Archive for the ‘திருப்பாவை’ Category

ஸ்ரீ திருப்பாவையும் ஸ்ரீ திருப்பாவை ஜீயர்-ஸ்ரீ எம்பெருமானாரும்-ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

January 21, 2026

நம்முடைய ஸம்பிரதாயத்தில் எம்பெருமானார்க்குத் திருப்பாவை ஜீயரென்று ஸுப்ரஸித்தமான வ்யபதேசமுள்ளது. திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டு அதை யநுஸந்திப்பதில் போர அபிநிவிஷ்டரா யெழுந்தருளி யிருந்தது பற்றி அங்ஙனே வ்யபதேச முண்டாயிற்று என்பது தவிர மற்றுமோர் சிறந்த ஹேதுவுமுண்டு. அதாவது, திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்க வேண்டும் படியான சொற்றொடர்கள் அமைந்திருக்கின்றன வென்பதே.இஃது ஏறிட்டுரைக்யம் முறையிலன்றிக்கே ஏற்ற முறையில் விவரிக்கப்படுமாறு காண்க. மீமாம்ஸா சாஸ்திரத்தில் விநியோக பநக்த்வம் என்கிற நியாயம் ஈண்டு பெரும் பாலும் அநுஸந்திக்கத் தக்கதாம்.

மதி நிறைந்த நன்னாள் * என்பதற்கு சந்திரன் நிறைந்த நன்னாள் – பரிபூர்ண சுக்ல பக்ஷம் என்பது ஒரு பொருள். மதி – ஞானம்; அது நிறையப் போகிற நல்ல நாள் என்பது உள்ளுறை பொருள். எம்பெருமானார் அவதரித்த நாள் இருள் தரு மா ஞாலத்தவர்களுக்கு ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நன்னாளன்றோ ? ‘நிறையப் போகிற என்ன வேண்டு மிடத்து (நிறைந்த) என்றது கால வழுவமைதி யென்பர் தமிழர். “ஆசம்ஸாயாம் பூதவச்ச” என்பது வடமொழி வியாகரணம். யதிராஜ ஸப்ததியில் * அநபாய விஷ்ணு பத ஸம்ச்ரயம் பஜே* என்கிற ஸ்லோகத்தினால்-எம்பெருமானார் விலக்ஷண சந்திரனாக ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளார். அந்த யதிராஜ சந்திரன் தோன்றிய நன்னாள் என்னவுமாம். சித்திரைத் திங்களானது மனிதர்களுக்கு முதல் மாதம். மார்கழித் திங்களானது தேவர்களுக்கு முதல் மாதம் என்னும் பொருத்தமுளது. இது வியாக்கியானங்களிலும் விசதம். ஆகவே, ஸ்வாமியின் அவதாரம் முதல் மாதத்திலென்கிற ப்ரஸித்திக்குக் குறை யில்லை

அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன். பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால். சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது, இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல; எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார், அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

(பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்) திருப்பாற்கடலிலே துயின்ற பரம புருஷன் ஷீராப்திநாதன். நம்மாழ்வார் “உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன்”என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப் பேசினார். அவர் தாமே அக்குணங்களைக் கடலாகவும் பேசினார் “சீர்க்கடலையுள் பொதிந்த” என்ற பாசுரத்தினால். இவற்றுக்குச் சார்பாக “அநந்த குண ஸாகரம் பரஹ்ம” (அனந்தமான குண ஸாகரத்தை யுடையவர்] பரம புருஷர் என்றருளினார் ஸ்ரீ பாஷ்யகாரர். அவ்வளவோடு நில்லாமல் அக் குணங்களையே தமது திவ்ய க்ரந்தங்களில் வாய் வெருவுவதும் செய்கின்றார். ஏவஞ்ச, பகவத் குண ஸாகரத்திலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானாரென்க.

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து” “ஞானங் கனிந்த நலங் கொண்டு”இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களிற் படியே எம்பெருமானை விட ஓங்கி-அதிசயித்து, உலகத்தை யெல்லாம் ஸ்வாதீனமாக்கிக் கொண்ட உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரே. ஒருவர்க்கும் ஒன்றுஞ் சொல்லாதவர் அதமர். நிர்ப்பந்தத்தினால் சொல்லுபவர் மத்யமர். தம்முடைய கருணையினால் தாமே சொல்லுமவர் உத்தமர்.-*ஓராண் வழியா யுபதேசித்தார் முன்னோரென்கிற உபதேச ரத்தின மாலையின் படி உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரே யாவர். நூற்றந்தாதியில் மற்றொரு பேறு மதியா தென்கிற பாசுரத்தில் உத்தமனாகவுங் கூறப்பட்டுள்ளார்.

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே
.–57-மாதவன் திருவடிகளை உபாயமாகவும் -உபேயமாகவும்-கொள்ளுமவன் உத்தம அதிகாரி எனப்படுவான் .
எம்பெருமானார் அத்தகைய அதிகாரி ஆதலின் அவரை உத்தமன்-என்கிறார் .
த்வயார்த்த நிஷ்ட்டர் -என்றபடி .கீழ் சொன்ன அதிகாரிகளில் அரங்கனையும் சேர்த்து
உத் புருஷன் உத்தர புருஷன் ஆழ்வார்கள் உத்தம புருஷன் ஆச்சார்யர்கள் என்ற படி.

எம்பெருமானுடைய ஆழியும் சங்கும் சார்ங்கமும் வருவதனால்-“அடையார் கமலத் தலர் மகள் கேள்வன்’‘ என்கிற நூற்றந்தாதிப் பாசுரப்படிக்கும், வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே:” என்கிற யதிராஜ ஸப்ததிப் படிக்கும் பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷமான எம்பெருமானார் நினைப்பூட்டப் படுகிறார். ஒன்றும் நீ கை கரவேல்— அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல் வர்ஷித்த மேகம் *இராமாநுச னென்னுஞ் சீர் முகிலே. ஆழி யுள் புக்கு எனற விடத்து “உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்’‘ என்கிற ஸ்ரீ பாஷ்யகார திவ்ய ஸூக்தி மிகப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே
.–82-சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக-சீர் -இங்கே வள்ளன்மை குணம்-வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் ஸ்ரீ இராமானுசன் -என்க-இன்று கண்டு உயர்ந்தேன் –இராமானுசன் என்னும் கார் தன்னையே -24- காரேய் கருணை இராமானுச -25- திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை -26--விசேஷஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசித்து இருந்துள்ள குணவத்தா பிரதையை வுடையராய்-குணம் திகழ் கொண்டல் – 60- என்னும்படியே-பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ !-கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் -74-கார் கொண்ட வண்மை இராமானுச -83-இராமானுசன் –சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -84உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104

ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கு எம்பெருமானார். இடக் கை வலக் கை யறியாத இடையர்கள் வாழ்ந்த விடம் திருவாய்ப்பாடி. அதில் தோன்றிய அணி விளக்கு ‘ஆயர் பாடிக் கணி விளக்கே!‘ என்று யசோதைப் பிராட்டியா லழைக்கப்படுகிற அச்யுத பாநுவான கண்ண பிரான். ந்ருபசு: என்று ஆளவந்தாரும், வ்ருத்த்யா பசுர் நரவபு : என்று மணவாள மா முனிகளு மருளிச் செய்த படி பசு ப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர் குல மாதலால் இருள் தரு மா ஞாலமாகிற இவ் வாயர் குலத்திலே தோன்றிய அணி விளக்கு-ராமாநுஜ திவாகரர். ”புண்யாம் போஜ விகாஸாய பாப த்வாந்த க்ஷயாய ச, ஸ்ரீமாநாவிரபூத் பூமெள ராமாநுஜ திவாகர “‘ என்னக் கடவதிறே.

”புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு’‘ என்பது எம்பெருமானார்க்கு மிகச் சிறந்த ப்ரத்யபிஞாபகம். “பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே” என்றபடி பால் போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி யெம்பெருமானாரும் “துக்தோ தந்வத் தவள மதுரம் சுத்த ஸத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணிந்த்ராவதாரம்” என்றபடி பால் போன்ற திரு நிறந்தவர். இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில் [புள்ளரையன் கோயில்.] “பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் கெழ் குழறும் புனலரங்கமே “ என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற இரண்டு தில்யாயுதங்களில் சக்கரமானது “கருதுமிடம் பொருது” என்ற அருளிச் செயலின் படியே காசீ விப்லோஷாதி நாநா கார்ய விசேஷங்களுக்காக பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டே யிருக்கும். திருச் சங்கு அப்படி யன்றியே “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம், கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத் தலத்தே” என்னும்படி யிருக்கும். ஸ்வாமி தாமும் “யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” [சரணாகதி கத்யே] என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியா யிருந்தவர். ஆகவே ‘கோயில் சங்கு ‘ என்றது ஸ்வாமி யெம்பெரு மானார்க்கு மிகப் பொருத்தம்.

[கலந்து பேசின பேச்சரவம்.] பூர்வாசார்ய ஸூக்திகளோடே கலந்திருக்கும்படி [அவற்றுக்கு முரண்படாதபடி) ஸ்ரீஸூக்தி யருளிச் செய்தவர் ஸ்ரீராமாநுஜர் என்பது இவருடைய திவ்ய ஸூக்தியினால் ஸித்தம். ஸ்ரீபாஷ்யம் தொடங்கும் போதே “பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யாஸ் ஸஞ்சி பு:; தந்மதாது ஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ் யந்தே” என்றருளிச் செய்தவர் ஸ்வாமி யொருவரே யன்றோ. அன்றியும் கலந்து பேசுவதாவது வட மொழி தென் மொழிகளைக் கலந்து மணி ப்ரவாளமாகப் பேசுவது. இத்தகைய கரந்தம் முதன் முதலாகத் திருவாறாயிரப்படியே தோன்றியது. அது பிள்ளானருளியதாயினும் “எதிராசர் பேரருளால்” என்று மணவாள மாமுனிகளருளிச் செய்தபடியே ஸ்வாமி கற்பித்த நடையே யாம் அது. ஆகவே இரு மொழிகளைக் கலந்து பேசின பேச்சுக்கு நிதான பூதர் ஸ்வாமி யென்று குறிப்பிட்டவாறு.

”மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து”என்றதில் ஸ்வாமியின் ப்ரபாவமே நன்கு ஸ்புரிக்கும். “அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வ மாச்ரித்ய, பூர்வே மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு’ என்ற பட்டர் ஸ்ரீ ஸூக்திப் படிக்கும், “பாத கோடீராஸ் ஸம்பந்தேந ஸமித்யமா ந விபவாங் என்ற நிகமாந்த மகா குரு ஸூக்திப் படிக்கும் திருவடி ஸம் பந்தத்தாலே பின்னோர்களையும் திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ் வித்தவர் ஸ்வாமி யெம்பெருமானார்.மிக்குள்ள பிள்ளைக ளென்றது ஸ்வாமிக்கும் பூஜ்யர்களாயிருந்த பூருவர்களை. அவர்களைப் போகாமல் காந்து என்றது தாம் அவதரித்து அவர்களை நற் கதி யெய்துவித்த படியைக் காட்டுமதாம்.

[மணிக் கதவம் தாள் திறவாய்] மணி யென்று ரத்னத்திற்குப் பெயர். நவ ரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்க்யை ஸூசிதமாகிறது. கதவு என்பது ப்தார்த்தங்களைச் சேமித்து வைப்பது. ஸ்வாமியினுடைய திவ்ய க்ரந்தங்களே இங்குக் கதவென்பன. ஸ்வாமி யருளிச் செய்தவை ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம்,கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம். நித்யம் என்று ஒன்பது திவ்ய க்ரந்தங்களாகையாலே அவையே இங்கு மணிக் கதவமெனப் படுகிறது. அவற்றைத் திறக்க வேணுமென்றது- அவற்றிலுள்ள அர்த்த விசேஷங்கள் எங்களுக்கும் நிலமாம்படி விளக்கி யருள வேணு மென்றபடி.

*நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்? அருங்கலமே! என்ற இரண்டு விளிகளிலும் ஸ்வாமியின் ப்ரத்யபிஞை நன்கு உண்டாகும். நோற்று என்றது மஹாபாக்ய வசத்தாலே என்றபடி. ஸுவர்க்கம் புகுகின்ற –ஸுவர்க்கமென்று ஸமூஹத்திற்குப் பெயர் ; ஒரு வகுப்பு என்றபடி. ( ) என்பதனால் மிகச்சிறந்த வகுப்பு என்றதாகும். யாதவ பரகாசரிடத்திலே வாசித்துக் கொண்டிருந்து அவர் சாயையிலே ஒதுங்கி யிருந்த ஸ்வாமி அவருடைய கருத்தின் படியே ஆபத்துக்களை யடைந்து போகாமல் நம் போல்வர்களின் பாக்ய வசத்தாலே பெருந்தேவி மணவாளனான பேரருளாளனது பரம க்ருபைக்கு இலக்காகி ஸ்ரீ வைஷ்ணவ வகுப்பிலே புகுந்து அனைவர்க்கும் தாயாயிருந்தவர்.சுவர்க்கம் என்பதற்கு ஸ்வர்க்கமென்றே பொருளானாலும் “யஸ் த்வயா ஸஹஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா” என்ற ஸ்ரீராமாயணத்தின் படி எம்பெருமானோடு கூடப் பெற்றவ ரென்றதாகும். ஸித்தாச்ரமத்தில் நின்றும் வருகிறோமென்று சொல்லிக் கொண்டு வந்த வேடனும் வேடுவிச்சியுமான பகவத் தம்பதிகளோடே கூடப் பெற்றமை கூறினபடி. அருங்கலமேt என்றது அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே! என்றும், உத்தம ஸத் பாத்ரமே! என்றும் பொருள்படும். நம்முடைய குரு பரம்பரையிலே மஹா பூஷணமாக விளங்குமவர் ஸ்வாமி. “தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதிச பதம் பாதி நாந் யத்ர”என்னும்படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத் பாத்ரமாயும் விளங்குமவர்.

இப் பாசுரத்தில் கற்றுக் கறவை யென்று தொடங்கி கோவலர் தம் பொற்கொடியே!என்னுமளவுமுள்ள விளி பூர்த்தியாக எம்பெருமானார் தன்மையையே தெரிவிக்குமதாயிருக்கும். கற்று – சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்குமெல்லை யில்லா வற நெறியாவும் தெரிந்தவன்? என்ற நூற்றந்தாதிப் பாசுரப்படியே எல்லாக் கல்விகளையும் கற்று; [கறவைக் கணங்கள் பல கறந்து)-பஞ்சாசார்ய பதாச்ரித: என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி. “கலாமங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச” என்கிறபடியே கோக்கள் பதினான்கு லோகங்களையும் தம்முள் வஹிக்குமா போலே சதுர்தச வித்யைகளையும் தம்முட்கொண்டு நன்றாகக் கறக்கு மாசாரியர்கள் பலரிடத்திலும் ஸ்த் ஸம்ப்ரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி. பெரிய நம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று மந்த்ரார்த்தங்கள் கேட்டும், பெரிய திருமலை நம்பி பக்கலிலே ஸ்ரீராமாயணார்த்தம் கேட்டும் திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தும், திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப் பொருள் கேட்டும், ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச்செயல் கற்றும் நல்வார்த்தைகள் கேட்டும் போந்தவராகையாலே கறவைக் கணங்கள் பலகறந் தென்றது ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். அதற்கு மேல் செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்] எம்பெருமானை நிர்க் குணனென்றும் நிர் விபூதிகனென்றும் நிர் லக்ஷ்மீகனென்றும் திவ்ய மங்கள விக்ரஹ சூந்யனென்றும் சொல்லுமவர்கள்-செற்றார்; அவர்களுடைய நிறலழிய வாக்கு மிடுக்குத் தொலையும் படியாக, திசை தொறு மெழுந்தருளி வாதப் போர் நிகழ்த்தியவர் ஸ்வாமி “விப்ரம் நிர்ஜித்ய வாதத ” என்கிறபடியே இது குற்றமாகை யன்றிக்கே ஸித்தாந்த ரக்ஷணார்த்தமாகச் செய்ததாகையாலே நற்றமே யாயிற்றென்று காட்ட“குற்றமொன்றில்லாத என்றது. கோ என்னும் வடசொல் நாநார்த்தமாகையாலே ஸ்ரீ ஸூக்தியையும் சொல்லக் கடவது; “யத் கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் ” என்ற விடத்திலுமிது காணலாம். கோ வல்லவர் –மஹா வித்வான்கள். அவர் தம் பொற் கொடி –ஸ்வாமி. கோ அ(ல்)லர்-ஸ்வதந்திரரல்லர்.

ஸ்வாமியின் திருவவதார ஸ்தலமான ஸ்ரீபெரும் பூதூரில் இரட்டித்து ஸேவிக்கும் பாசுரமிது-.பூருவாசாரியர்களும் தங்கள் வியாக்கியானங்களின் முடிவிலே
எம் பெருமானாரை ப்ரஸ்தாவித்திருக்கும் பாசுரமுமிது. இங்கு இவ்வளவே நாமெழுதப் போதும். ஆயினும் சிறிது விவரிக்கலாகிறது. இப் பாட்டில் நற் செல்வனென்றது ஸ்வாமியைக் கருதி.நற் செல்வ னென்பதை வடமொழியிற் கூற வேணுமானால் லக்ஷ்மி ஸம்பந்ந: என்ன வேணும். ஸ்ரீராமாயணத்தில் *லக்ஷ்மண லக்ஷ்மிஸம்பந்த:* என்னப்பட்ட இளைய பெருமாளே யன்றோ இளையாழ்வாராகத் திருவதரித்தவர் . அவர் ”அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று விபவாவதாரத்திலே அடிமை செய்யப் பெற்றார் ; இவர் “நித்ய கிங்கரோ பவாநி” என்று அர்ச்சா ஸ்தலங்களிலே ஒப்புயர்வற்ற அடிமைகள் செய்யப் பெற்றார். “மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்று முவந்திடு நாள்

இப் பாட்டில் கள்ளத் தவிர்ந்து கலந்தென்றது உயிரான சொற்றொடர். ‘‘கிம்
தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா” என்றபடி ஆத்மாபஹாரக்
கள்வமென்றுண்டு; அது தவிர மற்றொரு கள்வம் கேண்மின்; “ஏகஸ் ஸ்வாது ந
புஞ்ஜீத புஞ்ஜீத பஹுபிஸ் ஸஹ “‘இன் கனி தனி யருந்தான்” என்கிறபடியே
போக்ய பதார்த்தங்களைப் பலரோடுங்கூடி யநுபவித்துக் களிக்கை யன்றிக்கே அசலறியாதபடி யனுபவிக்கை கள்வம்; எம்பெருமானார்க்கு முற்பட்ட ஆசாரியர்களிடத்து இத்தகைய கள்வமிருந்தது; அதனைத் தவிர்ந்தவர் ஸ்வாமி யொருவரே–தவிர்ந்து எல்லாரோடுங் கலந்து அனுபவித்தவர். “பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் “ என்றதும் ஸ்வாமியின் பெருமையை நினைப்பூட்டும். பாவைக்களமென்பது கால க்ஷேப மண்டபம்; அதில் எல்லாரும் புகப் பெற்றது ஸ்வாமிக்கு முன்பு இல்லை; அதிகார பரீக்ஷை பண்ணிப் பலர் விலக்கப் பட்டிருந்தார்களன்றோ-ஆசைக்கு மேற்பட அதிகார ஸம்பத்தி யில்லை யென்று கொண்ட ஸ்வாமியின்காலத்தில் தான் பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார். அதனை நன்கு காட்டின படி.

இப் பாட்டில் “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின” என்பதில் ஸ்வாமியின் திவ்ய ப்ரபாவமொன்று நினைவுக்கு வரும். ஸ்வாமி யாதவ ப்ரகாச ரிடத்திலே பூர்வபக்ஷ வேதாந்தம் வாசித்தபோது ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம ‘ஐத தாத்ம்ய மிதம் ஸர்வம் ‘தத் த்வமஸி இத்யாதி ஸ்ருதி வாக்யங்களுக்கு அவர் அபார்த்தம் கூற, ஸ்வாமி இப்படி யன்றோ பொருள்’ என்று உபபந்நமான அர்த்த மருளிச் செய்ய, மேல் வாய் திறக்க மாட்டாதே ஹுங்காரமே பண்ணிப் போந்ததாக வைபவ நூல்கள் விளம்புகின்றன. அது இங்கு நினைவுக்கு வரும். ஸ்வாமி திருவாய் மலர்ந்தருளியது செங்கழுநீர் வாய் நெகிழ்ந்தமை; யாதவர் மறு மாற்றம் சொல்ல மாட்டாமே வாய் மூடிக் கிடந்தது ஆம்பல் வாய் கூம்பினமை. மேலே *செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்” என்றதும் ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். செங்கல் பொடிக் கூறை=*காஷா
யேண க்ருஹீத பீத வஸநா* என்று ஸப்ததியில் போற்றப்பட்ட திவ்ய மூர்த்தி. வெண் பல்=*அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே . என்னும்படி மஹா விரக்த ஸார்வ பெளமராகையாலே “யத் தஸ்மை திஷ்ட தேந்ய: க்ருபணமசரணோ தர்சயந் தந்தபங்க் தீ” என்னும்படி பிறர் பாடே பல்லைக் காட்டப் பெறாதவர். தவத் தவர் மம . மம என்னாதே ‘தவ, தவ’ என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர். தங்கள் திருக் கோயில்= அமுதனாருடைய ஆதீனத்தி லிருந்த கோயில் தங்கள் திருக் கோயிலென்னும்படி தம்மதீனமாகப் பெற்றவர். சங்கிடுவான்—’சங்க:’ என்ற வடமொழி சங்கு என்று திரிவது போல் சங்கு:’ என்ற வடமொழியும் சங்கு எனத் திரியும். இச்சொல் திறவு கோல் என்னும் பொருளைத் தரும். ஆறாயிரப்படியில் இப் பொருளும் பணிக்கப் பெற்றது . ஆழ்வான் மூல மாகத் திருக் கோயில் திறவு கோலைப் பெற்ற இதிஹாஸம் இச் சொற்றொடரில் அநு ஸந்திக்கலாகிறது.

இப் பாட்டில் “உனக்கென்ன வேறுடையை” என்னுஞ் சொற்றொடர் நிதியானது. உமக்கு மட்டும் அஸாதாரணமான பெருமை என்னே! என்று வியந்து கூறப் பட்டுள்ளது. ஸ்வாமிக்கு முன்னே நம்மாழ்வாரும் ஸ்ரீமந் நாதமுனிகளும் ஆளவந்தாரும் நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களா யிருக்கச் செய்தேயும், ‘நம்மாழ்வார் தரிசனம்’ என்றோ, ‘நாதமுனிகள் தரிசனம்’ என்றே ‘ஆளவந்தார் தரிசனம் என்றோ வ்யவஹாரம் வாராமே ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றே வ்யவஹாரம் நிகழ்ந்து வருகைக்கீடான ஸ்வாமியின் அஸாதாரணமான பெருமை இங்கு அநு ஸந்திக்க வரியது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானென்ற விடத்தில் பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹநச் சார்வாக சைலாசநி: பெளத்த த்வாந்த நிராஸ வாஸர பதிர் ஜைநேப கண்டீரவ:, மாயாவதி புஜங்க பங்க கருட:” * தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்…… நீசரும் மாண்டனர்* “சாறுவாக மத நீறு செய்து” இத்யாதிகள் நினைவுக்கு வரும்.

யதிராஜஸப்ததியில் ” அமுநா தபநாதிசாயி பூம்நா யதிராஜேந நிபத்தநாயகஸ்ரீ :, மஹதீ குருபங்க்திஹாரயஷ்டி” என்று பணித்தபடியே நம்முடைய குருபரம்பரா ஹாரத்தில் நாயகமணியாய் விளங்குமவர் ஸ்வாமி. [நந்தகோபன்]]தனக்கு ஒளரஸ புத்திரனில்லாமல் ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம் “ என்னப்பட்டவொரு தெய்வத்தைப் புதல்வனாகக் கொண்ட நந்தகோபன் போலே ஸ்வாமியும் ‘யதிராஜ ஸம்பத் குமாரா !’ என்னும்படி செல்லப் பிள்ளையைத் தம்புத்திரராகப்பெற்றவர். (உடைய] உடையவரென்கிற திருநாமம் ஸுசிதமாகிறதென்று கொள்ளக்குறையில்லை. (கோயில் காப்பான்] •ஸ்ரீமந்! ஸ்ரீரங்கச்ரிய மநுபத்ரவாமநுதிநம் ஸம்வர்த்தய என்னும்படி ஸ்ரீரங்க ஸ்ரீயைக்காத்தருளினவர் ஸ்வாமி. (கொடித்தோன்றும் தோரணவாசல் காப்பான்] “உபய வி பூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா!” என்பது ஸ்வாமிக்குக் கட்டியம். கீழ் கோயில் காப்பானே ‘ என்பதனால் லீலா விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று, இங்கு நித்ய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
சொல்லுகிறது. ”கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்” “நெடுவரைத்தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனருலகே” என்னும்படி கொடித் தோன்றும்தோரண வாசல் நித்ய விபூதிவாசல்; அதையும் பிறர்புகாதபடிகாத்தருள்பவர்ஸ்வாமி.

அம்பரத்தையும் தண்ணீரையும் சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி.
”அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ என்றநிகண்டின்படி அம்பரமாவது ஆகாசம்;
பரமாகாச மெனப்படுகிற பரமபதம். அதையும், விரஜையாகிற தண்ணீரையும்,
அந்நம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் என்று உபநிஷத்தில் அன்னமாகச் சொல்லப்
பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறஞ்செய்யுமெம்பெருமான்-க்ருபாமா த்ரப்ரஸந்நா
சார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார். மேலே” அம்பர மூடறுத்து
ஓங்கியுலகளந்த வும்பர் கோமான்” என்றதும் எம்பெருமானாரை நன்கு நினைப்
பூட்டும். ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி ஸேவிக்கப்பெற்றபோது
“ஆளவந்தாரோடே நான் சேர்ந்து வாழப்பெறில் பரமபதத்திற்குப் படிகட்டி
யிருப்பேனே!” என்று ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி. ஆளவந்தாரோடே
சேர்ந்துவாழப் பெறாமற் போனாலும் *யத்பதாம் போருஹ த்யாந ஸ்லோகப்படியும்
“ஏகலவ்யனன்றோ நான்” என்ற ஸூக்திப்படியும் அவருடைய விலக்ஷணாநுக்ரஹ
பாத்ரமாயிருக்கப் பெற்ற பெருமையினால் நித்யவிபூதிக்கும் லீலாவிபூதிக்கும்
இடைச்சுவர் தள்ள உபய விபூதியையும் ஓரு போகி யாக்கினவர் நம் ஸ்வாமி
யென்று ப்ரஸித்தமாயிற்று. “மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தங்
காண்மினே” என்ற விடத்தே வியாக்கியானத்தில் உபய விபூதிக்கும் இடைச் சுவர்
தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச் செய்யப்பட்டிருந்தாலும் அப் பெருமை ஸ்வாமிக்கு கிம்புநர் ந்யாய ஸித்தமே. அம்பரத்தை- பரமாகாசத்தை,ஊடறுத்தவர் என்றதாயிற்று.
  இப் பாசுரம் மூலமாகவே ஸ்வாமிக்குத் திருப்பாவை ஜீயரென்று வ்யபதேச முண்டாயிற்றென்றும் ப்ரஸித்தமாதலால் இங்கு நாம் வேறு எதுவும் விவரிக்க வேண்டிற்றிலை. ஆனாலும் கீழும் மேலுமுள்ள விவரணங்களுக்குச் சேர இங்கு மொன்றுரைப்போம். கந்தங்கமழுங்குழ ! என்று கேச பாசத்தை யிட்டுச் சொன்னது ஸ்வாமியின் திருவுள்ளத்திற்கு மிகவுகப்பான ஸம்போதனமாம். மதாந்தரஸ்தர்களான யதிகள் சிகையை வஹியாதே முண்டனம் செய்து போருவர்கள்;அங்ஙனன்றிக்கே “காரிசுதன் கழல் சூடிய முடியும் கன நற்சிகை முடியும் “ என்றும்
“கமநீய சிகாநிவேசம்” என்றும் ”சிகயா சேகரிணம் பதிம் யதீநாம்” என்றும் நம் முதலிகள் உள் குழைந்து பேசும்படி கமநீய சிகா பந்தத்தோடு ஸ்வாமி ஸேவை
ஸாதித்த வழகு நெஞ்சு குளிர அனுபவிக்கப்பட்டதாயிற்று.

திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
எழுந்தருளி ரஹஸ்யார்த்த விசேஷம் பெற்று அவ்விடத்திலேயே அதைச்சிலர்க்கு உபதேசித்தருளின இதிஹாஸம் இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது
தோரண விளக்கு, குத்துவிளக்கு என்று இருவிளக்குண்டு. தோரணவிளக்கு
ஸ்தாவரமாயிருக்கும். குத்துவிளக்கு ஜங்கமமாயிருக்கும். ஸ்வஸ்தானத்திலேயே ஸ்தாவரராகவிருந்த திருக்கோட்டியூர் நம்பி தோரண விளக்காவார். பலகால் கதாகதம் செய்தருளின எம்பெருமானார் குத்துவிளக்காவர். இந்தகுத்துவிளக்கு எரிய நம்பிபக்கலிலே அர்த்தவிசேஷம் கேட்டு ஜ்வலிக்கஎன்றபடி. [கோட்டு] “ஏகதேச விக்ருதம் அநந்யவத் பவதி” என்கிற வடமொழி வியாகரண முறையின்படி கோட்டி என்றதாகக் கொள்க. கோஷ்டீ என்னும் வட சொல் கோட்டியென்று தானே திரியும். திருக்கோட்டியூரென்றதாயிற்று. இவ்விடத்திலேயே [கால் கட்டு] ரஹஸ்யார்த்த முபதேசித்தருளா நின்ற நம்பிகள் தம் திருவடியைத் தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றே;அந்த கால் கட்டு ஸூசிதமாகிறது. (மேலேறி] ஏற்கெனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலக்ஷணர்களுக்கு உபதேசிக்கத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி ஸன்னிதியின் மேல் தளத்தி லேறின படியைக் காட்டுகிறது. இப்படி ஆசார்ய திவ்யாஜ்ஞையைக் கடந்து உபதேசித்திருப்பரோ சாஸ்த்ர வச்யரான ஸ்வாமி? என்கிற சங்கைக்குப் பரிஹாரம் செய்கிறது [மலர் மார்பா!) என்னும் விளி. ஸ்வாமியினுடைய ஹ்ருதய வைசால்யமே அதற்குக் காரணமென்று காட்டினபடி. மலர்ந்த ஹ்ருதய முடையவரே! என்று விளித்தபடி.

இப்பாட்டில் ‘செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பங்கொடுக்கும் விமலா! என்னும் விளிகள் ஸ்வாமிக்கு மிகவும் ஏற்றிருப்பவை. வடமொழியில் ஆர்ஐவமெனப்படும் குணம் தமிழில் செப்பமெனப்படும். மநோ வாக் காயங்களின் ஒற்றுமையாகிற கரண த்ரய ஸாரூப்யமே ஆர்ஜவம்; அது தான் செப்பம். ஸ்வாமியினுடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளை ஸேவிக்கும் போது ஒவ்வோரக்ஷரமும் அவருடைய ஆர்ஜவத்தை யன்றோ தெரிவிக்கின்றது! பர நிந்தை முதலியவற்றை நெஞ்சாலும் நினையாமலும் வாக்கிலும் காட்டாமலுமிருந்த
பெருமை ஸ்வாமிக்கும் ஸ்வாமியின் புநரவதார பூதரான மணவாள மா முனிகளுக்கும் அஸாதாரணமன்றோ. [திறலுடையாய்!] திறலாவது பராபிபவந ஸாமர்த்தியம்.நீறு பூத்த நெருப்புப் போலே யிருந்து இதர வாதிகளின் துர் வாதங்கள் தலையெடுக்க வொட்டாதபடி செய்தருளுமாற்றலும் ஸ்வாமிக்கு அஸாதாரணம்.
[செற்ர்க்கு வெப்பம் கொடுக்குப்] செற்றாராகிறார் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே “குணிநமபி குணைஸ் தம் தரித்ராணம் – ஆஹு” என்ற பட்டர் ஸ்ரீ ஸூக்திப்படியே அப்பெருமானை ஸர்வ தரித்ரனாகப் பேசி வைத்தவர்கள்;அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி. வெப்பமாவது ஜ்வரம். பீதி ஜ்வரம். ‘தஸ்மை ராமாநுஜார்யாய நம : பரம யோகிநே, ய: ஸ்ருதி ஸ்ம்ருதித்ராணாம் அந்தர் ஜ்வரமசீசமத்’ என்று ஸ்வாமி ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களுக்கிருந்த அந்தர் ஜ்வரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று. அதை எங்கே போகவிட்டார் தெரியுமோ? செற்றருடைய உள்ளத்திலே போக விட்டாராயிற்று. திருவடி இலங்கையைக் கொளுத்தினாரே, எந்த நெருப்பைக் கொண்டு கொளுத்தினாரென்று கேட்க, வாலில் அரக்கர் பற்றவைத்த நெருப்பினால் என்றார்களாம்; அன்று அன்று; சோகவஹ்ம் ஜநகாத்மஜாயா : ஆதாய தேநைவததாஹ லங்காம்’ என்று பிராட்டி திரு வயிற்றிலே மண்டிக் கிடந்த சோகாக்னியை அங்கு நின்றும் கிளப்பி அதனாலேயே இலங்கையைக் கொளுத்தினா ரென்றார் மர்மஜ்ஞர். அது போலவே யிங்கும். ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களின் அந்தர் ஜ்வரத்தை யெடுத்துச் செற்றார் வயிற்றி லெறிந்தபடி.

“வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்” என்னும் போது ஸ்வாமியின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வாராது. ஸ்வாமிக்கு முன்பிருந்த ஆசார்யர்களை யெடுத்துக் கொண்டு அவர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள்? என்று கேட்டால் இருவர் மூவர் நால்வர் ஐவர் என்ன வேண்டுமத்தனை;ஸ்வாமியின் சிஷ்ய வர்க்கங்களைப் பற்றிக் கேட்டாலோ “ஏகாந்திபிர் த்வாதசபிஸ் ஸஹஸ்ரை: ஸம் ஸேவிதஸ் ஸம்யமி ஸப்த சத்யா” என்று உடனிருந்தவர்கள் பேசும்படியாயிருக்கும் அன்றியும், மஹா ஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளென்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளார்கள்.அவர்கள் தாம் எப்படிப்பட்டவர்களென்னில்; [ஏற்ற கலங்கள்] ஆசார்ய ஸார்வ பெளமர்க்கு ஏற்றிருக்குந் தன்மையை யுடைய ஸத்பாத்ர பூதர்களான ஸச் சிஷ்யர்கள். பின்னையும் எப்படிப்பட்டவர்களென்னில்; (எதிர் பொங்கி மீதளிப்ப] “சிஷ்யாதிச்சேத் பராஜயம்” என்னும்படி ஆசார்யரையும் விஞ்சினவர்களா யிருப்பர்கள்.காச்மீரத்தில் சாரதா பீடத்தில் ஸ்வாமியும் ஆழ்வானும் போதாயந விருத்தியைக் கடாக்ஷியா நிற்க அதற்கு இடையூறு விளைந்த போது ‘க்ரந்தத்தைப் பூர்த்தியாகப் பார்க்க முடிய வில்லையே!) என்று ஸ்வாமி க்லேசிக்க, அந்த வருத்தி கரந்தத்தைப்பூர்த்தியாகக் கடாக்ஷித்து அத்தனையும் ஹ்ருதி தரித்துக் கொண்டிருந்த ஆழ்வான் “இங்கே விண்ணப்பஞ் செய்யவோ? இரண்டாற்றின் நடுவே விண்ணப்பஞ் செய்யவோ ‘ என்று பணித்தாரென்று ப்ரஸித்தம். இப்படியே யன்றோ மேன் மேலுமுள்ள சிஷ்ய வர்க்கங்களின் சரித்திரமும். அவர்கள் இன்னமும் எப்படிப் பட்டவர்களென்னில்;[மாற்றாதே பால் சொரியும்] அவ்வாசாரியர்களின் பரம்பரை பெரும்பாலும் அநுஸ்யூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற அர்த்த விசேஷங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு. இத்தகைய வள்ளல் பெரும் பசுக்களை ஆற்றப் படைத்தவர் ஸ்வாமி. ஆற்ற அபரிமிதமாக. மேலே”‘மாற்றாருனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்” என்றவிடத்து யாதவ ப்ரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம் மிகப் பொருத்தம்.

திங்களுமாதித்தியனு மெழுந்தாற் போல் அங்கணிரண்டுங் கொண்டு ” என்றதில் ஸ்வாமியினுடைய உபய வேதாந்த க்ரந்த ப்ரவசநபடுத்வம் பேசப்படுகிறது. திங்களும் ஆதித்தியனும் ஏக காலத்தில் எழுவது அஸம்பாவிதம். ஆதித்யனெழும் போது தீக்ஷ்ணதையும், திங்கள் எழும் போது தண்ணளியும் அநுபவிக்கலாயிருக்கும்.உபய வேதாந்த ப்ரவர்த்தகரான ஸ்வாமி காலை வேளைகளில் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் ஸாதிப்பதும், மாலை வேளைகளில் அருளிச்செயல் [பகவத்விஷய ] கால ஷேபம் ஸாதிப்பது மாயிருப்பவர். மதாந்தர ப்ரத்யாக்க்யாந தத் பரமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும் போது தீஷ்ணதையும், செவிக்கினிய செஞ்சொல்* சீர் கலந்த சொல் ஈரச் சொல்.* என்ன நின்ற அருளிச் செயல்களின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும் போது ஸெளம்யதையும் காணலாயிருக்கும். இரண்டிலுமிரண்டு முண்டானாலும், “இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற” என்ற ஸ்ரீவசந பூஷண ப்ரக்ரியையிலே கொள்ளக் கடவது. மேலே அங்கணிரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், என்ற விடத்திலும் உபய வேதாந்தப் பொருள்களையும் எங்களுக்குக் கடாக்ஷித் தருள வேணுமென்ற பிரார்த்தனை யுள்ளது. “சஷுஷ்மத்தாது சாஸ்த்ரேண” என்றபடி கண்ணென்பது சாஸ்த்ரமேயாம். உபய வேதாந்தங்களும் ஸ்வாமிக்கு இரண்டு திருக் கண்களென்க. ஒன்றில் ஆதரமும் மற்றொன்றில் அநாதரமும் கொண்டிருக்கையே சாபமாகும். அது தொலைய வேணுமென்றவாறு. ஸ்வாமி பக்கலிலே சிஷ்யர்கள் பிரார்த்திப்பது இது.இதற்கு மலையும் முழஞ்சும் விலக்ஷணமாயிருக்கும். முந்நூறாண்டு வேதமோ தின பரத்வாஜ மஹர்ஷிக்கு தேவேந்திரன் வேதங்களை மலையாகக் காட்டினனென்று வேதமே சொல்லுகையாலே வேதமே மலையாகக் கொள்ள வுரியது. அதில் முழஞ்சாவது தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்* என்னும்படி தர்ம க்ஷ்மங்கள் பொதிந்திருக்குமிடம், அதிலே மன்னிக் கிடந்து லௌகிக விஷயங்களில் திருக் கண் செலுத்தாதே* ஆத்மயேவ ஆத்மாநம் பச்யந் ஸுகித்திருப்பவர் ஸ்வாமி-(அறிவுற்று.) ‘நாம் அவதரித்தது எதற்காக?’ என்று தம் அவதார ப்ரயோஜனத்தைக் குறிக் கொண்டு என்றபடி-“அமர கோச” தீ விழித்து- புத்திர் மநீஷா திஷணா தீ:என்றவிடத்து புத்தி பர்யாயமாகப் படிக்கப்பட்ட கடாக்ஷமே என்பது இங்குத் தீ யென நிற்கின்றது. அது விழித்கிருப்பது-விகஸித்திருப்பது ஸ்வாமிக்கே யென்க-[எப்பாடும் பேர்ந்து உதறி] ஸ்ரீரங்கம் கரிசைல மஞ்ஜந கிரிம் தார்க்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம். ஸ்ரீமத் த்வாராவதீ ப்ரயாக மதுரா யோ த்யா கயா புஷ்கரம் ‘ஸாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி- என்கிறபடியே எண்டிசையும் பாத சாரத்தாலே ஸஞ்சரித்து,ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறி யருளினவர் ஸ்வாமி.

”அறிவுற்றுத் தீ விழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்துமுழங்கிப் புறப்படும் சீரிய சிங்கம்” நம் யதி ஸார்வபெளம ஸிம்ஹம் தவிர வேறுண்டோ? நூற்றந்தாதியில் “கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமானொலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயமிராமாநுசன்” என்று சீரிய சிங்கமாகச் சொல்லப்பட்டவர் ஸ்வாமி. உலகில் சிங்கம் ஹேயமான வுணவை யுண்டு செருக்கியிருக்கும்; யதிராஜ ஸிம்ஹம் திருமங்கையாழ்வா ருடைய திவ்ய ஸூக்திகளை யுண்டு அதனால் தடித்திருக்கு மென்கிறார் அமுதனார்.

இதில் “வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்றதை உயிராகக் கொள்க. “கொல்வது கோல்’ என்னுமாபோலே வெல்வது வேல் எனப்படும். கண்ணபிரான் திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான். ஸ்வாமி திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது த்ரிதண்டம். ஸப்ததியில் ‘ விஸ்வக்ஸேநோ யதிபதிரபூத் வேத்ரஸாரஸ் த்ரிதண்ட:” என்று சேனையர் கோன் ஸ்வாமியாகத் திருவவதரிக்க, உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கையிலுள்ள திருப்பிரம்புதானே த்ரிதண்டமாயிற்று என்னப்பட்டது.அந்தத் திருப்பிரம்புக்கு எவ்வளவு சக்தியோ அவ்வளவும் ஸ்வாமியின் த்ரிதண்டத்துக்கு முண்டென்க. தாடீபஞ்சகத்தில் ஸ்வாமிக்குப் பேசவேண்டிய பெருமைகளெல்லாம் த்ரிதண்டத்தின் மேலும் யஜ்ஞஸூத்ரத்தின் மேலும் ஏறிட்டுப் பேசப்பட்டுள்ளன. அங்ஙனம் பேசுகையில் “பாஷண்டஷண்ட கிரிகண்டந வஜ்ர தண்டா:…ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா?” என்றும், “தத்தேராமா நுஜார்ய: பரத்திகதக சிரோ வஜ்ரதண்டம் த்ரித்தண்டம்” என்றும் பேசப்பட்டதுண்டே,அதுதான் வென்று பகை கெடுக்குமென்றதற்கு விவரணம். அப்படிப்பட்டகையில் வேலாகிய முக்கோலுக்கு மங்களாசாஸனம் செய்தது முக்கோல் பிடித்த முனிக்கே மங்களாசாஸனம் செய்தபடியாமென்றுணர்க.

தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து அவன்
வயிற்றில்நெருப்பென்னநின்றவர்ஸ்வாமி.
கம்ஸன் கண்ணனிடத்திலே அனர்த்தம்
விளைக்க வழிதேடியிருந்ததுபோல, நம் ஸ்வாமிக்கு அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தவர் ஒருவர் ப்ரஸித்தர். அவருடைய கருத்தைப் பிழைப்பித்து [பிழைப்படச்
செய்து] ஓரிரவில் ஒளித்து வளர்ந்தவர் ஸ்வாமி. விந்த்யாடவியெங்கே! ஸத்யவிரத க்ஷேத்ரமெங்கே !ஓரிரவில் அங்கு நின்றும் இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ரபா
வங்களையெல்லாம் ஒளித்துவைத்திருந்தாரத்தனையன்றே
. அன்ன வர் ஆஸுர ப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார். ‘ பாஷண்ட ஸாகர மஹாபடபா முகாக் :” என்று நெருப்பாகவேயன்றோ பேசப்பட்டார் ஸ்வாமி. [நெடுமால்-வியாமோஹங் கொண்டவர். ” அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத:.’

இதில் *ஆலினிலையாய்! * என்ற விளி இன் சுவை மிக்கது. ஆலின் இலை யதன் மேல் பைய வுயோகு துயில் கொண்ட பரம் பரன் கண்ணன்.[ஆலின் நிலையாய்!ஆலமரத்தின் நிலைமை போன்ற நிலைமை யுடையவர் ஸ்வாமி. எம்பெருமான் பாஹச் சாயா மவஷ்டப் தோ யஸ்ய லோகோ மஹாத்மந.” என்கிறபடியே தன் பாதச் சாயையிலே ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்துத் தாபம் தீர்ப்பவன்.ஸ்வமியோ வென்னில் “ப்ராப்தாநாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயாச் சாயயா தாப ஹ்ருத் வ ” என்றாப் போலே அடி பணிந்தார்க்குத் திருவடி நிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர். இதுதானே ஆலின் நிலைமை. நூற்றந்தாதி தொடங்கும் போதே “பல் கலையோர் தாம் மன்ன வந்த விராமாநுசன் சரணாரவிந்தம்” என்றன்றோ தொடங்கிற்று: பல் கலையோர் தாம் மன்ன வந்த என்ற விசேஷணத்தை இராமானுசனுக்கு ஆக்குவது போலவே அவருடைய சரணார விந்தத்திற்கு மாக்கலாமே. “நயக்ரோதோ பஹுபாத் வட ” என்ற அமர கோசம் ஆல மரத்திற்கு [பஹுபாத்] என்று பெயர் படித்தது. உண்மையில் ஆல மரமானது மற்ற மரங்களைப் போலன்றிக்கோ அபரிமிதமான பாதங்களை யுடைத்தாயிருக்கும். ஸ்வாமிக்கும் திரு வடிகள் அபரிமிதங்கள். [சிஷ்யர்களே திருவடிகள் இப் பாட்டில் சொன்ன ‘சங்கம் பெரும் பறை பல்லாண்டிசைப்பார் கோல விளக்கு கொடி விதானம்‘ என்னுஞ் சொற்களை ஊன்றி நோக்கினால் இவை யெல்லாம் ஸ்வாமியே யென்னப் பொருந்தும். [சங்கம்] த்ருவனிடஞ்சென்ற பகவான் சங்க ஸ்பர்சத்தினால் அவனை ஸர்வஜ்ஞ னாக்கினதாகப் புராணங் கூறும்; அது போல, ஸ்வ ஸம்பந்தத்தாலே ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் எம்பார் பிள்ளான் முதலானாரை ஸர்வஜ்ஞராக்கினவர் ஸ்வாமி.[பறை] பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறை யென்னத் தகுவர். (பல்லாண்டிசைப்பார்] பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமன்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும் வல்லராயிருந்தார். (கோல விளக்கு] ஸ்ரீவைஷ்ணவகுல ப்ரதீபமாயிருந்தவர் –(கொடி] ‘ஸ்ரீமல்லமண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜ’மென்று பிறரைச் சொல்லும்போது ஸ்வாமிக்குச் சொல்ல வேணுமோ? விசிஷ்டாத்வைத ஸித்தாந்த விஜயத்வஜமென்க. (விதானம் ] கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக் கெழுந்தருளும்போது “தொடுத்து மேல் விதானமாய பௌவ ரராவணை” என்ற திருச்சந்தவிருத்தத்தின்படியே விதானமாயிருந்தவர் ஆதிசேஷனான திருவனந் தாழ்வான்; அவரேயன்றோ ஸ்வாமியாக வடிவெடுத்தார்.

யஜ்ஜ மூர்த்தி போல்வாரான பல பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமியோடு எதிரம்பு கோப்பவர்களாய் (கூடாதவர்களாய்] இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமிக்கு வெற்றியைத் தந்தார்கள். அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை யுடையவர் ஸ்வாமி. அந்தச் சீர்கள் எவை யென்னில்; கேவலம் வைதுஷ்யம் மட்டுமல்ல; திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பல பல. ஸ்வாமியின் வடிவழகை ஸேவித்த மாத்திரத்திலேயே யீடுபட்டவர்கள் பல பலர். கோவிந்தா] பசுக்களை மேய்ப்பதனாலே கண்ணன் கோவிந்தனாயினன்-ஸ்ரீஸக்திகளும் கோ சப்தார்த்த மென்று கீழே காட்டினோமாகையாலே ஸகல ப்ரமாணங்களையும் ”பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரி யதி” என்னும்படியான பீதியைப் போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும் கோவிந்தர்..-பசு ப்ராயர்களான நம்மைக் காத்தவரென்றுமாம்.

“குறை யொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னைப் பிறவி பெறுந் தனை புண்ணியம் யாமுடையோம்” என்னும் வார்த்தை ஸ்வாமி யெம்பெருமானாரை நோக்கி ஸ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத் தக்கது. ஞானம் அனுட்டானம் பர ஸம்ருத்தியேக ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும் ஆசார்ய பீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள் இவை மூன்றும் நன்கு நிறையப் பெற்றவர் ஸ்வாமியே– 1-குறை யில்லாத – 2-குறை யொன்றில்லாத – 3-குறை யொன்று மில்லாத என்று யோஜித்து மேற் சொன்ன மூன்றாலும் குறையற்றிருப்பவர் ஸ்வாமியே என்று கொள்வது. கூரத்தாழ்வான் ஸ்வாமிக்கிட்ட தனியனில் “தயைக ஸிந்தோ: என்று விசேஷணமிட்டது பர ஸம்ருத்த்யேக ப்ரயோநத்வத்தையே காட்டின படி.–இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்வாமி நமக்குக் குல கூடஸ்தராகித் திரு வவதரிக்கப் பெற்றது வாசா மகோசரமான நமது பெரும் பாக்கிய மன்றோ! இந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தைக் காட்டுவதாம் உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோமென்பது. உன்றன்னை யென்பதற்கு ‘உன்றன்னைக் கொண்டு’ என்று பொருள் கொள்வது மிகச் சிறக்கும். உன்றன்னால் என்றபடி.(உருபு மயக்கம்.) ஸ ஹி வித்யாதஸ் தம் ஐநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜந்ம என்கிறபடியே நாங்கள் ஸ்ரேஷ்டமான வித்யா ஜன்மத்தை தேவரீர் திருவருளாலன்றோ பெற்றிருக்கிறோம். ஸ்வாமி திருவம்சத்திலே நாம் பிறக்கப் பெற்றது, நம் குல விளக்காக ஸ்வாமி அவதரிக்கப் பெற்றது ஆகிய இரண்டும் இங்கு விவக்ஷிதமென்க.

எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன் றன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோமென்பது நாமெல்லோரும் ஸ்வாமியை நோக்கியே சொல்லத் தகுந்த வார்த்தை. ஆழ்வார்கள் *இருள் தருமா ஞாலத்துளினிப் பிறவி யான் வேண்டேனென்றும், இயக்கறாத பல் பிறப்பிலென்னை மாற்றி யென்றும், ஆதலால் பிறவி வேண்டேனென்றும் புநர் ஜன்மத்தை வெறுத்துப் பேசுவர்கள். நாம் அப்படி வெறுக்க வேண்டா; எத்தனை ஜன்மங்களும் யதேஷ்டமாக நேரட்டும்; நேருகிற ஜன்மங்கள் தோறும் இப்போது நமக்கு வாய்த்திருப்பதுபோலவே எம்பெருமானார் திவ்ய ஸுக்தி ஸுதைகளையே பருகும் பாக்கியம் வாய்த்திடுமானால் பிறவியில் வெறுப்பு நமக்கேதுக்கு? ஒரு பிறப்பன்று, ஒன்பதினாயிரம் பிறப்புமெடுப்போமாக-அதற்குச் சளைப்போமல்லோம்; ஆனால் அப் பிறவி தோறும் . (உன்றன்னோடுற்றோமே யாவோம்] ‘இராமாநுசனடியார்’ என்னும் விருதுக்கு லோபமின்றிக்கே யிருக்கக் கடவோம் . (உனக்கே நாம் ஆட் செய்வோம் வடுக நம்பியைப் போலே ஸ்வாமிக்கே அடிமை செய்து கொண்டிருக்கக் கடவோம். *கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரினும், உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் என்ற அமுதனாரநுஸந்தானமே உறைத்திருக்கக் கடவது நமக்கு.

திருப்பாவை முப்பதுக்கும் வங்கக் கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ண பிரானை லக்ஷ்ய பூதனாகத் கொள்ளுமவர்கள் தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதங் கொடுத்து “பலே க்ரஹிர் ஹி கமலாலாபே ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச் செய்தபடியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க.திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள் இங்ஙனே பொருள் காண்க; நிர்மத்த்ய ச்ருதி ஸாகராத் என்றும்- நமாம் யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் திரு நாவின் மந்தரத்தால்
கடைந்து ” வசஸ்தாம்…ஸுமநஸோ பெளமா : பிபந்த் வந்வஹம்”
என்று ஸ்வாமி தாமே யருளிச் செய்தபடி நிலத் தேவர்கள் நித்யா நுபவம் பண்ண அமுத மளித்தவர் ஸ்வாமி. மாதவனை] மா-மஹத்தான, தவனைா–தவத்தை(தபஸ்ஸை] யுடையவரை; மஹா தபஸ்வியை யென்றபடி. தபஸ்விகளில் தலைவரன்றோ ஸ்வாமி எம்பெருமானார். [இங்கு இப் பரிசு உரைப்பார்] இங்ஙனே முப்பது பாசுரங் களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் ‘அணி புதுவைப் பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ள முகந்ததே யென்று கொண்டு உபந்யா கோஷ்டிகளிலெடுத்துரைக்குமவர்கள். *”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலா லெங்குந் திருவருள் பெற்று இன்புறுவர்”= பீதகவாடைப் பிரானார் பிர குருவாகி வந்து என்ற பெரியாழ்வாரருளிச் செயலின்படியும், ஸா மூர்த்திர் முரமர்தநஸ்ய ஜயதி என்ற ஸப்த ஸுக்திப்படியும் ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணாவதாரமான எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று அம்ருத ஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸ்தல் என்று தலைக் கட்டிற்றாயிற்று .

மன்னு மணவாள மா-முனிவன் மாண்புரைக்கு மன்ன புகழண்ணங்கராசிரியன் சொன்ன திருப்பாவைச் சீயர் சிறப்புரைக்கு மிந் நூல் விருப்பாலுரைப்பார்க்கு வீடு.
திருப்பாவை ஜீயர் திருவடிகளே சரணம்.

—————————————————————-

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவையில் –மீண்டும் மீண்டும் பத பிரயோகங்கள் —அவற்றின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்–

January 12, 2026

நாராயணன் -3- பிரயோகங்கள் –
உலகளந்த – 3-பிரயோகங்கள் –-
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –
புண்ணியன்-2-நப்பின்னை -4- பிரயோகங்கள் –
நந்தகோபன் -5- பிரயோகங்கள் –
ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –புள்-4-பிரயோகங்கள் –
தூயோமாய்-5-பிரயோகங்கள் –
மாயனை -4-பிரயோகங்கள் –
மால்–3–பிரயோகங்கள் –
செல்வம்–6–பிரயோகங்கள் –
கறவை-3-பிரயோகங்கள் –
வந்து-8-பிரயோகங்கள் –
சென்று-4-பிரயோகங்கள் –
நாம்-யாம் -எங்கள் -21-பிரயோகங்கள் –
பறை–10 -பிரயோகங்கள்
நீராட்டம்–6-பிரயோகங்கள்
அடி–6 -பிரயோகங்கள்
பாடி- 18-பிரயோகங்கள் –
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –
எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

————–

நாராயணன் -3- பிரயோகங்கள் –

மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –

1-மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்–வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும் மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள்-இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும் –நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்-திண்ணம் நாரணம் -என்றும்-நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும் நாராயணா சப்தார்த்தம் -என்றும்-ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும் ஸ்ருதியும் நாராயண பரம் ப்ரஹ்மம்-என்றும் பல விடத்திலும் சொல்லிற்று-ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன் ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற- சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –

2-கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நாராயணன்–முகம் தோற்றாமே நின்று-
வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –மூர்த்தி –தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது-கேசவன் –கண்ணுக்கு தோற்ற நின்று-நம் விரோதிகளை போக்குமவன்-வாத்சல்யத்தையும் – சௌசீல்யத்தையும்- ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும்–பாடவும்-கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் – ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான்-அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்-நிருபாதிக ஸ்வாமியான சர்வேஸ்வரன்-ஆஸ்ரித வத்சலனனாய் கிருஷ்ணனாய் வந்து அவதரித்த இடத்தில் கேசி வந்து நலியப் புக- அவனை கிருஷ்ணன் கொன்றான் காண் –

3-நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ –வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ –உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –அவனுக்கு உன் பக்கல் புகுந்தால் புறப்பட வன்றோ வழி அரிது –ஜீவ த்வார வன்றோ அநு பிரவேசம் –விட்டுப் போகாதார் பேறு வன்றோ இது-உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –ஆசைப்பட்ட உன்னை விடுமோ –
வியாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தே ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ
(முன்பே எங்கும் வியாபித்து இருந்தாலும் எங்கும் உளன் கண்ணன் என்றதும் ஸ்புரித்துக் காட்டினான் அன்றோ )நாற்றத் துழாய் முடி நாராயணன்-ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ(தீஷிதம் விரதம் சம்பன்னம் )–இங்கு மூன்றாவது-நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் –அழியாத குணக் கடல் நிறைந்தவன்-கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –

—————————————————

உலகளந்த – 3-பிரயோகங்கள் –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –

1-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி –சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே-சிறுப்பது பெருப்பதாகிறது–சம்சாரிகளுடைய வ்ருத்தி ஹ்ராசாதிகள் கர்ம அனுகுணம் ஆகையாலும்- ஸ்வார்த்தமாகையாலும் – தோஷாய ஆகா நிற்கும் –ஸர்வேஸ்வரன் செயல் பரார்த்தமாகையாலும் கிருபையால் யாகையாலும் குணாயாவாம் அத்தனை இறே –உலகு அளந்த-குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-வ்யாப்திக்கு கருத்து-இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக – இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்- உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-இத்தால் அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது-உத்தமன்-தன்னை அழிய மாறி ஆகிலும் பிறர் கார்யம் செய்யுமவன் ஆகையாலே உத்தமன் என்கிறது-தனக்காய் இருத்தல் செய்யாதே- தென்றலும் நிலாவும் போலே பிறர்க்கேயாய் இருத்தல் –ந தே ரூபம் ந சாகார–நிஷேதம் தன்னது என்கையைத் தவிர்க்கிறது நமக்கு -அஹமபி ந மம பாகவத ஏவாஹமஸ்மி போலே இவனுக்கும் ந தே ரூபம் –பக்தா நாம் -என்கை-
சர்வாதிகன் -என்கை –தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்–அது தன் பேறாய் இருக்கையும் –-ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே-இவனே பரதத்வம்-தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே – ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –( பர கத ஸ்வீ காரம் )

2-அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே-பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே-ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே திருவடிகளை குளிர வைத்தபடி –நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –உம்பர் கோமானே –
இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு காடும் ஓடையும் அளப்பதே
இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –

3-அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –யடி போற்றி-தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி – திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்-மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –அடி போற்றி –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று – அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே – உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

——————————————————
கோவிந்தன் -3- பிரயோகங்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

1-கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா—ஆந்தனையும் பார்த்தால் – ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை – அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ-பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்-ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

2-கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி-எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ – இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால்-உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ நாங்கள் அபேஷிக்கிறது –இத்தால்-சௌலப்யம் சொல்லுகிறது-நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ- அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு –நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை –நம்மை அறிந்தாலும் விரகு இல்லை அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா எ
ன்கிறார்கள் –

3-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ-லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே –பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் –
நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்-கோவிந்தாஎங்களையும் எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ-போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )

——————————————————

புண்ணியன்-2-

போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-

1-போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-வெறுமையே பச்சையாக-இடைச்சிகளும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –இவர்களுடைய ஆஸ்ரயணம் உபாயம் அன்று-ருசியாலே-புண்ணியன் –இவர்கள் உபாயம் அவன் தானே இறே -வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்
(நம்முடைய மால் பித்தன் )புண்ணியனால்1-அத்வேஷம் மாத்திரம் உடையோருக்கு தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமும்2-ருசி ஜனகனும்3-உபாயமும்4-ப்ராப்யனுமாய் –இருக்கிறவனாலே –கிருஷ்ணம் தர்மம் சனாதனம்புண்ணியன் ஆகையாவது –
சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –

2-உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்-அவர்களைப் போலேயோ நாங்கள் ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே எங்களோடு சஜாதீயனாய் வந்து அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில் இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் – நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ-புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் – உன்னைத் தர வல்லது உன்னில் விஞ்சினது இல்லையே-பறை தரும் புண்ணியனே இறே தன்னையும் தருவது –
பிறக்கைக்கு ஹேதுவே இறே தருகைக்கும் ஹேது-எங்கள் புண்யம் முதல் இல்லாதார்க்கு முதலும் பலிசையும் கொடுக்கும் புண்யம் காண்

———

நப்பின்னை -4- பிரயோகங்கள் –

உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே

1-உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்–ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே-கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் –
இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் –இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் –இவள் உகக்குமது ஆகையாலும்-இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் – புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –இப்படிச் சொன்னவாறே திருவாய்ப்பாடியிலே கம்பும் காற்றையும் அகப்பட நந்தகோபாலன் மருமகள் அல்லாதார் உண்டோ-நமக்கு ஏன் என்று பேசாதே கிடந்தாள் அதுக்காக நப்பின்னாய் என்று விசேஷிக்கிறார்கள்-தங்களுடைய கிலேசம் தீர்க்கைக்கும் – தங்களுடைய ஆர்த்தி இவள் நெஞ்சிலே படுத்துகைக்காகவும்
நப்பின்னாய் -என்று பேரைச் சொல்கிறார்கள் –ஹே கிருஷ்ணா ஹே யாதவ ஹே ஸஹ என்று அர்ஜுனன் கிருஷ்ணனை அஸத் கரித்து வார்த்தை சொல்லுமா போலே –
நப்பின்னாய் -என்று சிவிட்க்கு என்கிறார்கள் 

2-குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா-திருக் குழலில் ஸ்பர்சத்தாலே கொத்துக் கொத்தாக-அலரா நின்றுள்ள பூவை உடைத்தான குழல்-காலம் அலர்த்துமா போலே-அவனோட்டை பிரணய கலகத்தால் அலருகை –வாசம் செய் பூம் குழலாள் இறே-கேசவனையும் பிச்சேற்ற வல்ல குழலை யுடையவள் –இவள் குழல் வாருகைக்கு அக் காக்கை வருவது-பின்னை மணாளனை என்று இவளோட்டை சம்பந்தம் சொன்னாலாய்த்து-கொங்கையைத் தன மேலே வைத்துக் கிடத்தல் –கொங்கையின் மேலே தன்னை வைத்துக் கிடத்தல் –ந சாஸ்திரம் நைவ ச க்ரம-பர்யா யேண ப்ரஸூப் தாஸ்ச-(மந்தாகினி நதிக்கரையில் மடியில் மாற்றி மாற்றி சயனம் )மலராள் தனத்துள்ளான் –மலைப் பார்ஸ்வத்தைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே-நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

3-முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்பூர்ணை ஆனவளே-பூர்த்தி ஆகிறது –அநுக்த சௌந்தர்ய சமுச்சயம் –சொல்லிச் சொல்லாத ஸுந்தர்யங்கள் எல்லா வற்றாலும் பூர்ணை யானவளே-ஆய்ப்பாடி வளர்ந்த நம்பியினுடைய பூர்த்திக்கும் அடியான பூர்த்தியை யுடையவளே –ஒசிந்த ஒண் மலராள் என்னுமா போலே – சம்ஸ்லேஷத்தால் வந்த துவட்சி -சம்போக ஸ்ரீ உடையவள் –ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே-என்னும்படியாய் இருக்கை –அழகு அவளாலே –குணங்கள் அவளாலே –மேன்மை அவளாலே –நீர்மை அவளாலே –நிரூபித்தால் அனைத்தும் அடங்கலும் அவள் தோயலாய் இருக்குமே –பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை –பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -1-7-8-செப்பன்ன மென்முலை என்று தொடங்கி
இச் சுழிகளிலே அகப்பட்டவன் தப்பி ஏறினால் இறே நம் கார்யம் செய்வது-இருவரையும் திருத்துவது உபதேசத்தால் உபதேசத்தால் மீளாத போது அவனை அழகாலே திருத்தும் நம்மை அருளாலே திருத்தும் செப்பன்ன மென்முலை-விஷய க்ராஹகமாய்- விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் -பகவத் விஷய பக்தியையும்-செவ்வாய்-அவனுக்கு மிகவும் போக்யமான பரம பக்தியையும் -பக்தி பழுத்து கனி போன்ற வாய்-சிறு மருங்குல்-
விஷயாந்தர வைராக்யத்தையும் உடையையாய்-நப்பின்னை நங்காய் திருவே
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்-நங்காய்-பிராப்யத்வ
புருஷகாரத்வோப யுக்த கல்யாண குண பூர்னையான பெரிய பிராட்டியாரே நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –

4-மாலே–கோல விளக்கே-பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் -மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்–பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

———————————————

நந்தகோபன் -5- பிரயோகங்கள் –

மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

1-மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்–சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே-இக்குடிக்கு வேலே ஆயுதம்-பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து –நம் சிறியாத்தானைப் போலே ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே –அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி- வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-ந ஹிம்ஸ்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது அத் தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –நந்த கோபன் –நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம்-பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்-நாம தேயமாதல் –இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில் உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறேஇவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது -பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் 

2-நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய–ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய்
எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரைச் சொல்லிற்று ஆகவுமாம் –இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –இவனை நாயகன் என்கிறது என் என்ன –பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்-பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு சேஷிகள் என்கிறார்கள் –உந்தம் அடிகள் முனிவர் -என்று பிரசித்தமாம் படி ஸ்வாமிகளாய் நியமிக்கிறார் ஸ்ரீ நந்தகோபர் ஆகையால் உபய விபூதி நாயகனான கிருஷ்ணனுக்கும் நாயகர் ஆகையால்-ஸ்ரீ நந்த கோபரை-நாயகனாய் நின்ற நந்தகோபன் –நந்த கோபனுடைய-
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்- சம் ஸ்ரீ தர ரஷகனான ஆச்சார்யன் உடைய-நந்த கோபனுடைய கோயில்-கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்-நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற
கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது

3-அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்-எங்களுக்கு தாரக போஷக போக்யங்கள் எல்லாமான கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த ஸ்வாமி-எழுந்திராய் –
வாஸூதேவ சர்வம் இதி-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் –ஏகைக பல லாபாயா சர்வ லாபாய கேசவ -என்றும் எங்களுக்கு கிருஷ்ணனை உபகரிக்கையாலே விசேஷித்து எங்களை எழுதிக் கொண்டவனேநந்தகோபன் குமரன் என்று உம்முடைய ஆன்ரு சம்சயத்தைக் கொண்டு
உம்முடைய பிள்ளை என்று அன்றோ நாங்கள் ஆசைப்பட்டது –வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் –அறம் செய்கிறவர் ஆகையாலும்-எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும் நீர் தாம் கோபாலர் ஆகையாலும் ஜீவ லோக ரக்ஷணம்
ஸ்வ ஜன ரக்ஷணம் –ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –இனிது மறித்து நீரூட்டுகிறதும்
வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பால் இறே ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும் தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும் தத்தேதுவான கைங்கர்யத்தையும் ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது–தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள நமக்கு வகுத்த சேஷியாய்
ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –கிருஷ்ணனைப் பெற்று தந்த நீர் குறையும் நாங்கள் பெறும்படி பாரீர் -என்கிறார்கள்

4-உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்–பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் – நாட்டில் நடையாடாத தோள் வலியன்-இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –அங்கோர் ஆய்க் குலம் -என்று கம்சன் படைவீடான ஸ்ரீ மதுரையை நினைத்து அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இறே –நம்முடைய அநீதிகளை நினைத்தால் எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே – கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால் இவருடைய தோள் வலியை நினைத்து பயம் கெடலாய் இருக்கை –கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு
ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்ல மிடுக்கை உடையவர் இறே –கிருஷ்ணன் தீம்பை அனுசந்தித்து அஞ்சின பெண்களுக்கு இவர் தோள் மிடுக்கை நினைத்து அச்சம் கெட்டு இருக்கலாய் இருக்கை –நந்தகோபாலன் –ஆனந்த நிர்பரனாய்-ஆஸ்ரித ரஷகனான
ஆச்சார்யன் உடைய ––ஜகத் விலஷணமான-ஞானபலத்தை உடையவனாய் –ஞானக் கை -என்னக் கடவது இறே –அஹங்காரத்துக்கு பிற்காலியாத-ஞான பலத்தை உடையவன்-

5-ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்மிகவும் படைத்தான் –ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும்-ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே-கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே(அந்த இரண்டுக்கும் இந்த இரண்டு
அவை இருந்த சொத்து இவை பிறந்து பெற்ற சொத்து )

——————————————————————

ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –

கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –

1-கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்–நம்மாலே பேறு என்று நாம் வரப் பார்த்து இருக்குமவர்கள்-
நாம் இருந்த இடத்தே வந்தது இவர்கள் செல்லாமை இறே-என்று இரங்கி நமக்கும் உகந்து அருளும் காண் – பிரணயித்வம் போனாலும் ஆர்த்த ரஷணம் தவிருமோ-அனுஷ்டியாது ஒழியுமோ ஆன பின்பு அவன் அருளுக்கு ஹேது பூதையான நீ எழுந்து இராய்-ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம -என்று சொல்லி வைத்தும் அது அனுஷ்டியாதே இருக்குமோ
அவன் பக்கல் ஒரு தட்டில்லை- நம் குறை அத்தனை – கடுகப் புறப்பட வமையும்-என்கிறார்கள் –

2-மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –நீங்கள் என் பட்டி கோள்-என் செய்தி கோள் -என்கை-அதாவது
பெண்களை எழுப்புவது –வாசல் காப்பானை எழுப்புவது –ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –நம்மை எழுப்புஅண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் – –எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –வந்த கார்யம் -இப்போது சொல்லார் –சிற்றம் சிறு காலைக்கு -29-வைக்கிறார்கள்-

————————————————————

புள்-4-பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

1-2-புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்–போது விடிந்தது-பஷிகள் அகப்படக் கிளம்பி இரை தேடித் போகா நின்றன — காண்-பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே-வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –நீங்கள் பிறந்த ஊரில் பஷிகளுக்கு உறக்கம் உண்டோ –காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ –என்று அன்றோ இருப்பது -ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத் தான் உறக்கம் உண்டோ -என்று ஆச்சான் பிள்ளை -இப்போது இவள் புள் என்கிறது -சேர்ப்பாரையில் சொல்லுகிறபடியே-ஞான அனுஷ்டங்களாலே-பகவத் சம்பந்தம் கடகரான பாகவதர்களை ஆகையால் சத்வோத்தரமான காலம் ஆனவாறே சாத்விகரான பாகவதர்கள் –பகவத் குண அனுசந்தான பூர்வகமாக பகவத் கைங்கர்ய ரூபங்களாய்- தத் தத் வர்ண ஆஸ்ரம உசிதங்களான காலிக கர்மங்களை அனுஷ்டிக்கைகாக சர்வவோதிக்கமாக எழுந்து இருந்து புறப்பட்டார்கள் –

2-புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ–புள்ளுக்கு நிர்வாஹகனான பெரிய திருவடி உண்டு –அவனுடைய கோ உண்டு -சர்வேஸ்வரன்
அவனுடைய இல் -என்னுதல்-புள் -என்று பஷியாய்-அத்தாலே பெரிய திருவடியாய் –
அவனுக்கு நிர்வாஹகனானவனுடைய கோயில் -என்னுதல் –சக்கரவர்த்தி திருமகன் திருவவதாரம் பண்ணி-இருந்ததே குடியாக அவன் அழகிலே ஈடுபட்டு செல்லா நிற்க –
சஹா பத்ன்யா விசாலாஷி நாராயண -என்று- அவர் பெரிய பெருமாளை ஆஸ்ரயிக்குமா போலே-கிருஷ்ணனையும் கும்பிடு கொள்கைக்கு ஒரு திரு முற்றம் உண்டு-புள்ளரையன்
அவனுக்கு நிரூபக தர்மம் ராமானுஜம் லஷ்மணம் பூர்வஜம் ச(சீதா பிராட்டி -இருவரையும் மாய மான் பின் அனுப்பிய பின் )அகஸ்திய ப்ராதரம்-நாராயணன் (நாரங்களை வைத்தே இவனுக்கும் )என்னுமா போலே வழியே இழியுமவர்கள் ஆகையால் பெரிய திருவடியை முன்னிடுகிறார்கள்அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே (திரு விருத்தம் -3-)-என்னக் கடவது இறே–புள்ளரையன் கோ -பெரியாழ்வார் ஸூசகம்

3-4-புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்–பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்ட கள்ள அசுரன் (பெரியாழ்வார் 2-5-4 )-
கள்ளச் சகடம் -என்னுமா போலே –மேய்க்கிற கொக்கிலே அசுரன் ஆவேசித்து நலியப் புகுந்தான் –பொதுக்கோ -என்று கீண்ட சடக்கைச் சொல்கிறது –இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –இத் தலைக்கு அனுமதி இறே வேண்டுவது –விரோதியைப் போக்கி தன்னைக் கொடுக்கை இறே அவன் பணி –இவனுடைய அனுமதியும் அவனுடைய ரக்ஷகத்வமும் ஸ்வரூபத்தில் புகும் அத்தனை(காக்கும் இயல்பினன் இயல்பு -ஸ்வரூபம் தானே -பிரபாவம் அல்ல-அனுமதியும் நமக்கு ஸ்வரூபம் )கர்ம ஞானங்களை சஹகாரியாகக் கொண்டு பக்தி உபாயம் என்று இருக்குமவர்கள் அன்று இறே இவர்கள் –தன்னுடைய அஞ்ஞான அசக்திகளையும்-அவனுடைய ஞான சக்த்யாதிகளையும் சஹகாரியாய்க் கொண்டு அவனே உபாயம் என்று இருக்குமவர்கள் அன்றோ இவர்கள் –புள்ளின் வாய் கீண்டானை –ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்

4-புள்ளும் சிலம்பின காண் –புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே-இரை தேடி சிலம்பி போயிற்றன –கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது –அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று-இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –புள்ளும் சிலம்பின காண் –மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –

——————————————-

தூயோமாய்-3-பிரயோகங்கள் –

மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து

1-மாயனை —தூய பெரு நீர் யமுனைத் துறைவனை –விரஜை போலே போந்த இடத்துக்கு ஒரு ஆறு உண்டானபடி -விட்ட வற்றை (நாட்டை -பரம பதத்தை -நதியை -விரஜையை ) மறக்கும் படியான ஆறு –பரம பதத்தில் நின்றும் வந்து அவதரிக்கைக்கு இவ் வூர் உண்டானால் போலே பரம பதத்துக்கு விரஜை போலே இவ்வூருக்கு இவ்வாறு தூய-1-ஸ்ரீ வசுதேவர் எழுந்து அருளுவித்துக் கொண்டு போகிற போது பாங்காக வற்றிக் கொடுத்த படி –2-ஸ்ரீ கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறிப் கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம் –3-நீரில் தெளிவை சொல்லிற்று ஆகவுமாம்-அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே –திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து
அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக முழங்கால் மட்டாக வற்றிக் கொடுத்த சுத்தியைச் சொல்கிறது-யமுனாஞ்சாதி கம்பீராம் நானாவர்த்த சஷாகுலாம் வஸூ தேவோ வஹான் கிருஷ்ணம் ஜானு மாத்ரோத கோயயவ்-என்ற ஸ்ரீவிஷ்ணுபுராண வசநம்-பிராட்டி சரணம் புகவும் ராவண பயத்தால் அஞ்சி இருந்த கோதாவரி போல் அன்றிக்கே கம்சன் மாளிகை நிழல் கீழே வற்றிக் கொடுத்த படிப்ராயேண தேவி பவ தீவ்யபதேச யோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .-ஸ்ரீ கோதா ஸ்துதி -12.அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி
இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள்.)

2-தூயோமாய் வந்து நாம் – அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-முறை கெட வருவான் என் என்னில்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-தூயோமாய்-இடைச்சிகள் தூய்மை இறே –
தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )
விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-தூயோமாய்அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்நாம்க்ரம பிராப்தி பற்றாத நாம்

3-தூ மலர் – மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்- அநந்ய பிரயோஜனமான பூ விறேபிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்பத்ரம் புஷ்ப்பம்-த்ரவ்ய தார தம்யம் பார்ப்பது இல்லை – இடுகிறவன் நெஞ்சிலே ஈரமே பார்ப்பது – எல்லாம் கூட அஸ்நாமி இறே

4-நாயகனாய் —தூயோமாய் வந்தோம்–நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை-எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய-ஸ்வ யத்னமாதல்-ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் – பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்-தூயோமாய் வந்தோம் –
பறை என்றது வியாஜ்ய மாதரம்-நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –

5-தூ மணி மாடத்து—நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் —இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத-நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் –சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை –ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்—திருத் தொலை வில்லி மங்கலம்- திரு நறையூர் மணி மாடக்கோயில் -திரு நாங்கூர் மணி மாட கோயில் -இவற்றை விட ஸ்ரேஷ்டம் இவள் இருக்கும் தூ மணி மாடம்

———————————–

மாயனை -4-
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைபரம பதத்திலே —விஸ்ருங்கல ஜ்ஞாநிகளான நித்ய ஸூரிகளாலும்-கறை காண ஒண்ணாத பரத்வத்தை உடையவனை அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே –மாயன் -என்கிறது –கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –மாயனை –ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது-ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-அன்றிக்கே நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்- அவதரித்தான் என்று- அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து- அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு – எத்திறம் -என்கிறார்கள் -ஆகவுமாம் –மாயனை –ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் – உபய விபூதி உக்தனாய் – ஸ்ரீ யபதியாய்-ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுமாமாயன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-மேன்மைக்கும் நீர்மைக்கும் – இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ யபதித்வத்துக்கும் வாசகங்களான திருநாமங்களை அநேகம் சொன்னோம் -மஹா மாயன் -172–மாதவன் -73
வைகுண்ட 406

வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-மாயனைப் –தன் கையில் அவர்கள் படுமத்தனை-பெண்கள் கையில் பட்டு நமக்குத் தோற்று –அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை-குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி –மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்மாயன் –பெண்கள் கோஷ்ட்டியில் தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பரிமாறின படி-எங்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹனானவன்-எங்கள் கோஷ்டியிலே தாழ நின்று கையைக் காலைப் பிடித்த படி-ஆஸ்ரித பரதந்த்ரனாய்-சுலபனாய்-ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்-எம்பெருமான் நென் நேற்றே பறை தருகிறேன் என்று மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –

—————-

மால்–3-
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம்
மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்

1-நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்–இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ-குழல் இனிது யாழ் இனிது -தம் மக்கள் அழு குரல் இனிது –-கண்ணன் தனது புல்லாங்குழலை விட பக்த நாரதர் வீணை ஒலியை மிக இனியது என்றும் நம் போல்வார் அழுகையையும் ஸ்தோத்ரமாகக் கொள்ளும் மால் அன்றோ

2-நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை அருத்தித்து வந்தோம்–ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –-ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர முலைப் பால் திரு மேனியில் பாய அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –

3-மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள் மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –-இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –மாலே –மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை-வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் இவர்–ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து –தான் என்னை முற்ற பருகினான்-இவர் விழுங்க திட–பருகினான் -த்ரவ்ய–வ்யாமோஹம் கண்டு ஆழ்வார் உருக அத்தை பருகினான் –

———

செல்வம்–6-
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்-1-
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்-1-லஷ்மணோ லஷ்மி சம்பன்னஅந்தரி ஷக்த ஸ்ரீ மான்சது நாகவர ஸ்ரீ மான்-இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை-அதாவது-வழி பாதி வழக்கு பாதி தர்மம் பாதி யாக-பஞ்ச லஷம் குடியில் பெண்களில் இவனால் புஜிக்கப்படாதார்-ஒருவரும் இல்லை-வலி  யாகிறது -தன் செல்லாமை-வழக்கு ஆகிறது -மைத்துனமை-தர்மம் ஆகிறது -சம்சயம்-வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் (அனுபவிக்கப் )படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி-வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி-வலியாவது-தன் செல்லாமை கொண்டு மேல் விழும்படி-அஹங்கார ஸ்பர்சமாதல் –தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –இத்தால் சொல்லிற்று ஆயத்து- அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே –-அழிவில்லாத சம்பத்து நிரவதிமாம்படி-சேதனர் உடைய புண்ய பாப அனுரூபமாக படி விடும்-சர்வேஸ்வரன் அடியாக வந்த சம்பத்தாகில் இறே அளவு பட்டு இருப்பது-பகவத் ஸ்பர்சத்தால் வந்த சம்பத் ஊற்று உடைத்தாய் இருக்கும் இறே-ஆகையால் நீங்காத செல்வம் -என்கிறது-ஈஸ்வரன் பார்த்த இடம் போலே சாவதி அன்று இறே இவர்கள் பார்த்த இடம் – புண்யம் அடியாக வருதல் ஈஸ்வர கடாக்ஷம் அடியாக வருதல் செய்யுமவை போல் அன்றுஅவனுடைய ஐஸ்வர்யத்துக்கு அடியான கடாக்ஷம் உள்ளவர்கள் இறே இவ்வைஸ்வர்யத்துக்கு அடிபிற் காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து ஸூத்த ஸத்வராய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு பரம பத நாதனோடுபரம சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ணஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்
சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய-அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –இவர்கள் -கடி மலர்ப் பாவைக்கு ஒப்பு உள்ளவர்கள் அன்றோ

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ–பகவத் குணங்களை ஒரு மடை செய்து-புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய-நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ -உன்னோடு கூடுவது எங்களுக்கு எல்லா ஐஸ்வர்யமுமான நீ கிருஷ்ண குண அனுசந்தத்தாலே புஷ்கலையான நீ –

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்–தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –அதாகிறது –கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை-லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே-கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –லஷ்மி சம்பன்ன -என்றது-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –கர்மத்தாலே யாதல் –தேவதாந்த்ர பஜனத்தாலே யாதல் வரும் ஐஸ்வர்யம் அந்தவத்தாய் இருக்கும்-பெருமாளை பிரியாத இளைய பெருமாள் உடைய ஐஸ்வர்யம் போலே –-கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அன்றிக்கே-அவனை நோக்குகிற ஐஸ்வர்யம் இறே நிரந்தர சேவை போலே நிலை நின்ற ஐஸ்வர்யம் –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா–கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –

செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்–செல்வத் திருமாலால்-உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடைய ஸ்ரீ யபதியாலே-திருத் தக்க செல்வமும் -என்றபடி-செல்வத்துக்கு தகுதியானவள்-உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி முடிவிலும் சொல்லுகையாலே த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –இங்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது-ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம் வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –பஞ்ச லக்ஷம் பெண்களைப் பெற்ற பூர்ணனான திருமால் -பேற்றுக்கு உகப்பானும் அவனே அன்றோ

———————

கறவை-3-பிரயோகங்கள் –

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துகறக்கும் பருவமாய் இருக்கச் செய்தே கன்று நாகாய் இருக்கை –முக்தர் பஞ்ச விம்சதி வார்ஷிகராய் கீழ் நோக்கி வயசுஸூ புகுமா போலே இவையும் இளகிப் பதித்து இருக்கும் – அவர்கள் பரத்வ அனுசந்தானத்தாலே –
இவை மனுஷத்தவே பரனான கிருஷ்ணனுடைய கர ஸ்பர்சத்தாலே

கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி-உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே – ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் – ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –இளம் கன்றான எருமை என்னுதல்-இளம் கன்றை யுடைய எருமை என்னுதல் –இரண்டாலும் பாடு ஆற்றாமை சொன்ன படி-தன் முலைக் கடுப்பு கிடக்க கன்று என் படுகிறதோ -என்று இரங்கி- எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில்-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று அவன் படும் பாட்டுக்கு நிதர்சனமாய் இருக்கிறது –எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போலே -(கஜேந்திர மோக்ஷம் )
அவன் எருமை கறவா விட்டால் அவை படும் பாடு நாங்கள் உன்னாலே படா நின்றோம் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –அறியாமைக்குக் கன்று காலி என்கை –ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே
அறிவில்லாதவரை பசுக்களோடு ஒப்பர் என்னக் கடவது -(மா முனிகள் விருத்தத்தில் பசு நர வபுஸ் -பசு பிராயர் )-நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி –
இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை – எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் – பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –கறவைகள் பின் சென்று-இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய்-எங்கள் இளிம்பு கண்டு சிரித்து
எங்கள் ஆர்ஜவத்தை அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்-காலிகள் பின் சென்று என்னாதே – கறவைகள் பின் சென்று -என்றது தர்ம புத்தயா ரஷித்தது அன்று – பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –எருதுகள் வறடுகள்
ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –

————————————————-

வந்து-

தூயோமாய் வந்து -5-
கூவுவான் வந்து நின்றோம் -8-
தேற்றமாய் வந்து திறவேலோ -10-
தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-
தூயோமாய் வந்தோம் -16-
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-
சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-

தூயோமாய் வந்து -5-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து-முறை கெட வருவான் என் என்னில்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே-
உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -என்று-அவன் வரவை நாம் செய்யக் கடவோம் –உபஸ்தேயை ரூபஸ்தித-என்றும் –பத்ம்யாமபி கமாச்சைவ-என்றும்-இட்ட நாலடிக்கும் புண் பட்டு இருக்குமவன் இறே

கூவுவான் வந்து நின்றோம் -8-தேச பிராப்தியே பிரயோஜனம் போலே -வந்து-போகை தானே உத்தேச்யமாகப் போனால் போலே உன்னைக் கூவுகை தானே பிரயோஜனமாக வந்தோம்-வந்து நின்றோம் –உத்தரம் தீர மாஸாத்ய கஸ்த ஏவ வ்யதிஷ்டித்த –என்னும் படியே
உன் பக்கலிலே வந்து நின்றோம் –கால்கள் தரையிலே பாவி நிற்கப் பெற்றோம்

தேற்றமாய் வந்து திறவேலோ -10-இவர்கள் ஆர்த்தியைக் கேட்டு துணுக் என்று வர புக்காள்- இரண்டாம் நிலத்தில் -மேல் மெத்தையில் -கிடக்கிறவள் ஆகையாலே-தடுமாறாதே தெரிந்து வந்து திற -என்கிறார்கள் –ஊராகத் திரண்டு கிடக்கிறது-படுக்கையில் கிடந்தபடி வாராதே
சதஸ்தையாய் வந்து திற

தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-இவ்வூர் அடங்க இவளுக்கு தோழிமார் உறவு -இவளுடைய சம்பந்தம் இவள் போல் அனன்ய ப்ரயோஜனராய் அது தான் தோழமை
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெரில் ஓன்று நூறாயிரமாக –
கொண்டத்துக்குக் கைக் கூலி கொடுக்கும் ஜாதி எல்லாரும் வந்து உன்னை ஒழிய வேறு பிரயோஜனம் இல்லாமல் நீயே பிரயோஜனம்

தூயோமாய் வந்தோம் -16-அவள் செய்வதை நாங்கள் செய்தோம்-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய ஸ்வ யத்னமாதல்
ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் – உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –துடை தட்டி எழுப்புவாரைப் போலே-சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –சத்வோத்தரமான காலம் ஆனவாறே சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள்-வந்து திறவாய் –யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது -உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –எங்களுக்காக நாலடி வந்தாய் என்னும் தரம் நாங்கள் பெறும்படி வந்து திறக்க வேணும் –நாலடி போய் வந்தாகிலும் திறக்க வேணும்-அவனும் நாங்களும் உன் நடை அழகைக் கண்டு வாழும் படி வர வேணும் –நம்முடைய பிரயத்னத்தை அபேஷியாமல்
நீயே வந்து ஸ்வரூப உபாய புருஷார்த்த விஷய விரோதியான தத் தத் அஞ்ஞானத்தைப் போக்காய்-

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-அநந்ய பிரயோஜனைகளான நாங்கள் வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் ––விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்-இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே – உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று கார்யம் இன்னது என்னும் இடத்தை கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்

சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை

————–

சென்று-

தீக்குறளைச் சென்று ஓதோம்-2-
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11-
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-

தீக்குறளைச் சென்று ஓதோம்-2-பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-நம்மில் நாம்-நப்பின்னை நங்காய் -என்றும்-நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் –
நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்-ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை
கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்-பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே-சென்று ஓதோம்-அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-விரஹம் தின்று குறைக் கொள்ளியான நம் சரீரத்தை அவன் கண்டு புண் படும்படி அவன் இருந்த விடத்தே செல்லக் கடவோம்-அவன் வர பிராப்தமாய் இருக்க நாம் சென்று – இவர்கள் நம -சொல்லுகையும் அத்தலைக்கு மிகுதியாய் இறே இருப்பது –அத்தலை இத்தலையாய் –அவன் வருகையும் சேவிக்கையும் தவிர்த்தால்-நாம் சென்று சேவிக்கை அத்தனை அன்றோ அப்படி செய்தால் நம் கார்யம் செய்யாது ஒழியுமோ –

செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11- எதிரிகள் வந்தால் பொர இருக்கை அன்றிக்கே -இருந்த இடங்களிலே சென்று பொருகை –அபியாதாப் ரஹர்த்தாச -என்ற
சக்கரவர்த்தி திரு மகனைப் போலே இவர்கள் வீரம் –எதிரிகள் வந்து ஊரை அடை மதிகள் படுத்த வெல்லுகை குற்றம் ஆனால் போலே நாங்கள் வர புறப்படாதே இருக்கை உனக்கு குற்றம் அன்றோ –

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-நோவு வருவதற்கு முன்னே சென்று
ஏற்கவே ரஷிக்க கடவ நீ நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்க லாகாதோ –நீ சென்று உதவக் கடவ உனக்கு – உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ – உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவன் அல்லையோ – எழுதும் இன்னுமது மிகையாய் அன்றோ இருப்பது-

——–

நாம்-

நமக்கே பறை தருவான் -1-
நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2-
நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-
நாங்களும் மார்கழி நீராட -4-
நாம் தூ மலர் தூவித் தொழுது -5-
சென்று நாம் சேவித்தால் -8-
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
நானே தான் ஆயிடுக -15-
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-
எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-
யாம் பெரும் சம்மானம்–யாம் அணியோம் -27-
புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

1-நமக்கே பறை தருவான் -1--அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )-நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –இதில் (நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்- அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் – உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –

2-நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2—அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் –
லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற(நப்பின்னைப் பிராட்டியும் கோபிகளில் ஒருத்தியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள் அன்றோ
நாம் அனைவரும் -கண்ணனும் இங்கே )இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்(அவனாலே அவனை அடைவோம் என்று விஸ்வசித்து உள்ள நாமும் )நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு –-உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது-வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –அதனாலே அலமருகிற நாமும் – நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு — இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்

நம் பாவைக்கு –நம்முடைய நோன்புக்கு--அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும் இந்த்ரிஜித் பிரப்ருதிகள்-பௌண்டரீக வாசுதேவாதிகள் போல்வார் உடைய யாகம் போல் அன்றியே- ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –மம ஸூதா -மமகாராம் அற்றவனையும் சொல்லப் பண்ணுமா போல் நம் பாவை பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே(அவனையே பிள்ளையாகப் பெற சக்ரவர்தியாதிகள் செய்த யாகம் -நோன்பு -போல்வனவும் அன்றிக்கே ) கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு-அவனும் அவன் விபூதியும் வாழ்க்கைக்கு பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்

நாம் முடியோம் –அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே-அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி-இவள் குழலிலே படியும் படி இறே திருக் குழலில் செவ்வி இருப்பது –தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே –அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் –அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –நாமாய் பகவத பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து –இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே

5-நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-நாங்கள்-திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்-நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள் என்னவுமாம்-பாடி மடி கோலாதே-
இது தானே பிரயோஜனமாக யுடைய நாங்கள் ––பாடி நெய் உண்ணோம் -என்றவர்கள் பாட்டு இறே-இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-என்று இருக்குமவர்கள் இறே-என்னையும் கொடுத்து என்னுடைமையும் கொடுத்து என்கிறார்கள்-பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே

6-நம் பாவைக்கு-ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு-நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால்-அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி இருக்கை — அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே பலத்தில் அழிவில்லாமை பெறுமதுவும் கிருஷணனேயாய்-பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -என்றுமாம் (நோன்பு -உபாயம் அல்லவே -பெறு வித்தவனுக்கு கைங்கர்ய மாத்திரமே)

7-நாங்களும் மார்கழி நீராட -4-பகவத் கைங்கர்ய ஏக போகரான நாங்களும் -நோன்பு -என்கிற-வ்யாஜ்யத்தாலே- பகவத் சம்ஸ்லேஷத்தைப் பண்ணி மகிழக் கடவோம்-அதாவது-
பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை-நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ – நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றிப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –
இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம் ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்

நாம் தூ மலர் தூவித் தொழுது -5-க்ரம பிராப்தி பற்றாத நாம்-அவனே உபாயம் என்று இருக்கிற நாம்-உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-

சென்று நாம் சேவித்தால் -8-ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறோம்-மாசுடை யுடம்போடு தலை யுலறி-உபவாச கிருஸாம் தீ நாம்-அவன் நெஞ்சு புண்படுகைக்கு உடலாக-அவன் இருந்த இடத்தே சென்று அவன் செய்வதை நாம் செய்து விடுகிறோம்

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10–வெறுமையே பச்சையாக யுடைய நம்மால்-இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நம்மால் -நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் -நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ

நானே தான் ஆயிடுக -15-இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால்
அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-பெரியாழ்வாரைப் போலே யன்றோ நாங்கள் வந்தது என்கை-தம்மைப் பேணாதே அத் தலையைப் பேணுமவர்-நாங்களும் எங்களைப் பேணாதே உன் வாசலிலே வந்தோம் என்கை-நாங்களும்-உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று-தேகாத்ம அபிமானத்தையும் ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும் உபாயாந்தர
உபேயாந்தரங்களையும் விட்டு இவற்றை நீ கொடுத்தாலும் பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று உன் திருவாசலிலே வந்து –நீயே சமஸ்தவித பிராப்யங்களும் பிராபகங்களும் என்று உன் திருவடிகளை ஸ்துதித்து மங்களா சாசனம் பண்ணி வந்து ஆஸ்ரயித்தோம் –

எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-எம் மேல் விழியாவோ-கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே – விழியாவோ -என்று தங்கள் மநோரதம் –எங்கள் மேல் –உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –எங்கண் மேல் நோக்குதியேல்-உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே-எங்கள் மேல்அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்-2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்-சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6) ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி-ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர் இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )எங்கள் மேல் சாபம் இழிந்து-தங்கள் யாதனா சரீரம் போலேயும்
சாபோபஹதரைப் போலேயும் விஸ்லேஷ வ்யசனமே படுகிற எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்-3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –
4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –-1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )
2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)
4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் -என்று அநந்ய கதிகளாக சொல்லுவதே -யாம் வந்த-எங்களை அறிவுதி இறே –நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்

யாம் பெரும் சம்மானம்–யாம் அணிவோம் -27-யாம் பெரும் சம்மானம்-தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்-அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –யாம் அணிவோம் –வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள் பூண்போம் -என்கிறார்கள் அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று – பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –யாம் அணிவோம்-ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –

புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-புண்ணியம் யாம் யுடையோம் ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம் -இதுவோ எங்கள் குற்றம் –புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில் இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் – நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ-அவள் பெற்று (புண்ணியம்) உடையளானாள் – நாங்கள் பிறந்து (புண்ணியம் )உடையோம் ஆனோம் –
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று ஊருக்காக பலித்தது இறே –எங்கள் ஸூஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சமும் இல்லை –மஹா பாதக ஸ்பர்சமும் இல்லை(உபாயாந்தர சம்பந்த பாதகமும் ஸூவ ப்ரயோஜன பிரபல விரோதியும் இல்லை )உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது –எங்களாலும் விட ஒண்ணாது – இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ –ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ-நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி –நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே-நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்- தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது —(நாராயண -உறவு இல்லையே நாங்கள் சொன்னது )
இடையிலே வந்த உறவு காண் எங்களது –அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு –
அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு-நீ மைத்துனன் நம்பி -(நாச்சியார் )-நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழிக்கும் படி –இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம் இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ பரதந்த்ரரை தாழ நின்று கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
எங்களை–தாஸ்யத்தில் சுவடு அறிந்து –அதில் ருசியும் த்வரையும் விளைந்து-க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை-அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று
தங்கள் ஆற்றாமையை அணித்துக் காட்டுகிறார்கள்-சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை-ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை-ஸ்வரூப ஞானம் யுண்டாய் இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ-உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ-பெரும் பசியராய் இருப்பார் -உண்ணப் புக்கு கலத்திலே கேச லேஸம் கண்டால் பின்னை உண்ணாதே பொகட்டுப் போமா போலே சப்தாதிகள் போக்யாதிகளாய் இருக்கிற எங்களை வடிவு அழகைக் காட்டி உண்ணும் சோறு -முதலானவைகளை எல்லாம் நீ என்னப் பண்ணி-
ஸ்வரூப அனுரூபமான அடிமை தாராதே போகைக்கு உன் தரமோ- என்கை-உன் தரமோ நாங்கள் -நீ தான் உனக்கு உரியையோ என்னை நெகிழக்கிலும் -இத்யாதி -நப்பின்னை பிராட்டி பரிகரம் –ஆணை இட்டவர்கள் பெண் பிள்ளை அன்றோ –உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்-இற்றை அளவிலே போகாது காண் –-இப் பிறவி அளவிலே போகாது காண்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய் சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்- அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –உன் தன்னோடு-நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும்
கூடத் திரியும் அத்தனை-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் –உனக்கே நாம் ஆட்செய்வோம் –சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் ––உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –ஆட் செய்யும் இடத்தில்-எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்-நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது-நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் –
(நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம் அப்பாஞ்ச ஜன்யம் )நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும்
மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –-இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறதுஅநந்ய போக்யத்வமும் –அநந்ய உபாயத்வமும் –அநந்யார்ஹத்வமும் -இறே ஸ்வரூபம்-(நாராயணாயா -கைங்கர்யமே பிரதானம் என்பதால் அத்தை முதல் காட்டி அருளுகிறார் )

செல்வச் சிறுமீர்காள் –
வையத்து வாழ்வீர்காள் நாமும் –
நாங்கள் நம் பாவைக்கு –
நாங்களும் மார்கழி நீராட –
எம்மை நீராட்டு –
யாம் வந்தோம் –
யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் –
நாங்கள் என்பது
எங்களுடையது என்பதாய்
பாட்டுத் தோறும் தங்களை உறைத்துக் காட்டிற்று

ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும்
பலத்திலும்
தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு
நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இறே –

————————————————————————–

பறை–10 -பிரயோகங்கள்

மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கூடாரை –பாடிப் பறை கொண்டு
கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –

1-மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் – –நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்- தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் –

இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )-உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது

2-கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு –இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்–முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடி நெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-
அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-
இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்- அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களை நாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-

3-நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்–போற்ற
குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல-பறை தரும்
இப்படி பெரியவன் நமக்குப் பறை தருமோ என்னில் – நாராயணன் அன்றோ –போற்றாதார் பாடும் புக்கு இருக்கிறவன் அன்றோ -தரும் என்னவுமாம்-நம்மால் –நம்முடைய மால் -கைக் கொள்ள துழாய் மேல் வைக்கும் வியா மோஹம் நம்மிடம் வைத்துள்ளவன் –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் அன்பன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய அன்பேயோ-வெறுமையே பச்சையான இடைச்சிகளுக்கும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படி இருக்கிற தார்மிகன்(நம்முடைய மால் பித்தன்)

4-நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்அறை பறைநோன்புக்கு பறை வேண்டி வந்தோம்–புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன என்று தங்கள் மௌக்யம் தோற்ற சொன்னார்கள்

5-ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்–எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில் (ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )-இவன் எல்லாம் செய்தாலும் அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே-இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே – ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்-தாழ்ந்தார் உயர்ந்தாரை திரு உள்ளமாகில் செய் என்னுமா போலே-உன் அழகாலே எங்களை மயக்காதே –செய்து அருளப் பார்த்தாயாகில் -செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்-நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ-அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் – ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள் திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இறே சொல்வது

6-மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே–ஒரு மன்று அளவில் த்வநிக்கை அன்றிக்கே எங்கும் கேட்க த்வநிக்கிறது ஒரு பறை வேணும் –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

7-கூடாரை –பாடிப் பறை கொண்டு—பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம்-பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே-ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம்-பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே-தங்களுக்கு ப்ராப்யம் இறே-பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம் இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி-

8-கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-விலக்காமை பார்த்து இருக்கும் நீ எங்கள் அபேஷிதம் செய்யாய் –சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ
இங்கு வந்து பண்ணி அருளிற்று –பறை தாராய் என்றவாறே-கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான்
அருகில் இருக்கிறவளை( நப்பின்னைப் பிராட்டியை)-நீ தாராய்-அவள் தருவது தந்தாள் –
நீ தரும் அத்தைத் தாராய் –உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது –மேல் உள்ளது உன் பணி அன்றோ(அஸ்து தே -உபாய அத்யாவசிய அவள் முன்பே கொடுத்தாளே)அஸ்துதே என்று அவள் அது செய்தால் –அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ-நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்-ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை –உபாயம் தன்னைப் பொறுக்கும்-உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே-

பறை தரு மாலை -சாற்றி அருளுகிறாள்-இறைவா நீ தாராய் பறை–நாராயணனே நமக்கே பறை தருவான்–கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பறை கொண்டு-நோற்று —நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -கும்பகர்ண நிஹந்தாவான சக்கரவர்த்தி திருமகன் –
மாலே –சாலப் பெரும் பறையே -வாத்திய விசேஷம்-அன்று இவ்வுலகம் அளந்தாய் -பல்லாண்டு பாடுவதே பிரயோஜனம்-இன்று இப்பறை கொள்வான் வந்தோம் –குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -இதுவே அபேஷிதம்-கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு-வள்ளல் மால் இரும் சோலை மணாளர் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –இற்றைப் பறை கொள்வான் அன்று -இன்று மட்டும் இல்லை யாவதாத்மபாவி கைங்கர்யமே அபேஷிதம்-எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு-கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்-அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்-சொல் திரியினும் பொருள் திரியா வினைத்தொகை–நன்னூல் ஸூத்தரம்–இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்

9-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா–இப்போது –
பறை தருவான் -என்றும் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
போற்றப் பறை தரும் என்றும் –
அறை பறை என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் –
சாலப் பெறும் பறை -என்றும் –
உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் –
நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று-பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான் இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று பறையைக் கொடுக்கப் புக –இற்றைப் பறை கொள்வான் அன்று காண் –இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் – யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –கெடுவாய் யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ-லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –உன்னை அங்கனே விடுவுதுமோ-இவர்கள் சொல்லிற்று கேட்டு -இவர்கள் நம்மை விடார்களாய் இருந்தார்கள் –நம்மைத் தடுத்தும் வளைத்தும் கொள்வர்கள்-என்று –பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்றுஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –

10-வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –ஆஸ்ரயணீய ஸ்தலம் இருக்கிறபடி-அங்கு திருவாய்ப்பாடியிலே ஸ்ரீ நந்தகோபருடைய கோயிலிலே நப்பின்னை பிராட்டி கட்டிலிலே திவ்ய ஆஸ்தானத்திலே திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த இருப்பில்–நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை
ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-கொண்ட பிரகாரத்தை –தங்கள் வெறுமையையும் அவன் பூர்த்தியையும் பந்தத்தையும் முன்னிட்டுத்
தப்புக்கு பொறை கொண்டு ருசியையும் த்வரையையும் காட்டி வளைப்பிட்டு அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி –மறந்து நில்லாதே நாட்டுக்குப் பறை என்று அடிமை கொண்ட படியை-

—————————————————————–

நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்

1-மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ-கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை-இத்தால் இவர்கள் நினைக்கிறது -கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –-கிருஷ்ண சம்ச்லேஷம்-தமிழரும் கலவியை –சுனையாடல் -என்றார்கள்-இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இறே –யமுனா ஜலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்-என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே-தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே -(10-1)-நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் )அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே

2-ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்–நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நம்முடைய-விரஹ தாபம் போக நாம் குளித்தால்-நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால்-பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக-கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணினால்-பலமும்-பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை-சாற்றி நீராடினால்நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்- வ்ருத்த ப்ரக்ருதிபிர் நித்யம் ப்ரயாதி சரயூம் நதீம் -ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே என்கை – ந மே ஸ்நானம் பஹுமதம் -இத்யாதியால் சொல்லுகிறபடியே அவனுடைய விரஹ தாபம் தீரும்

3-ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்–நாங்கள் காலத்திலே போய் மார்கழி நீராடக் கடவோம்– அதுவும் முன்பே ஊராக நிச்சயித்த தொன்று அன்றோ –நாங்களும் நோன்பு நோற்றோமாய் அந்த நோன்புக்கு பலமான வர்ஷமும் உண்டாய்த்தாய்-
கிருஷ்ணனோட்டை சம்ஸ்லேஷத்தால் மகிழ்ந்து நீராடக் கடவோம்-உனக்கு பிரிய கரமாக புருஷார்த்தமாக – கிருஷ்ணனும் நாங்களும் மகிழ்ந்து குளிக்கிறோம்-நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ – நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் – இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்-ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம் என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

4-புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே–கிருஷ்ண விரஹ ஆற நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விஸ்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே-தாங்கள் ஆகையாலே உள்ளே கிடந்தாலும் தங்கள் சம்பந்தத்தாலே (விரஹ தாபத்தால் )கொதிக்கும் என்று அறிகிறிலள்-சரயூமவகாஹதே-என்னுமா போலே (பரதன் ஊரார் வரும் முன் நீராட சரயு போவான் -பெருமாள் லஷ்மணன் பேசி –கோதாவரியில் குள்ளக் குளிர பேசிக்கொண்டது –தாபம் இல்லாம்நாள் லஷ்மணனுக்கு குளிரும் –அவன் அத்யந்த ஸூ குமாரன் அபர ராத்திரியில் எப்படி நீராடுவானோ )-நீராடாதே-பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

5-முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-எங்களையும் அவனையும் கூட நீராட்ட வேணும் –இவன் முழுக் கூட்டுகைக்காக நிற்கில் முழுக்க அஞ்சுவோம் என்பார்கள் –கையைப் பிடித்துக் கூட முழுகும்-தாரா பித்ரு க்ருதா இதி -என்று பெருமாள் பிராட்டியுடைய சவுந்தர்யாதிகள் கிடக்க பிராட்டியை உகப்பது -ஐயர் பண்ணிய விவாஹம் என்று ஆய்த்து –அப்படியே இவள் தந்த கிருஷ்ணன் என்று இவர்களும் உகப்பார்கள் ஆயிற்று –நீராட்டு மாலை–சாற்றி அருளுகிறாள்-இப்போதே எம்மை நீராட்டு -தாபத் த்ரயம் தீர எம்பெருமானுக்கு தாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன்– எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான் ஆனதற்கு பின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக்குளத் தேனை ஒத்து-மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56–ஷூத்ருட் பீடித நிதநரைப் போலே கண்டு கொண்டு பருகி –ஆச்சார்ய ஹிருதயம்-

6-மாலே –மார்கழி நீராடுவான்–ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து இது எங்கே உள்ளது என்று தான் என்றான்-இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்-மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை —இந்நோன்பு தான்–காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்–பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்-ஆகையாலே பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்–சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து-

—————————————————————

அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

1-வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி–அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்- பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே-
ஔசித்யத்தாலும் போக்யதையாலும் கிருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே-
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிறவனை பாடுவான் என் என்னில் –
இரண்டு இடமும் ஒருவனே ஆகையாலே நோன்பு நோற்க புக்கவர்கள் கிருஷ்ணனைப் பாடா நின்றார்கள் என்று சொல்லாமைக்காக- ஒரு தெய்வத்தின் பேரைச் சொல்லிற்றாக சொல்லுகிறார்கள்-மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே-திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்-பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே--அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி-அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே-மடலூர்ந்தால் தலைமை கிடக்கும்-ஸ்வ பாவம் மாத்திரம் அழியும் -ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்

2-அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா-கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே –-இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்ற
அவரைப் போலே முன் பிறந்து கைங்கர்ய ஸ்ரீ யைப் படைத்தால் – அவரைப் போல் உறங்காது இருக்கவும் வேண்டாவோ – பெருமாளும் பிராட்டியும் கண் வளரும் போது புறம்பு மதிளாய் நின்று நோக்கும் அத்தனை இறே அவர்-கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ – சந்தே சைஸ் சாம மதுரை ப்ரேம கர்ப்பை ரகர்விதை ராமேனாச்வா சீதா கோபியோ ஹரினா ஹ்ருத சேதச -என்கிறபடியே எங்களையும் அவனையும் பொருந்த விடுகிற உனக்கு உறங்க விரகு உண்டோ

3-ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடி இல்லாமையாலே உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே – மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே-ப்ரஹ்மாஸ்திரம் விட வேண்டும் படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி-த்ரீன் லோகான் சாம் பரிக்ரமய-என்னும் படி அலமந்து-சபித்ரா ச பரித்யக்த -என்னும் படி ஓர் இடத்திலே புகல் அற்று –
தமேவம் சரணம் கத -என்று பெருமாள் திருவடிகளில் விழுந்த காகம் போலே உன் வாசலிலே வந்து உன் காலில் கீழே விழுந்தோம் –அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும்
குணங்களுக்குத் தோற்று வந்தோம்
–அம்பு பிடரி தள்ளாத தள்ள வருவாரைப் போலே
ஸுந்தர்ய குண பலாக்ருதைகளாய் வந்தோம் அம்பு நற் கொலையாகக் கொல்லும் –
குணம் உயிர்க் கொலையாகக் கொல்லும்- வல் வினையேனை ஈர்கின்ற குணங்கள்

4-அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலாவி அருளின படி திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே
–திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்-மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர-திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும் எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே-பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே-அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் – சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் – அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்-திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று –அஹங்கார க்ரச்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே – உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம்

5-பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்-5-10-3-காலை நிமிர்த்த கன்னிப் போர் என்பதால் பல்லாண்டு பாடுகிறார்-கன்னி சேஷ்டித்ததுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள் –தாயும் உதவாத தசையில் திருவடி உதவினதே புகழ் ஆவது-பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை கால் கூறாக்கி விட்ட படி – திருக் காலாண்ட பெருமானே –பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே -கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு ––தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த-பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த, வீங்கோத வண்ணர் விரல்.–

6-அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும் அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி-நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்-சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்

7-சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-மகார்க்கமுமாய்
போக்யமுமாய் பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து – வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே-கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி –
தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை–அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே(திருமார்பை ஆசைப்படும் அத்திரு திருவடியை ஆசைப்படும் இத்திரு )–உன் –பொன்–அடி-உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ – காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-அவை –உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் —
வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –இது
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே
இப் பொன்னடி இருப்பது –பொற்றாமரை அடி அன்றோ – சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும் ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்
பொன்னும் தாமரையும்
-தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3)
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 )
இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –பரமன் அடி பாடி –அடி போற்றி –
கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே
–-அடியே போற்றும் பொருள் – சூட வந்த பூவுக்கு விலையிடுவாரைப் போலே -உனது பால் என்றுமாம்(அடி -ஸ்வாமி உன்னையே என்றவாறு )உபாய உபேயங்கள் இரண்டும் தானே
ஸ்வீகார மாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிற படி-ருசிக்கு அவ்வருகு பட்டால்
பலத்திலே மூளும் அத்தனை-கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது -(முகத்தின் அழகைப்பார்த்தால் கைங்கர்யத்துக்குப் போக ஓட்டாதே )(வந்து உன்னைச் சேவித்து ஸ் வீகாரம் -மேல் உன் பொற்றாமரை அடியே போற்றி -அதுக்குப் பிரயோஜனம் பொருள் இவ்வாறு மூன்றும்)-இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை அவன் இவர்கள் திருவடிகளை பார்க்க –இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே

————————————————————-

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறவை –முகில் வண்ணன் பேர் பாட

கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி–பாடி –உகந்து -செய்வதே சந்தோஷம்- உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த– பரபாக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்உண்டார்க்கு உண்ண வேண்டா விறே –நீராடி பின்பே- அடி பாட நீராடித் தான் பாட வேண்டும் நியதி இல்லையே -இதுவே பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்த்தனம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை-ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாடல்ல -(பெரிய திருமொழி-11-7-4 )–என்று இறே பாட்டுக்கு லக்ஷணம் -உத்தமனை விட உயர்ந்த பேர் -கார்மேனி முதலில் அதை விட உயர்ந்த -பரமன் அடி -அதை விட உயர்ந்த -இங்கு பேர் –

மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க–வாய் படைத்த லாபம் பெற்றோம் என்று திரு நாமத்தைச் சொல்லி –மனஸ் சஹகாரம் இன்றிக்கே -என்றுமாம்-வருவதற்கு மேலே-சொல்லுவதும் செய்தோம் என்று அவனை நோவு படுத்துகை –-என்னவுமாம் –ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே–வாயினால் பாடி -என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ-வாத்சல்யத்தையும் –சௌசீல்யத்தையும்-ஆஸ்ரித விரோதி நிரசனத்தையும் பேசின விடத்திலும்-பின்னையும் இவர்கள் பேச்சே தனக்கு தாரகமாக கிடைக்கையாலே-அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து-மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -உன்னைக் கண்டு நாங்கள் வாழும்படி வாய் திறவாய் என்கிறார்கள் –கேசவனைப் பாட -என்றும்-பாடிப் பறை கொண்டு -என்றும் –கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு–இதுக்கு முன்பு நாம் பெற்ற ஐஸ்வர்யம் போலேயோ-
இப்பொழுது நாம் பெற புகுகிற ஐஸ்வர்யம்-முன்பு கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாருக்கு தெரியாதபடிநெஞ்சால் கிருஷ்ணனை அனுபவித்து-அவ் வனுபவ ஜனித ப்ரீதியானது -புறம்பு ஒசியாதபடி அடங்கிப் போந்தோம்-இப்போது நாட்டார் தாங்களே அனுமதி பண்ணுகையாலே-வாய்க்கால் வெட்டி நெஞ்சிலே கங்கும் கரையும்-அறப் பெருகுகிற கிருஷ்ண அனுபவ ப்ரீதிக்கு போக்கு-அணை வெட்டிவிட்டு கிருஷ்ண குணங்களைநாம் வாயார நினைத்த படி பாடக் கடவோம் –கிருஷ்ணன் பெண்கள் கிருஷ்ணன் -என்று வாய்க் காவல் இட்டுக் கிடக்கிற வூரிலேஇவ்விரண்டு நாளும் கழிந்தால் அவனை நமக்குத் பாடக் கிடைக்குமோ-ஆஸூர ப்ரக்ருதிகளான ஹிரண்யாதிகள் படை வீடுகள் போலேதிரு நாமம் சொல்லப் பொறார்கள் யாய்த்துபெண்கள் பிரசங்கத்தில் மோஹிப்பர்கள் என்று அவ் விழவு தீரகிருஷ்ண நாம புன புன என்கிறபடி வாயாரத் திரு நாமத்தைப் பாடி-பாடுகையாகிற புருஷார்த்தத்தை லபித்து-

தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்றுமேன்மைக்கும் நீர்மைக்கும் ஸ்ரீ யபதித்வத்துக்கும் ஏகாந்தமான திரு நாமங்களை அநேகம் சொன்னோம் -சஹஸ்ர நாமம் உட்படச் சொன்னோம் –

நோற்று –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்-இவர்கள் (ஆர்த்திகள்)-அர்த்திகள்- ஆகையாவது போற்றுகை போலே–குடிப் பிறப்பால் வந்தது(வழி வழி ஆட் செய்கின்றோம் )-உபாயம் அல்ல-போற்றுதலே அர்த்தித்தல் -உபாயம் அல்ல -புருஷனால் அர்த்தித்தே -வேண்டியே -பெறுவது தானே புருஷார்த்தம் –அறிவித்தல் பசி உள்ளது என்று காட்டுமா போல் அதிகாரி ஸ்வரூபம்)

கற்றுக் கறவை –முகில் வண்ணன் பேர் பாடமுகில் வண்ணன் –நிறம் -வள்ளல் தன்மையைப் பாட வேண்டும் –வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி-நாங்களும் உன் பக்கமே நின்று அத்தைப் பெறுகைக்காக-நீ உகக்கும் வடிவு அழகிலும் உதார குணத்திலும் ஈடு பட்டுத் திரு நாமத்தை பாட-நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட

கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்-கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்- வாய் திறக்கிறது இல்லை -எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்க வல்லை யாவதே-ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –எங்களுக்காக அன்றிக்கே உன் ஹர்ஷத்துக்காக போக்கு விட வேண்டாவோ

உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்–உன் ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாட –ஒரு நீர்ச்சாவி போலே கிடக்கிற இத் திரள் உஜ்ஜீவிக்கும் படி வர்ஷியாய்-

எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-நம்முடைய தோல்வியையும்
அவனுடைய வெற்றியையும் -தோற்ற பாட –ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே-வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –கேசவனைப் பாட (7)-என்றும் பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று-முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும் அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி-இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –இவ் விஷயத்திலே விஐயம் பிரணயித்தவத்துக்குக் கொத்தையாய் -தோற்க
அத் தோல்விக்கு அவனைப் பாட வேணும் –

நாயகனாய் –துயில் எழப் பாடுவான்-திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -என்னுமவர்கள் பெண் பிள்ளைகள் இறே இவர்கள் –ச மயா போதிதஸ் ஸ்ரீ மான் -என்று பிராட்டி உறங்குகிற படி கண்டு உகந்தாள்–இவர்கள் உணரும் படி காண ஆசைப்படுகிறார்கள் -பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்அவன் உணர்ந்து அருளும் போதை அழகுக்கும் மங்களா சாசனம் பண்ண வன்றோ நாங்கள் வந்தது –பிரயோஜனாந்தர பரர்கள் அன்றோ ஓலக்கத்தில் புகுவார் –அநந்ய பிரயோஜனர் இறே கண் வளர்ந்து அருளுகிற இடத்திலே புகுரப் பெறுவார் –மூன்று உலகும் தம் வயிற்றில்-நெறியாகக் கொண்டு-நின்று ஒழிந்தார் -உடையவன் உடைமையை நோக்குவது முறையாலேயாய்-இருக்கும் அன்றோ 

உந்து –உன் மைத்துனன் பேர் பாட–நீயும் அவனும் மைத்துனமை யாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி இட்டீடு கொள்ளும் போது உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும் பிரிந்தால் தாய் பஷத்தில் இறே பிரஜைகள் நிற்பது –நீயும் அவனும் பந்தடிக்கையில் உனக்கு அவன் தோற்ற தோல்விக்கு அவன் திரு நாமங்களைப் பாட-பெருமாள் தோல்வியைப் பிராட்டி இளைய பெருமாளுக்கு அருளிச் செய்ய அவர் பிராட்டி பக்ஷத்தில் நின்றால் போலே-நாமும் பலவுடை நாரண நம்பி இறே –
இன்னாள் அடியான் இன்னாள் அடியான் -என்று படைத்த பேருக்கு ஒரு அவதி இல்லை இறே

ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –அவர் தன்னைப் பேணாதே
உன்னைப் பேணினாப் போலே-நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல் ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே – வந்தோம்-நசை முடிய ஒட்டாது – ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே -புகழ்ந்து –எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –

அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக –-உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –என்னுமவர்கள் இறே –(ஏத்துதலே எங்கள் பலம் )நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்

ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி-உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே-யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து-வருத்தம் உன்னை நீ கண்டு அறியாயே-பிரிந்தார் படும் பாடு பாராய் -என்கை-சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து

கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு-வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்-பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப் பாடுகையே பிரயோஜனம்

கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்-கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இறே – முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு மேற்பட்ட உண்டோ குற்றம் –இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது –
நாராயணன் -என்றத்தை – தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்று சொல்லுகை குற்றம் இறே –அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே –
நாராயணனே என்றும் –நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றும் நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இறே

சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –பரமன் அடி பாடி –
அடி போற்றி – கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –

——————————————————-—————————————————
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –நீ கேட்டே கிடத்தியோ –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –

அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாத கோபிகை
அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை
கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை
எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை
எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை
எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை
ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை
நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை
அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்

———-

நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்
விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்

——————————————–

எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

மார்கழி –படிந்தேலோ ரெம்பாவாய்
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய்
ஓங்கி –நிறைந்தேலோ ரெம்பாவாய் —

ஆழி -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ——
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய் —
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய் -7

மாயனை –செப்பேலோ ரெம்பாவாய்

புள்ளும் –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் –
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் -2-

கீசு –திறவேலோ ரெம்பாவாய்

கீழ் வானம் -அருளேலோ ரெம்பாவாய் —
மாரி –அருளேலோ ரெம்பாவாய் –
மாலே –அருளேலோ ரெம்பாவாய்–3-

தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய்
நோற்றுச் –திறவேலோ ரெம்பாவாய்
கற்றுக் –பொருளேலோ ரெம்பாவாய்
கனைத்து–அறிந்தேலோ ரெம்பாவாய்
புல்லின் –கலந்தேலோ ரெம்பாவாய் –

உங்கள் –பாடேலோ ரெம்பாவாய் —-
மாயனை –செப்பேலோ ரெம்பாவாய் –
தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய் –
எல்லே –பாடேலோ ரெம்பாவாய் -3-

எல்லே –பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –நீக்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே –உறங்கேலோ ரெம்பாவாய்
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
குத்து –தகவேலோ ரெம்பாவாய்
முப்பத்து –நீராட்டேலோ ரெம்பாவாய்
ஏற்ற –புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாரி –அருளேலோ ரெம்பாவாய்
அன்று –இரங்கேலோ ரெம்பாவாய்
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாலே –அருளேலோ ரெம்பாவாய்
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கறவைகள் –பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் -மாற்றேலோ ரெம்பாவாய்
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய்-

ஏல் ஓர் எம்பாவாய் -அனைத்திலும் காதாலே கேட்டு அனுஷ்ட்டித்து சொல்லி வழிபட்டு அனுபவம்
அம்பரமே -மாற்றி– ஓர் எம்பாவாய் -கேட்டது போதும் -அனுஷ்ட்டித்து வழிபட்டு அனுபவம்
வங்க கடல் –எம்பாவாய் -அனுபவத்தை ஆனந்தமாக இருப்பதே கர்த்தவ்யம்

—————

1-பாரோர் புகழ் மாலை –பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ
2-உய்வு மாலை–உய்வுமாறு எண்ணி –
3-செல்வ மாலை –வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்
4-மகிழ் மாலை-நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து –
5-பிழை மாயும் மாலை –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
6-குளிர் மாலை-அரி என்ற பேரரவம் -உள்ளம் புகுந்து குளிர்ந்து
7-தேச மாலை –தேசமுடையாய் -தேசம் -தேஜஸ் இரண்டு பொருளும் விவஷிதம்
8-அருள் மாலை-ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
9-திரு நாம மாலை –மா மாயன் மாதவன்வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று –
10-தேற்ற மாலை –தேற்றமாய் வந்து திற
11-பொருள் மாலை –எற்றுக்குறங்கும் பொருள் –
12-அறிவு மாலை –அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
13-கள்ளம் தவிர் மாலை-கள்ளம் தவிர்ந்து கலந்து –
14-பாடல் மாலை –சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பங்கயக் கண்ணானைப் பாட –
15-வேறோர் பாடல் மாலை –மாற்றாரை மாற்று அழிக்கும்-
16-நேய மாலை-நேச நிலைக் கதம் நீக்கு
17-உறங்கா மாலை –உம்பியும் நீயும் உறங்கேல்
18-மகிழ்ச்சி மாலை –செந்தாமரைக் கையால் வளை ஒலிப்ப மகிழ்ந்து வந்து திறவாய் –
19-தகவு மாலை –தத்வமஸி க்கு பிறர் கூறும் பொருள் தகுதி அற்றது
20-நீராட்டு மாலை —இப்போதே எம்மை நீராட்டு –
21-புகழ் மாலை-போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து –
22–சாப நிவாரண மாலை –
23-ஆராய்ச்சி மாலை –யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
24-இரக்க மாலை –இன்று யாம் வந்து இரங்கு –
25-வருத்தம் தீர் மாலை-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
26-ஆலினிலையான் மாலை –ஆலினிலையாய் அருள் –
27-கூடி இருந்து குளிர் மாலை –
28-பறை தரும் மாலை –இறைவா நீ தாராய்
29-காமங்கள் மாற்று மாலை
30-திருவருள் மாலை-எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்

ப்ரபந்ந அம்ருதம் -ஆண்டான் 30  நாள்களும் நோன்பு நோற்று -அரங்கனை கனவில் திருக்கல்யாண போகம் அனுபவித்த நாளை -நாமும் திருக் கல்யாணம் சேவித்து இன்றும் அனுபவிக்கிறோம் -திருக் கல்யாணம் பங்குனி உத்தரம் நடந்ததையும் ப்ரபந்ந அம்ருதம் காட்டி அருளும் –

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிச் செயல்களில் -இனி பதப் பிரயோகங்கள் –

November 25, 2025

இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே – நாலாயி:603/4
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2

——————

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்
–இனித் தான் எழுந்திராய் – எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ எழுந்திராய் –எங்கள் ஆர்த்திக்கு உணரா விட்டால் உன் பேற்றுக்கு உணர வேண்டாவோ – எங்கள் ஆற்றாமையை அறிந்த பின்பும் எழுந்திராது ஒழிவதே-எங்களுடைய ஆர்த்தியைக் கண்டு எழுந்திரா தொழியில் ஒழி -மனத்துக்கினியானுடைய பாட்டுக்களைக் கேட்கவாகிலும் உணருதி என்றபடி.-இனி எழுந்திராய்-பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை – புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில் அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் -பெண்களையும் கிருஷ்ணனையும் சேர ஒட்டாத ஊரடைய ப்ரஸித்தமாய்த்து-எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்–

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது – பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –இனி என்றும் பொய்கைக்கு வாரோம் –இவர்கள் வாரோம் இனி -என்றவாறே — தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-அவனோ வந்திலன் –
அவன் விபூதியோ நமக்கு பகையாய்த்து-வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிப்போம் என்றால் போத யந்த பரஸ்பரம் –பண்ணுகைக்கும் ஆள் இல்லை யாய்த்து-இனி நாம் ஆர் வாசலிலே கூப்பிடுவோம்-அவன் நமக்கு பாதகனான அன்றும் அவன் விபூதி ஓர் அகத்தடியாராய் நம் கருத்திலே நிற்கும் என்று இருந்தோம்-அதுவும் அவன் கருத்திலே நின்ற பின்பு நாம் இனி யார் வாசலிலே கூப்பிடுவோம் –

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே--10-7-என்னுடையான தனத்தைக் கொண்டான் என்னுதல்-என்னுடைமையும் தனத்தையும் கொண்டான் என்னுதல்
என்னை சர்வ ஸ்வாபகாரம் பண்ணினான் என்னுதல்-உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
அவன் அல்லாத உங்களுக்கு என் முன்னே ஆடி நாளிகை போருமோ –இனி –அவன் குடக் கூத்தாடுவதற்கு முன்னே ஆடினி கோளாகில் அன்றோ பிரயோஜனம் உள்ளது – சைதன்யம் நடையாடினால் பின் ஆடக் கடவதோ-பெண்ணின் வருத்தம் அறியாத -அவனில் காட்டிலும் உங்களுக்கு ஒரு வாசி வேண்டாவோ பிறர் நலிந்தாரையும் நலியக் கடவி கோளோ –

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-நாணி நான் என்னுடைய ஸ்த்ரீத்வத்தை நோக்குகிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –நாணுகை யாவது லஜ்ஜிக்கை இறே-லஜ்ஜித்து மீள வேண்டுவது –இன்னமும் சில நாள் இருந்து அவ்வஸ்துவை லபிக்க வேணும் என்று இருப்பார்க்கே – லஜ்ஜை போகையாவது முடிகை இறே –இனி -முடியும் அளவானாலும் ஜீவித்து இருப்பார் செய்யுமது செய்யப் போமோ –சத்தை கிடக்கில் இறே லஜ்ஜை நோக்குவது-சத்தை அழியா நிற்கச் செய்தே நோக்குவது ஒரு லஜ்ஜை உண்டோ-தர்மியை அனுபந்தித்தித்றே லஜ்ஜை இருப்பது
தரமி லோபம் பிறக்கும் அளவானால் இனி நோக்குகை என்ற ஒரு பொருள் உண்டோ-
இனி -இவள் தான் ஆம் அளவும் நோக்கிப் பார்த்தாள் போலே காணும் –

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-ஓர் குற்றேவல்
முலை எழுந்தவளுடைய குற்றேவல் இறே –தம்தாமுக்கு அடைத்த கரணங்களைக் கொண்டு பண்ணும் கைங்கர்யம் இறே தானே குற்றேவல் –இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என் காத்ரைஸ் சோகாபி கர்சிதை –சம்ஸ் ப்ருசேயம் -என்னுமா போலே
இவ் வுடம்போடே அணைய ஆசைப் பட்டு பெறாதே-இனி அவ்வருகே போய்-ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி பெரும் பேறாகிறது-பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸ் ஸூ பண்ணுவாரோ பாதி -என்று இருக்கிறாள் பரம பதனை அனுபவிப்பது இது போலே என்று இருக்கிறாள் –

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை ஸ்ரீ ராமாயணம்

July 29, 2025

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-
22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து –
24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,-மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –

தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான–பகவத் காருண்ய வர்ஷத்தை-வாழ —-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி உலகினில்–லௌகிகர் இடங்களில்-சார்ங்கம் உதைத்த சர மழை போல்-இரை பெறாத பாம்பு போலே-முன்பு விஷயம் இல்லாமையாலே அடங்கி இருந்த ஸ்ரீ சார்ங்கம்–சக்கரவர்த்தி திருமகன் கடைக் கணித்த வாறே நூறாயிரம் சர வ்ருஷ்டியைத் தானே பண்ணிற்று –எய் வண்ண வெஞ்சிலை இறே -உடையவன் அம்பு பெருக்கி இடுகை –சார்ங்கம் உதைத்த –அகம்படியர் –சேஷ பூதர் -கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போகாது இறே-அது போல் பெருமாள் கடைக் கணித்த பின்பு பெருமாளாலும்-விலக்க ஒண்ணாதாய் இருக்கை-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னக் கடவது இறே-சர வர்ஷம் வவர்ஷ ஹ -என்று தானே சர வ்ருஷடி பண்ண வற்று-வாழ உலகினில் பெய்திடாய் –த்ருஷ்டாந்தமான சர வர்ஷத்திலே ராஷச ஜாதி அடங்க முடிந்தது -அங்கன் ஒண்ணாது-அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே லோகமாக வாழ வேணும்-லௌகிகர் எல்லாம் ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்து வாழும்படி–லௌகிகர் இடங்களில்-பகவத் குண கதாம்ருதத்தை வர்ஷிக்கக் கடவாய்

————–

பண்டு ஒருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த –
தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து சாவாரைப் போலே–ரிபூணாம் அபிவத்சலரான பெருமாள் பக்கலிலே தப்புச் செய்த –-கும்ப கர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ –உறக்கத்தில் தலையானவனும்-உனக்குத் தோற்று தன் உறக்கையும் தானே தந்து போனானோ -ஸ்ரீ பரசுராம ஆழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினால் போலே –நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக் கொண்டாயோ ––அவனது -துயில்-உன்னது -பெரும் துயில்–அவனுக்கு ஆறு மாசம் உறங்குகையும்-ஆறு மாசத்துக்கு ஒருக்கால் உணர்ந்து இருக்கையும் என்று ஒரு வியவஸ்தை யுண்டு இறே-அங்கனம் ஓன்று இல்லையோ உனக்கு – நீ கால தத்வம் உள்ளதனையும் உறங்குகிறாய் அன்றோ –இவள் அரை க்ஷணம் புறப்படாது ஒழிய நெடும் காலமாய் தோற்றுகிறது இவர்களுக்கு-அவன் ஒருத்தியை இறே பிரித்தது-நீ ஊராக பிரித்து உறங்கா நின்றாயே-கூற்றத்தின் வாய் வீழ்ந்த-தான் சிறை இட்டு வைத்த ம்ருத்யுவினுடைய ஆஸ்யத்திலே- வாயிலே விழுந்த புண்ணியனால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த-பதார்த்த தரிசனத்துக்காக ஏற்றின -எல்லாரும் தண்ணீர் குடித்து உஜ்ஜீவிக்கிற ஏரியிலே கல்லைக் கட்டிக் கொண்டு வீழ்ந்து சாவாரைப் போலேயும் -விளக்கில் விட்டில் புக்கு முடிந்து போமா போலே இவன் திரு உள்ளத்தால் அவன் அநர்த்தத்துக்கு நினைவில்லை என்கை –

இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு-இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை 

—————

சினத்தினால் –உண்ணாது உறங்காது –அனித்ரஸ் சததம் ராம (நைவ தம்சான் ந மசகான்–-சுந்தர -36-44)-என்று பெண்களை பிரிந்தால் ஊணும் உறக்கமும் இன்றிக்கே-பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழியபெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்-இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே –விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே –ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –சினத்தினால் மனத்துக்கு இனியான் –அவன் கோபமும் நமக்கு இனிமை
இவன் தன்னைக் கோமானாக நினைத்துக் கொண்டதால் இவனைச் செற்ற வேண்டிற்று-(ரக்ஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ கார்ய -லோக காரியமும் அந்தப்புரக் காரியமும் செய்வார் பெருமாள் ) தான் தன் சீற்றத்தினை முடிக்கும் -(6-4)

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

தென்னிலங்கை-பையல் செய்த அநீதியை நினைத்து பறைச் சேரி பறைச் சேரி -என்பாரைப் போலே –-ஒரு பிராணனை இரண்டு ஆக்கினாப் போலே தாயையும் தாமப்பனையும் பிரித்த படி கொலைக் காரன் இருக்கிற இடம் இறே-அத் திக்குக்கும் அஸஹ்யமான படி-தென்னிலங்கை கோமானைச் செற்ற-யத்ய தர்மோ ந பலவான்-என்றும் –அஹோ வீர்யம் அஹோ ரூபம் -என்றும் –திருவடி மதித்த ஐஸ்வர்யம் இறே-ஓர் அம்பாலே தலையைத் தள்ளி விடாதே –படையைக் கொன்று –புத்ர பவித்ராதிகளை தலை சாய்த்து ஆயுதங்களை முறித்து –அரக்கர் தங்கள் கோன் போலும் -என்கிற அபிமானத்தை அழித்து-பட்ட எளிவரவு எல்லாம் அறிவிப்பார் இல்லாத படி தரம் கெடுத்து நெஞ்சாரால் படுத்திக்க கொன்ற படி-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –கோபத்தினாலே-யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான அஹங்காரத்தை நசிப்பித்து-அத ஏவ மனத்துக்கு இனியானை –சக்கரவர்த்தி திருமகனை –மனத்துக் கினியானைப் –வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக-பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே-ஏகதார வ்ரதனாய் இருக்கை –கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்-என்று-நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரையும் காற்கடைக் கொண்டு-இத உபரி ம்ருத சம்ஜிவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் )-என்னும் படியே
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

———–

பொல்லா அரக்கனைக்-உயிரையும் உடலையும் பிரித்தால் போலே-தாயையும் தமப்பனையும் ஓர் இடத்திலே சேர இருக்க ஒட்டாதே பிரித்த நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது –-முன் பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம் )-என்னும் அத்தனை போக்கி அவன் தண்மைக்கு பாசுரம் இல்லை இறே –
திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-விபீஷணஸ் து தர்மாத்மா -என்று-நல்ல அரக்கனும் ஒருத்தன் உண்டு இறே-கிள்ளிக் களைந்தானைக்-மறுவலிடாத படிந் கிழங்கோடு வாங்கின படி– திரு விளையாடு சூழலில் புழுத்த இடம் கிள்ளிப் பொகடுமா போலே-ஆஸ்ரிதர் குடியில் தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –
கிள்ளி –என்கிறார்கள் –பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது–அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய-கிள்ளிக் களைந்தானை”-என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.-ஆராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போகடுமாபோலே களைந்தானென்க-ஒரே வரியில் சொல்லும் படி ராமனும் கண்ணனும் ஒரே தத்வம் -நாராயணன் –தமிழை ஆண்டாள் -பகாசுரனையும் ராவணனையும் ஒரே வரியில் –

கீர்த்திமை –-எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம்-உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான்-தங்கை அழகிலே கண் கலங்கினாள்-தம்பி சீலத்துக்கு இலக்கானான் –-பாடிப் போய் –இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி –வழிக்கு தாரகம் இறே திரு நாமம்-தன் தாள் பாடி -என்னக் கடவது இறே –தங்கள் அபலைகள் ஆகையாலே தங்களுக்கு பலமுண்டாக அவன் விஜயத்தையே அனுசந்திக்கிறார்கள் –கீர்த்திமை பாடிப் போய்-கல்யாண குணங்களை-ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி-அதுவே தாரகமாய் போய் –விரஹத்தாலே துர்ப்பலைகளான பெண்பிள்ளைகள் பகவத் குண கீர்த்தநத்தைப் பாதேயமாகக் கொண்டு வழி கடந்தன ரென்றவாறு

————–

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே-பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை-எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை இவர்களுக்கு குடிப் பிறப்பு –தென்னிலங்கை-அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய் குழவிக் கூடு கொண்டாப் போலே-ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –செற்றாய் –ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை-திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே-மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும் அவர்கள் ஆகையாலே-குடிப் பிறப்பாலே வந்தது –இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்-ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்-சென்று அங்குத்-அங்கே சென்று –நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –கொடிய காட்டிலே பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள் –எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே- உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

————-
உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் –
அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
” என்பது பிராட்டியின் திருவாக்கு.-
அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.”
என்றார்.- பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அவிநாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயதிய ஆஸ்ரித ஸந்த்ராச த்வாந்த  வித்வம்ஸந உதய: ।பிரபாவான் சீதயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ॥மங்கள ஸ்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவிநா பாவமேயாம்.

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை–நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது –ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உன் தன்னோடு-அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்-(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்-எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் –(பராங்குச நாயகி )

உனக்கே நாம் ஆட்செய்வோம்
சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே-ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –நீ உகந்த அடிமை செய்வோம் –உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே-நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

———————

வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயினனென்றதாகக் கொள்க.
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்‘-பிராட்டியே தான் மதுரக் கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான் ஸுந்தர பாஹு – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவமுதுண அமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே!” என்றார் திருமங்கை யாழ்வாரும்.

தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்-கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் –என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை செய்த குற்றம் பொறுக்க வேண்டுமா போலே ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை-அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது-அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

மாதவனை
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்-லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து-அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

மேலே கேசவனென்றதனால் பரசு ராம பங்க கதை ஸூசிதமாகிறது- கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே யாதலால் அது கேசவனை யென்பதனால் ஸூசிதமென்னக் குறையில்லை.-

கேசவனை
விரோதி நிரசன ஸ்வ பாவனை –பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை –
பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே
போக்க வல்லவன் –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது--அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற நிலையைச் சொல்லிற்று

மாதவனை கேசவனை
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான்
என்று பட்டர் அருளிச் செய்வர் –

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸூ சனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;
சேயிழையார்
என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்விய இழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால் சொல்லப்பட்ட
தாகிறது
. ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே- பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று- அடுத்தபடியாக ஸீதாபிராட்டி மங்களாசாஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.

இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம் செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களாங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூப ஸம்ஹநம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ருர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்ற பாடமும் பல ஸ்ரீகோஸங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “
ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!
” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப் பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில் கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷிகளையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்து கொள்ளக் குறையில்லை.

தருணவ் மஹாபலெள,புண்டரீக விசாலாக்ஷள சீர க்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை — அதன் பிறகு தாரையின் புகழுரை.-நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-
த்வமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தம தார்மிகச்ச, அக்ஷய்ய கீர்த்திச்ச விசக்ஷணச் ச க்ஷமாவாந் க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள்
ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-
வயத்தமேஷ மஹாயோ …. தம : பரமோயாதர சங்க சக்ர கதாதர , ஸ்ரீவத் வக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் ஸாச்வதோ த்ருவ:”இத்யாதி
யாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வாக்கிலும் வந்ததல்ல.-

சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே-ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே-கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –ஸ்வரூப குணங்களாலும்
ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –(நேரிழையீர் அது நேர்மை -ஆஸ்ரயணீய தசை-சேயிழையீர் இது செம்மை -இது அனுபவ தசை )

திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறை கொண்டவர் சக்ரவர்த்தி திருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்று சொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்க வேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றது தான் அங்குப் பறை கொண்டவாறு.

குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”

பெருமாள் திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹித ஸித்தி யாதலால் இதனையே பறை கொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சால விணங்கும்.

இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து –அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி 

அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –-எற்றைக்கும் என்ற பறையை –அப் பரிமாற்றத்திலே நின்று அவனை ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை-தங்கள் வெறுமையையும்-அவன் பூர்த்தியையும்-பந்தத்தையும் முன்னிட்டுத் தப்புக்கு பொறை கொண்டு-ருசியையும் த்வரையையும் காட்டி-வளைப்பிட்டு-அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –கொண்ட-நீ தாராய் என்கிறபடியே அவன் தரப் பெற்ற படி-ஆற்றை –கொண்ட பிரகாரத்தை –ஆஸ்ரயணீய பலமும் பல சித்தி க்ரமும் சொன்ன படி  -சேதன லாபம் பகவானுக்கே -பேற்றுக்கு சாதனங்களும் செய்து பெற்று உகப்பானும் அவனே

“அணி புதுவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த விசேஷணமும் ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி உபபாதிப்போம். ஆண்டாளுக்கும வான்மீகி முனிவர்க்கும் அபலபிக்க வொண்ணாத வொரு உத் கர்ஷம் கோதாஸ்தியில்-ः –
வல்மீகத: ஸ்ரவணதோ வஸுதாத்மநஸ் தே ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: | கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: || (7): என்கிற ஸ்லோகத்திற்கு —நிலததில் தென்படும் புற்றானது பூமி தேவியின் காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமாதலால் பூமி என்றே கொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில் நின்றும் தோன்றிய வால்மீகி முனிவர்-ஆண்டாளுடைய காதில் நின்றும் தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்தி ஏற்பட்டு விட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும் தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில் நின்று உண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோக விலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவானால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஸஹஜமே யாதலால்
மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில் நின்றும் தோன்ற
வென்பதில் வியப்பு ஒன்றுமில்லை கிடீர்  -ஸ்ரீராமாயணத்திற்கு ஏற்பட்டிருக்கும் ப்ரஸித்தையைப் பற்றிச் சிறிது வியக்க வேண்டுமே யல்லது உம்முடைய திவ்ய ப்ரந்தங்ளுக்கு ஏற்பட்டிருக்கின்ற போக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
ஸக்தியில்லை என்பது உள்ளுறை –இதனால்,வால்மீமி கோகிலத்தின் சொற்களில்
கிளி மொழிக் கோதையின் சொற்களே விலக்ஷணமாயுள்ளது.

ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன்.
அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,
தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்-உன் செவியிற் பிறந்த மஹிமையாலே அவர் கவிஸார்வ பௌமரானார். உன்னுடைய குழந்தை (அம்சம்) விபூதிதானே அவர்!அவர் கவிதாசக்திக்கு நீதானே மூலம்!-திருச்செவியிலிருந்து. ஜன்ஹுமஹர்ஷியின் ஸ்ரவணத்திலிருந்து கங்கை அவதரித்தாள்.-அதுபோல உன்னுடைய ஸ்ரவணத்திலிருந்து ராமாயண கங்கா ப்ரவாஹ ஹேதுவான வால்மீகிமுனி பிறந்தார்.-உன் காதில் பிறந்தவர் வாக்கு அத்தனை இனிமையாகையில் உன் திருவாயிலிருந்து வரும் வாக்குகளின் இனிப்புக்குக் கேட்பானேன்?-உன் “ஸ்ரவணத்திலிருந்து” என்பதற்கு எதிர்த்தட்டு உன் “வக்த்ராரவிந்தத்திலிருந்து” என்பது

அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் –தனக்கு-பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேஸ்யமாய் அவர் அபிமானித்த தேசம் என்று ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் திரு அயோத்யையும் போலவும்-நப்பின்னைப் பிராட்டிக்கு கும்ப குலமும் திருவாய்ப்பாடியும் போலவும் அன்றிக்கே-ஆண்டாளுக்கு-பிறவியும் புக்க இடமும் ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இறே உள்ளது –பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே-நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற அலங்காரம் உள்ள தேசம் இறே
(அகாரம் உகாரம் மகாரமும் என்றுமாம்-ரெங்க மன்னாரும் ஆண்டாளும் பெரிய திருவடி-சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர்-ஓங்காரமே காட்சி கொடுத்து ஸேவை சாதித்து அருளும் திவ்ய தேசம் )

‘கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்று காட்டினாப் போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவை மிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹல்யா சாப விமோசனம் .4.வில் வளைத்து வைதேஹியை மணம் புணர்ந்தது. 5.பரசு ராம பங்கம்.(ஆக 5) அயோத்யா காண்டத்தில்,1.யுவ ராஜ பட்டாபிஷேக ப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டது. 4. பாதுகா பட்டாபிஷேகம்.5-அத்திரி பகவானாச்ரமத்தில் அநஸூய தேவிக்கும் மீதா ஸீதேவிக்கும் ஸம்வாதம். (ஆக 5)இங்ஙனே காண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை ஐயைந்தாக வகுத்தாள்வது.-
இப் பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக
உரைப்பார்-உபந்யஸிக்க ல்லவர்கள்.

———————————————————————————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை ஸ்வாபதேச வியாக்கியானங்கள்- சார அமுதம்

April 18, 2025

ஸ்ரீ திருப்பாவையால்–நாராயணன் -1-என்றும் –-பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்-ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஆஹ்யதோ மதுராம் புரீம் -என்கிறபடியே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி–திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –-பிரபன்ன நிஷ்டாக்ரமமும் – பிரபத்தவ்யன் அதி ஸூலபனாம் படிக்கு அடியான அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது

கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -1-என்றும்-நாராயணன் மூர்த்தி -7-என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -3–என்றும் சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே -என்னக் கடவது இறே

முதல் பாட்டில்-பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது வேதார்த்தம் –
அதாவது-சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது-அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்-தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-கண்ணே உன்னைக் காணக் கருதி எண்ணே கொண்ட சிந்தையினராய் அன்றோ ஆழ்வார்கள் இருப்பது -அவனே உபாயமும் ப்ராப்யமும் –

மார்கழித் திங்கள்–)சத்வோத்தரமான காலத்திலே–சதாசார்ய பிரசாதம் அடியாக -ஸ்வரூப யாதாத்ம்ய (மதி நிறைந்த )ஜ்ஞானம் பரி பூரணமாய்-இச் சேதனன் பகவத் விஷயீ கார பாத்ர பூதமான திவசத்திலே-தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்
(நன்னாளால்)-தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –-ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்(குடந்தைக் கிடந்தாய் அடியேன் ஒரு வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே அன்று நான் பிறந்திலேன் )

நீராடப் போதுவீர் –பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்-நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் ) அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே–நேரிழையீர் –இதுக்குத் தகுதியான-ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –ஆயர் சிறுமீர்காள்-ஜ்ஞான ஜன்மம் உடையவர்கள் போலே-பகவத் ஏக பரர்-ஸ்த்ரீத்வேன நிர்த்தேசம் – –உபாயாந்தர-உபேயாந்தர-தேவதாந்தர-பரர் போல் அன்றியே-அனன்யார்ஹத்வத் யோதனார்த்தம்-ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும் ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

ஆய்ப்பாடி-பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று-அனுபவிக்க வேண்டாத ஊர்-ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்-பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே-கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்–அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் -இங்கு தான் கும்பிடுகிற இடம் இறே –-தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே

கூர் வேல் கொடும் தொழிலன் -இத்யாதி
கூரியதாய்-சர்வ அநிஷ்ட நிவர்தகமான மங்களா சாசனத்தை உடையவராய்- அல்ப அமங்களம் சம்பாவிக்கையிலும்-அதிசயித மங்களா சாசனை பரராய்–ஞானம் தாண்டி அவன் அழகு மார்த்வம் பொங்கும் பரிவால் ரக்ஷண ரக்ஷக பாவம் -தட்டு மாறிக் கிடக்குமே– பகவ லாபத்தாலே களித்து-(நந்த கோபன் -ஆனந்த மயமாய் -) பகவத் விஷயத்தை அசல் (கம்ஸாதிகள் )அறியாதபடி-ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்- தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்-(இளம் குமரன் )-தமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்-அம்பன்ன கண்ணாள் யசோதை -(பெரிய திருமொழி -6-8-6)ஆகையால் இவள்-முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்–அம்பரமே தண்ணீரே –என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர்-நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ

கண் என்று ஜ்ஞானமாய் –-அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்- தன்னை அனுசந்திப்பாருக்கு ஆபிஜ்யாதி (குலம் தரும் இத்யாதி)சகல அதிசய ப்ரதமான-திரு மந்த்ரத்திலே- தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் – மந்த்ரோ மாதா -என்னக்   கடவது இறே-(வித்யை தாயாகப் பெற்று இத்யாதி -நாயனார்))-இம் மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம் மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை

மந்த்ரத்திலும் மந்த்ர பிரதனான ஆச்சார்யன் பக்கலியும் மந்திரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமேஆகவே யசோதை -நந்தகோபனைச் சொல்லி நாராயணனையும் சொல்கிறதுகார் மேனி என்கையாலே –சௌலப்ய சௌசீல்யங்களையும்-செங்கண் என்கையாலே –வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே- ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்துகதிர் மதியம் இத்யாதி – சூர்ய கிரணங்களை உடைய மதியம் போலே இருக்கிற திருமுக மண்டலத்தை உடையவனாய்-அனுகூலர்க்கு அணுகலாம் படி இருக்கையும்-
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாமையும் தோற்றுகையாலே- அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே- ஆஸ்ரித கார்ய ஆபாதக குண சதுஷ்டயமும் (ஞானம் சக்தி பிராப்தி பூர்த்தி )சொல்லிற்று ஆய்த்து

நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே அதிகாரிகள் என்று  அதிகாரியை  ஸங்க்ரஹித்தார்கள்-நாராயணனே என்று  ப்ராபகத்தை  ஸங்க்ரஹித்தார்கள்-நமக்கே  என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-இத்தால்- உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக- அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-ஸர்வ தர்மான் பரித்யஜ் ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -கீதா ஸ்லோக அர்த்தமே கோதா உபநிஷத்தின் அர்த்தமும் என்றதாயிற்று-

ஸ்வாமி எம்பெருமானார் , கிருமிகண்ட சோழன் உபத்தரவம் பொறுக்க மாட்டாமல் மேல்நாட்டில் எழுந்தருளி இருந்த காலத்தில் பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனான ஹொய்சள மன்னரின் உதவியோடு 1-தலக்காடு கீர்த்தி நாராயணன்-2-தொண்டனூர் நம்பி நாராயணன்-3-மேலகோட்டை திரு நாராயணன்-4-பேலூர் கேசவ நாராயணன்–5-கடக வீர நாராயணன் என்பதான பஞ்ச நாராயண க்ஷேத்ரங்களை பிரதிஷ்டாபித்தார் என்பது வரலாறு.–கோயில் அண்ணரான இராமானுஜர் எவ்வழி அவ்வழியில் தங்கையான ஆண்டாளும் இந்த பாசுரத்தில் 1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் நாராயணன்-2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் நாராயணன்–3-கார்மேனி நாராயணன்–4-செங்கண் நாராயணன்–5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன்–ஆகிய பஞ்ச நாராயணர்களை பிரதிஷ்டாபனம் பண்ணுகிறாள்-

1-கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் நாராயணன்– திருமந்திரார்த்த பிரதனான ஆச்சாரியனைச் சொல்லும். எப்படி என்றால்-தனக்கு விதேயனாக இருக்கிற கண்ணனெம்பெருமானை ரக்ஷிக்க வேண்டி , கூரிய வேலை பிடித்தவன் நந்தகோபன். ஆசாரியனும், பகவத் ரக்ஷண தத்பரர் ஆகையால், பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையர். இவருடைய மங்களாஸாசன தத்பரத்தையே இவர் கைவேல்.
திருமந்திரம் இவருக்கு விதேயமாய் சிஷ்யனுடைய ஆத்ம ரக்ஷணத்தில் காரியம் செய்கையாலும், நந்தித்தவமும் கோப்திருத்வமும் இவருக்கும் உண்டு ஆகையால் நந்தகோபன் குமரன் நாராயணன் என்றபடி.

2-ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணன் –-என்பது கண்ணியாக உள்ள துவய மந்திர பிரதிபாத்யன் நாராயணன் என்றபடி.-கண்ணனுடைய பிரதாபங்கள் எல்லாம் யசோதை இடத்திலாய், அவள் கண் வட்டத்துள் நின்று அகலாது முந்தாணையில் முடியாலாம்பட்டி இருக்கிற தன்மை கொண்டு – ஆசாரியன் கைபுகுந்தவாறே திருமந்திரம் கை புகுரும் என்ற கணக்கிலே மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவான நாராயணனைச் சொல்லுகிறது இத்தால்.

3-கார் மேனி நாராயணன் –-என்றது மேகத்தைப்போல் இன்னார் இனையார் என்று பார்க்காது , அவர்கள் இருக்கிற இடம் சென்று வர்ஷிக்கிற வர்ஷாகால மேகத்தைப் போலேயான ஒளதார்யமும், சௌலப்யமும் சொல்லிற்று. நீர் அந்த்ரேண சம்ஸ்லேய : என்று மழைநீர் அது விழுகிற இடத்தின் தன்மையை – செம்மண் பூமியானால் செந்நிறமும், பால்நிற பூமியானால் பால் நிறமும் பெறுவதுபோல – ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது உம்பி எம்பி என்று தோழமை கொண்டதும், மாடு கன்றுகளோடும், இடையர்களோடும் பொறையற கலக்கின்ற சௌசீல்ய குணத்தையும் சொல்லிற்று எனலாம்.

4-செங்கண் நாராயணன் – என்றது செவ்வரியோடிய நீண்டவப் பெரிய வாய கண்கள் என்று ஸ்வாமிதவ, ஸ்ரீமத்வ ஸூசகங்கள்.-மைய கண்ணாள் என்று பிராட்டியையும், செய்யக் கோல தடங்கண்ணன் என்று ஸ்ரீயப் பதித்தவமும், ஸ்ரீமத்வமும் இறே இவனுக்கு நிரூபணங்கள். இந்த ஸ்வாமித்வ, சௌலப்ய, சௌசீல்யாதிகள் அல்லவோ ஆஸ்ரித ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்-

5-கதிர் மதியம் போல் முகத்த நாராயணன் –-என்றது தண்ணளியும், பிரகாசமும் ஒருங்கேயான ஸ்வாமிதவ, சக்தி சாமர்த்தியாதி களுக்கு உப லக்ஷணம்.
இவை ஆஸ்ரித காரிய ஆபாதக குணங்களாய் நாராயண ஸப்தார்த்த குண போக்யதைகளையும் சொல்லிற்று.

அப்படிப்பட்ட நாராயணனே-மந்திரத்திலும், மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும், மந்திர பிரதனான ஆசாரியன் பக்கலிலும் பிரேமம் கனக்க உண்டான நமக்கே ஸ்வரூபனுரூபமான கைங்கர்யமாகிற பறை தருவான் என்கிறது இப் பாசுரத்தில்.

———–

வாழ்வீர்காள் –
(இந் நிலத்திலே )-இந்தளத்திலே -தாமரை போலே –-கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே–அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை காண் –அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இறே –வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இறே-இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க–வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் – தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்-தோற்றாமையாலே அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-வாழ்வீர்காள் –என்ற பன்மைக்குக் கருத்து – அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இறே பெற்றது –(நவ திருப்பதிக்கும் ஒரே நம்மாழ்வார் போல் )
விபீஷணஸ் து தர்மாத்மா -என்று வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே-வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தமப்பனார்-இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி–இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது–அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான்-

நீராடி மூன்று அர்த்தம்–போகார்தம்–சாதனமாக–விரஹ தாபம் தீர–அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத் சமமாக ஆக்கக் கடவோம்- மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக-இருக்கைக்காக மேற்பட-புருஷனுக்கு அவத்யம் இல்லை இறே-அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்-ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத-நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்

நாட்காலே நீராடி-ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணிஇத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது–மையிட்டு எழுதோம் –மை கண்ணுக்கு பிரகாசம் ஆகையால் ஆத்ம யாதாம்ய பிரகாசகமான ஞான யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -பக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ –அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ –பூச்சூடுகை போக ரூபமாகையாலே –மலரிட்டு நாம் முடியோம் என்று பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -என்கிறது –நாம் முடியோம் – நாமாய் பகவத் பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து – இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே-நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் – அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

உய்யுமாறு எண்ணி உகந்துஉத்தர வாக்கியம் -இது முன்னாக வைத்து-செய்யும் கிரிசைகள்பூர்வ வாக்கியம் -இது அன்றோ இவர்கள் நிஷ்டை-எம்பெருமானார் –உபேயத்திலே எப்பொழுதும் கண் வைத்து உபாயத்தில் ஸக்ருத் தானே – கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம் அன்றோ

வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்-இவ்விஷயத்தில் இழிவார்களுடைய விரக்தியையும் சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது-

————-

ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அநு பாவ்யனாய்- சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள –சர்வேஸ்வரன் – நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –அநந்தரம் – பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து பற்ப நாபன் -என்று சுழித்து – தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே – ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று-திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும் -நோய் பஞ்சம் திருடர் -மூன்றுமே இருக்காதே
ஓம் அர்த்தம் புரிந்தால் திருட்டு போகும் -அநந்யார்ஹ சேஷ பூதன் அறிந்தால் பிறர் நன் பொருளை அபகரிக்க மாட்டோம்-நமஸ் அர்த்தம் புரிந்தால் பஞ்சம் தொலையும் -அநந்ய சரண்யத்வம்-நாராயாணாயா அர்த்தம் புரிந்தால் வியாதி தொலையும் -அநந்ய போக்யத்வம்
மூன்று பத அர்த்தங்களை ஸூ சகம் -மூன்று அடிகள் -திரிவிக்ரமன் –

ஓங்கி –ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே- மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்- உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே

உத்தமன் பேர் என்கிறது திருமந்த்ரத்தை –-முதல் பாட்டில் நாராயணன் என்கையாலும் –சப்தம் சொல்லி–இரண்டாம் பாட்டில் பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்–இதில் மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யா பிஜ்ஞ்ஞாகரமான-த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும் திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்- அவனுக்கும் திரு நாமத்துக்கும்-கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் -கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும்-ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும்-பக்தி யோகிக்கு பக்தி சித்திக்கைக்கும் விரோதி போகைக்கும்
பிரபன்னனுக்குச் சோறும் தண்ணீரும் போலே யாகைக்கும் திரு நாமம் போலே இல்லை-அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி-இதுவே நமக்கு நீங்காத செல்பம் நிறைந்து இருக்குமே-நமக்கே முதலில் –நாமும் அடுத்த பாசுரத்தில் இங்கு நாங்கள் நம் பாவைக்கு -பாசுரம் தோறும் அதிகாரி ஸ்வரூபம்

இத்தால் அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது

திங்கள் மும்மாரி பெய்து- சத்வோத்தரமான காலத்திலே–அனன்யார்ஹ சேஷத்வ-
அநந்ய சரணத்வ அநந்ய போக்யத்வங்கள் ஆகிற-ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்-
அத்தாலே அபிவிருதங்களாய்-(ஓங்கு பெரும் செந்நெல்)ஓர் ஊருக்கு ஒருவரே போரும்படியான சேதனர் உடைய நடுவிலே தத் சம்பந்திகளாய்த் ததேக தாரகரான (செந்நெலூடு கயலுகள)ஆத்ம வர்க்கங்கள்-களிப்பிலே துள்ளா நிற்க-ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்-இடங்களிலே-பரம ஏகாந்திகளான -ஓங்கு பெரும் செந்நெல்லையே பற்றி இருக்கும் ஞானிகள் பூங்குவளை – ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்- பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்-
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-ஸூகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர –பொறி வண்டு கண் படுப்ப-ஸர்வஞ்ஞன் அடியார் ஹ்ருதயத்தில் பெறாப் பேறு பெற்றானாய் இருப்பதால் ஞான லப்தனாய் என்கிறார்–பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண ஜ்ஞானிகள் (இதம் பூர்ணம் -அவனைப்போல் )ஆக்குமவர்களாய் சிஷ்ய விதேயராய்-நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய- அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து –ந கச்சின் ந பராத்யதி -என்னும்
அவள் அடியாக வந்த சம்பத் ஆகையால் ஊற்று மாறாத சம்பத்து இறே 

பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே–ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –

நாராயணனே நமக்கே பறை – தண்டுழாய் நமகன்றி நல்கான் – தனி நோக்கு – (விஷம) வியஷ்டி ஸ்ருஷ்டி-நாமும்-நாங்கள்-நாங்களும் மார்கழி நீராட – பொது நோக்கு – ஸமஷ்டி ஸ்ருஷ்டி.

———

ஆழி மழைக் கண்ணா —ஆழி–அபரிச்சேத்யமான ஜ்ஞான வைபவத்தை உடையையாய்-மழைக் கண்ணா – பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகனானவனே-என்னுதல்
பூமிப் பரப்பில் உள்ள சேதனர் அடைய பகவத் காருண்யத்துக்கு விஷயமாம்படி பண்ண வல்லவனே -என்னுதல்
பகவத் குணாம்ருத வர்ஷிகளான ஆசார்யர்களுக்கும் ஆசார்ய பதம் நிர்வஹிக்குமவன் -என்னுதல்(ஜகத் ஏக உத்தாரக ஆச்சார்யரான ராமாநுஜரைச் சொன்னவாறு )-நீ ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக அனைவரையும் பகவத் காருண்யத்துக்கு விஷயம் ஆக்கவல்ல நீ-
வர்ஷியா விட்டால் உடம்பு வெளுக்கும் நீ-கை கரவேல் –-பகவத் குண வர்ஷத்திலே சோராதே கொள்ளாய்-ஆழி –பகவத் குணாம்ருத சாகரத்திலே-உள் புக்கு
உள்ளே அவஹாகித்து-முகந்து கொடு – யாவத் குணங்களையும் புத்தி ஸ்தமாம் படி அகஞ்சுரிப்படுததிக் கொண்டு –-அதாவது-எப்பேர்பட்ட அபாரதிகள் ஆகிலும் தாம் அபிமானத்த வர்களில்-காருண்யத்தைப் பண்ணும்படி எம்பெருமான் விதேயமாம்படி-பண்ணிக் கொள்ளுகை

பாழியம் தோளுடைப் பற்பநாபன் கையில் ஆழி போல் மின்னி –ஸூ தர்சனம் -மனஸ்ஸுக்கு அதிஷ்டான -வேகமாக சுற்றும் அன்றோ -யோகத்தால் உடையவரைத் தியானித்து
எதிராசர் வடிவு அழகு எனது இதயத்தில் இருப்பதால் இல்லை எனக்கு எதிர் என்று இருப்பார்கள் அன்றோ-அவன் கையில் வர்த்திக்கும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போல் இடைவிடாமல் த்வநித்து-அதாவது-பிரணவ அர்த்தத்தை அனைவரும் அறியும்படி திருவாய்மொழி முகத்தாலே வெளி இட்டு அருளிச் செய்கை –தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் –அவிச்சின்னமாக சார்ங்கம் வர்ஷித்த பாண வர்ஷம் போலே-
பிரணவத்தில் சேஷ சேஷி பாவ சம்பந்த பிரயுக்தமான- பகவத் காருண்ய வர்ஷத்தை-மகிழ்ந்து-மகிழக் கடவோம்-அதாவது- பகவத் அனுபவ சஹகாரிகள் இத்தனை பேர் உண்டாவதே என்று அவர்களோடு கலந்து-பகவத் அனுபவத்தைப் பண்ணி ஆனந்திக்கை

நாங்களும் கிருஷ்ணனும் சேரக் குளிக்கை உனக்கு கிடைப்பது ஒன்றோ –
நாங்கள் உன் வடிவைக் கண்டு த்வனியைக் கேட்டு எங்களுடைய தாபத்தை ஆற்றி
ப்ரீதிகளாய்க் கொண்டு மார்கழி நீராடுகிறோம் –சோஸ்னுதே சர்வான் காமம் ஸஹ ப்ரஹ்மணா -கூடியே அனுபவம் –-இவர்களை யுகப்பிக்கை இறே இவனுக்கு ஸ்வரூபம்-ப்ரகர்ஷ இஷ்யாமி யிலே இறே அந்வயம்-என்னுயிர்க்கு அது காலன்-என்ன வேண்டாவே கிருஷ்ணன் கூட நீராடுகையாலே –

அநந்ய பிரயோஜனனாய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவனுக்கு-இந்த்ராதி தேவதைகள் நியாம்யராவார்கள் -என்று இவ் வதிகாரிகளுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –

———-

வந்த நாம்- அவன் வர இருக்கக் கடவ நாம் வந்து–முறை கெட வருவான் என் என்னில்-
உபாயத்தில் துணிவு புறப்பட ஒட்டாதது போலே- உபேயத்தில் த்வரை முறை பார்த்து இருக்க ஒட்டாது இறே-அவன் திரு உள்ளத்தைப் புண் படுத்தக் கடவோம்–
தூ மலர்-யோக்யமோ அயோக்யமோ என்று தேடப் படாத மலர்களை(மடி தடவாத சோறு –சுண்ணாம்பு கலவாத சந்தனம் –சுருள் நாறாத பூ -தூய்மை )-ஆயர் குலம் என்றது- அநந்ய சாதனரான பாகவத குலம் -என்றபடி-

தாமோதரனை-நம்முடைய பந்தம் நம்மால் அறுக்க ஒண்ணாதாப் போலே – அவனுடைய பந்தமும் அவனாலே அறுக்கப் போகாது சேஷியினுடைய திரு இலச்சினை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

இப்படி பகவத் பஜன அனுபவம் பண்ணுமவனுக்கு-உத்தர பூர்வாகயோ ரஸ்லேஷ விநாசவ்-என்கிறபடியே பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்று சொல்லுகிறது –

———-

மார்கழி -1-முதல் -மாயனை -5-என்னும் அளவும்-நாராயணனே -1-என்று தொடங்கி-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -2-என்றும்-ஓங்கி உலகளந்த உத்தமன் -3-என்றும்
சார்ங்கம் உதைத்த சர மழை 4-என்றும்-மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -5-என்றும்
அடி பாட்டு சொல்கிறது

————

பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும்

அரி என்ற பேர் அரவம்-ஹரி ஹரி என்கை யாவது –-ரக்ஷது த்வாம் அசேஷாணாம்–( ஸ்ரீ விஷ்ணு புராணம் ) என்னும்படியே உன்னை நீயே காத்துத் தர வேணும் என்று திருப் பல்லாண்டு பாடுகை

பேய் இத்யாதி –பேய் உண்டு -பிரகிருதி-முலை உண்டு -அஹங்கார மமகாரங்கள்
நஞ்சு -அவைகள் ஆகிற விஷம்-உண்டு -அனுபவித்து –அதாவது-பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் சேதனருக்கு வரும் அஹங்கார மமகாரங்களைப் போக்கி -என்றபடி -(நீர் நுமது என்ற இவை வேர் முதல் மாய்த்து)

கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி-காம குரோதங்களையும் நிவர்ப்பித்து-சகடம் ஏக வசனம் –காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ குண ஸமுத்பவ  –இரண்டும் ஒன்றே -காமத்தால் க்ரோதம் வரும்

புள் -6-பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய ப்ரயோஜனராய்
இவ்விஷயத்தில் தேசிகர் இன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல் பரிவாலே தேசிகராக்குகை ஸ்வபாவம் என்னுமத்தைச் சொல்லுகிறது –பரிசுத்தரராய் வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம –என்னும் படி சொல்லுகிறது –

——————

காசும் பிறப்பும் கல கலப்ப கை பேர்த்து –
திருமந்த்ரமும்-த்வய சரம ஸ்லோகங்களும்-ஒன்றோடு ஓன்று சேர்ந்து த்வனிக்க
ஸ்வரூப(திருமந்த்ரம்)-உபாய(சரம ஸ்லோகம்)-புருஷார்த்த(த்வய) ஞானம் தலையெடுத்து –வாச நறும் குழல் இத்யாதி –
மிக்க பரிமளத்தை உடைய-பகவத் விஷய வ்யாமோகத்தை உடைய அனன்யார்ஹ சேஷபூதரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் சங்கல்ப்பத்தால் சிஷிதரான (மத்தினால் ஓசைப் படுத்த)சம்சாரி சேதனர் உடைய- திவ்ய பிரபந்த அனுசந்தான த்வனியை கேட்டிலையோ –

தேசமுடையாய் திற –பகவத் குண அனுபவத்தால் உண்டான மகா தேஜசை உடையவளே
இத் தேஜஸ் காட்டில் எறிந்த நிலா வாகாமே-நாங்கள் அனுபவிக்கலாம்படி
எங்கள் அஞ்ஞானத்தை நீக்காய்

கீசு -7-பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

பகவத் விஷயமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவால் –
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடியே அறிவிக்கையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———–

உங்களில் யாரேனும் அத் திக்கைப் பார்க்கையாலே-உங்கள் முகத்தில் ஒளி பிரதிபலிக்கையாலே கிழக்கு வெளுத்ததாய் இருக்கிறது- இவர்கள் தான் திங்கள் திரு முகத்து சேயிழையார் இறே- அது அந்யதா ஜ்ஞானம்-எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் -உங்கள் முகத்தில் ஒளியைக் கண்டு இருள் திரிந்து போகிறது இத்தனை--உங்களுடைய முக ஜ்யோதிஸ் யோஜனையாலே சிதறிப் போகிற இருள் அத்தனை இவை –
அல்லது எருமைகள் அன்று – இது உங்களுடைய விபரீத ஞானம் இருக்கிற படி -மரங்களும் இரங்கும் வகை –என்று-அசேதனத்துக்கும் சைதன்யம் உண்டாம் படி-சத்வோத்தரமான காலம் ஆயிற்று –

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய –தன்னை நாம் கிட்டு அனுபவிக்கைக்கு ஈடாக-
இடையிலே வன்னியம் அறுத்த ஆண் பிள்ளையைப் பாடக் கடவோம்-மாவாய் பிளந்தானை-
அஹங்கார நிராசகனைமல்லரை மாட்டிய-காம க்ரோத நிவர்தகனை

சங்கீர்த்தனத்துக்கு அடுத்த சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூஹலிக்கப்படும் விஷயரானவர்களை சகல விரோதி நிவாகரனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதராக்கும் படியைச் சொல்லுகிறது-கிருஷ்ணனால் கொண்டாடப் படும் ஏற்றமுடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்-பகவத் அனுபவத்தில் பிரத்யா சன்னராய் இருப்பார் இடத்தில் சாபேஷாராய் இருக்கையும் –அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது

பகவத் அனுபவத்தில் ப்ரத்யா சன்னராய் இருப்பார் திறத்தில் சாபேஷாராய் இருக்கையும்
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனைக் கிட்டுகையும்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———-

தூ மணி மாடத்து –துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத- நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் – சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும்  அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை —கீழில் பாட்டில் முக்தர் படி போலே இருப்பாள் ஒருத்தியை எழுப்பிற்று –
இப் பாட்டில் நித்ய முக்தர் படியே இருப்பார் ஒருத்தியை எழுப்புகிறது –-ஆழ்வான் -ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்-மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே-(அம்மான்)ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய் அனந்யார்ஹரான பாகவதரே-

சுற்றும் விளக்கெரியத்-இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது –

மணி மாடத்தினுடைய மணிக் கதைவையும் மணித் தாள் திறவாய் – அதாவது த்வத் அனுபவ விரோதியான தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப் தவிர்ப்பாய் -என்றபடி –அன்றிக்கே த்வத் அனுபவ விரோதியான பகவத் சௌந்தர்யத்திலும்
பகவத் பக்தியிலும் மம காரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —அநக -ராம பக்தியிலும் கால் தாழாமல் -உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்து என்று அவனையே கால்பிடித்து வேண்டிக்கொள்ளவேண்டுமே-இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற அநந்ய உபாயத்வ ஸ்வரூப ஞானம் ஆகிற -திருத் தாயார் – அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —ஸ்வாமிநீ யான நீர் உமது ஸ்வம்மான அவளை எழுப்பீரோ –ஞானமான நீ நம்பிக்கையை உணர்த்த வேண்டாமோ தன்னிடத்தில் அநந்ய உபாயத்வ ஞானம் பிறந்த பின்பு தானே அவனே உபாயம் என்ற திட அத்ய வசாயம் பிறக்கும்-ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ- காவல் இடப் பட்டாளோ –நமஸ் தடுத்தோ -உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில் அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ-உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ –

தத் தஸ்ய சத்ருசம் பவத் -என்று பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் ப்ரேம அதிசயத்தாலே தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை-
அவர்களுக்கு ஸ்வரூபம் -என்கிறது –

——-

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.-கீழே அனந்தல் உடையவள் -இங்கு ஆற்ற அனந்தல் உடையவள்-வாழும் சோம்பராக இருக்க வேண்டுமே-இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை-தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்-சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது- ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –

ஞானீ த்வாத்மைவ மே மதம்-அஹம் ச ச மம ப்ரிய -என்று அவன் பக்ஷபாதத்தில் இருப்பார் திறத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————–

கற்றுக் கறவைக் –ஸ சந்தானரான சிஷ்யர்-சிஷ்யர் ஸமூஹமாய் சேர்ந்தே இருக்கும் ஆச்சார்யர் -சிஷ்யராக இருந்தே ஆச்சார்யர் போல் -சிறு மா மானிடராய் என்னை ஆண்டார்-கறந்து – அவர்களுடிய அபிநிவேச அனுகுணமாக-ஜ்ஞானப் பிரதானம் பண்ணி-புற்றரவல்குல் –ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது-புன மயிலே –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே- வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக- ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான பிரேம ரூப ஞானம் ஆகையாலே- புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –

பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த சந்தான ப்ரஸூதர் நமக்கு பூஜ்யர் என்றும்
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது 

——-

கனைத்து –ஸ்வாசார்யன் தனக்கும்-ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –(ஸ்வ ஆச்சார்யன் நித்ய வாசம் பண்ணும் இடத்தில் இல்லாமலும் -அவர் திரு நாட்டை அலங்கரிக்கப் பெறலாமே -இந்த வியஸனம்)

பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –முலை வழியே நின்று பால் சோர–பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக பகவத் குணங்கள் சுரக்க –
பகவத் விஷயம் கேளாதே இருக்க தன் செல்லாமையாலே சொல்லுவாரைப் போலே – அர்ஜுனன் கேளாதே இருக்க –
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணுமே பரமம் வச-என்றவன் தன்னைப் போல
த்வயார்த்த உபதேசம் உனது ஸ்வரூப லாபத்துக்கும் தனது ஸ்வரூப லாபத்துக்கும் பிரதியுபகாரம் -உபய விபூதி கொடுத்தாலும் ஸத்ருசம் அல்லவே-பனித் தலை வீழ – பனியானது தலை மேல் சொரிய-
அதாவது- மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம்

நின் வாசற் கடை பற்றிச்- கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்- பகவத் குணானுபவ (ஞான பாவம் )பிரவாஹம் என்ன – மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ (ப்ரேம பாவம் )பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ (போதயந்த பரஸ்பரம் )பிரவாஹம் என்ன –இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம் உனக்கு பிரதிபாதகமான நமஸிலே த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற நகாரத்தைப் பற்றி என்றபடி –(அல்லேன் எனக்கு -முன் நகாரம் இருக்க வேண்டுமே -கண்டேன் ஸீதையை போல்)

பேருறக்கம்-காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –இரண்டிலும் வியாவிருத்தமாய்-
இது ஒரு பத்தொன்பதாம் பாஷையாய் இருந்ததீ- சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் – ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம் ஆகையாலே பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும்

ஆண்டாளுக்கும்-ஆழ்வாருக்கும்-தசாரதாதிகளுக்கும் – குகாதிகளுக்கும் சத்ருக்களுக்கும் மனத்துக்கு இனியான் 

பகவத் விஷயம் ஸஹ்யமாம் படி அவகாஹித்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே தத் சம்பந்த சம்பந்திகள் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————

புள்ளின் வாய் கீண்டானை – ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸ்வ அனுபவ விரோதியான காமாதி தோஷ நிவர்தகனாய்-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான அஹங்காரத்தை-அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன – அஹம் மம -என்றால் ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹங்காரத்துக்கு நன்மை யாவது – தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை -அஹங்காரத்துக்கு–தீமையாவது –பாவைக் களம் புக்கார்- அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் – அதாவது காலஷேப கூடம்-வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று–பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய் அஞ்ஞானம் தலை மடிந்தது –புள்ளும் சிலம்பின காண் – மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –போதரிக் கண்ணினாய்– ஸ்வச்சமாய்
ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –

புள்ளு–13-பகவத் அனுபவ ரூபமான ஞான பக்திகளால் பூர்ணராய் இருப்பார் இடத்திலும்
தாதர்த்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சாபேஷாராய் இருக்கை ஸ்வரூபம் -என்கிறது –

———-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்-செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்- ஆகார த்ரய விசிஷ்டரான உங்களுடைய விஹார ஸ்தானமான திருமந்த்ரத்தின் உடைய மத்யே வர்த்திக்கிற நமஸிலே பாரதந்த்ர்யம் பிரகாசமாய் ஸ்வ தந்த்ர்யம் தலை மடிந்தது காண் –செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்–ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய
மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள்(தவத்தவர்) தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் – எங்களை எல்லாம் நாங்கள் அபேஷிப்பதற்கு முன்னம் ஞானிகள் ஆக்கும்படி ஸ்ரீ ஸூக்திகளை அருளிச் செய்யும் பூர்த்தியை உடையவரே -எழுந்திராய் –

பகவத் விஷயத்தில் மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் -என்கிறது –

———————-

இல்லாத குற்றத்தை ஏறிட்டு சொன்னாலும் இல்லை செய்யாதே இசைந்து கொள்வதே தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் -ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது- ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம் அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் -என்கிறது –

————

வேதம் வல்லார்கள் -என்ற இடத்தில் குரு பரம்பரையை நினைத்து கீழ்ப் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –விண்ணோர் பெருமானில்- விண்ணோர் ஆகிறவர்கள்-த்வார பாலகர் தொடக்கமாக திவ்ய மஹிஷிகள் ஈறாக உள்ளவர்கள் இறே

சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே-நந்த கோபனுடைய–பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்–சம்ஸ்ரத ரஷகனான ஆச்சார்யன் உடைய-நந்தி –ஆனந்தம்-கோபன் -சிஷ்யர்களை ரக்ஷிக்குமவன்-கோயில் காப்பானே – கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்-அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள-
அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-மணிக் கதவம் தாள் திறவாய்- ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்-
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-

நந்த கோபனுடைய கோயில்-கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய்-நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது

அறம் செய்யும் –பால அபிசந்தி ரஹிதமாக-ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –இத்தால்-நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ –எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் -ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்0–(அம்பரமே-போக்யம் )
தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்–(தண்ணீரே-தாரகம்) தத் தேதுவான கைங்கர்யத்தையும் (சோறே- போஷகம்) ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி-தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள (அறம் செய்யும்) நமக்கு வகுத்த சேஷியாய் (எம்பெருமான்)-ஆனந்த நிர்ப்பரனாய் (நந்த) ஆஸ்ரித ரஷகனான (கோபாலா) ஆசார்யனே -நீ உணர வேணும் -(எழுந்திராய்-)பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் (கொழுந்தே) பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் (குலவிளக்கே) எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் (எம்பெருமாட்டி) தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி சகல அதிசய பிரதமான திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை-செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்- சிவந்து ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்  பட்ட வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர் கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்

குல விளக்கே-எங்களுக்கும் உன்னுடைய குலத்துக்கும் மங்கள தீபையாய்க் கொண்டு ப்ரகாசகை ஆனவளே–விளக்கு அந்நிய நிரபேஷமாக பதார்த்த தர்சனத்துக்கும் தன்னுடைய தர்சனத்துக்கும் ஹேது வாமா போலே –கொழுந்தே குல விளக்கே-ஆயர் கொழுந்தையும்
ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் – நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –உம்பியும் நீயும் உறங்கேல்-படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி படுக்கைக்கு உறக்கம் உண்டோ-அவன் படுக்கையான நீ உணர்ந்து எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )

மந்திரத்திலும் -மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிடமும் மந்த்ர பிரதானனான ஆச்சார்யர் பக்கல்லிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமே

நாயகனில் -16–அம்பரமே –17 – இவை இரண்டாலும் பகவத் விஷயத்தை கிட்டுவார்
தத் ப்ரத்யா சன்னரைப் புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் -என்கிறது –

————

கீழே நாயகனாய் நேச நிலைக் கதவம் நீக்கு -ஆச்சார்யர் -அஞ்ஞானம் அஹந்காராதிகளைப் போக்கி மிதுனம் காட்டிக் கொடுப்பவர் இங்கு பிராட்டியை –வந்து திறவாய் மகிழ்ந்து என்று பிரார்த்தனை -பெருமாள் உடைய அஞ்ஞானம் போக்க-இருவருக்கும் உபதேசித்துப் பார்த்து -திருந்தாமல் இருந்தாலும் மீளாமல் நம்மை அருளால் திருத்தி அவனை அழகால் திருத்துபவள்-ஆஸ்ரிதர் தோஷ தரிசனத்தில் அஞ்ஞானம் கிட்டும் படி அருளுபவள்

கந்தம் கமழும் குழலி -வாஸனை-கோழி அழைத்தன -குயில் இனங்கள் கூவின-சீரார் வளை ஒலிப்ப-ஸப்த ஸமூஹங்கள்-பந்தார் விரலி-ஸ்பர்சம்-உன் மைத்துனன் பேர் பாட-ரஸம்
செந்தாமரைக் கை-ரூபம்-ஐவகை மதத்தில் ஈடுபட லௌகிக விஷயாந்தரங்களுக்குப் போக மாட்டோம்-மகிழ்ந்து  இப்படி சர்வ இந்திரியங்களுக்கும் விடாய் தீர்ந்தால் மாநஸமான உகப்பு உன்னதாக வேணும் –வந்து எங்கும் கோழி அழைத்தன காண் – சத்வோத்தரமான காலம் ஆனவாறே சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்- வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்-பரம பாகவத சமூஹங்கள்-சத்வம் தலை எடுத்த பின்பும் உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப் பல காலும் கூவா நின்றன காண் –செந் தாமரைக் கையால் –சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே-தாமரை போன்ற திருக் கையாலே – இவ்விடத்தில் –கையாவது -ஜ்ஞானம்-ஜ்ஞானக் கை என்றார் இறே ஆழ்வார் –ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன-இதர விஷய நிவ்ருத்தி -சௌந்தர்யம் ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி -சௌகுமார்யம்-நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-சௌகந்த்யம்-சீரார் வளை ஒலிப்ப–நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்- பகவத் சம்பந்த ஸூசகங்களான-ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

ஒரு கையாலே விபூதி – விபூதிமான் ஒரு கையிலே —நாரம் ஒரு கையிலே அயனம் ஒரு கையிலே – சேஷி ஒரு கையிலே- சேஷம் ஒரு கையிலே –-போக்யம் ஒரு கையிலே – போக ஸ்தானம் ஒரு கையிலே

——

கோட்டுக் கால் கட்டில் மேல்- சதுர தந்தியான குவலயா பீடத்தின் உடைய தந்தங்களாலே-செய்யப் பட்ட கால்களை உடைய கட்டில் மேல் இத்தால் – சதுர்வித கர்த்ருத்வ மூலமான
அஹங்கார கார்யமான சேஷத்வே கர்த்ருத்வம்-பர கத அதிசய ஆதேன இச்சையா- ஜ்ஞாத்ருத்வே கர்த்ருத்வம் கர்த்ருத்வே கர்த்ருத்வம் போக்த்ருத்வே கர்த்ருத்வம்-ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்த்தல் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே ஆகிற கால்களை உடைத்தாய்-அந்த கர்த்ருத்வ விஷயமான தர்ம அர்த்த காம மோஷங்கள் ஆகிற பட்டங்களை உடைத்தாய் தத் அனுஷ்டான அபிநிவேசம் ஆகிற கச்சையை உடைத்தாய் இருக்கிற கட்டில் மேல் என்கிறது –மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்– சேஷத்வாதி கர்த்ருத்வ ராஹித்யத்தாலே-மிருதுவான அர்த்த பஞ்சகம் ஆகிற படுக்கையின் மேலேறி –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா – வர்க்கம் வர்க்கம் ஆகிற விகசித ஜ்ஞானரான ஆத்மாக்கள் ஆகிற புஷ்பங்களை உடைய பகவத் விஷய ஸ்வ வியாமோகம் ஆகிற-அளகபாரத்தை -(குழல் )உடைய நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

(உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-

சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே – பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை – அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –

தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விஸ்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —

ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை 
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –அசித் கல்பனாய் -முதல் (ஆத்ம சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூபத்தை)அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து அங்கீகரிப்பதே -என்று கிருதஞ்ஞனாய் போருகை –

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ நம்மை அவன் அங்கீ கரித்தான்  என்று தன் பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும் விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –

போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் -)

செப்பன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்– விஷய க்ராஹகமாய் விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் பகவத் விஷய பக்தியையும் (செப்பன்ன மென் முலை)அவனுக்கு மிகவும் போக்கியமான பரம பக்தியையும் –(செவ்வாய்)விஷயாந்தர வைராக்யத்தையும் (சிறு மருங்குல்) உடையையாய்- நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்-பிராப்யத்வ புருஷகாரத்வோப யுக்த கல்யாண குண பூர்ணையான பெரிய பிராட்டியாரே நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-உக்கம் -ஆலவட்டம் தட்டொளி -கண்ணாடி-ஸ்வா பதேசத்தில் கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும் யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும் இவ் விரண்டையும் கொடுத்து – உனக்கு பவ்யனான ஈஸ்வரனை இந்த ஷணத்திலே பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை ஸம்ஸ்லேஷிப்பி -என்கிறார்கள் –

அதிகாரி சித்திக்கும் -தடங்கல் போக்கி அருள -உந்து-உபாய ஸித்திக்கு குத்து விளக்கு
ப்ராப்ய ஸித்திக்கு முப்பத்து மூவர்-உக்கம் -அஹங்கார மமகாரங்கள் இல்லாத கைங்கர்யம்
பிராட்டி கைங்கர்ய வர்த்தகையாய் இருக்குமே –பகவத் விஷயீகாரம் பிராட்டி சாபேஷமாய் இருக்கிறது-பிராட்டியை புருஷகாரமாக வரித்தால்-அவனும் அவளும் இசலி இசலிப் பரியும் பரிவையும் சொல்லுகிறது –அடிமை செய்யும் இடத்திலும் இருவர்க்கும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறையாகிறது –உந்து மத களிற்றின் தனித்து புருஷகாரமாகப் பற்றி குத்து விளக்கில் மிதுனத்தில் -இவளை முன்னிட்டு அவனை உபாயமாகப் பற்றி முப்பத்து மூவரில் மீண்டும் மிதுனத்தில் அவனை நீராட்டப் பிரார்த்திக்கிறார்கள்

—————

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே – என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே எல்லாரும் காணலாம்படி- அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து –
சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே-சுடரே-ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்–இன்னார் தூதன் என நின்றான் -ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -மனுஷ்யத்தவே பரத்வம்–ஏற்ற கலங்கள் –உபதேச பாத்திர பூதரான சிஷ்யர்கள் –துயில் எழாய்- நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் -ரஷணம் பிரசக்தமாய் இருக்க ரஷண சிந்தை பண்ணக் கடவதோ – என்று தாத்பர்யம் –அர்த்தித்தவமும்  ஸ்வரூபத்தில் புகும் அத்தனை –உபாயத்தில் புகாது-லுப்த சதுர்த்தி அர்த்தம் -அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே-போற்றி –புகழ்ந்து –வந்தோம்-பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் – அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம் நீ பெறிலும் பெறு-இழக்கிலும் இழ –

ஏற்ற கலம் -ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –ஏத்த வேழுலகும் கொண்ட -என்கிறபடியே ஆஸ்ரிதரானவர்கள் நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறது –

—–

இஜ் ஜென்மத்துக்கு மூலம்-சார்ந்த இரு வல் வினை–இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–அங்கண் -கீழில் பாட்டில் தங்கள் அபிமான ஸூந்யதையைச் சொல்லிற்றாய் –இப்பாட்டில் –அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது-அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்குத் தங்களுடைய அநந்யார்ஹ சேஷத்வம் அநுசந்தேயம் -என்கிறது –கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே– இழவு பேறுகள்-அத்தலையிலேயாய் இருக்கிற படி-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணி-பெண்கள் ஆற்றாமை அலரப் பண்ணுகிற படி-ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –-இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது -ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது -ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று–-சிறுச் சிறிதே-ஒரு நீர்ச் சாவியிலே வெள்ளமாகாமை பொறுக்கப் பொறுக்க பிரதம பரிஷ்பந்தமே பிடித்துக் காண வேணும் என்கை-திங்களும் ஆதித்யனும்-1-விரஹ தாபம் போக்குகைக்கும்-2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

எங்கள் மேல் சாபம்-பிறருடைய சாபம் உன் கடாக்ஷத்தாலே தீரும் – எங்களுடைய சாபம் நீ போக்குதல் அனுபவித்து விடுதல் செய்யும் அத்தனை -விஸ்லேஷ வியசனம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்கிறது –1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் – 2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம் 3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் – 4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்-எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )-2-எங்கள் மேல் நோக்க வேணும்-3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)-4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வாந் வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)

————-

மாரி-பிரிந்தார் கூடும் காலம் – கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் – புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்-பெண்களோடு மேகம் அறையிடும் காலம் – பிரிந்தார் கொடுமை குழறும் காலம் – கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -(திருவிருத்தம் ) பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம் (நாச்சியார் -8- )-மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது – இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான்-சீரிய சிங்கம்-நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-3)-சீரிய சிங்கம்-சிற்றாயர் சிங்கம் -யாதவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -ராகவ சிம்மம் -ராஜ ஸிம்ஹம்-நீ பூவைப் பூ வண்ணா -உன்னை நீ அறிய வேண்டாவோ – எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ-சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும் ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ

————

அன்று –தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று–தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று – ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று– எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று – நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று– அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று– இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்-அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான்-இசைவு பிறந்த இன்று -என்னுதல்- நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்

இரங்கு – எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை –
அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் – அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத்தலைக்கு ஸ்வரூபம்-தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-இரங்கு -என்று கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்று
ருசி காரித்தைச் சொல்லுகிறது –

அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று – தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –லோபத்தை எறிதடியாக எறிந்து மோஹத்தை நசிப்பித்தவனே –அஞ்ஞான கார்யமான அஹங்காரம் இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு
பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –ஐம் புலன்களுக்கும் அவனையே விஷயமாக்கி -இது குன்று போல் -இது ஸ்திரம் அநந்தம் அவை கல் போல் அல்பம் அஸ்திரம்)-அஹங்காரத்தை ஜெயித்து தத் விஷய வைமுக்யத்தை மாற்றும் நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

இருந்த இடத்தில் இருந்து அளந்த திருவடிக்கும்-எவ்வாறு நடந்தாய் எம் இராமாவோ -என்ற திருவடிக்கும்-குழந்தையாய் சகடம் உதைத்த திருவடிகளுக்கும்-கன்றை எறிந்த போது காட்டி அருளிய குஞ்சித பாதங்களுக்கும் இந்திரனை ரஷித்த குணத்துக்கும் இவை உன்னது செயல்கள் அல்ல உனது திருக்கையில் ஆயுதங்கள் செய்தன -அவற்றுக்குப் பல்லாண்டு என்று என்று பல தடவை பல்லாண்டு பாடுவதே பறை-அடி போற்றி –திறல் போற்றி -புகழ் போற்றி- கழல் போற்றி – குணம் போற்றி – வேல் போற்றி -என்று -இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –

——————-

ஒருத்தி மகனாய் பிறந்து – அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்- குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்அவதரித்து –ஓர் இரவில் ஒருத்தி மகனாய் – லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்-வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்கள் அனைத்தயும் வியக்தம் அஷ்டாக்ஷர மந்திரத்தில் மட்டும் தானே-ஸ்வரூபம் மட்டும் வியக்தம் துவாதச அக்ஷர மந்திரத்தில்-ஒளித்து வளரத்-குண விக்ரஹ விபூதி களாலே சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –தரிக்கிலானாகித் –ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய் பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே – தானே த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –திருத் தக்க செல்வமும் சேவகமும் –பெரிய பிராட்டியாருக்கு தகுதியான ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய் இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்- உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாக தீர்ந்து ஆனந்திக்கக் கடவோம் –வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் – மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் – ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது-விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து – அபிமத சித்தியும் யுண்டாய்த்து — பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –ஸ்வரூப லாபத்தோ பாதி-துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –

சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது – கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் – கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்–

————

சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள் -மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை – மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் – இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும் துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே தட்டி எழுப்புகிறார்கள் –ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது – இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது – கார்ச்யத்தாலே இடை என்று -விரக்தியைச் சொல்லிற்றாய் அத்தால் விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை வைராக்யத்தைச் சொல்லுகிறது –மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று-ஆலினிலையாய் -அஹம் –என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று-பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் -மூன்றும் சேர்ந்த பசும்கூட்டம் மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்–

மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –

சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும் சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும் உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –ஓம் விட நமஸ் உயர்ந்தது-போய்ப் பாடுடையனவே -இடமுடைமை- பெருமை-சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ய போக்யங்கள் -ஆகவே சாலப் பெரும் பாறை -பெரிய த்வனி இதுக்கு-சாலப் பெரும் பறையே –பறை -பெரும் பறை – சாலப் பெரும் பறைபல்லாண்டிசைப்பாரே-சத் சஹ வாசம் வேணும் –கோல விளக்கே – பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –கொடியே – கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான கைங்கர்யமும் வேணும் –விதானமே- அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும்

திருப் பல்லாண்டு பாடுகைக்கு- அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும் பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் –நம்மாழ்வாரையும் கொடுத்தான்-மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான் கொடிக்கு பெரிய திருவடியையும் விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்-எல்லாம் கொடுத்தாலும் தன்னைக் கொடுத்தது ஆகாமையாலே அத்தவாளத்தையும் கொடுத்தான்
எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில் எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-

———

சீர் –எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே – வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் – அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே- அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம் நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்(ஸாஷாத் மன்மதன் ) ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்-இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

சூடகமே இத்யாதி-1-பிடித்த கைக்கும் –2-அணைத்த தோள்களுக்கும்-3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்-4-ஸ்பர்சத்துக்கும்-5-தோற்று விழும் துறைக்கும்-பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -ப்ரஹ்ம அலங்காரம் –-உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து-வாய் பாட-உடம்பு கூட-நெஞ்சு குளிர-கூடி –குளிர்ந்து-குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –நீரிலே தோயாதே உபாயாந்தரங்களிலே இழியாதே-நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும்-தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும் அனுகுண அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –-அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே-அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் ) பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன-ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்-கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது-நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்- தனியே புஜிக்கக் கடவது அன்று – உண்கை உத்தேச்யம் அன்று- பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்-நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே-ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா–அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

சூடகமே –காப்பே–கைத்தலம் பற்றி உபக்ரமம் –திருவடியில் விழுந்தது பர்யந்தம்–தோள் வளையே –திரு இலச்சினையே-தோடு – திரு மந்த்ரமே-செவிப் பூவே-த்வயமே (அனுபவத்துக்கு )-பாடகமே-சரம ஸ்லோகமே -இவை ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் – பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன-இதில் தோடு –மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணியான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே – திருமந்த்ரத்தை சொல்லுகிறது –செவிப்பூ-ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –இம் மூன்று ரகஸ்யங்களாலும் ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது – அது எங்கனே என்னில் –திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும் த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும் சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும் ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும் ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே- ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –யாம் அணிவோம்-உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம் இன்று அணியக் கடவோம் -பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது – பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –ஆடை உடுப்போம்-சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்-பால் சோறு-கைங்கர்யம் ஆனது-மூட நெய் பெய்து மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –கூடி இருந்து குளிர்ந்து – போக்தாவான உன்னோடு
போக்யரான நாம் சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-

———-

முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்கள் இரண்டையும் மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக இப் பாட்டில் பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்–நாராயணனே பறை நாராயணனே தருவான்-என்பதின் விவரணம் இப் பாசுரமும் அடுத்த பாசுரமும் உன்னோடு உண்டான சம்பந்தம் –உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது –
உன்னோடு நமக்கு உண்டான உறவை ஆராய்ந்து பார்த்தால் சோபாதிகம் அன்றிக்கே
நம் இருவர் உடையவும் ஸ்வரூபமாய் இருக்கையாலே அது தானும் நித்யம் ஆகையாலே
சர்வ சக்தியான உன்னாலும் போக்க ஒண்ணாது – பிராக்ருதரான நம்மாலும் போக்க ஒண்ணாது –க்ருத சங்கே திகளான இருவராலும் போக்க ஒண்ணாது – இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது ––நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை –மந்த்ர ரஹஸ்யம் -விதி ரஹஸ்யம் -அனுஷ்டான ரஹஸ்யம் -ஷேம கரம் – பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -நடுவில்-ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ஓம் சாந்தி சாந்தி சாந்தி: –

கறவைகள் -இத்யாதி – ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி – தேக போஷண ஏக பரராய் இருந்தோம் இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –அறிவொன்றும் இல்லாத – ஞானமும் ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –ஆய்க் குலம் –உபயாந்தரங்கள் இல்லாமையாலே
தோஷமாகாத குலத்திலே பிறந்தவர்கள் நாங்கள் –இத்தால் – ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –தங்கள் உடைய ஆகிஞ்சன்யத்தையும் அநந்ய கதித்வத்தையும் உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும் சொன்னார்கள் ஆய்த்து –இறைவா- வானோர் இறையை நினைத்தன்று – ஆய்க் குலமாக வந்து தோன்றின நம் இறை –பேற்றுக்கு அத்வேஷம் இறே இத் தலைக்கு வேண்டுவது பேற்றின் கனத்துக்கு கீழே விளைந்தது எல்லாம் அத்வேஷ மாத்ரமாய் இருக்கும் இறே –1-தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்-2-அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து-3-உபாய பூர்த்தியையும்
4-தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு –-5-கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு-6-எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள் –ஆய்க் குலத்து உன் தன்னை-அநஸ்நன் -என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்-இமையோர் தம் குல முதலான உன்னை(திருவாய் -1-5 ) ஆயர் தம் குல முதலாகப் பெற்றோம்-வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் –நீ பகல் விளக்கான குலமும்-நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ-நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது – நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது-

கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –

——–

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –நீ ஸ்வாமியாகவும்-நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது-எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்-நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும் இவை இரண்டும் விரோதி யாகையாலே அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – என்றவர்கள் தாங்களே குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே மங்களா சாசனத்துக்கு பலமாக அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும்
மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள் அபேஷித்தாலும் ஹித பரனான நீ கேள்வி கொள்ளவும் கடவை அல்லை கொடுக்கக் கடவையும் அல்லை – என்றது ஆய்த்து –

சிற்றம் சிறு காலை யாவது – சம்சாரியான நிலை குலைந்து முக்தனாவதுக்கு முன்பு
முமுஷூத்வம் அங்குரித்த தசை இறே -முன்பு ஒரு போகியாக உறக்கம் –
பின்பு ஒரு போகியாக உணர்ச்சி – நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது–இருள் அகன்ற அளவாய்-வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து –இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –காலை நல் ஞானத் துறை படிந்தாடி (திரு விருத்தம் -93)-என்று ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி – தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இறே நல் ஞானமாவது –துறை படுகையாவது- சதாசார்ய உபதேச மூலமாக பிராட்டி புருஷகாரமாக – பாகவதர்கள் உஸாத் துணையாக எம்பெருமானைப் பற்றுமது-உன் மணாளனை எம்மை நீராட்டு (20) என்று துறை தப்பாமல் இழிந்தவர்கள் இறே இவர்கள்-வந்து-பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து – நம் தெருவின் நடுவே வந்து – கதவின் புறமே வந்து – முற்றம் புகுந்து – நம் இல்லம் புகுந்து – நீ மலர் அணை மேல் வைகி – மாலை புகுர ப்ராப்தமாய்-படுக்கையை விட்டுப் படி கடந்து காவலும் கடந்து – உன் தோரண வாசலிலே வந்து – உட் கட்டிலிலே புகுந்து – பள்ளிக் கட்டில் கீழே – சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ – இருக்க –உன் பொற்றாமரை அடியே போற்றும் -சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-உன் அடி போற்றும்-ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்-அடியே –போற்றும்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே-(திருமார்பை ஆசைப்படும் அத்திரு திருவடியை ஆசைப்படும் இத்திரு )பொற்றாமரை அடி அன்றோ –சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்-ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-ஏவம் ஸ்வீ க்ருத சித்த உபாயனுக்கு
தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும் தத் விரோதி நிவ்ருத்தியும் யா காஸ்சந க்ருதய-இத்யாதிப் படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –

குற்றேவல்-அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது –-முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இறே -8-5-விடுத்த திசைக்கு கருமமும் இல்லை-கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை –
அணுகின விருத்தியும் –-ஏவின விருத்தியாக வேணும்-திருத் திரைக்குள்ளில் விருத்தி –
உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் – கலசப் பானை பிடித்தல் – படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் – திருவடிகளை விளக்குதல்- ஒலியன் (ஆலவட்டம் )பணி மாறுதல் – சாமரம் இரட்டுதல் – அடைக்காய் திருத்துதல் – அடி வருடுதல்-முலைகள் இடர் தீர அணைத்தல்-இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -(நாச்சியார் )-மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று-நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று-எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே

ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும்-அதின் பலமான கலக்கமும் – விளைந்த ஆர்த்தியும் –
இது எல்லாவற்றுக்கும் அடியான ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் – பேற்றில் அளவிறந்த பாரிப்பும்-அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் –

1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ )
கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –இவை எல்லாம் நிழல் எழும்படி
கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –

———–

தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த கிருஷ்ணன் உடைய ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே சொல்லுகிறார்கள் ––மாதவனை – கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை – ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –கேசவனை – வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது–விரோதி நிரசன ஸ்வ பாவனை –ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —மாதவனை கேசவனை – தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் – என்று பட்டர் அருளிச் செய்வர் –

உக்தமான அனுஷ்டானம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பாசுரமே பேற்றைக் கொடுக்கும் என்று சொல்லி நிகமிக்கிறது –விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்-மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது – என்று பட்டர் அருளிச் செய்வர் –

சேதனர் பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல் சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி கிருபையாகிற கயிற்றாலே சுற்றி கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன்  கேசியை நிரசித்தாப் போலே ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான திருமுக மண்டலம் உடையவர்களாய் தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய் அனந்யார்ஹரான பாகவதர்கள் ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று பூஜித்து–உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான
ஸ்ரீயபதியாலே-த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும் பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி கிருபையை லபித்து ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்

7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

சரண க்ரஹணத்தோடு கேச க்ரஹணத்தோடு வாசி இல்லையே பிரணயிநி யாகையாலே –
கேசவனைக் கால் பிடிப்பாள் (பெரிய திருமொழி -2-6 )-என்று இறே நிரூபகம்-

பரமனைப் பாடி(2) என்று தொடங்கி கேசவனை என்று தலைக் கட்டுகையாலே
பாதாதி கேசாந்தமாக கிருஷ்ணனை அனுபவித்தாள் யாய்த்து –

இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீமன்-செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே-

1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது

6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு

11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு

வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –

17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்

22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –

27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –

ஆகையால் இம் முப்பத்து பாட்டிலும் நழுவ விடலாவது ஒரு பாட்டு இல்லை –எம்பாவாய்-இன்புறுவர் எங்கள் சந்தஸாலே இன்புறுவர் – நாங்கள் யாதொருபடி இன்புற்றோம் அப்படி இன்புறுவர்கள் –பெரிய பிராட்டியார் இன்புற்றால் போலே இன்புற்றார் ஆவார்கள் (பாவை பெரிய பிராட்டியார் ) ஸ்ரீ கோபிமார் பாவாய் இன்புற்றோம் நாங்கள் –(கோபி மார் பா சொல் )-எங்கள் சொல்லை யுரைப்பார் எங்கள் பாவாய் -இன்புறுவார்கள் (எங்கள் பா -திருப்பாவை )சமகாலத்தில் உள்ளாரை – எம் பாவாய் – நீராடப் போதுவீர் போதுமினோ -என்று கூட்டிக் கொண்டார்கள் –பிற்பாடார்க்கும் எம் பாவாய் பிரபந்த முகத்தால் எம் பாவாய் இன்புறுவர் என்று தலைக் கட்டுகிறார்கள் –

———————

ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு போர அவகாஹித்தரோடு வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –

அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –

அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –

கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –

மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா-என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கு கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனுசரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

எல்லே இளங்கிளியே -என்கையாலே –
சுக முகாத் அம்ருதத்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப்பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை -அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –

நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —
ஸ்ரீ யை நம —
ஸ்ரீ தராய நம -என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இருவர் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –

————–

எட்டு எழுத்தின் இணைப் பொருளும்இரண்டு தனில் பொருளும்இயல் வலித்தோர் அருச்சுனனுக்கு இறைவன் தம்மை தொட்டுரைத்த முறை யறுதிப் பொருளை
எல்லாம் தோன்றும் வகை –இத்யாதி படியே இப் பிரபந்தம் ரகஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –

இப் பிரபந்தத்திலே –ஊழி முதல்வன் -பற்ப நாபன் -என்று –சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –உனக்கே -என்கையாலே –உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –நாம்-என்றும் –யாம் -என்றும் –மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

தூயோமாய் வந்து நாம் – தூயோமாய் வந்தோம் – அபிமான பங்கமாய் – மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் – நாராயணன் மூர்த்தி -என்றும் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே அதிலே சர்வ வித பந்துத்வமும்-எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –

தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –

கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே(பெரிய திருமொழி 6-10-1)-என்னக் கடவது இறே

(ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் -இவற்றுக்கு பிரமாணங்கள்)

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –

(தாதர்த்த சதுர்த்திக்கும்-பிரார்த்தனா சதுர்த்திக்கும் இரண்டு பிரமாணங்கள்)

ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –

———————

கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைச் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –(மாம் -நாற்றத்துழாய் முடி நாராயணன் )
புண்ணியம் நாமுடையோம் என்றும் –

(இது வரை ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ -அர்த்தம்
மேல் அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச-அர்த்தம்)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –

(அவன் திரு உள்ளத்தில் கோபமும் ப்ரீதியும் தானே பாபமும் புண்யமும்
தூசாக்க வேண்டாம் -தூசாகும் -தன்னடையே போகுமே)

ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி–3-2-2)
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –(மூன்றாம் திருவந்தாதி )
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –

திருப்பாவையால் –
நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –

(பரத்வ வ்யூஹ முன் அவதாரங்களை சொல்லி மாம் என்று தொ ட்டுரைத்த சொல்)

ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –

அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –

இது சரம ஸ்லோக விவரணம் –

மாமின் அஹமின் அர்த்தங்கள் இவை தானே (திருப்பாவை ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே ஸ்ரீ மத் பாகவத சுருக்கம்)

———————————

திருப்பாவையில் -அத்யந்த பக்தி உக்தரானவர்கள் –
பகவத் விரஹ பரிதாப ஹரமாக ஸஹ காரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு –
ஸ்வ அபேக்ஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது-

தாம் தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே பிரேம ஸ்வபாவம் இருப்பது –

(நீராடப்போய் அப்பறை பெற்ற வாற்றை அன்றோ திருப்பாவை முழுவதும் சொல்லிற்று)

(பக்தனுக்கு கிருஷ்ண விரஹம் போல் சம்சாரிகளுக்கு அபிமத விஷய விஸ்லேஷம் போல் தானே
ஸர்வமும் பக்தனுக்கு அவனே -இவர்களும் எல்லாமாகக் கொண்ட பெண்டிர் அன்றோ)

ஸ்ரீ யபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் -இருந்துள்ள சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக –
ஸ்வ விபூதியில் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்துப் போந்து –
பிராட்டியைப் பிரிந்து-மெல்லியல் தோள் தோய்ந்து –

அநந்தரம் இப்படி அதி விலக்ஷணையாய்-
அத்யந்த அபிமதையான தத் விஷயத்தை லோக ரக்ஷண அர்த்தமாக விஸ்லேஷித்து-
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து (11-7)-என்னும்படி
பரி தப்த்தனாய-அந்த விரஹ தாபம் மாற்றலாமோ என்கிற அலமாப்பாலே
அரணவத்திலே அவகாஹிக்க நினைப்பது ஆனால் போலேயும் –

அவனைப் பின் தொடர்ந்து போந்த பரிவரான தம்பி பரதனும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தைப் பிரிந்து –
கூடேக்நி ரிவபாதபம் -என்னும் படி பரிதபித்து
சரயு ஆற்றிலே அவகாஹித்து ஒருப்பட்டு இருந்தால் போலேயும்

பின்னையும் மா மாயன் மாதவன் வைகுந்தன் வான் இளவரசு வைகுந்தக் குட்டன்
வாஸூ தேவன் மதுரை மன்னன் நந்த கோபன் இளவரசு
கோவலர் குட்டன் -சூட்டு நன் மாலை தொடக்கமான -அங்குத்தை போகத்தை அநாதரித்து
அடலாயர் தம் கொம்பினுக்காக இங்கே போந்தால் போலே –

ஆண்டாளும் அந்த வைகுண்ட  வான் போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
ஆயர் குலத்தில் தோன்றினவனை மனத்துக்கு இனிதாகப் பாடி கூடி இருந்த படியை
செய்ய வெண்ணப் போந்தவளாய் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –(5-4)
அவனில் எண் மடங்கான காமத் தீ யுள் புகுந்து கதுவ-

அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்(7-10)
இப் புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –
அது எங்கனே என்னில் –

ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –
நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –

அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்

புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –

அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-(8-5-11)
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்

பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -(5-7)என்றும்

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி (5-11)-என்றும்

பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய (7–10)-என்றும்

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்

(திருப்பாவையில் போல் நாச்சியார் திருமொழியில் இதே பரத்வாதி பஞ்சகத்துக்குப் பிரமாணங்கள்)

ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்

உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் (4-8)-என்றும்

பெண் கொடியை வதம் செய்தான் (8-9)-என்றும் –

காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே

பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-

முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில் (வளர்பிறை பவ்ர்ணமியில்)
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே

யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்

வங்கக் கடல் கடைந்து –அங்கு அப்பறை கொண்ட ஆறு இதுவரை-மேல் அணி புதுவை –இத்யாதி )

சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் (2-8-10)சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –

பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப் பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –(6-15 பாசுரங்கள் ஒரு பதிகம் தானே)

இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –

இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –

புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ(ரகுகுல பரதனைச் சொன்னவாறு-நடுவில் பிள்ளை )
ப்ராத கால யமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்ந உத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதிம் குஹம்
சீக்ரமா நய பத்ரந்தே தார யிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபிமி தமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –

இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி

———————————

இப் பத்து பாட்டுக்கும்
குண சாம்யத்தாலும்-கௌரவ்யதையாலும்-பத்துப் பெண்களை எழுப்புகிற முகத்தால்
ஆழ்வார்கள் பதின்மரையும் கூட்டிக் கொண்டு
ஆழ்வார் திரு மகளார் அனுசந்திக்கிறதாக அறுதி இட்டார்கள் –

இப்படி பக்தராய் முக்தராய் இருப்பார் ஆழ்வார்கள் –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியையும் உணர்த்தி-
இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்லுகிறது –
நாயகன் -தொடங்கி -அஞ்சு பாட்டாலே –

(ஜனபத சரித் அந்தரீப புஷ்யத் புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் குமுத முகாந் கண நாயகாந் நமாமி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–32-என்றும்

குமுதாதி கண நாதர்கள்–ஆயுதங்கள் பரிவாரங்கள் -வாஹனங்கள் உடன் ரக்ஷணத்தில் மும்முரமாக உள்ளனர் –)

ஸ்மேர ஆநந அஷி கமலை நமத புநா நாந் தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் த்விஷத துநாநாத்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி ரங்க த்வார ஆவளீஷு சதஸ்ருஷு அதிகார பாஜ –37–என்றும் –

கோரைப் பற்களாலும் புருவ நெறிப்பாலும் அடியார் விரோதிகளை அச்சம் கொள்ளச் செய்கின்றனர்
தெற்கு வாசல் –பத்ரன் -ஸூ பத்ரன் –வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –மேற்கு வாசல் -ஜெயன் விஜயன் –கிழக்கு வாசல் -சண்டன் -ப்ரசண்டன்)

ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -என்றும் –

ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம் யம்பாம் -என்றும்

(ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திரியா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசித் நயன அதிகாரம்
ய நிர்வஹதி அநிசம் அங்குளி முத்ரயா ஏவ ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -50—ஸ்ரீ விஷ்வக் சேனரை ஸ்துதிக்கிறார்

ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம்
ஸ்ரீ பத லாஷா லாஞ்ச்சித சேவா ப்ரோத லசத்தோர் வல்லி விலாசம் –51—ஸூத்ரவதி தேவியை ஸ்துதிக்கிறார்)

(ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி–பகவத் குண தர்ப்பணம் )

நம ஸ்ரீ ரெங்கே நாயக்யை யத் ப்ரு விப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்னோன்னதமிதம் ஜகத் என்றும்

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே சிந்தாமணி மிவோத் பாந்த முத் சங்கே நந்த போகின -என்றும் சொல்லுகிறபடி

(ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.)

வைகுந்தத்து அமரரான கோயில் கொள் தெய்வங்களையும்–
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
ஆயிரம் முகத்தினால் காப்பாருடை  யவதாரமானவரையும் –
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அனைத்துக் கொண்டு
கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டி அபேக்ஷிதங்களை அர்த்திக்கும் படி சொல்லுகிறது

(வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-)

(கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-)

ஸ்ரீ யை நம –
ஸ்ரீ தராய நம -என்று இறே க்ரமம் இருப்பது –

உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் -என்றதிலே
முமுஷுக்களாய் முக்தரோடு சாம்யம் பெற்ற (விண்ணுள்ளாரிலும் சீரியரான )
நாத முனிகள்
யாமுன யோகி(முனிகளும் -அவர் குண அனுபவ நிஷ்டர் யோகிகளும் -இவர் கைங்கர்ய நிஷ்டர் )
யதி வராதிகளும் ஸூசித்தர் –
இது குரு பரம்பரையின் அடைவு –

ஆறாயிரப்படியில் -நாயனார் –(17 பாசுர அவதாரிகையில் )
பெறுகைக்குப் புறப்படுகிற திரளை
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமானை திருப் பாதம் பணிகை இறே –

(வேதம் வல்லார்களைக் கொண்டு*  விண்ணோர் பெருமான் திருப்- 

பாதம் பணிந்து,*  இவள் நோய்*  இது தீர்த்துக் கொள்ளாது போய்*

ஏதம் பறைந்து அல்ல செய்து*  கள் ஊடு கலாய்த் தூய்,*

கீதம் முழவு இட்டு*  நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.  )

(வேதம் வல்லார்களைக் கொண்டு–பாசுரங்கள் 6-15 விண்ணோர் –பாசுரங்கள் -16-20
பெருமானை திருப் பாதம் பணிகை இறே–பாசுரங்கள் 21-29-)

நல் ஞானத் துறை படிந்தாடி -(திரு விருத்தம் -93)என்னுமா போலே –

நல் ஞானம் ஆகிறது -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை-
விஞ்ஞானம் யதீதம் பிராப்தம் –என்னுமா போலே —

துறையாவது முறை தப்பாமல் குரு பரம்பரை வழியே பற்றுகை –

த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வார் –

(காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –)

வேதம் வல்லார்கள் என்றவிடத்து
குரு பரம்பரையை நினைத்து –
கீழ் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –

விண்ணோர் பெருமானில்-விண்ணோர் என்கிறது –
த்வார பாலர்கள் தொடக்கமான திவ்ய மஹிஷிகளாய் உள்ளவர்கள் -என்றபடி –

இந்த யோஜனைகள் எல்லாம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே  -என்று அருளிச் செய்யும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்கு சேரும் இறே –

பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் என்கிற இடத்து1-5-11
குண சாம்யத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கும் –

(வாக்ய குரு பரம்பரை விஷயமாக வியாக்யானம் இங்கும் குண ஸாம்யத்தாலே –என்றவாறு)

(நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-)

(மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-)

———————————————————————

இனி த்வய யோஜகையில்-
அர்த்த விஷயமாக மெய்ப்பொருளை இறே விசதம் ஆக்கிற்று –

இரண்டு அர்த்தத்தையும் புலம் ஐந்து மேயும் -என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்-
அனுஷ்டானமாக திருப்பாவையில் –
தாயே தந்தையிலும் –(1-9)
ஸ்தோத்ர கத்யங்களிலும் (ஸ்தோத்ர ரத்னத்திலும் கத்ய த்ரயத்திலும் )த்வயத்தின் அடைவு காணும் படி எங்கனே என்னில் –

(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே)

முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –

(முதலில் உபதேச வேளை
இறுதியில் அனுஷ்டான வேளை)

நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம் என்றபடி –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
திரு மந்திரத்தில் பத த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும்
ஒவ் ஒன்றே பத்துப் பாட்டாய் பரவும் படி திருப்பாவை முப்பது பாட்டாக பாடி அருளிற்று –

திருமந்திரத்தில் ஸ்வரூப அனுரூபமாக நிஷ் கர்ஷித்த
ப்ராப்ய ப்ராபகங்கள் இறே த்வயத்தில் விசதமாக அனுசந்திக்கிறது –
அந்த க்ரமத்திலே யாயிற்று இங்கும் அனுசந்திக்கிறது –

————

குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தின் அடைவு சொல்லுகிறது –

நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –

உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-

நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –(அலர் மேல் மங்கை உறை மார்பன் இறையும் பிரிவில்லாமல் )

நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி என்றும் –
ஓங்கி உலகளந்த -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் -என்றும் –
லோக விக்ராந்த சரணங்களாய்
நாராயணன் த்ரிவிக்ரமன் அடியான உலகு அளந்த மெல்லடியை -உன் பொற்றாமரை அடி -என்றும் –
சரண -சப்தார்த்தமும் –

கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
ஊழி முதல்வன் உருவம் போல் –முகில் வண்ணன் -சங்கோடு சக்கரம் ஏந்தும்
தடக் கையன் பங்கயக் கண்ணன் -என்றதில் விக்ரஹ யோகத்தையும்

(திருவடியைச் சொன்னது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம்
கண்கள்
உருவம்
தடக்கை
இவற்றுக்கும் பாசுரங்கள் உண்டே)

முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் -என்னும் படி சம்சாரி திரிந்த இடத்தில் வந்து கிடக்கிற
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்

(சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்துத் திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –)

(கீழ் வாத்சல்யம் சொல்லி இங்கு ஸ்வாமித்வம்-ஸ்வாமி சொத்தைத் தேடுமா போல் -கடலில் சயனித்து முத்து கிடைக்குமா என்று முக்தர்களைத் தேடிக் கிடக்கிறான் )

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-

(அதமன் -மத்யமன் -வ்யாவ்ருத்தம்(

மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –

(ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாத குணங்கள் -பூர்வ வாக்ய நாராயண அர்த்தங்கள் இந்த நான்கும்)

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்

அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –

(புகல் ஒன்றும் இல்லா -த்வயத்தில் வாக்கியம் இல்லை -ஆழ்வார் இவற்றையும் வியக்தமாய் காட்டி அருளியது போல் இங்கும்)

தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –

வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –

(உனது திருவடிகளை உபாயமாகப் பற்றினோம்
முக்கரணங்களாலும் -இங்கு உண்டே)

ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –

(ப்ரபத்யே -பற்றும் பற்றுதலும் உபாயம் அல்லவே
விடுவித்து பற்றுவிக்கும் அவனே -உபாயம்
துடிப்பால் வந்து நின்றோம்)

(இது வரை பூர்வ வாக்ய அர்த்தம்
மேல் உத்தர வாக்ய அர்த்தங்கள்
இடைவிடாமல் இரண்டும் வேண்டுமே -அவனுக்கு நாம் சொல்லும் மாஸூச அன்றோ இது)

குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ -என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –

(தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10-)-

(அவள் ஏவ மிதுனத்தில் கைங்கர்யம் -அந்தப்புர கைங்கர்ய பரராய் இருப்பதில் ஏற்றம் உண்டே )

(மேல் ஆய நம -அர்த்தங்கள்
கைங்கர்ய பிரார்த்தனை
கைங்கர்ய உபகரணங்கள்
எவ்வித கைங்கர்யங்கள்
அவன் ஆனந்தத்துக்காகவே
இவ்வாறு நான்குக்கும் பாசுரங்கள் இங்கே உண்டே)

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –

செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மா மாயன் மாதவன் வைகுந்தன் (9)என்றும் 
மாதவனை (30)என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –

(மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே10-5-7-)-என்று என்று-இரட்டித்து இருப்பது

(மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10)

செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –

இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று – ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது- கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம் தம் த்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்த உத்ஸவ சமயோசிதம் பிரசித்தம் –

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –

ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தத்துக்கும் முதல் ஸ்லோகம் சங்க்ரஹமானால் போலேயும்

ஸ்ரீ ராமாயணம் 24000 ஸ்லோகங்களும் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணம் -சங்க்ரஹமானால் போலேயும்-

ஸ்ரீ மஹா பாராதம் -125000–கிரந்தத்துக்கும் முதல் அத்யாயம் சங்க்ரஹமானால் போலேயும்

திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி சங்க்ரஹமானால் போலேயும்

முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு சங்க்ரஹமானால் போலேயும்

மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் சங்க்ரஹமானால் போலேயும்

முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாயே இருக்கும் –

சங்க்ரஹமான படி எங்கனே என்னில்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்ற இடத்தால்
முதல் ஐஞ்சு பாட்டுக்கள் சங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்தில்
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கூர் வேல் கொடும் தொழிலன் -என்று –
கோயில் காப்பானே -என்கிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

நந்த கோபன் என்று –
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்றும் –
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

குமரன் -என்றதால் –
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெறும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற
இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கார் மேனி -என்று
முகில் வண்ணன் -என்றும் –
பூவைப் பூ வண்ணா -என்றும் –
மாயன் மணி வண்ணன் -என்றும்
மாலே மணி வண்ணா -என்றும் இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

செங்கண் -என்று
கிண்கிணி வாய்ச செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ என்றும்
அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
பங்கயக் கண்ணன் -என்றும்
செங்கண் திருமுகம் -என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –

கதிர் மதியம் போல் முகத்தான் -என்று –
திங்களும் ஆதித்யனும் சேர்ந்தால் போல் என்றும் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹமாகச் சொல்லிற்று –

நாராயணன் -என்று –
நாராயணன் மூர்த்தி கேசவன் -என்றும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும் –
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்றும் –
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்

நமக்கே பறை தருவான் -என்பதால் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
நம்மால் போற்றப் பறை தரும் என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும் –
அறை பறை -என்றும் –
சாலப் பெரும் பறை -என்றும் –
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் –
இறைவா நீ தாராய் பறை என்றும் –
அங்கு அப்பறை கொண்ட வாற்றை என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்

பாரோர் புகழ -என்று –
நாடு புகழும் -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம் –

ஏலோர் எம்பாவாய் -என்று
முப்பது பாட்டிலும் சொல்லும் ஏலோர் எம்பாவாய்க்கு சங்க்ரஹம் –

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான
ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –

—————————————

அதிகாரி ஸ்வாபதேசம் –

இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –

அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –

கர்மாந்தர பரித்யாகத்தையும் –

பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –

ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்

ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –

பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –

அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்

சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –

இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –

———

இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
என்ற ஒரு ஸ்வாபதேசம் –

இப் பாட்டில்
இந்த பிரபன்ன அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது —
எங்கனே என்னில் –

ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
தேயே சதம் இத்யனுக்ரமாத் -என்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்கிறபடியே –(ஆனந்தவல்லி நூறு நூறாக பெருக்கிக் கொடு திரும்பியதே)
ஆஸ்ரிதர்கள் வந்து ஒரு விண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவசரம் இல்லாமையால் –

ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே
ஜகத் ரக்ஷண சிந்தனையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதற்கு யாராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அந்த யுரைக்கு செவி கொடுத்து
கண் வளருகிறதாக நினைத்து இருக்கையும் –(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன் என்கிறபடி கூப்பீடு கேட்க்கும் இடம் )

சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ணுகையும் –(பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி )
ஆகையால் பிரபன்னனுக்கு த்வய அனுசந்தானம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –

அந்த ரசானுபவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில்
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்கஜே நிவேசி தாத்மாக தமன்ய திச்சதி-என்கிறபடி –
போக்யமான மது சக்கர ஷீரா ததி க்ருதாதிகளிலும் நைரபேஷயத்தையும்-

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –

ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

த்ரிவிக்ரமத் வச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி–என்கிறபடியே
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும்

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||ஶ்லோகம் 31 –

இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்)

அது ஒழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யா பரணங்களை நிஷேதித்தமையும்-
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில்
ஜாதி பேதத்தாலே அபோக்யமாய் இருக்கச் செய்தேயும் பரம போக்யத்தால் ஸ்வீகரிக்கையும்-

யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீயாராதனம் பண்ணி பகவத் அனுபவம் பண்ணுவித்து –
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும்(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி )

இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லுகிறது –

இரண்டாம் பாட்டில் வ்யூஹம் சொல்லுகிறது –

———

மூன்றாம் பாட்டில்
நோன்பில் இழியவே-தாத் பலமான சம்ருதிகள் அடைய உண்டாம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழிய
வேறே -ஆயுராசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலங்களும் ஆனு ஷங்கிக சித்தமாய்க் கொண்டு சித்திக்கும் என்கிறது –

—————

நாலாம் பாட்டில் –
வர்ஷ தேவதையைக் குறித்து வர்ஷிக்கும் படியை நியமிக்கிறார்கள்-

இத்தால்
அநந்ய பிரயோஜனராய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவர்க்கு
இந்திராதி தேவதைகளும் நியாமியர் ஆவார்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி-என்னக் கடவது இறே

————-

அஞ்சாம் பாட்டில் –
ஸ்ரேயாம் சி பஹூ விக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –

இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரச் லேக்ஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –

————–

ஆக இவ் வைந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –

இதுக்கு மேல் பத்துப் பாட்டும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச் செல்லுகிறது –

இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் –
தனி அனுபவிக்க ஒண்ணாமையாலே பெருக்காற்றிலே இழிவார் துணை கொண்டு இழியுமா போலேயும்
ஏக ஸ்வாது நபுஞ்சீத-என்று தனி அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும் பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடி
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –

(கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.–5-2-2-)

————-

இதில் முதல் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறாள் –

இத்தால்
பகவத் ஏக போக்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய பிரயோஜனராய்
இவ் விஷயத்தில் தேசிகர் அன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல்
பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு கிருத்யம் என்று இருக்கை ஸ்ரீ வைஷ்ணத்வம்
என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –

(எது தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் என்று பாசுரம் தோறும் உண்டே)

———

இரண்டாம் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் -இவ் வனுபவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாள் ஒருத்தி எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடி அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார்க்கு ஸ்வரூபம் என்கிறது –

(போதயந்தபரஸ்பரம்– கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச)

————-

மூன்றாம் பாட்டில் –
கிருஷ்ணனால் கொண்டாடப்படும் ஏற்றம் உடையவளை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் அனுபவத்தில் ப்ரத்யாசன்னராய் இருப்பார் இடத்தில் சா பேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனை கிட்டுக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –

———-

நாலாம் பாட்டில் –
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று நிர்ப்பரரையாய்க் கொண்டு கிடக்கும் அவளை எழுப்புகிறார்கள் –

இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் – என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் பிரேமாதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது –

(சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”-சுந். 39:30)

————–

அஞ்சாம் பாட்டில் –
பெண்கள் எல்லாம் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை –
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இத்தால்
ஞானீத் வாத்மைவ மே மதம் –
அஹம் ச சம ப்ரிய -என்றும் அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –

(என்னது உன்னதாவியில் அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும். )

————-

ஆறாம் பாட்டில் –
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(கோவலர் தம் பொற் கொடி )

இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேச்யர் என்றும் –
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்கிறது –

———–

ஏழாம் பாட்டில் –
இளைய பெருமாளை போலே கிருஷ்ணனைப் பிரியாதே இருப்பான் ஒருவன் தங்கையை எழுப்புகிறார்கள் (நற் செல்வன் தங்காய் )

இத்தால்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார் தங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே-
தத் சம்பந்த சம்பந்திகளும் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

—————-

எட்டாம் பாட்டில் –
நம் கண் அழகு உண்டாகில் தானே வருகிறான் -என்று அவயவ சோபையை மதித்து கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(போதரிக் கண்ணினாய் -பரிபூர்ண ஞானம் உபாயம் அபாயம் அறிந்து )

இத்தால்
பகவத் அனுபவ பரிகரமான ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –

————–

ஒன்பதாம் பாட்டில்
எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய் -எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாய் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த
நிர்வாஹகர் முன்னாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –

—————

பத்தாம் பாட்டில் –
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –

இத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம்
அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் என்கிறது –

———–

ஆக இப் பதினைந்து பட்டாலும் எழுப்பப் பட்டவர்கள் எல்லாரும் கூட வந்து –
மேல் பதினாறாம் பாட்டால்
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும் ஸ்ரீ வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –

(ஆயர் சிறியோம் -அனைவரும் ஒரே பேரால் நாம ரூப விபாகம் அற்று கடலிலே நதிகள் சேருமா போல்)

———–

பதினேழாம் பாட்டில் –
இவர்கள் திருக் காப்பு நீக்கி -உள்ளே புக விட
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமான உள் உள்ளாரை அடைய எழுப்புகிறார்கள் –

 இவ் விரண்டு பாட்டிலும்
பகவத் விஷயத்தை கிட்டுவார் தத் ப்ரத்யாஸன்னரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் என்கிறது –

—————

பதினெட்டாம் பாட்டில் –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்து இராமையாலே தங்களுக்கு புருஷகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பகவத் விஷயீ காரம் பிராட்டி புருஷகார சாபேஷை என்கிறது –

(புருஷ சாபேஷமாயும் புருஷகார சா பேக்ஷமாயுமாய் இருக்குமே பேறு பெறுவதற்கு)

————–

பத்தொன்பதாம் பாட்டில் –
இவள் திறக்கப் புக -நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
கட்டிக் கொண்டு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி –(மலர் மார்பா வாய் திறவாய் )
மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –

இத்தால்
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால் அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது –

————–

இருபதாம் பாட்டில் –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியும் கூட எழுப்புகிறார்கள்

இத்தால்
அடிமை செய்யும் இடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்கிறது –

(கமலா -நமக்கும் அவனுக்குமாக இருப்பவள் -)

—————-

இருபத்தோராம் பாட்டில் –
நப்பின்னைப் பிராட்டியும் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூட கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன
அவன் குணங்களில் தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –

இத்தால்
பிரபுத்தனாய் (விழித்து எழுந்தவனாய் )தங்கள் கார்யம் செய்கைக்கு
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர் களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –

(ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.–2-2-11-)

(ஏழு உலகுக்கும் அதிபதி அவன் -ஏற்ற பாடுவது அவன் சம்பந்தம் உணர்ந்து பாடுவது –நானும் உனக்கு பழ அடியேன் என்று உணர வேண்டுமே)

—————-

இருபத்து இரண்டாம் பாட்டில்
கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூ ன்யத்தையைச் சொல்லி
இப்பாட்டில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –

இத்தால்
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்கு தங்கள் அநந்யார்ஹ சேஷத்வம் அனுசந்தேயம் என்கிறது –

—————-

இருபத்து மூன்றாம் பாட்டில் –
உபஸ்தேயைர் உபஸ்தித -என்று
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளினுடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக பெற்றிலோம் என்று வெறுத்தால் போலே
இவர்கள் நோவு படப் பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று இன்னாதாய் –
அவர்களை அழைத்து செய்ய வேண்டுவது என் என்ன –

(உறாமையோடே உற்றேன் ஆக்காமல் -அதிகாரம் வளர்க்கவே)

இங்கனே சொல்ல ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்கிறார்கள் –

இத்தால் –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனாந்தர பரரைக் காட்டிலும்
அநந்ய பிரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களைக் காட்டிலும் -சித்த சாதனம் பண்ணினார்க்கு
தம் தாம் கையில் கைம் முதல் இல்லாமையால் ஈஸ்வரனே பிரபுத்தனாய்க் கொண்டு அபேக்ஷித சம் விதானம் பண்ண வேணும்
என்று இவ் வதிகாரத்தில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –

(யாம் வந்த கார்யம் ஆராய வேண்டிய பொறுப்பு உன்னடையதே -ரிஷிகளுக்கே உனது பொறுப்பு என்று இருந்தாய் அன்றோ)

————-

இருபத்து நாலாம் பாட்டில் –
அப்படியே செய்கிறோம் என்று பிரதிஞ்ஜை பண்ணின படியைக் கண்டு –
தங்கள் வந்த காரியத்தை மறந்து
தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

(தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு-பஞ்ச லக்ஷம் பெண்களை ஒரு சேரப் பார்த்த அழகு -யார் உயிர் பட்டது எனது உயிர் பட்டது போல் அவனுக்கு இங்கு)

இத்தால்
அர்த்திகளாகச் சென்றால் தம் தாமுடைய
புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வை லக்ஷண்யம் சொல்லுகிறது –

————-

இருபத்தஞ்சாம் பாட்டில் –
ஏதேனும் இப் பிரவ்ருத்திக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள் –

இத்தால்
ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி-துக்க நிவ்ருத்தியும்
அத் தலைக்கே பரம் என்னும் இவ் வர்த்தம் சொல்லுகிறது –

(தான் தீங்கு நினைத்த கம்சனைப் போக்கி-வருத்தமும் தீர்த்து மகிழ வைக்க வேண்டுமே)

———

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய -இதுவரை
மேல்
என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
அவனது பாரிப்பு கடல் போல் -நமது பாரிப்பு குளப்படி போல்
அவா அறச் சூழ்ந்தது போல் இங்கும்
அத்தைக் கண்டு மாலே என்று தொடங்கும் இறுதி ஐந்து பாசுரங்கள் )

இருபத்து ஆறாம் பாட்டில் –
மற்ற அபேக்ஷிதம் என் என்ன நோன்புக்கு வேண்டும் உபகரணங்களை தர வேணும் என்கிறார்கள் –

இத்தால்
துக்க நிவ்ருத்தியோபாதி போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது –

—————

இருபத்து ஏழாம் பாட்டில் –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –

இத்தால்
ப்ரஹ்ம அலங்காரரேன அலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது

————-

இருபத்து எட்டாம் பாட்டில் –
நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வியாஜத்தை இட்டு புகுந்தோம் அத்தனை
எங்களுக்கு அது உத்தேச்யம் அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யம் என்று தங்களுக்கு உத்தேசியமான புருஷார்த்த சித்திக்கு
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு –
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு
ப்ராப்ய பிரார்த்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –

இதுக்கு கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களை சொல்லிற்று யாயிற்று
இப் பாட்டில்
அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லுகிறது

—————

இருபத்து ஒன்பதாம் பாட்டில் –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் -என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்

இத்தால்
ஸ்வீக்ருத உபாயத்துக்கு பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது –

(இறைவா நீ தாராய் பறை -பிரார்த்தனை
உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று –புருஷார்த்த ஸ்வரூபம்)

————

முப்பதாம் பாட்டில் –
இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –

இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

———–

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –

அதாவது
அவதாரமே சர்வ ஸமாஸ்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகம் என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசி யுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

(இரக்கம் ப்ராப்யம் -உபாயம்
இனிமை ப்ராபகம் -உபேயம்
இச்சையே அதிகாரம்)

(இயம் ஸீதா மம ஸுதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||

இயம் கோதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||
நாளை வதுவை –கனாக் கண்டேன் தோழீ நான் -கேசவ நம்பியைக் கால் பிடித்து மிதுனமாக நமக்கு நித்ய அநுக்ரஹம் செய்து கொண்டுள்ளார்கள்)

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் ஏவகார சீமாட்டி-ஸ்ரீ திருப்பாவையில் ஏவகாரங்களும் உம்மைத்தொகையும் -அவற்றின் வியாக்யான ஸ்ரீ ஸூக்திகளும்–

March 7, 2025

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐ ஐந்தும் அறியாதார் வையம் சுமப்பதும் வம்பு
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி
பரமனடி காட்டும் வேதங்கள்
வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் வேதம்
கோதை தமிழ்-
ஐ ஐந்தும் ஐந்தும் -அர்த்த பஞ்சகம் -ஒவ்வொன்றிலும் ஐந்து உண்டே
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -இத்யாதி

ப்ரத்யகாத்மா –புபுஷு -முமுஷு -கேவலர் -முக்தர் -நித்யர்பிள்ளாய் -பேய்ப்பெண்ணே -புபுஷு
தேசமுடையாய் -முமுஷு
கோது காலமுடைய பாவாய் -கேவலர்
துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே -முக்தன்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்-நித்யர்

உபாயம் -கர்ம யோகம்- ஞான யோகம் -பக்தி யோகம் -பிரபத்தி -ஆச்சார்ய அபிமானம் -ஐந்தையும்
பல கறந்து -கர்ம யோகம்
நினைத்து -ஞான யோகம்
போதரிக் கண்ணினாய் -பக்தி யோகம்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் -பிரபத்தி
நானே தான் ஆயிடுக -ஆச்சார்யர் அபிமானியே இவ்வாறு இருக்க முடியும்

பல ஸ்வரூபம் -தர்மம் அர்த்தம் காமம் கேவலம் பகவத் ப்ராப்தி
தூயோமாய் வந்தோம் -தர்மம்
அம்பரமே தண்ணீரே சோறே -அர்த்தம் -பொருள்
மாதவிப் பந்தல் கீழ் -இன்பம் -போக அனுபவம் -காமம்
தத்வம் அன்று தகவு -கேவலம்
உன் மணாளனையும் தந்து –நீராட்டு -பகவத் ப்ராப்தி-உக்கமும் தட்டொளியும் கைங்கர்ய உபகரணங்கள்

விரோதி -ஸ்வரூப-பரத்வ விரோதி – புருஷார்த்த -உபாய -பிராப்தி
மாற்றாதே வந்து -ஸ்வரூப விரோதி
அபிமான பங்கமாய் வந்து -பரத்வ விரோதி -தேவோஹம் இல்லாமல்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -கைங்கர்யமே புருஷார்த்தம் -ஆகவே புருஷார்த்த விரோதி
உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் -உபாய விரோதி -நம்முடைய யத்னமே இல்லாமல் -ஏத்துகையே பிரயோஜனம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -அவன் ஆனந்தமே -பிராப்தி விரோதி

ஐ ஐந்தும் -அறிய மேல் ஐந்து-பிரமாண பஞ்சகம் -வதந்தி ஸகல வேதா – இதிஹாச புராணங்கள் முனைய -பாஞ்சராத்ர ஆகமம் -தர்ம சாஸ்திரம் அருளிச் செயல்கள் -மஹாத்மாக்கள் -வாசுதேவ சர்வம் இதி என்று இருப்பவர்கள்
மேலையார் செய்வனகள் -வேதம்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா -சரித்திரங்கள் -இதிஹாச புராணங்கள்
கானம் சேர்ந்து -தர்ம சாஸ்திரங்கள்
வந்து சேவித்து -ஆராதன முறைகள் -பாஞ்சராத்ர ஆகமங்கள்
முப்பத்தும் தப்பாதே -திவ்ய பிரபந்தங்கள்

வேதம் -முதல் ஐந்தும்
வல்லார்களைக் கொண்டு -இரண்டு பதங்கள் -அடுத்த பத்து
விண்ணோர்கள் -16-20
பெருமான் -21-25
திருப் பாதம் பணிந்து -26-30

தமிழ் மாலை முப்பதும் -தமிழிலே அருளிச் செய்து இருந்தாலும் மீண்டும் தமிழ் என்று அருளிச் செய்து -இனிமையும் நீர்மையும் தமிழ் அன்றோ

————

ஏவ காராம் – 1-தேற்றப் பொருளிலும் -2-இசைவுப்பொருளிலும் -3-உறுதிப்பொருளிலும் -4-சிறப்புப் பொருளிலும் -5 வினாவாகவும் -6-வியப்பாகவும் -7-உயர்ச்சியாகவும் உண்டே

தேற்றப்பொருளில்
நாராயணனே- 1- -சமிதை பாதி ஸாவித்ரி பாதி அன்றிக்கே தானே சென்று தலைக்கட்ட வல்லன் என்கிற உபாயத்தில் விருப்பம் இல்லாமை -உபாய நைரபேஷ்யம் -சொல்வதில் நோக்கு
நமக்கே -2-
முலை வழியே –12- கை வழி தவிர

இசைவுப்பொருளில்
கீழே -22- அந்த ராஜ்யங்களைக் கொடுத்துப் போங்கள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா என்று உன் ஸிம்ஹாஸனத்தின் கீழேயே

உறுதிப்பொருளில்
அடியே -29-ஸர்வாத்நா பர்யநு நீயமாநோ யதாநா ஸுமித்ரி ருபைதி யோகம் என்னுமா போலே

சிறப்புப்பொருளில்
உனக்கே -29-நீ உகந்த அடிமை செய்வோம்

வினாப்பொருளில்
வல்லீர்கள் நீங்களே -15-உன் வாசலில் வந்து எழுப்ப -சில்லென்று அழையேன்மின் -என்றது உன்னதன்றோ வெட்டிமை

வியப்புப் பொருளில்
நென்னலே -16 -உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றும் ஒரு நாளே

அம்பரமே -17 இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை

—————

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படியாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் – வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறேஅவதாரணத்துக்கு கருத்து-சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற- சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –

—————–

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )–ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் –அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்- அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –நமக்கே பறை தருவான்-உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை – சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்-

ஏவகாரத்தால்-உபாயாந்தரங்களையும் தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-ஈஸ்வரன் கர்ம அனுகுணமாக பலம் கொடுப்பான் அத்தனை அல்லது-கிருபா அனுகுணமாக பலம் கொடான் என்னும் இடம் தோற்றுகிறது

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது-மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-இத்தால்- உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக- அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

———————-

நாமும் –
அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இறே – இந்தப் பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்-நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு – உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது – ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –அதனாலே அலமருகிற நாமும் –நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு — இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்-அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே–ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்- உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது-அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இறே –த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறது –ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இறே –

————–

பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
அவனுடைய விஜயத்தைக் கேட்டு-கேசி வந்து கழியப் புக்கான் என்ற துணுக்கும் கேட்டு
கர வத அநந்தரம் சக்கரவர்த்தி திருமகனை-ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்-அணைத்தால் போலே நீயும் கிருஷ்ணனை அணைக்க-புறப்படுவாயோ -என்று சொன்னோம் –
அதுவும் உனக்கு கிருஷ்ண விரோதி பயம் தீர்ந்து- மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி ஆவதே -அழகிதாக உன்னை எழுப்ப வழி பார்த்தோம் – தொடை குத்தி உறக்கினோம் ஆகாதே-பேச்சின் இனிமையைக் கேட்டு இவள் வாய் திறவாதே கிடந்த வாறே
ஜாலக த்வாரத்தாலே பார்த்தார்கள் – அவனுடைய விஜயத்தை அனுசந்திக்கையாலே வந்த புகரை யடைய வடிவிலே காணும் படி கிடந்தாள்

——–

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
இவள் வாய் பேசாதே கிடக்கிற இது பொறுக்க மாட்டாமையாலே – மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் -என்கிறார்கள் –வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ
ஐஸ்வர்யம் மிக்காள் பந்துக்களை ஏன் என்னலாகாதோ – உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ -கண்ணும் செவியும் ஒக்க பட்டினி கொள்ள வேணுமோ – மதுரா மதுரா வாக்யா -என்று இறே இவள் பேச்சு இருப்பது -படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ-போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ-உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ-த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி-
எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும் நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ –துளம்படு முறுவல் -இவர்கள் ஜீவனம் –

துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள் கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த, மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.2-7-

கும்பகர்ணனும்
பிராட்டியைப் பிரித்த ராஜ துரோகியோடே கூட்டுகிறார்கள்
அவன் ஒருத்தியைப் பிரித்து வைத்து உறங்கினான் -நீ ஊராக பிரித்து வைத்து உறங்குகிறாய்-தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ-எங்களைப் பிரித்து கிருஷ்ண அனுபவம் செய்தது கும்பகர்ணனுடன் ஒக்குமே-ஒருத்தியை பிரித்தான் அவன் -நீயோ எங்கள் அனைவரையும் பிரித்தாயே

——–

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்-இத உபரி ம்ருத சஞ்ஜீவனம் ராம வ்ருத்தாந்தம் (பராசர பட்டர் முன்னுரை ராம திரு நாமங்களுக்கு )-என்றத்தைக் கேட்டும் –
ராம வ்ருத்தாந்தம் கேட்டதும் – உறங்குகைக்கு உறுப்பாயிற்றோ

நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து-பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே-வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்-
முலை வழியே –
கை வழி தவிர – நின்று பால் சோர -நினைவு பாராமையாலே-திருமலையிலே திரு அருவிகள் போலே பால் மாறாதே சொரிகை-இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு-உறுப்பாம் அன்று இறே இவன் எருமைகளை விட்டுக் கறப்பது
அது என் என்னில் கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே- பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-கன்றை அகல கட்டி வைப்பார்கள் –அத்தை நினைத்து -பாவன பிரகர்ஷத்தாலே – கன்று முலையிலே வாய் வைத்ததாகக் கொண்டு கை வழியும் அன்றிக்கே – கன்றின் வாய் வழியும் அன்றிக்கே முலை வழியே பால் சொரியா நிற்கும் –

———

வல்லீர்கள் நீங்களே –
இன்னம் உறங்குதியோ என்றும் –-வல்லை யுன் கட்டுரைகள் -என்று வெட்டிமை உங்களது அன்றோ -என்ன-உன் வாசலில் வந்து எழுப்ப-சில்லென்று அழையேன்மின் என்றது உன்னதன்றோ வெட்டிமை -என்ன-அது என் குற்றம் அன்று –-அதுவும் உங்கள் குற்றமே
நம்முடைய வார்த்தை கேட்டு உகக்குமிவள்-நம் வார்த்தை அசஹ்யமாம் படி இறே
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்தது -என்று உகக்க வேண்டி இருக்க அதிலே தோஷத்தை ஏறிட்ட உங்களது அன்றோ குற்றம் –உங்கள் பாசுரத்தை அனுபவிக்கிற என்னுடைய அனுபவத்துக்கு விரோதியைப் பண்ணி அதுக்கு மேலே என் மேலே பழியாம்படி வார்த்தை சொல்ல வல்ல நீங்கள் அன்றோ சமர்த்தர்கள் -என்ன -நான் உங்கள் வாசலிலே வந்து உங்களாலே படாதது உண்டோ -என்ன-அது சாத்தியம்– இது சித்தம் அன்றோ -பிரத்யஷத்துக்கு அனுமானம் வேணுமோ -என்ன-

நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –பிறர் குற்றத்தையும் தன்னுடைய பாப பலம் என்றான் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது-ஒருவனுக்கு வைஷ்ணத்வம் ஆவது ஸ்வ தோஷத்தை இல்லை செய்யாதே இல்லாததையும் சிலர் உண்டு என்றால் அத்தை இசைகையே ஸ்வரூபம் என்னும் வேதார்த்தம் சொல்லிற்று ஆகிறது-பர ஸ்துதி யோடே ஒக்கும் ஸ்வ நிகர்ஷம்(சொல்லிக் -கொள்வதும் சமமான கர்தவ்யம் பட்டர் சம்பாவனை செய்த ஐதிக்யம் )
அத் தோஷம் என் தலையிலே கிடக்கிறது -உங்களுக்கு இப்போது செய்ய வேண்டுவது என் என்ன-அரை க்ஷணம் தங்களுக்கு அவளை ஒழியச் செல்லாமையாலும் – அவளுக்கு தங்களை ஒழியச் செல்லாமையாலும் சடக்கெனப் புறப்பட்டுக் கொண்டு நில் என்கிறார்கள்

———-

எல்லே இளங்கிளியே –
கிளியை வ்யாவர்த்திக்கிறது -தாங்கள் கிளிகள் -இவள் இளங்கிளி-கிளி இவள் பேச்சுக்கு ஒப்பாம் இத்தனை –-பருவத்துக்கு ஒப்பு அன்று -என்கை-யாழில் இட்டுப் பாடி – அது பண் பட்டு இனிதானவாறே
தம் தாம் மிடற்றிலே மாற்றுவாரைப் போலே தங்கள் பேச்சுக்கு இவள் பேச்சு-திருவான மிடறும் பாட்டும் இருந்தபடி என் தான் – பேச்சில் இனிமை இருந்தபடி – எழுப்புகை சால தர்ம ஹானியாய் இருந்ததீ – பேச்சில் இனிமையாலே -எல்லே -என்று ஆச்சர்யப்படுகிறார்கள்-மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே ––திரு நெடும் தாண்டகம்–15–

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே-திருவாய்மொழி-9-7-11-

—————

கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே-அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் –
இன்னது பிடிப்பான் -என்னுமா போலே-அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் -இத்தால் – சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே -இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-ஸ்ரீ நந்தகோபர் தாழ்த்தார் –கம்சன் வெட்டியன் –காப்பாரும் இல்லை –
என்று நாங்கள் வயிறு எரிந்து இருக்க –எங்கள் வயிறு எரிதல் தீர்க்கிறவன் அன்றோ –உன்னைக் காவலாக வைத்தது உகவாதார் புகுராமைக்கும் உகப்பாரை புகுரா விடுகைக்கும் அன்றோ – ஆன பின்பு அவனை ஆசைப்பட்ட எங்களுடைய ஆர்த்தியையும் ஆராய வேண்டாவோ –

கோயில் காப்பானே என்று ஷேத்ராதிபதியைச் சொல்லி-வாசல் காப்பானே என்று திரு வாசல் காக்கும் முதலியைச் சொல்லிற்று-யாராலே விக்னம் வருகிறதோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று
தேவதாந்த்ரங்கள் காலில் விழுமவர்கள் பரிவர் காலிலே விழச் சொல்ல வேணுமோ-கொடியும் தோரணமும் அசேதனம் ஆகையால் அழைக்க மாட்டாது –உள்ளுக் கொண்டு புகாது – நீ சேதனனான வாசி நாங்கள் பெற வேண்டாவோ –கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள- அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-கோயில் காப்பானும் -எம்பெருமானாரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
ஸ்ரீ மன் ஸ்ரீ ரங்க ஸ்ரீ ரியம் அனுபத்ரவாம் அனுதினம் சம்வர்த்தய –
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
-சகல திவ்ய தேசங்களையும் உத்தரித்து அருளினவர் –கொடியும் தோரணமான வாசல் பரமபத வாசல்
இதுவும் எம்பெருமானார் ஆளுக்குகைக்கு உட்பட்டதே –எம்பெருமானார் திருவடிகளை பெறாதாவர்களுக்கு அரிது என்னும் இடம் காட்டப்பட்டது

நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ-அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம்-ஒரு நாளே -என்றார்கள் –-ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –திரு முளை யன்று-நேற்று கையார் சக்கரம் என்னுமா போலே-மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-ஆஸ்ரித பரதந்த்ரனாய்-சுலபனாய் ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
எம்பெருமான் நென் நேற்றே பறை தருகிறேன் என்று மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –பவிஷ்ய ஆச்சார்யர் அவதாரம் பற்றி நென்னலே வாய் நேர்ந்தாரே ஆழ்வார் –

———

அம்பரமே தண்ணீரே சோறே –புடைவையோடு-தண்ணீரோடு-சோறோடு வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –-ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –கொடுத்து அல்லது தரியாத உம்முடைய வாசலிலே நாங்கள் வந்தது எங்கள் குறை தீர்க்கைக்காகவோ – உம்முடைய குறை தீர்க்கைக்கு நாங்கள் வந்து நிற்க நீர் உறங்குவது என்-தன் பக்கல் கார்யம் கொள்ளுமவர்களை உதார என்று கிருஷ்ணன் சொல்லுவது உம்முடைய வயிற்றில் பிறப்பால் அன்றோ -இவர் மகன் தூரஸ்தன் ஆனாலும் பேர் சொல்ல புடவை வழங்குகிறதும் –இனிது மறித்து நீரூட்டுகிறதும்-வேண்டு அடிசில் உண்ணும் போதுகளிலே சோறு வாங்கி இடுகிறதும் இவர் வயிற்றில் பிறப்பால் இறே ஹித புத்தி இறே பிதாவின் பக்கலில் உள்ளது –-பெற்றாலும் அங்கனேயோ என்று பெறா விட்டாலும் தரிக்கலாமவையோ நீர் கொடுப்பது-அர்த்தித்தவர்களுக்கு ரூப சாதனமான வஸ்திரம் – தாரகமான தண்ணீர் – போஷகமான சோறு – வேண்டுவார்க்கு வேண்டுவது எல்லாம் கொடுக்கிற உமக்கு நாங்கள் வேண்டிற்று எல்லாம் தர வேண்டாவோ –அம்பரமே என்கிற அவதாரணத்தாலே ஓர் ஒன்றையோ இவர் கொடுக்கத் தக்கது என்னும் படி இருக்கையும் – அது தான் புஷ்கயசஸ் ஸூ க்கு கொடுக்கை இன்றிக்கே- பல அபிசந்தி ரஹிதமாகக் கொடுக்கையும் கர்த்தவ்யம் என்கிற பிரதிபத்தியோடே -தன் பேறாக ஆன்ரு சம்சயத்தாலே கொடுக்கையும் –வேண்டுவார்க்கு வேண்டுவது கொடுக்கிறவர் ஆகையாலும் – அறம் செய்கிறவர் ஆகையாலும்–எங்களுக்கு ஸ்வாமிகள் ஆகையாலும்-நீர் தாம் கோபாலர் ஆகையாலும் ஜீவ லோக ரக்ஷணம் ஸ்வ ஜன ரக்ஷணம் – ஸ்வ தர்ம ரக்ஷணம் பண்ணாதே உறங்கக் கடவீரோ –ஆத்மா ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும் தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்
தத்தேதுவான கைங்கர்யத்தையும் ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி-தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள
நமக்கு வகுத்த சேஷியாய் ஆனந்த நிர்ப்பரனாய் ஆஸ்ரித ரஷகனான ஆசார்யனே -நீ உணர வேணும் –

அம்பரம் தண்ணீர் சோறு
பரம ஆகாசம் -விரஜை -அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் -ப்ரஹ்ம அனுபவம் –உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று என்றே-

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே--பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே-பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது
-குல விளக்கே – இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே- பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே-இரண்டுக்கும் கடவ அவன் உணர்ந்தால் ஒன்றுக்கும் கடவ நீ உறங்கக் கடவையோ – வஞ்சிக் கொம்பு போலே இருந்துள்ள ஸ்திரீகளுக்கு எல்லாம் தலையானவளே-கொழுந்தே-பெண்களுக்கு ஒரு குறை வரில் உன் முகம் அன்றோ வாடுவது –நாரீணாம் உத்தமா என்கிற பதம் பெறும் போது அவள் படி உனக்கு உண்டாக வேண்டாவோ-தன்னை நலிகிற ராக்ஷஸிகளுக்கு பவேயம் சரணம் ஹிவ-என்று அவள் சொன்னால் போலே ஆர்த்தைகளாய் வந்த எங்களையும் அஞ்சாதே என்ன வேண்டாவோ –ஆயர் கொழுந்தையும்-ஆய்ப்பாடிக்கு அணி விளக்கையும் – நீ கொழுந்தும் விளக்குமானால் அனுபவிக்கத் தர வேண்டாவோ –எம்பெருமானை பெற்ற ஸ்திரீகளுக்குள் கொழுந்தே இவள்-அதிதி -பெற்ற அன்றே அழுது–கௌசல்யை–தேவகி–அனுபவம் இவளுக்கு தான் -தெய்வ நங்கை எல்லாம் பெற்றாளே-குல விளக்கே -எங்களுக்கு மங்கள தீபம்–பதார்த்த தன்னுடைய தர்சனம் ஹேது போலே–உன்னையும் கண்ணனையும் கொடுக்க

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே-இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி-இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ உறங்காது ஒழிய வேணும்

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
உனக்கு பவ்யனான தம்பியும் -அவனுக்கு பவ்யனான நீயும் உறங்காது ஒழிய வேணும் –உன்னுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிறவனும் –அவனுடைய ஸ்பர்சத்தாலே உறங்குகிற நீயும் –அவன் பாரதந்தர்யத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும் –இவன் ஆற்றாமையால் கட்டிக் கொண்டு கிடக்கும் –நீ உன் ஸ்வரூபத்தால் பாரதந்தர்யம் கொண்டாட நாங்கள் இழந்தே போம் எத்தனையோ – திரு வனந்த ஆழ்வானுக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம் இறே –
சென்றால் குடையும் -இத்யாதி-படுக்கையில் சாய்ந்தார் உறங்கும் அத்தனை போக்கி
படுக்கைக்கு உறக்கம் உண்டோ-அவன் படுக்கையான நீ உணர்ந்து எங்கள் படுக்கையையும் (அயனம் ஆஸ்ரயம் அன்றோ )உணர்த்தி எங்களுக்குத் தாராய்
பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்(திருமாலை )-இப்போது கிடந்தது உறங்க –
நாங்கள் அர்த்திகளாய் வந்து எழுப்பின பின்பு எழுந்து இராதே நாங்கள் பட்டது எல்லாம் நீ எங்கள் வாசலிலே பட விறே புகுகிறாய்

—————–

கலியே –
மிடுக்கை உடையவனே –அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கை ஒழிய உண்டோ –
அரணிமையை-கல் மதிள் போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களை – உடையவன் -ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேரமா போலே உன் மிடுக்குக்கு எங்கள் பல ஹானியும் நேர் அன்றோ –அபலைகளான எங்களுக்கு கிருஷ்ண பலா -என்கிற உன் மிடுக்கு அல்லது உண்டோ –கலி -என்று மிகுதியாய் – சகல தேவதைகளையும் ரஷிக்கையாலே சர்வாதிகனானே–செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா – பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –இத்தால்-பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –

இப்போதே –
பிற்றைப் போதைக்கு இராத எங்களை –அனந்தர க்ஷணத்தில் ஊராரும் இசையார் –
நாங்களும் ஜீவியோம் –

திருவே –எம்மை நீராட்டு
எங்களையும் அவனையும் ஒரு துறையிலே சேராத போது-நீ திருவாகைக்கு உபாயம் உண்டோ-ஸ்ரீயதே ஸ்ரயதே -என்று இறே ஸ்ரீ யாயத்து – ஸ்வ தந்திரரோடு பரதந்த்ரரோடு வாசி இல்லை – இவள் கை பார்த்து இருக்க வேணும்-உன் மணாளனை எம்மை-உனக்கு ஒருக்கால் எழுதித் தந்து பிரதி க்ஷணம் எழுத்து வாங்குகிறவனை – நீராட்டம் அமைத்து வைத்தேன் -என்று உனக்கும் அவனுக்கும் கூட குளிக்கச் சமைத்த நீரிலே எங்களையும் கூட முழுக்கூட்டு-உன் மணாளனையும் தந்து நீராட்டு என்கிறார்கள்-பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –

———

மாற்றாதே பால் சொரியும்-
இட்ட கலம் நிரம்பிற்று –-கலம் இடுவார் இல்லை என்னாக் கண் அடையாது –முலைக் கடுப்பாலே ஊற்று மாறாதே பால் சொரியும் அத்தனை-ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று
நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும் நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே கோப குலமும் கோபாலத்வமும்- -பரம பதத்தில் வந்தோமோ –வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ-நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-ஆற்றப் படைத்தான் மகனே –அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த-ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை –
ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும் உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்-உனக்கும் எங்களுக்கும் உண்டான சம்பந்தத்தால் பெறில் பெறும் அத்தனை என்று-உன் தன்னைப் பிறவி பெறும் தனை -என்று அருளிச் செய்தாள் இறே-நந்த கோபன் குமரன் -முதலில் -இங்கு ஆற்றப்படைத்தான் மகன் -மேல் ஒருத்தி மகனாய் பிறந்து -ஒருத்தி மகனாய் வளர்ந்து

ஆற்றப்படைத்தான் மகனே -திருவாய்ப்பாடியில் அனைவருக்கும் பொருந்தும்
ஆகவே கண்ணனுக்கே அசாதாரணமான மூன்று அடையாளங்கள் –
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -கண்டவர் பேச்சைக் கெடுக்காமல் கண்ட எனது பேச்சை கேள் -திருவடி மித்ர பாவேனே -நத்யஜேயம் கதஞ்சன

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே எல்லாரும் காணலாம்படி-
அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து – சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –சம்சாரிகளைப் போலே பிறக்க பிறக்க கறை ஏறுகை அன்றிக்கே
சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை-லோகத்தில் தோற்றின பின்பு நிறம் பெற்ற படி –அனுக்ரஹ கார்யம் ஆகையால் பிறக்க பிறக்க ஒளி மிகா நிற்கும்-நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே –உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே- மனுஷ்யத்தவே பரத்வம்-இந்த லோகத்தில் சஷூர் விஷயமாம் படி அவதரித்தவனாய் சிர காலம் இருந்து தேஷிஷ்டனானவனே- ஆஸ்ரித பஷ பாதம் லோகத்திலே பிரசித்தமாம்படி நின்று தேஷிஷ்டனானவனே–ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்-இன்னார் தூதன் என நின்றான்ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -என்னக் கடவது இறே–பகல் விளக்கு அங்கு –பாற் கடலில் கடல் விளக்கு – இங்கு தானே சுடர் விளக்கு

நாங்களும்
உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று-தேகாத்ம அபிமானத்தையும்
ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும்-அந்ய சேஷத்வத்தையும் -ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும்-பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும்-உபாயாந்தர உபேயாந்தரங்களையும் விட்டு இவற்றை நீ கொடுத்தாலும் பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று உன் திருவாசலிலே வந்து –

———-

என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்-ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் — ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை-(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ -உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –-)இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய வீர சரிதத்தையே ஏத்தி புருஷார்த்தத்தை லபிக்கைக்காக சத்வம் தலை எடுத்த இன்று உன் கை பார்த்து இருக்கும் நாங்கள் வந்தோம் -நீ கிருபை செய்து அருள வேணும் –வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது – பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது-உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே-வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் – இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்-சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் – வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே-இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்-மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம் ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –

————

திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –-பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –திருவுக்கு தக்க செல்வம்-யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற படியே
பிராட்டி ஆசைப்படும் சம்பத்து – திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே
ஸ்ரிய ஸ்ரியம் (ஆளவந்தார் )-ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத் 
பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ

சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே-ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் – கப்பம் தவிர்க்கும் கலியே (சேவகமும்)என்றதுவும்

வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து – கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம் பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்-வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து-நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 ) உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல் விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )-வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –-ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது-விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —

———————-

அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
அபிமான ஸூன்யாராய் வந்து-சிம்ஹாசனத்தின் கீழே திரள வந்து அணுக்க ஓலக்கமாய் இருக்கை –கீழே-அவதாரணம்(கீழேயே )-அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே போல் –புத்தியால் அநந்யார்ஹ சேஷத்வம் உணர்வதையே இங்கும் சொல்லிற்று-தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து உன் திருவடிக் கீழேயே வாழ்ச்சிநின் பள்ளிக் கட்டில் கீழே – அந்த ராஜ்யங்களைக் கொடுத்து- போங்கோள் என்றாலும் பழைய எளிவரவை நினைத்து -அவை வேண்டா என்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே –

நாங்களும்
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தை விட்டும்-வேறு உண்டான போகங்களையும் விட்டும்
உன்னுடைய குணஜிதராய்க் கொண்டு வந்தோம் –அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்
அநாதி காலம் பண்ணிப் போந்த தேகாத்ம அபிமானத்தை விட்டு தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –நாங்களும் -ஒரு ப்ரஹ்ம அபிமானத்தோ பாதியும் போந்து இருக்கிற ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பந்துக்களுடைய நிரோதத்தாலே கிருகங்களை விட்டுப்
புறப்பட ஒண்ணாத அருமையையும் வேறு உண்டான போகங்களையும் விட்டு
அம்புக்கு தோற்றாரோ பாதி உன் அழகுக்குத் தோற்று வந்து புகுந்தோம் 

——————

மாலே-இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்-மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —நோற்கவும் ஷமன் அன்றிக்கே-நாங்கள் வந்து எழுப்பும் அளவும் எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –-அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு-யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு

பாஞ்ச சன்னியமே-போல்வன சங்கங்கள் –
இடமுடைத்தாய் உன் திரு மேனிக்குப் பகைத் தொடையாம்படி-பாலைத் திரட்டினால் போலே இருக்கிற நிறத்தை யுடைத்தாய்-ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -என்கிறபடி அன்றிக்கே நின்று முழங்கக் கடவதுமாய்-பல சொல்லி என் -உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன பல சங்கங்கள் வேணும் என்கிறார்கள் –இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது

சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ – பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம் முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

பல்லாண்டிசைப்பாரே
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போவார் வேணும்-கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –சத் சஹாவாசம் வேணும் –

கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –-எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-

விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்

பறை கறங்க கூத்தாடின போது திரு வரையில் கட்டின பறையையும்-திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்-திருப் பல்லாண்டு பாடுகைக்கு-அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்-பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்-விளக்குக்கு -மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்-கொடிக்கு -பெரிய திருவடியையும்–விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள்-கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்கொடி -சித்தாந்த விஜய த்வஜம்விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை-

ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.-ஆறு விஷயங்கள்- –அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள்-போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை பல்லாண்டு இசைப்பார் கோல விளக்கு கொடி விதானம் உக்கம்
தட்டொளி என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே –
என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.

———

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்-பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –-அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )-காப்பே

தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –-அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-திரு இலச்சினையே

தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது —திரு மந்த்ரமே-மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே – திருமந்த்ரத்தை சொல்லுகிறது –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம் –மேல் தோன்றிப் பூ- ஆழ்வார் )-த்வயமே-ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –

பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்-அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்சரம ஸ்லோகமே-பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –

திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே- ஆகையால் –பல் கலனும் -என்கிறார்கள் –

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற — திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இறே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்-திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க

கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –ஆக இரண்டு பட்டாலும் சாம்யா பத்தியும் குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து--வாய் பாட–உடம்பு கூட–நெஞ்சு குளிர–கூடிக் –குளிர்ந்து–குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே-நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா- அஹம் அன்னம் –இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

முழங்கை வழி வார கூடி இருந்து குளிர்ந்து என்பதின் ஸ்வாரஸ்யம், முக்தபோக அனுபவத்தில் , அன்நாதனாக அவனிருக்க, அன்னமாய் இவர்கள் நின்று, அவனானந்தம் கண்டு இவர்கள் ஆனந்திப்பதையே முழங்கை வழிவார என்கிறாள் .
அனுபவம் நித்யமாய், எப்போதும் நடவா நிற்பதை முழங்கை வழிவார என்று continuous tense ல் அமைத்தமை நோக்கத்தக்கது.-பாலே போல் சீரை அனுபவிக்க முதல் நிலை பசி பர பக்தி. அது இன்னும் அதிகமாக அதிகமாக பரஞான பரம பக்தியாக பழுக்கிறது. அதுபோல அனபவாதிசயமும் விசத, விசத தர, விசத தமமாக பரார்த்த ஆனந்தம்; பரார்த்த கைங்கர்யம்; குணானுபவமே புருஷார்த்தமாக கனிவது சொல்லப்பட்டது.

———–

அறிவொன்றும் இல்லாத 

1-அறிவில்லை
2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை-இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –நோற்ற நோன்பிலேன்-குளித்து மூன்று-ந தர்ம நிஷ்டோஸ்மி

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி-உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ-சர்வ நிரபேஷன் -என்கை-இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –
இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை – எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால் உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –1-குறைவு இல்லை-2-குறை ஓன்று இல்லை-3-குறை ஒன்றும் இல்லை-1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –-2-ஸாவதியும் அன்று –-3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்-அமுதனார் –நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் –உன் தன்னோடு-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்-நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
ஆனபின்பு இப்பிறவி -விதி நிர்மித மேத தன்வயம் -என்கிறபடியே மேடு படக் கண்டது பள்ளத்தை நிரப்ப அன்றோ-உறவை ஒழிக்க ஒழியாதே–பிரகாரத்தை ஒழிய பிரகாரி உண்டோ-ஸ்திதி உண்டோ -பிரகாரம் நம் போல்வார் -பிரகாரி -நன்றாக நான் -நான் இல்லை என்றால் நீ இல்லையே-நாரம் -இருந்தால் நாராயணன்-நடுவில் வந்த–இடையனாய் வந்த உறவை சொன்னோம்–ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் சொல்ல வில்லை-இடைக்குலத்தில் நாங்கள் –இடையிலே வந்த உறவு–இடைத்தனத்தில்–அறிவு இல்லாதவர் மறக்கலாம்

————

கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வ பாவங்களைச் சொல்லி ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு தலைக் கட்டுகிறது –முதல் பாட்டில் சங்க்ரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்கள் இரண்டையும் மேல் இரண்டு பாட்டாலும் விவரிப்பதாக இப் பாட்டில் பிராபக ஸ்வரூபத்தை விவரிக்கிறார்கள்

——–

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்-போக்யமுமாய்-பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று
அவதாரணத்துக்கு கருத்து – வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
-சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்-அடியே –போற்றும்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து
பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை-உன்னடியே போற்றும்-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி – அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே (திருமார்பை ஆசைப்படும் அத் திரு-திருவடியை ஆசைப்படும் இத் திரு )-உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ – காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-பொற்றாமரை அடி அன்றோ – சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்-ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-உன் பொற்றாமரை அடியே-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால்-கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே-அழித்தாய் உன் திருவடியால் –கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக-தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 ) இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்-ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம் அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை-காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ ஸ்வாமியாகவும் நாங்கள் ஸ்வம் ஆகவும்-இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்-ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக-சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் – ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய் சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்- அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை-தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் – இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே-உற்றோமே யாவோம்-சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் – பண்டை நாள் திருவாய் -எல்லா உறவின் காரியமும் நீயே)நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி) அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் ) நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை ) நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும் (அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் ) நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் ) கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும் -எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )-விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )

உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே-பத்து மாசம் பிரிந்து இருத்தல் -(சீதாபிராட்டி )
பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -(பரதன்)-பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது (நம்மாழ்வார்)-ஏழு ஏழு பிறவிக்கும்-இங்கே பிறந்தாலும் ஓக்கப் பிறக்க வேணும்
கிருஷ்ணனும் பெண்களுமாய் புறப்படில் அமையும்-அவனும் எதிர் சூழல் என்று இவர்களைப் பெற வேணும் என்று முற்கோலிப் பிறவா நிற்கும் என்றுமாம்
இளைய பெருமாள் காட்டிலும் படை வீட்டிலும் அடிமை செய்தால் போலே
தேவத்வே தேவ தே ஹேயம் -மனுஷ்யத்வே ச மாநுஷீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-ஆக வேணும் என்கிறார்கள்-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து-நீ உகந்த அடிமை செய்வோம் –
உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து-தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –ஆட் செய்வோம்-அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது –ஆட் செய்யும் இடத்தில் எங்களுக்கு உறவை அறிவித்து அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்-உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது-மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் – என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே-கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே
மங்களா சாசனத்துக்கு பலமாக அவன் கொடுக்க வேண்டியதும் இவர்கள் கொள்ள வேண்டியதும் மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் –என்கையாலே ரஜஸ் -தமஸ் ஸூ க்களாலே கலங்கி தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள் அபேஷித்தாலும் ஹித பரனான நீ
கேள்வி கொள்ளவும் கடவை அல்லை கொடுக்கக் கடவையும் அல்லை – என்றது ஆய்த்து –

1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ) கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –

நாராயணனே நமக்கே தருவான் – என்றது முதல் பாசுரம்.-உனக்கே நாமாட்ச் செய்வோம் – 29 ஆம் பாசுரம். இத்தால் நாராயணனே நமக்கே – உனக்கே நாம் = நாராயணனே உனக்கே நாம் என்றாகிறது.

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே – அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –இங்கு – பிற்பட்ட காலத்திலே -என்னுதல் -சம்சாரத்திலே -என்னுதல்-அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –

1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது

6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு

11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு

வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –

17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்

22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –

27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –

ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகன் என்றும்
ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –

—————

நாச்சியாரும்‌ பெரியாழ்வாரும்‌ வடபெருங்‌ கோயிலுடையானும்‌ கலந்து வாழும்‌ வில்லிபுத்தூர்‌ பொன்னும்‌, முத்தும்‌, மாணிக்கமும்‌ பதித்துச்‌ செய்த அணிக்கு நிகராய்‌ ஒளிர்கின்றது என்று உணர்வோர்‌ உளர்‌.
குறித்தொருவர்‌ கொண்டாடும்‌ கொள்கைத்‌தோ கோதை
நிறுத்தவூர்‌ விண்டுசித்தர்‌ நீடூர்‌–பிறப்பிலியூர்‌
தாழ்வில்லி புத்தூர்‌என்‌ றைவர்க்குத்‌ தானிரந்தான்‌
வாழவில்லி புத்தூர்‌ வளம்‌
-என்று பிள்ளைப்‌ பெருமாளையங்கார்‌ கூறும்‌ கூற்று இதை
நிலை நிறுத்தும்‌. (நூற்றெட்டுத்திருப்பதி அந்தாதி, ப: 108),

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்ரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆடவும் கண்டேன் அன்றிப்பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஒட்டேன் மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக் கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே – 3-4-5-

மற்றொருவற்‌ கென்னைப்‌ பேசவொட்டேன்‌ மாலிருஞ்சோலை யெம்மாற்‌ கல்லால்‌
(பெரியாழ்வார்‌ திருமொழி -3-4-5-
மானிடவர்க்‌ கென்று பேச்சுப்படில்‌ வாழகில்லேன்‌- கண்டாய்‌ மன்மதனே (நாச்சியார்‌ திருமொழி 1-4-3-)

சிந்தூரம் இலங்க தன் திரு நெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக் குழலும்
அந்தரம் முழவத் தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் -வளை கோல் வீச
அந்தம் ஒன்றில்லாத ஆய்ப் பிள்ளை அறிந்து அறிந்து இவ்வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழி 3-4-6- –

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத் தெருவே போதாரே—11-4-

ஆண்டாள்‌ வில்லிபுத்தூர்‌ விளக்கு – அணிவிளக்கு – சுற்றும்‌ எரியும்‌ விளக்கு – பெரியாழ்வாரின்‌ குலவிளக்கு – குத்துவிளக்கு – இறுதியில்‌ குன்றின் மேலிட்ட விளக்காக விளங்கியமை. வேயர்‌ பயந்த விளக்காகிய ஆண்டாள்‌, ஆயர்‌ குலத்தில்‌ தோன்றிய கண்ணனாகிய அணி விளக்கின்‌ வனப்பு வீரம்‌, உயர்வு முதலியவற்றால்‌ ஈர்க்கப்பட்டு அவனை அணுகி இறுதியில்‌ அன்னவனோடு கலந்தாள்-கோதை தமிழ்‌- கோதுஇல்‌ தமிழ்‌ – இன் தமிழ்‌-‘ வண் தமிழ்‌. பிற ஆழ்வார்களை விஞ்சும்‌ தமிழ்‌. இவருடைய காதல்‌ பள்ளமடையாகும்‌.

*பேச்சு அரவம்‌ கேட்டிலையோ” என்றது விசேஷமான கருத்தை யுடையது. சேட்பதில்‌ ரஸமில்லை; பேச்சிலிருந்து தோன்றுகிற (அரவம்‌) த்வனிப்‌ பொருளைக்‌ கேட்டுணர்‌வது தான்‌ சுவை மிக்கது என்று ஆண்டாளே காட்டியிருக்‌றாள்-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

—————

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை-உபன்யாசங்களில் இருந்து சாரம்-

January 20, 2025

காத்யாயனி மஹாமாயே மஹாயோகி³ன்யதீ⁴ஶ்வரி .
நந்த³கோ³பஸுதம்ʼ தே³வி பதிம்ʼ மே குரு தே நம꞉ .
இதி மந்த்ரம்ʼ ஜபந்த்யஸ்தா꞉ பூஜாம்ʼ சக்ரு꞉ கமாரிகா꞉ .. 4..

ஏவம்ʼ மாஸம்ʼ வ்ரதம்ʼ சேரு꞉ குமார்ய꞉ க்ருʼஷ்ணசேதஸ꞉ .
ப⁴த்³ரகாலீம்ʼ ஸமானர்சுர்பூ⁴யான்னந்த³ஸுத꞉ பதி꞉ .. 5..

உஷஸ்யுத்தா²ய கோ³த்ரை꞉ ஸ்வைரன்யோன்யாப³த்³த⁴பா³ஹவ꞉ .
க்ருʼஷ்ணமுச்சைர்ஜகு³ர்யாந்த்ய꞉ காலிந்த்³யாம்ʼ ஸ்னாதுமன்வஹம் .. 6..

நத்³யாம்ʼ கதா³சிதா³க³த்ய தீரே நிக்ஷிப்ய பூர்வவத் .
வாஸாம்ʼஸி க்ருʼஷ்ணம்ʼ கா³யந்த்யோ விஜஹ்ரு꞉ ஸலிலே முதா³ .. 7..

ப⁴க³வாம்ʼஸ்தத³பி⁴ப்ரேத்ய க்ருʼஷ்ணோ யோகே³ஶ்வரேஶ்வர꞉ .
வயஸ்யைராவ்ருʼதஸ்தத்ர க³தஸ்தத்கர்மஸித்³த⁴யே .. 8..

ஸ்ரீ மத் பாகவதம் -10-22-காத்யாயினீ விரதம் பற்றிச் சொல்லும்

ஸ்ரீ சுகர் , பரீக்ஷித்துக்கு மேலும் சொல்கிறார்.
கிருஷ்ணா….கோபிகைகள் காத்யாயினி வ்ரதம் அனுஷ்டித்ததையும்,
யமுனையில் வஸ்த்ரமில்லாமல் குளித்ததால்,தேவதைகளுக்குச் செய்த அபசாரம் என்று,
நீ, அவர்களுக்கு உணர்த்தி, அந்தப் பாபம் போக, உன்னை வந்து வணங்கி
வஸ்த்ரங்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னதையும் விவரிக்கிறார்.

ஹேமந்த ருதுவான மார்கழி மாதம் முதல்வாரத்தில்,
கோபிகைகளான கன்னிகைகள் —–உன்னைப் பதியாக அடைவதற்காக,
காத்யாயினி வ்ரதம் அநுஷ்டித்தார்கள்.
மார்கழி மாசத்தில், விடியற்காலையில் எழுந்து, யமுனையில் நீராடி,
அங்கு களிமண்ணால் காத்யாயினி உருவத்தைச் செய்து, சந்தன, குங்கும
த்ரவ்யங்களை இட்டு, ஆபரணங்களால் அலங்கரித்து,
கந்த புஷ்பங்களைச் சாற்றி, அக்ஷதை, தூப தீபங்களைச் சமர்ப்பித்து,
தேங்காய், பால் போன்றவைகளால் பிரசாதம் செய்து,
அதை -நைவேத்யம் செய்து, அர்ச்சித்து,
“ஹே….காத்யாயினி……மஹாமாயே….ஈஸ்வரி….
நந்தகோப குமாரனான ஸ்ரீ கிருஷ்ணனை, எங்களுக்குப் பதியாக அளிப்பாய் ..
உனக்குப் பல நமஸ்காரங்கள்…..” என்று சொல்லி,
பகல் ஒருவேளை மட்டில் ஸாத்விக ஆகாரமான
அக்னியில் சமர்ப்பிக்கப்படும் “சாரு ” போன்ற கஞ்சிப் பாயசத்தை அருந்தி,
இப்படியே பத்ரகாளியையும் பூஜித்து, தினந்தோறும் இப்படிப் பூஜை செய்து,

மாதக் கடைசியில், ——-மார்கழி நோன்பு எனச் சொல்லப்படும்
இதன் முடிவில், வ்ரதம் முடியும் நாளில், விடியற்காலையில்,
உன்னை ஸ்மரித்துக் கொண்டும், உன் கீதங்களைப் பாடிக் கொண்டும்,
தங்களுடைய வஸ்த்ரங்களை யெல்லாம் யமுனைக் கரையில் வைத்து விட்டு,
யமுனை நதியில் இறங்கி ,கடுமையான குளிரில் தீர்த்தமாடினார்கள்.

இதை அறிந்த நீ, அவர்களுக்கு அநுக்ரஹம் செய்யத் தீர்மானித்தாய்

ஹே மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா சேருர் ஹவிஷ்யம் புர்ஜானா காத்யாயனி யர்ச்சன விரதம்

ஹேமந்தருவின் முதல் மாதத்தில் நந்தனுடைய ஆயர்பாடியில் உள்ள கன்னிகைகள் ஹவிஸ்ஸை
உணவாகக் கொண்டு காத்யாயினியைப் பூஜிக்கும் விரதத்தை அனுஷ்ட்டித்தார்கள்

ஆப் லுத் யாம்ப ஸி காளிந்த்யா ஜலாந்தே சோதயேருணே க்ருத்வா ப்ரதி க்ருதம் தேவீம் ஆனர்ச ந்ருப ஸை கதிம்

அருணோதயத்தில் யமுனை நதியில் நீராடி நீரின் கிட்டே மணலினால் தேவியின் உருவத்தைச் சமைத்து அர்ச்சித்தார்கள்

கந்தர் மால்யை ஸூரபி பிர் பலி பிர் தூப தீபகை உச்சா வசைது சோபஹார ப்ரவாள பல தண்டு லை

மணமுள்ள புஷ்ப சந்தனங்களால் அர்ச்சித்தும் தூப தீபங்கள் காட்டியும் பலிகள் உபகாரங்களாய்
சிவந்த பழங்களும் ரிஷிகளும் கொடுத்தார்கள்

காத்யாயனி மஹா மாயா மஹா யோகின் யதீஸ்வரி நந்த கோப ஸூதம் தேவி பதம் மே குருதே நம

அவர்கள் செய்த ஸ்தோத்ரம் -மஹா மாயையான ஸ்வரூபமாயும் மஹா யோகினியாயும்
எல்லாவற்றுக்கும் மேலான காத்யாயினி தேவியே உனக்கு நமஸ்காரங்கள் -நந்தகோபன் குமரனை எனக்குப் பதியாகச் செய்து அருள்

இதி மந்த்ரம் ஜபந்த்யஸ்தா பூஜாம் சக்ரு குமாரிகா ஏவம் மாஸம் வ்ரதம் சேரு குமார்ய க்ருஷ்ண சேதஸ

இந்த மந்த்ரத்தை ஜெபிப்பவர்களாய் கன்னிகைகள் பூஜை செய்தார்கள் –
இவ்விதம் கிருஷனையே மனதில் உடையவர்களாக பூஜை செய்தார்கள்
ஒரு மாதம் விரதம் அனுஷ்ட்டித்தார்கள்

பத்ர காளீம் ஸமானர்சு பூயான் நந்த ஸூத ப்பகு யுஷஸ் யுத்தாய கோத்ரை ஸ்வைரஸ் யோன்யா பத்த பாஹவஸ்

நந்தகோப குமரன் பதியாக வேண்டும் என்று பத்ரகாளியை ஆராதித்தார்கள்-

தினம் தோறும் யமுனையில் நீராடப் போகும் பொழுது கிருஷ்ண நாமத்தை உரத்த குரலில் பாடிக் கொண்டும்
ஒருவரை ஒருவர் கை கோர்த்துக் கொண்டும் சென்றார்கள் –

கதி -அயன -என்ற இரண்டு பதங்களால் மோக்ஷ மார்க்கங்கள் எவை என்று விசாரிக்கும் கத்யயனர் ரிஷி குலம்

தவத்தைந் நீராடல் என்று நீராட்டம் தபஸ்ஸாகவே பரிபாடல் சொல்லும்
தாய் அருகா நின்று தவத்தைந் நீராடல்
அம்பா வாடலின் ஆய் தொடிக் கன்னியர்

பாவை-காத்யாயினி நோன்பு அழகிய பெண்களால் –பாவை என்பது கொல்லிப் பாவை என்னும் பெண் தெய்வமாக இருக்கலாம்.- விக்ரஹம் வடிவில் வைத்து நோன்பு -கோபிகளின் நோன்பு கண் மணி போல் காப்பான் -இஞ்சி – திருவே பாவையாகி நோன்பு -திருப்பாவை -திருப்பு ஆவை

கார்த்யாயினி என்பது நமது கன்னியாகுமரியில் இருக்கும் சிறு பெண்வடிவில் இருக்கும் கன்னித் தெய்வமே!-இதை “கார்த்தியாயினி வித்மஹே கன்னியகுமாரி தீமஹி தந்நோ துர்கிப் ப்ரசோதயாத் ” என்பதே துர்கா காயத்ரி மந்தரம் மூலம் அறியலாம்

தாத்பர்யம் சந்திரிகை -மாதங்களில் நான் மார்கழி-மூன்று காரணங்கள்
1-ஆகம சாஸ்திரம் படி வர்ஷ முதல் மாதம் மார்கழி -அர்ப்பணிக்க -தை பிறந்தார் வழி பிறக்கும் –
2-முதல் வடிவம் கேசவஸ்ய மாதம் -மார்கழி -கார்த்திகை தாமோதரன் மாதம்
3-விரதம் -இறை வழிப்பாட்டுக்கு ஏற்பட்ட காலம் -தேவர்களுடைய ப்ரஹ்ம முஹூர்த்தம்

சொல்லுதல் இசைத்தல் ஓதுதல் அறைத்தால் பொழிதல்
சாற்றுதல்
சொல்லுதல்
விளம்பரப்படுத்தல்
விற்றல்
நிறைத்தல்
அடித்தல்
உணர்த்துதல்
சாற்றுதல் எனில் சொல்லுதல், முழங்குதல் எனப் பொருள். சாத்துதல் எனில் அணிவித்தல் என்பது பொருள்.
பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்

With yesterday’s Tiruppavai Kalakshepam Sattrumurai our Swamy has delivered Tiruppavai upanyasam 50 times in the last 33 years .

நம் ஸ்வாமி நமக்கே, நாமும், நாங்கள், நாங்களும், நாம் என்று முதல் 5 பாசுரங்களில் உள்ள பலவிதமான ‘நாம்’ என்பதின் அர்த்தங்களையும் (வித்யாசங்களையும்), நமக்கே பறை தருவான், அறை பறை, பறை தருதியாகில், சாலப் பெரும் பறையே, பாடிப் பறை கொண்டு, நீ தாராய் பறை என்பதில் உள்ள பலவிதமான ‘பறை’ சப்தத்திற்கும் அர்த்தங்களை அருளிச்செய்தது மிகவும் ரஸோக்தியாக அமைந்தது.

கறவைகள் பாசுரத்தின் வ்யாக்யான விளக்கமும் அற்புதம். அதில் இறுதியில், பேற்றின் க4நத்துக்கு கீழ் விளைந்ததெல்லாம் அத்வேஷமாத்ரமாயிருக்குமிறே என்று அருளிச்செய்தது மனத்துக்கு மிகவும் க4னமாக அமைந்தது. கோதோபனிஷதாக உள்ள திருப்பாவையையே அத்வேஷமாத்ரம் என்று கூற வேண்டும் என்றால், அந்த பேற்றின் பெருமையை நாம் அறியவே முடியாதோ என்று தோன்றுகின்றது.

நேற்றைய காலக்ஷேபத்தில் வங்கக்கடல் கடைந்ததின் ஸ்வாபதேசம் மிக அருமை. அதிலும் பிராட்டியிலும் ப்ரேம விஷயமான ஆத்மாவை லபித்தவன் என்பதில் நம் ஸ்வாமி உடனே இராமாயணத்திலிருந்து உதாரணம் அருளிச்செய்தது மிகவும் அற்புதம்.

இந்த அற்புதமான திருப்பாவை காலக்ஷேப அனுபவத்தை திரும்பத் திரும்ப நினைத்தால், மறுபடியும் உடனே மார்கழி திங்கள் முதல் நாளாக அமையக்கூடாதோ என்று தோன்றுகின்றது. திருப்பாவை மார்கழியில் அமைந்ததால் தான் எம்பெருமானும் மாதங்களில் மார்கழியாக உள்ளானோ!

மார்கழி திங்களில்
வையத்தில் உள்ள நம் போல்வார்க்கு
உத்தமனாய்
ஆழிமழைக்கண்ணாவான நம் ஸ்வாமி (பகவத் காருண்ய வர்ஷ நிர்வாஹகன்)
நாம் எம்பெருமானை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும்,
பிள்ளாய், பேய்ப்பெண், கோதூகலமுடைய பாவாய், மாமான் மகள், நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய், கோவலர் தம் பொற்கொடி, நற்செல்வன் தங்காய், போதரிக்கண்ணினாய் என்று பலவிதமான ஶ்ரோதாக்கள் / பாகவதர்கள் இருக்கும் காலக்ஷேப கூடத்தில் (பாவைக்களம்)
நம்மாழ்வாரை ஒத்த நாவுடையான நம் ஸ்வாமியும்,
இளங்கிளியான இளைய ஸ்வாமியும் இணைந்து
உபகாரக உத்தாரக ஆசார்யனாய் நாயகனாய் நின்று
ஆத்மஸ்வரூபமான ஈஸ்வரமுகவிகாஸமான அம்பரத்தையும், ஸ்வபோக்த்ருத்வபுத்தி நிவ்ருத்தியான தண்ணீரையும், கைங்கர்யமான சோறையும் எவ்வாறு பெருவது எனும் ஜ்ஞான விசேஷத்தை அருளிச்செய்து,
நப்பின்னை பிராட்டியின் புருஷகாரத்தைப் பெற்றுத்தந்து,
ஆற்றப்படைத்தானாகவும் ஆற்றப்படைத்தான் மகனாகவும் நின்று எம்பெருமானிடம் நமக்காக விண்ணப்பம் செய்து,
சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ என்பது போல் ஜாயமானம் ஹி புருஷம் யம் பஶ்யேத் மதுஸூதன: ஏன்பதிலிருந்து ஆரம்பித்து ஸ்வபோக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை வரை நம்மை பக்குவப்படுத்தி,
நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்வதற்காக,
அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று எம்பெருமானை மங்களாசாஶனம் செய்து,
நம் வருத்தமும் தீர்ந்து மகிழ்வதற்காக
ஸாம்யாபத்தி, ஸாயுஜ்ய மோக்ஷத்தைப் தேஹாவஸானே அருள்வதாக உறுதி அளித்து,
குறையொன்றும் இல்லாத நம் ஸ்வாமி
மற்றை நம் காமங்களையும் மாற்றி வழுவிலா அடிமையை அருள்வதாக நமக்கு நிச்சயித்து மார்கழி மாதம் முழுவதும் நீராட்டல் அனுபவத்தை அருளிச்செய்ததற்கு நம் ஸ்வாமிக்கு பல்லாண்டு பாடுவோம். எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்றும் ப்ரார்த்திப்போம்.

திருப்பாவையில் தோழிகளை எழுப்பும் பாசுரத்தில் முதன்முதலாக பொய்கையாழ்வாரை !! எங்கனே எனில் பிள்ளாய் எழுந்திரு !! என்னும் முகமாக!! இவ்வாழ்வாரும், கிருஷ்ணானுபவத்தில் ஊற்றம் உள்ளவரென்றும், இவள் சூடிக்கொடுத்த வடிவுக்கு , இவ்வாழ்வாரும், வையம் தகளியாய் !! வார்க்கடலே !! நெய்யென்றும்!! மாலுங்கருங்கடலே !!
எந்நோற்றாய்!! என்று எம்பெருமானின் அங்க செளந்தர்யத்தைப் பேசினதாலும் , சூடிக்கொடுத்த வடிவுக்கு நேரென்று ஒப்புமைப்படுத்தியும், கிருஷ்ண ஷேஷ்டிதங்கள், பலவற்றையும் , இவர் பாடினதாலேயும் , “ஒன்றுமதனை உணரேன் நான் !! என்று மெளக்த்யம் தோன்ற , பிள்ளைப் பெண் ” என்ற ஸ்வாபதேசத்தை ஸ்வாமிவிளக்கியது அருமை !!
மேலும் நாயகனாகத் பெருமானின் வைபவத்தையும் தர்சித்ததாலும், மேலும் ஸ்தீரி ஸ்வபாவமாகவே,
பலப் பல பாசுரம் பாடியவராதலால், ‘பேயாழ்வாரைப் பேய்ப்பெண்ணே !!என்று உணரபட்டவரென்றும்,
“கோதுகலமுடையப்பாவாய்” என பூதத்தாழ்வாரையும்!!
நாலாம் பாட்டில் ” திருமழிசைப்பிரானை ” மாமன்மகளுக்கு ஒப்புமைப்படுத்தி ஸ்வாமி ஸாதித்தது அதிஅத்புதம்!!
பார்க்கவ மகரிஷிக்கு புத்தரர், பார்கவி , மகாலஷ்மிக்கு சகோதரர், எனவே மாமான் மகள் , அனைவருக்குமே !! என்பது ரஸமே !!
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மானாக குலசேகரர் , எங்ஙனே எனில் , இளம் ஆய்ச்சியராய், எல்லிப்பொழுதில் ஏமத்தூடி என , ஸ்தீரி பாவத்தில் , இங்கு எதற்கு வந்தாய்!! அங்கே நட!! எனவும் ,ரங்கயாத்ரை நித்ய அனுபவமாக நடத்தி காட்டியவராகையாலும் என்பதும்,
பெரியாழ்வாரை கோவலர் தம் பொற்கொடியே !! என கிருஷ்ணானுபவத்தையே நித்தமும் கொண்டிருந்தவரென்பதையும்,
தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நற்செல்வன் தங்காயென, பெரியாழ்வாரின் பிற்பட்டவராய், அவரைப்போன்றே இவரும் மாலாக்காரர் , ஆதலால் என பல்வேறு கோணத்தில் கூறியது, கேட்கும் பாக்யம் என்னே !!
என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே !! என ஸ்ரீரஙகநாதனிடத்தில் வியாமோகமே வடிவெடுத்த ” திருப்பாணாழ்வாரை , போதரிக்கண்ணினாய் என அழைப்பது பொருத்தமே !! என பலபடிகளாலும் விளக்கியது அருமை !!
வாய் பேசும் நங்கை “சடகோபன்” எனபதனை , அவரின் கிருஷ்ணா அனுபவ பாடல்களின் கனத்த பிரேமம் காதலை, “நாணும் நிறைவும் எனகிங்கில்லை “எனவும் , பங்கயக்கண்ணனையே!! என்ற பல பாசுரங்களாலும் நாவீறுடையப்பிரான் அவரே !! என்பதை பலபடிகளாலும் விளக்கியதை, நாங்கள் அனுபவித்ததைச் சொல்ல ஸத்தையில்லை!! ஸ்வாமி !!
மென்கிளி என மிழற்றும் , “அவன் பின் கெண்டையொன் கண் மிளிரக்கிளி போல் மிழற்றிநடந்து !! செல்லும் பரகாலனே !! இளங்கிளி !! என்பதனை அனுபவ பூர்வமாக ஸ்வாமி விளக்கிய காலட்ஷேபம் இனிது !! இனிது !!
பாசுரங்கள் ,சேவையில் இவ்வாழ்வாரெல்லாம் நினைவில் தோன்றச் செய்த, பெருமையெல்லாம், ஸ்வாமியையே !! சேரும் !! என்பதில் ஜயமில்

கோதை நாச்சியாரின் திருப்பாவைக் காலட்ஷேபம் , ஸூத்த ஸத்வ தொண்டையாச்சாரியரின் வியாக்யானமும் , வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளின் ஸ்வாபதேசத்துடனும் , ஸ்வாமி அதி அற்புதமாக விளக்கி வருகிறார் !!
மார்கழி நோன்பு , நீராடல் என்பது பிரம்மத்துடனான அனுபவம் , ஆச்சாரியர்களுக்கு , பிரம்மம் என்பதை விட கிருஷ்ணானுபவம் என்பதே , ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் என்பதனையும் , பாசுர விளக்கமாக ஸ்வாமியின் காலட்ஷேபத்தில் , வெகுவாக அனுபவித்து வருகிறோம். ஆண்டாள் காலத்துக்கே சென்று , அவளுடனே ஆயர் பெண்களை எழுப்பி , நந்தகோபன் , யசோதை , பலராமன் , நப்பின்னை கண்ணனை எழுப்பி , படுக்கை பேச்சாக இல்லாது , வீர சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் , வந்த காரியம் கேட்டு அருள் புரிவாயாக !! என அன்புடனும் ஆதரத்துடனும் அவனை எழுப்பி , திருக்கண்கள் மலர விழித்து என்பதில், கண்ணனின் திருக்கண்கள் , கிங்கிணிப்போலவும் , தாமரைப்புஷ்பம் போன்ற , சிவந்த திருக்கண்கள் சிறிது சிறிதே மலர , முதலில் ,தேகமே ஆத்மா என்ற முதல் சாபம் நீங்க , தான் ஸ்வதந்திரன் அல்ல என்பதனை உணர , திருக்கண்கள் கொஞ்சம் மலர , நாம் அவனுக்கு அடிமை என்பதே !! ஸ்வரூபம் என்பதனை உணர்த்த ( இவ்விடத்திலும் மனைவி கணவனுக்கு சேவை செய்வது போன்றதும், அதுவே கணவன் செய்வது ப்ரீத்தியாலே என விளக்கியது ரஸம்) பிறகு மற்றப்பேருக்கன்றி கண்ணனுக்கு !! என உணர , மேலும் மலர , தான் ஜ்ஞாதா என்று உணரும் போதும் , தன்னைத் தான் அனுபவிக்கும் கைவல்யமும், ஒழிந்து , அதுக்கும் இசைந்து வர , தன்னை ரட்ஷிக்க தான், என நினைவு அகல ,அதுக்கு இசைந்த பிறகு , மற்ற உபாயங்களை என்ற நினைவகற்றி, அவனே உபாயம் என்ற நினைவின்படி, தன் காரியத்துக்கு தன்னால் என நினைவகற்றி , , பாராதீனமாக, தான் என நினைவொழிந்து, அவனுக்கே பர தந்திரனாய் , பரதாழ்வான் போல் நின்று , சமஸ்த கல்யாண குணங்களை அனுபவித்து ,அந்த அனுபவத்தின் பிரீத்தியாலே !! கைங்கர்யம் செய்ய புகுந்து , அதுவும் தன் ஆனந்தத்திற்கு அல்ல ஈஸ்வர உகப்பிற்கே !! எனும் நிலையிலே !! முழு கண்ணழகையும் சேவிக்க !! ,என்று , ஸ்வாமி விளக்கினது மிக இனிமை !!
நடந்த திருவடிகளுக்கு போற்றி போற்றி !! என பல்லாண்டு பாடினதையும் , மேலும் இன்றைய பாசுரத்தில், தேவகி பிராட்டியை ஒருத்தி எனவும் , யசோதையையும் ஒருத்தி என விளக்கினதைக் கேட்டதுண்டு. ஆனால் ஓர் இரவு என்று , கண்ணனைப் பெற்றுக் கொடுத்ததும் , அவ்விரவே ,அவன் கோகுலத்துக்கு சென்று , மறைத்து வளரவும் , வழி வகுத்தது என அவ்விருட்டுக்கு ஸ்வாமி , பல்லாண்டு கூறி விளக்கியது அத்புதம்!!
மேலும் ஸ்வாப தேசத்தில் குருபரம்பரையின் விவரணம் என்றும் , பத்து ஆயர்பெண்களின் பிரதிசம்பந்தியாக , பத்து ஆழ்வார்கள் , என அவர்களின் பாசுரமடியாகவே உள்ள விவரணத்தை , ஸ்வாமி மடைத் திறந்தாற் போல் பிரவாகித்தது அருமை.
” கை கரவாத மேகம் !!
எதிர் பொங்கி மீதலிப்ப , மாற்றாதே பால் சொரியும் !! வள்ளல் பெரும் பசுக்கள் !! ஆழிப்போல் மின்னி !! வலம்புரிப் போல் , நின்று அதிர்ந்து!! தாழாதே !! சாரங்கம் உதைத்த சர மழைப் போல், இவ்வுலகம் வாழ !! ஆஸ்ரிதர்கள் வாழ !! நாங்களும் மார்கழி நீராட !! ஸ்வாமியின் காலட்சேபம், தொடர்ந்து , அனைவரும் கேட்டு இன்புற !! என , திருமறுமார்பன் !!அருள் புரிவாராக!!🪷🪷🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚡⚡

இந்த பாசுரங்கள் ஒவ்வொன்றும் ரஹஸ்ய த்ரயத்தை விளக்க வந்த ஆதாரமாய், ஸ்வருபத்தையும் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் கொடுக்க வல்லது. அனன்யார்க சேஷ பூதனான இந்த ஜீவாத்மாவிற்கு வேறு சக்தி ப்ராப்தி இல்லை. ப்ரீதிகாரி த புருஷார்த்தமே என அறிந்து இவையால் ஸ்வஞானம், ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் என கண்ணனை அடைய படிக்கட்டுக்களாய் மார்கழி நோன்பு நூற்றார்கள். ஸ்வாபதேசமாய் சம்பிரதாய அர்த்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது .இதற்கு விஸஸதமாய் வாக் ஸ்ரீமான் வானமாமலை பொன்னடிகால் ஜீயர், ஸீத்த ஸத்வ தொட்டைய்யா ச்சாரியார் ஆகிய இருவரும் வ்யாக்யானம் அருளியதின் அடியொற்றி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் அதன் அர்த்த விசேஷங்களை முன்வைத்தார். திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் சாரார்த்தத்தை உள்ளடக்கி உள்ளது. மந்திர ரத்னமாய் போற்றப்படும் த்வயம் . அவனையே சாக்ஷாத் சித்த புண்ணியமாக கொள்கின்றனர் .அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்திற்கு முதல் பாசுரத்திலிருந்து பறை என்ற பேரி வாத்தியததை கண்ணன் கொடுக்க, யதாஸ்ருதக்ராஹியாய் – மேம்போக்கான அர்த்தத்தை கொண்டவனே. தாத்பர்ய ஞானம் இல்லாதவனே. இதை நாங்கள் பிரார்த்தித்து வரவில்லை. புருஷார்த்தமாய் கைங்கர்யத்தை பிரார்த்தித்து வந்தோம். பாகவதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லே இளங்கிளியே பாசுரத்தில் கூறியுள்ளாள். பகவான்
எப்படி நடக்க வேண்டும் என்பதை சிற்றஞ்சிறு காலே பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளாள்.
29 வது பாசுர விளக்கம் – கண்ணா சிறுகாலே – சிறு விடியல் நேரத்திற்கே வந்து உன்னைப் பணிந்து உன் பொன் தாமரை.-ஸ்பரு ஹீயமான- மதிக்கத்தக்க பாவனமாகவும் பரம் போக்கியமாகவும் உள்ளஉன்திருவடித்தாமரைகளை மங்களாசாசனம்
பண்ணி வாழ்த்தும் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடை குலத்தில் பிறந்த உனக்குநாங்கள் அந்தரங்க தொண்டு கைங்கர்யாதை புரிய ப்ரார்த்திக்கிறோம். இந்தக் கொட்டுப் பறையை பெற நாங்கள்
வரவில்லை. காலமுள்ள அளவும்
ஏழேழு பிறவிக்கும் உனக்கே உன் ஒருவனுக்கே நாங்கள் ஆட்செய்வோம். அடிமை செய்யக் கடவோம். எங்களுடைய மற்றைய ஆசைகளையும் ஸ்போக்திருத்வத புத்தியையும்தவிர்த்து அருள வேண்டும்.
வியாக்யானம் – இங்கு ஸத்வம் நிறைந்து காணப்படும் சிற்றஞ்சிறுகாலே என்பதை குறிப்பிட்டு ஆற்றாமையால்( துறை தள்ளி) வந்து எங்கள் வருகையே மிகை – அதிகம் என்று இருக்கும் உன்னை சேவித்து, உன் திருவடி தாமரைக்கே மங்களாசாசனம் பண்ணுகிறோம்.அவன் பறையை கொடுக்க, தாத்பர்ய அர்த்தம் புரியாதவனே எல்லா காலங்களிலும் நாங்கள் லக்ஷ்மணன் ராமனிடம் பிரார்த்தித்து போல் தாஸனின் கைங்கர்யமாய்- போற்றும் பொருள் என்பது கைங்கர்யத்தை பரார்த்தமாய் உன் ஆனந்தத்திற்குபுரிய வந்தோம். நாங்கள் ஆத்ம ஸ்வருபத்திற்கு உகந்ததையே கேட்போம். அதிருஷ்ட பலத்தை நாங்கள் கேட்டதாக இருக்கனும். அவன் கொடுக்க நாங்கள் கொள்வதாய் – போதயந்த பரஸ்பரமாய் இருக்க வேண்டும். த்ருஷ்ட பலத்தை கேட்டதாக சொல்லக்கூடாது என்றாள்.
ஏனைய எங்களுடைய ஆசைகளை தவிர்த்து கைங்கர்ய பேறை கொடுக்க
வேண்டும்.
3௦வது பாசுர விளக்கம் – கப்பல்கள் உடைய திருப்பாற் கடலை தேவர்களுக்காக கடந்த மாதவனை – ஸ்ரிய பதியை சந்திரனை ஒத்த முகமுடைய ஆய்ச்சிகள் வணங்கி பறையாகிய புருஷார்த்தமான உண்மை பொருளை அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் குமாரத்தியான தன்நிலை பாவஸீத்தியில் ஆண்டாள், இதனையே
30 திவ்ய பாசுரங்களாக அருளினாள். இவற்றை தவறாமல் ஒதுபவர்கள் ஈரிரண்டு பெருக்கமான தோள்களைப் பெற்ற செங்கண் திருமால் அருளால் எங்கும் திருவருள் பெற்று இன்பம் அடைவார்கள்.
வ்யாக்யானம் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி அதாவது க்ருபை என்ற ஸங்கல்பம் என்ற மந்திர பர்வத்திற்கு கடாக்ஷம் என்ற கைகளால் கடைந்து ஆத்மவஸ்துவான ஜீவாத்மாவை லபித்தவன். பகவான் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ நாம போக்தா என்றும் நினைக்கும் கேசியை ,அந்த புருஷன் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ அந்த புருஷன்சந்திரன் போல் ஒளியுடன்
ஆஹ்லாத கரமாய் குளிர்ச்சியுடன் காணப்படுகிறார். நாம் அவரிடத்தில் ஞான பக்தி வைராக்ய பூஷித ராய் அவரைத் தவிர வேறு ஒன்றை கேட்காமல் இருக்க வேண்டும். பெரியாழ்வார் சூட்டின மாலை கோதை அந்த கோதை பாடியது தீந்தமிழ் பாமாலை. பூமாலையை சூட்டிக் கொடுத்த சுடர்கொடி. இதை நாம் தலையால் தரித்து இந்த இனிய திவ்ய ப்ரபந்தத்தை ஒரு பாட்டுக் கூட குறையாமல் எப்போதும் அனுசந்தித்து பல்கி பெருக பெருக கூடிய நாலு திருத் தோள்கள் உடையவனான சிவந்த கண்கள் உடைய மலர்ந்ததிருமுகத்தை உடையவனான உபய விபூதிக்கு நாயகனான திருமாலை –
எல்லா சொத்திற்கும் அவன் தேவதை. அவனுக்கு அவள் தேவதை. காலத்திற்கு பிற்பட்ட நாம் எப்போதும் இந்த லோகத்து ஞானம் அந்த லோகத்து அதிர்ஷ்ட விஷய ஞானம் பெற்று கண்ணனை எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாசுரத்திற்கும் உள்ள சாரத்தை ஒவ்வொரு வரி தோறும் சிறப்பித்து அத்புதமாய் ஸ்ரோத்தாக்களுக்கு பகவத் அனுபவத்தை கொடுத்த ஞான திவாகர் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என ப்ரார்த்திக்கிறோம். க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

“புருஷகார வைபவம்”
பலவகையான நல்விஷயங்களை உள்ளடக்கியது மார்கழி மாதம் என்பதனால் பகவான் “மாதங்களில் நான்மார்கழி”
என்றுரைத்தான். அப்படியான மாதத்தில்
ஸ்ரீ ஆண்டாளருளிய
திருப்பாவையைப் பாடி
அதனுள் சொல்லப்பட்ட
பகவதனுபவமேற்படுவதற்கான விஷயங்களைச் சொல்லவேணுமென்கிற
தாகம் மேலோங்கிட ஸ்வாமி மேற்கொண்ட
இக்காலஷேப வைபவத்தால் அடியேன் கொண்ட அநுபவமானது:
பார்கடலில் பையத்
துயிலும் பரமனடிபாட, குள்ளக்குளிர நீராடி, அக, புற அழுக்குகள்
நீங்கிட அறியாதவற்றைச்
சொல்லும் வேதமும், அதனால் சொல்லப்பட்ட
பகவானின் தன்மையைக் கூறும்வேதாந்தக்கருத்து
களையும் அறிந்ததனால்
ஏற்பட்ட ஜ்ஞாநத்தால் கைக்கொள்ளவேண்டிய
“அர்த்த பஞ்சகம்” மற்றும்
“ரஹஸ்யத்ரய” ஸாரங்கள்
இப்பாசுரங்களிலே மறைப்பொருளாக சொல்லப்பட்டிருப்பதை
மிகவிஸ்தரமாகச் சொல்லி; ஆக, சம்ஸாரயாத்ரையிலிருந்து
சற்றே விலகி பகவதநுபவ
யாத்ரையை மேற்கொள்ள
பகவானின் பொற்தாமரையடி போற்றி,
அது சுவாதீனமாய்க் கிட்ட பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்றி அவனும், அவளும் இசலி, இசலிப் பரியும் பரிவைக் கொண்டு அவர்களது சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்பதைச்சொல்லி: ஆகையால்
இம்முப்பது பாசுரங்களை நிச்சலும் தப்பாமல் பாடிட “செங்கண்
திருமுகத்துச் செல்வத்திருமாலின் திருவருள் பெறும் இன்பமே
சம்மானம்” என்று ஒரு தாயின் வாத்ஸல்யத்தோடு, கருணைபொங்க, அன்புமேலோங்க தனக்காகவே எனையாட்கொண்ட ஸ்வாமி அருளிப்போந்த
இக்காலஷேபமும் ஒரு
” புருஷகார வைபவமே”!!

பாதகங்கள் தீர்க்கும் பரமனடிபாடும் கோதைத்தமிழின் யதார்த்தத்தை அதியத்புதமாக விளக்கி
அதனுள் சொல்லப்பட்ட
வேத,வேதாந்தக்கருத்துகளையும் அறிந்து கொள்ள வைத்த ஸ்வாமி திருவடிகளிலேயே உழன்று
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றேனாகி,
அன்னவர்க்கே ஆட்செய்யும்
சேவகமும் வேண்டியே பல்லாண்டு
பாடுகிறேன் மகிழ்ந்து!!💐🙌🏻🙏🙏

திரு ஆயர்பாடியில் பஞ்ச லக்ஷ பெண்கள் கிருஷ்ணானுபவத்தை அடைய ஹேமந்த ருதுவில் மார்கழி மாதத்தில் நோன்பு தூற்றார்கள். அதை ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு அனுகாரம் செய்தாள் அவள் பேச்சு, நடை, முடி அனைத்தும் இடைப்பெண் போல் மாறியது. அந்த ஆண்டாள் அனுக்ரஹித்தது திருப்பாவை 30 பாசுரங்கள். கலியுகத்தில் இருந்து கொண்டு இதை நாம் நித்ய அனுசந்திக்கும் போது ஆண்டாளின் பூரண அனுக்ரஹகம் நமக்கும் கிட்டும். வேதம் அனைத்திற்கும் வித்தாகும் ஐயைய்ந்தும் ஐந்தும் ஆன திருப்பாவையை வைஷ்ணவ த்ரயத்தை எம்பெருமானார் சர்வாதிகாரமாய் அனுசந்திக்க- அதை திவ்ய ப்ரபந்தமாய் யாரும் கற்கலாம் என ஸ்வாமி ராமானுஜர் இதை நியமனம் பண்ணி வைத்தார். அதில் விசேஷித்த 30 பாசுரங்கள் – இந்த பாசுரங்கள் ஒவ்வொன்றும் ரஹஸ்ய த்ரயத்தை விளக்க வந்த ஆதாரமாய், ஸ்வருபத்தையும் உபாயத்தையும் புருஷார்த்தத்தையும் கொடுக்க வல்லது. அனன்யார்க சேஷ பூதனான இந்த ஜீவாத்மாவிற்கு வேறு சக்தி ப்ராப்தி இல்லை. ப்ரீதிகாரி த புருஷார்த்தமே என அறிந்து இவையால் ஸ்வஞானம், ப்ராபக ஞானம் ப்ராப்ய ஞானம் என கண்ணனை அடைய படிக்கட்டுக்களாய் மார்கழி நோன்பு நூற்றார்கள். ஸ்வாபதேசமாய் சம்பிரதாய அர்த்தங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது .இதற்கு விஸஸதமாய் வாக் ஸ்ரீமான் வானமாமலை பொன்னடிகால் ஜீயர், ஸீத்த ஸத்வ தொட்டைய்யா ச்சாரியார் ஆகிய இருவரும் வ்யாக்யானம் அருளியதின் அடியொற்றி வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் அதன் அர்த்த விசேஷங்களை முன்வைத்தார். திருமந்திரம் த்வயம் சரமஸ்லோகம் சாரார்த்தத்தை உள்ளடக்கி உள்ளது. மந்திர ரத்னமாய் போற்றப்படும் த்வயம் . அவனையே சாக்ஷாத் சித்த புண்ணியமாக கொள்கின்றனர் .அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்திற்கு முதல் பாசுரத்திலிருந்து பறை என்ற பேரி வாத்தியததை கண்ணன் கொடுக்க, யதாஸ்ருதக்ராஹியாய் – மேம்போக்கான அர்த்தத்தை கொண்டவனே. தாத்பர்ய ஞானம் இல்லாதவனே. இதை நாங்கள் பிரார்த்தித்து வரவில்லை. புருஷார்த்தமாய் கைங்கர்யத்தை பிரார்த்தித்து வந்தோம். பாகவதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லே இளங்கிளியே பாசுரத்தில் கூறியுள்ளாள். பகவான்
எப்படி நடக்க வேண்டும் என்பதை சிற்றஞ்சிறு காலே பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளாள்.
29 வது பாசுர விளக்கம் – கண்ணா சிறுகாலே – சிறு விடியல் நேரத்திற்கே வந்து உன்னைப் பணிந்து உன் பொன் தாமரை.-ஸ்பரு ஹீயமான- மதிக்கத்தக்க பாவனமாகவும் பரம் போக்கியமாகவும் உள்ளஉன்திருவடித்தாமரைகளை மங்களாசாசனம்
பண்ணி வாழ்த்தும் பொருளை நீ கேட்டு அருள வேண்டும். பசுக்களை மேய்த்துண்ணும் இடை குலத்தில் பிறந்த உனக்குநாங்கள் அந்தரங்க தொண்டு கைங்கர்யாதை புரிய ப்ரார்த்திக்கிறோம். இந்தக் கொட்டுப் பறையை பெற நாங்கள்
வரவில்லை. காலமுள்ள அளவும்
ஏழேழு பிறவிக்கும் உனக்கே உன் ஒருவனுக்கே நாங்கள் ஆட்செய்வோம். அடிமை செய்யக் கடவோம். எங்களுடைய மற்றைய ஆசைகளையும் ஸ்போக்திருத்வத புத்தியையும்தவிர்த்து அருள வேண்டும்.
வியாக்யானம் – இங்கு ஸத்வம் நிறைந்து காணப்படும் சிற்றஞ்சிறுகாலே என்பதை குறிப்பிட்டு ஆற்றாமையால்( துறை தள்ளி) வந்து எங்கள் வருகையே மிகை – அதிகம் என்று இருக்கும் உன்னை சேவித்து, உன் திருவடி தாமரைக்கே மங்களாசாசனம் பண்ணுகிறோம்.அவன் பறையை கொடுக்க, தாத்பர்ய அர்த்தம் புரியாதவனே எல்லா காலங்களிலும் நாங்கள் லக்ஷ்மணன் ராமனிடம் பிரார்த்தித்து போல் தாஸனின் கைங்கர்யமாய்- போற்றும் பொருள் என்பது கைங்கர்யத்தை பரார்த்தமாய் உன் ஆனந்தத்திற்குபுரிய வந்தோம். நாங்கள் ஆத்ம ஸ்வருபத்திற்கு உகந்ததையே கேட்போம். அதிருஷ்ட பலத்தை நாங்கள் கேட்டதாக இருக்கனும். அவன் கொடுக்க நாங்கள் கொள்வதாய் – போதயந்த பரஸ்பரமாய் இருக்க வேண்டும். த்ருஷ்ட பலத்தை கேட்டதாக சொல்லக்கூடாது என்றாள்.
ஏனைய எங்களுடைய ஆசைகளை தவிர்த்து கைங்கர்ய பேறை கொடுக்க
வேண்டும்.
3௦வது பாசுர விளக்கம் – கப்பல்கள் உடைய திருப்பாற் கடலை தேவர்களுக்காக கடந்த மாதவனை – ஸ்ரிய பதியை சந்திரனை ஒத்த முகமுடைய ஆய்ச்சிகள் வணங்கி பறையாகிய புருஷார்த்தமான உண்மை பொருளை அடைந்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் குமாரத்தியான தன்நிலை பாவஸீத்தியில் ஆண்டாள், இதனையே
30 திவ்ய பாசுரங்களாக அருளினாள். இவற்றை தவறாமல் ஒதுபவர்கள் ஈரிரண்டு பெருக்கமான தோள்களைப் பெற்ற செங்கண் திருமால் அருளால் எங்கும் திருவருள் பெற்று இன்பம் அடைவார்கள்.
வ்யாக்யானம் பாற்கடலில் மந்திரத்தை மத்தாக நாட்டி அதாவது க்ருபை என்ற ஸங்கல்பம் என்ற மந்திர பர்வத்திற்கு கடாக்ஷம் என்ற கைகளால் கடைந்து ஆத்மவஸ்துவான ஜீவாத்மாவை லபித்தவன். பகவான் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ நாம போக்தா என்றும் நினைக்கும் கேசியை ,அந்த புருஷன் எந்த உள்ளத்தில் உறைகிறாரோ அந்த புருஷன்சந்திரன் போல் ஒளியுடன்
ஆஹ்லாத கரமாய் குளிர்ச்சியுடன் காணப்படுகிறார். நாம் அவரிடத்தில் ஞான பக்தி வைராக்ய பூஷித ராய் அவரைத் தவிர வேறு ஒன்றை கேட்காமல் இருக்க வேண்டும். பெரியாழ்வார் சூட்டின மாலை கோதை அந்த கோதை பாடியது தீந்தமிழ் பாமாலை. பூமாலையை சூட்டிக் கொடுத்த சுடர்கொடி. இதை நாம் தலையால் தரித்து இந்த இனிய திவ்ய ப்ரபந்தத்தை ஒரு பாட்டுக் கூட குறையாமல் எப்போதும் அனுசந்தித்து பல்கி பெருக பெருக கூடிய நாலு திருத் தோள்கள் உடையவனான சிவந்த கண்கள் உடைய மலர்ந்ததிருமுகத்தை உடையவனான உபய விபூதிக்கு நாயகனான திருமாலை –
எல்லா சொத்திற்கும் அவன் தேவதை. அவனுக்கு அவள் தேவதை. காலத்திற்கு பிற்பட்ட நாம் எப்போதும் இந்த லோகத்து ஞானம் அந்த லோகத்து அதிர்ஷ்ட விஷய ஞானம் பெற்று கண்ணனை எப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாசுரத்திற்கும் உள்ள சாரத்தை ஒவ்வொரு வரி தோறும் சிறப்பித்து அத்புதமாய் ஸ்ரோத்தாக்களுக்கு பகவத் அனுபவத்தை கொடுத்த ஞான திவாகர் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என ப்ரார்த்திக்கிறோம். க்ஷ மிக்க பிரார்த்திக்கிறேன்.

ஒரு பெண் புருஷனைக் கண்டு ஸநேஹிக்கை பள்ளமடையாகையாலே,
ஆழ்வார்களுள் பெண்ணான ஆண்டாள்
அருளிய திருப்பாவையைக்
கொண்டு “மாரகழிசுனையாடலை”யும்,அதன் மூலம் நோற்கப்படும் நோன்பு என்று ஒரு வ்யாஜ்யத்தாலே நம்பெருமாள் பக்கலிலே சென்று, அவனுக்கு சேஷமாயிருக்கிற, அநவரதமும் ஸம்ஸார சாகரத்திலே கிடந்துறங்கும்
ஆத்மாக்களாகிய நாம்
அநர்த்தப்படாதபடி, நம்மை
எழுப்பி பகவதநுபவ ப்ரீதிகாரித கைங்கர்யத்தில் ஈடுபட்டுய்ய, சுனையாடலின் செம்மை, மேன்மை, அருமைகளையும் அதிலே
ஆழ்பொருளாய்ச் சொல்லப்பட்டுள்ள வைஷ்ணவ தர்மத்திலுள்ள
சாஸ்ரார்த்தங்களையும் இரு பெரு மஹநீயர்களின்
ஸ்வாபதேச வ்யாக்யானங்களைக் கொண்டு நமக்கு வேண்டுவனவெல்லாம்
ஆந்தனையும் கைகாட்டி, உள்ளுமாறுய்ய அறிவுத்
தொண்டு புரியும் நம் ஸ்வாமி ஸ்ரீ ஆண்டாளுதித்த திருவாடிப்பூரத்தின் முன்
திருநட்சத்திரமாம் ஆடி மகந்தன்னில் உதித்தமையாலே ஆண்டாளுக்கு முன்னானார் என்று போற்றியாம் வந்தோம் புகழ்ந்து,
வடமொழி, தென்மொழிப் புலமையும்,
சமயநுட்பப் புலமையும், சொற்பொழிவுத் திறமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற நம் ஸ்வாமி எப்பொழுதும்
அத்திருவருள் கொண்டு
நமக்கு சத்விஷயங்களை
அருளவேணுமென *ஆண்டாளின் திருவடிகளை
வழுத்துவோம் மனமே மகிழ்ந்து!!*

சிற்றஞ்சிறுகாலே , கோபிமார்களின் ஸத்வோர்த்தமான காதலுடனும், அதே அனுகாரத்துடனே தோழிகளையும் அழைத்துக்கொண்டு , தானே !! ஸத்கரித்து, நம்மைப்போன்று திருப்பாவை அனுசந்தானம், என்னும் ,தோல்கன்றே , போல்வாரையும் ,
[ ] வந்தார்களே !! என கலங்கி அருள, கண்ணனே !! முற்பட்டு,
[ ]
[ ] அதீத வாத்ஸல்யத்தாலே, நாங்கள் ஒரு வ்யாஜ்யமாய்க் கேட்ட, தோல் பறையை தர முனைந்ததுப் போலன்றி, எங்களுக்கு புருஷார்த்தமான , இவ்வாயர்பாடியிலே பிறந்தது , எங்களுக்காக ,நீயும் !!வந்துதித்த இங்கேயே , உனக்கு கைங்கர்யம் என்பதே பறை ( இவ்விடத்தில் மங்களாசாசனம் என்பது , பல்லாண்டு பாடுவது மட்டுமன்றி, பூத்தொடுத்தல், தளிகை பண்ணுதலும் அவ்வெம்பெருமானுக்கு மங்களம் பாடுதலுக்கு சமம் என்று விளக்கியது , பெரிய புரிதலுடனான அதி அத்புத அனுபவம்) பிற உறவுகளை விட்டே , உன்னையே எல்லாமாகவும் பற்றின எங்களுக்கு , எல்லா உறவுக்கும், பண்ண வேண்டிய கைங்கர்யங்களை எல்லாம் லஷ்மண, குகனைப் போல நாங்களே !! உனக்குச் செய்து, ஸத்தை , பெறுவதே ப்ராதனம் , என ‘உனக்கே ‘ எனும் பதத்தின் மூலமாக, ஆண்டாளின், வேண்டுகோளை ,விளக்கியது சுகானுபவம் !!
[ ] பெரியாழ்வாரைப் போல கைங்கர்யம் , வைகுண்டதைதிலும் தொடர வேண்டுவதை , நினையாதே, கண்ணனின் பார்வை வட்டத்துக்குள்ளேயே, ஏதேனும் கைங்கர்யம், அதுவும் எங்கள் உகப்புக்குக்கன்றி, கண்ணனின் ஆனந்தத்திற்கே !! ஆக வேண்டும் என ஆயர்குடிப் பெண்ணாகவே கோதை !! வேண்டுவது ,” இங்கே இப்பிறப்பே மகிழ்வர்” எனும்படி கருணையுடன் ஞான ஜென்மாக்களாய் ஆக்கி, இந்த இடத்திலே, திருப்பாவை, ஸாதித்துக் கொடுக்கும் சேவிப்பாற்கு , என ஸ்வாமி , விளக்கியதைக் கேட்டதே !! பெரும் புண்யம்!!
[ ] மேலும் வங்ககடலைக் கடைதல் எனும் வ்யாஜத்தாலே !!
வங்கம் ,ஜீவனின் தேகமே எனவும் , அதற்கு சலனமின்றி, தன் சங்கல்பத்தாலே !! கிருபை என்னும் கயிறு கொண்டு, தன் கடாக்ஷ்ம் , எனும் கையாலே !! கடைந்து , பெறுவது , பிராட்டியை விடவும் , பிரேமமான , நம் போன்ற, ஆத்ம வஸ்து ( இங்கு இராம சுக்ரீவ ஸம்வாதம் அருமை ) எனவும் ,

கடல் கடைந்து ,பிராட்டியைப் பெற்றான், என்றே ,கேட்டுகந்த , நமக்கு , அவன் பெறுவது , நம்மையே !! எனவும் அதுவும் அவனுகப்புக்கே, என தெளிவது , நம் ஸ்வாமியின் கருணையடியான , சொல்லுதலின்றி தரிக்காத பகவானின் வ்ருத்தாதந்தத்தை, நம் போலோற்கு, ஆண்டாளின் , ஸ்ரீஸூக்தியாலே !! என்பது , நாம் பெற்ற பெரும் பேறு !! செல்வத்திருமாலாலே !! என
பல்லாண்டு !! பல்லாண்டு!! ஸ்வாமிக்கு !! பாடி மகிழ்ந்து குளிர்வோம் !!🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻

திருப்பாவையில் முப்பது தீர்த்தங்கள் 🕉️

1️⃣ மார்கழித் திங்கள் –
வ்ரஜா நதி – வைகுண்டம்

2️⃣ வையத்து வாழ்வீர்காள் –
சமுத்திர ராஜன் – திருப்பாற்கடல்

3️⃣ ஓங்கி உலகளந்த –
கங்கை – இமயமலை

4️⃣ ஆழி மழைக் கண்ணா –
வருண தேவன்

5️⃣ மாயனை மன்னு –
யமுனா – விருந்தாவனம்

6️⃣ புள்ளும் சிலம்பின காண் –
சரஸ்வதி – மானா, பத்ரிநாத்

7️⃣ கீசுகீசு என்று –
புண்டரீக புஷ்கரணி – மாமல்லபுரம்

8️⃣ கீழ்வானம் –
தக்ஷிண பிநாகினி (தென்பெண்ணை) – திருக்கோவலூர்

9️⃣ தூமணி மாடத்து – தாமிரபரணி – நெல்லை, தூத்துக்குடி

1️⃣0️⃣ நோற்றுச் சுவர்க்கம் –
பாலாறு – காஞ்சிபுரம்

1️⃣1️⃣ கற்றுக் கறவை –
பாரதபுழா – கேரளா

1️⃣2️⃣ கனைத்து இளம் –
வைகை – மதுரை

1️⃣3️⃣ புள்ளின் வாய் –
சந்திர புஷ்கரணி – ஸ்ரீரங்கம்

1️⃣4️⃣ உங்கள் புழக்கடை –
காவிரி – திருவரங்கம்

1️⃣5️⃣ எல்லே ! இளங்கிளியே –
நம்பி ஆறு – திருக்குறுங்குடி

1️⃣6️⃣ நாயகனாய் நின்ற –
ராதா குண்ட் , ஷியாம் குண்ட் – கோவர்தன்

1️⃣7️⃣ அம்பரமே தண்ணீரே –
யசோதா குண்ட் – நந்தகாவ்

1️⃣8️⃣ உந்துமத களிற்றன் –
அனந்த சரஸ் – காஞ்சிபுரம்

1️⃣9️⃣ குத்து விளக்கெரிய –
லலிதா குண்ட் – நிதிவனம், விருந்தாவனம்

2️⃣0️⃣ முப்பத்து மூவர் –
வேணுகூபம் – பண்டீரவனம்

2️⃣1️⃣ ஏற்ற கலங்கள் – இந்திரத்யும்ன சரோவர் – ஜகன்னாத் புரி

2️⃣2️⃣ அங்கண்மா ஞாலத்து –
பத்மதீர்த்தம் – திருவனந்தபுரம்

2️⃣3️⃣ மாரி மலை முழைஞ்சில் –
பாவநாசினி – அஹோபிலம்

2️⃣4️⃣ அன்று இவ்வுலகம் –
சந்திரபாகா – பண்டரிபுரம்

2️⃣5️⃣ ஒருத்தி மகனாய் –
கோமதி – துவாரகா

2️⃣6️⃣ மாலே ! மணிவண்ணா –
சரயு – அயோத்யா

2️⃣7️⃣ கூடாரை வெல்லும் –
ஸ்வாமி புஷ்கரணி – திருமலை திருப்பதி

2️⃣8️⃣ கறவைகள் பின்சென்று –
ஹரித்ரா நதி – மன்னார்குடி

2️⃣9️⃣ சிற்றம் சிறு காலே –
சக்ர தீர்த்தம், நைமிசாரண்யம்

3️⃣0️⃣ வங்கக்கடல் கடைந்த –
திருமுக்குளம் – ஸ்ரீவில்லிபுத்தூர்.✍🏼🌹

மார்கழி -சரமஸ்லோகார்த்தம் ப்ராப்ய பிரதானம் -ஸ்வரூபம்
வையத்து– த்வயம்–ப்ராப்ய பிராப்தி பரம்-பேற்றுக்கு தவரிக்கவும் வேண்டும் -செய்யும் கிரிசைகள் –திண் என்றும் இருக்கும் திருவடிகளே
ஓங்கி -திருமந்திரம் -பிராப்தி பரம் -பேர் பாடி பொழுது போக்கு -அச்சுவை பெறினேம் வேண்டேன்

ரஹஸ்ய த்ரவ்யம் முதல் மூன்று பாசுரார்த்தம்– -ஆழி மழைக் கண்ணா ததீய சேஷத்வம்-அந்தர்யாமி இதில் அர்ச்சா அடுத்து மன்னு வடமதுரை மைந்தன்

ஆழி மழைக் கண்ணா –11 கட்டளைகள் இடுகிறாள்–11-ழ காரம்

வடமதுரைக்கு மற்ற முக்தி ஷேத்ரங்கள் கைங்கர்யம் -சத்ர சாமரங்கள் பத்னி பாத ஸ்தானங்கள்-ஸப்த புண்ணிய ஷேத்ரங்கள்-முக்தி தரும் மோட்சத் தலங்கள்-7–வடமதுரை–ராஜா -ஸிம்ஹாஸனம்–துவாரகை—அயோத்தி–ராணி ஸ்தானம்–ஹரித்வார்–காசி–உஜ்ஜயினி (அவந்திகா)—காஞ்சி

அங்குஷ்டா கட்டைவிரலையே புருஷ லிங்கம் மற்ற விரல்கள் ஸ்த்ரீ லிங்கம் -அசித் -பத்த முக்த நித்ய -மற்ற விரல்கள் -ஸத்வ ரஜஸ் தமஸ் -விரல்கள் அளவும் ஒரே மாதிரியாக இருக்காவே

திருப்பாவையில் திவ்ய தேசங்கள் >>

  1. மார்கழித் திங்கள் – நாராயணனே நமக்கே பறை தருவான் – பரமபதம்.
  2. வையத்து – பாற்கடலில் பையத் துயின்ற – க்ஷீராப்தி.
  3. ஓங்கி – ஓங்கி உலகளந்த உத்தமன் – திருக்கோவலூர்.
  4. ஆழிமழை – பாழியம் தோளுடை பத்மநாபன் – திரு அனந்தபுரம் .
  5. மாயனை – வடமதுரை மைந்தன் – மதுரா .
  6. புள்ளும் – வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து – திருவண் வண்டூர்.
  7. கீச்சு கீச்சு – கேசவனைப் பாடவும் – திருவாய்ப்பாடி.
  8. கீழ்வானம் – தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் – வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.
  9. தூமணி மாடம் – குன்றின்மேல் விளக்கு – திருக் கடிகை.
  10. நோற்று சுவர்க்கம் – நாற்றத் துழாய்முடி நாராயணன் – திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை – முகில் வண்ணன் பேர் பாட – காளமேகப் பெருமாள் திருமோகூர்.

  1. கனைத்திளம் – தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.
  2. புள்ளின்வாய் – பள்ளிக் கிடத்தியோ – திருக்குடந்தை.
  3. உங்கள் புழக்கடை – நாவுடையாய் – செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் – தேரழுந்தூர்.
  4. எல்லே – மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் – திருவல்லிக்கேணி.
  5. நாயகனாய் – மாயன் மணிவண்ணன் – திருக்குறுங்குடி.
  6. அம்பரமே – அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் – சீர்காழி.
  7. உந்து மத களிறு – பந்தார் விரலி மைத்துனன் – திருநறையூர்.
  8. குத்து விளக்கு – மலர்மார்பா – திருவிடவெந்தை.
  9. முப்பத்து மூவர் – செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் – திருப்பாடகம்.
  10. ஏற்ற கலங்கள் – ஊற்றமுடையாய் பெரியாய் – பெரும்புறக் கடல் – திருக்கண்ண மங்கை.
  11. அங்கண்மா ஞாலம் – அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து – திருமாலிருஞ் சோலை.
  12. மாரி மலை முழஞ்சில் – பூவை பூ வண்ணா – திருவரங்கம்.
  13. அன்றிவ் உலகம் – குன்று குடையாய் – கோவர்த்தனம்.
  14. ஒருத்தி – கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் – திருக்கண்ணபுரம்.
  15. மாலே மணிவண்ணா – ஆலின் இலையாய் – பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் – சீர் கோவிந்தா – (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை – குறை ஒன்றுமில்லாத கோவிந்தா – (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை – பறை கொள்வான் கோவிந்தா – (துவாரகை.)

39 வங்கக் கடல் – அணிபுதுவை – (ஸ்ரீவில்லிபுத்தூர்).

(P B அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி தொகுத்ததில் எடுத்தது)

ஐந்தாம் பட்டு ஆளவந்தார் -யமுனைத் துறைவன்
செல்வ சிறுமியர் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
செய்யும் கிரிசைகள் -நாதமுனி பெரிய யோகி-
அடுத்து -உய்யக்கொண்டாரும்–உய்யுமாறு எண்ணி– -நாடு எல்லாம் பிணம் கிடைக்க மணம் புரிவார் உண்டோ
அடுத்து -மணக்கால் நம்பியும்–சேறு உகள –சார்ங்கம் உதைத்த -ராம மிஸ்ரர் –

நாராயணனே மாயன் -துயின்ற பரமனும் மாயன் -உத்தமனும் மாயன் -பத்ம நாபனும் மாயன்-ஊழி முதல்வன் -வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி பத்ம நாபன் சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -இரண்டுமே மாயன் -தாமோதரனும் மாயன்

“தூயோமாய்”
ஒரு விளக்கு எப்படி
தனக்கும் பிறர்க்குமாக இருக்குமோ,அதேபோல
ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களைக் கொண்ட
” திருப்பாவை” யின் மூலம்,
பகவானை அடையும் வழியை அறியாதவர்க்கு,
ஒரு ஒளிவிளக்காக இருந்து கண்ணனை அடைய வேணும் எனும்
ருசி/ ஆசையுடையோர்க்கு பகவத்கைங்கர்ய வழியை ஒரு நோன்பைக் காரணமாகக் கொண்டு அனைவர்க்குமாக காட்டி அருளியத்தை: ஒரு ப்ரபந்நனுக்கு அநவரதம் அநுசந்தேயமான இத்திவ்யப் பாமாலை, ஆக்ஞையில் வாராது;
ஆசைப்படவேண்டும; எனவே, வாருங்கோள்
என்றழைத்து இதனுள் பொதிந்திருக்கும் ஆழ்ந்த கருத்துகளை வ்யாக்யானச் சக்ரவர்த்தியான ஸ் வாமி
பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தை கைக்கொண்டு தனக்கே உரிய பாணியில் பல ப்ரமாணங்களையும், மேற்கோள்களையும் கொண்டு கோர்த்து கோர்த்து நம் ஸ்வாமி வழங்கும் பொழிவில் மூழ்கிப் பேரின்பத்தில் திளைப்பது ஒரு சுஹானுபவம். அந்த வகையில் நாமனுபவித்தச் சில இடங்கள்:
“நாராயணனே”என்பது பரவாஸுதேவனையும்(சரமஸ்லோகத்துக்குமானது)
“பையத்துயின்ற பரமனை”
என்பது வ்யூகமென்றும்(த்வயத்துக்கானது)
“உத்தமன் பேர்பாடி” விபவத்தையும்(துருமந்திரத்துக்கானது)
“ஆழிமழைக் கண்ணா”
என்பதன் மூலம் வருணபகவானான
பரஜன்யஸ்வாமி உலகினில் பெய்த மழையால் ஊரார்களைக் குளிப்பாட்டியதைப்போல,
நாங்களும் நீராடக் கடவோம் மகிழ்ந்து என்பதனையும்,
“ஆயர்குலத்தின் அணிவிளக்கை” பரிசுத்தமான மலர்களைக்கொண்டு பூஜித்து, வாயினால்பாடி, மனத்தினால் சிந்திக்க
“சஞ்சித கர்மம் மற்றும் ப்ராரப்தகர்மத்தினால் ஏற்பட்ட அனைத்து பாவங்களும் தீயிலிட்ட பஞ்சைப்போல் பொசுங்கிவிடும் என்று விளக்கியது:
அடுத்து, ” படிந்து”, “உகந்து”, நிறைந்து”, ” “மகிழ்ந்து” மற்றும் “தூயோமாய் வந்து” என்று நவவித பக்திகளை முதல் ஐந்து பாசுரத்திலே சொல்லப்பட்டிருப்பதையும்,
பட்டுத்திருந்தும் வாசிகளான ஒரு முமுஷுவோ (அ) பரமைகாந்தியோ அல்லாதாரும் உய்யுமாறு
பண்ணும் “உந்து” தலில் ஒரு தாய்க்கு தன் சேய்வசம் உள்ள அன்பினை “உச்சிமோந்து”
வெளிப்படுத்தும் விதமாக பகவானின் திருநாமங்களின் ஏற்றத்தைச் சொல்லி நம்மை நல்வழிப்படுத்தும்
ஸ்வாமியை நாமும் ‘”தூயோமாய் வந்து”
தூமலர்த்தூவித் தொழுவோமென ஆண்டாள் காட்டிப்போந்தவாறே முன்னோர் செய்தமுறை தப்பாது செயற்படும் ஸ்வாமியை மனத்தினால் அநுதினம் சிந்தித்து துதிப்போம்

🌺காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலேயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம் போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதை யெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன். பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல் ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல் இலை, பூ , நார், மூங்கில் மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது!

“🌹இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள் தான் செய்யணும். இது வரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித் தந்ததா தகவல் இல்லை. எங்க விட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு கட்டி தரோம்’நு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.

🌹ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புது கிளி செய்வோம். ஒரு கிளி கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரமாகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தந்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழை நாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன்.

வித்தினை உள்ளத்துக்கு கொண்டு –வித்தினை –முதல் இரண்டு அத்தியாயங்கள் -ஜகத் காரணமான ப்ரஹ்மம் -நாராயணனை -பரமனை -உத்தமனை -பத்ம நாதனை -மாயனை -த்யேய வாஸ்து நிர்ணயம் கீழே தியானித்து-உள்ளத்துக்கொண்டு -சாதன அத்யாயம் -மூன்றாம் அத்யாயம் –

திரு அனந்தல் ஸேவை –திருபள்ளி எழுச்சி -ஸூப்ரபாத ஸேவை

பேர் -நாம மகிமை 14 பாசுரங்கள் பூதத்தாழ்வார்
துழாய் -14 பாசுரங்கள் -பேயாழ்வார்

துயில் அணை மேல் கண் வளரும் -9
கோட்டுக் கால் கட்டில் மேல் -பஞ்ச சயனத்தின் மேல் -19
மாடியில் -கட்டிலில் -படுக்கையில் -ஒரே வ்யக்தி கண் வளரும்

கோதுகலமுடைய -வேண்டற்பாடு உடையவால் -பெரியவா ச்சார்யன் பிள்ளையும் மா முனிகளும் -உயர்ந்த குலத்தில் தோன்றிய -திருவாய் மொழிப்பிள்ளை ஸ்வாப தேச வியாக்யானம்

பிஷாசான் -ஹரி கண ஈஸ்வர
மித்ரா பாவேந -விபீஷணன்
சக்ருதேவ -பிரபன்னனுக்கு –
இவ்வாறு ஆராய்ந்து அருள்வாய்
மற்றவர்கள் வரம் கொடுக்கும் பொழுது ஆராயாமல் அருளி பின்பும் இவனை சரணம் அடைந்து தங்களுக்கு வரும் அநர்த்தங்களையும் போக்கிக் கொள்வார்கள்-

ருக்மிணி பொற் கோடி
லஷ்மணன் -நற் செல்வன்
ராமன் -மனத்துக்கு இனியான்

கற்றுக்கறைவை –முத்திறமும் உண்டு -சத்வ குணம் பசு -தமஸ் ரஜஸ் -ஆடு எருமை –கற்று எருமை -பசுப்பால் பகவத் கைங்கர்யம் -எருமைப்பால் -லௌகிக வியாபாரம் –

வியாழன் உறங்கிற்று அஸ்தமித்தது -அமங்கள சொல் அருளிச் செய்யாமல்
பாலில் ஸ்ரீனிவாசன் இருந்தது -ஸ்ரீனி வாசம் எறும்பு

புள்ளின் வாய் கீண்டவன் புள் இன் வாய் -ஜடாயு -ஆயுஷ்மான் -பெரிய உடையார் -இந்து முகூர்த்தம் -தொலைந்த ஓன்று அப்படியே கிட்டும் -ஆஞ்சநேயர் பெருமாள் காதில் ஓதிய மந்த்ரம் -யுத்தம் விற்கவும் படைத்த நினைவு படுத்திய வ்ருத்தாந்தம்

இரா வண்ணன் கருமை நிறம் கொண்ட ராமன்-ராமன் ரா இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களில் மன்னன் -ராவணனை ராமன் கொன்றான் சொன்னாலும் பொருந்தும்

ஆழ்வார்களில் ஆழ்ந்து அருளிச் செயல்களில் ஆழ்ந்து-ஆராவமுதப்பெருமாள் ஆராவமுத ஆழ்வார் திரு நாமம் பெற்றார்-அத்யயன உத்சவம் மார்கழியில் இங்கு நடக்கும் -தைமாதம் ப்ரஹ்ம உத்சவம் நடக்க இடையூறு இல்லாமல் இருப்பதற்காகவே

மண்ணுண்ணி மாப்பிள்ளையே-காவிறையே, கூவிறையே உங்களப்பன் கோவில் பெருச்சாளி, கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே!”-தமிழ் மொழியில் எதையும்கூறி உரை சொல்ல முடியும்

கன்னா பின்னா மன்னா
கன்னா = வாரி வழங்குவதில் வல்லவனான கர்ணனைப் போன்று விளங்கும் கொடைவள்ளலே ! பின்னா = அவனுக்குப்பின் பிறந்த தர்மபுத்திரனைப் போன்று நீதி வழுவாதவனே ! தென்னா மன்னா = தென்னாடு முழுவதும் ஆளும் மன்னனே ! சோழங்கப் பெருமாளே = சோழ வம்சத்தின் பெருமையை நிலைநாட்ட வந்த தலைவனே !-மண் உண்ணி மா பிள்ளையே -உலகம் உண்ட பெரிய வாயன் -ஸ்ரீ யப்பத்தி-காவிறையே என்றால் கா என்பது கற்பகம் அதற்கு இறைவன் இந்திரன்
கூ என்பது பூமி அதனிறைவன் நம் பெருமான் அதாவது அரசன் உங்கப்பன் கோ என்பது உங்கள் தந்தையும் பெரிய சக்கர வர்த்தி அவர் வில் வித்தையில் பெரிய ஆள் அதையே வில் பெருச்சாளி

ராமனும் கண்ணனும் ஒருவனே என்றார்கள் கீழ் -எவ்வாறு ஒருவரே என்பதை சங்கொடு சக்கரம்ஏந்தும் தடக்கையன் -பங்கய கண்ணன் -என்கிறார்கள்

நான் -நாண் -இரண்டுமே அஹங்காரச் சொற்கள்
புழக்கடை -கடைத்தலை வாழும் சோம்பர் -தலைக்கடை வாசல் புறம்

அரவணைப்பள்ளியானைகேசவனைப் பாடும் ” ஹரி”
எனும் பேச்சரவம், தயிரரவம் கேட்டிலையோ, கண்ணனை துயில் எழுப்ப வா என்றும்;
: நுனிப்புல் மேய நமக்கு முன் செல்லும் கறவையினங்களையும் நிறுத்தி உன் வாசலில் நிற்கிறோம்; கண்ணனைக் கொண்டாட வா என்றும்;
: பகவானின் திருநாமங்களான “மாமாயன், மாதவன், வைகுந்தனில்
மூன்றாவதான “வைகுந்தனை” எங்களுடன் சேர்ந்து பாடவா என்றும்;
: வேதத்தின் சுருக்கான, ஸாரமான, மங்கலத்தைச்
சொல்லும் நாராயணனின் அருள் பெற்றவளே; படுக்கையிலிருந்து எழுந்து வந்து எங்களுடன்
சேர்வாய் என்றும்;
: கோவலர்தம் பொற்கொடியே, மிக்கசெல்வங்களையுடையவளே, இடையனின் தங்கையே நோன்புக்கு நீயும் வருவாய் என்றும்;

: இடைச்சியாய் க்ருஷணாநுபவத்தைப்
பாடினாலும் இடையிடையே ஸ்வரூபத்துக்கநுரூபமான
கைங்கர்யச் செல்வனைப்
பெற்ற”மனத்துக்கினிய”னான ஸ்ரீராமனையும் பாட கோவலர்களின்வாரிசே
நீ எங்களுடன், சேர்வாய் என்றும்;
: ஜ்ஞானத்தின்சீர்மையை
காட்டும் ” கண்ணழகு உடையவளே”, பொல்லா அரக்கனை கொன்ற ஸ்ரீ ராமனைப் பாடி நாம் எல்லாரும் ஒன்றாக அநுபவிப்போம் என்றும்
பாடிப் போந்ததை::
வியாக்யானச் சக்ரவர்த்தியான பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமியின் விரிவுரை, வேதவேதாந்தஙகள்,
இதிகாச புராணாதிகள் மற்றும் ஆழ்வார்களின்
பாசுரங்களிலும் மேலே சொல்லப்பட்ட விஷயங்களுக்கநுகுணமான ஆழ்ந்த கருத்துகள் சொல்லப்பட்டிருக்கும் செயலியையும் ஒரு சங்கிலித்தொடராகச் சேர்த்துச் சொல்லி;
பகவத்விஷயத்தின் சுவடறிந்தும் மறந்து கிடக்கும் அடியேன் போன்றவர்கள் கடைத்தேறவும்,
பரார்த்த
கைங்கர்யம் பகவத் விஷயத்தோடு நில்லாமல்
பாகவதவிஷயமாயும் இருக்கத் தன்னையே ஒரு
கொழுகொம்பாய்ப் பிடித்துக் கொண்டு நோன்பு நோற்க நம்மை அழைத்துச் செல்லும்
“மனத்துக்கினியனான” நம் ஸவாமியின் திருவடிகளைப் பற்றி வீண் பேச்சுக்களைத் தவிர்த்து
எப்பொழுதும் திருமாலின் கதைகளையே பேசியும், உய்யுமாரெண்ணியும்
உகந்தே இருப்போம்!!
” பொலிக, பொலிக, பொலிக!!

பாவைக் களம் -திருவஞ்சிக்களம் -திரு மூழிக் களம் -செல்வம் மறப்பித்த ஸ்தலம்

ஒரு கால் நந்த கோபன் மேலும் மற்ற ஒரு கால் யசோதா பிராட்டி மேலும் பலதேவன் கால் நூபுரம் த்வனி கேட்டு பாசுரம் -அடியை விடாதவர்கள் அன்றோ இவர்கள்

சாலப்பல நாள் இன்னம் தளர்வேனோ – -திருமந்த்ரார்த்தம் –இன்னம் உறங்குதியோ-இன்னம் மூன்று அர்த்தங்களும்-மூன்று பாசுரங்களாலும் அங்கு சர்வ கால ரக்ஷகத்வம் -சர்வ ரக்ஷகத்வம் -சர்வ பிரகார ரக்ஷகத்வம் -அங்கு சொல்லி -புருஷகாரம் -இருக்கவும் ரக்ஷகன் இருந்தாலும் -அடியேன் சம்பந்தம் அறிந்த பின்பும் இன்பம் தளரவனோ -இன்னும் கெடுப்பாயோ- -இன்னும் குறுகாதோ-6-9-திருவாய் மொழியில்7-8-9 பாசுரங்கள் மூன்று இன்னும்-இன்னும் எண்ணுகின்றாய் -7-1- பிராட்டி முன்னாக சரணம் அடைந்த பின்பும்-உற்றேன் உன பாதம் பெற்றேன் உகந்து பணி செய்தேன் -இரண்டுமே ப்ராப்யம் –
இனியும் ஈதே வேண்டுவது -அங்கும் இனியும்–இன்னும் கார் வண்ணமே

செல்வா பலதேவா -நற் செல்வனாகி இருந்து வெறும் செல்வனாகி தூங்கலாமோ -கைங்கர்யம் இழந்தாயே-பிராட்டி மூலம் கைங்கர்யம் செய்ய உபதேசித்து நன்மையை மீண்டும் பெற்றான்–கன்னிகை இல்லாமல் கல்யாணமா -என்று காட்டி அருளினவன்-திருமந்திர சாரமே இவன்-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை- -கீழ் ஆச்சார்யன் -மந்த்ரம் -பொருள் -இங்கு சாரம்

உந்து மத களிற்றன் -உகாரம் -18-குத்து விளக்க எரிய -க் +உ -19- -முப்பத்து மூவர்-ம் +உ -20-மேல் மூன்று பாசுரங்கள் அவளையும் -அவள் அவன் நாம் சேர்க்கையும் உண்டே

ந பின்னை–பிரிவே இல்லாமல் பின்னால் போகாமல் வஞ்சுள வல்லித்தாயார் போல் -நம்பியைக் கையில் வைத்துக் இருக்கும் நம்பிக்கை நாச்சியார்-கண்ணன் பின் பிறந்தவள் கும்பன் திரு மகள்-மாதவிப்பந்தல் -ஸ்ரீ வில்லி புத்தூரிலும் அழகர் கோயிலிலும் உண்டே-உந்து மத களிற்றன்-கண்ணனே களிறு -பராங்குசன்-

தனிக் கோயில் நாச்சியார் இடம் பிரார்த்தனை -உந்து -உபய நாச்சியார் உடன் கூடிய அவனிடம் சரணாகதி குத்து -திருமார்பு நாச்சியார் சேர்த்தியில் கைங்கர்யம் முப்பத்து மூவர்

நேத்ருத்வம் உந்து -நித்ய யோகம் -குத்து விளக்கு-தத் இங்கித பராதீனன்-

ஏற்ற கலங்கள் -திருப்பாவையில் திருப்பள்ளி எழுச்சி -அன்று –போற்றி -திருப்பல்லாண்டு-ஆர்ய புத்ரா -ஆற்றப் படைத்தான் மகனே -சாஸ்திரம் படி கணவனை அழைக்க வேண்டிய முறையை நப்பின்னை சொல்லிக் கொடுத்த படி –

சூடகமே -ஏவகார சீமாட்டி -அனைத்துமே கண்ணன் -கன்றுக் குட்டிகள் ஆயர் சிறுமியர்கள் போல இவனே முன்பு ஆனான் -உன்னையே அர்த்தித்து வந்தோம் என்றவர்கள் தானே –

நம் காமங்கள் மாற்று -எம் இல்லை -அவனையும் சேர்த்து -விளையாட்டுக்காக -அவன் செய்யலாம் -அவனையும் சேர்த்து அருளிச் செய்கிறார்

28ம் பாசுரத்திற்கு த்வயத்தின் முன்வாக்கியத்தையும் 29ம் பாகரத்தில் பின்வாக்கியத்தையும் சாதித்தாள். இந்த 28ம்மாகரத்தில் இறைவா நீ தாராய் பறை என்று ப்ரார்த்தித்தாள் ( முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை
தருவான் என்றாள்

28ம்பாசுரத்தில் ப்ராபகத்தையும் ௨9ம்பாகரத்தில் முழுமையான ப்ராப்ய ப்ராபக ப்ரார்த்தனை செய்கிறார். இந்த 6 உபாய வர்ணத்தை – த்வயத்தின் முன்பகுதி அர்த்தத்தை சொல்லி 28வது பாசுரத்தில் சரணம் ப்ரபத்யே என கூறுகிறாள். ஆக 18, 19, ௨௦வது பாசுரங்கள் ஸ்ரீமத் சப்தம், 21, 22, நாராயணாய , 23, 24- சரணௌ சப்தரித்தல் 25 – சரணம் விளக்கம் – அநிஷ்டத்தை தொலைத்து . இஷ்டத்தை கொடுக்குமாறு அர்த்தித்தல் ( வருத்தம் தீர்ந்து அருளேலோ) 26 – யார் உபாயம் என்று கூறுவது 27 – கூடியிருந்து குளிர்ந்து ஸாயுஜ்ய மோக்ஷம் – 28வது பாசுரம் சரணாகதியை சொல்வது

18 முதல்20 வது பாசுரம் வரை பிராட்டி சம்பந்தம் சொல்லப்பட்டது. நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே – நாரங்களுக்கு அயனமாய் இருக்கிறார். நாராயண – சேதன அசேதனங்களுக்கு விசிஷ்டனாய், குணவிசிஷ்டனாய், விக்ரஹ விசிஷ்டனாய லஷ்மி விசிஷ்டராய் இருக்கிறார். 21ம் பாகரத்தில் . போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து – என குணத்தை புகழ்கிறாள். 22ம் பாசுரம் – கடாக்ஷத்தை பிரார்த்திப்பது 23 – அவர் திருவடிகளே உபாயம். உபாயமான நீ எங்களை தேடி வர வேண்டும் என பரகத ஸ்வீகார மே ஸ்வீகாரம் என்கிறாள். 24 நடந்த திருவடிகளுக்கு பல்லாண்டு பாடினாள். 25வது பாசுரத்தில் தேவரீரே பறை என்ற புருஷார்த்தம் 26வது பாசுரத்தில் அவரும் நாமும் சேர்ந்து 8 குணங்களில் சாம்யாபத்தி – அவருக்கு நிகரான தன்மை. 26வது பாசுரத்தில் ஆலின்கிலையாய் அருள் – அகடித கடனா சாமர்த்தியத்துடன் கூடிய பரத்துவம் சொல்லப்பட்டுள்ளது. சாம்யாபத்தி மோக்ஷம். பரத்துவம் உடையவர் கொடுத்தால் தான் உயர்ந்த சாம்யாபத்தியாய் இருக்கும். 27வது பாகரத்தில் 8 குணங்களில் பெருமானுக்கு நிகர். ஆனந்தம் எப்படி இருக்கும் அடியார்களுடன் சேர்ந்து பகவானை அனுபவிப்போம். 27. சாயுஜ்ய பதவி கிட்டுவது 28வது பாசுரம் ப்ரபன்னனிற்கு உண்டான நிஷ்டையை ப்ராப்யத்தை இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புண்ணியம் யாம் உடையோம் – இங்கு புண்ணியமே பெருமாள்தான் உன் திருவடிகளையே உபாயமாக ளித்த உபாயமாக உன்னையே கொடுத்தாய்.29ம் பாதரம் – ப்ராபகம் . திருப்பாவை ஆகிறது இப்பாசுரம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து -திருமந்திரத்தில் பிறந்து
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -துவாதச அஷரி -ஓம் நமோ பகவத் வாஸூ தேவர் -மகனாய் ஒளித்து வளர-யாதவ ஸிம்ஹம் போலவே நரஸிம்ஹ -வாமன -ராகவ ஸிம்ஹம் -ரெங்கேத்ர ஸிம்ஹம் -ராமானுஜ சீயம் அனைவருக்கும் பொருந்தும்

திருத்தக்க செல்வம் -அவனையே சொன்னவாறு -வருத்தமும் தீர்ந்ததும் அவனுக்கே

ஆ ந ந -இல்லை என்பதை இல்லை -எப்பொழுதும் உண்டு -ஆநநம் முகம் -நம்மோடே உற்றோடே ஆவீர் -நமக்கே ஆட் செய்வீர் என்பவன் -லஷ்மீ கல்யாண வைபோகமே அருளி நிகமனம் -மா தொடங்கி -எங்கும் திரு வருள் பெற்று இன்புறுவர்

அங்கு அப்பறை –பரமன் அடி பாடி -ஒரு பறை -பரம புருஷார்த்தம் -ப்ரீதி காரித ததீய கைங்கர்யம் -ததீயாருக்காகவே-அப்பறையே நீங்காத செல்வம்-குண அனுபவம் -கைங்கர்ய நிஷ்டர் -பறை இரண்டு வகை -முனிவரும் யோகிகளும் -கலந்து பேசின -கூட்டமாக அனுபவம்-

கணுப் பண்டிகை பாடல் :

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும்
காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பார்த்து வெச்சேன் பரப்பி வெச்சேன்
பச்சை இலையில் நிரப்பி வெச்சேன்

மஞ்சள் இலையை விரிச்சு வெச்சேன்
மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்

காக்கைக்கும் குருவிக்கும்
கல்யாணம்னு சொல்லி வெச்சேன்

கலர் கலரா சாதம் வெச்சேன்
கரும்புத் துண்டும் கலந்து வெச்சேன்

வகை வகையா சாதம் வெச்சேன்
வாழைப்பழம் சேர்த்து வெச்சேன்

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம்
அமர்க்களமாய் வாழ வெச்சேன்

இனிப்பு புளிப்பு தேங்காய் சாதம்
இன்பமாய் எடுத்து வெச்சேன்

எள் சாதம் எலுமிச்சை சாதம்
ஏகாந்தமாய் நானும் வெச்சேன்

கூட்டு பொரியல் அவியல் வெச்சேன்
கூட்டுக் குடும்பம் கேட்டு வெச்சேன்

தூப தீபம் காட்டி வெச்சேன்
இதயத்தோடு எதுத்து வெச்சேன்

கற்பூரம் ஏத்தி வெச்சேன்
கண்ணனை வணங்கி வெச்சேன்

ஆரத்தி எடுத்து வெச்சேன்
ஆண்டவனை வேண்டி வெச்சேன்

கணுப் பிடி வெச்சேன்
காக்காப் பிடி வெச்சேன்

கணுப் பிடியும் காக்காப் பிடியும்
கலந்து நானும் வெச்சேன்

பிறந்த அகம் ஓங்கி வளர ஆழ்வார் எம்பெருமானாரை வணங்கி வெச்சேன்

——————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆண்டாள் திருக் கல்யாணம் -ஸ்ரீ திருமலை நல்லான் ஸ்ரீ ராமகிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்

January 20, 2025

மார்க்க சீர்ஷ விரதம் கிரந்தம் சிரோமணி வி நிர்மிதம்
நிரூப யைவம் ஸ்லோஹம் ஆஹதே சிகோ வரதோ முதா
–கார்ப்பங்காடு ஸ்ரீ தேசிக வரதாச்சார்யர் ஸ்வாமிகள் மங்களா ஸாஸனம்

முதல் அங்கம் -முதல் களம்
ஸ்ரீ ஆண்டாளும் அனுக்ரஹை தோழியும் வருகிறார்கள்
ஆண்டாள்
–சகி -இச்சோலையைப் பார் -என்ன நேர்த்தி -எத்தனை வனப்பு -அதுவும் மாலை நேரம் -தங்கத்தை உருக்கியது போன்ற தன் செங்கிரணங்களை -ஏழைகள் குடிசையில் உத்யானத்திலும் பாரத பரப்பிக் கொண்டு இருக்கின்றான் – எங்குப் பார்த்தால் தங்கக் கொடிகள் -தங்க புஷ்பங்கள் தங்கப் பறவைகள் -இவ்வுலகம் அழியக் கூடியதாகையாலே வெறுக்கத் தக்கது என்றும் வேதாந்திகள் கூறுகின்றனரே –அது இயற்க்கைச் சேவை அறியாதவர் வாத்யம் என்பதை எனது அபிப்பிராயம் -தினம் தோறும் தங்கதிரினைக் கதிரவன் இங்கனம் வீசுவது இல்லையா -பிரளய காலத்திலும் இவற்றை அழிக்க மனமில்லாமல் ரஸிகக் கடவுள் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றுகிறான் –

அனுக்ரஹை -ஆம் -இயற்கையில் எவர் மனம் தான் ஈடுபடாது -இவ்விதம் இருப்பது வழக்கம் தான் என்று லஷ்யம் செய்யும் மூடர்கள் தான் இதை வெறுக்கின்றனர் -முற்றும் துறந்த முனிவர்களும் கூட இயற்கையினில் தங்களை திட மனத்தைக் கொள்ளை கொடுத்து விடுகின்றனர் -இது அவர்கள் இன் மொழியை ஆராய்ந்தால் நன்கு புலப்படும் -ஏன் நின் தந்தையும் கூட இயற்கை அன்னைக்கே தமது கவி முழுவதும் கப்பம் விடுகின்றார் அன்றோ-இக்கொடியைப் பார் -இக்கொள் கொம்பை எவ்வாறு இறுகத் தழுவிக் கொள்கிறது -இதில் வைத்தால் நாட்டத்தை யாரால் திருப்ப முடியும் –

ஆண்டாள் -ஆச்சர்யத் தோற்றத்துடன் -அதைப் பார்த்த வண்ணம் -சசி நெடுநாள் பிரிந்த மணாளனையும் பெண் மணியும் போன்று இக் கொடி கொம்பைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது -அம்மடந்தையரின் மந்த ஹாஸத்தை மலர்ந்த மலர்கள் பரிஹசிக்கின்றன –மலர்களில் ததும்பும் தேனைப் பருகும் வண்டினங்கள் இனிது முரல்கின்றன -தென்றலுக்கு அசையும் அசைவு அதைத் தலை யசைத்து புகழ்வதை ஒக்கும் -இக் கொம்பை விட்டுப் பிரிந்தால் -பிரியில் தரியேன் -என்னும் உத்தம ஸ்த்ரிகள் போல் இக் கொடி என்ன பாடு பாடும் -பிரியேன் என்ற பெருமையால் அன்றோ இது அந்தமில் பேரின்பத்தை அனுபவிக்கிறது -உயரிய தம்பதிகளின் காதலின் மேம்பாட்டை இக் கொடி நன்கு விளக்கிக் காட்டுகிறது

அனுக்ரஹை -புன்னகையுடன் -நீ கூடுவது முற்றிலும் பொருந்தும் -ஆனால் உன்னுடைய வார்த்தைகள் இத்தைக் கண்டு பொறாமைப்படுவதை விளக்குகின்றனவே-

ஆண்டாள் -இல்லை சகி -நான் பொறாமைப் படவில்லை -உண்மையிலேயே இவ்வுலகில் காதலுக்கு இணை கிடைக்கவே கிடையாது -ஆகையால் தானே கவியரசர்கள் அதையே கையாள்கின்றனர் -உலகில் சிறந்தவை எல்லாமே கவி வாணர்களின் இன் மொழிகளுக்கு இடமாவது இயல்பே அன்றோ -ஸ்வாமியான பரமாத்மாவிடம் தாஸர்களான ஜீவாத்மாக்கள் செலுத்தும் பக்திக்கும் காதல் தான் தகுந்த த்ருஷ்டாந்தம் -ஞானிக்கு நான் பிரியன் -எனக்கு அவன் பிரியன் -என்றான் கீதாச்சார்யன் -இக்காதலின் உண்மையை அறிந்தே முற்றிலும் துறந்த முனிவர்களும் மறு ஜென்மம் கோபிகளாகப் பிறந்து கண்ணனை அனுபவிக்கிறார்கள் -முனிவர்களிலும் பன் மடங்கு ஞானாதிகரான பராங்குசர் முதலிய நம் பெரியோரும் மறு பிறவி வரை கூடத் தாங்க இயலாமல் அதே பிறவியில் ஆணாய் இருந்தும் உண்மைப் பெண்டிர் நிலைமை எய்தி பரமாத்மாவிடம் காதல் கொண்டு உருகி நைந்தனர் எனில் காதலின் மேம்பாட்டை நான் இயம்பவும் வேண்டுமோ-

அனுக்ரஹை-ஆணாய் இருந்தும் பெண்மை யுற்ற பெரியோரினும் நீ பெரியை -ஏன் எனில் உண்மையாகவே பெண் மகளாய்த் தோன்றிய நின் காதல் அவர்களுடைய காதலிலும் சீரியது அன்றோ –

ஆண்டாள்-சிறிது கோபத்துடன் -தலை குனிந்து -நான் காதல் கொண்டேனோ -யாரிடம் -இஃது என்ன விந்தை -நான் அறியாமல் என் காதலை நீ அறிந்து கொண்டு விட்டனை போலும் -இனி இது போன்ற அடுக்காத சொற்களை விடுக்காதே –

அனுக்ரஹை–ஏன் மறைகின்றனை -நீ நின் காதலனைக் காணாமல் படும் பாடுகளை எல்லாமே நான் நன்கு அறிவேன் -நின் முகம் வெளுத்து இருக்கிறது -ஒளி மழுங்கவில்லை -இதன் காரணம் விரஹத்தைத் தவிர வேறு ஏதாக இருக்க முடியும் -நோய் இல்லாமல் உனது உடம்பு இளைக்கக் காரணம் எது -நீ அடிக்கடி பெரு மூச்சு விடுகின்றாயே அது எதற்க்காக –நீ இப் பூஞ் சோலைக்கு அடிக்கடி வர விரும்புவது இல்லையே -குயில் ஓசையிலும் தென்றல் காற்றிலுமுள்ள பயம் தானே -அழகிய மணவாளனைப் பற்றிப் பேசும் போது எல்லாம் நின் மேனியில் தோன்றும் மயிர்க் கூச்சலை நான் பன் முறை கணடு இருக்கிறேன் -எனவே நின் மனதைக் கவர்ந்த கள்வன் அவனே என்றும் நான் நன்கு அறிவேன் –மேலும் இலக்குமன் போலே பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளிடம் பற்றுக் கொண்ட நீ அவன் திவ்ய வைபவங்களை பாடினால் மட்டுமே உறங்குவாய் என்றும் உன் தந்தை கூற நான் கேள்விப்பட்டது இல்லையோ -பால்யத்திலேயே இவ்வாறு என்றால் இப்போது இந்த யவ்வன தசையில் அவனிடம் பற்றுக் கொள்ள இல்லை என்பது ஏற்கப் பாலாது ஆகுமோ-

ஆண்டாள்-தலை குனிந்து -சகி நீ என்னையே இவ்வாறு பரிஹஸிக்கவோ இங்கு வந்தனை -பரிஹஸிக்கும் ஆற்றன் இல்லாத பழியைச் சுமத்துவதில் நீ கொஞ்சமும் அஞ்சுவது இல்லை -நான் மறுத்திடிலோ ஒன்றுக்குப் பத்து வார்த்தை –அம்மா போதும் நிறுத்திக் கொள்

அனுக்ரஹை-புன்னகையுடன் -நீ என்ன கூறினாலும் உண்மையை மறைக்க முடியுமோ -பிரிவாற்றாமை முற்றிய பின்னர் நீயே வலியக் கூற வேண்டி இருக்கும் -அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன் –சிறிது தூரம் சென்று பூக் கொய்கின்றனள் –

ஆண்டாள்–தனக்குள் -சகியை நான் சினந்து கூறி விட்டேன் -வேறு வார்த்தையாடி என் சகியின் உள்ளம் உகக்கக் செய்கிறேன் –
வெளியில் -சகி -இச் சோலைக்கு ஈடு இவ்வுலகிலினேயே இல்லை என்கின்றனர் -இது உண்மை தானா -உன் அபிப்ராயம் என்ன-

அனுக்ரஹை-இச் சோலையை விட பன் மடங்கு வனப்பு வாய்ந்த மற்றுமோர் சோலை இருக்கிறது –

ஆண்டாள்-அது எங்கு உள்ளது -அதை நான் காண அவா வுறுறேன் –

அனுக்ரஹை-அச்சோலை வெகு தூரத்திலே இல்லை -ஆழ்ந்த நாவி என்னும் வாவியுடன் கூடியதும் -மூன்று மடிப்புகளாகிய படிக்கட்டுகள் உடையதும் -தோள்கள் என்னும் கொடிகளுடன் கூடியதும் -கண்கள் என்னும் வண்டு இனங்கள் உடையதுமான நின் வடிவமே அச்சோலை -நின் வடிவச் சோலைக்கும் இச் சோலைக்கும் நெடு வாசி உண்டு என்பது என் அபிப்ராயம் –

ஆண்டாள்–பரிஹஸிப்பது உன் பிறவிக் குணம் போலும் –

அனுக்ரஹை-சகி -இங்கே என் பக்கம் வா -மண மலி மலர்கள் இங்கு மலிந்து இருக்கின்றன -பொற் கொடியாளான யுன்னை இக் கொடி தன் வண்டு ஒலியால் அழைக்கின்றது

ஆண்டாள்-இங்கு இல்லாவிடில் அன்றோ அங்கே வர வேண்டும்

அனுக்ரஹை-ஆமாம் சகி வர வேண்டாம் -வந்தால் வண்டினங்கள் இம்மலர்களை விட்டு நின் முக மலரின் கண் வீழ்ந்து -அதர மதுவைப் பருகி விடும் -தேவர்களுக்கு எல்லாம் கடல் கடைந்து அம்ருதம் எடுத்துக் ஈந்த வள்ளலுக்கு எனச் சேமித்து வைத்துக் இருக்கும் மதுவைக் கேவலம் வண்டினங்கள் பருகக் கொடுப்பது நியாயமோ-

ஆண்டாள்– சகி -உனக்கு என்னால் பதிலும் கூற இயலாது -என்று வேறு ஒரு இடமும் சென்று -சகியின் சாமர்த்தியம் தான் என்னே -எவ்வளவு புத்திக் கூர்மையும் ஊஹமும் அவளுக்கு -எனது விரஹ வேதனையை அவள் எவ்வாறு அறிந்து கொண்டனளோ -நான் எவ்வளவு மறைத்தாலும் அவள் ஒப்பவில்லை -இன்னாரிடம் காதல் கொண்டேன் என்னும் உண்மையைத் துணிந்து பணிக்கின்றனள்-ஆஹா காமத்தீயுள் புகுந்து கதுவக் கங்குல் யாமங்களில் தென்றலுக்கு இலக்காய் நான் படும் படு மறைத்தற்கு உரியதோ -மெல்ல மெல்ல மலயானிலம் வந்து வீசவே என் விரஹ அநலம் விரைந்து பொங்கி எழகின்றது –காற்றுக்கும் நெருப்புக்கும் ஸ்நேஹம் உண்டு என்றும் உலகினில் கூறுகின்றனர் -இவ்வுண்மையை என் போன்ற விரஹி தான் முதல் முதலில் உணர்ந்து இருக்க வேண்டும் -இவ்வனம் வசித்தற்கு இனிய சோலை எனும் மாற்றம் ஏமாற்றமாகவே முடிந்தது -இதைக் காம தேவன் தன் கூரிய கணைகள் வைக்கும் படைச் சாலையாகவே யானும் கருதுகிறேன் -ஆகா காம தேவனின் மஹிமை அளவிடற்கு அரியது -கடவுளாலும் அவன் கட்டளையைக் கடக்க முடியாது -காம தேவா என்னைக் கலக்க வேண்டாம் -தொழுது முப்போதும் உன் முன்னடி வணங்கித் தூ மலர் தூவி ஏத்துகின்றேன் -பாற் கடல் வண்ணன் என் கண்ணனுக்கே பணி செய்து வாழ அருள் புரிவாய் -அம் மாயவனுக்கு அன்றி மானிடருக்கு என்றும் பேச்சுப் படில் யானும் வாழ கில்லேன் கண்டாய் -இது நிச்சயம் -கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருள வேண்டும் -அந்தோ காமன் கழலடி வணங்கியும் என்னை ஏன் அவன் படைகள் அடர்கின்றன -இதோ இக் குயிலின் கோலாஹலம் ஆலா ஹாலத்திலும் கொடிதாய் உள்ளது -ஏ குயிலே என்றும் இக் காவில் இருந்து என்னைத் ததர்த்தாதே -யான் என்புருகி நெடும் கண்கள் இமை பொருந்தாமல் பல நாளாகத் துன்பக் கடலில் புக்கு உழல்கிறேன் -அன்புடையாரைப் பிரிவதால் உண்டாகும் நோயை நீயும் அறிகின்றிலையோ -நற் பொழில் வாழ் நற் குயிலே -அக்கார் வண்ணக் கண்ணன் வரக் கூவ வேண்டும் – இன்றேல் என் பொன் வளை களைக் கொண்டு தருதல் வேண்டும் -இரண்டத்தில் ஒன்றைத் திண்ணமாக நீ செய்தாக வேண்டும் -இன்றேல் இப் பூங்காவில் வாழ ஒட்டாது நான் விரட்டுவேன் -பூ இதழ்கள் மெல்லியவை அன்றும் -உண்மையில் அவை கத்தி முனையிலும் கூரியவையே -சந்தனம் என் தனத்துக்கு செந்தணல் தான் -பகலிலுள்ள வேதனை விட இரவில் என்னை மிகவும் துன்புறுத்துகின்றது -ஒரு கங்குல் ஆயிரம் ஊழிகளே -அதிலும் சுக்ல பக்ஷமாகில் கேட்க வேண்டியதில்லை -என் கதி அதோ கதி தான் -திங்கள் ஊடறுத்து என்னை நலியும் முறை மிகவும் பெரியது -அமாவாசையில் மறைந்த மதி ஏன் மீண்டும் உதிக்கிறான் -பாபிகள் இவ்வுலகை எளிதில் விடுவது இல்லை -ஆஹா உலகில் தீயோர் வேஷம் மிகவும் விசித்ரமானது -சந்திரன் எவ்வளவு கொடியவன் -அவன் குளிர்ந்தவனாகக் கொண்டாடப்படுகிறான் -இவன் கொடுமையை இவ்வுலகு அறிவது இல்லை -நஞ்சு அரவமும் இவன் வெப்பம் தங்கள் மாட்டாமல் அன்றோ இவனை உமிழ்ந்து விடுகிறது -இக்கொடியோன் தன் கிரணங்களால் பனி எனும் புனர் பெயர் பூண்ட நெருப்புத் தணல்களை வாரிக் கொட்டுகிறான் -இதை யாரால் பொறுக்க முடியும் -எல்லாம் அறிந்த அக்கள்வன் என் நிலைமையை மட்டுமே உணர்கிலனோ -பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதற்க்கு ஆசையினால் கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலித்து என் ஆவியை ஆகுலம் செய்யவும் அவன் இதை உணராதவன் போல் பஞ்சிலும் மெல்லிய அரவணையில் திருமாலுடன் கூடிக் களிக்கின்றனனே -இது நியாயம் ஆகுமோ -தீமை செய்யும் சிரீதரா நான் தினம் தோறும் உனக்கு மலர்மாலை சூட்டிப் பரிவுடன் தருகின்றேனே -நீ மட்டுமே ஏன் என் கூந்தலில் மலர் சூட்டக் கூடாது -இன்றாவது வந்து என் ஆசையை நிறைவேற்றித் தர வேண்டும் -இறைவன் வருவானா என்றும் கூடல் இழைத்துப் பார்ப்போம் -கீழே அமர்ந்து கூடல் இழைக்கிறாள்
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்க்
காமவன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர் தம்
கோ மகன் வரில் கூடிடு கூடலே

இதற்குள் அனுக்ரஹை வந்து விடுகிறாள் –

ஆண்டாள்– சடக்கென எழுந்து -சகி எவ்வளவு நேரம் -நான் போதுமான பூக் கொய்து விட்டு நின் வரவை நெடு நேரம் எதிர்பார்த்து நிற்கிறேனே-

அனுக்ரஹை-என் வரவை எதிர்பார்க்கத் தனி இடம் வேண்டுமா -நீ எதிர் பார்க்கும் அக் கார்க் கடல் வண்ணனைத் திண்ணமாய் என் உதவி இன்றி நண்ண முடியாது -பிராண சகிக்கும் கூட மறைக்கும் ரஹஸ்யம் ஓன்று உண்டு போலும்

ஆண்டாள்– கோபக்குறியோடு பார்க்கிறாள்

அனுக்ரஹை-சகி தனியே பூக் கொய்யாமல் ஏதோ நினைத்து உருகியதால் இங்கனம் உன்னை உன்னைக் கூறினேன் -இதற்க்கு ஏன் கோபம் -கையைப் பிடித்துக் கொள்கிறாள்

இருவரும் செல்கின்றனர்
முதல் அங்கம் முதல் களம் முற்றிற்று –

————

முதல் அங்கம் -2- களம்-இடம் –ஸ்ரீ வட பெரும் கோயில் சந்நிதி -ஸ்ரீ வில்லி புத்தூர்
கையிலே குடலையுடன் பெரியாழ்வார் வருகிறார்

பெரியாழ்வார் -சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி-
நாரணா -மஹா பிரபோ -வட பத்ர ஸாயீ -ஸர்வ லோக சரண்யா -கருணைக் கடலே -எஞ்சலில் என்னுடை இன்னமுதே -நன்மை தீமைகள் ஒன்றுமே அறியாத நான் ஓவாதே நமோ நாரணா என்பேன் -தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டமின்றி உன் பொன்னடிக்கீழ் வைக்கின்றேன் -அடியேன் உண்ணா நாள் பசியாவது ஒன்று இல்லை -நமோ நாராணா என்றும் எண்ணா நாளே எனக்குப் பாட்டினி நாள் –ஆசையினாலே உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் துள்ளம் சோர யுன்னை நாள் தோறும் தொழுது ஏத்தும் நன்மையே எனக்கு அருள் செய்ய வேண்டும் -கொங்கைச் சிறுவரை என்னும் பொதும்பினில் அழுந்திக் கிடந்து உழலும் என்னை வல் வினைகள் மாற்றி பங்கப்படா வண்ணம் செய்த நின்னருள் கண்டாய் இவ்வுலகினில் மிக்கது -பிரம குருவாகி வந்து நீ என் வன்னெஞ்சம் புகுந்து என் சென்னித்திடரில் பாத இலச்சினை வைத்தால் இப்பண்பினை என் என்பேன் –
பை அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி -பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நீர் செய்வான் பிறந்த பாவ காரிகள் படர்ந்த இப்பாரினில் -மரகத மலை போல் நிலை பெயராமல் நீ படுத்து இருக்கும் படி என்னே -குடையும் செருப்பும் இல்லாமல் கடிய வெங்கானிடைக் கன்றின் பின் போன நின் சிறுக்குட்டச் செங்கமல அடிகள் வெதும்பி -கண்கள் சிவந்து -உடலம் சிதைந்த தனாலோ அயர்ந்து நீ உறங்குகின்றனை -உன்னை இது காறும் தனியே விட்டு இருந்த என்னின் மனம் வலியான் ஒருவன் உண்டோ -பஞ்சாயுதங்களே என் சிறுகுட்டனின் பள்ளி அரையைப் பார்த்துக் கொள்ளுங்கோள்-

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே
அறவெறி நாந்தக வாளே யழகிய  சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்
பறவை அரையா உறகல் பள்ளி யறை குறிக் கொள்மின் -5 -2-9 –

ஆஹா என்ன அதிசயம் -வான் இளவரசு வைகுந்தக் குட்டன் ஆயர் குலக்கொழுந்து ஆயினன் -என்ன கருணை -அவன் தன் கருணை எல்லையை உள்ளவாறு கண்டார் ஒருவர் உளரோ -அவன் தான் கண்டனனோ -இதை அறியாதவனுக்கு ஸர்வ்ஞ்ஞன் என்ற பட்டமாம் -ஓஹோ எல்லை இருந்திடில் அன்றோ அவன் காண முடியும் -அதனால் தான் அப் பட்டம் அவனுக்கு நிலத்து இருக்கிறது – ஸர்வேஸ்வரா உன் உந்திக் கமலத்துள் இருந்தும் அயன் நின்னடிக்கமலம் காண்கின்றிலன் -அத்தகைய நீ கேவலம் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் அவதரித்தனையே -இஃது ஒன்றே உனது கருணைக்கும் ஸுலப்யத்தத்துக்கும் அளவின்மையை நன்கு உணர்த்துகிறது -உறி வெண்ணெய் உண்டு -ஊரார்கள் எல்லாரும் காண உரலோடு கட்டுண்டு அடிபட்டு கன்றுகள் மேய்த்து நின் தோழரோடு கலந்து நினைத்து எளிமை தான் என்னே -இத்தகையனான உன்னைச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த யசோதையின் பாக்கியமே பாக்யம் -உன் பிள்ளைச் சுவை எல்லாம் பெற்றாள் யசோதை -உன் திரு விளையாடல்களைக் கண்டு களிக்கும் அம்மங்கையின் கண்களே கண்கள் -மற்றவை புண்களே ஆகும் -அது எல்லாமே எனது காலங்களில் நடை பெறக்கூடாதோ -அசோதையைப் போலே யான் களிக்கும் நாட்களும் கிடைக்குமோ -இது என் பைத்தியம் -அவை நடந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன -அதைப்பற்ற நினைப்பதால் யாது பயன் -ஆகிலும் என்ன -எதற்கும் மனம் தானே காரணம் –முற் காலத்தில் யசோதை உனக்கு மலர் சூட்டி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது போல் யானும் நான் மகிழுறக் கூடாது-

ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய் -2 7-1 – –

என்று ஒரு மாலையை எடுத்து உற்றுப் பார்த்துக் கண்களில் நீர் வடிய
ஐயோ இது என்ன பாவம் -யார் இவ் வடாத கார்யம் செய்தது -பகவத் அபசாரத்துக்கு அல்லவா உள்ளான் ஆனேன் -இதில் என்னைத் தவிர வேறு யாரை நொந்து கொள்வது -கோயிலுக்கு மாலை கொண்டு வருவதற்கு முன்பே நான் ஏன் கவனித்து இருக்கக் கூடாது-ஐயோ எம்பெருமான் திரு உள்ளம் இதனால் எவ்வளவு சீற்றம் கொண்டதோ -கேசம் சம்பந்தப்பட்டால் எவ்வளவு அசுத்தம் -இம் மாலையில் அது சம்பந்தப்பட்ட வேண்டிய காரணம் என்ன–தன்னை அறியாமல் யவருடையது ஏதேனும் இதில் சேர்ந்து விட்டதோ -ஆம் அப்படித்தான் -நமது இல்லத்தில் ஒருவரும் தன்னை அறிந்து இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள் –
மறுபடியும் மாலையை உற்று நோக்கிப் பெரு மூச்சுடன் –
இவ்வளவு நீண்டும் கறுத்தும் உள்ள கேசம் கோதையினுடையது தான் -சந்தேகம் இல்லை -அவள் சகிகளுக்குக் கூட இவ்வளவு நீண்ட கூந்தல் கிடையாது -ஆஹா அவள் தானோ இக்கொடுமை இழைத்தனள் -அடி கொடியவளே -அபசாரத்திற்கு ஆளாக்கி விட்டாயே -இக் கொடிய எண்ணம் உனக்கு ஏன் உண்டாயிற்று -தினம் தோறும் இவ்விதம் தான் நீ செய்து வருகின்றனையோ -பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான் அன்றோ -இன்று நீ அகப்பட்டுக் கொண்டனை -ஹும் -பகவானுக்குச் சாத்திக் களைந்த பின் மனம் குன்றி விடுமோ –
சே இது என்ன எண்ணம் -நமது குழந்தை இவ்வாறு செய்து இருப்பாளோ -ஒருக்காலும் இல்லை -அவள் தான் மஹா பக்தையாயிற்றே -என்னிடம் அழகிய மணவாளன் வைபவத்தை எவ்வளவு குதூகலமாகக் கேட்ப்பாள் -அச்சமயங்களில் அவளுக்கு உண்டாகும் ஆனந்தக் கண்ணீரையும் மயிர்க் கூச்சலையும் நான் நேரிலே கண்டு இருக்கின்றேனே -அவளா இவ்வாறு செய்தனள் -இல்லவே இல்லை -ஒரு வேளை அவலாய் அறியாமலேயே அவனது கேசம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாமே -அவள் அபசாரம் செய்யவில்லை -நான் தான் அவளை நிந்தித்ததால் பாகவத அபசாரத்துக்கும் இலக்கானேன்-

ஐயோ நான் மனத்தை எவ்விதம் சமாதானம் படுத்திக் கொண்டால் தான் என்ன-அது நிம்மதி அடையவில்லையே -இக் கேசம் தலையிலே சூடிக் களைந்த பொழுது சிக்குண்டு அறுந்ததாகவே எனக்குத் தோன்றுகிறது – இல்லாவிடில் மாலையைச் சுற்றி சுற்றி எவ்வாறு இருக்க முடியும் -இது அறியாமையால் நடந்து காரியம் அன்று-சந்தேகமே இல்லை -ஆஹா ஸ்த்ரீகளின் ஸ்வ பாவம் தான் என்ன-அவர்களது இயல்பினை இவ் வுலகில் யாவரே அறிபவர் -அவர்கள் மனம் ஆழ் கடலினும் ஆழம் உடைத்தே -அக் கொடியவள் பகவானிடம் பக்தி உள்ளவள் போல் எவ்வளவு பாசாங்கு செய்தனள் -நான் உண்மை என்று அல்லவா அகம் மகிழ்ந்து இருந்தேன் -எல்லாம் வேஷமா -இதோ உனக்குத் தகுந்த தண்டனை விதிக்கிறேன் -இனி விஷ்ணு பக்தி இல்லாத உன்னோடு ஸஹ வாஸமே எனக்கு அடுக்காது –

பகவானை நோக்கி -ஸர்வேஸ்வரா -அடியேன் அறிவின்மையால் இழைத்த அபராதம் அனைத்தும் பொறுத்து அருள வேண்டும் -வேறு புது மாலைகள் கொணர்ந்து சாத்துகிறேன்
குடலையை எடுத்துக் கொண்டு திரும்பி விடுகிறார்-

உள்ளிருந்து ஒரு குரல் உண்டாகிறது -ஆழ்வீர் ஆழ்வீர் நில்லும் நில்லும் போக வேண்டாம் -இங்கே வாரும்

ஆழ்வார் திரும்பி வந்து கைகட்டி நிற்கிறார்

அசரீரி -இதோ உமது கையில் துலங்கு மலங்கல் நின் மகள் கோதை சூடிக் களைந்ததே ஆகும் -தினம் தோறும் அவள் இவ்வாறு செய்து வருகின்றனள் -நீர் நினைப்பது போல் இது பக்தி இன்மையால் செய்த கார்யம் அல்ல -பரம பக்தியால் செய்த காரியமாகும் -நாமும் இதனை மனம் உகந்து ஏற்கிறோம் -தினம் போல் இன்றும் இம் மாலையை இவ்வழகிய கேசத்துடனே சாத்தி எமது உள்ளத்தைக் குளிர வைப்பீராக –

ஆழ்வார் -அவ்வாறே செய்கிறேன் -அவ்விதம் செய்து கை கூப்பிய வண்ணம் – பிரபோ அடியேன் கோதையிடம் அபசாரப் பட்டு விட்டேன் -அதைப் பொறுத்து அருள வேண்டும் –

அசரீரி -அவ்வாறே ஆகுக -என் பிராண நாயகியிடம் புரிந்த அபராததுக்குப் பிராயச்சித்தமாகப் பிரதி தினமும் அவள் சூடிக் களைந்த மாலைகளையே சாத்துவீராக -இதனால் என் மனமும் அவள் மனமும் குளிர்ச்சி அசையும் -போய் வாரும்

ஆழ்வார் விடை பெற்று வெளியே வருகிறார்

ஆழ்வார் -ஆஹா என்னே கோதையின் பக்தி -பிஞ்சிலேயே பழுத்து விட்டனள் -நமக்கு இன்னமும் அவ்வளவு பரிபக்குவம் ஏற்பட வில்லை -ஆஹா நின் மகள் என்ற வார்த்தை எவ்வளவு இனிமையாக இருந்தது -பகவான் திரு வாயினால் நின் மகள் என்றும் கூறப்பெற்ற பாக்யம் ஒன்றே நமக்குப் போதும் -அகம் சென்று அவள் வாயால் சூடிக்களைந்த வரலாறு கேட்டு அகம் மகிழ்கிறேன் –
செல்கிறார்
முதல் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

————–

முதல் அங்கம் -மூன்றாம் களம்
இடம் –பெரியாழ்வார் திரு மாளிகை -பெரியாழ்வாரும் அவர் மனைவி விரஜையும் பேசிக் கொள்கின்றனர் –

விரஜை –நாதா உலகப் பற்றை அறவே ஒழித்து விட்டீர்களே -நம் அரும் தவப் புதல்வி பக்குவ நிலைக்கு வந்து விட்டனள் அன்றோ -இன்னும் ஏன் அவளுக்கு மணம் முடிக்க மனம் கொள்ளவில்லை -அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே இல்லை போலும் –

ஆழ்வார் –கண் மணி -இல்லாமல் என்ன-உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்க்கும் நம் மகளுக்கு நாடு நகரும் அறிய நல்லதோர் கல்யாணம் செய்யவே நான் கருதுகிறேன் -ஆனால் நம் புதல்வி கோதை அறிவிலும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் -இணையின்றி விளங்குகின்றனள் அன்றோ -அவள் மனம் இவ்வுலகினில் எவரைத் தான் நாடும் -அழகிலும் அறிவிலும் அவளுக்குத் தக்க வரன் இவ்வுலகில் ஏது -அதனால் தான் என்ன செய்வது என்றே தோன்றாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறேன் –

விரஜை -நாதா பகுத்தறிவு அற்ற ஒரு கொடியும் ஓர் கோலைத் தழுவிடில் அன்றோ வாழ்கின்றது -பெண்ணாகப் பிறந்த ஒருத்தி இவ் வுலகினில் நாதன் இல்லாமல் வாழ்வது எங்கனம் –

ஆழ்வார் -உண்மை தான் -ஆனால் கொடியும் தன்னைத் தாங்க வல்ல கோலையே நாடுகின்றது -அணங்கிலும் பேர் அழகு வாய்ந்த பெண்மணி ஆண்டாளைத் தரிக்க வல்ல ஒரு கோல் இவ்வுலகினில் எங்கே உள்ளது – அதனால் தான் இவ் வுலகில் கண் அவள் மனம் பற்றைத் துறந்து விட்டது –

விரஜை -ஆகில் அவள் எண்ணம் என்ன-மணமே வேண்டாம் என்கின்றனளா -பாரதந்திர்யம் அன்றோ பேதையர்க்கு அழகு –

ஆழ்வார் -அது கொண்டே அவள் மனம்-கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடுகின்றது -நாம் உகக்கும் தேவர் என்று நாகணை மிசையான் மிசை கடல் போலும் காமத்தனள் ஆயினள் -நம் தந்தை நந்தேவரை வருவிப்பரேல் அது காண்டும் என்று உறுதி பூண்டு இருக்கின்றனள் -ஆனால் இள மடந்தை யாகையாலே இவ் வுண்மையை வெளியிட இயலாது உழல்கின்றனள்

விரஜை –ஆச்சர்யத்துடன் -திருமாலையா -இது என்ன விந்தை -மறையவரும் மறை முடியும் இன்னம் அவர் கழலிணை காணவில்லையே -இஃது என்ன பைத்தியம் -எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடுவாரும் உண்டோ –

ஆழ்வார் -பேதாய் அவ்வாறு கூற வேண்டாம் -பத்துடை அடியவருக்கு ஸர்வேஸ்வரன் மிகவும் எளியவன் அன்றோ -பிறர்களுக்கு அவன் அரியவனே -அரசனுக்குச் சத்ர சாமரங்கள் போலே அவனுக்குப் பரத்வ ஸுலப்யங்கள் ஒருங்கே அமைந்துள்ளன என்பதை நீ கேட்டு அறியாய் போலும் –

விரஜை -நாதா -என்னவெனிலும் ஈஸ்வரன் நாயகனாய் அமைவது இயலாத கார்யம் -இதற்குப் பிராட்டி சம்மதம் வேண்டாவோ -பிராட்டி முகம் நோக்கிய பின்னர் தானே எக் காரியமும் செய்வது அவன் இயல்பு -எனவே இது ஒரு நாளும் நடவாது -எதற்கு இந்தப் பேராசை –

ஆழ்வார் -பேதாய் -அப்படி நினைக்க வேண்டாம் -நமது கோதை தன் மனதைக் கொள்ளை கொடுத்தது போலே அவன் மனத்தையும் கொள்ளை கொண்டு விட்டனள் -ஆகவே இது நடவாத கார்யம் அன்று-

விரஜை –நீங்கள் இதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் –

ஆழ்வார் -ஒவ்வொரு நாளும் மாலுக்கு எனக் கொய்த மலர்களை இவள் சூடிக் காறை பூண்டு கண்ணாடி கண்டு தன் கைவளை குலுக்கி -கூறை உடுத்தி -தன் கொவ்வைச் செவ்வாய் திருத்திப் பின்னர் களைந்து வந்தனள் -அம் மலர்களை மலர் மங்கை மணாளன் மகிழ்வுடன் ஏற்று வருகின்றனன் -தன் மணாளன் இம் மலர்களைச் சூடியதும் மலர்மகளும் மண் மகளும் அவனைப் பொறாமையுடன் பார்க்கின்றனர் -அக் கொடிய பார்வையை அவன் லஷ்யம் செய்யவே இல்லை -நான் நேற்றுக் கொண்டு போன மாலையிலே கேசம் சம்பந்தப்பட்டு இருந்ததால் சாத்தாமல் திரும்பினேன் -அப்பொழுது தினம் தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே சாத்தும் படி பகவான் எனக்குக் கட்டளை இட்டார் –

விரஜை –ஆச்சர்யத்துடன் – அப்படியா -என்ன பெருமை நம் புதல்விக்கு -இவளைப் பெண் எனப் பெறும்படி யாம என்ன நோன்பு நோற்றோமோ –

ஆழ்வார் -இப்பொழுதாவது தெரிந்ததா -அவள் திருமணத்தைப் பற்றி நினைக்க நாம் கொஞ்சமேனும் அருகர் இல்லை -திரு மார்பனே தேடி வரும் சீர்மையினள் அன்றோ அவள் -ஆயினும் அவ்விருவர் சேர்த்து இருக்கும் நம்மாலானதைச் செய்து நாம் சத்தை பெற வேண்டும் –

விரஜை -ஆம் அதற்கு என்ன தடை -இதோ அவளை எனது இரு கரங்களாலும் மார்புறத் தழுவ வேண்டும் -போய் வருகிறேன் -விடை கொடுங்கோள்

ஆழ்வார் -நானும் வருகிறேன் –
இருவரும் செல்கின்றனர்

முதல் அங்கம் முற்றிற்று –

————–

இரண்டாம் அங்கம் -முதல் களம்
அனுக்ரஹை ஒரு கையிலே தீர்த்த பாத்திரமும் மற்றுமோர் கையிலே துளஸீ புஷ்ப்பங்களும் ஏந்தி வருகின்றனள்
அனுக்ரஹை–எங்கோ காலடி சப்தம் கேட்க்கின்றதே -யாராக இருக்கக் கூடும் -நமது தந்தையாக இருக்கலாமோ -அவர் என் சகியின் நிலையை அறிந்து கொண்டால் ஆராத் துயரில் ஆழ்ந்து விடுவாரே -என்ன செய்வது-

இதற்குள் சுசீலை வருகிறாள்
சுசீலை –சகி -எனக்கு ஆண்டாளைப் பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது -இவ்வளவு பயங்கர நிலையிலும் தந்தைக்குத் தெரிவியாமல் இருப்பது பேதமைத்தனம் அல்லவா -ஆகையால் நான் தந்தையிடம் தெரிவித்து விட்டேன் -அவர் ஆராதனம் முடிந்ததும் -உத்யானம் வருவதாகக் கூறி இருக்கிறார் –

அனுக்ரஹை-ஹும் இது என்ன கார்யம் -இது ஜுரமோ -மதன தாபம் தானே -இதற்கு ஏன் பயப்பட வேண்டும் -தந்தையிடம் கூறியதை அவளுக்கு நீ தெரிவிக்க வேண்டாம் -ஏற்கனவே அவள் உண்மையைக் கூறாது மறைத்து விட்டாள் -தந்தை வரும் முன்பே அவளிடம் இருந்து உண்மையை அறிந்து நான் தூது சென்றது -முதலியவற்றைக் கூறி அவளை சமாதானப் படுத்தி விடுவோம் –

சுசீலை -இனி அவள் உண்மையைக் கூறாது இருக்க முடியாது
இருவரும் செல்கின்றனர் –

இரண்டாம் அங்கம் முதல் களம் முற்றிற்று

———————-

இரண்டாம் அங்கம் -இரண்டாம் களம்
இடம் –செண்பகப் பூந் தோட்டம்-நேரம் மாலை
ஓர் அழகிய தாமரைக்குளம் -அலைகள் மெல்ல வீசுகின்றன -அதன் கரையிலே கொடியினாலான வீடு ஓன்று உள்ளது -அதன் நடுவே தாமரை இலைகளும் பூக்களும் விரிக்கப் பட்டு உள்ளன -அதில் ஆண்டாள் சயனித்துக் கொண்டு இருக்கிறாள் -அருகில் சுசீலை உட்க்கார்ந்து இருக்கின்றனள் -அநுக்ரஹை குளத்தில் இருந்து மலர்களைக் கொய்து ஆண்டாளுக்கு வீசி வருகின்றனள்

சுசீலை -சகி -நம் தோழி ஏன் இவ்விதம் மிரள மிரள விழிக்கின்றனள்

அநுக்ரஹை-உற்று நோக்கி -சுசீலை -நமது சகி முன்னிலும் அபாய நிலைக்கு வந்து விட்டனள் -பரிதியின் பிரிவாற்றாத பங்கயக் கொடி போன்று வாடி விட்டனள் -என்ன செய்வது-உண்மையை உரைக்காமல் மறைக்கின்றனள் -பிடிவாதம் செய்கிறாள் -ஆகாரம் உட் கொள்ளவே இல்லை -ஆகாரம் கொண்டு வரலாமா என்று கேள் –

சுசீலை -அவ்விதம் செய்து பதில் கிடையாமல் பெரு மூச்செறிந்து -அநுக்ரஹை-நமது சகி மூர்ச்சித்து விட்டனள் -காரியம் பெரிதாகி விட்டது -விளையாடுவதாக நாம் இதை ஏன் மறைத்தோம் –

அநுக்ரஹை-சசியின் முகத்தை உற்று நோக்கிப் பெரு மூச்சு எறிகின்றனள் -இருவரும் ஒன்றுமே தோன்றாமல் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்கின்றனர் –

அநுக்ரஹை-சற்று மன உறுதியுடன் -சுசீலா பயப்படாதே -இவள் முகத்திலே ஒளி மழுங்கவே இல்லை -ஆகையால் இது மன்மதனின் திரு விளையாடலே -எதற்கும் நமக்கு ஈஸ்வரன் இருக்கிறான் -நமது இன்னல் நோய்கட்க்கு அவனது தீர்த்தமும் -துளஸியும் தான் தக்க மருந்தாகும் -அவன் தண் அம் துழாய் இந் நாநிலத்தில் என்ன தான் செய்யாது -நான் தீர்த்த பாத்திரத்தில் கொணர்ந்த தீர்த்தத்தையும் துளஸியையும் இங்கே கொண்டு வா

சுசீலை அவ்வாறே செய்கின்றனள் -தீர்த்தத்தைக் கையிலே வாங்கி -ஏ வடபத்ர ஸாயீ -ஆபத் பாந்தவா -அமுதினும் இனிய அருள் கூர் அண்ணலே -பேதை யாம் படும் பாட்டை நீர் அறிகிலீரோ -அன்பர் மனம் நொந்திடில் நின் மனம் வெந்திடும் என்கின்றனரே –அத்தகைய தயை இத் தையல் விஷயத்தில் மந்தித்ததோ -இதை விட உனது தயைக்கு ஏற்ற கலன் எங்கே உளது -நின் பேர் அன்புக்கு உரிய ஆண்டாளை இதோ எழுப்பித்துத் தந்து அருள வேண்டும் –
தீர்த்தத்தை ஆண்டாள் திரு முகத்திலே தெளித்துத் துழாய் வாடை வீசுகிறாள்

ஆண்டாள் மெல்ல மெல்ல உணர்வு உறுகின்றனள்

சுசீலை -சகி -அநுக்ரஹை-நம் சகிக்குத் துழாய் மாலை சூட்டு

அநுக்ரஹை-அவ்வாறே செய்கின்றனள்

சுசீலை -ஆண்டாளை நோக்கி -சகி -உண்ணல் உறாமையும் உள் மெலிவும் தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் -என்று நீ அடிக்கடி கூறுபவள் ஆயிற்றே -அநுக்ரஹை துழாய் மாலை சூட்டியும் நீ ஏன் தெளிந்து எங்கள் மனம் களிப்புறச் செய்ய வில்லை -பர உபதேச மாத்திரமோ உனது வார்த்தை –

ஆண்டாள் -தளர்ந்த குரலில் துழாய் மாலை சூட்டி இருக்கிறீர்களா –

அநுக்ரஹை-அதையே நீ அறியவில்லையே -இந்நிலையிலும் நீ நோயின் காரணம் கூறாவிடில் நாங்கள் என்ன செய்வோம்

சுசீலை -அநுக்ரஹை-நீ அரங்கம் சென்ற அன்று இவள்

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

என்று புலப்பத்தில் சங்கைச் சிதைந்தனள் -பின்னர் நான் கேட்டதற்கு மறுமாற்றம் கூறாது மறைந்தனள் -இதனால் நான் இவள் மாதவன் தன் வாய் அம்ருதம் பருகவே இப்பாடு படுகின்றனள் என்றும் தீர்மானித்துக் கொண்டேன் -இவள் அனுமதி இன்றி நீ திருவரங்கதிற்கு தூது சென்றது நல்லதாயிற்று -உனது ஊஹத் திறமை போற்றத் தக்கது –

ஆண்டாள் -சிறிது தெளிந்த முகத்துடன் -திருவரங்கத்திற்கு தூது சென்றனளா -ஏன்

அனுக்ரஹை -ஏனோ -நீ ஏன் நோய் உற்றனை -இதை முதலில் கூறி -பின்னர் நான் கூறுகிறேன்

ஆண்டாள் –தனக்குள்ளே -இனி நான் வெட்க்கி மறைப்பதால் பயனில்லை -தோழியரிடம் சொல்லியே தீர வேண்டும் –
வெளிப்படையாக -சகி காள் -நான் உண்மையைக் கூறி விடுகிறேன் -இனி என்னால் தாங்க இயலாது -பெண்ணின் வருத்தம் அறியாத கொடிய கடிய திருமாலால் தளர்ந்து நான் நோவுற்றேன் -அவன் தண் அம் துழாய் கொண்டு என் நெற்றி மென் குழல் மேல் சூட்டினதால் தான் நான் இப்பொழுது சிறிதாவது பேசும் திறன் பெற்றேன் -நீங்கள் என்னைக் காக்க வேண்டில் அவன் தன்னடியில் சேர்த்து விடுங்கோள் -அவனிடம் உள்ள என் கோபம் எல்லாமே தீர பயன் ஒன்றுமே இல்லாத இக் கொங்கைகளை அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து விடுகிறேன் –

அனுக்ரஹை -சசி -கணவனிடம் இவ்வளவு கோபம் கொள்ளலாமோ -அடக்கம் அன்றோ மங்கையருக்கு அணிகலம் –

ஆண்டாள் -இனி நான் அடங்க இயலாது -என் கணவன் ஒரு பெண் கொடியை வதம் செய்யவும் துணிந்து இருக்கிறான் -இந்நிலையில் நான் அடங்கி இருந்திடில் இறப்பது திண்ணம் -அவனுக்காக வாடி வதங்கின இம்மேனி இனி இடர் தீரக் அக்குமரன் கோலப் பணைத் தோளுடன் இம்மைப் பிறவியிலேயே அணையா விடில் -இனிப்போய் மறு பிறவியில் எய்துவதால் தான் என்ன பயன் -ஆகையால் அல்லல் இழைத்த அக் கள்வனையே வேட்க்கையுற்று மிக விரும்பும் என்னை அவனிடமே சேர்த்து விடுங்கோள்

அனுக்ரஹை -அவன் உன்னிடம் தன்னைச் சேர்க்கும் படி தன் துணைவனை வேண்டுகின்றனனே –

ஆண்டாள் -எவன்

அனுக்ரஹை-அப்பச்சை பசும் தேவன்

ஆண்டாள் -இச்சை உடையரேல் இதற்குள் இவ்விடம் வந்திருக்க மாட்டாரோ –

அனுக்ரஹை-அவன் இச்சை யுடையவன் தான் -கருடன் வாயிலாக நின் இணையில்லா எழில் கேட்டு இளகிய உள்ளத்தனாய் ஏங்கி நிற்கின்றனன் -ஆயினும் ரெங்க நாச்சியாருக்காக அஞ்சி இங்கு வர முடியாமல் தவிக்கிறான் –

ஆண்டாள் -வெற்றிக் கருளன் அன்றோ -தந்தையில் பரிவரான அவரிடம் செய்த வேண்டுகோள் வீணாகுமோ –

அனுக்ரஹை-ஆம் -தாகம் உள்ளவர் இருக்கும் இடத்தில் தண்ணீர் கொணர்ந்து வார்ப்பாரைப் போலே ஆசைப்பட்டார் இருக்கும் இடத்தில் அவனையே கொணர்ந்து உதவுபவன் அன்றோ அவன் -முதலை வாய்ப்பட்ட களிறு கத்தரிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்னும் போது உதவின செய்ய -அவனுக்கும் புள்ளரையன் அன்றோ வேண்டியதாயிற்று -அதனால் தான் அவனை அருளாழிப் புள் என்று பெரியோர்கள் சொல்லுகின்றனர் -ஆகையால் ஆடும் கெருளக் கொடி யுடையான் வந்தருள் செய்வதும் நிச்சயம் -நீ பயப்படாதே –

ஆண்டாள்–இவ்வளவு துணிவாகக் கூறுகின்றனையே -இவ்விஷயம் உனக்கு இவ்வளவு உறுதியாக எப்படித் தெரிந்தது –

அனுக்ரஹை–நீ மறைத்தாலும் திருவரங்கச் செல்வனார் மேல் நின் சிந்தை சென்று இருப்பதை நான் வெகு நாட்களுக்கு முன்னரே தெரிந்து கொண்டேன் -சில நாட்களுக்கு முன்னர் சோலையில் மாலை நேரத்தில் இவ்விஷயத்தை நான் பிரஸ்தாபித்த போது நீ மிகவும் சினந்தனை -நீ மறைத்ததாலேயே இவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது -அவனிடம் உள்ள நினது கடலின் மிகப்பெரிய காதலை நீ கூறா விடினும் நின் செய்கைகள் தெரிவித்தன -ஆதலால் உன் அனுமதி இன்றியே திருவரங்கத்துக்குத் தூது சென்று அவன் தன் நிலைமையை அறிந்து கொண்டு வந்தேன் -இனி மேலேனும் உண்மையைக் கூறு -கடியன் கொடியன் -என்று திருவரங்கரைத் தானே நீ குறித்தனை உன் வாயால் இத்தை ஒப்புக் கொள்

ஆண்டாள்-நாணி புன்னகையுடன் -ஆம் சகி

எழிலுடைய இன் சகி காள் என்னரங்கத்தின் இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே

சுசீலை -அநுக்ரஹை -நீ போனதைக் கூட அறியாமல் இவள் அவ்வளவு மெய் மறந்து இருந்தனள் பார்

ஆண்டாள் -நீ போனது உண்மை தானா

அநுக்ரஹை-ஏன் நான் கூறியதில் உனக்கும் நம்பிக்கை இல்லையோ

ஆண்டாள் -பிராண சகி -இல்லாமல் இல்லை -ஆயினும் என்னைத் தேற்றுவதற்கு நீங்கள் செய்த உபாயமோ இது என்று சந்தேஹப் படுகின்றேன் –

அனுக்ரஹை -அவனிடமுள்ள கட்டடங்க காதல் இஷ்ட சகியின் சொற்களைக் கூடச் சந்தேகிக்கச் செய்கிறது -காதலின் மஹிமை தான் என்ன-

ஆண்டாள் -இல்லை சகி -என்னுடைய நன்மையைக் கருதி நீங்கள் இவ்வாறு செய்து இருக்கலாம் என்றும் நினைத்தேன் –

அனுக்ரஹை–நாங்கள் இவ்விதம் செய்து இருக்கலாம் -கடிதத்தைக் காட்டி -ஆயினும் அவர் கொடுத்த கடிதம் ஓன்று உளதே -இதுவும் எங்கள் கற்பனையில் அடங்குமோ

ஆண்டாள் -புன்னகையுடன் கடிதம் கிடைத்துள்ளதோ -எங்கே பார்ப்போம் -கையை நீட்டுகிறாள் –

அனுக்ரஹை -கடிதத்தைக் கொடுத்து -சகி -இனி மேலாவது சகிகள் சொல்லை சங்கிக்காமல் இருப்பாயா –

ஆண்டாள் -கடிதத்தைக் கண்ணிலும் தலையிலும் வைத்து நாணி வணங்கிய முகத்திலே புன்னகை தவழ மெதுவாக வாசிக்கிறாள் –

அனுக்ரஹை -சகி உன் காதல் தான் பறை அடித்த பரம ரஹஸ்யம் ஆயிற்றே – உரக்க வாசித்தால் என்ன-

ஆண்டாள் –செய்தி கொணர்ந்த நீயே வாசித்து நாம் எல்லோரும் கேட்டுக் களிக்க வேண்டும் -சுக துக்கங்களை பங்கிட்டுக் கொண்டால் தான் பொறுத்துக் கொள்ள முடியும் என்பது உண்மையான அனுபவம் -ஆகையால் நீயே வாசி –

அனுக்ரஹை -ஆகில் கொடு -கையை நீட்டுகிறாள்

ஆண்டாள் -கடிதத்தை உற்றுப் பார்த்த வண்ணமே இருக்கிறாள்

அனுக்ரஹை-கொடுக்க மனம் இல்லையா

ஆண்டாள்-இதை அவர் கைப்பட எழுதினாரோ -எழுத்துக்கள் மணி மணியாக இருக்கின்றனவே -கண்ணில் ஒத்திக் கொள்கிறாள் -ஆனால் மை சிதறி இருக்கும் காரணம் என்ன-

அனுக்ரஹை-அவர் கண்ணும் கண்ண நீருமாய் எழுதினார் -அதனால் தான் கண்ணீர் சிந்தி மை சிதறி இருக்கிறது -இது அவர் படும்பாட்டை யுணர்த்த தகுந்த சாட்சியாம் யன்றோ -மேலும் அச் சமயம் பிராட்டியின் பாதச் சிலம்பு ஒலி காதில் பட்டது -உடன் பூ வணை முதலியவைகளைக் கருடனைக் கொண்டு அப்புறப் படுத்தி விட்டு மை உலரும் முன்பே கடிதத்தை மடித்துக் கொடுத்து என்னையே வேறு ஒரு வழியாக அனுப்பி விட்டார் -இதுவும் அதற்கொரு காரணம்

ஆண்டாள்-தேனைச் சக்கரைப் பாத்திரத்தால் பருகுவிப்பது போல் உன் செவிக்கு இனிய செஞ்சொல்லால் இக் கடிதமாம் தேனைப் பருகச் செய் -கடிதத்தைக் கொடுக்கிறாள்

அனுக்ரஹை -வாசிக்கின்றனள்

ரங்கராஜன் -திருவரங்கம் –
எனது ஆருயிர் அனைய நங்காய் -நினது எழிலால் எனது இதயம் கொள்கை கொண்டு விட்டாய் -மன்மதன் தமது அம்புகளால் என்னை இடைவிடாது கொளுத்து கின்றனன் -இனி நான் பிழைக்க வழி யில்லை -நினைத்து கருணை அரிய பார்வையே உற்ற துணையாகும் என்றும் நம்புகிறேன் –

ஆருயிர் அனைய நங்காய் அரும் புகழ்ப் பட்டன் கோதாய்
சீரிய எழிலால் என் தன் சிந்தனை கவரச் செய்தாய்
கூரிய கணைகள் கொண்டு கொளுத்து கின்றனனே மாரன்
நாரி நின் கருணை மாரி தனை யல்லால் துணை இலேனே —
நின் பால் உயிருள்ள
ரங்கராஜன்

ஆண்டாள் -சகி என்பால் பேர் இரக்கம் கொண்டு பேர் உதவி புரிந்த நினக்குத் தலை யல்லால் கைம்மாறு இலேன்

அனுக்ரஹை -உன் ஸஹ வாஸத்தால் நினது அரும் குணங்களின் லவலேசம் என்னிடம் ப்ரதி பலித்திடில் நீ அதனைப் பாராட்டுதல் தகாது -இக் கடிதத்துக்கு ஏற்றால் போல் நினது அரும் காதலை வெளிப் படுத்துமோர் பதில் விடுத்து நெடும் கணாளனை யடுக்க வழி பார் –

ஆண்டாள் -அவன் ஏலாப் பொய்கள் உரைப்பவன் யாயிற்றே -அவன் கடிதத்தை நம்பி நாம் பதில் விடுக்கலாமோ –

அனுக்ரஹை -ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று உன் தந்தை அடிக்கடி கூற நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமே -அவனிடம் உனக்கும் ஏன் இவ்வளவு அவ நம்பிக்கை –

ஆண்டாள் -தந்தை விஷயத்தில் அவனாலே பொய் சொல்ல ஒண்ணாது -அது கொண்டே -ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று அவரைக் கொண்டு தன்னைக் கவி பாடிக் கொண்டனன் — பாவியேன் நான் பிறந்த பின்னர் அவன் பொய்களையே உரைப்பான் ஆயினன் -என் வல்வினை அவன் ஸ்வ பாவத்தையும் கூட மாற்றி விட்டது போலும் -பாம்பணை மேல் படுக்கும் அவனுக்கும் தம் பாம்பு போலே நாவும் இரண்டு உண்டாயின போலும் -இத் தகையோன் கடிதத்தை நம்பி நான் பதில் எழுதலாமோ –

அனுக்ரஹை -ப்ரபந்ந குலத்தில் பிறந்த உனக்குப் பராமனைச் சேர சந்தேகம் ஏன்

ஆண்டாள் -ராமன் இரு விதம் பேசான் என்னும் பிருதம் பிடித்த பெருமான் படியே என் விஷயத்தில் மாறுபடுகிறதே -ப்ரபன்னரான பட்டர் பிரான் சம்பந்தம் கொண்டு நான் ஆறி இருப்பது எப்படிப் முடியும் –

அனுக்ரஹை -சகி அவ்விதம் நினைக்க வேண்டாம் -அவன் படும் பாட்டை நேரில் நான் கண்டு வந்திருக்கிறேன் -உன் பிரிவாற்றாத அப் பாம்பணையான் பூவணை மிசை பள்ளி கொண்டு துடி துடிக்கிறான் -சந்திர ஒளியினால் அவன் மனம் வெடி படுகின்றது –

சுசீலை -பாபி சந்திரன் தான் பிறந்தவிடம் என்று கூடப் பாராமல் அவர் மனம் தகர்க்கின்றனன் போலும் –

அனுக்ரஹை -புன்னகையுடன் -இக்கலியில் தந்தையிடம் மைந்தர் இருக்க வேண்டிய விதத்தைச் சந்திரன் கற்ப்பிக்கின்றனன் –

ஆண்டாள் -ஆகில் நான் பதில் எழுதத் தான் வேண்டும் என்று சகி ஆஞ்ஞாபிக்கின்றனளா –

அனுக்ரஹை -ஆஞ்ஞாபிக்க வில்லை -யோசனை கூறுகிறேன்

சுசீலை -எழுதுவதற்கான சாதனங்களைக் கொணர்ந்து தருகிறாள்

ஆண்டாள் -ஒரு புருவத்தை உயர்த்தி வளைத்து யோசிக்கின்றாள்

சுசீலை -சகீ அனுக்ரஹை -நமது சகியின் புருவம் எவ்வளவு அழகாக மன்மதன் வளைத்த வில் போல் வளைந்து இருக்கிறது

அனுக்ரஹை-ஆம் இச்சமயம் அவ் வரங்கன் இவள் எதிரில் நின்றால் என்ன பாடு படுவான் –

சுசீலை -தந்தை தாய் பாராமல் தமது ஆணையைச் செலுத்துபவனான மன்மதனின் சமநிலை ஆச்சர்யமானது

ஆண்டாள் –சகிகாள் கேளுங்கோள்

கோதை நாயகி -ஸ்ரீ வில்லி புத்தூர்
அரங்கம் தனில் இலங்கும் என் நாதா -அநங்கன் என்னும் கொடியவனால் அபலையாகிய நான் அநவரதம் அல்லல் படுகிறேன் -மாதவா உன்னைச் சரண் அடைகிறேன் -நான் நீ அலால் இலேன் காண் -என்னை நீ குறிக் கொள்ள வேண்டும் -அநாதையான என்னை ஸநாதையாக ஆக்குவது நின் கடைமை -உன்னைக் கரம் கூப்பி இறைஞ்சுகின்றேன் -காக்கும் திறன் உனக்கும் அன்றி வேறு ஒருவருக்கும் இல்லை -இரக்கம் கொண்டு என்னை நீ புரக்க விரைந்து வா -இன்றேல் நான் இன்றே முடிவேன் -ஒரு பெண் கொடியை வதம் செய்தான் என்னும் வசைச் சொல் உனக்கு வேண்டாம் -பழி ஏறாது கண் பார்த்து அருள்வாயாக

அரங்கனே அலர் வாழ் மங்கை அலகிலா வகன் மார்போனே
சரங்களால் அநங்கன் என்னைத் தகிக்கின்றான் இனி என் செய்வேன்
கரம் குவித்து இறைஞ்சுகின்றேன் காப்பவர் இலரால் நீயே இரங்கி என் எதிரே வந்தால் இறந்திடாது உயிர் வாழ்வேன்
நின் தனை உற்ற அடியாள்
கோதை நாயகி

அனுக்ரஹை –சகி வெகு அழகு -நின் சொல் திறம் போற்றத் தக்கது பக்தியும் நின் காதலை இக்கடிதம் நன்கு வெளிப்படுத்துகின்றது -இது காறும் மண்ணுற்ற மின் என இருந்த உனக்கும் இனி அரங்கக் கொண்டலில் மின் என விளங்கும் காலம் கிட்டி விட்டது

ஆண்டாள் -இக்கடிதம் அரங்கர் பால் சேர்வது எங்கனம்

அனுக்ரஹை -சுசீலையின் மூலமாக இதை ஆம் அனுப்ப வேண்டும் -சுசீலையை நோக்கி -சகி இக்கடிதம் அரங்கர் கையிலே சேர வேண்டும் -பிராட்டியார் கண்ணில் பட்டு விடக் கூடாது –

சுசீலை -அப்படியே -கடிதம் பெற்று செல்கிறாள்

ஆண்டாள் -சகி நாம் இந்தக் கார்யத்தைப் பிராட்டிக்குத் தெரியாமல் சாதித்துக் கொள்ள முடியுமா -அப்படி நினைப்பது அறிவீனம் அன்றோ -அவளை வைத்தன்றோ அவனது வாழ்வு

அனுக்ரஹை -உண்மை தான் -ஆனால் முதலில் நீ அவன் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாய் -இனி உன் விரஹத்தை அவ்வரங்கன் தாங்க இயலாது -எனவே அவனது நிலைமைக்கு ஏற்ப நின் காதலன் நிறைவேற்றத் திருமகள் தயங்க மாட்டாள் -மற்ற மங்கையர் அரங்கனை அணைந்திடில் தமது இரு கொங்கை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்வதாகவே எண்ணுவது அவள் இயல்பு -எனினும் பிராட்டிமார் மனம் உகக்க ஒரு உபாயம் அனுஷ்ட்டிப்பது தான் நல்லது

ஆண்டாள் –ஆம் உண்மை தான் -அரங்கனை அடைவதற்குத் திருமகள் புருஷகாரம் இன்றியமையாதது – அவ்விருவர் சேர்த்தியில் தான் நாம் அடிமை செய்ய ஆசை கொள்ள வேண்டும் -பிரித்துத் பற்றினதால் தான் தங்கை மூக்கும் தமையன் தலையும் இழந்தனர் -இருவர் சேர்த்தியில் ராவணனினும் கொடிய காகம் தலைபெற்றது -ஆனால் இவ்வலியை நமக்கு உபதேசிப்பவர் யார் –

அனுக்ரஹை -ஏன் நமது தந்தை தான்

ஆண்டாள் தந்தையிடம் -திரு வரங்கச் செல்வனார் என் மெய்ப்பொருளும் கொண்டார் -என்று நான் எவ்விதம் தெரிவிப்பேன் -நான் ஒரு விதம் எண்ணியிருக்க இவளும் வேறொன்று எண்ணுகின்றாள் -என்று அவர் கூறிடில் நான் என்ன செய்வேன்

திடீரென பெரியாழ்வார் வந்து கொண்டே -எனது அரும் தவப் புதல்வியே -உன் எண்ணத்திற்கு என் எண்ணம் மாறுபடுமோ -உன்னை உரப்பவே நான் ஒன்றுமே மாட்டான் -நானும் இந்த நல்ல காரியத்தில் பங்கு எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன் –

இருவரும் திடுக்கிட்டு எழுந்து சேவிக்கின்றனர் -ஆண்டாள்-ஓரமாக ஒதுங்கி இருகின்றனள்-

அனுக்ரஹை -ஒரு மானுரி ஆஸனம் கொணர்ந்து -தந்தையே இவ்வாசனத்தை அலங்கரித்து அருள வேண்டும் –
ஆழ்வார் ஆசனத்தில் அமர்ந்து இருவரையும் உட்காரக் கை காட்டுகிறார் -இருவரும் உட்காருகின்றார்கள் –ஆண்டாள் மட்டுமே நாணத்தால் ஓரம் உட்க்காருகின்றனள் –

பெரியாழ்வார் -ஆண்டாளை நோக்கி -கோதாய் தந்தையிடம் நாண வேண்டுமோ -நீ தான் சற்று முன் உன் தோழியிடம் -இனி என்னால் அடங்க இயலாது -என்று கூறினை -காதல் விஞ்சிடில் எப்பொழுதும் -நாண் மட அச்சம் நமக்கு இங்கு இல்லை – என்று இருக்க வேண்டாமே

ஆண்டாள் தலை குனிந்து பேசாது இருக்கிறாள்

அனுக்ரஹை -நும் தம் புதல்வியும் என் தோழியான இவள் ரங்கராஜனைக் கணவனாகக் கொள்ளுமாறு தக்கவோர் உபாயம் எடுத்துக் உபதேசியுங்கோள்

ஆண்டாள் அனுக்ரஹையைக் கோபக் குறியோடு பார்க்கிறாள்

பெரியாழ்வார் -கோதாய் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் கலந்த வெட்கம் -உன் நன்மையைக் கருதி உன் தந்தையிடம் உண்மையைக் கூறினதற்காகவே இந்தப் பார்வை -அனுக்ரஹை -சகி இந்தப் பார்வை கீர்வை எல்லாமே ரங்கராஜன் விஷயத்தில் இருக்கட்டும் -இங்கே செல்லாது

ஆண்டாள் மறுமுறையும் முறைத்துப் பார்த்துப் போகப் பார்க்கிறாள் -அனுக்ரஹை கையைப்பிடித்து உட்க்கார்த்தி விடுகிறாள்

பெரியாழ்வார் -கோதாய் நான் இந்த விஷயத்தைக் தெரிந்து கொண்டு விட்டேன்-நீ இதற்காக நாணவோ அஞ்சவோ வேண்டாம் -கைத்தலத்திலுள்ள மாடு -செல்வம் -அழியக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்து உனக்குப் பெருப்பெருத்த கல்யாணம் செய்ய நான் ஆசை கொண்டு விட்டேன் -நீ ரங்கராஜனிடம் காதல் கொண்டது நான் செய்த தவப்பயன் என்றே கருதுகிறேன் -செடியில் உள்ள பூ ஈசன் அடிக் கமலத்தில் தானே நழுவி விழுந்திடில் எனக்கு அது மகிழ்வே அன்றோ-ஆகையால் நீ அவ்வரங்கனை அடையத் தக்கதோர் உபாயம் கூறுகிறேன் -கேள் -முற்காலத்தில் ஆய்ப்பாடியில் ஆய்ச்சியர் நோன்பு நோற்றுக் கண்ணனை அடைந்தனர் -அஃதே போல் நீயும் நோன்பு நோற்க வேண்டும் -ஆய்ச்சியர்க்கு மார்கழி நோன்பே சீர் கெழு கண்ணனைச் சேர்வதற்கு ஏற்றதாய் இருந்தது -அந்நோன்பை நீயும் கைக் கொள்ளலாம் -அதன் விவரத்தைக் கூறுகிறேன் -இங்கே வா
ஆண்டாள் அவ் வண்ணமே வரக் காதண்டைச் சிலவற்றை உபதேசிக்கிறார் –
ஆண்டாள் -தனக்குள் -தந்தையர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்

அனுக்ரஹை -இந் நோன்பு என் சகியின் பேர் ஆத்திரத்திற்கு ஏற்ப சீக்கிரம் பயன் தரத் தக்கது தானே

பெரியாழ்வார் -அதற்கு என்ன ஸந்தேஹம் -இந்நோன்பில் கண்ணனின் பேர் அன்புக்கு உரிய நப்பின்னையைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டும் -கண்ணன் இந் நோன்புக்கு இரங்கியே தீருவன் -பின்னர் ரங்கராஜன் கைபுகுந்தான் என்பதைக் ஐயம் என்ன-கண்ணனும் அவனும் வேறு அன்றே -ஆகையால் நப்பின்னையைப் புருஷகாரமாகக் கொண்டு இந் நோன்பினை நோற்றல் வேண்டும் –

அனுக்ரஹை -நோன்புக்கான ஏற்பாடு செய்வோம் வாருங்கோள்

எல்லாமும் எழுந்து செல்கின்றனர்

இரண்டாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

————–

இரண்டாவது அங்கம் மூன்றாம் களம்
இடம் -பழைய காலத்து வீட்டு வாசல் வராண்டா
ஒரு கிழவர் தம் மேனியில் பன்னிரு திருமண் மின்ன கையில் உள்ள தீர்த்த பாத்திரத்தை ஓரிடம் வைத்து விட்டு -ஒரு கரத்தால் கோலூன்றி -மறு கரத்தால் தொந்தியைத் தடவிக் கொண்டு உலாவிய வண்ணம்
ஆஹா என்ன இனிமை -எத்துணை போக்யமாய் பெருமாள் அமுது செய்து இருந்தார் -அமுதம் அருந்தும் தேவரும் இதை அறிந்திடில் நிச்சயமாக அமிழ்த்தினை உமிழ்ந்திடுவர் -எவ்வளவோ படே படே பேர் வழிகளின் ததீயாராதனம் எல்லாமே யான் கண்டிருக்கிறேன் -ஓன்று கூட என்னுடைய முழு புகழ்ச்சிக்கும் உரியதாக இல்லை -ஆனால் இன்றைய ததீயாராதனத்தையோ எனின் என்னைக் கேளாமல் ருசி அறிந்த என் நாக்கு புகழத் தொடங்குகிறது -ஆஹா பாருங்களேன் -எவரைக் காணிலும் என்னைப் போல் முகம் மலர்ச்சியும் உதர நிமிர்ச்சியும் யுடையவர்களாகவே காணப்படுகின்றனர் -என்ன பராமரிப்பு -ஒரு ஆவலாதி கூடக் கிடையாது -மீசையை முறுக்கிக் கொண்டு -இவ்வளவு வயசாகியும் அசக்திக்கு உறைவிடமான எனக்கு யவ்வனம் திரும்பி வந்து விட்டது போலும் -அழுத்தத்தினால் அந்திமப் பருவத்தைத் தடுக்கலாம் -என்ன ஆச்சார்யன் -இந்த அமுதத்தினால் கழிந்த யவ்வனமும் திரும்பியதே -இது ததீயாராதனம் அருந்தாத எத்துணை ஜவான்கள் போருக்கு வந்திடினும் அவர்களை வென்று விடலாம் -தன்னுடம்பைப் பார்த்துக் கொள்ளுகிறார்

இதற்குள் ஒரு சிறுவன் ஓடி வந்து -உடம்பைப் பார்த்துக் கொள்ள கண்ணாடி வேணுமா -உள்ளே போய் அம்மாகிட்டே வாங்கிண்டு வரேன்
கிழவர் -உள்ளே போய் வாங்கிண்டு வா பார்ப்போம்
சிறுவன் உள்ளே சென்று கண்ணாடி வாங்கித் தருகிறான்
கிழவர் -அடே பயலே -நான் எப்படி இருக்கிறேன் -முன்னே போலவா இருக்கிறேன் –
சிறுவன் -இல்லை தாத்தா வயசாச்சு இல்லையோ -முன்னை விட கன்னம் எல்லாம் சுருங்கிப் போச்சு -முன்னைப் போல எப்படி இருப்பீள்
கிழவர் -முன்னை விட பயில்வானாக இருப்பதால் நான் சொல்லுகிறேன் -நீ கன்னம் சுருங்கிப் போச்சு என்கிறாயா
சிறுவன் -பயில்வானா -என்ன தாத்தா நா ஓடரேன் -உம்மாலே பிடிக்க முடியுமோ
கிழவர் -அடே இனி மேல் தாத்தா என்றும் அழைக்கக் கூடாது தெரியுமா -அழைத்தால் அப்படியே சட்டினி தான்

தன் காலால் பூமியைக் உதைக்கிறார்
சிறுவன் -தாத்தா இது எண்ணம் இப்படி உதைக்கிறீர்
கிழவர் -இது என் உண்ணும் தாத்தாவா -ஊன்று கோலைக் கொண்டு அடிக்க வருகிறார் –
சிறுவன் -சிறு தூரம் ஓடி -தாத்தா தொந்தி குலுங்க ஏன் ஓடி வருகிறீர் -வயிற்றிலே என்ன வியாதியோ பாவம் -இப்படிப் புடைத்து இருக்கிறது -இதோடு ஒடி வரலாமோ –
கிழவர் -அட போக்கிலி -சிறிது அங்கே நில்லு -ஊன்று கோலைக் கிறு கிறு என்றும் சுற்றிக் கொண்டு ஓடி வருகிறார் –
சிறுவன் -உதட்டைக் காண்பித்து -தாத்தா சிலம்பு விளையாட்டு வேடிக்கையாக இருக்கிறது -தாத்தா என்னைப் பிடி பார்க்கலாம்

திரைக்குள் இருந்து -அடே பெரியோர்கள் இடம் விளையாடலாமா -இரு உன்னை இதோ
பையன் திரும்பிப் பார்த்து ஓடி விடுகிறான்

திருவேங்கடாச்சார்யார் வருகிறார்
கிழவர் -தனது கையைப் புருவத்தில் வைத்து உற்று நோக்கி -யாரது -திருவேங்கடாச்சார்யர் ஸ்வாமியா -பார்த்ததா சிறுவனின் திரு விளையாட்டை

திருவேங்கடாச்சார்யார் -ஆகட்டும் அவனை நான் கண்டிக்கிறேன்

கிழவர் -அது எல்லாமே இருக்கட்டும் -கீழே ஏழி இருக்க-

இருவரும் உட்காருகின்றனர் –

கிழவர் -இன்று ததியாராதனத்துக்கு எழுந்து அருளினீரே -எப்படி

எப்படி என்றும் கேட்கவும் வேண்டுமோ -இவ்வளவு வைபவமாக இதுவரை ஒரு விசேஷமும் எங்கும் நடக்க வில்லை என்றும் கூடச் சொல்லலாம் –

அடியேன் நினைக்கும் போலவே தேவரீரும் சொல்வதே -ஆண்டாள் செய்யும் இந்த வைபவம் நம் ஊருக்கே ஒரு பெருமை கொடுக்கிறது என்றும் நினைக்கிறேன் – தேவரீர் அபிப்ராயம் எப்படியோ –

அவலோன் நடத்தும் வைபவம் இருக்கட்டும் -அவள் அவதரித்ததே நமது ஊருக்கே பெருமை -ஈசனிடம் எண்ணரும் பக்தி கொண்ட இப் பெண் மணியைப் பெறும் பாக்யம் நம் நந்நகருக்கு அன்றோ கிடைத்தது -இப் பெருமை மற்ற எந்த ஊருக்கு உண்டு

கிழவர் -ஸந்தேஹம் என்ன அவள் செய்யும் இத் ததீயாரானத்தை முன்னிட்டு அன்றோ அளவில்லா ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கு ஸேவை சாதிக்கிறார்கள்

ததீயாராதனத்துக்கோ இங்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸேவை சாதிக்கிறார்கள் -ஆண்டாளிடம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அளவும் கடந்த பக்தி உண்டு -அதனால் இவ்வளவு பெரிய ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியை நாம் ஸேவிக்க முடிந்தது –

கிழவர் -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஏன் ஆண்டாளிடம் பிரியம் தெரியுமா -அவள் அடிக்கடி இப்படித் ததீயாராதனம் செய்து அவர்களைக் களிப்பிப்பதால் தான் -ருசி கண்ட பூனை விடுமா -இவ் வைபவத்துக்கும் கூட்டத்துக்கும் குறைச்சல் இல்லை –

என்ன தேவரீரே இப்படிச் சாதிக்கிறது -அவர்கள் வருவதில் தேவரீருக்கு என்ன-தேவரீருக்கு என்ன சாப்பாட்டில் குறை உண்டோ –

கிழவர் -கிடையாது கிடையாது இவ்வளவு கூட்டத்தையும் அவளே நின்று பராமரித்தாள் என்பதற்கு இதை நான் சொல்ல வந்தேன்

திருவேங்கடாச்சார்யார் -தனக்குள் -ஏதடா -இவரே புகழ்ந்து விட்டாரே -என்ன ஆச்சார்யம் -வெளியில் -ஆம் வந்த குழாத்தைப் பராமரிப்பதில் ஆண்டாளுக்கு இணை இவ்வுலகினில் கிடையாது என்பதை மிகையில்லை -அவளது செந்தாமரை போன்ற முகத்திலே சந்ததமும் மந்த ஹாஸம் தவழ்ந்து கொண்டே இருக்கிறது -விருந்து முகம் வேறுபடில் அப்பொழுதே அவள் முகம் வாடி வருந்தும் என்பதற்கு ஐயம் இல்லை -அவள் அகம் அமர்ந்து ஈதலை விட முகன் அமர்ந்து இன் சொற் கூறுவதை எவரும் கொண்டாடுகின்றனர் –

கிழவர் -பட்டர் பிரான் என்ன நோன்பு நோற்றாரோ -இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பெற்றார் –

ஆம் அவர் செய்த அறச் செல்வம் ஊரடி ஊருணி போல் அனைவருக்கும் பயன் படுகிறது –

கிழவர் -அனைவருக்கும் என்ன பயன் படுகிறது -ததீயாராதனம் தானே

நகைத்து தேவரீர் ததீயாராதனத்தையே கனவு காண்கிறாப் போலே இருக்கிறதே

கிழவர் -வேறு என்ன பயன்படுகிறது -கொஞ்சம் சொல்லவே -கேட்ப்போம்

இதை நான் சொல்லவும் வேண்டுமோ -இப்பெண்மணி அவதரித்த பின்னர் நம் நகரில் வியாதி துர்பிக்ஷம் திருடர் பயம் முதலியன தலைக் காட்டவே இல்லை யன்றோ -இதை விட அனைவருக்கும் வேறு என்ன பயன் வேண்டும்

கிழவர் -கோபித்துக் கொள்ளக் கூடாது -இவள் பிறப்புக்கும் திருடருக்கும் என்ன ஸம்பந்தம் -இவள் என்ன போலீஸ் அதிகாரியா திருடர்களைத் தடுப்பதற்கு –

திருவேங்கடாச்சார்யார் -ஆம் சம்பந்தம் உண்டு

ஆண்டாள் பிஞ்சிலே பழுத்தவள் -அஷ்டாக்ஷர ஸித்தி பெற்றவள் -அஷ்டாக்ஷரத்தில் கூறியபடி ஈஸ்வரனுக்கு அநந்யார்ஹையாய் ஆட்பட்டு மானிடருக்கு என்றும் பேச்சுப்படில் வாழ முடியாதவளாய் இருக்கின்றனள் -எவ்விடத்தில் அஷ்டாக்ஷர ஸித்தி பெற்றவர்கள் அங்குள்ளவர் கொண்டாடும்படி இருக்கிறார்களோ அங்கு வியாதி திருடர் பயம் முதலியன உண்டாகா என்றும் சாஸ்திரங்கள் முறையிடுகின்றன –

கிழவர் -இவள் அனுஷ்டிக்கிறாளே இப்பொழுது ஒரு நோன்பு -இதுவும் அக் கரிய கண்ணனைக் குறித்துத் தானோ

ஆம் -அவனை நோக்கிய வைபவங்களில் அவன் அடியார் விஷயங்களில் ஆண்டாள் மிக்க கவனமுடையவள்

ஆம் கண்டு கொண்டேன் இத் ததீயாராதனத்தில் -அதிலும் கிழவர்கள் இடம் அதிகமான ப்ரீதி யுண்டு என்பதைக் கூட நான் தெரிந்து கொண்டேன் –

அது என்ன கிழவர்களிடம் மாத்திரம் அதிகம் ப்ரீதி

அதற்குப் பலவித சான்றுகள் உண்டு -அதில் ஒரு உதாரணம் மாத்திரம் சொல்லுகிறேன் -இன்று பெரும்பாலும் ததீயாராதனத்தில் மெதுவான பஷணங்களே உபயோகப்படுத்தப் பட்டன-அதன் கருத்து என்ன-பல் இழந்த கிழவர்கள் இதனால் தானே திருப்தி அடையக் கூடும் –அதனால் தான் கூறுகிறேன் -கிழவர்கள் இடமும் விசேஷமான பக்தி என்று

புன்னகையுடன் -நன்று நன்று-எவ்வளவு அதிசய ஆராய்ச்சி -அதிரசத்தை விட இவ்வாராய்ச்சி அதி ரசமுள்ளது –

கிழவர் -அது இருக்கட்டும் -ஆசீர்வாதம் இப்போது தானே நடக்கப் போகிறது -தக்ஷிணை எவ்வளவு கொடுக்கிறாளோ பார்ப்போம் -பெரிய இடத்துக் கார்யம்

சிரித்துக் கொண்டு தேவரீருக்கு வயசாகியும் ஏன் ஆசை விடவில்லை

எனக்கு என்ன வயசாகி விட்டது -இப்பொழுது நான் ஒரு ஜவானாகி விட்டேன் -நிமிர்ந்து தன் மார்பகத்தைப் பார்த்துக் கொள்கிறார்

தேவரீர் பலவானான் ஆனதைக் கண்டு தேவரீர் ஆசையும் பலம் பெறுகிறதோ

கிழவர் -எல்லாருக்கும் ஆசை இல்லையோ -ஆசை இல்லாவிட்டால் அங்கு எதற்குப் போகிறார்கள்

ஆசீர்வதிப்பது மூலம் தங்கள் நன்றியைச் செலுத்துவதற்காகவே –

கிழவர் -ஓஹோ -பலமாக மண்டையை ஆட்டுகிறார் –

திரையில் வாத்திய ஒலி கேட்க்கிறது -இருவரும் எழுந்து செல்கின்றனர் -சிறிது நேரத்தில் ஆசீர்வாத ஒலி கேட்க்கிறது

இரண்டாம் அங்கம் முற்றிற்று


மூன்றாம் அங்கம் -முதல் களம்
இடம்–திருவாய்ப்பாடி வீற்று வாசல் திண்ணை
ஆதி நாராயண கோபர்
அநந்த கோபர்
கேசவ கோபர்
முதலிய சிலர் உட்க்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்

அநந்த -ஏ ஐயா நம்ம ஊரில் மழை இல்லையே -என்ன பண்ணலாம் -இப்போ பலத்த இரண்டு மழை பெய்தால் போதும் -கா மேனிக்கூடக் காணாட்ட சம்சாரி என்ன பண்ணுவது -மழைக்கு அறிகுறியே இல்லையே -தாய் முகம் நோக்கும் சிசு போலே பயிர்கள் வானம் நோக்கி வாடுகின்றனவே -நாம் எல்லாமே எப்படிப் பிழைக்கிறது –

கேசவ-போன பாட்டம் குறை இல்லாமல் இருந்தது -இந்தப் பாட்டம் எந்தப்பாவி கண் வைத்தானோ இப்படி யாய்விட்டது

ஆதி நாராயணன் -பழம் கதை எதுக்கு ஐயா -பசிச்சவன் பழம் கணக்கு பார்ப்பது போல் -இப்போ என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கோ –

அநந்த -கேசவகோபரைக் காண்பித்து இதோ பெரியவராய் இருக்கிறார் -இவரே சொல்ல வேணும் -சொல்லுங்கள் ஐயா

கேசவ-முன்பு இவ்வாறு மழை இல்லாமல் போக -எல்லாரும் சேர்ந்து யோசனை பண்ணி நமது தேவதைக்குப் பூஜை வைத்தார்கள் -அம்மிடுத்தான் -கொட்டிருச்சு மழை –

ஆ ஆ அப்படியா நாமம் இப்பொழுது அப்படியே செய்யலாம் என்கிறீரோ

அதன் விபரம் தெரிந்தால் அல்லவோ நாம் செய்வது-அத்தைச் சொல்லுங்கோ

ஆமம் அதைச் சொல்லுங்கோ முதலில்

கேசவ-நம்ம ஊரில் சின்னப் பெண்கள் எல்லாரும் சேரனும்-நம்ம தேவதை நாராயணன் மேல் நோன்பு நோக்க வேணும் -நோன்பு வேண்டிய சாமான்களை சேகரித்துக் கொடுக்க ஒரு வாலிபனை நியமித்தால் போதும் -நாம் கவலைப்பட வேண்டாமே –

நம்ம பெண்களுக்கு நோன்பு நோக்க வழி தெரியுமோ

நமது சம்சாரத்தைச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிட்டால் போதும்

ஒரு வாலிபனை நியமிக்கப் வேண்டுமே -யாரை நியமிக்கலாம் -சொல்லுங்கோ

நம்ம அநந்த கோபர் மகன் ரொம்ப நல்லவன் -அட்டி இல்லாமல் சட்டென சாமான்கள் எல்லாமே சேகரித்துக் கொடுப்பான்

அநந்த -அவன் இவ்வேலைக்கு ஏத்தவன் இல்லை -நம்ம நந்தகோபர் மகன் தான் இந்த வேலைக்குத் தக்கவன்

எல்லாமும் கேட்டுக் குலுங்க நகைக்கின்றனர்

ஆதி நாராயண கோபர் -படபடப்புடன் கேலி பண்ணுகிறீர்களா -திருடன் கையிலே பணப்பெட்டியை யாரேனும் கொடுப்பார்களா -நம் பெண்களைத் திருடிய கள்ளன் அல்லவோ அவன் -நாம் முழிச்சுக் கொண்டு இருக்கும் போதே நம் கண்ணில் மண்ணைத்தூவி நம்ம பெண்களை கொள்கை கொண்டு போனான் -அதுக்க்காகத் தானே அவனை சிறையில் அடைத்தது -சிறையில் அசைக்க நீங்கள் தானே சிபாரிசும் செய்தீர்கள் -இப்பொழுது இவ்வாறு சொல்ல உங்களுக்கு இரண்டு நாக்கா

அநந்த -ஏன் இந்தப் படபடப்பு -நமக்கு இப்பொழுது அவனாலே காரியமாக வேண்டி இருக்கிறதோ -அவன் தான் இந்த வேலைக்குத் தக்கவன் -நீங்கள் அவனைத் தெரிந்து கொள்ள வில்லை -நன் அறிவேன்-அவன் பிறந்த பின்பும் ஊரே செழிப்பாச்சுதே -அவனை சிறையில் அடைச்சோம் -மழை இல்லாமல் போய்ச்சு-அவனை வெளியில் விட்டாலே போதும் -மழை பொழியும் -அவன் என்ன சாதாரணமானவனா –

எல்லாரும் –ஆமாம் ஆமாம் உண்மை அவன் தான்-இதுக்குத் தக்கவன்

ஆதி நாராயண கோபர் -எல்லாரும் சம்மதித்த பின்பும் நானே போய் நந்தகோபர் இடம் சொல்லி ஆவணி விடுவித்து இங்கே கூட்டி வாரேன் -போகிறார் –

அநந்த கோபர் -ஏனய்யா – நான் சொல்வது பொய்யா நிஜமா -அவன் சாதாரண மனிதனாய் இல்லை -நம்ப நாராயணன் தான் நமக்காக இப்படி வந்துள்ளான் -சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுது எவ்வளவு ஆச்சார்யமானப் சேட்டைகள் பண்ணி உள்ளான் -பூதனையைக் கொல்லவில்லையா -சகடத்தை உதைத்து அழிக்க வில்லையா -மருத மரத்தைச் சாய்க்க வில்லையா -இவை எல்லாமே சின்னக் குழந்தை செய்யும் செயல்களா -ஆகையால் இவன் நாராயணனே என்பதை தெளிவு -நீங்களும் யோசித்துப் பாருங்கோ -இவனை வைத்துக் நோன்பு நோற்கச் செய்தால் மழை கட்டாயம் பெய்யும் -நீங்களே சொல்லுங்கோ

எல்லாரும் -ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது நிசம்
அநந்த கோபர் -அதோ இருவரும் வந்து விட்டார்கள்
கண்ணனும் ஆதி நாராயண கோபரும் வர
கண்ணன் -கை கூப்பி அனைவரையும் சேவிக்கிறான்
அநந்த கோபர் -ஹும் ஹும் பெரியோரை ஸேவித்த பலனாக உனக்கு சிறையில் இருந்து விடுதலை உண்டாகட்டும் –
கண்ணன் -விடுதலை அடைய ஆசீர்வாதம் வேணுமா நினைத்தால் போதாதா

கேசவ-ஏன் கொஞ்சம் நினைச்சிக்கோயே பார்ப்போம்

கண்ணன் -நான் நினைச்சு என்ன பயன் -எல்லாரையும் கட்டில் இருந்து விடுவித்தாலும் உங்களுடைய அன்புக் கட்டுதலை என்னாலே அவிழ்த்துக் கொள்ளப் போமோ -அன்புக்கு நான் அடியான் அன்றோ

ஆதி நாராயண -இன்னும் அந்த உதாரப் பேச்சு

அநந்த -இயற்க்கை மறையாது அன்றோ

கண்ணன் -பெரியோர்களே என்னை அழைத்தது எதற்கு

அநந்த -புன்னகையுடன் -உன்னை விடுதலை பண்ணிரலாம் என்னுதான்

ஆதி நாராயண -குற்றம் பண்ணலே என்று ஒத்துண்டால் தான் விடுதலை தெரியுமோ -ஒத்துக் கொண்டு அப்படியே நடக்கணும்

கண்ணன் -ஆஹா அப்படியே ஒத்துக் கொள்கிறான் -குற்றமற்ற நான் ஏன் இவ்விதம் ஒப்புக் கொள்ளக் கூடாது -உண்மையைக் கூறி விடுகிறேன் கேளுங்கோள் -நான் களங்கம் அற்றவன் -குற்றம் என்பதே என்னைப் பற்றி நிற்காது-ஒளியை இருள் பற்றி நிற்குமோ -ஆனால் நீங்கள் என்னிடம் குற்றம் இருப்பதாகப் பிரமிக்கிறீர்கள் -இல்லாத பழி என் மேல் சுமத்தப் படுகிறது –நீங்கள் நன்கு உணர்வது ஆராய்ந்து பார்த்தால் என் குற்றமின்மை விளங்காமல் போகாது -இத்தகைய நான் இனியும் ஏன் குற்றம் அற்று இருப்பதாக வாக்களிகக் கூடாது –

அநந்த கோபர் -இந்த வாக்கு அளிப்பதோடு வேறு ஒரு காரியமும் செய்யணும் -அதையும் ஒப்புக் கொண்டால் விடுக்கிறோம் –

கண்ணன் -அது என்ன கார்யம்

அநந்த கோபர் -நம்ம ஊரில் பெண்களை எல்லாரும் நோம்பு நோற்கப் போகிறார்கள் அன்றோ –

கண்ணன் -தனக்குள் -நம் நினைவு பலித்து விட்டது -வெளியில் -ஏன்

அநந்த கோபர் -மழைக்காக -மழை இல்லை என்பது கூட உனக்குத் தெரியாதோ

கண்ணன் -சிறையில் அடைபட்ட நான் இதை எப்படி அறிவேன் -பெண்கள் நோன்பு நோற்றால் நான் செய்ய வேண்டும் கார்யம் என்ன-

நீ அந்தப் பெண்களுடன் இருந்து நோம்புக்கு வேணுங்கர சாமான்கள் எல்லாமே சேகரித்துக் கொடுக்க வேணும் – இது தான் உன் கார்யம்

கண்ணன் -பெரியோர்களே -மன்னிக்க வேண்டும் -இக்காரியத்தை செய்ய முடியாதவனாக இருக்கிறேன் -பாவையர் முகம் பாராத போதே நான் பழி சுமந்தேன் -இனிப் பாவையர் முகம் பார்த்திடிலோ கேட்க வேண்டாமே –

இனி மேல் அவ்விதிப் பழி ஒன்றுமே வாராது ஏற்றுக்கொள்

தயவு செய்து இக் காரியத்துக்கு என்னை ஏவ வேண்டாம் -இதைத் தவிர வேறு ஏதாயினும் நான் செய்யத் தடையில்லை –

நீ இவ்விதம் பிடிவாதம் செய்தால் நாங்கள் என்ன செய்வது-உன்னுடைய அமுத கீத வலைப்பட்டு ஓடி வரும் பசுக்களாவது பசும் புல் வேண்டாவோ -விசும்பில் துளி வீழின் அல்லால் பசும் புல் தலை காண்பது அரிதன்றோ -நீ அழகிய கையால் குழல் கொண்டு ஊதின போது கறவைக் கணங்கள் பரவசமாகிக் கால்கள் பரப்பித் தலை கவிழ்ந்து தம் செவிகளைக் கூட அசையாமல் நின்று நினது அமுத கீதம் கேட்டுக் களிக்க வேண்டாமே -இதற்க்காகவாவது நீ இக் காரியத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் –

கண்ணன் -சரி உங்கள் நிர்பந்தத்துக்காக ஏற்றுக் கொள்கிறேன் -ஆனால் இனிமேல் என் மேல் பழி சுமத்தக் கூடாது -இது நான் உங்களுடன் செய்து கொள்ளும் கட்டுப்பாடு -சம்மதமா

எல்லாமும் சம்மதிக்கிறார்கள்

அநந்த கோபர் -இனி நாம் போகலாம் -கண்ணனை நோக்கி -நோன்புக்கு எவ்விதக் குறைவின்றிப் பார்த்துக் கொள் – எல்லாப் பொறுப்பையும் உன்னிடமும் தான் போட்டு இருக்கிறோம் –

கண்ணன் -அது தானே வேண்டுவது -எக் காரியத்தையும் பற்று அற்று என்னிடம் பொறுப்பாகத் தள்ளி விடில் அது எவ்வ்த்தைக் குறையும் இன்றி நிறைவேறுவதற்கு ஐயம் என்ன-

கோபர்கள் போகின்றனர்

கண்ணன் -ஆஹா எனது பாக்கியமே பாக்யம் -இவ் வூரார் மழை இல்லாமல் பரிதவிக்கின்றனர் -எனக்கு அது களிப்பூட்டு கின்றது -இப்பொழுது மழை பெய்திடில் என்னை இவர்கள் விடப் போகிறார்களா -ஏன் அவ் வனிதையரின் மதிவதனம் கண்டு மகிழுறக் கூறுவார்களா -அம் மடந்தையரின் தவப் பலனாகாத் தான் மழையின்றிப் போயிற்றுப் போலும் -ஐயோ என்னைக் காணாது அவர்கள் மனமுடைந்தார்களோ -என் மீது அன்பு கொடு உருகுமவர் மனம் மாறுபடில் இவ்வுலகம் வாழ முடியுமோ -ஆஹா என்ன ஆனந்தம் -நானும் அவர்களும் கூடிக் களிக்கும் காலம் கிட்டி விட்டது -இனி நான் இங்கு தாமதிப்பதில் பயன் இல்லை -கதிரவன் மறைந்தவுடன் உத்யானம் போக வேண்டும் -நான் அங்குச் சென்று எதிர்பார்ப்பதை எனது இன்னுயிர் நங்கைகளுக்கு என் தோழன் நற் செல்வன் மூலமும் அறிவிக்க வேண்டும் -இதோ நான் என் மணாட்டி நப்பின்னையுடன் உத்யானம் போகப் போகிறேன் -இது வரை எனக்கு இரவு தான் பல பல ஊழிகளாக இருந்தது -ஆனால் இன்றோ ஒரு பகலே பல பல ஊழிகளாக இருக்கிறதே -கதிரவன் ஏன் சோம்பேறியாக இருக்கிறான் -என்றும் இடுக்கண் இழைத்த நற் கங்குல் தான் இன்று மகிழுறும் மங்கள வேளை யாயிற்று -ஏ மங்களக் கங்குலே எங்கள் மனம் களிப்புற நீ நெடு நேரம் தங்க வேண்டும் -பகல் இத்தோடு ஒழியட்டும் -இனிப் பகலே வேண்டாமே -ஆஹா இத் உத்யாயனம் -குளிர்ந்த காற்று -நளிர் மலர்களின் ஸூ கந்தம் -மலர்ந்த செந்தாமரை போன்ற அம்மடந்தையரின் மந்த ஹாஸம் -என்ன சுகம் -நங்கைமீர் இம்மங்களக் கங்குலில் ஒரு க்ஷணம் கூட வீணாகக் கூடாது -இச் சோம்பேறி ஸூர்யன் தொலைந்ததும் உங்கள் முகமாகிற சந்திரன் என் முன் துலங்க வேண்டும் -வாருங்கள் வந்து களி கூறுங்கள்

செல்கிறார்

மூன்றாம் அங்கம் முதல் களம் முற்றிற்று

——–

மூன்றாம் அங்கம் -இரண்டாம் களம்
இடம் -ஸ்ரீ வில்லி நகர் வட பெரும் கோயிலுடையான் ஸந்நிதி
ஆண்டாளும் அவள் தோழிகளும் வருகின்றனர் –

ஆண்டாள் -தனக்குள் -கை கூப்பிய வண்ணம் ஆலிலையில் துயிலும் தூயோய் -நின்னையடைய நான் எத்தனை நாட்கள் தான் தவம் செய்வது-செய்யினும் என்னை யாளுடைய நின் மனம் கல்லினும் கடிதாயுளதே -நீ இலாது தனி யினி நான் இருக்க முடியாது -காரியவாகிப் புடை பரந்து செவ்வரியோடிய நின் கண்ணகம் கருணை மழை பொழிந்ததும் நீ வாளா இருப்பது விந்தையே -அல்லது நின் மனத்தின் கண் உள்ள கபடம் என்னும் விஷயத் தீயினாலோ நின் கண்ணகம் செந்நிறம் கொண்டதோ -முற்காலத்தில் ஜானகியைப் பெற வில் முறித்தும் அணை கட்டியும் வாள் அரக்கன் நீண் முடி பொடிப்படச் செய்தும் அரும் புகழ் கொண்டது வீண் கட்டுக் கதையோ -ருக்மிணிப் பிராட்டியாரை கபட நாடகம் நடித்து நீர் நீர் ஏற்றுக் கொள்ள வில்லையோ -ஆயர் தம் கொம்பினுக்காக ஆன் விடைகள் ஏழு அடர்க்க வில்லையோ -என் விஷயத்தில் மட்டும் வாளா இருப்பது ஏன் -இப்பொழுது உன்னை யான் அடைய ஒரு உபாயம் அனுஷ்ட்டிக்கப் போகிறேன் -இது தான் முடிவானது -இதற்கும் கருங்கல் போல் இரங்காது இருந்தால் அரங்கா என எனது உயிரை விடத் துணிவேன் -இதுவரை அரும்பாடு பட்டு சம்பாதித்த நின் புகழை இனி ஒரு நொடியில் பறக்கடித்து விடுவேன் -பெண் பழி வீணே போகாது –
சகிகளைப் பார்த்து-எனது இன்னுயர்த் தோழிகாள் -இப்பொழுது நாம் ஆய்ச்சியராக ஸர்வேஸ்வரனை வணங்குகிறோம் -ஏதும் அறியாத இடையர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனைப் பெறும் புண்ணியம் படைத்தனர் -இதனால் ஆரணம் காணா நாரணனுக்கு ஆயர்களிடமுள்ள அளவில்லா அன்பு வெளியாகின்றது அன்றோ -ஸ்ரீ மன் நாராயணன் தச அவதாரமும் மற்றும் பல அவதாரங்களும் எடுத்துள்ளார் -அவைகளில் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரமே சீரியது என ஆன்றோர் கூறுகிறார் -அதற்க்கு காரணம் அவ் வவதாரத்தில் நம் போன்ற பேதையர்கள் துன்பம் முக்கியமாகக் கருதிப் போக்கடிப்பட்டது தான் -கிருஷ்ண அவதாரத்தில் ஆயிரக் கணக்கான ஆய்ச்சியர் உய்ந்து போயினர் -ஆகையால் பேதையரான நாம் உய்ய வேண்டில் அந்த அவதாரத்தில் தான் ஈடுபட வேண்டும் -ஆனால் அவ்வவதார காலமோ மிகவும் முந்தியது -அவன் வளர்த்த ஆய்ப்பாடியும் அதிக தூரத்திலே உள்ளது -அபலையாகிய யாம் அங்குப் போக பலம் ஏது -ஆகையால் நமக்கு ஒரே வழி தான் உள்ளது -கண்ணனைப் பிரிந்த துன்பம் தாங்க மாட்டாமல் கோபியர் அவனைப் போலவே நடித்து உயிரைத் தரித்துக் கொண்டனர் -அதே போல தான் நாமும் நடிக்க வேண்டும் -அங்கனம் செய்தால் நாம் கண்ணனைப் கலப்பது திண்ணம் -நமது ஸ்ரீ வில்லி புத்தூரே ஆய்ப்பாடி -பகவானைப் பார்த்துக் -இவ் வட பத்ர ஸாயியே கிருஷ்ண பகவான் -யாமே கோபியர் -இனி என்ன வேண்டும் -இது முதல் யாம் விடியற் காலம் எழுந்து மார்கழி நோன்பு நோற்க வேண்டும் -நீங்கள் எல்லோரும் விடிவோரையில் ஆயத்தமாய் இருங்கோள் –

ஒருத்தி -சகி நாம் உள்ளுணர்ச்சியின் எழுச்சியால் ஆய்ச்சியர் ஆவது தடையில்லை -ஆனால் வட பத்ர ஸாயியைக் கண்ணனாகக் கூறினாயே -அவன் கண்ணனாக எப்படிப் நடிப்பான்

ஆண்டாள் -நாம் உண்மையில் ஆய்ச்சியர் ஆயிடின் இவன் கண்ணனாக நடிப்பதற்கு ஐயம் என்ன-எனினும் யான் இப் பரம் பொருளை வேண்டிக் கொள்கிறேன்
கை கூப்பி பிரபோ -நான் வேதப்பட்டார் பிரான் புதல்வியாகி உன்னிடமும் உண்மையான அன்பு கொண்டவளாயின் எங்கள் கண் முகப்பே கண்ணனாகத் தோன்றி எங்களது நோன்பை நிறைவேற்றித் தந்து அருள வேண்டும் –
கீழே விழுந்து வணங்குகிறாள்

அசரீரி -கோதாய் நின் பக்தியை மெச்சுகிறோம் -எமக்கும் உனக்கும் இனி ஏதும் குறைவில்லை -உனது அபீஷ்டத்தைப் பூர்த்தி செய்வது எனது கடைமை –

ஆண்டாள் புத்துணர்வுற்று உருகும் நெஞ்சுடன்
ஆலிலைத் துயில்வாய் போற்றி
அருளலைக் கடலே போற்றி
பாலினும் இனியாய் போற்றி
பரம நின்மலனே போற்றி
சீலமில் இடையர் தீம்பில் சிந்தை நன்கு உகப்பாய் போற்றி
நாலு இரண்டு அறியா எங்கள் நாயக போற்றி போற்றி –

சகிகள் -ஆஹா என்ன ஆச்சர்யம் -என்ன ஆச்சர்யம் -அடியார்களிடம் என்ன பரிவு -எல்லாம் வல்ல இறைவன் எனது ஆண்டாளின் அன்பு வலை வாய்ப்பட்டு அவளிட்ட கட்டளைப்படி நடக்கிறேன் எனின் இதை விட என்ன ஆச்சார்யன் இருக்கிறது –

ஆண்டாள் -சகிகாள் நீங்களும் நமது நோன்பு நிறைவேறுமாறு இறைவனை இறைஞ்சுங்கள் -இறைஞ்சவே அவன் திருக்கண்களால் நாம் உண்மையாகவே ஆய்ச்சிமாராகவே திருந்தவே நோக்கி உமக்கு அருள்வன் காண்மின்

சகிகள் அவ்வண்ணமே செய்ய உடன் அவர்கள் எல்லாரும் உண்மையில் ஆய்ச்சிமாராகவே மாறுகின்றனர் – அக்கோயில் நந்தகோபர் அரண்மனையாகத் தோன்றுகிறது -ஸ்ரீ வில்லி புத்தூரை ஆய்ப்பாடியாகவே பார்க்கிறார்கள்

ஆய்ச்சியர் தலைவி -தோழிகாள் நாம் நாளை முதல் நோன்பு நோற்க வேண்டும் என்றும் -நமது பிராண நாயகன் அதற்கு உதவி செய்வான் என்றும் -அதற்காக அவனை விடுதலை செய்து இருக்கிறது என்றும் கூறினார்களே -விடுதலை பெற்றால் நமது பிராண நாயகன் எங்கே இருப்பான் -நாம் நமது பாக்யம் பலித்தது என்று அவனைத் தேடி வந்தது போலே அவனும் நம்மைத்தேடி வந்திருப்பானோ -அல்லது இவ்வளவும் பொய்யாய் இருக்கலாமோ –

ஒருத்தி -ஒருவேளை தன் பிராண நாயகி நப்பின்னை வீட்டுக்குப் போய் இருப்பானோ என்னவோ

தலைவி -ஆமாம் இருக்கலாம் -வாருங்கோள் நாம் அங்கேயே போவோம் -அவள் தான் நம்மை விட அவனுக்கு அதிகம் பிரியமானவள் அன்றோ -அவன் அங்கே தான் இருப்பான் -வாருங்கோள் போவோம்

எல்லாமும் போகும் பொழுது திடீர் என நற் செல்வன் வந்து -இன்று உங்கள் நாயகன் கண்ணன் விடுதலை பெற்றான் -நப்பின்னையுடன் அவன் இப்பொழுது தான் அவன் உத்யானம் செல்கிறான் -நீங்களும் அங்கு தவறாமல் வந்து விட வேண்டுமாய்த் தெரிவிக்கச் சொன்னான் -எல்லாரும் விரைவில் செல்லுங்கோள்

தலைவி புன்முறுவலுடன் -நற் செல்வ-நற் செய்தி கொணர்ந்த உனது உபகாரத்தை எங்களால் மறக்க முடியாது –

நற் செல்வன் -நான் என்ன உபகாரம் செய்தேன் -மேகம் செய்த உபகாரத்தை என்று கூறுங்கோள் -மேகம் மழை பெய்து இருந்தால் உங்களால் இப்பொழுது கண்ணனைச் சேர முடியுமா

தலைவி -ஆமாம் மழை இல்லாமல் போனது எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது -ஆனால் இனி மேல் மழை பெய்தால் தான் எங்களுக்கு நன்மை யுண்டு –

நற் செல்வன் -இனிமேல் மழை பொழிவதற்கு ஐயம் என்ன-எல்லாம் கண்ணன் சித்தம் -போய் வாருங்கோள்

நற் செல்வன் செல்கிறான்

தலைவி -தோழி காள் நப்பின்னையின் பாக்யமே பாக்யம் -நாம் அவள் பாக்கியத்தில் சிறிதளவாவது பங்கெடுத்துக் கொள்வோம் -போவோம் வாருங்கோள்

ஒருத்தி -தோழீ நாளை முதல் அவன் நன்மை விட்டுப் பிரிய மாட்டான் அன்றோ -நல்ல வேளையாக நமக்கு நோன்பு வாய்த்தது –

தலைவி -ஆம் நாளை விடிவோரை நாங்கள் எழு முன்பே நீ விரைந்து வந்து எங்களை எழுப்புவாயாக –

அப்படியே செய்கிறேன் -எங்கள் புழக்கடைத் தோட்டத்தில் ஆம்பல் வாய் மூடு முன்பே நான் எழுந்து உங்களை எழுப்புகிறேன் -நானாச்சு அதற்கு-

மற்ற ஒருத்தி -எதற்கு இவ்வளவு வாய் வீச்சு -தன் மாமி வீட்டு வேலை எல்லாம் செய்த பிறகு தானே நீ எழுந்திருப்பாய் -நாளை மட்டும் எப்படி ஆம்பல் வாய் மூடு முன்பே கூம்பு முன்பே எழுந்திருக்கப் போகிறாய் –

பாரேன் நாளைக்கு

தலைவி -இது தன் கார்யம் அன்றோ ஆகையால் முன்னரே எழுந்து இருந்து விடுவாள் -தோழீ இவள் வார்த்தையைப் பொய்யாக்க வேண்டும் -அதற்காகவாவது நீ முதன் முதலில் அவளையே போய் எழுப்பு –

அப்படித்தான் செய்ய வேண்டும் -அப்பொழுது தான் அவள் நம்புவாள்

திரைக்குள் குழலோசை கேட்க்கப் படுகிறது

தலைவி -ஆஹா கோவிந்தன் குழல் கொடு பொழிலிடையே அமுத கீத மொழி பொழிகின்றனன் -இவ்வமயம் அவ்வமுத கீத ரஸத்தால் அங்கே மரங்கள் நின்று மது தாரை பாயும் -மலர்கள் வீழும் -வளர் கொம்புகள் தாழும் -பாறையும் உருகும் -கண்ணுக்கும் காதுக்கும் விருந்து அளிக்கும் இவ்வரிய நேரத்தை விட்டு இங்கு நிற்கின்றோமே -சதிரான சமயம் இதுவே -வாருங்கோள் -ஓடி வாருங்கோள் -பணம் படைத்தும் அனுபவியாத லோபி போலே இவ்வமுத கீதத்தை அனுபவியாமல் நாம் இங்கு நிற்கலாமோ -ஓடி வாருங்கோள் –

எல்லாமும் பரபரப்புடன் மலர்க் கூந்தல் அவிழ்ந்து மயில் தொகை போல் தொங்க நெகிழ்ந்த உடைய ஒரு கையால் பிடித்துத் கொண்டு வேகமாகத் தோட்டத்திற்க்குச் செல்கின்றனர்

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யோல்கியோட  அரிக்கண் ஓட   நின்றனரே – 3-6-2- –

மூன்றாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று


மூன்றாம் அங்கம் மூன்றாம் களம்

ரெங்கராஜன் அரண்மனை -திருவரங்கம் –
ரெங்கராஜனும் கருடனும் பேசிக்கொண்டு இருக்கின்றர்

ரங்கராஜன் -நண்ப -என் கண்கள் பஞ்சடைந்து விட்டன-எதிரில் உள்ள வஸ்துக்களையும் கூட நான் பார்க்க முடியவில்லையே

கருடன் -அரசே அஞ்ச வேண்டாம் -பிஞ்சிலேயே அன்பு விஞ்சிய நெஞ்சினாளான அச் செஞ்சொலாளைத் தாங்கள் விரைவில் பெறப்போகிறீர்கள்

தினம் விரைவில் விரைவில் என்றால் என்ன செய்வது -ஒவ்வொரு நிமிடத்திலும் என் காதல் வேதனை கரை கட்டாக் காவேரி போல் பெருகிக் கொண்டே போகிறதே

பிரபு -அம் மங்கை தன் தோழிகளுடன் தங்களை அடைவதற்காக நாளைக்காலை முதல் மார்கழி நோன்பு நோற்கப் போவதாகக் கேள்வி -அதனால் தான் விரைவில் பெறப் போகிறீர்கள் -என்கிறேன்

சந்தோஷக் குறியுடன் -அப்படியா -என்னைப்போல் அவளும் காதல் கொண்டுள்ளாள் என்று சொல்லு

ஆமாம் -இதற்கு என்ன தடை

காதல் கொண்டால் தான் என்ன-எங்களுக்கு இடையே எத்தனையோ ஆறுகளும் ஊர்களும் காடுகளும் மலைகளும் குறுக்கே நிக்கின்றனவே -இவ்வளவையும் தாண்டி நாங்கள் எப்படி ஓன்று சேரப் போகிறோம் –

அரசே காதல் சங்கிலியால் தாங்களும் அம் மங்கையை கட்டுப்பட்டு இருக்கிறீர்கள் -இக்கட்டுதலை அவிழ்க்க ஆராலும் ஆகாது -அயஸ்ஸைக் காந்தம் இழுப்பது போல் உங்களில் ஒருவர் ஒருவரைத் தன்னிடத்துக்கு இழுத்து விடப்போவது திண்ணம் -அதில் சந்தேகத்தை விட்டு விடுங்கள்

என்ன நண்பா நீ செல்வது விந்தையாய் இருக்கிறதே -காதல் வேதனையையே ராணிக்கு மறைக்கக் கஷ்டப்படுகிறது -இந்நிலையில் அம்மங்கையைக் கைப்பிடிப்பதை எப்படிப் மறைக்க முடியும் –

தங்கள் சுதந்தரர் -தங்களை ராணி தடுக்க முடியுமோ

நண்பா அப்படிக் கூற வேண்டாம் -ராணி முகம் கோண என்னால் நடக்க முடியாத

ராணியே தங்கள் திருமணத்தை நடத்தி வைப்பாளே -பாருங்கோள்

ஏது

முதன்முதலில் அம்மங்கையின் தூதாக ஒரு தோழி அனுக்ரஹை வந்தாளே -அவளிடம் ராணியைப் புருஷகாரமாகப் பற்றும்படி நான் சொல்லி அனுப்பி இருக்கிறேன் –

நல்ல கார்யம் செய்தனை -உன் முன் யோசனை மிகவும் பாராட்டத் தக்கது

இனி ஸந்தேஹமே இல்லையே அவர்கள் நோன்பு பலிப்பதற்கு

ஆம் என் பாக்யம் பலிக்க ஸந்தேஹம் இல்லை -ஏன் நண்ப அம்மங்கையர் நோன்பு நோற்கின்றனரே -கண்ணன் வேண்டாமோ அதற்கு-

தங்கள் கண்ணனாகப் போகிறீர்களா

புன்னகையுடன் -அப்பாக்யம் யாருக்குக் கிடைத்து இருக்கிறதோ -யாருக்கேனும் கிடைக்கட்டும் -நாம் அந்நோன்பினை யாவது பாரத்தால் என்ன-நான் தான் அம்மங்கையை நேரில் காண்பது -நண்ப நீ கண்டிருக்கின்றாயே அப்பெண்மனையை -அவள் எத்தகையவள் -சிறிது கூறு -கேட்டு இன்புறுகிறேன்

மஹா ராஜா தங்களைக் கூடக் கலக்குகின்றானே காமதேவன் -அவன் அம்மங்கை தன்னிடமே தன் படைகளோடு தங்கு கின்றனன் -ஆகையால் தான் அவன் தங்களையே கலக்கும் பலம் பெற்று இருக்கின்றனன் –

நாண் இத்தலையில் வைத்தான் நளிர் முகப்புருவமாகும்
நீள் நெடும் சிலைகட்க்கு ஏற்ப நீல ஐம் படைகள் வைத்தான்
காண் அரும் மேனி வைத்தான் இடை தனில் கலவிச் செல்வம்
வேணனி வளர் மென் கொங்கை வைத்து மேலாக்கும் இட்டான்

இத்தகைய வனிதையின் வனப்பை நான் எவ்விதம் வருணிக்க முடியும்

நண்ப -நாம் இப்பொழுதே அங்கு போக வேண்டும் -அதற்குச் சாக்கிட ஒரு காரணத்தை யோசித்துப் பார்

திடீர் என்று விதூஷகன் அலறிக் கொண்டே ஓடி வந்து -ஐயோ ஐயோ மஹா ராசா -ரெங்கராஜன் காலண்டை வந்து விழுகிறான் –
பரபரப்புடன் என்ன சமாசாரம்

மஹா ராசா –உடல் நடுங்கி -ஒரு –ஒரு

சீக்கிரம் சொல்லித் தொலை சமாசாரத்தை

நடுங்கி -நான் –இல்லை –அங்கு ஒரு புலி

புலியா எங்கு-

நடுங்கிக் கொண்டே ஆமாம் நான்

அடக் கஷ்டமே இடத்தைச் சொல்லித் தொலை

அங்கே தான் மஹா ராசா

இது என்னடா எந்த இடத்தில்

கருடன் -புலி உன்னை எந்த இடத்தில் பார்த்தது –

புலி என்னைப் பார்க்கவில்லை -நான் தான் பார்த்தேன் -தப்பிச்சிண்டேன்

இது என்ன வேடிக்கை செய்கிறான்

ரெங்க -யாரடா -ஒரு சேவகன் வர -இவன் என்ன புலி கிலி என்கிறான் -உண்மைதானா போய் விசாரித்து வா

சேவகன் -ஒண்ணும் இல்லை புலி ஊருக்குள் வந்தது -அதைக் கொன்று போட்டாச்சு

சரி நீ போய் வா

செத்த புலிக்கா இந்தப்பயம்

சாகலை அது தூங்கரது

இது என்ன பரிகாஸம்

பரிகாஸம் இல்லை சத்யமாகச் சொல்லுகிறேன்

சேவகன் செத்துவிட்டது என்கிறானே

இவன் கிடக்கிறான் சோத்துப்புலி -அது குறட்டை விட்டுத் தூங்குகிறது -செத்துப்போச்சாம்

நகைத்து உன் வீட்டுக்கட்டிலிலா

ஆமாம் மஹாராசா -அது காட்டுப்புலி அல்ல வீட்டுப்புலி –

காட்டுப்புலிக்கா பயப்படுகிறவன்

கருடன் -நகைத்து -தன் மனைவியைச் சொல்கிறானோ

மனைவி இல்லை -வீட்டுப்புலி -அப்பப்பா அது நேற்று ராத்திரி எனது காதை என்னமாய்க் கடிச்சிட்டது -காதைப்பிடித்துக் கொள்கிறான் -நல்ல வேளை -இப்போ தூங்குகிற சமயம் பார்த்து தப்பிச்சு விட்டேன் –

ஏன் கடித்து விட்டது

நேற்று ராத்திரி அப்புலி எனது உதட்டைக் கடிக்க வந்தது -முத்தமாம் இது -அப்போ நான் சொன்னேன் -உதட்டைக் கடிக்காதே வேதம் ஓதும் வாய் எச்சிலாகி விடும் -அதற்கு இசைந்து உதட்டுக்குப் பதிலாக காதை-முத்தம் இல்லை -கடித்தது

கருடனும் ரெங்கராஜனும் சிரிக்கிறார்கள்

மாராசா -ஒரு விண்ணப்பம் வேதம் ஓதும் வாயை எச்சிலாக்காத பெண்ணை எனக்கு மணம் செய்விக்க வேண்டும்

நீர் பயந்தாங்கொள்ளி யாச்சே -உமக்கு யார் பெண் கொடுப்பது

நான் பயந்தாங்கொள்ளியா-அன்றைக்கு அந்தப்புலி சொல்லிற்று -புருஷர்கள் அனைவரும் பயந்தாங் கொள்ளி களே என்ன-நான் பயந்தாங் கொள்ளி அல்ல -உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இத்தனை நாள் இருந்தேனே -என்று நேரடியாகவே அவளிடமே சொன்னேனே

ஒரு பெண்டாடியிடமே இவ்வாறு ஆனால் இரண்டு பெண்டாட்டிகள் உனக்கா

ஏன் முடியாது -நாளைக்கே மொட்டை போட்டுக்கொள்கிறேன்

எதற்கு

அவர்கள் எனது முடியைப்பிடித்து ஆட்ட முடியாதே

ரெங்க -போதும் உனது ஓட்டை வாயை மூடிக்கோ -நாங்கள் பேசிக்கொள்வதை யாரிடமும் சொல்லக் கூடாதே –

கருடன் -தனக்குள் இவர் தமாஷ் நின்றும் விட்டது -வேறே என்ன சொல்லப்போகிறார் -இவர் பெண்மணியைப் பற்றித்தான் இருக்கும் -அதற்க்குள் வேறே வழியில் திருப்பி விடுகிறேன் -வெளியே பேசுகிறான் -மஹா ராஜா நாட்டில் காட்டு மிருகங்கள் மலிந்து விட்டன போலும் -நாம் —

ரெங்க -சந்தோஷத்துடன் ஆம் நண்பா நாம் வேட்டையாடும் சாக்கில் அவ்விடம் போய்ப் பார்த்துக் விட்டால் என்ன-

கெருடன் -தனக்குள் மறுபடியும் அந்தப் நினைவு–நல்லது -வெளியில் மஹா ராஜா அரசராகிய நீங்கள் அகாரணமாக அங்கு எப்படிப் போக முடியும் என்று யோசிக்கிறேன்

மாறு வேடம் பூண்டு செல்வோம் -எப்படியாயினும் அந்நங்கையைக் காண வேண்டும்

விதூ -நங்கையைக் காண வில்லையோ இன்னும்

நீ கண்டிருக்கிறாயோ

விதூ -ஆமாம் இதோ பாருங்கோ -கையை நீட்டி இதோ நம் கை

உன்னை வாயைப் பொத்திக் கொள்ளச் சொன்னேனே –

திரைக்குள் கிணீர் குரல்
நான் வேதப்பட்டர் பிரான் புதல்வியாகி நின்னிடம் அன்பு செலுத்துவது உண்மையாயின் -எங்கண் முகப்பே கண்ணனாகத் தோன்றி அருள வேண்டும்

விதூ -மஹாராஜா -இது என்ன-இது என்ன-நடுங்கி ராஜனண்டை ஓடி வருகிறான் –

கெருடன் -பயந்தாங் கொள்ளி -உட்க்காரு கீழே

ரெங்க -நண்ப இது என்ன யார் குரல் ஆதரம் பெருகுகிறதே -என்ன அன்புக்கனிவு -குளிர்ச்சி

கருட -வேறு யார் இப்படிப் பேச முடியும் -தங்கள் காதலி தான்

ரெங்க -பொருந்தும் பொருந்தும் -குயிலின் குரலும் குழந்தை மழலையும் இதற்கு நிகராகா -நண்ப இப்பெண்மணியை இப்பொழுது காண வேண்டும் -புறப்படு –எந்தத் புறப்படுகிறார் –

கருடன் -அப்பெண்மணிக்கு பதில் சொல்லுங்கோள்

அவள் என்ன பிரார்த்தித்தாள்

அரசருக்கு மதி மயக்கம் தலை மண்டி இருக்கிறது -அவள் நோன்புக்குத் தங்களை கண்ணனாக வாவது இருக்கும்படி பிரார்த்தித்தாளே

அவளை எங்கே

ஊரிலேயே இருந்து பிரார்த்திக்கிறாள் -அவள் பேச்சு பக்தி என்கிற தந்திக்கம்பி வழியே வந்து தங்கள் காதண்டை ஒலிக்கிறது -அவள் பிரார்த்தனைக்கு இணங்கிப் பதில் கூறுங்கோள் -போவோம்

ரெங்க -கோதாய் நின் பக்தியை மெச்சுகிறோம் -நமக்கு இனி ஒரு குறையும் இல்லை -உனது அபீஷ்டத்தை நிறைவேற்றுவது எனது கடைமை –

சிறிது நேரத்தில் மறுபடியும் குரல் கேட்கிறது –

ஆலிலைத் துயில்வா போற்றி அருளலைக் கடலே போற்றி
பாலினும் இனியாய் போற்றி பரம நின்மலனே போற்றி
சீலமில் இடையர் தீம்பில் சிந்தை நன்கு உகப்பாய் போற்றி
நாலிரண்டு அறியா எங்கள் நாயக போட்டி போற்றி –

ரெங்க -ஆஹா அம்மங்கையின் திருவாயில் நின்று பெருகும் திருவாசகச் செந்தேன் எவ்வளவு தித்திப்பாய் இருக்கிறது -இது இ எதிர்பாராமல் நான் பெற்ற பேறு

விதூ -மஹா ராஜா இன்று எனக்கு லட்டோடு சாப்பாடு போட்டிடணும்

கெருட-அரசே அம்மாதரின் திருமுகச் சேவையும் இன்று தான் தங்களுக்குக் கிடைக்கப் போகிறது –

ஆம் நண்ப எல்லாமே உனது உதவியால் தானே

விதூ -மஹா ராஜருக்கு கல்யாணம் நடக்கப்போகிறது -எனக்கும் ஒரு பெண்ணை -புலியை இல்லை -பல்லை இளிக்கிறான்

உனக்கும் இசைந்த பெண் அகப்பட வேண்டுமே

மஹா ராஜருக்கு மட்டுமே இசைந்து இருக்கிறாளோ அப்பெண்

ஆம்

மஹா ராஜரைப்போல் அழகாய் இருப்பாளோ

ஆம்

ஏன் ஐயா பொய் சொல்கிறாய் அவளுக்கும் இவர் போல் மீசை உண்டோ

உனக்கும் மீசை முளைத்த இசைந்த பெண்ணைத் தேடுவோம் -நீ வீட்டுக்குப் போ –

மஹா ராஜா நானும் வருகிறேன் -நோன்பு சாப்பாடு சாப்பிடுகிறேன்

அரசே இவனும் வரட்டும் -ஓட்டை வாய்

ரெங்க -விஷ்வக் சேனரிடம் சொல்லி விட்டு வா -நாம் வரும் வரை ராஜ்யத்தைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டு வா

கருடன் செல்கிறான்

விதூ -நீங்கள் கண்ணனாகப் போகிறீர்களா -வேஷம் போட்டுக் கொள்ளுங்கோ பார்க்கிறேன்

நான் இப்பொழுதே கண்ணனாகிக் கொள்ளுகிறேன்

விதூ -நீங்கள் மஹாராஜாரா -இல்லை போல் இருக்கே –

என்னை மஹா ராஜா என்று அழைக்கக் கூடாது-நான் கண்ணன் -நீ என் தோழன் நற் செல்வன் -நமது ஊர் ஆய்ப்பாடி -தெரிகிறதா

நான் மாப்பிள்ளை தோழனா -பலே -என் பாடு வேட்டை தான்

சரி போ நற் செல்வனாக வந்து சேர்
விதூஷகன் போகிறான்

எனது பிராண நாயகியின் நோன்பை -என் பாக்ய பலனை அனுபவிப்பதற்காக நான் கண்ணனாகி விட்டேன் -வில்லி நகரை ஆய்ப்பாடியாகத் தோன்றும்படி செய்து விட்டேன் -எனது தலைவியும் தோழிகளும் எனது அனுக்ரஹத்தால் ஆய்ச்சிகளாகி விட்டனர் -எனது அகடி தகடநா சாமர்த்தியத்தால் -வில்லிநகர் கிழவர்களிடம் ஆய்ச்சியர் நூற்கும் நோன்பை நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து விட்டேன் -விதூஷகன் நற்செல்வனாகி விடும்படி செய்தேன் -கெருடன் நப்பின்னை நாயகி யாகட்டும் -நான் நிலவரையில் அடைபட்டதால் பிரிந்து வருந்தும் உணர்ச்சியும் உண்டாகட்டும் அவனுக்கு -பட்ட மஹிஷிகள் நப்பின்னையாக வா என்றும் எப்படி அழைப்பேன் -நானும் ரெங்கராஜன் என்னும் உணச்சியை மறந்து கண்ணனாகி விட வேண்டும் -நோன்பு முடியும் வரை ஆய்ச்சியர் கோலத்திலேனும் கண்ணன் உணர்ச்சியோடாவது அவளை அனுபவிக்க முடியும் அன்றோ

மூன்றாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று
மூன்றாம் அங்கம் முற்றிற்று

————————————-

நான்காம் அங்கம் -முதல் களம்

அழகிய தாமரைக்குளக்கரை -விசித்திரமான பறை –
நப்பின்னையும் கண்ணனும் அதில் மறந்து இருக்கின்றனர்
இருவரும் மாலை தொடுத்த வண்ணம் சம்பாஷித்துக் கொண்டு இருக்கிறார்கள்

கண்ணன் -கண்மணி இன்று எவ்வளவு புண்ணிய நாள் -நாம் இருவரும் பிரிந்து எங்கி எதிர் பார்த்தது இந்நாளைத் தானே -பிரிந்து கூடுவதால் உண்டாகும் இன்பம் பெரிது தானே -நீயே கூறு -இன்று போல் என்றேனும் உனக்கும் இத் தகைய இன்பம் உண்டாகி இருக்கிறதோ

நப்பின்னை -பிராண பிரிய-தாகம் உள்ளவனுக்குத் தண்ணீரும் இனியது தானே -எப்போ எப்போ என்றும் எதிர்பார்த்துக் காதல் தாகம் கொண்ட நமக்கு இச் சேர்த்தி ஏன் இன்பம் பயக்காது –

கண்ணன் -நாம் கூடிக் களித்து விளையாடும் இச்சோலை நிச்சயம் இத்தனை நாட்களாக நம் வரவை எதிர் பார்த்து இருக்கும் -நீ என்ன நினைக்கின்றனை –

நப்பின்னை -நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் -வந்த விருந்தாகிய நாம் அருந்த வளைந்து அசைகிற கிளைகளாகிய கைகளால் அழைத்து அரிய பழங்களை ஈந்து நம் மனம் உகக்கச் செய்யும் இவ்வனம் நமது வரவை எதிர்பார்த்து இருந்தது என்பதில் ஐயம் என்ன-

கண்ணன் -ஆம் இவ்வனம் ஒரு பெரிய வள்ளல் போன்றது -வள்ளலைச் சார்ந்தோர் எள்ளளவேனும் வருந்த இடமும் உண்டோ -அதைப்போல் இவ்வனத்தைச் சார்ந்த எதைக் காணிடினும் அது வருந்தாமல் இருக்க அரும் தவம் செய்ததோ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது -பறவையினங்கள் தங்கள் கூட்டில் தம் பேடு குஞ்சுகளுடன் கொஞ்சிக் குலாவுகின்றன -இக்குளத்தில் சிறிய அலைகளால் அசையும் ஆம்பலில் மதுவுண்டு மதம் கொண்ட வண்டினங்கள் இனிய இசையுடன் அரசன் குமாரர் போல் ஊஞ்சல் ஆடுகின்றன -ஸ்தாவரங்களைப் பார் -என்ன ஆனந்தம் அவைகளுக்கு -பூங்கொத்துக்களாகிற கொங்கைகளையும் -தளிர்களாகிய அதரத்தையும் கண்டு காமுற்ற மரங்கள் தங்கள் கிளைகளாகிற கரங்களால் இம்மலர்க்கொடிகளாகிற மடமாதரை இறுகத் தழுவி மகிழ்கின்றன -இக்கொடி மடவாரும் இளங்காற்றினால் அசையும் மலர்களில் நின்றும் தேனாகிய ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்து கொண்டு இருக்கின்றனர் -பிரிந்து கூடும் நம்மை இக்கொடி மாது பூத்துப் புன் முறுவலால் பரிகாஸம் செய்கின்றன போலும் -இத்தகைய வனத்தில் ஆனந்தமில்லாத ஒன்றை நாம் காண முடியுமோ

நப்பின்னை -ஏன் ஆனந்தம் இல்லாதது ஒன்றுமே இல்லையோ -இத்தாமரைக் கொடியைப் பாருங்கோள் -எப்படி வாடி வதங்கி இருக்கிறது -இவ்வுலகில் ஓன்று இன்புறுவதுவும் மற்ற ஓன்று துன்புறுவதுவும் இயல்வே அன்றோ

கண்ணன் -ஆம் -ஆனால் இக்கொடி கதிரவனாகிய தமது கணவனைப் பிரிந்து வாடி வதங்குகிறது -விரஹிகளுக்கு சுவர்க்கத்திலும் சுகமில்லை -நீயும் நான்முகன் பிரிந்தநிலையில் -நேற்று வரையில் என்ன பாடு பட்டோம் -நீயோ நானோ நேற்று இச்சோலைக்கு வந்திருந்தால் –

உண்மை தான் -விரஹிகள் படும் துன்பத்துக்குக் கங்குகரை கிடையாதன்றோ -நீங்கள் கூறியபடி இப் பங்கயக் கொடி இவ்வுண்மையை நன்கு விளக்கிக் காட்டுகிறது –

இதே கொடி காலையில் கணவனைக் கண்டதும் மலர் முக மலர்ந்து வண்டு எனும் இருண்ட திலகம் அணிந்து களித்துக் கொளித்துக் காதலர் பிரிந்து கூடும் புணர்ப்பினில் உண்டாகும் யுணர்ச்சியை யுணர்த்தப் போகின்றது -என்னே உலக நிலை –

நாதா தாங்கள் கவி மரபினில் தோன்றிய கவி வாணர் போலே அழகாக வர்ணிக்கிறீர்கள் -இக்கொடி இப்பொழுது ஏங்கி நிற்கும் நிலையினை நன்கு வர்ணியுங்கோள் -கேட்டு இன்புறுகிறேன்

நன்கு கூறினை -கவி வாணர்கள் அரசர்களிடம் பரிசு பெறக் கவி இசைப்பார்கள் -அதே போலே நான்முகன் உன்னிடமும் பரிசு பெற ஒரு கவி கட்டுகிறேன் –

என்னிடம் என்ன பரிசை எதிர்பார்க்கிறீர்கள் –

நான் எதிர்பார்க்கும் பரிசு பெரியது -ஆனால் அது உனக்கு சிறுசே

அது என்ன சொல்லுங்கோள் -உங்களுக்கு இல்லாத எது எனக்கு மட்டுமே உரியதாய் உள்ளது

ஓன்று உண்டு -அது நீ இசைந்தால் மட்டுமே எனக்குக் கிடைக்கும் -கடல் மண் எல்லாமே சேர்ந்தாலும் இதுக்கு விலை யாகுமோ என்று சொல்லத்தகும் பெருமை வாய்ந்த செல்வம் அது –

அது எது என்று சொல்லுங்கோள் பின்னர் தான் நான் இசைய முடியும்

நீ இசைவதாக வாக்களித்தால் தான் நான் சொல்லுவேன்

என்னாலே முடியுமானால் இசையத் தடை என்

உனக்கு அது சிறுசு என்று முன்பே சொல்லி விட்டேனே

இசைகிறேன்

நான் கவி கட்டுகிறேன் -அது சுவை உடைத்தாயின் உன் தோள்களாகிய தங்கக் கொடி களால் என் அங்கத்தைக் கட்டி விட வேண்டும் -இது தான் நான் உன்னிடமும் எதிர்பார்க்கும் விலை யற்ற பரிசு

நாணிப் புன்முறுவலுடன் -அழகாய் இருக்கிறது -நல்ல பரிசை எதிர்பார்க்கிறீர்கள்

இப்பரிசுக்கு என்ன-இதை விட நான் உன்னிடமும் எதிர்பார்க்க வேண்டியது என்ன இருக்கிறது -இப்பரிசு பெற்றிடில் என் ஜென்மம் சபலமாகும் -நான் பிறந்தது அடலாயர் கொம்பினுக்கே தான்

நாணி முறுவலுடன் -பெண்கள் முதலில் தழுவுவது வழக்கமில்லையே

பாற் கடல் கடையும் போது பங்கயவல்லி பத்மநாபன் மார்பகத்தைத் தழுவ வில்லையா -இதோ காணும் கொடிகள் கொள் கொம்பினைத் தான் ஆலிங்கனம் செய்ய வில்லையா –

பங்கய வல்லியும் இங்குள்ள கொடிகளும் சுயம்வர காலத்தில் மட்டுமே தாங்களே கணவனைத் தேடித் தழுவிக் கொண்டாலும் -தழுவிய பின்னர் மாலும் இம்மரங்களும் இன்னும் தன்னங்கத்தில் தாங்குகின்ற தன்மையையும் கவனியுங்கோள்

உன்னையும் இப்பொழுது ஒரு சுயம்வரம் தான் நடத்தச் சொல்லுகிறேன்

ஆன் விடைகள் ஏழும் அடர்த்து நீங்கள் தான் என்னை சுயம் வரித்து இருக்கிறீர்களே –

பரிசு கொடுக்க இசைந்து இப்படி மறுக்கலாமா

ஓஹோ இதற்குத் தான் முன்பே வாக்களிக்கச் சொன்னீர்கள் போலும் -நல்லது -தங்கள் கவி சுவை உடைத்து இருந்ததாகில் நான் வாக்கு தவறக் கூடாது தான் – எதை விடத் தங்கள் கவி சுவை யுடைத்து இருந்தால் -அதைக் கூறுங்கோள்

நீ உலகில் எதை மிகச் சுவை யுடையதாகக் கருதுகிறாய்

தங்களைத் தான்

என்னை விட என் கவி சுவை யுடைத்தாய் இருந்ததாகில் பரிசு கொடுக்கிறேன் என்கிறாயோ

ஆம்

என்னை விட உனக்கும் மற்ற ஒன்றுமே ரசியாது என்பாயே

ஆம் ரசியாது தான் அது என் ஸ்வ பாவம்

மற்றக் கவிகளை விடச் சுவை யுடைத்தாய் இருந்ததாகில் என்றும் தான் கொள்ள வேண்டும்

மற்றக் கவிகள் எவை

உலகில் உள்ள கவிகள்

தங்கள் கவியை விட சுவையுள்ள வேறு ஒரு கவியை நான் சொல்லி விட்டால்

அப்பொழுது உனக்கு நான் பரிசு தருகிறேன்

புன்னகையுடன் என்ன பரிசு

உனக்கு என்ன வேண்டும்

தாங்கள் விரும்பிய பரிசு தான்

ஏட்டைத் திருப்பி விட்டனையோ

ஆமாம் இப்பொழுது பரிசு பந்தயமாகி விட்டது

நமது கவிகளில் இது அதிகச்சுவை யுடைத்து என்று தீர்மானிப்பவர் யார்

எவ்விதத்திலும் ஒத்த நம்முடைய அந்தராத்மாக்கள் தான்

தோல்வியுற்ற பின்னர் நான் மாட்டேன் வெட்கமாய் இருக்கிறது என்று இப்பொழுது போல் பின் வாங்கக் கூடாது –

புன்னகையுடன் தோல்வியுற்றால் பின் வாங்க வில்லை

மட்டார் குழலாள் இம்மலர்க்கொடி
மொட்டால் நின் தனம் ஓக்க முயன்றும்
வட்டாய் நின் முக மாண்புற்றிடவும்
எட்டாமை யினால் ஏங்கு கின்றதால்

நாணித் தலை குனிந்து -நன்கு வருணிக்கிறீர்கள் –

இக்கொடி ஏங்குவதற்கு இதைவிட என்ன காரணமுள்ளது

இதன் தன்மையைத் தான் வர்ணிக்கக் கூறினேன் -என்னை இதில் பிணைப்பான் என்

நீ வருணி கேட்ப்போம்

நான் இவ்வருணனையில் பிணைக்கப் போவதில்லை தங்களை

புன்னகையுடன் வருணனையில் எண்ணெய் பிணைக்க வேண்டாமே –உன் இரு

கோபக்குறியோடி பார்த்துத் தலை குனிகிறாள்

ஒரு கையால் நாடியை உயரத்தி-என் ஆசைக் களஞ்சியமே -இதற்கு என்ன கோபம் -நான் கூறியதில் என்ன குற்றம் இருக்கிறது -நடவாத அல்லது நடக்கப் போகாத எதை யாவது சொல்லி விட்டேனா

தங்கள் பரிஹாஸத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது

இப்படிக் கோபித்துக் கொண்டு விட்டால் நான் பந்தயத்தை மறந்து விட மாட்டேன் –

ஓஹோ தாங்கள் ஜெயித்து விட்டதாகவே கனவு காண்கிறீர்கள் போலும்

நான் ஜெயிப்பதற்கு ஐயம் என்ன-உனக்கு முடியுமானால் தான் இதற்குள் பதில் கவி கூறி என்னை ஜெயிக்கத் துணிந்து இருப்பாயே

என்னாலே ஜெயிக்க முடியாதா பார்ப்போமே -கேளுங்கோள் எனது பாட்டை

களங்க மதி தீண்ட வரக்கரம் விரித்தே
கணவனு மேல் திசை மாது தன்னைச் சேர
வள மிகு தேனெனும் செல்வம் கொள்ளை கொண்டே
வண்டினம் தம் பெண்டிரோடு குமுதமேக
இளங்கமல முகம் வாடி ஏங்கி நிற்கும்
இக் கொடியை வாவி எனும் பாவி யந்தோ
உளம் உருக வரு திரையாம் கரங்களாலே
உந்தி வெளி தள்ளு நிலை பார்க்க ஒணாதே

ஆஹா வெகு அழகு

நாதா இக்கவி தங்களுக்கு சுவை ஊட்டுகின்றதா

என் இன்னுயிர் மானே -இதற்கு என்ன தடை -கலவிப் போரில் நினது இனிய அதர மதுவும் குழறும் மழலைச் சொற்களும் போல புலமைப் போரிலும் உன் கவிச்சுவை ஈறில இன்ப வெள்ளத்தில் என்னை மூழ்கும் படி செய்து விட்டது

நாதா இப்பொழுது யார் வென்றவர் -நீங்களே சொல்லுங்கோள்

நீ தான் -தோற்ற நான் பந்தயத்தை இப்பொழுது நான் நிறைவேற்றுகிறேன் –

புன்முறுவலுடன் -பந்தயம் நிறைவேற்றுவது இருக்கட்டும் -என் கவி சுவை யுடைத்தாயின் என் காதிற்கு இன்பம் பயக்கும்படிக் குழலூதி இன்னிசை யமுதம் பரிசு அளியுங்கோள்

நின் தேனூறும் திருவாயில் நின்றும் தோன்றும் ஒரு வாசகமேனும் வெளிவரின் என் குழலோசை செவிகட்கு நாராசமே யாம் அன்றோ -அதை ஊதுவான் என்

நாதா நெடு நாளாக நான் தங்கள் குழல் இசையில் நசை கொண்டேன் -இன்று நாம் தனித்துக் கூடியும் இதை நான் பெறா விடில் ஏன் பாக்யத்தை என்ன என்பேன்-

பேதாய் என் குழலோசை கேட்பது பாக்ய பலன் என்று கருதுகிறாயோ

ஆம் அதற்கு என்ன தடை

நீ தான் குழலை வென்ற குளிர் வாயினள் ஆயிற்றே -பின்னை ஏன் என் குழலை மெச்சுகின்றனை –

நாதா நின் செந்தாமரைக் கண்கள் மிளிரக் குழலூதி இசை பாடினால் அவ்வழகும் இசையும் கண்டு நான் உளன் மகிழ்வேன் –

ஆகில் அப்படியே செய்கிறேன்
கண்ணன் குழலூதுகிறான்
நப்பின்னை உளமுருகிக் கண்கள் நீர் பனிப்ப இமை கொட்டாமல் அவ் வழகையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள்-

சிறிது நேரம் கழித்து -கண்மணி இது என்ன-தன்னை மறந்து என்ன யோசிக்கின்றனை

திடுக்கிட்டு -பிராணேச தாங்கள் என்னருகே இருக்கும் போது எனக்கு யோஜனை ஏது -தங்கள் கீதம் கேட்டு உருகி எழுது சித்திரம் போல் ஆயினேன் –

திரைக்குள் பாத சிலம்பொலி கேட்க்கின்றது

நாதா எங்கோ காலடி சப்தம் கேட்க்கின்றதே

காது கொடுத்து -ஆம் இப்பொழுது யார் ஈண்டு வருவது –

நாதா நீங்கள் தானே சிறிது நேரத்துக்கு முன்பு நற் செல்வன் மூலம் என் தோழிகளுக்கு இங்கு வரத் தெருவித்ததாகச் சொன்னீர்களே -அவர்களாய் இருக்கலாம் -அதற்குள் மறந்து விட்டீர்களே

ஆம் மறந்து விட்டேன் -அம்ருதம் நிறைந்த அதரம் தரித்த நினது மதுரத் திரு முகத்தை கண்டு இவ்வுலகையே நான் மறந்து விட்டேனே -இதில் என்ன ஆச்சர்யம்

தலை குனிந்து நயம் படப் பேசுவதை மட்டும் மறக்க வில்லை போலும்

அவர்கள் தான் வருகிறார்களா என்று பார்

எழுந்து பார்த்து-ஆம் நாதா அவர்கள் தான்-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது
மட மயில்களோடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர்க் கூந்தல் விழ
உடை நெகிழ வோர் கையால் துகில் பற்றி யோல்கியோட  அரிக்கண் ஓட   நின்றனரே – 3-6-2- –

நும் தோழிகள் தானே வருகின்றனர் -நாம் மறைந்து கொண்டு சிறிது வேடிக்கை பார்ப்போமா

நாதா இது தகாது -எத்தனையோ நாட்களாகத் தங்களைப் பிரிந்து வருந்திய இம்மான் விழியினரை நாம் ஏன் ஒளிந்து பரக்க பரக்க விழிக்க வைக்க வேண்டும் –

பேதாய் பிரிவாற்றாமல் படும் பாட்டை நேரே கண்டால் நமக்கு வேட்கை அவர்கள் மீது மீதூறும் அன்றோ

இனி வேட்கை மீதூறுவதாவது -உங்கள் காதல் தான் கடலின் மிகப்பெரியதாய் இருக்கிறதே

ஆயினும் அம்மான் விழியினரின் பயந்து வெருண்டு மருளும் கண்களின் அழகை இப்பொழுது தானே காண முடியும்

தாங்கள் கண்ணழகை காமுறுகிறீர்கள் -அவர்கள் பாடு என்னாகும் -முடிந்ததே விடுவார்களே

முடியும் வரை நாம் பார்த்து இருப்போமோ -வா ஒளிந்து கொள்வோம்
கண்ணன் எழுந்து கையைப் பிடித்து எழுப்ப இருவரும் பாறையடியில் குதித்து ஒளிந்து கொள்கின்றனர்

ஆய்ச்சியர் வருகின்றனர்

தலைவி -சகிகாள் -அவர்களைக் காணோமே -என் செய்வது

ஒருத்தி -அவர்கள் நன்மை ஏமாற்றி விட்டனர் -நாம் வீடு திரும்புவதா

மற்ற ஒருத்தி -அவர்கள் அவ்விதம் செய்திருக்க மாட்டார்கள் -ஏமாற்ற இதுவோ தருணம்

தலைவி -அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் -அதிலும் நம் தோழி நப்பின்னை வராமல் ஏமாற்ற இடம் கொடுத்திருக்க மாட்டாள் -மேலும் நாம் குழலோசை கேட்டது பொய்யோ -நீங்கள் தேடிப் பாருங்கோள் -அவன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு தான் இருப்பான் –

ஆம் நம் தோழி கூறுவது உண்மை -நம்மைத் தனியே விட்டு சிறிது நேரம் வேடிக்கை பார்ப்பது அவன் வழக்கம் தானே

நீங்கள் ஆங்காங்கு சென்று தேடிப்
பாருங்கோள்

எல்லாமும் தேடச் செல்கின்றனர்

தலைவி -பெரு மூச்செறிந்து -ஐயோ இத்தனை நாட்களாக கிழடுகள் செய்த இடையூறுகளால் துன்பப்பட்ட நான் இன்று அத் துன்பம் மறைந்தது என்று உள்ளம் மகிழ்ந்தேனே -நற் செல்வன் செஞ்சொல்லைக் கேட்டதும் முன் இருந்த நிலையெல்லாம் மறந்து எனக்கு என்ன களிப்பு -என்ன பூரிப்பு -எத்துணை கர்வம் –அக்களிப்பும் பூரிப்பும் கர்வமும் என்னை விட்டு எங்கு தொலைந்தன-ஐயோ நான் எண்ணி இருந்தது என்ன -நான் கட்டின பிரமாண்டமான மனக்கோட்டை ஒரு நிதியில் தகர்த்து எறியப்பட்டதே -அவன் குழலோசை கேட்டு குதூ ஹலித்து ஓடி வந்தேனே -இவ்வளவு ஆசை காட்டி அவன் மோசம் செய்துவிட்டானே -முழுதும் தான் தேடி விட்டோமே -இனி என் தோழிகள் எங்கே காணப் போகிறார்கள் -அவன் மனம் கல்லினும் கடிது போலும் -இனி என்னால் நடக்கவும் முடியாது-அவனைக் கண்டால் ஒழிய நான் இங்கு விட்டு எங்கும் போகேன் -மாமிமார் வந்து அழைத்திடினும் நான் போகப்போவது இல்லை -நாணி இனி ஓர் கர்மமும் இல்லை -அவன் முகத்தன்றி விழியேன் -இதோ தெரியும் பாறை மீது உட்க்கார்ந்து கொள்கிறேன்-

சில அடிகள் நடந்து கீழே உற்று நோக்கி -ஆஹா கண்ணன் இங்கே வந்தே உள்ளான் -இங்குத் தான் சகிகள் வரவில்லையே -ஆனால் காலடி காணப்படுகிறது –
மேலும் சிறிது உற்று நோக்கி -ஆம் -அவன் தான் வந்துள்ளான் -சங்கு சக்கரம் முதலிய திருவடி ரேகைகள் துலங்குகின்றன –
மற்றுமோர் அடியும் காணப்படுகிறது -அது நப்பின்னையதாய் இருக்கலாம் ஆம் நப்பின்னையது தான் -பின்புறம் பள்ளமாயும் முன்புறம் உயர்ந்ததாகவும் காணப்படும் இவ்வடி தேர்த்தட்டு போன்ற பிற்றட்டு வாய்ந்த அவளுடையது தான் என்பதில் ஐயம் இல்லை -அவ்விருவரும் தனித்து இவ்விடம் வந்திருப்பது உண்மை –
இவ்வடி வழியே சென்றால் நான் அவர்களைக் கண்டு பிடித்துக் கொள்ளலாம் –

அவ்வடி வழியே சென்று பாறை ஏறி –ஆஹா இதை விட அவர்கள் வந்ததிற்கு வேறு என்ன அடையாளம் வேண்டும் -அவர்கள் இருவரும் இப்பாறையில் தான் மாலை தொடுத்துக் கொண்டு இருந்தனர் போலும் -ஆஹா அவர்கள் இருவரும் தனித்தனியே தொடுத்த மாலைகளை எனக்காக இங்கு வைத்து விட்டு போயிருக்கிறார்கள் போலும் –

அம்மாலைகள் இரண்டையும் எடுத்து ஒன்றாக முடித்துக் கொண்டு
ஐயோ நான் எவ்வளவு பாக்யமற்றவள்
கண்களில் நீர் வடிகிறது
இம்மாலையை என் பிராணநாதன் அன்றோ கழுத்தில் அணுவிக்க வேண்டும் -ஐயோ நானாகவே அணிந்திட வேண்டும் –
மாலையை அணிந்து வானம் நோக்கி
எனது இன்னுயிர்த் துணைய ய் நீ எங்கே சென்று மறைந்து கொண்டனை -இது காறும் உள்ளே உருகி நைந்து வருந்திய நான் இன்று என் பாக்யம் பலித்தது என்று எண்ணி இருக்க நீ இங்கனம் சோதனை செய்யலாமோ -உன் விளையாட்டு வெகு அழகாய் இருக்கிறது -என்னால் முடிந்த மட்டும் தேடிப் பார்க்கிறேன் -கண்டால் நல்லது -இல்லையானால் இங்கேயே நான் முடிவேன் -நீ இல்லாமல் தனித்து இனி நான் வீடு திரும்பப் போவதில்லை -இது உறுதி-

பாறையின் ஓர் புறம் இறங்கி அங்குக்காணாமல் வேறிடம் சென்று அங்கும் அடிகளைக் காணாமல் மரம் செடி புதர்களிலும் அவர்களைக் காணாமல் பாறை ஏறி
இது என்ன விந்தை -சிறிது நேரத்துக்கு முன்பு குழலோசை கேட்டது -இன்னும் அவர்கள் இங்கு வந்ததற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன -இருந்தாலும் காண முடியவில்லையே -இங்கிருந்து அவர்கள் மந்திரத்தால் அந்தரத்தில் மறைந்து விட்டனரோ -பல நாள் மழையின்றி வெயிலால் வாடிய கொடி முகிலொலி கேட்பது போல் நற் செல்வனுடைய இனிய சொல் கேட்டேன் -ஆனால் நப்பின்னை மின்னலுடன் அம்முகில் எங்கோ சென்று விட்டது -இஃது என் ஊழ் வினைப்பயன் போலும் -இனி என் சகிகள் கண்டால் தான் கண்டது -நான் அவர்கள் அமர்ந்த இப்புண்ணிய பாறையில் உட்க்கார்ந்து கொள்கிறேன்
உட்க்காருகிறாள்

நப்பின்னையும் கண்ணனும் ஒளிந்த இடத்திலிருந்து பார்கின்றனர்

நப்பின்னை -நாதா உங்களுக்கு இது நியாயம் இல்லை -ஐயோ என்ன பாடு படுகிறாள் -இவள் தாபம் தணிய உங்களது தர்சநம் கொடுங்கோள்

மான் விழியாய் நின் தோழியின் மிரண்டு இருண்ட கண்களின் அழகை இப்பொழுது பார் -இந்த வாவியில் பாய்ந்தோடும் கயல்களால் மிளிரும் குவளைகள் தான் இவள் கண்ணுக்கு நிகராகுமா -இவளுடைய அகன்ற கண்ணகத்தில் கண்ணீர் அலமருகின்றதைப் பார் -இந்நிலையை வாழ்த்துக் கூறி பார்த்து இருப்பதா-அல்லது தர்சனம் கொடுத்துக் கலைத்து விடுவதா -நீயே கூறு

தலைவி -பெரு மூச்செறிந்து இரக்கமேலொன்றும் இலாதாய் -உலங்குண்ட விளங்கனி போல் என் உள் மெலியப்புகுந்து என்னை ஏன் வாதை செய்கின்றனை

கண்ணன் -என் இளங்கிளியே -உன் தோழி என்ன சொல்கின்றனள் -கேட்டனையா -அவள் என்னை இவ்வளவு கடிந்து கூறிடினும் அதுவும் எவ்வளவு மதுரக் கொழுஞ்சாறாய் இருக்கிறது பார் -மென் கிளி போல் மிக மிழற்றும் சொற்களில் சினம் கலந்தாலும் ஓர் இனிமை தான்

தலைவி -ஆஹா கஷ்டம் என்றால் கடிதில் தொடரும் போலும் -நாம் அவனை மறந்து சிறிது வருத்தம் இல்லாமல் போம் என்றால் முடிகிறதா -கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் நீங்களுமா என்னைப் பாதிக்க வேண்டும் -நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன் –அந்தக் கள்வனின் உரு ஒளிக்காட்டி என்னை நீங்கள் துன்புறுத்துகிறீர்களே -எதற்க்காக -எனக்கு உய்யும் வழக்கொன்று உரைக்கக் கூடாதா –

நப்பின்னை -நாதா தங்களுக்கு இரக்கம் இல்லையா -அரி சினத்தால் பெற்ற தாய் அகற்றிடினும் அவள் தன் பாலமுதத்தை நினைந்து தவழ்ந்து தளர் நடை வந்து காலைக்கட்டி அழும் குழந்தையின் குரல் போலே இவளது தினக்குரல் மனதை உருக்குகின்றதே

நங்காய் இவளது உண்மை அன்பு உள்ளத்தை உருக்குகின்றது தான் -எனினும் சிறிது பொறுத்து இன்ப மூர்த்தியான இவளைச் சேருவோம்

தலைவி -ஐயோ எங்களுக்கும் மெய்யனல்லாத உன் தன் பொய்யைக் கேட்டு நான் ஏன் வந்திருக்க வேண்டும் -என்னை வருக எனக் குறித்திட்டு ஏன் நீ மறைந்தாய் -இற்றை இரவிடை என்னை நீ அகன்று போனால் என்றும் என் பக்கம் வரக்கூடாது -இது உறுதி

கண்ணன் -தனியாக -என்னால் எப்படி அகல முடியும்

தலைவி -ஓ கொடிய கடிய போட்கனே -நீ இப்பொழுது இல்லாமல் வேறு எப்பொழுது வந்தாலும் பயன் என்ன-நீ என்னை ஏற்றுக் கொள்ள விரும்பா விடினும் என் முகம் நோக்கிப்போ என விடை தந்தாலும் அதுவும் மிக நல்லது -முடிந்து இடர் தீரவாவது அப்பொழுது முடியும் –

நப்பின்னை -இனி தாங்கள் அரை நிமிடமும் தாமதிக்கக் கூடாது -அவளது தாபத்தைச் சீக்கிரம் தணியுங்கோள் -இல்லை எனில் நான் போய் தாங்கள் இருக்குமிடத்தை யவளுக்குக் காட்டி விடுவேன்

கண்ணன் -ஆம் இனி நாம் தாமதிக்கக்கூடாது –

தலைவி -ஐயோ என்ன கஷ்டம் -இப்பஞ்ச மஹா பாதகர்கள் சேர்ந்து என்னைப் படுத்தும் பாட்டை நான் எப்படி தரிப்பேன் -இப்பாதகர் களுக்கு என் பெரு மா மாயன் நிறம் எப்படிக் கிடைத்தது -என்னைத் துன்புறுத்துவதற்காகவே அந்தப்புறம் போலே உள்ளும் கரியான் தன் நிறத்தை இப்பாதகருக்கு ஈந்தான் போலும்-

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

அந்தோ நீங்கள் நாழிகை கூறிட்டு முறை வைத்து இவ்வேழையைத் தகர்த்துகிறீர்களே -இவ்வேளையில் என்னைத் தகர்த்வதற்க்கு கருவிளையின் முறை போலும் -நன்று நன்று -தீமை செய்யும் தலைவ-இனியும் எவ்வளவு தான் தீம்பு செய்யப் போகிறாய் -பார்ப்போம் -இப்படியாவது உயிரை விடுவனே தவிர இதை விட்டு இனி புரையும் பெயர கில்லேன்

கண்ணன் -மெல்ல தலைவியின் பின்னண்டை வந்து கண்ணைப் பொத்துகிறான்

தலைவி -திடுக்கிட்டு யாரது

பதில் கூறாமல் இருக்கிறான்

பதில் சொன்னால் பவள முத்து உதிர்ந்திடுமோ -விளையாட இது தான் தருணமோ

தனது ஸ்வரத்தை மாற்றிக்கொண்டு -நான் தான் -இது தான் விளையாடத் தருணம்

தனக்குள் -இது யார் குரல் -தெரிய வில்லையே -வெளிப்படையாக -விளையாடுவதற்கு நல்ல தருணம் பார்த்தாய் -நீ யார் -உன் பெயரைச்சொல்லு -நான் தான் என்றால்

கண்ணன் -நீ யார் என்றால்

தலைவி -கடும் சினத்துடன் -இது என்ன-புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை -இப்படிக் குறும்பு செய்யும் நீ யார் -விடு முதலில் உன் கையை-
தனக்குள் -யாராக இருக்கக்கூடும் -நம் தலைவன் தீண்டும் உணர்ச்சி உண்டாகிறது -சினத்தை வரவேற்பினும் மனம் இடம் தரவில்லையே

கண்ணன் -குறும்பு செய்யும் நான் குறும்பன்

தலைவி -போதும் போதும் நின் கையை விடு
தன் கையால் அவன் கையை எடுக்கிறாள்

கண்ணன் கையை விட்டுப் பாறை அடியிலே குதித்து ஒளிந்து கொள்கிறான்
தலைவி கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து கீழ் இறங்கித் தேடுகிறாள்
இதற்குள் ஆய்ச்சியர் கண்ணனைக் காணாமல் வருத்தத்துடன் திரும்புகின்றனர்

நாங்கள் எங்கும் தேடினோம் -காண வில்லன் -என்ன செய்வது

நான் இப்பாறையில் உட்க்கார்ந்து இருக்கும் பொழுது யாரோ எனது கண்ணை வந்து பொத்தினார் -நான் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒளிந்து கொண்டுவிட்டார் -ஒரு வேளை அவரே கண்ணனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் -அவ்வித உணர்ச்சி எனக்கு உண்டாயிற்று -ஆகையால் நாம் இங்கேயே நன்கு தேடுவோம் -வாருங்கள்

நப்பின்னை -எங்கே கீழே குதித்த என் நாதனை -சுற்றும் பார்த்தும் காணாமல் -ஓஹோ அவன் என்னையும் ஏமாற்றி விட்டனன் போலும் -எனது தோழிகள் இங்கே தேடி வருவதற்கு முன்பே நானே இவர்களிடம் சென்று உண்மையைக் கூறுகின்றேன் -ஆய்ச்சியரிடம் செல்கின்றனள்-

கண்ணன் -முன்பு ஒளிந்திருந்த இடம் வந்து -என் பிராண நாயகி தனது தோழிகளிடம் போய்விட்டாள் -அவர்களை ஏமாற்றுவதை இவள் மட்டுமே பார்த்திருந்தாள் அன்றோ -இப்பொழுது இவளையும் ஏமாற்றுகிறேன் -எனது பிராண நாயகியை எனது கையால் அலங்கரிப்பதற்க்காக அவளது அணி ஆடைப்பெட்டியை அவளும் அறியாமல் இங்கே கொண்டு வந்திருக்கிறேன் அன்றோ -அவற்றைக் கொண்டு நானே பெண் வேடம் பூண்டு இவேந்திழையார் குழாத்துடனே நுழைந்தே இவர்களை ஏமாற்றுகிறேன்
அவ்வண்ணமே செய்து கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொள்கிறான்
ஆஹா மிகவும் எனக்குப் பெண் கோலம் பொருத்தமாய் இருக்கிறது -நான் கண்ணன் தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறதே -எனது சவுந்தர்யம் என்னையே மயக்குகின்றதே -இவர்களை ஏன் மயக்காது
மெல்ல மறைந்து வந்து பெண்களை கூட்டத்துடன் கலந்து கொள்கிறான்

தலைவி -நப்பின்னையைக் கண்டு -தோழீ இஃது என்ன கார்யம் -வேலால் துன்னம் பெய்தால் போல் நீ இருந்தும் அவனை அல்லல் விளைவிக்க வைத்தனையே -உள்ளே உருகி நைவேனை உளாளோ இலளோ என்னும் நிலையிலும் முகம் காட்டாத அக்கொள்ளைக் கொள்ளிக் குறும்பனை எங்கே -என்னை சற்று முன்னர் கண்ணைப் பொத்தியது யார்-

நப்பின்னை -தோழீ நான் அல்லல் விளைவிக்கச் செய்வேனோ -நான் வேண்டாம் என்று மறுத்தும் அவன் நீ படும்பாட்டை மருந்து பார்த்துக் கொண்டு இருந்தனன் -இனி இறைப்பொழுதும் முகம் காட்டாமல் இருக்கக் கூடாது என்று நான் வற்புறுத்திய போது அவனே வந்து நின் கண்ணிப் பொத்தினன் -திரும்பி பாறையடியில் குதித்தவன் எங்குச் சென்றனனோ -காணோம் -அவன் என்னையும் ஏமாற்றி விட்டான்

தலைவி -தோழீ இது என்ன மாயம் -இனி என்றும் இவ்விடம் வாரோம் -அவன் நமக்கு ஆராவமுதம் போல் தோன்றினாலும் பனியால் உள்ளுறையும் நெருப்பை மறைக்கும் இச்சந்திரிகை போலே உள்ளூர வேம்பேயாக வளருகிறான் -ஆனாலும் வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாதது போல் அவனை அன்றி நம் மனம் பிறிது ஓன்றைக் கனவிலும் கருதுவது இல்லையே -நாம் என்ன பண்ணுவோம் -நம்மைப் போலே அவனும் இருந்தால் தானே -பொய் சொல்லி ஏமாற்றுவதே அவனது ஸ்வ பாவமாயிற்று –

கரு மலர் கூந்தல் ஒருத்தி தன்னை
கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன் பால்
மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்கு பொய் குறித்து
புரி குழல் மங்கை ஒருத்தி தன்னை
புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் ! உன் வளர்த்தி யோடே
வளர்கின்றதால் உன் தன் மாயை தானே –6-3-

கண்ணன் -தனியாக தன் தலையை அசைக்கிறான்

நப்பின்னை -ஆம் சகி -கூடவே இது வரையிலும் இருந்த என்னையும் உங்களைப்போல் அவன் ஏமாற்றி விட்டானே -அவனை எப்படி நம்புவது –

ஒருத்தி -நப்பின்னையை நோக்கி -நீங்கள் ஒளிந்து இருந்த இடம் எது -ஒரு வேளை அவன் இப்போதும் அங்கேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்கிறானோ என்னவோ

தலைவி -ஏது -ஒருக்காலும் அவன் அங்கு இருக்க மாட்டான் -அங்கு இருந்து தானே நம் தோழி நப்பின்னை வந்து இருக்கிறாள் -எனினும் அவன் அமர்ந்த அவ்விடத்தைக் கண்டாவது சிறிது களிக்கலாம் -போவோம் வாருங்கோள்

நப்பின்னை முன் செல்ல எல்லோரும் அவர்கள் ஒளிந்து இருந்த இடம் செல்கிறார்கள் –

கண்ணன் -வேறாக நின்று-ஆஹா இக்காட்சியே அழகான காட்சி -என்னைத்தேட என் கூடவே இருந்த நப்பின்னை செல்கிறாள் -இப்பெண்களோ பாவம் கூடவே கலந்து வரும் என்னைக் கூடத் தெரிந்து கொள்ளாதபடி அவ்வளவு சித்த்ப்ரேமை கொண்டிருக்கிறார்கள் -என்னை நானே கண்ணன் தானா என்று சந்தேகிக்கும் போது இவர்கள் என்னை எங்கனம் தெரிந்த கொள்ளப் போகிறார்கள் –
மறுபடியும் கூட்டத்தோடு கலந்து கொள்கிறான்-

நப்பின்னை -நாங்கள் இங்கே தான் ஒளிந்து கொண்டோம் -அவன் நீ படும்பாட்டை இங்கே இருந்து தான் எட்டி எட்டிப் பார்த்தான்

தலைவி -கீழே கிடந்த அவனது புல்லாங்குழலை எடுத்து-சகிகாள் அம்மாயனை நாம் எவ்வளவு முயன்றாலும் காணமுடியாது -அவனைக்காண்பதற்கு உபாயம் அவனது பேர் அருள் ஒன்றே -ஆகையால் அவன் இஷ்டப்பட்ட போது வந்து கொள்ளட்டும் -அவனுடைய புல்லாங்குழல் கிடைத்து இருக்கிறது -அது வரை நாம் ஆறி இருக்க நான் தான் கண்ணன் -இதோ என் பிராண நாயகி நப்பின்னை -நாங்கள் இருவரும் அவன் இருந்தது போலவே இப்பாறையில் உட்க்கார்ந்து கொள்கிறோம் நான் குழல் ஊதுவேன் -நீங்கள் எல்லோரும் மண் போலவே சிறிது தூரத்திலே நின்றும் ஓடி வர வேண்டும் -பின்னர் நாம் இப்பொழுது கண்ணனைக் கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ -அதை எல்லாமே என்னிடத்தில் செய்ய வேண்டும் -சரி தானே என் யோஜனை

சகிகள் -ஆம் இது நல்ல யோஜனை -நாம் இப்படிச் செய்தால் தான் பிரிவாற்றாமையை சிறிதாவது பொறுத்துக் கொள்ள முடியும் –

கண்ணன் -தனக்குள் -நாம் இவர்களுடன் ஓட்டம் பிடிப்பதா -அல்லது இவளோடு இருந்து விடுவதா
யோஜித்து தலைவி யண்டை வந்து -சகி அவனைப்பிரிந்து நான் போரக் கிலேசப்படுகிறேன் -என்னால் ஓட இயலாது -ஆகையால் நான் நீயாக -ஆய்ச்சியர் தலைவியாக -இருந்து விடுகிறேன்

தலைவி -ஆச்சர்யத்துடன் பார்த்த வண்ணம் தனக்குள் -இவர் யார் -கன்னங்கரிய மேனி -என் அன்பனின் சாயைக்குச் சமமாக யோகம் பெற்று இருக்கிறதே -முன் பின் தெரியாதவராயினும் -இவரைக்கண்டதும் என் மனம் உருகுகிறதே -காரணம் என்ன-இவரும் நம்மைப்போலவே அவரது பிரிவாற்றாதவர் -இவரையும் அவன் இங்கு வரக்கூறினான் போலும்
வெளிப்படையாக -நீர் யார் -எனக்குத் தெரியவில்லையே

கண்ணன் -என் பெயர் கிருஷ்ணா -எனக்கு அயலூர் -இப்பொழுது தான் இவ்வூரில் கல்யாணம் நடந்தது -இன்று பகலில் நம் ஈசன் பீதக ஆடை உடை தாழப் பெரும் மேகக் கன்றே போல் எங்கள் வீதியார வந்தான் -வந்த அம்மணி வண்ணனிடம் என் மனம் குடி கொண்டு விட்டது -அவனும் என் நிலைமை அறிந்து இன்று இரவு உங்களோடு தோட்டத்துக்கு வந்து கலந்து கொள்ளுமாறு கூறினான் -நான் பொட்ட -சடக்கென போய்ப் பட்டுடுத்தி யணி பூண்டு புறப்பட்டு வந்தேன் -இங்கு அவனைக் காணோம் -அவன் பிரிவாற்றாமையைப் பொறுத்துக் கொள்ள நீ கூறிய யோஜனை சால நல்லது -நீ கண்ணனானால் கண்ணனுக்கு நீ போலே உனக்கு ஒரு தலைவி வேண்டும் அன்றோ -அவளாக நான் இருக்கிறேன் என்கிறேன்

ஒருத்தி -ஆம் இவள் அசலூர்ப் பெண் -பத்து தினங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது -கண்ணன் நிலவரையில் அடைபட்டு இருந்ததால் நாம் எல்லோரும் கல்யாணத்துக்குப் போகவில்லை –

கண்ணன் -தனக்குள் நல்ல வேளை -இங்கு வராத ஒரு புதுப்பெண்ணின் பெயரைச் சொன்னது நல்லதாயிற்று

நப்பின்னை -சகி -நம் தலைவனைப் போலவே நம் சகி கிருஷ்ணாவும் இருக்கிறாள் பார்

தலைவி -நான் பார்த்தவுடனேயே நினைத்து கொண்டு விட்டேன்
கிருஷ்ணாவையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறாள்

நப்பின்னை -சரி சகிகாள் -நீங்கள் போய் நான் குழலூதிய பின்னர் ஓடி வாருங்கோள்

எல்லோரும் செல்கின்றனர் -மூவரும் பாறை மீது அமர்கின்றனர்-

தலைவி -கிருஷ்ணா நீ இன்று தான் முதல் முதலில் அக்கள்வனின் வலையினில் அகப்பட்டனையோ

ஆம் இன்று தானே அவன் விடுதலை பெற்றான்

நப்பின்னை -ஒரு வேளை அவனைக்கண்ட மாத்திரத்திலேயே தளர்ந்து விட்டனையே -எப்பொழுதும் அவனையே வாரிப்பருகும் நாங்கள் என்ன பாடு படுவோம்

தலைவி -சகிகாள் நான் கிருஷ்ணனாகப் பாவித்துக் குழலூதுகிறேன் -நீங்கள் ஆளுக்கு ஒரு பக்கம் என்னருகில் அமருங்கோள்
இருவரும் அருகே அமருகின்றனர்

கிருஷ்ண -நாதா-குழலோசை குழந்தைகளின் மழலைச் சொற்களை விட இனிதானது -அதிலும் குழலின் தொளையில் விரல்களை விரவி நின் அதர அம்ருதத்தை ஊட்டிய பின் கேட்க வேண்டுமோ –
தலைவியின் தொடையோடு தொடையிடித்து நெருங்கி உட்க்காருகிறார்

நப்பின்னை -ஆம் -நிதமும் அதர அம்ருதத்தைப் பருகும் பாக்யம் இக்குழலுக்குக் கிடைத்துள்ளது

கிருஷ்ணா –பிராண நாயகி -இல்லையில்லை -பிராண நாயக-நினது அதர அம்ருதத்தை முதன்முதலில் எனக்குப் பருக தர வேண்டும் -இல்லையானால் குழலின் இசை இன்ப வெள்ளத்தில் நான் தரித்து நிற்க முடியாது –

தலைவி -தனக்குள் -இது என்ன ஆச்சர்யம்-கண்ணைப் பொத்தும் பொழுது உண்டான உணர்ச்சி கிருஷ்ணா என் மேல் இடித்து உட்க்காரும் பொழுது உண்டாகிறது -பிராண நாயக என்று அழைப்பதற்குப் பதிலாக பிராண நாயகி என்று அழைத்தது எனக்குப் பெரிய ஸந்தேஹத்தை உண்டாக்குகின்றது -ஒரு வேளை கிருஷ்ணன் தான் கிருஷ்ணாவாக வந்துள்ளானோ -பொறுத்துப் பார்ப்போம்
வெளிப்படையாக -பிராண நாயகி என்றும் கூறினையே -இப்படி யாரையேனும் இதுவரை அழைத்தது உண்டோ –

கிருஷ்ணா -தனக்குள் -ஏது அகப்பட்டுக் கொண்டேனோ -வெளிப்படையாக -இல்லை -நான் என்னைக் கண்ணன் என்றும் நினைத்துக் கொண்டேன்

தலைவி குழலூதுகிறாள் -கிருஷ்ணாவும் நப்பின்னையும் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தனர் -ஆய்ச்சிகள் ஓடி வந்து குழலோசை கேட்டு நிற்கின்றனர் –

தலைவி -ஆய்ச்சிகளைக் கண்டு என்னாருயிர் அனைய நங்கைமீர் வாருங்கோள்
சடக்கென எழுந்து மூவரும் அக்கூட்டத்தோடே கலந்து கொள்கின்றனர்

கிருஷ்ணா -நாத எனது தோழிகள் அனைவரும் வந்து விட்டனர் -பட்ட நிலா காய்கிறது -நமக்கு உண்டாகும் ஆனந்த வெள்ளத்துக்கு ஒரு போக்கு விட வேண்டும் -இல்லாவிடில் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு விடும் –

தலைவி -போக்கு விடுவதற்கு வழி எண்ணம்

ராஸக்ரீடை விளையாடலாம்

ஆம் அது தான் தக்க வழி

நப்பின்னை -கிருஷ்ணா இன்று தானே நீ எம் மணி வண்ணனைக் கண்டதாகக் கூறினை -இவ்விளையாட்டு விஷயத்தை நீ எவ்வாறு தெரிந்து கொண்டாய்

கிருஷ்ணா -இன்று நான் காணும் போது இவ்விளையாட்டின் விபரத்தைக் கூறி -இதில் தனக்கும் மிகவும் பிரியம் என்றும் இன்று இது தான் விளையாடப் போவதாகவும் கூறினான்

ஏமாற்றுவதில் நம் தலைவனை விஞ்சுவார் யாரும் இல்லை

தலைவி இரண்டு பெண்களுக்கு ஒவ்வொரு கிருஷ்ணனாகப் பொறுக்குகிறாள்

நப்பின்னை -ராஸக்ரீடையில் நான் தான் கண்ணனாக இருப்பேன்

தலைவி -சரி நானும் கிருஷ்ணாவும் உன் பக்கத்தில் இருக்கிறோம் –

எல்லாமும் வட்டமாய் இருந்து விளையாடுகிறார்கள் -அப்பொழுது கிருஷ்ணாவின் அரையில் இருந்து துகில் நழுவ பீதக வாடையை நப்பின்னை கண்டுவிடுகிறாள்

நப்பின்னை -தனக்குள் கிருஷ்ணா அணிந்து இருக்கும் அணி ஆடைகள் எல்லாம் என்னுடையவை போல் இருக்கின்றனவே -முன்னமே நான் சிறிது ஸந்தேஹம் கொண்டேன் -அதற்கு ஏற்றால் போல் பீதகவாடை துலங்குகிறது -உண்மையில் இவள் கிருஷ்ணா இல்லை -கண்ணன் தான் -எப்படியாவது இவ்வுண்மையை சீக்கிரத்தில் தெரிந்து கொள்கிறேன் –

ராஸக்ரீடை முடிகிறது

தலைவி -இனி நாம் என்ன செய்யலாம் –

நப்பின்னை -தனக்குள் -ஜலக்ரீடை செய்ய வேண்டும் என்றும் சொல்வோம் -அப்பொழுது தான் கிருஷ்ணாவின் உண்மை தெரியவரும் -வெளியில் -கயல் கண்ணாய் இந்த வாவியில் நாம் ஜலக்ரீடை செய்வோம் –

தலைவி -ஆம் அங்கனமே செய்வோம்

கிருஷ்ணா -தனக்குள் இப்பொழுது நாம் எப்படி தப்பிப்பது -துகில் களைந்து கரையில் வைக்க வேண்டியதாய் இருக்குமே
வெளியில் -முதலில் தலைவி கண்ணனாய் இருந்தாகி விட்டது -நப்பின்னையும் அவ்வாசையை நிறைவேற்றிக் கொண்டாள் -இப்பொழுது நான் தான் கண்ணனாய் இருப்பேன்

நப்பின்னை -தனக்குள் -உண்மை விளங்கி விட்டது -அக்கள்வனே என் நகைகளைக் களவாடி இக்கோலம் கொண்டிருக்கிறான்-அவனை இப்பொழுது தப்பிக்க விடப்போவதில்லை
வெளியில் -இல்லை இல்லை நான் தான் கண்ணனாய் இருப்பேன் -அடிக்கடி மாறினால் சுவை குன்றிப்போம்

கிருஷ்ணா -முறைப்படி நான் தான் கண்ணனாய் இருக்க வேண்டும் -மேலும் நான் புதியவள் -துகில் களைவது என்றால் எனக்கு வெட்கமாய் இருக்கிறது –

தலைவி -சகி கிருஷ்ணா தான் கண்ணனாய் இருக்கட்டுமே -பேரும் உருவமும் அவனைப் போலவே இவளுக்கும் இருக்கிறது -ஆனால் துகில் பறித்து மரம் ஏறத் தெரியுமா

நப்பின்னை -தெரியாது -புதியவளான கிருஷ்ணனுக்கு கண்ணனாக நடிக்க எப்படித் தெரியும்

தலைவி -ஆம் அது தெரியாமல் கண்ணனாக எப்படி இருக்க முடியும்

கிருஷ்ணா -எனக்கு அது எல்லாமே தெரியும் -நான் நடிப்பதைக் கண்டால் நீங்கள் என்னையே அவனாக நம்பி விடுவீர்கள்

நப்பின்னை -நீ என்ன கூறினாலும் உன்னை இக்கோலத்துடன் கண்ணனாக நடிக்க விடப்போவது இல்லை -இக்கோலத்தைக் களைந்து வா -உன்னைக் கண்ணனாக நம்புவோம் –

கிருஷ்ணா -நான் எக்கோலத்தைக் களைந்து வர வேண்டும் –

இப்பெண் கோலத்தை

நீயும் இப்பெண் கோலத்தைக் களைய வேண்டும் அன்றோ -கண்ணனாக நடிக்க வேண்டுமானால் –

உண்மையில் பெண் மகளான நான் என் பெண் கோலத்தை எவ்வாறு களைய முடியும்

கிருஷ்ணா -கோபத்துடன் சகிகாள் கேளுங்கோள் -இவள் தான் பெண் மகளாம் -நான் பெண் மகளன்றாம் -ஆகில் நான் இங்கு எதற்க்காகக் கண்ணனைத் தேடி வர வேண்டும் -நீங்களே விளையாடிக் கொள்ளுங்கோள் -எனது பிராண நாயகன் வந்ததற் பின் வந்து கொள்கிறேன்
வேகமாகச் செல் கிறாள்

தலைவி -தனக்குள் -நப்பின்னை ஏன் இவளைக் கோபித்துக் கொள்ளும்படி செய்கிறாள் -அக்கரியானையே ஒத்த இவள் பக்கத்தில் இருந்ததால் தான் எனக்கு ஒரு வித உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்றே -இனி என் செய்வேன்
வெளியில் -கிருஷ்ணா நீ ஏன் கோபித்துக் கொள்கிறாய் -திரும்பி வா -நீயே கண்ணனாக இரு

கிருஷ்ணா -என் பெண்மையையே பொய் என்னும் சொல் வந்தபின்பு நான் அங்கு வர முடியாது

உண்ணும் வேகமாகச் செல்லும் போது ஆடையின் தலைப்பு ஒரு கிளையில் மாட்டிக் கொண்டு விடுகிறது -அவ்வமயம் தலைவி ஓடி ஓடிச் சென்று தலைப்பைப் பிடித்துக் கொள்ள கிருஷ்ணா திமிறிச் செல்ல முயல -அப்பொழுது நப்பின்னை வந்து தலையுடன் சேலையை பலமாக இழுத்து உருகி விடுகிறாள் -கிருஷ்ணா அரையில் பீதகவாடையும் உடம்பில் பெண்கள் அணியும் திகழ புன்முறுவலுடன் நிற்கிறார் -எல்லோரும் ஆச்சர்யத்துடன் ஒன்றுமே தோன்றாமல் அவனையே கண்ணாரக் கண்டு களிக்கின்றனர் –

நான்காம் அங்கம் முதல் களம் முற்றிற்று


நான்காம் அங்கம் -இரண்டாம் களம்

திருவாய்ப்பாடியில் ஒரு தெரு
காலம் -பின் மாலை

தலைவி வருகிறாள்

வானத்தை நோக்கி -இம்மதி நிம்மதி இன்றி எம் போன்ற பேதையரைத் துன்புறுத்தி விளையாடினன் -இவ்வமயம் அவன் வீழ்ச்சி காலம் நெருங்கி விட்டது -இவ்வுலகினில் சிலர் இளமையில் அளவிலாத் தீமைகள் புரிந்து இறுதியில் நல்லவராவதுண்டு -அது போல் இதுகாறும் இடுக்கண் இழைத்த இத்திங்கள் அந்திம வேளையில் என் தன் உள்ளம் குளிரச் செய்கின்றனன் -ஒவ்வொருவரது நிலையும் மாறுவது இவ்வுலகில் இயல்வே -கொழுநனைத் தழுவ நான் செல்ல இச்சந்திரன் பெரிதும் உதவுகின்றனன் அன்றோ -இருளாய் இருந்தால் அவ்விருள் நிறக் கண்ணைக் காண முடியுமோ -ஆஹா இவ்விரவு முழுவதும் அவ்வரியனது போகம் என் தோழி நப்பின்னைக்குக் கிடைத்ததே -கவிப் பந்தயத்தில் அவள் அவனை வென்றாளாம் -அதற்காக தமது சரீரத்தையே அவளுக்குப் பரிசாக அளித்தனன் -இவ்விரவில் அவள் ஒருவளே சுகம் பெற்றனள் -எம் போன்றவர்கள் ஏற்கனவே பிரிந்த துன்பத்துக்கும் மேல் கூடிய மறுபடியும் பிரிந்ததால் அந்தமின்றி வருந்த வேண்டி இருக்கிறதே -அனுபவிக்க அனுபவிக்க காதல் தீ வளருமே அன்றி குறையாது -அனுபவத்தை காதல்தீக்கு விறகு என்னலாம் -காதலின் மஹிமை சொல்வதற்கு அரியது –காதலருக்கு நடுவே ஒரு ஆறு அல்லது சமுத்திரம் -ஏன் உலகமே இருந்தாலும் அவர்களை காதல் தேவதை சேர்த்து வைத்து விடும் –காதல் மந்த்ரம் தேவ மந்திரத்தில் -வீட்டில் ஒளிந்து இருந்தாலும் காதலனைக் கடிதில் சேர்ப்பித்து விடுகிறது -சிறையில் அடைப்பட்ட என் காதலனை விடுவித்தது இந்தக் காதல் மந்திரமே -உண்மையில் காதலைப் பிரிக்க தெய்வத்தாலும் ஆகாது -சந்திரிகையை சந்த்ரனிடமிருந்து பிரிக்க வல்லார் யார் -நிறை ஆறு கடல் நோக்கிச் செல்வது போல் நாங்கள் அக்கரும் கடல் வண்ணனைக் கலந்து சத்தையை -பெண்மையை -பெறப் போகிறோம் -என் தோழிகள் என்னை வந்து எழுப்புவதாகக் கூறினார்களே -இன்னும் ஏன் வரவில்லை – இது எவ்வளவு அரிய சீரிய நேரம் -இந்நேரத்தை வீணே விட்டு வாளா இருக்கின்றனரே -இத்தகைய நேரம் கிடைப்பது எளிதோ -நாள் என ஓன்று போல் காட்டிலும் இக்காலம் கழிந்தது கழிந்தது தானே -நாளை இது மீளுமோ -நானே சென்று அவர்களை —

இதற்குள் சிலர் வருகின்றனர்-

தலைவி -சகிகாள் வாருங்கோள் வாருங்கோள் நீங்கள் வரவில்லையே என்று நினைத்தேன் -வந்து விட்டீர்கள் -உங்களுக்கு நூறு வயதிற்கு குறையில்லை -வேண்டும் அளவும் கண்ணனை அனுபவித்துக் கொள்ளலாம்

வந்தவர் -அக்கரியனைப் பிரிந்து வந்தது முதல் நீ உறங்கவேயில்லை என்பதை உனது சிவந்த கண்ணகம் சொல்கிறது -உன்னை நாங்கள் எப்படிப் முன்பே வந்து எழுப்ப முடியும்

தலைவி -ஏற்கனவே நெடுநாளாக அனுபவித்து வரும் விரஹத்தீயை சிறிது நேரம் கூடிப் பிரிந்தது பெரிதும் வளர்த்து விட்டது -நான் எப்படி உறங்க முடியும்

என்ன ஆனந்தத் தோற்றம்

எங்கே

உன் முகத்திலே –மேகத்தைக் கண்ட மயில் இனங்கள் இடத்திலும் போலவும் நிதிகண்ட தரித்ரனிடத்தில் போலவும் -தாய்கண்ட சேய்களின் இடத்தில் போலவும் -பரிதி கண்ட பங்கயத்திலும் -சக்கரவாக தம்பதிகள் இடத்தில் போலவும் -அளவிடமுடியாத ஆனந்தத்தோற்றம் உனது முகத்திலே தென்படுகிறதே

தலைவி -ஆம் சகி -ஆனந்திக்க வேண்டிய நேரம் இது -நான் மட்டுமல்ல -நீங்களும் தான் -சுக துக்கங்கள் நமக்கு இங்கு தனியே கிடையாதே -அவை நமக்குப் பொதுவானவை -நாம் முன் ஜென்மத்தில் என்ன நோன்பு நோற்றோமோ -இத்தகைய அரிய சீரிய நேரம் கிடைக்கப் பெற்றோம்

முன் ஜென்ம நோன்பின் பயனாக கூறும்படி இந்நேரம் என்ன சீர்மை பெற்றது

கூறுகிறேன் -ஸாவதானமாகக் கேளுங்கோள் -பொதுவாக விடிவோரை -ஆதலால் மிகவும் கொண்டாடத்தக்கது -சாத்விகமான காலம் இதுதான் -இத்திங்கள் முப்பதுமே சாத்விக காலம் தான் -தேவர்களுக்கு உத்தராயணம் பகலாகும் -அதற்கு முந்திய ப்ரஹ்ம முஹூர்த்தமான விடிவோரை காலம் இத்திங்கள் முப்பதும் -நாம் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் இந்த நேரம் ஏன் -இம்மாதமே ஏற்றமுள்ளது -அதற்கு ஐந்து காரணங்கள் உண்டு -முதலாவது மிகவும் குளிர் மிகவும் வெப்பம் இல்லாமல் நம் நாயகனைப் போல் இருக்கும் யோகம் -இரண்டாவது தை முதல் ஆரம்பமாகும் தேவர்களுடைய பைகளுக்கு முந்திய ப்ரஹ்ம முகூர்த்த மான சாத்விகமான காலம் இது -மூன்றாவது நம் ஈசனுக்கு நேசமான மாதமாதலால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகந்த காலம் -மாதங்களில் நான் மார்கழி யாகிறேன் என்கிறார் அன்றோ -நான்காவது எல்லாப் பயிர்களும் பலிக்கும் காலமாதலால் நம் மநோ ரதமும் பலிக்கும் காலம் -ஐந்தாவது நாம் நம் நாதனை நண்ணி பலம் -நலம் -பெறுவதை பொறாத விருத்தர் குளிருக்கு அஞ்சி வெளிப் புறப்படாத காலம்

நாம் நோன்பு ஆரம்பிக்கும் போது இத்தகைய நேரம்-மாதம் – நேர்பட்டதே -இதுவே நமது கார்யம் நிறைவேறப்போவதற்கு அறிகுறி -நீ என்ன நினைக்கின்றனை

மாதம் மட்டுமா பக்ஷமும் அதற்கு ஏற்றால் போலே நேர்பட்டு இருக்கிறதே -அதைப் பாருங்கோள்

பக்ஷத்திற்கு என்ன ஏற்றம்

இதை நான் கூற வேண்டுமோ -விண்ணைக் காண்மின் -மீன் எனும் பூக்கள் பூத்த வான் எனும் சோலையில் த்விஜராஜன் -சந்திரன் -பூர்ணனாய் ரோஹிணியுடன் -வாருணி -மேல் திசை -கள்ளுமாம் -சேவித்து விளையாடி மகிழ்கின்றான்-மயங்குகின்றனன் – அன்றோ -இதனால் சுக்ல பக்ஷ பூர்த்தி என்றும் உங்களுக்கு விளங்க வில்லையா -சுக்ல பக்ஷத்தில் நற் கார்யங்கள் செய்ய வேண்டும் என்றும் சாஸ்திரங்களும் கூறுகின்றன அன்றோ -அதுவும் தெய்வாதீனமாய் நேர்பட்டதே

அப்படியே மாதத்தைத் போலவே பக்ஷமும் நேர்பட்டதால் மிகவும் ஆனந்தம்

சகிகாள் -என்ன ஆனந்தம் பாருங்கள் -இன்று நாளும் நன்னாள்

ஆச்சர் யத்துடன் -நாளும் நன்னாளா எப்படி

சகிகாள் -மேகத்தால் ஆகாயம் மறைபட்ட நாளை துர்தினம் என்பர் பெரியோர் -இன்று ஆகாயத்தைப் பாருங்கள் -நிர்மலமாய் கன்னங்கரேல் என்று நம் நாதனை ஒக்கும் யோகம் பெற்று இருக்கிறது -சந்திரன் சந்திக்கையை மேகம் முதலிய தடங்கலின்றி அடங்க எங்கும் பரப்பி இந்நாள் ஏன் நன்னாள் ஆகாது -முன் காலத்தில் மஹா விஷ்ணு தேவர்களுக்கும் மட்டுமே அம்ருதம் கொடுத்ததாக நாம் கேள்விப்படுகிறோம் -ஆனால் இன்று அக்காட்சியை நாம் நேராகவே அனுபவிக்கிறோம் -ஆகாயமாகிய மாயன் -சந்திரனாகிற வெள்ளிக் கிண்ணத்தில் உள்ள சந்திரிகையாகிற வெளுத்த அமுதத்தை முன் போல் வஞ்சகம் இல்லாமல் எல்லாருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கிறான் -நம் கருத்துக்கு விருத்தரான -விரோதிக்கும் கிழவர்களே-கருத்து ஒன்றுபட்டுக் கண்ணனைக் கலந்து கொள்ளக் குறிப்பிட்ட இது நன்னாளே அன்றோ -மேலும் நம் நாதனே ஆதரவுடன் என்னை வந்து எழுப்புங்கோள் பறை தருகிறேன் என்றும் குறிப்பிட்ட இது மிக மிக நன்னாளே அன்றோ

சகி விடியப்போகிறது நாம் செய்ய வேண்டியது யாது

நாம் இப்பொழுது நீராட வேண்டும்

இப்பொழுது என்பில் இழை கோப்பது போலே பனிவாடை ஈர்கின்றதே -எப்படி நீராடப் போகிறோம்

சகி காள் பயப்பட வேண்டாம் -நான் நீராட்டம் என்றும் குறிப்பிட்டது கண்ணன் கலவியைத்தான் -கலவியை சுனையாடல் என்பது தமிழ் மக்களின் மரபுன்டை

குளிக்க என்றும் சொல்லாமல் நீராட என்றும் கூடியது கூட மரபுச் சொல் தானோ

நகைத்து -பரி ஹசிக்கிறீர்களா -கணவனைக் கௌரவிப்பது பெண்டிரின் கடமை -கணவனைச் சேர்ந்தோரையும் கௌரவிக்க வேண்டும் -இன்றேல் கணவனையே அகௌரவிப்பது போல் ஆகிவிடும் -நீங்கள் என் தோழிகளாயினும் என் ஈசனிடம் பாசம் வைத்தவராதலின் குளிக்க என்று கூறாமல் நீராட என்று மரியாதை சொல் கொண்டு கூறினேன்

இந்நோன்பில் சேர புதிய பெண்களை ஆசைப்படுகிறார்கள் -அவர்கள் சேர்ந்து கொள்ள ஏதேனும் யோக்யதை தேடிக்கொள்ள வேண்டுமா

இது என்ன விந்தை -நாம் எல்லாமே என்ன யோக்கியதை தேடிக்கொண்டோம் -ஆசை ஓன்று தான் இதற்கு வேண்டுவது -ஆகையால் இப்பொழுதே அவர்களை அழைத்து வர வேண்டும்

ஒருத்தி போய் மற்ற சிலருடன் வருகிறாள்

வாருங்கோள் வாருங்கோள் -எச்சமயத்திலும் கண்ணனைச் சேருவதற்கு ஏற்றபடி அணிகள் அணிந்த நேரிழையீர் -வானோர் இறையின் நீர்மை கரை மல்கும்படிச் சீர்மை பெற்ற இத்திருவாய்ப்பாடியலே வாழ்ந்து -கண்ணன் கலவியாம் செல்வமும் -அதை அனுபவிப்பதற்கு ஏற்ற பருவமும் பெற்ற நீங்களோ இந்நோன்பில் சேருவதற்கு யோக்யதை வேணுமா என்று கேட்பது -சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள் -வாருங்கோள் -வந்து கூடுங்கோள்

சகி நாம் சிறுமியர் ஆயிற்றே -இந்நோன்பை நிறைவேற்றும் ஆற்றலுக்காக ஏதேனும் யோக்யதை தேடிக்கொள்ள வேண்டுமோ என்று ஸந்தேஹித்தோம்-

சசி காள் -நம்மால் செய்யற் பாலது என் -நமக்கு ஆற்றல் ஏது -அது ஈசனிடம் உள்ளதன்றோ -கூரிய வேலேந்தும் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரனும் -ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் ஸிம்ஹமும் -கார் மேனியனும் -செங்கண்ணனும் -கதிர் மதியம் போல் முகத்தனுமான ஸ்ரீ மன் நாராயணனே நமது விருப்பத்தைத் நிரப்பித் தருவான் -நானே நாராயணன் என்று நம் முன்பே தமது பரத்வத்தைக் காட்டும் நம் பர்த்தா தானே நம் நோன்பை நிறைவேற்றித் தருவான் -நாம் எதிலும் முயல வேண்டியதில்லை -முயலும் கூடாது -பெற்று எடுத்த தாய் பசித்து அழும் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டி மகிழ்வது போல் -அவனும் நம் நோன்பை நிறைவேற்றி -பாலே போன்ற சீரிலே -சவுந்தர்யாதி குணங்களிலே -பெரும் பசியரான நம் பசியைப் போக்குவதற்கு முயன்று கொள்வான்

ஊருக்கு ஒப்ப பறை பெறுவதாகக் கூறுவோம் -உண்மைப்பறை நமக்கு –ஆத்மாவுடைய ஸ்வரூபத்துக்கு ஏற்ற கைங்கர்யம் -சேதனராகையாலே அத்தையே பிரார்திக்கக் கடவோம் -இந்நோன்பினால் நமக்கு அந்த உண்மைப்பறை கிடைக்கும் -நம்மைத்தடுத்த கிழவர்களே புகழும் படி மழையும் பொழியும்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்

இந்நோன்புக்கு அங்கமாக நாம் செய்ய வேண்டுவது என்ன-

அவனாலே பேறு என்றும் இருக்கும் நாம் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை -எனினும் இவ்வுலகம் ஒப்பச்செய்ய வேண்டிய சிலவற்றைக் கூறுகிறேன் -பரமபதத்தில் நின்றும் அண்டினவர் கூக்குரல் கேட்க்கும்படி பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாட வேண்டும் –பரமனும் கண்ணனும் வேறு அன்றே -ஆகையால் நம் கற்பு நெறிக்குக் குறையில்லை -பாடவே வேறொன்றும் நமது மனதுக்கு உகக்காது -விரித்துக் கூறுவான் என் -நம் மரபிற்கே விருப்பமான நெய் உண்ணோம் பாலுண்ணோம் -நாட் காலே -விடிவோரை -நீராடிக் கண்களில் மையிட்டு எழுந்தோம் -நாம் மலரிட்டு நாம் முடிய மாட்டோம் -செய்யாதன செய்யோம்-நம் தோழிகள் மற்றவரையும் இந்நோன்பிலே கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் -இன்றேல் செய்யாதன செய்தோமாவோம் -நாம் பிறருக்குத் இன்னல் விளைக்கும் பொய்யுரைகளைச் சென்று ஓதோம் -நாம் விளையாட்டாக ஏசிக்கொண்டதைக் கூட நம் நாதனிடம் சொல்லக்கூடாது -துர்ஜனங்களான ராஜசிகளுடைய தர்ஜனத்தையே -அதட்டலையே -பிராட்டி பெருமாளிடம் கூறினாள் இல்லை -அப்படி நாம் நம் நாதனிடம் கூறினால் தீக்குறளைத் சென்று ஓதினோமாவோம் -நற்பாத்திரம் அறிந்து இடும் ஐயமும் ப்ரஹ்மசாரி சந்நியாசிக்கட்க்கு இடும் பிச்சையும் அவர்கள் கொண்டு ஆம் போதும் என்னும் அளவும் இல்லை என்னாது கைநீட்டிக் கொடுக்க வேண்டும் -ஏன் நம் நாதனையே உள்ளபடி அறிந்து ஒருவரே அவனையே நம்மிடம் வந்து கேட்டால் தடையில்லாமல் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறோம் -நம்மோடு இவ்வுலகமும் உய்யும் வழி இதுவே –

வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பைய துயின்ற பரமனடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்

அங்கத்தோடு இந்நோன்பின் விபரத்தைக் கூறியது போல் இதன் பயனையும் விபரமாகக் கூறு -கேட்டு இன்புறுகிறோம் –

நம்முடைய பயன் கண்ணன் கலவியே -உலகைச் சாரும் பயனைக் கூறுகிறேன் -இவ்வுலகம் விரும்பாவிடினும் கருணை கொண்டு எல்லார் முடியிலும் அடியிட்டு ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாம் நம் பாவைக்கு -நோன்புக்கு -நீராடினால் -தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் -நோய் பஞ்சம் முதலியன இருந்த இடமும் தெரியாமல் பறந்து ஓடிப்போம் -ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையும் பெய்வதால் நம்மூரோடு இந்நாடு எல்லாம் நெற்பயிர்கள் திரி விக்ரமனிடம் போட்டியிடுவது போல் ஓங்கி வளரா நிற்கும் -அந்நெற்பயிருக்குள் நண்டு போக இடமில்லாமல் துள்ளி விழா நிற்கும் -அவ்வமயம் நெற்பயிறூடே வளர்ந்த குவளை மலர்கள் அசைய அவைகளில் உள்ள வண்டினங்கள் ஊஞ்சலில் பஞ்சணையில் துயிலும் அரச குமரர் போல் உறங்கா நிற்கும் -மேலும் தயங்காமல் ஒருப்பட்டு ஒரே நிலையில் பருத்த மடுவினைப் பற்றி வாங்கினால் குடம் குடமாகப் பாலால் நிறைக்கும் வள்ளன்மை வாய்ந்த பெரும் பசுக்கள் வாய்ந்தவராய் நம்மூரார் எல்லாரும் நீங்காத செல்வம் நிறைந்து இருப்பார்கள் -புண்ணியம் அடியாக வரும் செல்வம் தான் நீங்கும் -கண்ணன் கருணை அடியாக வரும் செல்வம் நீங்காது -இவை எல்லாமே நமது நோன்பின் பயனாகும்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

நன்கு கூறினை -உனது ஆழ்ந்த கருத்துள்ள அழகிய மொழிகளால் எங்களுக்கு மிகவும் ஆர்வம் பெருகி விட்டது -இனித் தாமதிப்பான் என் -வா போகலாம் —

நமது சகிகள் இன்னும் பலர் வரவில்லையே -போகும் வழியில் அவர்களையும் எழுப்பிக் கூட்டிக் கொண்டே போக வேண்டும் -போவோம் வாருங்கோள்

எல்லாரும் செல்கின்றனர்

நான்காம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

நான்காம் அங்கம் முற்றிற்று


ஐந்தாம் அங்கம் -முதல் களம்

ஆய்ப்பாடியில் வெட்ட வெளியான இடமும்
பர்ஜன்ய தேவன் பிரவேசிக்கிறான்

ஆஹா உபய விபூதிகளுக்கும் நிர்வாஹகனான சர்வேஸ்வரன் தன்னைத் தாழ விட்டு இடை மடவாரது பணியாளாய் இவ் வூரில் எழுந்து அருளி இருக்கிறான் எனின் இவ்வூரின் பெருமையை யார் அறிவர் -ஸ்ரீ மன் நாராயணனது நீர்மை இங்குப் பரமபதம் அளவும் அலை எறியும்படி அன்றோ ப்ரவஹிக்கிறது -இடக்கை வலக்கை அறியா ஆயர் சிறுமியர் எங்கே -உலகம் அனைத்தையுமே ஒடுக்கி ஆளும் ஒரு தனி நாதன் எங்கே -மறையவரும் மறை முடியும் அவ்விறைவனை இறைஞ்சியும் இன்னும் கழலிணை காணாது கலங்குகின்றனரே -அவன் கழலிணை காணா எம் போன்ற தேவர்கட்க்கு தான் ஒரு அளவு உண்டோ -விண்ணுக்கு வெறும் சுமையாக எம் போன்றவர்கள் இருந்து என்ன-போய் என்ன-இவ்வூர் சிறுமியரது சீர்மையில் எள்ளளவு கூட எம்மிடம் இல்லையே -இப்பெண் மணிகள் மழைப் புத்தேளான ஆக்கமில்லா எனக்காக நோன்பு நோற்கின்றனராம் -உண்மையில் இந்நோன்பு கரிய வள்ளலை நோக்கியது என்பதை யான் அறியாமல் இல்லை -எந்நோன்பும் அவனது ஆராதனமே என்பது புராதன சாஸ்திரங்களின் கருத்து -இம்மடந்தையரோ அவன் நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தராவார் -உலகிற்கு ஏற்ப இவர்கள் எனக்காக நோன்பு நோற்பதாகக் கூறுகின்றனர் -இனி நான் வாளா இருக்கலாகாது -மழை பொழிந்திடல் வேண்டும் -இல்லாவிட்டால் மஹா பாகவதர்களான இம்மடவார் மதிமுகம் மாறுபடும் -படவே கருணை வள்ளலது உள்ளம் கலங்கி விடும் -நான் வெகு விழிப்புடன் இத்தையலாருக்குத் தக்க உதவி செய்திடல் வேண்டும் -மானிடர் தானே என்று அவமதித்தல் கூடாது -அடியாராதலின் படி சாய்ந்து முடியால் வணங்கத் தக்கவர் ஆகிறார்கள் -அவர்கள் இடமே சென்று நான் செய்ய வேண்டிய அடிமை யாது என்று கேட்க்கிறேன்

ஆய்ச்சியர் சிறிது தூரத்திலே பாடிக்
கொண்டு வருகின்றனர் –

ஆஹா இவர்கள் வந்து விட்டனர் -இவர்களுடன் கீதம் உள்ளத்தை நவநீதம் என உருக்குகிறது -உலகில் சங்கீதத்தைப் போலே உள்ளம் கவருவது ஒன்றுமே இல்லை -வேதங்களில் கீதத்தாலே ஸாமம் சிறந்தது -சொல்லின் சுவைக்கு சங்கீதம் உரை கல்லானது -சங்கீதமும் சாஹித்யமும் இல்லாதவன் கொம்பும் வாலும் இல்லாத ஒரு தாழ்ந்த பசுவாகி விடுகிறான் -பசுவும் சிசுவும் பாம்பும் கூட சங்கீதத்தில் லயித்து விடுகின்றனர் -எத்தகைய துன்ப நிலையிலும் சங்கீதம் உள்ளத்தில் களிப்பினை பொங்கச் செய்யும் -தங்கச் சங்கம் போன்ற இவர் தம் கண்டக் குரல் தீய அசுரர் நடலைப்பட முழங்கும் பாஞ்ச ஜன்யத்தின் முழக்கம் பக்தர் தம் குழாத்தைப் போலே என்னைப் பரவசமாக்குகிறது -சங்கீதம் இனிது -இவர் தம் குரல் இனிது -மேனி இனிது -திருமால் திரு நாமம் இனிது -வேறு இனி என்ன வேண்டுவது –
மெய் மறந்து பரவசமாகி நிற்கிறான்

ஆய்ச்சியர் நெருங்கி விடுகின்றனர்

தலைவி -தனக்குள் -இங்கு நிற்கும் பெரியார் யார் -இவர் மெய் மறந்து பகவத் குண அனுசந்தானம் செய்கிறார் போலும் -பெரியோர்களை வணங்காமல் செல்வது நன்மைகளுக்கு பங்கமாய் விடும்
வெளியில் -சகி காள் -இப்பெரியவரை வணங்குங்கோள் -நம் நோன்புக்கு இதனால் நன்மை உண்டாகும்
எல்லாமும் வணங்குகின்றனர்

பர்ஜன்யன் -கீதம் நின்று விட்டதால் உடன் திடுக்கிட்டு -அபசாரம் -அபசாரம் -கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்

தலைவி -பெரியோய் நீவிர் யார் பர உபகாரமே புரியும் தங்கள் தர்சனம் எமக்கு என் நன்மை பயக்கப் போகிறதோ –

பர்ஜன்யன் -வணக்கத்துடன் -அம்மணி என் பெயர் பர்ஜன்யன் -மழை பொழி தேவன் -உங்களுடைய நோன்பின் உண்மையை நான் அறிந்து கொண்டேன் -அடியாராக உங்களைப் படி சாய்ந்து வணங்கி

தலைவி -அபசாரம் அபசாரம்

நான் எப்பொழுது என்ன விதமான அடிமை செய்ய வேண்டும் என்று கேட்க வந்தேன் -நியமித்து அருளுக –

பெரியோய் சிறுமியரான எங்களைக் கணிசித்து வலிய உதவ வந்த நினது வள்ளன்மைக்கு ஓர் அளவிலது-திருமால் திருமேனி ஒக்கும் யோகம் படைத்த நினது வடிவை யாம் என்றென்றும் மறவோம் -எங்களுக்கு உதவ வேண்டிய விதத்தை வேண்டிக் கொள்கிறேன் – கேட்டருளுக
ஓ ஆழி மழைக்கு அண்ணா -கடல் நிறக் கபீரனே -நின் வள்ளன்மையில் எள்ளளவும் உள்ளடக்கிடாமல் -நல்லவர் தீயவர் பாராமல் -நாடடஙக எமக்காக மழை பொழிந்திடல் வேண்டும் -இப்பொழுதே பொட்டென புறப்பட்டுப் போய் ஆழியுள் புக்கு மணலே மீதாம்படி நீர் முகந்து கொள்ள வேண்டும் -எங்கும் பரந்து முகம் காட்டாமல் புரக்கும் அரியைப் போல் இராமல் உலகம் அனைத்தும் உன் பேர் முழக்கம் கேட்டு உளம் மகிழுமாறு கர்ஜித்து -விண்ணீல மேலாப்பு விரித்தால் போலே எங்கும் பரந்து கொள்ள வேண்டும் -ஊழி முதல்வன் உருவம் போல் நின் மெய் கறுத்திடல் வேணும் -வலிமையையும் பரப்பும் அழகும் வாய்ந்த தோள் களுடைப் பற்பநாபன் கையில் துலங்கும் ஆழி போல் மின்னி வலம் புரி போல் நின்று அதிர்க்க வேண்டும் -அவனது சாரங்கம் எனும் வில்லிட்ட சர மழை போல் விடாது மழை பொழிய வேண்டும் – சர மழையால் அரக்கர் அடங்க அழிந்தனர் -நீ யாரும் வாழ உலகினில் பெய்திட வேண்டும் -இவ்விதம் செய்தால் நாம் உன் வடிவைப் போல இந் நன்றியையும் மறவாமல் மார்கழி நீராடுவோம் –

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி

ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து

பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்

பர்ஜன்யன் -அம்மணி நன்று கூறினை -என் கடைமைப்படி இது எல்லாம் நான் செய்து முடிக்கிறேன் -நின் புகழ்சிக்கு ஏற்ப இது பெரிய உதவியாமோ –

பெரியோய் இவை நின் கடைமையின் பாற்பட்டன என்பது உண்மையே -ஆயினும் மழை வேண்டும் காலத்தில் செய்த இவ்வுதவி ஞாலத்திலும் மாணப்பெரிதாம் அன்றோ

ஆகட்டும் அப்படியே செய்கின்றேன்

இருவரும் வணங்குகின்றனர் -பர்ஜன்யன் செல்கிறான்

ஒருத்தி -என்ன ஆச்சார்யன் இப்பொழுது வந்தவர் யார் -மழைக்குத் தேவனாமே -ஒரு தேவதை சிறுமியரான நமக்கு வலிய வந்து உதவுகிறதே –

நம் நாதனுக்காக நமக்கு வந்து உதவுகிறான் -இது என்ன ஆச்சர்யம் -நாம் பரிசுத்தராய் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க-கழிந்த பாபங்களும் இனி வரும் பாபங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுக் குவை போலே உரு மாய்ந்து போமே -இதில் என்ன அதிக விந்தை –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

மறுபடியும் பாடிக்கொண்டே செல்கின்றனர்

ஐந்தாம் அங்கம் முதல் களம் முற்றிற்று


ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம்

திருவாய்ப்பாடி சிறிய கோயில் பக்கம்
வசிஷ்டர் வியாசர் சுகர் நாரதர் -ஆக நான்கு முனிவர்கள் வருகின்றனர் –

வியாசர் -நாரத மகரிஷே -இவ்வுலகினில் மஹான்கள் வசிக்கும் எத்தனையோ புண்ணிய ஷேத்ரங்கள் இருக்கின்றனவே -அவைகள் இடக்கை வலக்கை ஆயர்கள் வசிக்கும் ஆய்ப்பாடிக்கு நிகராகுமோ -சர்வேஸ்வரனது ஸுவ் சீல்ய ஸுவ் லப்ய குணங்கள் இங்கே தானே கங்குகரையின்றி ப்ரவஹிக்கிறது –

நாரதர் -வாரீர் வ்யாஸ முனிவரே -நீர் சொல்லிய அனைத்துமே சத்தியமே -முன்பு சர்வேஸ்வரன் அயோத்தியில் இஷ்டரான சிஷ்டருடன் பழகிப் பேரானந்தம் கொண்டனன் -இப்பொழுது இங்கோ ஏதும் அறியாத இடையருடன் ஏக போகனாய் -ஸுவ் சீல்ய குணம் -தாழ்ந்தவருடன் சேர்ந்து பழகும் குணம் -நிறம் பெறும்படி நடந்து கொள்கின்றனன்

மஹர்ஷே இதனால் தானே மற்ற அவதாரங்களை விட இவ்வவதாரம் சீரியதாகிறது

சுகர் -தந்தை கூறியது உண்மையே -மற்ற அவதாரங்களை விட ராம அவதாரமே சீரியது -தன்னை தசரத குமாரனான மனிதனாகவே எண்ணி அவன் காரியத்தை நடத்திப் போந்தான் -இவ்வவதாரமோ அதை விடச் சீரியது -ஜாதி தொழில் முதலியவற்றில் தாழ்ந்தவர்களோடு கலந்து பழகுவதோடு தன் பரத்வத்தையும் பார் அறியச் செயவது இவ் வவதாரத்தில் தானே

வசிஷ்டர் -இரண்டும் சீரிய அவதாரங்கள் தான்

நாரதர் -சுக ப்ரஹ்ம ரிஷே -பரத்வம் என்றதினால் எனக்கு நினைவு உண்டாகிறது -நெடுநாளாக எனக்கு பரத்வ நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது -காயோடு கனி யுண்டு நெடும் காலம் தவம் செய்தேன் -பின்னும் பல இடங்களிலே அலைந்து உழன்றேன் -பின்னர் கண்ணபிரானால் எனது எண்ணம் நிறைவேறியது -அது முதல் இவ்வுண்மை எனக்குப் புலனாயிற்று –
கண்ணன் கழலிணை நண்ணினால்
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தான் வாட வாடத் தவம் செய்ய வேண்டா
அது முதல் நான் யாருக்கும் இவ்வுண்மையை உபதேசித்து வருகிறேன்

திண் நன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லைஓர் கண்ணே.

ராமாவதாரத்தில் இத்தகைய வரலாறு ஒன்றையும் காணோமே -ஆகையால் அவ்வவதாரத்தை விட இவ்வ்வாதாரமே சீரியது என்று நான் நினைக்கிறேன்

வசிஷ்டர் -கண்ணன் அவதாரம் சீரியது தான் எனினும் ராமாவதாரத்தை விடச் சீரியது எனல் தகாது -சேது பந்தனம் முதலிய அதி மானுஷ செயல்களினால் அவ்வவ தாரத்திலும் பரத்வம் பார் அறியப் பரவி இருக்கிறது -கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற அரும் பாவி சொற்கேட்டு மெல்லிய அடிகளில் ரத்தம் பீறிட -நேரிழையும் இளம்கோவும் –பிராட்டியும் இலக்குவனும் -பின்னே போக -நெடும் கானமிடை நடந்து புகழ் கொண்ட வல் வில் ராமனை இன்றும் மறை முனிவர் நெஞ்சத் தாமரையில் இருத்தி அருத்தித்து வழி படுகின்றனர் –ஆஹா அக்கூற்றுத்தாய் கொடிய வனம் போ என்றிடவும் அச்சீதை மணாளன் சிறிதும் சீற்றமில்லாமல் புன்முறுவலுடன் அத்தை ஏற்றுக்கொண்ட காட்சி யாருடைய மனத்தை உருக்காது –
அப்பொழுது தயரதன்
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-
என்று என்னை நோக்கி புலம்பிய புலம்பல் என் மனத்தை உருக்கி விட்டது -தர்ம ஸம் ஸ்தாபனத்துக்கு அவதரித்த அம் மைந்தனோ இப்புலம்பலை சிந்தை செய்யாது தர்மத்தை ஸ்தாபிக்கவே கானகம் சென்றான் -தர்ம ஸ்வரூபி ராமன் -குறும்பு செய்வானோர் மகன் கண்ணன் -ஏக பத்னீ விரதம் ராமனுடையது -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் என்ற கணக்கிலே பாஹு பத்னீ விரதம் கண்ணனுடையது -பெண்களைக் களவாடிய வாலியையும் ராவணனையும் வதை செய்தவன் அவன் -வெண்ணெயையும் பெண்களையும் களவாடுபவன் இவன் -தான் சடை முடி தாங்கி குரங்கினையும் அரக்கனையும் கொன்று அவர் தம் தம்பியருக்கு பொன் முடி சூட்டினவன் அவன் -தன் சொந்த மாமனான கஞ்சன் வயிற்றினுள் நெருப்பு என நின்று அவனையே முடித்தவன் இவன் -இத்யாதி காரணங்களைப் பார்த்தால் ராமாவதாரத்துக்குத் தான் ஏற்றம் கூற வேண்டும் -ராவண வத அநந்தரம் பிரமன் சிவன் முதலிய தேவர்களும் அவனைத் துதி செய்ததால் அவனே பரன் என்பது தெள்ளியதாக விளங்கும்

வியாசர் -சுகர் -தாத்தா தாங்கள் ரவிகுல குருவாய் இருந்ததால் தங்களுக்கே உரிய சொந்தமாகி விடுவானோ -அவனிடம் எங்களுக்கு அபிமானம் அல்லது பக்தி இல்லையா -அவனிடமுள்ள அபிமானம் இவவவ தாரத்தின் உண்மைக் குணங்களை தங்களுக்கு மறைத்து விட்டது போலும்-

வசிஷ்டர் -புன்முறுவலுடன் தாடியைத் தடவிக்கொண்டே -குழந்தைகளே ராம அவதாரத்தை விட இவ்வவதாரத்தில் தான் ஸுவ் சீல்ய ஸுவ் லப்ய குணங்கள் நிறம் பெறுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள் -என் அபிமானம் இவ்வுண்மையை எனக்கு மறைத்து விடவில்லை -ஆகிலும் பாமரர் கருதுவது என்ன-கண்ணன் தீம்பன் கள்வன் பெண்களை கற்பழிக்கின்றனன் -இவ்வவதாரம் இப்படி எல்லாமே எண்ண இடமும் கொடுக்கிறது -ராம அவதாரத்தில் இப்படி நினைப்பதற்கு இடமில்லை -ஆகையால் இவ்விஷயத்தில் ராம அவதாரத்துக்கு ஒரு தனி ஏற்றமே தானே

நாரதர் -ஸ்வாமி தேவரீர் சற்று ஆராய்ந்து கூறிடல் வேண்டும் -நானும் ராம அவதாரத்தைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டிருக்கிறேன் -ராமனது அரிய குணங்களை உலகு எங்கும் பரப்பிய வால்மீகிக்கும் நான் தான் முதல் முதலில் சுருங்க அவ்வவ தாரத்தைப் பற்றி உபதேசித்தேன் -ராமன் தன்னை மனிதனாக எண்ணி நடந்து கொண்டது உண்மை -கண்ணனோ அவ்விதம் செய்தாலும் அடிக்கடி தானே விண்ணோர் பெருமாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டி விடுகிறான் -குற்றமற்ற பரம் பொருள் பெண்கள் கற்பை அழிக்குமா -பாமரரும் இங்கனம் சந்தேஹிப்பதற்கு இடமில்லையே -பெண்களுடன் சேர்ந்து விளையாடுகின்றனனே எனில் அது கற்பை அழிப்பது ஆகாது -மற்றவருக்கு என்று பேச்சுப்படில் வாழ மாட்டாத மங்கையர் ஆகிற ஜீவாத்மாக்களை அனுபவிக்கின்றான் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்
கூறை பரிப்பது முதலிய ஸ்ருங்காரங்களுக்குக் கருத்தாவது -அப்பெண் மணிகளுக்கும் தனக்கும் இடையே உள்ள யாராலும் தாண்டுத்தற்க்கு அரிய தன் மாயையைத் தானே விலக்குவதாகும் -கூறை பரித்த பின் உண்டாகும் அனுபவம் ப்ரஹ்ம ஆனந்தமே ஆகும் -ஆடவருக்கும் இவ்வித நிலைமை உண்டாயினும் எல்லா ஆத்மாக்களுக்கும் உண்மையில் பெண் தன்மை தான் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுவதால் பெண்டிரது நிலையே வர்ணித்துக் கூறப்படுகிறது -பகவத் விமுகரும் இவ் விஷயத்தில் இறங்கும் படி இவ்வுலகிற்கு ஏற்ப மங்கைமாரது சிருங்கார ரசம் பெரியோர்களால் நன்கு வர்ணித்துக் கூறப்படுகிறது -நவநீத ஸுவ்ர் யத்தால் வெண்ணெய் என உருகும் இளம் நெஞ்சினரது உள்ளத்தைக் கவரும் தனது உண்மை நிலையை உணர்த்துகின்றனன் -ஆகையால் கண்ணன் அவதாரத்தில் எத்தகைய உண்மைத் தீம்புகளுக்கும் இடமே இல்லை என்பதை எவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்

வியாசர் -சுகர் காதண்டை -சுக நம் தாத்தாவுக்கு நாரதர் தக்க பதில் அளித்தார் -நீ என்ன நினைக்கின்றனை

சுகர் -ஆம் அப்பா தாத்தாவிடம் நாம் என்ன பதில் சொல்ல முடியும் -சொல்வதைக் கேட்டுக் கொண்டு தானே இருக்க வேண்டும் -இந்தக்கிழவருக்கு ஏற்ற வல் கிழவர் நாரதர் தாம் -கிழவர்கள் சண்டையில் நமக்கு என்ன-

ஆய்ச்சியர்கள் பாடிக்கொண்டே வருகிறார்கள்

நாரதர் -வசிஷ்டரைப்பார்த்து -ஸ்வாமி அடியேன் அதிகத்தனமாக ஏதாவது —

வசிஷ்டர் -அபசாரம் -அபசாரம் -தேவர் கூறியது அவ்வளவும் உண்மையே

வியாசர் -இதோ ஆய்ச்சியர் வந்து விட்டனர் -இவர்களுக்கு இடைஞ்சலாக நாம் இங்கே நிற்பது கூடாது -ப்ரஹ்ம வித்துக்களைப் போல் இவர்கள் முகம் களங்கமில்லாமல் எள்ளளவு அழகாக தெளிந்த நீர் உள்ளேயுள்ள சாமான்களை விளக்கிக் காட்டுவது போலே அந்தரங்க சுத்தியை வெளிப்படுத்துகிறது பாருங்கள் -நாம் இச் சந்நிதியில் சென்று இறைவனடி இறைஞ்சுவோம் வாருங்கோள்

எல்லாமும் ஹரி நாராயணா என்று பாடிக்கொண்டே செல்கின்றனர்

ஐந்தாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று


ஐந்தாம் அங்கம் –மூன்றாம் களம்

திருவாய்ப்பாடியில் ஒரு வீதி
ஆய்ச்சியர்கள் பிரவேசிக்கின்றனர் -சிலர் வந்து கலந்து கொள்கின்றனர்

ஒருத்தி -சகி -நேற்று நம்மோடு வந்தவர் சிலர் இன்னும் வரவில்லையே

வந்தவர் -அவர்களுக்கு இந்நோன்பில் சிரத்தை இல்லை போலும் -இருந்தால் இதற்கு முன்பே எழுந்து வந்திருக்க மாட்டார்களா

ஆம் உண்மை தான் கண்ணனைப் பிரிந்த நமக்கு உறக்கும் வந்ததா-அவர்களும் உண்மையில் பிரிந்து நொந்திடுவரேல் உறக்கம் வருமா

அவர்களை எல்லாம் இனி எதிர்பார்ப்பதில் பயன் இல்லை -நேரமாகிறது -நாம் போவோமே -முனிவரின் அரி அரி என்ற பேர் அரவம் கேட்டு உடனே நாங்களே வரவில்லையா

தலைவியை நோக்கி -ஏன் சகி நாம் போகலாமா

தலைவி -சகி நாம் அவர்கள் இல்லாமல் தனித்துப் போகக்கூடாது

அவர்கள் தான் இவ்விஷயத்தில் ஸ்ரத்தை இல்லாமல் இருக்கிறார்களே

ஏன்

ஸ்ரத்தை இருந்திருந்தால் இவர்களைப் போல அரி அரி என்ற பெரிய சப்தம் கேட்ட பிறகேனும் வந்திருக்க மாட்டார்களா

அப்படியே நினைக்க வேண்டாம் பிரிந்த துன்பம் அவர்களுக்கும் இல்லாமல் இல்லை

பின்னை ஏன் இன்னும் உறங்குகின்றனர்

தலைவி -சகி நன்கு சிலரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் துடிக்கப் பண்ணும் -சிலரை மயங்கப் பண்ணும் -அதே போல் அவர்களைப் பிரிவுத் துன்பம் மயங்கப் பண்ணி இருக்கிறது -இதனால் அவர்களுக்கு ஸ்ரத்தையே இல்லை என்றும் கூறலாமா-

ஒருத்தி -ஒரு வீட்டைச் சுட்டிக்காட்டி இவ் வீட்டுப்பெண் இவ்விஷயத்தில் புதியவள் ஆயிற்றே -அவளையும் எழுப்பச் செல்வோமா

தலைவி -ஆம் அவளைத் தான் முதலில் எழுப்ப வேண்டும் -கதவண்டை வந்து -சகி பொழுது விடிந்து விட்டதே -எழுந்திரு சீக்கிரம் நோன்புக்கு நேரமாகிறதே

நீங்கள் உறங்காமல் இருக்கிறீர்கள் -விடிந்தமைக்கு என்ன அடையாளம்

பறவைகள் எழுந்து கூவுகின்றனவே

உறங்காது அலையும் நீங்கள் அவைகளைக் கிளப்பி விட்டிருப்பீர்கள் உங்கள் பேர் இரைச்சலால்

திரைக்குள் சங்கூதும் த்வனி கேட்க்கிறது

கருட வாஹனாரூடனான சர்வேஸ்வரன் சந்நதியில் திருப்பள்ளி எழுப்பும் சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ
பதில் இல்லாமையால் தனக்குள் -புதியவள் இவள் -நாம் வந்து நிற்பதையும் லஷ்யம் செய்யவில்லை -ஆகிலும் இவளை எழுப்பியே தீர வேண்டும்
வெளியில் -சிறு பெண்ணே எழுந்திரு

உங்களை எல்லாம் எழுப்பியது யார்

நீ கூடியது போலச் சிலர் உறங்கவே இல்லை -சிலர் பேய்ப்பாலுண்டு கள்ளத்தால் வந்த சகடத்தைக் கட்டழிந்து சிதறும் படி சோறு காலால் உதைத்த நமது நாதனாகிய பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டருளும் காரண பூதனை முனிவர்களும் யோகிகளும் மனத்தில் த்யான செய்து மெள்ள எழுந்து ஸ்துதிக்கும் ஹரி ஹரி சப்தம் கேட்டு உளன் மகிழ்ந்து குளிர்ந்து எழுந்தனர்-

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்

வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

உள்ளிருந்து வந்து கலந்து கொள்கிறாள்

ஒருத்தி -ஒரு வீட்டைக் காட்டி -இந்த வீட்டுக்காரி நோன்பில் மிகவும் ஆர்வமுள்ளவளாய் இருந்தாளே -இன்னும் ஏன் வரவில்லை-

ஆம் அவள் எழாதது ஆச்சர்யமே

நான் சென்று அவளை எழுப்புகிறேன் -இவ்விஷயம் எல்லாமே தெரிந்தும் தன்னை மறந்து இவள் இன்னும் உறங்குகின்றனளே
வாயிற் கதவண்டை வந்து உள் நோக்கி -சகி போது விடிந்தது எழுந்திரு –

விடியட்டும் அவசரப்படாதே -விடிந்த பின் வருகிறேன்

விடிந்த பின்பா -நன்றாய் இருக்கிறது -வலியன் குருவிகள் கீசு கீசு என்றும் பேசும் அரவம் உன் காதில் விழவில்லையா -விடியாமலோ அவர்கள் பேச்சரவம் கேட்க்கிறது

நீங்கள் அவைகளைக் கிளப்பி விட்டு இருப்பீர்கள்

நாங்கள் கிளப்பி விட்டு இருப்போமோ -விடிந்ததே இனிப் பகல் முழுவதும் எப்படிப் பிரிவைத் தரிப்போம்-என்று அவை கலந்து பேசும் பேச்சரவம் நீ கேட்டிலையோ -வேறென்ன அடையாளம் வேண்டும்

பிரிந்த நீங்கள் தளர்ச்சியை வலியன் குருவியின் குரலில் உள்ளதாகக் காண்கிறீர்கள் -விரஹிகிள் இவ்வுலகையே தம்மைப் போலவே பிரிந்து வருந்துவதாகவே தான் பார்ப்பார்கள் -இது விடிந்தமைக்கு அடையாளம் அன்று-

அடி அறிவிலி என்ன சொன்னாய் -எழுந்து வந்த நாங்கள் எல்லாம் பைத்யக்காரர்களா

நான் அறிவிலி என்பது இருக்கட்டும் -விடிந்தமைக்கு வேறு அடையாளம் உண்டாகில் சொல்லு -இதோ வந்து விடுகிறேன்

ஆய்ச்சியர் குழல் அவிழ்ந்து பரிமளம் கமழ அச்சுத்தாலியும் முளைத்தாலியும் கல கல என்றும் சப்திக்க -கை சலுக்கும் படி மத்தினால் தயிர் கடையும் ஓசையும் நீ கேட்டிலையோ

இவ்வூரில் எப்பொழுதும் தயிர் கடைவது ஸ்வ பாவம் அன்றோ -இது எவ்விதம் விடிந்தமைக்கு அடையாளம் ஆகும்

சிறிது நேரம் அவள் வரவை எதிர்பார்த்து -எங்களுக்கு எல்லாமே தலைமை வகிக்கும் முறை இது தானோ -நாயகப்பெண் பிள்ளாய் சொன்னதற்கு எல்லாம் மறு மாற்றம் சொல்லிப் பேசாதே கிடப்பது நாயகத் தன்மைக்குச் சேரும் என்றும் இருக்கிறாயோ

சகி இவள் இதற்கு எழுந்திருக்க வில்லை -நான் ஒரு வழி சொல்லுகிறேன் இவள் திடுக்கிட்டு இப்பொழுது எழுந்து வர -ஸ்ரீமந் நாராயணன் கண்ணனாக அவதரித்து வளரும் காலத்திலே கேசி என்பானோர் அசுரன் நலிய வந்தான் என்று கூறி -உடன் கண்ணனுக்கு என்ன வருகிறதோ என்றும் துடிக்கிட்டு எழுந்திப்பாள்

கிருஷ்ணனை கேசி வந்து நலியப் புகுந்தது காண் -துணுக்கென எழுந்து வா

வரக்காணாமல் -சகி இன்னும் எழுந்து வரவில்லையே –

ஆகில் அவனை அவன் கொன்றான் காண் என்று கூறு -விஜயக் கணவனை அணைந்து கொள்ள உடன் எழுந்து வருவாள்

கேசியைக் கண்ணன் கொன்று விட்டான் -உடன் அவனை அணைத்துக் கொள்ள வா
கேசி என்பவன் கேளடி கண்ணனால்
தேசு அழிந்து சிதைந்தனன் சீக்கிரம்
ஆசை நாயகன் தன்னை அணைந்திட
நேசமுடன் துயில் நீக்கி நெருங்கி வா

உள்ளிருப்பவள் இவள் பாட்டைக்கேட்டு மெய் மறந்து இருந்தனள்

கேசவனைப் பாடுவது உனக்குத் தாலாட்டு போல் இருக்கிறதோ -எழுந்து விரைந்து வா-

தலைவி -வரக் காணாமையால் ஜன்னல் வழியே உள் நோக்கி -ஆம் கேசவனைப் பாடுவதைக் கேட்டு கிருஷ்ணன் விஷயத்தை அனுசந்தித்து மெய் மறந்து இருக்கின்றனள் -ஆஹா அநுஸந்திக்கும் இவள் முகத்திலே என்ன தேஜஸ்ஸு -சகி நாங்கள் இந்த தேஜஸ்ஸு கண்டு களிக்க வேண்டும் -உன் அழகைக் காணுமாறு நீயே வந்து கதவைத் திற-

சகி அப்படியே செய்கிறேன் -இதோ வந்து விட்டேன்-

கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்

கதவைத் திறந்து புன்முறுவலுடன் தலைவி யோடு சேர்ந்து கொள்கிறாள்

ஒருத்தி -மற்ற ஒரு வீட்டைக் காட்டி இவ் -வீட்டுக்காரி இன்னும் வரவில்லையே

ஏன் இவள் இன்னும் வரவில்லை-இவள் மிக்க குதூஹலமுடையவள் ஆயிற்றே -நாம் இவளை எழுப்புவோம்
கதவண்டை வந்து -கோதுகுலமுடைய பாவாய் -எழுந்திரு -கீழ் வானம் வெளுத்து விட்டதே -இன்னும் உறங்கலாமா

கிழக்கு வெளுக்கவில்லை -உங்கள் முக மதியின் ஒளியினால் அங்கனம் தோன்றுகின்றது போலும்

பனிப்புல் மேய விடிவோரையில் விடப்பட்டு எருமைகள் வயல்கள் எங்கும் பரந்தன -அவற்றின் பின்னே கண்ணன் போய் விடப் போகிறானே -பின்னை யாரைக் காண்பது எழுந்திரு –

உங்கள் முகத்து ஒளியால் இருள் திரள் போகின்றது போலும் -அவற்றை நீங்கள் எருமைகள் என்று பிரமிக்கிறீர்கள்

நாங்கள் பிரமித்ததாகவே இருக்கட்டும் -நீ விடியவில்லை என்பதை எப்படி அறிந்து கொண்டாய்

இவ்வூர்ப் பெண்களை உங்களை ஒழிய மற்றவர்கள் இன்னும் உணராதலால்

உன்னை ஒழிய எல்லாரும் போய் விட்டார்களே – நீ தான் எழுப்ப வேண்டும்படியாய் தூங்குகின்றாய்

அப்படியா போய் விட்டார்களா -போவதையே பெரிய சுகமாக எண்ணி என்னை மறந்து அவர்கள் தான் போய் விட்டார்களே -நான் எழுந்து இனி எங்கே போக –

அவர்கள் போனாலும் நீ வரவில்லை என்று அவர்களைப் போகாமல் தடுத்து உன்னை எழுப்புவதற்காக உன் வாசலிலே வந்து மேற் போக மாட்டாமல் நிலை நின்றோம் -எழுந்திரு

நான் இப்பொழுது எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்

நம் நெஞ்சிலே பொங்கி எழுகிற கிருஷ்ண அனுபவ ப்ரவாஹத்திற்கு போக்கு வீடாக நாம் வாயார நினைத்த படி பாடக்கடவோம் -பின்னர் பறை கொண்டு -கேசியின் வாயைப் பிளந்து -சாணூர மல்லரைக் கொன்ற தேவாதி தேவனான நம் கண்ணனைப் நாம் சென்று சேவிக்க வேண்டும் விரஹம் தின்ற நம் சரீரத்தை கண்டு ஐயோ ஐயோ என்று நம் குறைகளை ஆராய்ந்து -நாம் சென்று இவர்களுக்கு உதவப் பெற்றிலோமே -என்று அவன் இரங்கியே தீருவான் –
ஆக அவன் அருளுக்குக் காரண பூதையான நீ எழுந்து வா-

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய

பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்

உள்ளிருப்பவள் கதவைத் திறந்து வந்து கலந்து கொள்கிறாள்

ஒருத்தி -மற்றோர் வீட்டைக் காட்டி -சகி -இந்த வீட்டைப் பார் -தூய மணிகளால் ஆக்கிய மாடம் -நாலா பக்கங்களிலும் விளக்குகள் எறிந்து கொண்டு இருக்கின்றன -மணி மாடத்துக்கு விளக்குகள் எதற்க்காக -அழகுக்காக வைத்திருக்கிறார்கள் போலும் -புகையைக் காணோம் -பரிமளம் கம கம என்று கமழ்கின்றது -என்ன ஆச்சர்யம்

எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்து நிற்கின்றனர்

தலைவி -மணிமாடமாகையாலே உன் ஜோடிப்பு எல்லாமே வெளியில் தெரிகிறது –
வாயிலண்டை வந்து -சகிகாள் இன்னும் என்ன ஆச்சர்யம் பாருங்கள் -நமக்கு மெல்லிய மலர்ப் படுக்கை வெம் பள்ளியாய் இருக்கிறது -இவளோ துயில் அணையிலே பொருந்தி எவ்விதமோ கண் வளருகின்றனள் -கண்ணன் தானே தேடி வந்த போது வரட்டும் -நான் அவனைத் தேடிப் போகப் போவதில்லை -என்று இவள் நினைப்பு போலும்

ஒருத்தி -சகி உனக்குத்தான் இவள் மாமான் மகளாயிற்றே -உறவு கொண்டாடி சிறிது அதட்டியே எழுப்பு -அப்பொழுது தான் இவள் சீக்கிரம் எழுந்திருப்பாள்

அடி மாமான் மகளே மணிக்கதவம் தாள் திற

உள்ளிருப்பவள் பேசாது இருக்க-அவள் தாய் -அவள் எழுப்புகிறாள் -நீ ஏன் பேசாது இருக்கிறாய் –

தலைவி -மாமி அவளைச் சீக்கிரம் எழுப்பி விடு

தாய் -அவள் எழுப்புகிறாள் -நீ ஏன் பேசாது இருக்கிறாய் –

எழுந்திருக்காததைக் கண்டு -மாமி உன் மகள் என்ன ஊமையா -பேசாது இருக்க-அல்லது செவிடோ எங்கள் சப்தம் கேட்க்காது இருக்க-சோம்பேறியா அசையாது இருக்க-இவள் எழுந்திருக்கக் கூடாது என்று காவலிட்டு வைத்திருக்கிறதோ -அல்லது மந்த்ர வாதம் செய்திருக்கிறதோ

தாய் -உள்ளிருந்தே அவள் உணரும்படி திரு நாமங்களைச் சொல்லுங்கோள் -எழுந்திருந்து விடுவாள்

என் தோழிகள் தான் -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று இவ்விதமாகப் பல நாமங்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார்களே -நாமம் பலவும் நவின்றோம் -அவளை எழுப்பு-

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்

நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்-

ஒருத்தி -சகி நேரமாகிறது -அவன் போய் விட்டால் நாம் என் செய்வோம்

தலைவி -உள் நோக்கி -அழகாய் இருக்கிறது -நீ எமக்குத் தலைவி யன்றோ -அச்செருக்காலே விடிந்த பின்பும் கிடந்து உறங்குகின்றனை போலும் -நோற்று அழகாய் பலம் பெற்று விட்டனை -தூக்கத்தை விட வேறு என்ன பலன் இருக்கிறது -தூக்கம் தான் உனக்கும் சுவர்க்கம் -நீ எழா விட்டாலும் அங்கே இருந்து ஒரு வார்த்தையாயினும் தரக்கூடாதா -மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-ஆமாம் எஜமானியாய் இருப்பார்கள் பேசுவாரோ –

சகி இங்கே கம் என்று திருத்துழாய் வாடை வீசுகிறதே -கண்ணனுடன் கலந்தனளோ என்னவோ -அதனால் தான் அப்படி உறங்குகிறாள்

அவனோடே கலந்தாலும் கலக்காவிட்டாலும் இத்தைப் பற்றி பிரஸ்தாபித்தாலே உடன் சடக்கென எழுந்திருப்பாள்
உள் நோக்கி -அம்மனாய்-இரவெல்லாம் கண்ணனுடன் கலந்தனை போலும்-அதனால் தான் விடிந்ததும் உணர்ந்ததிலை-நீ மட்டும் அனுபவித்தால் போதுமா -கண்ணனுக்கு உடம்பு கொடுத்தால் எங்களுக்கு ஒரு வார்த்தை யாகிலும் தரக்கூடாதா –

நீங்கள் ஏன் பழியிடுகிறீர்கள் -ஏற்கனவே அவனைப் பிரிந்து வருந்தும் என் மீது புண்ணில் புளி பெய்தால் போலப் பழியைச் சுமத்துகிறீர்கள் -அவன் இங்கு இருக்கிறானா பாருங்கள்

நீ அவனை மறைத்திருப்பாய் -திருத் துழாய் வாசனை கம் என்று வீசுகிறதே -அவனை மறைத்தாலும் வாசனையை மறைக்க முடியுமா

இரவில் தோட்டத்தில் நாம் அவனை அணைத்துக் கொள்ள வில்லையா -அவ்வாசனையாய் இருக்கலாம் -அவன் ஒரு சமயம் அணைத்து விட்டால் தான் பரிமளம் ஐந்து ஆறு தடவை குளிக்கும் வரை நிற்குமே -மேலும் இவ்வளவு கட்டும் காவலுமாய் யுள்ள இடத்தில் அவனை யுள்ளே விடுவார்களா -என் தாயைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கண்ணன் கலவிக்கு விரோதிகளாயிற்றே –

அவன் கதவைத் திறந்து தான் வர வேணுமா -ஒரே காலத்தில் எங்கும் இருந்து பல லீலைகள் புரிபவன் அன்றோ –

உங்களை என்னாலே பதிலும் சொல்லி வெல்ல முடியாது -அவன் என்னவோ இங்கில்லை –

பின்னை ஏன் நீ விடிந்ததும் உணர்ந்திலை

எனக்கு என்னவோ மிகவும் தூக்கம் வந்துவிட்டதம்மா –

புன்னகையுடன் -உனக்கு மட்டுமில்லை -பண்டொரு நாள் கும்பகர்ணனுக்கும் இப்படி உறக்கம் வந்திருக்கிறது -நீ இதிலே பெருமை கொள்ள வேண்டாம் -கும்ப கர்ணன் நமக்குப் பறை தரும் புன்னியனிடம் வீரத்தால் தோற்று கூற்றுக்கு இரையாயினன் -அவனே உறக்கத்தில் உனக்குத் தோற்று தன் உறக்கத்தை உனக்குக் கப்பம் கட்டி விட்டான் போலும் -உன்னது அவனது இரண்டுமே சேர்ந்து கொண்டால் உனக்கேன் பேர் உறக்கம் வராது

சகி என் மீது பழி சுமத்த வேண்டாம் -இதோ எழுந்திருக்கிறேன் -எழுந்து சோம்பல் முறிக்கிறாள்

ஆஹா என்ன அழகு இவள் சோம்பல் முறிக்கும் போது –
மற்றவர்கள் எல்லாரும் வந்து பார்க்கிரார்கள் –
அடி அணி போன்றவளே –எங்கள் நிலையைக் கண்டும் இன்னுமேன் தாமதம் –

உள்ளிருப்பவள் அரை குலையத் தலை குலையக் கதவைத் திருக்க விரைந்து வருகிறாள்

சகி தடுமாறாமல் நெகிழ்ந்த உடையை நன்றாக உடுத்து தூக்கம் தெளிந்தவளாய் வந்து கதவைத் திற -படுக்கையில் கிடந்தபடியே கலவிச் சின்னத்துடன் வெளியே வராதே –

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே

தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

ஒரு மட்டுக்கு இவளை எழுப்பினோம் -ஒரு வீட்டைக்காட்டி –இவ்வில்லத்தாள் குலத்தாலும் அழகாலும் குணத்தாலும் நம் கண்ணனுக்கு நிகரானவள் -இவளை முன்னிட்டு அன்றோ நாம் செல்ல வேண்டும் –

ஆம் சகி இவளை நானே எழுப்புகிறேன் -செல்வமும் வீரமும் வாய்ந்து குற்றமில்லாதது இவள் தன் குலம் -அழகும் குணமுமோ அளவிடற்கு அரியவை –

சகி அதோ பார் இவள் தந்தை எழுந்து பால் கறந்து கொண்டு இருக்கிறார் -இவள் மட்டுமே ஏன் எழுந்திருக்கவில்லை

சகிகாள் -நான் இவள் குலம் செல்வமும் வீரமும் வாய்ந்தது என்றும் கூறியது எவ்வளவு பொருந்தி இருக்கிறது பாருங்கோள் -என்ன ஆச்சர்யம் -கன்றுகளாயினும் பால் கறக்கும் பசுக்கூட்டங்கள் தான் எத்தனை -இவர் இத்தனை இவர் ஒருவரே நின்று கறக்கிறார் எனின் இவர் வலிமையை என் என்பது –

சகி -நம் கண்ணன் பெருமையைப் பொறாத சில சத்ருக்கள் இருக்கும் இடம் சென்று -அவர்கள் திறல் அழிய -யுத்தமுறை தவறாமல் குற்றமின்றி போர் புரிவரான இவர் இத்தனை பசுக்களைக் கறப்பது பேர் ஆச்சர்யம் இல்லையே

உள் நோக்கி -குற்றமொன்றில்லாத கோவலர் தம் நற் குலத்தில் தோன்றிய பொற்கொடியே-துயில் எழு –பாம்பின் படம் போல் அகன்று அழகிய நிதம்பம் வாய்ந்த மயில் போன்றவளே துயில் எழு -எங்களோடு புறப்படு நோன்பிற்காக –

எல்லாமும் வந்துவிட்டனரா நான் புறப்பட

ஆம் நின் சுற்றமான தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடவும் நீ அசையாமல் பேசாமல் கிடக்கின்றனையே -ஏன் -கண்ணன் கலவி என்னும் செல்வம் வாய்ந்த பெண்ணே -நீ அச்செல்வத்தை விட்டு என்ன பயனுக்காக இப்படி உறங்குகிறாய் -புறப்பட்டு சீக்கிரம்-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்

வந்து கலந்து கொள்கிறாள்

மற்றோர் வீட்டண்டை வந்து -சகி காள் -இந்தத் தொழுவைப் பாருங்கள் -பால் கறப்பார் ஒருவரும் இல்லையா -இவ் விளங்கற்று எருமைக் கூட்டங்கள் எல்லாம் பால் கறவாமையால் முலை கடுக்கக் கதறி -தன் கன்றுக்கு இரங்கி -அக்கன்றுகளையே நினைந்து -அதனாலேயே முலை வழியே இடைவிடாமல் பாலைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றனவே –

ஆம் இது யார் வீடு -இந்த இல்லம் பால் பெருகிச் சேறாகி விட்டது -கன்றுகளையும் ஊட்டாமல் பாலையும் வீணாக்கி இவ்வீட்டுக் கோபாலர் எங்கே போனார்-

தலைவி -இது நற் செல்வன் வீடு -நமது கண்ணனுக்கு இவன் உற்ற துணைவன் அல்லவா -இவன் தானே கண்ணன் விடுதலை அடைந்த செய்தியை நமக்குத் தெரிவித்தான் -தூங்கி எழுந்ததும் தன் துணைவன் கண்ணனுக்காக ஏதேனும் செய்ய வேண்டியிருக்கும் அதற்க்காகப் போயிருப்பான் -தன் கார்யத்தைக் கூட விட்டு அவன் கண்ணனுக்காக முன்பே எழுந்து போயிருக்கின்றனனே -அவன் தங்கையும் அது போல் எழுந்து வந்திருக்கின்றனளா

இல்லை இல்லை

வாயிலண்டை வந்து -சகி நற் செல்வன் தங்காய் -உன் தமையன் கண்ணனுக்காகப் பால் கறப்பது போன்ற தன் கார்யங்களையும் கூட விட்டுப் போய் விட்டனனே -நீ அவன் தங்கையாய் இருந்தும் இன்னும் உறங்கலாமா -நாங்கள் உன்னை எழுப்ப வந்திருக்கிறோம் -உடன் எழுந்திரு -மேலே தலையிலே பனி கொட்டுகிறது -கீழே பால் பெருகச் சேறான இடத்தில் நிற்கிறோம் -இதற்கிடையே மயக்கம் -நாங்கள் என்ன செய்வோம் -நிற்கவும் முடியவில்லை -உன் வாயிற் கடையிலுள்ள தண்டியத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம் -உடனே எழுந்து எங்களைத் தேற்று –

சகி இவள் நற் செல்வன் போல் இல்லை –பெண்களின் வருத்தம் அறியாமல் அவர்களைப் புரிய விடுகிறான் -என்று கண்ணன் மேல் இவளுக்குக் கோபம் -இவள் மனத்துக்கு இனியான் ஸ்ரீ ராமன் தான் -உண்ணாது உறங்காது ஒலி கடலை
ஊடறுத்து ஒரு பெண்ணிற்காக அன்றோ அவன் பெரும் பாடு பட்டான் -அதனால் தான் ராமன் மீது இவளுக்குப் பிரியம் -அவனைப் பாடினால் இவள் உடனே எழுந்து வந்து விடுவாள் என்று நினைக்கிறேன் –

ஆம் சகிகாள் பாடுவோம் ராமனைப் பற்றி

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு பேதுற்ற வெஞ்சினத்தால்
திண்ணார் மதிள்சூழ் தென்னிலங்கைக் கோமானை
புண்ணாக வாளி தொளைத்தானைப் போற்றுவோமே

வரக் காணாமையாலே -நாங்கள் தான் கண்ணனை விட்டு உன் மனதுக்கு இனியானைப் பாடிவிட்டோமே -அப்படிப் பாடவும் நீ ஏன் வாய் திறக்கவில்லை -நாங்கள் பனித்தலை வீழ என்று எங்கள் நிலைமையை உணர்த்திய பின்பும் நீ எழுந்திருக்கவில்லையே -இனித்தான் என்ன-ஈது என்ன பேர் உறக்கம் –உகந்த இல்லாதது -பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலில் நின்றும் அழைப்பது ஊரார்கள்க்கு எல்லாம் தெரியட்டும் என்று இருக்கிறாயோ -ஆகில் அவர்கள் எல்லாருமே தெரிந்து கொண்டு விட்டார்கள் -இனிமேலேயாயினும் எழுந்திரு –

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

வந்து கலந்து கொள்கிறாள்-

ஒரு வீட்டைக்காட்டி இந்தவீட்டுப் பெண் மணி இன்னும் எழுந்து வரவில்லையே

ஏன் இவள் இன்னும் எழுந்து வரவில்லை-கண்ணனை அனுபவிப்பதில் இவள் வல்லவளாயிற்றே

இரவில் உத்யானத்தில் விளையாடிவிட்டு நானும் இவளும் வீட்டுக்கு வரும் போது இவள் சொன்னாள் -கண்ணன் என் அழகை இன்று கொண்டாடினானே -இது உள் கருத்துடன் இருக்குமோ -அல்லது கபடத்தாலா என்று- நான் உண்மையாகத்தான் கூறி இருக்க வேண்டும் என்றும் சொன்னேன் -அதற்கு இவள் -இதை நான் பார்த்து விட வேண்டும் -நான் விடிவோரை நோன்பிற்கு எழுந்து அவனிடம் வரப்போவதில்லை -என் கண்ணழகில் உண்மையாக ஈடுபட்டு இருந்தால் அவன் தானே இங்கு வரட்டும் -என்று சொன்னாள் -அவ் வபிப்பிராத்துடன் தான் இன்னும் இவள் எழுந்திருக்க வில்லை என்று நினைக்கிறேன் –

அப்படியே -ஆகில் நீங்கள் பாடிக்கொண்டே செல்ல முன்பே போங்கள் -நான் இவளை எழுப்பி கொண்டு வந்து சேர்ந்து விடுகிறேன்

எல்லாரும்
கள்ளக் கருத்தோடே வந்த வக் காதகப்
புள்ளைப் பிளந்தானை பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் குள்ளக் குளிரக் குடைந்து நீராடுவோம்
என்று பாடிக்கொண்டே செல்கிறார்கள்

தலைவி -வீட்டண்டை வந்து -சகி மலர் போன்றும் மான் போன்றும் அழகிய கண்ணுடையவளே -பெண்கள் எல்லாரும் பகாசுரனையும் ராவணனையும் வதம் செய்த வீரத்தை வாயாடப் பாடிக் கொண்டே நோன்பு நிற்கும் இடத்திற்குப் போய் விட்டார்களே -நீ சென்று எழுப்ப வேண்டிய பிள்ளைகள் -இளம்பெண்கள் -கூட உனக்கு முன்பே எழுந்து புறப்பட்டார்கள் -நீ மட்டும் ஏன் உணர வில்லை

போது விடிந்தததோ எல்லாரும் போவதற்கு –

ஆம் விடிந்தது -சுக்ரன் எழுந்தது -குரு நக்ஷத்ரம் அஸ்தமித்து விட்டது

எதையோ பார்த்து நீ சுக்கிரனும் குருவுமாய் நினைக்கிறாய்

பறைவைகளானவை காலை யானவாறே சிலும்புகின்றன பார்
சிறிது நேரம் எதிர்பார்த்தும் அவள் வாராமையாலே
தனக்குள் -சகி சிறிது முன்பு கூறியது உண்மை தான் -தன் கண் அழகால் அவன் தான் இங்கு வரட்டுமே என்று இவள் இறுமாந்து இருக்கிறாள்
வெளியில் -அடி போதரிக் கண்ணினாய்!-உன் கண் அழகால் அவனை வரவழைத்துத் தனியே அவனை அனுபவிக்கலாம் என்றும் இருக்கிறாயோ -அவனைத் தனித்து அனுபவிக்க வேண்டும் என்கிற கள்ள எண்ணத்தை விட்டு எங்களோடு கலந்து -காலையில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் படுக்கையிலே படுத்துக் கொண்டு இருக்கின்றனையே -அவ்வின்ப வெள்ளத்தைத் தனியே நீ அனுபவிக்க முடியாது -மெல்லிய இயல்பினை யுடையவளே -இன்று நல்ல நாள் -அவனை நாம் எல்லாரும் கூடி யநுபவிக்கக் கோபர்கள் கூட ஒப்புக் கொண்ட நாள் -வந்து சீக்கிரம் கலந்து கொள் –

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

உள்ளிருப்பவள் வெளியே வர அவளும் தலைவியாக வேகமாக முன்னே செல்லும் கூட்டத்தோடு கலந்து கொள்கின்றனர்

ஒரு வீட்டைக்காட்டி சகி நேற்று இந்த வீட்டுக்காரி என்ன சொன்னாள்

ஓஹோ இன்னும் அவள் வரவில்லையே

நான் தான் சொன்னேனே -மாமி வீட்டு வேலைகள் எல்லாம் பார்த்தால் பிறகு தான் இவள் எழுந்திருப்பது வழக்கம் -ஆம்பல் வாய் மூடும் முன்பு எழுந்திடுவாளாம் -என்ன சாமர்த்தியம்

இவள் சொன்னதைச் சுட்டிக் காட்டி நீயே இவளை எழுப்பு

அடி -எங்களை முன்னமே எழுப்புவதாக வாய் வீச்சு வீசின பொய் சொல்லாத உத்தம நங்காய் -உங்கள் புழைக்கடைத் தோட்டத்திலுள்ள குளத்திலே செங்கழு நீர் மலர்ந்தது -ஆம்பல் மொட்டாகி விட்டது -நீயே பார்த்துக் கொள் -ஸத்ய சீலையான நீ பொய் சொல்லும் எங்கள் வார்த்தையை நம்பா விட்டால்

இனித்தான் செங்கழு நீர் அலரப் போகிறது -ஏன் ஆத்திரப்படுகிறாய்

காஷாயமுடுத்து வெளுத்த பற்களை யுடைய தவசிகள் கோயிலிலே பூஜை பண்ணப் போயிருக்கிறார்கள் -அதற்கு என்ன சொல்லப் போகிறாய் -தான் சொன்னபடி நடக்கவில்லையே என்றும் வெட்கம் சூடு சுணை கொஞ்சம் கூடக் கிடையாது -பேச்சில் மட்டுமே குறைச்சல் இல்லை -அடி நாவுடையாய் எழுந்திரு –

என்னை இவ்வளவு கோபித்துக் கொள்கிறாயே -நான் வந்து என்ன செய்யப் போகிறேன்

நீ ஒன்றுமே செய்ய வேண்டாம் -பங்கயக் கண்ணானை நீ வாயாலே பாட வேண்டும் -அதுவே போதும்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

உடன் வந்து கலந்துகொண்டு பாடிக்கொண்டே அவர்களிடம் செல்கின்றனர்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணன் பவளச் செவ்வாயினன்
திங்கள் திருமுகச் சேயிழையாருடன்
மங்கள மூர்த்தி மகிழ்வெய்தி வாழி

சகிகாள் –சிறிது சந்தடி இல்லாமல் நில்லுங்கள் -இங்கு இளங்கிளி யினுடையது போல் இனிய குரல் கேட்க்கின்றதே

சிறிது நேரம் காது கொடுத்து -ஆம் சகி என்னைப் பாட வேண்டும் என்றனையே -இவள் அல்லவா பாட வேண்டும் -இவள் குரலைக்கேட்டால் கிளியும் குயிலும் இனி வாயைத் திறவாமல் போய் விடும் -சிறிது அமைதியாய் கேளுங்கோள் -என்ன படுகிறாள் -சாப்பாட்டு எப்படிப் இருக்கிறது என்பதை தெரிய வரும்

எல்லாரும் சாவதானமாய்க் கேட்க்கின்றனர்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணன் பவளச் செவ்வாயினன்
திங்கள் திருமுகச் சேயிழையாருடன்
மங்கள மூர்த்தி மகிழ்வெய்தி வாழி

சகி நீ பாடிய பாட்டைத்தான் படுகிறாள் -என்ன இனிமை -என்ன குளிர்ச்சி -என்ன உருக்கம் –

அடுத்த வீடு தானே -இதைக்கேட்டு அனுபவித்து உருக்கமாகப் படுகிறானள்

வீட்டண்டை வந்து -இளங்கிளியே -உன் குரலில் தான் எத்தனை இனிமை ஆஹா

சசி எழுப்பச் சென்று குரலைக் கொண்டாடி இருந்தால் –எழுப்பி அவள் நம் முன்னிலையில் பாடிய பின்பல்லவா புகழ வேண்டும் –

இளங்கிளியே நாங்கள் உனக்காக வாசலில் காத்து நிற்கிறோமே -நீ படுக்கையை விட்டு இன்னும் எழுந்திராமல் இருக்கலாமா –

நான் தனக்குள் பாடிக் கொண்டு இருக்கும் போது அதற்கு இடைஞ்சலாக சில் என்று அழையாதீர்கள்

என் பேச்சைக்கூட கேட்க கூடாமல் உனக்கும் என்ன மேன்மை யடி யம்மா வந்து விட்டது

எனக்கு ஒரு மேன்மையும் இல்லை -நீங்கள் தான் மேன்மையுள்ளவர்கள் -நங்கைமீர் சிறிது பேசாது இருங்கோள் -இதோ வந்து விடுகிறேன்

நங்கைமீர் என்று எங்களையோ மேன்மை யுள்ளவர்களாகச் சொல்லுகிறாய் -நீ வெட்டு ஓன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் கெட்டிக்காரி என்பது எங்களுக்கு இன்று தானா தெரியும் -உன் வாயைப் பண்டே நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம்

நீங்கள் தான் நீ வெட்டு ஓன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் கெட்டிக்காரர்கள் -அப்படி இல்லாமலா இப்படிப் பேசுகிறீர்கள்

சில் என்று அழையாதீர்கள் என்று முதன்முதலில் நீ தானே சொன்னாய்

அது ஒரு குற்றமா -நீங்கள் பாடின பாட்டின்படியே கண்ணன் குணங்களை அனுபவிப்பதனால் உங்கள் வார்த்தையைக் கேட்க முடியா விட்டால் அது என் குற்றமா -ஆனால் நீங்கள் பாடியதும் குற்றமாகத்தான் முடிந்து விடும் -இது எதற்கு -நானே கெட்டிக்காரியாக இருந்தால் இருந்து விட்டுப் போகிறேன் -நான் இப்பொழுது எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் –

தாமதியாமல் எங்களோடு கலந்து கொள்ளவேண்டும் -நாங்கள் எல்லாமிருக்க எங்களுக்கு இல்லாத வேறு என்ன உனக்கும் மாத்ரமே இருக்கிறது எங்களை விட்டுத் தனியே அவனைப் பாடி அனுபவிக்க

எல்லாமும் வந்துவிட்டார்களா

ஆம் வந்து விட்டார்கள்

ஆனால் எல்லாரும் உள்ளே வாருங்கோள்

நீ வெளியே வந்து எல்லாரும் வந்து விட்டார்களா என்று எண்ணிப் பார்த்துக் கொள்

நான் வெளியே வந்ததும் செய்ய வேண்டிய கார்யம் யாது

நின் குழலை வென்ற குளிர் வாயால் நமது மாயனைப் பற்றி பாட வேண்டும் –

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.-

நல்ல என் தோழிகாள் நலமெய்த வாரீர்
வெல்லற்கு அரியவோர் வேழத்தைக் கொன்று
மல்லரை மல்லினில் மாற்றழியச் செய
வல்லனை மாயனை வாயினால் வாழ்த்துவோம்
பாடிக்கொண்டே வெளியில் வந்து கலந்து கொள்கிறாள்

ஐந்தாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று

ஐந்தாம் அங்கம் முற்றிற்று


ஆறாம் அங்கம் -முதல் களம்

நந்தகோபன் அரண்மனை
வாசலில் ஒரு சேவகன் நின்று கொண்டு இருக்கிறான்

அப்ப அப்பா அரண்மனையில் வேலை பார்ப்பது கத்தி நுனியை நாக்கால் நெருடுவது போலாம் என்பர்கள் -அது உண்மை -ஸூர்யனுக்காவது ஒய்வு இருக்கும் -அரண்மனைச் சேவகர்கள் அப்பெயரையே கேட்டு அறியார்கள் -இரவு முழுவதும் தினம்தோறும் விழித்து இருப்பது என்றால் அது இலகுவான கார்யமா -ஒரு நாளா இரண்டு நாளா -வருஷம் முந்நூற்று அறுபது நாளும் இப்படியே தான்-இப்பொழுதோ விடியல் காலமாகி விட்டது -இனிப் பயமில்லை – அதோ தோரண வாசல் காப்பான் உறங்கவில்லையா -அதே போல் நானும் சிறிது சாய்ந்து கொள்கிறேன் –
சாய்ந்து கொள்கிறான்

ஆய்ச்சிகள் பிரவேசிக்கின்றனர்

ஒருத்தி -வாயிற் காப்பவன் உறங்குகிறான் -நாம் அவன் அறியாமல் உள்ளே நுழைந்து விட்டால் என்ன

ஆம் சகி -அது தான் நல்லது -அவன் விழித்துக் கொண்டால் முதன் முதலில் சகுனத் தடை போல் ஒரு வேளை தடுத்தாலும் தடுத்து விடுவான்

தலைவி -சகி காள் -இவன் தடுத்தாலும் சரி -தடுக்கா விட்டாலும் சரி -இவனுக்குத் தெரியாமல் நாம் உள்ளே நுழைவது நியாயமாகாது -நந்தகோபன் கோயில் காப்பானே எழுந்திரு –

வாயிற் காப்போன் விழித்த வாக்கில் யாரது

உள்ளே செல்ல வேண்டும்

பெரு மூச்சுடன் போம்படி ஜாடை காட்டி விடுகிறான்

எல்லாரும் தோரண வாயில் அடைகிறான்

தோரண வாயிற் காப்பானே மணிக்கதவம் தாள் திறக்க வேண்டும் -எழுந்திரு

திடுக்கிட்டு எழுந்து -யாரது என்னை ஏன் எழுப்புகிறீர்கள்

உள்ளே போக வேண்டும்

இரவு நேரத்தில் உள்ளே விட முடியாது

நாங்கள் ஆயர் சிறுமியர்கள் தான்

நீங்கள் எதற்க்காக வந்தீர்கள்

நோன்புக்கு பறை பெறுவதற்காக

விடிந்த பின் வாருங்கோள் பறை வாங்கிக் கொள்ளலாம்

நாங்கள் இப்பொழுது பறை பெறுவதற்கு பேர் ஆர்வம் கொண்டுள்ளோம் –

உங்களுக்கு பேர் ஆர்வம் இருந்தால் நான் என்ன செய்ய முடியும் -எஜமானன் உத்தரவின்றி உள்ளே விட முடியாது

மாயன் மணி வண்ணன் நேற்றே எங்களை விடிவோரை வரும்படிக்குத் திருவாய் மலர்ந்து அருளி இருக்கின்றனனே

அது எல்லாமே எனக்குத் தெரியாது -விடிந்த பின் வாருங்கோள் -ஆக்ஷேபிக்க வில்லை

தன்னைத் துயில் எழுப்பிப் பறை கொள்ளும்படி கூறி இருக்கின்றனனே -விடிந்த பின்பு வந்தால் நாங்கள் எப்படி அவனை எழுப்ப முடியும்

உங்களை நான் எப்படி நம்ப முடியும்

வேறொரு காரியத்துக்காக நாங்கள் வரவில்லை-நோன்பு நோற்கும் நாங்கள் பொய் சொல்ல மாட்டோம் -தூயோமாய் வந்தோம்

நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்பதையும் உங்கள் வார்த்தையை கொண்டு தானே நம்ப வேண்டி இருக்கிறது

கெஞ்சிய முகத்துடன் –முதன் முதலில் நோன்புக்குச் சகுனத் தடை போல் தடுத்து விடாதே அப்பா -உனக்குப் புண்ணியமுண்டு -சகி காள் இவனைக் ப்ரார்த்தியுங்கோல்

எல்லாரும்
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

வாயிற் காப்போன் கதவைத் திறக்க ஆய்ச்சியர்கள் உள்ளே நுழைகின்றனர்

தலைவி -சசி காள் நாம் முதன் முதலில் கண்ணனை எழுப்பி விடக் கூடாது -முந்துற நமக்குக் கண்ணனைத் தந்து உதவிய நந்தகோபனையும் யசோதையையும் எழுப்ப வேண்டும் -பின்னர் கண்ணனையும் பலதேவனையும் எழுப்புவோம்

அப்படியே செய்வோம் -பாடுகின்றனர்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

சகி காள் நாம் ஆத்திரப்பட்டு எழுப்பும் முறையில் பிசகி விட்டோம் -பெரியோர்களை எழுப்பிய பின்னர் நப்பின்னையை நாம் எழுப்பி இருக்க வேண்டும் -முந்துறவே உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் என்று கண்ணனை எழுப்பி விட்டோம் -நப்பின்னையுடைய புருஷகாரம் இல்லாவிட்டால் நாம் கண்ணனைப் அனுபவிக்க முடியாது -ஆகையால் புருஷகாரத்திற்காக அவளை முதலில் எழுப்புவோம் –

ஓஹோ நப்பின்னையை எழுப்புவதற்காகக் கள்ள உறக்கம் கொள்கின்றானோ
ஆம் சுகி அவன் ஸ்வ பாவமே இது தான் -இப்பொழுது மட்டும் அன்று-எப்பொழுது ஆயினும் அவன் தன்னைப் புருஷகாரமில்லாமல் அனுபவிக்க விட மாட்டான்

ஆகில் அவளைச் சீக்கிரம் நீயே எழுப்பு நேரமாகிறதே

சகி நப்பின்னாய் -கந்தம் கமழும் குழலி! -எப்பொழுதும் மத ஜலத்தைப் பெருக விடும் கரியினைப் போன்றவனும் எதிரிகளிடமிருந்து ஓட வேண்டா தோள் வலிமை படைத்தவனுமான நந்த கோபாலன் மருமகளே! எழுந்து கதவைத் திற -பொழுது விடிந்தது-கோழி கூவியாகி விட்டது -பந்தல் போலப் படர்ந்த குருக்கத்திக் கொடியின் மேலிருந்து விடிந்தமைக்கு அடையாளமாகக் குயிலினங்கள் காலையில் விருதாவளி படித்து எழுப்பும் பாடகர்கள் போலப் பலகாலும் கூவுகின்றன கேள்
பதிலும் இல்லாமையால் ஜன்னலண்டை வந்து உற்று நோக்கி
சகி காள் நப்பின்னை நமது உற்ற உறவான கண்ணனுடன் பந்தாடிக்கொண்டு இருந்தனள் போலத் தோன்றுகிறது -அவள் பந்தாடியதால் மிகவும் அயர்ந்து உறங்குகின்றனள்

நம்மைப் போல பிரிந்து இருந்தால் அன்றோ உண்ணாது உறங்காது இருக்கப் போகிறாள் -பந்து கை புகுந்ததற் பின்பு அவள் உறங்குவதற்கு என்ன-

அடி பந்தார் விரலி-நீயும் அவனும் மைத்துன்மையாடி ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி விளையாடும் போது -உன் பக்கத்திலே நின்று அவன் தோல்விக்கு வசை பாடுவோம் -அழகிய மென்னடை அன்னம் போல் வந்து நின் செந்தாமரைக் கைகளில் அணிந்த வளையல்கள் குலுங்க கதவைத் திற-

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

சகி இனி நாம் கண்ணனை எழுப்ப வேண்டியதில்லையோ

ஏன் வேண்டாம் இனித்தான் அவனை எழுப்ப வேண்டும்

அவன் நப்பின்னை இட்ட கட்டளைப்படி நடப்பவன் என்றனையே -அவளை எழுப்பினாலே அவன் எழுந்து விடுவனோ என்று நினைத்தேன்

நான் சொல்வது பொய்யா -ஜன்னல் வழியே உள்ளே உற்று நோக்கிப் பார் -அவன் அவளிடம் எவ்வளவு மயங்கி மண்டிக் கிடக்கிறான் என்பது தெரிய வரும் –

அவ்வண்ணமே உற்று நோக்கி ஆச்சர்யத்துடன் -ஆம் சகி காள் உள்ளே பாருங்கள் -என்ன ஆச்சர்யம்-படுக்கை அறைக்குத்தான் எவ்வளவு ஜோடிப்பு -தந்தத்தினால் அழகு படச் சித்தரித்து வேலைகள் அமைக்கப்பட்ட நல்ல கால்களுடன் கூடிய ஓர் கட்டில் -அருகே குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது -கட்டில் மேலே மெத்தென்ன பஞ்ச சயனம் விரிக்கப்பட்டுள்ளது -அப் பஞ்சசயனத்தில் தேன் ஒழுகு பூங்குழலினளும் செவ்வாயினளும் சிற்றிடை யினளுமான நப்பின்னையின் செப்பெனத் திகழும் கொங்கைகளில் தன்னையே பதியவைத்து -தாமரை மொட்டில் வண்டு போலும் -மாணிக்கச் ஷேப்பில் சிமிள் போலும் படிந்து கிடக்கின்றன
எல்லாரும் ஆவலுடன் ஜன்னலண்டை வந்து உள்ளே உற்றுப் நோக்குகிறார்கள்

தலைவி -ஜன்னல் வழியே உற்று நோக்கி -அகன்ற மார்பினனே -நாங்கள் வந்தவுடன் சடக்கெனத் துயில் எழுந்து வரா விடினும் அங்கிருந்தே ஒரு வார்த்தை யாயினும் கூறக் கூடாதா -உன் கூட இருக்குமவள் புறப்பட்டு வர ஒட்டாளாகில் அங்கிருந்தே வருந்தேல்மின் என்று ஒரு வார்த்தை கூறுவதும் அரிதோ
சகிகளை நோக்கி -சகி காள் நப்பின்னையுடன் அவன் சேர்ந்து இருப்பதால் நமது கார்யம் விரைவில் நிறைவேறும் என்று இருந்தோமே -நப்பின்னையே இப்பொழுது நம் காரியம் தாமப்பிதற்க்குக் காரணமாய் இருக்கிறாள் -என் வார்த்தைக்கு மறுமாற்றம் சொல்லப் புகுந்த அவனை அவள் தன் கண்ணால் ஜாடை காட்டிப் பேச ஒட்டுகிறிலள் -நாம் மையிட்டு எழுதோம் என்றும் இருக்கிறோம் -அவளோ கண்ணில் மையிட்டு அவ்வழகால் அவனை அகப்படுத்திக் கொண்டு இறுமாந்து இருக்கின்றனள்
உள் நோக்கி -மையிட்ட அழகாய் அகன்ற கண்ணுடையவளே -நீ உன் கண் அழகால் சொன்ன சொற் கேட்டு நடக்கும் உன் மணாளனை எழுப்பித் தருவாய் என்று இருந்தோம் –நீயே அவனைப் பேசவும் ஒட்டுகிறதில்லை -க்ஷண காலம் கூட நீ அவன் பிரிவைப் பொறுக்க முடியாதவள் ஆயிற்றே -உன்னைப் போலத் தானே நாங்களும் -ஒரு க்ஷண நேரம் எங்களுக்காக அவனை எழுப்பி அவன் எழுந்திருக்கும் போது உண்டான பிரிவைப் பொறுத்துக் கொள்ளக் கூடாதா -இது கூட நீ செய்கிறதில்லை -உண்மையாகச் சொல்லுகிறேன் -இது உனக்குத் தகாது –

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

சகி ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுவதே ஸ்வ பாவமாக வுடைய நம் நாதன் இனியும் வரவில்லை-நப்பின்னையை இது தகாது என்று நீ சிறிது சினந்து கூறியதை அவன் பொறுக்க வில்லை போலும் -ஆகையால் இப்பொழுது நீ நப்பின்னை அழகைப் புகழ்ந்து இருவரையும் ஒரே சமயத்தில் எழுப்பிப் பார் -அவன் அவசியம் வந்து தீருவான்

அப்படிச் செய்தாவது பார்ப்போம்
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வரும் முன்பே சென்று அவர்களது நடுக்கத்தைத் தொலைக்கும் பலமுடையோய் -துயில் எழு -கடல்படா அமுதான உன்னை விட்டு கடல் படு அமுதம் விரும்பும் தேவர்கட்கே உதவும் நீ -உன்னை அன்றி இலாத அபலைகளான எங்களைப் பிரிந்து நோவு பட்ட பிறகேனும் வந்து ரக்ஷிக்கக் கூடாதா -அண்டினோரைக் காப்பதும் விரோதிகளுக்குத் தீமை செய்வதும் அன்றோ உன் ஸ்வ பாவம் -இப்பொழுது நீ அண்டினோருக்கும் தீமை செய்யும் சிரீதரனானாயோ -எங்களுக்காக நீ செய்ய வேண்டிய கார்யம் யாது -ஒன்றும் இல்லையே -விமலா துயில் எழு -அதுவே போதும் -செப்புப் போன்ற மென் கொங்கையும் செவ்வாயும் சிறிய மருங்குலும் படைத்த நப்பின்னை நங்காய் -இலக்குமி போன்றவளே துயில் எழு

நப்பின்னை -உள் இருந்தே -நான் எழுந்திருந்து உங்களுக்குத் செய்ய வேண்டியது என்ன-

தலைவி -தனக்குள் -ஒரு மட்டுக்கு எழுந்தாள் அம்மா-
வெளியில் நீ எழுந்து விசிறியும் கண்ணாடியும் உன் மணாளனும் தர வேண்டும் -தந்து இப்பொழுதே பிரிந்து வருந்தும் எங்களை உன் கணவனோடு கூட்டி நீராட்ட வேண்டும் -அவன் அழகில் நாங்கள் ஈடுபட்டவர்களானாலும் நீ அவனைத் தந்தால் -நீ தந்த கண்ணன் -என்று அவனிடம் நாங்கள் ஈடுபடுவோம் –

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

நப்பின்னை கதவைத் திறந்து வெளியே வருகின்றனள்
ஆய்ச்சியர் புன்முறுவலுடன் அவளை வரவேற்கின்றனர்

சகி நீ இருந்தும் இவ்வளவு ஏன் தாமதம்

நப்பின்னை -நானும் உங்களில் ஒருத்தி தானே -நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணனை எழுப்ப வேண்டி இருக்க நீங்கள் மட்டும் நான் இல்லாமல் அவனை எழுப்ப ஆரம்பித்தீர்கள் அன்றோ -அதனால் தான் இதுவரை தாமதிக்கும்படி செய்தேன் -இனி நாம் எல்லோரும் சேர்ந்து அவனை எழுப்புவோம் வாருங்கோள்

எல்லோரும் உள்ளே செல்கின்றனர்

கறக்கும் கலங்கள் பொங்கும்படி பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் வாய்ந்த நந்தகோபன் திருமகனே
அண்டினவரை ஆதரிப்பதில் திண்மையுடைய பெரியோய் -உலகில் காணக் கூசாமல் வந்து அவதரித்த சுடரே -துயில் எழு -சத்ருக்கள் வலி இழந்து தோற்று உன்னடிக்கீழ் வீழ்வது போல் நாங்களும் உன் குணங்களுக்குத் தோற்று வந்தோம் -மாற்றார் உனது அம்புகளுக்குத் தோற்றனர் -நாங்கள் உன் குணங்களுக்குத் தோற்றோம் -தோற்ற நாங்கள் எல்லோரும் ஆற்ற கில்லோம் -தோற்கடித்த உன் குணங்களைப் பாடி யுனக்கு பல்லாண்டு பல்லாண்டுகளாக மங்களங்கள் உண்டாக வேணும் என்று ஆஸாஸிக்க வந்தோம் -பிரிவாற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டுகிறதில்லை -ஆகையால் நீ வந்து எங்களைக் கை கொடுக்க வேண்டி யிருக்க நாங்களே வந்து நின் புகழ் பாடா நின்றோம் -கண் விழித்து அருள்வாயாக -பங்கய லோசன-அகன்று அழகிய இப்பார் முழுதும் தார் வேந்தராய் அரசாண்ட மன்னர் எல்லோரும் தம் தமது அபிமானங்களை விட்டு ராஜ்யாதிகாரத்தைத் துறந்து உன் பாணங்களுக்குத் தோற்று உன் சிம்ஹாசனத்திற்கு கீழே குழுமிப் படுகாடு கிடப்பதைப் போலே நாங்களும் எங்கள் பெண் தன்மை ஒழிந்து வேறு சுக அனுபவங்களை இறையும் எண்ணாமல் நின் பள்ளிக் கட்டில் கீழே கிட்டி விட்டோம் -கணவன் வந்து கை கொடுத்திடில் வாழ்வோம் – என்று இருந்த இடத்திலே இருப்பே பெண் தன்மைக்குச் சேரும் -எங்கள் ஆற்றாமை அப்படி இருக்க ஓட்டுகிறது இல்லையே –கிண்கிணி -சலங்கை போல் பாதி மலர்ந்த தாமரை போன்ற கண்களைச் சிறுக சிறுக விழித்து எம் மேல் கடாக்ஷ அம்ருதத்தைப் பொழியக் கூடாதா – நீர் இல்லாமல் வாடிய பயிர்களில் ஒரே தடவையாக வெள்ளத்தைப் பாய்ச்சினால் அவை பயிராகா அன்றோ -அதே போல் முதல் தடவையிலேயே நினது கடாக்ஷ அம்ருதத்தை முழுதும் எம்மேல் பொழிந்திடில் அதை எங்களுக்கு அனுபவிக்கும் ஆற்றல் கிடையாது -வாடும் பயிருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஜலம் பாய்ச்சவதைப் போலே சிறுக சிறுக எங்கள் மேல் விழிக்க வேண்டும் -பின்னர் நாங்கள் முழுப்பார்வையும் தரிக்கும் ஆற்றல் படைத்ததும் கோப காலத்தில் ஸூர்யன் போலவும் குளிர்ந்த காலத்தில் சந்திரன் போலவும் உள்ள இரண்டு கண்களாலும் எங்கள் மேல் நோக்குவாயானால் நாங்கள் அவசியம் அனுபவித்தே விடவேண்டிய எங்கள் துக்கம் எல்லாமே தொலைந்து போம் -ஆகையால் கடிதில் கண் பார்த்து அருள்வாயாக-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

கண்ணன் -எழுந்து உட்க்கார்ந்து -வாருங்கள் வாருங்கோள் -நீங்கள் வெகு நேரம் காத்து நிற்கிறீர்களோ -நான் பெரிய குற்றம் செய்து விட்டேன் -நீங்கள் வரும் முன்பே நான் எழுந்து உங்கள் காரியத்தை -இல்லை இல்லை -நமது காரியத்தைச் செய்ய வேண்டி இருக்க-நீங்கள் எல்லோரும் வந்து பல படிப்பட்ட எழுப்பும் வரையிலும் நான் பேசாதே கிடந்தேனே -நீங்கள் இக்குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் -நான் செய்ய வேண்டிய கார்யத்தைச் சொல்லுங்கோள் -அப்படியே செய்து சடக்கென முடிக்கிறேன்-

பூவைப்பூ வண்ணா -தூங்கி எழுந்த நீ இங்கிருந்தே எங்கள் காரியத்தை ஆராயக் கூடாது -அழகிய ஆஸ்தான மண்டபத்தில் ஸிம்ஹாஸனத்தில் இருந்து யாம வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேண்டும் -மழைக் காலங்களில் மலைக் குகைகளில் படிந்து கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் உறங்கி எழுந்து -தீப்பொறி பறக்கச் செங்கண் விழித்து பிடரி மயிர் -கேசரம் -சிலும்பும்படி நாலா பக்கத்திலும் புடை பெயர்ந்து தன் உடம்பை உதறி நிமிர்த்துக் கர்ச்சித்துப் புறப்பட்டுப் போவது போல் நீயும் நின் கோயிலில் நின்றும் இதோ இந்த மணி மண்டபத்துக்கு எழுந்தருளி வெற்றி ஆஸனத்தில் அமர்ந்து எங்கள் காரியத்தை ஆராய்ந்து அருள வேண்டும் –

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

கண்ணன் -புன்முறுவலுடன் -நன்கு வர்ணித்தனை -அப்படியே செய்வோம்
கண்ணன் முன்னும் கோபியர் பின்புமாக நடந்து செல்கின்றனர்

நப்பின்னை -சகிகாள் -நம் நாதனுடைய நடையழகைப் பாருங்கள் -முன் அவதாரத்தில் இவன் உலகு இழந்த இந்திரனின் ஆர்த்தி தீரும் படி -இவ் வுலகை எல்லாம் கல்லும் கானும் பாராமல் நாம் கூடக் கூசிப்பிடிக்கும் மெல்லியவடி இட்டது போல் இப்பொழுது நம் ஆர்த்தி தீரும்படி தன்னடிகளின் மென்மை பாராதே நடந்து செல்கின்றனனே -முன்பாவது இரண்டு அடி -இப்பொழுது எட்டுப் பத்து அடிகள் அன்றோ -இவ்வடிகளுக்கு மங்களம் உண்டாகட்டும்

ஒருத்தி -சகி முன் அவதாரத்தில் பிராட்டியைப் பிரித்த பாபி இருந்த தென்னிலங்கையை -புலி கிடந்த புதரை அடைவது போலக் கானகத்தில் எவ்வாறோ இம் மெல்லடி யிட்டு நடந்து சென்று திறல் காட்டினனே -இதற்கு மங்களம் உண்டாகட்டும் -அங்கே ஒருத்திக்காக நடந்தான் -இங்கே பலருக்காக நடக்கிறான்

ஏன் வேறு அவதாரத்துக்குப் போக வேண்டும் -இவ்வவதாரத்திலேயே பாருங்கள் -இம்மெல்லடி கொண்டு தானே சகடாசுரன் உருக்குலைய உதைத்தனன் -அப்புகழுக்கு மங்களம் பாடுவோம் -இது மட்டுமா -கன்றுரு எடுத்து நலிய வந்த அசுரனைக் கருவியாகக் கொண்டு கபித்தாசுரன் மேலே வீசினானே -என்ன துணிவு -அவ்விரு பகைவரும் சேர்ந்து கொண்டு இட்டால் என்ன ஆகும் -அவ்வமயம் எறியும் பொழுது மடித்த திருப் பாதத்திற்கு மங்களம் பாடுவோம் –
குன்று குடையாக எடுத்தானே -அப்பொழுது அப்பாரத்தை எல்லாம் இம்மலரடிகள் தானே தாங்கின –
இவன் கையிலுள்ள பகை கெடுக்கும் வேல் தானே பகைவர் உள்ள விடம் என்றும் கூடப் பாராமல் இவனது பாதங்களை நடக்கச் செய்கிறது -இவ்வேலும் கையுமாய் இருப்பதற்கு யாதொரு தீங்கும் வராமல் இருக்க வேண்டுமே
இதற்கு எல்லாம் மங்களம் பாடுவோம்

கண்ணன் ஆஸ்தான மண்டபத்தண்டை செல்கிறான்

நாதா இவ்விடத்தில் தான் எங்கள் காரியத்தை ஆராய வேண்டும் -உண்மையாக எங்கள் கார்யத்தைச் சுருக்கிக் கூறி விடுகிறேன் -என்றைக்கும் உனது வீர சரித்ரம் பாடி உன்னை அனுபவிக்க ஊரார் இசைந்து இன்று வந்தோம் -இதற்கு இசைந்து இரங்க வேண்டும் –

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

எல்லோரும் உள்ளே செல்கின்றனர்

ஆறாம் அங்கம் முதற் களம் முற்றிற்று


ஆறாம் அங்கம் இரண்டாம் களம்

நந்தகோபன் அரண்மனை -ஆஸ்தான மண்டபம்
ஸிம்ஹாஸனத்தில் கண்ணன் அமர்ந்திருக்கின்றான்
அருகே ஆய்ச்சியர்கள் நிற்கின்றனர்

சிறுமியர்காள் உங்களுக்கு வேண்டுவது என்ன-நீங்கள் வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள்

எங்களிடம் பெரு மயக்குடை மணி வண்ணா -மார்கழி நீராட வந்தோம் –அந் நோன்பிற்கு உபகரணங்கள் வேண்டும் -எங்கள் பிரதிபந்தகங்களைப் போக்கி விடு -விடவே நாங்கள் உன் சேவகம் பாடி மகிழ வேண்டும் –

மார்கழி நீராட்டம் என்றால் என்ன

இது தெரியாதா -இது ப்ரஸித்தமான நோன்பு அன்றோ

யாகம் முதலியவை போல் இது எங்கே கூறப்பட்டு இருக்கிறது –

அவை போல் அல்ல காண் இது-நம் பெரியோர்கள் செய்வது-சிஷ்டாசாரத்தை விட மேற் பிரமாணம் எது

ஆகில் வேண்டுவது சொல்லுங்கள் -இவர்கள் கட்டழகைக் கண்டு இமை கொட்டாமல் பார்த்த வண்ணம் மெய் மறந்து இருக்கிறான்

நாதா எங்களிடம் பெரு மயக்கன் என்று நான் கூறியது உண்மை யாயிற்றே -சதுரங்கமாடுபவர் போல் எங்கள் மதுர அங்கத்தைக் கண்டு அதே கவனமாய் மற்றவற்றை மறந்து விட்டால் நாங்கள் எப்படி வேண்டிக் கொள்வது -நாங்கள் வேண்டுவதை நீ கவனமாகக் கேட்ப்பாயாகில் கூறுகிறேன்

புன்னகையுடன் உங்கள் வையம் என் கண்ணுக்கு இனிதாய் இருப்பது போல் உங்கள் இனிய வடிவத்தில் உண்டாம் குரலும் என் செவி கட்க்கு இனிதாம் அன்றோ -கூறுங்கள் கேட்டு இன்புறுகிறேன்

கேட்டு இன்புற்றால் போதுமோ -நாங்கள் வேண்டுவன கொடுக்க வேண்டுமே

அப்படியே கொடுக்கிறேன்

ஞானத்தை எல்லாமே நடுங்க முழங்கும் பால் போன்ற நிறமுள்ள உன் பாஞ்ச ஜன்யத்தைப் போலவே பல சங்கங்கள் வேண்டும்

வேறு என்ன வேண்டும்

மிகவும் பெரிய பறை என்ற வாத்யம் வேண்டும்

வேறு

பல்லாண்டு பாடி மங்களா ஸாஸனம் பண்ணுபவர் வேண்டும்

இன்னும்

மங்கள தீபம் வேண்டும்
கொடிகள் விதானம் முதலியவையும் வேண்டும்

பஞ்ச ஜன்யத்தை ஒத்த சங்கங்கள் உலகில் கிடையாது -ஆகையால் என் பாஞ்ச ஜன்யத்தையே வாங்கிக் கொள்ளுங்கள் –
பாரோர்கள் எல்லாம் மகிழக் குடக் கூத்தாடின போது நான் அரையில் கட்டின பறையைப் பெறுங்கள் -பல்லாண்டு பாட நம் அந்தரங்கர் ஒருவரைத் தருகிறோம்
விளக்குக்கு நப்பின்னைப்பிராட்டியையும் கொடிக்குக் கருடக் கொடியையும் -மேற் கட்டிக்கு அத்தாளத்தையும் -உத்தரீய வஸ்திரத்தையும் -கொண்டு செல்லுங்கள்

ஓரொன்று பாராது -இப்படி இருப்பன பல வேண்டும்

ஒற்றொன்று தானே உளது -இல்லாதவைக்கு எங்கே போவது

உனக்குக் கிடையாதது ஓன்று உண்டோ

எனக்கு என்றால் எளியதாகி விடுமோ

ஆலினிலையாய் -ஒரு பாலகனாய் ஆலிலை மேல் மேலொரு நாள் உலகெல்லாம் உண்டு திரு வயிற்றில் அடக்கிக் கண் வளர்ந்து அருளும் அக்டி தகடநா ஸாமர்த்யம் வாய்ந்த உனக்குக் கிடையாதது எது -எங்களுக்காகவாவது அவைகளை உண்டாக்கிக் தந்தருள வேண்டும் -உன்னை அடைந்தாரைத் தன்னைப் போலவே ஆக்குவதே உன் ஸ்வ பாவம் அன்றோ -அப்படியே உன் பஞ்ச ஜன்யம் முதலியவற்றைத் தந்தருள வேண்டும் –

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

நீங்கள் இந்த நோன்பினால் என்ன பலன் பெறப் போகிறீர்கள்

கூடாரை -சத்ருக்களை -வெல்லும் குணமுடைக் கோவிந்தா -உன் தன்னைப் பாடிப் பறை பெறுவதே எங்கள் நோன்பின் பலனாம் -பின்னர் நாங்கள் உன்னிடமிருந்து கீழ் வரும் சம் மானம் பெறுவோம் -நீ கொடுக்கும் சம் மானம் இந்நாடு புகழும்படி இருக்க வேண்டும்
சம்மானமாவன -கைகளுக்கு இடும் சூடகம் -தோள் வளை –காதுக்கு இடும் தோடு -செவிக்கு அலங்காரமாக வைத்துக் கொள்ளும் பூ -காலுக்கு இடும் பாடகம்

சரி இவ்வளவு தானே

இவ்வளவு மட்டுமல்ல -எவ்வளவு அணி கலங்கள் உண்டோ அவ்வளவும் வேண்டும் -பல் கலனும் யாம் அணிவோம்

சரி அணிந்து கொள்ளுங்கோள்

நாங்கள் அணிதலாவது -தனித்து இருக்கும் போது நாங்கள் மலரிட்டுக் கூட முடியும் -நீயும் நாங்களும் சேர்ந்து காலத்தில் பல்கலனும் நீயும் நப்பின்னையுமாகப் பூட்டவே நாங்கள் அணிவோம்

பிறகு

ஆடை உடுப்போம்

புன்னகையுடன் -ஏன் இப்பொழுது ஆடை இல்லாமலா வந்திருக்கிறீர்கள்

நாணத்தால் மவ்னமாய் இருக்கின்றனள்

நப்பின்னை -இதுவரை தங்களே யுடுத்துக் கொண்டனர் -நீ உடுத்து உடாதது உடையன்று என்று இவர்கள் அபிப்ராயம் போலும்

இரவில் தோட்டத்தில் யானும் உன் உடை உடுத்து உங்களை ஏமாற்றினேன் அன்றோ -அது போல் இவர்கள் என் ஆடையை -பீதாம்பரத்தை -உடுக்க வேணும் என்கின்றனர்
தலைவியை நோக்கி -நாம் ஆடை மாற்றிக் கொள்ள வேணும் -அப்படித்தானே

நாணத்துடன் நோன்பு நாளாகையாலே நல்லாடை உடுப்போம் என்கிறேன்

நல்ல ஆடையாவது

நப்பின்னை -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை

நீங்கள் இருவரும் என்னைப் பரிஹஸிக்கிறீர்கள்

இல்லை இல்லை உன் உண்மையான ஆசையைக் கூறினோம் -மேலே சொல்லு

நப்பின்னை -சகி கூறை பறித்தோடும் கள்வனிடம் கூறை உடுப்போம் என்கின்றனையே -கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடப் போன போதே இவனும் மறைந்து வந்து கூறை பறித்துக் குருந்திடை இருந்து கூறை கொடாமல் வேதனைப் படுத்தியதை நீ மறந்து விட்டனையோ –

புன்னகையுடன் தோட்டத்தின் இரவு வேளையில் நீயும் இவளும் சேர்ந்து ஒரு புதிய பெண்ணின் துகிலைப் பறிக்க வில்லையோ -அது மட்டுமே நியாயமோ

ஆம் ஆம் இரவில் நல்ல கார்யம் செய்தனை -புதுப் பெண்ணாம் -இயற்கையிலேயே பெண்ணாகப் பிறந்தவள் போல் அன்றோ நடித்து விட்டனை

ஆசை யுடுப்பதோடு முடிந்து விட வில்லை -அதன் பின்னே எங்களுடன் கூடவே இருக்க வேண்டும்

கூடி இருந்து நான் செய்ய வேண்டியது என்ன

நாம் எல்லோரும் கூடி புஜிக்க-உண்ண -வேண்டும்

புஜிக்க என்ன வைத்திருக்கிறீர்கள்

நினது கைங்கர்யமும் பாரதந்தர்யம் போலே ருசிகரமான பாற் சோறும் நெய்யும் இருக்கின்றன

அவற்றை எப்படிப் புஜிக்க வேண்டும் தெரியுமா

ஆம் அறிவோம் -நின் தனக்கும் எங்கள் மரபினில் அவதரித்த பின்னர் தானே இவைகளை நன்கு அனுபவிக்கத் தெரிந்தது -நாங்கள் தனித்தால் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -உன்னோடு கூடியே பாற் சோறே தெரியாமல் மூடும்படி நெய் பெய்து கையிலே எடுத்தால் நெய் முழங்கை வரை பெருகலாம்பாடி அக்கார அடிசில் ஆக்கி பிரிந்த துன்பத்தை மறந்து குளிர்ந்து இருப்போம்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

அப்படியே செய்வோம் -என்னையே ப்ராபகமாக -உபாயமாக -பற்றி நிற்கும் நீங்கள் எனது ஆத்மா -ஆகவே உங்கள் விருப்பை நிரப்ப நான் கடமைப் பட்டு இருக்கிறேன்

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா எங்களிடம் அறிவு ஒன்றுமே என்பதே இல்லை -ஞான பக்திகளுடைய வாஸனையே வீசினதில்லை -கறவைப் பசுக்களோடு பசுக்களாய்க் காடுமேடு திரிந்து தின்னும் அறிவொன்றும் இல்லா ஆயர் தம் குலம் எங்களுடையது -நாங்கள் இக்குலத்தில் நீ பிறக்கும்படிக்கு என்ன புண்ணியம் படைத்தோமோ-

புன்னகையுடன் -நன்றாய் இருக்கிறது -முரண்படப் பேசுகின்றனையே -புண்ணியமுளதாம் -அறிவில்லையாம் -புண்ணியம் யுடையோருக்கு அறிவு இருந்து தீருமே

நான் முரண்படப்பேசுவதாலேயே அறிவின்மை விளங்கவில்லையா -நாங்கள் அறிவிலிகளே யாயினும் நீ குறைவற்ற கோவிந்தன் அன்றோ -உனது பூர்ணிமை -குறைவின்மை – எங்கள் அறிவின்மைக் குறையைப் போக்குமன்றோ -குறைவற்ற பூர்ணனான நீ நிரபேஷனாய் இக்குலத்தில் அவதரித்து எங்கள் அறிவின்மை பள்ளத்தை உனது குறைவின்மை மேடு கொண்டு நிரப்பி விட்டனை என்கிறேன்

நீ வழக்காடுவதில் வல்லவள் அன்றோ -அறிவில்லாத நீ எப்படிப் இவ்வாறு வழக்காடுகின்றனை -இதைச் சொல்லு

இதுவும் நின்னது இன்னருளாலே தான்

எனக்கு நிறையுண்டாயினும் இதைக்கொண்டு உங்கள் அறிவின்மையாகிய பள்ளத்தை எப்படி நிரப்ப முடியும் -மேட்டுக்கும் பள்ளத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் வேண்டாமே நிரப்ப

நீ எங்களுக்கு உறவன்றோ -நிறைவாளனான நீ குறைவாளரான எங்களுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறாய்

உறவு ஒரு குடநீரோடே போகி விடுமே
(கட ப்ரஹரம் என்னும் கர்மத்தில் ஒரு நீருள்ள குடத்தை உடைக்க நாயிகா நாயக சம்பந்தம் விட்டுப்போம் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டு இருக்கிறது -இது பழைய காலத்தில் விவாஹ ரத்தாகும் )

போகாது -உன் தன்னோடு உறவு உன்னாலோ நாம் எல்லாருலாமோ போக்கடிக்க முடியாதது-

ஏன்

பெரியோர் கூறக் கேள்விப்பட்டு இருக்கின்றேன்

பெரியோர் கூறியது என்ன-

தலைவி
இன்றாக நாளையாக இனிச் சிறிது
நின்றாக நின்னருளே என்பாலதே -நன்றாக
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே
நாரணனே நீ யன்றி இலை

அப்பெரியவர் உன்னைச் சேர்ந்தவர் -ஆகையால் இப்படி கூறி இருக்கிறார்

ஆகில் உன்னாலேயே வெளியிடப்பட்ட திருமந்த்ரத்தைப் பார் -அதில் முதல் எழுத்தான அகாரம் உண்மையை உணர்த்தும்

எப்படி

அவ்வெழுத்து ரக்ஷகன் என்கிற அர்த்தத்தைக் காட்டி எமக்கும் உனக்குமுள்ள ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை உணர்த்துகின்றதோ

தலையை அசைத்து நன்கு வழக்கு அறிந்து கூறினை

இறைவ-நாங்கள் சிறுமியர் -அன்புடையோர் -சிறுமையாலும் அன்பினாலும் வந்த அஞ்ஞானத்தாலே செய்த குற்றங்களை எல்லாம் பொறுத்து அருள வேண்டும் -நீர்மை குடி கொண்ட உன்னைப் பரத்வத்தைப் காட்டும் நாராயணன் முதலிய பெயர் இட்டுச் சொன்ன குற்றத்தையும் பொறுத்து அருள வேண்டும் -நீர்மை பிரகாசிப்பதற்கு எனப்பிறந்த உனக்குப் பரத்வத்தைக்காட்டும் சொற்கள் கொண்டு கூறுவதைப் பொறுக்க முடியாதது தான் -அன்பினால் அறிவின்மையால் அச் சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே -நாங்கள் விரும்பிய பறையைத் தந்தருள்-

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

திங்கள் திருமுகத்துச் சேயிழையீர் -நீங்கள் என்னைப் பெறுவதற்காகப் பேர் ஆத்திரம் கொண்டு இருப்பது போலத் தான் நானும் இருக்கிறேன் -போவோம் வாருங்கள் நமது மநோ ரதத்தை நிறைவேற்றிக்கொள்ள

கோவிந்தா எனது முடிவைச் சுருக்கமாகக் கூறி விடுகிறேன் -அதன் படி அருள் செய்ய வேண்டும் -சிற்றம் சிறுகாலையில் வந்து உன் பொற்றாமரை அடி போற்றும் காரணம் யாது என் எனின்

மெய் மறந்து தனக்குள் –ஆஹா இம்மங்கை பேசும் போது என்ன அழகு -கோவைச் செவ்வாய் அமுத ஊற்று -வெளுத்த பற்களின் ஒளி -அச்செவ்வாய் மீது பவளத்தரை மேல் பனிமதி பிரகாசிப்பது போன்று இருக்கிறது -நான் இந்தத் சந்திரிகையை அனுபவிக்கும் ஓர் சகோர பக்ஷி

நான் சொல்வதை நான் கேட்கவில்லையே -நீ வேறு கவனமாய் இருக்கின்றனை -என் சொல் காட்டில் எறிந்த நிலாத் தானோ

செஞ்சொற் கிளியே -நான் ஓர் சகோர பக்ஷி -நீ பேசும் போது நின் செவ்வாயில் வீசும் நிலாவை நான் அனுபவித்து கொண்ட இருக்கிறேன் -ஆஹா என்ன அழகு

நப்பின்னை -நாதா என் சகி தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் பொழுது அவள் அழகில் நின் மனம் சென்று விட்டால் அவள் வார்த்தையை எப்படிக் கேட்டு அதன்படி செய்ய முடியும்

மனம் நிலை நில்லாதது -எனினும் நான் அதை அடக்கிக் கேட்க முயலுகின்றேன்

என் சகியின் வார்த்தையை ஓர்த்த மனத்தினனாய் பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆராய வேண்டி இருக்கிறதோ யோகீஸ்வரர் போல்

ஆம் இவள் அழகு படுத்தும் பாடு இது -தலைவியை நோக்கி அழகுக் களஞ்சியமே -மேலே சொல் கேட்க்கிறேன் – கண்ணை மூடிக் கொள்கிறார்

நப்பின்னை -இது ஏன்

ஓன்று பார்க்க வேண்டும் -அல்லது கேட்க வேண்டும் -இப்பொழுது கேட்கப் போகிறேன் -கண்ணைத் திறந்தால் இவள் அழகைக் காண்பேனே அன்றி கேட்க முடியாது

நான் சொல்வதைக் கவனமாக கேட்க வேண்டும்

அப்படியே –

கன்றுகள் மேய்த்து உழைக்கும் காடு வாழ் சாதியரான இடைக்குலத்திலே பிறந்த நீ எங்களைக் கொண்டு அடிமை கொள்ளா மல் இருக்கக் கூடாது –

நீங்கள் நோன்புக்கு உபகரணமான -சங்கும் பறையும் கொடியும் விலைக்கும் விநாதனமும் அன்றோ கேட்டீர்கள் -அவைகளைக் கொண்டு போங்கள் -வேறு அடிமையாவது என்ன

முக்கியமான பறையைக் கொடுக்கிறான்

நாங்கள் இன்று இப்பறை கொள்ள வந்தவர்கள் இல்லை -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்னோடு எல்லா உறவும் கொண்டவர்களாகவே நாங்கள் இருக்க வேண்டும் -அவ்வுறவைத் தெரிவிக்க வேணும் –

மற்றும் வேண்டுவது என்ன

நாங்கள் செய்யும் அடிமை உனக்கேயாக இருக்க வேண்டும் -உனக்கும் எங்களுக்கும் உகப்பான அடிமை எங்களுக்கு வேண்டாம் -மற்ற எங்கள் விருப்பங்களை இதோடு மாற்றி விட வேண்டும் -அடிமை செய்வது எங்களுக்காக என்ற நினைப்பை மாற்ற வேண்டும் -இதற்காகவே நாங்கள் வந்தோம்

பின்னை ஏன் கொடி விதானம் பறை முதலியவற்றைக் கேட்டீர்கள்

நாங்கள் நோன்பு என்பதோர் வ்யாஜம் கொண்டு வந்தபடியால் உலகத்தோடு ஒட்டு ஒழுக வேண்டி அவைகளை வேண்டினோம் -நோன்பு நோலுங்கோள் என்றும் அனுமதித்த கிழவர்களிடம் இவற்றைக் காட்டினால் உன் முகம் கண்டு களிக்கக் கூறுவர்-இந்நோன்பினால் அன்றோ உன்னோடு நாங்கள் சேர முடிந்தது -அதற்காக அவைகளை நாங்கள் வேண்டினோம் -உண்மையில் எங்களுக்குப் பறை அந்தரங்க கைங்கர்யமே –

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

நல்லது செல்வோம் வாருங்கோள் -எழுந்து இருக்கிறான்

நாதா முடிவில் ஒரு வேண்டுகோள் -அதற்கும் அருள வேண்டும் -இவ்வாய்ப்பாடியில் நாங்கள் பறை கொண்ட வழியை இப்படியே நோன்பு நோற்பவரும் பாடுவோரும் நடிப்போரும் கேட்ப்போரும் நினைது திரு முகத்துச் செங்கண் இறைக் கருணைப் பார்வைக்கு இலக்காகி இன்பம் பெற வேண்டும்

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

அப்படியே ஆகுக

எல்லோரும் செல்கின்றனர்

ஆறாம் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று

—————–

ஆறாம் அங்கம் -மூன்றாம் களம்
திருவரங்கம்
ரங்கராஜனும் கருடனும் தனித்துப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்

நண்ப இவ்வுலகில் காமத்தீயை விடக் கொடியது ஒன்றுமே இல்லை – தீ தன்னைத் தொட்டால் தான் சுடும் – காமத்தீயோ பிரிந்தால் சுடுமதாய் யுள்ளது -தீயினும் கொடிய இத்தை நான் எப்படி ஆற்றுவேன்

அரசே தாங்கள் காமத்தை அவ்வளவு இழிவு படுத்தி விடக்கூடாது -காமத்தைப் போல் இனிது இவ்வுலகில் கண் உள்ளதோ

ஆமாம் காமம் இனிதானது தான் -அம்ருதமாவது அருந்தும் போது தான் இனிமை பயக்கும் -இதுவோ அனுபவத்தை நினைத்தாலே அளவில்லா மகிழ்ச்சி யூட்டுகிறது – ஆயர் குலத்திலேனும் அம்மங்கையை நான் அனுபவித்ததை நினைத்தால் இப்பொழுதும் என்ன ஆனந்தம் உண்டாகிறது –

அப்ப இருக்கத் தாங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்களே

கவலை இல்லாமல் எப்படி இருக்க முடியும் -முன் அனுபவத்தை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தால் போதுமா -பழம் கணக்கு பசி ஆற்றுமா -அவ்வனுபவத்தை இப்பொழுது நினைத்துச் சிறிது மகிழ்வதால் தான் பிரிந்து வருந்தும் இந்நிலையிலும் உயிர் வாழ முடிகிறது -இனி அதுவும் முடியாது போல் இருக்கிறதே-

ஏன்

இதோ பங்குனி போக இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன -பின்னர் என்ன காலம் வரப்போகிறது தெரியமா -நினைக்கும் போதே உடல் நடுங்குகிறது

வஸந்த காலம் வரப்போகிறது

அப்பா என்ன கஷ்டம் -அது மதானன் செங்கோல் நடாத்தும் காலம் -கூற்றுப் போல் குயில் கூவும் காலம் -ஐயோ

அரசே அஞ்ச வேண்டாம் -அக் காலத்திற்குள் அம் மங்கையைக் கைப் பிடித்து விடுவீர்கள்

இப் பங்குனிக்குள்ளேயா

ஆமாம்

எனக்கு என்னவோ நண்பன் வார்த்தையை கூட நம்பிக்கை யுண்டாக வில்லை -தையிலும் மாசியிலும் தூக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டே காலம் கழித்தேன் -இம்மாதத்திலோ அதுவும் முடியாத -உயிர் இருந்தால் தான் இந்தக்கவலை எல்லாம்
பெரு மூச்செறிந்து -ஆஹா அப்பெண்மணியின் அழகை நான் மறுமுறை காணாமலா போகவேண்டும் -நல்லது -அடே மாரனே -வஞ்சக -இரும்புகள் தான் உனது பாணங்கள் -பூ அரும்புகள் அன்று-அடே பாதக -அவள் மீதும் இது போலே நீ அன்பு எய்கின்றனையோ இல்லையே -ஐயோ என் ஆண்மை எல்லாம் எங்கே மாயமாய் மறைந்தன -நண்ப எனக்கு என் ராஜ்யம் கைவிட்டுப் போய் விட்டால் எவ்வளவு வருத்தம் உண்டாகும் -அதைவிடப் பன் மடங்கு இப்பொழுது வருத்தம் பொங்கி எழுகின்றது -என்ன செய்யலாம் -கருடன் மீது சாய்ந்து கொள்கிறார்

கருட -தனக்குள் -நம் அரசனின் நிலையை வெகு மோசமாகி விட்டது -இவ்வருத்தத்தை எப்படியாவது நாம் மறக்கடிக்க வேண்டும் –
வெளியில் -அரசே தாங்கள் முன்பு பாணன் என்பானொரு அசுரனை வென்று பெரும் புகழ் படைத்திருக்கிறீர்கள் -ஆனால் இங்கே இப்பொழுது பஞ்ச பாணர் போராட்டம் பொறுக்கக் கூடியதாய் இல்லை -தாங்கள் கூட அவரை வெல்ல முடியாத போலிருக்கிறது-

எழுந்து பஞ்ச பாணரா -ஒருவன் போனான் -பஞ்ச பேர் முளைத்து இருக்கிறார்களா -எங்கே அவர்கள் -வில்லெடுத்து நாண் ஏற்றுகிறார்

தாங்கள் அவரை வெல்வது அரிது

ஏன் நீயே இப்படி சொல்கிறாய்

தாங்கள் உட்பட மூ உலகையும் அடக்கும் ஆற்றல் படைத்தவர் அவர் -ஆதலின் இவ்வாறு கூறினேன்

கோபத்துடன் என்னை அடக்கும் ஆற்றலா -இனி மேல் அல்லவா அது தெரியப் போகிறது -காண்பி அவர் இருக்கும் இடத்தை -இவருக்கும் பரசிவன் ஸஹாயத்துக்கு வந்திருக்கிறானா –

இல்லை இல்லை அவர் இவன் உடலை எரித்து விட்டார்

எரித்தது மன்மதனை அன்றோ

ஆம் அவரைத்தான் பஞ்ச பாணர் என்று கூறினேன் -அவருக்கு ஐந்து பாணங்கள் உண்டு அன்றோ –

ரங்கராஜன் நாணித்தலை குனிகிறார்

வீரனுக்கும் வில்லுக்கும் சேர்ந்தால் போல் நாண் -வெட்கமும் -ஏறி விட்டதே

நண்ப நீ கூட என்னைப் பரிஹசிக்கின்றனையே -நல்ல தருணம் பார்த்தனை -ஐயோ அந்த சுந்தரிக்காக நான் என்ன பாடெல்லாம் பட வேண்டி இருக்கிறது -அடி சுந்தரி -உனக்குக் கொஞ்சம் கூடத் தயை இல்லையா

கையிலே இருந்து வில் நழுவுகிறது -சோர்ந்து உட்க்கார்ந்து விடுகிறார்

கருடன் -தனக்குள் -சிறிது மறக்கடித்தே னாயினும் மறுபடியும் அந் நினைவுக்கே நம் அரசன் திரும்பி விட்டார் -ஆகட்டும் -சமாதானப் படுத்திப் பார்க்கிறேன்
வெளியில் -ஆழ் மனம் உடையீர் -தங்கள் மனத்திலும் துக்கம் தலை தூக்கலாமா -கப்பல் சென்றாலும் கடல் கலங்குவது உண்டோ

நண்ப-கப்பல் சென்றான் கடல் கலங்காதது என்பது உண்மையே -ஆனால் மலை கொண்டு அலை கடல் கடையும் போது கடல் எவ்விதம் கலங்கியது -மலை போல் வந்த இப்பிரிவினால் எனது மனக்கடல் ஏன் கலங்காது

அரசே தாங்கள் இனி அம் மங்கையைச் சேர சங்கை கொள்ள வேண்டாம் -ஏன் எனில் இம் மங்களப் பங்குனிக்குள் அவள் தங்களைச் சேர்ந்தால் ஒழிய உயிருடன் இருக்க முடியாத நிலைக்கு வந்து விட்டனள்

அப்படியே அவள் இங்கே என்னைத் தேடி வரப் போகிறாளா

வந்து விட்டதாகவே தீர்மானித்துக் கொள்ளுங்கோள்

ஆச்சர்யத்துடன் -வந்து விட்டனளா -எங்கே -நாலு பக்கங்களிலும் பார்த்து-ஆம் நண்ப நீ கூறியது உண்மையே -அப்பெண்மணி இதோ வந்து விட்டனள் -என்ன ஆச்சர்யம் -புன்முறுவலுடன் அவள் காணும் அழகைப்பார்-ஆஹா இந் நுண்ணிடை பெருத்த இரு கொங்கைகளையும் எப்படித் தாங்குகிறது –

மையோ குழல் மழையோ முகமதியஞ்சிருள் திரளோ
வெய்யோன் மதன் வளைவில் விடு கணையோ விழி வேலோ
ஐயோ இரு பெரு மா மலை அழகாருமோர் கொம்பின்
பொய்யோ வெனும் இடை தன்னிடை பொருகின்றதே அம்மா

எனது உயிரே வா மயிலே வா குயிலே வா கொஞ்சு கிளியே வா -இதுகாறும் விரஹத்தால் வெந்த எனது நெஞ்சினை குளிரச் செய் -எனது ஆசைக்களஞ்சியமே உயிரைப்போல் நமது உடலையும் ஒன்றாகச் செய்து விடு -இனிப்பிரிய முடியாதபடி
சுவரண்டை ஓடுகிறார்

கருடன் – விரைந்து முன் சென்று அறிவுடை மேலோய் -அப்பெண்மணி இன்னும் வந்துவிடவில்லை -நினது கைக்கொண்டு வரைந்த சித்ரமிது

ரெங்கராஜன் திடுக்கிட்டு பிரமித்து நிற்கிறார் -கருடன் கைகொடுத்து ஆசனத்தில் அமர்த்துகிறார்

சிறிது நேரம் கழித்து -நண்ப இது சித்ரமா -என்ன விசித்திரம் -சித்திரத்திலேயே இவ்வளவு வனப்பும் கவர்ச்சியும் -நேரில் கண்டாய்

ஆல் எதற்கு -தாங்கள் நேராக கண்களார அம்மங்கையின் வனப்பைக் கூடிய சீக்கிரத்தில் பருகப் போகிறீர்கள்

நண்ப நான் நினைக்கிறேன் -என்னைப் போலவே சித்திரம் எழுதி பிராமணாள் உயிர்ப்பிக்கப் பட்டவள் தான் அவ்வனிதா மணி என்று

அப்பெண்மணியை பிரமன் ஸ்ருஷ்டிக்க வில்லை -இந் நாநிலத்தின் சாரமே உருவெடுத்தால் போல் தானே வந்து உதித்தனள்-

ஒக்கும் -பிரமனுக்கு இத்துணை வனப்பு வாய்ந்த ஓர் பெண் மணியைப் படைக்கும் திறமேது -நண்ப இச் சித்திரத்தை எடு -என் நண்ப இச் சித்திரத்தில் அவள் அழகில் கோடியில் ஒரு பங்கேலும் காணப்படுகிறதோ –

முழு அழகும் காணப்படுகிறது -அதனால் தானே அப்பெண்மணியை நேரிலே கண்டாற் போலே தங்களுக்குப் பிரமம் உண்டாயிற்று –

அவளும் சித்திரத்தில் வல்லவளாய் இருப்பாள் அல்லவா

ஆம் அதை அவள் எழுதிய எழுத்துக்களே உணர்த்துகின்றனவே –

உண்மை தான் -சுசீலையின் மூலமாக வந்த கடித எழுத்துக்கள் என் கண் முன்பே நிற்கின்றன -அக்கடிதம் எனக்கு சிறிது ஆற்றல் அளிக்கிறது -அதனால் அக்கடிதத்தை நான் கீழே வைப்பதே கிடையாது –
கடிதத்தை எடுக்கக் காணாமல் -அந்தோ என் செய்வேன் -அழுகிறார் –

அரிய வீரனே இது என்ன செயல் -நான் கடிதத்தைக் கண்டு பிடித்துத் தருகிறேன் -தைரியத்தைக் கைக்கொள்க –

இதற்குள் சபை கூடுவதற்காக மணி அடிக்கப்படுகிறது

நண்ப சபை கூட மணி அடித்தாகி விட்டது -இச்சித்திரத்தைப் பத்திரமாக மறைத்து வை

கருடன் அவசரத்தோடு மறைத்து வைக்கிறார் -சபையோர்கள் வந்து வணங்கி தக்க ஆசனத்தில் அமருகின்றனர் -பிராட்டி ரெங்கராஜனுடன் ஸிம்ஹாஸனத்தில் அமருகிறாள்

இதற்குள் ஓர் சேவகன் வாயிலில் பெரியாழ்வார் வந்து இருப்பதாகத் தெரிவிக்கிறான்

உடனே அவரை அழைத்து வா

உத்தரவுப்படி -செல்கிறான்

பெரியாழ்வாரும் ஆண்டாளும் வருகின்றனர் -ரெங்கராஜன் முதலிய யாவரும் எதிர்கொண்டு வரவேற்கின்றனர் -யாவரும் ஆசனத்தில் அமருகின்றனர் -ஆண்டாள் மட்டும் நிற்கிறாள் பெரியாழ்வார் பக்கலில்

அரங்கச் செல்வம் ஓங்கட்டும்

ரெங்க -தனக்குள் நான் இதுகாறும் எவளுக்காக அளவில்லாமல் அல்லால் பட்டேனோ -அந்நங்கை இதோ வந்து விட்டனள் -பிராட்டி என் மார்பில் தான் வசிக்கின்றனள் -இப்பெண்மணியோ என் நெஞ்சினுள்ளேயே நித்ய வாஸம் செய்கின்றனள் -ஆனால் பிராட்டி முன்னிலையில் இவளை நாம் எப்படிப் ஏற்பது
வெளியில் -அந்தணர் ஏறே எங்களை சன்மானித்து இங்கு எழுந்து அருளிய காரணத்தைக் அறிய விரும்புகிறேன்-

பெரியாழ்வார் -இவ்விடத்து ஸ்ரீ முகப்படி இப் பெண் மணியை இங்கே சமர்ப்பிக்க வந்தேன்

ஆச்சர்யத்துடன் -ஸ்ரீ முகமா–ஏது ஸ்ரீ முகம்

திடுக்கிட்டு -என்ன அதற்குள் மறந்து விட்டீர்களா

நான் தங்களுக்கு கடிதம் எழுதவில்லையே

இதோ தங்கள் கடிதம் இருக்கிறதோ -கடிதத்தைக் காட்டுகிறார்

இது என் கடிதமா

ஆம் தங்கள் கையெழுத்து கூட இருக்கிறதே

நான் தங்களுக்குக் கடிதம் எழுதியதாக ஞாபகம் இல்லையே

தங்களுக்கு ஞாபகம் இல்லை -அரசரான படியால் -நான் கடிதத்தை நேராகக் காட்டுகிறேன் -அதற்கு என்ன செய்வது-

கருட அதை வாங்கிப்பார் -நான் கையெழுத்திட்டு இருக்கிறேனா என்றும்

வாங்கி -ஆம் இது தங்கள் கையெழுத்து தான்

ஆச்சர்யத்துடன் அப்படியா -அதைப்படி கேட்போம்

கருடன் வாசிக்கிறார்
ரெங்கராஜன் -திருவரங்கம்
அன்பு மிகுந்த பட்டர்பிரானுக்கு
நாம் தங்கள் காதல் புதல்வியின் காதல் பக்தியில் கட்டுண்டோம் – திருமகளும் இசைந்தனள் -நிகழும் பங்குனியில் உத்தர நாள் பவுர்ணமி திதி வெள்ளிக்கிழமை அன்று அன்பு மிக்காளை அழைத்து அவைக்கண் வரவும் -நாம் மனம் உகந்து ஏற்றுக் கொள்வோம்
இங்கனம்
தங்கள்
அழகிய மணவாளன்

ஆஹா இது என்ன ஆச்சர்யம் -நான் இப்பெண்மனையை அழைத்து வரும்படி எழுதினேனா -இல்லவே இல்லை -இது ஏதோ சூழ்ச்சியாக இருக்கிறது –

கோபத்துடன் -சூழ்ச்சியா வெகு அழகாகச் சொல்கிறீர்கள் -பிறந்தது முதல் கபடம் என்பதையே கேட்டு அறியாத எம் போன்றோர் செய்கை ஓர் பெரிய ராஜ்ய அதிகாரிக்குச் சூழ்ச்சியாகத் தோன்றும்-

அந்தணரரே சினம் கொள்ளக் கூடாது -நான் கடிதம் எழுதி இருந்தால் கணக்கில் இருக்கும் அல்லவா

இது என்ன ராஜீய விஷயமா -கணக்கில் வரிசை எண்ணம் நகல் காப்பி முதலியவை இருப்பதற்கு –

ராஜீய கணக்கில் இல்லாதாயினும் சொந்தக் கணக்கிலாவது இருந்தே தீரும்

சொந்தத்திலும் இது ரஹஸ்யமாயிற்றே

இது ரஹஸ்யமானால் கடிதத்தில் அவைக்கண் வரும்படி எழுதியிருக்குமா -தாங்கள் தான் சபைக்கு வருவீர்களா

அப்படியானால் கணக்கைப் பாருங்கள

கருடா கணக்கைப் பார்

கடிதக் குறிப்பு கணக்கைப் பார்த்து -இதில் தாங்கள் கடிதம் எழுதியதாகக் காணவில்லை

நாம் பொய் சொல்கிறோமா

பிராட்டியை நோக்கி -ஏன் அம்மா தாங்களும் இசைந்ததாகக் கடிதத்தில் காண்கிறதே -தாங்களாவது இவ்விஷயத்தில் நியாயம் கிடைக்க வழி செய்யலாகாதா –

தனக்குள் -என் கணவன் இப் பெண்மணியிடம் காதல் கொண்டதை எனக்காக மறைக்கின்றனன் -இனிப் பொறுத்துப் பார்ப்போம்
வெளியில் -ப்ராஹ்மண உத்தமரே இதுவரையிலும் என் கணவன் இப்பெண்மணியிடம் காதலன் கொண்டதாகவே தெரிவிக்க வில்லையே

இது என்ன அரசனே இவ்விதம் செய்தால் கேட்பது யார் -இது இருக்கட்டும் -தங்கள் இப்பெண்மணியை விரும்பியதற்கு வேறே சில சான்றுகளும் இருக்கின்றன -அவைகளை இப்பெண்மணியைக் கொண்டே சொல்லச் சொல்லுகிறேன்
ஆண்டாளை நோக்கி -இனி அஞ்சுவதில் பயனில்லை -முன்னர் நடந்தவைகளை இப்போது தெரிவித்து விடு

நாணிக் குனிந்து -நான் இச்சபையில் கூசாது எப்படி தெரிவிப்பேன்

ரங்க -தனக்குள் -அந்தோ நான் எவ்வளவு வன்னெஞ்சன் -வலிய வரும் மணியைத் தெருவில் எறிவாருண்டோ -இப்பெண்மணி பிராட்டி முலம் என்னையே அடையாலாகாதோ -இவள் தன் செஞ்சொற்கள் நெடுநாள் தேனில் ஊறின போலும் -ஐயோ தேனுள்ள இடமும் தெரிந்தும் செல்ல மாட்டா வண்டினம் போல் தவிக்கின்றேனே

குழந்தாய் பயப்படாதே தைர்யமாகச் சொல்லு

ஆண்டாள் வெட்கத்தால் சொல்ல மாட்டாதே குழறுகின்றனள்

ரெங்கநாயகி -தனக்குள் -எனக்காக எனது நாதன் காதல் கொள்ளாதவன் போல் நடிக்கின்றனன் -இந்நங்கையோ நாணத்தால் சொல்ல மாட்டாதே தவிக்கின்றனள் -இந்நிலையிலும் நான் வாளா இருத்தல் தகாது
வெளிபடையாக -நாத தங்கள் மனம் இப்படிக் குழப்பம் அடைந்தால் என்ன செய்வது-இப்பெண்மணியிடம் அடங்காத காதல் கொண்டும் நீங்கள் ஏன் மறுக்கின்றீர்கள் -உங்கள் காதலன் இக் கடிதம் தான் நன்கு வெளிப் படுத்துகின்றதே

நான் இக்கடிதம் எழுதவே இல்லையே

நாதா ஏன் மறைக்க வேண்டும் -உங்கள் இருவர் காதலையும் நான் நன்கு அறிவேன் -இப்பெண்மணியிடம் வந்த கடிதமும் என் கை வசமே உள்ளது –
கடிதத்தைக் காட்டுகிறாள்
தங்களது சயன அறையில் இரு மூன்று தினங்களுக்கு முன்பு நான் கண்டெடுத்தேன் -இக்கடிதத்தில் அலர் வாழ் மங்கை–அலகிலா அகன் மார்போனே -என்று குறிப்பிட்டதைக் கண்டு நான் பெரு மகிழ்சி அடைந்தேன்-

இவள் என்னைப் புருஷகாரமாகப் பற்றி இருக்கிறாள் -ஆதலின் இவள் பேரின்பம் பெற நான் முயற்சித்தேன் -உடனே உங்கள் கையெழுத்திட்டு நானே இக்கடிதம் எழுதி அனுப்பினேன் -இப்பெண்மணி எழுதின கடிதத்தைக்கொண்டேனும் ஆறி இருக்கும் உங்களுக்கு இதைக் காணாமல் பெரும் துன்பம் அதிகமாக விடப் போகிறதே என்று இறையும் பிரியாதே இரண்டு மூன்று தினங்களாக விநோதமாக போது போகும்படி செய்தேன் -இதற்குள் எவ்விதத்தேலும் இன்று இப்பெண்மணியை அழைத்து வரும்படி பணியாட்களையும் அனுப்பினேன் -இன்று இவள் வரும் நாளாகையாலே நான் தங்களை நெருங்க வில்லை -ஆகையால் கோபத்தை விட்டு இம் மாதை ஏற்று அருளுங்கோள்-

ரெங்க -புன்முறுவலுடன் உன் அனுமதிக்குத் தான் இவ்வளவு தாமதம்

ரெங்கநாயகி கீழ் இறங்கி ஆண்டாளையும் ஆசனத்தில் ஏற்றி அரியனது அருகில் அமரச் செய்து தானம் அமருகின்றனள்

பெரியாழ்வார் -மெய்மறந்து -ஆஹா என்ன ஆனந்தம் -எனக்கு எத் துணைப் பெருமை கிடைத்து விட்டது–இத் தகைய பெண்மணியைப் பெற்றதால் அன்றோ சர்வலோக சரண்யனைக் கண்ணாரக் கண்டு களிக்கும் பெற்றுமை பெற்றேன் -கடும் தவம் புரிந்தும் நெடும் கணாளை அடுக்க மாட்டாது இடர்பாடும் மானிடருக்கு ஓர் அளவுண்டோ –முள்ளுடைத்தேனும் மணமுள்ள மலர் தருவதால் அன்றோ தாழையை மாந்தர் மதிக்கின்றனர் -அதே போல் யானும் கோதை -மாலை -ஆண்டாளுமாம் -கொடுப்பதால் அன்றோ அரங்கனால் மாமனார் என மதிப்பிடப் பெற்றேன்-ஆஹா என் பெண்மணி மணவாளர் அரவணைப் பள்ளி கொள் மணவாளரோடு மணம் பிரிந்து கூடி விட்டனள் -இவ்வுயரிய தம்பதிகட்க்குத் திருஷ்ட்டி வாராமே பல்லாண்டு பாடுவோம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஆஹா அவ்வருள் இறைச் செங்கண் மாலினைக் கண்டு கொண்டே இருந்தால் போதாதோ -ஆராவமுதன் அன்றோ அவன் –
கண்ணை விழித்துப் பார்த்து அங்கு ஒருவரையும் காணாது ஏங்கி
அந்தோ அம் மாயப் பிரானை மறைந்தான் போலும் -ஞானப்பிரானை இவ்வூனக் கண்ணாலே எவ்வளவு நேரம் தான் காண முடியும் -கோதாய் நீ நெடுநாள் ஸேவை தந்தவளாயிற்றே -நீயுமோ மறைந்தனை -கோதாய் -உன்னைச் செங்கமலச் செல்வி போல் வளர்த்தேன் -அது போல் அங்கும் நீ வளருவாயா -அந்தோ எனக்கு வேறு ஒரு மகவும் இல்லையே -நீ அஞ்சு குடிக்கு ஒரே சந்ததி யாயிற்றே -இனி யார் முகம் கண்டு மகிழ்வேன்-

ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போலே வளர்த்தேன் செம்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை
மருமகளை கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -3-8-4-

அசரீரி -மாமா வருந்த வேண்டாம் -நாம் வில்லி நகரில் நின் மகளுடன் அரங்க மன்னார் எனப்பெயர் பூண்டு மணமகனாய் ஸேவை ஸாதிக்கிறோம் -மகிழ்வுடன் செல்வீராக

தன்யோஸ்மி -முன்பும் நின் மகள் என்ற அமிழ்தைச் செவி மடுத்தேன் -இப்பொழுதும் அதே போல் -ஆஹா அரங்கன் நான் இருக்கும் இடம் தேடி வரப் போகிறான் -வேறு இனி என்ன வேண்டுவது

வாழ்க அழகிய மா மணவாளனார்
வாழ்க மலரிடை வாழ் மணவாட்டியும்
வாழ்க மலர் முடி வைத்த மணாட்டியும்
வாழ்க இறை கழல் வாழ்த்துமவர்களே

செல்கிறார்

ஆறாம் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று

ஆறாம் அங்கம் முற்றிற்று

வாழ்க வாழ் கடல் வையகம் எல்லாம்
வாழ்க வாழ் கருத்துள்ளுடைக் கவி வரர்
வாழ்க வாழ்வார்கள் இம்மண் மிசை வாய் மொழி
வாழ்க வாழ்க இம்மார்கழி நோன்புமே

—————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பாவை அனுபவம்-முதலும் மற்றவையும் -இரண்டாவதும் மற்றவையும் -இத்யாதி-இங்கும் அங்கும்- —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் –ஸ்ரீ வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் உடன் தொகுத்தவை–

January 3, 2025

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி
எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்கிற இடத்தில்
முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்திலே
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று

கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது

நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும்
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்

கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்

நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும்
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

முதலில் அருளிய -நாராயணன் பர வஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –-ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு-அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் (பெரிய திருமொழி -6-10 )என்று – அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் – அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது –மாதாவின் முன்பு பிரஜைகள் செய்த குற்றம் பிதாவுக்கு தோற்றதால் போலே பிராட்டி சந்நிதி யுண்டானால் சேதனருடைய அபராதங்கள் அவனுக்குத் தோற்றாது-பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை – ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும் அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது-பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை – பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே போக்க வல்லவன்-அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற
நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம் –

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –

மா மாயன் மாதவன் என்றும் –
கேசவனைப் பாடவும் -என்றும் –
மா வாய் பிளந்தானை என்றும் சொன்னவற்றோடே தலைக் கட்ட வேணும் 

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த ஞான சக்திகளும் தோற்றுகையாலே நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்–கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும்
நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும்
சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்

முதலில் அருளியதே விவரித்து மேல் 29
பாசுரங்களும் நாராயணனே நமக்கே பறை தருவான் -பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம் இது தன்னையே மேலில் பாட்டில் விபரிக்கின்றான –

மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்-
மேல் பிராபகம் –பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –

முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –

நந்த கோபன் குமரன் –பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி-வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால்
இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –

பட்டர் பிரான் கோதை
பாராசர்யனான வியாசன் என்று ஆப்திக்குச் சொன்னால் போலே பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு இவளுக்கு உத்கர்ஷ ஹேது-பெரியாழ்வார் மகள் ஆகையாலே சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –ஆற்றப் படைத்தான் மகனே -என்று இறே
ப்ரதிபாத்யனுக்கு ஏற்றம் –விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்று இவருக்கு தேவராய்
வட பெரும் கோயில் யுடையான் நிறம் பெற்றான் –இவர் மகளாய் ஆண்டாள் நிறம் பெற்றாள்-ஒரு மகள் தன்னை யுடையேன் என்று இவள் சம்பந்தம் இறே
தமக்கு உத்கர்ஷமாகச் சொல்லுவது 

நந்த கோபன் குமரன் –யசோதை இளஞ்சிங்கம் -முதலிலும் -அம்பரமே பாசுரத்திலும்-நந்தகோபாலா எழுந்திராய் -யசோதா அறிவுறாய் – தாய் தந்தை -உண்டே
வகுள மாலிகை -திருமலை நம்பி -இருவருமே திருமலையில் உண்டே
பெற்றும் பேறு இழந்தது தேவகியும் புற்றும்

முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல் ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –

கார்மேனி -செங்கண்-
வடிவாலே அணைத்து-கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து-கண்ண பிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல் ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார் மேனி” எனப்பட்டது.-தங்கள் ஆடப் போகிற தடாகம்(கார் மேகத்தில் அன்றோ நீராடப்போகிறார்கள் )-செங்கண் அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் – அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே–அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே–ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை –இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –

செங்கண் திரு முகத்து
பெண்களைக் கண்ட பின்பு அலப்ய லாபத்தாலே திருக் கண்களும் செவ்வி பெற்று
திரு முகமும் குளிர்ந்த படி-கண்ணன் கோள் இழை வாண் முகம் – அதிலே நீரார் கமலம் போல் செங்கண்- தோழிமார் பாரி கோள் என்று ஒருவருக்கு ஒருவர் காட்டி அனுபவித்த
கடாக்ஷமும் முகமும்-செங்கண்-கதிர் மதியம் போல் முகத்தான் – பங்கயக் கண்ணானை –
செங்கண் சிறுச் சிறிதே –-அங்கண் இரண்டும் கொண்டு என்று முடிய இம் முகமும் கடாக்ஷமும் இறே இவர்கள் நெஞ்சிலே கிடந்தது –
திங்கள் திருமுகம் -என்று ஸ்ரீ கோபிமார் முகத்தையும் அவர்கட்க்கு அனுபாவ்யனானவன் -செங்கண் திருமுகம் -முகத்தையும்
ஒரு முகப்பட அனுபவிக்கிறார்கள்-

——–

1-7-10 மூன்றிலும்நாராயண குண த்ரயம் அருளி காட்டுகிறாள்நாராயணனே நமக்கே பறை தருவான்-இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்–சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –நாராயணன் மூர்த்தி-கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ–கண்ணுக்குத் தோற்றாதே நின்று ரஷிக்கும் சர்வேஸ்வரன் – ஆஸ்ரித வத்சலனாய் இங்கே வந்து அவதீரணன் ஆனான் அங்கே கேசி வந்து கிட்டினான் காண் என்கிறார்கள்–நாராயணன் – முகம் தோற்றாமே நின்று- வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும்நாராயணன் –அவனுக்கு எங்களைப் போலே கதவு திறக்கப் பார்த்து இருக்க வேணுமோ – வ்யாப்திக்கு பிரயோஜனம் -வேண்டின இடத்தே -ஸ்புரிக்க வல்லனாகை அன்றோ – உகவாதாரையும் விடாதவன் உகந்த உன்னை விடுமோ –உகவாதார்க்கும் சத்தையை நோக்கி உகந்தார்க்கு வத்சலனாய் இருக்குமவன் அன்றோ –நாற்றத் துழாய் முடி நாராயணன் -ஆசைப் பட்டாரை ரஷிக்கைக்கு தோள் மாலை இட்டு இருக்கிறவன் அன்றோ-நாராயணன் -இங்கு மூன்றாவது -நாரங்கள் -ரிங் க்ஷய -அழியாத பொருள்கள் –அழியாத குணக்கடல் நிறைந்தவன்-ரம் -அழிய வைக்கும்
கீழ் இரண்டும் macro minute -பஹு வ்ரீஹீ தத் புருஷ சமாஹ அர்த்தங்கள் -புறமும் உள்ளும் வியாபித்து –

———

1-28-29-
முதலில் அருளிய -பறை தருவான் -என்றதை -பிராப்ய பிராபகங்களை
சிற்றம் -கறவைகள் -விவரித்து அருளுகிறாள் –பறை என்று பிராப்யம் சொல்லி -தருவான் பிராபகமும் –பிராப்யம் முன்னாக அருளி -பிராபகம் பின்னாக அருளி -வயுத் பத்தி வேளையிலே -இப்படி –சப்த த்வயத்திலே அருளியதை காதா த்வயத்தாலே விவரிக்கும் இடத்து கறவை -என்று பிராபகம் முன்னாக -சிற்றம் என்று பிராப்யம் பின்னாக -அனுஷ்டான வேளையிலே இப்படி மாறாடி தான் இருக்கும்

முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்- சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது – நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம்

உன் பொற்றாமரை அடி -என்றும் –சரண -சப்தார்த்தமும் –

சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –

மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே – மாதவனே என்றும் – மாதவனை என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –செல்வத் திருமாலால் -என்றும் – பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-

——-

முதலும் 29 பாசுரமும்
முதலில் பிராப்ய பிரதிக்ஜை-29 பாட்டில் பிரப்யத்தை -கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –என்று நிஷ்கர்ஷிக்கிறாள் –
முதல் பாட்டில் -பறை -என்று மறைத்து கூறப்பட்டு -அதை இங்கே வ்யக்தமாக்கப்பட்டது –

——–

முதலும் இரண்டாவதும் -முதல் பாசுரத்தில் நாராயணனே -ஏவகாரம் -மாமேகம் என்றால் போலே-உபாய நைர பேஷ்யம் -நிர பேஷ உபாய பூதன் இறே பரமாத்மா –
இரண்டாம் பாட்டில் நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -சில வியாபாரங்களை கர்தவ்யங்களாக கூறுவது -நிர பேஷ உபாயத்வ பஞ்சகம் ஆகாது – உபாயத்வேன துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லை கைங்கர்ய ரூபேண சாஸ்திர விஹிதங்களை கர்தவ்யங்கள் என்றபடி

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –செய்யும் கிரிசைகள்-பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை —இச்சைக்கு விதேயத்வம் உண்டோ – நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள் –கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் –நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்-அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –

—————-

முதல்-26-30
முதல்-29-30-
முதல் பாட்டில் மூல மந்த்ரார்த்தையும் –
26 பாட்டில் சரம ச்லோகார்த்தத்தியும் –
30 பாட்டில் த்வயார்த்தத்தையும் அனுபவிக்கலாம் -29 பாட்டில் மூல மந்த்ரார்தம் வியக்தம் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற – ஸ்வரூப-உபாய-புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –ஆகையால் இப்பாட்டு திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று – இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.இம்மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை

மாலே மணி வண்ணா–நாராயண பரமாத்மா பரஞ்சோதி பரம தத்வம் பராயணம்-ஆனந்த மயன் -சாம்யாபத்தி பிரார்த்தனை இதில்-சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மம் -புண்ய பாப விதூய -நிரஞ்சன் பரம சாம்யம் உபைதி –கண்ணனையே கையில் கொண்ட இவர்கள் திண்ணைப் பேச்சும் ஸாஸ்த்ரம் -)ஆலின் இலையாய் அருள் – என்று நிர்ஹேதுக மாக்கினர்.-வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்
ஈண்டு அன்றன்னை புலம்பப்போய் ஓர் ஆய்க்குலம் புக்கதும்
காண்டலின்றி வளர்ந்து
–என்கிற படியே – க்ஷீராப்தியிலிருந்து மதுரைப்போந்து, அங்கிருந்து திருவாய்ப்பாடிக்கு தான் வந்த வரத்தை கணிசித்தார்கள் இல்லையோ என்று கண்ணன் வாய் திறவாமல் இருக்க நாராயணனே நமக்கே பறைதருவான் என்று ஸ்வ யத்ன ராஹித்யம் சொன்னவர்கள் தாங்கள் வந்தமை உபாயமாக நினைப்பிட்டனரோ என்று உதாசீனனாகவும் இருந்தமை போக்கி உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் என்று அனன்ய பிரயோஜனர்களாக வந்தார்களே என்று வியாமுக்தனாய் அது மணியின் நீரோட்டம் புறம் பொசிந்து காட்டுமா போலே அவனில் வெளிக்காட்ட , மாலே! மணிவண்ணா என்கிறார்கள்.-ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபயிதி – என்கிற ஸாம்ய பத்தி மோக்ஷம் சொல்லுகிற பாசுரம்.
போல்வன சங்கங்கள்
சாலப் பெரும் பறை
பல்லாண்டு இசைப்பார்
கோல விளக்கு
கொடி
விதானம்
உக்கம்
தட்டொளி
என்கிற 8 விஷயங்களை பிரார்த்தித்து அஷ்டவித ஆவிர்பாவத்தை
ஸோஸ்நுதே ஸர்வான் காமாந் ஸஹ பிரஹ்மணா விபஸ்சிதே – என்கிற முக்த போகத்தை கேட்கிறாள்.-பிரபன்னாதிகாரியினுடைய சஞ்சித + ஆரப்த கர்மங்கள் இரண்டையும் பகவான் தானே – அஹம் துவா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – என்று காணாக் கண்ணிட்டு தள்ளி விடுகிறான். என்றாலும் பிரபன்னாதிகாரி விஷயத்திலும்
1. விஷயாந்தர ஸம்பந்தம்
2. தேவதாந்தர ஸம்பந்தம்
3. பாகவத அபசாரம்-மூன்றின் சம்பந்தமும் இல்லாத பக்ஷத்தில் மட்டும் – அஸ்மாத் சரீராது ஸமுத்தாய பரஞ்சோதிர் உபஸம்பத்ய – என்று தேஹாவசானே மோக்ஷம் என்ற படி .

உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யம் செய்யும் பொழுது ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து -ப்ரபல தர விரோதி –மற்றை நம் காமங்கள் மாற்று –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
ப்ராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே –
எனக்கும் பிறருக்கும் அல்ல எனக்கும் உனக்கும் அல்ல -உனக்கே –
மாம் -ஏகம் -என்னையே -ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்வது
இதே போல் ப்ராப்யத்தில் -அவன் ஆனந்தத்துக்காகவே -மேல் படி
போக்தாவாகவே இருக்க வேண்டும்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ரங்கள் போக்யங்கள்
அஹம் அன்னம் நாமே போக்ய பதார்த்தம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –நீராடப் போதுவீர் –
(இவள் எடுத்த எடுப்பிலே நீராடப் போதுவீர் )
எல்லாரும் போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில் முதலடியிலே நின்று
அது நிலை நிற்கைக்காக ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்-
(பாகவத கைங்கர்யம் நிலை நிற்க பகவத் கைங்கர்யம் வேண்டுமே )

கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த
ஞான சக்திகளும் தோற்றுகையாலே
நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்

7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

———————

இரண்டும் முப்பதும்
இரண்டாம் பாசுரத்தில் -பையத் துயின்ற பரமன் -பாற்கடல் கிடக்கை
30 பாசுரத்தில் கடைந்த -கடல் கடைந்த சரித்ரம்
பௌவ நீர் கிடந்தது –கடைந்த பெற்றியோய் -திருச் சந்த விருத்தம் -28

பையத் துயின்ற--பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே–ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி-முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி- இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும் மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது -சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி-பரமன்-தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே-திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு-வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது-கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்-சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்-வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் – அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை–கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக கடல் கடைந்தபடி –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்றுஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –(திருச்சந்த 28)-

கடைந்த பெற்றியோய் – துர்வாச சாபத்தால் தேவர்கள் இழந்த பதார்த்தங்கள் அடங்க கடலிலே உண்டாக்கிக் கொடுக்கைகாக அக்கடலைக் கடைந்த மஹா பிரபாவத்தை உடையவனே –பெற்றி -ஸ்வபாவம் – ஆஸ்ரிதர் இழவுகளை தானே வ்யாபரித்து தீர்க்கும் –

———–

இரண்டும் -29 th பாசுரமும்
அடி பாடி -திருப்பாத கமலங்களின் அனுபவம் -தொடங்கி
அடியே போற்றும் -திருவடிகளின் அனுபவம் முடிக்கிறாள் –

அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

அடி பாடி –மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே- திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்–பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே–அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி-அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூசகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா-உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
நாங்கள் உன்னைக் கால் காட்டுகிற போதே எழுந்து இராதே பின்னை தனித் தனியே கால் கட்ட இறே நீ புகுகிறது(ஸ்வரூப நாசம் ஆகுமே பாகவத அபசாரம்-அம்பரீஷன் துர்வாசர் )சிவந்து-ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்த வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்-பொற் கால் பொலிய விட்டுப் பிறந்த சீமானே-எழுந்திராய் –
பலதேவன் என்று திரு நாமம்-செல்வா பட்டம் – பலை கதா மநி -(ஆளவந்தார் )
அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்–இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ என்கிறார்கள்
வெறும் படுக்கையைக் கண்டு கொண்டு கிடக்க அமையுமோ-திருவனந்த ஆழ்வான் இறே தமையனாய்ப் பிறந்தான்-சென்றால் குடையாம் -இத்யாதியாக வேண்டாவோ –
உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –(நாரங்களுக்கு ஆஸ்ரயம்-நாராயணனே எங்கள் படுக்கை நீ தான் தர வேண்டும் என்கிறார்கள்)

மாற்றார் உனக்கு வலி தொலைந்து-உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே-சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று போக்கடி இல்லாமையாலே
உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே – மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே -என்றுமாம் –அம்புக்குத் தோற்றாரோ பாதி நாங்களும் குணங்களுக்குத் தோற்று வந்தோம் –லௌகிக சத்ருக்களடைய உன்னுடைய மிடுக்குக்கு தங்கள் வலி மாண்டு உன் திருவாசலிலே பழைய ராஜ்யத்தைக் கொடுத்து நீ போ என்றாலும் முன்புத்தை எளிவரவை நினைத்து பொறுக்க மாட்டாதே உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமா போலே –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி –பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே-யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி – -திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –-திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்-அடி போற்றி அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் – சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள் சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் – அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்-திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை – போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள் அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்-செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்

கழல் போற்றி-விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்உன் பொற்றாமரை அடியே –மகார்க்கமுமாய் போக்யமுமாய் பிராப்தமுமாய் இருந்த திருவடிகளிலே –அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –
வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை-சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை  அடியே –போற்றும்-ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்-அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி – தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை-அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை-அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி –அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே
(திருமார்பை ஆசைப்படும் அத்திரு-திருவடியை ஆசைப்படும் இத்திரு )உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ –காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்-அவை –உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் — வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –இது மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே இப் பொன்னடி இருப்பது –உன் –பொன்னடி – எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -(பொது நின்ற பொன் அம் கழல் )
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் – கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் – விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ –பொற்றாமரை அடி அன்றோ –சாதனத்வமும் சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –பாவனத்வமும் போக்யத்வமும்0ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்-பொன்னும் தாமரையும்-தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3) தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )-எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால் கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே அழித்தாய் உன் திருவடியால் -கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று
ஆசிரயணீயமும் இதுவே –அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று ஆசைப்படுவதும் இதுவே-ஆசானுகுணமாக தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 ) இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –

பரமன் அடி பாடி –அடி போற்றி – கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே-கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி ) ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –

———–

இரண்டும் முப்பதும் –
அடி பாடி -திருவடிகளை பிரஸ்தாபித்து கேசவனை -திருக் குழல் அனுபத்தில் முடிக்கிறாள்
பெரியாழ்வார் திருமொழி 1-2- போலே பாதாதி கேசம் அனுபவம் –

கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே -1-2-1-பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்து இட்டு இருந்தவா காணீரே ஒண் நுதலீர் வந்து காணீரே -1-2-2-கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3-முழம் தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே- 1-2-4-இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை  வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5-அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகில் நகையீர் வந்து காணீரே -1-2-6-நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே -1-2-7-நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே -1-2-8-பழம் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்வு இருந்தவா காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-10-தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே –1-2-11-நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத் தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே -1-2-12-அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே -1-2-13-தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே சேய் இழையீர் வந்து காணீரே -1-2-14-வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே -1-2-15-கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே -1-2-16-புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-எழில் கொள்மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே செய் இழையீர் வந்து காணீரே -1-2-18-பரமன் தன
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே -1-2-19-குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-20-சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

———-

இரண்டும் 29 th பாசுரமும் –
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
29th பாட்டில் கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –

செய்யும் கிரிசைகள் கேளீரோ–கேளீரோ – பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே- இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே- பகவத் விமுகர் கோலாஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே-என்று
அவர்கள் இந்த லாப அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்-இருக்கையாலே -கேளீரோ -என்கிறார்கள் –மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணும் காலம் —
அசை இடுவார் உண்டோ – இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ-ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-கேளீரோ -என்று அந்ய பரத்தையை தவிர்க்கிறார்கள்-இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்-இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல-போதயந்த பரஸ்பம் பண்ண – ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது தரிக்க ஒண்ணாதாய் இருக்கிற படி-கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் –கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து– நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –காதால் கேட்பது -முன்னோர் உபதேசம் கேட்பது-

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் – இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் – வடிவு அழகிலும் பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி அந்நிய பரனாய் இருந்தான் –எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால்
ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இறே இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு-கேளீரோ (2 )-என்று பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் – இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று-

—————–

மூன்று-17-21-
மூன்றிலும் திரி விக்கிரம அனுபவம்
அவனே திரி விக்ரமன் இறே

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி–ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே- பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே- மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி – பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் – உவந்த உள்ளத்தனாய் -என்னக் கடவது இறே-சதைக ரூப ரூபாய -என்கிற தத்வம் இறே சிறுப்பது பெருப்பதாகிறது-செய்யும் ஆனைத் தொழில்களும் — ஆஸ்ரித பக்ஷ பாதமும் – வடிவு அழகும் – வாத்சல்யமும் – அவன் ஒரு வூருக்குக் கை யாளானால் போலே இவன் ஒரு நாட்டுக்காக எளியனான படியாலுமாக-அணைந்து இருக்கையாலே சொல்லுகிறார்கள் –உத்தமன் – இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினான் ஆக அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கிறபடி-தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே – ப்ராப்யமும் ப்ராபகமும் தானே-

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி ஊடருத்து-விம்ம வளந்த – இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –உறங்குகிற பிரஜையைத் தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே இருந்ததே குடியாக எல்லார் தலையிலும் திருவடி களை வைத்தபடி –உம்பர் கோமானே – இச் செயலால் தேவ ஜாதியை எழுதிக் கொண்டவனே-ஆண்களுமாய் பிரயோஜனாந்த பரருமாய் வேணுமோ முகம் கொடுக்கைக்கு – அநந்ய பிரயோஜனைகளுமாய் அபலைகளுமானால் ஆகாதோ
எங்களுக்கு முகம் காட்டும் போது சிறுப்பது பருப்பதாக வேணுமோ – இருந்தபடியே காட்ட அமையாதோ-உன் வாசி அறியாதே அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை
உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ

அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி–பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே-திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –திரு உலகு அளந்து அருளின அன்று இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான் தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர
திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள் அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்-

————-

நான்கு -23 th பாசுரம் –
நான்காவது பாசுரத்தில் மேகத்துக்கு ஆண்டாள் நியமனம்
23 th பாசுரத்தில் மேக வண்ணனுக்கு நியமனம் –

இப்படி பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாரை இதர தேவதைகள் அனுவர்த்திக்க கடவர் ஆகையாலே- வர்ஷ தேவதையான பர்ஜன்யன்-நாம் இச் சேர்த்தியிலே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் -என்று வந்து- நான் இங்குத்தைக்கு செய்யும் அடிமையை நியமிக்க வேணும் -என்ன- செய்யக் கடவ படியை – இன்ன படியும் இன்ன படியும் -என்று-கையோலை செய்து கொடுக்கிறார்கள்-நாட்டார் சிறுமை பாராதே-உன் பெருமைக்கு ஈடாக வர்ஷி-உன்னுடைய ஔதார்யத்தில் ஒன்றும் மாறாத படி தோற்ற வேணும்-சமுத்ரத்திலே போய் புக்க வேணும் அதிலும் வாய்கரையிலே ஆக ஒண்ணாது -நடுவே சென்று இழிய வேணும் –கடலை மணலே சேஷிக்கும்படி கிரஹிக்க வேணும்-நாட்டார் விடாயும் எங்கள் விடாயும் கெடும்படி மின்னி முழங்கி வில் விட்டுத் துளித்துக் கொடு வர வேணும்-ஆகாச அவகாசம் இடமடையும் படி உங்கள் வடிவைக் கொண்டு பாரிக்க வேணும்-ஜகத் காரண பூதன் ஆனவனுடைய வடிவு போல் இருக்க வேணும்-அவன் அகவாயில் தண்ணளி இதுக்குத் தேட ஒண்ணாதே –இதினுடைய அகவாயும் நீர் அன்றோ என்னில்
அவன் நீர்மையைப் பார்த்தால் இது நெருப்பு என்னலாம் படி யன்றோ இருப்பது –சிருஷ்டிக்கு முதலான ப்ரஹ்மாவை சிருஷ்டித்த திரு நாபீ கமலத்தை உடைய-சர்வேஸ்வரன் கையில்-திரு ஆழியோ பாதி மின்ன வேணும்-பாரத சமரத்தில் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய த்வனி போலே இருக்க வேணும்- அனுகூலர் வாழவும் பிரதி கூலர் முடியவும் ஆக வேணும் -நின்று அதிர்ந்து – அது போல் ஒரு கால் முழங்கி விட ஒண்ணாது-மாறாதே நின்று அதிர வேணும் –ஆர்த்திக்கு முற்பாடனாய் ரஷிக்கும் ஈஸ்வரனைப் போல் ஆக வேணும்-

சீரிய சிங்காசனத்து இருந்து-நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ – பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது-சீரிய சிங்கம் என்றதோடு –அறிவுற்று என்றதோடு – தீ விழித்து -என்றதோடு – வாசி அற இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –இவையா இவையா என்று தனித் தனியே ஆகர்ஷகம் இறே-மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்-சிம்ஹத்தால் உன்னுடைய வடிவு அழகையும் குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ-உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம் ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே-புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி-சதுர்க்கதி இறே-நடையிலே ரிஷபத்தின் உடைய வீறும் மத்த கஜத்தின் உடைய மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை–எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் – எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்-இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-பெண்காள் –ஒருவரை ஒருவர் எழுப்பி – எல்லாரும் திரண்டு நம் வாசல் காக்குமவனை எழுப்பி –
ஐயரை எழுப்பி ஆய்ச்சியை எழுப்பி நம்மை எழுப்பி அண்ணரை எழுப்பி மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –

———

நான்காம் பாசுரமும் 16th பாசுரமும்
வருண தேவனை அழைக்கும் ஆய்ச்சியர் ஆழி மழைக் கண்ணா -என்கிறார்கள் –
இது இ றே ஸ்ரீ வைஷ்ணவ திரு நாமம் –
ஏகாந்தீ வயப தேஷ் டவ்ய நைவ க்ராம குலாதிபி
விஷ்ணு நா வ்யபதேஷ்டவய தஸய சர்வம ஸ ஏவ ஹி -என்னக் கடவது இறே –
ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் அடியான் என்று இறே —
இந் நியாயம் பதினாறாம் பாட்டிலே- கோயில் காப்பானே -வாசல் காப்பானே -என்ற இடத்திலும் ஒக்கும் —

ஆழி மழைக் கண்ணா —மழைக்கு த்ருஷ்டியாய் நிர்வஹிக்குமவன் ஆகையால் –
மழைக் கண்ணன் என்று அதிகரித்த காரியத்தை இட்டுச் சொல்கிறார்கள்–ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது, “குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால் இன்னது பிடித்தான் என்பது போலே –இவர்கள் தான் யாரேயேனும் அழைக்கையிலும் கண்ணா என்று ஒழிய அழையார்கள் கிருஷ்ணனோட்டை வாசனையால்-தேவதை அப்ரஸித்தம் ஆனமையாலும் தங்கள் ராஜ குலத்தாலும் இன்ன பணிக்குக் கடவன் -என்பாரைப் போலே தொழிலை இட்டுச் சொல்லுகிறார்கள் –

கோயில் காப்பானே –வாசல் காப்பானே- சிறு பெண்கள் ஆகையாலே அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் – இன்னது பிடிப்பான் -என்னுமா போலே அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –இத்தால் சேஷ வ்ருத்தி ப்ரயுக்தமான பேரே ஆத்மாவுக்கு நிலை நின்ற பேர் என்னும் இடம் தோற்றுகிறது-யதோசிதம் சேஷ இதீரி தேஜநை (ஆளவந்தார் )-என்றும் – ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய நைவ க்ராம குல -என்றும் சொல்லக் கடவது இறே-

———–

ஐந்தாம் -16 th -28 th -29 th பாசுரங்கள்
ஐந்திலும் 16 th பாசுரத்திலும் -தூயோமாய் -தூயோமாய் -என்று கூறப் பட்டது இறே  – சுத்தி
அறிவு ஒன்றும் இலாத ஆய்க் குலத்து பெண்களுக்கு சுத்தியாகச் சொல்லப் பட்டது -ஸ்ரீ வைஷ்ணத்வம் இறே-
அது ஆகிறது -அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் இறே
ஆத்ம யாதாத்மய ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு இந்த அசுத்தி இல்லாமை
இரண்டு பாசுரங்களிலும் சுருங்க கூறப்பட்டு -இது தன்னை 28 th -29 th பாசுரங்களில் விஸ்தரிக்கிறாள் ஆண்டாள் –

தூய பெரு நீர் யமுனை -அடி அறிவார் கூடப் போந்து கருத்து அறிந்து கார்யம் நடத்துமா போலே – திருவடி திருவனந்த ஆழ்வான் போலே கருத்து அறிந்து அவ் விருளிலே கிருஷ்ணனை எழுந்து அருளுவித்துக் கொண்டு போக முழங்கால் மட்டாக வெற்றிக்கு கொடுத்த சுத்தியைச் சொல்கிறது-தூய்மை யாகிறது பகவத் ஸ்பர்சம் இறே (கீழே கைங்கர்யம் )கிருஷ்ணனும் பெண்களுமாக ஜல க்ரீடை பண்ணி ஒருவருக்கு ஒருவர் கொப்பளித்ததால் வந்த சுத்தி யாகவுமாம் –ஜலக் க்ரீடையிலே பெண்களும் அவனுமாக கொப்பளிக்கையால் வந்த தூய்மை ஆகவுமாம்

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கதூயோமாய் -இடைச்சிகள் தூய்மை இறே – தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே
பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே –
அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே –
(தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ )விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது –
அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது –
திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா – அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா – நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –தூயோமாய் -அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தூ மலர் மிக்க சீர் தொண்டர் இட்ட பூம் துளவம்-என்றும் சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்றும்-
அநந்ய பிரயோஜனமான பூ விறே-பிரயோஜனத்தை கணிசியாது இட்ட மலர்-

தூயோமாய் வந்தோம்-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –பறை -என்று ஒரு வியாஜ்யம் –
அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் – அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய-ஸ்வ யத்னமாதல் ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் – உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –

————-

ஐந்து -21-25
பகவத் அவதாரத்தை மக ரிஷிகள் வசன அநு குணமாக -தோன்றும் -தோற்றம் -என்று வர்ணித்த ஆண்டாள் 25 பாசுரத்தில் ஆழ்வார்கள் திரு உள்ளப்படி பிறந்து என்கிறாள் -சம்சாரி தான் தாய் வயிற்றில் பத்து மாசம் தங்கி பிறக்கிறான் -அவன்- பிறப்பை அறுப்பானான பகவான்– பன்னிரு திங்கள் தாய் வயிற்றில் தங்கிப் பிறக்கிறான் –
இது இறே அவன் அவதார ரகசியம் -தத ச த்வாதசே  மாசே -பன்னிரு திங்கள் வயிற்றில் என்னக் கடவது இறே

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை–பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் – முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது-தோன்றும் –தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி – கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி – பிறந்தது குணமாகைக்காக -பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்-பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே (ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )

ஒருத்தி மகனாய் பிறந்து –ஆவிர்பவிக்க லாகாதோ – பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ – பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் – இவன் பிறந்த போதே-ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்-நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும் அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –அவன் பிறவி நமக்கு என்று கோல – நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –பிறந்து-சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால் தூணிலே தோன்றினாலே போலே ஆதல் – ஆனைக்கு உதவினால் போலே யாதல் – வந்து உதவ அமைந்து இருக்க ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்-

——–

ஐந்து -15-இவ்விரண்டு பாசுரங்களிலும் மாயனை -என்ற சொல் உள்ளது
அர்த்த பேதம் காண்க

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை-மாயனை– பரம பதத்திலே -அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய்க் கொண்டு தன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி தோற்ற இருக்கும் இருப்பை நினைத்து அது தான் வாசாம் அகோசரம் ஆகையாலே -மாயன் -என்கிறது –கிருஷ்ண அவதாரத்தில் நீர்மை தங்களுக்கு நீர்மை இல்லாமையாலே பரம பதத்திலே அனுபவிக்கக் கோலி அது தானும் நிலம் அல்லாமையாலே எத்திறம் -என்கிறார்கள் –ஒரூருக்கு தன்னைக் கொடுத்த நீர்மை இறே இது- ஒரு நாட்டுக்காக தன்னைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற நீர்மை யாகையாலே ஏற்றம் உண்டே அங்குத்தைக்கு-நித்ய ஸூரிகளும் நேர் நின்று பார்க்க ஒண்ணாத நிரந்குச ஐஸ்வர்யத்தை உடையவன் கிடீர்-
அவதரித்தான் என்று- அவதார சௌலப்யத்தை அனுசந்தித்து- அந்த ஆச்சர்யத்தை சொல்லுவதற்கு முன்பே-ஆழம் கால் பட்டு – எத்திறம் -என்கிறார்கள்-மாயனை – ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் – நிரதிசய ஆனந்த பரிபூர்ணனாய் – உபய விபூதி உக்தனாய் –
ஸ்ரீ யபதியாய் ஏகார்ணவம் போலே -நித்ய விபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –யாதோ வாசோ நிவர்த்தந்தே– யஸ்ய அமதம் தஸ்ய மதம்- அவிஞ்ஞாதம் விஜா நதாம்– பண் கடந்த தேசம் (திருச்சந்த-25 ) -என்றும் வேதங்கள் மனசோடு வாக்குக்கு நிலம் அன்று என்று மீண்ட பரத்வம் – இவளுக்குப் பேசலாம் படி கை வந்த படி –

வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்-குவலயா பீடத்தை அழித்தால் போலே நம்முடைய ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தைப் போக்கி – மல்லரை நிரசித்தால் போலே –தன் தோளோடு அணைய ஒட்டாத இடையருடைய சங்கல்பத்தை போக்கி எதிரிகள் தனக்குத் தோற்றால் போலே நமக்குத் தான் தோற்று இருக்கிற ஆச்சர்ய பூதனை –மாயனை–தன் கையில் எதிரிகள் அகப்படுமவற்றைத் தான் பெண்கள் கையிலே அகப்பட வல்லவன்–தன் கையிலே எதிரிகள் படுவது எல்லாம் -நம் கையில் தான் பட்டு நமக்குத் தோற்று – அத் தோல்வியால் நம்மை வென்று இருக்குமவனை-

——————-

ஆறாம் பாசுரம் -13 th பாசுரம்
இரண்டிலும் -புள்ளும் சிலம்பின -சொற்றொடர் இருப்பினும் பொருளில் வேற்றுமை உள்ளது-முதலில் கூட்டில் நின்றும் சிலம்பின படியை சொல்லிற்று –
மேலே கூட வழியே போகும் இடம் எல்லாம் ஆகாரார்த்தமாக சிதறின படியைச் சொல்லுகிறது – இது கால பேதத்தை அநு சரித்து சிஹ்ன பேதம் கூறின படியாம் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்—மார்கழி நீராட வேணும் என்னும் த்வரையும் இன்றிக்கே- வைகி (காலம் தாழ்ந்து )எழுந்து இருக்கில் ப்ரத்யவாயமும் இன்றிக்கே காலம் உணர்த்த உணருமவை அன்றோ புட்கள் –-இவ்விடத்தில் பிள்ளைப் பிள்ளை யாழ்வான்-பகவத் சமாஸ்ரயணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கிற
பஷிகளின் நாதம் அல்லது-இவ்வாத்மாவுக்கு உத்தேச்யம் இல்லை என்று பணிக்கும் —என்று அருளிச் செய்வர்-காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்-மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ -என்று அன்றோ இருப்பது 

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்-கீழேயும் புள்ளும் சிலம்பின் காண் -என்றது -அப்போது கூட்டிலே இருந்து சிலம்பிற்று– இப்போது பறந்து போகத் தொடங்கிற்–அங்கு கூட்டில் நின்றும் சிலம்பின படி சொல்லிற்று இங்கே கூடி வழியே போம் இடம் எல்லாம் போய் ஆஹாரார்த்தமாக சிதறின படி சொல்கிறது –

———–

ழும் எட்டும்
ஏழாம் பாசுரத்தில் கேசவன் என்ற சப்தத்தைக் கூறி
எட்டாம் பாசுரத்தில் -மாவாய் பிளந்தான் -என்று அதன் பொருளை ஆண்டாள் கூறுகிறாள் –
கேசி ஹந்தா -கேசவன் -என்றபடி –

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ–நாராயணன் –
முகம் தோற்றாமே நின்று- வாத்சல்யத்தாலே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன் –-மூர்த்தி –
தன்னுடைய சௌசீல்யத்தாலே பிறந்தது-கேசவன் – கண்ணுக்கு தோற்ற நின்று-
நம் விரோதிகளை போக்குமவன்
-அவன் சேஷ்டிதங்கள் சிலரை அச்சம் கெடுக்கும்-(சிலருக்கு அச்சம் கொடுக்கும் -அஸ்தானே பய சங்கை பண்ண வைக்கும் )திருஷ்ணாவதாரத்தில் குதிரை வடிவாக வந்த கேசியென்னு மஸுரணை
வதஞ்செய்ததனால் கேசவனென்றது.

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை-மாவாய் பிளந்தானை
நம் விரோதிகளை போக்கி நம் அச்சம் தவிர்த்த உபகாரகன் அன்றோ தாரானோ-மாவாய்
ஸ்ரீ நாரத பகவான் நாம் முடிந்தோம் என்று கதறிக் கொண்டு வந்து விழும் படி இறே வந்து தோன்றின படி – நமக்காக கேசியைக் கொன்று திருவாய்ப்பாடியிலும் ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும் உண்டான வன்னியம் அறுத்து பெண்ணும் பேதையும் சகடச் சாத்தாகப் போம்படி பண்ணினவன் நம் கார்யம் செய்யானோ-

——–

ஒன்பதும் பத்தும்
ஒன்பதாம் பாசுரத்தில் -அனந்தல் -என்றும்
பத்தாம் பாசுரத்தில் ஆற்ற அனந்தல் உடையாய் –
இதன் மர்ம அர்த்தத்தை வியாக்யானம் கொண்டு தெளிக

உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ–கிருஷ்ணனுக்கு நெடும் போது ஆடல் கொடுத்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ – நெஞ்சுக்கும் விஷயம் அங்கேயோ –தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள் பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள் 

ஆற்ற வனந்தல் உடையாய்–சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை –ஆர்த்த த்வனி கேளாத படி அனந்தலினுடைய மிகுதி –எங்களுக்கு அங்கே (நந்த கோபன் வாசலில் ) போய் துயில் எழப் பாட வேணுமோ – நீ உணரும் படி காண அமையாதோ –

—————-

ஒன்பதும் -20 th பாசுரமும்
ஒன்பதாம் பாசுரத்தில் மா மாயன் -மாதவன் -வைகுந்தன் -என்று திரு நாம த்ரயத்தில் மத்யத்தில் மாதவன் – அருளி -மத்ய மணி நியாயத்தை கொண்டு அர்த்த நிர்வாஹம் பண்ண பாங்காக அமைந்து உள்ளது – மாதவன் ஆகையாலே மா மாயன் சுலபன் –
மாதவன் ஆகையாலே வைகுந்தன் பராத்பரன் -என்றபடி பரத்வ சௌலப்யங்களுக்கு நிதானம் ஸ்ரீ ய பதித்வம் -என்றபடி –
இருபதாம் பாட்டிலும் இதே நியாயத்தை கொண்டு வியாக்யானம் –
உக்கமும் தட்டொளியும் தந்து -உன்  மணாளனையும் தந்து -என்றது ஆய்த்து

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-மா மாயன்-ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டு அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-மாதவன் – அதுக்கடியான ஸ்ரீ ய பதி-
அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்-(சுவையன் திருவின் மணாளன் –அவள் இடம் கற்ற சுவை ராஸிக்யம் -குருகுல வாஸம் )வைகுந்தன் – ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்-அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் –மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்- நீர்மைக்கு அடியான திரு நாமங்களும் இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று -என்கிறார்கள்-

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-உக்கமும் தட்டொளியும் தந்து-ஆல வட்டமும் கண்ணாடியும் –
நோன்புக்கு வேண்டும் உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் உப லக்ஷணம்-தந்து உன் மணாளனை -உன்னோட்டைக் கூட்டுகிறது எங்களுக்கு உறுப்பு என்று இருந்தோம்– அன்றாய்த்தோ உக்கத்தோ பாதி அவனையும் தர வேணும் –உன் மணாளனை –இவற்றோபாதி உனக்கு உபகரண கோடியிலேயாய்- தன் கார்யம் உன் புத்தி அதீனமாம் படி இருக்கிறவனை-புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யன் ஆனவனை உக்கத்தோபாதி அவனையும் இவள் தர வேணும் -என்கை –உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு-

———

பத்தும் பதினொன்றும்
பத்தாம் பாட்டில் புண்ணியன் என்று பகவான் உபாய பூதன் -என்று கூறி
அடுத்து -அவனை முகில் வண்ணன் -என்று கூறியதின் கருத்து –
புண்ணியன் -தர்மம் என்றபடி ஷ்ரேயஸ் சாதனமான சாஷாத் தர்மம் அவன் இ றே –
அந்த புண்ணியத்தை தர வல்ல உதாரனும் அவனே
-பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -தந்தனன் தன் தாள்  நிழலே -என்னா நின்றது இறே
முகில் வண்ணன் -என்று மேகம் போல் உதாரன் -என்றபடி –

போற்றப் பறை தரும் புண்ணியனால் -கிருஷ்ணம் தர்மம் சநாதநம் – புண்ணியன் ஆகையாவது – சர்வ விஷயத்திலும் தண்ணீர் போலே பொதுவாய் இருக்கை யாயத்து –இடைப் பெண்களும் சென்று ஆஸ்ரயிக்கலாம் படியான தார்மிகன் –நீர் நெருப்பு -புண்ணியன் கூற்றம் -பெருமாள் கோபம் -சேராச் சேர்க்கைகள்-புண்ணியனால் -வீழ்ந்த -வீழ்க்கப்பட்ட இல்லையே -வீட்டில் பூச்சி போல் -வீழ்ந்தான் அன்றோ வல்லரக்கர் புக்கு அழுந்த தயரத மரகத மணித்தடம் –

முகில் வண்ணன் பேர் பாட-பரம உதாரனும்-ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை -நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –உகக்கும் திரு நாமங்களை நீ பாட -நாங்கள் உன் பஷத்தே நின்று கூட்டம் பற்ற-நீ அவன் அழகிலே ஈடுபட்டுப் பாட -உன்னீடுபாடு கண்டு நாங்கள் ஈடுபட்டுப் பாட-விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணன்-

———-

பத்தும் -19th பாசுரமும் –
பத்தாம் பாட்டில் -மாற்றமும் தாராரோ -என்று கோபிகையை குறித்து கூறியது –
ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கண்ணனுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் அவளே
மாற்றமும் தாராரோ -உடம்பு அவனுக்கு தந்தால்  வாய் வார்த்தை எங்களுக்கு தரலாகாதோ -என்கிறாள் –
19 th பாசுரத்தில் வாய் திறவாய் -என்று கண்ணனை குறித்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா -நப்பின்னை பிராட்டி
ஆலிங்கனத்தாலே மலர்ந்த மார்பு படைத்தவனே -வாய் திறவாய் -மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்கு தந்தால் ஆகாதோ -என்றபடி -அனன்யா என்று ஏக த்ரவ்யம் போலே இருப்பவர்களை புறப்படச் சொலுவார் ராவணாதி களோ பாதி இறே -ஆகையால் -எழுந்திராய் -என்கிறி லர்கள் – இவ்வர்த்தம் இரண்டு பாசுரங்களுக்கும் ஒக்கும்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-உடம்பை கிருஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சாகிலும் எங்களுக்கு தரலாகாதோ-வாசலைச் செம்மினால் வாயையும் செம்ம வேணுமோ – கண்ணைப் பட்டினி கொண்டாவோ பாதி செவியையும் பட்டினி கொள்ள வேணுமோ –ஐஸ்வர்யம் விஞ்சினால் பந்துக்கள் ஆர்த்தர் ஆனால் ஏன் என்னலாகாதோ- படு குலை அடித்தால் தண்ணீர் வார்த்தால் ஆகாதோ
போகத்தைத் தடுத்தால் எங்கள் சத்தையையும் அழிக்க வேணுமோ –உன் சரக்குத் தரப் பார்த்திலை யாகில் எங்கள் சரக்கு தந்தால் ஆகாதோ-உன்னுடைய கிருஷ்ணனைத் தாரா விட்டால் எங்களுடைய உன்னைத் தந்தால் ஆகாதோ-இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்-

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்–மார்பை அவளுக்கு கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ –-உன் கம்பீரமான மிடற்று ஓசையாலே ஒரு வார்த்தை சொல்லாய்-தன்னால் அல்லது செல்லாதே உன் புறப்பாடு பார்த்து இருக்கிற எங்களுக்கு ஒரு வார்த்தையும் அரிதோ – அவள் புறப்பட ஒட்டாள் ஆகில் -கிடந்த இடத்தே கிடந்தது மாசுச என்ற உக்தி நேருகையும் அரிதோ –ஏகத் த்ரவ்யம் போல் இருக்கிறவர்களை புறப்படச் சொல்லுவார் ராவணாதிகளோ பாதி இறே ஆகையால் எழுந்து இராய் என்கிறார்கள் இலர்-

———–

பதினோராம் பாசுரம் -20 th
பதினோராம் பாட்டில் -செற்றார் -பதம் பாகவதர்கள் உடைய சத்ருக்களைக் குறிக்கிறது –
சர்வம் விஷ்ணு மயம் -என்று இருக்கும் பாகவதர்களுக்கு நேராக சத்ருக்கள் இல்லை –
பகவத விரோதிகளையே தங்கள் விரோதிகளாக நினைக்கிறார்கள் –
நின்பால் பொறுப்ப அரியன கள் பேசில் —-ஆங்கே தலையை அறுப்பதே கருமம் -என்னா நின்றது இறே –
இருபதாம் பாட்டில் -செற்றார் -பதம் பகவத் விரோதிகளைக் குறிக்கிறது
தன்னை ஒழிந்த அனைத்தையும் தனக்கு விபூதியாக கொண்டஸ்ரீ மன் நாராயணனுக்கு – விபூதிமானுக்கு நேராக சத்ருக்கள் இருக்க பிராப்தி இல்லை -ஆயினும் பாகவத அபசாரம் பட்டவர்களை தனது சத்ருக்களாக நினைக்கிறான் -ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வர் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி-

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து-செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்-குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே–செற்றார்-இவர்களுக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் -கிருஷ்ணனுடைய மினுக்கம் பெறாதவர்கள் – சத்ரோஸ் சகா ஸாத் ஸம்ப்ராப்த -என்று ராவண சஹாசத்தின் நின்றும் வந்தான் என்னாதே நம் எதிரியான பையல் ஓலக்கத்தின் நின்றும் வந்தான் என்று அங்கதப் பெருமாள் பேசினால் போலே
(வாலிக்கு நண்பனாக இருந்தாலும் சத்ரு என்றாரே அங்கதன் )
ஆண்டாளும் இவ்வூரில் ஸம்ருத்தி பொறாதவர்களை சத்ருக்கள் என்கிறாள் –பகவத் ஸம்ருத்தி பொறாதார் பாகவதருக்கு சத்ருக்கள் – பாகவத ஸம்ருத்தி பொறாதார் எம்பெருமானுக்கு சத்ருக்கள் –இரண்டும் உண்டு இறே கஞ்சனுக்கு – தீய புந்திக் கஞ்சன் (பெரியாழ்வார் 2-2)-இத்யாதி – சாது சனத்தை நலியும் (திருவாய் -3-5-)பாண்டவர்களுக்கு சத்ருக்கள் நமக்கு சத்ருக்கள் என்று த்விஷதன்னம்-என்றான் இறே கிருஷ்ணன்
இவள் தானும் மாயன் இராவணன் -(நாச்சியார் 5-3 )என்று செவ்வைப் போர் அறியாத பையல் -என்று அருளிச் செய்தாள்-

செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்-நீ ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும் –-ஸூஹ்ருதம் சர்வ பூதானாம் -என்று இருக்கிற தனக்கு சத்ருக்கள் இல்லை இறே – ஆஸ்ரிதருடைய சத்ருக்களே இறே தனக்கு சத்ருக்கள் ஆகிறார்கள் – ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணிக் கொடுக்கும் –பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் —சந்தம் மல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி-செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-)

———

பதினொன்றாம் பாசுரமும் பன்னிரண்டாம் பாசுரமும்
பதினோராம் பாட்டில் கர்ம அனுஷ்டான தத்பரர் களுடைய பெண்ணை எழுப்புவதையும் –
அடுத்து -ஸ்வ தர்மத்தை காற் கடை கொண்டவனுடைய தங்கையை எழுப்புவதாகவும்
சொற் தொடர் அமைந்து உள்ளது -இது தன்னை பூர்வர்கள் நன்கு விளக்கி அருளி இருக்கிறார்கள் – கர்மம் உத்தேச்யமா த்யாஜ்யமா -என்று விசாரம் செய்து நிஷ்கர்ஷித்தார்கள் -வியாக்யானம் கண்டு தெளியவும் –

கர்ம யோகம் மாறாமல் -நித்ய அனுஷ்டானம் விடாதவர்கள் இதில் –
கிருஷ்ண கைங்கர்யம் விடாதவர்கள் அடுத்த பாசுரம் நற் செல்வன் அடுத்த பாசுரம் –
அனுஷ்டானம் சாமான்ய தர்மம் செல்வம் இதில் விசேஷ தர்மம் அடுத்த பாசுரம்
வர்ணாஸ்ரமம் இதி கர்த்தவ்ய தாக -விதி பிரேரிகம் -ஆஜ்ஜா கைங்கர்யம்-என்றும்
பகவத் த்யானம் ஆராதனம் -ராக பிரேரிகம் -அநு ஜ்ஜா கைங்கர்யம்-பல கறந்து
அநேக ரித்விக்குகள் செய்யக் கடவ சடங்கை அதிலே கூர்மை யுடையவன் ஒருவனே செய்யுமா போலேயும் ப்ராஹ்மணர் வேதத்தை அடைய அதிகரிக்குமா போலேயும்
ஷத்ரியன் பருவம் நிரப்புவதற்கு முன்பே யுத்தத்தில் நிலவன் ஆனால் போலேயும்
ஈஸ்வரன் ஒருவனுமே சர்வ ஆத்மாக்களினுடையவும் கர்ம அனுகுணமாக நாம ரூபங்களை பண்ணி நியமனாதிகளைப் பண்ணுமா போலேயும் பசுக்கள் அநேகம் ஆகிலும் ஜாதியில் மெய்ப்பாட்டாலும் – ஜாதி உசிதமான விருத்தி யாகையாலும் ஒருத்தன் அடங்க கறக்க வல்ல சாமர்த்தியம் –

ஸ்வ தர்மத்தை அனுஷ்டிப்பார்கள் உடைய பெண் பிள்ளையை எழுப்பிற்று கீழ்
இதில் ஸ்வ தர்மத்தை காற்கடைக் கொண்டவனுடைய தங்கையை எழுப்புகிறது-மஹத்தான அந்தரங்க கைங்கர்யம் செய்த நற் செல்வன் -அதனாலே இவனைப் பற்றி பெருமையுடன் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்)-சயமே அடிமை கோதில் அடியார் பிரியா அடியார் -மூன்றும் உண்டே-அவர்களுடைய அனுஷ்டானமும் இவனுடைய அநனுஷ்டானமும் உபாயம் அன்று –யாது ஓன்று உபேயத்தை தர வற்றது அது இறே உபாயம் –விடச் சொன்னவையும் பற்றச் சொன்னவையும் அன்று இறே உபாயம் – விடுவித்து பற்றுவித்தவன் இறே உபாயம்-விசேஷ தர்மம் இவன் -சாமான்ய தர்மம் முந்திய பாசுர கோவலன்-இத்தைச் செய்யாமல் சக்கரவர்த்தி இழந்தே போனானே-நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின் தொடர்ந்து நோக்கிக் கொண்டு திரியும் இளைய பெருமாளைப் போன்று, கண்ண பிரானை யன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவு பூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப் பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது–நற் செல்வன்லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -தோற்றி மறையும் நற் செல்வம் அன்று -நிலை நின்ற சம்பத்து-ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று ஆழ்வாருடைய கைங்கர்ய ஸ்ரீ விசேஷஞ்ஞரோடே அவிசேஷஞ்ஞரோடே வாசி அற ஏறிப் பாய்ந்தது போலே –இவனுடைய கைங்கர்ய ஸ்ரீயும் நாட்டுக்கு எல்லாம் குறை யற்று இருக்கை –

———-

12 th /21 th பாசுரங்கள்
12 th பாசுரத்தில் எருமை விருத்தாந்தம் -தனது கன்றுக்கு பால் கொடுக்காத நிலையில்
எருமை கனைக்கிற இது -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்க பெறாத காலத்தில் பகவன்
குமிறின குமிறலுக்கு ஸ்மாரகம் -என்றவாறு –
21 th பாசுரத்தில் வள்ளல் பெரும் பசுக்கள் விருத்தாந்தம் -பாகவத ஸ்மாரகம் -பகவத்
விஷயத்தை வாரி வாரி வளங்கும் வள்ளல்கள் -தவ கதாம்ருதம் –க்ருண நதி யே பூரிதா ஜநா –என்று இறே கோபிகா கீதம் -ஆழ்வாரும் பதிகம் தோறும் வண் குருகூர் சடகோபன் -என்று தன்னை அருளிச் செய்து கொண்டார் இறே-அதிதி சப்த வாசயர் இறே பாகவதர்கள் -அதிதிகள்-திதி பார்த்து வருவது இல்லை -அவர்கள் வந்து நம்மிடம் பெற்று போகிறார்கள் –
இவர்கள் வந்து தம்முடைய பகவத் ஞானத்தை வழங்குகிறார்கள் -இதுவே வாசி –

கனைத்து-உதாரர் கொடுக்கப் பெறா விட்டால் (துன்பம் )படுமா போலே – ஆஸ்ரிதர் கார்யம் செய்யப் பெறா விட்டால் – ரிணம் ப்ரவ்ருத்தம் -என்னுமா போலே ஈஸ்வரன் –ஸ்வாசார்யன் தனக்கும் ஸ்வ சந்தானத்துக்கும் பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –கன்றுக்கிரங்கி –தன் முலைக் கடுப்பு கிடக்க -கன்று என் படுகிறதோ -என்று இரங்கி – எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் -ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -என்று இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்–கலம் இடுவார் இல்லை என்றால் அத்தால் தவிராது – முலையில் கடுப்பு போகாது – போந்தனையும் நின்று பால் சொரியும்-ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே-சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை அன்றிக்கே தன் கார்யம் செய்ததாக உபகரிக்கும் படி உதார ஸ்வபாவமாய் இருக்கை –சிலர் அர்த்தியாய இருக்கச் செய்யாதே-வீடுமின் முற்றவும் என்று அருளிச் செய்தது-அத்தை நினைத்து இறே ஸ்ரீ மதுர கவிகள் –அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே -என்றது-(இன்ப மாரியான )வண் சடகோபரான இவரைப் போலவே
அருள் மாரியாகையாலே திரு மங்கை ஆழ்வாரும் முந்துற யுரைக்கேன் (9-8)- சொல்லுகேன் வம்மின் – நமரும் உரைமின் -என்று அருளிச் செய்தார்-

———

13th /22 nd பாசுரங்கள்
13 th பாசுரத்தில் போதரிக் கண்ணினாய் -ஒரு பக்த சிகாமணியின் கண்ணழகு கூறப்பட்டது
22 nd  பாசுரத்தில் -அம் கண் இரண்டும் -என்று பகவானுடைய கண் அழகு கூறப்பட்டது –

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்–ஜிதம் தே புண்டரீ காஷ–தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை என்னப் பண்ணும் கண்ணை யுடையவனை – ஆங்கு மலரும் -இத்யாதி — ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைச் சந்திரன் என்றும் திரு ஆழி ஆழ்வானை ஆதித்யன் என்றும் திரு நாபீ கமலம் மொட்டிப்பது அலருவது ஆமா போலே கண்ணாகிய தாமரையும் மொட்டிப்பது அலருவதாம்-என்கை –
சந்த்ர ஸூர்யர்களையும் தாமரைப் பூவையும் ஒரு கலம்பக மாலையாகத் தொடுத்தால் போலே இருக்கும்படியைச் சொல்லுகை –பங்கயக் கண்ணானை-கண்ணாலே நமனக்கு எழுத்து வாங்கி நம்மை எழுத்து வாங்குவித்துக் கொள்ளுமவன்-தூது செய் கண்கள் இறே-9-9-9–இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான்-1-7-5-

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ-ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை – அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே
இந்தத் தாமரைப் பூ –அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும் அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும் ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –செங்கண் – வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை – உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை-அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம் ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம் வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ-ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –43-நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே-பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே-நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே-கண்டவர் தம் மனம் வழங்கும் —
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் – என்னும்படியான கண்டாருடைய மனத்தைக் கொள்ளை கொள்ளும் திருக்கண்களுக்கு தாமரை ஒப்பாக மாட்டாதே-ஆர்ஜவமே வடிவெடுத்த திருக்கண்களுக்கு ஒப்பாக மாட்டாதே-அப்ஜம் –ஆக அதீர்க்கத்வாதி விசிஷ்டமான அப்ஜமானது வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ – கதம் –நு-நிதர்சனம் –அழகருடைய கரியவாகிச் செவ்வரி ஓடி புடை பரந்து நீண்ட அப்பெரியவாய திருக்கண்களுக்கு எங்கனே த்ருஷ்டாந்தம் ஆகவற்று–ஒரு போதும் ஆக மாட்டாதே
இங்கனம் அருளிச் செய்தவர் கீழே அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி தலம்–என்றது ஏதேனும் ஒன்றை த்ருஷ்டாந்தீ கரித்து போது போக்கவே-ஆழ்வாரும் -ஒட்டு உரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெறும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே
காட்டுமால் பரஞ்சோதி –என்னா நிற்கச் செய்தேயும் ஒட்டு உரைத்து புகழாது ஒழியார் இறே –)

————

14 th /23 rd பாசுரங்கள்
14th -தங்கள் திருக் கோயில்
23 rd -உன் திருக் கோயில் –16-நந்த கோபனுடையகோயில் காப்பானே 
நந்தகோபனுடைய கோயில் -உன் கோயில் என்றது
இவ்விரண்டுக்கும் முரண்பாடு இல்லை -வாஸ பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது -இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய பிரதாந்யம் கோலக் கடவது இறே – பிரணவம் போலேயும் -ஹிருதய கமலம் போலேயும் -திருவரங்கம் நம்மூர் -என்னக் கடவது இறே –

செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்-தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ -திருக் கோயில் -என்றது அவர்கள் சொல்லும் படி —தமஸ் பிரசுரரும் கூட உணரும் காலமாய்த்து -இது விடிவுக்கு உடல் அன்றோ-தாமச பிரக்ருதிகளை சொல்லுகிறது -என்று எம்பார் –தமஸ் பிரசுரர் உணர்ந்தார்கள் என்று சொல்லியோ எழுப்புவது என்று
அவள் நினைத்து இருக்கும் என்று சத்துவ நிஷ்டரான ஸந்நியாசிகளை சொல்லுகிறது என்று திருமலை நம்பி –ராக பிரயுக்தமான சேஷத்வ ஜ்ஞானம் உடைய மந்த ஸ்மிதம் உடையரான பிரபன்ன அதிகாரிகள் தங்கள் தங்கள் எம்பெருமான் சந்நிதியிலே
திருவாராதனம் பண்ணுகைக்குப் போந்தார்கள் –

நீ பூவைப் பூ வண்ணா வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிஉன் கோயில்-நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் – இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே – பிரணவம் போலவும் – ஹ்ருதயக் கமலம் போலவும் திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் ) எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –உபய பிரதானம்-அர்ஜுனன் தேர் தட்டு-
ராச மண்டலம்-ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல்

நந்த கோபனுடைய கோயில் காப்பானே –நந்த கோபனுடைய கோயில் கிருஷ்ணன் உகப்பது பாரதந்தர்யம் ஆகையால் – ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர -ஸ்ரீ நந்த கோபற்குப் பிள்ளையாய் நந்தகோபன் மகன் -என்று அவரை இட்டுத் தன்னைச் சொல்லும் படி
தான் பரதந்த்ரனாய் க்ருதார்த்தனான இடம் ஆகையால் அவர் அபிமானத்தில் இவன் ஒதுங்கினான் என்னும் இடம் தோற்ற கிருஷ்ணனுடைய கோயில் என்னாதே நந்த கோபனுடைய கோயில் என்கிறது-அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று
பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன் தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –

————-

15 th /29 th பாசுரங்கள்
இரண்டும் திருப்பாவை சாரம் பாசுரங்கள்
15 th -வ்யாக்யானத்தில் திருப்பாவை யாகிறது இப்பாட்டு –
பகவத் விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் சிற்றம் சிறு காலையில் சொல்லுகிறது –
பாகவத விஷயத்தில் இருக்கும் படி எல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது -அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்ரீ ஸூ க்தி –

பாகதவதர்களால் ஏதேனுமொருபடியாகக் குற்றம் சாட்டப் பொற்றவர்கள், அப்பாகவதர் திருவடிகளில் தலை சாய்த்து, ‘இக்குற்றம் அடியேனுடையதுதான் ஷமித்தருளவேணும்’ எனப் பிரார்த்தித்துப் பொறுப்பித்தல் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமாதலால், அவ்வாறே இப்பாட்டில் “நானே தானாயிடுக” என்று – பிறர் கூறிய குற்றம் தன்னிடத்தே யுள்ளதாகத் தானிசைந்தமை கூறப்படுதலால், பாகவத விஷயத்திலிருக்கும்படி சொல்லிற்றாகிறது.-இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –பரஸ்பர நீச பாவை (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று அன்றோ ஸ்வரூபம் இருப்பது-ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்-

திருப்பாவை ஆகிறது இப்பாட்டு-பாகவத வைபவம் எல்லே பகவத் வைபவம் இதில்
த்வயார்த்தம் -சரணாகதி கீழ் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் பிரபல தம விரோதி -களை அற்ற கைங்கர்யம் -ஸூய போக்த்ருத்வ புத்தி தவிர வேண்டுமே-மற்றை நம் காமங்கள் மாற்று–மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா-ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது-போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே –பிராப்ய பூமியிலும் – மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய சூரிகள் பிதற்றும் பாசுரம்-பசிக்கு மருந்து -பசியைஉண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –

———–

15 th /23 rd பாசுரங்கள்
15 th பாசுரத்தில் நீ போதராய் -என்று பாகவத சிகாமணியின் நடை யழகு காண ஆசைப்பட்ட படி –23 rd  பாசுரத்தில் -போந்தருளி -என்று பகவானுடைய நடை அழகு காண ஆசைப்பட்ட படி

ஒல்லை நீ போதாய் யுனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்-ஒல்லை நீ போதாய் –உன்னை அரை க்ஷணம் காணாது ஒழியில் எங்களுக்கு பிராண ஹானி – புறப்படாது ஒழியில் உனக்கு அநர்த்தமாய்த் தலைக் கட்டும்-போந்து எண்ணிக் கோள் – புறப்பட்டு மெய்ப் பாட்டுக் கொள்- மெய்க் காட்டுக் கொள்ளுகைக்கு பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் பேர் சொல்லுகையும் –
தொட்டு எண்ணுகையும்- ஸ்பர்ச ஸூகம் அனுபவிக்கையும்- பெண்களுக்கு ஸங்க்யை இல்லாமையால் எண்ணி முடிக்கும் தனையும் இவளைப் பிரியாதே அனுபவிக்கையும் –பின்பு அழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை திரு முதுகு வியர்வை பார்த்துப் பின்னே போவதே புருஷார்த்தம் என்று இருந்தார் அன்றோ-

நீ பூவைப் பூ வண்ணா வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளி— சதுர்க்கதி இறே
நடையிலே ரிஷபத்தின் உடைய வீறும் மத்த கஜத்தின் உடைய மதிப்பும் புலியினுடைய சிவிட்கும் சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை-நமக்கு இவை எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் – எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம் இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-பிராட்டியோடே இறே கண் வளர்ந்து அருளுவது – அவள் எங்களைத் தனித் தனியே நோக்கி அருளும்படி
நப்பின்னைப் பிராட்டி திருக் கையை ஊன்றிக் கொடு திருப் பள்ளி அறையில் நின்றும்
பெரிய திரு மண்டபத்து ஏறப் புறப்பட்டு அருள வேணும்

——————-

17 th /24 th பாசுரங்கள்
17 th  கழல் -பாகவத ஸ்ரீ பாத சம்பந்தம் பெற்ற வீர கழல் அனுபவிக்கப்பட்டது –
24th -கழல் போற்றி -பகவத் ஸ்ரீ பாதம் பெற்ற வீரக் கழலுக்கு பல்லாண்டு பாடப்படுகிறது –

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா—-சிவந்து ஸ்ப்ருஹணீயமான ஸ்வர்ணத்தாலே செய்யப் பட்ட வீரக் கழலை உடைய ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர்கதமாம் படியாய் இருக்கையாலே திருவடிகள் விருது பூண்ட கிருஷ்ணன் பின்னே பிறக்க முன்னே பொற்கால் பொலிய இட்டுப் பிறந்த ஸ்ரீ மானே – இளைய பெருமாள் பின் பிறந்து பெற்ற சம்பத்து முன் பிறந்து பெற்றவன் அன்றோ நீ –கிருஷ்ணனையும் பெண்ணையும் சேர விடும் ஏற்றம் உடையவன் அன்றோ நீ –அவன் பாரதந்த்ரியத்தாலே கட்டிக் கொண்டு கிடக்கும்- இவன் ஆற்றாமையாலே கட்டிக் கொண்டு கிடக்கும் என்கை -(அடியான் அவன் விடான் -அன்பன் இவன் விடான் )உன் படுக்கையை நீ விடாதாப் போலே- எங்கள் படுக்கையும் எங்களுக்குத் தாராய் என்கிறார்கள் –

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும் அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கழல் போற்றி கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் – காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல் கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –அடி போற்றி -கழல் போற்றி -நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும் சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-

———-

18th /29 th பாசுரங்கள்
18 th பாசுரத்தில் நந்தகோபாலன் மருமகளே -என்றும்
29 th பாசுரத்தில் -பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த -கோவிந்தா -என்ற சொல் தொடரால் –பெருமானும் பிராட்டியாரும் இருவரும் ஆய்க்குலத்தையும் ஆயர் சம்பந்தத்தையும் விரும்புகிறார்கள் என்று அறியல் ஆகிறது –

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்-ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே-கிருஷ்ணனுக்கு மச்சினியாய் முறையால் பால்யத்திலே இங்கேயே வளருகையாலும் – இங்கே வாழ்க்கைப் பட்ட படியாலும் – இவர் மருமகள் என்று தன்னை நினைத்து இருக்கையாலும் – இவள் உகக்குமது ஆகையாலும் இவள் விரும்பி இருப்பது இவருடைய சம்பந்தம் –முக்தனுக்கு சம்சாரம் போலே -இவளுக்கு பிறந்தகம் – புருஷகாரம் ஆவதற்கு கிருபை வேணும் இறே –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே–சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான
இடைச் சாதியிலே வந்து பிறந்த எங்களை அடிமை கொள்ளாது ஒழிய ஒண்ணாது –பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் – ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது
தாங்கள் உண்ணாத குலம் –இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ-நீ பிறப்பிலியாய் பிறவாதார் (நித்யர்( நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு (முக்தர்) முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ –
பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ – வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது – பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த எங்கள் பெற்றத்து ஆயன் வட மதுரைப் பிறந்தான் (திருவாய் -9)-என்று அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –நீளா குலேந ஸத்ருசீ – எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –எங்களை-திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க
நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப் பாடி யான எங்களை ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் (திருவாய் – 10-3-8 )என்று நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –இவ் வாய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது – ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-(திருச்சந்த 41 )பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை – பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் – பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் – இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை-

————

19 th /30 th பாசுரங்கள்
19 th பாசுரத்தில் -நப்பின்னை திருமேனி சம்ச்லேஷத்தால் விளைந்த கண்ணன் உடைய
திருமேனி விகாசத்தை -மலர் மார்பா -என்று கூறினார்கள் கோபிகைகள் –
30 th பாசுரத்தில் திருப்பாவை கேட்ட காலத்தில் கண்ணன் உடைய திருமேனி
விகாசத்தை ஈரிரண்டு மால் வரைத் தோள் -என்று ஆண்டாள் கூறுகிறாள் –

கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்–திரு முலைத் தடங்கள் உறுத்துகையாலே அகன்று இருந்துள்ள மார்பு இவ் விக்ருதியால் சதைக ரூப ரூபாயா -என்றதோடு விரோதியாதோ என்னில் விரோதியாது
அது ஹேய குணங்கள் இல்லை என்கிறது ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்வம் அவத்யம் இத்தனை இறே –மலர் மார்பா-அவன் அண்டை கொண்ட அரணும்- இவள் ஜீவனமும் –முலையைப் பற்றி அவன் கிடைக்கும் – மார்பைப் பற்றி இவள் கிடக்கும் –இவள் முலைப் பரப்பு எல்லாம் ஒரு முலைக்குப் போராத படி அகன்ற மார்பை யுடையவன்
பெரிய வரை மார்பு இறே அது –முற்றாரா வன – முலையாள் அகலத்துள் இருப்பாள் (திருநெடும் -19 )-என்னக் கடவது இறே-திரு முலைத் தடங்கல் உறுத்தும் படி அணைத்த ஸ்பர்ச ஸூ கத்தாலே பூ அலருமா போலே விகசிதமான மார்பை யுடையவன்-நித்ய அநபாயினியாய் இருக்கிறவர்களுடைய சம்ஸ்லேஷத்தால் வரும் விகாரம் இல்லை என்கிறது அன்றே – ஆஸ்ரித சம்ஸ்லேஷத்தில் அவிகாரித்தவம் அவத்யம் அத்தனை இறே
இவ்விகாரம் உண்டானால் கல்யாண குணங்களே யாம் அத்தனை – மலராது குவியாது என்றது ஸ்வரூபம் இறே –யசோதை பிராட்டி கட்டுக்கு அலருகிற மார்பு இவளுடைய ஸ்தனபந்தத்துக்கு அலரச் சொல்ல வேணுமோ-புடைக்கலந்தானை — வரை நெடும் தோள் -மூர்த்தி கண்டீர் -(பெரிய திருமொழி 4-4)(தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் அன்றோ அடிக்கவும் அணைக்கவும் அலர்வானே )இவளோடு அணைந்த பின்பு இவ் விகாசம் பிறவாதாகில் இவர்களுக்குத் தான் என் செய்ய –அவனுக்கு விகாசத்தைப் பண்ணி ஸ்வரூபம் பெற இருக்கிறவர்கள் இறே இவர்கள் நித்ய கிங்கர – கோவிந்தர்க்கு ஒரு குற்றேவல் – அவனை விகசிப்பிக்கை இவர்களுக்கு ஸ்வரூபமாய் இறே இருப்பது-நப்பின்னை பிராட்டி உடைய- போக உபகரணமான பக்தியை ஸ்வ விஷயத்தில் வைத்துக் கொண்டு அத்தால் விகஸித ஹ்ருதயன் ஆனவனே –

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்–இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்- உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும் இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –பெண்களை அணைக்கப் புக்க பின்பு கிருஷ்ணனுக்கு திருத் தோள்கள் பணைத்த படி –(பெரிய பிராட்டி ஸ்லோகம் கேட்டு அரங்கன் கவசம் வெடித்தது போல் ) வேய் இரும் தடம் தோளினாரோடு-அணைந்த தோள்கள் இறே-

———–

22nd /23rd பாசுரங்கள்
22nd -வந்து தலைப் பெய்தோம் -என்று அவனுக்கும் தங்களுக்கும் உள்ள பிராப்தி
சம்பந்தத்தை சொல்லி -23rd பாசுரத்தில் பிராப்தி பலமானவற்றை பிரார்த்திக்கிறார்கள் –
அவனுடைய நடை அழகு காண இ றே கண் படைத்தது –
நம் ஆழ்வாரும் கொண்ட பெண்டிர் -9-1-பதிகத்தில் பிராப்தியை சொல்லி –
அடுத்த பதிகம் பண்டை நாளாலே -9-2-பிராப்தி பலத்தை வேண்டினார் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்து உள்ளார் –

நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்–கீழே எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யசனம் எல்லாம் சபலமாம்படி வந்து கிட்டப் பெற்றோம் –
அநாதி காலம் இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள் இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப் பெற்றோம் ஒருபடி வந்து கிட்டப் பெறுவதே -என்கை – விசத்ருசமான இது சங்கதமாகப் பெறுவதே-அந்த ராஜாக்களை போலே நாங்களும் அநாதி காலம் பண்ணிப் போந்த
தேகாத்ம அபிமானத்தாலே இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்
நிர்ஹேதுகமாக கிட்டப் பெற்றோம்-யாதிருச்சிகமாக பிறப்பதொரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் கடாக்ஷத்துக்கு யோக்யனாய் அனந்தரம் தேஹாத்மாக்கள் உடைய ஸ்வரூபத்தை விவேகித்து – தேஹாத்ம அபிமானத்தை விட்டு ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்தர்யத்தையும் விட்டு ஈஸ்வரனுக்கு சேஷம் என்றும் – புருஷார்த்தம் அவன் என்றும் – ருசி விளைந்து –
அது பெறுகைக்கு அடியான உபாயமாகவும் – அவன் தன்னைப் பற்ற விளம்பம் பொறாத படி த்வரை விளைந்து திருவடிகளில் வந்து கிடக்கும் அளவாய் விட்டது இறே-

சங்கம் இருப்பார் போல் -22-என்ற வார்த்தையைக் கேட்டு
நீங்கள் அநந்ய கதிகள் என்பதே நப்பின்னைப் பிராட்டி பரிக்ரஹமாய் இருந்து வைத்து
என்று திரு உள்ளம் புண்பட்டு – உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
இங்கனே குன்னங்குறிச்சியாகக் (சிறுபிள்ளை வார்த்தை -அமுக்கியமாக )கேட்டருள ஒண்ணாது – பேர் ஓலக்கமாய் இருந்து நீ கேட்டருளுமா போலே கேட்டருள வேணும் -என்கிறார்கள்-கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார் குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால் ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ் வதிகாரத்தைச் சொல்லுகிறது-இங்கனே – எங்கள் முன்னே நடக்க வேணும் –
எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் – கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம் இனி நடை அழகு கண்டு வாழ வேணும் – நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது-கண் வளருகிற போதை அழகும் –உலாவுகிற போதை அழகும் – கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே-இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் – வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு–81-

அவனே நிருபாதிக பந்து-அவனையே பற்றப் பாருங்கோள் -என்று-தாம் அறுதி இட்ட அர்த்தத்தை தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக-பரோபதேசத்தில் மூளுகிறார் –

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்–92-

என்னை உன் அழகிய திருக் கண்களாலே நோக்கி அருள வேணும் –
திருவடிகளைத் தலையிலே வைத்து அருள வேணும் –
திருப்பள்ளி யுணர்ந்து பிராட்டியோடே கூட இருந்து அருள வேணும் –
எழுந்திருந்து என்னெதிரே வந்து அருள வேணும் -என்று இப்புடைகளிலே
தம்முடைய மநோ ரதங்களை யடைய அபேக்ஷிக்கிறார் –ப்ராப்தியை அனுபவித்தார் கீழ் -பிராப்தி பலத்தை அபேக்ஷிக்கிறார் இதில் –இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தத்தை அனுபவித்தார் மேல் திருவாய் மொழியில் – சம்பந்தத்தின் பலத்தை ஆசைப்பட்டு விரும்புகிறார் இத் திருவாய் மொழியில் — சர்வ வித பந்து அவனே -கண்ணன் அல்லால் வேறு சரண் இல்லை –பற்ற உபதேசித்தார்- ஆடாமல் அசையாமல் அர்ச்சையில் கண் வளர்ந்து இருக்க கண்டார் –கைங்கர்யம் செய்ய பாரிக்கிறார் -இதில்-

இதே போல்

19th /23rd பாசுரங்கள் –
19th -கிடந்த -என்று அவன் கிடந்ததோர் கிடை அழகு அனுபவிக்கப்பட்டது –
23rd -இங்கனே போந்தருளி -என்று அவன் நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் காண ஆசைப் -படுகிறாள்
திருப் புளிங்குடி கிடந்தானே -என்று அவன் கிடந்தவாற்றை கண்ட ஆழ்வார் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
மூ யுலகும் தொழ இருந்து அருளாய் –
காண வாராயே –
நின்று அருளாய்
இருந்திடாய் –
என்று நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் பிரார்த்தித்தால் போலே ஆண்டாளும் பிரார்த்திக்கிற படி –

26th /27th பாசுரங்கள் –
26th பாசுரத்தில் நோன்புக்கு உபகரணம் வேண்டிய ஆயர் -சிறுமியர்
அடுத்து -27th பாசுரத்தில் -நோன்பு முடிவு பெற்ற பிறகு -பெற வேண்டிய சம்மானத்தை பிரார்த்திக்கிறார்கள் –

1-ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன-பூமியே நடுங்கும் படி
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே-அவனது நம்மிடம் வர வேண்டுமே
அப் பாஞ்ச ஜன்யம் -பெரியாழ்வார்-அங்கு மங்களாசாசனம் இங்கு சாம்யா பத்தி பிரார்த்தனை
போல்வன சங்கங்கள் –பல வேண்டும் -மத்த பரதரம் கிஞ்சித் நாஸ்தி –

2-போய்ப் பாடுடையனவே சாலப் பெரும்பறையே -இடமுடைத்தான-பேரி வாத்யம் -மேலே பறை கொள்வான் அன்று –
அறிந்து அறிந்து தேறி தேறி உணர வேண்டாமோ -கைங்கர்ய பிரார்த்தனை என்று உணர வேண்டாமோ –
3-பல்லாண்டிசைப்பாரே-
4-கோல விளக்கே -அழகிய மங்களமான விளக்கு
5-கொடியே-த்வஜம்
6-விதானமே-மேல் கட்டி
ஆறு விஷயங்கள் -அபஹத -இத்யாதி ஆறும் ஸூசகம்-பிரார்த்தித்தே பெற வேண்டும் -அருள் என்கிறார்கள் )

உன் கையில் பாஞ்ச ஜன்யம் போல் இருப்பன-பல சங்கங்கள் வேணும்-ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே-லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –-பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம் முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய் மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் -திருப் பல்லாண்டு பாடுகைக்கு-
அடியோமோடும் நின்னோடும் என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வாரையும்
பாகவத ஸம்ருத்திக்கு- பொலிக பொலிக -(5-2)என்னும் -நம்மாழ்வாரையும் கொடுத்தான்–பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான-கைங்கர்யமும் வேணும் –விதானமே புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்
கொடிக்கு பெரிய திருவடியையும் விதானத்துக்குத் திரு அவதரித்த அன்று தன் பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த திரு அநந்த ஆழ்வானையும் கொடுத்தான்

கீழில்- தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –சூடகமே அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே – இவர்கள் ஆபரணம் பூண்ட கையை அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது – அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் – வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே – அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –(பாணி கிரஹணம் முதல் அன்றோ )தோள் வளையே -கையைப் பிடித்த அனந்தரம் – அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் – அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி- இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே-தோடே தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –செவிப் பூவே -அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்-பாடகமே-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்–சூடகமே இத்யாதி-1-பிடித்த கைக்கும் –-2-அணைத்த தோள்களுக்கும்-3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும் 4-ஸ்பர்சத்துக்கும் 5-தோற்று விழும் துறைக்கும்–சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற — திருக்கையால் தாள் பற்ற –கையைக் காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

———–

2nd /26th பாசுரங்கள்-
2nd -செய்யாதன செய்யோம் -என்று பூர்வர்கள் செய்யாத கார்யங்களை செய்வது இல்லை
என்று பிரதிக்ஜை செய்தார்கள் -தத் அநு குணமாக அனுஷ்டாநத்தைக் கூறுகிறது 26th பாசுரம் –மேலையார் செய்வனகள் -என்று தங்களுடைய நோன்பு சிஷ்டாசார சித்தம் -ஆகையால் நாங்கள் செய்கிறோம் என்று கூறுகிறார்கள் –

செய்யாதன செய்யோம்-விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட-ஆசசரிக்க கடவோம் அல்லோம்-அதாகிறது – ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்- ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை –நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –(விரூப்யை ஆக வாய்ப்பு -சூர்ப்பணகை தனியே சென்று பட்ட பாடு அறிவோம் )பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –(போவான் போகின்றாரைக் காத்து உன்னைக் கூவுவான் வந்தோம் என்பவர்கள் அன்றோ )

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்-பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும் வியாசன் சொன்னான் மனு சொன்னான் ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள் யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று – ஞானவான்களுடைய வசனத்தையும் அனுஷ்டானத்தையும் அன்றோ பிரமாணமாகச் சொல்கிறது –வேதங்களுக்கு முன்னே அன்றோ தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது-யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்-யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ

————-

27th /28th /29th பாசுரங்கள் –
கோவிந்த நாம த்ர்யார்த்தம்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா-கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ –பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-பசுக்களுக்கும் தோற்குமவனே

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ–அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு – நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை – நம்மை அறிந்தாலும் விரகு இல்லை-அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி கோப குலத்திலே கலந்து பரிமாறி காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும் ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற
உபாய வேஷத்தை கோவிந்தா என்கிறார்கள் –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா–பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-அபிதா வ்ருத்தியைப் போக்கி தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே -பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே – பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –எங்களையும்
எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே உன்னையும் உன் பிறவியையும் மறந்தாயீ-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று ஞான பூர்வகமான உபாய ஸ்வீகாரம் பண்ணுகிற இடமாகையாலே குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை அவ்விடத்திலே-ப்ராப்ய ருசியாலே கண்ணாஞ்சுழலை இடுகையாலும் பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான ரோஷத்தாலும் இவ்வளவும் சொல்ல வேணும் இறே இங்கு-அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால் பர வ்யூஹாதிகளையும் யாதவ வம்சத்தையும் விட்டு இடைச் சேரியில் ஸூலபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் – கெடுவாய் நாங்கள் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்-என்று பட்டர் அருளிச் செய்த வார்த்தை – இடையனாகையாலே அபிதாந வ்ருத்தி போமித்தனை -தாத்பர்ய வ்ருத்தி போகாது என்கை போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )

——–

28th /29th
கறவை -என்ற 28th பாசுரத்தில் -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –என்று பிராப்தியை சொல்லி -சிற்றம் -29th பாசுரத்தில் -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று பிராப்தி பலமான கைங்கர்யத்தை பிரார்த்தித்த படி –

உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது–உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-நீ எங்களுக்கு உறவு அன்றோ –நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ –பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே- ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் 1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது – எங்களாலும் விட ஒண்ணாது – இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நீ என்னை அன்றி இலை -தயா பூர்ணனான உன்னோடு தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு-பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ – ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ-1-அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக பந்தமும் உன்னோடே –
2-குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
3-ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் (திரு விருத்தம்-54 )ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே –
4-தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று கார்ய காரண பந்தமும் உன்னோடே –
5-என்னுயிர்க் கண்ண பிரான் -என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
6-நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே –
7-எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே –
இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்–திரு நாட்டிலே இருக்க்கவுமாம் ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம் அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை- காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை செய்தாப் போலே யாக வேணும் –நீ பிறவாது இருக்கும் இடத்திலும் பிறந்து திரியும் இடத்திலும் கூடத் திரியும் அத்தனை

உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று
வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )

உனக்கே நாம் ஆட்செய்வோம் –-சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விஸ்லேஷித்து இருக்கை அன்றிக்கே இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து நீ உகந்த அடிமை செய்வோம் – உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே நீ உகந்த அடிமை யாக வேணும் – அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது-கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே (திருவாய் – 4-10-10-)என்றபடி உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –

கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று – கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -(திரு விருத்தம் -30) (கண்ணன் கோவிந்தன் என்ற நிலையே நாங்கள் வேண்டுவது) இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இறே நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் – (பராங்குச நாயகி -தீர்க்க சிந்தையந்தி நிலை வேண்டுமே )ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் – அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் – (நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்-அப்பாஞ்ச ஜன்யம் )-நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்- அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய போக்த்ருத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி விரோதமாய் இறே இருப்பது – அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் ஏற்றம் போக்த்ருதம் விட போக்ய புத்தி ஏற்றம் -ஆச்சார்ய ஹ்ருதயம் )

கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று-நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது ஸ்வரூப உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே-

————-

1st /30th பாசுரங்கள் –
மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு அநுபவ ரசிகர்களுக்கு பெரு விருந்து –

பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –
11-வைகுந்தன் -13-புண்ணியன் -14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –
16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -18-மணி வண்ணன்
19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்
30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இ றே பிறந்து படைத்த ஐ ஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இ றே -இவனே ஸ்ரீ ய பதி என்றபடி –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் -திருப்பாவை —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் –ஸ்ரீ வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் உடன் தொகுத்தவை–

December 31, 2024

நாராயணனே -திருப்பாவை -1-
பாற் கடலுள் பையத் துயின்ற -திருப்பாவை –2-
மன்னு வட மதுரை மைந்தனை -திருப்பாவை –5-
விண்ணோர் தலைவா -கேசவா -ஆயர் குல முதலே -திருவாய் மொழி -1-5-6-

பர வ்யூஹ விபவ நிலைகள் மூன்றையும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உதசருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம்
பர வ்யூஹ விபவ ஆத்மாநா த்ரிவிதம் பரஹம இதி பாகவத சித்தாந்த -பராசர பட்டர்
க -பிரமன் -ஈச சிவன் இவர்களுக்கு உதபாதகனாய் ஆஸ்ரயநீயனான ஷீராப்தி சாயீ கேசவன்

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

விண்ணோர் தலைவா –விரோதி பிரசங்கம் இல்லாத நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனானவனே –
கேசவா–அவர்களை போல் அன்றியே ப்ரயோஜனாந்தர பரரான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் சத்தா ஹேதுவாகையாலே கேசவன் என்னும் திருநாமம் யுடையவனே –
மனை சேர் ஆயர் குல முதலே -குடிசில் கூடக் கொண்டு திரிகையாலே மனையோடு சேர்ந்த ஆயருடைய குலத்துக்கு மூலமானவனே
மா மாயனே -அபர்யந்தமான நவ நீத ஸுர்யாதி ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவனே –
மாதவா-அதுக்கு அடியாய் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்று பிராமண ஸித்தமான இவ்வாதார கதமான ஸ்ரீ யபதித்தவத்தாலே -மாதவன் என்ற திருநாமம் யுடையவனே

விண்ணோர் தலைவா –
நிரந்தர அனுபவம் பண்ணுவாரை ஒரு நாடாக யுடையவனே –
கேசவா –
அவர்களால் பர்யாப்தி பிறவாதே திருத்தி அடிமை கொள்ளுகைக்கு -ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவான் -என்று
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு உத்பாதகனுமாய் -தன் மத்யச்தனாய் வந்து அவதரிக்கும் படி –

மனை சேர் ஆயர் குல முதலே –
பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல்
இவ்வருகே இடையர் இருந்த மனைகளிலே வந்து அவர்கள் குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே
மனை சேர்ந்த ஆயர் என்னவுமாம்
மூங்கில்களை கையோடு கொண்டு போய் பசுக்களுக்கு புல் உள்ள விடத்தே வளைத்துக் கொண்டு இருக்கும் அத்தனை என்கை
புலவிக் குல வானவர் தம் கோ -என்னும் அதுக்கு அவ்வருகே யாயிற்று ஆயர் குல முதலே -என்கிற இது
மா மாயனே
சர்வ சக்தியாய் இருந்து வைத்து வெண்ணெய் களவிலே இழிந்து அதை தலைக் கட்ட மாட்டாதே கட்டுண்டு நிற்கும் ஆச்சர்யம்
மாதவா –
இவ் வெளிமைக்கு நிதானம் இருக்கிற படி -அவளை உகப்பிக்கை யாகிறது -ஆஸ்ரிதற்கு எளியன் ஆகை இறே

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –

வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )
நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –

தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்
மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள் என்னவுமாம் –

இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயணா சப்தார்த்தம் -என்றும்-

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்
நாராயண பரம் பரமம் -என்றும்
பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –
இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-

சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து

நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –
இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –

பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத்வ ஷமா சம்குசந்தீ -(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவம் )
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் –வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்-
இத்தனை இறே காகமும் சிசுபாலனும் செய்தது –இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இறே இருவரையும் –

நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே

பையத் துயின்ற
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இறே இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே-பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே-
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி-ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி- இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது-சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே-நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி-கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து
மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –கௌசல்யா ஸூ ப்ரஜா ராம — உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்-சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்

ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

பாற் கடலுள் பையத் துயின்ற –
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்-
நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை அழிக்கிறார்களோ-என்று பயப்பட்டு-
கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்-ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய-ஹ்யாகதோ-மதுராம் புரீம் -என்னக் கடவது இறே

மன்னு வட மதுரை –
பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –
ஆனை படும் ஆகரம் போலே அவதாரம் மாறாத வூர் –
சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ வாமனனாய் தபஸ்ஸூ பண்ணி வர்த்தித்ததும்
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் வன்னியம் அறுத்து தனக்கு படைவீடாகப் பெற்று நெடு நாள் இருந்து ராஜ்ஜியம் பண்ணியும்
ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும் –
இப்படி பகவத் சம்பந்தம் மாறாத தேசம் –-மல்லை  மூதூர் வடமதுரை -ஆழ்வாரும் ஈடு பட்டு அருளுகிறார் இறே -அப்படி இறே மஹரிஷிகள் ஈடுபட்டது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ சுபா யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத-
(மதுரையார் மன்னன் என்பதில் ஆசை மிக்கவன் அன்றோ )–நகரீ -விட்டுப் போந்த இடமோ -பிறந்து படைத்து விரும்பின விடமோ படை வீடாவது –
புண்யா -அபிமத லாபத்தை யுண்டாக்க வற்றாய் இருக்கை-அவனைப் பெறுகைக்கு உபாயமும் தானே –
பாப ஹரீ-அப் பேற்றுக்கு பிரதிபந்தக நிரசனமும் பண்ண வற்றாய் இருக்கை –
சுபா -ஒன்றைப் போக்கவும் ஒன்றைத் தரவும் வேண்டா -பரம பதம் போலே ப்ராப்யமும் தானேயாய் இருக்கும் –
யஸ்யாம் ஜாதவ் ஜெகந்நாத -யாதொன்றிலே ஜகந்நாதன் ஆனவன் ஜாதனானான் –
சம்சாரிகளுடைய குறை தீர்க்கைக்காக நியாந்தாவானவன் நியாம்ய கோடியிலே பிறந்தான் –நலமந்தம் இல்லதோர் நாடு -என்றாப் போலே- பரம பதம் போலே போக்யதையால் பிரசித்தமான ஊர் –பரம பதத்திலும் காட்டில் இவ்வூர் பிரசித்தம் போலே – கலங்கா பெரு  நகரம் ஆகையால் கலங்காது இருக்கிறது அங்கு – கலங்கும் தேசத்திலே கலங்காதே இருக்கிறது இங்கு –
பரம பதம் கலவிருக்கை என்னும்படி-பிறந்து விரும்பின படை வீடு –
அவனைத் தருகைக்கு உபாயமாகை – விரோதி நிரசனத்துக்கும் தானே யாகை-
பிராப்யமும் தானே யாகை-இத்தனைக்கும் அடி திரு அவதரித்து அருளுகை –
தன் பிரஜைகள் பட்ட ஆபத்தை நீக்குகைக்கு-அவர்களை இழக்க மாட்டாமல் பிறந்தபடி –அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்னுமா போலே- அஜஹத் ஸ்வபாவனாய் கொண்டு-நித்யனானவன்-
ஆஸ்ரித சஜாதீயனாய் பிறந்த மெய்ப்பாடு-சதைக ரூப ரூபாய என்கிறபடியே –
அங்கு ஏக ரூபனாய் நின்று உடம்பு கொடுத்த படியைச் சொல்லிற்று
இங்கு ப்ரவாஹ ரூபேண உடம்பு கொடுக்கும் படி சொல்லுகிறது –சாஷாத் -ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த -என்றும் –பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாயா -என்னும் படியே-மாயை -என்று ஞானமாய் -தன்னுடைய இச்சையால் அவதரித்தான் என்கிறது
விஷ்ணு -வியாபக வஸ்து -வியாப்பிய ஏக தேசத்திலே வந்து பிறந்தான் என்கை
எங்கும் உளனானவன் ஓர் இடத்திலே தோன்றின படி
சனாதன -என்றும் உளனானவன் ஒரு நாளிலே தோன்றின படி –

——–

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் -அத் திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று – சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )-(நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது-ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது – அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்-விலக்காமையும் அதுக்கு அடியான சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசங்கமாம் –

நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்–ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை –சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்-நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்- தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே-உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே – இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது–இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )-தருவான் –பிராப்தி உண்டானாலும் அவன் தரக் கொள்ள வேணும் என்னுமிடம் தோற்றுகிறது-உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்- ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா –தருவான் -தருவதற்காகவே நாராயணன் இங்கு கண்ணனாக அவதாரம்-நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் -என்றுமாம்-அருள் தருவான் அது நம் விதி வகையே

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1

நல்ல வருள்கள்
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-

நமக்கே தந்தருள் செய்வான் –நிர்ஹேதுகமாகையாலே விலக்ஷணமான ஆத்மந ஆஸந்தி அந்த பிரவேச
விரோதி நிவர்த்தக அனுபவங்களுக்கு அடியான நிரவதிக கிருபைகளை-தாரேன் பிறர்க்கு உன்னருள் என்னிடை வைத்தாய் -என்கிற கணக்கிலே -நமக்கே அசாதாரணமாக தந்து மேலும் இடை விடாமல் அருள் செய்வானாய்
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே
– -9-4-2-

கண்ணே உன்னைக் காணக் கருதி –எனக்கு தர்சன சாதன பூதனாய்க் கொண்டு த்ருஷ்ட்டி யானவனே –-சாதன பூதனான உன்னையே சதா தர்சனம் பண்ணி அனுபவிக்கக் கருதி –காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே-பிரபன்ன ஜன கூடஸ்தர் -நாலாயிர ஆழ்ந்த பொருள் இதுவே –-அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இறே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இ றே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –

————–

மலரிட்டு நாம் முடியோம் -திருப்பாவை -2-
இனிப் பிறவி யான் வேண்டேன் -திருவாய்மொழி -10-6-1-

அவன் தானே வந்து சூட்டில் செய்யல் ஆவது இல்லை என்பதால் நாம் விசேஷித்து அருளுகிறாள் –
ஆழ்வாரும் என் புத்தியால் விட்டேன் -அவன் இருத்தலில் செய்யல் ஆவது இல்லை -ஈட்டு திவ்ய ஸ்ரீ ஸூக்தி

மலரிட்டு நாம் முடியோம் – சுரும்பார் குழல் கோதை -என்றும்–வாசம் செய் பூம் குழலாள் -என்றும் இறே இருப்பது இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது – அது செய்யக் கடவோம் அல்லோம் என்கை -பூச் சூடுகை போக ரூபமாகையாலே -மலரிட்டு நாம் முடியோம் என்று பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் –என்கிறது –தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால் சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்–நாம் முடியோம் – அவன் தான் மாலையைக் கொடு வந்து-மயிரை முடித்து அலங்கரித்து-விரல் கவ்வி- இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை- அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை – நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இறே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து – இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே-நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே – அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் – அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

அருள்  பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –
பிறவி யான் வேண்டேன்–வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை -யான் வேண்டேன் – என் புத்தியால் விட்டேன் – அவன் இருத்தில் செய்யலாவது இல்லை-

————-

தூயோமாய் -திருப்பாவை -5–தூயோமாய -திருப்பாவை -16
ஆசற்றார் மாசற்றார் -திருமாலை -22

பிரயோஜனாந்தர பரத்வமும் -உபாயாந்தர -பரத்வமும் -இல்லாத தூய்மை
ஆசு -மாசு -குற்றம் –
பகவானே உபய உபேயங்கள் என்று அறிந்த தூய்மை –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்–5-

தூயோமாய் வந்து நாம் –
அங்குத்தைக்கு நாம் யோக்யரோ அயோக்யரோ என்று பாராதே-
இருந்தபடியே வந்து –இருந்தபடியே-வருகைக்கு மேற்பட சுத்தி தேட வேண்டா இறே-
ஸ்ரீ மான் என்றது இறே இருந்த படியே வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானை-இடைச்சிகள் தூய்மை இறே – தலை  இருக்க உடம்பு கழுவியும் -உடம்பு இருக்க தலை  கழுவியும் போருவர்கள் இறே பகவத் சம்பந்தம் ஒழிய தனக்கு ஒரு சுத்தி சம்பதிக்கையாவது அசுத்தனாய் விடுகை இறே – அவனுடைய சம்பந்தத்தை அனுசந்திக்கை ஒழிய தனக்கு ஒரு சுத்தி இல்லையே – (தன்னால் வரும் நன்மை விலைப்பால் போலே -அவனால் வரும் நன்மை முலைப்பால் போல் அன்றோ ) விபீஷணன் கடலிலே ஒரு முழுக்கு இட்டு இன்று இறே வந்தது – அர்ஜுனன் யுத்தத்தின் நடுவே முழுக்கு இட்டு இன்று இறே சரம ஸ்லோகம் கேட்டது – திரௌபதி முழுகி யன்றே பிரபத்தி பண்ணிற்று-ஆகையால் பிரபத்திக்கு ஒரு சுத்தியும் தேட வேண்டா –அசத்தி சம்பாதிக்கவும் வேண்டா –நின்ற நிலையில் அதிகாரம் அமையும் –தூயோமாய்-அநந்ய பிரயோஜனத்தை சொல்லிற்று ஆகவுமாம்

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் –-அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-நாங்கள் ஆராய வேண்டும் படி வந்தவர்கள் அல்லோம் —
உனக்கு அங்கன் பயப்பட வேண்டும் படி பாவ தோஷம் இல்லை
எங்கள் தலையிலும் ஒன்றும் கிடக்க வந்தோமும் அல்லோம் –
அவனுடைய ரக்ஷையும் அவனுடைய பிரயோஜனமும் ஒழிய
ஸ்வ யத்னமாதல்-ஸ்வ பிரயோஜனமாதல் பற்ற வந்தோமும் அல்லோம் –
உபயாந்தரங்களைக் கொண்டு பெறுவாரும் அல்லோம் –
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு அகல்வாரும் அல்லோம் –திருவடி -திருவாழி மோதிரமும் -தன் வடிவும் காட்டாதே மிடற்று ஓசை காட்டி விசுவசித்திப்பித்தால் போலே
இவர்களும் தங்கள் ஆர்த்த த்வனியைக் காட்டுகிறார்கள்

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

ஆசு -குற்றம்-உபாய விஷயமாக வரும் குற்றம் –அதாகிறது
1-பாரதந்த்ர்யத்துக்கு சேராதவை –
2-அஹங்கார கர்ப்பமான அசேதன கிரியா கலேபங்களை சாதனமாக நினைத்து இருக்கை –-இதர உபாயங்களை விட்டு தன்னையே உபாயமாகப் பற்றினார்க்கு அல்லது –
தன்னை உள்ளபடி அறியலாய் இருப்பான் ஒருவனும் அல்லன் –

மாசற்றார்-
இதுவும் ஒரு மானஸ தோஷம் ஆயிற்று –-அதுவும் பிராப்ய ஆபாசங்களிலே பிராப்ய புத்தியைப் பண்ணி இருக்கை –அவன் தன்னையே பற்றி ஐஸ்வர்யாதிகளை லபித்துப் போகா நிற்பர்கள் –அங்கன் அன்றியே-அவன் தன்னையே பெற வேண்டும் என்று இருக்கை -மாசறுகை யாவது –

————-

நாராயணன் மூர்த்தி கேசவன் -திருப்பாவை -7–வாத்சல்யம் -சௌசீல்யம்-விரோதி நிரசன சாமர்த்தியம் –
கோளரி -மாதவன் -கோவிந்தன் -நாச்சியார் திருமொழி -6-2-தேஜஸ் -ராசிக்யம் -எளிமை –
கோவிந்தனை -மது சூதனை -கோளரியை -திருவாய்மொழி -7-10-3-வாத்சல்யம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -அநபவிநீயத்வம்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்
கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ –
முகம் தோற்றாதே நின்று வாத்சல்யத்தாலே விடாதே ரஷிக்கக் கடவ சர்வேஸ்வரன்-ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக -பரித்ராணாய இத்யாதிப்படியே அவதரிக்கை –பின்னும் நம்முடைய விரோதிகளைப் போக்குமவனை -சர்வ ஸ்மாத் பரனான நாராயணன் உடைய அவதாரமாய்
கேசி ஹந்தாவான கிருஷ்ணனை பாடச் செய்தேயும்-கிருஷ்ண விஜயத்தை கேட்டு புறப்பட்டு அவனை அணைக்க கடவ நீ அதுவே துடைக்குத்தாக பகவத் அபாய பயம் தீர்ந்து-உறங்கக் கடவையோ

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை–கோ ரக்ஷணத்துக்கு முடி சூடினவனாய் ரஷ்ய விரோதியான மதுவுக்கு நிராசகனாய் – அத்யுஜ்ஜ்வல தேஜோ ரூப ஸிம்ஹம் போலே விரோதிகளுக்கு அநபிபவ நீயனானவனை-அதாவது ஆஸ்ரித பவ்யனாய் இருக்கையும் -தத் விரோதி நிரசீலனாய் இருக்கையும் அநாஸ்ரிதர்க்கு அ நபிபவ நீயனாய் இருக்கையும் –ஜ்வலந்தம் – விளங்குகின்றவனை’ என்கிறபடியே, ‘கோளரி’ என்கிறார்.-(உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்)

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

கோளரியஸ்ய சா ஜனகாத்மஜா -அப்ரமேயம் ஹி தத் தேஜ--என்கிற பெருமை
எல்லாம் தோற்ற மேணானிப்போடே வந்தபடி-மாதவன் – பரம ரசிகன் என்று தோற்ற நடந்து வந்த படி –கோவிந்தன் – விவாஹமாய் இரா நின்றது -ஆராலே என்ன விக்நம் வரும் -என்று அறியாமையாலேஎல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொடு வந்தபடி

——-

மாமாயன் மாதவன் வைகுந்தன் -திருப்பாவை -9-
தீ வினைக்கு அரு நஞ்சே -தேவி மணாளனை -ஆயனை -திரு விருத்தம்-89-
சௌலப்யம் பரத்வம் இரண்டுக்கும் மூல காரணம் ஸ்ரீ மத் வத்வம் -மத்ய மணி ந்யாயம் –மஹா மாயன் -172—மாதவன் -73-வைகுண்ட: 406
72. பூகர்ப்ப:, 73. மாதவ:, 74. மதுஸுதன: |

ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டச்ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: || –8-

மஹா மாய –
ஆச்சர்ய சக்தி படைத்தவன் -பெரு மாயன்-குண மாயா சமாவ்ருத -ஜிதந்தா–குணங்கள் என்ற மாயை மூலம் மறைத்த படி-மாயை என்பது பொய் என்ற பொருளில் இல்லை என்ற படி-மம மாயா துரத்யயா-பகவத் ஸ்வரூபம் திரோதானகரி தானே பிரகிருதி -நாம் மருள் உற்றவர் -தெருள் உற்ற ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-எல்லையில் மாயன் -3-10-8-

வைகுண்ட: — –குடி -தடை -இத்தை போக்குபவன்-தடை போனால் தன்னிடம் சேர்வார்கள் -தானே நடக்கும்-குறுக்கம், எல்லை முதலியன அற்றவர்; தம்பால் அனைத்தையும் ஈர்த்து வைப்பவர்-தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூகர்ப்ப: — பூமியையும் தம்முள் கருவாய்ப் பேணி வளர்க்கும் தாய்மை.-ஓம் பூ கர்ப்பாய நம
பூமியை ரக்ஷித்து அருளுபவர் உண்டு உமிழ்ந்து இத்யாதி செய்ததால்-பார்வண்ண மடமங்கை பத்தர் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்-அரவாகி சுமத்தி யால் -எயிற்றால் ஏந்தி —அறிந்தால் சீறாளோ -விராடன் ஸ்துதி
மாதவ: — திருவுக்கும் திருவாகிய செல்வர்.-அஸ்ய ஈசாநா ஜகதீ விஷ்ணு பத்நீ–புருஷ ஸூக்தம்ஹ்ரீஸ் ச தே லஷ்மீம் ச பத்ந்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17--மஹா விஷ்ணுவே உனக்குப் பூமா தேவியும் மஹா லஷ்மியும் பத்னிகள்-நித்யைவ ஏஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ -அநபாயிநீ- யதா ஸர்வ கதோ விஷ்ணோர் ததைவ இயம் த்விஜோத்தம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–
அந்தணரே உலகின் தாயான இந்த மஹா லஷ்மி நித்தியமாக இருப்பவள்
ஒரு நொடி கூட மஹா விஷ்ணுபைப் பிரியாமல் உள்ளவள்
மஹா விஷ்ணு எவ்விதம் வியாபித்து உள்ளானோ அது போன்று இவளும் எங்கும் வியாபித்து உள்ளாள்-திருவுக்கும் திருவாகிய செல்வன்
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
அமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்
ஸ்ரீ வல்லபன்-மா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்
உலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமாபெருமானுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை
தத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ க்தம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –
கௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
மதுஸூதந: — மதுவென்னும் புலன்களை ஒடுக்குவதில் அடியார்க்கு உதவி.: —இந்திரியங்களுக்கு மது என்று பெயர்-இவற்றைத் தன் பக்கம் இழுப்பதால் மது ஸூதனன் எனப்படுகிறான் நித்ய ஸூரிகளின் இந்திரியங்களை எந்தவிதமான தடையும் இல்லாமல் தன் வசப்படுத்தி வைத்துள்ளதாலும் அவனுக்கு மது ஸூதனன் என்னும் பெயர் என்றுமாம்

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களாலே-அபலைகளான பெண்களை எழுதிக் கொண்டவன் –அவர்களுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய் இருக்குமவன்-பெண்களுக்கு காணாச் சிறையாய்க் கிடக்குமவன்-

மாதவன் –
அதுக்கடியான ஸ்ரீ ய பதி–அந்த சௌலப்யத்துக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்-சுவையன் திருவின் மணாளன் –

வைகுந்தன் –
ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த மேன்மைக்கு தகுதியான-தேச விசேஷத்தை உடையவன்
அப் பெரிய மேன்மையை உடைய ஸ்ரீ ய பதியானவன் கிடீர்-பெண்களுக்கு எளியனானவன் -பெண்களையே அன்றிக்கே ஆண்களையும் அடிமை கொண்டு ஒரு நாட்டுக்காக கையாளாய் இருக்குமவன் ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தை உடையவன் –

மேன்மைக்கு அடியான திரு நாமங்களும்-நீர்மைக்கு அடியான திரு நாமங்களும்
இரண்டுக்கும் நிதானமான ஸ்ரீ ய பதித்வத்துக்கு வாசகமான-திரு நாமங்களுமாக
ஒரு ஸ்ரீ சஹஸ்ர நாமத்துக்கு போரும் திருநாமங்களை சொல்லிற்று

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

தீ வினைக்கரு நஞ்சை
கொடிதாய்-துக்கத்தை விளைப்பதான-துஷ் கர்மத்துக்கு ஆற்ற அரிய நஞ்சானவனை-பகவத் பிராப்திக்கு பிரதி பந்தகமான துஷ் கர்மங்களுக்கு ஆற்ற ஒண்ணாத-
நஞ்சாய் உள்ளவனை

நல் வினைக்கு இன்னமுதினை ––
பலாபிசந்தி ரஹீதமான கர்மத்தை பரிகரமாக உடைய பக்திக்கு -(பிரபத்திக்கு என்றே கொள்ள வேண்டும் )நிரதிசய போக்யனாய் பரம ப்ராப்யனாய் உள்ளவனை-இப்படி பாபங்களை போக்குகைக்கும் – தன் பக்கல் ருசி ஜநகன் ஆகைக்கும் அடி என் -என்ன –

பூவினை மேவிய தேவி மணாளனை
பிராட்டியோடு சேர்த்தியாலே–பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்-ஆகைக்கு மேற்பட இல்லை இறே மேன்மைக்கு அத்யந்த போக்யதையைப் பூரிப்பதான போக்ய அதிசயத்துக்கு ஸூசகமாய் இருக்கிற பூவிலே நித்ய வாஸத்தை யுடையளாய் நிரதிசய வைலக்ஷண்யத்தை யுடைத்தான ஸ்வரூபாதிகளாலே த்யோதமானையாய் இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு நித்ய போக்யனானவனை

புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை
இந்த மேன்மை யுண்டாய் இருக்கச் செய்தே-சிறுமை என்று இகழாதே பசுக்களை மேக்கப் கடவனாய் அதிலே நிலை நின்ற சிக்கனவை யுடைய இடையனானவனை-வல்லாயனை–மற்றும் பசு மேய்ப்பார் உடம்பில் துளி நீர்  ஏறிட்டு கொள்ளிலும் அதுக்கும் அவசரம் இல்லாதபடி இருக்குமவனை –

———–

சினத்தினால் -திருப்பாவை -12
உகிரால் கீண்டான் சினம் -பேயாழ்வார் -42
சீற்றம் ஓன்று உண்டு -கலியன் -5-8-3-
ஆஸ்ரித சத்ருக்கள் சக்கரவர்த்தி திரு மகனுக்கும் விரோதி –
அருள் அன்று நமக்கு உத்தேச்யம் -ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சீற்றம் உத்தேச்யம்-அச் சினத்தை தெரி -அனுசந்தி
தரித்ரனாவன் தணிகனை அடையுமா போலே -சீற்றமும் உண்டு -என்று இறே இவர் பற்றுகிறது-ஆஸ்ரியருக்கு உறுப்பான குணங்கள் இறே சௌசீல்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய-பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை சொல்லுகிறார்கள் –தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே-மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்-அவர் அழுத போது கூட அழுதார் இறே -தன் திரு மேனியில் அம்பு பட்ட போது ஆறி இருந்தார் –திருவடி மேலே அம்பு பட்ட போது சீறினான் இறே –கோபஸ்ய வசமே இவான்-க்ரோதம் ஆஹாரயத் என்று இருக்கக் கடவ தாமும்
கோபம் இட்ட வழக்கானார்–விரோதிகளைப் போக்கி நமக்கு உபகரித்தானாய் இருக்கும் கிருஷ்ணனைப் போல் அன்றிக்கே – ஆஸ்ரித விரோதிகளை போக்குமது தன் சினம் தீர்ந்தானாக நினைத்து இருக்கை –

மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன் சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.-6-4-7-

தனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்–தன் இச்சா ரூபமான அபிமத விக்ரகங்களை பரிக்ரஹித்துஆஸ்ரித வாத்சல்யத்தை யுடைய தான் ஆஸ்ரித விரோதி நிரசனத்தாலே தன் சீற்றம் முடிப்பானாய் இருப்பானாய்-பிரஜையை நலிந்தவர்களை தாய் தனக்கு சத்ருசு என்று நிலைக்குமா போலே-இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான அநுமாரைப் பார்த்து,
பிறகு மஹா பராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது
ததோ ராமோ மஹாதேஜே ராவணேன க்ருத வ்ரணம் த்ருஷ்ட்வா
ப்லவக சார்தூலம் கோபஸ்ய வஸமேயிவாந்”-
என்பது, ஸ்ரீராமா. யுத். 50 : 136.

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரி யுருவமாகி இரணியனதாகம்
தெரி யுகிரால் கீண்டான் சினம் —-42–(எரி உருவம் -கோபக்கனலுடன் என்றும் பாட பேதம் )

அருள் என்று நமக்கு உத்தேச்யம் –ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு யுண்டான சினம் உத்தேச்யம்-அச் சினத்தை தெரி –(நெஞ்சே)அநுஸந்தி -என்றுமாம் -(நெஞ்சே – பாசுரத்தில் இல்லை யாகிலும் இத்தைத் தரிவித்துக் கொள்ள வேண்டும் )

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

கொண்ட சீற்றம் –
சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம் தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால் சரீரி பேசாது இரானே
வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே
இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும்   –ஓன்று உண்டு-தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்-விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

———–

பொல்லா அரக்கனை -திருப்பாவை -13
சுரி குழல் –அரக்கன் -கலியன் -5-7-7-
முன் பொலா இராவணன் -திருக் குறும் தாண்டகம் -15
பொல்லாங்கே வடிவு எடுத்தவன் இராவணன் -ஆண்டாள் கலியன் -பிராட்டியை பிரித்த பொல்லாங்கு –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்–13-

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி-நைர்க்ருண்யத்தாலே வந்த தண்மையை நினைத்து பொல்லா என்கிறது- முன்பொலா இராவணன் (திருக்குறும் தாண்டகம்) -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் விபீஷணஸ் து தர்மாத்மா –நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –திருவினைப் பிரித்த கொடுமை (பெரிய திருமொழி 5-7) இறே –துர்வ்ருத்தம் -என்னும் அத்தனை இறே-த்வன் நீச -என்றாள் இறே(தாழ்ந்த முயல் போல் நீ எனது பெருமாள் யானை போல் என்றாள் பிராட்டி கூட )-மாயா மிருகத்தைக் காட்டுவார் – மாயா சிரஸைக் காட்டுகைக்கு சஹகரிப்பார் –
க்ருத்ரிமத்தாலே பிரித்த இடம் அழகியதாய் செய்தது என்பாராய் ராவணனின் தண்ணியர் இல்லை இறே இஜ் ஜாதிக்குள்

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

சுரி குழல் கனி வாய்த் திருவினைப்
ஸூ கேச்யா-என்றும்-சாரு கேசீம் – என்றும் சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –பிரித்த கொடுமையில் –அனந்யா ராகவேணாஹம்-என்றும்-அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்
இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும்-இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி-கடு விசை யரக்கன்-க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான
ராவணன் –

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

முன்பொலா ராவணன் தன்-
அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் –
ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.

பொல்லா  அரக்கன் -திருப்பாவை -13
பொல்லா ஆக்கை -திரு வாய் மொழி -3-2-3-
விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டு-துரியோதனன் பிரதி கூலனாய் தோன்றினான் -ஆக்கை அநு கூலமாக போலே ஆயிற்று இருந்து பிரதி கூல்யம் ஆயிற்று –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா-அநர்த்த ஹேதுவான சரீரத்தோடு உண்டான சம்பந்தத்தை அறுக்க உத்யோகித்தாலும் என்னால் அறுக்கலாம் படி அல்ல –துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-தன்பக்கல் போக்யதா புத்தியைப் பிறப்பித்து, ஈஸ்வரனுடைய போக்யதையை திரஸ்கரிப்பிக்கும் .
எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இ றே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி–பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே? அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார். இராவணன் தலைகள் போன்று முளையாநிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார்.சிறையிலே கிடப்பாரைப் போலே பிரக்ருதியிலே கிடக்கிற நான் ஒரு தேச விசேஷத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் உன்னைக் கிட்டலாதொரு விரகு சொல்ல வேணும் நான் கிட்டவும் வேணும் -நான் அறியில் இறாய்ப்பேன்-நான் அறியாதபடி சூழ்ச்சி யாகவும் வேணும்-இது இன்ன நாள் என்று சொல்லவும் வேணும் என்கிறார் –

———-

கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
அவுணன் உடல் கீண்ட -அமலன் -8
கல் எடுத்து கல் மாரி காத்தாய்-கலியன் -திரு நெடும் தாண்டகம் -13
வீர பத்னி ஆகையாலே கல் எடுத்து என்னுமா போலே கிள்ளி களைந்தான் என்கிறாள்
தோஷம அசத்தி கிள்ளிப் பொகட்டிய படி
உலர்ந்த தாழை நாரை கிழித்தால் போலே அஹங்கார ஹேதுவான தேகத்தை பொகட்டான்
சோலை சூழ் குன்று எடுத்தான் -கல் எடுத்தான் என்றது அனாயசேன எடுத்தமை காட்ட
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே -என்று இருக்குமவள் இறே

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –மறுவலிடாத படி கிழங்கோடு வாங்கின படி–கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.

பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப் பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

அவுணன் உடல் கீண்ட –
நரசிம்ஹத்தினுடைய மொறாந்த முகமும்-நா மடிக்கொண்ட உதடும் -செறுத்து நோக்கின நோக்கும் –குத்த முறுக்கின கையும் கண்ட போதே பொசிக்கின பன்றி போலே மங்கு நாரைக் கிழிக்குமா போலே கிழித்த படி-திருவாழி யாழ்வானுக்கும் பிற்காலிக்க வேண்டும்படி இறே -ஊன் மல்கி-மோடி பருத்து இருக்கிறபடி-சர்வ லோகத்தில் உள்ள தமஸ் எல்லாம் திரண்டு ஒரு வடிவு கொண்டாப் போலே அதி ஸ்தூலனாய் -மஹா மேரு நடந்தாப் போலே எதிர்த்து வந்த திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் ஒரு வாழை மடலைக் கிழிக்குமா போலே இரண்டு கூறு செய்தவனாய் -தன்னதான ஆத்ம வஸ்துவுக்கு அழிவு வாராமல் கிள்ளிக் களைந்தான் -என்னுமா போலே அஹங்கார ஹேதுவான தேஹத்தைக் கிழித்துப் பொகட்டான்-

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்
காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல்லடர்த்து மல்லரையன் அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே-13-

கல்லெடுத்து
அவன் எடுத்தது –சோலை சூழ் குன்றாய் இருக்க –
கல்லெடுத்து –அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி.
“கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில,
வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க.-வீரபத்நியாகை யாலே “பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க– ஒரு சிலா மாதரத்தை எடுத்தால் போலே ஒசழக்காகச் சொல்கிறாள் –ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்த போதை அநாயாசத்தை கண்டு இருந்தவள் ஆகையாலே இந்த சக்தி இறே இவள் ஹ்ர்தயத்தில் கிடப்பது -கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே என்று இருக்குமவள் இறே –
அசக்தாதிகாரம் இது சக்தாதிகாரம் இது -சாதனாந்தரங்கள் -என்கிற வார்த்தைகள்
நம் ஆச்சார்யர்கள் கோஷ்டியில் புகுரக் கடவது அன்றியே இறே இருப்பது –
சக்தரோடு அசக்தரோடு வாசி இல்லை –ஈஸ்வர சக்தியைக் கொண்டு
தலை எடுக்கைக்கு என்று இருக்கும் கோஷ்டி இறே

பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-

———-

சங்கொடு சக்கர பங்கயக் கண்ணன் -திருப்பாவை -14-
வெள்ளச் சுரி -தாமரைக் கண்ணன் -திருவாய்மொழி -7-3-1-
ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்கள் திருமேனிக்கு திவ்ய ஆயுதங்கள் பிரகாசகமாக இருப்பது போலே திருக் கண் நோக்கு ஆத்ம குணங்களுக்கு பிரகாசகமாய் -அகவாயில் தண் அளிவு கண் வழியே தோற்றுமே -பிரதி கூலருக்கு திவ்ய ஆயுதங்களும் திருக் கண்களும் விரோதியாய் தோற்றும்-அநு கூலருக்கு அழகுக்கு உடலாய் தோன்றும் -தோற்பித்த படிக்கு இரண்டுமே சேருமே -ஜிதம் தே –பண்ண வைக்குமே -செய்ய கண்ணா உருவச் செஞ்சுடர் ஆழி வலலானே -கலியன் -7-7-1-என்னக் கடவது இறே-

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை
ப் பாடேலோ ரெம்பாவாய்-14-

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் ஏந்தி அந்த ஸ்பர்ச்யத்தாலே வளர்ந்த
திருக் கைகளை உடையவனாய் -ஆழ்வார்களிலே வந்து அலை எறிகிற கண்களை உடையவனை-இளவாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் -என்று
இவர்களைத் தோற்பித்துக் கொள்ளும் கண் இறே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
அனுபவிப்பாரை பிச்சேற்ற வல்லக் கடவ திரு ஆழியையும் திருமேனிக்கு பரபாகமான திரு பாஞ்ச ஜன்யத்தையும் முற்பட தன்னை எழுதிக் கொடுத்து பின்னை எழுதிக் கொள்கிற திருக் கண்களையும் உடையவனை-ஆசைப்படப் பண்ணுமதுவும் அறிவு கெடப் பண்ணுமதுவும் திவ்ய ஆயுதங்கள் யுடைய சேர்த்தியே இறே

தாமரைக் கண்ணன் -சுரி சங்கு ஆழி ஏந்தி –(வெள்ளைச் சுரி சங்கோடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -திருவாய் 7-3-1 )

தாமரை மலரவும் மொட்டிக்கவும் இவை இரண்டும் -அங்கு மலரும் குவியும்
கண் நாடு பிடிக்க வளர ஆழ்வார்கள் அளவும் நீண்டு இருக்குமே
(ஆராவமுத ஆழ்வான் உத்சவர் இன்றும் சேவித்தால் சங்கு சக்கரம் காதுகளுக்கு அருகிலே இருக்குமே )சந்த்ர ஆதித்யர்கள் சேர உதித்தால் போல் இருக்கிற இரண்டு திவ்ய ஆயுதங்களையும் கண்டு – ஆங்கு மலரும் குவியும் என்கிற திரு நாபீ கமலம் போலே திருக் கண்களும் அலருவதும் மொட்டிப்பதாகவுமாகா நிற்கும்

பங்கயக் கண்ணானை
முற்பட பெண்களுக்கு தன்னை எழுதிக் கொடுத்து எழுத்து வாங்கப் பண்ணும் கண்கள் –
தூது செய் கண்கள் –-விடவே செய்து விழிக்கும் -(1-7)-கண்களுக்கு அற்றுத் தீர்ந்து –
ஜிதந்தே –தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகன் (2-6)-என்று உபய விபூதியையும் தோற்பிக்கும் கண் அழகு யுடையவனை –

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரிசங்கொடு-ஆழி ஏந்தித்தாமரைக் கண்ணன் -ஸ்யாமமான வடிவுக்கு பரபாகமான வெண்மையையும் சுரியையும் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் -மற்றைக் கைக்கு ஆபரணமான திரு வாழி -இரண்டு ஆழ்வார்கள் அளவும் வந்து அலை எறிகிற கண்கள் -சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும் -என்று கீழ் வாசிதமானது பிரகாசிக்கிற படி -ஜிதந்தே என்னப் பண்ணுகைக்கு திருக் கண்களோடு திவ்யாயுதங்களோடு வாசி இல்லை-முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி-திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,-ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி-.பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும்
விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா –
செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே-

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடராழி வல்லானே
உலகுண்ட ஒருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை அன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே —7-7-1-

செய்ய கண்ணா-புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே-உருவச் செஞ்சுடராழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-அழகிய வடிவை யுடைத்தாய் -நிரதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே யுடைய சர்வேஸ்வரனே –

————–

நாயகனாய் நின்ற -திருப்பாவை -16
தெருள் கொள் -திருவாய்மொழி -5-7-3-
நாயணன் -நந்தகோபனுக்கும் -கோயில் காப்பானுக்கும் அந்வயம்
தெருள் கொள் -அடை மொழியை நான்மறைக்கும் -வல்லவா -இரண்டுக்கும் அந்வயம் –

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய் எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –நாயகனாய் என்கிற நாயகத்வம் திரு வாசல் காக்கும் முதலிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம் –கடகரை சேஷி என்று இருக்குமவர்கள் இறே இவர்கள் –பகவத் சம்பந்திகளை முன்னிட்டுக் கொண்டு அவனையே உபாயமாகப் பற்றுமது பேற்றுக்கு உடல் என்று ஸ்வ பிரபந்தத்தில் முதலிலும் முடிவிலும் பரமாச்சார்யரான பெரிய முதலியாரைப் பற்றினார் –த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்று தாம் பண்ணின ப்ரபத்தியையும் கீழில் அவற்றோடு காற்கடைக் கொண்டு –
நாத முனிம் வி லோக்ய -என்று பெரிய முதலியாரை முன்னிட்டார் –

வேறாக வேத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் -(நான்முகன் )
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் -(திருவாய் -7-10-11 )
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தம் அடியான் -(பெரிய திருமொழி -2-6)
ஆர் தொழுவார் பாதமவை தொழுவது அன்றே (இரண்டாம் )-என்றும் இவை இறே ஆழ்வார்கள் படி –உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் —
அடியார்க்கு என்னை ஆட்படுத்த -ஈஸ்வரனுடைய கிருஷிக்கு பலம் இவர்களோடு சம்பந்திக்கை இறே –செல்வனைப் போலே -ஏத்த வல்லார் அடியோம் -என்ற பெரியாழ்வார் இருக்கை இறே-தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் -என்று ஆண்டாள் இருந்தது-பட்டர் -நஞ்சீயரை -பெரிய பெருமாள் தஞ்சம் என்று இருக்குமவரை தஞ்சம் என்று இரும் என்று அருளிச் செய்தார்

கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3-

தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு-ஞானாதிசயத்தை யுடையராய்க் கொண்டு நாலுவகைப்பட்ட வேதங்களையும் தங்கள் நினைத்தபடி நிர்வகிக்க வல்லவர்கள் பலரும் பகவத் அனுபவத்தால் சம்பன்னராய் வர்த்திக்கிற ஸ்ரீ வர மங்கல நகருக்கு-தெருள் கொள் நான்மறை என்று வேத விசேஷணம் ஆகவுமாம்-வேதாஹ மேதம் புருஷன் மஹாந்தம் -என்கிறபடியே பகவத் விஷயமே வேத தாத்பர்யம் என்று உணர்ந்து இருக்குமவர்கள் என்னுதல் -ப்ரதிபாத்யத்தை உள்ளபடி காட்டித்தர வல்ல வேதம் என்னுதல்

————

அம்பரம்–உம்பர்கோமானே எழுந்திராய் -திருப்பாவை -17
நல்கி ..பொழில் ஏழும் வினையேற்கே -திருவாய்மொழி -1-4-5-
அகலிடம் படித்து –வாரான் -திருவாய்மொழி -9-9-2-
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு -கலியன் -9-4-9-
ஆண்டாளும் -பராங்குச பரகால நாயகிகளும்  வருந்த ஒரே காரணம்
நாட்டுக்கு உள்ள நியாயம் அந்த புரத்துக்கு இல்லையாய் யாயிற்றே
சாமான்யத்தில் பண்ணும் ரஷணம்  விசேஷத்தில் இன்றிக்கே இருப்பது என்று –

ஆண்களுமாய் பிரயோஜனாந்தர பரர்களாய் மானவர்களுக்கோ கார்யம் செய்யலாவது –
அபலைகளுமாய் அனன்யா பிரயோஜனைகளுமான வர்களுக்கு கார்யம் செய்யலாகாதோ
வரையாதே உகப்பாரையும் யுகவாதாரையும் தீண்டுகிற நீ -ஆசைப்பட்ட எங்களைத் தீண்டல் ஆகாதோ
நீயே அர்த்தியாய் கார்யம் செய்யக் கடவ யுனக்கு நாங்கள் அர்த்திக்கை குற்றமோ –
நீ நிபுணரான இந்த்ராதிகளுக்கோ கார்யம் செய்யலாவது -அநிபுணரான எங்கள் கார்யம் செய்யலாகாதோ
உறங்குவாரை தழுவக் கடவ உனக்கு உணர்ந்து வந்தாரை தழுவல் ஆகாதோ
அவிசேஷஞ்ஞமான விபூதிக்காக உன்னைக் கொடுத்தால் வாசி அறிவார்க்கு உன்னைக் கொடுக்கலாகாதோ –
கழஞ்சு மண்ணை ஆசைப்படாதே உன்னை ஆசைப்பட்டது இழவுக்கு உடலாயத் தாகாதே

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து–எங்கும் அளிக்கின்ற –பரப்பை யுடைத்தான பூமி உரு மாய்ந்து போக -அத்தை யுண்டாக்கி பிரளய ஆபத்தில் அகப்படாதே வயிற்றிலே வைத்து நோக்கி -வெளிநாடு காண உமிழ்ந்து -பிரபலர் அபகரித்த அளவிலே எல்லை நடந்து மீட்டுக் கொண்டு இப்படி வரையாதே ரஷிக்கையே ஸ்வ பாவமாக இருக்குமவன் –இருந்ததே குடியாக ரக்ஷிக்குமவன் கிடீர் மஹிஷி நோவு பட உதவாது இருக்கிறவன் இப்படி வரையாதே நோக்கும் தன்மையன் கண்டீர்-இப்போது வாராது ஒழிகிறான் – என்றது-–பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்-தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்-கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கி
உலகங்களைக் காப்பாற்றும்போது, கார்த்த்வயா புத்தி இன்றிக்கே -செய்து தீர வேண்டுமே என்ற எண்ணத்தோடு அன்றிப் பேறு தன்னதாகக் காக்கின்றானாதலின், ‘நல்கி’ என்கிறாள்.
அதாவது, ‘எனக்குத் தன் பக்கல் உண்டான காதல், தனக்கு உலகத்திலே உண்டாய்க் காக்கின்றான்,’ என்றபடி.-தான்-அபேக்ஷிப்பார் இன்றிக்கே -விரும்புவார் இல்லாதிருக்கவும், தானே காக்கின்றானாதலின், ‘தான்’ என்கிறாள்.-காத்தளித்தல் என்பது–விருப்பமில்லாதன வற்றை நீக்கி விரும்புகின்ற வற்றைக் கொடுத்தல்.-பொழிலேழும் உலகம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டிருத்தலின், ‘பொழிலேழும்’ என்கிறாள்.
அன்றி, இவ்வுலகம், கீழ் உலகம் என்னும் இவ்விரண்டனையும் ஒன்றாகக் கொண்டு
அதனோடு மேலே உள்ள ஆறு உலகங்களையும் சேர்த்து ஏழாகக் கோடலும் அமையும்.
ஆக, தன் சரீரத்தைப் பாதுகாத்துக் கோடல் அன்பினாலே ஆதலின், ‘தான் நல்கிக் காத்து அளிக்கும் பொழிலேழும் நாரணன்’ என்கிறாள்-வினையேற்கே நல்கத்தான் ஆகாதோ-
‘தம் மக்களைப் பாதுகாத்தல் ஆகாதோ?’ நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தப் புரத்துக்கு அரிதாக வேண்டுமோ?’ என்றபடி.-வினையேன்-‘கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம் படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.

இனி, ‘நல்கித் தான் காத்து அளிக்கும் பொழிலேழும்’ என்பதற்கு,-பெயர் வேறாகவும் உருவம் வேறாகவும் பிரிப்பதற்குத் தகுதி இன்றிக் கிடந்த அன்று, யார் இருந்து விரும்ப, இதனை உண்டாக்கினான்? நீறு பூத்த நெருப்புப் போன்று, தான் என்ற சொல்லுக்குள்ளேயாய், தன்னை இட்டுப் பேச வேண்டி இருந்த அன்று, தன் மேலே, ஏறிட்டுக் கொண்டு நோக்கி அளிப்பவன்’ என்றும்,-வினையேற்கே நல்கத் தான் ஆகாதோ?’ என்பதற்கு, ‘இல்லாத அன்று உண்டாக்கினான்; உண்டாக்கியதற்குப் பலன் கருமத்தை ஏறிட்டுக் கைவிடுகையோ!’ என்று பொருள் கூறலுமாம்.

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே —-9-4-9-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் – ஜகத்துக்கு கண் (வழி )காட்டியாக வேதத்தை உண்டாக்கி-அத்தாலே ப்ரதிபாத்யனான தன்னைக் கிட்டுகைக்கு சாதனமாக யாகாத்ய உபகரணங்களையும் உண்டாக்கி அதுக்கு பல பூமியான ஸ்வர்க்கங்களை உண்டாக்கி ஜகத்துக்கு பிரகாசத்தை பண்ணக் கடவரான சந்திர ஸூர்யர்களையும் உண்டாக்கி அவ் வழியாலே ஜகதாகாரனாய் இருக்கிறவன் –அருள் தந்தவா நமக்குப் – அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே- (ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய ஸூவ ஜன ரக்ஷிதா -கண்ணனைப் போல் இல்லாமல்
தம் ஜனங்களையும் ரக்ஷிக்கும் ராமனும் நமக்கு அரிதாவதே )

———-

பஞ்ச சயனம் -திருப்பாவை -19–அழகு குளிர்த்தி மார்த்வம் பரிமளம் தாவள்யம் -மெத்தன என்றது மார்தவம் விசேஷித்த படியால்
அஞ்ச லோதியை -திருவாய்மொழி -10-2-4-இருண்ட கூந்தலுக்கு ஐஞ்சு லஷணங்கள் -அல் -கருமை -விசேஷித்து அருளி –
ஐம்பால் ஓதியை -கலியன் திரு எழு கூற்று இருக்கை –கூந்தலுக்கு -மார்த்வம் சைத்யம் பரிமளம் கருமை நீட்சி

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி –மெத்தன்ற பஞ்சாலே செய்த படுக்கை ஆகிலும்-கட்டில் -ஜாதி பேச்சு- கிருஷ்ணனுக்காக ஆராதைகளாக வந்து படுக்கையின் உள்மானம் புறமானம் கொண்டாடிக் கொண்டு படுக்கை பொருந்துவதே –கண் உறங்குவதே-பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்-பஞ்ச விதமான படுக்கையின் மேல் ஏறி -அதாவது-அழகு -குளிர்ச்சி -மார்த்த்வம் -பரிமளம் -தாவள்யம் -ஆக இவை இவர்களுக்கு மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாய் இறே இருப்பது – அஞ்சு உருவிட்டுச் செய்த படுக்கை -என்றுமாம் –
பஞ்சாலே செய்த படுக்கை என்னுமாம் –பஞ்ச சயனம்
பஞ்ச வித சயனம் –
1-சீத பரிஹாரமுமாய் -உஷ்ண பரிஹாரமுமாய் –
2-தர்ச நீயமாய் –
3-பரிமளத்துவமாய்-
4-விஸ்தார
5-பாண்டரோ பேதமுமாய் இருக்கை-

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சி வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரிவார் பொழில் மா மயிலன்ன
அஞ்சலோதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-4-

அஞ்சலோதியைக் கொண்டு நடமின்-
சுருண்டு நெய்த்து பரிமளிதமாய் என்றாப் போலே அஞ்சு வகைப் பட்டிருப்பதாய்த்
(இருட்சி நீட்சி சுருட்ச்சி குளிர்ச்சி அழகு ஐந்தும் -அல்லும் -இருட்டு -கறுத்து )
இருண்டு இருந்துள்ள மயிர் முடியை உடைய பிராட்டியை கொடு போங்கோள்-அஞ்சு -என்று அஞ்சு வகைப் பட்டிருக்கை – அல் -என்று இராத்திரி-அத்தால் இருட்சியை நினைக்கிறது –ஓதி -என்று மயிர் முடி –

அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறமுதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை –ஐந்து லஷணம் உடைய திருக் குழல் கற்றையை யுடைய பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தாய் -அஞ்சு லஷணத்தை யுடைத்தான மயிர் முடியை யுடையாளாய் –சுருண்டு பளபளத்து -நறுமணம் அடர்த்தி மென்மை
ந கச்சித் ந அபராத்யதி என்னும் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பினில் வைத்து அருளினாய்-மேல் சொல்லப் படுகிற ஐஸ்வர்ய சௌலப்யங்களுக்கு அடியான
ஸ்ரீ யபதித்வம் சொல்லப் படுகிறது –

————

கப்பம் தவிர்க்கும் -திருப்பாவை -20-கப்பம் -கம்பம் என்றபடி
இரு கூறா நகந்தாய் -திருவாய்மொழி -9-4-7-நகந்தாய -நகத்தாய என்றபடி
வல்லொற்று மெல்லொற்றாக மாறிய இடங்கள்
நகத்தை தாவும்படி பண்ணின விசேஷ அர்த்தமும் பன்னீராயிரப்படியில் அருளி உள்ளார்-

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்-கப்பம் தவிர்க்கும்–கப்பம் -என்கிறது கம்பம் -என்கிறபடி -அதாவது நடுக்கம் – கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துக் கிடக்கிறது –அஸூர ராஷசராலே குடி இருப்பு உள் பட இழந்து-புகலிடம் அற்றுப் படுகிற நடுக்கைத்தை தவிர்க்கை –நாட்டார் நடுக்கத்தை தவிர்க்கக் கடவ நீ –-எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய்-அவர்கள் நடுக்கத்துக்கும் எங்கள் நடுக்கத்துக்கும் வாசி அறிய வேண்டாவோ –அவர்கள் நடுக்கம் எதிரிகள் நிமித்தமாக-உன்னைக் கிடையாது ஒழியப் புகுகிறதோ -என்று எங்களுக்கு நடுக்கம்-கப்பம் -என்று இறை யாகவுமாம் –ராவணாதிகளுக்குப் பணிப் பூ விட்டு திரியாமைக்காக-

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–
9-4-7-

ரண்டு கூறாம் படி பண்ண வல்ல திரு நகத்தை யுடையவுமாய் -ஆர்த்தருடைய ஆர்த்தியைத் தீர்க்கும் நரசிம்ம ரூபி யானவனே -நகத்தாயே-நகந்தாய் என்று மெல்கிக்  கிடக்கிறது –நகத்தாய்-என்று வல்லொற்றை மெல்லொற்றாய்க் கிடக்கிறது என்று கிடக்கிறது-இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல-நகத்தை உடையவனே-நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் ஹிரண்யனுடைய மார்பகத்தில் பெரிய இடத்தை இரு கூறாம்படியாக நகத்தை தாவும்படி பண்ணின ஸ்ரீ நரஸிம்ஹமான திவ்ய ரூபத்தை யுடையவன்-

——————

பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -திருப்பாவை -21
அடியோமுக்கே எம்பெருமான் -கலியன் -4-9-5-
உன்னை நீ உணர வில்லை -உன் பிறவியைப் புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
பரம பதத்தில் வந்தோமோ -ஷீராப்திக்கு வந்தோமோ -எங்களைத் தேடி நீ திருவாய்ப்பாடிக்கு அன்றோ வந்தாய் -இங்கே உறங்கலாமோ -ஆண்டாள் –
எங்களைத் தேடி திரு இந்தளூர்  எழுந்து அருளிய ஸ்ரீ பரிமள ரெங்க நாதனே உணராய் –

ஆற்றப் படைத்தான் மகனேஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும் ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே-பரம பதம் போலேயும்-நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே கோப குலமும் கோபாலத்வமும்- நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே-அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே 
—4-9-5-

அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே   –
அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு-ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும் உகந்து அருளின நிலங்கள் –தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே

———-

அன்று இவ் உலகம் போற்றி -திருப்பாவை -24
அருகலிலாய –நம் –திருவாய்மொழி -1-9-3-
அடி போற்றி -திறல்  போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய வீர சரிதத்தையே ஏத்தி புருஷார்த்தத்தை லபிக்கைக்காக சத்வம் தலை எடுத்த இன்று உன் கை பார்த்து இருக்கும் நாங்கள் வந்தோம் நீ கிருபை செய்து அருள வேணும் இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் — ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை- ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ )

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
–1-9-3-

ஹேய ப்ரத்ய நீகமாய்-ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்வரூப வைலக்ஷண்யமும்- நித்ய ஸூரி நிர்வாஹகத்வ ரூபமான மேன்மையும்-விலக்ஷண விக்ரஹ யோகமும் —
புண்டரீகாக்ஷத்வமும் -கருட வாஹனத்வமும் -ஸ்ரீ யபதித்வமும்–ஆகிற பரத்வ சிஹ்னங்களாய் யுள்ள அறு சுவையும் -தாரா நின்றான்-என் அளவில் நித்ய ஸூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்-
——————————————–

கன்று குணிலா எறிந்தாய் -திருப்பாவை -24-விளங்கனிக்கு எறிந்த விஷயம் அஸ்பஷ்டம்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -கலியன் -9-10-7-அஃது ஸ்புடமாகிறது இதில் –

ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்-குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக் குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்-கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே கழல் போற்றி என்கிறார்கள் –

வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி

மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க) மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க) வாசியற பழி கேடன் என்று சொல்லும் படி இறே

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து – கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும் ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய்
ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் –

குணம் போற்றி-பசிக்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ – அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் ––குன்று குடையா வெடுத்தாய்-விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான்
நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து – கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும் ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –ஆநிரைக்கு அழிவு என்று  மா மழை நின்று காத்து உகந்தான் – பசுக்களுக்கு அழிவு வருமன்று மகா வர்ஷத்தை மலையை எடுத்துக் கொண்டு நின்று காத்து இவற்றுக்கு உறுப்பாக பெற்றோம் -என்று உகந்தவன் –நில மா மகட்கு இனியான்- பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள் ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே- பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –

———–

ஒருத்தி மகனாய் -திருப்பாவை -25
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய்  வளர்ந்ததும் கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-

ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 ) தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்-சர்வ வியாபகனுமாய் நித்யனுமாய் இருக்கிற மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் ) சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே – தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –இவன் பிறந்த போதே ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

அவன் பிறவி நமக்கு என்று கோல – நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –அவன் பிறப்பு கூட்டும் –
அவனை விட்டு நீங்கவே  நம் பிறப்பு பிரபத்தி யாவது இந்த ஞானமே -(பிரபத்தி இந்த பிரதிபத்யே )

ஒருத்தி மகனாய் பிறந்து வளர -திருப்பாவை -25
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-

அங்கே பிறந்து இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி-ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்-திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும் ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-ஈன்ற முதல்  தாய் சடகோபன் -மொய்ம்பால்  வளர்த்த இதத்தாய் இராமானுசன் –இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

தான் தீங்கு நினைந்த -திருப்பாவை -25
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த -திருவாய்மொழி -2-6-6-
நினைந்த -மனஸ் சஹ காரம் உண்டாவதே
உக்தி மாதரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் ஆய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்து கழுத்துக்கு மேலும் அமையும் –
கைவிடும் இடத்தில் அக வாயிலும் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான் –
அவன் விடுவது புத்தி பூர்வம் பிரதி கூல்யம் பண்ணினவரை
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும் –

அஸ்மாந் ஹந்தும் ந சம்சய -(விபீஷணன் -நமக்கு எல்லாம் உயிரான பெருமாளை நம்மை அழிக்க வருகிறான் என்றாரே சுக்ரீவ மகா ராஜர் )

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-

உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த –
வார்த்தையோடு நில்லாது நெஞ்சினாலும் இகழ்ந்தவன். இத்தால், அவன் விடுவது, மனம் அறிந்தே தீவினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

தீங்கு -திருப்பாவை -25
பொல்லா  -திருப்பாவை -13
இன்னது என்று சொல்ல மாட்டாமையாலே தீங்கு பொல்லா என்கிறார்கள்
இராவணன் பொல்லாங்குக்கு பாசுரம் இட்டு சொல்ல முடியாமல் -பொல்லா -என்னும் அளவே சொல்கிறார்கள்
கம்சனுடைய தீமையும் வாசாம் அகோசரம் -என்றபடி

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

———————-

மாலே -திருப்பாவை -26
நெடுமாலே -திருவாய்மொழி -5-8-1-
இருவரும் ஆஸ்ரித வ்யாமோகத்தை அருளுகிறார்கள் –
சம புத்தியால் மாலே இடைப்பென்கள் வார்த்தை மால் வியாமோகம்
நெடுமால் மிக வியாமோகம் -நீராய் அலைந்து கரைய என்கிற அடைவு

மாலே-முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் – சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்-மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் – இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

நாங்கள் தெளிந்து நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –நோற்கவும் ஷமன் அன்றிக்கே நாங்கள் வந்து எழுப்பும் அளவும் எழுந்து இருக்கவும் மாட்டாதே வ்யாமோஹம் இருந்த படி என் –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு-யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு-ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே – ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே – பெண்களை பிரியாமைக்கு இறே-மாலே -மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
உன் பக்கல் உள்ள நிரதிசய அநு க்ரஹத்தாலே நீராய் உருகும்படி பண்ணி வைத்து எனக்கு
அரியையாய் இருக்கிறவனே -உன் பக்கல் யுண்டான ஸ்நேஹாதிசயத்தாலே அசேதனமான என்னுடைய சரீரமும் கூட அத்யந்த சிதிலமாம் படி பண்ணுகிற அபி நிவேச ப்ரகர்ஷத்தை யுடையவனே-ஜலமயமாம் படி கட்டுக் குலைந்து ஒரு நிலையில் நில்லாத வ்யாகுலமாய்
ஆஸ்ரயமும் தெரியாதபடி கரையும்படியாக உருகப் பண்ணா நிற்கிற அபரிச்சின்ன போக்யதா மஹாத்ம்யத்தை யுடையவனே-நெடுமாலே!-1-சர்வேஸ்வரன் என்னுதல் -2-போக்யதையின் மிகுதியைச் சொல்லுதல் -3-வ்யோமோஹ அதிசயத்தை சொல்லுதல் -4-இப்படி ஸைதில்யத்தை பிறப்பியா நின்று வைத்து எட்டாது இருக்கிறவன் என்னுதல் –5-தன் போக்யத்தையாலே ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கை என்னுதல் -6-தன் வ்யோமோஹ அதிசயத்தை காட்டி ஸைதில்யத்தை பிறப்பியா நிற்கிறவன் என்னுதல்

ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின்,-நெடுமாலே’ என்கிறார். என்றது, எதிர்த் தலையில் அழிவு கண்ட பின்பே அன்றோ இத் தலையில் அழிவு என்றபடி.
அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராத படியாயிருக்கும்.
அவனுடைய அழிவு சொல்லும் போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது.-நெடுமால்’ என்னில் என்னுமித்தனை.
மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை.
அன்றிக்கே, மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில், அன்று, நெடுமால் – மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்-சர்வேச்வரன் என்றபடி.
அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ.-
பரத்வமும் நீர்மையும் உருக வைக்கிறது -என்றவாறு-

——–

சூடகமே -திருப்பாவை -26
கை வண்ணம் -திரு நெடும் தாண்டகம் -21
இருவரும் அடைவு கெட அனுபவம் -பிடித்த கைக்கும் அணைத்த தோளுக்கும் அணைத்த விடத்தே உருத்தும் அதுக்கும் ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் துறைக்கு ஆபரணம் –
அம்மி மிதித்த காலத்திலேயே என் காலைப்  பிடித்த கை –
ஆதி ஷடேமம அசமாநம ஆசமேவ த்வம சத்திரா பவ -என்று அப்போதே மந்த்ரம் சொன்ன வாய் –இமாம் சமேத பச்யதே -அப்போதே காலே பிடித்து கரிய குழல் அளவும் பார்த்த கண்
பின்பு சப்தபதீ பர கரணத்தில் நடந்த திருவடிகள் –

சூடகமே-பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –(பாணி கிரஹணம் முதல் அன்றோ )-முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்-

தோள் வளையே –அந்த ஸ்பர்சத்தாலே -அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

தோடே-தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே – அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் – இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –

செவிப் பூவே –அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு –முகந்து பார்க்க )விஷயமான இடம்

பாடகமே–அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்-அணைத்தால் துவண்டு விழுமிடம் – அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம் –

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —திருக்கையால் தாள் பற்ற -கையைக் காலைப் பிடித்து இறே நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ
மகரம் சேர் குழை யிருபாடு இலங்கியாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே
அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே–21-

கை வண்ணம் இத்யாதி –
அந்த சௌந்த்ர்ய சாகரத்தில் தான் அகப்பட்ட சுழிகளைச் சொல்லுகிறாள் –
பாதாதி கேசாந்தமாகச் சொல்லுதல் -கேசாதி பாதாந்தமாக சொல்லுதல் செய்யாது ஒழிந்தது-தான் அனுபவித்த பிரகாரம் இதுவாகையாலே-

1-கை வண்ணம் தாமரை —-பிரதமத்தில் தன்னை மேல் விழுந்து பாணி க்ரஹணம் பண்ணின கையைச் சொல்லுகிறாள் –2-வாய் கமலம் போலும் – கையைப் பிடித்து தன் செல்லாமை தோன்ற – இது ஒரு வடிவு அழகு இருந்தபடி என்-இது ஒரு முலை அழகு இருந்த படி என்-இது ஒரு கண் அழகு இருந்தபடி என் -என்று இவன் சொல்லுச் சொன்ன திரு வதரம் இருந்தபடி –3-கண் இணையும் அரவிந்தம்- இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி அனுகூல தர்சனத்தாலே விக்கினால் குறையும் தலைக் கட்டும் கண் – இவன் சொல்லுச் சொல்லத் தொடங்கி குறையும் தலைக் கட்ட மாட்டாதே இடையிலே விக்கி குறையும் கண்ணாலே தலைக் கட்டின படி ஆதர ஸூசகம் இறே  இவன் சொல்லு – அவ்வாதரம் இத்தனையும் கண்ணிலே பிரகாசிக்கும்படி நின்றார் -என்கை –4-அடியும் அக்தே -அந் நோக்குக்குத் தோற்று – கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -என்று கீழ் சொன்னால் போலே இங்கும் சொல்ல அமைந்து இருக்க -போக்யதா அதிசயத்திலே
அவயவங்கள் தோறும் தனித்தனியே தாமரையை த்ருஷ்டாந்தமாக  சொல்கிறாள் –அடியும் தாமரை -என்னாதே- அடியும் அக்தே -என்றது உபேஷா வசனத்தாலே கீழ் சொன்னவையும் சத்ர்சமான த்ருஷ்டாந்தம் அன்று என்னும் இடம் ஸூசகம் –

கூடாரை வெல்லும் கோவிந்தா -திருப்பாவை -27
பருப்பதத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-7-
அத்வேஷ மாதரத்தை பற்றாசாக கொண்டு அவன் அருளும் தன்மை இரண்டாலும் அருளப்படுகிறது – கூடுவோம் அல்லோம் என்று அபிசந்தி இல்லாத மாதரத்தில் ரஷித்த படி
பொருந்தோம் என்று துர் அபிமானம் இன்றிக்கே -ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவன் கோவிந்தன்
பருப்பத்தது -விலக்காமை ஒன்றே வேண்டுவது-வருவானும் -விரோதிகளை போக்குவானும் -தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் தானே–பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி –
ஸ்வ சாசநாதி வரு ததி வ்யவசாய நிவ்ருத்தி மாத்ரேண -ரசன அநு பபத்தி அதிகரண ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்தி — விலக்காமை ஆத்ம ஞானம் -பிரளயத்தில் மோஷ பிரதானம் பண்ண இதுவே ஹேது ததேக சேஷத்வ ததேக ரஷ்யத்வ ஞானம் இல்லை பிரளயத்தில் -தத் கார்யமான விலக்காமை அப்போது இல்லையே –

கூடாரை வெல்லும் –-ஆந்தனையும் பார்த்தால் –-ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் – வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும் அங்கதனை இட்டும் பின்பு வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் – வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 ) ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது-பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் – லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்-பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் —-என்று ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் ) ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற துரியோதனனை வெல்ல வல்லனானான் –நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும் தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

எல்லாரையும் வெல்வது குணத்தால் – கூடுவாரை சீலத்தாலே வெல்லும் – கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்-ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் — சீலம் அழகுக்கு இலக்காகும் –அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்-சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்-அம்பு தோல் புரையே போம் – அழகு உயிர்க் கொலை யாக்கும்

சீர்-அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் – சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்-தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷன்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

கோவிந்தா – கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத மாத்ரத்திலே ரஷித்த படி –கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில் கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ-பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே- ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

மகா மேருவிலே  தன் வெற்றி எல்லாம் தோன்றும்படி தன் அடையாளத்தை இட்டுப் போந்தான்-அப்படியே பரம பதம் கலவிருக்கையான  ஈஸ்வரன் இங்கு நின்றும் இவர் பக்கலிலே வரும் அளவும் உண்டான பாவக் காட்டையும் சீய்த்து இவர் வன்னியத்தையும் அறுத்து இவர் –சென்னித் திடரில் பாத இலச்சினை-வைத்த படிக்கு த்ர்ஷ்டாந்தம் ஆகிறது –இவர் வருதல் இருவரும் பாதி பாதி வழி வருதல் செய்கை அன்றிகே அவன் தானே வந்தான் ஆய்த்து –மலைக்கு உள்ளது விலக்காமை இறே
1-அப்படியே வருவானும்
2-வழியில் உள்ள விரோதிகளை போக்குவானும்
3-தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் -தானே இறே -இவர்க்கும்

பொறித்தாய்-கர்ம பாரதந்த்ர்யத்தால் பொறித்த பொறி போல் அன்றி-ஈஸ்வர பரதந்த்ர்யமாக பொறித்த பொறி-

—————

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -திருப்பாவை -28
நம்பீ -திருமாலை -25
குண பூர்த்தி -அனுபவம் இருவரும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் -நைச்ய அநு சந்தானம் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அவன் மேன்மை அனுசந்தானம் –
அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் -என் கண் இல்லை -நின் கணும் பக்தன் அல்லேன் -நைச்ய அநு சந்தானம் –

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ சர்வ நிரபேஷன் -என்கை-எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ-உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ –இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து-இத்தால் உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று –

1-குறைவு இல்லை-2-குறை ஓன்று இல்லை-3-குறை ஒன்றும் இல்லை-

1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –2-ஸாவதியும் அன்று –3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-(1-எதையும் எதிர்பாராமல்-2-எல்லைக்கு உட்படாதது-3-பிரதிபந்தகங்களால் தடுக்க முடியாதே )

1-உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
2-பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
3-பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே

1-நிரபேஷனைப் பற்றாய் —2-பூர்ணணைப் பற்றாய் –3-பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –

நாரணனே நீ நான் இன்றி இலேன்–பயன் இருவருக்குமே -அமுதனார்
நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்-அமுதனார் -நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் – நிகரின்ற நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிரை ஒன்றும் இலேன்–உன்னுடைய அருளுக்கும் -என்னை விட தாழ்ந்தவன் இல்லையேபயன் இருவருக்கும் ஆனபின்பு--மா முனிகள் ஆர்த்தி பிரபந்தம் –எனைப் போல் பிழை செய்வார் உண்டோ
உனைப் போலே பொறுப்பார் உண்டோ–மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ —

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா-இக் குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று –
தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்- அவர்களில் சிறியவர்களுக்கும்
அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி-கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி – ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே வாத்சல்யாதிகளாலும்
ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ-

கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் – கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும் மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேஷத்தை
கோவிந்தா என்கிறார்கள் –
(நிறைவினால் குறையில்லா நெடும் பணைத்தோள் பின்னை —
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும்-திருவாய் )

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தண்மை தன்னை
ஒளித்திட்டேன் என் கண் இல்லை நின் கணும் பக்தனும் அல்லேன்

களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் அரங்க மா நகர் உளானே –25-

அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் –ப்ராஹ்மண்யம் –ஒளித்திட்டேன் – ப்ராஹ்மண்யம் இல்லாமை என் அளவாய் போகை அன்றிக்கே இவ் வர்ணம் தான் தண்ணிது -என்னும்படி பண்ணினேன் –விசிஷ்டராய் இருப்பாரைக் கண்டால் இன்னான் அதிகரித்த வர்ணத்திலே சிலர் அன்றோ என்று கொண்டு அவர்களுக்கும் அவத்யமாம் படி திரிந்தேன் – இது இறே நான் கர்ம யோகத்தில் நின்ற நிலை-என் கண் இல்லை--என் விஷயமாக எனக்கு ஒன்றும் இல்லை – ஆத்ம விஷய ஞானம் எனக்கு இல்லை -என்கை-கர்ம யோகம் இல்லை என்ற போதே தத் சாத்யமான ஜ்ஞான யோகம் இல்லை என்னும் இடம் அர்த்த சித்தம் அன்றோ -என்னில் – இஜ் ஜன்மத்தில் அனுஷ்டித்த தொரு கர்மம் இல்லை யாகிலும் பூர்வ ஜன்மத்தில் கர்ம யோகம் பக்வமாய் அவ் வளவிலே தேக விஸ்லேஷம் பிறந்து அனந்தர ஜன்மத்திலே ஜ்ஞானம் நைசர்க்கிகமாய் இருக்கும் இறே – அதுவும் இல்லை என்கை –

ஆனால் பக்தி யோகம் இருந்தபடி என் என்னில் –நின் கணும் பக்தனும் அல்லேன் –
கண்டார்க்கு ஸ்ப்ர்ஹை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத உன் பக்கல் எனக்கு ஸ்நேஹமும் இல்லை –கர்ம ஜ்ஞானங்கள் இரண்டும் இல்லையாய் இருக்க –
உபய சாத்யமான பக்தி இல்லை என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்னில் –
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஜ்ஞான சமாதிபி நராணாம் ஷீண பாபாநாம் க்ர்ஷ்னே பக்தி பிரஜாயதே-என்கிறபடியே உண்டாகலாம் இறே – அதுவும் இல்லை என்கை –அதவா
கர்ம ஜ்ஞான பக்திகள் மூன்றையும் தனித் தனியே உபாயமாகச் சொல்லுவாரும் உண்டு –
அந்த பிரகாரத்தில் சொல்லிற்றாகவுமாம் –கர்மனை வஹி சம்சித்தி மாஸ்திதா ஜனகாதய –என்றும்-சர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞானே பரி சமாப்யதே -என்றும்-பக்த்யாத் வனன்ய யாசக்ய -என்றும் – சொல்லக் கடவது இறே –இது இறே கர்ம ஜ்ஞான பக்திகளிலே நான் நின்ற நிலை –மற்றும் இவ் விஷயத்தில் அறிவுடையார் – நோற்ற நோன்பு இலேன் -என்றும்
கறைவைகள் பின் சென்று -என்றும்-ந தர்ம நிஷ்டோச்மி -என்றும் தம் தாம் வெறுமைகளை பேற்றுக்கு உடலாக முன்னிட்டுக் கொண்டு போரக் கடவதாய் இறே இருப்பது –

நம்பி –நான் உபயாந்தரங்களில் வெறுமையில் பூரணன் ஆனவோபாதி
தேவரீர் சீலாதி குண பரிபூர்ணன் அல்லீரோ – தேவரீர் உடைய பூர்த்தி சஹகார நிரபேஷம் அன்றோ –அறிவொன்றும் இல்லாத -அநந்தரம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்றாள் இறே –கடல் வண்ணா – தேவரீர் உடைய சீலாதி குண பரி பூர்த்தி எல்லாம் வேணுமோ – வடிவு அழகே அமையாதோ என் பேற்றுக்கு –-ஒரு கடலோடு ஸ்ப்ர்தை பண்ணி ஒரு கடல் சாய்ந்தால் போலே இறே பெரிய பெருமாள் கண் வளர்ந்து அருளுகிறது –ஐயப் பாடு அறுத்துத் தோன்றும் அழகன் – இவ் வடிவு அழகு இறே இவர் பற்றாசாகச் சொல்லிப் போந்தது –

———–

கறைவைகள் -திருப்பாவை -28 -த்வய பூர்வ வாக்யார்த்தம் –-அகலகில்லேன் -திருவாய்மொழி -6-10-10–த்வய பூர்வ வாக்யார்த்தம்-சிற்றம் -திருப்பாவை -த்வய உத்தர வாக்யார்த்தம் – ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி –த்வய உத்தர வாக்யார்த்தம் -மேம்பொருள் -திருமாலை -38-த்வ்யார்த்தம் –

மேம்பொருள் -திருமாலை -38-மகா பாரத சாரம் -சரம ஸ்லோகம் -ஆனால் போலேஇப்பிரபந்த சாரம் -இப்பாட்டு –இது தான் த்வயத்தின் உடைய அர்த்தத்தைச் சொல்லுகிறது –த்வயத்தில் பிராபகம் முன்னாய்-பிராப்யம் பின்னாய் -இருக்க இதில் பிராப்யம் முன்னாய் -பிராபகம் பின்னாய் -இருப்பான்
என் என்னில்-வ்யுத்பத்தி வேளையிலே-பிராப்யம் முன்னாகவும்-பிராபகம் பின்னாகவும் இருக்கக் கடவது இறே-ஸ்வர்க்க காமோ ஜ்யோதிஷ்டோமேன யஜேத -என்று இறே வ்யுத்பத்தி வேளை இருப்பது –அனுஷ்டான வேளையிலே ஜ்யோதிஷ்டமோம் அனுஷ்டான பூர்வகமாக இறே ஸ்வர்க்க சித்தி பிராபக நிஷ்டையால் இறே பிராப்யம் சித்திக்கும்-அப்படியே இப் பாட்டிலே வுயுத்பத்தி வேளையாய் த்வயத்தில் அனுஷ்டான வேளையாய்
இருக்கிறது –அதில் பூர்வ பாகத்தளவிலே அனுசந்தித்தார் நம் ஆழ்வார் –
உத்தர பாகத்தை அனுசந்தித்தாள் ஆண்டாள்-அவ் விரண்டையும் சேர அனுசந்தித்தார் இவ் ஆழ்வாரே யாய்த்து

மேம்பொருள் போக விட்டு -என்றும் ஐம்புலன் அகத்தடக்கி -என்றும் நமஸ் சப்தார்த்தம் சொல்லப் பட்டது-மெய்ம்மையை மிக உணர்ந்து -என்கிற இது –
நாராயண பதத்தில் –நார -சப்தார்த்தம் சொல்லிற்றாய் அந்த சேஷத்வத்துக்கு பிரதி சம்பந்தியை ஒழிய ஸ்திதி இல்லாமையாலே சேஷித்வம் ஆர்த்தமாய் சொல்லிற்றாய்
ஆக –நாராயண -சப்தார்த்தம் சொல்லிற்றாய் -ஆய்த்து-உணர்ந்து -என்று கொண்டு
ஜ்ஞாத்ருவ பரமாகச் சொல்லுகையாலே பிரணவார்த்தம் சொல்லிற்றாயிற்று-இப்பாட்டில் குறையும் பூர்வார்த்தத்தில் சொல்லுகிற பிராபகத்தைச் சொல்லுகிறது –உன் கடைத் தலை இருந்து –உன் தலைக்கடை -என்றபடி – சரணவ் -என்கிற ஸ்தானத்திலே -கடைத்தலை -என்கிறார் –காம்பற தலை சிரைத்து -என்ற இடம் உபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமான உபாயாந்தர பரித்யாகத்தை சொல்லுகிறது –சூழ் புனல் அரங்கத்தானே –உன் கடைத்தலை -என்று நாராயண சப்தார்த்தமான சீலாதிகளை நினைக்கிறது –பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும் நாராயண சப்தத்தில் அந்தர்பூதை யாகையாலும்
உன் -என்கிற இதிலே –லஷ்மீ சம்பந்தம் அனுசந்தேயம் –கடைத்தலை -என்றது
சரணவ்  -என்றபடி –இருந்து வாழும் -என்ற கிரியா பதத்தில் உபாயத்வ அத்யாவச்யதையும்
அது தான் போக ரூபமாயும் இருக்கிற படியும் சொல்லிற்று –சோம்பரை –
என்றது –பிரபத்யே -என்கிற உத்தமனால் ஆஷிப்தனான அதிகாரியைச் சொல்லிற்று –

—————–

வங்கக் கடல் கடைந்த மாதவனை -திருப்பாவை -30
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –

வங்கக் கடல் கடைந்த-தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதை பெற்று அப்போது உகப்போடே இருந்தால் போலே ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி- பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே
இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய் கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது-ஒல்லை நானும் கடைவன் என்று (பெருமாள் திருமொழி )-விண்ணவர் அமுதுண்ண என்று ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து
அபேக்ஷித சம்விதானம் பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன் அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ-பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று
ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )

மாதவனை –ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம் லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் –
அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது -பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக – -என்கிறது –பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து
அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –
கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

———-

மாதவனை திருமாலால் -திருப்பாவை -30-
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீ ய பதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை  இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி

செல்வத் திருமாலால் –உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –-இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி முடிவிலும் சொல்லுகையாலே த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை-திருமால் –செல்வம்-திருவுக்கும் திருவாகிய –செல்வு -செல்வச் சிறுமியரைப் பெற்ற பின்பு சிறந்தது-இங்கு உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது-ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த லஷ்மீ சம்பந்தம்
வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –(மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்-செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே)செல்வத் திருமாலால் உபய விபூதி யுக்தனான ஸ்ரீ யபதி யாலே-இப் பாட்டில் உபக்ரம உப சம்ஹாரங்களில் (மாதவனை கேசவனை –செல்வத் திருமாலால் )த்வயத்தில் போலே பிராட்டி சம்பந்தம் சொல்லிற்று ஆய்த்து

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே-10-5-7-

மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்–புருஷகார யோகம் என்ன கைங்கர்ய வர்த்தகம் என்ன இரண்டு ஆகாரத்தையும் யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ விசிஷ்டனானவனுடைய மாதவன் என்கிற திரு நாமத்தை
பூர்வ கண்ட மர்யாதையாலே உபாயத்வேன ஆஸ்ரயணீயன் என்றும்
உத்தர கண்ட மர்யாதையாலே உபேயாத்வேன புருஷார்ய பூதன் என்றும் அனுசந்தித்து
உச்சரிக்கைக்கு -கிடையாதது கிடைத்தது -என்ற பேர் ஆதாரத்துடன் சொல்ல வல்லி கோளாகில்-மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி –
ஆச்சார்யா ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10
முற்கூற்றால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளை உபாயமாக பற்றுகிறது-பிற்கூற்றால் அச் சேர்த்தியில் அடிமையை இரக்கிறது-முமுஷுப்படி -சூர்ணிகை -122-ஆக-திருமந்தரம் த்வயம் இரண்டையும் அனுசந்திக்க வல்லீர் கோளாகில் -என்றது ஆயிற்று –

————-

தண் தெரியல் -திருப்பாவை -30
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் -அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பைங்கமலத் தண் தெரியல் –பிராமணருக்கு தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –பசுத்த கமலத்தினுடைய குளிர்ந்த மாலை – தண்ணம் துழாய் அழல் போல் (திருவிருத்தம் -3 )-என்று வட பெரும் கோயில் யுடையானுடைய மாலை போலே கொதித்துக் கிடவாதே
பெரியாழ்வார் கழுத்தில் மாலை –பிரித்தவன் மாலை போல் அன்றே சேர்ப்பார் மாலை –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3

————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .