போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே–4-1-1-
ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே-என்கிறார் முதல் பாசுரத்தில்
சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று
அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே
மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் –
அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும்
தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம் –
என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள்
எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன
அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம்
இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம்
சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே
ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும்
எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற
சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே
வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே
உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே
சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை
அளைந்து இருந்த வ்யாமோஹம்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி
ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
——————
கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-
ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான ஸ்ரீ விபீஷணனுக்கு கொடுத்து அருளினவன்
வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் முதல் பாசுரத்தில்
அந்த நிருத்தத்திலே-வன்மைக் கூத்து என்றும்-மென்மைக் கூத்து என்றும் சில உண்டு -அவற்றை
அடையப் பண்ணின அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து வர்த்திக்கிற கோயில்
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
அவற்றின் உடைய ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்-இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
உள்ளே போய் புக்கு கம்சன் தலை மயிரைப் பிடித்து முகம் கீழ் பட வலித்து திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
என்கிறார் நாலாம் பாசுரத்தில்
இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
மூவடியை நீர் ஏற்று திருக்கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
அவன் முடிந்து போகச் செய்தேயும் சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த ஸ்ரீ நர சிம்ஹம்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம் என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக – பிஷையை முன்பு அருளின-தேவன் உடைய வலிய சாபம் நீங்க
மகா உதாரனானவன்– வர்த்திக்கிற தேசம்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
தன்னாலே ஸ்ருஷ்டனான சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————————
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-
லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி
தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார் முதல் பாசுரத்தில்
கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து-இரண்டாம் பாசுரத்தில்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்
ஏழு இசையின் சுவை தன்னைச்-சப்த ஸ்வரங்களிலும் உண்டான ரச வஸ்து தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
நிரதிசய போகய பூதனாய் இருந்துள்ளவனை
பேதியா இன்ப வெள்ளம் -என்ற இடம் ஸ்வரூபத்தின் போக்யதை சொல்லிற்று
இங்கு குண யோகத்தினால் வந்த போக்யதை சொல்லுகிறது
காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான வடிவை உடையவனை கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் நான்காம் பாசுரத்தில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்-
பசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக ஸ்ரீ கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக முடி சூடி நிற்கிறவனை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
என்கிறார் நான்காம் பாசுரத்தில்
விபவத்தில் நெஞ்சு சென்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்
பொல்லாத நெஞ்சை உடைய ராஷசர் மிடுக்கைப் போக்கினவனே-என்று
அப்படியே எங்கள் பிரதிபந்தங்களைப் போக்கி ரஷிக்க வேணும் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை
நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி
போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள
சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்-எட்டாம் பாசுரத்தில்-
பாலும் சக்கரையும் அனுபவித்து தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்
ஒரு கால் ஸ்ரீ சர்வேஸ்வரன் ரஷகன் -என்று இரா மற்று ஒரு போது-வேறு ஓன்று ரஷகம் -என்று இருக்கை அன்றிக்கே
என்றும் ஒக்க சர்வேஸ்வரனே நமக்கு ரஷகன் -என்று தெளிந்து இருக்கிற பிராமணர்
அழகியதாய் நிரவதிகமான ஆனந்தத்தை உடையவனாய் நிற்கிறவனை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
பரப்பை உடைத்தான வெண் கொற்றக் குடைக் கீழே பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்-நிரவதிக ப்ரீதி உக்தராய் நித்ய சூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்
பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நலமுடையவன் அருளினன் அயர்வறும் அமரர்கள் அதிபதி – கோயில் திருமலை பெருமாள் கோயில்
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————————-
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-
பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்-
முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்-
என்கிறார் முதல் பாசுரத்தில்
ஒருத்தரும் விரும்பாத நஞ்சை யுண்டு அறிவு குடி புகுராமையாலே உகந்த பிள்ளை கண்டீர்
மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்-
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக-
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
கறுப்பு ஆர்ந்த திண்ணியதான ருஷபங்களை அடர்த்து விவாஹ மங்களத்தை நிர்வஹித்த
கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ஸ்ரீ ருக்மிணி ஸ்ரீ நப்பின்னை இருவர் உடன் சம்ஸ்லேஷித்த படியை அனுசந்திக்கிறார்-
வெளுத்த தந்த பங்க்தியை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியார்-
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
ஸ்ரீ ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் மற்றும் உள்ள முதலிகளுமாக இப்பாட்டில் சொல்லுகிறது என் -என்று
