Archive for October, 2024

ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் சார அமுதம் —

October 31, 2024

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே
–2-1-1-

நோயும் பயலைமையும் – மனத்தின் துன்பமும் அத்தாலே வந்த -வைவர்ண்யமும் -பசலை நிறமும். தன் பக்கலிலே காண்கையாலே அவ் விரண்டும் நாரைக்கும் உண்டு என்றிருக்கிறாள்.-துக்க பரிபவங்களைப் பொறுத்திருக்கையாலும் பற்றிற்று விடாதிருக்கிறபடியாலும் பசலை நிறத்தாலும், என்னைப் போன்று இரா நின்றாய்,’ தத் தஸ்ய சத்ருசம் பவேத்-என்று கூறி இருந்த ஸ்ரீ பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மே போல் நீயும்’ என்கிறாள்.-மைந்தனை மலராள் மணவாளனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்பாள். ‘திருமாலால்’ என்கிறாள்.
நெஞ்சம் கோட்பட்டாயே ‘தோற்புரை அன்றியே, மறுபாடுருவ  வேர்ப் பற்றிலே நோவு பட்டாய் ஆகாதே! என்பாள்,  நெஞ்சம் கோட்பட்டாயே’  என்கிறாள்.

இத்தால் -சாம்சாரிக கல்லோலத்தை மதியாது இருப்பார்க்கு உறங்காமையும் ரூப விபர்யாஸமும் பகவத் விஸ்லேஷ ஜெனிதம் என்று இருக்கை –

——————

கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே
–2-1-2-

ஆள்பட்ட எம்மே போல் நீயும் – ‘நெஞ்சு பறி யுண்டு படுக்கையிலுஞ்சேராதே நோவு படுகைக்கு என்னைப் போலே நீயும் அவன் திருவடிகளில்  தாஸ்ய பரிமளத்திலே அன்றோ அகப்பட்டது?’ நாட்டாரில் வேறு பாட்டை யுடையதாகப் போந்திருக்கிற நீ’ என்பாள் ‘நீயும்’ என்கிறாள்-மயர்வற மதிநலம் அருளப் பெற்றாய் இல்லை; ஆதலால் என்றனை உட்புகாத நீயும் இப்படி ஆவதே!’ என்பாள், ‘நீயும்’ என்றாள் எனலுமாம்.-ஸாஸ்த்ர ஜன்ய ஞானமும் இல்லை -பகவத் பிரசாத லப்த ஞானமும் இல்லை -என்றபடி

மேல் திருமாலால்’ என்றாள்; இருவருமானால் இருப்பது படுக்கையிலே யாய் இருக்குமே?
ஆதலின், ஈண்டு ‘அரவணையான்’ என்கிறாள்.-ஆக, ‘அவனும் அவளுமாய்த் துகைத்த திருத்துழாய் மாலை பெறவேண்டும்’ என்று ‘அத்தையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்கிறாள்-அவர்கள் இருவரும் கூடத் துகைத்த துழாய்’ என்பாள், ‘தாள்பட்ட துழாய்’ என்கிறாள்.-‘தாளிணை மேல் அணி தண் அம் துழாய்’ என்று அன்றோ தான் கிடப்பது? சங்கத்தளவிலே நில்லாது ‘பெறில் பிழைத்தல்; பெறா விடில் முடிதலான நிலையை அடைந்தாயே! என்பாள், காமுற்றாயே’ என்கிறாள். தாமம் – ஒலியும் மாலையும்.-சங்கம் -காமம் -அநுராகம் -ஸ்நேஹம் -இத்யாதி அவஸ்தைகளில் பிரதமம் சங்கம் -என்றபடி –

இத்தால் -ஆர்த்த த்வனி யுடையார் அவனைப் பிரிந்து கூப்பிடுகிறார்கள் -என்று இருக்கை —

————-

காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே
–2-1-3-

அன்றிலுடைய ஒலிக்கு வருந்தி இருக்கமளவில் கடல் என்று ஒரு மஹாதத்வமாய், அது தன் காம்பீர்யம் எல்லாம் இழந்து-கரையிலே வருவது கரையேற மாட்டாதே உள்ளே விழுவதாய், எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி-ஊமைக் கூறனாகக் கூப்பிடுவதாகிறபடியைக் கண்டு, பாவியேன் இராம குணத்தில் அகப்பட்டு, நான் பட்டது நீயும் பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.‘உறக்கம் இன்றியே ஒழியினும் நெஞ்சாயினும் அழியாதிருக்கப் பெற்றனையோ?-அதுவும் இன்றே!’ என்பாள், ‘உருகு ஏங்குதியால்’ என்கிறாள்.-பாவியேன், பரத்துவத்திலே ஆசைப்பட்டாய் இல்லையே-
பிரணயிநி -காதலியின் விரஹம் பொறுக்கமாட்டாத சக்கரவர்த்தி திருமகனை யன்றோ நீயும் ஆசைப்பட்டாய?’-தோள் நயந்த யாம் என்னாதே தாள் நயந்த யாம் என்றது ப்ராஹ்மணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே அடி விடாத வாசனையால்
தேரியும் தேறாமலும் ஸ்வரூபம் குலையாதே அடியோம் தொடர்ந்து குற்றேவல் -அடிச்சியாம் அடிக்கீழ் குற்றேவல்

இத்தால் -மஹத்தையை யுடையார் வாய்விட்டு அலறுவது அவனை பிரிந்தால் என்று இருக்கை –

—————-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –
2-1-4-

காற்று என்று ஒரு வியாபக தத்வமாய், அது தான் அபிமத காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால்,  இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவு தெரியாத படியாய், சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின்,  காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே- ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினாள் -ஆஸ்ரித அர்த்தமாக அசத்திய ப்ரதிஜ்ஜை ஆனவன் ஓரத்து அளவும் -அதாவது- செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள்,  ‘அடல் கொள் படையாழி அம்மான்’ என்கிறாள்.
(ஓரம் -திரு ஆழியின் முனை கூர்மை என்றும் ஸஹஜார்த்தம் -ஆஸ்ரித பக்ஷபாதம் )

உபகார சீலர்க்கும் உடம்பில் வரும் விகாரங்கள் அவனைக் காணப் பெறாமல் -என்று கருத்து –

—————-

ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே
–2-1-5-

அவ்வளவிலே ஒரு மேகமானது கரைந்து நீராய் விழப்புக்கது; ‘நீயும் அவனுடைய பகைவர்களைக் கொல்லுகின்ற பண்பிலே அகப்பட்டாய் ஆகாதே?’என்கிறாள்

இத்தால் -உதார ஸ்வபாவர்க்கு ஸைதில்யம் பகவத் விரஹ ஜெனிதம் -என்கிறாள் –

——–

நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே
–-2-1-6-

மேகத்தின் அருகே கலா மாத்ரமான ஒரு கலையோடு கூடியிருக்கின்ற-சந்திரன் தோன்ற
சந்திரனே!-உன் வடிவில் எழில் இழந்தாய் ஆகாதே -ஏதத் விரதம் மம என்றும் –
மா ஸூச -என்றும் -எம்பெருமான் அருளிச் செய்த வார்த்தையைக் கேட்டு- பெரும் பொய்யாய் மெய்யாகக் கருதி உன்னுடைய உடம்பில் அழகிய ஒளியை இழந்தாயே–என்கிறாள் –நைவு வாய -இடம் -நைவுக்கு இடமாய் நைவை யுடைத்தான என்றும் நைவே தானே வடிவு கொண்டு இருக்கிற என்றபடி –எம்மே -எங்களை என்றது நாரை அன்றில் கடல் வாடை வானம் இவைகளைச் சொன்னவாறு -அவருடைய பெரும் பொய்யிலே அகப்பட்டாய் ஆகாதே நீ’ என்கிறாள். 
தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள்,  ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள்.-இதனால், அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி,-இராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் அன்றோ அடியார்க்கட்குத் தஞ்சம்? ஆகையாலே தோற்றாள்.

இத்தால் -உஜ்ஜ்வல ஸ்வபாவடைய ஓளி மழுக்கம் அவனுடைய யுக்தி வையர்த்ய சங்கா வஹமான விளம்பம் -என்று கருத்து –

———

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே
–2-1-7-

மதி கெட்டவாறே அந்தகாரம் வந்து மேலிட்டது,’ என்கிறாள். -இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய,  சொற்களின் நயத்தைத் திருவுள்ளம் பற்றி எம்பெருமானார்  அருளிச் செய்து போருவது ஒன்று உண்டு: 
அம்மங்கியம்மாளும்  அதனையே நிர்ப்பந்தித்துப் போரும். அதாகிறது, தான், பிரிவாற்றாதார் பலர் கூடக் கட்டிக்கொண்டு கூப்பிடாநிற்க, இருள் வந்து முகத்தை மறைக்க,
அத்தைப் பார்த்து, ‘ஆற்றாமைக்குப் போக்குவிட்டுத் தரிக்க ஒட்டாதே நீ வந்து நலியக் கடவையோ?’ என்கிறாள் என்பதாம்

எம்பெருமாற்கு –கெடுவாய், வகுத்த விஷயத்திலே அன்றோ நாங்கள் நெஞ்சை இழந்தது?நாரணற்கு –தன்னுடைமை’ என்றால் வாத்சல்ய குணமுடையவனுக்கு அன்றோ இழந்தது?அவனைப் பெறவோ-போன நெஞ்சைப்பெறவோ?-எங்கள் ஆற்றாமையாலே அழப் பெறோமோ?’ என்பாள், ‘சொல்லி அழுவோம்’ என்கிறாள்.‘உன் இழவு கனத்திருந்ததே! வகுத்த எம்பெருமானிடத்தில் யாமெல்லாம் நெஞ்சிழந்து கூப்பிடாநிற்க
நீ உன் ஆற்றாமையைக் காட்டி நலிகின்றாயே! உன் அவசாதம் – நலிவு நீங்கி -ஜீவித்திடுக -வாழ்ந்திடுக,’ என்கிறாள்-

————-

இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –
2-1-8-

இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்;-அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு,‘பாவியேன், சகடாசுரனை -நிரசித்த -அழித்த அச் செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.-காலத்துக்கு ஓர் எல்லை காணிலும் உன் ஆற்றாமைக்கு ஓர் எல்லை காண்கின்றிலோம். காலமாகில் திவா ராத்ரி விபாக விபக்தமாகவே இருக்கும் என்று இருக்கையாலும் காலம் நசித்தது என்று இருக்கிறாள்-

இத்தால் -ஜல-ஜட -ப்ரப்ருதிகளும் -அவன் கிருபா குணத்திலே அகப்பட்டால் கால் தாழ்வர்-என்று கருத்து –

———–

நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –
2-1-9-

அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்;
( சாடு -தத் துக்கஸ்ய பாரம் த்ரஷ்டும் அசமர்த்தா ஸதீ இதி த்வனி ) அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்;-அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்

அம் தாமம் தண் துழாய் ஆசையால் –‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே.-பதி சம்மானிதா சீதா பார்த்தாராம் அஸி தேஷணா (  ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி,-கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’) என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. ( தன் திருக்கழுத்தில் மாலையைச் சாத்தினார் என்று இறே ஆழ்வான் பணிக்கும் படி அஸி தேஷணா என்கையாலே தானும் ஒரு மாலை இட்டால் போலே காணும் -என்னும் ஆழ்வான் )வேவாயே- ‘உக்கக்காலுக்கு உளையக் கூடிய உன் உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள். –உக்கம் விசிறி –கால் -காற்று  

இத்தால் -அவன் வடிவழகில் ஆசை தேஜஸ்விகளையும் பரிதபிக்கும் -என்கை –

———–

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
–2-1-10-

இவள் அவசாதம் – துன்பமெல்லாம் தீர வந்து கூடின எம்பெருமானைக் குறித்து,
‘இனி ஒருநாளும் என்னை விடாதொழிய வேண்டும்’ என்கிறார்-

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின்  ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள்.
‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின்,   அல்லாது நெருப்பைப் போல அன்று;-வெந்த இடமே விரகாக எரிக்கிற வேட்கை நோய்’ என்றபடி.உன்பாலே வீழ்த்தொழிந்தாய் – அகப்பட்டார்க்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டாய்.-இனி, இதற்கு ‘உன் பக்கலிலே விழ விட்டுக்கொண்டு. முகங்காட்டாமல் கடக்க நின்றாய்’ என்று பொருள் கூறலுமாம்.-இப்பொருளுக்கு வீழ்த்தொழிந்தாய்’ என்பன-உன்பாலே வீழ்த்து –ஒழிந்தாய் இரண்டு சொற்கள். 

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா –கேசி வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய்,-மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உபகாரங்களை – உதவிகளைச்செய்து,
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் ரக்ஷணத்திலே உக்தனாய் -முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே!
இனி, ‘மூவா முதல்வா’ என்பதற்கு,-‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’

அச்சேத்யம் என்னும் அது-ஈரும் வேம்-ஈரியாய் உலர்த்த வென்னப் பட-சித்தம் சித்தாய் அல்லேன் என்று நீங்க-கரணங்கள் முடியானேயில் அவையாக-உடலம் ஆத்ம தர்மம் கொள்ள-காற்றும் கழியும் கட்டி அழக்-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே–ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-—சூரணை –132-

உலர்த்த – வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -2-1-10–என்று பிரேம வியாதி யானது மிருது ஸ்வாபமான ஆத்மாவை குருத்து வற்றாக உலர்த்த என்றும் – இப்படி சேதன ஆத்யர்ஹம் ஆயிற்று என்று ஸ்வயமேவ சொல்லும்படியாக –

இத்தால் -தம்முடைய அநிஷ்டங்களைப் போக்கி சத்தியை உண்டாக்கின படியை அனுசந்தித்தாறாயிற்று –

——————–

சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே
–2-1-11-

இத்திருவாய்மொழி கற்றார், கண்ணாற்காணப்பட்டன எல்லாம் பகவானைப் பெறாமையாலே -அலாபத்தாலே – நோவுபடுகிற சம்சாரத்திலே இருந்து நோவுபடாமல்,
கண்டார் எல்லாம் பகவானைப் பெற்று -லாபத்தாலே-களித்து வாழும் நாட்டிலே புகப்பெறுவர்’ இது நிச்சிதம் -என்கிறார்–ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி உண்டாகும் என்று தாத்பர்யம் 

பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற நின்றானாதலின் ‘சோதிக்கு’ என்கிறார்.-இதனால்,க்ருதக்ருத்யனானான் -‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இரா நின்றான்’ என்பதனைத் தெரிவித்தபடி.காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார்.இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,  தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே. (அவரது பக்தியின் ஸ்வ பாவம் அவருக்கே தெரியுமது ஒழிய பிறருக்குத் தெரியாது இறே –இவருடைய ஆகாரங்கள் வேறே ஓர் இடத்திலே காணாமையாலே -)

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.   

———————

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
–2-2-1- 

இது திருவாய் மொழியில் சொல்லுகிற பரத்வத்தை சங்க்ரஹேண -ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் பிரளய ஆபத் சகனான கிருஷ்ணனே ஈஸ்வரன்-என்கிறார் –எண்ணின் மீதியன் –எல்லை இல்லாத கல்யாண குணங்களையுடையவன்.-எண்ணுக்கும் மேற்பட்ட மோக்ஷம் முதலான உலகங்களை உடையவன்’ -முழுதுமாய் -சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்ய பேத பின்ன சகல வித மோக்ஷ ப்ரதன்-காத்தல் அவனுக்குத்  தாரகமாகையாலே  ‘உண்ட’ என்கிறார்; இன்றேல், ‘காக்கும்’ என்ன அமையும்.நம்-கண்ணன்-என்று ரக்ஷகத்வ பிரசித்தியை சொல்லுகிறது-

‘நம் கண்ணன் கண்’ என்கையாலே அன்வய -விதி-முகத்தால் பரத்துவமும்,
‘அல்லது இல்லை’ என்கையாலே வ்யதிரேக- மறை-முகத்தாலே பரத்துவமும் அருளிச் செய்தார்.  
‘எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன்’ என்றது,அன்வய – விதி-முகத்தாற் கூறியது.
அல்லது இல்லை ஓர் கண்’ என்றது -வ்யதிரேக -மறைமுகத்தாற்கூறியது.

———–

ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே
–2-2-2-

அல்லது இல்லை’ என்று நீர் சொல்லுவான் என்? ப்ரஹ்ம ருத்ரர்களும் இறையவர்களாகப் பேசப்படுகின்ற பிரமாணங்களும் சில இருக்கின்றனவே?’ எனின்,
‘அவர்கள் நிலையினை ஆராய்ந்தால், தலை அறுப்பாரும் தலை அறுப்புண்டு நிற்பாருமாக இருக்கிறார்கள்;-கர்ம வஸ்யரை ஈஸ்வரராக சொல்ல ஒண்ணாது இறே-அவர்கள் ஆபத்தினைப் போக்கிக் காத்தளிக்கின்றான்-ரக்ஷிக்கிறவன் இவன்;-அவர்களோ, இவனோ சர்வேஸ்வரன்?’ என்கிறார்-அவன் -சர்வ விஷயமாகப் பண்ணின ரக்ஷணம் -எல்லாப் பொருள்களையும் காக்கின்ற தன்மை-கிடக்கக்கிடீர் – நிற்க; 
தந்தாம் காலைத் தாம்தாம் நீட்டி முடக்க வல்லராய் இருக்கிறவர்களும் ஓரோர் அளவுகளிலே-ஆபன்னரானால் –ஆபத்தை அடைவர்களாயின், அவற்றைப் போக்கிக் காக்கும்படியைப் பார்க்கலாகாதோ?’ -துக்கத்தைப் போக்கியது அங்கே இங்கே தோன்றித் திரிகிற இடத்திலே என்பார், ‘கோபாலன்’ என்கிறார்.
இதனால், இவர்கள் எத்துணை உயர நிற்பினும் கேட்டினையே சூழ்த்துக் கொள்ளுவார்கள் என்பதும்,-இறைவன் எத்துணைத் தன்னைத் தாழ விட்டாலும் காப்பாற்றுமவனாம் என்பதும் சொல்லப்பட்டன.-கோபால கோள் அரி ஏறு –-கோபாலருடைய மிடுக்கையுடைத்தான ஆண் சிங்கம்.-கோள் – வலிமை.

———-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே
–2-2-3-

ஏறனை –சர்வேஸ்வரன் ‘கருட வாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று,
ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப் போன்று இறுமாந்து இருப்பவன்.பூவனை –‘திருநாபிக் கமலத்தில்-அவ்யவதாநேந- நேரே பிறந்தவன் அன்றோ?’ என்று இறுமாந்து இருக்கும் நான்முகன்.-

ப்ரஹ்மாதிகள் -‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பார்களோ?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க,  ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந் நீர்மையை விட மாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்று அருளிச் செய்தார். ஓர் தேவும் உளதே –
ஒக்கப் பரிமாறாநிற்க, ‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?
‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ,
இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’

————

தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே
–2–2-4–

பூவுக்கு ஈடான ஸுகுமார்யமும் பூஜைக்கு ஈடான ப்ராதான்யமும் அவனை ஒழிய வேறு ஒரு வியக்தியிலே இல்லாமையால் இவனே ஈஸ்வரன்-ஒரு பூவில்-உந்தித் தாமரை- நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன்.-சிக்குத் தலையனுக்குப் பூத்தகாது; பிச்சை உண்ணிக்குப் பூசனை தகாது;

அல்லது இல்லை ஒரு கண்ணே’ என்றும்,
‘கோள அரியேறு அன்றி அருளால் அளிப்பார் ஆர்’ என்றும், 
‘மால்தனில் மிக்குமோர் தேவும் உளதே?’ என்றும்,
‘பூவும் பூசனையுந் தகுமோ?’ என்றும்
தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் ஜோதி மேல் அறிவார் யவரே என்றும்
அவ் வைராக்கியத்தையே அருளிச் செய்தார்.-ஆகையால் ஞானத்தில் காட்டில் இதர விஷயத்தில் சரக்கு அறுகை யாகிற வைராக்யம் ஸ்ரேஷ்டம் 

————-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே
–2-2-5-

புண்டரீகாக்ஷனாகையாலும் – இவனே ஈஸ்வரன் ,-தகும் அம்மான் -படைக்கத் தகும் தாமரைக் கண்ணன் -தகுகைக்கு ப்ரகாசகங்கள் திருக்கண்கள்-எம்பெருமானுடைய திருமேனியின் அழகு ஒருவர்க்கு நினைக்க நிலமோ –

—————

யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே
–2-2-6-

ஆபத் சகனாகையாலும் இவனே ஈஸ்வரன்-கவர்வு இன்றி –-கவர்கையாவது-க்ரஹிக்கை – பற்றுகை:அதாவது,-ஹிம்சையாய் – துன்பமாய் ஒருவரை ஒருவர் நெருக்காதபடி.-பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் – இவர்களைக் காப்பதற்கு-ரஷிப்பதற்கு- உறுப்பான பரம்பின ஞான வெள்ளத்தை யுடையனாய்.-இப்படிக் காக்கப் பெற்ற இடம் தன் பேறு என்று தோன்றும்படி இருக்கிற (சுடர் என்றதிலே நோக்கு ) திவ்விய விக்கிரகத்தை யுடையரான அவர்,-இப்படி– ஆபத்துக் காலத்தில் துணைவனாய் -இவனே ஈஸ்வரன்-அசம்பாதகமாகத் தன்னுள்ளே வைக்கப்பட்ட சர்வ ஜகத்தையும் யுடையனாய்- ஸ்வாபாவிக சார்வஞ்ஞத்தை யுடையனாய்-ஆபத் சகனாய்-ஷீரார்ணவ நிகேதனான வண் துவரைப் பெருமானாய்- அணியன் ஆகையாலும் சர்வேஸ்வரன்-

————–

பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே
–2-2-7-

அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே ஈஸ்வரன்-அவாந்தர பிரளயத்தில் மூன்று லோகமாய் இருக்க இங்கு ஏழு உலகம் என்றது ரக்ஷணத்தில் உள்ள பாரிப்பைக் காட்டவே-கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி,‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’அவன் தன் கள்ள மாய மனக் கருத்தை உள்ளுள் அறியார் யார்-இவனுடைய சர்வேஸ்வரத்வ சிஹ்ன பூத திவ்ய சேஷ்டிதங்களுக்கு ஒரு முடிவு யுண்டோ-

————–

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே
–2-2-8-

ஸ்ருஷ்டியும் பாலனமும் ஸ்வ அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே ஈஸ்வரன் -ஸ்ருஷ்ட்டி ரக்ஷணங்கள் இரண்டும் பரம புருஷ ஏக கர்த்ருகம்-

——-

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே
–2-2-9-

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும் ஸ்வ அதீனமாம்படி இருக்கை யாலும் இவனே ஈஸ்வரன்-சம்ஹாரம் ஒன்றே கீழ்ப்பாட்டில் இருந்து இதுக்கு வாசி )பரம புருஷ கர்த்ருகம் -ப்ரஹ்மாதி ஸ்தம்ப பயந்த சர்வ ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றும்
பரம புருஷ கர்த்ருகம் 

———–

கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே
–2-2-10-

நமோ கண்டாய கர்ணாய நம கட கடாயச -என்று இவன் ஸ்தோத்ரம் பண்ணின படியை வாசிக்கக் கேட்ட ப்ராஹ்மணன்-ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயாகையாலே மீன் துடிக்கிறபடி பாராய் -என்றான்-‘நீ கறுப்புடுத்துத் தாழ நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் ‘மெய்’ என்றிருப்பார்களோ?‘கள்வா’ என்பர்கள்-அவர்கள் தங்களுடைய வாக்யமே பிரமாணம் -என்கிறார் ––ஈண்டுக் களவாவது,தன் ஸ்வாதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும் நிலை.-கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின், இராஜ சேவை செய்வார் தம் தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று,
இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே-அந்தப்புரத்தில் செல்லுகைக்கு அந்தரங்கதை போராமையாலே ஆட்டத்து வெளியிலே யானைக் காலிலே விழுந்து கூப்பிடுவாரைப் போலே பெரிய திருவடியின் மேலே ஏறிப் புறப்பட்ட இடத்தே யாயிற்றுப் புகழ்வது –வேத மயமான கருடன் வாஹனமாகையாலே ஈஸ்வரனுடைய வேதாந்த வேத்யத்வமும் தோற்றுகிறது-

———

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே
–2-2-11-

இத்திருவாய் மொழியைக் கற்று உணர வல்லவர்கட்கு, -தேவதாந்த்ரங்கள் பக்கல்
ஈஸ்வரத்வ புத்தி பண்ணுகையாகிற ஊனம் குற்றம் இல்லை,’-ஏத்தி ஸ்துதிக்க,
அந்த ஹர்ஷத்தாலே -அம்மகிழ்ச்சியாலே எல்லா உலகங்களையும் திருவடியின் கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை-வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு

—————–

ஊனில் வாழுயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே
–2-3-1-

பரம பதத்தைப் பெற்று அங்கே தான் பகவத் அனுபவம் பண்ணுகிற இடைத்தேயோ நீ உதவிற்று-மாம்ஸாதி புஞ்சமான சரீரத்திலே நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ நீ உபகரித்தது –ஈஸ்வரனும் என்றும் உளன் – தத் சம்பந்தமும் அநாதி – அவன் எதிர் சூழல் புக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்க -நீ ஆபிமுக்யம் பண்ணாமையால் அன்றோ இழந்தது-நீ ஆபி முக்கியம் பண்ணி இறே இப்பேறு பெற்றது – ‘கைங்கரிய சாம்ராஜ்யத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க,
இந் நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்  சரீரத்தைப் பற்றி அனுபவிக்கிற அனுபவத்தை யன்றி,
அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’ -உயிர்’ என்றது, மனத்தினை-

வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும் யானும் –-தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் -அவதரித்து, மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று,
என்னுடன்-சம்ச்லேஷ விரோதியை – கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி
என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும் 
கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள-விஷய பூதனான – யானும்,–கிருஷி செய்த தானும்,
கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’

‘தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தோம்’ என்கிறார்.-இதற்கு,ஏக –
ஒரு ஜாதிப் பொருள்கள் தம்மில் ஒன்றனோடு ஒன்று கலந்தது போன்று கலந்தோம்’ என்று 
ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பொருள் அருளிச் செய்வர்.
அதாவது,-தானும் யானும் எல்லாம் தன்னுள் தேனும் பாலும் நெய்யும்
கன்னலும் அமுதும் ஒத்துக் கலந்தொழிந்தோம்’–தேனும் தேனும் கலந்தாற் போலவும், பாலும் பாலும் கலந்தாற் போலவும், கன்னலும் கன்னலும் கலந்தாற் போலவும்-அமுதும் அமுதும் கலந்தாற்போலவும் என்பதாம்.

இதற்கு இவற்றைச் சுவை யுடைப் பொருள்களுக்கு எல்லாம் உபலக்ஷணமாக்கித்
‘தானும் நானுமாக கலவிக்குள்ளே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம் என்கிறார்’ என்று  எம்பெருமானார் பொருள் அருளிச் செய்வர்.  ‘சர்வ ரஸ: சர்வ கந்த:’ என்கிற இறைவனோடே கலக்கும் கலவி ஆதலானும், ஞான ஆனந்தங்களையுடைய இறைவனும் ஆத்துமாவும் கலக்கிற கலவி -சேர்த்தி -ஆதலானும் சர்வ ரஸங்களும் பிறக்கத் தட்டு இல்லை.  

அநேக த்ருஷ்டாந்த தாத்பர்யம் -ஸர்வவித சாரஸ்யமும் தோற்றுகைக்காக-
தேன் என்று -சர்வ ரஸ சமவாயம் –பால் என்று ஸ்வாபாவிக ரசம் -நெய் என்று ப்ரும்ஹண ரசம் -கன்னல் என்று கரும்பாய் -அதனுடைய பாகஜ ரசத்தை நினைக்கிறது –
அமுது என்று நித்ய ரசம் –

———

ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயா
ஒத்தாய் எப் பொருட்கும் உயிராய் என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய்த் அறியாதன யறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே
–2-3-2-

இவர் திருவுள்ளத்தைக் கொண்டாடப் புகுந்தவாறே, நெஞ்சு,-பெற்ற தாய் இருக்க மணை வென்னீராட்டுவரைப் போலே ‘நீர் அடி அறியாதே, வழிப் போவாரைக் கொண்டாடுகிறது என்? என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார்,
‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ?-நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு,
சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.

எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச் செய்து வருங்கால், இப்பாசுரம் ப்ரஸ்துதமான அளவிலே அளவில்,
எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம் குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது;
இருந்த முதலிகளிற்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர்,
‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக் கொண்டு போய்ச் சேர விட்ட ஸ்ரீவைஷ்ணவர்,’ என்றனர்;
எம்பார், ‘அங்ஙன் அன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி 
‘இசைவித்து’ என்கிறபடி,
அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதம குரு’ என்று அருளிச் செய்தார்

திருமகள் கேள்வனுக்கும் தன்னால் கழிக்க ஒண்ணாதபடி இருப்பது ஒரு தாரித்திரியம் உண்டு என்று அருளிச் செய்வார் எம்பார்,

எப்பொருட்கும் ஒத்தாய் -இந்திரா அனுஜன் -இந்திரனுக்குத் தம்பியாகவும்,
இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தும்,
திர்யக்குகளை -விலங்குகளைப் போன்று மஹா வராஹமாகியும்,
ஸ்தாவரங்களோடு ஓக்க -நிலையியற் பொருள் போன்று குட்டை மாமரமாயும் நின்ற நிலைகள் போல்வன.-குப்ஜாம்ரம் ‘குட்டை மாமரமாக நின்றது எற்றிற்கு?’ எனின்,
செவ்வே நிற்பின் பெண்ணுக்கும் பேதைக்கும் ஏற ஒண்ணாது என்று எல்லோர்க்கும் ஒக்க எளியன் ஆகைக்கு.-மேன்மையோடே வரின், ‘கிட்ட ஒண்ணாது’ என்ற அகலுவர்கள்;
தாழவிட்டு வரின், காற்கடைக் கொள்ளுவர்கள்;-ஆகையாலே, சஜாதீயனாய் வந்து அவதரிக்கிறான்.

நீ செய்தன’ என்னுமித்தனை.-செய்த நீ அறியில் அறியுமித்தனை; என்னால் சொல்லித் தலைக்கட்டப் போமோ?-அனுபவித்துக் குமிழி நீர் உண்டு போமித்தனை ஒழிய என்பார், ‘அடியேன் அறியேன்,’ 

அத்தா என்கிறதுக்கு- ஞான பிரதாத்ருத்வமும் -உபகாரத்வமும் -ஸ்வாமித்வமும்- அர்த்த த்ரயங்கள் –

————

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே
–2-3-3-

அறிவு நடையாடாத பருவத்தில் சம்பந்த ஞானத்தினைப் பிறப்பித்தாய்;
பிறப்பித்த ஞானத்தினை அழிக்கக்கூடிய தேஹ சம்பந்த்தத்தோடே பின்னையும் வைத்தாய்,’ என்னும் இன்னாப்பாலே
சொல்லுகிறார் என்று ஆளவந்தார் அருளிச் செ்யாதாராகத் திருமலையாண்டான் அருளிச் செய்வர்.

இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிற்பாட்டுகளும் பின்னிற்பாட்டுகளும் பிரீதியோடே நடவா நிற்க,
நடுவே பிரீதியின்மை தோற்றச் சொல்லுமது சேராது;
ஆன பின்னர், இங்ஙனே யாமித்தனை.
அறியா மா மாயத்து அடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து வைத்தாயால் என்கிறார்,’ என்று
இதனையும் ஓர் உபகாரமாக்கி அருளிச் செய்தார்.
‘அத்தா நீ செய்தன’ என்று, ‘நாம் செய்த உபகாரங்களைச் சொல்லுகின்றீர்;
அவற்றிலே நீர் மதித்திருப்பது ஓர் உபகாரத்தைச் சொல்லிக் காணீர்,’ என்ன, அதனைச் சொல்லுகிறார்

பெறாவிடில் முடியும்படியான நிலையினை உண்டாக்கினாய்’ என்பார், ‘அன்பு செய்வித்து’என்கிறார்.-அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை-நம்முடைய பொருள் அன்றோ?-அடியேனை-‘இத்தண்ணீர்ப் பந்தலை வைத்தாயே’-உபகார ஸ்ம்ருதி-எனது ஆவியுள் கலந்து – நான் இருக்குமிடத்தளவும் வந்து என்னோடே கலந்து,-
அத்யந்தம் அந்நிய பரனான ‘மிகவும் பராக்காய் இருக்கிற ஆத்துமாவிலே புகுந்து
உன் குணத்தாலும் செயலாலும் வசீகரித்தாய்,’ 

———

எனதாவியுள் கலந்த பெரு நல்லுதவிக் கைம்மாறு
எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பதுண்டே
எனதாவி யாவியும் நீ பொழில் எழும் உண்ட எந்தாய்
எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே
–2-3-4-

அவன் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணி, அனுசயிக்கிறார் –

உதவியாவது,-உபகரித்தல்.
நல்லுதவியாவது, -பச்சை கொள்ளாதே உபகரித்தல். 
பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல்.

மயா சமர்ப்பித- ‘தேவரீருடைய திருவடித் தாமரைகளில் எனது உயிரை இப்போது நான் சமர்ப்பித்தேன்,’ என்றும்,
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -‘என்னுடையதும் யானும் ஆகிய எல்லாப் பொருள்களும் தேவரீர் உடைமை அன்றோ?
இதனை நன்கு அறிந்த யான் தேவரீருக்கு என்னுடைய பொருள் என்று எதனைக் கொடுப்பேன்?-ஸ்ரீ ஆளவந்தார்

சத்தை அவன் இச்சாதீனம் ஆகையால் தந்த நீ கொண்டாக்கினையே –பிரளய ஆர்ணவத்திலே நசியாதபடி ஜகத்தை ரஷித்தால் போலே நான் பிரிந்து நோவு படாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்ட ஸ்வாமி-பண்டே உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மாவை நீ கொண்டு அருளினாய் –

———

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே
–2-3-5-

ஞான லாபமே அமையுமோ?பிராப்தி – பேறு வேண்டாவோ?’ என்ன,தனியேன் வாழ் முதலே!! -எனக்குப் பிரதம ஸூஹ்ருதமும் நீயேயாய்,-என்னைச் சமுசாரிகளில் -வ்யாவ்ருத்தன்- வேறுபட்டவன் ஆக்கின அன்றே பெற்றேனே அன்றோ?’ என்கிறார்

கனிவார் வீட்டு இன்பமே – நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே!
அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம். –வீட்டு இன்பப்பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் – -அர்ச்சாவதார பரத்வேந –நாயனார்-யசோதைப் பிராட்டிக்குக் காட்டி அருளியது த்ருஷ்டாந்தம்-

என் கடல் படா அமுதே –முயற்சி இன்றிக் கிடைத்த அமுதம் போன்றவனே-(இத்தால் ப்ராப்யத்வம் சொல்லிற்று )

எனக்கு என்றிருப்பார் நடுவே இருக்கையிறே இவர்க்குத் தனிமை.
தம்மை அத்தலைக்கு ஆக்கி வைக்கையிறே இவர்க்கு வாழ்வு,’
என்பது இருபத்து நாலாயிரப்படி

நுன பாதம் சேர்ந்ததேனே –-இமையோர் தலைவா ‘இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்னும்படி,-அறிவைத் தந்த போதே உன் திருவடிகளைப் பெற்றேனே அன்றோ?’

————

சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவருயிரை
சோர்ந்தே போகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே
–2-3-6-

இனி நுன பாதம் சேர்ந்தேனே’ என்றார். கீழ் திருப்பாசுரத்தில்;
‘இனி என்று தான் விசேஷிக்க வேண்டுமோ?
‘பொய்ந் நின்ற ஞானத்திலே’ நீ விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே கிட்டிற்றிலேனோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்,
அன்றிக்கே
ஸ்வரூபத்தை அநுசந்தித்தவாறே, நிலை நின்ற ஸ்வரூபம்
ஸ்வாபாவிக – இயல்பாகவே அமைந்துள்ளதான- சேஷத்துவமேயாய்,
நடுவுள்ளது வந்தேறியாய்த் தோன்றுகையாலே அருளிச் செய்கிறார் எனலுமாம்

அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது
கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்;இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும்-அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன்-அம்பரீடன் தவம் செய்து கொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று,  ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன ந அஹம் ஆராதயாமி த்வாம் தவ பத்தோயம் அஞ்சலி ,‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்;-என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே! உன்னைக் கும்பிடுகிறேன்’ என்றான்.

தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதவ் – ‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்:-ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே,
தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே,
அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து-த்ரவீபூதமாய் – நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே,-அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.-தீர்ந்தார்
உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –-பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்;-அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் –தீர்ந்தார் என்று ப்ராப்ய த்வரா நிஷ்டர் என்றும் —
ப்ராப்ய ப்ராபக நிஷ்டர் என்றுமாம்

அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –
சேஷ பூதனான நான் பண்டே அடைந்தேன் அன்றோ
‘அநாதி காலம் இழந்த இழவை மறக்கும்படி வந்து கலக்கையாலே, இன்றோ பெற்றது?
இவ்வாத்துமா உள்ள அன்றே பெற்றேன் அல்லேனோ?’ என்கிறார்.-முதன் முன்னமே என்றதுக்கு மூன்று அர்த்தங்கள்
1-இனி என்று பொய் நின்ற ஞானத்திலே விசேஷ கடாக்ஷம் பண்ணின போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –அநாதி காலம் பிடித்துப் பெற்றேனே அன்றோ
2-இனி -என்று அறியாத அறிவித்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –
பொய் நின்ற ஞானத்திலே நீ விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளினை போதே பெற்றேனே
3-வாயும் திரை யுகளில் ஆர்த்தி தீரக் கலந்த போதே பெற்றேன் என்று விசேஷிக்க வேணுமோ –-அநாதி காலம் தொடங்கி விஸ்லேஷம் இன்றிக்கே ஸம்ஸ்லேஷமாய் அன்றோ தமக்குச் செல்கிறது –

———–

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே
–2-3-7-

அடைந்தேன் முதல் முன்னமே-தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் நினைத்தார்;
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே -இவ்விஷயத்தினுடைய இனிமையையும்-போக்யத்தையும் – அநு சந்தித்தார்;
‘இது இருந்தபடி கண்டோமுக்குத் தொங்காது போலே இருந்தது’ என்று – அதிசங்கை கொண்டு, தேவர் என்னைக் கைவிடில் நான் உளேன் ஆகேன்;-என்னைக் கைவிடாது ஒழிய வேண்டும்,’ என்கிறார்

இவர்கள் தொழுது உளராமாப் போலே -அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜவலனாகா நிற்குமவன்-அனுபூதாம்சம் அளவுபட்டு அனுபாவ்ய அம்சமே பெருத்து இருக்குமே ஆதலின், ‘பரனே’ என்கிறார்.-கன்னலே-அமுதே-கார் முகிலே கண்ணா –இவ்வளவும் இவருடைய சங்கா ஹேது-உன்னை ஒழிந்த அன்று-அசித்ப்ராயமான -அறிவு அற்ற பொருளாகக் கிடக்கும் என்னை,-இவ்வயிருக்குத் தாரகனாய் இருக்கிற நீ பார்த்தருள வேண்டும்;-திருவுள்ளம் பற்றல் வேண்டும்-வ்யதிரேகத்தில் அழியும்படியான என்னை -வ்யதிரேகத்தில் அழிக்கும் படியான போக்யதையை யுடைய நீ -இரண்டு தலையையும் அறிந்து திரு உள்ளம் பற்ற வேணும் –

————

குறிக் கொள் ஞானங்களால் எனை யூழி செய்தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே
–2-3-8-

என்னை நீ குறிக் கொள்ளே’ என்றவாறே,-அவன் குளிரக் கடாக்ஷித்தான்;-அதனால் சகல வ்யசனங்களும் – எல்லாத் துன்பங்களும் போய்-அவனை அனுபவிக்கிறார்-

அவன் பின்னே நெறிப் பட்ட நெஞ்சை யுடையனாய்.-பின் நெறி – -பின்னே சொன்ன வழி-பிறவித் துயர் கடிந்து’ என்று தடையின் நீக்கத்தை–சரம ஸ்லோகத்தில் ‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கின்றேன்’-அர்த்த த்வயம் – பல பரமாயும் உபாய பரமாயும்-இவர், வெண்ணெய் களவு காணப்போன இடத்தில் அடி ஒற்றிக் கொண்டு சென்று, அவன் புக்க வீட்டிலே தாமும் புக்கு,  அவன் வெளி வாராமல் படலைத் திருகி வைத்து, உபாய நெறியினைக் கேட்டு அறிந்து, பின் பிறவித்துயர் கடிந்தார் என்ற தொனிப் பொருளும் தோன்றும்-பேறாவது–கிறியாவது பகவத் பிரசாதம் –சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் அனுபவத்தை இஜ் ஜென்மத்தில் அல்ப காலத்திலேயே அயத்நேந நான் பெற்றேன் -என்று தாம் பெற்ற ஸம்ருத்தியைச் சொல்லி அனுபவிக்கிறார் –

———

கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவானம் இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்தாடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
–2-3-9-

சோஸ்னுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மணா விபச்சிதா ‘-இவ் வுயிரானது முற்றறிவினனான இறைவனுடைய நற் குணங்களை அவ் விறைவனோடு அனுபவிக்கின்றது’ என்கிறபடியே,-தம்முடைய-சகல துரிதங்களும் – எல்லாத் துக்கங்களும் போகும்படி-‘இறைவனை அனுபவிக்கப் பெற்றேன்’ என்று ஹ்ருஷ்டராகிறார்

செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே –-அடி காண ஒண்ணாதபடி தூறு மண்டிக் கிடக்கிற தீய வினைகளெல்லாம் போகும்படி வந்து கிட்டி,-நான்கு மூலைகளிலும் புக்கு உட் புகுந்து, -அநந்யார்ஹனான -வேறு ஒருவர்க்கும் உரியன் அல்லாத- யான்-முழுமிடறு செய்து அனுபவதித்து, யமன் முதலியோர் தலைகளிலும் அடியிட்டுக் களிக்கப் பெற்றேன்.
படிதல் – கிட்டுதல்-
குடைதல். எங்கும் புகுதல்-
ஆடுதல் – உட்புகுதல்–
வாய் மடுத்துப் பருகுதல் – பெருவிடாயோடே அனுபவித்தல்.களித்தேனே-இதர விஷய ஸ்பர்சம் -சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், 
‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் 

———-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே
-2-3-10-

களித்தேனே’ என்றவர்,-மீண்டும்,-‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்-

துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் –வர்ஷிக்கையே ஸ்வபாவமாக யுடைய மழையினைப் பெய்கின்ற ஆகாயம், (துளிக்கின்ற -வர்த்தமான பதார்த்தம் )-அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் கடற்கரை வெளியில் நோக்கியது போன்று,  திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தை யுடையவன்.

கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது. –அடியார்கள் குழாங்களையே    -இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.
அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய,
பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:

‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க,
இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி,
இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்,’ என்று அருளினார்.

ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பிறந்து ஆவிர்பூத ஸ்வரூப ஸ்வ பாவரானவர்க்கு ப்ராப்யம் அடியாராக ஸூரிகள்-என்று கருத்து –

————

குழாங்கொள் பேரரக்கன் குலம்வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் யடியீருடன் கூடி நின்றாடுமினே
–2-3-11-

பருகிக் களித்தேனே -என்னா உடன் கூடுவது என்று கொலோ -என்று நான் பட்டது படாதே முதலிலே திரளோடே அனுபவிக்கப் பாருங்கோள்-அநு கூலராய் இருப்பார் அஹங்காராதிகளாலே பிரிய வர்த்தியாதே ஏக கண்டராய் அனுபவிக்கப் பாருங்கோள்-
அர்த்த காமாதிகளைப் பற்றி ஸ்வரூபத்தை இழவாதே கொள்ளுங்கோள் –

—————

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே
–2-4-1-

ஆடியாடி –ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று-ஹர்ஷ கார்யமான ந்ருத்தம் -துக்க தசையில் -நம் பெண்ணுக்கு அன்றோ இத்தசை என்று ஆகர்ஷமாக இருக்குமே –முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி –
தாளம் கொண்டு அறியும் அத்தனை -வெங்கலத் தொனி போலே —கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து – மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே-

கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது–
ஆர் குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே –பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் –
இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது இத்தால் என்ன பயன் -என்றவாறே –
பாவியேன் இந்த வரவை பரம சேதனன் அன்றோ பார்க்க வேணும் –
கண்ணீர் மல்கி –அதி ஆகர்ஷகமாக இருக்கிறதே பிராப்த சேஷி அன்றோ பார்க்க வேண்டும்-இவ்வரவு உடையவனான-இந்த கண்ணநீர் இவள் ஸ்வாமியான அவன் – பெருமாள் பார்க்காமல் யாரோ பார்ப்பதா–இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –-பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்

பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –-பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் –-கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்-எங்கும் நாடி நாடி – தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து – கண்ணன் என் ஒக்கலையானே-என்று அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே

நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம்-ஆலம்பனம் -(பற்றுக் கொம்பு /ஸ்தம்பம் )- இல்லாதபடி இருக்கையாலே வாடும்
1-மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
2-தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
3-ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
4-ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
5-சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
6-ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
7-இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ

வாடிவாடும்-கொம்பை இழந்த தளிர் போலே வாடும்-முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்

இவ்வாணுதலே-ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே-இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ-தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்

—————-

வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே
–2-4-2-

வாணனுடைய -பாஹு வனத்திலும் -தோள்கள் ஆயிரத்திலும், இவள் விரோதி பிரபலமோ?’ என்கிறாள்.பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது?-உம்மோடு கலந்த அபலைக்கு உதவல் ஆகாதோ?’

ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ரஹ்ணீஷ்வ பாணிநா – ‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று,-பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள்.-‘பெற்ற எனக்கு ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள்.

உம்மை நீர் அறியாமை இல்லையே;-நம்மைப் பிரிந்தார்கள் பிழையார்கள்’ என்று இருக்க வேண்டாவோ?’

இவள் நைவு பேற்றுக்கு உபாயமன்று; அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்,’ என்று காணும் திருத்தாயார் இருக்கிறது.
‘ஆயின், இவள் நைவிற்குப் பலன் தான் யாதோ?’ எனின்,
‘இவள் நைவு அவன் இரக்கத்துக்ப் பரிகரம்,-அவன் இரக்கம் பேற்றுக்குச் சாதனம்;-தானே காட்டக் காணும் இத்தனையே.

——————

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே
–2-4-3–

இன்று இச்செயல் செய்யக்கடவதாக நினைத்த நீர், அன்று,-‘உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்த’ லாகிய அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்கிறாள்-அரக்கன் இலங்கை செற்றீருக்கு –-‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான்.

எரி அணை அரக்கும் மெழுகும் ஒக்கும் – எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்.
அரக்கும் மெழுகும் என்னும் இவற்றை நெஞ்சுக்கு ஒன்றும், இவள்தனக்கு ஒன்றுமாகக் கொண்டு பொருள் கூறுவர் பிள்ளை திருநறையூர் அரையர்.
நெஞ்சும் இவள் தனக்குக் கையடைப்பு ஆகையாலே இவள் தனக்கே இரண்டையும் அடை ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்.

உம்மை இரங்கும்படி செய்யவோ?-அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது செய்வேன்?’

———

இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே
–2-4-4-

இலங்கை செற்றவனே என்னும் – எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே!’ என்னா நின்றான்.-முன்பு தனக்கு உதவினவன் இப்பொழுது தனக்கு உதவாது ஒழித்தாற்போலே கூப்பிடுகிறாள்.-கலங்கிக் கைதொழும் – தெளிந்திருந்து தொழுமது இல்லை அன்றே பிரணயிநி- தன்னுடைய நோவு வாயால் சொல்ல மாட்டாமையாலே தன் கருத்தை
கை தொழுகையாலே ஆவிஷ்கரியா நின்றாள் –-இவளே – அவன் தொழும்படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள்.

———-

இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே
–2-4-5-

‘வாய் வெருவுவான் அவனாக இருக்க, இவள் வாய் வெருவுகின்றாளே!’ என்கிறாள்.இவள் இராப்பகல் வாய் வெரீஇ’ என்றதனால் ‘பொய்ந்நின்ற ஞானம்’ தொடங்கி இத்திருப்பாசுரம் முடிய இவர் பாடிக்கொண்டு வந்தன எல்லாம் வாய் வெருவின இத்தனையே என்பதும், அவதானம் பண்ணி அருளிச் செய்கின்றார் அல்லர் என்பதும் போதரும்.
வாய் வெரீ இ-வாய் வெருவி – ‘அவதானம் பண்ணாமல் அருளிச்செய்தல் கூடுமோ?’ எனின்,
வாசனையே உபாத்தியாயராகச் சொல்லிக் கொண்டுவரச் சொல்லுகிறார் இத்தனை.இக்கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக்கூடிய கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்’ என்பாள், ‘தன் கண் நீர் கொண்டாள்’ என்றும் கூறுகின்றாள்.

தவள வண்ணர் தகவுகளே-தகவுகளே -தயநீய விஷயங்கள் பல வாகையாலே தயையும் பலவாய் இருக்கை – ‘சுத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயின?’ என்று எம்பார் அருளிச் செய்வர்.-‘உம்மைப் போலே நாலு சிஷ்டர்கள் அமையும் அபலைகள் குடிகெட’ என்று பட்டர் அருளிச் செய்வர்.

———–

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே
–2-4-6-

தகவுடையவனே என்னும் – கெடுவாய் ! ‘ஆகரத்தில் தகவு மறுக்குமோ? நம் குற்றங்காண்,’ என்கிறாள்-முன்பு பண்ணின உபகாரத்தை நினைத்து சொல்லுகிறாள்-என்னுடைய பிரத்யாகாத்மாவுக்கு நிரதிசய போக்யன் ஆனவனே -என்னும் -போக தசையில் சொல்லுமவை எல்லாம் சொல்லா நின்றாள்-.-உள்ளம் உக உருகி நின்று –அமூர்த்தமான -வடிவம் இல்லாத மனமானது-மூர்த்தீ பவித்து – வடிவினை அடைந்து உருகி நீர்ப்பண்டமாய் மங்கிப் போகா நின்றது.

———–

உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே
–2-4-7-

தன் நெஞ்சில் ஓடுகின்றவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கும் இயல்புடைய இவள்,உடல் உலர்ந்த பின்பு அன்றோ ஆவி உலர்தல் வேண்டும்?’ எனின், பாவபந்தம் அடியாக வருகிற நோயாகையாலே அகவாயே பிடித்து வெந்துகொண்டு வருமாயிற்று.-என் வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான ஆர்த்திகளிலே – துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள்.-வெள்ளம் நீர்க் கிடந்தாய் என்னும் தாபார்த்தோ ஜல சாயிநம் –‘என்விடாய்க்கு உதவத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தருளிற்றே’ என்னும்.-இக்கிடை, இவளுக்கு ஒரு படுக்கையிலே சாய்ந்தாற்போலே இருக்கிறது காணும்.–தான் பட்ட -தான், வேறுபாடு இல்லாதவனாய் இருக்க, இவள் வேறுபடுவதே!-அத்தலை இத்தலையாய் -அவன் அவிக்ருதனாய்-இவளை தோற்பிக்கும் படி யாவதே-வஞ்சனையே –-பெரும்படை உடையாரை அளவு படை உடையார் வெல்லுவது வஞ்சனையால் இறே
நேர் கொடு நேரே ஜெயம் அன்று என்கிறாள் –

—————–

வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே
–2-4-8-

உம்மை அனுபவித்துச் ஸூகித்திருக்க வைத்தீர் அல்லீர்;-கம்ஸனைப் போலே முடித்துவிட்டீர் அல்லீர்;-உம்மை ‘ரக்ஷகர்’ என்ற இருந்த இவள் படும் பாடே இது,’ என்கிறாள்.உம்மைத் தோற்பிக்க நினைத்தாரை நீர் தோற்பிக்குமவராய் இருந்தீர்.-ஆஸ்ரித அடைந்தவர்கள்-நாஸ்ரித – பகைவர்கள் என்னும்-விபாகம் அற – வேற்றுமை இன்றி உமக்கு இரண்டு இடத்திலும் காரியம் ஒன்றேயோ?’ என்கிறாள்.

வஞ்சனே என்னும் –தாயார், ‘வஞ்சித்தான்’ என்னப் பொறுத்திலள்;
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து’,
‘நான் அல்லேன் என்றாலும் தவிர ஒண்ணாதபடி என்னையும் அறியாதே வஞ்சித்து,
உன் திருவடிகளிலே சேர்த்த உபகாரகனே!’ என்கிறாள்.

இவள் பட்டனவே
‘சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைத்தீர் அல்லீர்;
நித்திய ஸூரிகளைப் போன்று அனுபவிக்க உம்மைக் கொடுத்தீர் அல்லீர்;
தத் தஸ்ய சத்ருசம் பவேத் ‘இலங்கையை அழித்து என்னை அழைத்துக்கொண்டு போவராகில் போகும் அச் செயல் அவர்க்குத் தக்கதாம்’ என்னும் எங்களைப்போன்று இருக்கப் பெற்றிலள்;
கம்ஸனைப் போன்று முடித்தீர் அல்லீர்;
என் வழி வாராதே உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்?
இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள் –

————

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–
2-4-9-

இவள் பட்டது தான் ஏது-என்ன அத்தை சொல்லுகிறாள் –உம்முடைய கையும் திரு வாழியும் காண ஆசைப் பட்டு உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே சபலையுமாய் இப்படி நோவு படுகிற இவள் திறத்து செய்ய நினைத்தது என்-‘படுவன எல்லாம் பட்டாள் ஆகில் இனி, என் படுவாள் என்கிறாள்.

விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்
-‘இது ஒரு பரிமளமே; இது ஒரு தேனே; இது ஒரு பூவே; இது ஒரு குளிர்ததியே’ என்று,
திருத்துழாய் விஷயமாக ஒரு கோடியைச் சொல்லும்.
ஆக, ‘உம்முடைய பேரும் தாரும் ஒழிய அறியாள்’ என்கிறாள். என்றவாறே,
நம்மை ஆசைப்பட்டு இப்படிப் படப்பெற்றோமே!’ என்று அலப்ய லாபத்தால் கையில் திரு ஆழியை விதிர்த்தான்

சுடர் வட்டம் வாய் நுதி நேமியீர்’ என்கிறாள்.
அதாவது, ‘சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையுமுடைய திரு வாழியைக் கையிலே உடையீர்’ என்பதாம்
இப்போது, பெண் பிள்ளையைக் காட்டிலும் திருத்தாய் கையும் திருவாழியுமான அழகுக்கு ஈடுபட்டு விசேஷணங்கள் இட்டு அனுபவிக்கிறாள் -‘சுடர் வட்டம் வாய் நுதி’ என்று.
ஆக, ‘அடைந்தவர் பகைவர் என்னும் வேற்றுமை இன்றி அழிக்கைக்குப் பரிகரம் உமக்கு ஒன்றேயோ?’ என்கிறாள் என்றபடி.
‘ஆழிப்படை அந்தணனை, மறவியை இன்றி மனத்து வைப்பாரே’ என்பதன்றோ இவர் தம்முடைய வார்த்தையும்?
கையும் திருவாயுமான அழகைக் கண்டால் நெஞ்சு அழியுமவர்கள் இவர்கள்.

இவ்வேழைக்கே– அபலைகள் பலரும் உண்டு -என்று இ றே நீர் இருப்பது -இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-அத்யந்தம் சபலையான இவள் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் –

————–

ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே
–2-4-10-

இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -இவள், நோக்கு ஒன்றும் ஒழிய, அல்லாதவை எல்லாம் இழந்தாள்;-இந்நோக்கு ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்’ என்கிறாள்-தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!–இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!–பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று
இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்‘
(ஒண்முத்தும் பைம்பொன்னும் ஏந்தி’ (திருவிருத். 11) என்றதனை உட்கொண்டு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார். பொன் –பசலை நிறம். முத்து – கண்ணீர்த்துளி-ஏழை – ‘கிடைக்காது’ என்று பிரமாணங்களால் பிரசித்தமாகக் கூறப்பட்டுள்ள பொருளில்,-கிடைக்கக்கூடிய பொருளில் செய்யும் விருப்பத்தினைச் செய்பவள்.-பேதை –
‘கிடைக்காது’ என்று அறிந்து மீளும் பருவம் அன்று; நான் ஹிதம் சொன்னாலும் கேளாத பருவம்.‘இராவணனைக்காட்டிலும் வலிதோ இவளுடைய விரோதிகளின் கூட்டம்?’இவள் தானே முடிந்து போகிறாள்?-நாங்கள் தாமே இழக்கிறோம்? ஜீவிக்க இருக்கிற நீர் வேண்டுமாகில், உம்முடைய ஜீவனத்தை நோக்கிக் கொள்ளப் பாரும், என்பாள்,
வாட்டேன்மின்’ என்று அவன் தொழிலாகக் கூறுகிறாள்.

இவள் நோக்குக் கிடீர் எல்லார்க்கும் உஜ்ஜீவன ஹேது என்று கருத்து –

——–

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே
–2-4-11-

நோக்கு ஒன்றும் வாட்டேன் மினே’ என்றவாறே, ‘புறப்பட்டோம்’ என்று நாணத்தோடே வந்து தோன்றினான்;-இவள் வாட, அவன் புகழாயிற்று வாடுவது.-இத் துன்ப நிலையிலே வந்து முகம் காட்டுகையாலே பூர்ணமான கல்யாண குணங்ளையுடையவன் ஆனான் என்கிறாள்.
தன் உடைமை பெறுகைக்கு இரப்பாளனாமவன் ஆகையாலே ‘வாமனன்’ என்கிறாள்.இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே
அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

———

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே
–2-5-1-

என் ஆவி –அவன் மேல் விழத் தாம் இறாய்த்தமை தோன்றுகிறது.-இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்;அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான்.
கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. ‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார்.
‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார்.
‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து
என் ஆவி சேர் அம்மான்’
என்கிறார் 

அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச் செய்வர். ‘
ஆயின், அவர்களை ‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், சின்மயராய் -ஞானவான்களாய் இருக்கச் செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக் கொள்கிறார்கள் இத்தனையே.
இனி, இதற்கு எம்பெருமானார்,-செந்தாமரைத் தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்–அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.
‘ஆயின், அவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின்,
கற்பகத் தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ?

———-

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே
–2-5-2-

தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன் தான், என் உடம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்

’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர்,‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்?தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.-வான் சுடர் –முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே-.இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம்.
பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.

ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். அநந்ய பரையான ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, அந்நிய பரரான -பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல குணத்தை அனுசந்தித்து, வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘ இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.

———-

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே
–2-5-3-

ஸ்வ வ்யதிரிக்த- தன்னின் வேறுபட்ட -ஸமஸ்த வஸ்துக்களும் -எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’-உலகத்துப் பொருள்கள், இவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, ஸ்வரூபத்தாலே; இவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது,பிரணயித்வ குணத்தால் -காதலாகிய பண்பாலே–என்னுள் கலந்தவன் – அகஸ்தியப் பிராதா ‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி.-‘நாராயணன், வாஸூ தேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று காணும் அவனுக்குத் திருநாமம்.வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித் தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார்.

—————-

எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே
–2-5-4-

நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’ என்ன,
‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ் விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும் இருக்கும்படி செய்ய –வல்லிகோளே- வல்லீர்களோ?’ என்கிறார்.மரதகம் குன்றம் ஒக்கும் –
கீழ் –எப்பொருளும் தனாய் -ஜெகதாகாரனாய் , உலகமே உருவமாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு, அசாதாரண விக்கிஹம் தன்னையே சொல்லுகிறது.
கீழ் ‘மின்னும் சுடர்’ என்று தம்முடைய கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று;-அப்புகருக்கு இருப்பிடமான-ஆஸ்ரயமான அசாதாரண விக்கிரஹத்தைச் சொல்லுகிறது இங்கு.

—————

ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –
2-5-5–

ஆராவமுதமாய்-உபமேயத்தையே சொல்லுகிறார்.-அசித்தைக்காட்டிலும் தம்மைக் குறைய நினைத்தபடியாலே ‘அல் ஆவி’ என்கிறார்.-என்னை ஆரா அமுதாக நினைத்து, என் அளவாகத் தன்னை நினைத்து அன்றோ கலந்தது-காரார் கருமுகில் போல் – என்னுடைய கலவி ‘பெறாப்பேறு’ என்னும் இடம் தன் வடிவிலே தோன்ற இரா நின்றான்.-பின்னும் இழை பலவே – அனுபவித்துப் போம் இத்தனை ஒழிய, என்னாற்சொல்லித் தலைக் கட்டப் போமோ? முடியாது,’ என்றபடி.

————-

பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–
2-5-6-

என்னுடனே கலந்து ஆற்றானாய்ப்-அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -பல சரீரங்களை மேற்கொண்டு என்ன அனுபவியா நின்றான்’ -முத்தன் தன்னை யனுபவிக்கும்போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளா நின்றான் -ஆக, இவற்றால், தன்னின் வேறு பட்டவற்றை எல்லாம் விஷயமாக உடையனாய், அவற்றை எல்லாம் அறியவும் வல்லவனாய்,-அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இருப்பைத் தெரிவித்தபடி.-சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் -பாம்பணை மேலாற்கேயோ-என்றது –

————

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே
–2-5-7—

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும், ஷீராப்தியில் -திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தன எல்லாம் எனக்காக அன்றோ?’ -பொன் முடி அம் போர் ஏறு பள்ளி அமர்ந்ததுவும், ஏறு செற்றதுவும், மராமரம் எய்ததுவும் ஆன இவையெல்லாம், எனக்காகவே கிடீர்-தன்னுடைய சர்வ சேஷ்டிதங்களையும் எனக்கே போக்யமாகச் செய்து அருளினான் -என்கிறார் –

———-

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே
–2-5-8-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் என் தண்மையைப் பாராது,
என்னோடே வந்து கலந்த இம்மஹா குணத்தை என்னால் பேசி முடியாது,’ என்கிறார்.

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – அவ்விஞ்ஞாத -‘அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று,-இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக,-அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை.
இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்றுமாம்.சொல்லுவது என் சொல்லீரே – விஷயாந்தர அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற நீங்கள் இதுக்கு ஏதேனும் சொல்ல வல்லீர்களோ-

———–

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன்
–2-5-9-

பாசுரம் இல்லை’ என்னா, கைவாங்கமாட்டாரே; சம்சாரிகளைப் பார்த்து,
‘என் நாயனான சர்வேஸ்வரனை நீங்கள் அனைவரும் கூடியாகிலும் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறார்.-திவ்யாத்தம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் திவ்ய மங்கள விக்கிரகங்களின் குணங்களுக்கு எல்லை காண முடியாமல் இருத்தலைத் தெரிவித்தபடி.-உபமான ரஹிதன் –

————-

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே
–2-5-10-

பட்டர் இவ்விடத்தில்–
நைநம் வாசா ஸ்த்ரீயம் ப்ரூவன் நைநமஸ்த்ரீ புமான் ப்ரூவன் புமாம்சம் ந ப்ரூவன் நைனம் வதன் வததி கம்சன் அ இதி ப்ரஹ்ம
(,‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை;
ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை.
அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; )
ச வை ந தேவா ஸூரமர்த்ய திர்யங் ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஐந்து நாயங்குண கர்ம ந சன் நிஷேத சேஷோ ஜயதாத சேஷ
(‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை;
ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை;
கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ )என்னும்
இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச் செய்தவாறே,
அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘ஸ்வாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில்,
சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க,
பட்டர், ‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே!
‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின்
‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.
‘ஆணல்லன் பெண்ணல்லன்’ என்கின்ற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் செய்தபடி

ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான்-அன்போடு தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிப்பான்’ -இந்த இந்த நிலைகளை எனக்கு அறிவித்த இறைவன் படிகளைப் பேச என்றால் சால மிறுக்குடைத்து.

————

கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே
–2-5-11-

பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.-கூடுவர் வைகுந்தம் – ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது ‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.-இவருடைய அனுபவத்தை பரமபதத்தில் அனுபவிக்க பெறுவார் –-

—————

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே
–2-6-1-

அம் தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் இறைவன் அழ்வாருடனே வந்து கலந்து
தான் பெறாப்பேறு பெற்றானாய் இருந்தான்;
இவர், ‘அல் ஆவி உள் கலந்த’ என்றும்,
‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தான்’ என்றும்
தம்முடைய -நைச்யத்தை அனுசந்தித்தவாறே -தாழ்மையினைச் சொன்னவாறே,
‘வளவேழ் உலகு தலை எடுத்து, இன்னம் இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று
எம்பெருமானுக்குப் பிறந்த அதி சங்கையை -ஐயத்தை-நிவர்த்திப்பிக்கிறார்

வைகுந்தா
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்ய புத்ர’ என்னுமாறு போன்றும்,
திருவாய்ப்பாடியில் பெண்கள்‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும்,
‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார்.
இதனால், ‘நித்திய விபூதி யுக்தன் தம்முடனே வந்து கலந்தான் என்று ஹ்ருஷ்டராகிறார் 

‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று;
‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று;
‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று;
இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.

இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்;
மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்;
அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார்.

செய் குந்தா வரும் தீமை –செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்கும் தீமை.-இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை

சிக்கெனப் பிடித்தேன் கொள் – என்னைப் பெறுகைக்கு முற்பட்ட நீ விடிலும் விடாதபடி நான் பிடித்தேனாகவே திருவுள்ளம் பற்று.-அவனைப் பார்த்து, மா ஸூ ச -‘துக்கப்பட வேண்டா’ என்கிறார்.-திருவடிகளை பிடித்தேனாக திரு உள்ளத்தில் கொள்ள அமையும்
மதிப்பன் அல்லன் என்று விடவோ –
வடிவில் பசை இல்லை என்று விடவோ-
ஸூ லபன் அன்று என்று விடவோ-
தேவர் நெகிழ்க்கிலும் நெகிழாத படி பற்றினேன் –

————

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
–2-6-2-

இவர், ‘விடேன்’ என்ற பின்பு அவனுக்கு வடிவில் பிறந்த பௌஷ்கல்யத்தைச் சொல்லுகிறார்-இவரோடே வந்து கலந்து, அக் கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று, விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது.

ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச் செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை:
‘அப்பன் ஸ்ரீ பாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷம் உண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய,
‘அது கேட்க வேண்டும்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்து ஏற,
அப்பனும் அங்கே ஒரு குட்டிச் சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க,
‘இவரைச் சமாதி பங்கம் பண்ண ஒண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க,
அப்பனும் யோகத்திலே எழுந்தருளி யிருக்கிறவர் திரும்பிப் பார்த்து,
‘இங்கே சொட்டைக் குலத்தில் யாரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள,
‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு,
‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச் செய்கைக்கு ஏது என்?’ என்ன,
‘நானும் தானுமாக அனுபவியா நின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும்
அவள் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன், என் கழுத்தை அமுக்கி நாலு மூன்று தரம அங்கே எட்டிப் பார்த்தான்;
இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக் குடியிலே சிலர் வந்தார் உண்டாகவேண்டும் என்று இருந்தேன் காணும்,’-என்று அருளிச் செய்தார்.

————–

தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நாம் மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே
–2-6-3-

நித்திய ஸூரிகளைக் கண் அழகாலே தோற்பித்தான்;-இவரைக் கண்ணியிலே அகப்படுத்தினான்.-அதாவது, ‘மார்வில் மாலையைக் காட்டி மால் ஆக்கினான்’-பொன் மலையை-இவரைப் பெற்ற பின்பு வளர்ந்து புகர் பெற்ற படியைத் தெரிவித்தபடி.-வேதங்களுங்கூட மீண்ட விஷயத்தை மறுபாடுருவ ஏத்துகின்றார் ஆதலின், ‘நன்கு ஏத்தி’ என்கிறார்-நா அலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –நாட் பூ அலருமாறு போன்று-ஜிஹ்வ அக்ரத்திலே – நாக்கின் நுனியிலே -விகசியா நின்றுள்ள சந்தஸானது என் பக்கலிலே நிற்கும் படியாகத் தந்த இது தன்னை –ஸ்வபாவமாக- உடையையாய் இருக்கிற பரம உதாரனே!-மனத்தின் துணையும் வேண்டாதபடி இருத்தலின் ‘நா அலர் பா’ என்கிறார்.

———–

வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே
–2-6-4-

உனை நினைந்து எள்கல் தந்த வெந்தாய் –எள்கல் த்யாகம் ஈடுபாடு –
1-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களை நான் விடும்படி பண்ணினவனே -என்னுதல்
அன்றிக்கே
2-எள்கலாவது-ஈடுபாடாய்-உன்னை அனுசந்தித்தால் –காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் – என்கிறபடியே அள்ளி எடுக்க வேண்டும்படி பண்ணித் தந்த என் நாயகனே -என்னுதல்

உன்னை எங்கனம் விடுகேன்
1-உதாரன் அல்ல என்று விடுவோ
2-விரோதி நிரசன் அல்லன் என்று விடவோ
3-உனக்கு வடிவு அழகு இல்லை என்றுவிடவோ
4-உன் விஷயத்தில் இப்படி ஈடுபட்ட நான் உன்னை விட சம்பாவனை உண்டோ -என்னுதல்
5-உன்னை அனுசந்தித்தால் இதர விஷயங்களிலே விரக்தனான நான் விட சம்பாவனை உண்டோ-என்னுதல்-இப்படி பல பிரகார உபகாரகன் -இனி மேல் எல்லாம் அவன் அதி சங்கையைத் தீர்க்கிறார் –

உய்ந்து போந்து இருந்தே
உய்ந்து -சந்தமேனம் ததோ விது -என்கிறபடியே உஜ்ஜீவித்து
போந்து -சம்சாரிகளை விட்டு வ்யாவ்ருத்தனாய்-நித்ய ஸூ ரிகள் பரிமாற்றமாய் இருக்கை
இருந்து -நிர்பரனாய் க்ருதக்ருத்யனாய்-இருந்து -வள்ளலே மது சூதனா உன்னை எங்கனம் விடுகேன்-

——————–

உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே
–2-6-5-

1-ஆஸ்ரித விஷயத்தில் உனக்குப் பொருத்தம் இல்லாமல் விடுகிறேனோ –
2-அவர்கள் ரக்ஷணத்தில் உனக்குச் சிந்தை இல்லாமல் விடுகிறேனோ –
3-உன் அனுபவத்தில் எனக்கு சீலனாம் இல்லாமல் விடுகிறேனோ –
4-என் ஸ்வரூபம் பிரகாசியாமல் விடுகிறேனோ –
5-விஷயாசக்தரான சம்சாரிகளோடு பொருத்தம் யுண்டாய் விடுகிறேனோ –
6-பிரதிபந்தகமான பாபம் யுண்டாய் விடுகிறேனோ –
7-ப்ராப்யமான கைங்கர்யத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ – தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாமல் விடுகிறேனோ?
8-எனக்குத் தெவிட்டி விடுகிறேனோ? -அடிமையின் சுவடு அறிந்த திருவனந்த ஆழ்வான் விடில் அன்றோ நான் உன்னை விடுவது–உன்னைச் சிந்தை செய்து செய்தே –நான் நினைக்கைக்குக் கிருஷி செய்த உன்னை நினைத்து வைத்து விடக் காரணம்-பிரசங்கம் உண்டோ?’

———————-

உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே
–2-6-6-

என் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் –என்னுடைய-பிராக்தனமான – பல காலமாக ஈட்டப்பட்ட கர்மங்களை வாசனையோடே போக்கினேன்.
முழு வேர்-வேர் முழுக்க. அதாவது, ‘பக்க வேரோடே’ என்றபடி.
பாவங்களைப் போக்கினவன் அவன் ஆயினும், பலத்தை அடைந்தவர் தாம் ஆகையாலே
அரிந்தனன் யான்’ எனத் தம் தொழிலாகக் கூறுகிறார்.

அவன் விடுவது, மனம் அறிந்தே தீ வினைகளைச் செய்தவர்களை;
கைக் கொள்ளுகைக்கு-மித்ர பாவமே – நட்புத் தன்மையே அமையும் என்றபடி.

என் முன்னைக் கோள் அரியே-நரசிம்ஹமாய் உதவியதும் தமக்கு என்று இருக்கிறார்;
ஆஸ்ரிதர்களில் -அடியார்களில் ஒருவருக்குச் செய்ததும் தமக்குச் செய்ததாக நினைத்து இராத அன்று பகவத் சம்பந்தம் இல்லையாம் இத்தனை. இதனால், ‘எனக்குப் பண்டே உதவி செய்தவனே’ என்கிறார் என்றபடி.-கோளரி ‘மஹாவிஷ்ணும்’ என்கிற மிடுக்கையுடைய சிங்கம் என்னுதல்.-‘ஜ்வலந்தம்’ என்கிற தேஜஸ் – ஒளியையுடைய சிங்கம் என்னுதல்.-முடியாதது என் எனக்கே –ப்ரதிஜ்ஜா சம காலத்திலே நீ தோற்றுவாய் ஆயிற்ற பின்பு எனக்கு முடியாதது உண்டோ?சர்வ அபீஷ்டமும் சித்தம் அன்றோ-இந்த ஸம்ருத்தி எல்லாம் உன்னுடைய ப்ரஸாதத்தாலே விளைந்தது-என்கிறார் –

————

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே
–2-6-7-

முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து – பிரளயாபத்தில் அகப்பட்ட பூமி -தன் வயிற்றிலே புகாத போது-படும் பாடு அடங்க தான் என் பக்கலிலே புகுராத போது படுவானாய் வந்து புகுந்தான் –-எனக்கு இனி முடியாதது உண்டோ-அடியேனுள் புகுந்தான் –-சம்பந்தத்தைப் பார்த்து புகுந்தான்-உட்கலந்தான் –-ஒரு நீராகக் கலந்தான்-தன் பக்கல் ஜகத்து புக்கால் போல் அன்றியே -உகந்து புகுந்தான் –விடியா வென்னரகத்து –-ஒரு நாள் வரையிலே கர்ம ஷயம் பிறந்தவாறே விடியுமது இறே யமன் தண்டல் -இது விடியா வென்னகரம் இறே
நரகம் -என்று புத்தி பிறக்கும் அதில் -தண்மை தோற்றாத நரகம் இது-என்றும் சேர்த்தல் மாறினரே-என்றும் கிட்டக் கடவதான தண்மை தவிர்ந்தார்கள்-நானும் பிரார்த்திக்க வேண்டிற்று இல்லை-அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை-எத்தாலே என்னில் -என் பக்கல் அவன் பண்ணின பஷபாத ராஜ குலத்தாலே மாறிக் கொண்டு நின்றார்கள்
முடியாதது என் எனக்கேல் இனி -என்று அந்வயம் –

————-

மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கல் எந்தாய்
–2-6-8-

இப்படி கனத்த பேற்றுக்கு நீர் செய்த ஸூக்ருதம் என் என்ன -ஒரு ஸூக்ருதத்தால் வந்தது அல்ல-நான் பிறந்து படைத்தது என்கிறார் –அதுவும் ஓன்று உண்டு-அந்தாதியாகப் பிறந்து போந்தேன் -என்கிறார் –பிறந்து படைத்தது -தமப்பன் ஐஸ்வர்யம் பிள்ளைக்கு உண்டு -ஜன்ம சித்தம் –அந்தாதி -பூர்வ தேக அந்தம் உத்தர தேஹம் ஆதியாக இருக்குமே -திருவாய்மொழி போலே இதுவும் -என்றவாறு –

அஜீர்ணம் போய் அக்கார அடிசில் பெற்றேன் –ஒரு கடலில் தப்பி பிராப்த கடலில் ஆழ்ந்தேன் –துன்பக் கடலில் இருந்தும் இன்பக் கடலில் மூழ்கினேன் –சம்சார நாற்றத்துக்குள் ஆழ்ந்து இருந்தவன் இப்பொழுது சம்சார கந்தமே இல்லாத நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக பெற்றேனே –

உன்னை என்னுள் நீக்கல் எந்தாய் – ப்ராப்தனுமாய் -சரண்யனுமாய் -போக்யனுமாய் -விரோதி நிவர்த்தகனுமான – உன்னை –உனக்கு சர்வ பிரகார பர தந்த்ரனான என்னுள்ளின் நின்றும் அகற்றாது ஒழிய வேணும் –-தம்முடைய இனிமையாலே இவரும் அவன் பக்கலிலே அதி சங்கை பண்ணுகிறார் -தம் உகப்பு அவனை எதிர் இட்ட படி
எந்தாய் -விரோதியைப் போக்கி வந்து கலக்கைக்கு அடியான ப்ராப்தியைச் சொல்கிறது

————-

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே
–2-6-9-

இனி எங்குப் போகின்றதே-போக்கிடம் இல்லையே உமக்கு -எதனால் என்னை விட முடியும் –
1-எந்தாய் -நீ சேஷி அல்லாமல் போகவோ -சேஷத்வம் மறந்தேன் என்று போகவோ –
2-தண் திருவேங்கடத்துள் நின்றாய் -நீ தூரஸ்தனாய் போகவோ
3-இலங்கை செற்றாய் -நீ விரோதி நிரசன சீலன் அல்லாமல் போகவோ
4-மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா -ஆஸ்ரித விஷயத்தில் மழு ஏந்திக் கொடுத்து கார்யம் செய்யும் அவன் அல்லாமல் போகவோ
5-கொந்தார் தண் அம் துழாயினாய் -ஆஸ்ரித ரஷணத்துக்கு மாலையிட்டிலையாய் போகவோ -கங்கணம் -ரஷை-தீஷை –
6-அமுதே-போகய பூதன் அல்லாமல் போகவோ
7- உன்னை என்னுள்ளே குழைந்த-ஒரு நீராக கலந்திலையாய் போகவோ
8- வெம் மைந்தா -நவீக்ருத ஸ்வ பாவன் அல்லாமல் போகவோ
9-வானேறே -மேன்மையன் அல்லாமல் போகவோ
10-இனி எங்குப் போகின்றதே-போகிலும் கூடப் போம் இத்தனை ஒழிய -ஏக தத்வம் என்னலாம் படி கலந்து தனித்துப் போகலாமோ-

———–

போகின்ற காலங்கள் போய காலங்கள் போக் காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே
–2-6-10-

சர்வாதிகனாய் இருந்து வைத்து -என்னை அடிமை கொள்ளுகைக்காக ஸ்ரமஹரமான திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனவனே-உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ –
இவருடைய ஆர்த்தி எல்லாம் தீரும்படியாக வந்து விஷயீகரித்து-தன்னை அனுபவிப்பித்து -இவர் தன்னை விடில் செய்வது என் என்கிற-அதி சங்கையும் தீர்த்து-தோளில் இட்ட மாலையும் –தண் துழாய் விரை நாறு கண்ணியனே –இப்பொழுது தான் –அதி சங்கை தீர்ந்த பின்பு பரிமளிதமாய்-பிடித்து மோந்த இலைத் தொடை மாலையும் -கைபந்து –தானுமாய் -பரிபூர்ண மநோ ரதனுமாய்-நின்றபடி-

————

கண்னித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே
–2-6-11-

அவர் கேசவன் தமரே –அவர்கள் ஆரேனும் ஆகவுமாம்-குல சரண கோத்ராதிகள் அபிரயோஜகம்-அரையர்கள் -விண்ணப்பம் செய்வார்கள் என்னுமா போலே இவ்வாகாரத்தாலே அவர்கள் பகவதீயர் -தன் முகத்தாலே -உத்தேச்யர் ஆவார்

———–

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
–2-7-1-

கேசவன் தமர்
1-ரூபம்-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-ஸ்வரூபம்-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா–சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது

மாசரிது பெற்று –கேசவன் தமர் ஆகிற பெரும் சதிரைப் பெற்று என்னுதல் –
மாதவன் என்றதே கொண்டு என்றத்தைச் சொல்லுதல் –
விதி சூழ்ந்ததால் என்று ஆகஸ்மிக பகவத் கிருபையை சொல்லுதல்
மா சதிர் -தம் தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது இது பெற்று
காணக் காண அவன் தலையால் சுமக்கிற படி-

————

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே
–2-7-2-

மஹா உபகாரகனாய் — இப்படி நார சப்தார்த்தங்கள் தமக்கு விபூதியான படியை எனக்கு பிரகாசிப்பித்த ஸ்ரீ யபதியான ஸ்ரீ கிருஷ்ணன் என்னை அநந்யார்ஹன் ஆக்கின சேஷி –ப்ரஸ்துதமான நாராயண சப்தார்த்தைச் சொல்லுகிறார் –

———-

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே
–2-7-3-

அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்–2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்- 4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று-தீதவம் கெடுக்கும் –தீதாகிறது -மயர்வற மதி நலம் அருள பெறுவதற்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணின கர்மங்கள்-அவமாகிறது -பின்பு பிராமாதிகம் ஆனவை-நிஷ்க்ருதி இல்லாத கர்மங்களும் நிஷ்க்ருதி உள்ளவையும் என்றுமாம் –அமுதம் –-போக்குவது தன் போக்யதையைக் காட்டி-செந்தாமரை கட்குன்றம்
என்னோட்டை கலவியாலே சிவந்த திருக் கண்களையும் வளர்ந்த திரு மேனியையும் உடையவன் ஆனான் –-சதைக ரூபமான வடிவு விகசிதம் ஆயிற்று –என் கோவிந்தன் -என்னை விஷயீ கரிக்கைக்காக கோவிந்தன் ஆனவன் –

————

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே
–2-7-4-

தேவும் தன்னையும்தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இறே தானான தன்மைஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இறே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்-எம்பிரான் விட்டுவே –எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்-சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளையுமா போலே வியாப்திக்கு பிரயோஜனம் தம்மை வசீகரிக்கை என்று இருக்கிறார் –

————–

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே
–2-7-5-

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

———

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
–2-7-6-

இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்-தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று-இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –-சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள்விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே-நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்-தம்மை விஷயீ கரித்து அல்லது அவனை இருக்க ஒட்டாமையாலே அவனுடைய க்ருபா குணத்தை விதி என்கிறது-

———-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே
–2-7-7-

என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்முத்துப் பல் வரிசை –

பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது

என் வாமனனே –வல்லை காண்-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

—–

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-

என்னைத் தீ மனம் கெடுத்தாய்-அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே — பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-

———-

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே
–2-7-9-

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படிஉன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை ன்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும் வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள-ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக-இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி-வைகல் வைகல்-கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனைஉன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
என்னிருடீ கேசனே – எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன-பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

————–

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே
–2-7-10-

மருடி யேலும் விடேல் கண்டாய்-உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது – நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்-நம்பி பற்ப நாபனையே — கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ-மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

———

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே
–2-7-11-

எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ஸ்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் -கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு-இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்-விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகனாய் வைத்து ஆஸ்ரிதைகளான இடைச்சிகளுக்கு கட்டவும் அடிக்கவும் படி இருக்கிற ஸுலப்யத்தைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் –

————-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே
–2-7-12-

எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய்-அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை பரிச்சேதிக்கலாமோ –

————-

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே
–2-7-13-

நெடுமாலை-என் அளவில் பர்யவசியாதே என்னோடே பரம்பரயா சம்பந்தித்தவர்கள் அளவும் செல்லும் வியாமோஹ அதிசயத்தை உடையவனை-இவை தான் பண்ணிலே புணர்க்கப் பட்டவை-ஸ்ரீ வைஷ்ணவ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை சர்வேஸ்வரன் திருவடிகளை சேர்க்கும்-இப்பத்தோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமராக்கும் –

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே
–2-8-1-

முக்த பிராப்ய போகத்தைச் சொல்லுகிறது -சர்வேஸ்வரனும் பிராட்டிமாருமாக திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே இருக்கக் கண்டு உகந்து அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகமாகிறது-முதல் பாட்டுத் தான் இத் திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாய்-மேலுள்ள பாட்டுக்களில் ஒரு பதத்தை பற்றிப் போருமவையும் அது தன்னைப் பற்றி எழுமவையுமாய் இருக்கிறது –அவனை சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரியாதாப் போலே சேஷியும் சேஷ பூதனோடு அணைந்து அல்லது தரியாதானாய் இருக்கும் படி –ப்ரஹ்ம ருத்ரர்கள் சம்சார பக்தர்கள் என்னும் இடமும் ஈஸ்வரனே மோஷ ப்ரதனாக வல்லான் என்னும் இடமும் சொல்லுகிறார்-ஆக -ஆஸ்ரயணீயன் அவனே -ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆஸ்ரயணீயர் அல்லர் –

1-1- உயர்வற பரத்வனே -திண்ணன் வீடு -அவதரித்து -விபவ பரத்வன் -அணைவது -இங்கே மோஷ ப்ரதத்வ பரன்–மேலே 4-10- ஒன்றும் தேவும் -அர்ச்சா பரத்வம்

விஷ்ணு போதம்-ஏக தேசத்தைப் பற்றி நிற்கை யன்றிக்கே அக்கரையும் இக்கரையும் பற்றி நிற்கும் ஒடமாயிற்று – லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் பற்றி நிற்கும் –சர்வ வியாபி

—————

நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே
–2-8-2-

அவனோடு உள்ள சம்பந்தமே மோஷ ப்ரதம்தாண்ட விருப்பம் வேண்டுமே -அப்பொழுது தான் சம்பந்தம் பிரயோஜனப்படும் –பிறவிக் கடல் நீந்துவார்க்கு -என்கிற விவரணமாய் இருக்கிறது –வீடு என்கிறது -சம்சார நிவ்ருத்தி மாதரத்தை அன்று –ஸூகபாவிக லஷணையான பகவத் பிராப்தியை

பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே —
1-வைத்த வளையத்தோடு காணும் மடுவில் போய் விழுந்தது -புருஷோத்தமன் லஷணம் அன்றோ
2-திருத் துழாயில் பரிமளம் போலே காணும் ஆனை இடரைக் கடந்தது -சம்பந்தமே மோஷம் – –வாட்டம் தணிய வீசீறே
3–ஆனை இடராவது -சர்வேஸ்வரன் ஆபத் சகன் -என்று இருந்தோம் -இவன் இப்படி ஆபன்னனாக உதவாது ஒழிவதே –
நிர்க்குணனாய் இருந்தானீ-என்று நாட்டில் உள்ளோர் நினைக்கில் செய்வது என் -என்ற அத்தாலே வந்த இடராகிலுமாம்-
திரௌபதிக்கு எங்கேயோ  இருந்து புடவை சுரந்தது போலே ஆகாதே -கையில் உள்ள செவ்வித் தாமரையை திருவடியில் இட வன்றோ இது ஆசைப்பட்டது
என் தனி நாயகன்-ஆனை இடரைப் போக்குகை அன்றிக்கே நம் இடரைப் பரிஹரித்தால் போலே யாயிற்று இவர்க்கு இருக்கிறது-புணர்ப்பே — அவனோட்டை சம்பந்தம் –-அவன் திருவடிகளிலே சம்பந்தம் துக்க நிவ்ருத்தியையும் பண்ணி –ஸூக பாவைக லஷணம்-என்கிற பேற்றையும் தரும் – 

—-

புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே
–2-8-3-

இருவரவர் முதலும் தானே -என்கிற பதத்தை விவரியா நின்று கொண்டு -ஸ்ரீ யபதியான அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்களை பிரத்யஷிக்கலாம் என்கிறது –இவை தான் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றியிருந்த போதாயிற்று –
ஸ்த நந்த்ய பிரஜை வாயில் முலை வாங்கினால் தரியாதாப் போலே – சிவன் நான்முகன் புத்திர முகேன இவரை விடாமல் இருப்பானே –ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகன் என்றவோபாதி ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் ஐஸ்வர் யத்துக்கு உடலாகையாலே –பெரிய பிராட்டியாரோடு சேர்த்தி நீர்மைக்கும் மேன்மைக்கும் உடலாய் இருக்கும் இறே-பெரும் புணர்ப்பு எங்கும் புலனே — ப்ரஹ்மாதிகள் அதிகரித்த கார்யங்களை அவர்கள் வழியாலே நடத்தியும்- வ்யூஹ மூர்த்தியாக –-தான் அதிகரித்த கார்யங்களை தானே நடத்தியும் -தனக்கு தகுதியான சேஷ்டிதங்கள்- போருகையாலே -தன்னுடைய பெரும் புணர்ப்பு ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாய் இருக்கும் –

—————

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –
2-8-4-

புகுவீர்இப் பேற்றுக்கு இசைவே அதிகாரம் என்கிறார்இசைவு அதிகாரம் தான் -உபாயம் இல்லை -அவன் இரக்கமே உபாயம் -இனிமை தானே உபேயம் –பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ஸ்மர்த்தவ்ய விஷய சாராஸ்யத்தாலே ஆச்ரயண தசையே தொடங்கி ரசியா நிற்கிற கல்யாண குணங்களிலே அவகாஹியுங்கோள்-ஓவாதே – அபர்வணி கடல் தீண்டல் ஆகாதே -என்னுமா போலே இதுக்கு கால நியதி இல்லை என்கை
தமக்கு ரசித்த படியால் இடைவிடாமல் அனுபவியுங்கோள் -என்கிறார்-நானும் சொன்னேன் நமரும் உரைமின் -என்னுமவர் இறே-ரசித்த பேரைச் சொல்லச் சொல்லி -கலியன்  –பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –ரசித்த குணங்களைச் – சொல்லச் சொல்லி –நம்மாழ்வார்– யானி நாமானி கௌனானி- வியாசர்

————

ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
–2-8-5-

இணைவனாம் எப்பொருட்கும் -என்றதை உபபாதிக்கிறார் துயர் பிறவி -தப்பாக சொன்னேன்- ஓவா துயர் பிறவி என்கிறேன் -என்கிறார்-உச்சிவீடும் விடாதே துயரை விளைக்கக் கடவதான ஜன்மம் தொடக்கமான மற்றும் உண்டான ஐந்துக்கும்-ஷட்பாவ விகாரம்-என் தீர்த்தனே — நல்ல போக்யஜாதம் இருக்க நிஷித்த த்ரவ்யங்களை விரும்புவாரைப் போலே தானும் தன்னுடைய குணங்களும் இருக்க -சப்தாதி விஷயங்களை விரும்பிப் போந்த என்னை-அவற்றை விட்டுத் தன்னையே விரும்படியான சுத்தியைப் பிறப்பித்த சுத்தியை உடையவன்--அன்றிக்கே -நான் இழிந்து ஆடும் துறை என்னுதல் –

———-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே
–2-8-6-

நீர் சொல்லுகிறவனுக்கு இந்த உத்கர்ஷம் எல்லாம் உண்டோ என்ன -முன்பே அர்ஜுனன் நிரூபித்து நிர்ணயித்த அர்த்தம் நாம் இன்றி ஆராயும்படி குறை பட்டு இருந்ததோ -என்கிறார் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திருத் துழாயை உடையனாகை–இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்-இது கிருஷ்ண அவதாரத்திலேயாய் இருக்க ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லுகிறது –வரையாதே தீண்டுகை –இரண்டு அவதாரத்துக்கு ஒத்து இருக்கையாலே-

————-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே
–2-8-7-

ஒருவன் -அர்ஜுனன் -ருத்ரன் -அனுவர்த்தனம் கொண்டு நிச்சயிக்க வேணுமோ –அவனுடைய இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோஇஜ்ஜகத்து இருக்கிறது -இதுவே போராதோ பரத்வ ஹேது -என்கிறார் –தன் விபூதியினுடைய ரஷணம் ஒரு தலையானால் அவன் படும் பாட்டை அனுசந்தித்து ஹ்ருஷ்டையாய்-அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டி அணைக்கும் -அத்தாலே தானும் ஹ்ருஷ்டனாய் அணையா நிற்கும்-

———

காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
ஏண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே
–2-8-8-

அவனுடைய அத்புத கர்மங்களை தனித்தனியும் திரளவும் பரிச்சேதிக்கப் போகாது எத்தனையேனும் அளவுடையார்க்கும் என்கிறார்-சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளான் ஆனவனை-அவன் தானே காட்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் இத்தனை போக்கி ஸ்வ யத்னத்தால் சிலர்க்குக் காணப் புக்கால் காணப் போமோ-ஜாதி வியக்தி தோறும் – குறைவற வியாபித்து இருக்கும்-ஆன பின்பு வ்யாபக வஸ்துவை வ்யாபத்திலே ஓன்று பரிச்சேதித்துக் காண்கை-என்று ஒரு பொருள் உண்டோ –

————

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே
–2-8-9-

நீர் சொன்னது அனுபபன்னமாய் இருந்ததீ-ஒரு வஸ்துவே அநேக பதார்த்தங்களில் குறைவற வியாபித்து இருக்கும் என்றால்-இது கூடுமோ என்ன கெடுவிகாள்-அவன் சர்வகதத்வத்தை இசையாத இரணியன் பட்டது படாதே கிடி கோள்-என்கிறார் –எங்கும் உளன் கண்ணன்--இதுவாயிற்று அவன் சொன்ன தப்பு -சர்வேஸ்வரன் சர்வ கதன் என்றான் என்ற மகனைக் காய்ந்து-இவ் வர்த்தத்தை சத்ருவே சொன்னாலும் கேட்ட போதே காலில் விழ வேண்டும் வார்த்தை சொல்லிற்று-பிரமாண விருத்தமான அர்த்தத்தைச் சொல்லிலும் கொண்டாட வேண்டும்படி யாயிற்று சம்பந்தம்-பருவத்தாலும் கொண்டாட வேண்டும் ஒள்ளியவாகிப் போந்த -இவை ஒன்றுமே இல்லை யாகிலும் சொன்ன போதே இனிமை தான் கொண்டாட வேணும்-பிள்ளையைச் சீறி -திரு நாமம் சொன்னதே ஹேதுவாக புத்திரன் அன்று என்று விட்டான் அவன் திரு நாமம் சொன்னவர்களோடே தமக்கு எல்லா உறவும் உண்டாக நினைத்து இருக்கையாலே இவர் பிள்ளை என்கிறார்-அதிர்த்துக் கொண்டு புறப்பட்ட போதை அட்ட ஹாசமும் -நா மடித்துக் கொண்ட உதடும் -நெற்றியது கண்ணும்–உச்சியது புருவமுமாய்க் கொண்டு- தோற்றின போதே பொசுக்கின பன்றி போலே உருகினான் ஆயிற்று பொன்னன் ஆகையாலே

——————–

சீர்மை கொள் வீடு ஸ்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
–2-8-10-

இவர்களை விடீர் -நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாதே –அவனை அனுபவிக்கப் பெற்றோம் இறேஎன்று ஸ்வ அனுபவ லாபத்தாலே ஹ்ருஷ்டராகிறார் –வித்து –மாறி மரம் ஆகும் -உபாதானம் -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதான காரணம்முதல் -சங்கல்பம் -நிமித்த -சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்-நிமித்த காரணம்
வேர் -கெட்டியாக இருந்து நிற்கும் சஹ காரி காரணம் -ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம்-தனி நின்ற ஸ்ரீ வைகுண்டத்தில் தனித்து உள்ளார் – தோஷங்கள் தட்டாமல் உள்ளார் என்றுமாம்

——————-

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே
–2-8-11-

இத் திருவாய்மொழி அப்யசிக்க வல்லார்கள் இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் –ஆள்வர் எம்மா வீடே – தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான் -1-5-10-என்று எனக்கும் என் பரிகரத்துக்கும் தருவானாக சமைத்து நிற்கிற பரம பதத்தை ஆளப் பெறுவார் – ஆழ்வார் சம்பந்தம் அடியாகவே ஆளப் பெறுவோமே –-பரந்த சிவந்து இருந்துள்ள திருக் கண்களையும் -அவற்றுக்கு பரபாகமாம் படி கறுத்த திரு மேனியையும் உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-பிரதிபாத்ய வைலஷ்யண்யம் .-வெள்ளத்திலே அலைவாரைப் போலே தேன் வெள்ளத்திலே வண்டுகள் அலையா நின்றுள்ள சோலையை உடைய திரு வழுதி வள நாட்டை உடைய ஆழ்வார் அருளிச் செய்தது – வக்த்ரு வைலஷ்யண்யம்-தலையான பண்ணிலே மேலே சொன்ன தமிழ் யாயிற்று இப்பிரபந்தம் தான் அன்றியே -பண்ணின் மேலே சொன்ன -என்னுதல் பிரபந்த வைலஷ்யண்யம்

————-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
–2-9-1-

1-ஆழ்வீர்-மோஷத்தைக் கொள்ளும் என்றான் ஈஸ்வரன் -வேண்டா என்றார் –
2-மா வீடு கிடீர் –விலஷணமான மோஷம் கிடீர் -என்றான் -அதுவும் வேண்டா என்றார் –
3-எம் மா வீடு கிடீர் -ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -என்று இருக்க வேண்டா -பரம புருஷார்த்த லஷண மோஷம் என்றான் -அதுவும் எனக்கு வேண்டா என்கிறார்

செப்பம் –செப்போம் –சொல்லோம்-நீ பிரசங்கிக்கக் கடவை யல்ல -நான் பிரதிஷேதிக்கவும் கடவேன் அல்லேன் –கொக்குவாயும் படு கண்ணியும் போலே உன் திருவடிகளும் என் தலையும் சேர வேணும்-

அதுக்கும் இதுக்கும் உள்ள வாசி பாராய்-1- -அங்கு முதலை ஓன்று –எனக்கு முதலை ஐந்து –2–அங்கு ஆயிரம் தேவ சம்வத்சரம் –இங்கு அநாதி காலம் –3–அங்கு ஒரு சிறு குழி –இங்கு பிறவி என்னும் பிறவிக்கடல் 4–அதுக்கு சரீர நாசம் –எனக்கு ஆத்மா நாசம்--5–ஆனையின் காலை யாயிற்று முதலை பற்றிற்று – இங்கு என்னுடைய நெஞ்சை யாயிற்று அருவித் தின்றிடுகிறது

சேஷத்வமே புருஷார்த்தம் -விக்ரகமே உத்தேச்யம் -ரிஷிகள் ஸ்வரூபத்தில் மண்டி -ஆழ்வார்கள் –திண் கழல் இருவர் -மிதுனம் -விட்டாலும் விடாதே

————–

ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா காலக் கழிவு செய்யலே
–2-9-2-

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்-இதிலே மானசமான பேற்றை அபேஷிக்கிறார்-

எய்தா நின் கழல் யான் எய்த
1-ஸ்வ யத்னத்தால் ஒருவருக்கும் பிராபிக்க ஒண்ணாத திருவடிகளை -உன்னாலே பேறு-என்று இருக்கிற நான் ப்ராபிக்கும் படி பண்ணி –அது நீர் மயர்வற மதிநலம் பெற்ற அன்றே பெற்றிலீரோ என்ன-ஞானக் கைதா –
2-இது நீ நினைத்து இருக்கும் அளவு போறாது -அது நான் பெற்றேன் என்று தெளியும்படி பண்ண வேணும்-அமிழ்ந்தினார்க்கு கை கொடுத்தால் போலே இருக்கையாலே ஜ்ஞான லாபம் –பிரத்யஷ சமானாகார ஞானம் –-ஜ்ஞானமான கையைத் தா -என்கிறார் -சர்வம் ஞான பிலவம்-தெப்பம் -கீதை –
இங்கே எம்பாருக்கு ஆண்டான் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-அதாவது
ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளியதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்கும் இறே -அப்படியே ஆகிறது என்று –
ஞானக் கை தா –3-அங்கன் அன்றிக்கே -அது பின்னை பரபக்தி பர ஞான பரம பக்திகளை உடையார் பெரும் பேறன்றோ என்ன-ஞானக் கை தா – அவற்றையும் தேவரே பிறப்பித்து தேவர் திருவடிகளைப் பெற வேணும் -செய்கிறோம் என்ன ஒண்ணாது -செய்து கொடு நிற்க வேணும் –

————-

செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே
–2-9-3-

இதில் வாசிகமான பேற்றை அபேஷிக்கிறார் –உதக்ரந்தி திசையிலும் கூட உன் திருவடிகளை நான் இளையாது ஏத்தும்படி -பிரானே -கிருபை பண்ணி அருள வேணும் -என்கிறார்-பிரார்த்தித்த எனக்கே அருள் செய் -வேண்டுதல் -அதிகாரி ஸ்வபாவம் -உனது அருளே உபாயம் –

———-

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே
–2-9-4-

இத் திருவாய் மொழியிலே இவர் நிஷ்கர்ஷித்த பிராப்யமாவது-(முக்கரணங்களால் கைங்கர்யம் )-ஸ்ரக் சந்த நாதிகளோபாதி தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று இறே
இவ்விடத்தில் எம்பார் அருளிச் செய்யும் படி –சர்வேஸ்வரன் த்ரிவித சேதனரையும் ஸ்வரூப அனுரூபமாக அடிமை கொள்ளா நின்றான் -நாமும் இப்படி பெறுவோமே -என்று –
முக்தரும் நித்யரும்-தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பார்கள்-அஹம் அன்னம் -என்று அவனை -ஆனந்திப்பித்து -அவன் உகந்த வழியாலே–அஹம் அந்நாத என்று தாங்களும் ஆனந்திப்பார்கள் – -பத்தர் தாங்கள் ஆனந்தியாதே-அவனை ஆனந்திப்பார்கள் –இன்புறும் இவ்விளையாட்டுடையான் –3-10-7-இறே –

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்று பிரார்த்திப்பான் என்- திரு உள்ளம் ஆனபடி செய்கிறான் என்று இராதே -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க
அது கேளீர் -முன்பு பிரிந்து அன்று -பின்பு பிரிவுக்கு பிரசங்கம் உண்டாயன்று -இரண்டும் இன்றி இருக்கத் திரு மார்வில் இருக்கச் செய்தே–அகலகில்லேன் அகலகில்லேன் -என்னப் பண்ணுகிறது விஷய ஸ்வபாவம் இறே –-அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது -என்று அருளிச் செய்தார் –எம்பார்-

எம்மா வீட்டில் எம்மா வீடாய்–ஸ்ரீ  வைஷ்ணவ சர்வ ஸ்வமுமாய் -உபநிஷத் குஹ்யமுமாய் -சர்வேஸ்வரன் பக்கலிலே-அபேஷித்துப் பெறுமதுவாய்-(ராக ப்ராப்தமாய் )-இவ்வாத்மாவுக்கு வகுத்ததுமான பார தந்த்ர்யத்தை– அவன் பக்கலிலே அபேஷிக்கிறார் –-ராக பிராப்தமுமாய் -ஸ்வரூப பிராப்தமாய் இருக்கும் -என்றவாறு -சிஷ்டாசாரமும் மூல பிரமாண சித்தமுமாயும் இருக்குமே -இத்தனையுமாய் இருப்பதால் சாரதமங்களுக்குள் சார தமம்

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என் மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி தனக்கேயாக- ஏழு சொற்களால் —ஏழு சங்கைகள் தீர்ந்து மகிழ்கிறார் ஆழ்வார் –
முதலிலே ஆட்செய்ய -என்ன வேணும் -ஆட்செய் -என்று -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது -பரதன் சங்கை தீர்ந்தது –முதல் சங்கை தீர்ந்தது –
அதில் –எனக்கு ஆட்செய் -என்ன வேணும் -எனக்கு ஆட்செய் -என்று அப்ராப்த விஷயங்களை வ்யாவர்த்திக்கிறது –இரண்டாம் சங்கை தீர்ந்தது –
அதில் எனக்கே ஆட்செய் என்று தனக்கும் எனக்கும் பொதுவான நிலையைத் தவிர்த்து -எனக்கே ஆட்செய் என்ன வேணும் -மூன்றாம் சங்கை தீர்ந்தது
இது தான் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி நிற்க வேணும் -நான்காம் சங்கை தீர்ந்தது-க்ரியதாமிதி மாம் வத -என்கிறபடியே -இன்னத்தைச் செய் –என்று- ஏவிக் கொள்ள வேணும்
இப்படி ஒரு வார்த்தை அருளிச் செய்து நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது
என் மனக்கே வந்து-என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுர வேணும் -ஐந்தாம் சங்கை தீர்ந்தது-புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாக ஒண்ணாது-இடைவீடின்றி மன்னி -ஸ்த்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருக்க வேணும் – ஆறாம் சங்கை தீர்ந்தது
இருந்து கொள்ளும் கார்யம் என் என்றால்-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
ஸ்ரக் சந்த நாதிகளோ பாதியாகக் கொள்ள வேணும்-அது சூடுமவனுக்கும் பூசுமவனுக்கும் உறுப்பாய் -மிகுதி கழித்துப் பொகடும் அத்தனை இறே-ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால் பிறக்கும் இனிமையும் இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே-அங்கன் என்னுடைய ப்ரீதிக்கு நான் அன்வயித்தேன் ஆக ஒண்ணாது – ஏழாம் சங்கை தீர்ந்தது –

பரமம் சாம்யம் உபைதி -சக ப்ரஹ்மம் -சக சாம்ய -சப்தங்கள் -சாம்யா பத்தி சாஸ்திரங்கள் சொல்ல-இவர் தமக்கு அந்வயம் இல்லாமல் அவனுக்கு மட்டுமே என்கிறது என்-
ஆனந்தத்தில் சாம்யா பத்தி -கைங்கர்யத்தால் வருகிற ஆனந்தம் வேண்டாம் என்கிறார் -அவன் ஆனந்தத்தால் இவருக்கும் ஆனந்தம் –அஹம் அன்னம் அஹம் அந்நாத –சாஸ்திர வாசனையாலே -தானே அருளிச் செய்கிறார் –-ஜகத் வியாபார வர்ஜம்-ஹேது மாறுவதால் ஹர்ஷத்தில் மாறுபாடு வாராதே -பிள்ளை தமப்பன் சம்பாதித்த சொத்தை பிரீதியாக அனுபவிப்பது போலே

பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற சமயத்திலே திரு முகத்தைப் பார்க்கில் வ்யவசாயம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார்

வங்கி புரத்து நம்பி திருமாளிகையில் மேல் கோட்டையில் ராமானுஜர் கையோலை இன்றும் வைத்து மகிழ்கிறார்கள் –

எனக்கே கண்ணனை-தனக்கேயாக என்ற பின்புத்தை எனக்கே இறே -புருஷார்த்தம் ஆகைக்காக சொல்லுகிறது –பாரதந்த்ர ஞானம் வந்த பின்பு வரும் ஸ்வா தந்த்ர்யம் –
ஞானாதிக்யத்தால் வரும் அஜ்ஞ்ஞானம் —என்னுடைய பந்தும் கழலும் தந்து போ போலே -அடிக் கழஞ்சு பெரும்-தனக்கே என்கிறது -பாரதந்தர்ய காஷ்டாய் -எனக்கே என்கிறது -புருஷார்த்தம் –

சிறப்பே —பல கால் வேண்டா -ஒரு கால் அமையும்-அது தன்னிலும் திருவாசலைத் திருக் காப்புக் கொண்டு ஒருவர் அறியாதபடி சிறப்பாக செய்யவும் அமையும்
சிறப்பாகிறது -ஏற்றம் -அதாவது -புருஷார்த்தம் – ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தைக் கொண்டருள வேணும் -என்றபடி-சிறப்பாவது -1-முக்தியும்-2- சம்பத்தும் –3-நன்றியும்
இவற்றில் நான் உன் பக்கல் கொள்ளும் மோஷம் உனக்கேயாக எனைக் கொள்ளுமதுவே –
உன் பக்கல் நான் கொள்ளும் சம்பத்து என்னவுமாம் –நன்றி என்னவுமாம் –பராங்குசனுக்கு -அவயவ பூதர் ஆனால் நாமும் பெறுவோமே-தேவும் மற்று அறியேன் என்று இருப்பார்கள் யாவரும் அவயவ பூதர்-

———–

சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே
–2-9-5-

ஏதேனுமாக உண்டான வஸ்து தேவர்க்கே உறுப்பாம் இதுவே வேண்டுவது -என்கிறார் –
வபுராதி ஷூ யோபி கோபி வா –மயா சமர்ப்பிதா –ஜீவன் உனக்கு உரியவன் —ஸ்தோத்ர ரத்னம் -52-என்னுமா போலே –இத்தலையில் உள்ளது எல்லாம் மறக்கலாம் -மறக்க வேண்டும் –அத்தலையில் உள்ளது ஒன்றும் நழுவ ஒண்ணாது –

என்றும் மகிழ்வேனே –மகிழ்ச்சி என்றும் அனுபவம் என்றும் பர்யாயம்-அனுபவிப்பேன் என்கிறார் –தொழுது எழு -பர்யாய சொற்கள் – ஆக -1-இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் –பெருமான் -என்கையாலே -2- சேஷித்வமும்மறப்பு ஓன்று இன்றி -என்கையாலே -3–ஜ்ஞாத்ருத்வமும்என்றும் -என்கையாலே-3- நித்யத்வமும்மகிழ்வு -என்கையாலே-4- போக்த்ருத்வமும் -போக்யமாக முதலில் இருந்து அவன் போக்கியம் கண்டு நாம் போகிக்க –ஆக -இத்தாலே –ஜீவாத்மா -ஸ்வரூபமும் வெளியிடுகிறார் –

கீழ்ப் பாட்டும் இப்பாட்டும் முன்னிலை யன்றியே ஸ்வ கத அனுசந்தானமாய் இருக்கிறது –

———-

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே
–2-9-6-

தேவாதி பதார்த்தங்களை உண்டாக்கினால் போலே- என்னையும் உன்னை அனுபவிப்பேனாம் படி பண்ண வேணும் -என்கிறாராதல்-
அன்றியே
தேவாதி பதார்த்தங்களுக்கு ஒரோ ஸ்வபாவம் நியதமாம் படி பண்ணினால் போலே எனக்கு உன்னை அனுபவிக்குமது-நியத ஸ்வபாவமாம்படி பண்ணி யருள வேணும் என்கிறாராதல் ஸ்வார்த்ததையே இல்லாத பேற்றைக் கேட்டீர் -லோகத்தில் இப்படி கேட்க வில்லையே அகடிதகடநா-இல்லாதவற்றை உண்டாக்கினாயே -அது போலே இத்தையும் அருளுவாய் –திருதிய விபூதியாக உண்டாக்கி அருளுவாய் –

என்னுடைய ஹிருதயம் உன்னை அனுபவித்து மகிழ்ச்சியை உடைத்தாம் படி பண்ண வேணும்-என்னுடைய வாக் வ்யவஹாரமும் அப்படியேயாகப் பண்ண வேணும்
என்னுடைய வியாபாரமும் ப்ரீதி புரஸ் சரமாக பண்ணும் கைங்கர்யமேயாக வேணும்
நானும் தனியே அனுபவித்து ப்ரீதியை உடையேனாம்படி பண்ண வேணும்
என்றும் இப்படி நான் உன்னை அனுபவிக்கும்படி வர வேணும் –
மகிழ் கொள் ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கையே இப்பாட்டில் ஏற்றம் –

———–

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே
–2-9-7-

தம்முடைய அபி நிவேசத்தாலே -எல்லாக் காலமும் என்னை அடிமை கொள்ள வர வேணும் -என்கிறார் –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–வாராய்-வர வேணும்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி -தாராதாய் –என்னுதல்-உன் திருப் பாத மலர்க் கீழே -பேராதே யான் வந்து அடையும்படி-வாராய் -என்னுதல்-

————-

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே
–2-9-8-

இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் படி -இனிக் கூறிட ஒண்ணாத படி சிறு கூறான அத்யல்ப காலத்திலும் நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் ஹிருதயத்திலே வந்து புகரப் பெறில் மற்று எக்காலத்திலும்-இது ஒழிந்த எல்லாக் காலத்திலும்
யாதொன்றும் வேண்டேன் –பின்னை இது தானும் வேண்டேன்-இத்தை எம்பெருமானார் கேட்டருளி-இது பொருள் அழகியது – இவ் வாழ்வாருடைய பிரக்ருதிக்குச் சேராது-நஹி வாசோ தரித்திர -வஸூ தேவர் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த பின் பல நூறு தானம் செய்வதாக எண்ணினால் போலே –-பெறிலும் பெறாது ஒழியிலும் சிறுகக் கோல மாட்டார் -இங்கனேயாக வேண்டும் என்று அருளிச் செய்வர்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் –-எல்லாக் காலத்திலும் எனக்கு சேஷியான நீ -நான் சேஷமான முறை தப்பாமே வந்து என் ஹிருதயத்திலே புகுரப் பெறில்-எக்காலத்திலும்-இக்காலம் எல்லாவற்றிலும்-மற்று யாதொன்றும் வேண்டேன் பின்னை இது ஒழிந்த மற்று ஒன்றையும் வேண்டேன் –

அக்காரக் கனியே — மற்று -எக்காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் -பிள்ளான் நிர்வாகம்
அக்காரக் கனியே மன்னில் -எக்காலத்திலும் யான் உன்னை – மற்று- யாதொன்றும் வேண்டேன்-யத்ர நான்யத்ர பஸ்யதி -அது தவிர -சுருதி சாயலில் -எம்பெருமானார் நிர்வாகம் –

———–

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே
–2-9-9-

யானே –என் இழவு பகவத் க்ருதமல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க –நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்துக் கொண்டேன் –இருந்தேன் –இப்படி நெடுநாள் போருகிற இடத்திலே ஒரு நாள் அனுதாபம் பிறக்கவுமாம் இறே –அது அன்றிக்கே க்ருதக்ருத்யனாய் நிர்ப்பரனாய் –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே -இருந்தேன்தீ வினையேன் வாளா விருந்தேன் 

எம் வானவர் ஏறே —நித்ய ஸூரிகள் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அடிமை செய்யா நிற்க அவனும் தன் சேஷித்வத்தால் வந்த உத்கர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு-எம் -என்றது-எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி உண்டாய் இருக்க இழந்து அனர்த்தப் பட்டேன் –

—————

ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே
–2-9-10-

அவ்விரோதிகளைப் போக்கினாப் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேணும் –உன் பொன்னடி சேர்த்து ஒல்லைநின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று தொடங்கின அர்த்தத்தைத் தலைக் கட்டுகிறார்-தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு–நான் இசைந்த போதே சடக்கெனத் திருவடிகளில் திவ்ய ரேகையோபாதி சேர்த்து அருள வேணும்
அவ்வளவும் போராது
வேறே போக எஞ்ஞான்றும் விடலே —-இவனுக்கு எல்லா உத்கர்ஷமும் பண்ணிக் கொடுத்தோம் ஆகில் இனி என் என்ன ஒண்ணாது-நீ எல்லா உயர்த்திகளும் பண்ணித் தந்தாலும் நான் எல்லாத் தாழ்வுகளும் பண்ணிக் கொள்வேன்-என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் –நெறி காட்டி நீக்காதே —

————–

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
–2-9-11-

நாம் ஒருவரையும் விடோம் காணும் -என்று திருக் கையில் திரு வாழியைக் காட்டினான் –ஒரு காலும் விடாத திரு வாழியைக் கையிலே உடைய சர்வேஸ்வரனைக் கவி பாடிற்று-

இப்பத்தும் கிளர்வார்க்கு கெடலில் வீடு செய்யும் வரில் பொகடேன்-கேடில் தேடேன் -என்று இருக்கை யன்றிக்கே ஸ்ரத்ததாநராய் இருப்பார்க்கு -அனர்த்த கந்த ரஹிதமாய்-
அஹங்கார மமகாரங்கள் உடைத்த தன்றிக்கே- தனக்கே யாக வேணும் -என்று இவர் பிரார்த்தபடியே இவ்வாத்மவினுடைய ஸ்வரூப அனுரூபமான பேற்றைத் பண்ணித் தரும் –

—————

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே
–2-10-1-

திருமலையை பிராபிக்கையே இவ்வாத்மாவுக்கு நிரதிசய புருஷார்த்தம் –என்கிறார் –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -திருமலைக்கு சென்றால் தானே கைங்கர்யம் கிட்டும்-இளமைக்கு கிளர் ஒளி -ஞானம் வளர யோக்யதை உண்டே –பால்யம் -யௌவன ஆரம்ப ரூபமான இளமை-கழிந்த பருவத்தை உங்களால் தான் மீட்கப் போமோ-கரண பாடவம் உள்ள போதே -என்னுதல்-அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

அடிமை செய்கிறவர்கள் -கிளர் ஒளி இளமையை உடையவர்கள்
அடிமை கொள்ளுகிறவன் வளர் ஒளி மாயோன்
அடிமை செய்கிற தேசம் -வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
ஆக –இப்படி அடிமை செய்யுமவனும் அடிமை கொள்ளுமவனும் அடிமை செய்யும் தேசமும் ஒத்த பருவமாயிற்று இருப்பதுசார்வது சதிரே —திருமலையைக் கிட்டும் இதுவே இவ்வாத்மாவுக்கு சதிர்-அல்லாதவை எல்லாம் இளிம்பு-

—————–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே
–2-10-2-

திருமலையோடு சேர்ந்த ஸ்ரீ யபதியை கிட்டுகையே பரம பிரயோஜனம் என்கிறார் –
அன்றிக்கே – -திருமலை தன்னையே சொல்லுகிறதாதல் -அன்றிக்கே (திருப்பதியை யாதல் )-சில கோசங்களில்-கீழே கிளர் ஒளி இளமை -என்றதே -அப்பருவம் கண்ட இடத்தே இழுத்துக் கொள்ளும் முதலைகள் யாயிற்று விஷயங்கள்பதியது வேத்தி எழுவது பயனே
-தொழுது எழு என்று தம்மைப் போலே என்று இருக்கிறார்-ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கும் அதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனம்-
அல்லாதவை நிஷ்பிரயோஜனம் -பிரயோஜனம் என்றது பிராப்யம் என்றபடி –ஏத்தி -உக்தி வ்ருத்தி விசேஷம் –

———

பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே
–2-10-3-

உத்தேச்யத்துக்கு இது எல்லாம் வேணுமோ –திருமலையோடு சேர்ந்த அயன்மலையை யடைய யமையும் -திருமாலை யோட்டை சம்பந்தத்தையே தனக்கு -பேராக-பேறாக உடைத்தான மலை-அகஸ்த்ய ப்ராதா -மாமான் மகளே-என்னுமா போலே-பயன் அல்லவாக நினைத்து இருக்கிறது -பரம பதத்தில் இருப்பையும் -அல்லாத அவதாரங்களையும்-செயலும் பலமும் இரண்டும் பிரயோஜனமாயிற்று தாம் பற்றின விஷயம் –பிராப்யம் -புயல் மழை வண்ணர்பிராபகம் -புரிந்துறை-அவன் எண்ணமே பிராபகம்-பயனான விஷயம் தான் இருக்கிறபடி-

—————–

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே
–2-10-4-

கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே-இது நம்மால் செய்து தலைக் கட்டப் போமோ -திருமலையை ஆஸ்ரயிக்கும் அது ஒழிய -என்று இங்கனே ஆழ்வான் ஒரு உருவிலே பணித்தானாம்-அங்கனம் நிர்வஹிக்கக் கடவது
அன்றிக்கே –
கரும வன் பாசம் கழிக்கைக்காகவும் -உழன்று உய்க்கைக்காகவும் -கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கைக்காகவும்என்று இங்கனே எம்பெருமானார் அருளிச் செய்யும் படி

ஊர்க்கு இரண்டாயிற்று மழை-நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதொரு மேகமும் -போவது வருவதுமாய் இருப்பதொரு மேகமும்-புயல் மழை வண்ணர் -என்றது இறே-மால் -என்று பெருமை —இருமை என்றும் பெருமை –ஓன்று ஒக்கத்திலே ஓன்று பரப்பிலே –

———-

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே
–2-10-5-

ரஷண உத்யுக்தமான திரு ஆழி உடையவன் வர்த்திக்கிறவன் -புற மலை கிட்டுவதே உபாயம்கிறி உபாயம் –ஆளவந்தார் நிர்வாகம் -கிறியாவது -விரகு -அதாவது அஸாத்யமானத்தை அயத்நேந லபிக்கை-–அற முயலாழி-சர்வேஸ்வரனைக் காட்டிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முற்பாடனாகை –

—————

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே
–2-10-6-

அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதவன்–அச்சுவடு அழியாமே நின்று அருளுகிற சர்வ போக்யமான திருமலையை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு நினைக்கும் அதுவே ப்ராப்யம்-மார்க்க சிந்தை பண்ணுமதுவே-இவ்வாத்மாவுக்கு நன்மையாவது -போம் வழியை நினைக்கவே நலம் -புருஷார்த்தம் -இந்த வழிக்குள் அடியேன் உட்பட வேண்டும் என்ற நினைவே வேண்டியது –

————-

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே
–2-10-7-

திருமலையை சென்று கிட்டி -வலமுறை-நிரந்தர வாஸம் பண்ணுகையே இவ்வாத்மாவுக்கு வெற்றி என்கிறார் –பகவத் விஸ்லேஷம் தான் ஆழ்வார்களுக்கு நரகம் –நெஞ்சே நகு-பகவத் விஸ்லேஷ ஜனித துக்கம் இங்கே தானே -சம்சாரம்–நின் பிரிவினும் சுடுமோ காடு-மலமறு மதி சேர் மாலிரும் சோலைதிருமலை ஆழ்வார் தாம் ஜ்ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தைவலமுறை எய்தி மருவுதல் வலமே –
காலயவன ஜரா சந்தாதிகளைப் போலே அன்றிக்கே சேஷ சேஷி பாவமாகிற முறைப் பாட்டால் உள்ள ஆனுகூல்யத்தை பெற்று பொருந்துகையே பலோத்தரம் -இதுவே பரம ப்ராப்யம்–-மருவுதல் வலம்- என்னுதல்- வரம்-என்னுதல் பலவத்தரம் என்னுதல்- ஸ்ரேஷ்டம் என்னுதல் –

——–

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
–2-10-8-

சித்ர கூட பரிசரத்தில் பிராட்டியும் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினால் போலே பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதாரத்தோடு சஞ்சரிக்கிற தேசம்-

கீழே –தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பன் -1-8-3–என்கிறார்-இங்கே வானோர் மாலிரும் சோலை என்கிறார்-இதுக்கு நினைவு என்-உகந்து அருளின தேசம் எல்லாம் கிடக்க -என்னில் பிரஜைக்கு தாயினுடைய அவயவம் எல்லாம் கிடக்க முலைக் கண்ணிலே இறே வாய் வைக்கலாவது-அப்படியே இங்கு தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும்-என்கிற முலை யாகையாலே அவர்களுக்கேயாய் இருக்கிறது –

பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் பிரதஷிணம் பண்ணா நிற்க பின்னே சேவித்துக் கொண்டு போனேன் – அல்லாதார் கடும் குதிரை போலே வாரா நிற்க இவர்கள் திருக் கோபுரங்களையும் திரு மாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-
துறும்பு நறுக்க பிராப்தி இல்லை -பிரபன்ன ஜன கூடஸ்தர் பிரதஷிணம் செய்ய சொல்வான் என் – உபாயதயா புத்தியால் இல்லை -கைங்கர்யத்துக்கு -கண்ணால் பருகுவார் -பிராப்யம் -அனுபவித்து செல்வார்-அவர்களுக்கு அது பிராப்யம் -நஞ்சீயருக்கு இவர்களை பார்த்து கொண்டே செல்வதே பிராப்யம்வாழ் முதல் -தாரகம் -போஷகம் –வளர் முதல் -போக்யம் மகிழ் முதல் –

———-

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே
–2-10-9-

மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை-செல்வாலும் இளமையாலும் அழகரோடு ஒத்த கஜ யூதர்கள் சேர்ந்து வர்த்திக்கிற தேசம்-இள வானைக் கன்றுகள் இன இனமாகச் சேரா நின்றுள்ள திருமலையை லஷண உபேதமாய் இருப்பதொரு ஆனை நின்ற இடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும்-அங்கு நிற்கிறது –நந்தா விளக்கின் சுடரே– சோலை மலைக் களிறு இறேஉலகம் ஏத்தும் –தென்னானை இறே-

———–

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே
–2-10-10-

பல படியாலும் திருமலையே பர பிராப்யம் என்று உபக்ரமித்த படியே உப சம்ஹரிக்கிறார்
சார்வது சதிரே -என்றத்தையே புகுவது பொருளே என்கிறார்

களவாவது -சோரேணாத்மாப ஹாரிணா -என்கிற ஆத்மாபஹாரமாய்-சூதாவது சாத்விகனாய் ப்ராமாணிகனாய் இருப்பான் ஒருவன் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று விஸ்வசித்து இருந்தால் காண்கிற தேஹத்துக்கு அவ்வருகே ஒரு ஈஸ்வரன் ஆவது என் ஆத்மா ஆவது என் -என்று காணக் காண அபஹரிக்கை-

வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்-ஸ்ரீ கீதா முகத்தால் வேதார்த்தத்தை விஸதீ கரித்தவன் –உபதேசத்தால் மீளாதாரை வடிவைக் காட்டி மீட்க்கைக்காக விரும்பி வர்த்திக்கிற தேசம் மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை-பேடையோடே கூடின மயில்கள் சேர்ந்து வர்த்திக்கிற திருமலை – மாதென்று மார்த்தவமாய் ஸூகுமாரமான மயில் என்றுமாம் அங்கு உள்ள சத்வங்கள் எல்லாம் மிதுனமே யாய் வர்த்திக்கும் -என்கை

போதவிழ் மலையே புகுவது பொருளே-கொடியும் தண்டும் சருகும் இடை இடையிலே பூவுமாய் இருக்கை யன்றிக்கே திருமலை தன்னை முட்டாக்கிட பூத்துக் கிடக்கும் அத்தனை திருமலையைக் கிட்டுமதுவே இவ்வாத்மாவுக்கு பிரயோஜனமாக தலைக் கட்டுவது -அல்லாதவை எல்லாம் வ்யர்த்த வ்ருத்திகள்-

—————–

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே
–2-10-11-

தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து-பிரபந்தமோ என்னில் –
மருள் உண்டாய் கழிய வேண்டிற்று ஆழ்வாருக்கு-இவருடைய பிரபந்தம் அப்யசித்தார்க்கு முதலிலே அஜ்ஞ்ஞானம் தான் இல்லை-மருள் இருந்து கழிந்த ஆழ்வார் போல் இல்லாமல்
கேட்டார்க்கு தெளிவைப் பிறக்கும்படி யாயிற்று இவர் அருளிச் செய்தது
தம்முடைய ஜ்ஞானத்துக்கு அடி ஈஸ்வரன் -இவர்களுக்கு தம்மடியாக வந்தது –
தூ மணி – துவளில் மா மணி போலே -பந்த மோஷ ஹேது அவனது -சாதாரண ஸ்வ தந்த்ரயம்--உஜ்ஜீவன ஏக ஹேது –அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

அருளை இட்டாயிற்று வஸ்துவை நிரூபிப்பது -அருளை உடையவன் திருவடிகளிலே சேர்த்து விடும்-அது செய்யும் இடத்தில்-முடித்தே-சம்சார பந்தத்தை வாசனையோடு போக்கி திருவடிகளிலே சேர்த்து விடும்-கள் அழகருக்கு -அருளுடைய பெருமாள் என்ற திரு நாமம் உண்டே –

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி இரண்டாம் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் தாத்பர்ய சார அமுதம் —

October 31, 2024

2-1-வாயும் திரையுகளும்-பிரவேசம் –

முதற்பத்தால் பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –சுடர் அடி தொழுது எழு என் மனனே ;
இரண்டாம் பத்தால் அந்த கைங்கர்யத்தில் களைகள் அறுக்கிறார் -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே .
மூன்றாம் பத்தால் விரோதி கழிந்த கைங்கர்ய வேஷம் பாகவத சேஷ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்-பயிலும் சுடர் ஒளி
நாலாம் பத்தால் இப்படிப்பட்ட கைங்கர்யத்துக்கு விரோதி ஐஸ்வர்ய கைவல்யம் என்றார்-ஒரு நாயகம் இத்யாதி
அஞ்சாம் பத்தால் அந்த விரோதியைப் போக்குவானும் அவனே என்றார்-களைவாய் -துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –
ஆறாம் பத்தால் விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளில் சரணம் புக்கார்-அகலகில்லேன் இறையும்–மிதுனத்தில் சரண்-
ஏழாம் பத்தால் இப்படிப் பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும் தக்த்த பட நியாயம் போலே
சம்சாரம் அனுவர்த்திக்கிற படியைக் கண்டு விஷண்ணரானார்-நண்ணிலா வகையே நலிவான் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தேயும் தக்த்த பட நியாயம் போலே நம்மை விடாதே அனுவர்த்திக்கிறது
நம்முடைய ஆத்மாத்மீயங்களில் நசை அறாத படியால் என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்கிறார்-
உங்களோடு எங்கள் இடை இல்லை பந்துக்களும் த்யாஜ்யம்
ஒன்பதாம் பத்தால் இப்படி நசை அற்ற பின்பும் ரஷியாது ஒழிவான் என் என்று அதிசங்கை பண்ண
நான் நாராயணன் -சர்வ சக்தி உக்தன் -உம்முடைய சர்வ அபேக்ஷிதங்களையும் செய்து முடிக்கிறோம் என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணத்திலே ஆழம் கால் படுகிறார்– ஓர் ஆயிரமாய் -பேராயிரம் கொண்ட பீடு உடையான்-சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
பத்தாம் பத்தில் ஆழ்வாருடைய பதற்றத்தைக் கண்டு -திரு மோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி –
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி இவருடைய அபேக்ஷித சம்விதானம் பண்ணின படியை அருளிச் செய்தார் –

கீழில் திருவாய்மொழியில் ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்று அவனுடைய ஸுலப்யத்தையும் மேன்மையினையும் வடிவழகினையும் அருளிச் செய்தார்.
மேல் விழப் பண்ணுகைக்கு இம் மூன்று குணங்களுள் ஓரொன்றே போதியதாம்.
இங்ஙனம் இருக்க, இறைவனிடத்தில் இம் மூன்று குணங்களும் நிறைந்து குறைவற்று இருக்குமேயாயின், அவனை அநுபவியாதிருக்கப் போகாதன்றே?
ஆதலால், ‘அவனை இப்பொழுதே அணைதல் வேண்டும்,’ என்னும் பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷை பிறந்தது –
நினைத்தவாறு அப்பொழுதே அணையப் பெறாமையாலே பிறந்த பெருந்துன்பத்தை ஸ்ரீ எம்பெருமானோடே கலந்து பிரிந்த ஆற்றாமையாலே நோவுபடுகிறாளாகிய ஒரு ஸ்ரீ பிராட்டி, ஆற்றாமை கை கொடுக்க, விளையாடும் பூஞ்சோலைக்குப் புறப்பட்டு,
அங்கே வாழ்கின்ற பொருள்களைக் கண்டு அவையுமெல்லாம் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம் நோவுபடுகிற பாசுரத்தால் பேசுகிறார்.

‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியைக் காட்டிலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கரை புரண்டிருக்கும். ‘அதற்குக் காரணம் என்னை?’ எனில்,
‘பெருநிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன்’ என்று அவதாரத்திலே அநுபவிக்கக் கோலிப் பெறாதது ஆகையாலே
‘அது ஒரு காலத்திலே நிகழ்ந்தது நாம் பிற்பாடரானோம்’ என்று ஆறலாம்;
இது அவ்வாறு அன்றி, ‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்று உகந்தருளின நிலத்திலே அநுபவிக்க ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த ஆற்றாமையாகையாலே இது கனத்திருக்கும்.
அவதாரத்தில், பிற்பட்டார்க்கும் இழக்க வேண்டாதபடி முகங்கொடுக்கைக்கு நிற்கின்ற இடங்கள் அன்றோ உகந்தருளின நிலங்கள்?
மற்றும், ‘அஞ்சிறைய மடநாராய்’ என்ற திருவாய்மொழியில் தூது விடுகைக்குத் தரிப்பு உண்டாயிற்று:-இத் திருவாய்மொழியில் அங்குத் தூது விட்ட பொருள்களும் நோவு படுகின்றனவாக அவற்றுக்குமாகத் தாம் நோவு படுகிறார்.
மேலும், அனுபவிக்கிற இவ் வாழ்வாருடைய தன்மையாலும் இத் திருவாய்மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்;
-யாங்ஙனம்?’ எனின், திருவாய்மொழியிலுள்ள ஆற்றாமை ‘பத்துடையடியவர்’ என்ற அத் திருவாய்மொழிக்கு முன்பு இறைவனை அநுபவித்துப் பிரிந்த அளவாலுள்ள ஆற்றாமையே;
‘அஞ்சிறைய மடநாரை’க்குப் பின்பு இத் திருவாய்மொழியளவும் அவனுடைய குணங்களை அநுபவித்துப் பிரிந்த பிரிவு ஆகையாலே இத் திரூவாய் மொழியில் ஆற்றாமை கனத்திருக்கும்; இறைவன்  பயிலப் பயில இனியவனாய் இருப்பவன் அன்றோ?

நாரையாகில் வெளுத்திருக்கியும், அன்றிலாகில் வாயலகு நெகிழ்த்தவாறே கதறுகையும்,
கடலாகில் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி கூப்பிடுகையும், காற்றாகில் வேறுபாடின்றி எப்பொழுதும் திரிகையும்,
மேகமாகில் நீராய் இற்று இற்று விழுகையும், சந்திரனாகில் தேய்வது வளர்வதாகையும்,
தமஸ்ஸாகில் -இருளாகில்-பதார்த்த தர்சனம் – பொருள்களைக் காண ஒண்ணாது தடுக்கையும்,
கழியாகில் அலைவாய் முகமாய் ஏறுவதும் வடிவதுமாகையும், விளக்காகில் இற்று இற்று எரிகையும்,
இங்ஙனம் இவற்றிற்கு-நியத ஸ்வபாவம் – இத் தன்மைகள் எப்பொழுதும் உள்ளவை என்று அறியாமல்,
இவை யெல்லாம் தம்மைப் போன்று -பகவத் விஸ்லேஷத்தில் -இறைவனைப் பிரிந்த பிரிவால் நோவு படுகின்றனவாகக் கொண்டு,
அவற்றுக்குமாகத் தாம்-அநு சோகிக்கிறார்-

இத் திருவாய்மொழியில், இளைய பெருமாளைக் காட்டிலும் இவர்க்கு உண்டான வேறுபாடு சொல்லப்படுகிறது. ‘யாங்ஙனம்?’ என்னில், ‘மீனுக்குத் தண்ணீரைத் தாரகமாக அறுதியிட்டார் அவர்;
இவர், அந்த மீனோடு மீனுக்குத் தாரகமான தண்ணீரோடு தம்மோடு வேற்றுமை யற,
பகவானுடைய குணங்களே தாரகம் என்றிருக்கிறார் ஆதலால்
துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு  ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று,
இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து,
‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்.

‘ஆயின், பறவை கடல் முதலான பொருள்கள் இறைவனைப் பிரியின், அப்பிரிவால் அவற்றிற்குத் துன்பம் உளதாமோ?’ எனில்,
அபி வ்ருஷ பரிம்லானா (‘வாரீர் சக்கரவர்த்தியே! உம்முடைய தேசத்தில் கழுத்தளவு தண்ணீரிலிருக்கிற மரங்களும் ஸ்ரீராம பிரானைப் பிரிந்த பிரிவால் உளதாய சோகத்தால் பீடிக்கப் பட்டனவாகி, அரும்பு போது மலர் இவைகளோடு வாடி உலர்ந்தன,’ )என்றும்,
உப தப்தோதகா நதியா பல்வலா நி சராம்சி ச (ஸ்ரீ ராம பிரானைப் பிரிந்த பிரிவின் வெம்மையால், ஆறுகள் கரையருகும் சென்று கிட்ட ஒண்ணாதபடி வெப்பங்கொண்டு கொதித்தன; வனத்திலுள்ள மரங்களும், சோலையிலுள்ள மரம் செடி கொடிகளும் உலர்ந்த இலைகளை யுடையன ஆயின்,’ என்றும்- )–ஸ்ரீ ராமாயணத்தில் பேசப்படுவது போன்று,
சேதன அசேதன விபாகம் அற – எல்லாப் பொருள்களையும் நோவு படுத்தக் கூடியவன், இவள் பிரிந்த இறைவன் என்க.
ஆக, ஸ்ரீ ராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி,-
சீதே ம்ருதஸ்தே ஸ்வசுர–பித்ரா ஹீநோ அஸி லஷ்மண ( முழுமதியினைப் போன்ற திரு முகத்தை யுடைய பிராட்டியருகிற்சென்று
அவளைப் பார்த்துச் ‘சீதாய்! உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ )என்றும்,
கூறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று கூப்பிடுகிறார் இங்கு-

இரண்டாம் பத்தில் -இப்படி பரத்வாதி குணங்களால் பரம சேஷியான சர்வேஸ்வரனுடைய சர்வ ரக்ஷகத்வ ப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து –
அநந்தரம் -இப்பத்தாலே உபேயத்வ உபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச் செய்வதாக 1-அந்த போக்யத அதிசய ஸூசகமான –
அல்ப கால விஸ்லேஷத்திலும் அதி கிலேச அவஹத்வத்தையும் –
2–ஆச்சர்ய ரூபமான -உத்துங்க லலிதத்வத்தையும் –
3–சர்வ சாரஸ்ய சமவாய ரூப திவ்ய போக்யத்தையும் –
4–போக அலாபத்தில் வந்த ஆர்த்தியைப் போக்கி ரஷிப்பான் அவனே -என்னும் இடத்தையும் –
5–ஆர்த்தி தீரும்படி கிட்டினவனுடைய ஹர்ஷ காரிதமான ஸுந்தர்ய அதிசயத்தையும் –
6–ஆஸ்ரித சம்ச்லேஷ ப்ரீதனுடைய தத் விஸ்லேஷ பீருத்வத்தையும் –
7–சமஸ்ரித சம்பந்தி குல சந்தான பயந்த சம்ரக்ஷணத்தையும் –
8–ரக்ஷண காஷ்டையான மோக்ஷ பிரதத்வத்தையும் –
9–மோக்ஷ தாத்பர்யமான பாரதந்தர்யத்தையும் –
10–போக பிரதிசம்பந்திதயா சாந்நித்யத்தையும் –
அருளிச் செய்து போக்யதையை உபபாதித்து அருளுகிறார் –
அதில் முதல் திருவாய் மொழியில் -க்ஷண விளம்பத்திலும் கிலேச அதிசய ஜனகமான ஈஸ்வரனுடைய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–தத் உபபாதகமான அவனுடைய ஸ்ரீ யபதித்வத்தையும் –
2–சேஷ சாயித்வத்தையும் –
3–அநிஷ்ட நிவர்த்த கத்வத்தையும்-
4–நிவர்த்தக பரிகர வத்தையும் –
5–சக்தி யோகத்தையும்
6–சத்யவாதித் வத்தையும்
7–சம்பந்த விசேஷத்வத்த்வத்தையும்
8–காருணிகத்வத்தையும்-
9–கமநீய விக்ரஹ யோகத்தையும் –
10–காரணத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் வித போக்ய பூதனுடைய அல்ப கால விளம்பத்தில் ஆற்றாமையாலே அசேஷ பதார்த்தங்களும் தம்மைப் போலே அவனைப் பிரிந்து
நோவு படுகிறனவாக -அபிசந்தி பண்ணும்படி கலங்கின பிரகாரத்தை -நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்தாள் ஒரு நாயகி சகல பதார்த்தங்களும் தன்னைப் போலே
தத் விரஹ துக்கத்தாலே ஈடுபடுகின்றனவாக நினைத்துப் போலிமைக்கு இரங்கி யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இத்திருவாய்மொழியில், முதற்பாட்டிலே தொடங்கி,
நாரை தொடக்கமாக, அன்றில், கடல், காற்று, மேகம், சந்திரன், இருள், கழி, விளக்கு ஆகிய
இப்பொருள்களைக் குறித்துச் சோகித்து
மிகவும் தளர்ந்த அளவிலே அவன் வந்து முகங்காட்ட,
‘இனி என்னை விடா தொழிய வேண்டும்’ என்று கூறி,
இத்திருவாய் மொழி கற்றார்க்குப் பலத்தைச் சொல்லித் தலைக் கட்டினார்.

—————

2-2-திண்ணன் வீடு -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின்,
‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்து போமித்தனை என்று இருந்தார்.
பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்;
‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே,
இதர – மற்றைப் பொருள்களினுடைய பேறு இழவுகளில் அளவு அல்லாத-விஷய வை லக்ஷண்யம் –
இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது;
அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியாய்,
கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி.

‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே,
ஸமஸ்த கல்யாண குணாத்மகனாகையாலே -எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது;
இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது.
‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின்,
‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின்,
எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும்.
ஆக, இவ்வகையில் ஒன்றைப்பற்றி ஒன்றாக-அத்விதீயமான – இடத்திற்கு ஏற்பத் தோன்றிய -பரத்வத்தை
இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார்.இத்திருவாய்மொழியில்.

இது வரை ப்ராசங்கிக சங்கதி -இனி சாஷாத் சங்கதி –
ஈஸ்வரன் சாத்ம்ய போக ப்ரதனாகையாலே-முதலில் தன்னுடைய ஈச்வரத்வத்தை அனுபவிப்பித்து
மேலே -2-3-ஊனில் வாழ் உயிரிலே தன்னை அனுபவிப்பிக்கிறான்
வைலக்ஷண்யத்துக்கு அடி குணங்கள் என்ற இடத்து -தாந்தைஸ் சர்வ பிரஜா காந்தை ப்ரீதி சஞ்சநைந பிதுர் குணைர்
விருருசே ராமோ தீப்தஸ் ஸூர்ய இவாம்ஸூபி -என்றது சம்வாதமாகக் கண்டு கொள்வது
இத்யாதிகளால் பெருமாள் குணங்களைச் சொல்லிக் கொடு போந்து-
ச ஹி தேவைர் உதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே
விஷ்ணுஸ் சனாதன -இத்யாதியாலே ஈஸ்வரத்வம் சொல்லிற்றே

இனி, ‘கீழ் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்;
அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை – காரணத்வத்தை –
இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பணிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

‘ஆயின், முதல்  திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின்,
‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்;
ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன்,
இனி, பகவத் விஷயத்தில் கூறியது -புநர் யுக்தி தோஷம் -கூறல் என்ற குற்றமும் ஆகாது.
‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்;
ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி
ஷணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன்.
‘ஆயின் ‘ஷணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின்,
பயிலா நிற்கச் செய்தே ‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்;
‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும்.
ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்யம் ஆகிறது?

ப்ரஸம்ஸாயாம் ப்ரதிஞ்ஞாயாம் ப்ரலாபே தர்ஜனே அபி வா பயே ச விஸ்மயே சைவ பவ்ன புந்ய மலங்க்ருதி -என்றபடி
பகவத் பரத்வ ப்ரதிஞ்ஜை யாகையாலே புநர் யுக்தி தோஷம் இல்லை
அனுபாவ்யத்தினுடைய ரஸ்யதையாலே
-அனுபவ ஜெனித ப்ரீதியாலே – பின்னையும் பின்னையும் சொல்லப் பண்ணும் இறே
இவர் ஆராத காதலை யுடையவர் ஆகையால் -2-1-11–கை வாங்கி இருக்குமவர் அல்லர்
ஆக உபதேஷ்ட்ரு ஸ்வபாவத்தாலும் உபதேஸ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபாவ்ய ஸ்வபாவத்தாலும் -அனுபவித்ரு ஸ்வபாவத்தாலும் –
அனுபாவயித்ரு ஸ்வபாவத்தாலும் புநர் யுக்தி தோஷாவாயன்று -என்கிறார்
நித்ய அபூர்வமான விஷயம் -பயில்கின்றாளால் -என்றது கண்டாயே -வர்த்தமான அர்த்தம்

ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு;
1-முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், ஸ்வாநுபவமாய் இருக்கும்;
இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும்.
2-அங்கு அன்வய – விதி முகத்தால் பரத்துவத்தை அருளிச்செய்தார்;
இங்கு அன்வய -விதிமுகம்-வ்யதிரேக – மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம் சொல்லுகிறார்.
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே —
3-அங்கு, சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார்.
கிருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாப்யய -என்றும் –
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்-என்றும் உண்டே
4-அங்கு, பரத்வத்திலே பரத்வம் -முதன்மையில் முதன்மை; இங்கு அவதாரங்களில் பரத்வம் -முதன்மை

இரண்டாம் திருவாய் மொழியில் -கீழ் யுக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்தவாபாதகமாய் –மா வாய் பிளந்து –2–1–10-என்று தொடங்கி –
1-கீழ் ப்ரக்ருதமான ஸுலபயத்துக்கும் ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாசகமான மனுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான அவதார தசையிலும் அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் —
2-அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி ஹேதுத்வத்தையும் -3-சர்வாதிகாத்தவத்தையும் -4-சர்வ பிரகார சமாராத்யதையும்–5-ஆதிக்ய ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும் –
6-ஆஸ்ரித ரேஷன் அர்த்தமான அர்ணவ ஸாயித்வத்தையும் -7-அகடிதகடநா சாமர்த்யத்தையும் -8-சர்வ பிரகார ரக்ஷகத்வத்தையும் -9-ஜெகஜ் ஜென்மாதி ஹேதுத்வத்தையும் –
10-சர்வ தேவதா ஸமாச்ரயணீயத்வத்தையும் –
அருளிச் செய்து -சர்வ ஸ்மாத் பரனாய் -சர்வ ஸூலபனான் ஈஸ்வரனுடைய போக்யத்வ வர்த்தமான உத்துங்க லலிதத்வத்தை உபபாதிக்கிறார் –

முதற்பாட்டில், மேல் பரக்க அருளிச் செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து -ஸங்க்ரஹேன -அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல்,
துக்கத்தைப் போக்குமவன்-நிவர்த்தகன் – ஆதலானும்,
சீலவான் ஆதலானும்,
ஸூகுமாரன் ஆதலானும், புண்டரீகாக்ஷன் -தாமரைக்கண்ணன் ஆதலானும்,
ஆபத்சகன் ஆகையானும்,
அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும், ஸ்ருஷ்ட்டி ஸ்திதிகளை -படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும்,
ஈஸ்வர அபிமானிகளாய் இருக்கிறவர்களுடைய ஸ்துதிகள் முதலியவைகளாலும்,
இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை அருளிச் செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———

2-3-ஊனில் வாழ் உயிர் -பிரவேசம் –

வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான துன்பமெல்லாம் தீரும்படி வந்து-
ஸம்ஸ்லேஷித்த சம்ச்லேஷத்தை – கலந்த கலவியினை அருளிச் செய்கிறார்.
இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’ எனின்,
ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய -ஈஸ்வரத்வம் -அம் முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.

ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் தாம் பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்;
அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்;
எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம் கனத்திருந்தது.
மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே எல்லா ரசங்களும் உண்டாய் ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது;
‘இத்தகைய பேற்றுக்கு உசாத் துணையாவார் யார்?’ என்று பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே,
அவன் தன்னோடு ஒக்கப் பிராப்யருமாய் அவனை நித்தியாநுபவம் பண்ணா நிற்பாருமாய்,
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய ஸூரிகள் திரளிலே சென்று புக்கு –
போதயந்த பரஸ்பரம் -ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு அநுபவிக்கப் பெறுவது எப்பொழுதோ?’ என்னும்
அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக் கட்டுகிறார்.

வாயும் திரையுக்களில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் சேர்ந்தார்
சம்ச்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நைசர்க்கிகமான நித்ய ஸூ ரிகளை உசாத் துணையாகத் தேடுகிறார் –

‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று,
பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய ஸூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் அசேதநங்களையும் சேர்த்தார்;
ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளையும் அசேதனங்களையும் -காற்றையும் கழியையும் கட்டி அழுதார்
இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு-அறிவு நைசர்க்கிகமான- இயற்கை அறிவையுடைய நித்திய ஸூரிகளைத் தேடுகிறார்.
இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி,
பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கலவியைப் போன்று இருந்தது.–ஜாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி.-‘அப் பெரியவன் இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’ என்று கிடக்கு மாயிற்று. -அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.

இப்படி உத்துங்க லலிதனான இவனுடைய ஸர்வவித சாரஸ்ய அதிசய ப்ரயுக்தமான திவ்ய போக்யதையை அருளிச் செய்வதாக –
1–அவனுடைய சர்வ ரசாத்மத்வத்தையும் -2-சர்வ ரஸ்ய யுக்தனான அவன் விஷயத்தில் தம்முடைய உபகார ஸ்ம்ருதியையும் —
3–ஸ்வ விஷயத்தில் தம்மை அவன் அபி நிவேசிப்பித்த படியையும் -4-அவ்வுபாஜகாரத்துக்கு பிரதியுபகாரம் இல்லாத படியையும் —
5–தன்னுடைய அப்ராக்ருத போக்யத்தையும் -பிரகாசிப்பித்துச் சேர்த்துக் கொண்ட படியையும் 6-இந்த சம்ச்லேஷம் ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அநாதி ஸித்தமான படியையும் –
7–போக்யதா அதிசயத்தாலே வ்யதிரேகத்தில் தரிக்க அருமையையும் -8-அவ்வனுபவம் தமக்குக் கைப் புகுந்தமையையும் –
9–சர்வ பிரகார அனுபவத்தால் பிறந்த ஆனந்த விசேஷத்தையும் –
இப்படி அனுபவித்து ஆனந்திகளான ஸூரி களோடு தாம் கூடி அனுபவிக்கையில் யுண்டான ஆசையையும் –
அருளிச் செய்து கீழ்ச் சொன்ன சர்வ பிரகார சாரஸ்யம் ஸூரி போக்யம் என்னும் இடத்தையும் உபபாதித்து அருளுகிறார் –

———

2-4-ஆடியாடி -பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் –
அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே
நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய்
தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

தாயாராகிறவள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று ஸ்வாபதேசம்
ஆச்சார்ய ஹ்ருதயத்தில்
மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யாவசாயமும் -என்று திருத்தாயார்
பாசுரமாகச் சொன்ன இடங்கள் எல்லாம் உபாய அத்யவசாய தசையிலே நின்று
சொன்னவைகள் என்றே நாயனாரும் நிர்வஹித்தது
இவரும் கடல் ஞாலத்திலே இப்படி அருளிச் செய்தாராகையாலும் அதுவும் ஒரு நிர்வாஹம் கிடக்கச் செய்தே
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிற படி என்று இங்கனே இப்படி
அருளிச் செய்கையாலே இந்த ஸ்வாபதேசமும் யோஜனாந்தர அபிப்ராயம் – )

முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –
ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-
ஸ்திதி கமன சயநாதிகளிலே ஒரு நியதி இன்றியிலே அரதியாய் –
விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்

ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி –
(அரக்கன் இலங்கை செற்றீருக்கே -3-பாசுரம்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -2-பாசுரம்
ஆதி ஸப்தத்தால் -நரஸிம்ஹ ஷீராப்தி நாதாதி அவதாரங்கள் )
ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர்
(கிளர் வாழ்வை வேவ-10-பாசுரம் )
உம்மை ஆசைப்பட்ட இவள் நோவு படப் பார்த்து இருப்பதே -என்று
எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று
கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்

(எல்லா அளவிலும் என்றது
ஆடியாடி -வாடி வாடும் -1-
உம்மைக்காணும் ஆசையில் நைகின்றாள் –2-
எரி யணை யரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -3 –
உள்ளம் மலங்க வெவ்வுர்க்கும் கலங்கிக் கை தொழும் -4-
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் –5–
இவள் மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே -10-
போன்ற தஸா விசேஷங்களுக்கு பரிஹாரம் நுமது இட்டம் என் கொல் -9-என்பதைப்பற்ற )

(நீர் செய்ய நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிற
இரக்கம் எழீர் –3-
உம்மைக்காணும் ஆசை –2-
தண்ணம் துழாய் கொடீர் –5-
உம்மைக்காண -2- என்பதை பற்ற )

காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே
வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு
கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க
ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே-அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –
அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்

நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே

நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-
பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் –
எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது –
அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது

பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே –
மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் –
அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –

(உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும்
தண்ணம் துழாய் கொடீர்
சுவர் வட்டவாய் நுதி நேமியீர்
அந்தாமத்து அன்பு செய்து
இவர் பாகவத விஸ்லேஷத்தில் உட்ப்புக நின்றவர் ஆகையாலே
அது இவருக்குப் பகவத் விஸ்லேஷ பர்யந்தமாய் அவன் தன்னையே அடிபிடித்துக் கூப்பிடுகிறார் என்றபடி )

கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன –
ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும் கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே –
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-

குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே

இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-
பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே
வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –

நாலாம் திருவாய் மொழியில் -இப்படி தாம் ஆசைப்பட்ட படியை அனுபவிக்கப் பெறாமையால் அவசன்னராய் –
தமக்குப் பிறந்த ஆர்த்தி அதிசயத்தை சமிப்பிக்கைக்கு -சர்வ ரக்ஷகனாய் போக்ய பூதனான அவனை ஒழிய இல்லை -என்று அறுதியிட்டு —
1-அவன் ஆஸ்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு உதவினைப்படியையும்—2-அநிருத்னனுக்கு உதவினபடியையும்–
-3-அபிமதையான பிராட்டிக்கு உதவினபடியையும்–4 – -நாட்டுக்கு உதவின படியையும் –5 –ஸூத்த பாவத்தையும் –6-நிரதிசய போக்யதையும்-
7- ரக்ஷண அர்த்தமான ஆசத்தியையும் –8-ஆஸன்ன ஜனங்களுக்கு அனுபவ விரோதிகளை போக்கினை படியையும்-
9- ரக்ஷண உபகரணவத்தையும் —-10-விரோதி மிகுந்தால் வெந்து விழப் பண்ணும் வீரப் பாட்டையும் –
அனுசந்தித்து -தம்முடைய ஆர்த்தியைப் பரிவர் முகத்தால் அவனுக்கு அறிவித்த படியை –
பிரிந்த தலைமகள் ஆற்றாமைக்கு நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், ‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து உதவுகின்றிலன்,’ என்றாள்;
இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக, ‘வாணனுடைய பாஹு தோள் வனத்திலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்;
மூன்றாம் பாட்டில், ‘இப்படிச் செய்ய நினைத்த நீர், முன்பு அச் செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்;
நான்காம் பாட்டில், ‘அது பொறுக்க மாட்டாமல் அது தன்னையே உபகாரமாகச் சொல்லா நின்றாள்,’ என்றாள்;
ஐந்தாம் பாட்டில், ‘அவ்வளவிலும் வாராமையாலே, -நிர்த்தயன் -அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்;
ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல், ‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்;
ஏழாம் பாட்டில், ‘அவன் குணம் ஹானியை -இன்மை தன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்;
எட்டாம் பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின-அபாஸ்ரயமாகப் பற்றின – இவள் படும் பாடே இது?’ என்றாள்;
ஒன்பதாம் பாட்டில், ‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்;
பத்தாம் பாட்டில்,சேஷித்தது -‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
நிகமத்தில் , இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

———

2-5-அந்தாமத்து அன்பு -பிரவேசம் –

கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ‘கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது;
முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் போன்றது ஒன்றாம்,
கீழ் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸனம் -துக்கம்;
அது எல்லாம் ஆறும்படியாக,
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் ‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’
என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே,
பெரிய த்வரையோடே – மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் -அக்ரமமாக -முறைபிறழத் தரித்துக் கொண்டு,
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு,
யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி,
க்ராஹம் சக்ரேனை மாதவ ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே,
பிரஜையின் – குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று,
பெரிய பிராட்டியாரும் தானுமாக, இரண்டுக்கும் நலிவு வாராமல் திரு ஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின
திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து
அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே,

இவ்வாழ்வாரும் ’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட-ஆர்த்த நாதம் – துக்க ஒலியானது செவிப்பட,
‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று,
பிற்பட்டதனால் உண்டாகும் -லஜ்ஜா பயங்களினால் -நாணத்தாலும் பயத்தாலும்-விஹ்வலனாய் கலங்கினவனாய்,
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும்
வந்து ஸம்ஸ்லேஷித்து – கலந்து- அத்தாலே ஹ்ருஷ்டானாய் -மகிழ்ந்தவனாய்,
தான் -க்ருதக்ருத்யனாய் -செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய்
இருக்கிற இருப்பை அனுபவித்து, -அவ்வனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகரஷத்தாலே –
அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –

முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———-

2-6-வைகுந்தா-பிரவேசம் –

ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் ஆர்த்தி -உண்டான துன்பம் தீர வந்து-ஸம்ஸ்லேஷித்த- கலந்த-படியை
‘அந்தாமத்து அன்பு’ என்ற திருவாய்மொழியில் அருளிச் செய்தார்;
அச் சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியில்.
‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’ என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர்.
அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி.
இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில், ‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத்
தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை அருளிச்செய்தார்;
இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம் இவர் ஒருவர் அளவில் நில்லாது,
சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்று இயைபு கூறலுமாம்.
இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும் அன்றே?
‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது இவருடைய திருவாக்கு.

(உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே’என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய, ‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.)

உபய விபுதிகளை யுடையவனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் -மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாக உடையவனாய்,-சர்வ பிரகார பரிபூர்ணனான – எல்லா வகையாலும் நிறைந்தவனான தான்,
தன் படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே ஸம்ஸ்லேஷித்து கலந்து,-அச் சம்ச்லேஷம் தான் – அக் கலவிதான் –
தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
அநாதி காலம் -பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த வஸ்துவை பொருளை ஒருபடியாக பிராபிக்கப் பெற்றோமே அடைந்தோமே!’
இவர்தாம் இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று அதி சங்கை பண்ணி -ஐயங்கொண்டு,
அவன் அலமாக்கிற படியைக் கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் -அதி சங்கையைப் பரிஹரித்து -ஐயத்தை நீக்கி,
அவனை உளன் ஆக்குகிறார்.
வைதேஹி ரமஸ கச்சித் சித்ரகூடே மயா ஸஹ ‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடு கூட
இன்பத்தினை அனுபவிக்கிறாயா?’ என்றால் போலே ஆயிற்று இதில் ரசமும் -சுவையும்;
‘மைதிலி, உன்னை அறிந்தாயே- நம்மை அறிந்தாயே,- கலக்கிற தேசம் அறிந்தாயே! என்றார் இறே பெருமாள் –

——————

ஆறாம் திருவாய் மொழியில் -தம்மோடு ஸம்ஸலேஷித்த ப்ரீதி அதிசயத்தாலே -அத்யந்தம் ஹ்ருஷ்டனான சர்வேஸ்வரன் –
இவர் நிகர்ஷ அனுசந்தானத்தாலே அகலாத தேடி இத்தைக் குலைக்கில் செய்வது என் -என்கிற அதிசங்கை பண்ணி –
தன் விஸ்லேஷ பீருத்வத்தை இவருடைய திருள்ளத்திலே பிரகாசிப்பிக்க -நம்முடைய அளவில் இவன் அபி நிவேசம் இருந்தபடி என் என்று
அத்யந்த ஹ்ருஷ்டராய் -இவனுடைய அதி சங்கா நிவ்ருத்தி அர்த்தமாக —
–1-தாம் அவனைச் சிக்கெனைப் பற்றினமையையும் –2-அவன் தான் அநந்ய பரனாய்த் தம்மோடு கலந்த படியையும் –
-3-ஸ்வ அனுபவத்தைக் கொடுத்த உதார குண அதிசயத்தையும் -4-அந்த உதார குணம் அடியாகத் தாம் விட மாட்டாமையையும் —
-5-லப்த போகரான தமக்கு விட யக்யத்தை இல்லை என்னும் இடத்தையும் -6-இவ்வநுப சித்தியால் தமக்கு வந்த பூர்த்தியையும் –
-7-அந்த லாபம் தன்னளவில் நில்லாமல் சம்பந்தி சம்பந்தி பர்யந்தமான படியையும் –8-இதுக்கு விஸ்லேஷம் பிறவாமையில் தமக்கு உண்டான அபேக்ஷையையும் —
-9-கிருஷி பண்ணினவன் தான் இத்தைக் குலையான் -என்னும் இடத்தையும் -10-அவன் குலைக்கில் தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து அவனுடைய விஸ்லேஷ அதி சங்கையை நிஸ் சேஷமாக நிவர்ப்பித்து அருளுகிறார்-

முதல் பாட்டில் எம்பெருமான் இவர் நம்மை விடில் செய்வது என் -என்கிற அதி சங்கையைப் போக்கினார்
இரண்டாம் பாட்டில் –அது போன பின்பு அவனுக்குப் பிறந்த புது கணிப்பை சொன்னார்
மூன்றாம் பாட்டில் தமக்கு அவன் பண்ணின ஔதார்யத்தை அனுசந்தித்து வித்தரானார்
நாலாம் பாட்டில் அவன் உமக்குப் பண்ணின ஔதார்யம் ஏது என்ன இதர விஷய வைராக்கியம் என்றார்
அஞ்சாம் பாட்டில் இதர விஷய வைராக்ய பூர்வகமாக ஆத்மானந்த தாச்யத்திலே அதிகரித்த நான் இனி ஒரு நாளும் விடேன் -என்றார்
ஆறாம் பாட்டில் ஆஸ்ரிதற்கு உதவுவாயான பின்பு எனக்கு ஒரு குறையுண்டோ என்றார் –
ஏழாம் பாட்டில் என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு குறையில்லை என்றார்
எட்டாம் பாட்டில் இதுக்குத் தாம் அனுஷ்டித்த உபாயம் இன்னது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் இவர் அகவாய் அறிய வேணும் என்று ஓர் அடி பேர நிற்க இனிப் போக ஒண்ணாது என்கிறார்
பத்தாம் பாட்டில் –நாம் போகாது ஒழிகிறோம் நீர் தாம் போகாது ஒழிய வேணுமே என்ன-கால த்ரயத்தாலும் சர்வவித பந்துவுமான
உன்னை விட சம்பாவனை இல்லை என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————-

2-7-கேசவன் தமர் -பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே-மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே-ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன் முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-

குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்-வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————–

2-8-அணைவது அரவணை மேல் -பிரவேசம் –

சர்வேஸ்வரன் தம் பக்கல் பண்ணின வ்யாமோஹம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே -தம்மோடு சம்பந்தம்
உடையார் அளவிலும் வெள்ளம் இட்ட படியை சொன்னார் கீழ் –
இத் திருவாய் மொழியில் -தம்மோட்டை சம்பந்தமே ஹேதுவான அவன் இப்படி விஷயீ கரிப்பானான பின்பு –சம்சாரிகளுக்கும் நம்மோட்டை
ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் -என்று அவர்களுக்கு மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –
இத் திருவாய் மொழி தன்னை –ஈஸ்வரத்வம் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு –
இருவரவர் முதலும் தானே -2-8-1- என்றும் தீர்த்தன் உலகளந்த -2-8-6-என்பததைக் கொண்டு –
மோஷ ப்ரதத்வம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –பிறவிக்கடல் நீந்துவார்க்கு புணைவன் -2-8-1- என்பதைக் கொண்டு –
இவை தான் ஒன்றை ஓன்று விட்டிராது –ஈஸ்வரன் யாயிற்று மோஷ பிரதானவன் -மோஷ பிரதானாம் போது ஈஸ்வரனாக வேணும் –

சங்க்ரஹ சங்கதி அருளிச் செய்து அத்தை விஸ்தரிக்கிறார் மேல் –
இது தன்னில் செய்ததாகிறது என்-என்னில் –
ஆழ்வாருக்கு முதல் தன்னில்-1- அத்வேஷத்தைப் பிறப்பித்து –2–ஆபிமுக்யத்தைப் பிறப்பித்து–3- ருசியை உண்டாக்கி
யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை நல்வீடு செய்யும் -திரு விருத்தம் -95—மயர்வற மதி நலம் அருளினான் -1-1-1—
யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன் -1-7-7- அடிமைக் கண் அன்பு செய்வித்து –2-3-3-
இசைவித்து -என்னை -5-8-9–நின்னலால் இல்லை காண் -2-3-7-
4-இவர் விடிலும் தாம் விடாதே விரும்பி–5- இது தான் இவர் தம்மளவில் இன்றிக்கே தம்மோடு சம்பந்தம் உடையார் அளவும்-இப்படியே பெருகிக் கரை புரளுகிறபடியை அனுசந்தித்து –
சர்வேஸ்வரன் ஸ்வபாவம் இதுவான பின்பு –நாம் பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி பண்ணுவோம் என்று சம்சாரிகளை அடையப் பார்த்து
-அவர்களுக்கு மோஷ ப்ரதன்-என்னும் இடத்தை அருளிச் செய்கிறார்-
பரத்வம் முதல் பத்தில் அருளி -இரண்டாம் -பத்தில் காரணத்வம் -த்யாநித்தால் மோஷம் கிட்டும் –முக்த பிராப்த போகம் -அருளிச் செய்கிறார் –

இதில்
உபகார பரம்பரைகள் –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மாற்றி –அத்வேஷம்
இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஆபி முக்கியம் -மயர்வற மதி நலம் அருளினன்
தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய்
அடிமைக் கண் அன்பு செய்வித்து -ருசியை விளைத்து –
நின் அலால் இலேன் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து -கேசவன் தமர் –சம்பந்தி அளவும் -வளர்ந்ததே
ஷீணே புண்யே மர்த்ய லோகம் – -ந புன ஆவர்த்தந்தே -இருள் அகற்றும் -வைகுந்த லோகம் ஏற்றி வைத்து ஏணி வாங்கி –புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே –
மாம் உபேத்ய -புனர் ஜன்ம -துக்க ஆலயம் -அசாஸ்வதம் சம்சாரம் -கர்மத்தால் திரும்ப திரும்ப பிறப்பானே –
அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் -சாஸ்திரம் -எழுதா மறை ஏழு முறை சொல்லி –

இவர் தாம் பெற்றதாய் -பிறருக்கு உபதேசிக்கிற பேறு தான் -பிராட்டி- திருவடி திரு வநந்த ஆழ்வானை- பரிகரமாக யுடைத்தாய் -பெருமானை-
விஷயமாகக் கொண்ட –முக்த பிராப்ய போகம் -அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது  -யானை இடர் கடிந்த -பெரிய திருவடி அங்கே –
எத்தனை யேனும் அளவுடையார்க்கும் ஸ்வ யத்னத்தாலே ப்ராபிக்க அரிதாய் அவனாலே பெறப் பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறலாய்-
புணைவன் -தெப்பம் -அவனை உபாயமாகக் கொண்டு அடையப் பார்ப்பார்க்கு –நாயாமாத்மா -தேர்ந்து எடுத்து அருளுவான் –
நலம் அந்தமில்லதோர் நாடு புகப் பெறுவீர் -துயரில்லா வீடு-
சம்சாரத்தில் போகங்கள் போலே அஸ்திரமாய் இருக்கை யன்றிக்கே – நித்தியமாய் –அவிசதமாய் இருக்கை யன்றிக்கே அத்யந்தம் ஸ்புடமாய்-
துக்க மிஸ்ரமாய் இருக்கை யன்றிக்கே ஸூககைதாநமாய்-மங்களமாய் -உத்தமமாய்- அபரிச்சின்னமாய் –
இப்படி இருக்கிற முக்த பிராப்ய போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் அவன் கொடுப்பானாக பாரிக்கிற படியைக் கண்டு
சம்சாரிகளையும் ஈத்ருச போகிகளாம் படி பண்ண வேணும் என்று பார்த்து அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச் செய்ய
அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையில் நின்றும் குலையாதே மால்யமான் தொடக்கமானார் ராவணனுக்கு சொன்ன ஹிதம் போலே
அவர்கள் இத்தை அநாதரித்து இருக்க
மால்யமான் -மாதா மகன் -காலச்ய வசப்பட்டு ஏற்க வில்லை -மாரீசன் –பலியோ நமுசியோ ராமர் முடிப்பார் -வீரன் சூரன் -மஹா தேஜஸ்வி –
விபீஷணன் -துஸ் ஸ்வப்னம் -கருடன் பாம்பை பிடித்தால் போலே -சீதையை ஒப்படைக்கா விடில் கோரம் –குருஷ்வ மம வசனம் -குல பாம்சினி
நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடு துவக்குண்கிற இதுக்கு பிரயோஜனம் என் என்று-
வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள் கொண்டு தப்பினார் ஹ்ருஷ்டராமா போலே –நாம் முந்துற முன்னம் இவர்களைப் போலே ஆகாது
ஒழியப் பெற்றோம் இறே-என்று ஸ்வ லாபத்தை அனுசந்தித்து இனியராகிறார் –

மேவும் தன்மையமாக்கினான் -2–7–4-என்று ஸ்வ சம்பந்தி ஜனங்களுக்கும் பிராப்தி பர்யந்த பல ரூப மோக்ஷ பிரதனாய்க கொண்டு ஈஸ்வரன் நிற்கிற நிலையையும் –
அதுக்கு அடியான பரத்வத்தையும் அனுசந்தித்து -இத்தை சம்சாரிகள் இழக்க ஒண்ணாது -என்று உபதேசிப்பாராய்க கோலி –
1–அவனுடைய சர்வ நிர்வாஹகத்வத்தையும் –2-சம்சார நிவ்ருத்தி பூர்வகமான மோக்ஷ பிரதத்வத்தையும் —
3—அதுக்கு உறுப்பான சேஷடித்த வை லக்ஷண்யத்தையும் –4-இந்த வியாபார பிரகாசித்தமான ஸுலப்யாதி குணங்கள் நித்ய அனுபாவ்யம் என்னும் இடத்தையும் –
5–அந்த குண ப்ரகாசகமான அவதார பாஹுள்யத்தையும் –6-அவதார திசையிலும் பரத்வம் அதி பிரசித்தம் என்னும் இடத்தையும் –
7–அவ தீர்ணனானவன் ரக்ஷண வ்யாமோஹத்தால் பண்ணும் வியாபாரம் அநேகம் என்னும் இடத்தையும் –
8-அவதீர்ணனனுடைய பரத்வ உபயுக்தமான அதிசயித ஆகாரங்கள் அறிய வல்லார் இல்லை என்னும் இடத்தையும்
9– அவனுடைய ஆஸ்ரித ஸுலப்யம் அபரிச்சின்னம் என்னும் இடத்தையும் -10-ஏவம் விதனைத் தாம் அனுபவிக்கப் பெற்றமையும் –
அருளிச் செய்து -உபதேச அந் நிவ்ருத்தராய் -ஸ்வ லாபத்தோடே தலைக் கட்டுகிறார் –

இதில் சொல்லுகிற பரத்வம் -முதல் திருவாய் மொழி போலே ஸ்வரூப கதமாய் அன்றியே –
திண்ணன் வீட்டிலே-2–2- போலே -மனுஷ்யத்தவே பரத்வமும் அன்றியே
மோக்ஷ பிரதத்வ உபயுக்தமாய் இருக்கிறது –

முதல் பாட்டில் இத் திருவாய் மொழியில் பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தை சங்க்ரஹேண அருளிச் செய்யா நின்று கொண்டு
சம்சாரம் ஆகிற இக்கடலைக் கடக்க வேணும் என்று இருப்பவர்களுக்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்
இரண்டாம் பாட்டில் -அவன் வேணுமோ அவனோட்டை சம்பந்தமே கடத்தும் என்றார்
மூன்றாம் பாட்டில் அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதங்கள் பிரத்யஷிக்கலாம் என்றார்
நாலாம் பாட்டில் –அந்தமில் பேரின்பத்தைப் பெற வேணும் என்று இருப்பார் அவனை ஆஸ்ரயிங்கோள் என்றார்
அஞ்சாம் பாட்டில் -கீழ் இணைவனாம் எப்பொருட்கும் என்றத்தை விவரித்தார்
ஆறாம் பாட்டில் இவ் உத்கர்ஷம் எல்லாம் அவனுக்கு உண்டோ என்ன நாம் ஆராய வேண்டாதபடி அர்ஜுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான் என்றார்
ஏழாம் பாட்டில் -ஒருவன் அநுவர்த்தனம் கொண்டு அறிய வேணுமோ –அவனுக்கு இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாய் அன்றோ ஜகத்து இருக்கிறது என்றார்
எட்டாம் பாட்டில் வ்யாப்தி தொடக்கமான அவனுடைய அபதானங்கள் ஒருவரால் பரிச்சேதிக்க முடியாது என்றார்-
ஒன்பதாம் பாட்டில் –அவனுடைய வ்யாப்தியை இசையாதார் ஹிரண்யன் பட்டது படுவர் -என்றார்
பத்தாம் பாட்டில் –ஏவம் பூதனானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

———

2-9-எம்மா வீடு பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் –நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர் -என்று இவர் தாமும் அருளிச் செய்து
சர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரத்துக்கும் மோஷம் கொடுப்பானாகப் பாரிக்க -அத்தைக் கண்டு –
தேவரீர் எனக்கு மோஷம் தந்து அருளப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –
அதாகிறது -உனக்கு மோஷம் கொள் -என்று எனக்காகத் தருகை அன்றிக்கே –நமக்காகக் கொள் -என்று தேவர்க்கே
யாம் படியாகத் தர வேணும் –என்று -தாம் நினைத்து இருந்தபடியை அவன் திரு முன்பே பிரார்த்திக்கிறார் –

கைங்கர்யம் பண்ணியே பொழுது போக்க வேண்டும் –கைங்கர்யம் தூண்டவே அருளிச் செயல்களும் அவற்றுக்கு வியாக்யானங்களும் –
இந்த புருஷார்த்த நிர்ணயம் இதில் -அத்தை பிரார்த்தித்தது ஒழிவில் காலம் எல்லாம் -3-3–வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்றாரே –மேல் –
ஸ்ரீ ராம சிகாமணி -நம்பிள்ளைக்கு- தொட்ட இடம் எல்லாம் ஸ்ரீ ராம திருஷ்டாந்தம் கொண்டு விளக்குவாறே –
தொழுது எழு-என்று தாம் நினைத்து இருந்து –தொழுது எழுகையே-அவன் திரு முன்பே அருளிச் செய்கிறார் –
ஸ்வதந்த்ரம் பாரதந்த்ரம் / ச்வார்த்ததா -பரார்த்ததா /அசித்வத் பரதந்த்ரம் -பிறருக்காகவே இருக்கும் -புஷ்பம் சந்தனம்-போலே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -நின் செம்மா பாதம் -தலை மேல் ஒல்லை -என்றே முன் நிலையாக அருளிச் செய்கிறார் –

ஆனால் இது தான் பின்னை இத்தனை நாள் நிஷ்கர்ஷியாது ஒழிவான் என்-என்னில் -அவன் மேன்மேல் என குண அனுபவத்தை
பண்ணுவிக்கையாலே-அதுக்குக் காலம் போந்தது அத்தனை அல்லது இது நிஷ்கர்ஷிக்க அவகாசம் பெற்றிலர் –
ஆனாலும் இப்போது குண அனுபவமே அன்றோ பண்ணுகிறது என்னில் -அது அப்படியே
அவன் தம் பக்கலிலே மேன்மேல் எனப் பண்ணுகிற விருப்பத்தைக் கண்டு -இவனுக்கு இந்த வ்யாமோஹம் முடிய அநுவர்த்திப்பது ஒன்றாய் இருந்தது
நாம் இவனை மீட்டாகிலும் நம்முடைய பிராப்யத்தை நிஷ்கர்ஷிப்போம் என்று பார்த்து
நீ இங்கனே நில் -என்று அவனை நிறுத்தி வைத்து ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார் –இரண்டாவது சங்கதி –

எம்பார் -இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கால் இருந்தவர்களை யார் என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து
குஹ்யமாகவும் அருளிச் செய்வது –

ப்ராப்யமாகில் இப்படி அன்றோ இருப்பது இவர் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் -என்னில்
சர்வேஸ்வரன் இவ்வாத்மாவுக்கு சேஷியாய்-இவனும் சேஷ பூதனுமாய் -அவனுடைய உபாய பாவமும் நித்தியமாய் இருக்கச் செய்தே
யன்றோ இவனுக்கு இன்று ச்வீகாரம் வேண்டுகிறது –சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக –
அப்படியே அவன் ஸ்வ தந்த்ரன் ஆகையாலே நினைத்த போது நினைத்த படி கொள்வான் ஒருவன் ஆகையால் பிராப்தி சமயத்தில்
அனுபவம் இருக்கும் படியையும் நிஷ்கர்ஷித்துப் பெற வேணும் இறே-
உத்தரார்த்தத்திலும் இவ்வர்த்தத்தை சொல்லா நின்றது இறே
-த்வயம் தன்னில் நிஷ்கர்ஷிக்க வேண்டுகிறது என் என்னில் பூர்வார்த்தத்தில் சொன்ன சாதனம் சர்வ பல ப்ரதமாகையாலே
-பிரயோஜனாந்த பரராய் சரணம் புகுவாருக்கும் அவற்றைக் கொடுத்து விடுவான் ஒருவன் இறே சர்வேஸ்வரன்
இது தன்னில் ஓடுகிறது என் என்னில்-1- -முக்தனாய் நிரதிசய ஸூக அனுபவத்தை பண்ணவுமாம் -2–ஆத்மா பிராப்தியைப் பெறவுமாம் –
3–ஆத்மா வி நாசமே யாகவுமாம் -4– நரக அனுபவத்தை பண்ணவுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை-(இவை எல்லாம் அதிசய யுக்தி -பிராப்யத்தில் நோக்கு )
உனக்காய் வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம் -எனக்காய் வருமன்று இவை இத்தனையும் வேண்டா–
ஆன பின்பு —தேவருக்கு உறுப்பாம் இதுவே எனக்கு வடிவாம் படி பண்ணி அருள வேணும்–என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார் –

சேஷத்வ பலம் -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி/-பாரதந்த்ர பலம் -ஸூ பிரயத்ன நிவ்ருத்தி –

இப்படிப் பட்ட பரிமாற்றம் தான் லோகத்தில் பரிமாறுகிறது ஓன்று அல்ல -17 லஷம் ஆண்டு களுக்கு முன்பே —
இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல் -இராமாயண புருஷர்களில் ஸ்ரீ பரத ஆழ்வான்-இளைய பெருமாள்
இவர்கள் பக்கலிலே காணுதல் செய்யும் அத்தனை –
பகவத் ஏக பாரதந்த்ர தயா -சேஷி க்கு அத்யந்த பிரிய -கைங்கர்ய கரணம் மாத்ரம் -ஸ்வார்த்த கர்த்ருத்வ-போக்த்ருத்வ -ரஹித -பாரதந்த்ர்யா அனுகுண குணம் -இப்படிப் பட்ட பரிமாற்றம்-
கைகேயி ராஜன் -என்ற சொல் பொறுக்க மாட்டாமே திரளிலே வந்து கூப்பிட்டான் இறே
தஸ் ஸ்ருத்வா—விலலாப சபா மத்யே -ஒரு திரளாக இருந்து என்னுடைய சேஷத்வத்தை அபஹரிப்பதே -திருட்டுக் கூட்டமாக இருந்து –
தஸ்யபிர் முஷி தே நேவா யுகத மாக் ரந்திதம் ப்ருசம் -என்னும்படி இழந்த வஸ்துவுக்கு தக்கபடியாய் இருக்கும் இறே கூப்பீடும்-
பெருமாளையும் பாரதந்த்ர்யத்தையும் அன்றோ இழந்தான் –
ஜ கர்ஹே ச -சந்த்யாவந்தனத்துக்கு பிற்பாடரை சிஷ்ட கர்ஹை பண்ணுவாரைப் போலே கர்ஹித்தான்
புரோஹிதம் -அழகியதாக இக்குடிக்கு முன்னாடி ஹிதம் பார்த்தாய் –-புரஹா ஹிதம் பஸ்யதி புரோஹிதம் –
சபா மத்யே புரோஹிதம் ஜ கர் ஹே -நியமாதி க்ரமம் ரஹசி போதயேத்-என்கிற நிலையும் பார்த்திலன் –
ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஒருவனுக்கு இரண்டு வஸ்து சேஷமானால் ஒன்றை ஓன்று நிர்வஹிக்குமோ –
ஆனால் ராஜ்ஜியம் தான் என்னை ஆண்டாலோ-தர்மம் வக்தும் இஹ அர்ஹசி–பெருமாள் காடேறப் போனார் -சக்கரவர்த்தி துஞ்சினான்
-நாடு அராஜமாகக் கிடக்க ஒண்ணாது -நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்க வேணும் என்று பார்த்தாய் அத்தனை போக்கி
இதுக்கு விஷய பூதனான என்னைப் பார்த்து வார்த்தை சொல்லிற்று இல்லை
கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக –அவர் பொகட்டுப் போன ராஜ்யத்தை அபஹரித்து அவரைப் பிரித்து
அனந்தரத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம் படி எங்கனே நான் –

பெருமாள் உள்ளப்படி தான் இருப்பதாக -ஆளுவதோ மீளுவதோ எதுவாக இருந்தாலும் -இதுவே ஸ்ரீ பரத ஆழ்வான் நிலை
அசித்வத் பாரதந்த்ரம் படி ராஜ்யமும் என்னை ஆளலாமே –
ஸ்வரூபம் பார்க்க வேண்டாமோ -ராஜ்யம் அபஹரிப்பவன் சக்கரவர்த்தி பிள்ளை யாவாரோ –

இளைய பெருமாள் நில் என்ன குருஷ்வ என்றார் இறே –
அன்வயத்தாலே தரிக்கக் கடவ வஸ்துவை வ்யதிரேகத்து நிற்கச் சொல்லுகையாவது அழிக்கை இறே
குரு என்னாதே குருஷ்வ என்றார் இறே —ஆத்மைநிவ பதம் –
ஆருடைய பிரயோஜனத்துக்கு ஆர் தான் இருக்கிறார்
உம்முடைய இழவுக்கு நீர் பதறாது இருக்கிறது என்
அநு சரம் பண்ணும் பிரகாரத்தை விதிக்கிறார்
நீர் தாம் நில் என்று அருளிச் செய்தது -நான் நிற்கச் சொல்லுகைக்கு யோக்யனாம் படி இருக்கை இறே
உம்முடைய சாயையை நில் -என்று சொல்லிற்று இலீரே -தனி சைதன்யம் -ஜீவன் -என்று நினைத்தது உம் குற்றம் –
சாயையோபாதி உம்மைப் பின் செல்வேனாக வேணும் –
நீரும் நிழலும் வாய்ந்து இருப்பதொரு பிரதேசத்தைப் பார்த்து பர்ண சாலையை அமையும் -என்ன நம் தலையில்
ஸ்வா தந்த்ர்யத்தை வைத்த போதே பெருமாள் நம்மைக் கை விட்டார் -என்று வேறு பட்டார்
ஏவ முக்தஸ்து ராமேண-இதுக்கு முன்பு எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம் -இவர் தாமே நம் ஸ்வரூபம்
அழியக் கார்யம் பார்த்தார் -இனி நம் ஸ்வரூபம் என்று ஓன்று உண்டோ என்று வேறுபட்டார் –
முன் நம் குறையாலே இழந்தோம் -இப்பொழுது இவராலே இழக்கிறோமே -ஸ்வரூபம் அழிக்கப் பார்க்கிறார் –
லஷ்மண -பாரதந்த்ர்யத்தை நிரூபகமாக உடையவர் -லஷ்மி சம்பன்ன –அடையாளம் கொண்டவர் -பாரதந்த்ர்யமே நிரூபகம்
சமய தாஞ்ஜலி-நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொண்ட வன்று நோக்குகை யன்றிக்கே சேஷி தானே அழித்த வன்றும்
ஸ்வரூபத்தை தர வாயிற்று அஞ்சலி -சர்வ அபிமத சாதனம் ஆயிற்று
லீதா சமஷாம்-பண்ணின அஞ்சலிக்கு அந்ய பரதை பாவிக்க ஒண்ணாதவன் சந்நிதியிலே
காகுத்சம் -பிராட்டி சந்நிதியும் மிகையாம் படியான குடிப்பிறப்பை உடையவரை –
ககுஸ்த வம்சே விமுகே -கை கூப்பி வந்தால் ஏமாந்து போகமாட்டானே –
இதம் வசனம் பிரவீத் -இவ்வார்த்தையை சொல்லுவானே என்று கொண்டாடுகிறார் ருஷி
பரவா நஸ்மி -உம்முடைய அஸ்மிதை போலே அல்ல காணும் என்னுடைய அஸ்மிதை
தேவரீர் உடையவனாக உள்ளேன் நான் -உம்முடைய-அஸ்மிதை -ஸ்வா தந்த்ர்யம் வேற -நான் ஸ்வ தந்த்ரன் அல்லேன் என்று சொல்லும் ஸ்வ தாந்த்ரம் உண்டே –

இப்படிக்கொத்த பார தந்த்ர்யத்தை யாயிற்று இவர் ஆசைப்படுகிறது-
இது தான் ஒருவர் அபேஷிக்குமதுவும் அல்ல – அபேஷிப்பார் இல்லாமையாலே நாம் கொடுத்துப் போருமதுவும் அல்ல -17 லஷம் வருஷமாக —
அவ்வழி புல் எழுந்து போயிற்று காணும் -என்று அவன் அநாதரித்து இருக்க –
புருஷன் அர்த்திக்க வருமது இறே புருஷார்த்தம் ஆவது
இப் பேறு இத்தனையும் நாம் பெற்றேனாக வேணும் என்று இவர் அபேஷிக்க-அவனும் தலை துலுக்கப் பெற்றாராய்த் தலைக் கட்டுகிறார்
வகுள பூஷண பாஸ்கரர் உதயம் ஆன பொழுதே இத்தை மீண்டும் கேட்கப் பெற்றான் –

ஒன்பதாம் திருவாயமொழியிலே -ஈசுவரனுடைய மோக்ஷ பிரதத்வத்தை அனுபவித்தவர் -அந்த மோக்ஷ பிரகாரங்கள்
எல்லாவற்றுக்கும் தாத்பர்ய பூமியாவது-பகவத் பாரதந்தர்யமே என்று நிஷ்கர்ஷித்து –
1–அவன் திருவடிகளோட்டை சம்பந்தமே உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
2–தத் விஷய ஞானத்தில் அபேக்ஷையையும்
3–ஞான அனுரூபமான ஸ்துத் அனுபவத்தில் ஸ்ரத்தையையும்
-4-அனுபாவ்யம் ததேக பாரதந்தர்யம் என்னும் இடத்தையும்
5–அதனுடைய அவிஸ்மரணம் ஆனந்த ஜனகம் என்னும் இடத்தையும்
6—அந்த ஸ்ம்ருதி காரிதமான பாஹ்ய அனுபவ அபேக்ஷையையும்
7—நிரந்தரமான ஆந்திர அனுபவம் அதிருப்தி கரம் என்னும் இடத்தையும்
8—அல்ப கால அனுபவத்திலும் அதிசயித்த அபி நிவேசத்தையும்
9—அனுபாவ்ய விஷயத்தோடு உண்டான அபிருத்தாக் சித்தி சம்பந்தத்தையும்
10—அந்த சம்பந்தத்தைக் குலையாமையில் உண்டான அபேக்ஷையையும்
அருளிச் செய்து -மோக்ஷ பிரதனான ஈஸ்வரன் சந்நிதியில் மோக்ஷ தாத்பர்யத்தை நிஷ்கர்ஷித்து அபேக்ஷித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் காயிகமான பேற்றை அபேஷித்தார்
இரண்டாம் பாட்டில் மானசமான பேற்றை அபேஷித்தார்
மூன்றாம் பாட்டில் வாசிகமான பேற்றை அபேஷித்தார்
நாலாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமான பிராப்யத்தை நிஷ்கர்ஷித்தார்
அஞ்சாம் பாட்டில் நீர் ஆராக இருந்து இப் பேற்றை அபேஷித்தீர் என்ன -நான் ஆராயினும் ஆயிடுக –உன்னை அனுபவித்து மகிழும்படி பண்ணி யருள வேணும் என்றார்
ஆறாம் பாட்டில் த்ரிவித கரணங்களாலும் உன்னை ப்ரீதி புரஸ் சரமாக அனுபவிக்கும் படி பண்ணி யருள வேணும் என்றார் –
ஏழாம் பாட்டில் அப்படிச் சடக்கென செய்யாமையாலே இன்னாதானார்
எட்டாம் பாட்டில் ஸ்வரூப அனுரூபமாக நீ ஷண காலம் என்னோடு அனுபவிக்கப் பெறில் பின்புள்ள காலம் எல்லாம் வேண்டேன் -என்றார்
ஒன்பதாம் பாட்டில் உன்னை அனுபவிக்க இட்டுப் பிறந்து வைத்து அது கிடையாதபடி நானே அனர்த்தத்தை சூழ்த்துக் கொண்டேன் -என்றார்
பத்தாம் பாட்டில் எனக்கு ஒரு நாளும் ஜ்ஞான விசேஷத்தைப் பண்ணித் தந்தோம் இறே என்று என்னை என் கையிலே காட்டித் தராது ஒழிய வேணும் என்றார்
நிகமத்தில் இது கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

——————————

2-10-கிளரொளி பிரவேசம்

கீழ் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்த ப்ராப்யம் –தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -2-9-4-பெறுகைக்கு திருமலையை –
திருமால் இரும் சோலையை -ஆஸ்ரயிக்கிறார்—சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –2-10-5-என்று ஆளவந்தார் என்று
அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் பணிக்கும் படி –
எம்பெருமானார் -அங்கன் அல்ல -இவர் பாட்டுத் தோறும் –ஒல்லை 2-9-1–ஒல்லை -2-9-10-என்றும் 2-9-2–காலக் கழிவு செய்யேல்
-என்றும் த்வரிக்கப் புக்கவாறே –நமக்கும் அறிவித்து நாமும் இவர் கார்யம் செய்வதாக அறுதி இட்டால் -சரீர சம நந்தரம் பேறு தப்பாது –
என்று அறுதி இட்டு இருக்கலாய் இருக்க இவர் இப்படி த்வரிக்கிறது -இச் சரீரத்தோடு நாம் அடிமை கொள்ள வேணும் -என்று
போலே இருந்தது -இனி இவருக்கு நாம் நினைத்தபடி பரிமாறுகைக்கு ஏகாந்தமான தேசம் ஏதோ என்று
ஞாலத்தூடே நடந்து உழக்கி பார்த்து -10-7-4-வரச் செய்தே -இவ்விடம் சால ஏகாந்த ஸ்தலமாய்
இருந்தது என்று – திருமலையிலே சந்நிதி பண்ணி யருளி -நாம் உமக்கு முகம் தருகைக்காக வந்து நிற்கிறோம் –நீர் இங்கே வந்து
நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறி அனுபவியும் என்று தெற்குத் திருமலையில் நிற்கும் நிலையை காட்டிக் கொடுக்க இவரும்
அத்தை அனுசந்தித்து பகவான் பிராப்யனானால் அவன் வர்த்திக்கும் தேசமும் பிராப்யமாகக் கடவது இறே
அத்தாலே திருமலையோடு-
அத்தோடு சேர்ந்த அயன் மலையோடு
புற மலையோடு
திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் என்று துணியும் துணிவோடு வாசியற பிராப்ய அந்தர்கதமாய் அனுபவித்து இனியராகிறார் –என்று -(அதனாலே பர உபதேசத்தில் இழிகிறார் )

தெற்குத் திரு மலை -சுந்தர தோளுடையான்-முதல் திவ்ய தேசம் இதில் மங்களா சாசனம் -மேலே வடக்குத் திருமலை மங்களா சாசனம்- (மூன்றாம் பத்தில் -தாம் அவதரித்த திருக் குருகூர் அடுத்த பத்தில் -இப்படி ஒவ் ஒன்றையே அனுபவம் 9
பிராபகமாக பற்றுகிறார் -திருமாலை ஆண்டான் நிர்வாகம் –கிறி-பதத்தில் நோக்கு
பிராப்யமாக பற்றுகிறார் -எம்பெருமானார் நிர்வாகம் –பயன் -பதத்தில் நோக்கு
ஸுவ அனுபவம் –ஐந்தும் பரோபதேசம் ஐந்துமாக அருளிச் செய்கிறார் –

முதல் இரண்டு பத்துக்கள் –பர ஸ்வரூபம் -என்றார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்-அர்த்த பஞ்சகம் பரமாகவே பத்து பத்தும் –
அதில் 1-1-பர ரூபம் –வ்யூஹ –அஞ்சிறைய தூது -1-10- பெரு நிலம் கடந்த நல்லடிப்போது –-ஜகதாதிஜா -விஷ்ணு –திண்ணன் வீடு -விபவம்
நெஞ்சின் உள்ளே புகுந்து –என்னுள் மன்னி -தீ மனம் கெடுத்தாய் -அந்தர்யாமித்வம் –
இதில் அர்ச்சை -2-10-சொல்லி பர ஸ்வரூபம் நிகமிக்கிறார் –(ஆக பஞ்ச பிரகாரங்களும் அருளிச் செய்கிறார் )

கீழ் புருஷார்த்த தயா நீர்நீத்தமான அத்யந்த பாரதந்தர்ய யுக்தமாய் இருந்துள்ள கைங்கர்யத்தை இவர் அபேக்ஷித்த படியே -கால விளம்பம் பிறவாதபடி
இங்கே கொடுத்து அருளுகைக்காகத் தெற்கு திருமலையில் எழுந்து அருளி நிற்கிற படியை பிரகாசிப்பிக்கக் கண்டு அத்யந்த ஹ்ருஷ்டராய் –
1 -அழகருடைய ஓவ்ஜ்ஜ்வல்யத்தையும்
2–ஆபி ரூப்யத்தையும்
3–ஒவ்தார்யத்தையும்
4–ரக்ஷகத்வத்தையும்
5–ரக்ஷண உபகரண வத்தையும்
6–ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
7–ஆபத் ஸகத்வத்தையும்
8–ஆஸ்ரித அனுகூலதையையும்
–விரோதி நிரசன சீலத்தையையும்
10–ஞான பிரதத்வத்தையும் —
அனுசந்தித்து -ஏவம் விதனான ப்ராப்ய பூதன் தானும் விரும்பும் படியான திருமலையே பிராப்யம் -என்று நிஷ்கர்ஷித்து
முதலிட்டு ஐந்து பாட்டாலே திரு உள்ளத்தையும்
மேலிட்டு ஐந்து பாட்டாலே லௌகிகரையும் குறித்து
அவன் போக்யதையை உபதேசித்து முடித்து அருளுகிறார் –

முதல் பாட்டில் -கடுகத் திருமலை யாழ்வாரை ஆஸ்ரயிங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் –திருமலையொடு சம்பந்தித்த ஸ்ரீயபதியை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் அத்தோடு சேர்ந்த அயன் மலை அமையும் என்றார்
நாலாம் பாட்டில் திரி தந்தாகிலும் என்கிறபடி திரியவும் திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
அஞ்சாம் பாட்டில் அத்தோடு சேர்த்த புற மலையை ஆஸ்ரயிங்கோள் என்றார்
ஆறாம் பாட்டில் திருமலைக்குப் போம் மார்க்க சிந்தை பண்ண அமையும் என்கிறார்
ஏழாம் பாட்டில் அவ்வழி யோடு சேர்ந்த திருமலையை ஆஸ்ரயிக்கச் சொன்னார்
எட்டாம் பாட்டில் நித்ய ஸூரிகளுக்கும் கூட ப்ராப்யம் ஆகையாலே திருமலையே பரம பிராப்யம் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் திரு மலையைத் தொழக் கடவோம் என்ற துணிவே வேண்டுவது என்றார்
பத்தாம் பாட்டில் எல்லாப் படியாலும் திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்தம் என்று தலைக் கட்டினார் ‘
நிகமத்தில் இது கற்றாருக்கு பலம் அருளி தலைக் கட்டுகிறார் –

முதல் திருவாய் மொழியாலே மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை –என்று விலஷண விஷயம் ஆகையாலே
பிரிந்தார் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் என்றார்
இரண்டாம் திருவாய் மொழியில் அவ்வோபாதி கூடினாலும் மறப்பிக்கும் என்றார்
மூன்றாம் திருவாய் மொழியாலே கூடின விஷயம் தானே ஸூக ரூபமாய் இருக்கும் என்றார்
நாலாம் திருவாய் மொழியாலே அவ்விஷயத்துக்கு தேசிகரோடே அனுபவிக்கப் பெறாமையாலே மோஹாங்கதரானார்
அஞ்சாம் திருவாய் மொழியிலே தாம் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தபடி சொன்னார்
ஆறாம் திருவாய் மொழியாலே தம் இழவுக்கும் அவன் அதி சங்கை பண்ணும் என்றார்
ஏழாம் திருவாய் மொழியாலே தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீகரித்தபடி சொன்னார்
எட்டாம் திருவாய் மொழியிலே அவனுடைய மோஷ பிரதத்வத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியாலே பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணினார்
பத்தாம் திருவாய் மொழியாலே நிஷ்கர்ஷித்த பிராப்யத்தை லபிக்கைக்கு திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கச் சொன்னார்

—————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)

பூர்வ அனுபூத -முன்னால் அனுபவித்த
முரவைரி குண அபி வ்ருத்த -பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற
பாஹ்ய சங்கம ருசி  (-1-10-) –தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ  பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே–2-2-

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸ அம்புஜ லோசநஸ்ய
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய ஸூக அம்ருதாப்திம்
தத் தேஸிக ப்ரதம ஸூரி கணை கதா ஸ்யாத்
ஸங்கோ மமேத்ய கதயன் ஸ முனிஸ் த்ருதீயே —2-3-

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸம் -தன்னுள்ளே
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய -முழுசி தழுவி -தன்னுள்ளே
ஸூக அம்ருதாப்திம் -கடல் படா அம்ருதம் -கலவி என்னும் அம்ருதக் கடலில் பிறந்த அனுபவம் –

தத் ப்ரார்த்திதா நதி கமேந ஸமுத்தி தார்த்தி
அக்ரே ஹரே பர முகேந யதா விதேயம்
ஆர்த்தேர் நிவேதநம் அபா கரணம் அர்த்த நஞ்ச
மூர்ச்சாம் ததா முனிரகாந் மஹதீம் சதுர்த்தே —2-4-

பர முகேந -மாற்றார் வாயால் -திருத்தாயார் பாசுரமாக
யதா விதேயம் –மடப்பம் மிக்க தலைமகள்
மஹதீம் மூர்ச்சாம்-பெரிய மயக்கம்
அபா கரணம் அர்த்த நஞ்ச -என் கொல் நுமது திரு உள்ளம் -பிரார்த்தனை –

ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-2-5-

சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி

நீசம் து மாம் அதி கதோ யமதி ஸ்வ ஸூ க்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸுவ விரஹாக மனே அதி சங்காம்
ஷஷ்டே நிரஸ்ய த்ருட சங்க கிரா ஸடாரி
ஆத்மான் வயிஷ் வபி தத் ஆதாரதோ அப்ய நந்தத் –16-2-6-

நீசம் து மாம் -தாழ்ந்தவன்
த்ருட சங்க கிரா –வாக்காலே சிக்கென பிடித்தேன்

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-2-7-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

ஆத்மான் வயிஷ்வபி ஹரே பிரியதாம வேஷ்ய
ஸர்வாத்மானஸ் ஸ்வ ஜனயந் முனிர் அஷ்டமேன
மோஷ பிரதத்வம் உபதிஸ்ய ததாபி முக்யா
லாபாத் ஸூவ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –-18–2-8-

மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-2-9-

ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-2-19-

————–————————————————————————————

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-

நித்ராதிச் சேதகத்வாத்- மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்
அரதி ஜநநதோ-கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–ஒருகாலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்
அஜஸ்ர சங்ஷோப கத்வாத் -நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-திவாராத்ரி விபாகமற
எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
விலய விதரணாத்-தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்
கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத் –நாண் மதியே! நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–கார்ஸ்யதைந் யாதிகளைப் பண்ணுகையாலும்
சிந்தா ஷோபாத்–தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்
வி சம்ஜ்ஜீகரணத்–மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்
உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்

நித்ராதி சேதகத்வாத்-வெவ்வேற துன்பம் -தூங்க விடாமல் –
அ ரதி ஜனனதக-சைதில்யம்
அஜச்ர -சர்வ காலத்தில் –சங்ஷோபகத்வம் -கலக்கும் தன்மை
அந்வேஷ்டும்-தேடி போக- பிரேரகத்வாத் -காரார் திருமேனி காணும் அளவும
விலய விதரநாத் –
கார்ய கார்ஷியா தைன்யாதி கிருத்வாத் -கிரிசமாகும் தன்மை -மதி கலை-
சித்த -ஆஷே பாதயாத் -போது போக்க ஒண்ணாத படி
விசம்கீ காரண -அறிய முடியாத படி
உப சம்ஷோஷனம் ஆர்ணவ  ஜந்மாப்யாம் — உலர்த்த -மெல்லாவி
த்ருஷ்ட்வா ஸ்வாத சௌரெ – ஷண விரஹ தசா –துச்சஹத்வம்–ஜகாதா- அருளிச் செய்தார்

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன் –

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —2-2-

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –

1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்

3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –

4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்

5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்

6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்

7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்

8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்

9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை

வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –

——

சித்ரா ஸ்வாத அநு பூதிம் ப்ரிய முப க்ருதிபிர் தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் பஜத அம்ருத ரஸம் பக்த சித்த ஏக போக்யம்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் ஸபதி பஹு பல ஸ்நேஹம் ஆஸ்வாத்ய ஸீலம்
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் நிர விஸத நகாஸ் லேஷ நிர்வேஸ மீஸம் -2-3-

சித்ரா ஸ்வாத அநு பூதிம் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே
மது ரங்களான மது ஷீராதி பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான அனுபவத்தை யுடையனுமாய்
விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்

ப்ரிய முப க்ருதிபிர் –பெற்ற அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
மாதாவும் பிதாவும் ஆச்சார்யனும் பண்ணும் உபகாரங்களை எல்லாம் தானே பண்ணி -அத்தாலே ஆஸ்ரிதருக்கு பிரியனுமாய்
மகா உபாகரகம்-

தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து –
அறிவு நடையாடாத காலத்திலே தாஸ்ய ரஸத்தை உண்டாக்கினவனுமாய்

ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் -எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனதாவி தந்து ஒழிந்தேன்
ஆத்மாவை சமர்ப்பிக்கும் படிக்கு ஈடாக ஆத்மாவினுள்ளே கலந்து இருந்த மஹா உபகாரத்தை உடையனுமாய்

பஜத அம்ருத ரஸம் -என் கடற்படா அமுதே!
ஆஸ்ரிதற்கு அமிர்தம் போலே போக்யனுமாய்

பக்த சித்த ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானே என்று இருக்குமவர்கள் மனஸ்ஸை விட்டுப் பிரிய மாட்டாது இருக்குமவனாய்

ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!
சஷுஸ் ஸ்ரோத்யாதி ஸர்வ இந்த்ரிய ப்ரீணந யோக்யதை யுடையனுமாய்

ஸபதி பஹு பல ஸ்நேஹம் -குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு இத்யாதிகளில் படியே சிரகால ஸாத்ய தபோ த்யான ஸமாதி பலமான
பக்தி யோகத்தைத் தனக்கு அபிமதர் இடத்திலே ஜடதி
சடக்கென -அருளி

ஆஸ்வாத்ய ஸீலம் -பவித்திரன் சீர்ச்  செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அத்யந்தம் போக்யத்வேன அநு பாவ்யங்களான கல்யாண குணங்களை யுடையனுமாய்
ஆழ்ந்து அனுபவிக்க-

ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் -மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே-சேர்ந்து உள்ளவன்-
ஸ்வ யஸஸ்ஸூக்களான நித்ய ஸூரிகளோடே ஸஹிதனாய் இருக்கிற எம்பெருமானை

நிர விஸதநக அஸ்லேஷ நிர்வேஸ மீஸம்
மதுரங்களான ஸர்வ பதார்த்தங்களின் உடைய ரஸத்தை யுடைத்தான போக்யதை யுடையனாக
ஊனில் வாழ் உயிரே!-தசகத்திலே ஆழ்வார் அனுபவித்தார் என்கிறார்

—————

ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம்
ஷபித விபது ஷா வல்லபம்
ஷிப்த லங்கம்
ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும்
ஸ்ரமஹர துளஸீ மாலிநம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம்
ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்
தீப்த ஹேதிம்
சத் பிரேஷா ரஷிதாரம்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத-2-4-

1-ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம் –நாடி நாடி நரசிங்கா என்று -பக்தனான ப்ரஹ்லாதன் நிமித்தமாக ஸ்ரீ ந்ருஸிம்ஹணாக ஆவிர்பவித்தும்
2-ஷபித விபது ஷா வல்லபம் -விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -அநிருத்தருக்கு விரோதியான பாணாசூரனுடைய கரங்களைக் கழித்தும்
3-ஷிப்த லங்கம் -அரக்கன் இலங்கை செற்றீர் -எதிரியான ராவணனுடைய இலங்கையை அழித்தும்
4-ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும் -வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் -விஷ விரோதியான வைனயதேயனை த்வஜமாகப் படைத்தும் –
5-ஸ்ரமஹர துளஸீ மாலிநம்-வண்டு திவளும் தண்ணம் துழாய்-மதுஸ்யந்தி யாகையாலே ஸ்ரமஹரமாய் இருக்கும் திருத்துழாய் மாலையைத் தரித்தும்
6-தைர்ய ஹேதும்—என தக வுயிர்க்கு அமுதே–விரஹ வியசனத்தாலே ஆத்ம வஸ்து அழியாதே அம்ருதமாய் இருந்து தரிப்பித்தும் –
7-த்ராணே தத்தா வதாநம்—வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்—ரக்ஷணத்திலே அவஹிதனாயத் திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்ததும் –
8-ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்—விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்–மிடுக்கனான கஞ்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தைத் தீர்த்து ஆஸ்வாஸம் பண்ணியும்
9-தீப்த ஹேதிம் —சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-தேஜிஷ்டமான திருவாழியைத் திருக்கையிலே தரித்தும்
10-சத் பிரேஷா ரஷிதாரம்–மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–ஆஸ்ரிதருடைய ப்ரேக்ஷையைப் போக்காதே ரஷித்தும்

வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
இப்படி பிரசித்த வைபவனான எம்பெருமானை ஆஸ்ரிதருடைய வியசனம் எல்லாம் நிரஸித்து அருளுபவனாக
ஆடி யாடி தசகத்திலே ஆழ்வார் அனுசந்தித்தார் -என்கிறார்

———

ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி  த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம்  துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த –2-5-

1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்

2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –

3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –

4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்

5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்

6-ந ஏக பூஷாதி  த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்

7-பிரத்யாத ப்ரீதி லீலம்  –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்

8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –

9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –

10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை

விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –

—————

ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் ஆஸ்ரித நியத த்ருஸே ந ஏக போக பிரதாநாத்
தியாக அநர்ஹ பிரகாசாத் ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் பாப பங்காத்
துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே விரஹ பய க்ருதே துர் விபேத ஆத்ம யோகாத் 
நித்ய அநேக உபகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் –2-6-

1-ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் —வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே–
தன்னுடைய நிரதிசய போக்யதையை க்யாபனம் பண்ணுகையாலும் –

2–ஆஸ்ரித நியத த்ருஸே–எங்கும்
பக்க நோக்கு அறியான் -ஆஸ்ரித ஜனத்தை விட்டு அந்யத்ர கண் வைக்க மாட்டாமையாலும்

3-ந ஏக போக பிரதாநாத் –நா மருவி நன்கேத்தி இத்யாதி —
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணி -மனஸ்ஸிலே சிந்தித்து -நிர்மமராய் வணங்கி –
ஹ்ருஷ்டராய் கூத்தாடும் படி -அநேக வித அனுபவத்தைக் கொடுக்கையாலும்

4-தியாக அநர்ஹ பிரகாசாத் —-உன்னை எங்கனம் விடுகேன்–தன்னை விடுகைக்கு ஸம்பாவனை இல்லாதபடி பிரகாசிக்கையாலும்

5-ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் —உனது
அந்தமில் அடிமை அடைந்தேன்–ஆத்மாந்த தாஸ்யத்தை நிலை நிறுத்துகையாலும்

6-பாப பங்காத்—-என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்–விரோதிகளான பாபங்களை ஸ வாசனமாகப் போக்குகையாலும்

7-துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே –முடியாதது என் எனக்கேல் இனி- -சம்பந்த சம்பந்திகளும் உத்தீர்ணராம் படி துஸ் சாதனமான காரியத்தை சாதிக்கையாலும் –

8-விரஹ பய க்ருதே —-உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்–விட்டுப் பிரியப் போகிறான் -என்கிற அதி சங்கையை விளைக்கையாலும்

9-துர் விபேத ஆத்ம யோகாத்  —உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா—ஆத்மாவோடு ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இருக்கையாலும்

10-நித்ய அநேக உபகாராத் —போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்-கால த்ரயத்தாலும்
மாதா பிதாக்கள் பண்ணும் உபகாரங்களையும் தான் தனக்குப் பண்ணும் உபகாரங்க ளையும் பண்ணுகையாலும்

ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் —எம்பெருமானை -வைகுந்தா மணி வண்ணனே -சதகத்திலே –
ஆஸ்ரிதர் நம்மை விடில் செய்வது என் -என்ற அதி சங்கையை யுடையனாக ஆழ்வார் அத்யவசித்து அருளினார் -என்கிறார் –

——

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———

பிராப்த்யாகார உபபத்யா ஜனி பரிஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே 
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ் ரஷணார்த்த அவதாராத் 
ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித விஹரணாத் -வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் 
பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –2-8–

1-பிராப்த்யாகார உபபத்யா —அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்—
திரு அனந்தாழ்வான் மேலே பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து இருகையாலும்

2-ஜனி பரிஹரணாத் —நீந்தும் துயர்ப் பிறவி–இத்யாதி -கடக்க அரிதான துக்கத்தை உண்டாக்கும்
ஜென்மம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்துகையாலும் –

3-விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு
அந்தராத்மாவாய் நின்று ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரதிகளைப் பண்ணுகையாலும்

4-நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ்-நலமந்த மில்லதோர் நாடு-நிரவதிக ஆனந்தத்தை உடைத்தான
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கையாலும்

5-ரஷணார்த்த அவதாராத் –மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-லோக ரக்ஷண அர்த்தமாக
ஹயக்ரீவ கூர்ம மத்ஸ்ய ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்

6-ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே
சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த-அர்ஜுனன் தன் திருவடிகளில் இட்ட திருமலையை
சிவனுடைய சிரஸ்ஸிலே கண்டு -இவனே சர்வாதிகன் என்று தெளிந்து -அறுதி இடும்படியான ப்ரபாவத்தை யுடைத்தாகையாலும்

7–விஹரணாத் –கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்-
திருப்பாற் கடலிலே கிடந்தும் -பரமபதத்தில் இருந்தும் -திருமலையில் நின்றும் –
அதவா
பிரதி ஸிஸ்யே மஹோ ததே -என்றும்
உடஜே ராமம் ஆஸீ நம் என்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் –என்றும் சொல்லுகிறபடியே
கடல் கரையிலே சாய்ந்தும் -பர்ண சாலையிலே இருந்தும் -வாலி வத அநந்தரம் நின்றும்
அதவா
மணல் குன்றிலே ஸ்ரீ கோபிமார் மடியிலே சாய்ந்தும்
வத்ஸ மத்யத்திலே கோப குமாரர்களோடே இருந்தும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணி நின்றும்
த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தும்
வராஹனாய உத்தரித்தும் –
பூமா தேவி மால் செய்யும் மால்-
இப்படி பஹு வித விஹரணங்களைப் பண்ணுகையாலும்

8-வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் -எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே-ஒரு குறைவின்றிக்கே எட்டு திக்கிலும் வியாபித்து நிற்கையாலும்

9-பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் –
ஆஸ்ரிதர் நினைத்த இடத்திலே அப்பொழுதே ஆவிர்பவித்துக் காணப்படுமவனாகையாலும்

10-அகில பல க்ருதேர் -சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற-மோக்ஷ ஸ்வர்க்காதி ஸகல புருஷார்த்தங்களுக்கும் காரணமாகையாலும்

முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –எம்பெருமான் ஒருவனே மோக்ஷ ஸூக பிரதன்-என்று —
அணைவது அரவணை மேல்–தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —

—————

ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-

1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —

2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –

3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –

4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —

5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்

6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –

7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –

8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —

9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –

10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை

11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——–

தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-

1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –

2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –

3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –

4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –

5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –

6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –

7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்

8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –

9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்

10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை

ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –

———

இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-

த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –

1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்

2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்

3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்

4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்

5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்

6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்

7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்

8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்

9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –

10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்

எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –

———————————————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 11-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து ————11-

வாயும் -திரு மால் –
அடியார் அனுபவிக்கலாம்படி
அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய
ஸ்ரீ யபதி யானவன் –

ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்
தம்முடைய துக்கத்தை ஆராய
அறியாத வற்றை

செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை
த்ருடமாக
கடாஷித்து அருளுவார்-

—————————————————————

அவதாரிகை –

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே-
1-அனன்யார்யக சேஷத்வம் -2–அநந்ய சரணத்வம் -3–அநந்ய போக்யத்வம் -4–ததேக நிர்வாகத்வ
5–சம்ச்லேஷத்தில் தரிக்கை -6–விச்லேஷத்தில் தரியாமை -கடி மா மலர்ப்பாவை யுடன் சாம்யம் உண்டே –
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு-மயக்கம் உற்று –
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்–

வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –

ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் -ஆச்சார்ய ஹிருதயம் -132

செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்வத்தை  
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————

வியாக்யானம்-

திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் -2-1-10-
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -2-1-11–என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை-அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –

திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –

நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியை யாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம் படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-

நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகை யாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம்படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி –புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்–பேதைக் குழவி பிடித்து உண்ணும் பாதக் கமலங்கள் காணீரே -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா– கமலா பத்ராஷஸ் –சர்வ சத்வ மநோஹரா-என்றும்–படி எடுத்து உரைக்கும் படி யன்றே அவன் படி -மூவாறு மாசம் மோகித்து –
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று –முலை மேல் சோர்கின்றாளே -கல் எடுத்தது பெரியது இல்லை சொல் என்று –
லாவண்யம் சௌந்தர்யம் -இரண்டையும் சுருங்கச் சொல்லி –
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –

வண்ணம் அறிந்து -அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –

அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு–————-13-

———————————————————-
அவதாரிகை –

இதில் எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ச்லேஷிக்க-ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் அன்றோ –
தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை –திண்ணன் வீடு -தலைக் கட்டின
அநந்தரம்
கீழ்
தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த எம்பெருமான் உடைய
சம்ச்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி
தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே
ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி
அளவிறந்து இருக்கிற படியையும் அனுசந்தித்து
தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே
துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே
போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற
ஊனில் வாழ் அர்த்தத்தை
ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

—————————————————————————-

வியாக்யானம்–

ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது
நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல்
சங்கோசம் அற சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது
ச ஹிருதயமாக சம்ச்லேஷித்த சாரஸ்யம் ஆனது

அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரச்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று
அனுகூல சஹவாசம் அபேஷிதமாய்

வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே
அனுபவத்துக்கு தேசிகராய்
வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின
ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே
நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்
அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —————-14-

————————————————————————

அவதாரிகை –

இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே
மிகவும் தளர்ந்து
தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான
நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை
பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற பிரகாரத்தை
கலந்து பிரிந்து மோஹங்கதையான பிராட்டி உடைய
விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே
அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்-

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து
ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே
ந்ருத்யந்தி கேசித் -என்னும் படியாக –
அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு
வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய்
ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே
வாடி வாடும் -என்று மிகவும் வாடி –

அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று
நிரவதிக சிநேக உக்தரான
மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூக்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை எம்பெருமானுக்கு நிரூபித்து
தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை
தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்
தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –

மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஆழ்வார் –

ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றர்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –
அற்ற பற்றார் -மதுரகவி போல்வார் –

அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே –என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே –என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்
இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்
கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய்
இருக்கும் ஆயிற்று –

——————

அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை–———–15-

—————————————————————-
அவதாரிகை –

இதில் ஆடியாடியில் -விடாய் தீர
அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து
வாட்டமில் புகழ் வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து
சம்ச்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே
அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை
மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை
அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –

————————————————————————————–

வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத்தேசத்திலும்
அத்தேசிகர் இடத்திலும் உண்டான அதி ச்நேஹத்தாலே –

அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு –
அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் –
அவர்களோடு கூட சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –

வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான்
பரமபதத்தின் நின்றும்
பரமா பதமாபன்னரான–பெரிய ஆபத்தில் இருந்த -இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ச்லேஷித்த ஔதார்யத்தாலே –

சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து
அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து
சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –

சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
வானோர் தனித் தலைவன்
அந்தாமத்து அன்பு செய்யும் படியான
ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே
அன்பை அடியிலே இட்டு வை-

————

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—————-16-

பித்தின் அடியாக -கர்மத்தால் அல்ல-ஆஸ்ரிதர் வியாஹோமம் அடியாக –
2-5- வந்து கலந்த –வைகுந்தன் –என்பதால் அந்தாமத்து அன்பில் –
செய்கின்ற நைச்ச்யம் -சிந்தித்து -1-5- பழைய நினைவு வர –
பகவான் நைகின்ற தன்மைதனை ஆழ்வார் கண்டு
உன்னை விடேன் -என்று ஆழ்வார் உரைக்க
சத்ய சங்கல்பர் சத்ய வாக்யர் இவர் என்று விஸ்வசித்து
இழந்த வன்மையை மீட்டுக் கொண்டான் –
மேலும் மீளும் -பின்னும் தீருவார் -இப்படி பண்ணி அருளி -பிறந்து படைத்த ஐஸ்வர்யம் அல்லவோ இது –

—————————————————————————————

அவதாரிகை –

இதில்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று
அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று
ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்த இவர்
அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே
வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று
அதி சங்கை பண்ணி
அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
அல்லாவி –குணமாக கொண்ட திருக் கல்யாண குணமே வாத்சல்யம் –
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி
அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற –வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை
வைகுந்தன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பாஷ்யத்தை ஒருகால் -திருவாய்மொழியை சதா காலம் அனுபவிக்க -திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மா முனிகளுக்கு ஆஜ்ஞ்ஞை செய்து அருளினாரே

————————————————————————————

வியாக்யானம்–

வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
நித்ய விபூதி உக்தன்
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி
ஒரு நீராக கலந்த பின்பு –

வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று
சம்பன்னரான ஆழ்வார் –

செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற
நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று
ஈஸ்வரன் விசாரித்து –
பாலாழி கண் வளரும் பண்பை கேட்டே யும் கால் ஆளும் -ஆழ்வாருக்கு -இங்கே -நைகின்ற தன்மையைக் கண்டு பெருமாள் –

நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –

உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விச்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற
உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்
ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –
வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி
துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி
ஸ்தர்யத்தைப் பிராபித்தான் –பிரசக்த கேசவன் ஆனவன் -மரகத மலை –
விஜ்ஜுர ப்ரமோதாக –அநிஷ்ட நிவ்ருத்த இஷ்ட பிராப்தி -வன்மை அடைந்தார் -இங்கே -விடேன் சொன்னதுமே

—————

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு–—————18-

மாறன் மலர் அடியே–வீசு புகழ்– எம்மா வீடு –
மாசில் உபதேசம் செய்-கியாதி லாப பூஜைக்காக இல்லாத

——————————————————-
அவதாரிகை –
இதில்
மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை
தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி
சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற
அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-

———————————————————————-

வியாக்யானம்–

அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே-
ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்
அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற
அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி
கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது
ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –

தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக
தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்
ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு –
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று –
ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் –என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற
குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –

அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆனபோது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே
உபாயாந்தர நிரபேஷமாக
திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்

அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது
இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் –என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற
கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
பெருமாள் பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –

உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை
நித்ய சூரிகளோடு கூட்ட
மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு
இணக்குப் பார்வை போல்-(மிருகத்தை மிருகம் வைத்து கண்ணி வைத்து பிடிப்பாரை போலே இணங்கி தாழ நின்று )-சஜாதீயராய் இணங்கி –

ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு
உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –

மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும்
பரிசுத்த ஞானரான ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஆழ்வார் உடைய-புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –

வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய
சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஆழ்வாருக்கு –செம்மா பாதம் -இறே எம்மா வீடு-பொசிந்து காட்டும் இங்கே
இவருக்கு மாறன் மலர் அடியே யாயிற்று
விபூதிஸ் சர்வம்- ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-

—————

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –————–19-

—————————————————————————————–

அவதாரிகை –

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்-2-8-
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –-என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————

வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் விலஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –

வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது –எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து –என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டுத் தான் இருப்பது –
தலைக்கு கட்டு -தலைக்கட்டினார் -சாடு
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –

நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி –தனியேன் வாழ் முதலே -2-3-5–என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –

மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6–என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –

கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று-தேவு மற்று அறியேன் -என்று அவனையும் தவிர்க்கிறார் -(தாழ்ச்சி எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் வாழ்ச்சி என்றார் ஆழ்வார் -இவர் அதையும் தவிர்ந்து –கீழ்மை அற்று ஆழ்வார் மலர் தாளிணை சூடி இருப்பதே நம்முடைய வாழ் முதல் என்று அருளிச் செய்கிறார் )
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

——————

இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-

கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய் கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –

வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –

தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –

தளர்வு –
மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு

அறவே –
அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து -சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –

இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் -கிளர் ஒளி இளமை -என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது -கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
ஸ்ரீ திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
ஸ்ரீ திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்-ஸ்வ அனுபவ கர்ப்ப பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –

அந்தர்கத குணா உபாசனத்தை மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாய பரமாக ஸ்ரீ நாயனார் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது-ஆகையால் ஸ்ரீ திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே

நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே –

முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –—————————————————————

ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் -சூர்ணிகை –220–

இரண்டாம் பத்தால்
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண –
அவனாலே தத்வ ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று
ஆசைப் பட்டுப் பெறாமையாலே –
( அந்தமில் பேர் இன்பத்துக்கு அடியாரோடு இருந்தமையை இவருக்கு ப்ராப்யம் ) அவசன்னராக (2-4-)
இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி –
அவன் வந்து சம்ஸ்லேஷித்து -(2-5 -அந்தாமத்து அன்பு )–அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையவனாய் –
(உடையவராய் என்று ஆழ்வாரைச் சொல்ல வில்லை –உடையவனாய் -என்று இவர் சிக்கெனப் பிடித்தேன் -என்று
சொல்ல அதனால் அவனும் ப்ரீதனாய் )
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு –
அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட –(அணைவது அரவணை மேல் -2-8-)
அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் –

ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு –
தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக-
த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் –
முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை –
நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —

(உபாசனத்தை -அங்க யுக்தம் ஆக்குகிறார்
கீழே அவனுடைய சேவைக்கு பக்திக்கு -எளிமையும் இனிமையும் உண்டு –பஜனத்தில் சேர்க்கிறார் -என்றார் –
இங்கு குண உபாசனம் -பக்தி சேவை -பர்யாயம் -சேவை -கைங்கர்யம் -பக்தியை கைங்கர்யம் நமக்கு –
கண்ணன் சொல்லும் கர்மயோகம் போல இல்லாமல் –ஷேத்ரவாச சங்கீர்த்தன அஞ்சலி ப்ரதக்ஷிண கதி சிந்தனாதி
ரசமான -காலைப்பிடிக்க பாலைக் கொடுப்பது போலே அருளிச் செய்கிறார்
குண அனுபவ கைங்கர்யமே பொழுது போக்காக கொள்ளுகை-பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்வது போலவே இங்கும் -)

(முகம் காட்டாமல் இருக்க -சிதிலமாகி – –காற்றும் கழியும் கட்டி அழுது -2-1-பெருமாள் பரத்வத்தை காட்ட –
கொஞ்சம் ஸைதில்யம் நீங்கி- ப்ராசங்கிகமாக-அடுத்த பத்து -2-2-விபவ அவதாரத்தில் பரத்வம் -திண்ணன் வீடு –
எல்லாம் தன்னுள்ளே கலந்து தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்து-ஸந்தோஷம்-
அடியார்கள் உடன் கூட ஆசைப் பிறந்து கிடைக்காமல் வியசனம் மிக்கு ஆடி ஆடி –துடிக்க –
அடுத்து -தன் பக்தர் உடன் ஆழ்வார் உடன் சேர –அந்தாமத்து அன்பு-2-5-இது தான் மா முனிகள் கலந்தான் என்கிறார் –
2-3-கலந்தாலும் –எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தான்– இந்த சம்ச்லேஷத்தாலும் ஆழ்வாருக்கு திருப்தி பிறக்க வில்லையே
மேலே ஆனந்தம் -ஆழ்வாருக்கு -2-6-உன்னைப் பிடித்தேன் சிக்கனவே -பின்பு கேசவன் தமர்–2 7–
இவன் தானே மோக்ஷ பிரதன் உபதேசம் –அணைவது அரவணை மேல் -2-8–
அவன் கொடுக்க வர புருஷார்த்த நிர்தேசம்-எம்மா வீட்டு –ப்ராப்ய நிஷ்கர்ஷம்–2-9-கைங்கர்யம் தெற்குத் திருமலையில் -2-10-
பராங்குச பயோதி-கடல் அன்றோ -வியாக்யானம் மூலம் கடல் கரையில் இருந்து அனுபவிக்கத் தான் முடியும் )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற
சித் அசித் த்ரய திரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க
உள்ளம் தேறித் தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான
ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
2-உலராமல் ஆவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன
வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில்
எம்மா வீட்டை உபய (சேஷ சேஷி இருவருக்கும் ) அனுகுணம் ஆக்கினவர்
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை
ஸ்தாபிக்கிற சகல பல ப்ரதத்வ காரணத்வ
சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை
திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன
பிரத்யஷங்களும் காட்டிப்
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ
சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற
அந்தர் கத குண உபாசனத்தை
6-மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக்
கீழ்மை வலம் சூதும் செய்து
இளமை கெடாமல் செய்யும்
ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி
பிரதஷிணகதி சிந்தநாத் அங்க
உக்தம் ஆக்குகிறார்
இரண்டாம் பத்தில்-
( 2-10-பாசுரங்களில் விவரித்தவை )

1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்
அதாவது
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,
மூவாத் தனி முதலாய் -2-8-5–என்றும் ,
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்றும்–
லீலா விபூதியில்
சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் —
ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —

நித்ய விபூதியில் -அப்ராக்ருதம் -கார்யத்வம் இல்லாமல் ஸூஷ்மம் நாம ரூபம் இல்லாமல் இருக்காதே -அங்கு
சர்வ காரணம் அவன் -லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் –
இச்சா விசிஷ்ட ரூப (சங்கல்ப-இங்கு -அங்கு இச்சையால் ) வேஷத்தால் நிமித்தமாயும் –
அப்ராக்ருத அசித் ஜீவ விசிஷ்ட வேஷத்தால் உபாதானம் -லீலா விபூதியில் இங்கும் ஜீவன் அப்ராக்ருதம் தானே –
உபாதானம் -மாறுவது -ச ஏகதா பவதி-இத்யாதி -இமான் லோகான் காமான் நீ காம ரூப்யான் ஸஞ்சரன்-அங்கும் உண்டு –
அதுவே ஸ்ருஷ்ட்டி அங்கு -கைங்கர்யத்துக்கு அனுரூபமான திரு மேனி
விநியோக உபயோகி ஞானாதி வேஷத்தாலே சஹகாரி அங்கு –

இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும்
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும்
திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்

(நித்ய இச்சையால் அது நித்ய விபூதி -அவர்கள் நித்யர்கள் –
நியதி பூர்வ க்ஷண வ்ருத்தித்வமே காரணம்–அது இங்கு -மாறக்கூடிய அசித் –
எது சத்வே-முதல் வினாடியில் இது இருந்ததால் அது இருக்கும் – சங்கல்பம் காரணம் –
அங்கு -இவை நித்தியமாக இருக்கட்டும் என்பதால் அவை நித்யம் -இதுவே நியாயம் –
சங்கல்பம் மாற்ற மாட்டான் -ஸ்வதந்த்ரன்
அப்ரக்ருத அசித் ஜீவ சரீரம் அங்கும் உண்டே அவனுக்கு -ப்ரதிஜ்ஜைக்கு ஹானி வராது
ப்ரஹ்மத்தை விட வேறு இல்லையே -2-3-5-ப்ரஹ்ம ஸூத்ரம்-
ப்ரஹ்ம கார்யத்வேன-ஆகாசம் -ப்ரஹ்மாத்மகம் –
நித்ய விபூதியில் -நித்ய சித்த -ப்ரஹ்ம சரீரத்வேன-கார்ய காரண அபாவம் –
சரீரமாக இருப்பதால் ப்ரஹ்மாத்மகம் அங்கு சுருதி பிரகாசர் -விளக்கம் –
இத்தை மா முனிகள் திரு உள்ளத்தில் கொண்டு -இப்படி பிரித்து அருளுகிறார் இரண்டையும் –
காலத்துக்கு குணத்ரயம் இல்லை -அபிமானி தேவதைக்கு குணத்ரய வஸ்யம் இருப்பதால் -கலியுகம் படுத்துகிறது என்பர் –
த்ரிவித சேதன த்ரிவித அசேதன-இதனாலே -)
(ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்-ஓன்று விடாமல்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்– மூவா -கலங்காமல் – -காரணந்து த்யேயா
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-
காரணத்வம் நியந்த்ருத்வம் வியாபகத்வம் காருணிக்கத்வம்
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் 2-10-11–மீண்டும் மேம்படும் -படைக்கிறான் –
கீழே மூவா வருத்தப்படாமல் இருப்பதை சொல்லி -)

அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி
அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை
விசத தமமாக அறிவிக்க —
அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி
நெஞ்ளில் தெளிவை உடையவராய்-(மனோ பூர்வ வாக் உத்தர க்ரமம் இல்லையே அவன் மூலம் பெற்றதால் )

தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
தூ மனத்தனனாய் –2-7-8-
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று
மோஷ ஏக ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் –
அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு (தத்வ வேதன மறப்பற்று ) பலம் மோஷம் ஆகையாலே –
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று
பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் –
சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் –
நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று
அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி
அப்போதே கிடையாமல்
வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி

2-உலராமல் ஆவி சேர்ந்து
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே
பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து —
கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி –

சிக்கெனப் புகுந்து-
சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று
அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி
தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து

சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினர்-2-6-7- -என்று
இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –
எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -2-7-1–என்று
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் –
நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர்
தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
(இளிம்பு-பகவத் கிருபை பெறாமல் / சதிர்-கிருபையை உபாஸனாதிகளால் பெற்று / மா சதிர் -நிர்ஹேதுகமாக பெற்று )

உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
இப்படி தம்முடைய ( சம்பந்தி ) பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே
தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2-
கெடலில் வீடு-2-9-11-
எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் –
(மூன்று வீட்டு சப்த அர்த்தங்கள் இத்தால் -துயர் இல்லா வீடு -ஸ்வார்த்ததா-அநர்த்தம் இல்லா வீடு – கெடலில் வீடு–எம்மா வீடு – )
அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே –
அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –
நின் செம்மா பாத பற்ப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –
கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் —
சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4–என்று
உபய ( சேஷ சேஷி இருவருக்கும் ) ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-

3-ஆச்ரயணீயனுக்குப் பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற
ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான

சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் -2-2-1-–என்று சகல பல பரதத்வம் –
தேவும் எல்லா பொருளும் 2-2-8-—கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் –
(வர்த்தித்து -வளர்த்து என்ற அர்த்தம் )
ஆக்கினான் தெய்வ வுலகுகள்-2-2-9- -என்று சர்வ காரணத்வம் –
ஆழி அம் பள்ளியாரே -2-2-6–என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் –
(பாற் கடலில் -ஆதி சேஷன் மேல் படுத்த -என்று கூட்டி லக்ஷணை-என்றவாறு -அஸ்வாரஸ்யம் )
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து -2-2-3-– என்று ஸ்ரீயபதித்வம் –
கண்ணன் கண் –2-2-1- கோபால கோள் அரி ஏறு-2-2-2- -என்று அவதார சௌலப்யம் –
(ஸுவ்லப்யமும் பரத்வத்தை விளக்க வந்தது தானே
ஐந்தும் இரண்டு திருவாய் மொழியிலும் –என்றும்
இரண்டு மட்டும் திண்ணன் -மீதி மூன்றும் அணைவது -என்று இரண்டு நிர்வாகங்கள் )

ஆதி -சப்தத்தாலே
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -2-2-5–என்று புண்டரீகாஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -2-2-7–என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —பிரகாசிப்பித்தது
(இவை இரண்டும் பரத்வத்தை விளக்கும்)

அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –
இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –
வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்-
(மோக்ஷத்துக்கு காரணம் –ஈட்டில் -மோக்ஷம் தொடக்கமான-என்று கொண்டு அஸ்வாரஸ்யம் –
கீழே திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -)

ஆதி -சப்தத்தாலே
பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –
மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம்
ஆகியவற்றை -அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –

அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய அசேஷ புருஷார்த்த
பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த –
தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் – திண்ணன் வீட்டிலும் –

அணைவது அரவணை மேலிலும் -என்றும் –
பூம் பாவை யாகம் புணர்வது- என்றும் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்
அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —

ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று
முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —

இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..
முற்பட்ட யோஜனையில் –
ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே கொள்ள வேண்டுகையும் –
வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை பிரகரண விருத்தமாம் படி –
மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் –
சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும்
சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு

4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி
கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே –
அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும்
எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான
பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு புறப்பட்டால் –
அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –

தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே –
ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து –
அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு – என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய –
அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —
பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம்
ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர க்ருத நிச்சி தார்த்த – என்கிறபடி
தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு –
சஜாதீயமான வற்றை அன்றிக்கே – அவை தன்னையே
பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே –
தானே பிரத்யஷித்து -சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே –
பேரளவு உடையவனான அவன் நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று
பிரத்யஷைத்தையும் காட்டி-
(மிலேச்சனும் பக்தன் ஆனால் சூத்ரம் -வசன அனுஷ்டானங்கள் முன்பு -பார்த்தோம் இங்கு வசன ப்ரத்யக்ஷங்கள் )

5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் கத குண உபாசனத்தை
(சம்சார துக்கம் மோக்ஷ ஆனந்தம் சாதன ரசம்-என்று பிரித்து )
புலன் ஐந்து -2-8-4-என்கிற பாட்டில் –
ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு
த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் –
பிராப்யத்தில் பிராவண்யமும் –
சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி- என்று
பரிச்சின வஸ்துக் க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை தவிர்ந்தது என்கையாலே –
அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –

நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் –2-8-4-என்று
நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர் என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்

பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -2-8-4-என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி ( சீரில் படிமின் குண உபாசனம் )
ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே –
சாதனத்தினுடைய ரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் –
(அலமந்து அசுரரை வீயச் செற்றவன் )அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே –
பிரபல பிரதி பந்தகங்களை அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –
தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி
குண உபாசனத்தை

(அந்தர் கத குண உபாசனம் -அங்கி இவை அங்கங்கள்
தஹர வித்யை -உபாசனம் ப்ரஹ்ம புர-தஸ்மிந் யத் அந்த அன்வேஷ்டவ்யம் -தேடத்தக்கது -விசாரிக்கத்தக்கது –
ப்ரஹ்மத்துக்குள் காமம் -கல்யாண குணங்கள் இருக்கும் -தேடி உபாசிப்பாய்
என்ன குணங்கள் -அபஹத பாப்மாதி அஷ்ட குணங்கள் –
இந்திரன் மாம் ஏவ உபாஸ்வ–மாம் என்னை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தை -உபேந்த்ரன் -உலகமாய் தோட்ட அவதாரம் –
கண்ணன் – மாம் சரணம் -இவனுக்குள்ளே என்று கொள்ளாமல் -அவனையே –
தஹர ஆகாசம் ஹ்ருதயத்துக்குள்ளே -நிறைந்த சோதி வெள்ளம் ஆகாசம் -அதற்குள் உள்ளதைத் தேடச் சொல்லி -சாந்தோக்யம் –
ஆழ்வார் அங்கங்கள் உடன் கூடிய உபாசனத்தை விதிப்பாரா -உபாயாந்தரங்கள் அன்றோ –
அஷ்டாங்க யோகம் -பக்தி –ஹிதம் ஷட்விதா சரணாகதி -பிரபத்தி நியாஸ பஞ்ச அங்கங்கள் கூடிய -ஹித தரம் –
சரணாகதி -அங்கங்கள் இல்லாமல் ஹித தமமாய் இருக்குமே –
தன்னடையே ஏற்கும் சம்பாவித ஸ்வ பாவம் -உத்தர க்ருத்யம் -அங்கங்கள் ஆகாதே –
அவகாத ஸ்வேதம் போலே ஆகுமே -பின் அங்கங்கள் என்று எதற்க்காக சொல்ல வேண்டும் –
நமக்கு சங்கை -போகும் இடம் உயர்ந்தது -பாபங்கள் பிரபலம் -செய்வது வெறும் சரணாகதி -உபாய பல்குத்வம்-
மூன்றாலும் விசுவாசம் குறையுமே
அந்தர் கத குண உபாசனம் சின்னதும் ஆசையுடன் கேட்க வருவோம் –கல்யாண குண அனுசந்தானம் -சொல்வது நம் சம்ப்ரதாயம்
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் –
அங்கங்கள் எதற்கு -உபாசனத்துக்கு அங்கங்கள் இருப்பது போலே இதுக்கும் இவை உண்டே
அங்கங்கள் என்ற புத்தியோ அனுஷ்டானமோ இல்லை ஆழ்வாருக்கு -இங்கும் உண்டு -சம்பாவித ஸ்வ பாபம் –
குண உபாசனை பலன் குண அனுசந்தானத்துக்கும் உண்டு -அங்கங்களாக இல்லை சம்பாவிதம் என்றவாறு – )

6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி –
வல்வினை மூழ்கி
நரகழுந்தி
கீழ்மை செய்து
வலம் கழித்து
சூது என்று களவும் சூதும் செய்து
கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று
உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி –
அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு
தண்மையை செய்து– பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய்
பால்யத்தை பாழ் போக்காதே –
(க்ருத்யம் அக்ருத்ய விபாகம் பண்ணி-மதியாது -என்ற பாசுரத்தை மதித்து –
பெருக்காது -என்றதை பெருக்கி —
மூழ்காது -மூழ்கி / அழுந்தாதே -அழுந்தி இத்யாதி
கைங்கர்யம் பண்ணும் நாம் கிளர் ஒளி -கைங்கர்யம் கொள்ளும் அவன் ஒளி வளர் ஒளி மாயோன் –
திவ்ய தேசம் வளர் இளம் பொழில் சூழ் -ஆகவே நாம் தளர்விலராகிச் சார்வது சதிர்
இங்கு அக்ருத்யங்களைச் சொல்லி மேலே க்ருத்யங்களை விவரிக்கிறார் –
செய்யாதன செய்யோம் -செய்யும் கிரிசைகள் -திருப்பாவை போலே )

செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்
அதாவது
பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும்
சொல்லுகிறபடியே
பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே –2-1-
போது அவிழ் மலையே புகுவது பொருளே-2-10–என்கிற ஷேத்திர வாசம் –
பதியது ஏத்தி 2-10-2-என்கிற சங்கீர்த்தனம்
தொழக் கருதுவதே -2-10-9-என்கிற அஞ்சலி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே-2-10-8- -என்கிற பிரதஷணம்
நெறிபட அதுவே நினைவது நலமே -2-10-6–என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–
(உபநிஷத் விதிக்கும் அங்கங்களை சம்பாவித ஸ்வ பாவங்களாக -தானே ஏற்படுவதைக் காட்டி அருளுகிறார் -என்றவாறு -)

(ஆக இரண்டாம் பத்தால்
காரணத்வத்தை வெளியிட்டு –
அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும்
ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும்
அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும்
அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும்
உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும் தெரிவித்தபடி – )

———————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் தாத்பர்ய சார அமுதம் —

October 28, 2024

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான
எம்பெருமானைப் பேசி –எவன் என்று ஸ்வரூபமும் -சுடர் அடி -ரூபமும் -உயர்வற உயர் நலம் உடையவன் -குணங்கள் –
எவன் -என்று ஸ்வரூபம் -சுடர் அடி -ரூபம் -உயர்வற உயர் நலம் குணம் –அமரர்கள் அதிபதி விபூதியும் சொல்லிற்று -மிகுநரை இலன் -மேற்பட்டவன் –
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் ஆதீனம் -1-3/4/5/6/-சர்வேஸ்வரன் -பூத பவ்ய பத பிரபு ஆமவை ஆயவை –
சுடர் மிகு சுருதியுள் உளன் -ஸ்ரீ யபதியாய் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –ஏவம் விதனானவன் திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –
தொழுது எழு என் மனனே -கிரியா பதம் எல்லா பாசுரங்களிலும் அந்வயித்து பொருள் கொள்ளலாமே

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி –உணர் முழு நலம் –மிகுநரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
ஸூஷ்மம் -ஆகையாலே-கர விசும்பு –அக்னி -வரன் -ஸ்ரேஷ்டம் -சப்த ரூப கந்தம் போலே –நின்ற பரன்-
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார் –சப்தார்த்தம் -முதல் பதிகம் -சப்தம் –வண் புகழ் நாரணன் அடுத்த பத்தில்
சர்வாதிகத்வமும் –மிகுநரையிலன் —சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும்
-ஆமவை ஆயவையாய் –கர விசும்-அயர்வறு அமரர்கள் அதிபதி –-உபய விபூதி நாதத்வமும் இறே-நாராயண சப்தார்த்தம்-

இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ஆரம்பித்து அவரும் பிரபந்தங்கள் முழுவதும் அருளிச் செய்தார் –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –-9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும் –
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
–பாற்கடல் அடி பாடி -பொற்றாமை அடியே -நிகமித்து ஆண்டாள் அருளி -திருவடி 2/29 அதே போலே இவரும் 1-2/10-9/

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –

இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே உத்தேச்யம் என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று –உயிர் வீடு -ஆத்மாவையும் சரீரத்தையும் யுடையான்
-உயிரை வீடாக சரீரமாக யுடையவன் -இரண்டு அர்த்தங்கள் – அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி

இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

இதில் முதல் பத்தாலே -உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
–துயர் அறு சுடரடி தொழுது எழு என் மனனே -1-1-1- என்று
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-ஸூரி போக்யனானவன் திருவடிகளிலே கைங்கர்யமே புருஷார்த்தம் என்று நிர்ணயித்து
உக்தமான அர்த்தத்துக்கும் -வஹ்யமாணமான அர்த்தத்துக்கு பிரமாணம் -உளன் சுடர் மிகு சுருதியுள் -1-1-7-என்று
நிர்தோஷமான சுருதியே பிரமாணம் என்றும்
ஏவம் விதனானவன் யார் என்ன —-வண் புகழ் நாரணன் –1-2-10-என்றும் –திருவுடையடிகள் –1-3-8-என்றும் –
செல்வ நாரணன் -1-10-8-என்றும் -விசேஷித்து –தொழுது எழு என் மனனே -1-1-1–என்று உபக்ரமித்து –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே -1-3-10-என்று த்ரிவித காரணங்களாலும் அடிமை செய்து
தலைக் கட்டுகையாலே பகவத் கைங்கர்யமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் –உயர்த்தி -பொருந்தி விட -அடிக்கடி பேசி -புதிதாக -பலமாக -உபக்ரமம் உபஸம்ஹாரம் -அடையாளம் -லிங்கம் –
தொழுது எழு- சொற் பணி செய் ஆயிரம் -உடல் வாசா கைங்கர்யம்
அயர்ப்பிலன் -அப்பியாசம் –அபூர்வம் -பிரத்யக்ஷமாக கைங்கர்யம் புருஷார்த்தம் தெரியாதே
தொழுதால் எழு -பலன் –உயர்வற உயர்நலம் உடையவனை தொழுது எழு பொருந்த விட்டு -முதல் பத்துக்கு தாத்பர்யம் கைங்கர்யமே -புருஷார்த்தம் -என்றதாயிற்று –

திருவாய் மொழிக்காக சங்க்ரஹம் முதல் திருவாய் மொழி –
முதல் திருவாய் மொழியினுடைய சங்க்ரஹம் முதல் மூன்று பாட்டுக்கள்
முதல் மூன்று பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் பாட்டு
முதல் பாட்டினுடைய சங்க்ரஹம் முதல் அடி –என் போல் என்னில்-

விக்ரஹ விபூதிகள் –முதல் அடியில் –நலம் -ஆனந்தம் சொல்லி -ஆனந்தாவாஹம் விக்ரஹம் விபூதிகள் அர்த்தாத் சித்தம் -முதல் வரியில் அர்த்த பஞ்சகமும் உண்டே -த்வயமும் உண்டே -உபயோகியான குணம் -நலம் உடையவன் என்பதால்- உயர் நலம் உடையவன் -என்பதே -அனைத்துக்கும் -என்றவாறே –
ரூசோ யஜூம்ஷி சாமாநி ததைவா தர்வணாநி ச சர்வம் அஷ்டாஷர அந்தஸ் ஸ்தம் யச்சான் யதபி வாங்மயம் -என்கிறபடியே –
சகல வேத சங்க்ரஹம் திரு மந்த்ரம்
அதினுடைய சங்க்ரஹம் பிரணவம்
அதினுடைய சங்க்ரஹம் அகாரம் ஆனால் போல –
மற்றும் பாரத ஸ்ரீ ராமாயணாதி களையும் சங்ஷேப விஸ்தரங்களாலே செய்தார்கள் இறே

முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக் குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆன பின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –

சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாஸ்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில் தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
தத் ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்

அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
அநந்ய ஈஸ்வரத்தையும் அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும் அகில வியாபகத்வத்தையும் சொல்லி அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

———

1-2-வீடுமின் முற்றவும் -அவதாரிகை –

தத்வ பரமாயும் -உபாசனை பரமாயும் இறே மோக்ஷ சாஸ்திரம் தான் இருப்பது
அதில் தத்வ பரமாகச் சொல்ல வேண்டுவது எல்லாம் எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய்மொழியிலே-
உபாசன பரமாகச் சொல்ல வேண்டுமவற்றுக்கு எல்லாம் ஸங்க்ரஹமாக இருக்கிறது இத் திருவாய் மொழி-

இத் திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போந்து எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர்,பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பின்னர் எம்பாரும் அவ்வாறே அருளிச் செய்தார்.

தனக்கும் தன் தன்மை அறிவரியான்’ என்கிறபடியே, அபரிச்சின்ன -அளவிற்கு அப்பாற்பட்ட -விஷயம் –‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்’ அன்றே?-‘எப்பொழுதும், நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதோறும், அப்பொழுதைக்கு ‘அப்பொழுது என் ஆரா அமுதம்’ என்னும்படி-நித்ய அபூர்வமாய் இருக்கும்–இனி தம் அபிநிவேசமமோ என்றால், ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’ என்றும்,  ‘மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால்’ என்றும்,  ‘சூழ்ந்ததனிற் பெரிய என் அவா’ என்றும் சொல்லும்படி பெருகி இருந்தது; .

இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு -ஆளாவார் யார் , (‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ )என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண் வைத்தார்;
தாம் பகவத் விஷயத்தில் பிரவணராய் இருக்குமா போலே அவர்கள் சப்தாதி விஷயங்களில் பிரவணராய் இருந்தார்கள்
அவர்கள் அனர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று  பலகாலும் அருளிச் செய்வர்;
அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்;
‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில்,
அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி.

1- சர்வேஸ்வரனுடைய நன்மையினையும்,
2-இவர்கள் பற்றியுள்ள விஷயங்கள் அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
3-பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்
4-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய
சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் (‘அடங்குக உள்ளே’)
5-பற்றுவாருக்கு அனுசந்திக்கப்படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் (‘வண்புகழ் நாரணன்’ )
6-அவனுடைய பஜநீயதையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு
7-இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் என்று
பர உபதேச ப்ரவ்ருத்தராகிறார் –

தத்வ ஹிதங்கள் இறே சாஸ்திரங்களில் ப்ரதிபாதிக்கிறது –
ஹிதமாவது அலவ்கிக புருஷார்த்த சாதனம் என்பதால் புருஷார்த்தம் ஹித்துக்குள்ளே சொருகி இறே இருப்பது
பூர்வ த்விகம் -தத்வம் நிரூபணம் -உத்தர த்விகம் -ஹித நிரூபணம் –
அந்த சாயையிலே முதல் திருவாய் மொழி தத்வ நிரூபணம் -இரண்டாம் திருவாய் மொழி ஹித நிரூபணம்
வீடுமின் முற்றவும் -1-சம தமாத் யுபேத ஸ்யாத் -ஸூ த்ரார்த்தம்
மின்னின் நிலை 2– வைராக்ய பாத அர்த்தம்
புல்கு-4 -என்று பகவத் அனுசந்தானத்துக்கு ப்ரீதி ரூபத்வம்
அற்றது பற்று எனில் –உற்றது வீடு உயிர் -ஞான யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் கிட்டினால் அங்கே தாழாமல் இருக்க உபதேசம்

முதல்பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை -வேறுபட்ட பொருள்களை விட்டு, சர்வேஸ்வரன் பக்கல் ஆத்துமாவைச் சமர்ப்பிக்க இசைமின்,’ என்றார்;
இரண்டாம் பாட்டில், ‘வ்யதிரிக்த விஷயங்களினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம்,’ என்றார்;
மூன்றாம் பாட்டில்,-த்யாஜ்ய அம்சத்தை – விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்தார்;
நான்காம் பாட்டில் பற்றப் படுகிற விஷயத்தினுடைய நன்மையினை அருளிச் செய்தார்;
ஐந்தாம் பாட்டில், பற்றுமிடத்தில், வரும்-அந்தராய பரிக்ரஹத்தை – தடைகளை நீக்கும் வழியினை அருளிச் செய்தார்;
ஆறாம் பாட்டில், அவன்-சங்க ஸ்வ பாவன்- அன்பே உருவமானவன்,’ என்றார்;
ஏழாம் பாட்டில், ‘சம்பந்த ஞானம் உண்டாகவே பொருந்தலாம்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘வேறு உபகரணம் தேட வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்,’ என்றார்:
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படிச் செய்யவே, -பஜன விரோதிகள்– வழிபாட்டிற்குத் தடையாக உள்ளவை எல்லாம்
தன்னடையே விட்டுப் போம் ’ என்றார்;
பத்தாம் பாட்டில்,-பாசனத்துக்கு ஆலம்பமான மந்திரம் இன்னது என்றார்;
முடிவில், ‘இவைதாம் வாய் வந்தபடி சொன்னவை அல்ல; சேதனருடைய -ஹிதத்துக்கு ஈடாக -நன்மைக்குத் தக
ஆராய்ந்து சொல்லப்பட்டவை,’ என்கிறார்.
அன்றி, ‘இவை தாம் ஹித தமமாய் இருப்பன ஆகையாலே, எப்போதும் ஒக்க ஓரப் படுவன,’ என்கிறார் என்னலுமாம் -.

இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே 1-ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான தத் இதர சகல தியாகத்தையும் -2-பஜன பிரகாரத்தையும் 3-அஸ்தைர்யத்தையும் 4-தியாக பிரகாரத்தையும் -5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும் -7-சர்வ ஸமத்வத்தையும் -8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும் -9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும் சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –

இந்த லோகத்தில் ஆத்மாக்களில் பகவத் ஏக போகராய் இருப்பார் இல்லாமையால் இவர்களை பகவத் ஏக போகராக்கிக் கொண்டாகிலும் அனுபவிக்க வேணும் என்று இந்த ஆத்மாக்களைக் குறித்து பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை பகவத் வியதிரிக்த விஷய வைராக்ய பூர்வகமாக உபதேசிக்கிறார் –

1-3-பத்துடை யடியவர்கு எளியவன்-ப்ரவேஸம்

இச் சம்சாரி சேதனனுக்கு-பஜிக்கலாம் படி – வழிபடலாம்படி -அவன் தன்னைக் கொண்டு வந்து தாழ விட்டு எளியனாமாகில், இவனுக்கு வழி படத் தட்டு இல்லையே?’ என்று
கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச் செய்கிறார்.சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விளங்க விரித்துச் சொல்லிக் கொண்டு போந்தோம்;-அது தானே ‘இவர்களுக்கு இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடல் ஆயிற்று? அவ் வெளிமை தானே ஆதரிக்கைக்கு உடல் ஆயிற்று உமக்கு ஒருவருக்குமே!’ என்று ஸ்ரீ எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச்செய்தாராம் .

ஜென்ம கர்ம ச மே திவ்யம் (‘என்னுடைய பிறவிகளும் பிறவிகளிற் செய்யப்படுகின்ற தொழில்களும் தெய்வத் தன்மை வாய்ந்தவை,’) என்று? அதாவது, ‘என்னுடைய பிறவிகள் கர்மம் அடியாக அல்ல; இச்சை அடியாக இருக்கும்.-நாம் பிறவா நிற்கச் செய்தே பிறவாமையும் கிடக்கும்; தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும்;
அப்ராக்கிருத சம்ஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்போம்;
இவற்றுள் ஒன்றை அறிந்தவர்கட்குப் பின்னர்ப் பிறவி இல்லை; நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேண்டுமோ?-ஈர் இறை உண்டோ?’ என்றான் என்றபடி.-பரத்வ தசைகளில் காட்டில் திரு வவதாரங்களிலே தன்னுடைய கல்யாண குணங்கள் நிறம் பெறும்–இவ்வவதார ரகஸ்யத்தின் உடைய சீர்மை ஒருவர்க்கும் அறிய அரிது

அவதாரங்களை முன்னிட்டுக் கொண்டு, அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லை நிலமான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே இழிந்து, அது தன்னிலும் பரத்துவத்தோடு ஒக்கச் சொல்லக் கூடிய நிலைகளைக் கழித்து, நவநீத சௌர்ய நகர க்ஷோபத்திலே அகப்பட்டு, இளமணற்பாய்ந்து ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடக்கிறார்.

இப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான ஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
1-தத் உப பாதகமான நவநீத சவ்ர்ய அபதாநத்தையும் -2-அவதார க்ருத சவ்லப் யத்தினுடைய உஜ்ஜ்வல்யகரத்வத்தையும்
3-அவதார ஆச்சர்யத்தினுடைய துரவபோதத்தையும்-
4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –
5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –
6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –
7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –
8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்
9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்
10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்
உபதேசித்து –
ஏவம் விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதற்பாட்டில்,ஸூலபன் -‘எளியவன்’ என்றார்;
இரண்டாம் பாட்டில்,-ப்ரஸ்துதமான ஸுலப்யத்தை – சொன்ன அவ்வெளிமையை வகைப்படுத்தி -ச பிரகாரமாக -அருளிச்செய்தார்;
மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று,’ என்றார்;
நான்காம் பாட்டில், ‘அத்தன்மைகள் தாம் அடியார்க்கு அறியலாம்; அல்லாதார்க்கு அறியப்போகா,’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘இப்படிப்பட்டவனை அவன் அருளிச்செய்த பத்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயியுங்கோள் – அடைமின்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், ஆஸ்ரயணீய வஸ்து -அடையத்தக்க பொருள் இன்னது’ என்றும், ஆஸ்ரயிக்கும் பிரகாரம் -அடையும் விதம் இன்னது என்றும் அருளிச் செய்தார்;
ஏழாம் பாட்டில், ‘நீங்கள் சில் வாழ் நாள் பல் பிணிச் சிற்றறிவினிர் ஆகையாலே, விளம்பிக்க ஒண்ணாது; கடுக அடைமின,’ என்றார்:
எட்டாம் பாட்டில், ‘பற்றிய அளவில் விரோதிகள் அடங்கலும் நசிக்கும்,’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், பிரமன் சிவன் முதலியோர்கட்கும் காரணமானவன் வந்து அவதரிக்கைக்குக் காரணம் அருளிச்செய்தார்;
பத்தாம் பாட்டில், இப்படி எளியவனானவனை முக் கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்;
முடிவில், இதனைக் கற்றார்க்குப்-அப்யசித்தார்க்கு – பலன் அருளிச் செய்தார்.

—————

1-4-அஞ்சிறைய மட நாராய்-பிரவேசம்

கீழ் மூன்று திருவாய்மொழிகளால், பரத்வத்தையும் -பஜனீயத்வத்தையும் -ஸுலப்யத்தையும் -அனுபவித்து மகிழ்ந்தவராய்த் தாமான தன்மையில் நின்று பேசினார்;
இத் திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது.

கீழே ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே,’ என்பதற்கு
‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பாரிக்கிறார்,’ என்று நஞ்சீயர் அருளிச் செய்த பொருள் அதற்கு அடுத்த இத் திருவாய்மொழிக்கு மிகப் பொருந்தும்.
‘அனுபவிக்கிறார்’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த பொருள்,
இவ் வாழ்வாருக்கு ‘முனியே நான்முகனே’ என்னும் திருவாய்மொழி முடிய உள்ளது
மானச அநுபவமாகையாலே அதற்குப் பொருந்துவதாம்.

‘ஆயின், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாகச் சொல்லுவதற்குக் காரணம் யாது?’ எனின்,
கீழே திரு உலகு அளந்தவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப் பட்டுக் கட்டிக் கொண்டார்; அது ஒரு கால விசேடத்திலேயாய், தாம் பிற்பாடராய்த் தோற்றுகையாலே, துணுக்கு என்று தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியினால் சொல்லும் பாசுரம் போய், ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாய் விட்டது.

ஞானத்தை மட்டும் உடையவராய் இருப்பின் கலங்கார்; ‘மயர்வற மதிநலம் அருளப்’ பெற்றவர் ஆகையாலே கலங்குகிறார்.-மற்றும், அவன் தானே கொடுத்த அறிவும்-விஸ்லேஷத்தில் – பிரிவில் அகிஞ்சித்கரமாம்படி அன்றோ அவனுடைய வைலக்ஷண்யம் இருப்பது? தத் தஸ்ய சத்ருசம் பவேத் ( ‘அவர் வந்து என்னை மீட்டுச் செல்வராகில், செல்லும் அச் செயல் அவ் விராமனுக்குத் தக்கதாம்,’ ) என்று கூறிய பிராட்டியே பிரிவுத் துன்பத்தைப் பொறுக்கிலளாகித் -வேண்யுத்க்ரத நாதிகளிலே- தன் சடையினைக் கொண்டு தூக்கிட்டு இறப்பதற்கு நினைந்தமையும் ஈண்டு நினைத்தல் தகும்.

ஆயின், பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில்,
அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், அன்வயத்தில் -கூடி இருக்கும் போது தரிக்கை,-விஸ்லேஷத்தில் -பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, -ததேக போகராகையாலும் -அவனுக்கே இன்பத்தை அளிக்கை,-அவன் நிர்வாஹகனாக- காப்பாற்றுகின்றவனாகத் தாம் நிர்வாஹ்யமாகையாலும்- காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை.

வையங்கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று,
இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; முற்றுவமை இருக்கிறபடி.இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேண்டும்,’ என்னும் ஆற்றாமை பிறந்து, தன் அருகிலுள்ள தோழிகள் ‘எம்மின் முன் அவனுக்கு மாய்வர்’ என்கிறபடியே தளர்ந்தவர்கள் ஆதலின், கால்நடை தருவார் இல்லாமையாலே, அப் பக்கத்தில் வசிக்கின்ற விலங்குகள் சிலவற்றைப் பார்த்து,
‘இவை வார்த்தை சொல்ல மாட்டா,’ என்னுமது அறியாதே, ‘இவற்றுக்குப் பக்ஷபாதம் உண்டாய் இருந்தது ஆகையாலே, இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக, இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்.
இவ்விடத்தில் ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.

அபராத ஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றதை பற்ற அபராத சஹத்வம் –

அநாதி காலம் இவ்வாழ்வாரைத் தன்னோடே சேர விடுகைக்குக் காலம் பார்த்து இருந்த-அவசர பிரதீஷனாய்ப் போந்தவன் – இவர் பக்கல் அப்ரதிஷேதம் -வெறுப்பின்மை உண்டான சமயம் பார்த்து, இவருக்கு மயர்வற மதிநலம் அருளல் ஈண்டுப் புணர்ச்சி-யாதிருச்சிக்க சம்ச்லேஷம் – எனப்படும். அவன் கொடுத்த அந்த ஞானம் பேற்றோடே தலைக் கட்டப் பெறாமை-விஸ்லேஷம் – பிரிவு எனப்படும்.

நாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் – அவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -1-போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து
ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் -2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் -3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்
4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் -5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் அநவதிக கிருபையையும் 8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் 9-அதுக்கு அடியான நிருபாதிக பந்தத்தையும் -10-அதூர வர்த்தித்தவத்தையும் உடையனாகையாலே நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு கடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

————–

1-5-வள வேழ் உலகின் பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் ‘சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரன் ஆகையாலே அவனைப் பற்றுவார்க்கு ஒரு குறை இல்லை,’ என்றார்;
இரண்டாந்திருவாய்மொழியால், அந்த ஆச்ரயணம் தான் புருடோத்தமனைப் பற்றுகிறது ஆகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது,’ என்றார்;
மூன்றாந்திருவாய்மொழியால், பஜிப்பார்க்காகத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டு இல்லை,’ என்றார்;
நான்காந்திருவாய்மொழியால் ஸூலபனானவன் ஆனவன் தானே -அபராத சஹனாகையாலே பலத்தோடே வ்யாப்தம் அல்லது இராது ,’ என்றார்;
அயோக்ய அநுஸந்தானம் ‘தம் தாழ்வினை நினைந்து அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டிப் பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான்,’ என்கிறார், இத்திருவாய்மொழியால்.

கீழ் கலங்கித் தூதுவிட்ட இடம்-ப்ரேம- அன்பின் காரியம்; இங்கு அகலப் பார்க்கிற இடம் ஞான காரியம்.அகலுவான் என்?’ என்னில்,- சேஷிக்கு – தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தம் தாம் விநாசத்தை அழிவினைப் பாரார்கள் அன்றே? -நான், நல்லார் தீயார் என்று நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் என் காலை வைத்ததைக் கண்டீரே,’
எனத் தான் திருவுலகு அளந்தருளின எளிமையைக்காட்ட,-ஒரு குணாதிக்யமோ வேண்டுவது ‘நம்மால் வரும் மேன்மையும் இவனுக்கு வேண்டா,’ என்று பின்னையும் அகலப்புக,-உம்மால் வரும் மேன்மையேயன்றோ நீர் வேண்டாதது? உம்மால் வரும் நான்தான் வேண்டுமோ, வேண்டாவோ?
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று எனக்குத் தாரகங்காணும்;
இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்;
நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு-சத்தா ஹானி ,’ என்று கூறி, பின்னர்
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ‘நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் -போட்கன்- வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்;
நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும்,கரிஷ்யே வசனம் தவ-என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
வருந்தித் தம்மை இசை வித்து, சேர்தற்கு அவன் தான் விரும்பியவாறே -சம்ச்லேஷ உன்முகனான படியே ஸம்ஸ்லேஷித்து சேர்த்து- தலைக் கட்டினான்,’ என்கிறார்.-

இப்படி கடக முகத்தால் இவ் வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான -1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–2-சர்வ
காரணத்வத்தையும் –3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் -4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் -7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் -8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும் அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

————-

1-6–பரிவதில் ஈசனைப் பாடி பிரவேசம்

முதல் திருவாய்மொழியிலே, அவன் -சர்வ ஸ்மாத் பரனாய் -எல்லாரினும் அறப் பெரியவனாய் இருக்கிறபடியை அனுபவித்தார்;
இரண்டாந் திருவாய்மொழியிலே, ‘இப்படிப் பரனானவனை பஜியுங்கோள் வழிபடுமின்,’ என்றார்,
மூன்றாந்திருவாய்மொழியிலே, அப் பஜனத்துக்கு -அவ்வழிபாட்டிற்கு உறுப்புகளாக அவனுடைய எளிமையையும்,
நான்காந் திருவாய்மொழியிலே, அவனுடைய -அபராத சஹத்வத்தையும் பொறை யுடைமைக் குணத்தையும்,
ஐந்தாந்திருவாய் மொழியிலே, -அதற்கு உறுப்பாக -அவனுடைய சீல குணத்தையும் அருளிச்செய்தார்;
‘இவை எல்லாம் உண்டாயினும், -பரிமாற்றத்தில் அருமை இருக்குமாகில் பசை இல்லை அன்றே?’ என்ன,
‘அது வேண்டா; ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத்தக்கவன்’ என்கிறார் இத் திருவாய்மொழியில்.திரவிய நியதி இல்லை, கால நியதி இல்லை, அதிகாரி நியதி இல்லை;
இப்படி இருக்கையாலே இறைவனை ஆஸ்ரயணீயம் ஸூகரம் அடைதல் எளிது; ஆதலால்,-ஆஸ்ரயியுங்கோள் – ‘அடைமின்’ என்கிறார்.பொருள்களின் உயர்வு தாழ்வு பார்க்கின்றான் இல்லை; இடுகிறவன் நெஞ்சில் ஈரமே பார்க்கிறான்;தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது-எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன்,
இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான்-செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று,
அவ் வேலைகளைத் தானே செய்வான்

இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில்
தத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக
அங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –2–ஆராதகனுடைய அதிகார
ஸுகர்யத்தையும் —3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்
4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய
ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்
–8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி– ஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –

———–

1-7-பிறவித் துயர் பிரவேசம் 

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் –
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போகரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்-இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே . 

ஸூ ஸூகம் கர்த்தும் – ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே தானும் போகரூபமாய் இருக்கும் –
அவ்யயம் -கோலின பலன்களைக் கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும் 

ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில் அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து
ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –3-பர தசையிலும் அவதாரம்
அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும் 5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் -7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
-8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல
பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

————

1-8-ஓடும் புள் -பிரவேசம் –

கீழில் திருவாய்மொழியில் நிரதிசய போக்யன் என்றார்; 
அவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்கிறார் இத் திருவாய்மொழியில்.
‘பத்துடை அடியவரில்’ சௌலப்யமும், ‘வளவேழ் உலகில்’ சௌசீல்யமும் அருளிச் செய்தார்;
இத் திருவாய்மொழியில் ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்;
இவற்றின் வேறுபாடு என்னை?’ எனின்,
சௌலப்யமாவது, ஸ்ரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாக வுடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதனர்
நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை. 
சௌசீல்யமாவது இப்படித் தாழ விட்டால், ‘சிறியார் அளவிலே நம்மைத் தாழவிட்டோமே!’ என்று
தன் திரு வுள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை. 
ஆர்ஜவமாவது, இப்படிப் பொருந்தினால், நினைவும் சொல்லும் செயலும் ஒரு படிப்பட்டு இராமல், பல வகைப்பட்ட சேதநரோடு
தான் பரிமாறும் இடத்தில், அவர்கள் போன வழி தனக்கும் வழியாம்படி தான் அவர்களுக்குச் செவ்வியனாய்ப் பரிமாறுகை. 

‘சௌசீல்யம்-ஆர்ஜவம்’ என்னும் இரண்டும் ஒன்று போலக் காணப் படினும், வேறு வேறு என்பதே
நம் பெரியோர்களுடைய திருவுள்ளம். 
ஸ்ரீ ஆளவந்தார் ‘குணவான்’ என்று சௌசீல்ய குணத்தை முன்னர் அருளிச் செய்து,
பின்னர் ‘ருஜூ’ என்று ஆர்ஜவ குணத்தைப் பிரித்து வேறாக அருளிச் செய்தார்.

இத் திருவாய்மொழி சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யம் கூறுகிறது என்பாரும்  
ஈச்வரத்வ லக்ஷணம் கூறுகிறது என்பாரும் –
கீழ் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர்.
‘ஆயின்’  இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே ஸ்ரீ பட்டருடைய  திருவுள்ளம்.

இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘ஓடும் புள் ஏறி,’ ‘சூடும் தண்துழாய்’,‘நீர் புரை வண்ணன்’ என்ற திருப்பாசுரங்களை நோக்கி
‘ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறார் இத் திருவாய்மொழியில்’ என்கிறார்.
இத் திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு’ என்பது முதலான
திருப் பாசுரங்களை நோக்கிப்‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர்.
‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம் அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப் பாசுரங்களை நோக்கி
ஈச்வரத்வ லக்ஷணம் கூறுகிறது, என்பர்.
‘அம்மான் சீர் கற்பன் வைகலே என்ற திருப் பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.
ஸ்ரீ பட்டர் ‘நீர் புரை வண்ணன்’ என்பது முதலான திருப் பாசுரங்களைக் கடாக்ஷித்து,
ஆர்ஜவ குணத்தைக் கூறுகிறது’ என்று அருளிச் செய்வார்.

இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய லீலா விபூதி சம்பந்தம் அடியான
செவ்வைக் கேட்டைச் செவ்வையாம் படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக -அதுக்கு
1-பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும் –
2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும் –
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும் -4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும் –
-5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும் –
6-இது சகல சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும் –
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம் படி கலக்கும் என்னும் இடத்தையும் —
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும் —
9–அவதாரங்கள் ஆஸ்ரித அனுபாவ்யமான அசாதாரண சிஹ்னங்கள் என்னும் இடத்தையும் –
10-ஏவம்வித ஸ்வ பாவன் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான அவனுடைய ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

—————

1-9-இவையும் அவையும் -பிரவேசம் –

கீழ் திருவாய்மொழியில் இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்;
இப்படி அநுசந்தித்தார் திறத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் இத் திருவாய்மொழியில்-
ஸ்ரீ சர்வேஸ்வரனாய் ஸ்ரீ திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன்,
ஸ்ரீ ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து -ஏக ரசனாய் -இனிமையில் ஒன்று ஆனான்;

இவ் வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான  விடாயைப் பிறப்பித்துப்
ஸ்ரீ பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக் கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான்.
அதாவது, ஸ்ரீ பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே;
ஸ்ரீ திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே.
இப்படி  அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்,
அது தன்னையும் குளப்படியிலே கடலை மடுத்தாற்போன்று அன்றி,(குளப்படி-மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு)-
(‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்வதால் )பொறுக்கப் பொறுக்கப் பரிமாற,
இவரும் அவனை  எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து,
(‘என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார்,
‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பனவற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.)
அந் நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப் பேசி அனுபவிக்கிறார்.

ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் -பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என் என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க
புஜிப்பிப்பானாக -1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –2-இவருக்கு அந்திகஸ்தனாவது -3-கூட நிற்பது –4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
-5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது -7-தோள்களில் சேர்வது -8-நாவிலே நிற்பது -9-கண்ணுக்குள்ளே யாவது -10-நெற்றியிலே யாவது -11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார் –

——————

1-10-பொரு மா நீள் படை -பிரவேசம்

கீழ் திருவாய்மொழியில்,-சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து –
தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை -நினைத்து -நிர்வ்ருதராகிறார் -இன்புறுகின்றார்
என்று கீழ் திருவாய்மொழிக்கும் இத் திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச் செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 
இங்கு, சர்வாங்க சம்ஸ்லேஷத்தை அனுசந்தித்து – எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை
அநுசந்தித்து ஸ்ரீ பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது,
கீழ் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்?
பேற்றில் இனி, ‘இதற்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இன்று;
இனி, இதனுடைய-அவிச்சேதத்தை – பிரிவின்மையைச்- செய்து கொடுக்கையே உள்ளது;
பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்;
இப் பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது;
‘ஏன் இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும்,
அத்வேஷம் -வெறுப்பின்மை-ஆபிமுக்யம் – எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில்,
இத் தலையில் பரம பத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே;
என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே;
மற்றும், ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத் தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே?
‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது?
மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழி போக வேண்டும்’ என்று –
உபகரணங்களை -உறுப்புகளைக் கொடுத்து விடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்;
இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே,
அத்வேஷம் -வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரம பத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனே யாவன்;
ஆதலால், ‘நித்திய ஸூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்,
அவன்-விஷயீகாரம் – திருவருள் இருக்கும்படி என்?’ என்று,
கீழ் திருவாய்மொழியில்-உன்மஸ்தமாக- தலைமுடிவாகப் பிறந்த -சம்ஸ்லேஷ ரசத்தை -சேர்க்கையாலாய சுவையை – அனுசந்தித்து -நினைத்து-நிர்வ்ருதராகிறார் – இன்புறுகிறார் என்பது.

பட்டர் தம்முடைய வைபவம் எல்லாம் காட்டும் திருவாய்மொழி யாயிற்று இது –

பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி -அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து
அதுக்கு உபபாதகமாக-1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –4-நிரந்தர அனுபாவயதையும்–5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் -7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் -8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்-

————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ
-1-உயர்வற

தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-
2-வீடுமின் – உபதேசித்தார்

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரணத்ரயதஸ் த்ருதீயே
–3- பத்துடை அடியவர்

தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே –
4-அஞ்சிறைய

தத் காங்ஷித –ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து

ஸ்வ ஆலிங்க நாதி சபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிரதி போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாமத பஞ்சமே அபூத்
-5-வள வேழ் உலகு –

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமஸ்ய
பக்தி பரம் பஹு மதா தத ஏவ சோ அயம்
ஸ்வாராத இத்யுபதிதேச முநிஸ்து ஷஷ்டே
-6-பரிவதில் –

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந
-7-பிறவித்துயர் –

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷ்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந
-8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் ஜந்துஷூ -குடில புத்தி குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்
சந்தர்ஸ்ய –வெளிப்படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி
-9-இவையும்

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

இத்தம் ஸ்ரீ யபதி க்ருத ஸ்வ ஸமஸ்த தேஹ
சம்ஸ்லேஷ லக்ஷண பலஸ்ய ஸூ துர் லபஸ்ய
பக்த்யாதி வத் ஸ்வ கணநே அபி ச தத் ப்ரஸாதாத்
நிர்ஹேதுக த்வம வதத் தசமே சடாரி
-10-பொரு மா நீள்

————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

சமாக்யா பந்தத்தி -1000 ஸ்லோகங்களும் ஆழ்வாருக்காக
நம் ஆழ்வார் ஸ்ரீ பாதுகை ஒரே கைங்கர்யம் –
32 பந்திகள் -32 அதிகாரங்கள்
ஆத்மா சித்தம் -தம் மனசுக்கு உபதேசித்து –

இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம்
-2-உயர்வற

1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –

2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-

3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்

4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –

விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்

எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்

சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-

7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்

8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்

9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்

10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்

பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்

தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்-

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம்
–2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –

1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்

3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –

4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்

5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்

6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்

7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்

8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்

9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை

வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–
3- பத்துடை அடியவர்

1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –

2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –

அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்

4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்

5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்

6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்

7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்

8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-

9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –

10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்

எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

அன்யாபதேசம் ஸ்வா பதேசம் இரண்டு ஸ்லோகங்கள்

த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம்
-4-அஞ்சிறைய

1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்

2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –

3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-

4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-

5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-

6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்

7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –

8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-

9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-

10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –

ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———–

ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா –
5-

1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –

2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –

3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –

4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –

5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –

6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –

7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த

8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –

9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –

10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –

ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –

ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்
–5-வள வேழ் உலகு –

1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –

2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்

3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –

4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –

5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –

6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்

7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்

8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்

9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்

10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-

———————

அக்ரீதைரர்ச்ய பாவாத்
அநியத விவிதாப் யர்ச்சநாத்
அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத்
ஸ்வ விஷய நியதேஷ் வாதராத்
ஸ்வாது பூம்நா
பாதா சக்த ப்ரசக்தேஸ்
சக்ருது பசத நே மோக்ஷணாத்
தர்ம ஸவ்ஸ்த்யாத்
ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத்
ஸூகரபஜநதாம் மாதவஸ்யாப்யதத்த
–6-பரிவதில்

1-அக்ரீதைரர்ச்ய பாவாத் -நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே -அர்த்தவ்யயம் பண்ணி சம்பாதிக்க வேண்டாத படி
ஸூலபமான புஷ்ப சலிலாதிகளால் பூஜிக்கப் படுமவனாகையாலும் –

2-அநியத விவிதாப் யர்ச்சநாத் -எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே -அதிகாரி நியமம் இல்லாதபடி
பஹு விதிமான பூஜனத்தை யுடைத்தாகையாலும்

3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்புமில் ஈசன் -இது யோக்யம் -இது அயோக்யம் -என்னாதே நாம் செய்கிறது
அல்பமானாலும் அத்தாலே ப்ரீதனாகையாலும் –

4-ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத் -வணங்கி வழிபடும் ஈசன்-பிரஹ்வீ பாவத்தால் தானே ஆவர்ஜிக்கப் படுமவனாகையாலும்

5–ஸ்வ விஷய நியதேஷ் வாதராத் -உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்
இடத்திலே ஆதர யுக்தனாகையாலும்

6–ஸ்வாது பூம்நா -அமுதிலும் ஆற்ற இனியன் -அத்யந்த போக்யனாகையாலும்

7-பாதா சக்த ப்ரசக்தேஸ் -தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே-தன் திருவடிகளைத் தலையாலே வணங்கினவர்கள்
இடத்திலே மிகவும் பிரசாதத்தைப் பண்ணுமவனாகையாலும் –

8-சக்ருது பசத நே மோக்ஷணாத்-அவனைத் தொழுதால் இத்யாதி -ஒருகால் உபசத்தி பண்ணினார்க்கு விரோதி நிரசன பூர்வகமாக
அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கையாலும்

9-தர்ம ஸவ்ஸ் த்யாத்-தருமவரும் பயனாய்-தர்மங்களினுடைய பரம பல ரூபனாய் இருக்கையாலும்

10-ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -விரோதிகளை நிரசிக்கும் இடத்தில்
ஒரு க்ஷணத்தில் தானே போக்குகையாலும் –

ஸூகர பஜநதாம் மாதவஸ் யாப்யதத்த– ஸ்ரீ எம்பெருமான் ஸ்வாராதன் -என்று பரிவதில் ஈசனை என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளுகிறார் என்கிறார் –

ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –

1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-

2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –

3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –

4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –

5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-

6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –

7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்

8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –

9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்

10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற

ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –

——————

ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்

1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்

2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்

3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்

4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்

5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்

6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்

7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்

8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்

9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –

10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற

நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத்
-9-இவையும்

1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –

2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-

3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –

4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –

5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்

6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்

7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –

8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்

9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –

10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்

ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –

விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்
விகணந ஸூலபம்
வ்யக்த பூர்வ உபகாரம்
ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும்
ஸ்வயமுத யஜூஷம்
பந்த மாத்ரோபயாதம்
சிந்தாஸ் துத்யாதி லஷ்யம்
நத ஜன சததஸ் லேக்ஷிணம்
தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே -10-பொரு மா நீள்

1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்-ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணித்
திரு வுலகு அளந்து அருளினை போது அத்யாச்சர்யமாக எல்லாராலும் காணப்படுமவனாய்

2-விகணந ஸூலபம் -எண்ணிலும் வரும் -ஓன்று இரண்டு தொடங்கி இருபத்தஞ்சு இருபத்தாறு -என்று சொன்னால்
இருபத்தாறாவாவன் நான் என்று தன்னைச் சொன்னதாகக் கொண்டு ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –

3-வ்யக்த பூர்வ உபகாரம் எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –
இன்று உபகரிக்கை இன்றிக்கே பூர்வ பூர்வர்களுக்கும் உபகாரகனாய்

4-ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும் -நெஞ்சமே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கொண்டாய் -மனஸ்ஸூ
தன்னிடத்தில் தானே ஐகாக்ர்யத்தை பஜிக்கைக்கு ஹேது பூதனுமாய் –

5-ஸ்வயமுத யஜூஷம்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -எண்ணிக்கை இன்றியே தானே வருவானுமாய் –

6-பந்த மாத்ரோபயாதம்-தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் ஈசன் -மாதா பிதாக்களைப் போலே
சம்பந்த மாத்திரத்தாலே வந்து உதவுமவனாய் –

7-சிந்தாஸ் துத்யாதி லஷ்யம் -சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -சிந்தா ஸ்துதி ப்ரணாமங்களுக்கு லஷ்யமுமாய்

8-நத ஜன சததஸ் லேக்ஷிணம்-இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் -ஆஸ்ரிதரை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிவில்
தரிக்க மாட்டாதவனாய் –

9-தர்சி தார்ச்சம் -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற -அதுக்கு உதாஹரணமாக தான் திருக் குறுங்குடியிலே
நின்று அருளின படியைக் காட்டுமவனாய் –

10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறவாதபடி மனசிலே ஜாகரூகனுமாய் இருக்கிற
ஸ்ரீ பெருமாளை அனுசந்தித்து

ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே – தன்னைத் தந்த கற்பகம் -என்கிறபடியே தன்னை அனுபவிக்க விதரணம் பண்ணுகிற
அவனுடைய மஹா உதார குணத்தால் -பொரு மா நீள் படை -என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அதி ஸந்துஷ்டரானார் -என்கிறார் –

—————

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம் -11-

இப்படி பிரதம சதகத்தில் பத்து சதகங்களாலும் பிரதி பாதிதங்களான அர்த்தங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார்
1-ஆதா வித்தம் பரத்வாத்–சர்வ ஸ்மாத் பரனாகையாலும்

2-அகில சமதயா–சர்வ சமனாகையாலும்

3-பக்த ஸுலப்ய பூம்நா–ஆஸ்ரித ஸூலபனாகையாலும்

4-நிஸ் சேஷாகஸ்சஹத்வாத்–சர்வ அபராத சஹனாகையாலும்

5-க்ருபண ஸூகட நாச்சாக்ய–ஸூ சீலனாகையாலும்

6-சம்ராத நத்வாத் –ஸ்வா ராதனாகையாலும்

7-ஸ்வாது ஸ்வோபாச நத்வாத்–ஸூக ரூப உபாசகனாகையாலும்

8-ப்ரக்ருதி ருஜு தயா–ருஜு பிரகிருதி ஆகையாலும்

9-சாத்ம்ய போக ப்ரதத்வாத் –சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கையாலும்

10-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

திராவிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ தேசிகன் –

சேவ்யத்வம் -சேவா யோக்யாக -முதல் பத்தால் –
அதி போக்ய தனு
சுபாஸ்ரைய
சர்வ போக்யாதிசய
ஸ்ரேயா தத் ஹேதுதாதா
பிரபதன ஸூ லபன்
அநிஷ்ட நிவ்ருத்தி சீலன்
பக்தா சந்தானு வர்த்தி 
நிர்பதிக ஸூ ஹ்ரூத்
சத் பதவியியாம் சகாயம்
ஸ்ரீ மான்
சர்வ அதிகாரமான  உபநிஷத்

சதகார்த்தங்களுக்கு சங்கதி –
1-பஸ்யன் உபாயம்
2-பிரபுமிக பரம பிராப்ய பூதன்
3-கல்யாண உதார மூர்த்தி -முடிச்சோதி
4-ஐஸ்வர் யாத் சதுர்த்த்யே –விஷ மது துலய-அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட் -5-10-அனிதர கதிதாம்

ஆத்ய சதகே
பரம் –
நிர்வைஷம்யம்
ஸூ லபம்
அபராத பிரசகனம்
ஸுசீலம்
ஸுவ ஆராதனம்
சரச பஜனம் 
ஸு ஆர்ஜவ
ஸூ சாதமா ஸுஆனந்த பரதம்
அநக விஸ்ரானன பரம் –குற்றம் இல்லாமல் கொடுத்து -ஹேது இல்லாமல்
முகுந்தம் -ஆத்ய சதகே முனி

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
22-பாசுரங்களால் – ஸ்ரீ பாஷ்ய அர்த்தம் –காரணத்வம் -அபாத்யத்வம்
உபாயத்வம் -பிராப்யத்வம்
த்விகாப்யம் -துரதிகமனம்-த்வய அஷ்ட அங்க்ரி பாதம் -16 பாதங்கள்
தூரதி கமன-அந்த்யாந்தா மீமாம்ஸா -சுருதி சிரசி தத்வம்
தத் ஆதௌ-அதிக விம்ச -22 பாசுரங்களால் –
கிருபா –
சரீரா சாஸ்திரம் -ஜகத் காரணத்வம் முதல்
தத் அபாத்யத்வம் -அவனே -இரண்டாவது
முமுஷு உபாச்யத்வம்
முக்த பிராப்யத்வம்
முதல் 6 பாசுரங்கள் -காரணத்வம் -முதல் அத்யாயம்
மேல் 5 -த்வீதிய அத்யாயம் -வேறு யாரும் காரணம் இல்லை –
2-1—2-9- திருதிய -உபாயத்வம் -புல்கு பற்று அற்றே
2-10-வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -4 அத்யாயம் –

பரத்வாதி -முதலான -10-குணங்கள் 
சேவா யோக்யம் பிரதம சதகே வீஷ்ய வரதம் –
தமேவ -போக்ய-அனுபவிக்கத் தக்கவன் –
வரிக்கத்தக்கவன் –
உடையார் ஸ்ரீ பாத முதலிகள் -பேர் அருளாளனையே பாடிற்று -அயர்வற அமரர்கள் அதிபதி-
பல இடங்களிலும் நித்ய ஸூரி நிர்வாஹத்வம் சொல்லி-தேவாதி ராஜனையே –
திரு வேங்கடாசலம் திருக் குறுங்குடி வாசஸ் ஸ்தானம் பேர் அருளாளானுக்கும் உண்டே -என்பாராம்
நெஞ்சுக்கு உபதேசிக்கும் படியே நம்மாழ்வார் சேவை சாதிக்க –ஞான முத்தரை திரு மார்புக்கு
கலியன் -இடது திருக்கை மடியிலும் வலது திருக்கை -மாற்றி செய்ய -முடியாமல் –
திருமாலை ஆண்டான் அருளிச் செய்தார் -விஸ்மிதராய்-ஆழ்வார் ஆவேசித்து -இங்கனே பிரதிஷ்டை செய்ய சொல்லி -தேவ பிரான் அசாதாரண திரு நாமம் அன்றோ இவனுக்கு –

—————————————————-

திருவாய் மொழி நூற்றந்தாதி

அவதாரிகை –
இதில் சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளில் தொழுது எழப் பாராய் என்று பரத்வ பிரதிபாதகமாய் இருக்கிற
ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய் மொழி அடியாகவே
சேதனர்க்கு மோஷ லாபம் என்னும் அர்த்தத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரிபூர்ணனாய்
சர்வ ஸ்மாத் பரனாய்
ஸ்ரீ யபதியாய்
அபௌருஷேயமான ஸூ திருட பிரமாணமான ஸ்ருதிகளால் பிரதி பாதிக்கப் பட்டுள்ள
எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி
அவன் பிரசாதத்தாலே
சாஷாத் கரித்து
அனுபவித்து
அனுபவித்த படியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ஏவம் விதனானவன் திருவடிகளிலே
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படி அடிமை செய்து உஜ்ஜீவி என்று
தம் திரு உள்ளத்தை அனுசாதித்து அருளிச் செய்த
முதல் திருவாய் மொழியின் அர்த்தத்தை அனுவதித்து
உயர்வே பரன்படியாலே -அருளிச் செய்கிறான் என்கை-

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு—–1

வியாக்யானம் –

உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு –
பரத்வத்தில் பரத்வம் ஆயிற்று இத் திருவாய் மொழியில் பிரதி பாதிக்கப் படுகிறது
ஆமவை யாயவையாய் நின்றவர் -என்றும்
முழுதுண்ட பரபரன் -என்றும்-
அளி பொறை யாய் நின்ற பரனடி மேல்-என்றும்
பரத்வத்தை ஆயிற்று இதில் சொல்கிறது
உயர்வே பரன் படி ஆவது –
தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -என்றும்
பர பராணாம் பரம -என்றும்
சொல்லுகிற சர்வ ஸ்மாத் பரத்வத்தையாயிற்று
உயர்வற உயர் நலம் -என்று அருளிச் செய்த அத்தை அடி ஒற்றி ஆயிற்று இவர் இப்படி அருளிச் செய்கிறது –
உயர்வே –என்கிற அவதாரணத்தாலே
அல்லாதார் உயர்திகளைபோலே தாழ்கை அன்றிக்கே
மேல் மேல் என என்றும் உயர்தியாய் இருக்கை-
நேதி நேதி -என்றும்
நோத்யமதோ அதி சேரதே -என்றும்
நலத்தாலும் உயர்ந்து உயர்ந்து அப்பாலன் -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும்
தேவர்க்கும் தேவாவோ -என்றும் -சொல்லக் கடவது இ றே
அன்றிக்கே
உயர்வு -என்று உச்சாரமாய்
 -என்று ஏய்கையாய் பொருந்துதலாய்
அது அல்லாருக்குப் போலே அநனுரூபமாய் இருக்கை அன்றிக்கே
ஏய்ப்பரன் என்று -அனுரூபமாய் பொருந்தி இருக்கிற பரன் என்றுமாம்
இப்படி உயர்தியாய் இருக்கிற பரன் படியாவது பரத்வைகாந்தமான ஸ்வ பாவம்
திவ்யம் ததாமி தே சஷூ பஸ்யமே யோகம் ஐஸ்வர்யம் -என்னும்படி
மயர்வற மதி நலம் அருளி
அவன் பிரசாதத்தாலே காட்டக் கண்டு
இப்படி அவன் காட்டினவைகள் எல்லா வற்றையும்-

உள்ளது எல்லாம் தான் கண்டு –பாட்டு தோறும் காட்டியவற்றை  தொகுத்து அருளி

உயர் வேத நேர் கொண்டு உரைத்து –
அபௌ ருஷேயமாய் -நித்தியமாய் -நிர்தோஷமாய்
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரன்களால் அழிக்க ஒண்ணாது ஆகையாலே
சர்வ பிரமாண உத்கர்ஷமான ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்தது –
அதாவது –
1–சோஸ்நுதே சர்வான் காமான் -என்று கல்யாண குண யோகத்தை நலமுடையவன் –என்றும்
2–தாது பிரசாதாம் மகிமானம் -என்கிற கிருபா வைபவத்தை -அருளினான் -என்றும்
3–தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ர்யயா-என்கிற விக்ரஹ விபூதி யோகத்தை
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன் துயர் அறு சுடரடி -என்றும்
4–சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்–ஆனந்தமய–ஆனந்தோ ப்ரஹ்ம –
என்கிற திவ்ய ஆத்மா ஸ்வரூப வை லஷண்யத்தை-உணர் முழு நலம் -என்றும்
5–பாதோச்ய விசவா பூதானி த்ரிபாத ச்யாம் ருதந்தி -என்று உபய விபூதியும் சொல்லி
பதிம் விச்வச்ய -என்றும் சொன்ன அந்த உபய விபூதி நாதத்வத்தாலே
லீலா விபூதியும் அவனது என்னுமத்தை -இலனது -தொடங்கி தர்சிப்பித்தும்
6–சர்வம் கல்விதம் ப்ரஹ்ம–நேஹானா நாஸ்தி கிஞ்சன —ச ஆத்மா அங்கான் யன்யாதே வதானி -என்கிற
சர்வ பிரகாரத்வத்தையும் சர்வ அந்தர்யாமித்வேன சர்வ ஸ்மாத் யர்த்தத்தையும்–நாமவன் —அவரிவர் ––என்கிற பாட்டுக்களிலே பிரகாசிப்பித்தும்
7-தேன வினாத்ருணா க்ரமபி நசலதி – யயா ஈச்வரஸ் சர்வ பூதாநாம் க்ருத்யேசேர்ஜூன திஷ்டதி
பிராமபன் சர்வ பூதா நியந்த்ராரூடா நிமாயயா -என்கிற பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் தத் ஆதீனம் என்னுமத்தை நின்றனர் இருந்தனர் -என்றும்
8–யச்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிற சர்வ சரீரத்வத்தையும்
9–அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்கிற சர்வ வ்யாப்தியையும்
10–ஹ்ரீச்சதே லஷ்மீஸ் ச பத்ன்யௌ-என்கிற ஸ்ரீ யபதித்வத்தையும்–திட விசும்பு –என்ற பாட்டாலே மூன்றையும் காட்டியும்
11–தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் தன தேவதானாம் பரமஞ்ச தைவதம் – நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்தவன் நாராயண பர
என்ற சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்து திரி  மூர்த்தி சாம்யத்தையும் நிவர்த்தித்த படியை -சுரர் அறி வரு -நிலையாலே ஸூ வ்யக்தமாயும்
12-வேத பாஹ்யனான சூன்யவாதியை -உளன் எனில் -இத்யாதிகளால் நிரசித்தும்
13—அணோர் அணியாந-என்கிற வ்யாப்தி சௌகர்யத்தை பரந்த தண் பரவையிலே பேசியும்
இப்படி வேத மார்க்க அனுசாரியாய் ஆயிற்று முதல் பாட்டு துடங்கி அருளிச் செய்தது
அத்தை பற்றி இ றே உயர் வேத நெறி கொண்டு உரைத்து -என்று இவர் அருளிச் செய்தது –
சுடர்மிகு ஸ்ருதி என்று இ றே ஸ்ருதி பிரமாணத்தை அங்கீ கரித்து அருளிற்று
அஹந்தா ப்ரஹ்ணச் தஸ்ய -என்று ஸ்வரூப அந்தர்பாவம் உண்டாகையாலே
ஸ்வரூபம் புக்க இடத்தே
ஸ்வரூப நிரூபக பூதையான பிராட்டியும் உண்டாக குறை இல்லை –

மயர்வேதும் -ஞான அனுதயம் அந்யதா ஞானம் விபரீத ஞானம் ஒன்றுமே இல்லாமல்

மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் –
பரோபதேச கர்ப்ப ஸ்வ அனுபவ பிரகாசகமான ஸ்ரீ ஸூ க்தியாலே
மனுஷ்ய ஜன்மாக்களாய் உள்ளவர்களை வாழ்விக்கும் —
வாழ்விக்கை யாவது –
பகவத் அனுபவ ஏக பரராககி-சந்த மேநம் -என்னும் படி பண்ணுகை
தம்மைத் தொழுது எழப் பண்ணினாப் போலே –

மாறன் சொல் -வேராகவே விளையும் வீடு–
அதாவது
1–இப்படி சகல ஜீவ உஜ்ஜீவன தத் பரரான வாழ்வார் திவ்ய ஸூக்தியடியாக பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது அடியாக மோஷ லாபம் என்றபடி
–ஸூக்தி மூலமாக இ றே முக்தி பலிக்கும் இறே
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி
அன்றிக்கே
2–ஆழ்வார் திரு நாமம் அடியாகவே -மாறன் சொல்-மோஷம் சித்திக்கும் என்கிறார் ஆகவுமாம்
தத் உக்தியாலே யாதல்
தத் விஷயமான உக்தியாலே ஆதல் -ஆகலாம் இறே –
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்னக் கடவது இறே –

————–

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

————————————————————————–

அவதாரிகை –

இதில் தம்முடைய திரு உள்ளம் போலே
அனுபவத்துக்குத் துணையாய்
திருந்தும்படி சம்சாரிகளைக் குறித்து பரோபதேசம் பண்ணுகிற
பாசுரத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –அனுவதித்து -என்றுமாம் –
அது எங்கனே என்னில்
கீழ் எம்பெருமான் உடைய பரத்வத்தை அனுபவித்தவர்
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே
போதயந்த பரஸ்பரம் -பண்ணி அல்லது தரிக்க மாட்டாதே துணைத் தேட்டமாய்த்து
ஈடானாரை சம்சாரத்தில் காணாமையாலே
அவர்களைத் திருத்தி யாகிலும் சேர்த்துக் கொள்வோம் என்று
பரோபதேச பிரவ்ருத்தராய்
பகவத் வ்யதிரிக்த விஷயங்களின் தோஷ பாஹூள்யத்தையும்
பகவத் குண வைலஷண்யத்தையும் உபதேசியா நின்று கொண்டு
அப்ராப்த விஷயங்களை விட்டு
பிராப்த விஷயமான எம்பெருமானை பஜியுங்கோள்-என்கிற
வீடுமின் முற்றத்தின் அர்த்தத்தை
வீடு செய்து இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை-

————————————————————————–

வியாக்யானம்-

வீடு செய்து மற்றெவையும் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -என்னும்படி
பரிக்ரஹங்கள் அடைய பரித்யஜித்து –

வீடு செய்து –
விடுகையைச் செய்து –

மற்றெவையும்
பகவத் வ்யதிரிக்தமாய் இருந்துள்ளவை எல்லாவற்றையும் நினைக்கிறது
பஜன விரோதிகளாய்
அஹங்கார ஹேதுக்களாய்
உள்ளது அடங்கலும் முமுஷூவுக்கு த்யாஜ்யம் இ றே
வீடுமின் முற்றவும் வீடு செய்து –என்றத்தைப் பின் சென்ற படி –
மின்னின் நிலையில் மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்தை இறை யுன்னுமின் நீரே -என்றும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -என்றும்
அது செற்று -என்றும்
உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து -என்றும்
இப்படி சதோஷமாய் இருக்குமது எல்லாம் த்யாஜ்யமாய்
அத்தால்
சகுணமாய் இருக்குமது உபாதேயமாய் இ றே இருப்பது
அத்தைச் சொல்லுகிறது –

மிக்க புகழ் நாரணன் தாள் –
ஈறில வண் புகழ் நாரணன் -என்றத்தைப் பின் சென்றபடி
சம்ருத்தமான கல்யாண குண சஹிதனாய்
சர்வ ஸ்மாத் பரனான
நாராயணன் யுடைய சரணங்களை –

நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் –
வீடு செய்மின்
இறை யுன்னுமின் நீரே
என்று நாடாகவே ஆஸ்ரயிக்கும் படி இ றே இவர் உபதேசிப்பது
அத்தை நினைத்து இறே நாடு –நலத்தால் அடைய –என்கிறது

நலத்தால் அடைகை ஆவது
எல்லையில் அந்நலம் புக்கு -என்றும்
அவன் முற்றில் அடங்கே -என்றும்
ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே -என்றும்
இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
ஒடுங்க அவன் கண் -என்றும்
அங்கனா பரிஷ்வங்கம் போலே அபி நிவேசத்தாலே ஆஸ்ரயிக்கும் படியை விதித்த படி -என்கை –
இப்படி லோகத்தில் உண்டான ஜனங்கள் பக்தியாலே பஜிக்கும் படி நன்றாக உபதேசித்து அருளும் –

உபதேசத்துக்கு நன்மையாவது –
நிர் ஹேதுகமாகவும்
உபதேச்ய அர்த்தங்களில் சங்கோசம் இன்றிக்கே உபதேசிக்கையும்
என்றபடி –

திருவாய் மொழி தோறும் திரு நாமப் பாட்டு உண்டாகையாலே
அத்தையும் தத் பலத்தோடே தலைக் கட்டாக அருளிச் செய்கிறார் –
நீடு புகழ் வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப் –
அதாவது
சம்சாரிகள் வைமுக்கியம் பாராமல்
பரோபதேசம் பண்ணுகையாலே
நித்யமுமாய்
நெடுகிப் போருகிற யசஸை யுடையவராய்
தர்ச நீயமான
உதாரமான
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் -என்னுதல்
அன்றிக்கே
வண்மை-வண் தென் குருகூர் வண் சடகோபன் -என்னும்படி -ஆழ்வாருக்கு விசேஷணம் ஆதல்
இப்படியான தம் ஔதார்யத்தினாலே
இந்த மகா பிருத்வியில் உண்டானவர்கள் எல்லாரும்
பகவத் பஜனத்தாலே சத்தை பெற்று வாழு படி –
இடைக்காதர் வள்ளுவர் ஔவையார் -குரு முநிவர் -பாசுரங்களே பீஜம் -என்கிறார்கள்

பண்புடனே பாடி யருள் பத்து-
பண்பு -ஸ்வபாவம்
தம்முடைய கிருபா ஸ்வபாவத்திலே யாதல்
ஔதார்ய ஸ்வபாவத்திலே ஆதல்
பரப்பறப் பாடி அருளினது பத்துப் பாட்டாயிற்று
சேரத் தடத் தென் குருகூர் சடகோபன் சொல் சீர்த்தொடை
ஆயிரத்தோர்த்த இப்பத்து -என்றத்தை பின் சென்றது
பாட்டுக்கு கிரியையும் பத்துக்கு கருத்தும் -என்கையாலே
பத்துப் பாட்டுக்கும் உயிர்பாட்டு பிரதானமாய் இருக்கும்-
பாட்டுக்குக் கிரியையும் பத்துக்குக் கருத்தும் போலே நூற்றுக்கு உபதேசப் பத்து –ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -216
கிரியை -வினைச் சொல்
அந்த நிதானப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கும் மற்றப் பாட்டு அடங்கலும்
இது இந்த திருவாய்மொழி திவ்ய பிரபந்தத்துக்கு எல்லாம் உள்ளது ஓன்று இ றே
வீடுமின் –என்று- த்யாஜ்ய உபாதேய- தோஷ குண -பரித்யாக சமர்ப்பண- க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து -என்று ஆச்சார்ய ஹிருதயத்திலே -சூர்ணிகை -219–நாயனாரும் அருளிச் செய்தார் -த்யாஜ்யம் -வீடு மின் முற்றவும் -தோஷம்- மின்னின் நிலையில -பரித்யாகம் நீர் நுமது -என்று பிரித்து -மேலே –
உபாதேயம் வீடு உடையான் -குணம் எல்லையில் அந்நலம்-சமர்ப்பணம் -இறை சேர்மினே -என்று கொள்ள வேண்டும்
இத்தை பக்தி பரமாக யோஜித்து-பாஷ்யகாரர் பாஷ்யம் தலைக் கட்டி அருளின பின்பு
பத்தி பரமாகவே யோஜித்து க்ரமத்தைப் பற்ற வாயிற்று
ஆச்சார்யர்கள் எல்லாரும் அப்படியே யோஜிததார்கள்-இவரும் அப்படியே அருளிச் செய்தார்

——

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மா நிலத்தீர் -மூண்டவன் பால் -பத்தி செய்யும்
என்று உரைத்த மாறன் தன் இன் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை——–3-

அவதாரிகை –

இதில் சௌலப்யத்தை யுபதேசித்த திவ்ய ஸூகதியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
சர்வ ஸ்மாத் பரனாய் அதீந்த்ரியன் ஆனவனை ஷூத்ரரான நாங்கள் கண்டு
பஜிக்கும் படி எங்கனே என்று வெருவுகிற சம்சாரிகளைக் குறித்து
பரனானவன் தானே அதீந்த்ரியமான வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கிக் கொண்டு
இதர சஜாதீயனாய் சம்சாரிகளுக்கும் பஜீக்கலாம் படி
தன் கிருபையாலே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து ஸூலபனான பின்பு
பஜிககத் தட்டில்லை என்கிற
பத்துடை அடியவரில் -அர்த்தத்தை
பத்துடையோர்க்கு -என்று அருளிச் செய்கிறார் என்கை –

வியாக்யானம் –

பத்துடையோர்க்கேன்றும் பரன் எளியனாம் பிறப்பால் –

பத்துடையோர்க்கு -பக்திமான்களுக்கு
பத்துடையோர் -நிதி யுடையோர் என்னுமா போலே
ஆசா லேசா மாதரத்தையே போரப் பொலிய எண்ணி இருக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே அருளிச் செய்கிறார்
பத்துடை அடியவர் -என்றார் இ றே –
ஏவம் வித பக்தி உக்தருக்கு

என்றும் –
சர்வ காலத்திலும் –

பரன் –
யாவையும் யாவரும் தானாம் அமையுடை நாரணன் –
மலர் மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்-
என்றும் சொல்லப் படுகிற சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன்

எளியனாம் –
வாயு ஸூநோ -என்றும்
இமௌஸ்ம -இத்யாதிப் படியே -எளியனாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் மத்துறு கடை வெண்ணெய் களவினில்

உரவிடை ஆப்புண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -எத்திறம்
என்னும்படி கட்டவும் அடிக்கவும் படி எளியனாம் -ஸூலபனாம் –

அது எத்தாலே என்னில் –
பிறப்பால் –
அவதாரத்தாலே
பல பிறப்பாய் ஒளி வரும் என்றத்தை நினைக்கிறது –

முத்தி தரும் –
அவதரித்த இடத்தே
பஷிக்கும்
ரஷஸ் ஸூக்கும்
மோஷத்தைக் கொடுக்கும் –
வீடாம் தெளிவரும் நிலைமையது ஒழிவிலன் -என்றத்தைப் பின் சென்ற படி –

மா நிலத்தீர் –
அவன் அவதரிக்கைக்கு ஈடான இந்த மகா பிருதிவியில்
உள்ளவர்களே –

மூண்டவன் பால் -பத்தி செய்யும்-
விதி ப்ரேரிதராய் அன்றிக்கே அத்யந்த
அபி நிவேச யுக்தராய்
பரத்வ சௌலப்யத்வாதி குண விசிஷ்டனானவன் திருவடிகளிலே
பக்தியைப் பண்ணுங்கோள்-

என்று உரைத்த-
என்று அருளிச் செய்த –
இத்தால் -நன்று என நலம் செய்து அவனிடை -என்றத்தை
அனுபாஷித்த படி –

பத்தி செய்யும்-என்று உரைத்த-மாறன் தன் இன் சொல்லால் போம் –
அவதார சௌலப்யத்தை முன்னிட்டு
ஆஸ்ரயிங்கோள் -என்று ஆழ்வார்
ஸ்ராவ்யமாக அருளிச் செய்த
இத் திருவாய் மொழியின் அனுசந்த்தாநத்தாலே
நிவ்ருத்தமாம் –

நெடுகச் சென்ற பிறப்பாம் அஞ்சிறை-
அநாதி காலம் தீர்க்கமாய்ப் போந்த
ஜன்மம் ஆகிற குரூரமான சிறை –
அறுவர் தம் பிறவி அஞ்சிறை -என்றத்தை அனுவிதாயானம்
பண்ணின படி –
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி சோர்ஜூந-என்னக் கடவது இ றே-

————

அஞ்சிறைய புட்கள் தமை யாழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என விரந்து-விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்-————–4-

அவதாரிகை –

இதில் அபராத சஹத்வத்தை அறிவியுங்கோள் -என்று
தூத ப்ரேஷணம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அவதார சௌலப்யத்தை யுபதேசித்து
அவனை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறர்க்கு உபதேசித்த இடத்தில்
அதில் அவர்கள் விமுகராய் இருக்கையாலே அவர்களை விட்டு
குண சாம்யத்தாலே கிருஷ்ணாவதாரத்தோடு போலியான த்ரிவிக்ரம அவதாரத்தை அனுசந்தித்து
தச் சரணங்களை திரிவித கரணங்களாலும் அனுபவிக்க பாரித்த இடத்தில்
அது முற்காலத்திலே யாய் தாம் பிற்பாடர் ஆகையாலே
பாரித்த படியே அனுபவிக்க பெறாமல் கலங்கின தசையில்
மதியினால் குறள் மாணாய உலகு இரந்த கள்வரான
அத்தலைக்கு அறிவிக்க வேணும் என்று
கடகரை அர்த்தித்துச் சொல்லும் க்ரமத்தை
கலந்து பிரிவாற்றாளாய் தலை மகள் -என் அபராதத்தைப் பார்த்து பிரிந்து போனவருக்கு
கிங்கோப மூலம் மனுஜேந்திர புத்திர -என்னும்படி
தம் அபராத சஹத்வத்தையும் ஒரு கால் பார்க்க கடவது அன்றோ என்று சொல்லுங்கோள் என்று
தன் உத்யானத்தில் வர்த்திக்ற பஷிகளை
தன் பிராண ரஷணத்துக்கு உறுப்பாக தூது விடுகிற பேச்சாலே
சொல்லச் சொல்லுகிற –அஞ்சிறைய மட நாரையில் -அர்த்தத்தை
அஞ்சிறைய புட்கள் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் —

வியாக்யானம்–

அஞ்சிறைய புட்கள் தமை-
விலஷணமான பஷங்களை உடைய பஷிகளை
அஞ்சிறைய மட நாராய் -என்று இ றே அருளிச் செய்தது –

புட்கள் -என்றது –
இனக் குயில்காள் –
மென்னடைய அன்னங்காள் –
நன்னீலமக அன்றில்காள் –
வண் சிறு குறுகே-
ஆழி வரி வண்டே –
இளங்கிளியே
சிறு பூவாய் –
என்று இப்படி அருளிச் செய்தவற்றை —

யாழியானுக்கு நீர் –
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் மடலாழி யம்மானை -என்றத்தை கடாஷித்த படி –
முதல் தூதுக்கு விஷயம் வ்யூஹம் இ றே –

நீர் –
வ்யூஹத்தையும் பேதித்துக் காண வல்ல நீங்கள் –

என் செயலைச் சொல்லும் என விரந்து-
என் செயலை தர்சிப்பியுங்கோள் என்று அர்த்தித்து –

என் செயலாவது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் -என்றும்
என்நீர்மை -என்றும்
நன்னீர்மை இனி அவர் கண் தங்காது -என்றும்
மல்கு நீர் கண்ணேர்க்கு -என்றும்
அவராவி துவரா முன் -என்றும் –
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும்
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்தமை –
என் பிழையே நினைத்து அருளி
அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
என்று ஒரு வாய்ச் சொல் -என்று
அவன் அபராத சஹத்வத்தை ஆவிஷ்கரித்ததும் இதில் ஸூசிதம் –
இப்படி ஆற்றாமையை ஆவிஷ்கரித்து –
விஞ்ச நலங்கியதும் –
மிகவும் நலம் குலைந்ததும்

மாறன் இங்கே நாயகனைத் தேடி மலங்கியதும் பத்தி வளம் –
ஆழ்வார் இங்கே
இவ்விடத்திலே
கூப்பீடு கேட்கும் இடமான கடலிலே
அடலாழி அம்மானான நாயகனைத் தேடி –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்று மலங்கியதும்
பக்தி அதிசயம் –
மதி எல்லாம் உள் கலங்கின பக்தி பிரபாவம் –

வளம் -பெருமையும் சம்பத்தும்
நலங்குதல் -நலம் கேடு
மலங்குதல் -திண்டாட்டம் –

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—————-5-

ஊடுருவ  ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து

—————————————————————————————————————————————-
-அவதாரிகை –

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக
சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை
அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து
ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று
த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி
தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை
வளம் மிக்க -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————————————————————————————–

வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை –மன்னுயிரின் தண்மை –
அதாவது –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரி நிர்வாகத்தால் வந்த
சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய்
அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை
கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –

உளமுற்று –
எம்பெருமான் யுடையவும்
தம்முடையவும்
உத்கர்ஷ அபகர்ஷங்கள்
திரு உள்ளத்திலே பட்டு

அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில்
நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி-1-5-1-
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் -1-5-7-ஆராய்ந்து
இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –

தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்
ந கல்வத்யைவ
யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே
நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை
பண்ண எண்ணுகிற ஆழ்வாரை

நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும்
ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விச்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை

மால் –
தன் செல்லாமையைக் காட்டி
ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் –
நெடுமாலே –
மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –

நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான
நித்ய விசதக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-

பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ச்நிக்தநோபாதியாக ச்நேஹித்து மங்க விடாமல்
அலாப்ய லாபமாக ஹர்ஷத்துடனே
சங்கதாராக பண்ணினான்
திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி
இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இறே-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

—————————————————–
அவதாரிகை –

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்
ஸ்ரீ யபதியான பரி  பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்
ஷூத்ர உபகரணான இவனால்
பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை –பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————

வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் –
ஹேய பிரத்ய நீக கல்யாணை
கதானான சர்வேஸ்வரன் யுடைய
ஸ்வ ஆராதன ஸ்வ பாவத்தை –

பண்புடனே பேசி –
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம்
ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி –புரிவதும் புகை பூவே –
என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே
பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-
வாமனன் சீரை இராமானுசன் உரைத்தான் -வாமனன் சீலன் ராமானுசன் -அவன் சீலம் இவருக்கும் என்றதுபோலே

அரியனலன் ஆராதனைக்கு என்று –
இப்படி பத்ர புஷ்பாதிகளாலே –
ஸ்வ ஆராதனாகையாலே ஆஸ்ரயிக்கும் இடத்தில்
சபர்யா பூஜிதஸ் சமயக் -என்னும்படி-சபரிக்கு எளியவன் -அன்றோ –
ஸபர்யைக்கு அருமை இல்லாதவன் என்றபடி -ச பர்யை-நல்ல கைங்கர்யத்துக்கு எளியவன் என்றுமாம் –

உரிமையுடன் ஓதி யருள் மாறன் –
அந்தரங்கமான
சிநேகத்தோடு அருளிச் செய்த ஆழ்வார்-திருக்கைத் தல சேவை பராங்குச நாயகிக்கு மட்டுமே உண்டே
அதாவது –
எது ஏது என் பணி என்னாது அதுவே யாட் செய்யுமீடே -என்றும்
உள் கலந்தோர்க்கு ஓர் அமுதே -என்றும்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்றும்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-என்றும்
அவனைத் தொழுதால் -என்றும்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றும்
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் செய்தவை -என்கை –

ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –
இப்படி உபதேசிக்கையாலே
இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்
பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை
ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

————

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் -அறவினியன்
பற்றும் அவர்க்கு என்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே ஓடு ————7-

இதில் ஆஸ்ரயண ரச்யதையை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஆராதனத்தில் அல்ப சந்துஷ்டதையாலே
அவனுக்கு செய்ய வேண்டியது பணி இல்லையே யாகிலும்
உள்ளது தேவையாய் இருக்கும் அன்று
ஆஸ்ரயணீயம் கூடாதே என்ன
ஸ்மர்த்தவ்ய விஷய சாரச்யத்தாலே
பல தசையில் போலே ஆஸ்ரயணம் தசையே பிடித்தும்
ரசிக்கும் விஷயம் ஆகையாலே
அபிமத விஷயத்தில் பரிமாற்றம் போலே
ஆஸ்ரயணம் அத்யந்தம் சரசமாய் இருக்கும் என்கிற
பிறவித் துயரில் -அர்த்தத்தை
பிறவி யற்று -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————–

வியாக்யானம்–

பிறவி யற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும் திறம் அளிக்கும் சீலத் திருமால் –
ஜன்ம சம்பந்தம் அற்று
நிரதிசய போக்யமான பரமாகாசத்திலே
நிரதிசய ஆனந்தத்தை அனுபவிக்கும் படி
அனுஹ்ரகிக்கும் ஸ்வ பாவனான
ஸ்ரீ யபதி யானவன் –
தருமவரும் பயனாய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றத்தை அனுபாஷித்து அருளின படி –

ஏவம் விதனானவன்
அறவினியன் பற்றும் அவர்க்கு என்று-
மிகவும் சரசனாய் இருக்கும் ஆஸ்ரயிக்குமவர்களுக்கு என்று-
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்-
தூய வமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே –
என்னுமத்தை அடி ஒற்றி அருளிச் செய்த படி –

மற்றும் அவனுடைய போக்யதைக்கு அனுகுணமாகும் படி
ஆழிப் படை அந்தணனை -என்றும்
ஒண் சுடர்க் கற்றையை என்றும்
விடுவேனோ என் விளக்கை -என்றும்
பின்னும் விராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன் –என்றும்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதல் -என்றும்
அருளிச் செய்தவையும் தத் சேஷங்களாகக் கடவது –

அறவினியன் பற்றுமவர்க்கு என்று பகர் மாறன் பாதமே உற்ற துணை என்று உள்ளமே ஓடு –
இப்படி ஆஸ்ரயிப்பார்க்கு-
குணைர் விருருசே ராம-என்னும்படி
நிரதிசய போக்கினாய் இருக்கும் என்று
இத் திருவாய் மொழி முகேன அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளே
பிராப்தமான துணை என்று
நெஞ்சே
சீக்ர கதியாகச் சென்று பற்று –
முந்துற்ற நெஞ்சாய்
அங்கே  பற்றும் படி ஓடு-

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை –நாடறிய
ஒர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை-————-8-

————————-

அவதாரிகை –

இதில் ருஜூக்களோடு குடிலரோடு வாசி அற
ஆர்ஜவ குண யுக்தன் என்று அனுசந்தித்த
ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
எங்கனே என்னில் –
ஆஸ்ரயணம் அத்யந்த சரசமாய் இருந்ததே யாகிலும்
ஆஸ்ரயிக்கிறவர்கள் கரணத்த்ரயத்தாலும் செவ்வைக் கேடரான சம்சாரிகள் ஆகையாலே
பரிமாற்றத்தில் அருமை தட்டி இராதோ என்னில்
நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போலே
இவர்களுடைய செவ்வைக் கேடே தனக்கு செவ்வையாகும் படி
இன்று ஆஸ்ரயிக்கிற இவர்கள் அளவிலும் செவ்வியனாய்
பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தன்
என்கிற –ஓடும் புள்ளில் அர்த்தத்தை
ஓடு மனம் செய்கை-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-

————————————————————————————–

வியாக்யானம்–

ஓடு மனம் செய்கை உரை யொன்றி நில்லாதாருடனே கூடி –
சஞ்சலமாய்
நின்றவா நில்லா நெஞ்சும் –
அதன் வழியே பின் செல்லும் வாக் காயங்களும்
ஒருமைப் பட்டு இருக்கை அன்றிக்கே
செவ்வை கெட நடக்கும்
குடிலரோடு கூடிக் கலந்து –

நெடுமால் அடிமை கொள்ளும் நிலை —
சர்வ ஸ்மாத் பரனானவன்
அடிமை கொள்ளும் ஆர்ஜவ ஸ்வபாவத்தை –

நாடறிய ஒர்ந்து –
நாட்டார் அறியும் படி ஆராய்ந்து –

அவன் -தன் செம்மை-
தெனதே தம நுவ்ரதா-
ராமோ ராஜ்ஜியம் உபாசித்வா –
என்னும் படியான அவனுடைய ஆர்ஜவத்தை

உரை செய்த –
அருளிச் செய்த –
அதாவது
ஓடும் புள்ளேறிச் சூடும் தண் துழாய் நீடு நின்றவை யாடும் அம்மானே -என்று
நித்ய சூரிகள் திறத்தில் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அம்மனாய் -என்றும்
கண்ணாவான்-என்றும்
நீர் புரை வண்ணன் -என்னும் அளவும்
நித்ய சம்சாரிகளோடே செவ்வையனாய் பரிமாறும் ஆர்ஜவத்தையும்
அருளிச் செய்தார் -என்கை-
இப்படி உரை செய்த –
மாறன் என –
ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்த
ஆழ்வார் என்று அனுசந்திக்க –

ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை –
ஸ்வரூப அனுரூபமான
சம்பத்தாய் உள்ளவை எல்லாம் பொருந்தி
சென்று ஒன்றி நின்ற திரு -என்னும்படி
நிலை நிற்கும் –

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் —————9-

ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க

——————————————————-
அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய
சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்
தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான
நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்
அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும்
இவன் ஒருவனுடனே
சர்வ இந்த்ரியங்களாலும்
சர்வ காத்ரங்களாலும்
பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற
இவையும் அவை யில் அர்த்தத்தை
இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஆர்ஜவம் உடன் -கலந்தார் -சொல்லி –
நம்முடன் கலப்பனோ -திருஷ்டாந்தம் -தம்முடன் கலந்து -அவர்கள் ஓர் ஓர் பிரகாரம் -இங்கு போலே அங்கு இல்லையே

——————————————————————————————–

வியாக்யானம்-

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
சர்வேஸ்வரன்
ஹ்ருஷ்டனாய்
சாத்மிக்க சாத்மிக்க
சர்வ அவயவங்களிலும்
சம்ச்லேஷிக்கும் ரசம் தன்னை பெற்று
பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்-செறிப்பு -கலக்கம் -தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சராமோ வாநரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே
1-அருகல் இலானே
2-ஒழிவிலன் என்னோடு உடனே –
3-கண்ணன் என் ஒக்கலையானே-
4-மாயன் என் நெஞ்சின் உளானே
5-என்னுடைத் தோள் இணையானே
6-என்னுடை நாவின் உளானே
7-கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
8-என் நெற்றி உளானே
9-என் உச்சி உளானே –
என்று -10-தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
பிராட்டி- திருவடி  – திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று
அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை
கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் யுடைய
ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –
பொரு -என்று ஒப்பாய்
அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

பெருமாழி சங்குடையோன் பூதலத்தே வந்து
தருமாறு ஓர் ஏது அறத் தன்னை -திறமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக வென் சென்னி
வாழ்த்திடுக வென்னுடைய வாய் ————–10-

————————————————————————
அவதாரிகை –

சர்வாங்க சம்ச்லேஷம் பண்ணுகைக்கு
ஹேத்வாந்தரம் காணாமல் ‘
நிர்ஹேதுகமாகாதே -என்று நிர்வ்ருத்தர் ஆகிற படியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
எங்கனே என்னில்
இப்படி உகப்புடனே பண்ணும் சர்வாங்க சம்ச்லேஷம் ஆகிற
இந்தப் பேற்றுக்குத் தகுதியாக
இவனாலே நேர்ந்து செய்யத் தக்கது உண்டோ -என்னில்
புத்தியாதி சகல பதார்த்தங்களுக்கும் நியாமகன் ஆகையாலே
அத்வேஷம் துடங்கி
பரிகணிநை நடுவாக
பரமபக்தி பர்யந்தமாக தானே விளைவித்து
வந்து
நிர்ஹேதுகமாக அங்கீகரிக்கும்
ஸ்வபாவன் என்று அவனுடைய
நிர்ஹேதுக உபகாரத்வத்தை அனுசந்தித்து
நிர்வ்ருத்தராகிற –
பொருமா நீள் படையில் அர்த்தத்தை
பெருமாழி சங்கு டையோன் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

————————————————————————————-

வியாக்யானம்–
பெருமாழி சங்கு டையோன் பூதலத்தே வந்து –
சத்ருக்கள் மேலே பொரா நிற்கிற
திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
திவ்ய ஆயுதங்களை உடைய சர்வேஸ்வரன்
எதிர் அம்பு கோக்கிற இந்த பூதலத்திலே
சஷூர் விஷயமாம் படி வந்து
பொரு மா நீள் படை என்று துடங்கி
கரு மாணிக்கம் என் கண் உளதாகும் -என்றத்தை கடாஷித்து
அருளிச் செய்தபடி –

தருமாறு ஓர் ஏது அறத் தன்னை –
நிர்ஹேதுகமாக
தன்னை உபகரிக்கிற
உபாயத்தை –

ஓர் ஏது அறத் தன்னை -தருமாறு-
ஒரு ஹேது இன்றிக்கே
நிர்ஹேதுகமாக
பல ஸ்வரூபனான தன்னையே
தருகிற பிரகாரத்தை –

திறமாகப் பார்த்துரை செய் மாறன் –
அதாவது
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் என் கண்ணுள்ளே வரும் -என்கிற
பக்திக்கும் பரிகணைனைக்கும் ஒக்க முகம் காட்டும்
படிக்கு மேலே
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு கண்டாயே -என்று
சஹித சஹித
சங்கத
என்று கரை சேர்த்த நிர்ஹேதுக கிருபையை
அல்ப அஞ்ஞராலே அவி சால்யமாம் படி ஸ்திரமாக தர்சித்து

அந்த பிரகாரத்தை அருளிச் செய்த ஆழ்வார் உடைய
பதம் பணிக வென் சென்னி வாழ்த்திடுக வென்னுடைய வாய் –
இப்படி நிர்ஹேதுக வைபவத்திலே நிர்வ்ருத்தர் ஆகிறபடியை
வெளியிட்ட ஆழ்வார் திருவடிகளை
மூர்த்த்னா ப்ரண மாமி -என்னும்படி
என் சிரஸ் சார்ந்து  பஜித்திடுக –
திருக் குருகை பெருமாள் தன் திருத் தாள்கள் வாழியே-என்று
என் வாக்கானது மங்களா சாசனம் பண்ணி விடுக

இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
தாம் ஆழ்வார் திருவடிகளிலே ஆழம் கால் பட்ட படியை
அருளிச் செய்து அருளினார் –

—————————————————————–

ஆச்சார்ய ஹிருதயம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் 

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண –

(உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.-1-1-1-

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர் வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடு வேனோ?–1-7-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10– )

அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ( ஐயம் திரிபு மறதி) ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –
அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –

அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –

(த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும்
மின்னின் நிலை இல, மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை, உன்னுமின் நீரே–1-2-2-

தத் த்யாக பிரகாரத்தையும்
நீர்நுமது என்றிவை, வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்குஅதன், நேர்நிறை இல்லே.-1-2-3-

உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-

தத் பஜன பிரகாரத்தையும்
பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன், முற்றில் அடங்கே-1-2-6-
அடங்கெழில் சம்பத்து, அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃது என்று, அடங்குக உள்ளே-1-2-7-

பஜன ஆலம்பமான மந்தரத்தையும்
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10–உபதேசித்து –
அங்கு இருப்பது நாமம் -மட்டுமே –
மா முனிகள் மந்த்ரம் -அதே பலன் கிட்டும் என்பதால் -)

பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரஸ்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு –

(சௌலப்யம்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே! —1-3-1-
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் -எளியவனைச் சொல்லி –
சரணம் -பஜனீயத்வம் -பின்பு அஹம் -கேட்ட ஒருவனும் மறந்தான் அங்கு
இங்கு பரத்வம் சொல்லி-பஜனீயத்வம்- பின்பு ஸுவ்லப்யம் –

அபராத சஹத்வம் –
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-

சீலவத்தை –
வளவேழ் உலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா!’ என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய்
இளவேறு ஏழும் தழுவிய எந்தாய்!’ என்பன் நினைந்து நைந்தே–1-5-1-

ஸ்வ ஆராததை –
பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்!
பிரிவகை இன்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே–1-6-1-

ஆஸ்ரயண ரஸ்யத்தை –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை உண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியைத்
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆர்ஜவம் –
ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-
வைகலும் வெண்ணெய், கை கலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய் கலந்தானே–1-8-5-

சாத்ம்ய போக பரதத்வம் –
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-
என் அருகலிலானே–1-9-2-ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-
என் ஓக்கலையானே –1-9-4-
என் நெஞ்சி னுளானே–1-9-5-எனது உச்சி யுளானே–1-9-10-

பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-
மார்க்கங்களுக்குள் சாம்யம் இங்கு -அதிகாரிகளுக்குள் சாம்யம் த்வார த்ரயத்தால் –

ஆகிற குணங்களை தர்சிப்பியா நின்று கொண்டு -)

அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
(சகல பலப்ரதன் விஷ்ணு- வாஸூ தேவ சர்வம் -எல்லாம் கண்ணன் )

ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று (வணக்குடை தவ நெறி நின்று )
தேவதாந்த்ரங்கள் பக்கல் பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —

(ஆழ்வார் அருளிச் செய்த இறைவனது குணங்களையும்
ஆழ்வாருக்கு அவன் செய்த உபகாரங்கள் இன்னது என்னுமத்தையும்
உலகோருக்கு உபதேசித்தவை இன்னது என்னுமத்தையும்
ஆக மூன்று பகுதியாக அருளிச் செய்கிறார் )

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்தி கணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

முதல் பத்தில் ..
பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்-1-1-8- -என்றும் ,
ஆய் நின்ற பரன் -1-1-11-என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே-1-5-1 -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -1-7-2-என்றும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -1-7-2–என்றும் ,
அவையுள் தனி முதல் -1-9-1–என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி-1-10-9- -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி-1-1-1- -என்று-
(கார்க்கி -அக்ஷரம் -ஆத்மா பொதுவாக அநேக இடங்களில் -இல்லது உள்ளதும் அல்லது அவன் உரு –
மாறும் பிரகிருதி போலவும் மாறாத ஆத்மா போல அல்லவே அவனது
பிரதானம் பிரகிருதி ஷரம்–லயம் இறுதியில் பிரக்ருதியில் லயம் -அழியாததால் அதையும் அக்ஷரம் இங்கு-
ப்ருஹதாரண்யம் அக்ஷராத் பர-அத்தைக் காட்டிலும் உயர்ந்தது ஆத்மா –
அக்ஷராத் பரதகா பர -அதிலும் உயர்ந்த பரமாத்மா -பரதா பரன்-இத்தையே பரபரன் ஆழ்வார் -அவை முழுதுண்ட பரபரன் –
ஷர பக்த ஜீவன் என்றும் சில இடங்களில் -அக்ஷர முக்த நித்ய ஜீவன் -த்வாவிமவ் புருஷ லோக கீதையில் -இந்த அர்த்தம் )

சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –
உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –
பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானரானவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

1-மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன்-1-1-1- -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -1-7-4–என்று
ஸ்வ கேவல கிருபையாலே –
ஞான அனுதய – அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை
இவருக்கு வாசனையோடு போக்கி-
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –
இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்க திருத்தி -1-5-10–என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான புண்ய பாப கர்மங்களையும் –
பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய் காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -1-10-10–என்றும் ,
நல்கி என்னை விடான்-1-10-8–என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -1-10-10–என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -1-3-10–என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -1-7-3–என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ-1-10-9- –என்றும்-
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும் அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –
எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி விஸ்மரிப்பது என்னும்படி –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை உடையர் ஆனவர்

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே 1-1-1–என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3–என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை-1-10-4- -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4–என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –

நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க பாராய் –
என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய ( கருமங்கள் )நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் –
(அஹம் த்வா -என்று அவனைப் போல் இல்லாமல் நீயும் நானும் ஆழ்வார் )
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகலாமல் இப்படியே நிற்க பெறில் –
அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள்
ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை சொன்னேன் -என்று இப்படி
திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து –

திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் –
ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் –
அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

4 வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
(த்யாஜ்ய – தோஷ – பரித்யாக க்ரமத்தை
உபாதேய – குண – சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து )
அதாவது
வீடு மின் முற்றத்திலே –1-2-
-வீடு மின் முற்றவும் -1-2-1-என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் 1-2-2–என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து 1-2-3–என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்

வீடுடையான்-என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –1-2-1-
இறை சேர்மின் –1-2-3-
இறை பற்று –1-2-5-
திண் கழல் சேர் –1-2-10-
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன் -1-2-10–என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

5 -எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் –எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்

-பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
( குற்றங்களையே நற்றமாகக் கொள்ளும் ஞால நாதன் )

-புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – -தான் ஓர் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலவானாய் –

அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -1-6-1-என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்

அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி –என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -1-9-11-என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து-
(ஆழியால் இரவியை மறைத்து ஜயத்ரதனை கொல்வித்ததும் -போல்வன -அவன் நேர்மை ஆர்ஜவம் செவ்வியனாக
-அவன் தலை அங்கே போய் விழ மர்மத்தையும் சொல்லிக் கொடுத்து -தன்னை அமைத்துக் கொள்வதும் உதாரணம் -)

போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -1-9-1-என்று தொடங்கி –
உச்சி உளானே -1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து
(திரு முடி சேவையும் ஆழ்வார் திரு நகரியிலே இன்றும் சேவை உண்டே )

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் –1-10-2- என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு

எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-3-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

8-தொழுதால் அரும் பயனாய தரும்
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்

உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –
(கழித்து தொழுமின் -அவனைத் தொழுதால் -துர்லபம் என்பதால் மீண்டும் -பஜனத்தால்-
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே
தரும் அவ்வரும் பயனாய திரு மகளார் கேள்வன் –
உத்யோகத்தே–அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே போலே )

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது என்று
அதாவது
பிணக்கற 1-3-5–என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வந் அந்யயா சக்யா அஹம் ஏவம் விதோர்ஜுன ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச
தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11-54- -என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமே வைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா –-ஸ்ரீ கீதை-9-34-என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

நும் இரு பசை அறுத்து-1-3-7- -என்றும் ,
மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து-1-3-5- -என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

10-நன்று என நலம் செய்வது அவனிடை-1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-

—————————————————————————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி முதல் பத்தில் ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் சார அமுதம் —

October 28, 2024

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-

தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாக இருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வை லக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இன்றி இருக்கவும் நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகன் ஆனான்;
ஸ்வ ஸ்ரூபா பந்நராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாக இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்விய விக்ரஹ வைலக்ஷண்யத்தைக் காட்டி உபகரித்தான்,
என்று அவன் பண்ணின உபகாரங்களை அடையச் சொல்லி, ‘இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்தியமான கைங்கரியத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராய்,’ என்று தம் திரு வுள்ளத்தோடே கூட்டுகிறார்

தாம் அகப்பட்ட துறை அக் குணங்களாகையாலே அவற்றையே முதன் முன்னம் பேசுகிறார்.
இவரைக் குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது.

யதோ வாஸே நிவர்த்தந்தே ’ என்று மீண்டன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலும் இறே – குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது –
இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய்ப் பேசுகிறார் இறே இவர்.

பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை உயர்வு என்கிறது-இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் ‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்த சந்தை –அற -தன்னுடைய உச்சராயத்தையும் இவற்றைப் பார்த்தால்
ஆதித்யன் சந்நிதியில் நஷத்ராத்யாதிகளைப் போலேயும்
மஹா மேரு மலையின் சிகரத்தில் நின்றவனுக்குக் கீழுள்ள-சர்ஷபாதிகள் – கடுகு முதலியவை இருக்குமா போலவும்,
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம்படி பண்ணினால்-உயர்வற உயரா நிற்கும் -வருத்தம் அற்று இருக்கையாலே ஸ்வாபாவிகமாய் இருக்கும்

உயர்–இயத்தா ராஹித்யத்தைச் சொன்னபடி –(‘உயர்’ என்ற சொல்லால் இவ்வளவு என்று அளவிட்டுக் கூற முடியாமையைக் கூறியபடி.)

நலம்’ என்றது,-ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது என்னுதல்
குண சமூகத்தைச் சொல்லுகிறது என்னுதல்
ஆனந்தாவஹமான (ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான )விபூதிகளைச் சொல்லுகிறது என்னுதல்-

உடையவன் –இக் குணங்கள் தன்னை அஸ்தி என்று விடும் அளவு அன்றிக்கே இவற்றை இட்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன்.
அதாவது ஆகந்துகமாக இன்றிக்கே ஸ்வரூப அநுபந்தியாய் இருக்கும்

ஸ்ரீ ஆழ்வான், ஸ்ரீ பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க் குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஸ்ரீ ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான்.

யவன் அவன் -அஸ் ஸ்வரூபத்தைப் பற்றி குணங்களும் நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது

மயர்வு அற –ஞாநாநுதயம், அந்யதா ஞானம், விபரீத ஞானம் என்கிற இவை வாசனையோடே போகும்படியாக.
ஞாநாநுதயமாவது,-தேஹாத்ம அபிமானம் ( தேகத்தையே ஆத்துமாவாக நினைத்தல்.)
அந்யதா ஞானமாவது -தேவதாந்த்ர சேஷம் என்று இருக்கை (பிற தெய்வங்கட்குத் தன்னை அடிமையாக நினைத்தல்.)
விபரீத ஞானமாவது,-ஸ்வ தந்திரனாயும் ஸ்வ போக்யமாயும் நினைத்து இருக்கிற கேவலனுனைய ஞானம்
(தனக்குத்தானே உரியவனாகவும் ஆத்துமாவோடு அனுபவிக்கின்ற இன்பமே இன்பமாகவும் நினைக்கும் கேவலனுடைய ஞானம்,)
என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்வார் –
தம் திருவாயாலே ‘மயர்வற’ என்று சொல்லலாம்படி காணும் அவன் தான் இவர்க்கு அஞ்ஞானத்தை வாசனையோடே போக்கினபடி.

மதி நலம் –ஞான பத்திகள் இரண்டனையுந் தந்தான் என்று நிர்வகிப்பாரும் உண்டு
அன்றிக்கே (இனி, நலம் மதி என முன் பின்னாகக் கூட்டி) ‘நலமான மதி’ யைத் தந்தான் என்றதாய் –‘முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பொருள்களைப் போலே -பக்தி ரூபாபன்ன ஞானத்தை(பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் )தந்தான் என்கிறார்,’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –கர்ம ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்தில் பகவத் பிரசாதமாய்-அனந்தரம் கைங்கர்யத்துக்கு பூர்வ க்ஷண வர்த்தியான பத்தி யாயிற்று இவரது .-உபாஸக வ்யாவ்ருத்தி –
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று ஸ்ரீ எம்பாரைச் சிலர் கேட்க,
ஸ்ரீ ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச் செய்தார். என் போலே என்னில் ,‘நாமும் எல்லாம் பிரபந்நர்களாய் இருக்கச் செய்தே ஆண்டு ஆறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே –உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ இறே இவர்க்கு.

அருளினன் –நிர்ஹேதுகமாக ( ஒரு விதக் காரணமும் பற்றாமல் )அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை,-எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது-பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-பிரபன்ன வ்யாவ்ருத்தி –
அருளினன்-இத் தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போலே தானாகவே அருளிக் கொண்டு நிற்க்க கண்ட இத்தனை – என்றுமாம்-நிர்ஹேதுகத்வம் மாத்திரம் அன்றிக்கே அருளாத போது தரியாமையும் ஹேத்வனுக்தியாலே சித்தம்

அயர்வு அறும் அமரர்கள் அதிபதி –தான் அருளாத அன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடகவுடையவன்.-அயர்வாவது -விஸ்ம்ருதி –மறதி. -அஃது இன்றிக்கே இருப்பவர்கள், அயர்வறும் அமரர்கள்.-அவர்கள், நித்தியர்கள்–த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது

அதிபதி –அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’-தொட்டுக்கொள்’ என்ன வேண்டும்படி யானைக்குக் குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்
ஸ்வாமி வாசகம் என்னுதல் –

அவன்-இதுக்கு அவ்வருகே விக்கிரஹ வைலக்ஷண்யம் சொல்ல ஒருப் பட்டுக் கீழ் நின்ற நிலையினைக் குலுக்கி-‘அவன்’என்று அவ்வருகே போகிறார்.

துயர் அறு சுடர் அடி –துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்;-எம்பெருமானார் அருளிச் செய்யும் படி –
வ்யாஸநேஷு மனுஷ்யானாம் ப்ருசம்பவதி துக்கித (ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’) என்று துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இறே-இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.

அடி –சேஷ பூதன் சேஷி பக்கலிலே கணிசிப்பது திருவடிகளை இறே
ஸ்தநந்தய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே-
இவரும் ‘உன் தேனே மலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்-

தொழுது –நித்திய சமுசாரியாகப் போந்த இழவு எல்லாந் தீரும்படி ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து-எழு –அடியிலே தொழாமையால் வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவி என்கிறார்.என் மனனே–இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனை இறே முன்பு.-நெடுநாள் பந்த ஹேதுவாய்ப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.

உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்;
மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி;
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று வாக்ய ஏக பாவத்தால் யோஜிக்கவுமாம்
இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு;
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’-என்று வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம்

ஸ்வ பக்ஷத்தை ஸ்தாபிக்கவே பர பக்ஷம் நிரஸ்தமாம் இறே
நெற் செய்யப் புல் தேயுமா போலே, தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இறே அவர்கள்

உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று;
‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
வஸ்து நிர்த்தேச நமஸ்கார ஆஸீஸ் ஸூக்களும் அடி தொழுது எழு என்கையாலே இதிலே உண்டே

—————

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே
 –1-1-2–

இரண்டாம் பாட்டில்-அகில ஹேய ப்ரத்ய நீகதையாலும் -கல்யாணை கதாநதையாலும் -சேதன அசேதனங்களில் காட்டில் அத்யந்த விலஷணமாய்-ஜ்ஞானாநந்தங்களே தனக்கு வடிவாய் -முதல் பாட்டில் அனுபவித்த குணங்களுக்கு ஆச்ரயமாய் இருந்துள்ள
நிஷ்க்ருஷ்டமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை சோபான க்ரமத்தாலே அனுபவிக்கிறார்

மனன் என்றது, மனம் என்றபடி-அகம் – உறுப்புகள் இல்லாத-நிர் அவயவமாய் இருக்கிற மனத்திற்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே, ‘மனனகம்’ என்றது, மனத்திலே என்றபடி.
அன்றியே மனமானது -பராகர்த்த விஷயமாயும் ப்ரத்யகர்த்த விஷயமாயும் -(வெளிப் பொருள்களிலும் உட் பொருளிலும் ) போருகையாலே பராகர்த்தத்தைத் தவிர்ந்து ப்ரத்யகர்த்த விஷயமானத்தை -அகம் -என்கிறது ஆகவுமாம் -அகம் மனம் என்றபடி –

மலம் அற –அவித்யாதிகள் -அவை அற-அனந்தரம் மலர் —விகஸிதமாய் மலர்ந்து, மிசை – மேல் நோக்கி, எழுதரும் – கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள,
மனன் உணர்வு – மனஸ் ஞானம் – அறிவு; இப்படி விகஸிதமாய் – மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள மன அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் ஆத்மா – அளவு இலன் – அதன் அளவுள்ள ஈஸ்வரன் –ஆக மலர் இத்யாதி விசேஷண த்ரயத்தாலும் ஆத்ம விஷயக ஞானத்தினுடைய உத்தர உத்தர பரிபாக விசேஷம் சொல்லுகிறது –விவேக விமோக -அப்யாஸ-க்ரியா -கல்யாண -அநவசாத -அநுத்தர் ஷேப்ய-என்கிற விவேகாதிகளோடே கூடின பகவத் உபாசனத்தாலே நிர்மலமான மனஸ் ஸூ வேணும் என்று பரிஹாரம் அத்யாஹரித்துக் கொள்வது –

பொறி உணர்வு அவை இலன்-‘ பொறி’ -என்று ஸஷுராதி கரணங்கள் – அவற்றால் அறியப்படும் பொருள்களின் படி அல்லன்-சித் -அசித்-விலக்ஷணன்

இனன் உணர் முழு நலம் என்பதற்கு, நேர் கொடு நேராகத் தன்னை அறிய முடியாமையாலே – என்றும் ஓக்க இனனாலே – உபமானத்தால் அறியப்படுவதான முழுநலமாய் இருக்கும் – . இனன் – உபமானம்.என்றபடியதா சைந்தவ கன-என்கிறபடியே நிரதிசய ஆனந்தமாய் இருக்கும் – ஆனந்தோ ப்ரஹ்ம-என்றும் ஆனந்த மய -என்றும் சொல்லக் கடவது இறே

எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – கால த்ரயத்திலும் இனன் உண்டு ஒப்பு -அது இல்லாதவன்-பட்டர் -‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்ம்ய திருஷ்டாந்தம் இல்லை-என்கிறது இங்கு என்று அருளிச் செய்வார். –

எனன் உயிர் –இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்;-இனி, உபலக்ஷணத்தால், யஸ் ஆத்மா சரீரம் -‘என்கிறபடியே இத்தைத் தனைக்கு சரீரமாய்க் கொண்டு தான் சரீரியாய் தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவைத்து ஓன்று இறே-

மிகுநரை இலன் –மிக்காரை யுடையான் அல்லன்-தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் -நியாமகனாய் இருக்குமா போலே –-தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ என்னில் தனக்கு மேம்பட்டாரை யுடையன் அல்லன்.
ந தத் சமச்சாப்யதி கச்ச த்ருச்யதே
-(‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’) என்னுமா போலே இவரும் -‘இனன் இலன், மிகுநரை இலன்– என்று அருளிச் செய்கிறார்.-கால த்ரயத்திலும் ஒரு படியாலும் ஒப்பில்லாதவனாய் சமாப்யதிக ரஹிதனாய் பரிபூர்ண ஞான ஆனந்த ஸ்வரூபனாய் எனக்கு தாரகனுமாய் இருந்த
எம்பெருமானுடைய துயரறு சுடரடியைத் தொழுது எழு என் மனனே
என்கிறார் –

————–

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –
1-1-3-

முதற்பாட்டிலே ப்ரதான்யேந கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –
விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் அனுபவித்து

அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்மா ஸ்வரூபமும் சித் அசித் விலக்ஷணமுமாய் உபமான ரஹிதமாயும் என்று இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து–ததீயத்வ ஆகாரத்தாலே
லீலா விபூதியும் உத்தேஸ்யம் ஆகா நின்றது முத்தனுக்கு
.-சரீரம் கிடக்கச் செய்தே- மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையாலே, ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார்.திரு விண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே’-திருவாய்மொழி -6-3-5- என்கிறபடியே, சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாகக் கடாஷித்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி,
அவர்கட்கு லீலா ரஸ விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

இலனது உடையனிது என நினைவரியவன்-‘இலன் அது’ எனின்-பரிச்சின்ன விபூதிகனாம் -,‘உடையன் இது’ எனின்,இது ஒழிந்தது இல்லாமையால் அற்ப விபூதிகனாம் –-ஆகவே, இரண்டு வழியாலும் ஐசுவரியம் குறைந்து தோன்றும்;-என -இப்படி இருக்கும் என -என்றவாறு-ஆதலின்,‘இலன் அது உடையன் இது என அரியவன்’ என்கிறார்.

நினைவு அரியவன்-அநுப பன்னங்களைச் சேர்த்து நினைக்கலாம் இறே
( ‘உலகத்துப் பொருள்களுள் ஒன்று சேராதவற்றையும் சேர்த்து நினைத்தல் கூடும்-என்றவாறு )-ஓர் ஊசி நிற்கிறதாகவும், அதன் மேலே கலசம் இருக்கிறதாகவும், அதன் மேலே சால் இருக்கிறதாகவும்,-அதன் மேலே மகா மேரு இருக்கிறதாகவும், இப்படி,-அநுபபங்களைச் சேர்த்து – சேராத பொருள்களைச் சேர்த்து- நினைக்கலாம்;-அப்படியே தான் -மநோ ரதத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில்-மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாக இருக்கும் ஆதலின்,‘நினைவரியவன்’என்று அருளிச் செய்கிறார்.

ஆனால் இவன் ஐஸ்வர்யத்தைப் பேசும்படி தான் என்?’ என்னில்–நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பதிம் விஸ்வஸ்ய (‘உலகத்திற்குத்தலைவன்’ )என்னுமித்தனை.
நிலனிடை என்கிற இது பாதாளத்தளவும் நினைக்கிறது;-விசும்பிடை என்கிற இது பரமபதத்திற்கு -இவ்வருகு உள்ளவற்றை எல்லாம் நினைக்கிறது.
உருவினன் -உருக்களை – சரீரங்களை–யுடையான்.-அருவினன் -அருக்களை யுடையான்
இனன்-என்ன உடையவன் என்று காட்டுமோ என்னில்-காராயின காளநன் மேனியினன்’ என்றால் ‘மேனியினையுடையான் என்று காட்டுமா போலே –
ஆக, கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை யுடையான் -இத்தால் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் ஸூரி ஸேவ்யனாய் இருக்குமவன் சேதன அசேதன ஸ்வாமி என்றபடி

புலன் என்றது,-புலப்படும் பதார்த்தங்களை –ஓடுதத் ஸ்ருஷ்ட்வா -என்கிறபடி இவற்றை உண்டாக்கி, ஜீவத்வாரா அநுப்பிரவேசித்துப் பின்னர்-இவற்றிற்கு வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் யுண்டாகும்படி பண்ணி-சர்வ ஆத்ம அந்தராத்மாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது-புலன் அலன் –தத் தர்மா அல்லன் -தான் ஒட்டு அற்று நின்று விளங்கா நிற்பவன்–

ஒழிவிலன் பரந்த – ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம் –அன்றியே -கால பரமாக்கி – எல்லாக் காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம்-அந்நலனுடை ஒருவனை –கீழ் இரண்டு பாட்டுகளாலும் அருளிச் செய்த குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து ‘அந்நலனுடை ஒருவனை’ என்கிறார்.நணுகினம் –மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிற ஞானத்தின் அளவே அன்றிக் கிட்டவும் பெற்றோம். நாமே – நாமேஇவ் வனுபவத்துக்குப் புறம்பான நாம்
அன்றியே-பகவத் கதா கந்த ரஹீதரான நாம் , (இறைவனுடைய பெயரின் வாசனையும் அறியாத நாம் ) நாமே இது, பொய்யோ?

ஆக இப் பாட்டில் முதல் கூற்றாலே வஸ்து பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்லி மேலே வ்யாப்தியால் தேச பரிச்சேத ராஹித்யத்தையும் சொல்லிற்று யாயிற்று –இப் பாட்டால் லீலா விபூதி யோகம் சொல்லுகிறது-ஆக இவ் விரண்டு பாட்டாலும் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம என்கிற ஸ்வரூப சோதக வாக்யார்த்தம் சொல்லப் பட்டது –

————-

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே
 –1-1-4-

இனி, (இது முதல் வருகின்ற பாட்டுக்கள் எட்டனுள் )ஒரு மூன்று பாட்டாலே
இவ்வுலகில் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் -பகவத் அதீநமாய் இருக்கும் என்றும் என்று கூறி,
அவற்றிற்குமேல் ஒரு பாட்டால்,  (7) ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் -சரீராத்மா பாவம் என்றும்
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (8)குத்ருஷ்டிகளை நிரசித்து
அவற்றிற்கு மேல் ஒரு பாட்டால்,  (9)சூன்ய வாதியை நிரசித்து
மேல் ஒரு பாட்டால் (10) வியாப்தி சௌகர்யத்தைக் கூறி,
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

இதில் விவித நிர்தேசங்களாலே நிரதிசயமான ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூபம் பகவத் ஆதீனம் என்று சொல்லுகிறது –

—————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5-

எம்பெருமான் சர்வ தேவ அந்தராத்ம தயா சர்வ கர்ம சமாராதனாய் சகல பல ப்ரதனாய் இருக்கையாலே ஜகத் ரக்ஷணமும் தத் அதீனம் என்கிறது —ரக்ஷண ரூபையான ஸ்திதி தத் அதீனை என்று வையதி கரண்யத்தாலே அருளிச் செய்கிறார் –சர்வேஸ்வரன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே,
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய் இவர்களும் பலபிரதான சக்தர்களாயும் ஆகின்றார்கள் அத்தனை -;இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் ஆஸ்ரயிக்கவும் ; இவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் என்கிறார் –
‘அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளதாவது,’ என்றபடி.

————-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே
 –1-1-6-

நின்றனர்.-இத்யாதி--ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் அவற்றிற்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி, அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழியப் ப்ரக்ருத்தி ஸ்திதி யாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே, அவன் அளவுங் காட்டுகின்றன.-பாபாதிகளில் ப்ரவ்ருத்தருடைய நிவ்ருத்திக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டாகையாலே சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கும் ஈஸ்வர அபேக்ஷை யுண்டு – ஆக விசிஷ்ட வஸ்துவையே காட்டுகிறது –ஸூதிட- சிறந்த திடமான -பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடையஇலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்-

————

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

இத்தால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களும் அநுபிரவேச நிபந்தனமான அந்தராத்மத்வமும் தத் அதீனம் என்றதாயிற்று –ஸ்ருதி இதிஹாச புராண உப ப்ரும்ஹிதமாய் -அபவ்ருஷேயம் ஆகையால் நிர்தோஷமாய் அபாதித ப்ராமாண்ய ரூப தேஜ பிரசுரமாய் இருந்த ஸ்ருதிகளிலே உளன் என்கிறார் –ஆதலால் லோகாயத மாயாவாத பாஸ்கரீய யாதவ ப்ரகாசாதி வேத விருத்த சமயங்கள் எல்லாம் நிரஸ்தமாயின -தாம் அனுசந்தித்த அர்த்தத்துக்கு ஸ்ருதியை சாஷியாகச் சொல்லுகையாலே ஸ்ருதியில் சொல்லுகிற ஸ்ரீ யபதித்வமும் நாராயண சப்த வாச்யத்வமும் அனுசந்தித்தாராக வேணும்

—————-

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8-

விண்’என்ற சொல்லால் மூலப்பிரக்ருதியை அருளிச் செய்கிறார்.-வரன் முதல் ஆய்
காரண நிலையிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்துத் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்,
காரியமாம் அளவில்  வந்தவாறே -அவ்யக்தம் மகான் அகங்காரம் என்கிற இவற்றிலும் ஸூஷ்ம ரூபேண வியாபித்தும் ,
காரண பரம்பரையோடு காரிய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக்கொண்டு போருகையாலே  வரிஷ்டமான காரணமாய் என்கிறது

அவை முழுது உண்ட –சம்ஹாரத்திலும் வந்தால் அவற்றை முழுவதும் சம்ஹரிக்கிறவனும் அவனே-ஏகதேச ஸ்ருஷ்டியும் ஏகதேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளவை;
அவைதாமும், அவர்களுக்கு அந்தராத்துமாவாக நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்கிறான் சர்வேஸ்வரன்.-குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள் –

——————-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே 
–1-1-9-

உளன் என இலன் என இவை குணமுடைமையில்-உளன் என்கிற இத்தையும் இலன் என்கிற இத்தையும் இவை இரண்டையும் குணமாக யுடையவன் ஆகையால்- இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று – உளன் இரு தகைமையொடு உளன் என்கிற சொல்லாலும் இலன் என்கிற சொல்லாலும் சொன்ன இரண்டு ஸ்வபாவத்தாலும் உளனானான்-ஈஸ்வரன் உளன் என்னில் அஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –ஈஸ்வரன் உளன் அலன் என்னில் நாஸ்தித்வ தர்ம விசிஷ்டனாய் இருக்கும் என்று சொல்லிற்றாய் வரும் –சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார்சூன்ய வாதியை ஹேது சொல்வதற்கு முன்பே பிரதிஜ்ஞா மாத்ரத்தில் சவிபூதிகனான சர்வேஸ்வரனுடைய உண்மையை சாதிக்கிறார் –-ஒழிவிலன் பரந்தே-நான் உளன் என்கிற சொல்லாலே சாதித்தேன் -நீ இலன் என்கிற சொல்லாலே சாதித்தாய் –ஆக இருவருமாக உண்மையை சாதித்தோம்-இனி அவன் உளனானால் உளனாமாம் போலே ச விபூதிகனாயே உளனாக அமையாதா என்கிறார் –

ஸர்வதா அநுப பத்தேச்ச-என்ற ஸூத்ரத்தை விவஷித்து –அதிகார அநு பாயத்வாத் ந வாதே ஸூன்ய வாதிந-ஸர்வதா சதுபாயா நாம் வாத மார்க்க ப்ரவர்த்ததே -என்கிற பாட்ட வசனம் அனுசந்தேயம்-நிஷேதிக்கிற ப்ரமாணத்தையும் ஸூன்யம் என்கையாலே வாதம் தந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்வர்-

—————

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –
1-1-10-

எங்கும் பரந்து உளன் – சேதனன் சரீரத்தில் உடலில் வியாபிக்கும் பொழுது அதில் ஏக தேசத்தில் நின்று ஞானத்தாலே எங்கும் வியாபிக்கக் கடவனாய் இருக்கும்
இவன் அவ்வாறு அன்றித் தன் சொரூபத்தாலே எங்கும் நிறைந்திருப்பன்.கரன் –
ஸூதிட பிரமாண சித்தன்– திடமிக்க பிரமாணங்களால் உறுதி செய்யப்பட்டவன்-ஸூ த்ருட பிராமண சித்தனுமாய் இருந்த எம்பெருமானுடைய துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –.-கரந்த வென்றும் ஸூஷ்மமாய்-சில் என்று ஸூஷ்மமாய் -இடம் என்று சரீரமாய் அத்யல்ப சரீரம் தோறும் என்றபடி –கீழ்ச் சொன்ன பகவத் வ்யாப்தியினுடைய சௌகர்யத்தை சொல்லுகிறது
எங்கும் பரந்துளன் -பஹிர் வியாப்தியும் சொல்லுகிறது –
நித்யம் விபும் -ஏஷோர் அணுராத்மா-என்றும் இரண்டும் ஸ்ருதி சொல்லிற்றே-

—————-

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்மினே
 –1-2-1-

சம்சார வெப்பம் எல்லார்க்கும் ஒத்து இருக்கையாலே யாவரேனும் ஒருவர்க்குச் சுவை பிறக்காதா என்று நினைந்து பொதுவிலே எல்லார்க்கும் உபதேசிக்கிறார்.

வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுக்கு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறைவிடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலைதானே பேறாக இருக்கையாலே விடுகையாகிற பேற்றைப் பெற்று என்றபடி

உம் உயிர் வீடு உடையானிடை
இதுக்கு பல படியாக அருளிச் செய்வர்
1-யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருத்வீ சரீரம் -(‘எவனுக்கு உயிர்கள் எல்லாம் சரீரமோ, எவனுக்கு உலகம் சரீரமோ’ ) என்கிறபடியே, உம் உயிரையும் அதற்கு வீடாகவுள்ள சரீரத்தையும் உடையவனிடத்தில் – என்னுதல்
2-அன்றிக்கே இதற்கு, ‘உம் உயிரைச் சரீரமாக -வீடாக -உடையவனிடத்தில்’-என்னுதல்
3-அன்றிக்கே ‘உம் உயிரை விடுமிடத்தில் உடையவனிடத்திலே’ விடுமின்-சமர்ப்பியுங்கோள் என்றுமாம்
வீடுடையான்-4-பரமபத நிலையான பக்கலிலே என்னுதல்

உம் உயிர்
அழிந்து போகின்ற சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகின்றேனோ?
நித்தியமான ஆத்துமாவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்லுகிறேன்?’  என்றும்,
‘அது தானும் என் உயிர்க்கோ? உங்களுடைய உயிர்க்கு அன்றோ?’ உம் உயிர்’ என்றும் அருளிச் செய்கிறார்.
உடையானிடை-பொதுவில் உடையான் என்கிறார்  என்கிறார்;– சுவை பிறந்து, ‘அவன் யார்?’ என்றால்-வண்புகழ் நாரணன்’- என்கைக்காக.-நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடு செய்மின்’என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை.

இத் திருவாய் மொழி பிரமேயம் -பகவத் ஆஸ்ரயணம் -சகல இதர பரித்யாக பூர்வகமாக
பகவத் விஷயமான ஆத்ம சமர்ப்பணம் பிரமேயம்-முற்றவும் வீடுமின் -வீடு செய்து உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே -என்று அன்வயம் –

——-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை யுன்னுமின் நீரே –
1-2-2-

-இதர விஷயங்களில் போக்யதா புத்தி -பண்ணிப் போருகிற இவனுக்கு
‘அவை அற்பம், நிலையற்றவை’ என்று- தோஷ தர்சனம் – குற்றங்களைக் காணும் படி செய்யவே விடத் தக்கனவாக இருக்குமாதலின், ‘மின்னின் நிலையில’ என்கிறார்.

மன் உயிர் ஆக்கைகள் –உயிர் -மன்னுகிற -பொருந்தியிருக்கின்ற- சரீரங்கள் என்னுதல்;
நித்தியமான ஆத்ம வஸ்து பரிக்ரஹிக்கிற தேகங்கள் —
நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் -என்னுதல்,-அன்றியே – உயிர்-ஏக வசனத்தை – – தொகுதி ஒருமையாகக் கொண்டு- ஜீவ அனந்தயத்துக்கும் உப லக்ஷணமாய் – பல ஆத்மாக்கள் பரிக்ரஹிக்கிற சரீரங்கள் என்றுமாம் 

இறை உன்னுமின் –இதில் அற்பத்தை ஆராயுங்கோள்.-நீரே –இதற்கு ஒரு பிரமாண-அபேக்ஷையும் – விருப்பமும் வேண்டுவது இல்லை.-சதாசார்ய உபதேசமும் வேண்டா என்றபடி.-இவ்வாத்மா சம்பந்தியான சரீராதி பிராகிருத விஷயங்களினுடைய
அஸ்திரத்வாதி தோஷங்களை நீங்களே ஆராய்ந்து உணருங்கோள் -உணரவே எளிதாக விடலாம் -என்கிறார் –

————

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர் மின் உயிர்க்கு அதன் நேர் நிறையில்லே–
1-2-3-

த்யாஜ்ய அம்சத்தை -விடுந்தன்மையினைச் சுருங்க அருளிச் செய்கிறார்;
சம்சாரத்துக்கு பீஜம் – வித்து இன்னது என்றும், அதற்கு பேஷஜம் – மருந்து இன்னது என்றும் அருளிச் செய்கிறார்

நீர் நுமது – அநர்த்த கரமான -கேட்டினைச் செய்கிற -அகங்கார மமகாரங்கள் -‘யான்,’ ‘எனது’ என்னும் செருக்குகள்.-ஈண்டு அதிகாரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின், ‘யான், எனது’ என்னும் தன்மைப் பெயர்களை நீர் நுமது’ என முன்னிலையாக அருளிச் செய்கிறார்.
அன்றிக்கே – செருக்கினைப் புலப்படுத்தும் அச் சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுதற்கு, அஞ்சி ‘நீர், நுமது’ என்கிறார் எனலுமாம்; ‘கூறின், நாக்கு வேம்,’ என்பது கருத்து.

இறை சேர்மின் – அப்ராப்த விஷயங்களை –அடையத் தக்கன அல்லாதவற்றை- நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள்.-சேர்மின் சம்சாரி இறைவனை அடைதல், கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற்போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.

உயிர்க்கு அதன் நேர் நிறை இல் – இத்தோடு ஒக்கச் சீரியது இல்லை என்னுதல்;
நேர் என்று ஒப்பாய், நிறை என்று மிகுதியாய், உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்னுதல்.
ஞான ஆனந்தங்களை -லக்ஷணமான ஆத்துமாவிற்கு, முதலில் ஒளஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் – ஹிதமுமாய்– உதர்க்கத்தில் – அடுத்த கணத்தில் பிரியமுமாய் இருக்கும் இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை என்றபடி.

—————-

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
 –1-2-4-

பற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.

துச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;விநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.உள்ளதும் –அழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.இல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –அத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம்

எல்லை இல் அந்நலம் –
‘ஆனந்த மய
:’ என்றும்,
‘உணர்முழுநலம்’ என்றும்,
‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,
‘சுடர்ஞான இன்பம்’ என்றும்,
ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்
கூறலாம்படி இருக்கும்.

புல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் – அங்கநாபரிஷ்வங்கம் போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.

பற்று அற்றே –அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.-இறைவன் ‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.

சர்வ சங்க பரித்யாக பூர்வகமாக ஸ்வேதர சமஸ்து வஸ்து விலக்ஷண ஞான ஆனந்த ஸ்வரூப ஸமஸ்த கல்யாண குணாத்மகனான பகவானுடைய ஆஸ்ரயணம் இப்பாட்டு பிரமேயம் 

ஸ்ரீ பன்னீராயிரப்படியில் மட்டும் உள்ள விலக்ஷண ஸ்ரீ ஸூக்திகள்-கீழ் மூன்று பாட்டிலும் பன்மையாலே உபதேசித்து இப்பாட்டுத் தொடங்கி ஒருமையாலே உபதேசிக்கிறது-த்யாஜ்யங்கள் பரஸ்பர விருத்தங்களாய்க் கொண்டு பலவாதலாலும் சத்வாதி குண பேதத்தாலே ருஸ்யாதி விசிஷ்டரான அதிகாரிகள் ஒன்றோடு ஓன்று ஒவ்வாத புத்தி பேதத்தை யுடையராகையாலும் இதர தியாகத்தில் பன்மையாலே உபதேசிக்க வேணும் –
பகவத் பஜனத்தில் புத்தி ஐக்யத்தாலும் புருஷார்த்த ஐக்யத்தாலும் அதிகாரி ஐக்கியம் உண்டாகையாலே ஒருமையாலே உபதேசிக்கலாம் –

————–

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே
 –1-2-5-

இறைவனைப் பற்றுமிடத்து வருகின்ற -அந்தராய பாரிஹாரத்தையும் -இடையூற்றை நீக்குந் தன்மையினை –அருளிச் செய்கிறார்.(இங்கு இடையூறு’ என்றது, கைவல்ய அனுபவத்தினை-உற்றது வீடுயிர்-உயிர் வீடு உற்றது – ஆத்துமா மோக்ஷத்தை – பிராபித்தது- அடைந்தது;-அது நித்தியமாய் ஞான ஆனந்தங்களாய் இருக்கையாலே ‘இது தன்னையே அனுபவிக்க அமையாதோ! என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும்;
அங்கு அனுபவிக்கும் அவ் வின்பத்தினையே இங்கு ‘வீடு’ என்கிறார்.அது செற்று –
அதனை முகஞ்சிதறப் புடைத்து.-அற்ற இறை பற்று – ஆஸ்ரயண- அடைகின்ற – காலத்திலே அவனுக்கு என்று அத்யவசித்து – அறுதி செய்து, சேஷியான அவனைப் பற்றப் பார்.
அன்றிக்கே
விபக்தியை மாறாடி-அவனைப் பற்றி இத்தை அறப் பார் -என்னுதல்–‘மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு’ என்னுமா போலே-

இதர சங்க தியாக பூர்வகமாக ஆத்ம அனுபவத்தை இச்சியாதே சர்வ சேஷியை
ஆஸ்ரயிக்க வேணும்-என்றது இப்பாட்டு பிரமேயம் –

—————–

பற்றிலன் யீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –
1-2-6-

ஈஸ்வரத்வம் வந்தேறி என்னும் படி சங்க ஸ்வ பாவன் காண்-என்கிறார் –அவன்-சங்க ஸ்வ பாவன்- பற்றுக்கு இருப்பிடமானவன்-பற்றிலன் –பற்று -உண்டு சங்கம் -அத்தை வாஸஸ் ஸ்தானமாக யுடையவன் – அன்பை உறைவிடம் ஆக உடையவன்.
பற்றிலன் என்பது – பற்றிலான் என்பதன் விகாரம்;இன்னான் இங்கு உண்டோ என்ன இங்கு இல்லை ‘அகத்திலான்’ என்பது போன்று;-அகத்திலான் – அகத்திலே இருப்பவன்.

முற்றவும் நின்றனன் –ஆஸ்ரயணித்வே – அடையும் திறத்தில்-சமனாய் – ஒத்தவனாய் இருந்தான். –இத்தலை இருந்தபடி இருக்கத் தான் எல்லார்க்கும் ஒத்திருக்கை.–பற்றிலையாய் – நீயும் பற்றிலையாய் -நீயும் பற்றினையுடையையாய்-சங்கத்தை யுடையையாய்-அவன் முற்றில் அடங்கு – அஹம் சர்வம் கரிஷ்யாமி (‘நான் எல்லா அடிமைகளும் செய்வேன்,’) என்கிறபடியே, அவனுடைய-எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி – எல்லாத் தொண்டுகளிலும் சேர்வாய்.

இப் பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி:
பற்றிலன் ஈசனும் –பரம பதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘முற்றவும் நின்றனன் –அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து ஆஸ்ரயிக்கிற – அடைகிற இவனாலே ஆம்படி நின்றான் –முற்றவும் நின்றனன்
நாமே தனக்கு தாரகாதிகளாக நினைத்து இருக்கும்-;பற்றிலையாய் –
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு?அவன் முற்றில் அடங்கு –அவனையே எல்லாமாகப் பற்றப் பார்:

—————-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே 
–1-2-7-

சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.ததீயம் – ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்,’ என்னும் நினைவே வேண்டுவது;-தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்-அந்வயிக்கலாம் – என்கிறார்-எம்பெருமானோடு உள்ள சம்பந்தத்தை அனுசந்திக்கவே தன் சிறுமையால் வெருவாதே தரித்து ஆஸ்ரயிக்கலாம் என்கிறார்-அந்த சம்பத் எல்லாம் என் ஸ்வாமியினுடைய சம்பத் என்று அனுசந்திக்கவே கூசாதே சென்று அணுகலாம் –அப்படி அனுசந்தித்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார் –.சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.-கடகருடைய க்ருத்யம்-இங்கே பட்டர் பிதா புத்ரர்கள் இருவரும் படவோடின கதையை அருளிச் செய்வர் –பரகத அதிசய ஆதானேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபயா ச சேஷி பர சேஷி –

————–

உள்ளம் உரை செயல் உள்ள விம்மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே 
–1-2-8-

அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்குகையே வணங்குதலாம் என்று-
பஜன பிரகாரத்தை – வணங்கும் முறையினை அருளிச் செய்கிறார்.
-இப் பாட்டில் பஜிக்கைக்கு புறம்பு ஒரு உபகரணம் சம்பாதிக்க வேண்டா-முன்னமே யுண்டானவற்றின் வியபிசாரத்தை தவிர்த்து வகுத்த விஷயத்திலே சமர்ப்பியுங்கோள்-என்கிறார்-

—————–

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9-

நீங்கள் அவனைக் கிட்டவே விரோதிகள் அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.எல்லாம் விடும் – அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.-பஜனத்துக்கு அங்கம் என்று நினைத்து -பின்னையும் அந்திம தசையில் நினை என்று அந்திம ஸ்ம்ருதியை விதிக்கிறது என்பாரும் உளர் –

ஓர் அயனத்தின் அன்று ஸ்ரீ குன்றத்துச்சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே புக, அவருடைய சிறுபேரைச் சொல்லி, ‘சிங்கப் பிரான்! இன்று அயநங்காண்,’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க,
உயிர் உடலை விட்டு நீங்கும். அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓரண்டு கழியப் பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ!’ என்று அருளிச் செய்தார்.

அன்றியே
ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு
‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!
பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

—————-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
 –1-2-10-

இத் திருப் பாசுரத்தால் ஸ்ரீ திரு மந்திரத்தை அர்த்தத்தோடு அருளிச் செய்கிறார்.
ஸ்ரீ ஆழ்வான் இப்பாட்டளவும் வரப் பணித்து இப் பாட்டு இது, இத் திருப்பாசுரம் திருமந்திரத்தின் பொருள் என்பதற்கும்
மந்திரத்தின் பொருள் ஆசாரியன் பால் கேட்டல் வேண்டும் என்பதற்கும் ஐதிஹ்யம் ஆம்.
ஸ்ரீ ஆழ்வாருடைய முந்தின வார்த்தை,கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
வந்தவாறே ‘இத்தையும் உங்கள் ஆசிரியர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்ன,
ஸ்ரீ பட்டரும் ஸ்ரீ சீராமப் பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து,
‘இன்ன போது இன்னார் இருப்பார்; இன்னார் போவார் என்று தெரியாது; இருந்து கேளுங்கோள்,’ என்று
ஸ்ரீ திரு மந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டை நிர்வகித்து
‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கோள்,’ என்று பணித்தார்.

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள்-வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாசகமுமாய்
தர்ம பூத ஞானமானதுவும் விஷயங்களைக் கிரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் அத்தைப் பற்றிச் சொல்கிறது –இதனாலே இரண்டு அடை மொழிகளைக் கொடுத்து –நலம் -என்றும் ஒண் என்றும் அருளிச் செய்கிறார்-ஈறு இலவான ஒண் பொருளையும், ஈறு இலவான வண் புகழையும் உடையன் ஆகையாயிற்று
‘நாராயணன்’ யாகையாகிறது
 –திண் கழல் சேரே — இப்படிப்பட்ட சம்பந்த ஜ்ஞானம் முன்னாகப் பற்றினாரை ஒருகாலும் விடாத திருவடிகளை ஆஸ்ரயி ––பஜனத்துக்கு ஆலம்பன மந்த்ரம் திரு அஷ்டாக்ஷரம் என்றது இப் பாட்டு பிரமேயம்

————–

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
 –1-2-11-

உபதேசம் பலரைக் குறித்து-உபக்ரமிகையாலே – தொடங்குகையால், ‘சேர்’ என்பது போன்ற-ஏக வசனங்கள் – ஒருமை இடங்களை எல்லாம்-ஜாதி அபிப்ராயம் – கூட்டத்தைக் குறித்த ஒருமையாகக் கொள்க.

———–

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-

பத்து-பக்தி. ‘பத்து என்பது பத்தியைக் காட்டுமோ?’ என்னில்,
‘எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால் மனந்தனைக் கட்டி’ என்னக் கடவது இறே !
ஆகையாலே, பத்து என்று பத்தியைச் சொல்லுகிறதாகும்.
அது தன்னிலும் பரபத்தியை அன்று இங்குச் சொல்லுகிறது; –
பக்தி உபக்ரம மாத்ரத்தையே -பத்தியின் தொடக்கத்தைச் சொல்லுகிறது.

உடை-இந்த அப்ரதிஷேத அத்வேஷ – விலக்காமை பகையாமை மாத்திரத்தையே- கனத்த உடைமையாகச் சொல்லுகிறார்.-இவ் வுலகில் இறைவனிடத்தில் பத்தியினைச் செலுத்துகின்றவர்களை‘விண்ணுளாரிலும் சீரியர்’ என்கிறபடியே, நித்திய ஸூரிகளைக் காட்டிலும் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய அபிப்பிராயத்தாலே சொல்லுகிறார்.

எளியவன் – அவர்கள் பாவத்தைப் போக்குதல், புண்ணியத்தைக் கொடுத்தல், தன்னைக் கிட்டலாம்படி இருத்தல் செய்தல் அன்றிக்கே, அவர்கள் இஷ்ட விநியோக அர்ஹமாய் – விரும்பியவாறு செய்து கொள்ளும்படி தன்னை ஆக்கி வைப்பவன். அதாவது, தன்னை ஒழிந்தது ஒன்றைக் கொடுத்தல், தான் இருக்குமிடத்தில் அவர்களை அழைத்துக் கொடுத்தல் செய்யான்;

மத்துறு கடை வெண்ணெய் –முக் கால வினைத்தொகை யாயினும், நிகழ் காலத்தில் பொருள் சிறப்புடைத்து;-கடையா நிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடைவதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்த படியைச் சொல்லுகிறார்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.

பெரிய பிராட்டியார் நெருக்கி அணைக்கும் மார்வை யன்றே கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டான்?’ என்பார், உரவிடையாப்புண்டு’ என்கிறார்:
அன்றியே – ‘மிடுக்கையுடைய ரிஷபம் போன்று இருக்கின்றவன் கட்டுண்டான்,’ என்று பொருள் கூறலுமாம்.-உரம் – மிடுக்கு; விடை – ரிஷபம்
உரம் என்பதனை ‘உதரம்’ என்ற சொல்லின் விகாரமாகக் கொண்டு ‘வயிற்றினிடத்தில் கட்டுண்டு’ என்று பொருள் கூறலும் ஒன்று. உதரம் – வயிறு.

த்யக்த்வா தேகம் புனர் ஜென்ம நைதி மாமேதி ‘(எனது அவதாரத்தையும் அவதாரத்தில் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளையும் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று எவன் அறிகிறானோ அவன் இச் சரீரத்தை விட்டால் வேறு சரீரத்தை அடைகிறான் இல்லை; என்னையே அடைகிறான்,’) என்கிறபடியே, நம்முடைய கட்டை அவிழ்க்க இறே தான் கட்டுண்டு இருந்தது –பிள்ளை பெற்றுத் தாமோதரன் என்று பெயரிடும்படி அன்றே கட்டுண்டான்?

சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக அவதாரங்களை அனுசந்தித்தவர் -தொடங்கின உபதேசத்தை மறந்து கிருஷ்ண அவதாரத்தில் நவநீத சௌர்ய சாரித்ரத்திலே தாம் அகப்பட்டு அழுந்துகிறார் –அவாப்த சமஸ்த காமன் தனக்கு ஒரு குறை யுண்டாய் -அது நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவிலே இழிந்து அது தலைக் கட்டப் பெறாதே வாயது கையதாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உரலினோடு இணைந்து இருந்து – உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே அசிதவ்யாவ்ருத்தனாய் இருந்த படி –ஏங்கிய எளிவே-இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்குமே – அவள் வாய் வாய் என்றால் ஏறிட்ட த்வனி இழிய விட மாட்டாதே பயப்பட்டு நிற்கும்-எளிவு -சௌலப்யம் –

எத்திறம்-இது என்னபடி-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று வேதம் மீண்ட பரத்வத்தை எல்லை காணலாம்-இந்த சௌலப்யம் தரை காண ஒண்ணாது இருந்ததீ-என்கிறார்-இவ்வதி மாத்ர ஆச்ரித ஸூலபத்வ மஹா குணத்தில் ஈடுபட்டு -ஆஸ்ரித ஸமாஸ்ரயணீயனாய் இருக்கைக்கு தத் சஜாதீயனாய் வந்து பிறந்து அருள அமையாதோ- இங்கனே உரலில் கட்டுண்டு நடுங்கின படியே இருந்து அருள வேணுமோ -பிரானே இது என் செய்து அருளினாய் -எதுக்காகச் செய்து அருளினாய் -என்கிறார் –

—————

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே 
–1-3-2-

தப்பச் செய்தோம்;தப்பச் சொன்னோம் அழித்துச் சூளுறவு-ப்ரதிஜ்ஜை – செய்ய வேண்டும்,’ என்கிறார் இரண்டாம் பாட்டில்.-இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார்-நிலை வரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை;-‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டி பூர்வர்கள் நிர்வாகம்
இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு,
‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர்.
அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. சாரதியை வேஷத்தோடே தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீ விஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின் பொருட்டுப் போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை.
இத்தாற் பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; ரக்ஷணத்துக்கு -காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன்- மோஷம் ஆகிற தெளிவைத் தரும் ஸ்வ பாவத்தை விடாதே கூட வந்து அவதரிக்கும் –இதுவும் கல்யாண குணங்களிலே ஒன்றாய் இருக்கப் பிரித்துச் சொல்லுகிறது -அவதாரத்துக்கு மோஷ பிரதானத்திலே நோக்கு ஆகையாலே

இறையோன், அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம்-ஒளிவரும் முழுநலம், வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய், நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும் இயல்வினன்’ என்று அந்வயம்-

————

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
–1-3-3-

மாயையை அறிபவர் யாரே –இவனுடைய அவதாரத்தின் மறை பொருள் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று என்கிறார். ‘என்னை?’ எனின்,
பிரகாரியான தான் பிரகாரமான பொருள்களிலே ஒன்று ‘என்மகன்’ என்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த இவ்வாச்சரியம் ஒருவர்க்கும் அறிய நிலம் அன்று
ஆதலின். ‘ஏன், ஒருவரும் அறியாரே?’ எனின்,
நித்தியஸூரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையாலே அறியார்கள்;
சம்சாரிகள் நாஸ்திகர் ஆகையாலே அறியார்கள்;
பிரமன் முதலிய தேவர்கள் தம்தமது அறிவாலே அறிய இருக்கின்றவர்கள் ஆகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ‘எத்திறம்!’ என்று மோஹித்துக் கிடப்பார்கள்;
தனக்குத் தானே முற்றறிவினையுடைய இறைவனும்-ஜென்ம கர்ம மே திவ்யம்
(‘என்னுடைய பிறவியும் செயல்களும் தெய்வத் தன்மையன,’) என்கின்றான்;
ஆதலின், ஒருவர்க்கும் நிலம் அன்று என்பதாம்.

———

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே 
–1-3-4-

ஒரு குரங்கு, வேடச்சி, ஆய்ச்சி இவர்களுக்கு எளியனாய் இருக்கக் கண்டாமே!
எம்பெருமான்’ என்ற சொல்லால்,-ஆஸ்ரிதற்கு- ‘அடியார்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு – அடியர் அல்லாதார்க்கு அரியனான-என் நாயன்- – நிலை இருந்தபடி என்னே!’ என்று ஈடுபட்டு எழுதிக் கொடுக்கிறார்.

பேரும் ஓர் ஆயிரம் – அநுபவிதாக்களுக்கு -அனுபவிக்கின்ற அடியார்கட்கு இழிந்த இடம் எல்லாம் துறையாகும்படி பல திரு நாமங்களை யுடையவனாய் இருக்கை.
குணம் பற்றி வருவனவும், ஸ்வரூபம் பற்றி வருவனவும் ஆன பெயர்களுக்கு ஓர் எல்லை இல்லை ஆதலின், ‘பேரும் ஓர் ஆயிரம்’ என்கிறார்.-தேவோ நாமோ சஹஸ்ரவான்

பிற பல உடைய எம்பெருமான்- அந் நாம த்வாரா காணும் -அப் பெயர்களின் மூலமாகக் காண்கின்ற -பல திருமேனிகளை யுடையனாய் இருக்கை. ‘பிற’ என்பது ஈண்டுத் திருமேனியைக் காட்டுகிறது.-இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து-அநு பாஷிக்கிற இடத்தில் –‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச் செய்தல் காண்க.

பிணக்கே- இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி.
அடியார்கள் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள் –
அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே முதலிலேயே கிட்டார்கள்; ‘
இவ் விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று தாம் இனியர் ஆகிறார்.

—————

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே 
–1-3-5-

அவன் தான் ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த பத்தி மார்க்கத்தாலே அவனை அடைமின்,’ என்கிறார்.-கணக்கு அறு நலத்தனன்-எல்லை இல்லாத குணத்தை யுடையவன்;
இனி, எல்லை இல்லாத ஸ்நேஹத்தை வாத்சல்யத்தையுடையவன் எனலுமாம்.

அம் பகவன் வணக்குடைத் தவநெறி வழி நின்று- வணக்கத்தை யுடைய பத்தி மார்க்கமாகிற வழியிலே நின்று;
ஸ்ரீ பகவத் கீதையில் பத்தியைப் பற்றிக் கூறுமிடத்தில்
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா (‘பத்தியினால் என்னை வணங்கி வழிபடுகின்றார்கள்,’ )என்று கூறி, பின்னர்,(மாம் நமஸ்குரு )‘என்னை வணங்குதலைச் செய்வாய்,’ என்றும் கூறுவதால்,
இவரும் பத்தியை ‘வணக்குடைத் தவ நெறி’ என்கிறார்.
பத்தியானது –அங்கனா பரிஷ்வ்ங்கம் -காதலியோடு கலக்கும் கலவி போன்று போக ரூபமாய் -இன்ப மயமாக இருக்குமாதலின்‘அம் பகவன் தவநெறி’ என்கிறார்.
பத்தி, ஞானத்தின் விசேடமாகையாலே, ‘தவம்’ என்ற சொல்லால் பக்தியைச் சொல்லுகிறார்;
யஸ்ய ஞான மயம் தப (‘அவனுக்குத் தவமானது ஞானத்தின் மயமாய் இருக்கிறது,’) என்கிற நியாயத்தாலே யாதல், இவனுடைய பிரேம மாத்ரத்தையே -அன்பினையே தவமாக நினைக்கின்ற பகவானுடைய அபிப்பிராயத்தாலே யாதல்.

புறம் நெறி களை கட்டு –புறநெறியாகிற களையைக் கடிந்து. அதாவது,-கடிந்து – பறித்து. கட்டல் -களைதல்-பத்தி விஷயமான போது வேறு பலன்களிற்செல்லும் விலக்கடிகளைத் தள்ளி’ என்றும்,-பிரபத்தி விஷயமானபோது மற்றைச் சாதனங்களைத் தள்ளி’ என்றும் பொருள் –

அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து –அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;-அதாவது, ‘பத்தி மார்க்கத்தைக் கொண்டு உணர்ந்து’ என்றபடி.
இனி,தத் யுக்த – அவன் அருளிச் செய்த ஞானத்தைக் கொண்டு உணர்ந்து;
அதாவது, ‘அவன் அருளிச் செய்த ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று’ என்னுதலுமாம்-

———————

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
 –1-3-6-

ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்-ஆஸ்ரயிக்கும் பிரகாரம் – பற்றுமுறை இன்னது என்றும் அருளிச் செய்கிறார்.

உணர்ந்து உணர்ந்து-உணர்வு என்னாமல் ‘உணர்ந்து’ என்கையாலே.
ஞப்தி – ‘அறிவு மாத்திரமே உள்ளது; -ஞாத்ர அம்சம் -அறிகின்றவன் இலன்’ என்கிற யோகாசாரனை மறுக்கிறார்.
‘உணர்ந்து உணர்ந்து’ என்ற-வீப்சைக்கு – அடுக்குத் தொடரால்,- சைதன்யம் ஆகந்துகம் – ‘அறிவு இடையிலே வந்தது; –முக்த அவஸ்தையிலும்- மோக்ஷ நிலையிலும்-பாஷாண கல்பமாய் – கல்லைப் போன்று இருக்கும்’ என்று கூறும்நையாயிக வைசேடியர்களை மறுத்து,-சைதன்யம் – ஞானம் நித்தியம் என்பதனைத் தெரிவிக்கிறார்.
மேலும், ஞாத்ருத்வம் -அறியுந்தன்மை நித்தியமாகையாலே, ‘ஞான கிரியா கர்த்ருத்வம்-ஞாத்ருத்வம்;அதுதான் அநித்தியம்,’ என்கிற கிரியாவாதியையும் மறுக்கிறார்.

அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-
ஒரு உணர்த்தி, ஸ்வரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, ஸ்வபாவத்தைப் பற்றியது
உரைத்து உரைத்து 
–ஸ்வரூப பரமான பிரமாணங்களையும்-ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்- தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால்-ஸ்ரவண மனனாதிகளால் உணர்ந்து,-அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து – கை புகுந்தது என்று விஸ்வசிக்கலாம் அளவும் -ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் வணங்குங்கோள்-

—————

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே 
–-1-3-7-

நீங்கள் முடிந்து போவதற்கு முன்னே-நிர்ணய உபாயங்களாலே – உறுதி செய்யும் வழிகளால் பொருள் இன்னது என்று உறுதி செய்து,
நிர்ணீதனானவன் உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே விரைவில் பத்திபைப் பண்ணப் பாருங்கோள், என்று,
மேல் பாசுரத்திற்குச் சேஷமாய் இருக்கிறது இப் பாசுரம்.
‘நீங்கள் குறைந்த ஆயுளை யுடையவர்கள் ஆகையாலே, விரைவில் செய்து கொடு நின்று, ‘செய்கிறோம்’ என்ன வேண்டும்;
-‘செய்கிறோம்’ என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே இப் பாசுரத்தில் விசேஷம்-கீழில் பாட்டில் காட்டில் –

நன்று எழில் நாரணன் –நன்று’ என்பதனால், -அநந்ய பரமான -அவனுக்கே உரிய நாராயண அநுவாகாதிகளை நினைக்கிறார்.‘எழில்’என்பதனால், அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா -(‘நீங்கின குற்றங்களை யுடையவனும் மோக்ஷத்தை யுடையவனும் ஒளி உருவனும் ஒருவனே யானவனும் ஆன நாராயணன்’) என்கிற புகரை நினைக்கிறார்.
இனி, ‘நன்று எழில்’ என்பதற்கு,ரூப ஸ்ரீ யை – வடிவின் அழகினைப் பார்த்தவாறே,
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்’ என்கிறபடியே, சர்வ ரக்ஷகன் -‘அனைத்து உலகும் அனைத்து உயிரும் அளிக்கும் பரமன் இவனே,’ என்னலாம்படி இருக்கும்
நன்றான அழகு என்று கூறலுமாம்.-திருப் பெயரைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தன அனைத்தையும் பிரகாரமாய்க் கொண்டு தான் பிரகாரியாய் இருப்பான் ஒருவன் என்று தோன்ற இருப்பவனாதலின்,‘நாரணன்’ என்கிறார்.–ஆன பின்பு தத் வியதிரிக்த ப்ரஹ்ம ருத்ரர்கள் பக்கல் ஈச்வரத்வ சங்கையை விட்டு அந்த நாராயணன் பக்கல் நம்முடைய சரீராத் யுபகரணங்கள் உள்ள போதே அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்வது என்கிறார் –

————

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே
 –1-3-8-

அநாதி காலம் ஆர்ஜிதமான கர்மம் ஆஸ்ரயணத்தை விலக்காதோ என்னில்
பஜன உபக்கிரம வேளையில் அவை அடங்க நசிக்கும் -நசிப்பாரும் உண்டு என்கிறது

அந்த அந்திம தசையில் யாகிலும் ஓர் அஞ்சலி மாத்திரம் ஆதல் ஓர் யுக்தி மாத்திரம் ஆதல் ஓர் ஸ்ம்ருதி மாத்திரம் ஆதல்-அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் –

சர்வேஸ்வரனை அடைந்தானாகில், அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனை அடையும் இடத்தில், இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து,
அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி’ என்னா நின்றது கண்டீரே’ என்று அருளிச் செய்தார் பட்டர்.

————-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே
–1-3-9-

ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் – பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், – ருசி ஜனகன் ஆகைக்காகவும்- ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’

பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,
பிரமனும் திரு நாபிக் கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.இப் பாட்டில் இவனைப் பற்றி ப்ரஹ்ம ருத்ராதிகள் லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியைச் சொல்லுகிறார் 
ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில்,
ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகா குணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்து கொண்டு செல்வார்கள்.
மற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத் தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே, இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி யிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக – தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

இவை அவன் துயக்கே- மம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே, அவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை வெட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன் பக்கல் அணுகாதபடி செய்து, அவர்கள் அகலப் புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார். துயக்கு–சம்சயம் -ஐயம்.

——————

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே
 —1-3-10-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க; அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை -அவன் திருவருளால் காட்டின வடிவழகை -அனுபவிப்போம் நாம் என்று பாரிக்கிறார்.பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே அமர்ந்து –அநந்ய பிரயோஜனனாய் -வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.
இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.

—————-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே
–1-3-11-

இத்திருவாய் மொழி வல்லாரை எம்பெருமான் பிரதிபந்தகங்களைப் போக்கி திருவடிகளில் கொண்டு போகப் பற்றாமை முந்துற திருவடிகளிலே கொண்டு போய் அந்தமில் பேரின்பத் தடியரோடு இருந்த பின்னை பிரதிபந்தகமான ப்ரக்ருதி சம்பந்தத்தைப் போக்கி அருளும் –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை – கவிழ்ந்து ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கிடக்கிற தேவ ஜாதி யானது எழுத்து வாங்கும்படியாக ஆயிற்று,தோளுந்தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாறு போன்று கடைந்த படி.-குணங்களுக்குத் தோற்றுத் ‘தொழுது எழு’ என்கிற தம் பாசுரமேயாய் விட்டது
அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் ஆதலின், ‘அமரர்கள் தொழுது எழ’ என்கிறார்.

——————–

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ 
–1-4-1-

அருளி –இரப்புக்குச் செய்தது ஆகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி. அருள் பண்ணுகைக்கு அத்தலை குறைவு அற்றாற்போலே அன்றோ அருளுக்கு விஷயமான இத்தலை குறைவு அற்றபடி? இறைவன் விஷயத்தில் உதவி செய்கின்றவர்கள் கைம்மாறு கருதியன்று உதவி செய்வது; தங்கள் பேரருளாலேயாம். ‘என்னை?’ எனின், உபய விபூதியாளனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு ஒப்பாகக் கொடுக்கத் தக்க பொருள் இல்லையே இவனுக்கு? ஆதலால், ‘அருளி’ என்கிறாள்.

வெஞ்சிறைப்புள் உயர்த்தாற்கு – அவர்கள் -பரம சாம்யா பன்னராய் -எல்லாவற்றாலும் தன்னை ஒத்தவர்களாக இருக்கையாலே வேறுபாட்டினைக் காட்டும் அறிகுறியாகப்-வ்யாவர்த்தக விசேஷணமாய் – பெரிய திருவடியைக் கொடியிலே உடையவனாக இருப்பான். விரோதியைப் போக்கிக்கொண்டு வருகைக்கு நமக்கு அங்கே ஆள் உண்டு என்பாள், ‘வெஞ்சிறைப்புள்’ என்கிறாள்.
அன்றி, தன்னை விட்டு-நிர்த்தயமாக – அருள் இன்றிப் பிரித்துக்கொண்டு போகையாலே,
அக்ரூர க்ரூர ஹ்ருதய ‘தேரை மிக விரைவார் ஓட்டிக்கொண்டு செல்வதனால், அக்குரூரர் அருள் அற்ற மனமுடையவர்,’ என்று ஆய்ப் பெண்கள் கூறியது போன்று கூறுகிறாள் என்றலும் ஒன்று.

புள் உயர்த்தான்-புள்ளாலே தாங்கப் பட்டவன் என்னுதல்;-அன்றி, புள்ளைக் கொடியிலே உயர்த்தியவன் என்னுதல்.

‘என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில்’ என்பதற்கு, நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகின்றீர்களோ?
சிறை கட்டுதல், சிங்க விளக்கெரித்தல் செய்யில் செய்வது என்?’ என்று கூசுகைக்கு;
எனக்காகத் தூது போனாரை பரிஷ் வங்கோ ஹனுமதா (‘அனுமானுக்கு என்னாற்செய்யப்படும் இவ்வாலிங்கனமானது’) என்னுமாறு போன்று, மார்பிலே அணைக்கும் காணுங்கோள். நான் அணைய ஆசைப்படுகிற மார்பு அன்றோ உங்களுக்குப் பரிசிலாகக் கிடைக்கப் போகின்றது?’

இவ்விடத்தில் நாரை தொடக்கமானவற்றைத் தூதாகச் சொல்லிற்று -கடகருடைய கார்ய தேசிகத்வ ஸூ சக அர்த்தமாக – சிறையை கொண்டாடிற்று -ஞான ப்ரேம ரூப பஷத்வ அன்வயத்தாலே – பேடையும் சேவலுமான சேர்த்தி கடகருடைய பரஸ்பர சேஷ சேஷி பாவ ஸூசகம் –

——————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே
 –1-4-2-

சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும் நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?

பெருமானார்க்கு-பிரிகிற போது கண்ணாலே நோக்கி இவளைத் தனக்கே உரிமை யாக்கிப் போன-அநந்யார்ஹையாக்கி-படி.

ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-தெற்காழ்வார் கையில் திருவாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போகில் அத்தனை ஒழிய,
ஒன்று இரண்டு முழுக்கால் போகாது காண் நான் பண்ணின பாபம்,’ என்று
ஸ்ரீ திருக்கோட்டியூரிலே ஸ்ரீ தெற்காழ்வான் ஸ்ரீ கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையிற் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது

திருவடிக் கீழ் குற்றேவல் –திருவடிகளிலே கிட்டி அந்தரங்கத் தொண்டுகளைச் செய்வதற்கு,
‘தலைவி பிரிந்து வருந்துகிறவள் ஆதலின், ‘அவனைச் சேர்வதற்கு’ என்னாது
‘திருவடிக் கீழ்க் குற்றேவல்’ என்கிறது என்னை?’ எனின்,
அந்தணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமாறு போன்று, இவர் பிராட்டியானாலும் மார்பால் அணைக்க நினையார்;-திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை.

எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று ஸ்ரீ பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.

இழந்த கால விஷய சோகமும் -த்வரையும்-ததேக ரஷ்யத்வ அத்யாவசாயமும் -ஆகிஞ்சன்ய அநந்ய கத்வங்களும் ஸூசிதம்-இவ்விடத்தில் கடகருடைய யுக்தி மாதுர்யமும் சமவாயமும் ஸூசிதம் –

——————-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-

அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.

குறள்-கோடியைக் காணி யாக்கினாற் போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படிசிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
மாணாய்-உண்டு’ என்று இட்ட போதொடு‘இல்லை’ என்று தள்ளிக் கதவு அடைத்த போதோடு வேற்றுமை அற முக மலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவை யுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள்.
உலகு இரந்த கள்வர் என்பதற்குத்-தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச் செய்வர் ஸ்ரீ திருமாலை யாண்டான்.
ஸ்ரீ எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச் செய்வர்.
அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி,

ஆயின், இவள் அச் செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின்,
‘பெருநிலம் கடந்த நல் அடிப் போது’ என்று அன்றோ இவள் ஆசைப் பட்டாள்?
மேலும்,‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது?
ஸ்ரீ திருமங்கையாழ்வாரும், ‘முன்னங் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார்.
ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கேயாம்.

வல்வினையே மாளாதோ–இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி யாவள்.-மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–மதி கலங்கி,-அறிவு அழிந்தாள் என்மின்.-மதி எல்லாம் உள் கலங்கி-
தாம் தந்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கின-அறிவித்த பின்பு வாராது ஒழியின், அவனது அன்றோ பழிச்சொல்!’அருளாழி அம்மான் ஆகையாலே வருவர் என்றபடி.-இனி, உங்களுக்கு ஸ்வரூபம், அவனுக்குக் குணம், எனக்குச் சத்தை, உங்களுக்கு யுக்தி – ஒரு வார்த்தை என்பாள், ‘என்னீரே’ என்கிறாள்-

இத்தால் கடகருடைய ஆசார வைலக்ஷண்யமும் ஸ்ரைஷ்ட்யமும் தோற்றுகிறது –

———-

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ 
–1-4-4-

ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’ ‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச் செய்தார்.

இது தன் நிலை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்லாமல் இருத்தலின், ‘இது’ என்கிறாள்.நன்னீலம் மகன்றில்காள் இத்யாதி – அவர் நீலமுகில் வண்ணராய் இருந்தார்; நீங்களும் நீல மகன்றில்களாய் இருந்தீர்கள்; செயலும் அவரைப் போன்று இருப்பீர்களோ?’ என்றபடி-நல்குதிரோ நல்கீரோ- செய்வீர்களோ, மாட்டீர்களோ? முதல் வார்த்தையிலேயே பதின்கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமாறு போன்று, ஆற்றாமையின் கனத்தாலே ‘நல்குதிரோ நல்கீரோ!’ என்கிறாள்.

இதில் கடகருடைய ரூப வைலக்ஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

—————

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே 
–1-4-5-

தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் –விகலமாய்ப்போகாமல் நோக்கிக் கொள்ளச் சொல்,’ என்கிறாள்.-என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டு அருளாய்- ‘இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்’ என்பாள்,‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள்.
‘ஆயின், குருகு இரை தேடுவதனை விட்டு இதனைப் பார்க்குமோ!’ எனின்,
இங்கும் சேலும் கயலும் உண்டாகையாலே பார்க்கும்.
இனி, தன்னைக் கண்ண நீரைக் கொண்டே நிரூபிக்க வேண்டி யிருத்தலின் ‘மல்கு நீர்க் கண்ணேன்’ என்கிறாள் -மறுக்கும் வார்த்தையும் அமையும்; அவர் பக்கல் உள்ளது ஒன்றே வேண்டுவது என்னும்நினைவினள் ஆதலின், ‘ஓர் வாசகம்’ என்கிறாள்.

‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார்.
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம்
நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’
 என்றார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார்.
கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய்
பாவியேன் காண வந்தே’ 
என்றார் இவ்வாழ்வார் நாயகியும்.

அருளாயே சொல்ல வேணும் என்னும் ஸ்தானத்திலே அருள வேணும் என்கிறது
எதிர்தலை திர்யக் ஆக்கவுமாம் -தான் ஜனக குலத்தில் பிரக்க்கவுமாம் –
இவ் விஷயத்தில் உபகாரகரை இங்கன் அல்லது சொல்ல விரகில்லை –

நம்பி யேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய,
பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத்
திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும்.

இத்தால் -சிறு மா மனுஷர் என்கிறபடியே கடக விக்ரஹம் ஸூக்ரஹம் -என்று தோற்றுகிறது –

————

அருளாத நீர் அருளி அவராவி துவராமுன்
அருளாழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருளாழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே –
1-4-6-

தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒருவழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே? அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது; நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு, அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.

‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்று நெஞ்சுருகிக் கிடக்குமவர், ‘அருளாத நீர்’ என்கிறது என்ன நிலை விசேஷம் என்று அறிகிலோம்; அருளாத நீர்’ என்று ஒரு திருப்பெயர் சாற்றுகிறாள்.நீங்கள் அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது: கொடுவருவாரும் அங்கே உண்டு,’ என்கிறாள். அருள் ஆழிப் புள்-அருட்கடலான பறவை.-‘வெஞ்சிறைப்புள்’ என்றாள் முன்னர்க் கொண்டு போனபடியாலே; இப்போது வரவுக்குக் காரணமாகையாலே -உடல் ஆகையால் -‘அருளாழிப்புள்’ என்கிறாள்.கடவீர் – அனுகூலர் -‘அன்புள்ளவர்கள் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் -தான் ஊற்றின்பம் உறுகைக்குமாகப் போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் ஆதலின்,அசேதனமான – அஃறிணைப் பொருளான தேரினைப் போன்று, வடிம்பாலே தாக்கி நடத்த வேண்டும்’ என்பாள், ‘கடவீர்’ என்கிறாள். ‘

யாமும் என் பிழைத்தோம் – ‘நாங்கள் என்ன தப்புச் செய்தோம்?-தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, நாங்களும் கிரமத்திலே பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ?
திர்யக்கின் -விலங்கின் காலில் விழுவாரும், தூது விடுவாரும் தாமாக இருக்க, –
அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ குற்றம்?’ என்பாள்,
‘யாமும் என் பிழைத்தோம்?’என்கிறாள்.

இத்தால் கடகருடைய சார க்ராஹித்வமும் ரூப சோபையையும் தோற்றிற்று-

—————–

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7-

அருளாத திருமாலார்க்கு-இதற்கு- ந கச்சின் ந அபராத்யதி -‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க,-எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ
என்று இன்னாதாகிறாள்,’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர்.
‘ஆயின், பிராட்டியின் மேல் வெறுப்பாக, ஸ்ரீ பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலே யன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –-தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல்-முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –என்பு இழைக்கும் இளங்கிளியே –முஃதயத்தாலும் -இளமையாலும், ஸ்நிக்தமான பிணிதியாலும் – அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே!
இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு,
‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’யான் வளர்த்த நீயலையே-கலந்தார் செய்யுமவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ-நிவாகர் அல்லாத ஸ்வ தந்த்ரர் செயலை நீயும் செய்யவோ

இதில் -கடகருடைய அவயவ சோபாதிகளும் கிஞ்சித்க்கார பிரதி சம்பந்தித்வாதிகளால் வந்த பவ்யத்தையும் தோற்றுகிறது –

——————

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
–1-4-8-

பூவையைப் பார்த்து, ‘நீ அலையே’ என்கிறாள்.-இதனால், ‘பகவல் லாபம் சேர்ப்பாராலே’ என்று இருக்கிறாள் என்பது போதரும்.நோய் எனது-‘ஸ்ரீ பரதாழ்வான் நோய், என்றால் சாதுர்த்திகமாய் இராதது போன்று, இவளும் உலகத்தார் நோயினின்றும் தனது நோயை வேறுபடுத்திக் காட்டுவாள், ‘எனது நோய்’ என்கிறாள்.

இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்.
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, தமக்கு ஒரு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்;-தம்முடைய அந்திம தசையில் -அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது, வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.

சிறு பூவாய் -என்று கடகருடைய பருவச் சிறுமையும் உத்தேச்யம் என்று தோற்றுகிறது –

—–

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே
–1-4-9-

நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,-வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

நாடாத மலர் நாடி –‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர்
ஸ்ரீ நஞ்சீயர், ‘எண் திசையும் உள்ள பூக் கொண்டு’ என்கிறபடியே,
‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச் செய்வர்.

அடியார்கட்குக் கிஞ்சித்கரித்துச் ஸ்வரூப சித்தியாயினாற்போன்று, இறைவனுக்கும் கிஞ்சித்கரிப்பித்துக் கொண்டு அன்றோ ஸ்வரூப சித்தி?அத் தலையால் வருங் கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில், ‘

இத்தால் கடககார அவஸ்தா விசேஷத்தாலே பாதகராகிலும் அதில் தாத்பர்யம் இல்லை -கார்யகரராகில் உத்தேச்யர் என்று கருத்து –

————–

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் ஓன்றாம் அளவே –
-1-4-10-

விடலாழி மட நெஞ்சே-அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர். அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு ‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது; நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;

அடல் ஆழி அம்மானை- ஸ்ருஜ்ய பதார்த்தங்களுக்கு -படைத்த உயிர்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக ஆசிலே வைத்த கையுந்தானுமாக ஆயிற்றுக் கண் வளர்ந்தருளுவது.ஆழி மடம் நெஞ்சே- ஞானத்தினை யுடையையாய் எனக்கு உரிமைபட்டிருக்கிற மனமே! -அளவுடையையாய் பவ்யமான நெஞ்சே
அன்றி, இதற்கு, ‘சுழன்று வருகிற பேதை நெஞ்சே’ என்று பொருள் கூறலும் ஒன்று.-வினையோம் ஒன்றாம் அளவும் விடல்- படைப்பிற்குப் பயன் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க, பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம் அவரோடே சேருமளவும் நீ அவரை விடாதே ஒழிய வேண்டும்.

இத்தால் கடகராவார் அந்தரங்க பூதர் என்று கருத்து –

—————-

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே
–1-4-11-

கண்ணனை – இவ் வளவிலே வந்து முகங்காட்டிற்றிலன் என்கிற குற்றந் தீர வந்து முகங்காட்டுகையாலே- ஆஸ்ரித ஸூலபனானவன் – அடியார்க்கு எளியவன் ஆனான்.
இனி, பத்துடை அடியவர்க்கு’ என்கிற திருவாய்மொழியில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை அனுபவிக்கப் பாரித்து, அது கிடைக்காமையாலே தூது விட்டவர் ஆகையாலே, இங்கு முகங்காட்டினான் ஸ்ரீ கிருஷ்ணன் என்னவும் ஆம்.-இத்தால், அவனுடைய மேன்மையோடு சௌலப்யமும் நிலை நின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பு ஆயிற்று என்றபடி.

——————-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
 –1-5-1-

நித்திய சூரிகட்கு -அனுபாவ்யனானவனை -அனுபவிக்கப்படும் பொருளானவனை, 
மனம் வாக்குக் காயங்களால் தூஷித்தேன் ’ என்கிறார்.-‘வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து,  ‘அருவினையேன்’ என்கிறார்.-அருவினை’ என்னலாமோ?’ எனின்,
‘பாபம் என்பது, அநிஷ்டாவஹம் -தமக்கு விருப்பம் இல்லாததைக் கொடுப்பது’ என்று இருக்குமவர் ஆகையாலே, இறைவனை விட்டு அகன்று நீங்கியிருத்தல் தமக்கு விருப்பமாயினும் அதனைச் செய்ய ஒட்டாது தடுக்கின்றமையின் அன்பினை ‘அருவினை’ என்கிறார்.‘களவேழ்’ என்பதற்குக் ‘களவிலே வேட்கையுடையனாய்-அபி நிவிஷ்டனாய்- ஊற்றமுடையனாய்’ என்று கூறலும் ஆம்

இளஏறு ஏழும் தழுவிய – ம்ருத்யு சமமாய் -யமனுக்கு ஒத்தனவாக இருந்துள்ள இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக ஒருக்காலே தழுவினான். பின்னர் அவளை அடைதலால், அவள் முலையிலே அணைந்தது போன்று இருக்கையாலே  ‘தழுவிய’  என்கிறார்.
எந்தாய் என்பன் – ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன்.
யுக்தி மாத்ரமேயோ சொன்ன அளவேயோ!-நினைந்து நெஞ்சாலும் தூஷித்தேன் – நிந்தித்தேன்.
அவ்வளவேயோ நைந்தே – பிறர் அறியும்படி சிதிலனாய்-காயிகத்தாலும் உடலாலும்-தூஷித்தேன் – நிந்தித்தேன்.

‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்;-‘எத்திறம்’ என்றேன்;-பிராட்டிமார் நிலையை ப்ராப்தனாய் – அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு அநு தபிக்கிறார் வருந்துகிறார் என்று பொருள் கூறலும்

—————

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே
 –1-5-2-

நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், -தப்பச் செய்தேன் ’ என்றார் கீழ் பாசுரத்தில்;-ப்ரேமார்த்த சித்தரான -அன்பினால் நனைந்த மனத்தையுடைய ப்ரஹ்மாதிகள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்!-தப்பச் செய்தேன் ‘ என்ற இடம் தப்பச் செய்தேன் என்கிறார் இப் பாசுரத்தில்;

அவன் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும்,-பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும்  ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.

நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல்  மனம் செய் ஞானம்’ என்று  சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச் செய்வதனால், ஈண்டு,  ‘நினைந்த’என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து  ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச் செய்கிறார்.

————-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் ருவனே
–1-5-3-

‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே; சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.-கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்-அசேஷ ஜன சம்ஸ்லேஷ ரூபமான லோக விக்ரமண ஸ்வ பாவத்தை ஈஸ்வரன் காட்டக் கண்டு விஸ்மிதராகிறார் –.தான் ஓர் ருவனே-இது ஒரு பிரகாரமே-மேன்மைக்கு ஒப்பு இல்லாதா போலே நீர்மைக்கும் அவதி இன்றிக்கே இருக்கிறபடி என் -என்று விஸ்மிதர் ஆகிறார் –ப்ரீதி அதிசயத்தாலே –ஒருவனே தானோர் ஒருவன் –என்று அவனைக் கொண்டாடுகிறார் –

—————–

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –
1-5-4-

இனி, ‘நான் அல்லேன்’ என்னிலும், தன்னுடைய சௌசீல்ய குணத்தால் என்னை விடான்,’ என்று – ஸமாஹிதராகிறார்- ‘தான் ஓர் தனி’ என்னும் மூன்று பதங்கள் -அழகிய த்ரிவித மூன்று காரணமும் தானேயாகி’ என்றபடி.

தன்னின் மூவர் முதலாய-தன்னில் -என்றது தன் பக்கலிலே என்ற படியாய் –
தன் சங்கல்ப ஞான ரூப ஞானத்தால் சேந்த்ர-என்று இந்திரனையும் கூட்டி –
பிரமன் சிவன் இந்திரன் ஆகிய மூவர் முதலாய – என்று கூறலும் ஆம்.

நெடு நாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால்,
அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார்,‘எம்பெருமானே’ என்கிறார்.-இத்தலை இறாயா நிற்க -தன் பேறாகச் சேர விட்டுக் கொள்ளுமவன் இறே ஸ்வாமி யானவன் –இந்த ஸுசீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஸ்லேஷியா விடில் அவனுக்கு சித்தியாது -ஆதலால் ஸுசீல்ய குண சித்யர்த்தமாக இனி அவனுக்கு ஆத்மாந்தமாக சகல சேஷ வ்ருத்தியும் பண்ணுவேன் -என்கிறார் –

———-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே
–1-5-5-

இவ்வளவிலே முகம் காட்டில் பழையபடியே அகலும் -அவர் தாமே அர்த்திக்கும் தனையும் முகம் காட்டக் கடவோம் அல்லோம் -என்று அகல நிற்க -உன்னைச் சேருமாறு அருளாய் என்கிறார் –

தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே  ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார்

அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருள வேண்டும்.-தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.

இத்தால் -1–ப்ரார்த்த நீயனுடைய நித்ய புருஷகார யோகத்தையும் – -2-ஆஸ்ரித வக்ரதையைக் கழிக்கும் ஆர்ஜவ ஆபாதகத்வத்தையும் -3-க்ஷண அபி நிவேசத்தையும்
-4-ப்ராப்யமான தேச விக்ரஹ வை லக்ஷண்யத்தையும் -5-பிரதிபந்தக நிவர்த்ததையும் –சொல்லிற்று ஆயிற்று –

————-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –
1-5-6-

இவர்-ஆபிமுக்யம் – எதிர்முகம் செய்தவாறே, இறைவன் அல்பம் சிறிது தாழ்த்தான்;
இவர் ‘என்னை’ இழந்தாய்? கிடாய் ’ என்கிறார்.-இவர் அபேஷித்த போதே முகம் காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் ஸ்ம்ருதி விஷயமாய் நலிய சிதிலர் ஆகிறார் –அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவர்க்குமே யாதலின்‘வினையேன் வினை’என்கிறார்.

இனையாய்- ஏவம்விதமான குண சேஷ்டிதங்கள் -இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே.-இனைய பெயரினாய்– அவற்றிற்கு வாசகங்களான திருப் பெயர்களை உடையவனே.-என்று நைவன் – ‘காண வேண்டும், கேட்க வேண்டும்’ என்ன மாட்டாதே – உருகுகின்றேன். அடியேனே –யார் உடைமை அழிகிறது?
இவ் வுயிர் ஏதேனும் தனக்குத் தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள்-வஸ்துவை – பொருளை நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்பார்,அடியேனே’- என்கிறார்,
உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

இத்தால் -1-அனுபவ விரோதி நிவர்த்தகமும் –-2-அனுபாவ்ய விபூதி யோகமும் –-3-ஆஸ்ரித சத்தாதி ஹேதத்வமும்–4- தத் விஷய ஸுலப்யாதிகளும் -5-அத்தாலே வந்த உன்மேஷமும்
-6-தத் ஹேதுவான ஸ்ரீ லஷ்மி சம்பந்தமும் -7-விசுவாச ஜனகத்வமும் –-8-தன் நிபந்தந உஜ்ஜ்வல்ய அதிசயமும் –தோற்றுகிறது –

————–

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
–1-5-7-

நைவன்’ என்றார்; இவரை நைவிக்க மனம் இல்லாமையாலே வந்து முகங்காட்டினான்;
அவனைப் பார்த்து ‘நம்மால் வரும் குணாதிக்யமும் -குணத்தின் மேன்மையும் -இவனுக்கு வேண்டா,’ என்று அகலுகிறார்.

அடியேன் சிறிய ஞானத்தன் – சம்சாரிகளில் அறிவு கேடர் -சர்வஞ்ஞர் -‘முற்றறிவினர்’ என்னும்படியன்றோ என் அறிவு கேடு!
‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே.
அன்றிக்கே , ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று;
ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று சேஷத்வத்தை -அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம்.தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’ என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச் செய்கிறார்-கண்ணனை- அறிய அரியனாயிருந்தும் ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.

அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்;-அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.கைவல்யாதி ப்ரயோஜனங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பாக்யம் பண்ணினாரோ –

அடியேன் காண்பான் அலற்றுவன்- அடியேன்’ என்று அலற்றுவன், காண வேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே – உண்டியே உடையே என உகந்து ஓடும் இம் மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த -சம்சாரியாக இருந்த -நாளில் அறிவே நன்றாக இருந்தது அன்றே!
‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக் காட்டிலும் அறிவு கேடு உண்டோ?-சம்சார தசையிலே அஜ்ஞ்ஞானம் தன்னை அழிக்குமது இறே இது அவனை அழிக்குமது இறே –

————————

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே
–1-5-8-

நீர் உம்மைக் கொண்டு அகலுவீராகில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினால் புக்க உலகம் புகுவீர்,’ என்றான். அவன் கருத்தைத் தாம் அறிந்தமை தோற்ற அநுபாஷிக்கிறார் இப் பாசுரத்தில்.மாயோனே – ஆஸ்ரித ஸ்பர்சமுள்ள -‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான- ஆஸ்ரித வியாமோஹத்தாலே – அடியார்களிடத்துள்ள பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனாய்ப் புக்கு ‘வெண்ணெய் அமுது செய்ய’ என்றால் கொடார்கள் அன்றே?-மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக;-வெண்ணெய் அமுது செய்தது, உன் சத்தைக்காக.-மண்ணை உண்கிற போது சேஷித்தது உண்டாகில் இறே உமிழ்கிற போதும் சேஷிப்பது-

————

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே
–1-5-9-

பரிவரான யசோதாதிகள் வெண்ணெய் உனக்கு அம்ருத சமம் -என்னுடைய ஸ்பர்சம் விஷ சமம் -நான் அகலுகையே உக்தம் -என்ன -பூதனை நஞ்சு பாதகம் ஆகாதாப் போலே உம்முடைய தோஷமும் பாதகம் அன்று –பெற்ற தாய் போலே வந்த பேய்ச்சி -என்று போலியும் அமையும் -என்ன-ஆகில் அகல்வேன் அல்லேன் என்று சமாஹிதர் ஆகிறார்-‘பூதனையை முடித்தது போன்று ‘நான் அல்லேன்’ என்று அகலப் புக்க
என் நிர்ப்பந்தத்தைப் போக்கினான்,

என் அம்மான் –mநான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்.
இனி, ‘நித்திய சூரிகளும் மற்றும் உள்ள எல்லா ஆத்துமாக்களும் ஒரு தட்டும்
நாள் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே விசேடமான திருவருளைச் செய்தவன்’ என்பார், ‘என் அம்மான்’ என்கிறார் எனலுமாம். அம்மா மூர்த்தியைச் சார்ந்து- விலக்ஷணமான திருமேனியை யுடைய அம் மகா புருஷனைக் கிட்டி, ‘கிட்டி மாயோம் – இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம்; ‘பிரிகை யாவது – விநாசம்’ என்று இருக்கையாலே ‘மாயோம்’ என்கிறார்.-இது, ‘நானும் என்னோடு சம்பந்தமுடையாரும் முடியக் கடவோ மல்லோம்,’ எனப் படர்க்கையை உளப் படுத்திய உளப் பாட்டுப் பன்மை.
இனி, இறைவனை உளப் படுத்தியதாகக் கொண்டு, ‘இரண்டு தலையையும் அழித்துக் கொள்ளக் கடவோம் அல்லோம்’ என்று பொருள் கூறலுமாம்.

ஸ்வதஸ் சர்வஞ்ஞனான – தனக்குத்தானே முற்றறிவனானவனும் ‘தாய்’ என்று பிரமிக்கும்படி தோற்றின பெரிய வஞ்சனை யுடையவளான பூதனை முடியும்படியாக.-எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அநந்யார்ஹம் ஆக்குகையாலே அம்ருதம் ஆயிற்று –‘பூதனையுடைய விஷம் அமிருதமாம்படி அமுது செய்தவன் தான் யார்?’ என்னில், –வானோர் தனித் தலைவன் – அயர்வு அறும் அமரர்களுக்குத் தனித் தலைவன் ஆனவன்.-மலராள் மைந்தன்-‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, -அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன். மைந்தன் – அவளுக்கு மிடுக்கானவன். இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

————–

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே
–1-5-10-

இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.-இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால் வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)நெடுமால்- இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு – புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்-நெடுமாலே-‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார். -அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.என்னைத் திருத்தி -பின்னை எனக்குத் திரு நாட்டையும் தந்து அருளுகைக்காக ஆகுவதே -எம்பெருமானுடைய சர்வஞ்ஞத்வ சர்வசக்திதவ
பரம காருணிகத்வ ஆஸ்ரித வத்சலத்வம் என்ற இப்படி அபர்யந்த குணங்கள் எல்லாம்
என்கிறார் –

————–

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –
-1-5-11-

பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை  ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

————

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே
–1-6-1-

பரிவது இல் –துக்கம் இல்லாத.–பக்ஷ பாதம் இல்லாத’ –ஹேயப்பிரத்ய நீகன்-உப லக்ஷணத்தால் கல்யாண குண யோகமும் அருளிச் செய்தாராயிற்று.பிரி வகை இன்றி –
பிரிகையாகிற வகை இன்றி; அதாவது, -உன் பெருமை மாசு உணாதோ?’ என்று அகல வகை இட்டுக் கொண்டு அகலாமல் என்றபடி.-

செதுகை யிட்டுப் புகைக்க அமையும்; கண்ட காலி இடவும் அமையும்,’ என்று அருளிச் செய்வர்-ஸ்ரீ பட்டர் –கூடாது என்று சாஸ்த்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று ஸ்ரீ நஞ்சீயர் கேட்க,
அவனுக்கு ஆகாது என்கிறது அன்று; பறிக்கிற அடியார் கையில் முள்பாயும் என்பதற்காகத் தவிர்த்தன காணும்!  ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்’ என்று இறைவனுக்கே உரிய திருத் துழாயோடு -விசஜாதீயங்களை -அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் ஸ்ரீ திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு -த்ரவ்ய தாரதம்யம் -பார்ப்பது அன்று என்பது விளங்குமே!-அப்ராக்ருத த்ரவ்யம் -பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்தான் வேண்டும் என்று இருந்தானாகில், ‘புள்ளாய் ஓர் ஏனமாய்’ அவதரிப்பானோ! ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ?’ என்று அருளிச் செய்தார்.
பின்னர் ஸ்ரீ ‘நஞ்சீயர்’வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது  ‘ஸ்ரீ வராக நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப் பட்டிருத்தலைக் கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடு தான்!’ என்று போர வித்தராய் – மிகவும் ஈடுபட்டவரானார்.

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமே – இப்படி அநுஸந்தியாதாருடைய ஹிருதயத்தை நினைத்திரோம் – நாங்கள் பதின்மரும் என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களும் –

———–

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே
–1-6-2-

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில் –நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா -என்கிறார் இதில்-

மது வார் தண் அம் துழாயான்-
‘‘புரிவதுவும் புகை பூவே’ என்றார் கீழே -;
‘மதுவார் தண் அம் துழாயான்’ என்கிறார் இங்கு; இது சேரும்படி என்?’ எனின்,
பூவாகில் மதுவோடே கூடியல்லது இராமையாலே சேரும்’ என்று சொல்லுவர்கள்;
‘வதுவார் தண் அம் துழாயான்’ என்று பாடமான போது சாலப் பொருந்தும்;
வதுவை-மணம்; ஆர்தல் -பூர்ணம் –
வதுவை -வது- என்று கடைக்குறைந்து நறு நாற்றத்தை யுடைய -துழாய் என்றுமாம் –
இது தமிழர் போரச் சேரும் என்பர்-

மதுவார் தண் அம் துழாயான்’என்கையாலே, -சர்வாதிகன் -எல்லாரினும் அறப்பெரியவன் என்பதனைத் தெரிவித்தபடி, 
‘முதுவேத முதல்வன்’ என்கையாலே, பரிபூர்ணன் என்பதனைத் தெரிவித்தபடி.
இவ்விரண்டும் -ஸ்வாராதன் – எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதற்கு உறுப்புகள்.

இப்படி விலஷணன் ஆனவனுக்கு நான் அடிமை செய்கை அயோக்யன் என்று பாராதே அந்தரங்க வ்ருத்தியோடே பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே-தம் தம்முடைய அநர்ஹத்தையைப் பாராது -எல்லா வ்ருத்தியும் செய்யக் கடவனாகை ஆட்செய்கைக்கு அதிகாரம் –

————–

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –
1-6-3-

அவனுடைய இஸ் ஸ்வபாவத்தை அனுசந்தித்து -நினைந்து, தாம் அதிகரித்த காரியத்தை பரோபதேசத்தை-மறக்கும்படி தம்முடைய மனம் வாக்குக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான -ப்ராவண்யத்தை -அருளிச் செய்கிறார்-தனித்தனி =என் என் என் -என்று கரண த்ரயத்தாலும் தம்முடைய உகப்பு தோற்றுகிறது –ஏகாரம் -விடாது பாடும் -ஆடும் -என்னும் வினைகளுடன் கூடிக் கிடக்கிறது –

———–

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே
–1-6-4-

தம்முடைய மனம் வாக்குக் காயங்கட்கு அவன் பக்கல் உண்டான-ப்ராவண்யம் –காதாசித்கமாய் விடுகை இன்றிக்கே – ஒரு காலத்தில் தோன்றி மறைதல் இன்றி,
நித்திய ஸூரிகளைப் போலே யாத்திரையான படியைச் சொல்லுகிறார்.-பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் – தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச் சொல்ல, நான் முந்துறச் சொல்ல’ என்று பிணங்கி நித்திய ஸூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப் போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன்.சர்வேஸ்வரனான எம்பெருமானை நான் அனுபவித்து ப்ரீதி அதிசயத்தாலே தைவா விஷ்டரைப் போலே அக்ரமமாக நின்று ஆடி அவனை வணங்கி அடிமை செய்யும் இதுவே ஸ்வ பாவமாகப் பெற்றேன் -என்கிறார் –

———–

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே
—1-6-5-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என்ற இடம் ஸ்வீகார சமயத்தில் குறை பாரான் என்றது -இங்கு பரிமாற்றத்தில் தரம் இட்டுக் கொள்ளான்-என்கை –விள்கை -பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை-விள்ளாமை -அநந்ய பிரயோஜனம் ஆகை
விரும்பி -ஆதரித்து உள் கலந்தார்க்கு-இவனையே பிரயோஜனமாகப் பற்றி இவனுடனே ஒரு நீராக கலந்தவர்களுக்குஓர் அமுதே –அத்விதீயமான அமிர்தமாய் இருக்கும் -ஆராவமுது இறே –

————

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே
–1-6-6-

அவன் படி இதுவாக இருக்க, அவனை விட்டு-பிரயோஜனாந்தரத்தை – வேறு பலன்களைக் கொண்டு அகலுவதே!’ என்று-ப்ரயோஜனாந்தர பரரான – வேறு பலன்களை விரும்பிய தேவர்களை நிந்திக்கிறார்.நிமிர் சுடர் ஆழி நெடுமால்-இவருடைய அமிர்தம் இருக்கிறபடி. 
‘நால் தோள் அமுதே’ அன்றோ இவர்க்கு அமுது?  அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்’ என்கிறபடியே, கையுந்திருவாழியுமாய் அன்றோ அவருடைய அமிருதம் இருப்பது?ஸ்ரீ நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவ சாதி வெறும் மரையோ? ‘உப்புச் சாறு கிளருவது எப்போதோ?’ என்று கவிழ்ந்து பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையையும் விட்டு!’ என்பராம்.‘கடலான்’ -‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ள லாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய், ஸ்வ சந்நிதானத்தாலே – தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’என்கிறார். ‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ என்பது ஸ்ரீ பொய்கையார் திரு வாக்கு.தன்னையே ப்ராப்யமாகப் பற்றி விடாதவர்களுக்குத் தன்னையே போக்யமாகக் கொடுக்கும் –அல்லாதார்க்குத் தன்னை ஒழிய ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுக்கும் –

————–

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே
–1-6-7-

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நாள் கடலைக் கழிமின் – இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து -சம்சார துரிதத்தை -பிறவிப் பெருங்கடலைக் கழித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.

————-

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே
–1-6-8-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ் வாத்துமாவுக்குச் ஸ்வரூபத்தோடு கட்டுப்பட்டதோ-ஸ்வரூப அனுபந்தியோ – என்னும்படி பொருந்தி யிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி.
இனி, ‘வழி நின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று,-பகவத் பிராப்தியை – பகவானை அடைதலைத் தடை செய்கிற -நிரோதிக்கிற -கர்மங்கள்’என்று பொருள் கூறலுமாம்.

அழிவு இன்றி ஆக்கம் தரும்-ந ச புநரா வர்த்ததே ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தரும் –கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1
-6-9-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில் தரும வரும பயனாய -திரு-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக்கேள்வன்’ என்கிறார்.ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –

————

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
–1-6-10–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -இப்படி அவனும் அவளும் குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம் கூடி?’ என்னில்,‘தன் திருவடிகளிலே தலை சாய்த்த அளவிலே’ என்கிறார் –மாதவனார்-பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க ஆயிற்றுப் போக்குவது.-ஒருதலை ஜென்மம் -ஒருதலை மரணம் -நடுவே ஆதி வியாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ-
குற்றம் கண்டில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் என்றால் –
அவளுக்காகப் பொறுத்தோம் -என்னும் அத்தனை –பெரிய திருவடியை விஷயீ கரிக்குமா போலே இன்று ஆஸ்ரயிப்பாரை விஷயீ கரிக்கும் ஸ்வபாவர் –

————-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே
–1-6-11-

மாத்ரு சம்ரக்ஷணம் அழகிது ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று,
பகவத் ஸமாச்ரயணம் எளிது – ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்க வேண்டுகிறது –இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம்-நிரபேஷமாக- இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள் ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்-பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் 

கவி பாடுகிறவனுக்கும்-கவி பாட்டு உண்கிறவனுக்கும்-கவிக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் தீதும் -அவமும் -ஏதமும் – என்றும் சொல்லுவர் –ஸ்ரீ பட்டர், ‘ஏதம் இல் ஆயிரம்’ என்று பிரபந்த லக்ஷணம் கூறிய போதே,- த்ரிவித தோஷ ராஹித்யம் – முக்குற்றங்கள் இல்லாமையும் சொல்லியதாம்; இனி, தீதும் அவமும் என்பன செய்வன என்?’ என்னில்,
‘சடகோபன் மாதவன் பால் தீது அவம் இன்றி உரைத்த’ என்று கூட்டிப் பொருள் கொள்க,’ என்று அருளிச் செய்தார்.
அதாவது, தீதாவது, ‘நான்-ஸ்ரீ யப்பதி திருமகள் கேள்வன் அல்லனோ!’ என்று தன் மேன்மையைப் பார்த்துக் கடக்க இருக்குமது.
அவமாவது, ‘ஆஸ்ரயிக்கிறவன் அடைகின்றவன் நித்திய சம்சாரி அல்லனோ!’ என்று இவன் சிறுமையைப் பார்த்துக் கைவிடுமது.
இவை இல்லாமையைச் சொன்ன இப் பத்து என்றபடி.

—————-

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே
–1-7-1-

நிரதிசய போக்யனை ஆஸ்ரயித்து வைத்து -ஷூத்ர பிரயோஜனத்தை அபேஷிப்பதே-என்று கேவலரை நிந்தித்து-அவர்கள் சிறுமை பாராதே அவர்கள் அபேஷித்ததைக் கொடுப்பதே -என்று அவன் நீர்மையைக் கண்டு விஸ்மிதர் ஆகிறார்-அறவனை – அவர்கள் படியையும், காரியம், பலன் கொடுக்கின்றவன் படியையும் பார்த்து, ‘என்ன பரம உதாரனோ!’என்கிறார்;
ஒருவன் விரும்பும் பயன் யாதாயினும், அதனைப் பெறுவற்குத் தன்னை விரும்பும் அத்தனையே அவன் வேண்டுகின்றான் என்றபடி.
‘எங்களுக்கு நீ வேண்டா; ஷூத்ர பிரயோஜனம் -சிறிய பயனே அமையும்,’ என்று இருக்கிறவர்களுக்கும் அதனைக் கொடுத்து விடுவதே! என்ன தார்மிகனோ!’ என்கிறார்.

அந்தணன்-என்று . சாணிச் சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை;
இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை.-ஆழிப் படை அந்தணனை-கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்.

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்.
‘மறவியை இன்றி’ என்று, அவர் தம் செயலுக்கு இரங்கும் இவர் மறப்பரோ?’ எனின்,
இவர்க்குக் கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் முன் அடி தோற்றாது; 
‘சக்கரத்து அண்ணலே’ என்றால் பின்னைத் தரைப்படும் இத்தனை அன்றோ இவர்?’ 
ஸ்ரீ திருமங்கை மன்னனும், ‘ஆழியொடும், பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன்!’ என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர்.
‘பிள்ளாய், நல்லதை மறக்கப் பண்ணா நிற்க இவ் விஷயம், தீயதை மறவாது ஒழிவதே!

மறவியை -மறப்பை -மறப்பு இன்றிக்கே-மறவாதே மனத்து வைப்பாரே-
உபாசன பரமானால் -சுடர் விளக்கம் குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது – அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந் நிலை குறையாதே நிற்பதே! இவ் வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.

————–

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே
–1-7-2-

ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை
இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார்.
இதனால், பிராப்யத்வம் கூறியபடி.-அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், பிராபகத்வம் கூறிய படி.

எங்கள் ஆயர் கொழுந்தே-ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு-பிராகிருத – சரீர சம்பந்தத்தினை விரும்பி,  எங்கள் ஆயர்’ என்கிறார்.
அன்றி,
எங்கள் கொழுந்தே-– அவதாரந்தான் அடியார்களைக் காப்பதற்காகவே எடுக்கப்பட்டது ஆதலானும்,-வெண்ணெய் களவு கண்டு புசித்ததனால் நகரம் கலங்கிய செய்தி பழையதாக எழுதிக் கிடக்கவும், அதனைக் கூறிய அளவில் ‘எத்திறம்’ என்று மோகித்தவர் இவரே ஆதலானும், எங்கள் கொழுந்து’ என்கிறார் என்று கொண்டு, ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு அடை மொழி ஆக்கலுமாம்.
இனி, தான், பிரமன் முதலிய தேவர்கட்குத் தலைவனாக இருத்தலால் உளதாய பெருமையைப் போன்றே, ஆயர்தங்களுக்குத் தலைவனாய் இருத்தலால் உளதாய பெருமையையும் பெருமையாக நினைக்கிறான் என்பார்,  ‘ஆயர் கொழுந்தே’ என்கிறார்

———–

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
1-7-3-

எம்பெருமானைத் தமக்கு இனிதாக புஜியா நிற்கச் செய்தெ சாம்சாரிக சகல துக்கங்களும் போயிற்று என்கிறார் –
ஷூ த்ரமான பிரயோஜனத்துக்காக பற்றினேன் அல்லேன்
அவனைப் பரம பிரயோஜனத்துக்கு உபாயமாகப் பற்றினேன் அல்லேன் –
இனிய விஷயம் என்று அனுபவிக்க இழிந்தேன் -விரோதியானது தானே போகக் கண்டேன் -என்கிறார் –

வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்ப டவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும்-அவரால் புடை உண்ணும்-‘-மத்தாலே ஓர் அடி அடிப்பார் போலே காணும்’ என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும்படி.அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து,-ஆஸ்ரிதர் ஸ்பர்சமுள்ள பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத்
தலைக் கட்ட மாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப் பிரானை’ என்கிறார்.என் மாணிக்கச் சோதியை-
அடியார்கள் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அறக் கடை யுண்ட மாணிக்கம் போன்று,
திரு மேனி புகர் பெற்று வருகிறபடி.என் சோதியை-அப் புகரைத் தனக்கு முற்றூட்டு ஆக்கினான் ஆதலின், ‘என் சோதியை’என்கிறார்.மயர்வை அறுத்தவன் இறைவனாக இருக்க, ‘அறுத்தேன்’ என்று தம் தொழிலாகக் கூறல் பொருந்துமோ?’ எனின், 
‘இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை’ என்று விரும்பியவர் தாமே யாதலின்,’ -அபேக்ஷித்தபடியே -விரும்பியவாறே பல அனுபவம் தம்மது ஆகையாலே ‘அறுத்தேன்’ எனத் தம் தொழிலாக அருளிச் செய்கிறார்.-தூய வமுதைப்அந்த அம்ருதம் அதிக்ருதாதிகாரம்-இது சர்வாதிகாரம் –அந்த அம்ருதம் சம்சாரத்தைப் பூண் கட்டும்-ஸக்ருத் சேவ்யம் அது -சதா சேவ்யம் இது

———-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ
–1-7-4-

தன் படியைக் காட்டி என்னை இசைவித்து -அயர்வறும் அமரர்களோடு கலக்குமா போலே என்னோடே கலந்த உபகாரகனை நினைத்து விட உபாயம் உண்டோ -என்கிறார் –
முன்பு அயோக்கியன் என்று அகன்றவர் ஆகையால் இனி விடேன் என்கிறார் –

என் மனத்தே மன்னினான் தன்னை – இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது என்று என்னுடைய மனத்திலே புகுந்து- ஸ்தாவரப் பிரதிஷ்டையாக இருந்தவனை,-என் மனத்தே-புறம்பேயும் -ஒரு கந்தவ்ய பூமி -சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான்-உயர் வினையே தரும் – -ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான்-தரும்-தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான்
ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’என்கிறார்.-காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’,  ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’,  ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’-என பத்தியை மேன்மேலும் தந்து கொண்டே இருக்கின்றான்-ஒண் சுடர்க் கற்றையை – இதனால், எனக்கு உபகரித்தானாய் இருத்தல் அன்றியே, ‘தான் உபகாரங்கொண்டான்’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற ‘இரா நின்றான்’ என்கிறார்.-என் இசைவினை – ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி  என் இசைவு தானாய்ப் புகுந்தவனை.

என் சொல்லி யான் விடுவேன் – 
1-‘சிறிது மயர்வு கிடந்தது’ என்று விடவோ? -மயர்வு அற
2-‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?- என் மனத்தே மன்னினான்
3-‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? -உயர் வினையே தரும்
4-‘தான் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு-ப்ரத்யுபகாரம் – கொள்ள இருந்தான்’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
5-‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? -ஒண் சுடர்க் கற்றையை
6-‘மேன்மை போராது’ என்று விடவோ? -அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
7-‘இப் பேற்றுக்கு-கிருஷி பண்ணினேன் – முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? என் இசைவினை எதனைச் சொல்லி நான் விடுவேன்?’ என்கிறார்.-

———–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
–1-7-5–

‘திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவேன்?’ என்கிறார்

இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.-மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?
ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.-உய்யக்கொண்டு விட்டிலன்;-மேல் மேல் எனக் கொள்ளா நின்றான் ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.-உடையவன் ஆகையாலே செய்தான்-திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு-யத்னம் – முயற்சி செய்தவர் யார்?’ 

விடவே செய்து விழிக்கும்–அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற.
இனி, இதற்குத் ‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து விழிக்கின்ற’ என்று கூறலுமாம்.-தவாஸ்மி–தாஸோ அஸ்மி -என்றால் போலே சொல்லுகை – இனி, ‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று பொருள் கூறலும் ஓன்று.விஷமமான சேஷ்டிதங்கள் என்னவுமாம் -விடர் உண்டு தூர்த்தர் -அவர்களுடைய செயலைச் செய்து என்றுமாம்-விடவே செய்து விழிக்கை -ச விலாசமாக நோக்குகை –

—————

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ
–1-7-6-

அவன் தான் விடில் செய்வது என் -என்னில் -தன் நீர்மையாலே -தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும்-என்னைத் தோற்பித்தவனை நான் விட இசைவேனோ என்கிறார்-பிரான் –நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.-பெரு நிலம் கீண்டவன்-சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்.-ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான்-மரா மரம் எய்த மாயவன் –இது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.-பின்னை யான் ஒட்டுவேனோ-என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப் போமோ?’ என்பதாம்.
இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்  பணிப்பர். தொங்குகை-திரிதல்.

————-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே
–1-7-7–

நான் நெகிழ்த்துக் கொடு போக்கிலும் அவன் இசையால் -என்கிறார் –ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று -ப்ரதிஜ்ஜை -சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், 
தான் ஒட்டி’ என்கிறார்.என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்வர். -‘எனக்கு ஞானம் பிறத்தற்கு-கிருஷி பண்ணி -முயன்றவன்–பிறந்த ஞானம் பயன் பெறும் அளவாகக் கொண்டு, நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ உடன்படுவேனோ?’-

————-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே
–1-7-8-

அவனுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது’ என்கிறார்.-‘ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்திய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புரப் பரிகரமான இவ் வாத்துமாவை அகற்றப் போகாது,’

——

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ
–1-7-9-

சர்வ பிரகாரத்தாலும் அவனை ஸம்ஸ்லேஷித்த -ஏக த்ரவ்யம் — என்னலாம்படியான இவ் வுயிரைப் பிரிக்கும்படி எங்ஙனே?’ என்கிறார்-விளக்கு, விளக்கின் ஒளி என்னும் இரண்டும், இரண்டு பொருள்களாய் இருப்பினும், ‘ஒன்றனை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் இருக்குமே –.-அமரர்க்கு முழுமுதல்’ என்றவர், ‘லீலா விபூதிக்கு ஆதியை’ என்னக் காரணம் யாது?’ எனின், இவ்வுலகில் உள்ளார்க்கும் நித்திய ஸூரிகளைப் போன்று சம்பந்தம் உண்டாயிருக்கவும், இவர்கட்கு இச்சை இல்லாமையாலே, யோக்கியதையைப் பண்ணிக் கொடுக்குமளவே செய்கிறான் ஆதலின், ‘ஆதியை’ என்கிறார் .

————–

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே
–1-7-10–

இப்படிப்பட்ட இவ்வனுபவத்தை கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தாலும் திருப்தன் ஆகிறிலேன்-என்கிறார் –இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு –அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது-இரண்டாம் பாட்டு –அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –பொருவல்லன் – ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்-பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை-அன்றியே பொரு என்று பொருத்தமாய் -அநன்யரைச் சேர வல்லன் என்றுமாம் –

————-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே
–-1-7-11-

அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்.

உடைந்து ஓடுவிக்கும்-இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், 
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் என்கிறபடியே,
சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இருவர் ஒருவழி போகப் பெறார்கள் –
இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற்சென்று சேரினும்-ஆஸ்ரயாந்தரத்தில் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’-மறுமுட்டப் பெறாதபடி அல்லாதனவாகக் கெடும்

———

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே
–1-8-1-

நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.‘ஆயின், அங்குள்ள அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லையே?
அங்ஙனம் இருக்க, அங்கு ஆர்ஜவ குணம் எற்றிற்கு?’ என்னில்,
அவர்கள் பலராய் இருத்தலானும், அவர்கட்கும் ருசி பேதம் உண்டு ஆதலானும்,
அவர்கள் நினைவு அறிந்து பரிமாறுதற்கு அங்கும் ஆர்ஜவ குணம் வேண்டும்.

ஓடும் புள்ளேறி-திருவடி ‘இப்பொழுது அடியேன் மேல் எழுந்தருள வேண்டும்’ என்று விரும்பினால், ‘வேண்டா’ என்னாது மேற்கொள்ளும் ஆர்ஜவமாம்.-பெரிய திருவடியை மேற்கொள்ளுமது தான், அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கைக்கும், பெரிய திருவடியினுடைய ஸ்வரூப லாபத்துக்காகவும் இருக்கும்.-சூடும் தண் துழாய் -திருத்துழாய் ‘இப்போதே பறித்துத் திருக்குழலில் வளையமாக வையாது ஒழியில் செல்வி அழிவேன்’ என்னும்-அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள-சைதன்யமே – அறிவுத் தன்மையே கழியப் பெறுவர்.-அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி.-பரம பதத்தில் மேற்கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.-எல்லார்க்கும் விஷயம் ஒன்றேயாகிலும், அவ் விஷயந்தன்னில் விருத்தி பேதத்தால் ருசி பேதம் உண்டாம்.ஆடும் –சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது, விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது,‘அவை ஆடும்’என்கிறார். அம்மானே--நித்திய ஸூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும்-சர்வாதிகனாய் இருந்து வைத்து – அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்-

———

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
–1-8-2-

நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.-அவ் வவதாரத்தோடு முடிவு பெறுதல் இன்றிப்–பஹுநி ‘பல படியாகப் பிறக்கிறேன்’ என்கிறபடியே, அதற்கு மேல் பல அவதாரங்களை எடுத்தான்.-பரத்துவத்திலும்-மனுஷத்வே பரத்வம் – மனித உருவத்தால் வந்த பரத்துவத்தினது அழகை, ஈண்டு ‘மாண்பு’ என்கிறார்.-மாண்பு என்று திருவவதாரங்களை சொல்லுகிறது-

————

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
–1-8-3-

இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்திய ஸூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்-
( திருவாய் மொழியில் முதல் ஸ்பஷ்டமாக திவ்ய தேச மங்களா சாசனப் பாசுரம் -)

கண்ணாவான்-சஷுர் தேவா நாம் உதமர்த்யாநாம் ‘விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்’ என்கிற ஸ்ருதி அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-கண்ணாமவன் என்றபடி.
இனி, இதற்குக் நிர்வாஹகானாவான் ‘காப்பாற்றுகின்றவன்’என்று பொருள் கூறலுமாம்.
கண்ணாகைக்காக -என்னுதல்-மண்ணோர் விண்ணோர்க்கு என்றும் கண்ணாவான் –
இதனால், தங்கள் காரியம் தாங்கள் செய்து கொள்ள மாட்டாமைக்கு, நித்திய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசி இன்மையைத் தெரிவிக்கிறார்.-விண்ணோர் வெற்பன்--‘வானவர் நாடு’ என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார்.-இரண்டு உலகத்தில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானே யாகிலும், திருமலை தான் நித்திய ஸூரிகளுடையது என்றபடி.-விண்ணோர் வெற்பன் என்கிற இடம் நித்ய ஸூரிகள் அபிப்ராயத்தாலே
விண்ணோர் எங்களது -என்று அபிமானிக்கும் படியான தண்ணார் வேங்கட வெற்பை உடையவன் 

————–

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே
–1-8-4-

அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.-சீர் கற்பன்-
அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து,-குணைர் தாஸ்யம் உபாகத  ‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று ஸ்ரீ இளைய பெருமாள் கூறியது போன்று,-அவனுடைய கல்யாண குணங்களை அந்த நற்குணங்களாலே -பிரேரிதனாய் தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன்.-அப்யசிப்பேன்-வைகலே- ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்;
விபன்யவ -‘எப்பொழுதும் ஸ்துதித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்திய ஸூரிகளைப் போன்று நானும் இதுவே தொழிலாக இருப்பன்.

——–

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே
–1-8-5-

நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று,-அவனும் என்னை விட்டு எனது தேகத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.‘கற்பன் வைகலே’ என்கிறபடியே, எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் -அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார்.அழுக்குடம்பு’ என்று யான் வெறுக்கும் ‘இச் சரீரம் இறைவனுக்கு -ஆதரணீயம் -விரும்பத் தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார்.
இதனால், அவன் மேல் விழ மேல் விழ -தாம் மேன்மையைக் கண்டு இறாய்க்கிறார் ஆயிற்று
அவன் மேல் விழுகிறதும் இத்தாலே யாயிற்று –

—————

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே
–1-8-6-

இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன்;
என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-
என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய நற் ஜீவனைக் கொண்டான் -அவ்வளவேயோ? –நாதன்-‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான்.
‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான்.புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே — ஸர்வேந்த்ரிய அபஹார ஷமமான குறள் வடிவைக் காட்டி மஹா பலியிடம் நிலம் கொண்டால் போலே – ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை.

————-

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே
–1-8-7-

தன் பக்கல் உண்டான என்னுடைய மநோ ரதத்தை என் பக்கலிலே தான் பண்ணினான் -ஆவி நலம் கொண்ட அளவேயோ? நித்ய விபூதியில் -பரம பதத்தில் செய்யும்
ஆதாரத்தை -அன்பையும் என் பக்கலிலே செய்தான்,’ என்கிறார்.

உண்டான் ஏழ் வையம்--பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான்.

தண் தாமம் செய்து – குளிர்ச்சியை யுடைத்தான பரம பதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான்.
இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு,  இவ் வுலகில் இருக்கிற என்னைப் பரம பதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ -தத் விபூதிகனாகவே – என்று பொருள் கூறலுமாம்

என் எண் தான் ஆனானே – நான் மநோரதித்தபடியே விரும்பியபடியே எனக்குக் கை புகுந்தான்.
அன்றிக்கே ‘என் மநோ ரதத்தைத் தான் கைக் கொண்டான்,’ என்று கூறலுமாம்.
அதாவது, ‘மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம், ஏகம் எண்ணும்,’ 
‘கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்,’ என்கிறபடியே,
ஸ்ரீ வைகுண்டத்திற்குச் சேறல் வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட,
ஸ்ரீ திருநகரிக்கு ஏறப் போக வேண்டும்;
ஸ்ரீ ஆழ்வாரை அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.-என் எண்ணிலே தன் கை புகுந்தான் -என்றுமாம் 

———

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே
–1-8-8-

என் பக்கல் சங்காதிசயத்தாலே என்னைப் பற்ற அவன் பட்டதுக்கு ஓர் அளவில்லை -என்னைக் கருதி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.தானாய சங்கே-என் பக்கல் தனக்கு உண்டான-சங்காதிசயத்தாலே – அன்பின் மிகுதியே.
இனி, இதற்கு, ‘என்னைக் குறித்துத் தான் எடுத்த அவதாரங்கள்-மஹா ஸங்க்யை –
மகாசங்கம் என்னும் அளவே,’ என்று கூறலுமாம்.
இனி, ‘சங்கே’ என்பதற்கு, ‘மகாசங்கம் என்னும் அளவேயோ! முடிவு உண்டோ!
பஹு நி  ‘பல’ என்னும் இத்தனை’ என்று கூறலும் ஒன்று.

——–

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே
–1-8-9-

இப்படி அவதரிக்குமிடத்து ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடே அடையாளங்களோடே
வந்து அவதரிப்பான்,’ என்கிறார்.-சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள் தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிக்கும்

———–

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரனே
—1-8-10-

அவன் நீர்மையைப் பேசப்புக்கு -நம்மால் பேசப்போமோ – கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார்-நாதன்-முதல் பாட்டில் சொன்ன சேஷித்வத்தை யுடையவன்-ஞாலம் கொள் பாதன்-இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார ஸுலப்யத்தை யுடையவன்-என் அம்மான்-எனக்கு கிட்டலாம் படி திருமலையில் வந்து அடிமை கொண்டவன் –
மூன்றாம் பாட்டில் -கண்ணாவான் -என்றத்தை நினைக்கிறார்-ஓதம் போல் கிளர் வேத நீரனே – இவனுடைய இந் நிலைமைகளைப் பேசும் போது-கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தாலே ப்ரதி பாதிக்கப்பட்ட நீர்மையை யுடையவன் – நீர்மையாவது -ஆர்ஜவம் –எம்பெருமானுடைய படி வேதைக ஸமதி கம்யம்-என்கிறார் –

————–

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –
1-8-11-

அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்த இடத்திலே கொடு போகலான நீரின் தன்மையை உடையவனுடைய குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து’ –என்கிறார்.-நீர் புரை வண்ணன் சீர் –நீரோடு ஒத்த தன்மையை யுடையவனுடைய ஆர்ஜவ குணத்தை.-சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை என்பதாம்.இனி, ‘இவை ஓர்தல்’ என்பதற்கு, சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.

—————-

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே
–1-9-1-

ஜகத் காரண பூதனனாய் -சர்வ அந்தராத்மாவாய் -ஸ்ரீ யபதியாய் இருந்துள்ள கிருஷ்ணனானவன் –என்னுடைய பர்யந்தத்தை விட்டு போக மாட்டாத படியானான் -என்கிறார் –

அவையுள் தனி முதல்- இதனால், உண்டாக்கிய பொருள்கள் தொழில் செய்தல் தொழில் செய்யாமைகட்குத் தகுதியாம்படி அவற்றுள் அந்தராத்துமாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்.
‘ஆயின், அந்தராத்துமாவாய் நிற்கும் இந்நிலை ‘ஆக்கியும்’ என்று படைத்தலைக் கூறிய போதே அடங்காதோ?’ எனின், தத் அநு ப்ரவேஸ்ய  ‘படைத்து அவற்றுள் அநுப்பிரவேசித்தார்’ என்கிறபடியே,-இவற்றுடைய -வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்கு -அவை பொருளாதலுக்காகவும் பெயர் அடைதலுக்காகவும் பண்ணும் அநுப் பிரவேசத்தைச் சொன்னார் அங்கு;
இங்கு அவற்றிற்குக் கூறப்படும் பெயர் இறைவனாகிய தன் அளவில் வந்து முடியும்படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறார்; ஆதலின், அடங்காது என்க.

கண்ண பிரான் –‘இப்படி இருக்கிறவன் தான் யார்?’ என்னில், ஸ்ரீ கிருஷ்ணன்.
இனி, கண்ணபிரான் என்பதற்கு, ‘கண்களுக்குத் தோன்றித் திருவருள் செய்கின்றவன்’ என்று கூறலுமாம்.-என் அமுதம்-தேவர்கள் அதிகாரிகளாய் இருக்கிற அமிருதத்தில் வேறுபாடு.-சுவையன்-பரம ரசிகன்; அவ்வமிருதத்திற்குச் சுவையை நுகருந்தன்மை இல்லையே!-திருவின் மணாளன் – இவருடைய அமிருதம் ஒரு மிதுனம் ஆயிற்று. இதனால், மேற்கூறிய சுவைக்கு ஊற்றுவாய் அருளிச் செய்கிறார்.-திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே- ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னப் பிறந்தவன், என் பக்கத்தில் வாழ்தல் தன் பேறாக வாழ்கின்றான்-‘ஆகியும் ஆக்கியும் காக்கும் தனி முதல் எம்மான்’ ஆகிய இறைவன், என்னை விட்டுப் பிரிதற்கு மனம் இன்றி என் அருகிலேயே தங்கி இருக்கிறான் என்பார்,‘என்னுடைச் சூழலுளானே’என்கிறார்.

————

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே
–1-9-2-

என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.-சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.-ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.-சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘கேழல் ஒன்றாகி’ என்கிறார். அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.  ‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியார். கேசவன்– அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.வேழம் மருப்பை ஒசித்தான் –குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.-விரோதி நிரசன சீலன் என்றபடி-வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)

———

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
–1-9-3-

ஸ்ரீ திருவடி ஸ்ரீ திருவானந்தாழ்வான் ஸ்ரீ பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையாலே பரிமாறுமவன்-என்னளவில் ஒரோ வகையிலே பரிமாறி விட மாட்டுகிறிலன் -என்கிறார் –தண் தாமம் செய்து -என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினார் -என்கிறார் –இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறிலன்-
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தாம் அத்தனை

———-

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே
–1-9-4-

மேன்மை அது -அகடிகடநா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதைப்பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் என்கிறார் –

திருமகள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு பிரதான மகிஷியாய் -பட்டத்துக்கு உரியவளாய் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று இருக்கும் ஸ்ரீ பெரிய பிராட்டியார்-மண் மகள் முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய்
பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி –ஆயர் மட மகள் -அனுபவ ஸூகம் தானாய் தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்திலே குற்றம் படாதபடி இருக்கும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி –திருமகள் அவன் ஐஸ்வர்யம்-மண் மகள் அது விளையும் பூமி-ஆயர் மட மகள் அத்தைப் புஜிக்கிற போக்தாவானவள் -என்றுமாம் –என்று இவர் மூவர்-மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித்தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர்-என் ஓக்கலையானே —ஸ்ரீ யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –

———

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே
–1-9-5-

விரோதி நிரசன சீலனாய் ‘மாற்றாரை மாறு அழிக்க வல்லவனாய்,- சர்வ ஸ்ரஷ்டாவானவன் – எல்லாப் பொருளின் தோற்றத்திற்குங்காரணனாய் உள்ளவன் என் ஹ்ருதயஸ்தன்- மனத்தினன் ஆனான்,’ என்கிறார்.-மாயன்- ஸ்ருஷ்டமான -உண்டாக்கிய உலகத்திலே அநுப் பிரவேசம் முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன். சர்வ சரீரியாய் இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் அன்றோ-என் நெஞ்சின் உளான் – என் சரீரத்தில் ஏக தேசத்தை ஓரிடத்தைப் பற்றி நின்றான்.-ப்ரஹ்மாதி ஸ்தாவர அந்தமான சர்வ ஜகத்துக்கும் ஸ்ரஷ்டாவாய் -சர்வ ஜெகன் நியந்தாவாய் –ஆச்சர்ய பூதனுமாய் -விரோதி நிரசன ஸ்வ பாவனுமாய் –
இருந்தவன் என் ஓக்கலையில் தான் இருந்த இருப்பு எனக்கு சாத்மித்தவாறே -என் மார்விலே வந்து இருந்து அருளினான் -என்கிறார் –

———–

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே
–1-9-6-

சர்வாந்தராத்மாவானவன் ‘எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாக இருப்பவன்
என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் – வாழ்கின்றான்’ என்கிறார்.-காயமும் சீவனும்
சர்வ அந்தராத்மா என் தோளைப் பற்றி வர்த்தியா நிற்கிறான்-தூயன்-இப்படி இருக்கிறவன் ஸ்ரீ யசோதை முதலானவர்கட்கு யதி சக் நோஷி ‘நீ வல்லையாகில் போய்க் காணாய்’‘
என்னலாம்படி இருப்பான்.-இதனால், அணிமைக்கு எல்லை கூறினார்.-துயக்கன் மயக்கன் –
உகவாதார்க்கு-சம்சய விபர்யயங்களை – ஐயம் திரிபுகளைப் பிறப்பிக்கின்றவன்.-என்னுடைத் தோளிணையானே–என் அளவில் அங்ஙன் அன்றிக்கே, ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருக்குமாறு போன்று, என் தோளில் இரா நின்றான்.-சம்சய விபர்யய ரஹிதமாக என் தோளிலே வர்த்தியா நின்றான்-பெரிய திருவடி தோளில் இருப்பை மாறி என் தோளிலே இரா நின்றான் –-இவனுக்கு என் பக்கலுள்ள அபி நிவேசம் இருக்கும் படியே இது -என்கிறார்

————

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே
–1-9-7-

நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார்.-ஆழ்வார் விரும்பிய வாறே திருத் துழாயால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சென்றான்.
இவர் உகப்பதும் திருத் துழாயே, அவன் கொடுப்பதும் திருத் துழாயே அன்றோ?
‘புள் ஊர்திகள் ஊரும் துழாய்க் கொயல் வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.
‘எங்ஙனம்?’ எனின்,
திருத் தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர்.
இவள் தானும் ‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, 
‘கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்’,
அவனும், ‘தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே,
இவளுக்கு அன்றி நல்கான்.

அணைக்க-கணிசிக்கிற விரும்புகிற திருத் தோள்களிலும்,–அணைப்பிக்குமவள் இருக்கிற திரு மார்பிலும்.-அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே
தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.-தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்.

இவ்வடிகட்கு ஸ்ரீ பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப் பொருள் அருளிச் செய்வர்;-அப் பொருள் வருமாறு:
வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான்.
பிரணயிகளாய்- காதலர்களாய் இருப்பவர்கள்-அபிமத விஷயத்துக்கு அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்;-அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் கோயில் கட்டணத்துக்குக் கொடுத்தான்;
ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்து கொள்ளுவார்கள் இத்தனை யன்றோ?-ஆதலின், தான் சூடினான்;
சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக் கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்;-ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ?
தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய ஸ்ரீ இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.

————–

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே
–1-9-8-

சகல வித்யா வேத்யனான ‘எல்லாக் கலைகளாலும் அறியப் படுகின்ற சர்வேஸ்வரன்,
பிரமாணங்களாலே காணக் கூடிய வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான்,’ என்கிறார்.-சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் அவன் இட்ட வழக்கு-கமலக் கண்ணன் என் கண்ணினுளானே-திருமேனியின் அழகாகிய பெரு வெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின்  ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார்.
பிராகிருத -வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாம் -ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து அருளிச் செய்கிறார்-

————

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே
–1-9-9-

ஸ்வ சங்கல்ப ஏக தேசத்தில் சர்வத்தையும் உண்டாக்கினவன்-என்னுடைய சரீர ஏக தேசத்தைப் பற்றி தான் உளனாக நினையா நின்றான்-கண்ணிலே நின்ற நிலை சாத்மித்தவாறே -பொறுத்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான்,’ என்கிறார் –அவன் தன் திருக் கண்களாலே என் குற்றம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான்.-என் நெற்றி யுளான் –  கர்மானுகுணமாக -கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். பிரயோஜன நிரபேஷமாக ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார்,  நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.

————–

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே
–1-9-10-

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்குக் காலம் பார்த்துத் தடுமாறும்படி இருக்கிறவன் தான்  என்னைப் பெறுகைக்கு-அவசரம் – காலம் பார்த்து வந்து என் உச்சியுள் ஆனான்,’ என்கிறார்.

ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியிலே வைத்தாலும், திருக் குழலின் சம்பந்தத்தால் செவ்வி பெற்றுத் தழையா நிற்குமாதலின் ‘கற்றைத் துழாய் முடி’ என்கிறார். –கற்றை – தழைத்தல். -இராசாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று,
இறைவன் இவர் திரு நெற்றியினின்றும் திரு முடி ஏறப் போகா நின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், 
‘அமரரும் எல்லாம் தொழா நிற்க வந்து எனது உச்சிளானே-என்று அருளிச் செய்கிறார் –

———

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே
–1-9-11-

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை ஸ்ரீ எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய –
அவர்கள் தலையிலே ஸ்ரீ எம்பெருமான் திருவடிகள் நாள் தோறும் சேரும் என்கிறார் –அமரர் சென்னிப் பூவான தான் என் சென்னிக்கு அவ் வருகு கந்தவ்ய பூமி இல்லை -என்று
என் உச்சியுள்ளே வர்த்தியா நின்றான்-என் உச்சியுள்ளே நிற்கையாலே தேவ தேவன் ஆனான் என்றுமாம்-தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு-இது கற்றற்கு முதல் அடியிலே உண்டாம்-

———–

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே
–1-10-1-

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் – ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –அக் கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி

ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும் படியாக.  ‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்றும்-கதா புந -என்றும் நான் ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியை யன்றே
ஆசை இல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ் உலகும் தொழ’ என்கிறார்.

ஒரு –அத்விதீயமாய் இருக்கை- இன்னமும் தானே அவ்வடிவை கொள்ள வேணும் என்னிலும் அப்படி வாயாது இருக்கை-மாணிக் குறளாகி – மாணி-அர்த்தித்வத்திலே தகண் ஏறின படி -மாண்-அழகு-குறளாகி -சேர்ப்பால் போலே சுருங்கின தனையும் போக்யமாய் இருக்கை-நிமிர்ந்த –அபேக்ஷிதம் பெற்ற ப்ரீதியாலே வளர்ந்த படிநிமிர்ந்த அக் கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி.-மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும்-பரிச்சேதிக்க – அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்-‘அக் கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.-என் கண் உளதாகும்- ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்;-அவ் வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம்.
மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

—————-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
–1-10-2-

காதன்மையால் தொழில்-பரம பத்திக்கும்  –எண்ணிலும் -பரிகணனைக்கும்-வரும்-ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் -வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.இவற்றால், அப்ரதி ஷேதமே- வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது,
அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.

ஸ்ரீ வேல்வெட்டி நம்பியார், ஸ்ரீ‘நம்பிள்ளையைப் பார்த்துப் ஸ்ரீ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கு இருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்;
ஆதலின், இப் பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ?’ என்று கேட்க,
சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அ ர்ஹதி ( ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடையத் தக்கவர்’ ) என்று ஸ்ரீ பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்;
அவன் தான் ஸ்ரீ பெருமாளைச் சரணம் புகுகிற இடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்று இல்லை;
‘ஆக, இத்தால், சொல்லிற்றாயிற்று என்?’ என்னில்,
ஸ்ரீ ‘பெருமாள் இஷ்வாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே, சில நியமங்களோடே சரணம் புக்கார்;ஸ்ரீ விபீஷ்ணாழ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்;-ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா,-அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா;

தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப் பற்றி உளவாம்படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன், தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ் வாத்துமாவிற்கு ஒரு குறை யுண்டோ?’ என்கிறார்.

————–

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே
–1-10-3-

அவனுடைய இந்நீர்மைக்கு அடியானை லஷ்மீ சம்பந்தத்தை அனுசந்தித்து இவ்விஷயத்தை அனுபவிக்கப் பாராய் என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!–ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ -உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய்-என்கிறார்.-தொழாய் – தொழப்படும் பொருள் – ஒரு மிதுனமாய் ஆயிற்று இருப்பது.-மட நெஞ்சமே –‘தொழுது எழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’ என்கிறார்.-மடம் – பவ்யம்; உரிமை.

————-

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்
–1-10-4-

தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.-பலன் தருகைக்கு இறைவன் உளன்;-விலக்காமைக்கு நீ உண்டு;-இனிச் செய்ய முடியாதது உண்டோ?-தான் அவனைக் கிட்டும் போது, ‘வளவேழ் உலகு’ தலை எடுத்து அகலப் பார்ப்பது ஒன்று உண்டு;-நீ அப்பொழுது அவனை விடாதே கொள்’ என்கிறார்;-துஞ்சுதலாவது -நிகர்ஷ அநு சந்தானத்தாலே வந்த விஸ்லேஷம்-விடாது தொடர் கண்டாய் –-நீ அவனை விடாதே தொடரப் பார்.-ஆக, இவ் வேப்பங்குடி நீரை அன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிறேன்? பிராட்டி ‘அகலகில்லேன் இறையும்’ என்கிற விஷயத்தை யன்றோ உன்னை நான் அனுபவிக்கச் சொல்லுகிறேன்?-ஆதலால், நான் அவனை அகன்று முடியும் அன்றும் நீ விடாதே அவனைத் தொடருவதற்குப் பார்,’ 

————-

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
–1-10-5-

கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்-பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ?-இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப் புகா நின்றான்’ என்னும் நினைவு உண்டோ?-இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?-கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –
1-10-6–

இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்-மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் – நிஷித்த அநுஷ்டானம் பண்ணி அகல விடுதல், தன்னை ஒழியப் பிரயோஜனத்தைக் கொண்டு அகல விடுதல், அயோக்கியதாநுசந்தானம் பண்ணி அகல விடுதல், வேறொரு சாதனத்தை மேற் கொள்ளச் செய்து அகலவிடுதல், முன்பு பண்ணின பாவத்தின் பலத்தை அனுபவம் பண்ண அகல விடுதல் செய்ய விட்டுக் கொடான்.-தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன்,-நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், -‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார்-பகவல் லாபத்துக்கு சேதனர் பக்கல் வேண்டுவது பிராதி கூல்ய நிவ்ருத்தியே என்று இப் பாட்டுக்கு கருத்து –

—————-

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே
–1-10-7-

கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-பாவியேன் – -விலக்ஷண போக்கியமான இப் பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே!-சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப் பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து,
சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார்.

———–

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே
–1-10-8-

‘நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு – விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.-ஸ்ரீ ஆழ்வார் பரிசரத்திலே பிரமசாரி எம்பெருமான் பெயர் சொல்வார் ஒருவரும் இலராதலின், ‘செல்வ நாரணன் என்ற’என்கிறார்.-இனி, ‘அல்லேன் என்று அகலுகைக்கு நான் வேண்டியிருந்தது,
ஆவேன் என்று கூடுகைக்கு நான் வேண்டிற்று இல்லையாய் இருந்ததே’ என்பார், ‘மாயமே’ என்கிறார்-அவன் பேர் மாத்ரத்தை கேட்ட அளவிலே-என் கண்ணானது பனி மல்கா நின்றது – நெஞ்சானது தேடா நின்றது -இது ஒரு ஆச்சர்யம் இருந்தபடி என்-‘என்னை –அபூர்ணனான என்னை,-நம்பி –-பெரு மதிப்பனாக -நினைத்து, விடான் –
விடுகின்றிலன்’ -‘சம்சாரி சேதனனைப் பெற்று, பெறாப் பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார் பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.-அவன் என்னில் காட்டிலும் அபி நிவிஷ்டனாய் என் பக்கலிலே
அதி பஹு மானத்தைப் பண்ணிக் கொண்டு என்னை விடுகிறிலன்-நான் என் செய்வன்-என்று நோகிறார் –

———

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ
–1-10-9–

நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-

1-அபூர்ணன் என்று மறக்கவோ?
2-தூரத்திலே உள்ளவன் என்று மறக்கவோ?
3-வடிவழகு இல்லை என்று மறக்கவோ?
4-மேன்மை இல்லை என்று மறக்கவோ?
5-எனக்கு உபகாரகன் அல்லன் என்று மறக்கவோ?-எத்தைச் சொல்லி மறப்பேன்? என்றபடி.

—————

மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே
–1-10-10-

ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் – நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை மறக்க விரகுண்டோ-அவன் மறவாமைக்கு கிருஷி பண்ணா நிற்க -என்னாலே மறக்கப் போமோ என்கிறார் – நான் சேதனனாய் நினைத்தேன் ஆகில் அன்றோ மறப்பது-அசித் கல்பனாய்க் கிடீர் நான் கிடந்தது-கீழ் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாதப் போலே இறே மேல் உள்ள காலம் எல்லாம் மறக்க விரகு இல்லாத படியும்என் மணியையே -பெரு விலையனாய் முடிந்து ஆளலாம் படி கை புகுந்து
புகழை யுடைத்தான நீல மணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்யமாம்படி பண்ணி வைத்தான் –தன்னை நான் மறவாமைக்காக அசேதனத்தைச் சேதனமாக்க வல்ல தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்குப் பரம ஸூலபனாய்க் கொண்டு — இனிப் பேரேன்-என்று இருந்து அருளினான் –இனி நான் அவனை அநாதரிப்பேனோ-

————–

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே
–1-10-11-

‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ –மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை
-சௌலப்பியம்-மேன்மை-வடிவழகு-இம் மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒரு சேர அருளிச் செய்கிறார்.

——————————————————————————————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

உலகின் முதல் மொழி தமிழ்!

October 20, 2024

உலகின் முதல் மொழி தமிழ்!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ!!!

W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் :

Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay – களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Blare – ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture – கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
,

ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” – ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )
~
600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll

(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )
கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் “கொ ” வரும் இடத்தில் ” K ” ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

” பொத்தல் ” ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , நாடு; கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

2015 ஆய்வுகளின் படி :

( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (ஐரோப்பிய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.

(“நிறைமொழி” மாந்தர் ஆணையில் கிளர்ந்த “மறைமொழி” தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.

நிறைமொழி – தமிழ்
மறைமொழி – சமஸ்கிரதம்

  • சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
  • இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = மொழி

சீனர்களின் மண்டரின் மொழி மற்றும் யூதர்களின் ஹிபுரு’வின் தாய்மொழி அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் , மேலும்1000 Km க்கு தூரத்திற்கு ஒரே மொழி நிச்சயம் சற்று வேறுபடும்!

” ழ ” உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெலுங்கு என்ற ஒரு தனி மொழி இல்லை!

தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெலுங்கு.
‘தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே” என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான்.
மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் “கட்டு மரம்” தான்.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் “தோரா” (கி.மு 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
,,,,
ஆனால் நம் தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.மு 1000 ஆண்டுகள் – திருக்குறள்
கி.மு 2000 ஆண்டுகள் – தொல்காப்பியம்
கி. மு 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.மு 5000 பரிபாடல்;
கி.மு 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன. மேலும் பழமையான நூல்கள் கடல் கோளாலும், சூழ்ச்சிகளாலும் அழிந்து விட்டன…

இத்தகைய தமிழின் சிறப்புகளை
பகிருவதற்கு தயங்க வேண்டாம்,,,
தமிழ் வாழ்க!!!.

———–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அன்னமாச்சார்யாரும் ஸ்ரீ ஆழ்வார்களும்-

October 20, 2024

ஆளவந்தார் ‘சது:ச்லோகி’யில் முதலில் தாயாரின் வைபவம் கூறுகிறார். பெரிய
பிராட்டியார் சரணாகதி கத்யத்தில் முதலில் இடம் பெறுகிறார். ஸ்ரீ
ஸ்தவத்தில் கூரத்தாழ்வானும், குணரத்ந கோசத்தில் பட்டரும் பிராட்டியின்
புருஷகாரத்வத்தைப் புகழ்வர்.
அன்னமையா முதலில் பாடியது ’அலமேல் மங்காம்பிகா சதகம்’.

’நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின் தன்மை
’யில் ஒருபடிப்படாத எண்ணற்ற
உயிரினங்களினுள்ளும் சரண்யன் ஸர்வாந்தர்யாமியாக நிற்கும் நிலையைத்
திருமழிசைப் பிரான் தெரிவித்தார்.
அன்னமையாவின் புகழ்பெற்ற ‘ப்ரம்ஹம் ஒகடே’ பாடல் அரசன், பணியாள், யானை,
மரம் செடிகள் எல்லாவற்றிலும் உள்ளே உறையும் எம்பெருமானை ‘அந்தரிகி
ஸ்ரீஹரியே அந்தராத்மா’
என்று தெரிவிக்கிறது.

சுடர்மிகு சுருதியுள் சூரியர் தலைவன் விளங்குவதை ஸ்வாமி நம்மாழ்வார்
சுவைபடக் கூறுவார்.
‘பலிகேடி வேதமே ப்ரமாணமு தலிசினவாரிகி தத்வமு சுண்டோ’- என்னும் அன்னமையாவின் கீர்த்தனத்துக்கு ‘எம்பெருமானின் இருப்புக்கு வேதமே சான்று ; உண்மையை உணர்ந்து கொள்வோர் தத்வத்தில் நிலைப்பர்’ என்று பொருள் கொள்ளலாம்.

ஆலமாமரத்தின் மேலொரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட லீலையில் திருப்பாணாழ்வார்
மனம் நெகிழ்வார்.
தெப்பகா மர்ராகு மீத தேலாடு வாடு எப்புடு லோகமுலெல்ல ஏலேடி வாடு’ வடபத்ர சயனனின் வைபவம் கூறும்.

ஆழ்வார்கள் பன்னிரு திருநாமங்களைப் பாக்களில் அமைத்துப் பாடினர்.
அன்னமையாவின்’ நீ நாமமே நாகு நிதியு நிதானமு’ பாடல் பரமனின் இருபத்து
திருநாமங்களை உள்ளடக்கியது. காயத்ரியின் 24 அக்ஷரங்கள் இவை என்று
கூறுவோரும் உளர்.

’பொடமி நல்லனி பெத்த பூதமு’ அச்சுதனின் அவதாரங்களைக் கூறுகிறது.

பட்டின வாரிகி சே பிட்ட பரமாத்முடு’ – ‘பத்துடை அடியவர்க்கெளியவன்’
என்கிறார் அன்னமையா.

கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றி அருளினான்’ –
மதுரகவியாரின் நற்சிந்தனை
‘குருபக்தி கலிகின குணநிதிகி அரய பாப புண்யமு மரிலேது’ என்னும் பாடலில் புரிகிறது.

’மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு..….’ குலசேகரரின் தாலாட்டு;
ஜோ அச்சுதாநந்த ஜோ ஜோ முகுந்த ….’ பாடலைக் கேட்டுக் கொண்டே வேங்கடவன்
கண் வளர்கிறான்.

‘கொண்டலலோ நெலகொன்ன கோனேடி ராயடுவாடு’ கீர்த்தனை குருவ நம்பி, அநந்தாழ்வான், திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி ஆகிய பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறது.

தொண்டரடிப்பொடியாழ்வார் அரங்கனை மட்டுமே பாடியதுபோல் அன்னமையா வேங்கடவனை மட்டுமே பாடினார் என்பது மற்றுமோர் ஒற்றுமை.

(நன்றி: ‘கோல விளக்கு’ ஸ்ரீ வைஷ்ணவ மாத இதழ், ஜூன் ‘09)

ள்ளபாக்கா என்ற குடும்பப் பெயரைக் கொண்ட தள்ளபாக்கா அன்னமாச்சார்யர் தெலுங்கு இலக்கிய உலகில், இசையுலகில்  தனக்கெனத் தனியிடம் பெற்றவர். தமிழகத்தில்  ஆழ்வார்கள், கர்நாடகத்தில் தாசர்கள் போலவே தெலுங்கு இலக்கிய உலகில் போற்றப்படுபவர்.

நீண்டகாலம் குழந்தையின்றி வருந்திய பெற்றோர் நாராயணசூரி—அக்கலாம்பா தம்பதியருக்கு  இறைவனருளால் குழந்தை பிறக்கிறது. அன்னமையா எனப் பெயரிடுகின்றனர். இளவயது முதலே அவர் திருப்பதி வெங்கடாசலபதியிடம் அன்பு கொண்டவராக இருக்கிறார். எட்டு வயதில் அவருக்கு வெங்கடேசனின் தரிசனம் கனவில் கிடைக்க திருப்பதி போகிறார். நீண்ட தூரம் நடந்ததால் சோர்வு ஏற்பட வழியிலேயே தூங்கி விடுகிறார். கனவில் அலமேலுமங்கைத் தாயாரின் திவ்யதரிசனம் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் தாயாரின் புகழை நூறு பாடல்களில் அங்கேயே வெளிப்படுத்துகிறார். பின்பு திருப்பதி சென்று ஆண்டவனை வழிபடுகிறார். அந்த இடத்தின் பேரழகைக் கண்டு அங்கேயே தங்குகிறார். பதினாறு வயதுவரை அவர் வாழ்வு அங்கு கழிகிறது.

இறையருளால் மீண்டும் தள்ளபாக்கா வருகிறார். தாய் அக்கலாம்பா   அன்னமையாவை இல்லற வாழ்வில் ஈடுபடுத்த விரும்பி அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அக்கலம்மா, திம்மக்கா என்று இரு மனைவியர். திம்மக்கா மகாபாரதக் கதையை முன்வைத்து  “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை எழுதியவர். இவர் தெலுங்கு மொழியின் முதல் பெண்புலவராகக் கருதப்படுகிறார். வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். தொண்ணூற்றி ஐந்து வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

தென்னிந்தியாவிலுள்ள வைஷ்ணவ ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று இறைவனைத் தரிசித்து பல கீர்த்தனைகள் பாடுகிறார்.அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார். பாடல்களின்    கவித்துவத்தால் கவரப்பட்ட பெனுகொண்டாவை ஆண்ட சலுவ நரசிங்கராயர் அன்னமையாவைத் தன் அவைக்கு அழைத்து தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடும்படி வேண்டு கிறார். மனிதர்கள் புகழ்பாட [நரஸ்துதி]  தான் ஒரு நாளும் தயாரில்லை என்று அன்னமையா மறுத்துத் திருப்பதி வந்துவிடுகிறார். இளவயது முதலே திருப்பதி வெங்கடாசலபதியிடம் ஈடுபாடு கொண்ட அன்னமையாவுக்கு  இறையனுபவங்கள் அடிக்கடி கிடைக்கின்றன. அந்த அனுபவங்கள் அவர் இறைவசப்பட பெருங்காரணமாகிறது.

பக்தி வெளிப்பாடும், அதன் பிரிவும்  பலவகைகள்  உடையதாக இருந்தாலும் கடவுளிடம் தஞ்சமடைதல் மூலம்தான் அமைதி அடைய முடியும் என்பதும் அதுதான்  பிறவியிலிருந்து விடுதலை அடைய மனிதனுக்குத் துணை செய்யுமென்பதும்  அன்னமையாவின்  ஆழமான எண்ணமாகும். அதனால் சரணாகதி என்ற பின்னணியில்தான் அவருடைய பக்திக் கீர்த்தனைகள் அமைகின்றன. பொதுவாக மொழி இலக்கியங்களில் பாடல்கள் பதம் [பாடமென்றும் சொல்லப்படும்] என்றழைக்கப்படும். அது பத்ய கவிதையும், பத கவிதையுமாகும் என்று இரண்டு வகைப்படுகிறது. பத்ய கவிதை இலக்கண முறைப்படி அமைவதாகும். பத கவிதை என்பது  இலக்கணக் கட்டுப்பாடில்லாமல் ஆனால்  ஒரு வடிவ அமைப்பிற்குள் அ்மைகிறது. அவர் பின்பற்றியது பதகவிதை வடிவமாகும். பொதுவாகக் கீர்த்தனம், கிருதி, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் குறிப்பிடப் படுகின்றன. அன்னமாச்சார்யாரின்  கீர்த்தனைகள் சமூக நன்மையும் தத்துவமும் கொண்ட பக்தி [அத்யாத்ம சங்கீர்த்தனை],  காதலின் வழியிலான பக்தி [சிருங்கார கீர்த்தனை] என்ற   இரண்டு பிரிவுகளின்கீழ்     அடங்குவதாகும்.

அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். வெங்கடாச்சல மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இரண்டும் வடமொழியில் எழுதப்பட்டவை. திவிபத ராமாயணம், சிருங்கார மஞ்சரி, வெங்கடேசுவர சதகம் ஆகியவை தெலுங்கு மொழியில் எழுதப் பட்டவையாகும். தன் மீது அருள் காட்டிய தாயாரின் மீது பாடிய நூறு பாடல்கள் வெங்கடேசுவர சதகம் என்றழைக்கப் படுகிறது. இதற்கு அலமேலுமங்கா சதகம் என்றும் பெயருமுண்டு. பக்தியில் இரண்டாயிரத்து இருநூற்று ஒன்பது கீர்த்தனைகளும் சிருங்காரத்தில் ஆயிரத்து ஐநூற்று இருபத்தியாறு கீர்த்தனைகளும் கிடைத்துள்ளன. சண்டை போடுதல், விவாதித்தல், தொண்டுசெய்தல், அடைக்கலம் வேண்டுதல் என்ற நான்கு நிலைகளில் பக்தி வெளிப்பட்டாலும் சரணாகதி என்பது அவருடைய கீர்த்தனைகளின்    ஆழமான  பின்புலமாகிறது. கடவுளர்   நாமவரிசை, சரணாகதி, நாயகி பாவம் என்று  நாலாயிர திவ்யபிரபந்தத்தின்  பிரதிபலிப்பைப் பல இடங்களில் பார்க்கமுடிகிறது. இவருடைய கீர்த்தனைகள் ஒரு பல்லவியும், மூன்று சரணங்களும் கொண்டுள்ளன. பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு. பொதுவாக எல்லாக் கீர்த்தனைகளும் ஒரு முத்திரையைக் கொண்டுள்ளன வெங்கடேசா  என்பது  இவருடைய முத்திரையாகும்.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட சாதி, மத பேதங்களை, மனிதர்களிடமான வேறுபாடுகளை, சிந்தனைப் போக்குகளைச் சுட்டிக் காட்டி சமூகநலம் விரும்பும் பக்தி இலக்கியங்களைக் கொண்டதாக பொதுவில் அந்தக் காலகட்டம் [பதினைந்தாம் நூற்றாண்டு] அமைகிறது. அதைத் தன் படைப்புகளில் அன்னமையா தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடவுளோடு நேரடியாகப் பேசுவது போன்ற பாவனையைத்தான் அவர்  கீர்த்தனைகள் முன்வைக்கின்றன. இறையனுபவத்தையும், தன் பக்தியையும், இசையையும் மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு பக்தன் என்ற நிலையில் நின்றுவிடாமல் சமூகவாதியாக, சீர்திருத்த வாதியாக அவர் வெளிப்படும் இடங்கள் பலவாகும். சமுதாய  விழிப்புணர்வு வற்புறுத்தலுக்கும், சமூக போதனைக்கும் அடையாளமாக அவருடைய சில பிரபலமான கீர்த்தனைகள் சான்றாக அமைகின்றன.

இறைவன் இந்தத் தன்மை கொண்டவன் என்பது யாராலும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாததாகும். எது மனதிற்கு விருப்பமாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதில் ஞானிகளும், சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்திருக்கின்றனர். அன்னமையா அந்த மாதிரியான ஒரு பிரக்ஞையை மக்கள் முன் வைக்கிறார்.” எந்த முறையில் கடவுளைப் பார்க்க விரும்புகிறோமோ அதே வடிவில் நாம் பார்க்க முடியும். வைணவர்கள் உன்னை விஷ்ணு என்றழைக்கின்றனர். சைவர்கள் சிவனென்று அழைக்கின்றனர்.காபாலிகர்கள் ஆதிபைரவன் என்கின்றனர். சக்தி பூஜாரிகள் சக்தி என்றழைக்கின்றனர். எந்தெந்த பெயர்களில் அழைக்கிறோமோ அந்தந்த பெயர்களில்தான் இறைவன்”  என்று ஒரு கீர்த்தனையமைகிறது.[’அவனு  எந்தமாத்ரமுனா எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு ’] அது அன்றைய சமூகநிலையைக் காட்டி மக்களைத் தெளிவுபடுத்தி வழிபாடு அவரவர் மனதிற்கு உகந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இன்றும் இந்தச் சிக்கலில் மனிதர்கள் உழல்வதும், முடிவு காண இயலாமல் தவிப்பதும் நடைமுறையில் காணும் அவலநிலையாகும்.

சாதி வேற்றுமைகளில் சமூகம் அழுந்திக் கிடந்ததை அவரால் பொறுக்க முடியவில்லை .எந்தச் சாதியாக ,எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் எல்லோருக்கும் “கடவுள் ஒருவர்தான் என்பதைத் தன் கீர்த்தனையில் உறுதியாகச் சொல்கிறார். ஏழை,பணக்காரர் என்ற வேறுபாடு கடவுளுக்கில்லை.தூக்கம் என்னும் உணர்வு எல்லோருக்கும் ஒன்றே. இரவும்,பகலும் எல்லோருக்கும் ஒருமாதிரியானதுதான். உண்ணும் உணவு வித்தியாசப் பட்டாலும் அனைவருக்கும் நாக்கு ஒன்றுதான் நாயோ யானையோ சூரியன் பொதுதான். இப்படிக் கடவுளும் ஒன்றுதான் ”[பிரம்மம் ஒக்கட்டே,  பரபிரும்மம் ஒக்கட்டே “] என்று அக்கீர்த்தனை பொதுத்தன்மை பற்றிப் பேசுகிறது. இது அவருடைய பிரபலமான கீர்த்தனையுமாகும்.

சமூக விழிப்புணர்வை தான் வாழ்ந்த சமூகத்து மக்களுக்கு வெளிப்படுத்தும் மற்றொரு சிறந்த கீர்த்தனையும் உண்டு. “எந்தக் குலமாக இருந்தால் என்ன? எந்த இடத்தவராக இருந்தாலென்ன? எல்லோரும் ஒன்றுதான். இறைவன் சாதி,இனத்திற்கு அப்பாற்பட்டவன். உண்மை, அன்பு, கருணை, பகையற்றவுணர்வு, மனவொழுக்கம், தர்மசிந்தனை ஆகியவை தான் இறைவனோடு நம்மை இணைக்குமேதவிர வேறு எதுவுமில்லை. வெங்கடேசனுக்கு யாராக இருந்தாலென்ன” [“ஏ குலஜூடை யினமேமி ] என்று அந்தக் கீர்த்தனை அமைகிறது.’சாதி வீணானது. அஜாமிளனும் மற்றவர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்? சாதிவேறுபாடு உடலோடு   தோன்றி   உடலோடு மறைகிறது.ஆத்மா     பரிசுத்தமானது; அழிவற்றது. இறைவனோடு இணைவது [விகாதுலன்னிய விருதா] என்றொரு கீர்த்தனை அமைகிறது.

“சிறப்பான விஷ்ணுவின் கதைகளைக் கேளுங்கள்.அது நம் அதிர்ஷ்டம்.அவை நமக்கு முதுகெலும்பு போன்றவை. நாரதர் மற்றும் முனிவர்கள் விஷ்ணுவின் கதையைப் பரப்பினர். வியாசர் கதைகளைச் சொன்னார் என்பது உரையாடல் பாங்கில் அமைந்த கீர்த்தனை வகைக்குச் சான்றாகும்.“[ வினவோ பாக்யமு விஷ்ணு கதா]. கனவில் வந்ததை, இந்த நிமிடத்தில் வந்ததைக் கனவாகவே காட்டும் வகையில் “கனவு கண்டேன்; இப்பொழுது கனவு கண்டேன். என்று நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கு எவையெல்லாம் சாத்தியமோ அதை இறைவனோடு இணைத்து நட்பான நிலையை முன்னிறுத்துகிறார் [“தலங்கந்தி இப்புடிது கலங்கந்தி “]. ராமனுக்கு அவனிடம் சேவை செய்பவர்களைப் பற்றிச் சொல்லுவதுபோல ஒரு கீர்த்தனை அமைகிறது.இதில் ராமனுக்குச் செய்யப்படும் சேவை விளக்கப்படுகிறது. நாரதர் தன் பாடலால் மகிழ்விக்கிறார். ரம்பையும், மற்றவர்களும் நடனமாடி மகிழ்விக்கின்றனர்.ரிஷிகள் மனம் நிறைந்து   ஆசீர்வாதிக்கின்றனர்.லட்சுமணன் விசிறுகிறான் [“அவதாரு ரகுபதி அந்தரி நீ சித்தகிஞ்சு”]. “என் தலைவனே ! உன் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன் “என்று தொடங்கும் பாடலில் பாட்டு ஒன்றே போதும் எங்களை உய்விக்க என்று தானுணர்ந்ததை   தனக்குப் பிரியமான    பக்தியை முன்வைக்கிறார். இறைவன் சந்நிதானத்தில் தினமும் ஒரு பாடலைப் பாடுவது அவர் பழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பாடலைக் கேட்கக்  கடவுள் காத்திருந்தார் என்பதும் மக்களின் நம்பிக்கையாகிறது.

கடவுளுக்கும்,பக்தனுக்கும் இருக்கும் உறவு ஒருவரை ஒருவர் சார்ந்ததாகும். ஒருவர் இல்லையெனில் இன்னொருவர் இல்லை என்ற கருத்து அவரால் வெளிப்படுத்தப்படும்  தன்மையும், பார்வையும் சிறப்பாக உள்ளது. ”அடியேன் இல்லையெனில் யார் மீது அன்பைப் பொழிவாய்” என்று பாடல் தொடங்குகிறது.

அடியவன் இல்லாவிட்டால்  யார் மீது அன்பு காட்டுவாய்
என்னால்தான் நீ  உன் அன்பிற்குச் சிறப்புப் பெற்றாய்
உதவாக்கரையான என்னை  நீ காப்பாற்றினால்தான்
உன் கருணை பெருமையோடு பேசப்படும்
என்னால்தான்  உனக்குப் பெருமை
உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன்
ஏ வெங்கடேசா   நாமிருவரும்
ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்”.
நயமான, பாவம் நிறைந்த கீர்த்தனையாக இது போற்றப்படுவதும் குறிப்பிடத் தக்கது [“நீ நோக்கட்ட இகுதி” ] பாகவத புராணம் காட்டும்  ஒன்பது வகையான பக்தியில் நட்பு ஒன்றாகும். இந்தக் கீர்த்தனை அதைப் பிரதிபலிப்பதாகிறது..

இறைவனுக்கு சுப்ரபாதம் பாடி அவனை எழுப்பும் தன்மையை அறிமுகம் செய்தவர் அன்னமையாதான். “வெங்கடேசா! இது நீ எழுவதற்குரிய நேரம்..இரவு முடிந்துவிட்டது. சூரியன் வந்துவிட்டான். உன் திரையை விலக்கிக் கொண்டு எழுந்திருப்பாய். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்துநிற்கின்றனர். உன் தாமரைஇதழ் போன்ற கண்களைத் திறப்பாய்.பக்தர்களின் குறைகள் கேட்பாய்” என்று பாடி வெங்கடேசுவரனை விழிக்கும்படி வேண்டுவதான கீர்த்தனையும் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.[’வின்னபாலு வினவல”]

பொதுவில் மனிதர்கள் தவறு செய்பவர்களாகவும், பாவங்கள் செய்பவர்களாகவும் உள்ளனர். கடவுளின் கருணைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற  எப்போதும்  கடவுள் தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையைச் எல்லோருக்கும் தருவதான நிலையை ஒரு பாடல் வெளிப்படுத்துகிறது. நடைமுறை உலகிலும் கூட தவறு செய்பவனுக்குக் கடவுளினருள் இருக்காது  என்ற கருத்து நிலவும் போதும்கூட அன்னமையா போன்ற ஞானிகள் அதைத் தவறென்று காட்டி மாறுவதற்கும்,உணர்வதற்கும்    வழிகாட்டுகின்றனர். ”நான் துன்பத்தால் வருந்தும் அற்பமனிதன்: என்னுடைய வெறுக்கத்தக்க நிலையையும், அசுத்தத் தன்மையையும் நான் கவனிக்கவில்லை. அப்படியான நிலையில் உன்னுடைய கருணைப் பார்வையை எப்படி கவனிக்க முடியும்? ஆனாலும் எனக்குத் தெரியும் நீ என்னைக் கைவிடமாட்டாயென்று” என்று என்றாவது தன்னையறியும் தன்மையை ஒரு கீர்த்தனை வெளிப்படுத்துகிறது.

இறைவனின் திருப்பாதங்களின் பெருமையும்,செயல்களையும் விளக்குவதாக  “பிரம்மன் கழுவிய பாதமிதுவே; முழுமுதற்கடவுளின் உட்கருத்தை விளக்கும் பாதமிதுவே” என்ற கீர்த்தனை  அமைகிறது. வாமனாவதாரம் எடுத்து பலியின் செருக்கை அடக்கினாய்: இந்திரனுக்கு அவனுடைய எதிரி பலியிடமிருந்து சுவர்க்கத்தை மீட்டுத்தந்தாய். அகலிகையின் பாவத்தை பாதம் பட்டு நீக்கினாய்; கண்ணன் அவதாரத்தில் காளிங்கன் மீது நடனமாடினாய். கல்கி அவதாரத்தில் தீயசக்திகளை அழிக்கக் குதிரை மேல்வருவாய் ”என்று இறப்பும், நிகழ்வும்,எதிகாலமும் குறித்த நிலைவெளிப்படுகிறது. [“பிரம்ம கடிகின பாதமு “ ].

பாசாங்குகளும், பயனற்ற தொழில்கள் நிறைந்ததுமான ஒரு நாடகமாக வாழ்க்கை அவருக்குத் தெரிகிறது.

“நாடக நடிப்பைத் தவிர  வேறொன்றுமில்லை இவ்வுலக வாழ்வு இடைவிடாத முயற்சியால் அடைவது முக்தி-பிறப்பும் நிச்சயம் இறப்பும் நிச்சயம்-வாழ்க்கை ஆரம்பிப்பதற்கும்  முடிவதற்கும் இடையேயுள்ள காட்சி  நாடக நடிப்பைத் தவிர வேறொன்றுமில்லை வெங்கடேசா !”[ “நானதி பதுக்கு நாடகமு]என்று சொல்லி  நாடகத்திலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறார்.

“பாட்டொன்றே போதும் எங்களை உய்விக்க என்னுடைய மற்ற பாடல்கள்  உன்னுடைய கருவூலத்தில் தூங்கட்டும் வலிமையுள்ளது உன் நாமம்.  உங்கள் கைகளில் நானொரு கருவியே. என் பாடல்களுக்குரிய பெருமை  என்னைச் சேர்ந்ததல்ல  உன்னடிமை நான் “ என்று ஒரு கீர்த்தனை அன்போடு வெளிப்படும் அடிமைநிலைக்குச் சான்றாகும். “மனிதர்களே, உங்கள் பாவங்களைப் பணம் போல பையில் வைத்துக் கொண்டு சந்தைக்கு வாருங்கள். பிறப்பு,இறப்பு, உலக மகிழ்ச்சி  எல்லாவற்ரையும் இங்கு மலிவாகப் பெற்றுக் கொள்ளுங்கள். வெங்கடேசன் மேலேயிருந்து உங்களை கவனித்தபடி இருப்பான் “என்ற பொருளில் அமைந்த ஒரு கீர்த்தனை மனிதர்களுக்கு அன்றாடம் பரிச்சயமான பணம்,சந்தை,மகிழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லி அவைகளால் மட்டும் நிம்மதியடைய முடியாது,தவறுகளுக்கான சாட்சியாக இறைவன் இருப்பான்.அதனால் மனசாட்சியோடு வாழ்வது உயர்வு  என்ற தத்துவமான கருத்தைக் காட்டுகிறார்.[ கோலாடி  புண்யா பாவாயி] இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை போலத்  தெரிந்தாலும் வாழ்க்கை, மனம், கர்மம் சார்ந்த பொருளாகும். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை நாமறிந்த வகையில் சொல்கிறார்.

காதல் பாவமும் அவரால் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. அலமேலு மங்கையை அவர் வியப்பதும்,போற்றுவதும் பல கீர்த்தனைகளின் சிறப்பாகிறது. ”அலமேலுமங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு [’அலமேலுமங்கா நீ அபிநவ ரூபமு’].

இன்னொரு கீர்த்தனையில் அவள் அழகாக நடனமாட பூக்கள் அவள் மீது பொழிகின்றன. மெல்ல திரைச்சீலைக்குப் பின்னால் மெட்டியொலிக்க அவள் நடனமாடும்போது வெங்கடேசன் அதை ரசிக்கிறார் என்ற நயமான  காதல் வெளிப்பாடு கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அவ்வுணர்வழகு ஏற்படும் வகையிலமைகிறது  [அலரலு குரியகா]. இந்தக் கீர்த்தனை குச்சிப்புடி நடனத்தில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அலமேலு மங்கையின் முகம் அழகானது. அவள் அசைவுகள்     நளினமானவை.   கருமையான மேகமூட்டம் நிறைந்த வானத்தில் இடையிடையே ஒளிவிடும் மின்னல்  போல வெங்கடேசனின் அருகில் அவள் இருக்கிறாள் என்ற கருத்திலமைந்த கீர்த்தனை எல்லோராலும் போற்றப்படுவதும், விரும்பிக் கேட்கப்படுவதுமாகும் [ஒக்கபரி  கொக்கபரி].

இறைவனின் அருகிலிருக்கும் அலமேலுமங்கையின் காதல் மட்டுமல்ல என் காதலும் தாபமும்,வேகமும் நிறைந்ததுதான் என்று நாயகி பாவத்தை கொண்டு வருகிறார் இன்னொரு கீர்த்தனையில் ஏக்க உணர்வில் தாபத்தோடு,

கூரை மேலிருந்து உன்னைக் பார்த்துக் கொண்டு உன் காதலுக்கு ஏங்குகிறேன் முனகிக் கொண்டே நாட்களைக் கழிக்கிறேன் வெங்கடேசா எங்கே போனாய் இவ்வளவு நேரம்?” என்று செல்லமாகக் கோபிக்கிறார்.

“ஏ மனமே கடவுளை அடைவதற்கு இசை,பக்தியைத் தவிர வேறு சிறந்த வழி இருக்கிறதா? என்றறிந்த   ஓர் உண்மையை சந்தேகம் போல பல கீர்த்தனைகளில் கேட்டு இரண்டின் ஆழத்தையும் உணரவைக்கிறார்.

பல கீர்த்தனைகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நாட்டுப்புறப் பின்னணியில் அமைந்துள்ளன.  இவை “ஜானபதளு” என்றழைக்கப் படுகின்றன. ”சுவ்வி சுவ்வி சுவ்வாலம்பா” என்ற கீர்த்தனை கிருஷ்ணன் பிறப்பை  பெண்கள்  கூட்டமாகக்     கூடிப்பாடுவதாகிறது. விழாக்கள், பண்டிககளின் போது பெண்கள் மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே செய்யும் நெல்குத்துதல்   நிகழ்வை  கீர்த்தனை வெளிப்படுத்துகிறது. இக்கீர்த்தனையில் அன்னமையா வெங்கடேசுவரனை ”சோனேடப்பா “என அழைக்கிறார்.கோயில் அருகேயுள்ள குளத்திற்கு சோனே என்பது பெயர். அதைக் காட்டும் வகையில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இது வடமொழிச் சொற்கள் கலக்காத முழுவதுமான தெலுங்கில் உள்ள கீர்த்தனை  என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பாலோடு விளக்கெண்ணைய் மற்றும் பிற மருந்துப் பொருட்கள் சேர்த்து குழந்தைக்கு செரிமானம் வளரக் கொடுக்கும் மருந்து சடங்கிற்கு  ’உக்கு’ என்ற பெயருண்டு.  குழந்தை அதைக் குடிக்க  மறுக்கும். தாய்  யசோதா  அதைக் கொடுக்கும்படி கோபிகையரிடம் வேண்டுகிறாள். என்றாலும் அதைக் குடிக்கக் கண்ணன் மறுக்கும்போது அவனை அதட்டக்  கூடாது எனக் கண்டிப்பும் வேண்டுதலுமான நிலையில் அமையும் கீர்த்தனையான இதில் நாட்டுப்புறச் சொற்கள் இயல்பாக இடம் பெறுகின்றன. “சின்னத் தங்கையே” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அலமேலுமங்கையே தசாவதாரம் பற்றிச் சொல்வதை   ஒரு கீர்த்தனை காட்டுகிறது. நாட்டு புறப் பின்னணியில் அமைந்த இதுவும் வடமொழிச் சொற்கள் கலக்காத தன்மையுடையது.[“சிறுத நவ்வுலா’] ,”ராவே ராவே கோடலா ரட்டடி கோடலா   “சந்தமாவே ராவோ, ஜாதிபிலி ராவோ”,”ராரா சின்னண்ணா, ராரோரி சின்னவடா “ என்பன போன்ற கீர்த்தனைகளும் நாட்டுப்பாடல் வடிவம் பெற்று அமைகின்றன. இவற்றில் இறைவனின் லீலைகள் விரிவாக விளக்கம் பெறுகின்றன. தாலாட்டு வடிவிலான கீர்த்தனைகளும் அவரால் பாடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் இன்றும் அப்பாடல்கள் மிகப் பிரபலமாகவும், வழக்கிலுமுள்ளன. ”ஜோ ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ “ என்பது அதிலொன்றாகும்.

சில கீர்த்தனைகள் எளிமையான உவமையோடும், நடைமுறை வாழ்க்கையிலான அணுகுமுறையும் பெற்றுள்ளன. ”ஏன் இறைவனைக் குறை சொல்ல வேண்டும். மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு? குயிலும் ,காகமும் பார்க்க ஒன்றாக இருந்தாலும் வசந்தகாலத்தில் அவற்றின் திறமை வேறுபாடு  வெளிப்படுகிறது. அவரவர்     பாவ, புண்ணிய தன்மைக்கேற்றபடி தான்    வாழ்க்கை“ என்கிறார் [தய்வமு     துரங்கனேன]’. ’வேப்பமன்னு பலுவோசி ’ என்ற கீர்த்தனையில் வேப்பமரத்தைப் பாலூற்றி வளர்த்தாலும் கசப்பு அதைவிட்டு நீங்காது, என்றும் அரிவாளை நீண்டகாலம் தண்ணீரில் வைத்திருந்தாலும் அது மென்மையாக முடியாது என்றும் அன்போடு பாதுகாத்தாலும் தேள் கொட்டாமலிருக்காது என்றும் சாதாரண மக்களறிந்த இயல்பான உவமைகளை முன்வைத்து வாழ்க்கை நிலையை வெளிப்படுத்துகிறார். நாட்டுப்புற நடையில்  தத்துவக் கருத்துக்களை கீர்த்தனைகளாக்கிய சூழலில் மக்களறிந்த அன்றைய வழக்குச் சொற்களான  ஏலா, ஜஜரா, லாலி ,உய்யாலா, ஜோலா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

வந்தே வாசுதேவம், பாலபுண்யமுலோ, டோலாயாம், ஒக்கபுரி கொக்கபுரி, பாவயாமி கோபாலபாலம், வந்தேஜகத் வல்லபம் நாராயணட்டே, ஸ்ரீமன் நாரயணா ,நீலமேகமோ என்பவை அவரது பிரபலமான கீர்த்தனைகளில் சிலவாகும். அன்பும், தத்துவமும் கைகோர்த்த தன்மை இவர் பாடல்களின் சிறப்பாக இருப்பதால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகின்றன என்றும் மொழியை எளிமையாகவும், ‘ஒருமித்த‘ தன்மையிலும் அவர்   கையாண்டிருப்பதாகவும் இசையாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

அன்னமையாவின் சிறப்பறிந்து புரந்தரதாசர் அவரைச் சந்திக்க வருகிறார். அன்னமையாவைப் பார்க்கும் போது   புரந்தரதாசருக்கு வெங்கடேசப் பெருமானையே பார்ப்பது போல் இருக்கிறது, அன்னமையாவுக்கு புரந்தரதாசர் பாண்டுரங்கன் போலத் தெரிகிறார் என்று இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சொல்லப்படுகிறது.

வேதம், உபநிடதம், புராணம் ஆகியவற்றின் உயர்ந்த கருத்துக்களைச் சாதாரண மக்களுக்கும் எடுத்துச் சென்றது அன்னமையாவின் சிறப்பெனலாம். அவருடைய கீர்த்தனைகைகள் தொண்ணுறு  ராகங்களைக் கொண்டிருப்பதாக இசைவல்லுனர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர். அன்னமையாவின் பேரன் சின்னண்ணா எழுதிய ’அன்னமாச்சார்யா சரிதமு’ என்ற நூலின் அடிப்படையில்தான் அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தன் தாத்தாவை ’பதகவி பிதாமகர்’ என்று அவர் போற்றியுள்ளார். அன்னமையாவின் சிறப்பைக் காட்டும் வகையில் “அன்னமாச்சார்யா”என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உள்ளிட்ட   பலர் பாடியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் ’அன்னமையா ஆராய்ச்சித் திட்டம்” என்ற பெயரில் பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாடல் விளக்கம் : மோகன் ஜி
படமும் பாடலும் : தேவா

ராகம் : மோஹனம்

பல்லவி
அதெ சூடரே மோஹன ரூபம்
பதி கோட்லு கல பாவஜ ரூபம்

சரணம் – 1
வெலயக பதஹாரு வேலு மகுவலனு
அலமின கன மோஹன ரூபம்
வலசின நந்த வஜ்ரமு கொல்லெதல
குலுகு சூபுலகு குரியகு ரூபம்

சரணம் – 2
இந்த்ர வனித நெப்புடு தன வர
மந்து நிலிபின மோஹன ரூபம்
கண்டுவ பூஸதி கோகிட ஸொம்புல
விந்துலு மரிகின வேடுக ரூபம்

சரணம் – 3
த்ருபுர ஸதுல போதிஞ்சி ரமிஞ்ச்சின
அபுரூபபு மோஹன ரூபம்
கபுருல ஶ்ரீ வேங்கட பதியை இல
உபமிஞ்ச கரானி வுன்னத ரூபம்

கீர்ரத்தனையின் பொருள் :

பல்லவி
மோகனமாக ஈர்த்திடும் பேரழகைப் பாருங்கள்.
பத்துகோடி மன்மதர்களின் அழகையும்கூட விஞ்சியதே அவன் சௌந்தரி்ய ரூபமல்லவா?

சரணம் – 1
பதினாராயிரம் கோபியர்களையும்
மயக்கியது அந்தப் பேரழகு ரூபம்.
பிருந்தாவனத்தின் கன்னிகையரையும்,
இடைவிடாது வெறித்து நோக்க வைத்தது நந்த வம்ச இரத்தினமான கிருஷ்ணனின் அழகிய ஸ்வரூபம்.

சரணம் -2
அரம்பையரும் எந்நேரமும் தம் நெஞ்சில் நிறுத்திய அழகிய ரூபம்.
அவன் அணைப்பெனும் அன்பின் விருந்தை வழங்கும் விந்தை ஸ்வரூபம்.

சரணம் 3
நினைத்துநினைத்து ஒன்றி வணங்கும்படியாக, மூவுலகங்களிலும் உள்ள பெண்டிர்தம் இதயங்களைக் கவர்ந்ததும் அந்த அழகிய ரூபம்.
அந்த பேரழகு ஸ்வரூபமே இப்போது நம்மெதிரே ஶ்ரீவேங்கடேஸ்வரனாக வடிவெடுத்து நிற்கிறது.

சில விளக்கங்கள்:
கிருஷ்ணரின் ஈடில்லாத அழகை எண்ணியெண்ணி மாய்ந்து போகிறார் அன்னமாச்சார்யார்.

கோபிகைகளும், அரம்பையரும், மூவுலகைச் சேர்ந்த மங்கையரும் கிருஷ்ணரின் அதிரூப லாவண்யத்தில் மயங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

தத்துவபரமாக, ஶ்ரீகி்ருஷ்ண பரமாத்மா ஒருவனே ஆண். ஜீவர்களாகிய நாம் யாவரும் பால்பாகுபாடின்றி, அவனில் மயங்கியிருக்க வேண்டிய பெண்மக்களே! அந்தக் கிருஷ்ணனே வேங்கடவனாகவும் இருக்கிறான்.
கோடி மன்மத ஸ்வரூபம்: காமதேவனான மன்மதன் பிரம்மனின் மானசப்புத்திரன் ஆவார்.

மனிதகுலம் அறாது தொடர, ஆண் பெண் இருவரிடையே நிலைக்க வேண்டிய ஈர்ப்பையும் காமத்தையும் தூண்டுகின்ற தேவனாக படைக்கப்பட்டார். இவரை திருமாலின் புத்திரன் என்றுகூட குறிப்பிடுவதும் உண்டு.

ஈடுயிணையற்ற சௌந்தர்யத்தை உடையவன் மன்மதன். ‘மனதை உன்மத்தம் கொள்ளச் செய்பவன்’ என்பது அவன் பெயரின் அர்த்தம்.

யோகத்திலிருந்த பரமசிவனார் மேலேயே தன் புஷ்ப பாணத்தைப் பிரயோகித்ததால், சிவனும் சினங்கொண்டு நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்க, காமதகனம் ஏற்பட்டது.

பராசக்தியின் அருளால், அனங்கனாக (உருவமற்றவனாக) ரதிதேவி கண்களுக்கு மட்டும் தெரிகின்றபடியாக மாறினான்.

இந்தப் பாடலில், அன்னமாச்சாரியார் ஸ்ரீகிருஷ்ணனை ‘பத்துகோடி மன்மதர்களின் மொத்த அழகையும் ஒருங்கே பெற்றவன்’ என்று பாடுகிறார்.

ஶ்ரீகிருஷ்ண சௌந்தர்யம் மகத்தானது. விவரிக்கவொண்ணாதது.

ஸ்ரீ கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன், முருகன், பரதன் முதலானோராக மன்மதனே மீண்டும் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஸ்ரீ கிருஷ்ணனின் பேரழகை ஆழ்வார்களும் சலிக்காமல் பாடி துதிக்கிறார்கள்.

அழகுக்கு பெயர்போனவர்கள் கந்தனும் கண்ணனும் அவர். அவர்களின் பேரழகை, சிறந்த கவிஞர்களும் ஓவியர்களும்கூட தமது கற்பனையின் எல்லைவரை மட்டுமே தொட முடியும்.

மன்மதனையும் பழிக்கும் அந்த பரம்பொருளின் எல்லையற்ற சௌந்தர்யத்தை, நம் ஊனக் கண்களாலும் மனக்கண்ணாலும்கூட காண முடியுமோ?!

இத்தனை பேரழகின் இருப்பிடமான நாராயணன், மோகினியாக பெண்ணுரு தாங்கி வந்து பஸ்மாசுரனை அழித்த கதை அறிவோம்.

ஆனானப்பட்ட சிவனே மோகினியின் ரூப லட்சணத்தில் மனம் பறிகொடுத்ததினால் ஹரிஹர புத்ரனாக சாஸ்தா பிறந்தார்.

மகாகவி பாரதியார் கண்ணனை காதலிக்கும் பெண்ணாக தன்னை வரித்துக்கொண்டு எழுதிய கண்ணன் பாடல்களில் ஒன்றைப் பார்ப்போம்.

‘ஆசை முகம் மறந்து போச்சே இதை யாரிடம் சொல்வேனடி தோழி!’ என்று தொடங்கும் பாடலில்,‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்அதில் கண்ணன் அழகு முழுதில்லை

நன்னு முகவடிவு கானில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்!
கண்கள் புரிந்து விட்ட பாவம்-உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு
பெண்கள் இனத்தில் இது போலே-ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ…’
என்றும்,

‘கண்ணன் முகம் மறந்து போனால்- இந்தக்
கண்கள் இருந்தும் பயன் உண்டோ?
வண்ணப் படமும் இல்லை கண்டாய் –
இனி வாழும்
வாழும் வழி என்னடி தோழி?’
என்றும் நொந்து கொள்கிறார்.

மறக்கக் கூடியதா கண்ணன் அழகு? ஆனாலும், மனித மனத்தின் நினைவுகூர்தலில் உள்ள மாய விளையாட்டை இப்பாடலில் மஹாகவி காட்சிப்படுத்துகிறார்.

கோபியரும் கிருஷ்ணனும் :
கோகுலத்தில் வாழ்ந்த கோபியர்கள் கிருஷ்ண பரமாத்மாவின்மேல் வைத்த எதிர்பார்ப்புகள் இல்லாத தூய பேரன்பும், திடமான பக்தியும் நமக்குச் சொல்லும் பாடம் ஒன்று இருக்கிறது. அந்தப் பரம்பொருளை அடைய வேண்டி, நாமும் அவ்விதம் தூயபக்தியைச் செலுத்துவது ஒன்றே உண்மையான ஆன்மீகமாகும்.

பிரார்த்தனை என்பது தூப தீபம் காட்டி, மனதை இறைவன் பாதத்தில் வைக்காமல், வாய் மட்டும் முணுமுணுக்கும் தோத்திரங்களால் பயனில்லை. நாம் யாவருமே மனதால் கோபியர்களாகவே இறையன்பு கொண்டு வணங்கினால், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் கண்ணன்.
முற்பிறவிகளில் ஶ்ரீமன் நாராயணன்பால் பெரும் பக்திசெய்த பக்திமான்கள் கோபியர்களாக மண்ணுலகுக்கு வந்து, கிருஷ்ணர் உடன் கலந்து வாழ்ந்த பாக்கியம் அடைந்தவர்கள்.

இந்திரவனிதை:
ஸ்ரீமன் நாராயணனின்மேல் கொண்ட பக்தியால், தேவர்களாக பதவி பெற்ற பக்திமான்களே கோகுலத்துக்கு வந்தார்கள் என்று ஒரு தொன்மம் உண்டு ( சுவாமி சிவானந்தரும் கோபியர்கள் தேவமங்கையர் என்பார்). அவர்களையே ‘இந்திர வனிதா’ என்று அன்னமாச்சாரியார் குறிப்பிடுவதாக யூகிக்கலாம். இந்திரலோகத்தை சேர்ந்த அரம்பையரும் கிருஷ்ணபக்தி கொண்டு இருந்தவர்களாகவும் கொள்ளலாம். ஆனாலும், ஸ்ரீகிருஷ்ணனின் அணைப்பில், தூய அன்பின் சுகம் கண்டவர்கள் என்று பாடலின் அடுத்த அடியில் குறிப்பதால், அவருடன் ராச லீலை புரிந்த கோபியரையே குறிப்பிடுகிறார் என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது

திருவேங்கட ரூபம் :
உற்றுக் கேட்டால், கடலலைகளின் ஓசை கேட்கும் வேங்கடவன் சிலாரூபம்.
குளிர்காலத்திலும் வெம்மையான திருமேனி; சுருள்சுருளான அளகபாரம்; அதன் மேல் ஒளிரும் கிரீடம்; அரைக்கண் வரையில் மூடிய பெரிய திருமண்; அழகிய நாசி; உதடுகளில் குமிண் சிரிப்பு; பாஞ்சஜன்யம் போலும் வடிவக் கழுத்து; திண்தோள்கள்; தோளினின்று நான்கு கரங்கள்; வலது மேற்கரம் சுதர்சனம் தாங்க, வலது கீழ்கரம் அபய ஹஸ்தம் காட்ட ; இடது மேற்கரம் பாஞ்சஜன்யம் ஏந்த, இடது கீழ்கரமோ இடது தொடையில் பதிந்து, ‘கத்யவலம்பிதம்’ எனும் முத்திரையில் இருக்கும் ;வீரம் செறிந்த மார்பு; மார்பின் இருபக்கங்களிலும் பதிந்த பத்மாவதியும் லஷ்மியும்; கச்சிதமாகக் குழைந்த வயிறு; கடிபந்தம் எனும் அரைக்கச்சு அணிந்த இடுப்பு; திடமான கால்கள்; பேரழகில் பதிய நின்ற பாதங்கள்.

கழுத்தில் சுவர்ண மாலைகள், சாளக்கிராம மாலை, விதவிதமாய் நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், முப்புரி நூல்; வாகுவலயங்கள், கட்கம், கங்கணம், பாதச் சிலம்புகள்இவ்விதமாய் பெரு மன்னர்களும், தனவந்தர்களும் சமர்ப்பித்த கணக்கிலடங்காத ஆபரணங்கள் தாங்கிய பேருருவம் திருவேங்கடவனின் சுந்தர ரூபம்.வேங்கடவனின் பேரழகைப் பலவிதமாய் ஆழ்வார்களும் வாக்கேயக்காரர்களும் அருளியிருக்கிறார்கள்.

அவனுடைய வாயின் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுதல் செய்த குலசேகர ஆழ்வார் பாசுரத்தைப் பார்ப்போம்.

‘செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இந்தப் பாடல் கேட்ட அக்கணமே வேங்கடவன் இரங்கித் திருவுளம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த ஒரு பாடலின் தெய்வீகத் தன்மையாலே, திருமலையில் வேங்கடவன் சன்னதியின் படியை, ‘குலசேகரப் படி’ என்றழைக்கும் பேறு பெற்றார்.

நிவேதனத்திற்கான ததியன்னம் கொண்ட மண்கலயம் ஒன்றைத் தவிர, குலசேகரப் படியைத் தாண்டி வேறு பொருள் கருவறை புக அனுமதியில்லை.

மோட்சத்தை அளிக்கவல்ல அந்த மோகன ரூபத்தை மனவரதமும் எண்ணியபடி இருப்போம்.

———–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவான் -ஞானாதி ஷட் குண வர்ணனைகள்-நம் பூர்வாச்சார்யர்கள் விளக்கம்–

October 18, 2024

ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய தனியன்:

நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே
நாதாய முனயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே

ஸ்ரீ நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே-மங்கள ஸ்லோகம்

யோ வேத்தி யுகபத் -உள்ளுவார் உள்ளம் எல்லாம் உடன் இருந்து அறுதி
ஸர்வம் ப்ரத்யஷேண -நேரடியாக
ஸதா -எப்போதும் –
ஸ்வத -இயல்பாகவே
தம் பிராணமய ஹரி ஸாஸ்த்ரம் நியாய தத்வம்
ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் முக்கிய பிரமாணம் -ஸாஸ்த்ர யோ நித்வாத்
உவமானம் நான்காவதாக நையாயிகர்
லௌகிகம் -ப்ரத்யக்ஷமே பிரதானம்
மோக்ஷம் ஆத்மா பரமாத்மா அறிவது வேதம் ஒன்றாலே
யஸ்ய ஆத்மா சரீரம் -சேஷ பூதன்
அபின்ன நிமித்த காரணம்
நையாயிகன் பரம அணுவே மூலப் பொருள்
வேதம் -சரணாகதி -மஹா விச்வாஸம் -உண்டாக -தனது சரீரங்களை ரக்ஷிப்பானே
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ-பர கத அதிசய ஆதேய

அஹம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
ஞான ஆனந்த வடிவம் ஜீவாத்மா
கட்டைப் போல் -நையாயிகன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா -நமது கர்மா ரூபா அவித்யா நீங்க கர்மா ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்ய அனுபவம்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்

மூன்று ஸ்லோகங்கள் எம்பெருமானார்-ஸப்த வித அனுபபத்தி பிரகரணத்தில் விளக்கி உள்ளார் ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி வியாக்யானமும் பண்ணி அருளுகிறார்
நியாய சித்தாஞ்சனம் தேசிகரும் ஸ்லோகம் மேற்கோள் காட்டி உள்ளார்

ஒரே ப்ரஹ்மம் மாயா வாதிகள் -தொண்டர் இல்லை –
கண்டிக்க ஸ்லோகங்கள்-

ஞான ரூபம் பர ப்ரஹ்மம் தன் நிவர்த்யம் ரிஷாத்மகம்

அஞ்ஞானம் சேத் சிரஸ் குர்யாத் கம் பிரபு தந் நிவர்த்ததே  

குழம்பாதே -அறியாமைக்கு வலிமை சாஸ்த்தியாகாதே
பர ப்ரஹ்மத்தை அறியாமையில் இருந்து மீட்க வேறே யார்
இரண்டாவது இல்லையே

அஞ்ஞானம் அநிர் வசனீயம்
ப்ரஹ்மம் ஞானமே அத்தைப் போக்கும்
கயிறு பாம்பு போல்

ப்ரஹ்மம் பற்றிய ஞானம் வந்தால் போக்கும் என்றால்
ப்ரஹ்மமே அறிவு -ப்ரஹ்மம் பற்றிய அறிவு வேறே இல்லையே இவர்களுக்கு

விளக்கு ஏற்றி வைத்து பார்வையும் தெரிந்து பொருள் விளங்குமே
விளக்கு ஏற்றியாச்சு சொன்னால் தான் போகும்
ஸ்வயம் பிரகாசம் -வேறே விளக்கு தேவை இல்லை
தன்னைத் தானே வெளிப்படுத்தும் ப்ரஹ்மம் -அறியாமையைப் போக்கி இருக்குமே
ஞானம் ஸ்வரூபம் ஸ்வயமே ப்ரகாஸம் -தானே உணர்த்திக் கொண்டே இருக்குமே

ப்ரஹ்மம் ஞானமே வடிவு எடுத்தது என்ற அறிவு வந்தால் போகும்
இப்பொழுது இரண்டாகுமே -அறியப்படும் பொருள் ஆனதே -உங்கள் கொள்கைக்கே முரணாகுமே
ப்ரஹ்மம் அனுபவம் அறிவு
அனுபவ ஸ்வரூபஸ்ய ப்ரஹ்மம்
ஞானம் அஞ்ஞான விரோதி

அறியாமை ப்ரஹ்மதுக்கு வராதே
ஆகவே பரமாத்மா ஜீவாத்மா வேறே வேறே என்று நிரூபணம்

நாத முனி
ஆதி முனி
ஓதும் முனி
கீதா முனி
தாத முனி
தூத முனி
ரெங்க நாத முனி
பாத முனி முனி
போத முனி
பேத முனி
அபேத முனி
மோத முனி
வேத முனி

——–

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–
1-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்
-2-

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன
-ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி-

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-
3-

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

நி மஜ்ஜதோ அநந்த பவ அர்ணவ அந்தஸ்
சிராய மே கூலம் இவ அஸி லப்த
த்வயாபி லப்தம் பகவந் நிதா நீம்
அநுத்தமம் பாத்ரம் இதம் தயாயா
—24-

பகவந் –
ஜ்ஞானாதி குண பூரணரான
தேவருடைய பேறு என்னும் இடம்
நான் சொல்ல வேண்டுமோ -என்கை

தயா ஸஹா ஸீ நம நந்த போகி நி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
பணா மணி வ்ராதம யூக மண்டல
பிரகாஸ மாநோத ரதி வ்யதா மநி
–39-

ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலை கதா மநி
இருவருமாய்ப் பரிமாறும் போது
அவர்களுக்கும் படியான -ஒப்பான -ஜ்ஞான சக்த்யாதி களுக்கு
ஆஸ்ரயமாய் இருக்குமவன் –
ஒருத்தன் என்று அவனுக்குக் கூச வேண்டாதே
துகைத்துப் பரிமாறலாம் படியான
தாரண சாமர்த்தியத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்குமவன் –

அவிவேகக நாந்த திங்முகே
பஹூதா ஸ்ந்தத துக்க வர்ஷிணி
பகவன் பவது ர்த்தி நே பத
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத—
49-

பகவன்-
இந்த துக்கத்தை பரிஹரிக்கைக்கு இத்தலையில்
ஜ்ஞான சக்த்யாத்ய பாவமும்
தேவரால் அல்லது பரிஹாரம் இல்லை
என்கிற இதுவும் தேவரீர் அறியீரோ -என்கை –
இதிலும் தேவரீர் அறியாதது உண்டோ –

தத் அஹம் த்வத் ருதே ந நாதவான்
மத்ருதே த்வம் தயநீயவான் ந ஸ
விதி நிர்மிதமே ததந்வயம்
பகவன் பாலய மா ஸம ஜீஹப
—51-

பகவன் –
இவற்றில் தேவருக்கு அறிவிக்க வேண்டியது உண்டோ –

அவபோதி தவா நிமாம் யதா
மயி நித்யாம் பவதீ யதாம் ஸ்வயம்
க்ருபயைதத நனய போக்யதாம்
பகவன் பக்திமபி ப்ரயச்ச மே—
54-

பகவன் –ஒன்றை ஒருத்தனுக்கு கொடுப்போம் என்றால்
ஒரு தடை இல்லாத ஜ்ஞான சகத்யாதிகளால் பூரணன் -என்கை –

பக்திமபி ப்ரயச்ச-யாதொரு படி ஜ்ஞானத்தைத் தந்தாய்-அப்படியே பக்தியையும் தந்து அருள வேணும் –

—————————————-

ஓம் பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் பத்ம வநாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம் தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம் அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே

பகவன் நாராயண –
பகவச் சப்தத்தாலே(-ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது-ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் ஸக்தி தேஜஸ்-பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி-அகில ஹேய ப்ரத்யநீகமும் சொல்லும் -இவனுக்கே முக்யார்த்தம் -மற்றவர்களுக்கு கௌண -இவன் சம்பந்தத்தால் லேசம் இருந்தாலும் பகவத் ஸப்த பிரயோகம் பண்ணுகிறோம்-சினத்தினால் செற்ற –மனத்துக்கு இனியான்   )
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரேண
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த த்வயான் வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ஸ ஸ பூதேஷ்வசே ஷேஷூ வகார்த்தஸ் ததோச்வ்யய
ஜ்ஞான சக்தி பலை ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் ஸ்ய சேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவமேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாஸூ தேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா சமன்வித
சப்தோயம் நோபசாரேன த்வன்யத்ர ஹ்யுவசாரத -என்கிறபடியே
ஹேய சம்பந்த ரஹித பூர்ண ஷாட் குண்யத்தைச் சொல்லுகிறது –

இத்தால் பயிருக்கு நீர் நிலை போலே சர்வ ஆத்மாக்களுக்கும் கூட உஜ்ஜீவன ஹேதுவான குண பூர்ணனுமாய்(ஸமஸ்த கல்யாண குண ஆர்ணவம் -குணக் கடல் )
பிறர் உடைய தோஷம் தட்டாத படியான ஹேய ராஹித்யத்தையும் உடையவன் -என்கிறது-

நாராயண –
பகவச் சப்தத்திலே சர்வமும் இல்லையோ
இனி நாராயண சப்த அபேஷை உண்டோ -என்னில்

அந்யத்ர ஹ்யுபசாரத -என்கிறபடியே
பகவச் சப்தத்துக்கும் ப்ரஹ்ம சப்தத்தோபாதி வ்யக்த் யந்தரங்களிலே ஔ பசாரிகமாக வாகிலும் பிரயோகம் உண்டு(ஸர்வத்ர ப்ருஹத் -இருப்பதிலேயே பெரியதாகியும் -ஆஸ்ரிதரை பெரியவராக்கி -அளவிலும் – குணங்களாலும் -ப்ருஹத்
ப்ரஹ்ம சப்தம் பிரக்ருதிக்கும் -ஆத்மாவுக்கும் பத பிரயோகம்
முடிவில் பெரும் பாழ் -நிர்தோஷ ஆத்மா முக்தனையும் ப்ரஹ்ம ஸப்தம் பிரயோகம் )

அதுவும் இன்றியே அநந்ய பரமான நாராயண அநுவாக சித்தமாய்
யோக ரூடியாலே நாராயண பதம் சர்வேஸ்வரனுக்கே வாசகமாய் இருக்கும்
அத்தாலே விசேஷிக்கிறது-

(காரணப் பெயர் –பாசக -சமையல் காரர் –நாற்காலி போல் –யவ்க்கிகம்
இடுகுறிப் பெயர் -குடம் மாடு -புத்தகம் -பிரித்து அர்த்தம் கொள்ளாமல் இதுக்கு இந்தப் பெயர் -ரூடி -பிரசித்த
யோக ரூடம் -இரண்டும் -பங்கஜம் -சேற்றில் இருந்து தோன்றியவையும் -தாமரை -யோகமும் ரூடியும் உண்டே – நாற்காலி -பூனைக்கும் நான்கு கால்கள் இருந்தாலும் -பிரசித்த அர்த்தம் குறிப்பிட்ட வஸ்துவுக்கே
ஆக மூன்றுமே உண்டு-நாராயணன் யோக ரூடி -உலகில் உள்ள அனைத்துக்கும் இருப்பிடம் -காரணப் பெயர் -குறிப்பிட்ட வ்யக்திக்கே பிரயோகம் -ஆகவே ரூடி -)

(நார -அயன -பதங்கள் சேர்ந்து -நாராயண -ஆனதே
சூரப்ப -நகம் -சூர்ப்பணகை -முரம் போன்ற நகம் கொண்டவள் -இவளுக்கு மட்டுமே இவ்வாறு
தஷிணாயனம்
உத்தராயணம் -இங்கு மட்டும் ண)

ஆக –பகவன் நாராயண -என்று
சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
உபய விபூதி நாதனான சர்வேஸ்வரனைச் சொல்லிற்று ஆயிற்று –

(பகவான் நாராயண
குண விபூதி புஷ்கல பரம் -ஸ்ருத ப்ரகாசகர்
ஈறில வண் புகழ் நாரணன் என்றும்
நாரணம் முழு ஏழு உலகுக்கும் நாதன் என்றும் சொல்லுமா போல்)

ஸ்வா பாவிக -அநவதிக அதிசய ஜ்ஞான பலை ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேச சௌசீல்ய
வாத்சல்ய மார்த்தவ ஆர்ஜவ சௌஹார்த்த சாம்ய காருண்யா மாதுர்ய காம்பீர்ய
ஔதார்ய சாதுர்ய ஸ்தைர்ய தைர்ய சௌர்ய பராக்ரம சத்ய காம சத்ய
சங்கல்ப க்ருதித்வ க்ருதஜ்ஞதாத் அசங்க்யேய கல்யாண குணகனௌக மஹார்ணவ

ஸ்வா பாவிக
ஜலத்துக்கு சைத்யம் போலே ஸ்வ பாவ சித்தமாய் இருக்கை

அநவதிக அதிசய
நிஸ் ஸீமமுமாய் ஆச்சர்ய கரமுமாய் இருக்கை
பிரதமத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் சர்வ விஷயங்கள்
அவற்றில்

ஜ்ஞான –
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத
தம் ப்ரணம்ய ஹரிம் சாஸ்திரம் நியாய தத்வம் ப்ரசஷ்மஹே -என்கிறபடியே
எல்லாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி அறியவற்றாய் இருக்கை –

பல –
சங்கல்ப மாத்ரத்தாலே சர்வ பதார்த்தங்களையும் தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய
சம்ஸ்த பதார்த்த நியமன சாமர்த்தியம்

வீர்ய
சர்வத்தையும் தரித்து நியமித்துப் போரா நின்றால் புருவம் வேராத அநாயாமை
எல்லா வற்றையும் உண்டாக்கா நின்றால் தான் அவிக்ருதனாய் இருக்கும் அவிகாரதை என்னவுமாம்

சக்தி –
ப்ரவ்ருத்த உன்முகரான சேதனர்க்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திப்பிக்கும் ப்ரவர்த்தகத்வ சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் என்னவுமாம்
ஜகத் உபாதான சக்தி என்னவுமாம் –

தேஜஸ் –
பராபிபவன  சாமர்த்தியம்-

ஸ்வ சங்கல்ப அனுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி
ஸ்வ சேஷ தைக ஸ்வபாவ பிரகிருதி புருஷ காலாத்மக
விவித விசித்ர அநந்த-போக்ய போக்த்ரு  வர்க்க போக உபகரண போக ஸ்தான ரூப
நிகில ஜகத் உதய விபவ லய லீல சத்ய காம சத்ய சங்கல்ப பர ப்ரஹ்ம பூத

முதல் நாலு குணங்களும் (சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம)சிருஷ்டிக்கு உறுப்பு
மேல் நாலு குணங்களும் (நாராயண மஹா விபூதே ஸ்ரீ மன் ஸ்ரீ வைகுண்ட நாத )பிரப்யத்வத்துக்கு உறுப்பு

சத்ய காம சத்ய சங்கல்ப பரப் ப்ரஹ்ம பூத -என்கிற இவை லீலா விபூதி சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது

புருஷோத்தம நாராயண -என்கிற இவை குண சூரணை யோடே அன்வயித்துக் கிடக்கிறது –3-பர ப்ரஹ்ம பூத –ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத-என்கிறபடியே(நான் பலவாக மாறப் போகிறேன்-நானே பாலனாகவும் குமாரனாகவும் வயோதிகனாவும் ஆவது போல் -அனைத்துக்கும் அவனே அந்தராத்மா)
ஜகதாகாரனாய் ப்ரும்ஹிதனாகை-
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மமே இறே கார்யமான ஜகத்தும் –

ஜ்ஞான –
ஈஸ்வர ஜ்ஞானம் -ஆகிறது –யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத -(ஸ்ரீ நாதமுனிகள் ஸ்ரீ ஸூக்தி) என்கிறபடியே
சர்வ காலமும் சர்வ வஸ்துக்களையும் ஒரு காலே சாஷாத் கரிக்கும் சாமர்த்தியம்
அதாகிறது -விஷம சிருஷ்டியிலே கர்மீ பவித்து இருந்துள்ள அசங்க்யாதமான ஆத்மாக்களின் உடைய ஸ்வரூப பேதத்தையும்
நாம பேதத்தையும் தத் தத் கர்ம பேதத்தையும் சாஷாத் கரிக்கும் சக்தி –

பல –
அதாவது -ஸ்ருஷ்டமான சகல பதார்த்தங்களையும் ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே
தரிக்கும் தாரண சாமர்த்தியம்

ஐஸ்வர்ய –
அதாவது -சகல ஆத்மாக்களையும் கர்ம அனுகுணமாக நியமிக்கும் நியமன சாமர்த்தியம்

வீர்ய –
அதாவது -ஸ்ருஷ்ட்யாதி சகல வியாபாரங்களையும் பண்ணா நின்றாலும்
அநாயாச ரூபமான அவிகாரித்வம்
யதா சந்நிதி மாத்ரேண கந்த சோபாய ஜாயதே
மனசோ நோபா கர்த்ருத்வாத் ததாசசௌ பரமேஸ்வர – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-20-

சக்தி
அதாவது -ப்ரவ்ருத்த உன்முகரான சேதனருக்கு சக்தியைக் கொடுத்து
ப்ரவர்த்திப்பிக்கும் பிரவர்த்தக சாமர்த்தியம்
அகடிதகடனா சாமர்த்தியம் ஆகவுமாம்-உபாதான சக்தி யாகவுமாம்

தேஜஸ் –
அதாவது -பராபிபவன சாமர்த்தியம்
ஜ்யோதீம்ஷ்யாதி த்யவத் ராஜன் குரூன் ப்ரச்சாதயன் ஸ்ரீ யா -என்றும்
தமேவ பாந்தம் அனுபாதி சர்வம் -என்றும்

இவ்வாறு ஆறு குணங்களும் சர்வ விஷயம் –

இப்படி ஜ்ஞாநாதி ஷட் குண யுக்தனான ஈஸ்வரனுக்கே

——————–

ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் பலம் அதுலம் ஐஸ்வர்யம் அகிலம்
விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச
பரம் தேஜஸ் ச இதி ப்ரவர குண ஷட்கம் பிரதமஜம்
குணா நாம் நிஸ்ஸீம் நாம் கணநவி குணாநாம் பிரசவ பூ –15-

ஹே வரத
ப்ரக்ருஷ்டம் விஞ்ஞானம் -சிறந்த ஞானம் என்ன
அதுலம் பலம் -ஒப்பற்ற பலம்
அகிலம் ஐஸ்வர்யம் -அநவதிகமான ஐஸ்வர்யம் என்ன
விமர்யாதம் வீர்யம் -எல்லை அற்ற வீர்யம் என்ன
பரமா சக்திரபி ச-ஸ்ரேஷ்டமான சக்தி என்ன
பரம் தேஜஸ் ச -சிறந்த தேஜஸ்ஸூ என்ன
இதி -ஆகிய இவையாகிற
பிரதமஜம் ப்ரவர குண ஷட்கம் -முதல் மூர்த்தியான ஸ்ரீ பர வாஸூ தேவ மூர்த்தி இடம் உள்ள சிறந்த ஆறு குணங்களானவை
நிஸ்ஸீம் நாம்-எல்லை அற்றதுகளும்
கணநவி குணாநாம்-எண்ணக் கூடாததுகளுமான
குணா நாம் பிரசவ பூ -கல்யாண குணங்களுக்குப் பிறப்பிடம் –

இந்த ஆறு குணங்களும் இன்ன இன்ன காரியத்தில் விநியோகம் என்னும் இடம்
ஸ்ரீ ரெங்க ராஜ சத்வ உத்தர சதகம் -யுகபத நிகமஷை -இத்யாதி சப்த ஸ்லோகங்களில் விசதம்

த்வ அநந்த குணஸ்யாபி ஷட் ஏவ ப்ரதமே குணா –இந்த ஆறுமே அஸங்க்யேயங்களான குண கணங்களுக்கு ஊற்றுவாய்
பிரதமஜம் -என்று குணங்களுக்குள் முதன்மையானது என்றுமாம்
நிஸ்ஸீம் நாம்-ஒரு பெரிய ராசியாகவும் எண்ண முடியாதவை —
ஒரு கூடை மண் ஒரு வண்டி மணல் போலே கூட முடியாதவை என்றவாறு –

————–

பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-

பகவாந் — அனைத்து கல்யாண குணங்களும் முழுமையாக உடையவர்
பகஹா — ஐஸ்வர்யம், வீர்யம், ஸ்ரீ, ஞானம், வைராக்கியம், யசஸ் என்னும் ஆறு நன்மைகளும் பூர்ணமாக அடைந்திருப்பவர்

(அரசுரிமை முதலிய) ஆறு குணங்களைக் கொண்டவன் {பகவாந்},
(அண்டப் பேரழிவின் போது) ஆறு குணங்களையும் அழிப்பவன் {பகஹா},

563-பகவான் -குற்றம் அற்றதாய் குணங்களே நிரம்பிய ஸ்வரூபம் ஆனதால் பூஜிக்கத் தக்கவர் –
564-பகஹா -முன்னால் கூறியபடி ஜ்ஞானம் முதலிய ஆறு குணங்களை உடையவர் –

563-பகவான் –
பூஜைக்கு உரியவன் -உயர்வற உயர்நல உடையவன்

ஏவம் அஸேஷ தோ₃ஷ வித்₃வேஷி கல்யாண ஸ்வரூப தயா பரம பூஜ்யோ
ப₄க₃வான் ॥(அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண ஏக குண நிதி )

தீதில் சீர் நலம் திகழ் நாரணன்-உணர் முழு நலம் -அந்தமில் ஆதி அம் பகவன்
கணக்கறு நலத்தனன் அந்தமிலாதியம் பகவன் -1-3-5-

குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————

  1. ஓம் பகவதே நம:

‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ: ஶ்ரிய: |

ஞானவைராக்யயோகைஸ்சைவ ஶண்ணாம் பக இதீரிணா ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.74)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வளம், அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி இருத்தல் “பக” என்ற சொல்லினால் குறிக்கப்படும்.

ஸோஸ்யாஸ்தீதி (மேற்சொன்ன ஆறு குணங்களும்) நிரம்பப் பெற்றிருப்பதால்

பகவான் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மேன்மை, அறம், புகழ், செல்வம், அறிவு (ஞானம்) மற்றும் வைராக்யம் ஆகிய ஆறு குணங்களும் குறைவின்றி நிரம்பப் பெற்றிருப்பதால் ஸ்ரீமந்நாராயணன் ‘பகவான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானமகதிம் கதிம்|

வேத்தி வித்யாமவித்யா ச ஸ வாச்யோ பகவானிதி ||’ (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.78)

ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: படைப்பு, அழிவு (ப்ரளயம்), உயிரினங்கள் வருதல் (பிறத்தல்), செல்லுதல் (மரித்தல்), அறிவு (ஞானம்) மற்றும் அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை உள்ளபடி அறிபவரை பகவான் என்று அழைக்கிறோம்.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

———–

  1. பகவான் – வழிபாட்டுக்குத் தகுதியானவர்

இந்த நாமத்திற்கு பின்வரும் அர்த்தங்கள் உள்ளன:

  • வணக்கத்திற்கு உரியவர்
  • ஆறு குணங்கள் அல்லது ஷட் குணங்கள் நிறைந்தவர். ஞானம் (அறிவு), சக்தி (ஆற்றல்), பலா (வலிமை), ஐஸ்வர்யா (இறையாண்மை அல்லது செல்வம்), வீரியம் (வீரம்), மற்றும் தேஜஸ் (பிரகாசம் அல்லது பிரகாசம்)
  • எல்லா உயிர்களின் தோற்றத்தையும் முடிவையும் அறிந்தவன்

பகவான் பின்வரும் 6 தெய்வீக குணங்களை போதுமான அளவில் பெற்றிருக்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் விளக்குகிறார். அவர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.74) மேற்கோள் காட்டுகிறார்:
ஐஸ்வர்யஸ்ய ஸமாக்ரஸ்ய தர்மஸ்ய யஷஸஸ் ஶ்ரியா |
ஞான வைராக்யயோஹ்ஸ் சைவ ஷன்னாம் பக இதீரணா ||
பக என்பது ஐஸ்வர்யம் (செல்வம்), தர்மம் (நீதி), யஷா (புகழ்), ஸ்ரீ (செழிப்பு), ஞானம் (அறிவு) மற்றும் இறுதியாக வைராக்யம் (இரக்கம்) ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஆறு குணங்களும் பகவை வரையறுக்கின்றன, பகவை உடையவன் பகவான்’.

ஸ்ரீ சங்கரர் விஷ்ணு புராணத்திலிருந்து (6.5.78) மற்றொரு ஸ்லோகத்தின் அடிப்படையில் கூடுதல் விளக்கத்தை அளிக்கிறார்:
உத்பத்திம் ப்ரளயம் சைவ பூதானம் ஆகதிம் கதிம்;
வேட்டி வித்யாம் அவித்யாம் ச ச வாச்யோ பகவான் இதி
எல்லா உயிரினங்களின் தோற்றம் மற்றும் முடிவு, வருகை மற்றும் வெளியேறுதல் மற்றும் அறிவு மற்றும் அறியாமை ஆகியவற்றை அறிந்தவர் என்பதால் அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்.

அனைத்து மங்களகரமான குணங்களையும் கொண்ட அவரது இன்றியமையாத இயல்பு காரணமாக அவர் வழிபாட்டிற்கு தகுதியானவர் என்று ஸ்ரீ பட்டர் நாமத்தை விளக்குகிறார். ‘பக’ என்ற சொல்லுக்கு ஆறு பண்புகளைக் குறிக்கும் சிறப்புப் பொருள் உண்டு, ஆனால் ஸ்ரீ பட்டர் இந்த நாமத்தை விளக்குவதற்கு இந்தப் பொருளைப் பயன்படுத்தவில்லை. மாறாக, “வணக்கத்திற்குரியவர்” என்று விளக்கம் தருகிறார். அமரகோஷத்தில், “பஜ்யத இதி பகஹ்” என்ற குறிப்பு உள்ளது, இது ஸ்ரீ பட்டரின் விளக்கத்திற்கு பொருத்தமானதாகத் தெரிகிறது.

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே. [2899]
இதயமே, எழுந்திரு, உயர்ந்த நன்மையை விட உயர்ந்தவனும், எப்போதும் இல்லாத வானங்களின் இறைவனுமான, எல்லா சந்தேகங்களையும் நீக்கி, தூய அறிவை வழங்குபவனின் பாதங்களை வணங்கு.

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே. [ 2925 ]
வேதங்களின் வழிமுறையை ஏற்றுக்கொண்டு, அவரை உணர்தல் மூலம் அறிந்து கொள்ளுங்கள், அவர் ஆதியும் முடிவும் இல்லாத இறைவன் (பகவான்) எல்லையற்ற பண்புகளைக் கொண்டவர். எல்லா சந்தேகங்களையும் கைவிட்டு, அவரிடம் சரணடையுங்கள், ஏனென்றால் அவர் ஆறு சிந்தனைப் பள்ளிகளில் உள்ள மோதல்களைத் தீர்க்கிறார்.

ஸ்ரீ வைஷ்ணவ பள்ளிகளில் பழமையானது பாகவத மற்றும் பஞ்சராத்ர பள்ளிகள். பாஞ்சராத்ர பள்ளியின் வணக்கத்திற்குரிய பகவான் ‘வாசுதேவா’ என்ற பரா வடிவமாக இருக்கிறார் – இந்த நாமம் சர்வ வியாபக அல்லது அனைத்து வியாபகத்தையும் குறிக்கும். வாசுதேவரின் ஷட்-குணங்களின் காரணமாக, அவர் பகவான் என்று அழைக்கப்படுகிறார்:
ஞான-சக்தி-பல ஐஸ்வர்ய-வீர்ய-தேஜஸ் அஸ்யாஷே ஷதா |
பகவான் சாப்தவாச்யாநி வினா ஹேயைர்குணாதிபிஹ ||

பகவான் இந்த ஆறு குணங்களுடன் (அதாவது ஞானம், சக்தி, பலா, ஐஸ்வர்யம், வீரியம் மற்றும் தேஜஸ்) முழுமை பெற்றவர், மேலும் அவர் அனைத்து ஹேய குணங்களும் இல்லாதவர், எனவே அவர் பகவான் என்று குறிப்பிடப்படுகிறார்.


564-பகஹா
நல்ல குணம் உடையவன் -குண பூரணன்-ஹா அடைந்தவர் அர்த்தம் இங்கு

கு₃ணதோ(அ)பி ததா ₂,
ப₄க₃ஹா ।
ஐஸ்வர்யஸ்ய சமகர்ஸ்ய வீர்யஸ்ய யசசஸ் ஸ்ரீயஸ் ஞான வைராக்ய யோச்சைவ ஷண்ணாம் பக இதீரனா–ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி செல்வம் ஞானம் வைராக்யம் ஆறுக்கும் பக என்று பெயர்

தம் ஹந்தி-க₃ச்ச₂தீதி; ஹந்திர் க₃மந கர்மா ।

அத்ர வைஷ்ணவே ஷஷ்டே ₂(அ)ஸே ப₄க₃வச் ச₂ப்₃த₃ நிர்வசந ப்ரகரணம் லேக்₂யம் ॥(ஆறாவது அம்சம் விரித்து உரைக்கும்-அங்கே கண்டு கொள்ளவும் )

வண் புகழ் நாரணன் -1-2-10-

நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————

  1. ஓம் பகக்னே நம:

ஐஶ்வர்யாதிகம் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை

ஸம்ஹாரஸமயே அழிக்கும் (ப்ரளய) காலத்தில்

ஹந்தீதி அழிப்பதால்

பகஹா பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தை அழிக்கும் ப்ரளய காலத்தில் (மற்றவர்களின்) மேன்மை, அறம், புகழ் ஆகியவற்றை அழிப்பதால் பகவான் ‘பகஹா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரளய காலத்தில் அனைவரின் “பக”த்தையும் “ஹ” – அழிக்கிறார் / அல்லது அபகரித்து தன்னுள் ஏற்றுக்கொள்கிறார்.

————-

  1. பகஹா – அவர் மங்களகரமான பண்புகளை உடையவர்

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஹா’ என்ற பின்னொட்டினால் அழிப்பவர் அல்லது நீக்குபவர் என்று விளக்குகிறார். ‘க்ரோதஹா – கோபத்தை அழிப்பவர்’ மற்றும் ‘காமஹா – ஆசைகளை அழிப்பவர்’ மற்றும் ‘துஷ்கிருதிஹா – தீயவர்களை அழிப்பவர்’ போன்ற நாமங்களை நாம் முன்பு பார்த்திருக்கிறோம். இதே ஒப்புமையால் சங்கரர் ‘ஐஸ்வர்யாதிகம் சம்ஹார ஸமயே ஹந்தி இதி பகஹா – பிரபஞ்சம் கரையும் அல்லது பிரளயத்தின் போது பகாவின் கீழ் வரும் 6 பண்புகளை அழிக்கிறார்’ என்கிறார். உயர்ந்த குணங்கள் உட்பட அனைத்தும் இறுதிப் பிரளயத்தில் செல்ல வேண்டும், பகவானைத் தவிர வேறு எதுவும் இந்த இறுதிச் செயலில் தப்பிப் பிழைக்காது.

பகஹாவிற்கு ஸ்ரீ பட்டரின் விளக்கம் ஆறு பண்புகளைக் குறிக்கும் பக என்ற பொருளைப் பயன்படுத்துகிறது, மேலும் ஸ்ரீ சங்கரரின் கடைசி நாமத்திற்கு (VP 6.5.74) பயன்படுத்தும் அதே விஷ்ணு புராணக் குறிப்பை இங்கே மேற்கோள் காட்டுகிறார். ஸ்ரீ பட்டர் தம் விளக்கத்தில் “ஹந்தி எனப் போகிறது” என்ற பொருளைப் பயன்படுத்தி, இந்த ஆறு தெய்வீக குணங்கள் பகவானுக்கு வழி காட்டுகின்றன.

ஸ்ரீ கிருஷ்ண தத்த பரத்வாஜும் இதே விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறார் – பாகம் மஹாத்ம்யம் ஜிஹிதே கச்சதி ப்ராப்நோதி இதி பகஹா.

ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் இந்த யோசனையின் ஒரு வித்தியாசமான விளக்கத்தைத் தருகிறார் – ‘பாகா’ என்பது பொருட்களின் பரந்த தன்மையைக் குறிக்கிறது, மேலும் ‘ஹா’ என்பது இந்த பரந்த தன்மையின் சுருக்கத்தைக் குறிக்கிறது. பிரளய நேரத்தில் அனைத்தையும் தன்னுள் சுருக்கிக் கொண்டு தனது படைப்பின் பரந்த தன்மையைக் குறைப்பதால் அவர் பக-ஹா என்று அழைக்கப்படுகிறார்.

சுவாமி சின்மயாஆனந்தா, இந்த அர்த்தத்தில், இது விஷயங்களை “அழித்தல்” அல்ல, ஆனால் முதலில் அவரிடமிருந்து வந்த விஷயங்களை தன்னிடமே உள்வாங்குதல் என்று சுட்டிக்காட்டுகிறார்.

செல்வம், புகழ் போன்றவற்றின் நிலையற்ற தன்மையே இங்கு நமக்குப் புகட்டப்படுவதாகவும், இதைப் புரிந்துகொண்டு இவற்றில் உள்ள பற்றுதலை நீக்கும் அளவுக்கு இந்த நாமத்தின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும் என்றும் தர்மச் சக்கரம் எழுத்தாளர் கவனிக்கிறார். .

ஆறு குணங்கள் –

123- மஹா தபா -அளவற்ற ஞானம் உடையவர் -1/6-
124-சர்வக -சம்ஹரிக்கப் பட்ட அனைத்தையும் தன்னிடம் தாங்கும் பலம் உடையவர் -2/6-
125-சர்வவித் -மறுபடியும் படைத்து பிரபஞ்சத்தையே அடையும் செல்வம் உடையவர் -3/6-
126-பா நு -உலகத்தை படைக்கும் போதும் விகாரம் இல்லாத வீர்யம் படைத்தவர் -4/6-
127-விஷ்வக்சேன -உலகையே காக்கும் சேனையை உடைய சக்தி படைத்தவர் -5/6-
128- ஜனார்த்தன -அடியார்களைக் காக்கும் போது எதிர்த்தவர்களை வேறு உதவி தேடாமல் அளிக்கும் தேஜஸ் உடையவர் -6/6-

123-மஹா தபா –

சிறந்த ஞானம் உடையவன் –அதிகமாக பூஜிக்கத்தக்க ஞானம் யுடையவன்

தத்ர வராரோஹ இத்யேத தந்தைர்நாமபி ப்ரயாஸ பரத்வம் யுக்தம்
கிமேகம் தைவதம் லோகே கிம் வா அப் யேகம் பராயணம் இதி
ப்ராப்ய ப்ரஸ்நயோஸ் -தத் ப்ரதி வசனயோஸ் ச ப்ராயேணா மீஷ் மேவ விஸ்ராந்தி

அத ஸ்து வந்த கம் கம இத்யாதீநாம் உபாய -ப்ரஸ்ன ப்ரதி வசநாநாம் அதிகார வ்யூஹ

தத்ர வாஸூ தேவ பரத்வேந வ்யாக்யாத
இதா நீம் ஸங்கர்ஷண

இதுவரையில் அடையத்தக்க பர வஸ்து எது என்கிற வினாவுக்குத் தக்கபடி
பர ஸ்வரூபம் பெரும்பாலும் கூறப்பட்டது
இனி வ்யூஹத்தைக் கூறுவது
அந்த வ்யூஹம்
வாஸூ தேவன்
சங்கர்ஷ்ணன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
என நான்கு வகைப்படும்

அவற்றுள் வாஸூ தேவன் பர ரூபத்தில் சேர்ந்ததனால் தனித்துச் சொல்ல வேண்டியது இல்லை
ஆதலால் இதற்கு மேல் ஸங்கர்ஷண வ்யூஹம் சொல்லப்படுகிறது-

மஹா தபா
யஸ்ய ஞான மயம் தப -இதி மஹத் பூஜ்யம் ஞானம் அஸ்யேதி
ஷட் குணா வ்யாக்யாஸ் யந்தே
தேஷு ஞான பல சங்கர்ஷணஸ்ய குணவ் வ்யூடவ்
ஞானம் -ச ப்ராசீன பவ பரிஸ் ராந்தி ஸாந்தயே சஞ்ஜி ஹீர்ஷா லக்ஷண மாத்ர –

யஸ்ய ஜ்ஞான மயம் தப -முண்டக-1-1-ஞான மயமான தபம் கொண்டவன்

தொடர்ந்து ஆறு குணங்களும் கூறப்பட உள்ளன
இவற்றில் ஞானம் பலம் இரண்டும் சங்கர்ஷனின் தன்மையாக உள்ளன

இங்கு ஞானம் என்பது அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று தவிக்கும் ஜீவர்களைக் கரை ஏற்றும் செயலுக்குத் தக்க ஞானம்

ஞானத்தின் ஒளி யுரு -பெரிய திருமொழி -6-3-
ஞானமாகி ஞாயிறாகி-திருச் சந்த -114
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா -4-7-1
சங்கர்ஷணன் – சம்ஹார கர்த்தா -சங்கல்பத்தால் -செய்து அருளி -ஞானம் -உடையவன்

சிறந்த ஞானம் உள்ளவர் -ஞானம் பலம் சங்கர்ஷணனுக்கு யுரியவை –
அடியார் பிறவித் துயரைப் போக்கும் இச்சையே ஞானம் என்ற சொல் -ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ருஷ்டியைப் பற்றிய சிறந்த ஞானம் யுடையவர் -உயர்ந்த ஐஸ்வர்யம் பெருமை யுடையவர்–சங்கரர் –

சிறந்த ஞானம் உள்ளவர் கபிலராக தபச்வியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் மஹா தபஸே நம

————

ஓம் மஹாதபஸே நம:

மஹத் மிகச்சிறந்த

ஸ்ருஜ்யவிஶயம் (இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும்

தபோ ‘தப’ என்றால்

ஞானமஸ்யேதி ஞானம் உடையவராதலால்

மஹாதபா:பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(இந்தப் ப்ரபஞ்சத்தை) படைக்கும் விஷயத்தில் மிகச்சிறந்த ஞானம் உடையவராதலால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘யஸ்ய ஞானமயம் தப:’ (முண்டக உபநிஶத் 1.1.9)

முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எவருக்கு உலகைப் படைக்கும் அறிவே தவமாகிறதோ

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ஐஸ்வர்யம் அவரது செல்வத்தின்

ப்ரதாபோ வா வீரத்தின்

தபோ காந்தி (ஒளி)

மஹதஸ்யேதி வா மிகச்சிறந்ததாகும்

மஹாதபா:எனவே, பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அவரது செல்வமும், வீரமும் அனைத்தையும் விஞ்சும் காந்தியுடன் (ஒளியுடன்) இருப்பதால் பகவான் ‘மஹாதபா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

முதல் விளக்கத்தில் ‘தப’ என்றால் ஞானம் என்று பொருள்; இரண்டாவது விளக்கத்தில் ‘தப’ என்றால் ஒளி அல்லது காந்தி என்று பொருள்.

123. மஹாதபஹ்

மஹாதபா என்றால் சிறந்த அறிவை உடையவர் என்று பொருள். தபஸ் என்றால் பொதுவாக தவம் என்று பொருள், அது அறிவு என்றும் பொருள். உயர்ந்த தவம் இறுதி அறிவிற்கு வழிவகுக்கிறது, எனவே இரண்டும் சாராம்சத்தில் ஒத்ததாக இருக்கின்றன.

இந்தச் சூழலில் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘மஹத் ஸ்ரீஜ்ய விஷயம் தபோ ஞானம் அஸ்ய இதி மஹாதபாஹ் – அவருக்கு படைப்பின் உச்ச ஞானம் இருப்பதால் அவர் மஹாதபா‘ என்று விளக்குகிறார்.

இது முண்டக உபநிடதத்திலும் பிரதிபலிக்கிறது, இது ‘யஸ்ய ஞானமயம் தபஹ் – யாருடைய தபஸ் என்பது அறிவின் தன்மை.

ததா ச ஸ்ரீ ஸாத்வதே

ஷாட் குண்ய விக்ரஹம் தேவம் பாஸ்வஜ் ஜ்வலன தேஜஸம்
ஸர்வத பாணி பாதம் தத் இத உபக்ரம்ய
பரம ஏதத் சாமாக்யாதம் ஏகம் சர்வ ஆஸ்ரயம் விபும்
ஏதத் பூர்வம் ய த்ரயம் ச அந்யத் ஞானாத்யை பேதிதம் குணை
நாநா ஆக்ருதி ச தத் வித்தி விபவம் புக்தி முக்திதம் (இஹ லோக பர லோக ஐஸ்வர்யம் அளிக்கும் )- சாத்துவத சம்ஹிதை

ஆறு முக்கியமான குணங்கள் உள்ளிட்ட பல குணங்களுடன் எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளது
அவன் தனது புத்தி மற்றும் தேஜஸ் மூலமாக ஒளிர்ந்தபடி உள்ளான்
அவனுக்கு எங்கும் கைகளும் கால்களும் உள்ளன
இதுவே ஒப்பில்லாத பர ரூபம் ஆகும்
இது அனைத்திலும் வியாபித்து அனைத்தையும் தாங்கிய படி உள்ளது
வ்யூஹமும் விபவமும் அர்ச்சையும் பற்றி சொல்லும்
முக்கிய விபவமும் சக்தி ஆவேச அவதாரங்களும் உண்டே

தத்ர ப்ராதுர் பாவா கேசித் ஸாஷாத் -யதா
மத்ஸ்ய கூர்மாதயா
அந்யே து ருஷ்யாதி விஸிஷ்ட புருஷாகிஷ்டா நேந –யதா
பார்க்கவ ராம கிருஷ்ண த்வைபாயநாதயா

அபரே காலே ஸக்தி ஆவேஸேந யதா புரஞ்ஜயாதி ஷு
இதரே ச வ்யக்தி ஷு ஸ்வயமேவ அவதீர்ய
யதா அர்ச்சாவதார
இதி சதுர்த்தா

நநு ப்ரஹ்மா தயோ அபி பகவத் ப்ராதுர் பாவா கல்ப்யந்தாம் -தத் அபேத உபதேசாத்
ததிதம் ஜடஜல்பிதம் அஸ்மதா தேஸ் த்ருணாதேஸ் ச தத் ப்ராதுர் பாவாத்வ பிரசங்காத்(நம் போல்வாரும் புல்லும் கூட விட்டுப்பிரியாமலே இருக்குமே )
அஸ்தி ஹி ஸ்ரவஸ் யாபேத வ்யபதேஸ-

சர்வம் கலு இதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மமே என்கிறது

புல் முதல் நான்முகன் வரை ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்கள்

நியமேந தேஷாம் ப்ரஹ்மாதீ நாம் பகவத் அவதார கணநாஸூ அபரி கண நாத்
தேவ மநுஷ்யாதி வத் ஸ்ருஷ்டி ப்ரகரணே ஷு ஸ்ருஜ்ய தயா பரிகரண நாச்ச(இவர்களும் படைக்கப்பட்டவர்களாகவே எண்ணப்படுகிறார்கள் )
ப்ரத்யுத தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேத வ்யபதேசா ப்ராதுர் பாவ ஸப்த விலக்ஷணேந
ப்ராதுர் பாவாந்தர ஸப்தேந நிர்தேஸா பகவத் விபூதி லேஸாத் பவத் வதத்(ஒரு லேச பிரபாவம் பெற்றவர்கள் )
ப்ராதுர் பாவ விசேஷ அதீந வ்ருதித்வாதி வ்யவஹாராஸ் ச
பகவச் சாஸ்த்ரேஷு பஹுலம் உப லப்யந்தே

அத ஏவ ஹி தேஷாம் ப்ராதுர் பாவேப்யோ பேதஸ்(அவதாரங்களில் இருந்து வேறுபட்டு உடைமையாக )
தத் விபூதித்வம் ச சாஸ்திரிதம்

ஞான உபதேஷ்டா பகவான் கபிலாஷஸ்து அதோஷஜ
வித்யா பூர்த்தி சதுர் வக்த்ரோ ப்ரஹ்மா வை லோக பூஜித
தத் அம்சு பூதோ வை யஸ்ய விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண–பவ்ஷ்கர ஸம்ஹிதை
சிவந்த கண்கள் கொண்ட அதோ ஷஜன் என்னும் பகவான் அனைத்து ஞானங்களையும் போதிக்கும் ஆசானாக உள்ளான்
ஞான மயனாகவும் அனைத்து உலகங்களால் பூஜிக்கப்படுபவனாகவும் உள்ள நான்முகன் இத்தகைய பகவானின் அம்சமாக உள்ளான்
அவன் பகவானுக்கு அடங்கியவனாகியே உள்ளான்
பகவான் இடம் பெற்ற ஞானத்தை இவன் மீண்டும் அளிப்பவனாக உள்ளான்

இங்கு யஸ்ய பதம் கபிலர் இவன் அம்ச அவதாரம் என்றும்
விஸ்வ வ்யஞ்ஜன லக்ஷண -என்று இவன் பகவானுக்கு உட்பட்டவன் என்றும் விளங்கும்

இதி ப்ராஹ்மண கபில ப்ராதுர் பாவம் ப்ரதி யஸ்யேதி ஷஷ்டயா சேஷத்வம் (ஆறாவது வேற்றுமை -அவனுடைய சேஷன் )தத் அம்ச பூதஸ் ஸந
விஸ்வ வியஞ்ஜன லக்ஷண இதி தத் தஜ் ஞான ப்ரவர்த்த கதயா தத்தி பூதித்வம் ச வ்யஞ்ஜிதம்
அம்ச ஸப்தஸ் ச ஏதாத்ருஸ ஸ விபூதி கஸ்ய பகவதோ விபூதி பூத ஏக தேஸே ஷு முக்யோ வியாக்யாத

அம்சோ நாநா வியபதேஸாத் இத்யத்ர–ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் –2-3-42-பகவானின் அம்சம் மிகவும் முதன்மையான நிலை என்பதைக் காட்டும்

ததா அனல ஸாயி ப்ராதுர் பாவம் ப்ரதி இதரஸ்ய

யுகாந்தரேஷு ச சம்ஹாரம் ய கரோதி ச ஸர்வதா
சங்கர ஆக்யோ மஹா ருத்ர ப்ராதுர் பாவாந்த்ரம் ஹி தத்
தேவஸ்ய அனலசாயே வை ஸர்வாத சமஸ்தி தஸ்ய ச-
யுகங்களின் முடிவில்
சங்கரன் என்று அழைக்கப்படும் மஹா ருத்ரன் அனைத்து உலகங்களையும் அழிக்கிறான்
இவன் அனைத்துக்கும் ஆதாரமாக உள்ளவனும் அனலசாயி என்று அழைக்கப்படுபவனுமாகிய எம்பெருமான் இடம் இருந்து வெளிப்பட்டவன் ஆவான்

அத்ர அந்தர ஸப்தோ பேத வசந
இஷு ஷீர குடா தீ நாம் மாதுர்யஸ் யாந்தரம் மஹத் இதி வத்(இனிப்பில் வேறுபாடு )

ப்ராதுர் பாவ ப்ராதுர் பாவாந்தரயோர் லக்ஷணம் ச விவிக்த முக்தம்

ப்ராதுர் பாவாஸ்து விஜ்ஜேயா ஸ்வ வியாபார வசாத்துவை
ப்ராதுர் பாவாந்தரா தத்த்வத் அம்சஸ்ய து வஸாதாபி —
ப்ராதுர் பாவம் என்பதும் ப்ராதுர் பாவாந்த்ரம் என்பதும் வேறே வேறே தானே
ப்ராதுர் பாவம் என்பது எம்பெருமான் செயல்களின் மூலம் மட்டுமே ஏற்படுவது
மற்ற அனைத்தும் -ப்ராதுர் பாவாந்தரம் -சிறிய அம்சமாகவே உள்ளவை-அவனுடைய மிகச் சிறிய பகுதி
ப்ராதுர் பாவாந்தரம் ப்ராதுர் பாவத்துக்குளே அடங்கியதே யாகும்

அத்ர ஸ்வ வியாபார வஸாத் -இதி ஸ்வ அசாதாரணத்வம்
அம்ஸஸ்ய து வஸாதபி –இதி -து ஸப்தாத் அம்ச வச ஸப்தாச்ச விஸேஷோ விபூதி பாரதந்தர்யம் ச

புநரபி தாத்ருஸ லக்ஷணம்
ஸ்வ பாவம் அஜஹச் சஸ்வத் ஆகாராந்தரம்  ஆக்ருத
யத் தத்வம் அம்ஸ ஸம் பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத் –இதி
ததா முக்ய ஒவ்பசாரிக விபாகாஸ் ச-ப்ராதுர் பாவ வாந்தரைஸ் ஸார்தம் 

ப்ராதுர் பாவாந்தரை சார்தம் ப்ராதுர் பாவை த்விஜ அகிலை
அப்யயை பிரபவாக்யைஸ் து கௌண முக்யை ஸூரேஸ்வரை
இது போன்று முக்கியம் ஒவ் பசாரிகம் என்ற வேறு பாடு உண்டே

ததா முமுஷுபிர் ப்ராதுர் பாவா நாம் ஆராத்யத்வம் –ப்ராதுர் பாவாந்தராணாம் ஆராதன நிஷேதஸ் ச

ஸ்வ பாவம் அஜஹத் சஸ்வத் ஆகாராந்தரம் ஆக்ருதே
யத் தத்வம் அம்ச ஸம்பூதம் ப்ராதுர் பாவாந்தரம் து தத்
முமுஷுக்கள் ப்ராதுபாவத்தையே உபாஸிக்க வேண்டும் -ப்ராதுர் பாவாந்தரத்தை உபாஸிக்கக் கூடாது

யதைவ க்ருததீ ஷாணாம் அதிகார ஸமர்ப்பித
அச்யுத ஆராத நாநாம் து நிஸ்ரேயஸ பதாப்தயே
ததைவ ப்ரதி ஷித்வம் ச தேவதாந்த்ர பூஜநம்
வ்யூஹாத்வா விபவ வாக் யாத்வா ருதே நான்யத் புரோதி தாம்
ஸ்கந்த ருத்ர மஹேந்த்ராத்யா ப்ரதிக்ஷித் வாஸ்து புஜநே
ஜ்ஞாத் வைவம் பக்தி ஸாங்கர்யம் ந குர்யாத் ஏவ மேவ ஹி
வ்யூஹமாகவும் விபவமாகவும் உள்ள அச்யுதனே உபாஸிக்கப் பட வேண்டும்
தேவதாந்த்ர உபாஸனை கூடாதே-

கோக்குல மன்னரை –போற்றும் புனிதன் ராமானுஜன்

ஸ்ரீ ஸாத்வத ஸம்ஹிதாயாம்
து மஹிஷீ பூஷண பரிஜநா தேர் போகோப கரண தயா
பகவத் விக்ரஹாந்த பாவ கால விதி ஸிவா தேலம் லவ்பயிக ஸம்ஸார உப கரணத்வம் ச ஸ்புடீ க்ருதம்

இதி ஏதத் தேவதா சக்ரம் அங்க மந்த்ர காணாந் திதம்
விக்ரஹே தேவ தேவஸ்ய ஸம் லீநம் அவ திஷ்டதே
வஹ்யே பவோ பவ கரண கீர்வாண கணம் உத்தமம்
நாநா விபவ மூர்த்தி நாம் யோ அவதிஷ்டதே சாஸநே
காலோபி யந் நியந்தா ச ஸாஸ்த்ரம் நா நாங்க லக்ஷணம்
வித்யாதி பதயச்சைவ ஸமுத்ர ஸ குண சிவ
பிரஜாபதி ஸம் மூஹஸ்து இந்த்ர ச பரிவாரக

முநய ஸப்த பூர்வேந்ய க்ரஹாஸ் தாரா கணை வ்ருத்தா
ஜீமுதாச்சா அகிலா நாகா து அப்சரோ கண உத்தம
ஓவ்ஷத் யச்சைவ பசவோ யஜ்ஞா சாங்காகி ஸாஸ்து யே
வித்யா சைவ அபார வித்யா பாவச் கச்சைவ மாருத
சந்த்ர அர்கைள வாரி வஸூதே இத் யுக்தம் அமலேக்ஷண
சதுர் விசதி சங்க்யம் ச பவோ பகரணம் மஹத்
பவ ஸாஷாத் ப்ரதா நஸ்து வ்யபகோ ஜட லக்ஷண
மந்த்ர மந்த்ரேஸ்வர ந்யாஸத் ஸோபி பூஜ்யத்வ மேதி ச

அத ஸ்ரீ ஜன்ம ரஹஸ்ய சதுர் முகாதி ப்ரசங்க ஸ்ரீ பவ்ஷ்கரே ப்ராதுர் பாவ விபூதி தயா அந்தர் பாவ நிபந்தநோ அநு சங்கேய
ஏவம் ச வ்யாமோஹ ஏவ த்ரி மூர்தி ஸாம்ய பண்டித ந்யாய பண்டிதம் அந்யாயாம்
ஸர்வே ஸைதத் தத்ர தத்ர ஸ்தாபயிஷ்யதே

———–

இது வரை –கிமேகம் தைவதம் லோகே -கிம்வாப்யேகம் பராயணம் -கேள்விக்கு
பரத்வ பரமான திரு நாமங்கள் சொல்லி அருளி
மேலே ஸ்துவந்த கம் -யாரைத் துதிக்க -கேள்விக்கு உத்தரம் –
மோஷத்துக்கு உபாயமான திரு நாமங்கள் –

வ்யூஹ மூர்த்திகள் -நால்வர் -வாசுதேவன் -சங்கர்ஷணன் பிரத்யும்னன் அநிருத்தன்
பர வாசுதேவன் -பூர்ணம் பகவத் குணங்கள்
சங்கர்ஷணன் -ஜ்ஞானம் பலம் பிரகாசிக்கும் – -சம்ஹாரம்
பிரத்யும்னன் -ஐஸ்வர்யம் வீர்யம் -பிரகாசிக்கும் -சிருஷ்டிக்கு
அநிருத்தன் -சக்தி தேஜஸ் பிரகாசிக்கும் -ஸ்திதி -காத்தல்-

சங்கர்ஷணன் ——–123-124——–2 திரு நாமங்கள்
பிரத்யும்னன் ———125-126———2 திரு நாமங்கள்
அநிருத்தன் ———-127-128———2 திரு நாமங்கள்

முதல் 6-ஞானம் பலம் -சங்கர்ஷணனுக்கு –
அடுத்த 4 சங்கர்ஷணன் -ஸம்ஹாரம்
அடுத்த 2-ப்ரத்யும்னன் -ஸ்ருஷ்ட்டி
அடுத்த 4-அநிருத்தன் -ஸ்திதி
அடுத்த 8 -வாசுதேவன்

———-

124- ஸ்ர்வக –
எல்லாம் தன்னிடம் வைத்துக் கொள்பவன் -லயம் -பிரளயம் பொழுது

தாரண ஸாமர்த்தய லக்ஷணேந பாலேந ஆத்மவத் தாரயன் ஸம் ஹ்ருதான் ஸர்வான் கச்சதீதி
ஸர்வக
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த ஷு ட
ஏவம் ஸங்கர்ஷணாத் தி ஸங்கர்ஷணம் நாம நிருச்யதே —அஷ்டாத்யாயீ -3-2-48-–செல்லுதல் என்ற பொருள் கொண்ட கம் என்பதன் பின் ட என்பதை இணைத்துக் கொள்கிறது -எப்போது என்றால்
அந்த -அத்யந்த -அத்வ -தூர -பார -ஸர்வ -அநந்த -போன்ற சொற்களுடன் கூடும் போது ஆகும் –

கார் யேழ் கடல் யேழ் மலை ஏழும் உண்டும் ஆரா வயிற்றான் -10-8-2–
தாரண சாமர்த்தியம் -பலம் –சங்கர்ஷணன் -556-
அனைத்தையும் தன்னிடம் இழுத்துப் பிடித்து வைத்து கொள்பவன் -ஞானத்துக்கு முக்கியமான அங்கம்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று உயிர் படைத்தான் -4-10-1-
தன்னுள் ஒன்ற வைத்து பின்னை வெளிக் காண படைத்தான் –

சம்ஹரிக்கப் பட்டவற்றை எல்லாம் தம் பலத்தினால் அடைந்து தரிப்பவர் –
சங்கர்ஷிப்பத்தால் -அழிப்பதால் சங்கர்ஷணன் -சம்ஹரிக்கப்பட்டவை எல்லாவற்றையும் தம்மிடம் வைத்துத் தாங்கும் வன்மை
இது கீழ் சொல்லிய ஞானத்துக்கு முக்கிய அங்கம் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆத்ம வடிவில் அனைவரையும் சென்று அடைபவன்
சங்கர்ஷம-556-அவன் தன்னில் அனைவரையும் வரவழைக்கிறான் என்றபடி

காரணமாக எங்கும் பரவி இருப்பதால் எங்கும் செல்பவர் -கார்யமாதலால் காரணங்களில் எங்கும் வியாபித்து இருப்பவர் -சங்கரர் –

எங்கும் செல்பவர் -அல்லது எல்லாம் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வகயா நம

————

ஓம் ஸர்வகாய நம:

ஸர்வத்ர எங்கும்

கச்சதீதி செல்வதால்

ஸர்வக: பகவான் ‘ஸர்வக’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் காரணத்வேன மூலகாரணமாய்

வ்யாப்தத்வாத் பரவி, நிறைந்திருக்கிறார்

ஸர்வத்ர எங்கும், எதிலும்.

அனைத்திற்கும் காரணமான பகவான் எங்கும், எதிலும் வ்யாபித்துப் பரவி, நிறைந்திருப்பதன் மூலம் அவர் எங்கும் செல்கிறார். எனவே, அவர் ‘ஸர்வக:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

—————

சர்வகா 

‘சர்வகா‘ என்றால் அனைவரையும் சென்றடைபவன் என்று பொருள். ‘சர்வத்ர கச்சதி இதி சர்வ-கா‘ என்றால் எல்லாவற்றையும் வியாபித்திருப்பவர் அல்லது எங்கும் செல்பவர். பகவான் அனைவரையும் சென்றடைகிறார், எல்லா இடங்களிலும் வியாபித்து, எங்கும் இருக்கிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் அதை மேலும் விளக்குகிறார், ‘காரணத்வேன வியாப்தத்வாத் சர்வத்ரா – அவர் எங்கும் இருப்பது அவர் எல்லா இடத்தையும் ஆக்கிரமித்ததன் விளைவு.

நாராயண ஸூக்தம் சொல்வது போல் – ‘அந்தர் பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணா ஸ்திதா – நாராயணன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடங்களிலும் உறுதியாக நிற்கிறார்.’

தனது சம்கர்ஷண வியூகத்தில் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.


125- ஸர்வ வித் –
எல்லாவற்றையும் அடைபவன் –ஸ்ருஷ்டிக்க -ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யுமனுக்கு -இதில் ஐஸ்வர்யம் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்

அதஸ் ஸம் ஹ்ருதான் ஸிஸ்ரு ஷு –ப்ரத்யும்ந –ஸர்வ கார்ய விந்ததி ஸ்ருஷ்டயா லபதே இதி
ஸர்வ வித்
இதமத்ர ஜகத் க்ரியா ஸ்க்த் யுல்லாஸ ரூபம் ஐஸ்வர்யம்

யஸ் சர்வஜ்ஞ சர்வ வித் -யஸ்ய ஜ்ஞான மயம் தப –சர்வ வித் -ஞான பூர்த்தி

நிறை ஞானத்து ஒரு மூர்த்தி -4-8-6
பிரத்யும்னன் -நாம ரூபங்கள் கொடுத்து ஸ்ருஷ்டிப்பதை –
ஜகத் கிரியா உல்லாச ரூபமான ஐஸ்வர்யம்
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த -8-10-7–

சம்ஹரிக்கப் பட்டவற்றை மறுபடி படைத்து அடைகிறார் -சிருஷ்டிக்கும் மூர்த்தி பிரத்யும்னன் –
கிரியா சக்தி உடைய விலாசமான ஐஸ்வர்யம்-மற்றும் பலம்-வீர்யம் -கூறப்படுகிறது -விசித்திரமான உலகங்களை உண்டு பண்ணும் திறமை இங்கு கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா இடத்திலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து பிரகாசிப்பவர் -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி இருப்பவர் -ப்ரகாசிப்பவர் -சர்வவித் பாநு -ஒரே திரு நாமம் -எல்லா இடங்களிலும் உள்ள எல்லாவற்றையும் அறிந்து -எல்லாம் தம்மிடத்தில் பொருந்தி பிரகாசிப்பவர் -சங்கரர் –

அனைத்தும் அறிபவர் -எல்லாம் அடைந்தார் –ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் சர்வ வித் நம

————

ஓம் ஸர்வவித்பானவே நம:

ஸர்வம் அனைத்தையும்

வேத்தி அறிவதனாலும்

விந்ததீதி வா அடைவதனாலும்

ஸர்வவித் பகவான் ‘ஸர்வவித்’ என்று அழைக்கப்படுகிறார்.

பாதீதி பானு: ஒளி வீசுவதால் ‘பானு’ என்று அழைக்கப்படுகிறார்.

தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்’ (கதோபநிஷத் 2.2.15)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது:

ஸ்வயமாக விளங்குகின்ற அதையே (அந்த பரப்ரஹ்மத்தை) சார்ந்து அனைத்தும் விளங்குகின்றன.

இதிஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

‘யதாதித்யகதம் தேஜோ ஜகத் பாஸயதேகிலம்’ | (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் (என்னுடையதே என்றுணர்).

இத்யாதிஸ்ம்ருதேஸ்சஇத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களாலும்,

ஸர்வவிச்சாஸௌ அனைத்தையும் அறிவதனாலும்

பானுஸ்சேதி (இயற்கையாக) ஒளி வீசுவதாலும்

ஸர்வவித்பானு: பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்தையும் அறிகிறார், நினைத்ததை அடைகிறார். மேலும், அவர் இயற்கையாக ஒளி வீசுகிறார் (சூரியன், அக்னி முதலானவை அவரது ஒளியைப் பெற்றே தாங்கள் ஒளி வீசுகின்றன). எனவே, பகவான் ‘ஸர்வவித்பானு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

சர்வ-வித்

சர்வவித்‘ என்றால் அனைத்தையும் அறிந்தவர் என்று பொருள். ‘சர்வம் வேத்தி விந்ததா இதி வா சர்வ-வித்‘ – அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் பெறுபவர். முதல் விளக்கத்தில், பகவான் அனைத்தையும் அறிந்தவர் அல்லது அனைத்தையும் அறிந்தவர். அவர் உள் ஆன்மா.

சர்வவித்தின் மற்றொரு விளக்கம் என்னவென்றால், அவர் ‘பிரத்யும்னா’ என்ற செயல்பாட்டைச் செய்கிறார் மற்றும் ‘சம்கர்ஷனா’ வடிவத்தில் தன்னுள் உறிஞ்சப்பட்ட அனைத்து ஜீவாக்களையும் மீட்டெடுக்கிறார் அல்லது பெறுகிறார்.


126-பாநு-
விளங்குபவன் -மாறுபடாமல் விளங்கும் வீர்ய குணம்

வீர்யம் -ஸுர்யம் -பராக்ரமம்
தனக்கு விகாரம் இல்லாமல் செய்வதே வீர்யம்-நித்ய நிர்விகார தத்வம்

ஸர்வ நிர்மாணே அப் யவி குர்வாணோ பாதீதி
பாநு

உணாதி ஸூத்ரம் –தா பாப் யாம் நு –ஒளிர்தல் என்னும் பொருள் கொண்ட பா என்பதுடனும்
அளித்தல் என்னும் பொருள் கொண்ட தா என்பதடுடனும்
நு என்பது சேர்க்கிறது

ஸ ஏஷ ஸ்வயம் உத்வபவ் –அவன் தானாகவே ஒளிர்கிறான்

இதம் அவிகார ஆகாரம் வீர்யம் –தனது வீர்யம் காரணமாக மாறுபடாமல் உள்ளான்

வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் -4-5-1-
பாநு -285-மீண்டும் -கிரணங்கள் உடைய ஆதித்யன்
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் -4-4-2-

எல்லாவற்றையும் படைத்து தாம் விகாரம் இல்லாமல் விளங்குபவர் -அவிகாரம் -என்கிற வீர்யம் -ஸ்ரீ பராசர பட்டர்-

பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் பானுவே நம

————

பானுஹ்

பானுஹ்‘ என்றால் பிரகாசிப்பவன் என்று பொருள். ‘பாதி இதி பானுஹ்‘ – அவரது படைப்பு மற்றும் பராமரிப்பு இருந்தபோதிலும், அவர் மாறாமல் இருக்கிறார் மற்றும் குறையாமல் தொடர்ந்து பிரகாசிக்கிறார். பகவத் கீதையில் (அத்தியாயம் 15, சுலோகம் 12) பகவான் கூறுகிறார், ‘யதாதித்ய கடம் தேஜஹ் ஜகத் பாஷயதே அகிலம் யத் சந்திரமஸி யத் ச அக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம்‘ சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பின் பிரகாசம் எனது முழு பூமியையும் ஒளிரச் செய்கிறது. அவற்றில் இருப்பு.

127-விஷ்வக்சேன
யாவரும் தன்னை ரஷகனாய் கொண்டு வாழும்படி செய்பவன்-அவன் எஜமானனுடன் உள்ளதால் சேனன் ஆகிறான்

அநிருத்தன் -சக்தி- தேஜஸ் -ஜகத் ரக்ஷணம்-இரண்டும் வேண்டுமே –

அத ஸ்தாபகோ –அநிருத்தோ–
விஷ்வக் ஸேந
இநேந ஸ்வாமிநா ஸஹ வர்தத இதி ஸேநா (தலைவர் உடன் கூட இருப்பதால் சேனா )-ஸேஸ் வரேதி
யாஸ்க
அநேந ரக்ஷக வந்தோ ஜந்தவோ விஷ் வஞ்சோ -அஸ் யேதி
இயமத்ர ஸாமர்த்ய ஸரீரா ஸக்தி

ரஷிக்க சேனை உடையவன் –
அநிருத்த-வ்யூஹ மூர்த்தியைச் சொல்லும் திரு நாமம்
ரஷண சாமர்த்திய சக்தியைச் சொல்லும் திரு நாமம் –
அவன் நியமனப் படி நிர்வஹிக்கும் சேனை முதல்வருக்கும் இத் திரு நாமம் பெயர்
இவர் ரஷணத்தில் வாழ்பவன் வைகுந்த குட்டன் –

எல்லாரும் தம்மைக் கொண்டு ரஷகராகக் கொண்டு ஜீவிக்கும்படி இருப்பவர் –
ரஷிக்கும் அநிருத்தன் -யுடைய சக்தி -எதையும் ரக்ஷிக்கும் திறம் –இங்கே கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

போர் செய்யத் தொடங்கிய யுடன் அசுர சேனை சிதறி ஓடும்படி செய்தவர் -தன்னுடைய யோக சக்தியால் செய்பவர் -சங்கரர் –

பிரமன் முதலிய அனைவரையும் சேனையாக உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் விஷ்வக் ஸேனாய நம

————

ஓம் விஶ்வக்ஸேனாய நம:

விஶ்வக் அவ்யயம் ‘விஶ்வ’ என்ற சொல்லிற்கு

ஸர்வேத்யர்த்தே அனைத்தும், எங்கும் என்று பொருள் |

விஶ்வ எங்கும்

கச்சதி ஓட வைக்கிறார் பலாயதே தோற்று

தைத்யஸேனா அஸுரப் படைகளை

யஸ்ய எவர்

ரணோத்யோகமாத்ரேணேதி போர்க்களத்தில் அவருடைய வீரத்தால்

விஶ்வக்ஸேன: (எனவே) பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘விஶ்வ’ என்றால் எங்கும், எல்லாவிடத்திலும் என்று பொருள். பகவான், போர்க்களத்தில் தன்னுடைய வீரத்தால் அஸுரப் படைகளை தோற்றடித்து எல்லாவிடத்திலும் ஓட வைக்கிறார். எனவே, பகவான் ‘விஶ்வக்ஸேனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்


விஷ்வக்-சேனா

‘விஷ்வக்-சேனா’ என்றால் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக எல்லா திசைகளிலும் தனது படையை வைத்திருப்பவர் என்று பொருள். வைஷ்ணவ மரபில் விஷ்வக்சேனர் என்பது மகாவிஷ்ணுவின் படையின் உச்ச தளபதியின் பெயர். இந்த நாமம், தேஜஸ் மற்றும் சக்தி ஆகிய இரண்டு குணங்களைக் கொண்ட பாதுகாவலரான அநிருத்த வியூஹாவைக் குறிக்கிறது.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் இரண்டாவது பூர்வாங்க சரணம் கூறுகிறது:

யஸ்ய த்விரதா வக்த்ராத்யாஹ் பரிஷத்யாஹ் பரஸ்ஶதம்
விக்னம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஷேநம் தமாஶ்ரயே’

ஒருவரின் பாதையில் இருந்து தடைகளை அகற்ற அழைக்கப்படுவதால், இது விஷ்வக்சேனருக்கு ஒரு அஞ்சலி. இந்த நாமம் அவனுடைய சக்தி அல்லது அவனது திறனைக் குறிக்கிறது. அனிருத்தன் என்றால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதவன் என்று பொருள். இந்த நாமம் இறைவனின் குணத்தையும் குறிக்கிறது, அதன் மூலம் அவர் தனது பக்தர்களைக் காக்க எப்போதும் இருக்கிறார்.

திரௌபதி, பிரஹலாதா, கஜேந்திரன், அம்ப்ரீஷ் போன்றோரின் பக்தர்களின் அழைப்பை அவர் காப்பாற்றுகிறார்.

ஸ்ரீ ஆதிசங்கரர், எதிர்க்கும் அசுரப் படையை போரில் எங்கும் ஓடச் செய்ததால், பகவான் விஷ்வக்சேனர் என்று அழைக்கப்படுகிறார் என்று விவரிக்கிறார்.


128-ஜனார்த்தன –
விரோதிகளை சம்ஹரிப்பவன் –தேஜஸ் -சொல்லும் -பராபிபவன சாமர்த்தியம்

வற்கலா ஜனார்த்தன பெருமாள் -ஜனி பிறப்பை அளிக்கும் ஜனார்த்தனன்-

ரஷா ப்ரதி பஷான் ஜநான் அநபேஷோ அர்த்தயதீதி
ஜனார்த்தந-

தஸ்யு த்ராணாத் ஜனார்த்தன -உத்யோக பர்வம்–71-6- –தீயவர்கள் இடம் ரக்ஷிப்பதால் ஜனார்த்தனன்
இதன் மூலம் யாருடைய உதவியும் இன்றி எதிரிகளை அளிக்கும் தேஜஸ் சொல்லப்படுகிறது

இதம் அநபேஷா லக்ஷணம் –தேஜஸ்
ப்ரதி மூர்தி குணா நாம் வ்யவஸ்தேயம் இயதாம் ஆவிஷ் காராத்
பகவதஸ் ஸர்வத்ரா நாவரண குணத்வாத் —

மூலே ஹி ஸ்ரூயதே–ஞாநேந ஐஸ்வர்யேன சக்த்யா (முதல் மூன்றையும் சொன்னது அடுத்த மூன்றுக்கும் உப லக்ஷணம் )இதி சர்வே பகவத அநூநா பூர்ணா –மூல ஸம்ஹிதை -பூரணமான ஞானாதி குணங்கள் கொண்டவன்

இதி ஏஷ ஆத்மா சதுர்வித
ஸர்வஞ்ஞ-ஸர்வ தர்சீ ஸர்வேஸ்வர ஸர்வ ஸக்திஸ் ஸம் ருத்தி மான் வா அக்ரன் திர நூந ஆப்தோ வஸீ ஸ்வாதீநோ அநாதி ரநந்தோ
வ்யபகத (ஒழிக்கப்பட்ட )நித்ரா பய க்ரோத தந்த்ரோ வ்யபகதேச்சா தம க்லம வியாதிர் நிர்தோஷா நிர நிஷ்டோ நிரவத்யோ யே பகவந்தம் வாஸூ தேவ மேவம் விது
ந தே விதுரிதி பகவான் வாஸூ தேவோ அநந்த ஏவ அபரிமிதோ அனந்தத்வேந அபரிமிதத்வேந பவதி(
முடிவற்ற அளவற்ற )-இதி ப்ரதி பர்யாயம் 

தன் சொத்தை ரஷிக்க சத்ருக்களை தானே அழித்து-தேஜஸ் விளங்கும் –
அநிருத்த பகவானே விபவ அவதாரங்களுக்கு மூலமாம்
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

ரஷிப்பதற்குத் தடையாக உள்ளவர்களை உதவி தேடாமல் அழிப்பவர்-அபேஷியாமல் ரஷிக்கும் தேஜஸ் -ஸ்ரீ பராசர பட்டர்-

மக்களால் மோஷம் செல்வம் முதலிய பயன்கள் வேண்டப்படுபவர் -தீயர்களை நரகத்தில் தள்ளுபவர் -சங்கரர் –

அடியவர்களின் பிறப்பை அறுப்பவர் -சமுத்ரத்தில் இருக்கும் ஜன என்னும் அசுரர்களை அழிப்பவர் -சம்சாரத்தை அழிப்பவர் –
ஜனங்களால் யாசிக்கப் படுபவர் -அடையப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

ஓம் ஜனார்த்தனாய நம

————

ஓம் ஜனார்தனாய நம:

ஜனான் துர்ஜனான் ‘ஜன’ என்றால் இங்கு துர்ஜனங்களைக் (தீயவர்களைக்) குறிக்கும்

அர்தயதி ஹினஸ்தி அவர்களை ‘அர்தனம்’ செய்கிறார், அதாவது தண்டனை அளிக்கிறார்

நரகாதீன் கமயதீதி வா அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளுகிறார்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான், துர்ஜனங்களைக் (தீயவர்களைக்), அவர்களை (அவர்களின் பாவங்களுக்கேற்ப வெவ்வேறு) நரகங்களில் தள்ளி அவர்களுக்கு தண்டனை அளிக்கிறார். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஜனை: மனிதர்கள் புருஶார்த்தம் (அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய) நான்கு அடையத்தகுந்த இலக்குகளை

அப்யுதய (தமது கர்மங்களின்) பலனாக

நி:ஶ்ரேயஸ லக்ஷணம் மிகச்சிறந்த

யாச்யதே இதி (பகவானிடம்) வேண்டுவதால்

ஜனார்தன: எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதர்கள், தத்தம் கர்மங்களின் பலனாக, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஶார்த்தங்களை பகவானிடமிருந்தே யாசித்துப் பெறுகின்றனர். எனவே, பகவான் ‘ஜனார்தனர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————–

ஜனார்தனா

ஜனார்தனா என்ற நாமத்திற்கு மூன்று அர்த்தங்கள் உண்டு.

  •   தீயவர்களை அழிப்பவர்;
  •   பக்தர்கள் தங்கள் விருப்பத்திற்காக அணுகுபவர்; மற்றும்
  •   துன்மார்க்கரிடமிருந்து பக்தர்களைக் காப்பவர்.

ஸ்ரீ ஆதி சங்கரர் பின்வரும் இரண்டு விளக்கங்களைத் தருகிறார்.

  •  முதல் விளக்கம் – தீயவர்களை அழிப்பவர். ‘ஜனன் துர்ஜனான் அர்தயாதி ஹினஸ்தி நரகாதீந் கமயதி இதி வா ஜனார்தனஹ் – தீயவர்களை அழிப்பவன் அல்லது அவர்களை நரகத்திற்குத் தள்ளுபவன்.’ பேய்களை வெல்ல அவருக்கு எந்த உதவியும் தேவையில்லை.
  • மற்றொரு விளக்கம் ‘அர்ட்’ என்ற மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது, இது பிச்சை எடுப்பது, கேட்பது – கதௌ யசநே ச ஜனைஹ் அர்த்யதே யச்யதே – தம் பக்தர்கள் எதைப் பெற விரும்புகிறாரோ அதை அணுகுபவர்.

ஸ்ரீ பராசர பட்டர் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி மூன்றாவது அர்த்தத்தை தருகிறார்.-‘தஸ்யு-த்ரானாத் ஜனார்தனா ( உத்யோக பர்வா 71.6) – தஸ்யுஸிலிருந்து (பேய்கள்) மக்களைப் பாதுகாப்பதால் அவர் ஜனார்தனா ஆவார்.’-

பகவானுக்கு ஆறு குணங்களும் எல்லா மூர்த்திகளிலும் மறையாமல் பிரகாசிப்பதாக ப்ரமாணங்களினால் சொல்லப்பட்டு இருந்தாலும்
அந்த அந்தக் கார்யங்களுக்குத் தக்கபடி மூர்த்திகள் தோறும் பிரகாசிக்கும் குணங்களை இங்கு வகுத்து உரைத்தது-

——–

174-மஹா பல-வேறு உதவியை நாடாத வலிமை உள்ளவர் –
175-மஹா புத்தி -எப்போதும் எங்கும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிபவர் –
176-மஹா வீர்ய -விகாரம் இல்லாதவர் –
177-மஹா சக்தி -தன் சரீரத்தின் ஒரு பகுதியான பிரக்ருதியை மாற்றி உலகத்தை படைக்கும் திறன் உள்ளவர் –
சிலந்தி தன் உடலில் இருந்தே நூலை வெளியேற்றி மறுபடியும் உள்ளே இழுப்பது போலே –
178-மஹாத் யுதி -சூர்ய ஒளி சிறிது என்னும் அளவிற்குப் பிரகாசம் ஆனவர் –

174-மஹாபல-
மிக்க வலிமை உடையவன் –

ஸஹாய அபேஷ கர்த்ரந்தர வ்யாவர்தகம் மஹத்₃ப₃ல மஸ்யேதி –
மஹா ப₃ல ।
அநேந ஹ்யய மபரிமித க்ரியோ(அ)ப்ய அநாகலித ஶ்ரம꞉ ஸ்வே மஹிம்நி திஷ்ட₂ன் அவதீ₄ரிதாத் –
ஆ₄ராந்தரோ து₃ர்வார வ்யாபார ஸந்தத ஸக்தி ஸமுல்லாஸ꞉
ஸரீரமிவ ஸகலம் பி₃ப₄ர்தி ।
*ப₃ஹுல யன் ப₃ஹு ம், இதி ச மௌல ꞉ ।
ஏதல் லேஸோ ஜீவந ஸமீரண- கி₃ரித₄ராதௌ₃ ॥(தண்ணீர் காற்று மண் மலை இவனது பலத்தில் ஏக தேசத்தால் தாங்கும் வலிமை கொண்டதாகும் )

பஹு ளயன் பஹுளம் –மவ்ல ஸம்ஹிதை –பல பொருள்களையும் உண்டாக்கி என்றபடி

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் -திறம்பாமல் மலை எடுத்தேன் என்னும் -திறம்பாமல் அசுரரைக் கொன்றேன் என்னும் -5-6-5-

வேறோர் உதவியை எதிர்பாராமல் எல்லாவற்றையும் நடத்தும் ஆற்றல் உடையவர் -அநாயாசேன செய்ய முடியாத
செயல்களைச் செய்து எல்லாவற்றையும் உடல் போலே தாங்குகின்றான் –
இந்த பலத்தின் சிறிது அளவே-நீரிலும் காற்றிலும் மலைகளிலும் பூமியிலும் இருக்கின்றது -ஸ்ரீ பராசர பட்டர்

பலமுடையவர்களுக்கும் மிகுந்த பலமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகவும் பலமுள்ளவர் -உயர்ந்தவளான லஷ்மியை உடையவர் -பலன் என்ற அசுரனுக்கு விரோதியான இந்த்ரனை –
அபலனைப் படைத்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

———

ஓம் மஹாபலாய நம:

பலினாமபி பலசாலிகளைக் காட்டிலும் 

பலவத்வாத் மிக்க பலம் பொருந்தியவராதலால் 

மஹாபல: பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து பலசாலிகளைக் காட்டிலும் மிக்க பலம் பொருந்தியவராக இருப்பதால் பகவான் ‘மஹாபல:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——

மஹாபலா – அளவிட முடியாத வலிமை கொண்டவர் – சர்வ வல்லமை படைத்தவர்

ஸ்ரீ ஆதி சங்கரரின் வியாக்கியானம் “பலிநமபி பலவத்வத் மஹாபலஹ் – அவர் வலிமை மிக்கவர்களை விட வலிமையானவர் என்பதால் மஹாபலஹ் என்று அழைக்கப்படுகிறார். உண்மையில் அவர் அனைவருக்கும் பலத்தின் ஆதாரமாக இருக்கிறார். கீதை (7.11) சொல்வது போல் ‘பலம் பலாவதாம் சாஹம் – நான் வலிமையானவர்களின் பலம்’.

இந்த குணத்திற்கு பல உதாரணங்களைத் தருகிறார். மகாபலியை வெல்வதற்காக ராவணன் பாதாள லோகம் சென்றான். மகாபலியின் வாயில் காப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பகவான், தற்காலிகமாக தன்னை கண்ணுக்கு தெரியாதவராக ஆக்கிக் கொண்டார். நரசிம்ம பகவானால் வதம் செய்யப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதில் இருந்து விழுந்ததால் வீட்டு வாசலில் கிடந்த ஹிரண்யகசிபுவின் குண்டலத்தை ராவணன் நகர்த்த முயன்றான்.ராவணனின் கைகள் குண்டலத்தின் கீழ் சிக்கியது. பகவான் காட்சியில் தோன்றி, முயற்சியின்றி ராவணனை உதைக்க ராவணன் வெகுதூரம் பறந்து சென்றான்.

175-மஹா புத்தி –
எல்லையில் ஞானத்தன் -சர்வஞ்ஞன் –

அஸவர்ஜ்ஞ காரணமத வ்யவச்சே₂த₃மாஹ – மஹத் ஜ்ஞாநமஸ்யேதி
மஹா பு₃த்₃தி₄꞉ ।
இத₃ம் சாஸ்ய அசேஷ தேஸ கால ஸ்வ பாவ –விப்ரக்ருஷ்ட அவிப்ரக்ருஷ்ட விஷயம் ஸார்வஜ்ஞாத்-(மிச்சம் இல்லாமல் தேச கால வஸ்து இவற்றால் கட்டுப்படாத ஞானம் )
அவிஸய விபர்யா ஸதயா யதா₂ர்த₂ம்,-(உள்ளவற்றை உள்ளபடி அறிந்த ஞானம்)
க்லேஸ கர்ம விபாகா ஸயாத்₃ யபராமர்ஸாத் –ஸ்வ பா₄விகத் வாந்-(இயற்கையாகவே) -நித்யம் ச சக்ஷுராதி₃கரண நிரபேக்ஷம்
ச தத₃பேக்ஷம் ச ஸ்வாதந்த்ர்யேண, (ஸ்வ தந்த்ர ஸங்கல்ப சக்தியால் )புண்ட₃ரீகாக்ஷத்வ(ஆனாலும் தாமரைக் கண்ணன் -நாம் அனுபவிக்க-ஸாஸ்த்ரத்தால் திருத்த ஒண்ணாத நம்மை வைமுக்யம் மாற்றி -ஈடுபாடு உண்டாக்கி -உபாயமாகக் கொடுத்து -உபாயமாகப் பற்றினார்க்கு போக்யமாய் இருக்குமே  )ஸூசி ஶ்ரவஸ்த்வாதே ₃꞉ ।
ந ச ரூப ரஸாதி₃க்₃ரஹணே கரண நியம:, ஸர்வேண ஸர்வ கார்ய ஸக்தே (எல்லாப் புலன்களாலும் எல்லாம் அனுபவிப்பான் )꞉ ;
ஸர்போ (அ)பி ஹி திர்யக்ஷு சக்ஷுஷைவ பஶ்யதி ஶ்ருணோதி ச
கத₂மித₃ம் ஸர்வ ஸக்தே ꞉ து₃ஶ்ஸகம் ?

யதோ₂க்தம் ஜயாயாம்,
* ஸர்வத꞉ ஶ்ருதி மாம்-ஶ்சாஸௌ யதா₂ த்₃ருக்  ச்₂ராவ கோரக₃꞉ இதி ।
கர தல ஆமலக விலோகதவத் அபரோக்ஷம் ச வைஸைத்₃யாத், அமோக₄ம் ச ஸர்வ நிர்வஹணாத்(வீணாகாத ஞானம்-அனைத்தையும் நிர்வஹி க்கிறானே  )।

யதா–விஸ்வதஸ் சஷு உத விஸ்வதோ முக –தைத்ரியம் நாராயண வல்லி -1-12-
அவன் கண்களையும் முகத்தையும் எங்கும் கொண்டவன்

பஸ்யதி அசஷு ச ஸ்ருணோதி அ கர்ண–ஸ்வேதாஸ்வரா -3-19- கண்கள் உதவி இன்று காண்கிறான் -காதுகள் உதவி இன்றி கேட்கிறான்

ஸர்வதா அஷி ஸீரோ முகம் –ஸ்ரீ கீதை -13-13-எங்கும் கண்களும் தலையும் முகமும் உள்ளது

ஆஹுஶ்ச நாத₂முநிமிஶ்ரா꞉, –யோ வேத்தி 1-யுகபத் 2-சர்வம் 3-ப்ரத்யஷேண 4-சதா 5-ஸ்வத இதி (பல விசேஷணங்கள்)।
யத் கேசித் ஸர்வஜ்ஞமவஜஜ்ஞிரே ,–நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள்

எந்த ஹரி அனைத்தையும் ப்ரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறானோ

பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் -மூன்றாம் திரு -11
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் -திருச் சந்த -29
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி -4-7-1-

ஸர்வஞ்ஞனான இவனை ஏளனம் பண்ணும் தொனியில்
ஏகே து ப்ரமாணேந சர்வஜ்ஜோ யேந கல்ப்யதே நூநம் ஸ சஷுஷா சர்வன் ரஸாதீன் ப்ரதிபத்யதே
ஒரு பிரமாணத்தின் மூலம் மட்டுமே அனைத்தும் அறிந்த ஸர்வேஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்று
அறிய முடிகிறது என்றால் அப்படிப்பட்டவன் தனது கண்கள் மூலமாகவே ருசி பார்ப்பது மற்றும்
இதர இந்திரியங்களை செய்யும் செயல்களை செய்பவன் என்று கொள்ளலாம் என்றும்
மேலும்

இதி, தத்₃
பவ் ₃த்₃தா₄த்₃ யநுமித ஸர்வஜ்ஞ விஷயம் (அனுமானத்தால் புத்த மத சர்வஞ்ஞத்வம் ); தத் ப்ரகரணாத், அந்யதா₂ ஸாஸ்த்ர விரோதா₄ச்ச ।
நித்யஸ் சேத அர்த்த வாதத்வம் தத் பரே ஸ்யாத் அநித்யதா 
ஸர்வேஸ்வரன் நித்தியமாக உள்ளவன் என்பது புகழ்ச்சிக்காகவே
அர்த்தவாதம் என்றால் அவன் நித்யன் அல்லன் ஸர்வஞ்ஞன் என்பவை இல்ல என்றதாகும் –

இதி ஸாஸ்த்ரீய
ஸர்வஜ்ஞத்வ வ்யுதா₃ஸநம் அத ஏவ அந்ய பரோக்தம் து₃ருக்தம் வா ;
சக்ஷு꞉ஶ்ரவ ꞉- ப்ரப்₄ருதிஷு காக உலூக க்₃ருதா₄தி₃ஷு(கழுகு கூர்மை கண் -காகம் ஏக கண் போல் )மந்த்ர ஸித்₃தௌ₄ஷத₄தப ꞉ ப்ரபா₄வாதி₃ஸம்ஸ்க்ருதேஷு ச கரணாநாம்
ஜ்ஞாந கார்ய வ்யதிஹார தந்த்ர தாப்ர கர்ஷ தாரதம்ய த₃ர்ஸ நாத் ;
ஸார்வஜ்ஞய ஸாஸ்த்ரஸ்ய அயோக்₃யார்த₂தா(அ)பி து₃ர்வதா₃ ।(இது தவறே ஆகும் -)

கு₃ணாந்தர வைசித்ரயே(அ)ப்யேஷைவ தி₃க் ।
அஸ்ய லவோ (சிறிய பகுதியாலேயே-சுடர் ஞான இன்பம் அன்றோ இவன்  )ப₃த்₃த₄முக்த நித்யேஷு சைதந்யம் ॥

எக் காலமும் எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் உள்ளபடி அறியும்படியாக மிகுந்த ஞானம் உள்ளவர் -சர்வஜ்ஞத்வம்
இல்லை என்றும் சொல்லுகிற மதத்தைக் கண்டிக்கிறது -ஸ்வா பாவிக நித்தியமான இந்திரியங்களை எதிர்பாராத ஞானம் உள்ளவன்
புண்டரீகாஷன் -சுசிஸ்ரவஸ்-கையிலங்கு நெல்லிக்கனி போலே தெளிவாகக் காணும் -அமோகமா இருக்கும் ஞானம் அனைத்தையும் நிர்வகிக்கும் –
இந்த ஞானத்தின் அற்ப அம்சம் தான் பத்தர் முக்தர் நித்யர் என்கிறவர்கள் இடத்தில் விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ஹரி அனைத்தையும் பிரத்யக்ஷமாக தனது ஸ்வ பாவம் மூலம் அறிகிறான் –
நாகங்கள் கண்களாலே கேட்டு -காகம் ஒரே கண்ணால் காண்பது -ஆந்தை இரவில் காண்பது -கழுகு தூரத்தில் இருப்பதை காண்பது
நித்யர்களுக்கு உள்ள ஞானமும் இவனது ஞானத்தில் ஒரு அணு அளவே

ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாபுத்தயே நம:

புத்திமதாமபி அனைத்து அறிவாளிகளைக் காட்டிலும்

புத்திமத்வாத் அறிவிற் சிறந்தவராக இருப்பதால்

மஹாபுத்தி:பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரைக் காட்டிலும் அறிவிற் சிறந்தவராக இருப்பதால் பகவான் ‘மஹாபுத்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

மஹாபுத்தி – எல்லையற்ற அறிவை உடையவர்.

ஸ்ரீஆதிசங்கரர் இந்தச் சொல்லை ‘புத்திமாதம் அபி புத்திமத்வாத் மஹாபுத்திஹ் – அவர் கூர்மையை விட அறிவில் கூர்மையானவர்’ என்று விளக்குகிறார்.

பகவத் கீதை அத்தியாயம் 7 வது 10வது வசனத்தில், ‘புத்திர் புத்திமாதம் அஸ்மி – நான் புத்திஜீவிகளில் இருக்கும் புத்தி’ என்று பகவான் கூறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர் அவர் மஹாபுத்தி என்று சுட்டிக்காட்டுகிறார், ஏனென்றால் அவருடைய அறிவு அவரது புலன்களையோ அல்லது வெளிப்புற உதவியையோ சார்ந்து இல்லை.

புலன் உறுப்புகள் எதுவும் தேவையில்லாமல் அவர் ஒரே நேரத்தில் பார்க்கிறார், கேட்கிறார் மற்றும் உணருகிறார். இது போன்ற ஸ்ருதிகளின் பல பகுதிகள் ஆதரிக்கின்றன

  • விஷ்வதாஷ்சக்ஷுருதா விஷ்வதோமுகஹ் – எல்லாப் பக்கங்களிலும் கண்களையும், எல்லாப் பக்கங்களிலும் முகங்களையும் உடையவன் (தைத்ரிய நாராயண உபநிஷத் 1.12). பகவான் தனது அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தியாகும், எனவே அவர் மொத்தத் தொகையான மகாபுத்தி.
  • பஸ்யாத்_யசக்ஷு ச ஸ்ருநோதி அகர்ணஹ் – அவர் கண்கள் இல்லாமல் பார்க்கிறார் மற்றும் காதுகள் இல்லாமல் கேட்கிறார் (ஸ்வேதாஸ்வர உபநிஷத் 3.19);
  • ஸர்வதோக்ஷி சிரோமுகம் – அவருக்கு கண்கள், தலைகள், வாய்கள் எல்லா இடங்களிலும் உள்ளன (பகவத் கீதை 13.13).

ஆச்சார்ய நாதமுனி கூறுகிறார் – ‘யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யக்ஷேந ஸதா ஸ்வதஹ் – அவர் நேரடியாகப் புலனுணர்வு மற்றும் அவரது விருப்பத்தின் மூலம் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்’ (நியாயதத்வா). பெயர் உருவான தாது வார்த்தை ‘புத்த ஞானே’ என்பது அறிவது, புரிந்துகொள்வது. பகவான் அவருடைய அனைத்து படைப்புகளின் செயல்பாட்டின் பின்னணியில் உள்ள புத்தி ஆவார், எனவே அவர் மகாபுத்தி ஆவார்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளின் நடத்தையும் அவர் அவற்றில் முதலீடு செய்த அறிவைக் குறிக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் அந்தந்த நிலைகளிலும் சுற்றுப்பாதைகளிலும் நிலைநிறுத்தப்படுவது, பகவானின் மகா புத்தி அல்லது செயலில் உள்ள மகாபுத்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நான்கு அந்த கரணங்களில் அல்லது மனிதனின் உள்ளார்ந்த திறன்களில் புத்தி மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டுகிறார். ‘அஹம்காரம்’ (ஈகோ) எடுத்துச் செயலைச் செயல்படுத்துவதற்கு முன், ‘சித்தம்’ (சிந்தனை) வழங்கிய அனைத்து முந்தைய அனுபவங்களின் நினைவுகளையும் கணக்கில் கொண்டு, ‘மனஸ்’ (மனம்) வழங்கிய விருப்பங்களுக்கு இடையே புத்தி தேர்வு செய்கிறார். புத்தி மோசமான தேர்வு செய்தால், அது அல்ப புத்தி அல்லது அற்ப புத்தியின் அடையாளம். புத்தி எப்பொழுதும் உன்னதமான விருப்பங்களைச் செய்தால், அது மஹாபுத்தியாகும், அதைத்தான் பகவான் உருவகப்படுத்துகிறார்.


176- மஹா வீர்ய –
மிக்க வீர்யம் உடையவன் -மாறுதல் அற்று இருப்பவன்
ஸ்வரூப விகாரம் இல்லாதவன்
அஷோப்ய-807-கலக்கம் அடையாதவன்

த₃தி₄பா₄வம் ஆபத்₃ய மாந து₃க்₃தா₄தி₃காரணேப்₄யோ (பால் தயிர் ஆவது போல் )பே₄த₃கம் ஸத்யபி ஹேது அவிகார லக்ஷணம் மஹத்₃ வீர்ய மஸ்யேதி
மஹாவீர்ய ꞉ ।
அக₃ரு ம்ருக₃மத₃ கஸ்தூரிகா- குஸும் ஆமோத₃வத் ஸம்நிதி₄மாத்ரேண நிர் மர்யாத₃கார்ய காரீ ஹ்யயம் । யதா₂

தஸ்ய சந்நிதி மாத்ரேண கந்த ஷோபாய ஜாயதே -மனசோ ந உப கர்த்ருத்வாத் ததா அசவ் பரமேஸ்வர —
நறு மணம் என்பது மனிதனின் அருகில் உள்ள போது அவனை இழுக்கிறது
இதே போல் எம்பெருமான் கஷ்டப்படாமல் சங்கல்பத்தாலே செயல் புரியுமவன்-

இந்தத் திறனில் ஓர் அனுவின் அளவு அவர்களிடம் உள்ளதால் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் உள்ளனர் –

இதி-ஏதத₃ணுர் யோகீ₃ஶ்வர ப்ரம்ருதிஷ்வஷு அப்₄யத்வம் (இவனது வீர்ய லேசத்தால் யோகிகள் )॥

பால் தயிராக மாறுவது போலே விகாரப் படுவதற்குக் காரணங்கள் இருப்பினும் தம் இயற்கை மாறுபடாதவர் –
அகில் கஸ்தூரி புஷ்பம் போன்றவற்றின் வாசனை போலே தம் சந்நிதி மாத்ரத்தால் அளவற்ற செயல்களைச் செய்பவன் –
இந்த வீர்யத்தில் அற்பாம்சமே யோகீச்வரர்கள் போன்றவர்கள் இடம் நிகரற்று விளங்குகிறது -ஸ்ரீ பராசர பட்டர்-

உலகத்தை உண்டாக்கும் காரணமாகிய அவித்யை என்னும் கரணத்தை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த திறமை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாவீர்யாய நம:

மஹத் இந்த ஸம்ஸாரம் (நமது பிறப்பு)

உத்பத்திகாரணம் உருவாவதற்கு காரணமான

அவித்யாலக்ஷணம் அஞ்ஞானம்

வீர்யமஸ்யேதி அவரது சக்தி வடிவான ‘வீர்யம்’ ஆதலால்

மஹாவீர்ய:பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமக்கு இந்த பிறவி உருவாவதற்குக் காரணமான அஞ்ஞானம் அவரது வீர்யமாகும். எனவே, பகவான் ‘மஹாவீர்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு, மஹத் (மூன்றாவது த) என்ற சொல்லிற்கு ஸம்ஸாரத்தில் நமக்கு ஏற்படும் பிறப்பு என்ற பொருள் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————-

மஹா வீர்யா – மகத்தான சக்தி கொண்டவர்

அவர் மஹாவீர்யா, ஏனென்றால் அவர் காலப்போக்கில் மாறும் எல்லாவற்றையும் போல மாறாமல் இருக்கிறார். மலர்கள் எந்த முயற்சியும் இல்லாமல் தங்கள் சுற்றுப்புறங்கள் அனைத்திற்கும் நறுமணத்தை கொடுப்பது போல், பகவான் தனது அனைத்து செயல்களையும் சிறிய முயற்சியுடன் செய்கிறார், இது அவரது வீரியத்தின் அறிகுறியாகும்.

ஸ்ரீஆதிசங்கரர் கூறுகிறார் – ‘ஜகதுத்பத்தி காரணம் அவித்யாலக்ஷணம் வீர்யம் அஸ்ய இதி மஹாவீர்யஹ் – இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டிக்குப் பின்னால் உள்ள அறியப்படாத சக்தி, பகவானின் அதீத வீரியத்திற்கு ஆதாரமேயன்றி வேறில்லை.

வீரியம் என்பது அனைத்து சுறுசுறுப்பு அல்லது படைப்புத் தூண்டுதலின் சாராம்சம் என்றும், படைப்பிற்கான அனைத்து ஆற்றல்களும் அவரிடமிருந்து மட்டுமே வெளிப்படும் உந்து சக்தியாக இருப்பதால் அவர் மகாவீர்யா ஆவார்.

எவ்வளவு கடினமாக இருந்தாலும் தன் குறிக்கோளை அடையும் குணம் வீரியம் என்று  விளக்குகிறார்கள். பகவானின் முதல் சாதனை, பிரகிருதி அல்லது ஆதிப் பொருளில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியது, அவருடைய வீரியத்தின் விளைவாகும்.

தர்மச் சக்கரத்தில் உள்ள வியாக்கியானத்தில், வீரியம் அல்லது படைப்பாற்றல் கொண்ட ஒருவர், இந்த படைப்பாற்றலை மற்ற அனைவரின் நலனுக்காக கடத்த இந்திரியங்களின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பகவான் ஒருவரே மஹா வீர்யர் என்று அழைக்கப் படுவார்.


177-மஹா சக்தி –
மிகுந்த திறமை-உபாதான நிமித்த சக காரி மூன்று வித காரணம் –
கடல் ஞாலம் செய்வேனும் யானே என்னும் -கடல் ஞாலம் ஆவேனும் யானே -என்னும் -5-6-1-

பஸூ பதிமதாவக₃தாே ந ஸக்தி விகல நிமித்த மாத்ர வ்யாவர்திகா மஹதீ।
ஸக்திரஸ்யேதி
மஹா ஸக்தி꞉ ।(பாசுபத நிரசனம் -நிமித்த மாத்திரம் என்பர் -தான் உலகம் ஆகாது என்பர்-உபாதான காரணமாகவும் உள்ள மஹா சக்தி -செய்தேனும் ஆவேனும் யானே என்னும்  )
ஸா ஹி ஸாத₄ந க்₃ராம விநியோக₃ லக்ஷணா ஸ்வ ஸரீர ஏகதேஸ –
ஶீக்ருத ப்ரக்ருதி பரிணாம யோக்₃யதா லக்ஷணா ஸத்யா (அ)ஸத்யா வா ஸாமக்₃ரயா
ஸர்வதா₃ ஸர்வ ஸம்பாதி₃நீ ।
ஊர்ணநாபி₄ப்ரப்₄ருதே ꞉ கீடஸ்யாபி நிமித்தஸ் யைவ உபாதா₃நா –
ஸக்திர் அதர்க்யா , கத₂மியம் ஸர்வஜ்ஞ ஸக்திஸ் தர்க்யா ? அஸ்யா விப்ருட் ப்ரதா₄ந த₃தி₄- து₃க்₃தா₄தௌ₃ ப்ரதி க்ஷண பரிணாமித்வம் ॥

தமது சரீரத்தின் ஏக தேசம் ஆகிய பிரக்ருதியின் பரிணாமத்தினால் உலகைப் படைக்கும் திறமை யுள்ளவர் -இந்த
சக்தியானது சாதன சமூஹங்களை விநியோகப் படுத்துவதாய் அவனுடைய சரீரத்தில் ஏக தேசமான பிரகிருதியை
பரிணமிப்பித்துக் கொண்டு சாமக்ரி இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லாவற்றையும் சம்பாதிக்கும் படி இருக்கும்
சிலந்திப் பூச்சி வாயில் இருக்கும் பொருளைக் கொண்டே வலை பின்னி நிமித்தமாயும் உபாதானமாகவும் இருக்கின்ற போது
சர்வஜ்ஞனான பகவானுக்கு இது கூடாததாகுமோ -இந்த சக்தியின் சிறிது அளவே பிரதானம் என்கிற பிரக்ருதியிலும்
தயிர் பால் போன்ற விகாரம் அடையும் பொருள்களிலும் காண்கிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் பெரிய சாமர்த்தியம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

மிக்க சக்தி உள்ளவர் -நிக்ரஹத்தையோ அருளையோ பொழியும் சக்தி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –

————

ஓம் மஹாஶக்தயே நம:

மஹதி சிறந்த

ஶக்திஸாமர்த்யம் ‘ஶக்தி’ அல்லது திறமை உடையவர்

அஸ்யேதி எனவே

மஹாஶக்தி:பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகவும் திறமைசாலியானவர். எனவே, பகவான் ‘மஹாஶக்தி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு மஹத் என்ற சொல்லிற்கு சிறந்த என்ற பொருளும், ‘ஶக்தி’ என்ற சொல்லிற்கு ஸாமர்த்யம் (திறமை) என்று பொருளும் உரைத்திருக்கிறார் ஆச்சார்யர்.

————

மஹாசக்தி – அவர் உலகத்தின் காரணம்

ஸ்ரீ ஆதி சங்கரர் அடிப்படை அர்த்தத்தை விவரிக்கிறார், ‘மஹாதீ சக்தி: சாமர்த்யம் அஸ்ய அஸ்தி இதி மஹாசக்தி: அவர் மஹாசக்தி, ஏனென்றால் அவர் செயல்படும் ஆற்றலுடன், அத்தகைய செயல்களுக்குத் தேவையான திறன்களைக் கொண்டவர்.

ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார், மகாசக்தி என்ற நாமம் பகவான் இந்த உலகத்திற்கு வெறும் உணர்வு காரணமல்ல, ஆனால் இந்த உலகத்திற்கு ஜடக் காரணமும் கூட, அதாவது, அவர் படைப்பின் மூளை மட்டுமல்ல, அவரே காரணமும் ஆவார். இது பிரகிருதியிலிருந்து இந்த உலகத்தை உருவாக்கியது.

கிரியா சக்தி (செயலின் சக்தி), இச்சா-சக்தி (ஆசையின் சக்தி) மற்றும் மூன்று சக்திகளின் தொடர்புக்கு காரணமானவர் என்பதால் அவர் மகாசக்தி என்று குறிப்பிடுகிறார். ஞான சக்தி (அறிவின் சக்தி). இந்த மூன்று சக்திகளும் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் செல்கின்றன.

ஒரு சிலந்தி தனக்குள்ளிருந்து வலையை உருவாக்குவது போல, இறைவன் தனக்குள் இருந்து உலகைப் படைக்கிறான்.

முந்தைய நாமத்தின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டபடி, அவர் உலகின் நன்மைக்காக வலிமை மிக்க சக்தியைப் பயன்படுத்துகிறார், மேலும் இந்த சக்தியின் ஒவ்வொரு நிகழ்வும் அவருடைய மகாசக்தியை நமக்கு நினைவூட்ட வேண்டும்


178-மஹா த்யுதி –
மிக்க ஒளி தேஜஸ் ஞானம் ஆகிற தேஜஸ் கொண்டே ஜகத் வியாபாரம்—பர நல் மலர் ஜோதி -ஜோதியாய் ஜோதி கீழ் உபாதான காரணத்வம் -இதில் சஹகாரி காரணத்வம்

ஸஹ கார்யபேஷா காரண வை லக்ஷண்ய கரம் தத₃ந பேக்ஷா லக்ஷணம் தேஜோ மஹத₃ஸ்யேதி
மஹாத்₃யுதி꞉ ।
யத் பா₃ஹ்யாந்தர தமோ விரோதி₄ ஸ்வ பர வர்க₃யோ꞉ க்ரமேண ரமணீயம் பீ₄ஷணம் ச ப₄வதி (அழகாகவும் பயங்கரமாயும் )।
அஸ்ய பி₃ந்து₃ர்  த்₄யு மணி மாணிக்யாதௌ₃ ப்ரகாஸ ꞉ ।

ஷட்ஸு சாமீஷு மஹத்த்வ விஸேஷேண (ஆறிலும் மஹத் அடைமொழி )நைதேஶே யத கு₃ணா꞉ கல யைவ பராவரம் கார்ய கலாபம் ப்ரவர்த்ய 
அஸேஷேண லப்₃தா₄மிஷா மஹோத₃தா₄விவ மஹௌகா₄ ப ₄க₃வத் யநந்தே மாந்தீதி நிவேத்₃யதே ।
அதி ப்ரதி₂தேயம் ப்ரகியா(மிகவும் பிரசித்தம் அன்றோ )

பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியா ச –ஸ்வேதாஸ்வர–6-8-
இவனுடைய சக்தி என்பது உயர்ந்ததும் பல விதமாகவும் காணப்படுகிறது
இவை இவனுக்கு இயற்கையாகவே உள்ளது
இப்படியாகவே இவனுக்கு ஞானம் பலம் ஸ்ருஷ்டிக்கும் திறன் போன்ற பலவும் உள்ளன

தேஜோ பல ஐஸ்வர்ய மஹா வபோத ஸூ வீர்ய சக்தியாதி குணைக ராசி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85-
தேஜஸ் பலம் ஐஸ்வர்யம் ஞானம் வீர்யம் மற்றும் சக்தி – ஆகிய பலவற்றுக்கும் இவனே இருப்பிடம் ஆவான்

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்சி அசேஷத பகவச் சப்த வாஸ்யாநி விநா ஹேயை குணாதிபி –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-79-
தாழ்வான குணங்கள் என்பதற்கு எதிர்த்தட்டாகவும்
பூர்ணமாகவும் உள்ள ஞானம் பலம் சக்தி ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்பதாகவும் உள்ள குணங்களே பகவான் என்ற பதம் மூலம் உணர்த்தப்படுகின்றது

இத்யாதௌ₃ ।
ப ₄க₃வச் சா₂ஸ்த்ராணி
காத்ஸ்ந்யேந இத₃மர்தா₂நி ।
ஏஷு ஷட்ஸ்வேவ ஸௌஶீல்ய வாத்ஸல்யாத₃யோ (அ)க₃ணித கு₃ணா꞉ கேநாபி ப்ரயோஜ(கே )ந அநந்தர் –
பா₄வ்யந்தே ॥

பகவத் ஸாஸ்த்ரம் இந்த பூரணமான ஆறு குணங்களும் இயற்கையாகவே இருப்பதையே காட்டும்
ஸுசீல்யாதி குணங்கள் இவற்றுக்குள்ளேயே அமைந்தவை –

173-தொடங்கி -178- வரை உள்ள ஆறு திரு நாமங்களிலும்
மஹா அடைமொழி –
எம்பெருமான் குணங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியே எத்தனை பெரிய செயல்களாக
இருந்தாலும் அல்பமாகவே முடிக்கும் படி ஆகும் என்பதைக் காட்டும்
பெரிய கடலில் நதி போலவே ஆகும் என்று காட்டும்

சோதியாய சோதி நீ அதுண்மையில் விளங்கினாய் -திருச்சந்த -34-
பெரிய பர நன் மலர்ச் சோதி -10-10-10-

படைத்தலில் தனக்கு வேறோர் துணை வேண்டாத தேஜஸ்சை உடையவர் –
ஸூர்யன் போன்றார்க்க்கு அனுகூலமாயும் எதிரிகளுக்கு பயங்கரமாயும் இருக்கும்
இதனுடைய அற்பாம்சமே சூரியன் சந்திரன் மாணிக்கம் முதலியவைகளில் பிரகாசித்து வருகிறது

இந்த ஆறு திரு நாமங்களிலும் மஹத்-விசேஷணம்-சமுத்ரத்தில் பெரு வெள்ளம் போலே அநந்த ரூபமான அவனிடம் நிறைந்த இதுவே
பகவத் சாஸ்த்ரங்களின் விஷயமாகும் -சௌசீல்யம் வாத்சல்யம் என்ற இரண்டு குணங்களும் சில பயன்களுக்காக
இதற்குள்ளே அடங்குகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

உள்ளும் புறமும் ஒளி வடிவானவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஒளியை சூரியனுக்குத் தருபவர் -மிகுந்த ஒளி யுள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —

————

ஓம் மஹாத்யுதயே நம:

மஹதி மிகச்சிறந்த

த்யுதிர் ஒளி

பாஹ்யாப்யந்தரா அகமும் புறமும்

ச அஸ்யேதி உடையவராதலால்

மஹாத்யுதி:பகவான் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அகமும் (ஞானத்தாலும்), புறமும் (திருமேனி காந்தியாலும்) ஒளிபொருந்தியவர். எனவே, அவர் ‘மஹாத்யுதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வயம்ஜ்யோதி: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.9)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா) தானே ஒளி வீசுவது

ஜ்யோதிஶாம் ஜ்யோதி:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.16)

ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மம், ஆத்மா சூரியன், சந்திரன் போன்று) ஒளி வீசும் அனைத்திற்கும் ஒளியாய் இருப்பது.

இத்யாதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

மஹா த்யுதிஹ் – பெரும் தேகம் அல்லது பிரகாசம் கொண்டவர்

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை ‘மஹாதீ த்யுதிஹ் பாஹ்யாப்யந்தரா ச அஸ்ய அஸ்தி இதி மஹாத்யுதிஹ் – அவர் அகத்திலும் வெளியிலும் மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவர்’ என்று வரையறுக்கிறார்.

இந்த நாமத்தின் தோற்றம் தாது த்யுத தீப்தௌ என்பதிலிருந்து பிரகாசிப்பது. த்யோததே இதி த்யுதிஹ் என்றால் பிரகாசிப்பவர் என்று பொருள். த்யுதி, த்யோதாயிதா வா த்யுதி – பொருட்களை பிரகாசிக்கச் செய்பவன் த்யுதி.

உபநிடதங்கள் அவரை ‘ஸ்வயம் ஜோதிஹ் – அவர் தனது சொந்த புத்திசாலித்தனத்தின் ஆதாரம்’ என்றும் ‘ஜோதிஷாம் ஜோதிஹ் – அவர் அனைத்து ஒளிகளையும் ஆற்றும் ஒளி’ என்றும் அழைக்கிறது. ‘தஸ்ய பாசா சர்வம் இடம் விபாதி – இங்குள்ள அனைத்தும் அவரது பிரகாசத்தால் பிரகாசிக்கின்றன’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீ பராசர பட்டர் விளக்குகிறார், இந்த நாமம் பகவானின் எந்தவொரு செயலுக்கும் வெளிப்புற உதவி தேவையில்லை என்பதை குறிக்கிறது, மேலும் அவரது தோற்றத்தில் உள்ள பெரிய தேஜஸ் (தேஜஸ்) இதை வெளிப்படுத்துகிறது. இந்தப் புத்திசாலித்தனம் நம்மில் உள்ள வெளி இருட்டையும் அக இருளையும் நீக்க வல்லது. சூரியனின் தேஜஸ் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளின் பிரகாசம் ஆகியவை இறைவனின் தேஜஸின் ஒரு சிறிய பகுதியாகும். இறைவனின் இந்த தேஜஸ் அவரது பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் அவரது எதிரிகளை மிகவும் பயமுறுத்துகிறது (நாம நரசிம்ம-வபுவின் விளக்கத்தை நாம் நினைவுகூரலாம், அவருடைய நரசிம்ம அவதாரத்தில் இந்த விஷயத்தை நாம் வலியுறுத்தினோம்). இதை ஆதரிக்கும் ஸ்ருதி குறிப்புகள்:

  • ஸ்வயம் ஜ்யோதிஹ் – அவரை பிரகாசிக்க வெளிப்புற வழிகள் தேவையில்லாமல் அவர் தூய்மையான பிரகாசமாக இருக்கிறார் (பிருஹதாரண்யக உபநிஷத் 4.3.9),
  • ஜோதிஷ்ஆம் ஜோதிஹ் என்றால் விளக்குகளுக்கு மத்தியில் ஒளி (முண்டக உபநிஷத் 2.2.9).

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மொத்தம் 43 பெயர்கள் ‘மஹா’ என்ற வார்த்தையில் தொடங்குவதாக சுட்டிக்காட்டுகிறார். இவற்றில், கடைசி ஆறு நாமங்கள் பகவானின் அதிபதி, வலிமை, அறிவு, வீரியம், சக்தி, பிரகாசம் ஆகிய குணங்களைக் குறிப்பிடுகின்றன. இந்த ஆறு குணங்களின் கலவையே பகவானை மஹாமாயா அல்லது அவரது விளையாட்டு அல்லது லீலா போன்ற அற்புதமான செயல்களைச் செய்பவராக ஆக்குகிறது.

இந்த உலகில் ஜொலிப்பவை அனைத்தும் அவருடைய பிரகாசத்தால்தான் –

யஸ்தே திவி ஸூர்யே மஹிமா ஸம்பபுவ|
தஸ்மை தே மஹிம்நே ப்ரஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா ||
யஸ்தே நக்ஷத்ரேஷு சந்த்ரமஸி மஹிமா ஸம்பபுவ |
தஸ்மை தே மஹிம்நே ப்ர்ஜாபதயே தேவேப்யஹ் ஸ்வாஹா || (யஜூர் 23-2, 23-4)

இறைவனை வழிபடுவோருக்கு இயற்கையாகவே இந்த த்யுதியின் ஒரு பகுதி இறைவனால் ஆசீர்வதிக்கப்படுகிறது என்பதை தர்மச் சக்கரம் விளக்குகிறது (முகம் என்பது மனதின் குறியீடு – அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ் வாசகம்).

————-

227-விச்வாத்மா – தன்னுடைய ஞான சக்திகளால் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பவர் –

227-விஸ்வாத்மா –
எங்கும் உள்ளவன் -ஞான சக்திகளால் வியாபித்து

தைஶ் ச தத் கார்ய ஜ்ஞாந க்ரியா ஸாமர்த்₂ய அநந்த்யம் லக்ஷ்யதே இத் யபி₄யுக்தா꞉ ;
ஔசித்யாத்₃ பஹு ஸாஸ்த்ர ஸங்க₃தேஶ்ச ॥
ஆப்₄யாம் ஜ்ஞாந ஸஹ நாப்₄யாம் விஶ்வ வ்யாபநாத்
* விஶ்வாத்மா; யதா₂

ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வா –புருஷ ஸூக்தம் —அனைத்து திசைகளிலும் பூமியை வியாபித்து

யேந ஏஷ பூத திஷ்டதி அந்தராத்மா –தைத்ரியம் –
யார் எங்கும் வியாபித்து உள்ளானோ அவனே அனைத்தின் அந்தர்யாமியாகவும் உள்ளான்

யேந ஸர்வம் இதம் ப்ரோதம் –தைத்ரியம்
ப்ரக்ருதி காலம் சம்சார ஜீவன் முக்த ஜீவன் மற்றும் நித்ய ஸூரிகள் பலருக்கும் இவனே அந்தராத்மா
அனைத்தும் இவனால் பரவப்பட்டு உள்ளன-ஆகியும் ஆக்கியும் -அவையுள் தனி முதல் அம்மான்

அஹமாத்மா குடாகேச ஸர்வ பூதா –கீதை -10-20-
சோம்பலை வென்ற அர்ஜுனா -அனைத்து உயிரிகளின் இருதயத்தில் நானே உள்ளேன்

உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

ஞான சக்திகளினால் உலகு எங்கும் பரவி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு ஆத்மாவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் கட்டளை இடுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

————

ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்

விஶ்வாத்மாபகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் ‘விஶ்வாத்மா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

விஷ்வாத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா
அவர் விஷ்வாத்மா, ஏனென்றால் அவர் தனது அறிவினாலும் பலத்தினாலும் முழு பிரபஞ்சத்தையும் வியாபித்துள்ளார்.

ஸ்ரீ ஆதிசங்கரர் இதை ‘விஸ்வஸ்ய ஆத்மா – பிரபஞ்சத்தின் ஆன்மா‘ என்று விளக்குகிறார். உயிரற்ற பொருட்களை உயிருள்ள உயிரினங்களாக மாற்றும் முக்கிய சாரம் அவர். அவர் சர்வ வியாபி, எங்கும் இருப்பவர் மற்றும் சர்வ அந்தர்யமி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறார். அதனால்தான் சஹஸ்ரநாமத்தில் முதல் பெயர் விஸ்வம். அவர் பிரபஞ்சத்தை மைக்ரோகாஸ்மிக் மற்றும் மேக்ரோகோஸ்மிக் மட்டத்தில் அடையாளப்படுத்துகிறார்.

“அஹம் ஆத்மா குடாகேஷ ஸர்வபூதாஷாயஸ்திதா –10-20- அர்ஜுனா! நான் அனைத்து உயிர்களின் இதயத்திலும் வசிக்கும் ஆன்மா”.

நமது வெளித்தோற்றத்தில் உள்ள வேறுபாட்டையோ, எண்ணங்களில் உள்ள வேறுபாட்டையோ பார்க்காமல், எல்லா உயிரினங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை உணர்வதில்தான் இந்த நாமத்தின் உண்மையான முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்று தர்ம சக்கரத்தில் எழுதியவர் குறிப்பிடுகிறார். தோற்றம் அல்லது நம் எண்ணங்களில், காமம், க்ரோதா, லோபம், மோகம், மாதா மற்றும் மாத்சார்யம் மட்டுமே நம்மில் வளர்ந்து வளர்கின்றன. நம் உள்ளத்தின் பின்னால் உள்ள ஒற்றுமையைக் காணக் கற்றுக் கொள்ளும்போதுதான், அவருடைய தயாவைப் பெறத் தகுதி பெறுவோம்.

இதைத்தான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்கு உபதேசித்தார். ஒருவன் தன் மனைவியை நேசிக்கும் போது அவளுடைய தோற்றத்தை அல்ல, அவளில் உள்ள ஆத்மாவையே நேசிக்க வேண்டும். அன்பின் உண்மையான அர்த்தம் அதுதான்.

—————————

454-சர்வஜ்ஞ -குறைவற்ற தன் மேன்மையை முற்றும் அறிந்தவர் –
455-ஜ்ஞானமுத்தமம் -பாஞ்சராத்ர ஆகமத்தின் மூலம் ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அனைவரும் அறியக் காரணம் ஆனவர்

  • 454-ஸர்வஞ்ஞ-
    எல்லாமாகத் தன்னை அறிந்தவன்-ஞானம் உத்தமம் மேல் ஞானமாயும் –இங்கு ஞாதாவாகவும் -இருப்பவன் –ததா₂ ஸர்வாத்மநா(ஆ)த்மாநம் ஜாநாதீதி
    ஸர்வஜ்ஞ
    யுஞ்ஞானாம் ச ஸ்வமாத்மானம் பரஸ்மின் அவ்யயே பதே –
    அனைத்திற்கும் தான் ஆத்மாவாக அறிந்தும்
    தனது ஆத்மாவை அழியாத பரம பதத்துடன் இணைத்தும் உள்ளவன்இவர் சம்பந்தத்தால் தான் ஸ்ரீ வைகுண்டம் ஞானத்துக்கு தடுப்பே இல்லாமல் இருக்கும் கலங்காப் பெரு நகரம்கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -2-2-10-
    நிறைந்த ஞான மூர்த்தி
    மீண்டும் 821 வரும்தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –————
    1. ஓம்ஸர்வஜ்ஞாயநம:
    ஸர்வஸ்சாஸௌ எங்கும் இருக்கிறார்ஞஸ்சேதி அனைத்தையும் அறிகிறார்ஸர்வஜ்ஞ: எனவே, பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.எங்கும் இருப்பதாலும் அனைத்தையும் அறிவித்தாலும் பகவான் ‘ஸர்வஜ்ஞ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.இதக்ம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு காணப்படும் அனைத்தும் ஆத்மாவேயன்றி வேறில்லை————
  • சர்வஜ்ஞா – எல்லாம் அறிந்தவர்
  • ஸ்ரீஆதிசங்கரர் இதை ‘ஸர்வஶ்ச அஸௌ ஜ்ஞாஷ்ச இதி ஸர்வஜ்ஞாஹ் – அவரே எல்லாமும், அனைத்தையும் அறிந்தவர், எனவே அவர் சர்வஜ்ஞா’ என்று அழைக்கப்படுகிறார். பிருஹதாரண்யக உபநிஷத் (2.4.6) ‘இடம் ஸர்வம் யதயம் ஆத்மா – இங்குள்ள அனைத்தும் பரமாத்மா’ என்கிறது.ஸ்ரீ பராசர பட்டர் எல்லாவற்றிலும் அந்தர்யாமி என்றும், அதனால் அவர் சர்வஜ்ஞா என்றும் அவர் அறிவார் என்று விளக்குகிறார். அவர் சிறந்த தர்மம், சிறந்த வழிமுறை மற்றும் சிறந்த குறிக்கோள் என்பதை அவர் அறிவார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் பெரிய திருமொழியை (4.9.6) ஆதரித்து மேற்கோள் காட்டுகிறார் – ‘உலகத்து எல்லாம் அறிவீர் – உலகில் நடக்கும் அனைத்தையும் அவர் அறிவார்’.ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ருதி பற்றி பல குறிப்புகளை கொடுத்துள்ளார் –
    • யாஹ் சர்வஜ்ஞா ஸர்வவித் – அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் அறிந்தவர் ( முண்டக உபநிஷத் 1.9);
    • ச சர்வஜ்ஞா ஸர்வோ பவதி – அவர் சர்வஞானம் மற்றும் அவர் அந்தர்யாமி ( பிரஷ்ண உபநிஷத் 10);
    • ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ ஸர்வஜ்ஞঃ ஏஷோ அந்தர்யமேஷ்ய யோநிঃ ஸர்வஸ்ய ப்ரபவ்யாப்யாயௌஹி பூதாநாம் – இதுவே அனைத்திற்கும் இறைவன். இவரே அனைத்தையும் அறிந்தவர். இது உள் கட்டுப்படுத்தி. இதுவே அனைத்திற்கும் ஆதாரம். இதுவே உயிரினங்களின் ஆரம்பமும் முடிவும். ( மாண்டுக்ய உபநிஷத் 6);
    • ——
    • 455-ஜ்ஞாநமுத்தமம்-
      மேலான ஞானமாய் இருப்பவன் –ஜ்ஞாயதே (அ)ஸ்மின் ஸர்வ꞉ பரோ வைஷ்ணவோ த₄ர்ம இதி
      ஜ்ஞாநமுத்தமம்படந்தம் அநிசம் சாஸ்திரம் பாஞ்சராத்ர புரஸ்சரம் –
      பாஞ்சராத்ரம் உள்ளிட்ட அனைத்து ஸாஸ்த்ரங்களையும் படிப்பவன்திரு மந்த்ரத்தை உபதேசித்து –
      இவனே பகவச் சாஸ்திரம் ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை வெளியிட்டான்
      மிக்க ஞான மூர்த்தியாய் வேத விளக்கு -4-7-10-இங்கு ஞானம் -அடுத்து ஸூவ்ரதஸ்-அனுஷ்டானம்-ஸ்ரோத்ரியனாயும் ப்ரஹ்ம நிஷ்டனாயும் இருக்க வேண்டுமேஎல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –————–
      1. ஓம்ஞானமுத்தமாயநம:
      ஞானமுத்தமம் ‘ஞானம் உத்தமம்’ என்ற (இரண்டு வார்த்தைகளைக் கொண்ட) இத்யேதத் இந்த பதம் ஸவிஶேஶணம் பகவானை தனித்துக் குறிப்பதான ஏகம் நாம: ஒரே திருநாமமாகும்.ப்ரக்ருஶ்டம் மிகச்சிறந்தஅஜன்யம் பிறப்பற்ற அனவச்சின்னம் இடம், பொருள், காலம் முதலியவற்றால் தடைபடாதஸர்வஸ்ய ஸாதகமிதி அனைத்தையும் அளிக்கும் உன்னத ஸாதனமாய் விளங்கக்கூடியதுஞானமுத்தமம் அறியப்படவேண்டியவற்றுள் மிகச்சிறந்ததானப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானமாகும். எனவே (அந்த பரப்ரஹ்மமான) பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.மிகச்சிறந்ததும், பிறப்பற்றதும், இடம், பொருள், காலம் ஆகியவற்றால் தடைபடாததும், அனைத்தையும் அளிக்க வல்லதுமான ப்ரஹ்மஞானம் அனைத்திலும் சிறந்ததாகும். எனவே, பகவான் ஸ்ரீவிஷ்ணு ‘ஞானமுத்தமம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.பரப்ரஹ்மமான பகவானைப் பற்றிய அறிவே மிகச்சிறந்ததாகும். பகவானைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிட்டு காட்டுவதால் இந்த திருநாமத்தை விஶேஶமான திருநாமம் என்று ஆச்சார்யாள் குறிப்பிட்டுள்ளார்.
    • ஸத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம (தைத்ரீய உபநிஶத் 2.1)தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்தப் பரப்ரஹ்மமானது என்றுமுள்ளது, அறிவு வடிவானது மற்றும் (எவற்றாலும்) வரையறுக்கப்படாததாகும்.இதிஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.—————
      1. ஞானம்-உத்தமம் – அவருக்கு மிகப்பெரிய அறிவு உள்ளது
    • இதை ஸ்ரீ ஆதிசங்கரர் ‘ஞானமுத்தமம் இதி ஏதத் சவிஷேஷணம் ஏகம் நாமம்; ஞானம் ப்ரகிருஷ்டம் ஆஜன்யம் அநவச்சின்னம் சர்வஸ்ய ஸாதகதம் இதி ஞானமுத்தமம் – அவனது ஞானமானது ஆரம்பம் இல்லாத, எல்லையற்ற, அனைத்தையும் அடையும் திறன் கொண்ட மிக உயர்ந்த தரம் வாய்ந்தது, எனவே அவர் ஞானம்-உத்தமம் என்று அழைக்கப்படுகிறார்.வைஷ்ணவ தர்மம் – சர்வ பரோ வைஷ்ணவோ தர்மா ஜ்ஞாயதே அஸ்மின் இதி ஞானம் – உத்தமம் – அனைத்து தர்மங்களிலும் மேலான தர்மத்தை வெளிப்படுத்தியவர் பகவான் என்று ஸ்ரீ பராசர பட்டர் குறிப்பிடுகிறார். அவர் உத்தம ஞானம் – பத்தாந்தம் அனிஷம் சாஸ்திரம் பஞ்சராத்ர புரஸ்-சாரம் என்று பகவானால் பஞ்சராத்ரத்தை வெளிப்படுத்தியதையும் அவர் குறிப்பிடுகிறார்.ஸ்ரீ வி.வி. ராமானுஜன் நம்மாழ்வாரின் திருவாய் மொழி (4.7.10) – மிக்க ஞான மூர்த்தியாகிய வேத விளக்கு – தூய அறிவின் சிறந்த சின்னம், வேதங்களின் ஒளி.ஸ்ரீ சத்யதேவோ வசிஷ்டர் அதர்வ வேதத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து குறிப்பிடுகிறார் – “சூத்ரம் சூத்ரஸ்ய யோ வேதம், ச வேத ப்ராஹ்மணம் மஹத்” – எவன் பரம ஞானத்தைப் பற்றி அறிந்திருக்கிறானோ, அவன் அறிந்து கொள்ள வேண்டிய மிகப் பெரியதை அறிவான்.தைத்ரிய உபநிடதம் (2.1) கூறுகிறது ‘சத்யம் ஞானம் அனந்தம் ப்ரம்ஹ – பிரம்மன் என்பது சத்தியம், பிரம்மமே ஞானம், பிரம்மனே நித்தியம்’.பகவான் ஞானம்-உத்தமம், ஏனெனில் அவர் எல்லாம் அறிந்தவர் மற்றும் அனைத்து காரணங்களுக்கும் காரணமாக இருக்கிறார்.

தோஷ உபதா அவதி சம அதி சயாந சங்க்யா
நிர்லேப மங்கல குண ஓக துகா ஷட் ஏதா
ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ
த்வாம் ரங்கேச பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி –27-

ஹே ரங்கேச

தோஷ –குற்றம் என்ன

உபதா –உபாதி என்ன

அவதி -எல்லை என்ன

சம –சத்ருச வஸ்து என்ன

அதி சயாந –மேற்பட்ட வஸ்து என்ன

சங்க்யா–எண்ணிக்கை என்ன

நிர்லேப –ஆகிய இவற்றின் சம்பந்தம் இல்லாத

மங்கல குண ஓக –கல்யாண குணங்களின் சமூகத்தை

துகா ஷட் ஏதா ஞான ஐஸ்வரீ சகா வீர்ய பல அர்ச்சிஷ–சுரக்கின்ற இந்த ஞானம் ஐஸ்வர்யம்
சக்தி வீர்யம் பலம் தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்

த்வாம் -தேவரீரை

பாச இவ ரத்னம் அநர்க்க யந்தி-ரத்னத்தை ஒளிகள் பெருமைப் படுத்துவது போல் பெருமைப் படுத்துகின்றன –

கணக் கறு நலத்தனன் –
உயர்வற உயர் நலம் உடையவன் –
திருக் கல்யாண குணங்களை அனுபவிக்கக் கோலி
முந்துற அவற்றுக்கு ஊற்று வாயான இந்த ஆறு குணங்களையும் அருளிச் செய்கிறார்

ஞானம்-சர்வ காலத்திலும் உண்டான சர்வ பதார்த்த சாஷாத்காரம்

பலம் -உபய விபூதியையும் அநாயேசேந வஹிக்க வல்ல மிடுக்கு

ஐஸ்வர்யம் -அனைத்தையும் தன் குடைக் கீழ் அடக்கி ஆள வல்ல நியந்த்ருத்வம்

வீர்யம் -ஜகத் தாரண நியமங்களிலே சாரீரக கிலேசம் ஒன்றும் இன்றிக்கே இருக்கை

சக்தி -எந்த பிரதிபந்தகங்களும் முட்டுக் கட்டாதபடி எடுத்த கார்யம் தலைக் கட்ட வல்ல சாமர்த்தியம்

தேஜஸ் எதிரிகள் குடல் குழம்பும்படியான மதிப்பு –
பஹு பிரயத்தன சாத்யமானவற்றை சஹகாரி நிரபேஷனாக
அல்ப ப்ரயத்னத்தாலேயே தலைக் கட்டுகை-

இவன் சம்பந்தத்தால் குணங்களுக்குப் பெருமை என்றும்

குணங்களால் இவனுக்கு பெருமை என்றும் அருளிச் செய்வார்கள் அன்றோ-

ஞானாதி ஷட் குணங்கள் அனைத்து கல்யாண குணங்களுக்கும் பீஜம் —
ரத்தினத்துக்கு தேஜஸ் போலவே கல்யாண குணங்களும் உன்னைக் காட்டித் தருமே —

ஆக இது வரை பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக -அநு குணமாக ச உப ப்ராஹ்மண ஸ்ருதி
பிரமாணங்களைக் காட்டி அருளி

ஸ்ரீ மானான ஸ்ரீ பெரிய பெருமாளுக்கே சித் அசித் ஆத்மகமான ஜகத்தைக் குறித்து
காரணத்வத்தையும் ஈஸ்வரத்தையும் சமர்ப்பித்து

ஸ்ரீ த்வய உத்தர காண்ட ஸ்ரீ மத் சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்

இதில் காரணத்வ நிர்வாஹத்தை காட்டி அருள திரு உள்ளம் பற்றி
நார சப்தார்த்தங்கள் ஆகையால்
நிர் துஷ்டங்களாய் –
நிருபாதிகங்களாய் –
நிரவதிகங்களாய் –
நிஸ் சமாப்யதிகங்களாய்-
நிஸ் சங்க்யங்களாய்-
மங்களமாய் இருக்கிற தயாதி குணங்களுக்கு மூலங்களாய்
பகவச் சப்தார்த்தங்களாய்-பிரசித்தங்களான
ஞானாதி ஷட் குணங்களும்
ரத்னத்தைக் காந்திகள் போலே தேவரை அலங்கரிக்கிறது -என்கிறார் –

——————–

ஞான குண ஸ்வரூப நிரூபணம் இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார்

யுகபத் அநிசம் அக்ஷைஸ் ஸ்வைஸ் ஸ்வதஸ் வாஷ கார்யே
நியமம் அநியமம் வா ப்ராப்ய ரங்காதி ராஜ
கர தலவத் அசேஷம் பஸ்யசி ஸ்வ பிரகாசம்
தத் அவரணம் அமோகம் ஞானம் ஆம்நாசி ஷு தே –28-

ஹே ரங்காதி ராஜ

த்வம் -தேவரீர்

அக்ஷைஸ் ஸ்வைஸ் -தனது இந்த்ரியங்களாலே யாதல்

ஸ்வதஸ் வா–இந்திரியங்களின் அபேக்ஷை இன்றியே ஸ்வயமாகவே யாதல்

அஷ கார்யே–கண் முதலிய இந்திரியங்களின் தொழிலாகிய பார்வை முதலியவற்றில்

நியமம் –ஒரு வியவஸ்தையோ

அநியமம் வா –அப்படி ஒரு விவஸ்தை ஒன்றும் இல்லாமையே

ப்ராப்ய-அடைந்து

அநிசம்–எப்போதும்

அசேஷம்–உபய விபூதியில் உள் அடங்கிய அனைத்தையும்

யுகபத் -ஏக காலத்தில்

கரதலவத்–உள்ளங்கையைப் பார்ப்பது போலே

பஸ்யசி–சாஷாத் கரிக்கிறீர்

ஸ்வ பிரகாசம்–ஸ்வமேவ பிரகாசிப்பதும்

அவரணம் –ஆவரணம் அற்றதும்

அமோகம்–யதார்த்தமுமான

தத் -அந்த சாஷாத் காரத்தை

ஞானம் ஆம்நாசிஷு தே–தேவரீருடைய ஞானமாக உபநிஷத்துக்கள் ஓதி வைத்தன –

அனைத்தையும் ஒரே நேரத்தில் நோக்கியபடி -உள்ளங்கை நெல்லிக்கனி இருப்பதைக் காண்பது போன்று
எளிதாக அறியும் சர்வஞ்ஞன் அன்றோ-

ஞானம் -என்பதை விளக்குகிறார் –

சஷுராதி த்வாரத்தால் ஆதல் –
தர்ம பூத ஞானத்தால் யாதல் –
இந்த்ரியங்களாளிலும் தத் அதீந்த்ரியங்களாலே தத் தத் விஷயங்களையும்
அந்ய இந்திரிய விஷயங்களையும்
இப்படி சர்வத்தையும்-
க்ராஹ்ய க்ராஹகீ நியமம் இல்லாமல்- ஒருக்காலே கரதலாமலகம் போலே நித்தியமாக
ஸமஸ்தமும் ஏக காலத்திலேயே தேவரீர் சாஷாத் கரிக்கும் சாஷாத்காரத்தை
ஸ்வ ப்ரகாசமாயும் –
ஆவரண ரஹிதமாயும் –
யதார்த்தமாயும் உள்ள ஞானம் என்று உபநிஷத்துக்கள் சொல்லுமே –

——————

நயன ஸ்ரவண த்ருஸா ஸ்ருனோஷி அத தே ரெங்க பதே மஹே சிது
கரணை அபி காம காரிண கடதே சர்வ பதீநம் ஈஷணம்–29-

ஹே ரெங்க பதே

நயன ஸ்ரவண –கண்களாகிய காதுகளை உடையவராய்

த்ருஸா ஸ்ருனோஷி –திருக் கண்களால் கேட்கின்றீர்

அத-பின்னையும்

கரணை அபி–மற்ற இந்திரியங்களைக் கொண்டும்

காம காரிண–இஷ்டப்படி செய்கின்ற

தே மஹே சிது–விலக்ஷணனான ஈஸ்வரனான தேவரீருக்கு

கடதே சர்வ பதீநம் ஈஷணம்–சர்வதோமுகமான சாஷாத்காரம் கூடா நின்றது –

கண்களால் கேட்க முடியும்
காதுகளால் பார்க்கவும் -இருப்பதை புகழ்கிறார் –

தேவரீர் திருச் செவியால் பார்க்கிறது –
திருக் கண்களால் கேட்க்கிறது-
இப்படி கரணங்களால் யதேஷ்டமான
தேவரீருக்கு லோக விலக்ஷணமான கரண ஞான சக்த்யாதிகள் ப்ரதிபாதங்கள் ஆகையால்
போனது எல்லாம் வெளியான சாஷாத்காரம் கடிக்கக் குறை என்ன என்கிறார் –

———————-

சார்வஞ்யேந அஜ்ஞ மூலம் ஜகத் அபிததத வாரிதா சாக்ஷி மாத்ராத்
சாங்க்ய யுக்தாத் காரணம் த்வாம் பரயதி பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்
அப்ரேர்ய அந்யை ஸ்வ தந்த்ர அப்ரதிஹதி சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம்
யத்ர இச்சா லேசத த்வம் யுகபத் அகணயந் விஸ்வம் ஆவிச் சகர்த்த–30-

ஹே பகவந் ஐஸ்வரீ ரங்க சாயிந்

ஜகத்–இந்த உலகத்தை

அஜ்ஞ மூலம்–அபிததத –அசேதனத்தால் படைக்கப்பட்டதாகச் சொல்கிறவர்கள்

சார்வஞ்யேந வாரிதா –தேவரீருடைய சர்வஞ்ஞத் வத்தால் நிரசிக்கப் பட்டார்கள் –

யத்ர சதி -யாதொரு ஐஸ்வர்ய குணம் இருக்கும் அளவில்

அப்ரேர்ய அந்யை–பிறரால் ஏவப்படாதவராய்

ஸ்வ தந்த்ர-த்வம் -ஸ்வ அதீனரான தேவரீர்

சத் அசத் கர்ம சைத்ர்யா விசித்திரம் –புண்ய பாப ரூப கர்மங்களின் விசித்திர வகையினாலே பல வகைப்பட்ட

விஸ்வம் இச்சா லேசத-சகலத்தையும் சங்கல்ப லேசத்தினாலேயே

அகணயந்-அவலீலையாய் நினைத்தவராய்

யுகபத் –ஏக காலத்திலேயே

அப்ரதிஹதி -தடையின்றி

ஆவிச் சகர்த்த-படைத்தீரோ

சா ஐஸ்வரீ –அப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்னும் குணமானது

காரணம் த்வாம்–ஜகத்துக்கு உபாதான காரணமாய் இருக்கின்ற தேவரீரை

சாங்க்ய யுக்தாத்–சாங்க்யரால் சொல்லப்பட்ட

சாக்ஷி மாத்ராத்–சாக்ஷி மாத்ர புருஷனின் காட்டில்

பரயதி–வேறு படுத்து கின்றது –

சாங்க்யர் சாக்ஷி மாத்ர புருஷன் என்பர் –

நீயோ சர்வஞ்ஞன்
ஸத்ய ஸங்கல்பன் –
சர்வ காரணன் –

இப்படி சர்வஞ்ஞரான தேவர் மூலமே ஜகத் ஸித்திக்கிறது-

சாங்க்யர் அசேதனமான பிரக்ருதியே மூலம் என்பர்

நிர்விசேஷமாகையால் அஞ்ஞான ப்ரஹ்மமே மூலம் என்பர்

இவர்கள் பக்ஷம் நிரசித்து
பிரேரிரிகர் இல்லா நிரதிசய ஸ்வ தந்தரரான ப்ரதிஹத்தி இல்லாமல்
புண்ய பாப ரூப கர்மா வைச்சித்திரத்தாலே
விசித்ரமமான சர்வ ஜகத்தையும் சங்கல்ப ஏக தேசத்தால் ஏக காலத்தில்
தேவரீர் ஸ்ருஷ்டித்து அருளுகிறது என்கையாய்
சாக்ஷி மாத்திரம் என்கிற சாங்க்ய பக்ஷம் நிரசனம்

அபரிஹத சங்கல்பத்துவம் உமக்கே அசாதாரணம்

——————–

கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-

ஹே ரங்க ராஜ

அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான

தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது

ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி

சதா -எப்போதும்

யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது

சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்

இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்

கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்

ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை

உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி

சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –

ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –

ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –

சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –

சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்

ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்

சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி

சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்

சிலந்தி த்ருஷ்டாந்தம்

———————

ஸ்வ மஹிம ஸ்திதி ஈச ப்ருச க்ரிய அபி
அகலித ஸ்ரம ஏவ பிபர்ஷி யத்
வபு இவ ஸ்வம் அசேஷம் இதம் பலம்
தவ பர ஆஸ்ரித காரண வாரணம் –32-பல குண அனுபவம்-

ஹே ஈச

ஸ்வ மஹிம ஸ்திதி-த்வம் -தன்னுடையதான மஹாத்ம்யத்தில் நிலை நிற்கப் பெற்று இருக்கும் தேவரீர்

ப்ருச க்ரிய அபி-அபரிமிதமான சேஷ்டிதங்களை உடையவராய் இருந்த போதிலும்

அகலித ஸ்ரம ஏவ–ஆயாசம் உண்டாகப் பெறாதவராகவே

அசேஷம் ஜகத் -சகல லோகத்தையும்

வபு இவ ஸ்வம் -பிபர்ஷி–தனது சரீரத்தைப் போலவே வஹிக்கின்றீர்

இதி யத் தத் -என்பது யாது ஓன்று உண்டு -அது –

தவ பலம் -தேவரீருடைய பலம் என்ற குணம்

இதம் -இக் குணமானது

பர ஆஸ்ரித காரண வாரணம்–அந்யாதிஷ்டமாய்க் கொண்டு காரணமாவதை வியாவர்த்திப்பிக்கிறது

வாரணம்-வியாவர்த்தகம் என்றபடி -லோக விலக்ஷணம் என்றபடி

ஸ்வ மஹாத்ம்யத்தாலே அநேக வியாபாரங்கள் பண்ணினாலும் ஸ்ரமம் உண்டாக்காதே
சர்வ ஜகத்தையும் தேவர் சரீரம் போலே பரிக்கிறது என்கிற இது
அதுக்கு பலம் அந்யா திஷ்டிதமாய்க் கொண்டு
காரணமானத்தை வ்யாவர்த்திப்பிக்கிறது என்கிறார் –

—————–

ம்ருக நாபி கந்த இவ யத் சகல அர்த்தாந்
நிஜ சந்நிதே அவிக்ருத விக்ருனோஷி
பிரிய ரங்க வீர்யம் இதி தத் து வதந்தே
ச விகார காரணம் இத வினிவார்யம்–33-வீர்ய குண அனுபவம்-

ஹே பிரிய ரங்க–திரு உள்ளத்துக்கு உகப்பான ஸ்ரீ திருவரங்கம் பெரிய கோயிலை உடையவரே

த்வம் -ம்ருக நாபி கந்த இவ–தேவரீர் கஸ்தூரியின் பரிமளம் போலே

ஸ்வயம் அவிக்ருத–தாம் விகாரப் படாதவராகவே

நிஜ சந்நிதே–தமது சந்நிதிதான மாத்திரத்தாலே

சகல அர்த்தாந்–சகல பதார்த்தங்களையும்

விக்ருனோஷி–விகாரப் படுத்துகின்றீர்

இதி யத் -என்பது யாது ஓன்று உண்டோ

தத் வீர்யம் இதி –அதனையே வீர்ய குணம் என்று

வதந்தே–வைதிகர்கள் சொல்லுகின்றனர்

ச விகார காரணம் இத வினிவார்யம்-இதனால் விகாரத்தை யுடைத்தாய்க் கொண்டு காரணமாகின்றவை
வியாவர்த்திக்க உரியது
விநிவாரயம் -வியவ

வீர்யமாவது கஸ்தூரிகா கந்தமானது -ஸ்வ சந்நிதி மாத்திரத்தாலே தான் அவிக்ருதமாய்க் கொண்டு
சன்னிஹிதருடைய மனஸ்ஸூக்களை விகரிக்குமா போலே

தேவரும் அப்படியே சகல பதார்த்தங்களையும் விகரிப்பிக்கிறது என்று சொல்லுவார்கள்

அத்தால் ச விகாரமான காரணம் வியாவ்ருத்தம் ஆகிறது என்கிறார்

—————-

ஸஹ காரி அபேக்ஷம் அபி ஹாதும் இஹ தத் அநபேஷ கர்த்ருதா
ரங்க தந ஜயதி தேஜ இதி ப்ரணத ஆர்த்திஜித் பிரதிபட அபி பாவுகம்–34- தேஜஸ் குண அனுபவம்

ஹே ரங்க தந

ஸஹ காரி அபேக்ஷம் அபி –சஹகாரி காரணங்களை அபேக்ஷித்து இருக்கின்ற காரணத்தையும்

ஹர்தும்–வியவச்சேதிக்கும் பொருட்டு

இஹ தத் அநபேஷ கர்த்ருதா-அந்த சஹகாரி காரணத்தை எதிர்பாராத
காரணத்வம் என்பது யாது ஓன்று உண்டோ அது தான்

ஜயதி தேஜ இதி –தேஜஸ் குணம் என்று விளங்குகின்றது

இக் குணமானது

ப்ரணத ஆர்த்திஜித்–ஆஸ்ரிதர்களின் ஆர்த்தியைப் போக்கக் கூடியதாகவும்

பிரதிபட அபி பாவுகம்-எதிரிகளை திரஸ்கரிக்கக் கூடியதாகவும் ஆவது –

சிஷ்ட ரக்ஷண துஷ்ட பரிபாலனம் செய்வது இந்த தேஜஸ் குண ஸ்வரூபம் என்ற பஷாந்தரமும் உண்டே –

தேஜஸ்ஸாவது சஹகாரி சா பேஷ காரண வியாவ்ருத்தமான
சஹகாரி நிரபேஷ கர்த்ருத்வ ரூபம் என்று சொல்லப்பட்டதாய்
ஆஸ்ரிதருடைய தாபத் த்ரயத்தையும் தத் விரோதிகளையும் அபிபவியா நின்று கொண்டு
இந்த குணங்களில் உத்க்ருஷ்டம் ஆகிறது என்கிறார்

————–———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா சதுஸ்லோகி -ஸ்ரீ பகவத் திரு அவதார ரஹஸ்யங்கள்-

October 18, 2024

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—
৷৷4.5৷৷

ஸ்ரீ பகவாநுவாச-கண்ணன் கூறினார்
ஹே அர்ஜுனா
தவ ச -உனக்குப் போலே
மே -எனக்கு
பஹூநி ஜந்மாநி .–கணக்கற்றவையான பிறவிகள்
வ்யதீதாநி-கடந்து விட்டன
ஹே பரந்தப-எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே
தாநி ஸர்வாணி-உன்னுடைய மற்றும் என்னுடைய எல்லாப் பிறவிகளையும்
அஹம் -நான்
வேத -அறிவேன்
த்வம் -நீ
ந வேத்த -அவற்றை அறிய மாட்டாய்

ஸ்ரீ பகவான் கூறினான் -அர்ஜுனா உனக்குப் போலே எனக்கும் கணக்கற்ற பிறவிகள் கடந்து விட்டன –
அவை அனைத்தையும் நாம் அறிவேன் -ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய் –

நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் –அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் —

மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –

உன்னைப் போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் –
பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
பத்து என்பது மனசில் பிடிக்க– அஜாயமானோ பஹுதா விஜாயத-
எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் —
பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –

அஜாய மானோ பஹுதா விஜயதா
சன்பம் பல பல செய்து
அணைவது அரவணை மேல் –இணைவனாம் எப்பொருட்கட்க்கும்
தேவ -உபேந்த்ரன்
மனுஷ்ய -ராம கிருஷ்ண
சங்கமம் விலங்கு வராஹ நரஸிம்ஹ ஹயக்ரீவ
ஸ்தாவரம் குப்ஜா மரம்
விஜாயதே -நன்றாக -பிறக்கப் பிறக்க தேஜஸ் விஞ்சி அன்றோ அவனுக்கு -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்

ஜென்ம ப்ரதிபாஸம் -தோற்றங்கள் கழிந்து விட்டன சொல்லாமல் ஜென்மங்கள் கழிந்து விட்டன
உண்மை என்பதை நேராகச் சொல்லாமல் பல -பஹத்வம் -முடிந்தமை -கழிந்தமை -பல பிறவிகள் கழிந்து விட்டன
தவ ச -அவனது த்ருஷ்டாந்தம் -அதே போல் உண்மை யானவையே –
குண ராசிகளின் வெளிப்பாடே அவதாரங்கள்
அவற்றையும் எண்ண முடியாது -இவற்றையும் எண்ண முடியாது –
முன்பு விவஸ்வானுக்கு உபதேசித்தது இவன் நினைவில் உள்ளது என்பதைக் காட்டவே -எனது -உனது -முன் பிறவிகளை அறிவேன் -என்கிறான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை.
கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும்.
அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார்.
ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும்.
வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார்.
இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.

ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை.
பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:

৷৷4.5৷৷ஷ்ரீபகவாநுவாச அநேந ஜந்மநஃ ஸத்யத்வம் உக்தம்’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’ இதி வசநாத்,
தவ ச இதி தரிஷ்டாந்த தயா உபாதாநாச்ச.

৷৷4.5৷৷ஏஷூத்தரஂ க்ரமாத் பகவாநுவாச’பஹூநீத்யாதிபிஃ’. நஹி பூர்வ ஜந்மநாமேகத்வபஹுத்வே பரிஷ்டே, ந ச தஜ்ஜ்ஞாநாஜ்ஞாநே இதி ஷங்காயாமாஹ ‘அநேநேதி’. கதஂ ஜந்மநஃ ஸத்யத்வமுக்தஂ? பஹுத்வாதீதத்வதஜ்ஜ்ஞாநாதி ஹி வாசநிகதயா ப்ரதீயத இத்யத்ராஹ ‘பஹூநீதி’.’அயமபிப்ராயஃ’ ‘இதாநீந்தநஸ்த்வஂ ததாநீந்தநாய கதமுக்தவாந்?’ இதி ப்ரஷ்நே ஜந்மாந்தரேணாஹமுக்தவாந், தச்சேதாநீமநுஸந்தாய வதாமீதி ஸாக்ஷாதுத்தரமுச்யேத, தஸ்ய ச ப்ரஷ்நஸ்யாந்யபரத்வஸ்ய பூர்வஂ ஸஹேதுக முக்தத்வாதவஷ்யஂ ப்ரஷ்டவ்யேஷ்வர்தேஷு யத்பரத்வமத்ர வ்யாகர்துஂ ஷக்யஂ தத்பராண்யேவ பஹூநீத்யாதி விஷேஷணாநி; ஸத்யத்வே ஹி பஹுத்வாதீதத்வாதீநி ஸ்வரஸாநி ஜந்மாநீதி சோக்தம், ந ஜந்ம ப்ரதிபாஸா இதி,’தவ ச'(ஜென்ம தோற்றம் என்று சொல்லாமல் ஜென்மம் என்பதால் அத்வைதி மதம் நிரசனம் )இத்யபரிஷ்டஸ்யார்தஸ்ய உபாதாநமப்யேதத்ஸத்யத்வதரிஷ்டாந்தாபிப்ராயமந்தரேண ந கடதே, ந சார்ஜுநஸ்ய ஜந்ம மித்யா, தஸ்ய வா ததாத்வப்ரதிபாஸஃ, தத்ஸம்பவே வா கரிஷ்ண ஜந்மநி குதோஸ்ய ஸஂஷயஃ? இதி.

————————

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

அஜோபிஸந் -கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு அற்றவனாய் இருந்து கொண்டே-அபி சந் -இப்படியும் இருந்து கொண்டு –
அவ்யயாத்மா -அபி சந் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய்க் கொண்டே
பூதாநாம் -எல்லாப் பொருள்களுக்கும்
ஈஸ்வரோபிஸந்.—ஈஸ்வரனாகவும் இருந்து கொண்டே
ஸ்வாம் ப்ரக்ருதிம் -எனக்கே உரிய அப்ராக்ருத திரு மேனியை
அதிஷ்டாய –தரித்துக் கொண்டே
யாத்ம மாயயா—என் சங்கல்பத்தாலேயே
ஸம்பவாமி -பலபடியாகப் பிறக்கிறேன்

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் –
அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்

அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
ப்ரக்ருதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி
மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம் யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷

மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் –
ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் –
சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
மாத்ரு யோனி பரீஷை –வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
பஞ்ச சக்தி மயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம்

சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு -எதனால் அவதாரம் கேள்விக்கு
ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் –அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
சன் மூன்று இடத்திலும் –

அஜோபிஸந் -பிறவாதவனாக இருந்து கொண்டு —
முடிவு இல்லாதவனாக கொண்டு –
ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –

ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-
எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஸ்ரீ ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூக்தி–
அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
பிறக்கும் அனைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன்
அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம்
குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி –

ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் –
நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் —
சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் —
கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –

கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் –
மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே –
கரு மணி கோமளம் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே —
திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே –
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே –
பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா –

கர்மத்தால் பிறக்காததால் பர ப்ரஹ்மம் -அஜன்-தன்மைகளை விடாமல் பிறக்கிறேன்
அரி அயன் அரன் -அரி -அஜன் -ஹரன் -நான்முகனும் நாபியில் பிறந்ததால் அஜன்

அவ்யய ஆத்மா அபி சந் -கர்மத்தால் ஏற்படும் அழிவு இல்லையே
ராமாவதாரம் -11000-கிருஷ்ண அவதாரம் -110-வருஷங்கள் கழித்து தீர்த்தம் ப்ரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிறார்
பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸமஸ்த பூதங்களின் உள்ளே புகுந்து இயக்குகிறேன் –
இப்படி அஜா அபி சந் -அவ்யயா ஆத்மா பூதா நாம் ஈஸ்வர அபி சந் -அஜஹத் ஸ்வ பாவங்கள் விடாமல் அவதரிக்கிறேன்
அர்ச்சாவதாரங்களிலும் இவை உண்டு
பூர்ணம் –சர்வம் பூர்ணமஸ்ய -அவன் இவன் என்று கூழேன் மின்
உபய லிங்கம் -எல்லா நிலைகளிலும் –
சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸமஸ்த கல்யாண பூர்ணன் அவாப்த ஸமஸ்த காமன்
-இவற்றுக்கும் உப லக்ஷணம்
அதிஷ்டானம் -உள்ளே புகுந்து இயக்குதல் -தன்னுடைய பிரக்ருதியை -அசாதாரண தன்மையை ஸ்வ பாவத்தை -எடுத்துக் கொண்டு அவதரிக்கிறேன் –
முக் குணங்களைச் சொல்ல வில்லை -இங்கு ப்ரக்ருதி என்று –
பஞ்ச உபநிஷத் -ந பூத சங்க ஸம்ஸ்தானம் –
கோப ப்ரக்ருதி கோபமே இயல்வாக்க கொண்ட என்பது போல்
ஸ்வ பாவம் விட்டுப் புரியாதது போல் பிரகிருதி –
திவ்ய மங்கள விக்ரஹம் -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -ரஹஸ்யம் என்கிற அர்த்தத்தில் –
ஸூத்த சத்வ மயம் -பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல –

ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் –அங்கே போலவே இங்கும்
பரம் சுடர் உடம்பாய்

ஆத்ம மாயையால் அவதாரம்
பொய் மித்யை அல்ல -ஆச்சர்யம் -புரிய முடியாதது-விசித்ரம் – -ஸங்கல்பம் என்றவாறு
ஆசையாலே -தனது முடிவு என்பதையே-விசித்திரமான இச்சை – -மாயை -என்கிறார்

மூன்றாலும் புருஷோத்தமன் அஜ அவ்யயாத்மா பூதானாம் ஈஸ்வர –
பிறப்பு -அசேதன வஸ்துக்களுக்கு அழிவு போல் அல்லவே இவனுக்கு – -ஆத்மாவுக்கு போல் பந்தம் போல் இல்லை
அவ்யயம் -தேயாத குறையே இல்லாத -முக்தர் முன்பு ஞானம் மங்கி இருந்தார்களே -அவர்களை விட
உயர்ந்தவன்
பூதாநாம் ஈஸ்வரோபி சந் -நித்யர்களை விட உயர்ந்தவன் -இவர்களும் இவனால் இயக்கப்பட்டு இருப்பார்களே
இப்படி மூன்று சொற்களால் புருஷோத்தமன் இவன் ஒருவனே என்று காட்டி அருளுகிறான்

৷4.6৷৷ஆத்மநஃ அவதார ப்ரகாரஂ தேஹ யாதாத்ம்யஂ ஜந்ம ஹேதுஂ ச ஆஹஅஜத்வா (பத்த வ்யாவ்ருத்தி-பிறப்பிலி -ஸ்தம்ப சம்பவாமி )வ்யயத்வ (ஆங்கு மலராது குவியாது-முக்த  வ்யாவ்ருத்தி )ஸர்வேஷ்வரத்வாதி (நித்ய வ்யாவ்ருத்தி )ஸர்வஂ பாரமேஷ்வரஂ ப்ரகாரம் அஜஹத் ஏவ ஸ்வாஂ ப்ரகரிதிம் அதிஷ்டாய ஆத்ம மாயயா ஸஂபவாமி ப்ரகரிதிஃ ஸ்வபாவஃ, (ப்ரக்ருதி சப்தம் பஞ்ச பூதம் என்றும் ஸ்வ பாவம் என்றும் இங்கு ஸ்வ பாவம் )ஸ்வம் ஏவ ஸ்வபாவம் அதிஷ்டாய ஸ்வேந ஏவ ரூபேண ஸ்வேச்சயா ஸஂபவாமி இத்யர்தஃ.

ஸ்வரூபஂ து ‘ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (யஜுர்வே0 31.18)’க்ஷயந்தமஸ்ய ரஜஸஃ பராகே.’ (ஸாம0 17.1.4.2)’ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மயஃ புருஷஃ’ (சா0 உ0 1.6.6) தஸ்மிந்நயஂ புருஷோ மநோ மயோ மரிதோ ஹிரண்மயஃ.’ (தை0 உ0 1.6.1)’ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யுதஃ புருஷாததி.’ (யஜுர்வே0 32.2)’பாரூபஃ ஸத்ய ஸஂகல்ப ஆகாஷாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காமஃ ஸர்வ கந்தஃ ஸர்வ ரஸஃ.’ (சா0 உ0 3.14.2)’மாஹா ரஜநஂ வாஸஃ’ (பொன்னிற ஆடை போல் -பரி0 உ0 2.3.6) இத்யாதி (உபாஸ்யமான திவ்ய மங்கள விக்ராஹ வர்ணனை )ஷ்ருதி ஸித்தம்.

ஆத்ம மாயயா ஆத்மீயயா மாயயா.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ (வே0 நி0 த0 வ0 22) இதி ஜ்ஞாந பர்யாயஃ அத்ர மாயா ஷப்தஃ. (ஞான ரூபமான சங்கல்பம் )ததா ச அபி யுக்த ப்ரயோகஃ ‘மாயயா ஸததஂ வேத்தி ப்ராணிநாஂ ச ஷுபாஷுபம்’ இதி. ஆத்மீயேந (தன்னுடைய )ஜ்ஞாநேந ஆத்ம ஸஂகல்பேந இத்யர்தஃ.அதஃ அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வஂ ஸர்வம் ஐஷ்வரஂ ஸ்வபாவம் அஜஹத் ஏவ ஸ்வம் ஏவ ரூபஂ தேவ மநுஷ்யாதி ஸஜாதீய ஸ்தாநஂ குர்வந் ஆத்ம ஸஂகல்பேந தேவாதி ரூபஃ ஸஂபவாமி.(பல பிறப்பாய் ஒளி வரும் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் )

தத் இதம் ஆஹ ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ (யஜுர்வேத 31.19) இதி ஷ்ருதிஃ. இதர புருஷ ஸாதாரணஂ ஜந்ம அகுர்வந் தேவாதி ரூபேண ஸ்வஸஂகல்பேந உக்த ப்ரக்ரியயா ஜாயத இத்யர்தஃ.’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந. தாந்யஹஂ வேத ஸர்வாணி’ (கீதா 4.5)’ததாத்மாநஂ ஸரிஜாம்யஹம்৷৷’ (கீதா 4.7)’ஜந்ம கர்ம ச மே திவ்யமேவஂ யோ வேத்தி தத்த்வதஃ.’ (கீதா 4.9) இதி பூர்வாபராவிரோதாச்ச.ஜந்ம காலம் ஆஹ(இவை ரூப பரம் அல்ல ஸ்வரூப பரம் என்றால் விரோதங்கள் வருமே என்றவாறு )

৷৷4.6৷৷அத ப்ரகாராதிப்ரஷ்நத்ரயோத்தரமநந்தரஷ்லோக இத்யாஹ ‘அவதாரேதி’. அஜாவ்யயஷப்தாப்யாஂ ப்ரகரிதிபுருஷயோரிவ ஸ்வரூபதோ தர்மதஷ்ச விகாரா ந ஸந்தீத்யுச்யதே; அஜாவ்யயஷப்தௌ கர்மகரிதஜந்மமரணநிவரித்திபரௌ வா; தேந ஹேயப்ரத்யநீகத்வமுக்தஂ பவதி.’பூதாநாமீஷ்வரோபி’ இதி கல்யாணகுணாகரத்வாப்ரச்யுதிருபலக்ஷ்யதே. யத்வா அஜஷப்தேந ஸ்வரூபதஃ ஷரீரத்வாரா ச ஜந்மயுக்தாசித்க்ஷேத்ரஜ்ஞாப்யாஂ வ்யாவர்தநம்.’அவ்யயாத்மா’ இத்யாத்மஷப்தஸ்ய ஸ்வபாவபரதயா நஞோத்யந்தாபாவபரதயா ச கதாசிஜ்ஜ்ஞாநஸங்கோசாதிமதோ முக்தாத்வ்யாவரித்திஃ.’ஈஷ்வரஷப்தேந’ நித்யாஸங்குசிதஜ்ஞாநேப்யோ நித்யமுக்தேப்யோ வ்யவச்சேதஃ.’அவ்யயாத்மா’ இத்யத்ராபி பூர்வோத்தரவத்’அபி ஸந்’ இத்யநுஷஞ்ஜநீயம். அத்ர ச பூர்வார்தேந தரிதீயசதுர்தபாதாப்யாஂ ச ப்ரஷ்நத்ரயஸ்ய க்ரமாத்பரிஹாரஃ. ஆதிஷப்தேநேஷ்வரத்வோபலக்ஷிதஸர்வஜ்ஞத்வஸத்யஸங்கல்பத்வாவாப்தஸமஸ்தகாமத்வாதீநி கரிஹ்யந்தே.’ஸர்வமிதி’ ந கஸ்யசிதபி ஸ்வபாவலேஷஸ்ய ஹாநிரிதி பாவஃ. பரமேஷ்வரஸம்பந்தி பாரமேஷ்வரஂ, பரமேஷ்வரத்வப்ரயுக்தமித்யர்தஃ.’அபி ஸத்’ இத்யஸ்ய வர்தமாநநிர்தேஷஸ்ய தாத்பர்யமாஹ ‘அஜஹதேவேதி’. ஏதேந தத்ததவதாரேஷு தாஸு தாஸ்வவஸ்தாஸு ச பாரமேஷ்வரஸ்வபாவஸ்ய ஸத ஏவ ஸ்வேச்சாயா திரோதாநமாத்ரமிதி ஸூசிதம்; ததா சாஹுஃ’குணைஃ ஷட்பிஸ்த்வேதைஃ ப்ரதமதரமூர்திஸ்தவ பபௌ ததஸ்திஸ்ரஸ்தேஷாஂ த்ரியுகயுகலைர்ஹி த்ரிபிரபுஃ. வ்யவஸ்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்கரிதிவஷாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணிதமஹாமங்கலகுணஃ৷৷வரதராஜஸ்தவே16 இதி. அவதாரேஷு ஹி பரமேஷ்வரத்வஂ வ்யபதிஷ்யதே.’ஈஷந்நபி மஹாயோகீ’ ம.பா.5.68.14’கரிஷ்ண ஏவ ஹி லோகாநாஂ’ ம.பா.2.38.23’வ்யக்தமேஷ மஹாயோகீ பரமாத்மா’ வா.ரா.6.1.11 இத்யாதிபிஃ. நாத்ர ப்ரகரிதிஷப்தேந’ப்ரகரிதிஂ ஸ்வாமவஷ்டப்ய விஸரிஜாமி’ 9.8 இத்யாதிஷ்விவ த்ரிகுணா ப்ரகரிதிருச்யதே, அவதாரேஷ்வபி தத்விக்ரஹஸ்ய த்ரிகுணோபாதாநத்வாபாவாத். யதோக்தஂ’ந பூதஸங்கஸஂஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மநஃ’ ம.பா.’ந தஸ்ய ப்ராகரிதா மூர்திர்மாஂஸமேதோஸ்திஸம்பவா’ வா.பு.பூ.34.40வ.பு.14.41. இதி. அதோத்ராவதாரோபயுக்தாந்யா ப்ரகரிதிருச்யத இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரகரிதிஃ ஸ்வபாவ’ இதி.’ப்ரகரிதிஃ பஞ்சபூதேஷு ஸ்வபாவே மூலகாரணே’ இதி நைகண்டுகாஃ. விக்ரஹஸ்யாபி’நித்யாலிங்கா ஸ்வபாவஸஂஸித்திஃ’ ர.ப்ரா. இத்யேகாயநஷ்ருத்யநுஸாரேண நிருபாதிகஸ்வாஸாதாரணவிஷேஷணத்வாத் ஸ்வபாவஷப்தேநோபாதாநம். கோபலீவர்தந்யாயாச்சாத்ர விக்ரஹாக்யஸ்வபாவவிஷேஷபரதா, ஸ்வபாவபர்யாயப்ரகரிதிஷப்தேநாபரிதக்ஸித்திலாபேபி’ஸ்வாஂ’ இதி நிர்தேஷோ ஜீவஸாதாரணத்ரிகுணப்ரகரிதிவ்யவச்சேதார்த இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஸ்வமேவேதி’.’அந்தரதிகரணபாஷ்யேப்யேதத்வ்யாக்யாதஂ”ஸ்வமேவ ஸ்வபாவமாஸ்தாய ந ஸஂஸாரிணாஂ ஸ்வபாவமித்யர்தஃ’ இதி. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர விக்ரஹபரத்வஂ’அதிஷ்டாய’ இத்யநேநஸூசிதஂ ஸ்வாதந்த்ர்யஂ ச தர்ஷயதி ‘ஸ்வேநைவ ரூபேணேதி’. யத்வா’ஸ்வமேவ ஸ்வபாவஂ’ இத்யாத்யேகவாக்யஂ ஸங்கலிதார்தபரம், தததிஷ்டாயேத்யேததந்தஂ பூர்வார்தஸ்யார்தஃ,’ஸ்வேநைவ ரூபேண’ இதி து தரிதீயபாதஸ்ய’ஸ்வேச்சயா’ இதி சதுர்தபாதஸ்ய. அஸ்யாஂ யோஜநாயாஂ ப்ரகரிதிஷப்தோவதாரோபாதாந பூததிவ்யவிக்ரஹமேவாஹ.அவதாரவிக்ரஹோபாதாநபூதப்ரகரிதேர்பஹுஷ்ருதிஸித்ததாமாஹ ‘ஸ்வஸ்வரூபமிதி’.’ஸ்வரூபஂ’ ப்ரஹ்மணோபரம்’ இதி ப்ரயோகாத் ஸ்வரூபஷப்தோத்ர விக்ரஹபரஃ. “ஆதித்யவர்ணஂ தமஸஃ பரஸ்தாத்” இத்யநேநாப்ராகரிதத்வஂ, ஸ்வாஸாதாரணநிரதிஷயதீப்தியுக்தத்வஂ ச ஸித்தம். தத்ப்ரகரணே ச தேஷவிஷேஷவர்தித்வநித்யஸூரிஸேவ்யத்வலக்ஷ்மீபதித்வாதிகமபி பாவ்யம்.’க்ஷயந்தம்’ இத்யத்ர ரஜஷ்ஷப்தோ மூலப்ரகரிதிவிஷயஃ, ந து லோகவிஷயஃ’தமஸஃ பரஸ்தாத்’ இத்யநேந துல்யார்தத்வாத். ரஜோகுணகத்வாச்ச ரஜஷ்ஷப்தேநோபாதாநம். வ்யாப்தஸ்ய தேஷவிஷேஷே’க்ஷயந்தம்’ இதி நிவாஸவசநாத்விக்ரஹவத்த்வஂ ஸித்தம். ஏவஂ பரமபதநிலயநித்யவிக்ரஹஸத்பாவஃ ஷ்ருதித்வயேந தர்ஷிதஃ. தஸ்யைவ விக்ரஹஸ்யாவதாரதஷாஂ தர்ஷயதி ‘ய ஏஷ’ இதி.’ஆதித்யவர்ணஂ”ஹிரண்மயஃ’ இதி ச ஏக ஏவ வர்ணஃ ப்ரதியோகிபேதாதீநப்ராதிகூல்யாநுகூல்யாப்யாஂ முகபேதேந நிர்திஷ்யதே. யதாஹுர்த்ரமிடாசார்யாஃ’ஹிரண்மய இதி ரூபஸாமாந்யாச்சந்த்ரமுகவத்’ இதி. யத்வா, ஹிரண்யவிகாரத்வவ்யவச்சேதார்தஂ த்ரமிடபாஷ்யம். தத்ர’மயூரகண்டச்சவிஷுத்தஹேம’ இதி ஷில்பஷாஸ்த்ராநுஸாராச்ச்யாமத்வஸித்திஃ. அதவா ஸ்வேச்சயா தத்ர தத்ர ரூபபேதேபி ந தோஷஃ; யுகாதிபேதே பர்யாயதஃ ஸிதரக்தாதிவிகல்பிதவாஸுதேவாதிவ்யூஹரூபபேதவத். தஸ்யைவ ஹரிதயாந்தர்வர்தித்வே ஷ்ருதிமுதாஹரதி ‘தஸ்மிந்நிதி’.’மநோமய’ இதி விஷுத்தேந மநஸா ப்ரசுரஃ க்ராஹ்ய இத்யர்தஃ. ஆப்யாஂ ஷ்ருதிப்யாமுபாஸநஸ்தாநவிஷேஷஸ்திதிர்தர்ஷிதா. காரணவாக்யேபி தஸ்ய ஸத்பாவஂ தர்ஷயதி ‘ஸர்வ’ இதி.’வித்யுத’ இதிபதஂ வித்யுத்வர்ணாதித்யந்யத்ர வ்யாக்யாதம். “ஷாந்த உபாஸீத” சாஂ.உ.3.14.1 இதி பூர்வோக்தமுபாஸநஂ’ஸ க்ரதுஂ குர்வீத’ இத்யநூத்ய தச்சேஷதயா விதீயமாநேஷு பாரமார்திகேஷு குணேஷு விக்ரஹஸ்ய ஸஹபாடஂ தர்ஷயதி ‘பாரூப’ இதி. பாஸ்வரரூப இத்யர்தஃ. “மாஹாரஜநஂ வாஸஃ” இத்யேஷா ஷ்ருதிஃ ஷாரீரகே வ்யாக்யாதா “தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபஂ யதா மாஹாராஜநஂ வாஸஃ” பரி.உ.2.3.6 இத்யாதிநாகாரவிஷேஷஂ சாபிதாய, இதி. ஸர்வாஸு சாஸு ஷ்ருதிஷு விலக்ஷணஸ்தாநவிஷிஷ்டத்வவர்ணவிஷேஷபுருஷஷப்தாதிபிஃ பூர்வோபாத்தபுருஷஸூக்தவாக்யைகார்தத்வஂ ஸித்தம். ஷஷ்டீஸமாஸே ஸ்வஸ்வாமித்வலக்ஷணஃ ஸம்பந்தோத்ர விவக்ஷித இத்யாஹ ‘ஆத்மீயயேதி’.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ இதி நிகண்டூபாதாநம். ஸ்வேச்சாவதரணப்ரகரணே ஸ ஏவார்த உசித இதி பாவஃ. நிகண்டுஸித்தமர்தஂ தந்மூலபூதாபியுக்தப்ரயோகேண த்ரடயதி ‘ததா சேதி’.’மாயயா வேத்தி’ இதி நிர்தேஷாதியஂ மாயா நிகண்டுஸித்தஂ ஜ்ஞாநமேவ, பரப்ரஸித்தமாயாயாஸ்தத்த்வார்தப்ரகாஷகத்வாபாவாதிதி பாவஃ. ஏதேந ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர த்ரிகுணாத்மகப்ரகரிதிவிஷயத்வஂ மாயாஷப்தஸ்ய மித்யார்தபரத்வஂ ச’ஷங்கரோக்தஂ’ ப்ரத்யுக்தம்.’ஆத்மமாயயா’ இத்யஸ்ய ந பரமார்ததோ லோகவதிதி வ்யவச்சேதஷ்சாயுக்தஃ; அந்யேஷாமபி ஜந்மநஸ்தந்மதே மித்யாத்வாத்யவிஷேஷாத். பலிதஂ வக்துமாஹ ‘ஆத்மீயேந ஜ்ஞாநேநேதி’. ஜ்ஞாநமாத்ரஸ்ய கதமவதாரஹேதுத்வம்? ததா ஸதி ஸர்வதாவதாரப்ரஸங்காதித்யத்ராஹ ‘ஆத்மஸங்கல்பேநேத்யர்த’ இதி.

ஷ்லோகஸ்ய பிண்டிதார்தஂ விஷதயதி ‘அத’ இதி.’அபஹதபாப்மத்வாதீத்யநேந தஹரவித்யாஸுபாலோபநிஷத்ப்ரபரிதிஷு’ நிர்தோஷத்வமங்கலகுணாகரத்வப்ரதிபாதகாநாஂ வாக்யாநாஂ ஸ்மாரணம்.’ஸமஸ்தகல்யாணகுணாத்மகத்வமித்யாதிநா”ஸமஸ்தகல்யாணகுணாத்மகோஸௌ ஸ்வஷக்திலேஷாத்தரிதபூதஸர்கஃ. இச்சாகரிஹீதாபிமதோருதேஹஃ ஸஂஸாதிதாஷேஷஜகத்திதோஸௌ’ வி.பு.6.5.84 இத்யாதி ஸ்மாரிதம். ஈஷ்வரஸ்வபாவஃ ஸர்வோப்யுபயலிங்கத்வேந ஸங்கரிஹ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’ஸர்வமைஷஂ ஸ்வபாவமிதி’. ஸ்வமேவ ரூபமித்யாதிநா’ஸமஸ்தஷக்திரூபாணி தத்கரோதி ஜநேஷ்வரஃ. தேவதிர்யங்மநுஷ்யாதிசேஷ்டாவந்தி ஸ்வலீலயா’ வி.பு.6.7.70 இத்யாதி பகவத்பராஷரவசநஂ ஸ்மாரிதம். அஜத்வஷ்ருத்யா ஸ்மரிதிரியஂ பாத்யேதேத்யத்ராஹ ‘ததிதமாஹேதி’. அஜாயமாநத்வஜாயமாநத்வோக்த்யா வ்யாஹதத்வாதந்யபரேயஂ ஷ்ருதிரித்யத்ராஹ ‘இதரேதி’.’அஜாயமாநஃ’ இதி ஸாமாந்யநிஷேதோ’பஹுதா விஜாயதே’ இதி விஷேஷவிதாநஸந்நிதாநாத்ஸங்குசிதவிஷயஃ. அதோ விரோதே ஷாந்தே தாத்பர்யாந்தரஂ ந கல்ப்யம். ந சேதஂ “பஹு ஸ்யாம்” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இதிவஜ்ஜகத்ரூபேண பஹுபவநம் “தஸ்ய தீராஃ பரிஜாநந்தி யோநிம்” இத்யநந்தரவாக்யைர்முமுக்ஷூணாமத்யந்தோபகாரகாவதாரரஹஸ்யஜ்ஞாநஸ்யைவ வக்துமுசிதத்வாத், அஸ்ய ச ததைகார்த்யாதிதி பாவஃ. ஸத்யமித்யாத்வாப்யாஂ விரோதபரிஹாரஷங்காஂ ப்ரதிக்ஷேப்துஂ’ப்ரகரிதிஂ ஸ்வாமதிஷ்டாய’ இத்யஸ்ய விக்ரஹபரத்வே மாயாஷப்தஸ்ய ஜ்ஞாநபரத்வே ச ஹேத்வந்தரமாஹ’பஹூநீதி’.’வேத, ஸரிஜாமிதிவ்யம்’ இதி ஷப்தைர்ஜந்மநோ புத்திபூர்வத்வேச்சாமாத்ரகரிதத்வதிவ்யத்வாதீநி ப்ரதீயந்தே. மாயாதிஷப்தஸ்யாவித்யாதிபரத்வே து ததகிலஂ விருத்யேத. நஹ்யத்ர ஜந்மஷப்தோ ஜந்மப்ரதிபாஸவாசீ; ந ச ப்ரத்வஸ்தபர்யாயோ வ்யதீதஷப்தோ பாதபரஃ; ந ச மாயாகரிஹீதஸ்ய ஸர்வவேதித்வம்;நாபி மித்யாபூதே ஸரிஷ்டிஷப்தஃ; ந ச த்ரிகுணப்ரஸூதஸ்ய திவ்யத்வமிதி பாவஃ.

—————

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்
—৷৷4.7৷৷

பாரத—பரத குலத்தில் உதித்தவனே
யதா யதா ஹி -எந்த எந்தக் காலங்களில்
தர்மஸ்ய -அறத்திற்கு
க்லாநிர் பவதி -வாட்டம் ஏற்படுகிறதோ –
அ தர்மஸ்ய-அறத்திற்கு எதிரான மறத்திற்கு
அப்யுத்தாநம் -(பவதி )–எழுச்சி ஏற்படுகிறதோ-உத்தானம் -எழுவது
ததா-அந்த அந்தக் காலங்களில்-ததா-ஒரு முறை இருந்தாலும் இரண்டு முறை சொன்னதாகவே கொள்ள வேண்டும்
அஹம் -நான்
ஆத்மாநம் -என்னையே
ஸருஜாமி –படைத்துக் கொள்கிறேன்

பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்

பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் –
தர்மத்திற்கு தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –

யதா யதா -இரட்டை -எப்போது எப்போது-யுகத்துக்கு உள்ளேயும் -கால நியமம் இல்லாமல் – -யுகம் தோறும் அவதாரம் அடுத்த ஸ்லோகத்தில் –
கால அநியமும் யுக அநியமும் -இரண்டையும் சொன்னவாறு –
ஜீவாத்மாவுக்கு -கர்மம் யுந்த பிறவி -கர்மம் பழுத்து பயன் தர வேண்டுமே –
இவனுக்கோ காருண்யம் இல்லாத சமயமே இல்லையே -இயற்கையான காருண்யம்
மீனாய் ஆமையுமாய் –கற்கியுமாம் –இன்னம் கார் வண்ணனே –பிறந்து பிறந்து ஒளி விஞ்சி அன்றோ இருக்கிறான் –

வேதத்தால் சொல்லப்பட்டதே தர்மம்
இதம் குரு -இதம் மா குரு சொல்லுமே -இத்தைச் செய் நன்மை பயக்கும் -இத்தைச் செய்யாதே தீமை விளையும் செய்யாதே என்றும் சொல்லும்
ஜைமினி சோதனா – லக்ஷண அர்த்த -ஸ்ரேயஸ் தரும் படியும் இருக்கும்

க்லானி-குறைபாடு -மறையும் பொழுது தான் பிறக்கிறேன் என்று இல்லை -சிறிது குறைபாடு ஏற்பட்டாலே பிறக்கிறான்
அப்படி ரக்ஷிக்கும் தர்மம் ஒரு நாளும் அழியாதே -சநாதனம் -அதனாலே ஆகும் –

ஆத்மாநம் -ஸ்வரூபத்தை இங்கே சொல்ல வில்லை -உடலோடு கொடியவன் என்பதும் இல்லை -திருமேனியும் நித்யம் –
அப்ராக்ருத விக்ரஹத்துடன் அவதரிப்பதையே சொன்னவாறு -அஹம் ஸ்ருஜாமி -நானே என்னைப் படைத்துக் கொள்கிறேன் –

৷4.7৷৷ந கால நியமஃ அஸ்மத் ஸஂபவஸ்ய; யதா யதா ஹி தர்மஸ்ய வேதேந உதிதஸ்ய சாதுர் வர்ண்ய சாதுராஷ்ரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய(வேதத்தால் விதிக்கப்பட்ட  வர்ணாஸ்ரம வரம்பு மீறாமல் ) கர்தவ் யஸ்ய க்லாநிஃ பவதி, யதா யதா ச தத் விபர்ய யஸ்ய (வேத பாஹ்ய குத்ருஷ்டிகள் )அதர்மஸ்ய அப்யுத்தாநஂ ததா அஹம் ஏவ (ஏவகாரம் -நானே -ஸஹ காரி நிரபேஷமாக சாஷாத்தாக நானே )ஸ்வ ஸஂகல்பேந உக்த ப்ரகாரேண ஆத்மாநஂ ஸரிஜாமி.ஜந்மநஃ ப்ரயோஜநம் ஆஹ(ஸ்வரூபத்தை பிறப்பிக்க முடியாதே -ஆத்மாநாம் -திவ்ய மங்கள விகிரஹத்துடன் படைத்துக் கொள்கிறேன் என்கிறான் )

(தன்னை தூஷிப்பதைப் பற்றி சொல்லாமல் -வேதம் வாழ்தல் எல்லாமே வாழும் -சாஸ்த்ர யோனித் வாத் -வேதைக சமைதி கம்யன் -ஊற்றம் உடையாய் -உளன் -சுடர் மிகு ஸ்ருதியும் உளன்)

৷৷4.7৷৷கதா? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மகாலமாஹேதி’. யுகா நியமஸ்ய வக்ஷ்யமாணத்வாத்’யதா யதா’ இதி வீப்ஸா யுகாந்தர்வர்திகாலாநியமபரேத்யபிப்ராயேணாஹ ‘ந காலேதி’. ஜீவவத்புண்யாபுண்யவிபாககரிதோ வா, வ்யவஸ்தித ஸ்வஸங்கல்பகரிதோ வா, மந்வந்தரமஹாகல்பாதிரூபோ வா காலநியமோ நாஸ்தீத்யர்தஃ. ப்ரமாணதஃ ஸ்வரூபதஷ்ச க்லாநிப்ரகாரஸூசநாய பாஹ்யதர்மதர்மைகதேஷவ்யவச்சேதாய ச’வேதேநோதிதஸ்யேத்யாதிவிஷேஷணம்’.’வேதேநோதிதஸ்ய கர்தவ்யஸ்ய’ இதி தர்மலக்ஷணமப்யுக்தஂ பவதி. அதர்மஷப்தே நஞோ விரோதிவிஷயத்வமபிப்ரேத்யோக்தஂ’தத்விபர்யயஸ்யேதி’. ததஷ்சாவைதிகாகமோதிதஸ்ய வர்ணாஷ்ரமாதிவ்யவஸ்தாரஹிதஸ்ய தத ஏவாகர்தவ்யஸ்யேதி பூர்வோக்தப்ரகாரவைபரீத்யஂ பலிதம். தர்மக்லாநேரதர்மோத்தாநஸ்ய ச துலாக்ரநமநோந்நமநவத்பரஸ்பராவிநாபாவித்வஂ ச தர்ஷிதம். ததேத்யத்ராபி’யதாயதா’ இத்யேதத்ப்ரதிநிர்தேஷரூபத்வாத்வீப்ஸாநுஸந்தேயா. தர்மஸ்ய க்லாநிமபி ந ஸஹே, கிஂ புநர்விச்சேதஂ? இதி க்லாநிஷப்ததாத்பர்யம். ஏவமதர்மஸ்யோத்கமமாத்ரமபி ந ஸஹே, கிமுத ஷாகாநுஷாகதாஂ? இத்யப்யுத்தாநஷப்தாபிப்ரேதம்.’அஹஂ ஸரிஜாமி’ இத்யத்ராபேக்ஷணீயாந்தராதர்ஷநாத்’அஹமேவ ஸ்வஸங்கல்பேநேத்யுக்தம்’. தேந காலஸ்யாப்யதிஷ்டாதுஸ்தஸ்ய காலபரதந்த்ரத்வஂ பரிஹரிதஂ பவதி.’ஆத்மாநஂ ஸரிஜாமி’ இத்யேதந்ந தாவத்ஸ்வரூபவிஷயஂ, தஸ்ய நித்யத்வாத், ஆத்மாஷ்ரயாதிப்ரஸங்காச்ச. நாபி ஜீவவிஷயஂ, தஸ்ய ப்ரகரணாஸங்கதத்வாத். நாப்யாத்யவிக்ரஹவிஷிஷ்டஸ்வாத்மவிஷயஂ, தஸ்யாபி ரூபஸ்ய நித்யத்வாத்; அதோவதாரவிக்ரஹ விஷிஷ்டஸ்வாத்மாத்ர’ஆத்மாநம்’ இதி நிர்திஷ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’உக்தப்ரகாரேணேதி’.

———–

எந்தக் காலத்தில் பிறக்கிறாய் என்பதுக்கு கீழ் பதில்
இதில் பிறந்ததனால் பிரயோஜனம் என்ன என்பதற்குப் பதில்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

ஸாதூநாம்-நல்லோர்களை
பரித்ராணாய –நன்கு ரக்ஷிப்பதின் பொருட்டும்
துஷ் க்ருதாம்–தீயவர்களை
விநாஸாய -அழிப்பதின் பொருட்டும்
ச .–உம்மைத் தொகை
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய -அறத்தை நன்கு நிலை நிறுத்துவதில் பொருட்டும்
ஸம்பவாமி யுகே யுகே—அந்த அந்த யுகங்களில் பலபடியாகப் பிறக்கிறேன் –

நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் –
க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
சாது சம்ரக்ஷணார்தம் தானே முக்கிய காரணம் -அது பண்ண
துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி
இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் –
சாது -வர்ணாஸ்ரம தர்மம் நழுவாமல்–பிரகலாதன் –மாலாகாரர்–போன்ற பக்தர்கள்
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப் படையும் இருக்க —
கதறி கண்ணா கண்ணா என்று அலர–முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ –
கொடியேன் பால் காண வாராய்-

சாலப் பல நாள் -யுகம் தோறும்-உயிர்கள் காப்பானே-கோலத் திரு மா மகளுடன்-

ரஷணம் என்றாலே -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் தானே –

சாதுக்களை ரக்ஷிப்பதற்காக மேலோட்டம்
வைஷ்ணவ அக்ரேஸர் –அநந்யார்ஹ பக்தி ஒன்றிலே நோக்கம் –
ஆஸ்திகர் -தேவதாந்த்ர பரர்களும் – அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாய் பூஜிப்பவர்களும் -நேராக அவனையே -மூன்றாம் வகை
இங்கு சாது என்றது இந்த மூன்றாம் வகை -உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன் –
2-56-வஸீ கார ஸம்ஹிதை பார்த்தோம் -ஞான யோகத்தில் மிக உயர்ந்த நிலை -ப்ரஹ்லாதன் எடுத்துக் காட்டு –
உடலையும் பொருட்படுத்தாமல் கடிப்பதை அறியாமல் இருந்தானே
பரித்ராணாம் -முழுமையாக நன்றாக ரக்ஷிப்பது -சேர்ந்தால் தரிப்பர் -ஒரு பகல் விஸ்லேஷம் ஆயிரம் ஊழி போல் –
சாதுக்களுக்கு -வெளி விரோதி -தீயோர்-உள் விரோதி -அவனைக் காணாமல்-அணைக்காமல் – இருப்பது -தன்னைக் கொடுத்து தரித்து இருக்கப் பண்ண வேண்டுமே –
ச காரம் -உம்மைத்தொகை -அன்வாசயம் -இரண்டாம் பக்ஷ பிரயோஜனம் -என்றவாறு -இத்தை அவதரிக்காமலே செய்ய முடியுமே
சாது பரித்ராணாமே முக்ய பிரயோஜனம் -அவதரித்தது தானே தன்னைக் காட்டவும் அணைக்கவும் பெறப்பெறுவார்கள்
தர்மம் ஸம் ஸ்தாபனம் -நன்றாக நிலை பெறச்செய்வது ரிஷிகள் ஆச்சார்யர்கள் மூலம் செய்யாமல் -நேராகச் செய்வது
செய்து காட்டி -அனுஷ்டானம் -பெருமாள் -இளைய பெருமாள் -பரத்தாழ்வான் -சத்ருக்கனன் மூலம் விசேஷ தர்ம அனுஷ்டானம் –
அதுக்கும் மேல் யாரைக் குறித்து செய்ய வேண்டும் என்றும் காட்டி அருளி -அஹம் ஹி ஸர்வ யஜ்ஜாநாம் போக்தா பிரபு ஏவச –
ஆராதனத்தில் ஊற்றம் வர அவனைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமே -இதுவே தர்ம ஸம் ஸ்தாபனம் –

பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக –
தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் -காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்று தானா நல்லார் அடையும் பயன்?
காக்கப்  படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :

৷4.8৷৷ஸாதவ உக்த லக்ஷண தர்மஷீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாஷ்ரயணே ப்ரவரித்தா மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் அவாங் மநஸகோசரதயா(நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் -ஈனச் சொல்லே
நானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தினாலும் எங்கு எய்தும் )மத்தர்ஷநாத் றதே ஸ்வாத்ம தாரண போஷணாதிஸுகம் அலபமாநா அணு மாத்ர காலம் அபி கல்பஸஹஸ்ரஂ மந்வாநாஃ (ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ )ப்ர ஷிதில ஸர்வகாத்ரா பவேயுஃ (கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -உள்ளம் சோர –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் )இதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந (கோவிந்தற்கு ஓர் குற்றேவல் செய்யாமல் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி )தேஷாஂ பரித்ராணாய தத் விபரீதாநாஂ விநாஷாய ச (பரித்ராணாயா -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உட்பகை -விஸ்லேஷாதிகள் -இங்கே வெளிப்பகை -நெருப்பு என்று நின்ற திருமாலே -)க்ஷீணஸ்ய வைதிக தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப ப்ரதர்ஷநேந தஸ்ய ஸ்தாபநாய ச (சாஷாத் தர்மம் -தன்னை நிலை நிறுத்த -சிந்தையந்தி மாலாகாரர் போல்வாருக்கக் காட்டி அருள )தேவ மநுஷ்யாதி ரூபேண யுகே யுகே ஸஂபவாமி. (ஸம் -பிறந்து ஒளி விஞ்சி -பெருமை தேடி )க்ருத த்ரேதாதி யுக விஷேஷ நியமஃ அபி நாஸ்தி இத்யர்தஃ.

৷৷4.8৷৷கிமர்தஂ? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மந’ இதி. ஸாதுஷப்தோத்ர நாஸமர்தாதிவிஷயஃ, துஷ்கரிச்சப்தப்ரதியோகிரூபத்வாத்; அதஃ ஸுகரிதிவிஷயோயமித்யபிப்ராயேணோக்தஂ ‘உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி.’உக்தலக்ஷணஷப்தேந”வேதேநோதிதஸ்ய’ இத்யாதி பராமரிஷ்யதே. யே புநருக்தலக்ஷணதர்மேண தேவதாந்தராண்யேவ உபாஸதே; யே ச வைஷ்ணவாஃ’ப்ரதர்ஷநவித்யாதிந்யாயேந’ தத்தத்தேவதாவிஷிஷ்டவேஷேணைவ பகவந்தமுபாஸதே; ந தேஷாமவதாரப்ரதர்ஷநேத்யந்தநிர்பந்தஃ; தத்தத்தேவதாகஞ்சுகிதவேஷேணைவ ததபேக்ஷிதஸகலப்ரதாநோபபத்தேரித்யபிப்ராயேணோக்தஂ ‘வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பகவத்பக்தவர்யா இத்யர்தஃ.’உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி’வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பதாப்யாஂ’ந சலதி நிஜவர்ணதர்மதோ யஃ’ வி.பு.3.7.20’வர்ணாஷ்ரமாசாரவதா’ வி.பு.3.8.9 இத்யாதி ஸூசிதம். யதாவஸ்திதமுபாயஂ ப்ராப்யஂ சாவலம்பமாநா இதி ச பலிதம். த்ராணஂ ஹி நாமாத்ராநிஷ்டநிவர்தநபூர்வகேஷ்டப்ராபணம். ஏவஂவிதவைஷ்ணவாக்ரேஸராணாமநிஷ்டஷ்ச பகவதலாபஃ; தத்ஸமாஷ்ரயணபூர்வகஂ தல்லாபேநைவ ச தஸ்யாநிஷ்டஸ்ய நிவர்தநமித்யபிப்ரேத்யோச்யதே’மத்ஸமாஷ்ரயண’ இத்யாரப்ய’ஆலாபாதிதாநேநேத்யந்தம்’. நஹ்யமீஷாமந்நபாநதாம்பூலாதிதாரணபோஷணாதிகம், கிந்து’அஹஂ கரிஷ்ண ஏவ ஸர்வஂ’ இத்யபிப்ராயேணோச்யதே’மத்தர்ஷநாத்விநா ஸ்வாத்மதாரணபோஷணாதிகமலபமாநா’ இதி. அதர்ஷநஂ சாநிஷ்பந்நயோகாவஸ்தத்வாத். யத்யமீ மத்ஸாக்ஷாத்காராத்பூர்வமல்பஂ காலஂ லோசநே மீலயித்வா ஸஹேரந், ததாஹமபி தாதரிஷீஂ தேஷாமவஸ்தாஂ ஸஹேயாபி, நத்வேதே ததேத்யபிப்ராயேணோக்தஂ ‘க்ஷணேத்யாதி’.’த்ருடிர்யுகாயதே த்வாமபஷ்யதாம்’ பாக.10.31.15 இத்யாதிகமிஹ பாவ்யம். அதர்ஷநதுஃகஸ்ய ச சரமாவஸ்தோச்யதே’ப்ரஷிதிலஸர்வகாவா பவேயுரிதி’. ஸ்வவிஷ்லேஷபரிக்லிஷ்டாநாமுஜ்ஜீவநாய ப்ரவரித்தஸ்ய க்ரமாத்பக்தாநுபாவ்யாகாரா உச்யந்தே’மத்ஸ்வரூபசேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேநேதி’. நஹ்யபவர்கஸுகாதிவதவதாரமந்தரேண ஸ்வஸங்கல்பமாத்ரேணைவ தத்தாதுஂ ஷக்யமிதி பாவஃ.’பரித்ராணாய’ இத்யத்ரோபஸர்கேண விவிதாநிஷ்டநிவரித்திபூர்வகவிவிதேஷ்டப்ராப்திஃ ஸூசிதேத்யபிப்ராயேண’மந்நாமகுணகர்மேத்யாதிகஂ தாரணேத்யாதிகஂ ஸ்வரூபசேஷ்டிதேத்யாதிகஂ’ சோக்தம். ஸ்வரூபமத்ர விக்ரஹஃ. ஏவஂ ஸாதூநாமாந்தரபயாத்பரித்ராணமுக்தம்; அத தேஷாமேவ பாஹ்யபயாத்பரித்ராணமுச்யத இத்யபிப்ராயேணாஹ’தத்விபரீதாநாஂ விநாஷாய சேதி’. சகாரோந்வாசயார்தஃ. இதமப்யுக்தமந்தராதித்யாதிகரணபாஷ்யே’ஸாதவோ ஹ்யுபாஸகாஃ, தத்பரித்ராணமேவோத்தேஷ்யம்; ஆநுஷங்கிகஸ்து துஷ்கரிதாஂ விநாஷஃ, ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தேஃ’ இதி. பாகவதாநாமபராதோ ஹி துஷ்கரித்த்வகாஷ்டேத்யபிப்ராயேண’தத்விபரீதாநாமித்யுக்தம்’.’ரிபூணாமபி வத்ஸலஃ”மச்சரைஸ்த்வஂ ரணே ஷாந்தஸ்ததஃ பூதோ பவிஷ்யஸி’ இதிவத்துஷ்கரிதாமபி விநாஷோ நாத்யந்தவிநாஷஃ; கிந்து, வைபரீத்யஹேதுபூதராக்ஷஸப்ரபரிதிஷரீரக்ரந்த்யாதிவிநிவர்தநம்; தந்நிவரித்தௌ ச தேஷாமபி தார்மிகத்வஂ ஸம்பவேதிதி ஸோபி தர்மஸஂஸ்தாபநபர்யவஸிதஃ. மச்சேஷபூதமாராதநஂ மயைவ ஹி ஸ்தாபநீயமித்யபிப்ராயேண’மதாராதநரூபஸ்யேத்யுக்தம்’. அநுஷ்டாநமுகேநோபதேஷமுகேந ச தர்மப்ரவர்தநஂ வ்யாஸாதித்வாராபி ஷக்யம்; ஆராத்யரூபப்ரதர்ஷநேந பக்த்யுத்பாதநமவதாராஸாதாரணப்ரயோஜநம்; பரஷ்ஷதபருஷவாதீ ஜந்மத்ரயஷத்ருஃ ஷிஷுபாலோபி ஹி கரிஷ்ணதர்ஷநேந ப்ரீதிமாந்பூத்வா முக்திஂ கத இத்யபிப்ராயேண’ஆராத்யஸ்வரூபப்ரதர்ஷநேநேத்யுக்தம்’.’ருபௌதார்யகுணைஃ புஂஸாஂ தரிஷ்டிசித்தாபஹாரிணாம்’ வா.ரா.2.3.29 இத்யாதி ச பாவ்யம். ஏதேந தர்மஸ்ய ஸம்யக்ஸ்தாபநஂ ஹி ஸ்வபர்யந்ததயா ஸ்தாபநமித்யுக்தஂ பவதி.’யுகே யுகே’ இதி வீப்ஸாதாத்பர்யஂ வ்யநக்தி’கரிதத்ரேதாதீதி’. ந து ப்ரதியுகமவஷ்யஂ ஸம்பவாமி, நாபி யுகவிஷேஷநிர்பந்த இதி பாவஃ.

————

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் –
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே —
ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம்
––ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–

அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
வியாபாரத்தாலும்-
அலங்காரத்தாலும் –
விக்ரமத்தாலும் –
பிரதாபத்தாலும்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
புகழ்ந்து பேசத் தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்

மக்களுக்குத் திவ்யம் -ஆச்சர்யம் என்று மட்டும் இல்லை
தனக்கே ஆனந்தம்
தன் சரிதை கேட்டு பெருமாள் மகிழ்ந்தானே -ம்ருத சஞ்சீவனம் –
பீஷ்மர் சொல்லக் கேட்டான்
பூரி ஜெகந்நாதப்பெருமாள் இந்த சேவை தானே
ஸ்ரீ ரோகிணி தேவி சொல்ல கேட்டு கண்கள் விரிந்து ஸேவை

அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –

அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக் கொள்கிறான்.
அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான்.
இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும்
அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.

ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது.
ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான்.
மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப் பற்றி
நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.

இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திர பூர்வமானவர்களல்ல என்றும்,
சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும்
உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே
ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திர பூர்வமாகவும்
ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம்.
ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.

திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள்.
அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள்.
அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குந்தான் போக முடியும்.
அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய் வரலாம்.
அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட
கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை.
ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்தது ஏழு ரிஷிகள் மாத்திரமே
அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர்.
எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே,
சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.

ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை
மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம்.
ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது.
வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக் கண்ணால் தான் இந்த உண்மையைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.

என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:

৷4.9৷৷ஏவஂ (இப்படிப்பட்ட -கீழ் ஸ்லோகங்களில் சொன்னபடி )கர்ம மூல பூத ஹேய த்ரிகுண ப்ரகரிதி ஸஂஸர்க ரூப ஜந்ம ரஹிதஸ்ய (பிறப்பால் தாழ்ச்சி இல்லையே ப்ரக்ருதி சம்பந்தம் இல்லையே-கர்ம  மூலம் இல்லை இச்சா க்ருஹீதாம் )ஸர்வேஷ்வரத்வ ஸர்வ ஜ்ஞத்வ ஸத்ய ஸஂகல்பத்வாதி ஸமஸ்த கல்யாண குணோபேதஸ்ய ஸாது பரித்ராண மத்ஸமாஷ்ரயணைக ப்ரயோஜநஂ திவ்யம் அப்ராகரிதஂ மதஸாதாரணஂ (அசாதாரணம் -அந்தர்யாமி போல் அல்லவே-ஸாஷாத்தாக )மம ஜந்ம சேஷ்டிதஂ ச (அப்ராக்ருதமாய் -தாழ்ச்சி அற்றதாய் -பரம போக்யமாய் -நெஞ்சால் நினைப்பரிய -அளவிட முடியாத -இமையோர் தமக்கும் நினைப்பரிதால் -அம்ருத மயமாய் -இவை மூன்றும் ஜென்மங்களுக்கு சேஷ்டிதங்களுக்கும் உண்டே -மே திவ்யம் -அதி மானுஷ –எனக்கு வியப்பாக உள்ளதே -அலாப்ய லாபம் போல் )தத்த்வதஃ யோ வேத்தி (உள்ளபடி அறிந்து -சம்சயம் விபர்யயம் அல்லாமல் )ஸ வர்தமாநஂ தேஹஂ பரித்யஜ்ய புநஃ ஜந்ம ந ஏதி மாம் ஏவ ப்ராப்நோதி.மதீய திவ்ய ஜந்ம சேஷ்டித யாதாத்ம்ய விஜ்ஞாநேந வித்வஸ்த ஸமஸ்த மத் ஸமாஷ்ரயண விரோதி பாப்மா அஸ்மிந் ஏவ ஜந்மநி யதோதித ப்ரகாரேண மாம் ஆஷ்ரித்ய மதேக ப்ரியோ மதேக சித்தோ மாம் ஏவ ப்ராப்நோதி.தத் ஆஹ(அவன் ஜென்மம் நமக்கு என்று கோல நம் ஜென்மம் தந்தை கால் விலங்கு போல் வெடிக்கும் அன்றோ-பிறந்தவாறும் -திடமாக இங்கேயே இருக்க சரணாகதி அன்றோ -நீ நெய் உண்டாய்– நாம் கண் உண்டோம்– பிரதிகூலர் மண் உண்டார்கள்  )

ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –

৷৷4.9৷৷ப்ராஸங்கிகஸ்யாவதாரயாதாத்ம்யகதநஸ்ய பரமப்ரகரிதமோக்ஷோபயோகித்வமுச்யதே ‘ஜந்ம கர்ம’ இதி ஷ்லோகேந.’ஏவமிதி’ ‘அஜோபி’ 4.6 இத்யாதிநோக்தப்ரகாரேணேத்யர்தஃ.’திவ்யஂ’ இத்யஸ்யைவார்தஃ’அப்ராகரிதமிதி’.’மதஸாதாரணமித்யநேந’ “பஹு ஸ்யாஂ ப்ரஜாயேய” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இத்யுக்தஜந்மவ்யவச்சேதஃ. வஹ்ந்யௌஷ்ண்யவத்தர்மிக்ராஹகப்ரமாணஸித்தஃ பதார்தாந்தரேஷ்வதரிஷ்டஷ்ச ப்ரகாரோ ந தர்கபாத்ய இதி பாவஃ.’ஜந்ம கர்ம ச மே திவ்யம்’ இத்யுக்தே ஜந்மவத்தத்தேதுபூதஂ புண்யமபி கிமஸ்தி?. இதி ஷங்காவ்யுதாஸாய’சேஷ்டிதமிதி’ வ்யாக்யாதம்.’தத்த்வத’ இதி ஸஂஷயவிபர்யயரஹிதமித்யர்தஃ.’தேஹஂ பரித்யஜ்ய’ இத்யுக்தே ப்ராரப்தகர்மபர்யவஸாநதேஹஂ பரித்யஜ்யேதி ஸாதாரணப்ரதீதிஃ ஸ்யாத், தத்வ்யவச்சேதாய ‘வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யுக்தம்’. ஏதச்ச’யோ வேத்தி ஸ புநர்ஜந்ம நைதி’ இதி வேதிதரித்வாவஸ்தாபேக்ஷயா புநர்ஜந்மப்ரதிஷேதாத்பலிதம்.’புநர்ஜந்ம நைதி’ இத்யநேந விரோதிநிவரித்திருச்யதே;’மாமேதி’ இதீஷ்டப்ராப்திஃ. ந கேவலஂ விரோதிநிவரித்திமாத்ரேண ஸ்வாத்மாநந்தாநுபவமாத்ரம், அபித்வவதாரரஹஸ்யஜ்ஞாநவாந்மாமேவ ப்ராப்நோதீத்யவதாரணார்தஃ. நநு வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யாத்யயுக்தம், ப்ராரப்தகர்மாவஸாநே ஹி மோக்ஷஃ ஷாரீரகே நிர்ணீதஃ, ப்ராரப்தஸ்ய ச கர்மணஃ கியந்தி ஜந்மாநி ஸாத்யாநீதி ந நியமஃ; வ்யாஸாதிஷ்வநியமதர்ஷநாத். ந ச ஜந்மகர்மஜ்ஞாநமாத்ராந்மோக்ஷஃ, தீர்ககாலநைரந்தர்யாதரஸேவநீயதுஷ்கரதரகர்மஜ்ஞாநாநுகரிஹீதோபாஸநஷாஸ்த்ரார்தநைரர்தக்யப்ரஸங்காதித்யத்ராஹ ‘மதீயேதி’. திவ்யஜந்மசேஷ்டிதஜ்ஞாநேநோபாஸநவிரோதிநாஂ ஸமஸ்தாநாஂ பாபாநாஂ நிவரித்தத்த்வாதஸ்மிந்நேவ ஜந்மநி ஜந்மாந்தராரம்பகபாபாஂஷப்ரஷமநஸமர்தபுஷ்கலோபாஸநநிஷ்பத்தேர்ந ஜந்மாந்தரபரிக்ரஹஃ. ஸ்மரந்தி ச’விநிஷ்பந்நஸமாதிஸ்து முக்திஂ தத்ரைவ ஜந்மநி’ வி.பு.6.7.35 இதி. ஏவஂ சோபாஸநபௌஷ்கல்யஹேதுதயாஸ்யாபிதாநாத் பரம்பரயா மோக்ஷஸாதநத்வமிதி நோபாஸநஷாஸ்த்ரவையர்த்யமிதி பாவஃ.’யதோதிதப்ரகாரேண மாமாஷ்ரித்யேதி’ புஷ்கலத்யாநாவஸ்தோச்யதே.’மதேகப்ரிய’ இதி து பக்திரூபாபந்நதோக்திஃ. அஹமேக ஏவ ப்ரியஃ ப்ரீதிவிஷயோ யஸ்ய ஸ மதேகப்ரியஃ’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ 7.17 இதி வக்ஷ்யதே. ஏதேந புருஷார்தாந்தரநிஷ்டவ்யவச்சேதஃ.’மேதகசித்த’ இதி ஸமாத்யவஸ்தா. மய்யேகஸ்மிந்நேவ சித்தஂ யஸ்ய ஸ மதேகசித்தஃ.

———–———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஶ்ரீஶாரீரக மீமாம்ஸா பாஷ்யத்தில் – ஶ்ரீபாஷ்யத்தில் – ஜிஜ்ஞாஸாதிகரண ஸாரம்

October 17, 2024

வேதாந்தமென்னும் உபநிஷத்துக்களின் கருத்தை அறிவது நம்போலியர்க்கு அரிதாகையால் எம்பெருமான் க்ருஷ்ணத்வைபாயனரெனும் வ்யாஸ மஹர்ஷியாய் அவதரித்து ஶாரீரகமீமாம்ஸா- ஸூத்ரங்களால் அதைத் தெளிவித்தான்.

இவை நான்கு அத்யாயங்களும் ஒவ்வொரு அத்யாயத்திலும்
நான்கு பாதங்களும் கொண்டு, 156 அதிகரணங்களில் 545 ஸூத்ரங்களாக அமைந்துள்ளன. அதில்
ப்ரஹ்மம் ஜகத்காரணமென்றும், அதை மறுக்க இயலாதென்றும், அதை அடைய வழிகளும், அதை அடைந்து பெருவாழ்ச்சி பெறுவதும் முறையே நான்கு அத்யாயங்களில் விளக்கப்பட்டுள்ளன.
அதில் முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் முதல் ஸூத்ரம் –
ஓம் அதாதோ ப்ரஹ்மஜிஜ்ஞாஸா (1.1.1) என்று.
இந்த ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் இந்த ஒரே ஸூத்ரம் தான் உள்ளது. இது இந்த ஶாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தகுந்தது தான் என ஸாதிக்கிறது.
இந்த ஸூத்ரத்தில், அத, அத:, ப்ரஹ்மஜிஜ்ஞாஸா என மூன்று சொற்கள் உள்ளன. பின்னர், அதனால், ப்ரஹ்மத்தின்(தை) அறி(வில்)ய ஆவல் என தனிச்சொற்பொருட்கள்.
அதிகரணம் என்றால் ‘விஷயம்’, ‘ஸம்ஶயம்’, ‘பூர்வபக்ஷம்’, ‘ஸித்தாந்தம்’, ‘ப்ரயோஜநம்’ இந்த ஐந்தும் கூடியது.
இந்த முதல் ஸூத்ரத்துக்கு ப்ரஹ்மஜிஜ்ஞாஸா ‘விஷயம்’. அதாவது ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய ஆவல்.
அது தொடங்கத் தக்கதா, இல்லையா என ‘ஸம்ஶயம்’, அதாவது ஐயம். தொடங்கத்தகாதது என ‘பூர்வபக்ஷம்’ அதாவது, முதற்கூற்று. தொடங்கத் தக்கது, வேண்டியது என ‘ஸித்தாந்தம்’ அதாவது முடிவான கொள்கை. ‘பயனா’வது, இந்த ஶாஸ்த்ரத்தின் அர்த்தநிர்ணயம், அதாவது, ப்ரஹ்மத்தைப் பற்றி ஐயந்திரிபற அறிதல்.
‘परीक्ष्य ल ोकान् कर्मचितान् ब्राह्मण ो निर्वेदमायात् …. तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्’ என்பது விஷய வாக்யம்.
ப்ரஹ்மவிசாரம் தானாக ஆவல் ஏற்பட, அதாவது தன் விருப்பத்தால், உந்துதலால் ஏற்படுவதால், இந்த விதிவாக்யம், அப்ராப்த ப்ராபகமான ‘அபூர்வவிதி’யல்ல, அதாவது, அறியாததை அறிவிப்பதாகிய அல்லது அடையாததை அடைவிக்கும் கட்டளை அன்று. பின் ஏதென்னில், ‘நியமவிதி’யாம், அதாவது,
ஆசார்யனின் உபதேஶத்தை முன்னிட்டே ப்ரஹ்ம விசாரம் செய்யவேண்டுமென்கிற நியமம்
அறிந்திராததாகையால் ‘அபிகச்சேத்’ என்று நியமவிதி, அதாவது, ஒன்றைச் செய்ய விரும்பினால், அதை எவ்வாறு செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுவதாம்.

இப்பொழுது, இந்த ஸூத்ரத்தின் ஸித்தாந்தமாவது, ‘அத’ – அநந்தரம், அதாவது, பிறகு, வேதத்தினுடைய முதல் பகுதியான கர்மகாண்டமென்பதின் அர்த்தத்தை விசாரித்த பிறகு என்றபடி. ‘அத:’ – ப்ரஹ்மஜ்ஞானமில்லாத கர்மங்கள் குறைவானதும் நிலையற்றதுமான பலன்களையே அளிப்பவை-யாகையாலும், ப்ரஹ்மஜ்ஞானம் அளவற்ற, நிலையான பலனை அளிப்பதாகக் காண்பதாலும்,
‘ப்ரஹ்மஜிஜ்ஞாஸா’, அதாவது ப்ரஹ்மவிஷயகமான ஶாரீரகமீமாம்ஸை – இந்த ஶாஸ்த்ரம் – செய்யத் தக்கதென்றபடி. இங்கு ‘கர்த்தவ்யா’ என்று ஒரு சொல்லைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
‘ப்ரஹ்ம’ஶப்தத்தால் இயற்கையாகவே எல்லாவித விடத்தக்க பண்புகளுக்கும் எதிர்த்தட்டாய், எல்லா உயர்ந்த நற்பண்புகளுக்கெல்லாம் ஒரே இருப்பிடமான திருமகள் கேள்வனாம் ‘புருஷோத்தமன்’ சொல்லப்படுகிறான்.
ப்ரஹ்மவிசாரம் கர்த்தவ்யம்’ என்கிற ஜ்ஞானம் இந்த ஸூத்ரத்தில் விதிக்கப்படுகிறது.

இந்த அதிகரணம் ஶ்ரீபாஷ்யத்தில் மிக விரிவாக உரைக்கப்பட்டுள்ளது. ஸித்தாந்தத்தின் பல முக்கிய அம்ஶங்கள் இங்கு மற்ற ஸித்தாந்தங்களுடன் ஒப்பிட்டு முடிவிடப் படுகின்றன. அதனால் லகுபூர்வபக்ஷ, ஸித்தாந்தங்கள், மஹாபூர்வபக்ஷ, ஸித்தாந்தங்களெனவும், (மஹா ஸித்தாந்தத்திலும் ஆத்மஸ்வரூபஶோதனம் – {‘அஹம்’ என்ற சொல்லின் பொருளே ஆத்மா, அவன் ‘அறியும் சுடர்’ என்றும், ‘அறிவாகி அறிவதுமாய்’ என்றும், ‘தான் தனக்குக் தன்னாலே தோன்றித் தன்னோர் ஒளியணைக்குங் குணத்தாலும் தன்னைக்கண்டு’ என்று முதலியவற்றின்படி ஜ்ஞான ஸ்வரூபனும், ஜ்ஞான குணகனுமாகிறான்} –
ஶ்ருதிப்ரக்ரியை, புராணப்ரக்ரியை, ஏழுவித ஆக்ஷேபங்கள் – [ஶங்கர அத்வைத மதத்தின்
அவித்யாவாதத்தைக் கண்டிக்க அதன் ஆஶ்ரயம் (இருப்பிடம்), திரோதானம் (ப்ரஹ்மத்தை மறைத்தல்),ஸ்வரூபம் (பிரிவில்லா இருளொன்று பிணக்கொன்றில்லாப் பெருவெயிலை மறைத்துலகங் காட்டுமென்னல்), அநிர்வசநீயம் (உளதுமல்லது இலதுமல்லதெனல்), ப்ரமாணம் (அவித்யையை நிரூபிக்கும் ப்ரமாணமின்மை), நிவர்தகம் (அதை ஒழிக்குமது), நிவ்ருத்தி (அதன் ஒழிதல்) சொல்லமுடியாமையால் ஸப்தவித அநுபபத்திகள் – பொருத்தமின்மைகள்)], பின்னர், முடிவில் ‘அதிகரணபூர்வபக்ஷம்’ மீமாம்ஸகர் வாயிலாக வர, அதன் ஸமாதானத்துடன் ‘அதிகரணஸித்தாந்தம்’ ஆகியவை இதில் இடம் பெறுகின்றன.

வேதத்தின் பொருளை விசாரித்து அறிவித்தல் என்கிற ‘மீமாம்ஸா’ (உயர்ந்த விஷயத்தைப் பற்றிய விசாரம்) ஶாஸ்த்ரம் ஒன்றாகையாலே அதில் முதல் பாகமான கர்மமீமாம்ஸையினுடைய கடைசியில்,
‘ஸ விஷ்ணுராஹ ஹி’, ‘தம் ப்ரஹ்மேத்யாசக்ஷதே’ என்று ப்ரஹ்மம் சொல்லப்பட்டதால் அந்த
ப்ரஸங்கத்தாலே, மேல் பாகத்தின் விசாரமாகிய ‘ப்ரஹ்மமீமாம்ஸை’யை ஆரம்பிக்கிறார் வ்யாஸ பகவான்.
‘அத்ராயமதஶப்த’ முதலிய வாக்யங்களால் ‘அத’, ‘அத:’ என்கிற சொற்களுக்கு முறையே
ஆநந்தர்யத்தையும் – பின்னர் வருதல், நடந்த கர்ம விசாரத்துக்கு ஹேதுபாவத்தையும் – காரணமாதலையும், பொருளாக விவரித்தார்.
‘அதீதஸாங்க’ முதலியவைகளால் கர்மவிசாரம் முந்தி நடந்ததென்றும், ப்ரஹ்மவிசாரம் மேல்
நடக்கவேண்டியதென்றும், கர்மங்களுக்கு குறைந்ததாகவும், நிலையற்றதுமான பலனை மட்டுமே கொடுக்கத்தக்க தன்மையின் முடிவுடன் கூடிய ப்ரஹ்மஜ்ஞானத்தின் அளவற்ற, அழிவற்ற பலனைக் கொடுப்பதில் மேலெழுந்தவாரியான எண்ணமும், ப்ரஹ்ம விசாரத்தை ஆரம்பிப்பதற்கு ‘ஹேது’ – காரணம் என்று காட்டினார்.
‘ப்ரஹ்மணோ ஜிஜ்ஞாஸா’ என்றாரம்பிக்கும் வாக்யத்தால் ‘ப்ரஹ்மண:’ என்கிற ஆறாம் வேற்றுமைக்கு கர்மார்த்தத்வத்தை நிரூபித்தார்.
ஆறாம் வேற்றுமை, ‘ஷஷ்டீ ஶேஷே’ என்னும் ஸூத்ரத்தால் ஸமாஸத்தில் (சொற்றொகையில்) உள்ள சொற்களின் பொதுவான தொடர்பைக் குறிக்கும். இது ‘ஸம்பந்தஸாமாந்யம்’ எனப்படும்.

இதைக்கொண்டாலும், ‘அறிய ஆவல்’ என்ற விடத்து ‘எதை அறிய?’ எனக் கேள்வி தோன்றுமாதலால், ப்ரஹ்மம் கர்மாவென்று கிடைக்கும்.
ஆயினும், குறிப்பாகக் ‘கர்த்ருகர்மணோ: க்ருதி’ என்று விஶேஷித்து ஷஷ்டியை விதித்திருப்பதால், இங்கு கர்மார்த்தத்தில் – ‘கர்மணி’ – ஷஷ்டீ வந்திருக்கிறது. (இங்கு ‘கர்தா’ எனக் கொள்ளல் பொருந்தாது

  • ‘ப்ரஹ்மம் அறிய விரும்புகிறது’ எனப் பொருளாதலால். தவிரவும் ‘கர்தா’, ‘கர்ம’ இரண்டும் வரில் கர்மாவையே கொள்ள வேண்டும், ‘உபயப்ராப்தௌ கர்மணி’ என்ற ஸூத்ரத்தால்). அதாவது ஷஷ்டியானது கர்த்ருகர்ம இரண்டுக்கும் பொதுவாயினும், தாபத்ரயத்தால் வருந்துபவனுக்கே ப்ரஹ்மஜிஜ்ஞாஸாகர்த்ருத்வம், ப்ரஹ்மத்துக்கே கர்மத்வம், ஆவதால் ‘கர்மணி ஷஷ்டீ’, என்றார்.
    ‘ப்ரதிபதவிதாநா ச ஷஷ்டீ ந ஸமஸ்யதே’ என்ற வார்திகத்தால் ‘ப்ரஹ்மஜிஜ்ஞாஸா’ என்ற ஷஷ்டீஸமாஸம் வராதென்ற கேள்விக்கு ‘க்ருத்யோகா ச ஷஷ்டீ ஸமஸ்யதே’ என்ற ப்ரதிப்ரஸவம் (விலக்குக்கு விலக்கு) உள்ளதால் தடையின்றி கர்மணி ஷஷ்டீ ஸமாஸம் வருமென்றார். ‘உபபதவிபக்தி’யை விட ‘காரகவிபக்தி’ வலிமையுள்ளது என்றபடி.
    ‘ப்ரஹ்மஶப்தேந ச’ என்கிற வாக்யங்களினால் ஶப்த ஶக்தியாலும் அர்த்த ஸாமர்த்யத்தாலும் ‘ப்ரஹ்ம’ஶப்தம் புருஷோத்தமனை ப்ரதிபாதிக்கிறதென்று ஸமர்த்தித்தார். ப்ரஹ்ம ஶப்தத்துக்குப் பெருமை உடையதும் பெருமை அடைவிப்பதும் பொருள், அதாவது, ‘ப்ருஹத்த்வம்’, ‘ப்ரும்ஹணத்வம்’ என்றபடி.
    ‘ஜ்ஞாதுமிச்சா’ முதலியவைகளால் – ‘அப்ராப்தே ஹி ஶாஸ்த்ரம் அர்த்தவத்‘ – ஏற்கனவே அறிந்திராததை அறிவிப்பது தானே ஶாஸ்த்ரமெனப்படும். ப்ரஹ்ம விசாரமோ ராகப்ராப்தம் – விருப்பத்தால் செய்வது, ஆகையால் விதிக்கத்தக்கதல்ல.
  • மற்றும் உபநிஷத்துக்களுக்கு ஸித்தவஸ்துபரத்வமில்லாததால் ‘ஸத்யம்
    ஜ்ஞானமி’த்யாதி வாக்யம் ப்ரஹ்மத்தைத் தெரிவிக்கமாட்டாதாகையாலே வேதாந்தஶாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கதன்றென்று மீமாம்ஸகன் ஆக்ஷேபிக்க,
    அந்த ஶங்கைக்கு, குழந்தைகளுக்கு சொற்களுக்கும் அவற்றின் பொருட்களுக்கும் உள்ள தொடர்பின் அறிவு, பெரியவர்கள், அப்பா, அம்மா, மாமா, முதலியவர்களையும், அம்புலி, மாடு, மனிதன், விலங்குகள், பறவை, பாம்பு முதலியவற்றையும் கைவிரல்களால் சுட்டிக் காட்டி அவற்றைக் குறிக்கும் சொற்களை வழங்குவதால் ஏற்படுவது கண்கூடாக இருப்பதால், கார்யபொருள் அல்லாதவற்றிலும்
    ‘வ்யுத்பத்தி’ – சொற்பொருட்தொடர்பு – உண்டாகுமென்று விடையளித்து,
    மீமாம்ஸா விசாரத்துக்கு ‘கர்த்தவ்யத்வம்’ முன் அறியப்படாததால் அதை விதிப்பதிலே நோக்கு என்றும்
    விதி ஶப்தத்துக்கு அறியாததை அறிவிப்பதில் தவிர, செய்யாதவனைச் செய்விப்பதில் நோக்கு எனல் தேவையில்லை எனவும் காட்டியருளினார்.
    இப்படி இந்த அதிகரணத்தின் சில முக்கிய விஷயங்கள் தொகுக்கப்பட்டன.
    .

—————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்

October 17, 2024

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

அதி கரணங்களை ஆராய்ந்து-ப்ரஹ்ம ஸ்வரூப ரூப குண வை லக்ஷண்யங்களை அறிந்து
அவனே உபாயம் உபேயம் ரக்ஷகன் -ஸ்வாமி -பக்தி உழவன் -பேற்றுக்குத் த்வரிப்பவன் அறிந்து அனுபவிக்கிறோம்
545-ஸூத்ரங்கள் தான் இதில்
700 -அநுஷ்டுப் ஸ்லோகங்கள் கீதையை விட சுருக்கம்
ராமானுஜர் சரம உபதேசங்களில் -ஆறு கட்டளைகளில் முதலில் -ஸ்ரீ பாஷ்யம் கற்றும் மற்றவருக்கும் சொல்ல வேண்டும் என்று அருளிச் செய்துள்ளார்

உபநிஷத்துக்களை நன்றாக அறிய உதவும்-

வேதத்தின் தேவை

  • வர்ஷார்த்த₂ம் அஷ்ட வ் ப்ரயதேத மாஸாந்
    நிஶார்த்த₂ம் அர்த₄ம் தி₃வஸே யதேத |
    வார்த₄க்ய ஹேதோ : வயஸா நவேந
    பரத்ர ஹேதோர் இஹ ஜன்மநா ச ||

நாலு மாதம் இருக்கும் மழைக் காலத்துக்காக மீதமுள்ள எட்டு மாஸங்களிலும், இரவுக்காகப் பகலிலும், முதுமைக்காக இளமையிலும் உழைப்பது போல், இப் பிறப்பில் மறுமைக்காக உழைக்க வேண்டும்.பெரியாழ்வார் -வல்லவ தேவன் சரித்திரம் அறிவோம்-

  • அம் மறுமையைப் பற்றி ஸாதாரண மனிதர்கள் கூட அன்றாட வாழ்க்கையில் எளிமையாகப் பேசுகிறோம். ஆத்மா, பாபம், புண்ணியம், ஸ்வர்கம், நரகம், ஸ்ருஷ்டி, ப்ரளயம், பரமாத்மா, முக்தி – இந்தச் சொற்கள் யாருக்குத் தான் தெரியாது?
  • ஆனால் இந்தப் பொருள்களை நாம் புலன்களைக் கொண்டோ ,அநு மானம் கொண்டோ செய்தோ அறிந்து கொள்ளவில்லை . இவற்றை எல்லாம் நமக்குக் கற்பிக்கும் ஒப்பற்ற, என்றும் அழியாத, தவறுகளே இல்லாத நூல்கள் தான் வேதங்கள்.
  • வேதத்தை பகவான் தன் மனதில் எப்போதும் கொண்டுள்ளார்.
    ஒவ்வொரு முறையும் ஸ்ருஷ்டிக்கும் போது வேதங்களை அதே வடிவத்தில், ஒரு எழுத்தோ வரியோ மாறாமல் உலகிற்கு உபதேசிக்கிறார். அதனால் தான் வேதம் நித்யம் என்று கூறுகிறோம்.

வேதத்துக்கு “அபௌருஷேயம்” என்றுதான் லக்ஷணம் சொல்லியிருக்கிறது-மந்திரங்களை ரிஷிகள் இயற்றியிருந்தால் அவர்களுக்கு “மந்த்ர கர்த்தா” என்றே பெயர் இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் அவர்களுக்கு “மந்த்ர த்ரஷ்டா” என்றுதான் பெயர் இருக்கிறது. இதற்கு “மந்திரங்களைக் கண்டவர்கள்” என்றே அர்த்தம்; செய்தவர்கள் என்று அர்த்தமில்லை.-ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (II.4.10) “ரிக் -யஜுஸ்-ஸாம-அதர்வ வேதங்கள் ஈஸ்வரனின் சுவாஸமாகும்” என்று சொல்லியிருக்கிறது. “நிச்வஸிதம்” – மூச்சுக்காற்று – என்ற வார்த்தையை இந்த இடத்தில் போட்டிருக்கிறது.

நமக்கு ஸ்வாஸமில்லாவிடில் நாம் உயிரோடு இருக்க முடியுமா? முடியாதல்லவா? அப்படித்தான் பரமாத்மாவுக்கு உயிராக இருக்கிற ச்வாஸமே வேதம். அநாதியான அவர் என்றென்றும் உயிரோடு இருந்திருக்கிறார் என்பதால், வேதமே அவருடனேயே, அவரது ஸ்வாஸமாக, அநாதியாக இருந்திருக்கிறது என்று ஆகிவிடுகிறது!-பகவானும் கீதையில் சொல்கிறபோது2, “நானே எல்லா வேதங்களாலும் அறியப்படுகிறவன் (வேதைச்ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய:) ” என்று சொல்லிவிட்டு தன்னை “வேத க்ருத்” (அதாவது வேதத்தை பண்ணினவன்) என்று சொல்லிக் கொள்ளாமல், “வேதாந்த க்ருத்” என்றே, அதாவது வேதங்களுக்கு முடிவான தத்வத்தை உண்டு பண்ணினவன் என்றே சொல்லிக் கொள்கிறார். தன்னை வேதம் அறிந்தவனாக (வேதவித்) சொல்லிக் கொள்கிறாரே அன்றி “வேத க்ருத்” என்று சொல்லவில்லை. வேதாந்தம் என்கிற தத்வ ரூபத்தில் ஜீவர்களுக்குப் பிரயோஜனமாகப் பிரகாசிப்பதற்கு முந்தியே, ஜீவ சிருஷ்டிக்கு முன்னாலுங்கூட சப்த ரூபத்தில் இந்த வேதங்கள் ஈச்வரனோடு ஈச்வரனாக அவனது மூச்சாக இருந்திருக்கின்றன.-“தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய ஆதி கவயே” என்று பாகவதத்தின் முதல் ச்லோகம் சொல்கிறது. அதனால் பரமாத்மாவின் ஹருதயத்தில் எப்போதுமே வேதம் இருந்து கொண்டிருக்கிறது, அதை அவர் இயற்றவில்லை என்று தெரிகிறது. அவர் சங்கல்பம் பண்ணின மாத்திரத்தில் பிரம்மாவுக்கு அத்தனை வேதங்களும் தெரிந்துவிட்டன. அந்த சப்தங்களை வைத்துக் கொண்டு அவர் ஸ்ருஷ்டி பண்ண ஆரம்பித்து விட்டார்.

——————

  • வேத வ்யாஸரின் பங்கு
  • உலகில் யாரும் வேதத்திற்குத் தவறான பொருளைக் கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்வதற்காகத் தான் பகவான் தானே வேத வ்யாஸராக அவதரித்தார்.
  • வேதங்களை எல்லாம் வகுத்துக் கொடுத்து, மஹாபாரதம்
    என்கிற பெரும் இதிஹாஸத்தையும் ஶ்ரீபாகவத புராணத்தையும் இயற்றி, உபநிஷத்துக்களில் ஏற்படும் ஸந்தேஹங்களைப் போக்குவதற்காக ப்ரஹ்ம ஸூத்ரங்களையும் எழுதினார் வேத வ்யாஸர்.
  • வேத வ்யாஸர் தன்னுடைய நான்கு சீடர்களான பைலர், வைச ம்பாயனர், ஜைமிநி மற்றும் ஸுமந்துவுக்கு நான்கு வேதங்களையும் கற்பித்து, உலகில் பரப்பினார்.
  • வேதத்தில் முன் பகுதி (பூர்வ காண்டம்) கர்மங்களைப் பற்றிப் பேசுகிறபடியால் கர்ம காண்டம் ஆகும். அதன் பொருளை ஆராய்வதற்காக கர்ம மீமாம்ஸை -பூர்வ மீமாம்ஸை என்ற நூலை ஜைமிநி மஹரிஷி எழுதினார்.
  • வேதத்தின் பின் பகுதி (உத்தர காண்டம்) ப்₃ரஹ்மத்தைப் பற்றிப் பேசுகிறபடியால் ப்ரஹ்ம காண்டம் ஆகும்.அதன் பொருளை ஆராய்வதற்காக ப்ரஹ்ம மீமாம்ஸை – உத்தர மீமாம்ஸை என்ற நூலை வேத வ்யாஸர் இயற்றினார்.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் |
பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் ||3

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம : || 4

அன்னமாய் மறையை வெளிப்படுத்திய அம்மான் –
வேத அபகாரம்- மீட்க மத்ஸ்ய அவதாரம்
வேதாந்த பொருள் அபஹாரம் -மீட்கவே வ்யாஸர் அவதாரம்
பாற் கடலை -மந்தரம் -அம்ருதம்
ஸ்ருதி சாகரம் -மதி புத்தியையே மத்தாக மஹா பாரத சந்திரன் அருளியவர்
ஸம்யக் நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூத்ரம்

பவிஷ்யத் புராணே
“பிபேதி கஹநாத் சாஸ்த்ராத் நரஸ் தீவ்ராதி வௌஷதாத் |
பாரத: ஶாஸ்த்ர ஸாரோ அயமத: காவ்யாத்மநா க்ருத:||“

மனிதன் கடினமான ஸாஸ்த்ரத்தைக் கண்டு கடுமையான மருந்தைக் கண்டது போல் பயப்படுகிறான் -ஆதலால் எல்லா ஸாஸ்த்ரங்களின் ஸாரமாகிய இம் மஹா பாரதம் காவ்யா ரூபமாகச் செய்யப்பட்டுள்ளது -என்றும்

மாத்ஸ்யே
“யஸ்ய த்வை பாயந: புத்ர: ஸ்வயம் விஷ்ணு ரஜாயத |
ப்ரகாஸோ ஜநிதோ யேந மஹா பாரத சந்த்ரமா:||

மஹா பாரதம் என்னும் சந்த்ரனால் உலகத்துக்கு வெளிச்சம் கொடுத்தவராகிய த்வைபாயனர்-த்வீபத்தில் பிறந்தவர் என்னும்
புத்ரராக ஸாஷாத் விஷ்ணுவே பராசரருக்குப் பிறந்தார் என்று மத்ஸ்ய புராணத்திலும்-

“வைஷ்ணவே “
க்ருஷ்ண த்வை பாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹ்யந்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத் பகவத் ||“;மூன்றாம் அம்சம் 

மைத்ரேயர் கிருஷ்ண த்வை பாயனர் என்னப்படும் வியாஸரைப் பிரபுவான நாராயணர் என்றே அறி
பூமியில் வேறு எவன் மஹா பாரத்தத்தைச் செய்வான் ஆவான் -என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்-பாரசார்யர்-பராசரர் பிள்ளை -பராசரரே கொண்டாடிப் பேசுகிறார்

மார்கண்டேய
“வ்யாஸ வாக்ய ஜலௌகேந குதர்ம தரு ஹாரிணா |
வேத ஸைல அவதீர்ணேந நீரஜஸ்கா மஹீ க்ருதா||“ இத்யாதிபி:;

கெட்ட தர்மங்கள் ஆகிய மரங்களைக் களைவதும் வேதம் என்னும் மலையின் நின்றும் இறங்கியதுமாகிய
வ்யாஸர் வாக்யம் என்னும் ஜல ப்ரவாஹத்தால் பூமியானது
பாவம் இல்லாதாகச் செய்யப்பட்டது என்று மார்க்கண்டேய புராணத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாலும்

ஸ்வஸ்மிம்ஶ்ச“யோ வித்யாச் சதுரோ வேதாந் ஸாங்கே உபநிஷதாந் த்விஜ:|
ந சாக்யாநமிதம் வித்யாந் நைவ ஸ ஸ்யாத் விசக்ஷண:||“

நாலு வேதங்களையும்-வேதாந்தங்களையும் -உபநிஷத்துக்களையும் அறிந்தும் இம் மஹா பாரதத்தை அறியாத பிராமணன் எவனோ அவன் அறிவித்த தேற்றம் உள்ளவன் ஆகான்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு-அரக்கு மாளிகை எரிப்பு சூதாட்டத்தில் நாடு இழப்பு காட்டில் சுற்றல் மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு ஆநிரை கவர்தல்-போரில் அழிவு சமாதான உடன்படிக்கை மீறல் பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம் –இதுவே மஹா பாரதம்

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் | ததர்தஹாரிணஸ் ஸர்வாந் வ்யாஸ ரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே, அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.-அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தர மீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதி ஶத சஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்தி பிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதக்கடலை மதி என்ற மத்தால் கடைந்து அருளிய அம்ருதம் -ப்ரஹ்ம ஸூத்ரம்-அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணி யருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.-பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் –

இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர் *  (65) என்று காட்டியருளினார்

கர்ம மீமாம்ஸை –4 அத்தியாயங்கள்-ப்ரஹ்ம ஆராதனையே கர்மங்கள் –
ப்ரஹ்ம மீமாம்ஸை –16 அத்யாயங்கள்
சாரீரிகம் மீமாம்சை என்றும் ப்ரஹ்ம மீமாம்ஸைக்கு பெயர்-பூஜ்ய விஷய விசாரமே மீமாம்ஸை
சரீரம் உடைய ஆத்மா- சாரீரிகன் -ஸமஸ்த உலகங்கள் அனைத்தையும் உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் அன்றோ-தாசாரதி -சொன்னவுடன் சக்கரவத்தி திருமகனைச் சொல்வது போல் –

நிவ்ருத்தி, ஞானம், ஸாக்ஷாத்காரம் ஆகியவற்றை வேதங்களின் முடிவுப் பகுதிகளான உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அவற்றை வேதத்தின் உத்தர (பின்) பாகம் என்பார்கள். ஞான காண்டம் என்ற அதை அப்படியே தள்ளிவிட்டு, வேதத்தின் பூர்வ (முன்) பாகத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை மாத்திரம் ஒப்புக்கொண்டு இப்படிச் செய்த சித்தாந்தத்திற்குப் ‘பூர்வ மீமாம்ஸை’ என்றும் ‘கர்ம மீமாம்ஸை’ என்றும் பெயர். ‘மீமாம்ஸை’ என்றால் ‘நல்ல விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி’.உத்தரபாகமான ஞான காண்டத்தை ஆதாரமாகக்கொண்டு உண்டான சித்தாந்தத்திற்கு ‘உத்தர மீமாம்ஸை’ என்று பெயர். 

ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை  சார்த்தம் தவத் அர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் –

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்களோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ
வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்
–15-15-

ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் ஸந்நிவிஷ்ட:-எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன்
ச மத்த:-மேலும் என்னிடம் இருந்து தான்,
ஸ்ம்ருதி: ஜ்ஞாநம் அபோஹநம் ச-நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் பிறக்கின்றன,
ஸர்வை: வேதை: ச வேத்ய: அஹம் ஏவ – எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் நான்,
வேதாந்த க்ருத் வேத வித் ச அஹம் ஏவ-வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.

ஆத்மாவா -ப்ரஹ்மம் -ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்ஸ்யாதிதவ்ய த்ரஷ்டவ்ய –
கேட்டு -ஸ்ரவணம்
ஆராய்ந்து -மனனம்
முன்னோர் வார்த்தைகள் கேட்டு பின் ஓர்ந்து -ஆராய்ந்து நிலை நிறுத்தி தரித்து -நிதித்ஸ்யாதிதவ்யம்

மனனம் செய்ய வழி முறைகள் -ஆராய்ந்து காட்டி அருளி -மீமாம்ஸை காட்டும் –
நான்கு நிலைகள் பற்றி –ஸ்ருத்யந்த்தம் -மூலம் ஸ்ருதம் -கேட்டு-ஸ்ரவணம் -ப்ரஹ்ம ஸூத்ரம் -ஸ்ரீ பாஷ்யம் கொண்டு மூலம் மனனம் -மதம் பாஷ்யே -இது கொண்டு மனனம் ஹ்ருதம் புஜே- ஹ்ருதயத்தில் த்யானம் -த்ருஷ்டம் ஸ்ரீ ரெங்க தாம்நே -லஷ்மிபதி ப்ரபத்யே –

பத்யம் -ஸ்லோக ரூபம்
கத்யம் -prose ரூபம் -கத்ய த்ரயம் -போல் ப்ரஹ்ம ஸூத்ரம் -வாக்கியங்கள் – சுருக்கமான சொல் தொடர்-சூர்ணிகை – -ஸூத்ரம்–

அல்பாக்ஷரம் அஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோம்கம் |
அஸ்தோபம் அநவத்யம் ச ஸூத்ரம் ஸூத்ரவிதோ விது: ||

ஸூத்ரம் என்பது
குறைந்த எழுத்துகள் உள்ளதாய்,
ஸந்தேஹம் ஏற்படுத்தாததாய்,
ஆழமான பொருள் கொண்டதாய்,
அனைத்து இடங்களிலும் பொருந்தும் யுக்திகணைச் சொல்லுவதாய்-
தேவைiயற்ற வார்த்தைகள் இல்லாததாய்,
உண்மையான பொருள் உடையதாய் இருக்கும்
ஒரு சொற் தொடர் ஆகும்.
1-அல்ப அக்ஷரம் —
2-அசந்திக்தம் -சங்கைகள் இல்லாமல் தெளிவாக –
3-சாரவாத் –
4-விஸ்வதோ முகம் -எல்லா சூழ் நிலைகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் -அனைத்து உபநிஷத் சாகைகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் –
5-அஷோபம் –தேவையில்லா அக்ஷரங்கள் இல்லாமல் இருக்கும்
6-அநவத்யம் குற்றங்கள் அற்றவையாக இருக்கும்

545 ஸூத்ரங்கள்

156-அதிகரணங்கள் – -ஐந்து விஷயங்கள் கொண்டவை

விஷயோ விஶயஶ்சைவ பூர்வபக்ஷ: ததா உத்தரம்|
ஸங்கதிஶ்ச இதி பஞ்ச அங்கம் சாஸ்த்தர அதிகரணம் விது: ||

(1) விஷயம் – ஆராயப்படும் உபநிஷத் வாக்யம்
(2)விசயம்- ஸம்சயம் –அதில் இருக்கும் ஸந்தேஹம்
(3) பூர்வபக்ஷம் – எதிர் வாதியின் வாதம்
(4) ஸித்தாந்தம் – வேத வ்யாஸரின் வாதம் மற்றும் முடிவு
(5) ஸங்கதி – அதிகரணங்களுக்குள் இருக்கும் தொடர்ச்சி –
இவை ஐந்தும் தான் ஒரு அதிகரணத்தின் பகுதிகள் ஆகும்.

அத்தியாங்கள் -4-ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள் -ஆக 16 பாதங்கள்

காரணந்து த்யேய –

1) ஸமந்வய – உபநிஷத் வாக்யங்கள் ப்ரஹ்மத்திடம்
பொருந்தி அவரையே உலகத்துக்குக் காரணம் என்கின்றன
(2) அவிரோத – ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்பதில் எந்த
முரண்பாடுகளும் இல்லை என்ற நிரூபணம்
(3) ஸாதந – ப்ரஹ்மத்தை அடையும் வழி (உபாயம்)
(4) பல – மிகவுயர்ந்த இலக்கான முக்தியை அடைதல்

முதல் இரண்டு அத்யாயங்கள் பரமாத்மா ஶ்ரீமந் நாராயணனே உலகைப் படைப்பவர் என்று உறுதிபடுத்துகின்றன.-முன்னமே இருக்கும் ப்ரஹ்மத்தைப் பற்றி சொல்லுகிறபடியால் இது ஸித்த த்விகம் எனப்படுகிறது.
கடைசி இரண்டு அத்யாயங்கள் நம் முயற்சியால் ஏற்பட வேண்டிய பக்தியோகம் மற்றும் முக்தியைப் பற்றிச் சொல்லுகிறபடியால் இவ்விரண்டும் ஸாத்ய த்விகம் ஆகும்.

முதல் அத்யாயம் –11–6–10-8-அதிகரணங்கள் —-35–அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம் –10–8–7–8- அதிகரணங்கள் -33—அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம் –6–8–26–15–அதிகரணங்கள் —55–அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் –11-11-5-6-அதிகாரணங்கள் -33–அதிகரணங்கள்

சாரீரிக மீமாம்ஸ சாஸ்திரத்தில் நான்கு அத்தியாயங்களும்
விஷய த்விகம் -ஸித்த த்விகம் என்றும்
விஷயீ த்விகம் -ஸாத்ய த்விகம் என்றும் உண்டு
மூன்றாம் அத்தியாயத்தில் பக்தி ரூப ஞானம் விஷயி
நான்காம் அத்தியாயத்தில் ப்ரஹ்ம அனுபவ ஸ்வரூப ஞானம் விஷயி ஆகும்

வேதார்த்த விசாரம் -ஒரே ஸாஸ்த்ரம்
4 அத்தியாயங்கள் –
1-சமன்வய -காரணத்வ
2-அவிரோதித்தவ -அபாத்யத்வ
3-உபாயத்வ
4-பலத்வ –அதிகாரங்கள் நான்கும்

16 பாதங்கள்
1-ஜீவ மிக அஸ்பஷ்ட மாயும்
2-ஜீவ அஸ்பஷ்ட மாயும்
3-ஜீவ ஸ்பஷ்ட மாயும்
4-ஜீவ மிக ஸ்பஷ்ட மாயும்
5-ஸாங்க்யாதி ஸ்ம்ருதி மூலமான தோஷ பரிஹாரம் காட்டுவது
6-ஸாங்க்யாதி பக்ஷங்கள் கண்டனம்
7-ஆகாசாதி த்ரவ்யங்களுக்கு ஸ்வரூப பரிணாம ரூபமான கார்யத்வம் கூறுவது
ஆத்மாக்களுக்கு ஸ்வ பாவ அந்யதா பாவ ரூப கார்யத்வம் கூறுவது
8-ஜீவ உபகரணமான இந்திரியாதிகளின் உத்பத்தி க்ரமம் கூறப்படுவது
9-வைராக்ய நிமித்தமாக புருஷனுக்கு ஏற்படும் தோஷங்கள்
10-ப்ராப்யத்தில் ஆசை தோன்ற ப்ரஹ்மத்துக்கு நிர்த்தோஷமும் கல்யாணைக தானத்வமும்
11-பகவானிடம் செய்யும் பக்தியின் பிரகாரங்கள்
12–பக்திக்கு வர்ணாஸ்ரம தர்மங்களை அங்கங்களாக விதித்தல்
13-உபாஸனா ஸ்வரூபமும் அநுஷ்டான க்ரமமும் விளக்கப்படுத்தல் -வித்யா மகிமையும் கூறுதல்
14-ஜீவன் உடலை விட்டுப் புறப்படுதல் -உத் க்ரமணம்
15-ஜீவனின் மோக்ஷ கதி சிந்தனம்
16-பிராப்தி -பலம் -மோக்ஷம் –

————

16 பாதங்களின் சுருக்கம்
தத்ர ஆத்₃யே அத்யந்தகூ₃ட₄ அவிசத விசத ஸுஸ்பஷ்ட ஜீவாதி₃வாச:
பஶ்சாத் ஸ்ம்ருத்யாதி₃கை : அக்ஷதி: அஹித ஹதி: கார்யதா அப்₄ரேந்த்₃ரியாதே ₃: |
தோ₃ஷ தோ ₃ஷௌ த்ருதீயே ப₄வப்₄ருத் இதரயோ : ப₄க்தி: அங்கா₃நி சாத₂
உபாஸாரோஹ ப்ரபா₄வ உத் க்ரம ஸரணி ப₂லாநி அந்திமே சிந்திதாநி ||
-அதிகரண சாராவளி ஸ்லோகம்

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

அவிரோத ₄ அத்யாயம் – பரமாத்மா ஜகத் காரணம் என்பதில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்னுதல்

முதல் பாதம் (ஸ்ம்ருதி பாதம்) – இக் கருத்துக்கு ஸ்ம்ருதிகளோடு முரண்பாடு இல்லை என்று காட்டுதல்

இரண்டாம் பாதம் (தர்க பாதம்) – இக் கருத்துக்கு யுக்திகளாலும் முரண்பாடு இல்லை என்று நிரூபித்தல்

மூன்றாம் பாதம் (வியத் பாதம்) – பஞ்ச பூதங்களையும் ஜீவாத்மாவையும் பரமாத்மாவே படைக்கிறார் என்னுதல்

நான்காம் பாதம் (ப்ராண பாதம்) – இந்த்ரியங்கள் கூட பரமாத்மாவால் உண்டாக்கப்பட்டவை என்னுதல்

ஸாத₄ன அத்யாயம் – முக்தி அடைவதற்கு வழியான பக்தி யோகத்தை , அதன் தகுதிகளோடும் அங்கங்களோடும் நிரூபிக்கும் அத்யாயம்(உலக விஷயங்களில் வைராக்கியமும் ப்ரஹ்ம ப்ராப்தியில் ருசியும் உள்ளவர்களே அதிகாரிகள்-கர்ம யோக-ஞான யோகங்கள் போல்வன அங்கங்கள்)

முதல் பாதம் (வைராக்ய பாதம்) – உலக வாழ்க்கையில் வைராக்யம் ஏற்படுவதற்காக, ஒரு ஜீவாத்மா விழிப்பு, தூக்கம், ஸ்வப்நம், நரகம் முதலான நிலைகளில் படும் துன்பங்களைச் சொல்லுதல்

இரண்டாம் பாதம் (உபய லிங்க பாதம்) – பரமாத்மாவிடம் ஈடுபாடு பிறப்பதற்காக, அவருக்கு எந்த தோஷங்களும் இல்லை என்றும், எல்லா நற்குணங்களும் இருக்கின்றன என்றும் காட்டுதல்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும் கல்யாண குணாத்மகமும் உபய லிங்கங்கள்

மூன்றாம் பாதம் (குண உப ஸம்ஹார பாதம்) – முக்திக்கு வழியான பக்தி யோகத்தின் வகைகளைச் சொல்வது

நான்காம் பாதம் (அங்க பாதம்) – பக்திக்கு அங்கமான கர்மங்கள், புலனடக்கம் முதலானவற்றைக் கூறுதல்

ப₂ல அத்யாயம் – பக்தி யோகத்தால் அடையப்படும் முக்தியின் தன்மையை முழுமையாக உணரத்தல்

முதல் பாதம் ( ஆவ்ருத்தி பாதம்) – பக்தி யோகத்தின் மகிமையால் நம் பாபங்கள் நீக்கப்படுதல்

இரண்டாம் பாதம் (உத்க்ராந்தி பாதம்) – முக்தி அடையும் ஆத்மா இவ் வுடலிலிருந்து புறப்படுதல்

மூன்றாம் பாதம் (கதி பாதம்) – இவ்வாத்மா அர்ச்சிராதி மார்கத்தால் ப்ரயாணித்து வைகுந்தம் அடைதல்

நான்காம் பாதம் (முக்தி பாதம்) – வைகுந்தத்தில் தன் இயற்கையான தன்மையை அடைந்து ப்ரஹ்மத்தை அநுபவித்து நிரந்தரமான ஆனந்தத்தில் திளைத்தல்

——————-

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வ நிஷ்ட: நிரவதிக மஹிமா அபாஸ்த பாத பாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசித ஜநந க்ருத் ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த் தோஷத்வாதி ரம்ய: பஹு பஜந பதம் ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்ம நாடீ கதி க்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ர வேத்ய: || (19)-அதிகரண சாராவளி ஸ்லோகம்–ஒவ்வொரு பாதம் மூலம் ஒவ்வொரு கல்யாண குண அனுபவம்-

ஸ்ரஷ்டா – உலகைப் படைப்பவன்(1-1),முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன்
தேஹீ – தன்னை யொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வ நிஷ்ட: – -அந்நிய ஆதரேண–தன்னையே ஆஸ்ரயமாகக் கொண்டவன் (1-3);
நிரவதி மஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);உளன் மிகு ஸ்ருதியுள் வேதைக சமைதி கம்யன்
அபாத ஸப்த பாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்க முடியாதவன்-எந்த முரண்பாடுகளும் இல்லாமல் ஜகத் காரணம் என்று அறியப் படுபவர் (2-1);
ஆஶ்ரிதாப்த: – பஞ்ச கால பராயணர்க்கு ஆப்தன் –அண்டியவர்களுக்கு நண்பன் -தன் பக்தர்களை ரக்ஷிப்பதற்காக, தீயவர்களை மயக்குவதற்கு பல தவறான மதங்களை
ஏற்படுத்தியவர்(2-2);
காத்மாதே: உசித ஜநந க்ருத் –பஞ்ச பூதங்களையும் ஜீவாத்மாக்களையும் கூடத் தகுந்த முறையில் படைப்பவர்- –அசேதன ஸ்வரூப விகார -சேதன ஸ்வரூப ஸ்வ பாவ ஜனன கர்த்தா(2-3)

இந்திரியாதே: உசித ஜநந க்ருத் – இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்;-(2-4)

ஸம்ஸ்ருதௌ தந்த்ர வாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்தி மூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன்-ஜீவன் ஸம்ஸாரத்தில் அநுபவிக்கும் எல்லா நிலைகளையும்
நிர்வஹிப்பவர் (3-1);

நிர் தோஷத்வாதி ரம்ய: – தோஷங்கள் தட்டாதவன் -ரம்யன்;அகில ஹேய ப்ரத்ய நீகன் கல்யாண குணைகநாதன்-(3-2)

பஹு பஜன பதம்  –பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத் தக்கவன்-பல விதமான பக்தி யோகங்களால் பலராலும் வழிபடப்படுபவர்;-(3-3)

ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய: – ஜீவர்கள் தம் தம் ஆஸ்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்;-வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வதால் மகிழ்ந்து, பக்தி யோகத்தை வழங்கக் கூடியவர்.-(3-4)

வர்ணாஸ்ரம ஸாஸ்வதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நரந்ய தத் தோஷ காரக -ஸ்ரீ விஷ்ணு புராணம்

பாபச்சித்  – பாபங்களை நீக்குபவன்;-உத்தர பூர்வ பாபங்களில் அஸ்லேஷ விஸ்லேஷ கர்த்தா-(4-1)

ப்ரஹ்ம நாடீ கதி க்ருத் – -ஆத்மா உடலிலிருந்து புறப்படும் போது ஸுஷும்நா நாடி மூலம் அழைத்துச் செல்பவர்-மோக்ஷத்தை அடைவிப்பவன்;-(4-2)

இதுவரை ஸ்தூல தேஹ விஸிஷ்டனுக்கு பலம்

மேல் ஸூஷ்ம தேஹ விஸிஷ்ட னுக்கு பலம்

அதிவஹந் – அழைத்துச் செல்பவன்;–அர்ச்சிராதி மார்க்கத்தில் கூடவே இருந்து இவ் வாத்மாவை அழைத்துச் செல்பவர்–(4-3)திருமோகூர் ஆப்தன் வழித் துணைப் பெருமாள்

ஸாம்யத: தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.-நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி–வைகுந்தத்தை அடைந்த முக்த ஆத்மாவை தனக்கு நிகராக ஆக்கி மகிழ்விப்பவர். (4-4)-சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே திருமலையே அருளும் அன்றோ-

இங்கு ஸாம்யா பத்தி சொல்லி இருந்தாலும் —பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவமும்
அனுபவ ஜெனித ப்ரீதியும் ப்ரீதி காரித ஸர்வ வித ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா அசேஷ கைங்கர்யமும் -பரம புருஷார்த்தம்

இப்படி மொத்தம் 16 திருக் குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

இஷ்ட தேவதா ஸ்தோத்திரம் மங்களம். மங்கள ஆஸி – நமஸ்காரம் .

இதர தேவதா மங்கள ஸ்லோகம் ; சமுசித தேவதா தியானமாகும்.
சங்கீதத்துக்கு ஸரஸ்வதி , ஆயுர் வேதத்துக்கு தன்வந்திரி .
இஷ்ட தேவதையே சமுசித்த தேவதையாகும் போது , சமுசித்திஷ்ட தேவதா தியானமாகும்.

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே-உத்பத்தி ஸ்திதி விநாசம் -லீலையாக
அகில புவன -அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்
மணல் தூள்கள் கணக்கிட முடியாதது போலே -நட்ஷத்ரங்கள் உண்டே-அண்ட கடாகம் – பல உண்டே
எல்லா புவனங்களுக்கும்
லீலை -லோக வஸ்து லீலா கைவல்யம்
கிம் காரணம் –
சு கமயம் துக்க மயம்-நமக்காக செய்கிறானா – அவாப்த சமஸ்த காமன் -தனக்காக செய்கிறானா –
வியாச மகரிஷி லீலா வஸ்து கைவல்யம்
லீலா ஸுயம் பிரயோஜனம் –க்ரீடா லீலா ஸுயம் பிரயோஜன வியாபாரம்
குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவது போலே
பகவத் சாஷாத்காரம் அடைந்தால் தான் அறிவோம்
மம ப்ரஹ்மணி ஷேமுசி பக்தி பூர்வா பவது-ஸங்க்ரஹமாக அனைத்தையும் அருளுகிறார்

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே –ஜகத் காரணத்வம் –உயர்வற உயர் நலம் உடையவன் -அர்த்த விசேஷம்
விநத -மதி நலம் அர்த்தம் -பக்தியால் சத்தை பெற்றமை
மதிநலம் எனக்கு அருளினன் இல்லாததால் முன்பு சத்தை இல்லாமையையை தெரிவித்து அருளினார்
பக்தி வந்த பின்பு என் மனனே என்று சத்தை வந்தமையை வெளியிட்டு அருளினார்
விவித பூத வ்ராத -சம்பந்த சம்பந்திகளுக்கும் பலம் உண்டு என்று அருளிச் செய்கிறார்
பொய் நின்ற –யாம் -என்றும் -கேசவன் தமர் –எமர் -என்றும் அருளிச் செய்தது போல் இங்கும்
ரக்ஷைக தீஷே -துயர் அறு சுடர் அடி -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ருஹ்மணி ஸ்ரீ நிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்தி ரூப -பிரார்த்தித்தே பெற வேண்டும் என்று காட்டி அருளுகிறார்
ப்ரார்த்த நீயம் என்பதை ஆவ்ருத்தி ரஸ க்ருத -ஸூத்ரம்
ஜிஜ்ஞாஸா -இச்சிக்க வேண்டும்
நிதித்யாஸி தவ்ய-ஸ்ருதி அர்த்தம்

———

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

பராசரரின் மகனான வேத வ்யாஸரால் இயற்றப்பட்ட ப்ரஹ்ம ஸூத்ரங்கள், உபநிஷத் என்னும் பாற்கடலின் நடுவிலிருந்து ஆழமாகத் தேடி எடுக்கப்பட்ட அமுதம் ஆகும். ஸம்ஸாரத்தின் துன்பங்களால் துவண்டு போய், பரமாத்மாவாகிற ப்ராணனை இழந்து துன்பப்படும் ஜீவாத்மாக்களுக்கு உயிரூட்டும் அமுதமாக அது உள்ளது. இந்நூல் பூர்வாசார்யர்களால் நன்கு ரக்ஷிக்கப் பட்டிருந்தாலும், அண்மையில் பலருடைய முரண்பட்ட விளக்கங்களால் வெகு தூரத்தில் போய்விட்டது. அதனை நான் என் ஶ்ரீபாஷ்யத்தின் மூலம் அருகில் எடுத்து வருகிறேன், ஈடுபாடுடைய அனைவரும் தினமும் பருகட்டும்.

பெரிய திருவடி அம்ருத கலசம் கொண்டு வந்தது போல் ராமானுஜர் இந்த அம்ருதம் ஆஸ்திகர் உஜஜீவனம் அடையும் படி அருளி உள்ளார் -தினம் தோறும் பருகிக் களிக்கலாம் அன்றோ-

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
ஹுமதிம் வியாகாத தூரஸ்திதாம் (5)
நீதாந் து நிஜா க்ஷரைஹி ஸு மனஸோ பௌமாஸ்து பிபந் வஹம் ||

பாராசார்யா வசஸ்துதாம்-வியாசர் -அமிருத ரூபமான வாக்கு-மரணம் ஜனனம் இல்லாத -அபாவம் தானே மோஷம்
பிபந்வஹம்-பிபந்து குடிக்க வேண்டும்-5–விசேஷணங்கள் மேலே சொல்லி

ஸ்ரீபகவத் ராமானுஜர் வேதாந்த ஸங்க்ரஹம் -முதலில் திருவேங்கடமுடையான் சந்நிதியில் அருளி யஸ் ஸ்ரீ சைல- இஷ்ட தேவதா-அவர் அங்கீகாரம் பெற்று இத்தை அருளி –அதன் அனுவர்த்தி ஸ்ரீ பாஷ்யம் –பாதாராயண -பராசரர் புத்ரர் – பூமியில் உள்ள எல்லாரும் இந்த அம்ர்தத்தை பானம் செய்யட்டும்-பிபந்து -ஆசீர்வாதம் செய்கிறார்

———–

குரு பரம்பரை-(குற்றம் அற்ற மஹான்கள் புராதன வேதாந்த வ்யாக்யாந கர்த்தாக்கள் -வேதார்த்த ஸங்க்ரஹத்தில் ராமானுஜர் காட்டி அருளுகிறார்)

வேத வ்யாஸர் – ப்ரஹ்ம ஸூத்ரங்கள்

போதாயனர் – வ்ருத்தி என்னும் நெடிய உரை

டங்கர் (ப்ரஹ்ம நந்தி) – வாக்யம் என்னும் உரை

த்ரமிடர் – சாந்தோக்ய உபநிஷத்தின் பாஷ்யம்

நாதமுனிகள் – ந்யாய தத்த்வம், புருஷ நிர்ணயம்

யாமுநாசார்யர் – ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம்

பகவத் ராமாநுஜர் – வேதாந்த ஸாரம், ஶ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம்-
தன் ஆசார்யரான யாமுநாசார்யரின் ஆணையின்படி, போதாயனர் இயற்றிய வ்ருத்தி க்ரந்தத்தைக் காஷ்மீரத்தில் சென்று பெற்று, அதை அநுஸரித்து
ஶ்ரீபாஷ்யம் என்னும் ஒப்பற்ற உரையை இயற்றினார் ஸ்வாமி ராமாநுஜர்.

மிகவும் சுருக்கமாக வேதாந்த சாரம் அருளி
பின்பு அதைக் காட்டி போதாயன வ்ருத்தி கிரந்தம் பெற்று ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து
பின்பு வேதாந்த தீபம் அருளிச் செய்துள்ளார்

ஸ்ரீ பகவத் போதாயன க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சார்ய ஸஞ்சிஷிபு தன் மத அநு சாரேண ஸூத்ர அக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே-ஸ்ரீ பாஷ்ய மூல ஸ்ரீ ஸூக்திகள்

ஸுதர்சன பட்டர் – ஶ்ரீபாஷ்யத்திற்கு ஸ்ருத ப்ரகாசிகை என்னும் உரை-வேத வ்யாஸ பட்டர் திருப்பேரானார் -வாக் விஜயீ திருக் குமாரார் -நடாதூர் அம்மாள் திருக்குமாரர்-வ்யாஸர் பட்டம் -விருது நம் பெருமாள் அருளிச் செய்துள்ளார்-

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

வேதாந்த தேசிகர் – ஶ்ரீபாஷ்யத்திற்கு தத்த்வ டீகை என்னும் உரை -அதிகரண சாராவளி

கருணைக் கடலான ராமானுஜர்-சாலைக்கிணற்று நீர் கைங்கர்யமாக வர்ஷிக்க பேர் அருளாளன் கருணை யுடையவர் ஆகி அர்த்தித்தார்த்த பரி தீஷிதரார் ஆனார் -தேசிகன்

நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா
விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்-ஸ்ரீ யதிராஜ சப்ததி–50-

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அதுபோன்றவற்றின் தரத்தை வடிகட்டுகின்றன.
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –70-

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்-உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மாதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றிய போது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

————–

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல் ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

ப்ரஹ்மத்தின் சேஷித்வம் ஸ்பஷ்டமாகக் காணப்படும் -அபர ஸ்ரீ ரெங்க விமானம் போலே –
பிரணவ ஆகாரமாகவே பிரகாசிக்கிற ஸ்ரீ பாஷ்யத்தை சரணமாக வரிக்கிறேன்

ப்ரணவமாகிற ஓங்காரத்திலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும் பிரகாசிக்கும் பரமாத்மாவுடைய சேஷித்வம்
பிறரால் உண்டு பண்ணப்பட்டு இருக்கிற அதிசயத்தை -மேன்மையைத் தங்கி இருப்பது
ஸ்ரீ ரெங்கத்தில் பிரகாசிக்கும் சேஷித்வம் சேஷசாயித்வம் என்று கண்டு கொள்வது

திரு மந்திரத்தில் பத த்ரயத்தாலே
ஜீவாத்மாக்களுடைய
அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -ஆகிய -ஆகார த்ரயம்
ஸாப்தமாக ப்ரதிபாதிதம்
பரமாத்மாவின்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிய ஆகார த்ரயம்
ஆர்த்தமாகக் கிடைக்கும்

ஸ்ரீ ராமானுஜ தர்சன அடிப்படைக் கோட்ப்பாடுகள்

த்₃ருஷ்டே அபஹ்நுத் யபா₄வாத் அநுமிதி விஷயே லாக₄வஸ்ய அநுரோதா₄த்
சாஸ்த்ரேணைவ அவஸேயே விஹதி விரஹிதே நாஸ்திகத்வ ப்ரஹாணாத் |
நாதோ அ₂பஜ்ஞம் ப்ரவ்ருத்தம் ப₃ஹுபி₄: உபசிதம் யாமுநேய ப்ரப₃ந்தை ₄:
த்ராதம் ஸம்யக் யதீந்த்₃ரை : இத₃ம் அகி₂ல தம:கர்சனம் த₃ர்சனம் ந: ||

உபநிஷத்துகள் காட்டும் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் நாத முநிகள் தொடங்கி பரப்பப்பட்டு,-யாமுநாசார்யரின் நூல்களால் வளர்க்கப்பட்டு, யதிராஜரான ஸ்வாமி ராமாநுஜராலே நன்கு நிலை நாட்டப்பட்டது. இதுவே நம் மனதிலிருக்கும் இருட்டாகிற அறிவின்மையைப் போக்கும்.

இந்த விசிஷ்டாத்வைதத்தின் முக்கியமான கோட்பாடுகள் –

1-புலன்களால் சரியாக அறியப்படும் எந்தப் பொருளையும் பொய் என்னக் கூடாது

2-அநுமானத்தைப் பயன்படுத்தும் போது இன்றியமையாத குணறந்த அளவு மட்டுமே செய்யலாம்

3-புலன்களுக்கு அப்பாற்பட்டவையாய், வேதத்தால் மட்டுமே அறியப்பட வேண்டிய பொருள்களை வேதம் சொன்னபடியே ஏற்க வேண்டும். அங்கு புலன்களோ அநுமானமோ செல்லாது.

—————–

சாஸ்த்ரத்தின் ஆரம்பம்

  • எந்த ஒரு நூலையும் இயற்றும் ஆசிரியர் அதற்கு ஒரு முன்னுரை அணமப்பது முறை . முன்னுரை என்பதும் நூலின் பகுதி தான், ஆனால் அதில் நூலின் கருத்துகள் சொல்லப்படாது. அந்த நூலின் பொருளையும், அதன் தேவையையும் , படிக்க வேண்டிய பயனாளியையும் குறிப்பிட்டு, கற்பவரை ஊக்குவிப்பதே அதன் நோக்கம் ஆகும்.
  • எடுத்துக் காட்டுக்கு, பகவத் கீதையில் முதல் அத்யாயம் முழுவதும் அர்ஜுநனின் குழப்பத்தையும் சோகத்தையும் தான் சொல்லுகிறது, அதில் கண்ணனின் உபதேசம் ஏதுமில்லை . ஆனால் அது கீதையின் பகுதி தான், மேல் செய்யப்படுகிற உபதேசத்தின் பின்புலத்தைச் சொல்லுகிறபடியால்.
  • ப்ரஹ்ம ஸூத்ரங்கள் என்ற நூலை இயற்றிய வேத வ்யாஸர், இந்நூலின் முதல் நான்கு அதிகரணங்களை முன்னுரையாக –ஸாஸ்த்ர ஆரம்பம்-அமைத்துள்ளார். (ஸாசநாதி ஸாஸ்த்ரம் -கீதையில் 2-11- தொடங்கி ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரம் போல்)அவற்றின் பெயர்கள் –
  • ஜிஜ்ஞாஸா அதி₄கரணம்
  • ஜந்மாதி₃ அதி₄கரணம்
  • சாஸ்த்ர யோநித்வ அதி₄கரணம்
  • ஸமந்வய அதி₄கரணம்
  • இந்த ஒவ்வொரு அதிகரணத்திலும் ஒரே ஒரு ஸூத்ரம் தான் உள்ளது.
  • 545 ஸூத்ரங்கள் கொண்ட இந்த சாஸ்த்ரத்திற்கு, முதல் 4 ஸூத்ரங்கள் முன்னுரை ஆகும்.

சதுஸ் ஸூத்ரி –பாதி ப்ரஹ்ம ஸூத்ரம் போல் விபுல வ்யாக்யானம்
விஷய உபநிஷத் வாக்யங்கள் இவற்றுக்கு வேண்டாவே –
மேல் உள்ள அதிகரணங்களுக்குத் தான் அவை வேண்டும் –

———

அத்யாயம் 1, பாதம் 1, அதிகரணம் 1 – ஜிஜ்ஞாஸ தி₄கரணம்

  • இந்த முதல் அதிகரணத்தில் உள்ை ஒரே ஸூத்ரம் – (அதா₂தோ ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா)
  • இந்த ஸூத்ரத்தில் 3 சொற்கள் உள்ளன – (அத₂ அத: ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா)
  • அத₂ – இந்த சொல்லுக்கு ’பிறகு’-’அடுத்து’ என்று பொருள். எதற்குப் பிறகு என்கிற கேள்வி இயல்பாக எழும்.(அத -அநந்தர்யம் -அடுத்ததாக சொல்லபபடும் -there after -என்ற பொருளே இங்கு விவஷிதம்-இதற்கு மங்களம் -கார்ஸ்யம் முழுமை-அடுத்து ப்ரஸ்னம் -பல அர்த்தங்கள் உண்டே)
  • அத: – இச் சொல்லுக்கு ’ஆகையால்’ என்று பொருள். ஆகையால் என்றால் எதனால் என்கிற கேள்வி எழும்.
  • ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா – ’ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய ஆசை ’ என்பது இச் சொல்லுக்குப் பொருள் ஆகும்
  • ப்ரஹ்மம் – தானே அளவாலும் குணங்களாலும் பெரியதாக இருப்பதாகவும், தன்னோடு தொடர்புடையவர்களைப் பெரியவராய் ஆக்குவதாகவும் இருக்கும் பொருள் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது. உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களையும் காட்டிலும் பரமாத்மா பெரியவர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரிடம் உள்ள கல்யாண குணங்களுக்கும் எல்லையுமில்லை , எண்ணிக்கையுமில்லை . தன்னைப் பற்றின பக்தர்களையும் தன் அளவுக்கு உயர்த்தி, வைகுந்தத்தில் அமர்த்துகிறார் பரமாத்மா. எனவே அவரைத் தான் ப்ரஹ்மம் என்ற சொல் குறிக்கிறது.(ப்ரஹ்ம ஸப்தேந ச ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷோ அனவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபி கீ யதே வந்தேறி அல்ல இயற்கையிலே உள்ளவை–ஸர்வத்ர ப்ருஹத்வ குண யோகேந ஹி ப்ரஹ்ம ஸப்தேப்ருஹத்வம் ச ஸ்வரூபேண குணைஸ் ச-யத்ர அனவதிக அதிசயம் ஸோ அஸ்ய முக்யோர்த்த ஸ ச ஸர்வேஸ்வர ஏவ-ஸ்வரூபமும் ரூபமும் ஒப்பற்றகாக இருக்கும்-இன்றியமையாத தன்மை இயல்பு -ஸ்வரூபம்)
  • ஜிஜ்ஞாஸா – அறிய வேண்டும் என்கிற ஆசை . இங்கு எவ்விதமான அறிவு சொல்லப்படுகிறது? வெறும் ஒரு முறை ப்ரஹ்மத்தைப் பற்றி கேட்பதோ , அவரைக் காண்பதோ அல்ல -. விசாரம் அதாவது ஆராய்ச்சி வடிவமான ஜ்ஞாநம் தான் இங்கு சொல்லப்படும் அறிவு. எனவே , ’ஆராயச்சியில் ஆசை ’ என்பது தேரிய பொருள் ஆகும்
  • இந்த மூன்று சொற்களையும் சேர்த்தால், “அடுத்து ஆகையால் ப்ரஹ்மத்தைப் பற்றின ஆராய்ச்சியில் ஆசை ” என்று கிடைக்கிறது. இது முழுமை அடையாமலிருக்கிறபடியால், (கர்தவ்ய:) அதாவது“செய்யப்பட வேண்டும்” என்கிற சொல்லை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அத்₄யாஹாரம் என்று பெயர்.-ஆர்வத்துடன் ப்ரஹ்ம விசார கர்தவ்யம் என்றபடி
  • எனவே ஸூத்ரத்தின் பொருள் – அடுத்து ஆகையால் ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரத்தை ஆசையோடு செய்ய வேண்டும்

எதற்குப் பின் ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும்?

  • அத ₂ என்ற சொல் ’அடுத்து’ என்கிறது. எதற்கு அடுத்து என்று ஆராய்வோம்.

வ்யாசக்₂யு: கேபி தாப த்ரய ஹதிம் இதரே ஸாத₄நாநாம் சதுஷ்கம்
காண்டே₃ஸ்மிந் பூர்வ வ்ருத்தம் கத₂யதி நிக₃ம: கர்ம சிந்தாப₂லம் தத் |
ஸ அங்கா₃தீ₄திர்ஹி ஸூதே விசயம் அவஸர: க்வாத்ர தந்த்ராந்தராதே₃:
ஔசித்யஸ்தா₂பிவதோயம் க்ரம இஹ ந புந: சோத₃நா ஸம் ப்ரயுக்த: ||

  • சிலர் தாப த்ரய ஹதிம் இதரே-உலகத்தில் (ஆத்யாத்மிகம் ஆதி பவ்திகம் ஆதி தெய்விகம்)மூன்று விதமான தாபங்களால் பாதிக்கப்பட்ட பிறகு என்கிறார்கள்.
    சிலர் இதரே ஸாத₄நாநாம் சதுஷ்கம்-ஸாத₄ந சதுஷ்டயம் எனப்படும் நான்கு தகுதிகள் ஏற்பட்ட பிறகு என்கிறார்கள்.-அவையாவன –
    (1) நித்ய அநித்ய வஸ்து விவேக: –உலக பொருள்களில் எது நித்யமானது எது அநித்யமானது என்ற பகுத்தறிவு
    (2) சமம் தமம் – வெளிப் புலன்கள் மற்றும் மனதை அடக்குவது
    (3) இஹ அமுத்ர ப₂ல போ₄க₃ விராக₃: – இம்மையிலும் மறுமையிலும் பெரும் இன்பங்களில் பற்றின்மை
    (4) முமுக்ஷுத்வம் – ஸம்ஸாரத்திலிருந்து மோக்ஷம் அடைய வேண்டும் என்கிற ஆசை .

காண்டே₃ஸ்மிந் பூர்வ வ்ருத்தம் கத₂யதி நிக₃ம: |-இந்த கேள்விக்கான விடையை வேதமே வழங்குகிறது –

பரீக்ஷ்ய லோகாந் கர்ம சிதாந் ப்₃ராஹ்மண : நிர்வேத₃ம் ஆயாத் நாஸ்தி அக்ருத: க்ருதேந
தத்₃விஜ்ஞாநார்தம் ஸ கு₃ருமேவ அபி₄க₃ச்சே₂த்.ஸமித் பாணிம்
ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்

கர்மங்களால் அடையப்படும் பயன்களை ஆராய்ந்து பார்த்து இந்த முடிவுக்கு வரக் கடவன் – கர்மங்களால் நிரந்தரமான ஸுகத்தை அடைய முடியாது என்று. (ஓட்டைப்படகு என்றே வேதம் இவற்றைக் கூறும்)அதன் பிறகு ப்ரஹ்மத்தை அறிய குருவை அணுக வேண்டும்.

எதற்காக வேதத்தின் பொருளில் ஆராய்ச்சி?

  • ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் “ அதா₂தோ ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாைா” என்னும் ஸூத்ரத்தில் அத₂ என்ற சொல் ’அடுத்து’ என்று பொருள் உடையது. யோசித்துப் பார்த்தால் “கர்ம விசாரம் செய்த பிறகு” என்கிற பொருளை அறியலாம்.
  • ப்ரஹ்ம விசாரம் செய்வதற்கான சூழ்நிலை எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்போம் –
  • 1-வேதத்தைக் கற்க வேண்டும் என்னும் கட்டளை யுள்ளது. அதனால் வேதத்தை ஒருவன் அத்யயனம் செய்கிறான், அதாவது ஆசார்யன் சொல்லச் சொல்லத் திரும்பச் சொல்கிறான். அதன் மூலம் வேதம் என்னும் மூல நூலை மனப்பாடம் செய்து விடுகிறான்.
  • 2-அதன் கூடவே ஸம்ஸ்க்ருத பாஷை , இலக்கணம் முதலானவற்றையும் கற்கிறான். அதனால் வேதத்தைக் கற்கும் போதே அதன் பொருளும் மேலோட்டமாக அவனுக்கு புரியத் தொடங்குகிறது. இதை ஆபாத ப்ரதீதி என்பர்கள்.
  • 3-அதில், சில கர்மங்கள் நிலை நில்லாத பயன்களையும், சில நிரந்தரமான பயனையும் தரும் என்று தோற்றுகிறது.-ப்ரஹ்மத்தைத் த்யானித்தால் நிரந்தரமான பயன் கிடைக்கும் என்றும் தோற்றுகிறது. ஆனால் மேலோட்டமான புரிதல் மட்டும் இருந்தால், பல ஸந்தேஹங்கள் மனதில் தோன்றும். அதன் மூலம் எந்த உறுதியான முடிவையும் எடுக்க இயலாது.
  • 4-எந்த ஒரு ஆத்மாவுக்கும் ஒரே குறிக்கோள் – எல்லை யற்ற முடிவற்ற ஆநந்தத்தை அடைய வேண்டும் என்பதே . அதற்கான சிறந்த வழி எது என்று முடிவு செய்வதற்கு தனக்குள்ள ஸந்தேஹங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக முழுமையாக வேதத்தின் பொருளை ஆராய்ச்சி செய்து தான் ஆக வேண்டும்.
  • 5-இந் நிலையில் கர்மங்களைச் சொல்லும் கர்ம காண்டத்தை முதலில் ஆராய்வானா? அல்லது ப்ரஹ்மத்தைச் சொல்லும் ப்ரஹ்ம காண்டத்தை (உபநிக்ஷத்தை ) முதலில் ஆராய்வானா?

கர்மங்ளின் ஆராய்ச்சிக்குப் பின் ப்ரஹ்மத்தின் ஆராய்ச்சி

  1. ப்ராவண்யம் ப்ராக் த்ரிவர்கே ₃ ஸப₂ல யதநதா உபாஸந அங்க₃த்வதோபி
    வ்யாக்₂யாரூ பேத்ர ஸாஸ்த்ரே க்ரம நியதிரஸவ் ஸ்யாச்ச முக்₂ய க்ரமேண

    எந்த ஒரு மனிதனுக்கும் பல ஜந்மங்களாக தர்மம் அர்த்தம் காமம் என்ற மூன்று புருஷார்த்தங்கணை அநுபவித்தே பழக்கமான படியால், அதைத் தரும் கர்மங்கள் பழக்கமானவை . எனவே முதலில் கர்ம காண்டத்தை ஆராய்வான்-கர்ம யோகம் உபாசனத்துக்கு அங்கமாகவும் உள்ளதால் அத்தை முதலில் ஆராய வேண்டுமே-. மேலும், மீமாம்ஸை என்கிற ஆராய்ச்சி நூல் வேதம் என்கிற மூல நூலின் வ்யாக்₂யானம் (உரை ) தான். எனவே , மூல நூலில் எந்த வரிசை உள்ளதோ அதன்படி தானே உரையை வாசிக்க முடியும். வேதத்தில் முதலில் கர்ம காண்டம் உள்ளது, பிறகு தான் ப்ரஹ்ம காண்டம். எனவே முதலில் கர்ம காண்டத்தை ஆராயத்தான் முயல்வான்.
  2. கர்ம காண்டத்தின் பொருளை ஸந்தேஹத்துக்கு இடமில்லாமல் ஆராய்ந்து நிரூபிப்பதற்குத் தான் ஜைமிநி மஹரிஷி கர்ம மீமாம்ஸை என்னும் கர்ம விசார நூலை இயற்றியுள்ளார். எனவே அதைத் தான் முதலில் பயில்வான். அதன் முடிவில் இந்த புரிதல் வருகிறது – நாம் செய்யும் கர்மங்களால் நிரந்தர ஸூகமான மோக்ஷத்தை அடையவே முடியாது என்று.
  3. அப்போது தான் த்யானம் செய்தால் மோக்ஷத்தை அடையலாமா என்று அறிவதற்காக மீதமிருக்கும் பகுதியான உபநிக்ஷத்துக்களை ஆராயக் கூடிய ப்ரஹ்ம மீமாம்ஸா எனப்படும் ப்ரஹ்ம விசாரத்தில் இழிகிறான். அதற்காக ஒரு குருவிடம் கண்டிப்பாகச் சென்று உபதேசங்களைப் பெற வேண்டும் என்று உபஷிநத் கட்டளை இடுகிறது.
  4. இதைத் தான் போதாயநர் தன்னுடைய வ்ருத்தி என்னும் நூலில் (வ்ருத்தாத் கர்மாதி₄க₃மாத் அநந்தரம் ப்ரஹ்ம விவிதி₃ஷா ) அதாவது “கர்ம விசாரம் முடிக்கப்பட்ட பிறகு ப்ரஹ்மத்தை ஆராயும் ஆசை ஏற்படுகிறது” என்கிறார். இதுதான் ’ அத₂’ என்ற சொல்லின் பொருள் ஆகும்.
  5. அத: (ஆகையால்) என்ற சொல்லின் பொருள் – “கர்மங்கள் நிரந்தர ஸூகத்தை அளிக்காது என்ற புரிதலால்”

இரண்டு மீமாம்ஸைகளும் ஒரே நூல் தான்

  • ஜைமிநி மஹரிஷி எழுதிய கர்ம மீமாம்ஸை என்னும் நூலை முதலிலும், அதற்குப் பின் வேத வ்யாஸர் இயற்றிய ப்ரஹ்ம மீமாம்ஸை என்னும் நூலையும் படிக்க வேண்டும் என்று பார்த்தோம். உண்மையில் இணவ இரண்டும் வெவ்வேறு நூல்களே அல்ல, மீமாம்ஸை என்பது ஒரே நூல், அதில் கர்மம் என்றும் ப்ரஹ்மம் என்றும் இரண்டு
    பகுதிகளே உள்ளன என்பது பெரியோர்களின் கருத்து.
  • இரண்டு புத்தகங்களைக் கண்டால் இவை ஒரே நூலா அல்லவா என்று எப்படி முடிவு செய்யலாம்?
  • ஒரே புத்தகமாக அச்சிடப்பட்டிருக்க வேண்டுமே -என்னில் தேவையில்லை . பெரிய ஒரு நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தும் அச்சிடுவதைக் காண்கிறோமே .
  • ஒரே பெயர் இருக்க வேண்டுமே -என்னில் தேவையில்லை . பகவத் கீதை போல், ஒரு நூலில் ஒவ்வொரு அத்யாயத்துக்கும் வெவ்வேறு பெயர் இருப்பதுபோல் அந்தந்தப் பகுதிக்கு ஒரு பெயர் இருக்கலாமே .
  • ஒரே விக்ஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமா? தேவையில்லையே . ஒரே நூலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விஷயங்களைப்பற்றிப் பேசலாமே .
    எனவே இங்கும் கர்மம் ப்ரஹ்மம் என்று இரு வேறு விக்ஷயங்களைப் பேசினாலும் குறையில்லை .
  • ஒரே ஆசிரியர் இருக்க வேண்டுமா? அதுவும் தேவை யில்லை . காத₃ம்ப₃ரீ முதலான பல நூல்கள் பல ஆசிரியர்களால் சேர்ந்து இயற்றப் பட்டிருப்பதைக் காண்கிறோம். எனவே இங்கும் ஜைமிநி வ்யாஸர் என்று இரண்டு ஆசிரியர்கள் இருப்பதில் தவறில்லை .
  • ஒரே நூலாய் இருக்க ஒரே தேவை தான் – தொடர்ச்சி இருக்க வேண்டும். அது இங்கு உள்ளது. கர்ம மீமாம்ஸை எந்தப் புள்ளியில் முடிகிறதோ அங்கிருந்தே ப்ரஹ்ம மீமாம்ஸை தொடங்குகிறது. எனவே இது ஒரே நூல் தான்.ஸம் ஹிதம் -சங்கத விசிஷ்டேன -தொடர்பு உள்ளதால் ஒரே நூலே-
  • இத்தால், கர்மம் த்யாநம் எனும் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை- இரண்டுமே நம் வாழ்க்கையில் இன்றியமையாதவை என்று தெரிகிறது.
  • அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா -ஜைமினியின் முதல் ஸ்தோத்ரத்துடன் ஒவ்வொன்றுக்கும் நன்றாகக் பொருந்தி உள்ளவே-தர்ம விசாரமும் ப்ரஹ்ம விசாரமும் ஒன்றே-ஸித்த தர்மமே ப்ரஹ்மம் –

நாம் பயிலும் முறை சரியா?
வித்₄யுக்த்யா அதீ₄த்ய வேதா₃ந் விதி₄ப₃லவிரதௌ அந்யஜாதே₃வ ராகா₃த்
க்ருத்ஸ்நம் மீமாம்ஸ மாநா: க்ரமத இதி பர ப்₃ரஹ்ம சிந்தாம் தரந்தி |
ப்ராப்வத துர்யே யுகே₃ஸ்மின் பரிமித ப₃ல தீ₄ ப்ராண தத்₃விக்₄ந த்₃ருஷ்ட்யா
கால ஷேப அக்ஷமத்வாத் கதி சந க்ருதிந: சீக்₄ரம் அந்தே ரமந்தே ||

  • பகவானின் ஆணையால் வேதத்தைப் பயில்கிறான்; அதன் பின் தனக்கே அதன் பொருளை ஆராய வேண்டும் என்னும் ஆசை பிறந்து முழு வேதத்தையும் ஆராய்கிறான் – முதலில் கர்ம விசாரம் பின் ப்ரஹ்ம விசாரம் என்ற வரிசையில். இது தான் பொதுவாக ப்ரஹ்ம விசாரம் செய்யச் சரியான வழி. ஆனால் நாம் இப்படிச் செய்ய வில்லையே ? அது தவறா?
  • அல்ல என்கிறார்கள் ஆசார்யர்கள் – கடைசி யுகமான கலியுகத்தில்-(பரிமித ப₃ல தீ₄ ப்ராணதத்₃விக்₄ந த்₃ருஷ்ட்யா )பலம், புத்திக் கூர்மை மற்றும் ஆயுஸ் குறைந்து விட்டபடியாலும், தடைகள் (விக்நங்கள்) அதிகமானபடியாலும், காலம் தாழ்த்த மனமில்லாமல் சில (க்ருதிந )பாக்ய சாலிகள் நேரடியாக இறுதிப் படியான ப்ரஹ்ம விசாரத்திலேயே இழியலாம், இதில் தவறில்லை .( சீக்₄ரம் அந்தே ரமந்தே-விரைவில் ஆனந்தமும் அடைகிறார்கள்)
  • எனவே , ப்ரஹ்மத்தைப் பற்றி அறிவதன் மூலம் மட்டுமே மோக்ஷம் எய்த முடியும் என்பதால், அவ் வறிவை ஸந்தேஹத்துக்கு இடமின்றி நமக்கு அளிக்கும் ப்ரஹ்ம விசாரத்தை ஆசைப்பட்டுச் செய்ய வேண்டும் என்று வேத வ்யாஸர் இந்த முதல் ஸூத்ரத்தில் கூறுகிறார்.
  • ஆத்மாவா அரே த்ரஷ்டவ்யா: ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய ஸ்ரோதவ்ய:- கேட்டு -ஆணை அல்ல -ஆசையுடன் ஸ்ரவணம் செய்ய வேண்டும் மந்தவ்ய: நிதித்யாஸிதவ்ய-மனனம் மந்தவ்ய -இவற்றையும் ஆணையிட முடியாது -ராகம் தூண்ட செய்ய வேண்டும் த்யானம் ஒன்றே கட்டளை-ப்ரீதி பூர்வகமாக அநவரதம் த்யானம் பண்ணி ம்ருத்யு சம்சாரம் போக்கி – உபாஸ்ய -பரமாத்மாவை அடைந்து பரம புருஷார்த்தம் பெற வேண்டும்
  • இனி, இந்த ஸூத்ரத்தில் ஸந்தேஹம் என்ன? பூர்வ பக்ஷம் என்ன? ஸித்தாந்தம் என்ன? என்று பார்க்கலாம்.
  • ஸ்ரவணம்–மனனம் -த்யானம்
  • ஆச்சார்யர் உபதேசம் கேட்டு
  • ப்ரஹ்ம விசாரமாவது உபநிஷத்துக்கள் அர்த்தங்கள் ஆராய்ச்சி -இதுவே மனனம் -பின்பு -த்யானம்
  • ஆஸ்திக தர்சனம்
  • மதங்கள் வேறே தர்சனங்கள் வேறே
  • உலகம் பற்றிய எண்ணமே தர்சனம் –
  • மீமாம்ஸா தர்சனம் -கர்ம காண்டத்துக்கு முக்கியம்
  • பிரபாகரர் குரு -அவலம்பித்தவர்கள் இங்கு பூர்வ பஷீ

ப்ராபாகரர்களின் ஆஷேபம்
சாஸ்த்ரத்தையே தொடங்க வேண்டாம் என்று ஆஷேபம்
இது வரை முதல் ஸூத்ரத்தின் சொற்களுக்கான பொருள் என்ன என்று பார்த்தோம். இனி, இந்த ஸூத்ரத்தின் மூலம் யாருடைய எந்தக் கேள்விக்கு வ்யாஸர் பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம்.

  • விஷயம் – இந்த ஜிஜ்ஞாஸாதிகரணத்தின் விஷயம் “ப்ரஹ்ம மீமாம்ஸை ” அதாவது உபநிஷத்துகளின் பொருள் என்கிற உயர்ந்த விஷயத்தைப் பற்றின ஆராய்ச்சி (அல்லது ப்ரஹ்மம் என்கிற உயர்ந்த விஷயத்தின் ஆராய்ச்சி).
  • ஸந்தேஹம் – ப்ரம்ஹத்தைப் பற்றின விசாரத்தைத் துவங்க வேண்டாமா? துவங்க வேண்டுமா?
  • பூர்வ பக்ஷம் – ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய உபநிஷத்தின் பொருணை ஆராய்ந்து பயனில்லை , ஏன் எனில் உபநிஷத்துகளால் ஸித்த வஸ்துவான ப்ரஹ்மத்தைப் பற்றி போதிக்கவே முடியாது.
  • இந்த அதிகரணத்தின் பூர்வபக்ஷீ (எதிர் வாதம் செய்பவர்) மீமாம்ஸை என்ற ஸித்தாந்தத்தை ஏற்பவர்களில் ஒரு குழுவான ப்ராபாகரர்கள். இங்கு மீமாம்ஸை என்பது வேதத்தின் கர்ம காண்டத்தையே முக்கியமாகக் கொண்டு வேதாந்தத்தைப் புறக் கணிக்கும் ஒரு ஆஸ்திக தர்சனம்.
  • இவர்களது வாதம் இவ்வாறு –
  • வேதாந்தம் ப்ரஹ்மத்தைப் பற்றி அறிவிக்க முடியாது
  • ஏன் எனில், ஸித்தமான (முன்னரே தயாராக இருக்கும்) ஒரு பொருளைப் பற்றி மட்டும் பேசும் வாக்கியம் அறிவை ஏற்படுத்த முடியாது. செய்யப்பட வேண்டிய ஒரு செயல் (கார்யம்) அந்தச் சொற் தொடரில் இருக்க வேண்டும்.
  • ஏன் எனில், சொல்லுக்கும் பொருளுக்கும் உண்டான தொடர்பு (சக்தி) அறியப்படும் போது, அது ஸித்தமான பொருளோடு அறியப் படுவதில்லை , கார்யத்தோடு தொடர்பு பட்ட பொருள்களில் தான் அறியப் படுகிறது.
  • ஏன் எனில், வ்ருத்த வ்யவஹாரம் (ஒருவர் ஆணையிட மற்ற ஓருவர் அதைச் செய்வது) என்பதைப் பார்ப்பதன் மூலம் மட்டும் தான் சக்தியை அறிய முடியும், எனவே அதில் கார்யம் இன்றியமையாதது.

ஹரி -13 அர்த்தங்கள் -நாராயணன் ஸிம்ஹம் குரங்கு போல்வன-ஸக்தி சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் -தொடர்பை அறியும் பொழுது செயலுடன் சேர்ந்த ஒன்றாகவே இருக்க வேண்டும் –ஸக்தி க்ரஹம் -அதைப் பற்றிய அறிவு அப்பொழுது தான் ஏற்படும் என்பர்
ப்ரஹ்மம் ஸித்த வஸ்து –
மாட்டை அழைத்து வா -சொல்லவும் -கொண்டு வரப் பார்த்து -குழந்தை அறிகிறது
மாட்டை கட்டு என்றதும் அதையும் அறிகிறது குழந்தை
இதே போல் குதிரையை அழைத்து வா குதிரையைக் கட்டு இவற்றைக் கேட்டு செய்த செயல்களைப் பார்த்து அறிகிறது
பெயர்ச் சொல்லுகளுக்கும் வினைச் சொல்லுகளுக்கும் இவ்வாறே அறிகிறது –
ஸ்ரீ ரெங்கத்தில் அரங்கன் பள்ளி கொண்டுள்ளார் -ஆச்சார்யர் சொல்ல ஒன்றுமே செய்யாத சிஷ்யர் –குழந்தைக்கு ஒன்றுமே அறிய இயலாதே-

அயோத்யையில் ராமர் இருக்கிறார் -நாம் அறிகிறோமே -அறிவே வராது என்று சொல்ல வில்லை-நீ போய் தர்சிப்பாய் -என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் –
வயலிலே மாடு மேய்ந்து கொண்டு உள்ளது -தனித்துப் பார்க்காமல்-மாட்டை அழைத்து வா -மாட்டைக்கட்டு என்பவற்றைச் சேர்த்தே முழுமையான ஞானம் வரும்-கர்மகாண்டத்துக்கு இந்த ஆஷேபம் வராது -ஜ்யோதிஷ்ட ஹோமம் செய் -பேசுவதால் ஞானம் ஏற்படுகிறது என்பர்-

மீமாம்ஸகர்
ப்ராபகரர்
பாட்டர்
மண்டல மிஸ்ரர் -மூன்று சித்தாந்தங்கள்

வேதாந்தத்தின் ஆற்றலை நிரூபித்தல்

வேதாந்தம் ப்ரஹ்மத்தை போதிக்கும் ஆற்றல் கொண்டது

  • எந்த ஒரு சொற் தொடரும் ஸித்தமான ஒரு பொருளைப் போதிக்க முடியாது, ஆகையால் வேதாந்தம் கொண்டு ப்ரஹ்மத்தை அறிய இயலாது என்பது ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் ப்ராபாகரர்கள் செய்த ஆஷேபம். அதற்கு பதில் உரைக்கத் தான் வேத வ்யாஸர் ’
    அதா₂தோ ப்₃ரஹ்ம ஜிஜ்ஞாஸா’ என்ற ஸூத்ரம் அமைத்து, ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டியது தான் என்று நிரூபிக்கிறார்.
  • பூர்வபக்ஷியின் வாதத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்கிறார் பகவத் ராமாநுஜர் –
  1. வ்ருத்த வ்யவஹாரம் தவிர வேறு எந்த முறையிலும் சொல்-பொருள் தொடர்பு ( சக்தி) அறியப்பட முடியாது
  2. வ்ருத்த வ்யவஹாரம் கார்யத்தோடு தொடர்புபட்ட பொருளில் தான் சக்தியை அறிவிக்கும், ஸித்தப் பொருளில் அல்ல
  3. எனவே வேதாந்தத்தில் கார்யம் எதுவும் சொல்லப் படாதபடியால் அது ஸித்தமான ப்ரஹ்மத்தை மட்டும் போதிக்காது
  • இனி இப் பகுதிகளுக்கான பதில்களை வரிசையாகப் பார்ப்போம் –

ஒருவர் ஆணையிட மற்ற ஓருவர் செயல் படுவதைப் பார்த்து மட்டும் தான் சக்தியை அறியலாம் என்பது தவறு.
i. சிறு குழந்தைக்கு தாய் தந்தையர் விரலால் ஒவ்வொரு பொருளையும் காட்டிக் காட்டி, ’இது அம்மா’’இது சந்திரன்’’இது மாடு’’இது மரம்’ என்று பல முறை சொல்லுகிறார்கள். காலப் போக்கில், குழந்தையும் அந்தச் சொற்களைக் கற்றுக் கொள்கிறது. பிறகு, அந்தந்தப் பொருளைப் பார்க்கும் போது அந்தந்தச் சொல்லும், அந்தந்தச் சொல்லைக் கேட்கும் போது அந்தந்த பொருளும் தனக்குத் தோற்றுவதைப் பார்த்து அக் குழந்தை
புரிந்து கொள்கிறது – ’இந்தச் சொல் இந்தப் பொருளைப் பற்றின அறிவை ஏற்படுத்தும் சக்தி உடையது’ என்று.
ii.சற்று வளர்ந்தவுடன் , விரலால் சுட்டுவதை நிறுத்தி விட்டு, குழந்தைக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டே தெரியாத பொருள்களை அறிவிக்கிறார்கள். ’அந்த மரத்தின் மேல் இருப்பது தான் குரங்கு’–வானத்தில் பரக்கிறதே அதுதான் விமானம்’ என்னும் சொற் தொடர்களிலிருந்தே குழந்தை சக்தியை அறிந்து கொள்கிறது.
இம் முறைகளில் செயல் எதுவும் இல்லை , ஸித்தமான பொருளிலேயே குழந்தை சொல்லின் சக்தியை அறிகிறது.

சம்பந்தம்- உள்ள சொற்கள் அம்மா அப்பா போல்வன-பொதுவான சந்திரன் போன்றவை -இரண்டு வர்க்கங்கள்-அங்குல்யா நிர்திஸ்ய நிர் திஸ்ய -பஹு நாளாக கேட்ட பின்பு-பின்பு கையாலே காண்பிக்காமல்-சொல்லச் சொல்ல -ப்ரஸித்த வாக்ய-
வார்த்தைகளை நினைத்து -பின்பு-வ்யக்தியைப் பார்த்து -தொடர்பு -சக்தி ஞானம் குழந்தைக்கு உண்டாகும்-வியாகரணம் -ஆண் பால் -எடுத்துக்காட்டு -கோஸம் -dictinary -ஆப்த வாக்யம் -போன்ற பல வழிகளால் ஞானம் ஏற்படும் –வ்ருத்த வியவஹாரம் ஒரு வழி

மேல் ஆச்சார்யர் சிஷ்யன் குழந்தை தேவதத்தன் ஆகிய நால்வரைக் காட்டி செயல்கள் இல்லாத ஞானமும் ஏற்படுவதைக் காட்டுகிறார்-ஹஸ்த சேஷ்டை மூலமும் சொல்வதை அறியலாம்

வ்ருத்த வ்யவஹாரத்தால் கார்யத்தோடு தொடர்புபட்ட பொருளில் மட்டும்தான் சக்தியை அறிய முடியும் என்பதல்ல
எடுத்துக்காட்டு – ஓர் ஆசார்யன் ஒரு சீடனிடம் ஆணையிட்டார் – “உன் தந்தை நலமாக உள்ளார்” என்று தேவதத்தனிடம் சொல் – என்று. அச்சீடன் ஓடிப்போய் தேவதத்தனிடம் செய்கைகளின் மூலம் அதை அறிவித்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை , அச்சீடன் செய்த செய்கைகளின் மூலம் அர்தத்தைப் புரிந்து கொண்டு, ஆசார்யன் சொன்ன வாக்கியத்திற்கு அது தான் பொருளாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாமே
இவ்விடத்தில் கார்யம் எதுவும் இல்லை , தந்தையின் நலம் என்ற ஸித்தமான பொருள் தான் சொல்லப் பட்டுள்ளது,-ஆனால் குழந்தைக்கு சக்தி ஜ்ஞாநம் ஏற்படுகிறதே . எனவே வ்ருத்த வ்யவஹாரம் மூலமும் ஸித்தமான பொருளில் சொல்லின் சக்தியை அறியலாம்.
இவ்வாறு ஸித்தமான பொருளிலும் சக்தியை அறிய முடியும் என்பதால், வேதாந்தம் ஸித்தமான ப்ரஹ்மத்தைப் பற்றி அறிவிக்க வல்லதே என்று நிரூபித்தார் வேத வ்யாஸர்.

வ்ருத்த வியவஹாரத்தில் செயல் இல்லாவிட்டாலும் ஞானம் ஏற்படுமே-அத்தையும் காட்டுகிறார்

  1. ஒரு வேளை பூர்வபக்ஷி சொன்னது போல் கார்யம் இருந்தால் மட்டும் தான் ஒரு சொற் தொடர் பொருள் அளிக்கும் என்பதை ஒப்புக் கொண்டாலும் கூட, வேதாந்தம் ப்ரஹ்மத்தை போதிக்க முடியும் என்றும் நாம் நிரூபிக்கலாம்.
    ’வயலில் மாடு உள்ளது’-அதை அழைத்து வா’ என்று ஆசார்யன் சொன்னால், ஸித்தமான பொருளைச் சொல்லும் முதல் சொற் தொடர் தனியே அறிவை ஏற்படுத்தாது, இரண்டாவது சொற் தொடரில் உள்ள செயலோடு தொடர்பு உள்ள படியால் தான் போதிக்கும் என்றார் ப்ராபாகரர்.
    அதே போல் வேதாந்தத்திலும் ’ப்ரஹ்மத்தை த்யானிப்பாய்’ என்று ஆணையிட்டுவிட்டு, பிறகுதான் ’ப்ரஹ்மம் இப்படிப்பட்டது’ என்று ஸித்தமான ப்ரஹ்மத்தைச் சொல்லும் வாக்கியங்கள் உள்ளன. எனவே அவையும் த்யானம் என்ற செயலோடு தொடர்புபட்ட ப்ரஹ்மத்தைத் தான் சொல்லுகின்றன.-ஆக இவ்வாறு, ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டியதே என்று நிரூபிக்கப்பட்டது.

நீ சொல்வதை ஒத்துக் கொண்டு– முதல் வாக்யம் செயல் இல்லாமலும் -இரண்டாவது வாக்யத்தில் செயல் -ஆணை விதிகள் உள்ளனவே-வேதாந்தத்தில் த்யானம் உபாஸனம் தியானம் போன்ற செயல்கள் உள்ளனவே-மாடு வயலில் உள்ளது -ஸித்த வாக்கியம் சொல்லி மேல் மாட்டை அழைத்து வா -சொல்வது போல்-கர்ம காண்டத்திலும் ஸ்வர்க்கம் இப்படி இருக்கும் சித்த வாக்கியம் சொல்லி ஜ்யோதிஷடஹோமம் அத்தை அடையலாம் -என்பது போல் இங்கும் உண்டே-

———–

1.1.2 ஜந்மாத்யதி₄கரணம்
ப்ரஹ்மத்துக்கு இலக்கணம் உண்டா?

ப்ரஹ்மத்திற்கு இலக்கணம் ஏன் தேவை ?

ஜிஜ்ஞாஸாதிகரணத்தில் – உபநிஷத்துகள் ப்ரஹ்மத்தைச் சொல்ல வல்லவை தான், எனவே ப்ரஹ்மத்தைப் பற்றின ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும் என்று வ்யாஸர் கூறினார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது – ஆராயப் பட வேண்டிய ப்ரஹ்மம் யார் என்று துல்யமாக அறிந்தால் தானே அவரை ஆராய முடியும். அந்த ப்ரஹ்மத்துக்கு இலக்கணம் உண்டா? என்று. அதற்கு பதிலளிக்கிறார் “ஜந்மாத்யதி₄கரணம்” என்ற இரண்டாம் அதிகரணத்தில். இதுவே ஸங்கதி (தொடர்பு)

ஒரு பொருணை அடையாளம் காண இரண்டு தேவைகள் – ப்ரமாணம் மற்றும் இலக்கணம் (லக்ஷணம்).-எடுத்துக்காட்டு – ஒரு மாடு (லக்ஷ்யம்) அடையாளம் காணப் பட வேண்டும் என்றால் முதலில் அதைப் பார்ப்பதற்குக் கண் தேவை -. ஆனால் அது மட்டும் போதாது. மாடு என்பது எப்படி இருக்கும், அதன் இலக்கணம் என்ன என்றும் அறிந்திருக்க வேண்டும். அதுபோல், இவர் தான் ப்ரஹ்மம், இவரைத் தான் நாம் ஆராயப் போகிறோம் என்று
உறுதி செய்ய ப்ரமாணம் மற்றும் இலக்கணம் என்று இரண்டும் தேவை -. ஜிஜ்ஞாஸாதிகரணத்தில், ப்ரஹ்மத்தை அறிய வேதாந்தம் தான் ப்ரமாணம் என்று கூறினார். இந்த அதிகரணத்தில் அந்த ப்ரஹ்மத்தின் இலக்கணம் கூறுகிறார்.

(அதிகரணம் 1.1.2) ஜந்மாத்யதிகரண ம் – இதில் ஒரே ஸூத்ரம் தான் உள்ளது – ஜந்மாத் அஸ்ய யத:

அஸ்ய – எண்ணிலடங்காத பலவிதமான சேநர்களும் அசேனப்பொருள்களும் அடங்கிய இந்த ஜகத்தினுணடய ஜந்மாதி₃ – ஜன்மம் (உண்டாக்கம்), ஸ்தி₂தி (நிலைப்பாடு), லயம் (அழிவு) ஆகிய இம் மூன்றும்

யத : – எதனிடமிருந்தோ / எதனாலாலோ [“அதுவே ப்ரஹ்மம்” என்று வாக்கியத்தை முடித்துக் கொள்ள வேண்டும்]

ஆக,
“உலகத்தை யெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் தான் ப்ரஹ்மத்தின் இலக்கணம். இம் மூன்று பண்புகளும் யாரிடம் உள்ளனவோ அவரே ப்ரஹ்மம் ஆவார்” என்று இந்த ஸூத்ரத்தின் பொருள் ஆகும்.

இதற்கு மூலம் – தைத்திரீய உபநிஷத்தில் வருணன் தன் மகனாக ப்ருகுவுக்கு ப்ரஹ்மத்தின் இலக்கணத்தை இவ்வாறே கூறினார் –
“யதோ வா இமாநி பூ₄தாநி ஜாயந்தே , யேந ஜாதாநி ஜீவந்தி, யத் ப்ரயந்தி அபி₄ஸம்விசந்தி, தத் ப்₃ரஹ்ம”.

இலக்கணம் சொல்ல இயலாது என்ற பூர்வ பக்ஷம்

  • இந்த அதிகரணத்தில் பூர்வபக்ஷீ கூறுகிறார் – “யதோ வா இமாநி” என்ற உபநிஷத் வாக்கியம் ப்ரஹ்மத்தின் லக்ஷணத்தைச் சொல்லவே முடியாது; இலக்கணம் சொல்ல முடியாத போது அப் பொருணை ஆராய முடியாது; எனவே உபநிஷத்துகளை ஆராயும் இந்த ப்ரஹ்ம மீமாம்ஸை என்ற ப்ரஹ்ம ஸூத்ரங்களைத் தொடங்கவே வேண்டாம்.
  • உலகத்தை யெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் தான் ப்ரஹ்மத்தின் இலக்கணம்” என்று சொல்வதில் என்ன தவறு? ஏன் இது ப்ரஹ்மத்தின் இலக்கணமாக முடியாது? என்று நமக்குத் தோன்றும். அதற்கு பூர்வபக்ஷீ மிக அழகாக வருணிக்கிறார்.
  • இவ் விடத்தில் ஒரு முக்கியமான நுட்பத்ணத அறிந்து கொள்வோம். லக்ஷணம் (இலக்கணம்) இரண்டு வகைப்படும் –
  1. விசேஷணம் – லக்ஷ்யத்தின் பகுதியாகவே இருக்கும் அடையாளம்.
    ஒரு காகத்துக்கு அடையாளம் அதன் அலகு, சிறகு, கருப்பு நிறம் முதலானவை . இவற்றைக் கொண்டு காகத்தை அறிகிறோம். இவை என்றுமே காகத்தை விட்டு விலகாது. காகத்தை எப்போதும் இவற்றோடு சேர்ந்து தான் அறிய முடியும். எனவே இப்படிப்பட்ட அடையாளங்கள் விசேஷணம் எனப்படுகின்றன.
  2. உபலக்ஷணம் – லக்ஷ்யத்தைக் காட்டிலும் வேறுபட்டதான அடையாளம்.
    ஒரு க்ராமத்துக்குச் சென்று “இங்கு கண்ணனின் நிலம் எது?” என்று கேட்டேன். “அதோ கொக்கு இருக்கிறதே ,-அதுதான் கண்ணனின் நிலம்” என்று ஒருவர் கூறினார். இவ்விடத்தில், கொக்கு என்னும் அடையாளத்தைக் கொண்டு கண்ணனின் நிலத்ணத அடையாளம் கண்டோம், ஆனால் கொக்கு நிலத்தின் பிரியாத பகுதி அல்ல. அது எப்போது வேண்டுமானாலும் பரந்து சென்றுவிடும். அந்நிலத்தை அறியும் போதெல்லாம் அந்தக் கொக்கோடு சேர்த்து தான் அறியமுடியும் என்பதல்ல. இப்படிப்பட்ட அடையாளமான கொக்கு உபலக்ஷணம் ஆகிறது.

இந்த அதிகரணத்தின் பூர்வபக்ஷீ சொல்லுவது – படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்றும் விசேஷணம் என்ற வகையைச் சேர்ந்த இலக்கணமா? அல்லது உப லக்ஷணம் என்ற வகையைச் சேர்ந்ததா? எப்படிச் சொன்னாலும் அதில் குற்றம் ஏற்படுகிறது, அதனால் இரண்டுமே பொருந்தாது. எனவே ப்ரஹ்மத்துக்கு இது இலக்கணமாக முடியாது.

பூர்வபக்ஷி சொல்லும் ஒவ்வாமை

  • ஏன் இரண்டு விதமுமே ஒவ்வாது என்று சொல்கிறார் என்று பார்ப்போம் –

உப லக்ஷணம் என்று கொண்டால் – உப லஷணம் சொல்லும் இடங்களில் லக்ஷ்யத்தை நாம் மூன்று நிலைகளில் அறிகிறோம்.
i. முதலில் “நிலம்” என்று பொதுவாக அறிந்தேன். இதுவே பூர்வ ப்ரதிபந்ந ஆகாரம் (முன் அறியப்பட்ட வடிவம்)
ii. அடுத்து “கொக்கு அமர்ந்திருக்கும் நிலம்” என்று உப லக்ஷணத்தை உடையதாக அறிந்தேன்.
iii. இறுதியில் “கண்ணனுடைய நிலம்” என்று அறிந்தேன். இது தான் ’உப லக்ஷ்ய ஆகாரம்” எனப்படுகிறது.
அதுபோல் இவ் விடத்தில் பார்த்தால், படைத்தல் காத்தல் அழித்தல் என்ற உப லக்ஷணங்களைக் கொண்டு ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்றால், அதற்கு முன்னமே ஏதோ ஒரு முறையில் ப்ரஹ்மத்தை அறிந்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அறிவு உபநிஷத்தில் இல்லை . எனவே இந்தப் பண்புகள் உப லக்ஷணமும் ஆக முடியாது.
இரண்டு வகையுமே இயலாத போது இம் மூன்று பண்புகள் இலக்கணமே அல்ல என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

விசேஷணம் என்று கொண்டால் – விசேஷணம் என்ற சொல்லுக்கே ’வ்யாவர்தகம்’-அதாவது வேறுபடுத்துவது’ என்று பொருள். “வெள்ளை வேஷ்டி” என்று சொன்னால், இங்கு வெண்மை என்ற விசேஷணம், தான் இருக்கும் வேஷ்டியை மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும். இது ஒவ்வொரு விசேஷணத்துக்கும் இயல்பு. எனவே ஒரு சொற் தொடரில் பல விசேஷணங்களைச் சொன்னால்,
ஒவ்வொரு விசேஷணமும் தான் இருக்கும் பொருளை மற்றப் பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறபடியால், இறுதியில் பல பொருள்கள் இருப்பதாகத் தான் ஆகுமே தவிற, ஒரே பொருள் ஆகாது.
அதுபோல் இங்கும் – படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று பண்புகணை இந்த உபநிஷத் வாக்யம் சொல்லுகிறபடியால், இவை விசேஷணங்கள் என்று கொண்டால், மூன்று ப்ரஹ்மங்கள் தான் கிணடக்குமே தவிற, மூன்று பண்புகள் கொண்ட ஒரு ப்ரஹ்மம் கிடைக்காது! எனவே இப் பண்புகள் விசேஷணங்கள் ஆக முடியாது.

(குள்ளமான பீதாம்பரம் அணிந்த கறுத்த தேவதத்தன் என்றால் மூன்று வ்யக்தி அல்லவே
கண்டோ முண்டோ பூர்ண கொம்புள்ள மாடு -வெவ்வேறே காலத்திலே ஒரே மாட்டுக்கு மூன்று விசேஷணங்களுமே ஒரு வியக்திக்கு ஆகுமே இதற்குப் பரிஹாரம்)

(ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -கொண்டு அடிப்படையான பூர்வ ப்ரதி பன்ன ஆகாரம் உள்ளதே என்றால்-இங்கும் மூன்று விசேஷணங்கள் உப லக்ஷணங்கள் உள்ளனவே -அதற்கும் பூர்வ ப்ரதி பன்ன ஆகாரம் உண்டே-இப்படிப் போய் கொண்டே இருக்குமே
ஆகவே ப்ரஹ்மதத்துக்கு லக்ஷணம் இல்லை -என்பதே ஆஷேபம் இங்கு)

1.1.2 ஜந்மாத்யதி₄கரணம்
உலகத்தை எல்லாம் படைத்தவரே ப்ரஹ்மம்
படைத்தல் காத்தல் அழித்தல் – ப்ரஹ்மத்தின் லக்ஷணம்

  • 1.1.2 ஜந்மாத்யதி₄கரணம் பூர்வபக்ஷம் –
    “யதோ வா இமாநி” என்ற உபநிஷத் வாக்யம் ப்ரஹ்மத்துக்கு லக்ஷணம் சொல்ல முடியாது; அதில் சொல்லப்படும் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று செயல்களும்
    (1) விசேஷணம் என்று கொண்டால், பல விசேஷணங்கள் உள்ளபடியால் பல ப்ரஹ்மங்களை ஏற்க நேரிடும்
    (2) உபலக்ஷணம் என்று கொண்டால், பூர்வ ப்ரதிபந்ந ஆகாரம் (முன் அறியப்பட்ட வடிவம்) எதுவும் இல்லை
  • ஸித்தாந்தம் – இவற்றுக்கு பதிலளித்து, படைத்தல் முதலானவை தான் ப்ரஹமத்தின் லக்ஷணம் என்கிறார் வ்யாஸர்
  1. படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றும் ப்ரஹ்மத்திற்கு விசேஷணம் ஆகலாம் என்று நிரூபித்தல்

இங்கோ படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொழில்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கிறபடியால் முரண் இல்லை ,-எனவே இம் மூன்று பண்புகளும் ப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் ஆக முடியும்.

பூர்வபக்ஷியின் வாதம் – ஒவ்வொரு விசேஷணமும் தான் இருக்கும் பொருளை மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபடுத்தும், எனவே பல விசேஷணங்கள் இருந்தால் பல பொருள்களை ஏற்க நேரிடும்.

ஸித்தாந்தம் – இதில் ஒரு சிறிய மாற்றம் தேவை – ஒரு விசேஷணம், தான் இருக்கும் பொருளை மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபடுத்தாது; முரண்பட்ட பண்புகளைக் கொண்ட பொருளிலில் இருந்து மட்டுமே வேறுபடுத்தும்.

(எடுத்துக்காட்டு) ’கருப்பான பெரிய மண் குடம்’ என்று சொன்னால் மூன்று விசேஷணங்கள் உள்ளன. ’கருப்பு’ என்றதால் மஞ்சளான வெளுப்பான சிவப்பான பொருள்களிலிருந்து குடம் வேறுபடுத்தப்படுகிறது;
’பெரிய’ என்பதால் சிறிய பொருள்களிலிருந்து குடம் வேறுபடுத்தப்படுகிறது;
’மண்’ என்றதால் தங்கம் வெள்ளி முதலானவற்றிலிருந்து அதே குடம் வேறுபடுத்தப் படுகிறது. எனவே இங்கு மூன்று குடங்கள் அல்ல, ஒரே குடம் தான்.

எவ்விடத்தில் முரண்பட்ட பல விசேஷணங்கள் சொல்லப்படுகின்றனவோ , அங்கு தான் பல பொருள்களை ஏற்க வேண்டும் – ’மொட்டைக் கொம்போடு அரைக் கொம்போடு முழுக் கொம்போடு உள்ள மாடு’ என்பது போல்.

இங்கோ படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொழில்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கிறபடியால் முரண் இல்லை ,-எனவே இம் மூன்று பண்புகளும் ப்ரஹ்மத்திற்கு லக்ஷணம் ஆக முடியும்.

  1. உபலக்ஷணம் ஆகலாம் என்று நிரூபித்தல்
  • பூர்வபக்ஷம் – முதலில் ’நிலம்’ என்று அறிந்தால் தான், பிறகு கொக்கு என்ற அணடயாளம் கொண்டு அதை ’கண்ணனின் நிலம்’ என்று அறிய முடியும். அதுபோல் படைத்தல் முதலானவற்ணறக் கொண்டு ப்ரஹ்மத்தை அடையாளம் காண்பதற்கு முன் ப்ரஹ்மம் ஏதோ ஒரு விதத்தில் அறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ப்ரஹ்மம் அறியப்படவில்லை
  • ஸித்தாந்தம் – ப்ரஹ்மம் முன்னமே அறியப்பட்டது தான்.சாந்தோக்ய உபநிஷத்தில் ’ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்’ என்ற வாக்யம் நமக்கு ப்ரஹ்மத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த வாக்கியத்தின் பொருள் – “இந்த உலகமனைத்தும் ப்ரளய காலத்தில் ’ஸத்’ என்ற ஒரே பொருளாக இருந்த்து, வேறு எதுவும் இல்ணல”. இதனால், உலகுக்கு எல்லாம் காரணமான ஸத் என்ற ஒரு பொருள் அறியப்படுகிறது.
    தேறிய பொருள் –
    உலகத்தில் ஒரு குடம் உண்டாக மண் என்ற உபாதாந காரணமும், குயவன் என்ற நிமித்த காரணமும், சக்கரம் தடி முதலான ஸஹகாரி காரணங்களும் தேவை . ஆனால் இந்த உலகம் உண்டாக மூன்று காரணங்களாகவும் ’ஸத்’ என்ற அந்தப் பொருளே இருக்கிறது. ஒரு சிலந்தி தன் உடலிலிருந்தே ஒரு பொருளை உண்டாக்கி வலை
    பின்னுவது போல் ’ஸத்’ என்ற பொருள் உலகத்தைத் தானே தன்னிடமிருந்தே படைக்கிறது.
  • உலகுக்கு எல்லாம் காரணம் என்றால் அந்த ’ஸத்’ என்ற பொருளுக்கு அதிகமான ஜ்ஞாநம், சக்தி முதலானவை இருக்க வேண்டும் என்று நாம் அறியலாம். எனவே , இவ்வாறு முன்னமே ப்ரஹ்மம் அறியப்பட்டுள்ளது. இதுவே பூர்வ ப்ரதிபந்ந ஆகாரம் (அடையாளம் காண்பதற்கு முன்னால் அறியப்பட்ட வடிவம்).
  • இனி, ’யதோ வா இமாநி’ என்ற வாக்யம் சொல்லுகிறது – அந்த ’ஸத்’ என்ற பொருள் உலகத்தை யெல்லாம் படைத்து காத்து அழிக்கிறபடியால் அதுவே ப்ரஹ்மம், அதாவது, அதுவே எல்லையற்ற ஒப்பற்ற அளவு – பெருமை உடையது.
    எனவே , ’இவ்வுலகத்தின் உண்டாக்கம் நிலைப்பாடு அழிவு என்ற மூன்றுக்கும் காரணமானது ப்ரஹ்மம்’ என்று ப்ரஹ்மத்தின் லக்ஷணம் கொள்ளலாம். இப் பண்புகளை விசேஷணம் உபலக்ஷணம் என்ற இரண்டாகவும் கொள்ள இயலும்

மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,ய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?

மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,* –ஜிஜ்ஜாஸ அதிகரணம்
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,ய் –ஜென்மாதி அதிகரணம்

1.1.3 சாஸ்த்ர யோநித்வாதி₄கரணம்
வேதாந்தம் தேவை யற்றதா?

லக்ஷணத்தின் இரண்டு வகைகள்

  • 1.1.2 ஜந்மாத்யதி₄கரணத்தில் ப்ரஹ்மத்தின் லக்ஷணம் சொல்லப்பட்டது – “உலகத்தின் உண்டாக்கம், நிலைப்பாடு மற்றும் அழிவுக்குக் காரணமானது ப்ரஹ்மம்” என்று.
    இதை தைத்திரீய உபநிஷத்தில் மற்று ஓரு லக்ஷணமும் ப்ரஹ்மத்துக்குக் கூறப்பட்டுள்ளது –
    “ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம” என்று. அதன் பொருளைப் பார்ப்போம்.
  • ஸத்யம் – ’என்றும் மாறாத இருப்பு (Unconditional Existence) உடைய பொருள்’. இத்தால் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் அசேதநம் மற்றும் பத்த ஜீவர்களைக் காட்டிலும் ப்ரஹ்மம் வேறுபட்டது ஆகிறது.
    ஜ்ஞாநம் – ’என்றும் குறைவில்லாத ஜ்ஞாநமுடையது”. இதில் முக்தர்களைக் காட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
    அநந்தம் – ’-அளவுபடாதது
    இத்தால் அணு ஸ்வரூபர்களான நித்ய ஸூரிகளைக் காட்டிலும் வேறுபாடு தெரிகிறது.
    இப்படி மூன்று பண்புகள் சேர்ந்த இந்த லக்ஷணமானது உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டதான ப்ரஹ்மத்தை அறிவிக்கிறது.
  • இந்த இரண்டு லக்ஷணங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? பார்ப்போம்.
    லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும் –

ஸ்வரூப லக்ஷணம் – இலக்கில் (லக்ஷ்யத்தில்) இருக்கும் தன்மைகளே அதற்கு லக்ஷணம் ஆகும்.-எடுத்துக் காட்டு – ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்ரஹ்ம என்ற லக்ஷணம்

தடஸ்த₂ லக்ஷணம் – வேறு ஒரு பொருளில் இருக்கும் தன்மைகள் லக்ஷ்யத்தின் லக்ஷணம் ஆகும்.-எடுத்துக்காட்டு – ’யதோ வா இமாநி’ என்ற வாக்கியத்தில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டதான இந்த ஜகத்தில் இருக்கும் ’உண்டாக்கம்’ நிலைப்பாடு’ மற்றும் அழிவு’
என்ற பண்புகளைக் கொண்டு ப்ரஹ்மத்தின் லக்ஷணம் இங்கு சொல்லப்படுகிறபடியால்.

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்

நந்தா -ஸத்யம்
விளக்கே–ஞானம்
அளத்தற்கு அரியாய்–அநந்தம்

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

மெய்-ஸத்யம்
மதி-ஞானம்
கடலே–அநந்தம்

அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே |
ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே ||

அவிகாராய -அசேதன வ்யாவ்ருத்தி
சுத்தாய –பத்த சேதன வ்யாவ்ருத்தி
நித்யாய–முக்த சேதன வ்யாவ்ருத்தி
பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய –நித்ய வ்யாவ்ருத்தி

தடஸ்த –கரையில் இருந்து பார்க்கும் பார்வை

முதல் அதிகரணத்தில் – ப்ரஹ்மம் ஸித்தமான பொருள் ஆனாலும் வேதாந்தம் அதைக் கூறும் ப்ரமாணமாக-முடியும் என்றார். இரண்டாம் அதிகரணத்தில் – ப்ரஹ்மத்தின் லக்ஷணம் ஜகத் காரணத்வம் என்றார்.
இந்த அதிகரணத்தில் ந்யாய தர்சனத்தைச் சேர்ந்தவர்கள் தான் பூர்வபக்ஷீ. அவர்கள் சொல்வது – வேதாந்தம் ப்ரஹ்மத்தைச் சொல்ல முடியும் என்றாலும் அது தேவை யில்லாதது; வேறு ப்ரமாணத்தின் மூலம் ஜகத் காரணமான ப்ரஹ்மத்தை அறிய முடியும். எனவே வேறு ஓரு ப்ரமாணத்தால் அறியப்பட்ட விஷயத்தைச் சாஸ்த்ரம் திரும்பச் சொன்னால் அது பயனற்றது தானே ? எனவே வேதாந்த விசாரம் செய்ய வேண்டாம் – என்று.

1.1.3 சாஸ்த்ர யோநித்வ அதி₄கரணம். இதில் ஒரே ஸூத்ரம் உள்ளது – “சாஸ்த்ர யோநித்வாத்”.

சாஸ்த்ரம் என்றால் வேதம். யோநி என்றால் காரணம். இவ் விடத்தில் உண்டாக்கும் காரணம் அல்ல, அறிவிக்கும் காரணம் சொல்லப்படுகிறது.
எனவே சாஸ்த்ரயோநி என்ற சொல் – ’வேதத்தால் அறியப்படுவது’ அல்லது
’வேதத்தைத் தனக்குப் ப்ரமாணமாகக் கொண்டது’ என்ற பொருள் உடையது. அதற்கு மேல் ஐந்தாம் வேற்றுமை .
எனவே “வேதத்தைத் தனக்குப் ப்ரமாணமாகக் கொண்டபடியால்” என்று பொருள் கிடைக்கிறது.

பொதுவாக ஒன்றைச் சொன்னாலே அதில் வலியுறுத்தல் வெளிப்படும். தவம் செய்பவரைப் பார்த்து ’அப்₃ப₄க்ஷ:’-அதாவது ’தண்ணீர் குடித்துத் தவம் செய்பவர்’ என்று சொன்னால் ’தண்ணீர் மட்டும் குடிப்பவர்’ என்று தேறுகிறது. அதுபோல் இங்கும் “வேதத்தை மட்டும் தனக்குப் ப்ரமாணமாகக் கொண்டபடியால்” என்று பொருள் இந்த வாக்கியத்தை நாம் நிரப்பிக் கொள்ள வேண்டும் – “ப்ரஹ்மம் வேதத்தை மட்டும் தனக்குப் ப்ரமாணமாகக்
கொண்டபடியால், அதைப் பற்றின விசாரத்தைச் செய்ய வேண்டும்’ என்று ஸூத்ரத்தின் முழு பொருள் ஆகும்.

கீழ் ஜிஜ்ஞாஸாதி₄கரணத்திலேயே வேதாந்தம் ப்ரஹ்மத்தைக் கூறும் ப்ரமாணம் தான் என்று நிரூபித்து விட்டோம்.-ஏன் மறுபடியும் அதையே சொல்கிறார் வேத வ்யாஸர்? அதற்கான காரணத்தைப் பார்ப்போம்.

வேதாந்தம் தேவை யற்றதா?-அநுமானத்தால் ப்ரஹ்மத்தை அறிதல்

(1) இந்த ஜகத் உண்டாக்கப்பட்டது தான், பல பகுதிகளைக் கொண்டதானபடியால்; குடத்தைப் போல.
(2) இந்த ஜகத், அதன் மூலப் பொருள் கருவிகள் பயனாளி மற்றும் பயன்பாட்டை அறிந்த ஒருவரால் உண்டாக்கப்பட்டது தான், உண்டாக்கப்பட்டபடியால், குடத்தைப் போல இந்த அநுமானங்களின் மூலம் உலகத்தை எல்லாம் படைக்கும் வல்லமை படைத்த பரமாத்மா அறியப்படுகிறபடியால், இவரைச் சொல்ல வேதாந்தம் தேவையில்லை என்பதே பூர்வ பக்ஷியின் வாதம் ஆகும்.

ப்ரமாணங்கள் மூன்று
(1) ப்ரத்யக்ஷம் – கண் காது நாக்கு மூக்கு தோல் மனது என்ற புலன்கள்
(2) அநுமானம் – இரண்டு பொருள்களின் விட்டுப் பிரியாமையை (வ்யாப்தியை ) அறிந்து கொண்டு, ஒரு பொருளைப் பார்த்தால் மற்ற ஓரு பொருள் இருப்பதை ஊஹிப்பது. எடுத்துக் காட்டு – அடுப்படி முதலான இடங்களில் ’எங்கு எல்லாம் புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்’ என்று அறிந்த படியால், ஒரு மலைக்கு மேல் புகை வருவதைப் பார்த்தால் அதன் மேல் எங்கோ நெருப்பு இருப்பதை அநுமானத்தால் அறியலாம்.
(3) சப்தம் – ஒரு சொல் தொடரைக் கேட்டால் அதன் பொருள் அறியப்படுகிறது. அந்தச் சொல் தொடரே ப்ரமாணம்.

1300 அதிகரணம் பூர்வ மீமாம்ஸை -இதற்கு பாஷ்யம் சபர ஸ்வாமி செய்துள்ளார்
ஸாஸ்த்ரம் –சொல் தொடரைக் கேட்டவுடன் பொருள் அறிய உதவும் –
இது லோக விஷயம் -சொல்லாது -லோக விஷயத்துக்கு மாறுபட்டும் சொல்லாது அஸந்நிஹ்ருஷ்டம்கண்ணுக்குத் தெரியாத விஷயம் சொல்லும் ஸாஸ்த்ரம்

மீமாம்சை என்பதை தனியொரு தரிசனமாக வார்த்தெடுத்தவராக கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான ஜைமினி கருதப்படுகிறார். வேதத்தின் வெவ்வேறு சம்ஹிதைகளிலும், பிரமாணங்களிலும் கூறப்பட்டுள்ள பல்வேறு வேள்விச் சடங்குகளையும், அவற்றுக்குரிய பலன்களையும் விளக்கும் வகையில் மீமாம்ச சூத்திரம் என்ற நூலை ஜைமினி படைத்தார். 12 பாகங்களில், 60 அத்தியாயங்களின் கீழ் 2,500 ஸ்லோகங்களை (செய்யுள்களை) உள்ளடக்கியதாக இந்த நூல் உள்ளது.

இந்த மீமாம்ச சூத்திரத்துக்கு சபர ஸ்வாமி என்பவர் எழுதிய சபர பாஷ்யம் மிகச் சிறந்த விளக்கமாகும். பின்னர் பிரபாகரர், குமாரில பட்டர், சாலிகநாதர், மாதவ வித்யாரண்யர், மற்றும் லௌகாக்ஷி பாஸ்கரர் இவர்கள் உரைகள் எழுதி இருக்கின்றனர்.

பிரத்யக்ஷம் என்பது, கண், காது உள்ளிட்ட புலன்களைக் கொண்டு நாமே நேரடியாக அறிந்துகொள்வது. இதற்கு நிர்விகல்ப-பிரத்யக்ஷ என்று பெயர்.

பிறவழி அறிதலாகிய பரோக்ஷத்துக்கு சவிகல்ப-பிரத்யக்ஷ என்று பெயர்.

இதனை 5 விதங்களாக மீமாம்சை வகைப்படுத்துகிறது. அவை, அனுமானம் (ஊகம்), உபமானம் (உவமை அல்லது ஒப்பீடு), சப்தம் (உரை), அர்த்தாபத்தி (பொருத்திக்கொள்ளல்), அனுபலப்தி (உணரப்படாமை).

இதில் ப்ரத்யக்ஷத்தால் ப்ரஹ்மத்தை அறிய இயலாது. வெளிப் புலன்கள் உலகப் பொருள்களை மட்டுமே காட்டும்; உட் புலனான மனது ஆத்மாவையும் அதிலிருக்கும் ஸுகம் துக்கம் ஆசை வெறுப்பு முதலானவற்றை மட்டுமே காட்டும். வேதம் என்ற சப்த ப்ரமாணம் தேவையில்லை என்பது தான் பூர்வபக்ஷியின் வாதமே .
எனவே , அநுமானத்தால் ஜகத் காரணமான ப்ரஹ்மத்தை அறியலாம் என்பதே ந்யாய மதத்தவர்களின் வாதம்.

உலகத்தில் பல பகுதிகளைக் கொண்ட பொருள்கள் (குடம் முதலானவை ) அனைத்துமே உண்டாக்கப்பட்டவை தான் என்று பார்க்கிறோம். அப்படி படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு படைப்பாளி இருக்கிறார் என்பதையும் பார்க்கிறோம். அந்தப் படைப்பாளி அந்த உண்டாக்கப்படும் பொருளுக்குத் தேவையான மூலப் பொருள், உண்டாக்க உதவும் கருவிகள், அப் பொருளைப் பயன்படுத்துபவர், அப் பொருளின் பயன்பாடு என்பவற்றை அறிந்தே அதை உண்டாக்குகிறார். அதே போல் உலக விஷயத்திலும் சொல்லலாமே .

அநீஸ்வரர் அல்ப ஞான சக்தர் அநாத்ம காமர் -லோகத்தில் படைப்பாளிகள் -அது போல் இல்லையே பரமாத்மா-அவாப்த ஸமஸ்த காமன் ஸர்வஞ்ஞன் ஸர்வ சக்தன் -அன்றோ –

1.1.3 சாஸ்த்ர யோநித்வாதி₄கரணம்
வேதாந்தத்தின் இன்றியமையாமை

அநுமானத்தால் ஜகத் காரணத்தை நிரூபிக்க இயலாது

  • 1.1.3 சாஸ்த்ர யோநித்வ அதிகரணத்தில் பூர்வ பக்ஷி சொன்னது – அநுமானத்தால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அறியப்பட்டு விட்டபடியால், அதையே திரும்பச் சொல்லும் சாஸ்த்ரம் வீணானது.
  • கேள்வி – அநுமானத்தால் ப்ரஹ்மம் உலகத்தைப் படைத்தவர் (நிமித்த காரணம்) என்று அறிந்தாலும் அவரே உபாதாந காரணமும் ஆவார் என்று சாஸ்த்ரம் தானே போதிக்கிறது? எனவே வேதாந்தம் தேவை தானே ?
    பூர்வ பக்ஷியின் பதில் – உலகில் நிமித்த காரணம் என்பது உபாதான காரணத்தைக் காட்டிலும் வேறாகவே காணப்படுகிறபடியால், அநுமானத்தால் நிமித்த காரணமாக அறியப்பட்ட ப்ரஹ்மம் உபாதாந காரணமாக ஆக முடியாது. எனவே அதை போதிக்கும் சாஸ்த்ரமும் தவறானதாகத் தான் இருக்க முடியும், எனவே தேவை யற்றது.
  • ஸித்தாந்தம் – சாஸ்த்ர யோநித்வாத் – வேதம் ஒன்று தான் ப்ரஹ்மத்தை அறிவதற்கான ப்ரமாணமாகும்.
  • பூர்வ பக்ஷத்தில் உள்ள தவறு யாதெனில் – பூர்வ பக்ஷீ ந்யாய மதத்தைச் சேர்ந்தவர். ஸித்தாந்தீ வேத வ்யாஸர் விசிஷ்டாத்வைதத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் பொதுவாக உள்ள கோட்பாடு – பரமாத்மா ஒருவரே உள்ளார்;
    அவர் ஒரே காலத்தில் இவ்வுலகம் அனைத்தையும் படைத்தார் என்பது. அந்த பரமாத்மாவைக் காட்டும் ப்ரமாணம் எது என்பதில் மாட்டுமே விவாதம் உள்ளது. ஆனால் அநுமானத்தின் மூலம் உலகத்தைப் படைக்கும் பரமாத்மாவை நாம் நிரூபித்தால் அது இக் கோட்பாட்டோடு முரண்படும். ஏன் என்று பார்ப்போம்.
  • இவ் வுலகில் படைப்பு என்று ஒன்று இருந்தால் அதற்கு ஒரு படைப்பாளி இருப்பதைக் காண்கிறோம். அதன் அடிப்படையில் தான் இவ் வுலகத்தையும் படைத்தவர் இருக்க வேண்டும் என்று அநுமானம் கூறுகிறார் பூர்வ பக்ஷீ.
    ஆனால், உலகில் வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு படைப்பாளிகளால் வெவ்வேறு காலங்களில் படைக்கப் படுவதைத்தான் நாம் காண்கிறோம். எனவே அநுமானத்தால் ப்ரஹ்மத்தை நிரூபித்தால், இவ் வுலகிலும் வெவ்வேறு பகுதிகளை , வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பரமாத்மாக்கள் படைத்தார்கள் என்று தான் கிடைக்குமே தவிற, ஒரே பரமாத்மா ஒரே காலத்தில் படைத்தார் என்று நிரூபிக்க இயலாது.
  • ஒரே காலத்தில் ஒருவரால் அனைத்தையும் படைத்தவன் ப்ரஹ்மம் -இது அநுமானத்தால் சாதிக்க முடியாதே -இதற்கு வேத ஸாஸ்த்ரம் வேண்டுமே

ந்யாய மதத்தில் பரமாத்மாவின் படைப்பு ஒவ்வாது

  • பூர்வ பக்ஷியின் கேள்வி – அநுமானத்தில் எப்போதுமே ’லாகவம்’ (எளிமை ) என்பதைப் பின் பற்ற வேண்டும்.-அநுமானம் மூலம் இவ் வுலகத்தைப் படைத்தவர் இருக்க வேண்டும் என்று அறிகிறோம்; அது ஜீவாத்மாவாக இயலாது ,-அவருக்குப் போதுமான ஜ்ஞானம் சக்தி முதலானவை இல்லாத படியால். எனவே அவற்றை உடையவராக பரமாத்மா என்பவரைக் கல்பிக்கும் பொழுது, அப்படிப்பட்ட பல பரமாத்மாக்களைக் கல்பிப்பதை விட ஒருவரைக் கல்பிப்பதே எளிமையானது. எனவே ஒரே படைப்பாளி என்று கூறலாமே ?
  • பதில் – ஜீவாத்மாக்களால் படைக்க இயலாது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. உலகில் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையில், மனிதர்கள் தேவர்கள் முதலானவர்களுக்கும் ஜ்ஞாநம் சக்தி முதலானவற்றில் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கிறோம். எனவே , மிக அதிகமான புண்ணியம் செய்த ஒரு ஜீவாத்மாவே கூட உலகத்தைப் படைக்கும் அளவுக்கு சக்தி உடையவராக இயலும்; அதை முழுவதுமாக மறுக்க யுக்தி எதுவும் இல்லை . எனவே இவ் வநுமாநத்தின் மூலம் ஒரே ஒரு பரமாத்மா உலகத்தை எல்லாம் படைக்கிறார் என்று நிரூபிக்கவே இயலாது.
  • மேலும், பரமாத்மா உடல் அற்றவராய் உலகத்தைப் படைக்க முடியாது, உடல் இல்லாமல் எக் காரியத்தையும் செய்ய இயலாதபடியால். உடல் உள்ளது என்றால், அது நித்யமானதா அநித்யமானதா? நித்யமானது என்றால்,
    “பகுதிகளோடு கூடிய பொருள்கள் அனைத்துமே உண்டாக்கப்பட்டவை தான்” என்னும் கோட்பாடு இங்கு பொய்யாகிறது. பல பகுதிகளைக் கொண்ட பரமாத்மாவின் சரீரம் நித்யமாக இருக்குமானால், அதே போல் இந்த ஜகத்தும் நித்யமானது,
    இதற்குப் படைப்பாளியே தேவையில்லை என்று ஆகி விடும். பரமாத்மாவின் சரீரம் அநித்யமானது என்றால், அதைப் படைக்க அவருக்கு வேறு ஒரு சரீரம் இருந்திருக்கவேண்டும், அதுக்கும் அப்படியே என்று முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கும்.
  • இப்படி அநுமானத்தில் பல தோஷங்கள் உள்ளபடியால், உலகத்துக்கு நிமித்த காரணமாகவும், உபாதாநமாகவும், எல்லையற்ற ஜ்ஞாநம் சக்தி கொண்டதாகவுமுள்ள ப்ரஹ்மத்தை உபநிஷத்துக்களைக் கொண்டு மட்டும் தான் அறிய இயலும். எனவே ப்ரஹ்மம் சாஸ்த்ரம் ஒன்றையே ப்ரமாணமாகக் கொண்டதானபடியால், அந்த சாஸ்த்ரத்தைப் பற்றின விசாரம் தொடங்கப்பட வேண்டியது தான் என்று இந்த அதிகரணத்தில் வேத வ்யாஸர் நிச்சயிக்கிறார்.

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத சாஸ்த்ரா விரோதி நா
யஸ் தர்க்கேணா நு சந்தத்தே ச தர்மம் வேத நேதர -மநு ஸ்ம்ருதி

நசிகேசத் -கட உபநிஷத் -பிரேஷ்ட -பிரியமானவனே -தர்க்கத்தால் மட்டும் அறியமுடியாது -உபதேஸ ஜன்ய ஸாஸ்த்ர ஞானத்தால் தான் அறியமுடியும்

ஜகத் என்பது கார்யம் -செய்யப்படுவதே என்றாலும்-ஒரே காலத்திலே ஒரே புருஷனாலே சர்வ ஜகத்தும் படைக்கப்பட்டது என்பதில் பிரமாணம் இல்லாதபடியால் விச்வாமித்திராதிகளைப் போன்ற ஜீவர்களுக்கே விசித்ர ஸ்ருஷ்டி சம்பவிக்குமாகையாலே ஜீவனை விட்டு வேறான ஸர்வஞ்ஞத் வாதி குணங்களை யுடைய ப்ரஹ்மம் அனுமானத்தால் ஸித்திக்காது அதற்கு ஸாஸ்திரமே பிரமாணமாக வேண்டும் என்பது ஸித்தாந்தம் அனுமானாதிகளாலே உள்ளவாறு அறிய ஒண்ணாமையாலே-யதோவா இமானி -என்ற வாக்கியம் உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் உள்ள ப்ரஹ்மத்தைப் போதிப்பதால் ஸாஸ்திரமே பிரமாணம் ஆகிறது – ஆகவே ப்ரஹ்மம் ஸாஸ்த்ர யோனியாகிறது பிற பிரமாணங்கள் போதிக்காது என்பதாம் –உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் –ஸ்வத நித்ய நிர்தோஷ பிரமாணம்

—————-

1.1.4 ஸமந்வயாதி₄கரணம்
ப்ரஹ்மத்தை அறிவதே ஆநந்தம்

ப்ரஹ்மத்தை அறிவதால் என்ன பயன்?

  • ப்ரஹ்ம மீமாம்ஸை என்னும் சாஸ்த்ரத்தைத் துவங்க வேண்டும் என்று நிரூபிப்பதற்காக ஏற்பட்டவை முதல் நான்கு அதிகரணங்கள். முதல் இரண்டு அதிகரணங்களால் உபநிஷத்துகளைக் கொண்டு ப்ரஹ்மத்தை அறிய முடியும் என்று நிரூபித்தார் வ்யாஸர். ஆனால் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்னும் ஆசை இருந்தால் தானே ஒருவன் உபநிஷத்தைப் படிப்பான். அந்த ஆசை பிறக்க இரண்டு தேவைகள் உள்ளன – ப்ரஹ்மம் இதற்கு முன் அறியப்படாததாய் (அஜ்ஞாதம்) இருக்க வேண்டும் -மற்றும் அதை அறிவதால் பயன் (ப்ரயோஜநம்) இருக்க வேண்டும். மூன்றாம் அதிகரணத்தில் ப்ரஹ்மம் வேறு எந்த ப்ரமாணத்தாலும் அறியப்படாதபடியால் இது அஜ்ஞாதம் தான் என்று நிரூபித்தார். இனி ஸமந்வயாதி₄கரணம் என்று பெயர் பெற்ற நான்காம் அதிகரணத்தில் ப்ரஹ்மத்தை அறிவதால் பயன் உள்ளது என்று நிரூபிக்கிறார்.
  • பூர்வ பக்ஷம் – இங்கு மீமாம்ஸா தர்சனத்தைச் சேர்ந்தவர்கள் தான் பூர்வ பக்ஷிகள். ப்ரஹ்மத்தை அறிவதால் எந்தப் பயனும் இல்லை என்பதே அவர்கள் வாதம். ஏன் அப்படிக் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
  • பயன் (ப்ரயோஜநம்) என்பது இரண்டு விதம் –
    (1) ஸுகம் அடைவது
    (2) துக்கம் விலகுவது.
    இவை ஏற்பட ஒரு மனிதன் ஏதோ ஒரு ப்ரவ்ருத்தி (முயற்சி) செய்ய வேண்டும்– அல்லது நிவ்ருத்தி (ஒரு செயலிலிருந்து விலகுதல்) செய்ய வேண்டும்.
    எடுத்துக்காட்டு – சக்கரைப் பொங்கலை உண்ணுதல் என்னும் ப்ரவ்ருத்தியால் நமக்கு ஸுகம் ஏற்படுகிறது, அதிகமாக துரித உணவுகளை உண்ணாமல் இருத்தல் என்னும் நிவ்ருத்தியால் நமக்கு அஜீரணத்தால் வரும் துக்கம் விலகுகிறது.–ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இல்லாத வாக்கியங்கள் முழுமையானவை அல்ல -குமாரிள பட்டர்
  • எனவே , ஒரு நூல் ப்ரயோஜநமுடையது என்று சொல்ல வேண்டும் என்றால் அது நம்மிடம் ப்ரவ்ருத்தியையோ நிவ்ருத்தியையோ போதித்து, அதை ஏற்படுத்தி, அதன் மூலம் நமக்கு ஒரு பயனை ஏற்படுத்த வேண்டும். வேதாந்தத்தால் போதிக்கப்படும் ப்ரஹ்மம் என்பது ஒரு ஸித்த வஸ்து, ப்ரவ்ருத்தியையோ நிவ்ருத்தியையோ அல்ல -. எனவே அதை அறிவதால் எந்தப் பயனும் ஏற்பட முடியாது. ஆகையால் வேதாந்தத்தை ஆராயத் தேவையில்லை
  • ’உனக்குக் குழந்தை பிறந்துள்ளது’-’இது பாம்பு அல்ல ’ முதலான சொற் தொடர்கள் ஸித்தமான வஸ்துவைச் சொன்னாலும் அதிலிருந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லது பயம் விலகுகிறதே? அதே போல் ப்ரஹ்ம ஜ்ஞாநத்தால் பயன் இருக்கலாமே ?
    உண்மை தான், இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சொற் தொடர்களைக் கேட்பதால் மட்டும் மகிழ்ச்சி வருகிறபடியால் அதன் பொருள் உண்மையாக இருக்க வேண்டும் என்னும் தேவை யில்லை . -அர்த்த ஸத் பாவம் இருக்க வேண்டும் -இத்தை சாப்பிட்டால் 10 அடி உயர்வாய் போன்ற -பாலர்களை ஊக்குவிக்க -உபச்சந்தன வாக்கியமாக இருக்கலாமே-ஆகவே ப்ரஹ்மம் என்பது உண்மை ஆகாது.

ப்ரஹ்மத்தை அறிவதே பயன்

  • பூர்வ பக்ஷியின் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார் வேத வ்யாஸர்
    தத் து ஸமந்வயாத்” என்ற ஒரே ஸூத்ரத்தால்.
  • தத் – வேதாந்தம் ப்ரஹ்மத்தைக் கூறும் ப்ரமாணம் ஆகும் என்பது
    து – உண்மை தான், ஏன் எனில்
    ஸமந்வயாத் – ப்ரஹ்மம் வேதாந்தத்தோடு நன்கு அந்வயிக்கிறபடியால் – சிறந்த ப்ரயோஜனமாகச் சொல்லப்படுகிறபடியால்

ஸம் -நன்றாக அந்வயம் -சேர்க்கை -ஸம்யக் புருஷார்த்த தயா அந்வய ஸமன்வய -வேதி துர் நிரதிசய அநந்த ஸ்வரூபத்வேந பரம புருஷார்த்த ரூபே பரே ப்ரஹ்மணி வேதகதயா ஸாஸ்த்ரஸ்ய அந்வயாத் ப்ரஹ்மண ஸாஸ்த்ர பிரமாண கத்வம் சித்த்யத்யே வேதி

  • உபநிஷத்துக்கள் ப்ரஹ்மத்தையே ஆநந்தம் (ஸுகமே வடிவமானது) என்று சொல்லுகின்றன. எந்த ஒரு பொருளின் அறிவு அல்லது அநுபவமே நமக்கு இனிமையாய், பிடித்ததாய் இருக்கிறதோ , அப் பொருளைத் தான் ஆநந்தம் என்போம்.
    ப்ரஹ்மத்தையும், அதன் பண்புகளையும் அறிவதே நமக்கு ஆநந்தத்தைக் கொடுக்கிறது. முக்தி அடைந்த ஒரு ஜீவன் இந்த ப்ரஹ்மத்தை அநுபவித்து தாநே எல்லை யில்லாத ஸுகத்தை அடைகிறான்? பக்தர்கள் எல்லாம் இந்த ஸம்ஸாரத்தில் இருக்கும் போதே அந்த ப்ரஹ்மத்தை நினைத்தாலோ கண்டாலோ மகிழ்ச்சி யடைகிறார்கள். எனவே ப்ரஹ்மமே ஸுகம்.
  • எனவே , ப்ரவ்ருத்தியோ நிவ்ருத்தியோ ஏற்பட்டால் மட்டுமே ஸுகம் அடைய முடியும் என்பது தவறு. ஒரு பொருளின் அறிவு மட்டுமே நமக்கு ஸுகத்தைத் தரலாம். எடுத்துக் காட்டு
    (1) நம் வீட்டில் ஒரு புதையல் உள்ளது என்று கேள்விப்பட்ட உடனேயே நாம் மகிழ்கிறோம். அதைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தினால் மட்டும் தான் மகிழ்ச்சி என்பதில்லையே ?
    (2) ஓர் அரச குமாரன் சிறு வயதில் காணாமல் போய் காட்டிலே வேடர்களோடு வளர்ந்து வந்தான். ஓரு நாள் ஒரு பெரியவர் அவனை அடையாளம் கண்டு,
    “நீ வேடன் அல்ல , அரச குமாரன். உன் தந்தை மிகப் பெரிய சக்ரவர்த்தி. உன்னிடம் அளவுகடந்த அன்புடையவர். உன்னைத் திரும்பவும் காண முடியுமா என்று துடித்துக் கொண்டிருக்கிறார்” என்று சொன்னால், அதைக் கேட்டதே போதும், அக் குழந்தை எல்லை யற்ற மகிழ்ச்சியை அடையுமே. அதுபோல் தான் ப்ரஹ்மத்தின் அறிவும்-நின் புகழில் வைக்கும் சிந்தையினிலும் மற்று இனிதோ நீ வைகுந்தம் என்று கொடுக்கும் வான்-
  • அறிவால் மட்டும் ஸுகம் ஏற்பட்டால், அறியப்பட்ட பொருள் உண்மையாக இருக்கத் தேவை யில்லையே என்ற கேள்வி.
    அதற்கு பதில் – ஒரு குழந்தையிடம் ’மருந்து சாப்பிடு, உயரம் ஆவாய்’ என்று பொய் சொல்லி ஏமாற்றலாம். ஆனால், அது பொய் என்று குழந்தை உணர்ந்து விட்டால் பிறகு மகிழ்ச்சி அடையாது. அதே போல், ஆராய்ந்து செயல்படும் மனிதர்களுக்கு, ஒரு குற்றமும் இல்லாத சிறந்த ப்ரமாணமான வேதம், பொய்யான பொருளை போதித்து ஏமாற்றி மகிழ்விக்க முடியாது.எனவே ப்ரஹ்மம் உண்மை தான், அதன் அறிவே பயன். ஆகையால் உபநிஷத்துகளின் ஆராய்ச்சி துடங்கப்பட வேண்டியதே.

உபாசகனுக்கு பயனாக ப்ரஹ்மமும்-ப்ரஹ்மத்துக்கு பயனாக உபாசகனும் ஆவதால்
கர்மங்களையும் பலன்களையும் சொல்லும் வேதங்கள் பிரமாணங்கள் ஆகும்

தத் து சமன்வயாத் -மூன்று சொற்கள்
து பூர்வ பக்ஷ நிரஸனம்
தத் -சாஸ்திரத்தையே ப்ரமாணமாகக் கொண்டமை ஸம்மபவிப்பதே
சமன்வயாத்-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்-ஆனந்தோ ப்ரஹ்ம-முதலிய வாக்யங்களுக்கு ப்ரயோஜன பூதமான ப்ரஹ்மத்தை ஆனந்த ரூபமாக விளக்கும் தன்மையால்-சமன்வயம் -பொருத்தம் ஏற்படுவதால்-ஸாஸ்த்ர யோனித்வம் கூடும் –இவ்வாறு நான்கு அதிகரணங்களால் ஸாஸ்த்ர ஆரம்பத்தைச் சரியானதே என்று நிலை நாட்டி ப்ரஹ்ம விசாரத்தை தொடங்குகிறார்

——————-

1.1.5 ஈக்ஷத்யதி₄கரணம்
ப்ரக்ருதியே உலகை உண்டாக்கலாமே ?

ஈக்ஷத்யதிகரணத்தின் பின்புலம்

  • சதுஸ் ஸூத்ரீ என்ற பாகத்தாலே ப்ரஹ்மம் என்று ஒரு பொருள் வேதாந்தத்தால் சொல்லப்படுகிறது, அதுவே ஜகத்துக்குக் காரணம், அதை வேதாந்தம் கொண்டு மட்டுமே அறிய முடியும், அதை அறிவதால் ப்ரயோஜனமும் உண்டு என்னப்பட்டது.
    இனி இந்த பாதம் மற்றும் அத்யாயத்தின் மீதிப் பகுதியால் அந்த ப்ரஹ்மம் சித் மற்றும் அசித் அல்ல, வேறு ஓன்று என்கிறார்.
  • ஸங்கதி – ஸமந்வயாதிகரணத்தில் ப்ரஹ்மம் என்ற பொருளே ஸுக வடிவமானதானபடியால் அதுவே ப்ராப்யம் (இலக்கு) என்று சொல்லப்பட்டது. அதுக்கு மேல் எழும் ஆஷேபம் – இந்த உலகம் உண்டாவதற்கு மூலப் பொருளாக இருக்கும் -ப்ரக்ருதி – ப்ரதானம் எனப்படும் அசேதனப் பொருள் தான் ப்ரஹ்மம் என்று வேதாந்தத்தில் சொல்லப்படுகிறபடியால், ப்ரஹ்மம் ப்ராப்யம் ஆக முடியாது. இதற்கு பதில் அளிக்கத் தான் இந்த ஈக்ஷத்யதிகரணம் ஏற்படுகிறது.
  • விஷய வாக்யம் – ஸாம வேதத்தின் பகுதியான சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது ப்ரபாடகத்தில் ஸத் வித்யா என்ற உபாஸனம் சொல்லப்படுகிறது. உத்தாலகர், தன் மகனான ஸ்வேத கேதுவை குரு குலத்திற்கு அனுப்புகிறார். அவனும் வேதங்களை எல்லாம் கற்று, அதனால் கர்வம் கொண்டவனாய்த் திரும்புகிறான். அவனிடம் உத்தாலகர் கேட்டார்-
    உத தம் ஆதே சம் அப்ராக்ஷ்ய: யேந அஸ்ருதம் ஸ்ருதம் ப₄வதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்’ – எந்த ஒரு பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ அந்த ஈஸ்வரனை அறிந்தாயா?
  • அது எப்படி ஸாத்யமாகும் என்று மகனுக்குப் புரிய வைக்க ஓர் எடுத்துக் காட்டைச் சொன்னார் – ’
    யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்’ – எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் அதிலிருந்து உண்டாகும் பொருள்களை அறிந்ததாகுவோ அது போலே காரணப் பொருளை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்ததாகும்.
  • சரி, அப்படி உலகுக்கு எல்லாம் ஒரு காரணமுண்டா என்று மகன் கேட்க, உத்தாலகர் சொல்கிறார் ’ஸதே₃வ ஸோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்’ – இந்த உலகப் பொருள்கள் எல்லாம் ப்ரளய காலத்தில் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்தன, அவற்றைப் பெயராலோ உருவத்தாலோ வேறுபடுத்த முடியவில்லை , இப்படி ஸத் என்ற ஒரே பொருள் தான் அப்போது இருந்தது, இரண்டாவது எந்தப் பொருளும் இல்லை . இது தான் இந்த அதிகரணத்தின் விஷய வாக்யம்.
  • ஸந்தேஹம் – இந்த வாக்யத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படும் பொருள் ப்ரதாநம் என்ற அசேதனமா ? பரமாத்மாவா?

ப்ரதானமே ஜகத் காரணம் என்ற பூர்வ பக்ஷம்

  • பூர்வ பக்ஷம் – இங்கு ஜகத் காரண மாகச் சொல்லப்படும் ஸத் என்ற பொருள் ப்ரதாநம் தான். இதற்கான யுக்திகள் –
  1. கார்ய அநுகுணத்வம் – கார்யத்துக்குத் தகுந்ததாய் (பொருத்தமானதாய்) இருத்தல். இங்கு கார்யம் (உண்டாக்கப்படும் பொருள்) ஜகத் ஆனபடியால், அது முக்குணங்களை உடையதாய் இருப்பதால், இதற்கான காரணமும் (உண்டாக்கும் பொருளும்) முக்குணங்களை உடையதாக இருப்பதே பொருத்தமானது. அப்படிப்பட்ட பொருள் ப்ரதாநம் தான்.
  2. ப்ரதிஜ்ஞா ஸித்தி: – உத்தாலகர் தொடக்கத்தில் ஒரு ப்ரதிஜ்ஜை செய்தார், ஸத் என்ற பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று. அது பொருந்த வேண்டும் என்றால், மண் கட்டியும் குடமும் எப்படி ஒரே பொருளோ அதே போல் ஸத்தும் உலகும் ஒரே பொருளாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஐக்யம் பரமாத்மாவுக்கும் உலகுக்கும் பொருந்தாதே . எனவே ஸத் என்று ப்ரதாநத்தைத் தான் சொல்ல வேண்டும். ப்ரதாநமும் உலகமும் ஓரே பொருள் தான்.
  3. த்ருஷ்டாந்த ஸாரூப்யம் – ஒரு விஷயத்துக்கு எடுத்துக் காட்டு சொன்னால், எடுத்துக் காட்டும் (உபமாநமும் -த்ருஷ்டாந்தமும்) அவ் விஷயமும் (உபமேயமும்-தார்ஷ்டாந்திகமும்) ஒரே தன்மை யுடையவையாய் இருக்க வேண்டும். இங்கு உத்தாலகர் மண் கட்டியை அறிந்தால் மண் பொருளை அறிந்ததாகும் என்று எடுத்துக்காட்டு உரைத்தார். மண்கட்டி என்ற த்ருஷ்டாந்தம்
    அசேதநமானபடியால், ஸத் என்ற தார்ஷ்டாந்திகமும் (உபமேயமும்) அசித்தான ப்ரதாநமாகத்தான் இருக்க வேண்டும்.
  4. ஸ்ம்ருதி ஸம்வாதம் – ப்ரதாநம் தான் ஜகத்காரணம் என்று கபிலர் என்ற மஹ ரிஷியால் ஸாங்க்ய ஸ்ம்ருதியிலும் சொல்லப்பட்டுள்ள படியால், இவ்வர்த்தமே சரியானதாய் இருக்க வேண்டும்.
  5. அநுமான ஆகாரம் – இங்கு உத்தாலகரின் வாக்யமே ஒரு அநுமானம் போல் உள்ளது . அநுமானத்தில் தான் ப்ரதிஜ்ஜா (மலையில் நெருப்பு உள்ளது), ஹேது (புகை இருக்கிற படியால்), த்ருஷ்டாந்தம் (அடுப்பில்-விளக்கில் இருப்பது போல்) என்பவை காட்டப்படுகின்றன. இங்கும் ’ஸத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்’ என்று ப்ரதிஜ்ஜையும், ’மண்கட்டியை அறிந்தால் அதன் கார்யங்களை அறிந்த தாவது போல்’ என்று த்ருஷ்டாந்தமும் சொல்லப்பட்டுள்ளன.
    எனவே இங்கு ஒரு அநுமானம் தான் சொல்லப்படுகிறது. அநுமானத்தால் அறியப்படும் ஸத் என்ற பொருள் ப்ரதாநமாகத் தான் இருக்க முடியும்; பரோத்மாவை அநுமானத்தால் அறிய இயலாது என்று நீங்களே ஒப்புக் கொண்டபடியால்.

1.1.5 ஈக்ஷத்யதி₄கரணம்
வேதாந்தம் காட்டும் ஜ்ஞாநமுடைய படைப்பாளி

ஜ்ஞாநமுள்ள பொருளே ஜகத் காரணம்

  • பூர்வ பக்ஷத்தில், உலகத்தைப் போல் முக்குணமுடைய ப்ரதானம் தான் ஜகத் காரணமாக இருக்க முடியும் என்னப் பட்டது.
  • ஸித்தாந்தம் – ஜகத்காரணப் பொருள் ப்ரதானம் அல்ல என்று 8 ஸூத்ரங்களாலே நிரூபிக்கிறார் வேத வ்யாஸர்
  1. ஈக்ஷதே: ந அசப்தம் – ’அசப்தம்’ என்றால் ப்ரதானம். சப்தம் என்பது வேதம். அசப்தம் என்றால் ’வேதத்தால் மட்டும் அறியப்படாத பொருள்’. ப்ரதானத்தை அநுமானத்தாலும் அறியலாம், வேதம் கொண்டும் அறியலாம். ஆகவே அது அசப்தம் ஆகும். ’
    ந’ என்றால் அல்ல. ஈக்ஷணம் என்றால் பார்ப்பது அல்லது ஸங்கல்பம் செய்து கொள்வது. ’ஈக்ஷதே:’ என்றால் ’ஸங்கல்பத்தைச் சொல்லும் சொல் இருக்கிறபடியால்’ என்று பொருள்.
    ஆக இந்த ஸூத்ரத்தின் முழுப் பொருள் –
    “ஸத் வித்யையில் ஜகத் காரணமாகச் சொல்லப்படும் ’ஸத்’ என்ற பொருள் ப்ரதானம் அல்ல, ஸத்தோடு தொடர்பு பட்ட
    ஸங்கல்பத்தைச் சொல்லும் ஈக்ஷதி என்ற சொல் இருக்கிறபடியால்”.
    உத்தாலகர் ’ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத்’ என்று இவ் வுலகுக்கு ஸத் தான் காரணம் என்று சொல்லி விட்டு,
    ’தத் ஐக்ஷத, ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய இதி’ என்று கூறுகிறார். அதாவது – “அந்த ஸத் என்ற பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டது; -நான் பலவாக ஆகக் கடவேன்; அதற்காக உலகப் பொருள்களைப் படைக்கக் கடவேன்” என்று. இப்படி உலகத்தை எல்லாம் படைப்பதற்கு உறுப்பான ஸங்கல்பம் அசேதநமான ப்ரதானத்துக்குப் பொருந்தாதே –
    பூர்வ பக்ஷி கூறிய யுக்திகளுக்கும் பதில் இதில் கிடைக்கிறது.
    (1) கார்யத்துக்குத் தகுந்தபடி காரணம் இருக்க வேண்டும் –
    பரமாத்மா தான் அனைத்து உலகத்தையும் படைக்கத் தகுந்தவர், எல்லை யற்ற ஜ்ஞாநம் சக்தி முதலானவை உள்ளபடியால்.
    (2) ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் பொருந்தும் – அனைத்து சேதனம் மற்றும் அசேதனப் பொருள்களை ப்ரஹ்மம் தனக்கு உடலாகக் கொண்டபடியால்.
    (3) த்ருஷ்டாந்த ஒற்றுமை – ஒரு பொருள் எல்லா பண்புகளும் எடுத்துக்காட்டைப் போல் இருக்க வேண்டும் என்னும் தேவை யில்லை .
    (4) கபிலரின் உபதேசம் –வேதாந்தத்துக்கு முரணான இந்த கபிலரின் உபதேசம் தள்ளத் தக்கதே
    (5) அநுமான வடிவம் – இங்கு அநுமான வடிவமே
    இல்லை
    ’ஹேது’ என்ற முக்கியமான வாக்கியம் இல்லாதபடியால். ப்ரதிஜ்ஜை எல்லா ப்ரமாணங்களுக்கும் பொருந்தும்.
    த்ருஷ்டாந்தமும் இப்படி ஒரு பொருள் இருக்க முடியும் என்று காட்ட வந்தது.

ப்ரதானம் ஜகத்காரணம் ஆக முடியாது

  1. கௌ₃ண:சேத் ந ஆத்ம சப்தாத்-
    கௌணம் உருவகம் சேத் என்றால், ந அல்ல, ஆத்ம சப்தாத் ஆத்மா என்ற சொல் இருப்பதால்
    இங்கு சொல்லப்பட்ட ஈக்ஷணம் ஸங்கல்பம் என்று கொள்ளாமல், ’கார்யம் உண்டாக்கத் தயாரான நிலை ’ என்ற இரண்டாம் பக்ஷமாகக் (கௌணமாகக்) கொண்டால் ப்ரதானமே சொல்லப் படலாமே ? மேலுள்ள வாக்கியங்களில் தேஜஸ் ஜலம் முதலானவை ஸங்கல்பம் செய்ததாகச் சொல்லுகிறபடியால் அங்கு கௌணமாகத் தானே கொள்ள வேன்டும்? என்று பூர்வ பக்ஷீ சொன்னால், அது தவறு.
    உத்தாலகர் மேல் ஓரு இடத்தில் “–ஐததா₃த்ம்யம் இத₃ம் ஸர்வம்… ஸ ஆத்மா” என்று
    கூறுகிறார்.
    ஸத் என்ற பொருளை ’உலகுக்கு எல்லாம் ஆத்மா’ என்று அழைக்கிறார்.
    ஆத்மா என்ற சொல் இருக்கிற படியால், இங்கு சொல்லப்பட்ட ’ஈக்ஷணம்’ என்பது சேதனனின் ஸங்கல்பமே
    அசேதனத்துக்கு ஏற்படும் ’ தயாரான நிலை ’ அல்ல.
  2. தந் நிஷ்ட₂ஸ்ய மோக்ஷ உபதேசாத் –
    ’தத் த்வம் அஸி’ அதாவது
    ’ஸத் என்ற பொருளும் நானும் ஒன்று’ என்று அறிந்து
    த்யானிப்பவன் மோக்ஷம் அணடகிறான் என்கிறது வேதம்.
    “தஸ்ய தாவதே₃வ சிரம் யாவத் ந விமோக்ஷ்யே அத₂
    ஸம்பத்ஸ்யே ” – இப்படி ஸத்தை த்யானிப்பவனுக்கு உடல் பிரியும் வரை தான் தாமதம், உடனே மோக்ஷம் அடைகிறான்.
    ஆகவே ஸத் என்பது பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும். ப்ரதானத்தைத் த்யானித்தால் ஸம்ஸாரம் தானே கிடைக்கும்.
  3. ஹேயத்வா வசநாத் ச –
    தள்ளத் தக்கதாகச் சொல்லாதபடியால். ஸத் என்பது ப்ரதானம் ஆனால் ’தத் த்வம் அஸி’ என்பது
    ’உடலே நான்’ என்னும் மயக்கத்தைக் குறிக்க வேண்டும். அப்படி என்றால், அது தள்ளத் தக்கது என்று வேதம்
    உபதேசித்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான உபதேசம் இங்கு காணப்பட வில்லை . ஸத்தைப் புகழ்கிறது வேதம்.
  4. ப்ரதிஜ்ஞாவிதராோ₄த் –
    ப்ரதிஜ்ஜையோடு முரண்பாடு. ஸத் என்ற பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்று உத்தாலகர் கூறினார். உலகம் என்பது சேதனம் அசேதனம் இரண்டையும் உடையது. ஸத் என்பது ப்ரதானம் என்று கொண்டால், ப்ரதானத்திலிருந்து அசேதனப் பொருள்கள் தோன்றுகிறபடியால், ஸத்தை அறிந்தால்
    அவற்றை அறிந்ததாகும். ஆனால், சேதனர்களான ஜீவாத்மாக்கள் அசேதனமான ப்ரதானத்திலிருந்து உண்டாக இயலாது.
    அகவே ஸத்தை அறிந்தால் ஜீவர்களை அறிந்ததாகாது. எனவே ஸத் என்பது ப்ரதானம் அல்ல. பரமாத்மா தான்.
    பரமாத்மாவுக்கு சேதனம் அசேதனம் அனைத்தும் உடலானபடியால், அவற்றோடு கூடியவராக அவரை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜை பொருத்தமானதாகும்.

உபநிஷத்துக்களின் ஒற்றுமை

  1. ஸ்வாப்யயாத் –
    தன்னிடம் லயம் அடைகிறபடியால். உத்தாலகர் மேல் ஒரு இடத்தில்
    “ஸதா ஸோம்ய ததா₃ ஸம்பந்நோ ப₄வதி, ஸ்வம் அபீதோ ப₄வதி, ஸதி ஸம்பத்₃ய ந விது₃:” அதாவது,
    ’இந்த ஜீவன் தூங்கும் போது, ஸத்தோடு கூடுகிறான்;
    ஸத்திடம் லயம் அடைகிறான்’ என்று கூறுகிறார். ஒரு பொருள் எங்கு உண்டானதோ அங்கு தான் லயம் அடைய முடியும். -எனவே ஜீவர்களுக்குக் காரணப் பொருள் ஸத் தான் என்று தெரிகிறது. எனவே அது ப்ரதானம் ஆக முடியாது. ஜீவர்களையும் தனக்கு உடலாகக் கொண்ட பரமாத்மா தான் ஜீவர்களைப் படைக்கிறான் என்று ஏற்க வேண்டும்.
  2. க₃தி ஸாமாந்யாத் –
    ஒற்ற அர்த்தத்தைச் சொல்லுகிறபடியால். கதி என்றால் செயல்பாடு என்று பொருள். இந்த வேத வாக்கியத்தின் செயல் பாடாவது, தன் பொருளைப் போதிப்பது. ஸாமாந்யம் என்றால் ஒற்றுமை . எல்லா வேதாந்தங்களுக்கும் ’பொருளை போதித்தல் என்னும் செயல் ஒற்றுமை யுடையதாக இருக்க வேண்டும்’ என்று
    ஸூத்ரத்தின் பொருள். ஒற்றுமையாவது, ஒரே பொருளை போதிப்பது. எல்லா உபநிஷத்துகளும் ஒரே பொருளைத் தானே ஜகத் காரணம் என்று சொல்ல வேண்டும்.
    மற்ற உபநிஷத்துக்களைப் பார்த்தால்,
    “ஆத்மா வா இத₃ம் ஏக ஏவ அக்₃ரே ஆஸீத்” (ஐதரேய உபநிஷத்),
    “ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:” (தைத்திரீய உபநிஷத்) என்று எங்கும் அறிவுடையவரான ஆத்மா ஒருவர் தான் ஜகத் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளார். எனவே அதோடு ஒற்ற பொருளைச் சொல்ல வேண்டிய இந்த உபநிஷத்தில் சொல்லப்படும் ஸத் என்பது ஜ்ஞாநமுடைய பொருளாகத் தான் இருக்க வேண்டும், அசேதனமாக முடியாது.
  3. ஸ்ருேத்வாத் ச –
    கேட்கப்படுகிறபடியாலும்.
    மற்ற உபநிஷத்துகளில் மட்டுமல்லாமல், இந்த சாந்தோக்ய உபநிஷத்திலேயே கூட மற்ற இடங்களில் பரமாத்மா தான் ஜகத் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.
    “த்தை₃க்ஷத” என்ற ஸங்கல்பத்தால் எல்லை யற்ற ஜ்ஞாநம்,

    ப₃ஹு ஸ்யாம்” என்ற பலவாக ஆகிற படியால் தடையற்ற சக்தியும்,

    ஸதா₃யதனா:” என்று அனைத்தையும் தாங்கும் பலமும்,
    “அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிஸ்ய” என்பதால் இவரே அனைத்துப் பொருள்களுக்கு உள்ளும் புகுந்து வ்யாபிக்கிறார் என்று, “அஸ்மிந் காமா: ஸமாஹிதா:” என்று ஆசைப் படத் தகுந்த நற் பண்புகள் எல்லாம் இந்த ஜகத் காரணத்திடம் உள்ளன என்றும்,
    “ஏஷ ஆத்மா அபஹத பாப்மா” என்று இந்த ஜகத்காரணம் எந்த தோஷங்களும் அற்றது என்றும் இந்த உபநிஷத்திலேயே சொல்லப் பட்டபடியால் ஸத் என்ற ஜகத் காரணம் பரமாத்மாவே .
    இப்படி பல வாக்கியங்களை ஆராய்ந்து, ஸத் என்ற ஜகத் காரணம் பரமாத்மாவே என்பதைத் தெளிவு படுத்துகிறார் வேத வ்யாஸர்-

1.1.6 ஆநந்தமயாதி₄கரணம்
ஜீவாத்மாவே படைத்திருக்கலாமே ?
ஆநந்தமயாதிகரணத்தின் பின்புலம்

ஸங்கதி – ஜகத் காரணமான ப்ரஹ்மம் உலகில் மிக ப்ரஸித்தமான அசேதனப் பொருள் அல்ல என்று 1.1.5-ஈக்ஷத்யதிகரணத்தில்-நிரூபிக்கப்பட்டது. அடுத்து, உலகத்தில் இன்ப துன்பங்களை அநுபவிக்கும் பத்த ஜீவாத்மாவோ , முக்தி அடைந்த ஜீவாத்மாவோ கூட ஜகத் காரணமான ப்ரஹ்மம் ஆக இயலாது என்று 1.1.6 ஆநந்தமயாதிகரணத்தில் நிரூபிக்கப்படுகிறது.

விஷய வாக்யம் – க்ருஷ்ண யஜுர் வேதத்தில் அடங்கிய தைத்திரீய உபநிஷத்தின் ஆநந்தவல்லி என்னும் இரண்டாம் வல்லி.

ப்₃ரஹ்மவித் ஆப்நோதி பரம், ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம – ப்ரஹ்மத்தை அறிந்தவன் உயர்ந்த இலக்கான அந்த ப்ரஹ்மத்தையே அடைகிறார், அது என்றும் மாறாதது, அறிவே வடிவமானது, எல்லை யற்றது.

ஸ்தூல அருந்ததி நியாயம் -போல் உடலில் தொடங்கி ஆத்மாவைக் காட்டும் பஞ்ச கோசங்கள் -உடலான அன்ன மயம் -பிராண மயம் -மநோ மயம் -விஞ்ஞான மயம் -ஆனந்த மயம் -ப்ரஹ்மம் என்றும் காட்டும் –

ஆத்ம ஆகாச: ஸம்பூ₄த:, ஆகாசாத் வாயு:, வாயோர் : அக்₃நி:, அக்₃ந : ஆப:, அத்₃ப்₄ய: ப்ருதி₂வீ, ப்ருதி₂வ்யா ஓஷத₄ய:. ஓஷதீ₄ப்₄ய: அந்நம், அந்நாத் புருஷ:, புருஷ: அந்ந ரஸ மய: – ப்ரஹ்மம் எனப் படும் ஆத்மாவிடமிருந்து ஆகாசம், காற்று, நெருப்பு, நீர், பூமி, பயிர்கள்,
உணவு, உடல் உண்டாகின்றன. உடல் உணவால் ஆக்கப் பட்டபடியால் ’அந்ந மயம்’ எனப்படுகிறது.

தஸ்மாத்₃வா எதஸ்மாத் அந்ந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ப்ராண மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –அந்த அந்ந மயமான உடலைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, ப்ராண மயம் எனப்படும் மூச்சுக் காற்று. ப்ராண மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் ப்ராண மயத்துக்கும் ஆத்மா

தஸ்மாத்₃வா எதஸ்மாத் ப்ராண மயாத் அந்ய: அந்தர ஆத்மா மநோ மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –-அந்த ப்ராண மயம் எனப் படும் மூச்சைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, மநோ மயம் எனப்படும் மனது.-ப்ராண மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் மநோ மயத்துக்கும் ஆத்மா

தஸ்மாத்₃வா எதஸ்மாத் மநோ மயாத் அந்ய: அந்தர ஆத்மா விஜ்ஞாந மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –-அந்த மநோ மயம் எனப் படும் மனதைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, விஜ்ஞாநமயம் எனப்படும் புத்தி (உறுதி).-மநோ மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் விஜ்ஞாந மயத்துக்கும் ஆத்மா

தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞா மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆ ந்த₃மய:, தஸ்ய எஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய –-அந்த விஜ்ஞாந மயம் எனப்படும் புத்தியைக் காட்டிலும் வேறொன்று, அதற்குள் இருப்பது, ஆநந்த மயம் எனப்படும் ஜீவாத்மா. -விஜ்ஞாந மயத்துக்கு எந்த சாரீர ஆத்மா (உடலோடு கூடிய ஆத்மா) ஆத்மாவோ , அதுவே தான் ஆநந்த மயத்துக்கும் ஆத்மா.

ஆநந்த மயனுக்கு மேல் ஒரு பொருள் இருப்பதாக இங்கு சொல்லாத படியால், தொடக்கத்தில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமும் ஆநந்த மயனும் ஒன்று என்று தெரிகிறது.

ஆநந்த மயன் ஜீவாத்மாவே என்னும் பூர்வ பக்ஷம்
பூர்வ பக்ஷம் – இங்கு ப்ரஹ்மம், ஆத்மா, ஆநந்த மயன் என்றெல்லாம் சொல்லப்பட்டது ஜீவாத்மா தான். இதற்குக் காரணங்கள் –

சாரீர ஆத்மா” என்று குறிப்பிட்டது – இங்கு அந்ந மயம் முதலானவற்றுக்கு ஆத்மாவான பொருளைச் போல்லும் போது,
“சாரீர ஆத்மா” அதாவது “சரீரத்தை உடைய ஆத்மா” என்று சொல்லப்பட்டது. சரீரம் என்பது ஜீவனுக்கே உண்டாகையால் இது ஜீவாத்மாவைத்தான் குறிக்க வேண்டும்.
ஸாமாநாதி கரண்யம் – ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றான படியால் இங்கு ஆநந்த மயன் எனப்படுபவர் ஜீவாத்மாவே .
இரண்டு சொற்கள் சேர்ந்து படிக்கப்பட்டு, அவை ஒரே பொருளைச் சொல்லுமானால் அதற்கு ஸாமாநாதிகரண்யம் என்று பெயர். எடுத்துக்காட்டு – “சிவந்த தாமரை ” என்ற சொல் தொடரில், சிவந்த என்னும் சொல்லும் தாமரை என்ற
சொல்லும் ஒரே பொருளான தாமரையைத் தான் குறிக்கின்றன.
அது போல் சாந்தோக்ய உபநிஷத்தில் ஸத்வித்யை என்னும் பகுதியில் உத்தாலகர் தன் மகனான ஸ்வேத கேதுவைப் பார்த்து “தத் த்வம் அஸி” என்கிறார். இதில் ’தத்’ என்ற சொல்லுக்கும் ’த்வம்’ என்ற சொல்லுக்கும் ஸாமாநாதிகரண்யம்
இருக்கிறபடியால் இரண்டு சொற்களும் ஒருவரைத்தான் குறிக்க வேண்டும். எனவே , “ஜகத் காரணமான ஸத் என்ற பொருள் தான் நீயாக இருக்கிறாய்” என்று பொருள் ஆகும்.

இதுவே அத்வைத மதம் – ’ப்ரஹ்மம்’ என்ற ஒரு பொருள் மட்டுமே உள்ளது. அது ’அவித்யா’ என்ற ஒரு குற்றத்தால்
மூடப்பட்டு, தன்னைச் சுற்றிப் பல பொருட்கள் இருப்பதாக கற்பணன செய்து கொள்கிறது. இதுவே ப்ரமம்/மயக்கம்.
இந்த மயக்கத்தால் பல இன்ப துன்பங்களை ப்ரஹ்மம் அநுபவிக்கிறபடியால் அதுவே ஜீவாத்மா எனப்படுகிறது. இந்த மயக்கம் தீர வேண்டும் என்றால், “தத் த்வம் அஸி” முதலான வாக்யங்களைக் கொண்டு தான் மட்டுமே உண்மை, மற்ற அனைத்தும் பொய் என்று உணர வேண்டும். இந்த புரிதல் வந்தால், அவித்யா என்ற தோஷம் அழிந்து விடும்,
அதற்குப் பின் பல பொருள்களை ப்ரஹ்மம் கற்பனை செய்யாது, தான் மட்டுமே ஸுகமாக இருக்கும்.
எனவே , மேல் சொல்லப்பட்ட இரண்டு காரணங்களால் ஜீவாத்மா தான் ஆநந்த மயன் என்பதே பூர்வ பஷம்

1.1.6 ஆநந்தமயாதி₄கரணம்
அளவிறந்த ஆநந்தம் பரமாத்மாவுக்கே

வேதமே அளக்க முடியாத ஆநந்தம்-

தைத்திரீய உபநிஷத்தின் ஆநந்த வல்லியில் ஜகத்காரணமான ப்ரஹ்மம் ஆநந்த மயன் எனப்பட்டது. அவரே-’சாரீர:’ -அதாவது உடலோடு கூடியவர் என்று உபநிஷத் சொல்கிற படியால் அவர் ஒரு ஜீவாத்மாவே என்பது பூர்வ பக்ஷம்.

ஸித்தாந்தம் – இவ் வாதத்தை முறியடித்து, ஆநந்த மயன் பரமாத்மாவே என்று 8 ஸூத்ரங்களால் நிரூபிக்கிறார் வ்யாஸர்.

(1) ஆநந்த₃மய: அப்₄யாஸாத் –
அடுத்த அதிகரணத்தில் இருக்கும் ’அந்ய:’ என்ற சொல்லை இந்தப் பாதத்தில் இருக்கும் எல்லா அதிகரணங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அநுஷங்கம் என்று பெயர்.
ஸூத்ரத்தின் பொருள் –
ஆநந்த₃மய: – ஆநந்த₃மயன் என்று சொல் ப்பட்டவர்
அந்ய: – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவர்
அப்₄யாஸாத் – அப்₄யாஸம் செய்யப்பட்ட அதாவது மறுபடியும் மறுபடியும் பெருக்கிச் சொல்ப்பட்ட ஆநந்த்த்தால்

இந்த ஆநந்த₃வல்லியில், ஆநந்த மயனின் ஆநந்தத்தை ஒரு அளவு கோல் கொண்டு அளக்க முயற்சிக்கிறது வேதமே-

ஸா ஏஷா ஆநந்த₃ஸ்ய மீமாம்ஸா ப₄வதி| யுவா ஸ்யாத் ஸாது₄ யுவாத்₄யாயக: ஆசிஷ்டோ ₂ த்₃ரடி₄ஷ்டோ ₂ ப₃லிஷ் ட ₂: |தஸ்யேயம் ப்ருதி₂வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் | ஸ ஏகோ மாநுஷ ஆநந்த₃: –
ஆநந்த மயனின் ஆநந்தத்தைப் பற்றின ஆராய்ச்சி துவங்கப்படுகிறது. இளமையும், கல்வியும், உடல் மற்றும் மன வலிமையும், வேகமாகச் செயல்படும் திறமையும், அதிகமான செல்வமும் இருந்தால் அதுவே ஒரு மனிதனின் ஆநந்தம் ஆகும்.

தே யே சதம் மாநுஷா ஆநந்தா₃: ஸ ஏகோ மநுஷ்ய க₃ந்த₄ர்வாணாம் ஆநந்த₃: |ஸ்ரோத்ரி யஸ்ய ச அகாமஹதஸ்ய –
இந்த மநுஷ்ய ஆநந்தத்தை நூறு மடங்காகப் பெருக்கினால், அது ஒரு க₃ந்த₄ர்வனின் ஆநந்தம் ஆகும். அதுவே முக்தனுக்கும்

இப்படியே நூறு நூறாகப் பெருக்கிக் கொண்டு போனால், பித்ருக்கள் தேவர்கள் இந்த்ரன் ப்ருஹஸ்பதி மற்றும் ப்ரஜாபதியின் ஆநந்தங்களை அளக்கலாம். ப்ரஜாபதியின் ஆநந்தத்தை நூறால் பெருக்கினால் ஆநந்த மயனின் ஆநந்தம் கிடைக்குமோ என்று பார்த்த வேதம், அதன் அருகில் கூடச் செல்ல முடியாதபடியால் தோல்வி யுற்றுச் சொல்லுகிறது –
யதோ வாஸோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ, ஆநந்த₃ம் ப்₃ரஹ்மண: – என்னுடைய பேச்சும் மனதும் எதை அடைய முடியாமல் திரும்பி விட்டனவோ அதுவே ஆநந்த மயனான ப்ரஹ்மத்தின் ஆநந்தம் ஆகும்.-

இப்படி நூறு நூறாகப் பெருக்கிப் பார்த்தாலும் அளக்க முடியாத எல்லை யற்ற ஆநந்தத்தை உடையவர் ஆநந்த மயன்.-இப்படிப்பட்ட ஆநந்தம் ஸம்ஸாரத்தில் எல்லை யற்ற துன்பமும் சிறிது ஸுகமும் காணும் ஜீவனுக்குப் பொருந்தாது.

பூர்வ பக்ஷியின் யுக்திகளை முறி யடித்தல்
பூர்வ பக்ஷி முக்கியமாக இரண்டு யுக்திகளைக் கையாண்டார். அவற்றுக்கு விடை அளிக்கிறார் வ்யாஸர் –
1- “சாரீர ஆத்மா” – உடலோடு கூடிய ஆத்மா என்று சொல் ப்பட்டவர் ஜீவனாகத் தான் இருக்க வேண்டும் என்றார் பூர்வ பக்ஷி. அது உண்மை யல்ல . பரமாத்மாவுக்கு இந்த உலகில் உள்ள சேதனர்கள் மற்றும் அசேதனங்கள் அனைத்தும் சரீரமாக உள்ளபடியால், உண்மையில் அவரைத் தான் சாரீரன் என்று சொல்வது பொருத்தமானது.

2- ஸாமாநாதி₄கரண்யம் – சேர்த்துப் படிக்கப் பட்ட இரண்டு சொற்கள் ஒரே பொருளைச் சொல்லுதல் ஸாமாநாதிகரண்யம்.
“தத் த்வம் அஸி” என்று வேதமே பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்று சொல்கிறபடியால் ஜீவனே ஜகத் காரணம் என்றார் பூர்வ பக்ஷி. இதுவும் சரி அல்ல , இங்கு ஜீவனுக்கும் பரனுக்கும் ஐக்யம் சொல்லப் படாத படியால்.

பொதுவாக ’நான் மநுஷ்யன்’ என்று சொன்னால், நான் என்ற சொல் ஆத்மாவையும், மநுஷ்யன் என்ற சொல் உடலையும் தான் குறிக்கும். பிறகு எப்படி இரண்டும் ஒரே பொருளைத் தருகின்றன? ஏன் என்றால் மநுஷ்யன் என்ற சொல், இந்த உடலை மட்டும் குறிப்பிடுவதோடு நின்று விடாமல், அதற்குள் இருக்கும் ஜீவாத்மா வரை குறிக்கும்.
ஜீவாத்மாவை விட்டுப் பிரியாத தன்மையாக இந்த உடல் இருக்கிறபடியால். ஆகையால் இந்தச் சொற் தொடரின் உண்மையான பொருள் – “நான் மநுஷ்ய சரீரத்தை உடையவர்” என்று –

அதே போல் இப்போது உத்தாலகர் தன் மகன் ஸ்வேத கேதுவைப் பார்த்துச் சொல்கிறார் – “தத் த்வம் அஸி” அதாவது “அந்த ஜகத் காரணமான ப்ரஹ்மமே நீயாக இருக்கிறாய்” என்று. இதில் ’த்வம்’ அதாவது-’நீ’ என்ற சொல், ஸ்வேத கேதுவின் உடலை மட்டும் குறிக்காமல் எப்படி அதற்குள் இருக்கும் ஆத்மா வரை குறிக்குமோ , அதுவே போல் அந்த
ஜீவனுக்குள் இருக்கும் பரமாத்மா வரை குறிக்கும். எனவே இந்தச் சொற் தொடரின் உண்மையான பொருள் ஆவது –“ஜகத்காரணமான அந்த ப்ரஹ்மம் தான் உனக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார்” என்பதே ஆகும். எனவே இங்கு பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் ஐக்யம் சொல்லப்படவே இல்லை-

ஸ்வாமி நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கூறுகிறார் –
நீராய் நிலனாய் தீயாய் காயாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய்”.

பரமாத்மா தான் இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் வடிவு கொண்டிருக்கிறார். இதுவே “தத் த்வம் அஸி” என்ற வாக்கியத்தின் சரியான பொருள்.

ஆநந்த மயன் என்ற சொல்லின் ஆராய்ச்சி
(2) விகார சப்₃தா₃த் ந இதி சேத் ந ப்ராசுர்யாத் –
ஸூத்ரத்தின் பொருளாவது “விகாரத்தைச் சசால்லும் சொல் இருக்கிற படியால் ஆநந்த மயன் ஜீவாத்மாவே என்று சொன்னாய் என்றால், அது தவறு, மிகுதியால்”.

பூர்வ பக்ஷி கேட்கிறார் – ஆநந்த மயன் என்னும் சொல்லில் உள்ள மயட் என்கிற விகுதியானது-’விகாரம்’ அதாவது மாறுபாடு – பரிணாமம் என்ற பொருளைக் உடையதாக உலகத்தில் காண்கிறோம். தங்க மயமான மோதிரம் என்றால் தங்கத்திலிருந்து உண்டானது என்று தெரிகிறது. ஆகையால், ஆநந்த மயன் என்றால் ஆநந்தத்தின் ஒரு மாறுபாடு என்று பொருள் ஆகும். எனவே ஆநந்த மயன் என்பவர் தன் ஆநந்த நிலை யிலிருந்து மாறி துக்கத்தை அநுபவிப்பவராக இருக்க வேண்டும். இது ஸம்ஸாரத்தில் துன்பப்படும் ஜீவனுக்குத் தானே பொருந்தும்?

ஸித்தாந்தியின் பதில் – இது தவறானது. ’மயட்’ என்ற சொல்லுக்கு ’மிகுதி’ என்றும் ஒரு பொருள் உலகில் உள்ளது. ’தேஜோ மயம்’ என்று சொன்னால், மிகுதியான தேஜஸ் என்று தானே பொ ருள்படுகிறது. அது போல் இங்கும் ஆநந்த மயன் என்று சொன்னால் , மிகுதியான ஆநந்தம் உடையவர் என்று தான் பொருள். அந்த மிகுதி தான் முன்
சொல்லப் பட்ட ஆநந்த்தத்தை அளக்கும் முயற்சியிலும் காட்டப்பட்டது. எனவே ஆநந்த மயன் ஜீவனல்ல-

3) தத்₃தே ₄து வ்யபதே ₃ஶாச்ச – “ஆநந்தத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறபடியாலும்”.
இதே இடத்தில்-ஆநந்த மயன் எல்லை யற்ற ஆநந்தம் உடையவர் என்பதோடு மட்டும் நிற்காமல், இவர் தான் மற்றவருக்கு ஆநந்தத்தை வழங்குகிறார் என்றும் வேதம் சொல்கிறது.
“கோஹ்யே வ அந்யாத் க: ப்ராண்யாத் யதே₃ஷ ஆகாச ஆநந்த₃: ந ஸ்யாத்|
எஷ ஹ்யேவ ஆநந்த₃யாதி” –

இந்த ஆநந்த மயன் இல்லா விட்டால் வேறு யார் ஜீவனுக்கு இவ்வுலக இன்பங்களையும்,
மோக்ஷமாகிற இன்பத்தையும் வழங்க முடியும்? என்கிறது. எனவே ஆநந்தத்தைப் பெரும் ஜீவனைக் காட்டிலும், ஆநந்தம் கொடுக்கும் ஆநந்த மயன் வேறாகத் தான் இருக்க வேண்டும்.

4-மாந்த்ர வர்ணிகமேவ ச கீ₃யதே – “மந்த்ரத்தில் சொல்லப் பட்டவர் தான் இங்கும் சொல்லப் படுகிறபடியால்”.
இந்த வல்லியின் தொடக்கத்தில் உள்ள மந்த்ரம் –
“ப்ரஹ்மவித் ஆப்நோதி பரம்” அதாவது ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான
இலக்கான அந்த ப்ரஹ்மத்தையே அடைகிறார் என்கிறது. அங்கு சொல்லப்பட்ட ப்ரஹ்மம் தான் இங்கு சொல்லப்படும் ஆநந்த மயன் என்பதில் ஐயமில்லை . எனவே , உபாஸனம் செய்யும் ஜீவனைக் காட்டிலும், அடையப்படும் இலக்கான ஆநந்த மயன் என்ற ப்ரஹ்மம் வேறாகத் தானே இருக்க வேண்டும்

ஆநந்த வல்லியில் மற்ற வாக்கியங்களின் ஆராய்ச்சி
(5) ந இதர: அநுபபத்தே :
– “வேறு ஒருவனான ஜீவன் அல்ல , பொருந்தாமையால்”.
பூர்வ பக்ஷியின் கேள்வி – முன் கூறிய மந்த்ரத்தால் சொல்லப்பட்ட ப்ரஹ்மம் “ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம்” அதாவது என்றும் மாறாதது, ஜ்ஞாநமே வடிவமானது, எல்லை யற்றது ’ என்று விவரிக்கப்படுகிறது. இது ஸம்ஸாரி ஜீவனுக்குப் பொருந்தாது என்றாலும் முக்தி
அடைந்த ஜீவனையே ப்ரஹ்மம் என்று கொள்ளலாமே ?
ஸித்தாந்தியின் பதில் – இல்லை , ப்ரஹ்மம் என்பது முக்தி அடைந்த ஜீவனின் நிலையும் அல்ல . இங்கு ப்ரஹ்மத்தை விபஶ்சித் என்று வேதம் கூறுகிறது. விபஶ்சித் என்றால்“பலவற்றைப் பார்த்து அறிபவன்” என்று பொருள். பூர்வ பக்ஷியான அத்வைதியின் மதத்தில் முக்தி அடைந்த ஜீவன் தன்னைத் தவிர எதையுமே அறிய மாட்டார். எனவே அவரை விபஶ்சித் என்று சொல்லுவது பொருந்தாது.

(6) பே₄த₃ வ்யபதே₃ஶாச்ச – “வேறுபாடு சசொல்லப்பட்டபடியாலும்”. நேரடியாகவே வேதம் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் தான் ஆநந்த மயன் என்று சொல்கிறதே –
தஸ்மாத்₃வா ஏதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர: ஆத்மா ஆநந்த₃மய:” அதாவது விஜ்ஞாந மயன் என்ற ஜீவனைக் காட்டிலும் வேறாய் அதற்குள் இருப்பவர் ஆநந்த மயன்-என்று. இங்கு விஜ்ஞாந மயன் என்பவர் ஜீவன் தான். புத்தியை விஜ்ஞாந மயன் என்று சொல்ல இயலாது, புத்தியால்“விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே ” என்று மேல் சொல்லப் பட்டபடி யாகம் முதலானவற்றைச் செய்ய முடியாதபடியால்.

(7) காமாத் ச ந அநுமாநாபேக்ஷா – “ஆகையால் உடலின் தேவை இல்லாதபடியாலும்”. காமம் என்றால் ஆசை . -அநுமானம் என்ற சொல் இங்கு உடலைக் குறிக்கிறது. ப்ரஹ்மம் தன் ஸங்கல்பத்தால் மற்றும் ஆசையால் மட்டுமே உலகைப் படைப்பதாக வேதம் சொல்லுகிறது – “ஸ: அகாமயத ப₃ஹு ஸ்யாம் ப்ரஜாயேய இதி”-என்றும்
ஸ தப: அதப்யத” என்றும் முதலானவற்றில்.
எனவே ப்ரஹ்மத்திற்கு ஸ்ருஷ்டி செய்ய. ஒரு உடலின் தேவையே இல்லை –ஆனால் ஜீவாத்மாவோ உடல் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது. எனவே இங்கு சொல்லப் படும் ப்ரஹ்மம் ஜீவாத்மா அல்ல-

(8) அஸ்மின் அஸ்ய ச தத்₃யோகம் சாஸ்தி – “இதில் இவனுக்கு அதன் சேர்க்கை சொல்லப் படுகிறபடியாலும்”.
ப்ரஹ்மத்திடம் ஜீவனுக்கு ஆநந்தத்தின் சேர்க்கை சொல்லப்பட்டுள்ளது. வேதம் கூறுகிறது – “ரஸோ வை ஸ:, ரஸம் ஹ்யேவ அயம் லப்₃த்₄வா ஆநந்தீ₃ பா₄தி” அதாவது-’இந்த ப்ரஹ்மமே ரஸமான இன்பமான பொருள், இதை அடைந்து தான் ஒருவன் ஆநந்தத்தைப் பெருகிறான்’ என்று. எனவே ரஸமான இன்பமான அநுபவிக்கப்படும் பொருளான ப்ரஹ்மம், அதை அநுபவிக்கும் ஜீவனைக் காட்டிலும் வேறாகத் தான் இருக்க வேண்டும்.
இதுவே ஸித்தாந்தம்

கீழே -(3) தத்₃தே ₄து வ்யபதே ₃ஶாச்ச-அங்கு மோக்ஷ ப்ரதன் -இங்கு அவனே ப்ராப்யம் -என்கிறார் -இதுவே வாசி
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

————-

1.1.7 அந்தரதி₄கரணம்
பரமாத்மாவின் திவ்யமான திருமேனி

அந்தரதிகரணத்தின் பின்புலம்
ப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் அத்யாயமான ஸமந்வய அத்யாயம் முழுவதும் பரமாத்மாவே உபநிஷத்தில் ஜகத்காரணம் என்று சொல்லப்பட்டவர் என்று நிரூபிப்பதற்காக.
1.1.5 ஈக்ஷத் யதிகரணம் மற்றும் 1.1.6 ஆநந்த மயாதிகரணம் சேர்ந்து
ஜகத் காரணமான ப்ரஹ்மம் உலகிலுள்ள அசேநம் மற்றும் சேதனப் பொருட்களைக் காட்டிலும் வேறுபட்டது என்று நிரூபித்தன.-அதற்கு அடுத்து 1.1.8 அந்தரதி₄கரணம் துவங்கப்படுகிறது.

இந்த அத்யாயத்தில் யார் ஜகத் காரணம் என்ற ஆராய்ச்சி நேரடியாக இல்லை . ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் யார் என்பதே ஆராயப் படுகிறது. பிறகு ஏன் இது இவ் விடத்தில் ஆராயப் பட வேண்டும் எனில், தொடர்பு உள்ளது.

ஸங்கதி – ஆநந்த மயாதிகரணத்தில் தைத்திரீய உபநிஷத்தின் ஆநந்த வல்லியைப் பற்றி ஆராய்ச்சி நடந்தது.-அங்கு ஒரு வாக்கியம் உள்ளது – “
ஸ ய: அயம் புருஷே ய: அஸவ் ஆதி₃த்யே ஸ ஏக:” அதாவது ’இந்த ஆத்மாவுக்குள்
இருப்பவரும் ஸூர்ய மண்டலத்துக்குள் இருப்பவரும் ஒருவர் தான்’ என்று பொருள். சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் அந்தாராதி₃த்ய வித்யையிலும் ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் ஆத்மாவைப் பற்றிச் சொல்லப் பட்டுள்ளபடியால், அதை ஆராய்ந்து பார்ப்பது தகுந்ததே . அவ் விடத்தில் ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் ஒரு ஜீவாத்மா என்று முடிவாகி விட்டால், அவரே தான் இவ் வாத்மாவுக்குள் இருக்கும் ஆநந்த மயனாகவும் இருக்க வேண்டும். இதனால் ஜீவாத்மாவே ஜகத் காரணம் என்று நிரூபித்து விடலாம் என்பது பூர்வ பக்ஷியின் எண்ணம்

விஷயவாக்யம் – ய ஏஷ: அந் ராதி₃த்தய ஹிரண் மய: புருஷ: த்₃ருஸ்யத | ஹிரண்யஸ் மஸ்ரு: ஹிரண்ய தகச: |
ஆ ப்ரணகா₂த் ஸர்வ ஏவ ஸுவர்ண: | தஸ்ய யதா ₂ கப்யாஸம் புண்ட₃ரீகம் ஏவம் அக்ஷிணீ –
“ஸூர்ய மண்டலத்திற்குள் யார் ஒருவர் தங்க மயமான சரீரத்துடன் யோகிகளால் காணப் படுகிறாரோ , அவரது மீசையும் கேசமும் கூட தங்க மயமானாவை , அவர் தலை முதல் நகம் வரை அனைத்துமே தங்க மயமானது. அவருக்கு ஸூர்யனால் அலர்த்தப்பட்ட, தடாகத்தில் இருக்கும் தாமரை போன்ற அழகிய சிவந்த கண்கள் உள்ளன”. இவ்விடத்தில் தங்க மயம்
என்பதற்கு பிடித்தமானது, ஆசையைத் தூண்டக் கூடியது, ஈர்க்கக் கூடியது என்று பொருள்.

தஸ்ய உத் இதி நாம | ஸ ஏஷ ஸர்வேப்₄ய: பாப்மப்₄ய: உதி₃ : த | உதே ₃தி ஹ வை ஸர்வெப்₄ய: பாப்மப்₄ய: ய ஏவம் வேத–அவருக்கு உத் என்று பெயர். அவர் பாபங்களை எல்லாம் கடந்தவர். அவரை எவன் ஓருவன் த்யானிக்கிறானோ அவனும் எல்லாப் பாபங்களையும் கடந்து விடுகிறான்-

ஜீவாத்மாவே அந்தராதி₃த்ய புருஷன் என்னும் பூர்வ பக்ஷம்
ஸந்தேகம் – ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் ஜகத் காரணமான புருஷன் ஜீவனா? பரமாத்மாவா? என்று ஆநந்த மயாதிகரணத்தில் ஜீவாத்மா ஜகத் காரணம் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும், இங்கு அதிகப்படியாக ஒரு கேள்வி உள்ளது. நம்மைப் போன்ற ஸாதாரண மனிதர்களால் ஜகத் காரணம் ஆக முடியாது என்றாலும், மிகுந்த புண்ணிய ஸாலிகளான சக்தி வாய்ந்த இந்த்ரன் வருணன் ப்ரஜாபதி போன்ற ஜீவாத்மாக்களுல் ஒருவர் இருக்கலாமே ?

பூர்வ பக்ஷம் – இங்கு ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பதாகச் சொல்லப் பட்டவர் ஜீவாத்மா தான். இதற்குக் காரணம் –ஸரீரத்வம் – ஸரீரம் உடைமை . இவ் விடத்தில் ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் புருஷனுக்கு ஸரீரம் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளபடியால் அவர் ஜீவனாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார் பூர்வ பஷீ.

கேள்வி – சென்ற அதிகரணத்திலேயே ஆநந்த மயன் என்ற பரமாத்மா ’ஸாரீரன்’ அதாவது ஸரீரம் உடையவர் என்று சொல்லி விட்டோம். பிறகு எப்படி இவ் வதிகரணத்தில் ஸரீரம் இருப்பதனால் இவர் ஜீவாத்மா என்று கூற முடியும்?

பதில் – கடந்த அதிகரணத்தில், பரமாத்மாவுக்கு இவ் வுலகிலிருக்கும் சித் மற்றும் அசித் பொருள்கள் எல்லாம் ஸரீரம் என்று தான் சொல்லப் பட்டது. ஆனால் இங்கு அந்தராதித்ய வித்யையில் ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவருக்கு கை கால்கள் கண் கேசம் முதலானவற்றைக் கொண்ட உடல் சொல்லப் படுகிறபடியால் இது பரமாத்மா அல்ல.

பூர்வபக்ஷியின் அபிப்ராயம் இதுவே – நாம் முன் பிறவிகளில் செய்த பாபம் மற்றும் புண்ணியத்தின் பயனான துக்கம் மற்றும் ஸுகத்தை அநுபவிப்பதற்காகத் தான் இந்த உடல் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் முக்தி அடைந்த பிறகு இவ் வாத்மா பாப புண்யங்களால் ஏற்படும் ஸுக துக்கங்கணள அநுபவிக்கத் தேவை யில்லாதபாடியால், முக்தி அடைந்த
ஜீவனுக்கு உடல் இல்லை என்று வேதம் கூறுகிறது – “
ந ஹ வை ஸ ஸ ரீரஸ்ய ஸத: ப்ரியாப்ரியயோ : அபஹதி: அஸ்தி| அஸரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருசத:” என்று.

எனவே , ஒருவருக்கு உடல் இருக்கிறது என்றால் அவர் கண்டிப்பாக பாப புண்யங்களுக்குக் கட்டுப் பட்டவராகத் தான் இருக்க வேண்டும். ஆகையால், ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவரும் பாப புண்யங்கள் கொண்ட ஜீவாத்மா தான்-

பாப்மப்₄ய: உதி₃த:’ என்று அவர் பாபங்களைக் கடந்தவர் என்று சொல்லப்பட்டதே ? எனில் – அதிகமான புண்யம் செய்ததால் ஸூர்ய பகவான் என்ற உயர்ந்த பிறவியை அடைந்திருக்கிற படியால் அப்படிச் சொல்கிறது-

அந்தராதி₃த்ய புருஷன் பரமாத்மாவே-ஸித்தாந்தம் – பூர்வ பக்ஷியின் இந்த வாதத்தை இரண்டே ஸூத்ரங்களில் முறியடிக்கிறார் வேத வ்யாஸர்.

1-அந்த (அந்ய) : தத்₃ ₄தர்மோ பதே ₃சாத் – அடுத்த ஸூத்ரத்தில் இருக்கும் ’அந்ய:’ என்ற பதத்தை இங்கும் சேர்க்க வேண்டும்.
அந்த : – ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவராகச் சொல்லப்பட்ட புருஷன்
அந்ய: – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறு பட்டவர்
தத்₃ ₄தர்மோபதே₃சாத் – ஜீவாத்மாவுக்குப் பொருந்தாத அபஹத பாப்மத்வத்தின் உபதேசத்தால்

’ஸ ஏஷ ஸர்வேப்₄ய: பாப்மப்₄ய: உதி₃ :’ என்ற வாக்கியம் மிகவும் முக்கியமானது. இதற்கு ’பாபங்களைக் கடந்தவர்’ என்று மேலோட்டமான பொருள். ஆனால் பாபம் என்ற சொல் பாபத்தை மட்டும் அல்ல, பாபம் புண்யம் இரண்டையும் குறிக்கும். ப்ரஹ்மத்தைப் பற்றி போதிக்கும் இதே போன்ற மற்ற வாக்கியங்களில் ’-ந ஸுக்ருதம் ந து₃ஷ்க்ருதம்’ என்று பாப புண்யங்கள் இரண்டும் ப்ரஹ்மத்துக்கு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

அதே போல், ’கடந்தது’ என்றால் ஒரு காலத்தில் பாபம் இருந்து, பிறகு அதைக் கடந்த்து என்று பொருள் அல்ல,-பாப புண்யங்களின் வாஸனையே இல்லாமை . எனவே இங்கு சொல்லப்படும் குணம் –அபஹத பாப்மத்வம் —அதாவது இயற்கையாகவே எப்போதும் கர்மங்களுக்கு கட்டுப்படாமை . இது ஜீவாத்மாவுக்குப் பொருந்தாது-

கேள்வி – ஆதித்ய புருஷனுக்கு ஸரீரம் இருக்கிற படியால் அவர் கர்மத்துக்கு வசப் பட்டவராகத் தானே இருக்க வேண்டும்?
பதில் – இல்லை , கர்மத்துக்கு அப்பாற்பட்ட பரமாத்மாவும் தன் கருணையால் தானே ஆசைப்பட்டு ஸரீரம் எடுக்கலாம்.

கேள்வி – ஆசைப்பட்டு எடுத்தாலும் தாழ்ந்த அழுக்கான ஸரீரத்தை உடைமை என்பது ஒரு தாழ்ச்சி தானே ?
பதில் – அல்ல. பஞ்ச பூதங்களால் ஆன நம்முடைய தாழ்ந்த உடலல்ல பரமாத்மாவினுடையது, அப்ராக்ருதமானது

அஜாய மாநோ பஹுதா விஜாயதே –இச்சா க்ருஹீத அபிமத -அவதார ரஹஸ்யம் -சங்கல்பத்தால் அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் –
கண்கள் சிவந்து –அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –

(2) பேதே ₄ ₃வ்யபதே ₃ஶாச்ச அந்ய: – “வேறுபாடு சொல்லப்பட்டபடியாலும் வேறு ஓருவர்”.
அபஹத பாப்மத்வம் என்ற பண்பு கொண்டு தான் ஆதித்ய புருஷன் பரமாத்மா என்ற முடிவு செய்ய வேண்டிய தேவை இல்லை -. “யஸ்ய ஆதி₃த்ய: ஸரீரம்” என்று நேரடியாகவே ஸூர்ய மண்டலத்திற்குள் இருக்கும் ஜீவாத்மாவைக் காட்டிலும் இங்கு சொல்லப்படும் ஆதித்ய புருஷன் வேறு பட்டவர் என்று உபநிஷத் தெளிவாகவே சொல்கிறது.
எனவே ஆதித்ய புருஷன் பரமாத்மாவே , இவரே ஆநந்த மயன் என்பதால் ஆநந்த மயனும் பரமாத்மாத்வே

ஆதித்ய புருஷனுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா -அவனாலும் அறிய முடியாதவன் -அனைவருக்கும் இருந்து நியமிப்பவன் -ப்ரதிமான் அபபிரபுத்திமான் -நமக்காகவே உருவம் கொண்டு அருளுகிறவன்-

————-

1.8 ஆகாசாதி₄கரணம்
பரமாத்மாவே அடையப்பட வேண்டிய ஆகாசம்

தாசாரதி காட்டுக்குப் போனான் -அவர் சூர்ப்பணகை யுடைய காது மூக்கு அறுத்தார் -அவரே ராமர் -மூக்கு அறிந்திட்ட குமாரனார் சொல்லும் பொய்யானல் –
இதே போல் ஆகாயம் ஜககாரணம் என்றால் ஈஷத் -சங்கல்பம் செய்தது பொருந்தாதே என்றால் -அதற்கும் இரண்டாம் பக்ஷமாக -தயாரானது என்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்ளலாம் அன்றோ
இதுவே அடுத்த நான்கு அதிகரணங்களுடைய சங்கதி

அடுத்த நான்கு அதிகரணங்களின் ஸங்கதி
ப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் அத்யாயத்தின் முதல் பாதம் நடக்கிறது.
அதில் முதல் 4 அதிகரணங்கள் முன்னுரை .
அடுத்த மூன்று அதிகரணங்களால் ஜகத் காரணமான ப்ரஹ்மம் அசேதனம் மற்றும் சேதனப் பொருட்களைக் காட்டிலும் வேறுஎன்று நிரூபிக்கப் பட்டது.
எனவே உண்மையில் இதோடு இந்த அத்யாயமே முடிந்திருக்கலாம், ஜகத் காரணம் பரமாத்மாவே என்று நிரூபித்து விட்டபடியால். ஆனால், அதில் சில ஆஷேபங்கள் (கேள்விகள்) எழ, அதற்கு பதில் சொல்கிறார் வேத வ்யாஸர் இந்தப் பாதத்தில் மீதமுள்ள 4 அதிகரணங்களாலே

இதுவரை பார்த்த அதிகரணங்களில் விசாரிக்கப்பட்ட விஷய வாக்யங்களைப் பார்த்தால், அவற்றில் ஜகத் காரணப் பொருளைக் குறிப்பதற்கு ஸத், ப்ரஹ்மம், ஆத்மா என்ற சொற்கள் தான் உபயோகிக்கப் பட்டன. ஸத்-என்றால் ’இருக்கும் பொருள்’ என்றும், ப்ரஹ்மம் என்றால் ’பெரிய பொருள்’ என்றும், ஆத்மா என்றால் ’எங்கும் பரந்திருக்கும் பொருள்’ என்றும் பொருள். இந்தச் சொற்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் குறிப்பவை அல்ல

ஒரு பொதுவான பண்பை உடைய எல்லாப் பொருள்களையும் குறிக்கும் சொல் ’
ஸாதாரணச் சொல்’ அல்லது ’பொதுச் சொல்’ எனப்படுகின்றன.-எடுத்துக்காட்டு – மனிதன், மிருகம்.-ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டும் குறிக்கும் சொல்-விசேஷச் சொல்’ அல்லது ’தனிச் சொல்’ எனப்படுகின்றன.-எடுத்துக்காட்டு – குடம், வேஷ்டி.

எனவே இதுவரை பொதுச் சொற்களால் மட்டுமே ஜகத் காரணப் பொருள் குறிப்பிடப் பட்டுள்ளபடியால், அந்தந்த வேதப் பகுதியில் சொல்லப்பட்ட ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம், பாப புண்யங்களைக் கடந்திருத்தல் முதலான அடையாளங்களைக் கொண்டு தான் நாம் ஜகத் காரணம் யார் என்று முடிவு செய்தோம்.

இப்போது பூர்வ பக்ஷியின் ஆஷேபம் என்ன வென்றால் – உபநிஷத்துக்களில் சில இடங்களில் ஆகாசம், ப்ராணன், இந்த்ரன், ஜ்யோதிஸ் போன்ற விசேஷச் சொல் அதாவது தனிச் சொல்லைக் கொண்டே ஜகத் காரணப் பொருள் கூறப்பட்டுள்ளது. நேரடியாக வேதத்தில் உள்ள சொல் (ஸ்ருதி) என்பது அதில் சொல்லப் ட்ட அடையாளம் (லிங்கம்)
என்பதைக் காட்டிலும் பலமுடையது. எனவே யார் ஜகத் காரணம் என்று அந்த விசேஷச் சொற்களைக் கொண்டு முடிவு செய்வதே தகுந்தது. அம் முடிவுக்குத் தகுந்தபடி தான் கீழ சொல்லப்பட்ட அடையாளங்களுக்குப் பொருள் கொள்ள வேண்டும். எனவே
ஆகாசம்
ப்ராணன்
இந்த்ரன்
அக்நி

தான் ஜகத் காரணமே தவிற, பரமாத்மா அல்ல.

இந்த ஆஷேபங்களுக்கு பதிலுரைக்கத் தான் வேத வ்யாஸர் அடுத்த 4 அதிகரணங்களை அமைக்கிறார். இதுவே ஸங்கதி

ஆகாசாதிகரணத்தின் பின்புலம்
சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ராபடகம் (அத்யாயம்), 8 மற்றும் 9ஆம் பகுதிகளில் இவ்வாறு சொல்லப்படுகிறது –
த்ரயோ ஹோத்₃கீ₃தே ₂ குசலா ₃பபூ₄வு꞉ ஶிலக꞉ தா₃ல்ப்₄ய꞉ ப்ரவாஹண: இதி | தே ஹோசு : ஹந்த உத்₃கீ₃தே ₂ கதா₂ம் வாதா₃ம இதி || – சிலகர் தால்ப்யர் ப்ரவாஹணர் என்ற மூன்று ரிஷிகள் தங்களுக்குள் வாதம் செய்ய முடிவெடுத்தனர்.

ஸ ஶிலக꞉ தா₃ல்ப்₄யமுவாஸ – கா ஸாம்நோ க₃திரிதி | ஸ்வர இதி ஹோவாஸ | ஸ்வரஸ்ய ப்ராண:| ப்ராணஸ்ய அந்நம் | அந்நஸ்ய ஆப : | அபாம் அஸௌ லோக | அமுஷ்ய லோகஸ்ய கா க₃திரிதி | ந ஸ்வர்க₃ம் லோகமிதி நயேதி₃தி ஹோவாஸ| –
முதலில் சிலகர் தால்ப்யரிடம் கேட்டார் – ஸாமத்தின் கதி எது? அதாவது, ஸாமம் எதை அண்டி இருக்கிறது?
தால்ப்யர் கூறினார் – ஸ்வரம் என்று.
இதே போல் அடுத்தடுத்து ப்ராணன், அந்நம், ஜலம், ஸ்வர்கம் என்று ஆதாரங்களைச் சொன்னார்.-ஸ்வர்கத்தின் ஆதாரம் எது என்று சிலகர் கேட்ட போது, ஸ்வர்கம் தாண்டி ஸாமத்திற்கு ஆதாரம் இல்லை என்று கூறினார்.

அப்ரதிஷ்டி₂தம் வை கில தே தா₃ல்ப்₄ய ஸாம | அமுஷ்ய லோகஸ்ய கா க₃திரிதி | அயம் லோக இதி ஹோவாஸ | அஸ்ய லோகஸ்ய கா க₃திரிதி | ந ப்ரதிஷ்டா₂ம் லோகமிதி நயேதி₃தி ஹோவாஸ | –
சிலகர் கூறினார் – ஸ்வர்கம் ஆதாரமே இல்லாமல் இருக்க முடியாது. ஸ்வர்கத்துக்கு இந்த பூமி தான் ஆதாரம் என்று. பூமிக்கு எது ஆதாரம் என்று தால்ப்யர் கேட்டதற்கு, பூமிக்கு ஆதாரமில்லை என்று சிலகர் கூறினார்

தம் ஹ ப்ரவாஹண: உவாஸ – அந்தவத்₃வை கில தே ஸாம | அஸ்ய லோகஸ்ய கா க₃திரிதி | ஆகாஸ இதி ஹோவாஸ | ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாந் யாகாஶா தேவ₃ஸமுத் த்₃யந்தே | ஆகாஸம் ப்ரதி அஸ்தம் யந்தி| ஆகாஸோ ஹ்யேவ ஏப்₄யோ ஜ்யாயாந் | ஆகாஸ ꞉ பராயணம் –
இதைக் கேட்ட ப்ரவாஹணர் கூறினார் – சிலகரே ! அழியக் கூடியதான இந்த
பூமியானது ஸாமத்தின் கடைசி ஆதாரமாக இருக்க முடியாது. இந்த பூமிக்கும் ஆதாரம் ஆகாசம் தான். இவ் வுலகில் இருக்கும் பூதங்கள் (பொருள்கள்-ஜீவ ராசிகள்) அனைத்துமே அந்த ஆகாசத்திடம் இருந்தன்றோ உண்டாகின்றன. -அதனிடம் தான் லயம் அடைகின்றன. ஆகாசம் தான் இந்த எல்லாப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தது. ஆகாசமே இறுதியான இலக்கு (ப்ராப்யம்) என்று.

ஸந்தேகம் – இங்கு ஆகாசம் எனப்படுவது ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாசமா ? அல்லது பரமாத்மாவா?

பூர்வ பக்ஷியின் வாதம்
ஒரு பொருளை சேதம் ( சப்த ப்ரமாணம்) கொண்டு தான் அறிய முடியும் என்றால், அதை சேதத்தில் சொல்லப்ட்ட படி தான் ஏற்க வேண்டும்; உலகில் நாம் காணும் முறைகளுக்குள் அதை அடக்க முயலக் கூடாது. எடுத்துக்காட்டு – ஐராவதம் என்ற யானை வெள்ளை யானது என்று புராணம் கூறினால், அதை அப்படியே ஏற்கத் தான் வேண்டும், நாம் கண்களால்
ஐராவதத்தைக் காண முடியாதபடியால். அதுவே ஒரு உலக யானை வெள்ளையாக உள்ளது என்று யாராவது சொன்னால், அது நம் அநுபவத்துக்குப் பொருந்தாதபடியால், அதற்கு வேறு பொருள் கற்பித்து விடுகிறோம்.

ஜகத் காரணப் பொருள் இவ் விடத்தில் ’ஆகாசம்’ என்ற சொல்லால் சொல்லப் பட்டுள்ளது. இச் சொல் உலகில் ப்ரஸித்தமாக ஐம் பூதங்களில் ஒன்றான ஆகாசத்தைத் (பூதாகாசம்) தான் குறிக்கிறது. பரமாத்மாவைக் குறிக்கப் பயன் படுத்தப் படுவதில்லை . எனவே அந்த உலகில் ப்ரஸித்தமான பொருளைத் தான் இங்கும் கொள்ள வேண்டும்.

பெயர் சொற்கள் இரண்டு வகை யானணவ (1) இடுகுறிப் பெயர் (ரூட₄மான சொல்) – ப்ரஸித்தமாக ஒரு பொருளுக்கு வழங்கப்படும் பெயர். இச் சொல்லைப் பிரித்துப் பார்த்து நாம் பொருள் கொள்வதில்லை . எடுத்துக் காட்டு –மேஜை , புத்தகம்.
(2) காரணப் பெயர் (யௌகி₃கச் சொல்) – ஒரு காரணத்தால் ஒரு பொருளுக்கு வழங்கப்படும் பெயர். -எடுத்துக்காட்டு – நாற்காலி. இச் சொல்லைப் பிரித்துப் பார்த்து, ’நான்கு கால்களை உடையது’ என்பதால் நாற்காலி என்னும் பொருளைக் குறிக்கிறது-

காரணப் பெயரைக் காட்டிலும் இடு குறிப் பெயருக்கு வலிமை அதிதம். இடு குறிப் பெயர் சடக்கென ஒரு பொருளை நினைவு படுத்தும். காரணப் பெயர் என்பது அதன் பகுதிகளை ஆராய்ந்த பின்பு தான் ஒரு பொருளை நமக்கு உணர்த்தும்.
எடுத்துக்காட்டு – ’நாற்காலி ’ என்ற சொல்லின் பகுதிகளை ஆராய்ந்தால், இச் சொல் நாய் மாடு முதலான நாலுகால் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும். ஆனால் நமக்கு Chair என்ற பொருள் தான் தோற்றுகிறது, ப்ரஸித்தமாக அப் பொருளைக் குறிப்பதற்கே நாற்காலி என்ற சொல் உபயோகப் படுத்தப் படுகிறபடியால்.

அது போல் ஆகாசம் என்னும் சொல் பூதாகாசத்தைக் குறிப்பது இடுகுறிப் பெயராக – சொல்லின் பகுதிகளை ஆராயாமலேயே நாம் இப் பொருளை அறிகிறோம். ஆனால் ஆகாசம் என்ற சொல் பரமாத்மாவைக் குறிக்க வேண்டும் என்றால், அதைக் காரணப் பெயர் என்று கொள்ள வேண்டும் – ’
ஆ’ நன்றாக
’காசவத’ ப்ரகாசிக்கிறபடியால்
பரமாத்மாவே ஆகாசம் என்று.
எனவே , இங்கு பூதாகாசம் தான் சொல்லப் படுகிறது என்கிறார் பூர்வ பக்ஷி

அடையாளங்களின் கதி?
கீழ் அதிகரணங்களில் ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம் முதலான அடையாளங்களைக் கொண்டு பரமாத்மாவே ஜகத் காரணம் என்று நிரூபித்தோமே ? இப்போது எப்படி பூதாகாசம் ஜகத் காரணம் என்று ஏற்க முடியும்? அதற்கு ஸங்கல்பம், ஆநந்தம் முதலான பண்புகள் பொருந்தாதே ? என்ற கேள்வி எழும். அதற்குப் பூர்வ பக்ஷி சொல்வது – அடையாளங்களைக் கொண்டு முடிவு செய்ததே தவறு என்று.

ஸதே₃வ சோம்ய இத₃ம் அக்₃ரே ஆஸீத்’ என்ற வாக்கியம், ஜகத் காரணமான பொருளை நமக்கு அறிமுகப்படுத்தியது.-பிறகு, ’யதோ வா இமாநி பூ₄தாநி’ என்ற வாக்கியம், உலகைப் படைத்து, காத்து அழிக்கும் பொருள் தான் ப்ரஹ்மம் என்னும் இலக்கணத்தைக் கூறியது. ஆனால், ஸத், ப்ரஹ்மம், ஆத்மா என்ற சொற்கள் பொதுச் சொற்கள் ஆன படியால்
அதைக் கொண்டு ஜகத் காரணம் யார் என்று குறிப்பிட்டு அறிய முடியாது.

இந் நிலையில், நமக்கு இரண்டு வழிகள் உள்ளன.
(1) ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம் முதலான அடையாளங்கள் கொண்டு பரமாத்மாவே ப்ரஹமம் என்று முடிவு செய்யலாம். இப்படிச் செய்தால், இங்கு சொல்லப்படும் ஆகாசம்
என்ற சொல்லைக் காரணப் பெயராகக் கொண்டு அது பரமாத்மாவையே சொல்கிறது என்று ஏற்க வேண்டும்.
(2) இந்த வாக்கியத்தில் இருக்கும் ஆகாசம் என்ற விசேஷச் சொல் கொண்டு பூதாகாசமே ப்ரஹ்மம் என்று முடிவு செய்யலாம். இப்படிச் செய்தால், முன் சொல்லப்பட்ட ஸத் ப்ரஹ்மம் ஆத்மா என்ற சொற்களும் இந்த பூதாகாசத்தைத் தான் குறிக்க வேண்டும். அப்போது ஸங்கல்பம், எல்லை யற்ற ஆநந்தம் முதலான அடையாளங்கள்அதில் பொருந்தாத படியால், அவற்றுக்கு வேறு பொருள் தான் கொள்ள வேண்டும்.

இதில் பூர்வபக்ஷி சொல்வது – லிங்கம் என்ற அடையாளத்தைக் காட்டிலும் ஸ்ருதி என்ற சொல்லுக்கு வலிமை அதிகம். எனவே , ஆகாசம் என்ற விசேஷச் சொல் கொண்டு தான் யார் ப்ரஹ்மம் என்ற நிர்ணயிக்க வேண்டும்.

’ஆத்மந: ஆகாச: ஸம்பூ₄த:’ என்று, பூதாகாசமும் உண்டாக்கப்பட்டதாக வேதம் சொல்கிறதே ? அந்த பூதாகாசம் எப்படி ஜகத் காரணமாக ஆக முடியும்? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு பூர்வ பக்ஷியின் பதில் – இந்த வாக்கியத்தில் சொல்லப்படுவது – ’தன்னிடமிருந்தே ஆகாசம் தோன்றியது’ என்று. அதாவது, ஆகாசமே முன்னால் ஒரு ஸூக்ஷ்ம்மான (நுண்ணிய) நிலையில் இருந்த்து, இப்போது ஸ்தூ₂லமான நிலையை அடைகிறது. எனவே , ஆகாசம் என்ற பொருள் எப்போதுமே உள்ளது தான். அதுவே ப்ரஹ்மம் என்று சொல்லப்படும் ஜகத் காரணம் ஆகும்.

(இந்த்ரனைக் குறித்து வேத மந்த்ரம் -அடையாளம் –
இந்த மந்த்ரத்தைக் கொண்டு கார்கபத்யம் அக்னி நெருப்பை புகழ உபயோகி என்றும் வேதம் சொல்லும்-சொல்லுக்கு பலம் என்றால் புகழ வேண்டும் –
அடையாளம் வைத்துக் வேதக் கட்டளையை மீறக்கூடாதே –ஸ்ருதி லிங்கத்தை விட பலமுடையதுஇது பூர்வ மீமாம்ஸையில் உள்ளது)

ஆகாசாதிகரணத்தின் ஸித்தாந்தம்
1.1.8 ஆகாசாதிகரணத்தில் பூர்வ பக்ஷம் – சாந்தோக்யத்தில் ஆகாசம் என்ற சொல்லால் கூறப்பட்ட ஜகத் காரணம் ஐம்பூதங்களுள் ஒன்றான ஆகாசம், அதாவது பூதாகாசமே ; ஆகாசம் என்ற சொல் ப்ரஸித்தமாக பூதாகாசத்தையே குறிக்கிறபடியால் – என்று.
இதற்கு ஒரே ஸூத்ரத்தில் பதிலளிக்கிறார் வேத வ்யாஸர் –

(1) ஆகாச: தல் லிங்கா₃த் –
இங்கும் முன் அதிகரணத்தில் உள்ள ’அந்ய:’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டும்.
ஆகாச: சாந்தோக்யத்தில் ஆகாசம் என்று சொல்லப்பட்டது
அந்ய: பூதாகாசத்தைக் காட்டிலும் வேறான பரமாத்மாவே
தல் லிங்கா₃த் – பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும் லிங்கம் (அடையாளங்கள்) சொல்லப் பட்டபடியால்

இந்தப் பகுதியில் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய, பூதாகாசத்துக்குப் பொருந்தாத பண்புகள் உள்ளன –
(i) நிகி₂ல ஜக₃தே₃க காரணத்வம் – அனைத்துலகத்துக்கும் ஒரே காரணமாய் இருத்தல்.
இங்கு ’ஸர்வாணி பூ₄தாநி’ எல்லாப் பொருள்களும், அதாவது அசேதனம் மற்றும் சேதனப் பொருள்கள் அனைத்தும், ஆகாசத்திடமிருந்து தான் உண்டாகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது. அசேதனப் பொருளான பூதாகாசம் சேதனர்களான ஜீவாத்மாக்களுக்குக் காரணம் ஆக முடியாது. எனவே இங்கு ஆகாசம் என்ற சொல் பூதாகாசத்தை அல்ல, பரமாத்மாவையே கூறுகிறது-

ii) பராயணத்வம் – மேலான ப்ராப்யமாய் (இலக்காய்) இருத்தல். பூதாகாசம் என்பது ஒரு அசேதனப் பொருள், -பரிணாமங்களுக்கு உட்பட்டது, ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களை உடையது. எனவே மிகத் தாழ்ந்ததானது.-மேலும், அது நம்மை இந்த ஸம்ஸாரத்தில் கட்டுகிறது. இப்படிப்பட்ட பூதாகாசத்தை நிகரற்ற இறுதியான இலக்காக
உபநிஷத் கூறி யிருக்க முடியாது

(iii) ஸர்வஸ்மாத் ஜ்யாயஸ்த்வம் – உலகப் பொருள்கள் அனைத்தையும் விட உயர்வு. எந்தப் பொருள் எல்லை யற்ற நற் பண்புகளை உடையதோ அதுவே அனைத்திலும் உயர்ந்த பொருளாக முடியும்.
முன் சொன்ன காரணங்களாலேயே பூதாகாசம் என்பது உயர்ந்த பொருளே அல்ல என்று தெரிகிறது. எனவே இங்கு பூதாகாசம் சொல்லப்படவில்லை

இப்படி இந்த உபநிஷத் பகுதியில் சொல்லப்பட்ட அடையாளங்கள் அனைத்துமே பூதாகாசத்துக்குப் பொருந்தாதவையாய், பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவையாய் உள்ளபடியால், இங்கு ஆகாசம் என்ற சொல்லால் சொல்லப்படுவது பரமாத்மாவாகவே இருக்க வேண்டும் என்பது ஸித்தாந்தம்.

ஸ்ருதி லிங்கத்தை விட பலமுடையதாயிற்றே ?
பூர்வ பக்ஷி கூறியிருந்தார் – இங்கு ஆகாசம் என்ற சொல் (ஸ்ருதி) வேதத்தில் நேராகக் காணப் படுகிறது. அது லிங்கம் என்ற அடையாளங்களைக் காட்டிலும் பலமுடையது. எனவே ப்ரஹ்மம் யார் என்று ஆராயும் போது ஒரு குறிப்பிட்ட பொருளைக் குறிக்கும் விசேஷச் சொல்லான ஆகாசம் என்ற சொல்லைக் கொண்டு பூதாகாசமே ஜகத்காரணம் என்று தான் முடிவு செய்ய வேண்டும். அணடயாளங்களைக் கொண்டு முடிவு செய்யக் கூடாது என்று. இதற்கான பதில்

உண்மை தான். ஸ்ருதி லிங்கத்தை விட பலமுடையதே . ஆனால் அதற்கு ஒரு தேவை உள்ளது – ’ஆகாசமே ஜகத் காரணம்’ என்று இங்கு சொல்லப் பட்டிருந்தால், ஆகாசம் என்ற விசேஷச் சொல்லைக் கொண்டு, பூதாகாசமே ஜகத் காரணம் என்று நாம் முடிவு செய்திருக்கலாம். ஆனால் இங்கு ’ஆகாசம் அன்றோ ஜகத் காரணம்’ என்று தான் வாக்கியம் உள்ளது.
ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாநி ஆகாசாத் ஏ₃வ ஸமுத் பத்₃யந்ததே ’ என்னுமிடத்தில் ’ ஹ வா’ என்ற சொற் றொடர் ’அன்றோ ’ என்ற பொருளை உடையது. எனவே , முன்னமே வேதத்தில் உள்ள மற்ற வாக்கியங்களால் ஜகத் காரணமாக அறியப்பட்ட பொருள் தான் இங்கு நினைவு கூறப்பட்டு, ஆகாசம் என்று அழைக்கப் படுகிறது என்று தோற்றுகிறது.ப்ரஸித்த நிர்தேசம்

ஒரு பொருளை முதன் முறை சொன்னால் அது’புரோவாத₃ம்’. –திரும்பச் சொன்னால் அது’அநுவாத₃ம்’. இங்கு இருப்பதோ அநுவாதச் சொற் றொடர் மட்டுமே . எனவே இதற்கு முன்னால் புரோ வாத வாக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். அவை எவை என்றால், முன்னமே ஆராயப்பட்ட ’ஸதே ₃வ சோ ம்ய’, ’யதோ வா இமாநி’’ஆநந்த மய:’ முதலான வாக்கியங்கள் தான். எனவே , அவற்றில் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்று
அடையாளங்களைக் கொண்டு முடிவு செய்யப்பட்ட படியால், அதையே தான் இந்த வாக்கியம் அதே பொருளைத் தான் சொல்ல முடியுமே தவிற, அவற்றோடு முரண்பட்டு, பூதாகாசமே ஜகத் காரணம் என்று போதிக்க இயலாது. இங்கு சொல்லப்பட்ட அடையாளங்களும் பரமாத்மாவுக்கே பொருந்துகின்றன.

(நாற்காலி இருக்கிறது என்றால் chair
நாற்காலி நடக்கிறது -இங்கு நான்கு கால்களை உடைய பிராணியையே குறிக்கும்)

எனவே , ஆகாசம் என்ற சொல் பூதாகாசம் என்ற பொருளில் இடுகுறிப் பெயராக இருந்தாலும், அடையாளங்கள் அதற்குப் பொருந்தாத படியால், அதைக் காரணப் பெயராகவே கொண்டு, தானே ப்ரகாசிப்பவராகவும், மற்றப் பொருள்களையும் ப்ரகாசிக்க வைப்பவருமான பரமாத்மாவையே இந்த ஆகாசம் என்ற சொல் குறிக்கிறது.-ஆகவே , இங்கும் ஆகாசம் என்ற சொல்லாலும் சொல்லப்பட்ட ஜகத் காரணம் பரமாத்மாவே

————

1.1.9 ப்ராணாதி₄கரணம்
பரமாத்மாவே அனைத்தையும் வாழ வைக்கும் ப்ராணன் .

ப்ராணாதிகரணத்தின் பின் புலம்
1.1.9 ப்ராணாதி₄கரணம் – முன் அதிகரணத்தில் சொன்னது போல் இங்கும் ப்ராணன் என்ற ஒரு குறிப்பிட்ட பொருளைச் சொல்லும் விசேஷச் சொல் உள்ள படியால், ப்ராணனே ஜகத் காரணம் என்கிறார் பூர்வ பக்ஷி.

ஸங்கதி – முன் அதிகரணத்தில், ஆகாசம் என்ற சொல்லுக்கு பூதாகாசம் என்று பொருள் கொண்டால், அதற்குப் பொருந்தாத பல பண்புகள் அங்கு சொல்லப் பட்டபடியால் ஒவ்வாமை ஏற்பட்டது. எனவே ஆகாசம் என்பது பரமாத்மா என்று கூறினோம். ஆனால் இந்த அதிகரணத்தில் பார்க்கப் போகும் வாக்கியங்களில் உள்ள ப்ராணன் என்ற சொல்லுக்கு மூச்சுக் காற்று என்று ப்ரஸித்தமான பொருளைக்
கொண்டாலும் அதற்குப் பொருந்தாத எந்தப் பண்பும் இங்கு சொல்லப்பட வில்லை . எனவே மூச்சுக் காற்று என்ற ப்ராணனே ஜகத் காரணம் என்று ஆஷேபம் எழுகிறது.

விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் 10 மற்றும் 11ஆம் பகுதிகள் –
மடசீஹதேஷு குருஷு ஆடிக்யா ஸஹ ஜாயயா உஷஸ்திர்ஹ சாக்ராயண: உவாஸ – பஞ்சத்தால் வாடி யிருந்த குரு பூமியில் மனைவியோடு கூட உஷஸ்தி என்ற ப்ரஹ்ம ஜ்ஞாநி வாழ்ந்து வந்தார். அவர் செல்வம் ஸம்பாதிப்பதற்காக அருகில் யாகம் செய்து கொண்டிருந்த ஒரு அரசனைச் சந்திக்கச் சென்றார்.

ப்ரஸ்தோதர்யா தே₃வதா ப்ரஸ்தாவ மந் வாயத்தா தாம் சேத₃ வித்₃வாந் ப்ரஸ்ததோஷ்யஸி மூர்தா₄ தே
விபதிஷ்யதீதி
–யாகத்தில் ப்ரஸ்தோதா என்பவர் ஒரு தேவதையைக் குறித்துப் பாடிக் கொண்டிருந்தார்.
அவரிடம் உஷஸ்தி கூறினார் – “நீர் பாடும் மந்த்ரம் எந்த தெய்வத்தைச் சொல்கிறதோ , அதை அறியாமல் நீர் பாடினால் உம் தலை விழுந்து விடும்” என்று. அதாவது, பெரிய குற்றமாகி விடும் என்று கூறினார். அந்த தெய்வம் யாரென்று தானே கூறினார்

ப்ராண இதி ஹோவாச | ஸர்வாணி ஹ வா இமாநி பூ₄தாநி ப்ராணமேவ அபி₄ ஸம் விஶந்தி ப்ராணம் அப்₄யுஜ்ஜிஹதே – ப்ராணன் தான் அந்த தேவதை . எல்லா உலகப் பொருள்களும் ப்ராணனிடமிருந்து தானே தோன்றுகின்றன, ப்ராணனிடமே லயம் அடைகின்றன-

ப்ராணாதிகரணத்தின் விசாரம்
ஸந்தேஹம்
– இங்கு ப்ராணன் என்ற சொல் மூச்சுக் காற்றைக் குறிக்கிறதா? அல்லது பரமாத்மாவையா?

பூர்வ பக்ஷம் – லவ்கிகச் சொல்லைக் (காரணப் பெயரைக்) காட்டிலும் ரூடமான சொல் (இடுகுறிப் பெயர்) வலிமை மிக்கது. எனவே இங்கு ப்ராணன் என்ற இடுகுறிப் பெயர் ப்ரஸித்தமாக மூச்சுக் காற்றையே கூறுகிறபடியால் அதுவே தான் ஜகத் காரணமான ப்ரஹ்ம்ம் என்று கொள்ள வேண்டும்.

அதிகக் கேள்வி – எல்லா பூதங்களுக்கும் காரணமாயிருக்கும் தன்மை மூச்சுக் காற்றுக்கும் பொருந்துகிறபடியால் ஆகாசாதிகரணத்தில் சொன்னது போல் அதைக் கை விடத் தேவை யில்லை

ஸித்தாந்தம் – இந்த அதிகரணத்தில் எழுந்த ஆஷேபத்துக்கு ஒரே ஸூத்ரத்தில் பதில் கூறுகிறார் வ்யாஸர்.
(1) அத ஏவ ப்ராண:
அத ஏவ –ஆகையினாலேயே (அதாவது ப்ராணனுக்குப் பொருந்தாத, பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய பண்புகள் இங்கு உள்ளபடியாலேயே )
ப்ராண: ப்ராணன் என்று சொல்லப்படுபவர் பரமாத்மாவே

இந்த வேதப் பகுதியிலும் உலகப் பொருள்கள் எல்லாம் தோற்றுமிடமாகவும் அழியுமிடமாகவும் சொல்லப் பட்டபடியால் ப்ராணன் என்பது பரமாத்மாவாகத்தான் இருக்க வேண்டும்.

அதிகக் கேள்விக்குப் பதில் – இங்கும் ப்ராணன் என்ற சொல்லுக்குப் ப்ரஸித்தமான மூச்சுக் காற்று என்ற பொருளைக் கொண்டால், இங்கு சொல்லப்பட்ட ஜகத் காரணத்வம் என்ற அடையாளம் பொருந்தாமல் போய்விடும். ஏனெனில், -மனிதர்கள் மரங்கள் விலங்குகள் முதலான உயிருள்ள ப்ராணிகள் மூச்சுக் காற்றால் வாழ்ந்தாலும், கல் மண் மட்டை முதலான உயிரற்ற பொருள்கள் ப்ராணனை நம்பி இல்லை . மேலும், இவ்வுலகத்தில் அசேதனம் மற்றும் சேதனப் பொருள்கள் உள்ளன. அதில் அசேதனப் பொருள்களுக்கு வேண்டுமென்றால் ஆகாசம் காரணமாய் இருக்கலாமே ஒழிய,
ஜ்ஞாநமுடைய ஜீவாத்மாக்களுக்குக் காரணமாக இருக்கவே முடியாது. எனவே உலகுக்கெல்லாம் காரைணமாய் இருத்தல் என்ற பண்பு மூச்சுக் காற்றுக்குப் பொருந்தாத படியால் இங்கு ப்ராணன் எனப்படுபவர் பரமாத்மாவே .

(non லிவிங் things இவற்றுக்கு பிராணன் ஹேது அல்லவே -ஆகவே பரமாத்மாவையே சொல்லும்)

ப்ராணயதி’ எல்லா ஜீவ ராசிகளையும் பகவான் அந்தர்யாமியாக இருந்து வாழ வைப்பதால் அவரையே ப்ராணன் என்றும் குறிப்பிடுகிறது
இவ்வாறு 1.1.9 ப்ராணாதிகரணம் முடிவடைகிறது.

ப்ரஹ்மம் அனைத்தையும் தாங்கும் என்று முன் அதிகரணத்திலும் இதில் ப்ரஹ்மமே அனைத்தையுமே வாழவைக்கும் என்றும் ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொன்னவாறு-

——————

1.1.10 ஜ்யோதிரதி₄கரணம்
நிகரற்ற ஒளியுடைய ஜ்யோதிஸ்

1.1.10 ஜ்யோதிரதிகரணத்தின் பின் புலம்
ஸங்கதி – முதலில் ஸத், ப்ரஹ்மம், ஆத்மா என்ற பொதுச் சொற்களால் சொல்லப்படும் ஜகத்காரணம் பரமாத்மாவே
என்று அந்த வாக்கியங்களில் இருந்த அடையாளங்களை வைத்து நிரூபித்தார் வேத வ்யாஸர்.
அதற்குப் பின், ஒரு
குறிப்பிட்ட அசித் பொருளைக் குறிக்கும் ஆகாஸம் ப்ராணன் போன்ற சிறப்புச் சொற்களால் சொல்லப்படும்
ஜகத்காரணமும் பரமாத்மாவே என்று அங்கிருந்த அடையாளங்களைக் கொண்டு நிரூபித்தார்.
இனி இந்தப் பாதத்தில் மீதமிருக்கும் இரண்டு அதிகரணங்களிலும் உபநிஷத்துகளில் ஒரு குறிப்பிட்ட அசித் மற்றும் சித் பொருளைக் குறிப்பிடும்
ஜ்யோதிஸ் மற்றும் இந்த்ரன் என்ற சிறப்புச் சொற்களால் ஒரு பொருளைச் சொல்லி, ஜகத் காரணப் பொருளுக்கே
இருக்கக் கூடிய சில தனித் தன்மைகள் அப் பொருளுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டிருந்தால், அச் சொற்களும் கூட பரமாத்மாவையே குறிக்கும் என்று அங்கிருக்கும் அடையாளங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்.

இவ் விரண்டு அதிகரணங்களிலும், விஷய வாக்கியம் நேரடியாக ஜகத் காரணம் யார் என்பதைப் பற்றிச் பேசாது .ஜகத் காரணப் பொருளுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகள் தான் சொல்லப்பட்டிருக்கும். அப் பண்புகளை உடைய பொருள் எது என்று ஆராய்ந்து முடிவு செய்தால், அப் பொருள்தான் ஜகத் காரணம் என்று நிரூபித்து விடலாம்

விஷய வாக்யம் – சாந்தோக்ய உபநிஷத்தில் 3ஆம் அத்யாயத்தில் உள்ள 12&13ஆம் பகுதிகளை ஆராயப் போகிறோம்.

கா₃யத்ரீ வா இத₃ம் ஸர்வம் பூ₄தம் யதி₃த₃ம் கிம் ச | வாக்₃வை கா₃யத்ரீ | வாக்₃வா இத₃ம் ஸர்வம் பூ₄தம் கா₃யதி ச த்ராயதே ச–இந்த உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் காயத்ரி தான். காயத்ரீ என்பது வாக் (பேச்சு). வாக் தான் அனைத்துப் பொருள்களையும் கூறுகிறது மற்றும் காக்கிறது. எனவே காயத்ரீ தான் உலகனைத்தும்-

ஸைஷா சதுஷ்பதா₃ ஷட்₃விதா₄ கா₃யத்ரீ ॥பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி த்ரிபாத₃ஸ்ய அம்ருதம் தி₃வி – இந்த காயத்ரிக்கு பூதம், ப்ருதிவீ, சரீரம், ஹ்ருதயம் என்று நான்கு கால்கள். இந்த உலகிலிருக்கும் பொருள்கள் அனைத்தும் சேர்ந்து அந்த காயத்ரியின் ஒரு கால் பகுதி சொத்து. இதை விட மூன்று மடங்கு இருக்கும் அழியாத சொத்து மேலுலகில் இருக்கிறது-

(வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணுவே
நமோ வை ப்ரஹ்ம நிதயே
வாஸிஷ்டாய நமோ நமஃ -போன்று நான்கு பாதங்கள்)

அத₂ யத₃த꞉ பரோ தி₃வோ ஜ்யோதிர் தீ₃ப்யதே விஶ்வத꞉ ப்ருஷ்டே ₂ஷு ஸர்வத꞉ ப்ருஷ்டே₂ஷ்வ நுத்தமே ஷூத்தமேஷு லோகேஷு – மேலுலகத்தைத் தாண்டி இருக்கும் ஜ்யோதிஸ் என்று அழைக்கப்படும் மிகவும் ஒளி பொருந்திய ஒரு பொருள், மேல் உலகங்கள் மற்றும் கீழ் உலகங்கள் அனைத்துக்கும் ஒளி கொடுக்கிறது.

இத₃ம் வாவ தத் யதி₃த₃ம் அஸ்மிந் அந்த꞉ புருஷே ஜ்யோதி꞉ – அந்த ஜ்யோதிஸ் தான் நம் உடலுக்குள் இருக்கும் நெருப்பு-

ஸூர்யனே ஜ்யோதிஸ் என்னும் பூர்வ பக்ஷம்
ஸந்தேஹம்
– இங்கு நிகரற்ற ஒளியுடைய பொருளாகச் சொல்லப்படும் ஜ்யோதிஸ் ஸூர்யனா? பரமாத்மாவா?

பூர்வ பக்ஷம் – ஸூர்யன் தான் இங்கு சொல்லப் படுகிறார் என்பது பூர்வ பக்ஷியின் கூற்று. அவருடைய வாதங்கள்
ஜ்யோதிஸ் என்பது ஒரு சிறப்புச் சொல். அது பொதுவாக ஸூர்யன் முதலான பொருள்களைத் தான் உலகில் குறிக்கிறது.
பொருந்தாமை இல்லை – முன் அதிகரணங்களில் ஆகாஸம்-ப்ராணன் என்ற சொற்களுக்கு பூதாகாஸம்-மூச்சுக் காற்று என்று ப்ரஸித்தமான பொருளைக் கொண்டால், அந்த வாக்கியங்களில் சொல்லப்பட்ட அடையாளங்களே பொருந்தவில்லை –அதனால் வேறு பொருள் கொண்டோம். இங்கு அதைப் போல் எந்தப் பொருந்தாமையும் இல்லை . “ஸூர்யன் மேலுலகத்தில் மிகுந்த ஒளியோடு இருந்து, உலகங்களுக்கு எல்லாம் ஒளியூட்டுகிறார்” என்று அழகாகப் பொருந்துகிறது.

பொருத்தம் உள்ளது – பொருந்தாமை இல்லாதது மட்டும் அல்ல, அதிகப் படியாக ஒரு சிறந்த பொருத்தமும் உள்ளது –
கடைசி வரியில் “அந்த ஜ்யோதிஸ் தான் நம் உடலுக்கும் இருக்கும் நெருப்பு” என்று சொல்லப் பட்டுள்ளது. இது ஸூர்யனுக்குத் தான் பொருந்தும், பரமாத்மாவுக்குப் பொருந்தாது. நம் உடலுக்குள் ஜாட₂ராக்₃நி – வைஸ்வானரன் என்ற ஒரு நெருப்புத் தான் நாம் உண்ணும் உணவை ஜெரிக்க வைக்கிறது. அதுவும் ஒரு நெருப்பு (தேஜஸ்); ஸூர்யனும் ஒரு
நெருப்பு. எனவே இரண்டும் ஒன்று தான் என்று சொல்வது பொருத்தமானதே . ஜ்யோதிஸ் என்ற சொல்லுக்குப் பரமாத்மா என்று பொருள் கொண்டால், அவர் எப்படி வயிற்றுக்குள் இருக்கும் நெருப்பாக ஆக முடியும்?

நிறமுடைய பொருள் – எந்த ஒரு பொருளுக்கு நிறம் உள்ளதோ , அதுக்குத் தான் ஒளி இருக்க முடியும். எனவே ஜ்யோதிஸ் என்ற சொல் ஒரு நிறமுடைய பொருளைக் குறிக்க வேண்டும். எனவே அது ஸூர்யனே . பரமாத்மாவுக்கு நிறம் இல்லை-

இவ்வாறு ஜ்யோதிஸ் என்கிற பொருள் ஸூர்யன் தான் என்று பூர்வ பக்ஷீ கூறுகிறார்.
கேள்வி – நிகரற்ற ஒளி உடைய பொருள் ஸூர்யனாகவே இருக்கட்டும். ஜகத்காரணமான ப்ரஹ்மம் என்பது பரமாத்மாவே என்று இதற்கு முன் சொன்னதுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? இந்த அதிகரணம் ஏன் ஏற்பட்டது?

பூர்வ பக்ஷியின் பதில் – உபநிஷத்துகளில் ஜகத்காரணமான ப்ரஹ்மத்துக்கு தான் நிகரற்ற ஒளி உண்டு என்றும், அதன் ஒளியால் தான் மற்ற ஒளியுடைய பொருள்கள் எல்லாம் ஒளி விடுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே , நிகரற்ற ஒளியுடைய பொருள் ஸூர்யன் தான் என்று இங்கு நாம் நிரூபித்து விட்ட படியால், ஸூர்யனே தான் ஜகத் காரணம்.

நிகரற்ற ஒளி உடைய ஜ்யோதிஸ் பரமாத்மாவே-ஸித்தாந்தம் – 4 ஸூத்ரங்களைக் கொண்டு வேத வ்யாஸர் இந்த வாதத்துக்கு பதிலுரைக்கிறார்.

(1) ஜ்யோதி: சரணாபி₄தா₄நாத் – அந்தரதிகரணத்திலிருந்து ’அந்ய:’ என்ற சொல்லை இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜ்யோதி: – ஜ்யோதிஸ் என்று சொல்லப்படுவது
அந்ய: – ஸூர்யனைக் காட்டிலும் வேறு ஓருவரான பரமாத்மாவே
சரண அபி₄தா₄நாத் – கால் சொல்லப் பட்டிருக்கிறபடியால்-

இந்த ஜ்யோதிஸ் என்ற பொருளைச் சொல்லும் வாக்கியத்துக்கு முன் வாக்கியத்தில், ’பாத₃: அஸ்ய ஸர்வா பூ₄தாநி, த்ரிபாத் அஸ்ய அம்ருதம் தி₃வி’ –அதாவது ’இந்தப் பொருளின் ஒரு காலாகத் தான் இவ் வுலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் உள்ளன; மிச்சமுள்ள மூன்று கால்கள் வைகுந்தத்தில் அழிவற்ற பொருள்களாய் உள்ளன’ என்று கால் பற்றிச் சொல்லப் பட்டுள்ளது. இந்தப் பண்பு ஸூர்யனுக்குப் பொருந்தாது, பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த ஜ்வயாதிஸ் என்பது பரமாத்மாவாயின் அது எப்படி வயிற்றிலுள்ள நெருப்போடு ஒன்றாக முடியும்? என்று கேள்வி எழும். அதிலும் குறை யில்லை . பரமாத்மாவே தான் வயிற்றில் இருக்கும் நெருப்புக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்பதால் ஜ்யோதிஸ்ஸும் அவரே , வயிற்றிலிருக்கும் நெருப்பும் அவரே . ’அஹம் வைஸ்வாநவரா பூ₄த்வா ப்ராணினாம் தே₃ஹம் ஆஸ்ரித:’ என்று கண்ணனும் பகவத் கீதையில் தானே வைஸ்வானரன் என்ற வயிற்று நெருப்பு என்கிறார்.

(2) ச₂ந்ததா₃பி₄தா₄நாத் ந இதி சேத் ந ததா₂ சேதோர் பணநிக₃மாத் ததா₂ஹி த₃ர்சநம் – இதில் இரண்டு பகுதிகள்.
ச₂ந்ததா₃பி₄தா₄நாத் ந – இது பூர்வ பக்ஷியின் கூற்று. அவர் வாதிடுகிறார் – இந்த உபநிஷத் பகுதியின் தொடக்கத்தில் ’கா₃யத்ரீ’ என்ற ச₂ந்தஸ் (விருத்தம்) சொல்லப்பட்டுள்ளது. அதன் காலாக உலகப் பொருள்கள் உள்ளன என்று தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர ஜ்யோதிஸ் என்ற பொருளின் காலாக அல்ல. எனவே ஜ்யோதிஸ் என்பது பரமாத்மா அல்ல
இதி சேத் ந – “என்று நீ கூறினால் அது தவறு”. இது தொடங்கி வ்யாஸரின் கூற்று.
ததா₂ சேதோர் பண நிக₃மாத் – ததா₂-அவ்வாறு -சேத: மனத்தை அர்பணம் செலுத்துவது
நிக₃மாத் உபதேசிக்கப் பட்டுள்ளதால் காயத்ரீ என்ற சொல்லும் வெறும் விருத்தத்தைச் சொல்ல வில்லை , இரண்டுக்கும் 4 கால்கள் இருக்கின்றன என்னும் ஒற்றுமையால் காயத்ரியாகவே பரமாத்மாவைத் த்யானிக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது.
ததா₂ஹி த₃ர்சநம் – “அவ்வாறு அன்றோ காணப் படுகிறது”. வேதத்தில் பல இடங்களில் இதைப் போல் ஒரு பொருளை ஒரு விருத்தமாக த்யானிப்பது காணப் படுகிறது.

(வாயு -அக்னி -சூர்யன் -சந்திரன் -ஜலம் -பிராணம்- வாக்கு-சஷுஸ்- ஸ்ரோத்ரம் மனஸ் –10 பொருள்கள் -இது தான் விராட் -விருத்தம் -பாதம் தோறும் 10 அக்ஷரங்கள்-போன்றவையும் உண்டே -)

உலகத்தை எல்லாம் காக்கும் காயத்ரியும் பரமாத்மாவே
காயத்ரீ என்ற பொருளும் ஜ்யோதிஸ் என்ற பொருளும் மேலுலகத்தில் இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளபடியால் இரண்டும் ஒன்றே . எனவே “இதற்கு உலகப் பொருள்கள் எல்லாம் காலாக இருக்கின்றன” என்ற வாக்கியத்தின் படி காயத்ரீ என்பது பரமாத்மாவே , விருத்தம் அல்ல என்று வ்யாஸர் நிரூபித்தார். அதற்கு மேல் எழும் கேள்வி –

கேள்வி – மீமாம்ஸை யில் உபக்ரம ந்யாயம் என்று ஒன்றுண்டு. ஒரு பகுதியில் முன்னால் சொல்லப்பட்ட வாக்கியத்துக்கு எவ்வாறு பொருள் கொள்ளப் பட்டுள்ளதோ , அதற்குத் தகுந்தபடி தான் பின் வரும் வாக்கியங்களுக்குப் பொருள் கொள்ள வேண்டும் என்பது அந்த ந்யாயம். அதன் படி முதலில் நாம் ’காயத்ரீ’ என்ற சொல்லைக் கேட்டதும், விருத்தத்தைத் தான் அறிகிற படியால், பின் வரும் வாக்கியத்தில் ’இதன் காலாக உலகப் பொருள்கள் எல்லாம் உள்ளன’ என்ற சொல்லப்பட்டு இருந்தாலும், அதற்குத் தான் வேறு பொருள் கண்டு பிடிக்க வேண்டும். பின்னுள்ளதைப் பொருந்த விடுவதற்காக முன்னாலுள்ள காயத்ரீ என்ற சொல்லுக்குப் பரமாத்மா என்று பொருள் கற்பிப்பது பொருந்தாது. இதற்கான பதில் –

(3) பூ₄தாதி₃ பாத₃ வ்யபதே₃ச உபபத்தே : ச ஏவம் –
“பூ₄தாதி₃
–பூதம் ப்ருதிவீ சரீரம் ஹ்ருதயம் என்பவை பாத₃ காலாக
வ்யபதே₃ச –சொல்லப்பட்டது
உபபத்தே : ச –பொருந்துகிறபடியாலும்
ஏவம் –இவ்வாறே ”

பின்னுள்ள வாக்கியத்தில் சொல்லப் பட்டதைப் பொருந்த விட மட்டும் இங்கு காயத்ரீ என்பது பரமாத்மாவே என்று நாங்கள் சொல்ல வில்லை . காயத்ரீ என்பதைப் பற்றி உபதேசிக்கும் முன்னாலுள்ள பகுதியிலேயே “காயத்ரிக்கு ஆத்மாக்கள், ப்ருதிவீ, சரீரங்கள், ஹ்ருதயங்கள் என்பவை பகுதிகளாக உள்ளன’ என்று சொல்லப் பட்டுள்ளது. இதுவே -காயத்ரீ என்ற வ்ருத்தத்துக்குப் பொருந்தாது. பரமாத்மா என்று பொருள் கொண்டால் தான் அதுவும் பொருந்துகிறது.

(4) உபதே ₃ச பே₄தா₃த் ந இதி சேத் ந உப₄யஸ்மிந் அபி அவிரோதா₄த் – இதில் பூர்வ பக்ஷம் ஸித்தாந்தம் இரண்டுமுள்ளது.
உபதே ₃ச பே₄தா₃த் ந – காயத்ரீ என்பது “மேலுலகத்தில் உள்ளது” என்றும், ஜ்யோதிஸ் என்பது “மேலுலகத்தைத் தாண்டி உள்ளது” என்றும் வெவ்வேறாக உபதேசம் இருக்கிற படியால் காயத்ரியும் ஜ்யோதிஸ்ஸும் ஒன்று அல்ல
இதி தசத் ந – என்று நீ சொன்னால் அது தவறு
உப₄யஸ்மிந் அபி அவிதராதா₄த் – ’மரத்தின் நுணியில் கழுகு’ மற்றும் ’மரத்துக்கு மேல் கழுகு’ என்பவை போல் இங்கும் இரண்டு உபதேசங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை , எனவே ஜ்யோதிஸ்ஸும் காயத்ரியும் பரமாத்மாவே .

இவ்வாறு ஜகத் காரணப் பொருளின் தனித் தன்மையான நிகரற்ற ஒளி இருப்பது பரமாத்மாவுக்கே என நிரூபிக்கப்பட்டது,

நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே–5-5-7-

ஸ॒ஹஸ்ர॑ஶீர்​ஷா॒ புரு॑ஷ: । ஸ॒ஹ॒ஸ்ரா॒க்ஷ: ஸ॒ஹஸ்ர॑பாத் । ஸ பூ⁴மிம்॑ வி॒ஶ்வதோ॑ வ்ரு॒த்வா । அத்ய॑திஷ்ட²த்³த³ஶாங்கு॒³லம் ॥

ஏ॒தாவா॑னஸ்ய மஹி॒மா । அதோ॒ ஜ்யாயாக்॑³ஶ்ச॒ பூரு॑ஷ: । பாதோ᳚³ஸ்ய॒ விஶ்வா॑ பூ॒⁴தானி॑ । த்ரி॒பாத॑³ஸ்யா॒ம்ருதம்॑ தி॒³வி ॥

வேதா॒³ஹமே॒தம் புரு॑ஷம் ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒³த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ॒ஸ்து பா॒ரே । ஸர்வா॑ணி ரூ॒பாணி॑ வி॒சித்ய॒ தீ⁴ர:॑ । நாமா॑னி க்ரு॒த்வாபி॒⁴வத॒³ன்॒, யதா³ஸ்தே᳚ ॥

—————

1.1.11 இந்த்ர ப்ராணாதி₄கரணம்
இந்திரனை உபாஸித்தால் முக்தியா?

1.1.11 இந்த்ர ப்ராணாதிகரணத்தின் பின் புலம்
ஸங்கதி
– 1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் ஜ்யோதிஸ் என்ற சிறப்புச் சொல் ஸூர்யனைக் குறிப்பிட்டால், அந்த வாக்கியத்தின் பொருளில் எந்த ஒவ்வாமையும் இல்லை என்றாலும் அப் பகுதியின் தொடக்கத்திலுள்ள வாக்கியங்கள் பொருந்தாமல் போகின்றன. எனவே , ஜ்யோதிஸ் என்ற சொல்லுக்கு ஸூர்யன் என்ற பொருளை விட்டு, பரமாத்மா என்று பொருள் கொண்டோம்.

இந்த 1.1.11 இந்த்ர ப்ராணாதிகரணத்தில் பூர்வ பக்ஷி கேட்பதாவது – இங்குள்ள ப்ராணன் என்ற சொல்லுக்கு இந்திரன் என்று பொருள் கொண்டால் அந்த வாக்கியத்திலும் ஒவ்வாமை இல்லை , அப் பகுதியின் தொடக்கத்திலுள்ள வாக்கியத்துக்கும் பொருந்தாமை இல்லை -எனவே இந்திரன் என்றே பொருள் கொள்ளலாம் என்று.

கீழ் அதிகரணத்தில் போல் இங்கும் நேரடியாக ஜகத் காரணம் யார் என்ற ஆராய்ச்சி இல்லை – ஜகத் காரணப் பொருளுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஒரு தன்மை – ’மோக்ஷம் அடைவதற்காக ஜீவர்களால் உபாஸிக்கப் படுதல்’ என்பது. இங்கு அப் பண்பு இந்திரனுக்கு இருப்பதாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே இந்த்ரினே ஜகத் காரணமோ என்று கேள்வி.

ப்ராணாதிகரணத்தைக் காட்டிலும் இந்த அதிகரணத்தை வேறு படுத்தத் தான் ’இந்த்ர ப்ராணா அதிகரணம்’ அதாவது’இந்திரனாலே சொல்லப்பட்ட ப்ராண சப்தத்தைப் பற்றி ஆராயும் அதிகரணம்’ என்று பெயர் இடப் பட்டுள்ளது.

விஷய வாக்யம் – ருக் வேதத்தின் உபநிஷத்தான கௌஷீதகீ உபநிஷத்தின் 3ஆம் அத்யாயத்தில் உள்ள ப்ரதர்த₃ந வித்₃யா— ப்ரதர்த₃நோ ஹ வை தை ₃வேதா₃ஸி: இந்த்ரஸ்ய ப்ரியம் தா₄ம உபஜகா₃ம | ஸ ஹோவாச – த்வமேவ மம வ்ருணீஷ்வ யம் த்வம் மநுஷ்யாய ஹித தமம் மந்யமஸ இதி – ப்ரதர்தனன் என்பவன் ஸ்வர்கம் சென்றான். அவனுக்கு என்ன வரம் வேண்டுமோ அதைக் கேட்கும்படி இந்திரன் கூறினார். அதற்குப் ப்ரதர்தனன் – ’ஒரு ஆத்மாவுக்கு எது அனைத்திலும் உயர்ந்த நன்மை அளிக்கக் கூடியது என்று நீ நிணனக்கிறாயோ , அதையே எனக்கு வரமாகக் கொடு’ என்றான்.

தம் ஹ இந்த்ர உவாச – மாமேவ விஜாநீஹி| ஏத்தே ₃அவாஹம் மநுஷ்யாய ஹித தமம் மந்மய | த்ரிசீர்ஷாணம் த்வாஷ்ட்ரம் அஹநம் – இந்திரன் கூறினார் – என்னையே உபாஸனம் செய்வாய். இதுவே அனைத்திலும் உயர்ந்த நன்மை அளிக்கும். -நான் தான் மூன்று தலைகளை உடைய த்வாஷ்ட்ரன் என்ற அஸுரனைக் கொன்றேன்.

ஸ ஹோவாச – ப்ராணோ அஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம் மாம் ஆய: அம்ருதம் இதி உபாஸ்வ – இந்திரன் கூறினார் – நானே ப்ராணன், ஜ்ஞாநத்தில் சிறந்தவன். ஆயுஸ்ஸும் முக்தியும் பெற என்னை உபாஸிப்பாய்.

ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்த: அஜர: அம்ருத: – ப்ராணனே ஆநந்தமானது, மூப்பற்றது, மரணமற்றது.

யாரை உபாஸித்தால் முக்தி?
ஸந்தேஹம்
– இங்கு இந்த்ரனால் கூறப்பட்ட ப்ராணன் என்ற சொல் குறிப்பது இந்திரனையா? பரமாத்மாவையா?
பூர்வ பக்ஷம் – இந்திரன் சொல்லும் வாக்கியத்தில் ’ப்ராண : அஸ்மி’ அதாவது ’நானே ப்ராணன்’ என்று நேரடியாகச் சொல்லப்பட்டபடியால் இங்கு ப்ராணன் எனப் படுபவர் இந்திரன் தான்.-இந்திரனை உபாஸிப்பது தான் ஒரு ஆத்மாவுக்கு அனைத்திலும் உயர்ந்த நன்மை அளிக்கும் என்று இந்திரனே இங்கு கூறுகிறார். பொதுவாக ஒரு ஆத்மாவுக்கு மிக உயர்ந்த நன்மை என்பது முக்தியே . எனவே முக்தி அடைவதற்கு உபாஸிக்கப்பட வேண்டியவர் இந்திரனே என்று தோற்றுகிறது. ஆனால் உபநிஷத்துக்கள் பொதுவாக ஜகத் காரணத்தை உபாஸித்தால் தான் முக்தி கிடைக்கும் என்கின்றன. எனவே இந்திரனே தான் ஜகத் காரணமாக இருக்க வேண்டும்.

ஸித்தாந்தம் – இதற்கு வ்யாஸர் 4 ஸூத்ரங்களில் பதில் அளிக்கிறார்.
(1) ப்ராண: ததா₂ அநுக₃மாத் –
இங்கும் அந்தரதிகரணத்திலிருந்து ’அந்ய:’ என்ற சொல்லைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
ப்ராண: – இந்திரனால் ப்ராணன் என்று அழைக்கப்பட்டவர்
அந்ய: – இந்திரனைக் காட்டிலும் வேறான பரமாத்மாவே
ததா₂ –அவ்வாறே
அநுக₃மாத் –இந்த வாக்கியமானது மேல் வாக்கியங்களோடு பொருந்துகிற படியால்.
ப்ராண : அஸ்மி… மாம் உபாஸ்வ’ அதாவது ’நானே ப்ராணன்… என்னையே உபாஸிப்பாய்’ என்ற வாக்கியத்தில் உள்ள ப்ராணன் என்கிற சொல் பரமாமாவைக் குறித்தால் மட்டுமே இந்த வாக்கியம் பின் வாக்கியங்களோடு பொருந்தும்.
எடுத்துக்காட்டு – “தசரதனின் மகன் காட்டுக்குச் சென்றான். அவன் சூர்பணகையின் காதை அறுத்தான்”என்று கூறினால், மேல் உள்ள வாக்கியத்துடன் பொருந்துவதற்காக ’தசரதனின் மகன்’ என்பது லக்ஷ்மணன் என்றே கொள்ள வேண்டும்

அது போல் இங்கும் ”ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்த₃: அஜர: அம்ருத:” என்று பின்னால் வாக்கியம் உள்ளது.
இச் சொற்களின் முழுமையான தடையற்ற பொருளைப் பார்த்தால் –
ப்ரஜ்ஞாத்மா என்றால் எல்லை யற்ற
ஜ்ஞாநமுடையவர்,
ஆநந்த₃: என்றால் அளக்கப்பட முடியாத ஆநந்தமுடையவர்,
அஜர: என்றால் என்றுமே
இயற்கையாகவே மூப்பு -மாறுபாடுகளை அடையாதவர்,
அம்ருத: என்றால் என்றுமே மரணமே இல்லாதவர்.
இப் பண்புகள் எல்லாம் முன் சொல்லப்பட்ட ப்ராணனுக்குப் பொருந்த வேண்டுமானால் ப்ராணன் எனப்படுபவர் பரமாத்மா என்று தான் சொல்ல வேண்டும். இந்திரனுக்கு அப்படிப்பட்ட ஜ்ஞாநமோ , ஆநந்தமோ , எப்போதுமே மரணமில்லாத் தன்மையோ கிடையாது, அவனும் கர்மத்துக்கு வசப்பட்டு பிறப்பு இறப்புகள் உடையவனே .

அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும் அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனை
க் கண்ணனைத் தாள்பற்றி யான்ஓர் துக்கம் இலனே.

எல்லை இல் ஞானத்தன் – ‘மநஸ்வீ – அவளிடத்தில் சென்ற மனத்தை உடையவன்’ என்னுமாறு போன்று, பிரணய தாரையில் . ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் – தானும் அவளுமான சேர்த்தியிற்பிறந்த வெளிச் சிறப்பையே வேறு துணையை வேண்டி யிராதே கருவியாகக் கொண்டு, இக் காரியங்களின் கூட்டத்தை எல்லாம் உண்டாக்குகிறவன். ‘யாதொரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு அம் முகக் குறிப்பில் பரவசப்பட்டவனாய், படைத்தல் முதலான எல்லாத் தொழில்களையும் செய்கிறானோ, அவன்’ என்றார் அன்றோ பட்டரும்? 

——

முன் வாக்கியம் தானே பலமானது?
(2) ந வக்து: ஆத்மோபதே₃சாத் இதி சேத் அத்₄யாத்ம ஸம்பந்த₄ பூ₄மாஹிஅஸ்மிந்
– இதில் இரு பகுதிகள் உள்ளன.
ந வக்து: ஆத்மோபதே₃சாத்–“இது தவறு, வக்தாவான இந்திரன் தன்னையே உபதேசிக்கிற படியால்”. இது பூர்வ பக்ஷம்

பூர்வ பக்ஷியின் அபிப்ராயம் – நாம் உபக்ரம ந்யாயம் என்பதைப் பற்றிப் பார்த்துள்ளோம். இரண்டு வாக்கியங்கள் இருந்தால், அதில் முதல் வாக்கியத்தைப் படிக்கும் போது நமக்குச் சட்டென்று ஒரு பொருத்தமான பொருள் தோன்றி விடுகிறது. அதற்குப் பிறகு தான் பின் வரும் வாக்கியத்தைப் படிக்கிறோம். அப்போது, முன் வாக்கியத்தின் பொருளுக்குத் தகுந்தபடி தான் பின் வாக்கியத்துக்குப் பொருள் கூற வேண்டும். இதுவே உபக்ரம ந்யாயம்.

(அக்னி -ரிக் வேதம் கொடுக்க -வாயு -யஜுர் வேதம் கொடுக்க -ஆதித்யன் -சாம வேதம் கொடுக்க -என்று முதலில் சொல்லி-ரிக் மந்த்ரம் படிக்கும் பொழுது உரைத்து குரலில் படிக்க வேண்டும் என்றும் அடுத்து சொல்லும்-சில ரிக் மந்த்ரம் யஜுர் வேதத்திலும் இருக்கும் -கலந்த படியே இருக்கும் முதலில் ரிக் வேதத்தைச் சொல்லி பின்னர் ரிக் மந்த்ரம் சொல்லும் பொழுது ரிக் வேதத்தையே கொள்ள வேண்டும் -இதுவே உபக்ரம நியாயம் -இது பூர்வ மீமாம்ஸையில் உள்ளது)

எடுத்துக்காட்டு – ’ராமன் காட்டுக்குச் சென்றான். அவன் சூர்பணகையின் காதை அறுத்தான்’ என்று கூறினால், முன் வாக்கியத்தில் ராமன் என்று தெளிவாகத் தெரிந்து விட்டபடியால், பின்னால் வரும் ’சூர்பணகையின் காதை அறுத்தான்’ என்பதற்குத் தான் வேறு சபாருள் கொள்ள வேண்டும் – ’லக்ஷ்மணன் மூலமாக அறுத்தான்’ என்பது போல்.

அதை இங்கு உபயோகிப்போம். இங்கு முதலில் “ நானே ப்ராணன்… நானே த்வாஷ்ட்ரனைக் கொன்றேன்” என்று இந்திரன் சொல்லுகிறபடியால், ஸந்தேஹத்துக்கே இடமில்லாமல் இந்திரன் தன்னைத் தான் ப்ராணன் என்று சொல்லிக் கொள்கிறான் என்று தெரிகிறது. பரமாத்மா தான் ப்ராணன் என்று கொண்டால், அவர் த்வாஷ்ட்ரன் என்ற அஸுரனைக் கொல்ல வில்லையே என்கிற பொருந்தாமை ஏற்படும். இவ்வாறு தொடக்கத்தில் முடிவு செய்து விட்டோம்

இனி பிற்பாடு வரும் வாக்கியம் – “ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்த₃: அஜர: அம்ருத:” என்று. எனவே முன் வாக்கியத்தின் பொருளுக்குப் பொருந்தும்படி தான் பின் வாக்கியத்திற்குப் பொருள் கூற வேண்டும். எனவே இச் சொற்களின் பொருளைக் குறைத்துக் கொண்டு, ப்ரஜ்ஞாத்மா என்றால் நம்மை விட அதிகமான ஜ்ஞாநமுடையவர், ஆநந்த₃: என்றால் நம்மை விட அதிகமான ஆநந்த முடையவர், அஜர: அம்ருத:” என்றால் அம்ருதத்தைக் குடித்த படியால் மூப்பு மற்றும் மரணம் அற்றவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இதுவே உபக்ரம ந்யாயத்தின் படி தகுந்ததாகும்.-எனவே இந்திரன் தான் இங்கு ப்ராணன் என்று சொல்லப் படுகிறார் என்கிறார் பூர்வபக்ஷி.

இதி சேத் – “இவ்வாறு நீ சொன்னாய் என்றால்”.-இதற்கு மேல் ’அது தவறு’ என்று சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தொடங்கி ஸித்தாந்தம் கூறுகிறார் வ்யாஸர்.

உபக்ரம ந்யாயத்திற்கு விதி விலக்கு
அத்₄யாத்ம ஸம்ப₃ந்த₄ பூ₄மாஹிஅஸ்மிந்
அத்₄யாத்ம –ஆத்மாவில் இருக்கும் ஸம்ப₃ந்த₄ –தொடர்புகளின்-பூ₄மா பன்மை-அஸ்மிந் -இவரிடம்-ஹி–அன்றோ

ஆத்மாவில் இருக்கும் தொடர்புகள் என்றால் ஆத்மாவோடு மற்ற பொருள்களுக்கு இருக்கும் தொடர்புகள் என்று பொருள். அவை பலவாக இருக்கின்றன என்றால், ஆத்மாவோடு தொடர்பு பட்ட பொருள்கள் பலவாக இருக்கின்றன என்று பொருள். இப்படிப் பல பொருள்களோடு தொடர்பு பட்டு இருத்தல் என்பது இவரிடம் அதாவது-பரமாத்மாவிடம் மட்டும் தான் பொருந்துகிற படியால், இங்கு ப்ராணன் எனப்படுபவர் பரமாத்மாவே – என்று ஸூத்ரத்தின் பொருள்

.இந்த உபநிஷத் பகுதியிலேயே – “தத்₃யதா₂ ரத₂ஸ்ய அரேஷு நேமி: அர்பிதா, நாபௌ₄ அரா: அர்பிதா:, ஏவமேவ ஏதா: பூ₄த மாத்ரா: ப்ரஜ்ஞா மாத்ராஸு அர்பிதா:, ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணே அர்பிதா:” என்ற ஓரு வாக்கியம் உள்ளது. இதன் பொருள் – எப்படி ஒரு சக்கரத்தில் வெளியில் இருக்கும் வட்டமான நேமி என்ற பகுதி அதற்குள் இருக்கும் அரங்கள்
என்னும் குச்சிகளால் தாங்கப்படுகிறதோ , அந்தக் குச்சிகள் எல்லாம் நடுவில் இருக்கும் நாபி₄ என்ற குமிழ் போன்ற பகுதியால் தாங்கப் படுகின்றனவோ , அது போல் பூ₄த மாத்ரம் எனப்படும் அசேதனப் பொருள்கள் எல்லாம் ப்ரஜ்ஞாை மாத்ரம் எனும் ஜீவாத்மாக்களால் தாங்கப் படுகின்றன, அந்த ஜீவாதமாக்கள் எல்லாம் ப்ராணனால் தாங்கப் படுகின்றன”.

இப்படி உலகிலுள்ள சேதநம் மற்றும் அசேதநங்கள் அனைத்தோடும் தொடர்பு பட்டு, அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கும் ப்ராணன் என்பவர் கண்டிப்பாக ஒரு ஜீவாத்மாவான இந்திரனாக இருக்க முடியாது. பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.இத்தால், உபக்ரம ந்யாயம் இங்கு பொருந்தாது என்று காட்டப் படுகிறது. ஸமமான எண்ணிக்கையில் இருக்கும்வாக்யங்களுக்கு இடையே தான் முன் வாக்கியம் பின் வாக்கியத்தை விட பலமானது என்னும் உபக்ரம ந்யாயம் பொருந்தும். முதலில் ஒரே ஒரு வாக்கியம் இருந்து, பின்னால் அதற்கு முரண்பட்ட பல வாக்கியங்கள் இருந்தால், பலவற்றின் பொருளை முடிவு செய்து, அதற்குத் தகுந்தபடி தான் முன் வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

இங்கும், ’ ப்ரஜ்ஞாத்மா ஆந ந்த₃: அஜர: அம்ருத:’ ’ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணே அர்பிதா:’ என்று பின்னாலிருக்கும் பல வாக்கியங்கள் பரமாத்மாவுக்கு மட்டுமே பொருந்துகிற படியால், தொடக்கத்தில் இருக்கும் ஒரே ஒரு ’ப்ராணன்’ என்ற சொல்லுக்குப் பொருளை மாற்றி, பரமாத்மா என்று கொள்வது தான் ஏற்புடையதாகும்.

1.1.11 இந்த்ரப்ராணாதி₄கரணம்
வைதிகக் கண்ணோட்டம் காட்டுவது பரமாத்மாவையே

தன்னையே பரமாத்மா என்று இந்திரன் சொல்லலாமா?
1.1.11– இந்த்ர ப்ராணாதிகரணத்தில் தன்னை உபாஸித்தால் முக்தி அடையலாம் என்று இந்திரன் சொன்னபடியால் அவனே ப்ரஹ்மம் என்று பூர்வ பக்ஷீ கூறினார். ஆனால் இந்த ப்ரகரணத்தில் உள்ள பல வாக்கியங்கள் பரமாத்மாவுக்கே பொருந்துகிறபடியால் இங்கு உபாஸிக்கப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்றார் வ்யாஸர்.

இதற்கு மேல் ஒரு கேள்வி எழுகிறது – மற்ற வாக்கியங்கள் இருக்கட்டும். தன்னையே உபாஸிக்க வேண்டும் என்று இந்திரன் சொன்னது எப்படி வ்யாஸர் பக்ஷத்தில் பொருந்தும்? தன்னையே பரமாத்மா என்று இந்திரன் சொல்லலாமா?
இதற்கு பதிலளிக்கிறார் வேத வ்யாஸர் மூன்றாம் ஸூத்ரத்தில் –
(3) சாஸ்த்ரத்₃ருஷ்ட்யா து உபதே₃ச: வாமதே₃வவத்.
உபதே₃ச:
– முக்தி அடைய வேண்டும் என்றால் தன்னையே உபாஸிக்க வேண்டும் என்ற இந்திரனின் உபதேசம்
சாஸ்த்ர த்₃ருஷ்ட்யா து – ஸாஸ்த்ரத்தால் ஏற்பட்ட பார்வையால் ஆத்மாவைக் கண்ட படியால் அன்றோ
வாம தே₃வவத் – வாம தேவர் என்ற ரிஷியைப் போல்

ஜீவாத்மாவை அறிவதற்கு இரண்டு ப்ரமாணங்கள் உள்ளன. ஒன்று ப்ரத்யக்ஷம், அதாவது நம்முடைய புலன்கள். -அதன் மூலம் ஜீவாத்மாவை அறிந்தால் அவரை உடலைக் காட்டிலும் வேறு பட்டவர் என்று மட்டும் தான் அறியலாம்.
இரண்டாவது ப்ரமாணம் ஸாஸ்த்ரம். வேதத்தின் மூலம் ஜீவாத்மாவை அறிந்தால், அவருக்கு உள்ளே அந்தர்யாமியாக பரமாத்மா இருக்கிறார் என்பதையும் சேர்த்து அறிந்து கொள்வோம். அப்படி ஸாஸ்த்ரத்தால் ஏற்பட்ட ஆத்மாவைப் பற்றின கண்ணோட்டம் இந்திரனுக்கு உள்ள படியால் தான் இந்திரன் தன்னையே பரமாத்மா என்று சொல்கிறார்.

து அன்றோ- -ப்ரத்யக்ஷ பார்வையைக் கொண்டு உபதேசிக்க வில்லை-ஸாஸ்த்ரத்தால் ஏற்பட்ட பார்வையால் ஆத்மாவைக் கண்ட படியால் அன்றோ

பரமாத்மா தான் உலகத்தில் அனைத்துக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். அதனால் தான் உலகத்திலுள்ள எந்த பொருளைக் குறிக்கும் சொல்லும் அந்தப் பொருளை மட்டும் குறிக்காது, அதற்குள் இருக்கும் பரமாத்மா வரை குறிக்கும்.
அதே போல், ’நான்’ என்ற சொல்லும், நமக்குள் அந்தர்யாமியான பரமாத்மாவையே குறிக்கிறபடியால் இந்திரன் தன்னையே உபாஸிக்க வேண்டும் என்று உபதேசித்ததில் தவறில்லை – எனக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய் என்றே அதற்குப் பொருள்.

யானும் தானாய் ஒழிந்தான்
யானும் நீ என்னுடைமையும் நீயே
ஆமவை ஆயவை ஆய் நின்ற அவரே
ஜகத் சர்வம் ப்ரஹ்மம்

மத்த சர்வம் -ப்ரஹ்லாதன்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -ஆழ்வார்

இதற்கு எடுத்துக்காட்டு – வாம தேவர் என்ற ரிஷி கூறுகிறார் “அஹம் மநு: அப₄வம்” அதாவது “நானே மநுவாக ஆனேன்” என்று. எனக்குள் அந்தர்யாமியான பரமாத்மா தான் மநுவுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறார் என்று இதற்குப் பொருள். அதே போல் தான் இந்திரனும் கூறி யிருக்கிறார்.

ஏன் இப்படிச் சுற்றி வளைக்கிறார் இந்திரன்?
தன்னையே உபாஸிக்க வேண்டும் என்று இந்திரன் சொன்னது தவறில்லை என்றாலும், இப்படிச் சொல்ல வேண்டிய தேவை என்ன? நேரடியாக ’நாராயணனை உபாஸிப்பாய்’ என்று சொல்லியிருந்தால். விசாரமே தேவைப் படாமல் எளிமையாகப் பொருளைப் புரிந்து கொண்டிருக்கலாமே ? இக் கேள்வியைப் பூர்வ பக்ஷீ எழுப்புகிறார் –

(4) ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந உபாஸா த்ரைவித்₄யாத் ஆஸ்ரிதத்வாத் இஹ தத்₃யோகா₃த்
ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந – இது பூர்வ பக்ஷியின் கூற்று.இந்த வேதப் பகுதியில் ஜீவன் (இந்திரன்) மற்றும் முக்ய ப்ராணன் என்ற மூச்சுக் காற்றைப் பற்றின லிங்கம் -அதாவது அடையாளம் உள்ளது. த்வாஷ்ட்ரனைக் கொன்றவர் கண்டிப்பாக இந்திரன் என்ற ஜீவாத்மா தான். அதே போல் “யாவத்₃தி₄ அஸ்மின் சரீரே ப்ராணோ வஸதி தாவத் ஆயு:” -அதாவது ’எதுவரை இந்த உடலில் ப்ராணன் உள்ளதோ அது வரை தான் ஆயுஸ்’ என்ற வாக்கியமும் மூச்சுக் காற்றுக்கே பொருந்தும். அதனால் இங்கு பரமாத்மா சொல்லப்படுகிறார் என்று சொல்வது தவறு – என்கிறார் பூர்வ பக்ஷீ
இதி சேத் ந – “இவ்வாறு கூறினால் அது தவறு”. இது தொடங்கி வ்யாஸரின் பதில் ஆகும்
உபாஸா த்ரை வித்₄யாத் –“ப்ரஹ்மத்தைப் பற்றின மூன்று விதமான உபாஸனங்களைச் சொல்வதற்காக”.
(1) தானான தன்மை (ஸ்வரூபம்)
(2) ஜீவாத்மாக்களுக்கு அந்தர் யாமியான நிலை
(3) அசேதநப் பொருள்களுக்கு அந்தர் யாமியான நிலை

என்று மூன்று முறைகளில் ப்ரஹ்மத்தைத் த்யானிக்க வேண்டும் என்று காட்டுவதற்காகத் தான் இந்திரன் வேண்டும் என்றே தன்னைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் சொல்லி, அவற்றுக்கு அந்தர் யாமியான பரமாத்மாவை த்யானிக்க வேண்டும் என்கிறார்,
ஆஸ்ரிதத்வாத் – “இதைப் போல் மற்ற உபநிஷத்துகளிலும் மூன்று விதமான உபாஸநங்கள் சொல்லப் பட்டுள்ளபடியால்”
இஹ தத்₃யோகா₃த் – “இங்கும் அது பொருந்துகிற படியால்”.
இந்தப் ப்ரகரணத்தில், “ஆநந்த₃: அஜர: அம்ருத:” என்று ப்ரஹ்ம ஸ்வரூபத்தைப் பற்றின த்யானமும், “மாம் உபாஸ்வ” அதாவது இந்திரனுக்கு அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிப்பாய்” என்பதன் மூலம் ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாக உபாஸிப்பதும், “ப்ராணா : அஸ்மி” அதாவது ’நானே ப்ராணன்’ என்பதால் மூச்சுக் காற்று என்ற அசேதனப் பொருளுக்கு அந்தர் யாமியாக உபாஸிப்பதும் சொல்லப் பட்டுள்ளன.

எனவே இங்குச் சொல்லபட்ட ’ப்ராணன்’ பரமாத்மாவே என்று முடிவாகிறது. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்.

(

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நேராக ஸ்வரூபம்
தத் ஸ்ருஷ்ட்வா தத் அனுபிரவேஸாத்-அந்தர்யாமி -சேதன அசேதன அந்தர்யாமித்வம்
ராமர் திருமேனி -சீதைக்கு மணவாளன் – -விபீஷணனுக்கு அபயம் அளித்தவன்

முதல் பாதத்தில் பரமாத்மாவின் குணங்கள்
முதல் அத்யாயத்தின் முதல் பாதத்தில் மொத்தம் 11 அதிகரணங்கள் உள்ளன. அதில் முதல் நான்கு அதிகரணங்கள்
இந்த ஸாஸ்த்ரத்தை ஏன் தொடங்க வேண்டும் என்று காட்டும் முன்னுரையாக அமைந்தன.
அதற்கு மேல் ஏழு அதிகரணங்களால் அந்த ஜகத் காரணமான ப்ரஹ்மம் பரமாத்மா தான் எனப்பட்டது. இதில்
ஒவ்வொரு அதிகரணத்திலும் பரமாத்மாவின் சிறந்த பண்புகள் விளக்கப் பட்டுள்ளது என்கிறார் ஶ்ரீ வேதாந்த தேசிகன் –

ஸ்வேச்சா₂தே : ஸர்வஹேது: சுப₄ கு₃ண விப₄வ-அநந்த -நிஸ் ஸீம-ஹர்ஷ:
சுத்₃த ₄-அகர்தமாத்தே ₂-தி₃வ்யாக்ருதி: அநுபதி₄க-ஆகாசநாதி₃-ஸ்வபா₄வ: |
ஸப்ராண-அப்ராண-பே₄த₃-வ்யதிபி₄து₃ர-ஜக₃த்-ப்ராணன: தி₃வ்யதீ₃ப்தி:
ப்ராண-இந்த்₃ராதி₃-அந்தராத்மா ப்ரபு₄ஃ அதி₄கரணை : ஸப்தபி₄: ப்ரத்யபாதி₃ ||

(5) ஈக்ஷத்யதி₄கரணம் – தன் ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் படைப்பவர் பரமாத்மா
(6) ஆந்ந்தா ₃மயாதி₄கரணம் – வேதத்தாலும் அளக்கப்பட முடியாத எல்லை யற்ற ஆநந்தத்தை உடையவர் பரமாத்மா
(7) அந்தரதி₄கரணம் – தூய்மையான, பாப புண்யங்களால் ஏற்படாத, திவ்யமான திரு மேனியை உடையவர் பரமாத்மா
(8) ஆகாசாதி₄கரணம் –இயற்கையாக ப்ரகாசிப்பவர், மற்ற பொருள்களையும் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா
(9) ப்ராணாதி₄கரணம் – உயிருள்ள மற்றும் உயிரற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் வாழ்வதற்குக் காரணம்
பரமாத்மா
(10) ஜ்யோதிரதி₄கரணம் – நிகரற்ற ஒளியை யுடையவர் பரமாத்மா
(11) இந்த்₃ர ப்ராணாதி₄கரணம் –ப்ராணன் இந்த்ரன் முதலானவர்களுக்கு எல்லாம் அந்தர்யாமீ பரமாத்மா

அஸ்ப்ருஷ்ட லிங்க ஸ்ருதி வாக்ய விசாரணை இதில்

(5) ஈக்ஷத்யதி₄கரணம் – தன் ஸங்கல்பத்தாலேயே அனைத்தையும் படைப்பவர் பரமாத்மா–ஸ்வேச்சா₂தே : ஸர்வஹேது:
(6) ஆந்ந்தா ₃மயாதி₄கரணம் – வேதத்தாலும் அளக்கப்பட முடியாத எல்லை யற்ற ஆநந்தத்தை உடையவர் பரமாத்மா–சுப₄ கு₃ண விப₄வ-அநந்த -நிஸ் ஸீம-ஹர்ஷ:
(7) அந்தரதி₄கரணம் – தூய்மையான, பாப புண்யங்களால் ஏற்படாத, திவ்யமான திரு மேனியை உடையவர் பரமாத்மா–சுத்₃த ₄-அகர்தமாத்தே ₂-தி₃வ்யாக்ருதி-
(8) ஆகாசாதி₄கரணம் –இயற்கையாக ப்ரகாசிப்பவர், மற்ற பொருள்களையும் ப்ரகாசிக்க வைப்பவர் பரமாத்மா-அநுபதி₄க-ஆகாசநாதி₃-ஸ்வபா₄வ: |
(9) ப்ராணாதி₄கரணம் – உயிருள்ள மற்றும் உயிரற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் வாழ்வதற்குக் காரணம்
பரமாத்மா-ஸப்ராண-அப்ராண-பே₄த₃-வ்யதிபி₄து₃ர ஜகத் ப்ராணன
(10) ஜ்யோதிரதி₄கரணம் – நிகரற்ற ஒளியை யுடையவர் பரமாத்மா–திவ்ய தீப்தி
(11) இந்த்₃ர ப்ராணாதி₄கரணம் –ப்ராணன் இந்த்ரன் முதலானவர்களுக்கு எல்லாம் அந்தர்யாமீ பரமாத்மா-ப்ராண இந்த்ராதி அந்தராத்மா ப்ரபு

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-