுக்கும்‌ இயையும்‌. ஸுமநஸ: — மலர்களும்‌ பண்டிதர்களும்‌. ஆழ்வார்கள்‌ இப் பெருமானை அக்காரக்கனி என்றார்கள்‌. இவர்‌ அம்ருத பலம்‌ என்றும்‌ திருப்பாற்கடல்‌ என்றும்‌ தேனென்றும்‌ கூறுகிறார்‌. இவையனைத்தும்‌ மதுர தமமான வஸ்துக்களிறே

ஸூ மநோ வ்ருதேந மதுநா –சாத்விகர்களுக்கு- -உபாய உபேயம் இவனே அறிந்தவர்களுக்கு தேன்-ஸூதராம் மதுரேண ஸூத்தி குண பாஜா -மிகவும் இனிமையான -ஸூத்தமான -ஸாத்விக குணம்-கடிகாசல ஜநுஷா -இங்கு தான் உத்பத்தி ஆகிறது
மம மாநஸ நாமா ஸமுத் ஸூகோ ப்ருங்க —மனசாகிய வண்டு மிகவும் அபி நிவேசம் மிக்கு உள்ளதே-நம்மாழ்வார் தீர்க்க சிந்தயந்தி —எறும்பி அப்பா ஸ்வாமியோ பரம தீர்க்க சிந்தயந்தி -மா முனிகள் விஸ்லேஷத்தில் தரியாமல் திருவடித் தாமரையில் படியும் ப்ருங்கம் இவர் தானே-

———-

தீனே பூர்ணாம் பவதநுசரே தேஹி த்ருஷ்டிம் தயார்த்ராம் |
பக்த்யுத்கர்ஷம் வரவரமுநே தாத்ருசம் பாவயந்தீம் ||
யேந ஸ்ரீமந் த்ருத மஹமித: ப்ராப்ய யுஷ்மத் பதாப்ஜம் |
த்வத் விஶ்லேஷே தநு விரஹித: தத்ர லீனோ பவேயம் ||–ஸ்ரீ வர வர முனி சதகம் – 75

ஹே வரவரமுநியே உமது கருணை தோய்ந்த கடாக்ஷத்தைப் பூர்ணமாக எளியவனான
உமது பணியாளனான அடியேனிடத்தில் வைப்பீராக. அந்தக் கடாக்ஷமே உம்மிடத்தில் மேலான பக்தியைத் தரவல்லது.
அந்தக் கடாக்ஷத்தாலேயே இங்கிருந்து உமது திருவடித் தாமரையை அடைந்து
உமது பிரிவு ஏற்படும்போது சரீரமற்றவனாக அங்கேயே மறைந்தவனாவேன்.

—————

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத சததம் ஆப்து காமேந
கடிகாசல பிரணயிநா விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ–44-

அணுதரமபி – மிகச் சிறியதாயிருந்த போதிலும்‌, ஸ்வம்‌ – பொருளை ( பணத்தை) அர்ப்பயத: – தனக்குக்‌ கொடுக்கிற, அந்யாந்‌ மற்றவர்களை, ஸததம்‌ – எப்போதும்‌, ஆப்துகாமேந – அடைய விரும்பித்‌ தேடுகிற. கடிகாசல ப்ரணயிநா – கடிகை மலையில்‌ அன்பு மிக்க எம்பெருமானாகிற யாசகனாலே, விபுலம்‌ – மிகப் பெரிதான, ஹிரண்ய தாநம்‌ – ஸ்வர்ண தாநமானது, விஹிதம்‌ – செய்யப்பட்டது. அஹோ – ஆச்சரியம்‌.
தனக்குச்‌ சிறிதாவது பொருள்‌ கொடுப்பாருண்டா என்று தேடித் திரியுமவன்‌ ஸ்வர்ண தாநம்‌ செய்தானென்பது முரண்‌பட்ட விஷயம்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ ஹிரண்ய தானமாவது -ஸ்வர்ணதானமன்று. ஹிரண்யனைப்‌ பிளத்தலே யாகும்‌ என்று பொருள்படுதலால்‌ காண்க. தாநம்‌ என்னும்‌ சொல்‌ தாஞ்‌- தாநே- என்ற தாதுவிலிருந்தும்‌, தோ – அவகண்டநே – என்ற தாதுவிலிருந்தும்‌ உண்டாகக்‌ கூடியது. முதலது கொடுத்தலென்னும்‌ பொருளையும்‌, பின்னது பிளத்தலென்னும்‌ பொருளையும்‌ குறிப்பதாகும்‌.

அணு தரம் அபி ஸ்வம் அந்யாந் அர்ப்பயத -கிஞ்சித் சமர்ப்பித்தாலும் –பத்ரம் பலம் தோயம்
சததம் ஆப்து காமேந -எப்போதும் எதிர்பார்த்து இருக்கும்
அவாப்த ஸமஸ்த காமனும் நமது ஆபி முக்யம் எதிர்பார்த்து இருப்பானே
கடிகாசல பிரணயிநா -ஆசையுடன் உகந்து
விபுலம் விஹிதம் ஹிரண்ய தாநம் அஹோ –ஸ்வர்ண தானம் -ஸ்லேடை -ஹிரண்யனைப் பிளந்த –நமது அஹங்காராதிகளைப் போக்கித் தன் தாளிணைக் கீழ் -இசைவித்து -இருத்தும் அம்மான் அன்றோ –

————–

அநநு குண விஷய தீஷாம் அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா
கடிகாசல ப்ரணயிநா கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் –45-

அநிதம்‌ ப்ரதமா – அநாதியான. ஸரஸ்வதீ – வேத வாக்கானது,-அநநுகுண விஷய தீக்ஷாம்‌ – (பகவத் சேஷமாகிய ஆத்ம ஸ்வரூபத்துக்குத்‌) தகாத சப்தாதி விஷய(அநுபவதித்தில்‌ உள்ள விரதத்தை (நான் சப்தாதி விஷயங்களை யனுபவிப்பேனே தவிர எம்பெருமானை அனுபவிக்க மாட்டே( னென்னும்‌ ப்ரதிஜ்ஞையை) முக்த்வா -விடுவித்து, கடிகாசல ப்ரணயிதா – கடிகைமலையில்‌ பற்றுமிக்க எம்பெருமானோடே, கன அநுராகமமீம்‌ த்ருஷ்டிம்‌ – நிறைந்த பக்தி மயமான எண்ணத்தை, கடயதி – சேர்ப்பிக்கிறது
வேத வாக்கியங்களை அர்த்தத்தோடு தெரிந்து கொண்டால்‌, விஷயாநுபவத்தில்‌ ஆசை நசிக்கப் பெற்றுப்‌ பரம புருஷனிடத்தில்‌ பக்தி ரூபமான ஞானமுண்டாகி பகவதனுபவம்‌ கிடைக்குமென்றபடி. அநிதம்ப்‌ரதமா இது தான்‌ வேதம்‌ தோன்றிய முதற்காலம்‌ என்பதில்லாதது – அதாவது எப்டோது வேத வாக்குக்குமுள்ள வேறுபாடு. முக்த்வா அந்தர்ப்பாவிதணிஜந்தம்‌- 

அநநு குண விஷய தீஷாம் – –யாதானும் பற்றி நீங்கி விரதம் –
அநிதம் ப்ரதமா ஸரஸ்வதீ முக்த்வா –வேத புருஷன் வேத மாதா -திரு உள்ளத்தில் வந்ததும் அநாதி
ஸரஸ்வதி -வேத வாக்கு என்றபடி -முக்த்வா விடுதலை தருகிறாள்
கடிகாசல ப்ரணயிநா –இங்கு உகந்து இருந்து அருளும் அக்காரக்கனியின் மேல்
கடயதி த்ருஷ்டிம் கந அநுராக மயம் —நிறைந்த அபி நிவேசம் -பக்தியை யுண்டாக்க்கும் அன்றோ –

———–

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –46-

ஜராஆதிஅதீதேந – கிழத்தனம்‌ மரணம்‌ முதலியவற்றைக்‌ கடந்தவனும்‌, த்ருப்யந் மநஸா – அது காரணமாக மகிழ்ச்சி மிக்க மனமுடையவனும்‌, தைவ யோகாத்‌ த்ருஸ்யேந – அதிர்ஷ்ட யோகத்தினால்‌ காணத் தக்கவனுமான, கடிகாத்ரி யோகி புருஷேணே – கடிகை மலையிலுள்ள – யோக ஸித்தி பெற்ற பரம புருஷனோடு, ஸங்க: – ஸம்பந்தமானது, அகிலாம்‌ ஸித்திம்‌ – எல்லாவிதமான செல்வங்களையும்‌, ஸாதயதி – சாதித்துக்‌ கொடுக்கும்‌.
செல்வங்களாவன – இவ் வுலகிலும்‌, ஸ்வர்க்கம்‌ முதலிய உலகங்களிலும்‌ அனுபவிக்கும்‌ இன்பமும்‌, பரம பதத்கில்‌ அநுபவித்தற்குரிய பகவதனுபவ கைங்கரியங்களும்‌ ஆகும்‌. பகவானோடு ஸம்பந்தம்‌ பகவத் க்ருபையினால்‌ கிடைக்கும்‌. அந்த பகவத்‌ க்ருபை தான்‌ இங்கு அத்ருஷ்ட மெனப்பட்டது. அத்ருஷ்டமும்‌ விதியும்‌ ஒன்றே, விதி வாய்க்கின்று காப்பாரார்‌ பகவத்‌ க்ருபை பலிக்கும்போது தடுப்பார்‌ ஆர்‌ (திருவாய்‌ 5.1.1) என்றவிடத்தில்‌ விதி சப்தம்‌ பகவத் க்ருபா வாசகமாக ப்ரஸித்தமிறே. பகவத்‌ க்ருபையினால்‌ பகவத்‌ ஸம்பந்த மேற்பட்ட பிறகு, அகில ஸித்திகளும்‌ அந்த பகவத் க்ருபையினால்‌ தான்‌ உண்‌டாகும்‌. ஆக பகவத் க்ருபையினால்‌ பகவத் ஸம்பந்த முண்டாகி, அதனால்‌ பகவத் க்ருபை மேன்மேலும்‌ பெருகி அதன்‌ பிறகு ஸகல ஸித்திகளும்‌ ஏற்படுமென்றபடி. ஸங்கம்‌ – ஸம்பந்தம்‌- அன்பு என்றபடி “அன்புக் கடியானதுவே – (பகவத்‌ க்ருபையே) அடி சேருகைக்கும்‌ (பலத்திற்கும்‌ ஸாதனம்‌” என்றாரிறே -.நலமருளினன்‌ என்கொல்‌ என்று ஆமூலசூட.ம்‌ அருளால்‌ மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கு ஸாதநம்‌.-அழகியமணவாளப்பெருமாள்‌ நாயனார்‌ (ஆசார்ய ஹ்ருதயம்‌ 114)-“அறியாக் காலத்துள்ளே அடிமைக் கணன்பு செய்வித்து’” (திருவா. 2- 3 – 3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்யதை யில்லாத அதி பால்யததிலே அன்பை விளைத்தானென்றும்‌, ““ஆராவன்பிலடியேனுன்னடி சேர்‌ வண்ணமருளாயே” (திருவா. 6 – 10 – 2) என்கையாலே அந்த பக்திக்கடியான கிருபையே பகவத் ப்ராப்திக்கு சாதநம் என்கிறார் –

த்ருஸ்யேந தைவ யோகாத் த்ருப்யன் மனஸா ஜராத்யதீ தேந -ஜரா கொடியது –கிளர் ஒளி கிளமை கெடுவதன் முன்னம்-இவற்றை அதீதேந -கடந்து -மகிழ்ந்த திரு உள்ளத்துடன் இருக்க-அவன் தர்சனம் பெறுவதற்கும் திரு உள்ளத்தில் ஸங்கல்பிக்க வேண்டுமே
ஸாதயதி ஸித்திம் அகிலாம் ஸங்கோ கடிகாத்ரி யோகி புருஷேண –அவன் உடன் ஸம்ஸ்லேஷித்து-யோக நரஸிம்ஹன் அன்றோ –ஸகல பல பிரதன் -அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளுவான் அன்றோ

———-

பிரபலைர் மம இந்த்ரியாஸ் வை பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே
பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ கடிகாத்ரி பார்த சாரதி நா –47-

மம – அடியேனுடைய, மந: – மனமென்கிற, ரத: – தேரானது, (முதலில்‌) ப்ரபலை: அதிக பலமுள்ள, இந்த்ரிய அஸ்வை: – செவி வாய்‌ கண்‌ முதலிய இந்த்ரியங்களாகிற குதிரைகளினால்‌, விஷம விஷய காந்தாரே – கொடிய சப்தாதி விஷயங்களாகிற காட்டு வழியில்‌, பரிக்ருஷ்ட: – நன்றாக இழுத்து” செல்லப்பட்டதாய்‌, (பின்பு) கடிகாத்ரி பார்த்த ஸாரதிநா – கடிகைமலையிலுள்ள நரஸிம்மப் பெருமாளாகிற பார்த்த ஸாரதியினால்‌, அக்ர்யாம்‌ பதவீம்‌ – உயர்ந்த பகவத்‌ பாகவதாசார்யர்களாகிற வழியை, ப்ராப்த: – அடைந்தது.
ஸாரதி யில்லாத தேரைப்‌ பொல்லாத குதிரைகள்‌ கல்லும்‌ முள்ளும்‌ மிக்க காட்டு வழியில்‌ இழுத்துச்‌ சென்றன-ஸமர்த்தனான ஸாரதி தேருள்ள இடமறிந்து சென்று அதின் கண்‌ ஏறிக் கொண்டு குதிரைகளை அடக்கி, அக் குதிரைகளின்‌ வாயிலாகவே உயர்ந்த வழியில்‌ இழுத்துச்‌ செல்லுவது உலகவியல்பு. அது போன்று பகவத்‌ க்ருபை யில்லாத போது பொல்லாத இந்த்ரியங்களால்‌ கொடிய விஷயங்களில்‌ இழுத்துச்‌ செல்லப்பட்ட மனமானது பகவானால்‌ க்ருபையோடு அவ்விந்த்ரியங்களின்‌ மூலமாகவே நல்ல வழியை அடைவிக்கப்‌ படுகிறதென்றபடி. நரஸிம்மப்‌ பெருமாளே பார்த்த ஸாரதி யாகையால்‌ கடிகாத்ரி பார்த்தஸாரதி என்று நரஸிம்மப்‌ பெருமாளைக்‌ குறிப்பிட் டருளினார்‌. மனம்‌ ஏதாவதொரு விஷயத்தைப்‌ பற்றியே நிற்கும்‌. இது வரையில்‌ நிக்ருஷ்ட விஷயத்தை பற்றிக்‌ கொண்டு அலைந்த மனஸ்ஸு பகவத்‌ க்ருபையினால்‌ உத்க்ருஷ்ட விஷயத்தைப்‌ பற்றி நிலைத்து நின்றதென்றார்‌ இதனால் –

பிரபலைர் மம இந்த்ரிய அஸ்வை -நமது பிரபல இந்த்ரியங்களே குதிரை-பரிக்ருஷ்டா விஷம விஷய காந்தாரே -விஷயாந்தரங்களை நோக்கி -காட்டு வழி -நன்று இழுத்துச் செல்ல-பதவீம் மநோ ரத அக்ரயாம் ப்ராப்தோ -அவற்றை அடக்கி தனது பக்கம் இழுத்துச் செல்லும்-அக்ர -உயர்ந்த நிலைக்குக் கூட்டிச் செல்கிறார் -என்றபடி-கடிகாத்ரி பார்த சாரதி நா —அக்காரக்கனியே பார்த்த சாரதி – நக்ஷத்ர மாலிகை முதல் ஸ்லோகம் -ஞான முத்திரை காட்டி அடக்கி ஆளும் -ஆழ்வார் ஜீயாத் –

————

அதி வேல விலஸிதோர்மே அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ
ப்ராப்தோ அஸ்மி பவ பயோதே பாரம் கடிகா நியாமகே நாஹம் –48-

அதிவேல விலஸித ஊர்மே: – கரையைக்‌ கடந்து வீசுகிற அலைகளை யுடையதும்‌,
(அதனால்‌) அவகாஹவதாம்‌ – மூழ்கியவர்களை . அத:நயனஹேதோ: – அடியில்‌ இழுத்துச்‌ செல்வதற்குக்‌ காரணமானதுமான, பவ பயோதே: – ஸம்ஸாரமாகிற கடலினுடைய-பாரம் –– அக்கரையை, கடிகாநியாமகேந – கடிகை மலை யரசனாகிய படகோட்டியினாலே, அஹம்‌ ப்ராப்த: அஸ்மி – அடியேன்‌ அடைந்‌தவனானேன்‌.
நீச விஷயங்களை அனுபவித்து அனுபவித்து ஸம்ஸாரமாகிற கடலில்‌ மூழ்கிக்‌ கொண்டிருந்த அடியேனை, எம்பெருமான்‌ படகோட்டியாக எழுந்தருளி க்ருபை செய்து அக் கடலின்‌ அந்தண்டைக்‌ கரைய அடைவித்தானென்றார்‌. நியாமக: – (1) ஆணையிடுமரசன்‌ (2) படகோட்டி –

அதி வேல விலஸிதோர் மே -அளவு கடந்த -கடலின் அலைகள் -ஸம்ஸார சாகர அலைகள்
அவகாஹவதாம் அதோ நயந ஹேதோ -மூழ்கினவர்களை-ப்ராப்தோ அஸ்மி பவ பயோ தே பாரம் -அக்கரைப்படுத்தி அடைய வைத்து அருளும்-கடிகா நியாமகே நாஹம் –கடத்தடம் குன்றின் அரசன் என்னும் படகோட்டி -நாவாய் முகுந்தன் அன்றோ -இவனும்

——–

கடிகா யதி குண கடிதா கடிகாசல சக்ரி கல்பிதா நஸ்யு
பவ கூபதோ ஜடாநாம் பவ்ய கோ வா ஸமுத்தரண ஹேது -49-

கடிகா: – (அறிவிலிகளின்‌ வாழ் நாட்களில்‌) சில நாழிகைகள்‌-குணகடிதா-தன்னுடைய க்ருபை முதலிய குணங்களோடு சேர்க்கப் பட்டவைகளாக, கடிகாசல சக்ரி கல்பிதா: ந ஸ்யு யதி – கடிகை மலையிலுள்ள சக்ர தாரியான எம்பெருமானால்‌ ஆக்கப் படாவிட்‌டால் , ஜடாநாம்‌ – அறிவற்ற ஜனங்களை, பவ கூபத: -ஸம்ஸாரமாகிற கிணற்றிலிருந்து. பவ்ய:ஸமுத்தரண ஹேது: – நல்லதான – மேலே தூக்குவதற்குக்‌ காரணம்‌, கோ வா .அஸ்தி – என்ன இருக்கிறது.
அறிவும்‌ ஆற்றலுமுடையவர்கள்‌ பக்தி யோகம்‌ முதலியவற்றை அநுஷ்டித்து ஸம்ஸாரமென்னும்‌ கிணற்றிலிருந்து மேல்‌ செல்லுகிறார்கள்‌. அறிவாற்றல்‌ இல்லாதவர்களுக்கு பகவானுடைய கிருபை முதலிய குணங்களே அக் கிணற்றிலிருந்து மேலெழுவதற்குக்‌ காரணம்‌ என்ற படியாம்‌. “நாஸெள புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம்‌ க்ருபயைவாஹம்‌ ப்ரேக்ஷே கஞ்சித்‌ கதாசந” (முற்கூறப்பட்ட நான்‌ புருஷகாரமான பிராட்டி காரணமாகவோ , பக்தி ப்ரபத்தி முதலிய வேறு காரணமாகவோ ஒருவனைக்‌ கடாக்ஷிப்பதில்லை; ௭ன்னுடைய நிர்ஹேதுகமான க்ருபையினால்‌ மட்டுமே யாரோவொருவனை ஏதோவொரு காலத்தில்‌ கடாக்ஷிக்கிறேன்‌ – லக்ஷமீ தந்த்ரம்‌) என்று பகவான்‌ கூறியபடி – அறிவற்ற வர்களை ஏதோவொரு காலத்தில்‌ க்ருபையால்‌ கடாக்ஷிக்கிறேன்‌ என்ற பொருளையே கடிகா: குணகடிதா: சக்ரி கல்பிதா: (சில நாழிகைகளில்‌ சக்ர தாரியானவன் அறிவிலிகள்‌ விஷயத்தில்‌ தனது க்ருபையை உபயோகப் படுத்துகிறான்‌) என்றார்‌. எம்பெருமான்‌ அறிவிலிகள்‌ வாழ்நாளில்‌ ஏதோவொரு ஸமயத்தில்‌ தன்‌ க்ருபையை ௨பயோகிக்காதிருந்தால்‌, அவர்கள்‌ ஸம்ஸாரமாகிய அக்கிணற்றிலிருந்து மேலே வருவதற்கு மோக்ஷம்‌ பெறுவதற்கு வேறொரு உபாயமில்லை என்பது கருத்து. இங்கு வேறொரு பொருளும்‌ தோன்றுகிறது.
சக்ரி கல்பிதா: கடிகா: குணகடிதா: யதி நஸ்யு: ஜட(லா)நாம்‌ கூபத: ஸமுத்தரண ஹேது: கோ வா அஸ்தி? என்று அந்வயித்தால்‌, குயவனால்‌ செய்யப்பட்ட பானைகள்‌ தாம்புக் கயிறோடு சேர்க்கப்படாவிட்டால்‌ கிணற்றிலிருந்து ஜலத்தை மேலே தூக்குவதற்கு வேறு உபாயம்‌ என்ன இருக்கிறது – என்பதே அப்பொருள்‌. டலயோ; அபேத: – (ட, ல என்ற இரண்டும்‌ ஒன்றே) என்ற ந்யாயத்தைக்‌ கொண்டு, ஜடாநாம்‌ என்பது இப்பொருளில்‌ ஜலாநாம்‌ பானைகள்‌. சக்ரீ – (1) சக்ரதாரியான எம்பெருமான்‌, (2) பானை செய்வதற்காகச்‌ சுழற்றப்படும்‌ சக்கரத்தையுடைய குயவன்‌. குண: -(1) நல்லகுணம்‌, (2) கயிறு-முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸம்ஸாரத்தைக்‌ கடலென்றார்‌. இதில்‌ கிணறென்றார்‌. நீஞ்சத்‌ தெரியாதவனுக்கு இவை யிரண்டும்‌ உயிரை மாய்ப்பனவே யாகும்

கடிகா யதி குண கடிதா நஸ்யு-கருணாதி குணங்களால் சில நாழிகை காட்டா விடில்
கடிகா சல சக்ரி கல்பிதா -சக்ரம் ஏந்திய அக்காரக்கனி என்றும் குயவன் என்றும்
பவ கூபதோ ஜடா நாம் பவ்ய -அறிவிலிகள் ஸம்ஸார பவக்கடலில் இருந்து
கடா நாம் -என்று கொண்டு குடாதிகள் கொண்டு கிணறு முதலியவற்றில் எடுக்க முடியாதே
கோவா ஸமுத்தரண ஹேது -உஜ்ஜீவனம் ஹேது ஒன்றுமே இல்லையே

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —ஆர்த்தி பிரபந்தம் -9-

———

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைத்ய கல்பிதேந பதா
பவ ரோகதோ அசிராத் தே முக்தா ஸ்நாநம் சரந்தி விரஜாயாம் -50-

யே- யார்‌, ஸ்வயாத்ராம்‌ – தமது தேஹ யாத்ரையை (ஜீவ தசையை) கடிகாசல வைத்ய கல்பிதேந பதா – கடிகை மலையிலுள்ள வைத்‌யனாகிற எம்பெருமானால்‌ கற்பிக்கப்பட்ட வழியாலே, கலயந்தி– செய்கிறார்களோ (நடத்துகிறார்களோ) தே- அவர்கள்‌, பவரோகத: – ஸம்ஸாரமாகிய வியாதியிலிருந்து, அசிராத்‌ – விரைவிலேயே, முக்தா: விடுபட்ட வர்களாய்க்‌ கொண்டு, விரஜாயாம்‌ – விரஜா நதியில்‌, ஸ்நாநம்‌ சரந்தி – ஸ்நாநம்‌ செய்கிறார்கள்‌.
மனிதர்‌ தம்‌ வாழ்நாள்களில்‌ எம்பெருமான்‌ கீதை முதலிய நூற்களில்‌ மோக்ஷ உபாயமாக விதித்த – தன்னையே ௨பாயமாகப்‌ பற்றும்படி விதித்த வழியில்‌ செல்வார்களாகில்‌ விரைவிலேயே (இப்பிறவியின்‌ இறுதியிலேயே) ஸம்ஸாரமென்னும்‌ நோயிலிருந்து விடுபட்டுச்‌ சென்று விரஜையாற்றில்‌ நீராடித்‌ தூய்மை பெற்றுப்‌ பரமபதம்‌ செல்லுகிறார்கள்‌ என்றபடி. ஸம்ஸாரத்தை இதில்‌ வியாதியாகக்‌ குறிப்பிட்டார்‌.
வைத்யன்‌ சொல்லும்‌ வழியில்‌ நடப்பவர்கள் வியாதி தீரப் பெற்று – இத்தனை நாட்கள்‌ ஸ்நாநம்‌ செய்யாத குறை தீரும்படி ஸ்நாநம்‌ செயகிறார்ளென்பதும்‌ காண்க-

கலயந்தி யே ஸ்வாத் யாத்ராம் கடிகாசல வைதய கல்பிதேந பதா -தேக யாத்ரையை இவன் வழி நடத்தி-உபதேசங்கள் பலவும் அருளிச் செய்தானே-பவ ரோகதோ அசிராத் தே முக்தா -சம்சார ரோகம் அதி சீக்கிரமாகத் தீர பெற்று-ஸ்நாநம் சாந்தி விரஜாயாம் -குள்ளக் குளிர்ந்து விரஜையிலே நீராடலாம் அமானவன் கர ஸ்பர்சம் கிட்டும்-மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-கீழே 22 ஸ்லோகம் நரஸிம்ஹ சரம ஸ்லோகம் பார்த்தோம்
மஹா விஸ்வாசமே வேண்டும்-வடிவாய மா மகளும் நில மகளும் நடுவாக வீற்று இருந்த அவனைக் கிட்டி அனுபவித்து -அனுபவ ஜனித கைங்கர்யமும் செய்யப்பெற்று நித்யர்கள் உடன் ஒரு கோவையாகப் பெறுவோமே

———–

தததோ ஜகத் யுதாரான் ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ரா ஹு
ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –51-

ஜகதி – உலகில்‌, அர்த்திந: – யாசகர்கள்‌, ஸ்வாபேக்ஷிதம்‌ அர்த்தம்‌ – தமக்கு வேண்டிய பொருளை, ததத: – கொடுப்பவர்களை, உதாராந்‌ – கொடையாளிகளாக, ப்ராஹு: – சொல்லுகிறார்கள்‌. கடிகாசலார்த்திநா புந: – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற யாசகனாலோ வெனறால்‌, (இதற்கு மாறாக) (தன்னிடமிருந்து) அர்த்தாந்‌ – பொருளை (புருஷார்த்தங்களை) ஆததத: – யாசித்துப்‌ பெறுமவர்கள்‌ உதாரா: கொடையாளிகளாக, உக்தா: – சொல்‌லப்பட்டார்கள்‌.
உலகில்‌ கொடுப்பவர்களே கொடையாளிகளாகச்‌ சொல்லப் படுகின்றனர்‌. “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜஞாநீ ச பரதர்ஷப’, “உதாரா: ஸர்வ ஏவைதே’ (கீதை – அத்‌. 7.16) இழந்த செல்வத்தை விரும்பும்‌ அர்த்தார்த்தியும்‌, ஆத்மாநுபவரூபமான கைவல்யத்தை விரும்பும்‌ ஜிஜ்ஞாஸூம்‌. என்னுடைய அநுபவத்தை விரும்பும்‌ ஜ்ஞாநியும்‌ ஆகிய இவர்களனைவரும்‌ (இவற்றை என்னிடமிருந்து யாசித்துப்‌ பெற்றாலும்‌ யாசகர்களல்லர்‌, பின்னையோ வென்றால்‌) கொடையாளிகளே யாகிறார்கள்‌ என்று எம்பெருமான்‌ யாசகர்களைக்‌ கொடையாளிகளென்றது காணத் தக்கது. பொருளைக்‌ கொடுப்பவர்கள்‌ கொடையாளிகள் அல்லர்‌, பொருளைக்‌ கொடுப்பவர்களுக்குக்‌ கொடையாளியாகுந் தன்மையைக்‌ கொடுப்பவர்களே (யாசகர்களே) கொடையாளிகள்‌ என்பது பரமோதாரனான எம்பெருமானுடைய திருவுள்ளம்‌. கர்ணனிடம்‌ பிறர் யாசித்துப்‌ பெற்ற பொருள்‌ அப்பொழுதே அழிந்து விட்டது. கர்ணனுடைய கொடையாளியாகுந்‌ தன்மை (கொடையாளி என்னும்‌ பெயர்‌) என்றும்‌ அழியாமல்‌ நிற்கிறது என்பது ஈண்டு நினைக்கத் தக்கது. பொருள்‌ அநித்யம் – புகழ்‌ நித்யமிறே –

தததோ ஜகத் யுதாரான் -கொடுப்பவர்களை உலகம் உதாரர் என்பர் -கர்ணன் பெற்ற பெயர்
ஸ்வ அபேக்ஷிதம் அர்த்தம் அர்த்திந ப்ராஹு -கேட்டதைக் கொடுப்பவர் களுக்கு முன்பு இவ்வாறு உலக வழக்கு-ஆதத்த புநர் அர்த்தான் உக்தா கடிகாசல அர்த்திந உதாரா –இங்கு அக்காரக்கனியே யாசகன்-தன்னைக் கொடையாளியாக்கும் அனைவருமே உதாரர்
உதார -ஸர்வ கீதையில் அனைவரையும் -கொடையாளி யாக்கியவர்கள் –
அனைத்தையும் அருளி இன்னும் ஒன்றுமே செய்யாதவனாகவே ருணம் ப்ரவர்த்தம் என்று சென்றவன் அன்றோ-அந்தமில் பேர் இன்பம் கேட்டு இருப்பார்களே மம ஆத்மா என்பான் -அன்றோ –

————

தாதே ஹிதாதி கார்த்தான் ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம்
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா –52-

(உலகில்‌) தாதா – கொடையாளி ஸ்வ ஸம்ஸ்ரிதேப்ய: – தன்னை யண்டினவர்களுக்கு, ஸ்வ வ்யதிரிக்தாந்‌ – தன்னைவிட வேறான, ஈஹித அதிக அர்த்தாந்‌ – (அவர்கள் )விரும்பியதைக்‌ காட்டிலும்‌ அதிகமான பொருள்களை, ததாதி – கொடுக்கிறான்‌. கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா(து) – கடிகை மலை நரசிங்கப்‌ பெருமானாகிற கொடையாளியாலோ வென்றால்‌, ஸ்வஸம்‌ஸ்ரிதேப்ய: – தன்னை யடைந்தவர்களுக்கு,ஸ்வ:அபி – தானும்‌, தத்த: – கொடுக்கப்பட்‌டான்‌.

‘யாசகர்களே உதாரர்கள்‌, கொடுப்பவர்கள்‌ உதாரரல்லர்‌” என்பது எம்பெருமான்‌ திருவுள்ளமானாலும்‌, உண்மையை ஆராய்ந்தால்‌ எம்பெருமானே உதாரன்‌ என்பது இக் கவியின்‌ திருவுள்ளமென்பது இந்த ஸ்லோகத்தில்‌ விளங்குகிறது. உலகில்‌ கொடையாளிகள்‌, யாசிப்பவர்‌ விரும்பியவற்றையோ அவற்றைக்‌ காட்டிலும்‌ அதிகமாகவோ கொடுப்பார்களே யன்றித்‌ தன்னைக்‌ கொடுக்க மாட்டார்கள்‌. எம்பெருமான்‌ தன்னையும்‌ கொடுப்பான்‌. ஆகையால் எம்பெருமானாகிய கொடையாளியே உயர்ந்தவ னென்றதாயிற்று.
எம்பெருமான்‌ யாசிப்பவர்களுக்குத்‌ தன்‌னைக்‌ கொடுப்பதாவது, அவர்கள்‌ சொன்ன காரியத்தையெல்லாம்‌ தான்‌ செய்யுமளவுக்கு அவர்களுக்குத்‌ தன்னை இட்ட வழக்காக்கி வைப்பது. கண்ணபிரான்‌ அர்ச்சுநனுக்குத்‌ தேரோட்டியதும்‌ தூது நடந்ததும்‌, யதோக்தகாரி யெம்பெருமான்‌ திருமழிசைபிரான்‌ பின்னே சென்றதும்‌ திரும்பி வந்ததும்‌, திருக் குடந்தை ஆராவமுதாழ்வார்‌ திருமழிசை பிரானுக்கு எழுந்திருந்து பேசியதும்‌ முதலிய சரித்திரங்களே, பக்தர்களுக்கு எம்பெருமான்‌ தன்னைக்‌ கொடுத்தற்குப்‌ போதுமான சான்றுகளாகும்‌. “ஸோ5பி” என்று பாடம்‌ காணகிறது. அதைவிட ஸ்வோ$பி என்ற பாடமே சிறக்கும்‌. எம்பெருமானால்‌ அவனும்‌ கொடுக்கப்பட்டான்‌ என்பதை விட, எம்பெருமானால்‌ தானும்‌ கொடுக்கப் பட்டானென்பதன்‌றோ ஸ்வரஸமாவது. பூர்வார்த்தத்தில்‌ “தத்வ்யதிரிக்தாந்‌” என்னாமல்‌, “ஸ்வவ்யதிரிக்தாந்‌’ என்றது இதை வலியுறுத்தும்

தாதே ஹிதாதி கார்த்தான் -தாதா -கொடையாளி கேட்டதைக் கொடுப்பான்-ஸ்வ வ்யதிரிக்தான் ததாதி நாத்மாநம் –-என்னையும் ஆக்கி தன்னையும் தரும் கற்பகம் அன்றோ
ஸ்வோ அபி ஸ்வ ஸம்ஸ்ரி தேப்யோ தத்தோ கடிகாத்ரி ந்ரு ஹரிணா தாத்ரா —நன்றாக ஆஸ்ரயிப்பவர்களுக்கு-தன்னையே தனது பேறாகக் கொடுக்குமவன் அன்றோ

—————-

ஹிம்ஸித தாநவ கரிணே ஹ்ருதய குஹா விஹித பஹுவிஹாராய
விக்ரமவதே ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய –53-

விக்ரமவதே- பராக்ரமமுடையதாய்‌, ஹிமஸித தாநவ கரிணே – ஹிரண்யாஸுரனாகிய யானையைக்‌ கொன்றதும்‌, ஹ்ருதய குஹா விஹித பஹு விஹாராய – (ஞானிகளின்‌) ஹிருதயங்களாகிய குகைகளில்‌ பல விதமான விஹாரங்களைச்‌ செய்வதுமான, கடிகாத்ரி வீரஸிம்ஹாய – கடிகைமலையிலுள்ள வீரசிங்கத்திற்கு ஸபர்யாம்‌ விததே பணி விடைகளைச்‌ செய்கிறேன் –
பக்தர்களுக்குத்‌ தன்னையே கொடுப்பவனுக்கு, நீர்‌ என்ன செய்யப் போகிறீர்‌ என்ன, நான்‌ என்னையே அவனுக்குக்‌ கொடுககிறேனென்கிறார்‌. இதனால்‌ இவர்‌ தம்மையே அவனுக்குக்‌ கொடுத்தலாவது – தமது மனத்தையும்‌ வாக்கையும்‌ உடலையும்‌ அவனுக்கு ஸ்வாதீனமாக்கி, அவனை த்யானம்‌ செய்வதும்‌ அவனைப்‌ புகழ்வதும்‌, அவனை வணங்குவதுமாய்‌ அவனுக்குத்‌ தொண்‌டு செய்வதேயாகும்‌.
சிங்கம்‌ பராக்ரமமுடையது – யானைகளைக்‌ கொல்லுமது – குகையில்‌ ஸஞ்சரிப்பது. அது போல்‌ கடிகை மலை வீர சிங்கமும்‌ உள்ளமை காண்க. எம்பெருமான்‌ ஞானிகளின்‌ ஹிருதய குகையில்‌ விஹாரம்‌ செய்வது “நின்றதும்‌ இருந்ததும்‌ கிடந்ததும்‌ என்நெஞ்சுளே” (திருச்சந்தவிருத்தம்‌ 54) “தாமரைக்கண்ணன்‌ என்‌ நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற வாற்றைக்‌ காணீர்‌” (திருவாய்‌ 7.3.1) முதலிய விடங்களில்‌ காணத் தக்கது.

ஹிம்ஸித தாநவ கரிணே -ஹிரண்ய கசிபு யாகிய யானையை நிரஸித்து-ஹ்ருதய குஹா விஹித -ஹ்ருதய விசால குஹையில் மன்னி-பஹுவிஹாராய -நிறைய அனுபவம் கொடுத்துக் கொண்டு அருளி-விக்ரமவதே -வீர தீர பராக்ரமங்கையும் காட்டி அருளி பரிவர் இல்லை என்ற அதிசங்கை போக்கி அருளி-ஸபர்யாம் விததே கடிகாத்ரி வீர ஸிம்ஹாய —இந்த அக்காரக் கனிக்கு அனைத்து வித கைங்கர்யங்களும் செய்யப் பெறுவேனாக வேண்டும்

—————

ஸ்ருதி பாரகாய வித்யா ஸூதி க்ருஹாய ஸ்வ தர்ம நிரதாய
ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே கடிகாத்ரி பூமி தேவாய –54-

ஸ்ருதிபாரகாய – வேதங்களைச்‌ கரை கண்டவனும்‌, வித்யா ஸூதி க்ருஹாய சாஸ்திர ஜ்ஞானத்திற்குப்‌ பிறப்பிடமானவனும்‌, ஸ்வ தர்ம நிரதாய – தனது வர்ணாஸ்ரம தருமங்களில்‌ ஊன்றியவனும்‌, ஸூதியே (இச் செயற்கை யறிவேயன்றி) இயற்கையாகவே நல்லறிவு படைத்தவனுமாகிய, கடிகாத்ரி பூமிதேவாய – கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணனுக்கு, ஸ்வ உசிதம்‌ – எனக்குத்‌ தகுந்த, ஸ்வம்‌ – சொத்தை, ப்ரதாஸ்யே கொடுக்கக் கடவேன்‌
ப்ராஹ்மணனுக்குத்‌ தானம்‌ செய்ய வேண்டுமென்று சாஸ்த்ரம்‌ சொல்லுகிறது. “வேங்கட வேதியனை?” (பெரியதிருமொழி – 1.10.10) என்றும்‌, “உலகளப்பான்‌ அடி நிமிர்த்த அந்தணனை” (பெரிய திருமொழி 5.6 7) என்றும்‌ எம்பெருமானை ப்ராஹ்மணனாக ஆழ்வார்கள்‌ அருளியது காண்க. ப்ராஹ்மணன்‌ – வேதத்தைக்‌ கண்டவன்‌, சாஸ்த்ர அறிவுக்குப்‌ பிறப்பிடமானவன்‌, தனது தருமங்களில்‌ ஊன்றியவன்‌, புத்திமான்‌ இவை யெல்லாம்‌ எம்பெருமானுக்கும்‌ ஒக்கும்‌. மேலும்‌ எம்பெருமான்‌ தனது தருமமான ஆஸ்ரித ஸம்ரக்ஷணத்தில்‌ ஊன்றியவனென்பதும்‌ இங்குக்‌ கருதுக. கவிக்குத்‌ தனக்குரிய சொத்தாவது ஸ்லோகங்களேயாகும்‌. இதுமேல்‌ ஸ்லோகத்தில்‌ விளங்கும்

ஸ்ருதி பாரகாய –-வேதம் வெளியிட்டு அருளிகரை காண அரிதான வேதக்கடலை அன்னமாய் அங்கு அரு மறை பயந்து அருளி-வித்யா ஸூதி க்ருஹாய -ஸாஸ்த்ர ஞானம் -ப்ரஹ்ம வித்யைகளை அருளிச் செய்து-ஸ்வ தர்ம நிரதாய –-சரணாகத வத்ஸலன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -பக்த உசிதன் -ரக்ஷணத்தில் நிலை நின்று-ஸ்வம் ஸ்வ உசிதம் ப்ரதாஸ்யே ஸூதீயே -தீ -ஞானம் -கடிகாத்ரி பூமி தேவாய –ப்ரஹ்மணோத்தமனாக –ஸகல மனுஷ நயன விஷய தாங்கனாக அவனுக்கு கைங்கர்யம் -இந்த ஸ்ரீ ஸூ கத்தியை கன்னிகா தானமாக அருளி

மஹநீய வ்ருத்த வர்ணா மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா
ஸூக்தி ஸூதநு ப்ரதேயா ஸூத்தா கடிகாத்ரி பூ ஸூர வராய –55-

மஹநீய வ்ருத்த வர்ணா – (1) பூஜிக்கத்தக்க சந்தஸ்ஸும்‌ எழுத்துக்களும்‌ உடையதும்‌, (2) பூஜிக்கத்தக்க நடத்தையும்‌ மேனி நிறமும்‌ உடையவளும்‌, மஹித அந்வயவதீ – (1) உயர்ந்த – சொற்களின்‌ அந்வமுடையதும்‌, (க்லிஷ்டாந்வயமில்லாமல்‌ ஸுலபாந்வயமுடையதும்‌, (2) உயர்ந்த குடிபிறப்பை யுடையவளும்‌, அலங்க்ருதா – (1) சப்தாலங்காரங்களும்‌ அர்த்தாலங்காரங்களும்‌ உடையதும்‌. (2) வஸ்த்ராபரணங்களால்‌ அலங்கரிக்கப்பட்டவளும்‌, ஸூத்தா – (1) காவியக் குற்றமின்றி சுத்தமாயும்‌, (2) நாண் மடம்‌ அச்சம்‌ முதலிய குணங்களினால்‌ சுத்தையாயும்‌ இருக்கிற, ஸூக்தி ஸுதநு: ஸ்ரீஸூக்திகள்‌ (ஸ்லோகங்கள்‌) என்கிற கந்யகை யானவள்‌, கடிகாத்ரி பூஸுரவராய- கடிகை மலையிலுள்ள ப்ராஹ்மணோத்தமனான எம்பெருமானுக்கு, க்ருதிநா – (1) பண்டிதனாலே (2) புண்ணியம்‌ செய்தவனாலே, ப்ரதேயா – கொடுக்கத் தக்கவளாகிறாள்‌.
தம்முடைய ஸ்ரீஸூக்தியைக்‌ கந்யகையாகக் கூறி, கடிகை மலை யெம்பெருமானை ப்ராஹ்மண உத்தமனாகக்‌ குறிப்பிட்டு, அவனுக்குத்‌ தம்‌ காவியமாகிய பெண்ணைத்‌ தானம்‌ செய்வது உசிதமென்கிறார்‌ இதனால்

மஹநீய வ்ருத்த வர்ணா -உயர்ந்த சந்தஸ் ஸூக்களைக் கொண்ட -பூஜிக்கப்பட்ட நல்ல நடத்தை யுடைய கன்னிகை போல்-மஹிதான்வய வத்ஸ லங்க்ருதா க்ருதிநா –உயர்ந்த அந்வயங்கள் -ஸப்த அலங்காரங்களைக் கொண்டும்-உயர்ந்த ஆபி ஜாதியம் -அலங்காரம்
ஸூக்தி ஸூத அநு ப்ரதேயா ஸூத்தா -பரிசுத்தம் -தீர்த்தம் -கன்னிகையை
கடிகாத்ரி பூ ஸூர வராய –இந்த அக்காரக்கனி அழகிய மணவாளனுக்கு தகுதியாக
வேதியர் கோன் -விளக்கு – தனது குழந்தையான பா மாலையை சூட்டி -பெரியாழ்வார் போல் மாமனார் ஆகிறார் எறும்பி அப்பா ஸ்வாமியும்

———-

காம்யோ ததாதி ஸார்த்தம் தவளம மதி ப்ரேம தாரயா ஸஹிதம்
கடிகாசல பிரணயிநே கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் –56-

கடிகாசலப்ரணயிநே – கடிகை மலையில்‌ பற்றுவைத்த யாசகனுக்கு, ஸார்த்தாம்‌ – (1) பொன்னோடு கூடிய (கொம்புக்கும்‌ குளம்புக்கும்‌ பொன்‌ கட்டு கட்டிய) (2) நல்ல அர்த்தத்தோடு கூடிய, காம்‌ – (1) பசுவை (2) ஸ்ரீ ஸூக்தியை (ஸ்லோகங்களை), தவள மதி ப்ரேம தாரயா ஸஹிதாம்‌ – (1! சுத்தமான எண்ணமும்‌ ப்ரதீயுமாகிற நீர்த் தாரையோடு கூடியதாக, (2) சுத்த ஜான ஞானமும்‌ பக்தியுமாகிறவற்றின்‌ தொடர்ச்சியோடு கூடியதாக, ய: – எவன்‌, ததாதி – கொடுக்கிறானோ, தஸ்ய – அவனுக்கு, காங்க்ஷிதம் பலம்‌ – விரும்பிய பயன்‌, கிம்‌ ந கடதே – எதுதான்‌ கை கூடாது
இதில்‌ தனது ஸ்ரீஸக்தியைப்‌ பசுவாகக்‌ கூறி அதனை எம்பெருமானுக்குத்‌ தானம்‌ செய்தால்‌ எல்லா விருப்பங்‌களும்‌ நிறைவேறுமென்று கூறினாராயிற்று. இவ்விரண்டு ஸ்லோகங்களினாலும்‌,-கீழ் ஸ்லோகத்தில்‌ தனக்குரிய சொத்து என்றதை விவரித்து அத்தகைய சொத்தான ஸ்ரீ ஸூக்தியை எம்பெருமானுக்குக்‌ கொடுக்கக்‌ கடவதாகவும்‌, கொடுத்தால்‌ எல்லா விருப்பமும்‌ நிறைவேறுவதாகவும்‌ அருளிச்‌ செய்தாராயிற்று. ப்ரணயீ – (1) பற்றுடையாவன்‌ (2) யாசகன்

காம்யோ ததாதி ஸார்த்தம் –பொன் கட்டிய பசு தானம் பண்ணுகிறார் இதில்
அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம்-தவல மதி ப்ரேம தாரயா ஸஹிதம் -ஸூத்தமான -வெண்மை -பிரேமை மிக்கு –நீராய் அலைந்து கரைந்து உருகும் திரு உள்ளம்
அனுபவ ஜெனித ப்ரீதி உள் அடங்காமல் வெளிவந்தவை அன்றோ
கடிகாசல பிரணயிநே -உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க-கடிதே கிம் தஸ்ய காங்ஷிதம் ந பலம் —கோ தானம் -வாக்கு -தானம் செய்த பின்பு அபீஷ்டங்கள் அனைத்துமே அருளுவான் அன்றோ
இந்த ஸ்துதியை நாவினால் நவிலவே நமக்கும் அருளிச் செய்வான் அன்றோ

————

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித வைமுக்ய கல்மஷா திஷணா
ப்ருது குண வதீ மதீயா ஸ்ப்ருஹயதி கடிகாசல ப்ரியாய ப்ருசம் –57-

கலுஷ ஆதி கடித வாக்யை – மனத்தின் கண்‌ (உள்ள) அழுக்கைப்‌ போக்கடிப் பவைகளாகத்‌ தானே சேர்ந்த வேத வாக்கியங்களாலே, அல்லது மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்கியங்களாலே, க்ஷாளிதவைமுக்யகல்மஷா கழுவப்பட்ட – எம்பெருமானிடம்‌ பராமுகமா யிருத்தலாகிற அழுக்கை யுடைய, மதீயா திஷணா – என்னுடைய புத்தியானது. ப்ருது குணவதீ – அதிகமான – எம்பெருமானுக்கு நேர்‌ முகமாக இருத்தலென்னும்‌ குணத்தை யுடையதாய்க்‌ கொண்டு, கடிகாசலப்ரியாய கடிகைமலைநாயகன்‌ பொருட்டு, ப்ருசம்‌ மிகவும்‌, ஸ்ப்ருஹயதி – ஆசைப் படுகிறது.
மனதின்கண்‌ உள்ள அழுக்காவன – நான்‌ ஸ்வதந்த்ரன்‌ என்னும்‌ அஹங்காரமும்‌, உலகிலுள்ள பொருள்கள்‌ யாவும்‌ என்னுடையவையே என்னும்‌ மமகாரமுமாகும்‌. இப்படிப்பட்ட அழுக்குக்களை – எம்பெருமானொருவனே ஸ்வதந்த்ரன்‌, மற்ற ஜீவாத்மாக்கள்‌ மற்றுமுள்ள ஜடப் பொருள்களனைத்துமே அப் பெருமானுக்குப்‌ பரதந்திரமானவையே என்ற கருத்துக்களைக்‌ கொண்ட வேத வாக்கியங்கள்‌ அல்லது இதிஹாஸ புராண வாக்கியங்கள்‌ போக்கடிக்கின்றன. இக்கருத்து மனதின்‌ கண்‌ ஊறவூற மனிதர்களின்‌ எண்ணத்தில்‌ பகவத்‌ வைமுக்யம்‌ நசிக்கப் பெற்று செவ்முக்யமென்னும்‌ குணம்‌ அதிகமாக உண்டாகும்‌. அக் குணமுண்டாகவே பகவானிடம்‌ மிக்க ஆசை உண்டாகும்‌ என்பதைக்‌ கவி தம்மோடு தொடர்பு படுத்திக் கூறினாராயிற்று. இகனால்‌ வைமுக்யம்‌- எம்பெருமானிடம்‌ பாரமுகமாக இருத்தல்‌. ஸெளமுக்யம்‌ – நேர்முகமாக இருத்தல்‌. அதாவது சிறிது ஆசை யுண்டாகப்‌ பெறுதல்‌. அந்நிலமை நீடிக்கப் பெற்றால்‌ சில நாட்களில்‌ அதிகமான ஆசையாகிய பக்தி உண்டாகு மென்றபடி. கலுஷம்‌ – காலுஷ்யம்‌ – அழுக்கு. கலுஷம்‌ அதந்தீதி – கலுஷாநீதி கடிதாநி – கடிதாநிச தாநி வாக்யாநிச என்று விக்ரஹவாக்யம்‌. அத பக்ஷணே என்ற தாதுவின்‌ மேல்‌ ணிநிப்ரத்யயம்‌ சேர்ந்தால்‌ ஆதி என்ற ரூபம்‌ நிஷ்பந்நமாகும்‌. இதுநபும்ஸகலிங்க சப்தம்‌. நாசம்‌ பண்ணுமது என்பது அதன்‌ பொருள்‌. கடித வாக்யாநி – தாமே சேர்ந்த வேத வாக்கியங்கள்‌ – வேதம்‌ அபவ் ருஷேயமாகையாலே, கடித வாக்யாநி மஹர்ஷிகளாலே சேர்க்கப்பட்ட இதிஹாஸ புராண வாக்யங்கள்‌-கடிதமென்பதில்‌ முந்தின பக்ஷத்தில்‌ கர்த்தரியிலும்‌ பிந்தின பக்ஷத்தில்‌ கர்பணியிலும்‌ “க்த” ப்ரத்யயம்‌ வந்துள்ளது

கலு ஷாதி கடித வாக்யை ஷாலித -அஹங்கார மமகாரா தூஷித
வைமுக்ய கல் மஷாதிஷ ணா -பாராமுகமாக அடியேன் திரு உள்ளம்
ப்ருது குண வதீ மதீயா ஸ் ப்ருஹயதி -அவன் மேலே இழுத்துக் கொண்டு
கடிகாசல ப்ரியாய ப்ருசம் -அக்காரக்கனி உகந்து அருளின திவ்ய தேச மஹாத்ம்யத்தாலேயே நாம் அனுசந்திக்க தாம் நைச்ய அனுசந்தானம் செய்து அருளுகிறார்

—————

அந் விஷ்யதாம் ஸ்வம் அதவா தூஷ்ணீ மாத்வம் ஸூரர்ஷி பித்ரு முக்யா
தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை கடிகாத்ரி பூபுஜே ச சிவை –58

ஸுர ருஷி பித்ருமுக்யா: – தேவதைகள்‌ ருஷிகள்‌ பித்ருக்கள்‌ முதலியவர்களே ! ஸ்வம்‌ அந்விஷ்யதாம்‌ – உங்களுடைய சொத்து தேடப்படட்டும்‌, அதவா – அல்லது (சொத்தே வேண்டா மென்றால்‌) தூஷ்ணீம்‌ ஆத்வம்‌ – : வெறுமனே இருங்கள்‌. (எங்களுடைய சொத்தாக நீ இருக்க நாங்கள்‌ தேடுவதும்‌, வேண்‌டா விடில்‌ வெறுமனே இருப்பதும்‌ எதற்கு என்றால்‌ பதில்‌ கூறுகிறார்‌ – நான்‌ பகவானுடைய சொத்தாக ஆகிவிட்டேனென்று) அஹம்‌ – நான்‌, கடிகாத்ரிபூபுஜே – கடிகைமலை யரசரான எம்பெருமானுக்கு, தத்ஜ்தை;: அவனைப்‌ பற்றி அறிந்த – தத்வ ஜ்ஞாநிகளான , ஸசிவை: – மந்த்ரிகளாலே பாகவதர்களாலும்‌ ஆசார்யர்களாலும்‌, தத் கிங்கர: – அவ்வெம்பெருமானுடைய தொண்டனாக, அர்ப்பித: -ஸமர்ப்பிக்கப்பட்டேன் –
53ம்‌ ஸ்லோகத்தில்‌ – பகவானுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வேனென்றார்‌. 54,55,56ம்‌ ஸ்லோகங்களில்‌ வாசிக கைங்கர்யம்‌ செய்வதா௧க் கூறினார்‌. 57ல்‌ இங்ஙனம்‌ கைங்கர்யம்‌ செய்வதற்குக்‌ காரணமான பக்தி தமக்கு எம்‌பெருமானிடம்‌ உண்டானதாகச்‌ சொன்னார்‌. இதைக்‌ கேட்ட தேவர் ரிஷி பித்ருக்கள்‌ – இது வரையில்‌ எங்களுக்குத்‌ தொண்டு செய்து கொண்டிருந்த நீ எப்பொழுது இப்படி மாறிவிட்டாய் என்று கேட்க விடை யிறுக்கிறார்‌ இதனால்‌. பகவத்‌ க்ருபையால்‌ பாகவதர்களோடு ஸஹ வாஸம்‌ உண்டாக, இவர்கள்‌ என்னை ஸதாசார்யனோடு சேர்க்க, அவ்வாசார்யர்‌ என்னை பகவத் தாஸனாகச்‌ சேர்த்து விட்டார்‌. இனி உங்களுக்கும்‌ எனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. உங்களுக்கு சொத்து வேண்டுமென்றால்‌ வேறுயாரையாவது தேடிப் பிடித்துக்‌ கொள்ளுங்கள்‌, இல்லையேல்‌ வாளா விருங்களென்று அவர்களிடம் அறை கூவுகிறார்‌ இதனால்‌ என்க.
தேவர்ஷிபூதாப்த ந்ருணாம்‌ பித்ரூணாம்‌ ந கிங்கரோ நாயம்ருணீச ராஜந்‌ | ஸர்வாத்மநா ய: ஸரணம்‌ ஸரண்யம்‌ நாராயணம்‌ லோக குரும்‌ ப்ரபந்ந: |!-(ஸ்ரீ பாகவதம்‌ 11.5.41) – அரசே எவனொருவன்‌ சரணமடையத் தக்கவனாய்‌ (க்ருபையும்‌ சக்தியுமுடையவனாய்‌) லோக பிதாவான நாராயணனை எல்லா விதத்தாலும்‌ சரணமடைந்தானோ, அவன்‌ – தேவர்களுக்கும்‌ ரிஷிகளுக்கும்‌ பூதங்களுக்கும்‌ பந்துக்களுக்கும்‌ பித்ருக்களுக்கும்‌ அடிமைப்பட்டவனல்லன்‌, கடன்பட்டவனுமல்லன்‌ என்ற ஸ்லோகம்‌ இங்கு நினைக்கத் தக்கது . இது கரபாஜந முனிவர்‌ நிமியரசனுக்கு உபதேசித்தது.

உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-ஸூரர்ஷி பித்ரு முக்யா -ஸூரர் ரிஷிகள் பித்ருக்கள் முதலியவர்அந் விஷ்யதாம் ஸ்வம் -உங்கள் சொத்து தொலைந்து போனதே என்கிறார்-அதவா தூஷ்ணீ மாத்வம் -வெறுமனே உட்க்கார்ந்து இருங்கள்
கடிகாத்ரி பூபுஜே ச சிவை –அக்காரக்கனி -கடிகாத்ரி அரசன் பற்றிய பூர்ண ஞானம் கொண்ட மந்திரிகள் –மாச முனிகளை ஆஸ்ரயித்த பின்பு-தத் கிங்கரோ அர்ப்பிதோ அஹம் தஜ்ஜஜை -கைங்கர்ய பரனாக அடியேன் சமர்ப்பிக்கப் பட்டேன்-ஆச்சார்யர்கள் நம்மை விற்கவும் பெறுவார்கள் அன்றோ-சூடகம் -கங்கணம் -தோள் வளை சங்கு சக்கர லாஞ்சனை தோடே செவிப்பூவே -மந்த்ர உபதேசம் -பாடகம் கால் கட்டு -பஞ்ச ஸம்ஸ்காரம்-சாஷாத் பல ஏக லஷ்யம் -மங்களா ஸாஸனம் -ஆஸாசித்தல் –

———-

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே
மன்யே மந்த தீயஸ் தான் மாதங்கா நேவ மத ஜூஷ கலுஷான் –59-

கடிகாமஹீப்ருத: கோப்த்ரே – கடிகைமலையின்‌ அரசனாகிய, ஹரயே (நர)ஸிம்ஹத்தின்‌ பொருட்டு, யே– யார்‌. அநர்த்தகம்‌– வ்யர்த்தமாக – (பயனின்றி) ந்ருத்யந்தி – கூத்தாடுகின்றார்களோ, தாந்‌ – அத்தகைய, மந்ததிய: – புத்தி குறையப் பெற்றவர்களை, கலுஷாந்‌ – அறிவு கலங்கிய, மதஜுஷ: மதம் பிடித்த, மாதங்காந்‌ ஏவ – யானைகளாகவே, மந்யே – கருதுகிறேன்‌.
கடிகைமலை யெம்பெருமானுக்குத் தொண்டராகிய தமக்கு விபரீதரானவர்களை பகவத்‌ த்வேஷிகளை நிந்திக்கிறார்‌ இதனால்‌, மதம்‌ பிடிக்காத யானை சிங்கத்தின்‌ எதிரில்‌ செல்லவே செல்லாது. மதம்‌ பிடித்த யானை அறிவு கலங்கிச்‌ சிங்கத்தின்‌ எதிரே சென்று
ஆடுவதும்‌ பிளிறுவதுமாக இருந்தால்‌ அது சிங்கத்தினால்‌ கொல்லப்படுவது உறுதி. அது போலவே நரசிங்கப்‌ பெருமானெதிரி. வந்து அவனை மதியாமல்‌ கூத்தாடுவர்களேல்‌ அவர்கள்‌ ஸ்வரூப நாசம்‌ பெறுவது உறுதி என்று இதனால்‌ குறித்து அருளினார் –

ந்ருத்யந்த்ய நர்த்த கம்யே -அநர்த்த நாட்டியம் –ஈஸ்வரோஹம் -அகங்கார மமக தூஷித்தராய் ஆட –கோப்த்ரே கடிகா மஹீ ப்ருதோ ஹரயே –அக்காரக்கனி அரசே-மன்யே மந்த தீ யஸ்தான் -அஞ்ஞானம் தலை எடுத்து-மாதங்கா நேவ மத ஜூஷ் கலுஷான் –கலங்கிய அறிவால் மதம் பிடித்த யானை போல் – காட்டில் ஸிம்ஹ அரசன் முன் ஆடும் யானை மாள்வது போல் அன்றோ இவர்கள் –

———

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே
ஸ்வஸ்தி ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை கடிகாத்ரி பூபுஜே பூயாத் –60-

துஷ்டாந்‌ – துஷ்டர்களை, தரஸா விரைவிலேயே, நிக்ருஹ்ய – தண்டித்து, சிஷ்டாந்‌ அகிலாந்‌ – நல்லோர்கள்‌ அனைவரையும்‌. சிரேண – வெகு நாட்களாகவே, பாலயதே காப்பாற்றி வருமவனும்‌, ஸுஹ்ருதே நல்ல மனமுடையவனும்‌, குணாநாம்‌ பூத்யை நற்குணங்களுக்கு இருப்பிடமானவனுமான-கடிகாத்ரி பூபுஜே – கடிகைமலை யரசனுக்கு, ஸ்வஸ்தி பூயாத்‌ – க்ஷேமம்‌ உண்டாயிடுக.
58ம்‌ ஸ்லோகத்தில்‌ தாம்‌ பகவத் கிங்கரரானமையத்‌ தெரிவித்து மகிழ்ந்து, 59ல்‌ பகவத்‌ த்வேஷிகளை நிந்தித்து, இப்படி துஷ்டர்களை யழித்தலையும்‌ சிஷ்டர்களைக்‌ காத்தலையும்‌ தொழிலாகக்‌ கொண்ட எம்பெருமான்‌ தன்மைக்குத்‌ தோற்று, அவனுக்குப்‌ பல்லாண்டு பாடினாராயிற்று இதனால்

துஷ்டான் நிக்ருஹ்ய தரஸா -அனிஷ்டங்களைப் போக்கி அருளி –தரஸா-விரைவில்
ஸிஷ்டாந் அகிலாம் ஸ் சிரேண பாலயதே-ஸமஸ்த இஷ்ட ஸூஹ்ருதே குணாநாம் பூத்யை -நல்ல குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடம்-ப்ரதானங்களையும் எப்பொழுதும் அருளி
ஸ்வஸ்தி கடிகாத்ரி பூ பஜே பூயாத் –அக்காரக்கனி தெய்வத்துக்கு அரசுக்கு பல்லாண்டு பாடுவோம்

————

ம்ருதுளம் பவாக்நி பாகாத் வ்யாப்தம் குணதோ வி ஸூத்தம் அஹம் அன்னம்
போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –61

பவஅக்நி பாகாத்‌ – ஸம்ஸாரமென்னும்‌ அக்நியால்‌ சமைக்கப்பட்டதனால்‌, ம்ருதுளம்‌ – (1 மெத்தென்றிருப்பதும்‌ (2) மனம்‌ கனியப் பெற்றவனும்‌, குணத: – (1) சுவையாகிற குணத்தினால்‌ நிறைந்ததும்‌ (2) சம தமாதி குணங்களினால்‌ நிறைந்தவனும்‌, விசுத்தம்‌ – (1) மிகவும்‌ சுத்தமானதும்‌ (2) மிகவும்‌ பரிசுத்தமான வனும்‌, போஜ்யம்‌ – உண்ணத் தக்கதுமான, அந்தம்‌ – அந்நமாக, போஜ்யம்‌ ஸ்வம்‌ – அனுபவிக்கத் தக்கவனுமான தன்னை (என்னை) கடிகாசலஸ்ய போக்த்ரே – கடிகை மலையில் வுள்ள (1) உண்ணுமவன்‌ பொருட்டு (2) அனுபவிப்பவன்‌ பொருட்டு, ஸஸ்நேஹம்‌ – (1) நெய்யோடு கூட (2) பக்தியோடு கூட, ஸமர்ப்பயே – ஸமர்ப்பிக்கிறேன்‌.
இதில்‌ எறும்பியப்பா கடிகை மலை யெம்பெருமானுக்குத்‌ தம்மை அந்நமாக ஸமர்ப்பிக்கிறார்‌. (1) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ அந்நத்துக்கும்‌, (2) என்று குறிக்கப்பட்ட விசேஷணங்கள்‌ – ஸ்வம்‌ என்‌பதனால்‌ சொல்லப்பட்ட தமக்கும்‌ (எறும்பி அப்பாவுக்கும்‌) பொருத்துக.
அந்நம்‌ சமைக்கப்பட்டு மெத்தென்றிருக்கும, சுவைக் குணம்‌ நிறைந்திருக்கும்‌, தூய்மை பெற்றிருக்கும்‌, நெய் சேர்ந்திருக்கும்‌. இப்படிப்பட்ட அந்நமே உண்பவனுக்கு உண்ணத் தக்கது. அங்ஙனமே அப்பாவும்‌ ஸம்ஸாராக்நியினால்‌ சமைக்கப்பட்டு முரட்டுத்தனம்‌ நீங்கி மெத்தென்றிருப்பர்‌. மனவடக்கம்‌ பொறியடக்கம்‌ முதலிய குணங்கள்‌ நிறையப் பெற்றிருப்பர்‌. அதனால்‌ தூய்மை பெற்றிருப்பர்‌. பகவானிடம்‌ பக்தியுடனிருப்பர்‌. இப்படிப்பட்ட இவர்‌ அனுபவிக்கின்ற பகவானுக்கு அனுபவிக்கத் தக்கவராயிருப்பர்‌ என்றபடி.

மருதலம் -வெந்து குழைந்து –நீராய் அலைந்து கரைந்து உருக்குகின்ற
பவாக்நி பாகாத் -அக்னியால் பக்குவப்பட்டு -சம்சார பாவாக்னி
வ்யாப்தம் குணதோ -ருசி மிக்கு சமதமாதி குணங்கள் நிறைந்து
வி ஸூத்தம் -பரி ஸூத்தம் –நெய் சமஸ்க்ருதம் அன்ன ஸூத்தி நிறைந்து
அஹம் அன்னம் போஜ்யம் ஸமர்ப்பயே ஸ்வம் -அடியேனை சமர்ப்பிக்கிறேன் -சொத்து தானே-போக்த்ரே கடிகாசலஸ்ய ஸஸ் நேஹம் –இஷ்டமாக அனுபவித்து -ஸ்வாமி சொத்தை -நெய் -மிகுந்த பக்தி -நிறைந்த அன்னம் -அடியேன் பல்லாண்டு கீழே அருளி –அம்மம் உண்ண இதில் -பெரியாழ்வார் போல் இவரும் இதில்

————–

நித்ய ஸ்ரீ யே குணா நாம் நிதயே நிஷ்ட யூத நிகில தோஷாய
ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –62-

நித்ய ஸ்ரியே – பிராட்டியோடு எப்போதும்‌ கூடியிருப்பவனும்‌, (அது காரணமாக) நிஷ்ட்யூத நிகில தோஷாய – காரி யுமிழப்பட்ட எல்லாக்‌ குற்றங்களை யுமுடையவனும்‌, குணாநாம்‌ நிதயே – நற்குணங்களுக்கு நிதி போன்றவனுமான, கடிகாசலஸ்ய பர்த்ரே கடிகாசலத்தில்‌ வாழும்‌ எம்பெருமானாகிய கணவனுக்கு, பாக்ய வசாத்‌ – (என்னுடைய) அத்ருஷ்ட வசத்தில்‌, மயா – என்னால்‌. எஷா ப்ரஜ்ஞா – இந்த ப்ரஜ்ஞை என்னும்‌ கன்னிகை, அர்ப்பிதா – ஸமர்ப்பிக்கப் பட்டாள்‌.
இங்கு ப்ரஜ்ஞையாவது இடையறாமல்‌ எம்பெருமானை நினைத்தலாகிய ஜ்ஞான விசேஷம்‌. இதுவே பக்தி யெனப்படும் -இது தன்னை அவனுக்குக் கொடுத்தலாவது அவனையே எப்போதும்‌ நினைத்தல்‌ என்றபடி -அல்லது தத்வ ஹித புருஷார்த்த விஷயமான புத்தியும்‌ ப்ரஜ்ஞையாகலாம்‌. இதை நாயகனுக்கு ஸமர்ப்பித்தலாவது எம்பெருமானையே பர தத்துவமாகவும்‌ மோஷ உபாய ரூபமான ஹிதமாகவும்‌ புருஷார்த்தமாகவும்‌ அறுதி யிட்டிருக்கையாகும்‌. எம்பெருமானை பர்த்தா என்று குறித்துள்ளதற்கேற்ப, ப்ரஜ்ஞை கன்னிகையாகக்‌ கருதப்பட்டது. ஆக “ பிராட்டியின்‌ நித்ய யோகத்தினால்‌ குற்றமாகிய ஸ்வாதந்த்ரியம்‌ தலை மடிந்து, அதனால் தலை யெடுத்த வாத்ஸல்யாதி குணங்களை யுடைய எம்பெருமானாகிய மணவாளப்‌ பிள்ளைக்கு தமது ப்ரஜ்ஞையாம்‌ கன்னிகையைக்‌ கைப்பிடிக்கும்படி ஸமர்ப்பித்தார் ஆயிற்று -இதனால்‌. “ஓண் தாமரையாள்‌ கேள்வ னொருவனையே நோக்குமுணர்வு’ தான்‌ உணர்வாவது அதுவே இங்கு ப்ரஜ்ஞையாகக்‌ குறிப்பிடப்பட்டது என்க –

நித்ய ஸ்ரீ யே –கூடவே பிரியாமல் -ஸ்ரீ யபதி புருஷார்த்தம் இருப்பதால் பயப்படவே வேண்டாமே-காகாசுரன் இவள் சந்நிதியால் உஜ்ஜீவித்தான் -ராவணன் இவள் அஸந்நிதியால் மாண்டான்
குணா நாம் நிதயே-அதுக்கும் மேல் குணக்கடலாகவும்
என்னடியார் அது செய்யார் என்பவனும் ந கச்சின் ந அபராதயதி என்பாளும் உண்டே
நிஷ்ட யூத நிகில தோஷாய-காரி உமிழும் படி தோஷங்கள் அனைத்துக்கும் இருப்பிடமான நம் போல்வாரும்-ப்ரஞ்ஞா அர்ப்பிதா மயைஷா பர்த்ரே -ப்ரஞ்ஞா -தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள்-இவற்றை உணர்ந்து -ஸமர்ப்பிக்கப் பட்டாள்
கடிகாசலஸ்ய பாக்ய வஸாத் –அதிர்ஷ்ட வசமாகப் பெற்ற மணவாளன் அக்காரக்கனி அன்றோ -திரிபுவன -உபய விபூதி நாயகன் அன்றோ
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -பிரதம மத்யம சரம பர்வதங்கள் -பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவதர் -ஆச்சார்யர் —கன்னிகையாக உருவகம் –தாயார் கூடவே இருப்பதால் பெற்ற பலன் அன்றோ –

—————

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் சாத்ரே ஸத் புருஷ வித் விஷாம் ஸததம்
தாத்ரே ஸகல பலா நாம் நேத்ரே ஜகதாம் நமோ ந்ருஸிம்ஹாய –63-

ஸததம்‌ – எப்போதும்‌, ஸமாஸ்ரிதாநாம்‌ – தன்னை யடைந்தவர்களை, பாத்ரே காப்பவனும்‌, ஸத் புருஷ வித்விஷாம்‌ – தன்னை யடைந்த ஸத்புருஷர்களின்‌ பகைவர்களை, சாத்ரே – மெலிவுறச்‌ செய்பவனும்‌-அழிப்பவனும்‌, ஸகல பலாநாம்‌ – எல்லா விதமான பலன்களையும்‌, தாத்ரே – (தன்னை யடைந்தவர்களுக்குத்‌, தருமவனும்‌ (இங்ஙனமாக) ஜகதாம்‌ – உலகத்திலுள்ளோர்க்கு, நேத்ரே – நாயானாகிய, ந்ருஸிம்ஹாய – நரஸிம்ஹப்‌ பெருமாளுக்கு, நம: – நமஸ்காரம்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானே தத்வமும்‌ ஹிதமும்‌ புருஷார்த்தமும்‌ என்றறுதி யிடுதற்குரிய ப்ரஜ்ஞையை உடையவராகத்‌ தம்மைக்‌ குறிப்பிட்டவர்‌, அந்த ப்ரஜ்ஞைக்குத்‌ தக்கபடி எம்பெருமானுக்கு நமஸ்காரம் செய்கிறார்‌ இது தன்னில்‌. அவனே பர தத்துவம்‌ (சேஷி) என்றறிந்தாலும்‌, அவனே ஹிதம்‌ (மோக்ஷோபாயம்‌) என்றறிந்தாலும்‌, அவனே புருஷார்த்தம்‌ (ப்ராப்யம்‌) என்றறிந்தாலும்‌ அவனுக்கு நமஸ்காரம்‌ செய்யவேணுமிறே. அதனாலன்றோ திருமந்‌திரத்தில்‌ நடுவிலுள்ள நம: பதத்தை ஆவ்ருத்தி செய்து- சேஷியைச்‌ சொல்லும்‌ ப்ரணவத்தோடும்‌ உபாயத்தைச்‌ சொல்லும்‌ ‘நம:” பதத்தோடும்‌, ப்ராப்யத்தைச்‌ சொல்லும்‌ நாராயணாய என்னும்‌ பதத்தோடும்‌ ஆசார்யர்கள்‌ கூட்டி அர்த்தம்‌ அருளிச் செய்வது.

பாத்ரே ஸமாஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதர் அனைவரையும் கை விடாமல் காத்து அருளி
சாத்ரே ஸத் புருஷ வித்விஷாம் ஸததம் –ஸத் புருஷர் -ஸாத்விகர் -ஆக்கி அருளி -தமோ ரஜோ குணம் தலை தூக்க விடாமல் பண்ணி அருளி
தாத்ரே ஸகல பலா நாம் -ஸமஸ்த அபீஷ்டங்களையும் அருளி
நேத்ரே ஜகதாம்அனைவருக்கும் கண்ணாவான் -நாயகன் ஆவான் –
நமோ ந்ருஸிம்ஹாய-அடியேன் உம்மை நமஸ்கரிக்கிறேன்
மந்த்ர ராஜ -திருமந்திரம் -திரு அஷ்டாக்ஷரம் -அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் அவனே தத்வம் -அவனே உபாயம் -அவனே உபேயம்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
பர கத ஸ்வீ கார நிஷ்டர் -இசைவித்து தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
பொருள் அல்லாத அடியேனை பொருளாக்கி அடிமை கொள்வான்
ஓம் நம -ஸ்வரூப விரோதி அஹங்கார மமகாரங்களைப் போக்கி அருளி
நமோ நம -உபாய விரோதி கழித்து அருளி
நாராயணாயா நம -ப்ராப்ய விரோதி கழித்து அருளி
நரஸிம்ஹ -நாராயணா போல் சதுர் அக்ஷரீ தானே –

———–

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் ஸூக முக ஸேவ்யாத் ஸூ ஸீதலச் சாயாத் –
கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத கஸ்யா காங்ஷிதம் ந பலம்–64-

ஸுமநஸ் ஸமூஹ பவ்யாத்‌ – (1) தேவதா ஸமுஹத்திற்கு க்ஷேமமளிப்பவனும்‌, (2) புஷ்ப ஸமூஹத்தினால்‌ மங்களமானதும்‌, சுக முக ஸேவ்யாத்‌ – (1) சுக முனிவர்‌ முதலியவர்களாலே ஸேவிக்கத் தக்கவனும்‌, 2) கிளி முதலிய பஷிகளாலே அடையப் பெற்றதும்‌, ஸுசீதள ச்சாயாத்‌ – மிகக்‌ குளிர்ந்த காந்தியை உடையவனும்‌ (2) மிகக்‌ குளிர்ந்த நிழலை யுடையதும்‌, கடிகாத்ரி தட நிசநடாத்‌ – கடிகைமலைத் தாழ்வரையில்‌ (1) தோன்றியவனுமான (2) முளைத்ததுமான. கல்பகத: – (1) எம்பெருமானாகிய (2) கற்பக மரத்தினிடமிருந்து, கஸ்ய – யாருக்கு, காங்க்ஷிதம்‌ பலம்‌ (1) விரும்பிய பலன்‌ (2) விரும்பிய பழம்‌, ந(லப்யதே) கிடைக்காது.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எல்லாப்‌ பலன்களையும்‌ தருமவன்‌ என்று அந்வயத்தினால்‌ (உடன்‌ பாட்டினால்‌) அருளிச்‌ செய்தவர்‌, அது தன்னை திடப் படுத்துவதற்காக இந்த ஸ்லோகத்தில்‌, யாருக்கு என்ன பலன்‌ கிடைக்காது என்று “வ்யதி ரேகத்தினால்‌” (எதிர் மறையினால்‌) அருளிச் செய்கிறார்‌. மேலும்‌ எம்பெருமானை எல்லாப் பயன்களையும்‌ எல்லாப்‌ பழங்களையும்‌ கொடுக்கும்‌ கற்பக மரமாக ரூபணம்‌ செய்கிறார் இதில் எம்பெருமானுக்கும்‌ கற்பகத்‌ தருவுக்கும்‌ பொருந்தும்படி சிலேடையில்‌ விசேஷணங்களை யமைத்துள்ளமை காண்க-

ஸூ மனஸ் ஸமூஹ பவ்யாத் –வ்ருக்ஷத்தில் புஷ்ப ஸமூஹம் இருக்குமே-தேவதா ஸமூஹங்களுக்கு-ஸூக முக ஸேவ்யாத் -கிளி போன்றவை தங்கும் இடம்-ஸூக பிரமுகர்கள் பலரால் ஸேவிக்கப் பட்டவர்-ஸூ ஸீதலச் சாயாத் –குளிர்ந்த நிழல் பரவி இருக்குமே00சம்சார தாப த்ரயங்களைப் போக்கி அருளி-கடிகாத்ரி தட நிரூடாத் கல்பகத -தாழ்வரையில் -கற்பக வ்ருக்ஷம்-கஸ்யா காங்ஷிதம் ந பலம் –யாருக்குத் தான் ஆசைப்பட்டவை கிடைக்காமல் போகும்-வியதிரேகத்தில் என்ன பலம் தான் கிட்டாது என்று இதில் திடமாக புத்திக்கு உபதேசம் –எனக்கே தந்தைத் தந்த கல்பகம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான்

————–

அவிரத ஹித ப்ரவ்ருத்தே ஆபதி ஸஹிதாத் அக்ருத்ரிம ஸ்நேஹாத்
மம கடிகாசல பந்தோ மான்யா தன்யேந கேந கிம் கார்யம் –65-

அவிரதஹித ப்ரவ்ருத்தே – இடைவிடாமல்‌ நமக்கு நன்மை செய்வதில்‌ முயலுமவனும்‌, ஆபதி – ஆபத்து வரும் போது, ஸஹிதாத்‌ – நம்மை விடாமல்‌ கூடவே இருப்பவனும்‌, (அவ்விரண்டிற்கும்‌ உதவியாக) அக்ருத்ரிம ஸ்நேஹாத்‌ – இயற்கையான (கபடமற்ற) நட்புடையவனும்‌, மாந்யாத்‌ – (அதனால்‌) கெளரவிக்கத் தக்கவனுமாகிய கடிகாசல பந்தோ: – கடிகை மலைபிலுள்ள பந்துவான எம்பெருமானை விட, அந்யேந வேறான, கேந – யாராலே, மம – எனக்கு, கிம்‌ கார்யம்‌ – எந்த காரியம்‌ (ப்ரயோஜனம்‌), பவேத்‌ உண்டாகக்‌ கடவது.
உண்மையான பந்துவுக்கு லக்ஷணம்‌ – கபடமற்ற நட்பும்‌, எப்போதும்‌ தன்‌ நண்பனுக்கு நன்மை செய்யும்‌ முயற்சி யுடைமையும்‌, ஆபத்து வந்தால்‌ கூடவே இருந்து உதவி செய்வதுமாகும்‌. அத்தகைய லக்ஷணம்‌ எம்பெருமான்‌ தவிர வேறு யாரிடமும்‌ இல்லாமையால்‌ அவனைத்‌ தவிர்ந்த யாரால்‌ எனகக என்ன காரியம்‌ ஆக வேண்டியிருக்கிறதென்றார்‌ இதனால்‌. எம்பிரானெந்தை என்னுடைச்‌ சுற்றம்‌ (பெரியதிருமொழி 1.1.6) என்று தொடங்கிக்‌ கலியன்‌, ஸர்வேஸ்வானே எல்லா வித பந்துவுமாவான்‌ என்றருளிச்‌ செய்தார் இறே –

அவிரத ஹித ப்ரவ்ருத்தே -நன்மையே செய்யும்-ஆபதி ஸஹிதாத் –ஆபத்துக்களில் துணையாக-அக்ருத்ரிம ஸ்நேஹாத் -இயற்கையாகவே நண்பன்-ஸக்யம் நவ வித பகுதிகளில் ஸ்நேஹ பாவமும் உண்டே-மம கடிகாசல பந்தோ –உற்ற நண்பனே விளிச் சொல்-மான்யாத் –மதிக்க வேண்டுமே-அன்யேந கேந கிம் கார்யம்--இவரை விட வேறே யாரால் என்ன வேண்டும்

—————

கந கருண அம்ருத பூரை கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநி தை
பாப அடாவீ ப்ரதக்தா பஜதே சித்ரம் பவ அம்புதி ஸோஷம் –66-

கடிகசால க்ருஷ்ண மேகத. – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிய கறுத்த மேகத்தாலே, ஜநிதை: – உணடு பண்ணப்பட்ட, கந கருணா அம்ருதபூரை: பெருங் கருணையாகிற அம்ருத ப்ரவாஹங்களினால்‌, பாப அடவீ – எனது பாவங்களாகிய காடு, ப்ரதக்தா – நன்றாகக்‌ கொளுத்தப்பட்டது; பவஅம்புதி:- (எனது) ஸம்ஸாரமாகிய கடல்‌, சோஷம்‌ பஜதே – வற்றுதலை அடைகிறது. சித்ரம்‌ – இது ஆச்சரியம்‌.
கொளுத்தும்‌ சக்தியும்‌ வற்றச்‌ செய்யுமாற்றலும்‌ நெருப்புக்கிருக்க, இதில்‌ கருணாம்ருத ப்ரவாஹத்திற்குப்‌ பாவங்கொளுத்து மாற்றலும்‌, பிறவிக் கடலை வற்றச்‌ செய்யும்‌ சக்தியும்‌ உண்டானதாகச்‌ சொல்லியதனால்‌ இது ஆச்சரியமென்றார்‌. குளிர்ந்த கருணையை
நெருப்பென்ன மாட்டாமல்‌ அம்ருத ப்ரவாஹம் என்றார்‌ என்க. இதில்‌ எம்பெருமானை கைம்மாறு கருதாமல்‌ மழை பொழியும்‌ கார்மேகம் என்றார்

கந கருண அம்ருத பூரை –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி –
அம்ருத ப்ரவாஹம் பொழிந்து
கடிகாசல கிருஷ்ண மேகதோ ஜநிதை -இன்னும் கார் வண்ணனே
பாப அடாவீ ப்ரதக்தா -காட்டுத்தீயையும் அணைக்க வல்ல மேகம் அன்றோ
பவ அம்புதி ஸோஷம் –சம்சாரக்கடலை வற்ற வைக்கும் மேகம் அன்றோ
சித்ரம் பஜதே –என்ன ஆச்சர்யம் -ஆஸ்ரயிக்க வேண்டாவோ

————

கோபி பிரகாசி தார்த்தாத் கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத்
ஜாகர்தி ஸதத நித்ரம் ஸ விதுர் ஜகதாம் மனஸ் ஸரோஜம் மே –67-

கோபி: (1) தனது கிரணங்களினால்‌ (2) (கீதை சரமச்லோகம்‌ முதலிய) தனது ஸ்ரீஸூக்திகளினால்‌, ப்ரகாசித அர்த்தாச்‌ – (1) உலகிலுள்ள பொருள்களைக்‌ கண்களுக்குக்‌ காட்டுபவனும்‌ (2) சாஸ்த்‌ரார்த்தங்களை விளங்கச் செய்பவனும்‌, கடிகாஅபிதாநவதி கோத்ரே – கடிகை யென்னும்‌ பெயர்‌ பெற்ற மலையில்‌, உதிதாத்‌ தோன்றியவனுமான, ஜகதாம்‌ ஸவிது: – (1) உலகங்கட்கு ஸூர்யனானவனிடமிருந்து, ஸதத நித்ரம்‌ (1) எப்போதும்‌ கூம்பியே இருக்கிற (2) எப்போதும்‌ அறியாமையாகிய தூக்கங் கொண்டிருக்கிற, மே – என்னுடைய, மந: ஸரோஜம்‌ – தாமரை போன்ற மனஸ்ஸானது, ஜாகர்த்தி – (1) மலர்ச்சியை அடைகிறது (2) அறிவாகிய மலர்ச்சியைப்‌ பெறுகிறது.
கெள: – கிரணமும்‌ வாக்கும்‌. கோத்ரம்‌ – மலை. ஸவிதா – ஸூர்யனும்‌,-உலகங்களைப்‌ பெற்ற எம்பெருமானும்‌. இதில்‌ எம்பெருமானை ஸூரியனாகப்‌ பேசி யனுபவித்தார்‌

கோபி பிரகாசி தார்த்தாத் -தனது கிரணங்களால் பொருள்களை விளக்கும் ஆதித்யன்
கருணை ப்ரவாஹ -ஸ்ரீ ஸூக்திகளால் -சரம ஸ்லோஹாதிகள் -இவற்றால் ஸாஸ்த்ர சாரங்களை அருளிச் செய்து விளக்கி
கோத்ரே கடிகாபிதா நவத் யுதிதாத் –மலையிலே -உதித்து –
கீழே 13 ஸ்லோகம் கபி சூர்யன் உதித்து அக்காரக்கனியை ஸேவித்து பார்த்தோம்
எம்பெருமான் தானே உகந்து அருளி நித்யவாஸம் செய்து அருளி
ஜாகர்தி சதத நித்ரம் ஸ விது ஜகதாம் -உறக்கத்தில் இருந்து எழுப்பி
ஆதித்ய உதயம் முன்பே எழும் சாத்விகர் -காணாமல் கண்டு கொண்டு திரிகால சந்த்யா வந்தனம்
அஞ்ஞானம் அந்தகாரம் -உழன்று இருக்கும் சம்சாரிகள் விடுபட்டு ஞான மலர்த்தியை
மனஸ் ஸரோஜம் மே -மானஸ தாமரையை அலர்த்தும் அக்காரக்கனியே
தானே புகுந்து அகற்றி-விகஸித்து அருளுகிறார் -என்று ஸ்லாகிக்கிறார்

————

ருஷ்டேந யேந ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி
கந துரித தந்திநோ அஸ்மாத் கடிகாத்ரி ஹரே கதம் ந பிப்யது மே –68-

ருஷ்டேந யேந – கோபமடைந்த எம் பெருமானாலே, ருத்ர: – சிவபெருமான்‌, சரப:அபி – சரப வுருக்‌ கொண்ட போதிலும்‌, ருக்ண: – தோற்றுப்போய்‌, தரணீம்‌ ஜகாம – பூமிக்குள்ளே புகுந்து கொண்டானோ, அஸ்மாத்‌ கடிகாத்ரிவரே: – அத்தகைய இந்த கடிகாசலச் சிங்கப்‌ பெருமானிடமிருந்து, மே – என்னுடைய. கந துரித தந்திந: – மஹா பாதங்களாகிய யானைகள்‌, கதம்‌ – எப்படி, ந பிப்யது – அஞ்ச மாட்டா,
இக் கடிகை மலைச்சிங்கம்‌ சரபத்தை.. அச்சுறுத்துவதாக இருக்க, இதனிடம்‌ யானைகள்‌ அஞ்சுவதைப்‌ பற்றித்‌ தனியே சொல்ல வேண்டுமா ? என்றபடி
சரபம்‌ – இரண்டு தலைகளையும்‌ சிறகுகளையும்‌ கூரிய நகமுள்ள எட்டுக் கால்களையும்‌ மேல்‌ நோக்கி. கண்களை யுமுடைய மிருக விசேடம்‌. இதனைப்‌ பறவை யென்றலுமுண்டு. இது சிங்கத்தை எளிதிற்‌ கொல்லுந்‌ திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்கமாதலாலும்‌, ஸாமாந்ய ஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடைய புருஷோத்தமனது அவதாரமான திவ்ய ஸிம்ஹமாதலாலும்‌ இது சரபத்தைக்‌ கொன்று விட்டது-
ஹே! மர்த்ய ஸிம்ஹவ புஷஸ்தவ தேஜஸோஃம்ம ஸம்புர்‌ பவந்ஹி ஸரப: ஸலபோ பபூவ” சரப வுருக்‌ கொண்ட சிவன்‌ நரஸிம்ஹ ரூபங்கொண்ட உனது தேஜஸ்ஸில்‌ ஒரு மூலையில்‌ விட்டில்‌ பூச்சி போலே அகப்பட்டு மாண்டானன்றோ ? இது ஆச்சரியம்‌ – என்று கூரத் தாழ்வான்‌” (அதிமாநுஷ ஸ்தவ ‘ – 12) அருளிச் செய்தது ஸேவிக்கத் தக்கது –

ருஷ்டேந யேந -கொண்ட சீற்றம் ஓன்று இருக்க
ருத்ரோ ருக்ணோ தரணீம் ஜகாம சரபோ அபி –சரப உருவாக வந்த பொழுதும் கூட
தோற்று கீழே ஒளிந்து போகப் பண்ணினாய் அன்றோ-
இவ்வளவு வைபவம் கொண்ட அக்காரக்கனி அழகிய ஸிம்ஹர் முன்னால்
பாப மூட்டையாகிய பெரிய யானைகள் பயந்து நடுங்கச் சொல்லவும் வேணுமோ

கிரீடா விதேஸ் பரிகரஸ் தவ யா து மாயா சா மோஹிநீ ந கதமஸ்ய து ஹந்த ஐந்தோ ஹை மர்த்ய ஸிம்ஹ வபுஷஸ் தவ தேஜஸ் சா அம்சே சம்புர் பவந் ஹி சரபச் சலபோ பபூவ –12-யாதொரு மாயையானது-தேவரீருடைய லீலா வியாபாரத்துக்கு ஸாமக்ரியையாய் இருக்கிறதோ அந்த மாயை யானது எந்தப் பிராணிக்குத் தான் அவி விவேகத்தை உண்டு பண்ணுகிறது இல்லை சரப உருக் கொண்ட சிவனானவன் நரஸிம்ஹ வடிவு கொண்ட தேவரீருடைய தேஜஸ்ஸின் ஏக தேசத்திலே வீட்டில் பூச்சி போலே பட்டு ஒழிந்தான் இறே–என்ன ஆச்சர்யம் –சலபோ பபூவ-லகாரம் -ரகாரம் -சரபம் சலபம் ஆனதே என்ன ஆச்சர்யம் –ஸ்ரீ நரஸிம்ஹ பிரதாபா அக்னிஸ் புலிங்கத்திலே வீட்டில் பூச்சி பட்டது பட்டான் என்பது மாயையின் காரியமே-இத்தை கண்ட ருத்ரன் உனது பரத்வம் அறிந்து போனான் வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும் அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த சிங்கவேள் குன்றத்தினார்க்கு –சிங்க வேள் குன்றம் நூற்று எட்டு அந்தாதி -97-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்-சரபத்தை பிளந்தாயே -மன்மதனை எரித்த சிவனையே பிளந்தாயே

————–

அவ்யாஹத ப்ரஸாராத் அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் ஸஹஸ்ராஸ்யாத்
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் கடிகாத்ரி போகிந கோஹி –-69-

அவ்யாஹத ப்ரசாராத்‌ – தடை யற்ற ஸஞ்சாரத்தை யுடையதும்‌, அபஹத மந்த்ர ஒளஷதாத்‌ – தூரத்தில்‌ துரத்தப்பட்ட மந்த்ரமென்ன மருந்தென்ன இவற்றை யுடையதும்‌ (மந்திரத்திற்கும் மருந்துக்கும்‌ கட்டுப்படாததும்‌), ஸஹஸ்ரஆஸ்யாத்‌ ஆயி ரவாய்களுடையதுமான, கடிகாத்ரி போகிந: – கடிகை மலையிலுள்ள போக மனுபவிக்கும்‌ எம்பெருமானாகிய ஸர்ப்பத்தைக்‌ காட்டிலும்‌, கோ ஹி – வேறு யார் தான்‌, பாதக மூஷிக நிவஹாத்‌ – பாபமாகிய எலிக் கூட்டத்திலிருந்து, பாயாத்‌ (நம்மைக்‌) காப்பாற்றக் கடவர்‌.
இதில்‌ எம்பெருமானை ஸர்பமாக “ரூபணம்‌” செய்தார்‌. ஆயிர முகமுடைய எம்பெருமானாகிற ஸர்ப்பம் தான்‌ நம்முடைய எண்ணற்ற பாதகமாகிய எலிகளை விழுங்க வல்ல தென்றபடி. போகீ – பாம்பும்‌, போகமனுவிப்பவனும்‌, மந்திரமும்‌ மருந்தும்‌ தானிட்ட வழக்காகப்‌ பெற்ற எம்‌பெருமானாகிற பாம்பு, மந்திர – மருந்துகளுக்குக்‌ கட்டுப்படாமல்‌ தடையற்று பக்தர்களுள்ள விடந்தோறும்‌ திரிந்து அவர்களுடைய பாதக மூஷிகங்களை விழுங்குமென்பது கருத்து –

அவ்யாஹத ப்ரஸாராத் -தனக்கு தடை இல்லாமல் எங்கும் புகுந்து -சஞ்சரிக்கும் அரவம்
ஸர்வ வ்யாபி -அண்டம் அகத்தும் புறத்தும் உள்ளான்
அபஹத மந்த்ர ஒவ்ஷதாத் -மந்த்ரத்துக்கும் ஒவ்ஷதத்துக்கும் கட்டுப்படாமல்
வேதமோ தபஸோ ஹோமமோ -கட்டுப்படுத்த முடியாமல் -பக்தி ஒன்றாலே –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அன்றோ
ஸஹஸ்ராஸ்யாத் -ஆயிரம் தலை கொண்ட –ஸஹஸ்ரம் பல பலவே ஸர்வேஸ்வரேஸ்வரனையே சொன்னவாறு
பாதக மூஷிக நிவஹாத் பாயாத் –எலி பயல்கள் போல் -துஷ்ட பாபங்களையே எலி கூட்டமாக –கடிகாத்ரி போகி ந கோஹி -அக்காரக் கனியைத் தவிர வேறே யாரால் போக்க முடியும்

———–

கலித புருஷார்த்த ஸார்தாத் கடிகா கடிதாத் ஸநாதநாத் தர்மாத்
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –70 –

கலித புருஷார்த்த ஸார்த்தாத்‌ – உண்டு பண்ணப்பட்ட புருஷார்த்த ஸமூஹத்தை யுடைய உபாயமாயும்‌, கடிகா கடிதாத்‌ – கடிகை மலையில்‌ (மஹிரிஷிகளால்‌) சேர்க்கப் பட்டதுமான, ஸநாதநாத்‌ தர்மாத்‌ . நம்மால்‌ முயன்று உண்டாக்கப்படுகின்ற கரும யோகாதி தருமங்கள்‌ போலன்றிககே) நித்ய ஸித்தமான தருமமாகிய கடிகை யெம்பெருமானிடமிருந்து, ப்ரமாத்யதாம்‌ – தவறின, பும்ஸாம்‌ – புருஷர்களுக்கு, அத்ர அமுத்ர வா – இம்மையிலோ மறுமையிலோ, கிம்‌ வா க்ஷேமம்‌ ஸ்யாத்‌ – எந்த நன்மை தான்‌ உண்டாகும்‌ ?
புருஷார்த்தங்கள்‌ – இம்மை மறுமைகளல்‌ இன்பமும்‌, கைவல்ய மோக்ஷ ஸூகமும்‌ பரம பதத்தில்‌ பகவதநுபவ ஸூகமுமாம்‌, தருமம்‌ – ஸூகத்தைச்‌ சாதித்துத்‌ தரும்‌ உபாயம்‌ – முன்‌ ஸ்லோகத்தில்‌ ஸுகாநுபவத்திற்குத்‌ தடையாக வுள்ள பாவங்களை நீக்குதலாகிய அநிஷ்ட பரிஹாரம்‌ கூறினார்‌. இதில்‌ (இஷ்டமாகிய) ஸூகத்தைத்‌ தருவதாகிய இஷ்ட ப்ராபணம்‌ கூறினார்‌. இவை யிரண்டுமன்றோ உபாயத்தின காரியம்‌; ஹி ஹி – பாத பூரணம்‌.

கலித புருஷார்த்த ஸார்தாத் -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -இங்கும் அங்கும் -தந்து அருளும்
கடிகா கடிதாத் ஸநாத நாத் தர்மாத் -அக்காரக்கனி -தர்ம நிஷ்டையில் -ததாமி ஏதத் விரதம் மம -என்னுமவன் அன்றோ
அநாதி தர்மம் ராமாவதாரத்தில் வெளிப்படுத்தி அருளி -அவனைப் போல் அநாதி
கிம் வா பிரமாத் யதாம் ஸ்யாத் க்ஷேமம் ஹ்யத்ர ஹ்ய முத்ர வா பும்ஸாம் –இவ்வாறு இருந்தும் நாம் இடறி விழுகிறோமே
பும்ஸாம் -மானிடர்கள் –
அத்ர அமுத்ர-இங்கும் அங்கும்
க்ஷேமம் பெறாமல் இழப்பது ஆச்சார்யம் அன்றோ -ஹி –

———

கந ஸமய நிர் வ்யபேஷாத் மேகாத் கடிகாத்ரி பர்த்ரு ருத்பூதா
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –71-

கந ஸமய நிர் வ்யபேக்ஷாத்‌ – கார் காலததை எதிர் பார்க்காத, கடிகாத்ரி பர்த்து: கடிகைமலைத் தலைவன்‌ என்கிற, மேகாத்‌ – மேகத்தினிடமிருந்து, உத்பூதா – உண்டான, காசந – ஒப்பற்ற, கருணா தரங்கிணீ – கருணையாகிய ஆறானது, கலுஷ மலிநம்‌ பாபத்தினால்‌ அழுக்கடைந்த, புவநம்‌ – உலகத்தை (உலகிலுள்ளோரை) க்ஷாளயதி சுத்தி செய்கிறது.
இதில்‌ எம்பெருமானை மேகமாகவும்‌, அவனிடமிருந்து பெருகுகிற கருணையை
நதியாகவும்‌ வருணிக்கிறார்‌. உலகில்‌ வெளி யழுக்கைக் கழுவித்‌ தூய்மை யாக்கும்‌ ஆறானது கார் காலத்திலுண்டாகும்‌ மேகத்தை எதிர் பார்க்கும்‌. உள்ளழுக்காகிய பாபத்தைக் கழுவிச் சுத்தமாக்கும்‌ கருணை யென்னும்‌ ஆறு கார் காலத்தை எதிர்பாராமல்‌ எப்போதும்‌ பெருகும்‌. எம்பெருமான்‌ நித்யனாகையால்‌ அவனது கருணையும்‌ நித்யமாய்ப்‌ பாபிகளுக்கு உபயோகப் படுகிறது. அதை நாம்‌ உபயோகித்துக்‌ கொள்ள வேணுமென்றபடி. தரங்கிணீ அலைகளை உடைய ஆறு.

கந ஸமய நிர் வ்யபேஷாத் -நதி தேவதை -மழை கால ருதுவை விரும்புமே -அசுத்தங்களை தள்ளிக் கொண்டு போகும் அன்றோ –ஆனால் சரத்காலம் அபேக்ஷை இல்லாத அக்காரக்கனி காள மேகம்
மேகாத் கடிகாத்ரி பர்த்ரு –தலைவன் -கணவன் -இவனே மேகம்
ருத்பூதா -உத்பத்தி செய்து அருளும்
ஷாள யதி கலுஷ மலிநம் காசந கருணா தரங்கிணீ புவநம் –பாப அழுக்கு கூட்டங்களை உடனே சுத்தம் பண்ணும் –கருணை அலைகள் மிக்கு உள்ள நதி-எப்பொழுதுமே -எத்தையும் எதிர்பார்க்காமலேயே செய்து அருளும் அன்றோ

————–

ஸந் நிஹித சங்க பத்மாத் ஸர்வ ஸகாத் ஸகல புண்ய ஜன ஸேவ்யாத்
கடிகாத்ரி ராஜ ராஜாத் கா வா ந ஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத் –72-

ஸமாஸ்ரிதாத்‌ – (நம்மால்‌) தஞ்சமடையப்‌ பெற்றவனாய்க்‌ கொண்டு, ஸந்நிஹித சங்க பத்மாத்‌ – (1) தன்னருகில்‌ இருக்கப்‌ பெற்ற சங்கையும்‌ தாமரை மலரையும்‌ அல்லது பிராட்டியையும்‌ உடையவனும்‌ (2) தன்னிடமுள்ள சங்க நிதி பத்ம நிதிகளை யுடையவனும்‌, ஸர்வ ஸகாத்‌ – (1) எல்லோருக்‌கும்‌ தோழனானவனும்‌, (2) சிவ பெருமானுக்குத்‌ தோழனானவனும்‌, ஸகல புண்ய ஜந ஸேவ்யாத்‌ – (1) எல்லாப் புண்யசாலி ஜனங்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, (2) எல்ல புருக்ஷர்களாலும்‌ ஸேவிக்கத் தக்கவனுமான, கடிகாத்ரி ராஜ ராஜாத்‌ – கடிகை மலையிலுஎஃள குபேரனிடமிருந்து, கா வா ஸம்பத்‌ – எந்தச்‌ செல்வந்தான்‌, ந ஸ்யாத்‌ – உண்டாகாது.
இதில்‌ எம்பெருமானைக்‌ குபேரனாக வருணிக்கிறார்‌. பிரசித்தனான குபேரன்‌ – தநத: என்று பேர் பெற்றவனாய்ப்‌ பணமென்னும்‌ செல்வத்தை மட்டுமே அளிக்க வல்லவன்‌. இக் கடிகை மலைக்‌ குபேரனோ வன்னில்‌ – இப் பணமாகிய செல்வத்தோடு கூட ஆயுட் செல்வம்‌ மக்கட் செல்வம்‌ முதல்‌ இம்மைச்‌ செல்வமும்‌, சொர்க்க போகமாகிய மறுமைச்‌ செல்வமும்‌ மோக் ஷபோகமாகிய அழியாச் செல்வமும்‌ ஆகிய எல்லாவற்றையும்‌ கொடுக்குமாற்றல்‌ படைத்தவனென்பார்‌ – கா வா ஸம்பத்‌ ந ஸ்யாத்‌ – செல்வமென்று பெயர்‌ பெற்றவற்றில்‌ எது தான்‌ (இவனிடமிருந்து) உண்டாகாது என்றார்‌.
ஸந்நிஹிதெள சங்க; பத்ம: ச . அல்லது ஸந்நிஹிதே சங்க: பத்மா ச யேந ஸ: ஸந்நிஹித சங்க பத்ம: தஸ்மாத்‌ ௭-று பஹு வ்ரீஹி ஸமாஸம்‌ கொள்க. ஸர்வஸ்ய ஸகா – ஸர்வ ஸக: – ஸர்வ:- என்பது எல்லாரும்‌ என்ற பொருளையும்‌, சிவனையும்‌ குறிக்கும்‌. எல்லோருக்கும்‌ தோழன்‌ எம்பெருமான்‌, சிவனுக்குத்‌ தோழன்‌ குபேரன்‌, குபேரஸ்‌ த்ர்யம்பகஸக: என்பது அமர கோச… – குபேரன்‌ முக் கண்ணனுக்குத்‌ தோழன்‌ என்பது அதன்‌ பொருள்‌. புண்ய ஜந: – புண்யம் செய்தவனும்‌, யக்ஷனும்‌. ராஜ ராஜ: யக்ஷராஜனாகிய குபேரன்-

ஸந் நிஹித சங்க பத்மாத் -சங்க நிதி பத்ம நிதிகளைக் கொண்ட குபேரன்
சங்கம் தாமரை -அம்ருத பல வல்லித் தாயார் விட்டுப் பிரியாமல்
ஸர்வ ஸகாத் -ஸர்வேஸ்வரன் ஒருவனே -அனைவருக்கும் தோழன் -மங்களகரம் –
வைஷ்ணவானாம் யதா ஸம்பத் -அதுவே சம்பு சிவனுக்கு மங்களம் –
கீழே 68 ஸ்லோகம் சகாவாக முன்பே அருளிச் செய்தார் -ஆபத்து ரக்ஷகன்
அநந்யார்ஹம் இருக்க வேண்டியதாலும் -மற்றவரை வெறுக்கக் கூடாதே –
ஸகல புண்ய ஜன ஸேவ்யாத் -அனைவரும் ஆஸ்ரியத் தக்கவர்
கடிகாத்ரி ராஜ ராஜாத் -ராஜாதி ராஜன் -அக்காரக்கனி –
காவா நஸ்யாத் ஸமாஸ்ரிதாத் ஸம்பத்-எந்த செல்வம் தான் கிட்டப் பெறார்கள் -எல்லா செல்வங்களும்-அதுக்கும் மேலே பரம புருஷார்த்தமும் கிடைக்கப் பெறுவார்கள் அன்றோ –

————-

ப்ரஐந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தான் பவோரக க்ரஸ்தான்
குர்வீத லப்த சத்தான் கோ வா கடிகாத்ரி காருடி கதோ அந்ய –73-

பவ உரக க்ரஸ்தாந்‌ – ஸம்ஸாரமென்னும்‌ சபர்ப்பத்தினால்‌ விழுங்கப்பட்டவர்களாய்‌, ப்ரஜந விஷாநல மூர்ச்சா விமுஷித சித்தாந்‌ பெண் கலவி யாகிற விஷக் காற்றின்‌ வளர்ச்சியினால்‌ கவரப்பட்ட மனத்தை யுடையவர்களை, கடிகாத்ரி காருடிகத: கடிகை மலையிலுள்ள விஷ வைத்தியனாகிய எம்பெருமானைத்‌ தவிர, அந்ய: கோ வா வேறு யார்‌ தான்‌, லப்த ஸத்தாந்‌ – ப்ராணனை யுடைபவர்களாக – ஸத்தை பெற்றவர்களாக ஸத்தையின்‌ பயனான மோக்ஷத்தை யடைந்தவர்களாக, குர்வீத – ஆக்க வல்லார்‌.
இதில்‌ எம்பெருமானை விஷம் போக்கும்‌ வைத்தியனாக வருணிக்கிறார்‌. பாம்பு தீண்டி விஷமேறிச்‌ சாகக் கிடக்கிறவனை விஷ வைத்தியன்‌ பிழைக்க வைப்பான்‌. இவ் வுலக வாழ்க்கை யென்னும்‌ அரவம்‌ தீண்டி விஷய போகமாகிய விஷமேறித்‌ தன்‌ பிறப்பிற்குப்‌ பயனாகிய மோக்ஷமென்னும்‌ உயர்ந்த ஜீவனத்தை (பிராணனை)ப் பெறாமல்‌ ஸத்தா நாசமடைய விருக்கும்‌ மனிதனை. எம்பெருமானாகிய விஷ வைத்தியன்‌ மோக்ஷமளித்துப்‌ பிராணனை உண்டு பண்ணுகிறான்‌ என்றபடி. காருடிக:– விஷ வைத்தியன் –

ப்ரஐந விஷா நல -காம மோஹத்தால் –
மூர்ச்சா விமுஷித சித்தான் -சித்தம் முழுவதும் மூழ்கி
பவோ ரக க்ரஸ்தான் -ஸம்ஸார –உரக-க்ரஸ்தான் –நம்மை விழுங்கும் சர்ப்பம் –
கீழ் 11 ஸ்லோகத்திலும் நரேந்திரன் விஷ வைத்யனாக அருளிச் செய்தார்
குர்வீத லப்த சத்தான் கோவா -அத்தை மீட்டு உஜ்ஜவிப்பிக்க வல்லவன்
கடிகாத்ரி காருடி கதோ அந்ய –அக்காரக்கனி மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணனை விட வேறே யார்-நல்ல பிராணன் –அம்ருத பலமான தன்னையே அளிப்பவர் அன்றோ –
வாடினேன் வாடி –ஓடினேன் ஓடி –நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் -என்றாரே –

——-

நித்யாந் நிரஸ்த தோஷாத் நியதபதாத் புண்ய கீர்தன ஸ்ரவணாத்
விநதோ சிதாபி தாநாத் ப்ரஹ்மண ஏவாதி கம்யதே சகலம் –74-

நித்யாத்‌ – எக்காலத்திலும்‌ அழியாமல்‌ நூலை பெற்றிருப்பவனும்‌, நியதபதாத்‌ நித்யமான பரமபதமென்னும்‌ ஸ்தானத்தையுடை பவனும்‌, நிரஸ்த தோஷாத்‌- துரத்தப்பட்ட குற்றங்களை யுடையவனும்‌, புண்ய கீர்த்தன ஸ்ரவணாத்‌ – புண்ணியத்தை உண்டாக்குகின்ற – தன்னைப்‌ பற்றிய கீர்த்தனத்தையும்‌ ஸ்ரவணத்தைமுடையவனும்‌ (எவனைத்‌ ஸ்துதித்தாலும்‌, பிறர் ஸ்துதிக்கக் கேட்டாலும்‌ அவை புண்ணியத்தை யுண்டாக்குமோ அப்படிப்பட்டவனும்‌) விநதோசித அபிதாநாத்‌ (தன்னை வணங்கிய பக்தர்களுக்குக்‌ கருணை செய்யத் தக்கவன்‌ என்று பொருள்‌ படுகின்ற) பக்தோசிதன்‌ என்ற திருநாமமுடையவனுமான, ப்ரஹ்மண: ஏவ – ப்ர ப்ரஹ்ம மமாகிய ஸ்ரீமந்‌ நாராயணனிடமிருந்தே, ஸகலம்‌ – விரும்பிய எல்லாப் பயனும்‌, அதிகம்யதே – அடையப்படுகிறது

கீழ்‌ 72ம்‌ ச்லோகத்தில்‌ கடிசை.॥லைக்‌ குபேரனிடத்தில்‌ எல்லாச்‌ செல்வங்களும்‌ கிடைக்குமென்றார்‌. அவனை வெற ॥ குபேரனென்று நினைக்க வேண்டாம்‌. அவன்‌ பரப்ரஹ்ம மென்னும்‌ ஸாக்ஷாத்‌ விஷ்ணுவேயாவான்‌. அவனிடமிருந்து எல்லாப்‌ புருஷார்த்தங்களையும்‌ பெறலாம்‌ என்கிறார்‌ இதனால்‌. ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு: (விஷ்ணு எல்லாப்‌ பலன்களையும்‌ _உளிக்கவல்லவரல்லவா) என்றாரிறே வேதவ்யாஸ பகவான்‌ விஷ்ணு தர்மத்தில்‌ (43-47: விநத சப்தமும்‌, பக்த சப்தமும்‌ பரியாயமாகையால்‌, ‘பக்தோசிதன்‌” என்பதை “விரதோசிதன்‌

நித்யாந் –-ஸ நாதன் -நித்தியமாக –
நிரஸ்த தோஷாத் -அகில ஹேய ப்ரத்ய நீகன் அன்றோ
நியதபதாத் –பரமபதமும் நித்யம் அன்றோ
புண்ய கீர்தன ஸ்ரவணாத்-அது இது உது என்னாலாவது என கேனா அபி -அனைத்தும் புண்யம்
விநதோ சிதாபி தாநாத் -பக்தி பிரிய மாதவன் -பக்தி உசிதன் -கருணை பொழிபவன்
ப்ரஹ்மண ஏவ–சதேவ -ஏகமேவ அத்விதீயம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அதி கம்யதே சகலம் –சகல அபீஷ்டங்களையும் பெற்று மகிழ்வார்கள் அன்றோ
கரந்து எங்கும் பரந்துளன் -தான் ஏற நாள் பார்த்து உள்ளானே

————–

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் ஸ்வ ஆலோகேந ஏவ வ சஷுஷோ ஜகதாம்
கடிகாத்ர மித்ரதோ அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –75-

ஸ்வ ஆலோ கேந ஏவ – (1) தன்னுடைய ஒளியினாலேயே (2) தனது கடாக்ஷத்தாலேயே, அக்ர்யாம்‌ சுத்திம்‌ – உயர்ந்த தூய்மையை, உபஜநயத: – உண்டாக்குமவனும்‌, ஜகதாம் சக்ஷுஷ: – உலகங்களுக்குக் கண்‌ போன்றவனுமான, கடிகாத்ரி மித்ரத: – கடிகை மலையிலிருக்கும்‌ ஸூரியனைக் காட்‌டிலும்‌, அந்யம்‌ – வேறொருவனை, அஹம்‌ – நான்‌, அகிலலோக பாந்தவம்‌ – எல்லா வுலகங்களுக்கும்‌ பந்துவான ஸூரியனாக, ந கலயே எண்ண மாட்டேன்‌.
இதில்‌ எம்பெருமானை ஸூரியனாக ரூபணம்‌ செய்கிறார்‌. எம்பெருமானென்கிற ஸூரியனை விட – வேறான ஆகாயத்தில் தோன்றும்‌ ஸூரியனை ஸூரியனாகக்‌ கருத மாட்டேன்‌ என்கிறார் இதனால்‌.

ஸூத்திம் உப ஜநயதோ அக்ர்யாம் -முதன்மை -பவித்ரம்-சரீரத்துக்கு ஆத்ம உஜ்ஜீவனத்துக்கும் –
ஸ்வ ஆலோகேந ஏவ – சஷுஷோ ஜகதாம் -கண் போன்ற ஸூர்யன் -புற இருள் போக்க –கண்ணாவான் -ரக்ஷகன் அவனே-தன்னையே காட்டக் காணலாம்
கடிகாத்ர மித்ரதோ -மித்ரன் ஸூர்யன் –
அந்யம் கலயே அகில லோக பாந்தவம் நாஹம் –ந கலயே-ஸூர்ய நமஸ்காரம் செய்யாமல்
அவனுக்கும் அந்தர்யாமியான அக்காரக்கனியையே தொழுவேன்

——–

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை ஆலோகைர் அம்ருத ஸீதலை ஸ்நபிதா
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –76-

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை: – அமுத வெள்ளத்தோடு ஸமானமானவைகளும்‌, அம்ருத சீதளை: – அமுதம் போல்‌ குளிர்ந்தவைகளுமான, கடிகாத்ரி விலஸிதஸ்ய விதோ: ஆலோகை: – கடிகை மலையில்‌ மிகவும்‌ விளங்குகிற சந்திரனுடைய நிலவினாலே கடாக்ஷங்களாலே, ஸ்நபிதா: – நனைக்கப்ட்டவர்கள்‌, விவிதாந்‌ பவ தவ தாஹாந்‌ பலவகைப்பட்ட – ஸம்ஸாரமாகிய காட்டுத் தீயனால்‌ உண்டான எரிச்சல்களை, விஜஹதி விட்டு விடுகிறார்கள்‌.
முன்‌ ஸ்லோகத்தில்‌ எம்பெருமானை ஸூரியனாக வருணித்தவர்‌, இதில்‌ சந்திரனாக வருணிக்கிறார்‌. காட்டுத் தீயினால்‌ உடம்புக்கு உண்டாகும்‌ எரிச்சல்‌ சந்திரனுடைய குளிர்ந்த நிலவு உடம்பின்‌ மேல்‌ பட்டால்‌ நீங்கும்‌. எம்பெருமானாகிற சந்திரனுடைய நிலவு – அதாவது குளிர்ந்த கடாக்ஷங்கள்‌ நம்‌ மேல்‌ பட்டால்‌ ஆத்மாவுக்கு ஏற்படும்‌ ஸம்ஸார தாபங்கள்‌ நீங்கி விடுமென்றபடி. ஆத்யாத்மிகம்‌ ஆதிபெளதிகம்‌ ஆதிதைவிகம்‌ என்று ஸம்ஸார தாபங்கள்‌ மூன்று. தவ:- காட்டுத் தீ

அம்ருத ப்ரவாஹ ஸஹஜை –அம்ருத வெள்ளம் -இயற்கையாகவே –கீழே ஸூர்ய துல்ய -இங்கு சந்த்ர துல்ய-ஆலோகைர் அம்ருத ஸீதலை -குளிர்ந்து-ஸ்நபிதா -நனைக்கும்
விவிதான் பவ தவ தாஹான் விஜஹதி -சம்சார காட்டுத்தீயில் இருந்து விடுவித்து அருளும்
கடிகாத்ரி விலஸி தஸ்ய விதோ –அக்காரக்கனி சந்திரனே

——————

தர்மோத்தரம்‌ த்விபாத்ரே: ஸங்கே கடிகாத்ரி மத்பத விவாதம்‌ | கேநாப காரிணாரூஸ்மிந்‌ க்ருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம்வாஸ-77-

த்விபாத்ரே: – ஹஸ்தி கிரிக்கு, கடிகாத்ரி மத்பத விவாதம்‌ – கடிகைமலை யென்கிற நான்‌ வசிக்கும்‌ இடத்தோடு (உண்டான) வாய்ப் போரை – சண்டையை, தர்மோத்ரம்‌ உயர்ந்த தருமமுடையதாக (மிகவும்‌ நியாயமானதாக) ங்கே – ஊஹிக்கிறேன்‌. (அச் சண்டை எப்படிப்பட்ட தென்றால்‌) கேந அப காரிணா – எந்த அபகாரியினால்‌, அஸ்மிந்‌ – இங்கு (நானிருக்கும்‌ இடத்தில்‌) க்ருஷ்ண ம்ருக வரஸ்ய – கிருஷ்ணனாய்‌ அவதரித்த ம்ருக ராஜனான ஸிம்ஹத்திற்கு, நியத ஸம்வாஸ: – என்னோடு கூட நித்ய வாஸமானது. கல்பித: – ஏற்படுத்தப்பட்டது ? (என்பதேயாகும் )
கடிகைமலை தன்னிடம்‌ எழுந்தருளிடள்ள ஸிம்ஹத்தை ஹஸ்தி கிரிக்கு அனுப்பி அதனை நித்யம்‌ வஸிக்கும்படி செய்து விட்டதனால்‌, ஹஸ்தியான (யானையான) தனக்கு ஆபத்து நேரிட்டதென்று நினைத்து, ஹஸ்திகிரி – கடிகை மலையோடு சண்டை போடுவதாக, இக் கவி தாம்‌ கல்பித்து, அந்த சண்டையைத்‌ தாம்‌ மிகவும்‌ நியாயமாகக்‌ கருதுவதாகவும்‌ கூறுகிறாரிது தன்னால்‌. “எந்தத்‌ துரோஹி நானிருக்குமிடத்தில்‌ ஸிம்ஹத்தை ஸ்திர வாஸமாக இருக்கும்படிச்‌ செய்திருப்பான்‌. நீயே அப்படிச்‌ செய்திருப்பாய்‌” என்பது ஹஸ்திகிரி கடிகைமலையோடு புரிந்த வாய்ப்போரின்‌ அனுவாதமாகும்‌. இத்தகைய சண்டையை மிகவும்‌ நியாயமனதாகத்‌ தாம்‌ கருதுகிறாராம்‌ கவி. கடிகைமலைசெய்த காரியத்தினால்‌ ஹஸ்திகிரிக்கு ஆபத்து வந்து விட்டதனால்‌ ஆபத்தை யடைந்தவர்கள்‌ ஆபத்துக்குக்‌ காரணமாயிருப்பவர்‌ மேல்‌ கோபித்துச்‌ சண்டை யிடுவது நியாயந்தானே என்பது இக் கவியின்‌ கருத்தாகும்‌. கடிகாத்ரிக்கு மத்பத (என்னுடைய வாஸஸ்தானம்‌) என்று அடைமொழி யிட்டதற்கு- கடிகைமலை எனது மலையாயிருந்தாலும்‌, அது செய்த காரியத்தை நான்‌ நியாயமுடையதாகக்‌ கருத மாட்டேன் – அது செய்த துரோஹத்திற்காக, ஹஸ்திகிரி (வேறுமலை) அது தன்னோடு புரிந்த போரையே நான்‌ நியாயம்‌ மிக்கதாகக்‌ கருதுவேன்‌ என்பது கருத்து.
இங்ஙனமன்றி, பூர்வார்த்தத்தின்‌ இறுதியிலுள்ள மத்பதவிவாதம்‌ என்பதை மத்பதவிவாஸம்‌ என்பதாகக்‌ கொண்டும்‌. கேநாபகாரிணா என்ற விடத்திற்கு – வேறொரு பிரதியில்‌ “கேநாபிகாருணா” என்றுள்ள பாட பேதத்தை ஏற்றுக்‌ கொண்டும்‌, சுவை மிக்க பொருளொன்றும் உண்டு
த்விபாத்ரே: – ஹஸ்திகிரியினுடைய. க்ருஷ்ணம்ருக வரஸ்ய – க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு, அஸ்மிந்‌ – இந்த ஹஸ்திகிரியில்‌, நியத வாஸ: – நித்ய வாஸமானது. காருணா – லோகசிற்பியான, கேந – நான்முகக்‌ கடவுளினால்‌, ஆபி – அடைவிக்கப்பட்டது. (அது தருமமுடையதுதாள்‌) த்விபாத்ரே: – அந்த ஹஸ்திகிரியைவிட (ஹஸ்திகிரியில்‌ அப்பெருமான்‌ வாஸம்‌ செய்வதைவிட) க்ருஷ்ணம்ருகவரஸ்ய – அந்த க்ருஷ்ணனாகிய ஸிம்ஹத்திற்கு (உண்டான), (1) கடிகாத்ரி மத்பத விவாஸம்‌ – கடிகைமலையென்னும்‌ நானிருக்குமிடத்தில்‌ விசேஷ வாஸத்தை. தர்மோத்தரம்‌ – என்னுடைய உயர்ந்த தருமத்தின்‌ (புண்யத்தின்‌) பயனாக, சங்கே – கருதகிறேன்‌. அல்லது – (2) கடிகாத்ரி – மத்‌ – பத விவாஸம்‌ – கடிகை மலையையும்‌ என்னையும்‌ ஸ்தானமாகக்‌ கொண்டு செய்த விசேஷ வாஸத்தை, தர்மோத்தரம்‌ – “ஆந்ருசம்ஸ்யம்‌ பரோ தர்ம: (ராமாயணம்‌, ஸுந்தரகாண்டம்‌ 38.41) கருணையே உயர்ந்த தருமம்‌ – என்கிறபடியே அப்பெருமானுடைய உயர்ந்த கருணையின்‌ பயனாகவே, சங்கே – கருதுகிறேன்‌. என்றும்‌ கொள்ளலாம்‌

தர்மோத்தரம் த்வி பாத்ரே சங்கே -ஹஸ்திகிரிக்கும் கடிகாத்ரிக்கும் போட்டி -ஹஸ்திகிரிக்கே நியாயம்
கடிகாத்ரி மத்பத விவாதம்-அடியேன் வசிக்கும் கடிகாத்ரி யாக இருந்தாலும்
இரண்டு கிரிக்கும் பெருமாளையே தாங்கி இருந்தாலும்
கேநாப் காரிணா அஸ்மின் கிருஷ்ண ம்ருக வரஸ்ய நியத ஸம் வாஸ–கரும் தெய்வங்கள் இருவரும் -முகில் வண்ணன் -கரிய கோலத் திரு உரு
தன்னிடம் இருந்த ஸிம்ஹம் ஹஸ்திகிரிக்கு அனுப்பி -அஸ்மின் நான் இருக்கும் இடத்தில் –
யார் அபவாதம் செய்தார் -நன் தர்மம் வழியே முடிவு -நீயே தப்பு செய்தாய்
கவி சாதுர்யம் -அபூத கற்பனை -இல் பொருள் உவமை -சண்டையை கல்பிதம் செய்து அருளிய ஸ்லோகம்

————–

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் அபி துர ரஸநத்வம் ஆர்ஜவம் கமநே
கதமிவ ச கருட ஸக்யம் கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே –78-

கடிகாசல க்ருஷ்ண போகிந: – கடிகை மலையில்‌ உள்ள க்ருஷ்ண ஸர்ப்பத்திற்கு, ஸ்ரிதாநாம்‌ அம்ருதார்ப்பணம்‌ – தன்னைக் கிட்டுபவர்க்கு அம்ருதத்தைக்‌ கொடுப்பதும்‌ அபிதுர ரஸநத்வம்‌ – பிளவு படாத நாக்குடைமையும்‌, கமநே – செல்லும் போது, ஆர்ஜவம்‌ நேர்மையும்‌, கருடஸக்யம்‌ ச – கருடனோடு தோழமையும்‌, கதமிவ கடதே – எப்படித் தான்‌ பொருந்துகிறது.
இதில்‌ வேடிக்கையாக – எம்பெருமானைக்‌ கரு நாகமாகக்‌ கூறி, அதற்கு விஷங்கொடுப்பதும்‌, பிளவு பட்ட நாக்குடைமையும்‌, செல்லும் போது வளைந்து வளைந்து கோணலாய்ச்‌ செல்லுவதும்‌, கருடனோடு பகைமையுமே இயற்கை யாகையால்‌, அதனோடு முரண்பட்ட -பதவுரையில்‌ கூறிய -தன்மைகள்‌ எங்ஙனம்‌ பொருந்துமென்று விரோதத்தைத்‌ தோன்ற வைத்தார்‌. க்ருஷ்ண போகீ – கருநாகம்
அவ் விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ வருமாறு க்ருஷண போகீ என்றால்‌ கருநாகமன்று, க்ருஷ்ண போகீ – க்ருஷ்ணனாய்‌ அவதரிததுப்‌ பல போகங்களை அனுபவித்த எம்பெருமானாகிய நரஸிம்ஹப் பெருமாள்‌. அவனுக்கு ஆஸ்ரிதர்‌ பொருட்டுக்‌ கடல்‌ கடைந்து அம்ருதம்‌ கொடுப்பதும்‌, முன்னுக்குப் பின்‌ முரணாகப்‌ பேசுகை யாகிற பிளவு பட்ட நாக்கில்லாமையும்‌, தனது நடத்தையில்‌ கோணல் இல்லாமையும்‌, கருடனோடு தோழமையும்‌ பொருந்தாமை யில்லை, மிகவும்‌ அவை பொருந்துமென்று விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.

அம்ருதார்ப்பணம் ஸ்ரிதாநாம் -ஆஸ்ரிதற்கு ஆரா அமுதம் அன்றோ அக்காரக்கனி எம்பெருமான் -தன்னையே கொடுக்கும் கற்பகம்
அபி துர ரஸநத்வம் -பிளவு படாத ஜிஹ்வா -நாக்கு –ஸத்ய வாக்யன் அன்றோ –இரட்டை நாக்கு இல்லாமல்-ஆர்ஜவம் கமநே –நேர்மையாக நடந்து -நடப்பித்து
கதமிவ ச கருட ஸக்யம் –கீழே 4 ஸ்லோகம் கருடக்கொடி -மின்னி விளங்கியதை அருளினார் அன்றோ –கடிகாசல கிருஷ்ண போகிநோ கடதே —அக்காரக்கனியை -உகந்து கைங்கர்யம் செய்ய தானே வந்தார் அன்றோ பெரிய திருவடி

———

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞஸ் யாத்மநோ அம்ருதஸ் யாஹம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் கடிகாத்ரி பூமி பாலஸ்ய –79-

ஸம்ஸ்ரிதாநாம்‌ ஆகஸ்ஸு – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களின்‌ திறத்தில்‌, அநபிஜ்ஞஸ்ய – அறியாமையை யுடையவனும்‌. அம்ருதஸ்ய ஆத்மந: – மரணம்‌ முதலிய விகாரங்கள்‌ இல்லாத பரமாத்மாவுமான கடிகாத்ரி பூமிபாலஸ்ய – கடிகை மலை யரசனான நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அஹம்‌ – அடியேன்‌, நித்யம்‌ – எப்பொழுதும்‌, நியமேந – எல்லா நிலைகளிலும்‌ தவறாமல்‌, ஸேவக: ஸ்யாம்‌ – தொண்டு செய்பவனாக ஆகக் கடவேன்‌.
எம்பெருமான்‌ அடியார்கள்‌ செய்த குற்றங்களைக்‌ காணாக்‌ கண்ணிட்டிருப்பவன்‌. ‘அவிஜ்ஞாதா” (விஷ்ணு ஸஹஸ்ர நாமம்‌ 483) என்பது காண்க. “ஸ தே ஆத்மா அந்தர்யாமீ அம்ருத:” (ப்ருஹ தா-ண்யகம்‌ 5.7.22) என்று, அந்தர்யாமியான எம்பெருமானை அம்ருத: ஆத்மா என்பதும்‌ நோக்கத் தக்கது. இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு “ஒழிவில்‌ காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமை” செய்யக்‌ கடவேனென்றாராயிற்று இதனால்

ஆகஸ்ஸூ ஸம்ஸ்ரிதாநாம் அநபிஜ்ஞ ஸ்யாத் -ஆஸ்ரிதர்கள் குற்றம் பாராமுகமாகவே இருந்து அருளி-யாத்மநோ அம்ருதஸ் யாஹம் –அக்காரக்கனி -ஆராவமுதம்
நியமேந ஸேவக ஸ்யாம் நித்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை கொண்டு அருள வேண்டும்-கடிகாத்ரி பூமி பாலஸ்ய –பூ பரிபாலனம் செய்து அருளும்

———–

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ கடிகாத்ரி பூப்ருதோ யுக்தம்
ஸூதராம் பாப்ரதாநாம் யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –80

கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனான எம்பெருமானுக்கு, ஸத்ப்ய: ஸத்துவ குணமுள்ள புண்யசாலிகளான நல்லோர்களுக்காக, ஸத்த்வோத்தர ஸ்வதாநாம்‌ – ஸத்துவ குணம்‌ அதிகமாகப்‌ பெற்ற தன்னை அனுபவிக்கும்படி கொடுப்பதென்பது, ஸுதராம்‌ யுக்தம்‌ – மிகவும்‌ தகுந்த செயலாகும்‌. பாபரதாநாம்‌ ஸுர த்விஷாம்‌ – பாபம்‌ செய்வதிலேயே பற்றுடைய அஸுரர்கள்‌ பொருட்டு, தாநம்‌- தன்னைக்‌ கொடுப்பதென்பது, கதம்‌ யுஜ்யேத்‌ – எப்படிப்‌ பொருந்தும்‌. ஸத்துவ குணமுடையவர்களுக்கு ஸத்துவ குணமுடைய தன்னைக்‌ கொடுப்பது தகுந்தது. ரஜோ குணமும்‌ தமோ குணமுடைய அசுரர்களுக்குத்‌ தன்னைத்‌ தருவது பொருந்தாது. ஆகையால் தான்‌ எம்பெருமான்‌ அவர்களுக்குத்‌ தன்னை யனுபவிக்கத்‌ தருவதில்லை என்றபடி.

ஸத் வோத்தர ஸ்வ தாநம் ஸத்ப்போ —ஸாத்விகர் அனைவரைக்கும் தன்னையே கொடுத்து அருளும்-வேங்கடேச பிரபத்தி ஸ்தோத்ரம் -இதே போல் உண்டே –திருவேங்கடத்தானை சொல்லியே இந்த ஸ்தோத்ரம் உபக்ரமித்தார்
கடிகாத்ரி பூப்ருதோ –அக்காரக்கனி அரசன்
யுக்தம் -இதுவே தகுந்த செயல்
ஸூதராம் பாப்ரதாநாம் -நாநா விதம் பாபமே செய்து உள்ள அசுரர்களுக்கு
யுஜ்யேத கதம் ஸூரத் விஷாம் தாநம் –-இவ்வாறு அருள முடியாதே –

————-

கடிகாத்ரி காம ஸூரபே காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம்
மாதுர் கவாம் மயி ஸ்யாத் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –81-

கவாம்‌ மாது: – பசுக்களுக்குத் தாயாரான, கடிகாத்ரி காமஸுரபே: கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற காமதேனு வினிடமிருந்து, ஜகதாம்‌ உலகிலுள்ளவர்களுடைய, காங்க்ஷாபத ஸகல பலம்‌ – விருப்பத்திற்கு இலக்கான எல்லாப் பலன்களும்‌, மயி – என்னொருவனிடத்தில்‌, ஸ்யாத்‌ – உண்டாகும்‌. அஹோ ஆச்சரியம்‌. வத்ஸே – தன் கன்றினிடத்தில்‌, மாது: – தாய்ப் பசுவுக்கு, வாத்ஸல்யம்‌ – மிக்க அன்பு, கதம்‌ ந ஸ்யாத்‌ – ஏன்‌ இராது ?
காமதேனு அவரவர்கள்‌ ஆசைப்பட்டுக்‌ கேட்டவற்றை மட்டும்‌ அவரவர்களுக்குக்‌ கொடுக்கும்‌, தன் கன்றுக்கோ வெனில்‌ கேட்காமலேயே எல்லாவற்றையும்‌ கொடுக்கும்‌. பிறரை விடக்‌ காமதேனுவுக்குத்‌ தன் கன்றினிடம்‌ மிக்க வாத்ஸல்யம்‌ இருப்பது இயற்கை யன்றோ என்றபடி. இதனால்‌ முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறியபடியே தன்‌ கன்று போன்று அடியேனுக்குத்‌ தன்னையும்‌ கொடுக்கும்படியான வாத்ஸல்ய மிகுதி கூறியபடி

கடிகாத்ரி காம ஸூரபே -அக்காரக்கனி தன்னையே தரும் -காமதேனு –
மாதுர் கவாம்-ஈன்ற கன்றுக்கு கொடுக்கச் சொல்ல வேண்டுமோ
காங்ஷாபத ஸகல பல மஹோ ஜகதாம் – ஸமஸ்த லோக மக்களுக்கும் ஸமஸ்த அபீஷ்டங்களை அளிக்கும் அவன்-மாதுர் கவாம் வத்ஸே பஹுலம் கதம் ந வாத்ஸல்யம் –அஹோ –என்ன ஆச்சர்யம் இவன் ஈன்று எடுத்த குழந்தையான அடியேனுக்கு கிருபை பண்ணுவதில் என்ன ஆச்சர்யம்

————

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா
கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-82-

ஹந்த ந ஐஹத்ய மோகாமா ஸிஷமாப்ய ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: | கடிகாசல ஹரி சந்தந பார்ஸ்வ மஹீநா: ஸுபாவநா ஹாரா: |! 82

அஹீநா: – ஸர்ப்ப ஸ்ரேஷ்டங்கள்‌, ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றை ஆஹாரமாக உடையவைகளாய்‌, அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய – வ்யர்த்தமாகாத விஷப்‌ பற்களை யுடையவைகளாய்‌, ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – விஷத்தைக்‌ கக்குகின்றவைகளாய்‌, கடிகாசல ஹரி சந்நத பார்ஸ்வம்‌ – கடிகைமலையிலுள்ள எம்பெருமானாகிற, சந்தன மரத்தின்‌ ஸமீபத்தை, ந ஜஹதி – விட்டுப்போகிறதில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இப்பொருளின்படி கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற சந்தன மரத்தை விட்டு அகலாமல்‌ விஷப் பாம்புகள்‌ இருப்பதனால்‌ அவற்றுக்கு அஞ்சி எம்பெருமானை நாம்‌ அணுகி வணங்க முடியாமலிருக்கிறது. ஐயோ கஷ்ட! – என்ற கருத்துத்‌ தோன்றும்‌. இதற்குப்‌ பரிஹாரம்‌ மேலே காண்க.
அஹீநா: – மிகவும்‌ உயர்ந்த மஹரிஷிகள்‌ ஸுபாவந ஆஹாரா: – நல்ல காற்றையே ஆஹாரமாக வுடையவர்களாய்த்‌ (தவஞ்செய்து), அமோகாம்‌ ஆசிஷம்‌ ஆப்ய வ்யர்த்தமாகாத தமது விருப்பத்தை யுடையவர்களாய்‌ (தமது விருப்பம்‌ நிறைவேறப்‌ பெற்றவர்களாய்‌) ஸ்ரியம்‌ ப்ரயுஞ்ஜாநா: – தம்மை யண்டினவர்களுக்குச்‌ செல்வத்தை அளிப்பவர்களாய்க்‌ கொண்டு, கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம்‌ ந விஜஹதி – கடிகை மலை யிலுள்ள எம்பெருமானாகிற ஹரி சந்தன (கற்பக) வ்ருக்ஷத்தின்‌ பக்கத்தை விடாமலிருக்கிறார்கள்‌. ஹந்த – ஆச்சர்யம்‌.
இப்பொருளின்படி மகரிஷிகள்‌ தவஞ்செய்து எம்பெருமானிடம்‌ தாம்‌ விரும்பிய வரங்களைப்‌ பெற்று, அதனால்‌ எம்‌பெருமானையும்‌ தம்மையும்‌ அணுகினவர்களுக்கு வேண்டிய செல்வத்தை யளித்துக்‌ கொணடு பகவானை விடாமலிருக்கிறார்கள்‌. எல்லோரும்‌ எம்பெருமானையும்‌ அவனடியார்களான அம் மகரிஷிகளையும்‌ ஸேவிக்கக்‌ கடிகை மலைக்குச்‌ செல்லலாம்‌ என்று முன்‌ கூறிய விரோதத்திற்குப்‌ பரிஹாரம்‌ காண்க.
ஆசீ: – (1) விஷப்பல்‌ (2) விருப்பம் –ஸ்ரீ: (1) விஷம்‌ (2) செல்வம்‌ (1) அஹீநாம்‌ இநா: அஹீநா: – ஸர்ப்பங்களின்‌ ஸ்ரேஷ்‌டங்கள்‌. (2) நஹீநா: – அஹீநா: – நீசர்களுக்கு முரண்பட்ட உத்க்ருஷ்டர்கள்‌. பவநஏவ பாவந:- சோபந: பாவந: – ஸுபாவந: ஸுபாவந:ஆஹார: யேஷாம்‌ தே – ஸுபாவநாஹாரா

ஹந்த ந ஜகத் யமோகம் ஆஸிஷம் ஆப்ய ஸ்ரியம் ப்ரயுஞ்ஜாநா -அமோகமான விஷப் பற்கள் கொண்டு இருந்தாலும்-மஹரிஷிகள் புருஷகாரமாக இருந்து நம்மையும் அவன் இடம் சேர்த்து அருளுகிறார்கள்-இதுவே அவர்கள் விரும்பும் கைங்கர்யம் -அது அமோகமாக நிறைவேறும் படி அருளிச் செய்கிறான் —பரம பக்தியுடன் இருந்து -தீங்கு விளைக்காமல்-கடிகாசல ஹரி சந்தன பார்ஸ்வம் அஹீநா ஸூபாவந ஆஹாரா —-பக்கம் -சுற்றி என்றும் கொண்டு –அருகில் உள்ள பாம்புகளும் காற்றையே ஆகாரமாகக் கொண்டு இவனையே உண்ணும் சோறு என்று இருக்கும் மகரிஷிகளையும் சொன்னவாறு காற்றையே ஆகாரமாகக் கொண்டு மனனம் பண்ணி இருப்பவர்

 
—————-
 
சத அம்ருத பலஸ்ய கடிகா ஸைல ரஸா லஸ்ய ஸவித கஸ்யாபி
ஸப்தாதி நிம்ப ஸேவாம் ஸந்த்ய ஜதி ந ஹந்த ஹ்ருதய காகோ மே –83-
 
ஸத்‌ அம்ருத பலஸ்ய – நல்ல அம்‌ருதம் போல்‌ தித்திக்கும்‌ மோக்ஷமாகிய பழத்தை யுடைய, கடிகாசைல ரஸாலஸ்ய – கடிகை மலையிலுள்ள எம்பெருமானாகிற ஒட்டு மா மரமானது, ஸவிதகஸ்ய அபி – என் பக்கத்தை அடைந்திருக்கச்‌ செய்தேயும்‌ அதனை விட்டுவிட்டு, மே – என்னுடைய, ஹ்ருதய காக: – மனமாகிய காக்கை யானது, சப்தாதி நிம்ப ஸேவாம்‌ சப்தாதி விஷயங்களாகிற வேப்பம்‌ பழத்தை உண்ணுதலை, ந ஸந்த்யஜதி விடுவதே யில்லை. ஹந்த – கஷ்டம்‌.
இதில்‌ கடிகை யெம்பெருமானை ஓட்டு மா மரமாகவும்‌ அவன்‌ கொடுக்கும்‌ அம்ருதத்தை – மோக்ஷத்தை அதில்‌ பழுத்த பழமாகவும்‌ பணம்‌ செய்து, அம் மரம்‌ கடிகை மலையில்‌ எனக்கு அண்மையில்‌ இருக்கச்‌ செய்தேயும்‌ அதை விட்டு விட்டு, என்‌ மனமாகிய காக்கை தான்‌ உண்டு பழகிய வேப்பம்‌ பழமாகி சப்தாதி விஷயத்தையே அனுபவிக்க எண்ணி, வெகு தூரம்‌ வருந்திச்‌ செல்கிற- ஐயோ கஷ்டம்‌ என்று கவி தம்மைப் பற்றி நைச்யாநுஸந்தானம்‌ செய்கிறார்‌. அதனால்‌ அவருடைய நைச்யாநுஸந்தானம்‌ நமக்குப்‌ பாடம்‌ கற்பிக்கிறது – நீச விஷயாநுபவத்தைவிட்டு மோக்ஷமாகிய பலம்‌ கிடைக்க கடிகை மலை எம்பெருமானைச்‌ சேவிக்கச்‌ செல்லுங்கள் என்பதாக –
 
சத அம்ருத பலஸ்ய –ஸாத்விக அம்ருத பலம் –அந்தமில் பேர் இன்பம் பர்யந்தம் அருளும்
கடிகா ஸைல ரஸா லஸ்ய —அக்காரக்கனி -கட்டடங்க அம்ருத ரஸம் மிக்கு -அன்றோ -தன்னையே அளித்து அருளும் –
ஸவித கஸ்யாபி -கூப்பிடு தூரத்தில் இருக்க
ஸப்தாதி நிம்ப ஸேவாம் -ஸப்தாதி -வேம்பை விரும்பிப் போகுவதே –
நெஞ்சம் உனது தாள் ஒழிந்தவற்றையே உகக்க -மா முனிகள் போல் இங்கு இவரும் நைச்யம் பாவிக்கிறார்
நாம் அனுசந்திக்கவே இருவரும் இவ்வாறு அருளிச் செய்கிறார்கள்
ஸந்த்ய ஜதி ந –ஐந்தில் அறியாதார் ஐம்பதிலும் அறியாரே -இதுவே தேஹ யாத்திரை ஆவதே –
ஹந்த -என்ன ஆச்சர்யம் -ஐயோ
ஹ்ருதய காகோ மே -காகம் போல் –பறந்து கண்டதையும் கவ்விப் போவதே -ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
 
—————
 
அமல அநு ராக ஸலிலை அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம் கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –84-
 
அமல அநுராக ஸலிலை: – நிர்மலமான. அன்பென்கிற (பகவத் பக்தி யென்கிற) தீர்த்தத்தினாலே, அபிலாஷ மலாநி ஸகலாநி – நீசமான சப்தாதி விஷயங்களில்‌ ஆசையாகிற அழுக்குகள்‌ அனைத்தையும்‌, அபோஹ்ய – என்‌ மனத்திலிருந்து அகற்றி, அஹிம்ஸந ஆத்யை: புஷ்பை: – அஹிம்ஸை முதலிய எட்டுப்‌ புஷ்பங்களாலே, கடிகாத்ரி தைவதஸ்ய – கடிகை மலைத்‌ தேவதையாகிய நரஸிம்ஹப்‌ பெருமானுக்கு, அர்ச்சாம்‌ பூஜையை, குர்யாம்‌ – செய்யக் கடவேன் –
பகவானைப்‌ பற்றிய நிர்மலமான பக்தி உண்டானால்‌ நீச விஷயங்களில்‌ ஆசை அகன்று விடும்‌. அவை அகன்றால்‌ மனத்தில்‌ எட்டு வகையான எண்ணங்கள்‌ பிறக்கும்‌ அவற்றால்‌ எம்பெருமானுக்கு ஸந்தோஷமுண்டாகும்படி அவனுக்குப்‌ பூஜை செய்கிறேனென்கிறார்‌. முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறிய மோக்ஷத்திற்கு எம்பெருமானிடம்‌ பக்தி யுண்டாக வேணும்‌. அதனால்‌ கெட்ட ஆசைகள்‌ அகலும்‌. நல்லெண்ணங்கள்‌ உண்டாகும்‌. அவை பகவானுக்கு உகப்பை யுண்‌டு பண்ணுவன என்பது கருத்து.
பகவானை அர்ச்சிக்கும்‌ புஷ்பங்கள்‌ எட்‌டு -வெளிப் புஷ்பங்கள்‌ “ஆனிரை மேய்க்க நீ போதி” என்று தொடங்கும்‌ திருமொழியில்‌ பெரியாழ்வார்‌ அருளுகின்ற செண்பகம்‌, மல்லிகை, பாதிரி, செங்கழுநீர்‌, புன்னைப் பூ, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை – என்பவை எட்டு. உள்ளத்தில்‌ உண்டாகும்‌ புஷ்பங்களாவன – அஹிம்ஸை, பொறியடக்கம்‌, தயை, பொறுமை, தத்துவ ஜ்ஞானம்‌, தவம்‌, த்யானம்‌, ஸத்யம்‌ என்பவை. இவை யெட்டும்‌ விஷ்ணுவுக்கு ப்ரீதியை உண்டாக்குவனவாம் –
 
அமல அநு ராக ஸலிலை –குற்றங்கள் அற்ற ப்ரேமை -பக்தி -விரும்பி -நீர்ப் பண்டமாக உருகும் படி-பக்திக்கும் அமல –நீர்ப்பண்டத்துக்கும் அமல விசேஷணம்
பர கத ஸ்வீ காரம் -உதாராஸ் ஸர்வை என்னுமவன் அன்றோ
அபிலாஷ மலாந்ய போஹ்ய சகலாநி -ஆசை காமம் -ஆறு பகைவர்கள் -காமம் க்ரோதம் இத்யாதிகளைபப் போக்கி-மதம் அபிமானம் அற்ற அந்திம உபாய நிஷ்டர்கள் அன்றோ மா முனிகள் ப்ருத்யைர்கள் -அவர்களில் ஸ்ரேஷ்டர் அன்றோ இவர்
நமக்காகவே இவ்வாறு அருளிச் செய்கிறார் -நிர்மலமான பக்தி நீர் கொண்டு அகற்றி அருள வேண்டும்
குஸூமைர் அஹிம்ஸந ஆத்யை குர்யாம்--ஸாத்விக அஷ்ட புஷ்பங்களைக் கொண்டு
கடிகாத்ரி தைவதைஸ் யார்ச்சாம் –அக்காரக்கனி அர்ச்சனை செய்யும் அருள வேண்டும்

அஹிம்ஸா பிரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:-சர்வபூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத: சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம் ஞானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் பவேத்

அபகத மத மாநைர் அந்திமோபாய நிஷ்டை-அதி கத பரமார்த்தைர் அர்த்த காம அநபேஷை –நிகில ஜன ஸூஹ்ருத்பிர் நிர்ஜித க்ரோதா லோபை வர வர முனி ப்ருத்யைர் அஸ்து மே நித்ய யோக –10-

விஷய போகக் களிப்பும் செருக்கும் அற்றவர்களாயும் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம உபாயமாக நிஷ்கர்ஷிக்கப் பட்ட அந்திம உபாயத்தில் ஊற்றம் உடையவர்களாயும் சகல சாஸ்த்ர சாரார்த்தங்களும் கை வந்தவர்களாயும் -தர்ம மோக்ஷங்கள் தவிர அர்த்த காமங்களில் விருப்பம் அற்றவர்களாயும் -ஒருவர் இடத்திலும் மாத்சர்யம் கொள்ளாதே சர்வ பூத ஸூஹ்ருத்துக்களாயும் க்ரோதம் லோபம் இரண்டையும் வென்றவர்களாயும் இருக்கின்ற மா முனிகளின் அடியாரோடு அடியேனுக்கு நித்ய சகவாசம் உண்டாகக் கடவது -என்று விஞ்ஞாபனம் செய்வார் சில பக்தர்கள்-

—————

தந தாத்யைர் அபி ந பரஸை ஸாத்யம் ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் துல்யோ கடிகாத்ரி பூ ப்ருத கோ வா |!—85-

(கடிகைமலையரசனான எம்பெருமானாலே ) பரை: – பிறராகிய, தந தாத்யைரபி குபேரன்‌ முதலியவர்களாலும்‌, யத்‌ ந ஸாத்யம்‌ – எது ஸாதிக்க முடியாததோ –தத் -அத்தகைய -ஸுமஹத்‌ – மிகப் பெரியதான, ஹிரண்ய தாநம்‌ – (1) ஸ்வர்ண தானமானது -(2)ஹிரண்யனைப்‌ பிளத்தலானது(தாநம்‌ – கொடுத்தலும்‌ பிளத்தலும்‌) ஸு+கரேண – நல்ல கையினால்‌, க்ருதம்‌ – செய்யப் பட்டது. அத: – அக் காரணத்தினால்‌, கடிகாத்ரி பூப்ருத: – கடிகை மலையரசனுக்கு, கோ வா துல்ய: ஸ்யாத்‌ – எவன்‌ தான்‌ ஸமாநமாக ஆக முடியும்‌ ?

தந தாத்யைர் அபி –குபேரன் முதல் கொண்டு –
ந பரஸை ஸாத்யம் -வேறே எவராலும் செய்ய முடியாததாய்
ஸூ மஹத் ஹிரண்ய தாநம் தத் -பெரிய-மஹாத்ம்யம் மிக்க இரண்ய தானம் -ஹிரண்ய வதம் -மோக்ஷ பிராப்தி என்றுமாம்
ஸூகரேண க்ருதமத ஸ்யாத் -ஸூ குமாரமான திருக் கரங்களால் செய்து அருளிய
துல்யோ கடிகாத்ரி பூ ப்ருதகோ –அக்காரக்கனி எம்பெருமானுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே-மோக்ஷ பிரதன் இவன் ஒருவனே -என்றவாறு –

———–

ஐநயத்வதி ச சகலாந் ஞாப்யதி ச யோ ஹிதாஹிதே சாஸ்த்ராத்
நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய –86-

ய: – எவன்‌, ஸகலாந்‌- எல்லோரையும்‌, ஜநயதி அவதி ச – பிறப்பிக்கிறானோ, மேலும்‌ காப்பாற்றுகிறானோ, சாஸ்த்ராத்‌ – வேதாதி சாஸ்த்ரங்களின்‌ வாயிலாக, ஹிதஅஹிதே நன்மையையும்‌ தீமையையும்‌, ஜ்ஞாபயதி ச – அறிவிக்கின்றானோ, தஸ்ய – அந்த, கடிகாத்ரி ஸர்வஜநகஸ்ய – கடிகை மலையிலுள்ள -எல்லோர்க்கும்‌ தந்தையான எம்பெருமானை, கோ வா ஜ்ஞாநீ – எந்த அறிவாளிதான்‌, ந அத்யேதி – கற்றறிய மாட்டான்‌.
இத்தனை யுபகாரங்களைச்‌ செய்த எம்பெருமானை எல்லோரும்‌ வேதாதி சாஸ்த்ரங்களின்‌ மூலமாகக்‌ கற்றறிவார்கள்‌ என்றபடி. அத்யேதி தஸ்ய கோ வா என்று பாடமானால்‌ அவன்‌ சொல்லை யார் தான் மீறுவார்கள்‌ என்று பொருள்‌ கொள்க. பித்ரு வாக்ய பரிபாலனம்‌ பிள்ளைகளுக்குப் பணி யன்றோ ? பித்ரு வாக்யமானது ஸ்ருதி ஸ்ம்ருதீ மமைவாஜ்ஞா (விஷ்ணு தர்மம்‌ 76-31) என்கிறபடியே பகவதாஜ்ஞா ரூபமான ஸ்ருதிகளும்‌ ஸ்ம்ருதிகளுமாகும்

ஐநயத்வதி ச சகலாந் -ஸமஸ்த சேதனங்களையும் ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து அருளி
ஞாபயதி ச யோஹிதாஹிதே சாஸ்த்ராத் ஹிதமாக ஸாஸ்த்ர பிரதானங்களையும் அருளி
கோவிந்தா நாமம் வாயாலே சொல்வாருக்கும் ரக்ஷித்து அருளும் தீஷையும் கொண்டு அருளி-நாத்யேதி தஸ்ய கோவா ஞானீ கடிகாத்ரி ஸர்வ ஐநகஸ்ய -ஜனிக்கும் காரணம் —அகில லோக தந்தை அன்றோ அக்காரக்கனி-இவற்றை அறிந்து -அத்யயனம் பண்ணி -கற்று அறிந்து தேறி -யார் தான் செய்ய மாட்டார்கள் –

———–

தோஷா கரே வி ராகம் ஸூர்யா லோகே விகாஸ மா மோதம்
பத்ம்யாக்யாம் அபி வஹதோ யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –87-

தோஷாகரே – (1) இரவை விளங்கச் செய்யும்‌ சந்திரனிடத்தில்‌ (2) குற்றங்களுக்கு நிதியான மனிதனிடத்தில்‌, விராகம்‌ ஆசை யில்லாமையையும்‌ (வெறுப்பையும்‌), ஸூர்ய ஆலோகே (1) ஸூர்யனைப்‌ பார்க்கும் போதும் , ஸூரி ஆலோகே (2) தத்வ ஜ்ஞானியான பண்டிதனைக்‌ காணும்‌ போது, விகாஸம்‌ ஆமோதம்‌ – (1) மலர்ச்சியையும்‌ நறு மணத்தையும் (2) முகம் மலர்தலையும்‌ ஸந்தோஷத்தையும்‌, பத்ம ஆக்யாம்‌ அபி (1) (2) பத்ம: என்கிற பெயரையும்‌, வஹத: – வகிக்கிற, கடிகாத்ரியஸ்ய – கடிகை மலையரசனுக்கு, கேஸரிதா (7) பூந் துகளை யுடைமை (2) பிடரி மயிருடைமை, யுக்தா – பொருந்தியதேயாகும்‌.
இதில்‌ எம்பெருமானை – பூந் துகளையுடை . தாமரை மலராந் தன்மையையும்‌, பிடரி மயிருடைய ஸிம்ஹமாம்‌ தன்மையையும்‌, அவை யிரண்டு தன்மைகளுக்கும்‌ ஏற்கும்‌ விசேஷணங்களை சிலேடை வகையில்‌ அமைத்துச்‌ சமத்காரமாகப்‌ பேசுகிறார்‌.
தோஷாம்‌ கரோதி – இரவை அலங்கரிப்பதால்‌ சந்திரனுக்கும்‌, தோஷாணாம்‌ ஆகர: – குற்றங்களுக்கு இருப்பிடமாகையால்‌ துஷ்டனுக்கும்‌, தோஷாகரனாந்‌ தன்மை ஒக்கும்‌. பத்ம: என்பது தாமரை மலருக்கும்‌, பத்ம: அஸ்மிந்‌ அஸ்த, பத்மா அஸ்மிந்‌ அஸ்தி என்ற வ்யுத்பத்திகளால்‌ – தாமரை மலரைக் கையிலுடைமையாலும்‌, தாமரையாளான பிராட்டியைத்‌ திருமார்பில்‌ உடைமையாலும்‌ பெருமாளுக்கும்‌ பெயராகும்‌.

தோஷா கரே வி ராகம் -தோஷம் கரோதி –சந்திரனுக்கு தோஷாகரன் -அவனைப் பார்த்து கூம்பிப் போகுமே-குற்றங்களையே பண்ணிக் கொண்டு இருக்கும் ஸம்ஸாரிகளை பார்த்து திருமுகம் வாடுமே
ஸூர்ய ஆலோஸி விகாஸ மா மோதம் -கதிரவனைப் பார்த்ததும் விகசிக்கும்
ஸூரி ஆலோக்ய-நித்ய ஸூரிகளை -அவர்களிலும்  பிரதானரான ஆதி சேஷனைப் பார்க்கும் க்ஷணம் தோறும் அதி விகாஸம் அடையுமே
பத்ம்யாக்யாம் அபி வஹதோ -பத்மம் தாமரை -பத்மம் திருக் கையில் வைத்து இருப்பதால் பிராட்டிக்கும் அக்காரக்கனிக்கும் பத்மக யுக்தா கடிகாத்ரி பஸ்ய கேஸரிதா –கேஸரி -மகரந்த சுவை இருப்பதால் தாமரைக்கும் ஸிம்ஹ பிடரிக்கும்-இவ்வளவு ஒற்றுமைகள் உண்டே –நீரே தாமரை -என்கிறார்

நித்யாநாம் யத் ப்ரதம கணநாம் நீயஸே ஷாஸ்த்ர முக்யை: |
க்ருத்யாSSக்ருத்யா பவஸி கமலா பர்துரேகாந்த மித்ரம் ||
தேவ:ஸ்வாமீ ஸ்வயமிஹ பவந் ஸௌம்யஜாமாத்ரு யோகீ |
போகீஷத்வத் விமுகமபிமாம் பூயஸா பஷ்யசி த்வம் ||-ஸ்ரீ வர வர முனி சதகம் –24

எந்த நீர் சாஸ்த்ரமறிந்தவர்களால் நித்யர்களுக்குள் முதல்வராக எண்ணப் படுகிறீர்,
செய்கையாலும் உருவத்தாலும் கமலாபதியின் ரஹஸ்யத் தோழனாகிறீர் —
தேவனாகவும் உடையவனாகவும் உள்ள தாமே இங்கு வரவர முநியாகி ஹே அநந்தனே!
உம்மைப் பாராதிருந்தும் என்னை நிறையக் கடாக்ஷிக்கிறீர்.

————————

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்
பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா–88–

மயா – என்னாலே, விபுலேந தபஸா – பெரிய தபஸ்ஸின்‌ மூலமாக, அத்ய லப்தா இப்போது அடையப்பட்ட, இயம்‌ – இந்த, தந்வீ – சிறிய அளவுள்ள (2) மெல்லிய மேனியை உடைய, பக்தி கந்யா – (1) பக்தியாகிற (2) கன்‌னிகையானவள்‌, ப்ரெளடா ஸதீ – (1) பரிபக்குவமடைந்ததாய்‌ (2) ருதுவானவளாய்க்‌ கொண்டு, கடிகாத்ரி பர்த்தரி – (1) கடிகை மலை யரசனான, (2) கணவனிடத்தில்‌, அவ்யபிசாரம பாவம்‌ – (1) வேறொரு தேவதையிடம்‌ பிளவுபடாத தன்மையை (2) வேறொரு புருடனிடத்தில்‌ செல்லாத மனதை, பஜதாம்‌ அடைந்திடுக.

இதில்‌ எம்பெருமானிடம்‌ பக்தியானது தமக்கு நீண்ட காலம்‌ தவம்‌ செய்து உண்டானதாகவும்‌, அது நாளடைவில்‌ வளர்ந்து பெருகி எம்பெருமானை விட்டு மற்றோர்‌ வ்யக்தியில்‌ அகலாதிருக்க வேணுமென்பதாவும்‌ பேசுகிறார்‌. இந்த பக்தியின்‌ நிலைமைக்கேற்ப, ஒரு பெண்ணின்‌ பருவத்தையும் குறித்திருப்பது அநுபவிக்கத் தக்கது. இப்படிபட்ட பக்திக்கு ப்ரயோஜநம்‌ மோக்ஷமடையத்‌ தகுதி பெறுதலாகும்‌. மாஞ்‌ ச யோஃவ்யபி சாரேண பக்தியோகேந ஸேவதே, ஸ குணாந்‌ ஸமதீத்யைதாந்‌ ப்ரஹ்ம பூயாய கல்பதே (கீதை 14-26) (என்னை எவனொருவன்‌ அவ்யபிசரிதமான-பிறரிடத்தில்‌ பிளவு பட்டுச்‌ செல்லாத பக்தி யோகத்தினால்‌ ஸேவிக்கிறானோ, அவன்‌ முற்கூறிய ஸத்த்வ ரஜஸ்‌ தமோ குணங்களைக் கடந்து, ப்ரஹ்ம ஸாம்யமாகிற மோக்ஷத்தை யடைவதற்குத்‌ தகுதி பெறுகிறான்‌ என்று கண்ணபிரான்‌, அருளியது காண்க. அல்லது உணவுக்கு அவச்யம்‌ முன்பு வேண்டிய பசி போலே, எம்பெருமானை அனுபவிக்கைக்கும்‌ அவனுக்குத்‌ தொண்டு செய்வதற்கும்‌ முன்பு உண்டாக வேண்டிய ஸ்வயம் ப்ரயோஜனமாகிய பக்தியை இங்குச்‌ சொல்லிற்றாகவும்‌ கொள்ளலாம்

தந்வீ மயா அத்ய லப்தா தபஸா விபுலேந பக்தி கந்யேயம்-அடியேனால் விபுலமான தபஸ்ஸாலே இப்பொழுது அடையப்பெற்ற -பக்தி -என்னும் கன்னிகை -தந்வீ-இப்பாலையை –பஜதாம் அவ்யபிசாரம் பாவம் கடிகாத்ரி பர்த்தரி ப்ரவ்டா—பிஞ்சிலே பழுத்து ஆசை விஞ்சி -பிரவிடாகி-அக்காரக்கனி எம்பருமானையே வரித்து-செய்த்தலை நாற்று போல் செய்வன செய்து கொள்ளட்டும் என்று அவனுக்கே அநந்யார்ஹை ஆகி-மற்று ஒரு தெய்வத்துக்கு ஆளாவதையும் -பேச்சும் கூட பொறுக்க மாட்டாமல் ஆனாள்-இந்த ஸ்தோத்ரம் ஸ்வாமியுடைய தபஸ்ஸாகும்-இதன் பலமாகவே பெற்ற பரம பக்தி நிலை என்று அருளிச் செய்கிறார்

—————-

பாஸ்வதி ஸூராஸூர குரவ் போகிநி வந்தாரு சவும்ய மந்தாரே
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி விதவ் கதம் க்ரஹை பீடா –89-

ஹே கடித ஆத்மகாய – வாராய்‌!, பொருந்தாத – ஸிம்ஹத்தின்‌ தலையையும்‌ மனிதனின்‌ உடலையும்‌ பொருத்தித் தனது திருமேனியாகக்‌ கொண்ட எம்பெருமானே, பாஸ்வதி – விளங்குமவனும்‌, ஸூர அஸுர குரெள – தேவர்களுக்கும்‌ அசுரர்களுக்கும்‌ பூஜிக்கத் தக்கவனும்‌, போகிநி போகங்களை அனுபவிக்கின்றவனும்‌, வந்தாரு ஸெளம்ய மந்தாரே – துதிப்பவர்க்கு நல்ல கற்பகம்‌ போல்‌ எல்லாவற்றையும்‌ அளிப்பவனும்‌ ஆகிய, கடிகாத்ரி விதெள – கடிகை மலையிலுள்ள எம்பெருமாளாகிய சந்திரனாகிய, த்வயி – உன்னிடத்தில்‌, க்ரகை: பீடா – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கமானது, கதம்‌ எப்படி, கடதே – பொருந்தும்‌.

பாஸ்வதி –ஸூர்யன் -ஆச்சார்யமான தேஜஸ்
ஸூராஸூர குரவ் -ப்ருஹஸ்பதி சுக்ரன் -தேவாசுரர்களும் பூஜிக்கும்
போகிநி -ராகு கேது -போகங்களை அனுபவிக்கும் -பாற் கடல் எம்பெருமான்
வந்தாரு சவும்ய -புதன் -வாங்கியவர்களுக்கு கற்பகம்
மந்தாரே -அனைத்துக்கும் அந்தர்யாமி
கடிதாத்மகாய கடதே கடிகாத்ரி –அக்காரக்கனி -சேராச் சேர்க்கை ந்ருஸிம்ஹம்
விதவ் கதம் க்ரஹை பீடா ––க்ரஹங்களால் என்ன பீடை வரும் –ஸந்த்ரன் விட ஆஹ்லாத கரம்-நீரே குளிரச் செய்து அருளிய பின்பு -ஆச்சார்யர் அநு க்ரஹமே -பலிக்கும் ‘
க்ரஹங்களால் அணுகவும் ஒண்ணாதே

இதில்‌ எம்பெருமானைச்‌ சந்திரனாகக்‌ குறிப்பிட்டு, சந்திரனுக்கு இயல்பாக உண்டாகும்‌ க்ரஹ பீடைகள்‌ உண்டாகாதென்கிறார்‌ – உண்டாகாமைக்குக்‌ காரணம்‌ – அவன்‌ வெறும்‌ சாதாரண சந்திரன்‌ அல்லால்‌ பற் பல பெருமைகளைப்‌ பெற்ற சந்திரன்‌ ஆகையாலே ஆகும்‌. அப் பெருமைகளே – பாஸ்வதி முதலிய விசேஷணங்களினால்‌ சொல்லப்பட்டனவாகும்‌-மேலும்‌ இந்த சந்திரன்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ உள்ளமையால்‌ – க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ துக்கம்‌ இவனுக்கு உண்டாகாதென்கிறார்‌. எல்லா க்ரஹங்களுக்கும்‌ இவ்வெம்பெருமான்‌ அந்தர்யாமியாகையால்‌ எல்லா க்ரஹங்களாகவும்‌ இவனே யாகைக்குத்‌ தட்டில்லையாகையால்‌, க்ரஹ பீடை இவனுக்கு உண்டாகைக்கு இடமேயில்லை. தன்னால்‌ தனக்குப்‌ பீடை உண்டோ ?
(1) பாஸ்வாந்‌ – சூரியன்‌ (2) ஸுரஅஸுரகுரு (1) ஸுர குருவான ப்ருஹஸ்பதி (3) அஸூர குருவான சுக்ரன்‌ (4) ஸெம்யன்‌ – புதன்‌ (5) விது: – சந்திரன்‌, போகீ – பாம்பு (6)பாம்புத் தலையுடைய கேது, (7) பாம்பு உடலையுடைய ராகு. அங்காரகனும்‌ சனியுமாகிய மற்றுமுள்ள இரண்டு க்ரஹங்களையும்‌ உபலக்ஷண வகையால்‌ கூட்டிக்‌ கொள்க. ஆக இந்த க்ரஹங்களுக்குகெல்லாம்‌ அந்தர்யாமியாகை காரணமாக இந்த கிரஹங்களுக்கெல்லாம்‌ இவனுக்குச்‌ சரீரமாகையால்‌, இவ்வெம்பெருமானாகிற சந்திரனுக்கு இவனிட்ட வழக்காக இருக்கும்‌ க்ரஹங்களால்‌ உண்டாகும்‌ பீடை இல்‌லை யென்றாராயிற்று.
கடிதாத்மகாய: – கடிதெள – ஆத்மகாயெள யேந ஸ:- கடிதாத்மகாய: என்று விக்ரஹம்‌. காய சப்தம்‌ சரீரத்தைக்‌ குறிப்பதாய்‌ – இங்கு சரீர அவயவங்களாகிய தலையையும்‌ மற்றுமுள்ள கீழுடலையும்‌ குறிப்பிடுகின்றது. பொருந்தாத – சிங்கத்தின்‌ தலையையும்‌ மனிதனது உடலையும்‌ நன்றாகப்‌ பொருத்திக்‌ கொண்டானே எம்பெருமான்‌. ஸிதாக்ஷீரந்யா யேந ஸங்கமிதாங்கம்‌ _. ரங்கேந்த்ர ஸிம்ஹ முபாஸ்‌ மகே (ஸ்ரீரங்க உத்தர – 64) சர்க்கரையையும்‌ பாலையும்‌ சேர்க்கிற கணக்கிலே – ஸிம்ஹத்தம்‌ தலை மனிதனின்‌ உடல்‌ ஆகிய இரு திருவுருவங்களைச்‌ சேர்த்துக்‌ கொண்ட (பரம போக்யமாக) ஸ்ரீரங்கநாதனாகிய நரஸிம்ஹப்‌ பெருமாளைச்‌ சிந்திக்கிறோம்‌ என்று அருளிச்‌ செய்தாரிறே ஸ்ரீபராசரபட்டர்‌. பட்டர்‌ ஸங்கமிதாங்கக: என்றதனையே இவர்‌ இங்க கடிதாத்மகாய: என்ற சொல்லால்‌ குறிப்பிட்டருளுகிறார்-அழகியான் தானே அரி யுருவன் தானே

ந்ருஹரி தசயோ பஸ்யன் ஓவ்பத்திகம் கடநா அத்புதம்
நரம் உத ஹரிம் த்ருஷ்ட்வா ஏகைகம் சமுத்விஜதே ஜந
இதி கில சிதாஷீர ந்யாயேந சங்கமித அங்கம்
ஸ்புட சட மஹா தம்ஷ்ட்ரம் ரங்கேந்திர சிம்மம் உபாஸ்மஹே —64-

நரத்வ ஸிம்ஹத்வ அவஸ்தைகளுடைய உத்பத்தி ஸித்தமான விசித்திரமான ஸுவ் கட்யத்தை அனுபவித்து பிரத்யேக நரனையும் சிம்மத்தையும் பார்த்து பயப்படுக என்று போலே பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போல் சேர்க்கப்பட்ட அவயவங்களை உடையவராய் ஸ்பஷ்டங்களான பிடரி மயிரையும் பெரிதான கோரப் பல்லையும் உடையரான ஸ்ரீ பெரிய பெருமாளாகிற ஸ்ரீ நரசிம்மத்தை அந்த அழகுக்குத் தோற்று எப்போதும் அனுபவிக்கிறோம்

—————–

ஸம வர்த்திநி புவநேஸே புண்ய ஜநே பாவகே ஜகத் ப்ராணே
ஸ்ரீதே ஸிவே அபி கடிகா ஸைல ஹரவ் சதி கிமன்ய திக் பாலை –90-

கடிகாசைல ஹரெள – கடிகை மலையிலுள்‌ள நரஸிம்ஹப் பெருமான்‌, ஸமவர்த்திநி (1) எல்லோரிடம்‌ ஸமமாக நடந்து கொள்பவனாகவும்‌ (2) யமனாகவும்‌, புவநேசே – (1) உலகங்கட்குத்‌ தலைவனாகவும்‌, (2) அத்தகைய இந்கிரனாகவும்‌, (3) நீருக்குத்‌ தலைவனான வருணனாகவும்‌, புண்யஜநே – (1) புண்யர்களாகிய பக்த ஜனங்களை யுடையவனாகவும்‌ (2) நிர்ருதி என்கிற ராக்ஷஸனாகவும்‌, பாவகே- (1) பத்தியை உண்டு பண்ணுகிறவனாகவும்‌ (2) அக்நியாகவும்‌, ஜகத் ப்ராணே – (1) உலகுக்கெல்லாம்‌ உயிராகவும்‌ (2) ப்ராணனான வாயுவாகவும்‌, ஸ்ரீதே – (1) செல்வத்தையளிப்பவனாகவும்‌ (2) குபேரனாகவும்‌, சிவேஃபி (1) மங்களத்தை உண்டு பண்ணுமவனாகவும் (2) சிவ பெருமானாகவும்‌, ஸதி இருக்கும் போது, அந்ய திக்‌ பாலை:- வேறான யமா: இந்திரன்‌ முதலிய திக் பாலகர்களாலே, கிம்‌- எனக்கு என்ன பயன்‌ ?

ஸம வர்த்திநி -யம தேவன் –தர்ம ராஜன் –
புவநேஸே-இந்த்ரன் -வருணனையும் சொல்வார் -வர்ஷித்து ரக்ஷணம்
புண்ய ஜநே -நிருதி –
பாவகே –அக்னி தேவன் -பரம பாவனன்
ஜகத் ப்ராணே -வாயு பகவான்
ஸ்ரீதே -சுவையான திருவின் மணாளன் -குபேரன்
ஸிவே அபி -சிவன் உட்பட -பரம சிவன் –வைஷ்ணவாணாம் யதா சம்பு அன்றோ
இயற்கையான மங்களம் இவன் திருவடி தீர்த்தம் தாங்கி
கடிகா ஸைல ஹரவ் சதி -அனைவருக்கும் அந்தர்யாமி அக்காரக்கனி எம்பெருமானே தானே
கிமன்ய திக் பாலை –இவர்களால் ப்ரபன்னருக்கு என்ன வேண்டும் –

இந்திரன், அக்னி தேவன், எமதருமன், வருண பகவான், நிருதி பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள்
கிழக்குத் திசைக்கு அதிபதி, இந்திரன்
தென்கிழக்கு அக்னி தேவன்
தரும தேவன் -காலதேவன் – அவர் தான் எம தருமன். தென் திசைக்காவலன்
வருண பகவான், மேற்குத் திசையின் நாயகன். காவலன்
நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. –
இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.
வடமேற்கு திசைக்குக் காவலன் வாயு பகவான்
குபேரன் வடக்குத் திசையின் நாயகன்
வடகிழக்கு திசையின் அதிபதி, நாயகன்… ஈசானன்.-சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று

————–

யஸ் யோதய பரார்த்த யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம்
காலேந போதயதி ய கடிகா மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் –91-

யஸ்ய – எவனுடைய, உதய: (1) ௨தயமானது (2) தோற்றமானது (அவதாரமானது), பரார்த்த: – (1) பிறர்‌ தூக்கம்‌ விட்‌டு எழுந்து நல்ல காரியம்‌ செய்து சுகப்படுவதற்காக ஏற்படுகிறதோ (2) நல்லோர்கள்‌ வாழ்‌வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1 எவனைக்‌ காண்பதனால்‌ (2) நல்லோர்கள்‌ வாழ்வு பெறுவதற்காக ஏற்படுகிறதோ, யஸ்ய ஆலோகேந – (1) எவனைக்‌ காண்பதனால்‌ (2) எவனுடைய கடாக்ஷத்தினாலே, அகம்‌ பாபமானது, விலயம்‌ யாதி – நாசத்தை யடைகிறதோ, ய: – எவன்‌, காலேந – (1) உரிய காலத்தில்‌ (இரவு முடியும்‌ ஸமயத்தில் ) (2) அஜ்ஞானம்‌ நீங்க வேண்டிய நல்ல காலம்‌ கிட்டும்போது, போதயதி – (1) விழிப்பை உண்டு பண்ணுகிறானோ (2) தானாகவோ அல்லது ஆசாரியர்கள்‌ வாயிலாகவோ ஜ்ஞானைத்தை உண்டாக்குகிறானோ, அத்ர கடிகாமித்ரே அத்தகைய இந்த கடிகை மலை ஸூரியனிடத்தில்‌, க: – எவன்‌, விராகீ ஸ்யாத்‌ ஆசையற்றவனாக இருப்பான்‌.

யஸ் யோதய பரார்த்த –யாருடைய உதயத்தால் பரர்களுக்கு நன்மை விளைகிறதோ
ஞானம் –அந்தமில் பேர் இன்பம் பிராப்தி பர்யந்தம் கிட்டுமோ
யஸ்ய ஆலோகேந யாத்யகம் விலயம் –யாரைக் காண்பதினாலேயே அகம் -அழுக்கு இருட்டு -அஞ்ஞானம் நீங்குகின்றதோ
கடாக்ஷத்தால் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி
காலேந போத யதிய கடிகா –சரியான காலத்தில் ஒளி உண்டாக்கி -விழிப்பு உண்டாக்கி -ஞானம் உண்டாக்கி
காலம் தாழ்த்தாமல் கிருபை அருளி
மித்ரே அத்ர கோ விராகீ ஸ்யாத் —அப்பேர் பட்ட ஸூர்யன் மேல் யார் தான் விருப்பம் கொள்ளாமல் இருப்பார் –
அக்காரக்கனி திவாகரன்-அச்யுத பானு – மேல் ஆர் தான் ஆசை கொள்ளாமல் இருக்க இயலும்

—————

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே ஸரஸி ஜாலயே மோஹாத்
விரஸேஷு சித்த நாமா விஷயேஷுர கேஷு விஹரதே ப்ருங்க –92-

கடிகாஸைலகதே – (1) கடிகை மலையை அடைந்ததும்‌ (2) கடிகை மலையை அடைந்தவனும்‌, ஸரஸே – (1) நீர்‌ நிறைந்ததும்‌ (2) ஆஸ்ரிதரிடம்‌ அன்புடையவனும்‌, ஸரஸிஜ ஸரஸிஜா ஆலயே – (1) தாமரை மலர்களுக்கு இருப்பிடமுமான தடாகம்‌, (2) பிராட்டிக்கு இருப்பிடமுமான எம்பெருமான்‌, ஜாக்ரதி – (1) தன்னிடம் மலர்ந்த மலர்களால்‌ விழித்திருக்கச்‌ செய்தேயும்‌, (2) நம்மிடம்‌ யாராவது வரப்போகிறார்களா என்று கவனமாயிருக்கச்‌ செய்தேயும்‌, (1) அதனை (2) அவனை (அலக்ஷ்யம்‌ பண்ணி), சித்தநாமா ப்ருங்க: – எனது (1) மனமென்னும்‌ (2) அன்பற்ற, விஷய இக்ஷுர கேக்ஷ – (2) ஸ்த்ரீ முதலிய (1) முள்ளி மலர்களில்‌, விஹரதே – அலைந்து திரிகிறது.

தாமரைக் குளத்தில்‌ தேன்‌ நிறைந்த தாமரை மலர்கள்‌ மலர்ந்து கிடக்க, அதை விட்டுச்‌ சுவையற்ற முள்ளி மலரில்‌ அலையும்‌ மதியற்ற வண்‌டு போலே என் மனமானது – பிராட்டிக்கு வாஸஸ்தானமாய்‌ அவள்‌ காரணமாக ஆஸ்ரிதர்களிடத்தில்‌ அன்பு நிறைந்த எம்பெருமான்‌ கடிகை மலையில்‌ நம்மை எதிர்பார்த்திருக்க, அவனை அநாதரம்‌ பண்ணி, அன்பு சிறிதுமின்றிக்கே யிருக்கும்‌ பெண்களிடத்தில்‌ அலைந்து திரிகின்றது என்றாராயிற்று. இதுவும் நைச்ய அனுசந்தானம் -நம்மை திருத்து வதற்காகவே அருளிச் செய்துள்ளார்

ஸரஸே ஜாக்ரதி கடிகா ஸைல கதே -நீர் நிரம்பிய ஸரோவரம் இங்கே உள்ளது -நன்றாக மலர்ந்த
கருணா ரஸம் பொழியும் அக்காரக்கனி -கடிகைத்தடம் குன்றத்திலே நீர்ப்பண்டமாக
ஸரஸி ஜாலயே மோஹாத் -ஸரஸி ஜா- தாமரை மலர்களுக்கு இருப்பிடம் -பிராட்டி அம்ருத பல வல்லித் தாயாரும் இங்கே எழுந்து அருளி இருக்க
விரஸேஷு சித்த நாமா விஷயே ஷுர கேஷு விஹரதே ப்ருங்க — ரீங்காரம் இட்டு வரும் வண்டு
இங்கே வராமல் முள்ளு மலரிலே சென்று தன்னை வருத்திக் கொள்கிறதே ஐயோ
மிதுனமாக இங்கே நமக்காகவே உகந்து எழுந்து அருளி நித்ய வாஸம் பண்ணி நிற்க
புருஷாந்தரங்களை வேறே எங்கு எங்கோயே போகுமோ
ஹரீ ஹரீ என்று அன்றோ ரீங்காரம் இட்டுக் கொண்டு மங்களா ஸாஸனம் பண்ண அன்றோ அடுப்பது
கீழ் அச்யுத பானு ராம திவாகரன் அக்காரக்கனி பாஸ்கரன்
இங்கு தாமரை விகஸிப்பதும் பொருந்துமே

————-

பிப்ரதி ஸதைவ லக்ஷ்மீம்‌ விப்ராஜதி மித்ர மண்டலே விதுஷாம்‌ | கடிகாத்ரி ஸார்வ பெளமே கிம்‌ வா கடதே ந ஸம்ஸ்ரிதாபிமதம்‌ |! 93

ஸதைவ ! – எப்போதும்‌, லக்ஷ்மீம்‌ – (1) ஸ்ரீ மஹாலக்ஷமியை (2) செல்வத்தை, பிப்ரதி (1) திரு மார்பில்‌ தரித்துக்‌ கொண்டிருப்பவனும்‌ (2) வளர்த்து வைத்திருப்பவனும்‌, மித்ர மண்டலே விதுஷாம்‌ விப்ராஜதி (1) ஸூர்ய மண்டலத்தில்‌ ஞானிகள்‌ த்யானம்‌ செய்வதற்காக விளங்கிக்‌ கொண்டிருப்பவனுமாகிய (2) தோழர்களான சிற்றரசர்கள்‌ மந்திரிகள்‌ புரோகிதர்கள்‌ ஆகிய இவர்களின்‌ நடுவே வித்வான்‌௧ளை கெளரவிப்பதற்காகக்‌ கொலுவில்‌ விளங்குமவனாகிய, கடிகாத்ரி ஸார்வ பெளமே – திருக்கடிகை மலையிலுள்ள (1) எம்பெருமானாகிய (2) சக்ரவர்த்தியினிடத்தில்‌, ஸம்ஸ்ரித அபிமதம்‌ – (1) தன்னை ஆஸ்ரயித்த ஞானிகளின்‌ விருப்பமானது (2) வித்வான்‌௧ளின்‌ விருப்பமானது, கிம்‌ வா எதுதான்‌, ந கடதே – நிறைவேறாது.

இதில்‌ எம்பெருமானைச்‌ சக்கரவர்த்தியாக ரூபணம்‌ செய்தார்‌. லஷ்மீ: – (1) பிராட்டி (2) செல்வம்‌. மித்ர: – ஸூரியன்‌, மித்ரம்‌ – தோழன்‌, ஸார்வ பெளமன்‌ பூமண்டலமனைத்துக்கும்‌ பேரரசனான சக்ரவர்த்ததி விசேஷணங்களின்‌ பொருள்களைப்‌ பிரித்துக்‌ காண்க.

பிப்ரதி சதைவ லஷ்மீ -எப்பொழுதும் செல்வங்கள் மிக்கு இருக்கும் சக்ரவர்த்தி
அம்ருத பல வல்லி தாயார் இறையும் அகலகில்லேன் என்று இருக்க
விப்ரா ஜதி மித்ர மண்டலே விதுஷாம் -தோழர்கள்-வேத விற்பன்னர்கள் பண்டிதர்கள் மந்திரிமார்கள் புடை சூழ்ந்து –
ஓலக்கத்தில் சாதனர்களை கௌரவித்து –
ஞானிகள் தபஸ்ஸூ செய்யும் படி ஸூர்ய நாராயணனாக இருக்க
கடிகாத்ரி ஸார்வ பவ்மே -ஸர்வேஸ்வரேஸ்வரன் அக்காரக்கனி எம்பிரான் நித்ய ஸந்நிதியாய் எழுந்து அருளி இருக்க
நம் போல்வார் கூட சகல மனுஷ நயன விஷய தாங்கனாக உகந்து எழுந்து அருளி இருக்க
கிம் வா கடதே ந ஸம் ஸ்ரித அபி மதம் –அபீஷ்டங்கள் எவை தான் யாருக்குத் தான் கிட்டாமல் போகும் –

—————–

ஸ்ரித கடிகாசல ஸிகரே ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –94-

ஸ்ரித கடிகாசல ஸிகரே – கடிகை மலை யுச்சியை அடைந்ததும்‌, ஸ்திர கருணாபூர நிர்ப்பரே – நிலைத்திருக்கிற (1) கருனை யாகிற (2) நீர் வெள்ளத்தால்‌ நிறைந்ததும்‌, ஸிஸிரே – குளிர்ந்ததும்‌, திவ்யே – (1) அப்ராக்ருதமான (2) அழகுடையதுமான கமல ஆலயே – (1) பிராட்டிக்கு இருப்பிடமான பெருமானாகிற (2) கமல மலர்களுக்‌ க இருப்பிடமான தாமரைத்‌ தடாகத்தில்‌, விமல பக்ஷா: – : 1) குற்றமற்ற ஜ்ஞாநம்‌ அநுஷ்டான மென்கிற (2) இரண்டு இறகுகளையுடைய, ஹம்ஸா: ‘1) யோகிகளாகிற (2) அன்னப் பறவைகள்‌, சிரம்‌ வெகு காலம்‌, தீவ்யந்தி -விளையாடுகின்றன.

இதில்‌ எம்‌பருமானைத்‌ தாமரைத் தடாகமாகவும்‌ யோகிகளை ஹம்ஸங்களாகவும்‌ கூறுகிறார்‌. அன்னப்‌ பறவைகளுக்கு ஆகாசத்தில்‌ பறந்து செல்வதற்கு துணை செய்கின்ற இரண்டு இறகுகள் போல, யோகிகளுக்‌குப் பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்துக்குப்‌ பறந்து செல்வதற்கு உறுப்பாகிய ஞானமும்‌ அநுஷ்டானமும்‌ இரண்டு சிறகுகளாகக்‌ கருதப்பட்டன.

ஹம்ஸா: – (1) யோகிகள்‌ (2) அன்‌னப் பறவைகள்‌. திவ்யம்‌ (1) அப்ராக்ருதமானது (2) அழகுடையது. அன்னங்கள்‌ தடாகத்கில்‌ விளையாடுகின்றன, அதுபோல்‌ யோகிகள்‌ எம்பெருமானிடம்‌ ரமிக்கின்றனர்‌

ஸ்ரித கடிகாசல ஸிகரே -அடைந்த -உகந்து அருளி
ஸ்திர கருணா பூர நிர்ப்பரே ஸிஸிரே -குளிர்ந்த தடாகம் -கருணை வெள்ளம் நிரம்பிய
ஆச்சார்ய புருஷர்கள் கூடி -கிருபா கடாக்ஷம் -பெற்று ஆழ்ந்து –
லோக ஹிதம் ஒன்றே இவர்கள் க்ருத்யம் -59 சதகம் -நம் போல்வாரை கரை சேர்க்கவே
நம்போல்வாரை மிதுனத்துக்கு சேஷமாக்கி அருளவே இவர்கள் இங்கே மண்டி உள்ளார் அன்றோ
தீவ்யந்தி விமல பஷா திவ்யே கமலாலயே சிரம் ஹம்ஸா –பாவனத்வம் -நிறைய நாளாக விளையாடிக் கொண்டு இருக்கும்
உலாவும் பெருமாள் -ஞான தீபம் ப்ரஸாதம் -ஸஜாதீய மனுஷ்யர் என்று எண்ணினால் யானையைக்குளிப்பாட்டிய பின்பு தன் மேல் புழுதி போட்டுக் கொள்ளுமா போலே அன்றோ
ஆச்சார்யர் திவ்ய மயம் என்று உணர வேண்டுமே –
திவ்யமான தடாகத்தில் மிதுன கருணா கடாக்ஷத்தில் விளையாடும் பரம ஹம்ஸர்
தூவி சேர் அன்னம் சூழ் புனல் குடந்தையே தொழுது
ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் -இரண்டு சிறகுகள் -பரம ஹம்ஸர் –
ப்ரயோஜனாந்தர பரர் இல்லாமல் -மங்களா ஸாஸனம் முதல் பாசுரம் கலியன்

அஸ்மாத் பூயாந் த்வமஸி விவிதா நாத்மந: சோதயித்வா |
பத்மா பர்த்து: ப்ரதி திநமிஹ ப்ரேஷயந் ப்ராப்ருதாநி ||
தஸ்மிந் திவ்யே வரவரமுநே தாமநி ப்ரஹ்ம ஸாம்யாத் |
பாத்ரீ பூதோ பவது பகவந் நைவ கிஞ்சித் தயாயா: ||–ஸ்ரீ வர வர முனி சதகம் –59

பிராட்டியின் கணவனான ஸ்ரீமந் நாராயணனுக்குப் பரிசாக இங்கு தினந்தோறும் பல ஜீவன்களைச் சுத்தி செய்து எங்களை அனுப்பிக் கொண்டு நீர் மதிக்கத் தக்கவராக இருக்கிறீர்.ஹே வரவரமுநியே! அந்தப் பரமபதத்தில் பரப்ரஹ்ம ஸமமாக இருப்பதால்
உமது கருணைக்குப் பாத்திரமாக ஒரு வஸ்துவும் ஆகிறதில்லை.

———————-

விஹரதி பஹு குண ஜாலே வீரே கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே
விஜஹதி ஸமஸ்த தாபான் விஜயந்தே கில மமாபி மோஹ மஹோ –95-

பஹுகுண ஜாலே – சுத்தி, நல்‌ நிறம்‌ முதலிய நற்குணங்களின்‌ ஸமூகங்களை உடையவனும்‌, வீரே – எரிக்கும்‌ பராக்ரமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையிலுள்ள அக்நி யானவன்‌ விஹரதி ஸதி – ஸஞ்சாரம்‌ செய்யும் போது, தே -முன்‌ ஸ்லோகத்தில்‌ கூறப்பட்ட ஹம்ஸங்கள்‌, ஸமஸ்த தாபாந்‌ – எல்லாத்‌ தாபங்களையும்‌, விஜஹதி – விட்டு விடுகின்றன, (மேலும்‌) மம – என்னுடைய, மோஹமபி அஜ்ஞானத்தையும்‌, விஜயந்தே – வெல்லுகின்றன. அஹோ – ஆச்சரியம்
ஹம்ஸங்கள்‌ அக்நியினிடம்‌ சென்று தமது தாபத்தைத்‌ தீர்த்துக்‌ கொள்வதும்‌, இக் கிரந்த கர்த்தாவின்‌ அஜ்ஞானத்தை வெற்றி கொள்வதும (போக்குவதும்‌) ஆச்சரியமாகையால்‌ விரோதம்‌ தோன்றும்‌, பரிஹாரம்‌ மேலே காண்க.

பஹு குண ஜாலே – க்ருபை வாத்ஸல்பம்‌ முதலிய குளிர்ந்த பல குண ஸமூகங்களை யுடையவனும்‌, வீரே – ஸம்ஸார தாபம்‌ போக்கும்‌ பராக்ரமமுடையவனுமான, கடிகாத்ரி க்ருஷ்ண வர்த்மநி – கடிகை மலையில்‌ வசிக்கும்‌ க்ருஷ்ணனாகிய ஸித்தோபாயமான பெருமான்‌, விஹரதி – விஹாரம்‌ செய்யும் போது, (அவனை யாஸ்ரயித்து) தே – ஹம்ஸர்கள்‌ என்று கூறப்பட்ட யோகிகள்‌, ஸமஸ்த தாபாந்‌ – ஆத்யாத்மிகம்‌ ஆதி பெளதிகம்‌ ஆதி தைவிகமாகிய எல்லாத்‌ தாபங்களையும்‌ (கஷ்டங்களையும்‌) விஜஹதி – விட்டு விட்டுச்‌ சுகமாக இருக்கிறார்கள்‌. (இதுவே யன்றி), மம – என்னுடைய, மோஹமபி – அவிவேகத்தையும்‌, விஜயந்தே – தமது உபதேசத்தாலே வெற்றி கொள்கிறார்கள்‌. இப்படிப் பொருள்‌ கொண்டால்‌ முற் காட்டிய விரோதம்‌ தோன்ற இடமில்லாமை காண்க.

க்ருஷ்ணவர்த்மா – (1) கறுத்த வழியை உடையது (தன்‌ வழியைக்‌ கறுப்பாக்குவது ) ஆகையால்‌ இது அக்நிக்குப்‌ பெயர்‌ (2) க்ருஷ்ணனாகிய வர்த்ம – மார்க்கம்‌ உபாயமென்றபடி. அதாவது க்ருஷ்ணனாகிய மோக்ஷோபாயம்‌. யோகிகள்‌ எம்பெருமானை யணுகி, தாம்‌ ஸம்ஸார தாபம்‌ தீரத்துக் கொள்வதோடு தம்மை யடைந்த வர்க்கும்‌ ஸம்ஸார தாபம்‌ தீர்த்து, மோக்ஷம்‌ பெறுவதற்குரிய ஞானம்‌ உண்டாவதற்காக, அஜ்ஞானம்‌ தீரும்படி உதவுகிறார்களென்றவாறு.

விஹரதி பஹு குண ஜாலே -கல்யாண குண கணங்கள் மிக்கு
வீரே -தாப த்ரயங்களைப் போக்கி அருளும் வீரனே
கடிகாத்ரி கிருஷ்ண வர்த்மநிதே –மார்க்கம் உபாயம் –அக்காரக்கனி கண்ணன் என்னும் கரும் தெய்வமே ஸித்த உபாயம்
விஜஹதி –ஆஸ்ரயித்து- கைங்கர்யமே யாத்ரையாகக் கொண்டு
ஸமஸ்த தாபான் விஜயந்தே -கீழே பரம ஹம்சர்கள் -தாபத் த்ரயங்கள் விடுபட்டுப்போய்
கில மமாபி மோஹம் அஹோ — அடியேனுக்கும் மோஹம் விலகிற்றே -என்ன ஆச்சார்யம் –
நீயே உபாயம் உபேயம் -அறியும்படி அருளினாயே
நாம் அனுசந்திக்க வேண்டியதற்காக அருளிச் செய்த ஸ்லோகம் அன்றோ

————–

கநக மய கடக ஸோபாம் கலயதி கடிகா மஹீ ப்ருதோ ருசிரே
தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே த்ராஸ லவம் அநு பவேத் கோ வா -96-

கநக மய கடக ஸோபாம்‌ – ஸ்வர்ண மயமான மலைச்‌ சரிவின்‌ சோபையை, கலயதி உண்டு பண்ணுவதும்‌, தீப்திமதி – ப்ரகாசமுடையதும்‌, ருசிரே – அழகுடையதுமான, கடிகா மஹீ ப்ருத க்ருஷ்ண வர்ணே – கடிகை மலையினுடைய கரு நிறமானது, த்ருஷ்டே ஸதி – பார்க்கப்பட்ட வளவில்‌, கோ வா – எவன் தான்‌, த்ராஸ லவம்‌ – பயத்தின்‌ சிறு பகுதியையும் கூட, அநுபவேத்‌ – அநுபவிப்பான் –

கநக மய கடக ஸோபாம் கலயதி –பொன் மயமான ஜ்வலிக்கும் சோபை மிக்க
கடிகா மஹீ ப்ருதோ ருசிரே தீப்தி மதி க்ருஷ்ண வர்ணே த்ருஷ்டே -ப்ரகாஸம் -அழகு -கருமை வண்ணம் -பொன் வண்ணமும் சேர்ந்து
த்ராச லவம் அனு பவேத் கோவா -ஸம்ஸார பயம் லவலேசமும் கீழே இருந்து தரிசித்தாலே போதுமே
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே போல் இங்கும் –

முன்‌ ஸ்லோகத்தில்‌ மஹான்கள்‌ கடிகை யெம்பெருமானை ஆஸ்ரயித்து ஸம்ஸார தாபம்‌ தீரப் பெறுகிறார்களென்று அருளியவர்‌ இந்த ஸ்லோகத்தில்‌ அவ்வெம்பெருமானை ஆஸ்ரயிக்கவும்‌ வேண்டாம்‌, வெகு தூரத்திலிருந்தே கடிகை மலையைத் தர்ஸித்தாலே போதும்‌. சிறிதும்‌ ஸம்ஸாரத்திற்கு அஞ்ச வேண்‌டாம்‌ என்கிறார்‌. மலையின்‌ அழகு – கநகமயகடக சோபாம்‌ கலயதி தீப்திமதி க்ருஷ்ண வர்ணே – என்றதனால்‌ குறிக்கப்படுகிறது. மரங்கள்‌ அடர்ந்திருப்பதால்‌ மலையின்‌ கீழ்ப்பகுதி கறுத்துத்‌ தோன்றுகிறது. அக் கருநிறமானது சிவப்புப் பாறை மயமாகையால்‌ தங்க நிறமுள்ள சரிவுக்குச்‌ சோபையை யுண்டாக்கித் தானும்‌ அத்தங்க நிறப்‌ பாறைகளால்‌ சோபயை அடைகிறது. இங்ஙனம்‌ அத் திருமலையின்‌ கருநிறமே நம்முடைய அச்சமனைத்தையும்‌ அகற்றவல்ல தென்றாராயிற்று. இருள்‌ பேய்‌ முதலியவற்றின்‌ கருநிறம்‌ அச்சத்தை உண்டாக்கும்‌. இம்மலையின்‌ கருநிறம்‌ அச்சத்தைப்‌ போக்குமென்றபடி. திருவேங்கட மாமலை யொன்றுமே தொழ நம்‌ வினை ஓயுமே (திருவாய்மொழி 3.3.8) என்று நம்மாழ்வார்‌ அருளியது போலவே இங்கும் அருளிச் செய்கிறார்

—————-

ஸப்தரிஷி ஸேவ்ய மாநே சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே
ரமதாம் மநோ ஹரெள மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே –97-

ஸப்தர்ஷி ஸேவ்யமாநே – ஸப்த ரிஷிகளால்‌ ஸேவிக்கப்பட்டவனும்‌, ஸந்தத ஸுமநஸ்‌ ஸ்துதே – எப்போதும்‌ தேவர்களால்‌ துதிக்கப்பட்டவனும்‌, ஸஹஸ்ராஷே ஆயிரங்‌ கண்ணுடையவனும்‌. கடிகாத்ரி ரத்நஸாநு தடே – கடிகைமலை யென்கிற மேருமலையின்‌ சரிவில்‌, ப்ராஜதி -விளங்குமவனான, ஹரெள – (1) இந்திரனிடத்தில்‌ (2) நரஸிம்மப் பெருமாளிடத்தில்‌, மே மந: – என்னுடைய மனஸ்ஸானது, ரமதாம்‌ – ப்ரீதியை அடைந்திடுக.

ஹரி: என்பது இந்திரனுக்கும்‌, திருமாலுக்கும்‌, சிங்கத்துக்கும்‌ பெயர்

ஸப்த ரிஷிகள்‌ ஆவார்‌ – வஸிஷ்டர்‌, காஸ்யபர்‌, அத்ரி, ஜமதக்நி, கெளதமர்‌, விஸ்வாமித்ரர்‌, பரத்வாஜர்‌ என்ற எழுவர்‌ என்று விஷ்ணு புராணம்‌ (3.1.32) கூறும்‌. மரீசி, அங்கிரஸ்ஸு, அத்ரி, புலஸ்த்யர் . புலஹர்‌, க்ரது, வஸிஷ்டர்‌ ஆகிய எழுவரென்றும்‌– மரீசி அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கௌதமர், பரத்வாஜர், அங்கீரஸ் .ஆகிய எழுவரென்றும்‌–
சந்தத ஸூமந ஸ்துதே ஸஹஸ்ராஷே-– -புருஷ ஸூக்தம் கொண்டு ஸ்துதிக்கும் ஸத் புருஷர்கள்
ரமதாம் மநோ ஹரவ் மே ராஜதி கடிகாத்ரி ரத்ன ஸாநு தடே -நரஸிம்ஹன் இடம் மனஸ்ஸூக்கு ப்ரீதி உண்டாக்கி அருள வேண்டும்-மேரு போன்ற குன்றம் கீழேயே அருளிச் செய்தார் அன்றோ –

—————

பாத ஸ்பர்சந விபவாத் பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –98–

பாத ஸ்பர்சந விபவாத்‌ – (1) தனது கிரணங்களின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌ (2) தனது திருவடிகளின்‌ ஸம்பந்தமாகிற பெருமையினால்‌, பாலித புவநே – உலகங்களைக்‌ காப்பவனும்‌, ப்ரபோதித ஆத்ம குணே – (1) தூங்கும் போது கூம்பிய – ஆத்மாவின்‌ குணமாகிய அறிவை மலரச் செய்பவனும்‌, (2) மோக்ஷ உபாயமாகிய தத்‌ வஜ்ஞானத்தை மிகவும்‌ உண்டாக்குமவனுமாகிய, கடிகாத்ரி மித்ரே பகவதி – கடிகை மலையிலுள்ள (1) சூரியனாம்‌ (2) எம்பெருமானிடத்தில்‌, மே மநஸ்‌ ஸரோஜம்‌ – என்னுடைய மனமாகிய தாமரை மலரானது, பாவம்‌ – (1) ப்ரீதியை (2) பக்தியை, பஜது- அடைந்திடுக

பாத ஸ்பர்சந விபவாத் -தீண்டி -கிரணங்களை பரப்பி –திருவடி சடாரி சம்பந்தத்தால் -ப்ருத்ய -அடியார் அடியார்
பாலித புவநே ப்ரபோதி தாத்ம குணே-பரிபாலனம் -இருள் நீக்கி -பயிர்களை விளைவித்து –
தத்வ ஞானம் அறிவித்து -அஞ்ஞானங்களைப் போக்கி-ஆத்ம குணம் வளர்த்து —
பஜது கடிகாத்ரி மித்ரே பகவதி பாவம் மநஸ் ஸரோஜம் மே –மித்ரன் சூரியனுக்கும் இன்னும் ஓரு பெயர் –
கடிகைத்தடம் குன்றம் மேல் உள்ள அக்காரக்கனி தானே ஹிருதய கமலத்தை இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

————-

துஷ்டே அல்பத ஸூ ஸீலே ஸூ குண க்ருஹீத ஸூ லக்ஷணே ஸூ த்ருடே
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார –99

அல்பத:துஷ்டே – (1) சிறிது கொடுத்தாலும்‌ அதனால்‌ ஸந்தோஷிப்பவனும்‌ (2) சிறிது ஆஹாரமிட்டாலும்‌ மகிழ்ச்சியடைவதும்‌, ஸுசீலே – (1) பக்தர்களோடு பேதமில்லாமல்‌ கலந்து பழகுதலை – சீலத்தை மிகவுமுடையவனும்‌ (2 )தன்னண்டையில்‌ வந்தவர்களைக்‌ கொம்பிலும்‌ குளம்பிலும்‌ ஏற்காமல்‌ ஸாதுவாக இருப்பதும்‌, ஸுகுண க்ருஹீதே- (1) ஜ்ஞாநம்‌ பக்தி சாந்தி வைராக்யம்‌ முதலிய நற்குணங்களையுடையவர் கட்கு வசப்படுபவனும்‌ (2) நல்ல கயிற்றால்‌ கட்டி வைத்தால்‌ அதற்கு அடங்கியிருப்பது… ஸூ லக்ஷணே – (1) நல்ல உத்தம புருஷ லக்ஷணங்களை யுடையவனும்‌ (2) எருதுக்கு இருக்க வேண்டிய நல்ல ஸாமுத்ரிக லக்ஷணங்களை யுடையதும்‌, ஸுத்ருடே – (1) பிராட்டி போல்வார்‌ குற்றங்களை யுரைத்தாலும்‌ ஆஸ்ரிதர்களைக் காப்பதில்‌ மிகவும்‌ மனத்திண்மை யுடையவனுமான (2) மிகவும்‌ பாரமேற்கத்தக்க பலமுடையதுமான, கடிகாத்ரி தூர்வஹே – கடிகாத்ரியில்‌ எழுந்தருளியிருந்து எல்லோருடைய ரக்ஷண பாரத்‌தையும்‌ வஹிக்கிற (1) எம்பெருமானாகிற பத்ரே – (2) எருதினிடத்தில்‌, மதீய: – என்னுடைய, பார: – ரக்ஷணமாகிய பாரமானது (சுமையானது) ஆரோபித: – ஏற்றப்ட:._து. பத்ர: – எருது.

துஷ்டே அல்பத ஸூ ஸீலே -எருது அல்ப தீனி கொடுத்தாலும் ஸந்தோஷம் அடைந்து –
அஞ்சலி பரமாம் முத்ரா -ஸக்ருத் -பக்தி ஒன்றையே எதிர்பார்த்து –
ஆச்சார்யர் ஸுலப்யமே உருவாகி
என் பேரைச் சொன்னான் ஊரைச் சொன்னான் இத்யாதி
ஸூ குண க்ருஹீத –கழுத்தில் காட்டியதும் அடங்கி இருக்கும்
கல்யாண குணங்கள் -ஞான பக்தி வைராக்யம் -பக்த ஆஸ்ரித வத்சலன் -பக்த உசிதன்
ஸூ லக்ஷணே ஸூ த்ருடே –அங்க அடையாளங்கள் பூர்த்தி -மல்லாண்ட திண் தோள்
திண் கழல் -ஊற்றம் உடையாய் -நெடுமால்
ஞானம் அனுஷ்டானங்கள் நிறைந்த ஆச்சார்ய ஸமூஹம் -நம்மைக் கரை யேற்றவே விரதம் தீக்ஷயாகக் கொண்டு
ஆரோபிதோ மதீயோ பத்ரே கடிகாத்ரி தூர்வஹே பார —இங்கே அன்றோ உள்ளது –
என்னுடைய பாரங்களை சமர்ப்பிக்க ஏற்றவாறு –
காளை புகுதக் கனாக் கண்டேன்
ரிஷபம் -ரிஷ அபம் -தீப பிரகாசம் இவனே
இவனையே பார்த்த சாரதி என்றும் முன்பே அருளிச் செய்தார்
பத்ரம் -மங்களம் -ஆச்சார்யர் திருவடிகளே மங்களகரம் -மங்களா ஸாஸனம் பண்ண நம்மை ஆக்கி அருளும் காளைகள் –

இதில்‌ எம்பெருமான்‌ பத்ரமாக எருதாக உருவகிக்கப்பட்டான்‌. ஒருவன்‌ தன்னுடைய பொருள்‌ பாரத்தை எருதினிடம்‌ ஏற்றுமா போலே, தம்மைக்‌ காப்பாற்றுதலாகிய பாரத்தை எம்பெருமானாகிய எருதினிடம்‌ ஏற்றினார்‌. இந்த பரஸமர்ப்பணம்‌ ஸித்தோபாய நிஷ்டர்க்குத்‌ தன்னடையே உண்டாகும்‌ ஸ்வபாவமிறே

———–

மேல் மூன்றும் பிரார்த்தனா ரூபமாக அங்கீ கரித்து அருள வேண்டி அருளுகிறார்

அநநு குணாம் அபி வாணீம் ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்
அங்கீ கரோது பகவான் ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –100-

ஆஸ்ரித தோஷ அவலோகந அகல்ய: – தன்னை யடைந்த பக்தர்களின்‌ குற்றங்களைக்‌ காண்பதில்‌ திறமை யற்றவனான, பகவாந்‌– ஜ்ஞாநம்‌, சக்தி, பலம்‌, ஐஸ்வர்யம்‌, வீர்யம்‌, தேஜஸ்‌ என்கிற ஆறு குணங்களை யுடைய எம்பெருமான்‌, ஆகஸ்‌ ஸந்தோஹ மந்தமதி கலிதாம்‌ – குற்றங்களின்‌ திரட்சிக்கு இருப்பிடமான – அல்ப புத்தியான அடியேனால்‌ சொல்லப்பட்ட. வாணீம்‌ – இந்த ஸ்தோத்ரமாகிய வாக்கை, அநநுகுணாம்‌ அபி – (தன்னுடைய பெருமைக்குத்‌) தக்கதாக இல்லாவிட்டாலும்‌, அங்கீகரோது – (தனது ஸ்தோத்ரமாக) ஏற்றுக்‌ கொள்வானாக

அநநு குணாம் அபி வாணீம் -உனது பெருமைக்குச் சேராத வாக்கு –
ஆகஸ் ஸந்தோ ஹ மந்த மதி கலிதாம்-மந்த மதிகளான -ப்ருத்யர்களின் கடைசில் நிலையானதாக ஆக்கி அருள் என்றார் அன்றோ
அங்கீ கரோது -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனிய வாறே அன்றோ
பகவான் –ஸ்வா பாவிக ஷட் குண -பகவான்
ஆஸ்ரித தோஷ அவலோநா அகல்ய –குற்றங்கள் எல்லாம் பார்க்காமல் -வாத்சல்யம் மிக்கு உள்ள அக்காரக்கனி எம்பெருமான் அன்றோ

———–

ஸ்வாமிந ஏவ க்ருதிர் மே ஸுக்திஸ் தோஷாய ததபி தஸ்யைஷா |! ஸ்வோக்தி மநு வததி பாலே ஸுதராம்‌ தாதோ அபி தோஷமுபயாதி--101-

மே க்ருதி: – என்னுடைய இந்த க்ரந்தமானது, ஸ்வாமிந: ஸூக்தி: ஏவ திருக்கடிகை யெம்பெருமானுடைய ஸ்ரீஸூக்தியே ஆகும்‌. ததபி – அத்தகையதாயினும்‌, ஏஷா – இந்த ஸ்ரீஸூக்தியானது, தஸ்ய தோஷாய – அவனுடைய ஸந்தோஷத்தின்‌ பொருட்டு ஆகிறது. (எப்படியென்னில்‌) பாலே – தன்‌ குழந்தையானது, ஸ்வ உக்திமபி (தகப்பனாரான) தனது சொல்லாயிருந்தாலும்‌ அதை, அநுவததி ஸதி – அப்படியே அநுவதித்துப்‌ பேசுமளவில்‌, தாத: – தகப்பன் ஸுதராம்‌ – மிகவும்‌, தோஷம்‌ ஸந்தோஷத்தை, உபயாதி(கலு) – அடைகிறான்‌ அல்லவா

இளைய புன் கவிதை
தன் சொல்லால் என்னைப் பாடுவித்த அப்பன்
பாலன் அநு வாதம் -தப்பாகவே பின்னால் சொன்னாலும்
தாதா-அப்பனுக்கு சந்தோசம் ஆகுமே
ஆர்த்தி பிரபந்தம் -முக்த ஜல்பிதம் என்று மா முனிகள் -திருவாய் மொழிப்பிள்ளை திருவடி அடைந்த வஸ்துவின் உளறல்

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும்

———-

பக்தோசித அப் யுக்தாம் பக்த்யா சவ்ம்ய வர கிங்கர உப ஹிதாம்
அம்ருத பலா வளிம் அநகா ம்ருது ளாமஸ் வாத்ய ம்ருத்யு மதி யாந்தி –102-

பக்த்யா – பக்தியோடு கூடி, ஸெளம்யவா கிங்கர உபஹிதாம்‌ – மணவாள மாமுனிகளின்‌ அடியவனாகிய அடியேனால்‌ ஸமர்‌ப்பிக்கப்பட்டும்‌, பக்தோசித உபயுக்தாம்‌ – தக்கானாலே செவிசாத்தப்பெற்றும்‌, ம்ருதுளாம – பக்தியினால்‌ மெத்தென்றுள்ள கனிந்துள்ள, அம்ருதபல ஆவளிம்‌ – அமுத. பால்‌ தித்திக்கும்‌ பழங்களாகிய ஸ்லோகங்களின்‌ வரிசையை, ஆஸ்வாத்ய – சுவைத்து அனுபவித்து, அநகா: – பாவம்‌ தொலையப்‌ பெற்றவர்களாய்க்‌ கொண்டு (மக்கள்‌) ம்ருத்யும்‌ – ஸம்ஸாரத்தை, அதியாந்தி கடந்து பரமபதம்‌ செல்லுகிறார்கள்

பக்தோசித அப யுக்தாம் -பக்த வத்சலன் -தக்கான் திருச்செவி சாத்தும் படி அருளி -அங்கீ கரித்து அருளி
பக்த்யா ஸெளம்ய வர கிங்கர உப ஹிதாம் -அடையாளம் காட்டிக்கொள்கிறார் –ஷட் பதம் -திருவடித் தாமரைகளில் அமர்ந்த வண்டு
திவ்ய ஞான பிரதர் -தனியனிலே உண்டே-ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||
மா முனிகள் நியமிக்க அருளிச் செய்த திவ்ய கிரந்தம்
அம்ருத பலா வளிம் -ஸ்வாமியே திரு நாமம் -ஆவளி -தொடர்
ஒவ்வொன்றுமே அம்ருதம் -தொகுத்து அருளிய திவ்ய மாலை –
அநகா-குற்றங்களைப் போக்கி அருளும்
ம்ருது லாம் -மிருதுவாக
ஆஸ்வாத்ய -தாபத் த்ரயங்களுக்கு ஆஸ்வாஸ கரம்
ம்ருத்யு மதி யாந்தி –ஸம்ஸாரத் தடைகளைப் போக்கி நிரதிசய பரம புருஷார்த்தம்
ஆச்சார்யர் திருவடிகளிலே சேர்த்து அருளும்

—————————————————————————————————————————–

வித்தகனே வேந்தே மணவாள மா முனியே
சுத்தனே சோதிச் சுடர் முடியே -முத்தே
கரும்பின் சுவையே கடலில் அமுதமே
அரும்பின தாள் நீயே அருள் —ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் குண வகுப்பு

————-

மல்லிகைகள் வகுள மலர் மணி முடியில் நாறும்
வண் பவள வாய் அலரில் மறைகள் மிகு நாறும்
நல்லிசை சேர் பதின்மர்களின் நற் கலைகள் எல்லாம்
நலமுடைய கருணை விழி நாள் தோறும் மணக்கும்
சொல்லரிய பாதம் அபிஷேக மணம் நாறும்
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்
செல்வன் மணவாளன் லோக குரு எங்கோன்
திருவடிகள் அல்லது ஒரு தெய்வம் அரியேனே–ஸ்ரீ ஸ்வாமி எறும்பி அப்பாவின் ஸ்ரீ மணவாள மா முனிகள் அகவல்

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -17-20-அத்யாயங்கள் – பிரகலாதன் சரிதம்-ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 24–ஸ்ரீ ப்ரஹ்லாத சரிதம் — தசகம் 25-ஸ்ரீ நரசிம்ம அவதாரம்-

January 25, 2023

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஸ்லோகம் -4-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

————-

ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -17-20-அத்யாயங்கள் –
17-பிரகலாதன் சரிதம்-
18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!–
19. பிரகலாதனின் பிரார்த்தனை-
20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்–

ஹ்லாதன்- ஒரு பிள்ளை பிரஹலாதன் -நல்ல ஆனந்தம் உடையவன் -மேல் இரண்டு பிள்ளைகள்
ஸூக ப்ரஹ்மம் -விரிவாக பேரன் சொல்வதை தாத்தா பராசரர் இங்கு சுருக்கமாக சொல்வார்

கர்ப்ப ஸ்ரீ மான் -நாராயணனே அனுக்ரஹம் இங்கு -பாகவதத்தில் நாரதர் அனுக்ரஹம்

சாமான்ய தர்மம் -தந்தை அளவில் பிள்ளை மதித்தான் -விசேஷ தர்மம் பகவத் பக்தியில் ஆழ்ந்தவன் –

பரதன் தாய் சொன்ன சாமான்ய தர்மம் விரோதம் -விசேஷ தர்மம் கைக்கொண்டு பாதுகை பெற்றான் -இதே போல் செல்வ விபீடணன் –

கடோ நாஸ்தி நியாயம் -உளன் அலன் எனிலும் உளன் தானே

அறியும் செந்தீயைத் தழுவி*  ‘அச்சுதன்’ என்னும் மெய்வேவாள்,* 
எறியும் தண் காற்றைத் தழுவி*  ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்,*
வெறி கொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
செறி வளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   
முக்கூர் அழகிய சிம்கார் -ராஜகோபாலாச்சாரியார் பூர்வ ஆஸ்ரம பெயர் -ராஜ கோபுரம் காட்டியவர்
நரசிம்ஹர் ரசிப்பார் திடமான விசுவாசம் -கையில் உள்ள அக்னி கொண்டு பீடி பற்ற வைக்கக் கெட்டவன் இடம்
ஸூர்யன் அஸ்தமிக்காமல் இருக்க அம்மாவைக் கூப்பிடு -கற்பைக் கொண்டாடும் வார்த்தை
கையில் அக்னி உள்ளது இதே போல்
மத்த சர்வம் யத்ர சர்வம் யதஸ்ஸ சர்வம் -சர்வம் ஸம்ஸரய ச –அஹம் சர்வம் மயி சர்வம் -ஆழ்வார் போல் அநுகாரம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சொம்பு தண்ணீர் கொண்டு வந்து சொம்பு கொண்டு வந்தேன் சொல்லாமல்
தண்ணீர் வேறே சொம்பு வேறே தான்
உள்ளே இருப்பதையே சொன்னவாறே இது
கட்டுண்ட போதும் பெருமாளை ஸ்துதிக்கிறான் 19 அத்தியாயத்தில்
உன்னுடைய தர்சனம் தந்து அருள்
நாராயணனாக சேவை -பீதாம்பரம் தரித்து
வரனாக வந்துள்ளேன்
கேள் -என்றான்
நாத யோகி ஸஹஸ்ரேஷு அச்யுத பக்தி மாறாமல் இருக்க வேண்டும் -எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உற்றோமே ஆக வேண்டும்
விவேகம் இல்லாதவர் அல்பமானவற்றில் வைக்கும் பற்றை உதாரணமாகச் சொன்னான்
உலகியல் ஆசைக்காக பகவானை தியாகம் செய்த சம்சாரிகள் பெரிய தியாகி -ராமகிருஷ்ணர்
தூணைப் பிளந்தது எல்லாம் விஷ்ணு புராணத்தில் இருளை
அப்பா பண்ணிய தப்பை மன்னித்துக்கொள்
மன்னித்தோம் என்றான்
அவரும் பக்தராக வேண்டும் -ஸ்தோத்ரமும் பண்ண வேண்டும் -பூஜையும் பண்ண வேண்டும்
சரி என்றான் –
கல்ப பேதத்தால் இந்த பேதம்
அடுத்த நாள் போனதும் வாடா குழந்தை -ஆசீர்வாதம் செய்து
தம் பிதா-சேர்ந்து பூஜை கைங்கர்யம் செய்தானாம்
திடீர் தூனைப் பிளந்து நரசிம்மர் தோன்றி -அழித்து -பட்டாபிஷேகம் செய்ததாக முடித்தார்
நல்லவனை எதனால் அழிக்க வேண்டும்
இவ்வளவு பாபம் செய்தவன் திருந்தி பக்தி எப்படி
எல்லீரும் வீடு பெற்றால் இடம் இல்லை
ராம நாமம் சொல்லவே புண்ணியம் வேண்டுமே
ஹிரண்யகசிபாக அவதரித்து முன்பு காட்டினான்
கீழ் வாழ்த்தி ஆசீர்வாதம் நாராயணன்
இதுவே ரஹஸ்யம்
பின்பு பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்
1-நான் அஹங்காரம் கூடாது
2-குலத்தால் வேறுபாடு பார்க்காத பகவான்
3-உறுதி நம்பிக்கை முக்கியம் பக்தனுக்கு
4-பகவான் எது செய்தாலும் நன்மைக்கே என்ற எண்ணம் வேண்டும்
5- பக்தனுக்காக எதையும் செய்வான்
கேட்டவர் பலன் -ஹிரண்யன் போல் பாபங்களை போக்கி அருளுவான் -ஒருமுறை
கோ தானம் செய்த பலன் -குறிப்பிட்ட அம்மாவாசை போன்ற நாள்களில் கேட்ப்பாருக்கு –
அனைத்து நாள்களிலும் கேட்ப்பார்களுக்கு கூட இருந்து ரஷிப்பான்

———-

1–17-பிரகலாதன் சரிதம்

ஸ்ரீ பராசர உவாச –

மைத்ரேய ஸ்ரூயதாம் சமயக் சரிதம் தஸ்ய தீமத
ப்ரஹ்லா தஸ்ய சதோதார சரி தஸ்ய மஹாத்மன–1-17-1-

ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் சரித்ரத்தை த்யான பூர்வமாகக் கேட்ப்பாயாக –

பிரஹ்லாத உவாச
அநாதி மத்ய அந்தம் அஜம் அவ்ருத்தி சாயம் அச்யுதம்
ப்ரணதோ அ சமயந்த சந்தாமம் சர்வ காரண காரணம் –1-17-15-இதுவே சார விஷயம் என்று உறுதியாச் சொன்னான்

பிரஹ்லாத உவாச –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷச்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்திதி
தம்ருதே பரமாத்மானம் தாத க கேன சாஸ்யதே–1-17-20-சாஸீதா -உள்ளேத்தே உறையும் மால் -லஷ்மீ நாத ஸமாரம்பாம்

ப்ரஹ்லாத உவாச
ந சப்த கோசரம் யஸ்ய யோகித்யேயம் பரம் பதம்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு பரமேஸ்வர –1-17-22-

வாய் வார்த்தையாலும் சொல்ல முடியாத ஸ்ரீ வைகுண்டம் -உலகு அவன் இடமே வந்தது -உள்ளே உயிராக உள்ளான் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு -இத்தை விடாமல் விஷ்ணு புராணம் காட்டிக் கொண்டே இருக்கும்

பிரஹ்லாத உவாச
ந கேவலம் தாத மம பிரஜானாம் ஸ ப்ரஹ்ம பூதோ பவதச்ச விஷ்ணோ
ததா விதாதா பரமேஸ் வரச்ச ப்ரசீத கோபம் குருஷே கிமர்த்தம் —1-17-24-

ப்ரஹ்லாத உவாச –
ந கேவலம் மத ஹ்ருதயம் ஸ விஷ்ணுர் ஆக்ரம்ய லோகான் அகிலான் அவஸ்தித
ஸ மாம் த்வாதீம்ச்ச பித்தாஸ் சமஸ்தான் சமஸ்த சேஷ்டாஸூ யு நகதி சர்வ –1-17-26-

ப்ரஹ்லாத உவாச
யத பிரதான புருஷௌ யதஸ் சைதஸ் சராசரம்
காரணம் சகலச்ய அஸ்ய ஸ நோ விஷ்ணு ப்ரசீதது –1-17-30-

பிரஹ்லாத உவாச –
விஷ்ணு சஸ்த்ரேஷூ யுஷ்மா ஸூ மயி ஸ அசௌ வ்யவஸ்தித
தைத்யாஸ் தென் சத்யேன மாக்ர நந்த்வா யுதானி மே–1-17-33-

பிராஹ்லாத உவாச
பயம் பயா நாம் அபஹாரிணி ஸ்திதே மநஸய நந்தே மம திஷ்டதி
ய ஸ்மின் ச்ம்ருதே ஜன்ம ஜரா அந்தகாதி பயானி சர்வாணி அபயாந்தி ததா -1-17-36-

ப்ரஹ்லாத உவாச –
தந்தா கஜா நாம் குலிசாக்ர நிஷ்டுரா சீர்ணா யதேதே ந பலம் மமைதத்
மஹா விபத்தாப விநாசனோ அயம் ஜனார்த்தனா நு ஸ்மரண அநுபாவ –1-17-44-

ப்ரஹ்லாத உவாச –
தாதைஷா வஹ்னி பவநேரி தோ அபி ந மாம் தஹ்யத்ர சமந்தோ அஹம்
பஸ்யாமி பதமாஸ் தரணாஸ் த்ருதாநி ஸீதாநி சர்வாணி திசாம்முகா நி –1-17-47-

சுக்ராச்சார்யர் புதல்வர்கள் -சண்டாமர்க்கர்கள்-அவர்களுக்கும் உபதேசிக்கிறான் ப்ரஹ்லாத ஆழ்வான்

ப்ரஹ்லாத உவாச –
அத்யந்தஸ் திமிதான்கானாம் வ்யாயாமேன ஸூ கைஷிணாம்
பிராந்தி ஜ்ஞானா வ்ருதாஷாணாம் து கமேவ ஸூ காயதே -1-17-61-

க்வ சரீரம் அசேஷாணாம் ச்லேஷ்மாதீனாம் மகாசய
க்வ காந்தி சோபா சௌந்த்ர்ய ரமணீ யாதயோ குணா -1-17-62-

மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர ஸ் நாயு மஜ்ஜா அஸ்தி சம்ஹதௌ
தேஹே சித்ப்ரீதி மான் மூடோ பவிதா நரகே அப்யசௌ–1-17-63-

அக்னே சீதேன தோயஸ்ய த்ருஷா பக் தஸ்ய ஸ ஷூதா
க்ரியதே ஸூ க கர்த்ருத்வம் தத் விலோ மஸ்ய சேதரை -1-17-64-

கரோதி ஹை தைத்ய ஸூ தா யாவன் மாதரம் பரிக்ரஹம்
தாவன் மாதரம் எவாசய துக்கம் சேதசி யச்சதி –1-17-65-

யாவத குருதே ஜந்து சம்பந்தான் மனச பிரியான்
தாவந்தோ அய நிகச்யந்தே ஹ்ருதயதே சோக சங்கவ –1-17-66-

யத் யத் க்ருஹே தன மனஸி யத்ர தத்ர அவதிஷ்டதி
நாசதாஹ உபகரணம் தஸ்ய தத்ர ஏவ திஷ்டதி –1-17-67-

ஜன்மன் யத்ர மஹத் துக்கம் ம்ரிய மாணச்ய சாபி தத்
யாத நா ஸூ யமஸ் யோக்ரம் கர்ப்ப சங்கர மணேஷூ ஸ -1-17-68-

கர்ப்பேஷூ ஸூ கலேசோ அபி பவத்பிர் அநு மீயதே
யதி தத் கத்யதாம் ஏவம் சர்வ துக்க மயம் ஜகத் –1-17-69-

தமேவம் அது துக்க நாம் ஆஸ்பதே அதர பவார்ணவே
பவதாம் கத்யதே சத்யம் விஷ்ணுர் ஏக பராயண –1-17-70-

மாஜா நீத வயம் பாலா தேஹி தேஹே ஷூ சாஸ்வத
ஜரா யௌவன ஜன்மாத்யா தர்மா தேஹச்ய ந ஆத்மன –1-17-71-

பால்யே க்ரீடன கா சக்தா யௌவனே விஷயோன்முகா
அஜ்ஞா நயந்த் யசக்த்யா ஸ வார்த்தகம் சமுபஸ்திதம் -1-17-75-இத்தையே ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளிச் செய்கிறார்

பாலஸ் தாவத் க்ரீடா சக்த:
தருணஸ் தாவத் தருணீ சக்த:
வ்ருத்தஸ் தாவத் சிந்தா சக்த:
பரே ப்ரஹ்மணி கோபி ந சக்த:

சிறு வயதிலோ விளையாட்டுச் செயல்களிலேயே ஒவ்வொருவரும் மூழ்கிப் போகின்றனர். பருவ வயதிலோ இனக் கவர்ச்சியிலேயே மனமெல்லாம் இருக்கிறது. முதுமைக் காலத்திலோ எத்தனையோ கவலைகள். ஐயோ! பரம் பொருளைப் பற்றி எண்ண ஒருவருக்கும் தமது வாழ்க்கையில் நேரமே இல்லையே?-கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள். கோவிந்தனை வணங்குங்கள்!

வேத நூல் பிராயம் நூறு —-பேதை பாலன் அது ஆகும் தொண்டரடிப்பொடி ஆழ்வார்-

100 வயசுக்கு வேடிக்கையாக சொல்லும் கதை –
குரங்கு20 வரை -காளை20-40 உழைத்து -மனுஷ்ய புத்தி -40-60–மேல் நாய் போல் காவல் இருந்து 80 வரை -மேல் வௌவ்வால் -கண் தெரியாமல் எங்கேயே ஒதுங்கி போய் –

தஸ்மாத் பால்யே விவேக ஆத்மா யதேதே ஸ்ரேயசே சதா
பால்ய யௌவன வ்ருத்தாத்யைர் தேஹ பாவரைஸம்யுத –1-17-76-

ததே தத்வோ மயாக்யாதம் யதி ஜாநீத நாந்ருதம்
ததஸ் மதபரீதயே விஷ்ணு ஸ்மர்யதாம் பந்த முக்தித –1-17-77-

ப்ரயாச ஸ்மரேண கோ அஸ்ய ச்ம்ருதோ யச்சதி சோபனம்
பாபஷ யச்ச பவதி ஸ்மரதாம் தமஹர் நிசம் –1-17-78—ஸ்மரேண–சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் –

சர்வ பூதஸ் திதே தஸ்மின் மதிர் மைத்ரீ திவா நிசம்
பவதாம் ஜாயதாமேவம் சர்வ க்லேசான் ப்ரஹாச்யதே–1-17-79-

தாபத்ர யேண் அபிஹதம் யதேதத் அகிலம் ஜகத்
ததா சோச்யேஷூ பூதேஷு த்வேஷம் ப்ராஜ்ஞா கரோதி க –1-17-80-

அத பத்ராணி பூதானி ஹீன சக்திர் அஹம் பரம்
முதம் ததாபி குர்வீத ஹா நிர் த்வேஷபலம் யத -1-17-81-

பக்த வைராணி பூதானி த்வேஷம் குர்வந்தி சேத்ததி
ஸூ சோஸ் யான்யதி மோஹேன வ்யாப்திநீதி மநீஷிணாம்–1-17-82-

விஸ்தார சர்வ பூதஸ்ய விஷ்ணோ சர்வம் இதம் ஜகத்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் தஸ்மாத் அபேதேன விசஷணை –1-17-84-

அஸார சம்சார விவர்த்தநேஷூ மா மா யாத தோஷம் பிரசபம் ப்ரவீமி
சர்வத்ர தைத்யாஸ் சமதாமுபேத சமத்தவம் ஆராதனம் அச்யுதச்ய –1-17-90-

தஸ்மின் பிரசன்னே கிமிஹாச்த்ய லப்யம் தர்ம அர்த்த காமைர் அலம் அல்ப காஸ்தே
சமாஸ்ரிதாத் ப்ரஹ்ம ரோர் அனந்தான் நி சம்சயம் ப்ராப்ச்யாத வை மஹத் பலம் –1-17-91-

——————

18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!–

பராசர உவாச
தச்யைதாம் தாநவாஸ் சேஷ்டாம் த்ருஷ்ட்வா தைத்ய பதேர் பயாத்
ஆசசரக்யு ஸ சோவாச ஸூ தா நா ஹூய சத்வர –1-18-1-

ப்ரஹ்லாத உவாச
சம்பத் ஐஸ்வர்ய மஹாத்ம்ய ஜ்ஞான சந்ததி கர்மாணாம்
விமுக்தேஸ் சைகதோ லப்யம் மூலம் ஆராதனம் ஹரே –1-18-26-விமுக்தி மோக்ஷ பர்யந்தம் அளிப்பான்

பஹூ நாத்ர கிமுக்தேன ஸ ஏவ ஜகத பதி
ஸ கர்த்தா ஸ விகர்த்தா ஸ சம்ஹர்த்தா ஸ ஹ்ருதி ஸ்திதே -1-18-27

ஸ போக்தா போஜ்யமப்யேவம் ஸ ஏவ ஜகத் ஈஸ்வர
பவத்பிர் ஏதத் ஷந்தவ்யம் பால்யாதுக்தம் து யன்மயா — 1-18-28-

க கேன ஹன்யதே ஜந்துர் ஜந்து க கேன ரஷ்யதே
ஹந்தி ரஷதி சைவாத்மா ஹ்யசத்சாது சமாசரன்–1-18-31-

கரமண ஜாயதே சர்வம் கர்மைவ கதி சாதனம்
தஸ்மாத் சர்வ பிரயத்னேந சாது கர்ம சமாசரேத்–1-18-32-

யத்ர அநபாயி பகவான் ஹ்ருத் யாஸ்தே ஹரிர் ஈஸ்வர
பங்கோ பவதி வஜ்ரச்ய தத்ர சூலச்ய கா கதா –1-18-36-

பிரஹ்லாத உவாச –
சர்வ வ்யாபின் ஜகத்ரூப ஜகத் ஸ்ரஷ்ட ஜனார்த்தன
பாஹி விப்ரான்இமான் அஸ்மா ஹூ சஹான்மந்திர பாவகாத் –1-18-39-

யதா சர்வேஷூ பூதேஷு சர்வவ்யாபி ஜகத் குரு
விஷ்ணுர் ஏவ ததா சர்வே ஜீவந்த்வேன புரோஹிதா –1-18-41-

யே ஹந்து பாகதா தப்யம் யைர்விஷம் யைர் ஹூ தாசன
யைர் திக் கஜைர் அஹம் ஷூண்ணோ தஷ்ட சர்பைச்ச யைரபி –1-18-42-

தேஷ்வஹம் மித்ர பாவேன சம பாபோ அஸ்மி ந க்வசித்
யதா தேனாத்ய சத்யேன ஜீவந்த்வவ ஸூ ரயா ஜகா –1-18-43-

ஸ்ரீ பராசர உவாச
இத்யுக்த்வா தம் ததோ கதவா யதாவ்ருத்தம் புரோஹிதா
தைத்ய ராஜாயா சகலம் ஆச்சக்யுர் மஹா முனே –1-18-46–

வித்யா கர்வம் இல்லாமல் -பாலகன் -அறியாமையால் சொன்னேன் -தப்பாக இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றான் விநயத்துடன் –

———————————–

19. பிரகலாதனின் பிரார்த்தனை

ஸ்ரீ பராசர உவாச
ஹிரண்யகசிபு ஸ்ருத்வா தாம் க்ருத்யாம் விததீக்ருதாம்
ஆ ஹூய புத்ரம் பப்ரச்ச பிரபாவஸ் யாச்ய காரணாத்–1-19-1-

ந மந்த்ராதி கருத்தும் தாத ந ஸ நை சர்கிகோ மம
பிரபாவ ஏஷ சாமான் யோ யஸ்ய அச்யுதோ ஹ்ருதி –1-19-4-உள்ளத்தில் உறையும் மாலால் பெற்ற சக்தி

அன்யேஷாம் யோ பாபானி சிந்தயத்ய ஆத்மா நோ யதா
தஸ்ய பாப கமஸ் தாத ஹேத்வ பாவான் ந வித்யதே –1-19-5-

கர்மணா மநஸா வாசா பரபீடாம் கரோதி ய
தத் பீஜம் ஜன்ம பலதி ப்ரபூதம் தஸ்ய ஸ அஸூபம் –1-19-6-

சோ அஹம் ந பாபம் இச்சாமி ந கரோமி வதாமி வா
சிந்தயன் சர்வ பூதஸ்தம் ஆத்மன்யபி ஸ கேசவம் -1-19-7-முக்கரணங்களால் பாபம் செய்யாமல் பெற்ற பலன்

சரீரம் மானசம் துக்கம் தைவதம் பூதபவம் ததா
சர்வத்ர ஸூ பசித் தஸ்ய தஸ்ய மே ஜாயதே குத – 1-19-8-

ஏவம் சர்வேஷூ பூதேஷு பக்திர் அவ்யபிசாரிணீ
கர்தவ்யா பண்டிதைர் ஜஞாத்வா சர்வ பூத மயம் ஹரிம் –1-19-9-நிற்கின்றது எல்லாம் நெடுமால் -என்று ஸர்வ பூத ஹிதம் வேண்டுமே

மம உபதிஷ்டம் சகலம் குருணா ந அதர சம்சய
க்ருஹீந்த்து மயா கிந்து ந சததேன்மதம் மம –1-19-34–

சாம சோபப்ப்ரதானம் ஸ பேத தண்டென ததா பரௌ
உபாயா கதிதா சர்வே மித்ராதீநாம் ச சாதேநே -1-19-35-

நானேவாஹம் ந பஸ்யாமி மித்ராதீம்ஸ் தாத மா கருத
சாத்யாபாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -1-19-36-

சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகனமயே
பரமாத்மனி கோவிந்தே மித்ர அமித்ர காத குத -1-19-37-

த்வய் யஸ்தி பகவான் விஷ்ணுர் மயி ச அன்யத்ர ச அஸ்தி ச
யதஸ் ததோயம் மித்ரம் மே சத்ருச்சேதி ப்ருதக் குத -1-19-38-வேறுபாடு இல்லையே

ததேபிர் அலமத்யர்த்தம் துஷ்டாரம் போத்தி விஸ்தரை
அவித்யா அந்தர் கதைர் யதன க்ர்த்தவ்யஸ் தாத சோபனே –1-19-39 –

வித்யா புத்திர் அவித்யாயாம் அஜ்ஞா நாத் தாத ஜாயதே
பாலோக் நிம் கிம் ந கத்யோதம் அ ஸூர ஈஸ்வர மந்யதே –1-19-40-

தத் கர்ம யன்ன பந்தாய சா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயாபரம் கர்ம வித்யான்யா சில்ப நை புணம் –1-19-41-

ததேதத் அவகம்யாஹம் அஸாரம் சாரமுத்தமம்
நிசாமய மஹாபாகா ப்ரநிபத்திய ப்ரவீமி தே–1-19-42-

ந சிந்த்யதி கோ ராஜ்யம் கோ தனம் நாபி வாஞ்சதி
ததாபி பாவயமே வைததுபயம் ப்ராப்யதே நரை –1-19-43-

சர்வ ஏக மஹாபாக்க மஹத்தவம் பிரதி சோத்யமா
ததாபி பும்ஸாம் பாக்யாநி நோத்யமா பூதி ஹேதவ–1-19-44–

ஜடா நாம விவேகானாம் அ ஸூ ராணாம்பி பிரபோ
பாக்ய போஜ்யாநி ராஜ்யாநி சந்தய நீதி மதாமாபி –1-19-45

தஸ்மாத் எதேத புண்யேஷூ ய இச்சேன் மஹதீம் ஸ்ரியம்
யதிதவ்யம் சமத்வே ச நிர்வாண ம்பி சேச்சதா–1-19-46-

தேவா மனுஷ்யா பசாவ பஷி வருஷ சரீஸ்ரூப
ரூபம் ஏதத் அனந்தசய விஷ்ணோர் பின்னம் இவ ஸ்திதம் –1-19-47-

ஏதத் விஜா நதா சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் விஷ்ணுர் எதோ அயம் விஸ்வ ரூப தருக –1-19-48-

ஏவம் ஜ்ஞாதே ச பகவான் அநாதி பரமேஸ்வர
ப்ரசீததி அச்யுதஸ் தஸ்மின் பிரசன்னே க்லேச சங்க்ஷய –1-19-49-

———-

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

———

17. பிரகலாதன் சரிதம்

பரமஞானியும் உதார சரிதராயும் விளங்கும் பிரகலாதரின் பிரபாவத்தை பராசர முனிவர் சொல்லலானார். பூர்வத்திலே மிகவும் பராக்கிரமமுடையவனும் அதிதியின் மகனுமான இரணியகசிபு என்ற ஓர் அரக்கன் இருந்தான். அந்த அரக்கன் கோரமான தவங்களினால் பிரம்மாவை மகிழச்செய்து, தனக்குத்தேவர்களாலோ, மிருகங்களாலோ மரணம் விளையக்கூடாது என்பது போன்ற அநேகவரங்களைப் பெற்றான். அதனால் அவன் கர்வம் மிகுந்து, மூன்று உலகங்களையும் தீனப்படுத்திக் கொண்டான். இந்திரன், வருணன், ஆதித்தன், வாயு, அக்கினி, சந்திரன், யமன் முதலியோரது அதிகாரங்களைத் தனது கைவசப்படுத்திக் கொண்டான். வேள்விகளில் அவர்களுக்குரிய அவிர்ப்பாகங்களையும் தானே கைக்கொண்டான் மூன்று உலகங்களையும் சாதிதேச்காரமாய் ஆண்டு வந்தான். அப்போது இந்திரன் முதலிய தேவர்கள் அவனுக்குப் பயந்து சுவர்க்கலோகத்தை விட்டு, மானிட வேடம் பூண்டு பூவுலகில் சஞ்சரித்தார்கள். இந்தவிதமாக இரணியகசிபு மூன்று உலகங்களையும் ஏகச்சக்கிராதிபதியாக மிகவும் அகங்காரத்தோடு ஆண்டு வந்தான். கந்தர்வர்கள் கீதம் பாட, சித்தசாரணர் மிருதங்கம் முதலிய வாத்தியங்களை, வாசிக்க தேவலோகத்து அப்சர மங்கையர் நடனமாட, ஸ்படிக மயமும் அப்ரகசிலா மயமுமான அதிவுன்னதமான அழகிய உப்பரிகையில் இரணியகசிபு மிகவும் மகிழ்ச்சியோடு, மதுபானம் அருந்திய வண்ணம், மனதுக்கிச்சையான சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் அனைவருக்கும் தானே தலைவன் தானே எல்லாம் தானே சர்வ வல்லமை பொருந்திய ஈசுவரன் என்று அகப்பாவம் கொண்டு தன்னைத் தவிர வேறு எதையும் வணங்கக்கூடாதென்றும் கட்டளை பிறப்பித்திருந்தான். அவனுக்குப் பிரகலாதன் என்று ஒரு குமாரன் இருந்தான். அவன் பாலியத்தில் உபாத்தியாயரின் வீட்டிலிருந்து, பாலர் படிக்கவேண்டிய படிப்பைப் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள் பிரகலாதன் தன் ஆசிரியரோடு, தன் தந்தையிடம் வந்து, வணங்கி நின்றான்; அப்போது மிகவும் தேஜஸோடு விளங்கும் தன் குமாரனை அசுர மன்னன் இரணியகசிபு வாரியணைத்துக் கொண்டு மனம் மகிழ்ந்து, குழந்தாய்! உன் குருநாதர் இத்தனை நாட்களாய் அதிக முயற்சியுடன் உனக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களின் சாராம்சத்தைச் சொல் பார்க்கலாம் என்றான். உடனே பிரகலாதன் பக்திச்சிரத்தையோடு, என் மனதில் இருக்கும் சாராம்சத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். ஆதிமத்தியாந்தரகிதனும் அஜனுமாகி விருத்தியும் க்ஷயமும் இல்லாமல், சர்வபூத அந்தராத்மாவாய் சிருஷ்டியாதிகளுக்கு காரணங்களான யாவற்றுக்குமே காரணமாய், எப்பொழுதுமே ஆனந்தசொரூபமாய் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவான அச்சுதனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்றான். குமாரனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் இரணியகசிபுவுக்குக் கோபம் மூண்டது. அவன் கண்கள் சிவந்தன, உதடுகள் துடிதுடித்தன. அவன் பயங்கரமான ரூபமடைந்து தன் புத்திரனின் குருவைப் பார்த்து, ஏ தர்ப்புத்தியுள்ளவனே! நிசாரமும் சத்துரு பட்ச துதியுமான இந்த சுலோகத்தை என் பாலகனுக்குச் சொல்லிக் கொடுத்த, என்னை அவமானஞ் செய்யலாமா? என்று கேட்டான். அதனால் ஆசிரியர் பயந்து நடுங்கி இரணியகசிபை நோக்கி, தைத்ய ஈசுவரா! கோபிக்க வேண்டாம். உமது குமாரன் நான் உபதேசித்த விதமாகப் படிக்கவில்லை! என்றார். உடனே இரணியகசிபு தன் பாலகனை நோக்கி, பிரகலாதா! உன் உபாத்தியாயர் இப்படி உனக்கு உபதேசிக்கவில்லை என்று சொல்கிறாரே, இப்படி யார் உனக்குப் போதித்தார்கள்? என்று சினத்துடன் கேட்டான். பிரகலாதனோ புன்முறுவலுடன் தன் தந்தையைப் பார்த்து ஐயா எவன் சர்வ பூதங்களின் இதயத்திலே இருக்கிறானோ, அந்த ஸ்ரீவிஷ்ணுவே சகல ஜனங்களுக்கும் புத்தியைக் கற்பிப்பவன் பரமாத்வான அந்தத் தேவனையன்றி வேறு யார் கற்பிப்பவன் இருக்கிறான்? என்றான்.

இரணியனுக்குக் கோபம் முற்றியது. அவன் தன் சின்னஞ்சிறு பாலகனான பிரகலாதனைக் கடிந்து நோக்கி, துர்புத்தியுள்ளவனே! உலகத்திற்கே ஈசுவரனான என் கண் முன்னாலேயே பயமின்றி நின்று வேறு எவனையோ அடிக்கடி பயமில்லாமல் துதிக்கிறாயே, அந்த விஷ்ணு என்பவன் யார்? என்று கேட்டான். எவனுடைய பரமார்த்த ஸ்வரூபம் இன்னதன்மையதென்று சொல்லக்கூடாமல் யோகீந்திரர்களுக்கும் தியான கம்மியமாக இருக்குமோ, எவனால் உலகமெல்லாம் உண்டாயிற்றோ எவன் விஸ்வமயனாக இருக்கிறனோ அந்தப் பரமேஸ்வரனே ஸ்ரீவிஷ்ணு என்று அறிவீராக! என்றான் பிரகலாதன். அதை எதிர்க்கும் விதமாக இரணியகசிபு துள்ளிச் சினந்து, மூடனே! யோகீஸ்வரனாக நான் இருக்கப் பரமேசுவரன் என்ற பெயர் வேறு ஒருவனுக்கும் உண்டோ? நீ நாசமடையப் போவதால் தான் என் முன்னாலேயே துணிந்து நின்று பலவிதமாக அன்னியனைத் துதிக்கிறாய்? என்று குமுறினான். பிரகலாதனோ அமைதியாக, தைத்யேசுவரனே! பரப்ரம்ம பூதனான ஸ்ரீவிஷ்ணுவே எனக்கும் உமக்கும் சகல பிரஜைகளுக்கும் நிலைப்படுத்துவோனும் சிருஷ்டிப்பவனுமாக இருக்கிறான். ஆகையால் நீங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? கோபத்தை விட்டுச் சாந்தமாக இருங்கள் என்றான். அதை இரணியகசிபால் பொறுக்கமுடியவில்லை. துர்புத்தியுடைய இந்தச் சிறுவனின், இதயத்தில் எவனோ ஒரு பாபகர்மமுடையவன் பிரவேசித்து மோகத்தையுண்டாக்கியிருக்கிறான். அதனால்தான் இவன் இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பலவாறாகச் சொல்கிறான்! என்று உறுமினான். சர்வலோக வியாபகனான அந்த ஸ்ரீமகாவிஷ்ணு என் இதயத்தில் மட்டுமல்ல; சகல உலகங்களிலும் வியாபித்திருக்கிறார். அதனால் என்னையும், உம்மையும் மற்றுமுள்ள சகலரையும் அந்த விஷ்ணுவே அந்தந்தக் காரியங்களில் பிரவேசிக்கச் செய்கிறார் என்றான் பிரகலாதன். அவன் சின்னஞ்சிறு பையன் என்றே; தன் புத்திரன் என்றோ பாராமல் இரணியன் மிகவும் குரோதம் கொண்டு; தன் அருகில் இருந்த அசுரர்களை அழைத்து துராத்மாவான இந்த மூடனைக் குருவின் வீட்டிற்குக் கொண்டு போய் நன்றாகத் தண்டிக்கச் சொல்லுங்கள்! ஒரு துராத்மா இவனுக்குப் பகைவனை துதிக்கும்படிப் போதித்திருக்கிறேன்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் அசுரர்கள் பிரகலாதனைக் குருவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேயே அவனைத் தள்ளிவிட்டுப் போனார்கள். அங்கே பிரகலாதன் தன் குருவுக்குப் பணிவிடைகள் புரிந்து; கல்வி பயின்று வந்தான்.

சிறிது காலஞ்சென்ற பிறகு இரணியன் தனது மகனை அழைப்பித்து; மகனே பிரகலாதா! ஏதேனும் ஒரு சுலோகத்தைச் சொல்! என்றான். அதனால் பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, எவனிடத்திலிருந்து மூலப்பிரகிருதியும் சமஷ்டி ரூபமான ÷க்ஷத்ரக்ஞனும் உண்டானார்களோ; எவனிடத்திலிருந்து சராசரத்மகமான சகல பிரபஞ்சமும் ஜனித்தனவோ; அப்படிப்பட்ட சர்வதாரனப் பூதனான ஸ்ரீவிஷ்ணுதேவன் நமக்குப் பிரத்யட்சமாகக் கடவன்! என்றான். அதைக்கேட்டதும் இரணியன் அளவிலாத கோபங்கொண்டு அங்கிருந்த அசுரரை நோக்கி; இந்தத் துராத்மாவைச் சித்திரவதை செய்து கொல்லுங்கள்! இவன் பிழைத்திருப்பதால் யாதொரு பயனுமில்லை. இவன் தன் சார்புடைய இனத்தவருக்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டதால் இக்குலத்துக்கு நெருப்பு போல இருக்கிறான் என்று கட்டளை பிறப்பித்தான். உடனே அசுரர்கள் அநேகர் கூடி, பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பிரகலாதனைத் தாக்கி வதைக்க முயன்றார்கள். அப்பொழுது பிரகலாதன் புன்முறுவலுடன், அசுரர்களே உங்களிடமும் என்னிடமும் உங்களுடைய ஆயுதங்களிலுங்கூட ஸ்ரீமந்நாராயணனே பரிபூரணமாய் நிறைந்திருக்கிறான் என்பது சத்தியம்! இந்தச் சத்தியத்தினாலே உங்கள் ஆயுதங்கள் என்மீது பாயாதிருக்கட்டும்! என்று சொன்னான். அப்படி அவன் சொல்லியுங்கூட அசுரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி, கத்தி, சூலசக்கரம் முதலிய ஆயுதங்களால் பிரகலாதனை வதைக்கலானார்கள். ஆயினும் பிரகலாதன் அவற்றால் சிறிதும் வேதனையடையாமல் விசேஷ காந்தியுடனே பிரகாசித்தான். அப்போது அவனது தந்தை இரணியன் அவனைப் பார்த்து, அடா துர்புத்தியுடையவனே! இனியேனும் எனது பகைவனைத் துதி செய்யாமல் இருந்தால் உனக்கு அபயங்கொடுக்கிறேன். அதிக மூடத்தன்மையை அடையாமல் சன்மார்க்கனாக இரு என்று புத்தி புகட்ட முயன்றான். அதை பிரகலாதன் ஏற்றுக்கொள்ளாமல், பிதாவே! எவனைச் சிந்திதகதவுடன் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலிய சமஸ்த பயங்களும் ஓடிப்போகுமோ, அத்தகைய பயங்களையெல்லாம் போக்கடிக்கும் அனந்தனான ஸ்ரீமகாவிஷ்ணு, எனது இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குப் பயம் என்பது ஏது? என்று நிமிர்ந்து நின்றான்.

அதைப் பார்த்து இரணியன் அளவிலாத ஆங்காரம் கொண்டு மகா நாகங்களை அழைத்து, ஓ கொடிய பாம்புகளே! மிகவும் துர்புத்தியும் துர்நடத்தையுமுள்ள இந்தப் பையனை விஷச்சுவாலைகள் மிக்க உங்கள் பற்களால் கடித்து இப்போதே இவனை நாசமடையச் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான்; உடனே தக்ஷகன் முதலான கொடிய பாம்புகளெல்லாம் உக்கிரமான விஷங்களைக் கக்கிக் கொண்டு பிரகலாதனின் சகல அவயவங்களிலும் கடித்தன. ஆனால் அந்தப் பாலகனோ ஸ்ரீவிஷ்ணுவிடம் தன் சிந்தை முழுவதையும் நிலைநிறுத்தியிருந்ததால் ஆனந்தப் பரவசமாகி அக்கொடிய பாம்புகள் தனது அறியாமல் இருந்தான். பிறகு விஷசர்ப்பங்களெல்லாம் தோல்வியடைந்து இரணியனிடம் சென்று அரசே எங்களுடைய பற்கள் ஒடிந்துவிட்டன. முடியிலிருக்கும் இரத்தினங்கள் வெடித்தன. படங்களிலே மகத்தான தூபம் ஒன்று உண்டாயிற்று. இதயம் நடுங்கியது. இவையெல்லாமல் அந்தப் பாலகனின் தேகத்தில் சிறிதும் சேதம் உண்டாகவில்லை. ஆகையால் எங்களிடத்தில் நீங்கள் கோபிக்காமல், இந்தக் காரியத்தை ஒழித்து வேறு ஒரு காரியத்தைக் கட்டளையிடுங்கள்! என்று கெஞ்சி விழுந்தன. இரணியன் அப்போதும் குரோதம் அடங்காமல் திக் கஜங்களைக் கூப்பிட்டு, ஓ! திசை யானைகளே! உங்களுடைய தந்தங்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி மிகக் கெட்டியாகவும் உக்கிரமாயும் விளங்குகின்றன. அத்தந்தங்களினால்; அந்தத் துராத்மாவான பிரகலாதன் மீது பாய்ந்து, அவனைக் கொன்றொழியுங்கள். அரணியில் பிறந்த அக்கினியே அந்த அரணியை தகிப்பதுபோல தைத்திய குலத்தில் பிறந்த இந்த அதமன் தன் குலத்தையே நாசஞ்செய்பவனாக இருக்கிறான்! என்றான். உடனே திக்கஜங்கள் பிரகலாதனை பூமியிலே வீழ்த்தி பருவத சிகரங்களைப் போன்ற தங்களுடைய தந்தங்களை பிரகலாதன் மீது பாயவைத்து இடித்தன. அப்படி அவை பாயும் போது; கோவிந்த சரணாவிந்தங்களையே பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தானாகையால் அந்தப் பாலகனது மார்பிலே யானைகளின் தந்தங்கள் பட்டதும்; அவை முறிந்து பொடிப்பொடியாய்ப் போயின.

அப்போது பாலகன் பிரகலாதன் தன் தந்தை இரணியனைப் பார்த்து; தந்தையே! வைரத்தைவிட உறுதியான திசையானைகளின் தந்தங்கள் என் மீது பட்டுப் பொடிப்பொடியானது என்னுடைய பலத்தால் அல்ல. பாபங்களையெல்லாம் நாசஞ்செய்யவல்ல ஸ்ரீஜனார்த்தனருடைய ஸ்மரண மகிமையினால் தான் என்பதை நினைப்பீராக! என்று சொன்னான். அதைக்கேட்டதும் இரணியன் அதிக ஆத்திரமடைந்து திக்கஜங்களை அப்பால் விரட்டிவிட்டுத் தன் அசுரர்களை நோக்கி, தைத்தியர்களே! பாபகர்மனான இந்தப் பாலகனைக் கொன்றொழிக்காமல் விடக்கூடாது. காலாக்கினிக்கு ஈடான மஹா அக்கினியை வளர்த்து அதிலே இவனைப் போட்டு எரியுங்கள் என்று சொல்லிவிட்டு; வாயுதேவனான காற்றைக் கூப்பிட்டு மாருதனே! அந்தப் பெரு நெருப்பை உனது காற்றால் ஜ்வலிக்கச் செய்! என்று கட்டளையிட்டான். அசுரர்களோ மலைபோல் விறகுகளைக் குவித்து; அந்தக் குவியலுக்குள் பாலகனான பிரகலாதன் மறையும்படி அவற்றினுள்ளே அமுக்கி மூடிவைத்து, நெருப்பை மூட்டிக் கொளுத்தினார்கள். அப்போது பிரகலாதன் தன் தந்தையை நோக்கி, பிதாவே! பிராண்ட மாருதத்தால் ஜ்வலிக்கப்பட்டும்; இந்த அக்கினி சிறிதளவுகூட என்னைத் தகிக்கவில்லை. மேலும் நான் கிடக்கும் இந்த நெருப்பு மயமான விறகுக் குவியலோ, பத்துத் திசைகளிலும் நல்ல தாமரை மலர்களை நிறைவித்து அதிகக் குளிர்ச்சியாகச் செய்யப்பட்டவை போலிருப்பதையே நான் உணர்கிறேன்! என்று சிரித்தான்.

இது இப்படியிருக்கும்போது, இரணியனுக்குப் புரோகிதர்களும், சுக்கிரனுடைய குமாரர்களுமான சண்டாமர்க்கர் என்பவர்கள் இரண்யனை நல்வார்த்தைகளால் துதித்து; அசுர ஈஸ்வரனே உமக்கு விரோதிகளான தேவர்கள் மீது உமது கோபத்தைச் செலுத்த வேண்டுமே தவிர உமது சொந்த மகனான இந்தப் பாலகனிடம் உமது கோபத்தையெல்லாம் செலுத்துவது முறையல்ல! இவன் இனிமேலும் சத்துருபட்ச ஸ்துதி செய்யாமல் இருக்கும்படி நாங்கள் இவனுக்குக் கற்பிக்கிறோம்! பாலியப்பருவம் சகல துர்க்குணங்களுக்கும் இருப்பிடமானபடியால் பாலகனான இந்தக் குமாரனிடத்தில் கோபிக்க வேண்டாம். நாங்கள் போதிப்பதாலும் இவன் ஹரிபக்தியை விடாமல் இருப்பானாயின் இவனை வதைப்பதற்கான துர்ச்செயல்களை நாங்களே செய்கிறோம்! என்று வேண்டிக்கொண்டார்கள். அதனால் இரணியன் சிறிது மனமிளகித் தன்னுடைய அசுரர்களை ஏவி மகாக்கினியின் மத்தியில் போட்டிருந்த பிரகலாதனை வெளியே இழுத்துவரச் செய்தான். மறுபடியும் குருகுலத்துக்கே போகும்படி பிரகலாதனுக்கு இரணியன் கட்டளையிட்டான். அதன்பிறகு, குருகுலத்தில் பிரகலாதன் வசித்துக் கொண்டிருந்தான். அங்கே அவனுடைய குருவானவர் பாடம் போதிக்காத சமயங்களில் பிரகலாதன் தன்னோடு படிக்கும் தைத்ரிய பாலர்களான அசுரச் சிறுவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்துக் கொண்டு அவர்களுக்கு விஷ்ணு பக்தியையும், உண்மையான ஞானமார்க்கத்தையும் உபதேசித்து வரலானான். ஓ தைத்திய பாலர்களே! பரமார்த்தமான விஷயத்தை உங்களுக்கு உபதேசிக்கிறேன் கேளுங்கள். என் வசனங்களைப் பொய்யாக என்ன வேண்டாம். ஏனென்றால் நான் பொருள்மீது ஆசை வைத்து இதை உங்களுக்கு உபதேசிக்க வந்தவனல்ல. ஆகையால் நான் சொல்வதை நம்பிக் கேளுங்கள். மனிதன் பிறந்தவுடன் பாலியமும், யவனமும், அதற்குப் பிறகு தடுக்கமுடியாத கிழத்தன்மையும் வந்து, கடைசியில் மிருத்யுவான மரணத்திற்கே வசமாவான். தைத்ய பாலர்களே! மனிதர்களிடம் இவையெல்லாம் உண்டாவதை நீங்களும் நானும் கண்ணெதிரில் கண்டிருக்கிறோம். இதுமட்டுமல்ல. மரணமடைந்தவனுக்கு மீண்டும் பிறவியுண்டாவதும் மெய்யேயாகும். இதற்கு சுருதி ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களே பிரமாணங்களாம்! அவற்றை நீங்களும் கற்றறிந்திருக்கிறீர்கள். இந்தத் தேகம் பிறப்பதற்குக் காரணம், பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களோடு கூடிய ஸ்திரமான ஆன்மாவேயல்லாமல் வேறு காரணம் அகப்படாமையால் சுக்கில சுரோணிதங்களுக்கு ஆளாவதான ஆன்மாவே முக்கிய காரணம். ஆகையால் மனிதனுக்கு கர்ப்பவாசம் முதல் சரீரம் விழும் வரையிலும், சர்வ அவஸ்தையிலும் துக்கம் ஒன்று தான் நிச்சயம்! அன்னபானாதிகளாலே பசியும் தாகமும் தீருவதும், அந்தந்த உபாயங்களாலே சீத உஷ்ணாதி உபத்திரவங்கள் விலகுவதையுங் கொண்டு அதையே சுகம் என்று நினைப்பது உண்மையில் அவிவேகமே ஆகும்!

அது எப்படியெனில், அன்னபானாதிகளைச் சம்பாதிப்பதற்காகச் செய்யும் பிரயாசையினால் உண்டாகும் துக்கங்கள் சொல்லத்தரமல்ல. இந்த அன்னாதிகளால் அஜீர்ணமாகும்போது எத்தனை துக்க ஹேதுவாகின்றன? இதற்கு உதாரணம் கேளுங்கள், வாத தோஷங்களால் மரத்திருக்கிற அங்கங்களையுடைவர்களுக்கும், வதைப்பதாலேயே தேகசுகத்தை விரும்புகிறவர்களுக்கும், அவர்களுடைய உடம்பைக் குத்துவதும், கசக்குவதும், பிசைவதும், மிதிப்பதும், அடிப்பதுமே சுகமாகத் தோன்றுகின்றன; காமமோகிகளாக இருப்பவர்களுக்கோ ஊடலும் கூடலும் காமினீ சரண தாடனமுமே சுகமாகத் தோன்றும் இப்படியாகத் துக்க ஏதுக்களில் சுகப்பிராந்தி உண்டாயிருப்பதைக் காண்பீர்கள். இதுபோலவே, மாமிச சிலேஷ்ம, மலமூத்திராதி மயமான உடலில் சவுந்தர்ய, சவுகுமார்ய, சவுரப்பிய காந்தி முதலான குணங்கள் உண்டென்று நினைப்பதும் வெறும் மனப்பிராந்தியே தவிர வேறல்ல. ரத்தமாமிச, சிலேஷ்ம மலமூத்திர மச்சஸ்நாயு அஸ்திகளின் சமூகமாக இருக்கும் தேகத்தின் மீது பிரியம் வைப்பவன் நரகத்திலேயும் பிரியம் வைக்கலாம். குளிரினால் நெருப்பும், தாகத்தினால் தண்ணீரும், பசியினால் அன்னமும் சுகமாகத் தோன்றுகின்றன. குளிரும் தாகமும் பசியும் இல்லாதபோது அக்கினியும் தண்ணீரும் அன்னமும் துக்க ஏதுக்களாகவே இருக்கும். பிள்ளைகளே! மனிதன் எவ்வளவு தனதானிய ரத்னாதிகளைக் கிரகித்துக் கொள்கிறானோ அவ்வளவையும் துக்கம் என்று நினைக்க வேண்டும். மனிதனின் மனத்துக்குப் பிரியமான புத்திர, மித்திர களத்திராதி சம்பந்தங்கள் எத்தனை சம்பாதிக்கிறானோ அத்தனையும் இதயத்தில் தைத்த ஆணிகளைப் போலவே இருக்கும்! மனிதன் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவனுடைய இதயத்தில் இருக்கிற தனதானிய ரத்னாதிகளை நாசமும், அக்கினியுபாதையும் கோரபயமுமில்லாமல் ஸ்திரமாய்ப் பாதித்துக்கொண்டேயுள்ளன. வீட்டில் கள்வர் பயமில்லாமல் இருந்தாலும், இருதயத்தில் பொருள்களிடத்துள்ள ஆசையால், அவை உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பிறக்கும்போது அனுபவிக்கிற துக்கத்தைப் போலவே மரணத்திலும் துக்கம் உண்டாகிறது. பிறகு, யமவாதனையிலும் மகாதுக்கமே உண்டாகும். கர்ப்பவாசத்தில் கொஞ்சமேனும் சுகம் இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள். எனவே எங்குமே சுகமில்லை ஆகையால் ஜகம் எங்கும் துக்கமயமாகவே இருக்கிறது.

இப்படியாகச் சகல துக்கங்களுக்கும் இருப்பிடமான சம்சார சாகரத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே கடக்கச் செய்பவன் உங்களுக்கு நான் உண்மையையே சொல்கிறேன். நாம் பால்யரானதால் விரகதி மார்க்கத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று நினைக்கவேண்டாம். பால்ய, யௌவன ஜரா, மரணாதி அவஸ்தைகள் உடலுக்கேயன்றி ஆத்மாவுக்கு இல்லை. உடலில் ஆன்மாதான் ஜனன மரணாதி ரகிதனாய், சாஸ்வதனாக இருக்கிறான். உலகத்தில் மனிதன், தன்னுடைய பாலப்பருவம் கடந்த பிறகு யவ்வன வயதிலே ஆன்மாவுக்கு இதஞ்செய்து கொள்கிறேன் என்றும், யவ்வனத்தை அடைந்தபோது வயோதிகத்திலே உயர்ந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் நினைப்பான். பிறகு வயது முதிர்ந்து, மூப்புவந்து இந்திரியங்கள் பலவீனப்பட்டுப் போகும் போது, இனிமேல் என்ன செய்வேன்? திடமாக இருந்தபோதே ஆத்தும இதஞ்செய்துகொள்ளாமல் மூடனாகப் போனேனே! என்று கவலைப்படுவான். இதுவுமல்லாமல் துராசார மோகங்கொண்டு, ஒருநாளும் உயர்வான மார்க்கத்துக்கு உரியவனாக மாட்டான். எப்படியென்றால், பலவித கிரீடா விளையாடல் விசேஷங்களால் பாலியத்தையும், சந்தன குசுமவனிதையர்களின் பரவசத்தினாலே வாலிபத்தையும், அசக்தியினாலேயே வயோதிகத்தையும் போக்கிக் கொண்டு, அஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கிறார்கள். ஆகையால் கங்கை நதியின் அருகிலிருந்தும் வண்ணான் தனக்குத் தாகமெடுத்தவுடன் தண்ணீரைக் குடிக்காமல், இந்தத் துணியைத் துவைத்தாகட்டும் இந்த ஆடையைத் துவைத்தாகட்டும் என்ற காலத்தைப் போக்குவதைப் போலவும், செம்படவன் இந்த மீனைப் பிடித்தாகட்டும் என்று பொழுதைப் போக்குவதைப் போலவும், எதிர்காலத்தை நினைத்து தற்காலப் பருவத்தைப் போக்கக்கூடாது. பாலிய, யவ்வன, ஜரா மரணாதி அவஸ்தைகள் உடலுக்கு உண்டே தவிர ஆன்மாவுக்கு இல்லை என்று நினைத்து விவேகமுடையவர்களாய், நீங்கள் உஜ்ஜீவிக்கும்படியான முயற்சிகளைச் செய்யுங்கள். இதுவே விரக்திமார்க்கம்! இது அசத்தியம் என்று நினைக்காதீர்கள் எப்போதும் சம்சார பந்த நிவாரணியான ஸ்ரீமந்நாராயணனையே நினையுங்கள். அந்த எம்பெருமானை நினைப்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அந்தத் திருப்பெயரை ஸ்மரித்தவுடனேயே சகல பாபங்களும் நாசமாய் சகல சுபங்களும் உண்டாகும். ஆகையால் அந்த மகாவிஷ்ணுவையே நினைத்து மகாத்துமாக்கள் உஜ்ஜீவிப்பார்கள். சர்வபூதந்தர் பாமியான நாராயணனிடத்தில் உங்களுக்கு நட்புணர்வு உண்டாகட்டும்! அவனது லீலா சாதனங்களான சேதனங்களிடத்தில் சினேகஞ்செய்யுங்கள். அதனால் மோகம் முதலிய சகல கிலேசங்களும் விலகும் ஆத்தியாத்து மாகாதி, தாபத்ரயத்தினால் ஜகம் யாவும் துன்பப்படுபவை. ஆகையால் மிகவும் பரிதாபப்பட வேண்டிய பிராணிகளிடத்தில் எவன்தான் துவேஷத்தை வைப்பான்? ஒருவேளை செல்வம், கல்வி, பலம் முதலியவற்றில் தன்னைவிட சகல ஜீவர்களும் சகல பிராணிகளும் செழிப்பாக இருப்பதாகவும், தான் ஒருவனே அப்படியில்லாமல் சக்தியீனனாக இருப்பதாகவும் மனிதன் நினைத்தானானால் அப்போதும் துவேஷம் பாராட்டாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். துவேஷஞ் செய்வதால் ஹானியே ஏற்படும் ஆகையால்; மயித்திரி; கருணை; முதிதை; உபேஷை என்ற மனத்தெளிவின் காரணங்களை மந்திமாதிகாரிகளின் மதத்தை அனுசரித்து உங்களுக்குச் சொன்னேன். மந்திமாதிகாரிகள் என்போர் உலகத்தைப் பகவானின் சொரூபமாக நினைக்காமல் வேறாக நினைக்கிற சாங்கியராவர். இனி உத்தமாதிகாரிகளின் கருத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

சகல பிரபஞ்சமும் சர்வாத்மாவான ஸ்ரீமந்நாராயணருடைய சொரூபம் என்று நினைத்து, ஞானமுள்ளவர்கள் சகல பூதங்களையும் உன்னைப்போலவே அபேதமாக நினைக்கவேண்டும். ஆகையால், நானும் நீங்களும் அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பெரும் ஆனந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்வோமாக. சூரியன், சந்திரன், வருணன், இந்திரன், வாயு, அக்கினி முதலானவர்களாலே ஒருபேறுமில்லை. இதற்கு என்ன செய்வது என்றால், தேவ, அசுர; யக்ஷ;ராக்ஷச, கின்னர பன்னகாதிகளாலும் மனுஷ்ய; பசு; பக்ஷி; மிருகங்களாலும் அதிகாரம்; ஜ்வரம், குன்மம், முதலிய மகாரோகங்களாலும் ராக, துவேஷ, லோப, மோக மதமாச்சாரியங்களாலும் எது நாசஞ்செய்யப்படாததோ அப்படிப்பட்ட பரமானந்தத்தைப் பெறுவதற்கு ஸ்ரீகேசவனது திருவடிகளில் இதயத்தை நிலைநிறுத்த வேண்டும். இதனால் சுகமடையலாம். ஆகையால் அசாரமான சம்சார மார்க்கத்தில் உண்டாகும் தேவ மனுஷ்யாதி சரீரங்களுக்கு உரிய ஸ்வர்க்க போகங்களுக்கு ஆசைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் வலுவில் வந்து நன்மையானவற்றையே சொல்கிறேன். சர்வபூதங்களிடத்திலும் சமத்துவ புத்தியுடன் இருங்கள். சர்வபூத சமத்துவந்தான் அச்சுதனுக்குச் செய்யும் ஆராதனையாகும். சர்வ நாதனான விஷ்ணுபெருமான் பிரசன்னமானானேயாகில் துர்லபமான பொருள்கள் என்னதான் இருக்கமுடியும்? ஆனாலும் தர்மார்த்த கர்மங்களைப் பிரார்த்திப்பது நல்லதன்று. அவை அற்பங்கள்! அவைகளினால் பயன் என்ன? மோட்சத்தையும் விரும்பவேண்டாம். ஏனென்றால் நன்றாய்ப் பழுத்த மாமரத்தின் அருகே சென்றவனுக்கு தற்செயலாய்ப் பழங்கிடைப்பது போல பரப்பிரமமான அனந்தன் என்ற மகாகல்ப விருட்சத்தை அணுகியவனுக்கு மோக்ஷõனந்தம் என்கிற பலன் தற்செயலாகவே கிடைத்துவிடும், இதில் சந்தேகமில்லை என்று பாலகன் பிரகலாதன் கூறினான்.

————

18. அசுரப் புரோகிதர்களைக் காத்தல்!

பிரகலாதனின் உபதேசங்களைக் கேட்டதும் அசுரகுமாரர்கள் மிகவும் யோசித்துவிட்டு, இரணியனின் கட்டாயத்துக்குப் பயந்து, பிரகலாதன் சொன்னவற்றையெல்லாம் அந்த அசுரேஸ்வரனிடம் கூறிவிட்டார்கள். அதனால் இரணியன் அதிகக் கோபமும் அகங்காரமும் கொண்டு தன் சமையற்காரனைக் கூப்பிட்டு, பரிசாரகர்களே! மந்தபுத்தி படைத்தவன் தான் என் குமாரன் பிரகலாதன் அவன் கெட்டதுமல்லாமல், மற்றவருக்கும் துன்மார்க்கமான உபதேசங்களைச் சொல்லி, அவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் பிரகலாதனைத் தாமதமின்றி அழித்தொழிக்க வேண்டும். அவனறியாத வண்ணம் அவனுடைய ஆகாரங்களிலெல்லாம் ஆலகாலம் என்ற கொடிய விஷத்தைக் கலந்து அவனுக்குக் கொடுங்கள். இந்தக் காரியத்தில் சந்தேகம் வேண்டாம்! என்று கட்டளையிட்டான். பரிசாரகர்களும் அப்படியே விஷங்கலந்த அன்னத்தை பிரகலாதனுக்கு கொடுத்தார்கள். அதையறிந்த பிரகலாதன், தன் மனதில் யாதொரு மாறுபாடும் இல்லாமல், அனந்தன் என்ற திவ்யநாமதே யத்தினால் அந்த அன்னங்களையெல்லாம் வாங்கி மகிழ்ச்சியுடன் அமுது செய்தான். ஸ்ரீஅனந்தனின் நாமத்தை உச்சரணை செய்த பெருமையால் அன்னத்தில் கலந்துள்ள விஷமெல்லாம் தன் வீரியத்தை இழந்து பிரகலாதனின் ரத்தத்திலேயே ஜீரணமாகிவிட்டது. அந்த மகாவிஷம் பிரகலாதனுக்கு ஜீரணமானதைப் பார்த்ததும் சமையற்காரர்கள் மகாபயம் பிடித்தவர்களாய் இரணியனிடம் ஓடி நடந்தவற்றைக் கூறினார்கள். அதனால் இரணியன் இன்னும் கோபங்கொண்டு, புரோகிதர்களான சண்டாமர்க்கர்களைக் கூப்பிட்டு, புரோகிதர்களே, விரைவில் அந்த துன்மார்க்கப்பையலைக் கட்டியிழுத்துச் சென்று உங்கள் மந்திர பலத்தால் பயங்கரமான கிருத்தியை உண்டாக்கி, அவனை அழித்து விடுங்கள் என்று கட்டளையிட்டான். புரோகிதர்களான பிராமணர்கள் அசுரேஸ்வரனின் ஆக்ஞையை ஏற்று பிரகலாதனை அணுகினார்கள். வணக்கமாக நின்று கொண்டிருக்கும் பிரகலாதனைப் பார்த்து, சிறுவனே! திரிலோக விக்கியாததமான பிரமகுலத்தில் உதித்து, இரணியனின் மகனான உனக்கு எந்தத் தேவதைகளால் என்ன ஆகவேண்டும்? விஷ்ணுவான அந்த அனந்தனாலே தான் உனக்கு என்ன பயன்? உன் பிதாவான இரணியகசிபோ சகல உலகங்களுக்கும் அதிபதியாக இருப்பதால் நீயும் அப்படியே அதிபதியாக இருக்கலாம். ஆகையால் சத்துருபட்ச ஸ்தோத்திரத்தை விட்டுவிடுவாயாக: சகல உலகங்களுக்கும் உன் தந்தையே பூஜிக்கத்தக்கவராகவும் பரமகுருவாகவும் இருக்கிறார். ஆகையால் இப்போது நீ அவரது கட்டளையை ஏற்று நடப்பதே நியாயம்! என்று புத்திமதி கூறினார்கள்.

மகாத்மாக்களே! நீங்கள் சொல்வது மெய்தான். மூன்று உலகங்களிலும் பிரமபுத்திரனான மரீசியின் வமிசம் மேலானது தான். என் தந்தை மேன்மையானவர், தேஜோ பல பராக்கிரமங்களையுடையவர் என்பதும் உண்மைதான். அவரே பரமகுரு என்பதும் நியாயமே! அத்தகைய என் தந்தைக்கு நான் சிறிதாவது அபராதம் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, அனந்தனாலே பயன் என்ன என்று நீங்கள் சொன்னீர்களே, அந்த வசனம் ஒன்றுதான் பொருள் அற்றது! என்றான் பிரகலாதன். பிறகு மரியாதைக்காக ஒன்றும் சொல்லாமல், புன்னகையுடன் பிரகலாதன் அவர்களைப் பார்த்து, புரோகிதர்களே! விஷ்ணுவான அந்த அனந்தனால் என்ன பயன் என்ற உங்களது வாக்கியம் நேர்த்தியாக இருக்கிறது. அனந்தனாலே காரியம் என்னவென்று நீங்கள் கேட்டது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் சொல்லுகிறேனே என்று மனதில் கிலேசங்கொள்ள வேண்டாம். அனந்தனாலே உண்டாகும் பயனை நான் சொல்கிறேன் கேளுங்கள். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்று சொல்லப்படும் நால்வகை புருஷார்த்தங்களும் எவனால் உண்டாகுமோ, அந்த அனந்தனாலே பிரயோசனமென்ன என்று நீங்கள் சொல்வதை நான் எப்படி அங்கீகரிப்பேன்? மரீசி முதலியவர்கள் அனந்தனை ஆராதித்தே, அவனது கிருபையினாலே தாம் விரும்பியதையெல்லாம் பெற்றார்கள். தத்துவ ஞானிகளான பரமாத்மாக்கள் ஞானநிஷ்டையினாலே அந்த பரமாத்மாவை ஆராதித்து, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தார்கள். சம்பத்து ஐசுவரியம், பெருமை, சந்தானபலம் ஆகிய நல்ல காரியத்துக்கும் மோட்சத்துக்கும் ஒன்றாலேயே பெறத்தக்க காரணம் எதுவென்றால் அது ஸ்ரீஹரியினுடைய ஆராதனையேயாகும். இப்படித் தருமார்த்த காம மோட்சங்கள் எவனிடமிருந்து பெறப்படுமோ, அப்படிப்பட்ட அனந்தனாலே என்ன பயன் என்று நீங்கள் கேட்டீர்கள்? பிராமணர்களே! இதுவென்ன நியாயம்? மேலும் நான் பல வார்த்தைகளைச் சொல்லி பயன் என்ன? நீங்களோ எனது ஆசிரியர்கள். ஆகையால் சந்தேகமின்றி நல்லதாயினும் பொல்லாததாயினும் என்னிடம் சொல்லுங்கள். இதனால் சிறப்பிராது அற்ப விவேகம் தான் இருக்கும். இனி என்னுடைய முடிவான சித்தாந்தத்தைக் கூறுகிறேன். கர்த்தாவும், வளர்ப்பவனும், சங்கரிப்பவனும் உலகநாதனும் எல்லோருடைய இதயத்திலிருப்பவனும், யாவற்றையும் அனுபவிப்பவனும், அனுபவிக்கப்படுபவனும் அந்த ஸ்ரீமந்நாராயணனே யல்லாமல் வேறு ஒருவனுமல்ல; பாலியனான நான் இப்படிச் சொல்வதைக் கேட்டுப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரகலாதன் கூறினான்.

பாலகனே! இனிமேல் நீ இப்படிச் சத்துருபக்ஷ ஸ்தோத்திரமான வார்த்தைகளைச் சொல்லமாட்டாய் என்று எண்ணித்தான், நெருப்பின் மத்தியிலே தகிக்கப்பட்டிருந்த உன்னை வெளியே இழுக்கச் செய்தோம். மூடனாகையால் அதையே நீ மறுபடியும் பேசுகிறாய். இனியும் உன் பிடிவாத்தை விடாமல் இருப்பாயானால், கிருத்தியை உண்டாக்கி ஒரு கணத்தில் உன்னை நாசமாக்குவோம்! என்றார்கள் புரோகிதர்கள். பிராமணர்களே! ஒருவனால் ஒருவன் ரட்சிக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. அவனவன் தனது சதாகாரத்தினாலேயே தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். நற்செயல்களால், சகல பயன்களும் நற்கதியும் உண்டாகின்றன. ஆகையால் எப்போதும் நல்லவற்றையே செய்யவேண்டும்! என்றான் பிரகலாதன். அசுரப் புரோகிதர்கள் கோபம் அடைந்து மந்திரங்களை உச்சாடனம் செய்து, மிகவும் பயங்கர முகத்துடன் தீச்சுவாலை வீசும்படியான ஒரு கிருத்தியை உண்டாக்கி அதைப் பிரகலாதன் மீது ஏவினார்கள். அது பூமிநடுங்க தன் பாதங்களை எடுத்து வைத்து மிகவும் கோபத்துடன் தனது சூலத்தினாலே, பிரகலாதனின் மார்பைத் தாக்கியது. அந்தச் சூலம் பிரகலாதனின் மார்பிலே பட்டவுடனேயே சடசடவென ஒடிந்து தரையில் விழுந்து பொடிப்பொடியாயிற்று! பகவானும் ஜகதீஸ்வரனுமான ஸ்ரீஹரி எங்கே பிரியாமல் இருப்பானோ, அங்கே வஜ்ராயுதமானாலும் பொடியாய்ப் போகும் என்றால் சூலத்தின் கதியை பற்றிச் சொல்லவா வேண்டும்? இவ்விதமாக அந்த கிருத்தியையினால் ஒன்றும் செய்யமுடியாமற் போகவே, அது தன்னைக் குற்றமில்லாத இடத்திற்கு ஏவிய புரோகிதர்கள் மீதே திரும்பி விழுந்து அவர்களைத் தகிக்கத் துவங்கியது. அதனால் தவிக்கிற ஆசிரியர்களைக் கண்டதும் பிரகலாதன் மிகவும் பரிவு கொண்டு அவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு, ஸ்ரீகிருஷ்ணா! ஸ்ரீஅனந்தா! இவர்களைக் காப்பாயாக! என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஓடிச்சென்று, சுவாமியைத் துதிக்கலானான்.

ஓ சர்வ வியாபகனே! ஜகத்ரூபனே! ஜகத்கர்த்தாவே! ஜனார்த்தனனே! கடினமான மந்திர அக்னியால் தகிக்கப்படும் இந்தப் பூசுரர்களைக் காப்பாயாக. சர்வ பூதங்களிடத்திலும் ஜகத் குருவான ஸ்ரீவிஷ்ணுவே வியாபித்திருக்கிறார் என்பது சத்தியமானால் இந்தப் புரோகிதர்கள் பிழைப்பார்களாக. ஸ்ரீவிஷ்ணு யாவரிடத்திலும் பிரியமாய் இருப்பவன் என்று நான் நினைத்து, சத்துரு பக்ஷத்திலும் துவேஷமில்லாமல் நான் இருப்பேனேயானால், இந்தப் பிராமணர்கள் பிழைக்கவேண்டும். என்னைச் சங்கரிக்க வந்த க்ஷத்திரிய அசுரர்களிடமும் எனக்கு விஷம் இட்ட சமையற்காரர்களிடமும், அக்கினியை மூட்டிய தானவர்களிடமும் தந்தங்களாலே என்னைப் பிடித்துப் பிடித்துக் குத்திய திக்கு கஜங்களிடத்திலும்; விஷங்கக்கி என்னைக் கடித்த பாம்புகளிடமும் என் சிநேகிதர்களிடமும் நான் சமமான புத்தியுடையவனாக இருந்து, எங்கும் ஒரு தீங்கும் நினைக்காமல் இருந்தேன் என்றால் அந்தச் சத்தியத்தினாலேயே இந்த அசுரப்புரோகிதர்கள் பிழைத்து சுகமாக இருக்கவேண்டும்! என்று பிரகலாதன் பிரார்த்தித்தான். அதனால் அப்புரோகிதர்களின் வேதனை ஒழிந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடன், பிரகலாதாழ்வானைப் பார்த்து, குழந்தாய்! நீ தீர்க்காயுளுடன் எதிரற்ற வீரிய பலபராக்கிரமங்களும், புத்திர பவுத்திர தனாதி ஐசுவரியங்களும் பெற்றுச் சுகமாக இருப்பாயாக! என்று ஆசிர்வதித்துவிட்டு, இரணியனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

————

19. பிரகலாதனின் பிரார்த்தனை

இரணியன் தன் புரோகிதர்கள் உண்டாக்கிய கிருத்தியை வீணானதைக் கேட்டுத் திகைத்தான். பிறகு அவன் தன் புத்தரனை அழைத்து, பிரகலாதா! உன் பிரபாவம் அதியற்புதமாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? இது மந்திரத்தால் உண்டானதா! இயல்பாகவே உள்ளதா? தெரியச் சொல்! என்றான். பிரகலாதன் தன் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு, ஐயனே! எனக்கு இந்தப் பிரபாவம் மந்திர தந்திரங்களால் உண்டானதல்ல! இயற்கையாகவே உள்ள சுபாவமுல்ல எவனெவன் இதயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு நிலையாகப் பிரகாசிப்பானோ, அவனவனுக்கெல்லாம் இத்தகைய பிரபாவம் உண்டு! யார் ஒருவன் தனக்குக் கேடு நினையாததைப் போலப் பிறருக்கும் கேடு நினைக்காமல் இருப்பானோ அப்படிப்பட்டவனுக்குப் பாவத்தின் காரியமாகிய பாவம் உண்டாவதில்லை. எவன் மனோவாக்குக் காயங்களினால் யாருக்கும் துரோகஞ்செய்யாமல் இருக்கிறேன். இப்படி நல்ல சிந்தையுள்ளவனான எனக்கு ஆத்தியாத் மிகம், ஆதி தெய்வீகம், ஆதி பவுதிகம் என்ற மூலகைத் துக்கமும் எப்படி உண்டாகும்? ஆகையால், விவேகமுள்ளவர்கள் ஸ்ரீஹரியே சர்வாத்துமகனாக இருக்கிறான் என்று நினைத்து, சகல பூதங்களிடமும் சர்வதேச, சர்வ காலங்களிலும் இடைவிடாமல் அன்பு செலுத்த வேண்டும்! என்று பிரகலாதன் சொன்னான். இரணியன் இன்னும் குரோதத்தால் பொங்கி, அங்கிருந்த அசுரகிங்கரர்களைக் கூவியழைத்து இந்த துஷ்டப்பையனான பிரகலாதனை இழுத்துகக் கொண்டு போய் நூறு யோசனை உயரமுள்ள உப்பரிகையின் மேலே இருந்து, கீழே தள்ளுங்கள். அந்த மலையின் மேல் விழுந்து இவனது உடம்பெல்லாம் சின்னாபின்னமடைந்து சிதையட்டும்! என்று கட்டளையிட்டான். அதன் பிரகாரம் கிங்கரர்களும் பிரகலாதனை இழுத்துப்போய் மிகவும் உயரத்திலிருந்து கீழே தள்ளினார்கள். ஆனால் பிரகலாதன் தனது இதயகமலத்தில் புண்டரிதாஷனான ஸ்ரீமந்நாராயணனையே நினைத்துக் கொண்டிருந்ததால் பூமிதேவி வெளிப்பட்டு சர்வபூத ரட்சகனின் பக்தனான பிரகலாதனை தன் கைகளால் ஏந்திக் கொண்டாள்.

அப்படிக் கீழே விழுந்தும் தனது அங்கத்தில் கிஞ்சித்தும் சேதமில்லாமல் சுகமாய் எழுந்துவந்த தன் மகனைப் பார்த்து, இரணியன் மனம் பொறாமல் மகாமாயவியான சம்பராசுரனைக் கூவி அழைத்து, அசுர உத்தமனே! துன்மார்க்கனான இந்தப் பையனைச் சாகடிக்க நான் எத்தனை உபாயம் செய்தும் இவன் சாகாமலே தப்பிவிடுகிறான்! ஆகையால் உமது மாயா சக்தியினால் இந்தத் துராத்மாவைச் சங்கரிக்க வேண்டும்! என்றான்.

அதற்கு சம்பராசுரன் இணங்கி, அசுரேஸ்வரா! எனது மாயாபலத்தைப் பாரும்! சஹஸ்ரகோடி மாயைகளைச் செய்து இந்த பிரகலாதனை நானே சாகடிக்கிறேன்! என்று சொல்லி விட்டு பிரகலாதன் மீது பலவகையான மாயைகளைப் பிரயோகித்தான். ஆனால் பிரகலாதனோ அந்த அசுரன் மீதும் வெறுப்படையாமல் ஸ்ரீமதுசூதனான விஷ்ணுவையே நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஸ்ரீமந்நாராயணனின் நியமனத்தால் அநேகமாயிரம் ஜ்வாலைகளோடு கூடிய திருவாழி புறப்பட்டு, பிரகலாதனை ரட்சிப்பதற்காக அதிவேகமாக வந்து, சம்பராசுரனின் மாயைகளையெல்லாம் தகித்துச் சாம்பலாக்கியது. பிறகு, இரணியன் இன்னும் பிடிவாதமான குரோதம் கொண்டு சம்சோஷகன் என்ற வாயுவைப் பார்த்து, சீக்கிரமாக இந்தத் துஷ்டனை நாசஞ்செய்வாயாக! என்று கட்டளையிட்டான். அந்த வாயு அசுரனும் அதிகுளிர்ச்சியும் அதிஉஷ்ணமும் கொண்டு, பிரகலாதனின் திருமேனியினுள்ளே பிரவேசித்தான். ஆனால் பிரகலாதன் தன் இருதயத்திலே ஸ்ரீமந்நாராயணனைத் தரித்திருந்தபடியால், அங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீமதுசூதனன் ரட்சகமூர்த்தியாய் எழும்பி, அந்தச் சம்சோஷகனை விழுங்கி ஒரே கணத்தில் நாசஞ்செய்தருளினார். அதைக்கண்ட இரணியன் பிரமித்தான். இதுபோல சம்பரனால் ஏவப்பட்ட மாயைகளும் சம்சோஷக வாயுவும் நாசமடைந்ததையறிந்த பிரகலாதன் மீண்டும், குருகுலத்துக்குச் சென்று அங்கே படித்துக் கொண்டிருந்தான். குருகுலத்தில் அவனுடைய ஆசாரியர், அவனுக்குத் தினந்தினம் சுக்கிர நீதியை உபதேசித்து வந்தார். சிலகாலம் சென்ற பிறகு அவர் தம்மிடம் பிரகலாதன் நீதி சாஸ்திரத்தை கற்றறிந்து விட்டதாக நினைத்து, அவனையும் அழைத்துக் கொண்டு, இரணியனிடம் சென்றார். அவர் இரணியனை நோக்கி, அசுரேந்திரனே! உனது புத்திரன் சுக்கிர நீதியை நன்றாகப் பயின்று சகல விஷயங்களிலும் சமர்த்தனாகி விட்டான்! என்றார். இரணியன் சிறிது மனச்சமாதானமடைந்து பிரகலாதனைப் பார்த்து, மகனே! அரசனானவன், நண்பர்களிடமும் பகைவரிடமும், நடுவரிடத்திலும், விருத்தி, சாமியம், க்ஷயம் என்பவை நேரிடும் சமயங்களிலும் எப்படியிருக்க வேண்டும்? புத்திசொல்லும் மந்திரிகளிடமும் காரியசகாயரான அமாத்தியரிடமும் பாகியர் என்னும் வரிவாங்கிச் சேர்க்கும் அதிகாரிகளிடமும், ஆப்பியந்தார் என்று சொல்லப்படும் அந்தப்புர அதிகாரிகளிடமும், தன்னுடைய குடிமக்களிடமும், தன்னால் ஜெயிக்கப்பட்டுத் தன்னிடம் சேவகம் செய்யும் பகைவரிடமும் மன்னன் என்போன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சந்தி, விக்கிரகம் முதலியவற்றில் எங்கே எதையெதைச் செய்ய வேண்டும்? தனக்குள்ளே இருந்து மர்மங்களை அறிந்து, பிறகு பிறராலே பேதப்படுத்திக் கொண்டு போக உடன்பட்டிருக்கும். தன் ஜனங்கள் விரோதமாகாமல் இருக்க அரசன் என்ன செய்ய வேண்டும்? சைலதுர்க்கம், வனதுர்க்கம், ஜலதுர்க்கம் முதலிய துர்க்கங்களை எப்படி அமைப்பது? அசாத்தியர்களால் வனத்தில் வாசஞ்செய்யும் மிலேச்சர்களை வசப்படுத்தும் உபாயம் யாது? திருடர் முதலிய துஷ்டர்களை நிக்ரஹிக்கும் விதம் என்ன? இவற்றையும் சாமதான பேதாதி உபாயங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் நீதி சாஸ்திரத்திலே நீ கற்றிருப்பவைகளையும் சொல்வாயாக உன் மனதில் இருக்கும் கருத்தை நான் அறிய விரும்புகிறேன் என்றான்.

தந்தையே! ஆசாரியர் எனக்குச் சகல சாஸ்திரங்களையும் உபதேசித்தார்; நானும் படித்தேன். ஆயினும் இவையெல்லாம் எனக்கு அர்த்தமற்றதாகவும், அசாரமாகவுமே தோன்றுகின்றன. மித்திராதிகளை வசப்படுத்த, சாம தான பேத தண்டங்களைச் செய்யும்படி நீதி சாஸ்திரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. ஐயனே கோபிக்க வேண்டாம்! ஜகத்திலே சத்துரு மித்திரர்களை நான் காணவில்லை. ஆகையால் சாமதானாதி உபாயங்கள் வீணானவையே! சாத்தியம் இல்லாதபோது வெறும் சாதனத்தால் பயன் என்ன? சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, ஜகத் ஸ்வரூபமாகவும் ஜகந்நாதனாகவும் கோவிந்தனே எழுந்தருளியிருக்கும்போது, இந்த ஜகத்தில் சத்துரு மித்துரு என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஸ்ரீவிஷ்ணுபகவான் உம்மிடமும் என்னிடமும் மற்றுமுள்ள சகல ஜகத்திலேயும் பரிபூரணமாக நிறைந்திருக்கிறாராகையால் சத்துரு மித்திரன் என்ற பேதம் எப்படி உண்டாகும்? இகலோக போகசாதனங்களாய் வீணான சொற்கள் விரிந்து, அவித்தைக்கு உட்பட்டிருக்கும் நீதி சாஸ்திரங்களால் என்ன பயன்? ஐயனே! பந்தங்கள் நீங்கும்படியான பிரமவித்தைப் பயிற்சிக்கே முயற்சி செய்ய வேண்டும். மின்மினிப் பூச்சியைப் பார்த்து அக்கினி என்று பாலகன் பிரமிப்பது போல் சிலர் அஞ்ஞானத்தால் அவித்தையை வித்தையென்று நினைக்கிறார்கள். எது சம்சார பந்தத்துக்குக் காரணமாகாதோ அப்படிப்பட்ட கருமமே கருமமாகும்! எது மோக்ஷத்துக் காரணமாகுமோ அப்படிப்பட்ட வித்தையே வித்தையாகும். மற்ற கருமங்கள் யாவுமே வீணான ஆயாசத்தை யுண்டாக்குமேயொழிய வேறாகாது. ஆகையால், நீதி சாஸ்திரத்தால் வரும் ராஜ்யாதி பயன்களைத் துச்சமாக நினைத்து, உத்தமமான விஷயத்தைச் சொல்கிறேன். பூமியில் ராஜ்ய அபேட்சையில்லாதவனும் தன அபேட்சையில்லாதவனும் உண்டோம். ஆயினும் பூர்வ புண்யவசத்தால் கிடைக்கத் தக்கதே கிடைக்குமேயல்லாது. நினைத்தது கிடைக்காது. கோபாக்கியமுடைய என் தந்தையே! ஜகத்தில் யாவரும் தமக்கு ஐசுவரியம் உண்டாக வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். ஆயினும் அது ஜன்மாந்திர பாக்கிய வசத்தாலன்றி முயற்சியால் உண்டாகாது.

விவேகமில்லாதவர்களக்கும் முயற்சி செய்யாதவருக்கும் நீதி சாஸ்திர மறியாதவருக்கும் அதிர்ஷ்டவசத்தால் ராஜ்யாதிகள் உண்டாகின்றன. ஆகையால் ஐசுவரியத்தை விரும்புவோரும் புண்ணியத்தையே செய்ய முயலவேண்டும். தேவ மனுஷ்ய, மிருக பட்சி விருட்ச ரூபமுடைய பிரபஞ்சம் யாவும் ஸ்ரீஅனந்தனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றன. ஆனால் அஞ்ஞானிகளுக்கு அவை வேறு போலத் தோன்றுகின்றன. ஸ்ரீவிஷ்ணு பகவான் விசுவதா ரூபதரன். ஆகையால் தாவர சங்கமாதமகமான பிரபஞ்சத்துக்கு எல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறான் என்று நினைத்து விவேதியாக இருப்பவன் சகல பூதங்களையும் ஆத்மசமானமாகப் பாவித்திருக்க வேண்டும். இந்த ஞானம் எவனுக்கு இருக்கிறதோ அவனிடத்திலே அனாதியாயும் ஷட்குண ஐசுவரிய சம்பன்னான அந்தப் புருஷோத்தமன் பிரசன்னமாவான். அவன் பிரசன்னனானால், சகல விதமான கிலேசங்களும் விலகிப் போய்விடும்! என்றான். பிரகலாதன் அதைக்கேட்ட இரணியன், சகிக்கமாட்டாமல் கோபத்துடன் தன் சிங்காதனத்திலிருந்து எழுந்து, தன் குமாரனின் மார்பிலே உதைத்து கையோடு கையை அறைந்து, அருகிலிருந்த அசுரர்களைப் பார்த்து, ஓ விப்ரசித்து! ராகுவே! ஓ பலனே! இந்தப் பயலை நாகபாசங்களினால் கட்டியிழுத்து, சமுத்திரத்திலே தூக்கிப் போடுங்கள் தாமதம் செய்ய வேண்டாம். இல்லையெனில் தைத்தியதானவ சமூகங்கள், மூடனான இந்தப் பாவியின் வழியில் சென்று கெட்டுப் போய்விடும். என்ன சொல்லியும் இவன் மாறவில்லை. இவனை நான் சொன்னபடிச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். தைத்யர்கள் அவனது கட்டளையை ஏற்று, பிரகலாதனை நாகபாசங்களாற் கட்டிக்கடலில் போட்டார்கள்.

பிரகலாதன் அதில் விழுந்து அசைந்ததும் கடல்நீர் எல்லை கடந்து, ஜகமெங்கும் வியாபித்தது. இவ்விதம் கடல்நீர் பொங்கிப்பூமியில் வியாபிப்பதைக் கண்ட இரணியன் தைத்யர்களை அழைத்து சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் அந்தத் துஷ்டன் மீது மலைகளை நெருக்கமாக அடுக்குங்கள்! அந்தப் பையன் பிழைப்பதால் யாதொரு பயனும் இல்லை. ஆகையால் ஜலராசியின் நடுவில், மலைகளால் நாலாபுறமும் அமுக்கப்பட்டுக் கொண்டே பல ஆண்டுகள் இருந்தானாகில் அவன் உயிரை விட்டுவிடுவான்! என்றான். பிறகு தைத்ய தானவர்கள் உயர்ந்த மலைகளைப் பறித்துக் கொண்டுவந்து பிரகலாதன் மீது போட்டு, அவனைச் சுற்றிலும் ஆயிரம் யோசனைக்கு மலைகளை அடுக்கினார்கள். இவ்விதம் பிரகலாதாழ்வான் சமுத்திர மத்தியில், அத்தனைத் தொல்லைகளிலும் ஏகாக்கிர சித்தனாய் அச்சுதனையே துதிக்கலானான்! புண்டரிகாக்ஷனே! உனக்கு எனது வணக்கம், புருஷோத்தமனே உனக்குத் தெண்டனிடுகிறேன். சர்வலோக ஸ்வரூபனே! உனக்கு நமஸ்காரம்! உக்கிரமான சக்கர ஆயுதமுடையவனே உனக்குத் தெண்டனிடுகிறேன். பிரமண்ணியம் என்று சொல்லப்பட்ட தவம் வேதம் முதலியவைகளுக்குத் தேவனாகவும், கோக்களுக்கும், பிராமணருக்கும் இதனாகவும், ஜகத்துக்கெல்லாம் ரக்ஷகனாயும், ஸ்ரீகிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்னும் திருநாமமுடைய உனக்கு மேலும் மேலும் தண்டனிடுகிறேன். பிரமரூபமாகி உலகங்களைப் படைத்துக் கொண்டும், தனது சொரூபமாகி ரட்சித்துக் கொண்டும், கல்பாந்தத்திலே ருத்திர ரூபமாகிச் சங்கரித்துக் கொண்டும், திரமூர்த்தியாக விளங்கும் உனக்குத் தெண்டனிடுகிறேன்! ஓ அச்சுதனே! தேவ அசுர கந்த வசித்த கின்னர சாத்திய பன்னக யக்ஷ ராக்ஷச பைசாச மனுஷிய பட்க்ஷ ஸ்தாவர பிபீவிகாதிகளும், பிரித்வி அப்பு, தேயு வாயு ஆகாயங்களுக்கும் சப்த ஸ்பரிச ரச கந்தங்களும், மனோ புத்தி சித்த அகங்காரங்களும், காலமும் அதன் குணங்களும் இவற்றின் பரமார்த்தமான ஆன்மாவும் இவையெல்லாம் நீயே! வித்தை அவித்தை சத்தியம், அசத்தியம் பிரவிர்த்தி, நிவர்த்தி ரோதோக்த்த சர்வகர்மங்களும் நீயே! விஷ்ணுபகவானே! சமஸ்த கர்மபோகத்தை அனுபவிப்பவனும் சர்வகர்ம பயன்களும் நீயே! ஓ மகாப்பிரபுவே! உன்னிடமும் இதரரிடமும் சேஷ பூதங்களான சகல உலகங்களிலே நீ வியாபித்திருப்பதும், உபதான நிமித்தகாரண ரூபமான ஐசுவரியும் அனந்த ஞானசக்தியும் உனது கல்யாண குணங்களைக் குறிக்கின்றன. பரமயோகிகள் உன்னைத் தியானிக்கின்றனர். யாகசீலர் உன்னைக் குறித்து யாகஞ்செய்கின்றனர். நீயே பிதுர் ரூபமும் தேவ ரூபமும் கொண்டு, ஹவ்ய கவ்யங்களைப் புசிக்கிறாய்! ஓ அச்சுதா! மகத்தகங்காரம் முதலான சூட்கமங்களும் பிரித்வி முதலிய பூதங்களும் அவற்றினுள்ளே அதிசூட்சுமமான ஆத்ம தத்துவமாகிய இந்தச் சூட்சும பிரபஞ்சமெல்லாம் எங்கேயிருக்கிறதோ, எங்கே உண்டாகிறதோ, அது சொரூப குணங்களிலே பெருத்த உனது மகாரூபமாக இருக்கிறது! சூக்ஷ்மம் முதலான யாதொரு சிறப்புமில்லாமல், சிந்திப்பதற்கும் அரியதாய் யாதொரு ரூபம் உண்டோ அதுவே உன்னுடைய பரமாத்ம சொரூபம்! இத்தகைய புருஷோத்தமனான உனக்குத் தெண்டமிடுகிறேன். சர்வாத்மகனே! சகல பூதங்களிலும் சத்வாதி குணங்களைப் பற்றியதாய் யாதொரு பிரகிருத சக்தி இருக்கிறதோ, ஜீவ ஸ்வரூபமான அந்தச் சக்தியை நான் வணங்குகிறேன்; வாக்குக்கும் மனதுக்கும் எது எட்டாததோ, யாதொரு விசேஷத்தினாலும் எது விசேஷப்படுத்தக் கூடாததோ, ஞானிகளுடைய ஞானத்தால் எது நிரூபிக்கப்படக்கூடியதோ அத்தகைய முந்தாத்தும ஸ்வரூபமாக இருக்கிற உனது மேன்மையான சக்திக்குத் தெண்டனிடுகிறேன்!

எவனுக்கு வேறானது ஒன்று இல்லையோ, எவன் எல்லாவற்றுக்கும் வேறாக இருக்கிறானோ, அத்தகைய பகவானான ஸ்ரீவாசுதேவனுக்குத் தெண்டனிடுகிறேன்! கர்மாதீனமான நாம ரூபங்கள் இல்லாமல் விலக்ஷணனாய் இருப்பதாக மட்டும் எவன் காரணப்படுவானோ அத்தகைய மகாத்மாவுக்கு எனது நமஸ்காரம்! சங்கர்ஷணாதி வியூகரூபியானவனுக்கு நமஸ்காரம்! தேவதைகளும் எவனுடைய பராத்பரமான ரூபத்தைக் காணமுடியாமல், மச்சகூர்மாதி அவதார ரூபங்களையே அர்ச்சனை செய்வார்களோ, அந்தப் பரமாத்மாவுக்கு வந்தனம்! எவன் ருத்திராதி சகல பூதங்களுக்கும் அந்தர்மியாகி சுபாசுபங்களை கண்டு கொண்டிருப்பானோ, அந்தச் சர்வசாட்சியும் பரமேஸ்வரனுமான ஸ்ரீவிஷ்ணுதேவருக்குத் தெண்டனிடுகிறேன்! காணப்படும் இந்தச் சகமெல்லாம் எவனோடு பேதமின்றி இருக்கிறதோ அந்த விஷ்ணுவுக்கு வந்தனஞ் செய்கிறேன்! யாவற்றுக்கும் ஆதியான அந்த ஸ்ரீஹரி எனக்குப் பிரசன்னனாகக் கடவன் அட்சரம் என்ற பெயருடையவனாக இருக்கும். எவனிடம் பிரபஞ்சமெல்லாம் நூலில் வஸ்திரம் கலந்திருந்திருப்பது போலக் கலந்தும், நூலில் மணிகள் சேர்க்கப்பட்டிருப்பது போலச் சேர்க்கப்பட்டும் இருக்கிறதோ, அந்தத் தியானசம்யனான அச்சுதன் என்னிடம் தோன்றக்கடவன்! சர்வ ஸ்வாமியாய் சர்வ சேஷயாய் இருக்கிற அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! எவனிடம் சகலமும் படைப்புக் காலத்தில் உண்டாகுமோ, எவன் சகல சரீரனாகவும், சகல ஆதாரமாகவும் இருக்கிறானோ, அந்த சுவாமிக்குப் பலமுறைகள் தெண்டனிடுகிறேன். யாவுமே எம்பெருமானது விபூதியாய், அவனைப் பற்றியே நிற்பதும் இயல்வதுமாய் சற்றேனும் சுதந்திரமில்லாமல் இருப்பதைப் பற்றியே எம்பெருமானை யாவும் என்றும் அவனன்றி வேறொன்றுமில்லை என்றும் அவனுள்ளேயே சொருகித் தன்னையும் அனுசந்தித்தபடியாகும். இதுவே விசிஷ்õத்துவைதம். ஸ்ரீஅனந்தன் எங்கும் ஆன்மாவாய், அகமும், புறமும் வியாபித்து ஞானானந்தமயனாய் நிறைந்திருப்பதால், நானும் அவனாகவே இருக்கிறேன். ஆகையால் என்னிடத்திலிருந்தே யாவும் உண்டாயிற்று. நானே யாவுமாக இருக்கிறேன். எப்போதும் இருக்கிற என்னிடத்திலே எல்லாம் இருக்கின்றன. நானே அவ்யயனாயும், நித்தியனாயும் வேறொரு ஆதாரமின்றி தன்னிலேயே தானாக இருக்கும் பரமாத்மாவாக இருக்கிறேன். நான் படைக்கும் முன்பு பிரமம் என்ற பெயரையுடையவனாக இருந்தேன். அப்படியே பிரளய காலத்திலும் எல்லாம் உள்ளே ஒடுங்கும்படியான பரமபுருஷனாக இருப்பேன்! என்று பிரகலாதன் தியானித்துக் கொண்டிருந்தான்.

—————

20. நரசிம்மர் பிரத்தியக்ஷமாதல்

சர்வ காரணனும் சர்வாத்மகனுமான ஸ்ரீவிஷ்ணுதேவன் தன்னையே சரீரமாகக் கொண்டு
உள்ளும்புறமும் வியாபித்துப் பூரணமயமாக இருப்பதால் விஷ்ணுமயமாகத் தன்னையே பிரகலாதன் நினைத்து,
விஷ்ணுவல்லாத பொருள் எதையுமே காணாமையால், திரிகுணாத்மகமாய் அனாதிப் பிரகிருதி வாசனாமலினமாய்,
மற்றக் காலத்திலே தோன்றுகின்ற ஆன்ம ஸ்வரூபத்தை மறந்தான்.
தான் அவ்யயனும் நித்தியனுமான பரமாத்மாவுக்குச் சரீர பூதராய், தன்மயர்ணனை நினைத்தான்.
இவ்விதமான யோகாப்பியாசப் பிரபாவத்தால் கிரமக் கிரமமாகச் சகல சருமங்களிலிருந்தும் விடுபட்டவனாய்
அந்தியந்த பரிசுத்தனான பிரகலாதனின் அந்தக்கரணத்திலே ஞானமயனும் அச்சுதனுமான பகவான் ஸ்ரீவிஷ்ணுவே பிரகாசித்தருளினான்.

யோகப் பிரபாவத்தினாலேயே பிரகலாதன் விஷ்ணு மயமானதால், அந்தப் பாலகனின் உடல் கட்டியிருந்த
நாகபாச பந்தங்கள் அனைத்துமே கணத்தில் சின்னாபின்னமாகச் சிதறுண்டு விழுந்தன.
பிறகு சமுத்திரமானது கரைகளை மூழ்த்தியது. அப்போது, பிரகலாதன் தன்மீது போடப்பட்டிருந்த மலைகளையெல்லாம்
விலக்கித் தள்ளிக்கொண்டு, சமுத்திரத்தை விட்டு வெளியில் வந்து, ஆகாயங்கவிந்த உலகத்தைப் பார்த்தும் லவுகித் திருஷ்டியினால்,
தான் பிரகலாதன் என்றும் இரணியனின் மகன் என்றும் நாமசாதிபாதி விசேஷண சமேதனாக மறுபடியும் தன்னை நினைத்தான்.
புத்திசாலியான அந்த அசுர சிகரமணி ஏகாக்கிர சித்தமுடன், மனோவாக்குக் காயங்களைச் சுவாதீனமாக்கிக் கொண்டு,
வியாகுலத்தை விட்டு, அநாதிப் புரு÷ஷாத்தமனான அச்சுதனை மீண்டும் துதித்தருளினான்.

பரமார்த்த பிரயோஜனமானவனே! ஸ்தூல சூட்சுமரூபனே வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருப்பவனே!
பஞ்சேந்திரியாதிக் கலைகளையெல்லாம் கடந்தவனே! சகலேசுவரனே! நிரஞ்சனனே குணங்களைத் தோற்றுவித்தவனே!
குணங்களுக்கு ஆதாரமானவனே! பிராகிருத குணம் இல்லாதவனே! சகல சற்குணங்களையும் கொண்டவனே!
மூர்த்தமும் அமூர்த்தமும் ஆனவனே! மஹாமூர்த்தியான விசுவரூபமும், சூத்ம மூர்த்தியான வியூக ரூபமும்,
வெளிப்படையாகத் தோன்றும் விபவ ரூபமும் அப்படி தோன்றாத, பரஸ்வரூபம் உடையவனே!
சத்துரு சங்கார காலங்களில் குரூரமாகவும் சுபாவத்தில் சாந்தமாகவும் விளங்கும் உருவமுடையவனே!
ஞான மயனாயும் அஞ்ஞான மயனாயும் இருப்பவனே! நன்மையாய் இருப்பவனே! உண்மையும் இன்மையும் கற்பிப்பவனே!
நித்திய அநித்திய பிரபஞ்ச ஆத்மகனே! பிரபஞ்சங்களுக்கம் மேற்பட்டவனே! நிருமலர் ஆஸ்ரயிக்கப்பெற்றவனே!
அச்சுதனே! உனக்குத் தண்டனிடுகிறேன். ஏகா! அநேகா வாசுதேவா! ஆதிகாரண! உனக்கு வணக்கம்!
எவன் ஸ்தூல ரூபத்தால் தோன்றுபவனும், எவன் சூட்சும ரூபத்தால் தோன்றாதவனுமாக இருக்கிறானோ,
எவன் சகல பூதங்களையும் சரீரமாகக் கொண்டு, யாவற்றிலும் தானே விலக்ஷணமாக இருக்கிறானோ,
இந்த உலகம் யாவும் விஷம சிருஷ்டி காரணமாகாத எவனிடமிருந்து உண்டாயிற்றே அந்தப் புரு÷ஷாத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்
என்று பலவாய்த் தோத்திரஞ்செய்த பிரகலாதனிடம்

ஸ்ரீஹரி பகவான் பிரசன்னனாய்ப் பீதாம்பராதி திவ்ய லக்ஷணங்களோடு அவனுக்குப் பிரத்யட்சமாய் சேவை சாதித்தான்.
அப்போது அந்தப் பரம பாகவதனான பிரகலாதன் பயபக்தியுடன் எம்பெருமானைத் சேவித்து மகிழ்ச்சியினால்
நாத்தடுமாற ஸ்ரீவிஷ்ணுவுக்குத் தெண்டமிடுகிறேன்! என்று பலமுறைகள் சொல்லிப் பிரார்த்தித்தான்.

சுவாமீ! சரணாகதி செய்தோரின் துக்கத்தைப் போக்கடிப்பவரே! ஸ்ரீகேசவா! அடியேனிடத்தில் பிரசன்னமாகி
இந்தப் படியே எக்காலமும் பிரத்யக்ஷமாய்ச் சேவை தந்து ரட்சித்து அருள்செய்ய வேண்டும்! என்று பிரகலாதன் வேண்டினான்.

அப்போது விஷ்ணுபகவான் அப்பாலகனைப் பார்த்து பிரகலாதா!
நீ இதர பயன்களை இச்சிக்காமல் என்னிடத்திலேயே பரமமான ஏகாந்த பக்தியைச் செய்தபடியால், உனக்குப் பிரசன்னமானேன்.
உனக்கு இஷ்டமான வரங்களை வேண்டிக்கொள் என்று அருளிச்செய்தார்.

சுவாமி! அடியேன் தேவ, திரியக், மனுஷ்யாதி ஜன்மங்களிலே எந்த ஜன்மத்தை எடுத்தாலும்
அந்த ஜன்மங்களில் எல்லாம் உன்னிடம் இடையறாத பக்தியுடையவனாக இருக்க வேண்டும்.
மேலும் விவேகமில்லாத ஜனங்களுக்கு நல்ல சந்தன வனிதாதி போக்கிய வஸ்துக்களில் எத்தகைய ஆசையுண்டாகுமோ
அத்தகைய பிரீதிச் சிறப்பானது, உன்னை ஸ்மரிக்கின்ற அடியேனுடைய மனத்தினின்றும் நீங்காமல் இருக்க வேண்டும்!
என்று பிரகலாதன் வேண்டிக் கொள்ளவே

எம்பெருமான் அந்தப் பக்த சிகாமணியைக் கடாட்சித்து, பிரகலாதா! முன்னமே என்னிடம் பிரியாத பக்தி உனக்கு உண்டாயிருக்கிறது.
இன்னமும் அப்படியே அது அபிவிருத்தியாகும். அதிருக்கட்டும் இப்பொழுது உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்று
அனுக்கிரகம் செய்ய, பிரகலாதாழ்வான் பிரார்த்திக்கலானான்.

எம்பெருமானே! உன்னைத் துதிக்கும் அடியேனிடத்தில் மாச்சரியம் பாராட்டியதால், அசஹ்யமான அபசாரம் பண்ணினவரானாலும்
இரணியன் என்னுடைய தகப்பனார் என்பதால் அவரைப் பாவமில்லாதவராகும்படி அனுக்கிரகஞ்செய்ய வேண்டும்!
மேலும் ஆயுதங்களால் அடிக்க வைத்தும், நெருப்பிலே போட்டும், சர்ப்பங்களைக் கொண்டு கடிக்கச் செய்தும்
போஜனத்திலே விஷத்தைக் கலந்தும், நாக சர்ப்பங்களைக் கட்டி சமுத்திரத்திலே போடுவித்தும்,
பர்வதங்களால் துவைத்தும் இவ்வாறு மற்றும் பலவிதங்களான தொல்லைகளைச் செய்து உன் பக்தனான அடியேனை
அழிக்கப் பார்த்த என் தகப்பனுக்குச் சம்பவித்திருக்கின்ற அளவற்ற மகாபாவங்கள் உனது கடாட்சத்தினாலேயே நாசமாக வேண்டும்.
இதுதான் அடியேன் வேண்டும் வரமாகும்! என்றான் பிரகலாதன்.

உடனே மதுசூதனன் புன்முறுவலுடன் பிரகலாதா! என் அனுக்கிரகத்தால் நீ கேட்டவாறே ஆகும்.
சந்தேகமில்லை இன்னமும் உனக்கு வேண்டிய வரங்களைக் கேட்பாயாக! என்றான்.

புரு÷ஷாத்தமனே, உனது திருவடித் தாமரைகளிலே பிரியாத பக்தி உண்டாகும்படி அனுக்கிரகித்தால், அடியேன் கிருதார்த்தனானேன்.
சகல ஜகத்காரண பூதனான உன்னிடத்தில் எவனுக்கு அசஞ்சலமான பக்திச் சிறப்புண்டாகுமோ அவனுக்கு
சர்வ உத்தமமான மோட்சமும் உண்டல்லவா? அப்படியிருக்க, அவனுக்குத் தர்மார்த்த காமங்களால் ஆகவேண்டுவது என்ன? என்றான் பிரகலாதன்.

குழந்தாய்! உன் இதயம் என்னிடம் பக்தியுடன் எப்படிச் சஞ்சலமற்று இருக்கிறதோ, அப்படியே எனது அனுக்கிரகத்தால்
பரமமான மோக்ஷõனந்தத்தையும் பெறுவாயாக! என்று ஸ்ரீபகவான் அருளிச் செய்து
பிரகலாதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதோ, அந்தர்த்தானமானார்.

பிரகலாதன் மீண்டும் நகரத்துக்கு வந்து தன் தந்தையை வணங்கி நின்றான்.
இரணியன் தன் பாலகனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு, உச்சிமோந்து, கண்களில் கண்ணீர் ததும்ப,
அடா குழந்தாய்! நீ பிழைத்து வந்தாயா? என்று அன்போடும் ஆசையோடும் கொஞ்சினான்.

பரமதார்மீகனான பிரகலாதனும், தன் தகப்பனுக்கும் ஆசாரியாருக்கும் பணிவிடை செய்துகொண்டு சுகமாக இருந்தான்.
சிறிது காலத்திற்குப் பிறகு, இரணியன் முன்பு நேர்ந்த பிரம்மசாபவசத்தால் பகவானிடம் துவேஷம் முற்றி,
மறுபடியும் தன் மகனான பிரகலாதனைக் கொல்ல முயன்றபோது, ஸ்ரீஹரிபகவான், அந்த அசுரனைச் சங்கரிக்க தீர்மானித்தார்.

தேவராலோ, மனிதராலோ, மிருகங்களாலோ தனக்கு மரணம் விளையக்கூடாது என்று இரண்யன் முன்பு
வரம் பெற்றிருந்தானாகையால், மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் நரசிம்ம உருவமெடுத்த
இரண்யனைக் கொல்ல வேண்டுமென்று விஷ்ணு கருதினார். இரண்யன் கோபத்துடன் தன் மகன் பிரகலாதனை நோக்கி,
உன் ஆண்டவன் இந்தத் தூணிலும் இருப்பானோ! என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டி ஏளனமாகச் சிரித்து
அந்தத் தூணை எட்டி உதைத்தான். உடனே ஹரிபகவான் நரசிம்மரூபியாக அவ்வரக்கன் சுட்டிக் காட்டிய தூணிலிருந்து தோன்றி
அவ்வசுர வேந்தனைச் சங்கரித்து அருளினார். பிறகு பரம பாகவதனான பிரகலாதன், தைத்ய ராஜ்யத்தில் முடிசூட்டிக்கொண்டு,
அந்த ராஜ்ய போகத்தினால் பிராரப்த கர்மங்களைக் கழித்து புத்திர பவுத்திராதிகளைப் பெற்று
பிராரப்த கர்ம அனுபவமாகிற அதிகாரங்கழிந்தவுடன், இரண்டையும் விட்டு மோக்ஷத்தையடைந்தான்.

மைத்ரேயரே! பரமபக்தனான பிரகலாதனின் மகிமையை வணக்கமாகச் சொன்னேன்.
எவன் மகாத்மாவான பிரகலாதனின் சரிதத்தை ஒருமித்த மனத்துடன் கேட்பானோ, அவனுக்கு அப்போதே
சகல பாவங்களும் தீர்ந்து போகும். பிரகலாதனின் சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும்,
அகோராத்திர கிருதங்களான பாவங்கள் நீங்கப்பெறுவர். இதில் ஐயமில்லை. எவன் இந்தச் சரிதத்தைப் படிக்கிறானோ,
அவன் பவுர்ணமியிலும், துவாதசியிலும், அஷ்டமியிலும் புனிதமான தோத்திரத்திலே சூரிய கிரகண புண்ணிய காலத்தில்
சுவர்ண சிருங்கம் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட உபயதோமுகியான பசுக்களை சற்பாத்திரத்திலே
பூரண மயமான தக்ஷணைகளோடு தானஞ்செய்த பயனையடைவான். உபயதோமுகி என்பது இருபுறத்தும் முகத்தையுடையது.
கன்றையீன்று கொண்டிருக்கும்போதே, பசுவைத் தானம் செய்வது. எவன் ஒருவன் பக்தியுடன்
இந்தப் பிரகலாதாழ்வானின் திருக்கதையைக் கேட்கிறானோ, அவனை ஸ்ரீமந்நாராயணன் பிரகலாதனைக் காத்தது போலவே,
சகல ஆபத்தையும் விலக்கிச் சர்வகாலமும் ரட்சித்து அருள்வான்.

————————————————————————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 24–ஸ்ரீ ப்ரஹ்லாத சரிதம் —

 

ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் -7-ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் சொல்லும்

ஹிரண்யாஷே போத்ரி ப்ரவர வபுஷா தேவ பவதா
ஹதே சோக க்ரோத க்லபி தத்ருதிரே தஸ்ய ஸஹஜ
ஹிரண்ய ப்ராரம்ப கசிபுர மராராதி ஸதசி
ப்ரதிஜ்ஞம் ஆதேந தவ கில வாதார்தம் மது ரிபோ –1-

மது என்ற அசுரனைக் கொன்றவனே -தாங்கள் ஸ்ரீ வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக்
கொன்றதால் கோபமடைந்த அவனுடைய சகோதரன்
ஹிரண்யகசிபு அசுரர்களின் சபையில் தங்களைக் கொல்வதாக சபதம் செய்தான்

போத்ரி-மானமில்லா பன்றி -அளவு உவமானம் இல்லா -மஹா வராஹா ஸ்புட பத்ம லோசனா –அபிமானம் இல்லா
சோக க்ரோ-சோகமும் கோபமும் கூடிய

ரத்தம் கொண்டே தர்ப்பணம் பண்ணுவேன் என்று சொன்னதை தமது வாயால் சொல்ல மாட்டாரே
தான் தீங்கு நினைந்த கம்சன் போல்

——————

விதா தாரம் கோரம் ச கலு தபஸித்வா நசிரத
புர ஸாஷாத் குர்வன் ஸூர நர ம்ருகாத்யைர் அநிதனம்
வரம் லப்தவா த்ருப்தோ ஜகதிஹ பவன் நாயக மிதம்
பரி ஷுந்தன் நிந்த்ராத ஹரத திவம் த்வாம கணயன்–2-

அவன் கடுமையான தவம் புரிந்து ப்ரம்ம தேவனைத் தன் முன் தோன்ற வைத்து பல வரன்கள் பெற்றான் –
தேவர்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் இல்லாத வரத்தைப் பெற்றான்
அதனால் கொழுப்பு அடைந்து தங்களைத் தலைவராக உடைய இந்த உலகத்தை அழித்துக் கொண்டு
இந்த்ர லோகத்தைக் கைப் பற்றினான்

————–

நிஹந்தும் த்வாம் பூயஸ் தவ பதம வாப் தஸ்ய ச ரிபோர்
பஹிர் த்ருஷ்டே ரந்தர் ததித ஹ்ருதயே ஸூஷ்ம வபுஷா
நதந் துச்சைஸ் தத்ராப் யகில புவநாந்தே ச ம்ருகயன்
பியா யாதம் மத்வா ச கலு ஜித காசீ நிவ வ்ருதே –3-

தங்களைக் கொல்வதற்காக -கார்ய -ஸ்ரீ வைகுண்ட லோகத்தை அடைந்தான் -தாங்கள் ஸூஷ்ம ரூபத்தில்
அவன் மனத்தில் உள்ளே மறைந்தீர்கள்-ஹ்ருதயே ஸூஷ்ம வபுஷா-இங்கு மட்டும் தானே தேட மாட்டான் -மறைந்து இருந்தால் தானே நரஸிம்ஹ அவதாரம் மஹிமை நாம் அறிய முடியும் –
அகில உலகங்களிலும் தங்களைத் தேடினான் -தாங்கள் பயந்து ஓடிப் போனதாக நினைத்து
உரக்க சப்தம் செய்து கொண்டு வெற்றி பெற்றதாகவே எண்ணி கர்வத்துடன் திரும்பினான்

————-

ததோ அஸ்ய ப்ரஹ்லாத ஸம ஜனி ஸூதோ கர்ப வசதவ்
முநேர் வீணா பாணேர் அதிகத பவத் பக்தி மஹிமா
ச வை ஜாத்யா தைத்ய ஸி ஸூரபி சமேத்ய த்வயி ரதம்
கதஸ் த்வத் பக்தாநாம் வரத பரம உதாஹரணதாம் –4-

அவனுக்கு ப்ரஹ்லாதன் என்ற மகன் பிறந்தான் -அவன் கர்ப்பத்தில் இருக்கும் போதே ஸ்ரீ நாரத முனிவர் இடம்
இருந்து தங்களுடைய மகிமையை உபதேசமாகப் பெற்றான்
பிறப்பால் அசுரனாய் இருந்தாலும் தங்கள் இடம் மிகுந்த பக்தி கொண்டு இருந்தான்
தங்கள் பக்தர்களுக்கு எல்லாம் சிறந்த உதாரணமாய் இருந்தான்

கயாது தாயின் கர்ப்ப ஸ்ரீ மான் கருவிலே திருவுடையால் -நல்ல ஆனந்தம் உடையவன் பெயரிலே ப்ர ஆஹ்லாதன் -ஆச்சார்ய அனுக்ரஹம்

சீமந்தம்-வேத மந்த்ரம் வீணையில் வாசிக்க வேண்டும் வேதம் சொல்லும்

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-பிரகலாதனை ரக்ஷித்து ஹிரண்யனை நிரஸித்து

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸாம் அம்பரீஷா –புண்யாம் பரம பாகவதர்
ப்ரஹ்லாத வரத நரசிம்மன் -இவனை வைத்த்தே நிரூபகம்

————–

ஸூராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜ ஸூதே
ச த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபி ரஸி ஸிஷச் சிரமமும்
குரு ப்ரோக்தம் ஸாசாவிதம் இதம் அபத்ராய த்ருடமி
த்யபா குர்வன் சர்வம் தவ சரண பக்த்யைவ வவ்ருதே –5-

தனது பிள்ளை தங்கள் இடம் பக்தி கொண்டு இருப்பதால் ஹிரண்ய கசிபு அசுரர்களின் கேலிக்கு ஆளானான் –
அதனால் அவன் ஆசிரியர்களை அவனுக்கு உபதேசிக்கச் சொன்னான்
அவர்கள் உபதேசித்த ராஜ நீதி முதலியவை பிறப்பு இறப்புக்களுக்கு காரணமாய் இருப்பதால்
அவற்றை விட்டு தங்கள் இடமே ப்ரஹ்லாதன் பக்தி செலுத்தி வந்தான் –

பக்த்யைவ வவ்ருதே–பக்தி நாளுக்கு நாள் வளர என்றும் பக்தியாலேயே வளர்ந்தான் -பாதேயம் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தனம்

————-

அதீ தேஷு ஸ்ரேஷ்டம் கிமிதி பரி ப்ருஷ்டே அத தனயே
பவத் பக்திம் வர்யாமபி கததி பர்யா குல த்ருதி
குருப்யோ ரோஷித்வா ஸஹஜம் அதிரஸ்யேத் யபி விதன்
வதோ பாயா நஸ்மின் வ்யத நுத பவத் பாத சரணே –6-

நீ படித்த பாடங்களில் சிறந்தது எது என்று ஹிரண்ய கசிபு கேட்க ப்ரஹ்லாதன் தங்கள் இடம் கொண்டுள்ள
பக்தியே சிறந்தது என்று கூறினான்
அதனால் ஹிரண்ய கசிபு ஆசிரியர்களைக் கோபித்துக் கொண்டான் -அவர்கள் இந்த பக்தி இவனுக்கு
முன் ஜென்மத்திலேயே உண்டானது என்று சொன்னார்கள்
அதனால் தங்கள் பக்தர்களில் சிறந்தவனாக இவனை கொல்ல திட்டங்கள் செய்தான் –

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோர் ஸ்மரணம் பாத சேவகம் -இங்கு அடியார் அடியாராக தொண்டு –
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸஹ்யம் ஆத்ம நிவேதனம்-நவ வித பக்தி
செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -நான் பெரியன் –நீ பெரியை என்பதனை யார் அறிவார்-

———–

ச ஸூலை ராவித்த ஸூபஹு ம் அதிதோ திக் கஜை கணர்
மஹா சர்பைர் தஷ்டோ அப் யநஸந கராஹார விதூத
கிரீந்த்ர வஷிப்தோ அப்ய ஹ ஹ பரமாத்மந்நயி விபோ
த்வயி ந்யஸ்தாத் மத்வாத் கிமபி ந நிபீடா மபஜத –7–

எங்கும் நிறைந்தவனே -சூலத்தால் குத்தப் பட்டும் -யானைகளால் மிதிக்கப் பட்டும் -பாம்புகளால் கடிக்கப் பட்டும் –
பட்டினி போடப் பட்டும் -விஷம் கொடுக்கப் பட்டும் ப்ரஹ்லாதன் துன்புறுத்தப் பட்டான்
தங்கள் இடம் மனத்தை வைத்ததால் எவற்றாலும் ப்ரஹ்லாதன் துன்பம் பட வில்லை ஆச்சர்யம் –

————

தத சங்காவிஷ்ட ச புனரதி துஷ்டோ அஸ்ய ஜனகோ
குரூக்த்யா தத் கேஹே கில வருண பாஸை ஸ் தமருணத்
குரோஸ் சா சாந்நித்யே ச புனர் அநுகான் தைத்ய தனயான்
பவத் பக்தேஸ் தத் தவம் பரமம் அபி விஞ்ஞானம் அஸிஷத் –8-

கவலை அடைந்த கொடியவனான ஹிரண்ய கசிபு ஆசிரியர்கள் வீட்டில் ப்ரஹ்லாதனை வருண பாசத்தால்
கட்டி அடைத்து வைத்தான்
ஆசிரியர்கள் இல்லாத போது ப்ரஹ்லாதன் அசுரக் குழந்தைகளுக்கு தங்கள் பக்தியைப் பற்றியும்
பக்தியின் தத்வத்தைப் பற்றியும் உபதேசித்தார் –

சண்டன் மர்த்தன் -சுக்ராச்சாரியார் பிள்ளைகள் -வருண பாசத்தால் தூணில் கட்டி உபதேசம் செய்தார்களாம்

————-

பிதா ஸ்ருண்வன் பால ப்ரகரம் அகிலம் த்வத் ஸ்துதி பரம்
ருஷாந்த ப்ராஹை நம் குல ஹதக கஸ்தே பலமிதி
பலம் மே வைகுண்டஸ் தவ ச ஜகதாம் சாபி ச பலம்
ச ஏவ த்ரை லோக்யம் சகலமிதி தீரோ அயம கதீத் –9-

எல்லா அசுரக் குழந்தைகளும் தங்களையே ஸ்துதிப்பதைக் கேட்ட ஹிரண்ய கசிபு கோபத்துடன் ப்ரஹ்லாதன் இடம்
உனக்கு எவன் உதவி செய்கிறான் என்று கேட்டான்-குல ஹதக-கோடாலிக்காம்பு போல் குலத்தை அழிக்கப் பார்க்கிறாய் –
ப்ரஹ்லாதனும் தைரியமாக -அந்த ஸ்ரீ மன் நாராயணனே எனக்கும் தங்களுக்கும் உலகங்களுக்கு எல்லாம் துணை
மூ உலகங்களும் அவனே என்றான் –

வைகுண்ட-தடைகளைப் போக்குமவன் என்பதால் இந்த பத பிரயோகம்

தீரோ -தீரன் -வீரத்துடனும் புத்தியுடனும் சொல்பவன் தீ ஞானம்

உளன் அலன் எனில் என்றாலும் உளன் -ஆழ்வார்-சாணிலும் உளன் நீ சொல்லும் சொல்லிலும் உளன் -கம்பர்

சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; “நன்று” எனக் கனகன் சொன்னான்.

————-

அரே க்வா சவ் க்வா சவ் சகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலித கரவாலோ திதி ஸூத
அத பஸ்ஸாத் விஷ்ணோ ந ஹி வதி துமீ ஸோ அஸ்மி ஸஹஸா
க்ருபாத் மந் விச்வாத் மந் பவன புர வாஸிந் ம்ருடய மாம் –10-

அடே ப்ரஹ்லாதா சகல உலகங்களும் அவனே என்று உன்னால் சொல்லப்படும் அந்த நாராயணன்
எங்கே என்று வாளை வீசிக் கொண்டு அங்கு இருந்த ஒரு தூணை அடித்தான்
எங்கும் நிறைந்த ஸ்ரீ மன் நாராயணா அதன் பின் நடந்தவற்றை எனக்குச் சொல்ல சக்தி இல்லை
கருணா மூர்த்தியே -சகல உலகமாய் இருக்கும் குருவாயூரப்பா அடியேனை குணப்படுத்தி அருள வேண்டும் –

அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
பேய் முலை உண்டானே! சப்பாணி.

———————–——————————————

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 25-ஸ்ரீ நரசிம்ம அவதாரம்-

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 25–ஸ்ரீ நரசிம்ம அவதாரம்

ஸூகர்ணி மீட்டர் கீழ் -ஸூக பிரகலாதன் சரித்திரம்
இது சார்த்தூல விக்ரீதம் மீட்டர் புலி பாய்ச்சல்

ஸ்தம்பே₄ க₄ட்டயதோ ஹிரண்யகஶிபோ: கர்ணௌ ஸமாசூர்ணயந்ந
ஆகூ₄ர்ணஜ் ஜக₃த₃ண்ட₃குண்ட₃குஹரோ கோ₄ரஸ்தவாபூ₄த்₃ரவ: |
ஶ்ருத்வா யம் கில தை₃த்யராஜ ஹ்ருத₃யே பூர்வம் கதா₃ப்யஶ்ருதம்
கம்ப: கஶ்சந ஸம்பபாத சலிதோ(அ)ப்யம்போ₄ஜபூ₄ர்விஷ்டராத் || 1||

ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது.
அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாயிருந்தது. இதுவரை எவராலும் கேட்கப்படாத சத்தமாக இருந்தது.
அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க
குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.

———–

தை₃த்யே தி₃க்ஷு விஸ்ருஷ்டசக்ஷுஷி மஹாஸம்ரம்பி₄ணி ஸ்தம்ப₄த:
ஸம்பூ₄தம் ந ம்ருகா₃த்மகம் ந மநுஜாகாரம் வபுஸ்தே விபோ₄ |
கிம் கிம் பீ₄ஷண மேதத₃த்₃பு₄தமிதி வ்யுத்₃ப்₄ராந்தசித்தே(அ)ஸுரே
விஸ்பூ₂ர்ஜ்ஜத்₃த₄வ லோக்₃ர ரோம விகஸத்₃வர்ஷ்மா ஸமாஜ்ரும்ப₄தா₂: || 2||

எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான்.
அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் தாங்கள் தோன்றினீர்கள்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன்,
சிங்க உருவத்துடன் தாங்கள் பெரிதாக வளர்ந்தீர்கள்.

பீஷணம் அத்புதம் -சேராச் சேர்க்கை -சக்கரை போட்ட பால் -அழகியான் தானே அரி யுருவன் தானே

அழகிய சிங்கர் -இவன் மட்டுமே –
மத்ஸ்ய கூர்ம வராஹா -வாமனன் -பரசுராமன் -ரோஷ ராமர் ராமன் -பல ராமன் -கண்ணன் -கல்கி
ஸூந்தர ராமன் -திருவடி உடன் இருப்பதால்
மோஹன கண்ணன்-ஆபத்துக்கு உதவ -நாளை என்பது நரசிம்மருக்கு இல்லையே
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராய முடியாதே

எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*
அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 

————–

தப்த ஸ்வர்ண ஸவர்ண கூ₄ர்ணத₃திரூக்ஷாக்ஷம் ஸடா கேஸர-
ப்ரோத்கம் பப்ரநிகும்பி₃தாம்ப₃ரமஹோ ஜீயாத் தவேத₃ம் வபு: |
வ்யாத்த வ்யாப்த மஹாத₃ரீ ஸக₂முக₂ம் க₂ட்₃கோ₃க்₃ர வல்க₃ந்மஹா-
ஜிஹ்வா நிர்க₃ம த்₃ருஶ்யமாந ஸுமஹா த₃ம்ஷ்ட்ரா யுகோ₃ட்₃டா₃மரம் || 3||

சுழலும் தங்கள் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன.
வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்றுகொண்டு இருந்த நாக்கு வெளியே வரும்போது,
மிகப்பெரிய கோரைப்பற்கள் இருபுறமும் தெரிந்தன. பயங்கரமான உருவம் கொண்ட,
தங்களுடைய இந்த நரசிம்ம அவதாரம் சிறந்து விளங்கட்டும்.

—————

உத்ஸர்பத்₃வ லிப₄ங்க₃பீ₄ஷண ஹநு ஹ்ரஸ்வஸ்த₂வீயஸ்தர-
க்₃ரீவம் பீவரதோ₃ஶ்ஶதோத்₃க₃தநக₂ க்ரூராம்ஶுதூ₃ரோல்ப₃ணம் |
வ்யோமோல் லங்கி₄ க₄நாக₄நோபமக₄நப்ரத்₄வாந நிர்தா₄வித-
ஸ்பர்தா₄லு ப்ரகரம் நமாமி ப₄வதஸ்தந் நாரஸிம்ஹம் வபு: || 4||

குட்டையான கழுத்துடன், கர்ஜிக்கும்போது மடிந்த கன்னத்து சதைகளால் தங்கள் உருவம் பயங்கரமானதாய் இருந்தது.
நூற்றுக் கணக்கான கைகளில் இருந்து கூர்மையான நகங்கள் வெளிவந்தது. மிக பயங்கரமான இடி முழக்கம் போன்ற
சிம்ம நாதக் குரல், பகைவர்களை ஓடச் செய்தது. இப்படிப்பட்ட நரசிம்ம உருவத்தை நமஸ்கரிக்கிறேன்.

————-

நூநம் விஷ்ணுரயம் நிஹந்ம்யமுமிதி ப்₄ராம்யத்₃க₃தா₃பீ₄ஷணம்
தை₃த்யேந்த்₃ரம் ஸமுபாத்₃ரவந்தமத்₄ரு₂ தோ₃ர்ப்₄யாம் ப்ருது₂ப்₄யாமமும் |
வீரோ நிர்க₃லிதோ(அ)த₂ க₂ட்₃க₃ப₂லகௌ க்₃ருஹ்ணந் விசித்ரஶ்ரமாந்
வ்யாவ்ருண்வந் புநராபபாத பு₄வநக்₃ராஸோத்₃யதம் த்வாமஹோ || 5||

“இவன் நிச்சயம் நாராயணன், இவனைக் கொல்கிறேன்” என்று ஹிரண்யகசிபு, தன் கதையைச் சுழற்றிக் கொண்டு,
தங்கள் அருகே வந்தான். தங்கள் பருத்த கரங்களால் அவனைப் பிடித்தீர்கள். அவன், தங்கள் பிடியிலிருந்து நழுவி,
தன் வாளால், உலகங்களை விழுங்கும் உக்கிரத்தோடு இருந்த தங்களைத் தாக்க முயன்றான். ஆச்சர்யம்!

————

ப்₄ராம்யந்தம் தி₃தி ஜாத₄மம் புநரபி ப்ரோத்₃க்₃ருஹ்ய தோ₃ர்ப்₄யாம் ஜவாத்
த்₃வாரே(அ)தோ₂ருயுகே₃ நிபாத்ய நக₂ராந் வ்யுத்கா₂ய வக்ஷோபு₄வி |
நிர்பி₄ந்த₃ந்நதி₄க₃ர்ப₄நிர்ப₄ரக₃லத்₃ரக்தாம்பு₃  ப₃த்₃தோ₄த்ஸவம்
பாயம் பாயமுதை₃ரயோ ப₃ஹு ஜக₃த் ஸம்ஹாரி ஸிம்ஹாரவாந் || 6||

மறுபடியும் கரங்களால் அவனைப் பிடித்து, வாசற்படியில், உம்முடைய தொடைகளில் படுக்க வைத்து,
கூரிய நகங்களால் அவன் மார்பைக் கிழித்தீர்கள். பெருகிய ரத்தத்தைக் குடித்து சிம்ம நாதம் செய்தீர்கள்.

கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -பக்த அபசாரம் பொறுக்காதவன்
ஆழ் துயர் செய்து அசுரரை அழித்தவன் -ஹிம்சை -ஸிம்ஹம் -இவர் போல் வடிவு என்பதால் காட்டு ராஜாவுக்கும் ஸிம்ஹம்
அனுக்ரஹம் செய்தார் -வெந்நரகம் போகாமல் இங்கேயே அனுபவிக்கப்பண்ணியதால்

————

த்யக்த்வா தம் ஹதமாஶு ரக்தலஹரீஸிக்தோந்நமத்₃வர்ஷ்மணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தை₃த்ய படலீம் சாகா₂த்₃யமாநே த்வயி |
ப்₄ராம்யத்₃பூ₄மி விகம்பிதாம்பு₃தி₄குலம் வ்யாலோலஶைலோத்கரம்
ப்ரோத்ஸர்பத்க₂சரம் சராசரமஹோ து₃:ஸ்தா₂மவஸ்தா₂ம் த₃தௌ₄ || 7||

கொன்ற அவனை விட்டுவிட்டு, எழுந்து நடந்து மற்ற அசுரர்களை விழுங்கத் தொடங்கினீர்கள்.
அப்போது, அனைத்து உலகங்களும் சுழன்றன. சமுத்திரங்கள் கலங்கின. மலைகள் அசைந்தன.
நட்சத்திரங்கள் சிதறின. அனைத்தும் நிலை குலைந்து விட்டது!

—————

தாவந்மாம்ஸவபாகராலவபுஷம் கோ₄ராந்த்ரமாலாத₄ரம்
த்வாம் மத்₄யே ஸப₄மித்₃த₄கோபமுஷிதம் து₃ர்வார கு₃ர்வாரவம் |
அப்₄யேதும் ந ஶஶாக கோபி பு₄வநே தூ₃ரே ஸ்தி₂தா பீ₄ரவ:
ஸர்வே ஶர்வ விரிஞ்ச வாஸவ முகா₂: ப்ரத்யேகமஸ்தோஷத || 8||

ஹிரண்யகசிபுவின் மாமிசத்தையும், குடலையும் மாலையாய் அணிந்து கொண்டு, இடி முழக்கம் போல்
கர்ஜித்துக் கொண்டு இருந்த தங்களை நெருங்க அனைவரும் அஞ்சினர்.
சிவன், பிரம்மன், இந்திரன் முதலியோர் வெகு தூரத்தில் இருந்து தங்களைத் துதித்தனர்.

ஸிம்ஹாஸனம் இருந்து -ஹிரண்யன் இருந்த negative vibration மாற்றி -இவன் அமர்ந்ததாலேயே அதுக்கு இந்த பெயர்

———–

பூ₄யோ(அ)ப்யக்ஷதரோஷதா₄ம்நி ப₄வதி ப்₃ரஹ்மாஜ்ஞயா பா₃லகே
ப்ரஹ்லாதே₃ பத₃யோர் நமத்யபப₄யே காருண்ய பா₄ராகுல: |
ஶாந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்₄நி ஸமதா₄: ஸ்தோத்ரைரதோ₂த்₃கா₃யத-
ஸ்தஸ்யாகாமதி₄யோ(அ)பி தேநித₂ வரம் லோகாய சாநுக்₃ரஹம் || 9||

அப்போதும் தங்களுடைய கோபம் அடங்க வில்லை. பிரம்மன், குழந்தையான பிரஹ்லாதனிடம் தங்களை
வணங்கும்படி கூறினார். பயமற்ற பிரஹ்லாதனும் தங்களை நெருங்கி நமஸ்கரித்தான்.
தாங்களும் சீற்றம் தணிந்து பிரஹ்லாதனுடைய தலை மேல் கையை வைத்து ஆசீர்வதித்தீர்கள்.
அவனும் தங்களை ஸ்தோத்திரங்களால் துதிக்க, அவனுக்கு அவன் விரும்

பக்தி நிலைத்து இருக்கவே அனுக்ரஹம் -இருக்கும் விஷயம் கேட்க்க கூடாதே -தந்தையை மன்னித்து விடு -முன்பே செய்தேனே
வரம் கெடுக்காமல் இருக்கும் நிலையை அருளு

———

ஏவம் நாடித ரௌத்₃ர சேஷ்டித விபோ₄ ஶ்ரீதாபநீயாபி₄த₄-
ஶ்ருத்யந்தஸ்ஃபுடகீ₃தஸர்வமஹிமந்நத்யந்தஶுத்₃தா₄க்ருதே |
தத்தாத்₃ருங்நிகி₂லோத்தரம் புநரஹோ கஸ்த்வாம் பரோ லங்க₄யேத்
ப்ரஹ்லாத₃ப்ரிய ஹே மருத் புரபதே ஸர்வாமயாத் பாஹி மாம் || 10||

இவ்வாறு ஒரு பயங்கரமான லீலையை நடித்தீர்கள். ஸ்ரீ நரசிம்மதாபனீயம் என்ற உபநிஷத்தில் பாடப்பட்டவரும்,
எல்லா மகிமைகளை உடையவரும், பரிசுத்தமான ரூபத்தை உடையவரும், பிரஹ்லாதனிடத்தில் பிரியம் வைத்தவருமான
குருவாயூரப்பா! எல்லா ரோகங்களில் இருந்தும் என்னைக் காக்க வேண்டும்.
“பிரஹ்லாத ப்ரிய” என்று பட்டத்ரி அழைத்ததும், பகவான் தலையை அசைக்காது இருந்தார்.
பட்டத்ரி வருந்தினார். அப்போது, “ நான் பிரஹ்லாதனிடத்தில் மட்டுமல்ல, பக்தர்கள் அனைவரிடமும் அன்பு வைத்தவன்”
என்று அசரீரி கேட்டது என்று பெரியோர்கள் சொல்வார்கள்

அங்கண் ஞாலமஞ்ச வங்கோ ராளரியாய் * அவுணன்
பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் *
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங்கணாளி யிட்டறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

———————–——————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்ம பெருமாள் ஸ்துதி–ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை–

January 21, 2023

ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி ஸ்லோகம்

ஜிதந்தே_மஹா ஸ்தம்ப_ஸம்பூத_விஷ்ணோ!
ஜிதந்தே_ஜகத் ரக்ஷணார்தாவார
ஜிதந்தே_ ஹரே_பாடலாத்ரௌ_நிவாஸின்
ஜிதந்தே_ ந்ருஸிம்ஹ_ப்ரஸீத_ப்ரஸீத
நமஸ்தே_ஜகந்நாத_விஷ்ணோ_முராரே
நமஸ்தே_ந்ருஸிம்ம_அச்யுதாநந்த_தேவ
நமஸ்தே_க்ருபாலோ_சக்ரபாணே
நமஸ்தம்ப_ஸம்பூத_திவ்யாவதார
பரப்ரஹ்மரூபம்_ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரௌல_சக்ரம்ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம்_த்ரிநேத்ரம்_ஹரிம்பாடலாத்ரௌ
சான்மேக_காத்ரம்_ந்ருஸிம்ஹம்_பஜாம்
கிரி ஜந்ருஹரிமீசம்_கர்விதாராதிவஜ்ரம்
பரம புருஷமாத்யம்_பாடலாத்ரௌ_ப்ரஸன்னம்
அபய_வரத_ஹஸ்தம்_சங்க சக்ரே ததாநம்சரண_மிஹபஜாம்_சாச்வதம்
நாரஸிம்ஹம்_ஸ்ரீந்ருஸிம்ஹ_மஹா ஸிம்ஹ_திவ்யசிம்ஹ!
கிரிஸம்பவ_தேவேச_ரக்ஷமாம்_சரணா கதம்

ஸ்ரீ_நரசிம்மர்_காயத்ரி
ஓம்_வஜ்ர_நகாய_வித்மஹே !!!
தீக்ஷ்ண_தம்ஷ்ட்ராய_தீமஹி !!!
தந்நோ_நரசிம்ஹப்_ப்ரசோதயாத் !!!

ஸ்ரீபாடலாத்ரி_நரசிம்மர்_திருவடிகளே__சரணம்
————–

லஷ்மி நரஸிம்ஹ சரணம் ப்ராத்யே🌹
🌹ஸ்ரீ நரசிம்ம அஷர மாலை 🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🔥ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ
அனாத ரக்ஷக நரசிம்ஹ
ஆபத் பாந்தவ நரசிம்ஹ.🌹
🔥இஷ்டார்த்த ப்ரத நரசிம்ஹ
ஈஷ்பரேஷ நரசிம்ஹ
உக்ர ஸ்வரூப நரசிம்ஹ
ஊர்த்வா பாஹூ நரசிம்ஹ.🌹
🔥எல்லா ரூப நரசிம்ஹ
ஐஸ்வர்ய ப்ரத நரசிம்ஹ
ஓங்கார ரூப நரசிம்ஹ
ஔஷத நாம நரசிம்ஹ.🌹
🔥அம்பர வாஸ நரசிம்ஹ
காம ஜனக நரசிம்ஹ
கிரீட தாரி நரசிம்ஹ
ககபதி வாஸன நரசிம்ஹ.🌹
🔥கதா தரனே நரசிம்ஹ
கர்ப்ப நிர்ப்பேதந நரசிம்ஹ
கிரிதர வாஸ நரசிம்ஹ
கௌதம பூஜித நரசிம்ஹ.🌹
🔥கடிகாசல ஸ்ரீ நரசிம்ஹ
சதுர் புஜனே நரசிம்ஹ
சதுரா யுத்தர நரசிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப நரசிம்ஹ.🌹
🔥தந்தே தாயியு நரசிம்ஹ
த்ரிநேத்ர தாரி நரசிம்ஹ
தநுஜா மர்த்தன நரசிம்ஹ
தீனநாத நரசிம்ஹ.🌹
🔥துக்க நிவாரக நரசிம்ஹ
தேவாதி தேவ நரசிம்ஹ
ஜ்ஞான ப்ரதனே நரசிம்ஹ
நர கிரி ரூப நரசிம்ஹ.🌹
🔥நர நாராயண நரசிம்ஹ
நித்யானந்த நரசிம்ஹ
நரம்றாக ரூப நரசிம்ஹ
நாம கிரீஷ நரசிம்ஹ.🌹
🔥பங்கஜானன நரசிம்ஹ
பாண்டுரங்க நரசிம்ஹ
ப்ரஹ்லாத வரத நரசிம்ஹ
பிநாக தாரி நரசிம்ஹ.🌹
🔥புராண புருஷ நரசிம்ஹ
பவ பய ஹரண நரசிம்ஹ
பக்த ஜன ப்ரிய நரசிம்ஹ
பக்தோத்தார நரசிம்ஹ.🌹
🔥பக்தானுக்ரஹ நரசிம்ஹ
பக்த ரக்ஷக நரசிம்ஹ
முநி ஜன ஸேவித நரசிம்ஹ
ம்ருக ரூப தாரி நரசிம்ஹ.🌹
🔥யக்ஞ புருஷ நரசிம்ஹ
ரங்கநாத நரசிம்ஹ
லக்ஷ்மீ ரமணா நரசிம்ஹ
வங்கி புரிஷ நரசிம்ஹ.🌹
🔥சாந்த மூர்த்தி நரசிம்ஹ
ஷட்வர்க தாரி நரசிம்ஹ
சர்வ மங்கள நரசிம்ஹ
சித்தி புருஷ நரசிம்ஹ.🌹
🔥சங்கடஹர நரசிம்ஹ
சாளிக்ராம நரசிம்ஹ
ஹரி நாராயண நரசிம்ஹ
க்ஷேம காரி நரசிம்ஹ.🌹
🔥ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜெய சுப மங்கள நரசிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ நரசிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ நரசிம்ஹ..🌹🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
🌹ஸ்ரீ லஷ்மி நரசிம்மயே நமஹ 🌹
————

ஸ்ரீஅனுமன் ஸ்துதி

வீதாகில விஷயேச்சசம் ஜாதானந்தா
ஸ்ரூபுல கமத்யச்சம் ஸீதா பதித தூதாத்யம்
வாதாத் மஜ மத்ய பாவயே ஹ்ருதயம்
அனைத்து விஷயங்களும் அறிந்தவரே பக்தனின் ஆனந்த கண்ணீர் கண்டு உணர்ச்சி வசப்படுபவரே தூய மனம் படைத்தவரே ராமதூதர்களில் முதல்வரே தியானிக்கத் தக்கவரே வாயுகுமாரரே ஆஞ்சநேயரே உம்மை மனதில் இருததி தியானிக்கிறேன்.
—————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம்–ஸ்ரீ தில்லை விளாகம் ராமர்–ஸ்ரீ சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்–ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர் —

January 15, 2023

ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமன்த்ரஸ்ய
பு³த⁴கௌஶிக ருஷி:
ஶ்ரீ ஸீதாராம சன்த்³ரோதே³வதா
அனுஷ்டுப் ச²ன்த:³
ஸீதா ஶக்தி:
ஶ்ரீமத்³ ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசன்த்³ர ப்ரீத்யர்தே² ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோக:³ ॥

த்⁴யானம்
த்⁴யாயேதா³ஜானுபா³ஹும் த்⁴ருதஶர த⁴னுஷம் ப³த்³த⁴ பத்³மாஸனஸ்த²ம்
பீதம் வாஸோவஸானம் நவகமல த³ல்த³ஸ்பர்தி² நேத்ரம் ப்ரஸன்னம் ।
வாமாங்காரூட⁴ ஸீதாமுக² கமலமிலல்லோசனம் நீரதா³ப⁴ம்
நானாலங்கார தீ³ப்தம் த³த⁴தமுரு ஜடாமண்ட³லம் ராமசன்த்³ரம் ॥

(மஞ்சள் ஆடை உடுத்தி வில்லும் அம்பும் தாங்கி பத்மாசனத்தில் கருணை பொங்கும் கடாக்ஷங்களுடன்
அடர்ந்து படர்ந்த விரிந்த கூந்தலுடன் ஆஜானுபாஹுவாய் வீற்று இருந்து அருளும் பெருமாளையும்
இடது பக்கத்தில் மேகவண்ண திவ்ய மங்கள விகிரகத்துடன் தெய்விக அணிகலன் பூஷிதமாய்
தாமரை திருமுகத்துடன் இருந்து அருளும்
பிராட்டியையும் நமஸ்கரிக்கிறேன்)

ஸ்தோத்ரம்
சரிதம் ரகு⁴னாத²ஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம் ।
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாஶனம் ॥ 1 ॥

(பெருமாள் சரித்திரத்தையும் அழகையும் விவரிக்க நூறு கோடி வார்த்தைகளாலும் இயலாது
விஸ்தாரமாக ஸத்ய லோகத்தில் ஸ்ரீ ராமாயணம் உண்டே
இங்கு அவற்றுள் ஒரு பதம் -ஒரு எழுத்தே அனைத்து சம்சார பாபங்களையும் ஒழிக்கும் அன்றோ)

த்⁴யாத்வா நீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம் ।
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டி³தம் ॥ 2 ॥

ஸாஸிதூண த⁴னுர்பா³ண பாணிம் நக்தம் சரான்தகம் ।
ஸ்வலீலயா ஜக³த்த்ராது மாவிர்பூ⁴தமஜம் விபு⁴ம் ॥ 3 ॥

ராமரக்ஷாம் படே²த்ப்ராஜ்ஞ: பாபக்⁴னீம் ஸர்வகாமதா³ம் ।
ஶிரோ மே ராக⁴வ: பாது பா²லம் (பா⁴லம்) த³ஶரதா²த்மஜ: ॥ 4 ॥

(நீலோத் பலம் -நீல நிற அல்லிப்பூ நிறத்தவன்-புண்டரீகாக்ஷன் -திரு அபிஷேகம் சாத்தி அருளி –
திருக்கரங்களில் கத்தி வில் அம்பு ஏந்தி அருளி துஷ்ட நிரசனத்துக்காக திரு அவதாரம் செய்து அருளி
லோக ரக்ஷணம் செய்து அருளும் கருணா மூர்த்தியான பெருமாளையும் சீதாப்பிராட்டியார் இலக்குமணன் உடன் இருக்கும் சேர்த்தியை
த்யானம் செய்து இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் பாராயணம் செய்து
ஸர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி சித்திகளைப் பெறுவோம்
பெருமாள் -சக்ரவர்த்தி திருமகன் -தலையையும் நெற்றியையும் காக்கட்டும்)

கௌஸல்யேயோ த்³ருஶௌபாது விஶ்வாமித்ரப்ரிய: ஶ்ருதீ ।
க்⁴ராணம் பாது மக²த்ராதா முக²ம் ஸௌமித்ரிவத்ஸல: ॥ 5 ॥

(கௌசல்யை குமரன் கண்களைக் காக்கட்டும் –
விச்வாமித்ர ரிஷி பிரியமான சிஷ்யன் காதுகளைக் காக்கட்டும்
யஜ்ஜ்ங்களை ரக்ஷிக்கும் பெருமாள் மூக்கினைக் காக்கட்டும்
சுமித்ரா தேவி குமாரனை நேசிக்கும் பெருமாள் முகத்தைக் காக்கட்டும்)

ஜிஹ்வாம் வித்³யானிதி⁴: பாது கண்ட²ம் ப⁴ரதவன்தி³த: ।
ஸ்கன்தௌ⁴ தி³வ்யாயுத:⁴ பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஶகார்முக: ॥ 6 ॥

(அறிவின் புதையல் என் நாக்கினையும்
பரதாழ்வானால் ஆஸ்ரயிக்கப்படும் பெருமாள் தொண்டையினையும்
தெய்வீக திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவர் தோள்களையும்
சிவ தனுஸ்ஸை உடைத்தவர் கரங்களையும் காக்கட்டும்)

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருத³யம் ஜாமத³க்³ன்யஜித் ।
மத்⁴யம் பாது க²ரத்⁴வம்ஸீ நாபி⁴ம் ஜாம்ப³வதா³ஶ்ரய: ॥ 7 ॥

(சீதா தேவியின் பதி என் கைகளையும்
பரசுராமரை வெற்றி கொண்டவர் என் ஹ்ருதயத்தையும்
கரணை நிரசித்தவர் என் மத்ய பாகத்தையும்
ஜாம்பவானுக்குப் புகலிடம் அளித்த பெருமாள் என் தொப்புள் கொடியையும் காக்கட்டும்)

ஸுக்³ரீவேஶ: கடிம் பாது ஸக்தி²னீ ஹனுமத்-ப்ரபு⁴: ।
ஊரூ ரகூ⁴த்தம: பாது ரக்ஷ:குல வினாஶக்ருத் ॥ 8 ॥

(சுக்ரீவனின் தலைவன் என் இடுப்பையும்
திருவடி ஹ்ருதய வாஸம் செய்து அருளும் பெருமாள் என் சக்தினியையும் -அதாவது -வலது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும்
ரகு வம்ச சிறந்த அரசர் இடது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும் காக்கட்டும்)

ஜானுனீ ஸேதுக்ருத்-பாது ஜங்கே⁴ த³ஶமுகா²ன்தக: ।
பாதௌ³ விபீ⁴ஷணஶ்ரீத:³ பாது ராமோகி²லம் வபு: ॥ 9 ॥

(சேது காட்டியவர் என் முழங்கால்களையும்
ராவணனை அழித்தவர் தொடைகளையும்
செல்வ விபீஷணனுக்கு அனைத்தையும் அளித்தவர் என் பாதங்களையும் மற்றும் உடம்பையும் காக்கட்டும்)

ஏதாம் ராமப³லோபேதாம் ரக்ஷாம் ய: ஸுக்ருதீ படே²த் ।
ஸ சிராயு: ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத் ॥ 10 ॥

(சாத்விகர்கள் இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரத்தை நித்தியமாக பாராயணம் செய்வர்-சாத்விக கொண்ட பெண்டிர் மக்களுடன்
அவர்கள் விநயத்துடன் இங்கும் லீலா விபூதியை ஆண்டும் அங்குச் சென்றும் நித்ய கைங்கர்யசெல்வம் பெறுவர் )

பாதால்த-³பூ⁴தல-வ்யோம-சாரிண-ஶ்சத்³ம-சாரிண: ।
ந த்³ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபி⁴: ॥ 11 ॥

(இத்தைப் பாராயணம் செய்பவர் மூ உலக அதிபதியான இந்திரனும் நிமிர்ந்து பார்க்க முடியாது
புண்ணிய சக்தி வாய்ந்த மந்த்ரம் இது)

ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசன்த்³ரேதி வா ஸ்மரன் ।
நரோ ந லிப்யதே பாபைர்பு⁴க்திம் முக்திம் ச வின்த³தி ॥ 12 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை பாப்பம் தீண்டாது
இங்கும் மகிழ்வுடன் வாழ்ந்து அங்கும் பரம புருஷார்த்த கைங்கர்யம் பெறுவர்)

ஜகஜ³்ஜைத்ரைக மன்த்ரேண ராமனாம்னாபி⁴ ரக்ஷிதம் ।
ய: கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²: ஸர்வஸித்³த⁴ய: ॥ 13 ॥

(இத்தை மனப்பாடமாக வைத்து பாராயணம் செய்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைவார்கள்
ஸமஸ்த அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக ஸமஸ்த இஷ்ட பிராப்தியும் பெறுவர்)

வஜ்ரபஞ்ஜர நாமேத³ம் யோ ராமகவசம் ஸ்மரேத் ।
அவ்யாஹதாஜ்ஞ: ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³ல்த³ம் ॥ 14 ॥

(இந்திர வஜ்ராயுதத்துக்கும் மேலான இந்த வஜ்ரா ராம கவசம் அனைத்து அபீஷ்டங்களையும் அருளும்
ஸகல வித புண்யமும் ஐயமும் அடைவிக்கும்(

ஆதி³ஷ்டவான்-யதா² ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர: ।
ததா² லிகி²தவான்-ப்ராத: ப்ரபு³த்³தௌ⁴ பு³த⁴கௌஶிக: ॥ 15 ॥

(பவித்ரமான இந்த கவசம் சிவபெருமானால் புத கௌசிக முனிவருக்கு கனவில் உபதேசிக்கப்பட்டு
உரைத்த படியே அவரால் ஈடுபடுத்தப்பட்ட ஸ்லோகம்)

ஆராம: கல்பவ்ருக்ஷாணாம் விராம: ஸகலாபதா³ம் ।
அபி⁴ராம-ஸ்த்ரிலோகானாம் ராம: ஶ்ரீமான் ஸ ந: ப்ரபு⁴: ॥ 16 ॥

(நம்மையும் பொருளாக்கி தன்னையே தந்து அருளும் கற்பகம் ராமபிரான்
ஈடில்லா அழகன் -ஒப்பில்லா அப்பன் -ஸர்வ சேஷீ)

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாப³லௌ ।
புண்ட³ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜினாம்ப³ரௌ ॥ 17 ॥

ப²லமூலாஶினௌ தா³ன்தௌ தாபஸௌ ப்³ரஹ்மசாரிணௌ ।
புத்ரௌ த³ஶரத²ஸ்யைதௌ ப்⁴ராதரௌ ராமலக்ஷ்மணௌ ॥ 18 ॥

ஶரண்யௌ ஸர்வஸத்த்வானாம் ஶ்ரேஷ்டௌ² ஸர்வத⁴னுஷ்மதாம் ।
ரக்ஷ:குல நிஹன்தாரௌ த்ராயேதாம் நோ ரகூ⁴த்தமௌ ॥ 19 ॥

(பெருமாள் அலகுக்குத் தோற்று சூர்ப்பணகை ஸ்தோத்ரம் -)

(வாலிப பருவம் -அழகியான் தானே -புண்டரீகாக்ஷன் -மான் தோல் மரவுரி தரித்தவர்
காய்கனி புஜிப்பவர் -ப்ரஹ்மசாரியம் அனுஷ்டிப்பவர் -அனைவருக்கும் ஒரே புகலிடம்
அசுரர் குலங்களை வெட்டிக்களைந்தவர்
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -இவர்கள் நம்மை ரக்ஷிக்கட்டும்)

ஆத்த ஸஜ்ய த⁴னுஷா விஷுஸ்ப்ருஶா வக்ஷயாஶுக³ நிஷங்க³ ஸங்கி³னௌ ।
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்³ரத: பதி² ஸதை³வ க³ச்ச²தாம் ॥ 2௦ ॥

(அமோக வில் -அம்புறாத் துணியில் எடுக்க எடுக்க குறைவற்ற பாணங்களால் நிரம்பியே இருக்கும்
இருவரும் நம் முன்னால் இருந்து ரக்ஷித்து அருளட்டும்(

ஸன்னத்³த:⁴ கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா ।
க³ச்ச²ன் மனோரதா²ன்னஶ்ச (மனோரதோ²ஸ்மாகம்) ராம: பாது ஸ லக்ஷ்மண: ॥ 21 ॥

ராமோ தா³ஶரதி² ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ ப³லீ ।
காகுத்ஸ: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூ⁴த்தம: ॥ 22 ॥

9எப்போதும் தயார் நிலையில் இருந்து -கவசம் அணிந்து திருக்கைகளிலே கத்தி வில் அம்பு ஏந்தி
நமக்கு முன்னால் இருந்து அனைத்து அபீஷ்டங்களையும் அளித்து ரக்ஷிக்கட்டும்)

வேதா³ன்தவேத்³யோ யஜ்ஞேஶ: புராண புருஷோத்தம: ।
ஜானகீவல்லப:⁴ ஶ்ரீமானப்ரமேய பராக்ரம: ॥ 23 ॥

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்³ப⁴க்த: ஶ்ரத்³த⁴யான்வித: ।
அஶ்வமேதா⁴தி⁴கம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்ஶய: ॥ 24 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் அஸ்வமேத யாகத்தை விட பன்மடங்கு ஸ்ரேஷ்டம்-இதில் எவ்வித சங்கையும் வேண்டாம் )

ராமம் தூ³ர்வாத³ல்த³ ஶ்யாமம் பத்³மாக்ஷம் பீதவாஸஸம் ।
ஸ்துவன்தி நாபி⁴-ர்தி³வ்யை-ர்னதே ஸம்ஸாரிணோ நரா: ॥ 25 ॥

(இவ்வுலக பந்த விடுதலையும் அடைவிக்கும்(

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுன்த³ரம்
காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம் ।
ராஜேன்த்³ரம் ஸத்யஸன்த⁴ம் த³ஶரத²தனயம் ஶ்யாமலம் ஶான்தமூர்திம்
வன்தே³ லோகாபி⁴ராமம் ரகு⁴குல திலகம் ராக⁴வம் ராவணாரிம் ॥ 26 ॥

ராமாய ராமப⁴த்³ராய ராமசன்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம: ॥ 27 ॥

ஶ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஶ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம ।
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் ப⁴வ ராம ராம ॥ 28 ॥

ஶ்ரீராம சன்த்³ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ வசஸா க்³ருஹ்ணாமி ।
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶிரஸா நமாமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 29 ॥

மாதா ராமோ மத்-பிதா ராமசன்த்³ர:
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா² ராமசன்த்³ர: ।
ஸர்வஸ்வம் மே ராமசன்த்³ரோ த³யால்து³:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே ॥ 3௦ ॥

த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச (து) ஜனகாத்மஜா ।
புரதோ மாருதிர்யஸ்ய தம் வன்தே³ ரகு⁴னந்த³னம் ॥ 31 ॥

லோகாபி⁴ராமம் ரணரங்க³தீ⁴ரம்
ராஜீவனேத்ரம் ரகு⁴வம்ஶனாத²ம் ।
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசன்த்³ரம் ஶரண்யம் ப்ரபத்³யே ॥ 32 ॥

மனோஜவம் மாருத துல்ய வேக³ம்
ஜிதேன்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்டம் ।
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம்
ஶ்ரீராமதூ³தம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 33 ॥

கூஜன்தம் ராமராமேதி மது⁴ரம் மது⁴ராக்ஷரம் ।
ஆருஹ்யகவிதா ஶாகா²ம் வன்தே³ வால்மீகி கோகிலம் ॥ 34 ॥

ஆபதா³மபஹர்தாரம் தா³தாரம் ஸர்வஸம்பதா³ம் ।
லோகாபி⁴ராமம் ஶ்ரீராமம் பூ⁴யோபூ⁴யோ நமாம்யஹம் ॥ 35 ॥

ப⁴ர்ஜனம் ப⁴வபீ³ஜானாமர்ஜனம் ஸுக²ஸம்பதா³ம் ।
தர்ஜனம் யமதூ³தானாம் ராம ராமேதி க³ர்ஜனம் ॥ 36 ॥

ராமோ ராஜமணி: ஸதா³ விஜயதே ராமம் ரமேஶம் பஜ⁴ே
ராமேணாபி⁴ஹதா நிஶாசரசமூ ராமாய தஸ்மை நம: ।
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴ர ॥ 37 ॥

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ।
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம நாம வரானநே ॥ 38 ॥

இதி ஶ்ரீபு³த⁴கௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

———-

ஶ்ரீராம ஜயராம ஜயஜயராம ।

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் – மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு “ஆதி தில்லை” என்றும் பெயருண்டு.

“ராம சரம்” என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் “தில்லை சித்ரகூடம்” என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

“எம்பார்” கோவிந்த தாசர், இராமனுஜருடைய “திருவடி நிழல்”(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். “சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை”, “மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை”ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று

சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்

இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது.

மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.
விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான்.ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார்.
அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.

வராஹ நரசிம்மரின் கட்டளைப்படி இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

மற்ற நாட்களில் சந்தனகாப்பிட்ட தரிசனம் தான்.

சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள்.

எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம்மலையை அடைந்தார்.

விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.

பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.

பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள்.

வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை.

ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.

சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

————-
ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர்
மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி.
இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று.
ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது.
மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன.
ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில்.
இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.
மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும்.
இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.
இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான்.
அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான்.
அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான்.
அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர்.
அவனும் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான்.
அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான்.
ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான்.
திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.
மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு,
ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு,
மங்களகிரியில் பானகம் அருந்தி,
திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு,
ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.
திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம்.
சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு.
அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்
மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது
தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி
அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை
ஸப்த  குல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில்
நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது.
ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன.
வேத புராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.
இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட
பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று
பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான்.
அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி,
மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.
மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற,
அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.
இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற,
அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.
கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில்
சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது,
அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின.
இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன்,
எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.
இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட,
திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார்.
அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு
குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக,
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது.
இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க,
பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க,
நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு,
அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார்.
அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.
அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர்
திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும்,
நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம்.
மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும்,
தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர்.
சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.
ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார்.
புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய,
அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.
வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில்
மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.
வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள்.
இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும்,
ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது.
இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம்.
இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர்,
சங்கு – சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய்
அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.
இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.
ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும்.
இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.
அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும்.
அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும்.
சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும்.
இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல.
தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ
அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில்
அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர்.
பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற,
இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது.
பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது. தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர்.
பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.
அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது.
தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம்.
மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு,
இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம்
வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க,
மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால்,
ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர்
நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார்.
ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது.
ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று
ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில்
இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார்.
இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார்.
இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது.
இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது
கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.
இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.
குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது
தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான்.
அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து,
மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை.
மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.
ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு
குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால்,
நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.
உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு,
இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன்,
நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில்
பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை.
பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.
கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில்,
ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.
லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார்.
தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன.
இக் கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது.
முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த
இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.
லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில்
பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும்,
கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள்.
இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது.
தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார்.
மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.
இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர்.
இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.
கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும்,
பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர்.
போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர்
கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.
மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும்,
மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம்,
நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும்,
பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது.
இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத சக்ரவர்த்தி திருமகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பானக லஷ்மீ நரஸிம்ஹர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸிம்ஹாஸல லஷ்மீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.