ஸ்ரீ பட்டருக்கு விண்ணப்பம் செய்ய0ஒரு கால் இயலைக் கேளா ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்
ஆறாம் பாசுரத்தில்
ஸ்ரீ சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே
மகா பலி உடையனாய் தான் குறைவாளனாய் இரந்த-என்ன பிள்ளை தான்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
பூமியை இடந்து அதுக்கு அபிமானியான ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
ஆழியானது மிக்கு இருந்துள்ள ஊழி வெள்ளத்தைப் பண்டு திருமேனியிலே ஏக தேசத்தில் அடக்கின ஸ்ரீ சர்வேஸ்வரன் கிடீர்
என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
ஐந்தும் ஐந்தும் வல்லார்-ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும் அது கலசாத ஐந்தும்
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும் குறைவற புஜித்து ஸ்ரீ பரம பதத்தில் ஸ்ரீ நித்ய சூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
————————
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1
மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் முதல் பாசுரத்தில்
இலங்கையைப் பற்றின ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி-
சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
அவன் விரோதி நிரசனத்தால் அல்லது போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது போது போக்க மாட்டாதே இருக்கும் படியும்-என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி
அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து ரஷகன் ஆனவன் தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே வந்து சந்நிஹிதன் ஆனான்
அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து
அவ் ஊரில் உள்ளார் இருப்பது–என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்
பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்
ஏழாம் பாசுரத்தில்
த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்-
இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்
சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-பத்தாம் பாசுரத்தில்-
———————–
தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நாவள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-
முள் பாய்ந்தால் அம்மே -என்னுமா போலே-பூர்வ ஜன்ம வாசனையாலே
நாவுக்கு அலங்காரமான திரு நாமத்தைச் சொல்லி
நா வாயில் உண்டே-நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -என்னக் கடவது இறே
அதுவும் நாராயணாவோ என்று இறே கூப்பிட்டது-
ஒரோ கால விசேஷங்களிலேயாய்-தீர்த்தம் பிரசாதித்தது என்னாமே நித்ய வாஸம் பண்ணுகிற
உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே ரஷகன் ஆக வேணும்
அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை இவர் தாமே அருளிச் செய்கிறார்-என்கிறார் முதல் பாசுரத்தில் –
காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
பூமியை இடந்து எடுத்து
மகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் கிடைக்கையாலே அவனை அழிக்க மாட்டாதே தன்னை அழித்தான் ஆய்த்து-
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக
அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய் புகுந்து இருக்கிற நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
ஸ்ரீ வாமனன் படி யாய்த்து அங்கு உள்ளவை எல்லாம் இருப்பது
அதாவது-தோற்றத்தில் கார்யப்பாடு உண்டாய் இருக்கை-
முளைத்த உடனே பல பர்யந்தமாய் ஸ்ரீ வாமனன் உடன் சாம்யம் இவற்றுக்கு-பழம் -போக்யம் குறைவற்று
போக்தாக்கள் தேட்டமாய்த்து இருப்பது
அசக்தன் சக்தனை அன்றோ அபாஸ்ரயமாகப் பற்றுவது
இப்படி சக்தனான நீயே சந்நிஹிதனான பின்பு நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே ரஷிக்கைக்கு ஈடாக வீரக் கழலை இட்டு அதுக்கு ஈடாக
சந்நிஹிதனுமாய் இருக்கிற உன்னை ஒழிய எனக்கு சுபாஸ்ரயம் உண்டோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே
நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
மல்லர் முடிந்தார் என்று கேட்ட அநந்தரம் பெரிய சீற்றத்தோடு வந்து தோற்றின
கம்சனை எதிரிட்டு சென்று கொன்று-இது பருவம் நிரம்புவதற்கு முன்பு செய்த கார்யம்
பருவம் நிரம்பிய பின் செய்தகார்யம் துர்யோதநாதிகள் உடன் ஷத்ரியர் என்று பேர் பெற்றவர் அடங்கலும்
முடிந்து போம்படியாக பாரத சமரத்தை நடத்தி பூ பாரத்தைப் போக்கினவனே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
பிதாவினுடைய ராஜ்ஜியம் புத்திரன் பண்ண வேணும் -மர்யாதா பங்கம் பண்ண ஒண்ணாது-என்று
அதுக்காக தூது எழுந்து அருளினான்
ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்-என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின திரு நாங்கூரிலே
ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது
அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக
ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும் போருகிறது ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே என்று
வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய்
ஸ்ரீ திரு நாங்கூரிலே-சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படி இருக்கும் ஆய்த்து
இப்படி நிரதிசய போக்யனான நீயே ரஷகனாக வேணும்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை
கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்
இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-பத்தாம் பாசுரத்தில்
——————————-
கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-
பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று
இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ-என்கிறார் முதல் பாசுரத்தில்
ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ –
என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்
ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது-என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார் நாலாம் பாசுரத்தில்
திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே-என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே ஆருடைய வஸ்து இங்கன் அலமாக்கிறது-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே-
பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
———————-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1-
காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்-
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்- என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்
ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும்
ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார்
ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-என்கிறார் பத்தாம் பாசுரத்தில் –
——————-
நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-
அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்-
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே
ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –என்கிறார் முதல் பாசுரத்தில்
தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே
ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் –
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன்
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
புறம்புள்ளார் அழகியதாக ஆசை பட்டான்-ஆசைப் பட்டவனுக்கு அழகிதாக முகம் கொடுத்தார்
இதுவோ தான் சிலர் ஆசைப் பட்டால் பலிக்கும் படி என்று உம்மைப் பழி சொல்லா நின்றார்
அயலாரும் ஏசு கின்றது இதுவே-நான் பேசுகின்றதுவும் இதுவே –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர்-எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-
நித்ய சூரிகளுக்கு படி விடும் வடிவை
சம்சாரிகளுக்கும் ஒக்க படி விடுகைக்கு அன்றோ ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
வாசி யற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்தே வாசி வையா நின்றீர்
உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டாருக்காக கண்டது என்று இருந்தோம்
அங்கன் அன்றாகில்-அத்தை நீர் கட்டிக் கொண்டு வாழும் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு ருசி பிறந்த போதே நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –
பூ அலறும் போதை செவ்விபார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –
என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
பரத்வம் நித்ய சூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரம் ஸ்ரீ தசரத ஸ்ரீ வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்
உகந்து அருளின நிலங்கள் -தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே
குருடருக்கு வைத்த இறையிலியில் விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்-இவருடைய பிரகிருதி மார்த்தவம்
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து முகம் காட்டிற்றிலர் என்னும்அவத்யத்தை பரிஹரிகைக்கு அன்றோ
நீர் ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது-போந்த கார்யத்தை மறக்கிறது என் –என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
பரார்த்தமான வஸ்துவை உமக்கு என்று இரா நின்றீர் உம்முடைய திருவடிகளை காட்டாமையே ஸ்வபாவமாம்படி யானீர் –
அவ் வபிசந்தியைக் குலைத்து அத்தை அப்படி செய்யப் பெறில்
நான் உபேஷித்தால் தான் இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ
ஆனபின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று ஆறி இருக்கைக்கு
உம்முடைய பரம பதத்தில் நித்ய சூரிகளோ
மரு பூமியிலே தண்ணீர் போலே உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற இஸ் சம்சாரத்தில்
உம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள் உஜ்ஜீவீயாமோ-
நீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால்-நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு
கண்டு கொண்டு இருக்க மாட்டோமேவாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும் என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான் இருக்கும்படி இது காண் என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ்வடிவைக் காட்ட வேண்டும்
நீர் கொள்ளும் வடிவுகளுக்கு எல்லாம் சாஸ்திரங்கள் இல்லையோ பிரமாணங்களால் கேட்டுப் போக ஒண்ணாது
நம்முடையாருக்கு இவ்வடிவு தான் இது காணும் கோள் என்று காட்ட வேணும் என்று அதுக்காக அன்றோ நீர்
ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது –என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
இவற்றை அப்யசித்து-அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-
அந்த ஜன்மத்திலே-அந்த வ்ருத்தத்திலே-அந்த ஞானத்திலே அந்த ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத்கர்ஷத்தை உடையரான நித்ய சூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –என்கிறார் பத்தாம் பாசுரத்தில்
—————
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-
ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –
அவன் கோயில் அதுவே என்கையாலே ஆஸ்ரயநீய ஸ்தலம் அதுவே -என்கிறார் முதல் பாசுரத்தில்
மது வனத்தில் புக்க முதலிகள் போலே பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே ஆலத்தி வையா நிற்கும்
ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்
பரத சாஸ்தரத்துக்கு வேண்டும் லஷணங்கள் எல்லாம் எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட ந்ருத்தங்களைப் பண்ணினவன் வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்
ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில் –என்கிறார் நாலாம் பாசுரத்தில்
ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால்
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்
கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ –
என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்
என்கிறார் ஆறாம் பாசுரத்தில்
சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் -என்னுதல்
அன்றிக்கே-சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி
அன்றிக்கே –வெள்ளியார் வணங்க –வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்
என்கிறார் ஏழாம் பாசுரத்தில்
ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –என்கிறார் எட்டாம் பாசுரத்தில்
தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக ஸ்ரீ திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன்-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்
பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள்
துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான் –
இவற்றை ஆதரித்துக் கொண்டு அப்யசிக்க ஈடான பாக்யாதிகர் கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –
பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே ஐஸ்வர்யத்தை தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும் என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்
அன்றிக்கே இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகாரி யார்களே அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார்
பத்தாம் பாசுரத்தில்
–——————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .