Archive for the ‘ராமானுஜ நூற்றந்தாதி’ Category

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி -ஸ்ரீ அனந்தாழ்வான் எனப்படும் இராமநாதபுரம் சதாவதானம் முத்துஸாமி யையங்கார் ஸ்வாமிகள்-

September 20, 2025

ஸ்ரீ மணவாள மா முனி நூற்றந்தாதி –

காப்பு,
நம்மாழ்வார்‌.
மன்னு புகழ்க் கோயின் மணவாள மா மானிவன்‌
தன்னடி மீதந்தாதி சாத்தவே-யின்னமுதின்‌
செந் தமிழால் வேதச் செழும் பொருளை மா நிலத்தே
தந் தருண் மாறன் தாள் சரண்‌-

எம்பெருமானார்‌
தாடொடர்பு நின் பாற்றழுவா தவர்க்கிலை நம்‌
வீட்டை தலென்று விளம்ப வரி–நீடணையாய்‌
நின்றான் யதிபதியாய் நீணிலத்திலே யுதித்தான்
என் தான் நமக்கேது இடர்

நூல்
பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1)

செய்யனந் தாமரைப் போதுற்று றங்கும் திருவரங்கத்‌
தையனந்தாதருண் மந்திர முண்டஃதன்‌றி வெண்மை
மெய்யனந்தாழ்வான்‌ மணவாள மாமுனி மென் கழலுண்‌டு
உய்யனர்தாப மறத் தொலைத்தின்ப முறுவதற்கே (2)

உறு பொருளின்பமுந் தாயுமெய்த்தந்தையு மொண் குருவு
நறு மலரிந்திரை நாதனு மற்று மிந் நானிலத்தோர்‌
சிறுமையை நீக்கு மிராமாநுசனெனச் சிந்தை செயுந்
திறமையன் கோயின் மணவாள மா முனித் தேசிகனே
(3)

தேசிகர் தங்களடிப்போ துளத்திடைச் சேர்த்‌தி யவர்‌
பேசிய நூல் வழிச் சேர்‌ திருவாய் மொழிப் பிள்ளை யன்பால்‌
வீசிய கீர்த்தி மணவாள மாமுனி மென் கழலை
நேசியு நீணிலத்தீரு மதுட்டுயர் நீங்கடுமே
–4-

நீங்கிய தீய வினையாளர் கூறு நெறிகளெலாந்
தேங்கின வெங்கு மகிழ் மாறன்‌ வேதச் செழுந் தமிழ்‌ க
டாங்கின மன்னுயிர் கண் மால் பரனெனச் சாற்றுதலை
யோங்கின ஞான மணவாள யோகி வந்துற்ற பின்பே-
-5-

உற்றினிதோங்கு மனமே யுனக்கோருறுதி சொல்வன்
இற்றிட வேண்டும் வினைப் பூரியருடனே சித்திடேன்
அற்றவர் போற்று மணவாள மாமுனி நம்பி யருள்‌
பெற்றிடினீதரப் பெற்றிடுவார் பலர் பேரின்பமே
-6-

பேரியல் கொண்ட பெருமாளருளிற் பெருமை பெற்ற
வாரியன் கோயினங் கந்தாடை யண்ணனை யார்ந்த பின் மெய்க்
குரியனாய மணவாள மா முனி தொல் புகழைப்‌
பாரினிற் பாடிப் பயன் பெறலெற்கொரு பாரமன்றே
-7-

பாராளு மன்னர் பதி தொறும் போயவர்பால் வருந்திச்
சிராயனந்தங் கவி பாடுவீர் நறுஞ் செங்கமலத்‌
தாராளன் கோயின் மணவாள மாமுனி தாளிணையை
யாராதனஞ் செயிலெய்திடு மிங்கும் அங்கு மானந்தமே
–8-

ஆனந்த மிக்கு மணவாள மாமுனி யன்பெனக் கொண்
ஞானந்த வாத பெரியோரவன் பெயர் நாடியதாற்‌
றேனந்துமின் சுவையாம் பா வெனத் துதி செய்வரல்லா
லீனந்தரும் பா வென விகழாரிதை யென்றைக்குமே
–9-

என்றிலங் காரணங் காணா வரும் பொருளிந் திரைப் பெ
ணின்றிலங்கஞ்சன மேனி யம்மான்‌ செய் நிய மனத்தா
லொன்றிய கீர்த்தி யிராமாநுசன் பின்‌ புயிர்க்கிரங்கி
யின்றதை யோம்ப மணவாள யோகியி னெய்தினனே
–10-

எய்‌திய நள்ளிருள் போமாறு லககலிற் கடனெய்‌
பெய்தினனாஞ் சுடரேற்றிய பொய்கைப் பிரான்‌ றமிழின்‌
மெய் தெரிந்தோது மணவாள மாமுனி மேவிய திப்‌
பொய் திகழ் ஞாலத்‌ துயிர்க்கின் மீந்து புரந்திடவே–11-

புரந்ரனாமெனப் பூ பதி யாகிப் பொருண் முழுதுந்
தரந்தரம் பெற்றிட வேண்டி வந்துன்‌றனைச் சார்ந்திலனின்‌
னிரந்தர மெய் யன்புடையார் பதத் தென்னினைவு நிற்க
வரந்தர வேண்டு மெய்த் தேவே மணவாள மாமுனியே
-12-

மா மகிழ் மாறன்‌ றமிழார் கலிக் கண் வரை யெனத்தன்‌
னாமடுத்தாரியர்‌ நூலரவார்த நலி தரச் செய்‌
தே மதிவாய்ந்த நரர்க்கமுதாப் பொருளீந்தது காண்‌
கோமலி கீர்‌த்தி மணவாள மாமுனிக் கொண்டனின்றே
-13-

கொண்ட தன்னுள்ளத் திருள் போயிறை யருள் கூடி யுய்யப்‌
பண்டை நன் ஞான நிறை விளக்கேற்றிய பண்பினன் சீர்‌த்
தொண்டர்கள் போற்றுங் கடன் மல்லை நாதன் றுணை யடியை
யண்டி நின்றேந்து மணவாள மாமுனி யாரியனே–14-

ஆரிருண் மாண்ட பின் கோவலுண் மா மலராள் பதியை
நேரினிற் கண்டு நெடுந் தமிழ் பாடிய நின்‌மலன் றன்‌
சீரினிற் செல்லு மணவாள யோகியைச் சிந்தை செயில்‌
வேரினிச் செல்லாதறுப்பான வனம் வினைகளையே
–15-

வினையாளர் கூறுஞ் சமயங்கடோறும் விழைந்து முத்தி
நினைவேதுந் தோன்‌றற் கிடந்தந்திலவென நீக்கி யரி
தனையே துதிக்கு மழிசைக் கிறைவன்‌ றமிழ்ப் பொருட்டே
னினையே பருகு மணவாள மாமுனி யென் குருவே-16-

குருகை வந்தோங்கு மகிழ் மாறன் வேதக் குரை கடல் க
டருந் தொடைச் சொல்லமுதுட் கொடு கோயிற் றடவரை நின்‌
நிரும்புவிமீதுயிர்க் கூழின் புறப் பொருளே பொழிந்து
வரும் புயல் காணு மணவாள மா முனி மாதவனே-17-

மாதவன் வேங்கடத் தெவ் வுருவாக வுமாவனென
வோதிய சேரலர் கோன் குலசேகரன் ஓண்டமிழ்க்கண்
ஆதரங் கொண்ட மணவாள மாமுனிக் கனமிலரிப்‌
பூதலத்தே வினைக் காளாக நின்று புழுங்குவரே
(18)

புழுங்கும் வழுதிப் பெருமான் மனத்‌திருள் போக வின்பத்‌
தழுங்கும்படி மால் பரமென்றுணர்த்தும் அமலனின்சொல்‌
விழுங்குங் குணங் கொண் மணவாள மாமுனி மேய பின்பே
யொழுங்கும் பொறையுங் குணமுமறிவு முயிர்க்குற்றவே —
(19)

உயிர்க்கின்ப நல்கும் பொருட்டன்று வில்லிபுத்‌தூரெழுஞ் செங்
கயற் கண்ணி யாயர் தங் கன்னிகையா யநுசாரஞ் செய்து
தயிர்க்கஞ்சி யாடும் பிரான்‌ றிருப் பள்ளி யிற்றந்த தமிழ்ப்‌
பயிர்க்கம்புதங் காண் மணவாள மா முனிப் பண்டிதனே-
-20-

பண்டரும் வேதப் பசுந் தமிழ் மாலையும் பைந் துளவத்‌
தண்டொடையுங் கொடு தென்னரகங் கேசனைத் தாழ்ந் தெழுப்புந்
தொண்டர் தம் பாதத் துகளடிப் போதைத் தொழுமவரை
மண்டி நின்றேத்து மணவாள மாமுனி வையகத்தே
(21)

வையம் புகழ வரு பாணர் கோனடிவாழ்த்‌து மெங்க
ளையன் குருகை மணவாள மா முனியன் பெவர்க்குஞ்‌
செய்யுங் கிரிசைகள் கேளீரிகத்‌தினிச் சென்‌ம வினை
நையும்படி செய்தழியாத முத்தியு நல்‌கடுமே
–22-

இடுமே வினைக் கணிடுவதல்லா னரகெய்து வித்த
விடுமே பவமிப் பவத்தை மெய்யென்று விரும்பிய வத்‌
தொடுமே யுழலுமவர்‌ தம் முறவை யொழித் தருட் கண்‌
கொடு மேனிலவு மணவாள யோகியைக் கூடுளமே (23)

கூடாரை வெல்லும் பெருமாளரங்கர் குணங்களைக் கொண்‌
டாடாவவரதருள் பெற்றிருப்பினு மாங்கவர்க்குன்‌
னேடார் மலர்ப் பதத்துண்டேற்றொடர் பவரீவர் முத்தி
வீடாருமின்ப மணவாள மா முனி மெய்ம்மை யிதே–
24-

மையார் கருங்கண் மடவார்‌ மயக்கின்‌ மயங்கியவர்‌
கையாளினின்று மவமே புரிந்துங்கலங்‌கி யிந்தப்‌
பொய்யா முலகிலுழல்கின்‌ற வென்னைப் புரந்திடுத
லையா கடமை மணவாள மா முனி யற்புதனே–25-

அற்புத நங்கை வடிவினின்‌றே மடலானறையூர்ப்‌
பொற் பமர் பூமகள் கேள்வனைப் பாடிப் புகழ்ந்திடு நங்‌
கற்பக மங்கைப் பரகாலன்‌ செஞ்சொற் கவிகளினு
ணற் பொருடேரு மணவாள மாமுனி நாயகமே–26-

நாயக நங்கை மகவெனத் தோன்‌றிய நம்பி யன்றிப்‌
பேயக மற்றொரு செய்வந் தொழாதெனப் பேசிய மெய்த்‌
தூய குணத் திருக்கோளூரறை தன் றுணை யடியை
நேயம் வைத்தேத்து மணவாள மா முனி நீணிலத்தே–27-

நிலத்‌தின்‌ மறைப் பொருண்முற்றுந் தமிழினிகழ்த்திய கோ
நலத்தின் பெருமை யவன் பாவருமை நவை யிலுயிரப்‌
புலத்திற் றெரிக்க மணவாள மா முனி போந்திலனேற்‌
றலத்திற் புதைத்த பொருள் போல நின்று தளர்வுறுமே–28-

தளரா ரிடுக்கண்கள் எய்‌தினு மின்பங்கள் சார்ந்திடினுங்‌
கிளரார் குருகைப் பெருமான்‌ மறையிற் கெழுமியசொல்‌
வளரா நிலவும்படி செய்த நாதமுனி மலர்த்தா
ளுளராரையுஞ் சொன் மணவாள யோகியை யுன்னினரே
-29-

உன்னற்கரிய மறைகளை யாயிர மொண் டமிழாற்‌
பன்னற்குலகில் வருஞ் சடகோபனைப் பத்தி யென்று
மன்னப் பதிவைத்திறைஞ்சு மணவாள மாமுனியா
மென்னப் பனுண்டெனக் கிங்கொரு நாளும் இடரில்லையே–3
0-

இட.ங்கொண்ட கீர்த்தி மணவாள மாமுனி யென்னி பம்பூச்‌
தடங்கொண்ட தென்குருகாபுரி மாறன்‌ றமிழ் மறையின்‌
நிடங் கொண்ட வின்பப்பொருண் மதம்பாயச் சினத்துந்து முக்கோ
லுடன் கொண்வந்த வப்போதற்றவா திய ரூக்கங்களே-31-

கள்ளார் மலர்ப்பொழிற் றென்னரங்கேசனைக் கண்டு தொழு
துள்ளாருறவை யொழித்‌ துய்யக் கொண்டார் தமொண் கழற்கண்‌
விள்ளாத வன்பன் மணவாள மாமுனி மென்பதநீர்‌
கொள்ளா ரிகத்தினிற்றள்ளார் பிறப்பின் கொடுமையையே
-32-

கொடுப்பா னருளைக் கொடுத்‌தும் வினைகள் குலைந்திட வந்
தடுப்பா னெதிரினடுத்‌ தின்ப மென்னு மலை கடற் கண்‌
மடுப்பானிகத்தின்‌ மடுத்ததன் பின் றிருமால் பதத்தில்‌
விடுப்பான்‌ குருகை மணவாள யோகியை மேவிடினே
-33-

மேவார் தமக்கிலை யெங்கோன ரங்கன் விரை மலர்ச் செம்‌
பூவார் கழலைப் பொருந்தி நல்லின்பம் புசித்‌திடுத
லாவாவெனத் திரிந்தாலென் பயனுண்டடை மனமே
பாவார் குருகை மணவாள மாமுனி பாதத்தையே
–34-

பாதகராயினுந் தஞ்ச நின்றாளெனப் பற்றிலவர்‌
மேதக வாய்ந்து நல்லின்ப மெய்ஞ்ஞானம் கண்‌ மேவியிகத்‌
தேதகவோடழியா முத்தராக விருப்பரென்றும்‌
போதகமங்கொண் மணவாள மாமுனிப் புண்ணியனே
-35-

புண்ணிய நோன்பு கண் முற்றுந் துறந்து புகலெனையே
நண்ணுதி யானினைச் செய்கு வல் பாவநவை யறவென்‌
றண்ணன் முன்போதிய நீதியெலா நீயவதரிக்க
மண்ணினிற்றேர்ந்ததுயிர் காண் மணவாள மாமுனியே–36-

முனிந்தாலும் தள்ளி மிதித்தாலும் சேயனை முன்பவடன்‌
மனந்தானிரங்கும் படிக்கமுமல்லது மாட்டகலா
தினன்றானிகர்க்கு மணவாளமாமுனி யென்னப்ப நீ
சினந்தாயெனினும் விடாதுன்கழலை யென் சிந்தனையே-37-

சிந்திக்க வின்பம் தருமரங்கேச ன் திருவருளால்
பந்தித்த தொல் வினை தீர் மணக்கால் நம்பி பாதத்தையே
வந்திக்குங் கோயின் மணவாள மாமுனி வைபவ நும்‌
புந்திக்கணின்பம் புகட்டும் புலவீர் புகழுமினே–
38-

புகழும் பொருளும் பொருந்தி யிப்பூதலம் போற்ற வின்பச்‌
தகழுமவரு மழியா திருந்திலராதவினால்
இகழும் புவி வாழ்வினை வெறுத் துன்னடி யெய்‌தி யன்பிற்‌
றிகழும்படி மணவாள மாமுனி செய்தருளே
-39-

௮ருளாழி யேந்தும் பெருமான் சமயத்தணி விளக்கா
லிருள் யாவு நீக்கும் யமுனைத்‌ துறைவ னிணையடி தன்‌
பொருளா யுகந்த மணவாள மாமுனி பூங்கழலைக்‌
தெருளார்ந்து இறைஞ்சு மவர்க் கினி மேலில்லை சென்மங்களே-40-

சென்‌மப் பெரும்பிணிக் குள்ளுற்றுழலுஞ் சிறியவர் தங்‌
கன்மக் கடுங் கனற் கோர் கடைக் காரெனக் கண்ண பிரான்‌
றன்மப் பயிர்க்கு நல்வித்தெனத் தோன்றிய தாழ்விலியுள்‌
வன்மத்தை நீக்கு மணவாள மாமுனி வண்மை நன்றே–41-

வண்மைப் பராங்குசன் றாளே கதியென வாழ்த்‌து மனச்‌
திண்மைப் பரம குருவாயுதித்த திருவரங்கத்‌
துண்மைப் பொருடேர் பெருமாளரைய ரொளிர் கழல் சேர்‌
தண்மைக் குணத்து மணவாள மாமுனி தாள் சரணே -42-

தாளானிலம் பண்டளந் தோனழகன்‌ றனக் கன்பு கொண்‌
டாளாகி நின்ற திருமாலை யாண்டா னருளமுதுண்‌
ணீளார் குணத்து மணவாள மாமுனி நீர்மை சொல
மாளாதிகத் திற்றலை யாயிரங் கொண்ட வாளகிக்கே-43-

வாசம் கலந்த துழாய் மாலை சூடி வரும் பெருமான்
நேசம் கலந்த திருக்கோட்டி நம்பி நிலை யுணர்ந்து
பேசும் புகழெம்மிராமா நுசனடி பெற்றிலகு
தாசன் குருகை மணவாள மாமுனி தாள் கதியே–44-

கதி காட்டு நூலிதுவோ வதுவோ வெனக் கற்று நுங்கண்‌
மதி காட்டும் பல் வழிச் சென்றுழல்வீர்‌ திருமால ருணற்‌
பதி காட்டு மின்பப் பயன் காட்டி மாறன்‌ பழ மறை யின்‌
றுதி காட்டுங் கோயின்‌ மணவாள மாமுனி சொன்னலமே–45-

சொல்லான்‌ மறைப் பொருளெல்லாந் தமிழிற்று லங்கிடச் செய்‌
நல்லார் குருகை வகுளா பரண னகு மலர்த்தா
ளல்லா திறைஞ்சாத் திருமலை நம்பி யடியலதுள்‌
புல்லான்றுதியான்‌ மணவாள மாமுனி பூதலத்தே (46)

பூதங்கவர் தெறுக்கால் கொட்டுலை கவி போன்‌ற நெஞ்சை
யேதம் படர் புலத்தூடுற்றுழலா திருத்‌தி யின்‌பப்‌
போதம் பயிற்றிய மாறனேர் நம்பி புகழ் கொளிரு
பாதம் பரவு மணவாள மாமுனி பண்பினிதே (47)

பண்பாடளி குடைந் தூதும் துளவப் பசுந் தொடையோ
டொண் பா வணியலணி தேவராசனுகப்ப வெழு
நண் பார்தவத்துத் திருக் கச்சி நம்பி நலங்கொடிந் தத்‌
திண் பார் புரக்கு மணவாள யோகி யென் சேம வைப்பே–48

வைப்பாய வான்‌ பொருளெல்லா முனது மலரடி யென்‌
றெப்போதும் வாழ்‌த்தி யிருக்கு மெய்ஞ்ஞானிய ரீட்ட மெனை
பிப்பாவியா ரென்றிகழா தணைக்கு நல்லின்ப மதி
தப்பாதெனக்கு மணவாள மாமுனி த்ந்தருளே (49)

அரு மா மறைப்பொருண் முற்றுந் தமிழிலருளிய வெம்‌
பெருமான் குணங் கண்டுவந்து வந்தேத்‌தும் பெரிய நம்பி
யிரு மா மலர்ப் பதத்துள்ளன்பு கொண்ட வெழிற் குருகை
வரு மா தவத்‌த மணவாள யோகி யென்‌ மா நிதியே (50)

நிதியா மறை வீந்துலகங் கலியா னிரப்புறுங்கால்‌
விதியாரனை யினருளா லெழுந்த விமலனின்ப
மதியார் குணத் தெம்மிராமாநுசன்‌ றன்‌ மலரடியே
கதியா யுகந்த மணவாள மாமுனி கார்முகிலே (51)

காரேய் கருணை யிராமாநுசன்‌ றன் கழற் கன்பினர்‌
யாரே யெனினு மவர் பான் மருவு மருங்குணத்துச்‌
சீரேய் குருகை மணவாள மாமுனிச் செல்வன்‌ றன்‌ வண்‌
பேரே துதிக்கிற் றருவானழியாப் பெரும் பதமே 52-

பெரும்பதம் வேண்டி யென் போலியர் போனிதம் பேதற்று நீ
கரும்பினு மின்சுவைப் பாமாலை தந்து கடலுலகந்
தரும் புகழ் கொண்ட விராமாநுசனடி தாழ்ந்திரந்து
வருந்திய தென்கொன் மணவாள யோகி யுன் மாய நன்றே–53-

மாயப் பெரும் பிணிக்குள்ளுற்று நாளுமடி தருமிக்‌
காயத்தை யான்‌ பரித்தேங்காது நிற்கக் கடைக் கணிப்பாய்
தா யொத்த வின்பத் திராமாநுசனடி தாழ்பவர் பா
னேயததைவைக்கு மணவாள மாமுனி நீ மகிழ்ந்தே –54-

நீ மகிழ்ந்து என் பாலருள்‌ செய வேண்டுவ னீணிலத்தோர்‌
கோ மகனாயினுமல்லா திரக்கும் குறை யுறினும்
நாமன நின் திரு நாமம் குணகணவின்‌ றெணத்தென்‌
பா மலி கீர்த்தி மணவாள மாமுனி பண்‌ணுதற்கே–55-

பண்ணார் பொழிலரங்கம் முதலாய பதிகளொரு
கண்ணாய் மவிந்த விராமாநுசற் கொடு காமரு சீர்
எண்ணார் பரவு மணவாள மாமுனி யெய்‌திய பின்‌
றண்ணார் மலர்க்கணிரண்டாகி நின்று தளிரந்ததனவே–56-

தளிர்த்தது சீலத்திராமாநுசன்‌ றன்‌ தரிசனமே
குளித்தது மன்னுயிரின்பக் கடற்குட் கொழுந் தமிழ்ப் பாத
துளித்தது நான்மறை யோடு உலகெங்கும் துழாயவன் பேர்‌
களித்தது கோயின்‌ மணவாள யோகியைக் கண்டவன்றே–57-

கண்டவ ருள்ளக் கசடறுத் தாட் கொளுங்கார் முகினேர்‌
மண்டலத் தோங்கு மிராமாச முனி வைபவ முட்‌
கொண்டறத்தே தளிர்‌ததாய் யுயிர்க்கீயுங் குருகைப் பிரான்‌
றண்டமிழ்ப் பாவை மணவாள மா முனி தண்ணளியே—58-

அளிக்குமினித்தாய கடுற்றுயிருழல ல்லலின்‌றிக்‌
களிக்குமது நல்லறத்தே தளிர்‌த்திடக் கண்டு மண் விண்‌
டுளிக்கும் புகழெம்மிராமாநுச னருட்டுய்த்‌ திரை வாய்க்‌
குளிக்கும் தவத்து மணவாள யோகி குணத்தியல்பே–59-

குணமேது தொண்டுட் குறியேது வேதக் கொழுந்தெழு நன்‌
மணமேது ஞான மணமேது தீய வலி கொள் வினைத்‌
தணவேது தன்‌ம நினைவேது பாரிற்றனமென வந்
தணவா திருக்கின்‌ மணவாள மாமுனி யாருயிர்க்கே (60)

ஆருண்டெனக் கிணை யென்றைவர் முன்‌பரு ளச்சுதன்‌ றன்‌
பேருண்டருங்கதி சேர்ப்பதற் கென்றெணும் பேய் மதியீர்‌
பாருண்ட கீர்த்தி மணவாள யோகி தன் பற்றிலர்க்குத்‌
தாருண்டு நீருண்டு சோறுண்டு பேருண்டு தாயுமுண்டே (61)

தாயுண்டு பண்ணிய தந்தை நீ யென்‌றிருப்பார் தமக்கு
வாயுண்டு நற்கதி தா வென்‌று கேட்க வோர் வண்மை யற்ற
தீயுண்ட நெஞ்சத் தென் போலியர்க் கென்னுண்டு சென்‌றிரக்க
நீ யுண்டு பண்ணின்‌ மணவாள மாமுனி நேருமன்‌றே (62)

நேரோதனத்திற் கிரங்கி நைந்தாயயினேர் விழியார்‌
வாரேர் தனத்திற்கவல முற்றாயிது வன்‌றி செஞ்சே
தாரோதுங் கீர்த்தி மணவாள மாமுனி தாணிலையு
ளாரோடுறவுண்டு லைந்தாய் வலி யுனக்கியா துளதே (63)

