Archive for January, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

தாள்ப ரப்பிமண் தாவிய ஈசனை
நீள்பொ ழிற்குரு கூர்ச்சட கோபன்சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வுஎய்தி ஞாலம் புகழவே.

    பொ-ரை : திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூமியிலுள்ளவர்களெல்லாரும் புகழும்படி பேற்றினையடைந்து வாழ்வார்கள்.

    வி-கு : ‘பரப்பித் தாவிய ஈசன்’ என்க. கேழ் – ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’ (கம். அயோத்.) என்ற இடத்துக் ‘கேழ்’ இப்பொருளதாதல் காண்க. ‘வல்லவர் ஞாலம் புகழ வாழ்வெய்தி வாழ்வர்,’ எனக் கூட்டுக. ஞாலம் – ஆகுபெயர்.

    ஈடு :  முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக்கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

    தாள் பரப்பி மண் தாவிய ஈசனை – கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற்போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்துகொண்ட சர்வேசுவரனை. நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் – திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு 1அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி வளர்ந்த பொழிலையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. ‘ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின், 2’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும், 3’மண் அளந்த இணைத்

தாமரைகள்’ என்றும், 1‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும் 2ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்; அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.

    கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் – ஒப்பில்லாத இப்பத்தையும் கற்க வல்லவர்கள். இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை. ஞாலம் புகழவே வாழ்வு எய்தி வாழ்வர் – 3‘இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று, எல்லாரும் புகழும்படியாகக் கைங்கரியத்தை விரும்பிவிடுதல் அன்றி இவருடைய விருப்பமே விருப்பமாகக் கைங்கரியமாகிற பேற்றினையடைந்து அனுபவிக்கப் பெறுவர்கள். இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி, கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்கவேண்டி ஏத்துவார்களே அன்றோ? அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல். ‘விசேடஞ்

ஞர்கள் ஏத்துதலேயன்றி, அவர்களில் சிலர் நெஞ்சிலே துவேஷமுங்கிடக்க ஏத்துதலேயன்றி, இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.

    முதற்பாட்டில், திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எத்தகைய அடிமைகளும் செய்யவேணும் என்று விரும்பினார்; இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச் தரச்சொல்ல வேண்டுமோ?’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான் என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார் ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும் தருவர்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத் தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே அடியர் ஆனார் எல்லாரும் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்றார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்கநலம் சேர்மாறன்
பூங்கழலை நெஞ்சே! புகழ்.

‘கைங்கரியத்தைப் பெற்று, ஞாலம் புகழ வாழ்ந்த பேர் உளரோ?’ என்ன,
அதற்கு விடையாக, ‘இளையபெருமாள் ஒருவரே!’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். இவ்விடத்தில்,

  ‘திருவரை சுற்றிய சீரை ஆடையன்
பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ! இவர்க்குஇவ்வூர் உறவென் றார்சிலர்.
‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையா ரென்று
முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவி லாத
துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்;
அன்பத்துக் கெல்லை உண்டே? அழகிதென் னடிமை’ என்றான்.’

  என்ற கம்ப ராமாயணச் செய்யுள்கள் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

நிகமத்தில் -ஆழ்வார் பிரார்த்தித்தபடி எல்ல வித கைங்கர்யங்களும் செய்ய பெறுவார்
தாள் பரப்பி மண் தாவிய ஈசன்
ஞாலம் புகழ வாழ்வு எய்து
கடினமான தேசத்தில் பூவை பரப்பினது போலே
தாவிய ஈசன்
திருவேம்கடமுடையான்
கொண்டாய் குறளாய்
மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன்
மதுகைடபார சமஸ்த ஜகதாம்
மதக தாயாக இருப்பவன்
மாதா அளப்பதும்
தாள் பரப்பி மண் தாவிய ஈசன்
எல்லாரையும் திருவடிகளின் கீழே இட்டு கொஇண்டுஈ
வரையாதே காணும் வானரமும்
வாமனன் சாம்யம்
அணுக்கர் இட்டால் போலே சோலைகள் குடை பொழில் உள்ள திருமலை
அவன் ஓங்கினான் பொழிலும் நீண்டு குடை பிடிக்க
கேளில் ஒப்பு இல்லாமை
கைங்கர்யம் மனோரதித்த
பத்தும் வாழ்வு கைங்கர்யம்
மனோ ரதிது விடுவர் அன்றிக்கே பெற்று
ஞாலம் புகழவே இளைய பெருமாளை படை வீடாக கொண்டாடுவது போலே
வாழ்வு எய்தி -ஜீவிக் க வேண்டியபடியாலே -ஸ்தோத்ரம் செய்பவர் போல் அன்றிக்கே
இவனை ஏத்த பெற்றோமே ப்ரீதி உடன் ஏத்துவர்
நெஞ்சில் த் வேஷம் இன்றி இருந்ததே குடியாக ஸ்தோத்ரம் செய்வர் பாசுரம் தோறும் அருளிய அர்த்தம் தொகுத்து அருளுகிறார்
ஒளிவிழா காலம் உண்டனாகி மன்னி
மாலுக்கு
ஏழு சிகர வேம்கடத்தில்
பாரித்த மாறன்
பூம் கழலை நெஞ்சே புகழ் போற்று மா முனிகள்
பாரித்த வாசிக கைங்கர்யம் அடுத்து திருவாய்மொழியில் அருளுகிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்
மொய்த்த சோலைமொய் பூந்தடந் தாள்வரை.

    பொ-ரை : படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடத்தினது மொய்த்த சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய தடாகங்களையுமுடைய திருத்தாள் வரையை, உங்கட்கு ஏற்படுத்திய ஆயுளின் முடிவில் எல்லையைச் சென்று குறுகி எய்த்து இளைப்பதற்கு முன்னர் அடைமின்.

    வி-கு : ‘சென்று குறுகி இளைப்பதன் முன் தாள்வரையை அடைமின்,’ என்க. பை – படம். தாள்வரை – மலையடிவாரம். இரண்டாமடியிலும் நான்காமடியிலும் யகரம் ஆசு எதுகையாய் வந்தது.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1ஆக, ‘திருமலையாழ்வார் எல்லார்க்கும் ஒக்க உத்தேஸ்யமான பின்பு எல்லாரும் ஒருசேரத் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்கிறார்.

    வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ – சர்வேசுவரன் நியமித்து வைத்த ஆயுளின் முடிவான எல்லையைச் சென்று கிட்டி, ‘திருமலைக்குப்

போக வேண்டும்’ என்னும் ஆசையும் மனத்தில் தொடர்ந்து கிடக்கவும் ‘பாவியேன் 1கரணபாடவ தசையுண்டாகப் பெற்றிலேன்’ என்னும் நிலை வருவதற்கு முன்னே செல்லுங்கள். ஆக, 2‘ஓ பிரமனே! திருமகள் கேள்வனை வணங்கும்பொருட்டு, கை கால் முதலிய உறுப்புகளுடன் கூடின விசித்திரமான இச்சரீரம் முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது’ என்கிறபடியே, ‘சர்வேசுவரன் இவ்வாத்துமாவிற்குச் சரீர சேர்க்கையைக் கொடுத்தது, நரகத்திற்குக் காரணமான விஷயங்கள் இருந்த இடம் தேடிப் போகைக்காக அன்று; திருமலைக்குப் போகைக்கு’ என்கிறார்.

    3‘ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகி

தர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

    பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் – தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப்படுக்கையைக்காட்டிலும் விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்; 2திருமலையாழ்வார்தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும். மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாள் வரை – செறிந்த சோலையையும், பரப்பு மாறப் பூத்த தடாகங்களையும் உடைத்தான திருத்தாள்வரையை. எய்த்து இளைப்பதன் முன்னம் சென்று அடைமினோ. எய்த்தல் – நெஞ்சு இளைத்தல். இளைத்தல் – சரீரம் இளைத்தல்.

எல்லாரும் ஒக்க ஆஸ்ரயிக்க –
அழகரடிவாரத்தில் சேவை
இங்கே உச்சியில் சேவை
எல்லை குறுகிச் சென்று இளைப்பதன் முன்னம்
பைத்த பாம்பணையான்
மொய்த்த சோலை
பூம் தடம் தாழ்வரை
எய்த்து -சர்வேஸ்வரன் சரீர
நரகாநுபவம் அனுபவிக்க சரீரம் இல்லை
விசித்ரா தேவ சம்பந்தி ஈச்வராயா நிவேததி
சுமத்ரை -ஸ்ருஷ்டப்யம் வனவாசா -இதற்காக பெறப் பட்டாய்
நாமும் திருவேம்கடமுடையான் சேவிக்க பிறந்து
ஐயர் சொல்ல காடேறப் பெருமாள் போக -ஐயா அப்பன் -சமபுத்தி அப்பா
அப்பனை கேளு இன்றும் திரு நாராயணபுரத்தில்

அப்பனோடு –
அவன் காட்டிலே எழுந்து அருளா நிற்க படை வீட்டில் இருக்கவா பெற்றேன் –
பந்துக்கள் இடம் ப்ரீதி உள்ளவனே -தாத்பர்யம்
அதனால் காட்டுக்கு
அவர்கள் யாருக்கும் உயிர் பிராணன் போகாமல் இருக்க கைங்கர்யம் செய
வேர் பற்றான பெருமாளை நோக்கித் தாரீர்
சுக்ருதம் எல்லாம் -பெருமாள்
எல்லா உறவுமாகா ராகவன் -தானே
போவது நியாயம்
ராமே ஆபத்து விளைவிக்க பண்ணாதே கொள்ளும் –நியமிக்க
தமையனார் நடப்பார் -நடையிலே நடை கொள்ளுவார்
நடை அழகிலே கண் வைத்து காவல் சோர்வு கோளாமல்
அது போலே சேதனர் திருமலைக்கு ஸ்ரத்தை உண்டானாலும்
பாவியேன் -கர்ம அவஸ்தை வரும் முன்
தன்னோட்டை ஸ்பர்சத்தால் விரிந்த மலர்ந்த
படுக்கை விட இங்கே விரும்பு நிற்கும் தேசம்
காட்டிலும் திருமலை ஆழ்வார் சேஷ கிரி சேஷாசலம்
மொய்த்த சேர்ந்த சோலையையும் -பரப்புமாற பூத்த
எய்த்து -இளைத்தல் -இரண்டு சப்தம்
நெஞ்சு இளைப்பு சரீர இளைப்பு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

ஓயும் மூப்புப் பிறப்புஇறப் புப்பிணி
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்து
ஆயன் நாள்மல ராம்அடித் தாமரை
வாயு ளுமமனத் துள்ளும்வைப் பார்கட்கே.

    பொ-ரை: நோய்களை அழியும்படி செய்கின்றவனான திருவேங்கடத்திலிருக்கிற எம்பெருமானது அன்று மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை வாயிலும் மனத்திலும் வைப்பார்கட்கு முதுமை பிறப்பு இறப்பு இவைகள் நீங்கும்.

    வி-கு : ‘மூப்பு பிறப்பு இறப்பு ஓயும்,’ என மாறுக. செய்வான் – வினையாலணையும் பெயர். வினையெச்சமாகப் பொருள் கோடலுமாம். ஆயன் – கிருஷ்ணன். ‘வைப்பார்கட்கு ஓயும்’ என முடிக்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. ‘நம் விரோதியையும் போக்கிப் பேற்றினையும் திருமலையாழ்வார்தாமே தருவர்,’ என்றார் மேல் இரண்டு பாசுரங்களாலே; 1‘இப்படி விரோதியான பாவங்களைப் போக்கி வீடு பேற்றினைத் தருவதற்குத் திருமலையாழ்வாரெல்லாம் வேண்டுமோ? திருமலையாழ்வாரில் ஒரு பகுதி அமையாதோ?’ என்கிறார் இப்பாசுரத்தில். ‘ஒரு பகுதி’ என்

றது, திருவேங்கடமுடையானை; ‘வட மா மலையுச்சியை’ என்பர் திருமங்கை மன்னன்.

    மூப்பு பிறப்பு இறப்பு ஓயும் – பிறப்பு முதுமை இறப்பு முதலானவைகள் ஓயும். ‘இப்போது ஓயும்’ என்கையாலே, இதுகாறும் அநாதி காலம் உச்சி வீடும் விடாதே போந்தது என்னுமிடம் தோன்றுகிறது. ‘பிணி வீயுமாறு செய்கின்றவனான திருவேங்கடத்துஆயன்’ என்னுதல்; ‘பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன்’ என்னுதல். ‘இவர்கள் பிணியும் இங்ஙனே சென்றிடுவதாக என்று இருந்தானாகில், கலங்காப் பெருநகரத்தில் இரானோ? என்பார், ‘பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன்’ என்கிறார். ஈண்டுப் ‘பிணி’ என்கிறது, சரீர சம்பந்தங் காரணமாக வருகின்ற எல்லா நோய்களையும். ஆக, இதனால், துக்கத்தைப் போக்கும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை; அவனே வந்து போக்கானாகில், இந்த 2எலி எலும்பனுக்குப் போக்கிக்கொள்ளப் போகாதேயன்றோ?

    நாள் மலராம் அடித்தாமரை – செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார். ‘அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி. இதனால், ‘விரோதி போகைக்கு இவ்வேப்பங்குடிநீரை ஆயிற்றுக் குடிக்கச் சொல்லுகிறது என்கிறார்,’ என்றபடி. வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு – இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி. வாயுள் வைக்கையாவது, 3‘ஓவாது உரைக்கு முரை’ என்கிறபடியே உரைத்தல். மனத்துள்

வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி உறுப்புகட்கு அடைத்த காரியங்களைக் கொள்ளவே, சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

    பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயனுடைய நாண்மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும்.

பிராப்தியும் திருமலை தரும் என்றவர் மறுபடியும் திருவேம்கடது ஆயன் –
விரோதி பாபங்கள் போக திருமலை ஆழ்வார்  எல்லாம் வேணுமோ
ஏக தேசம் போதுமே
அதனால் திருவேம்கடமுடையான்
வடமாமலை உச்சி -கலியன்

ஓயும் ஜன்ம ஜர மர ணாதிகள்
ஓயாதது ஓயும்
அவனோடு அன்வயம்
வீடுமாறு செய்பவன்
செய்வதற்காக இருக்கிறவன் –
பிணி-சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் அவை எல்லாம்
ஓயும் மூப்பு சொன்ன பின்பு
பிணி இங்குத்தை துக்க நிவ்ருத்தி வியாதிகள்
எலி எலும்பனுக்கு போக்கி கொள்ள முடியாது
அடித் தாமரை வாய் –மனசு சொல்லி -முக் கரணங்களால்
அவன் கால் காண நசிக்கும்
வேப்பம் சாறு குடிக்க சொல்ல வில்லையே -இனிமையான விஷயம்
செவ்விப் பூவை நாண் மலரா அடித் தாமரை
மனோ வாய் காயங்களால் ஓவாது உரைக்கும் உரை
கரணங்களுக்கு அடைந்த கார்யம் ஸ்வரூப விரோதிகள் போகும்
ஆயன் -கண்ணன் வேங்கட கிருஷ்ணன் -சௌலப்யம்
அப்பொழுது அலர்ந்த தாமரை பூ போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.

பொ-ரை : கோவர்த்தனமென்னும் மலையைத் தூக்கிக் குளிர்ந்த மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும் காத்தவன்; அக்காலத்தில் உலகத்தை அளந்த உபகாரகன்; எல்லார்க்கும் மேலானவன்; இவ்வாறான இறைவன் சென்று தங்கியிருக்கின்ற திருவேங்கடம் என்னும் மலை ஒன்றையுமே வணங்க, நம்முடைய வினைகள் நீங்கும்.

    வி-கு : ‘ஏந்திக் காத்தவன்’ என்றும், ‘தொழ ஓயும்’ என்றும் முடிக்க. ‘ஒன்றுமே’ என்பதில் ஏகாரம் பிரிநிலை.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1‘வேங்கடங்கள்’ என்கிற பாசுரத்திற்கூறிய விரோதி போக்கலையும் திருமலையாழ்வார் தாமே செய்து கொடுப்பர் என்கிறார். இனி, ‘ஒரு பேற்றினைத் தரல் வேண்டுமோ? திருமலையே நமக்கு உத்தேஸ்யம்; அடிமை கொள்பவனுக்கு உத்தேஸ்யமானது அடியவனுக்கு உத்தேஸ்யமாகச் சொல்ல வேண்டுமோ?’ என்கிறார் என்னுதல்.

    குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் – 2‘இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அப்பொழுது அக்கோகுலத்தைப் பார்த்துக் கிருஷ்ணன் சிந்தித்தான்,’ என்கிறபடியே, பசுக்களும் ஆயர்களும் மழையிலே தொலையப் புக, கண்ணுக்குத் தோன்றியதொரு மலையைப் பிடுங்கி ஏழு நாள் ஒருபடிப்படத் தரித்துக்கொண்டு நின்று அவற்றைக் காத்தவன். 3இதனால், துக்கத்தைப் போக்கும் சாதனம் மலையே என்பதனைத் தெரிவித்தவாறு. அன்று ஞாலம் அளந்த பிரான் – ஓர் ஊருக்கு உதவினபடி சொல்லிற்று மேல்; இங்கு நாட்டுக்குஉதவினபடி சொல்லுகிறது; விரோதியான மஹாபலியாலே பூமி கவரப்பட்ட அன்று, எல்லை நடந்து மீட்டுக்கொண்ட உபகாரகன். பரன் – எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவன். சென்று சேர் திரு வேங்கட மா மலை – அவன் தனக்கு 1உத்தேஸ்யம்’ என்று வந்து வசிக்கிற தேசம். ஒன்றுமே தொழ – ‘ஒன்றையுமே வணங்க. உள்ளே எழுந்தருளி யிருக்கிறவன் தானும் வேண்டா, திருமலையாழ்வார்தாமே அமையும்,’ என்பார், ‘ஒன்றுமே’ என்கிறார். நம் வினை ஓயும் – ‘பெற வேண்டும் பேற்றினைப் பெற்றிலோம்’ என்கிற துக்கத்தைப் போக்கும்’ என்னுதல்; ‘வேங்கடங்கள்’ என்னும் பாசுரத்திற்கூறிய, அடிமை செய்வதற்குத் தடையாக உள்ளனவற்றைப் போக்கும் என்னுதல்.

புருஷார்த்தத்தை திருமலை தர வேணுமோ
திருமலையே புருஷார்த்தம்
சேஷிக்கு உத்தேச்யம் ஆனது சேஷ பூதனுக்கும் உத்தேச்யம்
மலை ஒன்றே போதுமே
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்
சென்று சேர் திருவேம்கடம் ஒன்றுமே தொழ
துக்க நிவ்ருதிக்கு நிவர்தகம் மலை
அங்கும் கோவர்த்தன மலை -மழைக்கு பரிகாரம்
துக்க வர்ஷினி சம்சாரம் –
கோ கோபி ஜனங்கள் -நலிய புக கண்ணுக்கு தோற்றின மலையை
அன்று ஞாலம் -அது ஊருக்கு செய்தான்
நாட்டுக்காக உதவின படி -வாமனன் -சர்வ ரஷகன் ஆஸ்ரித ரஷகன்
சர்வேஸ்வரன் உத்தேச்யம் என்று வர்த்திக்கும்
திருமலை தொழுதால் பிராப்யம் பெறவில்லை வினை என்னுதல்
வேம் கடங்கள் பிரதிபந்தகங்கள் போகும்
பூ தொடுக்க கூப்பிட்டு அனுப்பி -பரன் சென்று சேரும்
எம்பெருமான் ஆக்ஜை
போக சொல்ல நீயும் வந்து சேர்ந்தவனே
இரண்டு தடவை சேவிப்பார்கள் இந்த பாசுரத்தையும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றுஎ ழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.

    பொ-ரை : நித்தியசூரிகள், சேனை முதலியாரோடும் வந்து சிறந்த பூக்களையும் தண்ணீரையும் விளக்கையும் வாசனைப்புகையையும் தாங்கிக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடமானது, நமக்கு ஒத்ததாகவுள்ள மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய பெரிய மலையாகும்.

    வி-கு : ‘மா மலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு’ என மாறுக. நமன்று – வணங்கி.

    ஈடு : ஏழாம் பாட்டு. ‘முதற்பாசுரத்தில் பிரார்த்தித்த கைங்கரியத்தைத் திருமலை தானே தரும்,’ என்கிறார். ‘‘வீடு தரும்’ என்றால், ‘மோக்ஷத்தைத் தரும்’ என்பதன்றோ பொருளாம்? கைங்கரியத்தைத் தரும் என்று பொருள் கூறல் பொருந்துமோ?’ எனின், கைங்கரியம் என்பது, 1பகவானை அடைதலுக்குப் பலமாய் வருவதாதலின் பொருந்தும்.

    சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு – ‘மா மலர் நீர் சுடர் தூபம் இவற்றைச் சுமந்துகொண்டு’ என்னவுமாம். அன்றி, ‘மா மலர் சுமந்து, நீர் சுடர் தீபம் கொண்டு’ என்னவுமாம். ஆக, 2‘ஒரு கருமுகை மாலையேயாகிலும் இதைக் கண்டருளக்கடவனே! சார்த்தியருளக்கடவனே! நம்மை விசேட கடாக்ஷம் பண்ணியருளக்கடவனே!’ என்றிருக்கிற இவர்கள் அன்பின் மிகுதியாலே கனத்துத் தோன்றுகிறதாதலின், ‘சுமந்து’ என்கிறார். இனி, அன்புடையவன் இட்டதாகையாலே சர்வேசுவரன் தனக்குக் கனத்துத் தோன்றுமாதலின், ‘சுமந்து’ என்கிறார் என்னுதல். 3ஸ்ரீ புருஷோத்தமமுடையானுக்கு

அரசகுமாரன் செண்பகப் பூக்கொண்டு அணிந்தபடியை நினைப்பது. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், ஸ்ரீ புருஷோத்தமமுடையான் செண்பகம் உகந்து அணிவர்; அரச குமாரர்கள் சிலர், செண்பகங்கொண்டு சார்த்துவதற்குத் தேடி, கடைகளிலே சென்று பார்க்க, ஒரு பூ இருக்கக் கண்டு, அப்பூவுக்கு ஒருவர்க்கொருவர் செருக்காலே விலையை மிகமிக ஏற்ற, அவர்களிலே ஒருவன் நினைக்க வொண்ணாதவாறு பொருளை மிகக் கொடுத்து அதனை வாங்கிக்கொண்டு வந்து சார்த்தினான்; அன்று இரவில் அவனுடைய கனாவில், ‘நீ இட்ட பூ எனக்குக் கனத்துச் சுமக்க முடிகிறதில்லை,’ என்று அருளிச்செய்ததைக் குறித்தபடி. அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திருவேங்கடம் – நித்தியசூரிகளும் சேநாபதியாழ்வானும் பொருந்தி இப்படி ஆராதனைக்கு வேண்டிய பொருள்களைக்கொண்டு வணங்கி எழுகின்ற திருவேங்கடம். இனி, ‘வானவர் வானவர் கோன்’ என்பதற்கு, ‘தேவர்களும் தேவர்கட்குத் தலைவனான பிரமனும்’ என்று பொருள் கூறலுமாம். 1இவர்கள் வேறு பலன்களை விரும்புகின்றவர்களாயினும், சேர்ந்த நிலத்தின் தன்மையாலே 2அநந்யப் பிரயோஜனர்களாக மாறுகிறார்களாதலின், ‘அமர்ந்து’ என்கிறார். இப்படிச் சமாராதன உபகரணங்களைக் கொண்டு வணங்கி எழுவர்களாயிற்று. ‘துயரறு சுடரடி தொழுது எழு’ என்கிற தமது வாசனை அவர்களுக்கும் உண்டு என்று இருக்கிறாராதலின் ‘நமன்று எழும்’ என்கிறார்.

    நங்கட்கு – கைங்கரிய ருசியையுடைய நமக்கு. சமன் கொள் வீடு தரும் – 3‘பிரஹ்மத்தையறிந்தவன் பிரஹ்மம்போல ஆகிறான்,’ என்றும், 4‘பிரஹ்ம வித்தையால் குற்றம் அற்றவன் பூர்ண ஒப்புமையையடைகிறான்,’ என்றும், 5‘இந்த ஞானத்தையுடையவர்கள் எனக்குச் சமமான உருவம் முதலியவற்றை அடைந்தவர்கள்,’ என்றும், 6‘தம்மையேயொக்க அருள் செய்வர்,’ என்றும் சொல்லுகிறபடியே, அவன், ‘அவனோடுஒத்ததாகையாகிற மோக்ஷத்தைத் தரும்’ என்னுதல்; 1‘இவ்வாத்துமாவானது சரீரத்தை விட்டுக் கிளம்பி ஒளியுருவமான பிரஹ்மத்தையடைந்து தனது உருவத்தோடு கூடுகிறான்,’ என்கிறபடியே, ‘இவ்வாத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான மோக்ஷத்தைத் தரும் என்னுதல்; இனி, ‘திருமலைதானே தன்னோடு ஒத்த பேற்றைப் பண்ணித் தரும்,’ என்னுதல்; என்றது, ‘திருமலையாழ்வார்தாம் திருவேங்கடமுடையானைத் தம் திருமுடியிலே எழுந்தருளுவித்துக்கொண்டன்றோ இருப்பது? அப்படியே 2‘நின் செம் மா பாத பற்புத் தலை சேர்த்து’ என்று இவர் வேண்டிக்கொண்ட பேற்றைத் திருமலையாழ்வார் தாமே தந்தருளுவர்,’ என்றபடியாம். தடங்குன்றம் – திருவேங்கடமுடையானுக்குத் தன் விருப்பின்படி சஞ்சாரம் பண்ணலாயிருக்கும்படி இடமுடைத்தாயிருக்கை. 3‘ஸீபக: – வீறுடைத்தாயிருக்கை. கிரிராஜ உபம: – திருமலையோடு ஒத்திருக்கை. யஸ்மிந்வஸதி – அதற்கு ஏது சொல்லுகிறது. காகுஸ்த்த: – போகத்துக்கு ஏகாந்தமான இடம் தேடி அனுபவிக்கும் குடியிலே பிறந்தவர் விடாதே விரும்பி வசித்தார் என்பது யாதொன்று உண்டு? குபேர இவ நந்தநே – துஷ்ட மிருகங்கள் மிகுதியாகவுள்ள தேசத்திலே செருக்கனான குபேரன் போது போக்குகைக்காகத் தன் உத்தியானத்திலே உலாவுமாறு போன்று சஞ்சரித்தார்.’

‘சமன் கொள் வீடு’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்
செய்கிறார். முதற்பொருளும், மூன்றாவது பொருளும் சாம்யாபத்தி ரூபமான
மோக்ஷம் என்பது. இரண்டாவது பொருள், ஸ்வரூபத்துக்குத் தகுதியான
மோக்ஷம் என்பது. சமம் – ஒத்தல்; தகுதி.

கைங்கர்யம் திருமலையே கொடுக்கும் பிரார்த்தனை பலன் –
குன்றமே -சமன் கொள் வீடு தரும்
நித்யர்களும் தொழும் -சுமந்து மா மலர் சிடர் நீர் தூபம் சுமந்து
வானவர் அமர்ந்து
நம சொல்லி எழும்
சுமந்து -பெரியஜீயர் -இந்த நான்கையும் செய்யும் கைங்கர்யம்
தோ மாலை புஷ்பம் –
கொண்டு -மா மலர் சுமந்து நீர் சுடர் தூபம் கொண்டு
கரு முகை மாலை -விசேஷ கடாஷம் செய்ய கடவனே கனத்து தோன்றும்
அனுகூலர் இட்டதால் சர்வேஸ்வரன் கனக்க நினைப்பான்
பூரி ஜெகன்னாதா -ஷேத்ரம் செண்பகப் பூ வ்ருத்தாந்தம்
ஒரே புஷ்பம் இருக்க –

ப்ரீதி பக்தி உடன் சமர்பித்ததால் சுமக்க
ராஜ புத்ரர்கள் -செருகாலே த்ரவ்யம் போர ஏத்தி -நினைக்க ஒண்ணாத படி
இட்ட பூ கனம் –
செருக்காலே வார்த்தை –
தொண்டைமான் போன்புஷ்பம் குறும்பு அறுத்த நம்பி மண் புஷ்பம்
செருக்காலே -சுமக்க முடியாதே –
அமர்ந்து -நித்யசூரிகள் சேனாபதி ஆழ்வான்
தேவர்கள் பிரமன் என்றும் கொண்டு பிரயோஜனந்த பரர்
அவர்களையும் அநந்ய பிரயோஜன பரர் ஆக்கும் ஸ்வா பாவம் உள்ள திருமலை
உபகரணங்கள் கொண்டு -தொழுது எழு தமது வாசனை அவர்களுக்கு உண்டு
தங்கட்கு -பிரமாதிகள் பெற்றால் நாம் பெறுவோம்
சமன் கொள் வீடு -சாம்யா பத்தி பரமம் சாம்யம் உபதி
தன்னையே ஒத்த அருள் செய்வான்

சமன் கொள் -ஜீவாத்மாவுக்கு சமமாக
ச்வரூபதுக்கு சேர ஆதமா ஸ்வரூப அநு ரூபமான
தன்னோடு ஒத்த பேற்றை திருமலை கொடுக்கும்
திருவேம்கடமுடையானை தலை மேல் சுமக்கும் அருள் பெறுவோம்
செம்மா பாத பற்பு தலை மேல் ஒல்லை பிரார்த்தித்த  படியே அருளும்

இஷ்டப்படி உலாத்தலாம் படி
சித்ர கூடம் சக்ரவர்த்தி திருமகன் -பரதச்ய வசனம்
குபேர இதி நந்தன -போலே காகுஸ்தன் -வசதி
சுபதக -கிரிராஜன் உபமதி –
வீறு உடைத்தாய் -திரு மலையை போல் ஒத்து இருக்கை
யஸ்மின் வசதி -சக்கரவர்த்தி திருமகன் இருப்பதால்
போகத்துக்கு ஏகாந்தமாக இடம்
விடாமல் விரும்பி வர்த்திக்கிற தேசம்
தடம் குன்றம் -பெருமாள் நித்ய வாசம் செய்யும் பெருமை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

வேங்க டங்கள்மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துஉறை வார்க்கு நமஎன்னல்
ஆஅங் கடமை அதுசுமந் தார்கட்கே.

    பொ-ரை : ‘திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவர்க்கு வணக்கம்,’
என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியமாம்; அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக்கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்துவிடும்; அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள்.

    வி-கு : ‘கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்,’ என மாறுக. கடன் – கடம்; னகரத்திற்கு மகரம் வந்தது. ‘கள்’ பன்மையையுணர்த்த வந்தது. ‘சுமந்தார்கட்கு வேம்’ எனக் கூட்டுக.

    ஈடு : ஆறாம் பாட்டு : 2மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான ‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். ‘இறைவன் பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பெற்ற அளவைக் கொண்டு மனம் நிறைவு பெறாதவனாகவிருந்தாலும், நாம் ஆசை

யுடன் கூடினவர்களாகவிருந்தாலும், 1சரீர சம்பந்தங்காரணமாகத் தொன்றுதொட்டு நாம் செய்து வைத்த, பகவானையடைவதற்குத் தடையாகவுள்ள கர்மங்கள் செய்வன என்?’ என்ன, ‘நாம் இதிலே துணியவே அவையெல்லாம் தாமாகவே நசிக்கும்,’ என்கிறார்.

    கடங்கள் வேம் – 2‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும், 3‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’ என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள்வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி. மெய்ம்மேல் வினை முற்றவும் – சரீரத்தின் சம்பந்தங்காரணமாக வருகின்ற பாவங்களைச் சொல்லுகிறது. ஆக, கடன்கள், மெய் மேல் வினைமுற்றவும் வேம் – நசிக்கும் என்றபடி. 1இங்ஙனம் ஆளவந்தார் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘இதற்கு, வேதாந்தத்திற்சொல்லுகிற கட்டளையிலே பொருள் சொல்ல அமையாதோ?’ என்று இங்ஙனம் அருளிச்செய்வர். அதாவது, 2‘ஞானத்தையடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ என்றும், 3‘இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும் நெருப்பிற்போடப்பட்ட துய் போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும் சொல்லுகிறபடியே ‘வேம்’ என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற்போய்விடுகையும் சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற்போதலைச் சொல்லிற்றாகவுமாம்.பூர்வாகமாவது – ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த தீவினைகள். உத்தராகமாவது – ஞானம் பிறந்த பின்பு அஜாக்கிரதையால் செய்து போந்த தீவினைகள். ‘ஆயின், பிரபந்நனுக்கு உத்தராகம் வருவதற்குக் காரணம் உண்டோ?’ எனின், ஞானம் பிறந்த பின்பும் விரோதியான சரீர சம்பந்தம் தொடர்ந்து வருகையினாலே பாவங்களிலே செல்லுவான்; பின்னர், ஞானம் பிறந்து, கடுக மீண்டு முன்பு செய்ததற்கு ‘நாம் என் செய்தோமானோம்!’ என்று கழிவிரக்கங்கொண்டு வருந்துவான். கடங்கள் மேல் வினை முற்றவும் வேம்; இது மெய்-சத்தியம். ‘இப்படிச் செய்கின்றவனுடைய எல்லாப் பாவங்களும் அழிகின்றன ‘என்பது உபநிடத வாக்கியம். ‘ஆயின், உபநிடதம் கூறின், அது மெய்யாக வேண்டுமோ?’ எனின், பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் திரிபுணர்ச்சிக்குக் காரணமாய் அவ்வுணர்ச்சியை நீக்குவதாயுமிருக்கும்; அவ்வாறு அன்றி, ‘உண்மையை உள்ளவாறே கூறுவது சாஸ்திரம்,’ என்கிறபடியே, சாஸ்திரம் சொல்லிற்று என்றால் அவ்வர்த்தம் மெய்யாக இருக்குமன்றோ?

    ‘ஆயின், மேல் வினை முற்றவும் சாராவாகில், அவற்றிற்குப் போக்கடி என்?’ எனின், 1கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் நாலடி வர நின்றவாறே, அச்சமயத்திலேயே ‘உன் விரோதிகளைச் சொல்லாய்’ என்றார் அன்றோ? இவ்விடத்திலே பட்டர் ஒரு ஐதிஹ்யம் அருளிச்செய்வர்: ‘பண்டு தலையில் மயிர் இல்லாதான்

ஒருவன் நெல் அளந்துகொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று, ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்றுமின்று; கண்டு போக வந்தேன்,’ என்ன, ஆகில், ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட, அவன் அதனைக்கொண்டு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து, ‘இது பெற்றது எங்கே?’ என்ன, ‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்ன, அவன் சென்று அங்கேயுள்ள அவனைக் கண்டு, ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையுங்கொண்டு என்னையும் வைது போவதே!’ என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து, ‘ஏன்தான் குழல்கள் அலைய அலைய ஓடி வாராநின்றாய்?’ என்ன, ‘ஒன்றுமின்று, இன்னம் ஒரு கோட்டை கொண்டுபோகச் சொல்ல வந்தேன்,’ என்றானாம்; அப்படியே, கடலை முகங்காட்டுவித்துக்கொள்ளுகைக்காகக் காலைப் பிடிப்பது கோலைத் தொடுப்பதாகாநிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே, ‘உனக்கு அம்பு தொடுத்தோம்’ என வெட்கி, ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’ என்றார் அன்றோ?

    இனி, முதற்பாசுரத்திலே 1சொல்லாமல் விடப்பட்டதொரு பொருளைச் சொல்லுகிறார் மேல்: தாங்கள் – மற்றை விஷயங்களில் விரக்தராய்க் கைங்கரிய ருசியுடையராயிருக்குமவர்கள். தங்கட்கு – இப்படிப்பட்ட ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு. நல்லனவே செய்வார் – தங்கள் சொரூபத்தோடு சேர்ந்த கைங்கரியத்தையே செய்வார்கள். ‘ஆக, இதனால், பலத்தை அனுபவிக்கிறவனுக்குப் பலத்தைப் போன்று விரோதி கழிதலைப் பிரார்த்தித்துப் பெறவேண்டியிருக்குமோ?’ என்னில், ‘அது வேண்டா; தாங்கள் தங்களுக்கு நன்றான கைங்கரியத்தைச் செய்யாநிற்க அமையும்; இவ்விரோதி தன்னடையே போம்,’ என்கிறார் என்றபடி. ‘ஆனால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் என்பதற்கு, ‘தங்களுக்கு நல்லவையாய்த் தோற்றியவற்றைச் செய்வார்கள்’ என்று பொருள் கூறின் என்னை?’ எனின், அங்ஙனங்கூற ஒண்ணாதே! ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற 1அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி ‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான். ‘நன்று; ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்கிறது, இவர்களை 2எங்ஙனேயாக நினைத்து?’ எனின், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கே – ‘வேங்கடத்துறைவார்க்கு’ இதனால், நான்காம் வேற்றுமையின் அர்த்தம் சொல்லப்படுகிறது; ‘நம:’ – எனக்கு அன்று, அவனுக்கு என்றபடி. என்னல் – இது தான் நெஞ்சில் உண்டாக வேண்டா; சொல்லளவே அமையும்; ‘இதுதான் சிறியதாய் இருப்பினும் இவன்தனக்குச் செய்தற்கு அருமையாக இருக்குமோ?’ எனின், ஆம் – மிக எளிதான காரியம். ‘எளிது எனின் சொரூபத்தோடு சேராததாயிருக்குமோ?’ என்னில், கடமை – செய்யத்தக்கது. அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப்போன்று ‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார். இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர்தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்; இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே

சொல்லுகிறாராதல். ‘ஆயின், அவன் நினைவு அப்படியிருக்குமோ?’ எனின், 1‘நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?

    2‘திரௌபதி வெகுதூரத்தில் வசிக்கின்ற என்னைக் ‘கோவிந்தா!’ என்று கூவி அழுதாள் என்பது யாதொன்று உண்டு; அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, ‘கோவிந்தா!’ என்று நம் பேரைச் சொன்னாள்; நாம் ஒன்றும் செய்திலோம் என்று அவளைக் கொண்டாடி, தன்னை நிந்தித்துத் திருவுள்ளம் புண்பட்டிருக்குமவனன்றோ? அப்போது சபையில் பிறந்த பரிபவம் நீக்கப்பட்டிருந்தும், ‘நம் பேரைச் சொல்லிக் கூப்பிட்டவளுக்கு ஆற்றாமையிலே முகங்காட்டப் பெற்றிலோம்’ என்று தான் உள்ளதனையும் இழவுபட்டிருந்தான் என்றபடி. ‘இழவுபடுகிறது என்? காரியம் செய்யப்படவில்லையோ?’ எனின், 3‘நம்முடைய பெயர் தன் காரியம் செய்ததத்தனை போக்கி, நாம் இவளுக்கு ஒன்றும் செய்திலோமே!’ என்று இருந்தான். ‘ஆயின், கிருஷ்ணனையொழியவும் திருப்பெயரே காரியம் செய்யவற்றோ?’ எனின், பொருத்தமில்லாமல் இரண்டு சொற்களைச் சேர்த்துச் சொல்ல அது விஷத்தைப் போக்குதற்குக் காரணம் ஆகாநின்றதே சொற்களின் சத்தியால்? அதைப் போன்றும் போராமை இல்லையன்றே திருநாமம்?

    ‘வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ எனக் கூட்டுக.

ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடனைக் குறித்தது;
‘மெய் மேல் வினை முற்றவும்’ என்றது, பூர்வோத்தராகங்களைக் குறித்தது;
மெய் – சரீரம். எம்பெருமானார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடன்
போலே அவசியம் அனுபவிக்கத் தக்கவைகளைச் சொல்லி, ‘மேல் வினை
முற்றவும்’ என்றது, உத்தராகத்தைச் சொல்லுகிறது. மெய் – சத்தியம் என்பது
பொருளாம். எம்பெருமானாருடைய நிர்வாகம் இரண்டு வகை: ‘அதாவது,
ஞானத்தையடைந்தவுடன்’ என்றது முதல் ‘சம்பந்தியாமற் போய்விடுகையும்
சொல்லுதல’ என்றது முடிய ஒரு வகை. ‘பூர்வாகத்துக்குச் சொன்ன
அழிவுதானே’ என்றது முதல் ‘சம்பந்தியாமல் போதலைச்
சொல்லிற்றாகவுமாம்’ என்றது முடிய இரண்டாவது வகை.

இவ்விடத்தில்,

  ‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்’

  என்னும் ஆண்டாள் ஸ்ரீ சூக்தியையும், ‘சாரக் கடவனவாய் நின்ற
துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின், உயிரான் அளவின்றி
ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான்
அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும்
அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல
ஞான யோகங்களின் முன்னர்க் கெடுதலான், ‘அழித்துச் சார்தரா’ என்றார்;
மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும்
என்றார்; ‘அஃது

திருமந்த்ரத்தை முதல் பாட்டில் அருளிச் செய்து
நம சப்தார்தம் அதில் ஸ்பஷ்டமாக சொல்ல வில்லையே
அவித்யாதிகள் கழிகை
அதை இங்கே அருளிச் செய்கிறார்
கர்மங்கள் நசிக்கும் தனனடையே
உடம்பு கர்மம் -சரீர சம்பந்த நிபந்தனம் பாப கூடங்கள்
பகவத் பிராப்தி பிரதிபந்தங்கள்
இதில் துணியவே உத்யோக்கிக்க இறங்கவே எண்ணில் துணிக கர்மம் –
மாயனை -பாசுரம் போலே இறங்கவே போகும் தீயினில் தூசாகும்
வேம் கடங்கள் இங்கு
வெந்து போகும் பாபங்கள்
கடன் -எல்லாம் போகும்
மெய் சத்யம்
மேல் வினை வரக் கூடிய பாபங்களும்
வேம்கடது உறை வார்க்கு நம சொன்னால் போதும் –
இது ஒன்றை செய்தால் அவன் சுமந்து இருந்து
கடம் -கடன் என்றபடி மனனே னகர மகரகடைப் போலி
அது போலே இங்கு
கடன்கள் -மனுஷ்யன் பிறக்கும் பொழுதே மூன்று கடன்கள்
ஆளவந்தார் நிர்வாகம் -ப்ரமசர்யென ரிஷிகள் கடன் /யக்ஜம் கொண்டு தேவதைகள் கடன் -பிரஜை பித்ரு கடன் தீர்க்கிறான்

மூன்றையும் தொலைத்த பின் நல்கதி அடைவான்
வேம் -வெந்து போகும்
மெய் மேல் -சரீரம் மேல் வினை கர்மங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால்
இவை முற்றவும் நசிக்கும்-வேம் -ஆளவந்தார் நிர்வாகம்
எம்பெருமானார் கேட்டு அருளி -வேதாந்தம் சொல்லும் கட்டளை
முன்பு சொனது வேதம் சொன்னபடி –
உத்தர பூர்வாக
ஏவம் சாந்தோக்ய உபநிஷத்
சர்வே பாபேப்மான அழிந்து போகும்
உரு மாய்ந்து இஷிகம் இலவம் பஞ்சு போலே –
தாமரைஇலை தண்ணீர் போலே ஒட்டாது -இரண்டு வாக்கியம் சொல்லி –

உபநிஷத் இரண்டையும் சொல்லி -வேத வியாசர் சங்கை தீர்க்க பிரம சூத்திரம்
எம்பெருமானை அறிந்து கொள்ளுவதற்கு முன் னால் செய்த பாபம் உரு மாய்ந்து போகும்
பூர்வாகம் இது உத்தராகம் -அறியாமல் தவிர்க்க முடியாத பாபங்கள் -பிரகிருதி சம்பந்தத்தால்
கிருபை காரணமாக ஒட்டாது வராத கடன் -தள்ளுவது போலே –
மாப்பிளையாக ஸ்வீகாரம் செய்த பின்பு கொடுப்பது கடனே இல்லையே
அது போலே எம்பெருமான் -உத்தர பூர்வ அபயோக அத்வேஷம் விநாசம் –
மூன்று கடன்கள் -என்று கோளாமல்
உத்தர பூர்வ -வேம் -வெந்து போகும் -கடன்கள் -பாபங்கள் பூர்வ
மேல் வினை சாரா வார்த்தை வரவு செய்து கொண்டு  உப லஷண ம் –அச்லேஷம் ஒட்டாது
ஞானம் பிறந்த பின்பு தெரியாமல் செய்யும் பாபங்கள் உத்தராகம்
விரோதியான தேக சம்பந்தம் அனுவர்த்திகையாலே
முன்பு செய்ததுக்கு என் செய்வோம் அனுதாபம் செய்வதே பிராயச்சித்தம்
கடன்கள் மேல் வினை –
இது சத்யம் –
முற்றவும் சாரா -பிரத்யஷாதிகள் -பிரமாணம் இல்லை சாஸ்திரம் ஒன்றே பிரமாணம்
பிரமமுண்டாக்கும் மற்றவை
சாஸ்திரம் சொல்வது மெய்யாகி இருக்கும்
நம பத அர்த்தம் இது
இங்கே சொல்லுகிறார் –
அத்தனை பாபங்களையும் போக்குவாரா –
பலன் அனுபவித்தே தீர வேண்டுமே
ஸ்தோத்ரம் செய்ய பாபங்கள் மறந்து போகிறான் சர்வஞ்ஞன்
கடலுக்கு தொடுத்த அம்பை விரோதிகள் இடம் -சாகரம் தோஷ இஷ்யாமி
உனக்குதோற்ற அம்பு இல்லை பொய் சொல்கிறான் சக்கரவர்த்தி திருமகன்

ஸ்வாமி இப்பொழுது தான் எழுந்து இருக்க -கௌ ரவ வார்த்தை
அடே வழி விடு சொல்லாம் இருக்க சமுத்திர ராஜன்
பட்டர் அருளிய கதை
பண்ணையார் -நெல்லை வாங்கிய கதை கழற்று மேட்டில் –
குழல் அசைய வாடுகிறதே மொட்டை தலையன் ஒரு மூட்டை நெல்லை கொடுக்க
வந்தவனும் மொட்டை தலையன்
உன்னைப் போலே மொட்டை தலையன் ஏமாந்தான்
இருப்பதாய் சொல்லி கோபம் இங்கே
இல்லாதது சொல்லி சந்தோஷம் அங்கே –
ஓடி சென்று -கேட்க
குழல் அசைய ஓடி வர வேண்டுமா –
இன்னொரு மூட்டை நெல்லை கொடுக்க -வந்தேன்

சர்வேஸ்வரன் தனக்கு செய்த அபராதங்கள் மறப்பான் சொல்ல  வேண்டுமா

கடலை முகம் காட்ட கலை பிடித்து கோலை பிடித்து
விரோதிகளுக்கு என்றான்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
இவர்களை -பல போக்தாவான -உத்தேச்யம் போலே -பிரார்த்தித்து பெறாமல்
ஸ்தோத்ரம் செய்தால் -தன்னடைவேபோகும்
நன்றன கைங்கர்யம் பண்ணா நிற்க அமையும்
விளக்கு ஏற்றி இருட்டு தானே போகுமே

ஸ்வரூப ப்ரப்தமானவற்றை செய்தால் தன்னடையே போகுமே –
அவானவனும் கடன் கடமை அர்த்தம் அங்கெ
கடன் பாப்பம் இங்கே
ஆகாமி –
சஞ்சிதம் வேம் -ஞானம் பெற்றவனுக்கு நெருப்பில் இட்ட பஞ்சு போலே
ஒட்டாது -இரண்டாக பிரித்து அர்த்தம் –
அவஸ்யம் அனுபவித்தே போக்க வேண்டுமே -கோபம் போய் பாப்பம் போகுமே
கடல் அரசன் திருஷ்டாந்தம் கதை பார்த்தோம் -இல்லாத ஒன்றை சொல்லி -பரிசு கொடுத்த கதை -மேல் வினை முற்றவும் சரா
பண்ண வேண்டிய கார்யம் -பிரார்த்தி பெற வேண்டாம் -தன்னடையே விரோதி போகும் என்றார் –
தாங்கள் தங்கட்குநல்லனவே செய்வார்  -வழு இலா அடிமை செய்பவர்
தன்னுடைய ஆனந்தத்துக்கு செய்ய மாட்டார்கள் –
களை அறுக்கிறது கைங்கர்யத்தில் –

செய்ய கூடாதே
நல்லதை -தங்களுக்கு ஏற்றதான ஸ்வரூப பிராப்த கைங்கர்யம்
நல்லதை பயக்கும் என்ற அர்த்தம் -அவன் ஆனந்தத்துக்கு செய்யும் கைங்கர்யம்
அதிகாரி வை லஷண்யம்
தாங்கள் தங்கட்கு நல்லனவே -அனந்தாழ்வான்
ஸ்வரூபம் உணர்ந்த தாங்கள் தங்களுக்கு ஸ்வரூப பிராப்தமான
இந்த திருவாய்மொழி முழுவதும் அனந்தாழ்வான் -வார்த்தை கள் பல உண்டே
குன்றம் ஏந்தி பாசுரம் -அங்கும் சரித்ரம் உண்டே
அதிகாரி வை லஷ்ண்யம் -வ்ருத்தி வை லஷண்யம் -சிறப்பு இரண்டும் சொல்லி
ஊன்றி சொல்லி அர்த்தம் –
தாங்கள் இதர விஷய வ்யக்தராய் –
சுமையாக பாரம் இல்லை -நல்லனவே செய்வார் –
வேம்கடத் து உறைவார்க்கு -சதுர்த்தி ஆய -அர்த்தம்
நம -எனக்கு அல்ல என்று சொல்வதே போதுமே
நெஞ்சில் உண்டாக வேண்டா உக்தி மாத்ரமே போதுமே

கருட மந்த்ரம் சொல்லி விஷம் தன்னடையே இறங்கும் –
வாயினால் பாடி –
மாயனை –பாசுரம் இறுதியில் செப்பு-முக் கரணங்கள் வேண்டாம்
எளிது –
ஸ்வரூபம் சேருமோ
ஆம் -சுலபமாக ஆகும்
என்னல் ஆம் -கடமை ஸ்வரூப பிராப்தம்
அது சுமந்தார்கட்கே மூன்று அர்த்தம்
பேற்றின் கனம் -ஆழ்வார் அபிப்ராயம் -நிரதிசய ஆனந்தம் -வாயாலே சொல்லிய மாத்ரம்
நேற்றி கடன் -கஷ்டமான கடன் அர்த்தம் இல்லை வேம்கடது உறைவார்க்கு நம -சொல்வது மட்டுமே –

மலையை சுமக்கணும் -அது சுமந்தார்கட்கு பெரிய கார்யம் இல்லை எதிர்மறை
பகவத் கிருபை பேற்றின் கனம் அறிந்து ஆழ்வார் இப்படி அருளுகிறார்
மூன்றாவது இவன் பக்கல் உள்ள கனக்க -மலையை சுமந்தான் என்று
பகவான் நினைப்பான் -பூயிஷ்டாம் என்று அவன்  நினைப்பானாம்
பூயிஷ்டாந்தே நம -உக்தி யஜுர் வேதம் -அக்னே -பெரியதான நம உக்தி வார்த்தை

தே பூயிஷ்டாம் உனக்கு பெரிய பழு வான வார்த்தை என்று பூர்வர்கள் அர்த்தம்
கை கூப்பி அஞ்சலி பரம் அவளுக்கு பாரம் -பட்டர் –
த்ரௌ பதி கோவிந்த புண்டரீகாஷா பேரை சொன்னாள் -துக்கம் பட்டான்
ஆபத்தில் விட்டு வைத்தோமே துக்கப்பட்டானாம்
மாம் தூரவாசினாம் -அர்ஜுனன் இடம் அருளிய வார்த்தை -சாம்பன் வதம் பண்ண போய் இருந்தான் –

ரிணம் பிரவ்ருத்தம்இவவே வட்டிக்கு மேலே வட்டி -அத்தனையும் முடித்த பின்பு உத்தரை சிறுவனையும் உய்யக் கொண்ட  பின்பு –

அங்கு வந்து இருந்தான் என்றால் பாண்டவர்களை நிரசித்து இருப்பான்
நாமம் செய்த கார்யம்

யோக ஷேமம் வஹாம் அஹம் -அவன் சுமக்கிறான்
இது சுமையா -சுமை என்று எம்பெருமான் -அவன் சுமையாக கொண்டான் -மூன்று அர்த்தங்கள் –

அசந்கதமாக இரண்டு சப்தங்களை சேர்த்து சொல்லி மந்த்ரம் -விஷகரம்
சப்த சக்தியால் -அவ்வோ போது போக வேண்டாம் திருநாமம் –
எந்த்ரங்களும் இயங்குகின்றன சப்தம் கொண்டே இன்று –
கடங்கள் முற்றவும் வேம்
இது மெய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 31, 2013

சோதி ஆகி,எல் லாஉல கும்தொழும்
ஆதி மூர்த்திஎன் றால்அளவு ஆகுமோ,
வேதி யர்முழு வேதத்து அமுதத்தைத்
தீதுஇல் சீர்த்திரு வேங்கடத் தானையே?

    பொ-ரை : ‘வேதங்களையறிந்த அந்தணர்களுடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற அமிர்தம் போன்ற இனிமையையுடையவனை, குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற பேரொளியுருவனாகி எல்லா உலகத்தாராலும் தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற வடிவையுடையவன் என்று கூறினால் அது பெருமையாகுமோ?’ என்கிறார். ‘ஆகாது’ என்றபடி.

    வி-கு : ‘சோதியாகி’ என்பதிலுள்ள ‘ஆகி’ என்னுமெச்சத்தை ‘இருக்கின்ற’ என்னும் வினையைக்கொணர்ந்து அதனோடு முடிக்க. அன்றி, எச்சத் திரிபாகக் கோடலுமாம்; ‘சோதியாகத் தொழப்படுகின்ற ஆதிமூர்த்தி’ என்க. ‘ஆகுமோ’ என்பதிலுள்ள ஓகாரம், எதிர்மறை.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘நித்தியசூரிகளுக்கும் தன்னைத் தந்தான் என்றது ஓர் ஏற்றமோ எனக்குத் தன்னைத் தந்தவனுக்கு!’

என்றார் மேல் பாசுரத்தில்; 1‘எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே இருக்கிறவனுக்கு?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

    சோதியாகி – தனக்குமேல் ஒன்று இல்லாத பேரொளியுருவமான திருமேனியையுடையவனாய். 2‘வன்மையுள்ள பேரொளிகளின் கூட்டமாயுள்ள அந்த விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். 3‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னற்கொடி போன்று ஒளியுடன் கூடியதாயும், நீவாரதானியத்தின் வால் போன்று மெல்லியதாயும், உருக்கிய தங்கம் போன்று காந்தியையுடையதாயும் இருக்கிற ஒரு சிகையிருந்தால், அது பரமாத்துமாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம்’ என்பது உபநிடதம்.. இதனால், சிரமத்தைப் போக்கும் வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்கும் என்கையும், அப்புகர்தன்னைச் சிரமத்தைப் போக்கும் வடிவு தன்னுள் அடக்கிக்கொண்டிருக்குமென்கையும் போதரும். இத்தால், ‘ஒன்றையொன்று விடாதே இரண்டும் வேறொன்றை வேண்டாதிருக்கும்’ என்றபடி. ஆயினும், ‘நீல நிறத்தையுடைய மேகத்தை நடுவிலேயுடைய மின்னல் போன்று’ என்று கூறி, ‘உருக்கின தங்கம் போன்று காந்தியையுடையதாய்’ என்றும் கூறுதலின், ஒளியே விஞ்சியிருக்கும் என்பது போதருதலின், இவரும் ‘சோதியாகி’ என்கிறார். எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவாகுமோ – இப்படிச்சொன்னால்தான்அவனுக்கு ஏற்றமாகப் போருமோ! ‘ஆயின், ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ?’ என்பதற்கு, முன்னர் ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி’ என்றாரோ?’ என்றது, என் சொல்லியவாறோ?’ எனில், ‘எண்ணில் தொல்புகழ் வானவ ரீசன்’ என்றவர், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்று அதனையே பின்னும் கூறியது போன்று, இங்கும் அவ்வாறு சொன்னாரோ?’ என்னில் என்றபடி. 1விழுக்காட்டாலே சொன்னார். ‘எங்ஙனே?’ என்னில், மேல், தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்றாரேயன்றோ? இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவர்; மிகத்தாழ்ந்தவரான தாம் தொழுத போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்; ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’ என்றால், ‘கீழ்ப்படி மூழ்கினமை’ சொல்ல வேண்டா அன்றே? 2‘கிருஷ்ணனிடத்தில் பரவசப்பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோமல்லோம் என்ற நினைவினைச் செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார். 3‘பிரஹ்மம் அறியத் தக்கது,’ என்று கூறி, ‘அறியத் தக்கதான

பிறஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன, 1எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது. ‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, 2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும், 3‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.

    இனி, ‘அளவாகாது’ என்று சொல்லும்போதும் சிறிதளவு சொல்லிப் பின்னர், 4‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் மீளுகின்றனவோ என்னும் வேதம் வேண்டாவோ?’ என்கிறார் மேல்; வேதியர் முழு வேதத்து அமுதத்தை – 5‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது,’ என்கிறபடியே, வேதங்களைச் செல்வமாகவுடைய பிராமணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை. 6‘பிரஹ்மம் ஆனந்தமானது’, 7‘அந்தப் பிரஹ்மமானது ரச மயமாய் இருக்கிறது,’ என்பன உபநிடத வாக்கியங்கள். இனி,எந்தப் பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 2‘எல்லா வேதங்களும் எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும், 3‘எல்லா வேதங்களாலும் அறியப்படுமவன் நானே’ என்றும் வருகின்றவாற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற ஆனந்த குணத்தை யுடையவனை என்னுதல். தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை – குற்றமற்ற குணங்களையுடையவனை. சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது, ‘அங்கீகரிக்குமிடத்தில், ‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.

    ‘நன்று; மேல், 4‘எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?’ என்றதிற்காட்டில் ஏற்றமாகச் சொன்ன பொருள் என்?’ என்னில், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும், ‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ற இடத்தில் ஏற்றங்கண்டோம்; அதைப்போன்று, ‘எல்லா உலகுந்தொழும்’ என்பதனைக் காட்டிலும் ‘தீதில் சீர்த்திருவேங்கடத்தான்’ என்ற இடத்தில் ஏற்றம் யாது?’ எனின், ‘என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத் தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு, 5‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக் குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்வருகு குற்றமுடையாரைத் தேடிக் கிடையாமையாலே நிற்கிறான் என்பதனைத் தெரிவித்தமையால், அவ்வாறு நிற்றலே ஓர் ஏற்றம் என்க. இனி, பாதுகாக்கிறவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் பெற்ற அளவிற்கு மனநிறைவு வருதல் பாதுகாத்தலுக்குக் குற்றமாமாதலின், ‘தீதில்சீர்’ என்கிறார் என்னுதல்; 1‘க்ஷத்திரியன் பெற்றதைக்கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்,’ என்பது பொதுவான தர்மம்.

ஆதிமூர்த்தியாகையாலே – காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும்
தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே உபாஸ்யம்
என்கைக்குச் சூத்திரத்தையும், சுருதியையும் அருளிச்செய்கிறார், ‘பிரஹ்மம்
அறியத் தக்கது’ என்று தொடங்கி. நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர்
மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை
அநுசந்திக்கையாவது, ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’
என்றருளிச்செய்தாராம், ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை
பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’
என்று கேட்டருள, ‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக்
குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.
இம்மணிமொழிகளை இங்கு நினைவு கூர்க.

வேதியர் முழுவேதத்து அமுதத்தை’ என்பதற்கு இரண்டு வகையில்
பொருள் அருளிச்செய்கிறார்: முதலது, ஸ்வரூபத்தில் இனிமை; இரண்டாவது
குணத்தில் இனிமை.

லோகத்தின் பொருள் முற்றும் வருமாறு :- ‘பிராஹ்மணன் பெற்றதற்கு
மகிழானாயின், நஷ்டமடைவான்; அப்படியே, க்ஷத்திரியன் பெற்றதைக்
கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்; பொதுமகள்
நாணத்தையுடையவளாயின் நஷ்டமடைவாள்; நற்குலப்பெண் நாணத்தை
விடுவாளாயின் குற்றமுடையவளாவள்,’ என்பது,

என்னிலும் தாழ நின்றவரை தேடி நிற்கிறவன்
மேலே சொல்கிறார் -த்வயத்தின் உத்தர வாக்ய விவரணம் இந்த திருவாய்மொழி –
இரண்டும் திருவேம்கடமுடையான் பற்றியே -ஒழிவில் -உலகம்
எனக்கு தன்னைத் தந்தான் என்பதுவும் ஏற்றமோ
என்னில் தாழ நின்றவர்களை தேடித் திரிகிறானே
என் கண் பாசம் வாய்த்த பரம் சுடரே -என்றார் முன்னம்
தாழ நின்றவர் கிடைக்காமல் என்னிடம் நின்று இதுவே பரத்வம் வேதியர் -வேதம் -பிராமணனாம் தனம் வேதம்
சோதியாகி எல்லா உலகும் தொழும் அதி மூர்த்தி -எனபது பெருமையோ –
தீதில் சீர் திருவேம்கடத்தான்
சோதியாகி நிரவதிக தேஜோ ரூபனாகி நீல தோயாத  மதயஸ்தா என்று நிற்க செய்தே
பீதபாக மஞ்சளாக பிரகாசிக்கும்
தேஜஸ் முட்டாக்கி இட்டு -பனி போர்வை சாத்தி இராப்பத்து திரு வல்லிக்கேணி -அனுபவம்
புகர் -முட்டாக்கு போட்டு காட்டும் -பிராட்டி தேஜஸ் முட்டாக்கு இட
திருக்கண்டேன் –அருக்கன் அணி நிறம் -அவள் தேஜஸ் சொல்லி பின்பு அவன் தேஜஸ்
இளித்துக் கொண்டு ஒன்றை ஓன்று விடாதே இரண்டும் நிரபேஷம்
நீலம் உள்ள மின்னனைய திருமேனி -ஆழ்வார்
விக்ரகம் பானம் பண்ணிக் கொண்டு இருக்கும் -தேஜஸ் சாம் ராசி மூர்ஜிதம்
திருமேனி தேஜஸ் ஒன்றை ஓன்று அனுபவித்து நெய் தினிந்தது போலே
கருப்புக்கட்டி -சோதியாகி அர்த்தம் -தேஜஸே வடிவு எடுத்து
எல்லா உலகும் தொழும் -இது ஏற்றமோ எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன் சொல்லி அது தேசமோ முன்பு அருளி –
ஐந்தாம் பாட்டில் அது அளவாகுமோ -எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி சொல்ல வில்லையே முன்பு -என்று கேள்வி வருவதாக கொண்டு –

விழுக்காட்டாலே சொன்னார் –ஸ்பஷ்டமாக சொல்ல வில்லை
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -தான் தொழுத பொழுதே எல்லா உலகும் விழுக்காட்டாலே
மறை முகமாக எல்லா உலகும் தொழும் என்பதை சொல்லிற்று ஆயிற்று எல்லா வற்றுக்கும்  மேல் படி அமிழ்ந்தது என்றால் கீழ் படி அமிழ்ந்தது சொல்ல வேண்டாம் இ றே –
தொழும் -சங்கல்பித்து கிடந்தார்களும் -பார்த்தால் தொழ வைக்கும் -ஈர்க்கும் சாமர்த்தியம் –
கண்ணபிரான் தூது -ஆசனம் இருந்த துரி யோதனன் தானே எழுந்து -யாரும் எழக் கூடாது
உத்தரவு பிறப்பிக்க -கண்ணன் வரும் முன் தேஜஸ் முன் வர -அவன் எழுந்ததும் அனைவரும் எழ -தன்னை பின்பு உணர்ந்தான் –

தேஜஸ் தொழும் படி -எழல உற்று மீண்டே இருந்து நோக்கும் துரி யோதனன் –

சேவிக்க மாட்டேன் என்பாரும் சேவிக்க
பிரம சூத்திரம் -பிரமத்தை பற்றிய விசாரம்
ஜென்மாதி -ஜகத் கரணம் லஷணம் -அறியப்பட வேண்டிய பிரமத்துக்கு
எல்லா உலகும் தொழும் -ஆதி மூர்த்தி சப்தம் உடனே சொல்லி
வருணன் உடைய ப்ருகு பிள்ளை -வருணன் இடம் கேட்டு -ஆஸ்ரேயன வஸ்து
உண்டாக்கி ரஷித்து லயித்து -காரணத்வம் அடையாளம் –
யோ ப்ரமாணாம் முமுஷுவை சரணம் அஹம் -அங்கும் ஜகத் காரண வஸ்து சரண்
தொழ வேண்டியது ஆதி மூர்த்தி வேதம் தமிழ் செய்த மாறன் ஆஸ்ரயேன வஸ்து –
அளவாகுமோ -சொல்லி விட்டு -தொழும் -எதோ வாசே நிவர்த்தந்தே
வேதியர் -செல்வம் வேதம் -அமிர்தம் -ஸ்ரீ -வேத தனரான பிராமணர்
போக்யதா -முழு வேதத்து அமுதத்தை -எல்லா வேத பாகமும்
சர்வே வேதாகா -யத்ர  ஏக -வேதைகி சர்வைகி அஹம் ஏவ வேத்ய -கீதை

வேதமே பிரமாணம் சாஸ்திர யோநித்வா சாஸ்த்ரம் ஒன்றாலே அறியப்படுபவன்
வேதம் சர்வைகி ஏவ எல்லா வேதங்களாலும் சொல்லப் படுபவன்
அஹம் ஏவ நானே
அஹம் வேத்ய ஏவ -தெரிவிக்க பட்டே தீரும்
ஆனந்தோ பிரம -அமுதம் -ரசோவை -தத –
வேதத்தை வேதத்தின் சுவை பயனை –
தீதில் சீர் -குற்றம் அற்ற குணங்களை உடையவன் இன்னார் ஆவார் இன்னார் ஆக மாட்டார்
பரிவதில் ஈசன் -குறை இல்லான்-அங்கேயே அருளி -சப்தம் இல்லை அர்த்தம் உண்டே -அதை விட பெருமை -எல்லா உலகும் தொழும்
என் கண் பாசம் வாய்த்த ஏற்றம் சொன்னோம் –
தீதில் சீர் என்றது ஏற்றம் -வாசி இன்றி -என்பதால் –
என்னில் தாழ்ந்தாரை தேடி கிடையாமல் பட்டினி விட்டு –
எதிவா ராமயா -சுமந்த்ரன் நின்று பார்த்து -திருப்பி வருவாரோ நைப்பாசை எதிர்பார்ப்பு
எம்பெருமானும் எதிர்பார்த்து அவசர ப்ரதீஷனாய் இருப்பவன்
காணாமல் நிற்கிறான்
குற்றத்தை குணமாக கொண்டு -இதை விட குற்றம் செய்தவரை தேடி
ரஷகனுக்கு ரஷத்திது போதும் என்ற எண்ணம் குற்றம் ரஷ்ய வர்க்கம் போதும் என்பதே குற்றம்

-சுபாஷித ஸ்லோகம் -அசந்துஷ்ட திருப்தி அடையாத பிராமணன் -த்ருப்தொச்மி சொல்லி -சந்துஷ்ட சத்ரியன்நஷ்ட -போதும் நினைத்தால் நஷ்டம் –

சீருக்கு தீது ஆஸ்ரித குண அகுண நிரூபணம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 29, 2013

ஈசன் வானவர்க்கு என்பன்என் றால்அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?
நீச னேன்நிறைவு ஒன்றுமி லேன்என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

    பொ-ரை : தாழ்ந்தவனாய்க் குணம் சிறிதுமில்லாதவனான யான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று

சொல்லுவேன்; அப்படிச்சொன்னால், அது என்னிடத்தில் அன்பை வைத்த மேலான சுடரையுடைய ஒளியுருவனான திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுக்குப் புகழாகுமோ? ‘ஆகாது’ என்றபடி.

    வி-கு : நிறைவொன்றுமிலேன் – வினையாலணையும் பெயர். ‘நீசனேனும் நிறைவொன்றுமிலேனுமாகிய யான், ‘வானவர்க்கு ஈசன்’ என்பன்; என்றால், அது, என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதியாகிய திருவேங்கடத்தானுக்குத் தேசமோ?’ எனக் கூட்டுக.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘நித்தியசூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தவன்’ என்றார் மேல்; ‘மிகத் தாழ்ந்தவனான என் பக்கலிலே பாசத்தை வைத்தவனுக்கு ‘நித்தியசூரிகளுக்குத் தன்னைக் கொடுத்தவன்’ என்னும் இது ஓர் ஏற்றமோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.

    வானவர்க்கு ஈசன் என்பன் – நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகன் என்று சொன்னேன். என்றால் – நான் இப்படிச் சொன்னால். அது திருவேங்கடத்தானுக்குத் தேசமோ – திருமலையிலே வந்து சுலபனாய் நிற்கிறவனுக்கு ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று இருக்கிற இது ஓர் ஏற்றமாயிற்றதோ? 2‘ஸ்ரீவைகுண்ட நாதனுக்கு ஏற்றஞ்சொல்லுகிறேனாக மயங்கினேன்; கானமும் வானரமும் வேடுமானார் ஓலக்கம் கொடுக்க நிற்கிறவனுக்கு நித்தியசூரிகள் ஓலக்கங்கொடுக்க நிற்கிறது ஓர் ஏற்றமோ?’ என்றபடி, ‘பரமபதத்தை விட்டு இங்கே வந்து இந்நிலத்தையிட்டு நிரூபிக்க வேண்டியிருக்கிறவன்’ என்பார், ‘திருவேங்கடத்தானுக்கு’ என்கிறார். ‘ஆக,3 முடி சூடி அரசு செலுத்துமவனுக்கு ஏற்றஞ்சொல்லும்போது தட்டியிலிருந்த காலத்தின் தன்மையையிட்டு ஏற்றஞ்சொல்ல ஒண்ணாதே,’ என்கிறார் என்றவாறு. ‘ஆயின், திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின், ‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்; இது கிடக்க அதனையோ சொல்லுவது?’ என்கிறார்.

    நிறைவொன்றுமிலேன் – தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று. 1‘தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்; சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்; ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்; அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது ‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்; நன்மை சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்; உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்; அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்; அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்; புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும் அபகரிப்பவன்; ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்; இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக்காரியம் பார்ப்பவன்’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். 1‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்லமாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான். ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி. ‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் 2இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

    3வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி – ‘நித்தியசூரிகளுக்கு ஈசனாயிருந்தான்; என் பக்கலிலே பற்றை வைத்தான். அவர்களுக்கு இருப்பு உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்: தன் இருப்பைப் பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்; பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு’ என்கிறார். இனி,என்கண் பாசம் வைத்த’ என்பதற்கு, 1‘என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று பொருள் கூறுவாருமுளர். இனி, மனத்தொடுபடாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, மனம் முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’ என்றும், கலந்த பின்னர் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின், ‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் என்னுதலுமாம். ‘பிராட்டியோடே கலந்தாற் போலே பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.

சோதியான திருவேங்கடத்தானுக்கு, ‘வானவர்க்கு ஈசன்’ என்பன் என்றால்,
அது தேசமோ?’ என்று கூட்டி அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘சௌலப்யத்தை மேற்கொண்டு திருமலையில் நிற்கிறவனுக்குப் பரத்துவம்
சொல்லுகை ஏற்றம் அன்று,’ என்றபடி. ‘ஆயின், ஏற்றம் அல்லாததனை
ஏற்றமாகச் சொன்னதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஸ்ரீவைகுண்டநாதனுக்கு’ என்று தொடங்கி.

3. முடி சூடி அரசு செலுத்தும் நிலை, திருவேங்கடத்தில்; தட்டியில் இருக்கும்
நிலை, பரமபதத்தில். தட்டி – சிறைக்கூடம்.

நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்று இப்படித் தம்மைத் தாழ்விற்கு
எல்லை நிலமாகச் சொன்னார் உளரோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து ‘அமர்யாத:’ என்ற சுலோகத்தை
எடுத்துக்காட்டி, அதற்குப் பொருளும் அருளிச்செய்கிறார், ‘தாய்க்கும்
மற்றொரு பொருளுக்கும்’ என்றது முதல், மேன்மேல் எனக் காரியம்
பார்ப்பவன்’ என்றது முடிய.

. ‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும்’ என்று தொடங்கும்
வாக்கியத்தின் பொருளை ‘அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ
ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி
‘அகதிம்’ என்ன, ‘நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி
என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம். அனந்தாழ்வான் ‘அமர்யாத:’
என்ற சுலோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக் கேட்டு ‘எனக்கு
அது சொல்ல வேண்டா’ என்றான்; அவர் சம்பந்தத்தாலே’ என வருகின்ற
திருப்பாவை வியாக்கியானத்தால் உணரலாகும்.

(மாரி மலை முழைஞ்சில், நாலாயிரப்படி)

2. ‘இவ்வார்த்தை’ என்றது, ‘வானவர்க் கீசன்’ என்றதனை.

3. ‘வானவர்க்கு ஈசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்று கூட்டி
இதற்கு மூன்று வகையாக பாவம் அருளிச்செய்கிறார். முதல் வகை,
‘நித்தியசூரிகளுக்கு’ என்று தொடங்குவது. இரண்டாம் வகை, ‘அவர்களுக்கு
இருப்பு’ என்று தொடங்குவது. மூன்றாம் வகை, ‘பிராதம்யத்துக்கும்’ என்று
தொடங்குவது. பிராதம்யம் – முதன்மை. செங்கல் சீரை – காஷாயம்.
‘பிராதம்யத்துக்கும்’ என்று தொடங்கும் வாக்கியத்தின் கருத்து, முதன்முதல்
விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் என்பதற்காகவும் ‘முதல் மனைவிக்கு
ஜீவனம் கொடுக்கவில்லை’ என்று உலகத்தார் கூறும் பழிச்சொற்களுக்காகவும்,
காஷாய வஸ்திரம் தரித்துப் பிச்சை புக்காளாகில் தனக்கு மானக்கேடு
உண்டாகுமே என்ற எண்ணத்தாலும் முதல் மனைவிக்கு ஜீவனோபாயத்துக்குச்
சிறிது பொருள் கொடுப்பாரைப் போன்று என்பது. ‘பாசம் வைத்த’
என்றதனால் நெஞ்சு கொடுத்தமை சொல்லிற்று; ‘பரஞ்சுடர்ச் சோதி’
என்றதனால் உடம்பு தந்தது சொல்லிற்று.

என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பையுண்டாக்கினான்’ என்றதன் கருத்து,
ஆழ்வார்க்குத் தன் மாட்டு அன்பை உண்டாக்கினான் என்பது.
முதற்பொருளில், இறையவன் ஆழ்வாரிடத்தில் அன்பை வைத்தான் என்பது
கருத்து. இரண்டாவது பொருளில் இறைவனாகிய தன்னிடத்தில் ஆழ்வார்க்கு
அன்பை உண்டாக்கினான் என்பது கருத்து.

நித்யர் அனுபவிக்க கொடுத்தான் என்றார் கீழே
அத்யந்த நீசன் எனக்கு அருளினவன் -அத்யந்த ஹேயன் உடன் சங்கம் -வைத்தவன்
ஈசன் வானவர் என்றது தேஜசோ –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
குணம் இன்மை –
நிர்வாகன் -வானவர்க்கு
திருமலையில் சுலபன் -அடர்வரும் அமரர்கள் அதிபதி வைகுண்ட நாதனுக்கு தான் அது ஏற்றம்
வானரம் வேடம் கானும் -ஓலக்கம் கொடுக்க நிற்கிறவன்
இந்நிலத்தை இட்டு நிரூபிக்க
திருவேம்கடம் உடையான் –
திருமலையே பொற்பு பேய் ஆழ்வார் -இரண்டு உருவும் ஓன்று
வேறு ஆழ்வார் திருமலை ஒருமலை யானே திரு மங்கை ஆழ்வார்
மற்றவர் மலையை இட்டு அவரை நிரூபிக்க வேண்டும்படி –
முடி சூடி ராஜ்ஜியம் செய்பவனுக்கு சிறை இருப்பை சொல்வது ஏற்றமே-

பரம பதம் இருப்பு சிறை போலே –
சிறு பேர் அழைத் தனவோம் சீறி அருளாதே
என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் சோதி இது தானே பெருமை
நீசனேன் -நீசத்வம்
நிறை ஒன்றும் இலேன்
இந்த இரண்டையும் கூட்டி ஆழ்வார் ஆக்கி -வடிவு எடுத்தவர் தாம் தம்மை சொல்லிக் கொள்ள
ஆளவந்தார் அமர்த்யா -ஸ்லோகம் அர்த்தம்
நைச்ய அனுசந்தானம்
கட்டுப்பாடு இன்றி -ஜனனிக்கும் மற்று ஒன்றுக்கும் -தாய் தாரம் வாசி இன்றி இருக்கும்
நிரபசுகு -வேஷத்தால் நரன் பசு செயல்களால் மிருகம்
சாஸ்திரங்கள் ஆகாது நிஷேதிவற்றை செய்து
சூத்திர -சாஸ்திர மரியாதை மீறாதே ஒருவன் சொன்னால் அதை கேட்காதவன்
சலமதி -நெஞ்சில் பட்டாலும் விஸ்வசிக்காத நிலவா நில்லா நெஞ்சு உடையவன்
அசூயா -பிரசவ பூது
ஹிதம் சொன்னவன் உத்கர்ஷம் பொறாமல்
கிருதஞ்ஞன் நன்றி கொன்றவன் இல்லை செய்து அவதானம் பண்ணி போந்து
துர்மானி அஹங்காரம்
ஹிதம் சொன்னவருக்கும் மேலாக நினைத்து
பரவச இதர ஸ்திரீகள் ஈடுபாடு
காமுகருக்கும் கீழாக
அங்கும் வஞ்சனை வஞ்சன பரர்
திருடி ஸ்திரீ கொடுத்து அங்கெ திறண் டவாறே அபகரித்து
இரக்கமும் இன்றி -கருணை இன்றி
அபதாரம் செய்து
பாபிஷ்ட பாபத்துக்கு ஊன்றி அடி இட்டு
அனந்தாழ்வான் தனது வாயால் சொல்ல மாட்டேன் ஆளவந்தார் அருளிச் செய்து இருந்தாலும்

யாமுனாசார்யர் ஸுய நைச்ய –
ஆளவந்தார் சம்பந்தத்தால் இப்படி
கிடம்பி ஆச்சான் -அழகர் அகதிசரனாம்கதி
ராமானுஜனை உடையவர் ஆனபின்பு
அமர்யாதா -ஸ்லோகம் வாயால் சொல்ல மாட்டேன்
ராமானுஜ சம்பந்தம் -அகதி இல்லை
நீசனேன் -அனாத்ம குணம் உள்ளது
தண்மையும் நிறை இன்றி
ஈசன் வானவர்க்கு சொன்னது தப்பு -பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தை
அறிவு இன்றி பெருமையாக சொன்னேன்
என் பக்கலில் பாசம்
சங்கத்தை பண்ணினான்
வானவர்க்கு தலைவன்
ப்ரீதி என்னிடம்
சத்தைஉண்டாக்க அவர்கள் இடம் கலந்து
தனது சத்தை பெற
நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு
மூத்தவள் இடம் ஜீவனாம்சம் கொடுத்து
பழிக்கு அஞ்சி -கொடுத்தானாம்
செங்கல் சீரை -பிச்சை எடுப்பாள் -அவமானம் இவனுக்கு –
மூன்று கா\ரணம் அஞ்சி
நித்யருக்கு ஈசன் இதனால்
என் கண் பாசம் -சங்கம் -தன்னிடத்திலே வைத்த
கண்ட விஷயத்தில் பாசம் வைக்காமல் அவன் இடம் ஸு விஷய பாசம் வைக்க

பரம் சுடர் ஜோதி –
ஹிருதயமாக ப்ரீதி உடன் செய்து
திருமேனியில் உள்ள தேஜஸ் இத்தை காட்டிக் கொடுக்க
வடிவில் பிறந்த புகர் -உஜ்ஜ்வலம்
முன்பு இல்லாத தேஜஸ் பெற்று
பிராட்டி உடன் கலந்தது போலே இருந்தான்
இது தான் அவனுக்கு பெருமை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 29, 2013

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணி றைசுனை நீர்த்திரு வேங்கடத்து
எண்இல் தொல்புகழ் வானவர் ஈசனே.   

    பொ-ரை : பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன், அழகினைக்கொண்ட செந்தாமரையைப் போன்ற திருக்கண்களையுடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற வடிவினையுமுடையவன், தெளிந்த நிறைந்த தண்ணீரையுடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற அளவிடற்கரிய இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகட்குத் தலைவன் ஆவன்.

    வி-கு : ‘தொல்புகழ்’ என்பது ஈசனுக்கு அடை. ‘கருமாணிக்கம்’ என்பது இல்பொருளுவமை.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘நாம் இங்ஙனம் அடிமை செய்ய வேண்டும் என்று விரும்புகிற இதுவேயோ வேண்டுவது? அவன் தான் நமக்கு அனுபவத்தின் நிறைவைத் தருவானோ?’ என்ன, ‘ஆசையற்றவர்கட்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிறவன், ஆசையோடு கூடிய நமக்குத் தரச் சொல்லவேண்டுமோ?’ என்கிறார்.

    அண்ணல் – ‘குறிஞ்சி நிலத்துத்தலைமகன்’ என்னுதல்; ‘எல்லார்க்கும் தலைவன்’ என்னுதல். மாயன் – அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சரியங்களையுடையவன். ‘அவற்றில் 2ஓர் அம்மான் பொடி சொல்லிக்காணீர்,’ என்ன, சொல்லுகிறார்மேல்: அணிகொள் செந்தாமரைக் கண்ணன் – ‘இக்கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படியிருப்பதாய், தனக்குத்தானே ஆபரணமாய், மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன். இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது. செங்கனி வாய் – அந்நோக்குத் தப்பினார்க்கும் தப்பவொண்ணாதபடியிருக்கிற புன்முறுவலைச் சொல்லுகிறது. முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது. கருமாணிக்கம் – அந்த முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது. தெள் நிறை நீர் சுனைத் திருவேங்கடத்து – தெளிந்து நிறைந்துள்ள நீரையுடைய சுனையையுடைய திருமலையிலே. இதனால், இறைவன் வடிவேயன்றித் திருமலையும் சிரமத்தைப் போக்கக்கூடியதாய் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. ‘ஆயின், விக்கிரக அனுபவத்தை விட்டுச் சுனையை வருணித்தற்குக் காரணம் என்?’ எனின், ‘அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு, ‘செங்கனிவாய்’ என்றதனோடு, ‘கருமாணிக்கம்’ என்றதனோடு, ‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே. எண் இல் தொல் புகழ்- 1‘சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்துமாவான பகவானுடைய குணங்களும் அளவிறந்தன,’ என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய. வானவர் ஈசன் – குணங்களை அனுபவிப்பித்து நித்தியசூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன். என்றது, ‘கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னையனுபவிப்பிக்கும்’ என்கை.

வானவர் ஈசனே’ என்பதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘ஆசையில்லாதவர்’ என்றது, பகவானுடைய அனுபவ ரச
பூர்த்தியைத் திருவுள்ளம் பற்றி.

2. அம்மான் பொடி – வசீகரண சாதனமான ஒரு வகைப்பொடி. பாலர்களை
வசீகரிக்கைக்காக அவர்கள்மேலே ‘அம்மான்’ என்று சொல்லி ஒரு பொடி
விசேடத்தைத் தூவினால், அந்தப் பாலர்கள் கள்ளர் பின்னே ‘அம்மான்,
அம்மான்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்; அந்தப் பொடி என்றபடி.
அப்படியே, ஆச்சரியமாக

மநோ ரதம் இதுவே வேண்டுவது
நிரபேஷம் உள்ளாருக்கும் தன்னைக் கொடுப்பவன்
அபேஷித்தவருக்கு கொடுப்பன் சொல்ல தேவை இல்லையே
நெஞ்சு கேட்டதாம் -பதில் சொல்கிறார்
அண்ணல் மாயன் -செம்தாமரைக் கண்ணன்
செம் கனி வாய் கரு மாணிக்கம்
சுனை நீர் -திருவேம்கடது
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
வினை சொல் இன்றி இதிலும்
கேள்விக்கு பதில் இங்கே –
புனர் யுத்தி தோஷம் இல்லை
வானவர் நிரபெஷர்
சர்வச்வாமி குறிஞ்சிக்கு தலைவன்
மாயன் -சௌந்தர்யா சீலாதிகளால் ஆசார்ய பூதன்
அம்மான் பொடி -மயக்க சில சொல்லிக் காட்டுகிறார் –

கண் அழகு உடையவனுக்கு வேற ஒப்பனை வேண்டாமே
செம் தாமரைக் கண் -தனக்கு தானே ஆபரணம்
விகாசம் செவ்வி குளிர்ச்சி நாற்றம் ஒருவகைக்கு ஒப்பாக சொலலலாய் தாமரை
முதல் உறவை பண்ணும் -செம் கனி வாய்
முருவலால் இவரை எழுதிக் கொடுத்து
ஆழம் கால் படுத்தும் திரு மேனி அழகு
தெளிந்து நிறைந்த சுனை -திரு மலை யும் வடிவு நிறைந்து
வாசி இன்றி-செம்கனி வாய்-சுனை நீர் –
அதுவும் அந்நிலத்தில் உள்ளபடியாதளால்
அவனுக்கும் இதனாலே ஏற்றம் –
எண்ணில் -என முடியாத
தொல் -தொன்மையான புகழ்
சமுத்திர ரத்னங்கள் போலே பிரமாணம் மாஸ்த்ய புராணம் –
ஸ்வா பிகமான புகழ் குணங்கள்
வானவர் ஈசன் -நித்யர் சத்தை இத்தால் அனுபவித்து நிர்வகித்து போனவன்
திருக் கல்யாணகுணங்கள் அனுபவமே நித்யருக்கு பிராணன்
கண் அழிவு அற்ற ருசி உடையாரை தன்னை அனுபவிக்க செய்கிறான்
நமக்கும் கொடுப்பான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 29, 2013

எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

    பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.

    வி-கு : அண்ணல் – பெருமையுடையவன். சிந்துபூ – வினைத்தொகை.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘குறைவில்லாத கைங்கரியத்தைப் பெறவேணும் என்று விரும்புகிறீர்; அது, இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.

    எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை – 2‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று, பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.‘அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து – நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப் பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ! கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.

    அந்தம் இல் புகழ் – பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளையுடையராய்க்கொண்டு கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்; இங்கு, 2‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது. ஆக, 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு. கார் எழில் – குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது. அண்ணல் – வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தமிருப்பது.

    ‘வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் – எந்தை தந்தைதந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.

ஏழ் தலைமுறைக்கு ஸ்வாமி என்பான் என்?’ என்னும் வினாவை
எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அடியார் அடியார்’
என்று தொடங்கி. இங்கு ஏழ் தலைமுறை கூறப்பட்டுள்ளவாறு யாங்ஙனம்?’
எனின், எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு
மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால் ஏழ் தலைமுறையாதல் காண்க. ‘அடியார்
அடியார்’ திருவாய். 3. 7 : 10.

கைங்கர்யம் -அங்கே என்றானாம்
அவர்களும் இங்கே செய்ய
இங்கேயே கொடு பிரார்த்திக்கிறார்
வானவர் வானவர் கோனுடும்-விஷ்வக் சேனர்
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்
எடுத்து தொடுத்து சமர்ப்பிக்க
அனந்த்தான் பிள்ளை ஆண் பிள்ளை நீர் ஒருவரே
ஸ்திரீ –
பர்தாவுக்கு அருகில்
விட்டு பிரிய துணியாமல்
தமது ஸ்வரூபத்தையும் அழிய மாறி
பரதாழ்வான் போலே பிரிந்து அடிமை செய்தாரே
திரு நாட்டுக்கு எழுந்து அருளும் போதே இங்கேயே சம்ஸ்காரம்
வருஷம் அவரே
விஸ்வசிது வருஷத்துக்கு மரியாதை இன்றும் -இரண்டு தடவை எழுந்து அருளி
குன்றம் -மலை தொழுதாலே மோஷம் இரண்டுதடவை சாதிக்கிறோம்
கோபித்து கொண்டு போக சொல்ல நீர் யார் கேட்ட ஐதிகம்
பரன் சென்று சேர் திருவேம்கடம் -வந்து சேர்ந்தவன்
தான் தோன்றியாக வந்தீர்
ஆசார்யன் சொல் படி வந்தோம்
இந்த பாசுர அனுபவம் அவர்  முன்பே பெற பெற்ற பாக்கியம்

பரி பூர்ண கைங்கர்யம் -சரீரம்
கழிந்து அர்சிஸ் ஆதி -கதிரவன் மண்டலத்தை கீண்டு புக்கு தேச விசேஷம்
அங்கெ பெறுவது
அங்கு உள்ளோரும்  வந்து அடிமை செய்வது இங்கே தானே
வானவர் நித்யர் வானவர் கோன்
சிந்து பூ மகிழும் உடல் உருகி பூ சீதா
இங்கே பூத்து சிந்தும் பூக்கள்
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணல் ஸ்வாமி
எந்தை எந்தை -அடியார் -அடியார் அடியோங்களே
இத்தலையில் ஆரம்பித்து அத்தலைக்கு போய் நிரூபிக்கும் படி
தாஸ தாஸ சரம அவதி
ஈசானாம் பரமம் மகேஸ்வரம்

அப்ராக்ருத புஷ்பங்களை கொண்டு -சுத்த சத்வ புஷ்பங்கள் கொண்டு
தங்களுக்கும் அவ்வருகு
கானமும் வானரமும் வேடும் உடை -திருவேம்கடம் -எளிமை
முகம் கொடுத்து நிற்கிறான்
சௌலப்யம் அனுபவித்து சிதிலராய் அடைவு கெ ட்டுசிந்தி
தூ மலர் தூவி
மேன்மை கண்டு அங்கு போய் அனன்யார்கர் ஆவது போல் நீர்மை கண்டு உருகி
சிந்து பூ மகிழும் மலரும்
கொம்பில் இருந்தது விட நிலத்தில் விழுந்ததும் மலர்ந்து
அந்தமில் புகழ் -ஸ்ரீ வைகுண்டத்தில் புகழ் அந்தம் உண்டு போலே
அப்ராக்ருத விக்ரகம் -நித்ய சூரிகள் -அங்கெ -கரணங்கள் சங்கோசம் இன்றி –
அனுபவ யோக்யனாக -கிட்டினார்க்கு மட்டுமே -இங்கே யாரும் அனபவிக்கலாமே

யாளி கோளரி -சர்வரும் அதிகாரி இங்கே –
வைப்பன் மணி விளக்காம் -கை நீட்டும் யானி
களிறு
பெருகும் மத வேழம்
தீப ஆரோபாதி திர்யக் கூட செய்யுமே -அந்தமில் புகழ் இவனுக்கே
சமஸ்த கல்யாண குணங்கள் கூடி -பிரகாசிக்கும் இங்கு தானே குணாத்மகன்
கார் எழில் கரிய திருமேனி -சியாமள திரு மேனி -குணம் இல்லாவிடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
இதுவும் வேண்டாம் பிராப்தி ஸ்வாமி -அண்ணல்

அவன் தான் எந்தை –முந்தை
ஆன பின்பு அவனுக்கு அடிமை செய்ய  முதல் பாட்டில் உள்ள வினைத் தொகை –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.