Archive for June, 2024

ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

June 27, 2024

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

கோதை -மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

———–

குரு வாயூர் புரி வாஸா குரு க்ஷேத்ர சாரதே
குரு சித்த ஹ்ருதா வாஸா குரு கிஞ்சித் கிருபா மயி
-1-

ஆச்சார்யர் திரு உள்ளம் விரும்பி -அனைத்தையும் செய்து அருள்கிறான் அன்றோ -இதுவே சரம பரம புருஷார்த்தம் அவனுக்கு
கருணா சாகரம் -அருள் மா கடல்-அடியேனுக்கு லவ லேச கிருபையை அளித்து அருள்வாய் என்கிறார்-

———-

குருர் யூத குண குரு வாயூர் ஆஞ்சநேய குரு குண வாயு போஜன வா
குரு மண்டலம் குண கதனம் ந அலம் குரு தவ அதி கதா அஹம்
–2-

உன்னை அடியேனால் ஸ்துதிக்க முடியுமோ –
வாசஸ் பதியாலும் -திருவடியாலும் -சொல்லின் செல்வனாலும்
2000 நாக்குகள் கொண்ட ஆதி சேஷனாலும் –
வாக்கு வன்மை ஸாமர்த்யம் அளவு இருந்தாலும் முடியாதே
உனது அருளை வாங்கிக் கொண்டு உன்னையே ஸ்துதிப்பேன்
நீயே பாடிக்கொள்ள வேண்டும்
சின் முத்ரை -கட்டை விரல் பரமாத்மா இறங்கி வந்து தொடலாமே

———–

குரு ததா கதி பத்தந நாயகம் குரு ததா கதி
மறு புகீவ பவே பகவான் ஆவி குரு ஸூகவே ஸதாம்
–3-

பாலை வனத்தில் கிடைத்த அமுதம் அன்றோ நீ
பிரம்மன் தபஸ் -தொடங்கி உத்தவர் குருவும் வாயுவும் -பல பக்தர்கள் தபஸ் செய்து பெற்ற அமுதம்
கண்களால் பேருக்கு உள்ளத்துக்குள் க்ஷேமமாக வைக்க வேண்டிய அமுதம்

———

வாசஸ்பதி சந் ஸததம் க்ருஹஸ்த ஸதாம் கதி குரு
வாசஸ்பதி சா அபி ஸூவ பக்தனாக்ய கதம் ஆகநோதி
–4-

பேசவும் உழைக்கும் ஆற்றலையும் அளிப்பவன் -சொல் வீரனாகவும் -செயல் வீரனாக்கி அருள்பவன்
வாசஸ்பதி-பேச்சாற்றல் உள்ள ப்ருஹஸ்பதி
ஸதாகதி-வாயு

————-

தாப ஜால பாப ஜால சாப ஜால பீடித -ஜீவ ராஸி அத்ர நாம
ஜீவ வாயு பத்த நேந்த்ர பாத ஸேவனம் விநா தஸ்ய வித்யதே கதிம்
–5-

சாமரம் சந்தஸ் பாடி குருவாயூரப்பனுக்கு சாமரம் வீசுவதை அனுபவிக்கிறார்
தாபத்த்ரயங்கள் -பாபக் கூட்டங்கள் –சாபங்களால் பீடிக்கப்பட்டு
குருவாயு ஜீவ வாயு -oxyjen
அஹல்யை சாபம் மஹாபலி அர்ஜுனன் மரம் மதுகைடபர் ருத்ரன் தேவர்களின் துர்வாச சாபம் போக்கி அருளியவன்

——-

குருவத் மாம் பாபினம் குருவத் நிரய குரு அக்னி மித்ர புர நாதன் விநா பவந்தம் ந ஆலம்பனம் சரணம் அபி —6-

ஒரே புகலிடம் –குரு அக்னி மித்ரன் வாயு –
குரு பூஜை -அக்னி பூஜை-அக்னி ஹோத்ரம் -மித்ர ஸூர்ய பூஜை -சந்தியாவந்தனம் -ஸூர்ய மண்டல மத்யவர்த்தி வந்தனம்
மூன்றுமே செய்யாமல்

——

ஜீவ சமீரந நகர வராந்தக ஜீவனம் ஏகம் ஜகதாம்
ஜீவ ததேக குரு க்ஷேத்ர ஜீவனம் அத்ர பரத்ர சே அபி ஸ்யாத்
-7-

உள்ளூத்துக்கு உள்ளே வைக்க இம்மை மறுமை பலன் பெறுவோம்

———–

சேஷாசலே ஸர்வேஷாம் சகலம்–8-

திருமலை அப்பனே குருவாயூரப்பன்
ஆதி சேஷன் வாயு -பல பரீஷை -மேரு மலை -பிடித்து பறக்க வைக்க
மேல் பகுதி பறக்க -அதுவே ஏழுமலை சேஷாசலம் -சேஷாத்ரி -சேஷ கிரி
மருதா -காற்றால் வந்தது
வேகமாக வீசும் வாயு குரு வாயு
நிலத்தில் இருந்து வரங்களை அளிக்க இங்கு
ப்ரஹஸ்பதி வாயு இருவர் மூலம் -இங்கு நித்ய வாஸம்

———

ஹநுமதி ப்ரீதி உபாகதம் ஸத் ஸ்வேதா பர ஸூ
இத்யாதியாத் ஸர்வான் அநுக்ரஹான் பரிபாலயன்-
-9-

திருவடிக்கு விசேஷ அனுக்ரஹம்
அவர் பெற்றோர்களுக்கு கௌரவம்
அஞ்சனா தேவி ஒரு வடிவம் அங்கு
குருவாயூர் அப்பன் இங்கு

————

விஷய சமீரந பட்டன நாயகா தாமக சோபன பாத பயோஜம் வசதி
மனஸ கதாசிக தத் குரு தத் குரு சகலம் –1
0-

திருவடிகளை நெஞ்சு தாமரையில் வைத்து இருக்க நீயே அருள வேண்டும் -இதுவே சகலத்துக்கும் போதுமே

——–

கருணாகரதா தவ கில மஹிதா
மயி அபி பாபி
கருணா கர ஸூத முக
கவிதா லீலை
–11-

இதில் தான் இயற்றிய காரணம்
ஆகாரம் சுரங்கம்
பாபிக்கும் அனுக்ரஹம் செய்தால் உலகம் அறியுமே
உன்னைப்போல் பெயர் கொண்ட மகன் சொல்ல ஸ்துதிக்கிறேன்

———-

மணி பாதுகையா மதுரம் பகவான் சன்யோஜத்வம் பாத சரோஜம்
மணி பாதுகையா மம ஹ்ருதயே மம கில அன்யே தன்யம் மம ஆத்மாஜம்
–12

மணி பாதுகையுடன் திரு உள்ளத்தில் பதிக்க பிரார்த்தனை
ஆழ்வாருடன் அவன் வந்து லீலைகளை பண்ணி அருள் என்கிறார்

மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு -பாதுகையை அணிந்து நாச்சியாரும் பிரார்த்தித்தார் அன்றோ

——–

மணி பாதுகையே மம கன்யகை மாத்திரம் சம்யோஜிய வரம்
மம குரு நந்தன ரெங்கம் மாநஸம் அம்புஜ லோசன
சீக்ரம் –13

உனது திருவடியுடன் சேர்த்து வைப்பது போல் நல்ல மாப்பிள்ளை லௌகிக வைதிக ஸ்ரேஷ்டராக -திருவடி ஸ்தானம் போல்

——–

கோதாயாம் அஸ்யா ஸஹஜா பூர்வம் தயையா ஏவம்
பிரார்த்தனை வர்ணா தேவம் வாசயதீபம்
–14-

பிரார்த்தனை -சக்தி வாய்ந்தது
லீலை செய்து காட்டுகிறாய் -என்னைக் குறித்து ஸ்துதி செய்து கொள்கிறாய்

———

உத்தவ நயனே நந்த ஸூ பாஷ்பம் ஜலயதி யஸ்தே ஸூந்தர வர்ஷமா
தன் மம நயன த்வந்த கதா ரஷ்யதி பகவன் தத் பத
–15-

உத்தவர் தரிசித்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது போல்
அடியேனுக்கு கண்ண நீர் வந்து நீ எப்பொழுது கண்டு மகிழப் போகிறாய்

———-

பிரார்த்தனையின் விளைவால்
பாகவதர் -வந்து -கூட்டிச் செல்லும் பொழுது
நோவு சாத்த
மீண்டும் திரும்பி

பகவான் பவதோ மங்கள மங்கள விக்ரஹ ஸேவா
ஆகா மத்யே மார்க்கம் தேன விருத்தம்
–16-

ஸேவிக்காமல் திரும்பி
கல்யாணம் நடந்த பின்பே ஸேவை பெற்றார் 1984-
இருந்த இடத்திலேயே பாட பேற்றைப் பெற்றார்

—–

கடயதி வாஞ்சித பக்த
தர்சனம் ஏவது
–17

கேட்டவுடன் அருளும் ஸ்வ பாவம்
நம்பிக்கை உள்ளது -பின்பு தருவாய் மஹா விசுவாசம் உள்ளது
தர்சனம் பண்ணாமலேயே பேற்றை அருளுவாய் என்று காட்டவே செய்கிறாய்

———

பிரதி க்ருஹ பகவான் நமத கிஞ்சித் வாஹம் –தத்ர விதாய –18

பக்தர் கொடுத்த படம் பார்த்து -கண்ணனுக்கு ஆனந்தம் உள்ளத்துக்கு ஆனந்தம்
தர்சிக்க முடியாத வருத்தம் நீங்குகிறது

———

நலாஸ்ய மூலம் -சரணாம் பத்ம ப்ரூஸம் கர பங்க –ஹ்ருதாயாம்புஜ–19-

பேசுகிறான் –
வலது திருக்கரம் -தண்டு திருவடியில் கவ்வி -திருக்கையில் ஏந்தி
தத்வம் உணர்த்துகிறார்
உள்ளத் தாமரை பிடித்து -கவ்விக் கொள்ளும் கள்வன் நீ –

யுக்தம் –விஷய லோலா –ஸ்வயமேவ அனுக்ரஹம் –20-

நாமாக அவனிடம் போகாமல் திரும்பி இருக்க -அனுக்ரஹத்தால் ஸ்வயமேவ -ஸ்வாமி சொத்தைக் கொள்ளுவது போல்
செய்து அருளுகிறாய்

——–

ஸ்வயம் ஹ்ருதயாம்புஜ –மஹிமா
ஆதார விதா –ஸ்பர்ச
–21-

இனி அல்ப சிந்தனை உள்ளத்தில் வராதே -திருவடியால் அமுக்கி – திருக்கையில் பிடித்து அருளி
மனதை நீ இயக்க -தூய்மை ஆனதே

——–

ஸ்ரீ நிதி –22

படிப்பாருக்கும் கேட்ப்பார்க்கும் செல்வங்கள் கிட்டும் பலன் பிரார்த்தனை கிட்டும் -குரு பெரிய பக்தியும் கிட்டும் –

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பலபட்டடைச்‌ சொக்கநாத பிள்ளை இயற்றிய ஸ்ரீ திருமாலிருஞ்‌ சோலை மலை ஸ்ரீ அழகர்‌ கிள்ளை விடு தூது–ஸ்ரீ உ. வே. சாமிநாதையர் (தொகுப்பு, குறிப்புரையுடன்)

June 25, 2024

உலா, கோவை, பிள்ளைத்தமிழ் போன்ற நூலமைப்புக்கள் தமிழுக்கே சிறப்பாக உரியன. தூதோ இந்திய மொழிகள் பலவற்றிலும் சில சில வேறுபாடான அமைப்புக்களுடன் காணப்படும். இங்ஙனம் பல மொழிப்புலவர்களும் விரும்பி நூல் செய்வதற்குரிய அமைப்பு முறை சிறந்ததாகவே இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.

வடமொழியில் தூது நூல்களை ஸந்தேசங்களென்றும் தூத காவ்யங்களென்றும் கூறுவர். அவை காப்பிய வரிசையிலே சேர்த்து எண்ணப்படுவன. காளிதாஸ் மகாகவியால் இயற்றப் பெற்ற மேக ஸந்தேசம் புலவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இனிய காப்பியமாக விளங்கி வருகின்றது. அதனைப் பின்பற்றிப் பல தூத காவியங்கள் வடமொழியில் எழுந் துள்ளன.

பிரபந்தத்திரட்டென்னும் இலக்கண நூல்,

“எகினமயில் கிள்ளை யெழிலியொடு பூவை
சகிகுயினெஞ் சந்தென்றல் வண்டு-தொகைபத்தை
வேறுவே றாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன்
பூறிவா வென்றறூ து”-என்று தூதின் இலக்கணத்தை அமைக்கின்றது.
இதன்கண் தூது விடுவதற்குரிய பொருள்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்பத்தையும் இரத்தினச் சுருக்கம் என்னும் நூலொன்று,

” இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே
தூ துரைத்து வாங்குந் தொடை”-எனக் கூறுகின்றது.

அழகர்‌ கிள்ளைவிடு தூதென்பது .ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை
யில்‌ திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும்‌ ஸ்ரீ செளந்தர
ராஜப்‌ பெருமாளைக்‌ காமுற்ற தலைவி ஒருத்தி அவர் பால்‌ ஒரு
கிளியைத்‌ தூது விடுத்ததாகப்‌ பலபட்டடைச்‌ சொக்கநாத
பிள்ளை யென்னும்‌ புலவர்‌ இயற்றியது. இது காப்பு வெண்பா
ஒன்றையும்‌, 239 கண்ணிகளையும்‌ உடையது.

3.2 திருமாலிருஞ்சோலைமலை

திருமாலிருஞ்சோலைமலை யென்பது பாண்டி நாட்டுத் திருமால் திருப்பதிகள் பதினெட்டனுள் ஒன்று. சங்ககாலத்து நூலாகிய பரிபாடலில் இதன் பெருமை சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. அந்நூலில் இளம்பெருவழுதியாரென்னும் புலவராற் பாடப்பெற்று, மருத்துவன் நல்லச்சுதனாரால் இசையமைக்கப்பெற்ற நோதிறப் பண்ணிலமைந்த பதினைந்தாம் பாடல் இத்தலப் பெருமையை விரிவாகக் கூறும் ; அப்பாடலின் பொருட் சுருக்கம் வருமாறு :

3.3 பரிபாடலிற் கண்ட செய்தி

‘அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே விளங்கி நிலத்தைத் தாங்கும் சக்கரவாளம் முதலாகத் தொல்லிசைப் புலவர்கள் ஆராய்ந்துரைத்த குன்றங்களைப் பொதுவகையால் சொல்லப் புகுந்தாற் பலவாம் ; அப்பலவற்றுள்ளும் நிலத்தில் உள்ளோரது பசித் துன்பத்தை நீக்கி, நிறைபயன்களெல்லா வற்றையும் எப்பொழுதும் அவர் பெறப் பயன்படும் குன்றுகள் சில ; அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்களையுடைய தடாகங்களும் மேகம் படியும் சிகரங்களும் உள்ள குலவரைகள் சில சிறந்தன ; அவற்றுள்ளே கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனும் பலதேவரும் எழுந்தருளியிருக்கும் சோலைமலை சிறந்தது. துழாய் மாலையை யுடைய திருமால் அருள் புரிந்தாலல்லாமல் துறக்கம் அடைதல் எளிதாகுமோ? அரிதிற் பெறும் துறக்கத்தை எளிதிற் பெறச் செய்வதனால் திருமாலிருஞ்சோலைமலையை ஏத்தக் கடவோம்.

‘பலதேவரது திருமார்பிலுள்ள வெண்கடப்ப மாலையைப் போல அருவியாக வீழ்வதனால் சிலம்பாறு அழகு பெறும். திருமாலிருஞ்சோலை யென்னும் பெயர் உலகமெல்லாம் பரவ, மகளிரும் மைந்தரும் காமத்தை விதைத்து விளைக்கும் யாமத் தியல்பையுடைய இருங்குன்றத்தில் இளவெயில் சூழ இருள் வளர்தலை யொத்துப் பீதாம்பரத்தையுடைய திருமால் பல தேவரோடு அமர்ந்து நிற்கும் நிலைமையை, மாந்தர்களே! தியானம் செய்ம்மின்; அம் மலையின் சிறப்பைக் கேண்மின் :

‘சுனைகளிலெல்லாம் நீலமலர் மலர அச்சுனையைச் சூழப் பொன்னிறமுள்ள அசோக மலர்கள் மலர்தலாலும் வேங்கை மலர்கள் மலர்தலாலும் பீதாம்பரத்தை அணிந்த மாயோனை ஒத்த நிலையினதாயிற்று அம்மலை. இருங்குன்றென்னும் பெயர் பரவி உலகத்தில் பழையதாகிய புகழையுடைய அது தன்னைக் கண்டாரது மயக்கத்தை அறுக்கும் தெய்வம் ; அதனால் சென்று திருமாலைத் தொழும் ஆற்றலை இல்லாதீர்! அம்மலையைக் கண்டேனும் பணிமின்.

‘குட்டியால் தழுவப்பட்ட மந்தி பாயவும், முல்லை மலர் கற்பு நிகழ்ச்சியைக் காட்டவும், மயில்கள் அகவவும், குருக்கத்தியின் இலை உதிரவும், அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் அவ் விருங்குன்றத்தில் குகைக்குள் முழங்குகின்ற எதிரொலி ஒழியாது.

‘நும் மனைவியரோடும் தாய் தந்தையரோடும் குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி அக்குன்றத்தைத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித் தொழுது சென்மின்.

‘தன் திருவுந்தியில் முன்பு உண்டாகிய கமலத்தை யொக்கும் கண்ணை உடையவனும், மேகம் இருள் மணி ஆகியவற்றை யொத்த திருமேனியை உடையவனும், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்க் கூட்டங்களின் பிறவித் துன் பத்தைக் களைவோனுமாகிய திருமால் அன்பு கொண்டு அக்குன் றத்தின்கண் எழுந்தருளி யிருக்கின்றான்.

‘திருமாலே! நீ பசுந் துழாய் மாலையையுடையை ; நீல மலையைப் போன்றாய்; மிக்க ஒளியினையுடையை ; ஒற்றைக் குழையையுடையை ; கருடக்கொடியை உடையை ; வளைந்த கலப்பையை உடையை ; தண்டு, சங்கு, சக்கரம், வில், அம்பு, பாராவளை, வாள் என்பவற்றை ஏந்தினை.

‘இங்ஙனம், வேதம் அவன் பெருமை ஈதென்று உரைத்தலால் யாமும் அவற்றுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்துத் திருமால் பலதேவரென்னும் இருவரையும் தொழுது அவ்விருங் குன்றத்தின் அடியில் வாழ்தல் எமக்கு உண்டாகுகவென்று வேண்டுவோமாக!’

இப்பரிபாடலால், முற்காலத்தில் இத்தலத்தே திருமாலோடு நம்பி மூத்தபிரானாகிய பலதேவரும் கோயில் கொண்டு எழுந்தருளி யிருந்தனரென்று தெரிகின்றது. அன்றியும், இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பாடப் பெற்ற இப்பரிபாடலில் உள்ள,

“இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது “-என்னும் பகுதி அதற்கு முன்பே பல காலமாக இயன்ற புகழை யுடையதென்று இத்தலத்தைப் பாராட்டுதல் அறிதற்குரியது.

சிலப்பதிகாரச் செய்தி

சிலப்பதிகாரத்தில், மதுரை நோக்கிச் செல்லும் கோவலனுக்கு ஒரந்தணன் வழியிலே காண்பனவற்றை விரித்துக் கூறுவதாக அமைந்த பகுதியில் இம்மலையைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன :

“திருமால் குன்றத்துச் செல்வீராயின், அங்கே மிக்க மயக்கத்தைக் கொடுக்கும் பிலத்துவார வழி ஒன்று உண்டு. அங்கே புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்னும் பெயரையுடைய மூன்று பொய்கைகள் உள. புண்ணிய சரவணத்தில் நீராடினால் இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமென்னும் இலக்கணத்தை உணரலாகும். பவகாரணி யென்னும் தீர்த்தத்தில் ஆடுவார் பழம்பிறப்பை உணர்வர். இட்ட சித்தியில் நீராடி நினைத்தவற்றை யெல்லாம் அடைதல் கூடும். அங்கே சிலம்பாற்றின் கரையின்கண் உள்ள கோங்க மரத்தின் நிழலிலே ஒரு தெய்வப்பெண் தோன்றி, ‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும் இவை இரண்டும் ஒழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்க் கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை? அவற்றை உரைமின்; யான் இம் மலையடிவாரத்திலே வாழ்வேன் ; வரோத்தமை யென்னும் பெயருடையேன். யான் வினாவியவற்றிற்கு ஏற்ற விடையை யார் கூறுகின்றனரோ அவருக்கு யான் ஏவல் புரிவேன். நீவிர் உரைத்தீ ராயின் உமக்கு இப்பொழுது இப்பிலவாயிற் கதவைத் திறந்து தருவேன்’ என்று சொல்வாள். அவள் வினாவியவற்றிற்கு விடை கூறின் அவள் பிலம் திறந்துவிடுவாள். மேலே செல்லின் ஆங்கொரு பெண் தெய்வம் முன்னே கூறிய மூன்று பொய்கைகளையும் காட்டுவாள். அப்பொய்கைகளிலே பஞ்சாக்ஷரத்தையும் அஷ்டாக்ஷரத்தையும் மனத்தால் நினைத்து ஜபித்து நீராடின் நற்பயனை அடைவீர்கள். அப்பொய்கையினால் உண்டாகும் பயனை விரும்பீராயின், அவற்றை நினையாது, அம்மலைமீது நின்றோனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தியானம் செய்யுங்கள். அங்கே துவஜஸ்தம்பத்தைக் காண்பீர்கள். அப்பெருமானுடைய திருவடி தரிசனம் பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்” (சிலப். 11 : 87-138, சுருக்கம்.)

இப்பகுதியால் இந்தத் தலத்தில் மூன்று பொய்கைகளும், சிறப்புடைய கோங்கமரம் ஒன்றும், பிலத்துவாரம் ஒன்றும் இருந்து வந்தனவென்று தெரியவரும். அன்றியும் சிலப்பதிகார காலத்தில் இத்தலத்தின் கண்ணே தெய்வப் பெண்கள் வாழ்ந்து வந்ததாக மக்கள் எண்ணி யிருந்தனரென்பதும் பெறப்படும்.

பிற நூல்கள்

பத்துப்பாட்டுள் முதலாவதாகும் திருமுருகாற்றுப்படையிலே முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளிய படைவீடு ஆறு கூறப்பட்டுள்ளன ; அவற்றுள் ஒன்றாகிய பழமுதிர்சோலை யென்பது இத்தலமே யென்று தெரிகின்றது. பழங்காலத்தில் இத்தலத்தே முருகக்கடவுள் திருக்கோயிலும் இருந்ததென்பதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதும் இருக்கின்றனவென்பர். சங்க காலத்துக்குப் பின் எழுந்த நூல்களிலும், திருப்புகழிலும் இதனை முருகக்கடவுளுக்குரிய தலமாகக் கொண்டு புலவரும் அன்பரும் பாடியுள்ளனர்.

பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என்பவர்களுடைய மங்களா சாஸனம் இத்தலத்திற்கு உண்டு. பிள்ளைப்பெருமாளையங்கார் இயற்றிய அழகர் அந்தாதியும், வேம்பத்தூர்க் கவிகுஞ்சரமையரால் இயற்றப்பெற்ற கலம்பகம் ஒன்றும், சாமி கவிகாளருத்திரர் இயற்றிய பிள்ளைத் தமிழ் ஒன்றும், பெருங்கரைக் கவிகுஞ்சர பாரதியால் இயற்றப்பெற்ற குறவஞ்சி ஒன்றும் இத்தல ஸம்பந்த மாக உள்ளன.

கந்தபுராணம் திருக்குற்றாலப் படலத்தில் அகத்தியர் கூற்றாக வுள்ள பகுதியில்,

” முத்திதரு பேரழகர் திருமலையி னிடையுற்றோம் ” (12)

என்று இத்தலம் சிலேடைவகையாற் குறிப்பிக்கப் பெறுதல் காண்க.

வடமொழியில் கூரத்தாழ்வார் அருளிய ஸ்ரீ சுந்தரபாஹு ஸ்தவமென்னும் நூலும், ஒரு புராணமும் இருக்கின்றன. வட மொழிப் புராணம் தமிழ்வசன நடையில் ‘அழகர்கோயில் மான்மியம்’ என்னும் பெயரோடு பல வருஷங்களுக்குமுன் மதுரை வி. என். இராகவக்கோன் என்பவரால் அச்சிடப்பெற்று வழங்குகின்றது. இப்பொழுது இத்தல விசாரணைக் கர்த்தராக இருந்து வரும் ஸ்ரீமான் கே. என். இராதாகிருஷ்ணையர் அவர்கள் மாட்சிமை தங்கிய சென்னைக் கவர்னரவர்களுக்கு 23-10-1935-இல் அனுப்பிய ஆங்கில விண்ணப்பமொன்று புத்தக ரூபத்தில் இருக்கின்றது. தல சம்பந்தமாகப் பல செய்திகளைத் தொகுத்து அதில் அவர் எழுதியிருக்கின்றனர். மேலே கண்ட நூல்களாலும் அழகர் கிள்ளி விடுதூதாகிய இந்நூலாலும் கேள்வியாலும் அறிந்த செய்திகள் பல ; அவற்றிற் சில பின்னே தெரிவிக்கப் படுகின்றன.

தலத்தின் திருநாமங்கள்
அலங்காரன்மலை, அழகர் கோயில், அழகர்மலை, ஆராம் சைலம், இருங்குன்றம், குலபூதரம், குலமலை, குளிர்மாமலை, குன்றம், கேசவாத்திரி, கொற்றமலை, கோலமலை, சஞ்சீவி பர்வதம், சிங்காத்திரி, சீர்பதி, சோலைமலை, தர்மாசலம், திருமலை, திரு மால்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, தென் திருப்பதி, நிலமலை, நீண்டமலை, பழமுதிர்சோலை, பழமுதிர்சோலைமலை, பிரம்மபர்வதம், மண்டூகபர்வதம், மாலிருங் குன்றம், வனகிரி, விருஷபகிரி, ஸ்ரீபதி.

பெருமாள் திருநாமங்கள்

அலங்காரர், அழகர், கள்ளழகர், சங்கத்தழகர், சுந்தரத் தோளர், சுந்தரபாஹு, சுந்தரராஜப் பெருமாள், சோலைமலைக் கரசு, தெய்வசிகாமணி, பரமசுவாமி, மலையலங்காரர், மாலலங் காரர், விருஷபாத்திரி நாதர்.

நாச்சியார் திருநாமம்
ஸெளந்தரவல்லி ; கல்யாண சுந்தரவல்லி யெனவும் வழங் கும். ஸ்ரீ ஆண்டாளும் இங்கே திருக்கோயில் கொண்டெழுந் தருளியுள்ளாள்.

தீர்த்தங்கள்
சிலம்பாறு என்பது இத்தலத்திலுள்ள தலைமையான தீர்த்தம். அது தேனாறு, நூபுர கங்கை , பகவத்பாத தீர்த்தம், மஞ்சீரந்தி, விஷ்ணு கங்கை யென்றும் வழங்கப்பெறும். அது திருக்கோயிலுக்கு வடக்கே 23 மைல் தூரத்தில் இருக்கிறது. மற்றத் தீர்த்தங்கள் வருமாறு :- அக்கினிவாபி, அனுமதீர்த்தம், இஷ்ட சித்தி, உத்தர நாராயணவாபி, கதலிவாபி அல்லது வாழைக் கவி, கருட தீர்த்தம், கிருஷ்ணவாபி, நாராயண புஷ்கரிணி, பண்டாரிவாபி, பவகாரணி, பாண்டவ தீர்த்தம், புண்ணிய சரவணம், பெரிய அருவி, வேணு தீர்த்தமென்னும் மூங்கிற்கவி.

விருக்ஷங்கள்
இங்கே முதல் யுகத்தில் ஆலாகவும் இரண்டாவது யுகத்தில் அரசாகவும் மூன்றாவதில் வில்வமாகவும் இக்கலியுகத்தில் புத்திர தீபமென்னும் பெயரினதாகவும் ஒரு ஸ்தல விருக்ஷம் உண்டென்று இந்த நூல் கூறும். மூன்றாம் யுகத்தில் பலாவாகவும் இக்கலி யுகத்தில் புத்திர ஜீவியென்னும் விருக்ஷமாகவும் இருப்பதாக இத்தல மான்மியம் தெரிவிக்கும். நூபுரகங்கையின் ஆரம்பத்தில் ஒரு மகா வடவிருக்ஷம் இருந்ததென்பர். சந்தன மரத்தைத் தலவிருக்ஷமென்பாரும் உளர். சிலப்பதிகாரத்திலே சொல்லப்பட்ட கன்னிகார விருக்ஷமும், இந்நூலில் கூறப்படும் உறங்காப்புளியும் இத்தலத்தோடு சார்த்திச் சொல்லப்பெறும் விருக்ஷங்களாம். இங்கே சோதிவிருக்ஷ முண்டென்றும் கூறுவர்.

விமானம்
சோமச்சந்திர விமானமென்றும், சோமச்சந்தவிமான மென்றும் வழங்கும். இது பிரணவாகாரமானதென்று தலமான் மியம் கூறும்.

மண்டபங்கள்
(1) மாத்வி மண்டபம் : இது சிலம்பாற்றங்கரையில் இருப்பது ; இந்தத் தலமான்மியத்திலும் இது கூறப்படுகின்றது. (2) சோலைமலை மண்டபம் : இது சாம்பல் போடும் மண்டபமென்றும் வழங்கும் ; பதினாறு கால்களை உடையது. (3) கனு மண்டபம்: கல்யாண சுந்தரவல்லித் தாயார் கனுத் திருவிழா நடைபெறும் மண்டபம். (4) வண்டியூர் மண்டபம் : அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று. (5) தேனூர் மண்டபம் : வையையாற்றின் இடையிலே உள்ளது ; அழகர் எழுந்தருளும் மண்டபங்களுள் ஒன்று; இது தேனூரிலுள்ள அன்பர்களாற் கட்டப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது.

பூசித்துப் பேறுபெற்றோர்
அம்பரீஷன், அருச்சுனன், அனுமன், இந்திரத்தியும் நான், இந்திரன், கந்தருவன் ஒருவன், கருடன், குப்ஜபாண்டியன், கெளதம முனிவர், சதிரிளமடவார், சந்திரகேது, சுதபஸ் என்னும் முனிவர், செளனக முனிவர், தருமதேவர், தாலப்பியர், பச்சை வாரணதாசர், பராசரர், பாண்டவர், பிரகலாதன், பிரம் தேவர், புண்ணியம், புரூரவசு, புலத்தியர், மரீசி, மலயத்துவசன், மார்க்கண்டேயர், மாவலி, மைத்திரேயர், யானையொன்று, ருக்மாங் கதர், வசிஷ்டர், விபீஷணன்.

பிற கோயில்கள்
(1) ஸ்ரீ நாகநாதர் கோயில் : பல நாகர்கள் உள்ள கோயில். (2) இராக்காயி அம்மன் கோயில் : (3) அனுமன் கோயில் : இஃது அனும தீர்த்தத்துக்கு அருகிலுள்ள து. (4) கருடன் கோயில் : கருட தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (5) பாண்டவர் கோயில் : பாண்டவர் தீர்த்தத்துக்கு அருகில் உள்ளது. (6) சதிரிளமடவார் கோயில் : இம்மலையின் தென் பகுதியில் உள்ளது. (7) சக்கரத்தாழ்வார் கோயில் : இதற் குச் சில நிவந்தங்கள் அமைந்ததாகக் கூறும் சிலாசாஸனம் உண்டு. (8), தண்டலைக் கோயில். (9) வெள்ளிமலை : இது மலையின் தென் பகுதிக்குப் பெயரென்றும் இங்கே வெள்ளி மலை யாண்டி யென்னும் கடவுள் உறைவதாகவும் கூறுவர். (10) க்ஷேத்திரபாலகர் கோயில் : க்ஷேத்திரபாலகர் கல்லென வும் வழங்கும் ; இக்கல்லில் வைரவர் எழுந்தருளி-யிருக்கின்றன ரென்பது ஐதிஹ்யம்.

விழாக்கள்
(1) கோடை உத்ஸவம் : இஃது இந்நூலிற் சிறப்பிக்கப் பெறுவது ; சித்திரா பௌர்ணமியில் நிகழ்வது. இவ்விழாவில் பெருமாள், ஆண்டாள் சூடிக்கொடுத்து அனுப்பிய மாலையை அணிந்து செல்வது வழக்கம்.
(2) வசந்த உத்ஸவம் : வைகாசி மாதம் பத்து நாள் நடை பெறும்.
(3) முப்பழ உத்ஸவம் : ஆனிப் பெளர்ணமியன்று முக் கனிகள் நிவேதனம் செய்யப்படும்.
(4) பிரும்மோத்ஸவம் : பத்து நாள் திருவிழா. மலயத்து வசபாண்டியன் முதலில் தொடங்கியதாகத் தலமான்மியம் கூறும். தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளுவர். ஆஷாட பௌர்ணமியன்று திருத்தேர் .
(5) கருட ஸேவை : ஆடி அமாவாசையன்று நடைபெறுவது.
(6) திருப்பவித்திர உத்ஸவம் : 5 நாள் நடைபெறும். ஆவணி மாதம் பெளர்ணமியோடு நிறைவுறும்.
(7) நவராத்திரி : புரட்டாசி மாதம் நடைபெறுவது.
(8) எண்ணெய்க் காப்பு உத்ஸவம் : ஐப்பசி மாதம் நடை பெறுவது. சுக்கிலபக்ஷத் துவாதசியன்று பெருமாள் தீர்த்தத் தொட்டிக்கு எழுந்தருளுவது வழக்கம் ; இதனால் இது தொட்டி யுத்ஸவமென்றும் வழங்கும்.
(9) திருக்கார்த்திகை விழா : இவ்விழாவிலே புறப்பாடு உண்டு .
(10) அத்யயன உத்ஸவம் : மார்கழி மாதம் நடைபெறும் பகற் பத்து இராப்பத்து.
(11) சட்டத்தேர் உத்ஸவம் : தைமாதம் நடைபெறுவது.
(12) திருக்கல்யாண உத்ஸவம் : பங்குனி உத்தரத்தன்று நிகழும். மறுநாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இவற்றையன்றி வேறு சில உத்ஸவங்களும் நடைபெறுவ துண்டு .

வாமன புராணம், வராக புராணம், பிரம்மாண்ட புராண மென்னும் மூன்று புராணங்களில் இத்திருப்பதியின் மான்மியம் கூறப்பட்டிருப்பதாகத் தலபுராணம் தெரிவிக்கின்றது.

திவ்யப் பிரபந்தத்திற் கண்ட சிறப்பு
மேலே கூறியவற்றுள் சிலம்பாற்றை,

“சிலம்பாறு பாயுந்தென் றிருமாலிருஞ் சோலையே”
“ஓட்டருந் தண்சிலம் பாறுடை மாலிருஞ் சோலையதே”-
என்று பெரியாழ்வாரும்,

சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது
வந்திழி யுஞ்சிலம் பாறுடை மாலிருஞ் சோலை
“-என்று ஆண்டாளும்,

சிலம்பிய லாறுடைய திருமாலிருஞ் சோலை”-என்று திருமங்கைமன்னனும் பணித்தனர்.

இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய பெருமாளை,

சுந்தரத் தோளுடையான் “
“திருமாலிருஞ் சோலைநம்பி”
“மாலிருஞ் சோலை நம்பி “
” சுந்தரன் “-
என்று ஆண்டாளும்,

தேவர்கள் நாயகன் “
“கேசவ நம்பி “
-என்று திருமங்கைமன்னனும்,

“அழகர்”-என்று நம்மாழ்வாரும் போற்றுகின்றனர்.

நெடுமாறன் தென்கூடற்கோன்”
“தென்னன் கொண்டாடும் தென்றிருமாலிருஞ் சோலை”
“அளித்தெங்கு நாடு நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலஞ்செய்யுந்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையே”
“சென்றுலகங் குடைந்தாடுஞ் சுனைத்திரு மாலிருஞ்சோலை ” (பெரியாழ்வார்)
“தேசமெல்லாம் வணங்குந் திருமாலிருஞ்சோலை ” (திருமங்கையாழ்வார்) “தென்சொல் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ் சோலை” (நம்மாழ்வார்)-என இத்தலம் பாராட்டப்படுகின்றது.

3.3. நூலின் பொருள் அமைப்பு

இந்நூலில் தூதுவிடப் பெறும் கிளியின் பெருமையும், பாட்டுடைத் தலைவராகிய அழகர் சிறப்பும், தலைவி அழகரைக் கண்டு காமுற்ற வரலாறும் முறையே கூறப்படுகின்றன. இதன் பொருளமைப்பு வருமாறு :

கிளியின் பெருமை

திருமாலின் திருநாமமாகிய அரியென்னும் பெயரையும், அவர் திருக்கண்வளரும் பாயலாகிய ஆலிலையின் நிறத்தையும் கொண்டு மன்மதனுக்கு வாகனமாக விளங்கும் கிளியரசே, நான் சொல்வதைக் கேட்பாயாக : உன்னுடைய பெருமை பலபடியாகப் பரந்தது. மன்மதனுடைய ஆட்சியிலே உன் சொல்லைக் கேளாதவர் ஆர்? மன்மதனது ஒற்றைச் சக்கரங்கூட இல்லாமற் செலுத்துகின்ற காற்றாகிய தேரைப் பலங்கொண்டு இழுத்துத் திரிகின்ற பச்சைக் குதிரையே, ஒற்றைச் சக்கரத்தோடு கூடிய சூரியன் தேர் ஒன்றை யிழுக்கும் பச்சைக் குதிரைகள் ஏழும் உனக்கு ஒப்பாகுமோ? ‘அந்தக் குதிரைகள் சுற்றிவரும் உலகமும் நீயே ; ஞான விளக்கும் நீயே” என்று சொல்வதிற் பிழையென்ன? உன் உருவம் கொண்ட சுகமுனிவர் எல்லாம் தாமாகவே இருந்தார். எத்தகைய நிறத்தையுடைய பறவையானாலும் உன்னுடைய பஞ்சவர்ணங்களுக்குள் ஒன்றில் அடங்குமன்றோ?

உன் மேனி முழுவதும் பச்சை நிறமா யிருந்தால் உன்னைக் கண்டோர் பார்வதி தேவியாரென்று எண்ணி விடுவார்களென்று கரு தியோ நீ மூக்கு மாத்திரம் சிவந்திருக்கின்றாய்? நாக்குத் தடுமாறிப் பேசுபவர்களை உலகத்தார் சேர்த்துக் கொள்ளாமல் விடுவர்; உன்னை அப்படி விடுபவர் ஒருவரும் இல்லை. முன்பு சீவகனுடைய மனைவியருள் ஒருத்தியாகிய காந்தருவதத்தை மிக்க சிறப்படைந்தமைக்குக் காரணம், அவள் உன் பெயருள் ஒன்றாகிய தத்தை யென்பதைக் கொண்டமையே. பிற பறவைகளினிடத்தில் திருமால் திருநாமத்தையும், சிவபெருமான் நாமத்தையும் சொல்வதனால் பயனில்லை. உன்னிடம் சொன்னால் நீ அவற்றைப் பயின்று கூறுவாய். கூடுவிட்டுக் கூடுபாயும் யோகி உனக்கு ஒப்பாவானோ? பாலின் பெயராகிய கீரம் என்பது உனக்கும் பெயர். அதனால் உனக்கும் ஆடை (பாலாடை, உடை) உண்டு. பாடகம், காலாழி முதலிய ஆபரணங்களை நீ பூண்பாய். [#]கற்புடையாய்; சோலையாகிய மனையிலே சேர்வாய். இவற்றால் உன்னையும் ஒரு பெண்ணென்றே சொல்லலாம்.

சாயுச்சியமென்னும் பதவியைச் சுகரூபமென்பர். உன் பெயர் சுகமாதலின் அது நின் சொரூப மென்றே சொல்லவேண்டும்.[§] ‘வன்னி பரிசித்த வெல்லாம் பரிசுத்தம்’ என்று வழங்குவதை யெண்ணியே நீ கோதிய பழத்தை யாவரும் உண்கின்றனர். யாருடைய சொல்லையும் நீ கற்றுக்கொள்வாய். யோகங்கள் சாதித்துப் [¢] பச்சைப்பிள்ளையாக வாழும் பெரியோர் பலர் உண்டு. ஆயினும் அந்த யோகங்கள் சாதியாமலே பச்சைப் பிள்ளையாய் நீ வாழ்கின்றாய். நீ” பாலனத்தாலே பசி தீர்க் கின்றாய். திருமாலும் தம்முடைய [£] பாலனத்தாலே உலகத்தோர் பசியைத் தீர்க்கின்றார். ஆதலின் நீ அவருக்கு ஒப்பாகின்றாய். மிக்க நண்பினரானாலும் [@] பூசையை விட்டார் முதலியோரை நீ விரும்பாய். உனக்குப் பச்சை சிவப்பு என்னும் [##] இரண்டு நிறம் இருப்பதனால் இரண்டு வடிவமுடைய கருடாழ்வானுக்கு இணையாவாய்.

[#] கல் புடையாய், கற்புடையாய். [§] வன்னி – நெருப்பு, கிளி.
[¢] பச்சைப்பிள்ளை – இளங்குழந்தை. [||] பாலனம் – பாலோடு கூடிய சோறு.
[£] இரட்சித்தல். [@] பூசையை விட்டார் – பூனையை விட்டவர், தெய்வ வழிபாட்டை நீத்தவர். [##] இரண்டு வடிவம் – பறவை வடிவமும் புருஷ வடிவமும்.

ஜபம் செய்வோர்களுக்கெல்லாம் திருவரங்கர் திருநாமத்தை நீ உபதேசம் செய்வாய். பெண்களுக்கு ஆடவரைப் போல முத்தம் கொடுப்பாய். அங்ஙனம் முத்தங் கொடுப்பதனால் அவருக்கு இதழிலே செந்நிறம் உண்டாயிற்றோ? அன்றி அவர் இதழ்ச் சிவப்பு உன் அலகிற்கு ஏறியதோ? யாருக்கும் தோற்றாதவனாகிய மன்மதனை நீ தேர்க்குதிரையாகி இழுத்து வருவாயாயின், அவனுக்குக் குறை ஏது? யோகிகளெல்லாம் அடக்கிக் கஷ்டப்படுகின்ற வாயுவை உன் பின்னாலே (தேராக) வரச் செய்வாய். திருமகளும் மலைமகளும் தம்முடைய திருக் கரங்களிலே உன்னைப் பிடித்திருக்கும்படி நீ நட்புப் பூண்டாய். திருமாலுக்கும், பார்வதிக்கும், உனக்கும் பச்சை நிறம் வந்த விதம் எங்ஙனம்?

யாவரும் மெச்சும் பறவையே, உன்னுடைய நாக்குக் கூழை நாக்கானது, அரிகீர்த்தனத்தை இடைவிடாமற் செய்ததனாலோ? [§] …….. குயில், வண்டு, புறா, மயில், நாகணவாய்ப்புள் என்னும் பறவைகளுக்கு உன் சிறப்பு வருமோ ?

வேதமாகிய சிவபிரான் குதிரைகளுக்குப் பிரமதேவர் சாரதி ; மன்மதனுடைய குதிரையாகிய உனக்குச் சாரதி யார்? சிவபெரு மான் திருநுதற் கண்ணால் மன்மதனும், அவன் நானாகிய வண்டும், சின்னமாகிய குயிலும் சுடப்பட்டுக் கருகிய காலத்தி லும் நீ கருகாமலே வந்தாய். உனக்குக் கனியினிடத்தில் அதிக விருப்பம். நீ [#]அரிதாளை விட்டு அகலாய். எனக்கு உள்ள இரண்டு கை உனக்கு இல்லை ; உனக்குள்ள இருசிறகு எனக் கில்லை. எனக்கும் உனக்கும் பேதம் இதுதான்.

[§] இங்கே உள்ளே சிலேடைப் பொருள்கள் வசனத்திலே எழுதற்கரியவை.
[#] அரிதாள் – அரிந்த தினைத்தாள், திருமாலின் திருவடி.

நீ வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களுடன் இதமாகப் பழகு வாய். அன்பினால் அக்கா, அம்மா என்று முறையிட்டு அழைப் பாய். வண்டு மதுவை உண்டு குழறும். குயிற்பிள்ளையோ மாமரத்திலேறிக் கத்தும். கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லும், என்ற நல்ல பெயரை நீ பெற்றிருக்கிறாய்.

நீ அன்னமில்லாமற் பால் மாத்திரம் குடிக்கும் பச்சைச் குழந்தையானாலும், உன் காலைப் பிடிப்பார் பலராவர். மன்மதனால் வருந்துவோருடைய நோயைத் தீர்ப்பதற்காகவோ நீ பச்சிலை ரூபத்தைப் படைத்தாய் ? மகளிருடைய மயக்கமாகிய காட்டைச் சுடுவதற்-காகவோ நீ [@] வன்னியென்னும் பெயரைத் தாங்கினாய்? அவர்களுடைய துன்பமாகிய வேழத்தைக் கொல்லவோ நீ [§] அரி வடிவம் பூண்டாய்? அவர்களது விரகதாபமாகிய பெரிய படையை வெல்லவோ நீ [$] கிள்ளை வடிவத்தை எடுத்தாய்? மாதர்களுடைய விசனம் கெடுவதற்காகவோ நீ [¢] சுகவடிவத்தைக் கொண்டாய்? …………………….. ரதிக்கும் கலைமகளுக்கும் உன்னை உவமானமாக்கி உரைப்பர். உவமையாகக் கூறும் பொருளே உயர்ந்ததாதலின் அவ்விருவரிலும் நீயே உயர்ந்தாயன்றோ ?…………….. உன்னுடைய வடிவமும் வளைந்த மூக்கும் திருமாலினுடைய துவசத்தில் இருக்கும் கருட தேவனது அம்சமோ? உன்னுடைய சிறகானது, பழைய காலத்தில் கண்ணபிரான் வேய்ங்குழல் வாசித்தபோது மரங்களிலே தளிர்த்த பசுந்தழையோ? அல்லது, இராமபிரான் இராவணனைச் சங்கரித்த பிறகு விபீடணன் இலங்கையிலே புக்குக் கட்டிய புதுத்தோரணமோ? உன்னுடைய இனிய மொழி கண்ணபிரானது வேய்ங் குழலோசையோ?

[@] வன்னி – நெருப்பு, கிளி. [§] அரி – சிங்கம், கிளி.
[$] கிள்ளை – குதிரை, கிளி. [¢] சுகம் – இன்பம், கிளி.

கிளிப்பிள்ளையே, தெள்ளமுதக் கிள்ளையே, இன்பரசக் குஞ்சே, தென்றற் குழவியைத் தாய்போல எடுத்துச் சஞ்சரிக்கும் செல்வமே, திருமகள் திருக்கரத்திலே யுள்ளாய், முத்தி நகரேழில் ஒன்றாகிய அவந்தியென்பதன் பெயரையும், தமிழில் வல்லினம் ஆறனுள் ஒன்றாகிய தகர வரியிலமைந்த தத்தை யென்னும் பெயரையும், ஐந்து பூதத்தில் ஒன்றாகிய நெருப்பின் பெயராம் வன்னியென்பதையும், சதுரங்க சேனைகளுள் குதிரையின் பெயராகிய கிள்ளையென்பதையும், மும்மூர்த்திகளில் ஒருவராகிய அரியின் திருநாமத்தையும், இரு பயனாகிய சுக துக்கங்களில் சுகமென்னும் பெயரையும் தாங்கிய என் கண்ணே , கண்ணுண் மணியே, நான் திருமாலைத் தரிசனம் செய்யப்போய் ஊராரெல்லாம் அவர் கூறும் நிலையை அடைந்ததைச் சொல்கின்றேன் ; கேட்பாயாக :

அழகர் பெருமை

அவன், நரசிங்கம் போன்ற திருவுருவத்தை எடுத்து இரணியசங்காரம் செய்தவன். கிருஷ்ணாவதாரத்தில் பூதனையின் பாலையுண்டவன். பிள்ளைத் தன்மை நீங்காதவன். கல்லைப் பெண்ணாக்கும் திருவடியையுடையவன். ஒரு கவிஞன் பொருட்டுத் தன் படுக்கையைத் தூக்கிச் சென்றவன். தேவர்களுக்காக அமுது கடைந்தவன். சீதாபிராட்டியுடன் கானங் கடந்தவன். ஒரு வேடனுக்கு மெல்லிய கால் நகங்களைத் தந்தவன். என் காதல் வெள்ளத்திலே அமிழ்ந்தினவன் ; பிரளயகால வெள்ளத்திலே மிதந்தவன் என் உள்ளத்தே உள்ளவன் ; ஆயினும், உலகத்துக்கு அப்பாலான். வெட்ட வெளியிலே நின்று எளிதிலே தோற்றாதவன் ; அருகிலே இருந்தும் அணுகுதற்கரியான். மாயன் என்னும் பெயருக்கேற்ப என் மனத்துள் இருந்தாலும் மாயம் செய்து ஒளிப்பவன். எல்லாவற்றையும் காட்டியருளிக் கண்ணனென்னும் பெயரை அடைபவன். எங்கும் இல்லா திருந்தும் எங்கும் நிறைந்திருப்பவன் ; எங்கும் நிறைந்திருந்தும் எங்கும் இல்லாதவனாக இருப்பவன். என்னை எனக்கு ஒளித்துத் தன்னை எனக்கருளும் தம்பிரான். என்னுடைய பழைய வினைகளையும் பல மாயைக் கூட்டத்தையும் கலைத்து என்னைத் தனியே இருத்துவோன். ‘நானே பிரமன் ; நானே எல்லா வுயிரும் ; இவ்விருவரையும் ஏவுபவனும் நான்’ என்று உணர்த்தும் பொருட்டுக் கோவலரிடத்தே பசுவும் பசுவின் கன்றும் அவற்றை மேய்ப்பவர்களுமாகி நின்ற பரஞ்சோதி. தன்னுடைய சங்கத்தொனியைக் கேட்டாரை நரகினின்றும் மீட்பவன். வேய்ங் குழலின் தொனியால் பட்ட மரங்களைத் தவிர்க்கச் செய்தவன். ‘ஆதிமூலம் இவன்’ என்பதை உணர்த்தும் யானை யொன்றை உடையவன். பிரமாவைத் திருவுந்தியால் வெளிப்படுத்திச் சிருஷ்டிக்கு மூலகாரணன் தானென்பதைப் புலப்படுத்துவோன் ; அப்படியே பிரளயகாலத்தில் உலகங்களை விழுங்கித் துடைப்போனும் தானே யென்பதை உணர்த்துவோன். தமிழினாலே வேதக் கருத்துக்களை உணர்த்திய ஆழ்வார்கள் பதினொருவருடைய உள்ளத்திலே எழுந்தருளியிருப்பவன். தன் பாதமாகிய செந்தாமரை மலரிலிருந்து வழியும் தேனைப் போலக் கங்கை உண்டாகும் பெருமையுடையவன். துயிலாத் துயில் கொள்பவன். தன் தாயாகிய யசோதைப் பிராட்டிக்கு, தன்னுள்ளும் புறம்பும் உலகம் இருப்பதை வாய் திறந்து காட்டி உணர்த்தியவன். பிறப்பாகிய கடலில் கலந்த அவித்தையாகிய உவர்த்தன்மையை வாங்கிவிட முகில் போல விளங்குபவன். பரசமயவாதங்களாகிய நதிகள் யாவும் தன்பாலே அடங்கக் கடல் போல இருப்பவன். ஒரு கிரணம் போன்ற என்னைத் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நீலமணிநிறம் பூண்டவன். உலகமாகிய ஊசலில் எழுந்தருளியிருப்பவனும் அதனை இயக்குபவனும் தானே யாகின்ற அண்ணல். வேடர்கள் ஒரு பார்வை மிருகத்தைக் கொண்டு நூறுமான்களைப் பிடிப்பதைப் போலத் தன் அவதாரமாகிய பத்தினால் தான் படைத்த எண்பத்து நான்கு லக்ஷம் யோனி பேதங்களாகிய பிறவிகளை நீக்குபவன்.

தசாங்கம்

கேசவாத்திரி, சிங்கத்திரி, இடபகிரி என்னும் திருநாமங் களையுடைய சோலைமலைக்கு அவன் தலைவன். அந்த இடபாசலம் இந்திரன் போலவும் அதில் உள்ள சுனைகள் அவன் கண்களைப் போலவும் இருப்பது, தோளில் புரளும் முத்தாரத்தைப் போல விளங்கும் நூபுரநதியை உடையவன். பூமிதேவிக்குப் பன்னிரு செந்தமிழ் நாடுகளும் கை இரண்டு, காது இரண்டு, நகில் இரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகப் பன்னிரண்டு உறுப்புக்களாக இருப்பவும், அவற்றுள் சோழ நாடும் பாண்டி நாடும் கண்களாக விளங்க, அவற்றுள்ளும் வலக் கண்ணாக விளங்கும் பாண்டி நாட்டை-யுடையவன். சோமச் சந்திர விமானத்தை இந்திர விமானமென்றும், துவசஸ்தம் பத்தைக் கற்பகவிருட்ச மென்றும், தன்னை உபேந்திரனென்றும், திருமாலையாண்டானென்றும், ஆசிரியரைப் பிருகஸ்பதி யென் றும், மற்ற யாவரையும் இந்திரன் முதலாகிய தேவர்களென்றும் யாரும் எண்ணுதலால் தேவர் வாழும் அமராபதி போலத் தோன்றுகின்ற சீபதியென்னும் திருப்பதியையுடையவன். தன் திருமார்பில் உள்ள பல ஆபரணங்களின் நிறத்தோடு சேர்ந்து இந்திரவில்லைப் போலத் தோற்றும் பசுந்துளப மாலையை அணிந்தவன். வைணவமாகிய [#]மதம் பொங்கவும் வைகானசம் பாஞ் சராத்திரமென்னும் ஆகமங்களாகிய மணிகள் ஒலிப்பவும், வடகலையும் தென்கலையும் புரசைக்கயிறாக விளங்கும் அத்துவி தானந்தமென்னும் யானையை உடையவன். வேதமாகிய குதிரையையும் கருடனாகிய கொடியையும் மும்முரசையும் உடையான். தவநிலை ஆணை தரித்தவன்.

[#]மதம் – யானையின் மதம், சமயம்.

பிற சிறப்புக்கள்

கண்ணபிரானாக வந்த காலத்துத் தன் திருமேனியிலே சிந்தின வெண்ணெய்ப் பிதிர்கள் நட்சத்திரங்களைப் போலவும் கையில் ஏந்திய வெண்ணெயுருண்டை மதியம் போலவும் விளங்க அதனை உண்டவன். சூரிய சந்திரர்களாகிய திருவிழிகளையும், அவற்றைப் போன்ற சங்கு சக்கரங்களையும் தாங்கினவன். உலகத்தை உண்ட திருவாயையும், அடக்கிய திருவயிற்றையும், ஈன்ற திருவுந்தித் தாமரையையும், அளந்த திருத்தாளையும், அதனை மாவலிபால் ஏற்ற திருக்கரத்தையும், அதன்கண் வளைந்த பயிர்களின் நிறத்தைக் காட்டும் திரு மேனியையும், அதனை வராகாவதாரத்தில் பெயர்த்த மருப்பையும், ஆமையாகி ஏந்திய முதுகையும், அதனைத் தன் படத்திலே வைத்த ஆதிசேடனாகிய பாயையும் உடையவன். தன் திரு நாமத்தை நினைந்து நாமமிட்டவர்களுக்கு இம்மை மறுமைப் பயன்களை ஈபவன். பிரமன் எழுதும் எழுத்தைத் தன் அஷ்டா ஷரத்தால், இனி இல்லையென்று சொல்லும்படி ஆக்குவோன். சங்கரன் முதலியோர் தங்கள் தங்கள் மலைகள் எங்கே இருப் பினும் இது நம் குன்று என எண்ணிவரும் நண்புடையவன். பச்சைவாரண தாசரென்பவருக்கு இரண்டு கண்களையும் மாற்றினவன் ; ஒரு யானைக் கன்றுக்குக் கண் கொடுத்தவன். திருக்கையில் உத்தியோகச் சக்கரத்தை யுடையவன். இலங்கையை முன்பு வென்று கொண்டாலும் நிலத்தை (மாவலியினிடம்) தானமாக வாங்கினவன்……. திருக்கரத்திலே சங்கத்தை யுடைமையினாலும், மதுரையிலுள்ள சங்கத்தில் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்தமையினாலும் சங்கத்தழகனென்று சொல்லும் திரு நாமமுடைய தம்பிரான். தன்னுடைய பாதுகை அரசு புரியவும் கருடாழ்வான் பறவைகளுக்கரசாக இருப்பவும் அருள் புரிந்தவன். செளந்தரவல்லி நாச்சியாரோடு சுந்தரராசனெனத் தோற்றினவன். சுந்தரத்தோளன், மலையலங்காரன் என்னும் திருநாமங்களை யுடையவன்.

வேறு வேறு தெய்வங்களை மக்கள் பூசித்தமையால் உண்டான புண்ணியமே தன்னை வந்து பூசிக்கப் பெற்றவன். மலயத்துவச பாண்டியனால் வழிபடப் பெற்றவன். அம்பரீஷனுக்கு அருள் செய்தவன்.

திருவிழா

அத்தகைய திருமால், தென்றல் வீசுங்காலத்திலே கோடைத் திருவிழாக் கொண்டருளி மதுரைக்கு எழுந்தருளினான். தல்லா குளத்திற்கு வந்து விடியற்காலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிப் பொற்குடையும் வெள்ளிக் குடையும் கொடிகளும் இலங்கவும், முரசம் முழங்கவும், மக்கள் கூட்டம் கூட்டமாகத் தொடர்ந்து வரவும், நீர்வீசு கருவிகள் பனிநீரைத் தூவவும், காணிக்கைக் கொப்பரை முன்னே செல்லவும் வையைநதியில் அங்கங்கே செய்யப்படும் உபசாரங்களை ஏற்றருளி வண்டியூர் மண்டபத்தில் வீற்றிருந்தருளினான்.

அப்பொழுது சூரியன் அத்தமித்தான். தீவட்டிகள் பிரகாசித் தன. வாணக்காட்சி நடைபெற்றது. பெருமாள் அனந்தாழ் வான் மீது பவனிவந்தான். அப்பவனியிலே அவனைத் தரிசித்துக் காமமயக்கத்தை யான் அடைந்தேன். அவன் மற்ற இடங் களுக்கு எழுந்தருளலானான்.
தலைவியின் நிலை

நான் அவனுடைய திருமுகமண்டலம் முதலியவற்றைக் கண்டு மால்கொண்டு என் உடன் வந்த மாதர்களுக்கு அவனைப் பற்றிக் கூறினேன். பின் அவனைப் பார்த்து, “அன்று நீர் திருடிய வெண்ணெயைப்போலத் தோற்றும் சங்கு இருப்பவும் என் கையிலுள்ள [§] சங்கைக் கவர்ந்து கொண்டீர். என்னுடைய கண்ணீர் உம்முடைய மலையிலே உள்ள அருவியைப்போல உமக்கு உவப்பாயிற்றோ? உமக்குரிய பீதாம்பரம் போதாதோ? இராமாவதாரத்திலே உடுத்துக்கொண்ட மரவுரியிலே வெறுப்பு வந்துவிட்டதோ? திரெளபதியாகிய பெண்ணுக்கு நீரே ஆடையை உதவினீரே. இப்பொழுது என்னுடைய ஆடையைக் கவர்ந்தீரே. பழையபடி கோவியர் ஆடை கவர்ந்ததைப் போலத் திருட்டுத்தனத்தை மேற்கொண்டீரோ? இந்த நூலாடை உமக்குப் [$] பாலாடை-யாயிற்றோ? உம்மேல் விருப்பங்கொண்டு முழங்குகின்ற எம்முடைய வார்த்தையை நீர் கேட்டிலீர். பாற்கடலிலே தூங்குவதைப்போல இந்த வையையிலும் தூக்கம் உண்டோ ? இப்பொழுது உண்மையாக நிலாவெள்ளம் பரந்ததோ? அன்றிப் பாற்கடல் தான் உம்முடைய பிரிவாற்றாமல் உம்மைப் பின் தொடர்ந்து இங்கே வந்துவிட்டதோ ? இரவாகிய யானை கசேந் திரன் போல இருக்கிறது; அதன்மேல் வரும் முதலையைப் போன்ற சந்திரனை நீர் சும்மா விட்டு விடலாமா? சதிரிள மடவாருக்கு இரங்கிய நீர் நெஞ்சம் தவிக்கும் இளமாதருக்கு இரங்கு தல் கூடாதோ? கோவியர்களிடத்தில் காம விளையாடல் புரிந்த செய்திகளெல்லாம் இப்பொழுது மறந்து போனீரோ?” என்று யான் கூறி முறையிட்டேன்.

[#]சங்கு – வளை. [$] காய்ச்சிய பாலில் மேலேயுள்ள ஏடு.

பிறகு பெருமான் தேனூர் மண்டபத்தை வலங்கொண்டு சோலைமலையைச் சார்ந்தான். யானோ மிக மெலிந்து யானை நோயுண்ட விளாம்பழம் போலானேன். இந்தத் துன்பத்தைத் தந்த அவன் சிறிதேனும் திருவுள்ளங் கனியானாயினன். சந்திரனும், கடலும், அயல் மகளிர் மொழியும், மன்மதன் செயலும், காளைகளின் மணியும், வேய்ங்குழலும் என்னைப் பலவாறாகத் துன்புறுத்துகின்றன.

கிளியை வேண்டுதல்

கிளியரசே, என்னுடைய உடம்பும் உன் கூடும் பலவகையில் ஒப்புமையுடையன. உன்னுடைய விருப்பத்தையறிந்து யான் உண்பிப்பேன் ; நலங்குக் குளிப்பாட்டுவேன் ; பட்டாடையால் துடைப்பேன் ; கூட்டில் இருத்தி ஆலத்தி எடுப்பேன் ; வாசனைத் தூபம் காட்டுவேன் ; இள வெயிலிலே குளிர்காயச் செய்து எடுத்து முத்தமிட்டு என்கையின்மேல் வைத்துப் பெருமாள் திருநாமமெல்லாம் உனக்குப் பழக்கி வைப்பேன்.

உன்னையன்றிப் பிறபொருள்களைத் தூதுவிடல் கூடுமோ? அன்னம், குயில், வண்டு, தென்றல், மேகம், காக்கை என்பன தகுதியற்றவை. நீயோ, அங்கே போனால் அடியார்கள் இருப்பின் நீயும் அவர்களோடு சேர்ந்து கீர்த்தனம் செய்வாய். நாச்சியார் அருகில் இருந்தால் அவர் கையிற் பறந்து சென்றிருப்பாய். “எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டால், ” சோலையிலிருந்து தரிசிக்க வந்தேன்” என்று சொல்வாய். சௌந்தர-வல்லிக்கும், சூடிக்கொடுத்த நாச்சியாருக்கும் தெரியாமல் என்னுடைய காதலைத் தெலுங்கிலே தந்திரமாகச் சொல்வாய். என்னுடைய துன்பத்தை நீக்குவாய். சச்சிதானந்தனாகிய பெருமாள் அணிந்துள்ள மாலையைக் கொண்டு வருவாய்.

அங்கே யுகந்தோறும் வேறு வேறாகிக் கலியுகத்தில் புத்திர தீபமாகும் தரு ஒன்று உண்டு. தேவர்களுக்குரிய ஐந்து கற்பகங்களோடு ஆறாவதாக அது விளங்கும். ஒரு கோடி சோலைகளும், ஒரு கோடி ஆறுகளும், ஒரு கோடி பூஞ்சுனையும் இருக்கின்றன. அன்றியும், யோகிகளைப்போல அல்லும் பகலும் துயிலாத உறங்காப் புளி ஒன்று இருக்கின்றது.

கோயிற் பணியாளர்

அத்தலத்தில் பிரமதேவனும் இந்திரனும் வந்து பெருமாளை இறைஞ்சுவார்கள். சீரங்கராச பட்டரென்னும் அர்ச்சகரும், திரு மாலிருஞ்சோலைச் சீயரென்னும் மாதவரும், திருமாலை யாண்டா னென்னும் ஆசிரியரும், தோழப்பையங்காரும், வேத பாரகரும், அமுதாரும், திருமலை நம்பியும், சோலைமலை நம்பியும், சடகோப நம்பியும், திருமாலிருஞ் சோலைப் பிரியரென்னும் சீகருணீகரும், சீகாரியஞ் செய்யும் நாயகர்களும் தன்னுடைய திருத்தாளை வணங்கி நிற்ப எம்பெருமான் திருவோலக்கத்தில் எழுந்தருளி யிருப்பான்.

தூதுரைக்கும் முறை

அப்பொழுது நீ தூதுரைக்கத் தொடங்கினால் உன் வார்த்தை அவன் திருச்செவியில் ஏறாது. ஆதலின் அவன் பள்ளியறைக்கு எழுந்தருளும் வேளை பார்த்து வேறொருவர் ஒன்றை விண்ணப்பித் தற்கு முன், என்னை மன்மதன் துன்பப்படுத்துவதற்கு முன்னே, பெண்டிர் அலர் தூற்றுவதற்கு முன்னே , கடலின் ஒலியும் தாயின் உரையும் என்னைத் துன்புறுத்தாமல் அடங்கும்படியாகத் தத்தையே, நீ என் தூதுச்செய்தியை உரைப்பாயாக.

உன்பேர் சுவாகத மாகையால் உனக்கும் [#] சுவாகதம் உண்டாகும். முன்பு ஒரு நாள் ஸ்ரீராமபிரானே உன்னைப் புகழ்ந்து பேசினானென்றால் உன்னைப் புகழ்ந்து பேசாதவர் யார்? நீ என் தூதுச் செய்தியைச் சொல்லிப் பெருமாளிடம் அவன் திருப் புயத்திலணிந்த மாலையைக் கேள். ‘உம்முடைய மாலையை அளியாவிடின் கோதையார் சூடிக்கொடுத்து-விட்ட மாலையை யேனும் தந்தருள்க” என்று கேள். தன்னை அடுப்பவர் யாவருக்கும் ஆடி மாதத்தில் தியாகம் கொடுக்கும் எம்பிரான் இல்லையென்று சொல்லான். ஆதலின் அவ்வழகன் புயத்து அணிந்த மாலையை நீ வாங்கி வருவாயாக.

[#] சுவாகதம் – நல்வரவு.

3.4. நூற்பொருள் ஆராய்ச்சி

அணிகள் இந்நூலின்கண் அங்கங்கே பலவகையான சொல்லணி பொரு ளணிகளைக் காணலாம்.

“வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளாதவரார்காண் கிள்ளையே ” (3)
“மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்” (19)

என்பன போன்ற இடங்களில் சிலேடையணி அமைந்திருக்கின் றது. தூத்துக்குரிய பொருள்களுட் கிளியல்லாத பிறபொருள்கள் தகுதியுடையனவல்லவென்று கூறும் பகுதியில் சிலேடையமை தியை மிகுதியாகக் காணலாம்.

“செலுத்திய காற் றேரைமுழுத் தேராய்” (4)
….. ….. ….. ….. – என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் ” (74-5)

என்பன போன்ற இடங்களில் விரோத அணியும்,

“மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதுஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய்” (28)

“…… …. ….. …..– கும்ப முனி
வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயி னுரையடங்கத் தத்தையே” (232-3)

என்பன முதலியவற்றிற் பின்வரு நிலையணியும் அமைந்துள்ளன.

“தேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும் வீறு பெறுமே” (33)
“அரசா யிருத்தியாலத்தி யெடுத்து ” (196)

என்பவற்றிற் பிற பொருட் பெயர்கள் தொனிக்கின்றன.

“தத்தை யடைந்தவரே தத்தையடையார்” (54)
“கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்” (146)
… ….. ….. …. – அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தர் (208-9)

என்பன போன்ற மடக்குகளும்,

“திருப்பா துகைக்குஞ் செழுங்கருடனுக்கும்
திருப்பா துகைக்குமர சீந்தோன்” (137)
“பாத கமலம் பரவுமல பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன் (141)

என்பவற்றில் யமகமும், 72-4, 142, 147, 222 – ஆம் கண்ணிகளில் திரிபும் அமைந்துள்ளன. சில இடங்களில் வகையுளி அமைந்திருக்கின்ற து (108,215).

தொகை முதலியன

ஏழு முதல் இரண்டு வரையில் உள்ள சில தொகைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் கிளியின் பெயரை அமைத்துக் காட்டிய பகுதி (63-5) இன்பந் தருவதாகும். பூமிக்கும் திருமாலுக்கும் உள்ள தொடர்பு மிக அழகாக ஓரிடத்தில் தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளது (126-8)

‘கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும்’ (46-7), ‘அவனசையாமல் அணுவசையாது’ (123), யானையுண்ட விளாம்பழம் (187-8) என்னும் பழமொழிகள் இதில் வந்துள்ளன.

சமற்காரம்

கிளியின் பெருமையைப் பல திறத்திற் பாராட்டிக் கூறவந்த இந்நூலாசிரியர் அதன் பெயரையும், இயல்பையும், புராண வரலாறுகளையும் வைத்துக்கொண்டு சமற்காரமாகப் பல பொருளமையும்படி அமைத்துக் காட்டுகின்றார். அரி, அவந்தி, கிள்ளை, கிளி, கிளிப்பிள்ளை, கீரம், சுகம், சுவாகதம், தத்தை, வன்னி என்னும் கிளியின் பெயர்களைச் சிலேடை வகையிலும் பிறவாறும் இவர் எடுத்தாளுவர்.

பிற பொருள்களைத் தூதுவிடுவதனாற் பயனில்லை என்று மறுக்கும் வாயிலாகச் சில தூதுப் பொருள்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவை வருமாறு : அன்னம் (33,199), காக்கை (204), குயில் (34,46,200), ‘தென்றல் (202), நாகண வாய்ப்புள் (38), புறா (36), மயில் (37), மேகம் (203), வண்டு (35, 46, 201)

புராண முதலிய நூற் செய்திகள்

திருமாலின் பெருமைகளைச் சொல்லுமிடங்களில் இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசச் செய்திகளும், பாகவதம் முதலிய மாபுராண வரலாறுகளும், இத்தலத்திற்குரிய புராணத்திற் கண்ட சிறப்புக்களும் எடுத்தாளப்படுகின்றன. ஓரிடத்தில் சீவக சிந்தாமணிச் செய்தியைக் காணலாம்.

வைணவ மரபு

நம்மாழ்வாரைக் காப்பிலே வாழ்த்தியிருத்தல் வைணவ மரபு ; கருடனைப் பெரிய திருவடிகள் என்றும் (22), திருமால் வாகனமாகிய குதிரையைக் குதிரை நம்பிரானென்றும் (152), ஆதிசேடனை அனந்தாழ்வான் என்றும் (166), பள்ளியறையைச் சேர்த்தி யென் றும் (230) வழங்குதல் அம்மரபைச் சார்ந்ததே.

பாண்டி நாட்டு வழக்கம்

‘உன்னுடைய சிறகுகள், இராமாவதாரத்தில், விபீடணன் இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டபோது, அங்கே கட்டிய புது மாவிலைத் தோரணமோ’ (59) என்பது ஒரு கண்ணியிற் கண்ட பொருள். ஒரு நிலத்தை மற்றொருவன் தனக்குரிய தாக்கும்போது அங்கே தோரணங்கட்டுதலும், அதனால் அச் செயலைத் தோரணம் வைத்தலென்று வழங்குதலும் பாண்டி நாட் டினர் வழக்கம். அவ்வழக்கத்தைப் பின்பற்றியே அவ்வாசிரியர் இங்கே இங்ஙனம் அமைத்தார்.

செய்யுள் நடை

இத்தூதின் செய்யுள் நடை பலவிதமாக அமைந்துள்ளது. மடக்கு, திரிபு, சிலேடை முதலியவை அமைந்த இடங்களிலே சற்றுக் கடினமாக இருப்பினும் மற்ற இடங்களில் தெளிவாகச் செல்வது. திருமாலினுடைய இயல்பைச் சொல்லும் இடங்கள், முக்கியமாக 75-ஆம் கண்ணி முதலிய சில கண்ணிகள் இந் நூலாசிரியர் உள்ளத்தே தீவிரமான பக்தியுணர்ச்சியோடு பாடப்பட்டிருக்கவேண்டும். உயர்ந்த உண்மைகளை ஆற்றலோடும், தெளிவாகவும் விளக்கும் அப்பகுதியிலே இவருடைய கவித்துவத்தின் சிறந்த அமைப்பைக் காணலாம். கிளியினைத் தூதுவிடுவதாக மேற்கொண்ட பிறகு, எந்த எந்த வகையாக வெல்லாம் அதைப் பாராட்ட முடியுமோ அந்த அந்த வகை யாகப் பாராட்டி யிருக்கின்றார். கல்வி, கேள்வி, அனுபவங்களிலே கிளியைப் பற்றி அறிந்தவற்றை யெல்லாம் எப்படியோ தொடுத்துக் கோத்திருக்கின்றார். கிளியைப் போலத் தூது செல்லுவதற்குரிய பொருள் வேறில்லை யென்று சொல்லுவதற்காக நிகண்டிலே கிளியின் பெயர்களாக உள்ள பதங்களும், புராண இதிகாசங்களும், சிலேடையணி முதலிய கருவிகளும், இவருக்குத் துணையாக நிற்கின்றன. கிளிதான் சகலமுமென்றவரைக்குங் கூட இவர் பாராட்டிப் பேசி விடுகிறாரெனின் வேறு என் செய்வது !

“…. ….. ….. …… – கண்ட
செகமுழுது நீஞான தீபமுநீயென்று
சுகமுனியே சொல்லாரோ”

என்று இவர் வினாவும் பொழுது ‘ஆம்” என்று விடையளிப் பதையன்றி வேறு வழியேது ; யுக்தியினால் சமற்காரமாகக் கிளிக்கு உயர்ந்த புகழைக்கூறிப் பாராட்டும் இடங்கள் இதிலே பல இருக்கின்றன. கிளியைப் பலர் தம் கையிலே பிடிப்பர்; இதே விஷயத்தைக் கிளிக்குப் பெருமை விளைவிக்கும் உருவத்திலே மாற்றி,

“பால் குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால் பிடிப்பார் கோடி பேர் கண்டாயே”

என்று அமைக்கும் இக்கவிஞருடைய சாமர்த்தியத்தை நாம் வியவாமல் இருப்பது எங்ஙனம்?

திருமாலுடைய பெருமையை மரபறிந்து புகழ்கின்றார். தலப் பெருமையையும், தசாங்கங்களையும், திருவிழா நடைபெறும் முறையையும் ஒழுங்காக உணர்த்துகின்றார். இந்தத் தலத்திலே உள்ள பல கைங்கர்யபரர்களின் பெயர்களை வரிசையாகத் தெரிவிக் கின்றார். அந்தப் பகுதியினால் கிளிக்காவது, தலைவிக்காவது, நமக்காவது பெரும் பயன் ஒன்றும் இல்லையென்றாலும் ஆசிரியர் தம் காலத்தில் இருந்த அவர்களைக் கிளியோடும் அழகரோடும் சேர்த்து அவர்கள் புகழையும் கல்லிற் பொறித்தது போல் தம் சொல்லிற் பொறித்திருக்கின்றார். இது புலவருடைய நன்றியறி வென்றோ, அம்மக்களுடைய பாக்கியமென்றோ இரண்டுமென்றோ சொல்வதிற் பிழை யாதும் இல்லை.

கணபதி துணை
திருமாலிருஞ் சோலைமலை அழகர் கிள்ளைவிடு தூது

காப்பு
(வெண்பா )
தெள்ளு தமிழழகர் சீபதிவாழ் வார்மீது
கிள்ளைவிடு தூது கிளத்தவே – பிள்ளைக்
குருகூரத் தானேசங் கூர்கமுகி லேறும்
குருகூரத் தானேசங் கூர்.

நூல்
கிளியின் பெருமை

கார்கொண்ட மேனிக் கடவுள் பெயர் கொண்டு 1
நீர்கொண்ட பாய னிறங்கொண்டு- சீர்கொண்ட
வையம் படைக்கு மதனையுமேற் கொண்டின்பம்
செய்யுங் கிளியரசே செப்பக்கேள் – வையமெலாம்
வேளாண்மை யென்னும் விளைவுக்கு நின்வார்த்தை
கேளா தவரார்காண் கிள்ளையே- நாளும்
மலைத்திடு மாரனொற்றை வண்டிலுமில் லாமற்
செலுத்திய காற் றேரை முழுத் தேராய்ப் – பெலத்திழுத்துக்
கொண்டுதிரி பச்சைக் குதிரா யுனக்கெதிரோ 5
பண்டுதிரி வெய்யோன் பரியேழும் – கண்ட


குறிப்புரை

காப்பு
அழகர் : திருமாலிருஞ் சோலைமலையில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருநாமம் ; இதன் வடமொழிப்பெயர் அலங்காரரென்பது. சீபதி – ஸ்ரீபதி ; அழகர்மலையின் திரு நாமங்களுள் ஒன்று. பிள்ளைக் குருகு – நாரைக்குஞ்சு. ஊர – தன்பின்னே ஊர்ந்து வருதலால். தானே சங்கு ஊர் கமுகில் ஏறும் : ஊர்கமுகு – மேற்பாகம் பரவியுள்ள கமுகு ; ஊர்தல் – பரத்தல். சங்கு ஏறுதற்கு இடமான. குருகூர் அத்தான் – ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியுள்ள தலைவனே; அத்தான் – அத்தனே : விளி ; “நம்பான்” (தே.) என்பது போல. நேசம்கூர் – திருவருள் புரிவாயாக. கிளத்த நேசம் கூர் என இயைக்க.

நூல்

  1. கடவுள் – திருமால். பெயர் – அவருடைய திரு நாமமான அரி யென்பதை ; அரியென்பது கிளிக்கும் உரிய பெயர். பாயல் – அவருடைய படுக்கையான ஆலிலையின் நிறம் – பச்சை நிறம். (பி – ம்.) கடவுளினற் பேர்கொண்டு.
  2. வை அம்பு அடைக்கும் மதனையும் : மதனையும் – மன்மதனை யும். கிளி – மன்மதனுக்கு வாகனமாதலால், ‘மதனையுமேற் கொண்டு’ என்றார். வையம் படைக்கும் அதனையும் – புவியைப் படைக்கும் அத் தொழிலையுமென்று வேறொரு பொருளும் தோற்றுகின்றது. (பி- ம்.) செய்யும் பசுங்கிளியே.
  3. வேளாண்மை – மன்மதனுடைய ஆட்சி ; பயிர்களை விளைத்தல்; சிலேடை. வேளாண்மைத் தொழிலாகிய விளைச்சலென்பது மற்றொரு பொருள். (பி – ம்.) என்றும் விளைவுக்கு முன்.
  4. மலைத்திடும் – போர் செய்யும். மாரன் – மன்மதன். ஒற்றை வண்டில் – ஒரு சக்கரம் ; சக்கரம் வண்டிலெனவும் வழங்கும் (தேவை யுலா, 2006). கால்தேர் – தென்றற்காற்றாகிய தேர் ; காற்பங்கான தேரென்பது மற்றொரு பொருள். மாரன் செலுத்திய என இயைக்க. பெலத்து – பலம் கொண்டு.
  5. பச்சைக்குதிராய் – பச்சைக்குதிரையே ; என்றது சூரியன் தேரிலுள்ள ஏழு பச்சைக்குதிரைகளை நினைந்து. (பி – ம்.) பரியெல்லாம்.

4-5. ஒற்றைச் சக்கரத்தையுடைய சூரியன் தேரை இழுத்துச் செல் லும் ஏழு பச்சைக் குதிரைகளும் ஒரு சக்கரமும் இல்லாத தேரை இழுத் துச் செல்லும் பச்சைக் குதிரையாகிய உனக்கு ஒப்பாகமாட்டா.

செகமுழுது நீஞான தீபமுநீ யென்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய்-வகைவகையாய்
எவ்வண்ண மாய்ப்பறக்கு மெப்பறவை யாயினுமுன்
ஐவண்ணத் துள்ளே யடங்குமே – மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதிலுனைப் பார்ப்பதியென் பாரென்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய் – நாக்குத்
தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை
விடுவா ரொருவருண்டோ விள்ளாய் – அடுபோர்
மறந்தரு சீவகனார் மங்கையரிற் றத்தை 10
சிறந்தது நின் பேர்படைத்த சீரே-பிறந்தவர்


  1. சுகமுனி – சுகமுனிவர் ; கிளிவடிவங்கொண்டிருந்த கிருதாசி யென்னும் தெய்வமகளிடம் வியாசருடைய கருணையால் அவதரித்தமை யின் இவர் இப்பெயர் பெற்றார். செக……… முனியே : சுகமுனிவர் பிறந்த பொழுதே துறவு பூண்டு பூமியில் நடந்து சென்றார். அவர் தந்தையான வியாசர், ‘குழந்தாய்’ என்று அவரை அழைப்ப எல்லாப் பொருளும் ஏனென்று கேட்டனவென்பர்;
    “பிறந்தபொழு தேதுறந்து பிறைக் குழவி போனடப்பப் பின் போய்த் தொன்னூல்,
    அறைந்தபுகழ் வியாத முனி யாதரத்தான் மதலாயென் றழைப்பச் செவ்வாய்,
    திறந்து நறை பொழியு மலர்ச் செழுந்தருவு மேனென்ன வுயிர்கள் யாவும்,
    நிறைந் துறையுஞ் சுகமுனிவ னிரையிதழ்த் தா மரைமலர்த்தா ணினை தல் செய்வாம்”
    (பாகவதம், காப்பு 3) என்பதனாலும் இவர் எங்கும் வியாபகமா யிருந்தனரென்பது விளங்கும். சுகமுனிவர் உன் வயிற்றிற் பிறந்தவர் ராதலால் புகழ்பெற்றார்.
  2. ஐவண்ணம் – ஐந்து நிறம் ; பஞ்சவர்ணக்கிளியென்று கிளியில் ஒரு சாதியுண்டு.
  3. பார்வதியென்று யாரும் உன்னை நினையாதபடி முற்றும் பசுமை யாயுள்ள தன்மை நீங்கி மூக்குமட்டும் சிவந்தாயென்றபடி ; இதனால் உன்னுடைய அடக்கம் வெளிப்படுகின்றது. பார்வதிதேவியார் பச்சை நிறமுடையவர். (பி – ம்.) பொழுதிற் பசுங்கிளி.
  4. உன்னை – குழறிப்பேசுகின்ற உன்னை விடுவார் – தள்ளுபவர்.
  5. சீவகனார் – சிந்தாமணி யென்னும் காப்பியத்தலைவன். ததீதை – காந்தருவதத்தை; சீவகனுடைய பட்டத்தேவியருள் முதல்வி ; இவள் பெயர் தத்தை யென்றும் வழங்கும்.

(பி – ம்.) பிறந்தவருள், பறந்து வரும்.

ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ருஞ்சிவன்றன்
பேரும் பகர்ந்தார் பிழையன்றோ – நேர்பெறுவி
வேகி யொருகூடு விட்டு மறு கூடடையும்
யோகி யுனக்குவமை யுண்டோகாண் – நீகிரம்
ஆகையாலாடை யுனக்குண்டே பாடகமும்
நீ கொள்வாய் காலாழி நீங்காயே- ஏகாத
கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே
அற்புடைய பெண்கொடிநீ யாகாயோ- பொற்புடையோர்
துன்னியசா யுச்யஞ் சுகரூப மாகையால் 15
அன்னது நின்சொருப் மல்லவோ-வன்னி
பரிசித்த வெல்லாம் பரிசுத்த மென்றோ
உருசித்த வுன்னெச்சி லுண்பார்- துரிசற்றோர்


  1. அச்சுதன்பேர் அரங்கனென்பது. சிவன் தன்பேர் சொக்க னென்பது. கிளி ரங்கரங்கா வென்று கூறுதல் வெளிப்படை. சொக்கர் பெயரைக் கூறுதல்,
    “புழுகுநெய்ச் சொக்க ரபிடேகச் சொக்கர்கர்ப் பூரச் சொக்கர்,
    அழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்க ரங்கயற்கண்,
    தழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரென்றென்று சந்தத நீ,
    பழகிய சொற்குப் பயன் றேர்ந்து வாவிங்கென் பைங்கிளியே” (மதுரைக். 54)
    என்பதனால் விளங்கும். பகர்ந்தால் – கற்பித்தால். பிழை – தகுதியில்லார்க்குக் கற் பித்தல். அச்சுதன்பேரையும் சிவன்பேரையும் நீ பிழையில்லாமற் கூறுகின்றாய். மற்றப் பறவைகளுக்குக் கற்பித்தால் அவை பிழைபடக் கூறும் ; அங்ஙனம் கற்பித்தல் பிழை. நேர் – நேர்மை . (பி – ம்.) பேரும் படைத்தாற் பிழையாரோ .
  2. கூடு – உடம்பு, பறவைக் கூடு. ஒருகூடு விட்டு மறுகூட்டை அடையும் யோகி உனக்கு உவமை ஆகான்; அவன் தான் இருக்கும் உடம்பை விட்டு அரூபியாகி வேறோர் உடம்பிற் புகுவான் ; நீ உடம் போடு வேறு கூட்டை அடைவாய் ;
    “கிட்டுநெறி யோகியருங் கிள்ளை களுந் தங்கூடு,
    விட்டுமறு கூடடையும் வேங்கடமே” (திருவேங்கட மாலை, 73).
    கீரம் – கிளி, பால் ; சிலேடை.
    11-2. விவேகி – விவேகியாகிய ஒருவன்.
  3. ஆடை-பாலின் ஆடை ; இங்கே சட்டை. பாடகம்- ஓராபரணம். காலாழி – ஒருவகை அணி ; இது பீலியென்னும் ஆபரணத்தோடு சேர்த்து வழங்கப்படும். கிளிக்குச் சட்டை போடுதலும், கால்விரல்களில் மோதி ரம் போடுதலும் உண்டு. ஏகாத – நீங்காத.
  4. கற்புடையாய் – கல்லின் பக்கத்தே யுள்ளாய், கற்பை யுடையாய்; சிலேடை. நீ கற்புடையா யென்றால். காமனை – மன்மதனை, காவாகிய மனையை; கா – சோலை ; சிலேடை.
    13-4. கிளியையும் பெண்ணென்று கூறுதற்குரிய காரணங்கள் சிலேடை வகையாற் கூறப்பட்டன.
    15-6. சுகரூபம் – இன்பரூபம். வன்னி – கிளி , நெருப்பு. உன் எச்சில் – உன்னுடைய உச்சிட்டத்தை. கிளி கடித்த பழம் சிறந்தது ;
    “சுழித்து நல்ல தொழுகியஞ் சுகமுகஞ் சேர்ந்து,
    தழைத்த நான் மறைத் தடஞ்சினைக் கற்பகத் தருவிற்,
    பழுத்து திர்ந்தது பரமபாகவத மென் றிசைக்கும்,
    விழுப்பெ ருங்கனி நுகர்ச்சியே விரும்புவார் மேலோர் ” (பாகவதம், காப்பு. 4).
    வன்னியென்னும் பெயர், “அச்ச, மனப் பேதையார் மால் வனஞ்சுடவோ வன்னி, எனப்பேர் படைத்தா யியம்பாய்” (49 – 50) என்று பின்னும் சிலேடையில் அமைக்கப்பட் டுள்ளது.

(பி – ம்.) பரிசுத்த மெல்லாம், அரிசித்த ருன்னெச்சி லார்வார் ; உரிசித்து நின்னெச்சில்.

இன்சொல்லைக் கற்பா ரெவர் சொல்லு நீகற்பாய்
உன்சொல்லைக் கற்கவல்லா ருண்டோகாண்- நின்போலத்
தள்ளரிய யோகங்கள் சாதியா தேபச்சைப்
பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த
மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப்
பாலனத் தாலே பசிதீர்ப்பாய்-மேலினத்தோர்
நட்டா ரெனினு நடந்துவரும் பூசைதனை 20
விட்டார் முகத்தில் விழித்திடாய் – வெட்டுமிரு

வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனை நீ கண்டா லகன்றிடுவாய்-கேளாய்
இருவடிவு கொண்டமையா லெங்கள் பெரிய
திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாய் – குருவாய்ச்
செபதே சிகர்க்கெல்லாந் தென்னரங்கர் நாமம்
உபதேச மாக வுரைப்பாய் – இபமுலையார்
சித்தங் களிகூரச் செவ்விதழி லாடவர்போல்
முத்தங் கொடுக்க முகங்கோணாய் – நித்தமவர்
செவ்விதழுன் மூக்காற் சிவந்ததோ வுன் மூக்கில் 25
அவ்விதழின் சிவப்புண் டானதோ – செவ்வியிழந்


  1. உண்டோ : இல்லையென்றபடி . (பி – ம்.) உன் சொற்கற் பாரொருவ ருண்டோகாண்.
  2. யோகங்கள் – மருந்துகள், யோகாப்பியாசங்கள். பச்சைப் பிள்ளையாய் – இளம்பிள்ளையாகி. இளம்பிள்ளையைப் பச்சைப் பிள்ளை யென்பது வழக்கு. எப்போதும் இளம்பிள்ளையாயிருத்தற்கு யோகம் இன்றியமையாதது. உள் உணர்ந்த – அறிஞர்கள் உள்ளத்தால் உண ரப்பட்ட. (பி – ம்.) உள்ளுணர்ந்து .
  3. பாலனம் : திருமாலுக்குப் பரிபாலனத்தொழிலென்றும் கிளிக்குப் பாற்சோறென்றும் கொள்க. (பி – ம்.) மேலினத்து.
  4. நட்டார் – நண்பர். பூசைதனை விட்டார் – பூனையை உன்மேல் விட்டவர், பூஜையைச் செய்யாது விட்டவர்.
  5. உறவில்லாளனை – மிக வில்லையாள்கின்ற வேடனை, உறவு இல்லாதவனை ; சிலேடை.
  6. இருவடிவு : கருடனுக்குப் புருஷ வடிவமும் பறவை வடிவ மும்; கிளிக்குப் பச்சை வடிவமும் சிவப்பு வடிவமும். பெரிய திருவடி கள்-கருடன்; “வயங்கு மீருரு வண்ண க் கலுழன்” (தக்க. 286.) வீறு – வேறொன்றற்கில்லாத பெருமை. “மெய்யின், வடிவம் வளைந்த மணி மூக்கு மாயன், கொடியிலிருப்பவர் தங் கூறோ ” என்பர் பின் ; 56-7.
  7. செபதேசிகர் – ஜபஞ்செய்தலையுடைய குருமார். உரைப்பது : ரங்க ரங்காவென்பது. இபம் – யானை ; இங்கே அதன் கொம்பு அல்லது மத்தகம்.
  8. இதழ் – கீழுதடு. ஆடவர்போல் – கணவரைப்போல. முத்தங் கொடுத்தல் ஆடவர் தொழில். அவர் – அம்மகளிருடைய. (பி-ம்.) செவ்வி தழ் நின்; செவ்வியழியாதவர் போல்.

25. (பி – ம்.) அவ்வித ழிற்சிவப்புண் டானதோ – செவ்வியாம்.

தண்டருக்குந் தோற்றா னடல் வேளா னானை நீ
கொண்டிழுத்தா லாகுங் குறையுண்டோ – உண்டடக்கி
ஆயுவை நீட்ட வருந்தவத்தோர் பூரகஞ்செய்
வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்- தேயசொளிர்
மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மா துஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம் பிடித்தாய் – மெய்ப்பிடிக்கும்
பச்சைநிற மச்சுதற்கும் பார்ப்பதிக்கு முன்றனக்கும்
இச்சை பெற வந்தவித மெந்தவிதம் – மெச்சும்
குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக் கான 30
தரிகீர்த் தனத்தினா லன்றோ – தெரிவையர்கள்

ஆர்த்தவிர லுன்முகமொப் பாகையா லேகையைப்
பார்த்து முகமதனைப் பாரென்பார் – சீர்த்திக்
கிரியையிலே காணுங்காற் கிள்ளை யடையாத
பெரியதனம் வீணன்றோ பேசாய் தெரியுங்காற்


  1. தோற்றான் – தோல்வியுற்றவன், கண்ணுக்குப் புலப்படாத வன். அடல் வேள் ஆனானை – தோற்றானாகி அவர்களை அடுதலையுடைய மன்மதனை. தோல்வியுற்றவனை நீ இழுத்தும் குறையில்லாயென்றபடி. (பி – ம்.) ஆர்க்குங் குறை.
  2. ஆயுவை – ஆயுளை. பூரகம் – காற்றை உள்ளே நிரப்புதல். தென்றலென்னும் தேரை இழுக்கும் குதிரையாய் முன்னே செல்லுதல் பற்றி, ‘வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்’ என்றார் ; வாயு – தென்ற லாகிய தேர். தேயசு – ஒளி. (பி – ம்.) தேயு வொளிர்.
  3. மலர் மாது – திருமகள். திருமகள் கையில் கிளியுண்மை , “பின்னைத்தாய் கையிலுறை பெண்டத்தாய்”, “நாச்சியார், பங்கிருந் தாற் கையிற் பறந்திருப்பாய்” (65, 205) என்பவற்றாலும், உமாதேவியாரின் கையிலுண்மை, “களங்கனி யென்றுமை கைக்கிளி பார்க்குங் கறைக் கண்டனே” (காசிக். 61) என்பதனாலும் விளங்கும். வங்கணம் – நட்பு ; “நேசமிலா, வங்கணத்தி னன்று வலிய பகை 17 (தனிப்.)
  4. கீர்த்தனம் – இறைவன் பெயரை இசையோடு சார்த்திச் சொல்லுதல் (204 – 5).
    (பி – ம்.) குருவி நின்னாக்கு.
  5. தூங்கியெழுந்தவுடன் மகளிர் தம் கைவிரலைப் பார்த்துப் பின்பு கண்ணாடியில் முகத்தைப் பார்க்கவேண்டுமென்பது பண்டை மரபு ; இங்ஙனம் கூறுதற்குக் காரணம் அவர்களுடைய கைவிரலின் நகம் உன் மூக்கை ஒத்திருத்தலே.
    (பி – ம்.) பார்த்து முகத்தைப்பாரென் பார் பெரியோர்.

32. கிள்ளை – கிள்ளுதலை, கிளியை. பெரிய தனம் – பெருத்த நகில், பெருஞ்செல்வம்.

றேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும்
வீறுபெறு மே நீ விரும்பினாற்-கூறிலனம்
உன்னுடைய வூணன்றோ வூதப் பறந்து போம்
சின்னவடி வன்றோ செழுங்குயிலும் – என்னே
முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் 35
மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ -எதிரும்
கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல
வரும் புறா வுக்கு மொரு வாயோ- விரும்புமயில்
உற்ற பிணிமுகமே யுன்போற் சுகரூபம்
பெற்ற பறவை பிறவுண்டோ – கற்றறியும்
கல்வியுங் கேள்வியுநீ கைக்கொண்டாய் சாரிகைக்குன்
செல்வமதி லள்ளித் தெளித்தாயோ- சொல்வேத
மென்பரிநா லுக்கும் விதிசாரதிவில் வேள் –
தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன்போரில்
மேவுஞ் சிவன்விழியால் வேள் கருகி நாண்கருகிக் 40
கூவும் பெரிய குயில்கருகிப் -பாவம்போல்


  1. தேறப்பட்ட பழங்களானவை காவிலுள்ள தேனைச் சிந்துகின்ற சக்கையாகக் கெடும் ; நீ விரும்பினால் அக்கனிகள் வீறுபெறும் ; வீறுபெறுதலாவது கிளி கோதின பழமென்று எல்லாராலும் விரும்பி யுண்ணப்படுதல் : 16, பார்க்க. அனம் – சோறு, அன்னப்பறவை.
    இக்கண்ணியில் கன்னி, காவேரி, சிந்து, கோதாவிரி யென்னும் நதிப் பெயர்கள் தோற்றுகின்றன. கனி – தொகுத்தல்.
  2. ஊதுதற்குப் பறந்து செல்லும் சின்னமாகிய வாத்திய வடிவு; ஊதியவளவிற் பறந்துபோம் சிறிய வடிவு. குயில் மன்மதனுக்குச் சின்னமென்னும் வாத்தியமென்பது இங்கே அறிதற்பாலது.
  3. முடிச்சவிழ்த்தல் – பேரரும்பின் இதழ்க்கட்டை அவிழ்த்தல், இரகசியத்தை விரித்துச் சொல்லுதல். வாயுண்டோ வென்பது குழறு மென்றபடி (45 – 6).
    (பி – ம்.) முடிசேவியாமுன், முடி சேவித்தாலும்.
  4. கரும்புறா- கரும்பின் சுவையுறாத, கரிய புறாவென்னும் பறவை. புறா தூது விடுவனவற்றுள் ஒன்றென்பது மலையாள பாஷையிலுள்ள கபோத சந்தேச மென்னும் நூலால் அறியப்படுகின்றது (கபோதம் – புறா ; சந்தேசம் – தூது);
    “நன்புறவைத் தூண்டினது நாளுந்தூ துண்டொ ழிக்கும்,
    என்புறத்துத் தூதாக வெண்ணுமே” (கச்சியானந்த. வண்டு. 337)
  5. பிணிமுகமென்பது மயிலின் பெயர் ; நோயோடு கூடிய முக மென்பது மற்றொரு பொருள்.
  6. சாரிகை – நாகணவாய்ப்புள். செல்வமதில் அள்ளி – உன்னு டைய செல்வத்திற் சிறிய பாகத்தை அள்ளி. நாகணவாய்ப்புள் பேசும் வன்மை சிறிதே பெற்றதென்னும் கருத்தை உட்கொண்டு இங்ஙனம் கூறினார். (பி – ம்.) தெறித்தாயோ.
    38 – 9. வேத மென் பரி – வேதமாகிய மெல்லிய குதிரை ; வேதமென் னும் பரியுமாம்.
    விதி – பிரமன். (பி – ம்.) பரியா முனக்குச் சாரதியார்.

40. வேள் கருகி – நெற்றிக் கண்ணின் தீயால் மன்மதன் சாம்ப ராகி ; கருநிறத்தை அடைந்தென்பது மற்றொரு பொருள். மன்மதன் கரிய நிற முடையவன்; “ஆழி யுடையான் மகன் மாயன் ” (தண்டி. 48, மேற் ). நாண் – வண்டு. கூவும் – சின்னமாக இருந்து கூவுகின்ற. இயற்கைகள் செயற்கையாகக் கூறப்பட்டன.

நின்று மறுப்படுநா ணீதா னடுப்படையிற் 41
சென்று மறுப்படா தேவந்தாய் – என்றுமாக்
காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் றானாக்கு
மூக்கு மறுப்பாய் முகம்பாராய்-ஆக்கம்
வரையாம னன்மை வரத்தினை நல்கும்
அரிதாளை நீவிட் டகலாய் – இருகை
உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை
எனக்குமுனக் கும் பேத மீதே-மனைக்குள்
இதமாய் மனிதருட னே பழகு வாயன் 45
பதனான் முறையிட் டழைப்பாய் – மதுவுண்
டளிப்பிள்ளை வாய் குழறு மாம்பரத்தி லேறிக்
களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் – கிளிப்பிள்ளை
சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்
பின்னத்தைப் போலுமொரு பேறுண்டோ – அன்னமின்றிப்
பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்
கால்பிடிப்பார் கோடி பேர் கண்டாயே-மால்பிடித்தோர் 49
கைச்சிலைவே ளால் வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ


  1. மறுப்படு நாள் – தோல்வியுற்ற காலத்தில், சாம்பராகி மறுப் பட்ட காலத்தில் மறுப்படாதே வந்தாயென்றது, பச்சை நிறத்தோடி ருத்தலை நினைந்து.
    41-2. நாக்கு மூக்கு மறுப்பாய் – நாக்கையும் மூக்கையும் கொண்டு முறையே சுவைத்தலையும் மோத்தலையும் செய்ய மறுப்பாய் ; அறுப்பா யென்று பிரித்து, சொன்னவருடைய நாக்கையும் மூக்கையும் அறுப்பா யென்று வேறொரு பொருள் கொள்க. ஆக்கம் – செல்வம்.
    43-4. நன்மை வரத்தினை நல்கும் – நல்ல கரிய மேன்மையான தினையைக் கொடுக்கும், நல்ல வரத்தைக் கொடுக்கும் ; கருந்தினை யென்று ஒரு சாதியுண்டு. அரிதாளை – தினையின் அரிந்த தாளை , திரு மாலின் பாதங்களை ; “அரிதாள் , மறவாத பாக வதனே” (மான்விடு தூது, 45) என்று பிறரும் இதனைச் சிலேடையில் அமைத்துள்ளனர்.
  2. முறையிட்டு – முறைப்பெயரிட்டு ; அப்பா, அம்மா, அக்கா என்பன முதலியன.
  3. அளிப்பிள்ளை – இளைய வண்டு. ஆம்பரம் – மாமரம். பிள்ளைப் பூங்குயிலும் – பிள்ளையாகிய குயிலும் ; குயிலுக்கு மாமரம் உரியது. (பி – ம்.) களிப்புள்ள பூங்குயிலும்.
  4. சொன்னத்தை – சொல்லியதை, தங்கத்தை. அத்தைப் போலும் – அதனைப்போலும். அன்னம் இன்றி – அன்னம் இல்லாமல்.
    (பி – ம்.) சொன்னதை, அன்னதை ; அன்னமன்றிப். 48. பச்சைக் குழந்தை – இளங்குழந்தை. கால்பிடித்தல் – கிளியின் . கால் தம் கையிற்படும்படி வைத்துக் கொண்டிருத்தல்.
  5. நோயைத் தீர்ப்பதற்குரிய மருந்துகளுள் பச்சிலை ஒன்று.

(பி – ம்.) தீர்ப்பதற்கோர், தீர்ப்பதற்குப் .

பச்சிலை ரூபம் படைத்திருந்தாய் – அச்ச 50
மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி
எனப்பேர் படைத்தா யியம்பாய்- அனத்தை
நிலவோவென் பார்க ணெடுந்துயர்வே முத்தைக்
கொலவோ வரிவடிவங் கொண்டாய் – சிலைநுதலார்
கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ
கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய் நீ-உள்ளம்
மிகவுடை மாதர் விதனங் கெடவோ
சுகவடிவு நீ கொண்டாய் சொல்லாய் – தகவுடைய
தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும்
வித்தையடைந் தாயுனையார் மெச்சவல்லார் – முத்தமிழோர்
மாரதி பாரதியார்க் குன்னையுவ மானிப்பார் 55
ஆரதிக மார் தாழ் வறைந்திடாய்-ஊரறிய


  1. மால்வனம் – காம மயக்கமாகிய காட்டை. வன்னி – கிளி, நெருப்பு. அனத்தை – அன்னப்பறவையை, சோற்றை.
    50-51. அன்னப்பறவையையும் மயக்கத்தால் நிலவென்று அஞ்சும் மகளிர். “தலைவரைப் பிரிந்த மகளிர் நிலவைக் கண்டு வருந்துவராதலின் வெண்மையான பிற பொருள்களையும் கண்டு அஞ்சுவாராயினர்.
  2. கிள்ளை – குதிரை, கிளி. கிற்பாய் – வன்மையுடையாய். (பி – ம்.) கிர்ச்சிப்பாய், கிற்கிற்பாய்.
  3. உடைமாதர் – உடைந்த மகளிர். சுகவடிவு – கிளியாகிய வடிவு, இன்பவடிவு.
  4. தத்தை – கிளியை, ஆபத்தை. (பி-ம்.) தத்தையடையென்று.

55. மா ரதி – திருமகளுக்கும் ரதிதேவிக்கும். பாரதியார்க்கு – கலைமகளுக்கு. உவமை உயர்ந்ததென்பது கருத்து ; ” உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை ” (தொல். உவம். 3)

நெய்யிற்கை யிட்டாலு நீதான் பசுமையென்றே
கையிட்டுச் சுத்தீ கரிக்கலாம்-மெய்யின்
வடிவும் வளைந்த மணிமூக்கு மாயன்
கொடியி லிருப்பவர்தங் கூறோ-நெடியமால்
விண்டுதறித் தூது வேணுகா னத்தினிலே
பண்டு தழைத்த பசுந்தழையோ- கொண்ட சிற
கல்லிலங்கு மெய்யானை யன்றழித்து வீடணன் போய்த்
தொல்லிலங்கை கட்டுபுதுத் தோரணமோ நல்வாய்
மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக் 60
குழலி னிசைதானோ கூறாய்- அழகுக்
கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக்
குளிப்பிள்ளா யின்பரசக் குஞ்சே – வளிப்பிள்ளை
தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய்
பின்னைத்தாய் கையிலுறை பெண்டத் தாய்-பொன்னொத்தாய்
முத்தி நக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய்
ஒத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே –சுத்தமுறும்


  1. பசுமையென்றது கிளிப்பச்சை யென்ற ஒருவகை ரத்தினத்தை நினைந்து. கையிட்டு – கையைச் செலுத்தி, கையறைந்து.
  2. கொடியிலிருப்பவர் – கருடாழ்வார்.
  3. விண்டு – மூங்கிலை. தறித்து – வெட்டி. வேணு – புல்லாங்குழல். சிறகு, தழைத்த பசுந்தழையோ. சிறகு : இடைநிலைத் தீவகம். (பி – ம்.) தனித் தூதும்.
  4. மெய்யான் – இராவணன். கிளி தோரணத்திற்கு உவமை ; “மாடத்துப் பறக்குமொண் கிளியொ ழுங்கின், இலைசெரு கியப சும்பூந் தோரண மிசைய வார்த்தார் ” (பிரபு. சூனிய. இருந்த. 9) (பி – ம்.) 58-9, கொண்டனிருத்தல் விலங்கு.
  5. மணிவண்ணன் – நீலமணி போன்ற நிறத்தையுடைய கண்ண பிரான்.
  6. நலங்கு குளிப்பிள்ளாய் – நலங்கு குளித்தலையுடைய பிள்ளாய்; “நலங் காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன்” என்பர் பின் ; 195. வளிப்பிள்ளை – தென்றற்காற்று.
    (பி – ம்.) கிள்ளாய் நலுங்கு ; குளிப்புள்ளாய்.
  7. தாய்போலெடுத்துச் சஞ்சரிக்குமென்றது குதிரையாக இருந்து வளிப்பிள்ளையைத் தாங்கிச் செல்லுதலை நினைந்து. பின்னைத்தாய் – திரு மகள் ; நப்பின்னையுமாம். பொன் – கிளிச்சிறையென்னும் பொன். (பி – ம்.) பேதைத்தாய்.

63. முத்தி நகர் ஏழில் ஒன்று அவந்தி. வல்லாறில் – வல்லெழுத்து ஆறில் ; தவ்வரிப்பேர் உற்றது ஒன்று : தத்தை. அவந்தி யென்பதும் தத்தை யென்பதும் கிளியின் பெயர்கள்.

ஐந்து பூதத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே
முந்து முத லானபொருள் மூன்றிலொன்றே- வந்த
இருபயனி லொன்றே யிமையே விழியே 65
பருவ விழியிலுறை பாவாய் – ஒருநாரில்
ஏற்றுந் திருமாலை யெய்தப்போ யூரெல்லாம்
தூற்றுமலர் கொண்ட கதை சொல்லக்கேள் – தோற்றி

அழகர் சிறப்பு
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்
பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய
வரைத்தடந் தோளவுணன் வன்காயங் கூட்டி
அரைத்திடுஞ் சேனை யருந்தி – உருத்திரனாய்ப்
பண்ணுந் தொழிலைப் பகைத்து நிலக் காப்புமணிந்
துண்ணும் படியெல்லா முண்டருளி-வெண்ணெயுடன்
பூதனை தந்த பால் போதாம் லேபசித்து 70
வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத்


  1. ஐந்து பூதத்தில் ஒன்று : வன்னி (நெருப்பு). படை நான்கிலொன்று : குதிரை. குதிரைக்குக் கிள்ளையென்று ஒரு பெயர் உண்டு. முதலான பொருள் மூன்றில் – திரிமூர்த்திகளில் ஒன்று என்றது அரி யென்னும் பெயரை. வன்னி, கிள்ளை, அரியென்பன கிளியின் பெயர்கள்.
  2. இருபயன் – சுகம், துக்கம் ; ஒன்று : சுகம் ; அது கிளிக்கும் பெயர். நார் – அன்பு, பூத்தொடுக்கும் நார். (பி – ம்.) இமையாவிழியே.
  3. திருமாலை- அழகரை, அழகிய மாலையை. அலர் – பூ. பழிமொழி.
    65-6. ஒரு நாளில் தொடுத்த பூமாலையை அடையப்போய் மலரை மாத்திரம் கொண்டேனென்பது வேறு பொருள்.
  4. அரி – சிங்கம். அரன் – சிவன். நரன்வடிவுமாகியெனப் பிரித்து, நரனென்னும் அவதாரம் செய்தென்று கொள்ளுதலுமாம். இக்கண்ணி நரசிங்காவதாரத்தைச் சுட்டியது.
  5. அவுணன் – இரணியன். காயம் – உடம்பு, உணவுப் பொரு ளோடு சேர்க்கும் பலவகைப் பொடி ; இது மசாலையென வழங்கும் ; “உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் ” (நாலடி. 116). சேனைசைனியத்தை, சேனைக்கிழங்கை. உருத்திரனாய் – நிலைபெற்ற வடிவை யுடையவனாகி, உருத்திரனென்னும் கடவுளாகி.
    (பி – ம்.) சேநெயருந்தி.
  6. பண்ணும் தொழில் – காத்தற்றொழில். நிலக்காப்பு – மண்ணைக் குழைத்திட்ட பொட்டு, நிலத்தைக் காத்தல். குழந்தைகளுக்கு மண் பொட்டிடுதல் மரபு ; “மண்பொட் டணிந்து நீறிட்டு ” (பிரபு. மாயை யுற்பத்தி. 46). உண்ணும் உலகங்களை யெல்லாம் உண்டு; படி – உலகம், படியால் அளக்கப்படும் அரிசியால் ஆகிய பிரசாதம் ; “குளப்படி நெய் யடிசிற் கொத்ததோ” (திருவரங்கத். 89)

70. வேதனை – துன்பத்தை, பிரமதேவனை. பாதவத்தை மரங்களை.

தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும் 71
பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஒள்ளிழையார்
கொல்லைப்பெண் ணைக்குதிரை யாக்குந் திருப்புயத்தான்
கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப்
பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர முதுகடைந்த வங்கையான்- நாரியுடன்
வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான் – என் காதல்
வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன் மிதந்தோன் 75
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான் – தெள்ளிதின்
வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான்
கிட்ட விருந்துங் கிடையாதான்- தட்டாதென்
எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன்
கண்ண னெனும் பெயராற் காண்பிப்போன்- எண்ணுங்கால்


  1. ஒள்ளிழையார் – ஒள்ளிய ஆபரணத்தை யணிந்த மகளிர் .
  2. கொல்லையிலுள்ள பனைமரத்தாலாகிய குதிரையாக்குதற்குக் காரணமான ; மகளிர் மடலேறுதல், திவ்யப்பிரபந்தத்திலுள்ள பெரிய திருமடல் முதலியவற்றால் அறியப்படும். புயவழகைக் கண்டு மகளிர் மடலேறுவாரென்பது கருத்து. பெண் -‘அகலிகை. கவிக்கு – திருமழிசை யாழ்வார் மாணாக்கரான கணிகண்ணர் பொருட்டு.
  3. முதுகு அடைந்த பாயலான் : அரவப், பாயலைத் தோளில் எடுத்துத் தூக்கிக் கணிகண்ணர்க்குப் பின்னே சென்றாரென்னும் பழைய வரலாறு இங்கே அறியத்தக்கது ; ‘பணிகொண்ட முடவுப் படப்பாய்ச் சுருட்டுப் பணைத்தோ ளெருத்தலைப்பப், பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே ” (மீனாட்சி. பிள்ளைத். காப்பு. 1). ஆர் அமுதுகடைந்த – அரிய அமுதத் தைக் கடைந்த; “கடல் கடைந் தமுதங் கொண்ட, அண்ணலை” (திருவாய். 3. 4: 9). நாரியுடன் – சீதாபிராட்டியோடு.
  4. வன் கானகம் கடந்த – வலிய தண்டகாரணியத்தைக் கடந்து சென்ற. வேட்டுவற்கு – சரனென்னும் வேடனுக்கு. மென் கால் நகங்கள் தந்த – மெல்லிய கால் நகங்களைத் தந்த. கண்ணபிரானுடைய காலை மானாக நினைந்து சரத்தை எய்து, பின் கண்ணபிரானது பாதமென்று அறிந்து வருந்திய அவனுக்கு வீட்டையும் அளித்தனரென்பதை வீட்டினா னென்பதனால் உடம்படு புணர்த்தினார் ; இந்த வரலாறு பாகவதம், 11-ஆம் கந்தம் தன்னுடைச் சோதிக்கெழுந்தருளிய அத்தியாயம், 28-ஆம் செய்யுள் முதலியவற்றால் அறியப்படும்.
  5. முதலடியில் முரண் அமைந்துள்ளது.

77. மாயன் – கரிய நிறமுடையவன், மாயையை யுடையவன். கண்ணன் – எல்லார் கண்ணிலும் உள்ளவன்; ” வீதிவாய்ச் செல்கின்றான்போல் விழித்திமை யாது நின்ற, மாதரார் கண்க ளூடே வாவுமான் றேரிற் செல்வான், யாதினு முயர்ந்தோர் தன்னை யாவர்க்குங் கண்ண னென்றே, ஒதிய பெயர்க்குத் தானே யுறுபொரு ளுணர்த்தி விட்டான்” (கம்ப. உலாவியற். 6) என்பதிலும் இச்சொல் இப்பொருளில் அமைக்கப் பட்டுள்ளது. (பி – ம்.) நண்ணுங்கால்.

எங்கு மிலாதிருந்தே யெங்கு நிறைந்திருப்போன்
எங்கு நிறைந்திருந்தே யெங்குமிலான் – அங்கறியும்
என்னை யெனக்கொளத்தி யானென்றுங் காணாத
தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை
கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை 80
என்றுந் தனியே யிருத்துவோன்- துன்றுபிர
மாவுநான் மன்னுயிரு நானவ் விருவரையும்
ஏவுவான் றானு நா னென்றுணர்த்தக்-கோவலர்பால்
ஆனுமா யான்கன்று மாகி யவற்றை மேய்ப்
பானுமாய் நின்ற பரஞ்சோதி-மா நரகப்
பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாவுடலில்
ஆருயிர் கூட்ட வயன் வேண்டா – பாருமெனச்
சங்கத் தொனியுந் தடங்குழ லோசையெனும்
துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்- பொங்குமலை
மோதும் பரனாதி மூல மிவனென்றே 85
ஓதுங் கரியொன் றுடையமால் – மூதுலகைத்
தந்திடுவோ னுந்துடைப்போன் றானு நா னென்று திரு
உந்தியால் வாயா லுரைத்திடுவோன்- பைந்தமிழால்


  1. கோவலர்பால் – இடையரிடத்தில். 80-81. பிரமாவும் நான்.
  2. பிரமன் ஆன்கன்றுகளையும் சிறார்களையும் கவர்ந்து ஒளித்து வைத்த பொழுது கண்ணபிரான் அப்பொருள்களாக இருந்தன ரென்பது, பாகவதம், மலரவன் சிறார்க்கன்று கவர்ந்த அத்தியாயத்தால் அறியப்படும்.
    83-4. துரியோதனனைச் சேர்ந்தவர்கள் தீ து செய்தவராயினும், கண்ணபிரானது சங்கத்தொனியைக் கேட்டமையின் நரகம் புகாராயி னார் ; ஆதலின் நரகப்பேரிருள் நீக்கச் சங்கத்தொனி தொனிப்பிப்போன் என்றார். வேய்ங்குழலோசையால் பட்டுப்போன மரங்கள் தளிர்த்தன வாதலின், ‘ உடலில் ஆருயிர் கூட்ட வயன்வேண்டா ‘ என்றும், ‘குழ லோசை………….. தொனிப்பிப்போன்’ என்றும் கூறினார். அலை – திருப் பாற்கடல்.
    (பி – ம்.) தொனியாய்த் தொனிப்பிப்போன்.
  3. கரி – கசேந்திரனென்னும் யானை, சாட்சி.

86. உந்தி – நாபி; இது தன்பால் பிரமனைத் தோற்றி உலகைச் சிருட்டிப்பது. பிரளயகாலத்தில் உலகத்தை உண்டமையால் வாய் அழித்தற்கு உரியது ; ” உலக முண்ட பெருவாயா” (திருவாய். 6:10:1)

ஆதிமறை நான்கையுநா லாயிரத்து நற்கவியா
ஓதும் பதினொருவ ருள்ளத்தான்-பாதமெனும்
செந்தா மரைமலரிற் சிந்திய தேன்போல
மந்தா கினிவழியும் வண்மையான்-சந்ததமும்
ஆன்ற வுலக மறிவுமறி யாமையுமாத்
தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத்
தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம் புறமும் 90
உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைக்
கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த
அவிச்சையுவர் வாங்கமுகி லானோன் – நிவப்பா
மடங்கும் பரசமய வாத நதிவந்
தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற்
புணர்க்க வொருகிரணம் போலுமெனை யுங்கொண்
டணைக்க மணிநிறமு மானோன் – பணைக்கும்
விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும்
அசைப்போனுந் தானாகு மண்ணல்-இசைத்திசைத்
மீன்பிடிக்கும் வேட ரொருபார்வை யானூறு 95
மான்பிடிக் கின்ற வகையென்னத்-தான்படைத்த


  1. பதினொருவர் – ஆழ்வார்கள் பன்னிருவருள் மதுரகவி யொழிந்த மற்றையோர்.
  2. திரிவிக்கிரமாவதாரகாலத்தில் வலக்காலை மேலே தூக்கிய போது கங்கை வழிந்ததென்பர். மந்தாகினி : வளைந்து செல்வ தென்பது இதன் அவயவப் பொருள்.
  3. துயிலாத் துயில் – அறிதுயில். ஈன்றவளை – யசோதையை.
  4. கொள்ளை – மிகுதி. (பி – ம்.) இருப்ப வுணர்வித்தோன்.
    89-90. ஈன்றவளை உணர்வித்தோனென இயைக்க.
  5. அவிச்சையுவர் – அஞ்ஞானமாகிய உப்பை. உவரை நீக்கி நீரைக் கொள்வது முகிலின் இயல்பு; முகில் – மேகம். நிவப்பா – உயர் வாக.
  6. கடலுக்கு நதிபதியென்று ஒரு பெயருமுண்டு. 91-2. (பி – ம்.) நிவப்பா மடங்காப்.
  7. நீலமணி ஏனை நிறங்களைத் தனக்குள்ளே அடக்கிக்கொள்ளும் இயல்புடையது.

95. பார்வை – பார்வைமிருகம் ; மிருகங்களைப் பிடிப்பதற்காக வேடர்கள் வளர்க்கும் மிருகங்கள் அல்லது அவற்றைப் போல மண்ணாற் செய்த வடிவங்கள் ; இவை தீபகமென்றும் சொல்லப்படும்.

என் பிறவி யெண்பத்து நான்குநூ றாயிரமும் 96
தன்பிறவி பத்தாற் றணித்திடுவோன் – முன்பு புகழ்ந்

தசாங்கங்கள்
(மலை)
தேத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச
வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம்
வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாம்
சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி – எங்கோமான்
மேய்த்த நிரைபோல வெற்புகளெல் லாஞ்சூழ
வாய்த்த நிரையிலொரு மால் விடையாய்ப் பார்த்திடலால்
இன்னிய மார்க்கு மிடபகிரி யென்னும்பேர் 100
மன்னிய சோலை மலையினான்-எந்நாளும்

(நதி)
பொற்சிலம்பி லோடுஞ்சாம் பூந்தபோன் மாணிக்க
நற்சிலம்பி லோடு நதியாகிக்-கற்சிலம்பில்


  1. பிறவி எண்பத்து நான்கு நூறாயிரமென்பது எண்பத்து நான்கு லட்சம் பிறப்பின் பேதங்களை. பிறவி பத்து – தசாவதாரம் ; தாம் அவதாரம் எடுத்தமையால் அவற்றைத் தியானிக்க என் பிறவி தீர்ந்த தென்பது கருத்து.
  2. இருவர் – பிரமதேவரும் உருத்திரரும். கேசவாத்திரி – அழகர் மலையின் திருநாமங்களுள் ஒன்று.
  3. காத்திரம் சேர் விலங்குகளை – உடம்பை அடைகின்ற பிறவி களாகிய தளைகளை, முன்காலைச் சேர்ந்த மிருகங்களாகிய யானைகளை ; சிலேடை. காத்திரம் – யானையின் முன்கால். சிங்காத்திரி : இம்மலையின் திரு நாமம். எம்கோமான் – கண்ணபிரான்.
  4. கீழேயிருக்கும் சிறு குன்றுகளுக்குப் பசு நிரையும், அழகர் மலைக்கு இடபமும் உவமை. தருமதேவதை இடபவடிவங்கொண்டு இங்கே தவஞ் செய்து வழிபட்டுப் பேறுபெற்றமையின் இடபகிரி யென்ற பெயர் உண்டாயிற்றென்பர்.
  5. இனிமை இயம் – இனிய வாத்தியங்கள் ;
    “முன்றி லதிர்மும் முரசினான்’ என்பர் பின் ; 122.
    97-100. இக்கண்ணிகளால் அழகர் மலையின் திருநாமங்களாகிய கேசவாத்திரி, சிம்மாத்திரி, இடபமலை, சோலைமலை என்னும் திருநாமங் கள் பாராட்டப் பெற்றுள்ளன. (பி – ம்.) கிரியெனும்பேர்.

101. பொற்சிலம்பில் – மேருமலையில். சாம்பூந்தம்-மேருவின் தென் பால் ஓடும் ஓராறு ; நாவற்பழத்தின் சாறே ஆறாக ஓடுதலால் இந்நதம் சாம்பூ நதமெனப் பெயர் பெற்றது; நதம் – மேற்கு நோக்கி ஓடும் ஆறு. மாணிக்க நற்சிலம்பு – திருவடியில் அணியப் பெற்றுள்ள மாணிக்கப் பரலையுடைய சிலம்பென்னும் ஆபரணம். கற்சிலம்பில் – பலவகையான கல்மலைகளுக்கு இடையே .

இந்திரன் போலு மிடபா சலமவன்மேல் 102
வந்தவிழி போலும் வளச்சுனைகள் – முந்து திரு
மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம்
போல வருநூ புரநதியான் – சீலமுறு

(நாடு)
பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு
முன்னிருகை காது முலைமுகங்கால் – பின்னகங்கண்
காட்டு மவற்றுட் கனகவரை மீது புகழ் 105
தீட்டும் புன்னாடுந் தென்னாடும்- நாட்டமாம்
அந்நா டிரண்டி லருள்சேர் வலக்கணெனும்
நன்னாடாந் தென்பாண்டி நாட்டினான் – பொன்னுருவச்

(ஊர்)
சந்த்ரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை
இந்திரவி மான மிதுவென்றும் – மந்த்ர விரு
துக்கொடி யேறு துசத்தம்பம் வல்லிசா 108
தக்கொடி யேறுகற்ப தாருவென்றும் – மிக்கோர்க்


  1. சுனைகளுக்கு இந்திரன் விழிகள் உவமை.
  2. முத்தாரம் தோளிலும் மார்பிலும் உள்ளன; நதிக்கு முத்தாரம் உவமை ; “மாயோன் மார்பி லாரம் போல, மணிவரை யிழிதரு மணி கிளரருவி” (தொல். செய். 35, பேர். மேற் ); “நதிக்குப் போத வொழுகு முத்தாரமும்” (தக்க. 280). நூபுரநதி – சிலம்பாறு ; “நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை” (சிலப். 11 : 108); “சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ் சோலை” (பெரியதிரு. 9. 9 : 9)
  3. பன்னிரு செந்தமிழ் சேர் நாடுகள் – செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள் ; “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி, பன்றி யருவாவதன் வடக்கு-நன்றாய, சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர், ஏதமில் பன்னிரு நாட் டெண்” (நன். 272, மயிலை. மேற்.). பின்னகம் – பின்னல். கண் – கண்கள். கையிரண்டு, காதிரண்டு, நகிலிரண்டு, முகம், காலிரண்டு, பின்னல், கண்ணிரண்டு ஆகிய பன்னிரண்டு உறுப்புக்களும் பன்னிரு நாடுகளுக்கு உவமை.
    (பி – ம்.) செந்தமிழ் நாடுகளும் ; வின்னகங்கண்.
  4. கனகவரை – மேருமலை. புனல் நாடு – சோழ நாடு. தென்னாடுபாண்டி நாடு. நாட்டம் ஆம் – கண்கள் ஆகும். (பி-ம்.) காட்டு மவற்றுக் கனக.
  5. சோமச்சந்திர விமானம் : இஃது அழகருடைய விமானத்தின் திருநாமம். தருமதேவதையின் கட்டளைப்படி விசுவகருமா சந்திர மண்டலத்தைப்போல அமைத்தமையால் இப்பெயர் பெற்றது ; இது சோமச்சந்த விமானமென்றும் வழங்கும் ; ” வந்த விமானத்தமரர் மலர் தூவிப் பணிசோமச், சந்தவிமா னத்தமருஞ் செளந்தரிய பரஞ்சோதி 1) (அழகர் கலம். 1)

107-8. விருதுக்கொடி – வெற்றிக்கொடி. துசத்தம்பம் – துவசத்தம் பம். வல்லிசாதக்கொடி – கற்பகமரத்திற் படரும் காமவல்லி.

கொருவாழ்வா னோனை யுபேந்திரனே யென்றும்
திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும்
நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை 110
விண்ணவர்கோ னாதி விபுதரென்றும் – எண்ணுதலால்
ஆர்பதி யான வமரா பதிபோலும்
சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில்

(மாலை)
எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த
வண்ணந் தருந்துளப மாலையான் –உண்ணின்

(யானை)
துருக்கும் வயிணவமா மோங்குமதம் பொங்கத்
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர – நெருக்கிய


  1. ஒரு வாழ்வானோனென்றது அழகரை. திருமாலையாண்டான் – உடையவருடைய குரு ; இவருடைய விக்கிரகம் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியின் பக்கத்தே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஸுப்ர பாதபடனம், புஷ்பாஞ்சலி முதலியன இவர் சொல்லா நிற்ப அர்ச்சகர் செய்யவேண்டும். திவ்யப்ரபந்த சேவையும் உண்டு. இவருடைய சந்ததியார் பெருமாள் எழுந்தருளும்பொழுது முன்னே பல்லக்கில் வருவார்கள். திரியெடுத்தாடுதல் முதலியவற்றில் இவர்களுக்குக் காணிக்கை யுண்டு. இவர்களைச் சேவித்தபின் அடியார்கள் பெருமாளைச் சேவிப் பார்கள்.
    (பி – ம்.) ஒருவாழ்வானோனே.
  2. நம்பி – திருமலை நம்பி; இவர் கைங்கரிய பரர் ; பட்டைக் கைங் கரியமென்று பெயர்; இக்கைங்கரியம் தர்ப்பம், கூர்ச்சம், பவித்ரம் முதலியன கொடுத்துப் புண்யாஹவா-சனாதிகள் செய்து வைக்கும் பௌரோகித சம்பந்தமானது. இவர் பரம்பரையார் இன்றும் இங்கேயே இருந்து கைங்கரியஞ் செய்து வருகிறார்கள். விபுதர் – தேவர்.
    (பி – ம்.) நம்பி முதலோர்கள்.
  3. ஆர் பதி – நிறைந்த ஊர். சீர்பதி-ஸ்ரீபதி ; இஃது இம்மலைக்கு உரிய ஒரு திருநாமம்.
  4. கலன் – ஆபரணங்கள். மற்ற ஆபரணங்களோடு சேர்ந்துள்ள துளபமாலைக்கு இந்திரவில் உவமை.
    (பி – ம்.) கலனிறத்தால், கலைநிறம்போ லிந்திரவிற்.

113. மதம் – சமயம், யானையின் மதம். திருக்கொம்பு – திருமகளாகிய பூங்கொம்பு, அழகிய யானைக்கொம்பு. துதிக்கை – துதித்தல், யானை யின் துதிக்கை .

பாகமொத்த வைகான் தம் பாஞ்ச ராத்திரமாம் 114
ஆகமத்தி னோசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு
மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக- விட்டுவிடா
வானந்த மான மலர்த்தாள்கண் டத்துவி
தானந்த மென்றகளி யானையான் – தானந்த

(குதிரை)
வர்க்கத் துடனெழுந்து வாயி னுரைகடந்து
கற்கி வடிவுநலங் காண்பித்துச் சொர்க்கத்தில்
ஏறுங் கதிகாட்டி யெய்து மணுத்தோற்றி
வீறும் பலகலையும் வென்றோடி – ஆறங்கம்
சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டு தாரணியிற்
போற்றிய வேதப் புரவியான் – பாற்கடலிற்

(கொடி)
புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் 120
சக்கரமும் போலத் தலைசுழன்று – தொக்கவிசை


  1. வைகானதம், பாஞ்சராத்திரம் : வைஷ்ணவ ஆகமங்களின் பெயர்கள். (பி – ம்.) மோகமுறும்.
  2. வடகலை, தென்கலை – வைணவ மதத்தின் உட்பிரிவுகள். புரசைக் கயிறு – யானையின் கழுத்திற் கட்டும் கயிறு. (பி – ம்.) விட்டுவட.
  3. வான் அந்தம் ஆன.
    (பி – ம்.) மானம் வரத்தாள் கண்டு ; தாள்கணடத்து செவிக், கானந்தம்.
    117-9. வேதத்துக்கும் குதிரைக்கும் சிலேடை.
  4. வர்க்கம் – எழுத்தின் வர்க்கம், சேணம். வாயின் உரைகடந்துமனிதர் வாயின் உரையைக் கடந்து, வாயில் நுரைகள் தந்தென்பது மற் றொரு பொருள். கற்கிவடிவு – கோயிலின் வடிவு. குதிரையின் வடிவு; கற்கி – கோயில் ; “கற்கிளர் கற்கி செய்தோன்” (சேது. இராமநாத. 43)
  5. அணு – துளி, உயிர் தோற்றி – வெளிப்படச் செய்து. கலை – நூல்கள், மான்கள். ஆறு அங்கம் – வேதாங்கம் ஆறு, ஆறுவகை உறுப்புக்கள்.
  6. மந்திரத்திற்குப் பம்பரமும், பூமிக்குச் சக்கரமும் உவமைகள். விசை – வேகம்.

(பி – ம்.) பூமியு மம்பரமும்.

வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப் 121
பற்றுங் கருடப் பதாகையான் – சுற்றியதன்

(முரசு )
குன்றிலரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர
முன்றி லதிர்மும் முரசினான் – என்றும்

(ஆணை )
அவனசை யாம லஹிவசையாதென்னும்
தவநிலை யாணை தரித்தோன் – நவநீதம்
மேனியிற் சிந்தியது மென்கையி லேந்தியதும்
வானி லுடுவு மதியுமெனத் – தானுண்டோன்
செங்கதிரும் வெண்கதிரு மென்னத் திருவிழியும் 125
சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன் – அங்கணுல
குண்டகனி வாயா னுறையுந் திருவயிற்றான்
கொண்ட படியீன்ற கொப்பூழான் – மண்டி
அளந்த திருத்தாளா னன்றேற்ற கையான்
விளைந்த பொருள் காட்டு மெய்யான்-உளங்கொண்


  1. கருடப்பதாகை – கருடக்கொடி : பதாகை – பெருங்கொடி. (பி-ம்.) பொழுதுவிடா, வாசுகியுஞ் சேடனையும்.
  2. அரி – சிங்கம். கரி – யானை. கொண்மூ – மேகம். மும்முரசு – நியாய முரசு, தியாக முரசு. வீர முரசு (புறநா. 58 : 12, உரை)
  3. “அவனன்றி யோரணுவு மசையாது” (தாயுமான. எங்கு நிறைகின்ற. 1). நவநீதம் – வெண்ணெய்.
  4. உடு – நட்சத்திரம். மதி – சந்திரன்.
  5. மேனியிற் சிந்திய வெண்ணெயின் சிறிய பிதிர்களுக்கு நட்சத்திரமும், கையில் எடுத்த பெரிய உருண்டைகளுக்கு மதியும் உவமைகள்.
  6. திங்கள் இடக்கண்ணும் சங்கும், சூரியன் வலக்கண்ணும் சக்கரமும் ஆகும்.
    (பி – ம்.) செங்கதிர் வெண்கதிர் நா லென்னத். வெண்கதிர் நாளென்னத்.
    125-6. உலகு உறையும் என இயைக்க. கொண்டபடி – உட் கொண்டபடி. கொப்பூழ் – திருவுந்தி. (பி – ம்.) ஈன்ற கொப்புளான்.

127. பூமியை அளந்ததும் அதனை ஏற்றதும் வாமனாவதாரத்தில். விளைந்த பொருள் – பச்சைப்பயிர்.

டிடந்த மருப்பினா னேந்து முதுகான் 128
படந்தனில் வைத்தமணிப் பாயான் – தொடர்ந்த வினை
முட்டறுக்குந் தன்னாம முன்னித் திருநாமம்
இட்டவருக் கீவோ னிகபரங்கள் – எட்டெழுத்தாற்
பிஞ்செழுத்தாய் நையும் பிரம் லிபியெனும்பேர் 130
அஞ்செழுத்தை மூன்றெழுத்த தாக்குவோன் – வஞ்சமறத்
தங்கள் குன் றெங்கிருந்துஞ் சங்கர னாதியோர்
நங்கள் குன்றி தென்னவரு நண்புடையோன் – அங்கோர்
வயமுனிக்குக் கண்ணிரண்டு மாற்றினோன் போற்றும்
கயமுனிக்குக் கண் கொடுத்த கண்ணன் – நயமுரைக்கின்


  1. இடந்த – பெயர்த்த; இது வராகாவதாரத்தில். முதுகிலேந்தி யது கூர்மாவதாரத்தில் பாய் – ஆதிசேடன்.
    126-8. ” கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ்புக், கிடந் திடுந் தன்னுட் கரக்கு முமிழும், தடம் பெருந்தோ ளாரத் தழுவும் பாரென்னும், மடந்தையை மால் செய்கின்ற மாலார் காண்பாரே”, ” உண்டு முமிழ்ந்துங் கடந்து மிடந்துங் கிடந்து நின்றும், கொண்ட கோலத்தோடு வீற்றிருந்துமணங் கூடியும், கண்டவாற்றாற் றனதே யுலகென நின்றான்” (திருவாய். 2, 8:7, 4.5: 10)
  2. முட்டு – தடை. தன் நாமம் முன்னி – தன் திருநாமங்களைத் தியானித்து. திருநாமம் இட்டவருக்கு – திருமண்குறிகளை இட்ட அடி யார்களுக்கு ;
    “மணிவாசற் றூங்க வொரு குடைக் கீழ்வையங் காத்துச் சிந்தா,
    மணிவா சவனென வாழ்ந்திருப் போர்பின்னை மாதிருக்கும்,
    மணி வாச மார்பரங் காகேச வாவென்று வாழ்த்தித்திரு,
    மணிவாசகங்கொண் பணிவா ரடியை வணங்கினரே” (திருவரங்கத். 72);
    “ஈராறு நாம் முரை செய்து மண் கொண் டிடுவார்கள் காணு மிமையோர் (வி. பா. 9-ஆம் போர்ச். 1). எட்டெழுத்து – அஷ்டாக்ஷரம்.
  3. பிஞ்சு எழுத்தாய் – சிறிய எழுத்தாய் : பிஞ்சு எழுத்து எனப் பிரித்து, பிய்ந்த எழுத்து எனினுமாம். பிரமலிபி : ஐந்தெழுத்தாலாகி யது ; அஞ்சு எழுத்து – யாவரும் அஞ்சுதற்குரிய எழுத்தெனினுமாம். மூன்று எழுத்தது – மூன்று எழுத்தையுடைய இல்லையென்னுஞ் சொல் ; “போதனார் நெட்டெழுத்து நமனா ரிட்ட குற்றெழுத்தும் புனலெழுத் தாய்ப்போக” (சீரங்க. ஊசல். 16)
    (பி- ம்.) எழுத்தா னையும் ; அஞ்செழுத்து ; அஞ்சலியாத்.
  4. (பி-ம்.) தங்கள் குன் றத்திருந்தும்; நங்கள் குன்றென்றுவரு.

132. வயமுனி – பச்சைவாரண தாசர்; இவர் திருக்கச்சி நம்பி முன் னோர்களுள் ஒருவர்; பச்சைவாரணப் பெருமாள் கோயிலில் வழிபட்டவர். இவருக்கு ஹஸ்திகிரியில் கண்ணைப் போக்கினதாகவும், அழகர் மலையில் கண்ணைக் கொடுத்ததாகவும் வரதராஜ ஸ்தவத்தில் கூரத்தாழ்வார் கூறி யிருப்பதாகப் பெரியோர் கூறுவர். கயமுனி – யானைக் கன்று; இதற்குக் ‘கண் கொடுத்தது, “வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில் வண்டோ டிரண்டு பாடும் மழைபாய் கடாக்கரிக் கண் கொடுத்தும் 11 (அழகர் பிள்ளைத். அம்புலிப். 4) என்பதிலும் கூறப்பட்டுள்ளது.

அஞ்சுபடை யோனெனினு மஞ்சாம் லங்கையில்வா
சஞ்செய்யு முத்யோகச் சக்கரத்தான் – எஞ்சாது
விண்ணிலங்கொள் பொன்னிலங்கை வெற்றியாய்க் கொண்டாலும்
மண்ணிலங்கைத் தானமாய் வாங்குவோன் – பண்ணிலங்கும்
ஏரணி பொன்னரங்கத் தெம்பிரான் போலெவர்க்கும் 135
தாரணி நல்காத தம்பிரான் – காரணியும்
செங்கைத் தலத்திடத்துந் தென்மதுரை யூரிடத்தும்
சங்கத் தழகனெனுந் தம்பிரான் – எங்கும்
திருப்பாது கைக்குஞ் செழுங்கருட னுக்கும்
திருப்பாது கைக்குமர சீந்தோன் – விருப்பமுகம்
சந்திர னான சவுந்தர வல்லியுடன்
சுந்தர ராசனெனத் தோன்றினோன் – அந்தம்
சொல நலங்கொ டோளழகாற் சுந்தரத் தோளன்
மலையலங் காரனென வந்தோன் – பலவிதமாய்


  1. அஞ்சுபடை – பஞ்சாயுதம், அஞ்சுகின்ற படை. உத்தியோகச் சக்கரம் : உத்தியோகச் சக்கரம், பிரயோகச் சக்கரமெனச் சக்கராயுதம் இருவகைப்படும்; அவற்றுள் இயல்பாக உள்ளது உத்தியோகச் சக்கரம்.
  2. பொன் இலங்கை – பொன்மயமான இலங்கை நகரத்தை. மண் நிலத்தை. கைத்தானமாய் வாங்குவோன் – மகாபலியினிடத்தே தானமாய்க் கையில் வாங்குவோன்.
  3. அரங்கத் தெம்பிரான் – ஸ்ரீரங்க நாதர். ஸ்ரீரங்கநாதர் நாச்சி யார் பலருக்கு மாலையை அளிப்பவர் ; அழகர் ஆண்டாளுக்கு மட்டும் மாலை அளிப்பவராதலின் இங்ஙனம் கூறினார். தாரணி – மாலையாகிய ஆபரணத்தை. கார் அணியும் – கொடையால் மேகத்தை ஒத்த. (பி- ம்.) நல்காத தண்மையான் ; சீரணியும்.
  4. இடச்செங்கையில் சங்கமென்னும் ஆயுதத்தையுடைய அழகர் ; தென்மதுரையூரிடத்தில் தமிழ்ச்சங்கத்திலுள்ள அழகர் ; “சுத்தத் தமிழ்ப் புலவர், சங்கத் திருப்பிரியான் சார்பு ” (அழகர் கலம். 68)
  5. திருப்பாது உகைக்கும் – பின்வாங்காமல் செலுத்துகின்ற. கருடன் – கருடாழ்வான் ; கருடனுக்கு அரசீந்தது, பறவைகளுக்கு அரசாக்கியது. திருப்பாதுகை – திருவடி நிலை ; அதற்கு அரசீந்தது இராமாவதாரத்தில். (பி – ம்.) அரசீய்ந்தோன்.
  6. சவுந்தரவல்லி – இத்தலத்து நாச்சியார் திருநாமம். அந்தம் – அழகு.
  7. தோள் அழகால் – தோளாலும் அழகாலும். தோளால் சுந்தரத் தோளனென்றும், அழகால் மலையலங்காரனென்றும் திருநாமங்கள் உண்டாயின.

(பி – ம்.) சொல நலங்கொளழகாற் ; தோளழகர்.

வழிபட்டோர்
நண்ணியதெய் வத்தை நரரெல்லாம் பூசித்த 140
புண்ணியமே தன்னைவந்து பூசித்தோன் – கண்ணனைய
பாத கமலம் பரவுமல யத்துவசன்
பாத கமலம் பறித்திடுவோன்-கோதில்
அரணாம் புயங்களுறு மம்பரீ டற்குச்
சரணாம் புயங்க டருவோன் – திருநாளில்

கோடைத் திருவிழா
சந்தக்கா வூடு தவழ்ந்துவருந் தென்றற்கால்
மந்தக்கா லாக மருவுங்காற் – சிந்திக்கும்
வாடைத் துளிபோன் மலர்த்தேன் றுளிதுளிக்கும்
கோடைத் திருவிழாக் கொண்டருளி- நீடுவிடைக்
குன்றிலுற்ற வெள்ளங் கொழுந்தோடி வையைதனிற் 145
சென்றெதிர்த்து நிற்பதெனச் சீபதியோர்-அன்றெதிர்த்துக்
கூடலிற் கூடலெனுங் கூடற் றிருநகரில்
ஏடலர் தாரா னெழுந்தருளி – ஆடலுடன்


  1. புண்ணியம் – தருமதேவதை ; தருமதேவதை வழிபட்டதை, 99-ஆம் கண்ணியின் குறிப்புரையால் அறியலாம். கள் நனைய – தேனை யுடைய அரும்புகளையுடையன-வாகிய ; அரும்புகள், அன்பர்கள் இட்டவை.
  2. பாத கமலம் பரவு – திருவடித்தாமரைகளை வணங்கிய . மலயத் துவசன் – மலயத்துவச பாண்டியன் ; இவன் இத்தலத்தில் கோயிற்றிருப் பணி முதலிய திருப்பணிகளையும் நித்தவிழா முதலியவற்றையும் செய் வித்துப் பேறுபெற்றவன்; இவ்வரலாறு இத்தலபுராணத்திலும் உள்ளது; “பதித்தமலை யத்துவச பாண்டியனை யாண்டனையே” (அழகர் கலம். 1). பாதகமாகிய மலத்தை . (பி – ம்.) மலையத்துவசன்.
  3. அரணாம் புயங்கள் – தம்முடைய குடிகளுக்கு அரணாகிய தோள்கள் ; “அரண்டரு திரடோள் ” (கம்ப. சடாயுவுயிர். 63). அம்பரீடன் : இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற ஓரரசன். சரண அம்புயங்கள் – திருவடித்தாமரைகளை.
  4. சந்தக்காவூடு – சந்தனச் சோலையினுள்ளே ; என்றது பொதி யின் மலையிலுள்ள சந்தனச் சோலையை. மந்தக்கால் ஆக – மந்தமாருத மாக ; தென்றலின் மூவகை நடையுள் மந்தம் ஒன்று.
    144-5. விடைக் குன்று ; அழகர்மலை ; 99, பார்க்க. சீபதியோர் – அழகர் மலையிலுள்ளோர். (பி – ம்.) சென்றெதிர்த்துக்.

145-6. சீபதியோர் கூடுதலால் கூடலென்னும் பெயர் பெற்ற மது ரையில் ; இது பிரிநிலை நவிற்சியணி. தரரான் – அழகர்.

கல்லா குளங்கள் கரையப் பணிவார்முன் 147
தல்லாகுளம்வந்து சார்ந்தருளி – மெல்ல

வையைக்கு எழுந்தருளுதல்
நரலோக மீது நடந்துவரு கின்ற
பரலோக மென்று சிலர் பார்க்கச்- சுரலோகத்
திந்த்ர விமானமிது வென்று மிதுசோமச்
சந்த்ர விமானமே தானென்றும் – முந்தியவட்
டாங்க விமான மவையிரண்டு மென்னவே 150
தாங்கு விமானந் தனிற்புகுமுன் – தீங்கிலார்
உன்னி விமான முரத்தெடுக்கும் போதனந்தன் –
சென்னிமணி யொன்று தெறித்தெழுந்த-தென்னவே
உம்பரில் வெய்யோ னுதயஞ் செயக்குதிரை
நம்பிரா னேறி நடந்தருளி- அம்பரத்திற்


  1. கல் ஆகு உளங்கள் – கல்லைப் போன்ற மனங்கள். தல்லா குளம் – மண்டபப்படியுள்ள ஓர் ஊரின் பெயர் ; இது வையை நதிக்கு வடக்கே உள்ளது.
  2. நரலோகமீது – பூமியின்மேல். சுரலோகத்து – தேவருலகத் தில் உள்ள.
  3. சோமச்சந்திர விமானம் : இத்தலத்துள்ள கோயிலின் விமா னம் ; 107-ஆம் கண்ணியின் குறிப்பைப் பார்க்க.
    149-50. அட்டாங்க விமானம் : எட்டு அங்கங்களையுடையது : அழ கருடைய சோமச்சந்திர விமானமும், கூடலழகருடைய விமானமும் இவ்வாறு கூறப்படுதலால், ” அட்டாங்க விமான மவையிரண்டும் 11 என்றார். இதன் இலக்கணத்தை , அழகர் பிள்ளைத் தமிழ், முத்தப் பருவம், “மட்பாவை தோயும் ” (7) என்னும் முதற் குறிப்புடைய செய் யுளால் அறிந்து கொள்ளலாம். தீங்கிலார் – விமானந் தாங்குவோர்.
    (பி – ம்.) அவையிரண்டென்னவே.
  4. உரத்து – வன்மைகொண்டு. அனந்தன் – ஆதிசேடனு டைய. சென்னிமணி – தலையிலுள்ள மணிகளுள்.
  5. குதிரை நம்பிரான் – பெருமாளுடைய வாகனமான குதிரை ; உத்தம் இலக்கணம் அமைந்த குதிரையைக் குதிரை நம்பிரானென்றல் மரபு (சீவக. 2157, ந.)

151-2. சூரியனுக்கு ஆதிசேடனுடைய மணி உவமை.

கோடி கதிரோனுங் கோடி பனிமதியும்
ஓடி நிரையா வுதித்தவென- நீடிய
பொற்கொடியும் வெள்ளிக் குடையும் பொலிந்திலங்க
விற்கொடிகள் விண்ணோர் பெயர் துடைப்பச் சொற்கத்
தியலுங் கரியுமதி பெற்று முரசும் 155
புயலு முருமேறும் போலக்-கயலினத்தை
அள்ளுந் திரைவையை யாறுட் பரந்து நர
வெள்ளங் கரைகடந்து மீதூர-வள்ளல்
திருத்தகு மேகம்போற் செல்லுதலானீர் தூம்
துருத்தி மழைபோற் சொரியக் – கருத்துடனே
வாட்டமற வந்து வரங்கேட்கு மன்பருக்குக்
கேட்டவர மூறுங் கிணறுபோல் நாட்டமுடன்
காணிக்கை வாங்கியன்பர் கைகோடி யள்ளியிடும்
ஆணிப்பொற் கொப்பரைமுன் னாகவரக்-காணிற்
புரந்தரற்கு நேரிதென்று போற்றிசைப்ப வோரா 160
யிரந்திருக்கண் வையைந்தி யெய்தி-உரந்தரித்த

வண்டியூர் மண்டபத்தில் எழுந்தருளுதல்
வார்மண்டு கொங்கை மனம்போல் விலங்குவண்டி
யூர் மண்டபத்தி னுவந்திருந்து – சீர்மண்டு


  1. கதிரோன் – சூரியன். மதி – சந்திரன். நிரையா – வரிசையாக,
    153 – 4. பொற்குடைக்குச் சூரியனும், வெள்ளிக்குடைக்குச் சந்திர னும் உவமைகள். விற்கொடிகள் – ஒளியையுடைய கொடிகள்.
  2. எற்றும் – அடிக்கப்படும்.
  3. (பி – ம்.) யாறு பரந்துநிறை.
  4. நீர்தூம் துருத்தி – நீர் தூவும் ஒருவகைக் கருவி.
  5. காணிக்கை – கையுறைகளை.
  6. திருக்கண் – வையை நதியினிடையே அழகர் திருக்கண் சாத்தியருளுதற்காக வைக்கப்படும் பூர்ண கும்பமுதலியன உள்ள மண்டபங்கள். ஆயிரம், பலவென்னும் பொருளை யுடையது. ஆயிரங் கண்களை யுடைமையால் வையை நதிக்கு இந்திரனை உவமை கூறினர். உரம் – மார்பு. (பி – ம்.) நதியேற.

161. வார்மண்டு கொங்கை – திருமகள். வண்டியூர் மண்டபம் – வையைக்கு வடகிழக்கு உள்ள ஓரூர். இவ்வூரில் சிவகங்கையரசரால் மண்டபப்படி நடத்தப்பெற்று வருகின்ற-தென்பர்.

மாயனுக்கு வாகனமாய் வாவென்று சேடனைத்தான் 162
போயழைக்க வெய்யோன் புகுந்திடலும்-தூயோன்
மருளப் பகலை மறைத்தவனிப்போ
திருளைப் பகல் செய்தா னென்னத் – தெருளவே
அங்கிக் கடவுளும்வந் தன்பருட னாடுதல்போற்
றிங்கட் கடவுள் சேவிப்பதுபோற் – கங்குற்
கர தீப மும்வாணக் காட்சியுங் காண 165
வரதீப ரூபமாய் வந்த- திருமால்

தலைவி அழகரைத் தரிசித்து மயல் கொள்ளல்
அவனி பரிக்கு மனந்தாழ்வான் மீது
பவனிவரக் கண்டு பணிந்தேன் – அவனழகிற்
பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே
முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன் – பின்னழகு
தானே கண் டாலுந் தனக்குத் துயர்வருமென்
றேனோரை நோக்கி யெழுந்தருள – ஆனோன்
விமலத் திருமுகமு மென் மார்பின் மேவும்
கமலத் திருமுகமுங் கண்டேன் – அமலன்
அரவணையா னென்பதுமுண் டண்ணலரன் போல 170
இரவணையா னென்பதுமுண் டேனும் – பரவைத்


  1. சூரியன் அத்தமிக்க. தற்குறிப்பேற்றவணி.
  2. பகலை மறைத்தது, கிருஷ்ணாவதாரத்தில் ; பகல் – சூரியன்.
  3. கர தீபம் – தீவட்டி. காண – காண்பதற்கு. தீபரூபமாய் வந்தது திருத்தண்காலில் ; இவருடைய திருநாமம் விளக்கொளிப் பெருமாளென்பது. (பி – ம்.) தீபரூபமாய் வந்தான்.
  4. அனந்தாழ்வான்மீது – ஆதிசேடவாகனத்தின்மீது. பவனி – உலா.
  5. பெருமானுடைய முன்னழகைப் போல்வதாகிய பின்னழ கைக் காணுமுன்னே . முன்னிலும் பின்பழகியரென்று பெருமாளுக்கு ஒரு திருநாமம் உண்டு ; ” முன்பிலும்பின் பழகிய நம் பெருமாள் ” (சீரங்க . ஊசல், 8). (பி – ம்.) தன்னழகைத்.
  6. (பி – ம்.) எழுந்தருளி – வானோன்.
  7. கமலத்திரு – தாமரைப் பூவிலுள்ள திருமகளது.

170. அரவணையான் – ஆதிசேடனை அணையாக உடையவன். இரவு அணையான் – யாசித்தலைப் பொருந்தான், இரவில் தழுவான்.

திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென் 171
துருவணையு மாதர்க் குரைத்தேன் – மருவணையும்

தலைவி அழகரை நோக்கிக் கூறுதல்
செங்கரத்தி லன்று திருடியவெண் ணெய்போலச்
சங்கிருக்க வென்சங்கு தான் கொண்டீர்-கொங்கை
மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத்
தலையருவி நீர்தானோ சாற்றீர்-விலையிலாப்
பொற்கலை யொன்றிருந்தாற் போதாதோ வன்று புனை
வற்கலையி லேவெறுப்பு வந்ததோ – நற்கலைதான்
ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ 175
சோரந் திரும்பத் தொடுத்தீரோ – ஈரஞ்சேர்
நூலாடை யாமெங்க ணுண்ணாடை தாமுமக்குப்
பாலாடை யாமோ பகருவீர்- மாலாகி
மொய்த்திரையு மெங்கண் மொழிகேளீர் பாற்கடலில்
நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ – இத்தரையிற்
பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடறான்
அங்குநிலா தும்மோ டணைந்ததோ – கங்குலெனும்


170-71. பரவைத் திருவணையான் – கடலிற் கட்டிய திருவணையை யுடையவன் , பாற்கடலிற்றோன்றிய திருமகளை அணையாதவன் ; பரவை – கடல் , பாற்கடல் .
மரு – வாசனை.

  1. (பி – ம்.) செப்புவதைப்பொய் ; முருகனையுஞ்.
  2. என் சங்கு – என்னுடைய வளையலை.
    172-3. கொங்கையாகிய மலையில் விழுகின்ற அருவி போன்ற கண்ணீ ர்.
  3. அன்று – இராமாவதாரத்தில். வற்கலை – மரவுரி . நற்கலை – நல்ல ஆடைகளை .
  4. ஆரம் – முத்துமாலைகள். கொங்கைக்கு – திரெளபதிக்கு. சோரம் – திருட்டுத் தொழில் ; என்றது கிருஷ்ணாவதாரத்தில் கோவியர் துகில் கவர்ந்ததை நினைந்து.
  5. பாலாடை – பால்போன்ற ஆடை, காய்ச்சிய பாலிலுள்ள ஏடு ; “ஆடைதனை யொதுக்கிடுமென் பால்வாரும் ” (அழகர் கலம். 87)
  6. மொய்த்து – நெருங்கி. இரையும் – முழங்கும். வேகவதி -வையை நதி. (பி – ம்.) வேகவதி நீருண்டோ .

178. நிலாவிற்குப் பாற்கடல் உவமை.

ஆனை கெசேந்திர னாகிலதன் மேல்வருவன்
மீனையும் விட்டு விடலாமோ -கானச்
சதிரிள மாதர் தமக்கிரங்கு வீர்நெஞ் 180
சதிரிளமா தர்க்கிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக்
கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில்
விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய்
மென்பா றெறித்த வியன்முலையைப் பாற்குடமென்
றன்பா லெடுத்த தறியீரோ-மின்போல்வார்
செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை
குன்றன் றெடுத்தீர் குளிருமமு தங்கடைந்தீர்
சென்றன்று பாம்பினடஞ் செய்தீரே-என்றென்று

அழகர் சோலைமலைக்கு மீளுதல்
கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத்தேனூர் 185
மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு- பண்டை
விரசையுடன் வைகுந்த வீடுமிது வென்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான்- வரிசை


  1. கெசேந்திரன் – கசேந்திராழ்வான். வன்மீனென்றது சந்தி ரனை ; கோள்களையும் மீனென்றல் மரபு ; “‘மைம்மீன் புகையினும் ” (புறநா. 117 : 1); முதலையென்பது மற்றொரு பொருள். கானம் – பாட்டு.
  2. சதிரிள மாதர் – இத்தலத்திலுள்ள தளிப்பெண்டுகள் ; இப் பெயர், ” சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது” (திருவாய்மொழி, 2. 10:2) என்பதிலும் காணப்படும். நெஞ்சு அதிர் இளமாதர்க்கு இரங்க ஒண்ணாதோ.
  3. கொட்டத்து – பால்கறக்கும் பாத்திரத்தில்.
    180-181. கன்றை விட்டுக் கறப்பதையென இயைக்க.
  4. எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். (பி – ம்.) எடுப்பதறியீரோ.
  5. செவ்வி தழை – அழகு தழைத்த . (பி – ம்.) யுண்பார்போல்.
  6. குன்று – கோவர்த்தன மலையை. அமுதங்கடைந்தீர் : ” ஆர முதுகடைந்த வங்கையான் ” என்றார் முன்னும் ; 73. பாம்பில் – காளியன் தலையில்.
  7. தேனூர் – மிகப் பழையதோர் ஊர் ; ஐங்குறுநூற்றிலும் இப் பெயர் வந்துள்ளது ; ” தேனூர் வெற்றிலையும் மானூர்ச் சுண்ணாம்பும் ” என்பது ஒரு பழமொழி.

186. விரசை – விரஜாநதி ; வைகுந்தத்திற்கு அருகே ஓடுவதோர் ஆறு. வைகுந்தவீடு – வைகுந்தமாகிய முத்தியுலகு. புரசைமலை – கசேந்திரனாகிய யானையை.

உபசாரங் கொண்டருளி யோர்சிவிகை மீது 187
தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட

தலைவியின் நிலை
வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான்
உள்ளிற் கனியானே யூர்ந்துவரும்-பிள்ளைமதி
செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும்
காற்றேரி னானுமொரு காலனன் றோவுருக்கி 190
ஊற்றாத சேமணியு மொன்றுண்டோ – வேற்றுக்
கிளையோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத்
துளையாக் குழலுமுண்டோ சொல்லாய்-கிளியரசே
என்கூடு பொன்கூடு மிந்த நிறத்தினால்
உன்கூடு மென்கூடு மொன்றுகாண் – என்கூட்டில்
மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத்
தீங்கனி யுண்டாசினியுண்டு-பாங்கிற்


  1. தபசு ஆர் அம் சீபதி – தவம் பொருந்திய அழகிய சோலை மலையை. இபம் – இங்கே யானை யென்னும் நோய் ; “தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோல் ” (சீவக. 232) என்பதன் உரையையும் ஒப்புமைப் பகுதியையும் பார்க்க.
  2. வெள்ளிங்கனி – விளாம்பழம். வேதனை யீன்றவன் – பிரமனைப் பெற்றவன், துன்பத்தைக் கொடுத்தவன் ; ” வேதனையும் பெற்று வெளி நின்று ” என்றார் முன்னும் ; 70. உள்ளில் கனியான் – மனத்தில் இரங் கான். பிள்ளைமதி – பிறை.
  3. செவ்வை மதியோ என்றது பிறை கோணியிருப்பதை நினைந்து. மொழி – பழிமொழி. கூற்று – யமன், சொல். எவ்வம்-துன்பம்.
  4. காற்றேரினான் – தென்றற்காற்றாகிய தேரையுடையவன். ஒரு காலன் – ஒற்றைத் தேர்ச்சக்கரத்தையுடையவன், ஓர் யமன். உருக்கி ஊற்றாத – வெண்கலத்தை உருக்கி ஊற்றப்படாத, தன் ஓசையைக் கேட்டாரை உருக்கி ஊற்றாத. சேமணி – இடபத்தின் கழுத்திற் கட்டிய மணி. உருக்கியூற்றாத சேமணி உண்டோ : ” மெழுகான், ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி 11 (குறுந். 155 : 3-4)
    190-191. வேற்றுக் கிளையோடு – வேறு மூங்கில்களோடு. சுட்டுத் துளையாக் குழல் – சுட்டுத் துளை செய்யப்படாத வேய்ங்குழல், தன் இசையைக் கேட்பவரைச் சுட்டுத் துளையாத குழல்.

192. என் கூடு – என்னுடம்பு. பொன் – பசலை. 193. கொவ்வைத் தீங்கனியென்றது உதட்டை. ஆசினி – பலா ; இங்கு அதன் பழத்திற்கு ஆயிற்று ; கொங்கைக்கு உவமை : “கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்” (திருவா. நீத்தல்.) (பி- ம்.) செழுங்கோவைத்.

குழையுமன முண்டுகுழம்பிய பாலுண்
டுழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்
தூட்டுவே னுன்னை யுருப்பசியா யென்னநலம் 195
காட்டுவேன் பட்டாடையாற்றுடைப்பேன்- கூட்டில்
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன்- அருகே
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் துளபமணி
ஈசன் றிருநாம மெல்லாமென் போலுனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே

பிற பொருள் தூதிற் சிறவா வென்றல்
ஈடுபட்ட வெள்ளை யெகினத்தைத் தூதுவிட்டாற்
சூடுபட் டார் துணிந்து சொல்வாரோ-கூடுகட்டி
அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாக் கோகிலந்தான் 200
என்பா லருள்வைத் தியம்புமோ-தன்பேர்
அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ- விரகஞ்செய்


  1. குழையும் மனம், குழையும் அனம். பால் – பகுதி, உண்ணும் பால், உழை – பக்கம்.
  2. உருப்பசியே தாயே என்றுகூற, உருவம் பசுத்திருப்பா யென்று யாவரும் சொல்ல. நலங்கு ஆட்டுவேன் : 61.
  3. ஆலத்தி – ஹாரத்தி ; அரசு, ஆல், அத்தி யென்னும் மரப் பெயர்கள் தோற்றுதல் ஒரு நயம். நறை – நறும்புகை.
  4. முத்தி – முத்தங்கொண்டு ; “புதல்வர் பூங்கண் முத்தி 1 (புறநா. 41:14)
  5. பேசென்று பயிற்றுவேனென இயைக்க.
  6. ஈடுபட்ட – எளிவரவுபட்ட (தக்க. 61, உரை). எகினத்தை – அன்னப்பறவையை. சூடு – உச்சிக் கொண்டை : இஃது அன்னத்தின் தலையிலுள்ள து. சூடுபட்டார் – சூடுண்டவரென்பது மற்றொரு பொருள்.
  7. வளர்த்த தாயார் – காக்கை. கோகிலம் – குயில். காக்கைக் கூட்டிலிருந்து வளர்ந்து இறகு முளைத்தபின் பறந்துபோய் விடுதல் குயிலின் இயல்பு ; ” வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற் கேட்டில் கடிந்தாள்” (சீவக. 1661); “உயிர்த்த பொழுதே நின் குரல்கே ளாமுன் ஓடிற் றீன்றதாய், நயத்தின் வளர்த்த தாய்குரல் கேட்டலுமே நடுங்கத் துரந்ததால் ” (பிரபு. பிரபுதேவர் வந்த. 63)

201. அரியென்று……. சொல்லும் : என்றது வண்டு குழறு மென்ற படி ; ” முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ “, ” அளிப்பிள்ளை வாய்குழறும் ” என்றார் முன் னும் ; 35, 46. அரி, அளியென்னும் இரண்டும் வண்டின் பெயர்கள். அரியென்பது திருமால் பெயர் ; அதைக் கூடச் சொல்லத் தெரியா தென் பதும், அரிச்சுவடியிலே முதல் வார்த்தையாகிய அரியென்பதே தெரியா தென்பதும் வேறு பொருள்; “அரியென்றெங்கள், தாலத்தின் மீதெழுதச் சமர்த்தி லாரோ” (அழகர்கலம். 6) விரகம் – பிரிவால் உண்டாகும் துன்பம்.

வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற 202
தென்காலு மென்காதல் செப்புமோ – பொன்காதல்
வண்டலையுந் தாரான்முன் மாதரையெல்லாந்தூற்றும்
கொண்டலையுந் தூதுவிடக் கூடுமோ -உண்ட
படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன்
கொடியோரும் போவாரோ கூறாய் – அடியார்கள்

கிளியின் தகுதி
அங்கிருந்தார் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார் 205
பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய் எங்கிருந்து
வந்தாயென் றான்மாலிருஞ்சோலையினிலிருந்
தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய் – அந்தச்
சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும்
உவந்தலர்சூடிக்கொடுத்தா ளுக்கும் – சிவந்த
கடுகிலே சங்கோபங் காணாம லென்மால்
வருகிலே சொல்வாய் வகையாய் – அடுகிலே
சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதானந்தரணி
கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய் – அங்கடுக்கின்


  1. காலதிக்கு – தெற்கு ; காலன் – யமன். துன்பத்தைச் செய்வாரோடு தொடர்புடைய-தென்பதைக் காட்டத் தெற்கென்னாது காலதிக் கென்றாள். மலைவாய் – பொதியின் மலையின்கண், மலைப்புடன். தென் கால் – தென்றல் காற்று. பொன் – திருமகள்.
  2. தாரான் – திருமால். மாதரை எல்லாம் தூற்றும் – பெண்களை யெல்லாம் பழி கூறுகின்ற பெரிய பூமி முழுதும் துளியைத் தூற்றுகின்ற. கொண்டலை – மேகத்தை.
  3. படி – உலகம். கொடியோர் – காக்கைகள், கொடுமையை யுடையவர் ; காகத்தைத் தூது விடுதலுண்டென்பது வடமொழியிலுள்ள காக சந்தேசமென்னும் நூலால் விளங்கும்.
  4. கீர்த்தனம் ; “குருகேயுன் னாக்குத்தான் கூழை நாக்கான, தரி கீர்த்தனத்தி-னாலன்றோ ” என்றார் முன்னும் ; 30. நாச்சியார் – ஆண் டாள் ; இவர் கையிற் கிளியிருக்கும்.
  5. சவுந்தரவல்லி : இத்தலத்துள்ள நாச்சியார் திருநாமம். தற் சொரூபி – அதே வடிவாயிருப்பவள். சூடிக்கொடுத்தாள் – ஆண்டாள்.
  6. கடுகு இலேசம் – கடுகளவாகிய சிறுமைகூட. மால் – மயல். வடுகு – தெலுங்கு.

208-9. அடு கிலேசம் கெடுப்பாய் – வருத்துகின்ற துன்பத்தைப் போக்குவாய். சச்சிதானந்தர் – அழகர். கொங்கு – தேன் ; பூந்தாதுமாம்.

அடையாளம்
ஒருகத்தி லாலாகி யோருகத்தி லேயரசாய் 210
ஒருகத்தி லேவில் லுவமாகி- ஓருகத்திற்
புத்திர தீபமுமாய்ப் புங்கவர்க்கா றாந்தருவாய்ச்
சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த
ஒரு கோடி காவுண் டொருகோடி யாறுண்
டொருகோடி பூஞ்சுனையு முண்டு – திருமால்
அறங்காக்கும் யோகிகள் போலல்லும் பகலும்
உறங்காப் புளிதானு முண்டு – திறஞ்சேர்
பிதாமக னோடுறையும் பெற்றி விளங்கப்
பிதாமகன் வந்து புகழ் பேசச் – சதாகால
முந்திரமாய் வாழு முபேந்திரனங் கில்லையென 215
இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப் – பிந்திய
தம்பியர் மூவருக்குந் தானே யாசீந்த
நம்பி திருத்தாளை நம்பினோர் – வெம்பிறவித்


  1. கிருதயுகத்தில் ஆலமரமாகவும், திரேதாயுகத்தில் அரச மரமாகவும், துவாபரயுகத்தில் பலாமரமாகவும், கலியுகத்தில் புத்திரஜீவி மரமாகவும் தருமம் விளங்கும் என்று இத்தலபுராணம் கூறும். இவர் மூன்றாம் யுகத்தில் வில்வமரத்தைக் கூறுகின்றார்.
  2. புத்திர தீபம் – ஒரு மரம். புங்கவர்க்கு – தேவர்க்கு . கற்பகங் கள் ஐந்தாதலின், ‘ஆறாந் தருவாய்?’ என்றார் ; “மூவரி னால்வரா முனி ” (கம்ப. மந்திரப். 5). என்பது போல.
  3. கா – சோலை.
  4. உறங்காப்புளி : இராஜகோபுரத்திற்கு வடக்கே பதினெட்டாம் படிக்கெதிரில் இது முன்னிருந்த தென்றும், சில நாளைக்கு முன் கீழே விழுந்துவிட்டதென்றும் அந்த இடத்தில் இப்பொழுது பூஜை நிவே தனம் நடந்து வருகின்றனவென்றும் கூறுவர். குமுதவல்லி-யோடு திருமங்கை மன்னன் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தபோது வைக்கப்பட்ட தென்பது கர்ண பரம்பரைச் செய்தி.
    யோகிகள் இரவும் பகலும் தூங்காதிருப்பர். அவர் போல் இலைகளை மூடாமல் எப்பொழுதும் விரித்தே இருக்கும் புளியை உறங்காப்புளி யென்பர்.
    212-3. திருமால் அறம் – ஸ்ரீவைஷ்ண வ தர்மம்.
  5. மகனோடு பிதா உறையும் பெற்றி. பிதாமகன் – பிரமன்.
    214-5. சதாகாலமும் – எப்பொழுதும் . திரம் -ஸ்திரம். உபேந்திரன் – அசுரரால் தேவர்களுக்கு உண்டாகும் துன்பத்தை மாற்றுவதற்குத் திருமால் உபேந்திரராக எழுந்தருளி யிருக்கிறாரென்பது மகாபுராண வரலாறு. “இருகூல மும்பொரு மா நீ ரரங்கத்தி லெந்தை ……… புருகூத னுக்குத் திருத்தம்பி யாகிப் புரக்கும் ” (திருவரங்கத்து மாலை, 16). முதலிலுள்ள அங்கென்றது தேவலோகத்தைக் குறித்தது.

216. மூவர் – பரதன், சுக்கிரீவன், விபீடணன் ஆகிய மூவர்.

ஸ்தலாசாரிய புருஷர்களும் பிறரும்
தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர் 217
ஆகும் ப்ரசித்தரா மர்ச்சகரும்-மோகமுறும்
கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற்
செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச்
செய்யுந் திருமாலிருஞ்சோலைச் சீயரென
வையம் விளங்கவரு மாதவரும் – பொய்யில்லா
ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொரு 220
மானதீ பங்காட்டி வந்து நின்று – மேனாளில்
முத்தமிழ்க்குப் பின்போவார் முன் போகப் பின்போன
அத்தன் றிருமாலை யாண்டானும்-பத்தியினால்
வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப்
பையங்கா ரென்னுமா சாரியரும் – மெய்யன்பாம்
சிட்டர்க டேவர்களாகத் தினம் பரவும்
பட்டர்க ளாம்வேத பாரகரும் – விட்டு வெனும்
சோதிகரு ணைக்கடற் றோன்றிக் கரசர
ணாதியுடன் வந்த வமுதாரும்-மூதுலகிற்


  1. பவித்திரம் – சுத்தம். சீரங்கராச பட்டர் : இவர் ஸ்தானிகராக முதலில் வந்தவர் ; அர்ச்சக ஸ்தானிகத்தில் குரு பரம்பரையார்.
  2. கங்குல் – இருளைப்போன்ற. மலமும், மாயையும், கன்மமும் அடுத்தவர்களுக்கு நீங்கும்படி ஓங்கிய திரிதண்டம். திரிதண்டம் ஸ்ரீவைஷ்ணவ சந்நியாசிகளுக்கு உரியது. சங்கை – சந்தேகம்.
  3. திருமாலிருஞ்சோலைச் சீயர் : ஸ்ரீ மணவாள மாமுனிகள் காலத்தில் இந்த ஜீய ஸ்தானம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு உரிய ஆசாரியர்கள் இப்போது கூடலழகர் சந்நிதியிலுள்ளனரென்பர்.
  4. முத்தமிழ்க்குப் பின்போவாரென்றது திருமழிசையாழ்வா ருடைய மாணாக்கருள் ஒருவராகிய கணிகண்ணர் செல்ல அவர் பின்னே திருமால் சென்றதை ; ” சொல்கவிக்குப், பார முதுகடைந்த பாயலான்” (72-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. திருமாலையாண்டான் – இவர் உடையவருடைய ஆசிரியர்களுள் ஒருவர் ; இவர் பரம்பரையினர் தல்லாகுளத்திற்கு வந்து விட்டனரென்பர்.
  5. வையம் கார்வண்ணனையே வாழ்த்த; வையம் – உலகத்தார். தோழப்பையங்கார் : திருமாலையாண்டான் பரம்பரையிலிருந்து பிரிந் தவர்களுள் மூத்தவர் ; ” தோழப்பர் நற்றமிழ்ச் சீர்பதிப்போன், நலமருவு மழகன் புரோகிதன் புனிதபத நாண்மலர் வழுத்துவேனே !! (அழகர் பிள்ளைத். பழிச்சினர்ப்பரவல், 14)
  6. சிட்டர்கள் – ஒழுக்கமுடையோர். வேதபாரகர் – வேதத்தைக் கரை கண்டவர். விட்டு – விஷ்ணு (227)

224. கரசரணாதியுடன் – கைகால்களுடன். அமுதார் – இவருடைய திருவுருவம் நம்பிள்ளை சந்நிதியிலுள்ளதென்பர்; இவர்பரிசாரக ஸ்தானிகர்.

றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல் 225
நண்ணுந் திருமலை நம்பிகளும் – உண்ணின்ற
மாமலை சோலை மலையையே நம்புதலாற்
சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை
விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம்
தருஞ்சட கோபநம்பி தாமும் – பெருஞ்சீர்
வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப்
பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும் – கிரியிலிருந்
தாளுங் கடவு ளருளே துணையாயெந்
நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க

தூதுரைக்க வேண்டுதல்
ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்ப னப்பொழுதுன் 230
வார்த்தை திருச்செவியில் வாயாது- சேர்த்தியிலே
மெல்ல வெழுந்தருளும் வேளை பார்த் தவ்வேளை
சொல்ல வெழுந்தொருவர் சொல்லாமுன்-வெல்லுமதன்
அம்பலர் தூற்ற வடர்த்து வருமுன்னே
வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி


  1. திருமலை – திருவேங்கடம். திருமலை நம்பிகள் : மடைப் பள் ளிப் பரிசாரக ஸ்தானிகர்.
  2. மாலை மலை – மயக்கத்தை அழிக்கின்ற ; திருமாலைத் தரித்த எனினுமாம். சோலைமலை நம்பி – சோலைமலையை நம்பியவரென்பது பொருள் ; இவர் சந்நிதி பரிசாரக கூடஸ்தர்.
  3. விரிஞ்சன் – பிரமன். சடகோப நம்பி – பரிசாரக ஸ்தானிக ருள் ஒருவர். இதன்பின்
    “‘ மருவு திருமாலிருஞ்சோலை நம்பி உருவின் மதனனையொப் போனும் ” என ஒரு கண்ணி மிகையாகக் காணப்படுகின்றது.
  4. வரி – எழுத்து. திருமாலிருஞ்சோலைப் பிரியர் : இவர் கரு ணீகர்களுள் ஒருவர். சீர்கருணப்பேர் – கணக்கர். .
  5. கடவுள் – அழகர். சீகாரியஞ்செய் நாயகர் – கோயிற் பணி விடை செய்பவர் ; இவர்களைக் கோயிற்கொத்தென்பர்.
  6. திருவோலக்கம் – சூழ இருப்பாரோடு ஆதனத்தில் எழுந் தருளியிருத்தல். வாயாது – பொருந்தாது. சேர்த்தி – பள்ளியறை.
  7. மதன் – மன்மதன்.

232. அம்பு அலர் தூற்ற – பாணமாகிய பூவைத் தூவ. வம்பலர் – அயலார். தூற்ற – பழிமொழிகூற. கும்பமுனி – அகத்திய முனிவருடைய.

வாயினுரையடங்க வந்த கடலடங்கத்
தாயினுடையடங்கத் தத்தையே – நீயுரையாய்
உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும்
அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண் – முன்பொருநாள்
கோசலை கையிற் குருசி லுனைப்புகழ்ந்து 235
பேசி னுனைப் புகழ்ந்து பேசாரார்- நேசமுடன்
எம்முடைய மாலை யிருபுயத்து மாலை கேள்
உம்முடைய மாலை யுதவீரேல் – அம்மைதிருக்
கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட
தாதையார் மாலைதனைத் தம்மினென்பாய் – நீதி
அடுப்பவர் யாவர்க்கு மாடித் தியாகம்
கொடுப்பவனில்லையென்று கூறான் – தடுக்கும்
அருமாலை நீக்கு மழகன் புயத்து 239
மருமாலை நீ வாங்கி வா.


  1. நுரை அடங்க – நுரைகள் ஒன்றுபட. வாயில் வந்தவென இயைக்க. அகத்திய முனிவர் கடலை ஆசமனம் செய்த வரலாறு இங்கே குறிக்கப்பட்டது. தாயின் உரை – செவிலித்தாயின் அதிகாரச் சொற்கள்; “” அனை வேங்கையினதட்ட 11 (அழகர் கலம். 42). தத்தையே – கிளியே.
  2. சுவாகதம் – கிளியின் பெயர்களுள் ஒன்று. அன்பு ஏர் சுவா கதம் ; சுவாகதம் – நல்வரவு.
  3. குருசில் – இராமன். அவர் கிளியைப் புகழ்ந்து பேசியதென் றது, சீதை தன் கிளிக்கு யார் பெயர் வைப்பதென்று கேட்க, கைகேயி யின் பெயரை வைக்கும்படி இராமன் கூறியதை நினைந்து ; ” என்னொ ரின்னுயிர் மென்கிளிக் கியார் பெய ரீகேன், மன்ன வென்றலு மாசறு கைகயன் மாதென், அன்னை தன்பெய ராகென வன்பினொ டந்நாட், சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்” (கம்ப.
    சூடாமணிப். 83)
  4. மாலை – திருமாலை ; நோக்கியென ஒரு சொல் வருவிக்க. மாலை கேள் – பூமாலையைக் கேட்பாயாக.
  5. கோதையார் – சூடிக்கொடுத்த நாச்சியார். தாதைஆர் – பூந் தாதுகள் நிரம்பிய. திருவிழாக்காலத்தில் சூடிக்கொடுத்த நாச்சியார் சூடிய மாலை ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து இங்கே வருவது வழக்கம். தம் மின் – தருவீர்.
  6. ஆடித் தியாகம் : அழகருக்கு ஆடி மாதத்தில் முன்பு பிர மோத்ஸவம் நடைபெற்று வந்ததென்பர்.
  7. அருமாலை – போக்குதற்கு அரிய மயக்கத்தை. மருமாலை – நறுமணமுள்ள பூமாலையை. புயத்து மரும் மாலையென்று கொண்டு திருத்தோளில் மருவிய மாலையெனலும் ஆம்.

ஸ்ரீ அழகர் கிள்ளைவிடு தூது முற்றிற்று.

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ குரு பரம்பரைப் புராண பாடல்கள் —

June 24, 2024

மாறன்‌ துதி
தேனறா மகிழ்த்‌ தொடையலும்‌ மவுலியும்‌ திருக்கிளர்‌ குழைக்காதும்‌
கானறா மலர்த்‌ திருமுகச்‌ சோதியும்‌ கயிரவத்‌ துவர் வாயும்‌:
மோன மாகிய வடிவமும்‌ மார்வமும்‌ முத்திரைத்‌ திருக்கையும்‌
ஞான தேசிகன்‌ சரண தாமரையு மென்‌ நயனம் விட்‌ டகலாவே.–1-

கான்‌ – வாசனை.
கயிரவம்‌ – செவ்‌ வாம்பல்‌.
ஞான தேசிகன்‌ – நம்மாழ்வார்‌.

பரம்பொருள்‌ துதி
மருதிறத்‌ தவழ்ந்தும்‌ சகடிற வுதைத்தும்‌ மறை துலங்‌கிட மலை எடுத்தும்‌
எருதொடு கரியும்‌ பரிவிழ முனிந்தும்‌ எண்ணரும்‌ ஆடல்கஎியற்றிப்‌
பொருது மல்‌லினர் கண்‌ பிதுங்கிட நெறித்தும்‌ புள்ளின் வாய்‌ விரிந்திடக்‌–2-

எண்ணரும்‌ ஆடல்கள்‌ – அலகிலா விளையாட்டு–கவிச்‌சக்ரவர்த்தி
மல்லினர்‌ -, மல்லர்‌.*மல்லாண்ட திண்‌ தோள்‌’ என்பர்‌ பெரியாழ்வார்‌.

அடியார்‌ துதி
திரு வாழி திருச் சங்கம்‌ திருத் தண்டம்‌ திருச் சார்ங்கம்‌ திருவாள்‌ என்னும்‌
செருவாரும்‌ அரக்கர்கள் தம்‌ சிரமுருட்டும்‌ ஐம்படையும்‌, தேவர்‌ போற்றும்‌
மருமாலை அயக்கிரிவர்‌ விச்சுவசேனரும்‌ செம்பொன்‌ வரையாம்‌ என்னப்‌
பொரு மேனிக்‌ கருடனும்‌, அஞ்‌சனை மகனும்‌ காப்பாகப்‌ பொருந்தும்‌ மாதோ.–3-

நூற்பயன்‌
பாலாழி நாரணன்‌ சீர் பாடியும் பரி பாலனித்தும்‌
மேலாம்‌ பதம் பெற்ற ஆழ்வார்கள்‌ ஆரியர்‌ மெய்ச்சரிதம்‌
நாலாயிரத்து முந்‌ நூற்றறு பத்தொரு நற் கவிக்குள்‌
மாலா யொருகவி கற்கினும்‌ நல்கிடும்‌ வைகுந்தமே.–4-

தற் சிறப்புப்‌ பாயிரம்‌ ‘
திரு வளரூறை விஜய ராகவன் செந்‌ தமிழினில்‌ செங்கண் மாலருளால்‌
மருவளரும் சீர்ப்‌ பொய்கையார்‌ முதலாழ்‌வார்கள் தம்‌ சரிதம துடனே
அருண்மிகு நாத முனிவனே முதலாம்‌ ஆரியர்‌ சரிதமி தாமிக்‌
குரு பரம்‌பரையாம்‌ பிரபந்தம்‌ இதனைக்‌ கூறினன்‌ விருத்தப் பாக்‌ கொண்டே.–5-

ஊறை–ஊற்றத்தூர்

———–

பதிகம்‌ —
பொய்கையார்‌ பூதத்தார்‌ புகழ் பேயார்‌ மூவர்களும்‌ .புவி வந்‌ துற்ற
செய்கை யானதுவுமவர்‌ தமிழ் பாடிப்‌ பரம பதம்‌ சேர்ந்த வாறும்‌;
மெய் கையா மகிழ் பெரியார்‌ புவியில் வந்‌தரிபரமாய்‌ விளம்பி யாறு
வைகையான்‌ கட்டிய பொற்‌க் கிழி யறுத்துத் தமிழ் பாடும்‌ வண்ணந்‌ தானும் –1-மெய்‌ கையா – உண்மையை -வெறுக்காத..

திருமங்கை மன்னர் பிறந்‌ தரி தனையே வழி மறித்துத்‌ திருமந்த்‌ ரங் கொள்‌
கருமங்கள்‌ பலவும்‌ அவர்‌ தமிழ் பாடிப்‌ பரமபதங்‌ கலந்த வாறும்‌;
தருமங்கொள்‌ பாற்கவர் பால்‌ மழிசையர் கோன்‌ உதித்துப் பல்‌ சமய நூலால்‌
தெருமந்து மால் பரமென்‌ றறிந்துதமிழ்‌ பாடி யடி சேர்ந்த வாறும்‌; –2–, தெருமந்து – மனம்‌ கலங்கி,

தொண்டரடிப்‌ பொடியர் பர மாதர்‌ தமை விரும்பிப் பின்‌ தொண்ட ராகி
வண்டமிழின்‌ கவிபாடி யரங்கருடன்‌ மெய் கலந்த வாறு தானும்‌;
மண்டு விடப்‌ பணி குடங்கை வைத்த குல சேகரனார்‌ மனது தன்னில்‌
விண்டு பர மென வறிந்து தமிழ் பாடிப்‌ பரம பதம்‌ மேவு மாறும்‌; –3-

விண்டு.- திருமால்‌.
“இடர்‌ துடைத்‌ தேக விண்டு பிறந்தனன்‌” என்பர்‌ கவிச்சக்ரவர்‌ த்திகள்‌ (சுந்தர காண்டம்‌),

உறையூரிற்‌ பாணனுதித்‌து இராகமொடு சங்கீத முவந்து பாடிக்‌
கறை நேமி நாரணனாந்‌ திருவரங்க ரடி யிணையிற்‌ கலந்த வாறும்‌;
நறையாருந்‌ துளவணி மால்‌ சடகோபனாய்‌ உதித்து நான்கென்‌ றோதும்‌
மறையாரும்‌ பொருளினையே தமிழ் செய்து தம் பதம் போய்‌ மருவு மாறும்‌; –4-

சடகோபன்‌ – தம்மாழ்வார்‌. சடம்‌ எனும்‌ வாயுவை வென்றவர்‌.
*சடம்வளை சடத்தை முனிந்தருள்‌ முனிவன்‌” -சடம்‌, ஆன்ம ஞானத்தை அழிக்கும்‌,

மதுரகவி யுணர்ந்து திரு வாய் மொழியைப்‌ புவியிடையே மலியச்‌ செய்து
சதிருடனே சடகோபர்‌ தமைப் பாடிப்‌ பரமபதஞ்‌ சார்ந்த வாறும்‌;
புதுவையற்குக்‌ கோதை குழல்‌ சூடிய பூ மாலை தனைப்‌ பொருந்த நல்கி
முதிர் சுவை சேர்‌ தமிழ் பாடி யவளரங்கர்‌ தம்மை மணம்‌ முடித்த வாறும்‌; –5–

“துன்பற்ற மதுரகவி தோன்றக்‌ காட்டும்‌ தொல் நெறி’ என்பர்‌ வேதாந்த தேசிகர்‌.
பெரிய ஜீயர்‌ (மதுரகவி சொற்படியே நிலையாகப்‌ பெற்றோம்‌” என்பர்‌,

வேதமதைப்‌ பன்னிருவர்‌ தமிழ் செயு நாலாயிரமும்‌ விளிந்த வாற்றால்‌
நாதமுனி விக்கிரமாம்‌ மாறனுரைத்‌ திட வெழுதி நாட்டு மாறும்‌;
ஓது திரு மந்திரமே முதலான பொருள்களெலா முய்யக்‌ கொண்டார்‌
கோதில் மணக்‌ கால் நம்பிக்‌ குபதேசத்‌தவர் பதத்திற்‌ குறுகு மாறும்‌–6-

விக்கரமாம்‌ மாறன்‌ – அர்ச்சாவதாரமான நம்மாழ்வார்‌. விக்ரஹம்‌ என்ற வடமொழிச்‌ சொல்லை * விக்கிரம்‌ * என்று திரித்துக் கொண்டார்
மந்திரமே முதலான பொருள்கள் -1–திருமந்திரம் -2-த்வயம் – 3. சரமஸ்லோகம்‌,

வாளமருங்‌ கரச் சோழன்‌ குருவா மாக்‌கி யாழ்வானை வாது தன்னில்‌
ஆளவந்தார்‌ வென்று மணக்‌ கால் நம்பி யிடத்து மந்த்ரம் அறிந்திட்‌ டாங்கோர்‌
நாள தனில்‌ பெரிய நம்பி முதலானோர்க்‌ குபதேசம்‌ நவின்ற வாறும்‌;
மீள வந்த தெரிசனத்தைப்‌ பெரிய நம்பிக்‌ களிக்க வவர்‌ விரும்பு மாறும்‌; –7-

பரசமய மதகரியை வென்‌ றிடுங்கோ ளரியெனவே பரவி வானம்‌
தரைமுழுதும்‌ புகழ்சீர்த்திப்‌ பெரும்பூதா ரெதிராசர்‌ சரிதந்‌ தானும்‌;
அரன்பரனென்‌ றெழுதுபடத்‌ துடனடைந்த கிருமிகண்ட னஹறைறந்த கட்சி
உரைகள்‌ தனக்‌ கெதிருரைக ளுரைத்துரைத்துக்‌ கூரத்தா னுரைவெல்‌ .பாங்கும்‌; 8–இராமானுஜரைச்‌ சிங்க ஏறு” என்பர்‌ மணவாளதாசர்‌.

———-

(வேறு)
மகுத்துவ முடையவிவ்‌ வாற தாயதில்
மிகுத்திடுங்‌ கதைகளும்‌ விரித்து ணர்ந்திட
வகுத்துரை மணிப்பிர வாளத்‌’ தின்வகை
தொகுத்துப்பா விருத்தமாய்த்‌ தமிழிற்‌ சொல்வனால்‌. 9

‘ அவையடக்கம்‌
பொருதிரைக்‌ கடலினிற்‌ பொருந்து நீரெலாம்‌
ஒருசிறு குருவிசென்‌ றுண்ணல்‌ போலவே
பெருகிய காதலாற்‌ பேச ரும்பெருங்‌ :
குருபரம்‌ பரையினைக்‌ கூறல்‌ மேயினேன்‌| 1

நாறுசெந்‌ தாமரை தாண்ம லர்பெருஞ்‌
சேறிடை யெழுகனுந்‌ தேவர்‌ கொள்வபோல்‌
தேறுமாழ்‌ வார்கள்தம்‌ கதையைத்‌ இமையேன்‌
கூறினும்‌ பெரியர்கள்‌ உவந்து கொள்வரால்‌, 2

மெல்லிய பாலர்கள்‌ விளம்பி டும்மிளஞ்‌ .
சொல்லினை த்‌ தந்தைதாய்‌ சூழ்ந்து கேட்பபோல்‌
நல்லியல்‌ நாவுடைப்‌ புலவர்‌ நன்கிலேன்‌.
புல்லிய சொல்லையும்‌ பொறுத்துக்‌ கேட்ப்ரால்‌. 2

குலவுமென்‌ மொழியுடைக்‌ கோ லத்துஎதிர்‌
நலமிலாப்‌ புன்கொடி நவிற்றல்‌ போலவே
அலஇூலாப்‌ பல்கலை யறிந்து ஸணர்ந்திடும்‌
புலவர்முன்‌ பரிவிலேன்‌ புகல்கன்‌ றேனரோ. – 4

பூவரு: நான்முகப்‌ புனிதன்‌ தன்னுடை
நாவரு வெண்கம லத்து நாயகி
மாவருள்‌ மாட்சியால்‌ வைய: மீதுளோர்‌
யாவரு முணரவீ தறைகின்‌ றேனரோ. –5-

நாட்டுச்‌ சிறப்பு
வான்சி றந்து மழைபொழிந்‌ தோங்களீர்‌
தான்ம லிந்து நதிகள்‌ பெருகிட
ஊன்பொ ருந்தி யுயிர்கள்‌ செழித்திட
ஆன்சு ரந்து அமுத மளிக்குமே. 1

சென்னெ லோங்கி வயல்கள்‌ செழித்திடும்‌
கன்ன லோடு கமுகுங்‌ கவின்கொாளும்‌
வன்ன மாமலர்ச்‌ சோலை வளம்பெறும்‌
அன்னம்‌ வாழுந்‌ தடங்க ளமைந்தவே. 2

வாழ்த்து
விரைசெய்‌ யந்தணர்‌ வேதம்‌ விளம்புக
துரைகள்‌ நீதிச்செங்‌ கோலுந்‌ துலங்குக
உரைசெய்‌ தேவ ரடியரு மோங்குக
திரைக உற்புவி வாழ்வு செழிக்கவே. 3

பயன்‌
இந்த மாக்கதை யின்பொருள்‌ யாவையுஞ்‌
ந்தை கொண்டு தெளிந்துரைப்‌ போர்களும்‌
உந்து காத லுடன்செவி யுள்ளுற வந்து கேட்டு மகழ்நரும்‌ வாழ்கவே! –4-

———

தோற்றுவாய்‌
உலக மோடய ஸுருத்திர னும்பர்கோன்‌ முதலாம்‌
புலவர்‌ பல்லுயிர்‌ யாவையும்‌ பூத்தளித்‌ தழிக்கும்‌
அலகில்‌ பல்விளை யாடல்செய்‌ தெவற்றையு மகட்டுற்று
இலகப்‌ பாலடை வளருமால்‌ வைகுந்தத்‌ திருந்தே. 1

உலகை இறைவன்‌ அழித்தான்‌ .என்றால்‌ இல்லாது செய்துவிட்டான்‌ என்று கருதக்கூடாது, இதனைச்‌ “சற்காரியவா தம்‌”என்பர்‌.
கவிச்சக்ரவர்த்தியார்‌ ஒருவரே இந்‌ நுட்பம்‌ உணர்ந்து ‘உளவாக்கல்‌, திலைபெறுத்தல்‌, நீக்கல்‌” என்பர்‌. புதியபயொருள்‌ தோன்றாது: பழைய பொருள்‌ அழியாது.

பால்‌ அடை, பாற்சகடலிலும்‌ ஆலிலையிலும்‌ என்று பொருள்‌ கொள்ளவேண்டும்‌.

தொடுத்த பல்லுயிர்த்‌ தொகுதிகள்‌ துவக்கறு மாறாய்‌
எடுத்த நம்மவ தாரங்க ளெண்ணில வ்வற்றை
அடுத்து நல்லறி விலாமையின்‌ அறிகில ராக்‌
கடுத்தெ இர்ந்திறந்‌ தாரசு ரேசர்நங்‌ கையினால்‌. 2

மானி டர்சிலர்‌ பரம்பொருள்‌ நாமென மதித்து
சரூன மல்கிநல்‌ லொழுக்கராய்‌ நாடொறும்‌ அன்பு
தானி ழைத்திருந்‌ துலகமா மாயையைத்‌ தடிந்து
வான வர்க்குமெட்‌ டாதவிப்‌ பதவிமன்‌ ஸனினரால்‌. 3–உலக மா மாயை என்றும்‌ உலகமாம்‌ மாயை என்றும்‌ பிரிக்கலாம்‌.

இன்ன வாறுசெய்‌ இவணடைந்‌ தனம்‌இனி யுலகின்‌
முன்னர்‌ செய்தவல்‌ வினைகளான்‌ முடிவிலாச்‌ சனனம்‌
மன்னி வாழ்பல வுயிரெலா மாய்தலுற்‌ பவித்தல்‌ ..
தன்னை யெவ்வகை யொழித்துதம்‌ பதந்தனிற்‌ சார்வார்‌. 4

நவ்வி காட்டியே வலையினால்‌ நவ்விகள்‌ தமையே
வவ்வு மாறென விவர்களா லவர்மயங்‌ குளத்தைச்‌
செவ்வி தாக்கியே சேர்த்திடும்‌ செயல்புரி குதலே
ஐஒவ்வு மென்னவண்‌ டுணுமதுத்‌ துளவமால்‌ ஓர்ந்தான்‌. 5

தவ்வி- மான்‌, *மாசைக்‌ கொண்டு மானைப்‌ பிடிப்பவர்போல்‌ இவர்‌களால்‌ அவர்கள்‌ உளத்தைச்‌ -செவ்வீதாக்குவோம்‌; “பிறகு நம்‌ பரமபதத்தில்‌
சேர்த்துக் கொள்வோம்‌” என்று தி ருமால்‌ கருதினான்‌.

பாயிரம்‌ முற்றும்‌

—-

முதலாழ்வார்கள்‌ திருவவதார அத்தியாயம்‌

ஐப்பசியில்‌ ஓணம்‌ அவிட்டம்‌ சுதையமிவை.
ஒப்பிலா நாள்கள்‌ உலகத்தீர்‌ — எப்புவியும்‌
பேசுபுகழ்ப்‌ பொய்கையார்‌ .பூதத்தார்‌ பேயாழ்வார்‌
தேசுடனே தோன்றுசிறப்‌ பால்‌. (உபதச ரத்‌இனமாலை, 6.)

திருமாலின்‌ கட்டளை
முத்த ரானவற்‌ குருத்தனை யளித்‌திடா முகுந்தன்‌ பத்தி செய்திருந்‌ தவர்களில்‌ மூவரைப்‌ பாரா
நித்தர் கேண்மினோ உலகுடை நீருதித்‌ தெவரும்‌
இத்த லம் பெறத்‌ திருத்தி மீண்‌ டெய்திடும்‌ எனலும்‌; 6

மூவர்‌ மறுப்புரை
கே ட்ட மூவரும்‌ பிரிவெனு மருந்துயர்‌ கிளர
வாட்ட மோடுன *தடிபிரியோ’ மென மறுக்க
மீட்டு மாங்கவர்‌ பொருந்துற மிகுநற வருந்துப்‌
பாட்டு வண்டிமிர்‌ துளவினான்‌ பகர்தன்மே யினனால்‌, 7

திருமால்‌
வருந்த லீரும துளத்தையா மகல்கிலம்‌ வடிவேற்‌
கருந்த டங்கணார்‌ புழுமல்கு மகட்டினிற்‌ கருவாய்ப்‌
பொருந்து றாதுநல்‌ விருந்தெனக்‌ களிப்பொடும்‌ புகுவண்‌
டருந்து தேன்றுளி மலர்மிசை யதவரித்‌ திடுமின்‌. 8

சன்று கூறியுண்‌ மயர்வரு மதியுமீந்‌ தஇடலால்‌
ஒன்றும்‌ வேறுரை யுரைத்திடா துரந்தனி லருந்தேன்‌
துன்று தாரணி மூவரும்‌ சுரபிவிட்‌ டகலும்‌
கன்‌ று போலவே விடைகொடு மீண்டனர்‌ கடிதில்‌. 9

முதலாழ்வார்கள்‌ அவதாரம்‌
ஆமி தேயென. ஐப்பசி ஓணநாள்‌ அதனில்‌
மாம திதவழ்‌ மாடமார்‌ கச்சிவந்‌ தொருவர்‌
காமர்‌ வண்டினங்‌ களித்துணத்‌ துளிமதுக்‌ கமழ்பூந்‌
தாமரைதனிற்‌ பொய்கைய ராயவ தரித்தார்‌. 10

மருக்கொண் மாலைய ரொருவர்‌ ஐப்‌பசிஅவிட்‌ டத்தில்‌
அருக்கன்‌ தேரிடறிட வுயர் மேடைகள் அமைந்த
திருக்க டன்மல்லை நகரில்‌ பூதத்தராய்த்‌ இகழும்‌
குருக்கத்‌ தஇம்மல ரதனிலே யுதித்தனர்‌ குறித்தே 11

பயிலும்‌ ஐப்பசி சதையநாள்‌ பேயராய்ப்‌ பரவும்‌
வெயிலை மாற்றிடும்‌ சோலையும்‌ வெண்சுதை மேலிக்‌
கயிலை போலுயர்‌ மாடமா ளிகைகளுங்‌ கவினும்‌
மயிலை மாநகர்‌ நெய்தலி னொருவர் வந்‌ தனரால்‌. 12

தேவ ரும்மலர்‌ சொரிந்திடத்‌ தஇங்களொன்‌ றினிலம்‌
மூவ ரும்பதி மூன்றிடை மூன்றுநாள்‌ தெய்வப்‌
பூவ ரும்மணி போலவிம்‌ முப்பெயர்‌ புளைந்து
யாவ ரும்பத மணுகுறும்‌ படியவ தரித்தார்‌. 13

செந்தி ௬ப்பதி யானநார ணன்‌ றிரு வடியாம்‌
அந்த மூவரு மொருவரை யொருவர்கண்‌ டறியார்‌
பந்த மாகிய காமமுங்‌ குரோதமும்‌ படரார்‌
வந்த மாநக ரங்களில்‌ வளருமந்‌ நாளில்‌. 14

மாதேவர்‌ கட்கு ஞயர்தேவ னாகி
வனசப்‌ பொகுட்டி லமரும்‌
சதேவி நாத னலதில்லை வேறு
துணையென்று சிந்தை யவராய்‌
மீதே யெழுத்த குமிழ்போ லழிந்து விடுதேக மேவ லிதுதான்‌
இதே யெனப்பி றவிசா கரத்தை
யொழிக்கின்ற சிந்தை யவராய்‌; 15

ஆனந்த மெய்து மால்லோக மேவி
யணைகன்ற சந்தை யவராய்‌-
ஞானம்‌ சுரந்த வுளமோ டெவற்கும்‌
நயமா மொழிப்பு கல்வராய்த்‌
தானம்‌ விளங்கு தருமங்க ளென்ற
துவமே யிழைக்கு மவராய்‌
மோனம்‌ பொருந்தி யுடையோர்கள்‌ பாத
மூளரித்‌ தொழுது மெனவே; 16

திருக்கோவலூரை அடைதல்‌
நாடித்‌ தரும்பொய்கை யார்கச்‌ச யாம்பொன்‌
நகரைத்‌ துறந்து லகெலாம்‌
தேடிப்‌ புகன்று பெரியோர்கள்‌ தம்மைத்‌
தெரிசித்‌ துயர்ந்த பலநீர்‌
ஆடித்‌ திருப்ப திகடோறு மெய்தி
அரிதாள்கள்‌ தமது முடிமேல்‌. ௭
சூடிப்‌ புகழ்ந்து இருக்கோ வலூரை
மகிழ்வில்‌ தொடர்ந்த ணுகியே; 17

பெருமாளைப்‌ பணிதல்‌
சந்‌ தாகு லம்தவிர்செ யானாய ஸனாரைத்‌
தெரிசத்‌ தழைத்த கரிமுன்‌ வந்தாய்‌ அயன்ற னுடனண்டம்‌ யாவும்‌
வளருந்தி மாம லரிலே
தந்தாய்‌ அரற்கு விதிசாபம்‌ நீக்கு
தலைவா நினைத்தெ ஸளிவர்யார்‌? | ப
எந்தாய்‌உ னம்பொ னடிபோற்றி! போற்றி.
எனமந்த்ர மோதித்‌ தொழுதார்‌… ……. 18

மூவர்‌ -சந்திப்பு
இவ்வாறு மீண்டு தொழுதந்த. வூரி. : னிடையன்‌ றிருந்த வளவில்‌
அவ்வாறு மற்ற விருவோரு மெண்சி –
யவர்வைகு மூர்கள்‌ , அகல்‌:எவ்வாறு மாடி யடியா ரிணங்கு
பதிதகோறு மெய்தி மகிழா
ஒவ்வாத கோவல்‌ நகராய னாரை
யுசுவிற்‌ புகழ்ந்து தொழுதார்‌. 19

தொழுதந்த வூரி னிடைவைக வன்று
தொலையாது காலு மழையும்‌
பொழுதத்தி மல்கு மிரவிற்‌ செறிந்து
பொழியெல்லை பொய்கை யருநூல்‌
முழுதும்‌ தெரிந்த வொருவேத ஸில்லின்‌
முடுகிப்‌ புகுந்து நடையில்‌ பழுதொன்றி லர்த சிறுதிண்ணை கண்டு
பரிவோடு பள்ளி கொளலும்‌; 20

பொய்கையார்‌ வேதன்‌ இல்லில்‌ உள்ள இண்ணையில்‌ பள்ளிகொண்
டார்‌. வேதன்‌ – வேதங்களைத்‌ தெரிந்தவன்‌. பரிவோடு – அன்புடன்‌.

பூதத்த ரம்பெய்‌ மழையால்‌ வருந்தி
யிடநாடிப்‌ பொய்கை துயிலும்‌
வேதத்த ஸில்லின்‌ மணிவாயில்‌ வந்துள்‌
விழைவோ டிருப்ப வர்கள்யார்‌?
ஊதற்‌ பெருக்கு தடியேன்‌ படுக்க
உளதோ இடமெ னலுமே
இதற்ற பொய்கை யவர்கண்‌ திறந்து
இருவாய்‌ மலர்ந்து மொழிவார்‌, 21

ஒருவர்‌ படுக்க இடமுள்ள திங்கண்‌
. உறைவேன்‌ விரும்பி வரில்நம்‌
இருவர்க்‌ கிருக்க இடமாகும்‌ வாரு
மெனவே யெழுந்து கதவைத்‌ துருவித்‌ இறக்க வவருட்‌ புகுந்து துணையாக நள்ளி ருளின்வாய்‌
மருவிச்‌ சிறந்த விருவோரு முள்ளம்‌
மக௫ழ்வோ டிருந்த விடையில்‌. – 22

பேயாரு மந்தத்‌ தலைவா யிடத்துப்‌
பிறழ்மேனி யோடு மணுகா
நாயேன்‌ தனக்கு முளதோ விருக்கை
-நவில்வீ ரெனப்பு கலவத்‌
தூயோரு மிங்க ணிருவர்க்‌ இருக்கும்‌
இடம்நீர்‌ தொடர்ந்த ணுகிடிற்‌ சாயாது நிற்கு மிடமாகும்‌ என்று
தாழைத்‌ திறந்து விடலும்‌. 23

இறைவன்‌ நெருக்குதல்‌
நெய்தற்‌ சிறந்த மலரிற்‌ பிறந்த
நிமலன்‌ மகிழ்ந்து விரைவாய்‌
எய்தப்‌ பொருந்து மவர்மூவர்‌ தாமும்‌
இனிதோடு நின்ற விடையிற்‌
கைதக்க வைந்து படையாய ஸனாருள்‌
கருதித்‌ இருப்பொ லியவே
நொய்திற்‌ புகுந்து புகலங்‌ கவர்க்குள்‌
நுழையா நெருக்கி யிடலும்‌. –24-

ஐந்து படையாயளனார்‌-
ஐந்து ஆயுதங்களைக்‌ கையில்‌ ஏந்திய ஆயன்‌ (இருக்கோவலார்ப்‌ பெருமான்‌
பெயர்‌ ஆயனார்‌; ஆனாயன்‌). நொய்தில்‌-எளிதாக, மற்றவர்‌ இடர்ப்பட்டு
நுழைந்தனர்‌. ஆயன்‌ எளிதே புகுந்து நெருக்கினான்‌.

தன்னேரி லாத திருமால்‌ புகுந்த
தனைநின்று ளோர்க எளறியார்‌
முன்னே யிருந்த ததிலும்‌ நெருங்கு முறையால்‌ வினவு தல்செயாப்‌
பின்னே யொருத்தர்‌ வரவில்லை வேறு
குரலில்லை பேச்சு தொனியா
என்னே நெருக்க மிதுகாண வேணு
மெனவந்த மூவர்‌ களுமே, 25

விளக்கேற்றுதல்‌
உள்ளத்து ஞள்ளி யரிதான ஞான
வொளிதீப மேந்தி யடர்பால்‌
வெள்ளத்து வந்த இருமார்பின்‌ மல்க
மிளிரைம்‌ படைக்க ரமின
நள்ளிற்‌ சிறந்த கருமேக மென்ன
வுருமல்க நார ணரெனுங்‌
கள்ளத்‌ தடைந்த திருவாய னாரைக்‌
கனிவோடு கண்டு ரகனார்‌. 26

இங்கு *பாவரும்‌ புகழால்‌ பேர்பெறு
பனுவல்‌ பாவலர்‌ பாதிநானிரவில்‌-மூவரும்நெருக்கி மொழி விளக்கேற்றி முதத்‌
தளைத்‌ தொழுத நன்னாடு” என்ற வரந்தருவார்‌ பாடல்‌ அனுசந்திக்க வேண்டும்‌, .

இறைவனைக்‌ காணுதல்‌
ஆனந்த மாவர்‌ புகழ்வார்‌ நடிப்பர்‌
அப்பார்‌ விழுந்து புரள்வர்‌
மோனம்‌ பொருந்தி யுரையா திருப்பர்‌
எழுவார்கள்‌ ஓடி. முதிர்தேன்‌

பானஞ்செய்‌ தோரில்‌ புரிகின்ற செய்கை
யுணரார்‌ பரிந்து தொழுவார்‌
ஞானம்‌ விளங்கு பரிவான. வோடை
யதுமூழ்கி யேந வில்வரால்‌. 27
துதிப்பாடல்கள்‌
ஆதியே! எம்மை யாளு மையனே! வைய முண்ட
சோதியே! அடியர்‌ நெஞ்சிற்‌ சுடரொளி யாகி தின்ற
வேதியா! முகுந்தா। கண்ணா! விண்டுவே[ அரியே! மாலே!
நீதியாய்‌! உலகம்‌ தாங்கு நிமலனே! கமலை .மார்பா! 28
உந்திமா மலரி னீரேழ்‌ —
புவனம தளித்த தோங்க
முந்திவே தன்ற னோடு
முக்கணான்‌ தனைச்சிட்‌ டித்துத்‌
தொந்தநால்‌ வகைப்பி றப்பேழ்‌
தோற்றமெண்‌ பத்து நான்காம்‌
அந்தமா ரிலக்க மான
சராசர மவையுண்‌ டாக்கி, ்‌ 29

நால்‌
வகைப்‌ பிறப்பையும்‌, எழுவகையான தோற்றத்தையும்‌ எண்பத்து நான்கு லட்ச
யோனி பேதத்தையும்‌ தோன்றச்‌ செய்து.
நால்வகைப்‌ பிறப்பு:. 7, பையில்‌ பிறப்பவை. 2. முட்டையில்‌ பிறப்பவை.
9. திலத்தில்‌ பிறப்பவை. 4, வியர்வையிற்‌ பிறப்பவை,
“தோற்றம்‌ நான்காம்‌ ; அவை பை, முட்டை, நிலம்‌, வியர்வையில்‌ திகழும்‌
என்ப” (பொருட்டொகை நிகண்டு).
எழுவகைத்‌ தோற்றம்‌, .. தேவர்‌ 8. மக்கள்‌ 8. விலங்கு 4, புள்‌ 5, ஊர்வன
6. நீர்‌ வாழ்வன 7. நிற்பன: எண்பத்து நான்காம்‌ சராசரம்‌: 1. தேவர்‌ 14 இலட்சம்‌;
. 2, மக்கள்‌ 9 லட்சம்‌; 8. விலங்கு 10 லட்சம்‌; 4. புள்‌ 10 லட்சம்‌; 5, நீர்‌ வாழ்வன
0 லட்சம்‌;: 6. ஊர்வன 11 லட்சம்‌; 7, நிற்பன 80 லட்சம்‌; சரம்‌-௮அசைவன.
அசரம்‌-அசையாதன.

உருப்பவித்‌ இடுதல்‌ காத்த
லொழித்திட லெனுமூச்‌ செய்கை
விருப்பொடு புரியு மக்கா ரணனென விளங்கும்‌ தன்மை கருத்திடை மதித்துத்‌ தேர்ந்து கண்கணீர்‌ பெருகச்‌ சோர
வுருக்கமாய்த்‌ தொழுதக்‌ கார்கள்‌
ஒருவரை யேனும்‌ காணேம்‌. 90

அத்தியின்‌ கனியி னுள்ளே
யறிவரி தாக வைகும்‌
வித்தெனத்‌ தெரியா வண்ண
மெய்யுயி ரனைத்தி னுள்ளும்‌
ஓத்துறை கின்ற நின்னை உருத்திரன்‌ பிரமன்‌ வானோர்‌
முத்தரு மறியார்‌ எம்மால்‌
அறியலா முறையுண்‌ டாமோ. ‘ 94

இறைவன்‌ கட்டளை
என்றுகொண் டிறைஞ்சி யுள்ளம்‌
இழுதென வுருகி நின்றே ஒன்றையு மறியா வெங்கட்‌
குணர்வளித்‌ தருள்வா யென்ன
நன்றுநன்‌ ஹறென்ன வுள்ளம்‌
நயந்திள நகையுந்‌ தோன்றக்‌
கன்றைவந்‌ தடைந்த ஆனிற்‌
கண்ணருள்‌ பெருக நோக்கா. 32

ஏரியு நிரம்பிக்‌ கொள்ளா
இருங்கரை யுடைத்திட்‌ டேகும்‌
நீரினைச்‌ சனெவா தெய்தி

யடைத்ததை நிரப்பு மாபோற்‌ சீரிய நுங்கள்‌ தம்மை
விடுகிலேம்‌ தெளிமி னென்னாப்‌
பாரினை விழுங்கிக்‌ காக்கும்‌
பச்சைமால்‌ பகர்ந்தா னன்றே. _ 33

இந்தவா சகங்கள்‌ கேளா
வெமக்கருள்‌ புரியு மந்நாள்‌
எந்தநாள்‌ அந்த நாளை
யியம்பிட வேண்டு மென்ன
– அந்தமா யாதி யாகி
யடிமுடி தெரியொ ணாத
செந்திரு மணாள னம்பொன்‌
இருவடி வணங்கி ஸனாரால்‌. 34

வணங்கலு மகிழ்ந்து மாயன்‌
மார்பினோ டிறுகப்‌ புல்லிப்‌
பணங்களி னரவு தாங்கும்‌
பாரினுற்‌ றோர்க ளெல்லாங்‌
குணங்கமழ்‌ தருமா நந்த பதத்திடைக்‌ குறுகி யாங்கண்‌
இணங்குநம்‌ மடியா ரோடு மினிதுவீற்‌ றிருக்கு’ மாறாய்‌. 35

மன்னெறி பொருந்து மப்போ
குனைகளை மறையைச்‌ சார்ந்த
குன்னைமா மாலை யாஞ்செந்‌
தமிழினாற்‌ கவிகள்‌ பாடிப்‌ பன்னுமிப்‌ புவியின்‌ மீது
பற்பகல்‌ வைகடிப்‌ பின்னர்‌
துன்னுமின்‌ அங்கென்‌ றோதித்‌
துளபமால்‌ மறைந்தான்‌ அன்றே. 36

மூவர்களின்‌ அருளிச்‌ செயலின்‌ மாண்பு
மறைந்து போதலு மற்றைய மூவரும்‌ மறுகி
நிறைந்த ஞானமும்‌ கல்வியும்‌ விளங்கிட நிணம்தோய்ந்‌
துறைந்த நேமிசங்‌ குடையமால்‌ உவப்புடன்‌ வாய்விண்‌
டறைந்த வாசக முறைவழா தரியநூல்‌ நூற்றார்‌. 37

மாயை யாம்பெரும்‌ பிணிதனை மாற்றுநன்‌ மருந்தாய்‌
நேய மாம்பெரும்‌ பசியினை நீக்குமா ரமுதாய்‌
மேய காமவேள்‌ வேட்கையாம்‌ வெயிலொழி நிழலாய்‌
ஓய்வி லாப்பிற விக்கட னீந்துமோ டமதாய்‌. 38

துன்னி ர௬ுட்பட ஞானம்நல்‌ இடும்சுட ரொளியாய்‌
பன்னி டும்பர சமயக்கா னொழிபடைத்‌ துணையாய்‌
அன்ன மின்மையின்‌ வாடுயிர்ப்‌ பயிர்க்கரு மழையாய்‌
மன்னு நற்பத மேற்செலற்‌ கேணியாய்‌ மலிய, 39

பொய்கை யாழ்வா ரெனும்நாமம்‌ புனைந்த புலவர்‌ பொய்ம்மையிலா
மெய்ம்மை யுளம்சேர்‌ பாகவதர்‌ விரும்பி யருந்து நறுந்தேனிற்‌ செய்ய மறையோ திடும்பொருளைத்‌ தெளிந்தே யோர்ந்து தஇருவாக்கால்‌
வையந்‌ தகளி யெனநூறு வெண்பா நவின்றார்‌ வளம்பெறவே. 40

பொய்கையாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
அந்த நூறு வெண்பாவென்‌
றமைந்த திருவந்‌ தாதிதனின்‌ முந்து பதிபாற்‌ கடலரங்கம்‌
முதிர்வேங்‌ கடம்பொன்‌ இருவெஃகா
விந்தை யுறையும்‌ திருக்கோவ
லூர்நல்‌ வளஞ்சேர்‌ விண்ணகரம்‌
இந்த வாறு தஇிருப்பதியும்‌ பொருந்திச்‌ றந்த விசைபெறவே. 41-பொய்கையார்‌ பாடிய பதிகள்‌ ஆறு.

முன்பே யுலகம்‌ புரிதவத்தான்‌
்‌ முதுமா மறையின்‌ பொருளுணர்ந்தே
தன்போ லிங்குப்‌ பலவுலகந்‌
… தனில்வா ழுயிர்கள்‌ சறப்படையப்‌
பொன்போல்‌ மேனிப்‌ பூதத்து
ஆழ்வார்‌ நாமம்‌ புனைபுலவர்‌
அன்பே தகளி யெனநூறு
வெண்பா வுரைத்தா ரழகுறவே. 42

பூதத்தாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
வடவேங்‌ கடம்தென்‌ னரங்கமுநீர்‌ மலைபா டகமா லிருஞ்சோலை
யிடவெந்‌ தைபாற்‌ கடல்பேரை யெழிலார்‌ கோவ லூர்தஞ்சை கடன்மல்‌ லை? ரத்திநகர்‌
கோட்டி நகர்தண்‌ காலூரும்‌ குடந்தை யீரே முடனென்றவ்‌
வந்தா தியினுட்‌ கூறியதே. – 43 இவர்‌ பாடிய பதிகள்‌ பதினான்கு,

திருக்கண்‌ டேனென்றோ துறுஞ்சீர்‌
சிறந்தே யொளிர்வெண்‌ பாவதனைச்‌
சருக்க ரைகொண்‌் டரூந்துவபோற்‌
றரையோ ரருந்திக்‌ களிப்புறவே
யிருக்கு முதலா நான்மறையி
னியலும்‌ பொருளை யறிந்துணர்ந்தே
யுருக்க முடன்பே யாழ்வாராம்‌
நாமம்‌ புனைந்தோ ருகந்துரைத்தார்‌. 44

பேயாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்யதேசங்கள்‌
அவ்வந்‌ தாதி தனிற்பதினைந்‌
தூர்பாற்‌ கடல்வேங்‌ கடமரங்கம்‌
ஒவ்வுங்‌ குடந்தை யிடவெந்தை
கோட்டி யூர்வே ளுக்கையுடன்‌
செவ்வெஃ காவை குந்தமட்ட
புயம்விண்‌ ணகர்‌€ ரலிக்கேணி
கவ்வி விசும்பார்‌ சோலைமலை
கடிகை கச்சிப்‌ பாடகமே. 45-பேயாழ்வார்‌ பாடிய இவ்யதேசங்கள்‌ பதினைந்து.

இந்த முறையா லிருக்கினில்வீற்‌
றிருக்கும்‌ பொருளை யம்மூவர்‌
செந்த மிழின்மூன்‌ றத்தாதி இருந்தப்‌ புகன்று பரசமயத்‌தந்தி தனக்கா ளரிபோலுந்‌
குயங்குள்‌ ளிருட்கா தவன்போலும்‌
எந்த வுலகத்‌ துள்ளோரும்‌
ஏத்தித்‌ தொழவாழ்ந்‌ தஇனிதிருந்தார்‌. 46

பரமபதம்‌ உறுதல்‌
அலகில்‌ பலநா ஸஎிரும்புவிமே
லவ்வா நிருந்து பரமபத
உலகத்‌ துளர்வந்‌ தெதுிர்கொளப்பொன்‌
னோங்கு விமான மதன்மிசைபோய்த்‌
இலக நுதற்செந்‌ திருமார்பன்‌
இருவம்‌ புயத்தாள்‌ தொழுதேத்தி, இலகு மணியா தனமிசைவீற்‌
றிருந்தார்‌ பிரிந்த விடாய்நீங்கி. 47–திலக நுதல்‌ செந்திரு – திலகமணித்த நெற்றியை உடைய பெரிய பிராட்டி.

தோன்று ஞான முடையவராய்த்‌
துலங்கு மாயை கடந்தவராய்‌
ஆன்ற மறையந்‌ தணர்முதலாய்‌
அறையும்‌ நான்கு வருணத்தார்‌
மூன்று திருவந்‌ தாதிக்குள்‌ முழுகிக்‌ காப்பிட்‌ டுணர்ந்தோதி
யேன்ற பரம பதந்தனிற்சென்‌
றிருந்தார்‌ சிறந்தார்‌ அடியரொடும்‌. 48 -கோவிலுக்குள்‌ செல்பவர்‌ நதியில்‌ மூழ்கிச்‌ செல்வது மரபு. பரமபதம்‌ செல்பவர்‌ மூன்று “இருவந்தாதியாம்‌ நதியில்‌ மூழ்கவேண்டும்‌,

இக்கா தையையன்‌ புடனேட்டில்‌
எழுதி னவரும்‌ படித்தவரும்‌ மிக்க விதனுட்‌ பொருள்கடமை
விரித்தே விளம்பி னவருமிதை
யொக்கு மெனக்கேட்‌ டுணர்ந்தவரு
மூலகிற்‌ பலநாள்‌ மகழ்ந்திருந்து
தக்க ஞானந்‌ தழைத்தனந்த சயனன்‌ பதம்போய்ச்‌ சார்ந்திடுவார்‌. 49

பெரியாழ்வார்‌ வரலாறு பேசுவோம்‌
முதன்மூன்‌ றாழ்வார்‌ களுமலர்மேன்‌
முளைத்த சரித மதனையிந்த
விதமா மெனவே விளம்பினம்சீர்‌
விளங்குந்‌ திருமால்‌ கமலவிரு
பதமார்‌ புயத்தி லணிகருட
பகவான்‌ புவிவந்‌ தவதரித்த
இதஞ்சேர்‌ பெரியாழ்‌ வார்சரித
மிதுவென்‌ றெடுத்திட்‌ டியம்பிடுவாம்‌. 50

பெரியாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
. இன்றைப்‌ பெருமை யறிந்திலையோ ஏழைநெஞ்சே
இன்றைக்கென்‌ னேற்ற மெனிலுரைக்கேன்‌ – நன்றிபுனை
பல்லாண்டு பாடியநம்‌ பட்டர்பிரான்‌ வந்துதித்த
நல்லாவனிச்சோதி நாள்‌, –உபதேசரத்தினமாலை…… 16

உலகநிலை
இவ்வாறினி தம்மூவரு மேகப்பல நாணீங்‌
கவ்வேலைமெய்ஞ்‌ ஞானம்மகன்‌ றஞ்ஞானம டைந்தே
யொவ்வாதவைம்‌ புலவேடருக்‌ குட்பட்டவ ராகி
வெவ்வேலையு டுக்கும்புவி மேல்வாழ்பவ ரெல்லாம்‌. 1

இறைவன்‌ கருடனுக்கிட்ட பணி
தருமத்துறை நடவாமல தருமத்துறை படவக்‌
கரமத்தினி லடைமூடவி லங்குற்றுளங்‌. கலங்கி
யொருவர்க்கெனும்‌ நலமென்பது நிலையாதவிவ்‌ வுலகு
திருமித்தத ளிக்குந்திரு நெடுமாலுள நினைந்தே. –2-தெருநல்‌ உளன்‌ ஒருவன்‌ இன்றில்லை என்னும்‌ பெருமை யுடைத்திவ்‌ வுலகு” என்பர்‌ திருவள்ளுவர்‌.

அருகற்பெரு வரையைப்பொரு முருவத்துட னணுகும்‌
கருடப்பெய ரவனைத்தன திருகட்கடை யருளாப்‌
பொருவற்றவ ரிவர்வாருஇப்‌ புவிவிட்டணு uses
மருவுற்றது பெருகிற்றிருண்‌ மலிமாயைக எதனால்‌. 3

நீபோய்பெரி யாழ்வாரென நிலமீதவ தரித்தே
மாபாவகொ டும்பாம்பினை மலியாமல டக்ூக்‌ :
காபாலிமுப்‌ புரமட்டவ னிருண்மாயைக எளைந்து
பூபாலுயர்‌ ஞானம்மது பெருகும்‌படி புரிவாய்‌, 4

கருடன்‌ விடைபெற்றான்‌
எனவேயுரை மொழிமேவித ஸிருசெஞ்செவி குறுகும்‌
மூனமேயவ னடிமாமலர்‌ முடிமீதுற வணியா
மனமேகொடு மதியாவிழி வழியேகொடு பருகா
கனவாய்கொடு துதியாவிடை. கொடுமேல்பதி கடவா. 5

பெரியாழ்வா அவதாரம்‌ y,
கனமேனிக ரியமேதி கலக்கும்மடு விடைவாழ்‌
சனமேவுவ ரால்பாய்தரத்‌ தென்னங்களனி யுதிரப்‌
புனமேவுக ரும்பிற்றுதிர்‌ மணிகள்பொழி நிலவின்‌
இனமாமெனக்‌ குமுதங்களி னிதழ்விண்டிடும்‌ வயலார்‌ 6

இதன்‌ உள்ளுறை. மேதிகள்‌ சமயவாதிகள்‌. மீன்‌-மீனையே கொடியாகக்‌
மொண்ட பாண்டியன்‌. உதிர்ந்த காய்கள்‌-சமயவாதிகளின்‌ ஆரவாரம்‌, கரும்பு
முறிந்து மணி வெளிப்பட்டது-பெரியாழ்வார்‌ சினந்து பரத்துவ நிர்ணயம்‌
செய்தது. குமுதம்‌ மலர்ந்தது- திருமால்‌ காட்சி வழங்கியது.

இருவில்லிபுத்‌ தாரென்றுரை செயுமப்பெரு நகரின்‌
மருவந்தணர்‌ குலமென்றிசை வகையிற்புனி தமதாய்‌
குருவென்றுய ரியசோழிய குலனிற்பிர மனைநேர்‌
ஒருவன்குல மணியென்னமு குந்தப்பெய ௬டையான்‌ 7

அறையும்மறை யவன்மாமனை யவள்பற்புமை யென்பாள்‌
பொறையிற்புவி யனையாளெழில்‌ பொலிவிற்றிரு நிகர்வாள்‌
நிறைகற்பினில்‌ வடமீனினை நிகர்வாள்குயின்‌ மொழியாள்‌
பிறையொத்திடு நுதலாளனப்‌ பெடையொப்பிடு நடையாள்‌ 8

அம்மாமட மகளின்றிரு வகடாமிட மதனுள்‌
இம்மாநில மிடைவாழ்ந்தினி திருக்கும்பல வுயிர்க்கும்‌
செம்மாவறி வினைமூடிடச்‌ செறியைம்புல விருளை
விம்மாதொழி வகைசெய்திடு மெய்ஞ்ஞான முகிழ்க்க. 9

ஒருமாகதி ரவனாயினி துதயஞ்செயு மதுபோற்
கருவாகவ மைந்தேகலந்‌ திடுநாளது முதலாய்‌
வரும்ாதம னைத்துங்குறி யவள்பால்மலி தர ஐ
யிருமாதமு நிறைவாய்முடி வெனலாகிய திருநாள்‌. 10

திருவவதரித்த நாள்‌
மிதுனத்திரு மதியிற்பிறை மிளிர்சுக்கல பக்கம்‌
அதனுக்குளி னுதிசோதிய தெனுமத்திரு நாளின்‌ மதனொத்தொளி ர௬ுருவத்தொடு வளையுற்றிடு மணிகள்‌
அதுமுற்றிட சிறகிற்பொரு தரித்தானவ தரித்தான்‌. 11

தந்தையின்‌ செயல்‌
மைந்த னங்குவந்‌ துதித்தலு முளமது மஇழ்வாய்த்‌
தந்தை யாகிய முகுந்தனுஞ்‌ சதுர்மறை நெறியைச்‌ சிந்தி யாசதஞ்‌ சீவவென்‌ றேயெடுத்‌ தெடுத்து
முத்த வாசிகள்‌ பலபல புகன்றனன்‌ முறையால்‌. 12

முகுத்தர்‌ மைந்தனைக்‌ கண்டு, சதம்‌ சீவ!” என்று வாழ்த்தினார்‌.
“இன்னுமொரு நூற்றாண்டிரும்‌’ என்று பல்லாண்டு பாடுவது வைணவ மரபு.
சதம்‌-நூறாண்டு, சீவ-வாழ்க/

புதையி ருட்பிழம்‌ பனையமா மாயையைப்‌ பொடியாச்‌
சிதையு மாறழித்‌ தொழித்திடச்‌ செங்கதி ரவன்வந்‌
துதைய மாயின னெனவுகஇத்‌ திடுமக வினுக்காய்‌
விதைமு தற்பல தானமும்‌ விதம்விதம்‌ வழங்கி. 13

மாயையைப்‌ பொடி யாய்ச்‌ செய்யும்‌ கதிரவன்‌ போல்‌ தோன்றிய மகவுக்காக விதை முதலான தானங்‌கள்‌ செய்தார்‌ முகுத்தர்‌.

மற்றும்‌. செய்வன யாவையுஞ்‌ செய்தனர்‌ ம௫ழ்வால்‌
வெற்றி யாழிநா ரணன்றிரு வருளினால்‌ விரைவோ
டுற்ற பாற்கடல்‌ கடைந்தநா ளூதத்தவா ரமுதம்‌ பெற்ற வானவ ரொத்தன ரந்நகர்ப்‌ பெரியோர்‌. 14

பெரியாழ்வார்‌ வளர்ந்தார்‌
ஊட்டி யும்முலை யுச்சிநெய்‌ தடவிமஞ்‌ சனநீ
ராட்டி யும்மணித்‌ தொட்டிலிட்‌ டசக்கியம்‌ புலியைக்‌
காட்டி யும்மடி மிசைவைத்தும்‌ கண்ணிறை கழித்தும்‌
ஈட்டி யிம்முறை பலபல்‌ ம௫ழ்வினோ டிழைப்ப. –15-

கிடந்த சைந்தும்பின்‌ கவிழ்ந்திட்டுந்‌ தவழ்தலாய்க்‌ கெழுமிப்‌
படர்ந்தி ருந்தும்பின்‌ பார்மிசை நின்றுதத்‌ தடியாய்‌
நடத்தும்‌ விம்மியும்‌’ நகைசெய்துந்‌ தந்தையும்‌ நல்கும்‌
மடத்தை யுங்களிப்‌ புறப்பல செய்கைகள்‌ மருவி. 16

சுதிர்செய்‌ நேமிநா ரணன்பத மலருளங்‌ கருஇத்‌
துதிசெய்‌ தேயுய ரியபதந்‌ தொடர்ந்திடப்‌ புவிமேல்‌
வதிப வர்க்குமெய்ஞ்‌ ஞானத்தை வளர்ப்பவந்‌ துதித்தோன்‌
மதிதி னங்கலை வளர்வபோல்‌ வளருமந்‌ நாளில்‌. 17

பெயர்‌ வைத்தல்‌
உட்பட்‌ டியாவரும்‌ பொருந்துற வூர்தியாய்க்‌ கருடப்‌
புட்ப டைத்தவர்க்‌ கேபரப்‌ பெயர்புனை விக்கும்‌
மூட்பொ திந்ததாட்‌ டாமரை தநிகர்தரு முகற்கு
விட்டு சித்தனென்‌ றேதிருப்‌ பெயர்புனை வித்தார்‌. 18
காப்பிடுதல்‌
விண்ணி டைப்பெருங்‌ கருடன்மேற்‌ றோன்றுவிண்‌ டுவுக்கு
மண்ணி டைக்குலப்‌ பாண்டிய னவையின்மா ஸிடர்தங்‌
கண்ணி றைப்பொருந்‌ தாதுபல்‌ லாண்டுகாப்‌ பிடுமப்‌
புண்ணி யர்க்குநற்‌ காப்புமிட்‌ டனர்பொருந்‌ துறவே. 19
அணிகலன்‌ புனைதல்‌
வண்டு ணும்மது மலரினை மாலையாய்த்‌ தொடுத்து
பண்டு மாநிலப்‌ பரப்பெலாம்‌ பாலன மெனவே
யுண்டு கந்தவற்‌ களிப்பவற்‌ குயாந்தபல்‌ கலங்கள்‌
கொண்டு மெய்யெலா மணிந்தனர்‌ குறைவில தாக. 20–பாலனம்‌-சிலேடை. பால்‌-அன்னம்‌ என்றும்‌, பாலனம்‌ என்றும்‌ கொண்டு நயம்‌ காண்க,

அன்னமுூட்டுதல்‌ .
மன்னு நால்வகை வருணருஞ்‌ செவியெனும்‌ வாயால்‌
பன்னி டுந்திரு வாய்மொழி யமுதினைப்‌ பருகப்‌
பின்ன ஸித்திடும்‌ விட்ணுசித்‌ தப்பெய ரவனுக்‌
கன்ன மாமமு தளித்தன ரன்புட னருந்த. 21
சடங்குகள்‌
தவள நேர்வளை யாழிமாற்‌ கோதுசெந்‌ தமிழாந்‌
திவளும்‌ வாள்கொடு தெய்வம்வே றுளதெனத்‌ தியங்க
உ.வளு மாயநூ லிருண்மயி ருகுத்தறுப்‌ பவர்க்குச்‌
சவள மாவதும்‌ கதிமுறைத்‌ தகவுட ஸிழைத்தார்‌. 22

இருபிறப்பாளராதல்‌
ஏலும்‌ வேதசாத்‌ -திரம்புரா ணங்களா யினவும்‌
மேலும்‌ தத்துவ முதலிய பலவென விளம்பும்‌
நூலெல்‌ லாமறிந்‌ தகத்தணி பவற்குநூன்‌ முறைய
தால ஸணிந்தனர்‌ முப்புரி நூலுமன்‌ புறவே. 23

இவ்வி – தம்புரி வனவிதி முறையெலா மியற்று
மவ்வி தம்புரிந்‌ தார்மகிழ்‌ வாயினர்‌ : அவனுஞ்‌
செவ்வி தாகிய பிரமசா ரியத்தொடும்‌ சிலநாள்‌ ்‌
ஒவ்விவாழ்ந்திருந்‌ தனனுவந்‌ துறையுமந்‌ நாளில்‌. 24

திருப்பணி
ஊர மித்தவன்‌ தந்தையாம்‌ பிரமனை யுதவும்‌
நார ணன்தஇிரு வுலகெலா மளந்திடு :நளினச்‌
சீர டிக்குமுன்‌ னுலகுதூ ளென்பதைத்‌ தெளிவு
கூர கத்திடை. யறிந்தன னாதியிற்‌ குமரன்‌. _ 25

அந்த வூரூறை வடபெருங்‌ கோயிலி லமர்ந்த
செந்தி ௬ப்பதி யானமா யவன்றிரு வடியை
முந்து காதலோ டணுகியே முறைமுறை வணங்கிச்‌
சிந்தை யோடிரு நயனமுஞ்‌ சிறந்திடக்‌ களித்தான்‌. 26

அடிமை செய்திடும்‌ தொழில்களில்‌ யாதினா லிந்த
நெடிய மால்திரு வுளமகழ்ந்‌ தஇடுமென நினையாக்‌
கடிகொண் மாமலரிதழொடுந்‌ தெளிமதுக்‌ கமழ்பூஞ்‌
செடிகள்‌ வைத்துப்பூ மாலைசாத்‌ திடலெனத்‌ தெளியா, 27

இதுவ லாற்பிரி திலையெனச்‌ சென்றிரு வாட்ட
மதுபொ மிந்துடுந்‌ துளவமல்‌ லிகைமுல்லை யலரிப்‌
புதும ணத்தசெவ்‌ வந்தியும்‌ புன்னைசெண்‌ பகமென்‌
பதுமு தற்பல சாதிபூ வனந்தனைப்‌ படைத்தே. 28

தேன்பொ ருந்துசெந்‌ தாமரை குமுதஞ்செங்‌ கழுநீர்‌
கான்பொ ருந்தும்வண்‌ டுறையும்வெண்‌ கமலமே முதலாம்‌
வான்பொ ருந்திடும்‌ தேவரும்‌ விரும்புமன்‌ மலர்க டான்பொ ருந்திடும்‌ பொய்கையும்‌ அமைத்தனன்‌ றகவாய்‌. 29

விடியு முன்றின மெழுந்துபோய்ப்‌ பொய்கையின்‌ மிளிர்நீர்‌
படித லேமுதற்‌ காலைசெய்‌ பலகடன்‌ முடித்து
நெடிய னாம்வட பத்திர சாயிபொன்‌ னிகர்சீர்‌
அடிவ ணங்கியே தந்தன வனந்தனை யணுகி. 30

கொத்தி டல்புனல்‌ விடலெருக்‌ கொணர்ந்துபூஞ்‌ செடிவேர்‌
வைத்தி டல்தண்ணீர்‌ பாய்ச்சுதல்‌ மலிகளை களைதல்‌
ஒத்து டச்சுவர்‌ வேலிவைத்‌ திடல்புழு வெடுத்தல்‌
இத்தி றம்புகல்‌ பக்குவம்‌ குறைவிலா திழைப்பார்‌. 31

விண்ட… லர்ந்தபூ மலர்களைப்‌ பத்தியால்‌ விரைந்து
வண்டு ஸணும்முனம்‌ மணமுறா மற்பரி வட்டால்‌
கொண்டு நாயைப்‌ பூட்டிப்பூக்‌ கூடையி லெடுத்துச்‌
செண்டு மாலைக டொடுத்திடு வான்தினந்‌ தோறும்‌. 32

வாசனை நாசியில்‌ புகாதபடி திருப்பரிவட்டத்தால்‌ பூட்டிக்‌ கொள்வார்‌. -* பூக்களைத்‌
தெரித்து புழுக்கடி போக்கிப்‌ பொய்யிலா மெய்யனார்‌ புரைதீர்‌ மூக்கலம்‌ மணம்‌
செள்‌ நடைந்திடா வண்ணம்‌ மூடிவாய்‌ புதைத்து”” என்பர்‌ வடிவழகய நம்பிதாசர்‌
(குருபரம்பரை). தமது நாசியில்‌ வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தாற்‌
கட்டிக்‌ கொண்டு” என்று குருபரம்பரை ப்ரபாவம்‌ பேசும்‌ (பன்னீராயிரப்படி).

தொடுத்த: செண்டொடு மாலையைத்‌ துலங்குபாற்‌ கடலிற்‌
படுத்தி டும்வட பத்திர சாயிக்குப்‌ பகல்போய்‌
அடுத்த சந்தியிற்‌ கொண்டுசென்‌ . றற்சகர்‌ கரத்திற்‌
கொடுப்ப னிம்முறை நடக்குநா ஸூற்றகூ றுதுமால்‌. 33

பகல்‌ போய்‌ அடுத்த சந்தியில்‌ என்‌.றதால்‌ ஆழ்வார்‌ மாலைக்காலச்‌
சந்திக்கு மாலை முதலானவற்றை வழங்கினார்‌ என்று தெரிகிறது. ** பகற்‌ பொழு
தைக்‌ கழித்ததற்பின்‌ எய்த்த நறு மலர்ந்தித்‌ திருமாலை நேயத்தால்‌-பரமனுக்குச்‌
சமைத்தளித்தே” என்பர்‌ வடிவழகய நம்பிதாசர்‌ (குருபரம்பரை),

பாண்டிமன்னன்‌ செயல்‌ ஆழ்வார்‌ கிழியறுத்தல்‌
முருகவிழ்‌ தாமரை முத்தை. யீன்றிடும்‌
கருவென வனங்கிடை காக்கு மாவயல்‌
மருவிய செந்நெலுங்‌ கரும்பு மல்இடுந்‌
இருவளர்‌ பாண்டிய தேய வேந்தனே. 34

நறைகொள்தார்‌ வேந்தராங்‌ கடன டுங்கியே
முறையெனப்‌ புலம்பியுள்‌ கலங்க மொய்ம்புணீர்‌
கறைகொள்வேல்‌ மலையினாற்‌ கலக்கி யேதரும்‌
திறைகொள்சீர்‌ வல ராய னென்பவன்‌. 35

பாண்டிய நாட்டு வளம்‌-தாமரை
ஈன்ற முத்தை முட்டை என்று கருதி அன்னம்‌ அடைகாக்கும்‌ நாடு பாண்டிய
நாடு. இங்கு நுட்பமான உள்ளுறை உண்டு, அன்னம்‌ முத்தை முட்டை என்று
அடைகாக்கிறது. * எத்தனை நாட்கள்‌ அடை கிடப்பினும்‌ அதில்‌ அன்னக்‌ குஞ்சு
தோன்றாது, அன்னம்‌ சமயவாதிகள்‌. முத்துக்கள்‌ லோகாயதம்‌ முதலான
புறச்சமயங்கள்‌. அச்சமயங்களால்‌ பயன்‌ இல்லை என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌.
முருகு- வாசனை, தேன்‌. கர௬-முட்டை. கிடைகாக்கும்‌-அடைகாத்தல்‌.

அறங்களாம்‌ எருவையிட்‌ டறம்பி ழைத்திடுங்‌
குறும்பராங்‌ களைகளைக்‌ குறைத்திட்‌ டன்பெனு
நறும்புனல்‌ பாச்சநல்‌ லோர்க ளாமெனும்‌
உறும்பயிர்‌ விளைத்துச்‌ செங்கோலை யோச்சு நாள்‌. 36

ஒருதினம்‌ நகரசோ தனைக்கென்‌ றுற்றுநள்‌
ளிருளிடை யொருவானா யிலங்கும்‌ வாளொடும்‌
மருவுமம்‌ மதுரைமா நகரின்‌ மல்கஇிடுந்‌
தெருவெலாந்‌ . துருவியே செல்லு மெல்லையில்‌. 37

காவலர்‌ பாரிப்போர்‌ மிடைதல்‌ காண்குறாச்‌
சீவல தேவ னென்‌ றுரைக்குஞ்‌ செவ்வியோன்‌
தாவியாங்‌ கொருதெருத்‌ திண்ணை தன்மிசை
மேவியாங்‌ இறைப்பொழு திருந்த வேலைவாய்‌. 38

பாரிபோட்‌ டடைந்தவ ரகலப்‌ பாருடை
கூரிய வேலினா னாங்கு பள்ளிகொள்
சீரிய னொருவனைச்‌ சேர்ந்தெ முப்பிநீ
யாரிசைப்‌ பாயென வதட்டிக்‌ கேட்டலும்‌. 39:

அன்ன வனுணர்ந்து நீ யாரென்றோதலும்‌
இன்னகர்‌ காத்திடும்‌ வேந்தன்‌ யானெனச்‌
சொன்னது கேட்டவத்‌ தூய வேதியன்‌
குன்னுடை வரவினைச்‌ சாற்று வானரோ. 40

மறையவர்‌ குலத்தன்யான்‌ மறைகள்‌ காணொணா
நறைகமழ்‌ துளவநா ரணன்ப தத்திடை
பிறையணி சடையினன்‌ கொண்டு பின்விடுந்‌
துறைபடுங்‌கங்கைநீர்‌ தோய்தற்‌ கேகியே. 41

ஒதுகங்‌ கையையடுத்‌ துகப்பி னாடியே
மாதுகா ரணத்திரா சகுவன்வ குத்திடுஞ்‌ :
சேதுவைத்‌ தெரிசனம்‌ செய்தற்‌ கெய்துவேன்‌
ஈதுகான்‌ வரவென வர? யம்புவான்‌. 42

அய்ய நீபற்பல தேயத்தி யாவையும்‌
கையிலா மலகம்போற்‌ காணும்‌ பெற்றியால்‌
செய்யநற்‌ சுதைபல தெரிந்தி ருப்பையான்‌
உய்யவோர்‌ நற்கதை யுரையென்‌ றோதலும்‌. 43

யானுணர்ந்‌ திலன்கதை யாயி னும்மொரு
தூனலனு டையதாஞ்‌ சுலோகங்‌ கற்றுளேன்‌
ஊளனுணும்‌ வேலவென்‌ றுரைப்ப வேந்துநீ
தானதை யுரையென வவனுஷஞ்‌ சாற்றினான்‌. 44

கேட்டிதன்‌ பொருளைநீ கிளத்து வாயென
வாட்டிறன்‌ மன்னவன்‌ வணங்கி யேத்தலும்‌
ஈட்டிய விரவினுண்‌ டிடுதற்‌ கஇயொாவையும்‌
. நாட்டிய பகலிடைக்‌ கொள்ளல்‌ நன்றரோ. 45

மாரி காலத்தினுண்‌ பவைகண்‌ மற்றைய
சரிய கோடையிற்‌ சேர்த்தல்‌ செவ்விதாஞ்‌
சேரிய முதுமையி ஸூண்டி சேர்த்தடுங்‌
காரிய மிளமையாங்‌ காலத்‌ தாகுமால்‌:-46

:* வர்ஷார்த்தம்‌ அஷ்டெள ப்ரயதேத மாஸான்‌7
நிஸார்த்த அர்த்தம்‌ இவஸம்‌ யதேந வார்த்ததய ஹேதோர்வயஸா நவேன பரத்ர
ஹேதோர்‌ இஹ ஜன்ம நாச”,-இரவில்‌ உண்பதற்கு
வேண்டியவற்றைப்‌ பகலில்‌ சேர்க்க வேண்டும்‌. ‘ மழைக்‌ காலத்துக்கு’ வேண்டிய
பொருளைக்‌ கோடைக்‌ காலத்தில்‌ ஈட்ட வேண்டும்‌. முதுமைக்‌ காலத்திற்கு
வேண்டியவற்றை இளமையில்‌ தேட வேண்டும்‌. இவற்றைப்‌ போல மறுமைக்கு
வேண்டிய உறுதிப்‌ பொருளை இம்மையில்‌ பெற வேண்டும்‌

அம்மையில்‌ வேண்டுநல்‌ லேது வானதை
யிம்மையிற்‌ றேடிட வேண்டு மென்னவே
மும்மையு முணருமந்‌ தணனு முன்புசொற்‌ செம்மைசேர்‌ சுலோகத்தின்‌ பொருளைச்‌ செப்பினான்‌. 47

மன்னனும்‌ கேட்டுள மகிழ்ந்து ருக்கமாய்‌
நன்னய மொழிபல நவின்று போநற்றிசெய்‌
தன்னவன்‌ றன்னொடு மவிடம்‌ நீங்கிப்போய்த்‌
தன்னர மனையிடைச்‌ சார்ந்திட்‌ ‘டானரோ. 48

சார்ந்தரு மறையவன்‌ -றனக்குக்‌ கண்ணருள்‌
கூர்ந்துவேண்‌ டுவவெலாங்‌ கொடுத்த ஸனுப்பியே
தேர்ந்தவ னுரைத்தநல்‌ லுரையைச்‌ சந்தைகொண்
டோர்ந்துயிர்க்‌ குறுதியை யுன்னு மெல்லையில்‌. ்‌ 49

அன்னவ ஸனுளத்திரு ளழித்து நீக்கிட மன்னுவன்‌ புதுவையா யென்னும்‌ வாய்மையை
முன்னர்வந்‌ துரைசெய்வான்‌ முடுகல்‌ போலவே
துன்னிருள்‌ ஒழிந்திட விரவி தோன்றினான்‌. : 50

காலையி னெழுந்துபல்‌ கடன்கண்‌ -முற்றியே
நூலையோர்‌ முனிவரா சிகணு வன்‌ றிட
வேலையின்‌ மிஞ்சொலி ..விம்ம வேகொல்ச்‌. . ட்ட
சாலைவந்‌ தரியணை தன்னின்‌ மன்னினான்‌. . 51

மந்திரித்‌ தலைவரும்‌ மற்று ளோர்களும்‌
வந்திரு மருங்கினு ணெருங்கி வைகட
அந்தரத்‌ தவர்புடை சூழ வாதனத்‌ இந்திர னிருந்தென விருத்த வெல்லையில்‌. 52

செல்வரஈம்பியின்‌ பண்பு
ஓவ்விய மோக்கமா முலகு தன்னையே
எவ்வித மடைகுவ தெனநி ஸனைத்திடும்‌
அவ்வயின்‌ நாரணன்‌ அடியர்‌ தங்களிற்‌
செவ்விய மாணியன்‌ சிறந்த மேன்மையான்‌ ; 59

பல்கலை நூல்களும்‌ பயில்நற்‌ கேள்வியான்‌ ;
குலமறை யோர்கடங்‌ கொழுந்து போன்றுளான்‌ ;
நலமலா துரைசெயா நாவு கொண்டுளான்‌ !
அலகிலாக்‌ கல்விசே ரறிவு மிக்குளான்‌ :54

செல்வநம்‌ பிப்பெயர்‌ சேர்ந்து ளான்‌௮அவன்‌
மல்கிய வவையிடை வந்து தோன்றலும்‌
மல்கவி ராசனும்‌ வணங்கு யாதனம்‌
நல்கலு மதன்மிசை நண்ணி னானரோ | 55

மன்னன்வினா
இருந்தவே தியன்முக னோக்கி யேந்தலும்‌
பொருந்துமிப்‌ பொய்மையாஞ்‌ சமயம்‌ புல்லியே
UGG Gumus மோக்கம்‌ மன்னியான்‌
இருந்துறும்‌ வகையைநீ செப்பு கென்னலும்‌ ;–56-

நம்பிவிடை
எண்ணிலா தத்துவ நூல்கள்‌ யாவையு
மண்ணிலே யுணர்ந்துடி லறிவுண்‌ டாகியே
விண்ணவர்க்‌ கரியதா மோக்க வீட்டினை
நண்ணலா மென்றனன்‌ செல்வ நம்பியே.–57-
என்னலுந்‌ தத்துவக்‌ கியானம்‌ யாவும்தேர்ந்‌

துன்னிடும்‌ பெரியவ .’ர௬ல, லுண்டுசொல்‌
அன்னவர்‌ தன்னை நீ : யறிந்து ளாயெனிற்‌
பன்னிட வேண்டுமென்‌ றரசன்‌ பன்னலும்‌;–58-

இவ்வுலகி யாவையு மினிதி ணாண்டது .- லொவ்வுசெல்‌ வந்தனை யோழியும்‌ புன்னுனிக்‌
கவ்விய பனியெனக்‌ கருதி மாறிலாச்‌
செவ்விய முத்தியைச்‌ சேர்த லுன்னினாய்‌,–59-

ஆதலா லியாதினு மறுக்கொ ணாதென
ஒது மாயா விருளதனை யுண்மையாம்‌
நீதியா லொழித்திடு நினைவுண்‌ டாகியே
இதிலா முத்திவீ டணையுஞ்‌ செய்கையை.–60

புல்நுனி கவ்விய பனி – புல்லின்‌ நுனி பற்றிக்‌ கொண்டுள்ள. பனி. *கவ்விய’- என்ற தொடர்‌ நயமானது செல்வ நிலையாமை விளக்கப்படுகிறது. :’புல்‌நுனிமேல்‌ நீர்போல்‌ நிலையாமை’* என்று நாலடி நிலையாமையைப்‌ பேசும்‌,

அறிவிக்க வல்லவர்‌ யாவ ரோவெனின்‌
நெறிதக்க வேதநூ னிறைந்த நெஞ்சிடை
குறிதக்க வல்லவ ராங்கும்‌ கொற்றவா
செறிதக்க வுள்ளர்நீ வெருவல்‌ . தேர்குவாய்‌ 61

என்றுரைத்‌ திடுதலு மினியர்‌ தங்களிப்பு
ஒன்‌. றிய மனத்தொடு மந்த வுத்தமர்‌ துன்றிய தெத்தலஞ்‌? சொல்லி னாங்கடைந்‌ –
இன்றடி தொழுதவர்க்‌ கடிமை யெய்துவேன்‌. 62

இனையவா சகந்தனை யேந்த லோதலும்‌
. இனையள வாயினும்‌ பெருமை தேர்கொணா
வனையரை யடைந்துகாண்‌ பரிய தாதலால்‌
நினையுமோ ருபாயத்தி னிரப்பல்‌ வேண்டுமால்‌. 63

என்னலு மொருவன்‌ வீடெய்த வெய்தியோர்‌
நன்னதி மூழ்கிட வேண்டு நாளிடை
யன்னதி யெதிரிடை யணுகி நீயுமென்‌
றன்னிடை மூழ்கெனச்‌ சார்ந்த தன்மைபோல்‌ ; 64

ஆயதிம்‌ மொழியென வரச ஸுண்மகழ்ந்‌
தேயவிச்‌ செயலலாற்‌ பிறிதொன்‌ றநில்லெனத்‌
துரயவ னடிதொழு துபாயஞ்‌ சொல்லென
நேயமோ டவனிது நிகழ்த்தன்‌ மேயினான்‌. 65

வேறு
கேட்டறிநீ அரச[விது பரமபுரு
டோத்தமனாய்க்‌ கிளருந்‌ தேவன்‌
ஈட்டியமா மயமெனும்‌ வினோதத்தால்‌
பலசமய மியைந்த தாமால்‌ ;66

நாட்டியவச்‌ சமயமெலாந்‌ தனித்தனியே
பெரிதென்று நயந்து சொல்லும்‌ ;
ஏட்டினிடை யேயெழுதா நான்மறையு
மவ்வாறா யிசைக்கு மன்றே, 67

அச்சமயத்‌ துற்றவரும்‌ பிறசமய
மாகாதென்‌ றறைவா ரந்த
இச்சைபெறும்‌ சமரமெலா நிருமித்த
பரனாகு மிறைவன்‌ றன்னை
நிச்சயங்கண்‌ டறிவார்கள்‌ அப்பரம
னடியார்கள்‌ ; நிறைந்த வேதத்‌
துச்சிமிசை யிருப்பதனை யத்திருநான்‌
மறைதானு முணரா தன்றே.” ட ்‌ 67

ஆதலினாற்‌ பலவாகுஞ்‌ சமயற்களிற்‌
* சிலபோர்க ‘ள்துவி ‘தென்றே
யோதுவர்கள்‌ சலபேர்கள்‌ பொதுவெனவே யுரைத்திடுவர்‌ உண்மை முற்றும்‌ஈதெனக்கண்‌ டியாவர்களும்‌ தெஸிந்துரையார்‌ ;
மாணிக்க மெனுங்கல்‌ லோடும்‌
தீதுபெறு புன்கல்லுங்‌ கலந்திடின்மற்‌
றாங்கதனைத்‌ தெரியத்‌ தக்கோர்‌. 68

சாணைதனிற்‌ பிடித்தறிவார்‌ ; அங்கதுபோல்‌
நீயிளகும்‌ தண்மை யெண்ணி
ஆணையொடு மறையுரைக்கும்‌ பரமபுரு
டோத்தமனை யறிந்து சொல்லும்‌
நாணையஞ்சே ரடியவர்க ளூளங்களிந்துள்‌
நணுக்கெவோர்‌ நயங்காண்‌ பித்தால்‌
வீணைபயி லின்னிசைகேட்‌ டசுணமா
வடைவதுபோல்‌ மேவு வாரால்‌. 69

மாணிக்கக்‌ கல்லுடன்‌ புல்லிய கல்‌ சேர்ந்துவிட்டால்‌
சாணையினில்‌ இட்டுத்‌ தேய்த்து அறிவார்கள்‌. அதுபோல்‌ சமயங்களைப்‌ பட்டை
தீட்டிக்‌ காட்டவல்ல பெரியவர்கள்‌ ஒன்றுசேர உபாயம்‌ செய்ய வேண்டும்‌.
அப்போது வீணையிசை கேட்டு ௮சுணமா வருவதுபோல்‌ சான்றோர்கள்‌ வரு
வார்கள்‌, ்

அன்னயம்யா. தெனிற்கேண்மோ நினதுதிரு
வரமனையா சார வாயில்‌
முன்னரிற்பொற்‌ கிழிதாூக்கிப்‌ பரமுரைத்திஃ
தறப்பாடு மொய்ம்பு ளோருக்‌
இன்னபொரு ஸூரியதெனத்‌ திருமுகத்தைப்‌
பொறித்தனுப்பி னெங்கு ளோரும்‌
மன்னிடுவர்‌ 2 அவரினதை விழப்பாடு
மவற்குருவாய்‌ வ௫க்க லாமால்‌. 70

குருவெனவே வகுத்துமல ரடிபோற்றிப்‌
பணிந்தவன்றான்‌ கூறு கின்ற
பொருவரிய நெறியிடைநின்‌ றாழ்கிடின்வெள்‌
ளோலையிடை பொறியா வேதத்‌
இருமுடியின்‌ வீற்றிருக்கும்‌ பரமபுரு டோத்தமனை -தெரி௫த்தி யார்க்கும்‌
மருவரிய பதவியதா மோக்கவீடதினடைந்து வாழ லாமால்‌. 71

ஈதலவே றுபாயமிலை யெனவெடுத்துச்‌
. செல்வதம்பி யினிதி னோடும்‌
ஒதுதலு மரசனுமவ்‌ வாரமுத மெனுமொழிகேட்‌ டுளத்தி abn
மாதுயர மதுநீங்கிப்‌ புளகமுடனி
ருபுயங்கண்‌ மலைபோ லோங்கப்‌
போதவுப சரித்தவர்க்குப்‌ பசும்பொன்மணி
கலன்பலவும்‌ பொருந்த . நல்கி. 72

கிழியுயர்த்தினான்‌
அவனுளத்தி னிடைகுறித்திட்‌ டுரைத்திடுமு பாயவகை யதனை யேசெய்‌
குவதுயர்நற்‌ பதவிபெறற்‌ குறுதியெனத்‌ இருவுளத்துக்‌ கொண்டா னாகி
இவனுமொரு .பொற்கிழியை யிழைத்ததனை
யுயரவெடுத்‌ தெழில்வா னோங்கித்‌
, துவளுமணிக்‌ கொடிபொருந்துந்‌ தனதுதிரு
மனைவாயிற்‌ றூக்குப்‌ பின்னர்‌ ; 73

அகலுமலை கடலுடையம்‌ புவியிடைப்பற்‌
பலசமயத்‌ தமைந்து ளோரிற்‌
புகலரிய சதுர்மறையும்‌ பலபலசாத்‌
தஇிரவகையும்‌ போத மார்ந்த
சகலகலை களுமூணரும்‌ தன்மையினர்‌
பலபலநூல்‌ நுவலத்‌ தக்கோர்‌
பகலிரவென்‌ றறியாத்‌ தனிப்பொருளாம்‌
பரஞ்சுடர்போற்‌ படிவங்‌ கொண்டோர்‌. . 74

பூவருமெண்‌ டோளுடைப்புங்‌ கவன்படைத்த
நான்கெனவே புகல்வர்‌ ணத்தின்‌
யாவரெனு மோக்கமதை யடையும்வழி
துன்னையடை விப்போர்‌ தங்கள்‌
தேவர்நிலை தனைத்தெரித்திட்‌ டெனையடிமை
கொண்டுசெம்பொற்‌ கிழியுங்‌ கொண்டு
போவதற்குக்‌: கருத்துடையோர்‌ மதுரைநக
ரிடைவந்து பொருது கென்றே. 75-எண்‌ தோளுடைப்‌ புங்கவன்‌ -பிரமன்‌.

சமயவாதியர்‌ செயல்‌
இருமுகங்கள்‌ பொறித்துவந்து தூதர்கள்‌ தங்‌
கைகொடுத்துத்‌ இசைக ளோர்தநா
லிருமுகத்தும்‌ விடுப்பவவர்‌ களுங்கொடுபோய்‌
கொடுத்ததனை யியம்ப லோடும்‌
மருவுமுவப்‌ பொடுஞ்சைவர்‌ வாமிகள்வை
சேடியர்மா விரதர்‌ புத்தர்‌
அருகருல காயுதர்க ளாமுகர்மீ
மாங்கெசர்சாங்‌ இயோக ரானோர்‌. 76

பாசுபதர்‌ மாயாவா தியர்முதலாஞ்‌
சமயத்தோர்‌ பலரும்‌ வந்தார்‌ :
பூசுரர்கண்‌ முதலாநால்‌ வருணத்துற்‌
பெரியோரும்‌ பொருந்தி வந்தார்‌ :
ஆசில்புக ழிமையவருஞ்‌ சித்தர்வித்யா
தரர்கண்‌ முதலானோர்‌ தாமும்‌
வீசுதிரைக்‌ கடற்புவியி னிதையறிவான்‌ மதுரைநகர்‌ மேவி னாரால்‌. 77

வேறு
– ஆழ்வாரின்‌ செயல்‌
‘இவ்வகை யாவரு மினிதி னடைந்தார்‌
அவ்வகை செய்யர சவ்வவ ருக்குச்‌
செவ்வகை செய்வ முறைப்படி செய்தா
ரொவ்விய புதுவை யினுற்ற துரைப்பாம்‌. 78

மருவிய விட்டுணு சித்தனும்‌ மாலாம்‌
பொருவட பத்திர சாயி பொருட்டு
ஒருபகல்‌ பொன்மலர்‌ மாலை யுஞற்றி
வருபக லின்னொரு வைக லிருட்கண்‌. 79

நித்திரை வேளையி ஸில்லா, விந்தம்‌
ஒத்துள கண்ணளி யு.ற்றவண்‌ விட்ணு
சித்த வெனப்பெயர்‌ செப்பி யெழுப்ப
அத்தலை மேனிய சக்கி யெழுந்தே. 80

சிக்கென நோக்கத்‌ திருவரு ளாலே
பக்கமி ர௬த்தருண்‌ மாலைப சுங்கார்‌
ஓக்கு நிறத்தோ டுற்றுத்‌ தன்னுளம்‌ மிக்க களிப்போ டவனடி மீதே. 81

விழும்‌; புரளும்‌; புவியிற்‌ ; பரிவின்மீண்‌
டெழும்‌; புகழும்‌;நட மிட்டுகை கூப்பித்‌
தொழும்‌ உருகும்‌; பரிவோடு துதிக்கும்‌ ;
அமும்‌;பரிசன்ன தறிந்திட லாகா. 82

இத்தக வாகி யெழுந்தெதிர்‌ நின்றே
கைத்தல மீது கவித்து விளித்த
மத்தகெ ஜத்தெதிர்‌ வந்தருள்‌ செய்த வித்தக நின்னை வியந்தவர்‌ யாவர்‌? 83

ஆதியு மாகி யனாதியு மாகிச்‌
சோதியு மாகிச்‌ சுடரொளி யாகி
நீதியி னாலுல கெங்கும்‌ நிறைந்த .
வேதிய னேயுனை யானறி வேனோ? ்‌ 84

நின்னடி யான்றொழு தற்கு நினைந்தோ?
வின்ன தொழில்புரி யென்பத னுக்கோ?
துன்னு பிறப்பை துலைத்திடு தற்கோ?
வென்னிவ ஸணுற்றது? இயம்புதி யென்றான்‌. 85

என்றது தன்செவி யின்னிடை யெய்த
நன்றென நாரண னும்நகை செய்யா
இன்று நினக்குரை செய்திடு மின்சொல்‌
ஒன்றுள கேளென என்னென லோடும்‌. ‘ 86

மற்பொரு தோண்மது ரைப்பதி யான்றன்‌
இற்பொலி வாயி லிடத்தெதி ராகப்‌
பொற்கிழி கட்டின னாதலி னீபோய்‌
யெற்பர மென்ன விசைத்த தறுத்தே | 87

அக்கிமி கொண்டிவ ணணுகென லோடும்‌
மிக்க விருப்பும்‌ வெறுப்பு மிலாதோன்‌
றக்க மறைப்பல சாத்திர நூலுந்‌
தொக்க வறிந்து சொலத்தகு வோரை,.-88

வாதினில்‌ வென்றிட வல்லவ ரன்றோ
ஓதுகி மிக்கொள லுக்குரி யோர்கள்‌ ?
ஏதெனு மொன்றுண ராவடி யேன்போ
யாதுப கர்ந்த தறுத்திட லாகும்‌?-89

கொட்டுகை பற்றி குனிந்தடி யேன்மண்‌
வெட்டுத மும்பை விரித்து தெரிக்கிற்‌
கட்டுகி மிப்படு மோ2படி னுங்கண்‌
டிட்டிடர்‌ சொற்கறி வின்மை யுணர்ந்தால்‌.–90

பொறுத்தல்‌ செயானவன்‌ பார்த்திப னென்னா
மறுத்திட மாலும்‌ வளக்கிழி யைப்போய்‌
யறுத்திட லுன்கடன்‌ : நான்மறை முடிவை
நிறுத்துரை.. செய்கட னென்சகட ஸேர்வாய்‌,-91

கொட்டு – மண்வெட்டி, கொட்டுசைபற்றி – மண்‌ வெட்டியதால்‌
உண்டான தழும்பைக்‌ காட்டினால்‌ இழி அறுபடுமோ? ஒருவேளை உன்‌ அருளால்‌
அது அறுபட்டாலும்‌, பாண்டியன்‌ பொறுத்துக்‌ கொள்வானோ, என்று கூறி
ஆழ்வார்‌ மறுத்தார்‌. “அறுத்தல்‌ உன்‌ கடன்‌; மறை முடிவை நிறுத்தல்‌ என்‌ கடன்‌”*
என்றான்‌ பெருமான்‌. தேர்வாய்‌-உடன்படுவாயாக,

என்னலும்‌ மேலவர்‌ யாரும்‌ நெருங்கித்‌
துன்னவை யின்னொரு சொல்லு மெழுத்தும்‌
இன்ன தெனத்தெளி யாவெளி யேன்போய்‌
மின்னுவ தெவ்வண மானமி லாமல்‌.–92-

ஆதலி னேகுத னன்கல வென்ன
மாதவ ஸனும்நகை செய்து மறித்தும்‌
ஓதுவ னென்வயி னுள்ளன வாகும்‌
வேத முனக்கரி தோதெளி விப்பேன்‌ 93

என்னுரை கொண்டவ ஸணேகுது யென்ன
அன்னவ னும்‌அமை வாகி யவன்றன்‌
பொன்னடி தன்மூடி மீது புனைந்து
நன்னய மெய்த நவின்று துஇத்தே. டடத–94-

ஏக விடைதரு கென்றவ னைத்தன்‌
ஆக முறத்தமி யன்போ டளித்தே
மேக நிறத்திரு மால்விரை விற்போய்‌
வாக மணித்திரு கோயிலின்‌ வாழ்ந்தான்‌. 95

ஆழ்வார்‌ மதுரையடைதல்‌
விடைகொண்‌ டுயர்விட்‌ டுணு9த்‌ தனிரு
புடையும்‌ மடியார்‌ கள்புகன்‌ றுவரக்‌
குடைவெ ஸண்மதியிற்‌ குலவச்‌ சிவிகை
இடைவெங்‌ கதிரென்‌ நிடவே றினனே. 96

பூவின்‌ மழைதே வர்பொழித்‌ இடமுன்‌
நாவின்‌ மதிபட்‌ டர்நலம்‌ புகழ
வீவின்‌ மிளிர்விண்‌ டுவினுந்‌ இவரும்‌
தேவின்‌ மகிழ்வோ டுிறந்‌ தனனே. 97

கதுவிப்‌ பொலிவாய்க்‌ ககனத்‌ துவரும்‌
விதுவைத்‌ தொடுமா டம்விளங்‌ தியசர்‌ ‘
புதுவைப்‌ பதிவிட்‌ டுபுலன்‌ கொடிசேோர்‌
மதுரைத்‌ இருமா நகர்கண்‌ டனனால்‌ 98

வேறு
மூதிர்மறை வாதினின்‌ முனைகு வோர்தமைச்‌
சதிர்பெற வெல்கநீ யொல்லை சார்கெளாக்‌
கதிர்மணி கொடியெனுங்‌ கரங்க ஸணீட்டியே
மதுரைமா தெதிரின்வந்‌ தழைத்தல்‌ மானுமால்‌. 99–*பர சமய வாதிகளை வெல்ல வருக!* என்று மதுரை கொடிகளாகிய
சுரங்கள்‌ நீட்டி அழைப்பது போன்றிருந்தது.

அலைகட லென்னவந்‌ தடைந்த out Bust
நிலைதளர்ந்‌ இடநெடு நாணி நெஞ்சுறத்‌
குலைவளைக்‌ தலின்முதிர்‌ கதிர்கொள் சாலியுங்‌
குலைதளு மரம்பையும்‌ குனிந்து காட்டுமால்‌. 100

வாதியர்‌ தளர்ந்திட வரசும்‌ மற்றுள
நீதியர்‌ களுந்தலை நிமிர்தல்‌ போலவே
சோதிசெய்‌ கழைகளுங்‌ கமுகுந்‌ துன்னிவான்‌
மீதினி லோங்கியே விளங்கிக்‌ காட்டுமால்‌. “101-அரசனும்‌, நீதிமான்களும்‌ உண்மை உணர்ந்தோம்‌ என்று நிமிர்வது
போல்‌ கரும்பும்‌, கமுகும்‌ விண்ணை யளாவி நிற்குமாம்‌. கழை – கரும்பு,
பாக்குமரம்‌,

இன்னர்‌ மதுரையுள்‌ ளேகிக்‌ கூடலின்‌
மன்னிய வழகர்தாள்‌ வணங்கி வாழ்த்தியே
துன்னிய களிப்பொடு நிற்குந்‌ தூாயனை
யன்னமா லிருகணா லமைய நோக்கியே, 102

பாண்டிய னவையிடை படர்ந்து வாதியர்‌
ஈண்டியர்‌ தமையெலா மினிதின்‌ வென்றுநீ
மீண்டிடு கென்னவாய்‌ விண்டு ரைத்தபின்‌
வேண்டிய வரங்களும்‌ விருப்பி னல்கினான்‌. 108

செல்கென விடையொடுஞ்‌ செங்கண்‌ ணாரணன்‌
நல்கிய வரங்களுங்‌ கொண்டு நண்ணியே
பல்பல மணிமுடிப்‌ பாண்டி யன்கொலு
மல்கிடு மண்டப மன்னு மெல்லையில்‌. 104

மதியென வெண்குடை மலியக்‌ காலையின்‌
கதிரென மணிமுடி கவின்கொண்்‌ டோங்கிட
விதிருடை வாடக மின்ன மாறனும்‌
அதிர்முர சொலியோடா தனத்தி ருந்தனன்‌. 105

மற்றுள வேந்தரும்‌ மந்திரி மார்களுங்‌
கொற்றவெஞ்‌ சேனையுங்‌ குடிக ளும்படை
வெற்றிசேர்‌ தலைவரும்‌ வேறு ளோர்களுஞ்‌
சுற்றும்வந்‌ தவரவர்‌ நெருங்கித்‌ துன்னினார்‌. 106

மறையவர்‌ குழாங்களும்‌ செல்வ நம்பியும்‌
அறைபல சமயமுற்‌ றடைந்து ளோர்களும்‌
முறைமுறை மண்டப முன்னி னார்கள்‌ ;வாள்‌
நிறைதரத்‌ தேவரு நெருங்கி நண்ணினார்‌. 107

“*இருக்கு,
எசு, சாம வேத நாண்மலர்‌ கொண்டு உன்பாதம்‌ நண்ணாதநாள்‌ அவை தத்து
றுமாகில்‌ ௮ன்று எனக்கு அவை பட்டினிநாளே””-என்பது பெரியாழ்வாரின்‌
அனுபூதி.

அவ்வணங்‌ கொலுவமைத்‌ திருக்கு மாயிடைச்‌
செவ்விய மறைபயில்‌ விட்ணு சித்தனும்‌
மொவ்விவத்‌ தடைந்தமை யுணர்ந்திட்‌ டானரோ
இவ்விய வுணர்வுடைச்‌ செல்வ நம்பியே. 108

அரசன்‌ உபசரிப்பு
உணர்ந்தவன்‌ வரவினை யரசுக்‌ கோதலும்‌
நிணங்கமழ்‌ வேலினா னெடிது சென்றடி
வணங்கலு மாசுகள்‌ வழங்கி னானரோ
மணங்கமழ்‌ துவளமா லடிவ ணங்குவோன்‌. 109

அரசனு மகழ்வினோ டவனை தோக்கியே
விரசுமா மணிகளின்‌ விளங்கு மாமுடிச்‌, .
சிரசின்மேல்‌ தாமரைச்‌ செங்கை கூப்பியே
பிரசமொத்‌ தினியசொல்‌ பெருகக்‌ கூறுவான்‌. . 110

கொடியதீ வினையுநல்‌ வினையுங்‌ கொண்டவிச்‌
சடிலநா ஸளெடுத்திமன்‌ றன்கை பட்டுயிர்‌
நெடிதுநாள்‌ வருந்திடல்‌ நீக்கி வீடுறும்‌
யடியருள்‌ புரிந்தெனைப்‌ பரித்தல்‌ வேண்டியோ. -111

அல்லது மாயையென்‌ றமையும்‌ வல்லிருள்‌
தொல்லுல குறாததைத்‌ துரத்த லுன்னியோ பல்லுயி ரினும்வளர்‌ பரம சோதியிந்‌
நல்லுருக்‌ கொண்டது நவில்க வென்னலும்‌ 112-::பீதக
ஆடைப்‌ பிரம குருவாக வந்து”, என்று பெரியாழ்வார்‌ திருவாய்‌ மலர்ந்த
ருளியுள்ளார்‌.

இருவுள மகிழ்ந்தருள்‌ விட்ணு சித்தனோ
டிருவிசும்‌ பினைப்பொர வெழுந்து மல்கிய
பொருவின்மண்‌ டபமதிற்‌ பொருந்தி வேந்தனுங்‌
குருமணி யாதனங்‌ கொடுத்திட்‌ டானரோ,. 113

கொடுத்தவா: தனமிசைக்‌ குரைதி ரைக்கட
லுடுத்தமா ஸனிலத்தின்மீ துற்று ளோர்தமி
லடுத்துவந்‌ துரைந்திடு மறிவில்‌ வாதியர்‌
நடுக்குற விரவியின்‌ னண்ணி வைகினான்‌. 114

இந்திரன்‌ வாதம்‌ செய்ய பிரஹஸ்பதியை அனுப்புதல்‌
வைகிய துணர்ந்திவ னறிவு மல்்‌கடச்‌ ,
செய்தலி லரசன்‌ வான்செல்வ னாகுவான்‌
எய்தியிங்‌ கதையழித்‌: இடுதல்‌ வேண்டுமென்‌
றையிருந்‌. தர்மதத்‌ ர்ச்‌ ‘மெண்ணியே. 115

தங்குலக்‌ * கரும்க நோக்கித்‌ தன்னிரு
செங்கைமா முடிமிசைச்‌ சேர்த்து நீயடைந்‌
தங்கதை யழித்திடென்‌ ‘றவனி யம்பவென்‌
பங்கென மானிடப்‌ படிவந்‌ தாங்கியே. ்‌ 116

புவியின்வந்‌ தவையிடைப்‌ புகுதக்‌ கண்டுவெண்‌
கவிகைநீ ழலிற்புவி புரக்கும்‌ காவலன்‌ :
குவிகரத்‌ தொடுமவ ஸணிருக்கக்‌ கோதிலாத்‌
தவிசளித்‌ தயாவனீ சாற்று கென்னலும்‌. 117

யானொரு மறையவன்‌ அறிதி யென்றுபின்‌
வானொரு வியசுரர்‌ குருவ ழங்கிவான்‌
தேனொழு இியபுதுத்‌ தெரியல்‌ வேந்த நீ
தானொரு பொற்கிழி தன்னைத்‌ தூக்கியே. 118

வேதமே முதலிய விளங்கு நூல்களால்‌
வாதுசெய்‌ தவர்களில்‌ வல்ல மேலவர்‌
ஈதறுத்‌ ததனைக்கொண்‌ டேகு மின்‌எனத்‌
தூதரை விடுத்திட விவர்கள்‌ துன்னினார்‌. 119

துன்னினோர்‌ தங்களிற்‌ சுருதி நூல்களா
லென்னைவென்்‌ றனனெனி லிந்த வேதியன்‌
றன்னடி வணங்கினை சாற்று கென்னலும்‌
மன்னவை யடைந்துள மற்று ளோர்களும்‌ 120

அவ்வுரைக்‌ கொன்றியே யரச ருட்களித்‌
தொவ்விய திருமூக னோக்கி யோதுவார்‌
இவ்வயி னெம்முனி தொழவி ருந்துளோன்‌
செவ்விய இழியையு மறுத்தல்‌ செய்தபின்‌. 121

இவனுட௨ன்‌ வாதுசெய்‌ திடுவோம்‌ யாமென
வவனையுல்‌ லங்கன மவர்கள்‌ கூறலும்‌
குவறிலாப்‌ புரோகிதன்‌ தன்னை நோக்கியிவ்‌
வவமதிக்‌ கென்செய லாகு மென்றனன்‌. 122

என்றவவ்‌ வரசனை யினிதி நோக்குறா
வின்றிதை யறுப்பது மிவரை வாதினில்‌
வென்றிடு வதுமிந்த விட்ணு சித்தனே
யொன்றுநீ வருந்தலை யென்ன வோதினான்‌. 123

வள்ளலும்‌ புரோ௫தன்‌ வழங்கும்‌ வாய்மையால்‌
உள்ளம துவப்புற உறைந்த காலையிற்‌
கள்ளவிழ்‌ துளவமால்‌ கழற்குத்‌ தொண்டுறும்‌
தெள்ளிய ஸுடன்சுரர்‌ குருவும்‌ செப்புவான்‌. 124

ஆழ்வாரும்‌ பிரஹஸ்பதியும்‌
பரத்துவ மிதுவெனப்‌ பகர்ந்த பின்புநீ
யுரத்துரு கிழியறென்‌ றுரைப்ப வேதத்தின்‌
சிரத்துறும்‌ பரம்பொருள்‌ செய்ய வாழிசேர்‌
கரத்துநா ரணனெனக்‌ கழற லோடுமே. 125

நாரணன்‌ பரமல நாலு மாமுகத்‌.
தாரணன்‌ பரமென வவனி யம்பலும்‌,
வாரண முறையிட வந்து காத்தருள்‌
காரண ஸடியனுங்‌ கழறன்‌ மேயினான்‌. 126

நன்றுநீ மொழிந்தனை நான்மு கன்றலை
யன்றறுப்‌ புண்டதை யறிந்திலாய்‌ கொலோ?
என்றுபுத்‌ தூரனு மியம்பக்‌ கேட்டுளோன்‌
நன்றுமச்‌ சுரர்குரு விதனைச்‌ செப்புவான்‌. 127

ஆகிலும்‌ சிவன்பர மாகு மென்னவே
போகிமுன்‌ விடுத்திடும்‌ புனிதன்‌ கூறலும்‌
நாகணைப்‌ பள்ளியான்‌ விடுப்ப நண்ணிய
யோடியு நகைத்திதை யோது வானரோ. 128

தானறுத்‌ திடுந்தலை தன்கை மீதுற லானதை யொழித்திட லாகா மையால்‌
வானமும்‌, வையமுந்‌ திரிந்து மாழ்கிடத்‌
தேனமர்‌ துளவமால்‌ தீர்த்த தோர்கிலாய்‌. 129

எனச்சொலப்‌ பிரபதி யியைந்த காலத்தால்‌
அனத்தவன்‌ றலைவிட்ட தந்தக்‌ காலமே
மனத்துணர்‌ பரமென மறுத்துச்‌ சொல்லலும்‌
புனத்துழா யவன்விடும்‌ புனிதன்‌ கூறுவான்‌. 130

காலமே பரமெனிற்‌ கால மூன்றிற்கும்‌
மேலுமக்‌ கடவுள்யா ரென்னக்‌ கேட்கலும்‌
ஞானமீ திருளெலாம்‌ ஒழித்து ஞானத்தின்‌
மேலுறு பொருளெலாம்‌ விளக்க வெய்யவன்‌ 131

எல்லியே பரம்பொரு ளென்ன வாங்கவன்‌
சொல்லிய புன்மொழி செவியிற்‌ றுன்னலும்‌
வில்லிபுத்‌ தூரனும்‌ நகைப்ப வேந்திடை
யல்லியம்‌ புயமுக மதனை நோக்குறா. 132

ஈங்கு னுரைத்தசொல்‌ லென்னென்‌ றோதலுந்்‌
தீங்குற விறத்தலோர்‌ காலை சேர்ந்துபின்‌
பாங்குறப்‌ பிறத்தலோர்‌ காலை பாற்கரன்‌
ஆங்கவன்‌ பரமென லாகு மோவெனா. 133

தேர்ந்திடா ரிம்மொழி செப்ப லல்லதிங்‌
கார்ந்தநா லுணர்வின ரறைந்தி டார்களென்‌
ஹறோர்ந்தர சவையிடை யுரைத்தல்‌ கேட்டுளஞ்‌
சோர்ந்துவே றுரைக்கடந்‌ தோன்றி டாமையால்‌. 134

தேவகுரு தோற்றார்‌
ஊமரிற்‌ சுரர்குரு வுற்றி ௬ுந்தபின்‌ றாமரு வியயல சமயத்‌ தோரெலாங்‌
காமர்தந்‌ தம்பெருங்‌ கடவு ளேபர ்‌
மாமென வவரவ ரறைத லோடுமே. , 135

எவ்வவ ரென்னென விசைத்த போதெலாம்‌
மவ்வவர்க்‌ கெதிர்மொழி யறைந்திட்‌ டாங்கவ
ரொவ்வநுந்‌ தெவம்பர மெனலொவ்‌ வாதெனச்‌
செவ்விசேர்‌ புதுவையான்‌ செப்புங்‌ காலையில்‌. . 136

செல்வஈாம்பியின்‌ விண்ணப்பம்‌
என்னிவ ருடன்விளை யாட. லோமறை
குன்னிடை வளர்பரஞ்‌ சோதி தன்னைநீ
மின்னிட வெளியிடல்‌ வேண்டு மென்றனன்‌
சென்னியங்‌ கரங்கொடு செல்வ நம்பியே. ்‌ 137

(வேறு)
அந்தசொற்‌ கேளா வாமிகா ஸனடுமீர்‌
வாளதாய்‌ அருகபஞ்‌ சினுக்கோர்‌ —
செந்தழ லாய்வை சேடியாட்‌ டினுக்கோர்‌
சீறுவெம்‌ புலியதாய்‌ பவுத்த.
குந்தமால்‌ கரிக்கோ ரரிய தாய்ச்‌
சைவ சற்பத்துக்‌ குவணமாய்‌ மற்றும்‌
வந்தபல்‌ சமய விருட்கிர வியதாய்‌ மலிந்திடும்‌ புதுவைமா நகரோன்‌. . 138

அவையுளோர்‌ திருமுன்‌ கடவுளர்‌ பணிய
வருமறை முடியின்மீ தமர்ந்தும்‌
சுவையமு தருள்வெண்‌ பாற்கடல்‌ வடத்தின்‌
றுளிரின்மீ தமர்ந்துகண்‌ வளரும்‌
நவையினா ரணனாஞ்‌ சற்பரம்‌ பொருளே
நற்பரம்‌ பொருளென நாட்டி
இவையெடுத்‌ துரைத்தான்‌ கேட்டுளோர்‌ மகிழ்வோ
டிருசெவிக்‌ கமுதெனப்‌ பருக. 139

பொற்கிழியறுந்து வந்தது
அத்தரத்‌ தவர்துந்‌ துமிமுழக்‌ குடன்வந்‌ தவர்மழை சலசலென்‌ றுதிர்ப்பச்‌,
செந்தழன்‌ முனிவோ ராசிக எியம்பச்‌
செந்தமிழ்ப்‌ புலவர்க டுதிப்ப
முந்துறும்‌ பெரியாழ்‌ வார்திரு வடிமுன்‌
மொழிந்திடும்‌ பொற்கிழி யறுந்து
வந்துற வதனைத்‌ திருக்கரத்‌ தெடுத்து மாறன்றன்‌ றிருமுன்வைக்‌ திடலும்‌. 140

மாறனு மகிழ்வோ டெழுந்திரு கரத்தான்‌
மாமுடி மருவுறப்‌ பொருத்தி வீறுமா மறையின்‌ றிருமுடி யதன்மேல்‌ வீற்றிடும்‌ பொருளென வுரைத்த நாறுபூந்‌ துளவ மாலையா. பரண
தாரண ஸிவனென்‌ மனத்திற்‌
ஹேறியங்‌ கவன்ற ஸிருபெருங்‌ கமலத்‌
இருவடி. பணிந்துநின்‌ றனனால்‌. . 141

மற்புய வரசன்‌ றமைநயந்‌ தருளி
மற்றுள சமயவா தியர்கள்‌
அற்புத மடையுஞ்‌ சிந்தைகொண்‌் டுருகி
யவரவர்‌ முறைமுறை யணுகடப்‌
பொற்புறு முதயக்‌ கதிரென விளங்கும்‌
‘புதுவைமா நகர்மறை யவன்றன்‌
நற்பத மிரண்டிற்‌ றமதுமா முடிகள்‌
நண்ணிடத்‌ -தொழுது நின்றனரால்‌, 142

தேவகுரு மறைந்தான்‌
ஆயவா றெவரு மனையரும வன்பொன்‌
னடிகளுக்‌ கடிகளா னதுகண்‌
டேயவிங்‌ இவனை யாதினும்‌ வெலுதற்‌
இயைந்திடா தெனமனம்‌ வெறுத்து
ஞாயிறெய்‌ திடும்போ தெதிரிலா திருந்த
நள்ளிருள்‌ தளர்ந்துளம்‌ நாணி
மாயமா – யினபோன்‌ மாயமாய்‌ மறைந்தான்‌
வாசவன்‌ விடுத்தரு மறையோன்‌. «148

ஆழ்வார்‌ திருவுலா
யாவரு மிவ்வா றடிதொழு மணியா
தனமிசை யிருந்தவாழ்‌ வாரைக்‌
கோவமை செயலின்‌ சிறப்பெலா மமையக்‌ குலூரி நிகர் கசப்‌ பிடர்மேல்‌ றேவர்கற்‌ பகப்பூச்‌ செழுமழை பொழியத்‌ இருந்திட வேற்றி மந்திரிகள்‌ வாவுமான்‌ றடந்தேர்‌ மதகரி. பரியாள்‌
மருங்குற நெருங்கிவந்‌ தடவும்‌; 144 –க௪ப்பிடர்‌ மேல்‌-யானையின்‌ பிடரியில்‌,

வருமுழு மதிபோல்‌ வெண்குடை நிழற்ற
_ மகரகுண்‌ . டலஞ்செவி யிலங்க
விருபுற மதிலுஞ்‌ சாமரை யிரட்ட
-விரவியிற்‌ பலகலன்‌ விளங்கப்‌
பொருகட லெனமா முரசொலி கறங்கப்‌
பூரிகா களம்பல முழங்க
அருமறை: யதுகொண் டிருடிக ளுடனே
யந்தணர்‌ மங்கல மூரைப்ப ; 145

மூன்றுல கினரும்‌ திருப்புகழ்‌ புகழ முறைமுறை யரரர்வந்‌ இறைஞ்ச
ஆன்றநல்‌ லறமும்‌ துதிசெய மகிழ்வோ
டைம்புல னாதுிதோத்‌ தரிக்க
மான்றுடர்‌. விழியார்‌ நடித்திடப்‌ பலர்கள்‌
மணிவிளக்‌ காலம தெடுப்ப
ஏன்றவிம்‌ முறையோ டஉரசன்வேண்ட
எழுந்தனன்‌ பவனிவந்‌ திடவே. 146

சகரர்தொட்‌ டிடுமக்‌ கருங்கட லடுத்த
தரணிமேல்‌ நிகரில தாக
மகுரதோ ரணங்களு யர்த்திப்பன்‌ முறையால்‌
வளம்பெறத்‌ திருத்தியும்‌ மதுரை நகரமுள்‌ வலமாய்‌ அரசவீ தியின்வாய்‌ –
நண்ணுறு கோலமஃ துணர்வான்‌
அகரமே மூதலா மக்கரத்‌ தெல்லாம்‌
அமருநா ரணனுமுள்‌ ஸணர்ந்தான்‌. 147

பெருமாள்‌ விண்ணில்‌ தோன்றினான்‌
இருடனை துரக்கு நவமணி பசும்பொன்‌
னிழைமுடி முடியின்மே லிலங்க
அருடரு கமலக்‌ கண்முகத்‌ இலங்க
வைம்படைக்‌ கரங்கண்‌ மீதசையச்‌
FGL_G குழற்பூந்‌ ‘திருவினோ டுரத்திற்‌
றலங்கொளி கவுத்துவம்‌ துளங்கக்‌
கருடன்மீ தெழுந்தான்‌ பொன்மலை மிசையோர்‌
கருமலை வருதலைக்‌ கடுப்ப. 148-பொன்‌ மலை மிசை கருமலை போல்‌ திருமால்‌ வந்தான்‌.
சுருடன்‌ – சிவந்த நிறமுடையவன்‌. திருமால்‌ கரிய நிறமுடையவன்‌,

அம்புயத்‌ துறையு மயன்கயி லையர்கோன்‌
அமரர்கோன்‌ முறைதொழு தேத்தத்‌;
தும்புரு வுடனா ரதனியாழ்‌ மிழற்றத்‌; தூயமா முனிவர்வாழ்த்‌ துரைப்ப
உம்பர்க ளியக்கர்‌ கருடகந்‌ தருவ
ருயர்பத்த நித்தமுத்‌ தர்களும்‌ பம்பியெம்‌ மருங்கும்‌ நெருங்குற வாடல்‌
பாடல்க ளரம்பையர்‌ பயில. 149

அந்தரத்‌ தெழுந்து துந்துமிக்‌ குழாங்க ளதிரவை குந்தம்விட்‌ டகலா
வந்தரு டிருநா ரணன்றிரு மேனி
வடிவமு நிறைமதி நிகருஞ்‌ சுந்தர வதன விலாசமுங்‌ கருணைத்‌
துணைமலர்க்‌ கண்களி னொளியும்‌
சிந்தையுள்‌ ஞரூருகக்‌ கண்களால்‌ விட்டு
சித்தனுந்‌ தெளிவுறக்‌ கண்டான்‌. 150-வடிவமும்‌, வதன விலாசமும்‌, கண்களின்‌ ஓளி
யும்‌, சிந்தை உருக, விஷ்ணு சித்தனும்‌ கண்டான்‌ என இணைக்கவும்‌.

திருப்பல்லாண்டு
விண்ணவர்‌ மகுட கோடிகள்‌ இறைஞ்ச
விளங்குபொற்‌ கலுழன்றன்‌ புயமேல்‌
நண்ணுநா ரணன்றன்‌ நிருவுரு வொளிதன்‌
னலமுரு முளத்துணர்ந்‌ இவரை
மண்ணவ ரெவரு மிருகணு மூளமு
மகிழ்வுற நோக்‌இடிற்‌ கதுவுங்‌
கண்ணிறை யெனப்பல்‌ லாண்டெனும்‌
பதிகக்‌ கவிதையால்‌ காப்பணிந்தனனால்‌, 151

முன்னமோர்‌ மடுவிற்‌ கராவின்வாய்ப்‌ படலான்‌
மூலமென்‌ றழைத்திடுங்‌ கரிமுன்‌
மன்னுமச்‌ செயல்போ லிந்நகர்க்‌ கோலம்‌
மருவுற வீங்கெழுந்‌ தருளும்‌ | நின்னைமா துடன்கண்‌ . களிப்புறக்‌ காணல்‌
நிலையிலா வுருவுகொண்‌ டிடும்யான்‌
என்னமா தவம்செய்‌ தனனெனப்‌ பல்கா லேத்தினன்‌ தொழுதனன்‌ மகிழ்ந்தான்‌. 152-பெரியாழ்வார்‌, உன்னைக்காணத்‌ திருமாலே! யான்‌ என்ன மாதவம்‌
. செய்தேன்‌ என்றார்‌

இத்தகை யினனாய்‌ மீண்டுமா மாலை
யிசைக்கவென்‌ நிதையத்துள்‌ நினையா
வத்தகை யுணந்தந்‌ நாரணன்‌ மகிழ்வா
யவன்றலை மீதுதன்‌ பதங்கண்‌
டொத்தகைத்‌ தலங்கொண் டஃஇவன்‌ வருடி
யுணர்ந்தவா றின்னதென்‌ றுணர்ந்திட்‌
டெத்தகை யெனக்கொண்‌ டியம்பலா மெனக்கா
யிரமிலை நாவெடுத்‌ தியம்ப. 153

இருமால்‌ தன்னுடைய திருவடியை ஆழ்வார்‌ தலையில்‌ வைத்தான்‌.
அப்போது ஆழ்வார்‌ அடைந்த நிலையை யியம்ப எனக்கு ஆயிரம்‌ நாக்கள்‌
இல்லையே என்கிறார்‌ ஆசிரியர்‌. **பருப்பதத்துக்‌ கொடி பொறித்த பாண்டியன்‌
குலபதிபோல்‌ திருப்பொலிந்த சேவடியென்‌ சென்னிமிசை வைத்தாய்‌” என்று
பெரியாழ்வாரே கூறியுள்ளார்‌. பெருமான்‌ தன்பதத்தை வைத்த போது ஆழ்வார்‌
தம்முடைய கரங்களால்‌ வருடினார்‌. இருமகளார்‌ வருடும்‌ பதத்தை வருடும்பேறு
பெரியாழ்வாருக்குக்‌ இட்டிற்று.

சமயவாதியர்‌ புகழ்ந்தனர்‌
சைவரே முதலாஞ்‌ சமயவா இயரும்‌
தத்தமச்‌ சமயதே வர்களைக்‌
கைவிடு பவராய்க்‌ கருத்துளே திருவின்‌
கணவனே பரமெனத்‌ தெளிந்தம்‌
மைவரை யனையான்‌ திருவடி யதன்‌€ழ்‌
வணங்கினர்‌; நடித்தனர்‌; குதித்தார்‌;
செய்வகை யுணரார்‌; களிப்பெனும்‌ நறவும்‌
தெவிட்டவுண்‌ டிடுதலாற்‌ றியங்கி, : 154

மாறனு செல்வ நம்பியே முதலா
வளைகடற்‌ புவிமருங்‌ இனருந்
தேறுமிப்‌ பரம புருடார்த்த மதனாற்‌
றேவரு முணர்கிலாப்‌ பரமாம்‌
நாறுபூந்‌ துளவ நாரண ஸனுருவ நங்கணாற்‌ கண்டனம்‌; எனக்கொண்
டூறுபே ர௬ுவகைச்‌ சிறந்தநல்‌ லுணர்வோ டுற்றெதஇர்‌ வணங்கி னரன்றே. 155

இவராலன்றோ நாம்‌ திருமாலைக்‌ கண்டோம்‌ என்று பாண்டியன்‌
செல்வதம்பி முதலானவர்கள்‌ ஆழ்வாரைப்‌ பணிந்தனர்‌,

வேண்டுதன்‌ வேண்டு மவ்விதம்‌ அருளும்‌
வேதமீ துறைந்திடுந்‌ திருமால்‌ மீண்டுமவ்‌ வாழ்வார்‌. திருமுகம்‌ நோக்கி
விளம்புவன்‌ ; இன்றுதொட்‌ டுனக்கு
மாண்டகும்‌ பட்டர்‌ பிரானெனு மொருபேர்‌
வழங்கினம்‌ இன்னமும்‌ சிலநாள்‌
பூண்டுறு நமது கயிங்கிரிய மதனைப்‌
.. பொருந்துறும்‌ படிபுரித்‌ திருந்து. 156

புவியிலஸஞ்‌ ஞான மடைந்துளோர்‌ ஞானம்‌
பொருந்துறச்‌ செந்தமி ழதனாற்‌:
கவிபல வியம்பிப்‌. பின்புவை குந்தங்‌
கலந்துநீ யணைகென வவன்றன்‌.
செவியுறப்‌ புகன்று கருணைகூர்ந்‌ தருளித்‌
தேவர்சென்‌ றடிதொழுந்‌ திருமால்‌
குவிமுலைத்‌ துவர்வாய்த்‌ இருவொடு மடியார்‌
குழாத்தொடும்‌ தன்பதி யடைத்தான்‌. 157

ஆழ்வார்‌ திருவோலக்கம்‌
(வேறு)
நாரண ஸனகன்றபின்‌ னலங்கொண் மாநகர்‌
தோரண வீதிகள்‌ பலவும்‌ சுற்றிவந்‌
தாரண வொலியுட னானை விட்டிழிந்‌
தேரணி மண்டப மினிதி னெய்தினான்‌. 158–ஏரணி மண்டபம்‌- அலங்கரிக்கப்பட்ட மண்டபம்‌,

முத்தவெண்‌ குடைமுழு “மதியின்‌ மீதுறக்‌
கத்தைவெண்‌ கவரிகா லசையக்‌ கைகொடு
புத்தரே முதலினர்‌ வணங்கிப்‌ போற்றிடச்‌
சித்திர வாதனஞ்‌ சேர்ந்து வைகனான்‌. 159:

சீவலதேவன்‌ பரம வைஷ்ணவனானான்‌
சவல தேவனென்‌ றுரைக்கும்‌ செவ்விசோர்‌
காவலற்‌ காழிசங்‌ குக்கு றிப்பொறித்‌
தேவல்செய்‌ தொண்டுகொண் டினிய வொண்பொரு
ளாவலோ டவனருள்‌ யாவும்‌ கைக்கொளா, . 160

கூடலி னழகர்தம்‌ கொடிய பாம்பின்மேல்‌
ஆடிய பதம்பணிந்‌ தவண்விட்‌ டேகுியே
நீடிய நெறியெலாங்‌ கடந்து நீள்கொடி
மாடமார்‌ புதுவையின்‌ மன்னி னானரோ. 161.

வடபெருங்‌ கோயிலின்‌ மருவி மாதவன்‌
அடிமலர்‌ . முடியுற வணிந்து மன்னருட்‌
படியவ ணடைந்துள பலவு மீதெனா ்‌
மு.டியவுஞ்‌ செவியுற மொழித்து மீண்டனன்‌. ்‌ 162

குன்பெருங்‌ கோயிலைச்‌ சார்ந்து வைகியே
முன்புபல்‌ லாண்டெனு மொழிந்த தாதியாய்‌
அன்பொடுஞ்‌ சென்னியோங்‌ கந்த மாகவே
இன்புறு மிசையினின்‌ றமிழி யம்பினான்‌. 163

நான்குநூ றெழுபதின்‌ மூன்று நன்கமைந்‌ தான்நவத்‌ திருமொழி யதனு ளாழிகைத்‌
தேன்கமழ்‌ துளவமால்‌ இருவு ருக்கொடு
தோன்றுமூ ரிருபதின்‌ மூன்று சொன்னதே. 164

வேறு
அரங்கம்‌ வெள்ளறை குறுங்குடி குடந்தை வதரிகாச்‌
சிரமம்‌ வேங்கடங்‌ கோட்டியூர்‌. சீர்கங்கைக்‌ கரையின்‌
மருவு கண்டஞ்சோ லைமலை சாளக்கி ராமம்‌
பொருவி லாதசர்‌ பொருந்துபேர்‌ திருக்கண்ண புரமே. 165

இருவை குந்தமோ டாயர்தம்‌ பாடிசீர்‌ வடம
துரைய யோத்திகோ வர்த்தனம்‌ வில்லிபுத்‌ தூரது
வரையொோ டுஞ்சித்ர கூடமு மதுரையிற்‌ கூடல்‌
புருட வுத்தமம்‌ பாற்கட லெனும்பெயர்‌ பொருந்தும்‌. 166-பெரியாழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திருப்பதிகள்‌ பதின்‌
மூன்று. அவற்றின்‌ பெயர்கள்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.

முதும்‌ றைப்பொரு எருஞ்சுவை முகந்துகொண்டு ரைக்கும்‌
அதுத னைத்தெரிந்‌ தறிந்துணர்ந்‌ தோதுயம்‌ புவியோர்‌
கதுவி டும்பெரு மாயையா மிருளினைக்‌ கடிந்தே
மதுபொ ருந்திடும்‌ துளவமால்‌ பதத்தின்மன்‌ னினரால்‌, 167

இனைய பாடல்க எளிசைத்தரு ளெம்பட்டர்‌ பெருமான்‌
அனைய மாநகர்‌ தனிலிருந்‌ தவணுறை திருமால்‌
புனையு மாலைகட்‌ டொழில்புரி தவனடி போற்றி
நிணையு நெஞ்சக மகிழ்வுட னெடிதுநா ஸிருந்தான்‌. 168

இன்ன காதையை யெழுதுவோர்‌ கஞமிதன்‌ பொருளைப்‌
பன்னு வோர்களும்‌ பன்னிடும்‌ பொருள்களைப்‌ பரிவாய்‌
கன்ன முடுறக்‌ கேட்பவர்‌ களுங்கடற்‌ புவிமேல்‌
மன்னு நாளிருந்‌ துயர்பத மருவிவாழ்‌ குவரால்‌, 169

திருமங்கைமன்னன்‌ வரலாறு புகல்வோம்‌
அங்கண்‌ மாநிலப்‌ பரப்பினில்‌ புதுவைவந்‌ தருளும்‌
நங்கள்‌ சீர்ப்பெரி யார்செய லினைநவின்‌ றனமால்‌
திங்கள்‌ சூடிதன்‌ குடியரிற்‌ குறையலூர்‌ செனித்த மங்கை யார்புரிந்‌ தருள்செயல்‌ வகுத்தினி துரைப்பாம்‌. 170

பெரியாழ்வார்‌ இருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

——————

திருமங்கையாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
பேதைநெஞ்சே! யின்றைப்‌ பெருமை யறிந்தஇலையே |
யேது பெருமையின்றைக்‌ கென்னெனின்‌- வோதுகின்றேன்‌
வாய்த்தபுகழ்‌ மங்கையர்கோன்‌ மாநிலத்தில்‌ வந்துதித்த
கார்த்திகையில்‌ கார்த்திகைநாள்‌ காண்‌.(உபதேச ரத்தினமாலை, பக்கம்‌ ; 8)

அகம்படியர்‌ குலம்‌
நிறையு மாமதி முகத்திய ரிளநகை நிலவான்‌
நறைகொ எளாம்பலின்‌ நாண்மலர்‌ நனைமுருக்‌ கவிழும்‌
நிறையு நீர்மலித்‌ தடங்களும்‌ வயல்களும்‌ நிரம்பும்‌
குறைய லூரதன்‌’ பெருமையைக்‌ கூறுத லரிதால்‌. 1

அந்த மாநக ரந்தனிற்‌ வெனடி யவரில்‌
வந்து வாழகம்‌ படியர்தங்‌ குடிவளம்‌ பெறவே
செந்தி ர௬ப்பகி யானநா ரணன் இரு வடியைச்‌
சிந்தை கொண்டுல கோர்தொழச்‌ செயும்பர காலன்‌. 2

ழ்வார்‌ அவதாரம்‌
ஆர்த்தெ முந்துமெய்ஞ்‌ ஞானநல்‌ லறிவணு இடவும்‌
வேர்த்து மாயையம்‌ புவிதனை விட்டகன்‌ . நிடவும்‌ .
தீர்த்த னாகிய நாரணன்‌ நிருவரு ளதனாற்‌
கார்த்தி கைத்திரு மதியினிற்‌ கார்த்திகை நாளின்‌. 3

ஒன்ப தாகியகோட்களு முச்சனன்‌ குறைந்திட்‌
டன்ப ராடுிநற்‌ பலன்றர வமையுமோ ரையினின்‌
முன்ப கன்றமெய்ஞ்‌ ஞானத்தின்‌ முளைத்திடுங்‌ கொழுந்தோர்‌
தென்ப டும்புவி யிடைச்சிறந்‌ தெழுந்தது போலும்‌. 4

ஆர ணன்முத லண்டங்கள்‌ பலவுமற்‌ றவையும்‌
நார ணன்றிரு வுந்தியிற்‌ னோன்றுதன்‌ மகமைக்‌
கார ணந்தெரி யாமதக்‌ கசடரைப்‌ பிளக்கும்‌
ஏர ணிந்தகோ டாலிவந்‌ தெழுந்தது போலும்‌. 5

தோன்றி னானவண்‌ தோன்றிய தோன்றலை நோக்கி
ஈன்று ளோனவற்‌ இயற்றுவ யாவையு மினிதின்‌
ஆன்ற கேள்வியர்‌ விதித்தநான்‌ முறையது வாகச்‌
சான்று ளோரெலா மகிழ்வுற வழங்கினான்‌ தானம்‌. -6-

அந்த மாநக ரந்தனி லணுகுவர்‌ பலருஞ்‌ சிந்தை யோடிரு கண்களும்‌ ம௫ழ்சிறந்‌ தோங்கச்‌
சந்திரன்கலை நாடொறும்‌ வளர்வபோற்‌. றழைத்து
மைந்த னுந்தினஞ்‌ சிறப்பொடு வளருமன்‌ னாளில்‌. _- 7

ஞால மதினிற்‌ காமகை வலமென நவிலுஞ்‌
சீல மில்லவச்‌ சமயமா யும்படி திருத்தும்‌
பால னாம்பர காலனுக்‌ கொருபெயர்‌ பரிவாய்‌
நீல னாமென நவின்றன னீன்றவ னென்போன்‌. 8

வேத நான்கினு முறுநல்ல தாகமே வமுதைத்‌
தீதில்‌ செந்தமி மாற்‌ றிரு மொழியெனத்‌ திருத்திக்‌ கோதி லாதவர்‌ செவியுறக்‌ கொடுப்பவர்க்‌ ன்ற .
மாத ருந்திடு மன்னமு மூட்டினண்‌ மகஒழ்வாய்‌. 9

மாயையின்‌ வன்மை
துள்ளி யம்மனத்‌ தெழுதரு மாயையின்‌ றொடர்பால்‌
நள்ளி ர௬ுட்களை பவனுக்குச்‌ சவளநன்‌ கிழைத்தார்‌
வள்ளி யோர்க்குமெய்ஞ்‌ ஞானத்தை வகுத்துறை வள்ளல்‌
பள்ளி யின்வட மொழியொடுந்‌ தென்மொழி பயின்றான்‌. 10

அனைய தன்மையி னாயறு பத்துநான்‌ கெனவே
நினையு றுங்கலைக்‌ கியானங்‌ கணிலையெலா முணர்ந்து
வினையி லாப்பரஞ்‌ சோதியி னிலைவெளிப்‌ படுத்தக்‌ கனைக டற்புவி மீதுவந்‌ தெழுந்தகண்‌ மணியை. 11

மயக்கி யேவருந்‌ திருவிளை யாட்டினை மதிப்பான்‌
வியக்கு நெஞ்சொடுந்‌ இருமகட்‌ கொழுனனும்‌ விரும்பி
நயக்கு மாயையை விடுத்தலு நண்ணுமங்‌ கதனான்‌
முயக்கு நெஞ்சின னாயினன்‌ முழுமதி யுள்ளன்‌. 12

ஏன்ற நீர்மிசை யமைவுறுஞ்‌ சைவல மதுபோன்‌
மூன்று லோகமு முந்தியின்‌ முறைமுறை வழுவா
இன்று சார்ந்தரு ளிறைவனை யிருத்துநல்‌ லறிவு தோன்று நெஞ்சினை மறைத்தது மாயையுந்‌ துடர்ந்து. 13-

வெங்க ணைக்கொலை வாள்சதை வேல்முத லியவாந்‌
தங்கு லத்தொழிற்‌ பரிசையு முணர்ந்தனன்‌ றகவாய்‌
எங்கும்‌ யாரினு மித்தொழிற்‌ பயிற்சிய ரெவரும்‌
அங்கி வந்தவ னடிகளுக்‌ கபயமென்‌- டைய. 14

மாயை யானது மலிந்துமூண்‌ டிடவுள மயங்கி. .
நேய மோடதை நீக்குவான்‌ நினைந்துநீக்‌ குதலுந்
தோய மபேற்றுடர்‌ சைவல மலம்பினும்‌ தொடர்ந்து
மேய தாமென ஈண்டவன்‌ றன்னைமே விடுமால்‌. 15

பந்தன்மீதுறப்‌ படர்ந்திடும்‌ பசியமென்‌ கொடியை
வந்து சூறைமா ருதம்விழுத்‌ இடுகின்ற வகைபோல்‌
சிந்தை மீதுறக்‌ கொழுந்துவிட்‌ டெழுந்திடு மறிவை
முந்து மீதுறுங்‌ காமக்கால்‌ முட்டிவீழ்த்‌ இடுமால்‌. 16

அரசர்‌ மாமணி முடிகளை யறுத்திடுங்‌ கூர்வாள்‌
நிரவு பஞ்சணை மிசையுறின்‌ மழுங்குமந்‌ நெறிபோல்‌
விரவு நாரணன்‌ பதத்துற நிரப்பு மெய்ஞ்ஞானம்‌
பரவு மங்கையர்‌ விருப்பினிற்‌ படமழுங்‌ இயதால்‌. 17

இன்ப ஞானவீ டறிந்துயர்‌ வேதமென்‌ றியம்பும்‌
அன்பு றுந்திரு மடலெனு மாலைசெய்‌ பவனுந்‌
துன்பு றுந்திரைக்‌ கடலெனுஞ்‌ இற்றின்பத்‌ துறையின்‌
றன்பெ ருங்கலை நாூலெலா முணர்ந்தனன்‌ றகவாய்‌. 18

மலையி ஸனும்பல கடத்தினு மற்றுள நிலத்தின்‌
றலைதொ றும்பெயு நீரெலாம்‌ தஇுதனிற்‌ செலல்போல்‌
நிலையு ஞானமும்‌ கல்வியும்‌ வேறுள நெறியும்‌
விலைம டந்தையர்‌ மலையெனு முலைவிழுங்‌ . 19

இனய ஸாய்ப்பதி னாறெனும்‌ வயதுமெய்‌ இயபின்‌
புனைம லர்க்குழமன்‌ மடந்தையர்‌ புந்தியள்‌ ளவனை
நினைவ ரைங்கணைக்‌ கழவனாமென தெடிதவனும்‌
அனையர்‌ தங்களை யிரதிய ராய்நினை குவனால்‌. 20

இவ்வி தத்தனாய்ப்‌ பரத்தைய ரின்ப்சா கரத்தின்‌:
ஓவ்வி யுற்றலைந்‌ தவரித மமுதமுண்‌ டுவப்பால்‌
யெவ்வி தத்தினுந்‌- தணிகிலா திழைந்தனன்‌ இழையும்‌.
அவ்வி த்த்தினை .யுரைத்திட முடியொணா தென்னால்‌.: 21

குமுதவல்லியார்‌
பூவின்‌ மெல்லியர்‌ சுனவிள முலையினர்‌ பொருத்தும்‌
ஏவு கண்ணியர்‌ முழுமூகத்‌ தெரிவையர்‌ எழில்சேர்‌
தேவ கன்னியர்‌ திரண்டொரு விமானமேற்‌ சேர்ந்து
மேவ மிக்களி கூர்ந்திட விசும்பைவிட்‌ டிழிந்தே. .. , 22

காலி மேதிகள்‌ கன்றினை நினைதொரறுங்‌ கனியும்‌
பாலி னோடிறா .லொழுகுதேன்‌ தினம்சென்று பாய்ந்து ்‌
சாலி யோடுசெங்‌ கன்னலுந்‌ தழைத்து வானோ்கும்‌
ஆவி மாநக ரதனில்வந்‌ தடைகுவா ரன்றே. -23

பொய்கை யார்ந்தறீ ராடுவார்‌ ; பூம்பொழிற்‌ களிற்போய்‌
கொய்கு வார்மலர்‌ ஆலிதநா . தன்குரை கழலிழ்‌
பெய்கு வார்‌;பணிந்‌ தேத்துவார்‌ ; பின்புவே றியற்றுஞ்‌
செய்கை நேர்ந்துபின்‌ விமானமேல்‌ விசும்பிடைச்‌ சேர்வார்‌. 24

இன்ன வாறுபற்‌ பலபல புரிந்திடு மிடையின்‌
மன்னு மோர்பகற்‌ றனித்தொரு மாநெடுந்‌ தூரம்‌
துன்னி மாமலர்‌ கொய்குவான்‌ றுருவிமற்‌ நுள்ளோர்‌ அன்ன தோர்கிலா ரவளைவிட்‌ டேகின ரன்றே. 25

பிரிந்து நீங்கிய மாதுமீண்‌ டவர்தமைப்‌ பேணிப்‌
பரிந்து நோக்கலும்‌ காண்கிலள்‌ ; பதைத்துள நெடுங்கண்‌ .
சொரிந்த நீர்களும்‌ சரிந்தவிழ்‌ குழல்களுந்‌ தோன்ற
விரிந்த மாமலர்ப்‌ பொய்கையின்‌ கரையின்மே வினளால்‌. 26

ஆங்கு நோக்கலு மாலிமா தவர்க்கனு தினமும்‌
பாங்கி னோடுமா ராதனம்‌ பரிவோடு புரியுந்‌
“தீங்கி லாமறை யவனிருந்‌ இிடத்தெளிந்‌ தவன்றன்‌
பூங்க ழற்கணின்‌ முடியுறப்‌ பணிந்திது புகல்வாள்‌. 27

ஐய ! கேட்டியான்‌ றேவ கன்னிகை யனேகருடன்‌
வைய மீதிழிந்‌ இந்தவான்‌ பொய்கைநீர்‌ மருவிச்‌
செய்ய மாமலர்‌ கொய்குவான்‌ சென்றபோ தியானத்‌
தைய லார்தமைப்‌ பிரிந்தொரு தமியளா யினனால்‌. 28

தேடி னேன்பல விடந்தொறும்‌ தெரிகிலேன்‌ றிகைத்து
வாடி னேனுளம்‌ வருந்தி வந்திவ்விட மருவிக்‌
கூடி னேன்படர்ந்‌ துளசெயல்‌ நின்செவி குறுகப்‌
பாடி னேனவர்‌ தமைக்கண்ட துண்டுகொல்‌ பகர்வாய்‌. 29

என்ன வோதவம்‌ மொழிகள்‌ தன்னிரு செவியுறலும்‌
அன்ன மாதுதன்‌ திருமுக நோக்கியங்‌ கவர்கள்‌
முன்ன ரேயொரு விமானத்தின்‌ மீமிசை முடுகி
மன்னி யேகினர்‌ வானிடை யென்றனன்‌ மறையோன்‌. 30

உ.ந்தன்‌ மாமக ளாகும்யாம்‌
தந்தை யாகுமென்‌ றவனடித்‌ தலத்துவீழ்ந்‌

ஆழ்ந்த வன்பினோ டந்தணன்‌ றனதடி யதன்மேல்‌
வீழ்ந்த மங்கையை நோக்கிநீ வெருவிடேல்‌ வெகுநாள்‌
வாழ்ந்து மல்கவென்‌ றாசிகள்‌ பற்பல வழங்கித்‌
தாழ்ந்தெ டுத்துமார்‌ பிருகுறத்‌ தழீஇனன்‌ றகவாய்‌. 32

னீர்துடைத்‌ துச்சிமோந்‌ இந்தமெல்‌ லியல்வீட்‌
ளாளெனி லுலகன ரொவ்விடார்‌; நமது
வழிய ளோர்களும்‌ வசைமொழி புகல்குவர்‌ வளரப்‌
பழியு ‘மெய்துமென்‌ றஐஞ்சியே பன்முறை நினைந்தே. 38

ஆலி நாதர்தன்‌ கோயிலில்‌ நடனஞ்செய்‌ பவர்க்குண்‌
மேலி நாள்தனை -வியரிலா தயர்ந்துபெண்‌ விருப்பா
மாலி னோடுற லுணர்ந்தவ னாகியம்‌ மடவாள்‌ ்‌
பாலி னிங்கிவ டனைவிடிற்‌-.பரிவொடும்‌ வளர்ப்பாள்‌. 34

என்ன வேதியன்‌ கன்னியோ டாங்கவ ஸிவின்வாய்த்‌
துன்ன லோடுமவ்‌ வேசையு மடுத்தெதிர்‌ தோன்றிப்‌“.
பொன்ன டிப்பணிந்‌ தேத்திய பூங்கொடி நிகரும்‌
கன்னி யாரெனக்‌ கேட்டலும்‌ வே.தியன்‌ கழறும்‌. –35-

முன்பெ டுத்துள சனனங்க: டொறுமுயன்‌ நிழைத்த
என்பெ : ரந்தவத்‌ தளித்தது: மகளிலா மையின்‌ நீ
, துன்பு றத்தெளிந்‌ தவையொழித்‌ தஇடும்வகை தோன்றும்‌
அன்பி னாலிவள்‌ தனையுன்க்‌ களிக்குமா றடைந்தேன்‌. 36

என்று ரைத்தவ உடன்வர லாற்றையு மியம்பி
நின்ற வக்கொடி தன்னையு நெறிமுறை யளித்துச்‌
சென்ற டைந்தனன்‌ தனதகம்‌ அளித்தசே யிழையை
porn னத்தன தகத்தினுட்‌ கொண்டுநண்‌ ணினளால்‌. 37

நாட்க அணங்கு நங்கையை வளர்த்தாள்‌ ‘
நாக மங்கையர்‌ நானில மடந்தையர்‌ நவிலும்‌ —
மாக மங்கையர்‌ மலரயன்‌ சவென்குகன்‌ மதன்றம்‌ >
போக மங்கையர்‌ எவர்களும்‌ புனிதநா
ஆக மங்கையு நிகரிலரி வளழ கறிந்தேன்‌. ப 38

துமுதம்‌ உற்றெழ மதித்தநாள்‌ தூயபாற்‌, கடலில்‌ அமுத முற்றெனத்‌ தோன்றிய வணங்தர்‌ சமுதைக்‌
குழுத வல்லியென்‌ ஹறொருபெயர்‌. குறித்தழைத்‌ தனளால்‌;
நமது நாயக வாலியாண்‌. கோயிலின்‌ நடிப்பாள்‌. 39

பவள வாயிதழ்‌ குவளைகண்‌ பகியகார்க்‌ கூந்தல்‌
இவட ஸனால்நமக்‌ .களவிலாப்‌ : பேருறு மெனக்கொண்
டவளை யாதர வுடன்சுமந்‌ தளித்தபெண்‌ ணாகத்‌
தவள வாயழு தூட்டியத்‌ தையலும்‌ வளர்ந்தாள்‌. 40

கோதி லாடனக்‌ கமைவன வகைவகை குறிக்கும்‌.
பாத மேமுதன்‌ முடியள வாகவே பலவா
யோது மாவவ யங்களுக்‌ கொழுகொளி பரப்புஞ்‌
. சோதி யாமணிப்‌ பசும்பொனின்‌ ‘ கலன்கள்சூட்‌ டினளால்‌ ;47:

பாட கம்செழும்‌ பதுமம்‌ நேரிய பதம்வருந்த
நாட கத்தொழில்‌ புரிபவள்‌: யாவுநன்‌ கறிந்தாள்‌ ;
சூடகக்‌ கையின்‌ விரல்களாற்‌ றுவன்‌ றிடத்‌ தெரித்திட்‌
டாகப்‌ பசுந்தந்‌ இயாழ்‌ பயில்வது மறிந்தாள்‌. 42

இனைய தாயதந்‌ தொழிலெலாங்‌ கற்றபின்‌ துளவம்‌
புனையு மாலிதா யகன்றிரு முன்ந்டம்‌ புரிந்து
வினைய கற்றுபொற்‌ படிகநீர்த்‌ துளவமு மிசைந்து
மனைய ணைந்துவா இத்திடு பள்ளிமன்‌ னுவளால்‌. 43

ஆலை யின்கரும்‌ பனையமா .தெழில்வள மறிந்து
வேலை சூழ்புவிப்‌ பரப்பெலாம்‌ விலங்கிடக்‌ தனிச்செங்‌ –
கோலை யோச்சிடு மரசர்கள்‌ குலவுமிங்‌ இவளைமாலை சூட்டிடக்‌ கிடைக்குமோ எனமருண்‌ டனரால்‌. 44

னியும்‌ பாகும்நற்‌ பாலுடன்‌ கைத்திட மிழற்றும்‌
இனிய சொல்லினாட்‌ கேவலிந்‌ திரியத்‌ தையவித்த
புனிதவ ரும்மதன்‌ னூன்முறை புரிகுவ ரென்னின்‌
மனித ராயினோர்‌ யாவரே மருளுறா தவரே? 45

பரகாலரின்‌ காதல்‌
வேறு
அன்னவ ஸிவ்வா றாக விருக்கும்‌ மதுதன்னைப்‌
பன்னரும்‌ €ர்த்திக்‌ குறையலூர்‌ வாழும்‌ பரகாலன்‌
nora லுணர்ந்தே யங்கவ ளாசைத்‌ தளைமேலும்‌
துன்னிட்‌ வவ்வூ ரேகுவ தற்குத்‌ துணிவானான்‌. 46

தங்க மூடன்பன்‌ மணியொளி ருந்தண்‌ டிகையேறிப்‌
பொங்க ரெனும்திண்‌ புயவலி தோழர்‌ புடைசூழ
மங்கு லளாவும்‌ .பொன்மதி டன்னை. மதியோடுஞ்‌
செங்க இருஞ்சூ ழாலி நகர்க்கண்‌ சென்றனனால்‌. 47

ஆங்கொ ரிடத்திற்‌ றுன்னி யிருந்திட்‌ டதன்பின்னர்‌
தீங்கனி யொக்குஞ்‌ சொல்லினண்‌ மேனித்‌ இறயோடும்‌
பாங்குற வைகும்‌ நல்லிட முங்கண்‌ படனோக்கி
ஈங்க டைமின்னென்‌ றேவிட நால்வ ரினிதோடும்‌. 48

அன்னவள்‌ வைகும்‌ பொன்மனை சென்றா ரதில்காணார்‌
துன்னி நடஞ்செய்‌ சாலையி ஸும்துன்‌ வினர்காணார்‌
நன்னரி யாழ்வல்‌ லாரொடு கற்றே நவில்கூடந்‌
குன்னில டைந்தே யங்குறு பெண்ணமு தந்தன்னை. 49

கண்ட னரம்பொன்‌ மேனியின்‌ வடிவம்‌ கண்ணென்னும்‌
புண்டரி கங்கொள்‌ ளாம லுளமற்‌ புதமெய்தி
எண்டிசை யுள்ளும்‌ கண்டில மிப்பே ரெழிலுக்குத்‌
தொண்டுறும்‌ நந்தம்‌ தோழனு மென்னத்‌ துணிவுற்றே. 50

மீண்டனர்‌ தாமுன்‌ வைகுறு மிலின்மே வினர்தம்மைக்‌
காண்டலு முள்ளங்‌ களிமகழ்‌ துன்னக்‌ கலிகன்றி
பூண்டிடு மன்பின்‌ ச௪ண்டுளி ரோநீர்‌ புகல்வீரென்‌
றாண்டவ னோதக்‌ கேட்டலு மவள்வடி வறைகன்தார்‌. 51

மழையள ‘கம்தண்‌ பிறைநுதல்‌ விற்புரு வம்வாட்கண்‌ ;
குழையணி வள்ளைக்‌ கன்ன மெளின்பூ |
அழகமை யும்கண்‌ ணாடிக போலும்‌ அமுதஞ்சொல்‌
பழமுதிர்‌ தொண்டை யிதழ்தர எங்கள்‌ பல்லாமால்‌; 52

விதுவ தனம்வளை கந்தரம்‌ வேய்த்தோள்‌ யாழ்முன்கை
பதுமம கங்கைத்‌ தளிர்விரல்‌ கிளிபாலி கையினுகிர்‌
புதுமலை முலையா லிலைவயி றாமெறும்‌ பூரோமம்‌
உதக மெழுந்திரை வரைதுடி யிடைசுழி யுந்தியதே. 53

அராவ. நிதம்பம்‌ கதலிகுறங்‌ கலவன்‌ சரணாம்‌
வராலின்‌ கணைக்கா லாமைப்‌ புறவடி. மன்னும்சர்‌
குராசு பரட்டாம்‌ பந்துகுதித்‌ துகிர்தான்‌ விரலாம்‌
பராவிய தாள்ங்‌ கந்திகழ்‌ பஞ்சு பதந்தானே. 54

அன்ன மெனப்படர்‌ மெல்லிய நடைமயி லஞ்சாயல்‌
இன்னக னமைதிக ளொப்பிட ஒவ்வா எழிலுற்ற
கன்னியை யாயிர மாதரு ளோர்பெண்‌ கனியென்ன
மூன்ன ரிழைத்துள நின்றவ மேமுன்‌ னியதென்ன. 55

அண்டர்‌ மத்திட வெண்கடல்‌ வந்தெழு மமுதென்னக்‌
கொண்ட. லுதஇித்தெழு முன்னெழு மின்னற்‌ கொடியென்னப்‌
புண்டரி கத்திரு மலரிடை வாழும்‌ பொன்னென்னக்‌
கண்டன மெம்மிரு கண்கள்‌ களிப்பக்‌ கடிதென்றார்‌. 56

அச்சொற்‌ கேளா வுள்ள மதற்குள்‌ ளவளாசைப்‌
பிச்சுற்‌ றேயங்‌ கேகு தலுன்னிப்‌ பெயர்போதின்‌
மச்சுத்‌. தேரோ டாதவ னாழி மறைவுற்றான்‌ நச்சுற்‌ கென்ன நள்ளிருள்‌ உள்ளில்‌: நணுஇியதால்‌. 57

வேறு .
இந்த வுலகம்‌ தனில்பிறந்திட்‌
டிறக்கும்‌ பிறவி தன்னையொழித்‌
குந்த வுலகம்‌ பெறுநான
மறிய வுரைக்கும்‌ குருபரனை நிந்தித்‌ இகழ்ந்திட்‌ டஞ்ஞான நெறியோ துவர்த மதியுள்ள
சந்தைக்‌ கருப்போ டியதெனவே
இசையோர்‌ எட்டு மிருண்டனவால்‌. 58

துன்னிச்‌ சிறந்த நள்ளிருள்வாய்த்‌ .
தோழ ரொடுமவ்‌ விடமகன்‌ றக்‌
கன்னி யுறைபொன்‌ மாடமதைக்‌
கலந்தாங்‌ இருந்தோர்‌. தமைவினவி
யன்ன மடமா தாடலுக்காய்‌
யாலிப்‌ பெருமான்‌ றிருக்கோயின்‌
மன்னி யடைந்த துளந்தெளிந்தம்‌
மணியா லயம்போய்‌ மன்னினனால்‌. 59

பரகாலர்‌ குமுதவல்லியைக்‌ கண்டார்‌
அங்கண்‌ பிரான்முன்‌ குமுதவல்லி
ஆடல்‌ புரியும்‌ போதினிலே
திங்க ளனைய முகத்தாடன்‌ ‘
இருமே னியினைப்‌ பதமுதலாய்‌
மங்கு லளக மீறாய்த்தன்‌
மலர்க்கண்‌ களிப்பக்‌ கண்டுருப்‌
பொங்கு ம௫ழ்வோ டாலியன்‌ நாட்‌
“பேர்துிற்‌ பணிந்து நின்றனனால்‌. — 60

தின்றங்‌ இருந்தப்‌ பேரழகன்‌
நிகரில்‌ வடிவந்‌ தனைக்காணா
மன்றல்‌ கமழுங்‌ : குழல்மடவாள்‌
மதனோ வானத்‌ திந்திரன்றான்‌
இன்றிங்‌ கிழிந்து வந்தனனோ?
வெனவே குவளை யிருத்டங்கண்‌
ஒன்ற வவன்றன்‌ றிருமேனி
முழுதும்‌ நோக்கி யுன்னுவளால்‌. 61

மருமந்‌ துளவ மணிகாணேம்‌;
வதனதந்‌ திருமண்‌ குறிகாணேம்‌;
மிருமந்‌ தரநேர்‌ மணிப்புயத்தி
லெஃகம்‌ வளையின்‌ பொறியிலையால்‌ ;
இருவின்‌ மகழ்நர்க்‌ கடியனலன்‌
எனவே இந்தை தெளிந்தவன்பாற்‌
கரும மிலையென்‌ நுளமுமிரு
கண்ணும்‌ திருப்பிக்‌ கசிந்தனளால்‌. 62

கசந்த மடந்தை திருவாலிக்‌
கண்ணன்‌ நறிருமுன்‌ னரிற்காலில்‌
-விசிந்த சதங்கை கலகலென
வேற்கண்‌ சுழலக்‌ கரமசைய
ஓ௫ந்த கொடியி னிடைநுடங்க
வொளிர்வா ரிறுக்குந்‌ தனங்குலுங்கப்‌
பசந்த மேனி வெயர்வரும்ப வுரோமம்‌ பொடிப்ப நடம்பயின்றாள்‌. 63

நடனம்‌ புரிந்து பெறுவதெலா
நல்கு வதுகொண் டவணீங்கி
மடம தருள்வார்‌ கள்புடைசூழ
மாட மணுடுப்‌ பசுங்கிளிக
ஞுடன்நன்‌ மொழிகள்‌ பலபயின்‌றிட்‌
டுணவு பொசித்திட்‌ டுறைபள்ளி
இடமங்‌ கணுகிப்‌ பஞ்சணைமே
லிசைந்தே திருக்கண்‌ வளர்ந்தனளால்‌, — 64-திருக் கண்‌ வளர்த்தாள்‌ – உறங்கினாள்‌. ‘**:அம்‌ மா மலர்க் கண்‌ வளர்‌கின்றான்‌”’ என்பர்‌ சடகோபர்‌

பாரகாலரின்‌ விரகம்‌
பரகா லனுந்தங்‌ கிடமணுகிப்‌ _
பஞ்ச சயனத்‌. இனிதமர்ந்திட்‌
டிரவான்‌ மதிபெய்‌ கொடுங்கனலால்‌
எய்தும்‌ பொதியத்‌ தென்றலினால்‌:
அரவார்‌ கடலி னொலிக்கூற்றால்‌
அன்றிற்‌ புலியால்‌ வென்‌ நிமதன்‌
கரவாய்ப்‌ பொழிஐங்‌ கணைவிடத்தாற்‌
கலங்கி யுறங்கா துருகினனால்‌, 65-பஞ்ச சயனம்‌-படுக்கை, அஞ்சுருவிட்டுச்‌ செய்த படுக்கை. பஞ்சவிதமான படுக்கை.
அழகு, குளிர்த்தி, மார்த்தவம்‌, பரிமளம்‌, தாவன்யம்‌ ஆக ஐந்துருவிட்டுச்‌ செய்த
படுக்கை” என்பர்‌ வியாக்யான சக்ரவர்த்தி பெரியவாச்சான்‌ பிள்ளை

உருகி யுருக நினைந்துநினைந்‌ துண்ட காம விடமதனாற்‌
கருக மேனி யவளையின்னும்‌
காணு மாசை யெனுமமுதம்‌
பருகி யுயிர்பெற்‌ றிவ்வகையா
யிரவை யொழித்தான்‌ பகலோனும்‌.
பெருகி யொளிருங்‌ கிரணமுடன்‌
பிறந்தான்‌ குணபாற்‌ பெருங்கடலின்‌. . 66

காலைப்‌ பொழுதி னஸெழுந்துசெய்யுங்‌
கரும மியற்றி முடித்திடுமவ்‌ வேலை தனதா ருயிர்த்தோழர்‌
மேவ வவர்தம்‌ முகம்தோக்கி
மேலைப்‌ படருங்‌ கருமமெலா
மூணர்வீர்‌ நீவிர்‌ விரைந்தெய்தி
யாலைக்‌ கரும்பின்‌ மொழியளெனை
யனையும்‌ வகைசெய்‌ தர௫ுண்மினென்றான்‌. 67

அந்த மொழியை தோழர்கள்சென்‌
றகல்வா னொழிந்திங்‌ கடைந்தவடன்‌
தந்தை தாயா ர௬ுடன்மொழிய
வவருங்‌ கேட்டுச்‌ சாற்றுமவர்‌
எந்த வூர்யார்‌ குலம்பெயரென்‌
.னெனவே கேட்க வுளதுரைக்கச்‌
சிந்தை மஒூழ்ந்திட்‌ டவற்கவளைத்‌ ட்ட
இருமா மணஞ்செய்‌ திடநேர்ந்தார்‌. 68

குமுதவல்லியாரின்‌ திருவுள்ளம்‌
அதனை யறிந்தக்‌ குமுதவல்லி யவன்றன்‌ செய்கை யறிந்ததனால்‌
விதனத்‌ துடன்யா ஸிவ்வுலகின்‌ விண்விட்‌ டிழிந்த துணர்வீரான்‌ தனொத்‌ துளனே யாயினும்பல்‌ வளத்தின்‌ மிகுந்தோ னாயினுமச்‌
சுதனுக்‌ கடியா னல்லனவன்‌ சுடலை யாடிக்‌ கடிமையுளான்‌. . 69

ஆத லாலங்‌ சுவர்க்களித்த
லடுக்கா தவனைச்‌ சேர்வதிலும்‌
வீத லேநன்‌ செனவடியேன்‌
விரும்பி யனலிற்‌ புகுவனென
வோத லோடு மம்மொழிகேட்‌
்‌ டுனது நினைவஃ தெனிலுன்மேற்‌
காத லாலங்‌ கவன்றிருமால்‌
கழற்குத்‌ தொண்டா குவன்கண்டாய்‌. 70

என்ன வந்த வவன்றோழ
ரிதனை யெடுத்திட்‌ டியம்புதலும்‌
அன்ன செய்கை யவன்புரியி
லவனை மண.நான்‌ புரிவனெனச்‌
சொன்ன மொழிகேட்‌ டவர்களுந்தந்‌
தோழ ரிடத்தில்‌
பன்ன வதனைப்‌ பரிவுடனே
பரகா லனுங்கேட்‌ டுளமகழ்ந்தான்‌. 71-

பரகாலர்‌ மாலடியாரானார்‌
அந்த மடமா தென்னுடனோர்‌
அணியா தனத்தி னிருப்பளெனில்‌
இந்தவ கைசெய்‌ இடவரிதோ’வென்றக்‌ கணத்தென்‌ றலை௫ரைத்து மூந்து மிரண்டு புயந்தனிலு | மாழி வளைமுத்‌ திரைபொறித்துச்‌
சிந்தை தெளிகே சவவாதித்‌
திருமண்‌ காப்புந்‌ தரித்தனனால்‌. 72

தோழர்கள்‌ குமுதவல்லியாரின்‌ கருத்தை உரைத்தலும்‌ பரகாலர்‌
காம்பறத்‌ தலை சிரைத்து, தோளில்‌ சங்கு சக்கரம்‌ பொறித்து, இருமண்‌ காப்பு-அணிந்து, வைணவரானார்‌. மதம்‌ மாறும்‌ போது தலை ிரைப்பது மரபு
என்பதை வடிவழகியாரும்‌ குறிப்பர்‌

-தளங்கொள்‌ வனமா லிகையினொடுந்
தாளார்‌ தண்ணந்‌ தாமரையின்‌
வளங்கொள்‌ மணியின்‌ றாழ்வடமும்‌
மணப்பூண்‌ டயங்குந்‌ திருமார்பில்‌
விளங்கும்‌ படியாய்த்‌ தரித்தவனும்‌
விரைந்து வருத லறிந்துமுயற்‌ களங்க மிலாத மதிமுகக்கா
ரிகையு மணத்தற்‌ கொருமித்தாள்‌. 73

ஒருமித்‌ திடப்பொற்‌ நூணிறுத்தி யுயரச்செழும்பட்‌ டதுவிரித்துக்‌
குருநித்‌ திலச்சா லர்கள்தூக்கி
குலமா மணியின்‌ விளக்கேற்றி
யருகிற்‌ கமுகுங்‌ கதலியுஞ்சேர்த்‌
குண்டி மனுக்கட வுள்தச்சன்‌
நிருமித்‌ திடுமோ ரண்டமென
மணிப்பந்‌ தலினை நிரப்பினரால்‌. 74

சாந்தால்‌ மெழுடச்‌ சுண்ணத்தாற்‌
றயங்கும்‌ கோலந்‌ தனையெழுதி
பூந்தா மரைகள்‌ பூத்ததுபோற்‌
பொற்பா லிகையைம்‌ பதுமுதலாய்‌

மாந்தர்‌ பலர்சேர்ந்‌ தவரவர்கள்‌ .
மற்று மியற்று வகையெல்லாம்‌
வேந்தர்‌ தமக்கு மிவ்வளமை ட
விளையா தெனவே யமைவித்தார்‌. 75

மங்கல நாண்‌ புனைந்தார்‌
உருமின்‌ முரச வகைமுழங்க
வொளிர்சங்‌ இனங்கள்‌ பலகுமுற
விருவர்‌ தமையு மணக்கோலம்‌
இயைவித்‌ தோரா தனமிசையே
மருவ விருத்தக்‌ கனன்முகஞ்செய்‌ ‘
வகைக ஸணிரப்ப மகிழ்வினொடுந்‌
இருமங்‌ கிலியங்‌ குமுதவல்லிக்‌
கணிந்தா ஸுயர்சீர்ப்‌ பரகாலன்‌. 76

மணமார்‌ முறைகள்‌ பலவும்விதி
வகையின்‌ வழுவா தஇயற்றியபின்‌
குணமார்‌ மடந்தை யொடுமறையுட்‌
குறுகி யணையுட்‌ பொருந்துதலும்‌
கணவ னாக வந்தபர
காலன்‌ றிருமே னியையரவின்‌
பணமா ரல்குற்‌ குமுதவல்லி
பாரா விதனைச்‌ இந்தித்தாள்‌. 77

தடனம்‌ புரியத்‌ தமதுருவ
மாற்றி வேறோர்‌ நற்கோலஞ்‌
சடல மணியு மவர்போலத்‌ தாங்குங்‌ கோல மகத்தினுளே அடல்சே ராழிக்‌ கரத்திருமா
லணுகக்‌ காணோம்‌ ஆதலினால்‌
தொடலா காதென்‌ றணைதனைவிட்‌
டெழுந்தா ளவனுஞ்‌ சோர்ந்துரைப்பான்‌. 78

என்னே யென்னை யிகழ்ந்தெழுந்த
இயம்பு கெனவாங்‌ கவன்கேட்பப்‌
பொன்னே யனையா ஸணினைந்ததனைப்‌
புகலக்‌ கேட்டாங்‌ கவன்மகிழ்வாய்‌
முன்னே நீயென்‌ னண்பருடன்‌
மொழிந்த நெறியின்‌ முறைபுரிந்தே னின்னே புரியும்‌ வகையுரைக்கி
னதையு மிழைப்ப னெனவுரைத்தான்‌. . 79

குமுதவல்லியாரின்‌ நிபந்தனை
அனைய மொழிகேட்‌ டாங்கவளும்‌
அவனம்‌ புயமா முகனோக்கி
யெனை நீ தொடவேண்‌ டினையென்னிற்‌
நிருமா லிருநா லெழுத்ததனை : நினைபா கவதர்‌ நூற்றெண்மர்‌
மருந்தா ரமூதளித்து வினைநீங்‌ கவர்தம்‌ பதவுதக
மிசைந்து வரவேண்‌ டிடுமென்‌ றாள்‌. 80-

திருமால்‌ இருநால்‌ எழுத்து-அஷ்டாட்சரம்‌, 108 பாகவதர்களுக்கு அமுதம்‌ வழங்க வேண்டும்‌,
பதவுதகம்‌-திருவடித்தீர்த்தம்‌.

அன்ன திழைத்து வருவேனென்‌
றம்மா நகர்வா மந்தணர்கள்‌
பன்னு மொருநூற்‌ றெண்மருக்குப்‌
பரிவிற்‌ றேவா வமிர்தமென  மன்னு மிருமூ வகைச்சுவையின்‌
மலியா ரமுத மருத்தியிவர்‌
_.. துன்னும்‌ பததீர்த்‌ தமுமருந்தித்‌ த தூயோ ஸனாய்மீண்‌. டடைந்தனனால்‌–81-

கண்டா ளவனுட்‌ டிருமாலுங்‌ ர
கலந்த பரிசா னுளங்கனிந்தவ்‌
வண்டார்‌ குழலி யவனுடனோ
ப ரணையின்‌ மருவி யிதழமுதம்‌
உண்டா ரொருவர்க்‌ கொருவர்முலை
யுடன்மார்‌ பிறுகும்‌’ படிதழுவிக்‌
கொண்டார்‌ மதனூல்‌ வழுவாம ட்ப
லின்பக்‌ கடலுட்‌ குளித்தெழுந்தார்‌. ‘–82-

வேறு
இம்மா முறையே திளம்நூற்‌ .
றெண்பே ரும்மா னகர்வாழ்‌ –
செம்மா மறையோ ரண்டு
தெவிட்டும்‌ படி யாரமுதம்‌.
எம்மா நிலமும்‌ புகழும்‌ OR ee tl
படியங்‌ கவனு மியைவித்‌ ௩1.
.” தம்மா னிதழ்வா யமுதுண்‌ ன ன ரோ
டுறையு மன்னா டனிலே. 83

கையிற்‌ பொருணீங்‌ இயபின்‌
கடன்கொண் டதிலம்‌ – முறையே ©
செய்யு மளவிற்‌ பலநாள்‌
சென்ற பின்னர்‌ கடனும்‌.வையத்‌ தெவரும்‌ நல்கா
தொழிப்ப மனமங்‌ கவனும்‌
நையுற்‌ தொருநாள்‌ புரியா
துறைவீ டதைநண்‌ ஸணுதலும்‌. ்‌ 84

மன்றன்‌ மலர்சே ரளகக்‌
குமுத வல்லிப்‌ பெயர்மான்‌
நன்றங்‌ கெதிர்சென்‌ றவனை
தோக்கா விதனை யறைவா
ளென்றும்‌ நின்னோ டாலிக்‌
கிறைவன்‌ வருவா னவனும்‌
இன்றுன்‌ னுடனே கூடி
வருதல்‌ காணா மென்னா. 85

கதவந்‌ தனைமூ டித்தாழ்‌ காப்புக்‌ சடிதிட்‌ டிடலும்‌
மதனொத்‌ திடுமக்‌ கலியன்‌
வாடித்‌ தெருவின்‌ கண்ணின்‌
இிதமுற்‌ நிடநல்‌ வசனம்‌ மவடன்‌ ஸிருகா துறுமவ்‌
விதமொத்‌ தடவோ தினனாய்‌
மீண்டும்‌ பகர்வா னானான்‌. -86

மானேர்‌ விழியாய்‌ தனமும்‌
பிரியா துடனே வருமத்‌
தேனார்‌ கமலைக்‌ திறைவ
னின்றென்‌ னுடனே செல்லாதேனோ வதனைகத்‌ தெளிய
வுரைநீ யெனலும்‌ மவளும்‌
ஆனா வன்னாள்‌ ததியா
ரதனஞ்‌ செய்வா யதனால்‌. , 87

உன்னோ டே. ராலித்‌
இருமா லுற்றா. னவைதா
னின்னாள்‌ புரியா தமையா
லெய்தா தொழிந்தா னறிறீ
யென்னா மொழியக்‌ கேளா
வென்கைப்‌ பொருளுள்‌ ளனவும்‌
பொன்னே யனையாய்‌ பலநாள்‌
புரிந்தே னதுபோ யினபின்‌.- 88

சிலனாள்‌ கடன்கொண்‌ டதனைச்‌
செய்தேன்‌ கொடுப்போர்‌ வேறிந்‌
நிலமீ தலையா லதையா
னிகழ்த்தும்‌ வகையே தென்னக்‌
குலமா மணியே யனைய
குமுத வல்லிக்‌ கொடியும்‌
பலர்தம்‌ பொருணிீ வழியிற்‌ ‘
பறித்தா லுஞ்செய்‌ தடைவாய்‌, 89

என்றங்‌ கவளும்‌ புகல்வ
இருசெஞ்‌ செவிவந்‌ துறலும்‌
நன்றென்‌ றவண்விட்‌ டே .
நலிசெய்‌ தொழிலின்‌ மிக்கோர்‌
குன்றம்‌ பொருதோட்‌ பலரைக்‌
கூட்டிக்‌ கொண்டே தானிற்‌
சென்றங்‌ கடைவோர்‌ பொருளைப்‌பறிக்கும்‌ செய்கை யறைவாம்‌. 90-பலர்‌-நீர்மேல்‌ நடப்‌
பான்‌, நிழல்‌ ஓதுங்குவான்‌, தாமூதுவான்‌, தேலா வழக்கன்‌, முதலானோர்‌.

பரகாலர்‌ கள்வராதல்‌
குடபாற்‌ கடலின்‌ கிழக்கில்‌
குணபாற்‌ கடலின்‌ மேற்கில்‌
வடமே ருவினிற்‌ றெற்கில்‌
வதிதென்‌ கடலின்‌ வடக்கில்‌
இடமெங்‌ கணினும்‌ வழியின்‌
னியல்வோர்‌ பொருள்கொண் டிடவே
கடவீ ரென்றே பலரை
யேவிப்‌ பரகா லனுமே. 91

சேரன்‌ சோழன்‌ மாறன்‌
தேசத்‌ இடைபா தைகளின்‌
ஓரங்‌ களில்பல்‌ லோரை
யேவி யுறுமங்‌ கவர்கள்‌
ஆரத்‌ துடனே பொருளு
மாடை பலவுங்‌ கொண்டு
வாரும்‌ மெனவே தானோர்‌
மரநீ ழலின்வை கனனால்‌. 92

ஏவும்‌ பலசே கவர்க
ளெங்கும்‌ வழிபா தைகளின்‌
மேவும்‌ மவர்கைப்‌ பொருளும்‌
மிளிரா பரணம்‌ முதலாய்‌.
யாவுங்‌ கொடுமென்‌ . றடியா
வதட்டா வெருட்டா வெருவி
நாவும்‌ மனமும்‌ முடலும்‌
நடுங்கப்‌ பறித்தா ரன்றே. -93-

அவர்கைப்‌ பறியுண்‌ டவர்செய்‌
கதுதனா லெவரும்‌ வழியுந்‌
தவருற்‌ றேகும்‌ மவரைத்‌ , தனியங்‌ ‘ குறையுங்‌ கலியன்‌-எவரிம்‌ முறைசெய்‌ தனரென்‌
றறியான்‌ போலிம்‌ முறைசெய்‌
குவரு மூளரோ வென்ன
மொழிதன்‌ பலவுங்‌ கூறா. 94

ஒருவே ளையினுக்‌ குணவும்‌
பழவத்‌ திரமொன்‌ நுந்தத்‌ குருகாய்‌ வருவித்‌ தவரை
‘யாற்றிப்‌ போமென்‌ ௰னுப்பித்‌ .
தருவார்‌ நிழல்வை குதலுந்‌ தன்றூ துவர்போய்ப்‌ பறித்து
வருமாப்‌ பொருள்கள்‌ பலவும்‌
கொண்டே. யூர்போய்‌ மருவி. ‘:95

இருவின்‌ கொழுனன்‌ னடியார்‌
நாூற்றெண்‌ டிருநா மங்கள்‌
பருகும்‌ படியா ரமுதம்‌ — ‘
முன்பிற்‌ பரிவின்‌ னமையாப்‌
பொருவில்‌ லவர்தம்‌ பதனீர்‌ .
கொண்டே புனிதத்‌ துடனே
வருமங்‌ கவனைக்‌ குழுத
வல்லிப்‌ பெயராள்‌ கண்டே, 96

இன்றுன்‌ னுடனெம்‌ பெருமான்‌
வந்தா னென்றே மகஒிழ்வா
யன்றங்‌ கவனை யழையா
வளாயுள்‌ ளணுகி யவனோ
டொன்றும்‌ மனதாயனைமே
லொருமித்‌ இன்பந்‌ தந்தஇட்‌
டென்றும்‌ மிவ்வா றாகவெய்தத்‌ தகும்நீ யென்றாள்‌. -97-

எம்பெருமான்‌ தடுத்தாட்‌ கொள்ளல்‌
அவ்வா றிவனும்‌ புரியா
பலனா ளவளோ டணுகுற்‌
றொவ்வா வின்பந்‌ துய்த்திட்‌
டுறைநாள்‌ குனின்முன்‌ னாள்வாய்‌
செவ்வாய்‌ திருமாழ்‌ மார்பத்‌
தேவன்‌ ஏவும்‌ மாயை
யெவ்வா றிவனோ டுறைவ
தெனநா ஸணுற்றே கியதால்‌. 98

மாயைத்‌ தொடர்பாங்‌ sae
மயர்வற்‌ றிடுநன்‌ மதியைக்‌
காயைத்‌ தின்போ ஸுக்குத்‌
கனியீ வதுபோ லருளச்‌
சேயைப்‌ பரிவிற்‌ றேடி
விரைந்தே யதன்பின்‌ செல்லும்‌
தாயைப்‌ போலத்‌ திருமால்‌
கலியன்‌ றன்பா லுறவே. 99-

காயைத்‌ தின்போனுக்குக்‌ கனியை யீவதுபோல்‌, மயர்வற்றிடு நன்மதியை அருள, சேயைத்‌.
தேடும்‌ தாயைப்‌ போல திருமால்‌ கலியன்பாலுற, என்று கொண்டு கூட்டுக, .

நினையும்‌ பொழுதிற்‌ பின்னும்‌
வேறிந்‌ நினைவுங்‌ கொண்டான்‌
அனையன்‌ களவின்‌ ஹறொழிலின்‌
னகப்பட்‌ டவன்செய்‌ திடுமவ்‌
வினையந்‌ தனையும்‌ பறிசெய்‌
வேடிக்‌ கைகளுங்‌ கண்டு
குனைபின்‌ பவனுக்‌ கறியும்‌  படிசாற்‌ றுதுமென்‌ பவனாய்‌. 100

குன்பொற்‌ பாதம்‌ தொழுமவ்‌
விதிசங்‌ கரனிந்‌ திரனை ‘
யன்பிற்‌ பாரா நீவி
ரமரர்‌ கூட்டத்‌ துடனே
முன்பிற்‌ செலுமென்‌ றுரையம்‌
மொழியின்‌ மனையா ர௬டனே
இன்புற்‌ றவரும்‌ மவ்வா
ஹேகற்‌ இவ்வா- றமைவார்‌. 101

பிரமன்‌ கலைமா துடன்மா
தவர்தம்‌ வடிவம்‌ பெறலும்‌
பரமன்‌ னுமையா ளொடுசங்‌
கமர்தம்‌ -படிவங்‌ கொண்டான்‌
சுரமன்‌ னயிரா ணியோடும்‌-:- ்‌
நரர்தம்‌ சொருபங்‌ கொளலும்‌
வரமன்‌ ஸிடுறித்‌ தர்களும்‌
இருமுத்‌ தர்களும்‌ மற்றும்‌. 102

வானந்‌ தனில்வை குவரும்‌
மவர்தம்‌ மனையா ௬டனே
மோனம்‌ பெறுசித்‌ தர்களும்‌
முனிவோர்‌ களுமா ஸிடராய்‌
கானந்‌ தனிலா பரணம்‌
கவினப்‌ :பலருஞ்‌ செல்லத்‌
தானும்‌ இருமா துடனே
மறையோர்‌ படிவம்‌ தாங்கா… : 103

பின்னே கிடலும்‌ மதன்முன்‌
பெருங்கா னிடையே வைகும்‌
தன்னே ரில்பர காலப்‌
பேரார்‌ வருவா ர௬ண்டோ
வென்னா வுயரும்‌ மரசத்‌
தருமீ தேறிப்‌ பாரா
வன்னோர்‌ வரவைக்‌ காணா
வகமுண்‌ மகிழ்வா யிழியா. 104

தன்சே வகரைக்‌ கூவா
தடிவாள்‌ வேல்கைக்‌ கொள்ளா
வன்போ டெதிர்சென்‌ றவரை
வழியின்‌ மறியா வுமது
பொன்பூ டணமுள்‌ ளவெல்லா
மேல்விட்‌ டாவி போக்கா
முன்போ டுமெனா மொழியா
முனிவாய்‌ வரன்மே ஸளனோசக்கா. 105

தனனே முதலாம்‌
புலவோர்‌ நித்தர்‌ முத்தர்‌ அருமா முனிவர்‌ சத்த
ரெவரும்‌ மவர்தே வியரும்‌
வெருவா மிரட்டிட்‌ டவர்தம்‌
மேலுள்‌ ளவத்தி ரம்மும்‌
குருமா மணியா பரணம்‌
எவையும்‌ வலுவிற்‌ கொண்டான்‌. 106

அவரே 7கியபின்‌ கமலத்‌
்‌ தயலுந்‌ தளவெண்‌ முளரித்‌
துவர்வா யவளு மிகலூர்‌
துணிவா யவர்தம்‌ பொருளுங்‌
கவர்வா நினைப்போ டவிடம்‌
கடிகித்‌ தடியா னதுகொண்
டிவரே குதலும்‌ வெருவா:
விதனைக்‌ கலைப்பெண்‌ பகர்வாள்‌. 107

ஐயா நீவீ ரெம்மை
அடித்துத்‌ துடிக்கக்‌ கொலைதான்‌
செய்யா துயிரோ டேகும்‌
படியே யருள்கொண்‌ டிடிலெம்‌
மெய்யா பரணம்‌ பலவும்‌
மேல்வத்‌ திரமு முதலாய்க்‌
கையாற்‌ றருவோ மென்னக்‌
கழற்றித்‌ தந்தே கனரால்‌. 108

உடனே சிவனும்‌ முமையும்‌
வரலும்‌ மொளிர்வா ஞடனே
அடல்சேர்‌ தடிகொண்‌ டிவனும்‌
மதட்டிச்‌ செல்லு மளவிற்‌
குடலும்‌ வயிறும்‌ முயிருங்‌
குலையப்‌ ‘பயமுற்‌ றுமையுங்‌
கடலின்‌ விடமுண்‌ டவன்மெய்‌
யுடனே கரவா யினளால்‌. 109

மறையக்‌ கிழிசங்‌ கமநின்‌
னுடனே வந்தா ளெங்கென்‌
றறையப்‌ பயமுற்று றுவனும்‌ மறியே னெனவே செவியுள்‌
உறைகுண்‌ டலமே முதலா
யுளதுங்‌ காவி யுடையுங்‌
குறையற்‌ பதியுற்‌ றவன்கைக்‌
கொடுத்திட்‌ டவனும்‌ போனான்‌. ‘ 110

இவ்வா றெவருந்‌ ததந்திட்‌ டேகும்‌ பொழுதோ ரொருவர்‌
செவ்வாய்‌ மடமங்‌ கயருக்‌
கொருசே லையுமா யவருக்‌
கொவ்வா வொருகோ வணமும்‌
மூதவா மற்றுள்‌ ளவெலாம்‌
எவ்வா வெருட்டிப்‌ பறியா
ஏகும்படிவிட்‌ டனனால்‌, –111

அனைய பொருண்கண்‌ முழுதும்‌
மாலிப்‌ பதியின்‌ னமது
மனையிற்‌ கொடுபோ யடைமின்‌
னெனமற்‌ றவரை யேவி
தனையொத்‌ துயரு மரசின்‌
றருவின்‌ னடிநீ ழலின்வாய்‌
தனையொப்‌ பவரும்‌ நிகராக்‌
கலியன்‌ றனிவை குதலும்‌. 112

வேறு
– வானி லுணரப்‌ படுமயனும்‌
மமுவா எளியுமவ்‌ வாறேகத்‌
தேனி லினிய விளங்குதலைத்‌ இருபின்‌ றுடருந்‌ திருமாலும்‌மேனி முழுது மாபரணம்‌
விளங்க நடந்து வருவதனைக்‌
கானி லுறையும்‌ பரகாலன்‌
காணா விதனைக்‌ கருதினனால்‌, 113

முனிவோ ரிமையோ ருனற்கரிதாய்‌
மூதுமா. மறையின்‌ முடிவிளங்கும்‌
குனிமா முதல்வேற்‌ றுருவமதாய்த்‌
தன்னைத்‌ திருத்தக்‌ கருகியுளம்‌ கனிவா யடைத லுணரானங்்‌
…. கவர்தம்‌ பொருளைக்‌ கவர்ந்துகொளில்‌
இனிநா. மென்றும்‌’ வேறுபொருட்‌
கிச்சை வேண இலையென வே.-1i4

உள்ளங்‌ களிப்பாய்‌ ஏவனடநீ
யோடா தேநில்‌ லெனவெதிர்போய்‌
புள்ளந்‌ தனைவான்‌ மிசைசு ழந்றிச்‌
போவ தெங்கென்‌ றதட்டியுன்வாய்‌
விள்ளப்‌’ புகுவென்‌ : றங்கவர்பால்‌
விளங்கும்‌ பணிதிக்‌ ககமகழ்வாய்‌
துள்ளித்‌ துள்ளி நடம்புரித்‌ ணரா மறையோ னிவைசொல்வான்‌. 115

அப்பா! கேணாம்‌ வேட்டகம்போய்‌
யாங்குற்‌ நிடுமென்‌ மனையவளாம்‌
இப்பா வையொ டுமுனதாலிக்‌ ்‌
கேகு வெனநீ யெகிர்வந்தே -கைப்பா யிடுங்கட்‌ குடித்தாடுங்‌
களிபோற்‌ குதித்த லெவனெனவே
– செப்பா வதற்குத்‌ திருமங்கை
மன்ன ஸனிதனைச்‌ செப்பிடுவான்‌,–116-

பரகாலர்‌ நிகழ்ந்தவை கூறல்‌
மறையோய்‌! கேட்டி யுயிர்போல .
மருவு மெனது மனையவளாம்‌
மிறைபோ ஸுதற்சேர்‌ குழுதவல்லிப்‌
பெயராள்‌ இனமு மிவ்வூரில்‌
உறைபா கவதர்‌ நூற்றெண்ம
ருண்ணத்‌ ததியா ராதத்தை முறையோ டிழைக்கி னலாலென்மேன்‌
முனிவாய்த்‌ தன்னைத்தொட வொட்டாள்‌.–117-

அதனாற்‌ பொருள்கை யுள்ளனவு
மந்த முறைசெய்‌ தனன்பின்னர்‌
இதமாய்ப்‌ பிறர்பாற்‌ கடன்கொண்டிட்‌
டிழைத்தேன்‌ அதற்பின்‌ கடன்யாரு
முதவா தொழிய வுற்றதற்பின்‌ . இதெலா மவளோ டுரைத்தினியான்‌
புரிவ தெனக்கேட்ப
விவ்வா றிழையென்‌ றவளுரைத்தாள்‌.–118-

அந்த முறையால்‌ வழிபறித்தங்‌
கதனை முயல்வேன்‌ பலர்பொருளோ
டிந்தந்‌ இனமும்‌ வரப்பறித்தெம்‌ – மில்லத்‌ ததனை தூதுவர்பான்‌
முந்த வனுப்பி யினும்வருவா
ருண்டோ வெளவிம்‌ முறையிருக்க
வந்த வுமது பொருள்பறியா விடுகேன்‌; எனக்கு வழக்கீதே.–119-

ஆத லாலும்‌ மிடத்துளதாம்‌
பொருள்க ளனைத்து மெனக்களித்‌
போத லேநன்‌ கல்லவெனிற்‌
புடைத்துப்‌ பறித்திட்‌ டுமதுயிரைக்‌
காது வென்கை யுடைவாளா.. :
லென்னக்‌ சுதித்திட்‌ டருகணைய
மாது தாட்டா மரைவதனம்‌
நோக்கி மறையோன்‌ வகுத்துரைப்பான்‌. 120

மனையா டனது காதலினால்‌
வழியில்‌ வருவோர்‌ தமதுபொருள்‌
தனையாங்‌ கவர்கள்‌ துயரமுற
வாள்கொண்‌ டடர்த்துக்‌ கவர்ந்திடுமிவ்‌
வினையான்‌ கள்வ னோவலதிம்‌
மிகுந்த பொருள்கொண்‌ டருந்தியிடும்‌
அனையார்‌ கள்ள ரோ?விதனை
யறிய வுரைநீ யென்றனனே. 121

கேட்ட மடவா எளிக்கொடியோன்‌
கிடைத்தற்‌ கரிதா யெனையளித்தோர்‌
பூட்டும்‌ பணிகள்‌ பலவுமது
போதா தெனவீன்‌ றவரையருள்‌
பாட்டன்‌ பாட்டி யவரிடுதற்‌
பணிதி பலவும்‌ பலபலவாய்‌
வேட்ட வகத்தோ ரிட்டதுவும்‌ ன
விரும்பிப்‌ பறிக்கத்‌ துணிந்ததனால்‌, ட. ட. 122

அந்த பயத்தால்‌ எனக்கொன்றும்‌
‘தோன்ற விலையென்‌ றவளுரைப்ப
இந்த விதமா யொருவர்முகம்‌
, “ஒருவர்‌ தோக்கி யிருந்திடலும்‌
சிந்தை முனிவாய்ப்‌ பரகாலன்‌
செங்கை யுறைவாள்‌ தனைச்சுழற்றா
வுந்தன்‌ முடியான்‌ றுணிப்பனென்றவ்‌
வொளிர்வாள்‌ தன்னன யோங்குதலும்‌. 123

அஞ்சி நடுங்கு மவர்போன்மெய்‌
நடுந்கா வவனை நோக்கியெமைத்‌
துஞ்சப்‌ பொருதா லஇிலுனக்கென்‌
பயனோ சொல்‌ ?லெம்‌ பாலுளவாம்‌
விஞ்சு மணியா பரணமெலாந்‌
தருவே மெனவேண்‌ டுதலாகக்‌
கஞ்சன்‌ றனையுந்‌ இயினளித்த
. கடைமா மறையோன்‌ கழறலுமே. 124

அதுவெஞ்‌ செவியுற்‌ றிடலுமுறை யணிவா எிட்டுக்‌ கதைகரத்திற்‌
கதுவப்‌ பிடித்திட்‌ டடிப்பதுபோற்‌
கப்பி யிடவம்‌ மறையவனும்‌
மதுகைப்‌ புயத்தோய்‌! நீயடியே
லென்னா மேல்வத்‌ திரமதனை
இதுகைக்‌ கொள்ளென்‌ றெறிந்திடலு
மவனு மிதனை யியம்பிடுவான்‌. 125

உனதுத்‌ தரியம்‌ தந்ததனா
லென்னோ பலனுள்‌ ளதுமேலும்‌
மனதுக்‌ இசைய மனையவளென்‌றுரைதந்‌ திடுமிம்‌ மடமங்கைதனது பணிக ளஞூள்ளவெலாந்
. தரிக்கு மொருவத்‌ திரம்தவிர
வெனது இருமுன்‌ வைத்திடுவா
-யெனமங்‌ கையர்கோன்‌ அதட்டலுமே. 126

மறையோ ஸனெனுமத்‌ திருமாலு
மணியா பரணந்்‌, தனைமடவாண்‌ –
முறையோ வெனத்தன்‌ தநிருக்கரத்தாற்‌
கழற்ற வேகு முறையறிந்து நிறைநா ணொன்றும்‌ வேண்டேன்மற்‌
றுளவெ: லாம்நீ தருகென்றே
_ கறைவாட்‌ டொழிலில்‌ நிகரில்பர
கால ஸுரைப்ப .வதுகேளா. .–127

நீல னுரைத்த படிமடவா
ணிறைநா ஸணொணன்றும்‌ தவிர்ப்பித்துச்‌ ்‌
சால வணியும்‌ பணிகளெலாஙம்‌: .
கழற்றி யவன்கை தந்தனனால்‌;
கால னளெளப்பூந்‌ ‘தடத்தடருங்‌
கராவின்‌ வாய்ப்பட்‌ டுளங்கலங்கி
மூல மெனவன்‌ றழைத்தகரி
முன்வந்‌ ததன்பே ரிடர்தவிர்த்தோன்‌. 128

அந்த மணியா பரணங்கள்‌
யாவும்‌ கைக்கொண் டதன்பின்னர்‌
உந்தன்‌ மேனி தொடுகிலன்யானொளியா துன்மே லுள்ளவெலாந்‌ – குந்தி டெனக்கை விரலணியுந்‌
இருவா ழிதனைத்‌ தவிர்ந்திடமற்‌ றெந்த வெந்த வாபரண .
மெல்லாங்‌ கழற்றி யீந்தனனால்‌. 129

அதுவுங்‌ கரத்திற்‌ கொண்டதற்பின்‌ னம்மா மறையோன்‌ மேனிதனைப்‌
பதும நிகரும்‌ பதமுதலாய்‌
முடியீ றாகப்‌ பார்த்திடலும்‌
கதுவுங்‌ கரத்தி லாழிதனைக்‌
கண்ணிற்‌ காணாப்‌ பெருங்களவா
இதுநீ யொளித்தால்‌ விடுவேனோ?
வதையும்‌ தருக வென்றனனால்‌. 130

கொழுந்து பொருந்திப்‌ படர்கீர்த்திக்‌
கலிய னிதனைக்‌ கூறுதலும்‌
எழுந்து பெருகு முவகையையுள்‌
ளடக்கி யிஃதென்‌ கைவிரலில்‌
அழுந்து முறையாற்‌ கழற்றுதலுக்‌
கொவ்வா வெனக்கேட்‌ டாங்கவனும்‌
செழுந்து ளவன்றி ருக்கரத்தைக்‌
கையாற்‌ பிடித்துச்‌ செப்பிடுவான்‌. 131

இவ்வா றாகக்‌ கழற்றுகென்றங்‌
குலியைக்‌ கரத்தாற்‌ பிடித்திழுக்க
அவ்வா ழியுங்கை வராமையினா
லதனை வாய்கொண்‌ டீர்த்தனனால்‌
கவ்வா விழுக்கும்‌ பொழுதெமது
““கலியனோ” வென்றவன்‌ முடிமேல்‌
ஓவ்வா வலது கரந்தனைவைத்‌துகந்தா னனைபா லுண்டுகந்தோன்‌. 132

பரகாலர்‌, சைவிரலில்‌ உள்ள இருவாழியை வாய்‌ கொண்டு கடித்து
இழுத்தார்‌. அப்போது பெருமான்‌ உவந்து **எமது ஈலியனோ”’ என்று கூறி அவர்‌
முடிமேல்‌ வலதுகரத்தை வைத்தான்‌,

தலைமேல்‌ கரம்வைத்‌ துகந்இடவுந்‌
தெரியா னாகி யதைத்தவிர்த்தே
மலைபோற்‌ குவித்த பணிமூட்டை
தனைச்சென்‌ றெடுக்க வதுபுவியின்‌
நிலையா யழுந்தி வராமையினை
யறிந்தாங்‌ இதனை நினைவுற்றான்‌
வலைபீ றநிடுஞ்சேற்‌ றடம்பலவாய்‌
மருவுங்‌ குறைய லூர்வள்ளல்‌. – ட 133

முன்னே யடைந்தோர்‌ தமதிடத்துங்‌
கவர்ந்த தெடுத்தோம்‌ இவன்பணிகள்‌.
என்னே புவியிற்‌ பொருதந்லிவன்‌ ்‌
செய்மந்‌ இரிப்பா மெனவுணர்ந்திட்‌
டன்னோன்‌ தனைப்பார்த்‌ ததட்டியடா
மறையோய்‌ யறிமந்‌ இரவன்மை
றன்னால்‌ கவ்வை யழுந்திடச்செய்‌
குனைசொல்‌ சாற்று கென்னலுமே. 134

அந்த வுரைகே ளாமூனங்கற்‌
றிந்த திருமத்‌ திரமதனால்‌ இந்த முறைசெய்‌ தவன்யானே
யிதனை யறிநீ யென்றுரைத்தான்‌
முந்த வொருவா ளவுணனிடம்‌
குறளாய்‌ மண்மூ வடியிரந்துட்‌ –
டெந்த வுலகும்‌ ஓஒரடிகொண்டளந்தே கவர்ந்த வெம்பெருமான்‌. 135

ஆழ்வார்‌ மந்திரம்‌ பெறல்‌
ஆனா லந்த மந்திரத்தை அறியும்‌ படியிங்‌ கெனக்குரைத்துப்‌
.,போனா யெனிலுன்‌ றனையுனதூரா்‌
போக விடுப்பேன்‌ அலையெனிலுன்‌
னானா (HO தனையென்கை
யொளிர்வா .ளதனாற்‌ றுணித்துயிர்போய்‌
வானா டாளும்‌ படிவிடுப்பேன்‌
மறையோய்‌ யிதைநீ யறியென்றான்‌. 136

கொடியோ னான பரகாலன்‌
கொதிப்பா யுள்ளங்‌ களிப்பெய்தி
வடிவா ளதனை யுறைகழற்றா
வையம்‌ நடுங்கும்‌ படிநடந்துன்‌
முடியான்‌ றுணிப்பே னெனவவனும்‌
முடிகி வரலும்‌ பயந்தவன்போல்‌
படிமீ தவ்வாள்‌ வைத்துவரிற்‌
பகர்வே னென்றான்‌ படியுண்டோன்‌. 137

புகலு மொழிகேட்‌ டவ்வாளை
யுறையுட்‌ புகுவித்‌ தருகணையும்‌ இகலோன்‌ வளது திருச்செவியி
லுள்ளத்‌ இருளை வெகுண்டெரிக்கும்‌
பகல்போ லிருநா லக்கரமாந்‌
இருமந்‌ தரத்தைப்‌ பகர்ந்திட்டான்‌
அகல்பூ விடைவா முயிரளித்த வயனுக்‌ கனமாய்‌ மறையறைந்தோன்‌. 138

சூரியன்‌ இருளை
ஓட்டுவான்‌. அதனால்‌ அவ்விருள்‌ மீளவும்‌ வருகிறது, ஆனால்‌ அஷ்டாட்சரமோ
உள்ள இருளை எரித்து விடுகிறது. அயனுக்கு அறைந்த மந்திரம்‌-ஹம்ச சதை.
“அன்னமாக அருமறைகள்‌ அருளிச்‌ செய்த அமலன்‌”? என்று பெரிய திருமொழி
பேசும்‌. ”அன்னமாய்‌ அறைந்தாய்‌ நீ” என்பர்‌ கவிச்சக்ரவர்த்திகள்‌,

மாயை நீங்கியது
வானே முதலாம்‌ பலவுலகும்‌
வயிற்றுள்‌ எடக்கு நாரணனுந்‌
தானே தன்னை யவனறியச்‌
சாற்றுந்‌ இருமந்‌ இரமதனால்‌ கானே வருவோர்‌ தம்மைவாள்‌
்‌. காட்டிப்‌ பறித்த பரகாலன்‌
ஊனே யுடல்சோ ஷித்தாந்தி
யங்க ஞம்விட்‌ டோடினவால்‌. 139

குன்னுள்‌ ளிருந்த கொடுமாயை
தனைவிட்‌ டொழிதந்த தன்மையும்பூ
மன்னுந்‌ திருமா துடன்திருமா
லுகந்த செயலும்‌, மற்றவர்தம்‌
பொன்னம்‌ பதங்க ள.றியுணர்வும்‌,
பரம பதத்திற்‌, புகும்வழியும்‌, துன்னு முயிர்கள்‌ பெறுவாழ்வுந்‌,
இருமந்‌ திரத்துட்‌ டோன்றலுமே. 140-

இருமந்திரத்தால்‌ ஆழ்வார்‌ உணர்ந்தவற்றை ஆரியர்‌ விவரிக்கிறார்‌.
கொடு மாயை ஒழிந்த தன்மையும்‌, திருமால்‌ உகந்த செயலும்‌, பதங்கள்‌ அறி
உணர்வும்‌, பரமபதத்திற்‌ புகு வழியும்‌, உயிர்கள்‌ பெறுவாழ்வும்‌, இரும்ந்திர த்தால்‌
தெரிந்தன. இவற்றை ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ** அர்த்த பஞ்சகம்‌ ** என்பர்‌.

மனம்வாய்‌ யொருமித்‌ தவன்றுருத்தி ்‌
வைத்தூ திடுமக்‌ கொல்லனுலைக்‌
கனல்வா யுருகு மெழுகெனலாய்க்‌
கந்து கசிந்திட்‌ டுளமுருகித்‌
தனதா முடலந்‌ தனதுவசந்‌ தானா காமற்‌ றனிமுதலின்‌
முனமே விழுந்து புரண்டுபுரண்‌ ‘டெழுந்தே முறையா னோக்கலுமே. 141

இறைவன்‌ கோலங்‌ காட்டல்‌
மறையோ னான திருவுருவம்‌
மாற்றிக்‌ கமலத்‌ இருவுடனே
சறையார்‌ கருட னெருத்தமிசைச்‌
செம்பொன்‌ முடிமா முடியோங்கக்‌
கறையா ராழி வளைசிலைவாள்‌
கதையைம்‌ படையும்‌ புடைதயங்க
நறையார்‌ துளவப்‌ படலையொடுங்‌
கவுத்து வமும்நன்‌ மார்பொளிர. ்‌ 142

அரையிற்‌ பீதாம்‌ பரம்விளங்க
வணியம்‌ புயத்தின்‌ வலயமின
வுரைசெய்‌ நயன மணிவாய்கை
யுந்திச்‌ சரண மெனவொளிரும்‌
விரைசெய்‌ கமல வனமலர்ந்தோர்‌
மேகம்‌ விசும்பி னிடைபசும்பொன்‌
வரையின்‌ மிசையுற்‌ ெழுந்திருந்து
வருத லெனலாய்‌ மாணுறவே. ்‌ 143

நயனம்‌, வாய்‌, கை, உந்தி, சரணம்‌, இவைகள்‌ தாமரைக்காடு போன்றி
ருந்தன. திருமால்‌ கமலவனம்‌ பூத்த மேகம்‌ போன்‌ றிருந்தான்‌. கருடன்‌ பொன்‌
மலை போன்‌ றிருந்தான்‌. “கருமுகில்‌ தாமரைக்காடு பூத்து, செம்பொற்குன்றின்‌
மேல்‌.வருவயபோல்‌ கருடன்‌ மேல்‌ வந்து தோன்றினான்‌ “என்ற கவிச்சக்கரவர்த்த
களின்‌ (பால) பாடலுக்கு விரிவுரை இங்கு உள்ளது.

வனும்‌ வேளும்‌ கரிமுகனுஞ்‌
செங்கேழ்‌ கமலந்‌ தனிலுறையும்‌
அவனும்‌ புருகூ. தனும்வானத்‌
. தனைவோர்‌ களுமைம்‌ புலனவித்த தவரும்‌ நித்தர்‌ முத்தர்கள்கின்‌
னரர்கந்‌ தருவர்‌ சத்தர்முதல்‌
எவரும்‌ புடையி.ற்‌ சயசயவென்‌
றஹேத்துித்‌ தொழுது வணங்கவும்‌. 144

அண்டத்‌ துறுதுந்‌ துமியினங்க
ளலைமாக்‌ கடல்போல்‌ அதிர்ந்தொலிக்க
கண்டொத்‌ இடுஞ்சொல்‌ லரம்பையர்க
. ஸணடனம்‌ புரியக்‌ கைப்பிரம்பாற்‌
றெண்டித்‌ தெதிரிற்‌ சேனையர்கோன்‌
விலக்கத்‌ திருந்து முலகமெலாம்‌
உண்டிட்‌ டுமிழ்ந்த திருமாலா
மொருவன்‌ விளங்கல்‌ தனைக்கண்டான்‌. 145

கண்டான்‌ பின்னும்‌ புவியின்‌ மிசை
விழுந்தான்‌ எழுந்தான்‌ கரந்தலைமேற்‌
கொண்டான்‌ நந்தா தோடினன்பின்‌
குதித்தான்‌ நடித்தான்‌ களிநறவ
முண்டான்‌ போலச்‌ செயல்களொன்று
முணரான்‌ — யொருமுறையே
வண்டார்‌ துளவன்‌ நிருமேனி
மகிழ்ந்து நோக்கா வகுத்துரைப்பான்‌. 146

வேறு
உன்னைநீ யுணர்கிலா யுனது மாயைகள்‌
துன்னையா னறிந்திடுஞ்‌ தகைய தாகுமோ?
வன்னையா யத்தனா யகில முந்தரும்‌
பொன்னைமார்‌ பகத்தணி புனித மூர்த்தியே |. 147

காலநேர்‌ கனகனை கடிந்த வன்றரும்‌
பாலனைப்‌ பரித்தருள்‌ பரம சோதியே |
மூலமென்‌ றழைத்திடுங்‌ கரிதன்‌ முன்பினோர்‌
நீலமால்‌ வரையென நின்ற மூர்த்தியே. 148

ஆலமுண்‌ டவற்கருந்‌ துயர கற்றியே
சூலமு மளித்தருள்‌ சுருதி நாதனே / நீலவாண்‌ கண்ணழற்‌ பிறந்த நேரிழை
யோலமிட்‌ டரற்றிட வுடைவ ழங்கனோய்‌, 149

அராவணை துயிறுறந்‌ தமரர்க்‌ காகவே
மராமர மனையதோள்‌ வலியி ராவணன்‌
விராதகனே முதலினோர்‌ தமைவி எளித்திட
இராமனென்‌ நயோத்தியி னெய்து மையனே. 150

அடியனை யொருபொரு ளாக வெண்ணியே
கொடியிடை முூளரிவாழ்‌ கோதை யோடுமிப்‌
பொடியுடைக்‌ கானம்நீ புகுத வாளொடும்‌
தடியொடும்‌ வழியிடை தடுத்திட்‌ டேனரோ. 151

பதைபதைத்‌ திடவுயிர்‌ பாரித்‌ திட்டவிக்‌
கதையினா லடிக்க வுங்‌ கருதி வாட்கொடு
வகைசெய நினைந்தனன்‌ வலிய பாவியேன்‌
இதைவிடப்‌ பிறிதின்ன மென்செய்‌ இன்றதே. 152

உனதுநற்‌ பணியெலாம்‌ பறித்திவ்‌ வுத்தமி
தனதுயர்‌ பணிகள்கொண் டாழி தன்விரல்‌
எனதுபுன்‌ வாயினாற்‌ கவ்வி யீர்த்திட
மனதுகொண் டிழைத்தனன்‌ மற்றென்‌ செய்வதே. 153

நல்லிய லல்லபுன்‌ மொழிக ணாவினாற்‌
“சொல்லியும்‌ பலகொடுந்‌ தொழிலி யற்றுமிப்‌
புல்லிய னுய்வினிற்‌ பொருந்தப்‌ புன்றலை
கல்லிடை மோதியான்‌ கழித்தல்‌ நன்றரோ. 154

என்றுகொண் டினையன பன்னி யேடவிழ்‌
மன்றவிழ்‌ துளவணி . மாலை மார்பினான்‌
றன்றிரு முன்னரில்‌ கலியன்‌ றானுமே
கன்றிய மனதொடு முருகும்‌ காலையில்‌. 155

அம்மொழி பலவுங்கேட்‌ டருளி னாழியான்‌
விம்முறு கலியனை விருப்பி நோக்கித்தன்‌
செம்மைசேர்‌ பவளவாய்‌ நகை சிறந்திட
இம்மொழி தனையெடுத்‌ தியம்பு வானரோ. 156

யாமே மயக்கினோம்‌
உன்னைநீ வெறுத்திடே லுனது நல்லுளந்‌
குன்னையாம்‌ மயக்கவித்‌ தகைமை செய்துளோம்‌
முன்னைய துவக்கெலா முடிந்து நீங்கின
வென்னைகொ லின்னமும்‌ மிரங்க லய்யனே. 157

அன்றியுஞ்‌ செய்விளை யாட்டு மின்சொலும்‌
தன்றிரு மகன்செயத்‌ தந்‌ைத கொள்வபோல்‌
இன்றுள மகிழ்ந்தனன்‌ நீயி ழைத்ததற்‌ ப கொன்றுநீ யஞ்ச டே லுளங்கொள்்‌ வாயரோ. 158

இன்னமும்‌ புகல்வதொன்‌ றுளது யாதெனில்‌
அன்னது கேட்டியா லாழி சேர்விரல்‌
குன்னை நீ கவ்விடைத்‌ தமிழின்‌ வாசனை
யுன்னணி வாயில்வந்‌ துற்ற தாதலால்‌. 159

இமிழ்திரைக்‌ கடற்புவி இடைவந்‌ துற்றுளோர்‌
அமிழ்தெனப்‌ பருகிவீ டணையு மாறதாய்‌
யுமிழ்மணங்‌ கமழிசை யுற்றி டுஞ்செழுந்‌ தமிழ்கொடு கவிதைகள்‌ பலவும்‌ சாற்றியே. 160

இரங்குமா கடலென விரைத்தி ரைத்துத்தன்‌ ்‌
கரங்களால்‌ வருடல்போற்‌ கவினு முத்துறும்‌
தரங்கமார்‌ காவிரித்‌ தார ணிந்துள
வரங்கமா நகரினை யணுகி யாங்கதில்‌. 161

ாற்கடலைப்‌ போலத்‌ திருவடிகளை
வருடும்‌ திரைகளைக்‌ கொண்டுள்ள திருக்கர்விரியை மாலையாகக்‌ கொண்டுள்ள
திருவரங்கம்‌. “பொன்னி திரைக்கையால்‌ அடிவருடப்‌ பள்ளி கொள்ளும்‌ கருமணி” *
என்பர்‌ குலசேகரர்‌,

இருப்பணி வேலைகள்‌ செய்து முற்றியே
விருப்பொடுங்‌ காதலி யோடு மேவிப்பின்‌
னிருப்பதாம்‌ வைகுந்த மென்னு நற்பதப்‌
பொருப்புறழ்‌ தோளினாய்‌ பொருந்து கென்றனன்‌. 162

என்று பற்பல மொழி யியம்பி யாவரும்‌
மொன்றியே திரண்டிரு மருங்கு முற்றிடக்‌
கன்றைவிட்‌ டகன்றிடுங்‌ கறவை போலவே. தன்றிரு வுலகிடைச்‌ சார்ந்திட்‌ டானரோ. 163

மாயவன்‌ றிருவொடும்‌ மறைந்து நீங்கலும்‌
ஆயவன்‌ நிருவடி யதனை யுன்னியே
துரயவ னாம்பர காலன்‌ துன்புறாத்‌
தாயகண்‌ நிடுங்குழந்‌ தையினி ரங்கினான்‌. “164

பிறிவாற்றாமை
ஐயனே! யமலனே ! அடியருக்‌ கெலாம்‌
மெய்யனே [ சுருதியின்‌ முடிவி ளங்வடுந்‌
துய்யனே ! சிவன்முத லோர்க்குந்‌ தோன்றுறாப்‌
பொய்யனே ! யென்னவும்‌ புலம்பி னானரோ. 165

செந்திருப்‌ பொலிந்திடச்‌ வன யன்றனோ
டிந்திரன்‌ முதலினோர்‌ ஏற்றிப்‌’ போற்றிட
வந்தரத்‌ தடைவரு மமல! யானினி :
எந்தநாள்‌ காண்பதென்‌ றேங்கி னானரோ. 166

ஏங்கின னொருமுறை தெளிவு மெய்தியே
ஆங்குவிட்‌ டணிநக ரதில டைந்துதன்‌
இங்கரும்‌ பனையசொற்‌ றேவி தன்னொடும்‌
பாங்குற வாலியான்‌ பதம்வ ணங்கியே. ட. -167

ஆரண மறிந்திடற்‌ கரிய சோதியாம்‌
நாரணன்‌ புவித்திருப்‌. பதியி. னல்லுருப்‌ பூரண மாகவே :பொருந்தி வைகுறும்‌ .
காரணந்‌ தனையுளே கருதி னானரோ. 168

ஆழ்வார்‌ அர்ச்சையின்‌ சறப்பை உணர்ந்தார்‌. சோதி வடிவமான
திருமால்‌ அற்பப்‌ பூமியில்‌ திவ்யமங்கள விக்ரகத்துடன்‌ இருப்பதன்‌ காரணத்தை
உள்ளத்தில்‌ இந்தித்தார்‌.

அன்னமால்‌ மருவிடு மலைகொள்‌ பாற்கடற்‌
றன்னையும்‌ . பரமவை குந்தம்‌ தானெனப்‌
பன்னுமிவ்‌ விருநகர்‌ தவிரப்‌ பார்மிசை
மன்னுனூற்‌ றாறெனும்‌ பதிவ ணங்குவான்‌. 169

அமுதமொத்‌ தினியசொல்‌ லிரதியோ வெனும்‌
குமுதவல்‌ லிப்பெயர்க்‌ கோதை தன்னொடும்‌
கமலமொத்‌ திடுமுகம்‌ கவின வாலியாம்‌
அமலநற்‌ பதிதொழு ததைவிட்‌ டேகினான்‌. 170

ஆழ்வாரின்‌ திவ்யதேச யாத்திரை
அத்தியூர்‌ புட்குமி யரங்கம்‌ வேங்கடம்‌
வித்துவக்‌ கோட்டிபோர்‌ பேரை விண்ணகர்‌
பத்தவி லோசனங்‌ குடந்தை பாடகஞ்‌
சித்ரகூ டம்முத லாகச்‌ செப்பிடும்‌. 171

நூறுட னாறென நுவறி ருப்பதி
வீறுமங்‌ களங்கொள்விக்‌ கறக மாகிய
துளவணி நார ணன்பத
மூறுமன்‌ புடன்பணிந்‌ துருகி னானரோ. 172

உரியனாய்ப்‌ பற்பல உயிரு ணன்றுறை
கரியமால்‌ பெருமையைக்‌ கண்ண கன்றிடும்‌
லுலகெலாம்‌ விளங்கு மாறதாய்‌
அரியசெந்‌ தமிழினா லறைத லுன்னியே. 172

பெருந்திரு மொழியொடும்‌ பெருமை சேர்மடல்‌
இருந்திரண்‌ டொடுமெழு கூற்றி ருக்கையும்‌
பொருந்திருத்‌ தாண்டக மிரண்டும்‌ பொய்யிலிங்‌ கரும்பொரு ளாறையும்‌ மறைந்து பின்னரின்‌. 174

கருவரங்‌ கந்தனை யொழிக்குங்‌ கார்முகில்‌
பெருவரங்‌ காதலித்‌ தவர்பெ றும்படி
இருவரங்‌ கந்தனி லிருப்பப்‌ பள்ளிகொள்
இருவரங்‌ கந்தனைச்‌ சேர்ந்திட்‌ டானரோ. | 175

அத்தலத்‌ தற்புத மனைத்துங்‌ காண்குறா வெத்தலங்‌ களுமொவ்வா இதற்கென்‌ றெண்ணியே
சித்திர மிழைத்த்கோ புர்த்துட்‌ செம்மைசேர்‌-
கைத்தலந்‌ தலைமிசை கவினச்‌ சென்றனன்‌. 176

அந்தர மிசையடைந்‌ தலர்க டூவியே
சந்திர மவுலியான்‌ றாம ரையுளான்‌
இந்திரன்‌ முதலினோ ரெட்டெ ,ழுத்தெனும்‌
மந்திர மோதியே வணங்கி வாழ்த்திட. 777

பன்னக வணைமிசைப்‌ பள்ளி கொண்டிடும்‌
அன்னமா மலரடி யதனைப்‌ பூந்திரு
முன்னிலை யாய்முடி யுறவ ணங்கியே
கதுன்னர மனையிடை சார்ந்து வைடனான்‌. 178

அந்தநாள்‌ நாரண னறைந்தி டும்பணி
யெந்தவா நிழைத்திட லாகு மென்னவோர்‌
குந்திரம தற்செயல்‌ தகுதி யாமெனச்‌
சிந்தையி னொருமுறை தெளிவு கொண்டனன்‌. 179

ஆழ்வார்‌ திருப்பணி
புத்தர்தம்‌ பொருள்புவி புதைத்தி டும்பொருள்‌.
பத்தர்தம்‌ பொருள்‌அரன்‌ பட்டு ளோர்பொருண்‌
மித்திரர்‌ பொருண்முடி வேந்தர்‌ தம்பொருள்‌
இத்தகை யாகிய பொருளு மின்னமும்‌. 180

ஊளமர்தம்‌ பொருள்முட முற்று ளோர்பொருள்‌
வாமியர்‌ தம்பொருள்‌ வல்ல : டிப்பொருள்‌
ஆமிதென்‌ றவைகள்கொண் ட்ீணுகு வீரென
நேமியா வருவர்பின்‌ ஒதுங்கு நீர்மையான்‌. 181

நீர்மிசை நடப்பவ னிழலொ துங்குவோன்‌
தோர்விலா வழக்கின னுயரத்‌ தொங்குவான்‌
தேரினா னாதுவோ நேர்ந்து தந்திரம்‌
சோர்வுறப்‌ பலபொருள்‌ தொகுத்திட்‌ டாரரோ. 182

விற்பொலி யட்டகோ புரங்கள்‌ வேறிரண்‌
டுற்றிடு மதின்மடைப்‌’ பள்ளி யோங்்‌இடும்‌
நெற்களஞ்‌ கஇயமழுநெற்‌ குத்து மண்டபம்‌
பற்பல வாந்திருப்‌ பணிகள்‌ செய்தனன்‌. 183

புத்தர்க ளருகர்கள்‌ பொருந்து ‘றுஞ்சிவ
பத்தர்கள்‌ மாயவா தியர்கள்‌ பற்பல
இத்தகை யாம்பர சமயத்தி யாவரும்‌ யெத்தகை வாதின்வந்‌ தெவரி யம்பினும்‌. 184

அவ்வவைக்‌ கெதிருறை வேத மாதிகொண்
டிவ்வித மாமென வெடுத்தெ டுத்துரைத்‌
தொவ்வுற வாதுவென்‌ றவரு ரைத்திடும்‌ .
செவ்விநேர்‌ நாமங்கள்‌ பல? றந்தனன்‌.–185-

இந்தநன்‌ முறையினால்‌ எவரு மேத்திடச்‌
செந்திரு வனையசர்‌ தேவி தன்னொடும்‌
மந்திர மனையதோண்‌ மங்கை வேந்தனும்‌
அந்தமா நகரிடை யமரும்‌ நாடனின்‌.–186-

ஒருபக லரங்கர்பா லடைந்து வப்பொடும்‌
இருவனந்‌ தன்மிசை துயிலும்‌ செவ்வியோய்‌ }
இருவினை யொழிந்துள தெனக்கு நற்பதந்‌
தருதியென்‌ றநிருபதம்‌ தாழ்ந்து நின்றனன்‌.–187

ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தது
நின்றவக்‌ கலியனை நீல மால்வரை
யொன்‌ நிய வுருவினா னுவந்து நோக்கியே
நன்றது புரிகுதும்‌ நமக்கோ ரில்லதாம்‌
“தென்றிருக்‌ குறுங்குடி சேர்தி யென்றனன்‌.–188

என்னவாட்‌ கலியனும்‌ மினிய வானந்தம்‌
துன்னிட. வவன்பதந்‌ தொழுது .போற்றிசெய்‌
தன்ன ந.ந்‌ .குறுங்குடிக்‌ கணுக லுன்னியே
பொன்னிவர்‌ தண்டிகை பொலிய மேவினான்‌–189.

சுற்றினு மடியர்தங்‌ குழாந்து வன்றிடக்‌
கொழற்றமெய்‌ இடும்பர சமய கோளரி
யுற்றன னெனத்திருச்‌ சன்ன மூதிடப்‌ ,
பொற்றிரு வரங்கம்‌ விட்டரிதஇற்‌ போயினான்‌.–190

ஆலைசா ஐறடும்புகை புயலென்‌ றண்மியே
காலைமா மயிலினங்‌ களிந டஞ்செயும்‌
சோலைமா மலையினைத்‌ துன்னி யேவன
மாலைமார்‌ பழகரை வணங்கி யேகினான்‌. 191

வெதிரினா லொழுகுதேன்‌ மேவிப்‌ பாய்தலில்‌
கதிருடை செந்நெல்வான்‌ கவின்கொாண்‌ டோங்கிடும்‌
மதுரையிற்‌ கூடலின்‌ அழகர்‌ வண்பதம்‌
சதிருடன்‌ முடியுறத்‌ தாழ்ந்து போற்றினான்‌. 192

வில்லிபுத்‌ தூாரினை யணுகி மேல்வரும்‌
மல்லரைக்‌ குமைவட பத்திர சாயிதாள்‌
அல்லியின்‌ வணங்கிப்‌ பல்லாண்‌ டெனுந்தமிழ்‌
சொல்லிய பெரியரைத்‌ தொழுது போயினான்‌. 193

குருமணி யினம்பல கொழித்தி ரைத்தலை
இருபுற மொதுக்கும்வே றிணையி லாதசர்ப்‌
பொருளையின்‌ வடகரை பொலியப்‌ பெற்றிடை
மருவுவை குந்தநா தரைவ ணங்கினான்‌. 194.

வைத்தமா நிதிக்குழைக்‌ காதர்‌ வண்டினம்‌
மொய்த்ததா மரைக்கணர்‌ மாயக்‌ கூத்தர்முன்‌
பெய்த்தவெம்‌ மிடர்கடி வாறெண்‌ ணார்தமைக்‌
கைத்தொழி காசினி வேந்தைக்‌ காண்குநா. 195

அவ்வவ ரிணைத்திரு வடியம்‌ போருகம்‌
ஓவ்வுறத்‌ தன்முடி தனைக்கொண் டொற்றியே
யெவ்வமற்‌ றுளமகழ்‌ வெய்இப்‌ போற்றியச்‌
செவ்விய நகரினைத்‌ தீர்ந்திட்‌ டேகினான்‌. 196

முருகவிழ்‌ முளரிமுத்‌ இளநி லாவினால்‌
அருகுறு குழமுதம்விண்‌ டலரு மாவயல்‌
குருகையா திப்பிரான்‌ குலவு தண்முடி
மருவுற வணங்கியே வாழ்த்தி யேனான்‌. 197

கூனிலாம்‌ பிறைமணிக்‌ கோயின்‌ மேற்றவழ்‌
வானமா மலைதனை யணுகி வண்டுணுந்
தேனமர்‌ துளவதோக்‌ தாத்ரி நாதர்செம்‌
பூனிகர்‌ பதந்தொழு தேத்துப்‌ போயினான்‌. 198

தறுங்குழன்‌ மடந்தையர்‌ நடைந டந்திடுத்‌ தொறுங்களி சிறந்திடத்‌ துடர்வ தற்கவா
வுறுங்குலப்‌ பெடையன முறையு மாவயல்‌
குறுங்குடித்‌ திருநகர்‌ குறுகி னானரோ.  199

அத்தலத்‌ தருச்சகர்‌ முதல யாவருங்
கொத்துடன்‌ ம௫ழ்த்துவந்‌ தெதிர்கொண்‌
முத்தெறி பாற்கடன்‌ முழுகிப்‌ பன்னிரண்‌
டொத்திடு தஇிருமண்காப்‌ புவந்து சாற்றியே. 200

இரண்டெனும்‌ துயந்தனை துதிசெய்‌ இயாவரும்‌
இரண்டிரு மருங்குறச்‌ சேர்ந்து கோயிலுள்‌
-கரண்டமா டிடும்பொய்கைக்‌ கரும்ப னைக்களனி
-மிரண்டிள வாளைபாய்ந்‌ தெழும்ப வீழ்வதை,. 201

“அரண்ட மாடு பொய்கையுள்‌ கரும்பனைப்‌ பெரும்‌ பழம்‌
புரண்டுவீழ, வாளைபாய்‌ குறுங்குடி நெடுந்தகாய்‌’” என்ற தஇிருமழிசைப்‌ பிரான்‌
பாடலின்‌ சாரமாகும்‌.

இருகணு மழைக்கண்‌ டிருந்த மானம்பி
இருமலை நம்பிபாற்‌ கடலி னம்பிசர்‌
பெருகதநின்‌ றருணம்பி கிடந்த நம்பிப்பேர்‌
மருவுமை வர்கண்மல ரடிவ ணங்கினான்‌. 202

அழூய நம்பிபொன்‌ னடியிற்‌ கண்ணநீர்‌
ஒழுகுறும்‌ படியணிந்‌ துகந்தெ ழுந்துகைத்‌ தொழுதடி யேற்கரு டூய வீடெனா
இழுதென வுருகிநின்‌ றேத்து மெல்லையில்‌. — 203

அளித்தனம்‌ முத்திவீ டணைதி யென்றுதேன்‌
துளித்திடும்‌ துளவமா லுரைப்பத்‌ தூவுளம்‌
களித்துயர்‌ விமானமேற்‌ கவின்கொண் டோங்கியே
குளித்தனன்‌ விரசயிற்‌ குலவு நீரிடை. 204.

படிகந்ன்‌ மேனியாய்ப்‌ பரம வான்பதி
நெடியசெம்‌ பொன்மணி நிரப்பு மண்டபத்‌
தடியவர்‌ குழுவொடு மணுகி வாழ்ந்தனன்‌
வடியுடை வாட்கர மங்கை மன்னனே. 205

மறுவிலான்‌ பிரபந்தம்‌ வகுத்த வாறினுள்‌
ona யாயிரத்‌ தொடுமுந்‌ நூறுடன்‌
அறுபது மொன்றதா மதனுட்‌ செங்கண்மால்‌
பெறுபதி யெண்பதோ .டிரண்டும்‌ பேசுவாம்‌.–206-

ஆழ்வார்‌ பாடிய பாசுரத்தொகை 1961, மங்களாசாசனம்‌, செய்த
இவ்ய தேசங்கள்‌ .88,

வேறு
சீரங்கம்‌ வேங்கடம்‌ மாதனூர்தஞ்சை
சேறை வெஃகா: நின்றவூர்‌
காரகம்‌ நந்திபுர விண்ணகர்நைமிசார்‌.
ணியம்‌ விண்ணகர்‌ கணபுரம்‌ :
நீரகந்‌ தேவனார்‌ தொகையயிந்‌ திரபுரம்‌
நிலாத்துங்க டுண்ட நறையூர்‌
ஊரகம்‌ புல்லாணி இத்திரகூ டமெவ்வ
ளூர்வதரியாச்‌ ரமே. : 207

அரிமேய விண்ணகரம்‌ நாகையட்‌ டப்புய
மலிக்கேணி யாலிமோகூர்‌
பிரிதிவெள்‌ ளறைகுறுங்‌ குடிதெற்றி யம்பலம்‌
போர்தலைச்‌ சங்க மெய்யம்‌
புருடோத்த மங்கவளம்‌ பாடிகூ டறிருப்‌
புட்குழி கண்ண மங்கை
பரமேச்‌ சுரவிண்‌ ணகர நீர்மலை
வேளுக்கை பாடகம்‌ மூழிக்களம்‌. 208

கடன்‌. மலைக்‌ காழிசீ ராமலிண்‌ ணகரம்வை
குந்த விண்ணகர்‌ கண்டியூர்‌
இடவெந்தை செம்பொன்செய்‌ கோயில்‌ பார்த்தன்‌
பள்ளி. இந்தளூர்‌ கண்ணங்குடி
குடந்தைவெள்‌ ளக்குளம்‌ அழுந்தூர்‌ கரம்பனூர்‌
கோவ லிடைகழி கூடலூர்‌
கடிகை நாங்கூ ரின்மணி மாடகோ .விற்சிங்க வேள்குன்று கார்வானமே. ~ 209

வேறு
இருக்கச்சியில்‌ சர்ப்பபள வண்ணம்‌
இருப்பாற்கடல்‌ சீராய்ப்பாடி
இருப்பேரகஞ்‌ Fran. wagons
இருநாவாய்‌ சீர்புலியூரே. 210

வேறு
புள்ளம்‌ பூதங்‌ குடித்தண்‌ காசிறு புலியூர்‌ சோலை
வெள்ளி யங்குடி கோட்டியூர்‌ விளங்கு சாளக்‌ கிராமங்‌
களவனூர்‌ வல்ல வாழ்தங்‌ கால்மணிக்‌ கூட மாகுந்‌
தெள்ளுசீர்க்‌ கமலை மார்பன்‌ செழுத்திரு பதிகண்‌ மாதேர்‌. 211

அன்னசெந்‌ தமிழைப்‌ பார்மேல்‌ அநேகர்கற்‌ றுணர்ந்து தம்முன்‌
றுன்னுமஞ்‌ ஞான நீங்கித்‌ தூயநல்‌ லறிவுண்‌ டாகி
மின்ணுசக்‌ கரஞ்சேர்‌ செங்கை விண்டுவாழ்‌ திருவை குந்தந்‌
தண்ணிடை களிப்பினோடுஞ்‌ சார்ந்துவீற்‌ றிருந்தா ரன்றே. 212

பயன்‌
இந்தமாக்‌ கதையை யன்போ
டெழுதினோர்‌ பரிவிற்‌ கற்றோர்‌
சிந்தையுள்‌ ளூருகக்‌ கேட்டோர்‌
செப்பினோர்‌ யாவ ரேனும்‌
முத்துக்‌ வினைக ணீங்கி
முளரிமா : மலர்மேல்‌ வாழுஞ்‌
செந்திரு வருளுண்‌ டாகிச்‌
சீர்பதம்‌ பெறுகு வாரே. 213

திருமங்கையாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

————

திருமழிசையாழ்வார்‌ வரலாறு பேசுவோம்‌
மங்கையார்‌ குறைய லூரில்‌ வந்தவ தாரஞ்‌ செய்திட்‌
டங்கண்மா ஞால மேத்த வருந்தமிழ்க்‌ கவிகள்‌ செய்தே
செங்கண்மால்‌ பதவிதன்னுட்‌ சேர்ந்தமை யுரைக்தோ மிப்பால்‌
நங்கள்்‌€ர்‌ மழிசை யான்றன்‌ சரிதமு நவில்வா மன்றே. 214

வெண்பா
தையில்‌ மகமின்று தாரணியி லேற்றமிந்த
தையில்‌ மகத்துக்குச்‌ சாற்றுன்றேன்‌ – றுய்யமதி
பெற்ற மழிசைப்‌ பிரான்‌ பிறந்த நாளென்று
நற்றவர்கள்‌ கொண்டாடு நாள்‌.
(உபதேச ரத்தினமாலை: 18.)

திருவிருத்தம்‌
இன்னவா றாகப்‌ பன்னா ளேகவைம்‌ புலன்வென்‌ றோராய்‌
மன்னியே கானந்‌ தன்னில்‌ வளம்பெறு வரையின்‌ சார்பில்‌
பன்னருந்‌ தவங்கள்‌ செய்யும்‌ பாற்கவன்‌ முதலா னோர்கள்‌
உன்னின ரொருநா ஞள்ளத்‌ தொருமுறை யாக மன்னோ. 1

மும்மையா முலகோ டீசன்‌
முளரியன்‌ முதலா: னோர்கள்‌
தும்மையுள்‌ ளடக்கி யாலந்‌
குழவி யாகிச்‌ செம்மைசேர்‌. கரத்தாற்‌ பார்மின்‌
இிருவொடும்‌ வருடத்‌ தங்கும்‌
நம்மையாண்‌ டருளுஞ்‌ சோதி
நாரணன்‌ அமல நாதன்‌. ” 2

இப்புவி தனிலும்‌ வந்துற்‌ றெழில்பெறப்‌ பலவென்‌ ஹோதும்‌
ஒப்புவே றிலாத தாகும்‌
பதிகளி னுறைந்து வாழ்வான்‌
அப்பெருந்‌ தலங்கட்‌ குள்ளாய்‌
அகன்றிடா தோரூர்‌ தன்னில்‌
செப்புமம்‌ மாலெப்‌ போதுஞ்‌
சேர்ந்துறைந்‌ இருப்பா னன்றோ. 3

அனையவாந்‌ தலம்யா தென்றா
ராய்ந்திட வேண்டு மென்னும்‌
நினைவுகொண்‌் டறிவிப்‌ பார்கள்‌ .:
்‌ ணீனிலத்‌ திலையென்‌ றோர்ந்தும்‌ ‘
மனையென மலரின்‌ வாழும்‌:
மறையவ னுலகந்‌ தன்னை
வினையற. நோற்று நின்ற
மேலவ ரடைந்தா ரன்றே. ்‌ 4

சென்றடைந்‌ தவர்க எந்தத்‌
இசைமுகன்‌ செழும்பொற்‌ பாதம்‌
. ஒன்றிட முடிகள்‌ சேர்த்தித்‌ ்‌ தொழுதெழுந்‌ துகப்பின்‌ முன்னர்‌ நின்றிட லோடுஞ்‌ .ஞான
நெறியுளீ ௬மையொப்‌ பார்யார்‌
என்றவர்ப்‌ புகழ்ந்திட்‌ டாசி
யியம்பியாங்‌ இருமி னென்றான்‌. 5

என்றவாங்‌ . டந்த
விருஞ்சிறைத்‌ தாவிச்‌ செங்கால்‌
அன்னமூ ரெண்கண்‌ ஸணான்றன்‌
அம்புய முகத்தை நோக்கா ்‌
முன்னர்நா ணின்னை யுந்தி
முன்னின ஸனீன்று Cares
தன்னைச்சிட்‌ டிக்கு மாறு.
சாற்றியோர்‌ சோதி தானாய்‌. | 6

அஞ்சுபூ தங்கட்‌ குள்ளும்‌ அந்தரி யாமி யாய்நின்று
உஞ்சுமா றவைக :ளெல்லா |
மோங்குறக்‌ காவல்‌ பூண்டுந்‌
துஞ்சுதல்‌ பிறத்த லென்ப
திலாதவச்‌ சுருப னாகி
விஞ்சுவை குந்தத்‌ தும்பார்‌
மிகுபல தலத்தும்‌ வாழ்வோன்‌. 7

மருவுமப்‌ பதிக டன்னில்‌
வளங்களோர்‌ காலந்‌ தன்னுள்‌
ஒருபக லேனும்‌ நன்றா.
. யொருகண மேனுநீங்‌. காமல்‌

இருவொடு மிருந்து வாழ்வா
னென்னவே தெளியு மாறாய்ப்‌
பொருவிலா மறைக டன்னிற்‌
புகன்றுளாய்‌ நீயு மன்றே. 8

அந்தநற்‌ றலமீ தென்ன வறிகிலே மறியு மாறாய்‌
எந்தமக்‌ குரைத்தி யென்ன
வியம்பினன்‌ அயல்நீங்‌ காமல்‌
செந்திரு வுடனே செங்கண்‌
மால்செழு மறையோர்‌ போற்ற
வந்துவாழ்‌
மழிசையென்‌ றுணர்மி னென்றான்‌. 9

அத்திரு நகர்க்கு நேராய்‌
அங்கண்மா ஞாலந்‌ தன்னுள்‌
எத்திரு நகரு மோங்கு மெழில்வளம்‌ புனிதம்‌. தன்னால்‌
ஒத்திடா துணர்மி னென்னா ்‌
வுயர்தவ முனிவோர்‌ தங்கள்‌
சித்தம துவக்கு மாறு ்‌
மீளவும்‌ தெரிவித்‌ தானால்‌. 10

கேட்டவம்‌ முனிவோர்‌ மீட்டக்‌
இளர்வளம்‌ பெறுந்த லத்தின்‌
மாட்டுள மேன்மை யாங்கள்‌
மனந்தெளி வுறுமா நாகக்‌
காட்டிட வேண்டு மென்னக்‌
கருஞ்சிறை யறுகால்‌ பொம்மென்‌
பாட்டுவண்‌ டிமிரும்‌ பங்கேருகத்தயன்‌ பரிவி னோடும்‌. –11

ஆங்கவர்‌ தம்மோ டண்மி
யத்திரு நகரின்‌ மேன்மை
– பாங்குற வுணர்த்த லுன்னிப்‌
பணிகள்‌ புற்றடைவ தாக
ஓங்கிவா னுயருங்‌ காவி
லுறுஞ்சிறைக்‌ கருட னேபோல்‌
மாங்குயிற்‌ றொகுதஇு கூவும்‌
மழிசைவந்‌ தடைந்தா னன்றே. . 12

வந்ததொரு துலைகோல்‌ தன்னை
மனத்தினா னிருமித்‌ தன்னோன்‌
முந்தொரு தட்டி லேசர்‌
மழிசையை முயல வைத்திட்(டு)
இந்தபே ௬லகை மற்றோர்‌
தட்டினிட்‌ டெடுத்துக்‌ காட்ட
அந்தமார்‌ மழிசைத்‌ தட்டு
மழுந்திக்கீ மிருந்த தாலோ. 13

உலகுறு தட்டு மேலிட்‌
டோங்குற வதனைக்‌ காணா
இலகுமிம்‌ மழிசைக்‌ கொப்பா
யில்லையிப்‌ புவியின்‌ வேறென்‌(று)
அலகின்மா தவர்கள்‌ யாரு
மற்புத மடைந்தா ராகி
மலரவ னம்பொற்‌ றாளின்‌
வணங்கிவாழ்த்‌ தினர்கள்‌ மாதோ. 14

இம்முறை தெளிவித்‌ தந்த விருந்தவர்க்‌ காசி நல்கிப்‌
பொம்மென வறுகாற்‌ பாடும்‌
மலரயன்‌ போய பின்னர்‌
கொம்மைமா முலைப்பூ மாதின்‌
கொழுநனைக்‌ குறித்திட்‌ டாங்குச்‌
செம்மைசேர்‌ யாகம்‌ செய்வான்‌
பார்தனைக்‌ &ண்டிட்‌ டானால்‌, 15

வேண்டுவ கலப்பை கொள்ளா
விதிமுறை துடங்கி யுள்ளம்‌
தூண்டுள முவகை துள்ளித்‌
துள்ளிமீ தெழுந்த தென்ன
மூண்டெழு கனற்க ணானெய்‌
முதலிய சொரிந்து முற்றும்‌ ஆண்டதொன்‌ றதனில்‌ நந்தும்‌
அருமகம்‌ முடித்தான்‌ அன்றே. 16

மகமது முடித்த லோடும்‌
வைகுந்த வாசு தேவன்‌
-அகமகிழ்த்‌ தரவிந்‌ ‘தம்வாழ்‌
பவளுட னணுகித்‌ தோன்றிச்‌
செகமதி னின்போல்‌ யாகம்‌ ்‌
செய்துளோ ரிலையென்‌ தேத்தித்‌
தருதும்‌ வேண்டும்‌
வரந்தனைச்‌ சாற்று கென்றான்‌. 17

என்னலு மூவகை யுள்ளத்‌
தெழுந்துமீ தோங்க வென்கண்‌
– மூன்னரென்‌ னன்னை யான மூளரிமா ‘ தோடு நீவந்‌ துன்னிடத்‌- தெரிசத்‌ தேற்குத்‌. தூயன விஃத லான்மற்று :
இன்னமும்‌ வேண்ட லென்னென்‌(று)
இருந்தவ னியம்பி னானால்‌. 18

கேட்டவத்‌ இருமால்‌ – பின்னும்‌
இளர்த்துவா னினிது ளத்தின்‌ .
மாட்டுள துணர்கு வோமால்‌, ஆயினு மகத்திற்‌ கெய்தி. நாட்டுமொன்‌ றேனு நல்கா ©
தேகல்நல்‌ லறம தாமோ?
சேட்டிளம்‌ பருதி போலோர்‌.
சிறுவனை யளித்தோ மென்றான்‌. 19

ஆழ்வார்‌ அவதாரம்‌
அவ்வர மளித்துச்‌ செங்கேழ்‌
அணிமலர்‌ மாதி னோடும்‌
செவ்விசேர்‌ இருவை குந்தஞ்‌
சிறப்புற வடைந்தான்‌ ; மேனாள்‌
வெவ்விய விடங்கர்‌ கானின்‌
விரைமல ரோடை தன்னுள்‌
கவ்விடத்‌ தளர்ந்து கூவும்‌
கரியருந்‌ துயரந்‌ ர்த்3தோன்‌, டட 20

ஆங்கவ ஸிவ்வா றாக
அகன்றபின்‌ தைமா தத்தில்‌
பாங்குறும்‌ மகநாள்‌ தன்னிற்‌
பார்க்கவ னென்னு நாமத்‌  தீங்கலா முனிவன்‌ றன்பால்‌
செனித்திடு மகவைக்‌ காணில்‌
தேங்குழ லுமையோர்‌ பாகச்‌
சிவனயன்‌ மகிழ்வர்‌ மாதோ. 21

செந்திருப்‌ புதல்வன்‌ றன்போற்‌
றினகர ஸுூருவந்‌ தாங்கி
வந்திரும்‌ புவிமே லுற்ற வாறென வந்து தோன்றும்‌
அந்தநன்‌ மகவைக்‌ காணா
அம்முனி மகவுள்‌ ளோரர்க்குச்‌
இந்தையுட்‌ கடவுட்‌ டியானந்‌ .
இருப்புமென்‌ றுள்ளந்‌ தேர்ந்தான்‌. 22

தேர்ந்தவம்‌ முனிவன்‌ றானுந்‌
சிந்தையுண்‌ மகவி னாசை
இர்ந்துசெங்‌ கரங்கண்‌ மீதச்‌
சிறுகுழ வியைக்கொண்‌் டவ்வூர்‌
பேர்ந்துபோ மளவி னாங்கோர்‌
பிரம்புறு புதரின்‌ &ழாய்ச்‌
சேர்ந்ததை வளர்த்தி னானோர்‌
சிறியவத்‌ தரத்தின்‌ மீதே. 23

இத்ததற்‌ குழவி தன்னைப்‌
புரந்தரல்‌ இதனை நம்பால்‌
தந்தவர்‌ கடனென்‌ நுன்னித்‌
தவஞ்செயும்‌ சாரல்‌ தன்னில்‌ அந்தமா முனிவன்‌ சார்ந்த
துறிந்துல கன்னை யான
செந்திரு வன்புற்‌ றாங்குச்‌ சேர்ந்தழுஞ்‌ செய்கை நோக்கா; 24

திருமகளின்‌ திருவருள்‌ .
மனதினுள்‌ இரக்கம்‌ கொண்டோர்‌
மதுரிக்கும்‌ தேனி றாலாய்‌
தனதுமா முலைப்பால்‌ தன்னைச்‌
சமைத்துமே லிருத்தி வைத்திட்‌(டு)
அனையதப்‌ பாலன்‌ வாய்விண்‌(டு)
அழுதுண வதனை யுன்னி
நினைதொறுந்‌ துளிக்கு மாறாய்‌
நியமித்திட்‌ டேகி னாளால்‌. 25

திருமகள்‌ தனது-பாலைத்‌ தேனிறாலாய்‌ மாற்றி ௮க்‌ குழவியின்‌ வாயில்‌ தேன்‌
துளி படும்படி நியமித்துவிட்டுப்‌ போய்விட்டாள்‌. மதுரிக்கும்‌ – இனிக்கின்ற.
சமைத்து – அமைத்து. வாய்விண்டு – வாய்திறந்து. நினைதொறும்‌ – நினைக்கும்‌
போதெல்லாம்‌. (அரிசமய தீபம்‌ திருமகளே பால்‌ வழங்கியதாகவும்‌, திருமகள்‌
தனது பால்‌ குழவியின்‌ பெருவிரலில்‌ உண்டாகும்படி செய்துவிட்டுப்‌ போனதாக
வும்‌ கூறியுள்ளது.)

உழுவைகாத்‌ தளிப்பக்‌ .காவிக்‌ —_
கதிரிள வெயிலு றாமல்‌
நிழலுறப்‌ பணம்வி ரித்தே ட
நீளர வுறைய மீதாய்‌
ஓழுகுதேன்‌ றுளிவாய்‌ வீழ்வ
துண்டுண்டு மகிழ்வி னோடப்‌
பழுதில்சேப்‌ வளரு மன்னாள்‌
உற்றது பகர லுற்றாம்‌. 26 -வெய்யில்‌ படாதபடி பாம்பு விரித்தது.

திருவாளன்‌ ஆழ்வாரை வளர்த்தது
அத்திரு மழிசையென்‌ றறையு மாநகர்‌
ஓத்துவாழ்‌ மேதையர்‌ குலத்தி லுற்றிடும்‌ உத்தம னாந்திரு வாள னென்றுளோன்‌
பத்தினி பங்கய வல்லி பண்புளாள்‌. 27

அவ்விரு வோர்களு மனமொன்‌ றநாகியே
வெவ்விய கானிடை விரைவி ஸனெய்தியாங்‌(கு) _
ஒவ்விய பிரம்புகொண் டூரின்‌ மேவியே
செவ்விய கூடைகள்‌ திருந்தக்‌ கட்டுவார்‌. 28

ஆங்கதை விலைசெயற்‌ கமைந்து கொண்டுசென்‌(று)
ஓங்குமம்‌ மாநக ருறுமவ்‌ வீதிவாய்‌
வாங்குவார்‌ தருபொருள்‌ வாங்கி வந்ததில்‌
பாங்குறு வனம்‌ பண்ணு வார்களால்‌. 29

ஆயவ ரம்முறை யணுகு நாளிடை
சேயிலா மையினுளந்‌ தியங்கி யேங்கியே
தூயவ ருளத்தினுஞ்‌ சுருதியுள்‌ ஞம்வாழ்‌ மாயனை மகிழ்வொடு மனத்தி லுன்னியே. 30

ஒருபகற்‌ பிரம்புகொண் டறுத்த லுன்னியத்‌
இருநகர்‌ கடந்துகான்‌ செல்லு மெல்லையில்‌
கருடனும்‌ வலியனுங்‌ கருது றும்மிடம்‌
வருதலும்‌ அகமிக மகிழ்வுற்‌ றேகினார்‌. 31

ஏகவப்‌ புதரின்‌€ ழிளங்கு ழந்தையுஞ்‌
சோகமுற்‌ றழுங்குரல்‌ தொனிசெ விக்கணுற்(று)
ஓகைகொண் டவனிலங்‌ குறுமுன்‌ காத்துறை
நாகமு முழுவையு நழுங்கிப்‌ போயதால்‌. . 32

போயபின்‌ பிவர்களு மருகற்‌ புக்கியச்‌
சேயினை யிருகரஞ்‌ சேர்த்தெ டுத்துமுன்‌
பாயின சகுனமும்‌ அதனுக்‌ கொவ்வுற
மாயவ னருளின னெனம இழ்ந்தனர்‌. 33

அங்குவிட்‌ டூர்புகுந்‌ தகத்துட்‌ சேரலும்‌
பங்கய வல்லியாம்‌ பெயர்ப டைத்துள
செங்கய லனையகட்‌ டிருவ னாட்டரு
கொங்கையுஞ்‌ றந்துபால்‌ சுரப்புக்‌ கொண்டதால்‌, 34

சுரந்துறு மமுதையச்‌ சுதற்க ளித்திட
நிரந்தர முண்டுபன்‌ னேயங்‌ காட்டலால்‌
பரந்த€ ரவர்கண்முன்‌ படைந்த துன்பநோய்கரந்தகன்‌ நிடவுளங்‌ களிப்புற்‌ றாரரோ. , 35

தூயதே வஇிவயின்‌ மதுரை தோன்றியுற்(று)
ஆயர்பா டியினடைந்‌ தசோதை யாள்திருச்‌
சேயென வளர்ந்துபன்‌ னடனஞ்‌ செய்திடும்‌
மாயனென்‌ றியாவரும்‌ மகிழ வைகினான்‌. 36

ஆளனும்‌ பங்கய வல்லி யாளெனும்‌
தாளதா மரைமுகத்‌ தவளும்‌ தாம்பெறுங்‌
காளையிங்‌ கிவனெனக்‌ கருத்து ஞன்னியே
நாளுற வளர்த்தனர்‌ நயப்புற்‌ றென்பவே. 37

மைந்தனு மாங்கவர்‌ மகிழ்வொ டுந்தனைத்‌
தந்திடுந்‌ தந்தையும்‌ தாயு மாமெனச்‌ சிந்தையுள்‌ மஒழ்ச்சியுஞ்‌ சிறப்பு மோங்கெ
இந்தநன்‌ முறையதாய்‌ வளரு மெல்லையில்‌. 38

தங்குல வியற்கையிற்‌ றகுவ யாவையும்‌
அங்கவர்க்‌ கிழைத்துற வவனு மாயையாங்‌
கங்குலை யொழித்திடக்‌ காலை யுற்றெழுஞ்‌ .
செங்கதி ரவனெனச்‌ சறெந்திட்‌ டானரோ. 39

ஆழ்வாரின்‌ யோகம்‌
மறந்துடர்‌ சனமுங்கா மமும்ம னத்திடைத்‌
துறந்துய ரியபரஞ்‌ சுடரைக்‌ காணுமா(று)
அறந்துடர்‌ யோகவப்‌ பியாச மாகவே
சிறந்துற வாண்டெழு நாறு சென்றதால்‌. 40

மறம்‌ துடர்‌ – பாவத்தைப்‌ பின்பற்றிச்‌ செல்கிற. மனத்திடைத்‌ துறந்து –
மனத்திலிருந்து விலக்கி, யோகாப்பியாசத்திலேயே எழுநூறு வருடம்‌ கழித்தது.

இறைவன்‌ காட்சி வழங்கல்‌
அரியதா இயெதன்னந்‌ தாமத்‌ தின்னுடைச்‌
சொருபமத்‌ திருமழி சையினுட்‌ டோன்றிடத்‌
தெரிவுறு ஞானக்கண்‌ திருந்த வேயளித்‌(து) இருசிறைக்‌ கலுழன்மே லிவர்ந்து தோன்‌ நினான்‌. 46

சோமனை முடியணிச்‌ சுடலை யாடியும்‌
நாமகள்‌ கொழுநனு நவிலு மோர்சத
மாமகன்‌ முதலினோர்‌ களும்வ ணங்கிடப்‌
பூமக ளொடுமெதிர்‌ பொலிந்து ளான்றனை; 47

இன்னவாறு உளம் களித்து உருகி ஏத்திடும் விண்ணுற நோக்குவான்‌ மீண்டும்‌ தன்னுடல்‌
மண்ணுற வணங்குவான்‌ வாழ்த்து வான்புகழ்ந்‌(.து)
எண்ணுவ னவன்‌ றிரு வெழிலை யென்பவே. “ 48

இன்னவா றுளங்களித்‌ துருகி யேத்திடும்‌
அன்னவன்‌ கண்படா தகன்று போயினான்‌
பன்னகத்‌ திடைநடம்‌ பயின்றி டைக்குலக்‌
கன்னியர்‌ துயில்கவர்‌ கரிய கோவலன்‌. 49

கோவல ஸனகன்றிடுங்‌ கொள்கை கண்டுளத்‌(து)
ஆவலோடி ரங்கியீன்‌ றளித்த ழித்திடும்‌
மூவராம்‌ வடிவுகொள்‌ முகுந்த னாந்திருத்‌ தேவனே பரமெனத்‌ தெளிவுண்‌ டாகியே; 50

பலசம யங்களிற்‌ படிந்த வற்றிலே
அலகில்நா ளொழித்ததுக்‌ ககம்நெ கழ்ந்துபின்‌(பு)
இலகுமூ லப்பொரு ளினைய டைந்தனம்‌. ட்ட)
நலமிதின்‌ வேறென நயக்க லாவதே. 51

திவ்ய தேச யாத்திரை
என்னவா னந்தமுள்‌ ளெழுந்து பொங்கவே
அன்னமா மழிசைவிட்‌ டாம்ப லும்செழுங்‌ ‘
கன்னலுஞ்‌ சாலியுங்‌ கவினு மாவயல்‌
மன்னுசீர்‌ .திருவல்லிக்‌ கேணி மன்னினான்‌.  52

சீர்த்ததா மரையுதிர்‌ மணிசெ ழித்திடும்‌
நீர்த்தட மாடியும்‌ நிமலன்‌ ஆகிய
பார்த்தசா ரதிப்பதம்‌ பணிந்து மிம்முறை
திர்த்தனாண்‌. டேழெழு நூறு. சென்றபின்‌; 53-700 வருடம்‌ ஆழ்வார்‌ இருவல்லிக்‌
கேணியில்‌ வாழ்ந்தார்‌.

ஒருபகல்‌ மழிசையுத்‌ தமனை யோங்கெழில்‌
பெருகுவெஃ காவெனும்‌ பெரும்ப தக்கணீ
வருகவென்‌ றுணர்த்தினன்‌ மலரின்‌ வைகுறும்‌ இருமகள்‌ மகணனாந்‌ தேவ தேவனே.–54-

அம்முறை கச்சவெஃ காவ டைந்தெணார்‌
தம்முள மாமனை சார்ந்‌ திடாதொழி
செம்மைசேர்‌ நாரணன்‌ திருப்ப தந்தொழு(து)
இம்முறை யேழுநூ றாண்டி ருந்தனன்‌. 55

கணிகண்ணன்‌ வரலாறு
்அந்தநா டனிற்கணி கண்ண ஸும்பெயர்ச்‌
செந்தமிழ்ப்‌ புலவரிற்‌ சிறந்து மாண்புடன்‌
வந்துமா மழிசையன்‌ பதம்வ ணங்கியே
சந்தத முளந்தனி லன்பு சார்ந்தரோ. 56

மழிசையன்‌ றன்புகழ்‌ வளங்கள்‌ பாடியே
அழிவில்சீர்‌ இருத்திய னணுக வோர்பகல்‌
மொழியுமந்‌ நகர்மனு முறையி னாண்டருள்‌
எழில்பெறு மரசனு முலாவந்‌ தெய்தினோன்‌; 57

புவியுடை வேந்தனும்‌ புலவன்‌ வைகிடத்‌
குவிசொடும்‌ பலபொரு டந்தென்‌ மீதிலோர்‌
கவிசொலென்‌ நுரைத்தசொற்‌ கனலிற்‌ காய்ச்சியே
செவியுடு மூசியொப்‌ பாகச்‌ சேர்தலும்‌; 58

இனியவெம்‌ பரன்புக ழியம்பு நாவினால்‌
மனிதர்மேற்‌ கவிதையான்‌ வழங்கு கின்றிலேன்‌
பனியென வழிவுறும்‌ வாழ்வைப்‌ பற்றியே
குனிசிலை வயங்கொளேன்‌ என்று கூறுவான்‌. 59

அரும்பொரு ளிஃதெலா மற்ப வோடதாம்‌
துரும்பதாம்‌ நீயெனச்‌ சொல்லி வீறுடன்‌
பெரும்புக ழமாளனும்‌ பெயர்தல்‌ காண்குறா
இரும்புவிக்‌ கரசனு மிதையி யம்புவான்‌. 60

அன்னதே யாமெனி லருந்த மிழ்வலோய்‌ ‘
என்னதாந்‌ தேயமீ திருக்க லாகுமோ
பன்னுக : நீயெனப்‌ பாரை யாள்பவன்‌
சொன்னசொல்‌ லவன்‌ செவி கருக்குற்‌ றெய்தலும்‌; 61

கணிகண்ணனும்‌ ஆழ்வாரும்‌ பெருமாளும்‌
கச்சியை விடுத்தல்‌
உன்றிருத்‌ தேயமீ துறைவ தில்லையான்‌
என்றுரைத்‌ தக்கணம்‌ விரைவி னெய்தியே
துன்றுசீர்‌ மழமிசையன்‌ றூய டித்துணை
குன்றலை மீதுறத்‌ தரித்து யம்புவான்‌. 62

(வேறு),
ஐய கேட்டியின்‌ றென்னையித்‌
தேயமா எரசனும்‌ வருவித்துச்‌
செய்ய வோர்கவி தன்மிசைப்‌
பாடெனச்‌ செப்பிட மறுத்தேனால்‌
வெய்ய னும்‌எனைத்‌ தனதுதே
யந்தனை விட்டக லெனச்சொன்னான்‌
துய்ய நின்பதந்‌ தொழுதகல்‌
குவனெனச்‌ சொற்றனன்‌; நடவுற்றான்‌. 63

அனைய ஸனேகலும்‌ நின்னைவிட்‌
டிங்ஙனம்‌ அணுகிலன்‌ யானென்ன
– . வினையி லாமழி சையனுநா ்‌
கணைமிசை விளங்குற வளர்கின்ற
புனைது மாய்வெஃகு மார்பினன்‌
பொன்னடிப்‌ போதினைப்‌ பணிந்தேத்தி
இனைய சற்கணி கண்ணனித்‌
தேயம்விட்‌ டேகுதற்‌ கமைந்தானால்‌; — 64

அவனை நீங்கியா னீங்குறை
இன்றிலே. னாதலா லவன்பின்னே
குவனின்‌ னாகணை சுருட்டிக்கொண்
டென்னுடன்‌ கூடவா வெனலோடுஞ்‌
சிவனுந்‌ தேர்கொணான்‌ வேறொரு
தேயநீர்‌ சேறலென்‌ னோவென்னாப்‌
்‌ பூவன வேந்தனும்‌ தன்மிசை
. ‘கவியிவன்‌ புகல்கிலா மையினாலே. | 65

இந்தத்‌ தேயம்விட்‌ : டேகென
இவன்றனக்‌ கியம்பின னெனலோடும்‌
அந்தப்‌ பேரவ மதியுன
தடியற்கன்‌’ றஇினிற்பதின்‌ மடங்காக
எந்தனைச்‌ செய்த தாகுமா
லுனைப்பிரிந்‌ இருக்கல னிவண்விட்டே
உந்த னோடுசெல்‌ குவனென
வுரைத்துவந்‌ துறங்குநா கணைதன்னை; 66

சுருட்டு றாவெடுத்‌ தேகலும்‌ .
மருகுறு தூய்மையார்‌ மடவார்கள்‌
மருட்டு றும்மிவ. ரொடுமறு ்‌
தேயம்யான்‌ மருவுவன்‌ இன்றென்னா
இருட்டி ஸீங்குவிட்‌ டேகலென்‌
னெனவவ ரிசைத்தலு மடியார்தம்‌
பொருட்டெ. னாநடந்‌ தமையெலாம்‌
புகன்றனன்‌ புவிதனை யளித்துண்டோன்‌. 67

அம்மொ ழித்திரு மகளொடும்‌
புவிமக ளாகிய விருவோர்கள்‌
தம்மி ௬ஞ்செவி யுறுதலுந்‌ இயங்கியே தனித்திவ ணுறையேம்யாம்‌
உம்மு டன்துடர்ந்‌ இடுவமென்‌
றெழுந்தவ ர௬டன்வர விரைவோடுஞ்‌
செம்மை சேரும்வெஃ காவைவிட்‌
டேமறு தேயஞ்சென்‌ றனர்மாதோ. 68

இச்செ யற்கண்மற்‌ றுளதிருப்‌
. பதிகள்வா. ழிறைவர்தேர்ந்‌ துடனேக
நிச்ச யித்தவ ரவர்கடந்‌
தேவியர்‌ நெருங்கித்தம்‌ முடன்செல்ல
கச்சி தன்னைவிட்‌ டேகினர்‌
மறுதினங்‌ காலையிற்‌ புனறோய்ந்து
குச்சி னிற்கத வந்திறந்‌
தர்ச்சகர்‌ கோயிலுட்‌ புகுந்தாரால்‌. 69

புகுந்து நோக்கலு முபயநாச்‌ சியார்களாம்‌ பூவைய ரொடுஞ்செந்தேன்‌
உகுந்து ழாய்முடி நாரணர்‌
தங்களை யொருவருங்‌ காணாராய்‌
மிகுந்த வற்புத மடைந்தவ ராகியே மீண்டொரு விடத்தொளன்றித்‌
தகுந்த யோசனை புரிந்த னர்திருத்‌ தலங்கள்வாழ்‌ மறையோர்கள்‌. 70

முரச றைந்திடு படைத்தலை
யுடையவம்‌ முதுநகர்ப்‌ புரந்தோம்பும்‌
அரசன்‌ மாடணைந்‌ தித்திறம்‌
யாவுமங்‌ கறைதலு மதுகேளாப்‌
புரசை யானைய ஸனூள்மிக
நடுங்கியிப்‌ புதுமையை அமைச்செய்தும்‌
பிரச மாலையீர்‌[ புகலுமி
னென்னவப்‌ பெரியரு மிதைச்சொன்னார்‌. 71

பணிமு டித்தலை சுமந்திடு
மிரும்புவி பரித்திடுந்‌ திணிதோளாய்‌
கணிக ணற்குநீ பிழைத்திடும்‌
பிழைகளக்‌ கணிகணன்‌ ..றனக்கல்ல :
மணிவ ஸணற்கிழைத்‌ துளதென .:
வுணர்திமற்‌ றவன்றிரு மலர்போன்ற
அணிப தத்தினிற்‌ றொழுதுப
– சரித்திடி லவரணை குவரென்ன? 72

கேட்ட போதுவெஃ காவிடை
யேகியே கேட்கலு முளதாமிந்‌
நாட்டி லில்லையக்‌ கணிகண
னிவ்வழி நடந்தன னென்வாங்குக்‌
கூட்ட மிட்டவ ர௬ரைத்தலு
மந்நெறி குறித்துப்பா ரளப்பான்போல்‌
ஓட்ட மிட்டொரு நொடியினிற்‌
சென்றன னொளிர்மணி முடிவேந்தன்‌. 73

மின்னி ழிந்திரும்‌ புவிமிசை
நடந்தென விரைவொடும்‌ நடந்தேகும்‌
பொன்னி னோடுமம்‌ புவிமகள்‌
தமதடிப்‌ போதினைப்‌ பணிந்தேத்து
என்னி லென்பிழை கண்டுநீ
ரேகுவ தியம்புவி ரெனலோடும்‌
உன்னி லோர்பிழை யாங்கள்கண்‌
டுணர்கில முலகிய லதுகேண்மோ. : 74

கணவன்‌ போம்வழி மனைவிய
ரேகுதல்‌ கடமையா மதனாலெம்‌
மணவன்‌ போகயாம்‌ பின்றுடர்ந்‌
தேகுவ மன்னனீ யவரைக்கேட்‌ (டு)
உணர்கு வாயென வாங்கவ
ருரைத்தலு மொளிர்மணி முடிவேந்தன்‌
பணவ ராவணை சுருட்டிமுன்‌
பெயருமப்‌ பச்சைமாற்‌ கெதிர்சென்றே; 75

இருவ டிக்கணின்‌ றடியனே
னென்பிழை செய்தன னெனநீயும்‌
மருவு கோயில்விட்‌ டேகுவ
தென்னலும்‌ மன்னவன்‌ றனைநோசக்கி
முருக விழ்த்தபூநர்‌ தொடையவ ரென்வயின்‌ முளரிசேர்‌. வண்டென்னப்‌
பெருகு மன்பின ரார்தினம்‌
யானெனப்‌ பேசுத லுணர்வாயால்‌. 76

ஆத லாலென தடியனாம்‌
மழிசைய ஸின்னகர்‌ தனைறீங்கிப்‌
._ போத லோடுமங்‌ கவனுடன்‌
யானுமே போகின்ற தறியுன்பால்‌
ததுண்‌ டாமெனி. லவனை நீ
வினவிடிற்‌ றெரிந்திடு மெனமாயன்‌
ஒத லோடுமன்‌ னவனுமன்‌
னவனிடத்‌ .துகந்துசென்‌ றனன்மாதோ. _ 77

சென்ற வன்றிருப்‌ பாதவம்‌
புயங்கடன்‌. நிருமுடி யுறச்சூடி இன்று நான்பிழை யிழைத்துள “
தென்கொனீ யேகுதற்‌ கெனலோடும்‌
வென்றி வேலினோய்‌ நின்னுட ்‌
னொருமொழி விளம்பிய திலையான்மற்(று)
ஒன்று நீயப .சாரமெற்‌
கிழைத்தது முணர்கில மதுகேண்மோ. 78

பிரிய மூற்‌ெ றனைச்‌ சார்ந்துள
கணிகணப்‌ பெயர்பெறும்‌ புலவோனும்‌ ட்‌
புரியு நின்புவி யெழுந்துவிட்‌
டேனெனப்‌ போயின னவன்றன்பால்‌
பரிவு கொண்டயான்‌ அடைந்துளே
னவனிடம்‌ படர்ந்துநீ வினவுற்றால்‌
தெரியு மாங்கவன்‌ திரும்புறில்‌ ்‌
அவன்பினே’ இரும்புவன்‌ யானென்றான்‌.  79

என்ன வோதலு மலைகட
லுடையுடை யிரும்புவி தனையாளும்‌
மன்ன வன்விரைந்‌ தடைந்துதன்‌
முடியுறு மணிமுடி கணிகண்ணன்‌
பொன்ன டித்துணைப்‌ போதுவைத்‌
இங்கியான்‌ புரிந்துள பிழையாவும்‌
அன்னை பாலிளங்‌ குழவிசெய்‌
துளதென வகம்பொறுத்‌ திடல்வேண்டும்‌. 80

மூவரும்‌ திரும்பினர்‌
என்று பற்பல வினியநன்‌
மொழிபுகன்‌ றேத்திவேண்‌ டுதலோடும்‌
நன்றெ னாநயந்‌ தவன்வெஃ
காவழி நடக்கலு மவன்பின்னே
கன்றி னைத்துடர்‌ பசுவென
மழிசையன்‌ கடுகின னவன்பின்பாய்‌
வென்றி யாழிய னடந்திட
அவன்பினே மின்னனார்‌ களுஞ்சென்ஜறார்‌. 81

வேந்த ஸனும்மகிழ்‌ வுடன்வரப்‌
பின்செல விரைந்து£ர்‌ வெஃ்காவுள்‌
காந்து பன்மணிக்‌ கோயிலுள்‌
யாவருங்‌ கலந்துபின்‌ மலையொன்றை-ஏத்தி மாமழை தடுத்திளங்‌. கோவிய ரிளமுலை வளம்வேட்ட
பூந்து மாய்முடி மாயனை
நோக்கியம்‌ மழிசையன்‌ புகல்வானால்‌. 82

மன்னி னன்சகணி கண்ணன்யா
னவன்பினே வந்துளே ஸினியுன்றன்‌
பன்ன கப்பெரும்‌’ பாயலை
விரித்ததிற்‌ படுமெனப்‌ படுத்தானால்‌.
அன்ன நாண்முத லத்திருப்‌ பதியின்வா மாழியங்‌ கையற்குச்‌
சொன்ன வண்ணஞ்செய்்‌ தருள்பெரு
மாளெனத்‌ தோன்றிய தொருநாமம்‌. 82

மற்ற வத்திருப்‌ பதியுறை பவர்களும்‌ மனைவிய ரொடு தம்மூர்‌
உற்ற டைந்துயர்‌ கோயிலுண்‌ ்‌
மகிழ்வொடு முறைந்தனர்‌; புவியாளும்‌
வெற்றி வேந்தனு முளங்களித்‌
தரமனை மேவிவாழ்ந்‌ தனனவ்வூர்‌
சொற்ற பார்க்கவன்‌ மதலையுஞ்‌
சிலபக றநுன்னிவாழ்ந்‌ ததன்பின்னர்‌; 84.

(வேறு)
மருவுவெஃ காவை நீங்கி
மாங்கனித்‌ தேற லும்பார்‌
பருகிள மேகிப்‌” பாலும்‌
பாசமா ரிறாலின்‌ றேனுங்‌  குருமணிக்‌ கரும்பின்‌ சாறுங்‌. *
குளம்பல நிரம்பப்‌ பாயும்‌:
இருவளர்‌ குடந்தை யென்னுந்‌ ட. 3 தெய்வமா நகரஞ்‌ சேர்ந்தான்‌. 85

அத்திருப்‌ பதிவா மாரா
வழுதரின்‌ அம்பொற்‌ பாதஞ்‌
சித்தமுள்‌ ஞருக யன்பு
செழிப்பவா லயத்துட்‌ சேர்ந்தே
நித்தமும்‌ வணங்கிப்‌ போற்றி ட்ப
நிகமுமாண்‌ : டதுவோ ராயி
ரத்துநா னூறவ்‌ வூரி: ன
னமர்ந்துவாழ்ந்‌ இருந்த பின்னர்‌; 86–ஆராவமுதனை வணங்கி ஆழ்வார்‌ குடந்தையில்‌ 1400 வருடம்‌ வாழ்ந்தார்‌.

பெரும்புலியூர்‌ நிகழ்ச்சி
குரும்பையங்‌ கொங்கை “நீலக்‌.
கூர்விழிப்‌ பணையின்‌ மென்றோள்‌
சுரும்பிமிர்‌ கரிய கூந்தல்‌
ஹறோகையர்‌ முத்த ளக்க.
அரும்பின நிலவில்‌ வாய்விண்‌
டலர்ந்திடுங்‌ குவளைப்‌ பண்ணைப்‌
பெரும்புலி யூரின்‌ வாழும்‌ பிரபல னொருவ னன்னோன்‌/ 87

செகந்தனி லுயர்ந்த சர்த்திச்‌
செழுமறை யவன்றா னாங்கோர்‌
மகந்தனை யியற்றல்‌ கேட்டம்‌
மாமகம்‌ காண்பா னாய்த்தன்‌
அகந்தனி னினைவுற்‌ றாங்கண்‌
அணுகியவ்‌ .வூர்வாழ்‌ கோயில்‌
உ.கந்துறை செங்கண்‌ மாலை
யுணர்ந்திவன்‌ வலம்வந்‌ தானால்‌, . 88:

வலமதாய்‌ வரும்போ தந்த
மண்டபம்‌ கோயிற்‌ றம்பம்‌
_ இலகுறு பெருமான்‌ மற்றும்‌
இயைவன மற்றும்‌ யாவும்‌
நலமுறு மழிசை யான்பின்‌
நடத்தல்போற்‌ _றிரும்பல்‌ காணாப்‌
பலருமாங்‌ கதிச௪ யித்தங்‌ ட
சுவர்பதம்‌ பணிந்து போற்றி; 89 ்‌

இந்தமாப்‌ புருடன்‌ யாவன்‌?
இவன்மகத்‌ துவந்தா னென்னோ?
பைந்தலை யரவி ஸாடும்‌
பரமனிவ்‌ வுருவந்‌ தாங்கி
வந்தன னாம லாவிவ்‌
வணஞ்சுழன்‌ நிடுமோ வென்னாச்‌
சந்தையின்‌ மகிழ்ந்து கொண்டா
டினர்களச்‌ சீரோன்‌ றன்னை. ்‌ 90

மழிசையன்‌ றானு மவ்வூர்‌
வைகினன்‌ மகம்செய்‌ வோனும்‌
விழிதுயி லுணர்ந்து காலை
விதிமுடித்‌ தெக்ய சாலை
உழிமிகு நியம மாய்ச்சென்‌
றுற்றவ னேக லோடும்‌
வழியினோர்‌ மடவாள்‌ தன்கால்‌
நீட்டலும்‌ மறையோன்‌ காணா; 91

வேலைவென்‌ நிடுங்கார்க்‌ கண்ணாய்‌।
வேலையின்‌ வளர்வ ஸத்தாய்‌/
மாலைசேர்‌ மாலை நோக்கி
மகம்புரிந்‌ இடுமவ்‌ வெக்ய
சாலையான்‌ சால நேமந்‌
தன்னுடன்‌ விரைவி னேகுங்‌
காலைநீ காலை நீட்டிற்‌
றென்னெனக்‌ கனன்று சொன்னான்‌. 92

சொன்னவம்‌ மொழிதன்‌ காதற்‌
சுருக்குற முத்த மூரல்‌ மின்னிட நகைசெய்‌ இிப்பார்‌
மிசையொரு கடவு ளாக
இன்னகர்‌ தனில்வந்‌ தெய்து
யிருக்குமம்‌ மழிசை யான்றன்‌
பொன்னடி. வணங்கிப்‌ பூசை
புரிந்திடு புலமை யில்லோய்‌. 93

தினக்கொரு மொழியு முண்டோ?
நின்மகம்‌ மகந்தா னாமோ?
எனக்கொடி மடவாள்‌ கூற
இருசெவி. புகுத லோடும்‌
கனக்கவு நாணங்‌ கொண்டக்‌
கன்னியைப்‌ புகழ்ந்து வாழ்த்தி
மனக்கவ லையினோ டேயம்‌
மறைவலான்‌ சாலை புக்கான்‌. ்‌ 94

புக்கவன்‌ மடவாள்‌ சொற்ற
புனிதனை விரைவி னோடுஞ்‌
சிக்கென வவ்வூர்‌ முற்றும்‌
தேடினன்‌ தெரியா னாகி
மிக்கவாந்‌ துயரி னோடும்‌
மெய்தளர்ந்‌ துயிர்த்து வாடித்‌
தக்கதே தறிதற்‌ கென்னாத்‌
தன்னகஞ்‌ சார்ந்தா னன்றே. 95

மனதுவெந்‌ துயரொ : டுங்க
வளர்வுமி மழிசை யுற்றோன்‌
தனதுரு விதுதேர்‌ கென்னத்‌
தானவ ஸூருவந்‌ தாங்கக்‌
கனவினிற்‌ றெரித்துப்‌ போனான்‌
கஞ்சனா ருயிர்போய்த்‌ துஞ்சச்‌
சினவரா வணையை நீங்கித்‌ தேவகி வயித்தின்‌ வந்தோன்‌. 96

கண்டுயி லுணர்ந்து பின்பவ்‌
வுருவினைக்‌ கண்கா ணாமல்‌
விண்டுவந்‌ துணர்வித்‌ தானென்‌
றுளந்தனில்‌ வியப்புற்‌ றானால்‌!
மண்டுறு முவகை யோடம்‌
மறைவலோன்‌ றிருமா லுக்குத்‌
தொண்டுறு மவனை நாடித்‌
துரிதமுற்‌ றெழுந்து காலை; 97

ஆங்கொரு வனுமா யுற்றோர்‌
ஆவண வீதி யின்கண்‌
பாங்குறு பிரப்பங்‌ கூடை
பரிவொடு .முடைந்திட்‌ டந்தத்‌
குங்கிலான்‌ விற்றல்‌ காணாச்‌
செழுந்துயில்‌ கனவிற்‌ கண்டோன்‌
ஈங்கிவ னாகு மென்னா
வெண்ணியுள்‌ மகஇழ்வுற்‌ நானாய்‌; : 98

ஐய/நீ யிவ்வா றுற்ற தறிந்திலே னறியத்‌ தக்கோர்‌ .
வையமீ தில்லை; இந்த
மானிட வடிவங்‌ கொண்டு
உய்யுமா றுற்ற தேவே:
எனவுள முருகி யன்னோன்‌
செய்யபங்‌ கயத்தாள்‌ மேலே
இருமுடி சேர்த்துச்‌ சொல்வான்‌. 99

என்பெருந்‌ தவமோ? முன்னோர்‌
இழைத்திடுத்‌ தவமோ? இப்பார்‌
தன்பெருந்‌ தவமோ? இந்தத்‌
தனிமகந்‌ தனக்குற்‌’ றோர்கள்‌
முன்புரி தவமோ? யாதோ?
…. தெரிகிலேன்‌; முளரி யொப்பாம்‌
நின்றிரு வடிச)ு ணோவ
வந்திவ ணடைந்த தென்னா; 100

என்னநன்‌ மொழிகள்‌ பேசி
யான்புரி கின்ற வேள்வி
தன்னைநீ காணு மாறு
சார்ந்திட வேண்டு .மென்னா
்‌ ௮அன்னமா மறையோன்‌ வேண்டி .
அழைத்துடு மின்சொல்‌ யாவுங்‌. –
கன்னமூ டுறலு முள்ளங்‌ : :
காப்புட னவன்பின்‌ சென்றான்‌. 101

யாகசாலையில்‌ நிகழ்ந்தது
மகம்புரி சாலை யெய்தி.
மறைமுறை வழுவா தங்கி
யுகந்திட வாவி நெய்கொண்
டோமமுற்‌ றியபின்‌ தேவர்‌ :
முகந்திட வவிக ணல்கி
. முடிந்தபின்‌ மழிசை யானுக்(கு) “-அகங்களித்‌ தெழுந்து சம்பா
வனைமுன மளித்தா னன்றே. 102

அன்னவர்க்‌ களித்தல்‌ காணா
ஆங்கணுற்‌ றிருந்தோ ரெல்லாம்‌
இன்னவன்‌ மகத்திற்‌ கெய்தி
யிருந்துள மேலோர்‌ தம்மில்‌
மூன்னரிற்‌ பூசை கொள்வோன்‌
முறமொடு கூடை தட்டும்‌
பின்னிவிற்‌ பவனோ வென்ன?
வெகுண்டனர்‌ பெரிது மன்னோ. 103

நிருபர்கள்‌ பலரை வென்று
நெறிவழா திராய சூயந்‌ தருமன்செய்‌ தஇிடுதாள்‌ முற்பூ சனையுயர்‌ வசுதே வன்றன்‌
இருமகற்‌ களித்த காலை
தனிற்சசு பாலன்‌ வெம்பி
உருமெனத்‌ தெழித்தற்‌ கொப்பாய்‌
உதாசனம்‌ பலவும்‌ சொன்னார்‌. 104

அவ்வுரை பலவுங்‌ கேளா
வந்தணன்‌ மழிசை யான்றன்‌
செவ்விய முளரி யொப்பாந்‌
திருவடி தனது சென்னி ஒவ்வுறப்‌ பணிந்திட்‌ டின்னார்‌
உரைத்தபுன்‌ மொழிகள்‌ எண்ணா
இவ்வயி னடியேற்‌ காப்பாற்‌
றருள்மிகப்‌ புரிவை யென்ன; 105

பன்மொழி நயக்கு மாறாய்ப்‌ |
பண்புறப்‌ பகர்ந்து போற்றி,
சின்மயப்‌ பொருளா யிப்பார்‌
– செனித்துறை சோதி யான
நின்மகத்‌ துவமிப்‌ புல்லோர்‌ ன ரர
நெஞ்சுறத்‌ தெரித்தி யென்னா. ‘
நன்மகத்‌ தலைவ னான
மறைவலோ னவில லோடும்‌; . 108:

இறைவன்‌ காட்சி
அந்தநன்‌ மொழிகள்‌ கேளா
அவனுமைம்‌ படையோன்‌ றன்னைச்‌
சிந்தையுள்‌ ஞணர்த்த லோடுஞ்‌ ~ சுவனய னுடனே யண்டத்‌
இந்திரன்‌ முதல்வா னோர்க ,
ளேத்தவந்‌ தரத்தின்‌ மீதாய்ச்‌ ்‌
செந்திரு வுடனே மாயோன்‌
உவணன்மேற்‌ சிறந்து தோன்ற; 107°

ஐம்படையோன்றன்னை – ஐந்து ஆயுதங்கள்‌ தாங்கிய.
இருமாலை.. இறைவனை ஆழ்வார்‌ சிந்தித்தார்‌. உடனே மாயோன்‌ கருடன்‌!
மேல்‌ சாட்சி தந்தான்‌, உவணன்மேல்‌ – சுருடன்மீது. :
இச்‌ சமயத்தில்‌, ஆழ்வார்‌,
**அக்கரங்கள்‌ .அக்கரங்கள்‌ என்றுமாவ தென்கொலோ
இக்குறும்பை நீக்கியென்னை யீசனாக்க வல்லையேல்‌
சக்கரங்கொள்‌ கையனே சடங்கர்வா யடங்கி௪
“உட்டிடத்த வண்ணமே புறம்பொ௫ிந்து
என்று பாடியதாக வரலர்று பேசும்‌.

காண்டலு மழிசை யான்றன்‌
_ கண்களித்‌ துளத்தி னூடு
பூண்டபே ரன்பி னோடும்‌
புவியுற வணங்கி யென்னை ஆண்டருள்‌ பரம மூர்த்தி
அண்ணலே விண்ணோர்‌ காணாத்‌
தூண்டருஞ்‌ சுடரே யென்னப்‌
புகழ்ந்துகை தொழுது சொல்வான்‌. 108

அஞ்சனை யளித்தாய்‌ போற்றி!
அலகைமா முலைவைத்‌ தாட்ட
நஞ்சமுண்‌ டுவந்தாய்‌ போற்றி!
நாகமே ஸனடித்தாய்‌ போற்றி!
கஞ்சனை வதைத்தாய்‌ போற்றி!
கரிபரி யிடப மெல்லாந்‌
துஞ்சுறப்‌ பொருதாய்‌ போற்றிர
தூயனே. போற்றி । போற்றி! 109

எனதுமா தவத்தி னால்வந்‌
தெய்தினை யினிநா யேன்வந்து
உனதுமாப்‌ பதாம்பு யத்தை
யுறும்வகை யளித்தி யென்றான்‌
மனதுவந்‌ தருளி யன்னான்‌
மாமூகந்‌ தன்னை நோக்கிப்‌
புனைதுழாய்ப்‌ படலை எம்மான்‌
புகல்குவ னிதனை மன்னோ. .. 110

இன்னமும்‌ சலநா ஸளிப்பா
ரிடையிருந்‌ துலகு ‘ளோர்பால்‌
துன்னுமா மாயை நீங்கி
“.. உயர்பதந்‌ துடரு மாறாய்‌ -பன்னுசெந்‌ தமிழி னாற்பல்‌
பாடல்க ளிசைத்துப்‌ பின்னர்‌
மன்னுதி யென்னத்‌ தன்செவ்‌
வாய்மலர்ந்‌ தருளி னானால்‌, 111

அப்பொழு தாழி மாய ,
னடியினை வணங்கி யேத்தி :
இப்பெரும்‌ புருட. னாலுன்‌
னிணையடி தொழுது யான்செய
ஒப்பரு மகத்தி னுற்ற வுயர்பல னடைந்தே ஜனென்னாச்‌
செப்பரு மகிழ்வி னோடுஞ்‌ ,
சிந்தையுள்‌ ளூருகி நின்றான்‌. 112

மற்றுமவ்‌ வேள்விக்‌ குற்றோர்‌ ட்‌…
மனமகிழ்ந்‌ தடைந்து ளோரும்‌ ்‌
நற்றுணை யா௫க்‌ காக்கும்‌
நாரண ஸனென்னு நாமம்‌
வெற்றிசே ராழி சங்கம்‌
விற்கதை வாள்கைக்‌ கொண்டோன்‌
பொற்றிரு வடியின்‌ வீழ்ந்து , புகழ்ந்தனர்‌ துதிசெய்‌ தாரால்‌. ்‌ 113

பாங்கொடு மிவ்வா றாகப்‌
பரிந்தடி தொழுது போற்றும்‌
ஆங்கவர்‌ தமக்குக்‌ காட்சி
யளித்துத்தன்‌ பதவி சார்ந்தான்‌;
பூங்கம லத்து வாழும்‌
புனிதனன்‌ நிட்ட சாபம்‌ – ட்ட
தாங்கிய வரனுக்‌ கையந்‌ ்‌
.தனையழித்‌ தொழித்த நாதன்‌. ப்‌. 114,

மாயவ னகுன்ற பின்னர்‌
* மகம்புரி மறையோ னண்மி
ஆயநன்‌ மகத்திற்‌ காவந்‌
துளபல ரும்யாஞ்‌ செய்த
இயன பொறுத்தி யென்னத்‌
்‌…. திருச்செவி யின்ப முற்ற
தூயவன்‌ கமல பாதந்‌
தொமுதன ரேத்திச்‌ சொன்னார்‌. 115

யாவரு மினிதி னோடும்‌
பின்னரு மியற்றல்‌ யாவும்‌
முடித்தபின்‌ னிருக்கை தன்னில்‌
அன்னவ ரடைந்து வாழ்ந்தா
ரப்பெரும்‌ புலியூ ரென்னும்‌
பொன்னகர்‌ மழிசை யானும்‌
பொருந்திவீற்‌ றிருக்கும்‌ நாளில்‌. ்‌ 116

ஒருநாட்‌ கிழிந்த வத்திரந்தத்‌ துறுபோ துமையு முருத்திரனாம்‌
எருதே —கயிலையெனு
மில்லம்‌ விடுத்தந்‌ தரமிசையே
வருபோ தவர்மே ஸிச்சாயல்‌
மற்றிம்‌ மழிசை யாழ்வார்தன்‌
இருமே ஸனியிற்றாக்‌ குதலுமுளந்‌ இகைத்துப்‌ பின்பா லொதுங்கினனால்‌. 117

கண்ட வுமையா ஸிவனிடையும்‌
கருமம்‌ யாதென்‌ றிடக்கேட்டு
வண்டுண்‌ துளவத்‌ திருநெடுமால்‌
மலர்நே ரடிமைக்‌ கடிமையுறும்‌
தொண்ட னதனா ஸஊஞ்சாயற்‌
ஹறோயா திடைந்தா னெனக்கடல்நஞ்‌
சுண்ட பெருமான்‌ கூறிடக்கேட்‌
டொருபா கத்தி னுமையுரைப்பாள்‌. 118

படியை யிரந்தோ ரடியதனுட்‌
படுமா றளந்து கொண்டருள்புட்‌
கொடியை யுயர்த்தும்‌ திருமாலின்‌
குரைபொற்‌ கழலார்‌ கோகனக
அடியை வழுத்தும்‌ . திருத்தொண்ட .
னாமே யெனினு மரவொடுவெண்
பொடியை யணிநீ கடவுளன்றோ? :
புவியிற்‌ பிறந்தோர்‌ தமக்கெல்லாம்‌.119-

அதையா மெய்தி யுணர்த்துமென
.அரனு மவன்பா லடையினமை
மதியா னெனலும்‌ மதியான்பால்‌
மதிப்பா யெய்தி மற்றவன்பால்‌
எதுவேண்‌ டினுமஃ தளித்தல்கடன்‌ ‘ ன
எனக்கேட்‌ டவளின்‌ மொழிமறுக்கும்‌
விதமின்‌ மையினா லுடன்பட்டு
மேவு மவன்மா முகநோக்க;–120-

வேண்டும்‌ வரங்கே ளெனவுசி
மேவும்‌ வழியவ்‌ வூசிதனிற்‌
பூண்ட நூல்போம்‌ வரந்தருதி
யெனவே புகலப்‌ பொற்கண்ணான்‌
ஈண்டுன்‌ வறுமைதவிர்‌ வரங்கே
ளெனலுந்‌ தனது முதுகதனைத்‌ தண்டி வெயர்வை தனையுருட்டிச்‌
சிந்திப்‌ புவிமேற்‌ றெரித்தனனால்‌. 121

பொன்னின்‌ மலைபோ லதுகுவியப்‌
பொருணின்‌ றனக்கு வேண்டிலிது
தன்னைக்‌ கொடுபோ வெனமழிசை
– தனில்வந்‌ துதித்தோன்‌ சாற்றுதலும்‌ அன்ன மொழிவந்‌ திருசெவியுள்‌
ளனல்போற்‌ புகுதப்‌ பொறாமையினால்‌
கன்னி பாகன்‌ வெகுண்டுநெற்றிக்‌
கண்ணைத்‌ திறந்தான்‌; திறந்திடலும்‌, 122

புகைகொண்‌ டெழும்பும்‌ வடவனல்போற்‌
பொங்கும்‌ கனல்விண்‌ தொடர்ந்தெழும்ப
நகைகொண் டருளி யணிமழிசை
நகர்வந்‌ துதித்தோ னவைநணுகா
வகைதன்‌ பதத்தார்‌ விரல்நகக்கண்‌
மலியா ரழலைத்‌ திறந்துவிடப்‌
பகைகொண் டதனை வளைந்துறழ்வாய்‌
படுத்திக்‌ கணத்திற்‌ பருகியதே. 123

பின்னும்‌ வெகுண்டு புரமட்ட
பெருமான்‌ வேறு நிகரிலதாய்‌
மன்னுஞ்‌ சூலந்‌ தனைவிடுப்ப
மதித்தாங்‌ கதனைக்‌ கைக்கொளலும்‌
அன்ன துணர்ந்த வசரீரி ்‌
யமரர்‌ தமக்கு மறிவறியாய்‌ ்‌
இன்ன படைநீ விடுத்திடினும்‌
எய்தி யவனா லழிவெய்தும்‌. 124.

ஆத லாலிங்‌ கிதனைவிடா
தகல்தி யெனவம்‌ மொழிகேட்டுச்‌
– சீத மதியுங்‌ கங்கையுந்தண்‌
செழுங்கொன்‌ றையுஞ்சேர்‌ செஞ்சடையோன்‌
பாதி யுடலங்‌ கொண்டமலை
பயந்த மடவா டனைவெறருத்துப்‌
போத நாணுற்‌ றிடபமிசைப்‌
பொருந்தி விசும்பிற்‌ போயினனால்‌. 125:

(வேறு)
ஆங்கவன்‌ போய பின்னர்‌
அணிமழி சையின்வந்‌ துற்ற
இங்கிலா வுளத்தா னந்த
செழுநக ரதனிற்‌ சின்னாள்‌
தேங்கமழ்‌ துளவப்‌ பைந்தார்‌
தஇருமக டலைவன்‌ செய்ய ,
பூங்கழன்‌ மதிக்கு முள்ளம்‌
பொருந்திவீற்‌ றிருக்கும்‌ நாளில்‌. 126,

குடந்தையி லமர்ந்த பொன்னங்‌
கோயிலுட்‌ டிருவ னந்தன்‌
படந்தனிற்‌ றுயிலு மாரா
வமுதினைப்‌ -பரிவி னோடுந்‌
தொடர்ந்தனு பவித்த வானந்‌
குத்தினைத்‌ தொடர்பை யெல்லாம்‌
கடந்தவம்‌ மழிசை யானுங்‌
கருதிப்பா விசைக்க லுற்றே; 127

நான்முகன்‌ இருவந்‌ தாதி நாற்பதோ டைம்பத்‌ தாறும்‌
தேன்பொழி யாநீர்‌ பத்துத்‌
திருச்சந்த விருத்தம்‌ தானும்‌ வான்மரு வமூத மென்ன
மண்ணுளோர்‌ துய்க்கு மாறாய்த்‌
தான்கனிந்‌ துரைத்தா னஃதைச்‌
சாற்றிவீ டடைந்தார்‌ பல்லோர்‌. 128

அவ்விரு நூற்றுப்‌ பத்தோ
டாறெனுங்‌ கவிதை தன்னு
ளொவ்வியே கமலை கேள்வ
னுவந்துறை கின்ற வாகும்‌
திவ்விய தேச மீரெண்‌
செப்பிய ததனுக்‌ குற்ற
செவ்விசேர்‌ நகரந்‌ தன்னைத்‌
தெரிவுறப்‌ புகல்வா மன்றே. 129

சீரரங்‌ கம்வெஃ காவுந்‌
இருவல்லிக்‌ கேணி தன்னோ
டூரகங்‌ குடந்தை கோட்டி
யூர்குறுங்‌ குடியோ டோதும்‌
பேரெவ்வுள்‌ வேங்க டம்‌அன்‌
பில்திருப்‌ பாட கம்து
வாரகைக்‌ கூடலும்‌ பாற்க
டலும்வை குந்த மாமே. 130

இப்ரபந்‌ தங்கள்‌ பாடி
யினிதொடுஞ்‌ சிலநாள்‌ வாழ்ந்து
முப்பரம்‌ பொருளாய்‌ வைகும்‌
முகுந்தனா ரருடன்‌ னாலே
ஒப்பிலா விமான மேறி
.யுயர்ந்திடும்‌ விரசை யாடிச்‌
செப்பிடும்‌ அமான ஸார்தந்‌
இருவடி சென்னி சூடி; ~ 131

படிகநன்‌ மேனி தாங்கிப்‌
பரமமா பதத்துட்‌ சார்ந்து
குடியதாய்ச்‌ சாம வேத
கீதங்கள்‌ குலவிப்‌ பாடி
நெடியநா ரணனோ டண்மிப்‌
பொருந்தின னிகழிக்காதை
அடிதொடங்‌ குதலாய்க்‌ கற்பார்‌
அடைகுவர்‌ பதவி மாதோ. 132

தொண்டரடிப்பொடியாழ்வார்‌ வரலாறு பகர்வோம்‌
சுமிகட லாடை யாகச்‌
சூழ்ந்தபா ரதனி ன்மீதே அழிவில்சீர்‌ மழிசை தன்னி
லவதரித்‌ தருளுஞ்‌ சீர்த்தி மழிசையான்‌ சரிதந்‌. தன்னை
வகுத்துரைத்‌ தனமால்‌ இப்பால்‌
மொழிகுதுந்‌ தொண்டர்‌ தங்காற்‌
பொடிகதை முழுதுந்‌ தானே. 133

திருமழிசையாழ்வார்‌ தஇருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

————-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌
திருவவதார அத்தியாயம்‌
வெண்பா
மன்னியசர்‌ மார்கழியில்‌ கேட்டையின்று மாநிலத்தீர்‌
என்னிதனுக்‌ கேற்ற மெனிலுரைக்கேன்‌–துன்னுபுகழ்‌
ஆமறையோன்‌ தொண்ட ரடிப்பொடி யார்பிறப்பால்‌
நாமறையோர்‌ கொண்டாடு நாள்‌. (உபதேசரத்தினமாலை, -11)

மண்டங்குடிச்‌ சிறப்பு :
வண்டங்குடி யிதின்வேரிலை யெனவேவளம்‌ விட்டே
கண்டங்குடி விலினேவுக ணையர்கார்க்‌ குழலுறல்போல்‌
அண்டங்குடி துறவாகட , வுளர்வந்தணு குறுசீர்‌ ,
மண்டங்குடி யெனுமோர்பதி வளமேவிய பதியே, 1,

ஆழ்வார்‌ அவதாரம்‌
அம்மாணக ரிடைவாழ்மறை யவர்தங்குல மதனில்‌
இம்மாணில முழுதும்புக ழிசைகொண்டுறு மொருவன்‌
செம்மாமட வரல்கற்பினில்‌ தெளிநீர்மையி னிறையில்‌
எம்மாதரு மொவ்வாத்திரு வெழிலாளவள்‌ வயிற்றின்‌.–2-

நாராயண ஸனூருவாமென நவில்மார்கழி யெனுமச்‌
சீரார்மதி தனிலிந்திர தினமாகிய திருநாள்‌
ஏராரற மொழியோங்குற இருமாகட. லெழுமவ்‌ ்‌
ஆராவழு தெனவந்தவ தரித்தான்வினை யெரித்தான்‌. 3

அண்டர்களி கூரப்பெறு மாயத்தனு மகிழ்வாய்‌
தொண்டர்கழல்‌ பொடியர்க்குறு சுபகாப்பணிந்‌ ததற்பின்‌
உண்டிட்டிடு மன்னத்தொடு சவளம்‌ உப நயனம்‌
பண்டைக்குல மறையின்முறை பலவும்புரி வித்தார்‌. 4

திருமணம்‌
உருவம்மத னெனலாயணை குறுநாடனின்‌ மதனூல்‌
பருவம்வரு தலுமன்பொடு பனிமாமலர்‌ வளருந்
இருவும்நிக ரலவென்றுரை செயுமொப்பில வடிவம்‌
மருவுங்குல மடமங்கையை மணமும்புரி வித்தார்‌. 5

துவளுங்கொடி யிடையொல்கிது வண்டெய்திட வரைபோல்‌ ்‌
இவளுந்தன மகலும்‌ உரம்‌ ஜெழுங்கத்தரு வணைமேல்‌ |
பவளம்பொரு மிதழின்சுவை பருகும்படி யொருமித்‌ t
துவளும்மிவ னொடுகூடிய ணைந்தின்பம டைந்தாள்‌. 6

கயற்கண்‌ வலையில்‌ படல்‌
இவ்வாறவ ளொடுகூடியி ருந்தும்பிற வழகார்‌ ச
செவ்வாய்மட வியர்தங்கடி றத்தாசைசெ லுத்தா
ஓவ்வாவவ ரொடுகூடியு றைந்தாரமு தெனவே
கவ்வாவிதழ்‌ பருகாமிகு கனிவாயணை குவனால்‌. -7

தவரும்முள னெகிழும்படி தங்கண்வலை தனைவீ க
சவர்சுந்தர வடிவங்களி லகமுந்துற வொழுகா,
துவர்செவ்விதழ்‌ முதல்யாவையுந்‌ துஇியாற்புக முதலால்‌
எவரும்மிவன்‌ மதனாமென இயைவுற்றணை குவரால்‌. . 8

(வேறு) ச |
இறைவன்‌ தடுத்தாட்கொளல்‌
படியெ லாமுட்‌ படிய வளர்த்திடும்‌ ட
நெடிய நாரணன்‌ நீள்பத பங்கயத்‌(து) அடிய ராக வகையுளத்‌ தொண்டர்கால்‌ ச
பொடிய ஸிவ்வணம்‌ நாள்பல போக்கலும்‌.-9-

பொய்ய தாகும்‌ புலவ னடத்தையை
மெய்யெ னாமனம்‌ வீணிற்‌ செலுத்தியே .
செய்ய வாய்மட மங்கையர்ச்‌ சேர்வுறும்‌
மையல்‌ கொண்டு மறந்தனன்‌ நம்மையே. 10
ஆத லாலிவ னுள்ளமம்‌ மங்கையர்‌
மீது றாதுதன்‌ மேனி யொளியிடைக்‌
காத லெய்து கருத்தரு ளத்திரு மாது கேள்வன்‌ மனத்திடை யுன்னியே. 1!

மடை மாறிற்று
அந்த —ளிச்செயச்‌
சிந்தை தன்னைத்‌ திருத்தி யடைகெனப்‌
பந்தெ னுந்தனப்‌ பாவையர்‌ காதலை
நொந்து விட்டுளம்‌ நோன்மைய ஸாயினான்‌. 12

ஆங்க வன்றெறு மாழியன்‌ பாலிறை
யோங்க வுள்ள முருகி யுருகிநைந்‌
தேங்கி யேங்கி யிருக்குமவ்‌ வெல்லையத்‌
தீங்கி லானுளங்‌ தேறிய தோர்ந்தரோ,. 13

இறைவன்‌ காட்சி
மூல காரண ஸாயிய லுந்திரு ‘
மாலு மாதுடன்‌ மாவயி னன்மிசை
நாலு மாமுகன்‌ நாகர்‌ முனிவர்கள்‌
கால காலனுங்‌ கைதொழு தேத்தவே. 14

விண்ணின்‌ மீதுவி எங்கித்தன்‌ மேன்மையைக்‌
கண்ணி னூடுறை காட்சி யளித்தலும்‌
மண்ணி ஸனின்றவம்‌ மண்டங்‌ குடியனும்‌
எண்ணி யுள்ள மிழுதென லாயினான்‌. 15

ஆடி னான்விழுந்‌ ‘தானெழுந்‌ தானெழுந்‌ :
தோடி னஸால்குதித்‌ தானுரு கிப்புகழ்‌ பாடி னானவன்‌ பங்கயச்‌ சேவடி
சூடி னான்றொழு தான்களி துள்ளவே: 16

கழிந்தகாலங்‌ கருதிக்‌ கனிந்தார்‌
அகந்தெ ஸிந்திவ்‌ வமுத மிருக்கவே
உகந்து மங்கையர்‌ பாலுற வாம்விடம்‌
முகந்து கால முடித்தன மேயெனா
இகழ்ந்து ளத்தைப்பின்‌ பின்னணம்‌ பன்னுவான்‌. 17

‘ நார ணாசிவன்‌ நான்முகன்‌ நாடிடுங்‌
கார ணாஅடி யார்தங்‌ கருத்துறை ‘
பூர ணாமுகுந்‌ தாபுனி தாவளர்‌ ‘ ஆர ணாஉனை யாரறி வார்களே. 18

ருந்‌ மா றம ரர்க்கன்‌ றலைகடல்‌
மருந்து கந்து வழங்கினை வாணகை
.மாதர்‌ கலைகொடு முன்வளர்‌
_ குருந்து: றுங்கருங்‌ கொண்ட ஸிறத்தனே. 19

கத்தி னம்‌௮ழு தேங்கக்‌ கனவரை
அத்தி னஞ்சுமந்‌ தாயென்‌ விழிகணீர்‌
முத்தி னஞ்சொரித்‌ தானந்த முத்திட இத்தி னம்மெதிர்ந்‌ தாயென தய்யனே. 20

என்னை யோர்பொரு ளாமென எண்ணியென்‌
அன்னை யாகு மமுதிடைத்‌ தோன்றிய
பொன்னை மார்பிற்‌ பொருத்திவந்‌ தெய்திய
உன்னை யான்கண்‌ டுரைக்கத்‌ தகுவனோ. 21

என்று பற்பல கூறி யிரங்கிமுன்‌
நின்று கைதொழு தேநெட்‌ டுயிர்த்தலும்‌
நன்று நன்றென்‌ றிளநகை தோன்‌ நிடக்‌
குன்று தாங்கிய கோவலன்‌ கூறுவான்‌. 22

பெருமாள்‌ தேற்றினான்‌
எனது மாயை யெனுமிரு ளெய்தியே
உனது நல்லறி வைமயக்‌ குற்றிட
மனதவ்‌ வாறு மயங்கினை யாகும்நின்‌
தனது ளத்தைத்‌ திருத்துறச்‌ சார்ந்தனம்‌. 23

வருந்து றேலினி மாயையும்‌ நீங்கிற்றால்‌
பொருந்து சீரங்கம்‌ வந்து புகுகெனாத்‌
இருந்தும்‌ இம்மொழி செப்பி மறைந்தனன்‌ விருந்து முன்னம்‌ விதுர னிடத்துண்டோன்‌. 24

(வேறு)
திருவரங்கம்‌ அடைந்தார்‌
மாயன்‌ மாயம தாக மறைதலுந்‌
தூய னானவன்‌ சிந்தை துளங்குறா
ஆய காலையொ ரவகை. யாறியே
சாயை போலுந்‌ தொடர்பைத்‌ தவிர்த்தரோ. 25

முன்னர்‌ அம்கம லத்துறை வோன்‌சவன்‌
அன்ன ரங்க மமர வனந்தனை
மன்ன ரங்க மதாய்த்திரு மால்வளர்‌
பொன்ன ரங்கம்‌ புகுந்தன னென்பவே. 26

அங்கு வைகு மடியர்க ளாயினோர்‌
தங்கள்‌ பொன்னடி தன்முடி தாங்கினான்‌
செங்க . ரங்கொ டவரிவன்‌ சேவடி.
பொங்கு மன்பொடு பூசித்‌ துளாரரோ. 27

ஒருவர்‌ தம்மை யொருவ ருபசரித்‌
துருவ மாத லிறத்தலென்‌ தோடும்‌.
இருமை யெய்த லிறுக்கு மவரொடுங்‌
குரும ணிச்செழுங்‌ கோயிலுட்‌ போயினான்‌. 28

நச்சு றும்பணை நாகணை மேற்றுயில்‌
பச்சை மாமலை மேனிப்‌ பவளவாய்‌
மொச்சு வண்டிமி ரும்முள ரிச்செங்கண்‌
அச்சு தற்பணிந்‌ தானந்த முற்றனன்‌. 29

ஆழ்வார்‌ திருப்பணி
இந்த மாயனுள்‌ ஸஎின்புற்‌ றுகக்குமாறு
எந்த வேலை யிழைத்திட லாமெனச்‌
சிந்தை யூடு நினைப்ப வதுதெரிந்‌
தந்த மாலு மிதனை யறைகுவான்‌. 30

(வேறு)
தொண்டர்தங்‌ காற்பொடி யேசொல்‌ லென்னிலன்‌
புண்டெனக்‌ கதுகவி யுகக்கு முண்மையே
கண்டறி மஞ்சனக்‌ காப்பொ டும்பல
கொண்டிழைப்‌ பதுமது வாகுங்‌ கோதிலாய்‌. 31

ஆதலாற்‌ கவியணி மாலை சாத்தியே
‘ததொழித்‌ தெந்தனைச்‌ சேர்தல்‌ வேண்டும்பா
வோதிட முடிவுறா தெனின்மற்‌ றொன்றுகேள்‌
போதணி மாலையைப்‌ பொருந்தச்‌ சாத்தியே. 32

என்னைவந்‌ தடைந்திட வேண்டு மீதலால்‌
பின்னையொன்‌ நிலையென வுரைத்துப்‌ பின்னரும்‌
முன்னைநாள்‌ விட்ணுசித்‌ தன்மு யன்றிது குன்னையே யிழைத்தன னெனவுஞ்‌ சாற்றினான்‌. 33

அவ்வுரை கேட்டலு மவ்வி ரண்டையும்‌
வெவ்வியேற்‌ கருள்செய வேண்டு மென்றிவன்‌
ஒவ்விய மனதொடு முரைப்ப வாழியான்‌
செவ்வியோ யம்முறை செய்கென்‌ றோதியே. -34

திருப்பள்ளியெழுச்சி உதயம்‌
அன்னவன்‌ திருமுடி யதிற்பொ ருந்துறத்‌ : தன்னிரு பதந்தனைச்‌ சார்த்த லோடுமே
இன்னிசை திருப்பள்ளி யெழுச்சி யென்பதைப்‌
பன்னினன்‌ கதிரவ னென்னும்‌ பத்தரோ. 35.

திருமாலை புனைந்தார்‌
தலங்களிற்‌ இறந்த? ரரங்கந்‌ தன்னிலே
யிலங்குமா லலதுவே றறிந்தி லேனென்றே
அலங்கலை யிசைபெறு மன்ப றைந்தனன்‌
நலங்கெழு செய்யுளோர்‌ நாற்பத்‌ தைந்தரோ. 36 :

“g7has SoG Qamgd மால்‌ அல்லது வேறு 2 NGwer” என்பது
தொண்டரடிப்பொடியாரின்‌ உறுதிப்பாடும்‌ உளப்பாடுமாகும்‌, இருவேங்கட
முடையான்‌. இது குறித்து வருந்தியதாகச்‌ சொல்லப்பட்டு வருகின்றது.
**தெண்டிரைசூழ்‌ அரங்கரையே தெய்வமென்றான்‌ வாழியே”’ என்பர்‌ அப்பிள்ளை. 1!
**தென்னரங்க . மணவாளற்‌ கன்பு மிக்குச்‌ செப்பிய நற்றிருமாலை’” என்பர்‌ ;
கவிதார்க்கக சிம்ஹர்‌ (பிரபந்த சாரம்‌).

நந்தவனப்‌ பணி
இம்முறைப்‌ பாவைம்ப தைந்தி சைத்தபின்‌
விம்முறு முவகையின்‌ விரைவி னேகியே
மும்முதல்‌ ஆகுமம்‌ முகுந்த னோதிய .
அம்முறை திருநந்த வனம்வைத்‌ தானரோ. 37

குல்லைபா திரிமருக்‌ கொழுந்து ௯விளம்‌
முல்லைபுன்‌ னைகரு முகைகு ருக்கத்தி
மல்லிகை யொடுமிரு வாட்டி யேமுதல்‌
சொல்லுபூஞ்‌ செடியெலாந்‌ துன்ன வைத்தனன்‌. 38

பக்குவம்‌ செய்தவன்‌ யாவும்‌ செய்தலால்‌
மிக்கபூ மாலைகள்‌ விளங்கு றத்தொடுத்‌
தொக்குமா றரங்கர்க்கு மரங்கம்‌ வாழ்த்திட
மிக்குறச்‌ சாத்துவன்‌ விருப்பி னோடுமே. 39

அரங்கன்‌ அருளிப்பாடு
இன்னணம்‌ பலபக லியற்ற வோர்பகல்‌
பொன்னரங்‌ கேசர்பூ மாலை கொண்டணை
யன்னவன்‌ மாமுக தோக்கி யன்றுநீ
சொன்னபா மாலையைச்‌ சொல்லு கென்னலும்‌. 40

இப்பெரும்‌ பாக்கிய மெய்திற்‌ றெற்கெனா
ஓப்பரு மகிழ்சிறந்‌ தோங்கத்‌ தான்முனஞ்‌
செப்புமப்‌ பாடல்கள்‌ செவியு றும்படி
அப்பொழு தோதினா னடிவ ணங்கியே. 41

பாடினார்‌ உருகினார்‌
பண்கொளப்‌ பாடல்கள்‌ பாடல்‌ தோறுந்தன்‌
கண்களா ஸந்தநீர்‌ கனிந்து திர்ந்திடப்‌
புண்களா ர௬டல்மயிர்‌ பொடித்திட்‌ டோங்குறும்‌
எண்கொளா வுருக்கமுற்‌ நிரங்கி நின்றனன்‌. 42

ஆழ்வார்‌ அரங்கனில்‌ கரைந்தார்‌
இரங்கிறின்‌ நிடுமவற்‌ கிரங்கி யின்பமோ
டரங்கரு மருகழைத்‌ தழுந்த வேதன. துரந்தனி லணைந்திட வவனு மொன்தறியே
கரந்தனன்‌ நீர்ப்பனிக்‌ கரைந்த தொப்பவே. 43

பயன்‌
ஆங்கவ ஸிம்முறை யரங்கர்‌ தந்திருப்‌ –
பூங்கழற்‌ பாடியே பொருந்தி யுற்றவித்‌ இங்கிலாச்‌ சரிதத்தைச்‌ செவியி னுள்ளுறப்‌
பாங்குடன்‌ கேட்பவர்‌ பதவி சேர்வரே. 44-

அன்னசீர்க்‌ கவிகளோ ரைம்பத்‌ தைந்தினில்‌
பன்னக வணையினான்‌ பதிகள்‌ மூன்றதாம்‌
பொன்னரங்‌ கம்வட மதுரைப்‌ பூம்பொழில்‌
மன்னு£ ரயோத்திமா நகர மென்பவே. -45-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌. மங்களாசாசனம்‌ செய்த இவ்விய
தேசங்கள்‌ மூன்று. அரங்கம்‌, வடமதுரை, அயோத்‌இ. பாடியபதி- திருவரங்கம்‌
ஒன்றே. மற்றைய இரண்டு இிவ்ய தேசங்கள்‌ சார்பாகப்‌ பேசப்பட டுள்ளன,

குலசேகரர்‌ வரலாறு கூறுவோம்‌
தோகைய ரின்பங்கொள் தொண்டர்‌ காற்பொடி
நாகணை யானைநண்‌ ஸணியது ரைத்தனஞ்‌
சாகரம்‌ சூழ்புவி தன்னை யாள்குல
சேகரன்‌ சரிதமுஞ்‌ செப்பு வாமரோ. 46-

தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றிற்று.

——–

குலசேகராழ்வார்‌ திருவவதார அத்தீயாயம்‌
வெண்பா
மா? புனர்பூசங்‌ காண்மினின்று மண்ணுலகீர்‌
தேசத்‌ இவசத்துக்‌ கேதென்னிற்‌- பேசுகின்றேன்‌
கொல்லி நகர்க்கோன்‌ குலசே கரன்பிறப்பால்‌
நல்லவர்கள்‌ கொண்டாடும்‌ நாள்‌.
(உபதேசரத்தினமாலை, 14.)

வஞ்சியர்‌ மன்னர்‌
நாடக வரங்கினு ணடம்ப யின்றிடும்‌
ஆடர வல்குலார்‌ யாழி னாங்கிசைப்‌
பாடலைக்‌ குயிலினம்‌ பயிலுஞ்‌ சோலைகுூழ்‌
கூடலிற்‌ கோத்துரை கொண்டிட்‌ டாள்பவன்‌. 1

நஞ்சினுங்‌ கொடுந்தொழில்‌ நடத்தும்‌ இயரை
அஞ்சுற வடக்கிநல்‌ லறத்தி னுற்றுளோர்‌
விஞ்சுறத்‌ தனிச்செங்கோல்‌ விளங்க வோச்சிடும்‌
வஞ்சியர்‌ வேந்தனாம்‌ மன்னர்‌ மன்னனே.–2-

ஆழ்வார்‌ அவதாரம்‌
அன்னவன்‌ தவத்தினா லவன்றன்‌ தேவியாம்‌
பொன்னனாள்‌ வயிற்றிடைப்‌ பூவு ளாரயன்‌
தன்னொடும்‌ வேதமுந்‌ தரும மும்ம௫ழ்‌
துன்னிடப்‌ புகழ்ந்துமூன்‌ துதிசெய்‌ தேத்தவே. 3

வைகுந்தத்‌ தமரும்‌ நாரணன்‌
நேசமா ரருட்படி நிமல மாமதி
மா௫ியிற்‌ புனர்த்தநாள்‌ வளமுற்‌ றோங்குறத்‌
தேசுறு புதல்வனும்‌ செனித்து ளானரோ. 4

வானுளோர்‌ மலரின்மா மழைபொ ழிந்தனர்‌
மோனமா ர௬ுளங்கொளும்‌ முனிவர்‌ வாழ்த்தினர்‌
ஞானமுந்‌ தருமமும்‌ நனிம கிழ்ந்தன
தானமும்‌ மெய்மையுந்‌ தலையெ டுத்ததால்‌. 5

சடங்குகள்‌ செய்தனர்‌
இத்தக வாசுவந்‌ தெழுந்த மைந்தனுக்‌
கத்தனு மன்னையு மடுத்து ளோர்களுஞ்‌
சித்தமுள்‌ மகழ்வுறச்‌ செய்வ செய்துபின்‌
வித்தமும்‌ வழங்கினர்‌ விதிவ மாமையே, 6

தன்னிகர்‌ தனத்தின்பாற்‌ றாய எளிப்பவேழ்‌
துன்னுநற்‌ .நினத்திடைக்‌ காப்பு மிட்டனர்‌
மன்னுமோ ராறெனும்‌ மாம தஇிக்கணே அன்னபி ராசன மதுவுஞ்‌ செய்தனர்‌. 7-ஆனெனும்‌ . மதிக்கண்‌ – ஆற வது மாதத்தில்‌ அன்னப்‌ பிராசனம்‌ – அன்னம்‌ ஊட்டுதல்‌.

வில்லிடு பானுவின்‌ விளங்கு மெய்யெலாம்‌
புல்லிடப்‌ பலபல பணிகள்‌ பூட்டியே
கொல்லியங்‌ கோன்குல சேக ரன்‌எனச்‌
சொல்லின ரொருதிரு நாமந்‌ துன்னவே. 8

அம்புலி யழைத்தலு மணிகொள்‌ சிற்றிலை
வெம்பீயே சிதைத்தலும்‌ விலங்குஞ்‌ சற்றிர
தம்புவி நடத்தலுஞ்‌ சாற்று பற்றவும்‌ பம்புமப்‌ பருவத்திற்‌ பயிற்று வித்தனர்‌.-9

ஓத்திடச்‌ சவளமோ டுபன யம்பல
வித்தையப்‌ பியாசமும்‌ வேலும்‌ வாளொடும்‌
சித்திரச்‌ சலைமுத லாகச்‌ செப்புமுப்‌
பத்துட னிரண்டெனும்‌ படைப யிற்றலும்‌. 10

திருமணமும்‌—ஆட்சியும்‌
ஈதெலா மமைவுற வியற்று வித்தபின்‌
ஓதுமங்‌ கலத்தின முறுநல்‌ லோரையில்‌
சூதெனு மிருதனத்‌ துவர்த்த செய்யவாய்‌
மாதினை விதிமுறை மணஞ்செய்‌ தாரரோ,. 11

பணிமுடி சுமந்தபார்‌ பரிக்க வவ்விரு
இணிபுய வரைகுல சேக rer menor
அணியரி யாசனகத்‌ இருத்தி யம்பொனின்‌
மணிமுடி. தரித்தனர்‌ மகழ்வி னென்பவே. 12

ஆங்கவன்‌ புவிபுரந்‌, தருளு நாளினில்‌ | ்‌
தீங்குறு கலிமுகம்‌ சிறுத்து நைந்தது; 3 ஓங்கெே நல்லறம்‌; உரைத்‌ திடும்மிடி
நீங்கின; செல்வமும்‌ நிலைபெற்‌ நிட்டதால்‌. 13

ஆழ்வார்‌ மாண்புகள்‌ ட
தேறுள மதனிற்றன்‌ றேவி பாலலால்‌ F
வேறொரு மடந்தையர்‌ விருப்பு றான்‌;மனு
கூறிய நூன்முறைக்‌ குடிகள்‌ பாலிறை ்‌
ஆறினி லொன்றலா லதிகங்‌ கொள்கிலான்‌. -14

வலிவுறும்‌ பசியிலான்‌ கன்றி னம்வரும்‌
புலிமுலைப்‌ பாலினைப்‌ பொருந்தி யுண்டிடும்‌
நலிவுறும்‌ பூனையின்‌ முலையை நாவுகொண்
“டெலியினம்‌ பற்றொடு மினித ருந்துமால்‌. 15

மாந்தர்தங்‌ குலத்தரு மத்தி னுண்மையைத்‌, தாந்திறம்‌ பாவகை சமைத்தி ழைப்பரால்‌;
ஏந்திள முலைநலா ரிசைகொள்‌ கற்பினின்‌
றார்ந்தத னிலுந்தவி ராது தாங்குவார்‌. 16

மதிதொறு மும்மழை வழங்கும்‌; மாவயல்‌.
கதிர்பெறுஞ்‌ செந்நெலுங்‌: கரும்பும்‌ வாழையும்‌
முதிர்சுவைக்‌ கனிபலா முதல வோங்கி௨
நதிகளுங்‌ குளங்களு நிறைந்து நண்ணுமால்‌. : 17

இத்திறம்‌ யாவுமாங்‌ கெழில்பெற்‌ றோங்கடைத்‌
துத்தம நெறிமுறை தவிர்கி லாதமை
சித்திரச்‌ சலையிரா கவன்றன்‌ செல்வநா
டொத்திட வவனுல கோம்பு நாளிடை. 18

(வேறு)
இறைவன்‌ திருவருள்‌ பெறல்‌
ஒருபக லிரவின்‌ வேந்த
னுறுதுயில்‌ வளருங்‌ காலைப்‌
பெருகுறு தனது நித்ய விபூதிலீ லாவி பூதப்‌
பெருமைக ஸஎிரண்டுங்‌ காண்பித்‌
தரிதினிற்‌ பெயர்ந்து போனான்‌
மருதிறத்‌ தவழ்ந்து வஞ்ச மல்லரைக்‌ குமைத்த மாயோன்‌. 19

இறைவன்‌ தன்னுடைய லீலா விபூதியையும்‌
தித்திய விபூதியையம்‌ காண்பித்தான்‌. லீலாவிபூதியைக்‌ காட்டியது பந்தபாசங்‌
கள்‌ நீங்குதற்காக; நித்திய விபூதியைக்‌ காட்டியது உள்ளத்தில்‌ ஞானமும்‌
வைராக்கியமும்‌ வருவதற்காக,

அந்தநல்‌ லுருவங்‌ காணா
வதிசய மிகவுந்‌ தோன்றிச்‌
சந்தையா னந்த வெள்ளந்‌
தேக்கிட வெண்க ணான்வாழ்‌
உந்திநா ரணன்வி பூதி
களையனு பவித்து றாமல்‌
இந்தநா ளளவும்‌ எல்லே
யிழந்தன மெனநைந்‌ தானால்‌, 20

ஆழ்வாரின்‌ விரக்தி
ஆயவ னிவ்வா றாய்நொந்‌ |
“… தழுங்கநெஞ்‌ சுருகுங்‌ காலை
மாயிரு ஞாலத்‌ தூடு
மஇழ்ந்துபல்‌ லிடங்கள்‌ தோறும்‌
பாயிரு ளகலக்‌ க&ீழ்பாற்‌
. பருப்பதத்‌ துதித்த வெய்யோன்‌,
சேயிரு விசும்பின்‌ மேலாய்ச்‌ —
செலுத்தின னெழுமாத்‌ திண்தேர்‌. . 21-

பருதிவந்‌ துதித்த லோடும்‌ படர்வுறுங்‌ கருமந்‌ தம்முள்‌
கருதியோ தமைச்சர்‌ தானைத்‌
தலைவர்கள்‌ கணித நூலோர்‌
சுருதியந்‌ தணர்‌ களேவற்‌
ஹறொழில்வலோர்‌ பலருந்‌ தெவ்வர்‌
குருதிதோய்‌ வடிவாள்‌ வேந்தன்‌
கொலுமணிக்‌ கூடஞ்‌ சார்ந்தார்‌. 22

சார்ந்தவ ர௬ுதையங்‌ கண்டோர்‌
சாமநே ரளவும்‌ பள்ளி
தீர்ந்தர செழுந்தி லாத செய்கைதேர்ந்‌ தென்னோ வென்னா,
பேர்ந்தவ ரணுடுத்‌ தாதிப்‌ | பேதையர்க்‌ குணர்த்த, அன்னோர்‌
சார்ந்தரு குணரு மாறு
சைகைகள்‌ பலவுஞ்‌ செய்தார்‌. 23

ஆதலா லரச ஸூள்ளந்‌
தணிந்தெழுந்‌ தவர்க ளோடும்‌
கோதிலா சார வாசல்‌
குறுகியே குறுகி னோர்கட்‌
கோதரும்‌ பணிகள்‌ நாளு
முரைத்தலி னுரைத்தி டாதோர்‌
– மூதறி வமைச்ச னோடும்‌:
மின்னணம்‌ மொழிய லுற்றான்‌. 24

ஆழ்வார்‌ மொழிகள்‌
உதியுற்ற குமிழி போலா
யொழியுமிவ்‌ வுடலத்‌ தோடும்‌
பதிமனை தனங்கள்‌ தாரம்‌
பாலர்கள்‌ மாதா என்ன
மதிமருண்‌ டுறுமிப்‌ பொய்யாம்‌
வாழ்வினில்‌ நிசங்க ஞண்டோ?
கதியுயிர்‌ பெறுமா றுன்னா
தவத்தினிற்‌ கழிந்த இந்நாள்‌. 25

இன்னுமெத்‌ தனைநா ஸளிவ்வா
ஹொழிக்கலா மினிமே லேனும்‌
மன்னுசாத்‌ மீக ரோடும்‌
மருவியங்‌ கவர்க ளான்மற்‌
றென்னுயிர்க்‌ குறுதி நாடல்‌
வேண்டும்நீ யிதற்கு பாயம்‌.
பன்னுதி மதிவ லோயெொன்‌
றன்னவன்‌ பகர்த லோடும்‌. 26

அடியார்களின்‌ நட்பு
நல்லுரை பகர்ந்தான்‌ வேந்தன்‌
எனவுளம்‌ நயந்தா னாக௫ிச்‌
, சொல்லுமுன்‌ பரம பாக
வதர்கள்கூழ்ந்‌ தணுகு மாறாய்‌ மல்லுறுந்‌ தோளான்‌ முன்னர்‌
வரவழைகத்‌ திருத்த லோடும்‌
அல்லல்கீர்ந்‌ தவாரக ளம்பொன்‌
‘னடிபணிந்‌ இருக்கை நல்கி; 27

அவருடன்‌ சிறந்த காலச்‌
சேபஞ்செய்‌ ததற்பின்‌ மற்றோர்‌
எவர்களு முடன்சென்‌ றெய்த
வெழிற்கொலுக்‌ கூட மெய்தி.
இவர்மணி யணையின்‌ மேல்வீற்‌
றிருத்தர சாட்டி மேவி
உவர்க்கட லுடுத்த பாரோம்‌
புறுதொழில்‌ நத்தி லானால்‌. 28

ஆழ்வார்‌ சுவைத்த பாசுரங்கள்‌
இன்னவா நாகப்‌ பன்னா
ளிசைபெறு முதன்மூன்‌ றாழ்வார்‌
மன்னுசீர்‌ பெரிய ஆழ்வார்‌
மங்கையர்‌ மழிசை யாழ்வார்‌-துன்னுநற்‌ றொண்டர்‌ தங்காற்‌
பொடியிவர்‌ சுருதி சாரம்‌ .
பன்னுசெந்‌ தமிழ்க ளெல்லாம்‌
பரிவினோர்ந்‌ துருகி னானால்‌; 29

வேறுள முனிவர்‌ பல்லோர்‌
விளம்புநல்‌ லிரத மூறும்‌
நாறுபூந்‌ துளவ மாலை
நாரணன்‌ சரிதம்‌ கேளாப்‌
பாறுசூழ்‌ வடிவாள்‌ வேந்தன்‌
பரிவினாள்‌ தொறுமிவ்‌ வாறாய்த்‌
தேறுளத்‌ துடனே செங்கோல்‌
செலுத்தினன்‌ வருமந்‌ நாளில்‌; 30

பாம்புக்‌ குடத்தில்‌ ஆழ்வார்‌ கைவிடல்‌
ஒருபக லதனில்‌ வந்த
உயர்குல சேக ரன்றன்‌
திருமனைக்‌ கருவூ’ லத்தில்‌
இகழிரத்‌ தனப்பொன்‌ னாழி
பொருவில தொன்று கெட்டுப்‌
போகலுங்‌ காவ லாளர்‌
வெருவிமந்‌ திரியி னோடு
விளம்பினர்‌; விளம்ப லோடும்‌, 31

மந்திரத்‌ தலைவர்‌ சென்றவ்‌
வள்ளலுக்‌ குரைத்த லோடும்‌
அந்தவா சகங்கள்‌ கேட்டவ்‌
வரசனு மவரை யாங்கண்‌
வந்தவர்‌ யாவர்‌? வந்த
வாறுணர்ந்‌ ததனை நம்பால்‌
தந்திடு மாறன்‌ ஜனோர்க்குச்‌.
சாற்றுமென்‌ றுரைத்தான்‌ அன்றே. 32

இனையவா றவர்கள்‌ சென்றாங்‌
தியம்பலு மதனைக்‌ கேளா
அனையகா வலரு மெவ்வா
றாய்ந்திட .லாகு மென்றோர்‌
நினைவுகொண் டரவந்‌ தன்னை
நிறைகுடம்‌ பொருந்த விட்டுத்‌
தனையணி முடிகொள்‌ வேந்தன்‌
தன்றிரு முன்னர்‌ வைத்தே; 33

இங்குளோ ரிதனிற்‌ றங்கை
யிட்டிட வேண்டு மென்று
அங்கவர்‌ மொழியைக்‌ கேளா…
அரசனிவ்‌ வவையி ஸனுற்றோர்‌
குங்களி லெவார்மே லையஞ்‌
சாற்றுமி னென்ன லோடும்‌
துங்கமா முடியோய்‌ கேட்டி
யெனவவர்‌ சொல்ல லுற்றார்‌. 34

அந்தக னேவல்‌ கொண்டா
ருயிர்கவர்‌ வார்க ளேனும்‌
வந்தணு குதற்கொவ்‌ வாறின்‌
மணியர மனையின்‌ வாயில்‌
இந்தபா கவத ரல்லால்‌
யாருமிங்‌ கெய்திற்‌ றில்லைச்‌
சிந்தையுள்‌ ளிவர்மே லைய
மெனவவர்‌ செப்ப லோடும்‌; 35

(வேறு)
செப்பு மம்மொழி யிருசெவி குறுகலுஞ்‌
செங்கண்மாற்‌ கடியாராம்‌
விப்பி ரர்குடம்‌ பாம்பினிற்‌ றங்கர
மேவவைக்‌ திடுதற்காய்‌
ஒப்பு றாவுள மமைந்த னருலகினை
யோம்பிடு முடிவேந்தன்‌
குப்பு றாஅரி அரியென விருகரங்‌
கொடுசெவி மறைத்தானால்‌. 36

வார ணம்முறை யிடுதலின்‌ விரைவொடு
வந்துகாத்‌ தருள்செய்த
நார ணன்றி ர௬வடியர்மேற்‌ கொடுமொழி
நாடியிங்‌ குரைசெய்யுங்‌
கார ணம்நினை வுறிலிவர்‌ மேற்குறை
கருதுதல்‌ வழக்கென் றால்‌
தார ஸணிப்புரந்‌ திடலினம்‌ பாலினோர்‌ கதுவறெனத்‌ தளர்வுற்றான்‌. 37

உருக னானுளந்‌ தியங்கினான்‌ பசும்பொனொத்‌ தொளிர்ந்திடுந்‌ இருமேனி கரக னானவை தநினைதொறு நினைதொறுங்்‌
கண்களா ஸீர்முத்தம்‌
பெருகி னான்வரை கொடுகடன்‌ _மதித்ததாட்‌
பிறந்தெழுங்‌ கொடுநஞ்சம்‌
பருக னானென ஊசலா டிடவுயிர்‌
பதைபதைத்‌ தனன்‌;பின்னும்‌, 38

ஆழ்வார்‌ குடத்தில்‌ கை
விட்ட அருமைப்பாட்டை **வாரங்கொடு குடப்பாம்பிற்‌ கையிட்டவன்‌”’ என்பர்‌
மணக்கால்‌ நம்பிகள்‌, :*குடப்பால்‌ விடப்பெரும்‌ பாந்தள்வாய்‌ கையிட்ட
கோவேந்தன்‌ அரசர்‌ ஏறு; கோப்பெருஞ்‌ சேரமான்‌” என்பது அழகர்‌ பிள்ளைத்‌
தமிழ்‌.

ஆழியைக்‌ குடத்தில்‌ இருந்து எடுத்தார்‌
சந்தை யோர்முறை தெளிவுகொண்
டரியணை தீர்ந்தெழுந்‌ தெதிர்சென்றே
இந்த மெய்யடி யார்களவ்‌ வாழியை
எடுத்தில ரெனவேதான்‌
முந்தி யேயர வுறுங்குட மதிற்கர
முறையினிட்‌ டதற்குள்ளாய்‌
அந்த காவலர்‌ வைத்திடு மணிவிர
லாழியை பெடுத்தீந்தான்‌. 39

கண்ட பேரவை யமைச்சர்கள்‌
முதலினோர்‌ காவல ஸனடிவீழ்ந்தார்‌
தொண்டர்‌ யாவரும்‌. மன்புகூர்ந்‌ தின்புறத்‌
தொழுதுரைத்‌ தெழுந்தார்த்தார்‌ அண்டர்‌ யாவரு மந்தர மிசையெழுத்‌
குலர்மழை பெய்தார்நஞ்‌
சுண்ட சங்கரன்‌ பிரமனே முதலினோ ்‌
ருளமகிழ்ந்‌ தனர்மாதோ. 40

திருவரங்கக்‌ காதல்‌
பின்ன ரும்பல நாள்குல சேகரன்‌
பெருகுவப்‌ பொடும்வாழ்நாள்‌
மன்னு மிவ்வுட லெடுத்திடுஞ்‌ சலுகினை
மாய்த்தொழித்‌ இடுமாறு
இன்ன ரங்கொடு தும்புரு நாரதர்‌
களர்த்துமின்‌ னிசையோங்கும்‌
பொன்ன ரங்கமா நகரினைக்‌ காண்குறப்‌
பொருந்துமோ நமக்கென்னா; 41

“நெஞ்சி ஜூடுற நினைந்திரு எிரியவின்‌ றேனிரம்‌ புறும்பாடல்‌
அஞ்சி ரண்டினை யாதுமுப்‌ பதுமிசைத்‌ ‘
குழகிய மணவாளர்‌
நஞ்ச ராவணை மிசையிலங்‌ காபுரி
நகரமா னதைநோக்கா ்‌
விஞ்சு கண்வளர்‌ கோலமே மனதினுள்‌
விளங்குற வியப்புற்றான்‌. 42

குரங்க மாகடல்‌ வளைபுவி புரந்திடற்‌
றணந்துதன்‌ சுதனான
உரங்கொ டோளினன்‌ றன்வயப்‌ படுத்திப்பொன்‌
னொளிர்மணி முடிசூட்டிக்‌
குரங்கு ளங்கதிர்‌ செங்கனி யாமெனக்‌
குதிகொளும்‌ பொற்கோயில்‌
அரங்கு மாநகர்‌ யாத்திரைக்‌ கேகுவான்‌
அமைந்தவ ணடைந்தானால்‌. 43

ஆழ்வார்‌, புதல்வனுக்கு முடிகுட்டிவிட்டுத்‌ திருவரங்கம்‌ அடைந்தார்‌.
புவி புரந்திடல்‌ தணந்து- பூமிகாவலை விட்டு. **கம்பமத யானை கழுத்தகத்தின்‌
மேலிருந்து இன்பமரும்‌ செல்வமும்‌ இவ்வரசும்‌ யான்‌ வேண்டேன்‌”* என்னும்‌.
பெருமாள்‌ திருமொழிப்‌ பாசுரம்‌

அரங்கம்‌ அடைந்தார்‌
கடைந்த பாற்கட லிடைவரு மமுதினைக்‌
கண்டவா னவரென்ன
அடைந்து ளான்றனை யெதிர்கொளத்‌ தலத்தடி
யவர்களிப்‌ புளங்கொள்ளா
உடைந்து கண்வழி யொழுகுநீ ராறெனு
முயர்விர சையின்‌ நன்னீர்‌
குடைந்து வைணவ ரடிமலர்‌ தொழுதலும்‌
்‌ ஆசிகள்‌ பலகூறி, –44

ஐய நீயிவண்‌ வந்ததெங்‌ குலத்தவ
மாமென வுபசாரம்‌
செய்யு மாங்கவ ரொடுமிவ னலைமணி
சிந்துகா விரியாற்றின்‌
துய்ய நீர்படிந்‌ தாறிரு இருமணும்‌
துலங்கெட வளங்கண்டு
பைய வேகடந்‌ துட்புகுந்‌ இிருகணீர்‌
பனித்துமுத்‌ துதிர்த்தானால்‌. 45

கண்டார்‌ அரங்கனை
திருந்து றுந்திருப்‌ பெட்டகந்‌ தனைப்பிர தக்கணம்‌ ‘புரிந்தாங்குப்‌
பொருந்‌ துறும்மணத்‌ தூணரு
காகியே புதியதா மரைபூத்தோர்‌
கருந்த டங்கிரி யெனவளர்‌
மாயனைக்‌ கண்டிரு கணினாலும்‌
அருந்து வானென
, இருகியே ஆனந்த மடைந்தானால்‌. .. 46.

திருவரங்கக்‌
கோவிலைப்‌ பெட்டகம்‌ என்கின்றனர்‌. அரிசமய இீபம்‌ ஐந்து இடங்களில்‌ இவ்வாறே பேசுகிறது.
“*பூரங்கு பெருந்திரு வைத்நூற்‌ றிரட்டிப்‌ பணவிடையில்‌
தூங்கு மதிலொரு மாவேற்‌ றமுண்டு சு.ரர்முனிவர்‌
ஆங்கவர்‌ செப்பிற்‌ கடங்கா துலகமனைத்‌ தும்பெறும்‌
ஓங்கு மரங்கத்‌ திருப்பெட்‌ டகத்து ளொருமணியே””
என்ற பாடல்‌ தனிப்பாடல்‌ திரட்டில்‌ உள்ளது; சுவைமிச்கது. இருந்த
குலக்குமரர்‌ தமை இருகண்ணின்‌ முகந்தழகு பருக நோக்கி£” என்பர்‌ கவிச்‌ சக்ரவர்த்திகள்‌ (பாலகாண்டம்‌),
**தஇிருவனுரு நயனமுற நாடிமணத்‌ தாணதனைப்‌ பற்றி மன்னன்‌ மருவுமனம்‌ வாய்ந்தவடி யாருடனே கூடிமிக வாழ்த்தி நின்‌. றான்‌’*

முகுந்தமாலை தொடுத்தார்‌
மிகுந்து மேல்வரும்‌ பிறப்புடன்‌
இறப்பையும்‌ விடுத்துயர்‌ வைகுந்தம்‌
புகுந்து ளோர்களும்‌ மீண்டுற
அருத்திகொள்‌ பொன்னரங்‌ கனைவாழ்த்தத்‌
தகுந்த தேதென நினைவுகொண்
டேதிறத்‌ தமிழினால்‌ தொடுத்தாற்போல்‌
முகுந்த மாலையொன்‌ wo me Gouri
கலைவட மொழியினால்‌ துதிசெய்தான்‌. 47

வேங்கடம்‌ செல்க
பாத தாமரை மீதுதன்‌
முடியுறப்‌ பணிந்தெதி ரிடைநின்ற இதி லாக்குல சேகரற்‌
குகந்தவன்‌ இருமுகந்‌ தனைநோக்கி
தாது சேர்மலர்ப்‌ பொழில்வட
வேங்கடந்‌ தனைமதித்‌ தெய்தென்னா
ஓ.தி னானிக்கு வாகுவாற்‌ சத்திய உலகநீத்‌ இவண்வந்தோன்‌. 48

“*பணியரங்கப்‌ பரஞ்‌
சுடரை யாங்‌ காண–அணியரங்கந்‌ தந்தானை அறியாதார்‌ அறியாதார்‌’* என்பர்‌
கவிச்சக்ரவர்த்திகள்‌ (பால காண்டம்‌),

இருசெ விக்கணவ்‌ வாசக
மூறுதலு மிதுவதென்‌ றிரண்டூரார்‌ ஒருவ ராமென வுளந்தெளிந்‌ .
குற்புத முறப்பெரு குவப்போடும்‌
வருவ :-னாங்குநின்‌ மலர்ப்பதந்‌
தொழற்கென மறித்தவன்‌ றனைப்போற்றிக்‌
குரும ணிச்செழுங்‌ கோயிலன்‌
பர்களுளங்‌ கொண்டன னடந்தானே. 49

திவ்ய தேசு யாத்திரை
வச்சி ரப்படை வானவர்‌ .
வேந்தனும்‌ மலர்மிசை யுறைவோனும்‌:
முச்சி ரப்படைச்‌ சுடலையி
னாடியு -முளரியங்‌ கரம்தங்கள்‌
உச்ச கைக்கொடு முறைதொழு
தேத்திட வுவந்தவர்க்‌ கருள்செய்யும்‌
கச்சி யம்பதி பேரரு ,
ளாளர்தம்‌ கழல்பணிந்‌ தவணீங்கி; 50

மரும லைச்செழு மணியின
மெறிதரும்‌ வளமலி மலரோடை
செரும லைக்கொடு விடங்கரின்‌
வாய்ப்படுஞ்‌ சறுகண்மும்‌ மதவேழம்‌
பொரும லைத்தவிர்த்‌ திடவொரு
கருமலை போலவந்‌ தவன்வாழும்‌
இரும லைத்தல மடைந்தனன்‌வளமெலாஞ்‌ ிந்தையுள்‌. தெளிவுற்றான்‌. 51

திருவேங்கடம்‌ அடைந்தார்‌
மூவ ரும்‌அயன்‌ கயிலைவா .
மிறையவன்‌ புரந்தரன்‌ முதலாய
தேவ ருங்கண நாதரும்‌
முத்தரும்‌ சித்தர்மற்‌ றுரைசெய்யும்‌
யாவ ரும்‌அவ ரவர்களோ
ருருவமைந்‌ தணுகுறும்‌ பெருஞ்சீர்த்தி மேவ ருந்திரு வேங்கட மகிமையை வியந்துளங்‌ கனிவுற்றே. 52

(வேறு)
பதிகம்‌ பாடினார்‌
ஊனேறு செல்வமென வோர்பதினோர்‌ பாவுரைத்து
மானேர்‌ விழியலர்மேன்‌ மங்கைஇரு முன்னிலையில்‌
தானே தனக்குறிக ரானான்றன்‌ தாள்வணங்க்‌
்‌ . கோனேரி யாடிக்‌ குலவிப்பன்‌ னாளுறைந்து; 53:

வித்துவக்கோடு
அம்மா நகர்விட்‌ டணிவித்‌ துவக்கோடாம்‌
செம்மா நகரடைந்து சிந்தை தளர்ந்தழைத்த
கைம்மா இடுக்கண்‌ களையக்‌ கரைசார்ந்த
பெம்மான்‌ கழலிணையைப்‌ பேணித்‌ தொழுதனனால்‌, 54

தருதுயரந்‌ தடாயேலுன்‌ சரணல்லாற்‌ சரணிலையென்‌
தொருபதிகந்‌ தன்னை யுகந்தாங்‌ குரைத்தருளிப்‌ பொருவில்‌ புகமாளன்‌ போயொழியப்‌ பற்பலநாள்‌ மருவி யுறைந்துபினம்‌ மாநகர்விட்‌ டேகனனால்‌. 55-

திருவாய்ப்பாடி
தாய்ப்போல்‌ வடிவாகத்‌ . தன்னுருவம்‌ மாற்றிவந்த
பேய்ப்பா டுறமுலையிற்‌ பெய்விடத்தோ டாருயிரை
வாய்ப்பா லுறிஞ்சியிடும்‌ மாதவனார்‌ தாம்வாழும்‌
ஆய்ப்பாடி ‘ சென்றே யடைந்தவன்தாள்‌ பூசித்தே;–56-

முத்தாரம்‌ பூணும்‌ முகிண்முலைச்செவ்‌ வாம்பலின்வாய்‌’ ்‌
கொத்தார்‌ மலரின்‌ குழற்கோ வியாகூடி :
வித்தார மாக விரித்துரைக்குஞ்‌ சொற்பொற்பா 4
பத்தாங்கு பாடிப்‌ பலநா ரறைந்தனனால்‌. 57

வட மதுரை
மூன்புசன னத்தில்‌ முயன்ற பெருந்தவந்தான்‌
பின்பு தொடர்ந்தடுத்த பெற்றியால்‌ பேருலகில்‌
அன்பு மிகுந்தே யடுத்தோர்‌ தமக்குதவ
என்பு முரியான்‌ வடமதுரைக்‌ கெய்தினான்‌. 58

தேவகியாதல்‌
தேவகுியா டானீன்ற செல்வத்‌ இருமதலை
்‌-. நாவி லினிதாக நவில்குதலைச்‌ சொற்கடமை
ஆவலொடுங்‌ கேட்டிலமே யென்றாங்‌ கவளுரைத்த
பாவனையா கப்பதினோர்‌ பாட லுரைத்தனனால்‌, 59

கண்ணபுரத்தில்‌ உறைதல்‌ ‘
அப்பதியி லன்னோ னடைவுடனே வைகுதலும்‌
செப்பமுடன்‌ பற்பலநாள்‌ செல்ல வவணீங்கி
எப்புவியி னுள்ளு மிணைதனக்குத்‌ தானல்லால்‌
ஒப்பிலாக்‌ கண்ணபுரத்‌ துற்றாங்‌ குறைந்தனனால்‌, . 60

தாலாட்டுப்‌ பாடினார்‌ —
கண்ண புரத்தானைக்‌ கவுசலையா டானீன்ற
விண்ணவர்க டந்துயர வேர்களைந்த ராகவனை
வண்ணமணித்‌ தொட்டில்‌ வளர்த்தித்தா லாட்டுதலாய்‌
பண்ணியலும்‌ பாடல்களோர்‌ பதினொன்று பாடினனால்‌, 61

தசரதனானார்‌
பின்னுந்‌ தசரதனார்‌ பிள்ளைவனம்‌ போயிடலும்‌
அன்ன தனைக்‌ கேட்டவனும்‌ ஆராமை பட்டதனைப்‌
பன்னும்‌ பனுவல்களோர்‌ பதினொன்‌ றி னளைப்பாடி
மன்னி யிருந்தானம்‌ மாநகரிற்‌ பற்பலநாள்‌. 62

சித்திரகூடம்‌
அம்மா நகர்விட்‌ டணி௫த்ர கூடமெனும்‌
செம்மா நகரதனைச்‌ சேர்ந்தணுடுத்‌ தில்லையுறை
கைம்மா வுரித்துகந்த கண்ணுதலான்‌ போற்றிடவாழ்‌
பெம்மான்‌ இருவடியைப்‌ பேணித்‌ தொழுதனனால்‌. 63-கைம்மா உரி – யானை
யின்‌ தோல்‌.

இராம காதை இசைத்தார்‌
வானவர்க ளேத்துபுகழ்‌ வான்மீக னென்றுரைக்கும்‌
மோனமுனி முன்னாள்‌ மொழிந்தவிரா மாயணத்தை
‘ரானமொமழி யாந்தமிழி லைந்தோ டறுகவிதை
கானமுட னேயிசைத்தான்‌ கன்னலிர தம்மெனவே, 64

தில்லைச்சித்‌ திரகூடத்‌ துட்சேர்ந்‌ இனிதுறையும்‌
தொல்லைச்‌ செழுமறைக்கும்‌ தோன்றாதான்‌ தாள்தொழுது
கொல்லி மலைக்கோன்‌ குலசே கரப்பெருமாள்‌
எல்லையில்சீ ரின்பத்‌ தினிதுறையு நாளின்கண்‌. 65

ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தார்‌
நாரா யணனெனவே தான்மறையால்‌ விப்பிரர்கள்‌
பாரா யணஞ்செய்‌ பரந்தாமன்‌ றன்னருளால்‌ ‘
ஆராய்ந்‌ துணர்த்தற்‌ கரிதாம்வை. குந்தத்தின்‌ சீரார்‌ மணிமண்‌ டபஞ்சேர்ந்‌ தஇனிதிருந்தான்‌. 66

அன்ன குலசேக ராழ்வாருந்‌ தண்தமிழால்‌
பன்னும்‌ பனுவல்க ளோர்பத்துப்‌ பதிகங்கள்‌
மன்னுங்‌ கவிதையில்‌ மாதுகுடி. வாழ்மார்பன்‌
துன்னுந்‌ திருப்பதிக ளெட்டெனவே’ சொல்லுவரால்‌. 67

இவர்‌ பாடியது பத்துப்‌ பதிகங்களாகும்‌.-மங்களாசாசனம்‌ செய்த பதிகள்‌ எட்டாகும்‌.

சீராரும்‌ பொன்னரங்கஞ்‌ சத்திரகூ டத்துடனே
ஏராரும்‌ வித்துவகக்கோட்‌ டெமுனைநதி கண்ணபுரம்‌
காரார்‌ வடவேங்‌ கடம்வல்லை வாழொடுமேற்‌
பேராரயோத்தி நகரெனவே பேசுவரால்‌. «68

பயன்‌
இந்தப்‌ பெருங்கதையை யின்பமுடன்‌ கேட்பவரும்‌
ஒந்தை தெளிந்துரைக்குஞ்‌ செய்கையருந்‌ தேனாரும்‌
பைந்துளவோன்‌ பாதம்‌ பரிவுடனே தான்பணியுஞ்‌
மைந்தருண்டாய்‌ வாழ்ந்துிருந்து வைகுந்தம்‌ மன்னுவரால்‌. 69

பாணர்‌ காதை பகர்வோம்‌
நலமார்‌ பெருஞ்சீர்த்தி நண்ணுதிருக்‌ கூடல்வரும்‌
குலசே கரன்சரிதம்‌ கூறினோம்‌ மாகடல்குழ்‌
தலமேலு றையூர்‌ சனித்ததிருப்‌ பாணர்கதை
சொலவே தெரிந்தளவுஞ்‌ சொல்வாந்‌ தொகுத்தினியே. 70

குலசேகராழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ மூற்நிற்று.

———–

திருப்பாணாழ்வார்‌ திருவவதார ,
| அத்தியாயம்‌ ப
வெண்பா ்‌
கார்த்திகையில்‌ ரோகிணிநாள்‌ காண்மினின்று காசினியீர்‌
வாய்த்த புகழ்ப்பாணர்‌ வந்துதிப்பால்‌ — ஆத்தியர்கள்‌
அன்புடனே தானமல ஸாதிபிரான்‌ கற்றதன்பின்‌
நன்குடனே கொண்டாடும்‌ நாள்‌. ’
்‌ (உபதேசரத்தினமாலை, 10.)’

உறையூர்‌
பிறைவாணுதல்‌ மடவாரெழில்‌ பெருகுந்திரு முகமும்‌
நறையார்மது கமழுஞ்செழு நளினப்புது மலரும்‌
சிறையாரறு பதவண்டுக டெரியாவல மருசர்‌ :
உறையூரெனும்‌ பெயர்மேவிடு மொருமாநக ருளதால்‌, 1

தாமரைக்கும்‌ முகத்துக்கும்‌ வண்டுகட்கு’
வேற்றுமை தெரியாமல்‌ இருப்பதுபோல்‌, அறிஞர்கட்கு, அமலனாத பிரானுக்கும்‌
வேதத்துக்கும்‌ வேற்றுமை தெரியாது என்பது உள்ளுறை.

ஆழ்வார்‌ அவதாரம்‌
வளமேவுநு மம்மாநகர்‌ மருவுங்கடை யவரென்‌
– நுளபஞ்சம குலமிக்கட லுலகற்புகழ்‌ Oi mayb
தளமார்செழு மணிமேவுறு தண்டாமரை மலர்வந்து
அளறாமதில்‌ வளருஞ்செய லதுவேநிக ரெளவும்‌. 2’

கண்ணார்நுத லிடைவைகுறு கயிலைப்பெரு மானுந்‌
தண்ணாருமம்‌ புயமாமலர்‌ தனில்வாழிறை யவனும்‌
பண்ணார்செழு மறையும்முனி வரரும்பல பலவாம்‌
மண்ணாடரும்‌ விண்ணாடரு மெவருமகஇழ்‌ வுறவும்‌. 3

(வேறு)
கார்த்திகை யெனும்பெயர்‌ கவினுந்‌ இங்களில்‌
சீர்த்திடு முரோகிணி நாள்‌ றந்திடத்‌ –
Sigs தருளினால்‌ செந்நெ லின்மிசை
பார்த்தவர்‌ களிப்புறப்‌ பாணன்‌ தோன்றினான்‌. 4

பாணன்‌ வளர்த்தான்‌
அத்தகை யுறவவ தரித்த மைந்தனைப்‌
புத்திர னிலாவொரு புலையன்‌ கொண்டுபோய்‌
சித்தமின்‌ புற்றிளந்‌ இங்க ளின்கலை
ஒத்திட வளர்த்தன னுரிமை யோடுமே. 5

இசைப்புலமை
ஆன்றவம்‌ மைந்தனு மரிய தும்புரு
சான்றநா ரதருமே சமான மில்லென
ஏன்றநல்‌ லிராசுகா னங்க ளென்பவை -:
மூன்றெனும்‌ வயதுளே முயன்று ளானரோ. 6

ஏவிரி இணறுமுன்‌ பெழுந்து தாமரைப்‌
பூவிரி கதிர்குணப்‌ பொருப்பு றாமுனம்‌
மீவிரி கங்கையின்‌ மேன்மை யெய்திய காவிரி படிந்துசெய்‌ கடன்க ளாற்றியே. 7

அரங்கன்‌ காதல்‌ பண்‌ பாடுதல்‌
வரங்களா ரணனரன்‌ வழங்கப்‌ பெற்றுளான்‌
ஓரங்களீ ரைந்தொடுஞ்‌ சிலையோ டம்புகொள்்‌
கரங்கணா ஸன்கைந்தையுங்‌ கடிந்த மித்தசர்‌
அரங்கநா யகரிடத்‌ தன்பு கூரவே. 8

கல்லொடு மலைகளும்‌ கடுஞ்சு வர்களும்‌
புல்லொடு மரங்களும்‌ புள்ளின்‌ கூட்டமும்‌ 4
வல்லிய முதல்விலங்‌ கனமும்‌ மற்றவாம்‌
பல்லுயிர்‌ யாவுமா லுருகப்‌ பாடுவான்‌. 9

சந்திர மவுலியும்‌ சரச வாயும்‌
இந்திரன்‌ முதலிமை யவரும்‌ யாழ்வல
கந்தரு வருமுளங்‌ கரையு மாறதாய்‌
அந்தரத்‌ தடைந்துகேட்‌ டஇச யிப்பரால்‌, 10.

அன்னகா விரிக்கரை யநேக நாழிகை
யின்னவா யாழிசை யினிது பாடிப்பின்‌
பொன்னணி விமானத்தைப்‌ பணிந்து போற்றியே ்‌
தன்னக மதனிடை சார்கு வானரோ,. –11

நாடொறு மிம்முறை நயந்து பாணனும்‌
ஆடர வமளிசே ரரங்கர்‌ தம்புகழ்‌
– பாடுறு மிசையின்முன்‌ பட்டு லர்ந்துவீழ்‌
காடுறும்‌ மரங்களும்‌ கப்பு மல்குமால்‌. 12

பற்பல நாளவன்‌: பாடும்‌ பாடல்கேட்‌
டற்புத மடைந்தன எளரங்க நாயகி
உற்பல நயனமு மொளிமி குந்திட
விற்பொலி புருவமும்‌ விளங்கு வாளரோ. 13

அரங்கநாயகி புருஷகாரம்‌ ்‌
்‌ நாயகி மகிழ்வொடு நாக ணைத்துயில்‌
மாயவ னணிபெறும்‌ வதனம்‌ நோசக்குபு
ஏயவவ்‌ வடியனாங்‌ கிசைக்கு மின்னிசை
தூயநும்‌ மிருசெவி துன்னிற்‌ நில்லையோ? 14

அன்னவன்‌ வீணைகொ டரிய கானத்திற்‌
பன்னுமின்‌ னிசைகொளும்‌ பனுவற்‌ கொப்பதாய்‌
என்னிலதக்‌ தினுமிலை யென்ன வானுறை
இன்னரர்‌ மூதலினோர்‌ கீழ்மை யெய்தினார்‌. 15

அன்புநம்‌ பிடந்தனி னதிக மாகக்கொண் ்‌
டென்புமுள்‌ ஞருகிட. இசைக்கு மின்னிசை
இன்புற விதிசிவன்‌ முதலி னோரவன்‌ ன்‌
முன்புவந்‌ தந்தர முயன்று கேட்டின்‌ நார்‌. 16

ஆதலின்‌ நாம்புறம்‌ பாக வைப்பது
நீதியன்‌ றவனைநின்‌ ஸனருகு றும்படி
காதலோ டழைத்திடல்‌ கரும மாமென
மாதுகூ றலுமண வாள ஸனோதுவான்‌. ்‌ 17

என்கருத்‌ இனுமதே யாயிற்‌ றென்னினும்‌
நின்கருத்‌ துணர்குவா னேர்ந்த தாமினி
உன்கருத்‌ துருகிட்ப்‌: பாடு வோன்றனை
நன்குநீத்‌ துடன்வரு விப்பன்‌ நாய. 18

பாணனை அழைக்கப்‌ பரமன்‌ பகர்ந்தான்‌
என்றுகொண் டவளுள மிசையு மாறுரைத்‌
தொன்றிய மனத்தொடு முலக முண்டுளோன்‌ . ட்‌
சென்றுநம்‌ தொண்டனாஞ்‌ சிறந்த பாணனை
இன்றுநீர்‌ கொணர்மினென்‌ நியம்ப லோடுமே. .19

அவ்வுரை கேட்டெதி ரணுகும்‌ வாயிலோர்‌ 1
ஒவ்விய மனதொடும்‌ விரைவி னோடியே
திவ்விய மணிபல சிதறுங்‌ காவிரி
செவ்விய திருமூகத்‌ துறையிற்‌ சேர்ந்தரோ. “20

பாலுறு பிரையெனப்‌ பல்லு .யிர்களுற்‌
றேலுமற்‌ றவைகடன்‌ ஸிடத்திற்‌ கொண்டுசேர்‌
ஆலிலை துயிலொழிந்‌ தரங்க முள்வளர்‌
மாலினை யிதயமேல்‌ வளர்த்தி வான்றனை; 21

பன்னிரு திருமணும்‌ பன்னிடந்‌ தொறும்‌
துன்னிட மார்பினிற்‌ றுளவ மாலிகை
மன்னிட யாழ்முறை வழங்கப்‌ பாடுறுங்‌
கன்னலா ரமுதெனுங்‌ கானத்‌ தான்றனை; 22

பாணர்பிரான்‌ திடுக்குற்றார்‌
கண்டன ரரங்கனாங்‌ கமலப்‌ பூவடித்‌
தொண்டனென்‌ றவனடித்‌ தொழுது நின்றுளோர்‌
புண்டரீ கந்தனைப்‌ பொருவ டிக்கணில்‌
தெண்டனிட்‌ டிம்மொழி தெரிப்ப தாயினார்‌. 23

என்‌ கருதி வந்தீர்‌?
ஐயநீர்‌ புரிந்திடற்‌ கடுக்கொ ணாததைச்‌
செய்யநும்‌ பான்மனஞ்‌ சேர்ந்த தென்கொலோ
வெய்யனே னிதனிடை வினையொ ழித்துமேல்‌
உய்யுமா றெவண்கொலென்‌ நுருடிப்‌ பின்னரும்‌. 24

ஈங்குநீ ரடைந்துள தென்கொ லென்னிடை
ஆங்கதை யுணருமா றறிவிப்‌; பீரெனத்‌
தங்கிலா னுரைத்தசொற்‌ செவியிற்‌ சேர்தலும்‌-பாங்குற வவர்களும்‌ பகர்தல்‌ மேயினார்‌. 25

அரங்கன்‌ கட்டளை
யாந்தொழ லரிதல யாவை யும்தரும்‌ க
பூந்தவி சுறைந்துளோன்‌ புராரி இந்திரன்‌ ்‌ தாந்தொழு குவர்‌்இறை தாளி ரண்டையும்‌
யேந்தினை திருவுளத்‌ இன்பம்‌ ஓங்கவே. 26

அன்னது கிடக்கயா மடைந்த காரணம்‌
என்னெனில்‌ நின்னுளத்‌ திருக்கும்‌ பைந்துழாய்ப்‌
பன்னக வணையரங்‌ கேசர்‌ பண்பொடுஞ்‌
சொன்னசொல்‌ உண்டதைச்‌ சொல்ல: வந்தனம்‌. 27

அம்மொழி யாதெனி லறியக்‌ கேட்டிநீ
தம்மரு கணைந்திதைச்‌ சாற்று மாறதாய்‌
உம்மரு – கணைந்தழைத்‌ துறுமி னின்றென
எம்மொடு முரைத்ததால்‌ வருதி யென்றனர்‌. 28

அரங்கம்‌ புக அருகனல்லேன்‌ :
என்னலுஞ்‌ சாதியிற்‌ கடையி னெய்இினேன்‌ i . தன . i பொன்னரங்‌ கந்தனிற்‌ புகுதப்‌ போதுமோ?
அன்னது தகுதியென்‌ றறிகி லேனெனப்‌ ‘
பன்னலு மீண்டனர்‌ படர்ந்து ளோர்களே,. 29

மீண்டவ ரரங்கர்பால்‌ மேவி யெந்தமை
ஆண்டுளோய்‌ அருட்பெரி யவனை யாம்வர
வேண்டினம்‌ அவனுந்தான்‌ விரும்பி மேல்வரத்‌
இண்டரும்‌ புலைக்குலஞ்‌ செனித்த தாதலால்‌; 30

அரங்கன்‌ மாற்றம்‌
வருகிலே னென்றவன்‌ வழங்கி னான்‌என
மருவிய வாயிலோர்‌ வகுத்துக்‌ கூறலும்‌
முருகவி ழிதழவிழ்‌ முளரி வைகுறுந்‌ இருமரு மார்பனு மிதனைச்‌ செப்புவான்‌. 31

வேதியர்‌ முதற்குலத்‌ தருமம்‌ வேதங்கள்‌ ‘
நீதிசார்ந்‌ திருப்பினும்‌ நிகழ்த்தும்‌ யாவையும்‌
ஆதியில்‌ யானுரைத்‌ தவர்க ளுற்றிடுஞ்‌ சாதிதான்‌ இனதெனச்‌ சாற்றற்‌ பாலதோ? 32

பிறப்பால்‌ சாதியில்லை சிறப்பால்‌ உண்டாம்‌
செம்மையாந்‌ தெளிவிலார்‌ செப்புங்‌ கீழ்மையால்‌
அம்மையாங்‌ கீழ்மைய ராவர்‌; சார்தலால்‌
எம்மர புஇக்கினு மவர்க ளெய்துடும்‌
அம்மர பேயிழி பாகு மாதலால்‌; 33

துக்கநல்‌ லறிவுளந்‌ தரித்து ளார்களே
மிக்கவ ராகுவர்‌; விளம்பு மாங்கவர்‌
– எக்குலத்‌ துதிப்பினு மவர்க ளெய்திடும்‌ அக்குல மேகுலத்‌ ததக மாகுமால்‌. 34

மீளவும்‌ அடியாரை அனுப்பினான்‌
ஆதலா லவனமக்‌ கடிமை பூண்டுளோன்‌ 4
போதமுங்‌ கல்வியும்‌ புகலுஞ்‌ சாத்திர ்‌
வேதமு மவன்வயின்‌ விளங்கும்‌ மெய்ம்மையே :
ஈதுவைத்‌ தழைத்திவண்‌ வருதி ரென்னலும்‌; 35

என்ன வோதலு மினிதி னால்வர்கள்‌
பொன்னரங்‌ கத்துறு புரிசை நீங்கியே is
துன்னு சீர்முகத்‌ துறையி டந்தனில்‌ ,
மன்னு பாணர்பால்‌ மருவி; யன்னவர்‌, . 36

வேத மென்பதின்‌ முடிவி ளங்கடும்‌
மாத வன்புகல்‌ வாச கந்தனை
ஒதி நீவரு கெனவு ரைத்தலுங்‌ கோதி லாதவ ஸிதனைக்‌ கூறுவான்‌. 37

மாலே பகரினும்‌ வாரேன்‌ அரங்கம்‌ ு
என்னை யுஞ்சரர்‌ சரமி ரும்புவி ்‌
தன்னை யுந்தருந்‌ தூய தாமலர்ப்‌
பொன்னை யாளுடைப்‌ புனித னாயகன்‌
சொன்ன சொற்சரி யாகுந்‌ தூய்மையீர்‌[ 38

ஆயி ஸனுூம்பொன்‌ னரங்கம்‌ மேவிய
மாய ஸனார்கடல்‌ சூழும்‌ வையகம்‌
காய சரடி சார்ந்து போற்றிடத்‌
தூய, ராம்திருத்‌ தொண்ட ருக்கலால்‌; 39-

மாசு றும்முளந்‌ தனில்வ ரீச்சிறை
மூசு வண்டிமிர்‌ முளரி யாமெனத்‌
தேசு றும்மவன்‌ சர டிக்கொளா
நீச ருக்கது நீதி யல்லவாம்‌. 40

ஆத லாலர வணையின்‌ மீமிசைப்‌
போத மார்ந்துளோன்‌ புரமெ ரித்துளோன்‌
மாத வத்தினோர்‌ வணங்க வேதுயில்‌
நாத ஸனார்திரு நகரந்‌ தன்னிலே. ்‌ 41

ர௬ுண்மிகுந்‌ தீய னாகிய
நாயி னேனிடம்‌ நலமி லாததால்‌
தோயு றும்படி துன்னி லேனென
ஆய பாணனா ரனுப்பப்‌ பின்னரும்‌; 42

சிந்தை யுள்ளவன்‌ தெளியு மாறதாய்‌
எந்த வாறவ ரொடுமி யம்பினும்‌
வந்தி லேனென மறுத்துக்‌ கூறல்கேட்‌
டந்த வேதிய ரவனை நோக்கியே; 43

உலக முண்டுமிழ்‌ ஒருவ னெம்மொடுஞ்‌
சொலுமொ .ழிப்படி துன்னி டாயெனில்‌
வலுவி லம்மண வாளர்‌ பாற்கொடு
செலுது மென்றவர்‌ செப்ப லோடுமே; 44

இட்டி வாவெனச்‌ செப்பி னுந்தலைக்‌
குட்டி யுங்கதை கொண்டு மோதியுங்‌
கட்டி யீர்ப்பினுங்‌ கடியவாள்‌ கொடு
வெட்டி னும்வரே. ரெனனவி எம்பியே; : 45

அடியவர்‌ பற்ற ஆழ்வார்‌ தென்கரையுற்றார்‌
ணத்தெழுந்‌ தவனு மேதனைப்‌
புக்க ணைந்திட வேபொ ருந்தினோர்‌
கைக்கொ ளக்கனிந்‌ தோடிக்‌ காவிரி
தெக்க ணக்கரை சேர்ந்து ளானரோ. 46

அனையர்‌ பேர்ந்தவ ரரங்கர்‌ பாலணைந்‌
. இனைய “செய்திக ளியம்பு தும்மெனா
வனையுங்‌ காவிரி வடக ரைத்தலை .
நினையு முன்னரின்‌ நீங்கி யேகினார்‌. 47

ஏடி னோர்களாங்‌ கெய்து செய்கைகள்‌
நாக ணைத்துயி னாத ஸனாகிவாழ்‌
ஆக மம்புய வனம லர்ந்தகார்‌
மேக மொத்துளா னொடுவி எம்பினார்‌. 48

சாரங்கமாமுனிக்கு இட்ட கட்டளை
விளம்ப லோடுமின்‌ மேதி ஸிப்பதத்‌
களந்து ளான்றனை யர்ச்ச னைசெயும்‌
வளம்பொ ருந்துசா ரங்க மாமூனிக்‌ .
குளங்க னிந்திட விதனை யோதுவான்‌: 49

தான லம்பெறும்‌ சாதி யிற்கடை
மீன னென்றன னேவ லிற்புகல்‌
வானி ரூம்புகழ்‌ வளரும்‌ பாணனை
நான வன்னவன்‌ னானெ ஸனக்கொடே; 50

கோயின்‌ மேவிடும்‌ கொத்து டன்வர
நீய டைந்திட நேர்ந்திடா னெனில்‌
தூய நின்றிருத்‌ தோண்மி சைக்கொடு
நேய மோடுபல்‌ வளம்நி ரம்பவே; 51

சுந்த ரம்பெறத்‌ துலங்கு வீதிசூழ்‌ இந்த மாநகர்‌ வலம தெய்தியே
வந்து சேரென வழங்கும்‌ வார்த்தைகேட்‌
டந்த -வாறதா யவனு மெய்தினான்‌. 52

குரும ணித்திரை கொழிக்குங்‌ காவிரித்‌
தருமு குத்துறை சேர்ந்து நெஞ்சகம்‌ உருகு பாடல்க ளோதுி நின்றிடும்‌
பொருவி லானொடும்‌ புகறல்‌ மேவினான்‌. 53

முனி மொழிகள்‌
ஐய்ய! கேட்டிநம்‌ அரங்க நாயகர்‌
பைய்ய வேதினை யனுப வித்திட
எய்த லாதமெய்‌ இயம்பி னானினிச்‌-செய்வ இல்லையென்‌ றன்பிற்‌ செப்பினான்‌. 54

மீளச்‌ சார்ங்கமா முனியும்‌ மெய்யரை
ஆளு நாயகன்‌ அருள்வ மாமலென்‌
தோளின்‌ மீதுனைச்‌ சுமப்பன்‌ ஐயனே! –
_ ஏளு கென்றவ ணெய்தி னானரோ. ்‌ 55

பாணர்‌ ஒதுங்கினார்‌ .
சென்ற போதினில்‌ இய சாதியன்‌
“என்ற வென்னைநீ சுமப்ப தேற்குமோ?
நன்று நன்றெனா நவின்று மெய்விதிர்த்‌.
தொன்ற வேபயந்‌ தோடி னானரோ. 56

ஓடு வான்றனை யோடிக்‌ கைக்கொளா
மாடு சென்றெதிர்‌ வளைத்து நிற்றலும்‌
பாடு நாயகன்‌ .பனுவல்‌ நொந்துளம்‌
வாடு -றத்திரு மதிலைச்‌ சார்கிலேன்‌; 57

நீச னீசனா னென்னை நீள்மொழி .
பேசிப்‌ பேசியே பிடித்தல்‌ ‘ இதெனாக்‌
கூசி யோடலுங்‌ கூவல்‌ மேவினான்‌
மாசி லாதொளிர்‌ மணியின்‌ மேனியான்‌. ‘ 58

எத்தி சைக்கணும்‌ எய்திப்போந்‌ தொறும்‌
அத்தி சைபுகுந்‌ தடைகி லேனெனத்‌
துத்தி நாகணைச்‌ சோதி தன்னுளக்‌ கொத்தி டுங்கொலென்‌ றுள்ள யர்ந்தனர்‌. 59

ஆழ்வார்‌ முனிவாகனர்‌ ஆனார்‌ .:
பின்னு மெங்கணும்‌ பெயர்க்கொ ணாமையால்‌
இன்னு மவ்விளை யாட்டெ லாம்விளைத்‌
தன்ன பாணனை அம்பு யந்தனில்‌
உன்னி யேற்றினன்‌ உவமை வேறிலான்‌. 60

இடரி னாற்கலுழ்ந்‌ திருந்த மெய்யன்தாள்‌
மடன விழ்ந்தநன்‌ மனதி னுள்ளுறு முடலை நீங்கிட முத்தமே கொடுத்‌
குடலின்‌ ஏந்தினான்‌ அன்பை ஏந்தினான்‌. 61

மருவு சூரன்முன்‌ மரைம லர்ந்தென
உருகு காதலால்‌ உளத்தொ எிர்ந்திடப்‌
பெருகும்‌ அன்பினிற்‌ பிறங்கு வோன்றனைப்‌
பொருவில்‌ தோளினிற்‌ பொலிய வைத்தனன்‌. 62

முனிவர்‌ கருடன்போலிருந்தார்‌
அளவி லாதநல்‌ லன்புக்‌ காழியைப்‌
பளகு வெம்பவம்‌ பாற்று மருந்தினை –
இளகு மன்பினால்‌ ஏந்திச்‌ செல்பவன்‌
களவில்‌ நெஞ்சுடைக்‌ கலுழ னாயினான்‌ 62

அனுமனுமானார்‌
க்க. ௫ ஒப்பிலா ரகுகுலம்‌ தனிலு கித்கருள்‌ |
அப்பனை யப்பினு எமுதொப்‌ பான்‌ ற்னைத்‌,… ர்
துப்பணைப்‌ பியன்மிசை சுமந்து வாந்க்கொள்‌ 7
எய்ப்பிலாக்‌ கான்மக னெனலு மாயினான்‌, ்‌ 64

முனிவன்‌ பூரிப்பு
தகவுறு பாணன்றன்‌ சரண்கைத்‌ தாங்கினோன்‌
உகவையின்‌ திருவுளம்‌ ஓங்கி டத்தவ
மகமிழைப்‌ பவருறு மகிழ்ச்சி யெய்தினான்‌
துகளிலா வாச்சியம்‌ துவைத்த தெங்குமே. 65

நிதியின்‌ மிக்கொளிர்‌ நெடிய கற்பகப்‌ — ப
புதிய மாமழை பொழிய, வானவர்‌
அதி௪ யித்துமா தவர்க ளன்பொடுந்‌
துதிசெய்‌ யப்புகழ்‌ பட்டர்‌ சொல்லவே. 66

துன்று தோரண முதல்து லங்குற அன்ற ரங்கம தலங்க ரித்துளது
என்றும்‌ இச்சிறப்‌ பில்லை என்றிடச்‌
சென்ற டைந்தனன்‌ தேவர்‌ செய்கையான்‌. 66

நீலமேனியன்‌ முன்‌ நிறுத்தினார்‌
நாலு வீதியு நண்ணி யன்புடன்‌
._ கோல மாமணிக்‌ கோவி லின்கணே
மூல மென்றுகூம்‌ முனியின்‌ முன்வரும்‌
நீல மேனியன்‌ முன்னி றுத்தினான்‌. 68.

ஆழ்வார்‌ அனுபூதி
அந்த மாதவன்‌ கேச வன்திருப்‌ .
பைந்து மாயணி பாதமே முதல்‌
சுந்த ரங்களின்‌ சோபை யாவையும்‌
முந்த வர்க்குறும்‌ முறையிற்‌ காட்டினான்‌. 69

புண்ட ரீகம்வாழ்‌ போத ஸும்விடம்‌
உண்ட பேயனும்‌ உம்பர்‌ யாவரும்‌
தொண்ட ராயடி தொழமும ரங்கரைக்‌
கண்ட கண்கள்‌ களித்த பாணற்கே; 70

ஒளித்தி லந்தொறு முறியில்‌ வெண்ணைபால்‌
களித்த ருந்திடுங்‌ கள்வ னேகரி
விளித்த ழைப்பமுன்‌ விரைவி னோடிவந்‌
தளித்த கார்வணா! அரங்க நாதனே! 71

என்று போற்றிசெய்‌ இறைவன்‌ மேனிமேல்‌
சென்ற அன்பெலாந்‌ திரட்டி. அன்பளாய்‌
அன்று பாடினா னமல ஸனாதியென்‌
தொன்றோ டொன்பது முவப்பி னோடுமே. 72

பாடி யேகளிப்‌ பாழி யிற்படிந்
. தாடி யாடிப்பொன்‌ னடியின்‌ வீழ்ந்தெழுந்‌
தோடி யோடிமெய்‌ யுருகி வேர்வெழக்‌
கூடி வந்தெ௫இர்‌ குறுகி நின்றனன்‌.–73

துன்று மன்புறும்‌ தொண்டன்‌ நீண்முடி
ஒன்ற நற்பத முவந்து வைத்தனன்‌
கன்றி னால்விள வெறிந்து கன்மலி
குன்றை யேந்திடும்‌ கரிய கோவலன்‌. 74

அரங்கக்‌ கடலில்‌ பாண நதி: கலந்தது
பன்னு கூவங்கள்‌ படுகு லைக்கணே
புன்னை யார்கடல்‌ புகுந்த டங்குறும்‌
உன்னு மன்பினால்‌ உருகு பாணனும்‌
மன்னி யொன்றினான்‌ மாயன்‌ றாட்குளே. . 75.

திருப்பாணாழ்வார்‌ அரங்கன்‌ இருவடிகளில்‌ கலந்தனர்‌.
*-கூவத்தின்‌ சிறு புனலைக்‌ கடலயிர்த்தல்‌ ஓவ்வாதோ கொற்ற வத்த.
என்பர்‌ சவிச்சக்ரவர்த்திகள்‌ (யுத்த காண்டம்‌).

கண்டு போற்றினர்‌ கண்ணி மைத்திடா
அண்டர்‌ யாவரும்‌ அஇச யித்தலர்‌
கொண்டி றைத்தனர்‌ கோயின்‌ மேவிவாழ்‌
ணட ன  தொண்டர்‌ யாவரும்‌ களிது ளங்கினார்‌. 76

அன்ன செய்கையான்‌ ஆய பாணனும்‌
பன்னு செந்தமிழ்ப்‌ பனுவல்‌ பத்தினுள்‌
பொன்ன ரங்கநற்‌ புகழ்கொள்‌ வேங்கடம்‌ ்‌
என்னு மிப்பதி யிரண்டு மெய்துமே. 77-ழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த திவ்ய தேசங்கள்‌ இரண்டு, –

பயன்‌
இப்பெ ருங்கதை யெழுதிக்‌ கற்றுளோர்‌
செப்பு வோரிரு செவியிற்‌ கேட்டுளோர்‌
ஒப்பு வேறிலா உயர்வை குந்தமாம்‌
அப்பெ ரும்பதி யணுகி வாழ்குவார்‌. 78

நம்மாழ்வார்‌ புகழ்‌ நவில்வோம்‌
ஒப்பென விளங்கு பாணர்செய்‌
வாறி தாமென வழங்கி னோமினி
நாறு பூத்துழாய்‌ நாத னாருரு
மாற னாங்கதை வகுத்துக்‌ கூறுவாம்‌. 79

திருப்பாணாழ்வார்‌ தருவவதார அத்தியாயம்‌
மூற்றிற்று.

———

சடகோபாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌
வெண்பா
ஏரார்வை காசி விசாகத்தின்‌ ஏற்றத்தைப்‌
பாரோ ரறியப்‌ பகர்கின்றேன்‌ — சீராரும்‌
வேதந்‌ தமிழ்செய்த மெய்யன்‌ எழிற்குருகை
நாதன்‌ அவதரித்த நாள்‌.
(உபதேசரத்தினமாலை, 14,)

எம்பெருமான்‌ சிந்தனை
மருவை குந்தன மலிந்ததா மரையே ………
பொருவை குந்தனுக்‌ ததற்கு ……………..
கருவை குந்தமே முதலினோர்‌ களையும்‌ ………
இருவை குந்தமா நகரதன்‌ சீர்மையா ருரைப்பார்‌. 1

முதல்‌ பாடல்‌ தைந்துள்ளமையால்‌ பொருள்‌ புலப்படவில்லை. இதனை
**மருவை கும்தளம்‌ மலிந்ததா மரைமூதற்‌ பூக்கள்‌
பொருவை குந்தனுக்‌ கிருப்பிட மாகிமுப்‌ புவனக்‌
கருவை குந்தமம்‌ முதலினோர்‌ களையும்‌ஆண்‌ டருளும்‌
தருவை குந்தமா நகரதன்‌ சீர்மையா ருரைப்பார்‌?’”
என்று திருத்தத்‌ தோன்றுகிறது.
மரு- வாசனை. வைகும்‌ -தங்கியிருக்கின்ற. தாமரை முதல்‌ பூக்கள்‌ – தாமரை
நீலோற்பலம்‌ முதலான மலர்களை. பொரும்‌ – ஓத்திருக்கின்‌ ஐ. வைகுந்த்னுக்கு
இருமாலுக்கு. இருப்பிடமாய்‌ – தங்கும்‌ இடமாய்‌, முப்புவனம்‌ – மூன்று உலக
மாகிய. SH – மூட்டையில்‌, வைகும்‌ – சிறையிடப்பட்ட. தமம்‌ முதலி
னோர்‌ – தமம்‌ என்று கூறப்படும்‌ நரகத்துக்கு உரியவர்களையும்‌, ஆண்டருளும்‌ *
பாதுகாக்கும்‌ திருவைகுந்தம்‌ என்சு,

அச்ச றந்தநா டதனிடை அருள்விளக்‌ கிடும்நல்‌
வச்சி ரஞ்செழு மரகத முதலிய – மருவ – ்‌
வுச்சி தந்தனை விச்சுவ கருமனே உஞற்ற
மெச்சு றுந்திரு மாமணி மண்டபம்‌ விளங்கும்‌. 2

அந்த மண்டபத்‌ தரியணைப்‌ புறத்தினில்‌ அயனோ
டிந்தி ரன்முதற்‌ கடவுள ரெவர்களு மீண்டி.
வந்து வந்தவக்‌ சணம்நெருங்‌ குறப்பிரம்‌ பதுகொண்
டுந்தி யுந்திருச்‌ சேனையர்‌ கோன்விலக்‌ குறவே. . 8

இருபு றத்தினு மரிவைசா மரங்கள்கொண் டிரட்ட
பொருவில்‌ முத்தவெண்‌ மதித்திருக்‌ கவிகைமேற்‌ பொலிய
குருக வின்கவுத்‌ துவமணி மார்பினிற்‌ குலவத்‌
இருவொ டும்பொலிந்‌ திருந்தனன்‌ நாரணன்‌ சிறப்பால்‌. 4

இருந்த கோவிய ரணியுடை களைக்கவர்ந்‌ தெடுத்துக்‌
குருந்த மேலுறுங்‌ கோவலன்‌ கொன்றையன்‌ -முதலாம்‌
அருந்த போதனர்‌ வரங்கள்பெற்‌ றகன்றதன்‌ பின்னர்‌ இருந்த வேயுளத்‌ தோர்முறை இந்திப்ப தானான்‌. 5

அருளில்‌ வைகுறத்‌ தக்க€ வாத்மகோ டிகளவ்‌
விருளெ லாம்தடிந்‌ திரிந்திடும்‌ நல்லறி வெய்தஇத்‌ .
தெருள்கொள் அன்பினால்‌ நம்வயின்‌ -சேர்தரு போதில்‌
மருளு றப்புரி வஞ்சரை மாய்த்திட வேண்டி, 6

நைதல்‌ ஒட்டுநன்‌ னீரராய்‌ நன்னலம்‌ பொருந்தும்‌
செய்கை யோர்களைப்‌ புவிமிசை செனிப்பித்தங்‌ சுவரால்‌
உய்தல்‌ வேண்டினோம்‌ உற்றுணர்‌ ஞானங்க சூரைத்த
மெய்மை யோர்களை வெறுப்பொடும்‌ தடிந்தன ரல்லால்‌, 7

கப்படும்‌ உணர்வொடும்‌ உறுபகை யொழித்தெம்‌
அருக ணைந்திலர்‌; இன்னம்யாம்‌ வருந்தியங்‌ கவர்பால்‌
கருணை கூர்தரப்‌ பிறந்திடக்‌ கருதினோம்‌; உதவ
வருதல்‌ ஆரியர்‌ செயலெனத்‌ திருவுளம்‌ மதித்தே, 8:

பெருமாள்‌ கட்டளை *
பாய லாயுறும்‌ அரசையும்‌ பணிக்குலந்‌ தன்னைக்‌
காயும்‌ வெஞ்சிறை ஊர்தியாம்‌ பொற்கரு டனையும்‌
கூய ழைத்துநீர்‌ புவியினில்‌ விரைவொடுகங்‌ குறுகி
நேய மோடிரும்‌ எனஅடி தொழுதெதிர்‌ நின்றார்‌. 9

நின்று ளோர்முகம்‌ நோக்கி,யாம்‌ நிலமிசை யுருவம்‌
ஒன்றி யேபிறந்‌ இடவுளத்‌ தோர்ந்தன மதனால்‌
சென்று நீர்முனம்‌ வழுதஇுநாட்‌ டிடைத்திருக்‌ குருகூர்‌
என்று கூறுமா நகரினு மன்னகர்க்‌ இணையாய்‌, 10

சிறந்தொ எிர்ந்தகோ ஸூரினுந்‌ திருப்புளி யெனவும்‌
அறந்த ழமைத்தசீர்‌ மறையுண ரந்தண னெனவும்‌
பிறந்தி டும்மெனப்‌ பேருல குண்டசெம்‌ பவளம்‌
இறந்து ரைத்தலு மங்கவ ரிம்மொழி தெரிப்பார்‌: 11

இருமால்‌ ஆதிசேடனையும்‌ கருடனையும்‌ அழைத்தான்‌ ; அவர்‌
கள்‌ வந்து பணிந்து நின்றனர்‌. அவர்களை தோக்கிய இறைவன்‌ யாம்‌ fos wf
பிறந்திட நினைந்துள்ளோம்‌, : நீங்கள்‌, திருக்குருகூரிலும்‌ இருக்கோளூரிலும்‌,
இிருப்புளியாகவும்‌ அந்தணனாசவும்‌ பிறந்திருங்கள்‌ என்‌ மனன்‌.

கடவு ளோர்களு முனிகளும்‌ வேண்டவாங்‌ கவர்கட்‌
இடர்பு ரிந்தவாள்‌ வேல்கெழு மிராக்கதக்‌ குழுவைப்‌
படியின்‌ மீதுவேற்‌ றுருவமாய்ப்‌ பலவவ தாரம்‌
அடிகள்‌ கொண்டடைந்‌ தழித்துமீண்‌ டிவ்விட மடைந்தீர்‌. 11

மாறு மோர்பகை : புவிமிசை யுளதுகொல்‌? மதித்துக்‌
கூறு தற்கிலை மீண்டுமோ ருருக்கொளக்‌ குறிக்கின்‌
வேறு காரணம்‌ யாது?யாம்‌ முன்னுரைத்‌ இட்ட
வாறு இத்திடில்‌ அடிகளெவ்‌ வுருக்கொள்வீ ரறைமின்‌? 12

எந்த வூர்தனி லெந்தநா ளினில்‌உல களந்த
உந்த மம்புய வடிகளைப்‌ பிரியும்கதீ தறுவோம்‌;
வந்து காண்குறும்‌ வகையையும்‌ மாறுத லின்றி-முந்த வோதிலம்‌ முறைபுரி குதுமென்றார்‌; முறையாய்‌, 14

மொழிந்த — கேட்டலும்‌ முகுந்தன்மற்‌ nor Gu
பொழிந்த கண்களால்‌ நோக்கினன்‌; புகழ்பரந்‌ தாமம்‌
ஒழிந்த கன்றிட விம்மொழி உவப்புட னுரைத்தான்‌
வழிந்து தேன்பொழி துழாய்முடி புனையுமா தவனே. 15

அறிஞர்கள்‌ பேயராயினர்‌ !
௪த நீர்க்கடல்‌ வரைப்பினிற்‌ றெளிவுளோர்‌ உணர
வேத மெந்தனை யுண்மையாய்‌ விளம்பியும்‌ வேதம்‌
ஓது மந்தண ரந்நிலை யுணரகில்‌ லாராய்ப்‌
பேதா பேதமா யுரைத்திடும்‌ பேயரா. யினரால்‌. 16–பேயராயினர்‌ என்று ஆசிரியர்‌ பொய்ம்மை வாதிகளைக்‌ கண்டிக்கிறார்‌,

கற்ற வேதிய ரிவ்வகைக்‌ கழறினர்‌ என்னில்‌
மற்று ளோர்களெவ்‌ வாறினி வாழ்வர்முக்‌ காலம்‌
மூ.ற்று மோர்தவ முனிவரு மயங்கினர்‌; முறைசேர்ந்‌
துற்ற மாயையின்‌ வலிமையவ்‌ வாறதா மூணரில்‌ ‘ 17

அன்ன தன்மையை தாதலால்‌ அளப்பரும்‌ புவியோர்‌
என்னை யுண்மைதேர்ந்‌ தெவருமிப்‌ பதியின்வந்‌ தெய்தி
மன்னி வாழ்ந்திடும்‌ வகையுணர்ந்‌ திலார்மதி யருள்வ
துன்னி யோதுமி னெனவவர்க்‌ குரைத்தபின்‌ விடுத்தேம்‌. 18

அவர்கள்‌ சென்றுறுப்‌ படைந்திடு மளவி லிம்மாயை
கவியு மாங்கதற்‌ இங்குபல்‌ வலிமைகாட்‌ டுகினும்‌
புவியி லெய்தினர்‌ பொலியுமெய்ஞ்‌ ஞானபோ தகத்தைச்‌
செவியின்‌ மேவுறத்‌ தெளிவுறப்‌ புகட்டிச்சின்‌ னாளில்‌; 19

மருவி யோங்கிடும்‌ வெவ்வினை மருவுமற்‌ றவர்கள்‌
இருநி லத்திழிந்‌ தடாமலெச்‌ சரிக்கைசெய்‌ தவராய்‌
பொருவில்‌ நல்லறம்‌ புகன்றனர்‌; புவிமிசை வதியும்‌
அருள்கொ ளந்தண ரரசர்கள்‌ வ௫ூயர்பின்‌ னவர்கள்‌; 20

இடிந்த நெஞ்சொடும்‌ இவர்மறித்‌ தன்னைதன்‌ வயிற்றிற்‌ படிந்து இத்துப்பின்‌ இறந்துடும்‌ பிறவியாம்‌ பவ்வம்‌
கடந்தி டும்திறம்‌ அறிந்திலர்‌ காசினி யதன்மேல்‌
நடந்தொமிந்தனர்‌ மையலால்‌ நவிலவே நிலையால்‌, 21

தமிழ்மறை ஓத அவதரிப்போம்‌
ஆத லாலிவர்‌. யாவர்க்கு மினியதா யமைந்து
பூத லத்தினில்‌ இழிகுலத்‌ தவரும்பூ வையரும்‌ ஓதி யின்புறற்‌ கடமதாம்‌ யோக்கிய முறவவ்‌
வேத –தமிழினால்‌ விரித்தினி துரைத்து;–22-

சொற்றி டும்பொருள்‌ நுட்பமும்‌ முறைமையின்‌ தொகுப்பும்‌
கற்று ணர்ந்திடும்‌ கலைஞரும்‌ மாந்தர்தம்‌ கணமும்‌
மற்றும்‌ மேவிடும்‌ சணங்களும்‌ மாண்புறப்‌ பெருநூல்‌
பெற்றி டும்படி நடத்துவித்‌ துறல்கடைப்‌ பிடித்தேம்‌.-23-

அதனுக்‌ கொத்திடக்‌ குருகைவாழ்‌ காரிமா றனுஞ்சர்‌
-சுதனி லாமையின்‌ மனைவியோ டருந்தவந்‌ தொடங்கி
. இதமு றத்தவம்‌ இயற்றுவ னினிச்சில நாளில்‌
– உதவு வேம்மக வெனவளித்‌ தவருவப்‌ புறவே,–24

கலியு கத்தினி லவதரித்‌ தனைத்துக்கும்‌ கலங்கா
வலிகெ முந்திரு வனந்தனீ குருகைமா நகரின்‌
ம்லித ருஞ்சினைப்‌ புளியெனுந்‌ தருவதாய்‌ வளரில்‌’.. _
பொலியு மத்தரு நிழலில்யாம்‌ பொருந்திவை குதுமால்‌, -25-

அந்த மாநகர்க்‌ கடுத்தகோ ஞூர்வயின்‌ அருளே
முந்து வஞ்சிறைக்‌ கலுழன்நீ முறைவழு வாமல்‌
செந்த மிழ்க்கவி யாகிநாம்‌ செப்புவாய்‌ மொழிக்கு
வந்து றைந்துபட்‌ டோலைநீ மடகழ்வொடு பிடிக்க; 26

அறிந்து நீவிர்க ளிருவரு மாஜிசூ முலகற்‌ பிறந்து வைகுமி னெனவரி பிறங்குபாட்‌ டிசைக்கும்‌
நறுந்து மாயணி மாலையான்‌ நவிறலு மிரவிற்‌
செறிந்த தாமரை மலரெனத்‌ திருமுகம்‌ குவிந்தார்‌. 27

ஐய! நின்மொழிக்‌ கெதுரெவ ரறைகுவர்‌? ஆனால்‌
வெய்ய இக்கொடு மொழிகளை விளம்பினை; ஆயின்‌
செய்ய வேண்டுமென்‌ றியம்பினை; செய்குதும்‌ என்றே
வைய மீதுற விடைகொடு நடந்தனர்‌ மஇழ்ந்தே. 28

(வேறு)
மதுரகவி அவதாரம்‌
நடந்தவரிற்‌ கலுழன்‌ நண்ணியடி யார்கள்‌
தொடர்ந்துகுடை யும்புனலிற்‌ றோய்ந்துள whips
படர்ந்தரவ மேற்றுயில்‌ பதிக்கண்மலர்‌ மேவும்‌
மடந்தைநிக ராகுமொரு மங்கைவயி றுற்றான்‌. 29

(வேறு)
அருமா மறையின்‌ வடிவா மமலன்‌
உருமா மதன்வந்‌ துலகத்‌ திடையே
வருமா னுடனாய்‌ மருவுற்‌ றிடல்போல்‌
இருநாள்‌ பொலியச்‌ செகமுற்‌ றனனே. . 30

(வேறு)
வந்த மதலைத்‌ திருமுகமும்‌ வடிவத்‌ தெழிலும்‌ புன்னகையும்‌
முந்த வருமா மகளிரெலாம்‌
முறையின்‌ நோக்கிக்‌ கண்களுடன்‌
சிந்தை மகிழ்ந்து நிறைவுற்றார்‌. தேவன்‌ இவனே என்றுரைத்தார்‌
அந்த நகர்வா யுறையுயிர்கள்‌ ்‌
அனைத்தும்‌ இன்பத்‌ தோங்கென வே. 31

மதுரகவி ஆழ்வாரின்‌ கல்விப்பயிற்சி
அறிய வொண்ணா மறைகளைக்காட்‌
டம்மா மறையோர்‌ அமைவிதிகள்‌
நெறியிற்‌ பகர இருகுரவர்‌ நிகழ்வித்‌ தன்பின்‌ வளர்க்குங்கால்‌
நறிய புனிதத்‌ துளவமென
நாளும்‌ வளர்ந்து வடகலையும்‌
செறியும்‌ இன்பத்‌. தென்கலையும்‌
சேர வுணர்ந்தான்‌ சின்னாளில்‌. 32

தீர்த்த யாத்திரை
சீரார்‌ மறையின்‌ பொருளுணர்சோத்‌
இரபண்‌ டிதனாய்ச்‌ சாற்றுபல
பாரார்‌ கலைதேர்‌ சால்புடையோர்‌
பரவிப்‌ புகழ வுறைந்ததன்பின்‌
நாரா யணன்வாழ்‌ பதுிபணிந்து
நல்லோர்‌ பாதம்‌ பணிந்தேத்தி
ஆரா மஞ்சூழ்‌ கங்கைகண்‌
டாட நினைந்தான்‌ அயர்வில்லான்‌. 33

நிகரில்‌ வளஞ்சார்‌ திருக்கோளூர்‌
நீங்கி நெடிதாம்‌ நெறிகடந்து ககன வமரர்‌ தினந்தோயும்‌
கங்கா நஇகண்‌ டந்நீரில்‌
மகிழ்வின்‌ இன்பப்‌ புனலாடி
மருவிப்‌ புரிதற்‌ கரியதவம்‌
புகலும்‌ மாயை தனைவிடுத்துப்‌
போக இருந்தான்‌ புகழ்வல்லோன்‌. 34

திருப்புளி ஆழ்வார்‌ அவதாரம்‌
பன்னற்‌ கினியான்‌ உவப்பெய்தப்‌
பலவே டங்கொள்்‌ திருவனந்தன்‌
தென்னன்‌ முதலாம்‌ வேந்தர்களும்‌
தேவர்‌ குழுவும்‌ இத்தர்களும்‌
கன்னல்‌ மொழிகொள்‌ அரம்பையரும்‌
கலந்தோர்‌ முகமா யடைந்துதொழப்‌
பொன்னின்‌ ஒளியை நனிநல்கும்‌nபுனிதம்‌ பெறுஞ்சீர்‌ குருகூர்வாய்‌; – 35

குலவு மாதி நாதன்றன்‌
– கோவில்‌ வடபாற்‌ பொருளைநதி
அலகில்‌ வளஞ்சார்‌ தீர்த்தநுகர்ந்‌
. தணிசேர்‌ இளையார்‌ திருப்புளியாய்‌
மலர்சூழ்‌ பொய்கைக்‌ இடையொடுங்க
வருக மூலம்‌ எனப்போந்த
நலமார்‌ திருமால்‌ எனஓங்கி .
நாகம்‌ முற்றும்‌ அளந்தனனே. 36

காரிமாறன்‌ கவலை
வாட யில்லாச்‌ சான்றோர்கள்‌
மறையோன்‌ எனவும்‌ புளிஎனவும்‌.
மால்‌ லாமற்‌ பொலிந்தார்கள்‌;
மதியோன்‌ கதிரோன்‌ வலம்செய்யும்‌
காசற்‌ ஹறொளிருங்‌ குருகூரில்‌
காரி மாறன்‌ உலகுபுகழ்‌
தேசுற்‌ றிலங்கு முடையநங்கை
. தேவி யுடனே சேர்ந்திருந்தான்‌. 37

பூடும்‌ வாடப்‌ பொறாதவர்கள்‌
புதல்வ னில்லாக்‌ காரணத்தால்‌
வாடி வாடி உளந்தளர்ந்தார்‌; .
ம$ழ்விற்‌ புரிந்த தருமமெலாம்‌ வீடி யொழிந்து போயினவோ?
மேவும்‌ கொடுமை யாதென்னா
நாடி மேலோ ரொடும்புகல
நயந்து கேட்டோ ரிவைபகர்ந்தார்‌. 38

கற்றாவும்‌ குன்றும்‌ கதறப்‌ பிரித்ேதோமோ 2
பெற்றாரைப்‌ பார்த்துப்‌ பெருமூச்‌ செறிந்தோமோ?
பேதலித்து முற்பிறப்பில்‌ பிள்ளைப்பால்‌ வார்த்தலமோ?
காதலித்து மைந்தருண்ணும்‌ சையைப்‌ பிடித்தோமோ?
என்னும்‌ நம்மாழ்வார்‌ தாலாட்டுப்‌ பாடல்‌

**குதலைமொழிக்‌ கன்கிணிக்கால்‌ கோகனகச்‌
– செவ்வாய்‌ மதலையரை யில்லாத வாழ்வுமொரு வாழ்வாமோ ? புக்கடிசில்‌
உண்டு புறம்புல்கிக்‌ கூத்தாடும்‌ மக்கள்‌ முகம்‌ காணாத வாழ்வுமொரு வாழ்வாமோ?
ஐந்தடக்கி, வேண்டும்‌ அறங்கோடி செய்தாலும்‌ மைந்தரைப்‌ பெற்றுய்யாத
வாழ்வுமொரு வாழ்வாமோ? மிகப்பேறளித்து விரசை நீராட்டும்‌ மகப்பேறடை
யாத வாழ்வுமொரு வாழ்வாமோ?’”’-என்னும்‌ நம்மாழ்வார்‌ தாலாட்டுப்‌ பாடல்‌

சான்றோர்‌ இன்னுரை
காரார்‌ குழல்சேர்‌ மனைவியொடும்‌
கலங்க வேண்டா; நன்மையுறும்‌;
ஏரார்‌ புதல்வர்‌ தமைவேண்டி
இளமா மதியம்‌ தவழ்கின்ற
சீரார்‌ மாடக்‌ குறுங்குடியைச்‌
சேர்ந்து புனிதப்‌ பாற்கடலில்‌
நீராடி யபின்‌ இருமாலை
நினைந்து தவங்கள்‌ செயுமென்‌ றார்‌. 39

தம்பதியர்‌ கண்ட கனா
நடுநாள்‌ தவஞ்செய்‌ போதினிலே
நிகரில்‌ கதிரோன்‌ உதயகிரி
படுகா லையினில்‌ கனவின்சண்‌
பரவுந்‌. இருப்பா லாழிவரும்‌
‘கொடுமா விடத்தை யரற்களித்த
கோமான்‌ நிரம்பிப்‌ பெருகிடுமன்‌
பொடுமாங்‌ கவர்தம்‌ தஇருமுன்னர்‌
உற்றுத்‌ இருவாய்‌ மலர்ந்தனனால்‌.-40-

மகவி லாத கொடுந்துயரால்‌ ‘
மறுகி யிரவும்‌ வெயில்காயும்‌
பகலும்‌ அரிய தவம்புரிந்தீர்‌;
படாத துன்பம்‌ நனிபெற்நீர்‌;
புகலு முமக்கிப்‌ பிறவியினிற்‌
புதல்வற்‌ பெறும்பே நிலை;ஆனால்‌
அகமுட்‌ பொருந்தி யித்தலம்வந்‌
தடைந்தோர்‌ நினைந்த தெய்துவரால்‌. 41

துதிசெய்‌ பவர்கள்‌ அருந்துயரைத்‌
துடைப்ப தெமது கடனாகும்‌
அதினா லுமையுற்‌ நிடுவினைகள்‌
அனைத்தும்‌ போக்கிச்‌ சோதிடத்தின்‌ விதியை யொழித்திட்‌ டுமதிடத்தில்‌
விரும்பி மகவாய்‌ அவதரிப்போம்‌;
பதிசென்‌ றடைமின்‌ எனப்பகர்ந்து
பரந்த விண்ணிற்‌ கரந்தனனால்‌, 48

அந்தக்‌ கனவை கண்டுணர்ந்திட்‌
டருளார்‌ காரி வியப்புடனே
சிந்தை களிகூர்ந்‌ தியம்புதலும்‌
இகழும்‌ அலர்மேல்‌ மகள்போலும்‌
கந்தம்‌ மேவுங்‌ குழலாளும்‌
கண்டேன்‌ கண்டேன்‌ ஈதேஎன்‌
றுந்து காத லுடன்மொழிய
உவந்தான்‌ வமுகு நன்னாடன்‌. 43

ஆழி முதலைம்‌ படையொடும்பால்‌
ஆமி நடுவிற்‌ றுயில்மாயன்‌
மாமி பலவாங்‌ கோடிகளென்‌
றுரைக்கும்‌ காலம்‌ கணமென்ன
வாழி யெனவக்‌ குறுங்குடிவாழ்‌
்‌ வார்க்குப்‌ பல்லாண்‌ டினிதோதிச்‌
சூழி மதமா கரியனையான்‌
துணைவி யொடுந்தன்‌ நகரடைந்தான்‌. 44

நம்மாழ்வார்‌ திருவவதாரம்‌
அடைந்து துயர்நீத்‌ துறைநாள்வாய்‌ ப
ஆமி தனைமந்‌ தரவரையால்‌
கடைந்து மருந்தன்‌ றளித்தான்றன்‌ கழற்றொண்‌ டியற்றி வருநாளில்‌
முடங்கி நலிந்த சிறியவரும்‌
முயற்சி யின்றிப்‌ பதவிபெறக்‌
குடைந்து தேனுண்‌ சுரும்பார்க்கும்‌ j
குழலார்‌ நங்கைத்‌ திருவயிற்றில்‌; 45

கடல்சூழ்‌ உலகம்‌ புகழ்ந்தேத்தக்‌
காரி யெனும்பேர்‌ .புனைந்தோன்செய்‌ – ்‌
*… திடமார்‌ தவத்தால்‌ துவாபரத்தில்‌ :
இகழும்‌ அந்தத்‌ தாவணியில்‌ |
இடமார்‌ இருபத்‌ தேழென்னும்‌ ்‌
இசைசேர்‌ தேதி தனிலொளியாய்‌ ,
அடல்சேர்‌ கலியின்‌ வெப்பகற்ற ்‌ ர
அருள்மா முகில்போல்‌ சென்றுற்றான்‌.–46-மூன்றாம்‌ யுகத்தில்‌ உடைய நங்கையார்‌ வயிற்றில்‌ திருமால்‌ சென்று தங்காள்‌.

மங்கு லனையான்‌ தாய்வயிற்றில்‌
மருவிக்‌ கருவாய்‌ உருவாகத்‌
தங்கள்‌ வதனம்‌ விளர்ப்பெய்தத்‌
தெரிய்‌ மருங்குல்‌ பெருந்தனத்துப்‌
பொங்கு முகத்துக்‌ கருமைநனி
பொலிய வியர்வோ டயர்வெய்த
மங்கை: தென்றல்‌ நடைகற்க
வளர்த்தான்‌; மதியை யிரண்டளவும்‌,–47-

மெலியும்‌ கலிவை காசியினில்‌
மேவும்‌ விசாக நன்னாளில்‌
பொலிவு மிக்க கடகமெனப்‌
புகழ்சேர்‌ ஓரை தனில்பொங்கி
மலியுங்‌ கடல்கள்‌ அத்தனையும்‌
மகிழ்வி னெழும்பி மறிதிரையாம்‌
ஒலிகொள்‌ முரசம்‌ இனிதார்ப்ப
உதித்தான்‌ ஒருசு ரியனெனவே. 48

காரியாரும்‌ உடைய நங்கையும்‌ உற்ற களிப்பு
பெற்றி மிக்க அறம்வளரப்‌
பேரார்‌ இராமன்‌ தோன்றியநாள்‌
சற்றும்‌ பொய்யில்‌ தசரதன்கா
சலையோ டந்நாட்‌ டவர்கள்முகம்‌
செற்றம்‌ நீங்கப்‌ பேரன்பில்‌
சிறந்த தென்னக்‌ காரியுடன்‌
பற்று மிக்க நங்கையரும்‌
பதிவாழ்‌ வாரும்‌ களிப்புற்றார்‌. 49

பேரிற்‌ றந்து நிறைசடரைப்‌
பெற்ற கொடியு முளங்களிப்பக்‌
காரி யாரும்‌ விரைந்துற்றுக்‌
கவினார்‌ சேயின்‌ முகங்கண்டு வேரி மலர்ச்சந்‌ தனமுடைபொன்‌
விதையா பரணம்‌ சருக்கரையும்‌
மாரி பொழிவ தெனத்தானம்‌.
வழங்கி யுளத்தின்‌ ம௫ழ்வடைந்தார்‌. 50

மாறன்‌ என்று வைத்தனர்‌ நற்பேர்‌ :
புரமட்‌ டவனும்‌ நான்முகனும்‌
…. புருகூ தனும்விண்‌ ணாட்டவரும்‌
பரவிப்‌ புகழ்தற்‌ கரிதாமப்‌ ட.
பரமன்‌ செயல்க எளாராய்ந்தார்‌;
மரபிற்‌ புகலும்‌ பெயர்காரி
மாறன்‌ என்று சுற்றத்தார்‌ .
கரமிட்‌ டுழக்க வைத்திட்டார்‌ ட
களிப்பா மமுதம்‌ அளித்திட்டார்‌. 51

மாறன்‌ மாயையை வெல்லுதல்‌ –
இம்முறை யவர்களெல்‌ லாரு மின்புறச்‌ ்‌
செம்மலு மாயையைச்‌ சதைய வென்றதால்‌
விம்மிவாய்‌ திறந்தழான்‌ விழிதி றந்திடான்‌
௮ம்மலர்‌ பொருவுதா ளசைந்தி டானரோ. 52 ‘

மலமொடு சலம்விடான்‌ மருவிப்‌ பாலுணான்‌
இலகுயோ கந்தனி லினிதி ருந்தனன்‌
உலகுடை ஒப்பிலா வுருவந்‌ தாங்கியும்‌
அலகிலா இன்பங்கள்‌ அளித்தி டானரோ, 53

தாய்வயிற்‌ றுஇத்திடில்‌ சார்ந்து வாட்டிடும்‌
மாயையைக்‌ தடிந்ததெவ்‌ வாறு? மற்றிதற்‌
காயதோ ருபாயம்யா மறிந்து லேமெனத்‌
தூயநன்‌ மனத்தினர்‌ தொடர்ந்து நோக்கினார்‌. 54

(வேறு)
மேனிவா டாமல்‌ உள்ளம்‌
வெதும்புதல்‌ சற்றும்‌ இன்றி
மோனியாய்‌ நாளும்‌ நாளும்‌
முகமலர்‌ விளக்கம்‌ பெற்று
வேனிலான்‌ இவனே என்று
‘விளம்பிட வனப்பை யுற்றான்‌
வானிடை உறைவோர்‌ பூவின்‌
மழைபொழிந்‌ தார்த்திட்‌ டாரால்‌. 55

இசைதரு புனித மைத்தன்‌
எழிலுறு முகார விந்தம்‌ ்‌. அசைவிலா திருப்ப நோக்கி
யருந்தவத்‌ தினிதின்‌ ஈன்ற வசையிலா மயிலை யொப்பாள்‌
காரியார்‌ மாழ்கி நைந்து
நசைநனி பெருகி யோங்க-இன்னணம்‌ நவில்வ தானார்‌: 56

உடைய நங்கையின்‌ புலம்பல்‌
அந்தமில்‌ காலம்‌ யாம்செய்‌
அருந்தவப்‌ பயனால்‌ வந்த
விந்தையார்‌ மகனே! தூய
விர தியே! உனக்கு நாயேன்‌
சிந்தையால்‌ செய்கீங்‌ கென்னோ?
இரண்டஎன்‌ முலையை உன்பொன்‌
சுந்தர வாயிற்‌ சவ்விச்‌
சுவைத்தும்பா அணவொ ணாதோ? 57

கண்ணினுள்‌ மணியே பொன்னே
கண்டிகை ஒதுக்கி என்றன்‌ ச
தண்ணமு தனைய பாலைத்‌
ககவுடன்‌ சுவைத்தல்‌ இதோ?
புண்ணியத்‌ தாள்க ளாலெம்‌
புயத்திடை யுதைக்கொ ணாதோ?
நண்ணுநின்‌ இரிப்பால்‌ யாங்கள்‌
நற்களிப்‌ புறலா காதோ? 58:

என்றும்நீ யன்பின்‌ மேவும்‌
எழிலுறு புதல்வ னாக
ஒன்றிய வுள்ளத்‌ தோடும்‌
உலகளந்‌ தவனை நோக்கி.
நின்றுபன்‌ னாட்கள்‌ நோன்பில்‌
நிறைந்தநின்‌ தந்த -யானோன்‌
தன்றிரு வுளத்தி லன்பு தழையநீ நோக்கி டாயோ? 59

நலமெலா மினிதின்‌ ஓங்க
நான்மக வுயிர்த்த காலைப்‌
பல.மணிக்‌ கணங்கள்‌ மேவிப்‌
பயின்மணித்‌ தொட்டில்‌ ஏற்றி
யலம்வரல்‌ முற்றும்‌ தீர்த்திட்‌
டம்புலீ! வருக என்னக்‌
கலமென இனிய தாகக்‌
காண்தவம்‌ செய்தி லேனோ? ்‌ 60

அருத்தியில்‌ லானென்‌ றோரா
ஐயவிக்‌ கொங்கைத்‌ தீம்பால்‌ :
உருத்தலால்‌ வருத்து கின்ற துயரேனும்‌ ஒஓழிக்கொ ணாதோ?
உரத்தலர்‌ மங்கை வாழும்‌
ஒருவனன்‌ றினிதின்‌ ஈன்ற
வரத்திலென்‌ வயிற்றில்‌ வந்த
மைந்தனே! முறையோ? சொல்லாய்‌. 61

பெருமைசால்‌ பரிசா ரம்வாழ்‌
பெருந்தகை யுனது பாட்டன்‌
அருமைமீ தூரப்‌ பொன்னால்‌
அழகுறப்‌ புனைந்து தந்த குருமணித்‌ தொட்டில்‌ குற்றும்‌
கோலமார்‌ வெயிலி னாலே
இருமுகம்‌ மலர்ந்து கண்கள்‌ சிறப்பயாம்‌ நோக்கொ ணாதோ? 62

ஓவிய மனையாய்‌! நின்பே
ரொளியினிற்‌ கண்வை யாதே
காவியங்‌ கண்வேற்‌ கொண்ட
காரிகை மார்கள்‌ தம்முள்‌
நாவினால்‌ ஏசி ஏ
நகைசெயல்‌ பிறர்வாய்க்‌ கேட்டேன்‌
பாவியேன்‌ இதலால்‌ வேறு
படுமொழி கேட்கொ ணாதோ? 63-

**சமஸ்கிருத சாஸ்இரங்களிலே பல
காலும்‌ சுண்‌ வையாமல்‌…… திருவாய்மொழி முதலான அருளிச்செயலிலே
பரிசலனம்‌ பண்ணிக்கொண்டு”” என்பது ‘*யதீந்த்ர ப்ரணவப்‌ பிரபாவம்‌””.

உன்திரு முகத்தின்‌ கோலத்‌
தோங்கிநல்‌ லுவகை காட்டும்‌
புன்சரிப்‌ பூடரனே என்னோ
புரிந்துநீ நோக்குப்‌ பாரா
இன்பமுற்‌ றிருக்கின்‌ றாற்போல்‌
இருந்தனை யோடு போலத்‌
தென்படு கின்ற தையா
இருமுலைப்‌ பாலு ணாயோ? 64

உள்ளத்து ஞணருந்‌ தன்மை
யுற்றுளாய்‌[ வாட கில்லாய்‌/
வள்ளலோ டலதென்‌ னோடிம்‌
மர்மத்தை. யுரைக்கொ ணாதோ?
மெள்ளவாய்‌ மலரொ ணாதோ?
விம்மிநன்‌ கழவொ ணாதோ?
-கள்ளமோ? எம்மோ டென்னோ காழ்ப்புனக்‌’ குற்ற தைய 65

உடையநங்கையார்‌ பாங்கிமாரொடு புலம்பல்‌
இன்னணம்‌ பலவா றாக
எடுத்தெடுத்‌ தியம்பும்‌ போதும்‌
அன்னமா மதலை மேனி
யசைத்திடான்‌; விழியால்‌ காணான்‌;
மன்னுமவ்‌ வாறு காண
மலர்க்கண்‌ ரருவி சோரப்‌
பின்னரும்‌ பாங்கி மாரோ
டின்னணம்‌ பேச லுற்றாள்‌: . 66

இங்கே வடிவழகிய தம்பிதாசர்‌ உடைய நங்கையார்‌ வாயிலாகப்‌ பாடும்‌
பாடல்கள்‌ யாவும்‌ கல்லையும்‌ கனியச்‌ செய்யும்‌ நீர்மையன, “தப்பா நிலையார்‌
கவமே! தமிழ்மாறா — அப்பா முலையிரண்டும்‌ விம்மிநான்‌ ஆற்றகல்லேன்‌. —
ஒப்பாரில்லாதாய்‌! சுரந்து பீர்‌ ஓடுகின்றது; — இப்‌ பால்‌ அருந்தாய்‌! நான்‌ என்‌
பிழைத்தேன்‌ இன்னமுதே’* — :*ஓக்கலைமேல்‌ வைத்தோர்‌ கரத்தால்‌ உனைத்‌
தாங்கித்‌ -தக்கமுலை யூட்டத்‌ தவம்‌ முன்பு செய்யாதேன்‌: — மக்கடமைப்‌ பெற்ற
மடவார்‌ முகம்‌ நோக்கி. வெட்கினேன்‌ மைந்தா, விதியிலியேன்‌ ஆனேனே”*
என்னும்‌ பாடல்கள்‌ முற்றும்‌ சோகமயமானவை.

வரமிருந்‌ தடியேன்‌ பெற்ற
மதலைபோற்‌ செய்கை தானும்‌ .
இரமுறும்‌ வடிவும்‌ பெற்ற சிறுவரை உததி கூழும்‌ கரையிலா வுலகில்‌ யாண்டும்‌
கண்ட துண்டோ?மற்‌ றோர்கள்‌
பிரமையாய்‌ உரைத்த ,துண்டோ?
பேசுவீர்‌[ பேசு வீரால்‌. 67

செகமெனுங்‌ கவளந்‌ தம்மைச்‌
சிறுபச வந்த வாற்றால்‌
அகமுவப்‌ புடனே உட்கொண்‌.
டணிகுறுங்‌ குடிசேர்ந்‌ தாங்குத்‌’ துகவுடன்‌ மேவு பெம்மான்‌
தான்பிறக்‌ குதுமென்‌ றாற்போல்‌ .
மகமுயர்‌ வெய்தி யோங்க |
மாயனே உதித்திட்‌ டாலும்‌; 68!

கண்ணிய அன்பு ளாள்போற்‌ : ்‌
சார்ந்தபூ தனையாம்‌ வஞ்சப்‌ ந
பெண்ணுவப்‌ புளாள்போல்‌ தந்த
பெருந்தனி விடத்தோடம்‌ பொன்‌
வண்ணமார்‌ முலைப்பா லுண்டு
மகழ்ந்துளோன்‌, வருந்திப்‌ பெற்று
நண்ணியான்‌ தருபா லுண்ண j
நாணமுற்‌ நிருக்கன்‌ றானோ? 69

குருகை மான்மியம்‌ பாடிய கவியரசர்‌
இருக்குருகைப்‌ பெருமாள்‌ கவிராயர்‌, மாறன்‌ இருவவதாரச்‌ சருக்கத்தில்‌, .
*அலகை வஞ்சகக்‌ கஞ்சன்‌ என்‌ பான்விடும்‌ ;
அலகை மாமுலை உண்டுஅதன்‌ ஆவியுண்டு ந
உலக முண்டவன்‌ உள்ளமுண்‌ டான்குலத்‌ ்‌
இலக நங்கை தஇிருமுலை உண்கிலான்‌” ர்‌
.. என்றும்‌, ச
. “வெள்ளத்‌ தாலிலை மேற்றுயில்‌ வித்தசு ;
உள்ளத்‌ தானை உணர்வெனும்‌ கண்ணினுள்‌ (1
ட்‌ ஆ
கொள்ளப்‌ பார்வை குறிப்பல்‌ லால்புறக்‌
கள்ளத்‌ தால்வரும்‌ காட்சிகள்‌ காண்கலான்‌”*
” என்றும்‌ இருவாய்‌ மலர்ந்தருளி உள்ளார்‌,

மருவுமாய்ப்‌ பாடி யின்கண்‌ ்‌
‘வளரும்நாள்‌ மனத்தி னூடே ்‌ |
வெருவுறு வஞ்சத்‌ தோடு
வேற்றுரு வமதாய்‌ வந்து  கருதரும்‌ துயர்செய்‌ தோனைக்‌
காலினால்‌ உதைத்தோன்‌, தன்னை
அருகுறும்‌ என்னை மெல்ல .:
அசைத்துதைத்‌ தழவொண்‌ ணாதோ? 70
உறுசுவைத்‌ தயிர்பால்‌ வெண்ணெய்‌
உறிக்குட மிறக்கி யுண்ணச்‌
செறுவுடன்‌ ஆய்ச்சி வந்து
சினந்துபின்‌ தொடர்ந்து பற்றிப்‌
பெறுகுறுங்‌ கயிற்றால்‌ அந்நாள்‌
பிணித்தகல்‌ லுரலி னோடு
மறுகிடத்‌ தவழ்ந்தோன்‌ என்கண்‌
மலரமுன்‌ தவழொ ணாதோ? 71
சருவமும்‌ செய்ய வல்ல
…. தலையயன்‌ எழுத்திவ்‌ வாறோ?
மருவுநீர்ச்‌ ரத்தா னோடு
மலர்மிசை யிருந்து வாழும்‌
ஒருவனும்‌ அறியொ ணாத
ஒப்பிலான்‌ புனித மூர்த்தி
தஇருமகிழ்‌ துளவத்‌ தாரான்‌
திருவிளை யாட லாமோ? 72

படுக்கவைத்‌ திடிலவ்‌ வாறே
-படுத்தவா நிருப்பன்‌; மார்பத்‌
இடத்தில்வைத்‌ திடிலவ்‌ வாறே:
இசைந்தசை வற்றி ருப்பன்‌;
எடுத்திடை தனில்வைக்‌ திட்டால்‌
இருந்தவா நிருப்பன்‌; நங்காய்‌
அடுக்குமோ இவ்வா றெங்கும்‌
அவனியிற்‌ கண்ட துண்டோ? 73

சான்றோர்‌ உரை
இத்தவா நாகத்‌ தான்தன்‌ பாங்கியோ டிரங்கிக்‌ கண்ணீர்‌
ஓந்திநித்‌ திலம்போல்‌ வீழச்‌
சந்தையில்‌ தளருங்‌ காலை
வந்திடுங்‌ குரவ ரோடவ்‌
வாசகம்‌ முற்றுங்‌ கூறத்‌
தந்தம துளந்தேர்ந்‌ தங்குச்‌
சாற்றினர்‌ ஏற்றம்‌ மிக்கார்‌. 74

அம்மகே ளிவ்வா றெய்தும்‌
அருந்துயர்‌ முற்றும்‌ ஆதிச்‌
செம்மறன்‌ வதனம்‌ நோக்கிச்‌
செப்பிடில்‌ நீங்கி டும்மென்‌
றெம்முள மதனிற்‌ றோன்றும்‌;
இதனைநீ ராய்ந்து கேண்மின்‌;
உம்முளத்‌ திட்ட தேவை யுகந்துநீர்‌ வேண்டிக்‌ கொள்வீர்‌. 75

என்றுகொண் டவர்க ளெல்லாம்‌
இயம்புதல்‌ கேட்ட லோடும்‌
நன்றுநன்‌ றென்னச்‌ சிந்தை
நலமருள்‌ உவப்பின்‌ மூழ்கித்‌
துன்றிருத்‌ துணைவ னோடுஞ்‌
சஞ்சலம்‌ முற்றும்‌ ஓட
ஒன்றிய மனத்த ராகி
யுள்ளினார்‌ பரிவு மிக்கார்‌. 76

வையம்‌: முழுதும்‌ தரிந்துழன்று ்‌. வாடி வாடிப்‌ பிறைசூடி
கையம்‌ படையாய்‌ எனை உகந்து
காத்தி காத்தி எனப்பணிய
ஐயம்‌ பெய்தன்‌ றிரப்பகற்றும்‌
அமலன்‌ ஆகித்‌ தனிமூர்த்தி, செய்யும்‌ பரிசங்‌ கஇவையல்லால்‌
பிரிதொன்‌ றில்லை எனத்தேர்ந்தார்‌. – 77

ஆதிநாதன்‌ கோயிலை அடைந்தார்‌
அதுவுந்‌ தெளிது மெனவுளங்கொண்
டம்பொன்‌ மணித்தொட்‌ டினிலோடும்‌
புதல்வன்‌ றனைக்கொண்‌் டக்குருகூர்‌
பொருந்து மாதிப்‌ பெருநாதன்‌
குதுக லத்தோ டினிதமரும்‌
கோயில்‌ முக்கால்‌ வலம்வந்து
இதயந்‌ தெளிந்து மிக்குறுமன்‌
பெழிலார்‌ தொட்டி லுடன்வைத்தார்‌. 78

ஆழ்வார்‌ தவழ்ந்து திருப்புளி உற்றார்‌
வைத்த உடனே வைத்திட்ட
‘வாறே கடக்கும்‌ தவக்குழவி
கைத்து. நெகழ்வார்‌ தமைப்பார்த்துக்‌
கண்கள்‌ களிப்பாய்‌ நங்கையெனும்‌
மைத்த டங்கண்‌ பெருந்தேவி
மகிழ தோக்கி முறுவலித்துத்‌ .
தனிமா முகில்போல்‌ தவழ்ந்தேகி; — 79

நம்மாழ்வாரின்‌ திருக்கோலம்‌
ஒப்பில்‌ பெருமான்‌ கோவில்புறத்‌ |
துற்ப வித்த தஇிருப்புளிக்கீழ்‌
வைப்பென்‌ றமரர்‌ புகழ்ந்தேத்த ட ச
மருவி மகிழ்வோ டினிதஇிருந்து .
செப்பற்‌ கரிய பொருளுணர்த்தும்‌ .
இருமெய்ஞ்‌ ஞான முத்திரையை
நட்பில்‌ வலப்பாற்‌ கரங்காட்ட *
நவில்செங்‌ கரத்தை மடியிருத்தி; ்‌ 80

பாரோர்‌ வியப்பின்‌ மயமாகப்‌
பதும மலர்க்கண்‌ விழியாமல்‌’
ஏரார்‌. மவுனக்‌ குகையின்கண்‌ ட ன ஏ
.. எய்தா. வாக்கி -னைச்செலுத்தி ட:
ஓரா உணரா நம்பெருமான்‌ :
ஒருகால்‌ வருவா னோவெனவோ
சீரார்‌ தென்றல்‌ முகம்வருடத்‌ . தெற்கு முகமாய்த்‌ திகழ்ந்திருத்தான்‌. 81

இரு முதுகுரவரும்‌ பிரியாதிருந்தனர்‌
கருதற்‌ கரிய தவக்கோலம்‌
கண்ட காரி மாறனும்கார்‌
மருவு வண்ணக்‌ குழற்செங்கை
மடவாள்‌. தானும்‌ அந்தநாளில்‌
. பொருவில்‌ கனவிற்‌ பகர்ந்தபடி
போந்த நாரா யணன்‌என்றே
இருளில்‌ நெஞ்சிற்‌ றெளிவெய்தி
யென்றும்‌ பிரியா திருந்தனரால்‌. – 82

மதுரகவியின்‌ வரலாறு
– இங்கனம்‌ இன்னவர்‌ இருக்கு நாளிடை
சங்கையில்‌ பகிரதன்‌ தவத்திற்‌ றோன்றிய
கங்கையா டிடச்செலும்‌ கனத்த மாதவ மங்கலத்‌ தணுகிய மதுர கவியரோ. 83

மதுரகவியார்‌ சோதி கண்டார்‌
– ஓர்‌இனம்‌ .தெக்கண முவந்து நோக்கலும்‌ :
பார்மிசை யிருந்துபல்‌ கோடி கோடியாம்‌ ”
– சூரிய ராமெனத்‌ துலங்கி யோங்இிடும்‌ ட
பேரொளி -விண்மிசை பிறங்கக்‌ கண்டனன்‌. 84

சோதியைத்‌ தொடர்ந்தார்‌ – யமுனை உற்றார்‌ த
கண்டுள மதனிடைக்‌ கலக்க நெஞ்சகம்‌ od
கொண்டதை யறிகுவம்‌ என்னும்‌ கொள்கையால்‌ : .
தெண்டிரைக்‌ கங்கையை நீத்துச்‌ சேந்தநெய்‌ ‘ ன
உண்டமா தவனுறை யமுனை யுற்றனன்‌. – ’85

வேங்கடம்‌ பணிந்தார்‌
தங்கட லெண்ணியச்‌ சிறுமை செய்தவர்‌ i
தாங்கடை தேறவே சார்ந்து காத்தவன்‌ . !
Came மெய்தியே விரும்பிப்‌ போற்றினன்‌ i
தேங்கட மாலினின்‌ னருளைத்‌ தேக்கினான்‌. ‘ +, , 5 OE 86

திருவரங்கம்‌ சேவித்தார்‌
கரங்களாற்‌ பணிந்துளங்‌ க௫யுந்‌ தொண்டர்போல்‌ ‘
கரங்களா லேற்றியே கனியும்‌: பொன்னிகூழ்‌ :
அரங்கமா நகரினை அன்பின்‌ உற்றனன்‌ ட்‌ அரங்கமாய்‌ வளர்மனத்‌ தாசை பொங்கவே. , 87

அழகரைப்‌ போற்றினார்‌
காலையும்‌ மாலையுங்‌ கனிந்து தேவர்சூழ்‌
சோலையம்‌ பொருப்பினைத்‌ துன்னி யன்புடன்‌
பாலையுந்‌ தயிரையும்‌ பாடி யில்நுகர்‌
மாலையவ்‌ வழகரை வணங்கிப்‌ போற்றினான்‌. 88

கூடலழகரைப்‌ பரவினார்‌
பாடலும்‌ மனைதொறும்‌ பந்தொ டம்மனை
ஆடலும்‌ அணைமிசை யணையு மன்பரோ
டூடலும்‌ மலிந்தசீர்‌ மதுரை யுற்றுப்பொழ்‌
கூடலின்‌ அழகன்தாள்‌ குறுகிப்‌ போற்றினான்‌. 89

வில்லிபுத்தூர்‌ மேவினார்‌
மிகுந்தவத்‌ துயரினை மேவி டாதுநல்‌
வகுந்தினை யருள்வட பத்ர சாயிவான்‌
புகுந்திருப்‌ பாதமும்‌ புகழ்ப்பல்‌ லாண்டினாற்‌
சுகந்தரு பதங்களுந்‌ தொழுது வாழ்த்‌ இனான்‌. 90

வைகுண்டக்‌ கள்ளபிரானை வாழ்த்தினார்‌.
இரும்பொழிற்‌ காரிரு ளெறிந்தி டுந்திரை
பெருந்திரு மணிகளால்‌ பிறங்கு சீர்பெறும்‌
இருந்துநற்‌ பொருளையைச்‌ சேர்ந்த மாநகர்‌ வருங்களப்‌ பிரானடி வணங்கி வாழ்த்தினான்‌. 91

தகவுறும்‌ தனியிடஞ்‌ சார்ந்துள்‌ ளன்பொடும்‌
அகமறப்‌ பொருநைநீ ராடித்‌ தென்கரை ‘
சகமெலாம்‌’ வியப்புறத்‌ தயங்கு மாடமேல்‌
முகில்தவழ்‌ குருகைமா நகரம்‌ முன்னினான்‌. 92

மதுரகவியாழ்வார்‌ கண்ட சோதி |
நாடியா யிரம்பண ரேந்தி நாடொறும்‌ _
பாடுற உயருபு படர்ந்து மீதெழும்‌
பீடுறு புளியினிற்‌ ப்ரகாச மொன்றியே
. ஆடலார்‌ பொந்தினு எடங்கக்‌ கண்டனன்‌. 93

கண்டுளங்‌ கனிந்துநின்‌ றவர்க்குக்‌ காசினி
உண்டவன்‌ திருவருள்‌ உவப்பின்‌ நல்கலும்‌
பிண்டமாம்‌ வினையறப்‌ பிரதெக்‌ கணம்‌்புரிந்‌
தண்டரும்‌ எய்திடா அகமுற்‌ றானரோ. 94

வலம்புரி காலையில்‌ வடபு றத்தினில்‌
– இலங்குறு கண்களா லினிது நோக்கலும்‌
துலங்குறப்‌ பொலிதவச்‌ சோதுக்‌ காதியை நலங்கெழு புளியுளே நாடிக்‌ கண்டனன்‌. 95

இந்தசிற்‌ நிடந்தனில்‌ எங்கும்‌ யாவுமாய்‌
அந்தநற்‌ பராபரன்‌ அடைந்து ளானெனச்‌
சிந்தையுட்‌ டெளிந்திடத்‌ தேர்ந்து காதலால்‌
வந்தவ ணிருந்துளோர்‌ வதனம்‌: நோக்குபு; . 96

மதுரகவிகள்‌ வினா
ஈங்குறும்‌ அதிசயம்‌ ஏது? கூட்டமாய்‌ ்‌
நீங்களெல்‌ லோர்களும்‌ நின்று நோக்கல்‌என்‌?
. பாங்குற விழைந்திடாப்‌ பரமன்‌ யாவனோ?
்‌. ஆங்கதை விளம்புமென்‌ றன்பின்‌ ஓதினான்‌. 97

காரிமாறன்‌ விடை
நீரிய னுரைத்தசொல்‌. நெறியிற்‌ கேட்டவர்‌
– ஆரியர்‌ திலகநீ யறிதி யாலெனா
மாரியிற்‌ பொழிகர வள்ளல்‌ மாதவக்‌
காரிமா றனுமெதிர்‌ கழறல்‌ மேவினான்‌. 98

புத்திர னிலாமையாற்‌ புந்தி நொந்தழும்‌ பத்தினி யுடனடி பேணிப்‌ பற்றுடன்‌
எத்திசை களும்புகழ்‌ எழிற்கு றுங்குடி அத்தல மதனிடை யணுகிப்‌ போற்றினோம்‌. 99

அருந்தவ மிழைத்திட ‘ வந்தக்‌ கங்குலில்‌ – –
-பொருந்துறக்‌ கனவினிற்‌ புகுந்து மாதவன்‌
திருந்துறு புதல்வரிச்‌ செனனத்‌ தஇில்லையால்‌
-வருந்தியெம்‌ மிடந்தனில்‌ வந்து வேண்டினீர்‌; 100

ஆதலா லுமதிடத்‌ தன்பு கொண்டுயாங்‌
காதல ஸனாகுவங்‌ கருத்து .ஸசூற்றிடும்‌
வாதனை தீர்ந்துமா நகர மன்னுமென்‌
ஹோதினான்‌ மகழ்வொடிவ்‌ வூர்வந்‌: துற்றனம்‌. – 101

உற்றபின்‌, என்மனை ஒருசு தன்றனைப்‌
பெற்றனள்‌; அன்னவன்‌ பேச லுண்ணுதள்‌
அற்றனன்‌; மலசலம்‌ யாதும்‌: கண்டிலோம்‌;
மற்றுமன்‌ பிலாமலே :-மவுனி யாயுளான்‌. 102

இங்கே நம்மாழ்வார்‌ தாலாட்டைப்‌ பார்க்கவும்‌.
… பாலுண்ண வில்லை, பசித்தழவோ தானுமில்லை;
்‌ மேலுண்பான்‌ என்றால்‌ விழியும்‌ திறக்கவில்லை;
உச்சி குளிரவில்லை; உள்ளங்கால்‌ வேர்க்கவில்லை;
அச்சங்கை யுண்டாம்‌ அரிவையரிங்‌ செய்தவில்லை’*
என்று நயம்படப்‌ பாடப்பட்டுள்ள

மாசிலா அன்புளாய்‌/ வைய மீதுறப்‌
பூசுரர்‌ பெருந்தவம்‌ பொருந்திற்‌ றாதலால்‌
கூசியாம்‌ எம்தவக்‌ குலமு றைப்படி ்‌
வாசியார்‌ ௪ருடை மதலை யைக்கொமே; .103

செம்மலே! எம்துயர்‌ இர்த்தி நீயென
இம்மகன்‌ றன்னொடும்‌ எய்து யாம்மிக
விம்மலுற்‌ றமுதருள்‌ வேண்டிச்‌ செப்பியே
மைம்முகில்‌ மாதவன்‌ முன்பு வைத்தனம்‌. 104

வைத்தலும்‌ சரிய மதலை யாங்கணே
சத்துவம்‌ பொலிவுறத்‌ தவழ்ந்து சென்‌ றிவண்‌
இத்திறம்‌ நிட்டையி லிருந்த திவ்வணம்‌
புத்திர ரிருப்பதுப்‌ புவியு லுண்டுகொல்‌! _ 105

அன்றுதொட்‌ டின்றள ours ஆண்டுகள்‌
சென்றன எட்டிரண்‌ டிதனைத்‌ தேர்ந்திட
என்றுமிங்‌ கெய்துவர்‌; இவர்கள்‌ யாவரும்‌
ஒன்றியே காணவந்‌ துற்று ளோர்களாம்‌. 106

தேன்றுளி துளவணி செங்கண்‌ மாயவன்‌
யான்றவ மிழைத்ததற்‌ கமைய என்மனை
யீன்றவிம்‌ மதலையா மென்று வெம்பினோன்‌
சான்றுளோ ஸூணர்ந்திடச்‌ சாற்றி னானரோ. 107:

துரகவிகள்‌ வினாவும்‌ ஆழ்வார்‌ விடையும்‌
அன்னது கேட்டதும்‌ அருளின்‌ ஆழியாய்‌
மன்னுமாழ்‌ வார்மருங்‌ கெய்தி மாண்புறக்‌
கன்னமாங்‌ இரண்டினிற்‌ கதுமெ னப்புகத்‌ துன்னிட வெடுத்திது சொல்ல லுற்றனன்‌. 108

சிற்றிதின்‌ வயிற்றினிற்‌ சிறிய தாயதொன்‌
றுற்றிடி லெதனைத்தின்‌ றுறையும்‌ எவ்விடம்‌
மற்றிது புகலென மதுர மாக்கவி
சொற்றலு மவன்விடை சொல்லி னான்ரோ. 109

தெய்வம்‌ ரீயே எனப்‌ பணிதல்‌
றெவ்விடம்‌ இருக்கும்‌ என்றனை
அத்தைத்தின்‌ றங்கனே அமையும்‌ என்றுயர்‌
உத்தரஞ்‌ சொல்லலும்‌ ஒப்பில்‌ வேதியன்‌
சித்தமுள்‌ ஞூறைந்திடும்‌ தெய்வம்நீ என்றான்‌. 110

எத்தைத்‌ தின்று எங்கே கிடக்கும்‌ என்று வினாவினாய்‌. அத்தைத்‌
தின்று அங்கே Be deeb”? என்று ஆழ்வார்‌ உத்தரம்‌ சொன்னார்‌. சேட்ட வேதி
யன்‌ “தெய்வம்‌ நீ’ என்று கூறினான்‌.
செத்தது – பிரகிருதி (உலகம்‌ – உ.டல்‌). சிறியது – ஆன்மா. எத்தைத்‌
தின்று – எதை அனுபவித்து. எங்கே கிடக்கும்‌ – எங்கே இருக்கும்‌ (வினா).
அத்தைத்‌ தின்று- அப்‌ பிரகிருதியை அனுபவித்து. அங்கே கடக்கும்‌ – அந்தப்‌
பிரகிரு தியிலேயே வாழும்‌ (விடை). :
நம்மாழ்வாரைக்‌ கண்டதும்‌ மதுரகவிகள்‌ ”இச்சோதியோ என்‌ இதயம்‌
உருக்கெயது; முச்சோஇியினும்‌ முழுச்சோதி என்றிறைஞ்சினார்‌” என்று பேசிய
தாசுத்‌ தாலாட்டுக்‌ கூறும்‌.

(வேறு)
படியின்‌ மீதினில்‌ — வடிவு கொண்டருள்‌
அடிகள்‌ மீதுதன்‌ — முடிய ணிந்தனன்‌. 111

காரி மாறனும்‌ — பாரி நங்கையும்‌
சேரு மானந்த — வாரி மூழ்கினார்‌. . 112

போரி யங்குகோ – ளூரில்‌. வந்தருள்‌சீரி யோனுமுள்‌ — வாரி யாயினான்‌. 113

மன்னு மன்பினான்‌ — தன்னை யீன்றவர்‌
உன்ன ருங்களி — துன்ன ஓதுவான்‌. 114

மதுரகவிகளின்‌ புகழுரை
ஓப்பி லாப்பரம்‌ — குப்புற்‌ றெய்தநீர்‌
செப்பருந்‌ தவம்‌ — நட்பிற்‌ செய்துளீர்‌. 115

பொங்கு மாழியில்‌ — அங்கு பாலனாய்த்‌
தங்கு மாதவன்‌. — இங்கு வந்தனன்‌. 116

இங்கு, தாலாட்டு, நம்மாழ்வாரைப்‌ பார்த்து, **கரிய திருமேனி எங்கே? கை
நான்கில்‌ இரண்டெங்கே? பெரிய திருவுந்இயினில்‌ பெற்ற பிரமனெங்கே?
பாக்த்தில்‌ வாழும்‌ பரசுதரித்தோன்‌ எங்கே? ஆகத்தில்‌ வாழும்‌ அலர்மேல்‌ மடந்தை
யெங்கே? ௮ண்டமுண்ட செவ்வாய்‌ அரவிந்தப்‌ பூ விதுவோ? பண்டகலம்‌ ஏழும்‌
பரந்தளந்த தாளிதுவோ? : ஆலம்‌ தளிரில்‌ அடங்கும்‌ வடிவிதுவோ? சலம்‌ பலவுந்‌
தெளித்துணரக்‌ கூடுமோ”’ என்று மதுரகவிகள்‌ பேசியதாகக்‌ கூறுகிறது. ்

நேச மோடிருந்
தாசில்‌ நற்றவம்‌ — தே௫ற்‌ செய்குளீர்‌. 117

பூர ணன்றனைச்‌  பெற்றுளீர்‌
தேர தாதினோர்‌ — பாரி லில்லையால்‌. . 118

நன்று செய்துளீர்‌ — ஒன்று மஞ்சலீர்‌
என்று ரைத்துணர்ந்‌ — தன்று வைகினான்‌. 119
120.
_ “121

சிவனு நான்முகத்‌ — தவனு மேத்துமா |
தவனிவ்‌ வாறதாய்‌ — புவன . மெய்இனான்‌. – 122

காத லாலினி — வேத மாவதை
ஓது. வான்றமிழ்‌– போத மாகவே, ~ (123

என்ன வேயுளத்‌ — துன்னி யங்கதை
முன்னர்‌ நாளரி — சொன்ன வாறினே. 124

மதுரகவிகள்‌ பட்டோலை பிடித்தார்‌
‘சட்ட மோடுகை — தொட்டுப்‌ பண்புடன்‌
பட்டி னோலையைக்‌ — இட்டி யேந்தினான்‌. – 125

மதுரகவிகள்‌ விண்ணப்பம்‌
அம்மா றன்றன்‌ அருகினில்வந்‌
தழகார்‌ நான்கு புயம்மறைத்து
* இம்மா நிலத்தை மேன்மேலும்‌,
இனிதாய்‌ உயர்த்த வேண்டுமென
நம்மாழ்‌ வாராய்ப்‌ புவியுற்றாய்‌[
நாரங்‌ களினுள்‌ ஞூறுபொருளே
தம்மா மனத்தி லுணராமல்‌
சலிக்கின்‌ றார்கள்‌ இவரெல்லாம்‌. 126

மாய்கை யியற்று ம௫மையதால்‌
மண்ணில்‌ தோன்றும்‌ ஆன்மாக்கள்‌
தாயி. னகமுற்‌ றிடுமனிதன்‌ சகத்தை உணராத்‌ தன்மையைப்போல்‌ நேய முடையான்‌ றனைமறந்தார்‌;
நிகரில்‌ பெரியோய்‌! இப்போதே
ஆய வருக்குற்‌ றுபதேசம்‌ |
அளிப்பாய்‌ என்றான்‌ கோளூரான்‌. 127

நான்கு புயம்‌ மறைத்து என்ற இடத்தில்‌,
“சேமம்‌ குருகையோ்‌ 2? செய்யதிருப்‌ பாற்கடலோ?
தாமம்‌ பராங்குசமோ ? நாரணமோ ?-* தாமம்‌
துளவோ ? வதுளமோ? தோளிரண்டோ ? நான்கோ?
உளவோ பெருமான்‌ உனக்கு”* :
என்ற சங்கத்தார்‌ பாடலை ஒப்பிட்டுக்‌ காண்ச,

பெருமாள்‌ காட்சி வழங்கல்‌
எண்ணி யுளத்திற்‌ கருடன்மிசை
ஏறி உலகம்‌ உவப்பெய்தக்‌
கண்ணு தலும்பூ வுறைவோனும்‌
கரங்கள்‌ கூப்பி மருங்குவர
– விண்ண வரும்பூ வடிபணிந்து
விரும்பிப்‌ போற்றக்‌ கடல்குழும்‌
மண்ணி லுறையும்‌ சடகோபன்‌
மருங்கு வந்தான்‌ மாயவனே. 128

நறவ வனமா லிகையணியும்‌
நலமார்‌ மகுடந்‌ தருசுடரும்‌
பறவை யினங்கள்‌ தமக்கரசாய்ப்‌ பயிலும்‌ பெருமான்‌ விடமகற்றும்‌ சிறகி னொலியும்‌ விசும்பிடையே
சிறப்பக்‌ கரிய ஞாயிறென
உறலு மகழ்மா றனுமிதெனோ
ஓலியென்‌ நுறப்பிற்‌ கண்விழித்தான்‌. 129

இருகண்‌ விழித்து நோக்குதலும்‌ எழிலார்‌ கடலின்‌ புனல்‌உண்ட
கருமா முகில்செந்‌ தாமரையின்‌
கானம்‌ மலர்ந்து தடித்திலங்கும்‌
பருதி யொடுவெண்‌ மதியினொடும்‌
பலவா முடுவின்‌ குலமுடனும்‌
உருமே றுடனுங்‌ ககனமிசை
யொளிர்ந்துப்‌ புவிக்க ணுறுவதுபோல்‌; 130

வயங்கு கங்கை தருபொற்றாள்‌
வதனம்‌ இருகண்‌ வாய்கரங்கள்‌
தயங்கு மகுடம்‌ . மணிக்குழைகள்‌
சங்கம்‌ H&A வாள்தண்டம்‌
இயங்கு கதைபொற்‌ பணிதியுடன்‌
சீரார்‌ விசும்பில்‌ மலர்பூத்த
கயங்கொள்்‌ எழிலோ டமலன்வரக்‌
கண்டு மாறன்‌ களிப்புற்றான்‌. 131

ஏரார்‌ கோலந்‌ தனைக்கண்டான்‌;
எதிர்சென்‌ றாடிப்‌ புவியுறவே .
வேரா விதுரா அழலினிடும்‌
மெழுகா யுருகி யெதிர்நின்‌ றான்‌;
ஆரா வமுதே[ எனப்புகன்‌ றான்‌:
அழுதான்‌ இரித்தான்‌ பாடிட்டான்‌;
சீரார்‌ மலர்ப்பூந்‌ இருவடிக்கீழ்‌
சென்னி யிருத்தித்‌ துதிசெய்வான்‌. 132

நம்மாழ்வார்‌ துதித்தல்‌ *
ஓயா! போற்றி! கருணைநிறை;
அத்தா! போற்றி! ஓம்படைசேர்‌
கையாய்‌! போற்றி! பேரன்பிற்‌
களித்தாய்‌] போற்றி! கருங்கொண்டல்‌
மெய்யாய்‌! போற்றி! வேதாந்த
விளக்கே! போற்றி! மாணிக்கப்‌
பையாய்‌! போற்றி! ஒப்பில்லாப்‌
பரமா! நின்பொற்‌ பதம்போற்றி 133

மாயா! போற்றி மரசுதமா
மலையே! போற்றி! செம்பவள .
வாயா! போற்றி! மறைதேடும்‌
வடிவோய்‌! போற்றி! பாடிவளர்‌
ஆயா! போற்றி! விதிக்கு மறை :
யறைந்தாய்‌! போற்றி! பூவையொடுங்‌
காயா மலர்மே னியா/போற்றி/
கருணா கரநின்‌ கழல்போற்றி! ்‌.. 134

ஆழி மதித்த புத்தமுதை யமரர்க்‌ களித்தாய்‌! தொலையாத
ஊழி பலவாங்‌ கோடிகளும்‌
ஒழியாய்‌! புகழ வாயில்லாத்‌
தாழி தனக்கும்‌. உயர்வீடு
தந்தாய்‌! இடங்கர்‌ வாய்ப்பட்ட
சூழிமா மதமா கரியினருந்
துயரந்‌ துடைத்தாய்‌!’ பல்லாண்டு. . 135

விண்ணி லுறையும்‌ கடவுளர்கள்‌
மேவிக்‌ காப்பாய்‌ என்றுரைப்ப,
மண்ணி லயோத்தித்‌ தயரதன்சர்‌
மகவாய்‌ உதித்தாய்‌! அருள்மீஇட்‌
டெண்ண லரிய கோடிகளாய்‌
இலங்கு மரக்கர்‌ தமைக்காலற்‌
குண்ண அளித்த கோதண்ட
முடைய பரனே! பல்லாண்டு! 136

என்னப்‌ .பலவாம்‌’ செய்கைகளை
எண்ணி யெண்ணி மனங்குளிர்ந்து
பன்னி மகழ்விற்‌ றுதிசெய்து
பரமா! பரமா! தேனுண்டு
தென்ன தெனவென்‌ றளிமழுரலும்‌
சரார்‌ துளபம்‌ பொலிமார்பா।
பன்னு மிதனைக்‌ கேட்டியெனப்‌
பராங்கு .சனுமீ துரைத்திட்டான்‌. 137

கூவிக்கொள்
இந்த வுடலத்‌ துடன்புவியில்‌
இந்நாள்‌ காறு மிருந்தலுத்தேன்‌; உந்த னடியைப்‌ பிரிந்தடியேன்‌
உழன்றேன்‌; மாலே, இனியா ற்றேன்‌;
வந்து மாயை தொடருமுனம்‌
வந்தே யெய்தத்‌ துடிக்கின்றேன்‌;
அந்தப்‌ பரம பதவுலகம்‌
அடைய விழைந்தேன்‌ என்றனனே. 138

பெருமாள்‌ விருப்பம்‌ –‘வேதம்‌ பாடுக
ஏரின்‌ மிக்க மொழிகேட்டுச்‌
சிவனோ டயனே முதலானோர்‌
பாரில்‌ தவங்கள்‌ புரிந்தாலும்‌
படிவம்‌ தெரியாப்‌ பரஞ்சுடராய்‌
வேரி மருவும்‌ இங்களனியாய்‌
வித்தாய்‌ இலங்க, வரையளித்த
நாரி விரும்பு முயர்ந்ததிரு நாம முடையோன்‌ இதைதநவில்வான்‌: 139

உலகை எழுப்பும்‌ கதிரவன்போல்‌
ஒளியார்‌ மணிகள்‌ கொழியாழி
இலகு திரைபோல்‌ வரும்பிறவி
இடரால்‌ உயிர்கள்‌ வாடினகாண்‌ மலரு முளத்தாய்‌] அருளின்றி
வருவேன்‌ என்னில்‌ அக்கருமம்‌
தலமீ தன்பி னுடன்புரியத்‌
தக்கோர்‌ எவரே சாற்றுவையால்‌. : 140

கோதில்‌ வேத உச்சியினிற்‌
கூறு முடிவாம்‌ பொருளதனை
நாத முறுசெந்‌ தமிழ்மொழியில்‌
நான்கு வருணத்‌ தவர்தமக்கும்‌
சாத னஞ்செய்‌ யோகியர்கள்‌
தமக்கு மாகும்‌ படியோதி
மாத வத்தின்‌ பெரும்பயனை
மாந்தர்‌ இனிதே பெறவுஞற்றி; — – 141

(வேறு) | ்‌
வாய்மொழி வழங்கி வருக
மருவு மிச்செயல்‌ புரிதற்கு முன்வரல்‌ வழக்கன்‌
ஐருமை யாம்செயல்‌ புரிகுதி; மாயையென்‌ பதுதான்‌. ….
இருமை யுங்கெடுத்‌ தெய்திடும்‌; இதன்வயப்‌ படாமல்‌
வெருவு றாமல்நீ வாய்மொழி வெளியிட்டு வருவாய்‌! 142

மாயம்‌ வல்லவன்‌ இன்னவா றியம்பி,வை குந்தத்‌
தேயும்‌ ஆசையான்‌ இப்புவி இருப்பனோ என்று
நேய மாய்வெகுண்‌ டென்மொழி நீமறேல்‌; அருளின்‌
நாய .காரஎனப்‌ பகர்ந்தனன்‌: நான்மறை முதல்வன்‌. 143

பந்தம்‌ யாவையும்‌ நீக்கிடும்‌ பசியகார்க்‌ கொண்டல்‌
இந்த வாறுரைத்‌ தேகினன்‌; ஏகலும்‌ கலங்கும்‌
சிந்தை யிற்றெளி வெய்தினன்‌; திருவுளங்‌ களித்தேற்‌
த்த மாறனும்‌ அயர்வெலா மகற்றினன்‌ அம்மா! 144

மாறன்‌ பெயர்ந்திலன்‌
மூன்பு: தானமைந்‌ திருந்துள முறைமையைத்‌ தேர்ந்து துன்ப மாமெனச்‌ சொலும்பெருஞ்‌ சாகரம்‌ துறக்க
இன்ப மாமெனும்‌ மரக்கலங்‌ கொடுக்கவந்‌ இடுதல்‌
பின்பு தானமைந்‌ இடுதலால்‌ பெயர்ந்திலன்‌ மாறன்‌. 145

திலமி ருந்துமா மாயையை நீக்குதற்‌ கரிதாம்‌
பலவு யிர்களும்‌ படித்துநல்‌ லுணர்வினைப்‌ படைத்‌்தஇட்‌
டலகன்‌ மாதவத்‌ தவர்களு மறியொணா வமலன்‌
உலக மேவியாங்‌ குறையடி யார்களோ டுறவும்‌; 146

மாய னாருரை வழுவுறா தியற்றவும்‌ மனதுள
நேய மாய்மறைப்‌ பொருளினைத்‌ தமிழ்செய்வா னினைந்திட்‌
டாய மாறனு மத்திருப்‌ புளியிடை யமர்ந்து
தூய மாமது ரக்கவி சுடர்முக நோக்கா; 147

வேதம்‌ அவதரித்தது — இருக்கு வேதம்‌
நன்று நீயெழு துகவெனா நவின்றருங்‌ கவியாய்‌ :
ஒன்று மாறுபொய்‌ நின்றஞா னமும்பொல்லா வொழுக்கும்‌
என்றெ டுத்துயர்‌ இருவிருத்‌ தம்மென இருக்கில்‌
துன்று கின்றசா ரந்தனைத்‌ துலங்கநா றுரைத்தான்‌. 148

யசுர்‌ வேதம்‌ — அதர்வண வேதம்‌
விரிவ தாமெசுர்‌ வேதசா ரந்தனைத்‌ திருவா
சிரிய மென்றெழு: கவிதையாய்ச்‌ செப்பினன்‌; அதன்பின்‌
பரிவி னோடதர்‌ வணம்பகர்‌ சாரத்தைப்‌ பெரிய
திருவந்‌ தாதியென்‌ றெண்பத்தேழ்‌ கவியதாய்ச்‌ செய்தான்‌. 149

சாம வேதம்‌ _..திருவாய்மொழியின்‌ மாண்பும்‌ கருத்தும்‌
செழியுஞ்‌ சாமவே தத்தின்சா ரந்தனைத்‌ திருவாய்‌
மொழியோ ராயிர நூற்றிரண்‌ டோடுகவி மொழிந்தான்‌;
அழிவி, லாதுயர்‌ பதவிசென்‌ றணுகுறு வோர்க்கு
‘வழியெ. லாங்குளிர்‌ மரங்களே மல்கட வம்மா! 150

அப்பெ ருந்திரு வாய்மொழி தனிலறைந்‌ ததுவோ.
இப்பெ ருங்கட லுலகெலா மீன்றுகாத்‌ தழிக்கும்‌
_முப்ப ரம்பொரு ளாகியும்‌ முடியுமன்‌ னாள்வாய்‌
ருந்திருப்‌ பாலனா யோருரு வமைந்தே. 151.

அடைய லைக்கடல்‌ வண்ணமோ! டயனரன்‌ முதலாய்‌
அடைய வுந்தன துருவினுள்‌ ளடக்கியோ ராலின்‌
அடைய டைந்திடு நாரண னேபர மவன்றாள்‌
அடைய வேண்டுமிவ்‌ வுடலமோ- நிலையிலா தழியும்‌. 152

: I படிய ளந்தநா ளயனொடு பரமனும்‌ . பிறரும்‌
முடியொ டுங்கழற்‌ றெரிவுற தோக்குதன்‌ முடியா
நெடிய தாந்திரு விக்ரம வடிவநேர்ந்‌ துவனோ
அடிய ராமவர்க்‌ கெளியவன்‌ பிறர்தமக்‌ கரியான்‌. 153

பரவு மப்பெரும்‌ பராபரன்‌ பாடியின்‌ வளர்நாள்‌
கரவி னூடுநெய்‌ ‘பால்ததி பருகுதல்‌ காணா
அரவ வல்குலி னாய்ச்சியர்‌ வெகுண்டுவந்‌ தடித்திட்‌
டுரலு டன்பிணித்‌ இடவெவ்வா, றுறைந்தனன்‌ என்னா; 154

ஆழ்வாரின்‌ மோக பரவசம்‌
தேறு ளந்தனி னினைதொறும்‌. நினைதொறும்‌ தியங்கா
கூறு தற்கருஞ்‌ சோகமுட்‌ கொளப்பொதா மையினால்‌
வேறு மோருரை விளம்புறா மோகமே விளங்கி
ஆறு தஇிங்கள்தன்‌ வாய்திற வாமலங்‌ இருந்தான்‌. ்‌ 155

தாயார்‌ பாசுரம்‌
்‌. மீள வுந்தெளிந்‌ தொருமூறை விளம்பியே தானோர்‌.
“வாள மைந்தகண்‌ மடமங்கை யாகவும்‌ வளர்முள்‌
தாள தாமரை மலர்மிசைச்‌ சார்ந்துறை திருவை
ஆளு நாரணன்‌ புருடனா கவுமுளத்‌ தமைத்து? 156

கள்ள லம்புபைந்‌ துளவவக்‌ காகுத்த ரிடத்தில்‌.
புள்ளி னங்களைத்‌ தூதுதான்‌ விடுவது போலும்‌
உள்ள மைந்தவா தனத்திடத்‌ துறுவது போலும்‌
தெள்ளு செந்தமிழ்க்‌ கவிபல செய்திடு மமைதி. 157

நூற்றெண்மர்‌ காட்சி வழங்கல்‌
ஒளிய ரங்கமே முதலநூற்‌ .றெண்பதி யுறையும்‌
துளிம துக்கமழ்‌ துளவணி மாலைமார்‌ பினரும்‌
களிது லங்கவக்‌ கவிகளைக்‌ கேட்குதல்‌ கருதிப்‌
புளியென்‌ றோதுமத்‌ தருவரு கனிற்பொருந்‌ தினரால்‌. 158

பனுவல்‌ பாடுமின்‌
பின்ன ருங்களி துலங்கிப்பற்‌ பலவிதம்‌ பெறவே
மன்னு மாறன்முற்‌ றுணர்ந்தவ னாமென மனதுள்‌
உன்னி நன்குணர்ந்‌ துகந்துகந்‌- துருகுறப்‌ புகழ்ந்து பன்னு செந்தமிழ்ப்‌ பனுவல்கள்‌ பாடுமின்‌ என்றும்‌; 159

௪னையு மாகடல்‌ sae pone மருந்தைமோ: கினியாய்‌
நனைகொள்‌ கற்பக, நாடருக்‌ களித்தரு ணாதன்‌
நினைவு றும்பொழு (தேநெடி தாம்பல வின்பந்‌
தனையு எளங்களி துளங்கிடத்‌ தருகுவ னெனவும்‌; 160

கதிர வன்றனை யமரிடை த்‌ துற்களைக்‌ கணவன்‌
மதிம ருண்டுயிர்‌. மாளவும்‌ வானுறை புலவோர்‌
அதிசெ யம்பெரி தடையவு மறைத்தவா ியர்க்குத்‌
– துதிசெய்‌ தேத்துமத்‌;தோத்ரமே முக்கிய மெனவும்‌; 161

சவையி னிற்றுரோ !பதியபி மானந்தாங்‌ கெனவே
கவலை யுற்றழைத்‌ ,திடவுடை யருள்கண்ண ஸனடியார்‌
அவய வங்களி லணுகிவீற்‌ -நிருந்தவர்‌ தம்பால்‌
எவையு மின்புற வனுபவித்‌ இடுபவ னெளவும்‌; 162

(வேறு)
துவரிதழ்க்‌ கருங்குழற்‌ றூய மெய்த்தவச்‌
சவரியுற்‌ நிடப்பதந்‌ தந்த மாண்பினான்‌
எவரிடத்‌ இினுங்கைமா றெதுவும்‌ நோக்குறா
தவரிடத்‌ தன்புவைத்‌ களித்து ளானென்றும்‌; 163

மாத்துய ரங்கொளும்‌ வார ணந்தனைக்‌
காத்தரு ஞம்செழுங்‌ கமல நாபனைப்‌
பார்த்திடா தனை நிக ராகப்‌ பாருளோர்‌ தோத்திரிக்‌ கின்றனர்‌ துயருற்‌ றென்னவும்‌; 164

சிந்தையுண்‌ ணினைந்திடச்‌ சக்கி ரத்தெதிர்‌
வந்தருள்‌ புரிபவன்‌ வஞ்ச முற்றெதிர்‌ |
முந்திவந்‌ தமர்புரி முட்டி கன்னொடும்‌ ்‌
தந்தமா கரிபடச்‌ சாடினோ ஸனென்றும்‌; 165

எருதுகைக்‌ கரிபரி யெதிர்ப்பக்‌ காய்ந்திடும்‌
அருமறை முடிவனை அனுப வித்திட
மருவியுற்‌ றென்னொடும்‌ வரத்த குந்துளோர்‌
இருநில மிசையெ வரிருக்கின்‌ றாரென்றும்‌; 166

தென்புறப்‌ பகைவர்மேல்‌ தரி யேவினோன்‌
முன்படைந்‌ தொழிவிலா முத்தர்‌ தம்மொடும்‌
அன்புடன்‌ கண்டனு பவிக்கன்‌ றேனென்றும்‌; 167
்‌
வன்புறப்‌ புகலிலா துலகில்‌ வாழுயிர்‌ [
‘ ச
….. திரைக்குலங்‌ காத்திட நீள்வி ரல்கொடு
| வரைக்குடை. பிடித்துக்கன்‌ மாரி மாற்றிய |
இரைக்கடல்‌ வண்ணர்பாற்‌ சேர்ந்தென்‌ செய்கைகள்‌ ட
உரைப்பரோ விவர்களென்‌ றுரைத்த தாகவும்‌; 168°

பன்னருந்‌ துயரினைப்‌ பாங்கி மார்களும்‌
அன்னையர்‌ களுமடைந்‌ தம்பு யத்துவாழ்‌
“பொன்னையா ஸூடைப்புரு .டோத்த மன்னொடுஞ்‌ |
சொன்னதா” கவுங்கவி சொல்லுங்‌ காலையில்‌; 169:

பெருமாள்‌ பரமபதக்‌ கோலங்‌ காட்டினான்‌
அந்தபா சுரங்களுக்‌ கன்புற்‌ றாங்கவன்‌
சிந்தையுட்‌ டோன்றியே சிறப்ப மைந்தவை
குந்தநல்‌ லிருப்பதாங்‌ கோலங்‌ காட்டினான்‌
பைந்தலை யரவணைப்‌ பள்ளி நாரணன்‌. 170

தூண்டருஞ்‌ சுடர்விளக்‌ கனைய சோதியைக்‌
காண்டலு முளந்தனிற்‌ களிப்புற்‌ றோங்கிட
மீண்டுபா சுரங்களை விளம்பி யேத்தினான்‌
யீண்டிது வேயழ காகு மென்றனன்‌. 171

கடுவமர்‌ களனொடுங்‌ கமலத்‌ தோனொடும்‌
நெடுமுகன்‌ மேனியோய்‌ நிகரி லாதறின்‌
வடிவிலுன்‌ றிருவடி. வலிந்து ளேனினி
விடுகில னென்னவும்‌ விளம்பு மெல்லையில்‌; 172°

இரு முதுகுரவர்கள்‌ பரமபதம்‌ பெறல்‌
சிரீதரன்‌ பணிவிடை செய்து வைகுவோர்‌
காரியார்‌ நங்கையார்‌ கழறுஞ்‌ சுற்றத்தவ்‌
ஊரரினோர்‌ தமக்குமே லுலகம்‌ நல்கினான்‌ வேரியந்‌ துளவணி விமல மாதவன்‌, : 173

அன்னதை யுணர்ந்தமா றனுமுள்‌ ளன்பொடும்‌
பின்னரு மோதுவான்‌: பிரமன்‌ றாதையார்‌
என்னையொப்‌ பாகவென்‌ சுற்றத்‌ தார்களும்‌
மன்னிட வுயர்பதம்‌ வழங்கி னாரென்றும்‌; 174

இத்திற முயர்பத முமெமக்கு மெய்திடற்‌
குத்திடு முலகுளீ ௬லகம்‌ யாவையும்‌
வைத்திடு மகடுள மாத வன்மலர்‌
ஒத்திடு மடித்தொழி லுஞற்று மென்னவும்‌:; 175

வேதமுற்‌ றுரைதவம்‌ விழைந்தி ழைத்திடு மாதவ ர௬ுளந்தொறும்‌ வாழு மாதவ
நாதனை யளித்திடு நளின மாமலர்ப்‌
பாதனைத்‌ துதஇிசெயும்‌ பதவிக்‌ கென்னவும்‌; 176 :

குரைகடல்‌ வண்ணர்தங்‌ கோல மெய்துதா
——வாழ்வு வேண்டினோர்‌
தரைபுகழ்‌ சோலைகள்‌ ளழகர்‌ தம்மிடம்‌
விரைவுட னேவரு வீர்க ளென்னவும்‌; 177

மீண்டும்‌ சேவை சாதித்தல்‌
இவ்விதங்‌ களிற்கவி யிசைக்குங்‌ காலையில்‌
அவ்விய மவித்தநெஞ்‌ சவனுக்‌ கன்பொடும்‌
செவ்விய திருவுருச்‌ சேவை காட்டினான்‌ ஒவ்வியா லடைக்கட லுறங்கு நாரணன்‌. 178°

திவ்விய மேனி வேண்டினார்‌
அவ்வுரு வனுபவித்‌ ததற்பின்‌ பாசுரம்‌
பவ்வனே ரியவதை யனுப வித்திடற்‌
இவ்வுரு வமைந்ததா காதெ னக்கினித்‌
இவ்விய வுருவருள்‌ செய்யு மென்னவும்‌; 179

அந்தநல்‌ லுருவின்வேங்‌ கடவர்க்‌ காட்செய்யுஞ்‌
சிந்தைகொண் டலரின்மேல்‌ மங்கை தேவனே
இந்தபூ வுலகுட னேழி ரண்டுடன்‌ எந்தபே ருலகமும்‌ யாரு மென்றனன்‌. 180

கனிவுறு முளந்தனிற்‌ கருதி யன்புடன்‌
தனுவளைத்‌ திலங்கையர்‌ தானை செற்றவன்‌
பனிமல ரடியினைப்‌ பணிந்து போற்றிசெய்‌
– தனுபவி யார்தமை யிகழ்ந்த தாகவும்‌; 181

குண்டுவா எளிருஞ்சிலை சங்கு சக்கரம்‌
கொண்டுளான்‌ நிருவுருக்‌ கோலச்‌ சேவையைக்‌
கண்டுள மகழ்ந்திரு கண்க ஸஎளிப்புடன்‌
தொண்டுநு மவர்புகழ்‌ சொன்‌ னதாகவும்‌; 182

அந்தரி யாமியா முருவ மாவதைச்‌
சிந்தைநேர்ந்‌ தறிகுத லரிது சீதரன்‌ வந்தவர்ச்‌ சாவதா ரமதை வன்மையோ
டுந்தமுட்‌ பற்றலே யுற்றவீ டென்றும்‌; 183

பாகவதர்‌ சிறப்பைப்‌ பேசினார்‌
பொன்னையா ரூடையவப்‌ புனிதன்‌ பார்மிசை
மன்னிய திருவர்ச்சா வதார மாவது
தன்னைநெஞ்‌ சதுகொடு தரித்து ளோர்களே
என்னையா: ரூடையவ ரென்ப தாகவும்‌; 184

வடிவது குறளின்மூ வடிமண்‌ வாங்கியே
– படியெலாம்‌ கொண்டடிப்‌ படுத்தி மாவலி
முடிமிசை யடிகவித்‌ துளமு குந்தனார்‌
அடியவர்க்‌ கடியனா னாகு மென்ளவும்‌; 186

மக்களைப்‌ பாடாதீர்‌
பாங்குறு மனிதரைப்‌ புகழ்ந்து பாடியே யேங்கியுற்‌ நிழித்திடா இனிதி வோடுமுந்‌ இங்கடப்‌ புலவர்காள்‌ தேவ. தேவனாம்‌
வேங்கட வனைக்கவி விளம்புவீ ‘ ரென்றும்‌; 186

காற்றருண்‌ மதலையாற்‌ கண்ணி லானருள்‌
‘நூற்றுவ ராவியை நுதிகொள்‌ சூலவெங்‌
.கூற்றுணா வளித்தகோ விந்த னல்லது வேற்றொரு வரைக்கவி விளம்பிடே னென்றும்‌; 187

செல்வமே நிலையிலை தெளிவுற்‌ றொல்லையில்‌
கல்வடி. வகன்றக லிகைக வின்பெறும்‌
நல்வண மெய்தமுன்‌ னடந்த நாரணன்‌ ்‌
பல்வளம்‌ பொருந்துதாள்‌ பற்றுவீ ரென்றும்‌; 188

அன்றிரா வணன்வலி யழித்தொ மித்துப்போர்க்‌
இன்றுபோய்‌ நாளைவா வென்றி யம்பிய
வென்‌ றிவெஞ்‌ சலையனை மேவி யன்பணி
மன்றலர்‌ மாலையை வழங்கு. கென்றனன்‌. … 189

உவந்தவ னிவ்வண மோதுங்‌ காலையில்‌
கவந்தனைக்‌ காய்ந்தகா குத்தன்‌ றானணி
நிவந்தபைந்‌ துளவொடு நிரம்ப வைத்திடும்‌
சிவந்தபூ மாலையைச்‌ சேர்ந்த ளித்தரோ,. 190

பெருமாள்‌ சேவை —
அந்தமாப்‌ புகழ்ச்சட கோப னாயினோன்‌
சிந்தைகன்‌ னையும்புகல்‌ செய்யு டன்னையும்‌
சந்தனம்‌ பணியு டையாகத்‌ தாங்கியே
வந்தவன்‌ நிருமுனம்‌ மருவி நின்றனன்‌. 191

நின்றவச்‌ செய்கையை நெடிது நோக்குறா
ஒன்றுமவ்‌ வாறவ னுவந்து பாடலும்‌
கன்றினால்‌ விளவினை யெறிந்த கார்வணன்‌
அன்றது கேட்டுவந்‌ தகன்று போயினான்‌. 192

Beroybd auivien Sra wpa
வாள்பொரு கண்ணினார்‌ வாச கந்தனை
தாளினாற்‌ சகடிற வுதைத்துச்‌ சாடினோன்‌
கேள்வியுற்‌ நிடும்வகை கிளர்த்தும்‌ வாறதாய்‌; 193

பாட்டிவன்‌ பாடலும்‌ பைய ராவின்மேல்‌
ஆட்டினோ -னாங்கவ ரறைந்த வாசகம்‌
கேட்டுள மஇூழ்ந்துதன்‌ கிருபை கிட்டியே
காட்டலு மிருகணுங்‌ களிப்புக்‌ கொண்டரோ; .194

இத்தக வுடையனா மென்க ணான்றனக்‌
கத்தனைப்‌ பாடுவேற்‌ கரிய துண்டுகொல்‌
சித்தமுட்‌ குறையெனோ வென்று செய்யபா
ஒத்திடத்‌ தனைவியந்‌ துரைக்கு மெல்லையில்‌; 195

ஆழ்வாரின்‌ பிரிவாற்றாமை
பின்னரு மாயவன்‌ .பெயர்ந்து போகலும்‌
அன்னதற்‌ கரங்கிமா தரின முங்கியே
பன்னரும்‌ விரகவா ழியிற்ப டிந்திடக்‌
கன்னியா்ச்‌ செயலினைக்‌ காண்ட லோடுமே; 196

அனையதோய்‌ இரவே வலிதி னாட்கொள
நினையவு மதுதனை நீக்கித்‌ துன்புடன்‌
soo pat வேறிலாத்‌ தன்மை யுள்ளவன்‌
எனையுறப்‌ பிடித்தன னென்ப தாகவும்‌; 197

சானகி யெனுந்திரு தன்னை நாடியே
கானினும்‌ வரையினுங்‌ கடுகச்‌ சென்றுள
மீனமாக்‌ கடல்வணன்‌ வேண்டி லானெனில்‌ .
நானு ம்வேண்‌ டிலனென நவில்வ தாகவும்‌; 198

உலகுளோர்‌ கொடுமையை யுள்ளத்‌ துன்னியிந்‌
நிலமிசை யிருந்திடேன்‌ நீல மேனியாய்‌
சலசலோ சனமுளாய்‌ தயர தன்றவக்‌
குலமணி’ யேயெனைக்‌ கூவிக்‌ கொள்ளென்றும்‌; 199

இருக்குரு கூரெனும்‌ பதியிற்‌ சேர்ந்துவாழ்ந்‌ இருக்குமால்‌ பரம்பிற தேவர்‌ யாவரும்‌
தருக்கிலா வபரமா மெனவுந்‌ தன்னுளத்‌
துருக்கமுற்‌ றுறுங்கவி யோது மெல்லையில்‌; 200

சமயவாதியர்‌ வருகை
(வேறு)
இருமா நிலத்தில்‌ உறுபொருள்க
“ளெவையும்‌ பெருவாய்‌ மலர்ந்துண்ட
பெருமான்‌ ஒப்பில்‌ பரமென்றும்‌
அபரம்‌ பிறதே வர்களென்றும்‌
அருமா மறைகள்‌ விரித்துரைக்கும்‌
அவ்வா றெடுத்துச்‌ ச௪டகோபன்‌
இருவாய்‌ மொழியாம்‌ பிரபந்த மதனுள்‌ வகுத்துச்‌ செப்புதலும்‌; 201

சைவ ரலகா யதர்பவுத்தர்‌
சமணர்‌ முதலாஞ்‌ சமயர்கள்நீ
செய்வ தாமிவ்‌ வருந்தமிழின்‌
இருவாய்‌ மொழியில்‌ வேண்டுபொருள்‌
கைவந்‌ தணுகா மலகமெனக்‌
காட்டி யருள்செய்‌ இடுமெமது
தெய்வங்‌ கள்கமை யபரமமெனச்‌ ;
செப்ப லெவ்வா றெதுகொண்டே? 202

வேதங்‌ .களினு மிவ்வாறாய்‌
விளம்பக்‌ காணோம்‌; . நீர்தாமே
ஓது கன்ற வகையோவென்‌
நுரைப்ப; அதற்கு நகைத்தருளிப்‌ பேதித்‌ துரைத்த திலைவேகம்‌;
பேசு முறையே யுரைத்தேனென்‌
றாதி பரனாம்‌ மகஇழ்மாற
.னருளிச்‌ செய்தும்‌; அவரறைவார்‌; 203

அருமா மறையின்‌ முறைவழுவா
குறைந்தே னென்றாய்‌! அம்மறைகள்‌ –
ஒருநான்‌ கனையு முழுதுணர்ந்தே யோதி னவரு முரைத்ததில்லை;
குருபோ தனைசெய்‌ இடவுணராய்‌;
குறிக்குந்‌. தெய்வ வருளதனால்‌
வருமோ வென்னோ? வந்திருந்தால்‌
வகுப்பா யதையிவ்‌ வாறெனவே; , 204

என்ன வவர்க ஸியம்புதல்கேட்‌
டிவ்வா றுங்கட்‌ கம்மறையை
வன்ன பேத மாதலினால்‌
வகுத்திட்‌ டுணர்த்த லாகாவே;
அன்ன மறையு ளெப்பொருணீ
ரறிய லாகா மெய்ப்‌ பொருள்கள்‌
இன்ன விதமென்‌ றெடுத்துரைப்பி
னியம்பு வேனென்‌ நியம்பினனே. 205

அந்த மொழிகேட்‌ டவர்களெலா
மதனுள்‌ தமக்கு வேண்டுவன .:
எந்த வெந்தச்‌ சங்கிதைக
ளெவ்வெவ்‌ விதமாய்‌ வினவினதற்‌
இந்த விதமா மதன்பொருளென்‌
நெடுத்துப்‌ பொருந்த விசைத்திடலும்‌ –
குந்தம்‌ முளத்தில்‌ பரமாவோன்‌ ்‌
தனிநா ரணனென்‌ றவர்தெளிந்தே; 206

ஐய மிலதா மிப்பொருள்தேர்ந்‌
தறியா மையினால்‌ அடியேங்கள்‌
வெய்ய மொழிகள்‌ பல.பலவாய்‌
…. விளம்பிற்‌ றெல்லாம்‌ பொறுத்தருள்‌ நீ
செய்ய வேண்டு மெனவவர்கள்‌ .
இருமா லுருவாய்த்‌ திகழ்மாறன்‌
துய்ய How worry udev
தொழுதாங்‌ ‘கெதிர்தின்‌ நிவைசொல்வார்‌. 207

வைய மதன்மேற்‌ பரநூல்கள்‌
– வகுத்துக்‌ கூறுங்‌ கடவுளெலாம்‌
பொய்ய தெனவும்‌ மெய்ஞ்ஞானம்‌
பொருந்திப்‌ பலவா முயிரெனவும்‌
உய்யும்‌ வகைநீ செயுங்கவிக்குள்‌
ளுரைத்த பொருளாம்‌. நாரணனே
மெய்ய தாமப்‌ பரமெனவும்‌
விளங்க வுணர்ந்தோ மாதவினால்‌; ட்‌ 208

சமயவாதியர்‌ திருந்தல்‌’:
எமையிங்‌ கடிமை கொளவேண்டு .
மெனவாங்‌ கவர்க ளதற்குமுனம்‌
அமையுங்‌ கோலந்‌’ தனைமாற்றி
யாழித்‌ இருநா ரணனடியார்‌
குமையொப்‌ பாகும்‌ திருவேடந்‌
்‌.. தாங்கி நிகழ்ந்தோர்‌.. துமைநோக்கு
உமையெம்‌ பெருமான்‌ களிப்பாக
உகந்தாட்‌ கொள்வா னெனவுரைத்தான்‌. : 209

பெருமாள்‌ காட்சி
மாற னவர்கள்‌ உரைத்ததிரு.
வாக்கெட்‌ கடையும்‌ வழுவாதவ்‌
வாறுற்‌ றுரைத்தான்‌; அருள்வேண்ட
வயினத்‌ தருவா கனமதன்‌.மேல்‌ நாறுந்‌ துளவப்‌ படலையணி
நாரா யணன்வந்‌ தெய்தினனால்‌
நீறு ‘புனையுஞ்‌, சவன்முதலோர்‌
நெருங்கிப்‌ பணிந்து துதிசெயவே. 210

விண்ணிற்‌ பொலியுங்‌ கருடன்மிசை
. விளங்குந்‌ திருநா ரணனுருவம்‌
மண்ணுற்‌ றிருந்த பரசமயம்‌
மருவித்‌ துறந்த அவர்கள்தம்‌ “ கண்ணுற்‌ றிடலும்‌ மகிழ்வடைந்து
கருத்துள்‌ ளூருகிக்‌ கரையவெதிர்‌
நண்ணிப்‌ பணிந்து துதித்தேத்தி நணுகா ஸனந்தக்‌ கடல்படிந்தார்‌. 211

மங்களாசாசனம்‌
உகமோர்‌ கோடி தவஞ்செயினு
மொருவர்க்‌ கெனுந்தோன்‌ றாயடியேன்‌
புகலு மளவீ லடைந்துவர்கள்‌
புகழ வெகிர்வந்‌ தணுகினையால்‌
மிகவுஞ்‌ சிறந்த பலனருள
வேண்டு மெனவே பராங்குசனும்‌
அகமுண்‌ மடஒழ்ந்தே இருமங்க
ளாச னத்தை யருள்செய்தான்‌. 212

ஏய வருக்கிங்‌ கிவ்வாறா
யெழில்சேர்‌ காட்சி யளித்ததற்பின்‌
தூய பரம பதமதனைக்‌
தொடர்ந்தாங்‌ கணைந்து வீற்றிருந்தான்‌ ஆயர்‌ பாடி தனின்மதுரை , Line
யதைவிட்‌ டடைந்து முடையடு குப்த
தோயுந்‌ தயிர்பால்‌ நவநீதம்‌ 213

புயலார்‌ மேனித்‌ இருநெடுமால்‌
பூங்கண்‌ மலரா திருந்ததனால்‌
கயலார்‌ கருங்கண்‌ மடந்தையர்போற்‌
காரி மாறன்‌ தானுமிக
மயலாய்‌ மெழுகிற்‌ கரைந்துருகி
வாடித்‌ தருமே னியுந்தளர்ந்திட்‌ டியலா ௬ளத்திற்‌ றிருமடலூர்ந்‌ இருந்தா னிருந்த வெல்லையின்வாய்‌; 214

காம ரிளங்கன்‌ நினையடையுங்
கறவை போலக்‌ குறுங்குடிவாழ்‌
தாமஞ்‌ சிறந்த வழகியசீர்‌
நம்பி யுளத்தின்‌ நயப்புறவே
சோமன்‌ றவழு மதிள்குருகூர்‌
துலங்கும்‌ புளிக்‌ முறைவகுளத்‌
தாமம்‌ புனைந்த சடகோபன்‌
றனக்குக்‌ காட்சி யளித்திடலும்‌; ்‌ 215

யானே அனைத்தும்‌ செய்தேன்‌
சீரா ரிருகண்‌ களிப்பெய்தத்‌
தெரிசித்‌ துளத்தின்‌ மட௫ழ்வெய்தி
நீரார்‌ கடல்சூழ்‌ புவியனைத்தும்‌ நிறைபல்‌ லுயிர்க்குள்‌ ளுயிராகி வேராய்‌ மூல காரணனாய்‌-
விளங்கி மருவுந்‌ திருவுருவ நாரா யணனார்‌ புரிந்ததெலாம்‌
நானே புரிந்த தாமென்றும்‌;. – .. 216

கான மதனில்‌ நட்பமையுங்‌
கதிரோன்‌ புதல்வன்‌ கலக்கமற
வானந்‌ தொடரும்‌ ஏழமுமரா
மரமன்‌ றுருவ வாளிதொட்டோய்‌!
மோனம்‌ பொருந்தும்‌ அடியவர்சேர்‌.
மோட்ச வீட்டிற்‌ பேரின்பம்‌
ஞான முதலா யினவெயையும்‌
நண்ண வெனக்கு நல்கெளவும்‌; 217

சீறு மரவா பரணனெடுஞ்‌
இலையை முறித்துச்‌ சான$க்கு
நாறு மலர்மா லையைப்புனைந்த
நளினக்‌ கரத்தோய்‌! அயடியேற்கு
வீறும்‌ பதவி யளித்திடினும்‌
அளியா விடினும்‌ உனையல்லால்‌
வேறு மொருவ ராதரவாய்‌
விரும்பி விளம்பற்‌ இலையெனவும்‌; 218

மறையோர்‌ செயுமா மகப்புகையும்‌
மடவார்‌ நனைகார்க்‌ குழற்புலர்த்தும்‌
நறையா ரகிலின்‌ கொழும்புகையும்‌ ்‌
நண்ணி யெழலும்‌ புயலெனவே
Keo mun மயில்கள்‌ நடம்பயிலுஞ்‌
சீரார்‌ வல்லை வாழுறுமெம்‌
மிறையோ னடைந்து காட்சியளித்‌
திடலும்‌ நீயே கதியென்றும்‌; 219

காண்ட வனத்தைப்‌ படிபொருந்துங்‌
கனலி யருந்த’ வளித்தருளும்‌ ‘பாண்ட’ வர்க்குண்‌’ ணடுப்பிறந்த
பார்த்தன்‌ மணியா ழியினிரதம்‌. ‘
பூண்ட கவனத்‌ தவளநிறப்‌
புரவி நடத்தும்‌ புயல்வண்ணா/
ஈண்டிங்‌ கடியேன்‌ றன்னையுவந்‌:
இரட்சித்‌ தருளு வாயெனவும்‌; 220

அறுகால்‌ பொம்மென்‌ றிசையுடன்சார்ந்‌
கணுகி யுறுந்தேன்‌ களித்துண்ணும்‌
நறவார்‌ துளவ வலங்கறிரு :
வண்ண நாய கன்னிடத்தில்‌
உறுகா .தலினை விரைவினடைந்‌
துரைமி: னெனவாங்‌ குறுதூதாய்‌
பறவை யினங்க டனக்குரைத்துப்‌ பரிவின்‌ விடுத்த பரிசாயும்‌; 221

ஊடலும்‌ கூடலும்‌
(வேறு)
நாடியம்‌ மாறன தருகு நண்ணிட
வாடிய மனம்தெளி வாய்ம ருங்கிருந்‌
தூடியுந்‌ தேற்றிட வுளங்க லங்கியும்‌ கூடியு மிருந்துள கொள்கை செப்பியும்‌; 222

அக்தர்யாமித்துவம்‌
மூந்திய விண்ணகர்‌ மாயன்‌ மோகமாய்க்‌
கந்தமா மலரிடைக்‌ கலந்த வாறுபோல்‌
அந்தரி யாமியா யணுட வைகுதல்‌
சிந்தியா ஞானமே இறக்கச்‌ செப்பியும்‌; 223

குறைவிலேன்‌
கருமுகி லெனவொளிர்‌ கண்ண ஸனாகியே
மருவுகோ வியரொடு மகிழ்ந்து லீலைசெய்‌
இருவிளை யாடல்கள்‌ செப்பு மென்றனக்‌
கொருகுறை யும்படர்ந்‌ துற்றிடா தென்றும்‌; 284

அலைபுனற்‌ றஐடவரா லருகற்‌ றெங்கினின்‌
குலைபழ முதிர்தரக்‌ குதித்த றைந்திடும்‌ துலைவிலா மங்கலந்‌ துன்னு சார்ங்கவெஞ்‌ சிலைவல மாறனைச்‌. சேர்ந்த தாகவும்‌; 225

வான்பொழி கன்மழை வரையின்‌ மாற்றியே
ஆன்புரந்‌ தளித்தவவ்‌ வாழி யானொடும்‌
தான்படுந்‌ துயரங்கள்‌ தனைத்தன்‌ தாயர்‌3பாய்‌
தேன்பொழி மொழியிற்செப்‌ பியது போலவும்‌; 226

உண்பது முதலிய வுரைக்கும்‌ யாவையும்‌
தண்படு புனற்றடஞ்‌ சாக ரம்மென
விண்படிந்‌ தருந்துகோ ஸூரின்‌ மேவிவாழ்‌
பண்படு மளிவனப்‌ படலை மாலென்றும்‌; 227

அந்தசெங்‌ சுதிருமி மாழி -மாலுக்கென்‌
சிந்தனை பகர்ந்துடச்‌ செல்லும்‌ புள்ளுகட்‌
கந்தமில்‌ லாதமூன்‌ றடுக்கு லோகமும்‌
தந்தன னாமெனச்‌ சாற்றிற்‌ றாகவும்‌; 228

இருவிசும்‌ புறைபவ ரிறைஞ்சி யேத்திட
மருவுவேங்‌ கடமெனும்‌ வரையின்‌ மீதுவாழ்‌
கருமுகில்‌ வண்ணச்செங்‌ கமலக்‌ கண்ணனைத்‌
திருமகள்‌ முதன்மையிற்‌ சேவித்தே னென்றும்‌; 229

இன்னவா முறைமையி ஸிசைபெ றுங்கவி
பன்னுமா றனுமது வரையிற்‌ பண்பொடுந்‌
குன்னையம்‌ மாயவன்‌ தனது யர்ப்பதம்‌மன்னிடும்‌ படிவர வழைத்தி டாமையால்‌; 230

மயலைப்‌ போக்க வேண்டல்‌
அம்புவி யளந்ததாட்‌ கடிமை யாமென
நம்பினோர்‌ தமக்குவீ டளிக்கும்‌ நாரணா
வெம்பியிவ்‌ வுடலினை வெதுப்பு கின்றதாம்‌.
ஐம்புலன்‌ வயத்தெனை பளித்தியோ வென்றும்‌; 231

மயல்கொடிவ்‌ வாறதாய்‌ வ்ருத்து மாதினைக்‌
கயல்விழி யன்னையர்‌ கடிது கொண்டுபோய்‌
புயல்வணம்‌ மால்முனம்‌ பொருந்தி யிட்டவள்‌
செயல்களை யவரொடுஞ்‌ செப்பு கின்றதும்‌; 232

தாட்டிய தறியுளே நார சிம்மமாய்க்‌
காட்டிய திருவுருக்‌ கமல நாபியான்‌
வேட்டைசென்‌ நுறுந்திருப்‌ பேரை மேயவன்‌
தாட்டுணை. யடைந்திடுஞ்‌ சார்ப தாகவும்‌; 233

சித்தமுள்‌ ஞருகிடச்‌ செய்ய கண்முகம்‌
கைத்தலம்‌ உந்திதாள்‌ கமல மாமலர்‌
ஒத்திடுங்‌ கருமுகி லுருவ நாரணன்‌
பத்தவ தாரமும்‌ பணிதல்‌ வேண்டியும்‌; .284

உடுத்திடு முடைக்கட லுடைய பார்மிசை
எடுத்தவவ்‌ வுருவுக டோறு மெம்பிராற்‌
கடுத்துள வரும்பகை யகலு மாறதாய்‌
சுடுத்தொழி கருமமுங்‌ காண வேண்டியும்‌; 235

இச்சைகொண்‌் டுரைப்பதை யுள த்தி லெண்ணியே
பச்சைமா மலையெனும்‌ படிவ வச்சுதன்‌
மச்சமே முதலுரு வமைந்து வாய்த்துள
அச்செயல்‌ யாவையு மறியத்‌ தோன்றலும்‌; 236

வெந்திற லவுணர்கள்‌ முதல வெம்பகை
வத்தது மவைகளை மாற்றக்‌ கொண்டுள
அந்தமில்‌ கோலமு மமைந்த யாவையும்‌
சிந்தைகொண் டுணர்ந்திடுஞ்‌ செய்கை தன்னையும்‌; 237

சீருறு காரணச்‌ செம்ம லாதியில்‌
ஈருரு வங்களி னியந்த இயாவுமோர்‌
ஒருரு வங்களா யுற்ற செய்திகள்‌
பாருளோ ரணர்வகைப்‌ பரிவிற்‌ பாடியும்‌; 238

பரிந்துள த்‌. தழைத்தபாண்‌ டவர்தம்‌ பத்தினிக்‌
குரிந்தவத்‌ இரமுவந்‌ துதவு மாலுரு தெரிந்திடா தகன்றிடச்‌ சந்தை வாடியே
பிரிந்துள துயர்களைப்‌: பின்பு சொல்லியும்‌; 239

உருவெளிக்‌ காட்சி உரைத்தது
அருவென வுருவென்‌ அதல மாமுதல்‌ a
இருநிலம்‌ விசும்புபல்‌ லிடத்து முற்றுமாய்ச்‌ ்‌
சுருபமா னவவெலாந்‌ துலங்கு மாறதாய்‌
உருவெளி கண்டதை யுரைத்த தாகவும்‌; 240

கூவிக்கொள்ளாக்‌ காரணம்‌ யாதோ?
அன்னமாய்‌ மறையயற்‌ கறைந்த மாதவா
நின்னுயர்‌ பதந்தனை நேர்ந்து வைகுதற்‌ இன்னமு மடியனை யழைத்தி டாததிங்‌
கென்னகா ரணமென விசைக்குங்‌ காலையில்‌; 241

கவியிசைப்பதற்கே
மாதவ னவனேதிர்‌ வந்து மன்னியே
பூதலந்‌ தனிலுனைப்‌ பொருந்த வைத்துள
தேதுகா ரணமெனி லிசைபெ றுங்கவி
ஓதுதற்‌ காமென வுரைத்துப்‌ போயினான்‌. 242

சொன்னசொல்‌ லிருசெவி துன்னீ யெய்தலும்‌
இன்னணம்‌ வாழுப கார மேற்கிலேன்‌
அன்னமா யவன்றனக்‌ கரிய மாமறை
என்னகை மாறுள திழைத்த தென்கையும்‌; 243

அத்தகை யியற்றுமா றனைவி வப்பதி
ஒத்துறை நாரண ஸனொளிருந்‌ தாள்களில்‌
சித்தமுற்‌ றடிமையான்‌ செய்தி டுந்தினம்‌
எத்தின மோவறிந்‌ திடுகிலே னென்றும்‌; 244

மாசிலா முழுமதி யனைய வாண்முகக்‌
கோசலை திருவயி றுஇத்த கோவலன்‌ .
ஓளசசயுற்‌ றுளகட லுலக வாழ்க்கையின்‌
ஆசைவிட்‌ டவர்வய மாவ னென்ளவும்‌; 245

முருகவிழ்‌ துளவணி முகுந்த னம்புயத்‌ திருவடி யிணைகளைத்‌ தமது சிந்தையுள்‌ மருவவைத்‌ திடுமவர்‌ வைகுந்‌ தத்தினுக்‌
கருகர்க ளாகவே யமைவ ரென்னவும்‌; 246

அத்தகைய மாயவ ஸனமருங்‌ சீர்வைகுந்‌
குத்தினுக்‌ கருகர்க ளாகச்‌ சார்ந்திடும்‌
முத்தரைத்‌ தெரிசியா முகம லர்ச்சியாய்‌
சித்தமுள்‌ ம௫ழ்ந்திடுஞ்‌ செய்கை யாகவும்‌; 247

முத்தர்கள்‌ தம்மொடு முளரி வாழயற்‌
கத்தனாம்‌ மாதவ னாங்க மைந்தொரு
மித்துறை – பெருமித விதங்க .ணோக்கியே
புத்தமு தருந்தலிற்‌ களிபொ ருந்தியே; ட 248

ர்மடையாயினான்‌
க௱ர்நிற வவுணர்தங்‌ குலத்தைக்‌ காய்ந்திடுங்‌
கூர்வளர்‌ இஇரிகை மாயக்‌ கூத்தனார்‌
வார்மழை: யுறும்புனல்‌ வரத்தன்‌ னுள்ளகால்‌–யாமென நேய மாயினான்‌. 249

எம்பெருமான்‌ ஆழ்வார்‌ உள்ளக்‌ கோவிலில்‌ வாழ்தல்‌
நேயமுட்‌ கொண்டவ Glow ou ழாமலே
தூயநல்‌ லுள்வழி யாகத்‌ துன்னியுற்‌
றாயவ ஸுயிர்ப்புலத்‌ தணுகி வைகினான்‌
மாயமான்‌ பின்தொடர்‌ மாய. னென்பவே. 250

கனைக்குமா இரைக்கருங்‌ கடலின்‌ வண்ணமால்‌
நினைக்குழமுன்‌ றனதுயி ரெனநி ரப்பிய
மனைக்கலந்‌ துறைந்தமை மனங்கொண்‌. டிவ்வணம்‌
எனைப்பிரி யாதுநீ யிருந்து டென்னவும்‌; . 251

முலைமிசைப்‌ பிறைறிகர்‌ முத்தின்‌ றாழ்வடக்‌
கலையணி மாதரிற்‌ கரிய மாணிக்க
மலையவ னேயென மற்ற வன்புகழ்‌
நிலைமையைப்‌ பின்னரும்‌ நேர்ந்து சொல்லியும்‌; 252

அடியார்க்கடியேன்‌
படியினைச்‌ சுருட்டுமோர்‌ பாயெ னக்கொளும்‌
கொடியனை ஏனமாய்க்‌ கொலைபு ரிந்திடும்‌
நெடியமால்‌ திருவடி நேயங்‌ கொண்டுள
அடியவர்க்‌ சடியவர்க்‌ கடியன்‌ யானென்றும்‌; 253

மல்லலம்‌ புவியுளீர்‌ வழங்கி டும்கைமா
றில்லது புரப்பவ ரிலங்கு மாலடி
அல்லது வேறிலை யதனை. நீரறிந்‌
தொல்லையி லவன்பதத்‌ துறுமி னென்னவும்‌; . 254

திருப்பதிகள்‌ மங்களாசாசனம்‌-
பொருப்பென மாளிகை பொருந்து செம்மணி
அருக்கனென்‌ றம்புய முகைய ‘விழ்ந்திடும்‌
இருப்புளிங்‌ குடிகிடந்‌ இடுமத்‌ தேவனை
விருப்புடன்‌ கவிபல விளங்கப்‌ பாடியும்‌; 255

குவித்திரு கண்ணிற்‌ கண்டுளோர்‌
பரகஇ யணுகுறும்‌ படிய எளித்தருள்‌
வரகுண மங்கைவீற்‌ றிருந்த மால்புகழ்‌
விரகுடன்‌ கவிபல விரித்துப்‌ பாடியும்‌; ‘ 256

வைகுந்த மல்குல்க டெரிய வாவிகோர்‌
வைகுந்த . மனையகண்‌ மாத ரார்புட
வைகுந்த மதன்மிசை மருவ வைத்இடும்‌
வைகுந்த நின்றமால்‌ வளங்கள்‌ பாடியும்‌; 257

மீண்டுமப்‌ புளிங்குடி. விளங்கப்‌ பள்ளிகொள்
தாண்டுறு திரைக்கருஞ்‌ சலதி வண்ணனை
ஈண்டுணர்ந்‌ தெனக்கொரு கைங்கிரி யஞ்சொல
வேண்டுமென்‌ றுளந்தனில்‌ விரும்பிக்‌ கூறலும்‌; 258

கேட்டுள wR yb Daur Gris இளர்த்து மின்னிசைப்‌ ட
பாட்டினா லவன்றனைப்‌ படலை மாதவன்‌
ஈட்டுறு முளந்தெளிந்‌ தெழுந்து செய்வினை
யாட்டுறு கயிங்கிரிய மதனைச்‌. செப்பினான்‌. 259

மாயவா வருக!
அம்மொழி யிருசெவி யணுகத்‌ தன்னுளம்‌
விம்முறு முவகையின்‌ மீண்டு மாயவா
, கைம்மலர்‌ மிசைகதி ராழி சங்குடன்‌
வம்மென வழைத்தனன்‌ மகிழ மாலையான்‌. ்‌ 260

வந்தனன்‌ பிரான்‌
அழைத்தவம்‌ முறைகதி ராழி சங்குடன்‌
துழைத்தவன்‌ பொடுமவன்‌ முன்பு சார்ந்தனன்‌
பிழைத்தன வுளங்கொளா தடியர்‌ பேணிமூன்பு ்‌
இழைத்தத$ வினையெலா மிரிக்கும்‌ நாரணன்‌. 261

மறைய வருந்துதல்‌
(வேறு)
சார்ந்த கேசவன்‌ றனையறிந்‌ தாவலார்ந்‌ தொழியச்‌
சேர்ந்த வன்றிரு வடிவினைச்‌ ஈறந்தபே ரன்பு
கூர்ந்த நெஞ்சொடு மனுபவித்‌ தடலுமக்‌ கோலம்‌
தீர்ந்து — இடுதலுந்‌ தனதுளந்‌ இகைத்தே; 262

பறவை கூவுபே சொலியொடு: பாவைய ரொலிகா துறலு மஞ்சிநெஞ்‌ சழிந்துபற்‌ பலவகை யுரைத்தும்‌ நறவ லங்கல்நா ரணனினி நணுகிலாங்‌ கவர்க்குத்‌
இிறமு டன்பல கைங்கிரியங்‌ செய்கருத்‌ இருந்தான்‌. 263 |

இறைவன்‌ அடியன்‌ ஆதல்‌
இருக்கு மெல்லையவ்‌ வடியருக்‌ கெளியனா மவனும்‌
பொருக்கெ னாவடைந்‌ திவர்க்குப்பூங்‌ கேசமே முதலாய்‌
இருக்க ழன்மல ரளவதாய்ச்‌ செயுங்கயிங்‌ இரியம்‌
உருக்க மோடிழைத்‌ இடுதலும்‌ அதையுள முணர்ந்தே. 264

நம்மிருவருக்கும்‌ பேதமில்லை
ஈதெ னோவென மாறனாங்‌ கியம்பலும்‌ எழிற்பூ
மாது கேள்வனு மகிழ்வொடு நம்மிரு வருக்கும்‌
பேத மில்லையொன்‌ றாயிடும்‌ பேரின்ப மெனவே
ஓத லோடுமவ்‌ வாசகங்‌ கேட்டுப்பின்‌ புரைப்பான்‌. 265

தடியெ யிற்றிரா வணன்றனை தனதுவால்‌ கொண்டே
முடியு றப்பிணித்‌ தெழுந்துசென்‌ றிடுமுரண்‌ வாலி
நெடிய மார்பக முருவிடக்‌ கணைவிடு நெடுமால்‌
அடிய ருக்கடி யவனென அகமகிழ்ந்‌ துரைத்தும்‌; 266

தூதனுப்புதல்‌
கார்ப்பெ ரங்கடற்‌ பிரமகற்‌ பந்தனிற்‌ கலிசெய்‌
ஆர்ப்புங்‌ கோடையின்‌ முகின்முழக்‌ கதிர்ச்சியு மவிய
வார்ப்பெ ரும்முழ வதிருமூ மிக்கள மால்பாற்‌
பார்ப்பி னங்களைத்‌ தாதனுப்‌ பியதெனப்‌ பகர்ந்தும்‌; 267

குருதி வேல்வை ரிழந்தநாட்‌ டினைப்பெருங்‌ கொள்கை
௧ர.இ மாநக ரடைந்துகாந்‌ தாரிகா தலநீ
தருதி யென்றுரை தூதனைத்‌ தாதிபோய்‌ சார்ந்து
வருதி யென்றழைத்‌ துறுதன்முன்‌ மனம்பொறா மையினால்‌.–268

திருநாவாய்‌ அணைய விரும்பினார்‌
மன்னர்‌ மூவெழு குலத்தைவேர்‌ களைந்தபோர்‌ மழுவோன்‌
கன்னி ருஞ்சிலை வாங்கியெய்‌ கணை தனக்‌ கன்னோன்‌
முன்ன ருந்தவந்‌ தனையிலக்‌ கருளிய முகுந்தன்‌
துன்னி வாழுநா வாயினைத்‌ தொடர்ந்திட நினைத்தும்‌; 269

மெய்‌ தளர்ந்தார்‌
ஆங்கு மெய்துதற்‌ கமைந்திடா தன்றிலின்‌ தொனியும்‌
மாங்கு யின்முழங்‌ கொலியும்யாழ்‌ வழங்கிடு மொலியும்‌
தேங்க மழ்ந்தபூந்‌ தென்றலும்‌ வருந்திடத்‌ Hoss Oe டேங்கி மெய்தளர்ந்‌ இதயமுங்‌ கலங்கியே யிருந்தும்‌; : 270.

வணங்குமின்‌
அந்த ரத்தவ ரலைகடல்‌ கடைந்தநா எழுந்தும்‌
மந்த ரத்தினைக்‌ கமடமாய்‌ தாங்கிய மாலைக்‌
கந்த ரத்தமர்‌ கடுவ?னா டயன்கட வுளர்கள்‌:
வந்தி செய்கண புரம்சென்று வணங்குமி னெளவும்‌; 271

மதத்த வாரணம்‌ அழைத்திட வந்திடங்‌ கரினைக்‌
கதத்த ழித்தமோ கூரில்வாழ்‌ கண்ணனே பரம
பதத்தி னுக்கருந்‌ துணையென வருகுவன்‌ பாரீர்‌
இதத்து டன்நலத்‌ திருவடி வணங்குமி னெளவும்‌; 272

குரும ணிச்செழுங்‌ கோயின்மேற்‌ குளிர்ந்துகண்‌ ணுறங்கும்‌
தருவ னந்தமா புரமெனச்‌ சறந்தமா நகரே
பொருவில்‌ சீர்ப்பர மப்பத மாகுமம்‌ புவியீர்‌
மருவி யாங்குவாழ்‌ மால்பதம்‌ வணங்குமி னெளவும்‌; 273

அவன்‌ அடியவர்க்கு எளியவன்‌
மீண்டு மாயர்தம்‌ பாடியின்‌ மதுரைவிட்‌ டணுகி
வேண்டு றும்விளை யாட்டெலாம்‌ விரும்பிச்செய்‌ விதங்கள்‌
தூண்டு மன்பொடு :சொல்லியு மாங்கவன்‌ தொண்டு
பூண்ட அன்பருக்‌ கெளியவ னாமெனப்‌ புகன்றும்‌; 274

பின்ன ருங்கவி புகலுவான்‌ கண்ணபி ரானே
பன்னு சீர்ப்பரம்‌ பொருளதா மாதலிற்‌ பாரீர்‌
துன்னு மன்பொடு தொடர்ந்துசென்‌ றெதிர்தொழு தேத்தி
அன்ன வன்திருப்‌ பதமல ரடைகுமி னெனவும்‌; 275

மேனியுடன்‌ பரமபதம்‌ வருக
அன்ன காலைவாட்‌ டாறுடை யச்சுதப்‌ பெருமான்‌
குன்னை யன்பொடு பாடலும்‌ ம௫ழ்ந்தவன்‌ றனைத்தான்‌
பன்னு சீர்ப்பர மப்பத வீட்டின்மெய்‌ யுடனே
மன்னு மாறுகொண்‌ டேகுவான்‌ மனத்திடை நினைந்தான்‌. 276

ஆழ்வார்‌ மறுப்பு
அச்சு தன்துரு வுளந்தனை யறிந்துநம்‌ மாழ்வார்‌
பச்சை மாமுகில்‌ மேனியோய்‌ பல்புமுக்‌ கூடாம்‌
இச்ச ரீரம-தனைக்கொடு போவதற்‌ கஇிதையத்‌ டட
துச்ச ரித்திட லொழித்திட வேண்டுமென்‌ நுரைத்தான்‌. 277

எம்பிரான்‌ வேட்கை
எனக்கு கப்பெனி லென்னிடை யிருந்துவந்‌ துதித்த
உனக்கு கப்புறா தெனாதுட லுடன்கொடு போவேன்‌
மனக்கொள்‌ நீமறுத்‌ தஇடலென மனமகிழ்ந்‌ துரைத்தான்‌
தனக்குத்‌ தானலா தொருவரு நிகரில்மா தவனே. 278

மாயவன்‌ மடிபிடித்திழுத்தான்‌
ஏது ரைப்பினு மினியவ னணுகுற வியையிக்‌
கோது றும்பல புழுமல்கு கூடுகொண் டவணி
போத வீரெழு புவனமோ டகிலமும்‌ பூத்த
மாது கேள்வனே தகாதென மடிபிடித்‌ கிழமுத்தான்‌. 279

அர்ச்சராதி மார்க்கம்‌
இழுத்தி! டும்பராங்‌ குசன்தனக்‌ இதயமுட்‌ கனிந்து
பமூத்த வன்பொடர்ச்‌ சராதிமார்க்‌ கப்பரி சறிவித்‌
துழுத்து கைமடி. யதுதனை விடுவித்துக்‌ கொண்டான்‌
வழுத்து வார்தமக்‌ குயர்பத மருளுமா தவனே, 280

காட்டு மர்ச்சரா மார்க்கமே கடிதுசென்‌ றாழ்வார்‌
மீட்டு மானிட வுருவமாய்‌ மிகுமலப்‌ புழுசோர்‌
கூட்டு வைகின மாதலாற்‌ கூடியே .பரம
நாட்டு றும்மடி யவருடன்‌ பொருந்துதல்‌ நயந்து) 281

பெருமாள்‌ ஆணை
பரம பத்திமீ தோங்குறப்‌ பலவுமீன்‌ றருளும்‌
பிரம னைத்தருந்‌ தாதையைப்‌ பேரன்பிற்‌ றலைமேற்‌
கரம லர்க்குவித்‌ தாணையிட்‌ டடியனைக்‌ கடுக
வரவ ழைத்திடென்‌ றானைபோற்‌ கூவினன்‌ மாதோ. 282

எம்பெருமான்‌ காட்சி வழங்கினான்‌
கூவு பேரொலி யிருசெவி குறுகநா ரணனும்‌
வாவு வெஞ்சிறைக்‌ கலுழன்‌ மேல்‌ மரகத மலைபோல்‌
தேவர்‌ கின்னரர்‌ சத்தர்கள்‌ சவனயன்‌ முதலோர்‌
யாவ ருந்தொழு தேத்திடத்‌ திருவொடு மடைந்தான்‌. 288

ஆழ்வார்‌ பெற்ற பேறு
தெள்ளு தண்புனல்‌ பெருகியே யருகுறச்‌ சேர்ந்த
பள்ள மெய்துறு பான்மையிற்‌ பராங்குசப்‌ பெருமான்‌
புள்ளின்‌ மேல்மச கதமலை போலவந்‌ தருளும்‌
கள்ளு றுந்துள வணியுநா ரணனொடுங்‌ கலந்தான்‌. 284

(வேறு)
இத்தன்மை யாக வுயர்நா ரணன்ற
னெதிர்பேசி யேக மனதாய்‌
ஓத்துச்‌ சிறந்த பரிசும்‌ அவன்ற
னொடுதான்‌ கலந்த செயலும்‌
சித்தம்‌ மகிழ்ந்து ரகஸ்யார்த்‌ தமான
தருவா சகங்கள்‌ பலவும்‌
வைத்துச்‌ சிறந்த தருவாய்‌ மொழிக்கண்‌ வகையோ டுரைக்கு மளவில்‌; 285

அவ்வா றிசைத்த கவிதன்‌ செவிக்கண்‌
அணுகக்‌ குளிர்ந்த மதியும்‌
ஒவ்வாத கோல முறுமா முகங்க
வினவே யொளிர்ந்த பவளச்‌
செவ்வாய்‌ திறந்து நகர்நீ செலற்கு
இருகென்ன வெய்து கெனவே
இவ்வாறு மாலு மாழ்வாரு மமான்றி
யுரையாடு மெல்லை யதின்வாய்‌; 266

கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு
மறுவொன்றி லாத மதிமா முகத்து
மதுரக்‌ கவிச்சொ லவனும்‌
உறுகாத லோடு மனதுள்‌ எிரங்குி
யுருகா மகிழ்ந்து கணினுண்‌ சிறுதாம்‌. பெனச்சொல்‌ பதினொன்று பாடல்‌
* செழியச்‌ இறந்து வகுள த
நறுமாலை சூடு சடகோபன்‌ மீது
நவிலா அளித்து நவில்வான்‌. 287

மதுரகவியாழ்வாரின்‌ துயரம்‌
அனையைப்‌ பிரிந்த தனமுண்‌ குழந்தை:
யதுபோ லருந்து யரினோ
டுனையின்‌ றிழந்து கடல்கூழு மிந்த
வுலகிற்‌ பொருந்தி டுவனோ’
புனையுங்‌ கவுத்வ மணிநார ணன்றன்‌ r
புகழ்வீட்‌ டினிற்பு குதுநீ
எனையுங்‌ கனிந்த மனதோ டுடன்கொ டேகென்‌ றுரைத்த வளவில்‌; 288

திருமால்‌ கட்டளை
அஞ்சக்‌ கரன்முளரி யயன்மா வரங்கள்‌
அவைகொண்டு வையம்‌ நலியும்‌
வஞ்சக்‌ கரன்ற சக்கிரிப னாதி
மாவா எரக்கர்‌ மடியச்‌
செஞ்சக்‌ கரம்வெள்‌ வளையும்‌ துறந்து
கலையும்‌ வயங்கொள் கணையும்‌
கஞ்சக்‌ கரங்கொள் இருமால்‌ மஇழ்ந்து
கனிவாய்‌ மலர்ந்து ரைசெய்வான்‌; 289

மதுரம்‌ பொருந்து தமிழா லெடுத்து
மகிழ்வோ டுரைத்த கவியோர்‌
பதினொன்று தானு மெனையே துஇத்த
பரிசாகு மாற னையுநீ
நிதமும்‌ கனிந்து பிரியா இருக்கு
நெறிகே ளிவன்ற ஸனிகராய்‌
சதிரொன்று மூர நிகழ்விக்ர கத்தை
சமைவித்‌ தெழிற்கொ ளதனை) 290

நீரார்‌! செழும்பொ ருனையாறு தன்தென்‌
கரையில்‌ .நிகழ்ந்து வளரும்‌
ஏராரு மிந்தப்‌ புளியென்‌ றியம்பி
யிடுமா மரத்தி னடியில்‌
சீரா யெழுந்த ௬ளுமா றநுஞற்றித்‌ தினமும்‌ விதித்த முறையே ஆரா தனஞ்செய்‌ திவனாம தென்ன
வகமுட்‌ பொருந்த நினைவாய்‌. 291

மாறன்‌ மறையை விளக்குக
பின்னும்‌ இவன்செய்‌ மறைநான்‌ கெனச்சொல்‌
பிரபந்த நான்க வையையும்‌
மன்னும்‌ புவிக்க ணிடையே விளங்கி
யிடுமாறு மானி டரெலாம்‌
பன்னும்‌ படிக்கு முன்ஞான மெய்து
பலர்க்கும்‌ உயர்ந்த பதவி
துன்னும்‌ படிக்கும்‌ அறிவித்து மாயை
தொடர்பைக்‌ கழித்து விடுவாய்‌; 292

அத்தன்மை யெய்தி புலிமீ இருந்து
பலநா ளகன்ற வவதஇ
இத்தன்மை யாக யிவணெய்துி யாமும்‌
இவனுக்‌ களிக்கு முறையே
சித்தங்‌ கனிந்து நினையும்‌ உயர்ந்த
இருநாடு .மீது கொடுபோய்‌
வைத்தும்‌ கலங்க லெனவன்பி னோடு
மதுரக்‌ கவிக்குரை செய்தான்‌. 293

மாறனுடன்‌ திருமால்‌ பரமபதம்‌ உறுதல்‌
படிமீ துதித்துப்‌ பெருமாயை தானும்‌
படரா தொழித்து மறையின்‌
-மூடிமீ துறத்தி டமாயி ருந்த
முளரிச்‌ சிறந்த மலர்நேர்‌
அடி.மீது சேர்த்து விடுமா றுரைத்த
தமிழ்மாற னாகு மவனை
மடிமீ இருத்தி மிசைதேவர்‌ இந்து
மலர்மாரி பந்தர்‌ நிழலில்‌; 294

இருபாலி னங்கை யொருபாலு ளானு
மலரோனு மேத்தி வரவும்‌
புருகூத னாதி முடிவெண்ணி லாத
புலவோர்‌ பணிந்து வரவும்‌
அருமாத வத்து முனிவோர்கள்‌ வேத
மதுநாலு மோதி வரவும்‌
இருமா லெவைக்கு முயர்வா யுயர்ந்த
இருநா டடைந்த னனரோ. 295

மாறன்‌ பனுவலால்‌ மாண்புற்றார்‌ பலர்‌
(வேறு)
அனைய வாறுமா லுடன்திரு வைகுந்த மடைந்த
வினையி லாச்சட கோபனார்‌ விளம்பிய பாடல்‌
தனையு ஸணர்ந்திரு வினைகளுந்‌ தடிந்துதண்‌ டுளவம்‌
புனையு மாயவ ஸுூயர்பதம்‌ புகுந்தனர்‌ புவியோர்‌. 296

ஆழ்வார்‌ மங்களாசாசனம்‌ செய்த பதிகள்‌
அந்த நான்கென வுரைசெயும்‌ பிரபந்த மதனுள்‌
பைந்து ழமாயணி மாதவ ஸனுவந்துவாழ்‌ பதிகள்‌
வந்த தைந்தொடு முப்பதாம்‌ வடமது ரையும்வை
குந்தஞ்‌ சீவர மங்கைர்‌ குறுங்குடி வெஃகா; 297

அரங்கம்‌ வேங்கடம்‌ விண்ணகர்‌ செங்குன்றூர்‌ அனந்த
புரம யோத்திபாற்‌ கடல்துவ ரைப்புளிங்‌ குடிகாட்‌
கரை குளந்தைவாட்‌ டாறு மூழிக்களம்‌ மோகூர்‌
குருகை வல்லவாழ்‌ துலைவிலி மங்கலங்‌ கோஞூர்‌; 298

சீர்பெ றுந்திரு மாலிருஞ்‌ சோலைவெற்‌ புபரி
சார மாம்பதி திருக்கடித்‌ தானநா வாய்வண்‌
டூர்கு டந்தையா றன்விளை கணபுரம்‌ புலியூர்‌
பேரை சீவர குணமங்கை பேரெனும்‌ நகரே. 299

நம்மாழ்வாரால்‌ மங்களாசாசனம்‌ செய்யப்பட்ட திவ்ய
தேசங்கள்‌ முப்பத்தைந்தின்‌ பெயர்கள்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

பயன்‌
இந்த மாக்கதை கேட்பவ ரநிரும்புவி யதன்மேல்‌
மைந்த தரும்பல வளங்களுஞ்‌ செல்வமும்‌ மருவிச்‌
சிந்தை யின்புற வாழ்ந்துநாள்‌ சென்றிடுங்‌ கடையில்‌
பைந்து ழாய்மது மாலையன்‌ பதம்பெறு வாரால்‌, 300

மூதிரு நான்மறை தனையருந்‌ தமிழினால்‌ மொழிந்து சதிரு டன்பராங்‌ குசன்பதஞ்‌ சார்ந்துள சரித
விதமி யம்பின மவன்விளம்‌ பியகவி வரைந்த
மதுர மாக்கவி பரமவீட டைந்ததும்‌ வகுப்பாம்‌. 301-

சடகோபாழ்வார்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.

———

மதுரகவியாழ்வார்‌ மோட்சமடைந்த
அத்தியாயம்‌
வெண்பா
ஏரார்‌ மதுரகவி இவ்வுலகில்‌ வந்துதித்த
சிராருஞ்‌ சித்திரையில்‌ சித்திரைநாள்‌ — பாருலகின்‌
மற்றுமுள ஆழ்வார்கள்‌ வந்துதித்த நாள்களினு முற்றதெமக்‌ கென்றுநெஞ்சே ஓர்‌.
(உபதேசரத்தினமாலை, 25.

மதுரகவியாழ்வார்‌ திருப்பணி
மாயவ ரருட்படி மதுர மாக்கவி
ஏயவம்‌ மாறனல்‌ லெழிலு ருத்தனை
தூயவிக்‌ இரமதாய்த்‌ துலங்கச்‌ செய்ததை
ஆயவப்‌ புளிமரத்‌ தடியில்‌ வைத்தரோ; 1

பொன்னொடு மரகதம்‌ புட்ப ராகமும்‌
மின்னிடு மணிகளும்‌ மேய்ந்து ழைத்துவான்‌
மன்னிடு மண்டப மதிள்வி மானமும்‌
துன்னிடு கோபுரந்‌ துலங்கச்‌ செய்தனன்‌. 2

பூடண வகைகளும்‌ பொருந்து வத்திரம்‌
ஏடவிழ்‌ பூமலர்‌ முதல யாவையும்‌
சூடிட லருத்துதல்‌ முதல சோர்விலா நாடொறு முபசரிப்‌ புடன்ந டத்தியே; 3

கருமுகின்‌ மேனியுங்‌ கமலக்‌ கண்களும்‌
முருகவிழ்‌ துளவமும்‌ .பொலிழு குந்தனார்‌
மருவுமா லயமுறை வழுவு றாமலே
திருவிழா முதலவுஞ்‌ செய்வித்‌ தானரோ. –4

வருதனம்‌ பலவுமவ்‌ வாற்‌ தாய்ப்புரிந்‌
தொருபக லாய்நொடி உளம்வ ருத்திட
மருமகழ்‌ தொடையணி மாற ஸனம்புயத்‌
இருவடி பிரிகிலான்‌ சேர்ந்து வாழுநாள்‌;–5-

(வேறு)
காசி லாவருந்‌ தமிழினாற்‌ பராங்குசன்‌ கவிசெய்‌
ஆச லாதவா இரியமும்‌ விருத்தமந்‌ தாதி
தேசு ஐுந்திரு வாய்மொழி யாமெனச்‌ செப்பும்‌
மா? லாப்பிர -பந்தங்கள்‌ மலிவுசெய்‌ வகையாய்‌; 6

மாத வர்க்கும்வே இயர்முதல்‌ நால்வரு ணருக்கும்‌
ஓது வித்துமாங்‌ கதன்பொரு ஞணர்வுற வுரைத்தும்‌
ஏத மில்லென வருடநூற்றி ௬பதி ஸிரட்டி
பூத லத்தவர்‌ புகழ்ந்திடப்‌ பொருந்தியங்‌ கிருந்தான்‌. : 7

ஆழ்வாரின்‌ பரமபத வேட்கை
இருக்கு நாளிடை யுயர்பத மடைகுவா னெண்ணிப்‌
பொருக்கெ னாஎனைக்‌ கொண்டணைந்்‌ தஇிடுஎனப்‌ பொருவில்‌
இருப்பு ளிக்கிடை யமர்ந்தருள்‌ மாறன்சே வடியை உருக்க மோடுதன்‌ மனத்துற நினைந்தன னொருநாள்‌. 8

விமானம்‌ வந்தது
நினைந்த காலையி லவ்வண நேர்ந்துள வகுளம்‌
புனைந்து ளான்றன தருளினாற்‌ புவியுளோர்‌ புகழக்‌
கனைந்த ணிந்தமா மணியொலி கறங்கடக்‌ கனகம்‌
வனைந்தி டுந்திரு வைகுந்த விமானம்வந்‌ துளதால்‌, 9

வந்த பொன்மணி விமானமேன்‌ மருவிவீற்‌ றிருப்பச்‌
சிந்தை யன்பொடு மதுரமா கவிதமைத்‌ திகழுநீ
குந்த மம்புய நிகர்கரங்‌ கொடுதழீஇ யெடுத்துச்‌
சுந்தரம்‌ பெற விருத்தினர்‌ சூழ்ந்துடு மடியார்‌. 10

மணிமண்டபம்‌ அடைந்தார்‌
அந்த ரத்தவர்‌ மீமிசை யலர்மழை பொழிந்து
துந்து மிக்குழா முழக்குறப்‌ பதவிபோய்த்‌ துடர்ந்து பைந்து மாயனை வகுளனை யன்பொடு பணிந்து
முந்து மாமணி மண்டப முத்தரோ டமர்ந்தான்‌. 11

மாற னேபர மெனமது ரக்கவி வகுத்துக்‌
கூறு Deis ழினிலிசை குலவுமப்‌ பாடல்‌
ஆறோ டைந்தையு முளமகழ்‌ வொடுபடித்‌ தனேகர்‌
மாறி லாதுயர்‌ பதவிசென்‌ .றெய்தினர்‌ மாதோ. 12-

பயன்‌
இவ்வ ருங்கதை மனம௫இழ்ந்‌ தெழுதஇடு மவரும்‌
செவ்வி திற்படிப்‌ பவர்களுஞ்‌ செப்பிடு மவரும்‌
எவ்வ மற்றிடக்‌ கேட்டிடு மவர்களும்‌ மிணைவேறு
ஓவ்வி லாதுயர்‌ வைகுந்த பதவிசென்‌ றுறுவார்‌. 13

மதுர மாக்கவி பதவிசேர்ந்‌ தமைவகுத்‌ துரைத்தேம்‌;
பதும மாமுகக்‌ கோதையாய்ப்‌ பார்மகள்‌ சிறந்த
புதுவை மாநக ருதித்ததும்‌ புரிந்தது – மரங்கர்‌ வதுவை செய்ததும்‌ இவ்வித மெனவகுத்‌ துரைப்பாம்‌. 14

மதுரகவியாழ்வார்‌ மோட்சமடைந்த அத்தியாயம்‌ மூற்றும்‌.

——–

ஆண்டாள்‌ திருவவதார அத்தியாயம்‌ .
வெண்பா
பெரியாழ்வார்‌ பெண்பிள்ளை ஆண்டாள்‌ பிறந்த
இருவாடிப்‌ பூரத்தின்‌ சீர்மை — ஒருநாளுக்கு உண்டோ? மனமே! உணர்ந்துபார்‌ ஆண்டாளுக்கு |
உண்டாகில்‌ ஒஓப்பிதற்கும்‌ உண்டு.
்‌ (உபதேசரத்தினமாலை, 24.)

நாரணன்‌ சிறப்பு
மராமரம்‌ அனையதோள்‌ வாலி தன்னொடும்‌
“இராவணன்‌ முதலினோர்‌ உயிர்‌இ ழந்திட
அராவணை துயில்துறந்து அயோத்து எய்திய
பராபர வத்துவாம்‌ படிவ நாரணன்‌; I

புண்டரீ கன்செவென்‌ முதற்புத்‌ தேளிரோடு
அண்டங்கள்‌ பலசரா சரம்‌அ னைத்தையும்‌
உண்டுஒரு பாலனாய்‌ உருவம்‌ தாங்கியே வெண்டிரைப்‌ பாற்கடல்‌ பள்ளி மேவியே; : 2

‘யோகநித்‌ திரைதனை ஒருவி தம்தெளிந்து
– ஆகமுற்று உரைஇரு அணங்கு பார்மகள்‌ :
பாகுசொல்‌ நீளையாம்‌ பாவை மூவரும்‌
்‌.. மோகம்‌உற்‌ நிடும்வகை முகமன்‌ கூறியே; 3

இருபுறம்‌. மருவிவீற்‌ நிருப்ப அம்பொனின்‌
குருமணி அரியணை மிசையில்‌ கோலமார்‌
முருகவிழ்‌ தாமரை வனம்ம லர்‌.ந்ததோர்‌ ட்ட
கருமுகில்‌ எனஒளி கவின வைகினான்‌. 4

பூமிதேவியின்‌ வினா
வைகிய காலையில்‌ மருங்கு வையே ‘
மைகணார்‌ புவிமகள்‌ எழுந்து வாள்விழிக்‌
கைகயன்‌ மகள்தரும்‌ கானம்‌ சென்றுள
செய்கழல்‌ வணங்கிஓர்‌ . மொழியைச்‌ செப்பினாள்‌. 5

கரியமா முகில்நிறக்‌ .கடவுள்‌ மூர்த்தியே
விரிகடல்‌ உலகனர்‌ இடத்தில்‌ மேவிநீர்‌
பிரியம்உற்று இருப்பதுஆ ரிடத்தில்‌? பெண்மையேன்‌ ‘
தெரிதரு மாறுஅகைச்‌ செப்பு கென்னவே.: : 6

எம்பெருமான்‌ விடை
அம்மொழி கன்னமூடு அணுகும்‌ காலையில்‌
இம்மொழி தனை எடுத்து இனிது இயம்புவான்‌
நம்மலர்‌ அடிகளைப்‌ பற்றி நண்ணுறச்‌
செம்மனத்து அன்புடன்‌ சேர வைத்தரோ; 7

பாடுறும்‌ அருந்தமிழ்ப்‌ பாவின்‌ மாலையும்‌
ஏடவிழ்‌ நறுமல ரினிற்செய்‌ மாலையும்‌
நாடொறும்‌ இயற்றியே நாம்‌அ௮ ஸணிந்திடச்‌
சூடுறு செய்கையார்‌ தொழில்பு ரிந்துளோர்‌; 8

பூமிதேவியின்‌ விருப்பம்‌
எவர்கள்‌ஆ யினும்‌அதற்கு உளம்‌இ ரங்கியாம்‌
அவதரித்து அனுதினம்‌ அணுகு வோம்‌எனா
aon Ht வண்ணன்‌ஆங்கு ஓதக்‌ கேட்டுஉளம்‌
துவர்‌இதழ்ப்‌ புவிமகள்‌ தொழுது சொல்லுவாள்‌. 9

நாத[இம்‌ முறையெனில்‌ நளினம்‌ ஓக்கும்நின்‌
பாதமேல்‌ பத்தியும்‌ பரிவும்‌ எய்தியான்‌
ஓதும்‌அம்‌ முறைவழாது உஞற்றின்‌ அல்லது
மாதெனப்‌ பிறந்துள பயன்வந்து எய்துமோ? 10

ஆதலால்‌ அடிச்சியேன்‌ ஆழி சூழ்வுறும்‌ பூதலத்து உதித்துப்பூ மாலை தன்னொடும்‌
– ஓதுபா மாலையும்‌ உகப்பச்‌ செய்திடப்‌ .
போதல்‌என்‌ கடன்‌எனப்‌ போற்றி நின்றனள்‌. 11

பெரியாழ்வாரின்‌ புகழ்‌
நின்றவள்‌ மாமுகம்‌ நோக்கி நேமிமால்‌
மன்றலங்‌ கோதைநின்‌ மனம்‌அவ்‌ வாறெனில்‌
ஒன்றுரைத்‌ தஇடுவன்யான்‌ உவந்து கேட்டுஅதை –
நன்ழெனக்‌ கொள்கென நவில்வது ஆயினான்‌. – 12

வில்லிபுத்‌ தூர்வரும்‌ விப்பி ரோத்தமன்‌,
நல்லியல்‌ உடையவன்‌; நகைகொள்‌ வாண்முகன்‌;
மெல்லிய: மொழியினன்‌; ‘ விளையும்‌ மாயையைக்‌
கல்லிய செய்கையன்‌; கருணைஉள்‌ எத்தான்‌. 13

எப்புவி தன்னினும்‌ இணைத ஸனக்குவேறு
ஒப்பிலா நிறைவுபெற்று உறும்மெய்ஞ்‌ ஞானத்தான்‌;
செப்பிடும்‌ பெயர்விட்டு சித்தன்‌ என்பவன்‌;
துப்புற எனதுஅடித்‌ தொண்டு பூண்டுளோன்‌; -14

இன்னவன்‌ மடியைப்பெற்று எழிலின்‌ ஓங்கிட
அன்னமா நகரிடை அணுகு வாய்‌;அவன்‌
குன்னுடைச்‌ சறுவியாய்‌ அவத ரித்தபின்‌
நின்னுளத்து உறும்‌இடர்‌ நீக்கு கென்றனன்‌. 15

சொன்னமா -மொழியெனும்‌ அழுதம்‌ தாயதன்‌
கன்னம்‌ஊ டுறஉளம்‌ களிது ளங்கியே
பின்னரும்‌ புவிமகள்‌ என்னும்‌ பெண்கொடி
நன்னய முடனிவை நவில்வது ஆயினாள்‌: 16

பூமிதேவியின்‌ வினர்‌.
வில்லிபுத்‌ தூர்‌எனும்‌ விளங்கு மாணகர்‌
தொல்லைநாள்‌ யாவரால்‌ தோன்றிற்று; அஆங்கதும்‌
நல்லவந்‌ நகரில்நீ நணுகும்‌ ஆறதும்‌ சொல்லும்‌அவ்‌ விட்டுணு சித்தன்‌ தோற்றமும்‌; : 17

ஆங்கவன்‌ செயும்கைங்‌ கரிய மாவதும்‌
ஈங்கிது முதலிய யாவும்‌ ஏழையேன்‌
பாங்குற .உணர்வகை. பகர்தி என்னலும்‌
தேங்கமழ்‌ துளவினான்‌ செப்பல்‌ ஆயினான்‌. 18

வில்லிபுத்தூரின்‌ மான்மியம்‌
– பூதலம்‌ தனில்சம்புத்‌ : இவில்‌ பொங்கு௮லை
மோதுதென்‌ கடலினுக்கு அருகில்‌ மொய்ம்புஉஉடை
– நீதிசேர்‌ பாண்டிய நெடிய நாட்டினில்‌ —
சேதுவிற்‌ குமரிமா வரையின்‌ கீழ்த்திசை; 19

காவதம்‌ ஒன்றினில்‌ கருதும்‌ ஒர்தலம்‌
ஆவதுஉண்டு; அதனிடை ஆதி காலம்யாம்‌
மூவகை உலகமும்‌ பொருமு ரண்வலி ‘
மேவும்‌ஓர்‌ வராகமாய்‌ விளங்கத்‌ தோன்றியே. 20

நினையனாள்‌ தன்னிடை நெடிய தாங்கொடு
விளைபுரி இரணிய வக்க வெய்யவன்‌
குனைவதை புரிந்துபல்‌ தருமம்‌ என்பவை அனையயா வையும்‌உனக்கு அருளிச்‌ செய்தனம்‌. 21

அத்தரு மங்களை அனைத்துங்‌ கேட்டறிந்து
இத்தலம்‌ “அதனில்‌எக்‌ காலும்‌ நீங்குறாது
ஓத்துஉறைந்‌ திடுதிஎன்று உள்ளம்‌ அன்பொடு
மெத்தவும்‌ வருந்தியே வேண்டல்‌ செய்தனை, . 22

ஓதும்‌௮ம்‌ மொழிப்படி யாம்‌உவந்து உனோடு
ஏதமில்‌ கற்பங்கள்‌ அனந்தம்‌ எய்திடப்‌
பேதியாது உறைதலால்‌ அதனுக்கு ஓர்பெயர்‌
ஆதியில்‌ வ்ராகக்ஷேத்‌ இரம்‌என்று ஆயதால்‌. 23

௩ அன்புறக்‌ கேட்டி;யான்‌ உறையும்‌ அத்தலம்‌:
பின்புறு நெடியநாள்‌ பிறஉ யிர்க்குறு
துன்புஇழை உழுவையும்‌ அரியும்‌ சூழ்ந்திடும்‌
வன்புஉறு வன்மதாய்‌ மருவி உற்றதால்‌, 24

… காலநேமி வதம்‌
அரியஆ ரணியமாம்‌ அத்த லம்தனில்‌
உரிமையோடு எந்தனை உளம்‌இ ருத்தியே
பிருகுமார்க்‌. கண்டனே முதல பெற்றியோர்‌’
மருவியுற்று’ .அரியமா தவம்‌இ ழைத்தனர்‌. 25

்‌ இழைத்திடுந்‌. தவத்தரைக்‌ கால நேமிஎன்று
அழைத்திடும்‌ பெயருடை அரக்கன்‌ எய்தியே.
குழைத்துளம்‌ ‘ வெருவுறக்‌ கொடிய தாம்பல
பிழைத்தனை இழைத்தனன்‌ பெருக என்பவே. 26

அத்துயர்‌ பொறுக்கொணாது அவர்கள்‌ யாவரும்‌
இத்திருப்‌ பாற்கடல்‌ எய்தி எம்மொடும்‌
குத்தமக்கு அவன்தனால்‌ சார்ந்த யாவையும்‌ சித்தமது இரங்கிடச்‌. செப்பி னார்களால்‌: 27

ஓலம்‌இட்டு உரைத்தல்கேட்டு உவண னஊாய்‌உறும்‌
சூலபா ணியன்மிசை துரிதத்து எய்தியே
காலனை அனையஅ௮க்‌ கால நேநமிதன்‌
மேலுற நேமியை விடுத்து வீட்டினேம்‌. 28

முக்குளம்‌
மாய்ந்தவன்‌ உடல்புண்நீர்‌ மற்ற வன்தனைக்‌
காய்ந்துள கொடியசெங்‌ கதிர்கொள்‌ நேமியில்‌
தோய்ந்திட அதனைநீர்‌ கொண்டு தொல்நிறம்‌
வாய்ந்துற ‘அலம்பு’என வருணற்கு ஓதினேம்‌. 29

என்றஎம்‌ மொழிவழாது எமுனை சான்னவி
சான்றமா சரஸ்வதி என்னச்‌ சார்ந்திடும்‌
மூன்றுமா நதியையும்‌ அழைத்து மொய்ம்புண்நீர்‌
கான்றதே மியைஅவன்‌ கழுவித்‌ தந்தனன்‌. 30

அக்கடி. நகரிடை வருணன்‌ ஆனவன்‌
சக்கரம்‌ அலம்பும்நீர்‌ மூன்றும்‌ சார்ந்துஒரு
.. முக்குளம்‌ என்னவே. மொழியும்‌ பேரொடு
மிக்கநல்‌ தீர்த்தமும்‌ விளங்கிற்று என்பவே. 31

ஓதும்‌௮வ்‌ அரக்கன்செய்‌ உபத்ர வந்தனால்‌
போதநேர்ந்து அயர்வொடு புழுங்கி நொத்துள
– மாதவர்‌ தமையினி வருந்த லீர்என
ஆதர வுரைகள்யாம்‌ அறையும்‌ எல்லையில்‌; 32

முனிவர்‌ கேட்ட வரம்‌
மீண்டும்‌ எந்தமை இவண்விளங்கு மாதவம்‌
பூண்டுள இருடியர்‌ பொருந்தும்‌ ஓர்வரம்‌
. ஈண்டுநீ மறுத்திடாது எமக்கு அருள்செய
வேண்டும்‌என்று உளந்தனில்‌ விரும்பிக்‌ கேட்டனர்‌. 33

என்னநீர்‌ வேண்டுவ தியம்பு மென்றலும்‌
அன்னவர்‌ ஓதினர்‌ அணிகொள்‌ பாற்கடல்‌
மன்னுதல்‌ ஒழிந்துஇவண்‌ வந்து தோன்றியே முன்‌எமை நலிந்தவெம்‌ மூர்க்கன்‌ தன்னையே; 34

பொங்குஒளி நேமியால்‌ பொருது அழித்துநீ
எங்கள்‌ஆ பத்துஓழித்‌ இடும்‌இ யற்கையால்‌
இங்குநீ உறைந்திடு வரம்‌௮து என்னலும்‌
அங்குஅவர்க்கு அவ்வரம்‌ தனை௮ ளித்துளேம்‌. 35

ஆதலால்‌ அத்தலம்‌ அதனுக்கு ஒப்பதாய்‌
ஓதமுன்‌ னாள்தனில்‌ ஒளிர்வ டத்துஇலை
மீதுகண்‌ வளர்வபோல்‌ விளங்கு௮ ராவின்மேன்‌
காதலோடு அமர்ந்துகண்‌ காட்‌ நல்கினேம்‌. 36

ஆங்குநம்‌ பெயர்வட வேச்சு ரன்‌எனப்‌
பாங்குற ஆங்குஅவர்‌ பகர்ந்து பின்னரும்‌
தீங்கிலா அத்தலம்‌ தனக்கும்‌ செவ்விதாய்‌
ஓங்கும்‌௮ப்‌ பெயர்கொளும்‌ புரம்‌என்று ஓதினார்‌. 37

அத்தலத்து அவ்விதத்து அமர்ந்த மாதவர்‌ சித்தர்கள்‌ முதலினோர்‌ வணங்கச்‌ சேர்வைகுந்‌
தொத்துரு சதுரமா முகம தோரறு
பத்துநான்கு அணுகுறும்‌ . அளவும்‌ பண்பொடும்‌; 38

உன்னையும்‌ அம்புயத்து உ.கந்து வாழ்வுறும்‌
பொன்னையும்‌. அருகுஉறப்‌ பொருந்தி வைகினேம்‌.
பன்னும்‌௮வ்‌ உகங்கள்‌ தீர்ந்து உறலும்‌ பார்மினே
பின்னரும்‌ வனமதாய்ப்‌: பெருகிற்‌ றாம்‌அரோ.. 39

குருவொடு செடிகளும்‌ சார்ந்தது அவ்வனத்து
அருகுபுத்‌- தூர்என அறையும்‌ ஓர்சிறு இருநகர்‌ உண்டு;அதைச்‌ சேர வேமிகும்‌
பெருவலி வேடர்கள்‌ பிரப லித்தனர்‌, . 40

முன்னுறும்‌ உழுவையே முதல்வி லங்கெலாம்‌
உன்னரும்‌ கொலைத்தொழில்‌ ‘ உஞற்று வேடரே
அன்னகர்‌ தன்ன்கத்து அதிக ராயினார்‌
பின்னருற்று அடைந்தமை பேசு வாம்‌அரோ. 41

வில்லியும்‌ கண்டனும்‌
அல்லி௮ம்‌ புயமலர்‌ அனைய மாமுக
மல்லிஎன்‌ றுரைபெறு மாது அகட்டினில்‌
கல்லியல்‌ தோளினர்‌; கமலக்‌ கண்ணினர்‌;
வில்லியும்‌: கண்டனும்‌, விளங்கத்‌ தோன்றினார்‌. . 42

அன்னவர்‌ நாள்தொறும்‌ அமுத அம்புலித்‌
துன்னரும்‌ கலையென எளர்ந்து . சோர்விலாப்‌
பன்னுதம்‌ குலமுறைத்‌ கொழில்ப யிற்றியே
மன்னுறு, காட்சியாய்‌ வாழும்‌ நாளிடை; :-: 43

அனையவர்‌ இருவரும்‌ வேட்டை. யாடுவான்‌
நினைவுகொண்டு ஒருபகல்‌ நிறைந்த தூணியும்‌
புனைமணிச்‌’ சிலையும்புங்‌ கவமும்‌ கொண்டுதம்‌
மனைஒழிந்து அரியஅவ்‌ வனத்தின்‌ ஏகியே; 44

மானொடு கலைகளும்‌ கடம்பும்‌ வைகுகோட்டு
ஏனமும்‌ உழுவையும்‌ எண்குஇ ஸனங்களும்‌
தானமார்‌ கரிகளும்‌ சரியச்‌ சாடியே
கானக முழுவதும்‌ கலக்கி னார்களால்‌. » 45

கூறுறு நிணங்களும்‌ குருதித்‌ தோயமும்‌ பாறுநாய்‌ நரிகழு கனம்ப ரிந்துண
வேறுள மிருகமும்‌ வேட்டை யாடிநாம்‌ க
மாறிலாது &உறங்கும்‌௮வ்‌ விடத்து வந்தனர்‌. 46

இளையவன்‌ புலியால்‌ இறத்தல்‌
அவ்விடந்‌ தனில்‌இளை யவனும்‌ மற்றொரு
வெவ்விய புலிதனைக்‌. கண்டு வெங்கணை
எவ்வினன்‌ பலபல ஏவும்‌ அம்பினுக்கு
ஒவ்விடாது அதுவிரைந்து ஓட –47

ஓடிடும்‌ அதைத்தொடர்ந்து இவனும்‌ ஓடலும்‌
நீடிய புதலிடை மறைந்து நின்றிட வாடிய மனதொடும்‌ இவனும்‌ மற்றதைத்‌
தேடிஅங்கு அதன்முனம்‌ செல்லும்‌ எல்லையில்‌; 48

பின்தொடர்ந்‌ துறும்‌ஓலி பெறவெ குண்டுமேல்‌
சென்றுறப்‌ பாய்ந்துஅவன்‌ சிதைவு றும்படி
கொன்றுடல்‌ கஇழித்துவெங்‌ குருதி சோர்வுற
வென்றிகொண்டு அப்புலி விரைவில்‌ போயதால்‌. 49

தம்பியைக்‌ காண்கிலான்‌ தமய னானவன்‌
வெம்பிய கானிடை விரைந்து தேடலும்‌
செம்புண் நீர்‌ ஒழுகடச்‌ சிலைக்கை அம்பொடும்‌
அம்புவி மேற்கடந்‌ தவனைக்‌ கண்டனன்‌. 50

அண்ணன்‌ புலம்பல்‌
– (வேறு)
கண்டான்‌; புலியாற்‌ கிழிபட்ட
செய்கை தெளிந்தான்‌; கண்மலரை
விண்டான்‌; கொட்டினான்‌; உரத்திற்‌
புடைத்தான்‌; பொருந்தா வெந்துயரங்‌
கொண்டான்‌; அவன்பொன்‌ மேனியெல்லாம்‌
தடவித்‌ தடவி கொடுநஞ்சம்‌
உண்டான்‌ போல மெய்தளர்ந்தான்‌;
உயிர்த்தான்‌; கரைந்தான்‌; உருகினான்‌. 51

ஆவி அழிந்திட்‌ டவர்போலுள்‌
அழிந்தே புலம்பத்‌ தொடங்கினான்‌
வாவி அறைந்த கொடும்புலியை
வதைப்பத்‌ துணையாய்‌ உடன்வாராப்‌
பாவி என்றன்‌ கொடியமுகம்‌
பார்க்கொ ணாதென்‌ றுளங்கருகுத்‌
தாவி வானம்‌ படர்ந்தனையோ?
என்னோ? ஐயா! சாற்றாயால்‌! 52

பனிமா மலரோன்‌ விதிமுறையோ?
பாவி யேன்செய்‌ கொடுவினையோ?
தனியா யொருவர்‌ துணையின்றித்‌
தரக்கின்‌ உஇர்க்கை குனிலகப்பட்டு
அனியா யமதாய்‌ உயிர்‌இழந்த
ஐயா! உலகத்‌ துனையிழந்திட்டு
இனிநான்‌ உயிர்வா ழேன்வாழேன்‌;
உடனே வருவேன்‌ என்‌ உயிரே! 52

அன்னை தந்தை குருதெய்வம்‌:
அண்ணன்‌ தம்பி மனைமக்கள்‌
பொன்னை முதலாம்‌ பலபலவாம்‌
பொருளும்‌ நீயாம்‌ எனநம்பும்‌
என்னை விடுத்துஅம்‌ பரம்புகுதற்கு
எண்ணிச்‌ சென்றாய்‌ கொடியன்‌ இலை?
உன்னை விடுத்தும்‌ இவண்‌இருந்தேன்‌;
உன்னிற்‌ கொடியேன்‌ நான்‌அன்றோ? 54

எந்தை யேஇங்கு எனைத்தனிவிட்டு
ஏக மனமுந்‌ துணிந்தனையோ?
சிந்தை கனிவாய்‌ வனம்சென்ற
சிறுவர்‌ வருவார்‌ எனப்பார்க்கும்‌
நந்தாய்‌ உனைஎங்கு எனக்கேட்டில்‌
நான்என்‌ நவில்வேன்‌? நவில்‌என்னா
இந்த வகையால்‌ பற்பலவாய்‌
எடுத்தே புலம்பி மெய்தளர்ந்தே; 55

விழுந்தான்‌; புவிமேல்‌ புரண்டுஅழுதான்‌;
வெதும்பித்‌ தேம்பி வெகுண்டுவிரைந்து
எழுந்தான்‌; புலிபோம்‌ வழிசென்றான்‌;
காணாது ஏங்கித்‌ திரும்பினான்‌;
செழுந்தார்‌ அனுசன்‌ கிடந்தவிடஞ்‌
சேர்ந்தான்‌; அவனோடு உடன்படுத்தான்‌;
அழுந்தாத்‌ துன்பக்‌ கடல்படிந்தான்‌;
ஆவி சோகித்து உறங்கினான்‌. 56

வில்லியின்‌ கனவு
உறக்கம்‌ கொள்ளும்‌ அவன்கனவில்‌
உறங்கு வேமிங்‌ குளமுவப்ப
நிறக்கு மணிபொன்‌ கோபுரமும்‌
நெடுமா மதிளும்‌ மண்டபமும்‌
துறக்கம்‌ எனவே அமைத்தாரும்‌
துலங்க வமைத்துக்‌ குடியேற்றிச்‌
சிறக்கும்‌ படி.நீ செய்விப்பாய்‌,
என, யாம்‌ அடைந்து செப்பினோம்‌. 57

அன்னது ஆகும்‌ மொழிதனைக்கேட்டு
அடர்வெம்‌ புலிஎன்‌ உயிர்த்தம்பி
குன்னை வீட்டிற்‌ றதுவல்லாற்‌
சமைக்கும்‌ கோயிற்‌ பணிகளுக்குப்‌
பொன்னும்‌ வெகுவாய்‌ வேண்டியிடும்‌
அதற்குஎங்‌. கேயான்‌ போவன்‌ என
இன்னது ஆகும்‌ மொழியதனை
அவனங்‌ கெடுத்திட்டு இயம்பினனால்‌, 58

அம்மா மொழிகேட்டு ‘உனதுதம்பி
அவனை எழுப்பி அவற்கொன்ற
வெம்மா புலியங்‌ கதுதனையும்‌
… வீட்டி யதுவாழ்‌ குகையிடத்தில்‌
செம்மாப்‌ பொருள்கள்‌ பலவுளது
காண்பித்‌ தஇடுவேம்‌ தெளிந்திடு’கென்று
இம்மா மொழியை மீண்டும்‌அவர்க்கு
இயம்பிக்‌ கனவின்‌ மறைதந்தனமே. 59

எழுந்தான்‌ தம்பி
அந்தக்‌ கனவு தனைக்சண்டிட்டு
அவனும்‌ மலர்க்கண்‌ விழித்தென்னோ
விந்தை உளதாம்‌; இதுபொய்யோ?
மெய்யோ? அறிய வேண்டுமெனச்‌
சிந்தை யுணர்ந்தாங்கு .இருந்திடலும்‌; சீறும்‌ புலியால்‌ மடியனுசன்‌
முந்தத்‌ துயில்கொடு எழுந்தவன்போல்‌ உணர்ந்தாங்கு எழுந்தான்‌ முகமலர்ந்தே. 60

எழுந்த தம்பி தனையணைத்தங்கு
இருகை யாலு மணிமார்பில்‌
அழுந்தப்‌ புல்லி உச்சியைமோந்து
அலர்க ணீர்மஞ்‌ சனம்‌ஆட்டி
கொழுந்துஉற்று ஓங்கும்‌ களிக்கடலில்‌
குளித்தான்‌; புலியாற்‌ றான்புவிமேல்‌
விழுந்த செயல்கள்‌ அனைத்தினையும்‌
விளைந்த வாறே விளம்பினனால்‌,–61

விளம்பு மொழிகள்‌ தனைக்கேளா
வில்லி தானும்‌ தன்கனவில்‌
களங்கம்‌ இலை;இங்கு உறங்குவம்யாம்‌;
எமக்குக்‌ கனக கோபுரமும்‌
வளங்கொள்‌ நகரும்‌ படையெளவும்‌
இருமால்‌ வந்து பகர்ந்தவெலாம்‌
உளங்கொண்டு உணரும்‌ படிதம்பிக்கு
உரைத்தான்‌; அவனும்‌ களிப்புற்றான்‌.–62-

இருவர்‌ களும்‌௮வ்‌ விடம்நீங்கிச்‌
லதா ரம்சென்று ஏகிடலும்‌
உருவும்‌ கணைகள்‌ – பலதைத்து
உடலம்‌ துறந்த வழியதன்வாய்‌
பெருகும்‌ குருதி மழையதுபோல்‌
பெய்யப்‌ .புவியும்‌ சிவப்புஎய்தப்‌
பொருவெம்‌ புலிசெற்று அவண்கிடக்க
அதனைக்‌ கண்டுஅற்‌ புதமடைந்தார்‌. -63

பின்னும்‌ அவண்விட்டு இருவர்களும்‌
கடிதிற்‌ சென்றுஅ௮ப்‌ பெரும்‌உழுவை
மன்னி யிருந்த வரைக்குகையில்‌
மருவிப்‌ பார்க்க வகைவகையாய்ப்‌. பொன்னும்‌ மணியும்‌ பணிதிகளும்‌
பொருந்தக்‌ கிடத்தல்‌ தனைக்கண்டே
துன்னும்‌ கனவில்‌ கண்டதெலாம்‌
மெய்யென்று உளத்தில்‌ — 64

இத்த இடத்தில்‌ அத்திருமால்‌. இருத்தற்கு ஐய மிலை;உறையும்‌
அந்த இடம்நாம்‌ அறிகுதும்‌என்று அவண்விட்டு ஏகி, அவ்வனத்தில்‌
எந்த இடத்தும்‌ புதல்புதலாய்‌
இருகண்‌ இமையாது ஆராய்ந்து
சிந்தை கனிவாய்‌ விரைவினொடும்‌
தேடித்‌ தேடி திரியுங்கால்‌; 65

வேடர்கள்‌ வடபத்ரசாயியைக்‌ கண்டது
முன்னாள்‌ தனில்‌ஆ ராதஇுத்தோர்‌
முயன்ற அணிஆ லயம்கிலமாப்‌
பின்னாள்‌ முளைத்த வடவிருக்கப்‌
பெருக்கால்‌ மூடு பட்டதனுள்‌
பன்னா கணையும்‌ அதன்மிசையே
படுத்த எமையும்‌ தாமரைவாழ்‌
பொன்னோடு உணையும்‌ ‘இருகண்ணும்‌
பொருந்தக்‌ கண்டே ‘ மகிழ்வாடு; 66

துயிலுங்‌ காலை யுறுங்கனவில்‌
களிப்பத்‌ தோன்றித்‌ தகவுடனே
பயிலுங்‌ கடவுள்‌ இவராம்‌என்று உன்னிப்‌ பலகா லம்புவியில்‌யிலம்‌ பொருவும்‌. இணிதோளார்‌
தாழ்ந்து வணங்கி அடிபோற்றி
அயில்வெங்‌ கண்ணாய்‌! கனவிலுரை ச
அவ்வாறு அமைக்கச்‌ சிந்தித்தே; 67

கோவில்‌ எழுந்தது
மலையின்‌ குகையின்‌ இடைகிடந்து
வளம்சேர்ந்‌ இரவைப்‌ பகலாக்கும்‌
விலையில்‌ மணியும்‌ பணிதிகளும்‌
மிளிரும்‌ பைம்பொன்‌ முதலியவாய்‌
நிலைகொண்டு அதைப்பண்‌ டியில்பொதியில்‌
நிரப்பிப்‌ பின்னும்‌ மனிதர்கள்தம்‌
தலையின்‌ மிசையும்‌ வருவித்தும்‌
தன்கைப்‌ பொருளும்‌ உடன்கலந்தே; 68

நிலைபெற்று உயர்பொன்‌ கோபுரமும்‌
நிரப்பு மணிமண்‌ டபம்மதிலும்‌
அலையுற்று எழுநீர்ப்‌ பொய்கையும்மற்று
அவைபோற்‌, பலவாம்‌ இருப்பணியும்‌
மலையொத்து உயரும்‌ மணிமாட
கூடங்‌ களுஞ்சேர்‌ வள.நகரும்‌
தஇலைபொற்‌ கரம்சேர்‌ வில்லியக்கான்‌
அழித்துச்‌ சிறக்கச்‌ செய்வித்தே; 69

வில்லிபுத்தூர்‌ மலர்ந்தது.
அருகில்‌ உறையும்‌ திருப்புத்தார்‌
அந்த ணாளர்‌ தமைஅழைத்துத்‌ திருவை குறயாம்‌ அமைத்திடும்‌இத்‌
இருமா நகரம்‌ அதனிடைநீர்‌
_ மருவி உறைந்து பெருவாழ்வு
மலியச்‌ சிறப்புஎய்‌ திடும்குடியாய்‌
வருதல்‌ வேண்டும்‌ எனஉரைப்ப
மற்றுஅங்கு அவர்கள்‌ வகுத்துரைப்பார்‌., 70

நன்று புகன்றது இத்திருமா
நகரத்‌ தனக்கும்‌ அழகுசிறப்பு
ஒன்று நாமம்‌ புத்தூர்‌ என்று
உரைத்தால்‌ யாங்கள்‌ அவண்வருவேம்‌
என்று புகல அப்பெயர்தன்‌
பெயரோடு இசையு மாறுஉரைத்தான்‌;
அன்று குடியாய்‌ அவர்களும்சேர்ந்து
அணுகச்‌ இறக்க வாழ்ந்தனரால்‌. 71

அதனால்‌ அவ்வூர்‌ அமைத்தவன்போர்‌
அருகு புத்தூர்‌ கலந்துஇரண்டு விதமாய்‌ ஒன்றி வில்லிபுத்தூர்‌
எனும்‌ஓர்‌ நாமம்‌ விளங்கியதால்‌;
மதிசேர்‌ சகரக்‌ கோபுரமும்‌
வளமா நகரும்‌ புராதனத்தைப்‌
புநிதாய்ச்‌ செய்த தால்‌ஒருபோர் புதுவை எனவும்‌ பொருந்தியதால்‌. 72

சீரார்‌ அனுமன்‌ பொற்கருடன்‌
சிவிகைப்‌ பரிதண்‌ டிகைசேடன்‌
தேர்‌ னைஇன முதலாகும்‌
இருவூர்‌ திகள்பல செய்வித்து
ஆரா தனம்பிரம்‌ மோற்சவமோடு
அணியார்‌ மற்றைத்‌ திருவிழாவும்‌
தோராது அமரர்‌ தாமும்‌அதி
சயித்துத்‌ துதிக்கப்‌ புரிவித்தான்‌. 73

அவ்வா றாக நாடொறும்‌ஆங்கு
அவன்செய்‌ பலவும்‌ குறைவுஇலகாய்ச்‌
செவ்வே புரிந்து வருநாளில்‌
Avant லம்சென்‌ நுற்றபினர்‌
எவ்வேறு உலகங்‌ களினும்‌இதற்கு
இணைளஎன்று எடுத்திட்டு இயம்பிடுதற்கு
ஒவ்வாது உயர்நம்‌ பரமபதத்து
உற்றான்‌ அவன்தம்‌ பியினோடும்‌. 74

பெரியாழ்வாரின்‌ வரலாறு
மண்நா டினையே முதற்பலவாய்‌
வகுத்தும்‌ புகல்‌௮அண்‌. டங்களினும்‌
நண்ணாப்‌ புகழ்நண்‌ ஸணிடும்‌௮ந்த
நகரின்‌ சரிதம்‌ ;நவின்றனமால்‌;
விண்ணா டர்களும்‌ புகழ்ந்துஏத்தும்‌
விட்ணு சித்தன்‌ சரிதம்‌அதைப்‌
பெண்ணார்‌ அமுதம்‌ அனையாய்‌!(யாம்‌ பேசக்‌ கேட்டி எனப்பேசும்‌. 75

(வேறு)
ஆழிசூழ்‌ உலடல்‌ அவதரித்‌ துடையோர்‌
அனைவரும்‌ நமைஅறி கிலராய்ச்‌
சழ்உறு மலமூத்‌ இரஉடல்‌ எடுக்கும்‌
செனனசா கரம்கடந்‌ திலராய்ச்‌
சூழ்‌்உ.று மாயை வயத்தராய்‌ நரகில்‌
துன்னுதற்கு இரங்கிஆங்கு அவர்கள்‌
வாழ்உறும்‌ பரம பதம்தனில்‌ புகுந்து
மகிழ்வுற யாம்‌உளம்‌ மதித்தே; 76

பெரியாழ்வார்‌ அவதாரம்‌
மருள்தரும்‌ உளம்சேர்‌ மாநிலத்து எவர்க்கும்‌
_ மயக்கற விளங்குமெய்ஞ்‌ ஞானப்‌
பொருள்தனை விரித்துஉள்‌ உணர்ந்திடு மாறாய்ப்‌
புகன்றுபின்‌ வருஇநீ என்னக்‌
கருடனுக்கு உரைப்ப அவனும்‌அம்‌ முறைக்‌
கடிநகர்‌ முகுந்தன்பத்‌ தினியாம்‌
இருள்தரு குழல்சேர்‌ பற்புமை வயிற்றி
னிடைவிட்ணு சத்தன்‌என்று உஇத்தே; 77

திருப்பணிகள்‌
துஞ்சுறு மாயை இருளினைத்‌ துறக்கும்‌
சுடரவ னாம்‌என விளங்கி
அஞ்சுமா வயதின்‌ ஞானஉற்‌ பவமாய்‌ அன்புநம்‌ மிடத்தில்உண்‌ டாகி விஞ்சுமல்‌ லிகைமுல்‌ லையும்நறுந்‌ துளவும்‌
விளங்குறு திருநந்த வனமும்‌
கஞ்சமும்‌ கழுநீர்‌ முதலிய மலர்கள்‌
கவின்பெறு தடமும்‌ஆங்கு இயற்றி; 78

கிழியறுத்தல்‌
காலையில்‌ கடன்கள்‌ கழித்துப்பூ மலர்கள்‌
கசங்குறாக்‌ கூடையின்‌ எடுத்து
மாலைகள்‌ தொகுத்து நமக்குஅணி வித்தே
வருகுவன்‌ அதுவும்‌அல்‌ லாமல்‌
வேலைகூழ்‌ புவியின்‌ மிகுவளம்‌ பொருந்தி
மேவுசீர்ப்‌ பாண்டிய வேந்தன்‌
மேலைநாள்‌ பரம வத்துஎவன்‌? என்ன
விளங்குறத்‌ தெரிகுவான்‌ விரும்பி; 79

தனதுவா யிலினோர்‌ கிழிதனைத்‌ தூக்கத்‌
குர்க்கத்தில்‌ வென்றுள பெரியோர்‌ :
இனதுகொண் டடைமின்‌ எனத்திரு முகங்கள்‌
எங்கணும்‌ பரவிட விடுத்தான்‌
அனதுணர்ந்து உலகிற்‌ பல்பல விதமாய்‌
அறையும்‌அச்‌ சமயவா தியர்கள்‌
மனதுவந்து அமைதம்‌ விருதுடன்‌ மதுரை
மாநகர்‌ வந்துஅணு கினரால்‌. 80

ஓத்தடைந்‌ தவர்கள்‌ தமதுநூன்‌ முறைகொண்டு
உரைத்திடும்‌ தர்க்கமா முறைகள்‌
எத்தனை விதத்தால்‌ கேட்பினும்‌ அதனுக்கு
இசைவுறத்‌ தனதுநூல்‌ எடுத்திட்டு அத்தனை விதங்கட்கு எண்மடங்கு உரைத்திட்டு
– ஆங்குஅவர்‌ தமையெலாம்‌ விட்ணு
சித்தன்வென்று அவைமுன்‌ நமைப்பரம்‌ எனவே
செப்பி௮க்‌ இழியையும்‌ அறுத்தான்‌. 81

ஏனைய சமயத்‌ தவர்களும்‌ துதிசெய்து
… ஏத்தும்‌அப்‌ பட்டர்பி ரானைச்‌
சோனைஅம்‌ புயலின்‌ பொழிகர அரசன்‌
‘தொழுதுபொன்‌ னடிமுடி யணிந்து
சேனை நால்‌ வகையும்‌. செயசெய என்னத்‌
தேவர்கள்‌ மலர்மழை பொழிய
ஆனைமேல்‌ ஏற்றி அணிமுரசு அதிர்வித்‌
குந்நகர்‌ வலம்வரும்‌ போதில்‌; 82

பல்லாண்டு
சவனயன்‌ முதலோர்‌ சேவடி வணங்கச்‌
செம்பொன்‌அங்‌ இரியினை நிகரும்‌
உவணமிீ இவர்ந்து திருவுளம்‌ பொலிய
உலகுளோர்‌ பலரும்‌ஆங்கு உணரப்‌
பவனிவந்‌ இடுவோன்‌ கண்டுஉளம்‌ உருகும்‌
படிஎதஇர்‌ எளியதாய்‌ அடைந்தேம்‌;
அவனும்‌அன்‌ புடனே தொழுதுபல்‌ லாண்டுஎன்று அணிபெறும்‌ காப்புஅணிந்‌ தனனால்‌. 83

முன்புறு சைவ சமயமாம்‌ அதனை:
விடுத்துப்பொன்‌ முடியுடை அரசன்‌
அன்புடன்‌ வேண்டத்‌ திகிரிசங்கு அவன்தன்‌
அணிபுயம்‌ இரண்டினும்‌ அணிந்தே
பின்புஉவந்து அளித்த பொருள்மணி முதலாம்‌
– பெருவெகு. மதிகள்கொண்‌ டருளித்‌
கன்புகழ்‌ எவரும்‌: துதிசெய மதுரை
தனைவிடுத்து அணிநகர்‌ அணுகி; 84

பாமாலையும்‌ பூமாலையும்‌ அணிவித்தல்‌
கண்ணனாய்‌ உதித்துயாம்‌ இருந்தபோது இயலும்‌
காரிய சம்ப்பரமம்‌ அதன்தன்‌
வண்ணம்யா வையும்செந்‌ தமிழினால்‌ கவியாய்‌
வழங்கும்‌௮அப்‌ பாவின்மா லைகளும்‌
தண்ணறாத்‌ துளிக்கும்‌ மலரினால்‌ தொடுத்துச்‌
சமைத்தபூ மாலையும்‌ சாத்தி ்‌
எண்ணரும்‌ கால மாய்‌இருக்‌ இன்றான்‌;
அவன்‌ உளத்து யாமும்வீற்‌ றிருப்போம்‌. 85

இந்தவா றாம்‌௮த்‌ தலம்‌அமைந்‌ துளதும்‌
யாம்அவண்‌ உறைந்துள செயலும்‌
செந்தமிழ்க்‌ கவிவல்‌ விட்டுணு இத்தன்‌
செனித்தசெய்‌ கையும்புவி மானே!
சிந்தைகொண்டு உணர்தி; எனவழங்‌ கஇனனால்‌, .
செழித்தபாற்‌ கடல்முகட்டு ஆலின்‌
பைந்தளிர்‌ அதன்மேல்‌ பாலனாய்‌ உறங்கும்‌ பராபர னானநா ரணனே. ட்ட 86

புவிமகள்‌ விண்ணப்பம்‌
உரைசெயும்‌ தருவா சகம்பல பலவும்‌
உற்றுவந்து இருசெவி யுருக
விரைசெய்பூந்‌ தொடையல்‌ கரியகார்க்‌ குழலின்‌
மிலைந்தசீர்‌ அம்புவி மகளும்‌
கரைசெயற்கு அரிதாம்‌ களிக்கடல்‌ அழுந்தி
ஓர்விதம்‌ கரைஉணர்ந்து எழுந்து
திரைகடல்‌ நிறத்தான்‌ இணைந்ததா மரைப்பூந்‌
“திருவடி பணிந்துஇவை தெரிப்பாள்‌:–87

பூமிததேவியின்‌ அவதாரம்‌
இருவுளப்‌ படியான்‌ புதுவையில்‌ பட்டர்‌
பிரான்‌எனுந்‌ இருப்பெயர்‌ புனைந்து
மருவும்‌௮ப்‌ பெரியாழ்‌ வார்மக எளாய்ப்பூ
மாலைபா மாலைஎன்று உரைக்கும்‌
இருவகைக்‌ கயிங்கி ரியமும்யான்‌ இழைப்பான்‌
இசைந்தனன்‌; ஏகுஎன விடைதந்து
அருளெனக்‌ கேட்டாள்‌; அம்முறை புரியென்று
ஆமிமா யனும்‌அளித்‌ தனனால்‌. 88

(வேறு)
விடைகொண் டதன்பின்‌ திருவெனவும்‌
நீளை எனவும்‌ விளம்பிடும்‌அப்‌
படைகண்‌ ஸணினர்தம்‌ மொடும்புகன்று
பலதே வர்கள்சித்‌ தர்கள்‌இயக்கா்‌
௪டைகொள்‌ முனிவோர்‌ முதலானோர்‌
தாழ்ந்து வணங்கக்‌ கடலாலின்‌
அடைகண்‌ வளர்மால்‌ உளம்தொடர ட்ட
்‌ அவைவிட்டு அகல்‌அம்‌ புவியடைந்தே; 89

வில்லி புத்தூர்‌ எனும்நாமம்‌.
‘விளங்கு நகரில்‌ பெரியாழ்வார்‌
அல்லும்‌ பகலும்‌ ஓழிவிலதாய்‌
அமைத்த நந்த வனத்தினிலே
எல்லும்‌ துளவ நறுஞ்செடியில்‌
ஏரார்‌ சிறுபெண்‌ வடிவுடனே
சொல்லும்‌ கடக மதிஅதனில்‌
துணையில்‌ கணையில்‌ தோன்‌ றினளால்‌. 90

அந்தத்‌ துளவம்‌ எனும்மடவாள்‌
அகலம்‌ புவிமான்‌ தனதுஇடத்தில்‌
வந்துஉற்‌ பவிக்கப்‌ பூரூவநாள்‌
வகுத்த தவம்யா தென்னஇட.ந்‌
குந்து பலவாய்‌ உபசரித்துத்‌
தளிர்க்கை கொடுபொற்‌ றாள் தடவிச்‌
சிந்தை கனிந்து ம௫ழ்சறக்கத்‌
இருமா முடியில்‌ தாங்கினளால்‌. 91

பெரியாழ்வாரின்‌ செயல்‌
பெரியாழ்‌ வாரும்‌ அன்றுஉதயம்‌
பெறுமுன்பு அமையும்‌ துயில்‌உணர்ந்து
விரியார்‌ புனலின்‌ தடந்தோய்ந்து
விதியிற்‌ காலைக்‌ கடன்பலவும்‌
புரியா துளவம்‌ அணிதிருமண்‌
பொலியத்‌ திருப்பூங்‌ கூடையுடன்‌
பரிவாய்‌ இதழ்விண்டு அலர்ந்தமலர்‌
பறிப்ப நந்த வனம்‌அடைந்தான்‌. 92

சோதியைக்‌ கண்டார்‌
வந்து நோக்கும்‌ பொழுதுஅவன்‌ தன்‌
மனமும்‌ மலர்க்கண்‌ களும்களிப்பக்‌
கந்தம்‌ பரந்து நெடுந்தூரம்‌ கமமும்‌ தளவம்‌ அதன்மிசைஓர்‌
சந்த்ர வதனப்‌ .பெருங்கதிரோன்‌
தான்வந்து உதய மானதுபோல்‌
முந்தும்‌ சோதி தோன்றுதலும்‌ முதிரும்‌ பெரிதுஅற்‌ புதம்‌அடைந்தே; 93,

அருகுஉற்று அமைய நோக்குதலும்‌ மதிமா முகமும்‌ அம்புயம்நேர்‌
இருகண்‌ கரம்பா தமும்‌ஒளிரும்‌
– பெண்கண்‌ மணிதன்‌ எழில்தோக்கி
முருகுஉற்று ஒளிரத்‌ துளவுஅணியும்‌ முகுந்தப்‌ பெருமான்‌ தனக்குஉகப்பாம்‌
இருமற்று இவளாம்‌ எனஉளத்துற்‌
சிந்தித்து அநேக விதம்துஇத்தே. -94

– இங்கே இம்மாது இரத்தினம்வந்து }
இருக்கும்‌ செயல்‌என்‌ னோ?இதெல்லாம்‌
பங்கே ர௬கம்வாழ்‌ இருவினொடும்‌
பார்மின்‌ னோடும்‌ பாம்பணையில்‌
செங்கேழ்‌ மலர்க்கண்‌ வடபத்ர ‘
சாயி தன்னை வினவியிடில்‌
அங்கே உணர லாம்‌எனத்தன்‌
அகம்‌உள்‌ தெளிந்துஆ னந்தமொடும்‌; 95

ஆழ்வார்‌ காணிக்கை
அந்த காந்த மணிவிளக்கை
உபய கரஅம்‌ புயம்‌அதுகொண்டு
உந்தி எடுத்துத்‌ தாங்கிவிரைந்து
ஒளிர்நந்‌ தனமா வனந்தனைவிட்டு
இந்து தவழும்‌ உயர்த்தவட
பெருங்கோ யில்முன்‌, எய்தித்தான்‌
தந்த பெருங்கா ணிக்கைஎனத்‌
தரைமேல்‌ வளர்த்தி இவைபுகன்றான்‌: 96

இவள்‌ யார்‌?
துமுதம்‌ தெரிக்கும்‌ பாற்கடலின்‌
துயில்நீத்து இவண்வந்து உறைந்திடுவோய்‌/
குமுதம்‌ பொருவாய்‌ கரியகுழல்‌
மதிமா முகம்கூ ரியவேல்கண்‌
அமுத மொழிஇப்‌ பெண்‌அணங்கார்‌?
இவண்வந்‌ ததும்மேல்‌ அமைவனவும்‌
உமது திருவாய்‌ மலர்ந்திடும்‌என்று
உபய மலர்த்தாள்‌ வணங்கினனால்‌. ர 97

நின்‌ திருமகளாய்‌ வளர்க்க எனல்‌
அன்போடு அவ்வாறு உரைத்துவணங்கு
ஆழ்வார்‌ அணிமா முகம்நோக்கி
மின்போல்‌ ஒளிரும்‌ திருமேனி
விளங்கு மணித்தா மரைவளரும்‌
பொன்போல்‌ வாள்நின்‌ இருமகளாம்‌;
அதனால்‌ பொலிவு சிறந்தோங்கும்‌
தின்மா ளிகையி னிடைகொடுபோய்‌ நேய முடனே வளர்த்திடுவாய்‌. 98

கோதை .எனப்‌ பெயரிடுக
முன்பின்‌ இயைந்த -செயலும்‌இவட்கு
இனிமேல்‌ முயலும்‌ செய்கைகளும்‌
பின்பின்‌ உணர்தி என அருளப்‌
பெருகப்‌ புகன்று பின்பும்‌இவள்‌
குன்பேர்‌ கோதை யாகுமெனத்‌
தரிப்பாய்‌ எனவும்‌ சாத்தினனால்‌;
வன்போடு அடைந்த மல்லரைமுன்‌
மலைந்து குமைத்த மாமாயன்‌. 99

உரைசெய்‌ மொழியார்‌. அமுதுசெவி
.. வழிவந்‌ துறலும்‌ பட்டர்பிரான்‌
கரைசெய்‌ திடுதற்கு. அரியபெருங்‌
களியா முவரி ‘தனில்‌அழுந்தி
விரைசெய்‌ துளவம்‌ கமழ்பதத்தோய்‌/
விளம்பு முறைசெய்‌ வேன்‌எனத்தா
மரைசெய்‌ , மலர்போல்‌ .முகங்கவின
மறித்தும்‌ வணங்கி நிற்றலுமே; 100

இறைவன்‌ கட்டளை
ஈண்டுடும்‌ மடவார்‌ இரத்தின த்தை
மணிபொற்‌ . சிவிகை. யிடையேற்றித்‌
தாண்டுந்‌: தரங்கக்‌ கடலின்‌ ஓலி
. தரும்வாத்‌ இயங்கள்‌ uss mms
வேண்டும்‌ “சம்ப்ரம :முடன்கொடுபோய்‌
விட்ணு சித்தன்‌ மனைவிடுத்து
மீண்டுஇங்கு உறுமின்‌ என்னபரி
சனத்தாற்கு அருள்மால்‌ விடையருளா; கு 101

நன்றுஎன்று அவர்கள்‌ திருவுள்ளம்‌
நயந்துஅம்‌ பொன்னின்‌ நவமணியும்‌
துன்றும்‌ சிவிகை மிசைஅணங்கின்‌
._ தூய்மா மணியை இருகரம்கொண்டு
ஒன்றும்‌ படியாய்‌ எழுந்தருளச்‌
செய்தே முழங்கா ரொலிஓங்கிச்‌
சென்றுஎண்‌ திசையின்‌ உறைவோர்தம்‌
செவியுற்று அடைந்து களிப்பாக; 102

மேளம்‌ பேரி நாகசுரம்‌
விளங்குந்‌ தாரை திருச்சின்னம்‌
தாளம்‌ ஒளிர்மத்‌ தளம்மற்றும்‌
சாற்றும்‌ பலவாத்‌ தியமுடனும்‌
வாளங்‌ கண்ணார்‌ நாடகமும்‌
மருவச்‌ சிறந்த மாநகர்வாய்‌
நீளுந்‌ தெருக்கள்‌ வலம்புரிந்தந்‌ நெடியோன்‌ மனைவிட்டு அவர்போனார்‌. 103

நாச்சியாரை ஆழ்வார்‌ வளர்த்தல்‌
(வேறு)
மனைய டைந்துறு மங்கலந்‌ தினந்தொறும்‌ வளர
வினையி லாதவவ்‌ விட்டுணு சித்தனும்‌ விதியால்‌
அனைய பெண்ணினுக்கு அழகுறக்‌ கோதையாம்‌ என்னப்‌
புனைது மாயவன்‌ மொழிப்படி நாமமும்‌ புனைந்தே; 104

வச்சி ரம்வயி . டூரியம்‌ செழியுமா ஸணிக்கம்‌
பச்சை யோடுகோ மேதகம்‌ புகர்புட்ப ராகம்‌
தச்சி ழைத்தசெம்‌ பொன்னினார்‌ வடமொடு தயங்கி
உச்சி தம்பெறும்‌ தொட்டிலும்‌ ஒளிபெற அமைத்தே; 105

ஆட்டுந்‌ தோழியர்‌; ‘ தொட்டிலிட்டு அஞ்சன மலர்க்கண்‌
இட்டும்‌ பாங்கியர்‌; மடிமிசைத்‌ இருத்தி அம்புலியைக்‌ .
காட்டும்‌ தாதியர்‌; கண்ணிறை கழித்துஅருந்து அமுதம்‌ ஊட்டும்‌ சேடியர்‌ முதலினர்‌ உபசரிப்‌ புறவே; 106

பேதை யாம்பரு வந்தனில்‌ இயைவன பெரியோர்‌
ஓதும்‌ அம்முறை யாவையும்‌ வழுவிலாது . உ.ஞற்றிக்‌
கோதி லாத்தனிக்‌ கலன்களும்‌ குறைவிலாது அணிந்து
இதி லாமதிக்‌ கலையெனத்‌ தினம்தினம்‌ வளர்த்தார்‌. 107

வளரும்‌ நாளிடை பெதும்பையாம்‌ பருவம்வந்‌ துறலும்‌
அளகம்‌ சூழிய மாய்முடித்து அலங்கலும்‌ புனைந்தே
ஒளிரும்‌ நெற்றியில்‌ பிறையெனத்‌ திருமண்காப்‌ புடனே
தளத எத்திருச்‌ சூரணம்‌ தன்னையும்‌ அணிந்தார்‌. 108

காதில்‌ கல்லிழை கம்மல்நற்‌ சிமிக்கெகத்‌ தரிப்பால்‌
இதி லாநவ மணிஇழை செம்பொனின்‌ முருகும்‌
கோதி லாமயிர்‌ மாட்டிசேர்‌ அழகுறும்‌ கொப்பும்‌
ஓது மற்றுள வகைகளும்‌ ஒளிபெற அணிந்தார்‌. 109

6தசு லாம்செழுங்‌ குவளைநேர்‌ கண்களில்‌ திகழக்‌
காச லாதொளிர்‌ அஞ்சனம்‌ கவின்பெ.ற அணிந்து
மாசி லாஇள நகைபெறு மதிமுகத்‌ தொளிரும்‌
நாசி தன்னின்மூக்‌ குத்திபி லாக்குடன்‌ அணிந்தார்‌. 110

சங்கம்‌ போன்றுள கழுத்தினில்‌ -தாழ்வடம்‌ பதக்கம்‌
பொங்கு ஒளிக்கட்டு வடம்பொலி மோகன மாலை
செங்க .இிர்ச்செழும்‌ பருதிபோல்‌ சரப்பளி’ பதக்கம்‌ –
தங்கு முத்தினா ரமும்பல பொலிவுறத்‌ தரித்தார்‌. 111

ஏட லர்ந்தபூங்‌ கரங்களில்‌ எழில்செய்‌ :மதாணி
ஆட கப்பசுந்‌ தோள்வளை அணிகொள்கே யூரம்‌
சூட கத்தொடு வளையலும்‌ நவமணித்‌ தொடியும்‌:
நீடு றும்விர லாழியும்‌ அணிமுறை நிறைத்தார்‌. 112.

அய்ய மெய்தியுண்‌ டிலையெனு மிடையிடை யழகாய்‌
செய்ய பட்டின்சிற்‌ றாடையும்‌ சிறுமடி சாறும்‌
துய்ய பொன்னரை ஞாணொடு துலங்கும்‌ஓட்‌ டியாணம்‌ .
வெய்ய வன்‌ஒளி காந்துறும்‌ படிமிலைந்‌ தனரால்‌. 113

பளப ளென்னசெம்‌ பஞ்சணிந்து அம்பொன்பா. டகமும்‌
மாமணித்‌ தண்டையும்‌ கெச்சையும்‌ கொலுசும்‌
முளரித்‌ தாள்களின்‌ மோதிர வகையுடன்‌ அழகு
வளமு றும்படி அணிந்தவை யாவரே வகுப்பார்‌? 114

இன்ன வாறதாய்‌ வானகத்‌ இடையிருந்து இழிந்த
மின்ன னாள்‌ஒளிர்‌ மெல்லிய மேனியின்‌ நிறையப்‌
பொன்னின்‌ மாமணி நிரப்புபல்‌ பூடணம்‌ அணிந்தார்‌
வன்ன முற்றபொன்‌ ஓவியம்‌ நிகர்த்திட மாதோ. 115

பொன்னின்‌ மாறுகோ லொடுமணி முச்சிலும்‌ பொலியும்‌ –
மின்னு வெண்கல வடுப்பொடு தாம்பலா விறகும்‌.
வன்ன வெண்பொனின்‌ பலபல: பாண்டத்தின்‌ வகையும்‌.
அன்ன மென்னடை யாள்விளை யாடுதற்கு அமைத்தார்‌. 116

இனைய யாவும்கொண்டு எழில்பெறும்‌ தோழிய ௬டனே
அனைய நாள்தனில்‌ நடைபெறும்‌ இருவிளை யாடல்‌
கதனைஓவ்‌ வாதஅக்‌ கோதையும்‌ நாள்தொறும்‌ தமது
மனையின்‌ ஊடுஇருந்து ஆடுவள்‌ மகழ்வொடு மாதோ. 17

நாச்சியார்‌ திருப்பணி
அந்த நாள்தனி லேபத்தி தலைஎடுத்‌ தவளாய்‌
கந்தை அன்பினோடு உஞற்றிடும்‌ தன்மைபோல்‌ தானும்‌
நந்த மாவன கயிங்கர்யம்‌ இயற்றுவான்‌ நலஞ்சேர்‌
,_ சிந்தை ஊடு௨உற நினைந்துஇது செய்யல்‌உற்‌ றனளால்‌. 118

உதைய காலையில்‌ தந்தையோடு இயல்வன உஞநற்றி
– இதையம்‌ அன்புற நந்தன வனந்தனில்‌ ஏ௫த்‌
-ததையு மாமலர்‌ எடுத்துத்தண்‌ ணீர்தனைப்‌ பாய்ச்சி
– அதையும்‌ ஓர்விளை யாட்டுஎன அனுதினம்‌ இழைப்பாள்‌. 110

சூடிக்கொடுத்தாள்‌
இன்ன வாகப்பற்‌ பலதினம்‌ இயைவுறும்‌ அமைதி
“பன்னு மோர்பகல்‌ பன்மலர்‌ பறித்துவந்‌ ததனைத்‌
துன்னு மாலைகள்‌ அணிபெற வகைவகை தொடுத்து
மன்னு பூந்திருக்‌ கூடையுள்‌ நிறப்புற வைத்தே; 120

ஆய ௬௯டைஓ ரிடத்துவைத்து உலவலுக்கு ஆழ்வார்‌
போய காலையில்‌ கோதைஎன்று உரைசெய்பூங்‌ கொடியும்‌
ஏய மாலைகள்‌ தன்னின்‌ஓர்‌ மாலையை எடுத்துத்‌தூய நாசியின்‌ அதன்மணம்‌ சோதிப்பான்‌ மோந்தாள்‌. 121

மோந்த போதினில்‌ பரிமள மிகுந்துற முழுதும்‌
காந்து மாமணித்‌ தொடியுறும்‌ கரங்களால்‌ எடுத்து
வாய்ந்து றும்படி அளகத்தும்‌ வளைகமுத்‌ தகத்தும்‌
வேய்ந்து தன்திரு மேனியின்‌ விளங்கு௮அழகு உணர்வாள்‌. 122

தோன்று சின்றகண்‌ ணாடியின்‌ கிணற்றிடைத்‌ தொடர்ந்தே
ஏன்ற பேரொளி யழகுகண்டு இன்புறும்‌; மீண்டும்‌
சான்ற தந்தையார்‌ வருவர்‌என்று அதன்முனம்‌ தரித்த
ஆன்ற மாலைகள்‌ அனைத்தையும்‌ அமைவுற வாங்கி; 123

இருந்து மாமலர்க்‌ கூடையிற்‌ சிக்கென முறையிற்‌
பொருந்த வைத்துஅதை உணர்ந்திடா வகைமுன்பு போல
இருந்தி டந்தனிற்‌ கொண்டுபோய்‌ இயைவுறத்‌ தூக்கிக்‌
கருந்த டங்கணாள்‌ பாங்கியர்‌ உறும்‌இடம்‌ கலந்தாள்‌. 124

மாத வற்குஅர சாகிய பெரியஆம்‌ வாரும்‌
கோதை செய்தமை உணர்ந்திலார்‌; இருமனை குறுகிப்‌
போது மாலையின்‌ குடலையை எடுத்துத்தன்‌ புயத்தின்‌
மீது தாங்கியே விரைவொடும்‌ வீதிகள்‌ கடந்தே; 125

வடபெ ருந்திருக்‌ கோயிலின்‌ மருவிநஞ்‌ சமரும்‌
படஅ ரா௮அணை அதன்மிசை பள்ளிகொள்‌ பவர்க்குக்‌
குடலை மாலையை அருச்சகர்‌ இருக்கரங்‌ கொடுத்திட்டு
அடைவு டன்‌உகப்பு எய்துறு மூறைஅணி வித்தே; 126

தீர்த்த மும்பிர சாதமும்‌” இகழ்வுறும்‌ இருகை ஏர்த்து வாங்கித்தன்‌ இதயமும்‌ இருகணும்‌ களிப்பச்‌
சீர்த்த நாரணன்‌ அம்புயச்‌ சீரடி வணங்கிப்‌
டூபர்த்து மாளிகை குறுகிவீற்‌ நிருந்தனன்‌ பெரியோன்‌, ..127

என்றும்‌ ஆங்குஅவன்‌ கொணர்ந்துதற்‌ கணிந்திடு தலினும்‌
அன்ற லங்களில்‌ பரிமளம்‌ அதிகமாய்‌ உறலும்‌
இன்று இதற்குள்டும்‌ முறையுறல்‌ எவ்விதம்‌ எனவே
குன்றி னால்மமை விலக்கிய கோவலன்‌ குறியா; : 128

வென்றி வேல்கண்௮ம்‌ கோதையாள்‌ விட்டுணு இத்தன்‌
சென்று நீங்கிய காலைத்தன்‌ குழலிடைச்‌ சேர்த்த
மன்ற லாம்‌என நடந்துள வாறுஉணர்ந்‌ தருளி
நன்று நன்றுஎன ஆனந்தம்‌ மிகவும்நண்‌ ணினனால்‌. 129

ஆங்குஅவ்‌ வாறதாய்‌ மாலையைக்‌ தொடுத்துவைத்து ஆழ்வார்‌
நீங்கு காலையில்‌ நாடொறும்‌ நிர்மலக்‌ கோதை
தேங்கு ழற்கணே அணிந்துகண்‌ ணாடிநேர்‌ கணெற்றில்‌
பாங்கி னோடுஅழ குணர்ந்துஅதைப்‌ பண்டுபோல்‌ வைப்பாள்‌.-130

குந்தை அச்செயல்‌ உணர்ந்திடாது அதைப்பின்பு தகவாய்‌
வந்தெ டுத்துப்போய்க்‌ கொடுப்பவை வடபத்ர மாலும்‌
சந்தை இன்புற அணிந்துஉளம்‌ ஆனந்தம்‌ சேர்வன்‌
இந்த வாறதாய்‌ நாள்தொறும்‌ இயலும்‌அந்‌ நாள்வாய்‌; 131

உவரி போல்நிற வடபெருங்‌ கோயில்‌உள்‌ உறைவோரன்‌ :
புவனி மங்கையாள்‌ கோதையாம்‌ திருப்பெயர்‌ பொருந்தி
அவத ரித்துதற்கு இயற்றுறு கயிங்கர்யம்‌ அதனை
cots ஞம்தெரிந்து உணர்வகை புரிகுவான்‌ எண்ணி; 132

வடபத்ரசாயி நாச்சியார்‌ சிறப்பை உலகுக்குணர்த்தல்‌
ஒருதி னம்பெரி யார்கொணர்ந்து உதவுபூங்‌ குடலை
இருக ரங்களால்‌ அருச்சகர்‌ இனிதொடும்‌ ஏந்தி
மருவு’ மாலையில்‌ ஒன்றுஎடுத்‌ திடலும்மற்று அதின்ஓர்‌
கருமயிர்தெரி வுறும்வகை காண்குவித்‌ தானால்‌, 133

காண்ட லும்‌அதைச்‌ சாத்துறாது அர்ச்சகர்‌ கருத்தில்‌
ஈண்டு இதன்‌இடை பங்கிஉற்‌ நிடுதலால்‌ எவரோ
பூண்ட மாலையைப்‌ போன்றுளது எனஜயம்‌ பொருந்தி
ஆண்டு உறும்பெரி யார்முகம்‌ அமைவுற நோக்கா; 134

அர்ச்சகர்‌ செயல்‌
அய்ய இக்கரு மயிர்தனைக்‌ கண்டிரோ? அதலால்‌
செய்ய மாலையும்‌ கசங்கியது; இச்செயல்‌ இதனுக்கு
எய்த வேணகா ரணம்‌எனோ? உணர்கிலன்‌; இதனைப்‌
பைய ராஅணை யார்தமக்கு அணிதல்பண்‌ பாமோ? 135

தீதி லார்கள்கொண்டு ‘அடைதலில்‌ இம்முறை சேரின்‌
ஓதும்‌ மற்றவர்‌ கொணர்வதை என்‌என உரைப்பேன்‌?
பேதை யேன்நினது அடிக்குஅப சாரமே பெறினும்‌
ஈது மாதவர்‌ தமக்கு௮ணி குதல்‌இழி வாமால்‌. – 136

அல்ல வென்றுநான்‌ அணிந்திடில்‌ பவம்தனக்கு ஆளாய்‌
தொல்லை மாநர கம்தனில்‌ தொடர்ந்துற அழுந்தி
எல்லை யில்லதாம்‌ காலம்‌.ஆங்கு எய்திடல்‌ வேண்டும்‌;
நல்லை நீ௨ண ருறாததை அடியன்‌என்‌ நவில்வேன்‌? 137

ஆய வாற்றினால்‌ யான்‌இதை அணிகுவன்‌ எனஇம்‌
மாய ஸனார்மனம்‌ உகப்பினும்‌ மனம்‌அறிந்து அடியேன்‌
நேய மோடுஅணி வித்திலன்‌ எனதில மிசைஅத்‌
தூய மாமலர்க்‌ குடலையைச்‌ சோரவிட்‌ டனனால்‌. 138

மாயனார்‌
உகப்பினும்‌ அணிவியேன்‌ என்றது அர்ச்சகரின்‌ திருத்தொண்டின்‌ உறைப்பைக்‌
காட்டுகிறது,

எடுத்த மாலையோடு அம்மலர்க்‌ குடலையை எதிரில்‌
கடுத்த மாமுகத்து அருச்சகர்‌ புவியிற்காண்‌ குறவே mo
விடுத்த வாறும்‌அங்கு அதுதுவண்டு ஒருமயிர்‌ விளங்க
அடுத்தி ருந்ததும்‌ அகமுறப்‌ பெரியரும்‌ அறிந்தே; 139.

வடுவில்‌ அம்புய. மலர்முக மண்டலம்‌ வதங்கிச்‌
சுடுகை .யாய்மனம்‌ பதைத்திடத்‌ துடைகளும்‌ கரமும்‌
நடுந டுங்கிட மேனியும்‌ குலைந்திட நலியும்‌
கடுவுண்‌ டார்களின்‌ உடலுயிர்‌ கலங்கிடக்‌ கரைந்தான்‌. 140

வெருவ. லோடுவீழ்ந்து அழுந்திய வெந்துயர்க்‌ கடலை
ஒருவி தம்கடந்து அக்கணம்‌ விரைவினில்‌ ஓடித்‌
தெரு௮ கன்றுநந்‌ ‘தனவனம்‌: அதனிடைச்‌ சேர்ந்து
மருவு றும்மலர்‌ தேடிஉள்‌ ளனமறித்து எடுத்தே; டட மதிரி–141

சரங்கள்‌ தம்மொடும்‌ தார்தொடுத்து ஆலயம்‌ சார்ந்து
தரங்க மாக்கடல்‌ வண்ணருக்கு அருச்சிப்பான்‌ தன்பொற்‌
‘கரங்கள்‌ தன்னில்‌௮க்‌ கடிமலர்க்‌ குடலையை அளித்திட்டு
இரங்கு உளத்தொடும்‌ அவன்தனது எழில்முகம்‌ நோக்கு; 142

அடியன்‌ நெஞ்சறி யாமல்‌இங்கு அடுத்துஉள தாகும்‌
கொடிய தீவினை யாவையும்‌ உளம்கொளாது அருளி
நெடிய நாரணற்கு இங்குஇகை நேரம்‌எய்‌ இடுமுன்‌
கடிது சாத்திட வேண்டும்‌என்று இருகரம்‌ குவித்தான்‌. 143

அனைய மாலையை வாங்கிஅவ்‌ அரவுஅணை அமலன்‌
புனையு மாறுஅணிந்‌ தருச்சகன்‌ உலகெலாம்‌ புகழும்‌
வினையி லான்முக மண்டலம்‌ நோக்கியே மீட்டும்‌
இனைய மாமொழி தனைஎடுத்து இயம்புவான்‌ நன்றே.144

அய்ய! கேட்டருள்‌; ஐயுறேல்‌; நின்னொடும்‌ அடியேன்‌
பொய்ய தாம்மொழி புகல்கிலேன்‌; புகலும்‌இங்கு இதனை
மெய்ய தாம்‌என உணர்தி; மேனாளிடைக்‌ கொணர்ந்த
செய்ய மாலைகள்‌ போன்றில பின்பின்‌ னாளாய்‌; 145

கொணரு மாலையில்‌ வதக்கமும்‌ கசக்கமுங்‌ குறுகி
நணுகு மாங்குஅதை நவின்றிடில்‌ நல்லுளத்து என்‌என்று
உணர்வை யோள௭ன்றும்‌ உனதிடத்து என்‌அப சாரம்‌
அணுகுமோ என்றும்‌ அறிவியாது இருந்தனன்‌ அன்றே, 146

அந்த மாலைகள்‌ துமைஅவர்க்கு அணிந்துவந்‌ துதனால்‌
சிந்தை ஊடுஅதை இன்றுநீ தெளிந்தனை அலவோ?
இந்த வாறுநம்‌ மாலையின்‌ எய்துமாறு ஓதி
வந்தது என்‌2அதை வகுக்கஎன; மற்றுஅவன்‌ வகுப்பான்‌. 147

விளங்கு மாலைகள்‌ தமைஎன்றும்‌ ஓர்விதம்‌ பெறவே
வளங்கொ ஸும்படி தொடுத்துஇவண்‌ வருவன்‌ மற்று அதனில்‌ ‘
களங்கம்‌ உள்ளதுஎன்று உணர்ந்திலன்‌ கண்டிலன்‌ என த்தன்‌
உளங்க லங்கிஆ ராமையி னோடுஉரைகத்‌ தலுமே, 148

கேட்ட லோடும்‌உள்‌ இரக்கமாய்ப்‌ பெரியரே ! கெழுமும்‌
வாட்ட மோடுஉளம்‌ வருந்தலீர்‌।| இனிபுனை மாலை
-ஈம்டல்‌ எச்சரிக்‌ கையினுடன்‌ இயற்றுக என்றுஇயம்பி வீட்ட கம்தனில்‌ அருச்சகன்‌ மேவினன்‌ அன்றே. 149

(வேறு)
ஆழ்வார்‌ தானும்‌ கிலேசமுடன்‌
்‌ அரவின்‌ அணையின்‌ மிசைடடந்து
வாழ்வாய்‌ உனது திருவிளையாட்டு
ஆமோ? மறித்துஉன்‌ இருவடிக்குத்‌ தாழ்வாம்‌ கருமம்‌ புரிந்துளனோ?
எனத்தாள்‌ வணங்கி இவ்வாறு –
சூழ்வார்‌ எவரோ? எனதநினைத்து வ
திருமா ளிகையில்‌ தொடர்ந்தடைந்தான்‌. 150

ஒப்பாய்‌ எடுத்து உரைப்பதனுக்கு
ஒவ்வாத்‌ துயர்உற்று உளந்தன்னில்‌
இப்பூங்‌ கூடை தனைத்தாரோடு
இருத்தி உலாவல்‌ தனசக்கெய்தும்‌
அப்போ தேதா வதுசங்கை
அடைதல்‌ உளவோ? அங்குஅதனைத்‌
குப்பாது உணர்தல்‌ வேண்டும்‌என
நினைந்துஅன்று இரவைத்‌ தான்கழித்தான்‌. 151:

உண்மை தெரிந்தது
மறுநாள்‌ அருணோ தயத்துஎழுந்து
வாவி நீர்தோய்ந்து ஆதவனுக்கு
உறும்‌௮க்‌ கடன்கள்‌ விதியின்மூடித்து
ஒளிர்நந்‌ தனமா வனம்‌அணுகி
அறுகால்‌ முகர்முன்‌ பரிவட்டம்‌
அதனை நாசி தனக்கு௮ணிந்து நறுமா மலர்கள்‌ எடுத்துஅகத்தில்‌-நண்ணி அலங்கல்‌ தனைத்தொடுத்தே; 152

நாசிதனக்கும்‌ பரி
வட்டம்‌ அணிந்து ஆழ்வார்‌ மலர்‌ கொய்வார்‌.
**தமது நாசியில்‌ வாசனை ஏறாதபடி திருப்பரிவட்டத்தால்‌ கட்டிக்கொண்டு
வண்டுகள்‌ மொய்த்து எச்சில்படுத்தா முன்னமே திருவுகிர்‌ படாதபடி, பக்குவ
மாகக்‌ கொய்து, இருப்பூக்‌ கூடையிற்‌ சேர்த்துக்‌ கொண்டுவந்து, பிணையல்‌,
கண்ணி, கோவை முதலாகப்‌ பலவித மாலைகளாகக்‌ சுட்டிக்கொண்டு டுபோய்‌ வட
பெருங்‌ கோவிலுடையானுக்குச்‌ சமர்ப்பித்துக்கொண்டிருந்தார்‌’” என்ற குருபரம்‌
பரை (பன்னீராயிரப்படி) நோக்குக.

என்றும்‌ இருத்தும்‌ இடந்தன்னில்‌ இருத்தி உலாவற்கு .எய்துவன்போல்‌
அன்றும்‌ எய்தி ஓர்‌இடத்தில்‌
கரவாய்‌ அதனைப்‌ பார்த்திடலும்‌
சென்ற தாதை ஒளித்திருத்தல்‌ தெரியாள்‌ தொல்நா ளைப்போல
மன்‌ றல்‌ கமழ்பூங்‌ குழற்கோதை :
மருவார்‌ அலங்கல்‌ தனைஎடுத்தே;: 153

கோதையாரின்‌ அச்சம்‌
அளகம்‌ தனிலும்‌ மார்புஅகத்தும்‌
அணிந்திட்டு அதன்பே ரழகுஉணர்வான்‌
புளக: மொடும்கண்‌ ஸணாடியுறும்‌
இணற்றில்‌ பொருந்தி நிழல்பார்க்க
உளம்‌உட்‌ புழுங்கப்‌ பெரியாழ்வார்‌
அதுகண்டு ஓடி வரலும்மனம்‌
இளகிக்‌ கோதை வெருவலொடும்‌
இருகால்‌ கரம்மெய்‌ நடுக்குறவே; 154

சூடி யுறும்‌௮ம்‌ மாலைஎலாம்‌
துரிதத்‌ துடனே வாங்கி௮அப்பூங்‌
கூடை யுறவைத்து அதன்‌அருகில்‌
குருதி வாள்போல்‌ செவ்வரிதோய்‌ ஓடை மலர்க்கண்‌ நித்திலங்கள்‌
உதிர்தல்‌ தனைஒத்து ஒழுகிடுநீர்‌ ஆடை நனைந்து . புவியினில்வீழ்ந்து
ஆறாய்ப்‌ பெருக அழுதுநின்றாள்‌. 155 ,

ஆழ்வார்‌ மொழிகள்‌
விம்மா அழுதல்‌ தனைநோக்கி
விட்ணு சித்தன்‌ மனம்‌இளகி,
அம்மா! கிளியே! மடமயிலே!
அனமே! குயிலே! ஆரமுதே!
இம்மா அலங்கல்‌ அரவணைமேல்‌ :
எழிலார்‌ திருக்கண்‌ வளர்ந்தருளும்‌
நம்மா தவனுக்கு அணிவதுஎன
நாடாய்‌ கொல்லோ! என்நினைந்தாய்‌? 156

அடியேன்‌ புரிந்த தவப்பயனால்‌
அமுதத்து எழுந்த திருமகள்போல்‌ கடியார்‌ துளவந்‌ .தனில்‌உ தித்தாய்‌/
காலி மேய்த்து வரைஎடுத்த
வடிஆ மியனும்‌ எனக்கு௨ன்னை
மகளாம்‌ என்னும்‌ வகைபுகன்‌ றான்‌;
படிமீது ஒருவர்‌ நிகர்‌இலைஎன்று ‘ .
இருந்தேன்‌; பெற்ற பயன்‌ இதுவோ? _ 157

புதனைப்‌ பயந்தோன்‌ நிகர்முகத்தாய்‌। –
புவியில்‌ பலவாம்‌ உயிர்பூப்ப
மதனைப்‌ பயந்த மாயவற்கு
வனைந்து கழிக்கும்‌ மருமாலை
– அதனைப்‌ புனைய லாம்யாம்‌;யாம்‌
அணிமா லைகள்‌அங்கு அவர்க்குஆமோ?
இதனைத்‌ தெளிய நினக்குஒருவர்‌
இயம்பக்‌ கேட்டும்‌ உணராயோ? 158

என்ன கருமம்‌ புரிந்தனை? இம்‌
முறையார்‌ இழைப்பர்‌? எவர்களுக்கும்‌
பன்னும்‌ அறிவு விளங்குமுறை
பகரும்‌ தகைமை உனக்குஉளதே!
துன்னு மதியும்‌ மமுங்கினைகொல்‌/
துலங்கா மதியார்க்கு ஒவ்வுசலாம்‌;
இன்ன புரிதல்‌ நின்போல்வார்க்கு
ஒவ்வா ஒவ்வா ஏந்திழையேர 158

மனங்குளிரச்‌ செய்தார்‌
இவ்வா றாக நன்மையொடும்‌
பலநன்‌ மொழிகள்‌ எடுத்துஇயம்பி
வெவ்வாட்‌ கண்கள்‌ ஒஓழுூடும்நீர்‌’
முத்தம்‌ துடைத்து விளம்பிஅவள்‌
ஒவ்வா மதியின்‌ முகம்தடவி
உச்சி மோத்திட்டு உறத்தழுவி
செவ்வே அவள்தன்‌ மனங்குளிரச்‌ செய்து மறித்துஇங்கு இதுசெய்வான்‌: 160

நந்த வனம்பேர்ய்‌ மீதியுள
‘நறுமா மலர்கள்‌ தனைஎடுத்து –
வந்து சிறந்த மாலைகளாய்‌
வகுத்துஅங்கு அதனைக்‌ கொடுசென்றே
சிந்தை கலங்கிக்‌ கொடியவிடங்
கரின்வாய்ச்‌ சக்கி யகப்பட்ட
தந்த மலைஅன்று அழைத்தபிரான்‌
தனக்குச்‌ சமர்ப்பித்து அகம்சார்ந்தான்‌, 161

திருமால்‌ கனவில்‌ கூறுதல்‌
அன்றை இரவில்‌ பெரியாழ்வார்‌
அமுதம்‌ பருகத்‌ இருவணைமேல்‌
சென்று மலர்க்கண்‌ வளர்பொழுதில்‌
. திருமால்‌ அவன்தன்‌ கனவினிடைத்‌
துன்றி யுததி யுடைபுவிமான்‌ நமக்குச்‌ சொலும்பா மாலையொடும்‌
மன்றல்‌ மாலை கயிங்குரியம்‌
வகுப்பான்‌ துளவின்‌ உற்பவித்தே;. 162

உனது மகளாய்‌ வளர்கின்‌.றாள்‌;
உவளும்‌ இந்நாள்‌ உவப்பினொடும்‌
தனது குழற்கண்‌ அணித்துநிழல்‌—ணாடி தனில்‌உணர்ந்து மனது மகிழ்விற்‌ கழித்தருள்பூ மாலை அதனை நீகொணர்ந்து
இனமும்‌ அளித்தாய்‌; அதுநறவம்‌
இகழ்ந்திட்டு அழகும்‌ சிறந்துளதால்‌. 162

அன்ன அழகார்‌ அலங்கலையாம்‌
அணிந்துஆ —
நென்ன லொடுஇன்று அவள்‌அணியா
வெறுமா லையினை நீகொணர்ந்தாய்‌!
இன்ன அலங்கல்‌: நனிநறவ
முடனே எழில்‌என்‌ பதுிறிதும்‌
துன்ன விலை;அங்கு அதனால்‌எம்‌ —
உ.ளமும்‌ உவப்புத்‌ தோன்றிலதால்‌. 164

ஆத லால்பின்‌ னாள்முதலாய்த்‌
தொடுக்கும்‌ அலங்கல்‌ தனைஎல்லாம்‌
தீதி லாநின்‌ திருமகளாய்த்‌
இகழ வளர்அம்‌ . புவிமாதாம்‌
கோதை குழலில்‌ அணிவித்துஆங்கு
அவள்பின்‌ கழித்துக்‌ கொடுக்கஅதை
நீதி உடையோய்‌! கொணர்ந்தளித்தி।
எனஆங்கு அதனை நிகழ்த்தினனால்‌. 165

அத்த கவின்‌அவ்‌ வில்லிபுத்தூர்‌
எனும்மா நகரின்‌ அமர்ந்துறைவோர்‌
சித்த. மகிழ்வை ணவரர்ச்ச
காதி யரசர்‌ முதலனைத்துக்‌
கொத்து தனக்கும்‌ பாலர்முதல்‌
குரவர்‌ ஈறாய்‌ யாவர்கட்கும்‌
குத்தப்‌ கனவில்‌ உணர்வகையாய்ச்‌
சாற்றித்‌ தன்துஆ லயம்சார்ந்தான்‌. 166

களையுற்று இரங்கு நள்ளிருளார்‌
்‌ இரவும்‌ துயிலும்‌ கழிந்துஅகல நினைவுற்று உணர்ந்து காலையின்வாய்‌
நியமம்‌ முடித்துஅங்கு எவர்களும்தம்‌
மனைவிட்டு எழுந்து வீதியின்வாய்‌
-வந்துஅன்று இரவில்‌ உணர்கனவு
தனையுற்று ஒருவர்‌ ஒருவரொடுஞ்‌ சாற்றி மிகஅற்‌ .புதம்‌அடைந்தே;. – 167

பெரியாழ்‌ வார்தன்‌ ம௫ூமையும்‌ஆங்கு
அவர்பெண்‌ கோதை மகத்துவமும்‌
தெரியாது இருந்தோம்‌ இந்தாள்வாய்‌; ்‌
தெரிந்தோம்‌ இன்றுஇங்கு இவர்தமைப்போல்‌
வரியார்‌ அரவின்‌ அணைமிசைகண்‌
வளரும்‌ Boar ரணன்பதங்கட்கு
உரியார்‌ யாவர்‌? என எவரும்‌ .
உவந்து போற்றித்‌ துஇசெய்தார்‌. 168

சூடிவழங்கினாள்‌ ‘சுந்தரக்கோதை
அந்நாள்‌ முதலாய்த்‌ தொடுத்திடும்பூ ்‌ ‘ அணியார்‌ அலங்கல்‌ தனைளஎல்லாம்‌ |
மூந்நாள்‌ தனைப்போல்‌ கோதைகுழல்‌
்‌ முடித்துக்‌ கழித்துக்‌ கொடுப்பஅதைப்‌
பொன்னாம்‌ மடந்தை ஒருபுறத்தும்‌
புவிமாது ஒருபா லினும்பொருந்தப்‌
பன்னா கணையில்‌ துயில்முகுந்தற்கு அணிந்தார்‌. அவரும்‌ பரிவடைந்தார்‌. 170

ஆடிக்‌ களிக்கும்‌ பணஅரவின்‌
அணைமாற்கு அணிபா மாலைதனைப்‌
பாடித்‌ தருமுன்‌ அணிஅலங்கல்‌
அணிந்தஇிட்டு அளித்த பரிசுஅதனால்‌
வாடி.த்‌ துவளும்‌ கொடியிடைசேர்‌
கோதை எனும்‌அம்‌ மடவாட்குச்‌
சூடிக்‌ கொடுத்தாள்‌ எனும்‌ஒருபேர்‌
அதுவும்‌ துலங்கப்‌ பொருந்தியதால்‌, 170

கோதை காதல்‌
(வேறு)
அம்மா. நகரில்‌ பெரியார்‌
மகளாய்‌ வளர்அம்‌ புவிமாது
இம்மா முறையில்‌ புகலும்‌
இருபே ரடனும்‌ வளர்நாள்‌
நம்மால்‌ நவிலற்கு அரிதாம்‌
பரம பத்தி நாளும்‌
விம்மா வரியை யணையும்‌
. பருவம்‌ உடன்மே விடலும்‌; 171

பாராய்‌ வானாய்‌ நரகாய்ப்‌:
பகரும்‌ பலவாம்‌ உயிரின்‌
வேராய்‌ முளையும்‌ வித்தாய்‌
விளைவிப்‌ பவனும்‌ தானாம்‌
நாரா யணனைத்‌ தழுவும்‌
வகையா தெனவே ஒருநாள்‌
சீரார்‌ உள்ளத்‌ தனில்‌அங்கு அவளும்‌ சந்இத்து உணர்வாள்‌. 172

அளகம்‌ தனில்யாம்‌ அணியும்‌
மணிபூந்‌ தொடையாம்‌ அதனைப்‌
புளகம்‌ முடனே அணிசெய்‌ க
அரவத்து அணையிற்‌ பொலியும்‌
களவின்‌ கனிவண்‌ ணனுமர்ச்‌
சாரூ பமதா கையினால்‌
இளகும்‌ மனதோடு அவரைப்‌
புணர்தற்‌ இசையா ததனால்‌; 173

இதனுக்கு இசையும்‌ படியாம்‌
்‌.. என்செய்‌ வோம்‌என்று உணர்கானள்‌
மதனிக்‌ குவில்கொண்டு எறியும்‌
.. மலர்ஐங்‌ கணைவந்து உருவ
விதனத்‌ நுடன்‌உற்‌ றிடும்‌௮அவ்‌
விரகம்‌ பலவும்‌ தனிநெஞ்சு
அதனுக்கு குள்ளே பிறர்கண்டு
அறியாது அடைவுற்‌ றனளால்‌. 174

உபாயம்‌ தேடல்‌
இருமா லினையாம்‌ அணையும்‌
செயல்யார்‌ புரிவார்‌? என;௮ப்‌
பெருமா நகர்வாய்‌ மடவார்‌
அவரிற்‌ பெரியா ராகி
வருகா ரணமும்‌ நிகழ்‌ அவ்‌
வகையும்‌ செலும்கா ரியமும்‌
அருகாய்‌ கண்டுஉற்‌ றவர்போல்‌ அறைவார்‌ தம்மைத்‌ துடரா; 175

அவரோடு இவளும்‌ மகிழ்வாய்‌,
அம்மா நீவிர்‌ .புவிமேல்‌
துவர்வாய்‌ மடவார்‌ உருவாய்த்‌
தோன்றுற்‌ றவர்கள்‌ தம்மில்‌
எவரா யினுமுன்‌ னொருவர்‌
இறைவா யரவிற்‌ றுயிலும்‌
உவரா மியின்வண்‌ ணரினோடு
உறவாய்க்‌ கலந்தார்‌ உண்டோ? 176

உண்டாம்‌ .எனில்‌இங்கு என்னோடு
ஓளியாது உளவா றுங்கண்‌
— அதையும்‌ அலது
காதில்‌ கேள்வி தனையும்‌
வண்டார்‌ குழலீர்‌, பகர்வீர்‌.
எனவே .கோதை மடவாள்‌
தண்டா மரைநேர்‌ வதனம்‌
கவினச்‌ சாற்று தலுமே; 177

திருப்பாவை உதயம்‌
அம்மா! கோதாய்‌!/ கேளென்று
அறியும்‌ கதையாம்‌ எனவே
தம்மா மனம்‌இன்‌ புறவங்கு
அவர்தாம்‌ இதுசாற்‌ றுவரால்‌:
எம்மா உலகும்‌ புகழ்‌ஆய்ப்‌
பாடி எனுமா நகரில்‌
நம்மால்‌ கண்ணன்‌ எனவே
நந்தன்‌ மனையில்‌ வளர்நாள்‌; 178

அனம்‌ஓத்து இளமா நடை-சேர்‌
ஆயக்‌ குலமா மடவார்‌
கனம்‌ஓத்து இருள்‌௮ங்‌ குழலும்‌ கலையும்‌ கலையச்‌ சயிலத்‌
துனம்‌ஓத்து அணிமார்பு இறுகக்‌, ‘
கரமா மலரில்‌ தழுவி
மனம்‌ஓத்து அவரைக்‌ கலவா
மருவிற்று உண்டுஎன்‌ றனரால்‌. 179

கோதையின்‌ ஏக்கம்‌
என்றுஅங்கு அவர்சொன்‌ மொழிவந்து
இருசெஞ்‌ செவியில்‌ குறுக
மன்றல்‌ கமழும்‌: குழலங்‌
கோதை மனது மகிழ்வாய்‌
அன்றங்கு அவர்கள்‌ புரியும்‌
விரதம்‌ என்னோ? அதனால்‌
குன்றம்‌ குடைகோ வலனைக்‌
கூடிச்‌ சேர்ந்தார்‌ கொல்லோ? ்‌ 180

. என்னோ? அதனை இனதுஎன்று
எளிதா நெஞ்சே! உணரேம்‌;
அன்னாள்‌ தனில்‌ஆய்ப்‌ பாடி
அதனுள்‌ பிறவாது ஒழிந்தேம்‌;
பொன்னாள்‌ அணையும்‌ புனிதன்‌
நமைஓர்‌ பொருளாய்‌ நினையா
இந்நாள்‌ தனில்‌ஓர்‌ உருவம்‌
எடுக்கும்‌ தகவுஎய்‌ இடுமோ? | ்‌ 181.

நந்தன்‌ மனையா ஞூடனே-:
நயனம்‌ மகிழ்வுஎய்‌ துறவே
அந்தத்‌ திருவாய்ப்‌ பாடி அதனில்‌ கண்ணன்‌ எனவே
வந்துஅத்‌ திருநா ரணனும்‌ வளரும்‌ அந்நாள்‌ தன்னில்‌
இந்தப்‌ புவி௮ங்கு அவர்தம்‌
இருதாள்‌ மிதிபட்‌ டுளதால்‌. 182

மெருகுற்‌ றுளஅந்‌ நிலமும்‌ மேகம்‌ பொழிகல்‌ மழையால்‌
விருகத்‌ இனமோ டிடையர்‌
மிகவும்‌ தளர்வுற்று அலறப்‌
பரிவுற்‌ றவர்கை விரலிற்‌
படியும்‌ படிகொண்டு அழகாய்‌
தரிபொற்‌ குடைஓத்து ஒளிரும்‌
கோவர்த்‌ தனமா வரையும்‌; 183

மண்ணார்‌ அளகம்‌ குதிகால்‌
மருவப்‌ பெருகி வளர்‌ஆயப்ப்‌
பெண்ணார்‌ அமுதம்‌ அனையார்‌
உடனே காமம்‌ பெருகப்‌
பண்ணார்‌ குழலார்‌ மருவிப்‌
பரிவின்‌ விளையா டிடும்‌அத்‌
தண்ணார்‌ புனலின்‌ மணியார்‌
எமூனா நதஇித்தண்‌ கரையும்‌; 184

மற்றும்‌ விளையாட்‌ ‘ட்வர்செய்‌
வகையால்‌ அமைமற்‌ றதுவும்‌
a. Hong ஒளிரும்‌ அதனால்‌
உளதாம்‌ பலவும்‌ காணப்‌
பெற்றுஅங்கு உறுவா னுளமுள்‌
பெருகும்‌ காதல்‌ வளரா
இற்றைப்‌ பொழுதே’ அடைவேம்‌
எனவே அவளுற்‌ றெழலும்‌; : ்‌ 185

கவசத்‌ தொடுகுண்‌ டலம்நல்‌
தருமங்‌ சுவருங்‌. கருடத்‌
துவசத்‌ தனன்மீது அமையும்‌
– விரகத்து எழுவெந்‌ துயரால்‌
அவசத்‌ துடனே. யுடலம்‌
அயர்வாய்‌ கைகா லவைதன்‌
சுவசப்‌ படலுற்‌ நிலதாய்ச்‌
சோர்வுற்று அவண்தின்‌ றனளால்‌. 186

நின்றாள்‌ நிலமீது அசையா
நிலைபெற்‌ – நிடும்‌ஓ வியமாய்‌
தன்றாள்‌ தரைபா .வாமற்‌
; றளர்வா யசைவுற்‌ றுளமுள்‌
துன்றா விதனம்‌ துன்றக்‌
கனலில்‌ துவள்பூங்‌ கொடிபோல்‌
குன்றா உடலம்‌ குன்றக்‌ குறியா இவைஉன்‌ னுவளால்‌. 187

**இனி, அவன்‌
உலாவிப்‌ போன அடிச்சுவடும்‌, அவனும்‌ பெண்களுமாகத்‌ திளைத்த யமுதையும்‌,
“அவன்‌ எடுத்த கோவர்த்தனமும்‌ கிடைத்ததாகில்‌, அவற்றைக்‌ கண்டாலும்‌ ‘தரிப்போம்‌ என்று பார்க்க” என்ற திருப்பாவை வியாக்கியான அவதாரிகை

கோதை நினைவு
கனகம்‌ மணியால்‌ அமையும்‌
கனமார்‌ மதில்கசுழ்‌ மிதிலைச்‌
சனகன்‌ மடமா மகளாம்‌
சனிப்‌ பெயர்சேர்‌ திருவும்‌
பனகம்‌ துயில்விட்டு அணிரா
கவனாய்ப்‌ படியில்‌ வரும்‌௮வ்‌
:- அனகன்‌ தனைக்கண்‌ டமையா
விரகம்‌ அதுகொண் டனளால்‌. 188

தனதத்‌ தனுரைப்‌ படிபோற்‌ சயிலத்‌ தினைஒத்து ஒளிரும்‌ கனவில்‌ தனையம்‌ புயம்நேர்‌
கைக்கொண் டணிதோள்‌ வலியால்‌
குனிவிடுத்‌ திடுபின்‌ பவரைக்‌
கூடுஞ்‌ செயலுண்‌ டெனவே
– மனதில்‌ துணிவாய்‌ தயிர்யம்‌
வைத்தங்கு உற்றா என்றே. 189

பொன்னைத்‌ தழுவும்‌ புனீதன்‌
புவியில்‌ கண்ணன்‌ எனவே
முன்னைப்‌ பகலின்‌ வருநாள்‌
காணா விரகம்‌ முடுகும்‌ பின்னைப்‌ பெயர்கொண்‌ .டிடும்‌௮ப்‌
பிராட்டி தனையே மிடபம்‌’:
தன்னைத்‌ தழுவி அடக்கித்‌ தழுவும்‌ திறம்‌உற்‌ றனளால்‌. ட… 190

உள்ளஞ்‌ சோர்ந்தாள்‌
நாம்என்‌ வலிமை அதனால்‌
நணுகுற்‌ நிடவே கொடிய
“காமன்‌ புரியும்‌ விரகம்‌
களைவோம்‌? எனவே மனதுள்‌
காமம்‌ துடர்வா ரவர்போல்‌
.உரையாது அதனை அடையாத்‌
தாமம்‌ கமழும்‌ குழலாள்‌
தளர்வாய்‌ உள்ளஞ்‌ சோர்ந்தாள்‌: 191

சோர்வுஉற்‌் றிடும்‌௮அங்கு அவள்தன்‌
மனதுள்‌ துடர்பைக்‌ குறியால்‌
தேர்வுஉற்று உணரா இவரில்‌
பலவும்‌ தெரியும்‌ பெரியாள்‌
நீர்வற்று இளமைப்‌ பயிரில்‌
நிறைகார்‌ பொழிகின்‌ றதுபோல்‌
ஆர்வத்‌ துடன்‌இம்‌ மொழியை அவள்தே நிடஅங்கு அறைவாள்‌: 192

ராஜன்‌ திருமகளைப்‌ போல வில்‌” என்று ஒரு அவதி பெறுதல்‌; நப்பின்னைப்‌
பிராட்டியைப்‌ போலே ‘ரிஷபங்கள்‌” என்ற ஒரு அவதி பெறுதல்‌ செய்யப்பெறாமை
யாலே மிகவும்‌ தளர்ந்து” என்ற திருப்பாவையின்‌ அ௮வதாரிகை

(வேறு)
முன்னர்நாள்‌ தன்னில்‌ கோவியர்‌ பலரும்‌
முயன்றுள விரதமும்‌ அதனைத்‌
” துன்னுமாறு இழைக்க விடுத்தகா ரணமும்‌
சூழ்ந்ததற்கு அவர்கள்செய்‌ உபாயம்‌
தன்னையும்‌ இவ்வாறு. எனத்தெளி வுறஅச்‌
சரிதங்கள்‌ நடந்துள படியே
பன்னுவன்‌ அதனைச்‌ செண்பகக்‌ கோதாய்‌/
பரிவொடுங்‌ கேட்டுஉளம்‌ உணர்வாய்‌. 193

கோவியர்‌ காதல்‌ நோன்பு
விரிகடல்‌ உடையாய்‌ அணியும்‌அம்‌ புவியாம்‌
மின்‌அனாள்‌ பரம்தொலைத்‌ தஇிடுவான்‌
.வரிஅர வணையில்‌ துயிலும்நா ரணனும்‌
கண்ணனாய்‌ வளரும்‌அந்‌ நாள்வாய்‌
பரிவொடும்‌ அவன்தன்‌ விரியுரம்‌ அதனைப்‌
பாடிவாழ்‌ கோவியர்‌ பலரும்‌
சரிகரம்‌ அதனால்‌ இறுகுற முலையில்‌
தழுவியே அனுபவித்‌ திருந்தார்‌. 194

விரி உரம்‌ – விரித்த மார்பு.
சரிசுரம்‌ – வளையல்‌ அணிந்த கை. “அங்கைச்‌ சரிவளையும்‌ நாணும்‌” என்பர்‌ பெரி
யாழ்வார்‌.

கமுதுயர்‌ முலைகொள்‌ விடமுடன்‌ அருந்தும்‌
கண்ணனைத்‌ தம்துமா மடவார்‌
தழுவுமாறு அவர்தாம்‌ நடந்துள குறிப்பின்‌
சாயலால்‌ உணர்ந்தகோ பாலர்‌
இழுதுஎன உருகா .இவர்புரி வதுதநம்‌
குலம்தனக்கு ஓக்குமாறு அலதாம்‌
பழுதுறும்‌ பிறர்தாம்‌ உணர்ந்துிடில்‌ எனவே
்‌ பதைபதைத்து உளமுற நினைந்தார்‌. 195

அவ்ர்கள்‌ என்கொல்யாம்‌ இதற்கும்‌
நிரப்புவது எனஒரு விதமாய்‌
அனையமா மடவார்‌. தமையெலாம்‌ அங்கங்கு
அவரவர்‌ அணுகும்‌ஓர்‌ பகலில்‌
தினையளவு உறும்‌௮ப்‌ பொழுதெனும்‌ பிறர்பால்‌
செல்லொணா வகையதாய்த்‌ தத்தம்‌
மனையிடைப்‌ பதன மாக்கஅ௮க்‌ கண்ணன்‌
மருவுறா வகையின்வைத்‌ தனரால்‌. ” 196

வைத்தபோது அந்த மடந்தையர்‌ காமம்‌
மருவுறு பருவநாண்‌ முதலாய்ச்‌
சித்தசன்‌ கணையுள்‌ ளஎகப்படா வண்ணம்‌
சேர்ந்துதம்‌ கொவ்வைவா யமுதம்‌
நித்தமும்‌ அருந்துங்‌ கண்ணனை அந்நாள்‌
‘நெருங்குறா வகையில்தம்‌ உள்ளம்‌ * –
பித்தரின்‌ மயங்கிப்‌ புரிகல்தோன்‌ மல்‌ பெருந்துயர்க்‌ கடல்‌உழந்‌ தனரால்‌. — 197

எண்ணரும்‌’ துயர்கொண் டிடுமட வார்்‌அ௮ம்‌
எழிலிபோல்‌ நிறக்கண்ண னஸார்தம்‌.
வண்ணமா முகமண்‌ டலத்தின தழகும்‌
மங்கலக்‌ குணஅதி சயமும்‌
பண்ணமை குழல்சேர்‌ பவளவாய்‌ ஒளியும்‌
பாங்குடன்‌ உற்றனு பவித்துக்‌
கண்ணினால்‌ காண்பது என்றுகொல்‌ எனவே
கருத்துற நினையும்‌ அக்காலை; 198

ஆங்குஅவர்‌ பலரும்‌ ஒருதினம்‌ பிறர்தாம்‌
அறிவுறாது ஓர்‌இடத்து அணுகி
ஈங்குஇதற்கு யாம்‌என்‌ செய்திட லாம்‌என்று
எண்ணுறும்‌ தத்தம துணர்வைப்‌
பாங்குற ஒருவர்‌ ஒருவரொடு உரைத்து
வினவும்‌அப்‌ பரிசுஉணர்தந்‌ தவரில்‌
தீங்கிலாள்‌ ஒருத்தி மற்றவர்‌ தமக்குத்‌ தெரியவோர்‌ உபாயம்செப்‌ புவளால்‌: 199

கொம்மைமா முலையீர்‌। சகடுஇற உதைத்துச்‌
குன்‌. றினால்‌: கல்மழை தடுத்து
வெம்மைசேர்‌ பாந்தள்‌ பணமிசை நடித்து
வெவ்விடப்‌ பேய்முலை அருந்தி
நம்மைஆ ஞடைய தகைமையிற்‌ பெருகும்‌
நந்தகோ பன்இரு மகனை
மும்மையாம்‌ உலகும்‌ ஈன்றுகாத்‌ தழிக்கும்‌
மூவர்க்கும்‌ முதல்வனே. எனலாம்‌. 200

ஆதலால்‌ அவனால்‌ அமைகலாக்‌ கருமம்‌ —
யாதொன்றும்‌ இலை;அவன்‌ அருளால்‌
பூதலம்‌ அதன்மேல்‌ சிலபகல்‌ வானம்‌
பொழிகிலாது அமையுமாறு உஞற்றில்‌
சீதளம்‌ அடங்கி வெம்மைமேல்‌ எழுந்து
செழிப்பெலாம்‌ தீய்ந்தழிந்து ஒடுங்கும்‌;
போதவா ஸிரைநொந்‌ தருந்துநீ ரொடுமேய்‌
புல்லுமற்‌ றல்லல்‌எய்‌ துறுமால்‌. 201

அத்தகவு அமையின்‌ இத்திரு நகரத்து
அணுகுறும்‌ தலைவர்கள்‌ பலரும்‌
சித்தம்நொந்‌ தவராய்‌ நமதுஇடத்து அணுத்‌ திருந்துநல்‌ லுரைபல புகன்று கத்தினம்‌ செழியு மாறுவான்‌ பொழியக்‌
கவின்பெறு வருணநோன்பு அதனை
ஒத்துஇழைத்‌ திடுமின்‌ எனஉரைத்‌ திடுவார்‌
அதற்குநாம்‌ ஓத்துளோம்‌; ஆனால்‌, . 202

“அனையமா, விரதம்‌ வழுவுறாது உளுற்றல்‌
அன்றுஇளங்‌ கன்றினைச்‌ சுழற்றி
நனைவிளா எறிந்த கண்ணனை அலது
நடந்திடாது ஆதலி னாலே
இனையவ ரொடுசென்‌ றனையகா ரியம்நீ
முடித்திட வேண்டும்‌என்று அன்னான்‌
தனையவர்‌ (வேண்டி நல்லுரை புகன்று : தம்முடன்‌ சார்கென விடுப்பார்‌. .203

விடுத்திடில்‌ அவனோடு அடைந்துஉரை செயும்‌அவ்‌
விரதமும்‌ வழுவுறாது இயற்றித்‌ தொடுத்தஎண்‌ -ணமும்நாம்‌ முடிக்கலாம்‌ எனஅத்‌
தோகையாள்‌ உரைத்தல்கேட்டு அதனுக்கு
அடுத்ததன்‌ மையைநீ உரைத்தனை எனஆங்கு
அனைவரும்‌ அவள்தனைப்‌ புகழா
எடுத்தபே ௬வகைக்‌ கடல்படிந்‌ தவராய்‌
இன்னதே முடித்தும்‌என்று இசைந்தே; 204

அனநடை மடவார்‌ அனைவரும்‌ ஒருமித்து
அலர்க்கரம்‌ குவித்துநீர்‌ அருந்துங்‌
கனநிற வணம்சேர்‌ கண்ண[இந்‌ நாட்டில்‌
கலந்துகார்‌ மழைபொழிந்‌ இடுது;
நினதுபே ரருளால்‌ சில்பகல்‌ பொழியாது ஒழித்திட நீசெய்க! என்றே மனதுற நினைந்து துதிசெய்து தத்தம்‌ மனைதனிற்‌ கலந்துஉறைந்‌ திருந்தார்‌. . 205

கண்ணனும்‌ அருளார்‌ இதயமா மலருள்‌
கனதனக்‌ கொடியிடைத்‌ துவர்வாய்‌
பண்ணமை இளஞ்சொற்‌ கிளிஅன மடவார்‌
பரிவொடும்‌ தனதுதாள்‌ மலரை
எண்ணிவேண்‌ டுறும்‌௮வ்‌ வாறுஉணர்ந்‌ தருளி
இனிதொடும்‌ ஆங்குஅவர்‌ குறித்த
வண்ணம்‌அந்‌ நாட்டில்‌ சலபகல்‌ வானம்‌ ்‌
வழங்கிடா வகைபுரிந்‌ தனனால்‌, 206

மழையிலாது ஒழியப்‌ பெருகும்‌௮க்‌ குளங்கள்‌
மருவுநீர்‌ சுவறியே பசும்புல்‌
கதுழைவிலாது எரிந்து. விடுதலால்‌ நிரைகள்‌
தயங்கட இவ்வகை யுறும்‌அப்‌
பிழைஎனோ எனத்தம்‌ முள்ளம்‌ ஊடு எழுந்து
பெருகுறுந்‌ துயர்‌ அடைந்‌ தவராய்‌
குழையுறு செவிநந்‌ தனேமுத லாகும்‌ , கோவலர்‌ பலர்களும்‌ குறித்தே; 207

குறைவிலாது எவர்க்கும்‌ நிறையமா தானம்‌
கொடுத்தும்வான்‌ பொழிகிலாது ஆக
மறையவர்‌ இணை௮ம்‌ . புயமல ரடியை
“வணங்கியே பின்னரும்‌ .அவர்‌இம்‌
முறைமழை யிலதாய்‌ ஒழிந்ததுஎன்‌? இதற்குயாம்‌
முயல்வதுஎன்‌? ,மொழிகுமின்‌ எனவாங்கு
அறைதலும்‌ அதனைக்‌ கேட்டுறும்‌ அவர்கள்‌
அரியநூல்‌ முறைஎடுத்து அறைவார்‌. 208

சேட்டுறு மதிநேர்‌ திருமுகம்‌ உடையீர்‌
இனகரன்‌ .முதலிய ஒன்பான்‌
கோள்தவ றுதலால்‌ வக்கிரித்‌ இடலால்‌
குவலயம்‌ அதன்மிசைக்‌ குறியின்‌
நாட்டிடை வானம்‌ பொழிந்திடாது எவரும்‌
நலம்பெற மழைபொழி வதனுக்கு
ஈட்டுறும்‌ முறையும்‌ இயம்புதும்‌ கேண்மின்‌
என்னமீண்டு இவைஎடுத்து இசைப்பார்‌; 209

வாட்டொழில்‌ நெடுங்கண்‌ மடந்தையர்‌ எனஇம்‌
மாநகர்‌ மருவுவோர்‌ பலரும்‌ ்‌
கூட்டமுற்று எமுனா நதிக்கரை அருகில்‌
வருணனைக்‌ குறித்துஒரு விரதம்‌ சூட்டுறு மலரின்‌ அருச்சனை முதலாம்‌
சோடச உபசரிப்‌ புடனே
நாட்டிய முறையின்‌ வழுவுறாது இழைக்கில்‌
நல்லன மழைபொழிந்‌ திடுமால்‌. 210

அவ்விர தத்த உளஞற்றிடாது ஒழியில்‌ அகல்விசும்‌ படைந்துகார்‌ முகில்கள்‌
எவ்விதத்‌ தேனும்‌ ஓர்துளி வழங்காது
ஆயிடும்‌; இழைக்கும்‌ஆங்கு அதனுக்கு
ஓவ்வுறும்‌ உபசா ரம்புரி குதலில்‌
ஒன்றெனும்‌ வழுவுதல்‌ உறினோ
இவ்வுலகத்தின்‌ மழைத்துளி என்பது
இலாமையாய்‌ முடிந்திடும்‌; இன்னும்‌, 211

ததியுறு மணலுள்‌ பெருகுநீர்‌ அதுவும்‌ நண்ணுறாது ஒழிவதும்‌ அல்லால்‌
பதியுறு கணற்றுள்‌ உறும்சிறு புனலும்‌ பலித்திடா; அழல்கொளும்‌; அதனால்‌
சதிர்பெறும்‌ அந்நோன்‌ பினுக்கு௨று பொருள்கள்‌
தருவித்துப்‌ பராமரித்‌ இடற்கு மதியுறும்‌ சர்வக்‌ கியர்‌இருந்து அதில்‌ஓர்‌
வழுவுறாது இயற்றவேண்‌ டிடுமால்‌. 212

ஆதலால்‌ இவ்வாறு இழைமின்‌என்று அவர்கள்‌
அறைதலும்‌ ஆயர்கள்‌ பலரும்‌
ஓதும்‌௮வ்‌ வாறே புரிகுதும்‌ எனஉள்‌
உவப்பொடும்‌ விரைவினோடு எழுந்து
தீதிலா எமுனைக்‌ கரையின்‌ஒர்‌ சாலை
செய்வித்துஅங்கு அகனிடைத்‌ தமது
மாதர்க ளானோர்‌ தமையெலாம்‌ நீர்போய்‌
மருவுமீன்‌ எனவகுத்‌ துரைத்தார்‌. 213

அவ்வகை அவர்போய்‌ அடைந்தபின்பு அவர்கள்‌
அவ்விர தந்தனை வழுவாது
ஒவ்வுறப்‌ புரிவிப்‌ பவர்கள்யா ரெனஆங்கு ட
ஒருவரை யொருவர்கள்‌ வினவி .
எவ்வகை யவற்கு மொவ்வொரு செயலால்‌
இயைவுறா தெனவுநம்‌ மிறையாஞ்‌
செவ்விசேர்‌ நந்த குமரனால்‌ முடியும்‌
என்னவும்‌ சிந்தைசெய்‌ தவராய்‌; 214

‘கண்ணனை வருவித்து அந்தணர்‌. புகன்ற
. காரணம்‌ பலவும்‌ஓர்ந்‌ தனையால்‌
பண்ணுறு .மொழிநம்‌ பாவையர்‌ பலரும்‌
பரிவொடு புரியும்நோன்பு அதனுக்கு
எண்ணரும்‌ பொருள்கள்‌ யாவையும்‌ வருவித்து
ஈந்துஒரு முறையினும்‌- வழுவா
வண்ணம்நீ நிறைவேற்று; ஆங்குஅடைந்து எனஉள்‌”
மகிழ்வொடும்‌ வகுத்துஉரைத்‌ தனரால்‌. 215

அம்மொழி பலவும்‌ இருசெவி உறவந்து
அணுகலும்‌ ஆங்குஇடங்‌ கொள்ளா
விம்முறும்‌ உவகைக்‌ கடலைஓர்‌ கரைசெய்‌
விதம்பெற அகத்தினுள்‌ அடக்கி
இம்மொழி களைஇங்கு என்னொடு நீவிர்‌
இசைத்தது நன்றுநன்று எனவே செம்மனம்‌ அதனில்‌ சனம்கொளும்‌ அவர்போல்‌
சிலமொழி தெரித்திடல்‌ ஆனான்‌. 216

முன்னர்நாள்‌ தனில்‌ஒர்‌ களங்கமாம்‌ அதனை
மொழிதந்திடற்கு இடமிலா உமது
கன்னிய ரொடுயான்‌ கலந்துபே Au gave
பழியுரை கழறியும்‌ மனைவாய்‌
அன்னமா மடவார்‌ தமைநில வறையுள்‌
அடைத்துவைத்‌ திருந்துவந்து இத்நாள்‌ இன்னமா மொழிகள்‌ இயம்பினீர்‌ இதனுக்கு
இயைகிலன்‌ எனஎழுந்து அகன்றான்‌. 217

அகன்நிடு பொழுதுஅவ்‌ வாயர்கள்‌ பலரும்‌
அருந்ததி நிகர்‌அசோ தையின்சர்‌
மகன்தனை விரைவில்‌ பின்துடர்ந்து ஓடி
வழிமறித்து அறிவிலாது அத்நாள்‌ புகன்றுள எமது கொடியமா வசையாம்‌
பொய்மொழி யானவை பலவும்‌
மிகுந்திடும்‌ புகழோய்‌ உளந்தனில்‌ பொறுத்தல்‌
வேண்டும்‌என்று உபசரித்‌ தவராய்‌; 218

அய்ய[ என்பவரும்‌; அத்த! என்பவரும்‌;
அருந்தெய்வ மே([எனும்‌ அவரும்‌;
துய்யபங்‌ கயத்தா எளினைவரு டுவரும்‌;
துணைக்கர மலர்பிடிப்‌ பவரும்‌;
. செய்யமோக்‌. கட்டை தனைப்பிடிப்‌ பவரும்‌;
செழுங்கரம்‌ குவித்துவேண்‌ டுவரும்‌;
வையமீது எதிர்வீழ்‌ பவரும்‌ஆ யினர்‌அவ்‌
வகைஎடுத்து உரைக்குமாறு இலதால்‌: 219

இத்தகை பலவாய்‌ வருந்திஆங்கு அவர்கள்‌:
யாவரும்‌ அந்தணர்‌ உரைத்த : ்‌
அத்தகை விரதம்‌ தனைவழு வாமல்‌ .i
அமைத்திட வேண்டும்நீ எனவே ்‌
சத்தமது இரங்கி உரைத்தல்கேட்‌ டரூளிச்‌
‘சிறுநகை நிலவுஎழ அதனுக்கு ஓத்துஉளம்‌ மகிழ்வாய்‌ எமுனையின்‌ கரைபோய்‌
உற்றனன்‌ புற்றுஅரா அணையான்‌. ்‌ 220

ஆங்குஅடைந்து அந்நோன்பு அதற்குவேண்‌ டுவதாம்‌ அரும்பொருள்‌ குறைவிலாது யாவும்‌
பாங்குற வருவித்து அவர்களால்‌ இயற்றும்‌
பரிசெலாம்‌ முறைவழு விலதாய்‌
தேங்குழல்‌ மடவார்‌ செங்கரம்‌ அதனில்‌
திருந்து றப்‌ புரிமுறை கதிரோன்‌ வீங்குநீர்‌ மேல்பாற்‌ கடலிடை மருவி
வீழுறும்‌ அளவும்‌ஆங்கு இயற்றி;–221

நள்ளிருள்‌ அடையும்‌ காலையில்‌ எழுந்துஅந்‌
நதிக்கரை இசையுநல்‌ லிடத்துஅக்‌
கள்ளவிழ்‌ மலர்ப்பூங்‌ குழலினர்‌ பலர்க்கும்‌
ஒவ்வொரு கணவனாய்‌ அவரோடு
உள்ளம்‌ஓத்து அணையா அவர்கள்வா ‘ யிதழ்த்தேன்‌
உண்டுஉழன்று: அழுந்திய காம
வெள்ளம்நீத்து அர்த்த ராவினில்‌ தத்தம்‌
வீடுஅணைந்து உண்டுஉறங்‌ குவரால்‌. 222

மற்றநாண்‌ முதல்‌அவ்‌ வாறதாய்‌ நந்தன்‌
மகனொடும்‌ பாடியின்‌ மருவும்‌
பொற்றொடி மகளிர்‌ பலரும்‌ஆங்கு ஒருவர்‌
ஒருவரை புரிதுயில்‌ உணர்த்தி
நற்றுரை யமுனா நதிக்கரை அணு
‘நலம்புரி நோன்டையும்‌ நடத்தி
உற்றமை காமக்‌ களிநற வருந்தி
யூர்புகுந்து அணிமனை உறைவார்‌. 223

. இந்தநன்‌ முறையே பலதினம்‌ அவர்கள்‌
இனி9தொாடும்‌ கண்ணனை அணைந்தார்‌;
அந்தநன்‌ னாட்டின்‌ வானமும்‌. பொழிந்திட்டு
ஆனினங்‌ களும்செழித்‌ துளதால்‌;
முந்துநாள்‌ நடந்த செயல்கள்‌இம்‌ முறையாம்‌;
முழுமதி நிகர்முகக்‌ கோதாய்‌[
சிந்தையூடு உணர்து என்னஅ௮ம்‌ மடவாள்‌ தெரிதரப்‌ புகன்றனள்‌ மாதோ. : . 224

பாவை நோன்பு
(வேறு)
கேட்டவம்‌ மயிலின்‌ சாயல்‌
கஇளிமொழி மடவாள்‌ தானும்‌
வாட்டமுற்று உளத்தி னூடு மகிழ்சிறந்‌ தோங்க அவ்வா
.மீட்டுதும்‌ யாமும்‌ என்றாங்கு
அவள்்‌இணை அடிகள்‌ ஏத்தி
வீட்டகம்‌ தன்னில்‌ சென்றோர்‌ தி
வினையமது இழைக்க லுற்றாள்‌. 225

ந்ண்ணுசர்‌ புதுவை என்னும்‌
நகரம்‌ஆய்ப்‌ பாடி யாயும்‌
வண்ணமா மணிகள்‌ ஆர்ந்த
வடபெருங்‌ கோயில்‌ தானே
விண்ணவர்‌ புகழும்‌ நந்தன்‌ \
வீடதாய்க்‌ கோவி லின்மால்‌
கண்ணனாம்‌ எனவும்‌ தன்சீர்‌ கருத்துளே திருத்தி; பின்னும்‌, 226

ஸ்ரீ வில்லிபுத்தாரே ஆயர்பாடியாகவும்‌, அங்குள்ள பெண்களே
இடைப்‌ பெண்களாசவும்‌, தானும்‌ அவர்களில்‌ ஒருத்தியாகவும்‌, வடபெருவ்‌
கோவிலே ஸ்ரீ நந்தர்கோன்‌ தஇிருமாளிகையாகவும்‌, உள்ளே நிற்ன்றவன்‌
இருஷ்ணனாகவும்‌ அனுசந்தித்து’* என்ற திருப்பாவை வியாக்கியானம்‌

*சீர்‌ புதுவை ஆயர்பாடியாகவும்‌, வடபெருங்கோவில்‌ நந்தன்‌ வீடாகவும்‌, அக்‌
கோவில்‌ மால்‌ சண்ணன்‌ ஆகவும்‌, தோழப்‌ பூவையர்‌ கோபாலர்‌ மகளிராகவும்‌,
தான்‌ அவர்களில்‌ ஒருத்தியாகவும்‌ பாவித்து, அம்‌ மடந்தையர்களை எழுப்புவ
தாகவும்‌ கருஇத்‌ இருப்பாவையைத்‌ திருவாய்மலர்ந்தருளினார்‌”-.. **அண்டர்‌
இருவாய்ப்பாடியாய்‌’” என்று தொடங்கும்‌ ஆண்டாள்‌ பிள்ளைத்தமிழ்‌

புனைமலர்க்‌ குழல்சேர்‌ தோழப்‌
பூவையர்‌ புகழ்கோ பாலர்‌
மனைவிய ராயும்‌ அம்மா
மடந்தையர்‌ தங்கட்‌ குள்ளாய்‌
தனைநிகர்‌ தான்‌௮ லாதாள்‌
தானும்‌ஓர்‌ மடந்தை யாயும்‌
இனையவாம்‌ தன்மை யாக
நியமித்துஇங்கு இனிதி னோடும்‌; 227

அப்பெரு மடவார்‌ தம்மை
அருந்துயில்‌ உணர்த்தல்‌ போலும்‌
செப்பரு வருண நோன்பு
செய்தபா வனைய தாயும்‌
இப்புவி தணிய வானம்‌
வழங்கிய தெனவும்‌ பாவை
முப்பது கவிதைத்‌ தந்தேன்‌ தமிழினால்‌ மொழிந்தா என்றே, 228

ஏழிரு புவனத்‌ துள்ளும்‌ இணையில்செந்‌ தமிழின்‌ பாவை
வாழிய உரைத்தும்‌ அண்டம்‌
அனைத்தையும்‌ வயிற்றுள்‌ வைத்து
ஊழிகள்‌ பற்பல்‌ கோடி
உலப்பிலாது உறங்கும்‌ செங்கேழ்‌
ஆழிமா யவனும்‌ இன்புற்று அணுகிடா முறைமை தன்னால்‌; 229

நாச்சியார்‌ திருமொழி நவின்றது
சித்தசன்‌ தன்னை யன்னாள்‌ இருந்துறப்‌ போற்றி செய்து பைத்தலைப்‌ பணியின்‌ வாழும்‌
பரமனை யடியேன்‌ தன்னோ
டொத்துவாழ்ந்‌ திடுமா றாக
வுனதுகைக்‌ கருப்பு வில்லில்‌
வைத்தபூங்‌ கணையே வென்னா
வழங்கெள்‌ கவீதை மாதோ, ‘ 230

“வித்தக வேங்கடவாணன்‌ விளக்கினிற்‌ புக என்னை விதிக்கித்‌ நியே’* என்ற நாச்சியார்‌ மொழியை நோக்குக (பதிகம்‌ — தையொருஇங்களும்‌).
வேதாந்த தே௫கர்‌ சங்கற்ப சூர்யோதயத்தின்‌ தொடச்சகத்‌இல்‌, “quant dada
ஜீவாத்மா என்ற அம்பைத்‌ தொடுத்துத்‌ திருமால்‌ என்கின்ற குறிபார்த்து ஒருவன்‌
வில்லாளியின்‌ நிலையில்‌ இருந்து எய்தால்‌ அந்த ஜீவன்‌ அவன்‌ இருமார்பில்‌
கெளவுத்துவம்‌ போல்‌ விளங்குவான்‌”’ என்றது அனுசத்திக்க வேண்டும்‌. இதுவே
தையொருஇங்களின்‌ உள்ளுறை.

ஆங்கணவ்‌ வாற தாக
அனங்களை வேண்‌ டலாகப்‌
பாங்குறு கவிகள்‌ தம்மைப்‌
பாடலு மதனைக்‌ கேளாப்‌ பூங்கழல்‌ திருமால்‌ தானும்‌
புவீமிசை விரைவின்‌ வந்தே
தேங்கமழ்‌ குழலி னாட்குச்‌
சேவைதந்து அருளி னானால்‌, 231

அன்னமால்‌ அடைந்து சேவை
அளித்தலும்‌ ௮ன்னம்‌ அன்னாள்‌
இன்னதோ ரளவு மிங்ங
ணெய்திடா திருந்த செய்கை
என்னவென்‌ றநுரைத்துச்‌ சிந்தை
யிடையுறு வெகுளி பொங்கப்‌
பின்னரொன்‌ றுரையா தூடற்‌
பிணக்குறு செய்கை யாளாய்‌; 232

வீழிவாய்க்‌ குவளைப்‌ பூங்கண்‌
விற்பிறை புருவ நெற்றித்‌ தோழிய ர௬டனே இற்றில்‌
தொகுத்தவ ளஞூறைத லோடும்‌
தாழியாம்‌ அதற்கும்‌ வீடு தந்தகோ விந்தன்‌ என்னும்‌
ஆழியான்‌ அதனைக்‌ தாள்கொண்டு
அழிவுறச்‌ சதைத்தா னன்றே, 233

மற்றும்‌௮அச்‌ செய்கை தேறா
மயிலியற்‌ குயிலின்‌ மென்சொற்‌
பொற்றொடி மடவாள்‌ தான்‌அப்‌
புண்ணியன்‌ வதனம்‌ நோக்கி உற்றுயாம்‌ வருத்தம்‌ தோன்ற
உகப்பொடு உஞற்றும்‌ இந்தச்‌.
சிற்றிலைச்‌ சதையேல்‌ என்னச்‌
செய்யவாய்‌ மலர்ந்து சொன்னாள்‌. 234

கன்னியர்‌ தமக்கெ லாம்‌ர்‌ ‘
கண்மணி துவர்வாய்‌ விண்டு
சொன்னசொற்்‌ புணர்ச்சி யாகத்‌
தூயமா மனத்துட்‌ கொண்டு
தன்னுரு தெரிந்தி டாதுஓர்‌ “சார்பதாய்‌ மறைந்து போனான்‌. .
அன்னமாய்‌ அயனுக்கு அந்நாள்‌
அருமறை புகன்ற மாயோன்‌. ~ 235

மாயவன்‌ இருகண்‌ காணா.
தோர்முறை மாய மாகப்‌
போயகன்‌ றிடலு’ மந்தப்‌
பூங்குழற்‌ கோதை யாளும்‌
சேயரிக்‌ கண்க ளோடு
சிந்துநீர்‌ முத்தம்‌ பொங்கத்‌
– தூயநல்‌ லுளமுட்‌ கொண்ட
துயரமும்‌ அடைந்தா ளாகி; 236

பாங்கியர்‌ எனும்‌அம்‌ மாதர்‌
பலர்களும்‌ உடன்சென்று எய்த
ஆங்கொரு பொய்கை தன்னை அணுகிஆங்கு அதனிற்‌ பூத்ததேங்கமழ்‌ முளரி யோடும்‌
செங்கழு நீர்ப்பூக்‌ கொய்தே
நீங்கரும்‌ உவகை தோன்ற —
நீர்விளை யாடும்‌ எல்லை; 237

மருந்துண வமரர்க்கு அந்நாள்‌
வழங்கிநல்‌ விதுரன்‌ இல்வாய்‌
விருந்துண வமைந்த மாயோன்‌
மிளிர்தடக்‌ கரையின்‌ மீது௮க்‌
கருந்தடங்‌ கண்ணார்‌ வைத்த
கலையெலாம்‌ கைக்கொண்‌ டேர்‌
குந்தமீ தேறித்‌ தோள்கள்‌
குலுங்குற நகைகொண் டானால்‌,. ~ 238

குலுங்குற நகைசெய்‌ வோனைக்‌
கோதையாள்‌ நயந்து நோக்கி
இலங்கிழை மடவா ரெல்லாம்‌
என்சொலார்‌? நகைத்துஏ சாரோ?
துலங்குற யாமுன்‌ வைத்த தூசெலாம்‌ அளித்தி என்னா
நலங்கெழு கவிதை யாக
நவின்றனள்‌ என்ப மன்னோ. 239

தலைமிசை கரங்க ளோடு
தன்னைவேண்‌ டிடுத லாய்‌அம்‌
மூலைமலைக்‌ கொடியின்‌ அன்னாள்‌
மொழிந்திடும்‌ கவிகள்‌ கேளா விலையிதென்று யாவ ராலும்‌
விளம்புதற்கு அரிதாம்‌ பாட்டில்‌
“கலையெலாம்‌ அளித்து மீளக்‌
கண்ணனும்‌ அகன்று போனான்‌. 240

சூடிய மாலை தன்னைத்‌
துளவமாற்‌ களித்தாள்‌ பின்னும்‌
வாடிய மனதோ டெந்நாள்‌
வருவரோ வவர்தா மென்னாக்‌
கூடலாங்‌ கிழைத்திட்‌ டேயக்‌
கொள்கையைக்‌ கவிக்‌ ளாகப்‌
பாடினாள்‌ பாடி யும்‌ஆய்ப்‌
பாடியான்‌ வராமை தன்னால்‌; 241

மயில்‌இயல்‌ கிளியின்‌ இன்சொல்‌
மடவன நடைபோர்‌ வேலும்‌
அயில்விழித்‌ தடங்கண்‌ கோதை
யாள்‌அர வணையின்‌ மீது
துயிலமை நறவப்‌ பைந்தேன்‌
துளவமால்‌ அணுகு மாறாய்க்‌
குயிலினைக்‌ கூவு கென்னக்‌
கவிகளும்‌ கூறி னாளால்‌. 242

கோதையார்‌ கனா
இக்குநேர்‌ கவிதை பாடி
இரங்குதல்‌ உணர்ந்தி ராவில்‌
புக்கவன்‌ கனவின்‌ மேற்றான்‌
புரிவது வையினிற்‌ செய்யும்‌அக்குறி யனைத்தும்‌ காண்பித்‌ .
தகன்றனன்‌ அன்பா லன்பு
மிக்கவ ரளத்தும்‌ வேதச்‌
சரத்தினும்‌ விளங்குந்‌ தாளான்‌.243

மத்தளங்‌ கொட்ட
கனவுறும்‌ இரவில்‌ கண்ட
கடிமணக்‌ கோலம்‌ யாவும்‌
மனதுற உணர்ந்த வாற்றை
மருங்குறும்‌ உயிரொப்‌ பாகும்‌
தனதுபாங்‌ கியர்க ளோடும்‌
சாற்றிய வாறு தன்னை
– அனநடைக்‌ கோதை தானும்‌
கவிகளாய்‌ அறைந்தா ளன்றே.244

கருப்ழரம்‌. நாறுமோ! பட்ட
“மின்னுறும்‌ இரவின்‌. காலம்‌ ன க
பெருகுறும்‌ கனவிற்‌ கண்ட
பன்னுறும்‌ அனுப வத்தைப்‌
பாஞ்சசன்‌ னியமே! நீசேர்‌
அன்னசீர்ப்‌ பவள வாயின்‌
சுவைதனை யறியு மாறாய்‌
கு என்னுடன்‌ புகறி யென்ன
இயம்பினள்‌ கவிகள்‌ மாதோ. 245

நீருறு வெள்ளம்‌ எங்கும்‌
நிரம்பிட மிகுந்து பெய்யும்‌
காருறு காலம்‌ தோன்றக்‌ கனந்தனை தோக்கி அன்பால்‌ ஏறுரு கடலின்‌ வண்ணர்‌ –
எய்துவர்‌ கொல்லோ என்னச்‌
சிருறு பாடல்‌ தன்னைச்‌
செப்பினள்‌ மறித்து மன்றே. 246

ஈங்கிவ்வா றாகப்‌ பாடல்‌
ஈறெழு பதின்மூன்‌ றோடும்‌
ஓங்குறும்‌ பாவை முப்ப
தொன்றிநூற்‌ றெழுப இன்மூன்‌ “றாங்கவள்‌ மகிழ்விற்‌ பாடி
யனுபவஞ்‌ செய்யா வாற்றால்‌
எங்கள்‌. எழித்து சோகித்‌
நிலைமை காணா
உயிரினி தெறுமென்‌ றஞ்சி–247

முருகவிழ்‌ துளவ மாலை
முகுந்தனு முளத்து என்பு பெருகுற வீரைவின்‌ வந்தப்‌
பிறைநுகற்‌ பவள வாயாள்‌
அருகுற மருவி யன்போ
– டளித்துமீண்‌ டகன்று போனான்‌. 248

-அன்பின்தாம்‌ அணிந்த மாலை
அணித்தருள்‌ ஆழி யான்தன்‌ இன்பமுண்‌ டதற்பி னுள்ளத்‌
தெழுந்த பேருவகை யோடும்‌ தன்புகழ்த்‌ தாதை யாகும்‌ பெரியர்பால்‌ விரைவிற்‌ சார்ந்து
பொன்புரை சரணஞ்‌ சென்னி ்‌
புனைந்துஇவை புகல்வது ஆனாள்‌: 249

அரங்கம்‌ செல்லல்‌
அய்ய/யான்‌ அரங்கம்‌ என்னும்‌
அணிபெரு நகரம்‌ தன்னுள்‌
பையரா வணையின்‌ மீது
பசியகார்‌ முகிலே போலச்‌
செய்யகண்‌ வளர்த லாகச்‌
செழிக்குநம்‌ பெருமா ளின்பொன்‌
துய்யதாள்‌ இணைகள்‌ தம்மைத்‌
தொழுதிட வேண்டு மன்றே. 250

ஆதலால்‌ அடியேனைக்‌ கொண்டு
அரைக்கண மெனுந்தங்‌ காமல்‌
போதுதல்‌ வேண்டும்‌ இந்தக்‌
கணத்துஎனப்‌ புகழ்ந்து கூறு
மாதவர்‌ தமக்கெ லாமோர்‌
மணியனான்‌ அதனைக்‌ கேளா,
ஓதும்‌௮அம்‌ முறைசெய்‌ வேனென்று உரைத்துஉள மகிழ்வி னோடும்‌; 251

வடபெருங்‌ கோயில்‌ தன்னை
விரைவொடு மருவி நஞ்சப்‌
படவர வணையிற்‌ நஞ்சும்‌
. பரமனைப்‌ பணிந்து போற்றிக்‌
குடமுலை, கழையின்‌ மென்றோள்‌
கோவியார்‌ மலர்க்கை கோத்து
நடனம்‌௮அன்று இழைத்துஅன்‌ னார்பால்‌
நயமொழி நவின்ற நாதா) 252

சரிகரக்‌ கோதை என்னும்‌
தையலாள்‌ அரங்கம்‌ தன்னுள்‌
வரியர வணையின்‌ மீதோர்‌
மஞ்சென வளர்கின்‌ றானைப்‌
பரிவொடு வணங்கு மாறாய்ப்‌
பகர்ந்தனள்‌; அதற்கு நாயேன்‌
புரிதல்வேண்‌ டுவதை யின்னே
– புகன்றிட வேண்டும்‌ என்றான்‌. 253

உரைத்தமா மொழிகள்‌ கேளா
உகப்பொடும்‌ அவனை நோக்கி
வரைத்தடங்‌ கொங்கை யாள்நின்‌
மகள்‌ தனை மணிகள்‌ தன்னால்‌
நிரைத்தபொற்‌ சிவிகை ஏற்றி
நீயுடன்‌ கொண்டு சென்று
இரைத்தவழ்‌ மணிகா வேரி சூழூம்தென்‌ ன்ரங்கம்‌ சென்றே; 254

ஆங்குறை அரங்க நாதர்‌
அடியிணை மலர்கள்‌ தம்மைப்‌
பாங்கொடு மனமும்‌ கண்ணும்‌
பரிவுறத்‌ தொழுது போற்றி ஈங்கடைந்‌ இடுமின்‌ என்ன
இசைத்தலும்‌; விடைபெற்று அன்னோன்‌ :
பூங்கழல்‌ தொழுது வாழ்த்திப்‌
பொன்மனை புகுந்தா னன்றே. 255

அத்தினம்‌ அதனில்‌ அந்தக்‌
கணத்திலம்‌ புவிமா னாகும்‌
-. தத்தைமென்‌ மொழியி னாளைத்‌
தமனியத்‌ தகட்டின்‌ Cube
த்தணி. சிவிகை: யேற்றி… வட சட்ட க்யா ட
ட: ஆங்கதைம்‌. பட்டால்‌: மூடி. ட ர ரர ர
ஒத்திடன்‌’ த்ர்னும்‌.வேறோரர்‌’
சிவிகைமீ துகந்து சென்றான்‌. 256

அந்தரத்து அமரர்‌ மேன்மேல்‌
அலர்மழை பொழிந்து வானத்‌
துந்துமி முழங்கக்‌ கோதைத்‌
தாழியர்‌ பலரும்‌ சூழச்‌
செந்திரு மணாளன்‌ கோயில்‌
பரிசனம்‌ பலரும்‌ சேர்ந்து
வந்திட மேள தாள
வாத்திய முழங்க மாதோ, 257

கதுவிஎண்‌ திசையும்‌ போற்றக்‌
கவின்புகழ்‌ பட்டர்‌ பாடச்‌
சதுர்மறை யவர்கள்‌ வாழ்த்தச்‌
சகலசம்‌ பிரமத்‌ தோடும்‌
முதுமலர்க்‌ குழலார்‌ மூரல்‌
மதியெனக்‌ குமுதம்‌ விள்ளும்‌
புதுவைமா நகரம்‌ நீங்கிப்‌
பொன்மதில்‌ மதுரை புக்கார்‌. 258

பணித்தலை வைப்பின்‌ ஒப்பாய்ப்‌
.பகருதற்கு இணைவே றில்லா
அணிக்கெழு கூடல்‌ தன்னில்‌
அமர்ந்தமல்‌ லாண்ட தோளன்‌
பாதம்‌ டில்‌ அண்ு தாழ்ந்தவா. றேத்திப்‌ போனார்‌. 259

மதுரையிற்‌ கூட ஸனீங்கி
மாலிருஞ்‌ சோலை யென்னும்‌
விதுவொடு கதிரோன்‌ சூழ்ந்து
விலங்குற வுயர்ந்த வெற்பில்‌
சதிர்பெற உறையுஞ்‌ சீர்கள்‌
ளழகர்பொற்‌ சரணந்‌ தன்னைத்‌
துதிசெய்து மூழ்ந்து வாழ்த்தித்‌ தொழுதன ரகன்று போனார்‌. 260

ஏகும்‌௮க்‌ காலை மூடுஞ்‌ —
சிவிகையின்‌ இருந்த வாறே
நாகரும்‌ புகழும்‌ சீர்த்தி
நலம்புனை தாதை யோடும்‌
மேகமொத்‌ திருண்ட கூந்தல்‌
வெற்பிளந்‌ தனத்துக்‌ கன்னல்‌
பாகன மொழியாள்‌ சாலப்‌
பரிவுடன்‌ இதனைச்‌ சொன்னாள்‌. 261

கோதை விருப்பம்‌
அய்ய/கேள்‌; நமது மால்வாழ்‌
அரங்கமா நகரத்‌ துற்ற துய்யமா மதிளும்‌ டொன்னின்‌
துலங்குகோ புரமும்‌ சேவை
செய்யநின்‌ மலர்ப்பூங்‌ கண்ணில்‌
தெரிவுறில்‌ அடியேன்‌ தானும்‌
வையமீ திழிந்து போற்றி .
வணங்குறத்‌ தெரித்தி என்றாள்‌. 262

ஆங்கவள்‌ உரைத்த பின்னர்‌
அருநெறி கடந்து செல்ல
வீங்கலை மணி௫ந்‌ துங்கா
விரிக்கரை யருகி ஞூடு
பாங்குட னேகுங்‌ காலைப்‌
பன்மணி மதிளும்‌ வான்மீ
தோங்குகோ புரமுந்‌ தோன்ற வுரைத்தனன்‌ தோன்றிற்‌ றென்றே. 263

(வேறு)
அடர்ந்த மும்மல மறுத்துவெம்‌ பிறவியங்‌
கடந்த தாதையா முரைமொழி
மடந்தை போன்றவக்‌ கோதையும்‌ வையமீ–264

நயந்த வாற்றினை யுந்தியி னான்முகத்‌ தவளைப்‌
பயந்த சீரம கியமண வாளரும்‌ பரிவாய்‌
வியந்து தன்திருத்‌ தேவியும்‌ மெல்லிய பதவம்‌
புயந்த னக்கிடர்‌ பொருந்துற வருந்துவ ளென்றே.; 265

அரங்கன்‌ திருவிளையாடல்‌
கஞ்ச நாண்மல ரூடுறும்‌ அளியினைக்‌ சடுப்ப,
பஞ்ச ரத்துறுந்‌ தத்தையிற்‌ பல்லக்கின்‌ வருமவ்‌
வஞ்சி நேரிடை யாள்திரு மேனியு மருவும்‌
நெஞ்சி னூடுதன்‌ னிடமணைத்‌ திடநிரு மித்தான்‌. 266

அரங்கன்‌, கோதையார்‌
நடந்தால்‌ பாதமலர்‌ வாடூம்‌ என்று கருதினான்‌. கருதிய திருவரங்கன்‌, மலரில்‌
உள்ள வண்டைப்‌ போலவும்‌, கூட்டில்‌ உள்ள கிளியைப்‌ போலவும்‌ வருகின்ற
கோதை நாச்சியார்‌ பிறரறியாமல்‌ தன்னிடம்‌ வரும்படி சங்கற்பித்தான்‌.

அவன ருட்படி பிறரொரு வருமறி யாமல்‌
துவரி தழ்க்குயின்‌ மழலையாள்‌ கோயிலுட்‌ டொடர்ந்திட்‌
டுவரி வண்ணர்தம்‌ பதமல ர௬ுவப்பொடும்‌ வணங்கி
நவமு றத்திரு வுளத்திடை தண்ணிவீற்‌ நிருந்தாள்‌. 267

ஆங்க ரங்கனோ டம்முறை யவடொடர்ந்‌ தணைந்தாள்‌
ஈங்கவ்‌ வேந்திழை யுறுஞ்சிவி கையைப்புய மேந்தித்‌
தாங்கு வோர்கண்முன்‌ பரமது சமைந்திடா மையினால்‌
ஏங்கி யீதென மாயமென்‌ றெண்ணிறின்‌ றனரால்‌. 268

கன்று காவுறுஞ்‌ சுரபியிற்‌ கலந்துபின்‌ சிவிகை
யொன்றி மேவுமப்‌ பெரியரென்‌ நுரைக்குமுத்‌ தமனும்‌
நின்று ளார்தமை நோக்கிநீர்‌ நின்றுள தென்னோ
என்று ரைத்தல்கேட்‌ டாங்கவ ரிம்மொழி யிசைப்பார்‌. 269

இன்ன செய்கையென்‌ றெவ்வித மிதையியம்‌ பிடுவோம்‌
அன்ன மென்னடை யாரணங்்‌ கமர்ந்துள பரந்தான்‌
முன்னர்‌ போலவிச்‌ சிவிகையின்‌ இலைமுயன்‌ றாய்ந்து
என்ன மாயமென்‌ றேங்கியா மிருந்தன — 270

ஆங்க வர்புகன்‌ றுளமொழி செவியின்வந்‌ தணுக
வீங்கெ னோவசதி சயமெனச்‌ சிவிகைவிட்‌ டிழிந்து
பாங்கொ டும்மகள்‌ சிவிகைமேன்‌ மூடுபட்‌ டதனை
வாங்கி யேயுற விருகண்மா மலரில்நோக்‌ இனனால்‌. 271

நோக்க லும்மக ளிலாமையி னுணங்குகேள்‌ வியினான்‌
போக்கெ னோலெனத்‌ திருவளம்‌ புழுங்கனன்‌; துடித்தான்‌;
ஏக்க மோடயர்ந்‌ திரங்வென்‌; நடுங்கினன்‌; இனைந்தான்‌;
வாக்கினாலவன்‌ துயரினை வகுத்திட லரிதால்‌. — 272

ஆய தன்மைய ஸனாகியே பின்னரு மறிவுற்‌
றஹேய காரணம்‌ பிறிதிலை யரங்கமுள்‌ எழிலார்‌
பாய லாய்விடப்‌ பைந்தலை யரவின்மேற்‌ படுத்த
மாய னார்செயுங்‌ களவென மனத்துற மதித்தே; 273

விரைவி னோடுடன்‌ மேவிவந்‌ தவர்களு மேவ
தரையின்‌ மீதுகா னடையொடுஞ்‌ சென்றுதண்‌ டரளந்‌
இரையெ றிந்துயர்‌ காவிரி கடந்துசெங்‌ கனகம்‌
நிரைசெய்‌ கோயிலுட்‌ புகுந்தரங்‌ கேசர்முன்‌ நின்றே; 474

ஆழ்வாரின்‌ முறையீடு
இருக ரங்குவித்‌ தடியுற வணங்கிமீண்‌ டெழுத்து
பொருத ரங்கவெண்‌ கடலி?னோ ராலடை பொருந்தல்‌
ஒருவி வந்தவ ணரவின்மே லுவப்பொடு முறங்கும்‌
கருமு கிற்கொழுந்‌ தேயெனக்‌ கட்டுரைத்‌ திடுவான்‌? 275

தளிரின்மேல்‌ துயிலும்‌
போது இருந்த கருணை அரவின்‌ சார்பால்‌ குறைந்ததோ என்பது உள்ளுறை.
“பள்ளித்‌ தோழமை பலித்தபடி’” என்பர்‌ நம்பிள்ளை.

அடியன்‌ மேலையம்‌ பிறவியு ளருமையுற்‌ நிழைத்த
நெடிய மாதவப்‌ பேற்றினால்‌ நேர்ந்தவோர்‌ மலர்ப்பூங்‌
கொடிய னாள்தனைக்‌ கொண்டுநின்‌ பதமலர்‌ குறுகி
முடியுறப்பணிந்‌ தேகுமம்‌ முறைமைகொண்‌ டடைந்தேன்‌. 276

அடைந்து. ளேன்மல ரடியரு கணுகுமுன்பு அளிகள்‌
குடைந்த -ரந்துதேன்‌ பூங்குழற்‌ கோதையைக்‌ குறுக
முடைந்து ‘யர்ந்துறி யாச்சி.பர்‌ முறைபடுக்‌ குறும்பால்‌
கடைந்த வெண்ணையிற்‌ களவிழைத்‌ திடுவது கணக்கோ? 277

கணக்க லாமலென்‌ மகள்தனைக்‌ கவர்ந்துள துணரின்‌
வணக்க மோடலை சகடலுடை வையகத்‌ தடையே
மணக்கு மாமலர்க்‌ குழன்மடந்‌ தையருமா டவரும்‌
இணக்க மோடுவந்‌ தெவருனது இணையடி தொழுவார்‌? 278

வடுத்த விர்ந்தமா மதிமுகத்‌ திருவினோ டுரைக்கின்‌
அடுத்தி லாதென நகைசெய்வ ளாதலாற்‌ களவில்‌
எடுத்து வந்தவென்‌ மகள்தனைக்‌ காண்பியு மென்னாக்‌
கடுத்த சிந்தையான்‌ போலுளத்‌ தன்பொடுங்‌ கழறி; 279

நகசைசெய்வான்‌ – பரிகப்பான்‌. **நப்பின்னை
கர்ணிழற்‌ இரிக்கும்‌” என்றவர்‌ அல்லவா? (பெரியாழ்வார்‌ திருமொழி — வெண்ணெ
யளைந்த என்ற்‌ பதிகம்‌ காண்க). இிருமகள்‌ சிரிப்பாள்‌ . அவள்‌ சிரிப்பதற்கு முன்‌
என்‌ மகளைக்‌ காண்பியும்‌,

ஓதி மாமறை முறைமையி னொளிர்மல ரவனும்‌
பாதி மாமதி சூடியும்‌ பணிந்துசண்‌ டறியாச்‌
சோதி யேகரி மூலமாம்‌ பெயர்‌ சொலி யழைத்த
ஆதி யேயெனத்‌ துதிசெய்தாங்‌ கெதி.ரில்நின்‌ றனனால்‌. 280

அரங்கன்‌ மாற்றம்‌
நின்ற வில்லிபுத்‌ தூாரவ னிகழ்த்துரை செவிக்குள்‌
ஒன்ற லோடுநெஞ்‌ சுருகுறப்‌ பெருகுவப்‌ புடனே
கன்று கொண்டுயர்‌ விளவினை யெறிந்தகார்‌ முகிலும்‌
நன்று நன்றென விளநகை தோன்றிட நவில்வான்‌. 281

ஒன்று மஞ்சலை யுன்மக ஞுந்தனி நடந்தஇங்‌
தின்று றும்படி நினைந்தன ளெண்ணுமம்‌ முறையே
சென்று றிற்பதஞ்‌ சிவப்புறு மெனத்தெறும்‌ புலனைவென்று ளாய்வருந்‌ தாவரு வித்தனம்‌ வெகுளேல்‌. 282

என்ன வேபல நன்மொழி புகன்றெமில்‌ பெறுநின்‌
கன்னி யிங்குறை கன்றனள்‌ காண்கெனக்‌ காட்ட
அன்ன மாதினைக்‌ க)ண்டலு மானந்த மூடனே
பின்னு மோர்மொழி யாங்கருண்‌ மகஇழ்வுறப்‌ பேசும்‌, 283

முறைப்படி மணக்க மொழிந்தனர்‌ ஆழ்வார்‌
மாய னே [இருப்‌ பாடியுள்‌ வளருமந்‌ நாள்வாய்‌
ஆய ரீன்றரு ளிளமுலை யனநடை யவரை
நேய மோடடைந்‌ திணைந்துள கள்ளமா நெறிபோல்‌
நாயி னேன்றிரு மகளையு நயந்திட நினையேல்‌. 284

உலகம்‌ யாவினு முறைபவ ரொவ்வுமவ்‌ வகையாய்ப்‌
பலருங்‌ காண்குறப்‌ பந்தருட்‌ பழமறை விதியின்‌
அலகின்‌ மாதவர்‌ வளர்க்குமவ்‌ வனலின்முன்‌ னிலையில்‌
இலகு மங்கலம்‌ புனைந்தபின்‌ னிணங்குத லியல்பாம்‌. 285

ஆத லாலடி யேனுறை புதுவைவந்‌ தணைந்திம்‌
மாத ராள்தனை விதிமுறை வதுவைசெய்‌ திடுமக்‌
கோதி லாமணக்‌ கோலமுட்‌ குளிர்ப்புறக்‌ காணுங்‌
காதல்‌ கொண்டுளே னெனக்கழல்‌ பணிந்துநின்‌ றனனால்‌, 286

உலகறிய மணப்போம்‌
நின்ற வன்திரு மாமுக நோக்கிநீ டூலகோர்‌
ஓன்று மாறுரைத்‌ தனையலாற்‌ பிறிதுரைத்‌ திலையால்‌
நன்றி தென்றுள முவந்தனம்‌ புதுவைமா நகரில்‌
சென்ற டைந்துநற்‌ றினந்தனிற்‌ றீருமணம்‌ புரிவேம்‌. 287

மங்க லந்தரித்‌ திடுதலுக்‌ குன்மகள்‌ தனக்குப்‌
பங்கு னித்திரு வுத்திரப்‌ பகற்பொருந்‌ துறுமன்‌
றங்கு வந்துநா மடைகுது மதற்குமுன்‌ பாக
இங்கி ருந்துநின்‌ சிறுவியோ டேகென விசைத்தே; 288

வில்லிபுத்தூர்‌ மேவுதல்‌ Los வரு
விடைய எளித்தலுங்‌ கோயிலில்‌ மேவுவோர்‌ தமக்கும்‌
படைநெ டுங்கணா ரொடுப கவர்கள்‌ தமக்கும்‌ ‘>
புடைதி ரண்டுபோ யிவர்தமைப்‌ புதுவையின்‌ விடுத்திங்‌ :
கடையு மென்றுரைத்‌ தவற்கிரு சவிகையு மளித்தான்‌. 289

அளித்த தன்மிசைக்‌ கோதையும்‌ பெரியஆழ்‌ வாரும்‌ :
களிப்பொ டும்புகத்‌ துந்துமி முழக்கியே கடிதின்‌
தளிர்த்த பூமழை சொரிந்திடச்‌ சாமரை தயங்க
விளித்த சங்கின முரசொலிக்‌ கறங்க மென்மேல்‌.. 290

ஆட கத்தியாழ்த்‌ தும்புரு நாரத ரிசைத்துப்‌
பாட வின்னிசை : முனிவரர்‌ பரிந்துதோத்‌ திரிக்கச்‌ ?
சூட கக்கர. மடந்தையர்‌ சோபனஞ்‌ சொல்ல ௩
நாட கத்தொழில்‌ வல்லவ ரெதிருற நடிப்ப; 291

விருதொ லித்திடப்‌ பட்டர்கள்‌ புகழவே நுலகில்‌ .
பொருவில்‌ வேங்கடப்‌ பொருப்பனு முடன்சென்று புகுதக்‌
குரும ணிச்செழுங்‌ கோயில்வீட்‌ டூயர்சுர நதியுங்‌- ்‌
கருது காவிரி யெனுந்திரு நதியினைக்‌ கடந்தே; 292

சோழ நாடது பின்படத்‌ துருவிப்பாண்‌ டியன்றான்‌
வாழு நாடுறு மாலிருஞ்‌ சோலைவந்‌ துறலும்‌
ஆழு மன்புட னத்தலத்‌ துறையனை வோரும்‌
சூழ வந்துப சரித்திடக்‌ கோயிலுள்‌ தொடர்ந்தே; 293

அழகர்‌ பூந்திரு வடிகளாம்‌ அம்புய மதனைக்‌:
குழையு நெஞ்சொடுந்‌ துதிசெய்து வணங்கியே கொடுத்த
தீழைது மாயுறு தீர்த்தப்பிர சாதமு மருந்தி .
விழைவி னோடுமத்‌ தலத்திடை யன்றுவீற்‌ நிருந்தே; 294

மறுதி னந்துடர்ந்‌ தழகரு முடன்வர மதுரை
யுறுத லோடுமத்‌ தலந்தனி லுறைபவ ரெவரும்‌
குறுகி வந்தெதிர்‌ கொண்டிடக்‌ கடலுண்‌ மருவி
நறும லர்பொரு மழகிய நம்பிதாள்‌ வணங்க) 295

மன்ற லார்வன படிகநீ ராங்கவர்‌ வழங்கித்‌
துன்று நற்பிர சாதமு மளித்திடத்‌ துய்த்தாங்‌ கன்று வைகுூயவ்‌ வழகரு முடன்கலந்‌ தணுகச்‌
சென்ற டைந்தனர்‌ புதுவையின்‌ மற்றைய இனமே. 296

ஆங்கு றும்வட பத்திர சாயியம்‌ புயச்செம்‌
பூங்க ழற்றொழு தரங்கர்பாற்‌ போயடி பணிந்திட்‌
டீங்கு வந்தன மெனதடந்‌ துளவெலா பெடுத்துப்‌
பாங்கொ டும்மவர்‌ செவியுறப்‌ பு.த;வையன்‌ பகர்ந்தான்‌, 297

கேட்ட வாறதாய்‌ நடத்துக கேள்வியோ யெனவச்‌
சூட்ட ராவணை யவன்சொலக்‌ களித்தனன்‌ துடர்ந்த
கூட்டம்‌ யாவர்க்கும்‌ இர்த்தப்பிர சாதமுங்‌ கோயின்‌
மாட்டு ளோரளித்‌ இடக்கொண்டு : மாளிகை கலந்தார்‌. 298

வேங்க டாசல மதன்மிசை விளங்கிவாழ்‌ பவரும்‌
ஒங்கு மாலிருஞ்‌ சோலைவெற்‌ புகந்துறை பவரும்‌
இங்கி லாச்செழுங்‌ கூடலிற்‌ சேர்ந்துவை குவரும்‌
தாங்கள்‌ தாங்களுற்‌ றுறைதலஞ்‌ சார்ந்துவை கனரால்‌, 299

அருந்து மாறதா யணிகெழு மரங்கமா நகரத்‌
இருந்து வந்துளோர்க்‌ கருங்கடல்‌ கடைந்திட வெழுந்த
மருந்து நேரென அறுசுவைப்‌ பதார்த்தம தோடும்‌
விருந்து செய்துசெய்‌ வெகுமதி வழங்கியே விடுத்தான்‌. 300

விடுத்த லோடுமாங்‌ சுவர்களும்‌ விடைகொடு விசும்பின்‌
எடுத்த பொன்மதி எரங்கர்முன்‌ னெய்திப்பாம்‌. பணையில்‌
படுத்து ளான்பதம்‌ பணிந்துதாம்‌ போய்வரு மளவும்‌
அடுத்த வாறெலாம்‌ அறைந்துதம்‌ மாளிகை யடைந்தார்‌. 301

(வேறு)
அங்கவ ரம்முறை யகன்று போயபின்‌
கொங்குறு மலர்க்குழற்‌ கோதை யென்பவள்‌
“சங்குறை கரவரங்‌ கேசர்‌ சாற்றுமப்‌
பங்குனி யுத்தரம்‌ பலிப்பதென்‌ றென்றும்‌; 302

செங்கம லம்பல இறக்கப்‌ பூத்ததோர்‌
மங்குலி னழகய வடி.வந்‌ தாங்கினோன்‌
இங்குவந்‌ துறுமந்நா ளெந்தநா ளென்றும்‌ கங்குலும்‌ பகலுந்தன்‌ கருத்து ளூன்னியே; 303

இன்னவா றன்றீயே வேறொன்‌ றெண்ணிலா
தன்னவள்‌ வைகவவ்‌ வாறு தந்தையும்‌
_தன்னுள மதனிடை தரித்து வைகினான்‌
– பின்னருற்‌ றடைந்தமை பேசு வாமரோ. . 304

ஆழ்வார்‌ மணநாள்‌ அறிதல்‌
ஒருபக லதனிடை யுவப்பு எத்தொடுத்‌
இருநகர்‌ வாழுறுஞ்‌ சீர்கொள்‌ வைணவர்‌
பெருமிதம்‌ பொருந்துமப்‌ பெரிய ரின்புற
மருவுமா ளிகையிடை வந்து ளார்களால்‌, 305

வந்துளோர்‌ பெரியர்தாள்‌ வணங்க லும்மவர்‌
தந்தம தடிகளைத்‌ தானுந்‌ தாழ்ந்தபின்‌
அந்தவே தியரருந்‌ தவனை நோக்கியே இந்தவா சகமெடுத்‌ தியம்பு வார்களால்‌. 306

அய்ய[நின்‌: தனையளை யரங்கர்‌ மாமணஞ்‌
செய்யுநாள்‌ நாளையென்‌ . றவர்கள்‌ செப்பவத்‌
ட. துய்யமா .மொழியது துஞ்சி யெஞ்சினோர்‌
“மையிலாச்‌ செவியுறு மருந்து போன்றதால்‌. 307

ஆயமா தவர்களம்‌ மொழிய றைந்துதம்‌
தூயமா -ளிகையிடைத்‌ துடர்ந்து வை௫னார்‌;
ஏயவப்‌ பெரியரு: மிதய. மூடெழும்‌ ்‌
நேயமோ டிவ்வகை நிரப்ப லுற்றனன்‌. 308

நகரவலங்காரம்‌
தேனைவென்‌ றுளசொனஞ்‌ சிறுவி கோதையாம்‌
மானையவ்‌ வரங்கர்செய்‌’ வதுவை நாளையால்‌
ஏனைய ரின்னக .ரெழில்சேய்‌ வாறதாய்‌
ஆனைமேன்‌ -மணிமுர சறையு மின்றெனன்‌. 309

அந்தவா சகஞ்செவி யுறவரங்‌ கம்வாழ்‌
சேர்திரு ‘ மணைனைச்‌ சேர்ந்த ழைத்திட
முந்துற வேகுவான்‌ போன்மு ழங்கலைச்‌
இந்துவின்‌ மறைந்தனன்‌ தினஞ்செய்‌ வோனுமே. 310

அன்னவன்‌ மறையமா முரசம்‌ அஆனைமேல்‌
மன்னு?ீர்க்‌ கோதைக்கும்‌ அரங்கற்‌ கும்மணம்‌
பின்னைநா ணகரணி பெருக்கு மின்னெனப்‌
பொன்னகர்‌ முழுவதும்‌ புகுந்து சாற்றினார்‌, 311.

முரசறை தரவெழு முழக்கங்‌ கேட்டலும்‌
விரசுமம்‌ மாணகர்‌ மேவு மாந்தரும்‌
பிரசமென்‌ இளவியும்‌ பேதை யார்களும்‌
கரைசெயற்‌ கருங்களிக்‌ கடலுள்‌ ஆழ்த்தனர்‌. 312

கோதையாள்‌ வதுவையைக்‌ குறித்துப்‌ பூந்திரு
மாதைமார்‌ பணியரங்‌ கேசர்‌ வந்திடுஞ்‌
சேதியை யாவருந்‌ தெரியு மாறுமுன்பு
ஓதவந்‌ தெனஇன ஸனுதைய மாயினான்‌. 313

மதுகமழ்‌ மலர்த்தரு மகளை மற்றொரு
சதுர்பெற வணியுமகத்‌ தன்மை யாமெனப்‌
புதுவையென்‌ றுரைக்குமப்‌ பொன்னின்‌ மாநகர்‌
கதிர்செய முறவலங்‌ கரிப்ப தாயினார்‌.315

கடலிடை யுறுதுயில்‌ கழித்து வந்தொரு
படவர வணைமிசை பள்ளி கொண்டுளான்‌
வடபெருங்‌ கோயிலை வகைவ கைபுரிந்‌
தடவுடன்‌ புதுக்கினர்‌ அழுது துன்னவே. 316

அந்தர வுலகினை நகைத்த லாமென
மந்தர மனைய?ர்‌ மாட மாளிகை
சுந்தரம்‌ பெறவடி முடி துடங்கியே
சந்திர னொளியைவெல்‌ சாந்து தீற்றுவார்‌. 317

ஒத்திட வாயின்முன்‌ புயர்ச்ச யெய்திட
முத்தணி பந்தர்கண்‌ முடுகிப்‌ போடுவார்‌;
கொத்துறு மலர்ச்சரங்‌ குலவத்‌ தூக்குவார்‌;
வைத்திழை மணிக்கொடி மலிய நாட்டுவார்‌. 318

பூரண பொற்கல சம்பொ ருத்துவார்‌;
ஏரணி பாலிகை யினம்நி ரப்புவார்‌;
காரணி மகரதோ ரணங்கள்‌ கட்டுவார்‌;
சீரணி பதுமைகள்‌ செழியத்‌ தூக்குவார்‌. 319

.பொன்னிறச்‌ சுளைபலா: முதற்பு கன்றிடும்‌
மன்னுநற்‌ சுவைகனி வகைகள்‌ தூக்குவார்‌;
கன்னலும்‌ வாழையுங்‌ கழுகும்‌ நாட்டுவார்‌;
: பன்னக ‘மணிவிளக்‌ கொளிப ரப்புவார்‌. 320 :

அரைபடு கலவைசேர்ந்‌ தமைத்த சாந்தினால்‌
குரையுற மெழுகுவார்‌; சார்ந்த பாங்கெலாம்‌
நிரைநிரை விளங்குகோ லமும்நி ரப்புவார்‌;
– விரைபனி நீர்தெரு வீதி வீசுவார்‌.321

ஆடைக ளழகுற வணிகு வார்‌;புதுப்‌
பாடகஞ்‌ சரிவளை பதக்க மாதிபல்‌
பூடண வகைகளும்‌ பொருந்தப்‌ பூணுவார்‌;
ஏடவிழ்‌ நறுமல ரிலங்கச்‌ சூடுவார்‌. 322

கந்தமார்‌ புனுகுபல்‌ கலவை சேர்த்தியே
சந்தனக்‌ குழம்புடல்‌ தணியப்‌ பூசுவார்‌;
சிந்துரஞ்‌ சூரணந்‌ இருமண்‌ சாத்துவார்‌;
“ சுந்தர மாயிரந்‌ துலங்கல்‌ காணுவார்‌. 323

அன்னமந்‌ தணர்தமக்‌ கருத்து வார்‌;புவி
பொன்னிவர்‌ மணியுடைப்‌ பூட ணம்ப்சு
இன்னவாம்‌ பலபல தான மேற்றுளோர்‌
. உன்னிய. முறையவ ருவப்ப நல்குவார்‌. 324

இன்னவை யாவையு மெழில்பெ றும்படி
பொன்னக ரொப்பவப்‌ புதுவை மாதகர்‌
தன்னையாங்‌ கவரலங்‌ கரித்த தன்மைகள்‌
£.* பன்னநா வாயிரம்‌ படைத்தி லேனரோ. 325

விட்டுணு சத்தன்மா ளிகைவி ளங்குற
மட்டிலா வைகுந்த மண்ட பந்தனக்‌
கெட்டுணை யாயினும்‌ வழுவி லாமலே
: திட்டமாய்ச்‌ செய்முறை யாவுஞ்‌ செய்தபின்‌; 326

பணங்கெழு பணித்துயில்‌ பயில ரங்களார்‌.
குணஞ்சிறந்‌ துடையபூங்‌ கோதை யாஸல்தனை
மணம்புரி. வதற்குச்சசய்‌ வகைகள்‌ யாவையும்‌
்‌ இணங்குமா றவரவ ரியைவித்‌ தாரோ. : 327

பேரிகை மத்தளம்‌ பிறங்குதா எங்கள்‌
தாரைகள்‌ திருச்சினம்‌ சங்க மற்றுள
தூரிய வகையெலாந்‌ . தொனிக்கு மோதையால்‌
2 வாரியின்‌ முழக்கமும்‌ மறைந்தொ ஸஎித்ததால்‌. 328

வாடுற விடைதன வரைகு லுங்குற
_ நாடக மாதர்கள்‌ நடம்ப யின்‌ றிட
-சூடுபூங்‌ குழலினர்‌ சோப னஞ்சொலப்‌
பாடகர்‌ இன்னர கதம்‌ பாடவே. ‘ 329

மணங்காண வந்தவர்‌
இங்கெ ரிவ்வண்‌ மிசையு மெல்லையில்‌
பொங்கரீன்‌ றருளிய பூவை யாளிடந்‌
தங்கவெள்‌ ளிடபமாம்‌ ஊர்தி தன்மிசை
– சங்கரன்‌ மகிழ்வொடுஞ்‌ சார்ந்து ளானரோ. 330

தேவரும்‌ பணிதிருத்‌ தேவ ஸுந்தியம்‌
பூவரு மெண்புயப்‌ புனித நான்முகன்‌ :
_நாலரு மயில்விழி நங்கை தன்னொடும்‌
தூவிசே ரனமிசை வந்து தோன்றினன்‌. – 331

அத்தர வுலஇனர்க்‌ கரச னாய |
“இந்திரன்‌ சீரயி ராணி யென்னுமச்‌
சுந்தர மதிமுகத்‌ தோகை யாளொடுந்
– தந்தவெண்‌ கரிமிசை சார்ந்து சானரோ. 332

மற்றுள மூனிவர்கள்‌ சித்தர்‌ வானவர்‌
‘வெற்றிவே லரசர்விஞ்‌ சையர்க ளாதிதம்‌
பொற்றொடி யவரொடும்‌ புதுவை மாநகர்‌
_ முற்றிலு மிடங்கொளா முறைவந்‌ தீண்டினர்‌. 333

கோதையாரின்‌ மணக்கோலம்‌
இங்கிவர்‌ யாவரு மீண்டி யுற்றபின்‌
– வெங்கொலைத்‌ தொழில்வல வேற்கண்‌ கோதையைச்‌
சங்கரி கலைமகள்‌ சசியிம்‌ மூவரும்‌
மங்கலக்‌ கோலஞ்செய்‌ வான்தொ டங்கியே; 334

கங்கையே முதலெழு கடவுண்‌ மாநதி
சங்யெ தீர்த்தங்கள்‌ தமைக்கொ —
பொங்கலை யாழியின்‌ புனித நீர்கலந்‌
௩ தங்கவர்‌ மஞ்சன மாட்டி னார்களால்‌. 335

மூகமலர்‌ மஞ்சளின்‌ முயங்கப்‌ பூசியே
அகில்முத லிந்தன மனலி லிட்டதின்‌
புகைகொடு முடற்குழல்‌ புலர்த்திக்‌ கைவிரல்‌
: நகமதிற்‌ கோதிநன்‌ குறமு டித்தனர்‌. 336

ஈரநீத்‌ துயர்ந்தபட்‌ டிலங்கச்‌ சாத்திநூல்‌
நேரிடை வருந்துற நிமிர்ந்த கொங்கையில்‌
வாரணிந்‌ திருகுற வலிந்து வாளைவேல்‌
_ கூர்விழிக்‌ கஞ்சனங்‌ குளிர இட்டனர்‌. 337

மறைமுதல்‌ வன்குறி வைத்த தென்னவே
கறையின்மா மதிமுகங்‌ கவினு மாறிளம்‌
பிறையெனக்‌ தஇிருமணும்‌ பிறங்கச்‌ சந்துரம்‌
நிறைதிருச்‌ சூரணம்‌ நிரம்பச்‌ சாத்தினார்‌.338

பொன்னினா லமைந்திடும்‌ புதிய பாவையின்‌
வன்னமார்ந்‌ தொளிபெற வரையு மாறெனப்‌
பன்னறு நவமணி யிழைத்த பைம்பொனின்‌
– மின்னுபல்‌ பூடணம்‌ விளங்கச்‌ சாத்தினார்‌. 339

கந்தமோர்‌ காவதங்‌ ௬மக மத்தசெஞ்‌
சந்தனம்‌ புனுகுசவ்‌ வாத ஸணிந்துபின்‌
சுந்தர நறுமல ரலங்கல்‌ சூட்டினார்‌
்‌ அந்தரத்‌ தவர்களு மஇச .யிப்பவே. 340

இன்னவை யாவையு மியைந்த பின்றிருப்‌
பொன்னரங்‌ கந்துயில்‌ புரியு நாரணன்‌
துன்னுமந்‌: நெறிகளைத்‌ தூய கண்களால்‌
அன்னவர்‌ தோக்கியங்‌ கிருக்கு மாயிடை; 341

பிரம்மன்‌ வினா
மட்டவிழ்‌ தாமரை மலரின்‌ வைகயன்‌
விட்டுணு சித்தனை விருப்பின்‌ நோக்கியே
அட்டதிக்‌ கினும்புக ழரங்கம்‌ வாழுறும்‌ த
வட்டச்செந்‌ இகிரிமால்‌ வருவதென்‌ றென்றான்‌. 342

என்றலு மணவினை யியற்று மங்கலம்‌
குனிமதி யுத்தி ரம்மெனும்‌
இன்றுவந்‌ தெய்துவ மென்ன யானடை அன்றுரைத்‌ தருளினா ரரங்க ரென்றனன்‌. 343

அவ்வுரை கேட்டலு மமரர்‌ கோமகன்‌
இவ்வுரை யானுமன்‌ நறிருந்து கேட்டனன்‌,
இவ்விய வுருவமை திருவ ரங்கனார்‌.
ஓவ்விய மாய்கையா ர௬ணர்வர்‌ என்றனன்‌. 344

எனவுரைத்‌ தவனொடு மேறு வாகனும்‌
அனமதை யூர்தியு மனைத்து ளோர்களுங்‌
கனறநிற மேனிமால்‌ கமலத்‌ தாள்களை
_ மனமுற நினைந்தவர்‌ வருந்து மெல்லையில்‌; 345

கோதைபாற்‌ பெரியருங்‌ குறுகி யம்ம[பூ
மாதுறை மார்பக மணிய ரங்களார்‌
ஏதுகா ரணமின மெய்தி லாததைன்‌
… வேதனே முதலினோர்‌ வினாவு கின்றனர்‌. . 346

வருதுமென்‌ றத்தினம்‌ வழங்கும்‌ வாறதாய்‌
மருதிறத்‌ தவழ்ந்தமால்‌ வந்த. லானினங்‌
கருதுவ தென்னினிக்‌ கழறு கென்னலும்‌
பொருதுவெல்‌ வேற்கணாள்‌ புகல்வ தாயினாள்‌, 347

கோதையின்‌ செயல்‌ — கருடன்‌ வருதல்‌
அன்னவர்‌ யாவரு மகங்க ஸிப்புற
இன்னமோர்‌ கடிகையி ஸனுள்வந்‌ தெப்துவார்‌
நின்னுளம்‌ வருந்தலை யெனநி கழ்த்தியே பின்னர்வே  லிருந்தப்‌ பெண்கொடி; . 348

பன்னக வயிரிதோத்‌ திரம்ப ரிவ்வொடுந்‌ -:
தன்னக மதனிடைத்‌ தரித்த வன்வர ‘
உன்னலு மக்கணத்‌ தோங்கல்‌ போன்றிரு : ்‌
பொன்னவீர்‌ சறகொலி பொருந்த வந்தனன்‌. -349

வந்தவன்‌ றிருமூக நோக்கி மாண்புறும்‌
உந்தலைக்‌ காவிரி யுடைய ரங்களார்‌
இந்தநா ளின்னகர்க்‌ கெய்து வேமென
அந்தநா ளடியனோ டறைந்து ளானரோ,. 350

அன்னமா மொழிமுறை யந்த மாதவன்‌
இன்னமு மிங்குவந்‌ தெய்தி லாமையால்‌
என்னகா. ரணம்வரா தெனவிங்‌ கியாவரும்‌
_ பன்னுகின்‌ றதற்கெனோ பகர லாகுமால்‌. 351

ஆதலா லிக்கணத்‌ தணிய ரங்கரென்‌
மீதுறு கருணையால்‌ விரைவி னோடடைந்‌
தீதெலா மிசைத்தவ ரெய்து மாறழைத்‌
தோதுமோர்‌ கடிகையுள்‌ ஞூறுதல்‌ வேண்டுமால்‌, 352

கருடனிடம்‌ கோதையார்‌, “*அரங்களார்‌ இன்று வருவேன்‌ என்று கூறினார்‌. ஆனால்‌ வரவில்லை. அரங்கன்பால்‌ இவற்றைக்‌ ong
அழைத்து வருக. அரங்கரை அழைத்து வந்தால்‌ யானும்‌ அவரும்‌ அமரும்‌ ஆத
னத்தில்‌ உன்னையும்‌ எழுந்தருளச்‌ ௦ செய்வேன்‌ ‘* என்று கூறினார்‌. இப்போதும்‌ ுரீவில்லிபுத்தூரில்‌ கருடாழ்வார்‌ அரங்கமன்னாருடன்‌ எழுத்தருளியிருப்பதைச்‌
சேவிக்கலாம்‌.

இன்னவா றழைத்துவந்‌ தெய்தி லாங்கவர்‌
தன்னொடும்‌ யானொரா தனத்து வைகுபோ
துன்னையு மந்தவா .தனத்தி னோக்கவே
_ மன்னுறப்‌ புரிகுவ னேனவ ழங்கினாள்‌. 353

வழங்குரை கேட்டவல்‌ வயின ஸூங்களித்‌
தீழங்குற லிக்கணஞ்‌ சார்ந்த ரங்கம்வாழ்‌
– முழங்குகார்‌ வணரையோர்‌ கடிகை மூன்‌ றினில்‌
கழங்குறு தருக்கையாய்‌ கொணர்உன்‌; காண்டியால்‌, 354

எனப்புகள்‌ றிருசிறை புடைத்தி யாதினுந்‌
தனக்குநேர்‌ தானலான்‌ தாவி வான்மிசை
மனக்கொடு வேகமோ டே வண்டுறை
.. புனைத்துழா யரங்கர்தாள்‌ போற்றி நிற்றலும்‌. 355

அரங்கன்‌ வினா.
எங்கிருந்‌ தெய்தினை யெனச்செஞ்‌ சக்கரம்‌
சங்கொடு மணிகரன்‌ சாற்ற மேருவாம்‌’
பொங்கரி ளனோங்கெழில்‌ பொருந்து மேனியான்‌
னிருசெவி யணுக வோதுவான்‌. 356

(வேறு)
பாதிமா மதியம்‌ புனைசடைச்‌ இவனும்‌
பங்கய மலருறை யயனும்‌
– ஆதிமா மறைகொண்‌ டனுதினதந்‌ துதிசெய்‌
தலர்சொரிந்‌ தடிமிசை வணங்குஞ்‌
சோதியே! விரிகா வீரியிரு புறமுஞ்‌
சூழ்ந்தபொன்‌ னரங்கநா யகனே!
மாதிரம்‌ புகழும்‌ புதுவை மாநகரி
னீருந்துவந்‌ தேனென வகுத்தான்‌. 357

என்னகா ரியமிங்‌ கடைந்ததென்‌ றுணரான்‌
எனவவ ஸியம்பவப்‌ புதுவைப்‌
பொன்னக ரிடைவாழ்‌ பொருந்துமப்‌ பெரியார்‌
புதல்விேகா தைப்பெயர்‌ புனைந்தாள்‌
நின்னுடை யெழிலுக்‌ குகந்தபே ரழகாள்‌
நிகழ்த்துமா றடைந்தனன்‌ எனவே
அன்னவள்‌ வடிவத்‌ தெழிலெலா மவர்கா
தறிவுறும்‌ வகையெடுத்‌ தறைவான்‌. 358

செளந்தர்ய லகரி
இருளொளிர்‌ மதிய முறிலகன்‌ தநிடும்‌;கார்‌
எனில்வெயர்ப்ப்‌ புதிர்த்துள மறுகும்‌;
பொருதிரை கொரழிக்கு மறலில்வெண்‌ மணலும்‌
பொருந்திடும்‌; சைவலங்‌ கூயும்‌;
மூருகவிழ்‌ மலரும்‌ நானமும்‌ புழுகும்‌
மு.திரகிற்‌ புகைகளுங்‌ கதுவிக்‌
‘கருநிறங்‌ கவினும்‌ வளர்குழல்‌ நிகராய்க்‌nகருதுதற்‌ யொதுமொன்‌ றிலையேல்‌. 359

கறைமிடன்‌ நூதற்க ணென்னச்‌ ிந்தூரங்‌
கவினுறத்‌ தீட்டுவா ணுதற்குப்‌
பிறைநிக ரென்னிற்‌ பிறைதனிற்‌ றிலதம்‌
பெறாமையிற்‌ பேசுத லெளிதாம்‌;
நீறைதுள வரங்க நினதுளங்‌ குழைக்க
நயனவம்‌ பேவுதற்‌ கெனவே
மறைமுதற்‌ இழவன்‌ வெஞ்சலை யெனவே
வகுத்ததோ?. புருவங்கண்‌ டிலனால்‌. 360

வேலெனில்‌ மழுங்கும்‌; வாளெனின்‌ மடியும்‌;
விடமெனி லரன்மிடற்‌ றொளிக்கும்‌;
சேலெனில்‌ நீருட்‌ பதுங்கிடும்‌; கயலின்‌
செய்கையு மஃதெனில்‌; அவள்தன்‌
பாலென்‌ வெளிறி நீலமொத்‌ திருண்டு
செவ்வரி பரவிமை தோய்ந்து
காலனிற்‌ கொலைசெய்‌ தொழில்பயின்‌ றுளகூர்ங்‌ ‘ கண்ணினுக்‌ கொப்புக்காண்‌ கலனால்‌. 361

கொள்ளையபோர்‌ ‘புரியுங்‌ ‘கூரிய வேற்கண்‌
கூடுறுஞ்‌ செவிதனக்‌ குவமை
வள்ளையென்‌ றுரைக்கின்‌ மகரமாக்‌ குழைகள்‌
மருவிடா; வேறுமொன்‌ நிலையால்‌;
கள்ளவிழ்‌ மலரைங்‌ கணைமதன்‌ நிருத்தேர்‌
கடாவுதற்‌ கமைத்தவீ இகொலோ?
எள்ளினன்‌ மலரோ? குமிழ்கொலோ? அவள்மூக்‌ .ஃ
te – இணையென யாதினை யிசைப்பாம்‌?. : 362

மண்ணவர்‌ விபுதர்‌ விஞ்சைய ரூரகர்‌
மதன்முத வினர்வடி வழகைக்‌
கண்ணீனால்‌ நோக்கற்‌ சென்னவே அயனார்‌
அமைத்தகண்‌ ணாடியோ கபோலம்‌?
பண்ணினின்‌ னிசையைக்‌ கன்னலை அமுதைப்‌
பாகினைத்‌ தேனினை வெகுண்ட
பெண்ணினுக்‌. கணங்கின்‌ கிளிமொழிக்‌ குவமை.
.”….. பெற்றுள தேதென வுரைப்பாம்‌. 363

முல்லையி னரும்பை முருந்தினை முத்தை
முகிண்முலைத்‌ தடங்கண்மெல்‌ லியல்தன்‌
பல்லினுக்‌ குவமை யுரைத்திடி லதன்பாற்‌. ட
பரவுசெங்‌ .காவிதோய்ந்‌ இலையால்‌; –
சொல்லில வலரிற்‌ றூதுளை _
தொண்டையங்‌. கனிகளி லமழுதம்‌
இல்லையா தலினான்‌ மதுரமூ றிதமுக்“தஇணையென வுரைக்குமா றெளிதோ? – 364

முழுமதி தனக்கோர்‌ முயற்கறை கதுவும்‌;
முளரியில்‌ வண்டினந்‌ துவைக்கும்‌;
வழுவிலா நிறைகற்‌ பருந்ததிக்‌ கருள்வாள்‌
வதனத்துக்‌ கணையெதை வகுப்பாம்‌?
விமுகதிர்‌ பாளை மடலவி மாத
கமுகமோ? நினதுகை மேவும்‌
பழுதிலா வளையோ? கந்தர மதனை
யாதெனப்‌ பகர்ந்திட லாமால்‌? 365

பூரண கலசம்‌ அதன்மிசை யணிந்த
பூர்தொடை பொலிதலைப்‌ பொருவ
வாரணி தனங்கண்‌ மிசையுறக்‌ கவிந்து
வளைந்தவேய்‌ நிகர்தடந்‌ தோளாள்‌;
சீரணி யரங்கத்‌ இறைவ[நின்‌ புகழ்கள்‌
இருத்துநா ரதன்செழுங்‌ கரங்கொள்
ஏரணி யாழ்முன்‌ கைக்குநா ணிடுமென்‌
றிசைக்கின்மற்‌ றெவைநிக ரிசைப்பாம்‌? _ 366

திங்களி னொளியாற்‌ பங்கயம்‌ மலரும்‌;
செமித்தசெங்‌ காந்தளின்‌ அரும்புஞ்‌
செங்கதி ரோளிக்குங்‌ குவியுமால்‌; அங்கைக்‌
கணையெனச்‌ செப்பவே றிலையாஷ்‌;
அங்குலிக்‌ கணையாய்ச்‌ செங்கணங்‌ கெளிற்றை
யறையலாம்‌; செழுமலர்ச்‌ சோலைப்‌
பைங்கிளி யணிழுக்‌ கதனையம்‌ மடவாள்‌
நகறிகர்‌ பகருத லெளிதால்‌. 367

சக்கர வாகஞ்‌ சறைகொளும்‌; இளநீர்‌
சந்தன மணிதந்திடா; சூதின்‌
மிக்கவட்‌ டதுதான்‌ வெட்டுணும்‌; கலசஞ்‌
சுணங்குறா; மேருமா வரைதான்‌
நக்கனால்‌ வளையும்‌; நளினமென்‌ முகைதான்‌
நாயிறாங்‌ குதித்தகா லலரும்‌;
மைக்கருங்‌ குழலாள்‌ மணிகணார்‌ தனத்துக்‌
கேதினை யிணையென வகுப்பாம்‌? 368

புடவியை முதலா மனைத்தையும்‌ மகட்டுள்‌
பொருந்திநீ விளங்குகண்‌ வளரும்‌
வடவிலை யதனை யொருமழுறை யவள்தன்‌
வயிற்றினுக்‌: இணையென லாகும்‌;
கடலெழு தரங்கம்‌ வரையென லாகும்‌;
கட்டெறும்‌ பூர்மயி ரொழுங்காம்‌;
துடியதோ? தந்தோ? அனங்கவே ளூருவோ?
யாதெனத்‌ தொகுக்கலா . மிடையே? 369

நீருறு சுழியை யுந்தியை நிகராய்‌ நிகழ்த்துதல்‌ அரிது;நீர்‌ வளரிப்‌
பேரராப்‌ பணமோ? இனித்ததேன்‌ கூண்டோ?
பெருகுபோர்‌ மதனன்பொக்‌ கஇசமோ?
தேரதோ? வாச நிலைகொலோ? பரந்த
செம்பொ னாலவட்‌ டமதோ?
வாருறை தனத்தா எல்குலா மதனை
யாதென வகுத்துரைத்‌ திடலாம்‌? 370

வாழையோ? மோகக்‌ கடலினைக்‌ கடக்க
வகுத்திடுந்‌ தெப்பமோ? வசஞ்செய்‌
வேழமா மதனைப்‌ பிணித்திடுந்‌ தறியோ?
மென்றொடை யாதென விசைப்பாம்‌?ஆழியைக்‌ கரந்தந்‌ தாழிசூ மிலங்கைக்‌ ட்ட
கன்றுநீ செல்கென விடுத்த ‘ ்‌ ்‌
பாழியந்‌ தடந்தோள்‌ தூதனை மருட்டும்‌
பரிசமை யணிமுழந்‌ தாளாள்‌. 371

சனைவரால்‌ கணைக்கா லென்னலாம்‌; கமடஞ்‌
செப்பலாம்‌ புறவடிக்‌ இணையாய்‌;
நினையுன தழகுஞ்‌ தனதுமா வழகும்‌ நிறுத்தறிந்‌ திடுமுறை முளரி மனையுறை யயன்‌ றான்‌ வகுத்திடுஞ்‌ துலையோ?:
மற்றவள்‌ பரடு;மென்‌ குஇக்குப்‌
புனைமலர்க்‌ குழலா ராடுகந்‌ துகந்தான்‌
பொரும்விரற்‌ றுகிரென லாமால்‌. , . 372

தேங்கம ழனிச்ச மலர்மிசை நடந்தோ? —
செய்யபஞ்‌ சூட்டியோ? கரத்தால்‌
பாங்கியர்‌ வருடப்‌ பொறாமையி னாலோ?
பாரெலா :மலைந்துபோர்‌ வயங்கொள்-

பூங்கணை மதனன்‌ மகுடமா முடிமேல்‌
பொருத்தியோ? யாதினோ சிவந்த?
மாங்குயின்‌ மொழியா ளன நடை வனச
மலரடிக்‌ கொப்புவே நிலையால்‌. 373

இந்தமா வடிவத்‌ தருந்ததி கற்பி னிரும்புவிப்‌ பொறைத்திரு வெழில்சேர்‌
அந்தமா இனைநீ மணம்புரி வதற்கின்‌
றணைவையென்‌ றாங்கவ ளூடனே
முந்துநாள்‌ நவின்ற தாகவவ்‌ வதுவை
முடிப்பதற்‌ கியாவையு மமைத்துத்‌
தந்தியன்‌ றுரித்தோன்‌ முதலினோர்‌ சார்ந்துன்‌
றன்வழி பார்த்திருக்‌ .இன் றார்‌. 374

ஆதலாற்‌ புதுவை நகர்க்குகந்‌ தணுகா யாயிடிற்‌ பெரியரோ டந்த
கோதையே முதலோர்‌ பொறுத்திடன்‌ முடியாக்‌
கொள்கைய ராவர்‌;என்‌ புயத்தின்‌
மீதமர்ந்‌ இடிலிக்‌ கணமவண்‌ கொடுபோய்‌
விடுகுவ னேறுக வெனவிப்‌
பூதனை யெடுத்துண்‌ டுமிழ்ந்திடந்‌ தளந்தோன்‌ பொன்னடி பணிந்துநின்‌ றனனால்‌. ‘ 375

அரங்கன்‌ புதுவையை அடைக்தான்‌
நின்றவன்‌ புயமேற்‌ பொன்மலை மிசையோர்‌
நீலமால்‌ வரைபடிந்‌ தெனலாய்‌
நன்றென மகழ்வோ டரங்கம்வா மிறைவன்‌
நணுகலு மேந்திவான்‌ வழியாய்ச்‌
சென்றுதன்‌ மனமும்‌ பிற்பட விசைத்துச்‌
செஞ்சிறை புடைத்திடும்‌ வளியால்‌
குன்றொடுந்‌ தருவேர்‌ பரிந்துபின்‌ தொடரக்‌ ‘கோதிலாப்‌ புதுவைசென்‌ றடைந்தான்‌. 376

அடையுமா முகில்நே ராழிமா தவனை
யாழியை மந்தர வரையால்‌
கடையுநா ளெழுந்த வமுதினைக்‌ கண்ட
காட்சியிற்‌ கண்டுளங்‌ கனிவாய்‌
சடையவ ஸனயனிந்‌ திரன்முதற்‌ பலருஞ்‌
சயசயென்‌ றடிதொழு தவர்மேல்‌
மடைதிறந்‌ ‘ தருளார்‌ கடைக்கணித்‌ தருளி
வயினனம்‌ புயத்தைவிட்‌ டிழிந்தான்‌. . 377

மீனமார்‌ கடல்போற்‌ றுந்துமி முழக்கி ‘
விண்ணவர்‌ மழையெனப்‌ பொழியும்‌
தேனமர்‌ மலரின்‌ பந்தரின்‌ நிழற்கீழ்த்‌
தேவார்கோன்‌ பாதுகை தாங்கப்‌
போனகங்‌ கடுவோன்‌ விதியிரு புறத்தும்‌
புகுந்துகை லாகுதந்‌ தடைய
வானக மளவா. யுயர்ந்தபொன்‌ மணியார்‌
வடபெருங்‌ கோயில்புக்‌ கனனால்‌. . 378

புக்கபின்‌ னாங்கோர்‌ செழுமணி யினங்கள்‌
பொருந்துமண்‌ டபத்தின்மத்‌ இயினோர்‌ .
தக்கவா தனமேல்‌ வெண்குடை. நிழற்றச்‌
சாமரை யிருபுறம்‌ இரட்ட
மிக்கசர்‌ மதிவீற்‌ றிருந்தென விருந்தான்‌;
மீனினம்‌ பலவிளங்‌ குவபோல்‌
அக்கர வணிந்தோன்‌ முதலினோர்‌ பலரு
மமையுமா தனத்தரு கஇிருந்தார்‌. 379

இருந்த வவ்வமைதி யிந்திரன்‌ வதனம்‌
இடைச்சிய ௬டைகவர்ந்‌ தெடுத்துக்‌
குருந்தமீ தடைந்த கோவல ஸஜனோசக்கிக்‌
கோதிலாப்‌ பெரியர்பாற்‌ குறுடக்‌
கருந்தட நயனக்‌ கோதையாள்‌ தனையாம்‌
கடிமணம்‌ புரிந்திடு வதற்குப்‌
பொருந்துமா நுரைத்து வருகவென்‌ நிசைப்பப்‌ புரிவனம்‌ முறையெனப்‌ போனான்‌. 380

போனவன்‌ ‘விரைவிற்‌ பெரியவாழ்‌ வார்தம்‌
பொன்மனை புகுந்துநின்‌ மகளாம்‌
மாவினோக்‌ கனளை யரங்கநா யகனார்‌ os
மணஞ்செய்வா னடைந்திருக்‌ கின்றார்‌;
ஆனதா லுனதுள்‌ ளறிகுவா னவரின்‌
றனுப்பவந்‌ தனன்புக லெனுமவ்‌
வானவ ரரசன்‌ றிருமுகம்‌ நோக்கி –
ட மற்றவன்‌ இதைவகுத்‌ துரைப்பான்‌ 381

மூன்னர்நா ஸிழைத்த அருந்தவத்‌ தீன்ற முயற்கறை யிலாமதி முகத்தென்‌
கன்னியைத்‌ கருவே னென்னயாத்‌ திரையாக்‌
கடிநகர்க்‌ கேகிய ஞான்றில்‌
அன்னவற்‌ குரைத்த தொனியுமஃ தறிவாய்‌; i
ஆதலா லம்மொழி மறுத்துப்‌
பின்னரொன்‌ நுரைப்ப துளகொலோ? எனதும்‌ ‘ : பெற்றிகண்‌ டறிந்திலாய்‌ போலும்‌! 382

அளித்திடு வதனுக்‌ கையமொன்‌ றிலையா
லாங்குநீ விரைந்தடை.ந்‌ தியானை
விளித்தமா முதலை யழைத்து வாவெனலும்‌
மீண்டவன்‌ கடிதுசென்‌ றருந்தேன்‌ ‘
துளித்தபைந்‌ துளவோ ஸனம்புய மலரின்‌
துணையடி வணங்கியப்‌ பெரியார்‌
களிப்புடன்‌ மகளைத்‌ தருவதற்‌ சசைந்தார்‌கடிதெழுந்‌ தருள்கெனப்‌ பணித்தான்‌. ” 383

பணித்தசொற்‌ றன்து திருச்செவி யுறலும்‌ பரிவினோ டாங்குவீற்‌ நிருந்த
மணித்தவி சனைவிட்‌ டெழுந்தழ தெறிக்கும்‌
மரக;தச்‌ சவிகைமேற்‌ பொருந்தித்‌
திணித்தட வரைத்தோட்‌ கணிச்சியன்‌ முதலோர்‌
சேர்ந்திரு புறத்தினும்‌ நெருங்கக்‌
கணித்தநான்‌’ முறைநல்‌ லோரையிற்‌ பெரியார்‌
கனகமா ளிகைகலந்‌ தனனால்‌, 384

கலந்தமா தவனைக்‌ கண்டவப்‌ பெரியார்‌
கனலிகா ணம்புய மலரின்‌
மலர்ந்திட வதன முளங்களி துளங்க
வந்தெதிர்‌ பணிந்துநீ வருக
நலம்புரிந்‌ துளதிக்‌ குடிகொலோ? கோதை
நங்கையோ? அடியனோ? நாயேன்‌
குலங்கொலோ? உணரேன்‌; எளப்புகழ்ந்‌ தேத்திக்‌
குருமணித்‌ தவிசினுய்த்‌ தனனால்‌. . 385

அரங்கன்‌ மணக்கோலம்‌
தஞ்சமென்‌ றடியிற்‌ றாழ்ந்துளோர்க்‌ கெல்லாம்‌
தாமரைக்‌ கடைக்கணித்‌ ததற்பின்‌
அஞ்சன வண்ண ஸெழுகநன்‌ முகூர்த்த
மகலுமுன்‌ றிருமண முடிப்பான்‌:மஞ்சன .மாட வேண்டும்நீ யெனவவ்‌
வானவற்‌ கிறைவனுஞ்‌ இவனுங்‌ |
கஞ்சனு மணிநீ ராடுமண்‌ டபத்துட்‌
கடி. துகொண் டடைந்தனர்‌ மாதோ. 386

தாண்டிய தரங்கப்‌ பெருகடல்‌ நீருஞ்‌
சத்தமா. நதிகணீர்‌ முதலாய்‌
– வேண்டுவ வருவித்‌ தவற்குநீ ராட்டி மெய்யெலாம்‌ பட்டினாற்‌ றடவி
மீண்டலங்‌ கரிக்குங்‌ கூடமுட்‌ கொடுபோய்‌
விளங்குபொன்‌ னுடைமுடி முதலாம்‌
பூண்டயங்‌ கஇிடுமா றணிந்துசந்‌ தனமும்‌
பூந்தொடை முதலெலாந்‌ தரித்தார்‌. _ 387

திருமணக்‌ கோல்‌ மமைத்தபின்‌ பவர்பூஞ்‌
செங்கர மணிவிர லதற்குள்‌
ஒருவிர லதனைச்‌ சங்கரன்‌ பிடித்திட்‌
டுவப்பொடு மழைத்துவந்‌ தனனவ்‌
்‌ விரு௨ரு மிருபா’ லினுமிரு புயமு
மேத்தி௦யெச்‌ சரிக்கையோ டெழிலாம்‌
குருநவ மணிக எளிழைத்தகல்‌ யாண
மண்டப முட்கொடு புகுந்தார்‌. 388

புகுந்தவ ணமைத்த பைம்பொனா தனமேற்‌
பொருந்துறக்‌ குணதிஎ.௪ முகமாய்‌
-மூகுந்தனை யிருத்தித்‌ தமதுமா மடவார்‌
.முகந்தனை .நோக்கவாங்‌ கவரும்‌
மிகுந்தவன்‌ பொடுபோய்க்‌ கோதையைக்‌ கொணர்ந்தல்‌
வேதநா யகன்வலப்‌ புறத்தில்‌
தகுந்தவம்‌ முறையோ ராதன மிசையே
சார்வுற இருத்தினர்‌ மாதோ. 389

ஏற்றனன்‌
தூரிய வசைகள்‌ கறங்கிடு முழக்குஞ்‌
சுரிமுகங்‌ களினெழு முழக்கும்‌
* ஆரியர்‌ வாழ்த்தும்‌ மங்கல வொலியும்‌
அருமறை முனிவரோ தொலியும்‌
வாரியின்‌ முழங்கப்‌ பெரியர்வந்‌ தென்பெண்‌
கோதையை வழங்கின னுமக்கென்‌
Cont கரத்தும்‌ நீர்பொழிந்‌ தளித்தான்‌
உலகளந்‌ தவனுமேற்‌ றனனால்‌. 390

மாதவன்‌ மங்கல நாண்‌ புனைந்தான்‌
– மருவமை முளரி மலருறை யயனார்‌
மங்கலச்‌ சடங்குகள்‌ உழுவா
தருமறை முறையில்‌ பலவுமாங்‌ இயற்றி
யாவீனெய்‌ சொரிந்தெரி வளர்த்தித்‌திருமரு -மார்பன்‌ கோதையாள்‌ கழுத்திற்‌
இருந்துமங்‌ இலியமங்‌ கரத்தால்‌
பொருவுமா றணிந்தான்‌; அந்தரத்‌ தவர்கள்‌
பூமழை பொழிந்துவாழ்த்‌ தினரால்‌. 391

மற்றுள சடங்கு நடந்தபின்‌ பெரியார்‌
மகிழ்ந்துபல்‌ லாண்டெடுத்‌ தோதப்‌
பொற்றொடி மடவார்‌ பலர்இரண்‌ டிசை?ர்‌
பொருந்துசங்‌ சர்த்தன மிசைப்ப
விற்றிரு நுதற்சூ டிக்கொடுத்‌ தவள்்‌ தன்‌
மெல்வீரல்‌ பிடி த்தம்மி மிதித்திட்‌
டுற்றெழு சனலை வலம்புரிந்‌ தாழி
யுதகமார்‌ குடத்திலிட்‌ டெடுத்தே; 392

எதிருற அடையு மருந்ததி தனையு
மெழிற்கணா னோக்கவந்‌ திருப்ப
. . ..மதிதவழ்‌ சடையா னெழுந்துவெண்‌ பொரிகை
்‌ வாரியிட்‌ டிடுதலு மஇழ்வாய்‌
கதிர்செயு மணி3மா இரமழ குறவாங்‌
கவர்இரு விரற்கணிந்‌ தெவரும்‌
அதிசய முடனே துதிசெய மடவா ்‌
-ராலநீர்‌ சுழற்றிட வெழுந்தார்‌. 393

எங்கிருந்‌ தெம்மாப்‌ பொருளையு மெடுத்திட்‌
டெய்திடு மிரவலர்‌ பலர்க்கும்‌
தங்கண்மா மனதுள்‌ வெறுப்புறும்‌ வகையோர்‌
சாமமா மளவுமோய்‌ வீலதாய்ச்‌
செங்கன கமுமா மணியும்பட்‌ டுடையுஞ்‌
செழித்தவா பரணமும்‌ பிறவும்‌
மங்குலி னுதவி யறுசுவை பதார்த்த
வகையமு தியாவரு மருந்தி; 394

வெண்கரி யத்னை யலங்கரித்‌ ததன்மேல்‌
வீதியிற்‌ கோலமாய்‌ விளங்கி
மண்படு துகளுந்‌ தூரிய வொலியும்‌
வானகம்‌ ‘போர்த்திடப்‌ பலருங்‌
கண்படு காட்சிக்‌ கடங்குறா வணம்‌அ௮க்‌
கடி நகர்‌ முழுவதும்‌ வலமாய்‌
விீண்படு கனக மாளிகை யதனின்‌
மேவினார்‌ மீட்டுமின்‌ பு.றவே. 395

விஞ்சொளி மணிகள்‌ பைம்‌பொனி ஸனிழைத்து
விளங்குறச்‌ சித்திர வறைக்குள்‌
அஞ்சன வண்ணத்‌ தரங்கநா யகனும்‌ .
2 அனநடைக்‌ கோதையும்‌ புகுந்து
பஞ்சணை மருவிக்‌ காமமாங்‌ கடலிற்‌
படிந்தின்ப நறவமுண்‌ டுறங்கிச்‌
செஞ்சுடர்க்‌ கதிரோன்‌ குணகட லெழலுஞ்‌
செழித்தபஞ்‌ சணையைவிட்‌ டெழுந்தார்‌. 396

ஆழ்வார்‌ சீர்வரிசை செய்தல்‌
அனங்கவேள்‌ தனைவென்‌ றுளபெரி யாழ்வார்‌
அரங்கமா நகரிற்பைந்‌ தலைகொள்‌ ல >
சனங்கெழு மரவிற்‌ .றுயிலுமா தவனார்‌
சேர்ந்துதன்‌ இிருமக ளாகுங்‌
கனங்குழை கோதை தனைமணம்‌ புணர்ந்த
காட்சியைக்‌ கண்டுகண்‌ களித்து
மனங்கொளா மடஒழ்வுற்‌ றவர்க்கரு ளிடுஞ்சீர்‌
வரிசைகள்‌ பலவுமீந்‌ தனரால்‌. 397

சய்ந்தபின்‌ பலவா முபசரிப்‌ புடன்றன்‌ ட்டா
இணையடி தொழுதிடும்‌ பெரியார்‌ _
வாய்ந்தவம்‌ புயமா மலர்முகம்‌ நோக்கி,
மாதவன்‌, மறைமுதற்‌ பலநூல்‌
ஆய்ந்தநல்‌ லுளத்தோ யினிச்சில நாளின்‌
“அரங்கமா நகரம்வந்‌ தணைகென்‌்
ஹேய்ந்தநல்‌ லுரைகள்‌ பலபல வாக
எடுத்தவன்‌ களிப்புற விசைத்தே; ்‌ 398

மணமக்கள்‌ அரங்கம்‌ அடைந்தனர்‌
“ மாதினுக்‌ கரசாங்‌ கோதையா ளஞூடனே
வயினனா மேறுவெற்‌ பதன்தோள்‌
மீதெழுந்‌ தருளி யரங்கமா நகர
மேவிவாழ்தந்‌ இருந்தனன்‌; விரிஞ்சன்‌
பூதமார்‌ படையோன்‌ புரந்தரன்‌ முதலாம்‌
; புலவர்க ளாதிமற்‌ றெவரும்‌
தீதிலாத்‌ தத்தம்‌ மடந்தைய ௬டனே ்‌
சேர்ந்துதம்‌ பதியில்வாழ்ந்‌ தனரால்‌, 399

(வேறு)
அனையவர்‌ யாவரு மகன்ற பின்னரின்‌
வினையற நோற்றவவ்‌ விட்டு சித்தனும்‌
கனைகுரன்‌ முரசதீர்‌ கனக மாளிகை
புனைகொடி. விசும்பினார்‌ புதுவை வைகினன்‌. 400

ஆழ்வார்‌ அரங்கம்‌ அடைதல்‌
பற்பல நாளகன்‌ றதற்பி னோர்பகல்‌
“ வெற்பமை வடபெருங்‌ கோயின்‌ மேவியே
சற்பமேற்‌ றுயில்வட பத்ர சாயிதன்‌
பொற்பதம்‌ பணிந்திவை புகல்வ தாயினான்‌: 401

விரிபுக ழரங்கமுள்‌ விளங்கிக்‌ கண்வளர்‌
வரியர வணையினான்‌ வருக வென்றெனைப்‌
பரிவொடு மற்றைநாள்‌ பணித்த தற்கியான்‌
புரியவேண்‌ டுவதெனோ புகல்கி யென்றனன்‌. 402

என்னலும்‌ யாமுவவ்‌ வெழில ரங்கரும்‌
ஒன்றென வுளந்தெளிந்‌ தொளிய ரங்கமுள்‌
சென்றணைந்‌ தாங்கவர்‌ செப்பு மம்முறை
நன்றெனப்‌ புரிகென விடையும்‌ நல்கினான்‌, 403

நல்கிய விடைகொடு நளினம்‌ போன்முகம்‌
மல்கிடப்‌ புதுவைமா நகரம்‌ நீங்கியே
பல்கலைக்‌ கேள்வியர்‌ பரவுங்‌ ௯டல்சேர்ந்‌
குல்கலி லழகர்பொன்‌ னடிவ ணங்கியே; 404

விழைவொடு மாலிருஞ்‌ சோலைமே விக்கள்‌
ளழகரம்‌ புவிமல ரடிவ ணங்கியே
முழவொலி யுருமென முடுகிூப்‌ புற்றரா
நுழையரங்‌ கந்தனை நோக்கிப்‌ புக்கனன்‌. . 404

புக்குநல்‌ இருவடி போற்றி நின்றவத்‌ குக்கசீர்ப்‌ பெரியர்தா மரையின்‌ றண்மலர்‌
ஒக்குமா முகந்தனை நோக்கி யொண்கதகுர்‌
சக்கரக்‌ கரவரங்‌ கேசர்‌ சாற்றுவார்‌? 406

ஈங்கொரு கோயிலொன்‌ றநியற்றி யெம்மையித்‌
தேங்குழற்‌ கோதையைக்‌ கருட தேவனைப்‌
பாங்குற விக்ரக மாகப்‌ பண்ணியே
ஆங்கொரா சனமிசை யணுக வைத்தரோ; 407

பத்தியோ டுச்சவா திகள்பல்‌ பூடணம்‌
நித்யவா ராதனம்‌ நிகழ்த்தும்‌ யாவையும்‌
ஒத்திடப்‌ புரிந்திவ ணுறைதி யென்னலும்‌ அத்தகை புரிந்தவ ணணுகு நாளிடை) 408
ஆழ்வார்‌ திருநாடலங்கரித்தார்‌
கோதில்பூ மாலை சூடிக்‌ கொடுத்தவம்‌
மாதுமுன்‌ னிலைத்திரு மந்தி ரந்தனை ஓதியப்‌ பெரியரு மொருதஇி னத்திடை
ஆதிநா ரணன்இரு வடிய டைந்தனர்‌. 409

கோதையாரின்‌ பாசுரம்‌
அன்னவ ஞூரைத்தபா மாலை யாமதை
– துன்னிய வன்பொடுந்‌ துதித்து நாவினாற்‌
பன்னியுங்‌ கேட்டுமிப்‌ படியின்‌ மீதுளோர்‌
மன்னின ரனேகர்‌ வைகுந்த மாதகர்‌, 410

(வேறு)
உரையப்‌ பாமா லையிற்றிருமா
லுறையும்‌ பதிகள்‌ பதினாறாம்‌
அரங்கம்‌ பிருந்தா வனங்குடந்தை
யணியா ரெமுனைக்‌ கரைக்கண்ண
புரமா லிருஞ்சோ லைவில்லி
புத்தூர்‌ பாண்டி வடம்வ௪ைம
துரைபத்‌ தவிலோ சனந்துருவேங்‌
கடஞ்சீர்‌ துவரா பதியோடும்‌; 411
(

வேறு)
நீரார்‌ பாற்கடலும்‌ — ஏரா ராய்ப்பாடிப்‌

பேரார்‌ வைகுந்தம்‌ — சீர்கோ வர்த்தனமே. 412

ஆண்டாள்‌ சிறப்பு
(வேறு)
. . உலகந்‌ தனில்வாழ்‌ மானிடற்குள்‌
உயர்ந்த பெரியோர்‌ முனிவர்களாம்‌;
இலகு மூனிவோர்‌ தமக்குயர்ந்தோ
ரெழிலாழ்‌ வார்க ளாம்‌;அவற்குள்‌
நலமார்‌ பெரியாழ்‌ வாருயர்வாம்‌;
அவர்க்கும்‌ நாச்சி யாரென்னும்‌
திலக நூதற்சூ டிக்கொடுத்தா
ளுயர்வாம்‌ அதன்செய்‌ கையுந்தெரிப்பாம்‌. 413

இனிதாம்‌ புண்ய மிதுபாப
மிதுநன்‌ மைகளீ திதுதின்மை
அனியா யந்௫ திதுநியாய
மெனவே யனைத்து மறிவகையாய்‌
முனிவோர்‌ பலசாத்‌ திரநூல்கள்‌
புகன்ற முறையா லிவ்வுலகின்‌
மனிதர்‌ தமக்குள்‌ எம்முனிவோர்‌
பெரியோ ரெனவைக்‌ கப்படுமால்‌. 414

காயைத்‌ தின்னு மவர்தமக்குக்‌
கனியைத்‌ தருமங்‌ கவர்போல
மாயைத்‌ தொடர்புள்‌ ஞழல்வோரம்‌
மயக்கைக்‌ கழிக்கும்‌ வகையயனாஞ்‌ : சேயைத்‌ தருமுத்‌ தியங்கமலத்‌
திருநா ரணனைச்‌ செப்பியீடும்‌
ஆய வாற்றா லாழ்வார்கள்‌ –
முனிவோர்க்‌ கதிக மெனவறைவார்‌. 415

மாயன்‌ றனக்குக்‌ கண்‌இிட்டி
வாரா வகைகாப்‌ பணிந்திடுமா
றாய பல்லாண்‌ டினையிசைத்தும்‌
அவரே பரமா மெனவிசைத்திட்‌
டேய கிழியும்‌ அறுத்ததனா
லிசைக்கு மாழ்வார்‌ தங்களுக்குள்‌
தூய பெரியாழ்‌ வார்பெரியா
ரெனவே சொல்லும்‌ முறைதெளிமின்‌. 416

சூடும்‌ நறும்பூ மாலைகளுஞ்‌
_. சுருபம்‌ பெண்ணாய்ப்‌ பத்தியொடும்‌
பாடு மிசைசேர்‌ பைந்தமிழின்‌
பாமா லைகளும்‌ பணவரவின்‌
ஆடுந்‌ திருமாற்‌ களித்தவரைப்‌ புணர்ந்த வதனா லருவினையைச்‌
சாடும்‌ பெரியாழ்‌ வாற்குமவள்‌ பெரியாள்‌ எனவே சாற்றுவரால்‌. 417

மலர்மாலையைச்‌ சூடிக்‌ கொடுத்ததனாலும்‌,
பெண்ணாகப்‌ பிறந்ததால்‌ காதல்‌ பள்ளமடையாயிருத்தலினாலும்‌, பெருமாளைத்‌
திருமணம்‌ செய்துகொண்டமையாலும்‌ சூடிக்கொடுத்த சுடர்க்‌ கொடியே
பெரியவள்‌

இந்தக்‌ கதையைப்‌ படித்தவரும்‌
எழுது மவரு மிதன்பொருளைச்‌
சிந்தை தெளிய வுரைப்பவருங்‌
கேட்கும்‌ செய்கை யுடையவரும்‌
முந்தை வினையைக்‌ களைந்துபத்தி
முயன்று பலபாக்‌ கியங்களொடும்‌
மைந்தர்ப்‌ பெருஞ்செல்‌ வமுமடைந்து.
கடையிற்‌ பதவி மன்னுவரால்‌. 418

ஆசாரியர்களின்‌ வரலாறு பேசுவோம்‌
புதுவைப்‌ பெரியாழ்‌ வார்மகளாய்ப்‌
புவிமா துதித்திட்‌ டரங்கர்தமை
வதுவை புரிந்த சரித்ரமதின்‌
வகைகள்‌ பலவும்‌ விரித்துரைத்தோம்‌;
இதுகா றாழ்வார்‌ களின்சரிதம்‌;
இனியா ரியாக எளியற்சரிதம்‌;
அதனுள்‌ நாத முனிசரிதம்‌
அதனை யிவ்வா றெனவறைவாம்‌. 419

ஆண்டாள்‌ திருவவதார அத்தியாயம்‌ முற்றும்‌.
(முதலாம்‌ காண்டம்‌ முற்றும்‌)
ஆழ்வார்‌ எம்பெருமானார்‌ திருவடிகளே சரணம்‌,

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராமன் -எத்தனை ராமனடி -ஸ்ரீ அயோத்யா ராமன் வந்தார் ஐயா-

June 22, 2024

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்…
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்!
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்!
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்…
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்!
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி?
ராமன்… எத்தனை ராமனடி?

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்…
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்!
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்!
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்…
வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்!
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்… ராமன்!

ராமன்… எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
ராமன்… எத்தனை ராமனடி?

வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
வம்சத்திற்கொருவன் ரகு ராமன்!
மதங்களை இணைப்பவன் சிவ ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீ ராமன்!
முடிவில்லாதவன் அனந்த ராமன்!

ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!
ராமஜெயம், ஸ்ரீ ராமஜெயம்!
ராமனின் கைகளில் நான் அபயம்!!

ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்!

ராமன்… எத்தனை ராமனடி!

————-

1-ரகு ராமன் -தான பிரபு

2-கோசல ராமன்

3-தசரத ராமன்

4-ஸூர்ய ராமன் -ராம திவாகரன் -உள் இருக்கும் அறியாமை போக்கும் -ஸீதா தேவியே ஒளி-அநந்யா ராகவே அஹம் பாஸ்கர -ஸூர்ய வம்சம்

5-சந்த்ர ராமன் -ராமசந்திரன் -16 கலைகள் -16 கல்யாண குணங்கள்

6-பால ராமன் -வஸிஷ்டர் இடம் கற்றவர்

7-ரஷக ராமன் -யாக ரக்ஷணம்-கண்ணை இமை காப்பது போல் -இருவரும் ரக்ஷணம்-

8-பாவந ராமன் -அகல்யை -பூதராக்கிய -காகுத்தன் கழல் துகள் -பட்டு -பதித பாவந ஸீதா ராமன்

9-ஸீதா ராமன்-மாலை போல் அனாயாசன வில்லை எடுத்து –
வில் தானே முறிந்து திருவடி ஸ்பர்சம்

10-கோதண்ட ராமன்

——

11-அயோத்யா ராமன் -பூமா தேவி திருக்கல்யாணம்-ராமனைப் பெற்ற குற்றம் இச்சா மோஹ-இத்யாதி

12-ஸத்ய ராமன்-அரசன் -ரசம் இல்லா மன்னன் இயம்பினன் -நின் பணி மறுப்பனோ -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதே

13-வன வாஸ ராமன்–ஜடா முடி தரித்து -ஆலம் பால் -ஆலமரத்தில் இருந்து குகன் கொடுக்க – -குகன் ஸஹ்யம் -திருச்சேறையில் ஸேவிக்கிறோம்

14- பாதுகா ராமன்-யோக க்ஷேமம் இரண்டையும் அளிக்க-இதுவே ரக்ஷை பாதுகாப்பூ பாதுகாப் பூ

—–

15- வேத ராமன் -தண்ட காரண்ய ரிஷிகளைக் காத்து அருளி

16-மாதுர்ய ராமன் -பாத்ம புராணம் -ரிஷிகள் மயங்கி -ஆலிங்கனம் அனுக்ரஹம் பிரார்த்திக்க -கிருஷ்ணன் கோபிகள் –

17-வல் வில் ராமன் -கர தூஷண நிரசனம் அஸஹாய சூரன்-தோலாத தனி வீரன்

18- முகுந்த ராமன் -ஜடாயு மோக்ஷம்-ஆயுஷ்மன் -பத்ரம் தே -விந்தம் முஹூர்த்தம் -அப்படியே திரும்பி வருவாள்-கச்ச லோகம் அநுத்தம

19-ஸூலப ராமன் -ஸபரி தேடி வந்து -தந்த கனி உகந்து -மோக்ஷம் செல்வதை ஸாக்ஷி -ராமன் மனதுக்கு இனியான் -அர்த்தம் தேடி வருவான் -நம்மூருக்கும் வருபவன்

———-

20 தர்ம ராமன்-வாலி வதம் –

21-காருண்ய ராமன் -சுக்ரீவன் மழைக் காலம் -தாரை -லஷ்மணன் -நன்றி கெட்டவன் சடலத்தை பருந்தும் தீண்டாதே –

—————–

22-ஆத்மா ராமன் -தத்வம் உணர்த்தி -இந்திரியங்கள் -தச -ஸம்ஸாரம் பிறவி பெரும்கடல் அசோக வனம் சரீரம் -முக் குணங்கள் விபீஷணன் ராவணன் கும்பகர்ணன்-ஆச்சார்யர் அபிமானமே உத்தாரகம் –

23-ஸூந்தர ராமன் -கண்டேன் ஸீதையை -ஆலிங்கனம் செய்து அருளி -தன்னையே தந்த கற்பகம் –ஸூந்தரன் -அஞ்சனா தேவி சாத்திய திருநாமம் -பந்தர் ஹிந்தியில் குரங்குக்கு

—————-

24- தர்ப்ப சயன ராமன் -கரும் கடல் நோக்கி கருணைக் கடல் பள்ளி கொண்ட திருக் கோலம்

25-சேது ராமன் -நளன் விஸ்வ கர்மா தேவ சிற்பியின் திருமகன் -நள சேது -என்றே திரு நாமம் -திருவடி துகள் களைத் திரட்டி -நம் கடல் போன்ற பாபங்களை போக்கி

26-வீர ராமன் -வீர ராகவப் பெருமாள் –

27-கோல வில்லி ராமன் –திரு வெள்ளியங்குடி –கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன்-விஜய ராமன் ஜய ராமன் -விஜய ராகவப்பெருமாள் திரு புட் குழி

28-பட்டாபி ராமன் -ராமனுக்கு இடப்புறம் இதில் -உத்சவர் கல்யாண ராமன் வலது பக்கம் சீதை கும்பகோணம் இரண்டு திருக் கோலமும் சேவிக்கிறோம்

—————-

29- ராஜா ராமன்-அசித்வத் பாரதந்தர்யம் காட்டவே மூன்றாம் பிரிவு-தபோ வனம் ரிஷிகள் மதியம் வேத மந்த்ரம் கேட்டே கர்ப்பவதியாக இருக்க -ராமன் திரு உள்ளபடி இருக்கவே தானே சொல்லி –லவகுசர் ஸ்ரீ ராமாயணம் பாட கேட்க ஆசை கொண்டார் –

30-ஸீதா ராமன்-அனுப்பி வைத்தது ராஜா ராமன் -அழுது கொண்டு இருந்தவன் ஸீதா ராமன் –ஸ்வர்ண விக்ரஹம் வைத்து அஸ்வமேத யாகம்

31- ஸந்தான ராமன் -தனது சரிதை கேட்டான்

32-வைகுண்ட ராமன் -பத்ராசல ராமனுக்கு இந்தத் திரு நாமம் –

———————

ராமர் கோவில்: 72 ஏக்கர் நிலம் இருக்கும்போது 2.7 ஏக்கரில் மட்டும் கோவில் கட்டப்பட்டது ஏன்?-கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.

சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.

மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.

முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.

முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.

அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.

முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.

முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.

ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.

இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.

அயோத்தியில் 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கோயில் கட்டுமானப் பொறுப்பான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முதலில் ரூ. 1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டது. ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ராமர் கோவிலின் முதன்மை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு கல் அனைத்தும் ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள பன்சி பஹர்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இளஞ்சிவப்பு கல் வலுவாக இருப்பதோடு நீண்ட ஆயுட்காலம் கொண்டது. பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைக் கொடுக்கக் கூடியது. ராம் லல்லாவின் சிலையைச் செதுக்குவதற்காக நேபாளத்திலிருந்து அயோத்திக்குச் சிறப்பு ஷாலிகிராம் கற்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஷாலிகிராம் கற்களைச் செதுக்கி இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராம் லல்லா 5 வயதுக் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதே மாதிரி அயோத்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாலிகிராம் கற்கள் சுமார் ஆறு கோடி ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது

ராம் பத், பக்தி பத், தர்ம் பத், ஜனம்பூமி பத் என்ற நான்கு பிரதான சாலைகள் விரிவாக்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ராம் பத் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகள் கடைகள் ஆகியவற்றின் முகப்புகள் மெருகூட்டப்பட்டு, ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை முழுவதும் பல சிறிய, பெரிய கடைகள் முளைத்துள்ளன. காவிக் கொடிகள், ராமாயணப் புத்தகங்கள், ராமர், அனுமரின் உருவப் படங்கள், சிலைகள் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்தார், அவருடைய தாத்தா பிரபாகர்ஜி சோம்புரா, அவரது மகன் ஆஷிஷ் சோம்புராவுடன் இணைந்து சோம்நாத் கோயிலை வடிவமைத்துள்ளார். 79 வயதான கட்டிடக் கலைஞர் 1992 இல் நியமிக்கப்பட்டார். வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளைப் பின்பற்றி நாகரா பாணியில் ராமர் கோயில் கட்டப்படுவதாக சோம்புரா குறிப்பிட்டார். கிழக்கில் உள்ள நுழைவாயில் கோபுர பாணியில் கட்டப்படும், இது தெற்கின் கோயில்களைக் குறிக்கும். கோவிலின் சுவர்கள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலைப்படைப்புகளைக் காண்பிக்கும். வடிவம்: மந்திரின் கருவறை எண்கோண வடிவில் இருக்கும், அதே சமயம் கட்டமைப்பு சுற்றளவு வட்டமாக இருக்கும். தளங்கள்: இந்த மந்திரில் 161 அடி உயரம் கொண்ட ஐந்து குவிமாடங்களும் ஒரு கோபுரமும் இருக்கும். 3-தளங்களைக் கொண்ட கோயிலில் ஒரு மையம் – கர்ப் க்ரிஹா – சூரியக் கதிர்கள் ராம் லல்லாவின் சிலை மீது விழும் வகையில் கட்டப்பட்டிருக்கும். இறைவன். கருவறையைப் போலவே, கிரஹ மண்டபமும் முழுமையாக மூடப்பட்டிருக்கும், அதே சமயம் கீர்த்தனையும் இருக்கும் மண்டபம், நிருத்ய மண்டபம், ரங் மண்டபம் மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு பிரார்த்தனை மண்டபங்கள் திறந்த பகுதிகளாக இருக்கும். சிலை: சிசு ராமர் சிலை 5 அடி உயரம் மற்றும் வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது. கோவில் மணி: ராமர் கோவிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணி, இந்தியாவில் மணி உற்பத்திக்கு நன்கு அறியப்பட்ட இடமான எட்டாவிலிருந்து கொண்டு வரப்படுகிறது. 6 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 லட்சம் ரூபாய்.

அயோத்தி ராமர் கோவில்: காலவரிசை

1528-1529: முகலாயப் பேரரசர் பாபர் பாபர் மசூதியைக் கட்டினார் 1850கள்: நிலத்தில் வகுப்புவாத வன்முறையின் ஆரம்பம் 1949: மசூதிக்குள் ராமர் சிலை கண்டெடுக்கப்பட்டது, வகுப்புவாத பதற்றத்தை தீவிரப்படுத்துகிறது 1950: பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்ய அனுமதி கோரி சிலையை வழிபட அனுமதி : UP 1961 சிலையை அகற்றக்கோரி மத்திய வக்ஃப் வாரியம் 1986: இந்து வழிபாட்டாளர்களுக்கான இடத்தை மாவட்ட நீதிமன்றம் திறந்தது 1992: பாபர் மசூதி டிசம்பர் 6, 2010ல் இடிக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்று வழிப் பிரிவினை விதித்தது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா இடையே சர்ச்சைக்குரிய பகுதி 2011: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்சி தடை 2016: சுப்ரமணியன் சுவாமி எஸ்சியில் மனு தாக்கல் செய்தார், ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோருகிறார் 2019: அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பதை எஸ்சி ஏற்றுக்கொண்டு, முழு உரிமையையும் ஒப்படைக்கிறது சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு மற்றும் 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்று இடமாக வழங்க அரசுக்கு உத்தரவு 2020: பிரதமர் மோடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

———

ழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட வைணவ ஆலயங்களை, ‘திவ்ய க்ஷேத்ரம்’ என்பர். இவை மொத்தம் 108. இவற்றுள் பரமபதமும் பாற்கடலும் இந்தப் பூலகில் தரிசிக்க இயலாதன. ஏனைய 106 திவ்ய ஸ்தலங்களில் அயோத்தி முக்கியமானது. பலரும் அயோத்தியில் இருக்கும் ராம ஜன்ம பூமிதான் ஆழ்வார்களால் பாடப்பட்டது என நினைப்பர். ஆனால், உண்மையில் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற, 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது அம்மாஜி மந்திர். ‘மதறாஸ் மந்திர்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. அயோத்தியில் வசிப்பவர்கள் பலருக்குமே இந்த ஆலயத்தைக் குறித்து சரியாகத் தெரியவில்லை. அயோத்திக்குச் செல்லும் பக்தர்கள் அவசியம் காணவேண்டிய திருத்தலம் இது.

அம்மாஜி மந்திர், நிர்மோச்சன் செள ரஸ்தா அருகில், கொத்வாலி அயோத்தியா காவல் நிலையத்துக்கு எதிர்ப்புற சாலையில் அமைந்துள்ளது. அச்சு அசலாகத் தமிழ்நாட்டு வைணவ ஆலயம் போலவே இது தோற்றம் தருகிறது. மூலவர் ஸ்ரீராமர், தாயார் சீதா தேவி. புஷ்கல விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில்
ஸ்ரீ ராமபிரானின் ஒருபுறம் சீதாபிராட்டியும், இன்னொரு புறம் லட்சுமணரும் காட்சி தருகின்றனர். ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்கு பரமபத புஷ்கரிணி மற்றும் சரயு நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அய்யங்கார் என்பவரால் நிறுவப்பட்டது இந்தக் கோயில். இவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். வேத இதிகாசங்களில் விற்பன்னராகவும் இருந்தவர். இவர்,
‘ஸ்ரீ சரஸ்வதி பண்டார்’ என்ற ட்ரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி, தனது சொத்துக்கள் முழுவதையும் அதற்கே தந்துவிட்டார். அதில் கிடைக்கும் வருவாயிலேயே இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது. அம்மாஜி மந்திர் இருக்கும் இடத்தில்தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடிய ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் இருந்ததாம்.
ஸ்ரீ ரங்கநாதர், அனுமன் மற்றும் ஆழ்வார்களுக்கான தனி சன்னிதிகளும் இந்தக் கோயிலில் உண்டு. ஸ்ரீ சடகோபர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோரும் காட்சி தருகின்றனர். கோயிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

கோயில் அமைந்ததற்கான சுவாரசிய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. யோகி ஸ்ரீ பார்த்தசாரதி அவர்களின் மனைவி சிங்காரம்மா என்பவரது கனவில் ஸ்ரீராமர் மற்றும் சீதாபிராட்டியாரின் உத்ஸவ விக்ரஹங்கள் தோன்றினவாம். அவை தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருப்புல்லாணி தலத்தில் அமைந்த ஒரு பாழடைந்த கோயிலில் புதைந்திருப்பதாகக் கனவில் அறியப்பட்டது. அந்தத் தம்பதியினர் உடனே சென்று அங்கே பார்க்க, கனவில் கண்டபடியே கோயிலும் மூர்த்திகளின் திருவுருவங்களும் தென்பட்டிருக்கின்றன.

உறவினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் ராமநாதபுரம் மன்னரின் அனுமதியோடு அந்த விக்ரஹங்களை எடுத்து வந்து ஆராதிக்க அயோத்தியில் கோயில் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். கோயில் திருப்பணிகள் முடிவதற்கு முன்னரே பார்த்தசாரதி அய்யங்கார் இறந்து விட, அவரது மனைவியே கோயில் பணிகளை நிறைவு செய்து, நித்ய ஆராதனை சேவைகளையும் உத்ஸவங்களையும் நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரது முனைப்பான திருப்பணியால் ஆலயம் உருவானதால், ‘அம்மாஜி மந்திர்’ என்ற பெயரிலேயே இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு, இந்த ஆலயத்தை, ‘சேது ராம மந்திர்’ என்று தெரிவிப்பதையும் கவனிக்கலாம்.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஸ்ரீராமநவமி உத்ஸவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கெனவே அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், வேத பாராயண விற்பன்னர்கள் ஆகியோர் திருவல்லிக்கேணியில் இருந்து அயோத்தி செல்கிறார்கள். ஆலயத்தில் தங்கும் வசதிகளும் உண்டு.

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம்–

June 21, 2024

இவ்வாழ்வார்  ஆழ்வார் திருநகரி  எனப்படும் திருக்குருகூரில் கலி முதல் வருஷமான ப்ரமாதி ௵ வைகாசி ௴ பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீ ஸேநேசருடைய அம்சமாய்க் காரி என்பவருக்குத் திருக்குமார்ராகத் திருவவதரித்து அருளினார். இவர் வேளாளர் குலத்தில் திருவவதரித்தருளியவர்.

திருவாய்மொழியின் முதலடியிலேயே ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்றாரம்பித்து ஸமஸ்த கல்யாண குணகண பரிபூர்ணனான பகவான்தான் பர தத்துவம் என்றும், அவனுடைய ‘துயரறு சுடரடி தொழுகை’யே உபாயம் என்றும், அப்படி ‘எழுகையே’ புருஷார்த்தம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இஸ் ஸம்ஸாரத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பகவானை அடைவதற்கு மார்க்கங்களான பரபக்தி, பரஜ்ஞாநம், பரமபக்தி, ப்ரபத்தி என்கிற நான்கு படிகளும் முறையே நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறலாம்.

1.திருவிருத்தம்.

இது க‌ட்ட‌ளைக் க‌லித்துறை என்கிற‌ வ்ருத்தத்தில் 100 பாட்டுக்க‌ள் அட‌ங்கிய‌தாயிருக்கும். “இவ‌ர் த‌ம் வ்ருத்தாத்த‌ங்க‌ளை முன்னிடுகையாலே திருவிருத்த‌ம் என்று பேர்பெற்ற‌ ப்ர‌ப‌ந்தத்தின்” என்று ஸ்ரீ உப‌கார‌ ஸ‌ங்க்ர‌ஹ‌ம் என்னும் ர‌ஹ‌ஸ்ய‌த்தில் ஸ்ரீ தேசிக‌ன் இத‌ன் திருநாம‌த்திற்குக் கார‌ண‌த்தை நிரூபித்திருக்கிறார். அதாவது விருத்தம் – வ்ருத்தம், முன்னால் நடந்தபடிகளை இதில் வெளியிடுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடி. அதாவது’பொய்நின்ற ஞானமும்’ என்று தொடங்கி, ’இன்னின்ற நீர்மை’ என்னுமளவாகத் தமக்கு நடந்த படிகளை அருளிச் செய்து, ’உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா’ என்று எம்பெருமான் தன் திறத்தில் இதற்குமுன் செய்தருளின உபகார பரம்பரைகளையும் ஸங்க்ரஹேண காட்டியருளி, இனிச் செய்ய வேண்டிய உபகாரங்களை ’மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று ப்ரார்த்தித்திருப்பதினால் இது வ்ருத்த கீர்த்தனமாய் நின்றது என்றதாய்யிற்று. விருத்தம் என்றது விரோதி என்பதைக் குறிக்குமாகையினால்இந்த ஸம்ஸாரம் விரோதி என்கிற ஆகாரம் இதில் நிரூபிக்கப்படுகிறபடியினால் இத் திருநாமம் என்றபடியாகவுமாம். திரு என்கிற விசேஷணம் பூஜ்யோக்தி. இதில் 100 பாட்டுக்களிலும் நூறு விதங்களான இலக்கியத் துறைகள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன என்பர்கள். இதிலுள்ள நூறு பாட்டுக்களும் திருவாய்மொழியின் 100 திருவாய்மொழிகளினுடைய அனுபவத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுவர்கள். இதுமேலே திருவிருத்த ப்ரபந்தத்தில் குறிப்பிடப் படுகிறது. இதுவும் ஆழ்வாருடைய மற்றைய மூன்று ப்ரபந்தங்களும் அந்தாதித் தொடரில் அருளிச் செய்யப்பட்டவைகளாயிருக்கும்.

இதில், ’ஈனச்சொல்லாயினுமாக ….. மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லவே’ என்கிற பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்யும்பொழுது அஸ்மத் ஸ்வாமி – ‘இது பாரீர்! பராங்கசாவதாரத்தில் ஸ்வமதத்தை வெளியிட்டபடி. ஸ்ரீகீதோபநிஷதாசார்யன் தன்னுடைய மதத்தை “ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்” என்று உத்கோஷித்தான். அவனே பின்பு குரு வரராய் அவதரித்து இதன் உட்கருத்தை ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் “ஜ்ஞாநீ து மே ஆத்மைவ இதி மதம் – வேதாந்தத்தில் ஏற்பட்ட ஸித்தாந்தமாயிருந்தாலும் இருக்கட்டும், இல்லாமல் போனாலும் போகட்டும், க்ருஷ்ணனுடைய ஸித்தாந்தமிது” என்றல்லவோ வெளியிட்டது. அதைப்போலே ஆழ்வாரும் ஸ்வ மதத்தை “மற்றெல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்டதுவே” என ஸ்ரீபராங்குசா சார்யனான காலத்தில் வெளியிட்டருளினார்.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா வாக்யத்தை இங்கும் அனுஷங்கித்துக்கொள்ளவும். அதாவது ‘திருத்தம் பெரியவர் சேரும் துறையில் செறிவிலர்க்கு, வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண் மகளார், கருத்தொன்ற ஆதி வராகம் உரைத்த கதி’யன்றோ இது. இந்த சரணாகதியாகிற உபாயம் வேதாந்தங்களில் நிரூபிக்கப் பட்டிருக்கட்டும், நிரூபிக்கப்படாமல் இருக்கட்டும், இதுவே பராங்குசனுடைய மதம் என்றறியவும் என்றபடி. இந்த இரண்டிடங்களுக்கும் இது வேதாந்தங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டதே ஆயினும் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிற நீ சொல்லுகிறபடி வேதாந்தங்களில் இவ் வர்த்தம் சொல்லப்படவில்லை என்றாலும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த வேதாந்தங்களை ப்ரவர்த்தனம் செய்தருளிய பகவானே இதை ப்ரவசனம் செய்தபடியினால் நீ அத்யயனம் செய்யாத வேதாந்தத்தில் இது கூறப்பட்டிருக்கிறது என்றறிக என்று கூறுவதில் கருத்து, இதுவேதான் ஸ்ரீராமாவதாரத்திலும், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலும் உத்கோஷிக்கப்பட்டது.

இதில்,

நானிலம்வாய்க்கொண் நன்னீரறமென்று கோதுகொண்ட

வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே!

கானிலதோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன் வெஃகாவுது, அம்பூந்

தேனிளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.

என்கிற பாட்டில் திருத்தண்காவில் ஸ்ரீதேசிகன் அவதரிக்கப்போகிறார் என்பதை ஸூசிப்பிக்கிறார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். இப்பாட்டில் தலைமகன் உகந்தருளின நிலங்களைக் காட்டித் தேற்றும் துறை கூறப்படுகிறது. பாலைவனத்தைக் கடந்துவிட்டோம், இதோ அருகில் தோன்றுவது என்பதை “வெஃகாவுது” என்றும், “அம்பூந்தேனிளம்சோலை அப்பாலது” என்று கொஞ்சம் தூரத்தில் தோன்றும் திருத்தண் காவைக் காட்டி, அது “எப்பாலைக்கும் சேமத்ததே” என்றுமல்லவா இப்பாட்டில் அனுஸந்தானம்! திவ்ய தேசங்களுக்குள் ஏற்றத்தாழ்வு சொல்ல முடியாதாகையினால் “எப்பாலைக்கும் சேமத்ததே” என்பதற்கு ஒரு விசேஷம் திருத்தண்காவிற்குச் சொல்லவேண்டும். இதுதான் ஆசார்ய ஸார்வபௌமனுடைய திருவவதாரம். வாழித்திருநாமத்தில் திருமலைமால் திருமணியாய் அவதரித்து, செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைத்தாராய் நின்றார். சந்தப்பொழிலாகிய திருத்தண்காவில் அவதரித்தருளி தஞ்சப் பரகதியைத் தந்தருளுவன் என்றார்கள். அதாவது பகவான் அவதரித்து ஹிதோபதேசம் செய்ததையே இவ்வாசார்யன் திவ்ய ப்ரபந்தங்களிலும் உத்கோஷிக்கப்பட்டவை என்று பல க்ரந்தங்களில் அருளிச் செய்தார். அத்துடன் நின்றுவிடாமல் ஆசார்ய ஸமாச்ரயணம் செய்தால்தான் மோக்ஷம் அடையலாம் என்றும் நிரூபித்தபடியினாலே அப்படி ஆச்ரயிப்பவர்கள் எக்காலத்தியவரேயாகிலும் மோக்ஷம் அடைவார்கள் என்று ஸ்தாபித்தபடியினாலே அப்படிப்பட்ட ஆசார்யன் திருவவதரித்தருளிய திருத்தண்கா எப்பாலைக்கும் சேமத்தையுடையதாயிற்று என்றபடி.

ப்ரஜ்ஞாக்யேமந்தஶைலேப்ரதிதகுணருசிம்நேத்ரயந்ஸம்ப்ரதாயம்

தத்தல்லப்திப்ரஸக்தைரநுபதிவிபுதைரர்த்திதோவே‍‍ங்கடேஶ: |

தல்பம்கல்பாந்தயூநஶடஜிதுபநிஷத்துக்ஸிந்தும்விமத்நந்

க்ரத்நாதிஸ்வாதுகாதாலஹரிதஶஶதீநிர்கதிம்ரத்நஜாதம் ||

தத்தல்லப்திப்ரஸக்தைஅனுபதிவிபுதைஅர்த்தித:

அந்தந்தப் பலனை அடைவதில் ஈடுபட்டவர்களாய் அந்தப் பகவானைத் தவிர வேறு பலனை நாடாத பாகவதர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டவரான

ஆழ்வார் தம்முடைய பரம க்ருபையாலே தொண்டர்க்கமுதுண்ண ப்ரந்யக்ஷீகரித்து வெளியிட்ட திருவாய்மொழிஎன்னும் ப்ரபந்தத்தில் ஓரொரு குணங்களில் விசேஷித்து ஈடுபட்ட பாகவதோத்தமர்களினால் – ஸ்ரீவைகுண்டத்தில் ஸர்வகுணாபேதனான பகவானையே அனுபவிக்கும் ஸூரிகளும் முக்தர்களும் ஒரு திவ்ய குணத்திலோ ஒரு திவ்ய அவய சோபையிலோ ஈடுபட்டு, அந்த அனுபவத்தையே சூழ்ந்திருந்து பல்லாண்டு ஏத்துகிறாப் போலேயும், ;பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினான்’ (திருவாய்மொழி 1-6-4) என்கிறபடியே தான் அனுபவித்த குணத்தின் முக்யத்வத்தை நிர்வஹிக்கிறாப் போலேயும் இந்த த்ரமிடோபநிஷத்தில் பகவானுடை எல்லாக் குணங்களுமே ப்ரதிபாதிக்கப்பட்டிருந்தபோதிலும் ஒருவருக்கு அவனுடைய ஸௌலப்யத்தில் ஈடுபாடு அதிகமாயும், மற்றொருவருக்கு அவனுடைய திருமேனியின் அனுபவத்தில் ஈடுபாடு அதிகமாயும் இருக்கும். அப்படித் தாங்கள் அனுபவித்த ப்ரகாரத்தை இன்னும் விசேஷமாக அனுபவிப்பதில் ஆசையையுடைய பாகவதர்களினால் அப்படிப்பட்ட அம்சங்களைத் தங்களுக்கு அருளிச் செய்யும்படி ப்ரார்த்திக்கப் பட்டவரான என்றபடி.

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம் இம்மண்ணுலகத்திலேயே மகிழ்ந்து அடையும்படியான பாக்கியம் பெற்ற பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்தவர்களாயும், ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷியாதவர்களாயும் பகவத் பாகவத குணானுபவத்தையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டவர்களாயும் ஷோடச வர்ணத்தோடு கூடிய ஸ்வர்ணம் போன்ற பாரமை காந்த்யத்தை யுடையவர்களாயும் ‘தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ -என்கிறபடியே எம்பெருமான் பேற்றையே தங்கள் பேறாகக் கொண்டவர்களாயுமிருக்கும் பாகவதோத்தமர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டார் என்றதாயிற்று.

இங்கு உத்தர க்ருத்யாதிகாரத்தில் ‘நித்யம் ப்ரூதேநி சமயதிச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி’ என்று அருளிச் செய்திருக்கிறபடியே ப்ரபன்னனுக்குக் கால யாபனம் திவ்ய ப்ரபந்தானுஸந்தானத் தினாலேயாகையினால் அதற்காக அதில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் குண விசேஷங்களைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி ப்ரார்த்தித்தார்கள் என்று அறியவும்.

முன்பு ஒரு காலத்தில் ஸ்வகார்யப் புலிகளான தேவதைகள் தங்களுக்குச் சாகா மருந்து கிடைப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்படி பகவானை வேண்டிக் கொள்ள, அதற்கு இணங்கிய அந்தப் பகவான் மந்தர பர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கடை கயிறாகவும் கொண்டு, தான் கூர்ம ரூபியாய் அந்த மந்தர பர்வதத்தைத் தன் முதுகில் தாங்கி, தேவதைகள் ஒரு பக்கமும் அஸுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று கடையும் பொழுது உண்டாகிய அம்ருதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தானே யாகிலும், அவ்வமுதில் ஆவிர்ப்பவித்த பெண் அமுதாகிய பிராட்டியைத் தன் பேறாகக் கொண்டான் என்பது ப்ரஸித்தம்.

வேங்கடேச:

வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடையவர். இத்தால் வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்று தாம் பிறந்து படைத்த திருநாமங்களில் காட்டிலும் தம் திருத்தகப்பனாரால் சூட்டப்பட்ட திருநாமத்தில் ஸ்வாமி தேசிகனுக்குள்ள கௌரவாதிசயம் தெரிவிக்கப் பட்டதாகிறது. அன்றிக்கே அன்று க்ஷீர ஸமுத்திரத்தைக் கடைந்த தண் நீள் புகழ் வேங்கட மா மலை மேவியவனே இன்று திருவேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்து நின்று, அதாவது தன்னை அடைந்த‌வர்களுக்குப் பரகதியைத் தந்தருளுவதற்காகத் திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் குருவரராய் நின்றருளியவரே திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடலைக் கடைந்தருளியவர் என்பதைக் குறிக்கிறதாகவுமாம்.

கல்பாந்தயூந: தல்பம் சடஜிதுபநிஷத் துக்த ஸிந்தும்

ஆழ்வார் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளினபடியால் சடஜிதுபநிஷத் என்னப்படுகிறது திருவாய்மொழி என்றபடி. ‘பனிக்கடலில் ப‌ள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக் கடலில் வாழவல்ல’என்கிறபடியே அடிக்கடி ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து தங்கள் துயரங்களை வெளியிடும் இடமான க்ஷீராப்தியில் எம்பெருமான் ஸுகமாக நித்திரை செய்யமுடியாமல் போய்விடுகிறது. இங்கு அப்படியன்று என்பதைக் குறிக்கிறது ‘வாழ வல்ல’ என்னும் பதம். இந்தத் திருவாய்மொழி ப்ரளயகாலத்திலும் நாசம் அடையாமல் யுவாவாக நிற்கும் பகவானுக்குத் திருப்பள்ளியாயிருக்கிறபடியினால் ப்ரளய காலத்தில் நாசமடையும் க்ஷீராப்தியினின்று வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறது ‘கல்பாந்தயூந: தல்பம்’ என்கிற பதம். இத்தால் திருவாய்மொழி நித்யம் என்னப்பட்டதாகிறது. ஒருகாலத்திலும் மாறுதலில்லாத ஸ்ரீவைகுண்டத்திலும் திவ்ய‌ ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன என்று ஸ்ரீபரமபத ஸோபானத்தில் அருளிச் செய்திருப்பதும் இந்த நித்யத்வத்தையே காட்டா நிற்கும்.

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதித குணருசிம் ஸம்ப்ரதாயம் நேத்ரயந்

தம்முடைய ஜ்ஞானத்தை மத்தாகவும் ப்ரஸித்த குண விசேஷங்களை யுடைய ஸம்ப்ரதாயத்தைக் கடை கயிறாகவும் கொண்டு

இதன் கருத்து:–

இதுவரையில் வேறு ஒருவருக்கும் கிட்டாத வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர், கவிதார்க்கிகஸிம்ஹம் என்கிற பிருதுகளைப் பெறுவதற்கு மூல காரணமாயிருந்த ஜ்ஞான விசேஷம் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை மந்த்ர பர்வதமாக நிரூபித்தபடியினால் ஒருவித யுக்தி முதலியவற்றாலும் சலிப்பிக்க முடியாதது என்பது குறிப்பிடப்படுகிறது.

தம்முடைய உத்தமமான ஜ்ஞானமாகிற மந்தர மலையிலே அதாவது:– ‘இந்த ஸம்ப்ரதாயத்தை விசேஷித்து ப்ரவசனம் செய்யக்கடவாய்’ என்னும் அம்மாளுடைய அனுக்ரஹத்தினால் உண்டானதாய்; கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தேமலர் சேவடி சேர்ந்து பணிந்து, அவர் தம்மருளால் நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெறுவதற்கு உற்றதாய்; அவரால் உபதேசிக்கப்பட்ட யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமான ரஹஸ்யார்த்தங்களைப் பற்றியதாய்; பன்னு கலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய பகவானுடைய திவ்ய லாலாம்ருதத்தினால் பெற்ற பதினெட்டு வித்யா ஸ்தானங்களிலே தாம் ப்ரதானமாய் அங்கீகரித்த வேதாந்த வித்யையை விஷயமாகக் கொண்டதாய்; அந்தமில்சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதனுடைய முந்தைமறை மொய்யவழி மொழி நீ என்று பெற்ற நியமனத்தினாலும், ஸ்ரீரங்கநாதனால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யத்வத்தினாலும், ஸ்ரீரங்கநாய்ச்சியாரால் கொடுக்கப்பட்ட ஸர்வதநத்ர ஸ்வதந்த்ரவத்தினாலும், அயிந்தை மாநகரில் முன்னாள் புணராத பரமதப்போர் பூரித்ததின் பலனாக ஸ்ரீதேவநாதனால் சாற்றப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹத்வத்தினாலும் மெய்ப்பிக்கப் பெற்றதாய்; செய்ய தமிழ் மாலைகள் தாம் ஓதித் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றதற்கு ஏற்றதுமான ஜ்ஞானமாகிற மந்தர பர்வதத்திலே,.

எம்பெருமான் தொடக்கமாக ஓராண் வழியாய் அவிச்சின்னமாய்த் தமக்குக் கிடைத்த இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்குக் கூடஸ்தர் என்றும், குலபதி என்றும், கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தவர் என்றும், த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்றும், போற்றப்பட்ட நம்மாழ்வாரால் ஓரவஸரத்திலே யோக தசையில் இந்த ஸம்ப்ரதாயத்தை உபதேசிக்கப் பெற்றவரும், தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளலுமான ஸ்ரீமந் நாதமுனிகளால் ப்ரவர்த்தனம் செய்யப்பட்ட சிறப்பை யுடையதாய்; ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களை அனுஸந்தானம் செய்ததினால் பெற்ற அனுபவத்தின் பரீவாஹமாக ஸ்தோத்திர ரத்தினம் முதலிய நூல்களை அருளிச் செய்த ஸ்ரீமத் யாமுன முனியினால் பாலூட்டி வளர்க்கப் பட்டதாய், இதத் தாய் எனப்பட்ட பகவத் ராமானுஜ முனியினால் நன்றாக ஸம் ரக்ஷிக்கப்பட்டதாய், அவரால் உபய வேதாந்த ப்ரவர்த்தத்தினாலே முடிசூட்டப்பட்ட திருக் குருகைப்பிரான் பிள்ளான் முதலான ஆசார்யர்களினால் அவரவர்கள் சக்திக்கு அனுகுணமாகப் போஷிக்கப்பட்டு வந்ததாய்த் தமக்குக் கிடைத்த ஸம்ப்ரதாயத்தை அஸுர ப்ரக்ருதிகள் வாயில் அகப்படாமல் காத்து, அதாவது இந்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகரான ஆழ்வாருடைய அவதார ப்ரபாவத்தையும், அவருக்கு அர்ச்சா ப்ரதிஷ்டாதிகள் செய்வது சாஸ்த்ரீயம் என்பதையும், அவருடைய ப்ரபந்தம் தமிழ் பாஷையிலிருந்தாலும் கான ப்ரதானமாயிருந்தாலும் பாஷையும் ப்ரசஸ்தமானது, பகவத் விஷயமான கானமும் ப்ரசஸ்தமானது என்கிற காரணத்தால் எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது என்பதையும், அவன் முன்னால் கானம் செய்யத்தக்கது என்பதையும், ஆழ்வாருடைய அனுக்ரஹமின்றி எம்பெருமானின் திருத் தாள்களில் தலை வைக்க முடியாது என்பதையும் நிரூபித்து, ‘அகில தம: கர்சனம் தர்சனம் ந:’ என்றும், ‘ஆபாத சூடமநபாயிநி தர்சநேஸ்மிந் ஆசாஸநீயம் பரம் ந விபக்ஷஹேதோ:’ என்றும் தாமே உத்கோஷிக்கும்படியான ஏற்றத்தை உண்டாக்கி, அது இனித் தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகச் செய்திருந்த ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகச் சுற்றி,

இத்தால் இந்த க்ரந்தத்தின் விச்வஸநீய தமத்வம் தெரிவிக்கப் பட்டதாகிறது.

விமத்நந்-கடைந்தருளி என்றபடி.-அந்த க்ஷீராப்தியைக் கடைவதற்கு தேவர்களும் அஸுரர்களும் இருபக்கங்களிலும் நின்று இழுத்தார்கள். இங்கு ஸ்வாமி தேசிகன் ஒருவராகவே கடைந்தமை காட்டப்பட்டதாகிறது.

ஸ்வாது காதால ஹரி தசசதீ நிர்கதம் ரத்ந ஜாதம்

முரமதன குண ஸ்தோம கர்ப்பங்களாய், செவிக்கினிய செஞ்சொற்களாய், தொண்டர்க்கதுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளாய், நாநா கல்லோல நாதானுபவ ரஸ பரீவாஹங்களாய் இருக்குமவைகளான திருவாய்மொழி ஆயிரம் பாட்டுக்களாகிற அலைகளிலிருந்து பகவத் குணங்களாகிற அநர்க்கங்களான ஆயிரத்தி நூற்றுப் பதினொரு ரத்தினங்கள் வெளிப்பட அவற்றில் முக்கியமான 111 குணங்களை (ரத்தினங்களை)-த்ரமிடோபநிஷத் என்னப்படும் திருவாய்மொழி 1102 பாட்டுக்கள் அடங்கியது. பத்துப் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கும் பத்துப் பாட்டுக்களும் பலச்ருதியாக ஒரு பாட்டுமாகப் பதினோரு பாட்டுக்கள் கொண்ட பாகத்தை ஒரு திருவாய்மொழி என்றும், இப்படிப் பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட 110 பாட்டுக்கள் அடங்கிய பாகத்தை ஒரு பத்து என்றும், இப்படிப் பத்துப் பத்துக்கள் சேர்ந்த 1102 (கேசவன் தமரில் மட்டும் 12 குணங்கள்) பாட்டுக்கள் கொண்டது திருவாய்மொழி என்றும் சொல்லுவர்கள். முதல் திருவாய்மொழியிலுள்ள பத்துப் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிதமான நிஸ்ஸீமோத்யத் குணத்வம் முதலிய பத்துக் குணங்களால் பரத்வம் என்கிற ஒரு பெரிய குணம் கூறப்படுகிறது. இப்படியே முதல் பத்து திருவாய்மொழிகளினால் சொல்லப்படுகிற பத்து ப்ரதான குணங்களினால் ஸேவ்யத்வமாகிற ஒரு முக்ய குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது. இப்படிப் பத்துப் பத்துக்களினால் ஏற்பட்ட பத்துக் குணங்களும் சேர்ந்து ஸார தமமான ஓர் அர்த்தத்தைக் குறிக்கிறது. இதுதான்

ச்ரிய:பதியானஎம்பெருமான்தன்னை அடைவதற்குத் தானே காரணம் என்பது.

இப்படிக் குணப்ரதானமான ஆயிரம் ரத்தினங்களையும் பகவத் நாம ஸஹஸ்ரமாய் வைத்துக்கொண்டு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது ஸ்வாமியின் திருவுள்ளம் என்று தோன்றுகிறது.

க்ஷீராப்தியோ பக்குவம் செய்யப்படாத பாலாகையினால் அதிலிருந்து உண்டான அம்ருதத்திற்கு மொச்சை வாஸனை இருந்திருக்கலாம். ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்தியோ ‘தேனும் பாலும் அமுதம் ஒத்தே’ என்கிறபடியே ஸ்வாதுதமங்களான வஸ்துக்கள் கலந்தாற் போல் இருக்கிறபடியால் இதிலிருந்து உண்டானவை மிகவும் போக்யமாயிருக்கும் என்பது கைமுதிக ந்யாய ஸித்தம்.

ஆக இப்படித் திருவாய்மொழியிலிருந்து 113 குணங்களாகிற ரத்தினங்களை எடுத்து, அவற்றில் நூறு திருவாய்மொழிகளினால் ப்ரதிபாதிக்கப்பட்டவைகளான நூறு பெரிய ரத்தினங்களையும் ஒவ்வொரு பத்தினால் ஏற்பட்ட முக்ய குணங்களான பத்து ரத்தினங்களையும், ப்ரபந்தம் முழுவதினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸாரதமமாய் நடுநாயகம் போன்ற ஒரு ரத்தினத்தையும் கொண்டு,-க்ரத்நாதி-ஒரு மாலையாகத் தொடுத்தருள்கிறார்.

ஆழ்வார் ‘கோமின் துழாய் முடி ஆதியஞ்சோதி குணங்களே’ என்று நியமித்தருளியதை இப்படி ஆழ்வார் திருவாய்மொழியில் பாட்டுக்கள் தோறும் அனுபவித்த குணங்களையே ரத்தினங்களாக்கி அவற்றை மாலையாக்கி அந்வர்த்தமாக்கிய பாக்யம் ஸ்வாமி தேசிகனுக்கே கிட்டிற்று. இந்த ஹாரத்தை எப்பொழுதும் பாகவதோத்தமர்கள் எவ்வித பயமும் உண்டாகாமல் இருப்பதற்காகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று மேலே பத்தாம் சுலோகத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கனுஸந்திக்கவும்.

இப்பிரபந்தத்தில் காமுகர்களின் நூநப்ரேக்ஷண விரஹ க்லேசாதிகள் அனுஸந்திக்கப் பட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? என்கிற ஸாமாந்ய ஜனங்களுடைய ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் அருளிச் செய்து கொண்டு இப்பிரபந்தத்தின் ஏற்றத்தை நிரூபித்தருளுகிறார்.

பாஞ்சாலீகா₃த்ரஶோபா₄ஹ்ரு̆தஹ்ரு̆த₃யவதூ₄வர்க₃பும்மாவநித்யா

பத்யௌ பத்₃மாஸஹாயே ப்ரணயிநி ப₄ஜத: ப்ரயஸீபாரதந்த்ர்யம் |

ப₄க்தி: ஶ்ரு̆ங்கா₃ரவ்ரு̆த்த்யா பரிணமதி முநேர்பா₄வப₃ந்த₄ப்ரதி₂ம்நா

யோகா₃த் ப்ராகு₃த்தராவஸ்தி₂திரிஹ விரஹோ தே₃ஶிகாஸ்தத்ர தூ₃தா: ||

பாஞ்சாலியின் அவ‌ய‌த்தின் அழ‌கைக் க‌ண்டு, அத்தால் அப‌ஹ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌த்தை யுடைய‌ ஸ்திரீக‌ள் அந்த‌ அழ‌கைத் தாங்க‌ள் புருஷ‌ர்க‌ளாயிருந்து அனுப‌விக்க‌ வேண்டும் என்கிற‌ ஆசையின் மிகுதியினால் த‌ங்க‌ளைப் புருஷ‌ர்க‌ளாக‌வே பாவித்துக் கொண்டாற் போலே ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் இட‌த்தில் ஸ்திரீக‌ளைப் போல‌வே பார‌த‌ந்த்ர்ய‌த்தை வ‌ஹித்த‌ ஆழ்வாருக்கு உண்டான‌ ப‌க்தியான‌து ச்ருங்கார‌மாக‌ப் ப‌ரிண‌மியா நின்ற‌து. இப்ப‌டி உண்டான‌ ஆசை பாஹ்ய‌ ஸ‌ம்ச்லேஷ‌ம் கிடைக்க‌ வேண்டும் என்று வ்ருத்தி அடைந்து அது கைகூடாமையாலே விர‌ஹ‌த‌சை உண்டாயிற்று. இத்த‌சையில் எம்பெருமானைக் கிட்டுமாறு செய்வ‌த‌ற்கு ஆசார்ய‌ர்க‌ள் தூத‌ர்க‌ளாய் ப்ரார்த்திக்க‌ப் ப‌டுகிறார்க‌ள். இதுதான் திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கும் தூத‌ப்ரேஷ‌ணாதிக‌ளுக்கு உட்பொருள் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்று.

ஆகிலும் வேத‌ங்க‌ள் போலே ஸ‌ம்ஸ்க்ருதத்தில் இல்லாமையினால் பாஷையினால் தாழ்ச்சி ஏற்ப‌டாதோ? கான‌ ப்ர‌தான‌மாயிருப்ப‌தினால் நிஷேதிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்றே? வேத‌ங்க‌ளைப் போல‌த் தத்வார்த்த‌ங்க‌ளைத் தெரிவிக்கும் ஏற்ற‌ம் இத‌ற்கு உண்டோ? என்கிற‌ ச‌ங்கைக‌ளைப் ப‌ரிஹ‌ரித்த‌ருளுகிறார்.

பா₄ஷாகீ₃தி: ப்ரஶஸ்தா ப₄க₃வதி வசநாத் ராஜவச்சோபசாராத்
ஸா ஜக₃ஸ்த்யப்ரஸூதாத்விஹ பரிஜக்₃ரு̆ஹே பூ₄மிகாபே₄த₃யோக்₃யா |
யத்தத்க்ரு̆த்யம் ஶ்ருதீநாம் முநிக₃ணவிஹிதை: ஸேதிஹாஸை: புராணை:
தத்ராஸௌ ஸத்த்வஸீம்ந: ஶட₂மத₂நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ₄மீ ||

பாஷா கீதி: ப்ரசஸ்தா-பாஷையும் ப்ரசஸ்தம், கீதியும் ப்ரசஸ்தம், பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பாஷா ப்ரசஸ்தா-ஸம்ஸ்க்ருதம் எப்படி ருத்திரனுடைய உடுக்கின் சப்தத்திலிருந்து உண்டாகி, பாணிணியினால் வ்யாகரணம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றபடியினால் ஸுஷ்டுவான பாஷை என்கிற பிரஸித்தி பெற்றதோ, அதைப்போலவே, தமிழ் பாஷையும் அதே ருத்திரனுடைய உடுக்கிஃ சப்தத்தில் இருந்து உண்டாகி அகஸ்த்ய மஹர்ஷியினால் இலக்கணம் இயக்கம் பட்டிருப்பதினால் ஸுஷ்டு பாஷையாயிருக்கும்.

கீதி: ப்ரசஸ்த:-ஸாமாந்ய கானத்தையும் அதை அப்யஸிக்கிறவர்களையுமிறே சாஸ்திரங்கள் நிஷேதிக்கின்றன. ஸாம வேதம் முழுமையும் கான ப்ரதானமாயிற்றே. பகவத் விஷயமா கானம் ஆசாஸ்த்ரீயமன்று. மாத்ஸ்ய புராணத்தில் பகவத்விஷய கானம் பாடியவரைத் தண்டித்த அரசன் யமலோகம் கொண்டு போகப்பட்ட வ்ருத்தாந்தம் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே வராக புராணத்தில் கைசீகாதசி மாஹாத்ம்யத்தில் நம்பாடுவான் விருத்தாந்தத்தில் பகவத் கானத்தின் பெருமை சொல்லப் பட்டிருக்கின்றது. எப்பொழுதும் வீணாகானம் செய்துகொண்டிருக்கும் நாரத மஹர்ஷி பாகவதோத்தமர் என்று கொண்டாடப் படுகிறாரல்லவோ! ஆகையினால் பகவத்கானம் நிஷித்தமன்று, ப்ரசஸ்தமே என்றபடி.

பாஷாகீதி: ப்ரசஸ்தா-த்ராமிட ப்ரஹ்மோபநிஷத்திலும், ப்ருஹத் ப்ரஹ்ம ஸம்ஹிதையிலும், பராசர ஸம்ஹிதையிலும், பவிஷ்யத் புராணம் முதலியவைகளிலும் திவ்யப்ரபந்த பாராயணம் பகவத் ஸந்நிதியில் செய்யப்படவேண்டும் என்பதோடு அதற்கு இடம் காலம் எல்லாம் விஸ்தாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பகவதி வசநாத்பகவானிடத்தில் பாஷாகீதி செய்வது ப்ரமாணங்களில் விதிக்கப்பட்டது என்றபடி.

ராஜவச்சோபசாராத்-இது லௌகிக யுக்தி. ராஜாக்களைப் பலர் பல பாஷைகளாலே ஸ்தோத்ரம் செய்கிறாப் போலே ராஜாதிராஜனான பகவானைப் பல பாஷைகளில் ஸ்தோத்ரம் செய்வது உசிதமே என்றபடி.

ஸாச அகஸ்த்ய ப்ரஸூதாது-தமிழ்ப்பாஷையும் அகஸ்த்ய மஹர்ஷியினால் இயற்றப்பட்ட பேரகத்தியம் என்கிற இலக்கணத்தையுடையதாகையாலும்,

ஆனாலும் மஹர்ஷியினால் வ்யாகரணம் செய்யப்படாத மற்ற பாஷைகள் அபப்ரம்சங்க ளாகையினால் அவைகளைக் கொண்டு பகவானை ஸ்தோத்ரிப்பது உசிதமன்று என்பது கருத்து.

இஹ‌ ப‌ரிஜ‌க்ருஹே பூமிகாபேத‌யோக்யா-இந்த‌க் கார‌ண‌ங்க‌ளைக் கொண்டு ந‌ம் பூர்வ‌ர்க‌ள் இந்த‌ ப்ர‌ப‌ன்ன‌ வேஷ‌த்திற்கு இவைக‌ள் மிக‌வும் உசித‌ம் என்று இவ‌ற்றை அங்கீக‌ரித்திருக்கிறார்க‌ள் என்று ஆசார்ய‌ர்க‌ளின் அப்யுப‌க‌மும் காட்ட‌ப்ப‌ட்ட‌து.

ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம் இத்யாதி-உத்த‌ரார்த்தத்தில் முனிக‌ண‌ங்க‌ளினால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ளுட‌ன் சேர்ந்த‌ வேத‌ங்க‌ள் எந்தெந்த‌ கார்ய‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்காக‌ ஏற்ப‌ட்ட‌வைக‌ளோ, அவ‌ற்றை எல்லாம் ஆழ்வாருடைய‌ ஸார்வ‌பௌமியான‌ ச்ருதியாகிற‌ உப‌நிஷ‌த்துச் செய்யாநிற்கும் என்று ஆழ்வாரின் ப்ர‌ப‌ந்தத்தின் வைல‌க்ஷ‌ண்ய‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று. அங்கு ச்ருதிக‌ளின் க‌ருத்தை அறிய‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளான‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ள் தேவையாயிருந்த‌ன‌. இங்கு ஆழ்வார் ஸ்ரீஸூக்தியோ அப்ப‌டிப்ப‌ட்ட‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளை எதிர்பாராம‌லே அவ்வ‌ர்த்த‌ங்க‌ளை ச‌ந்தேக‌ம‌ற‌ நிரூபிக்கின்ற‌ன‌ என்கிற‌ விசேஷ‌மும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

இங்கு ச்ருதிக‌ளும் சேர்த்துக் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், “ஸார்வ‌பௌமீ ஸ‌ம்ஹிதா” என்று ஆழ்வாருடைய‌ ப்ர‌ப‌ந்தத்தூ நிர்தேசித்தருளியிருப்ப‌தினாலும் திருவாய்மொழி ஒரு உபப்ரும்ஹ‌ண‌ம‌ன்று, வேத‌ங்க‌ளைப் போல‌வே துல்ய‌மான‌ ப்ர‌மாண‌ம் என்ற‌தாயிற்று.

இந்த‌ ஏற்ற‌த்தையே வேதாந்தாசார்ய‌ரான‌ ஸ்வாமியும், “மாசில் ம‌ன‌ம் தெளி முனிவ‌ர் வ‌குத்ததெல்லாம் ந‌ம் மாலுக‌ந்த‌ ஆசிரிய‌ர் வார்த்தைக்கொவ்வா” என்று உத்கோஷித்துள்ளார்.

ஆகிலும் வேத‌ங்க‌ள் ருக், ய‌ஜுஸ், ஸாம‌, அத‌ர்வ‌ என்று நாலு பாக‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அவ‌ற்றின் அர்த்த‌ங்க‌ள் ப்ர‌ஹ்ம‌ ஸூத்திர‌ங்க‌ளில் 4 அத்யாய‌ம் 16 பாத‌ங்க‌ளில் விஸ்தார‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அந்த‌ ஏற்ற‌ம் இப்பிர‌ப‌ந்தத்திற்கு எங்ங‌னே உண்டாகும் ? என்கிற‌ ஆக்ஷேப‌த்திற்கு ஸ‌மாதான‌ம் அருளிச் செய்துகொண்டு, கீழ் சுலோக‌த்தில் “ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம்” இத்யாதியாக‌ அருளிச் செய்ததை, அதாவ‌து இதிஹாஸ‌ புராணாதிக‌ளுட‌ன் கூடிய‌ ச்ருதிக‌ள் எந்த‌க் கார்ய‌த்தைச் செய்கின்ற‌ன‌வோ – எந்தெந்த‌ அர்த்த‌ங்க‌ளை ப்ர‌திபாதிக்கின்ற‌ன‌வோ – அவைக‌ளெல்லாம் திருவாய்மொழியிலும் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் உபபாதித்த‌ருளுகிறார் – “ஆதௌ சாரீர‌கார்த்த‌ க்ர‌மம்” என்றார‌ம்பித்து.

ஆதௌ₃ ஶாரீரகார்த₂க்ரமமிஹ விஶத₃ம் விம்ஶதிர்வக்தி ஸாக்₃ரா
        ஸங்க்ஷேபோsஸௌ விபா₄க₃ம் ப்ரதயதி ச ரு̆சாம் சாருபாடோ₂பபந்நம் |
ஸம்யக்₃கீ₃தாநுப₃த்₃த₄ம் ஸகலமநுக₃தம் ஸாமஶாகா₂ஸஹஸ்ரம்
        ஸம்லக்ஷ்யம் ஸாமிதே₄யை: யஜுரபி த₃ஶகை: பா₄த்யத₂ர்வா ரஸைஶ்ச ||

இத்திருவாய்மொழியில் நுனியுட‌ன்கூடிய‌ முத‌ல் இருப‌து பாசுர‌ங் க‌ளும், அதாவ‌து ப‌த்தாம் ப‌த்தில் “சார்வே த‌வ‌நெறி” என்றார‌ம் பிக்கும் திருவாய்மொழி தொட‌க்க‌மாக‌ ஏழு திருவாய்மொழி க‌ளும் முத‌ல் இருப‌து பாசுர‌ங்க‌ளும் சாரீர‌கார்த்த‌ க்ர‌ம‌த்தைத் தெளிவாகக் கூறுகின்ற‌ன‌. அதாவ‌து நான்கு அத்யாய‌ங்க‌ளாய்ப் ப‌தினாறு பாத‌ங்க‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சாரீர‌க‌ சாஸ்திர‌த் தில் தத்துவ‌ ஹித‌ புருஷார்த்த‌ங்க‌ள் எந்த‌ க்ர‌ம‌த்தில் நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வோ, அதே க்ர‌ம‌த்தில் இங்கும் இந்த‌ தொண்ணூறு பாசுர‌ங்க‌ளும் ப்ர‌திபாதியா நிற்கும் என்ற‌ப‌டி.

ஆதெள‌. சாரீரகார்த்த க்ரமம் இஹ‌ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா-தத்துவ ஹித புருஷார்த்தம் எனப்படுகிற பரப்ரஹ்ம ஸ்வரூபாதி கள், அதை அடைவதற்கு உபாயம் அந்த ப்ரஹ்மத்தை அனுபவிப்பதாகிற பலன், இவ்வனைத்தையும் வ்யாஸ மஹர்ஷி 545 ஸூத்திரங்களில் நிரூபித்திருக்கிறார். வேதங்களுக்கு அடுத்த படியான ப்ரமாண‌மாக இஸ்ஸூத்திரங்கள் கருதப்படுகின்றன, ஹிந்து மதத்தைப் பரவச் செய்ய முன்வந்தவர்க‌ள் இந்த ஸூத்திரங்களுக்கு விஸ்தரமான வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள். நம்முடைய மதமாகிய விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரவர்த்தகராகிய எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தில் இவற்றின் அர்த்தத்தை விவரித்துள்ளார். அதன் அவதாரிகா வாக்யத்திலிருந்து இந்த ஸூத்திரங்களுக்கு போதாயனர் மிகவும் பெரியதான வ்ருத்தி க்ரந்தம் என்னும் ஒரு வ்யாக்யானம் செய்திருப்பதாயும், (டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதிகளான)  பூர்வாசார்யர்கள் சுருக்கமாக வ்யாக்யானமிட் டிருப்பதாயும், அவற்றைத் தழுவி ஸூத்திரங்களின் அக்ஷரங் களுக்கு அர்த்தம் தாம் எழுதியதாயும் எற்படுகிறது.

இந்த ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங்களாக‌வும், பதினாறு பாதங்களாகவும் நாலு அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டிருக்கின்றன, அதிகரணங்கள் 158. ஒவ்வொரு பாதத்திலும் முறையே உள்ள அதிகரணங்கள் 11, 6, 10, 8-10, 8, 7, 8-6, 8, 28, 15- 11, 11, 5, 6 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. (அதிகர‌ண‌ ஸாராவளி – 16). இந்தப் பதினாறுபாதங்களுள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அம்சத்தை ஸ்ங்க்ரஹித்து ஒரு சுலோகம் ஆசார்ய ஸார்வ பெளமனால் ஸ்ரீஅதிகரண ஸாராவளி யில் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. அது பின்வ‌ருமாறு:-

(1) பகவானே சேதனா சேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) த‌ன‌க்கு வேறு ஆதாரம் இல்லாதவன், (4) எல்லையில்லாத மஹிமையையுடையவன், (5)இதற்கு ஒருவிதமான விரோதமும் சொல்லும் ப்ரமாண‌ங்கள் இல்லாதவன் (8) தன்னை அடைந்தவர்களுக்குத் தான் ஆப்தன், (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அததற்குத் தக்கபடி ஸ்ருஷ்டி செய்பவன், (3) அப்படியே இந்திரியங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்ஸாரத்தை நடத்துகிறவன், (10) தான் ஒருவித தோஷத்தினாலும் தொட‌ப்ப‌டாதவனாகையினால் போக்யமானவன், (11) அனேக விதமான பக்தியோகங்களுக்கு விஷயமாயிருப்பவன், {12} பக்தர் களினால் அவரவர்களுக்குத் தகுந்ததான வர்ணாச்ரம தர்மங் களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக் கூடியவன், (13} ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன், {14) ப்ரஹ்ம நாடி வழியாக நிர்யாண‌த்தைச் செய்துவைப்பவன், (15) ப‌ல‌வித‌ங்க‌ளான‌ ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தினால் மோக்ஷ‌த் திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடைய ஸாம்ய‌த்தைக் கொடுப்பவன், என்கிற அம்சங்கள் முறையே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன. இதைத்தான் சாரீரகார்த்த க்ரமம் என்கிறது. சரீரத்தையுடையவன் சாரீரன், சேதனாசேதனங்களைத் தன‌க்கு சரீரமாகவுடையவன் ப‌கவனாகையினால் அவன் சாரீரன் என்னப்படுகிறான். அவனைப் பற்றிய சாஸ்திரம் சாரீரகம் என்றும், இந்த அர்த்தத்தை நிரூபிக்கும் க்ரமம் சாரீர‌கார்த்த‌ க்ரமம் என்றும் கூறப்படுகிறது.

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,

ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய் நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ‘ பத்துடையடியவர்’  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி’க்கு முன் (–1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.

இங்கு ’சாரீரகஸூத்ரார்த்த க்ரமம்’ என்று நிரூபிக்காமல் ’சாரீரகார்த்த க்ரமம் ‘ என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. ‘விசதம்’ என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

        முதல் ஸூத்திரத்தில் ஸித்த பரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  ‘யவன் அவன் ’ என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனே’ என்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரணத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது ’உயர்வற உயர் நலமுடையவன்’ என்னப்பட்டது. ’உயர்வற உயர்நலம் உடையவன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. “மயர்வற மதிநலம் அருளினன்”  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.

ஸ்ரஷ்டா – பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதை யில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு ’பொறி உணர்வு அவையிலன்’என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்’ என்னப்பட்டது.

இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது “தேஹீ” என்னப் பட்டது. இது ’இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

’ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், ’நிரவதிமஹிமா’  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை ’அந்நலனுடை ஒருவனை’ என்கிற பாட்டில் காணலாம்.

இப்படி முதல் மூன்று பாட்டுக்களில் முதல் அத்யாயத்தில் உபபாதிக்கப்பட்ட பகவானுடைய. ஐகத்காரணத்வம் விவரிக்கப்பட்டது. இந்த சரீராத்மபாவத்தை நமது ஸித்தாந்தத்திற்கு ப்ரதான ப்ரதிதந்த்ரமாக பூர்வாசார்யர்கள் நிரூபித்துப் போந்ததற்குக் காரணம் இந்த ஸித்தாந்தத்திற்கு இந்தக் கலியுகாரம்பத்தில் ப்ரவர்த்தகரான ஆழ்வார் நான்கு பாட்டுக்களில் இந்த அம்சத்தை விசதமாக உபபாதித்திருப்பதே. அதாவது ’நாமவன்’, ’அவரவர்’, ‘நின்றனர்’ ’திடவிசும்பு’ என்றாரம்பிக்கும் நாலு ஐந்து ஆறு ஏழா வது பாட்டுக்களில் இவ்வர்த்தம் நன்றாக உபபாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ’உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இந்த ஸம்பந்தம் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எம்பெருமானார் தாம் ஸ்ரீஆளவந்தார் சரம திருமேனி முன்பே செய்தருளிய திருவாய் மொழிக்கு வ்யாக்யானம் செய்தருளுவதாகிற மூன்றாவது ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றத் திருவுள்ளம்பற்றி ஆழ்வாருடைய க்ருபைக்குப் பூர்ணபாத்திரமான ஸ்ரீமந்நாதமுனிகள் வம்சத்தில் பிறந்த திருக்குருகைப் பிரான் பிள்ளானை வ்யாக்யானம் எழுதும்படி நியமித்தார் என்பதும், அவரும் தாம் எம்பெருமானார் திருவடிகளில் க்ரஹித்த அர்த்த விசேஷங்களையே ஸங்க்ரஹித்துத் திருவாறாயிரப்படி எனப்படும் வ்யாக்யானத்தை எழுதி எம்பெருமானார் திருமுன்பே வைக்க, அவரும் அதைக் கடாக்ஷித்து, போரஉகந்து, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதித்தருளினார் என்பதும், தமக்குப் பிறகு திருவாய்மொழியின் அர்த்தத்தை ப்ரவசனம் செய்யும் அதிகாரத்தை அந்தப் பிள்ளானுக்கே கொடுத்தருளினார் என்பதும் ஸுப்ரஸித்தம். அந்த வ்யாக்யானத்தில் ’மனனகம்’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “இந்தக் குணங்களுக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைகதாநதயாவுள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது” என்றும் , ’இலனது’ என்கிற பாட்டின் அவதாரிகையில் ‘இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப குண விபூதிகனான எம்பெருமானுடைய ஜகதைச்வர்யம் சொல்லுகிறது’ என்றும், ‘திடவிசும்பு’ என்கிற பாட்டின் அவதாரிகையில் “கீழ் மூன்று பாட்டாலும் ஜகத்தினுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் பகவததீநம் என்னும் இடத்தை ஸாமாநாதிகரண்யத்தாலே சொல்லிற்று, இனி இந்த ஸாமானாதிகரண்யமானது ஜகதீச்வரயோ: சரீராத்மத்வ நிபந்தனம் என்று சொல்லுகிறது” என்றும், நடுவில் ‘அகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலா விநோதனாய் ஸர்வ ஜகதாத்மாவாய், ஸர்வ ஜகச்சரீரனாய் ஸ்வத ஏவ அகர்மவச்ய னாகையாலே ஸ்வசரீரபூத சேதனா சேதனாத்மக ஸமஸ்தவஸ்துகத ஸுக துக்க விகாராதி ஸர்வ தோஷை : அஸம்ஸ்ப்ருஷ்டனாயிருந்த பரமபுருஷன்’ என்றும் வ்யாக்யானம் செய்திருப்பதினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் உபபாதித்திருப்பதற்கு மூலம் இத் திருவாய்மொழிப் பாசுரங்களே என்பது ஸூசிப்பிக்கப்பட்டதாகிறது.

‘அபாஸ்தபாத:’ என்கிற இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ’சுடர்மிகு சுருதியுள்’ என்று காட்டப்பட்டது. அதாவது ’சுடர்மிகு’ என்பதினால் ச்ருதி உத்தம ப்ரமாணமாகையாலே அவற்றில் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதற்கு விருத்தமாகச் சொல்லுகிற ஸாங்க்ய ஸ்ம்ருதி, யோக சாஸ்திரம், முதலியவைகளினுலும் யுக்திகளினாலும் பாதிக்கப்படாதாகையினால் அவை நிரஸிக்கப்பட்டனவாயின என்று காட்டியபடி. மேல் ’உளன் எனில்’ என்கிற பாட்டில் சூந்யவாதியை நிரஸித்திருப்பதும் இந்த அபாஸ்த பாதத்வத்தையே விவரிப்பதாகும்.

“ச்ரிதாப்த” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தின் க்ரமம் ‘சுரரறிவரு நிலை’, ‘ உளன் எனில் உளன்’ என்கிற இரண்டு பாட்டுக்களில் காணப்படும். ‘காத் மாதேரிந்த்ரியாதே ருசிதஜனனக்ருத்* என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் ஆகாசாதிகளின் ஸ்ருஷ்டியைக் குறிப்பிட்டு அதற்கு ப்ரஹ்மாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று கூறும் ‘சுரரறிருவரு’ என்கிற பாட்டிலும் ‘சுடர் மிகு’ என்கிற பாட்டிலும் காணலாம்.

திருவாறாயிரப்படியில் ‘அபௌஷேயமாகையாலே நிர்த்தோஷமாய், அபாதித ப்ராமாண்ய ரூபதேஜ: ப்ரசுரமாயிருந்த சுருதிகளில் உளன் என்கிறார். ஆதலால் லோகாயத, மாயாவாத, பாஸ்கரீய யாதவப்ரகாசாதி வேதவிருத்த ஸமயங்கள் எல்லாம் நிரஸ்தமாய்த்தன’ என்று வ்யாக்யாதம். ஆக இப்படி முதல் திருவாய்மொழி பத்துப் பாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் க்ரமமும் சாரீரக சாஸ்திரத்தில் முதல் இரண்டு அத்யாயங்களின் ரீதியும் ஒன்றாயிருக்கும் என்றறியவும்,

‘ஸம்ஸ்ருதெள தந்த்ரவாஹீ ’ என்று நிரூபிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம் ‘வீடுமின் முற்றவும்’ என்கிற இரண்டாம் திருவாய்மொழியில் காணலாம். உபாயத்தை நிரூபிப்பதற்கு முன்பு இதர விஷயங்களினுடைய அஸ்திரத்வாதி தோஷங்களையும், ஆச்ரயணீய பகவானுடைய ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணை கதாநத்வத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக இதர விஷயங்களில் ஸங்கத்தை விட்டு அவனை ஆச்ரயிக்க வேண்டும் என்று முதல் பாட்டிலும், ஜீவாத்மா ஸ்திரன் என்றும், சரீரங்கள் அஸ்திரங்கள் என்றும் இரண்டாம் பாட்டிலும் இதற்கு மூல காரணங்களான அஹங்கார மகாரங்களை விடவேண்டும் என்று மூன்றாம் பாட்டிலும் நிரூபிக்கப்பட்டது.

நிர்தோஷத்வாதிரம்ய:’ என்னப்பட்ட இரண்டாம் பாதத்தின் க்ரமத்தை ‘இல்லதுமுள்ளதும் எல்லையில்,அந்நலம்’ என்கிற நாலாம் பாட்டில் காண்க, பகவானை ஆச்ரயிக்குமவர்களுக்கு நடுவில் இடையூறாக உண்டாகக் கூடிய கைவல்யத்தைப் பரிஹரிக்கும் ப்ரகாரம் ஐந்தாம் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தில் முக்தாதிகரணம் வரையிலான க்ரமம் நிரூபிக்கப்பட்டதாகிறது, அடுத்த உபய லிங்காதி கரணம் முதல் மேலுள்ள அதிகரணங்களின் க்ரமம் மேல் பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பகவான் ஆச்ரயணீயன் என்பதற்காக அவனுடைய ஸர்வஸமத்வத்தையும் அவனுடைய ஸர்வஸுஹ்ருத் வத்தையும் கண்டு அவirக் கரண த்ரயத்தாலும் ஆச்ரயிக்கும் ப்ரகாரம் “பற்றிலன்” என்றாரம்பித்து மூன்று பாட்டுக்களில் உபதேசிக்கப் பட்டது. இப்படி ஸங்க்ரஹமாக ப்ரஸ்தாவிக்கப்பட்ட பக்தியின் பலானுபவத்தை ‘ஒடுங்க அவன் கண்‘ என்கிற பாட்டில் குறிப்பிட்டு ஆச்ரயணீய தேவதை நாராயணன் என்பதை ‘வண் புகழ் நாரணன்’ என்று பத்தாம் பாட்டில் உபபாதித்தார்.

பலத்தை விஸ்தரமாக ப்ரதிபாதிக்கும் இடம் நாலாம் அத்யாயமேயாயினும், பலத்தை விதிக்குச் சேஷமாக வேதங்களில் சொல்லியிருப்பதைப்போல உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதற்கு உபயுக்தம் என்பதினால் மூன்றாவது அத்யாயம் இரண்டாம் பாதத்தின் இறுதியிலும் பலன் ப்ரஸ்தாவிக்கப் பட்டிருக்கிறது.

ஆக இப்படி இரண்டாம் திருவாய்மொழியில் பாட்டுக்களின் அர்த்த க்ரமம் மூன்றாவது அத்யாயத்தின் முதல் இரண்டு பாதங்களின் க்ரமமாகும். மூன்றாம் பாதத்தின் க்ரமம் ப்ரஸ்தாவிக்கப் பட்டு நிறுத்தப்பட்டது.

ஆகிலும் இப்படிப் பக்தி செய்வது ஸம்பாவிதமோ என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக மூன்றாம் திருவாய்மொழியில் அவனுடைய ஸெளலப்யாதிகளை உபதேசிக்க உபக்ரமம் செய்யப் பட்டது. இதற்கு மேல் ப்ரஸ்க்தானு ப்ரஸக்தமாகப் பலவித அனுபவங்களைத்தாம் பெற்று பத்தாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியாகிற “சார்வே தவநெறி” யில் கீழ் ப்ரஸ்தாவித்த பலத்தை உபஸம்ஹாரம் செய்து, மேல் பக்தி யோகத்தின் ப்ரகாரங்களே ’கண்ணன் கழலிணை’ என்கிற திருவாய்மொழியில் ப்ரதிபாதித்திருக்கிருக்கிறார்..

இப்படிக்கீழ் முதல்பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் கூறப்பட்ட பக்தி யோகத்தின் ப்ரகாரங்களை விவரிக்க நடுவில் ஸந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதும் அது ஏற்பட்டதும் “சார்வே தவநெறி” தொடங்கி அது உபபாதிக்கப்படுகிறதென்பதும் இத்திருவாய்மொழியின் திருவாறாயிரப்படியில் “இப்படி ப்ராஸங்கிகத்தை முடித்து பத்துடையடியவரிலே ப்ராரப்தமான பக்தியோக ஸுலபத்வத்தை நிகமிக்கிறார்” என்றும், இதன் வ்யாக்யானமான இருபத்தி நாலாயிரப்படியில் “ப்ராஸங்கிகத்தை முடித்து ……. நிகமிக்கிறார் ” என்கிற இவ்வசன வ்யக்தியாலே பத்துடையவர்க்கு மேல் இதுக்குக் கீழ் ப்ராஸங்கிகம் என்று தோற்றுகையால் “ இப்படி” என்றது ‘அஞ்சிறைய மட நாராய்’ தொடங்கி என்றபடி. ‘ ப்ராஸங்கிகத்தை’ என்றது ‘பத்துடையடியவரிலே’ பிறர்க்குத் தாம் அவனுடைய ஸுலபத்வத்தை உபதேசித்தவாறே இப்படி ஸுலபனானவனோடு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே தமக்கு அபேக்ஷை பிறந்து அது கைவராமையாலே மிகவும் அவஸந்நராய் ‘அஞ்சிறைய மடநாரா’வில் தூது விடுகையும், ……… .உத்தரோத்தரம் ப்ரஸக்தரனுப்ரஸக்தமான நாநா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத்தை என்றபடி. பத்துடையடியவரிலே ஸாமாந்யேந உபக்ராந்தமாயிருந்த பக்தியோக ஸுலபத்வத்தை விசேஷித்துச் சொல்லுகைக்காக அவஸரம் லப்தமானவாறே அத்தைச் சொல்லுகிறார் என்று கட்டதாத்பர்யம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆகையினால் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னவளி ச்லோகத்தில் ‘ஸாக்ரா’ என்னும் பதம் கீழ்க்கூறியபடியே திருவாய் மொழியின் இறுதியிலுள்ள திருவாய்மொழிகளைக் குறிக்கிறது என்பதே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவுள்ளத்திற்கு ஒத்திருக்கிறது என்பது ஸ்பஷ்டம்.

பஹுபஜநபதம்”“ஸ்வார்ஹகர்ம ப்ரஸாத்ய” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாம் அத்யாயம் மூன்றாவது நான்காவது பாதங்களின் க்ரமம் பக்தி யோகத்தின் பிரிவுகளாகச் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட திருநாம ஸங்கீர்த்தனம், புஷ்பாதி ஸமர்ப்பணம், நமஸ்காரம், த்யானம் இவைகளை ‘கண்ணன் கழலிணை’யில் காணலாம். ஆக இப்படிப் பத்தாம் பத்து நாலாம் ஐந்தாம் திருவாய்மொழிகளில் மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் நாலாம் பாதங்களின் க்ரமம் காட்டப்பட்டதாகிறது.

மேல் நாலாவது அத்யாயத்தில் ப்ரதிபாதிக்கப்படும் க்ரமமான ப2லானுபவம் மேல் திருவாய்மொழிகளில் விஸ்தாரமாக நிரூபிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். ப2லத்திற்குத் துல்யமாயிருப்பதினாலே ப2லாத்யாயத்தில் அங்கியான உபாஸனத்தின் ப்ரகாரம் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதே ரீதியில் ப்ரபன்னனுக்கு ப்ரபத்த்யனுஷ்டானத்திற்கு உத்தரக்ஷணம் முதல் வருகிற ஸாக்ஷாத்காராதிகளும் பலத்தில் சேர்ந்தவை என்பதை “அருள் பெறுவார்” என்கிற திருவாய்மொழி காட்டுகிறது. ப்ராரப்தகர்ம நாசத்தளவும் விளம்பத்தை (தாமதத்தை)ப் பொறுக்காமையினாலே ப்ரபன்னனுக்குப் பலன்கொடுப்பதில் எம்பெருமானுடைய தீவ்ரதமமான உத்யோகமும் அப்படிச் செய்யுமிடத்தில் இவனுடைய இஷ்டப்ரகாரம் செய்ய ஸித்தமாயிருப்பதும் விசேஷித்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

“ பாபச்சித்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட நாலாவது அத்யாயத்தின் முதல் பாதத்தின் க்ரமம், பத்தாம்பத்து ஐந்தாம் திருவாய்மொழியில் “தீதொன்று மடையா”“அமராவினைகளே” , “வினைவல் இருள் என்னும் முனைகள் வெருவிப்போம்” இத்யாதிகளில் காட்டப்பட்டிருக்கிறது.

’ப்ரஹ்மநாடீ கதிக்ருத்’ என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட இரண்டாவது பாதத்தின் க்ரமம் ஆறாம் திருவாய்மொழியில் ‘வானேற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

‘செஞ்சொற் கவிகாள்’ திருவாய்மொழியில் பகவானுக்குத் தன் ஆச்ரிதர்களிடத்திலுள்ள ப்ரீத்யாதிக்யம் ப்ரதிபாதிக்கப்பட்டிருப்பதினால் இதன் காரணமாகப் பகவான் ஆச்ரிதர்களின் பூர்வோத்தர கர்மங்களை இவனுடைய அனுகூல ப்ரதிகூலர்கள் பக்கல் ஏறிடுகிறான் என்கிற க்ரமம் சொல்லப்பட்டதாகிறது. ‘ப்ராரப்த கர்மத்திற்குச் செலவு செய்த பிறகு நிர்யாணத்திற்கு விளம்பமில்லை என்பது “உடலுமுயிரும் மங்கவொட்டு” என்னப்பட்டது. ‘திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்’ என்பதினால் ப்ரபன்னன் விஷயத்தில் எம்பெருமான்தானே அந்திம ப்ரத்யயத்தை உண்டாக்குகிறான் என்கிற விசேஷாகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

“அதிவஹந்” என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட மூன்றாவது பாதத்தில் அபிப்ரேதமான அர்ச்சிராதி கதியின் ப்ரகாரம் ’சூழ்விசும்பு’ என்கிற திருவாய்மொழியில் விசதமாக நிரூபிதம்,

‘ஸாம்யத’ என்று ஸங்கிரஹிக்கப்பட்ட நாலாம் பாத க்ரமம் ‘அந்தமில் பேரின்பத்து அடியா ரோடிருந்தமை’ என்கிற பாட்டில் காணலாம். ‘உன்னைப் பெற்று இனிப்போக்குவனோ’ ’ என்றதும் அபுநராவ்ருத்தியைக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீ த்ரமிடோபநிஷத் ஸாரத்தில் ‘யதந்த்யா மீமாம்ஸா ச்ருதி சிகர தத்வம் வ்யவ்ருணுத | ததாதௌ காதாபி: முநிரதிகவிம்சாபி: இஹ ந: க்ருதீ ஸாரக்ராஹம் வ்யதரதிஹ ஸங்க்ருஹ்ய க்ருபயா’ என்று அருளிச் செய்து இருப்பதைப் பார்த்து இங்கு செய்யப்பட்டிருக்கும் நிரூபணம் அத்துடன் முரண்படுமே என்று ஆபாத ப்ரதீதீயினால் ஸந்தேஹம் சிலர்க்கு உண்டாகலாம். ஸார ச்லோகத்தில் ‘ஸங்க்ருஹ்ய’ என்பதையும், ‘ச்ருதிசிகர தத்வம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும், ஸ்ரீரத்னாவளியில் ‘விசதம்’, ‘சாரீரகார்த்தக்ரமம்’ என்கிற பதங்களின் ஸ்வாரஸ்யத்தையும் பராமர்சித்தால் இந்த ஸந்தேஹம் உசிதமன்று என்று ஏற்படும்.

இன்னம் சிலர் இப்படி 91 திருவாய்மொழிகள் ப்ராஸங்கிகமாகில் அவை அனுபாதேயங்க ளல்லவோ என்று ஸந்தேஹிக்கலாம். இதுவும் உசிதமன்று. ப்ராஸங்கிகமெல்லாம் அனுபா தேயங்கள் என்கிற நியமமில்லை. கீதையில் நாலாம் அத்யாயத்தில் ப்ராஸங்கிகமாக உபதேசிக்கப்பட்ட அவதார ரஹஸ்யம் எப்படி உபாதேயமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் போலவே இந்தத் திருவாய்மொழிகளும் சங்கிலித் துவக்குப் போல் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் இவைகள் உபாதேயங்கள் என்று கண்டு கொள்ளவும்,

இந்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ச்லோகத்திற்கு 9000படியிலும், 18000படியிலும், ஸ்ரீ வேங்கடாசார்யர் வ்யாக்யானத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கும் அர்த்தத்தின் ஸங்க்ரஹம்:-

இப்ரபந்தம் வேதோபப்ரும்ஹணம் மாத்திரமன்று, வேதங்களுக்கெல்லாம் ஸத்ருசமாயிருக்கும் என்னும் அர்த்தத்தை இப்ரபந்தம் தானே ஸூசிப்பிக்கிறது என்று அருளிச்செய்கிறர் – ‘ஆதெள’ இத்யாதியால். அடியிலே இருபத்தொரு காதை வேதாந்த சாஸ்த்ர க்ரமத்தை விசதமாகச் சொல்லுகிறது. இந்த ஸங்க்ரஹம் தான் ஏக விம்சதி சாகைகளாகப் படிக்கப்படுகிற ரிக்குக்களுடைய பேதத்தை ப்ரகாசிப்பியா நிற்கிறது. இதில் காதாஸஹஸ்ரத்தாலே கீதத்தோடு கூடிய ஸமக்ரமான ஸாம சாகா ஸஹஸ்ரமும் பின் செல்லப்படுகிற‌து.. ப்ரதிபாத்யமான ஓர் அர்த்தத்தோடே கூடியிருக்கிற தசகங்களாலே ஏகசத சாகமான யஜுஸ்ஸும் காணப்படுகிறது. சாந்தி ப்ரதானமான இப்ரபந்தத்திலே அதற்கு உபயுக்தமாக இதர ரஸங்கள் எட்டும் ப்ரதிபாதிக்கப்படுகையாலே அஷ்ட சாகமான அதர்வண வேதமும் தோன்றுகிறது. இப்படியால் இது ஸர்வவேத ஸத்ருசமென்றபடி,

இதில் வேத ஸாம்யம் கேவலம் சில அம்சங்களிலுள்ள எண்ணிக்கையின் ஸாம்யத்தினாலே என்று நிரூபிக்கப்பட்டதாகிறது. மேலும் ‘ஸாக்ரா’ என்னும் பதம் நுனியோடுகூடிய என்பதைக் கூறும் மேல் பாட்டு என்பது க்லிஷ்டம். இருபத்தொருபாட்டுக்களில் உபாயமும் புருஷார்த்தமும் மிகவும் ஸங்க்ரஹமாகவே நிரூபிக்கப்படுகிறது என்று தான் சொல்லமுடியும். இது ‘ விசதம்’ என்பதுடன் சேராது. ‘விசதம்’ என்பதற்கு விரோதமில்லாமல் “ஸங்க்ஷேபா “ என்பதற்கு அர்த்தம் சொல்லப்படவில்லை. கீழில் உபபாதிக்கப்பட்டிருக்கிறபடியே பகவத் விஷயத்தை ப்ரவசனம் செய்யும்படி எம்பெருமானாரால் அநிதர ஸாதாரணமாய் நியமிக்கப் பட்ட ஏற்றம் பெற்ற திருக் குருகைப்பிரான் பிள்ளானுடைய உபபாதனத்துடன் சேரவில்லை. கீழ் ஸ்ரீரத்னாவளி ச்லோகத்தில் ‘யத்தத் க்ருத்யம் ச்ருதீநாம்’ எனப் பன்மையாகக் கூறி, அந்த ச்ருதிகளெல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்ய முன் வந்தனவோ, அது ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதான த்ரமிடோபநிஷத்தாகிய திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உபபாதிப்பதற்காகவன்றோ இந்த ச்லோகம். எண்ணிக்கையின் ஸாம்யம் ஒரு க்ருத்யம் என்று சொல்ல ஒருநாளும் ஒருவரும் முன் வரமாட்டார்கள். இந்த அஸ்வாரஸ்யங்களெல்லா வற்றையும் ஒருவாறு நீக்கி இந்த ச்லோகத்தின் முதல் பாதத்தின் கருத்தை உபயவேதாந்த ஐககண்ட்யம் என்னும் க்ரந்தத்தில் அடியேனுடைய ஆசார்யனாய், வேதாந்தாசார்ய ஸூக்தி ப்ரவசன சதுரர் என்றும், தேசிகப் பித்தர் என்றும் ப்ரஸித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் சேட்டலூர் ஸ்ரீ உப வே, நரஸிம்மாசார்யஸ்வாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அது இப்பொழுது கிடைப்பது அரிதாகையால் அதன் ஸங்க்ரஹம் கீழே நிரூபிக்கப்பட்டது.

ஸங்க்ஷேபோஸௌ விபாகம்’ – இப்படி நுனியுடன் கூடிய முதல் இருபது பாட்டுக்களில் சாரீரகார்த்த க்ரமம் விசதமாக ப்ரதிபாதிக்கப் படுகிறது என்று கூறியது சுருக்கமான நிரூபணம். விஸ்தரமோ என்னில்: –

கீழ் ஸ்ரீரத்னாவளி சுலோகத்தில் ச்ருதிகள் எல்லாம் சேர்ந்து எந்தக் கார்யத்தைச் செய்கின்றனவோ, அவற்றையெல்லாம் இத் திருவாய்மொழி செய்கிறது என்கிற அம்சம் ‘ப்ரதயதி’ என்றாரம்பித்து நிரூபிக்கப்படுகிறது – என்பது.

வேதங்கள் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தபோதிலும் அவை எல்லாவற்றிற்கும் பகவானுடைய ஸ்வரூபாதிகளை நிரூபிப்பதில் நோக்கு, அப்படிச் செய்யும் விஷயத்தில் ஒவ்வொரு வேதமும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றியிருக்கும். அந்த நான்கு முறைகளையும் திருவாய்மொழியில் காணலாம்.

ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் —

அழகிய பாடக்ரமத்துடன் கூடிய ரிக் வேதத்தின் பிரிவைக் காட்டுகிறது. ரிக்வேதத்தின் விசேஷாம்சம் சந்தோபத்தமா யிருக்கையும் ஸ்தோத்ர ரூபமா யிருப்பதும். அதாவது யாப்புடன் கூடியிருப்பது மற்ற வேதங்களில் காணப்பட வில்லை. இந்த வேதத்தில் ரிக்குக்களெல்லாம் ஸ்தோத்திர ரூபமாயிருக்கும். ஒரு பலனோ, இதைச் செய் என்று விதிப்பதோ இதில் கிடையாது. திருவாய் மொழியும் யாப்புடன் கூடியதாயும் ஸ்தோத்திர ரூபமாயும் இருக்கும். ’ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதன குணஸ்தோம கர்ப்பம்’ என்றன்றோ மேலே கூறப் பட்டிருக்கிறது. அதில் ரிக் வேதம் அக்நி வருணன் முதலிய தேவதைகளை ஸ்தோத்ரம் செய்கிறது. திருவாய் மொழி பகவானைப் பற்றியதாயிருக்கும் என்பது விசேஷம். “ஸா க்ஷாதப்ய விரோதம் ஜைமினி “ என்கிறபடியே அக்தி முதலிய பதங்கள் பகவானையே நேரில் சொல்லும் என்று ஸூத்ரகாரர் கூறியிருக்கிருர். அக்ரம் நயதீதி அக்நி: — உத்தமமான பதத்திற்கு அழைத்துப் போவதினால் அக்நி என்னும் பதம் நேரிலேயே பகவானைக் கூறுகிறது என்றபடி. மேலே ’ தசகை:’ என்பதை இங்கு அந்வயித்துக் கொண்டால் ரிக்வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறாப் போலே திருவாய்மொழியும் பத்துப் பத்துக்களாகப் பிரிக்கப் பட்டிருக்கும் என்கிற ஸாம்யமும் குறிக்கப்பட்டதாகும். ‘ ரிச:-ஸ்துதெள’ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் ரிக். திருவாய்மொழியில் பகவத் குணங்களே ப்ரதானமாகக் கூறப்பட்டிருந்த போதிலும், சிற்சில இடங்களில் ப்ரஹ்மா ருத்திரன் இவர்களைப் பற்றிக் கூறியிருப்பதற்குக் காரணம் பகவான் அவர்களுக்கு அந்தர்யாமியாகையால் என்பதை ஆழ்வார் தாமே “புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்” என்கிற பாசுரத்தில் அனுஸந்தித் திருக்கிறார்,

ஸம்யக் கீதானுபத்தம் ஸகலமனுகதம் ஸாமசாகா ஸஹஸ்ரம் —ஸாமம் எனப்படும் கீதத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஸாமவேதம் பின்பற்றப் பட்டதாயிருக்கும், அதாவது கானத்துடன் கூடிய ஆயிரம் பாட்டுக்களை யுடையதாகையினால் அதற்கு ஸமம் என்றபடி. ஸாமவேதம் யாகாதி காலங்களில் இசையுடன் பாடப் படுமாப் போலே, திருவாய்மொழியும் பகவதாரா தனத்திற்கு அங்கமாக ப்ரஹ்மோத்ஸவ காலாதிகளில் பகவான் திருமுன்பே அனுஸந்திக்கப்படுகிறது. ஸ்ரீமத் நாதமுனிகள் சந்தமிகு தமிழ் மறைகளுக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளல் என்பதும் ப்ரஸித்தம். மேலும் ப்ரஹ்மத்தை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்ட ப்ரஹ்ம வித்யைகள் முப்பத்திரண்டில் பல ஸாமவேதங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறாப் போலே இத்திருவாய்மொழியில் அவற்றில் ப்ரதானமென்றும் ஸர்வாதிகாரமென்றும் ப்ரஸித்தமான ஸ்ரீ ந்யாஸ வித்யையை விசேஷமாக உபபாதித்தருளி, கண்கள் சிவந்து இத்யாதிகளில் மற்றும் சில வித்யைகளை அனுஸந்தித்திருக்கிறார்.

சாந்தோக்யத்தில் பகவானுக்கு உத் என்கிற திருநாமம் கூறப்பட்டிருக்கிறது. இது உகாரத்தினால் ஆரம்பித்து தகாரத்தினால் முடிக்கிற திருவாய்மொழியிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.–ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி தசகை: பாதி —-ஸம்ஹிதைகள் ஏழு அஷ்டகங்களும், ப்ராஹ்மணம் மூன்று அஷ்டகங்களுமாகப் பத்து அஷ்டகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் யஜுர் வேதமும் கருத்துடன் கூடியதாய் ப்ரகாசிக்கிறது. யஜ-தேவ பூஜா யாம் என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமாய் தேவதாராதனமாகிற யஜ்ஞ யாகாதி கர்மங்களைக் கூறுவதில் யஜுர்வேதத்திற்கு நோக்கு. அதைப் போலவே பரம பலமாகிற மோக்ஷத்தைக் கொடுக்கும் பகவானுடைய ஆராதனத்தைப் பல இடங்களில் விதியா நிற்கும் திருவாய் மொழியும். ‘அவன் துயரறு சுடரடி தொழுதுஎழு’ என்று முதலில் ‘மனமே! நீ உஜ்ஜீவிக்க ஆசைப்பட்டாயேயாகில், பகவானுடைய திருவடிகளைத் தொழு’ என்று விதிக்கப்பட்டிருக்கிறது. திருவாய்மொழி ஆழ்வாருடைய ஸ்வானுபவமேயாகிலும் பத்துக்கள் தோறும் பரோபதேசமான திருவாய்மொழிகள் இருக்கின்றன. ‘வீடுமின் முற்றவும்’ திருவாய்மொழி அவதாரிகையில் திருவாறாயிரப்படியில் ‘இவ்வாத்மாக்களைக் குறித்து பகவதேக போகத்வோபாயமான பக்தி யோகத்தை பகவத் வ்யதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார்’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியே மேலும் கிளரொளியிளமை-2-10, சொன்னால் விரோதம்-3-9, ஒன்றும் தேவும்-4-10, பொலிக பொலிக-5-2, நல் குரவும் செல்வும்—6-3, இன்பம் பயக்க-7-10, எல்லியும் காலையும் – 8- 6, மாலை நண்ணி -9-10, கண்ணன் கழலிணை-10-5 முதலிய திருவாய்மொழிகளில் பரோபதேசம் விசேஷித்துச் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு திருவாய்மொழியின் கடைசியில் பலன் ப்ரதி பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் ‘ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை’ என்னும் பதங்கள் யஜுர் வேதம் சப்த ப்ரதானமாய் இருக்கும் என்பதைக் காட்டும். திருவாய்மொழி அபிதேயமான பொருளைக் கூறும். யஜுர்வேதோபநிஷத்தாகிய தைத்திரீயத்தில் உத்கோஷிக்கப் பட்டிருக்கும் ஸ்ரீந்யாஸவித்யை திருவாய்மொழியில் பரக்க ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கிறது. அப்படியே பகவானுடைய அநந்த கல்யாண குணங்களை நிரூபிக்க ஆரம்பித்து, ஒரு குணத்தை வர்ணித்து பூர்ணமாக நிரூபிக்காமல் திரும்பிற்று ஆநந்தவல்லி. திருவாய்மொழியோ முதலடியிலேயே அவனுடைய குணங்கள் மற்றொருவருக்கும் இல்லாதவைகளாயும், ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டவை களாயும், இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பவைகளாயும் இருக்கு மென்றும், அவற்றில் ப்ரதானங்களான ஸெளலப்யம் ஸௌசீல்யம், அவதார ப்ரபாவம், அர்ச்சாவதாரச் சிறப்பு இவற்றை விசேஷித்தும் நிரூபிக்கிறது.

அதர்வா ரஸைச்ச பாதி-ப்ரதிபாதிக்கப்படும் ரஸங்களினால் அதர்வ வேதம் போல் இருக்கும் என்றபடி.

ரு கதௌ என்கிற தாதுவில் நிஷ்பந்நமான பதம் அதர்வ என்பது. அதர்வ வேதத்தில் ப்ராப்ய ப்ராபகங்கள் விசேஷித்துக் கூறப் பட்டிருக்கின்றன, ‘லோகோ பிந்ந ருசி:’ என்னும் ந்யாயத்தை அனுஸரித்துப் பல வித பலன்களுக்கு ( ரஸங்களுக்கு ) உபாயங்களைக் கூறும் அதர்வவேதம். திருவாய்மொழியில் நூறுவித பலன்கள் பகவானை ஆச்ரயிப்பவர்கள் பெறலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒன்பது ரஸங்கள் மட்டும் அதர்வ வேதத்தில் கூறப் பட்டிருக்கிறது என்றும், அவற்றில் ப்ரதானமான சாந்தி ரஸத்தைத் திருவாய் மொழி ப்ரதிபாதிக்கிறது என்றும் நியமிப்பதற்கு ப்ரமாணம் இல்லை.

மேலும் இத்திருவாய்மொழியில் முதல் பாட்டில் விஷயாதி நிருபணம் முதலிய பத்து அர்த்தங்கள் ப்ரதிபாதிக்கப் படுகின்றன. அவை எவை என்னில்:-விஷய ப்ரயோஜன ஸம்பத்தாதிகாரிகளை நிரூபித்தல், மங்களாசரணம் செய்தல், சாஸ்த்ரார்த்தானுக்ரமம், பரப்ரஹ்ம சப்தார்த்த ஸங்க்ரஹம், ஸேவ்ய ஸம்சோதனம், அர்த்த பஞ்சக நிரூபணம், ப்ரணவார்த்த நிரூபணம், பரபக்ஷ ப்ரதிக்ஷேபம், பராரம்ப நிவாரணம், ஸ்வாரம்ப ஸமர்த்தனம் என்பவை.

1 விஷயாதி நிரூபணம்.-இந்த ப்ரபந்தத்திற்கு விஷயம் ஸ்வபாவத்திலேயே வேறு ஒருவருக்கும் இல்லாதவையாய் எப்பொழுதும் உயர்ந்துகொண்டே யிருப்பவைகளான எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடைய பகவானே என்பது ‘உயர்வற உயர் நலமுடையவன் ’ என்னப்பட்டது. அப்படிப்பட்ட பகவானுக்கு நிருபாதிக தாஸ பூதர்களான ஜீவாத்மாக்கள் மீட்சியில்லாத வாட்சியைப் பெறுதலே ப்ரயோஜனம் என்பது ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு’ என்று கூறப்பட்டது, அவனை அடைவது உண்மையான ஜ்ஞானத்தினாலே யாகையாலே அந்த ஜ்ஞானத்தை அடைவதும் அவனுடைய அனுக்ரஹத்தினாலே என்பது ‘மயர்வற மதி நலம் அருளினன் ‘ என்னப்பட்டது, இப்படி ஸர்வஜ்ஞனான பகவானால் அஜ்ஞான கந்தமில்லாதபடி அருளப் பெற்றவர் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்ட ப்ரபந்தமாகையினாலே இப்ரபந்தம் எல்லோருக்கும் உபாதேயம் என்பதும் விச்வஸநீயம் என்பதும் விவக்ஷிதம். இப்படிப் பகவான் அனுக்ரஹிப்பதற்குக் காரணம் அவனுக்கும் தமக்குமுள்ள ஸ்வாமித்வ தாஸத்வமாகையால் ஸம்பந்தம் அர்த்தாத் நிரூபிக்கப் பட்டதாயிற்று. ஆக மதி, நலம், தொழுது என்கிற பதங்களினால் விவக்ஷிதமான பக்தி ப்ரபத்தி களாகிற உபாயங்களும், துயரறு என்பதினால் ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியும், எழு என்பதினால் பகவத் கைங்கர்யமாகிற அவாந்தர பலன்களும் என் மனனே என்று தம்முடைய மனது போலே அந்தரங்கர்களான சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை குறிப்பிடப்பட்டு அவர்கள் அதிகாரிகள் என்பதும், விஷயமாகிய பகவானுடன் விஷய விஷயிபாவமும், உத்பாத்ய உத்பாதக பாவமும் ப்ரதி பாதிக்கப்பட்டபடியினால் விஷய ப்ரயோஜன அதிகாரி ஸம்பந்தங்கள் என்னப்படும் அனுபத்தி சதுஷ்டயமும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.

2.மங்களாசரணம்-இந்த ப்ரபந்தத்திற்கு ப்ரதான தாத்பர்யமாய் மற்ற எல்லா வஸ்துக்களைக் காட்டிலும் உயர்ந்ததான பரமாத்மாவை முதலடியிலேயே நிரூபித்திருப்பதினால் வஸ்து நிர்த்தேச மங்களமும், ‘எழு’ என்பதினால் ஆசீர்வாதரூப மங்களமும், ‘நலம் தொழுது’ என்கிற பதங்களினால் நமஸ்காராதிகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பக்தியாகிற உபாயமும் நமச்சப்தார்த்தமான ப்ரபத்தியாகிற உபாயமும் கூறப்பட்டபடியினால் நமஸ்கார ரூபமான மங்களமும் செய்யப்பட்டதாகிறது. இந்த ப்ரபந்தத்தை லக்ஷ்மீவாசகமென்று ச்ருதி ப்ரஸித்தமான உகாரத்தினால் ஆரம்பித்திருப்பதினால் ‘தேவதா விசேஷம் எதுவென்று தெரிந்து கொள்ளுவதற்கும், அவளுடைய பர்த்தாவாகிய பகவான் நம்மால் அடையப்படுவதற்கும் விசேஷமான மங்களங்களை அடைவதற்கும் இவ்விடத்தில் லக்ஷ்மீ முதலில் சொல்லப் பட்டாள் ” என்று ஸ்ரீ கீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் அருளிச் செய்திருக்கும் விசேஷாம்சங்களும் இங்கு விவக்ஷிதங்கள்.

3 சாஸ்த்ரார்த்தானுக்ரமம்-இந்த ப்ரபத்தத்தில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் மேலே 6 – ம் 8 – ம் சுலோகத்தின் விவரணத்தில் கண்டு கொள்வது.

4 ப்ரஹ்ம சப்தார்த்தநிரூபணம்-எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்கிற முதலாவது அடியில் ‘உயர்வற’ என்பதினால் இப்படிப்பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது, ஒரு வித தபஸ்ஸு முதலியது செய்ததனுடைய பலனாகப் பெற்றதன்று என்று தெரிவிக்கிறபடியினாலே பகவானுடைய ஸ்வரூபம் ஹேயப்ரத் யகமாய் கல்யாணைகதாநமாய் இருக்கும் என்றதாயிற்று,

ப்ரஹ்ம என்னும் பதத்திற்கு மேன்மையையுடைய வஸ்து என்றர்த்தம், அயலாரையும் அப்படியே மேன்மையுடையவர்களாகச் செய்வதும் அதன் உட்பிரிவு ஆகையினால் எந்த வஸ்து மற்ற எல்லா வஸ்துக்களையும் விட உயர்ந்ததோ அது ‘ப்ரஹ்ம’ என்னும் பதத்தினால் சொல்லப்படும். இப்படியே யாஸ்கரும் நிருக்தி செய்திருக்கிறார் என்பது ப்ரஸித்தம். ஆகையினால் விசேஷமான தபஸ்ஸு முதலியவைகளைச் செய்து தங்கள் தங்கள் பதங்களைப் பெற்ற ப்ரஹ்மாதிகளைப் போலன்றிக்கே ஒரு விதமான ச்ரமமின்றியும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட உயர்வு இருக்கிற தென்று சொல்ல முடியாதபடியும் நிற்கும் எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன் என்பதை முதல் பாதத்தில் ‘உயர்வற உயர் நலமுடையவன்’ என்று நிரூபித்திருப்பதனாலும், இரண்டாம் மூன்றாம் பாதங்களில் அப்படிப் பட்ட மேன்மையை மற்றவர்களுக்குக் கொடுப்பவன் என்று அருளிச் செய்திருப்பதினாலும் திருமாமகள் கேள்வனாகிய தேவனே ப்ரஹ்ம சப்தத்திற்கு முக்யார்த்தம் என்று உபபாதிக்கப்பட்டதாயிற்று.

5– ஸேவ்ய ஸம்சோதனம்-த்யேயமாகிய பரமாத்ம ஸ்வரூபத்தை விளக்கிக் காட்டும் அதாவது எண்ணிறந்த கல்யாண குணங்களுக்கு இருப்பிடமாயிருக்கும் என்கிற முதல் பாதத்தில் “உயர்வற” என்பதினால் இப்படிப் பட்ட ஏற்றம் ஸ்வபாவத்திலேயே ஏற்பட்டது என்று காட்டப்பட்ட தாயிற்று. அன்றிக்கே கீதாசார்யன் “எந்தக் காரணத்தினால் நான் ப்ரக்ருதியையும்,  அத்துடன் சேர்ந்த பத்த ஜீவர்களைக் காட்டிலும் வேறுபட்டவனோ,  பரிசுத்த ஜீவாத்மாக்களையும் விட வேறுபட்டவனோ,  அதே காரணத்தினால் ச்ருதியிலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று ப்ரஸித்தி பெற்றவனாகிறேன்” என்று உத்கோஷித்த அம்சம் சொல்லப்பட்டதாகவுமாம். ‘மயர்வற’ இத்யாதியால் ஜ்ஞானத்தைக் கொடுத்தருளியவன் என்பதினாலும் ‘அயர்வறும்’ இத்யாதியால் நித்ய முக்தர்களுக்கு அதிபதி என்றதனாலும் இந்த ஏற்றம் காட்டப்பட்டதாகிறது.

6- அர்த்த பஞ்சக நிரூபணம்–இதிஹாஸ புராணங்களுடன் கூடிய வேதங்கள் எல்லாம் பரமாத்ம ஸ்வரூபத்தையும், ஜீவாத்ம ஸ்வரூபத்தையும், பகவானை அடைவதற்கு உபாயத்தையும், தடங்கலாய் நிற்கும் ப்ராப்திவிரோதிகளையும், பலனையும் கூறுகின்றன என்பது ப்ரஸித்தம். ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று பரமாத்ம ஸ்வரூபமும், ‘என்’ என்பதினாலே ஜீவாத்ம ஸ்வரூபமும், துயர்’ என்று ப்ராப்தி விரோதியும், ‘நலம், தொழுது’ என்று உபாயத்தின் ஸ்வரூபமும், ‘எழு’ என்று பலனும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன.

7. ப்ர‌ண‌வார்த்த‌ நிரூப‌ண‌ம்–எப்ப‌டி ப்ர‌ண‌வ‌மான‌து எல்லாவேத‌ங்க‌ளிலும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் அர்த்த‌ விசேஷ‌ங்க‌ளையும் உபபாதிக்கிற‌தோ, அதைப்போல‌வே அந்த‌ ப்ர‌ண‌வ‌த்தின் ந‌டு அக்ஷ‌ர‌மாகிய‌ உகார‌த்தின் பொருளாகிய‌ ப‌க‌வானுக்கே சேஷ‌பூத‌ம் என்கிற‌ அந்யயோக‌ வ்ய‌வ‌ச்சேத‌ம், அதாவ‌து ம‌ற்வ‌ர்க‌ளுக்குச் சேஷ‌பூத‌ர்க‌ள‌ல்ல‌ என்ப‌து த‌ன்னைவிட‌ வேறுப‌ட்ட‌ ம‌ற்ற‌ எல்லோர்க்கும் ஸ்வாமி என்று கூறுகிற‌ முத‌ல‌டியினாலும், ம‌கார‌த்தின் பொருளான‌ ஜ்ஞான‌த்தைக் குண‌மாக‌ உடைய‌வ‌ன் ஜீவாத்மா என்ப‌து, “ம‌தி, ந‌ல‌ம்” என்ப‌தினாலும், வேற்றுமையுட‌ன் கூடிய‌ அகார‌த்தின் அர்த்த‌மான‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌னான‌ ப‌ர‌மாத்மாவிற்கே இந்த‌ ஜீவாத்மா சேஷ‌பூத‌ன் என்ப‌து “அய‌ர்வ‌றும்” இத்யாதியாலும் வெளியிட‌ப்ப‌ட்ட‌து. “அருளினன், துய‌ர‌று” இத்யாதியால் ப‌க‌வான் த‌ன்னுடைய‌ ப‌க்த‌ர்க‌ளுக்கு இஷ்ட‌ ப்ராப்தியையும் அநிஷ்ட‌ நிவ்ருத்தியையும் உண்டாக்குகிறான் என்ப‌து ஏற்ப‌டுகிற‌ப‌டியினால் அகாரார்த்த‌மாகிய‌ ஸ‌ர்வ‌ ர‌க்ஷ‌க‌த்வ‌ம் ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்ட‌தாகிற‌து.

8. ப‌ர‌ப‌க்ஷ‌ ப்ர‌திக்ஷேப‌ம்- “உய‌ர்வு” என்றார‌ம்பிக்கும் முத‌ல‌டியினால் எண்ணிற‌ந்த‌ க‌ல்யாண‌ குண‌ங்க‌ளை உடைய‌வ‌ன் என‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், கார‌ண‌ம் ஒன்றும் கூற‌ப்ப‌டாமையினால் இவ‌ற்றை ஸ்வ‌பாவ‌த்திலேயே உடைய‌வ‌ன் என்று ஏற்ப‌டுகிற‌ப‌டியினாலும் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ஒருவ‌ன் ப‌ர‌தேவ‌தை, மும்மூர்த்திக‌ளும் ஸ‌மம், மும்மூர்த்திக‌ளையும் விட‌ வேறுப‌ட்ட‌வ‌ன் ப‌ர‌தேவ‌தை என்றிவை முத‌லிய‌வ‌ற்றைக் கூறுப‌வ‌ர்க‌ளும், ப்ர‌ஹ்ம‌த்தின் ஈச்வ‌ர‌த்வ‌ம் ப்ர‌திபிம்ப‌ம் போன்ற‌து என்று கூறும‌வ‌ர்க‌ளும் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “எவ‌ன்” என்கிற‌ ப‌த‌ம் ப்ர‌மாண‌ங்க‌ளினால் ஏற்ப‌ட்ட‌ ப்ர‌ஸித்தியைத் தெரிவிப்ப‌தினால் ப‌ர‌மாத்மா இல்லை என்னும‌வ‌ர்க‌ள் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌க் குண‌ங்க‌ளினால் ஆன‌ந்த‌வ‌ல்லி ஜ்ஞாப‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, அத்தால் ஸூர்ய‌ ம‌ண்ட‌ல‌த்தின் ந‌டுவே இருக்கும் புருஷ‌ன் சொல்ல‌ப்ப‌டுகிற‌ப‌டியினால் நாராய‌ண‌னே ப‌ர‌தேவ‌தை என‌ ள‌ற்ப‌டுகிற‌து. ஆகையினால் ப‌ர‌தேவ‌தை வேறு என்று நிரூபிக்கும் ப‌க்ஷ‌ங்க‌ளெல்லாம் நிர‌ஸிக்க‌ப்ப‌ட்ட‌ன‌வாயிற்று.

நலம்மதி, தொழுது” என்கிற பதங்களினால்  ஒர் உபாயத்தை அனுஷ்டிக்கவேண்டும் என்று ஏற்படுகிறபடியினாலே கேவலம் வாக்யார்த்த ஜ்ஞானத்தினால் மோக்ஷ‌ம் பெறலாம் என்கிற பக்ஷ‌மும் – “அருளினன்” என்பதினாலே கொடுப்பவன் வேறு வாங்குமவன் வேறு என்பதும், கொடுத்தது மதியும் நலமும் என்பது ஸித்திக்கிறபடியினாலே ஜஞானம் மாத்திரம் ஆத்மா என்கிற பகடிமும் — அயர்வறும் அமரர்கள் எனப்பன்மையாகக் கூறியிருப்பதினாலே ஆத்மா ஒன்று என்கிற பக்ஷம் மோக்ஷ‌த்தில் பரமாத்மாவுடனே  ஐக்யமடைகிறது என்னும் பக்ஷ‌மும், ஆத்மா ஸ்வதந்த்ரன் எனும் பக்ஷமும் — அடி என்பதினால் திவ்ய மங்கள விக்ரஹம் ஸித்திக்கிற படியினாலே பகவானுக்கு ரூபமில்லை எனும் பக்ஷமும் — லக்ஷ்மீ வாசகமான உகாரத்தினால் இந்தப் பாட்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதினால் ல‌க்ஷ்மீ விசிஷ்டத்வம் ஸித்திக்கிறபடியினால் அதை அங்கீகரியாத பக்ஷங்களும் நிராகரிக்கப்பட்டனவாயிற்று.

9 பராரம்ப நிவாரணம்-பர ப்ரஹ்மம் நிர்க்குணமென்று சொல்லுமவர்கள் அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன் என உபபாதிக்கும் இக்ரந்தத்தை ஆரம்பிக்கமுடியாதல்லவா என்று கருத்து. எவன் என ப்ரஸித்தியைக் காட்டுகிற இந்த க்ரந்தத்தை ப்ரஹ்மம் ஒன்றினாலும் அறியமுடியாத தென்ற‌வர்களும், ப்ரஹ்மமே இல்லையென்ப‌வ‌ர்க‌ளும் ஆரம்பிக்கமுடியாதல்லவா ? …

10 ஸ்வாரம்ப‌ ஸ‌மர்த்தன‌ம்-பகவான் எல்லாக் கல்யாண‌ குணங்களையும் உடையவனாகையினால் அவனைப் பற்றிய ஜ்ஞானம் ஸார்வபெளமனான பிதாவைப் பற்றிய ஜ்ஞானத்தைப் போல மிகவும் விரும்பத்தக்கதாகும். அப்படிப்பட்ட ஜ்ஞானத்தினால் பகவானிடத்தில் ப்ரீதியுண்டாகி, அவனை அடைய வேண்டுமென்கிற ஆசைபை உண்டாக்கி, அதற்கு உபாயமான பக்தியையோ ப்ரபத்தியையோ அனுஷ்டித்து, மோக்ஷ‌த்தை அடையலாம் என்றும், பகவானுக்குத் திவ்ய ரூபாதிகள் உண்டென்றும் நிரூபிக்கும் இக்ரந்தம் ஆரம்பணீய‌ம் என்றதாயிற்று,

ஆக இப்படி எல்லா வேதங்களும் சேர்ந்து செய்யும் பகவானுடைய ஸ்வபாவம் ஸ்வரூபம் முதலியவைகளின் ப்ரகாசத்தை இத் திருவாய்மொழி விசதமாக நிரூபிக்கிறது என்கிற அம்சம் ஒருவாறு உபபாதிக்கப்பட்டது.

         இப்படி ஸ‌கல வேத‌ங்க‌ளினுடைய‌ க்ருத்ய‌ங்க‌ளையும் செய்கிறது என்று நிரூபித்த‌ருளி, மேல்  ப்ர‌திபாதிக்க‌ப் ப‌ட்டிருக்கும் அர்‌்த்த‌ங்க‌ளை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ அருளிச் செய்கிறார் – “ப்ராச்யே” என்றார‌ம்பித்து

ப்ராச்யே ஸேவாநுகு₃ண்யாத் ப்ரபு₄மிஹ ஶதகேsமம்ஸ்த முக்தேருபார்யம்

முக்தப்ராப்யம் த்₃விதீயே முநிரநுபு₃பு₃தே₄ போ₄க்₃யதா விஸ்தரேண |

ப்ராப்யத்வோபாயபா₄வௌ ஶுப₄ஸுப₄க₃தநோரித்யவாதீ₃த் த்ரு̆தீயே

அநந்யப்ராப்யஶ்சதுர்தே₂ ஸமப₄வதி₃தரைரப்யநந்யாத்₃யுபாய: ||

ஆழ்வார் இத்திருவாய்மொழியில் முத‌ல் ப‌த்தில் ப‌க‌வானை அடியார்க‌ள் வ‌ந்த‌டைய‌த் த‌குதியுள்ள‌மையால் மோக்ஷ‌த்திற்கு உபாய‌மென‌த் திருவுள்ள‌ம் ப‌ற்றினார். இர‌ண்டாம் ப‌த்தில் அவ‌னுடைய‌ போக்ய‌த்வ‌த்தின் மிகுதியாலே முக்த‌ர்க‌ளினாலே அடைய‌ப்ப‌டும‌வ‌னாக‌ நிர்ண‌யித்த‌ருளினார். மூன்றாம் ப‌த்தில் ப‌ல‌னாயும் அத‌ற்கு உபாய‌மாயும் இருக்கும் த‌ன்மைக‌ள் சுபாச்ர‌ய‌மான‌ திருமேனியுடைய‌ எம்பெருமானுக்கே என்று அருளிச் செய்தார். நான்காம் ப‌த்தில் ப‌க‌வானைத்த‌விர‌ வேறு ப‌ல‌னைக் கொள்ளாத‌வ‌ராக‌வும், ம‌ற்ற‌ ஆறு ப‌த்துக்க‌ளினால் ப‌க‌வானைய‌ன்றி வேறொன்றை உபாய‌மாகக் கொள்ளாத‌வ‌ராக‌வும் ஆனார்.

திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் முக்ய‌மான‌ அர்த்தத்தை வெளியிடுகிறார் — “தேவ‌:” என்றார‌ம்பித்து.

தே₃வ: ஶ்ரீமாந் ஸ்வஸித்₃தே₄: கரணமிதி₂ வத₃ந்நேகமர்த்த₂ம் ஸஹஸ்ரே

ஸேவ்யத்வாதீ₃ந் த₃ஶார்த்தா₂ந் ப்ரு̆த₂கி₃ஹ ஶதகை: வக்தி தத்ஸ்தா₂பநார்த்தா₂ந் |

ஐகைகஶ்யாத் பரத்வாதி₃ஷு த₃ஶககு₃ணேஷ்வாயதந்தே ததா₂ தே

தத்தத்₃ராதா₂கு₃ணாநாமவித₃த₄தி தத்பங்க்தய: பங்க்திஸங்க்₂யா: ||

ஆயிர‌ம் பாட்டுக்க‌ளையுடைய‌ இத்திருவாய்மொழியில் பெரிய‌ பிராட்டியை ஒரு க்ஷ‌ண‌ கால‌ம் கூட‌ப் பிரியாத‌ எம்பெருமான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌மாவான் என்னும் ஒரே அர்த்தத்தை அருளிச் செய்கிற‌வ‌ராய், அதை ஸாதிக்கக்கூடிய‌ ஸேவ்ய‌ன் (அடைய‌த் த‌குந்த‌வ‌ன்) முத‌லிய‌ ப‌த்து அர்த்த‌ங்க‌ளைப் ப‌த்துப் ப‌த்துக்க‌ளிலும் த‌னித்த‌னியாக‌ அருளிச் செய்கிறார். அந்த‌ப் ப‌த்து அர்த்த‌ங்க‌ளும் எல்லோரிலும் எல்லாவ‌ற்றிலும் மேற்ப‌ட்டிருக்கும் த‌ன்மை முத‌லிய‌ நூறு குண‌ங்க‌ளில் ஒவ்வொன்றாக‌ விரிவ‌டைகின்ற‌ன‌. அவ்வாறே ப‌த்து எண்க‌ளை உடைய‌ ப‌த்தாகிய‌ நூறு ப‌திக‌ங்க‌ளால் வெளியிட‌ப்ப‌டும் நூறு குண‌ங்க‌ளும் ஆயிர‌ம் எண்ணுள்ள‌ அந்த‌ந்த‌ப் பாசுர‌ங்க‌ளின் குண‌ங்க‌ளைப் பின்ப‌ற்றுகின்ற‌ன‌.

தேவ‌:ஸ்ரீமாந் –பெரிய‌பிராட்டியாருட‌ன் கூடின‌வ‌னாகையால் தேவ‌னான‌வ‌ன் என்ற‌ப‌டி. “திருமாம‌க‌ள் கேள்வா தேவா” என்ற‌ப‌டியினால் திருமாம‌க‌ளுக்குக் கேள்வ‌னாகையாலே இவ‌னுக்கு தேவ‌த்வ‌ம் ஸித்தித்தது என்று திருவுள்ள‌ம். இவ‌ள் ஸ‌ம்ப‌ந்த‌ம் பெறாமையால் ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளைப் ப‌ர‌தேவ‌தை என்று கூற‌ ப்ர‌மாண‌ங்க‌ள் முன்வ‌ர‌வில்லை. இவ‌ளுடைய‌ ச‌ம்ப‌ந்தத்தைப் ப‌ல‌ இட‌ங்க‌ளில் திருவாய்மொழியில் கூறியிருந்த‌போதிலும் ப‌ர‌தத்துவ‌ ப்ர‌திபாத‌க‌மான‌ “ஒண்டொடியாள் திரும‌க‌ளும் நீயுமே நிலா நிற்ப‌, கோல‌த்திருமாம‌க‌ளோடு உன்னை, நின் திருவ‌ருளும் ப‌ங்க‌ய‌த்தாள் திருவ‌ருளும்”, “உன் தாம‌ரைம‌ங்கையும் நீயும்”, “அக‌ல‌கில்லேன் இறையும் என்ற‌ல‌ர்மேல் ம‌ங்கை உறைமார்பா” என்றிவை முத‌லிய‌வை இங்க‌னுஸ‌ந்தேய‌ங்க‌ள். இந்த‌ ஒரு அர்த்தத்தைத்தான் ஸ்வாமி தேசிக‌ன் த‌ம‌க்கும் த‌ம் சிஷ்ய‌ர்க‌ளுக்கும் த‌ஞ்ச‌மாகக் க‌ருதினார் என்ப‌தை அவ‌ருடைய‌ அனேக‌ ப்ர‌ப‌ந்த‌ங்க‌ளில் காண‌லாம். தேவ‌:ஸ்ரீமாந் என்ப‌த‌ன் க‌ருத்து இப்ப‌த‌ங்க‌ளினாலோ இவ‌ற்றுக்கு ஸ‌த்ருச‌மான‌ ப‌த‌ங்க‌ளினாலோ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. ஸ்ரீஹ‌ம்ஸஸ‌ந்தேச‌த்தில் “தேவ‌:ஸ்ரீமாந்என்ற‌ ப‌த‌ங்க‌ளையே உப‌யோகித்த‌ருளினார். “ச்ரிய‌:ப‌தி புருஷோத்த‌ம‌ன்” என்று ஸாரார்த்த‌மாக‌ அருளிச் செய்ய‌ப் ப‌ட்டிருக்கிற‌து. “தேவ‌:ஸ‌ஹைவ‌ச்ரியா” என்று த‌சாவ‌தார‌ ஸ்தோத்திர‌த்திலும், “ஸ்ரீம‌த்நாராய‌ண‌:” என்று ஸ்ரீந்யாய‌ ஸித்தாஞ்ஜ‌ன‌த்திலும் ,”த‌ம்ப‌தீ ஜ‌க‌தாம்ப‌தீ”, “போத‌ம‌ரும் திருமாதுட‌ன் நின்ற‌ புராண‌னையே”, “ஸ‌ந்த‌:ஸ்ரீச‌ம் ஸ்வ‌த‌ந்த்ர‌ ப்ர‌ப‌த‌ன‌ விதிநாமுக்த‌யே நிர்விச‌ங்கா:” என்று ஸார‌ சாஸ்திர‌த்திலும், ஸ்ரீத‌யாச‌த‌க‌த்திலும், ஸ்ரீஸ‌ங்க‌ல்ப‌ ஸூர்யோத‌ய‌த் திலும் இந்த‌ ஆகார‌ம் ப‌ர‌க்க‌ப் பேச‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஸ்வ‌ ஸித்தே:க‌ர‌ண‌ம் இதி வ‌த‌ந் ஏக‌ம‌ர்த்த‌ம் – த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்கிற‌ ஒரே அர்த்தத்தை நிரூபியா நிற்கும்.

ப்ர‌ப‌ந்தத்தின் ந‌டுவில் ப்ர‌ப‌ந்த‌ ஸாரார்த்தத்தை நிரூபிப்ப‌து என்ப‌து ஓர் வ‌ழ‌க்கு. ஸ்ரீகீதையில் ஒன்ப‌தாம் அத்யாய‌த்தின் இறுதி ச்லோக‌த்தில் உபாய‌மான‌ ப‌க்தி யோக‌ம் கூற‌ப்ப‌ட்ட‌து.

திருப்பாவையில் 15ம் பாட்டில் பாகவதர்களின் பெருமை பேசப்பட்டது. ஒரு காரணமுமின்றியே சில பாகவதர்கள் நம் விஷயத்தில் அந்யதாவாகத் திருவுள்ளம் பற்றினாலும் நாம் அதற்காக அபசாரக்ஷாமணம் செய்துகொள்ளவேண்டும் என்று.இப்பாட்டில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அதைப்போல் திருவாய்மொழியிலும் ஐந்தாம் பத்தின் இறுதியில் ஆழ்வார் தாம் தஞ்சமாக நினைத்திருப்பதை வெளியிட்டிருக்கிறார்.

‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கென்று நாடொறும் ஏகசிந்தையனாய்க் குருகூர்ச்சடகோபன்’ என்பது ஆழ்வாரின் அனுஸந்தானம். இதன் திருவாறாயிரப்படியில் ‘எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குச் சரணம் என்று நாள் தோறும் இதொரு மனோரதமே உடைய ஆழ்வார் ………. இப்பத்தும் கற்றார் ஸ்ரீவைகுண்டத்திலேபோய் எம்பெருமானை நித்யானுபவம் பண்ணப் பெறுவர்’ என்று வ்யாக்யாநம். ஸ்ரீவைஷ்ணவர்களான நமக்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வதே உத்தமமான உபாயம் என்றும், அதை த்வயத்தினால் அனுஷ்டிக்கவேண்டும் என்றும் நம் பூர்வாசார்யர்கள் நிஷ்கர்ஷித்திருக்கிறார்கள். உபாயம் அனுஷ்டிப்பதற்கு முன் பெரியபிராட்டியாரிடம் புருஷகாரமாயிருக்கும்படி ப்ரார்த்திக்கவேண்டும். இது முதல்படி. அவளுடன் கூடிய பகவானுடைய திருவடிகளில் சரணாகதியைச் செய்வது இரண்டாவது படி. ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு அர்ச்சிராதி கதியினால் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து திவ்ய தம்பதிகளான அவர்களுக்கே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்வது மூன்றாவது படி. புருஷகாரமாயிருக்கும் ஆகாரம் பெரிய பிராட்டியாருக்கு மட்டும் அஸாதாரணம். உபய தசையிலும் உபேய தசையிலும் அவர்கள் இருவருடைய சேர்த்தியே நமக்குத் தஞ்சம் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளமென அறிந்து ஆசார்யன் தம்முடைய பரம க்ருபையினாலே இங்கு இப்படி ஸங்க்ரஹித்தருளிச்செய்தாராயிற்று.

உபாய ப்ரதிபந்தகங்களான பாபங்களைப் பகவானைப் போலவே பிராட்டியும்போக்குகிறாள் என்பது ‘வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ (4 – 5 – 11) என்று அருளிச் செய்யப்பட்டது. ‘இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸ்மஸ்த துக்கங்களையும் பகவதாச்ரித வாத்ஸல்யாதி கல்யாணகுணைகபோயான பெரியபிராட்டியார் போக்கும்’ எனத் திருவாறாயிரப்படியிலே வ்யாக்யாநம்.

ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பத்தாம்பாட்டில் ஆழ்வார் ஸ்வானுஷ்டான முகமாக சரணாகதி செய்யும் ப்ரகாரத்தை நிரூபித்தி ருக்கிறார். அது த்வய விவரணமென்பது ஸம்ப்ரதாயம்.

உலகமுண்ட பெருவாயா ( 8 – 10 ) திருவாறாயிரத்தின் அவதாரிகையில் ‘இப்படி திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைத்தும் அவனைக் காணப் பெறாமையாலே, இனி அவனைக்காண்கைக்கு உபாயம் இவன் திருவடிகளைச் சரணம் புகுகை போக்கி மற்றென்று மில்லை என்று பார்த்து, இவனுடைய காருண்ய வாத்ஸல்யாதி குணங்களைப் பற்றாசாகச் சொல்லிக் கொண்டு பிராட்டி புருஷகாரமாக ஸர்வலோக சரண்யனான திருவேங்கடமுடையான் திருவடிகளைச் சரணம் புகுகிறார்’ என்றும், அகலகில்லேன் பாட்டு அவதாரிகையில் ” உன் திருவடிகளை அநந்ய சரணனான அடியேன் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாகச் சரணம்புகுந்தேன். இப்போதே நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகனாய் உன் திருவடிகளிலே ஸர்வ காலமும் ஸர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெறவேணும் ” என்றும், இதனுடைய வ்யாக்யானமான 24000 படியில் ‘இங்கு பிராட்டிக்குப் புருஷகாரத்வம் சொன்னது இவளுடைய ஸித்தோபாய விசேஷண பாவத்திற்கும் உபலக்ஷணம் அல்லது அவ் விசேஷண பாவத்தை வ்யவச்சேதித்தபடியன்று. த்வயத்திலும் த்வய விவரணமான கத்யத்திலும் இப்பாட்டிலும் இவளுக்கு ஸித்தோபாய விசேஷணத்வம் சப்தஸ்வாரஸ்யத: ப்ராப்த மாயிருக்கையாலே அத்தை இங்கே வ்யவச்சேதிக்கக்கூடாதிறே. ஆகையால் இவ்விசேஷண பாவத்தை எடாதே புருஷகாரபாவத்தை எடுத்தது எம்பெருமானிற் காட்டில் இவளுக்குள்ள ஏற்றம் சொல்லுகைக்காகவத்தனை’ என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது,

இப்படிக் கொள்ளாவிட்டால் ‘பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ‘ஸமஸ்த துக்க’ என்றதுடன் விரோதிக்கும். ப்ரஹ்மசர்ய வேஷத்தைப் பூண்டு மஹாபலி யஜ்ஞவாடத்திற்குச் சென்ற காலத்திலும் அவனுடைய திருமார்வத்தை விட்டு அகலாதவள் இப்பொழுது தன்னுடைய தாஸபூதன் சரணாகதி செய்யும் ஸமயத்தில் எங்கு சென்றாள், ஏன்சென்றாள் என்றால் ஸமாதானம் சொல்லமுடியாதன்றோ?

இத்திருவாய்மொழியின் நாலாம் பாட்டிலும் ‘திருமாமகள் கேள்வா! தேவா’ என்று இவளுடைய ஸம்பந்தத்தால் அவன் ஏற்றம் பெற்றமை கூறப்பட்டிருக்கிறது,

இந்தத் திருவாய்மொழியின் நிகமனப்பாட்டிலும் ‘அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை’ என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே ‘தேவ: ஸ்ரீமாந்………ஏகமர்த்தம்’ என்று ஸங்க்ரஹிக்கப் பட்டது.

இந்த ஒரு அர்த்தத்தை ஸ்தாபிப்பதற்காகப் பத்துப் பத்துக்களிலும் அவன் ஸேவ்யன்அதிபோக்யன் என்றிவை முதலாகப் பத்து அர்த்தங்களையும், அப்படியே அவன் ஸேவ்யன் என்பதை நிரூபிப்பதற்காக பரம்நிர்வைஷம்யம் என்னும் பத்துக்குணங்களையும், அந்தப் பரத்வத்தை ஸ்தாபிப்பதற்காக நிஸ்ஸீமோத்யத்குண‌த்வம், அமிதரஸத்வம் முதலிய பத்துக் குணங்களையும் அனுஸந்தித்தருளினார் என்றபடி. அதாவது திருவாய்மொழியில் பல ச்ருதியான நூறு பாட்டுக்களை விட்டு விட்டால் 1002 பாட்டுக்கள் உள. இவை ஒவ்வொன்றிலும் ஒரு குணமாக 1002 குண‌ங்களும், இவைகளில் பத்துப் பத்துக் குணங்களினால் 100 திருவாய்மொழிகளில் 100 குணங்களும், இந்த 100 குணங்களில் பத்துப் பத்துக் குணங்களாகப் பத்துப் பத்துக்களில் 10 குணங்களுமாக 1112 குணங்கள் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கின்றன. எப்படி எல்லா வேதங்களும் பகவானுடைய ப்ராப்ய‌த்வ‌த்தையே கூறுகின்றனவோ, அப்படியே ஸர்வீய சாகையான‌ ஸ்ரீத்ரமிடோபநிஷத்தில் அவன் ப்ராப்ய‌ன் மாத்திரமல்லன்,ப்ராபகனும் அவனே என்றும், அப்படி ப்ராப்யனுமாய் ப்ராபகனுமாய் இருக்கும் ஆகாரம் திருமாமகளுடன் சேர்ந்து நிற்பவனுக்கே என்றும் ஆழ்வார் இத்திருவாய் மொழியில் உபபாதித்தருளினார் என்று ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய தமிழ்மறைகள் தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிந்தவரான சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு நிஷ்கர்ஷித்தருளினாராயிற்று.

இந்த ச்லோகத்திற்கு இப்படி அர்த்தம் என்று நிர்வஹித்தருளிய அஸ்மத் ஸ்வாமி, ஓருருவில் உபய வேதாந்தங்களைப் போலே ப்ரமாண‌ தம‌மாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகீதோபநிஷத்திலும் இவ்வர்த்தமே நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பது ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹத்தில் பரப்ரஹ்மமே ப்ராப்யமாகையால் அந்தப் பரப்ரஹ்ம‌ம் நாராயணனே என “நாராயண: பரம்ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே ஸமீரித” என்று அருளிச்செய்தார். இதின் மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய ஸ்ரீகீதார்த்த ஸ‌ங்க்ரஹப் பாட்டில் இந்த ச்லோகத்தின் கருத்தை “அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரம‌ம் திருமகளோடு வரும் திருமால் என்று தானுரைத்தான் தருமமுகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே ” என்று அருளிச் செய்திருப்ப‌தைப் பராமர்சித்தால் இவ்வர்த்தம், அதாவது ச்ரிய:பதியான பகவானே பரப்ரஹ்மம் என்னுமர்த்தம் தாம் கூறுவதொன்றன்று, இது ஸ்ரீகீதாசார்யனாலே சொல்லப்பட்டது என்றேற் படுகிறது. தத்துவார்த்தம் இப்படியிருக்க இந்த லோகத்தில் இப்பொழுது இதற்கு மாறாகப் பலர் பலபடிகளில் கூறிப் பரம பலத்தைத் தாங்களும் பெறாமல் போவதுடன் தங்களை ந‌ம்பியிருப்பவர் களுக்கும் அது கிட்டாமலிருக்ககும்ப‌டி செய்கிறார்க‌ளே, ஐயோ! க‌லியின் கொடுமை! “ என்று க‌ண்ணீர் விட்டுக் க‌த‌றும்ப‌டியாய் இருந்தது.

இப்ப‌டிக் கீழ் சுலோக‌த்தில் இந்த‌ ப்ர‌ப‌ந்தத்தில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌டும் ப்ர‌தான‌த‌மமான‌ அர்த்த‌விசேஷ‌ம் ச்ரிய‌:ப‌தியான‌ எம்பெருமான் த‌ன் திருவ‌டிக‌ளை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்று அருளிச்செய்து, அது திருவாய்மொழியில் ப‌த்து த‌ச‌க‌ங்க‌ள், நூறு திருவாய்மொழிக‌ள், ஆயிர‌ம் பாட்டுக்க‌ள், இவைக‌ளால் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. மேல் சுலோக‌த்தில் இந்த‌ அர்த்தத்தையே அனுவ‌தித்துக்கொண்டு, ப‌த்துப் ப‌த்துக்க‌ளினாலும் இவ்வ‌ர்த்த‌ம் உபபாதிக்க‌ப்ப‌டுகிற‌ப‌டியை அனுஸ‌ந்தித்த‌ருளுகிறார் – “ஸேவ்ய‌த்வாத்” என்றார‌ம்பித்து.

ஸேவ்யந்வாத் போ₄க்₃யபா₄வாத் ஶுப₄தநுவிப₄வாத் ஸர்வபோ₄க்₃யாதி₄கத்வாத்

ஶ்ரேயஸ்தத்₃தே₄நுதா₃நாத் ஶ்ரிதவிவஶதயா கா₂ஶ்ரிதாநிஷ்டஹ்ரு̆த்தவாத் ।

ப₄க்தச்ச₂ந்தா₃நுவ்ரு̆த்தே: நிருபதி₄கஸுஹ்ரு̆த்₃பா₄வத: ஸத்பத₃வ்யாம்

ஸாஹாய்யாச்ச ஸ்வஸித்₃தே₄: ஸ்வயமிஹ கரணம் ஶ்ரீத₄ர: ப்ரத்யபாதி₃ ।|

ஸேவ்யத்வாத் – பகவானே ஸேவிக்கப்படத் தகுந்தவனாயிருப்பதாலும்,போக்யபாவாத் — – அவ‌னே அனுபவிப்பதற்கு ஏற்றவனாகையாலும், சுபதனுவிபவாத் – மங்களமான திருமேனியின் பெருமையினாலும், ஸர்வபோக்யாதிகத்வாத் – போக்யங்களான எல்லாவற்றிற்கும் மேற்பட்ட போக்யனாயிருப்பதினாலும், ச்ரேய: தத்ஹேதுதாநாத் – புருஷார்த்தத்திற்கும், அதன் உபாயத்துக்கும் காரணமாய் நிற்பதாலும், ச்ரிதவிவசதயா – – ஆச்ரிதர்களுக்குப் பரதந்த்ரனாய் இருப்பதினாலும், ஸ்வாச்ரிதாநிஷ்ட ஹ்ருத்த்வாத் – தன் அடியார்களின் அதிஷ்டங்களைப் போக்குமவ னாகையாலும்,பக்தச்சந்தானுவ்ருத்தே: -அடியார்களின் கருத்தைத்தான் தழுவி நடப்பதினாலும், நிருபதிக ஸுஹ்ருத்பாவத: – காரணம் இது என்று நம்மால் அறுதியிட முடியாதபடி தோழனாய் நிற்பதினாலும், ஸத்பதவ்யாம் ஸாஹாய்யாச்ச – சிறந்த (அர்ச்சிராதி) மார்க்கத்தில் துணை நிற்பதினாலும், இஹ — திருவாய்மொழியாகிற இந்தப்ரபந்தத்தில், ஸ்ரீதர: – ச்ரிய:ப‌தியான ஸர்வேசுவரன், ஸ்வஸித்தே: – தன்னைப் பெறுவதாகிற பலனுக்கு, ஸ்வயம் – தானே, கரண‌ம் – ஸாதனம் என்று, ப்ரத்யபாதி – விளக்கப் பட்டுள்ளான்.

இந்தப் பத்துக் காரணங்களையும் (அர்த்தங்களையும்) முதல் பாட்டிலேயே ஸ‌ங்க்ரஹமாக நிரூபித்துள்ளார். எங்ஙனே என்னில் :

ஸேவ்யத்வாத்-அயர்வறும் அமரர்கள் அதிபதி,–அருளினன், அடிதொழுது

போக்யபாவாத்-உயர்வற உயர்நலம் உடையவன்

சுபதநுவிபவாத்-சுடர் அடி – திருவடி திவ்யமங்கள விக்ரஹத்திற்கு உப‌லக்ஷணம்

ஸ்வரபோக்யாதிகத்வாத்–அயர்வறும் அமரர்கள் அதிபதிஎன்பதினால் பகவான் நித்யஸூரிகளும் முக்தர்களும் எப்பொழுதும் அனுப‌வித்துக் கொண்டிருப்பது ஏற்படுகிற‌ப‌டியினால் அவனுடைய அதிபோக்யத்வம் கூறப்பட்டதாகிறது:

ச்ரேய:தத்ஹேதுதாநாத்-மதிநலம் அருளினன்

ச்ரிதவிவசதயா  -அடிதொழுது எழும்படி அவன் அவதார தசைகளில் ஸேவை ஸாதிக்கிருன் என்றபடி

ஸ்வாச்ரிதா நிஷ்டஹ்ருத்த்வாத்-துயர் அறு

பக்தச்சந்தாதுவ்ருத்தே-அயர்வறும் அமரர்கள் அதிபதி – ஸூரிக‌ளுடைய‌ அதிபதியாயிருந்த போதிலும், பக்தன் இஷ்ட ப்ரகாரம் தான் நடந்து கொள்ளுகிறான் என்றபடி

நிருபதிகஸுஹ்ருத்பாவ -ம‌திநலம் அருளினன்

ஸ‌த்ப‌த‌வ்யாம் ஸாஹாய்யாச்ச-அயர்வறும் அமரர்கள் அதிபதி ப‌க‌வ‌ான் நித்யஸூரிகளுக்கு நாத‌னாகையாலே அவனுடைய ஆஜ்ஞையை சிரஸா வஹித்து அர்ச்சிஸ் முதலிய ஸூரிகள் முக்தாத்மாவை அர்ச்சிராதி மார்க்கத்தில் எழுந்தருள‌ப் பண்ணுகிருர்களே யாகிலும் ப‌க‌வ‌ான் அக்காலத்தில் அவர்க‌ளுக்கு அந்தர்யாமியாக இருந்து கூட‌ வழி நடத்துகிறான் என்பதும்: வைகுண்ட லோகத்தை அடைந்ததும் ஸூரிகளுடைய பலவித ஸ‌த்கார‌ங்களான பிறகு, பெரிய பிராட்டியார் மூலமாகவும், அதுவும் போதாது என்றுகொண்டு “வந்து அவர் எதிர் கொள்ள” என்கிறபடியே பகவான்தானே வந்து எதிர்கொள்ளுகிறான் என்பதும் இங்கு விவக்ஷிதம்.

இப்ப‌டி ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் த‌ன்னை அடைவ‌த‌ற்குத் தானே உபாய‌ம் என்னும் அர்த்தத்தைஇர‌ண்டு சுலோக‌ங்க‌ளினால் உபபாதித்த‌ருளி, அந்த‌ ஸேவ்ய‌த்வ‌ம் முத‌லிய‌ ப‌த்துக் குண‌ங்க‌ளையும் ப்ர‌திபாதிக்கும் க்ர‌ம‌த்தை நிரூபிக்கக்கோலி, அதை ஸ‌ங்க்ர‌ஹ‌மாக‌ ஒரு ச்லோக‌த்தில் அருளிச் செய்கிறார் —- “ப்ரூதே” என்றார‌ம்பித்து.

ப்₃ரூதே கா₃தா₂ ஸஹஸ்ரம் முரமத₂நகு₃ணஸ்தோமக₃ர்ப₄ம் முநீந்த்₃ர:

ப்ரத்யேகம் சாத்ர கா₃தா₂: ப்ரதி₂தவிபு₄கு₃ணா: ஸ்பஷ்டமத்₄யக்ஷயாம: |

தத்ராஸங்கீர்ணதத்தத் த‌3ஶககு₃ணஶதஸ்தா₂பநௌசித்யயுக்தாந்

ஐத₃ம்பர்யாவருத்₃தா₄நக₃ணிதகு₃ணிதாந் தத்₃கு₃ணாந் உத்₃க்₃ரு̆ணீம: ||

முநீந்த்ர: – முனிவர்களுள் தலை சிறந்து நிற்கும் ந‌ம்மாழ்வார், காதாஸஹஸ்ரம் – ஆயிரம் பாசுரங்களையும், முரமதனகுண‌ ஸ்தோம கர்ப்பம் – எம்பெருமானுடைய திருக்கல்யாண‌ குண‌ங்களின் கூட்டங்களைத் தம்முள் பொதிந்து கொண்டிருக்குமாறு, ப்ரூதே – அருளிச் செய்கிறர். அத்ரச – இத்திருவாய்மொழியில், காதா-பாசுரங்களை, ப்ரத்யேகம் – ஒவ்வொன்றும், ப்ரதிதவிபுகுணா:- எம்பெருமானுடைய குணங்களை வெளிப்படுத்துவனவாக, ஸ்பஷ்டம் – தெளிவாக, அத்ய க்ஷ‌யாம– கண்கூடாகக் காண்கிறோம், தத்ர – அதில், அஸ‌ங்கீர்ண தத்தத் தசககுணசத ஸ்தாபந ஔசித்ய யுக்தாத் – கூறியது கூறாத அந்தந்தப் பதிகங்களின் நூறு குணங்களை ஸ்தாபிப்பதில் பொருத்தமுடையனவாய், ஐதம்பர்யாவ்ருத்தாத் – அக் கருத்தையே வற்புறுத்துதலில் நோக்கமுடையனவாய், அகணித குணிதாத் – மறுமுறை கூறப்பட்டன வாயினும், (ப்ரயோஜனமுடையதாகையினாலே குற்றமற்றனவான), தத் குணாந் – அந்தந்தப் பாசுரங்களில் விளக்கப்படும் குணங்களை, உ.த்க்ருணீம – எடுத்துக் கொள்ளுகிறோம்..

இந்த ப்ரதிஜ்ஞை மேல் பதினோராம் சுலோக்ம் முதல் ப்ரதிப்ாதிக்கப்பட்டிருக்கும் ப்ரகாரம் மேலே திருவாய்மொழிதோறும் காட்டப்பட்டிருக்கிறது. அதில் சிற்சில குணங்கள் மறுபடியும் கூறப் பட்டிருந்தபோதிலும் அந்தத் திருவாய்மொழி ப்ரகரணத்திற்கு ப்ரயோஜனமாயிருப்பதினால் அவைகள் ஸங்க்ரஹிக்கப்பட்டிருக்கின்றன என்று கருத்து. கீழ் இரண்டாம் சுலோகத்தில் உபபாதிக்கப் புட்டிருக்கிற‌படியே திருவாய்மொழியாகிற திருப்பாற்கடலை ஆசார்ய ஸார்வபெளமன் தம்முடைய அநிதரஸாதாரணமானதும் அத்யுத்க்ருஷ்டமென்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான ஜ்ஞானத்தை ம‌த்தாக நாட்டி, யதிவரனார் மடைப்பள்ளி வந்த மண‌மாகிற யதிராஜமஹாநஸ ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாக் கொண்டு கடைந் தருளின பொழுது உண்டான குண விசேஷம் ஒவ்வொன்றையும் ஒரு ரத்னமாகக்கொண்டு அவற்றை எடுத்து ஒரு மாலையாகச் சேர்க்கும்பொழுது அந்தந்த ப்ரதான குணங்களை ப்ரதிபாதிப்பதில் உபயோகமிருப்பதினால் புனருக்தமேயாகிலும் மறுபடியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சுலோகத்தின் தாத்பர்யத்தை விளக்கும்பொழுது அஸ்மத் ஸ்வாமி “ஸ‌ர்வந்த்தர ஸ்வதந்த்ரராகையாலே தட்டானாயிருந்து ரத்னஹாரம் செய்தருளினபடி இது, எப்படி ஒரு தட்டான், ஒரு உத்தமமான ஹாரத்தைச் செய்யும்பொழுது, பல வகைகளான ரத்னங்களைச் சேகரித்து, அவற்றைப் பிரித்து, தன் முன் பல ரகங்களாக வைத்துக் கொண்டு, ஹாரத்திற்குப் பொருத்தமான பச்சை சிவப்பு வெள்ளை மஞ்சள் முதலிய கற்களைப் பொறுக்கி எடுத்துக் கட்டுவனோ, அதைப்போலவே திருவாய்மொழிப் பாட்டுக்களில் ப்ரதிபாதிக்கப் பட்ட குணங்கள் ஸ்வாமி தேசிகனுக்குத் முன்பே மானஸமாகத் தோன்ற, அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, ஒருமாலையாகக் கோக்கிருர் என்பது இங்கு விவக்ஷிதமாகும்” என்று நிர்வஹித்தருளும்படி இருந்தது.

இப்படித் திருவாய்மொழியினுடைய தாத்பர்யத்தை வெளியிடுகிற‌ இந்த ஸ்ரீத்ரமிடோப நிஷத் தாத்பர்யர‌த்னாவளியானது ஸந்த்வஸ்தர்கள் எல்லோராலும் தரிக்கப்பட வேண்டியது என்று அருளிச் செய்து உபோத்காதத்தை உபஸம்ஹாரம் செய்தருளுகிறார்.

இச்சா ஸார‌த்ய‌ ஸ‌த்யாபித‌குண‌ க‌ம‌லாகாந்த‌ கீதாந்த‌ ஸித்ய‌த் சுத்தாந்த‌ ஆசார‌ சுத்தை: —தானே விரும்பி ஆசையோடு செய்த‌ தேரோட்டும் தொழிலினால் உண்மையாகக் காட்ட‌ப்ப‌ட்ட‌ ஸௌல‌ப்ய‌ம் முத‌லிய‌ குண‌ங்க‌ளையுடைய‌ ச்ரிய‌:ப‌தியின் ச‌ர‌ம‌ சுலோக‌த்தால் (கீதை 18 – 68-ம் சுலோக‌த்தால்) ஏற்ப‌ட்ட‌ அந்த‌:புர‌த்து ஒழுக்க‌த்தால் (வேறு உபாய‌த்தையும் ப‌ல‌னையும் நாடாத‌ த‌ன்மை முத‌லிய‌வ‌ற்றால்) மிக‌ ப்ர‌ஸித்த‌ர்க‌ளான‌ ப‌ர‌மைகாந்திக‌ளால்,

அந‌க‌ குண‌க்ர‌ந்தி ப‌ந்தானுப‌த்தா – குற்ற‌ம் க‌ல‌வாத‌ சிற‌ந்த‌ குண‌ங்க‌ளின் குழுவின் தொட‌ர்புடைய‌தாயும், அகில‌ ப‌யோத்தாரிணீ : ஸ‌ம்ஸார‌ம் அனைத்தையும் போக்க‌வ‌ல்ல‌துமான‌, இய‌ம் — இந்த‌, தத்தாத்ருக் – அள‌வ‌ற்ற‌ பெருமையை யுடைய‌, தாம்ர‌ப‌ர்ணீ த‌ட‌க‌த‌ —தாம்ர‌ப‌ர்ணீ நதிக்க‌ரையில் திருவவ‌தார‌ம் செய்த‌ருளி, ச‌ட‌ஜித் – ந‌ம்மாழ்வாரால், த்ருஷ்ட‌ —காண‌ப்ப‌ட்ட‌, அதாவ‌து ப்ர‌த்ய‌க்ஷீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌, ஸ‌ர்வீய‌சாகா – எல்லோரும் க‌ற்க‌ உரிய‌ த‌மிழ்ம‌றையின், காதா தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளீ – பாசுர‌ங்க‌ளின் க‌ருத்துக்க‌ளாகிய‌ ர‌த்ன‌ங்க‌ளின் குவிய‌லை வெளியிடுகின்ற‌ இந்த‌ தாத்ப‌ர்ய‌ ர‌த்னாவ‌ளி என்னும் ஸூக்தியான‌து, தார‌ணீயா –ஹ்ருத‌ய‌த்திலே த‌ரிக்க‌த்த‌க்க‌தாகும், அனுஸ‌ந்திக்க‌த்த‌க்க‌தாகும் என்ற‌ப‌டி.

இந்த‌ க்ர‌ந்தத்திற்கு அதிகாரிக‌ளை – “இச்சா” இத்யாதியால் அருளிச் செய்திருக்கிறார். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ப்ரதானமான சரணாகதியை விதிக்கிற ஸ்ரீகீதை 18 – ம் அத்யாயம், 68-ம் சுலோகம் சரம சுலோகம் என்னப்படும். இது கீதையின் இறுதியில் கூறப்பட்டிருப்பதினால் ‘கீதாந்த” என்னப்பட்டது. இதில் நிஷ்ட்டையுடைய பாகவதர்களின் அனுஷ்டானம் அந்த:புர ஒழுக்கம் எனப்படும். இவர்கள்தாம் பரமைகாந்திகள் என்னப்படுமவர்கள். அப்படிப்பட்ட பாகவதர்களினால், கீழ் இரண்டாம் சுலோகத்தில், *அநுபதிவிபுதை:அர்த்தித” என்பதை இங்கு இப்படிக் கூறியபடி. ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனான பகவானுடைய திருக்கல்யாண குணங்களை ப்ரதிபாதிக்கிறபடியினால் ‘அநககுண’ என்னப்பட்டது. ‘க்ரந்தி பத்தானுபத்தா ” என்றது அந்தக் குணங்களை ஒருமாலையாகக் கோத்துக் காட்டியபடி என்றபடி.

தத்தாத்ருக்” என்கிற விசேஷணம் தாம்ரபர்ணிக்கும், சடஜித்தான ஆழ்வாருக்கும் தாத்பர்ய ரத்னாவளி என்பதற்கும், ஸர்வீயசாகா என்பதற்கும் விசேஷணம், தத்தாத்ருக் தாம்ரபர்ணி தடகத என்றது கலியுகத்தில் நாராயண பராயணர்கள் பலர் அவதரிக்கப் போகிறார்கள் என்று ஸ்ரீபாகவதத்தில் கூறும் பொழுது முதல் முதலில் எடுக்கப்பட்ட ஏற்றம் பெற்ற தாம்ரபர்ணி என்றபடி,

தத்தாத்ருக் சடஜித் ’ என்று ஆழ்வாருடைய அவதார வைலக்ஷண்யம் தெரிவிக்கப்படுகிறது. ஸாமாந்ய குழந்தையைப் போலப் பிறந்தபோதிலும் பிறந்தபிறகு ஸ்தத்யபாநாதிகளுள் ஒன்றும் செய்யாமல் பகவதநுபவத் தினாலேயே வளர்ந்த ஏற்றம் தெரிவிக்கப்பட்டதாகிறது. தத்தாத்ருக் தாத்பர்ய ரனாவளி: ‘ என்று வக்த்ரு வைலக்ஷண்யம் ஸூசிப்பிக்கப்படுகிறது.

தத்தாத்ருக்ஸர்வீயசாகா என்பதினால் த்ரைவர்ணிகர்களினால் மட்டும் அத்யயனாதிகள் செய்யப்படக் கூடிய ஸம்ஸ்க்ருத வேதம் போலன்றிக்கே ஸர்வரும் அதிகரிக்கலான உத்கர்ஷம் பெற்றிருப்பது கூறப்பட்டதாகும். இந்த ஏற்றம் வேறொரு முகமாக இறுதியில் ‘ச்ராவ்யவேதாத்” ன்ன்று அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்திரிகையின் இறுதியில் இதே விசேஷணத்தை ‘தத்தாத்ருக் குருத்ருஷ்டிபாத மஹிம க்ரஸ்தேந யச் சேதஸா’ என்று அனுஸந்தித்திருப்பதைப் பார்த்தால் இது ஆழ்வாருக்கு விசேஷணம் என்றேற்படும். நம்மாழ்வாருக்கன்றோ இந்த ஸம்ப்ரதாயத்திற்கு இந்தக் கலியுக ஆரம்பத்தில் ப்ரதம ப்ரவர்த்தகராயும் பின்பு ஒரவஸரத்தில் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு அதை மீண்டும் ப்ரவர்த்தநம் செய்தவராயும் இருக்கும் ஏற்றம்! அங்கு கீதோபநிஷத்தை வியாக்யானம் செய்வதற்கு ஆசார்யர்களின் அனுக்ரஹத்தின் பெருமையைக் குறிப்பிடுவதற்காக இதே பதம் ப்ரயோகிக்கப்பட்டிருக்கிறது என்றறியவும்.

‘காதா’ என்றது ‘ச்ருணுகாதாம்புராகீதாம்’ என்றதற்கு ஸ்ரீஅபய ப்ரதான ஸாரத்தில் :’கண்டு என்பான் ஒரு மஹர்ஷி கண்டதொருகாதை கேளிர்” என்றருளிச் செய்திருப்பது நினைவூட்டப்பட்டு, ஆழ்வாரால் ப்ரத்யக்ஷீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஸ்ரீத்ரமிடோபநிஷத் எனப்படும் திருவாய்மொழியாகிற பாட்டுக்கள் குறிப்பிடப் படுகின்றன

அகில பயோத்தாரீணி என்னும் பதம் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பதினால் எல்லா பயங்களிலிருந்தும் விடுபடுவான் என்ப்தைக் கூறுகிறது

இப்படி உபோத்காத ரூபமாக ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பெருமையைப் பத்து சுலோகங்களினால் ப்ரதிபாதித்தபிறகு, பத்து பத்துக் குணங்களை நிரூபிக்கும் 100 சுலோகங்களும், இதில் அஞ்சிறைய மடநாராய் திருவாய்மொழியில் ஆசார்யகுணரூபமாக ஒரு சுலோகமும், சீலமில்லாச் சிறியனேலும் என்கிற பாட்டுக்கு அர்த்தாந்தரரூபமாக ஒரு சுலோகமும், நண்ணாதார் முறுவலிப்ப என்பதற்கு அர்த்தாந்தரமாக இரண்டு சுலோகமும், பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட ஒவ்வொரு பத்தில் உள்ள பத்துத் திருவாய்மொழிகளிலும் ப்ரதிபாதிக்கப்படும் குணங்களைக் கூறும் 10 சுலோகங்களுமாக 114 சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன. இவை மேலே அந்தந்தத் திருவாய்மொழிகளுக்கு முன்பு அச்சிடப்பட்டிருக்கின்றன.

நிகமனத்தில் ஆறு சுலோகங்கள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றன அதில் 128-ம் சுலோகத்தில் பத்துப் பத்துக்களினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட குணவிசேஷங்களைக் காட்டா நின்றுகொண்டு, திருவாய்மொழிக்கு ப்ரதானார்த்தமாய், கீழ் நிரூபித்த ச்ரிய:பதியாகிற பகவான் தன்னை அடைவதற்குத் தானே உபாயம் என்பதை மறுபடியும் வற்புறுத்துகிறார், மேல் 128-ம் சுலோகத்தின் அர்த்தம் கீழே நம்மாழ்வாரின் வைபவத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

127-ம் சுலோகத்தில் இப்ரபந்தத்தை அனுஸந்திப்பவர்களின் மனோபாவம் இருக்கும்படியை வெளியிட்டருளுகிறார்.

ச்ரிய:பதியாய் எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம் முதலிய வைகளை யுடையவனாய் ஸர்வஜ்ஞனாய், ஸர்வ சக்தியாய், ஸமஸ்த சேதனாசேதனங்களுக்கும் ஸ்வாமியாய் இருக்கும் பகவான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்ட ரக்ஷண பரத்தையுடைய நமக்கு இனி முக்திபெறுவதற்குச் செய்ய வேண்டிய கார்யம் என்ன? நமக்கு கிட்டாதது என்ன? என்ன துக்கம் ஏற்படப்போகிறது? இனி யாருக்குக் கடவோம்? இவை ஒன்றுமில்லையென்றபடி. இப்படிப்பட்ட அத்யவஸாயத்தைப் பெற்றவர்கள் ஸர்வோந்நதர் என்று திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கிறது.

வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் ப்ரபந்தங்கள் பல இருந்தபோதிலும் அவைகளுக்கு இத்திருவாய்மொழியின் பெருமையில்லை. இந்த ப்ரபந்தமொன்றுமே மற்ற சாஸ்திரங்களில் ஸாரமாக அறிய வேண்டும் என்று கூறப்பட்ட அர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் ஸாரதமமான அர்த்தத்தைக் கூறுகின்றது என்று இதன் ஸர்வோத்தமத்வத்தை வெளியிடுகிறார் 128-ம் சுலோகத்தில். இதன் தாத்பர்யம் முகவுரையில் 68-ம் பக்கம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் இரண்டு சுலோகங்களிலும் இந்த க்ரந்தத்தில் ஸங்க்ரஹிக்கப்பட்ட அர்த்தங்களே ப்ரமாண தமங்கள் என்றும், இப்ரபந்தத்தின் அவதார வைலக்ஷண்யத்தாலும் இது மற்ற ப்ரபந்தங்களை! விட உத்க்ருஷ்டமானது என்றும் நிரூபித்தருளுகிறார். அதாவது இத்த ஸங்க்ரஹமே எம்பெருமானும் அவனுடைய அடியார்களான பாகவதர்களும் உகப்பதாயிருக்கும் என்றபடி

இத்தம் – இவ்வாறு ஸத்ஸம்ப்ரதாயக்ரமஸமதிகத –எம்பெருமான் தொடக்கமாக ஸ்வாசார்யரான கிடாம்பி இராமானுசப் பிள்ளான் வரையிலான ஆசார்ய பரம்பரையினால் அடையப்பட்டதாய். அதாவது அவர்களுடைய க்ரந்தங்களினாலும் அவர்களுடைய உபதேசத்தினாலும் அவர்களுடைய அனுக்ரஹத்தினாலும் தாம் பெற்றதாய்

அசேஷ வர்ணார்ஹவேத — எல்லா வர்ணத்தார்களும் அதிகரிக்கக் கூடிய வேதமாய் இருக்கும் திருவாய்மொழியில்

ச்ரத்தாசுத்தாசயாநாம் – ருசியை யுடையவர்களாய் அத்தால் பரிசுத்த மான மனதுடன் கூடியவர்களான பாகவதோத்தமர்களுக்கு

அநகம் கெளதுகம் வேங்கடேச: அகடயத் – வென்றிப் புகழ் திருவேங்கடநாதனாய் அவதரித்தவர் எல்லையில்லாத சந்தோஷத்தை உண்டாக்கினார்.

தஸ்ய ஸம்யக்த்வே — இது உண்மை என்பதைக்கூறும் விஷயத்தில் ஸாக்ஷாச்சடரிபு: அதவாஸர்வஸாக்ஷீஸ ஸாக்ஷீ – ஆழ்வார்தாமேயும் அன்றிக்கே எல்லாவற்றிற்கும் ஸாக்ஷியாய் இருக்கும் ஸர்வேச்வரன் தானும் ஸாக்ஷியாக ஆவர்கள்,

ஸாவத்யத்வேபிபி பஜதாம் அப்ரகம்ப்யானுகம்ப ஸோடும் ப்ரபவதி ஸாவத்யத்வேபி என்று நைச்யானுஸந்தானம் செய்கிறபடி. இதில் யாதொரு தோஷமுமில்லை. அப்படி எங்காவது தோஷமிருந்தாலும் கூட ஆச்ரிதர்களிடத்தில் நிரவதிக ப்ரீதியையுடைய பகவான் அதைப் பொறுத்தருளுவன் என்றபடி. இங்கு தமிழ் மறைகளின் அனுபவ பரீவாஹமான ஸ்ரீஸ்தோத்திரத்திற்கு வ்யாக்யானமிட்டருளி அதன் இறுதியில்,

‘उपनिषदुपधेयस्तोत्रतात्पर्यमेतत् यतिपतिरवधत्ते यामुनार्य स्वय वा’

என்றனுஸந்தித்திருப்பது நினைக்கத்தக்கதாகும்,

இந்த க்ரந்த அவதரணத்தின் சீர்மையை வெளியிடாநின்று கொண்டும் இதன் வக்த்ரு வைலக்ஷண்யத்தை நிரூபித்துக் கொண்டும் க்ரந்தத்தை உபஸம்ஹாரம் செய்து, இது எம்பெருமான் திருவுள்ளமுகந்ததாயிருக்கும் என்று ஸாத்விகத்யாகம் செய்தருளுகிருர்,

சரணாகதி வேதம் என்று கொண்டாடப்படும் பெருமையை உடைய ஸ்ரீராமாயணம் சோகத்தின் பரீவாஹமாய் உண்டானது. ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்திருந்த இரண்டு க்ரெளஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற வேடனைப் பார்த்ததினால் உண்டான துக்கத்தின் மிகுதியினாலன்றோ ராமாயணம் உண்டாயிற்று,

அப்படியே அர்ஜுனனுடைய துக்கத்தைப் பொறுக்க முடியாதவனாய்த் தன்னுடைய அபார காருண்யத்தினால் ஸ்ரீக்ருஷ்ணன் கீதோபநிஷத்தை வெளியிட்டான். ஆழ்வார் திருவாய்மொழியோ பகவானுடைய எல்லை யில்லாத திருக்கல்யாண குணங்களை உள்ளபடியே அனுபவித்துத் தாம் அனுபவித்தபடியே பேசும் ப்ரபந்தமாகையினால் அவை இரண்டிலும் இதற்கு வாசி காட்டப்பட்டது.

சோகாச்லோகத்வம் அப்யாகதஇதி நயத – சோகத்தின் பரீவாஹத்தினால் ச்லோகம் உண்டாயிற்று என்கிற ந்யாயத்தினால்,

சுத்தபோதார்ணவோத்யந் நாதா கல்லோல நாதானுபவரஸ பரீவாஹத: – ஆழ்வாருடைய மயர்வற்ற மதியான ஸமுத்திரத்தில் உண்டாகியதாய், அனேகம் விதங்களான பகவதனுபவ பரீவாஹமாகிய-அதாவது பகவானுடைய திருக்கல்யாண குணங்களில் ஒன்றை அனுபவிக்கப்புக்கு, அது மற்றொரு குணானுபவத்தில் மூட்ட, இப்படியே மேன்மேலும் அவனுடைய கல்யாண குணங்க்ளைப் பல விதமாக அனுபவித்ததின் பரீவாஹமாக வெளிப்பட்டதன்றோ இத்திருவாய்ம்மொழி என்றபடி.

‘ச்ராவ்யவேதாத்’ என்பதினால் இது மிகவும் ச்ராவ்யமான வேதம். அதாவது பகவானுடைய திருக் கல்யாண குணங்களையே ப்ரதி பாதிக்கிறபடியினாலே மனதிற்கு ஆஹ்லாதத்தை உண்டாக்குகிறபடியினால் கேட்கத்தக்கது என்பதும், இசையுடன் கானம் செய்யப்பட வேண்டியதாகையால் எல்லோருடைய மனதைக் கவரக்கூடியது என்பதும், எல்லா வர்ணத்தாராலும் கேட்கத்தக்கது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

வேதாந்தாசார்யக ஸ்ரீபஹுமதபஹுவித் வேங்கடேசோத்த்ருதா – வேங்கடேச: என்று அவதார ப்ரபாவமும், ‘வேதாந்தாசார்யக’ என்று பிறந்து படைத்த ப்ரபாவமும், பஹுமத பஹுவித் என்று ஆசார்யர்களின் அணுக்ரஹத்தினால் பெற்ற ஏற்றமும், அதடியாகத் தாம் பெற்ற பாகவதர்களின் பஹுமானமும் தெரிவிக்கப்படுகின்றன.

“ரம்யா “ இத்யாதி – ச்ராவ்ய வேதமான திருவாய்மொழியிலிருந்து வேங்கடேசனால் கடைந்தெடுக்கப்பட்டு, மாலையாகக் கோக்கப்பட்ட இந்தத் தாத்பர்ய ரத்னாவளியானது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு ப்ரீதியைக் கொடுக்கும் என்று ஸாத்விக த்யாகம் செய்தருளியபடி. ஸ்ரீசரணாகதி கத்யத்தில் “அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்ஸ்வ” என்பதற்கு ஸ்வாமிதேசிகன் தாமே ஸ்ரீரங்கம் என்றது மற்ற ஸத்வோத்தர க்ஷேத்திரங்களுக்கு உபலக்ஷணமாகக் கடவது என்று நிர்வஹித்தருளியதைப் பின்பற்றி, இங்கே ஸ்ரீரங்கநாதன் ப்ரீதி அடைவான் என்றதும் இத்திருவாய்மொழியைத் திருச்செவி சாற்றியருளுகிற மற்ற நூற்றேழு திருப்பதிகளிலுமுள்ள எம்பெருமான்களும் ப்ரீதி அடைவார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டதாயிற்று.

ஆக இப்படிக் கீழ் ஸ்ரீ தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம் இவற்றைக் கொண்டு திருவாய்மொழியின் அர்த்த ஸங்க்ரதாம் உபபாதிக்கப்பட்டது. ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முரமதந குண ஸ்தோமகர்ப்பம் முநீந்த்ர:” என்கிறபடியே திருவாய்மொழியில் ஒவ்வொரு பாட்டும் பகவானுடைய குணங்களை உட்பொதிந்துக் கொண்டிருக்கும். ஆனாலும் சில பாட்டுக்களின் ஸங்க்ரஹ சுலோகத்தில் குணம் ஸ்பஷ்டமாகக் கூறப்படவில்லை, சில இடங்களில் ஆதி பதத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றை விவரிக்கவேண்டும் என்று சிலருக்கு அபிப்ராயம். ஆகிலும் ஸ்வாமிதாமே ஸ்ரீதத்துவமுக்தா கலாபத்தின் இறுதியில் அருளிச் செய்திருப்பதை அடியொற்றி அவற்றை விவரிக்க வில்லை. மேலும் ஸ்வாமியின் வாக்கைக் கொண்டே நிரூபிக்கப்படும் குண விசேஷங்களுக்கு ஸத்ருசமாக மற்றெரு பதத்தைக் குறிப்பிடுவதும் அபசாரமாகுமன்றோ என்று அவை விவரிக்கப்படவில்லை,

பிற்பட்ட வ்யாக்யாதாக்களான ஒன்பதினாயிரப்படிக்காரருக்கும் பதினெண்ணாயிரப் படிக்காரருக்கும் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி சுலோகத்தில் எந்தப் பதம் எந்தப் பாட்டின் அர்த்த ஸங்க்ரஹம் என்கிற விஷயத்தில் சிற்சில இடங்களில் அபிப்ராய பேதம் காணப்படுகிறது. கூடிய வரையில் இவர்களைப் பின்பற்றியே திருவாறாயிரப்படிக்கு அனுகுணமாக ப்ரதிபாதித்த குணங்கள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன.

6. விசேஷார்த்த நிரூபணம்.

மற்றைய திவ்ய ப்ரபந்தங்களிலும் பகவானுடைய குணங்கள் அனுஸந்திக்கப் பட்டிருந்தபோதிலும், திருவாய்மொழியிலே போலே ஒருக்ரமமாய்ச் சங்கிலித் துவக்குப்போலே அவை நிரூபிக்கப்படவில்லை. பகவானுக்கும் சேதனாசேதனங்களுக்குமுள்ள சரீராத்ம பாவத்தை விஸ்தரமாக உபபாதித்திருப்பதும் (திருவாய் 1-1-7) அர்ச்சிராதி மார்க்கத்தில் முக்தாத்மாவிற்கு நடக்கும் ஸத்கார விசேஷங்களை விவரமாக அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 10-9) பாகவத ப்ரபாவத்தை 2 திருவாய் மொழிகளில் பரக்கப் பேசியிருப்பதும் (திருவாய் 3-7, 8-10) வேதங்களும் பகவானை அறிவது அசக்யம் என்றே அறிந்தன என்று நிரூபித்திருப்பதும் (திருவாய் 9-3-3) பகவதனுபவத்தை இங்கே செய்வதை விட மோக்ஷானுபவம் உயர்ந்ததன்று என்று அனுஸந்தித் திருப்பதும் ஸம்ஸார துக்கத்தைப் போக்கிக்கொள்வதற்கு பகவானுடைய குணானுஸந்தானத்தை விட ஸாதநம் கிடையாது என்று நிஷ்கர்ஷித்திருப்பதும் (பெ.திரு 86) ஆசார்ய ஸார்வ பெளமனுடைய அவதாரத்தை ஸூசிப்பித்திருப்பதும் (திருவிரு 26) மார்க்கண்டேயனுக்கு ருத்திரன் சிரஞ்சீவியாய் இருக்கும்படி வரம் கொடுத்ததும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே என்று அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 4-10-8) பகவானுடைய திருக்கண்களின் சோபைனை தாமரைக் காடுகள் என வர்ணித்திருப்பதும் (திருவாசி 2, திருவாய் 8-9-1) சில விசேஷார்த்த நிரூபணங்களாகும்.

8. இவருடைய திருநாமங்கள்.

மாறன், சடகோபன், வழுதிவளநாடன் என்று தாமே தம்மை வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்திருநாமங்களுக்கு விசேஷணங்களாக குருகூர் நகரான், குருகூர், வழுதிநாடன் குருகைக் கோன், காரி, திருமாலால் அருளப்பட்ட என்றுஅனுஸந்தித்துக்கொண்டிருக்கிறார். காரி என்றது தகப்பனாரின் திருநாமம். மாறன் என்பது குடிப்பெயர். லோகத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் மாறான – வேறுபட்ட ஸ்வபாவத்தையுடையவர் என்றுமாம். சடகோபன் என்றது கெட்டவர்களைக் கோபித்துக்கொள்ளுமவர் என்றபடி. நம்மாழ்வார் என்பது இவரை உகந்து பெரியபெருமாள் அனுக்ரஹித்தருளிய திருநாமம். இத்திருநாமத்தாலேயே இவரை வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம்

குலபதி என்று ஸ்ரீஆளவந்தார் அனுஸந்தித்திருக்கிறார். ஸ்ரீதேசிகன் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி முதலியவற்றில் இவரை “சடரிபு:, சடஜித் சடமதநமுநி:, முநி: முநீந்த்ர யோகீ, சடாரி:, காரிஸூநு:, கேஸர ஸ்ரக் விபூஷ:, சடஜநமதந:, காரேஸ்தநூஜ:, காரேரபத்யம், காரிஜ:, : அகில த்ராமிட ப்ரஹ்ம தரிசி, சடகோப ஸூரி:, வகுளதர மஹர்ஷி, வகுளாபரண:, கூடஸ்த: என்றிவை முதலிய திருநாமங்களால் அனுஸந்திருக்கிறார்.

9. பூர்வர்கள் இவரைக் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் இவர் விஷயமான‘திருவழுதிநாடு’ என்றாரம்பிக்கும் தனியனையும், ஸ்ரீமந்நாதமுனிகள் ‘பக்தாம்ருதம்’ ‘மனத்தாலும்’ என்றாரம்பிக்கும் தனியன்களையும், ஸ்ரீஆளவந்தார் ‘மாதா பிதா’ என்கிற தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

எம்பெருமானார், ‘முந்துற்ற நெஞ்சே என்கிற பெரிய திருவந்தாதித் தனியனையும், திருக்குருகைப்பிரான், ‘வான் திகழும் சோலை’ ‘மிக்க இறைநிலையும்’, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்கிற திருவாய்மொழித் தனியன்களையும், கிடாம்பி ஆச்சான், ‘கருவிருத்தக்குழி என்கிற திருவிருத்தத் தனியனையும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ‘காசினியோர்’ என்கிற திருவாசிரியத் தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீமதுரகவியாழ்வார், இவ்வாழ்வார் தம்முடைய அனுபவ பரீவாகமாக வெளியிட்ட பாசுரங்களைப் பட்டோலை கொண்டு, அவற்றை நான்கு ப்ரபந்தங்களாக லோகத்தில் வெளியிட்டருளினது மாத்திரமன்றிக்கே ஆழ்வாரையே ஆசார்யனாகக் கொண்டு, அவருடைய திவ்யார்ச்சையை திரு ப்ரதிஷ்டை செய்தருளி அதற்கு உத்ஸவாதிகளை நடத்தி, அதற்கு உபரோதம் செய்தவர்களை நிரஸித்து உத்ஸவாதிகளை யதா க்ரமம் நடத்திவைத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதனுடைய நியமனப்படி இவருடைய ப்ரபந்தமான திருவாய்மொழியை ப்ரதி ஸம்வத்ஸரமும் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கமாக ஒவ்வொரு நாளும் ஒரு பத்தைத் திருச்செவி சாற்றியருளும்படி ஏற்பாடு செய்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ரத்தில் பற்பல பாட்டுக்களின் கருத்தை வெளியிட்டருளியிருக்கிறார், உதாஹரணமாக

மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே ” என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தருளியதை

न मृषा परमार्थमेव मे श्रृंणु विझापनमेकमग्रतः

तत् सत्यं मधुमथन विज्ञापनमिदम्

என்றும், உயர்வற உயர் நலமுடையவன் ’ என்றதை

स्वाभाविकानवधिकातिशयेशितृत्वं

என்றும், “யாருமோர் நிலைமையன் என நினைவரிய எம்பெருமான் யாருமோர் நிலைமையன்என அறிவெளிய எம்பெருமான்” என்றதை

‘विधिशिवसनकाद्ये: ध्यानुमत्यन्तदूरं पश्यन्ति केचिदनिशं त्वदनन्यभावाः’ என்றும், ‘நன்றெழில் நாரணன் ‘ என்றதை * नारायण ! त्वयि न मृष्यति वैदिकः कः ‘ என்றும், நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்றதையே * न धर्मनिष्ठेस्मि न चात्मवेदी ° என்றும் *

நாளு நின்றடு நம் பழமையங்கொடு வினையுடனே

மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி

நாளும் திருவடியடிகள்தம் நலங்கழல் வணங்கி

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

என்றனுஸந்தித்தருளியதை * त्वर्देधिमुद्वदिश्य कदापि केनचिन्’ என்ருரம்பிக்கும் கலோகத்திலும் விவரணம் செய்தருளிஞர்

எம்பெருமானார் திருவாய்மொழிக்குத் தம் சிஷ்யர்களில் ப்ரதானமானவரும், தம்மால் ஜ்ஞான புத்திரரென்று அபிமானிக்கப்பட்டவரும், தமக்குப் பிறகு உபய வேதாந்த ஸிம்ஹாஸனத்தில் மூர்த்தாபிஷிக்தருமான திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கொண்டு திருவாறாயிரப்படி என்னும் வ்யாக்யானத்தை வெளியிட்டு, அதைத் தாமே தம் சிஷ்யர்களுக்கு முதல் முதலிலே ப்ரவசனம் செய்தருளினார். சந்தமிகு தமிழ் மறைகளின் அனுஸந்தானத்தின் பரீவாஹமாய்ப் பெரிய முதலியார் அருளிச்செய்த ஸ்தோத்திரத்தைப் பல தடவை அனுஸந்தானம் செய்ததினால் ஸுப்ரதிஷ்டிதமான ஜ்ஞானத்தால் எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யத்தில் திருவாய்மொழியில் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்த விசேஷங்களையே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீபாஷ்யம் மங்கள சுலோகத்துக்கு மூலம்

‘துன்பமும் இன்பமுமாகிய செய்வினையாய் உலகங்களுமாய்

இன்பமில் வெந்நரகாகி இனியநல் வான் சுவர்க்கங்களுமாய்

மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால்

இன்புறுமிவ் விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்ல லிலனே

என்னும் திருவாய்மொழிப்பாட்டு ( 3-10-7) இதின் திருவாறாயிரம் — “நிகில ஜகதுதய விபவ லயாதிலீலனாய்” என்று. “இன்புறும் இவ்விளையாட்டுடையான்” என்றதையே எம்பெருமானார்

अखिलभुवनजन्मस्थेमभङ्गादिलीले-என்றருளிச் செய்திருப்பது. அப்படியே ஆழ்வார் முதல் திருவாய்மொழியில் 7ம் பாட்டில் உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்து, உளன் சுர்மிகு சுருதியுள் என்றதையே श्रुतिशिरअसि विदिप्ते ब्रह्माणि श्रीनिवासे என்றருளிச் செய்திருக்கிறார். உபக்ரமம் இப்படி. மேல் உபஸம்ஹாரம் எப்படி எனப் பராமர்சிப்போம்.

இறுதி ஸூத்திரம் ‘இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தினால் முக்தி அடைந்தவன் மறுபடியும் இந்த ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை — அப்படியே ச்ருதிகளில் கூறப்பட்டிருப்பதினால்’ என்பது. இதன் ஸ்ரீபாஷ்யத்தில் பகவத் ஸங்கல்பத்தினால் ஆத்மா முக்தி அடைகிறபடியினாலே பகவான் ஸ்வதந்த்ரன். அவன் திருப்பி அனுப்பாவிட்டால் என் செய்வது என்கிற ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் இந்த ஸூத்திரத்தில் கூறப்படுகிறது என அவதாரிகையை அருளிச் செய்து திருப்பி அனுப்பமாட்டான் என்பதற்கு ப்ரமாணம் வேதங்களே — எப்படி எம்பெருமான் உளன் என்று வேதங்களிலிருந்து அறியப்படுகிறதோ அப்படியே அவன் திருப்பி அனுப்பமாட்டான் என்பதையும் அந்த வேதங்களே கூறுகின்றன என்று அப்படிக் கூறும் வேதவாக்யங்களை உதாஹரித்து வேதங்களுக்குத் துல்ய ப்ரமாணமான ஸ்ரீகீதோபநிஷத் சுலோகத்தை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஸூத்திரத்தில் சகாரம்கூட இல்லாமையினால் மேல் உபஸம்ஹாரம் செய்யவேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் “ந ச ” என்று ஆரம்பித்து இப்படித் திருப்பி அனுப்பாமைக்குக் காரணத்தை மற்றொரு விதத்தில் உபபாதித்திருக்கிறார். இதற்கு மூலம் ஆழ்வாருடைய

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவனோ

என்கிற திருவாய்மொழி 1-7-4ம் பாட்டே. எப்படி வேதங்கள் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை உபபாதிப்பதில் உத்தம ப்ரமாணங்களாக நிற்கின்றனவோ, அதைப்போலவே திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார் பகவானை உள்ளபடியே ப்ரத்யக்ஷீகரித்து தாம் அனுபவித்தபடியை வெளியிடுகிற திருவாய்மொழியும் உத்தமமான ப்ரமாணமென்று திருவுள்ளம் பற்றி, எம்பெருமானார் தமது ஸ்ரீபாஷ்யத்தில் கீழ் உதாஹரிக்கப்பட்டதான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தின் பாட்டை அப்படியே ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஸூத்திரகாரரோ ராஜாஜ்ஞை போலே வேதங்கள் கூறா நிற்கும் என்றார். அகில த்ராமிட ப்ரஹ்மதர்சியாகிய ஆழ்வாரோ அந்தக் காரணத்தை மேலே நிரூபிக்கப்போகிறவராய் பகவான் முக்தனைத் திருப்பி அனுப்பமாட்டானேயாகிலும் முக்தனே திரும்பி வந்துவிட்டால் புனராவ்ருத்தியில்லை என்பது ஸ்தாபிக்கப்பட்டதாகாதே என்பதற்காக இந்த அம்சத்தை மட்டும் விசேஷித்து உபபாதித்தருளினார் என்பதும், இதற்குக் கீழ்ப்பாட்டில், “என் மாயப்பிறவி மயர்வறுத்தேனே” என்பதை அனுவதிக்கிறார் என்பதும் இங்கு விவக்ஷிதமாகக் கடவது. ஸ்ரீபாஷ்ய பங்க்தியும், எம்பெருமானாருடைய காலக்ஷேபத்தின் ஸங்க்ரஹமான திருவாறாயிரப்படி பங்க்தியும் உதாஹரிக்கப்படுகின்றன.

नचउच्छिन्नकर्मबन्धस्य असंकुचितज्ञानस्यपरत्रह्मानुभवैकस्वभावस्य तदेकप्रेियस्य अनवधिकातिशयानन्दं व्रह्मानुभवतः अन्यापेक्षातदर्थीीरम्भाद्यसंभवात् पुन रावृत्तिशङ्का । न च परमपुरुषः•••

திருவாய்மொழிப்பாட்டின் திருவாறாயிரப்படி பங்க்தி

இப்படி எம்பெருமானோடு ப்ரவ்ருத்தமான ஸம்ச்லேஷத்திற்கு ஒருபடியாலும் மேல் அழிவில்லை என்கிறார். தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞானமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான குண ஸ்வரூபங்களை அத்யந்த விசதமாம்படி எனக்குக் காட்டியருளித் தனக்கு ஸத்ருசரான அயர்வறும் அமரர்களோடு ஸம்ச்லேஷிக்குமாப்போலே என்னோடு ஸம்ச்லேஷித்தருளியவனை எங்ஙனே விடும்படி என்கிறார்” — என்பது. இங்கு “ஒருபடியாலும் அழிவில்லை” என்பதற்கு இதற்கு வ்யாக்யானமான இருபத்துநாலாயிரப்படி வ்யாக்யானத்தில் “என்னுடைய அஜ்ஞானமடியாகவும் விஷயாந்தர ஸங்கமடியாகவும் பகவத் ஸ்வாதந்த்ர்வமடியாகவும் என்னுடைய பாக்யஹானியடியாகவும் என்றபடி” என்று. கீழ் வேதவாக்யங்களுக்கு மேற்கோளாக ஸ்ரீகீதா ச்லோகத்தை உதாஹரித்தாற்போலே இந்த த்ரமிடோபநிஷத்துக்கும் மேற்கோளாக மற்றொரு கீதாச்லோகத்தை உதாஹரித்து உபஸம்ஹாரம் செய்தருளியிருக்கிறார் இப்படியே ஸ்ரீகீதாபாஷ்ய கத்யாதிகளிலும் பல ப்ரகரணங்களில் ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்திகளைப் பின்பற்றியே நிரூபித்தருளியிருக்கிறார்.

நம்முடைய விசிஷ்டாத்வைத ஸம்ப்ரதாயத்தை இந்தக் கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தருளியவர் இவரே என்றும், இவற்றை மீண்டும் ஸ்ரீமந் நாதமுனிகளும் உபதேசித்தருளியவர் என்றும் ஸ்ரீஸம்ப்ரதாய பரிசுத்தியில் ஸ்ரீமதுரகவிகள் முதலாக உண்டான ஸம்ப்ரதாய பரம்பரையாலும் திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் — இவரை ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தநையாலே ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்” இத்யாதியாக அனுஸந்தித்திருக்கிறார்.

நம்மாழ்வாருக்கும் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் நடுவில் பல வருஷங்கள் கழிந்துவிட்டதே என்பதற்கு ஸமாதானத்தை ஸ்ரீஸ்தோத்ரபாஷ்யத்தில்-कालविप्रकर्षेपि परमपुरुषसंकल्पात् कदाचित् प्रादुर्भूय सास्त्रादपि सर्वोपनिषदुपदेष्टारं என்றருளிச் செய்திருக்கிறார். இவருடைய அருளினால் “திருமால் தாளில் தலைவைத்தோம்” என்று அருளிச் செய்திருப்பதினால் இவருடைய க்ருபையில்லாவிடில் பகவானுடைய திருவடிகள் நமக்குக் கிட்டாது என வெளியிட்டிருக்கிறார். இவருடைய ப்ரபாவத்தை द्रमिडोपनिषत् द्रष्टुरस्य याथात्म्यमद्बुदं என்று வாசாமகோசரம் என நிரூபித்தருளினார். எம்பெருமான் நம்மாழ்வார் தம்முடைய திருவாய்மொழி 1000 பாட்டுக்கள் பாடிய பிறகே தன்னை உளனாக எண்ணி, அதற்கு ப்ரதியாகத் தானும் அவர் விஷயமாக 1000 பாட்டுக்களைப் பாடவேண்டும் என்ற அபிலாக்ஷையைத் தான் குருவரராய்த் தோன்றி ஸ்ரீபாதுகாசஹஸ்ரம் என்னும் க்ரந்தத்தை அருளிச்செய்து தீர்த்துக்கொண்டான். இவ்வம்சத்தை ஸ்ரீதேசிகன் தாமே ஸமாக்யா பத்ததியில் நம்மாழ்வாரும் ஸ்ரீபாதுகைகளும் ஒன்று என்று நிரூபித்திருப்பதினாலும், நாதபத்ததியில் பாதுகைகளின் நாதம் திருவாய்மொழிப் பாசுரங்களின் அனுதாதம் என்று அனுஸந்தித்திருப்பதினாலும், க்ரந்தத்தை “ஸந்த:” என்று தொடக்கம் செய்து “ஸந்த:” என்று முடித்திருப்பதினாலும் ஸூசிப்பித்திருக்கிறார். இவருடைய முதல் ப்ரபந்தமான திருவிருத்தத்தின் முதல் பாசுரத்திற்கு ஸ்ரீஉபகார ஸங்க்ரஹம் என்னும் ரஹஸ்யத்தில் வ்யாக்யானம் அருளிச் செய்திருக்கிறார். திருவாய்மொழிப் பாசுரங்களின் அர்த்தத்தை ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளீ, ஸ்ரீத்ரமிடோபநிஷத் ஸாரம், ஸ்ரீநிகம பரிமளம் இவைகளில் வெளியிட்டுள்ளார். இவருடைய சில பாட்டுக்களின் உண்மையான அர்த்தங்களை ப்ரமாணோபபத்திகளுடன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய க்ரந்தத்தில் நிரூபித்தருளினார். இவர் நெடுமாற்கடிமையில் அனுஸந்தித்தருளிய அர்த்த விசேஷங்களையே புருஷார்த்தகாஷ்டாதிகாரத்தில் ஸங்க்ரஹித்திருத் தருளினார். இவருடைய திருவாக்கின் ப்ரபாவத்தை “அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன” என்றும் நிரூபித்திருக்கிறார்.

ஒரு மதியன்பர் உளங்கவர்ந்தன‘, ‘குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி’ என்று இவருடைய ப்ரபாவத்தையும் பேசியுள்ளார். ஸ்ரீகீதாசார்யன் ஸாதுபரித்ராணார்த்தமாக அவதரிக்கிறேன் என்றது இவரையே ப்ரதானமாகக் குறிக்கும் என்று ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் ஸூசிப்பித்தார். அதாவது, “न हि अमिषां अन्नपानं ताम्बूलादि धारण पोषणादिकं, किं तु अहं कृष्ण एव” இவர் ‘உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம் கண்ணன்’ என்பதைப் பின்பற்றியதாகும். இப்படியே இவர் ‘கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்’ என்றனுஸந்தித்ததையே-कृष्णःतत्वं परं तत्परमापि च हितं तत्पदैकाश्रयत्वं’என்று கீதையின் பொருளாக ஸங்க்ரஹித்துள்ளார். பகவானுடைய திருக்கண்களின் சோபையை இவர் ‘தாமரைக்காடுகள்’ என்றனுஸந்தித்திருப்பதைப் பின்பற்றி-पुण्डरीकवन्लुण्ठाकलोचन-என்றனுஸந்தித்தருளினார்.

ஸ்ரீப்ரபந்தஸாரத்தில் ‘முன்னுரைத்த’ என்று இவர் ப்ரபந்தங்கள் விஷயமாக ஒரு பாட்டு அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவருடைய த்ராக்ஷா மதுரம் போன்ற ஸ்ரீஸூக்திகளை அனுஸந்தித்ததினால் உத்கர்ஷம் பெற்ற தம் வாக்குகள் ப்ரஹ்மாதிகள் விரும்பியும் பெறாத ஓர் ஏற்றம் பெற்றவைகளாய் நிற்கும் என்றனுஸந்தித்திருக்கிறார். கீழ்ப் பல இடங்களில் இவரைக்கொண்டாடியிருக்கும் ப்ரகாரம் காட்டப்பட்டிருக்கிறது.

கவி சக்கரவர்த்தியென இக்காலத்தில் விசேஷித்துக் கொண்டாடப்படும் கம்பனாலும் இவர் விஷயமாக சடகோபர் அந்தாதி என்னும் க்ரந்தத்தில் இவருடைய பெருமை நன்கு நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

10. விசேஷாம்சங்கள்

இவருக்கு மற்ற ஆழ்வார்களைப்போலே சந்தமிகு தமிழ்மறைகளில் சில பாகங்களை ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய ஏற்றத்துடனே அவற்றையும் மற்றைய ஆழ்வார்கள் வெளியிட்டருளிய ப்ரபந்தங்களையும் மறுபடியும் ப்ரவர்த்தனம் செய்தருளினார் என்கிற ஏற்றமுண்டு. இத்தால் இவருக்கு ஆசார்ய கோஷ்டியில் அனுஸந்திக்கப்படும் பெருமையுண்டு. மற்ற மூவாயிரம் பாசுரங்களைப்போலே இவருடைய திருவாய்மொழியை வீதிகளில் ஸேவிப்பதில்லை. ஸந்நிதிக்குள்ளோ, திருமாளிகைகளிலோ உட்கார்ந்துகொண்டே ஸேவிக்கும் ஏற்றம் பெற்றதாயிருக்கும்.

இவருடைய அவதாரத்தை ஸ்ரீபாகவதத்தில் 4ம் ஸ்கந்தத்தில் புரஞ்ஜனோபாக்யானம் கூறுகிறது. இவருடைய ப்ரபந்தத்தில் ஒரு விசேஷ மணம் வீசாநிற்கும் என்று ஆசார்யன் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார்.

திருவாய்மொழி எல்லோராலும் அனுஸந்திக்கப்படும் என்பதை ஆழ்வார் தாமே ‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்‘ என்றனுஸந்தித்திருக்கிறார். இதன் கருத்து :–ஸ்ரீபாகவதத்தில் பகவானுடைய திருக்கல்யாண குணங்கள்-निवृत्ततर्षैः उपगीयमानात् भवौषधात् सोत्रमनोभिरामात्எ-ன்கிறபடியே ஸம்ஸார ஸம்பந்தம் இல்லாத நித்யர்களாலும் முக்தர்களினாலும் கானம் செய்யப்படும் என்றும், ஸம்ஸாரத்தைப் போக்கடித்துக் கொள்ளுவதற்கு மருந்தாயிருப்பதினால் முமுக்ஷுக்களினாலே அனுஸந்திக்கப்படும் என்றும், கேட்பவர்களின் மனதிற்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றும் இப்படிகளினால் எல்லோராலும் அனுஸந்திக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது. அதைப்போலவே இத்திருவாய்மொழியும் என்பதை இதன் தனியனில் भक्तामृतं विश्वजनानुमोदनं सर्वार्थदं என்று கூறப்பட்டது. ‘பக்தாம்ருதம்‘ என்றது ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் ஸ்வயம் போக்யமானது என்றபடி. ‘விச்வஜனானுமோதனம்’ என்றது ச்ராவ்யமாயிருப்பதினால் ஸம்சாரி சேதனர்களுக்கு ஸந்தோஷத்தை உண்டாக்கும் என்றபடி. ‘ஸர்வார்த்ததம்’என்றது கற்பவர்களுக்கு வேதாந்த ஜ்ஞானத்தை உண்டாக்குகிறபடியினால் ஸம்ஸாரத்தைப் போக்குகிற அருமருந்தாய் நிற்கும் என்றபடி. இந்த மூன்று விசேஷணங்களும் ஆழ்வாரிடமிருந்து அவருடைய செவிக்கினிய செஞ்சொறகளான பாட்டுக்களை நேரில் கேட்டு, அப்படியே அவற்றை லோகத்தில் பரவச் செய்தருளிய ஸ்ரீமதுரகவிகளைக் கூறுமென்றும் சொல்லலாம்.

இந்த மூன்று விசேஷணங்களினாலும் ஸ்ரீதேசிகனைத் தான் ஆழ்வார் குறிப்பிட்டார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். ‘பாலேய் தமிழர்’ என்றது தமிழ் பாஷை ஸம்ஸ்க்ருத பாஷையைப் போலவே ப்ரசஸ்தமானது, நித்யமானது என்றும், எல்லோரும் அதிகரிக்கலான பாஷை என்றும், சித்தரஞ்ஜனத்தோடு வேதாந்தார்த்தங்களைத் தெளிவிப்பதில் இவை ப்ரதானம் என்றும், அனுஸந்திக்கப் பட்டவுடனே எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் என்றும் நிரூபித்தது மாத்திரமன்றிக்கே, தம்மை,’சந்தமிகு தமிழ் மறையோன்‘ என்று த்ரமிட வேதாத்யாயீ என்று அனுஸந்தித்தருளிய ஏற்றம் ஸ்ரீதேசிகனுக்கு மாத்திரமுள்ள பெருமையல்லவா என்றபடி. ‘இசைகாரர்’ என்றது கீதி பகவத் விஷயமாகில் ப்ரசஸ்தம் என்று நிஷ்கர்ஷித்தது மாத்திரமன்றிக்கே பாடுமவர்கள் கோஷ்டியில் தாம் இடம் பெற்றவர் என்று அனுஸந்திக்கும்படியான பெருமை ஸ்ரீதேசிகனையே சேர்ந்ததல்லவா என்றபடி. ‘பத்தர்‘ என்பதைப் பகவத் பக்தர்கள் என்றாலும் ஆழ்வாருடைய பக்தர் என்றாலும் அந்த இரண்டு அம்சங்களும் ஸ்ரீதேசிகனிடத்தில் பூர்ணமாயிருந்தமை ஸர்வஸம்ப்ரதிபன்னமானது. தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகத் தம்மை நிரூபித்துக்கொண்டவர் வேறொருவரு மில்லையே!

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்

ஸ்ரீ ஷட்பதீ –வண்டு- ஸ்தோத்ரம்–ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள்–

June 16, 2024

திருச்செந்தூர் முருகன் மீது ‘புஜங்கம்’ பாடி ப்ரார்த்திக்கும்போது, ‘ஹே ஸ்கந்தா! பத்மத்தில் வண்டு மொய்த்துக் களிக்கிறது போல் பவ வினையால் க்லேசமுற்றுக் கொதிக்கும் என் மன வண்டானது உன் பாதபத்மத்தில் ஸதா ரமித்துக் கொண்டிருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அங்கே,

மந: ஷட்பதோ மே பவ க்லேச தப்த:

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

என்கிறார்.

வண்டுக்கு ப்ருங்கம், ப்ரமரம், மதுபகம் என்றெல்லாமும் பெயர் இருக்க, அதை மனஸுக்கு ஒப்பிடும்போது ஷட்பதப் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பது ‘ஸெளந்தர்ய லஹரி’யில் வெளியாகிறது. அதில் (ஸெளந்தர்ய லஹரியில்) ‘பஞ்ச இந்த்ரியங்கள் என்கிற ஐந்து கரணங்களோடும் மனஸ் என்ற ஆறாவது கரணத்தோடும் சேர்ந்தால் ஆறுகால் கொண்ட வண்டு போலிருக்கிற என் ஜீவனானது உன் பாதபத்மத்தில் புதைந்து கிடக்கட்டும்’ என்று அம்பாளிடம் ப்ரார்த்திக்கிறார்.

நிமஜ்ஜன் மஜ்ஜீவ: காரண சரண: ஷட்சரணதாம் |

பதம், சரணம் இரண்டும் காலைக் குறிக்கும். ‘ஷட்சரண’ என்றால் ஷட்பதமான வண்டு என்றுதான் அர்த்தம்.

மனஸை ஐந்து இந்த்ரியங்களோடு ஆறாவதாகச் சொன்னாலும் மற்ற ஐந்தையும்கூட ஆட்டிப் படைப்பது அதுதான், அதனால் மனஸையே அதுவும், அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. அதனால்தான் ‘மன: ஷட்பதோ’ என்றார்.

ஆகையால் இங்கே, ‘ஆறு ச்லோக – ஆறு வார்த்தை – ஷட்பதீ என் வாயில் எப்போதும் இருக்கட்டும்’ என்று சொல்ல வந்தபோது அவருக்கு வண்டு நினைவு வந்து விட்டது. வண்டு ஸதா இருக்கிற இடமாகத் தம் வாய் இருக்கவேண்டுமென்றால் அந்த வாயானது தாமரைப் பூவாக இருந்தால்தானே முடியும்? வண்டு தாமரையைத் தானே ஸதா மொய்க்கும்? அதனால்தான் ‘வதந ஸரோஜே’ என்று போட்டுவிட்டார்!

ஸ்ரீபதியின் பதாரவிந்தத்தை, ஸுந்தர வதநாரவிந்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கிற ஒரு பக்தனின் வாயும் அரவிந்தமாக ஆகிவிடுமாதலால், ‘என் வாய்த்தாமரை’ என்று போட்டதில் எந்த அநுசிதமும் இல்லை. அந்த வதன ஸரோஜத்தில் உள்ள வண்டு எது என்றால் அதுதான் ஷட்பதீ ஸ்தோத்ரம்.

ஸதாஸர்வ காலமும் இந்த ஷட்பதீ என்று வாக்கில் இருக்கட்டும்’ என்று ஆசார்யாள் ப்ரார்த்தித்து, நம் எல்லோர் பொருட்டும் அவர் செய்த ப்ரார்த்தனையாகும். இந்த ‘வண்டு ஸ்தோத்ரம்’ மொய்க்கிற தாமரைகளாக நம் எல்லோருடைய வாயும் ஆகவேண்டும். அப்படியிருந்தால் பஞ்சேந்த்ரியமும் மனஸும் சேர்ந்து ஷட்பதமாக இருக்கிற நம்முடைய ஜீவனாகிற வண்டு எப்போதும் பகவானின் பாத கமலததில் படிந்துகிடக்கும். ஆரம்பத்தில், ‘தமய மந: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்……தாரய ஸம்ஸார ஸாகரத:’ என்கிறபோது ஆசார்யாள், மனஸும் இந்த்ரியங்களும் அடங்கி ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கடைத்தேற்றுவிக்கப்பட வேண்டும் என்றுதான் ப்ரார்த்தனை செய்தார். கடைசியில் பகவானின் பாதங்களில் மனஸ், இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் சரணாகதி பண்ணுவதைச் சொல்லி முடித்திருக்கிறார். அழகாலும், அருளாலும் நம்மை வசீகரித்து, தன்னிலே நம் உள்ளத்தை லயிக்கப் பண்ணி, ஸுலபமாக நம்மை பவஸாகரத்தலிருந்து கரைசேர்ப்பது பகவானின் பாத கமலம்தான். அதுதான் ‘பகவத்பாதர்’ என்றே சொல்லப்படுகிற நம் ஆசார்யாள். அவரே பகவானின் பாதகமலம் என்றால் அதிலும் அவரது முகம் ஒரு கமலமாக இருக்கிறது. அதிலே ஸதாவும் இருக்கிற வண்டு ஷட்பதீ ஸ்தோத்ரம். அது ஆசார்யாளுடைய வாக்குத் தேனையும், அதன் வழியாக பகவானின் அருள்தேனையும் நமக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கட்டும்!

————

ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்

அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத:
(1)

அவிநய – மபநய விஷ்ணோ

தமய மந:சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் |

பூத – தயாம் விஸ்தாராய

தாரய ஸம்ஸார – ஸாகரத: || 1 ||

ஹே விஷ்ணு
எனது பணிவின்மையைப் போக்கு
மனதை அடங்கச் செய்
ம்ருக த்ருஷ்ணாம்-தாகம் கொண்ட மான் போல்-புலன்கள் ஓடுவதைத் தவிர்த்து -சம தம பிரார்த்தனை–பேராசையையும் தவிர்த்து அருள்
எல்லா ஜீவ ராசிகளிடமும் தயையை வரச் செய்
சம்சாரக்கடலில் இருந்து அக்கரை சேர்த்து அருள்

——–

திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே
(2)

திவ்ய – துநீ மகரந்தே

பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே |

ஸ்ரீபதி பதாரவிந்தே

பவ – பய – கேத – ச்சிதே வந்தே || 2 ||

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும்
ஸச் சித் ஆனந்தம் ஆகியவற்றை வைசனையாகக் கொண்டதும்
உலகில் துன்பத்தைப் போக்குவதுமான
ஸ்ரீயப்பதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகிறேன்

———-

ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க:
(3)

ஸத்யபி பேதாபகமே

நாத தவாஹம் ந மாமகீநஸ் – த்வம் |

ஸாமுத்ரோ ஹி தரங்க:

க்வசந ஸமுத்ரோ ந தாரங்க: || 3 ||

ஜீவாத்மாவான எனக்கும் பரமாத்மாவான உனக்கும் இடையில் வேற்றுமை இல்லை எனினும்
ஹே ஸ்வாமிந்
அடியேன் உனக்கு சேஷ பூதனே
யானும் நீ என்னுடைமையும் நீயே
அலை தானே ஸமுத்ரத்தை அண்டி இருக்கும்
கடல் அலையை அண்டி இருக்காதே

———–

உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசி த்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார:
(4)-அந்தாதி அமைப்பில் ஸ்லோகம்

உத்த்ருத நக -நகபிதநுஜ

தநுஜகுலாமித்ர மித்ர – சசி – த்ருஷ்டே |

த்ருஷ்டே பவதி ப்ரபவதி

ந பவதி கிம் பவ – திரஸ்கார: || 4 ||

கோவர்த்தன மலையைத் தூக்கியவரே
இந்திரனின் இளையவராக உம்மை ஆக்கிக் கொண்டவரே
அசுரக் கூட்டத்தை அழித்தவரே
ஸூர்ய ஸந்த்ரர்களைக் கண்களாகக் கொண்டவரே
தங்கள் கண்களுக்கு எதிரே வந்து காட்சி அருளும் பொழுது எவருக்குத் தான் உலகியலிகளின் தாழ்மை தோற்றாது

——————

மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (
5)

மத்ஸ்யாதிபி – ரவதாரை –

ரவதாரவதா – வதா ஸதா வஸுதாம் |

பரமேச்வர பரிபால்யோ

பவதா பவ – தாப – பீதோஹம் || 5 ||

மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கி வந்து அருளி
பூமியைக் காத்து அருளும் தங்களால்
ஸம்ஸார தாபத் த்ரயங்களால் மருண்ட அடியேன்
உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்து அன்றோ

———

தாமோதர குண மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே
(6)

தாமோதர குண மந்திர

ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த |

பவ – ஜலதி – மதந மந்தர

பரமம் – தர – மபநய த்வம் மே || 6 ||

தாமோதரன்
குணங்களுக்கு கோயிலானவனே
அழகிய தாமரையை ஒத்த திரு முகம் கொண்டவனே
கோவிந்தா
ஸம்ஸாரக் கடலைக் கடையும் மந்த்ர மலை போன்றவனே i
எனது பெரும் துன்பத்தைப் போக்கி அருள்வாய்

————

நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது
(7)

நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ

இதி ஷட்பதீ மதீயே வதந – ஸரோஜே ஸதா வஸது ||

ஹே நாராயணா
கருணைக் கடலே
உனது திருவடித் தாமரைகளை சரணம் அடைகிறேன்
என்ற இந்த ஆறு சொற்கள் எப்போதும் என்னிடம் தங்க அருள்வாய்

————

இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக் கவலையும் கிரஹ தோஷமும் நீங்கும்.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சங்கர பகவத் பாகவத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் -ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

June 16, 2024

ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–

கோதை மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை

————

ஸ்ரீ குருவாயு புரே நாத குரு வாக் விபவேதவா
குருஷே விஹ்ருதிம் நித்யம் இதி டோலாயதே மநஸ்
–1-

அலகிலா விளையாட்டுடையவன் -அகில புவந ஸ்தேம பங்காதி லீலே -வேதத்தில் இவன் விளையாட்டு
குந்துமணி உரலில் அலசி -குழந்தைகள் உடன் சேர்ந்து விளையாடி -உடன் சேர்ந்து ப்ரதக்ஷிணமாக சென்றான்

இவனே அவன் -என்று மனஸ்ஸு மேலும் கீழும் ஊஞ்சல் ஆடுகிறது

———

குரு மருந் முநி ப்ருந்த நுதாங்க்ரய குரு வராக்ருதி மஸ்ய ஸமேயுஷே
குரு மருந் நகரோத்தம வாஸிநே குரு மருத் ப்ரதமாய நமோ நம
–2-

குருவும் வாயுவும் முனிக் கூட்டங்களும் வணங்கும் -10-5-கண்ணன் கழலிணை பதிகம் குருவாயூர் -நாராயண சங்கீர்த்தனம் இங்கு பிரஸித்தம் –
கெடும் இடராய -முன்னும் -திருவட்டாறு மங்களா சாசனம் பின்பும் -ரஸிக்கலாம்
குரு வராக்ருதி-அழகிய திருமேனி -பாதாள அஞ்சனக்கல் -மஹா லஷ்மி திருவடி பட்டு உருவான கல்லில் தானே யாக ஆசைப்பட்டு தானே வடித்து -பிரமதேவனுக்கு கொடுத்து -பின்பு இங்கு வந்தான்-

ப்ரஸ்னி ஸூதபஸ் பிரஸ்நிகர்ப்பன் பூஜிக்க
அதிதி கஸ்யபர் வாமனன் பூஜிக்க
தேவகி வாசுதேவன் கிருஷ்ணன் பூஜிக்க

கண்ணன் உத்தவருக்குக் கொடுக்க
ப்ருஹஸ்பதி குருவை நாட வாயுவும் சேர்ந்து இங்கு ப்ரதிஷ்டை-உங்கள் பெயரையே ஊருக்கும் தனக்கும் தானே வைத்துக் கொண்டான்-

குரு மருத் ப்ரதமாய-மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் இவனே

———————

குரு ஸிஷ்ய சவும்ய குரு பூஜந ஆஸ்ரயம் குரு ஸித்த கஞ்சிதபி தே ஸமாஸ்ரயம்
குரு பீம ஸேந ரண ரங்க பீஷணம் குரு பீம ஸேந குரு பத்த நாதிபம்
-3-

மனமே இவனை ஸமாஸ்ரயம் பண்ணு
பாபங்கள் விலகும்

———–

குரு கந்த வாஹ நகரீ விஹாரிணம் குரு வம்ஸ ஜாத விஜயஸ்ய சாரதிம்
குரு மாக மஸ்ய பரமம் புராதநம் குருமாந சாந்தர நிஸம் ஸூபாஸ்ரயம்
–4-

விளையாடும் தெய்வம் -நாம் அனைவரையும் பார்த்துக் கொண்டு இருக்கும் சாரதி -ஆகமம் காட்டும் புராதனப் பெருமாள் -சாந்தி அளிக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்-

—-

குருணா விநஷ்ட நிஜ பால காங்க்ஷிணா வருணா லயாந்தர வதீர்ய சோதித
அருணா தரம் தமுபநீய யோ ததவ் கருணா ரஸவ்க பரிதம் தமாஸ்ரயே
-5-

இழந்தவற்றை மீட்டுக் கொடுப்பவன்
ஸாந்தீப புத்ரனை உடலுடன் மீட்டுக் கொடுத்து அருளினவன் -பஞ்சஜனன் உடலுக்குள் தேடி யம லோகம் சென்று
செவ்விதழ் கொண்ட புத்ரன் -பூத பவ்ய பவத் பிரபு -அன்றோ
கருணைக்கடல் -தஞ்சம் அடைவோம் –

—————-

ஸ்ரீ ஜீவ மாருத புராதிப யுஷ்ம தீயா த்ருஷ்டா மயா ப்ரதி க்ருதா வபி திவ்ய மூர்தி
சாந்தா கபீர மதுரா ஸ்ரம ஹாரிணீ மாம் ஹே ஜீவ மாருத இதீவ கிலாபி தத்தே
–6-

ஸ்ரீ ஜீவ மாருத புரம் -சிறந்த காற்று -பிராணவாயு நிறைந்த புரம்
யுஷ்ம தீயா த்ருஷ்டா மயா ப்ரதிக்ருதா வபி திவ்ய மூர்தி –நீயே தேடி வந்து காட்சி அருளி
சாந்தா கபீர மதுரா ஸ்ரம ஹாரிணீ-தர்சனத்தாலே நிம்மதி இத்யாதி அருளி
மாம் ஹே ஜீவ மாருத -பக்தனே அழாதே
இதீவ கிலாபி தத்தே –அருளிய உனக்கு நமஸ்காரம்-

—————-

திஷணா மம விவாஸ ஸ்வய மதுநா விதி நேயம் குருதே ரதி மநிஸம் ப்ருஸ முரரீ க்ருத லாஸ்யா
திஷணா நில நகரோத்தம தில காயித தாம்நே நிகிலாகம ஸிர ஸித்தி தபத பங்கஜ பூம்நே
-7-

திஷண அநில-குரு வாயு
ஆனந்த கூத்தாடி பாடுகிறார்
திருவடியை உபநிஷத்தில்
இங்கு திருமேனி வைத்து ஒளி வீசுகிறாய்

————-

குரு மாருத பத்தநைக தாம்நே நிகமாந்தோதி தநைஐ கீர்தி பூம்நே
பவுகாதிக ஸர்வ காம ஸீம்நே-ஸ்ப்ருஹ யத் யேக்ஷ ஸதேஹ க்ருஷ்ண நாம்நே
–8-

நிகமாந்தோதி தநைஐ கீர்தி பூம்நே –புகழை வேதாந்தம் சொல்லும்
பவுகாதிக ஸர்வ காம ஸீம்நே -உயர்ந்த விருப்பங்கள் எல்லை நிலம் இவனே -அமுதினைக் கண்ட கண்கள் மாற்று ஒன்றைக் காணாவே -பூமா

நாயகி பாவத்தில் ஸ்தோத்ரம் -கண்ணன் என் காதலன் என்கிறார் –

—————

துர்வாதி நாமிஹ கலாவபி நாஸ்திகாநாம் கர்வாப நோதந விதவ் படுதாம் ததாநே
ஸர்வாபி வாஞ்சித விதாந ஸூபர்வ வ்ருஷே குர்வாஞ்சநேய குரு பத்தந ராஜி லீயே
–9-

நாஸ்திக வாதிகள் கர்வத்தை அடக்கி
கொம்பு முளைத்த தேங்காய் வ்ருத்தாந்தம் -இன்றும் காண்கிறோம்
நம்மை ஆக்கி தன்னைத் தந்து அருளும் கற்பகம்

—————-

குரு கந்த வாஹ நகரீ விஹாரிணே கரவை நமாம் ஸி மம ஸித்த ஹாரிணே
நிஜ பாத பக்த ஸூப சங்க காரிணே கருணாம் ரமாம் ச ஹ்ருதி நித்ய தாரிணே
–10-

லீலை செய்பவனே
உள்ளம் கவர் கள்வனே
பக்தர்களுக்கு ஸத் ஸங்கம் ஏற்படுத்தி அருளி
கருணா தேவியையும் ஸ்ரீ மஹா லஷ்மியையும் திரு மார்பில் நித்ய வாசம் செய்து அருளி
உனக்கு நமஸ்காரங்கள்

————-

ஹ்ருதய ஸதீ கதிரிஷ்டா தவ சேத் ஸ்ருணு மம கிரமதி ஹித ஸ்ருதி லக்நாம்
குத ரதி மிஹ ஸூர நுதி ததி மஹிதே திஷண ஸமீரண பத்தந நாதே —
11-

இருதயமே கேள்
தேவர் கூட்டம் வணங்கும் குருவாயூர் அப்பன் மீது காதல் பக்தி வளர்த்துக் கொள்

—————-

ஜீவ கிமேபிர் யத்நை ஜீவந மாத்ரே அபி நாத்ர பர்யாப்தை
ஜீவ ஸதாஸ் ரித்ய முதா ஜீவ ஜகத் ப்ராண பத்தந ப்ராணம் –
-12-

ஜீவாத்மாவுக்கு அறிவுரை
யத்னம் எடுத்து -பலன் கிட்டாமல்
அஹங்காரம் விட்டு
ஜகத் பிராணன் -குருவாயூர் -அடி பணிந்து உஜ்ஜீவி

————

மாயா தே ஸததம் தநோதி லலிதம் மாம் மந்த யந்தி பவே மாயா தே தயிதா தயா ரசமயீ ஸா மாம பாயாத் புநஸ்
மா யாயா இதி சாகமாக தவதீ ரஷாம் விதத்தே பராம் மாயா வல்கித மஞ்ஜூ மந்த ஹஸிதம் மாம் வீஷ்ய தத்தே பவாந்
–13-

உனது மாயை கட்டுகிறது
உன்னை மறைக்கிறது
மாயா ஆகிய மஹா லஷ்மி அடியேனைக் காத்து உனது திருவடிகளில் சேர்க்கிறாள்
நீ சிரித்துக் கொண்டே இரண்டையும் பார்க்கிறாய்-இந்த சிரிப்புக்கு நமஸ்காரங்கள்

——–

ஸ்ரீ ராமானுஜ தர்சநே ஜல நிதே யாஸ்தி ஸ்திதிஸ் தாத்ருஸீ
ஸ்ரீ ராமானுஜ தர்சநே தவ மம ஸ்வாமிந் க்ருபா வாரிதே
ஸ்ரீ ராமானுஜ தர்சநே மம ரதிம் ஸம் வர்த யேதாஸ் ஸதா
ஸ்ரீ ராமானுஜயா தநோது வஸதிம் ஜாயா தவாஸ் மத க்ருஹே
–14-

சந்திரன் -சந்தமாமா -ரமாவின் அநுஜன் -பார்த்து கடல் பொங்கும்
பல ராமனுடைய தம்பி -நீயே–கருணைக் கடலைப் பார்த்து -மனசாகிய சந்திரன் பொங்கும்
ராமானுஜர் ஸம்ப்ரதாயத்தில் நம்பிக்கை வளர அனுக்ரஹம் பண்ணி அருள்வாய்
விஜய லஷ்மி உள்ளத்தில் குடி கொள்ள வேண்டும்

——–

ஸ்வாமிந் நுத்தவ பூஜிதாமல மஹா ஸுந்தர்ய பூர்ணாக்ருத
ஸ்ரீ மந் நுத்தவதாம் விலோசந வதாம் நித்யம் கிலாத்ர ஆஸ்ரித
அஸ்மாகம் பவத் அங்க்ரி சக்த மநஸாம் ஹே ப்ராண பூத ப்ரபோ
ஸ்ரீ வாசஸ்பதி கந்த வாஹ நகரீ வாஸாஸ்து துல்யம் நம
-15-

ஸ்வாமி
உத்தவரால் பூஜிக்கப்பட்டவரே
கண்ணுக்கு விருந்தாக காட்சி அருளி
உன்னைக் காணாத கண் ஒரு கண்ணா
கண் இமைத்துக் காண்பாரும் இழப்பாரே
நீயே எங்களுக்கு பிராணன்

————–

கோதா சிந்தந தஸ் ஸதா கலு பவாந் தத்த்வம் கதோ வர்த்ததே
கோதா கார யுதோ ததாதி யதிதோ காமீத்ரு ஸீம் மாத்ருஸே
கோதாயா ஹி வரம் வரம் கடயதாத் ஸ்வாமிந் ஸூதாயா மம
கோதாநவ்க பலம் ஸக்ருத் கில பவத் ஸஞ்சிந் தநம் சவுதி ந
–16-

கோதா என்னும் தமது பெண்ணுக்கு கல்யாணம் பண்ண பிரார்த்தனை
கோதாவையே நினைத்து –நல் வார்த்தைகளை கோ தருபவள் -நீயும் கோதாவானாய் -அஞ்சேல் என்கிறாய்
கோ தானம் பண்ணும் பலனையும் அளிக்கிறாய்
உயர்வான வரன் அனுக்ரஹம் பண்ணி அருள்

—————

பீதாம் பரம் த்ருதவதா புருஷோத்தமேந
கீதாம் பரேண பவதா பவதா பஹந்த்ரீம்
கீதாம் பரேண சமரேந ததா விதே அபி
நீதாம் பராம் நிகமதோ அபி வதந்தி சந்தஸ்
–17-

போர்க்களத்தில் கீதை அருளி
யாரும் திருட வில்லையே
மது கைடபர் வேதம் திருட மீட்டுக் கொடுத்தாய்
ஆகவே கீதை வேதத்தை விட ஸ்ரேஷ்டம்

——————

புரா துரங்கா நந பூமி காவான் வேதா நதா ஸ்த்வம் விதயே ஹிதாய
ஜாதோ நியந்தாத துரங்க மாநாம் கீதாமியம் ஸாது கதா பரத்வம்
–18-

மேலும் ஒரு காரணம்
ஹயக்ரீவராக நான்முகனுக்கு அருளி
குதிரைகளை கட்டுப்படுத்தும் சாரதியாக நீ கீதை அருளினாயே

—————

குரு மருத் புஜி தே சகரே புரா ஸ்வ ஐநகேத மதாத் கில நர்த்தனம்
குரு மருந் நகரே புநரத்ய தத் நிகில லோக முதே பரமேததே
–19-

காளிய நர்த்தனம் முன்பு
சகரம் -விஷம் கலந்த பாம்பு -கோபிகள் அஞ்ச
இங்கு குருவாயூர் அப்பனாக -நகரத்தில் ஆடி -விஷம் இல்லாத -கரம் -விஷம்
அனைவருக்கும் ஸந்தோஷம் இங்கேயே

————–

குரு மருந் நகரே யதி நோ ரத குரு மருத் புஜி சக்த ததா தவ
குரு ந தல்ப ஸூகம் பவிதா தத குரு மருந் நகரே நிரதஸ் ஸதா
–20-

வாதாசலம் -காற்றையே உண்ணும் ஆதிசேஷன்
ஆகவே காற்று அடர்த்தியாய் உள்ள இங்கு நித்ய வாஸம்

———–

குரு ஹநுமத் குரு நகரே குர்வீம் ப்ரீதிம் ஸமே யுஷே பவதே
உர்வீ தல வைகுண்டே மவ்ர் வீவ நதா ஜயம் யாம
–21-

உர்வீ தல வைகுண்டே-பூலோக வைகுண்டம்
வணங்கி வெற்றி பெறுவோம்

————

குரு பங்க்தி நிவாஸ நிர்மலம் ஹ்ருதயம் ஸம் வஹதா கவீந்து நா
குரு வாயு புரீஸ விம்சதி ரசிதா ஸ்ரீ நிதி நாஸ் ஸதாம்
–22–

குரு பரம்பரை த்யான பூர்வகமாக
தூய்மையான உள்ளத்தால் ஸ்தோத்ரம்-

———-

மேல் சாந்தி * (தலைமை அர்ச்சகர்) அதிகாலை 2:30 மணிக்கு *ஸ்ரீ கோவிலுக்குள்* (( கருவறை)) நுழைந்து மதியம் 12:30 மணிக்கு
மதிய பூஜைகள் முடியும் வரை ஒரு குவளை தண்ணீர் கூட அருந்துவதில்லை .
வேத பாரம்பரியத்தின் இந்த முழுமையான தூய்மை குருவாயூர் கோயிலின் தனிச் சிறப்பாகும்.
ஆரம்ப கால வரலாறு
*நாரத புராணம்* அதன் அத்தியாயமான *குருபவனபுர மகாத்ம்யா*வில் கூறுகிறது: “அரசன் ஜனமேஜய, தன் தந்தையான பரீக்ஷித்தின் (பாம்பின் தலைவனான தக்ஷகனால் கொல்லப்பட்ட) மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக
, *சர்ப்பயக்ஞம்* (பாம்பு யாகம்) செய்தார். இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாம்புகள் உயிருடன் எரிக்கப்பட்டன,
ஜனமேஜயன் பயங்கரமான தொழுநோயால் பாதிக்கப்பட்டார், இதை உணர்ந்த தத்தாத்ரேயர் அவர் முன் தோன்றினார்
பரிகாரம் – குருவாயூர் கோவிலில் பகவான் கிருஷ்ணரின் கருணையை நாடுங்கள்.
முனிவர் விவரித்தார், பகவான் மகா விஷு தானே இந்த *மூர்த்தியை* முதலில் வணங்கினார். பத்ம கல்பத்தின் தொடக்கத்தில்
பிரம்மாவுக்கு உருவம் கொடுத்தார். *வராஹ கல்பத்தின்* தொடக்கத்தில், குழந்தை இல்லாத தம்பதிகள், சுதேபா &
ப்ரிஷ்னா பிரம்மாவிடம் ஒரு மகனுக்காக பிரார்த்தனை செய்தனர். பிரம்மா அவர்களுக்கு இந்த மூர்த்தத்தை அளித்தார், அவர்கள்
உண்மையான பக்தியுடன் மூர்த்தியை வழிபட்டால் அவர்களின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார் . இதை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள், அந்த அளவுக்கு மகாவிஷ்ணுவே
அவர்கள் முன் தோன்றினார். ஒரு வரமாக, அவர்கள் ஒரு மகனுக்காக மூன்று முறை அவரிடம் பிரார்த்தனை செய்தனர்.
தொடர்ந்து மூன்று பிறவிகளில் அவர்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தார் . மேலும், அவர்கள் மூன்று பிறவிகளிலும் தெய்வீக மூர்த்தியை வழிபடும் பாக்கியத்தைப் பெறுவார்கள்
.
அதன்படி, முதல் பிறப்பில், சுதேபா மற்றும் பிரிஷ்னா பிரிசிகர்பாவை மகனாகப் பெற்றனர். அவர்களின் இரண்டாவது பிறவியில், காஸ்யபர் & அதிதியாக,
தம்பதிகள் அதே மூர்த்தியை வணங்கி தங்கள் மகனான வாமனனைப் பெற்றனர். வசுதேவர் மற்றும் தேவகி அவர்களின் மூன்றாவது மற்றும் மிகவும் மங்களகரமான பிறப்பில்,
அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார் .
கம்சனைக் கொன்ற பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குச் சென்றார், அங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, இந்த மூர்த்தத்தை நிறுவி வழிபட்டார். அவர் (வைகுண்டத்திற்கு) திரும்புவதற்கான நேரம் வந்தபோது , ​​பகவான் கிருஷ்ணர் இந்த உருவத்தை உத்தவாவிடம் ஒப்படைத்தார், (பின்னர் வெளிப்படுத்தியபோது,​​பகவான் இல்லாத போது *கலியுகத்தில்* மனிதகுலத்திற்கு
ஏற்படப்போகும் கதியைப் பற்றிய அவரது அச்சம் ) . கலியுகத்தின் தீமைகளிலிருந்து தம் பக்தர்களைக் காக்கவும், மனித குலத்தை ஆசீர்வதிக்கவும்
இந்த மூர்த்தத்தில் வெளிப்படுவேன் என்று பகவான் உத்தவரிடம் உறுதியளித்தார் .
அவர் புறப்பட்டவுடன், துவாரகை கடலில் மூழ்கிவிடும் என்று அவர் உத்தவனை மதிப்பிட்டார்; எனவே, அவர்
பிரஹஸ்பதி (கடவுள்களின் குரு) உடன் கலந்தாலோசித்து சமமான புனிதமான இடத்தில் மூர்த்தியை நிறுவ வேண்டும்.
அதன்படி, குருவானவர் வாயுவுடன் (காற்று-கடவுள்) துவாரகைக்கு புறப்பட்டார், அங்கு அவர்கள் கண்ட அந்த உருவம் அலைகளால் கடலில் வீசப்பட்டது. வாயு
படத்தை எடுத்துச் சென்றார், இருவரும் அதை நிறுவ ஒரு புனித இடத்தைத் தேடத் தொடங்கினர். அவர்கள் பின்னர் பரசுராம முனிவரால் இணைந்தனர், அவர்கள்
தாமரைகள் (ருத்ரதீர்த்தம்) ஏரிக்கு வந்தனர், அங்கு சிவபெருமானும் பார்வதியும் அவர்களைப் பெறக் காத்திருந்தனர். அந்த இடம் நாராயணனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பொறிக்கப்பட்டதாக சிவா அவர்களிடம் கூறினார்;
அதனால் அவரும் பார்வதி தேவியும் எதிர் கரைக்கு மாறுவார்கள். கடவுளின் தெய்வீக கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட கோவிலில் குருவும் வாயுவும் சிலையை நிறுவினர்
. குருவும் வாயுவும் இணைந்து கோயிலை நிறுவியதால், அந்த இடம் குருவாயூர்புரா என்று அழைக்கப்பட்டது, இது பின்னர் குருவாயூர் என்று சுருக்கப்பட்டது.
இந்தக் கதையால் தூண்டப்பட்ட ஜனமேஜயன், குருவாயூர் கோயிலுக்குச் சென்று, நான்கு மாதங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டார். ஒரு இரவு நேரத்தில்
உறங்கிக் கொண்டிருந்த அவர், பகவான் கிருஷ்ணரின் உடல் மீது குணப்படுத்தும் ஸ்பரிசத்தை உணர்ந்தார், மேலும் அவரது நோய் (தொழுநோய்) இனி இல்லை! . மன்னன் ஜனமேஜய
பகவான் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடி, தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பினான் .

நவீன வரலாறு
கிபி 1789 இல், முஸ்லீம் கொடுங்கோலன் திப்பு சுல்தான், இந்துக்களை முஸ்லீம்களாக மாற்றும் நோக்கத்துடன், குருவாயூர் அமைந்துள்ள கோழிக்கோடு இராச்சியத்தின் மீது படையெடுத்தார்.
அழிவைக் கண்டு, அந்த உருவம் பூமிக்கடியில் மறைக்கப்பட்டு, *உற்சவ மூர்த்தி* வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு கோவிலுக்கு தீ வைத்தான், ஆனால் அது
ஒரு வான குரலால் காப்பாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து சரியான நேரத்தில் மழை பெய்தது. இந்த தெய்வீக தலையீட்டால் மிகவும் பயந்து, திப்புவும் அவரது வலிமைமிக்க இராணுவமும் குருவாயூரில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், கோழிக்கோடு மற்றும் ஆங்கிலேயர்களின் கூட்டுப் படையால் திப்பு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நவம்பர் 30, 1970 அன்று குருவாயூர் கோவிலில் கட்டுக்கடங்காத தீ விபத்து ஏற்பட்டது. இது ஐந்து மணி நேரம் சுற்றிலும் சீற்றமாக இருந்தது, ஆனால் ஸ்ரீ கோவில் (சன்னதி
சன்னதி), கொடி ஊழியர்கள் மற்றும் அனைத்து துணை தெய்வங்களும் பாதிக்கப்படவில்லை. தீயால் சுற்றுப்புறம் முழுவதும் எரிந்தது. *ஸ்ரீ கோவில்* 3 கெஜ தூரத்தில் இருந்தது, ஆனால்,
*ஸ்ரீ கோவிலின்* மூலையில் தொங்கிக் கொண்டிருந்த காய்ந்த மலர் மாலைகளைக் கூட உக்கிரமான நெருப்பு தீண்டவில்லை! .

குருவாயூர் கோயில் கட்டிடக்கலை
குருவாயூர் கோயில் கேரளாவின் வாஸ்துவித்யா கோயிலின் சுருக்கம். இது இரண்டு *கோபுரங்களுடன்* கிழக்கை நோக்கி உள்ளது, ஒன்று கிழக்கில் (*கிழக்கேநாடா*) மற்றொன்று
மேற்கில் (*பதிஞ்சரெனடா*).
இந்த *கோபுரங்களுக்கு* இடைப்பட்ட பகுதி முழுவதும் ஓடுகளால் கூரை வேயப்பட்டு *ஆனப்பந்தல்* என்று அழைக்கப்படுகிறது. இதன் மையத்தில்
*நலம்பலம்* என்று அழைக்கப்படும் சதுர வடிவ தூண் மண்டபம் உள்ளது, அதன் வெளிப்புறச் சுவர் எண்ணெய் விளக்குகளின் காட்சியகத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. *நாலாம்பலத்தின்* தென்புறத்தில் சாஸ்தா அல்லது ஐயப்பன் சன்னதி உள்ளது
.
இந்த சன்னதியின் வடகிழக்கு பகுதியில் *கூத்தம்பலம்* உள்ளது, இங்கு பழங்காலத்தில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. *நாலாம்பலத்தின்* முன் மற்றும் கிழக்குப் பகுதியில்
*பெலிக்கல்* மற்றும் *தீபஸ்தம்பங்கள்* – தீபத் தூண்கள் அமைந்துள்ளன. கோவிலில் இதுபோன்ற பல விளக்குத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு கோபுரங்களிலும் இருக்கும் *தீபஸ்தம்பங்கள்*
சிறப்பு வாய்ந்தவை.
கிழக்குப் பக்கம் உள்ள *தீபஸ்தம்பம்* 24 அடி உயரமும், திரிகளைப் பிடிக்க பதின்மூன்று வட்ட வடிவ கொள்கலனையும் கொண்டது. மேற்கு கோபுரத்தில் உள்ள மற்ற இரண்டில் ஒன்று
மர வடிவில் உள்ளது. த்விஜஸ்தம்ப – இது 70 அடி உயரமுள்ள, முழுவதுமாக தங்கத்தால் மூடப்பட்ட ஒரு கொடிக் கம்பம்.
சதுர வடிவிலான *ஸ்ரீ கோவிலில்* இரண்டு படிக்கட்டுகள் மற்றும் உள்ளே மூன்று அறைகள் உள்ளன. உட்புற அறையானது *கர்பக்ரிஹா* (பகவான் கிருஷ்ணரின் மூர்த்தி
இங்கு வைக்கப்பட்டுள்ளது) என்று அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டு கதவுகளும் கூரையும் தங்கத்தால் மூடப்பட்டிருக்கும். *கர்பக்ரிஹத்தில்* உள்ள அனைத்து பொருட்களும் தங்கத்தில் உள்ளன.
வெளி அறைக்கு *முகமண்டபம்* என்று பெயர். ஸ்ரீ கோவிலின் சுவர் பழமையான (17 ஆம் நூற்றாண்டு) சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோவிலின் முன்புறம்
*நமஸ்கார மண்டபம்* சதுர வடிவில் பிரமிடு கூரையுடன் உள்ளது. இதனைச் சுற்றிலும் *நாலம்பலம்* அல்லது *சுத்தம்பலம்* எனப்படும் தூண் சதுர மண்டபம் உள்ளது.
*நாலாம்பலம்* சுவரில் எண்ணெய் விளக்குகளின் காட்சியகம் பொருத்தப்பட்டுள்ளது . ஸ்ரீ கோவிலின் வடகிழக்கு பகுதியில் *மணிகிணறு* என்ற கோயில் கிணறு உள்ளது. கோயிலின் வடக்குப் பகுதியில்
தேவியின் உபசன்னதியான *எடத்திருத்திக் காவு* அமைந்துள்ளது.
*ஊட்டுப்புரா*, *பிரசாதவுட்டு* தலமும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இங்கு, பக்தர்களுக்கு தினசரி மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோயில்
குளம் *ருத்ரதீர்த்தம்* கோயிலின் வடக்குப் பக்கமாக அமைந்துள்ளது.

பூஜைகள்
*கர்பக்ரஹத்தில்* (மத்திய சன்னதி) முதன்மையான தெய்வம் மகா விஷ்ணு, ஆதி
சங்கராச்சாரியார் வகுத்த குறிப்பிட்ட பூஜை முறைகளின்படி வணங்கப்பட்டு சேவை செய்யப்படுகிறார். இருப்பினும், பக்தர்கள், பகவானை உன்னிகிருஷ்ணா அல்லது பாலகிருஷ்ணா என்று அழைக்கின்றனர். *மூர்த்தம்* *பதலாஞ்சன சிலையில்* செதுக்கப்பட்டுள்ளது, இது
மிகவும் புனிதமானது.
• நிர்மால்ய தரிசனம் (காலை 3 முதல் 3.20 வரை) . இதுவே அன்றைய முதல் தரிசனம். முந்தின இரவின் மலர்களாலும் , மாலைகளாலும் பகவான் இன்றும் அலங்கரிக்கப்படுகிறார்
. இரவு பூஜை (வழிபாடு) முடிந்ததும், கதவுகள் மூடப்பட்டதும், தேவர்கள் (தேவர்கள்) வந்து மூர்த்தியை வணங்குகிறார்கள்.
தேவர்களால் பூஜிக்கப்பட்ட பகவானின் தரிசனம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எரியும் விளக்குகள், மணியோசைகள் மற்றும் சங்குகள்,
பக்தர்களின் “நாராயணா”, “குருவாயூரப்பா”, “கோவிந்தா” போன்ற தன்னெழுச்சியான உரத்த கோஷங்களுக்கு மத்தியில், உங்கள் மனம் பக்தியின் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும்.
• தைலாபிஷேகம், வகாச்சார்த் & சங்காபிஷேகம் (காலை 3.20 முதல் அதிகாலை 3.30 வரை) .
முந்தைய நாளின் அலங்காரங்களை நீக்கிய பின், இஞ்சி எண்ணெயில் மூர்த்தியை குளிப்பாட்டும் சடங்கு நடைபெறுகிறது . பிறகு `வகச்சார்த்’ அதாவது மூர்த்தியை `வாக’ பொடி தூவுவது. `வாக’ எனும் மரத்தின் கோர்க்கை
பொடியாக்கி பயன்படுத்தப்படுகிறது. இது நிகழ்த்தப்பட்ட பிறகு, `அபிஷேகம்’ (மூர்த்தத்தை நீராடுதல் சடங்கு), ஒரு `சங்கு’ (சங்கு) புனித நீர் கொண்டு.
• அலங்காரம் & மலர் நிவேத்யம் (காலை 3.30 முதல் காலை 4.15 வரை) . குளித்த பிறகு, மூர்த்தியை மெல்லிய துணியால் துடைத்து, பின்னர் மாலைகள், காது
ஆபரணங்கள், கஸ்தூரி திலகம் மற்றும் சிவப்பு இடுப்பில் அலங்கரிக்கப்படும். கையில் வெண்ணெய் மற்றும் புல்லாங்குழல் வாசிக்கும் பகவான் இங்கே உன்னிகிருஷ்ணனாக (குழந்தை கிருஷ்ணனாக) காட்சியளிக்கிறார்,
கோகுலத்தில் அவர் விளையாடிய நாட்களை நினைவூட்டுகிறது. `அலங்காரம்’ (அலங்காரம் அல்லது அலங்காரம்)க்குப் பிறகு, `மலர்’ (பொருத்தப்பட்ட அரிசி) `நைவேத்யம்’, வாழைப்பழம் மற்றும் வெல்லம் ஆகியவை பகவானுக்குப் படைக்கப்படுகின்றன
.
• உஷா நைவேத்யம் & உஷா பூஜை (காலை 4.15 முதல் காலை 4.30 வரை) .சமைத்த அரிசி மற்றும் `நைபாயசம்’ (வெல்லத்தில் சமைத்த அரிசி) பிரசாதம் `உஷா’ ஆகும்.
நைவேத்யம்’ (காலை பிரசாதம்). இந்த நேரத்தில் ‘உஷா பூஜை’ (காலை வழிபாடு) நடத்தப்படுகிறது.
• எதிர்ரெட்டு பூஜை (காலை 4.30 முதல் காலை 6.15 வரை) . இப்போது பகவானும் சூரியனும் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, `வெள்ளை நைவாத்யம்’
(வெள்ளை பிரசாதம் அதாவது சமைத்த அரிசி) சமர்ப்பித்து பூஜை செய்யப்படுகிறது; அதே நேரத்தில், கோவிலில் உள்ள உப தெய்வங்களுக்கு இணை அர்ச்சகர்கள் கலந்து கொள்கின்றனர். கோவில் சமையலறையில் ‘கணபதி ஹோமம்’ செய்யப்படுகிறது
.
• சிவேலி (காலை 6.15 முதல் காலை 7.00 வரை) . பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் ஸ்ரீகோவில் (சன்னதி) திறக்கப்படுகிறது. MOORTY பின்னர்
சீவேலிக்கு (ஊர்வலம்) செல்கிறது. உத்ஸவமூர்த்தி (ஊர்வல மூர்த்தி) யானையின் மீது ஏற்றப்பட்டு கோவிலை மூன்று முறை சுற்றி வருகிறது. பகவான் இந்தப் பயிற்சியைச்
செய்ய வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் அவருடைய வான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்பதை அவரே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
• பாலாபிஷேகம், நவாபிஷேகம், பந்திராதினைவேத்யம் & பூஜை (காலை 7 முதல் 9 மணி வரை). அடுத்து வருவது
`பாலாபிஷேகம்’ அல்லது `க்ஷீராபிஷேகம்’ (பால் ஸ்நானம்) என்ற தொடரில் முதலில் வரும் `அபிஷேகங்கள்’. பின்னர், ஒன்பது வெள்ளிப் பாத்திரங்களில் நீர் நிரப்பி,
பூஜைகள் செய்து, நவாபிஷேகம் செய்யப்படுகிறது . நிழல் 12 அடி உயரத்தில் இருக்கும் போது `பந்திராடி பூஜை’ செய்யப்படுகிறது.
• தர்ஷன் (காலை 9 மணி முதல் 11.30 மணி வரை). பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
• UCHA POOJA (மதியம் பூஜை – 11.30 AM to 12.30 PM) . நண்பகல் 12 மணியளவில் நடத்தப்படும் இது அன்றைய மிக முக்கியமான மற்றும் விரிவான பூஜையாகும். ` நைவேத்யம்
‘ (பிரசாதம்) சமைத்த அரிசி மற்றும் `பால்பயாசம்’ (பால் மற்றும் சர்க்கரையில் சமைக்கப்பட்ட அரிசி) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு பிராமணர் கோவில் சமையலறையில் அமர்ந்து
நன்றாக உணவளிக்கிறார். இந்த சடங்கில் இந்த வழக்கம் கட்டாயமாகும்.
• கோவில் மதியம் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். இக்காலத்தில் பகவான் ஓய்வெடுக்கிறார்.
• SIVELI (4.30 PM to 5 PM) .பகவானின் இரண்டாவது ஊர்வலம் இந்த நேரத்தில் நடைபெறுகிறது.
• தர்ஷன் (மாலை 5 மணி முதல் மாலை 6.15 மணி வரை). பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
• தீபாராதனை (மாலை 6.15 முதல் மாலை 6.45 வரை) . கோவிலில் உள்ள அனைத்து தீபங்களும் ஏற்றப்பட்டு, எண்ணெய் தீபம் மற்றும் கற்பூர தீபங்களால் பகவானை வழிபடுகின்றனர். சங்குகள்
ஊதப்படுகின்றன, மேளம் அடிக்கப்படுகின்றன, மணிகள் ஒலிக்கப்படுகின்றன மற்றும் குழாய்கள் வாசிக்கப்படுகின்றன. முழு மகிமையுடன் பகவானின் காட்சி வெகு தொலைவில் இருந்து தெரியும். விளக்குகளுக்கு மத்தியில் பகவான்
மிகவும் அற்புதமாகத் தெரிகிறார், நம்பிக்கை இல்லாதவனுக்குக் கூட இரண்டாவது எண்ணம் வரும்.
• தரிசனம் (மாலை 6.45 முதல் இரவு 7.30 வரை) . பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
• அத்தாழ பூஜை & அத்தாழ நைவேத்யம் (மாலை 7.30 முதல் 8.15 மணி வரை) . இரவு ஆராதனை `அத்தாழ பூஜை’, அப்போது செய்யப்படும் பிரசாதம்
`அத்தாழனைவேத்யம்’. இந்த நேரத்தில் `அப்பம்’ மற்றும் `ஆடா’ (இனிப்பு சாதம் தயாரித்தல்), வெற்றிலை மற்றும் பாக்கு ஆகியவை வழங்கப்படுகின்றன.
• அத்தாழ சீவேலி (இரவு 8.45 முதல் இரவு 9.00 வரை) . இரவு ஊர்வலம், பகலின் மூன்றாவது மற்றும் கடைசி ஊர்வலம் நடைபெறுகிறது.
• திரிபுகா & ஒளவாயனா (9.PM to 9.15 PM) . ஒன்பது நாற்றமுள்ள ஈறுகளை வெள்ளித் தட்டில் வைத்து மையச் சன்னதி மற்றும் கோவிலைப் புகைப்பது
`திரிபுகா’ எனப்படும் . ஓலை வாயனா என்பது ஒரு நாளின் வருமானம் மற்றும் செலவுகளை பகவானுக்கு முன்பாக வாசிப்பது வழக்கம்.
• ஸ்ரீ கோவில் இரவு 9.15 மணிக்கு மூடப்படும்.
திருவிழாக்கள்
உல்சவம் (வருடாந்திர விழா) :
இது *கும்ப* (பிப்-மார்ச்) மாதத்தில் நடத்தப்பட்டு 10 நாட்கள் நடைபெறும். சுமார் 70 அடி உயரமுள்ள கொடிமரத்தின் (துவஜஸ்தம்பம்) மேல் கோயில் கொடி ஏற்றப்படுவது
திருவிழாவைக் குறிக்கிறது. 1ம் தேதி யானை பந்தயம் நடக்கிறது. அடுத்த 6 நாட்களில் காலை, மதியம் மற்றும் இரவு யானைகள் ஊர்வலம் நடைபெறும்
. காலையில், ஸ்ரீபூத பலி (பகவானின் வான ஊழியர்களுக்கு பிரசாதம்) உள்ளது.
இந்த நாட்களில் மேல்பத்தூர் ஆடிட்டோரியத்தில் (கோயிலுக்கு வெளியே) நடனம், இசை, மத விவாதங்கள் போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன . 8வது நாளில், ‘உற்சவபலி’ (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) அல்லது
பகவானின் படைவீரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு ஆடம்பர விருந்து காத்திருக்கிறது. பள்ளிவேட்டை அல்லது பகவானின் வேட்டையாடும் பயணம் 9வது நாளில் நடைபெறுகிறது.
இந்த வேட்டை காமம் (ஆசை), க்ரோதா (கோபம்) மற்றும் நம் வாழ்வில் நம்மைப் பாதிக்கும் பிற தீமைகளின் அழிவின் அடையாளமாகும். அதன் பிறகு
, மந்திரங்கள் முழங்க, ஆராட்டுக்காக பகவானின் திடம்பு ருத்ரதீர்த்தம் (கோவில் குளம்) க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தங்கள் பாவங்களைப் போக்க பகவானின் நாமத்தை உச்சரித்து நீராடுகிறார்கள் . பின்னர் பகவதி சன்னதியில் உச்ச பூஜை (அதாவது, நண்பகல் வழிபாடு – இந்த நாளில் மட்டுமே இரவில் நடக்கும்) நடைபெறுகிறது. இறுதியாக,
பகவான் 11 முறை வலம் வந்து கருவறைக்குத் திரும்புகிறார். பின்னர் திருவிழாவின் முடிவைக் குறிக்கும் வகையில் கோயில் கொடி இறக்கப்பட்டது.
விஷு :
மலையாளப் புத்தாண்டு தினமான விஷு, *மேடம்* மாதம் 1ஆம் தேதி (ஏப்ரல் நடுப்பகுதியில்) வருகிறது.
இந்த நாளில் விடியற்காலையில் ஒருவர் முதலில் பார்க்கும் பொருள்களின் சுபநிகழ்ச்சியைப் பொறுத்தே அந்த ஆண்டுக்கான அதிர்ஷ்டம் அமையும் . அதன்படி, *கொன்ன* மலர்கள், பச்சை அரிசி, தங்கம், வெற்றிலை மற்றும் காய்கள், மஞ்சள் வெள்ளரி மற்றும் காசுகள் அடங்கிய *கனி* (சகுனம்)
முந்தைய இரவே *இஷ்ட-தேவா* முன் வைக்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்ததும் முதல் பார்வையில் அவர்களைப் பார்க்கிறான்
. குருவாயூரில் *கனி* தரிசனம் செய்வது மிகவும் புண்ணியமாகும், எனவே லட்சக்கணக்கான பக்தர்கள் இரவில் தங்கி, கண்களை மூடிக்கொண்டு,
*கனி* மற்றும் மகிமை வாய்ந்த பகவான் மீது கண்களை பதித்து, வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு தரிசனத்திற்காக கதவுகள் திறக்கப்படுகின்றன.
வைஷ்கா:
*மேடம்* (ஏப்ரல்-மே) அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த அமாவாசை வரையிலான சந்திர மாதம். இந்த மாதத்தில் துறவு அல்லது ‘விரதம்’ கடைபிடிப்பது
விஷ்ணுவுக்கு மிகவும் புனிதமானது.
அஷ்டமி ரோகிணி :
*சிங்கம்* மாதம் (ஜூலை-ஆகஸ்ட்), *ரோகிணி நக்ஷத்திரத்தின்* கீழ், சிரவண மாதத்தின் 8வது நாளான, பகவான் கிருஷ்ணர்
பிறந்த நாள் அதாவது ஜென்மாஷ்டமி. அனைத்து ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்களிலும் மிகவும் விசேஷமான நாளான, குருவாயூர் தேவஸ்வமே ஒரு நிறமாலை (மாலைகள் மற்றும் விளக்குகள் நிறைந்தது),
அந்த நாளில் பகவானுக்கு மிகவும் விருப்பமான உணவாக கருதப்படும் *அப்பம்* (அரிசி பச்சரிசி மற்றும் வெல்லம்) உடன் பக்தர்கள் திரள்வார்கள்.
குசேலரின் நாள் :
இது *தனு* (டிசம்பர்-ஜனவரி) முதல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. குசேலன் ஒரு வறுமையில் வாடிய பிராமணன், பால்ய நண்பன் மற்றும்
பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தன். ஒரு நாள், அவர் தனது மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரின் உதவியை நாடச் சென்றார். அவர்
தனது நண்பருக்கு வழங்குவதற்காக வறண்ட அரிசியை தன்னுடன் எடுத்துச் சென்றார் . துவாரகாவை அடைந்ததும், அவரை கிருஷ்ணர் அன்புடன் வரவேற்றது மட்டுமல்லாமல், வீட்டில் இருப்பதை உணர வைத்தார், ஆனால் அவருக்காக என்ன கொண்டு வந்தீர்கள் என்றும் கேட்கப்பட்டது.
பகவான் அவருக்கு பெரும் செழிப்பை அருளினார்!
மற்ற முக்கிய விழாக்கள்: மண்டலம், ஏகாதசி, செம்பை இசை விழா & நாராயணீயம் நாள்.
குருவாயூர் மகாத்மாக்கள்
குருவாயூரில் பகவான் கிருஷ்ணரின் தரிசனம் பெற்ற புகழ்பெற்ற மகாத்மாக்கள் சங்கராச்சாரியார், மேல்பத்தூர் நாராயண பட்டாத்திரி, பூந்தானம்
நம்பூதிரி, வில்வமங்கலம் சுவாமியார், குருரம்மா, இளவரசர் மனதேவன் மற்றும் கூடலூர் குஞ்சிக்காவு நம்பூதிரி.
1. சங்கராச்சாரியார்
ஒருமுறை சங்கராச்சாரியார் சிருங்கேரிக்கு வான்வழிப் பயணத்தில் இருந்தார். குருவாயூர் கோவிலுக்கு மேலே இருக்கும் போது, ​​அவர் *ஸ்ரீபூத பலி* (வான ஊழியர்களுக்கு உணவளிக்கும்) ஊர்வலத்தைப் பார்த்து சிரித்து
, பகவானைப் புறக்கணித்து கோயிலைக் கடக்க முயன்றார். திடீரென்று அவர் கீழே விழுந்தார், ஊர்வலம் வடமேற்கு மூலையில் நின்றது
. அவர் விரைவில் குணமடைந்தார் மற்றும் பகவான் கிருஷ்ணரை அவரது அனைத்து அரச குடும்பத்திலும் பார்த்தார். அவரது வீழ்ச்சிக்கான காரணத்தை உணர்ந்த சங்கராச்சாரியார், பகவான் முன் சாஷ்டாங்கமாக வணங்கி,
கோவிந்தா அஷ்டகம் எனப்படும் கோவிந்தனைப் புகழ்ந்து எட்டு ஸ்லோகங்களைச் சொல்லி அவரைப் புகழ்ந்தார்.
இந்த நிகழ்வின் நினைவாக வடமேற்கு முற்றத்தின் மேல் கூரையில் சிறிய திறப்பு உள்ளது .
பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி, சங்கராச்சாரியார் குருவாயூர் கோவிலில் 41 நாட்கள் *பஜனம்* செய்தார். இந்த காலகட்டத்தில், அவர்
*குருவாயூர் க்ஷேத்ரா-ஆச்சாரஸ்* (கோயில் மரபுகள்) என்ற குறிப்பிட்ட குறியீட்டை நிறுவினார். *மண்டல விளக்கு* (41 நாட்கள் விளக்கு ஏற்றுதல்) பாரம்பரியம் அவரால் தொடங்கப்பட்டது.
2. மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி .
திருநாவைக்கு அருகில் உள்ள மேல்பத்தூர் பிராமணர் வீட்டில் பிறந்தவர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையைத் தேடினார். எழுத்தச்சன், புகழ்பெற்றவர்
மலையாளக் கவிஞரும் சமஸ்கிருத அறிஞரும் அவரிடம் சொன்னார் – “மீனுடன் தொடங்குங்கள்)” . பட்டாத்திரி அதை சரியான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டார் , பாகவதத்தில் *தசகங்கள்* (பத்து ஸ்லோகங்களின் குழுக்கள்) தொடரில்
விவரிக்கப்பட்டுள்ளபடி, மீன் தொடங்கி பகவான் மகாவிஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை வழங்க முடிவு செய்தார் . குருவாயூர் கோவிலை அடைந்து, மூர்த்தத்தின் முன் தினமும் ஒரு *தசகத்தை* இயற்றத் தொடங்கினார். ஒவ்வொரு *தசகத்தின்* கடைசி *ஸ்லோகத்திலும்* உள்ள பல்லவி , பிணிகள் மற்றும் துன்பங்களை நீக்க பகவானிடம் பிரார்த்தனை ஆகும் . *கலி* நாளில் நூறு *தசகங்களில்* தன் படைப்பை இயற்றினார். இந்த வேலை *நாராயணீயம்* என்று அழைக்கப்படுகிறது, அதன் பிறகு அவர் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியை அடைந்தார். *நாராயணீயம்* என்பது குருவாயூர் பகவானைப் போற்றுவதாகும். *நாராயணீயம்* என்பது *மகா பாகவதத்தின்* சுருக்கம் மற்றும் அதன் பாராயணம் (வாசிப்பு) திட்டவட்டமான பலன்களை அளிக்கிறது; இது ஒரு பயனுள்ள நம்பிக்கை சிகிச்சை. இது ஒரு தூய கிருஷ்ண பக்தராக ஆக்குகிறது, இது முக்கியமாக நமது தற்போதைய வாழ்க்கையைப் பற்றியது – ஆரோக்கியம் (உடல்நலம் மற்றும் நோய்களிலிருந்து விடுதலை) மற்றும் சௌக்கியம் (மகிழ்ச்சி). குருவாயூர் கோவிலில், *நாராயணீயம்* மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அளவுள்ள எந்தப் படைப்பும் வேறு எந்தக் கோயிலின் குலதெய்வத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படவில்லை . பகவான் கிருஷ்ணரைப் படிப்பதன் மூலமோ அல்லது அதன் பாடலைக் கேட்பதன் மூலமோ காட்சிப்படுத்தவும் வழிபடவும் இது பக்தருக்கு வாய்ப்பளிக்கிறது. அது சந்ததியினரின் இதயத்தில் உள்ள குருவாயூரில் பிரகாசிக்கிறது . குருவாயூர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் *நாராயணீயம்* தினம் கொண்டாடப்படுகிறது. 3. பூந்தானம் நம்பூதிரி . பூந்தானமும் மேல்பத்தூரும் சமகாலத்தவர்கள். பூந்தானம் என்பது குடும்பப் பெயர். அவர் 20 வயதில் ஒரு வாரிசை மணந்தார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பூந்தானம் குருவாயூர்ப் பெருமானுக்குப் பரிகாரம் செய்யத் தொடங்கினார் ; 1586 இல் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் ஒரு கொண்டாட்டத்திற்கு அழைத்தார், தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர், ஆனால் விழாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குழந்தை இறந்தது. துக்கமடைந்த பூந்தனம் குருவாயூரில் தஞ்சம் அடைந்து *குமாரஹரணம்* என்ற புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மெல்ல மெல்ல பூந்தனம் ஞானமடைந்து, “சின்ன கிருஷ்ணன் நம் இதயத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, ​​நமக்குச் சொந்தக்காரன் ஏன் வேண்டும் ?” . பல சந்தர்ப்பங்களில் அவர் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார். *ஞானப்பனா* மற்றும் *அஞ்சனா ஸ்ரீதரா…* பாடலை பூந்தானம் பகவானின் உதவியால் எழுதினார். பூந்தானம் தனது 90 ஆண்டுகால வாழ்நாள் முழுவதையும் பாகவதம் படிப்பதிலும், இறைவனின் பெருமைகளை எளிய மலையாளத்தில் பாடுவதிலும் கழித்தார். பகவானைப் போற்றிப் பல பக்திப் பாடல்களை இயற்றினார் . 4. வில்லுவமங்கலம் சுவாமியார் . வில்வமங்கலம் என்பது குடும்பப் பெயர். அவர் ஒரு அலைந்து திரிந்த புனிதர். மூர்த்தியிலிருந்து வேறுபடுத்தி பகவானை நேரில் தரிசிக்கும் அற்புத வரம் அவருக்குக் கிடைத்தது . குருவாயூர் சன்னதியில் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை கண்டார்.

5. குறூரம்மா .
குழந்தை இல்லாத விதவையாக இருந்த குரூரம்மா, குருவாயூரில் பக்தராகக் குடியேறினார். வில்வமங்கலத்தின் வழிகாட்டுதலால், குருவாயூர் உன்னிகிருஷ்ணனைத்
தன் மகனாகத் தத்தெடுத்தாள்; மற்றும் பகவான் ஒரு சிறிய பிராமணக் குழந்தையாக அவள் வீட்டிற்கு வந்தார். குருஊரம்மா அந்தக் குழந்தையைத் தன் மகனாகப் பாவித்து, அவனை நேசித்தாள், அவனுடன் விளையாடினாள்,
அவன் குறும்பு செய்யும் போது அவனை ஏளனம் செய்தாள், அவனுடைய குழந்தைத்தனமான வெறித்தனங்களைப் பார்த்து அழுதாள். *கனி காணும் நேரம்* என்ற பக்தி பாடல் இவரால் இயற்றப்பட்டது.
6. மனவேதன் .
கோழிக்கோடு இளவரசர் மனவேதன் 1595 இல் பிறந்தார் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் வில்வமங்கலத்தின் சீடரானார். பகவானின் பக்தியாலும்
, வில்வமங்கலத்தின் வழிகாட்டுதலாலும், அரண்மனையிலிருந்து குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஏலாழி மரத்தடியில் நின்றிருந்த பகவானை உன்னிகிருஷ்ணராகக் கண்டார்
. தற்போதுள்ள கூத்தம்பலம் இத்தலத்தில் அமைந்துள்ளது. இளவரசன் கிருஷ்ணநாட்டத்திற்கு எட்டு நாடகங்களைத் தொடராக எழுதினார்.
குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக கோவிலில் கிருஷ்ணநாட்டம் தொடர்ந்து அரங்கேறத் தொடங்கியது . இவ்வாறு
குருவாயூரின் புகழை கேரளா முழுவதும் பரப்ப கிருஷ்ணநாட்டம் என்ற நடன நாடகம் மற்றொரு ஊடகமாக மாறியது .
7. கூடலூர் குஞ்சிக்காவு நம்பூதிரி .
குஞ்சிக்காவு சிறுவயதில் ராமன் என்று அழைக்கப்பட்டார். அவர் தனது தாயாரின் தினசரி பாராயணம் (பாராயணம்) பாகவதம் மற்றும் ராமாயணம் மூலம் புராணங்களைக் கற்றுக்கொண்டார்
மற்றும் சமஸ்கிருதத்தை சொந்தமாகக் கற்றுக்கொண்டார். அவர் முன்பு தனது *புராண-பாராயணத்தை* தனது வீட்டில் தொடங்கினார் மற்றும் ஒரு ஆன்மீக-பக்தராக மெதுவாக பிரபலமானார். இந்த நிஜ உலகை அடிக்கடி மறந்து
, தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்களையும் பிருந்தாவனம் கோபியாகவே பார்த்தான். விலங்குகள் உட்பட அனைவரின் முன்பும் அவர் சுற்றி வந்து வணங்கத் தொடங்கினார்.
*ஸ்ரீ கோவிலில்* இருந்து தான் விரும்பியதை எடுத்துச் செல்வார். குருவாயூர் கோவிலில் அவர் *புராணபாராயணத்துக்கு* அமர்ந்திருந்த இடம் இன்றும்
*குஞ்சிக்காவு மூலை* என்று அழைக்கப்படுகிறது.
8. மல்லியூர் சங்கரன் நம்பூதிரி
*பாகவத-ஹம்சம்* பிரம்மஸ்ரீ மல்லியூர் சங்கரன் நம்பூதிரி கிருஷ்ண பக்தியின் வாழும் புராணக்கதை. இவர்
மல்லியூரில் உள்ள வேத பிராமண குடும்பத்தில் பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் ஆர்ய அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூத்த மகனாக 02 பிப்ரவரி 1921 அன்று பிறந்தார் .
அவர் பிறப்பிலேயே நோய்வாய்ப்பட்டிருந்தார். கடுமையான நோய்களும் கடுமையான வறுமையும் அவரது குழந்தைப் பருவத்தை பரிதாபமாக்கியது. இத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும், அவர் ஒரு விசுவாசமான கிருஷ்ணபக்தராக வளர்ந்தார்.ஏழை
பெற்றோர்கள் எப்படி அவருக்கு வேத கல்வியை வழங்க முடிந்தது. பாரம்பரிய *பிராமண-உபநயனம்* (தீட்சை)
(8) வயதில் செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் (14) வயதுக்கு முன் “சமவர்தனம்” செய்யப்பட்டது.
பிரம்மஸ்ரீ மல்லியூர் கோவில்-பூஜாரியாக பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமத் பாகவதத்தில் பண்டிதராக இருந்த அவர், பின்னர் *பாகவத் கதை-கதானம்* (
பாகவதம்-கதைகளின் சடங்கு விவரிப்பு) க்கு சொந்த வாழ்க்கையை அர்ப்பணித்தார். பகவானே சங்கரன் நம்பூதிரிக்கு பாகவதப் புத்தகத்தை வழங்கினார்.
அவரது “பாகவதம்-அமிர்தம்” விரைவில் கிருஷ்ண பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றது. பின்னர், மல்லியூர் வேதக் கோவில்களில் “பகவத-சப்தஹம்” இயக்கத்தைத் தொடங்கினார்
, இது நடைமுறையில் கேரளாவை “பகவதிமயமாக்கியது”.
பாகவதம் வேதங்களின் சாரம்; மேலும் அது “அத்யாத்மதீபா” என்று அழைக்கப்படுகிறது, சுயத்தின் ஒளி. இது முழு மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கும், மேலும்
மூன்று வகையான துன்பங்களை நீக்குகிறது, அதாவது, “ஆதிதைவிகா” (கர்மா அல்லது விதியால் ஏற்படும் பேரழிவுகள்), “அதிபூதிகா”, (மற்ற உயிரினங்களால் ஏற்படும் தடைகள்) மற்றும் “ஆத்மா”
(வரும் தொல்லைகள் ) ஒருவரின் சொந்த இயல்பிலிருந்து) . ஒருவர் பாகவதத்தைப் படிக்கவோ கேட்கவோ விரும்பும்போது, ​​பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய இதயத்தில் தோன்றுகிறார் என்பது உண்மை.
சுக முனிவர் ஏழு நாட்களில் பரீக்ஷித் மன்னனுக்கு பாகவதத்தை விவரித்தார். முதல் நாள், “வராஹவதாரம்” வரை, இரண்டாம் நாள் “ஜடாபாரதம்” வரை,
மூன்றாவது “அமிர்தமாதானம்” வரை, நான்காவது “கிருஷ்ணாவதாரம்” வரை, ஐந்தாம் தேதி “ருக்மணிகல்யாணம்” வரை, ஆறாம் நாள். “உத்தவசம்வாதா” வரை இருந்தது
மற்றும் கடைசி நாள் பாகவதம் முடிந்தது. ஏழு நாட்களுக்கு ஒரே வரிசையில் பாகவதத்தை வாசிப்பது
பாகவதசப்தாஹம் எனப்படும் . பிரம்மஸ்ரீ மல்லியூர் மற்றும் சீடர்கள் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு
கிருஷ்ண பக்தியின் அமிர்தத்தை ஊட்டி ஆயிரக்கணக்கான *பகவதசப்தாஹம்களை* வெற்றிகரமாக முடித்துள்ளனர் .
பிரம்மஸ்ரீ மல்லியூருக்கு வழங்கப்பட்ட பல பட்டங்களில் *பாகவத-ஹம்சம்* (குருவாயூர் பாகவத விஜானன சமிதியால்)
மற்றும் *பகவதசேவா-ரத்னம்* (குருவாயூர் கோவிலின் ஜனமாஷ்டமி விருது .காஞ்சி மடத்தின் தலைவர் தனிப்பட்ட முறையில் இதை வழங்க வந்தார்) ஆகியவை அடங்கும்.
மிகவும் பழமையான கற்களால் செதுக்கப்பட்ட கோவிலில் மல்லியூர் குலதெய்வம் *பீஜகணபதி*. (50) ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மஸ்ரீ மல்லியூர்
கோயிலின் மூலஸ்தான கணபதிக்கு முன்பாக சாளக்கிராமம் வைத்து பாகவதம் படித்து வருகிறார். ஒருவரின் *இஷ்ட-தேவதா*வை மற்றொரு
தெய்வத்தின் முன் வைத்து வழிபடுவது மிகவும் அரிதான வழக்கம் . இருப்பினும், மல்லியூர் தனது “குடும்ப தெய்வமான கணபதி” மற்றும் அவரது சொந்த *இஷ்ட-தேவதா, ஸ்ரீ கிருஷ்ணர்* ஆகியவற்றிற்கான தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இதைச் செய்தார்.
மேற்கண்ட ‘ஆத்மிக்-சாதனா’வின் விளைவு ஒரு அதிசயம். வேத பிராமணர்களும் வேத-ஜோதிஷிகளும் இந்த கணபதி-தெய்வத்தில்
*கிருஷ்ணா-சைதன்யம்* என்ற மிக அரிய மேலோட்டத்தைக் கண்டறிந்துள்ளனர் . எனவே இந்த தெய்வம் ஒரு தனித்துவமான *வைஷ்ணவ-கணபதி* .
கேரளாவில் உயர்ந்த வைஷ்ணவ-ஆச்சார்யராக அவரது உயர்ந்த அந்தஸ்து இருந்தபோதிலும், பிரம்மஸ்ரீ மல்லியூர் மல்லியூர் பணிவு மற்றும் இரக்கத்தின் ஒரு படம். எப்போதும் சிரிக்கும்
ஆச்சார்யா, தம்மை தரிசிக்கும் அனைவருக்கும் உணவளிக்கிறார், அவர் பொருள்முதல்வாதத்திலிருந்து முற்றிலும் விடுபடுகிறார். உண்மையான வைஷ்ணவ பாரம்பரியத்தில், அவர் தனது இரு மகன்களிலும் (பரமேஸ்வரன்
நம்பூதிரி மற்றும் திவாகரன் நம்பூதிரி) “பகவத-தர்மம்” ; மேலும் அவர்கள் இருவரும் அவருக்கு *பகவதசப்தஹம்ஸ்* ல் உதவி செய்கிறார்கள்.

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ காட்டுமன்னார் கோயில் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாள்–

June 16, 2024

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை யறிவாரார்
அருளிச் செயலை அறிவாரார் அருள் பெற்ற
நாதமுனி முதலாம் நம் தேசிகரை யல்லால்
பேதை மனமே உண்டோ பேசு   –உபதேச ரத்ன மாலை

ஜ்யேஷ்டா மாஸே த்வநூராதே ஜாதம் நாத முநிம் பஜே|

ய: ஸ்ரீஸடாரே: ஸ்ருதவாந் ப்ரபந்த மகிலம் குரோ:

ஆனி அனுஷத்தில் அவதரித்தவராய், ஆசார்யரான நம்மாழ்வாரிடமிருந்து எல்லா திவ்ய ப்ரபந்தங்களையும் கேட்டவரான நாதாமுனிகளிடம் பக்தி செய்கிறேன்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை: நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம்

————

இக்கோயில் காட்டுமன்னார்குடி என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ளது. அதன் பழங்காலப் பெயர்கள் சதுர்வேதிமங்கலம் மற்றும் வீரநாராயணபுரம். சமீப காலமாக வீராணம் ஏரி என்ற பெயரைப் பெற்ற வீரநாராயணபுரம் ஏரியின் கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது. மஹாலக்ஷ்மியின் கரம் பிடிக்க நாராயணர் ‘மன்னனாக’ இங்கு வந்து, பின்னர் நாதமுனிகளிடம் திவ்யப் பிரபந்தத்தையும் வைணவ சம்பிரதாயத்தையும் உலகுக்குப் பகிருமாறு கேட்டுக் கொண்டார், அவர் ‘காட்டும் – மன்னன் – ஆனார்’ (இறைவன்). அரசனாக வந்து திசை காட்டினான்) அதனால் ஊர் பின்னாளில் காட்டு மன்னார் ஆனது. ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது துணைவி ஸ்ரீ மரகதவல்லி தாயார் தனி சன்னதியில் காணப்படுகிறார். ஜிரும்பன ராஜா மகரிஷியின் வேண்டுதலின்படி மஹாலக்ஷ்மி தேவி பிறந்தாள். அவள் திருமண வயதை அடைந்ததும், ஒரு சுயம்வரம் நடத்தப்பட்டு, பகவான் நாராயணனே, தன் கருட வாகனத்தில் வந்து, அவளைத் தூக்கிக் கொண்டு, தன்னைத் தாக்கிய மற்ற மன்னர்களை முறியடித்தார். ஸ்ரீமன் நாராயணன் இங்கு வீரம் (வீரம்) காட்டியதால், அவர் வீர நாராயண பெருமாள் என்று அழைக்கப்பட்டார். 

சீனிவாசன் பட்டர் 99522-76110 /
ஸ்ரீனிவாச சுவாமி (பரம்பரை தீர்த்தகர்) 04144-262257 மற்றும் 96299-79779 /டி.ராகவாச்சாரி – 98411 40126-சென்னையிலிருந்து காட்டுமன்னார்கோயிலுக்கு 241 கிமீ தூரம் உள்ளது-

இறைவன் : வீரநாராயண பெருமாள்

தாயார் : மரகதவல்லி தாயார்

தல விருச்சம் : அடுக்கு நந்தியாவட்டை

தல தீர்த்தம் : தேவ புஷ்கர்ணி

நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம். மற்றும் நாத முனிகள் மற்றும் ஆளவந்தான் அவதார தலம் .

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் , கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளம் உள்ளது . இந்த கோயில் பராந்தக சோழனால் கட்டப்பட்டது . 10 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயில் . 13 ஆம் நூற்றாண்டில் சதய வர்மன் சுந்தர பாண்டியனால் புதுப்பிக்கப்பட்டது .

இவ்வூரில் அமைந்துள்ள வீராணம் ஏரி மிகவும் புகழ்பெற்றது . கடல் போல் காட்சியளிக்கும் இந்த வீராணம் ஏரியை கட்டியது முதலாம் பராந்தக சோழன் ஆவார் . அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தில் இந்த வீராணம் ஏரி பற்றி சிறப்பாக சொல்லியிருப்பார்கள் .

ஸ்ரீ நாத முனிகள் அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு கிடைக்க உதவிய தலம் . அதற்கு பண் அமைத்து எல்லா இடங்களிலும் பரப்பியது அவர்தான் . இவருடைய பேரனான ஆளவந்தான் பிறந்த தலமும் இதுதான் . மதங்க முனிவரின் தவத்தை ஏற்று பகவான் வீரநாராயனர் என்ற திவ்ய நாமதோடு இங்கு காட்சி தருகிறார் .

கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே செல்லும் போது கொடிமரத்தை காண்கிறோம் . அதன் பிறகு பலி பீடம் பின்பு பெரிய திருவடியான கருடாழ்வார் இருக்கிறார் .அவரை கடந்து உள்ளே சென்றால் இக்கோயில் உருவாக காரணமான மதங்க முனிவர் தனி சன்னதியில் உள்ளார் . நம்மாழ்வாரை வணங்கியவாறு மதுரகவியாழ்வார் உள்ள சந்நதியை காண்கிறோம் . பின்பு நாத முனிகள் சன்னதி , நரசிம்மர் சன்னதி ,ஸ்ரீராமர் சன்னதி ,ஆண்டாள் நாச்சியார் சன்னதி , ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவற்றை நாம் தரிசிக்கலாம் .

பகவான் வீரநாராயனர் பெருமாள் மூலஸ்தானத்தில் நின்றபடி அருள் தருகிறார் . ஸ்ரீதேவி , பூதேவி நாச்சியாருடன் காட்சி தருகிறார் . இவ் காட்டுமன்னார்கோயில் கல்வெட்டுகளில் சதுர்வேதிமங்கலம் என்று உள்ளது . திருமண தடை , குழந்தையின்மை ஆகியவற்றிற்கு பரிகார தலம் .

வீராணம் குளம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும், மேலும் இது பழமையானது. 1950-ம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியேன் செல்வன் என்ற நூலில் இந்த குளம் பற்றி சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குளத்தின் வயது குறித்த தகவல்களை இந்நூல் தருகிறது. பராந்தகே சோழனின் மகன் இளவரசர் ராஜாதித்தரின் 1000 ஆண்டுகளுக்கும் மேலான காலம். இந்த குளம் முதலில் வீரநாராயணன் குளம் என்று அழைக்கப்பட்டது. 

முதலாம் பராந்தக சோழன் 10ஆம் நூற்றாண்டில் அதாவது கிபி 907 முதல் 935 வரை சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டபோது, ​​சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாசன வசதிகளை மேம்படுத்த விரும்பினார். வீர நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தை உருவாக்கினார்] இந்த கிராமம் நான்கு வேதங்களை நன்கு அறிந்த அறிஞர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. வீராணம் குளத்தின் வலது ஓரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் இப்போது காட்டுமன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் மிகப்பெரிய குளத்தை உருவாக்கி அதற்கு ‘வீர நாராயணன் ஏரி’ என்று பெயரிட்டார் ‘வீர நாராயணன்’ என்பது மன்னன் முதலாம் பராந்தக சோழனின் வீரத்திற்காக வழங்கப்பட்ட புனைப்பெயர். இதையடுத்து தற்போது இந்த குளம் வீராணம் குளம் என அழைக்கப்படுகிறது. 

சோழ இராச்சியத்தின் பிற்காலத்தில், கி.பி 1012 முதல் கி.பி 1044 வரை ஆட்சி செய்த மன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை தனது ராஜ்யத்தை பரப்பினார். கங்கை நதி வரையிலான நிலங்களைக் கைப்பற்றினார். அவரது வெற்றியின் நினைவாக கி.பி 1024 இல் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற கிராமத்தை உருவாக்கினார். அதுமட்டுமின்றி புதிய கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதற்காக புதிய குளத்தை உருவாக்கி அதற்கு ‘சோழ’ கங்கம்’ என்று பெயரிட்டார். அவர் ‘சோழ கங்கம்’ மற்றும் வீரநாராயணன் எரி ஆகியவற்றுக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தினார். ஜெயம்கொண்டம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள சோழ கங்கம் குளம் தற்போது பொன்னேரி குளம் என அழைக்கப்படுகிறது. 

விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தகச் சோழன் “மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். ‘சோழசிகாமணி’ ‘சூரசிகாமணி’முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.

பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே தனது முதற்புதல்வனாகிய இளவரசன் ராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் ராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகரமான ஒரு பெரும் பணியை அவர்களைக்கொண்டு செய்விக்க எண்ணினான்.’வடக்காவேரி’ என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணி தன் வசமிருந்த வீரர்களைக்கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் ‘வீரநாராயணன் ஏரி‘என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயணபுரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். ‘விஷ்ணுக்கிருஹம்’என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று.ஸ்ரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே,ஏரிகளைக் காத்தருள்வதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீமந் நாராயணமூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளை கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான் என புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் ஸ்ரீ வீர நாராயணப் பெருமாள் கோயில் உருவானது குறித்து அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வீர நாராயண புரம் என்ற சரித்திர பெயர் நாளடைவில் காட்டு மன்னார் கோவில் என மாறியது.

அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய பெருமாள் அருள்பாலிக்கும் இக்கோயில் பாஞ்சராத்ர ஆகம தென்கலை சம்பிரதாயத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் வீரநாராயணப் பெருமாள், தாயார் பெயர் மரகதவல்லி. உற்சவருக்கு ராஜகோபாலன் என்றும் தாயாருக்கு மகாலட்சுமி என்றும் திருநாமம் உள்ளது. இக்கோயிலின் எதிரே உள்ள தீர்த்தத்தின் பெயர் வேத புஷ்கரணி என்பதாகும். தீர்த்த குளம் கோயிலின் எதிரே எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தலவிருட்சம் அடுக்கு நந்தியாவட்டை பூவாகும். இக்கோயிலில் நரசிம்மரையும் வராகரையும் நாம் தரிசிக்கலாம்.

வீரநாராயண பெருமாள் கோவிலில் மதங்க மாமுனிவருக்கு பெருமாள் சேவை சாதித்து அருளிய இடமாதலால் மதங்காசரமம் என்றும் பெயர் உள்ளது. திருமணத்தடை, குழந்தையின்மை ஆகியவற்றுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது இக்கோயில். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீமத் நாதமுனிகள் ,அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட  ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதாரம் செய்த  தலம் இது. -பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார்.

ஸ்ரீமந் நாதமுனிகள் சோழநாட்டில் தற்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில்கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரியான “கஜாநநர்” என்னும் ஆனைமுகமுடையவரின் அம்சமானவர்.

காவேரியாச்ச உத்தரேயீரே சரசபசிமெய்ததே
வீரநாராயணோபதி விமானே புண்ய நாமகே”

ஜிரும்பான ராஜ மகரிஷிக்கு குழந்தை இல்லை. இத்தலத்தில் அவர் மேற்கொண்ட தவத்தால் மகிழ்ந்த மகாலட்சுமி தேவியே இங்கு அவரது குழந்தையாகப் பிறந்தார். அவள் ஒரு அழகான இளம் பெண்ணாக வளர்ந்தவுடன், அவளுடைய பொருத்தத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாராயண பகவான் கருட வாகனத்தில் மன்னன் (மன்னன்) வேடத்தில் சுயம்வரத்தில் பங்கேற்பதற்காக இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அவளை வென்ற பிறகு, தன்னைத் தாக்கிய மற்ற மன்னர்களின் கோபத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். பகவான் நாராயணன், தனது விஸ்வரூபத்தைக் காட்டி, அனைத்து மன்னர்களையும் வென்றார். இங்கு தனது வீரத்தை வெளிப்படுத்தியதால், இறைவன் வீர நாராயணன் என்று அழைக்கப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் பிரம்மா ஏற்பாடு செய்த அஸ்வமேத யாகத்தில் வேத மந்திரத்தை உச்சரிக்கும் போது மாதங்க ரிஷி தவறு செய்தார் என்று மற்றொரு கதை கூறுகிறது. பிரம்மாவின் சாபத்திலிருந்து விடுபட, அவர் ஸ்ரீ முஷ்ணத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், அங்கு இறைவன் அவர் முன் தோன்றி, வேத புஷ்கரணியில் தவம் செய்ய ஸ்ரீமுஷ்ணத்தின் தென்கிழக்கில் உள்ள மன்யு க்ஷேத்திரத்திற்குத் திருப்பி அனுப்பினார்.

பல வருடங்கள் இங்கு தவம் செய்த பிறகு, நாராயண பகவான் தனது சதுர்பூஜை வடிவில் ரிஷியின் முன் தோன்றி அவருக்கு தரிசனம் அளித்து, மாதங்க ரிஷியின் விருப்பப்படி இங்கு தங்க ஒப்புக்கொண்டார். 

இந்தப் பாடல்களைக் கண்டுபிடிக்க முயன்ற நாதமுனி, கட்டு மன்னார் கோயிலில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றார், அங்கு ஆராவமுதன் இறைவன் அவர் முன் தோன்றி, திரு குருகூர் செல்லுமாறு கூறினார். குருகூரில் பதில் கிடைக்காததால், திரு கோளூர் சென்று, கண்ணின் சிறுதம்பினாளின் பாடல்களுடன் மதுரகவி ஆழ்வார் தீட்சை பெற்றார். அவர் மீண்டும் திருக்குருகூர் வந்து புளியமரத்தடியில் அமர்ந்து இந்த பாசுரங்களை 12000 முறை பாராயணம் செய்தார், அதன் முடிவில் நம்மாழ்வார் அவர் முன் தோன்றி 4000 பாடல்கள் – நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பகிர்ந்து கொண்டார்.

வீர நாராயணப் பெருமாள் நாதமுனியை மீண்டும் காட்டு மன்னார் கோயிலுக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது, அங்கு வைணவ சாவந்தர் கோஷமிட்டு நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பகிர்ந்து கொண்டார். இவ்வாறாக, ஆழ்வார்களின் 4000 பாசுரங்களை மீண்டும் உலகிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் காட்டு மன்னார் கோயில் நாதமுனி. இங்கிருந்து வைணவ சம்பிரதாயத்தையும் தொடங்கினார்.

பெயர் – ‘காட்டும் மன்னன்-ஆனார்’ கோயில்
மகாலட்சுமியின் கையைப் பிடிக்க நாராயணர் இங்கு ‘மன்னன்’ ஆக வந்ததால் (மேலே உள்ள கதையில் காணப்படுவது) பின்னர் நாதமுனியிடம் திவ்ய பிரபந்தம் மற்றும் வைணவ சம்பிரதாயத்தை உலகிற்கு பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார். பெரியது, அவர் ‘கட்டும்’ ‘மன்னன்- ஆனார்’ (அரசராக வந்து பின்னர் நாதமுனி மூலம் முழு பிரபந்தத்தையும் வழங்கிய இறைவன்) என்று குறிப்பிடப்பட்டார். காலப்போக்கில் கட்டு மன்னன் – ஆனார் காட்டு மன்னார் ஆனார். அரையர் சேவையின் உருவாக்கம் அவரது மருமகன்களான கீழையகத்தாழ்வார் மற்றும் மேலையகத்தாழ்வார் (அரையர்கள் இவ்விருவரின் வழித்தோன்றல்கள்) ஆகியோருடன் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையும் (ராகம் மற்றும் தாளமும் உருவாக்குதல்) நடன வடிவத்தை அளித்து உலகம் அனுபவிக்கும் வடிவில் வழங்கினார் நாதமுனி. மற்றும் அனுபவிக்க. அரையர் சேவை, அபிநயம் மூலம் ‘பாசுரங்களின்’ காட்சிப் பாடல் மற்றும் நடனத்தை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். அவர் ஸ்ரீரங்கம் சென்று திருவாய் மொழி பாசுரங்களை அரையர் சேவையை தனது இரு மருமகன்களுடன் செய்து, திருமங்கை ஆழ்வார் காலத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்ட ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தை மீண்டும் தொடங்கினார். நாதமுனியின் சீடர்களில் உய்யகொண்டான், திரு கண்ணமங்கையாண்டன் மற்றும் தெய்வநாயகந்தன் ஆகியோர் அடங்குவர்

நாதமுனியின் பேரன் விருப்பப்படி ‘யமுனை துரைவன்’ (ஆளவந்தான்) எனப் பெயரிட்டான். காட்டு மன்னார் கோயிலில் பிறந்த ஆளவந்தான் அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று வைணவச் செய்தியைப் பரப்புவான். அவர் இறந்த பிறகு ராமானுஜரை ‘ஆச்சார்யாராக’ பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆளவந்தனின் சீடர்களில் பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திரு கச்சி நம்பி மற்றும் ஸ்ரீரங்கம் அரையர் ஆகியோர் அடங்குவர்.

காட்டு மன்னார் கோயிலின் அமைப்பு
கூரத்தாழ்வாரின் திருமொழியின்படி இக்கோயில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது: “லட்சுமி நாத சம ஆரம்பன் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பரியந்தம் வந்தே குரு பரம்பரை” நடுவில் வீர நாராயணன், நாத முனி சந்நிதி (இடதுபுறம், சன்னிதிக்கு தெற்கு நோக்கி) (வடக்கு முகமாக) அவருக்கு வலப்புறம் (நாதமுனி சந்நிதிக்கு நேர் எதிரே) மரகதவல்லி தாயார் சந்நிதியுடன் வலதுபுறம் நாதமுனி மற்றும் ஆளவந்தான் சந்நிதிக்கு நடுவே நாதமுனி சந்நிதியில், நாதமுனி சந்நிதியில், நாதமுனி சந்நிதியில், அவருடைய சீடர்கள் ஆச்சாரியாரின் பாதத்தில் அவருக்குச் சேவை செய்யத் தயாராக இருப்பதைக் காண்கிறார். வீர நாராயண யேரி ( இப்போது வீராணம் ஏரி) கோயிலுக்கு வடமேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் வீர நாராயண ஏரி உள்ளது (இப்போது வீராணம் யேரி என அழைக்கப்படுகிறது), இது கி.பி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. காட்டு மன்னார் கோயில் தொடர்பான கல்வெட்டுகள் காட்டு மன்னார் கோயில் மற்றும் அதன் வரலாறு தொடர்பான பல கல்வெட்டுகள் இந்தக் கோயிலின் உள்ளேயும், இப்பகுதியில் உள்ள மற்ற கோயில்களிலும் வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்குப் பின்னோக்கிச் செல்லும். சோழர் காலத்துடன் தொடர்புடைய கல்வெட்டுகள் இந்த இடத்தை வீர நாராயணன் விண்ணகரம் என்றும், சுந்தரபாண்டியன் காலத்தில் இது மன்னனார் என்றும் அழைக்கப்பட்டது. விஷ்ணுவின் சிறந்த பக்தரான கிருஷ்ணதேவராயர், இறைவனை அழகிய மன்னனார் என்று குறிப்பிடுகிறார். காட்டு மன்னார் கோவிலில், கோவில் சுவர்களில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்துடன் தொடர்புடைய கல்வெட்டுகளைக் காணலாம். அவரது ஆட்சியின் போது, ​​இந்த இடம் வீர நாராயண புரம் என்று குறிப்பிடப்பட்டது. 1250 மற்றும் 1274 க்கு இடையில் ஆட்சி செய்த சடையவர்ம சுந்தரபாண்டியன் காட்டு மன்னார் கோயிலின் விரிவான புதுப்பிப்பை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. சோழர்கள், ராயர் மற்றும் நாயக்கர்களும் இந்த கோவிலுக்கு பங்களித்துள்ளனர். இத்தலம் வீர நாராயணன் சதுர்வேத மங்கலம் என்றும் துவரபதி மன்னன் திருக்கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

59.நெடுந்தூரம் போனேனோ நாத முனியைப் போலே!

நாதமுனிகள் காட்டுமன்னார் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரமான உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’  என்ற பாசுரத்தைத் தாளத்துடன் இசைத்த போது அவருடைய சிஷ்யர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள். 

உய்யக்கொண்டார் நாதமுனிகளை நோக்கி “ஆசாரியனே! ஆழ்வார் பாசுரங்களைக் கற்றுணர்ந்தால், எது எது பெருமாளை மறக்கடிக்குமோ அது அது பெருமாளை நினைக்க வைக்கும் பிரேம நிஷ்டை நமக்கு வந்துவிடுகிறது!” என்றார்

”முற்றிலும் சரி உய்யக்கொண்டாரே! நம்மாழ்வாருக்கு எல்லாம் கண்ணன் தான். அடியேனுக்கு அந்த உணர்வு என்று வரப்போகிறதோ!” என்று நாதமுனிகள் கூறிய அச்சமயத்தில் கோயிலுக்கு நுழைந்த ஒருவர் “ஐயா!  நீங்கள் இங்கே இருக்கிறீர்களா ? சற்று முன் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் உங்கள் இல்லத்துக்கு வந்தார்கள்!” என்றார் 

“ஓ அப்படியா ?” என்று நாதமுனிகள் எழுந்துகொள்ள, கூடவே சிஷ்யர்களும் எழுந்துகொள்ள எத்தனித்த போது, நாதமுனிகள் அமருங்கள் என்ற சைகை காண்பித்துவிட்டு “நீங்களும் என்னுடன் வந்துவிட்டால், ஆழ்வார் பாசுரங்கள் கேட்க முடியாமல், மன்னாரின் முகம் வாடிவிடும் அல்லவா ? அதனால் மேலும் சற்று நேரம் ஆழ்வார் பாசுரங்களை மன்னார் முன் சேவித்துக்கொண்டு இருங்கள்” என்று நாதமுனிகள் தன் இல்லம் நோக்கி ’யாராக இருக்கும்?’  என்ற சிந்தனையில் நடக்க ஆரம்பித்தார். 

தன் இல்லத்தின் வாசலில் இவருடைய பெண்பிள்ளைகள்  ”தந்தையே, நம்மகத்துக்கு இப்பொழுது தான் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் வந்திருந்தார்கள். அவர்களுடன் ஒரு குரங்கும் வந்தது!” என்றாள். 

”அப்படியா அவர்கள் எப்படி இருந்தார்கள் எந்தத் திசை நோக்கிச் சென்றார்கள் ?” என்று தவிப்புடன் கேட்டார். 

“வேட்டைக்கு புறப்பட்ட அரசர்களைப் போல, வில்லுடன் இருவர். அன்னம் போன்ற மென்மையான நடையை உடைய அழகிய பூக்கள் சூடிய கூந்தலை உடையவளுமான ஒரு பெண்ணோடும், கூட ஒரு குரங்கும் நம்மகத்தின் வாசல் திண்ணையின் நின்றுகொண்டு இருந்த  என்னைப் பார்த்து ‘நாதமுனிகள் எங்கே அம்மா?’ என்று கேட்டார்கள்’. தந்தை வெளியே சென்றிருக்கிறார் என்று கூற அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்” என்றாள். 

அதைக் கேட்ட நாதமுனிகள் “ஐயோ ! வில்லேந்தியவர் இருவர் என்றால் அது இராம லட்சுமணர்களாக இருக்க வேண்டும். மணம்மிக்க மலரைச் சூடிய கூந்தலை உடையவள் ஜனகனின் புதல்வியான சீதாபிராட்டி. பக்கத்தில் இருந்த குரங்கு முன்பு சூரியனிடத்தில் கற்று, இராமனுக்குத் தொண்டு புரிந்த அனுமானே ஆவார். ஒப்பற்ற தன்மை படைத்த அவர்கள் எங்கே போனார்கள்?” என்று கேட்க பெண்பிள்ளைகள் அவர்கள் சென்ற திசையை நோக்கி கைகளைக் காட்டினார்கள்.  

“ஆகா! இது பிரணவம் நடந்து சென்ற திசை அல்லவா ! அவர்களைத் தரிசிக்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேனே!” என்று கதறியவாறு அவர்கள் சென்ற திசையை நோக்கி வணங்கி அத்திசையில் ஓட ஆரம்பித்தார். சுற்றி இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்தார்கள். 

இவ்வாறு ஓட்டமும் நடையுமாகச் சென்ற நாதமுனிகள் வழியில் பூச்சரம் ஒன்றைக் கண்டார். அதைக் கண்டவர் “ஆகா! இது சீதாபிராட்டி சூட்டிக்கொண்டதல்லவா ? என்று அதை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு ஓட ஆரம்பித்தார். 

சற்று முன் பெய்த மழையினால் வழியெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. மரங்களில் மழையின் நீர் இலைகளின் நுனியில் சொட்டிக்கொண்டு இருந்தது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கப் பறவைகள் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ என்று வழக்கத்துக்கு மாறாக அன்று சீக்கிரமாகவே தங்கள் கூட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தன.  மீண்டும் மழை வருவதற்குள் தங்கள் இல்லத்துக்கு செல்ல வேண்டும் என்ற தவிப்பில் ஊர் மக்கள் வேகமாகத் தத்தம் குடிசைகளுக்கு வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள்.  

எதிரே வந்தவர்களை நாதமுனிகள் கைகூப்பி “பந்தை ஏந்திய கையை உடைய பெண்மணியும், மந்திர மலையைப் போன்று வலிய வில்லை ஏந்திய இருவர் அவ்வழியே பார்த்ததுண்டா ?” என்று கேட்க அவர்கள் “ஆம் ஐயா!  கண்டோம்! கண்டோம்! கம்பீரமும் பிரகாசமும் ஒருங்கே கொண்டவர்கள் இந்த வழியே சென்றார்கள்.(2)  கூடவே ஒரு குரங்கும் சென்றது” என்று கூற நாத முனிகள் கைகூப்பியவாறு அவர்கள் கூறிய திசை நோக்கி வேகமாக ஓடினார். 

சிறிது தூரம் சென்றபின் குரங்கின் கால் தடம் சேற்றில் பதிந்திருப்பதைக் கண்டு ” ஐயோ நடந்த கால்கள் நொந்தவோ! என்னைத் தேடிக்கொண்டு தாமரை போன்ற மெல்லிய திருவடிகள் சிவக்க இந்தச் சேற்றில்  நடந்து சென்றார்களா ? என்று  கண்களில் அருவியாகக் கண்ணீர் சொரிய அந்தச் சேற்றை எடுத்து நெற்றியில் திருமண்ணாகப் பூசிக்கொண்டு நாதமுனிகள் ஓடியது, அன்று பரதன் அடர்ந்த சித்திரகூடம் காட்டுக்குள் ராமனைத்தேடி ஓடியது போலக் காட்சியளித்தது. மீண்டும் சிலர் எதிரே தென்பட அவர்களிடம் “ஐயா ! இங்கே அழகு பொருந்திய இரண்டு வில்லர்கள், ஒரு குரங்கும், வளையளணிந்த கைகளையுடைய பெண்ணையும் பார்த்ததுண்டா ? சொல்வீர்களாக” என்று கேட்டார் 

அந்தணரே! நாங்கள் கண்டிலோம்” என்று அவர்கள் கூற நாதமுனிகள் சிற்றன்னையாகிய கைகேயியின் ஆணையைக் காத்த இராமனின் திருவடிகளைக் கண்டு வணங்கப் பெறும் பாக்கியம் இழந்தோமே!” என்று தசரதன் இராமனைப் பிரிந்த ஏக்கத்தில் மயக்கமுற்றது போல், விழுந்து புரண்டு அழுது, அந்த.இடத்திலேயே மயங்கி விழுந்தார். மரங்கள் ஆடாமல், பறவைகள் ஓசை இல்லாமல் எங்கும் அமைதி குடிகொண்டது. நாதமுனிகளுக்கு மேல் ஒரு கருடன் மட்டும் வட்டமிட்டமிட்டுக்கொண்டு இருந்தது. 

நாதமுனிகளை இந்த நிலையில் விட்டுவிட்டு நாம் மீண்டும் காட்டு மன்னார் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக நேயர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். 

ஈஸ்வர முனிகள், உய்யக்கொண்டார், குருகை காவலப்பன் அடங்கிய சீடர்கள் கோயிலில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அனுபவித்துவிட்டு நாதமுனிகளின் திருமாளிகையை அடைந்த போது, அங்கே சற்று முன் நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட போது,  பதட்டத்துடன் ஆசாரியருக்கு என்ன ஆனதோ என்ற பரிதவிப்புடன்,  எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒரு திசை நோக்கி ஓடினார்கள். 

மதுரகவிகள் அன்று ஜோதியைத் தேடி ஓடியது போல,  உய்யக்கொண்டார் தூரத்தில் கருடன் ஒன்று வட்டமிடுவதைக் கண்டு அதை நோக்கி ஓடினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது.  ஒரு மரத்தடியின் கீழ்  நாதமுனிகள்  மயங்கிய நிலையில் கிடந்தார். 

அருகில் சென்று அவரை தன் மடியில் தலைசாய்த்து “தெளிந்த ஞானத்தையும், ஆழ்வார்கள் அருளிய தமிழ் அமுதை அள்ளி அள்ளி அளித்த பெருமானே! எழுந்திருங்கள் எழுந்திருங்கள்!” என்று தவிப்புடன் எழுப்பினார். அவரின் சூடான கண்ணீர் நாதமுனிகளின் திருமேனியில் பட, மெல்லக் கண்களைத் திறந்து “இராமபிரான் என்னை அழைக்கிறான். நான் புறப்படுகிறேன். அதற்கு முன் அடியேன் பாதுகாத்த சொத்து ஒன்றை உம்மிடம் அளிக்க வேண்டும்!” என்றார் 

உய்யக்கொண்டார் “ஆழ்வார்கள் அமுதம் என்ற ஒப்பற்ற சொத்தையும், யோக சாஸ்திரம் என்ற மற்றொரு சொத்தையும் அளித்தீர்கள்! இதைத் தவிர மூன்றாவதாக என்ன சொத்து இருக்கிறது ? ” என்றார் 

நாதமுனிகள் “இருக்கிறது உய்யக்கொண்டாரே! விரைந்து அடியேனின் அகத்துக்குச் சென்று திருவாராதனம் செய்யும் பெருமாளின் திருவடிக்குக் கீழ் மரப்பெட்டி ஒன்று இருக்கிறது. அதை உடனே எடுத்துவாரும்! அதுவரையில் இங்கேயே ஆழ்வார்கள் பாசுரங்களைத் தியானித்துக்கொண்டு இருக்கிறேன்! ” என்றார் 

உய்யக்கொண்டார் வேகமாக ஓடிச் சென்று அந்தப் பெட்டியைத் தலையில் சுமந்துகொண்டு திரும்பி வந்தார். 

நாதமுனிகள் அவரை அன்புடன் அழைத்து அந்தப் பெட்டியைத் திறந்து அதில் உள்ள பட்டுத் துணியை விலக்க, விளக்கு போலப் பிரகாசமான, கற்பகம் போல் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும் கூடிய பவிஷ்தாசாரியார் காட்சி கொடுத்தார். 

நாதமுனிகள் அந்த திவ்யமங்கள விக்கிரகத்தை வெளியே எடுத்த போது,  முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகுடன் கூடிய  அந்த வடிவழகு இதயத்துள் தேனாக பாய்ந்தது. அழகில் ஆழங்காற்பட்டு தள்ளாடினார் உய்யக்கொண்டார். 

நாதமுனிகள் உய்யக்கொண்டாரை நோக்கி “ஒருவருக்கும் இதை வெளியிடாதீர்!”  என்று சூளுறவு கொண்டு ஆழ்வார் தமக்கு எப்படி நம்மாழ்வார் பவிஷ்யதாசார்ய விக்கிரகத்தை பிரசாதித்தருளினார் என்ற முழுக் கதையையும் கூறி, இனி இந்த நிதி உம்முடைய சொத்து. இதை ஈஸ்வர முனிகள் குமாரரான என் பேரன் யமுனைத்துறைவனுக்குப் பாட்டனான நாதமுனிகள் விரும்பிய விஷயமென்று சொல்லி தஞ்சமாக காட்டிக்கொடும்” என்று கூறி கண்களை மூடிக்கொண்டு அழகு பொருந்திய அவ்விக்கிரகத்தை மனதில் தியானித்து அவ்விக்கிரகத்தின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு ”ஆழ்வார் திருவடிகளே சரணம்” என்ற போது, மேலே வட்டமிட்ட கருடன் நாதமுனிகளின் ஆன்மாவை திருத்தோள் மேல் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பரந்த அழகிய அண்டங்களைத் தாண்டி அந்தமில் பேரின்பத்து அடியரோடு  ஒரு கோவையாக. கலங்கா பெரு நகரம் காட்டுவான் இலங்காபுரி எரித்தபிரான் திருவடிகளை அடைந்தார். 

உய்யக்கொண்டார் கையில் பவிஷதாசார்யர் பிரகாசித்தார். எம்பெருமானின் ஆயுதங்கள் ஒவ்வொரு ஆழ்வார்களாக அவதரித்தன. எம்பெருமானின் ஆயுதங்கள் எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து வடிவுகொண்ட அவதாரமா  என்று வியந்தார்(1) ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் இவர் அவதரிக்கப் போகும் நாளே அனைத்து உயிர்களும் கரையேறும்படியாக இருக்கப் போகிறது. அந்த நாளை நாம் பார்க்க முடியாதே என்று ஏங்கினார்(2) அந்த விக்கிரகத்தை பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைத்து மூடினார். அந்தச் சமயம் ஈஸ்வர முனிகள், குருகைக் காவலப்பன் அடங்கிய சிஷ்யர்கள் குழாம் அங்கே வந்து சேர்ந்தார்கள். 

நடந்த விஷயங்களை உய்யக்கொண்டார் மூலம் தெரிந்துகொண்டு, நாதமுனிகள் விமல சரமத் திருமேனியைச்  சேவித்து, தங்கள் கண்களிலும் நெஞ்சிலும் சோகத்தைத் தேக்கிக் கொண்டு, சொல்வதற்கரிய செயல்களைச் செய்த இத்திருமேனி இவ்வாறு பூமியின் மண்ணில் கிடப்பதை நினைத்து நினைத்துத்  துடித்து அழுது ஒருவாறு தேறி ஈஸ்வர முனிகள் கைகளால் வேதவிதிப்படி சரமக் கைங்கரியங்களைச் செய்வித்து(4), பெருந்திரளான அடியார்கள் சூழ திருப்பள்ளி படுத்தி அங்கே ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தனர். உய்யக்கொண்டார் நாதமுனிகள் ‘ஒருவருக்கும் வெளியிடாதீர்’ என்று தமக்கு அளித்த பவிஷ்தாசாரியர் விக்கிரகத்தை யாருக்கும் கூறவில்லை!

நாதமுனிகளை பிரிய மனம் இல்லாமல், அவருடைய திருவரசுக்கு அருகில்  அவருடைய  பேரனான யமுனைத் துறைவன் வரும் போது யோகத்தைக் கற்றுக்கொடுக்க, குருகை காவலப்பன் தர்பத்தை கீழே பரப்பி வலிமைக்கு மேல் வலிமை கொடுக்கக் கூடியதான மான் தோலை அதன் மேல் விரித்து அதன் மேல் பத்மாசனத்தில் வீற்றிருந்து எம்பெருமானை தன்பக்கம் நிலைத்திருக்குமாறு செய்து  யோகத்தில் ஆழ்ந்தார். 

பிறவியாகிய பெருநோய் தீர்க்கும் நம்மாழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமாகிய திருவாய் மொழியாலே உலகிலே திருந்தாதவர்களையும் நன்கு திருந்தச் செய்து வைணவ சம்பிரதாயத்தை விளக்கிக் கூற  ஆழ்வார்களின் பெருமையை அறிபவர்கள் யார்?  அவர்கள் அருளிய பாசுரங்களின் பெருமையை அறிபவர்கள் யார்? என்று நாதமுனிகள் கற்பித்த விஷயங்களை கற்பிக்க உய்யக்கொண்டாரும் மற்ற சீடர்களும் புறப்பட்டார்கள்(3)

சரித்திரச் சம்பந்தமான சில நிகழ்வுகளை இந்தக் கதையைப் படித்து வரும் வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்

* ”வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விகரத்தோட ஆதரிக்கும்” என்பர். அதாவது வெட்டிவேரைச் சூடிக்கொள்ளும் போது, வேரிலுள்ள மண்ணை கழுவி தனியாகப் பிரித்து எடுக்காமல், அப்படியே சூடிக்கொள்வார்கள்.(5) அது போல எம்பெருமான் ஞானிகளின் ஆத்மாவை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல், அவர்களுடைய திருமேனியைப் பலாப்பழத்திலே ஈமொய்க்குமாபோலே ஞான பரிமளத்துடன் விளங்கும் தேகத்தை  விடமாட்டாத எம்பெருமான் அதை உகந்து காக்கிறான். ஆகவே ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களின் திருமேனியைப் பள்ளிப் படுத்தி அந்த இடத்தில் ஞானிகளின் நல்லாட்சி என்ற நல்லாசி என்றும் நிலைத்து அரசாட்சி செய்வதால் அவ்விடம் திருவரசு என்று பெருமை பெறுகிறது. நாதமுனிகள் வைஷ்ணவ  சம்பிரதாயத்தின் ஆணி வேர். அந்த வேரின் மகிமையால் தான் இன்று மரமாகப் பல விழுதுகளுடன் வைணவம் வளர்ந்திருக்கிறது. 

ஸ்ரீ திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீ திருவேங்கட ராமானுஜசாரியார் ஸ்வாமி இந்த இடத்தில் தனது முன்னோர்கள் வழிபட்டனர் என்று கூறிய போது அவ்விடம் 1993ஆம் வருடம் முக்கியத்துவம் பெற்றது. அதற்குப் பிறகு புலவர் ஹரி தாஸ் என்பவர் தரிசு நிலமான,  இந்தக் காட்டுப் பகுதியை நாதமுனிகளுக்கு திருவரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வாங்கினார். அங்கே ஓர் அதிசயம் காத்துக்கொண்டு இருந்தது. அந்த நிலத்தில் தேவியருடன் ஆள் உயர பெருமாள் சிலை ஒன்று பாதியளவுக்கு மண்ணுக்குள் புதையுண்டிருந்ததை கண்டார். அதற்குப் பிறகு பலர் உதவிட ஈஸ்வர முனிகள் அன்று நிறுவிய திருவரசு மீண்டும் உயிர்பெற்றது ! 

* திருவரசுக்கு அருகில் குருகை காவலப்பன் அன்று யோகத்தில் அமர்ந்த இடத்தில் ‘குருகை காவலப்பன் கோயில்’  இருக்கிறது. 1976ஆம் வருடத்துக்குப் பிறகு 2014ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கே இருக்கும் பெருமாளும் வீர நாராயணப் பெருமாள் தான்!

* நாதமுனிகள் இராமனைத் தேடிக்கொண்டு சென்ற இடங்கள் இன்றும் இருக்கிறது. அவருக்கு பூ கிடைத்த இடம் பூவிழுந்த நல்லூர் என்றும், குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்த இடம் குறுங்குடி ( குரங்கடி குறுங்குடியாக திரிந்தது ). வழியில் கண்டீர்களா என்று கேட்க ‘கண்டோம் கண்டோம்’ என்று கூறிய இடம்  ‘கண்டமங்கலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நாதமுனிகள் பள்ளிப்படுத்தப்பட்ட  இடம் சொர்க்கப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது

தாது வருடம் மாசி மாதம் சுக்லபட்ச ஏகாதசி தினத்தன்று தனது 93 வயதில் திருநாடு அலங்கரித்தார்.

தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மையறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் அருள்பெற்ற
நாதமுனிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமனமே உண்டோபேசு  

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் – ப்ரமாணத் திரட்டு-

June 2, 2024

வாக்ய குருபரம்பரை

அஸ்மத் குருப்யோ நம:
அஸ்மத் பரம குருப்யோ நம:
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
ச்ரியை நம:
ஸ்ரீதராய நம:

ச்லோக குருபரம்பரை (ச்லோகம்)

அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.

திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய

த்வயம்
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே |
ஸ்ரீமதே நாராயணாய நம: ||

சரம ச்லோகம் (ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

ஸ்ரீராம சரம ச்லோகம்
ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

ஓராண் வழி ஆசார்ய தனியன்கள் (https://acharyas.koyil.org/index.php/thanians/)

  • பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந:

  • பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||

  • ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||

  • நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

  • ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||

  • உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||

  • மணக்கால்நம்பி (மாசி – மகம்)

அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||

  • ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||

  • பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

  • எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

  • எம்பார் (தை – புனர்பூசம்)

ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||

  • பட்டர் (வைகாசி – அனுஷம்)

ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

  • நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||

  • நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||

  • வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||

  • பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||

  • திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே ||

  • மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்
துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே ||

கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ச்லோகங்கள்

ஸாஷ்டாங்கமாக சேவித்துப் பின்வரும் ச்லோகங்களைச் சொல்லவும்:

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு || (ஸ்தோத்ர ரத்நம் 48)

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே || (ஸ்தோத்ர ரத்நம் 22)

ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)

தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் |
ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜ
உத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் || (ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம்)

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா
 நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 16)

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா
உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 23)

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்  (திருப்பாவை 24)

கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே || (புராண ச்லோகம்)

மூன்று முறை கையைத்தட்டி ஓசை செய்து, கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அங்கண்மா ஞாலத்து அரசர்
அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 22)

ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: || (புராண ச்லோகம்)

முந்தைய நாளில் சாற்றிய புஷ்பங்களை, இப்பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு களையவும்

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு 9)

ஸ்நாநாஸநம் செய்யவும் – புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம், பெரியாழ்வார் திருமொழி வெண்ணெயளைந்த குணுங்கு பதிகம் முதலியவைகளை கால அவகாசத்து ஏற்ப அநுஸந்திக்கவும்.

அலங்காராஸநம் ஆரம்பிக்கவும்.

முதலில் இந்த ச்லோகம்/பாஸுரம் சேவிக்கவும்.

கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ச்ரியம் || (ஸ்ரீ ஸூக்தம்)

பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே (திருவாய்மொழி 4.3.2)

தூபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
தூபம் ஆக்ராபயாமி (ர்க் வேதம்)

பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே (திருவாய்மொழி 1.6.1)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
பரிவதில் ஈசன்படியை பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று
உரிமையுடன் ஓதியருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு (திருவாய்மொழி நூற்றந்தாதி 6)

தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ச்லோகம்/பாசுரம்

உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச || (மஹா நாராயண உபநிஷத்)

வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் (முன்பே உள்ளது)

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பனிவான்
திங்கள் சடையேற வைத்தானும் தாமரை மேலானும்
குடையேறத் தாம் குவித்துக் கொண்டு (நான்முகன் திருவந்தாதி 43)

மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.  (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |
ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள் கடலுள்,
என்றும் புணையாம் அணிவிளக்காம் பூம்பட்டாம்
புல்கும் அணையாம் திருமார்க்கு அறவு (முதல் திருவந்தாதி 53)

அநத்யயன காலத்தில் சேவிக்க:
எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு
நம்பெருமாள் பெயரிட்டு நாட்டி வைத்தார்
அம்புவியோர் இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
அந்தச் செயல் அறிகைக்கா (உபதேச ரத்தின மாலை 38)

கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி || (ஸ்தோத்ர ரத்நம் 31)

ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா || (யதிராஜ விம்சதி 1)

போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

சாற்றுமுறை சேவிக்கவும்:

பர்யங்காஸனம்

இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்தித்துக் கொண்டு கோயிலாழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்):

பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: || (முகுந்த மாலா)

ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:
உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம ||

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறிவெறி நாந்தக வாளே அழகிய ஸார்ங்கமே தண்டே
இரவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி அறை குறிக்கொண்மின் (பெரியாழ்வார் திருமொழி 5.2.9)

பனிக் கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு
ஓடி வந்து என் மனக்கடலுள் வாழ வல்ல மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச்சுடரே தனி உலகே என்றென்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே (பெரியாழ்வார் திருமொழி 5.4.9)

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ சரம உபாய நிர்ணயம் -பிரமாணத் திரட்டு-

June 1, 2024

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||
–நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்குருமீடே நிஜமாதரேண சாஹம் |ய இஹாகில லோக ஜீவநாதர:சரமோபாய விநிர்ணயம் சகார ||-நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற
ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர்.

இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: |
வைஷ்ணவோ ந: குலே ஜாத: ஸ ந: ஸந்தார யிஷ்யதி || 
என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வ குலத்திலே  ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.

உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.15. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,16. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17.(சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ;  இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. (யஶ்ச ராமம்  நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகத ஸ்வீகார பரகத ஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்ய ஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை  ஸம்பந்தம்  நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.  இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.

உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21 (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22 (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

23. (விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில்  இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே  இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

 (கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது.
ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,-34. “ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம்  கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்

18. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று  சதுரராய்  கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.–35. ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத்  தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,–36 (ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன  குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

39. (ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ) என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37.  (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38.  (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே-41. (மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.

ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.

சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி  ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.