உளராகவென்று நினைந்தே யுரைப்பர் பல்லோர் தவத்‌துட்‌
டளரா வருந்துவர் வீணான தெய்வந் தனைப் பணிந்து
வளரா விரங்குவர் பாரின்‌ மணவாள மாமுனிவன்‌
கிளரா ருயிர்க்கின்ப நல்க வந்தேய்ததைக் கேட்டுமென்னே (64)

கேட்டா கமங்களுட னீறணீந்திரன்‌ கேடிலியென்‌
றூட்டா தரத்துலைந் தின் பா மறை தேர்ந்துகந்து வில்வக்‌
கோட்டூடு நின்று குதித்து வெங் கூற்றைக் குதித்த வெம்பார்‌
மாட்டோங்கு மன்பிற் சிறந்தோன் மணவாள மா முனியே (65)

மா மதங் கொண்ட பர வாரணங்கண் மடிய வெழுந்
தே மலி சிங்க மிராமாநுனடி யென்ன நின்ற
பூ மலி கீர்‌த்தி முதலியர் கோனருட் பொற்பை யுன்னிப்‌
பா மகிழ்ந்தோது மணவாள யோகி யென் பாக்கியமே —66-

எனக்கீந்த பேறிந்த நாலூரவனு மின்‌றெய்த வரு
டனத் தொன்று பூ மகள் கேள்வா வென்றேத்திய சற்குணத்தெம்‌
மனத்தொன்றி நின்‌ற வக்கூரேசன் றாணிலை வாழ்த்‌திடு நல்‌
லினத்தொன்று கீர்த்‌தி மணவாள மாமுனி யென்னப்பனே- (67)

என்னைப் பவக் கலிக்குள் ளுற்றுழலா தெடுத்தருள்வான்‌
மன்னித்‌ திகழ் வள்‌ளல் பட்டர்‌ தஞ்செய்ய மலரடியைப்‌
பன்னிப் பரவு மணவாள மாமுனி பான்மை யிலொன்‌
றுன்னப் பவம் போமெனி லென்னுறா தருளுற்றவர்க்கே (68)

உற்றார் கலிக்கணுழல்வார் தமக்குதவோர் தருவாய்க்
கற்றா நிகர்க்குங் குணங் கொணஞ்சீயர் கழறிய நூல்‌
பெற்றார்க்குமோது மணவாள மாமுனி பேர் சொலவாய்‌
சற்றே திறக்கிற்றிறந்திடு முத்தித் தலைக் கதவே (69)

தலையாயிரங் கொண்ட சேடன் றன்‌ மேற்றுயிறண்டுளவ
மலையார் புயத்‌துத்‌ திருவரங்கேசன்‌ வடிவெனவிவ்‌
வலையார் நிலத்‌திற் பொலிந்த நம்பிள்ளை யருளினுக்கோர்‌
நிலையாய கோயின் மணவாள யோகி யென்னெஞ்சத்தனே (70)

நெஞ்சிற் கறை யற்றிடத்‌ தமிழ் வேதத்‌துணீள்‌ பொருளை
யஞ் சொற்களால் வெளியாக்கும் பெரிய வாச்சான் பிள்ளையைக்‌
கொஞ்சிப் பரவு மணவாள யோகி முக்கோல் கொண்ட திக்‌
கஞ்சத்தலைப் புவிமீதுயிர்க் கின்பினைக் காட்டுதற்கே –71-

காட்டாவின்பின்‌ செஞ்சிலம்படி நோவக் களித்தெழுங்கா
ரூட்டாக மங்கை யுறை மார்பரங்கனுகக்க விரு
பீட்டாளர் தந்த வடக்குத்‌ திரு வீதிப் பிள்ளை யந்தாள்‌
சூட்டாற் பரிக்கு மணவாள யோகி யுட் சோர்விலனே (72)

சோர்வுற்ற மன்னுயிர்க்குள்ளன்பு தூண்டத் துணிந்து மறைச
சார்வுற்ற மெய்ப் பொருளெல்லாந் தமிழிடைத் தந்த நந்தாத்
தேர்வுற்ற ஞானத் துலகாரிய னருட் செவ்வி முற்று
மார்வுற்ற சிந்தை மணவாள யோகி யுண்டாள்வதற்கே –73-

ஆளாகி நிற்பவர்க் கில்லை நெஞ்சே யிகத்தல்லலென்‌று
நீளாசலாம் புயத்‌ திந்திரையோடுறை நேமி யங்கைக்‌
காளாம்புதத் தெந்தை நல் வீட்டினின்பமுங்கைக் கொள்வராற்‌
றாளாளன்‌ கோயின் மணவாள மாமுனி தாளிணைக்கே (74)

இணையாருனக்குண்டு நெஞ்சே யறிவிலிதுவதுவென்‌
றணையா தணைந்தவவரோ டுறவறலன்‌றி யன்பிற்‌
றுணையாங் குருகை மணவாள மாமுனி தொண்டர் தங்க
டிணையாரிடந் தொறும் போய்ப் பணிவானருள் செய்தனையே (75)

நையேனினி யிந்த நானிலத்தே யொளிர் ஞாயிறென
மையேயகற்றித் திருவாய் மொழிப் பிள்ளை வண்மை சொல்லி
மெய்யே பரவு மணவாள மாமுனி மேற் றுதிகள்‌
செய்யேனெனினுமுள் செய்தவர் தாடொழச் சிந்தித்தே –76-

சிந்தாகுல மறுத்தெங் கோனரங்கன்‌ றிருவடி யுட்‌
டந்தாதரத்திற் பணி பொழுதோர் துயர் சாற்ற வுன்னிச்
செந்தாதிலகிய வாடை முக்கோல் கொடு சீர் யதியாய்‌
வந்தானுலகை மணவாள மாமுனி வாழ்விக்கவே (77)

வாழ்வைப் பெரிதென வெண்ணி நையேலதுவான்‌ மினினும்
தாழ்வுற்றழி தருந்தன்மை யதாதலிற் சார்ந்திலர்‌ நூல்‌
சூழ்வுற்ற ஞானியர் நெஞ்சே வெறுத்தச்சுதனருட் க
ணாழ்வுற்ற கோயின் மணவாள மாமுனிக்கன்பு கொள்ளே (78)

அன்பே யுருக்கொடு நின்‌றது போனின்றனைத்‌ தயிர்க்குந்
துன்பே யகற்றி யறத்தே பயிற்றி யித் தொல்லுலகி
லின்பே கொடுக்கு மணவாள மாமுனி யிங்கு வந்த
பின்பே வருத்தந் தவிர்‌ந்தாரெமனும் பிரமனுமே (79)

மன மாசகற்றத் திருவரங்கேசன் மகி தலத்திற்‌
றனமா யுகந்த விராமாநுச னிரு தாளிணை மீக்
கென மா வெழுந்து மணவாள மாமுனி காதல் கொடு
தினமே பொழிந்த கலி யன்றி யுண்டு கொல் செப்புதற்கே–80-

செப்பார் குணத் தெம்மிராமாநுசன்‌ தன்‌ திருவடியை
யெப்போதும் வாழ்த்து மணவாள யோகியை யேத்தி யென்றுந்‌
தப்பாதவன் செய் திருவாய் மொழி நூற்றந்தாதியை யுள்‌
வைப்பார்‌ தமக்கிணை பாரீர் எவருண்டு மாதலத்தே (81)

தலத்தாரணந் தமிழ் தந்த நம்மாழ்வார் சரித்‌திர நூல்‌
வலத்தாசிரியா்‌ தம் வைபவ மன்னர் வரன்‌ முறை யுண்‌
மலத்தாசகற்ற வுபதேச ரத்‌தின மாலை யென்றே
நலத்தாலுரைத்தான்‌ மணவாள மாமுனி நானிலத்தே (82)

நானினி வேண்டுவதுண்டு கொன் முற்றுணர் நாயக வுன்‌
பானினை வொன்றிப் பரவுவதன்றி யோர் பற்றுமின்‌றி
மேனிலை காண மணவாள மாமுனி மெய்ச் சுடேரே
நீ நிழல் போற் பிரியாதுறு மென்னுள நேர் செயவே (83)

செயலேதுமின்றி வருந்துயிருட் கொடு தேர்‌ தரவோர்‌
புயலேய் குணத் துலகாரியன்‌ செய்த பொருவில் கலை
யயலே புதைத்த மணி போற் கிடந்த வரும் பொருளி
னியலே விரித்தான்‌ மணவாள மாமுனி யெந்தை வந்தே (84)

எந்தை யிராமாநுசனடிப் போதை யெப்போது மெண்ணுஞ்‌
சிந்தையன் கோயின்‌ மணவாள யோகி தெளிதர முன்‌
செந் தமிழ் வேதத் தரும் பொருளீட்டுள சிர்மை யெலாந்
தந்தனன் காண் பிரமாணத் திரட்டென்ற சாத்திரத்தே (85)

சாத்‌திரங் கற்றும் பிறர்க்குரைத்தும் மதிற்றா மடங்காக்‌
கோத்திரரோடும் குலாவுதல் விட்டுக் குருகைப் பிரான்‌
வாய்த்திரங் காட்டு மறைப் பொருண் முற்றும் வழங்க வந்த
பாத்‌திரன் கோயின்‌ மணவாள யோகியைப் பற்று நெஞ்சே (86)

பற்றா மனிதரைப் பற்றிய தாலென் பயனுளது
நற்றா யென வெழுந்தாரு யிர்க்கின்ப நலங் கொடுக்குங்‌
கற்றார் பரவு மணவாள மாமுனி நான்‌ மலரை
யுற்றா லொழியும் பவத்தே வருத்து நும் மூழ்வினையே–87-

ஊழிக் கடுங்கனற் குள்ளுற்ற மான் போலுலைந் துலைந்து
தாழிப் பெரு வயிற்றோடுழல்வீர் நிதி தா வெனப் போ
யாழிப் புவிக்கரசானவர் பாலிரந்தால் வருமோ
வாழிப் பதநம் மணவாள யோகியை வாழ்த்தலற்றே–88-

௮ற்றவர் போற்று மணவாள யோகி யருளிய நூன்‌
முற்றுமிந் நூலிடை முற்றிலவே யெனின் மூதுலசைச்‌
சிற்ற வரங்கை யுட் சேர்ப்பதற்கா மெனிற் சிந்து வைக்கை
யிற்றவர் நீந்துதற்கே யுமென்றாலிதிலே யுமன்றே–89-

ஏயும் குணத்து மணவாள யோகி யிருந் தெண்மரைத்‌
தீயுமு யிர்க்குத் தன்‌ போலருள் செய்ய வெண்டிக் கயங்க
ளாயும் பரமத சிங்கங்களாயு மமைத்திலனேன்‌
மாயன் பொருளென்று ரைப்பதர்காங் கொலிம் மானிலத்தே-90-

மானிலத்தோங்கு தென்‌ சீ வர மங்கை வளம்பதி யுண்‌
ஞானியர் போற்று மிராமாநுச முனி நாயகத்தை
யீனமிலென் போலியர்‌ தமைக்காக்க வினிது வைத்தான்‌
கோனிலை கொண்ட மணவாளயோகி குணக்கடலே–
91-

கடலாடை மான்‌ முலை போன்‌ மலி வேங்கடக் கார் வரைக் க
ணடலாழி யங்கைப்பெருமான் பணி கொடிங் காருயிர்க
ளிடராழி நீந்த விராமாநுசமுனியை யிருத்திச்
சுடராயிலங்கு மணவாள யோகி சுகிர்‌தமென்னே-92-

சுகத்தே யுலகத்‌துயிர் வாழ்‌ தரத் திருவுள்ளம் வைத்திச்‌
செகத்தே பரவத்தூர்ப் பட்டர் பிரானெனுஞ் சீயரைக் கொண்‌
டகத்தேய் பவத்தை யறுத்து விட்டான் குருகாதிபன் சொன்‌
முகத்தே யிலகு மணவாள யோகி முறை தெரித்தே–93-

முறையோர்ந்திலா துழல்வார்‌ தமைக் கண்டுமுதமொடவர்‌
கறையே யகற்றி யுணர்வே பயிற்றிக் கதி தருவான்‌
குறையேதுமின்‌றி நம் கந்தாடை யண்ணனைக் கோயிலுக்கோ
ரிறையாக வைத்த மணவாள யோகி யன்பென் சொல்வனே–94-

சொல்லு மெறும்பி யப்பா வொடப் பிள்ளாரைத் தூவழிக் கட்‌
செல்லுங் குணத்‌தி னப்பிள்ளேயை நீரிச் செகத்‌துயிர்க
ளல்லும் பகலு மரியே துதித்திட வாக்குவிப்பா
னில்லு மினென்றான்‌ மணவாள மாமுனி நேசம் வைத்தே–95-

நேசித்து நம் திருமாலின் சமய நெறி யிகழ்ந்து
பேசித் திரியும் பிறமதத் தீயர்‌ தம் பேரடக்க
வாசற்ற பிரதிவாதி பயங்கர வண்ணனுக்கோர்‌
தேசைக் கொடுத்தான் மணவாள மாமுனி சிந்தை செய்தே-96-

சிந்திக்க விந்த மணவாள மாமுனி செய்தது போ
னந்‌தித்‌ திரைப் புவி மீதெவர் செய்தனர் நாமினி மேற்‌
பந்தித்த தொல் வினைக்குள்ளுற்று வாடும் பரிசுளதோ
வந்தித்து வாழ்த்‌தி வழி படுவாமென்‌ மட நெஞ்சமே–97-

நெஞ்சே நமக்கு மணவாள மாமுனி நீணிலத் திற்‌
செஞ்சேம முற்றிடச் செய்த விந் நன்‌மையைச் சிந்தித்திடி
னஞ்சேய் வினையு நலமாய் வீடுமொரு நாளுமதற்‌
கஞ்சேல் வருந்தே லிருப்பா யவன்‌ றனருள்
நயந்தே–98-

நயவேனினி யொரு தெய்வத்தை நாளுமந் நான்‌ மறையி
னியலே யுணர்த்து மிராமாநசனெனி லின்‌பமுற்றி
மயலே பெருகு மணவாள யோகியை வாழ்த்‌துவர் த
மயலே திரிந்தவர்க் காட் செய்ய வென்னுள மைந்ததுவே–99-

அமையார் புயத்திந்திரை வாழு மார்பனரங்கன் பதந்‌
தமையே யடைதனின்‌ றண்ணளியால் வரிற் சார்வதல்லா
லெமையே யழைத்த வனீயினும் வேண்வதில்லை கண்டாய்‌
கமையே நிறைந்த மணவாள யோகி யென் கற்பகமே–100-

கற்புக்கணிகலமாய மின்னார்‌ தம் கணவனல்லா
லற்புக் கிடங்கொடார் நற் பரனெய்தினு மன்னரைப் போற்‌
சொற்புத்தி நின்னடிப் போதன்றி யொன்றைத் தொழாது செல்வப்‌
பொற்புற்ற கோயின்‌ மணவாள யோகிப் புகழ்ப் பொருளே–101

பொருளைப் புதல்வரைப் பூமியை மாதரைப் போற்ற வுன்னி
மருளுற்றுலகில் வருந்து நெஞ்சே பொன் மதிலரங்க
னருளைப் புநைந்த மணவாள மா முனிக் கன்பு கொண்டாற்‌
றெருளுற்ற ஞானஞ் செறிவுற்று நற்கதி சேர்குலமே- (102)

சோராதகன்ற பெண்ணாண யிர்ப்பின்‌றி வந்தே பதிபாற்
றாரா யருளை யென வேண்டல் போல நின்றாளடைந்தேன்‌
சீரார் குணத்து மணவாள யோகி யுன்‌ சிந்தை யென்னோ
வோரா தகற்றிற் கதி வேறிலை யெனக்குத்தமனே– (103)

உத்‌தமன் கோயின்‌ மணவாள யோகியை யுன்னி யுன்னி
நிச்சமும் போற்று நெறியினர் தாடொழ நேச நெஞ்சில்‌
வைத்தவர் தாமத்‌ திருநாட்டிடையின் மலர்‌மகள் கோன்‌
கைத் தலத்தாலணைப் புண்டிருப்பாருட் களிப்படைந்தே (104)

அடைந்தேன் குருகை மணவாள மாமுனி யம்புயத்தாண்‌
மிடைந்தே யினியெனை தீண்டாது தீய வினை கடலைக்‌
கடைந்தேய முதிமையோர்க் கருண் மாயன் கதி பெற உள்‌
ளுடைந்தேய்‌ வருத்த மொழிந்தேனிகக் தெவரொப் பெனக்கே (105)

எனக்குற்ற செல்வ மணவாள மாமுனி யென்‌றிருப்பார்‌
மனக்குற்ற நீங்கி மலமற்று ஞான வழிக்கணின்று
செனக் குற்ற மாற்றிப் பின்‌றம் போலருள் பெறச் செய்து நம் மா
றனக்குற்ற மெய்ப்பதம் வேண்டிய போதவர் சார்குவரே – (106)

சார்தேனுனது சரணாம்புயத்தைத் தலைக் கொடிவ
ணார்ந்தே னுனதடியார்‌ தமக்காட் செய வன்பர் தந்நோ
யீர்ந்தே யருளு மணவாள யோகி யிதிற் பெரிதோ
பேர்ந்தே யொளிரும் திரு நாட்டிடை யுறும் பேரின்பமே (107)

இன்புற்ற ஞானத்தி ராமாநுசன்‌ தன் இணை யடிக் க
ணன்புற்று நீ யிங்கிருப்பது போல் அவனும் தினமும்
துன்பத்தை நீக்கி மணவாள யோகி யித் தொல்லுலகிற்‌
புன்பற்ற கற்‌றப் புனைந்தேன் சிரத்‌து நின் பூங்கழலே -(108)

பூமாதிலங்கு மணி மார்பரங்கர் புகழ்ந்‌திடத்தென்‌
பா மாறன் வேதத் தமிழின் பொருளைப் பகர்ந் தருளஞ்‌
சீமான் குருகை மணவாள மாமுனி சேவடியாம்
தே மா நிழலுண்ட டைவார் விடாய் கெடச் செய்திடுமே
(1

———————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ வைபவம்-ஸ்ரீ அமுதனின் அமுதம்-ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ருங்க ராஜம்-

July 26, 2025

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்.

அரங்கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றிப் பெறுத்தும் இரர்மாநுசன்

அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமன் இராமாநுசன்.

அருமுனிவர் தொழுந்தவத்தோன் இராமாநுசன்

அருள்சுரந்தெல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந்த இராமா நுசன்.

அற்புதன் செம்மை இராமாநுசன்.

அறம்சீறும் உறுகலியைத்துரக்கும் பெருமை இராமாதுசன்

அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவந்து
இப்படியைத்தொடரும் இராமாநுசன்.

இராமாயணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமாநுசன்.

இருள்கொண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்த இராமாநுசன்

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து அறஞ்செப்பும்
அண்ணல் இராமாநுசன்

இன்புற்ற சீலத்து இராமாநுசன்.

ஈட்டிய சீலத்து இராமா நுசன்.

ஈன்கவிகளன் பால் மயல்கொண்டுவாழ்த்தும் இராமாநுசன்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல்
இராமா நுசன்.

உணீர்வின் மிக்கோர் தெரியும் வண்கீர்த்திஇராமாநுசன்.

உண்மைநன் ஞானமுரைத்த இராமாநுசன்.

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்ற இராமாநுசன்.

உலகோர்களெல்லாம் நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காமாறுவந்த
அண்ணல் இராமாநுசன்.

ஊழி முதல்வனையே பன்னப்பணித்த இராமாநுசன்

எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமாநுசன்.

எனக்குற்ற செல்வம் இராமாநுசன்.

ஒள்ளிய நுல் கற்றார் பரவும் இராமாநுசன்.

காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்படருங்குணன் இராமாநுசன்.

கார்கொண்ட வண்மை இராமாநுசன்.

காரேய்கருணை இராமாநுசன்.

கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்னஇராமாநுசன்.

கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்.

குறையல் பிரானடிக்கீழ்விள்ளாத அன்பன் இராமாநுசன்.

கொண்டலனையவண்மை ஏரார்குணத்து இராமாநுசன்.

கொல்லிகாவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன்.

கொள்ளக்குறைவற்றிலங்கிக் கொழுந்துவிட்டோங்கிய வள்ளல் இராமாநுசன்.

சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குஉதவும் இராமாநுசன்

சலியாப்பிறவிப் பவம்தரும் தீவினைபாற்றித்தரும் இராமாநுசன்.

சீரரங்கத்து ஐயன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியாமெய்யன் இராமாநுசன்.

சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் இராமாநுசன்

செம்மைநூற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி இராமாநுசன்.

செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் இராமாநுசன்.

ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறையவைத்தாளும் இராமாநுசன்,

தண்டமிழ்செய்தநீலன்தனக்கு உலகில் இனியான் இராமாநுசன்.

தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசன்,

தவம்தரும் செல்வும்தகவும்தரும் தீதிலிராமாநுசன்.

தன்னை எய்தினர்க்குத் தன்தகவென்னும் சரண்கொடுத்து வானம் கொடுக்கும்

திக்குற்ற கீர்த்தி இராமா நுசன்.இராமாநுசன்.

திசையனைத்தும் ஏறும்குணன் இராமாநுசன்.

திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும்
புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் இராமாநுசன்.

துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுசன்.

தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன்

தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமாநுசன்.

தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்பூண்ட அன்பாளன் இராமாநுசன்.

தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமாநுசன்

தென்னரங்கள் தொண்டர் குலாவும் இராமாநுசன்

நம் தலைமிசையே பொங்கிய கீர்த்திஇராமாநுசன்.

நல்தவர் போற்றும் இராமாநுசன்.

நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசன்.

நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமாநுசன்.

நினைவார் பிறவியை நீக்கும் பிரான் இராமாநுசன்.

பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாயமதமாய் விண்டிட
மெய்ம்மைகொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டிவந்தேன்ற இராமாநுசன்.

பரந்தாம மென்னும் திவந்தரும் தீதில் இராமாநுன்,

பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமாநுசன்.

பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதஉள்ளத்து இராமாநுசன்.

பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்று வீடளிப்பான் இராமாநுசன்

பழியைக்கடத்தும் இராமாநுசன்

பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடுங்கோனை முழு துணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன்.

பாவு தொல்ர் எதித்தலை நாதன் இராமாநுசன்.

ின்னைதன் காதலன்பாதம் நண்ணாவஞ்சர்க்கரிய இராமாநுசன்

புகழ்ப்பாண்பெருமாள் சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமாநுசன்

புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமாநுசன்.

புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமாநுசன்.

புன்மையிலோர் பகரும்பெருமை இராமாநுசன்

பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமனது
மாறன் அடிபணிந்துய்ந்த இராமாநுசன்.

பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருளென்றும் ஒள்வாளுருவி வெட்டிக்களைத்த இராமாநுசன்.

பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே இருந்தும் பரமன் இராமாநுசன்

பொய்தவம்போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞானத்து இராமா நுசன்.

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துறந்து இந்தப்பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன்.

பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசன்.

பொன்னரங்க மென்னில் மயலேபெருகும் இராமாநுசன் .

போற்றரும் சீலத்து இராமாநுசன்

மழிசைக்கிறைவன் இணையடிப்போது அடங்குமிதயத்து இராமாநுசன்

மன்பல்லுயிர்கட்சிறைவன் மாயனெனமொழிந்தஅன்பன் அனகன் இராமாநுசன்.

மாமலரான்புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் இராமாநுசன்

மாயவன் தன்னை வணங்கவைத்தகரணம் உமக்கன்றென்று
உயிர்கட்கு அரணமைத்த இராமாநுசன்.

மிக்கநான்மறையின் சுடரொளியால் கலியிருளைத்துறந்த இராமாநுசன்.

யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமா நுசன்.

வலிமிக்கசீயம் இராமாநுசன் கலிமிக்க செந்நெல் கழளிக்
குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்கப்பாடலை உண்டு உள்ளந் தடித்து அதனால் வலிமிக்கசீயம் இராமாநுசன்.

வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் இராமாநுசன்.

வாமனன் சீலன் (வாமன துல்ய சீலன்)

வேதத்தின் உச்சிமிக்கசோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்பேதமை தீர்த்த இராமா நுசன்.

வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை தன்னொம்
மாயன் வந்திருப்பிடம் இராமாநுசன்.

——————————————-

மணவாளமாமுன்களின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவரான எறும்பியப்பாவின் பெருமையைச் சொல்லவந்த ஒரு ச்லோகம் உலகில் ப்ரஸித்தமானது; அதாவது -“சடரிபுரேக ஏவ கமலாபதிதிவ்ய கவி: மதுரகவிர் யதா ச சடஜிந்முநிமுக்க்யகவி:, யதிகுலபுங்கவஸ்ய புவி ரங்கஸுதா கவிராட் வரவரயோகிநோ வரதராஜகவிச் ச ததா.’ என்பதாம். இதன் பொருள் யாதெனில், திருமகள் கொழு னான ஸர்வேச்வரனைக் கலிபாடித் துதித்தவர்களுள் நம்மாழ்வார் எப்படி சிறப்புப் பெற்றவரோ, அந்த நம்மாழ்வாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ, எம்பெருமானாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப்பெற்றவரோ, அப்படியே மணவாளமாமுனிகளைக் கவிபாடித் துதித்தவர்களுள் எறும்பியப்பா சிறப்புப் பெற்றவர் என்பதாம். உண்மையில், எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசப்பிறந்த நூல்களுள் திருவரங்கத்தமுதனார் திருவாய்மலர்ந்தருளிய இராமானுச நூற்றந்தாதிக்கு இணையானது எதுவுமில்லையென்று சபதமிட்டுரைப்பர் பெரியோர். சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்குமாகிய எந்நோக்கும் மிக அற்புதமாக வன்றோ நூற்றந்தாதியில் அமைந்துள்ளது.

ஆழ்வான் ஆண்டான் எம்பார்முதலான அந்தரங்கசிஷ்யர்கள் யாவரும் அப்பிரபந்தத்தை
உற்று நோக்கி, அதில் ஸ்வாமியின் திருவுள்ளவுகப்பையும் விசேஷித்தறிந்து மிக்க குதூஹலங்கொண்டு. “இப்பிரபந்தம் ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களோடொக்கப் பரிக்ராஹ்யமாம்படி நியமித்தருளவேணும்” என்று திருவடிகனப் பிடித்துக்கொண்டு பிரார்த்திக்க, ஸ்வாமி அதற்கு ஸஹஸா இசைந்தருளவில்லை. குசலவர்கள் பாடினதை ஸ்ரீராமபிரான் கேட்டருளி மிகவுமுகந்து “மமாபி தத் பூதிகரம்” என்று கொண்டாடின வரலாற்றை எடுத்துரைத்து அனைவரும் நிர்ப்பந்திக்க, இத்தனை பேருடைய குதூஹலத்திற்கு நாம் பங்கம் விளைக்கலாகாதென்று ஸ்வாமி திருவுள்ளம்பற்றி, அழகியமணவாளனுடைய நியமனத்தையும் பெற்று அப்படியே நியமித்தருளினார். ஸ்வாமி எழுந்தருளியிருந்த காலத்திலேயே இப்பிரபந்தம் ஸன்னிதிகளிலும் திருமாளிகைகளிலும் ஸேவிக்க உபக்ரமமாயிற்று. திருக்கார்த்திகைக்குப் பிறகு அநத்யயநக்ரமம் திவ்யப்பிரபந்தங்களுக்குப் போலவே இந்த நூற்றந்தாதிக்கும் அன்றுதொட்டு எங்கும் நிகழ்ந்து வரக் காண்கையாலே இதற்கு திவ்யப்ரபந்தத்தோடு ஸர்வாத்மநா ஸாம்யம் பூர்வாசார்ய ஸம்மதமாயிற்றென்பது அறியத்தக்கது.-மணவாளமாமுனிகள் இராமானுச நுற்றந்தாதியைப்பற்றி ஒன்றுமருளிச் செய்யாததேன்? திருவரங்கத்தமுதனார்க்கு நாள் பாட்டும் பணிக்கவில்லையே, ஏன்? என்று சிலர் கேட்பதுண்டு. ஸன்னிதிகளில் விக்ரஹப்ரதிஷ்டை பெற்றிருந்தவர்களுக்கே நாள் பாட்டு அருளிச்செய்யலாயிற்றென்பது ஸாரமான ஸமாதானம்.நூற்றந்தாதிக்கும் அமுதனார்க்குமாகவே உபதேச ரத்தினமாலையில் +இன்றுலகீர் சித்திரையிலேய்ந்த திருவாதிரை நாள்* என்று தொடங்கி மூன்று பாசுரங்கள் அருளிச் செய்தது. திருக்குருகைப்பிரான்பிள்ளான்,நஞ்சீயர், பெரியவச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர் முதலான ஆசார்யர்களைப் பற்றியும் உபதேசரத்தினமாலையில் ப்ரசம்ஸையிருந்தாலும் அவர்கள் அவதரித்தமாதமோ நக்ஷத்ரமோ அதில் பேசப்படவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் பணித்தவர்களுக்கு மாத்திரமே*மாதங்கள் நாள்கள்தமை மண்ணுலகோர்தாமறிய ஈதென்று சொல்லியுள்ளார். அந்த வரிசையில் ”சித்திரையில் செய்ய திருவாதிரை” என்று நாள் பாட்டு அமைத்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். திவ்யப்பிரபந்தமருளிச்செய்யாத எம்பெருமானார்க்கு மதுரகவிகட்கடுத்தபடியாக நாள் பாட்டு அமைத்தது இராமானுச நூற்றந்தாதிக்காகவேயென்பது சொல்லவும் வேண்டுமா? எம்பெருமானார்க்கேயிறே விக்ரஹப்ரதிஷ்டையுள்ளது.நாலாயிரத்திற்கும் வியாக்கியானஞ் செய்தருளின் பெரியவாச்சான் பிள்ளை நூற்றந்தாதிக்கு ஏன் வியாக்யானஞ் செய்தருளவில்லையென்று சிலர் விமர்சிப்பதுண்டு.ஸ்தோத்ரரத்த்திற்கு வியாக்யானஞ் செய்தருளினவர் பஞ்சஸ்தவாதிகளுக்கு வியாக்கியானஞ் செய்தருளவில்லையென்பதனால் ஒரு குறையில்லையே, அதுபோலவே யிங்குமென்று ஸமாஹிதராகலாம். அமுதனாருடைய திருவம்சத்திலோருவர் நுற்றந்தாதிக்கு வியாக்கியான மிட்டிருந்தாரென்றும், அது லோபித்ததனால் மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினரென்றும் கேட்டிருந்ததுண்டு.-ஸ்வாமி காலத்திலே ஸ்வாமி நியமனங்கொண்டே கருட வாஹன பண்டிதர்பணித்த திவ்ய ரிசரிதத்தில் பதினெட்டாம் ஸர்க்கத்தில் (51)“ஸ்ரீரங்காம்ருதகவிராஹ ரங்கிப்ருத்ய; தச்சிஷ்யோ யதிபதிவைபவாநுபந்தம்,அந்தாதித்ரமிடகிரா மஹாப்ரபந்தம் காதாநாம் அம்ருதமுசாம் யுதம் சதேந.“என்னும் ச்லோக தில் இப்பிரபந்தத்தின் பெருமை பேசப்பட்டுள்ளது. இதன்பொருளாவது, திருவரங்கத்தமுதனார் அழுதப்பெருக்கான தமிழ் மொழிபாலே எம்பெருமானாருடைய வைபவங்களைப் பேசுகிற் நூற்றந்தாதி ப்ரபந்தத்தை யருளிச்செய்தாரென்பதாம்.(19.) உறுபெருஞ் செல்வமும் (29.) *கூட்டும் விதியென்று கூடுங்கொலோ ” (46.) கூறுஞ்சமயங்களாறுங்குலைய (54.) *நாட்டிய நீசச்சமயங்கள் மாண்டன* (64.) பண்டருமாறன் பசுந்தமிழ்* (88) * கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* என்கிற பாசுரங்கள் விசேஷித்து நோக்கத் தக்கன ஸ்ரீமந்நாதமுனிகள்,ஆளவந்தார் முதலான பரமாசார்யர்கள் திறத்தில் ஸ்வாமிக்கிருந்த பத்திப் பெருங்காதல்20, 21 முதலான சில பாசுரங்களில் பேசப்பட்டது. கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான திவ்ய தேசங்களிலுண்டான ஆதராதிசயம் 31,35, 42, 47. 49,76, 81, 91, 106 முதலான பாசுரங்களில் பேசப்பட்டடுள்ளது.

—————–

அத்வைத, விசிஷ்டாத்துவைதக் கோட்பாடுகளுக்குள்ளவேறுபாட்டை எடுத்துக் காட்டும் மாக்ஸ்முல்லர்-The Brahman of Sankara is itself impersonal.
Sri Ramanuja’s brahman is essentially a personal God-the all-powerful and all-wise ruler of the real world permeated and animated by his spirit, the brahman is endowed with all auspicious qualities-Saguna Brahman.-என்றெழுதுவார்.

ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரை சேர்
சீரணி சிந்தையினோம் சிந்தியோம் இனித் தீ வினையே”
-என்கிறஅலுஸந்தானத்தால் நம்மை உடையவருடைமை என்று காட்டியருளுகிறார் ஸ்வாமி தேசிகன் அப்படியே யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள்மன்னியதே’ என்று தம் வாசகங்களுக்கெல்லாம் உடையவர் ஸம்பந்தமுண்டென்று மகிழ்ந்து பேசுகிறார். ‘ப்ரணாமம் லக்ஷ்மணமுனி: பாதிக்ருஹ்ணாது மாமகம்’ என்று
காயிகமாக வணங்கி வாழ்த்துகிறார். இப்படியாகக் கரண த்ரய சரூப்யம் தமக்கு எம்பெருமானார் விஷயத்தில் ஏற்பட்டதை அநுஸந்தித்து இனியராகிறார்.

———–

ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜப்ருங்கராஜம்*-நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வண்டுகளை விளிக்கும்போது வீசுஞ்சிறகால் பறத்தீர் ” என்னும் பாசுரத்தில் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சோவிக்கும் வண்டுகளே என்றருளிச்செய்துள்ளார். எம்பெருமான் திருவடிகளிலே அஸ்.மதாதிகளைக்கொண்டு சேர்க்குந்திறமை எம்பெருமானார்க்கேயுள்ளது.-வண்டுகள் சிறகால் பறப்பது போல ஸ்வாமி யெம்பெருமானார் ஞானமனுட்டான மென்னுமிவற்றால் உயர்கதியடை பவர். *உபாப்யாமேவ பக்ஷாப்யாமித்யாதி-வீ சுஞ்சிறகால் பறத்தீர் * என்றவுடனே “விண்ணாடும் நுங்கட்கு எளிது என்றமையால் பரமபதமும் ஸ்வாமி யெம்பெருமானார்க்கு அதீனமான பொருள் என்பது காட்டப்பட்டது. ஸ்வாமியின் திருவடி ஸம்பந்தம் பெழுதவர்கள-்-வண்டுகளோ வம்மின், நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூவுண்டுகளித்துழல்வீர் “ என்பது. பூக்களானவை நீரிலும் நிலத்திலும் மரங்களிலும் புஷ்பிக்குமவை. தாமரை செங்கழுநீர் முதலானவை நீர்ப்பூக்களாம். மல்லிகை முல்லை முதலானவை நிலப்பூக்களாம். வகுளம் பாதிரி பாரிஜாதம் முதலானவை மரப்பூக்களாம். இவற்றில் தேனைப்பருகும் வண்டுகள்.
எம்பெருமானார்பக்ஷத்திலோ வென்னில்; நீர்ப்பூ என்பது வீராப்திசாயியான வ்யூஹபகவானைச் சொல்லி அவனிடத்துத் தோன்றிய பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களைக் கூறும்;
நிலப்பூ என்பது நிலத்திலவதரித்திருந்த ஸ்ரீராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களையும், நிலத்தில் நித்யமாக அமர்ந்திருக்கின்ற அர்ச்சாவதாரங்களையுஞ் சொல்லி, வி வாவதாரபரங்களான இதிஹாஸ புராணங்களையும் அர்ச்சாவதாரபரங்களான திவ்ய ப்ரபந்தங்களையும் அநுபவித்துக் களிப்பவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்றவாறாம் * மரத்திலொண்பூ வென்று எட்டாநிலத்திலுள்ள பரமபதநாதனைச் சொல்லி வேதவேத்யே பரே பும்ஸி என்கிறபடியே பரம புருஷ ப்ரதிபாதகமான வேதங்களைச் சொல்லி அவற்றையநுபவிப் பவரெம்பெருமானார் என்று காட்டும்.-வண்டுக்கு சஞ்சரீக மென்று. பெயர்; எப்போதும் திரிந்து கொண்டே யிருப்பது என்று பொருள், ஸ்வாமி யெம்பெருமானாரும் *ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜ
கிரிம் தார்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீநாராயணம்
நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீ ப்ரயாக மதுராயோத்யாகயாபுஷ்கரம் ஸாலக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமாதே ராமா நு ஜோயம் முனி
: என்கிறபடியே * உலகமேத்துங்கண்டியூரரங்கம்
மெய்யம் கச்சி பேர்மல்லை யென்றுமண்டி பதியேபரவித் தொழுந்தொண்டராயிருந்தவர்.

வண்டினங்கள் காமரங்களிசைபாடும் * என்றும், யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்* என்றும், வரிவண்டுதேதென வென்றிசைபாடும் என்றும் பணித்தபடியே வண்டுகள் யாழினிசைபோன்ற இசைகளைப் பாடுவதுபோல் *பண்ணார்பாடல் * யாழினிசைவேதம். என்னப்பட்ட திருவாய்மொழியின் கானத்தையே போது போக்காக வுடையராயிருந்தவர் ஸ்வாமி.”தமிழ்மறைகளாயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” பண்டருமாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனிவேழம்’ என்றவை காண்க-வண்டு எந்த ஸமயத்தில் எங்குச் செல்லவேணுமென்று நினைத்தாலும் தட்டுத் தடங்கலின்றியே புகுந்து ரமிக்கும்: ஸன்னிதியில் கர்ப்பக்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திருமுடிமீதும் தாராளமாகப்
புகக் காணுகின்றோம். அதுபோல, பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டுப் புகலரிய என்னும்படி திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து
தலை நுழைக்கவொண்ணாதபடி நெருக்க, மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்” என்னும்படியவதரித்தருளின எம்பெருமானார் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான எந்த திவ்யதேசங்களிலும் தடையும் சங்கையுமின்றிக்கே அதிகாரச் செல்வத்துடனே உள்ளே புகுந்து ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்து வாழ்ந்தவர்
. வண்டு சோலைகளிலேயே சுழலமிடும்; எம்பெருமானார் தாமும் *ஆராமஞ் சூழ்ந்தவரங்கம்* சிந்து பூ மகிழுந்திருவேங்கடம் விரையார்பொழில் வேங்கடம் என்னும்படியாகச் சோலைகள் மிக்க தலங்களிலேயே சுழலமிட்டவர்.-இப்படி மற்றும் பல பொருத்தங்களும் காண்க.வண்டுக்கு த்விரேப மென்று பெயர்: இரண்டு ரேபங்களையுடையது என்றபடி. ரேபமாவது ரகரம். வண்டுக்கு வாசகமான (ப்ரமர) சப்தத்தில் இரண்டு ரேபமிருப்பதால் இது பற்றியே (வண்டு) தவிரேபமெனப்பட்டது, ஸ்ரீ ராமாநுஜராகிற வண்டானது தன்னிடத்தில் இரண்டு ரேபமில்லையேயென்கிற குறையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே வாவர முனிகளாக மற்றோரவதாரம் செய்தருளின்படி ராமா நுஜத்திருநாமத்தில் ஒரு ரேபமேயாய், வரவர முனிதிருநாமத்தில் இரண்டு ரேபமிருக்கும்படி கண்டுகொள்வது.

வரிவண்டு தேதெனவென்றிசைபாடும் என்றும்,தென்னாதெனாவென்று வண்டுமுரல் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்தபடியே தே, தே என்று முரலும்
வண்டுகள். (அஹங்கார) மமகாரமுள்ளவர்கள் மே மே என்பர்கள். அது நீங்கினவர்கள்
தே தே என்பவர்கள். தவ, தவ. என்றபடி வெண்பல் தவத்தவர்
” என்ற திருப்பாவைப்
பாசுரத்தில் (தவ, தவ) என்பவர்கள் தவத்தவர்களாக விவக்ஷிதர்களாதலால் அங்ஙனே
மமகாரமற்றவர்களில் தலைவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்க.

திருமங்கையாழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் *வம்பவிழும் சண்பகத்தின்
வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் பலர்மேல்வைகு’
என்கிற பாசுரத்தினால் வண்டு
மகிழமலர்மேல் வைகியிருப்பதாகப் பாடினர். ஸ்வாமி யெம்பெருமானாரோவென்னில்;
*யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோதவாஸிதம் (யதிராஜஸப்ததி] என்கிற
படியே மகிழமலரின் நறுமணங்கமழும் திருவாய்மொழியில் வைகியிருப்பவர். நூற்றந்தாதியயில் *உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும், திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் புக்குநிற்குமிராமானுசன்’ என்ற பாசுரம் இங்கு
அநுஸந்திக்கவுரியது.வண்டுகள் சோலைகளிலும் தடாகத்திலும் மொய்த்துக்கொண்டிருக்கும். எம்பெருமானாராகிற வண்டு *வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினங்கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை யணிதிருவரங்கத்திலும், தாமரைநீள் வாசக்கடமென்றும், தயரதன்பெற்றமரதகமணித் தடமென்றும் ப்ரஸித்தமான ஹரிஸரஸ்ஸிலும் மொய்த்துக்கொண்டிருந்தமை ப்ரஸித்தம்.வண்டு எங்குப் புகவேணுமானாலும் தடையொன்றுமின்றியே புகும்.
எம்பெருமானுடைய கர்ப்பக்ருஹத்தினுள்ளும் திருமேனியின் மேலும் தட்டுத்
தடங்கலின்றியே புகும். எம்பெருமானாராகிற வண்டும் அப்பனுக்குச் சங்காழி
யளித்தருளும் பெருமாள்* என்னும் மூதுரையின்படியே திருவேங்கடமுடையானுக்குத்
திருவாழி திருச்சங்கு அளித்தருள நுட்பமானவழியாலும் நுழைந்தமை
ப்ரஸித்தம்.

ஸ்வாமி ராமாநுஜர் விஷயமாக அருளிச்செய்யப்பட்ட கிரந்தங்கள்:

1. ஸ்வாமி மணவாளமாமுனிகள் அருளிச்செய்த யதிராஜ விம்சதி

2. ஸ்வாமி திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ராமாநுஜ நூற்றந்தாதி

3. ஸ்வாமி வேதந்தாச்சார்யர் அருளிச்செய்த யதிராஜ சப்ததி

4. ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ அதிமாநுஷ ஸ்தவம்

5. ஸ்ரீ முதலியாண்டான் அருளிச்செய்த தாடீபஞ்சகம்

6 ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் அருளிச்செய்த ஸ்ரீ ராமாநுஜ சது: ஸ்லோகி

7. ஸ்ருதப்ரகாஸிகாசார்யர் அருளிச்செய்த ப்ரார்த்தநா பஞ்சகம்

8 ஸ்ரீ வடுகநம்பி அருளிய ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் மற்றும் ஸ்ரீ ராமாநுஜ அஷ்டோத்தர ஸத நாமாவளி

9 ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய ஸ்ரீ ராமாநுஜ ஸுப்ரபாதம் மற்றும் ஸ்ரீபாஷ்யகார மங்களம்

10. பகவத் ராமாநுஜ அவயவ ப்ரபாவம்

11. ஸ்ரீ எம்பார் அருளிய உடையவர் வடிவழகு பாசுரம்

12 பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் அருளிய எம்பெருமானார் வாழி திருநாமங்கள்

13 ஸ்ரீ காஞ்சி மஹாவித்வான் மஹாமஹிமோபாத்யாய ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய ஸ்வாமி, எம்பெருமானாருடைய பலவகைப் பெருமைகளை தெரிவிக்கும் விதமாக எழுதியருளிய
எம்பெருமானார் அறுபத்து இரண்டு-ஆகியவை ஆகும்.

 ஸ்ரீ ராமானுஜரது காலம், கலியுகம் பிறந்து 4118 வருஷங்களுக்குப் பின் பிங்கள வருஷம் சித்திரை மாஸம் சுக்ல பக்ஷம் குருவார பஞ்சமி ஆருத்திரா நக்ஷத்திரம் கர்க்கடக லக்னம் ஆயுஷ்மான யோகத்தில் ஆபஸ்தம்ப ஸூத்திரத்தை சேர்ந்தவராய் (பொது ஆண்டுக்கு 1017-1137) ஆதிசங்கரருக்கு (பொ.ஆ.பி. 788 – 820) பின்னால் ஸ்ரீபெரும்புதூரில்  அவதரித்தவர்- இவரது தாயார் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராகிய ஸ்ரீசைலபூர்ணரின் மூத்த சகோதரி காந்திமதி. இவர் தந்தையார் ஸ்ரீ பெரும்புதூரில் வசித்து வந்த ஆசூரி கேசவ ஸோமயாஜி. லக்ஷ்மணன் என்னும் பெயரினை குறிக்கும் வகையில் இளையாழ்வார் என இயற்பெயர் கொண்டார்.  16 வயதில் தங்கம்மாள் என்னும் பெண்ணுடன் விவாஹம்.
பாரதிதாசன் ஸ்ரீ ராமானுஜர் பற்றி …முக்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்இராமா நுசனை ஈன்ற தன்றோ?எனப்பாடுகிறார்.

கஜினி படையெடுப்பு பொ.ஆ.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1941), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59,  இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.

1097-1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய  கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்திரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia  Ghazanavit என பதிவுசெய்தால்  உறுதி செய்கிறது. 

      எனவே, டில்லியில் முஸ்லீம் சுல்தான்களின் ஆட்சி ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இல்லை என மறுப்பவர்களின் கருத்து உடைபடுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் உள்ள தகவல் உண்மையே, சரித்திரபூர்வமானதே. ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் டில்லி சுல்தான்களின் ஆட்சியில்தான் இருந்தது. 1097 க்கு முன், முஸ்லீம்களின் படையெடுப்பு மைசூர் வரை வந்து சென்றதை தொண்டனூர் கல்வெட்டு ஆதாரத்துடன் காட்டுகிறது.  (The life of Ramanuja by A. Govindacharya) இஸ்லாமிய படையெடுப்பில் திருநாராயணபுரம் பெருமாள் திருமேனி கொள்ளையடிக்கப்பட்டதும், பின் பெருமாள் விக்ரஹம் மூன்றாம் மசூத் அரண்மனையில் அவனது பெண் பீபியின் அன்புக்கு ஆளானதும் உடையவர் பெருமாள் விக்ரஹத்தினை மீட்டெடுக்க சென்றதும் வரலாறு..

ஸ்ருத்யர்த்த தத்துவ விஜ் ஞாத்ரே பக்தி மார்க்க ப்ரதர்சிநே I
இராமாநுஜாய முநயே மங்களம் புவி ஸாஸ்வதம் II

தேசமெலாம் உகந்திடதே பெரும்பூதூரில் ,
சித்திரையில் ஆதிரை நாள் வந்து தோன்றி *
காசினி மேல் வாதியரை வென்று ,அரங்கர்-
கதியாக வாழ்ந்தருளும் எதிராசா ** முன்
பூசுரர் கோன் திருவரங்கத்தமுதனார் , உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்றெட்டுப் பாட்டும் ,
பிழையறவே எனக்கருள் செய் பேணி நீயே .-பிரபந்த ஸாரம்

ராமானுஜரின்216 அடி சிலை பிரதமர் மோடி பிப்ரவரி 5ஆம் தேதி திறந்து வைத்துள்ளார் 45 ஏக்கர் வளாகத்துக்கு மத்தியில் அலமக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்துக்கான சிலை’ (Statue of Equality)என வர்ணிக்கப்பட்டுள்ளது . சிறப்பம்சங்கள்: இந்த சிலை முழுக்க முழுக்க பக்தர்களின் நன் கொடைகளைப் பெற்று சுமார் ரூ.1,000 கோடி செலவில்
வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்த பூமியில் 120 வருடங்கள்
வாழ்ந்ததை நிலனவு கூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு இந்த
சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.-கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தங்கம், வெள்ளி, தாமிரம் பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான
‘பஞ்ச லோக ‘ சிலைைாக நிறுவப்பட்டுள்ளது.உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப் பெரிய சிலையாக இருந்து வருகிறது.சிலை அலமக்கப்பட்டுள்ள 45 ஏக்கர் இந்த வளாகத்தில்108 திவ்ய தேசங்கள், இடம் பெற்றுள்ளன.-ராமானுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது –

“அனந்த: ப்ரதமம் ரூபம் த்விதீயம் லக்ஷ் மணஸ் ததா
பலபத்ர: த்ருதீயஸ் து கலௌ கஸ்சித் பவிஷ்யதி||”
காரேய் கருணை ராமானுசா என்பர் அமுதனார். மேகத்தை ஒத்த கருணையுள்ள மஹான்
மேகம் கடல்நீரை முகந்து வர்ஷிக்கும் -ஸ்வாமி ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் -உபய வேத ரஹஸ்யங்களை வர்ஷித்து அருளினார் ‘உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து சிஷ்யர்கள் உள்ள இடங்களிலே எல்லாம் சென்று உபதேசித்து அருளினார் -மும்மாரி தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய பேத அபேத கடக ஸ்ருதிகள் பரபக்தி பரஞான பரம பக்தி
ஹம்ஸோ யதா க்ஷீரமிவ அம்புரமிச்ரம் என்கிறபடி -நம் ஸ்வாமி
சாஸ்த்ரங்கள் ஸார அஸாரங்களைப் பிரித்து உபதேசித்து அருளினார்
சங்கமவை முரலச் செங்கமல மலர் ஏறி அன்னமலி பெடையோடு அமரும்
என்றபடி ஹம்ஸமானது சங்குகளில் முழக்கத்தை இனிமையாகக் கேட்குமா போலே ஸ்வாமியும் சிஷ்யர்கள் செய்யும் ஸ்துதிகளைக் கேட்டு எழுந்தருளியிருந்தார்.

என்ன செய்யப் போகிறோம் என்று அறியாமல் தவிக்கும் பொழுது வேடுவ
வேடுவச்சி உருவில் தேவாதிராஜனும், பெருந் தேவி தாயாரும் ஆட்க்கொண்டதை
நினைத்து புலம்பி அழுதார்.பின்பு தம்மைத் தேற்றிக் கொண்டு பெரு மகிழ்ச்சி யுடன் கீழே யுள்ள ஸ்லோகங்களால் தொழுதார்.
‘‘ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்ரம் ஹே க்ருஷ்ண, ஹே யாதவ ஹே ஸகேதி
அஜானதா மஹிமானம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி
யச்சாப ஹா ஸாந்த மஸக்ருதோஸி விஹாரம்ய்யாசன போஜனேஷு
ஏகோதவாய் யச்யுத தத்ஸமகவும் தத்ஷா மயே த்வாமஹம ப்ரமேயம்’’

‘‘அச்சுதனே ! உன்னுடைய இந்த மஹிமையை அறியாத நான்,
கவனமின்மையாலும், அன்பினாலும் உன்னை நண்பன் என எண்ணி, ஏ கிருஷ்ணா, ஏ யாதவா, நண்பா! என்று விளையாடும் போதும், படுத்திருக்கும் போதும்,உட்கார்ந்திருக்கும் போதும், உண்ணும் போதும், பலர் முன்னிலையிலும் உன்னை
அவமதித்திருக்கிறேனே , அவை அனைத்தையும் பொறுத்தருளும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்,’’ என்று அர்ஜுனனைப் போல் வேண்டிக் கொண்டார்.

முன்னே பிறந்து இறந்து மூது உலகில் பட்ட வெல்லாம்
என்னே மறந்தனையோ என் நெஞ்சே -சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி
-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்

ராமானுஜன் என் தன் மா நிதி -என்றும் ராமானுஜன் என் தன் சேம வைப்பு -அரங்கன் தந்தது சந்நிதிக்குள்ளே யதிசம்ஸ்கார விதியின் படியே அந்தப்புரத்திலேயே தம் பெண்டிரை வைப்பாரைப் போலவே வைத்து அருளினான்

————–

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா – வியாசர் எப்ப உபநிஷத் கடலை கடைவதற்காக பார்த்தாலும், தன்னுடைய மதி, ஞானத்தையே மத்தாக நாட்டிடுவர். தன்னுடைய ஞானத்தை மத்தாக நாட்டி, உபநிஷத்துக்களாகிய கடலைக் கடைந்து, ‘பாராசார்ய வசஸ்ஸுதாம் உபநிஷது துக்தாத்பி மத்யோத்க்ருதாம், சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி’, இப்பேர்ப்பட்ட அமிர்தத்த கடைஞ்சு குடுத்துட்டார்

“புண்யாம்போஜ விகாஸாய பாபத்தாம் தக்ஸயாயச ஸ்ரீமான் ஆவிர பூத்பூமவ் ராமானுஜ திவாகரஹ”,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி-எதிராஜரை நடுநாயகக் கல்லாக வைத்துத்தான் இந்த அட்டியல்,-தேகழி தீபந் நியாயம்’னு பேரு. தேகழி – இடைகழி, தேகழி தீபம்-னா, இடைகழியிலே வைக்கப்பட்ட தீபம். அப்படின்னா என்னன்னா, இராமானுஜரோடே சம்பந்தத்தினாலேதான் அவருக்கு முற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம். அவரோட சம்பந்தத்தினாலேதான் அவருக்கு பிற்பட்ட மாணிக்கங்களுக்கும் ஏற்றம்

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி, இந்த சூத்திர கணக்கு வேணும்ன்னா, செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை. சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ? प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545. அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி
ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு

நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா
தேசிகர் தன்னுடைய எதிராஜ சப்ததியிலே சொல்லும்போது, இதம் அகிலதமக் கரிசனம் தரிசனம் நமஹ. த்ராதம் சம்யது யதீந்த்ரைஹி.

இராமானுசருடைய விக்கிரகத்தை ஏற்படுத்தி, மதுரகவி ஆழ்வார் மூலமாக, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி, அதுல இராமானுசர் விக்ரகம் வர, அத நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகக் கொடுத்ததே, நம்மாழ்வார்தான். ‘பவிஷ்யதாச்சார்ய வரசொரூபம் தம்காரீசூணு சரணம் ப்ரபத்யே’-ன்னு, ‘காரீசூணு’ன்னு நம்மாழ்வாருக்குப் பெயர். அவர்தான் இந்த பவிஷ்யதாச்சார்ய விக்கிரகத்தயே கொடுத்தார்

பூ மன்னு மாது – புஷ்பத்திலே எப்போதும் எழுந்தருளியிருக்கக்கூடிய மகாலக்ஷ்மி, மாது பொருந்திய மார்பன் – மகாலக்ஷ்மியை திருமார்பிலே கொண்டிருக்கிற ஸ்ரீமந் நாராயணன். மார்பன் புகழ் மலிந்த பா – ஸ்ரீமந் நாரயணனோட வைபவத்தைச் சொல்ற திருவாய்மொழி, பா மன்னு மாறன் – அந்த திருவாய்மொழியைப் பாடின நம்மாழ்வார், மாறன் அடி – நம்மாழ்வாருடைய திருவடி, அடிபணிந்துய்ந்தவர் – அந்தத் திருவடியைப் பற்றியே வாழ்ந்த இராமானுசர்.

பண் தரு மாறன் பசுந்தமிழ் * ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து * அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன்

பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே

அவர் எழுதினவை ஒன்பது கிரந்தங்கள், நவரத்தினங்கள்ன்னு சொல்லுவர்கள். வேதார்த்த சங்க்ரகம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், ஸ்ரீபாஷ்யம், சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், கீதாபாஷ்யம், நித்யக்ரந்தம், என்று ஒன்பது கிரந்தங்களைச் சுவாமி சாதித்தார். ஒன்பதுமே ஒன்பது இரத்தினங்கள்தான். இரத்தின இரத்தினமான கிரந்தங்களை, இரத்தினத்திலே நாயக இரத்தினமான இராமானுசர், இரத்தினமான, இராம இரத்தினமாய், கோபால இரத்தினமாய், ரங்க இரத்தினமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கரத்தினத்திலே எப்போதும் சேவை சாதிக்கக்கூடிய எம்பெருமானுடைய திருவடிகளுக்கு, இரத்தின ஹாரமாகவே சமர்ப்பித்தார். அந்த இரத்தினமான இராமானுசரை நாம் பற்றினோமென்னால், நாம் வெறும் கண்ணாடிக்கல்லாக இருந்தாலும், நாமும் ஸ்ரீவைஷ்ணவ இரத்தினமாக ஆக்கப்படுகிறோம், என்பது நம் சம்ப்ரதாயத்திலே தேறிய உண்மை.

அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்கும் எண்ணாங்கு உரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவும் அவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தான் உடையோன் வாழியே
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே

அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறு கலியைச் சிறிதும் அறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே

சங்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கயராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே!


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்

November 25, 2024

திருநக்ஷத்ரம் : பங்குனி ஹஸ்தம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன் : கூரத்தாழ்வான்
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம்
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே
-தனியன்:

பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார். பௌரோஹித்யமாவது கோயிலில் பஞ்சாங்கம், புராணம் வாசிப்பது வேத விண்ணப்பம் செய்வது முதலியன. முதலில் இவர் எம்பெருமானாரின் கோயில் சீர் திருத்த முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் மனம் மாறி, அவர் அருளுக்குப் பாத்ரபூதரானார்.

பெரிய பெருமாள் எம்பெருமானாருக்கு உடையவர் எனும் திருநாமம் சூட்டி, சந்நிதி க்ரமங்களைச் சீர்படுத்தத் திருவுள்ளமானபோது, பெரிய கோயில் நம்பி எம்பெருமானார் பக்கல் சற்று உதாசீனராய் இருக்கவே, ஸ்வாமி திகைப்பூண்டு என் செய்வோம் என்று கவலை கொண்டிருந்தார். அவரை அப்பதவியிலிருந்து விலக்குவதே சரியான உபாயம் என ஸ்வாமி திருவுள்ளம் பற்றியபோது ஒருநாள் புறப்பாட்டின் போது பெருமாள் ஸ்வாமிக்குப் பெரிய கோயில் நம்பி தமது நெடுநாள் அந்தரங்கக் கைங்கர்யபரர் என உணர்த்தினார்.

எம்பெருமானார் கோயில் நம்பி பால் தமக்குள்ள வருத்தம் நீங்கி, ஆழ்வானைக் கொண்டு அவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளமாகி நம்பியே சீர்திருத்தங்களை ஆதரிக்குமாறு செய்தார், ஆழ்வானின் உபதேசங்களால் மனம் மாறிய நம்பி, எம்பெருமானாரிடம் சிஷ்யராக விரும்பினார். ஆழ்வானால் அவர் திருத்தப்பட்டதால், எம்பெருமானார் அவரை ஆழ்வானுடைய சிஷ்யராகவே ஆக்கினார். அவர் ஆழ்வானின் சிஷ்யரானபின் அவரது அபார கவிதா சாமர்த்யத்தைப் பற்று ஸ்வாமி தாமே அவர்க்கு அமுதனார் என்னும் திருநாமம் சாற்றினார், இதன்பின் அமுதனார் ஆழ்வானிடமும் எம்பெருமானாரிடமும் அளவிறந்த பக்தி பூண்டொழுகலானார்.

அமுதனார் பெரிய கோயில் நிர்வாகத்தை எம்பெருமானாருக்கு ஸமர்ப்பித்தல்

அமுதனாரின் தாயார் பரமபதித்தபோது, அவரது சரம கைங்கர்யங்களில் ஒரு பகுதியாகப் பதினோராம் நாள் செய்யப்படும் ஏகாஹத்தில் பங்குகொள்ள  ஒரு ஸ்ரீ  வைஷ்ணவரைத் தேடினர் , அந்நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர் இறந்தவரின் பிரேதமாகக் கருதப் படுவார். மேலும் ஓராண்டு  காலம் அவர கோயில் கைங்கர்யம் எதுவும் செய்ய முடியாது, எம்பெருமானார் நியமனப் படி ஆழ்வான் அந்த ஏகாஹத்தில் அமர்ந்தார். அந்த ஸ்தானத்தில் அமர்பவர் த்ருபதோஸ்மி (த்ருப்தி அடைந்தேன்) என்று சொன்னாலே ச்ரார்த்தம் சம்பூர்ணமாகும் என்ற நியமமிருப்பதால், எம்பெருமானாரின் திருவாணைக்குப் பெரியகோயிலை உட்பட்டதாக்க வேணும் என்ற ஆர்ப்பத்தோடு, ஆழ்வான் நம்பியிடம் கோயில் திறவு கோல் கொண்டு சொல்வேன் என்று கூறி, கோயில்  கதவுச் சாவியைப் பெற்று நேரே எம்பெருமானார் மடம் சென்று தொழுது “தேவர் நியமித்த படி ச்ராத்த கார்யம் ஆயிற்று, சாவிகள் இதோ சமர்ப்பித்தேன் இனி கோயில் கார்யங்கள் ஸ்வாமி திருவுளப்படி” என்றார்.  எம்பெருமானாரும், பெருமாள் திருவாக்கை நினைந்து, கோயிலில் பௌரோஹித்யம் புராண படநங்கள் ஆழ்வான் வம்சத்தார்க்கும், திவ்ய ப்ரபந்த சேவைகளை அரையர்க்கும் ஆக்கி, இயற்பாவை அமுதனார் வம்சத்தார்க்காக்கி, அவை இன்றளவும் அவ்வாறே நடக்கிறது,

இராமானுச நூற்றந்தாதி தோற்றமும் பெருமைகளும்

இதன்பின் அமுதனார் எம்பெருமானார் விஷயமாக இராமாநுச நூற்றந்தாதி எனும் 108 பாசுரங்களை இயற்றி நம்பெருமாளுக்கும் எம்பெருமானார்க்கும் சமர்ப்பிக்க, அதை உகந்த நம்பெருமாள் அன்றைய புறப்பாட்டில் எம்பெருமானாரை வாராமல் தடுத்து, அந்தாதியை சேவிக்கச் சொல்லிக் கேட்டுகந்து,அதன்பின் அதை வழக்கமாக்கி சேவிக்க நியமிக்கவும், எம்பெருமான் திருவுளமறிந்த ஸ்வாமியும், நம்மாழ்வார் விஷயமான கண்ணிநுண் சிறுத்தாம்பு பூர்வர்களால் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டது போல, அதை இயற்பாவில் சேர்த்து எப்போதும் சேவிக்க நியமித்தார், இதுவே ப்ரபந்ந காயத்ரி என  ப்ரஸித்தி பெற்றது. யஜ்யோபவீதம் பெற்றோர் தினமும் காயத்ரி அநுஸந்தித்தல்போல்  ஸமாச்ரயணமானோர், ஸ்ரீவைஷ்ணவர், ப்ரபன்னர் எனப்படுவோர் இதை ஒரு முறையாகிலும் தினமும் அநுஸந்திக்கவேணும்,

இதில் இராமானுசர் திருநாமம் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவதால் இப்பெயர் பெற்றது, ஆசார்ய அபிமான  நிஷ்டர் அறிய வேண்டும் அர்த்தங்கள் யாவும் இதிலுள்ளதால், ஆசார்யன் (எம்பெருமானார்) சம்பந்தமடியாக எம்பெருமான் சம்பந்தம் நமக்குண்டு என்றும் எம்பெருமானார் திருவடித் தாமரைகளே நமக்கு உத்தாரகம் என்பதை இப்ரபந்தம் உறுதிப்படுத்துகிறது.

பேறொன்று மற்றில்லை எனும் 45ம் பாசுரத்தையும், நின்றவண் கீர்த்தி எனும் 76ம் பாசுரத்தையும்  வைத்து ஆசார்யர்களில் தலைவரான நடாதூரம்மாள் எம்பெருமானாரே ப்ராப்ய ப்ராபகங்கள் என்று அறுதியிட்டார், பெரியவாச்சான் பிள்ளை குமாரர் நாயனாராச்சான் பிள்ளை தம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html) ஸ்வாமியின் வைபவங்களை விளக்க இப்ரபந்தத்தைப் பரக்க உதாஹரிக்கிறார்,

மாமுனிகள் இதற்கு ரத்தினச் சுருக்கமான ஒரு திவ்ய வ்யாக்யானம் அருளியுள்ளார். அதன் தொடக்கத்தில் அமுதனார் மற்றும் நூற்றந்தாதியின் பெருமைகளை மிக அழகாக விளக்கியுள்ளார்:

ஆசார்யனையே சார்ந்திருக்கும் சரம பர்வ நிஷ்டையே திருமந்திரம், மற்றும் அனைத்துப் பாசுரங்களின் உட்பொருள். நம்மாழ்வார் விஷயமான தம் பிரபந்தத்திலும்  தம் அனுஷ்டானத்திலும் மதுரகவி ஆழ்வார் இதைக் காட்டினார், அமுதனாரும் மதுரகவி ஆழ்வார் போன்றே எம்பெருமானாரிடத்துத் தம் ப்ரதிபத்தியை வெளியிடுகிறார், ஆசார்ய நிஷ்டர்கள் தம் நிஷ்டையால் எம்பெருமானையே அடிக்கிறார்கள். இவர் எம்பெருமனாரின் நிர்ஹேதுக க்ருபையினாலும் ஆழ்வானின் கருணைமிக்க விடா முயார்சியாலும் திருத்தப்பட்டவர். எப்படி மதுரகவி ஆழ்வார்  11 பாசுரங்கள் மூலமாக தன்னுடைய ஆசார்ய நிஷ்டையை எல்லோருடைய நன்மைக்காகவும் வெளியிட்டாற்போலே, இவரும் 108 பாசுரங்கள் மூலமாக அனைவரும் ஆசார்ய நிஷ்டையைப் பற்றி அறிந்து கொண்டு அனுஷ்டிப்பதற்காக வெளியிட்டார். உபவீததாரிகளுக்கு காயத்ரிபோலே ப்ரபன்னர்களுக்கு இது என்று மாமுனிகள் திருவுள்ளம், ஆகையால் இது ப்ரபன்ன ஸாவித்ரி என்று அழைக்கப் படுகிறது,

அமுதனார் நிபுணத்வம்

அமுதனார் தென்கலையும் (தமிழ்) வடநெறியும் (ஸம்ஸ்க்ருதம்) திகழ்ந்த நாவர், அவரது அளவற்ற பாண்டித்யத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு:

திருவிருத்தம் 72ம் பாசுரத்தில் ஆழ்வார் நிலையை நம்பிள்ளை அப்பாசுரத்துக்கான தம் உரையில் விளக்குகிறார், பராங்குச நாயகி இரவில் எம்பெருமானின் பிரிவை உணர்கிறாள். நிலவில் விரகம் அதிகம், அப்போது குளிர் தென்றல் மேலும் கொடிது. இந்நிலையில் சிறு பிறை நிலா வரினும் இருள் விலகும். சேர்த்தியில் நிலவு இனிது, பிரிவில் பிறை நிலவும் கொடிது. இதை விளக்க அமுதனார் தரும் உதாரணம் சுவையானது. காட்டு வழியில் தனியே இரவில் சென்று கொண்டிருந்த ஒரு மெலிந்த பிராமணனை ஒரு கொடிய விலங்கு துரத்த, அவன் ஓடி ஒரு மரம் ஏறித் தன்னைக் காத்து கொண்டான். அப்பொழுது அவ்விலங்கை ஒரு புலி அடித்து உண்கிறது, பிராமணன் நிம்மதி அடையும் போது புலி மேலே மரத்தை நிமிர்ந்து பார்க்க அவன் அச்சம் பன்மடங்காகிறது போல், பிறை நிலவில் பராங்குச நாயகி பிரிவுத் துயர் இருளில் இருந்ததை விட மிகுந்து விட்டதாம்.

பட்டரும் அமுதனாரும்

பட்டர் தாம் ஞான வைராக்கியங்கள் மிக்க ஆழ்வான் குமாரர் என்பதில் செருக்குள்ளவர், இதை அவரே ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் வெளியிடுகிறார். அமுதனாரும் நூற்றந்தாதியுயில் “மொழியைக் கடக்கும்” பாசுரத்தில் ஆழ்வான் பெருமையைப் பரக்கத் பேசி ஸத்தை பெற்றார். ஒருக்கால் அமுதனார் வேறொரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் பட்டருக்கு, “நீர் ஆழ்வானோடு தேஹ சம்பந்தமுள்ளவர், அடியேனுக்கு அவரோடு ஆத்ம சம்பந்தமுண்டு காணும்” என்று தெரிவிக்க, பட்டர், “அந்தப் பெருமையை நீரே சொல்லலாகாது” என்கிறார். நம் பூர்வாசார்யர்கள் இவ்விஷயங்களை பெரிது படுத்தார், அமுதனார் ஆழ்வான் பக்தியிலேயே ஊன்றி இருந்தார். நம் பூர்வர்கள் மிகவும் அரிய சமயங்களில் சில மனவேற்றுமைகள் கொண்டிருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையுடன் வாழ்ந்து காட்டியது நாம் உணர்ந்து கைக்கொள்ளத்தக்கது.

ஆர்த்தி ப்ரபந்தத்தில் மாமுனிகள் 40ம் பாசுரசத்தில் நாம் ஆசார்ய பக்தியில் இடையறாதிருந்து எம்பெருமானாரிடம் சரணடைந்து, இராமானுசரடியார்களுடன் பொழுது போக்கி, இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தித்து சம்சாரக் கடலைத் தாண்டலாம் என்கிறார்.

இப்படி, நாமும் அமுதனாரின் மேன்மைமிகு சரித்திரத்தில் ஒரு சில துளிகளை அநுபவித்தோம். இவர் பாகவத நிஷ்டையில் நிலை நின்று, எம்பெருமானார் மற்றும் ஆழ்வானின் அபிமானத்தைப் பெற்றவர். நாமும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையை அடைய இவர் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

கோயிலின்‌ நடைமுறைகளில்‌ பழகியிருந்த பெரிய கோயில்‌ நம்பி என்பவர் தடையாக இருப்பதாகப் பலர்‌ ராமானுஜரிடம்‌ சொன்னார்கள்‌. அவரைக் கோயில்‌ நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால்‌, ராமானுஜரின்‌ எண்ணம்‌ நடக்காது என்றனர்‌. எம்பெருமானாரும்‌, கோயிலை நிர்வாகம்‌ செய்து வந்த கோவில்‌ பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்‌.

ராமானுஜர்‌ ஒரு நாள்‌ பெருமாள்‌ புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும்‌ போது, சற்று கண்‌ அயர்ந்தார். அரைத்தூக்கத்தில்‌, பெருமாள் தோன்றி “கோயில்‌ நம்பி என்னையே நம்பி என்னுடன்‌ இருக்கிறார்‌. அவரை வெளியேற்றாதே’ என்று சொல்லி மறைந்தார்‌. கூரத்தாழ்வானிடம்‌ இதுபற்றி சொன்னார் ராமானுஜர்‌. கூரத்தாழ்வானும்‌, பெரிய கோயில்‌ நம்பியிடம்‌ உடையவரின்‌ பெருமை பண்புகளைச்‌ சொல்லவும்,‌ கோயில்‌ நம்பிக்கு உடையவராகிய ராமானுஜர்‌ மீது பிடிப்பு வந்து அதுவே பக்தியாக மாறியது.


ஒருநாள்‌, ராமானுஜர்‌ அவரது இலக்கிய அறிவைப்‌ பாராட்டி”அமுதன்‌’ என்ற திருநாமத்தைச்‌ சூட்டினார்‌. அதனால்‌ திருவரங்கத்தமுதனார்‌ என்ற பெயர் நிலைத்தது‌. ராமானுஜர்‌ மீது கொண்ட பற்றால்‌ கூரத்தாழ்வானின்‌ அறிவுரையின்படி “ராமானுஜ நூற்றந்தாதி‘யை அமுதனார்‌ அருளினார்.

எல்லாப் பாசுரத்திலும் இராமானுசர் என்ற திருப்பெயர் வருவதால், இதைப் பாராயணம் செய்தாலே மாபெரும் புண்ணியம் கிட்டும்.

பெருமாள்‌ உலாவில்‌ உடன்‌ செல்லும்‌ பழக்கம்‌ உடையவராகிய ராமானுஜருக்கு உண்டு. சித்திரை மாதம்‌ 11
ஆம்‌ திருநாளில்,‌ ராமானுஜர்‌ கனவில்‌ பெருமாள்‌ தோன்றி, இன்று தாள வாத்தியங்கள்‌ வேண்டாம்‌ என்று சொல்லி மறைந்தார்‌. அன்று பெருமாள்‌ புறப்பாட்டின்‌ போது  தீப்பந்தங்கள்‌ மட்டும்‌ இருந்தன; ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச்‌ சேவித்ததைப் பெருமாள்‌ கேட்டுக்கொண்டு மகிழ்வுடன் சென்றார்‌. ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச்‌ சேவிக்கும்‌ போது கோஷ்டிக்கு வெகு அருகில்‌ பெருமாள்‌‌ தன்னையும்‌ ஒருவராக ஆக்கிக்‌ கொள்கிறார்‌ என்பது நம்பிக்கை. இன்றும்‌ திருவரங்கம்‌ கோயில்‌ ரங்கநாதர்‌ சந்நிதியில்‌ இயற்பா சாற்றி முடித்த பின்‌, அதனுடன்‌ ராமானுஜ நூற்றந்தாதியும்‌ சேவிக்கிறார்கள்.


திருவரங்கத்தமுதனார்‌ ராமானுஜரைக்‌ காட்டிலும்‌ மூத்தவர்‌ என்ற கருத்தும், 108 ஆண்டு காலம்‌ வாழ்ந்தார்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும்‌ ஸ்ரீ சுதர்சனர்‌ சந்நிதியில்‌ இந்த ராமானுஜதாசராகிய திருவரங்கத்து அமுதனார், சிலை உருவில்‌ இருக்கிறார்‌.

அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.

நாதமுனிகள் காலம் தொடங்கி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்து வந்தார்கள். சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுத்து, பிறகு அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலா வந்து. அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வருவதற்குப் பெயர் பிரம்மரத மரியாதை.

‘பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்’ ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தை( புத்தகம்) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.

அமுதனார் சன்னதி – ஸ்ரீரங்கம் கோயில்

அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்று கிழித்துப் போட்டுவிட்டார். பிறகு கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை ப்ரபந்ந காயத்திரி என்றும் சொல்லுவர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி ”இன்று என்னுடன் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். இந்த காரணத்தினால் இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. அதே போல் வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.

இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது.

திருவரங்கத்தமுதனார் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் அதிக வயதானவர் என்பதும், அவர் 105(108 என்றும் சொல்லுகிறார்கள்) ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதும் தெரிகிறது.. முதலாயிரத்தில் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ப் போல,இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச் சேர்த்தால் தான் நாலாயிர திவ்வியப் பிரபந்ததின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 வரும் என்பது இன்னொரு ஆச்சரியம்.

கிபி 1965க்குப் பிறகு அமுதனார் வம்சத்தவர்கள் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபடுவதில்லை. திருவரங்கத்தமுதனார் வம்சத்தவர்கள் இன்று அமெரிக்காவிற்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்து போய் விட்டதால், இயற்பா சேவிப்பதை அரையர்களே மீண்டும் செய்து வருகிறார்கள். ஆனால் திருவரங்கத்தமுதனாருக்கு ஏற்படுத்தப்பட்ட பிரம்மரத மரியாதையை அரையர்கள் பெற்றுக் கொள்வதில்லை.

திருவரங்கத்து அமுதனார் வாழ்ந்த திருமாளிகை (வீடு ) எங்கே என்று கண்டுபிடிக்க போன மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒருவரை விசாரித்ததில் ஸ்ரீரங்கத்தில் கிடையாது என்று அடித்து சொன்னார். பிறகு கோயிலுக்கு வெளியே வந்து சிலரிடம் விசாரித்ததில் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் விசாரித்தவர்கள் தினமும் கோயிலிலும் வீட்டிலும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவிப்பவர்கள். தொடந்து விசாரித்ததில் வடக்கு உத்திரவீதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் தென்கலை நாமம் போட்டுக்கொண்டு பூட்டிய வீட்டு திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த ஒருவரிடம் “திருவரங்கத்தமுதனார் வீடு இங்கே எங்கே இருக்கு?” என்றுகேட்டேன்.

அவர் காதில் என்ன விழுந்ததோ

“திருவரங்கத்துக் கொத்தனாரா ? ” என்றார்.

“இல்ல மாமா, திருவரங்கத்தமுதனார்…ராமானுஜ நூற்றந்தாதி எழுதியவர். அவர் வீடு இங்கே தான் எங்கோ இருக்குன்னு..சொல்றா.” என்றேன் தயங்கியபடி.

“தெரியலை, அவ வீட்டைப் பூட்டிண்டு எங்கோயோ போய்ட்டா, அவ வர்ற்த்துக்கு நான் காத்துண்டு இருக்கேன்…” என்று செல்போனை பார்த்துக்கொண்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

நான் இவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த எதிர்த்த வீட்டு பெண்மணி என்னிடம் தயங்கியபடி வந்தார்.
“என்ன சாமி, யாரை தேடறீங்க?” என்றாள்.

“நாமம் போட்டவருக்கே தெரியலை, இந்த அம்மாவிற்கு.. ஹும்..நோ சான்ஸ்” என்று மனதில் நினைத்துக்கொண்டு  “அமுதனார் வீடு” என்று சொல்லிக் கொண்டே, பைக்கை ஸ்டார்ட் செய்த போது “அமுதனார் வீடுங்களா ? அதோ அந்த வீடு தான்” என்றாள்.

“நீங்க எந்த அமுதனாரை சொல்றீங்க .. இவர்.. ” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க “சக்கரத்தாழ்வார் சன்னதியில் இருக்கும் அமுதனாரை தானே சொல்றீங்க, அதோ உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறாரே பெரியவர். அந்த வீடு தான் அமுதனார் வீடு” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்ப அந்த பெரியவர் யார் ?”

“அவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கார். அமுதனார் வாழ்ந்த வீடு ரொம்ப வருஷம் முன்பே கைமாறிவிட்டது..”

எனக்கு நிறைய விஷயம் புரிந்தது. மானசீகமாக அந்த பெண்மணியை சேவித்துவிட்டு கிளம்பினேன்.

அமுதனாரை பற்றி எழுதும்படி அப்பா சொன்னதற்கு காரணம் இது தானோ என்று யோசித்தவாறு கிளம்பினேன். கொஞ்சம் தூரம் சென்று, அமுதனார் வீட்டை திரும்பிப் பார்த்தேன். மனைவி வந்து பூட்டைத் திறப்பதற்காக, அமுதனார் வீட்டு திண்ணையில் கையில் செல்போனுடன் காத்துக்கொண்டிருந்தார் அவர்.

சாமாறும் கெடுமாறும் தமர்உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்துஅலற்றும் இவைஎன்ன உலகியற்கை?
ஆமாறுஒன்று அறியேன்நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
–4-9-2-

தமர் உற்றார் – சரீர சம்பந்தம் காரணமாக வந்தவர்களாய்த் ‘தாயத்தார்’ என்றும், ‘சம்பந்திகள்’ என்றும் சிலரை உறவாக நினைத்துப் பாரம் அற்றவர்களாய் இருப்பார்கள் ஆயிற்று; இஃது ஒழியவே, வேறே ‘தமர்கள் தமர்கள் தமர்கள்’ என்று ஓர் உறவு முறை உண்டாயிற்று இவர்க்கு-இவர் கேசவன் தமர் மாதவன் தமர் என்றே கொள்ளுவார் ஏமாறிக் கிடந்து அலற்றும் – ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.-அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.-ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகைஏமாறிக் கிடந்து அலற்றும் –
ஏ’ என்று ஏக்கமாய், மாறுகை – தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல்.
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை;
அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர்.பிள்ளை அமுதனார் பணிப்பர்.

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.
–5-1-7-

நித்திய சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் இருந்தேன் யான்.-பிள்ளையமுதனார், ‘அம்மான் ஆழிப்பிரான்’ என்று மேலே காட்டி, ‘யான் ஆர்’ என்று குறையச் சொல்லிக் காட்டுவர்.

போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே
.–6-1-6-

பிள்ளை யமுதனார், திரு விருத்த வரை மார்வனை,-‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச் செய்தது என்?’ என்ன,-‘தன் துன்ப ஒலி அவற்றின் செவியிலே படும் படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன,
“வானார் வண் கமுகு”,
“சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி. ‘நெய்தல் நிலத்திலே புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன,
அவன் பட்டர் பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன,
‘இவ் வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; -உச்ச ஸ்வரம் – அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச் செய்தார்.

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே
.-6-8-1-

உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ!
உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப் பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளை யமுதனார்.

உங்களுக்கு நான் சில செய்தேனோ! வெறும் உங்கள் நீர்மையாலே செய்தது அன்றோ.
பாண்டவர்களுக்குத் தூது போன கிருஷ்ணன் படியும்,
ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி!


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–99-108–

December 9, 2021

நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி போந்த பின்னே – – 99- –

மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –

விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் கண்ணனால் நீணிலதிற்கு வந்தது
அது வந்தது கருதிய காதலிக்காக –
விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் விண்ணனூரில் உள்ள கண்ணனால் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம் மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக
கற்பகம் வந்து நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .

————-

இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-
அதனது இயல்பினை -எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து
தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார் .

போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில் ஒண் சீ
ராம் தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –

உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று
கொண்டாடுகிறார் .பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது
மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்று –லஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர் –

தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது ஸூதநனின்
தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .
அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு இருக்குமாறு எம்பெருமானார்
தான் அருள் புரிய வேண்டும் என்று அவரிடம் அதனைப் பிரார்த்தித்தார் ஆயிற்று –

நம் ஆழ்வார் -எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -திரு வாய் மொழி -6 9-9 —என்கிறார்
இவர் எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று-

அனந்யார்க்க சேஷத்வம் -எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை
இங்கு அமுதனார் காட்டும் அழகு ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது

———–

இங்கனம் எம்பெருமானார் உடைய போக்யதையிலே நெஞ்சு படிந்ததும் -முன்பு தாம் அவர் திறத்து பண்ணின –
பாவனர் -தூய்மை படுத்துமவர் -என்னும் பாவனை குற்றமாகப் பட –
எம்பெருமானாரை நோக்கி தேவரீரது போக்யதையிலே ஈடுபட்டு இருப்பவர்களுக்கு-நான் -பாவனர் -என்னும்
பாவனையுடன் பேசினது குற்றமாக தோன்றும் என்று –நல்லவர்கள் சொல்லுவார்கள் என்கிறார்

மயக்கு மிருவினை வில்லியிற் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய வென்னைத் துயரகற்றி
உயக்கொண்டு நல்கு மிராமானுச என்ற துன்னை வுன்னி
நயக்கு மவர்க்கி திழுக்கென்பர் நல்லவ ரென்று நைந்தே – – 101- – –

தூயவன் தீதில் இராமானுசன் மாயும் என்னாவியை வந்து எடுத்தான் – 42- என்றும்
புன்மையினேன் இடைத் தான் புகுந்து தீர்த்தான் இருவினை -52 – என்றும்
பலகால் எம்பெருமானாருடைய பாவனத்வத்தை இவர் தானே அனுசந்தித்தையும் நினைவு கூர்ந்து
அவை அனைத்தையும் சேரப் பிடித்து –என்றது இது -என்கிறார்

அமுதம் போலே இனியர் என்றே அனுபவிப்பது நன்று-
சாணிச்சாறு போலே பாவனர் என்று அனுபவிப்பது ஏதமே என்பது -நயக்குமவர்கள் கருத்தாகும்-

————

இங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து –
தம் உட் கரணமும் -புறக் கரணங்களும் எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் .

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ
கேட்க வேண்டியது இல்லை -இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா நிற்கும் அன்றோ
இதனால் எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று –

ஞானம் கொடுக்கும் ஆசார்யன் நிரந்தர உறவு . ஆத்ம ஹிதமளிக்கும் ஆசார்யன் தந்தை போன்றவர்
இந்த உறவைக் குறிப்பிட்டு அமுதனார் எம் அய்யன் என்று அழைத்துப் பெருமைப் படுகிறார்.
கண் கருதிடும் காண-கண் காண எண்ணாமல், கண் கருதிடும் காண-
ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையனவாம்படி எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என்கண்ணே -திரு வாய் மொழி – 3-8 4-

———

எம்பெருமானார் தம் வண்மையினால் உமக்கு மட்டும் கரணங்கள் அனைத்தும்
தாமே தம்மிடம் ஈடுப்படும்படியாக உபகரித்தது எவ் வழியாலே என்பாருக்கு
என் கருமத்தை நீக்கி உபகரித்து அருளினார் -என்கிறார் .

வளர்ந்த வெங்கோப மடங்க லொன்றாய் அன்று வாளவுணன்
கிளர்ந்த பொன்னாகம் கிழித்தவன் கீர்த்திப் பயி ரெழுந்து
விளைந்திடும் சிந்தை யிராமானுசன் என்தன் மெய்வினைநோய்
களைந்து நன்ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – – 103 –

நரசிம்ஹப் பெருமாளுடைய இந்தக்கீர்திகள் -எம்பெருமானார் திரு உள்ளம் ஆகிற நன்செய்யுள் பயிராகி –
ஓங்கி வளர்ந்து விளைகின்றனவாம்-அவர் நெஞ்சுப் பெறும் செய்யுள் பேணப்படும் கீர்த்திப் பயிர்கள்
பெரியனவாய் யெழுந்து விளைந்து விடுகின்றன –
சிங்கப் பிரானுடைய குண அனுசந்தானத்தின்-விளைவு தான் எனக்கு அளித்த நல் ஞானம் என்பது அமுதனார் கருத்து .

அடியாருக்கு ஆபத்து வரும்கால் ஓடி வந்து காப்பதும், உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து நிற்பதும்,
அடியாருக்கு தீங்கிழைத்தால் சொல்லொணா சினம் கொள்வதும்… இப்படி வளர்ந்த வெம் கோபம் –
கீர்த்திப் பயிரை விளைந்திடச் செய்தார் -என்க .-மடங்கலானதும் ஒரு கீர்த்தி
சரணா கதற்கு தஞ்சமான தனமாக அனுசந்தித்த சீற்றம் -என் மெய் வினை நோயாம் இரணியனை களைவதற்கும் பயன்படுவதாயிற்று –
இங்கனம் அடியார்களைக் காக்கும் திறம் -பரத்வம் -முதலிய பிறவும்
சரண்யனுக்கு வேண்டிய குணங்களாய் அனுசந்திக்கப்பட்டு அச்சம் இன்றி நிறைவுடன் தெள்ளிய அறிவினராய்
வாழும்படி பலித்து -அவரைச் சார்ந்த எனக்கும் நல் ஞானமாய் பயன்படுகின்றன

—————-

உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக் காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ –
என்று எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு –
கண்ணனை நன்றாக காட்டித் தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை ஒழிய நான் வேண்டேன் –
இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எங்கும் உள்ள வ்யாபகனான கண்ணனை கையில் கனியைப் போலே உள்ளங்கையில்
அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார்
வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார்

தனக்கு புருஷார்த்தம் எம்பெருமானாரின் திருமேனி அழகே என்று அறிவிக்கிறார் அமுதனார்.
இராமானுசரின் மெய்யில் பிறங்கிய சீரை தான் கணண்ணை விட விரும்புவர் என்று தெரிவிக்கிறார் அமுதனார்
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே
அதனையே அமுதனார் மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து

———-

எல்லாரும் தோஷம் நிறைந்த சம்சாரத்தை அருவருத்து -பரம பத்திலே போய் இருக்க ஆசைப்படா நிற்பர் –
நீரோ -சம்சாரத்தையும் பரம பதத்தையும் ஓன்று போலேபேசா நின்றீர் -எங்கு இருப்பினும் சரியே என்றீர் .
நீர் போய் இருக்க ஆசைப்படும் இடம் தான் எது -அதனை சொல்லீர் -என்ன –அது தன்னை அருளிச் செய்கிறார் –

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

மாயன் திருவடிக் கீழ் விழுமவர் வேதியர்-
எம்பெருமானாரை தொழுமவர் நல் வேதியர் என்றது ஆயிற்று –
மாயன் திருவடிக் கீழ் வேதியர் விழுந்து இருப்பார் .
விழும் திருவடிகளை உடைய மாயனோ கண் துயில்பவன் .
எம்பெருமானார்பாதத்தை தொழுது பணி புரிபவராய் இருப்பர் நல் வேதியர் .
தொழப்படும் எம்பெருமானாரோ -காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் – 98-
என்றபடி கண் துயிலாதவர் –
எம்பெருமானாரை தொழுவது -சூழ்வது –
முதலியன செய்து எப்பொழுதும் அனுபவித்து கொண்டே இருக்கும் பெருமை வாய்ந்த பெரியோர்கள் –
அவ் அனுபவத்தால் உண்டான களிப்பு -உள் அடங்காது -இருந்த படியே இருக்க ஒண்ணாது
கிளர்ந்து எழுந்து ஆரவாரங்களைப் பண்ணிக் கொண்டு -பிரதம பர்வத்தில் -கும்பிடு நட்ட மிட்டாடி –
திருவாய் மொழி – 3-5 3- என்றபடி –கூத்தாடுகின்ற இடம் –
அவர்களது அந்நிலைக்கு அடிமை பட்டு விட்டவனாகிய-எனக்கு வாழும் இடம் ஆகும் -என்கிறார் .
அடியார்கள் குழாம் களுடன் அனுபவித்தற்கு வைகுந்தத்தில் வாழ -ஏனையோர் விரும்புவது போலே –
தொழும் பெரியோருடன் எம்பெருமானாரை அனுபவிப்பதற்கு அவர் எழுந்து அருளி உள்ள இடமே-
எனக்கு பேறான மோஷ பூமி -என்றது ஆயிற்று

————-

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் அமுதனாருடைய திரு உள்ளத்தை
மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி – அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய னிராமானுசன் மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக் கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்

இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும் என்பது மாயனது அவா –
ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –என்றபடி
வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள் வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று
அங்கனம் வாசம் பண்ண வரும் போது –தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து
இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை – மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது –
இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –

கையில் கணி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் என்று 104m பாசுரத்தில் ,
கண்ணன் கையில் கனிஎ ன்ன கிடைத்தாலும் வேண்டாம்-இராமனுசர் மெய்யில் பிறங்கிய சீரே வேண்டும் என்று உறுதி பூண்டார் அமுதனார்.
செழுந்திரைப் பாற்கடல் என்னும் அடுத்த பாசுரத்தில் இராமானுசர் அடியார் இருக்கும் இடமே தனக்கு இருப்பிடம் இடம் என்றார்
கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு
எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது

ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை – இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்-அவன் உகந்த ஈச்வரனோடும் தானாகவே இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –

இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 – யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும் சேவிக்கத் தக்கன

———–

தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம் ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை விண்ணப்பம் செய்கிறார் .

இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107-

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து

புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –

ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –

அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி –
உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .

————

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று
தாம் அருளிச் செய்த பேறு–தமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் –
அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக –
ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி
உயரினம் அனைத்துக்கும் சார்வாகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று
அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார்

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-
பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள் வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .

இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக
வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான மலர் மகளை போற்றிடுவோம் என்பது இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–89-98–

December 9, 2021

போற்ற முற்பட்டவர் -தகுதி யற்ற நான் புகழின்-தேவரீர் புகழ் மாசூணாதோ என்று தவிர்ந்து புகழின்
ஏற்றத்தை நிலை நிறுத்தலே நல்லது என்று தீர்மானித்தாலும் -என் மனம் தாங்குகிறது இல்லை .
போற்றியே யாக வேண்டி இருக்கிறது –
தேவரீர் நினைப்பு இவ் விஷயத்தில் எத் தகையதோ -என்று பயமாய் இருக்கிறது -என்று
தம் நிலையை எம்பெருமானார் இடத்தில் விண்ணப்பம் செய்கிறார் .

போற்றரும் சீலத்து இராமானுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேலது தாழ்வது தீரில் உன் சீர் தனக்கோர்
எற்றமென்றே கொண்டிருக்கிலும் என் மனம் ஏத்தி யன்றி
ஆற்ற கில்லாது இதற்கென்னினைவா என்றிட்டஞ்சுவனே – – -89 – –

என் கருவி மனம் -என் வசத்தில் இல்லை –
கருவியின் வசத்திலேயே நான் உள்ளேன் என்கிறார் -இதற்கு என் நினைவாய் –அஞ்சுவனே

பெரி யாழ்வார் வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா வுன்னை வாய்க் கொள்ள மாட்டேன்-
நாக்கு நின்னை யல்லால் லறியாது நனதஞ்சுவன் என் வசமன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று முனிவாய் யேலும்
என் நாவினுக்கு ஆற்றேன் — 5-1 1- – என்று அருளிச் செய்தது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது –

———–

எம்பெருமானார் கடாஷத்தாலே அச்சம் தீர பெற்ற அமுதனார் –மூன்று கரணங்களுள் ஏதேனும் ஓன்று கொண்டு –
எம்பெருமானார் திறத்தில் அநு கூலமான-செயலில் ஈடுபட்டு உய்யலாமே -அங்கன் உய்யாமல்
மாந்தர் பிறந்து படும் துன்பத்தில்-அழுந்து கிறார்களே -என்று பிறருக்காக வருந்துகிறார் .

நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந்நீணிலத்தே
எனையாள வந்த விராமானுசனை இருங்கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – – 90-

எம்பெருமானார் அருளுக்கு இலக்காகி பண்டைய அந்நிலை தவிர்ந்து-அவர் குணங்களை அனுபவிக்க வல்லனாய்
அவ் வனுபவத்தை இந்நூல் வடிவத்தில்-அடிவத்து தரும்படி பண்ணினதை நினைந்து -எனை ஆள –என்கிறார்

நினைத்தலும் புனைதலும் எம்பெருமானார் திறத்து செய்ய வேண்டியவைகளாகவும்
பூம் தொடையல் வளைதல் -எம்பெருமானாரை கவி பாடும் பெரியவர் திறத்து செய்ய
வேண்டியதாகவும் அமுதனார் அருளிச் செய்வது குறிக் கொள்ளத் தக்கது .
உத்தாரகரான ஆசார்யர் எம்பெருமானார் ஒருவரே ஆதலின் பிறவியை நீக்குவதற்காக
அவரே நினைக்க தக்கவர் ஆகிறார்

புனையும் பெரியவரை மட்டும் கூறி நினையும் பெரியவரை குறிப்பிடாதது கவனித்தற்கு உரியது .
நினைத்தால்- பிறர் அறியாது தனித்து செய்யப் படுவதாதலின் நினையும் பெரியவரை-அறிதல் அரிதே –
புனையும் பெரியவரையோ அவர்கள் இரும் கவியே காட்டும் ஆதலின்
அவர் தாள்களில்-பூம் தொடையல் வளைவது யாவர்க்கும் எளிதாகி விடுகிறது .
இங்கு நினைத்தல்- புனைதல்- வனைதல்கள் -முறையே
மனம் வாக்கு காயம் என்று மூன்று-கரணங்களின் செயல்களாக கூறப்பட்டு உள்ளன

——–

இன்னும் பிறப்பில் வருந்தும் மாந்தர் உய்வதற்காக எம்பெருமானார்
கைக் கொண்ட முயற்சியை-நினைவு கூர்ந்து அவரைக் கொண்டாடுகிறார் ..

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 —

தமோ குணம் அடியாக சொன்ன அவப் பொருள்-தூய சத்தவ குணம் அடியாக சொன்ன
நற் பொருளாக மாற்றப் பட்டது –
நல் ஆகமமான பாஞ்ச ராத்ரத்தின் படி -முடிய இடர் இலா வழியே -களி நடை நடந்து –
அரங்கனை வழி பட்டு -அந்தமிலா ஆனந்த கடலில் ஆழ முழுகுங்கள் என்று-
பாஞ்ச ராத்ர வழியில் உலகினை நடத்தும் கருத்துடன் அரங்கனை -எல்லா-உயிர் கட்கும் நாதன் -என்கிறார்
வைகுண்டத்தின் கண் உள்ள பரவாசுதேவனான-நாராயணன் அரங்கனே -எனபது எம்பெருமானார் கொள்கை .
வடிவுடை வானோர் தலைவனே – 7- 2- 10-

மிக்க புண்ணியன் இராமானுசன்-இருள் நீங்கப் பொருள் சுரந்தான் –

அரங்கனாம் -பெரிய பெருமாளும் -நீட்டிய திருக் கரத்தாலே -தன் திருவடிகளையே
உபாயமாகப் பற்றும்படி காட்டிய வண்ணமாய் பள்ளி கொண்டு இருப்பதனால் –
பாஞ்ச ராத்ரப் பொருளை விளக்கும் நிலையில் இருப்பதைப் பொறுத்து அரங்கனைப் குறிப்பட்ட தாகவுமாம்-

—————

தாமறியத் தம்மிடம் ஒரு ஹேதும் இல்லாத போது – தம்மை ஏற்று அருளுகைக்கும் –
பின்னர் கண் என்னும் வெளிக் கரணத்திற்கும் -நெஞ்சு என்னும் உட் கரணத்திற்கும் விஷயமாய் –
நிலை நின்று எழுந்து அருளி இருப்பதைக் கண்டு -மிக்க ஈடுபாட்டுடன் -இதனுக்கும் காரணம் -இன்னது
என்று அருளிச் செய்ய வேணும் என்று -எம்பெருமானார் இடமே கேட்கிறார் .

புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் -பெரிய திருவந்தாதி – 56-
என் கண்ணுள்ளும் -உலகியல் இன்பத்தில் நாட்டம் கொண்ட எண் கண்ணுக்கும் என் நெஞ்சுக்கும்-
தன்னை விஷயமாகக் காட்டி அருளுவதே -என்கிறார் .
கமலக் கண்ணன் என்கண்ணின் உளான் -திருவாய் மொழி – 1-9 8- –
மாயன் என் நெஞ்சின் உள்ளான் -திருவாய் மொழி -1 9-5 – – என்னும் நம் ஆழ்வார் அனுபவம்
அமுதனாருக்கு-எம்பெருமானார் விஷயத்தில் கிடைக்கிறது –
திருமாலே கட்டுரையே -திருவாய் மொழி – 3-1 1- – என்பது போலே இதனையும் கொள்க –
நிர் ஹேதுகமான தேவரீர் கிருபை தவிர வேறு காரணம் இல்லை -என்பது கருத்து .

—————

அவர் செய்யும் அவை யாவையும் -கருணை யன்றி வேறொரு-காரணம் அற்றவைகளாய் அல்லவோ -உள்ளன -என்கிறார் .

கட்டப் பொருளை மறைப் பொருளென்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரானல்லனே என் பெரு வினையைக்
கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி
வெட்டிக் களைந்த இராமானுசன் என்னும் மெய்த்தவனே – – -93 –

தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி –
ஸ்வா தந்த்ரியத்தால் அவனது அருளும் ஒரு கால் ஒளி மங்கி மழுங்கியும் போகக் கூடும்
எம்பெருமானார் உடைய அருளோ -அங்கனம் ஒரு காலும் ஒளி மங்கி மழுங்காத சாணை பிடித்த-வாளாய் –
அதனை ஒழித்துக் கட்டியே தீரும் -அது தோன்ற –தன் அருள் என்னும் ஒள் வாள் –என்றார் .
உருவி -என்றமையால் -அவ்வாள் இதுகாறும் வெளிப்படாமல் உறையில் இடப் பட்டமை தெரிகிறது –
சமயம் வரும்போது -அது வெளிப்படுகிறது -அமுதனாரை ஆட் கொள்ளும் சமயம் வரும் அளவும்-அதனை வெளிக் காட்டாது –
மறைத்துக் கொண்டு இருக்கிற எம்பெருமானார் உடைய சங்கல்பம்-என்கிற உறையில் இருந்து உருவப் பட்டது –
அருள் என்னும் ஒள் வாள் -என்க .

நம் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் – 26-யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல் வினையைக்-
கானும் மலையும் புகக் கடி வாள் -தானோர்-இருளன்ன மா மேனி எமமிறையார் தந்த-அருளென்னும் தண்டால் அடித்து -என்று
எம்பெருமான் தந்த அருளைத் தண்டாகக் கொண்டு வல் வினையை அடித்துத் துரத்துவதாக கூறினார் .
திரு மங்கை மன்னன் பெரிய திரு மொழியில் – 6-2 – 4- –
நீ பணித்த அருள் என்னும் ஒள் வாளுருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர -என்று
எம்பெருமான் பணித்த அருளை ஒள் வாளாக கொண்டு ஐம்புலன்களின் இடர் தீர எறிந்ததாக-கூறுகிறார்

நம் ஆழ்வார் வாள் ஏந்தாது அந்தணர் போல் சாந்தமாய் இருப்பவர் ஆதலின்-அவருக்கு அருள் தண்டாக கிடைத்தது
திரு மங்கை மன்னனோ ஷத்ரிய வீரர் போன்று-மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் — 3-9 10- –
ஆகையாலே அவருக்கு அருள் வாளாக கிடைத்தது .

அவர்கள் இருவரும் முறையே அடிப்பவர்களையும் எறிபவர்களாயும் தாமே யாயினர் .
அமுதனார்க்கோ அங்கன் அன்றி எம்பெருமானாரே தம் அருள் என்னும் வாள் கொண்டு
பெருவினையை வெட்டிக் களையும் படியான பெருமை கிடைத்தது –
நம் கூடஸ்தர் நமக்கு வைத்து இருக்கும் சொத்து சரணாகதி –அதுவே நமக்கு உஜ்ஜீவனம்

————–

எம்பெருமானார் -தம்மைச் சார்ந்தார்க்கு தவம் தொடங்கி திவம் முடிய அளிப்பரே யாயினும்–
நான் அவருடைய குணங்களை ஒழிய வேறு ஒன்றையும் விரும்பி அனுபவியேன்-என்கிறார் –

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

ஆச்சர்யணைக்கு கைங்கர்யம் பண்ணும் ருசி விளைவிப்பது செலவும் தகவும் தரும் என்னும் பதம்
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சி என்று ஆழ்வார் தாமும் எம்பெருமனிடமே கேட்டது போல் ,
இங்கு எம்பெருமானார் தாமே அளிப்பதாகக் இந்த பாசுரம்

ஸ்ரீ மான் ஆகிய எம்பெருமானார் நம் ஆழ்வாருடைய அழகிய இணைத் தாமரை யடியாக விளங்குகிறார் –
பகவானைப் பற்றிய நம் ஆழ்வார் -தம் வினைகள் கமலப் பாதம் காண்டலும் விண்டே ஒழிந்தன -என்றார் .
நம் ஆழ்வாரைப் பற்றிய மதுர கவிகள் -பண்டை வல் வினை பாற்றி யாருளினான் -கண்ணி நுண் – 7- என்றார் .
விண்டிடில் மீண்டும் உருப்படியாதலும் கூடும் .பாறு ஆக்கி விட்டாலோ தீ வினைகள்
மீண்டும் தலை தூக்க வழி இல்லை .ஆசார்ய அபிமானத்தின் வீறுடைமை இது.
மதுர கவிகளை அடி ஒற்றி –பாற்றித் தரும் -என்கிறார் அமுதனாரும்-

யான் அவன் சீர் அன்றி ஒன்றும் அருந்தேன் –
எம்பெருமானார் தரும் அவையான தவத்தில் இருந்து -திவம் உட்பட -யாதொன்றையும்
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிக்க மாட்டேன் –அவருடைய கல்யாண குணங்களையே
மன மகிழ்வுடன் விரும்பி அனுபவிப்பேன் -என்றதாயிற்று -அவைகள் வலுவிலே என் மடியில்
கட்டப்படில் தவிர்க்க ஒண்ணாது -நானாக மனம் மகிழ்ந்து விரும்பி அவற்றுள் ஒன்றினையும்
விரும்பி அருந்தேன் -என்கிறார் .
எம்பெருமானார் கல்யாண குணங்கள் அவ்வளவு இனிக்கின்றன அமுதனார்க்கு –
நம் ஆழ்வார் செங்கண் மாலை நோக்கி –நின் புகழில் வைக்கும் தம் சிந்தையிலும்
மற்றினிதோ நீ யவர்க்கு வைகுந்தம் என்றருளும் வான் -பெரிய திருவந்தாதி – 53- என்று-
அவன் தரும் வைகுந்தத்தினும் அவன் குணங்கள் இனிப்பதாக கூறுவதை இங்கே நினைவு கூர்க-

—————-

இவர் இவ் உலகத்தவர் அல்லர் -சம்சார சம்பந்தம் அறவே அற்று இருக்கும் நித்ய ஸூரிகளில் ஒருவர் –
வீடளித்து பிறரை உய்விப்பதற்க்காகவே அவதாரம் செய்தவராய் இருத்தல் வேண்டும் என்று
தீர்மானித்து அவதரித்து செய்யும் அவற்றை அனுசந்திக்கிறார் –-இந்தப் பாசுரத்திலே –

உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95 – –

குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து உயிர் களுக்காக இங்கே வந்து அவதரிக்கிறார்
ஸூர்யனுக்கும் கிழக்குத் திசையில் உதிக்கும் போது அத்திசைக்கும் எங்கனம் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லையோ –
அங்கனம் இம் மண்ணின் தலத்திற்கும்-அவருக்கும் யாதொரு தொடர்பும் உண்மையில் இல்லை என்றது ஆயிற்று
மண்ணின் தலத்து உதித்த -என்றதில்-மண்ணின் தோஷம் தட்டாத ஆற்றல் உடைமையும் –
உய் மறை நாளும் வளர்த்தனன் –-என்றதில் வளர்க்க வல்ல அறிவுடைமையும் தோன்றுமே
கீதையினைப் பரிஷ்கரித்து அதன் பொருளை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய
கீதா பாஷ்யம் -அருளிச் செய்வதற்கு என்றே எம்பெருமானார் பாரினில் அவதரிக்க வேண்டியதாயிற்று-
இப்படி எல்லாம் வல்ல பரனிலும் சீரிய முறையிலேயே அவதரித்து வேதார்த்த ஞானத்தை பரப்பி
உயிர் களை எல்லாம் உய்வித்து அருளுவதே –

————

நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான் என்கிறார் .

வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன் இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- –

மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினை –பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார்
இதனால் குழியைக் கடத்தும் கூரத் ஆழ்வானை அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே
நிஷ்டை கொண்டு உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று –
தேவு மற்று அறியேன் என்று எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து-

————

அவர் தம்மை உற்றவர் அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் – எவ்வாறு உமக்கு வந்தது
என்பாரை நோக்கி அதுவும் எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –

தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –

முதல் வாக்யத்தால் எம்பெருமானார் தம்மை ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஆழ்வான் தமக்கு
ஆசார்யனாகி -அவ் எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும் -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன
ஆழ்வான் எம்பெருமானார் விஷயமாக கவி பாடக்
கட்டளை இட்டாரே யன்றி தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
மொழியைக் கடக்கும் என்று ஓரிரு இடங்களில் ஆங்கங்கே கவி பட முடிந்தது அவ்வளவே
மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார்-

———-

எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –

நம் இராமானுசன் -நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது கருத்து

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம் –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது –
தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியும் –
பரதந்திர ச்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை –
சதத நிர்ப் பரனாய் இருக்கலாம் என்று கருத்து -என்னும் மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–79-88–

December 9, 2021

உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து
உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து –
வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும் குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார்

————

எம்பெருமானாரைத் தெய்வமாகப் பற்றும் அளவில் நின்றேன் அல்லேன் –
அவரையே தெய்வமாகப் பற்றி இருப்பாரைத் தமக்கு உரிய தெய்வமாக கருதிக் கொண்டு இருக்கும் அவர்களுக்கே
ஒழிவில் காலம் எல்லாம் வழுவிலா அடிமை செய்யும் நிலை வாய்க்கப் பெற்றேன் என்கிறார் இதனில் .

நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் யவர் அவர்க்கே
எல்லா விடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே – -80 – –

வீட்டின்பத்தையும் சம்சார பந்தத்தையும் -தருவது நாராயண சதுரஷரீ .
வீட்டின்பமொன்றினையே தர வல்லது ராமானுஜ சதுரஷரி –இதனால் இது சாதுர்யம் வாய்ந்தது

நம் ஆழ்வார் -திருமால் திருப்பேர் வல்லாரடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம் – 100- என்று தம்மை
சொல்லிக் கொள்கிறார் .இவரோ இராமானுசன் திரு நாமம் நம்ப வல்லாரை மறவாதவர்க்கு
அடிமை செய்பவன் நான் -என்று மேலும் ஒரு படி விஞ்சி தம்மை சொல்லிக் கொள்கிறார்

நம் ஆழ்வார் ஒழிவில் காலம் எல்லாம் ….அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பகவத் விஷயத்தில் கூறியதை –இவர் இராமானுசர் அடியார் திறத்து கூறுகிறார் –

——

இசைவில்லாமல் இருந்த தமக்கு -எம்பெருமானார் அருளாலே -ருசி உண்டாகியதை நினைத்து அவர் புரிந்த உபகாரத்தை –
நேரே அவரை நோக்கி – விண்ணப்பித்து -தேவரீர் கருனைக்கு ஒப்பு இல்லை -என்கிறார்

சோர்வின்றி வுன்தன் துணை அடிக்கீழ் தொண்டு பட்டவர் பால்
சார்வின்றி நின்ற வெனக்கு அரங்கன் செய்ய தாளிணைகள்
பேர்வின்றி யின்று பெறுத்தும் இராமானுச இனி யுன்
சீரொன்றிய கருணைக்கு இல்லைமாறு தெரிவுறிலே – – 81- –

அடியார்க்கு ஆட்படுதலும் –பேர்வின்றி அரங்கன் தாளிணைகளைப் பெறுதலும் –
இன்று எனக்கு பாகவத சேஷத்வத்திலே விருப்பம் உண்டாம்படி திருப்பத்தை ஏற்படுத்தின-
எம்பெருமானார் திருவருளால் கிடைத்த பேறுகள்-என்கிறார் .
பாகவதர்க்கே உரிமைப் பட்டது ஆத்மா -என்று எம்பெருமானார் உண்டு பண்ணின உணர்வு-
அடியாராகிய ஆழ்வானுக்கு அரங்கனால் ஆட்படுத்தப் பட்டு –
அரங்கன் தாளிணைகளை-பேர்வில்லாமல்-பெறும்படி செய்வதனால் -உரம் பெற்று நின்றது -என்க .
பாகவத சேஷத்வத்தை உணர்த்தி -அருளினதாக கூறாது –
அவ் உணர்வில் நிற்பார் பேர்வின்றி பெரும் அரங்கன் தாளிணைகளை பெறுவித்ததாக-கூறுவதனால்
அவ் உணர்வு உரம் பெற்று மிளிருவது காண்க –

பாகவத சேஷத்வத்தின் பயனாக அரங்கன் செய்ய தாளிணைகள் பெறுவித்ததாக கூறாமல்
நேரே பாகவத சேஷத்வத்தையே பெறுவித்ததாக உரை கூறலுமாம் –

———–

இன்று பெறுத்தும் என்று கீழ்க் கூறிய பேற்றினுக்கு உடலாகத் தமக்கு பண்ணின உபதேசத்தை
நினைவு கூர்ந்து -ஈடுபாட்டுடன் எம்பெருமானார் என்ன தார்மிகரோ-என்கிறார் –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

தெரிவுற்ற கீர்த்தி –
இன்னாருக்கு தெரிவுற்ற என்னாமையாலே -பூமி எங்கும் உள்ள பண்டிதர் பாமரர் என்கிற
வேறுபாடு இன்றி -எல்லோருக்கும் தெரிந்த கீர்த்தி -என்க –திக்குற்ற கீர்த்தி – 26- என்றார் கீழும்

இராமானுசன் என்னும் சீர் முகில்
சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக
சீர் -இங்கே வள்ளன்மை குணம்
வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் இராமானுசன் -என்க
குணம் திகழ் கொண்டல் – 60- என்று கீழும் முகிலாக எம்பெருமானார் கூறப் பட்டுள்ளமை காண்க .
சீரிய முகில் -சீர் முகில் -சீர் -அழகாகவுமாம் –

—————

பொருவற்ற கேள்வி -என்று உமது கேள்வி அறிவை சிறப்பிப்பான் என் – ஏனையோரும் கேள்வி அறிவு பெற்றிலரோ என்ன –
ஏனையோர் கேள்வி அறிவு பிரதம பர்வத்தை பற்றியதாதலின் -பகவானிடம் பிரபத்தி பண்ணி பரம பதத்தை அடைவராய்-நின்றனர் அவர் –
நானோ சரம பர்வத்தின் எல்லை நிலையான ஆசார்யராகிய தேவரீரைப் பற்றிய கேள்வி அறிவு உடையவனாக ஆக்கப்பட்டமையின் –
அவர் கூட்டத்தில் சேராது -தேவரீர் திருவடிகளையே பரம பதமாய் கொண்டு –
அதனை தேவரீர் வள்ளன்மையால் பெறுமவனாய் உள்ளேன் –இது என் கேள்வி யறிவினுடைய பொருவற்றமை -என்கிறார்

சீர் கொண்டு பேரறம் செய்து நல்வீடு செறிதும் என்னும்
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச ! இது கண்டு கொள்ளே – – 83-

எம்பெருமானாருடைய வண்மை கார் கொண்டது -அதாவது மேகத்தை வென்றது –
சிலருக்கு சில காலத்திலே மழை பொழிவது கார்
எல்லாருக்கும் எல்லாகாலத்திலும் பயன் படுவது வண்மை-ஆதலின் காரை வென்றது வண்மை
இது கண்டு கொள்
தேவரீர் வழங்க நான் பெற்றமை -வழங்கின தேவரீருக்கு தெரியாதோ –
ஏற்ற என் வாயாலே சொல்லிக் கேட்க வேணுமா என்கிறார் .
நான் கேள்வியினால் பிரபத்தி செய்து பகவானை அடைவார்கள் கூட்டத்தில் சேர்ந்திலேன்-
பொருவற்ற கேள்வியினால் ஆசார்யனுடைய அபிமானத்திற்கு பாத்ரமாகி எம்பெருமானார்-திருவடிகளையே
பெரும் பேறாக பெறுமவன் ஆனேன் –என்பது கருத்து .

———–

எம்பெருமானார் வள்ளன்மையாலே இனிமேல் பெற வேண்டியவை
ஒரு புறம் இருக்க -இதற்கு முன்பு பெற்றவை தாம் -ஒரு கணக்கில் அடங்குமோ –என்கிறார் .

கண்டு கொண்டேன் எம் இராமானுசன் தன்னை காண்டலுமே
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொற்றாளில் என் தொல்லை வெந்நோய்
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய் மடுத்தின்
றுண்டு கொண்டேன் இன்னுமுற்றனவோ தில் உலப்பில்லையே – -84 – –

காண்டலுமே –தொண்டர் பொற்றாளில்-
கண்ட மாத்திரத்திலே -அவர் அளவோடு நில்லாது அவர்க்கு ஆட்பட்டாருடைய
அழகிய திருவடிகளில் அடிமைப் பட்டு விட்டேன் -என்கிறார் .
அவன் சீர் —உண்டு கொண்டேன்
சீர் -குணம் அது வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து கடலாய் தோற்றுகிறது –
விடாய் தீர அக்குணக் கடலையே வாய் மடுத்து உண்டு கொண்டேன் என்கிறார்
இன்னம் -உலப்பு இல்லையே
இனி மேலும் நான் பெற்றவைகளை சொல்லிக் கொண்டே போனால் ஒரு முடிவே இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானாரை தொழும் பெரியோர்கள் திருவடிகளைத் தவிர
என் ஆத்மாவுக்கு வேறு ஒரு பற்று இல்லை -என்கிறார் .

ஓதிய வேதத்தின் உட் பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என வறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த விராமானுசனைத் தொழும் பெரியோர்
பாத மல்லால் என்தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – – 85- –

நாதன் என்னும் அறிவை -ஊட்டி -அறியாமை தீர்த்து -அருளினார் எம்பெருமானார் -என்க –
நாம் அனைவரும் நமது ஆத்மாவான இறைவனுக்கே சேஷப் பட்டவர்கள் ஆகிறோம் -என்னும் உபதேசத்தினால்
அறிவை ஊட்டி எம்பெருமானார் பேதைமை தீர்த்து அருளினார்
இராமானுசனைத் தொழுவார் -என்பதே அவர்கள் பெயர் .
தொழுகையே அவர்களுக்கு நிரூபகம் -இத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்றபடி –
ஆழ்வான் -ஆண்டான் போல்வார்கள் பாதம் அல்லால் –பற்று இல்லை –
என் தன் ஆர் உயிர்க்கு பாதமே பற்றுக் கோடு-பிறிது ஒன்றும் இல்லை -என்கிறார் .

———-

எம்பெருமானார் இடம் ஈடுபடும் உள்ளம் படைத்தவர் எவராயினும் -அவர் மேல் உள்ள காலம் எல்லாம் –
என்னை ஆள்வதற்கு உரிய பெரியவர் ஆவார் -என்கிறார் –

பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்றோடி நையேன் இனி ஒள்ளியநூல்
கற்றார் பரவும் இராமானுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் யவர் அவர் எம்மை நின்றாளும் பெரியவரே – – 86-

பெரியவர் ஆளுவதோ என்றும் அடிமை இன்பம் ஒன்றையே தருவதாய் இருத்தலின் ஒருபடிப் பட்டு இருக்கும்
எம்பெருமானாரைப் பற்றிய பெரியவர் -நாம் பையல் எனக் கொண்டு -தாமாகவே முன் போல் உழன்று ஓடி நைய விடாது ஆள்கின்றனர் .
என்னே என் நிலை அடியோடு மாறின படி -என்கிறார் .
அற்ப மனிசரைப் பற்றி அவரை உற்றாரஎன உழன்று ஓடி நைந்தேன் –இது நானாக தேடிக் கொண்ட கேடு
இன்று பெரியவர் என்னை அபிமானித்து அங்கன் நைய விடாது ஆள்கின்றனர் .
இது ஹேது எதுவும் இன்றி எனக்கு கிடைத்த பேரும் பேறு -என்ற வியந்து பேசுகிறார் .

————

ஸ்ரீ எம்பெருமானார் -உபதேசித்த ஞானம் வாய்க்காதவர்களுக்குத் தான் கலியினால் கேடு உண்டாகும் என்கிறார்

பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணம் கட்கு
உரிய சொல்லென்றும் உடையவன் என்று என்றென்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி யிராமானுசன் மறை தேர்ந்து உலகில்
புரியு நன் ஞானம் பொருந்தாதவரைப் பொரும் கலியே – – 87- –

ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த மேன்மைக் குணங்களும் .
பேதையர் பேசும் போது அவர்களுடைய அறியாமை இயலாமை களின் அளவிற்கு ஏற்ப
ஸ்ரீ எம்பெருமானார் இடம் அமைந்த எளிமை குணங்களும் பொருளாகின்றன .
இங்கு -பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வடிவு -21-என்னும் ஸ்ரீ பேய் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் -ஸ்ரீ திருவாய் மொழி -5 -8-4- – –என்னும்
ஸ்ரீ ஸூக்தியும் ஒப்பு நோக்கத் தக்கன
பாம்பின் கால் பாம்புக்கு தெரியும் -என்னும் முறையிலே உணர்வின் மிக்கோரே
தெரிந்து கொள்ள வல்லவர் -என்க
(ஆதி சேஷன் மகிமையை விஷ்வக்சேனர் உணர்வார் -எம்பெருமானார் மஹிமையை நம்மாழ்வார் அறிவார் என்றவாறு )

எம்பெருமானார் என்னும் ஆசார்யன் ஆகிற துறையிலே -சத்துவ குணம் தலையெடுத்து -ஞானஸ்தானம் செய்தவர்கள்
மிகத் தூயராய் இருப்பதனால் -கலி அவர்களை நலிய இயலாது ..
அசுத்தி சிறிதேனும் காணப்படில் அன்றோ -கலியினால் ஆக்ரமிக்க முடியும் –

அந்த நல் ஞானத்தில் சேர்ந்து இருப்பவர்களைக் கலி நலியாதாதலின் அவர்கள் கோஷ்டியில் சேர்ந்த எனக்கு –
ஸ்ரீ இராமானுசனைக் கருதும் உள்ளம் பெற்றார் எவராயினும் -அவர் எம்மை ஆளும் பரமர் -என்னும் துணிபு
கலியினால் குலைவு பெறாது –என்பது கருத்து —

——–

எம்பெருமானார் ஆகிற சிம்மம்-குத்ருஷ்டிகள் ஆகிற புலிகளைத் தொலைப்பதற்காக
இவ் உலகில் வந்ததாக உருவகம் செய்து -அவரது அவதாரத்தை
ஸ்தோத்ரம் பண்ணுவேன் -என்கிறார் –

கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமாள்
ஒலி மிக்க பாடலைக் வுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமானுசன் மறைவாதியராம்
புலி மிக்கதென்று இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே – – 88- –

கலைப் பெருமாள்-என்கிறார் .
வட மொழி மறையின் அங்கங்களை –கலை -என்னும் சொல்லாலே வழங்கி உள்ளார் திரு மங்கை ஆழ்வார் –
பன்னு கலை நூல் வேதப் பொருள் எல்லாம் -பெரிய திருமொழி -7 8-2-

ஒலி மிக்க பாடல் -மிகுந்த ஒலியை உடைய பாடல் -என்றபடி -ஒலி -ஓசை
துள்ளலோசை முதலியவை இவருடைய பாடலில் மிகுந்து இருப்பதைக் காணலாம் .
ஒலி கெழு பாடல் -11 4-10 –

இவ்வாறு மறை வாதியரைவெல்லும் வலி -கலை பெருமான் பாடல்களினால் மிகுந்ததாம் .
எம்பெருமானாருக்கு –ஆரண சாரம் அல்லவோ அப்பாடல்கள்-அடையார் சீயம் –பெரிய திரு மொழி – 3-4 10- –
பாடல் வலி மிக்க சீயமாக்கிற்று

ஒலி மிக்க பாடலை உண்டு : இந்த கலியனின் பாடலே இவருக்குத் தாரகம் என்றபடி
மாறன் கலை உணவாகப் பெற்றோம் என்று மாமுனிகள் சொவது போல் , எம்பெருமானாருக்கு இது தாரகம் என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–69-78–

December 9, 2021

எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –

தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் –

தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு காரணம் தந்தையானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .

எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று

எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –

———–

மேலும் விடாது -அருளல் வேண்டும் -என்று தம் கோரிக்கையை திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பிக்கிறார் .

என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து எண்ணில் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே யுன் பெரும் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமானுசா வுன்னைச் சார்ந்தவரே – 70 –

தமாசார்யான ஆழ்வான் நைச்ய அனுசந்தானம் செய்ததை தாமும் பின்பற்றி –
அமுதனார்-இங்கனம் அருளிச் செய்கிறார்
என்னையும் எண் இயல்வையும் பார்த்து -என்னாது
தனித் தனியே பார்த்து -என்றது -ஒவ் ஒன்றே அருள் செய்வதற்கு போதுமானது -என்று
தோற்றற்கு-என்க
அரங்கன் தராதையும் தந்து சம்சாரப் படு குழியில் இருந்து பெரும் பாவியான என்னை
எடுத்தலின் எம்பெருமானாரது கருணை பெரும் கருணை யாயிற்று-
முன் பாசுரத்தில் ஞானப் பிறப்பிற்கு ஹேதுவான தந்தையைக் கூறப் பட்டார் எம்பெருமானார் .
இந்தப் பாசுரத்தில் அவர் -பெற்றவனை வளர்க்கும் வளர்ப்புத் தகப்பனாராகக் கருதப்படுகிறார்

————-

இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்-

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும் தகையே !–71-

தாளிணையில் சார்ந்த -என்னாது –தாளிணைக் கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.

எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார் கண்டு கொண்டு பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது

செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக் கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம் ஆகாமையாலும் –
அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி
பண்ணி அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் –

வண்மையாவது, பெறுகிறவர் தகுதி பாராமல், கொடுக்கிற விஷயத்தின் சீர்மை கருதாமல் , கொடுப்பது.
இப்படி கொடுத்தது எம்பெருமானார் பதினெட்டு முறை நடந்து சரம ச்லோகார்த்தம் கேட்டு
அதை ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கியது வண்மைத் தன்மை என்று முழங்குகிறார்
ஸ்ரீ நல்லான் சக்கரவர்த்தி ராமகிருஷ்ண ஐயங்கார்

எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .

————-

எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .

கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –

மிக்க வண்மை செய்து வைத்தனன்
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை-அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .

கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் .

—————

தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே ரஷகராய் –
உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய
எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும் நிலை இல்லை என்கிறார் –

வண்மை யினாலும் தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம் உள்ளதே யாயினும்
அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை தாக்கு உறுவதும் உண்டு
எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது –
தனிப்பட்டதாய் அமைந்தது -என்க –

ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-
ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் –

மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .

———

எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி அதனில் ஈடுபடுகிறார் .

தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74-

1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால் வெல்லலாகாது- கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே –
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு
பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க

————–

பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
நம் கண் முகப்பே –
திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில்
ஈடுபடுத்த முற்படினும் தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும்
நோக்கம் உடையவராய் -என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் –
எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .

தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு -ஆதலின் அவன் அங்கனம் முற்படினும்
என் ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப்பாசுரத்தில் .
தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ மதுர கவியார் கண்டார்
அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை குலையாமல் இருப்பதாக பேசுகிறார் .

நம்மாழ்வார் தாமும் , கருட வாஹணன் வந்தாலும் அவனுக்கு ஒரு கும்பீடு போட்டு விட்டு இங்கேயே இருப்பேன்
என்று திவ்ய தேசமே தஞ்சம் என்று சொல்வதாக இருப்பதாக பேசுகிறார்-

கூடும் கொல் வைகலும்* கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*
ஆடும் பறவைமிசைக் கண்டு* கைதொழுது அன்றி அவன் உறையும்,*
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி* ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*
நீடு பொழில் திருவாறன்விளை தொழ* வாய்க்கும்கொல் நிச்சலுமே!

————–

ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக் கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் –
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு –
தமக்கு வேண்டும் பேற்றினை இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –

நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –

திரு மலையின் கீர்த்தி என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
வண் கீர்த்தி
வேறு பயனைக் கோராதவர்க்கு பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின் கீர்த்தனமே
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார்
குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும்
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின் எம்பெருமானாருக்கு பேரின்பம் தருகின்றன

பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும் முறைப்படுத்தப் பட்டன

ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –

வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று
நம் ஆழ்வாரும் எம்பெருமானைப் பிரார்த்தித்தது போலே அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார்

————-

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து –
இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல்
மேலும் உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி –
என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் –
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-
என்னும் பெரியாழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————-

இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின பின்பு-
வேறு ஒரு பொய்ப் பொருளை என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255-

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் –

பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல் –
அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் –
பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-

எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் –
அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–59-68–

December 9, 2021

இக் கலி காலத்தில்–எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஈச்வரனே –
என்று எவரும் நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59-

சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது -வெளிச்சம் அற்ற நில உலகில்
கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் யதிராஜர் என்னும் குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத்
துறக்கும் திறமை எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது-

உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான்
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி
பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க .இவை எல்லாம் எம்பெருமானார்
இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை –

——–

ஸ்வாமியின் ஞான வைபவத்தை அறிவித்த பின்பு –பக்தி வைபவத்தையும் அருளிச் செய்கிறார்
பகவான் இடத்திலும் -பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான
ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும்
உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .
இனி திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் –
அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே –என்று குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக பெற அவாவுவது காண்-

எங்கு எங்கு எல்லாம் ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக் கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் எம்பெருமானார் புக்கு நிற்கிறார்
நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- –

மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-திருப்பதிகளிலே-
வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான்
பொருந்தும் பதி -எனவே
பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம் என்க
திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் -என்க-

நிற்றல்-ஈடுபட்டு மெய் மறந்து நின்றால்
இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .
குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .
இனி நிற்கும் -என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது-

பிரமாதாக்களும் -பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் –
பேசப்பட்டு -அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது –

————-

ஸ்வாமியுடைய குண வைபவம் இருக்குபடியை அருளிச் செய்கிறார் –

கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –

அவர் இருக்கும் இடம் தேடி நான் போக வில்லை –அழுந்தினவன் எங்கனம் போக இயலும் –
அவரே விண்ணின் தலை நின்று மண்ணின் தலத்துக்கு-என்னை ஆட் கொள்ள வந்தார்

நிரயத்து அழுந்திய இடத்தே வந்தமையால்-வாத்சல்யம் தோற்றுகிறது .-
வேண்டுகோள் இன்றி தன் பேறாக வந்தமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது –
ஆட் கொண்டமையால்-சௌசீல்யமும்
தாமே நேரில் வந்தமையால்-சௌலப்யமும் -புலனாகின்றன .
நிரயத்து அழுந்தி உழலுவதை அறிந்து வந்தமையால்-ஞானமும் –
எடுத்து ஆட் கொண்டமையால்-சக்தியும் –
அரு முனிவர் தொழும் தவத்தோன் -என்றமையால் பூர்த்தியும்
எம் இராமானுசன் -என்றமையால்-பிராப்தியும் -சம்பந்தமும் –வெளி இடப்பட்டு களிப்ப்ட்டுவது காண்க .

தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது –
நிரயத்து அழுந்தி யிட்டேனை ஆட் கொண்ட பின்னும் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்று இயைக்க –
என்னளவோடு போதும் என்று திருப்தி பெறாமல் என்னை ஆட் கொண்டமையால் சுடர் மிகுந்த குணம்
என் போன்றவர்களை மேலும் தேடிக் கிளர்ந்து எழுந்தது -என்றபடி –
புகழ் சுடர் மிக்கு எழுந்தது
அது கொழுந்து விட்டு ஓடிப் படரும்-புகழ் சுடர் மிக்கு எழுந்தமையால் இந்நிலத்திற்கு சிறப்பு உண்டாயிற்று-

————

கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் –

இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –

எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று –
அவை இருவினை கழலுவதற்கு-திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம்
பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து -தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம்
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன்

பெரும் தேவர் -நித்ய ஸூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-திருவாய் மொழி -9 3-4 – –
இனி பெரும் தேவர் என்பதற்கு பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் –
அடிகளில் விழுந்து கெஞ்சிப் பல் இளித்தாலும் அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –

அத்தகைய பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது –
மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த கூரத் ஆழ்வானை-ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத
ஸ்வபாவத்திலே தோற்று பெரிய பெருமானை கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க
அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி–

———–

அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .

பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –

களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும்
உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் –

போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் –
தமது நெஞ்சை அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் –
அதன் கண் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் –
அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ்வண்டு வந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-
கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் -உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று
விளக்க பட்டு உள்ளமையும் கவனிக்க தக்கது –

ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க
படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப –
தம்மை அமைத்துக் கொண்டு -நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று மேலே -இவர் கூறுவதும் காண்க –

————

புற மதத்தவரும் குத்ருஷ்டிகளும் ஆகிய வாதியரைப் பார்த்து இராமானுச முனி யாகிய யானை
உங்களை நாடிக் கொண்டு பூமியிலே வந்து எதிர்ந்தது –உங்கள் வாழ்வு இனிப் போயிற்று என்கிறார்

பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழும் தண்டம் ஏந்திக் குவலயத்தே
மண்டி வந்தேன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வற்றதே – – 64- –

திரு வாய் மொழி என்னாது –மாறன் பசும் தமிழ் -என்றார்-அவருடைய நான்கு திவ்ய பிரபந்தங்களையும் நெஞ்சில் கொண்டு
என் நெஞ்சத்து உள்ளிருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவைமொழிந்து -திருவாய் மொழி -10 6-4 – -என்று
நம் ஆழ்வாரே தம் நூல்களை இரும் தமிழ் நூல் –
குறு முனிவன் முத்தமிழும் என் குறளும் நங்கை சிறு முனிவன் வாய் மொழியின் சேய் – என்றது காண்க –

பண்ணார் பாடலினால் திரு மால் இரும் சோலை யான் ஆனந்தம் அதிகமாகி அவ் ஆனந்தத்துக்கு
போக்கு வீடாக -தென்னா தென்னா -என்று ஆலாபனம் செய்து பாடா நிற்பானாயின்
எம்பெருமானார்க்கு இத்தகைய பண்ணார் பாடலினால் ஆனந்தம் விளைய கேட்க வேண்டுமா –

ஆனந்த பாஷ்பத்தை யானையின் மத நீராக உருவகம் செய்கிறார் .
முந்தைய பாசுரத்தில் பிடி போன்றவராக எம்பெருமானாரை வருணனை செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் என்னும் களிறு விட்டுப் பிரியலாகாது பின் தொடரத் தக்க தன்மை உடமை பற்றி –
இந்தப் பாசுரத்திலே
மதக் களிறாக அவ் வெம்பெருமானாரையே உருவகம் செய்கிறார் .வாதியரை எளிதில் சிதைக்கும் வலுவுடமை பற்றி
வாதியரை நாடித் துகைத்து சிதைக்கும் வலுவுடமை வாய்ந்து இருப்பினும்
இவ் வேழம் வைணவருக்கு அடங்கி வசப்பட்டே உள்ளது என்பது தோன்ற –எங்கள் வேழம் -என்றார் .
எங்கள் என்பது திருவாய் மொழியை அறியக் கற்று வல்லரான வைஷ்ணவர்களை

இராமானுச முனி யாகிற வேழம் -முனிகிற வேழம் முனி வேழம் என்று வினைத் தொகை யாக்கி இராமானுசனாகிற முனி வேழம் –
முனிவர் .. வேழம் என்று இரு பண்புகளும் கொண்ட இராமானுசன் என்றபடி இரு பெயரேட்டுப் பண்புத் தொகை.
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -17 – என்றும் இவ் ஆச்ரியரே கீழ்க் கூறி இருக்க –
ஏனைய பொருள்களைப் பற்றி வரும் கனிவும் முனிவும் தள்ளத் தக்கனவே அன்றி
பகவத் அனுபவத்தை பற்றி -குறிப்பாக மாறன் பசும் தமிழால்-வரும் பகவத் அனுபவத்தை பற்றி வரும் கனிவும் –
அப் பசும் தமிழ் இன்பத்துக்கு இடையூறாக நிற்கும் வாதியர் திறத்து முனிவும் -மிகவும் வேண்டற் பாலன வாதலின்
எம்பெருமானார் இடம் கனிவும் முனிவும் காட்டியது மிகவும் பொருந்தும் -என்க –

இராமானுச முனி வேழத்துக்கு மதமூட்டும் மருந்தாயிற்று மாறன் பசும் தமிழ்
திருவாய் மொழி மதமும் வேதக் கொழும் தண்டம் சேர்ந்து விட்டன –
வாதியர்கள் வாழ இனி வழி இல்லை -என்கிறார் .
உபய வேதாந்தங்களையும் தன்னகத்தே கொண்ட எம்பெருமானார் அவைகளைக் கொண்டே வாதியரை
வாழ்வு அறச் செய்கிறார் -என்பது கருத்து –

அருள் என்னும் தண்டால் அடித்து பெரிய திருவந்தாதி – 26-
வேதக் கொழும் தண்டம் என்பதனால் எம்பெருமானார் திருக் கரத்திலே ஏந்தின த்ரி தண்டத்தை-அமுதனார் கருதுகிறார்
மூன்று வேதங்களும் முக்கோல்கள் ஆயின -என்பது அவர் கருத்து –
திருவாய் மொழியை ஆழ்ந்து அனுபவித்து-அதனால் வேதப் பொருளை தெளிந்து –
தெளிந்த அப் பொருளுக்கு முரண்பட்டுக் கூறும் வாதியரை அந்த வேத வாக்யங்களைக் கொண்டு-
வாழ்வு அறச் செய்தார் எம்பெருமானார்

———-

வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த
நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .

வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-

என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –

தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 –என்றபடி
பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது என்றபடி .
ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணி தானே-பெருமாள் திரு மொழி -10- 5-
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றமெல்லாம் –அந்நாழ்அற்றது-
இராமானுசன் தந்தஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .

———-

எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது -கீழ்ப் பாசுரத்திலே .
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார் இப்பாசுரத்திலே

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

திரு மா மகளோடு கூடிய அருளாளன் -நாணாளும் நின்னினைந்து நைவேற்கு –பெரிய திரு மொழி -3 6-5-
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
திருவாய் மொழி -6 9-3- – – – என்றபடியும் நைந்து தளர்பவர்களுக்கு வானம் கொடுக்கிறான்
அந்தோ அருளானான மாதவன் நாடொறும் நைய விடுகிறான் தன் பக்தர்களை .
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசனை
மகா பாபியான என் மனத்தில் உள்ள தோஷத்தை போக்கினவரே என்று அமுதனார் இங்கு கூறியது
எத்தகையோருக்கும் தோஷத்தை நீக்கி -வானத்தைக் கொடுக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு
என்று தோற்றுகைக்காக -தன்னை விடப் பாபம் அதிகமாக செய்தவர் வேறு எவருமே இருக்க மாட்டார்கள்-
எம்பெருமானாரை அடைகிறவர்கள் இன்னார் இனையார் என்று இல்லை .
ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோருக்கும் அந்த வானத்தை கொடுத்து விடுகிறார்-

எய்தின அனுகூலர்க்கு கொடுப்பதால்-சர்வ முக்தி பிரசங்கத்திற்கு இடம் இல்லை
எம்பெருமானார் ஒருவரே தம்மை எய்தினர்க்கு நைதலில்லாமல் அத்தானம் கொடுக்கிறார் .
இதனால் உத்தரகாசார்யர் எம்பெருமானார் என்பதை உணர்த்தினார் -ஆயிற்று

———–

எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே நம் இந்திரியங்களைக் கட்டுப் படுத்தி-இவ் ஆத்ம வர்க்கத்தை ரஷித்து
இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .

சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார் உயிர்க்கே – 67- –

வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை எம்பெருமானார் வலியுறுத்து கிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று –திருவாய் மொழி –1 4-9 –
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணா கதி -யைக் கொண்டமையின் –தருமன் முதலியோர் வாழ்ந்தனர்
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து எம்பெருமானார் உயிர்கட்கு அரண் அமைத்தார் -என்க

———-

இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய
குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது
ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .

ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –

தக்க ஐவர் தமக்காய்-
அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -திரு வாய் மொழி -8 5-8 – –
என்று நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .
அக்நி தேவனால் அர்ஜுனனுக்குகொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார்-

மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லை-

சீரினில் –ஆவியும் சிந்தையுமே –
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது -சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –
சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது –

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–49-58–

December 9, 2021

எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை கூறி இனியராகிறார்
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு கூறப்பட்டது .-

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானத்தில் மன்னும் இராமானுசன் இத்தலத்து உதித்தே -49 –

பூம் கமலத் தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல்
திருவரங்கத்தில் தாமரை மலர்கள் தேன் சொரியும்–
வயல்கள் தண்ணீரினால் அல்ல—இந்த தாமரை மலர்கள் தேனினால் செழிப்பாகும் .
அது போல், இராமானுசரும் பெரிய பெருமாள் திருவடியை தனக்குத் தாரகமாகக் கொண்டு தரிக்கிறார்.

கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது சூடலாம் படி சொந்தமாயின போலும் –
உடையவர் -யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி –
பெரி யாழ்வார் சென்னியில் இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை எம்பெருமானார் திறத்து இல்லை –
தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி
இவர் சென்னியின் வைத்துக் கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி யரங்கன் துயில்வது –

உதித்து ஆனது செம்மை அற நெறி –
ஸூரியன் உதித்து அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-

இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்
தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது-

————

எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார்

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல் சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன-

திருமங்கை ஆழ்வாரும் தானே , நின்ற மாமருது இற்றிற்று-என்றும்
வானவர் கை தொழும் இணைத் தமரையடி என்றும் கலியன் கண்ணனின் திருவடியால் இருவர வீழ்ந்தது அருளிச் செய்தார்.
எம்பெருமானாரின் இணையடியோ பலரை அஞ்சும்படி பண்ணியது .

பாவு தொல் சீர் கண்ணா என்பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-
எம்பெருமானார் திருவடிகளை ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது

————

என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார் அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

ஐவர்கட்காய் -என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்துக் கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – – ஈடு
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது –
நம் ஆழ்வாரும் -குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஈட்டு ஸ்ரீ ஸூக்தி

தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –

———–

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளிச் செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக –புன்மையினேன் -என்கிறார்.

புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று -.
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று -புன்மை இல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-
என்பது தோன்ற அருளிச் செய்ததனால் -புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் –
என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –

ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-மாயப் பற்று அறுத்து –தீர்ந்து
தன் பால் மனம் வைக்கத் திருத்தி-தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்து வைத்தார் .

————-

சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் –

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

என்னை ஆள வந்த கற்பகம்-கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற ஆட் கொள்கையும் –
இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு எம்பெருமானார் வந்தது
தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -அமுதனார் –
என்னை-இரக்கவும் அறியாத என்னை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும்
நம் ஆழ்வார் திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்

பற் பல்லுயிர் பரனது என்கையாலே
ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும்
காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே –
அவ் வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின் பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய
சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின
பரனது எனும் நற் பொருள்-பிரதான பிரதி தந்த்ராரத்தம்

—————

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது .வண் தமிழ் மறை வாழ்வுற்றது

————–

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்-

தங்கள் சிந்தை கவரும் தென்னரங்கன் உடைய தொண்டர்கள் அவ்வரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
அரங்கனை விட அவர்கள் சிந்தையை எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார் -அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி செய்யவே
வைதிகர்களான அத் தொண்டர்கள் இவ் எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் –

பார்த்தருளும் என்றமையால்-எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –
இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று –
நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே எல்லாருக்கும்
அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் –

அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் –

———–

எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை -என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் –

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

புனிதன் -தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் எங்கும் ஆகிய கீர்த்தி –
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்று கீழ்க் கூறியதை இங்கு நினைக்க

வகுத்த எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு
உறவு பாராட்டி –என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார்

தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்

————-

இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் –

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57-

திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை நேரினும் –
அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்-

சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின
பெருதவிக்குத் தோற்று நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் –

பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது-

————

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் –
இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார்
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது
குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –
தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –

ஸ்ரீ பாஷ்யத்தில் –
அந்தி கதபத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய பிரத்யஷாதி சகல பிரமாண
ததிகர்த்தவ்யதாரூப சமீசீ நந்யாய மார்க்காணாம்-என்று
சொல்-வாக்யங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மைக் கருத்து ப்ரத்யஷம் முதலிய பிரமாணங்கள் உணர்த்துவது –
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வழிகள் இவற்றை அறியாதவர்கள் -என்று
மகாசித்தாந்தத் தொடக்கத்தில் அருளி உள்ளதை அடி ஒற்றி –பேதையர்-என்கிறார்

நிர் விசேஷ பிரம்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே
வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது
ஜீவான்மக்களுள் பேதமும் –பிரம்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும்-உணர்த்தப் படுகின்றன
அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர்

சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் பிரம்மமும் ஒன்றாக
கூறப்படுகின்றனவே அன்றி -ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-என்பது உணரத் தக்கது .

உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பிரனோடு ஒன்று-உடலை ; மெய் என்கிறார் அமுதனார்.
உலகம் மாயை என்று இதை மெய் என்று சொல்லிட்டு இந்த உடலின் மாயையை உணர்த்துகிறார்
‘அஸ்மாத் சரீராத் சமுத்தாய ‘ இந்த் உடலினின்று விடுபட்டதாக கொள்ளாமல் ,
இந்த உடல் மாயை என்று உணருவதே இவர்கள் புருஷார்த்தம் சரி,
உடல் மாயை என்ற உன்னத நிலையை அடைந்த பின் இந்த ஆத்மா தன்னை பிரமனோடு ஒன்றாக உணர்கிறது
ப்ர்ஹமவித் பிரஹ்மைவ பவதி -ப்ர்ஹமத்தை உணர்பவன் ப்ர்ஹமம் ஆகிறான் .

அல்லல் எல்லாம் இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –
அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை
என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று அமுதனார் ஈடுபடுகிறார்-

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருமலை நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண அய்யங்கார் ஸ்ரீ ஸூக்தி- அமுத விருந்து–39-48–

December 9, 2021

மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து -ப்ரீதியாலே –
தம் திரு உள்ளத்தைப் பார்த்து –எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-39-

தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –40-

மண்ணகத்தில்-கோயில் கொண்ட-ஆதாரம் பெருக வைத்த- அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம் என்று உபதேசித்து அருளியதையும் -41-

திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து அவனே அர்ச்சையாக கண்ணிற்கு இலக்காகி நிற்பினும் கண் எடுத்துப் பார்க்க மாட்டாத
உலகத்தவர் அனைவரும் –எம்பெருமானார் காலத்தில் மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் – 42-

விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று
தமது பண்டைய இழி நிலையையும் இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப் பெருமைப்பட்டுப் பேசுகிறார் –
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –43-

சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன் – ராமானுஜ என்கிற சதுரஷரி மந்த்ரத்தைச் சொன்னாலே
உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –44-

இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின்படி –
இராமானுச நாமத்தை சொல்ல முற்படாமையாலே -அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –45-

தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக நம்பும்படி செய்த எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து
அவரை நோக்கித் தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் 46-

உலகத்தாருக்கு தத்வ உபதேசம் செய்து பகவத் சமாஸ்ரயண-ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவிலே விசேஷமாக விஷயீகரித்ததை அனுசந்தித்து-இப்படிப் பட்ட எனக்கு நிகர் யாரும் இல்லை -என்கிறார் –47-

நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ்வருளுக்கும் இந்நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-
ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் -என்கிறார் –48-

————————

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து
புகழ்-புகழப் படும் குணம் -அது ஈறில்லாதது-அழிவின்றி நித்தியமாய் உள்ளது -எண்ணற்றதுமாம்
தன் புகழ்-
எம்பெருமானாருக்கு அசாதாரணம் ஆனது-இறைவனது குணம் அருள் போலே மறு பாடு அற்றது
பெரும் புகழ்-
புகழுக்கு பெருமை யாவது அனுபவிக்கும் குணத்தை விட்டு வேறு ஒரு குணத்தையோ
அன்றி வேறு ஒருவனாம் இறைவன் இடத்தில் உள்ள குணத்தையோ அனுபவிக்கப் போக ஒட்டாமை –

புகழே -ஏ பிரிநிலைக் கண் வந்தது
துயர் மாற்றிய புகழ் அன்றி வேறு ஒரு புகழ் தெரியாத வண்ணம் அப் புகழையே என் அறிவுக்கு புலன் ஆக்கினர் என்றதாயிற்று –
நம் ஆழ்வார் சர்வேஸ்வரன் என்னுள்ளே புகுந்து பெறாப் பேறு பெற்றானாய்-கால் வாங்க மாட்டாதே ரத்ன பர்வதம் போலே நின்ற
இம் மகா குணத்தை யல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதியேன் என்னும் கருத்துடன் –
என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே -திருவாய் மொழி -8 7-5

————–

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

சேம நல் வீடு
சேமமான வீடு -என்கிறார் .-யோக நல் வீடு என்றால் கிடைக்காதது பெற்றதாகும் –சேம நல் வீடு என்பதால் ஆத்மாவுக்கு எடுத்தது இது தான் –
அக்கரையில் அழுந்தி இக்கரை என்பர்களே-ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் தன்னிடம் பெருமாள் இடம் வந்தான் என்றாரே வால்மீகியும் –
கைவல்யத்தின் நின்றும் வேறுபாடு தோற்ற நல் வீடு என்றார்-

மண் மிசையே-கண்ணனுக்கே யாமது காமம்
அவன் இன்புறக் காண்பது அன்றி தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதி செலுத்தும் காமமே புருஷார்த்தம் என்றது ஆயிற்று –
இங்கு காமம் என்பது கண்ணைக் கலந்து களிப்புறுத்தும் நிலைமையேயாம்
அதாவது சம்ச்லேஷ சுகமே -கூடலின்பமே-என்றபடி –
மண்ணகத்தில்-கோயில் கொண்ட அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம்
ஆதாரம் பெருக வைத்த -அர்ச்சை வடிவனான கண்ணனதே

1-வேண்டுதலை எதிர்பாராது தானே வலியக் கொடுக்கையும் –
2-சீரியதைக் கொடுக்கையும் –
3-வரையாதே கொடுக்கையும் –
4-தன் பேறாக உவந்து கொடுக்கையும் -வாமனனுக்கும் எம்பெருமானாருக்கும் ஒத்த ஸ்வபாவன்களாம் –

குறிப்பாக மாவலி யிடமிருந்து-விரகினால்-சாமர்த்தியத்தால்- வாமனன் தன் விபூதியை -உலகினை-வாங்கியது போலே –
எம்பெருமானாரும் என்னிடம் இருந்து – விரகினால் தன் விபூதிமான் ஆகிய அரங்கனை வாங்கிக் கொண்ட ஒப்புமை இங்குக் கருதத் தக்கது –
வாங்கின விபூதியை உரியது இந்திரற்கு இது என்று -இந்திரனிடம் ஒப்படைத்தான் -வாமனன் .-
வாங்கின விபூதிமானை உரியன் ஸ்ரீ வைஷ்ணவர்க்கு என்று ஸ்ரீ வைஷ்ணவர் இடம் ஒப்படைத்தார்
எம்பெருமானார் -ஒப்டைத்ததும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை நோக்கி -இக் கண்ணனுக்கே ஆமது காமம்
அனைவரும் –நம்பெருமாள்-நம் பெருமாள்-என்று காமுரும்படி உபதேசித்து அருளினார் எம்பெருமானார்
வாமனன் சீலன் -கூரத் தாழ்வான் என்றபடி –
இவ்வின்ப வெள்ளத்தை விட்டு-நல் வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு கொள்வது எண்ணுமோ-என்கிறார் பராங்குசர்

———–

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

மண் மிசை நெடும் காலம் கண்ணுற நிற்றலின் மாதவனது எல்லை இல்லாத சௌசீல்ய குணம்-புலன் ஆகின்றது –
இங்கு ஆழ்வான் அருளிச் செய்த –
சீல க ஏஷ தவ ஹந்த தயைகசிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே
ஷோதீய சோபிஹி ஜனச்ய க்ருதே க்ருதீத்வ மத்ராவதீர்யா நனு லோசன கொசரோ பூ –அதி மானுஷ ஸ்தவம் -10 – என்று
அருளே நிறைந்த கடலே -நீ செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து முடித்து இருந்தும் –
உலக அண்டத்திற்கு இடையே சிறிதான பாமர மக்கள் குடி இருக்கும் இடத்தில்
மிகவும் அற்பர்களாகிய மக்களுக்காக இங்கே அவதரித்து கண்களுக்கு புலன் ஆயினை அன்றோ-
உனது சௌசீல்யம் குணத்தை என் என்பது -என்ற ஸ்லோகம் அனுசந்திக்க தக்கது-

இறைவன் பிராட்டி யோடே அவதரிக்கிறான் -என்பது தோன்ற –மாதவன் பிறந்து -என்றார்.
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷ சாவதாறேஷூ விஷ்ணு ரெஸா நபாயிநீ -விஷ்ணு புராண ஸ்லோகம்-என்று
இறைவன் ராமனான போது -சீதை யானாள்-கிருஷ்ணனாய் பிறந்த போது ருக்மிணி யானாள் –
மற்றைய அவதாரங்களிலும் விஷ்ணுவை விடு கிலள்-

மண் மிசை பிறந்து -என்றமையால் வாத்சல்யம் தோன்றுகிறது-வாத்சல்யமாவது குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளுதல்
எங்கள் மாதவன்-என்றமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது-ஸ்வாமித்வமாவது உடைமைக்கு உரியனாய் இருத்தல்
நிற்கிலும் -என்பதால் சௌசீல்யம் தோற்றுகிறது –0சௌசீல்யம் ஆவது மிகத் தாழ்வு உடையரோடு வேறுபாடு இன்றி பழகுதல்
கண்ணுற -என்றமையால் சௌலப்யம் தோற்றுகிறது-சௌலப்யம் ஆவது கண்ணுக்கு புலனாய் தோற்றுதல்-

மாதவன் அவதாரத்தை –பிறந்து -என்றார்-சம்சாரிகள் போலப் பயன் பெறாமையின் –
அண்ணல் அவதாரத்தை தோன்றி என்றார் பயன் பெற்றமை பற்றி –
நாரணற்கு ஆயினர் –
பொருள் அனைத்தையும் உட் புக்கு நியமிப்பது பற்றி-நாராயணன் -என்று திரு நாமம் அமைந்தது –
நாராயணன் என்பது நாரணன் என்று மருவி நின்றது .
உட் புக்கு நியமிப்பது ஆத்மா ..அங்கன் நியமிக்கப் படுவது உடல் –
உடல் ஆத்மாவுக்கு போல -பரமாத்மாவுக்குப் பொருள் அனைத்தும் உபயோகப்பட்டு சிறப்பு உறுதல் இயல்பு.
வ்யாபகத்வத்தை உணர்த்தும் சொல். வியாபக மந்திரங்களிலே ப்ரதானம் இந்த நாராயன மந்திரம்

பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து இருவரும் பல கால் பிறந்தும் பயனில்லை
எம்பெருமானார் தனியே ஒரு கால் தோன்றிய அப்பொழுதே பயன் மிக்கது .
மாதவனால் கையால் ஆகாது விடப் பட்டவர்களை எல்லாம் எம்பெருமானார் கை கொடுத்து-எடுத்துக் காத்து விட்டார் -என்றது ஆயிற்று .

————

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று
மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது —
என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –
சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –
காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -யதிராஜ விம்சதி

கூபத்தில் வீழும் குழலி யுடன் குதித்தல்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பே னேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்று-மணவாள மா முனியும் ஆர்த்தி பிரபந்தத்திலே- அருளி இருப்பது அனுசந்திதற்கு உரியது
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –

எல்லா உயிர் கட்கும் நாதன் மா மலராள் நாயகன் – -நாதனாய்-சேஷியாய்-இருக்கும் தன்மை ஸ்ரீ யபதிக்கே
ஸ்ரீயபதியாய் -சேஷியாய் இருப்பானை நம்மால் காண இயலுமோ -என்னும் ஐயம் அறுப்பது –அரங்கனை-
என்று மேலும் செய்யும் உபதேசம்

தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே –
தீது உபதேசத்துக்கு அனுவர்த்தனத்தை எதிர்பார்த்தல்-
எனது அனுவர்த்தனத்தை எதிர் பாராமல் தாம் பரம கிருபா மாத்ர பிரசன்னாசார்யராய் -உபதேசித்து-அருளினார் -என்றபடி –
இனி க்யாதி லாப பூஜைகளை எதிர்பாராமை யால் தீதிலர் என்னவுமாம் .
தொல் அருள் –
இயல்பான அருள்-நிர்ஹேதுதுக கிருபை என்றபடி-
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான் -என்று கூட்டி முடிக்க –

————-

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

உணர்வு -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றபடி
பரம் பொருளை அதன் எல்லை நிலமான அடியார் அளவும் உள்ளவாறு அறிதல் –

சொலப் புகில் வாயமுதம் பரக்கும்
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திரு மால் திரு நாமம் –பெரிய திரு மொழி – 6-10 6- –
என்று நாராயணா நாமம் தனக்கு அமுதமுமாய் இருப்பதாகத் திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் –
நாராயணா நாமம் சொல்ல சொல்ல அமுதமாக இருக்கிறது .
முக்தியை மாத்ரம் அன்றி சம்சாரத்தையும் பெருக்குவதாயும் உள்ளது

தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்று நம் ஆழ்வார் திரு நாமம்
சொன்னால் அமுது தன் நாவில் ஊருவதாக மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்தார் .
மதுர கவிகளுக்கு அமுதூரும்படி அமைந்த சடகோப நாமமோ -அவர் நாவுக்கே -சொன்ன பிறகே –
அமுதூருவதாய் அமைந்தது
நம் ஆழ்வார் திரு நாமம் ஒரு கால் சொன்னால் போதும் நாவிலே அமுதம் ஊறிக் கொண்டே இருக்கிறது .

ராமானுச நாமமோ சொல்லத் தொடங்கின உடனேயே அமுதனாருக்கு வாயிலே அமுதம் பரக்கிறது –
உய்வித்தலானும் இனிமையானும் திரு நாமம் அமுதமாக சொல்லப்படுகிறது-
ராமானுஜ நாமமோ சம்சாரத்துக்கு துணை புரியாது –முக்தியே தர வல்லதாய் –
படியில் உள்ளோர் அனைவருக்கும் சொல்லப் புக்கவாறே அமுதம்
பரக்கும்படி செய்ய வல்லதாய் வீறு பெற்று விளங்குகிறது

நாராயண நாமம் ஆயின் வினைகள் மீண்டும் தலை காட்டவும் கூடும் –
மாடே வரப்பெறுவராம் என்றே வல் வினையார்
காடானு மாதானும் கைக்கொள்ளார் -ஊடே போய்ப்
பேரோதும் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து -பெரிய திருவந்தாதி – 59– – என்று நம் ஆழ்வார் வல்வினையார் பேர்ந்து போகாது
பக்கத்தில் இருப்பதாக அருளிச் செய்வது காண்க

இராமானுச நாமம் சொல்லப் புக்கவாறே அஞ்சி பற்றற ஓடுகின்றன
இரு வினைகள் பற்று அற-வாசனையும் இல்லாது முழுதும் ஒழிந்து விட்ட படியால் இனி மீளாவே

மூன்று திரு நாமங்களும் சதுரஷரி –நான்கு எழுத்துக்கள்-கொண்டவையே –
நாராயண -சடகோப ராமானுஜ -என்பவை அத்திரு நாமங்கள்
இங்கனம் வீறு பெற்று விளங்குவது பற்றியே
ஆழ்வான் -ந சேத் ராமானுஜ அத்யஷர சதுரா சதுரஷரீ காம வஸ்த்தாம் ப்ரபத்யன்னே ஜந்தவோ ஹந்த மாத்ருசா
என்று சாதுர்யம் வாய்ந்த இந்த ராமானுஜ சதுரஷரீ இல்லை எனின் –
என் போன்ற பிராணிகள் என்ன நிலையை அடைவர் -என்றார்.

படியில் உள்ளீர் –
திரு நாமத்தைச் சொல்ல எல்லாரும் அதிகாரிகள் என்பது இவ்விளியினால் விளங்குகிறது –
இருள் தரும் மா ஞாலத்தில் -உள்ளவர்களுக்கு தெள்ளியோர் கைக் கொள்ளும் விஷயத்தை
உபதேசிக்கிறேன் -என்றபடி –

———-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

தாய் மொழி யாதலானும் ஆழ்வார்கள் ஈரத் தமிழ் ஆதலானும் -நான்கு ஸ்ருதிகளுக்கு முன்னர் மூன்று தமிழ்கள் கூறப்பட்டன –
செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று வட சொல்லுக்குமுத்திச் செந்திறத்த தமிழைத்
திரு மங்கை ஆழ்வார் அமைத்து அருளி இருப்பது இங்கு அறியற்பாலது –
தம் பாழி யாகையாலே தமிழை முதலில் கூறினார் என்பது அவ்விடத்திய வியாக்யானம்-

இயல் தமிழ் -இயல்பாய் அமைந்த தமிழ்
இசைத் தமிழ் -குறிஞ்சி காந்தாரம் முதலிய பண் அமைந்த தமிழ் .
இயலும் இசையும் விரவிய தமிழ் -நாடகத் தமிழ் –
இசைத் தமிழ் -பண்ணார் பாடல் எனப்பட்ட திருவாய் மொழி -பெரிய திருமொழி முதலியன
இயல் தமிழ் -பொய்கையார் அந்தாதி முதலியன
நாடகத் தமிழ் -உரையாடல் வடிவமாய் அமைந்த திருப்பாவை முதலியன –

சொல்லார் ஒரு தமிழ் என்று கூட்டித் -திருவாய் மொழியும்
ஒரு மூன்று -என்று மற்றை மூவாயிரமும் சொல்லப்படுகின்றன –

இனி நம் ஆழ்வார் அருளிச் செய்த திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி என்னும்
திவ்ய பிரபந்தங்கள் சொல்லப் படுகின்றன என்னலுமாம்-என்று பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் –

மேலே ஸ்ருதிகள் நான்கும் என்று வட மொழி வேதம் நான்கும் கூறப் படுவதற்கு ஏற்ப
தென் மொழி வேதம் நான்கும் கூறப் படுவது பொருந்தி உள்ளது என்பது அவர் கருத்து போலும் .

சொல்லார் தமிழ் -என்பது –சொல் சீர்த் தொடை யாயிரம் -திரு வாய் மொழி – 1-2 11- –
சடகோப வாங்மயம் -என்னும் திருவாய் மொழியை நினைவுறுத்துகிறது .
இரும் தமிழ் நூலிவை மொழிந்து -திருவாய் மொழி -10 -6 4- – என்றபடி
இரும் தமிழ் நூல் ஆதலின் -திருவாய் மொழி -தமிழ் -என்றே வழங்கப் பட்டது .

எது பேறு என்று காமிப்பரே
நம்பித் திரு நாமம் கற்றலாம் புருஷார்த்தத்தை விட்டு –புருஷார்த்தம் எது என்று
தேடி அலையா நிற்கிறார்களே -இவர்கள் அறிவீனம் இருந்த படி என்

—————

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

தேறும் அவர்க்கும் எனக்கும் –எனவே-தேறாத எனக்கும் என்பது பெற்றோம்
உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று
தேறினவர்க்கும்-தேறாதவர்க்கும் ஒருபடிப் பட -தன்னையே கொடுக்கும் நேர்மை-செம்மை –
தன்னையே சேர்ந்தது ஒன்றைக் கொடுத்து விடுகை அன்றிக்கே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றபடி தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் – –
எம்பெருமான் போலே ஆத்ம சமர்ப்பணத்தை எதிர்பாராது தேவரீர் தம்மையே அடியோங்களுக்கு ஆக்கி யருளுவதே-
உபகாரம் செய்த திருவடிக்கு பெருமாள் தன்னையே கொடுத்து அருளினார் –
தரம் பாராதே உபகாரம் செய்யாதவர்களுக்கும் தம்மைக் கொடுத்த-இச் செயலை என் என்று சொல்லுவது -என்கிறார்.

நெஞ்சால் நினைந்து குமிழ் நீர் உண்ணலாமே யன்றிச் சொல்லால் கூறும் பரமன்று என்கிறார் .
நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தையே உபாயமும் உபேயமுமாக தெளிந்து தன் நெஞ்சை நோக்கி
நான் கூறும் கூற்றாவ தித் தன்னையே நாணாளும்
தேங்காத நீருருவன் செங்கண்மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதியா நெஞ்சே நினை – -என்கிறார்
அத்தகைய தெளிவு வாய்ந்த தனக்கு உபாயமாகத் தெய்வ நாயகன் தன் பாதத்தை தந்த
உபகாரத்தைக் கூறி அதற்குக் கைம்மாறு காணாது தடுமாறுகிறார் .

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஓன்று இலேன் எனதாவியும் உனதே -திருவாய்மொழி – 5-7 10- – என்பது காண்க –.

அமுதனாரோ அங்கனம் கூறவும் மாட்டாது தடுமாறுகிறார் .

————

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

ஆறு சமயமும் = சாக்ய, உலுர்க்ய, அக்ஷபாத, க்ஷபண. கபில, பதஞ்சலி மதங்கள் எனப்படுகிற ஆறும் பாஹ்யஸமயங்களாம்;
சாக்யர்-பௌத்தர்; உலுர்க்யர்-சார்வாகர்; அக்ஷபாதரென்று கௌதமரைச் சொல்லி நையாயிக வைசேகூஷிகர்களை நினைக்கிறது.
க்ஷபணர்-ஜைநர். ஆறுசமயங்களுக்கு விளம்பும் என்று அடைமொழி கொடுத்தது-
அர்த்தமில்லாத வெறும். சொற்களையே பிதற்றுகிறவர்களென்று காட்டினபடி.

குவலயத்தே பணித்த -எனக் கூட்டினால் இருள் தரும் மா ஞாலத்திலே
வெளிச் சிறப்பு தோற்ற அருளிச் செய்த -என்றபடி –
இனி குவலயத்தே உணர்ந்தோனை-எனக் கூட்டினால் இந்த லோகத்திலே உணர்ந்தவர்
இவர் ஒருவரே என அருமைப்பாடு தோன்றுகிறது-
திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே-
இங்கனம் சமயங்கள் ஆறும் குலைய மாறன் உணர்ந்தமை -தேறும்படி என் மனம்-புகுந்தமை என்னும்
குணங்கள் திக்குகள் அனைத்திலும் பரவின –
அத்தகைய நற்குணம்-வாய்ந்த எம்பெருமானாரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம்

————-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

இரவும் பகலும் விடாது
அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திருவாய்மொழி 1-10 8- – –
என்கிற படியே இடைவிடாதபடி எழுந்து அருளி இருந்தார் .என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் –
ஆசாபாசங்களுக்கு உறைவிடமான என் சிந்தைக்கு உள்ளே இருந்தார் –

அமுதனாரை வசப்படுத்துவது தவிர எம்பெருமானார் திரு வவதாரதிற்குப் பேறு வேறில்லை என்பது கருத்து .
நிறைந்து இருந்தான்–
பகவத் விஷயத்துக்கும் இடம் இன்றித் தானே சிந்தையுள் நிறைந்து இருந்தான் -என்னலுமாம்
விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாதபடி
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –திருவாய் மொழி – 10-8 1- – என்று
நம் ஆழ்வார் கூறியது போலே அமுதனாரும் கூறினார் .
நம் ஆழ்வார் நெஞ்சில் விஷயாந்தரங்களுக்கு இடம் இல்லை .
அமுதனார் நெஞ்சில் பகவத் விஷயத்துக்கும் இடம் இல்லை –

———–

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

நிகரின்றி நின்றது என் நீசதை என்கிறார் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் 3-3 4- – என்றார் நம் ஆழ்வார்
நீசதை நீங்கி சிலர் நல்லவர் ஆதலும் உண்டு -என் நீசதை அங்கனம் நீங்காது நிலை நிற்பது
தோன்ற -நின்ற என் நீசதை-என்றார் –
நிகர் அற்றமையில் -என் நீசதைக்கும் தேவரீர் அருளுக்கும் ஒற்றுமை உண்டு .
ஆகவே அவை நிலைத்து ஏன் இணைந்து இருக்க மாட்டா -என்கிறார் –

ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தய நீய வாந்தச-விதி நிர்மித மேத்தா தான்யம்
பகவன் பாலய மாஸம ஜீஹப -என்று-பகவானே உம்மைத் தவிர நான் வேறு நாதன் அற்றவனாய் இருக்கிறேன்-
நீரும் என்னைத்தவிர இரக்கப்படத் தகுந்தவன் இல்லாதவனாய் இருக்கிறீர்-
தற்செயலாக அமைந்த இந்த தொடர்பினை காத்து அருள வேண்டும்விட்டு விடாதீர் -என்று ஆள வந்தாரும் காட்டி யருளினார்

யதிராஜ விம்சதியில் -வாசா மகோசர மகா குண தேசகாக்ர்யா கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷோ ஹமேவ ந புனர் ஜகதீச்ருசஸ் தத் ராமாநுஜார்ய கருணை வது மத் கதிச்தே -என்று-
மொழியைக் கடக்கும் பெரும்புகளை உடையரான ஆசார்யர்களில் சிறந்த கூரத் ஆழ்வான்-கூறிய
எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே
உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது
ஆகையால் எம்பெருமானரே தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு அனுசந்திக்கதக்கதாகும்-

வேதாந்த தேசிகன்
மயி திஷ்ட்டதி துஷ்க்ருதாம் பிரதானே மித தோஷா நிதரான் விசின்வதீத்வம்
அபராத கணைர பூர்ண குஷி கமலா காந்த தயே கதம் பவித்ரீ –என்று
பாபம் செய்தவர்களுக்குள் எண்ணற்ற பாபங்கள் செய்ததனா பிரதானனாகிய நன் இருக்க –
என்னைப் புறக்கணித்து -அளவுக்கு உட்பட்ட பாபம் செய்தவர்களை தேடிக் கொண்டு இருக்கும் நீ
பாபத் திரள்களினால் வயிறு நிரம்பாமல் கமலியின் காதலனுடைய அருள் அணங்கே –
எப்படி யாகப் போகிறாயோ -என்றும் –
அஹம் அஸ்ம்ய அபராத சக்ரவர்த்தீ கருணே த்வம்ச குனேஷூ சார்வ பௌமீ
விதுஷீ ஸ்த்திதி மீத்ருசீம் ஸ்வயம்மாம் வருஷ சைலேஸ்வர பாத சாத்குரு-என்று
நான் பாபம் செய்தவர்களுள் சக்கரவர்த்தியாய் மேம்பட்டவன்
கருணையே -நீயும் குணங்களுள் தலை சிறந்தவள் .
இத்தகைய நம் நிலையை உணர்ந்து தானாகவே என்னை திரு வேம்கடமுடையான்
திருவடிக்கு உரியனாக்குவாயாக -என்று தயா சதகத்திலே -29 30- – இக்கருத்தினையே தழுவி அருளி இருப்பது

பயனிருவோக்கும் ஆன பின்னே –
தேவரீருக்கு பயன் குண லாபம்-அடியேனுக்கு பயன் ஸ்வரூப லாபம்

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .