Archive for December, 2017

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –308-320 -சத் குரூப சேவகம்-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்–ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் – ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 29, 2017

1–புருஷகார வைபவம் -24-
2–சாதநஸ்ய கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -80–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாயதாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது நான்காவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் 
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் 

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் -24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்

——————————————-

த்வயார்த்தம் முடிந்தது இது வரை -கண்ட யுக்தமானவை இது வரை – ஆர்த்தமான அர்த்தங்கள் மேல் – அபிபிரேதமான அர்த்தங்கள் இனி மேல் என்றவாறு
ஆச்சார்ய கைங்கர்யம் -நிர்ஹேதுக கிருபா வைபவம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் இவை மூன்றும் த்வயத்தில் சப்தத்தில் இல்லை –
அவன் திரு உள்ளத்தில் உள்ளவை அன்றோ இவை -இத்தை ஓராண் வழியாக உபதேசித்து -அவிச்சின்னமாக பரம்பரையா சம்பிரதாயத்தில் வந்த அர்த்தங்கள் –
முன்னோர் முறை தப்பாதே கேட்டு இருக்க வேண்டுமே –

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

பூஜ்ய விஷய விசாரம் மீமாம்சை -வேத -வேதாந்த -வேதாந்த தாத்பர்ய மீமாம்சைகளை மூன்றும் உண்டே –
சாஸ்திரம் சாப்தமாக உபதேசித்தது -முதல் சொல்லி –தர்ச பூர்ண மாசம் -அக்னி ஹோத்ரம்-சோம யாகம் -இம் மூன்றும் கிருஷ்ண யாகங்கள் -மூன்றையும் விவரித்து சொல்லிற்று –
ஷட்க பேதம் பூர்வ மீமாம்சை ஜைமினி -கர்ம விசாரம் -உபதேச முதல் ஆறும் – அதி தேசம் அடுத்த ஆறும் –
த்ரவ்யத்தை தேவதைக்கு தியாகம் செய்வதே யாகம் –
உபதேசமாக அர்த்தங்களை வைத்து மற்றவற்றுக்கு ஊகிக்க வேண்டும் -தேவதை த்ரவ்யம் பலம் இவற்றை-இம் மூன்றை -ஏதாவது ஒன்றைக் கோடி காட்டும் –

த்விக பேதம் உத்தர மீமாம்சை வேதாந்த விசாரம் -சித்த ஸாத்ய த்வீகங்கள்- உபேய உபாய த்வீகங்கள் என்றவாறு –
சமன்வய அவிரோத -இரண்டும் ப்ரஹ்மம் குறித்து சித்த த்விகம்-உபாய த்விகம்–காரணந்து த்யேய சொல்ல வந்ததால் –
சாதன பல அத்தியாயங்கள் -ஸாத்ய த்விகம் – உபேய த்விகம்-பக்தி உபாசனம் ஸ்வயம் பிரயோஜனம் அதுவே உபேயமாகுமே –

பூர்வ த்ரிதகம்-அவை -மேலே – உத்தர த்ரிகம் -இதுவும் மீமாம்சை -பூர்வ உத்தர மீமாம்சைகளை போலே இதுவும் –
இங்கும் கண்ட உக்தமும் அபி பிரேரிதமாயும் இருக்கும் –த்வய நிஷ்டருக்கு வேண்டிய ஆழமான கருத்துக்கள் மேலே என்றவாறு –

————————————–

அநந்தரம்-தான் ஹித உபதேசம் பண்ணும் போது–என்று துடங்கி –
உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் –365-என்னும் அளவாக
இவ் அதிகாரிக்கு கீழ் சொன்ன அர்த்த விசேஷங்கள் எல்லாம்  307–உபதேஷ்டாவான
ஆசார்ய விஷயத்தில்  உண்டாக வேணும் பிரதிபத்தி அநு வர்தன பிரகாரங்களை) எண்ணமும் செயலையும் )தர்சிப்பிக்கைக்காக –
சதாசார்யா லஷணம் –
சச் சிஷ்ய லஷணம் –
தத் உபயருடைய பரிமாற்றம் -இவை இருக்கும் படியை ப்ரசக்த அநு ப்ரசக்தமாக அருளிச் செய்கிறார் –
இவ் வதிகாரிக்கு அசக்தி விஷயமான நிஷித்தங்கள் சொன்ன பிரசங்கத்தில்
அவை எல்லாவற்றிலும் -க்ரூர நிஷித்தம் -பர உபதேச சமயத்தில் -விப்ரதிபத்தி – என்று அருளிச் செய்கிறார் –

சூரணை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

(மாறாடி நினைத்தால் க்ரூரமாகவும் நிஷித்தமாகவும் இருக்கும் –கீழே -300-நிஷித்தம் நாலு வகை -ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாகவும் நிஷித்தமாகவும் இருக்கும்
இவை அதை விட குரூரம் -இது தானும் கெட்டு சேர்ந்தவர்களையும் கெடுக்கும்
ஆச்சார்யனான தான் -என்ற நினைவு கூடாதே -மாறாடுவது- சிஷ்யனாக நினைத்தால் பிரதி சம்பந்தி ஆகும் -தன் ஆச்சார்யருக்கு சிஷ்யன்
பலம் திருத்திப் பணி கொள்வது இல்லை –மங்களா சாசனம் பண்ண வைப்பதே பலம்இஹ லோக பர லோக மோக்ஷம் கொடுப்பது என்ற நினைவு மாறாடுவது -)

(ஆயி ஸ்வாமிகள்–யுக்த தினசர்யா -பிரகரணம்-அனுசந்தான உபதேஷ்டாவான சதாசார்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் – மாறாடி நினைப்பவர் அசத் ஆச்சார்யர் ஆவார் -சதாசார்யர் ஆக மாட்டார்
308-320-வரை ஆயி ஸ்வாமிகள் ஒன்பதில் ஆறாவது இது என்று அவதாரிகை – மா முனிகள் -ஆறில் நாலாவதாக அவதாரிகை –சிஷ்யனுக்கு கீழே -க்ரூரமாயும் நிஷித்தமாயும் இருக்கும்-இனி ஆச்சார்யருக்கு இங்கு  ஸூவ பர-சிஷ்ய- ஸ்வரூப விபர்யய ஸ்மரணம் -க்ரூரமாயும் நிஷித்தமாயும் இருக்கும்
ஸூவ ஆச்சார்ய பர தந்திரனாய் -அநந்ய பிரயோஜனாய் -கிருபாவானாய் -ஆப்த தமனாய் -சத் சம்பிரதாய க்ரமம் தப்பாத படி –
பூர்வ மீமாம்சை உத்தர மீமாம்சை ரஹஸ்ய மீமாம்சைகளை மூன்றையுமே ஒன்றுமே தப்பாமல் சமன்வயப்படுத்தி –ஸச் சிஷ்ய ஸ்வரூப ஹிதமான-அவசர பிரதீஷானாய் இருந்து சிஷ்யன் கேட்டுக் கொள்ள வேன்டும் தேசிகன் -சார மந்த்ரார்த்தைப் பேணி உபதேசிக்கும் பொழுது –சாஸ்த்ர சாரம் -வேதாந்தம் சாரம் -ரஹஸ்ய த்ரயம் –
ரூப ஹிதம் -சரீரகதம் -வேதம் பார்க்கும் -ஸ்வரூப ஹிதம் இங்கு  ஹித உபதேசம் -மந்த்ர ரூபம் -என்றது -மோக்ஷத்தில் இச்சையுடன் வருபவன் என்பதால் —
வேத சார உபநிஷத் சார தர அநுவாக சார தம காயத்ரியின் முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கை –என்றவாறே – போஷித்து உபதேசிக்க வேன்டும் –மந்திரத்தையும் மந்திரத்தின் அர்த்தங்களையும் ஸூவ ஆச்சார்ய பரதந்த்ரனாக உபதேசிக்கும் தன்னையும் மாறாடி நினைப்பது ஸ்வ தந்த்ரனாக நினைப்பது தானே
சம்சார நிர்வேதம் பிறந்து –வந்து உபதேசம் கேட்க்கிற சிஷ்யனையும் -உபதேச அனுகுண பலத்தையும் -உள்ளபடி நினையாமல் மாறாடி -நினைக்கை
கீழ் சொன்ன-300-301- நிஷித்த விஷயம் போலே இல்லையே -அதி க்ரூரமாய் இருக்கும் என்றவாறு-உபய ஸ்வரூப நாசகார -தானும் கெட்டு சிஷ்யனும் கெட்டு-க்ரூரமுமாய் சான்றோர்களால் தவறு என்று சொல்லப்படும் –
பிரதிபத்திய அநு வர்தன பிரகாரங்களை-எண்ணத்தையும் செயலையும் –என்றவாறு )

(உபேதேசாதிகளும்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் – அருளிச் செய்த பின்பு
-உபதிஷ்ட அர்த்த விஷய மஹா விஸ்வாச ஹேது -நிர்ஹேதுகம் -கிருபா வைபவமும் அருளிச் செய்த பின்பு-
உபத்திஷ்ட அர்த்த சரம அவதி -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -கிரமத்தாலே மேலே அருளிச் செய்கிறார் –
மேல் மேல் உத்தர உத்தர சங்கதிகள்-ஹித உபதேசம் -திருமந்திரம் -கொண்டே உபதேசிப்பது முமுஷுவுக்கு ஹிதமாகும் அன்றோ -)

அதாவது
கீழ் பிரபந்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரி லஷணங்கள் எல்லாவற்றாலும் குறை அற்று
இருந்துள்ள தான்  உஜ்ஜீவிஷுக்களாய் வந்து  தன்னை உபசத்தி பண்ணினவர்களுக்கு
உஜ்ஜீவன ஹேதுவான மந்திர ரூப ஹிதத்தை உபதேசிக்கும் காலத்தில் –
உபதேஷ்டாவான தன்னையும் –
உபதேச பாத்ரனான சிஷ்யனையும் –
உபதேச பலத்தையும் –
விபரீத பிரதிபத்தி பண்ணுகை பூர்வ உக்த நிஷிதங்களில் காட்டில்  க்ரூர நிஷித்தம் என்கை-

அவ்வோ நிஷித்தங்கள் இவன் தனக்கு நாசகம் இத்தனை இறே
அவ்வளவு இன்றிக்கே –
இவன் உபதேசம் கேட்டவனுக்கும் கேடாகையாலே இத்தை அவற்றிலும் காட்டில் க்ரூர நிஷித்தம் என்கிறது –
இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை என்று இறே மேல் சொல்லத் தேடுகிறது –

—————————————-

தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் -மாறாடி நினைக்கை யாவது -எது என்னும்
ஆ காங்ஷையிலே -அவற்றை உபபாதிக்கிறார் –

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்பஷ்டீ கரிக்கிறார் -யதா க்ரமத்தை மாறாடி-தன்னை -தன் ஆச்சார்யருக்கு சேஷம் என்று நினைக்காமல் சேஷி என்று நினைப்பது –
ஸூ ஆச்சார்ய பரதந்த்ரனான தான் -என்ற நினைவு வந்தாலே சிஷ்யனை தனது சிஷ்யனாக என்ன மாட்டானே – தனக்கு–தன்னை பற்றி சரியாக எண்ணி —
ஆச்சார்யருக்கு பரதந்த்ரனான இவனை தனது சிஷ்யனாக நினைக்கை –
இப்படி இரண்டில் ஓன்று தப்பானாலும் க்ரூரமாகுமே -ஸ்வரூப நாசம்
உபதேச பலத்தை -நம் ஆச்சார்யர் நமக்கு அந்தர்யாமியாய் உபதேசிக்க -யானாய் தன்னைத் தான் பாடி போலே -இருக்க வேண்டுமே -இதுக்கு பிரயோஜனம்
பலம் அந்தராத்மாவுக்குச் சேர வேன்டும் –திருவடி ஸ்தானீயம் தானே ஆச்சார்யர் -ஸூவ ஆச்சார்யருக்கு -மங்களா சாசனத்துக்கு அதிகாரி யாம் என்று நினைக்க வேன்டும்
ஆக இந்த சரம நிஷ்டையில் பெருமாள் ஒரே இடத்தில் மட்டுமே நிர்ஹேதுக கடாக்ஷம் தான்  இங்கு ஆச்சார்யர் -நம் ஸமாச்ரயண ஆச்சார்யர் பர்யந்தம் வர வேன்டும்
என்பதால் தான் உத்தாரக -உபகார ஆச்சார்யர் பர்யந்தம் வரவழைக்கத் தானே இந்த பிரபந்தம் –
நாம் சிறிது த்ருஷ்டம் பெறலாம் என்றோ- உஜ்ஜீவிப்பவன் ஸூ ஆச்சார்யர் என்று நினையாதே தானே கார்யம் என்று நினைப்பதுவும் -என்று அருளிச் செய்து இருந்தாலும் இங்கு இதுக்கும் மேல்  மா முனிகள் இங்கே உஜ்ஜீவனம் என்று நினைப்பதே மாறாடுதல்-என்பர் ஸூ நிமித்த உஜ்ஜீவனத்தை பலமாக மாறாடி நினைக்கை தோஷம் 
நம் ஆச்சார்யர் திருத்தி பகவத் கைங்கர்யம் செய்கிறார் என்று நினைக்க வேன்டும் -நாம் அங்குத்தைக்கு ஆளாக பண்ணினோம்-நமக்கு பகவத் கைங்கர்யம் என்ற நினைவு கூடாதே 
ஸஹ வாஸம் பண்ண தம் ஆச்சார்யர் வழி வகுத்தார் என்று நினைக்காமல் தன் உபதேசம் -ஸூ பிரயோஜன ஸஹ வாஸம் என்று நினைப்பதும் தோஷம் –
இந்த நாலும் வேன்டும் —ஆச்சார்யர் நினைவு -தானே தப்பு –ஸூ ப்ரயத்னத்தால் இல்லை –
அங்குத்தைக்கு கரண பூதனாகவும் –தன் ஆச்சார்யர் -பரமாச்சார்யர் திருக் கைகள் நாக்கு திரு உள்ளம் போல -பரதந்த்ரனாக-பிரதிபத்தி -பண்ண வேண்டுமே –
இப்படியே அவர் நினைவும் -அஸ்மத் ஆச்சார்யர் பர்யந்தம் -இதனாலே இன்றும் ஜீவிக்கிறது இந்த தனியன் –அவிச்சின்ன குரு பரம்பரை —
சிஷ்யன் இவரை ஆச்சார்யராக நினைக்க வேண்டுமே -அவரை பொறுத்த படி நினைக்க கூடாதே –இரண்டையும் சமன்வயப்படுத்தி அடுத்த சூரணை யிலே அருளிச் செய்கிறார் -)

(ஆளும் ஆளார்–என்று ஆழ்வார் -மங்களா சாசன பரராக ஆசைப்பட்டார் -எழுந்து இருந்து திரு ஆழி திருச் சங்கு பிடிக்க ஷமர் இல்லார் –கிஞ்சித்காரம் பண்ணாதவனுக்கு சேஷத்வம் சித்திக்காதே –
ஆச்சார்ய அதீன விருத்தி–அனைத்தும் இருக்க வேன்டும் -சாஸ்திரம் கற்று அது படி நடந்து சிஷ்யனை அதன்படி நிலை நிறுத்த வேன்டும் –
சிஷ்யன் இவற்றைச் செய்யும் பொழுது தன் ஆச்சார்யரை உள்ளத்திலே நினைத்து செய்தால் தான் நிலை நிற்கும் -தனியன் சொல்லியே கால ஷேபம் –
ஆச்சார்யர் வாக்காக நினைத்தே உபதேசம் -மங்களா சாசன பரராக ஆக்குவதே பெரியாழ்வார் -பிரயத்தனம் -பரம பிரயோஜனம் இதுவே –
அவாப்த ஸமஸ்த காமனுக்கு இதுக்கு மேற்பட்ட ப்ரீதி தருவது வேறே இல்லையே -மங்களா சாசன யோக்யதை ஏற்படுத்தவே உபதேசம் –
ஆறு தொழில் அந்தணன் -தானம் த்ருஷ்ட பலம் வாங்கிக் கொள்ளலாம் கொடுக்கலாம் உள்ளதே என்னில் –விசேஷ சாஸ்திரம் பரமை ஏகாந்தி –
சிசுரூஷா லாபம் யஜஸ் அர்த்தமாக செய்யக் கூடாதே கிருபையால் விருப்பம் இல்லாமல் செய்ய வேண்டுமே – திருமுக மலர்த்திக்கு ஒப்பிட்டால்-உஜ்ஜீவனமும் வேண்டாம் -அச்சுவை பெறினும் வேண்டேன் -அத்தை விட இதுக்கு ஏற்றம் என்றவாறு -பிரதானம் இதுவே என்பதால் –
திவ்ய அர்ச்சா ப்ரதிஷ்டை ஆராமம் தடாகம் கைங்கர்யங்கள் தானே-இவற்றுக்கும் மேலே சேதன ஸம்ஸ்கார பல பூதனாக்குவது – –
மங்களா சாசனம் இதுக்கும் மேலே என்றவாறு -வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்பதுவும் அதி அல்பம் மங்களா சாசனம் பார்த்தால் என்றபடி –
ஸஹ வாஸம் பண்ணப் போதயந்த பரஸ்பரம் -என்றாலும் இத்தை விட அல்பம் என்றவாறு 
மத் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் மூன்றும் திரு நெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் –)

அதாவது
உபதேஷ்டாவான தன்னை உள்ளபடி நினையாமல் -மாறாடி நினைக்கை யாவது –
உபதேச சமயத்தில் -தன்னுடைய ஆசார்யனையே இவனுக்கு உபதேஷ்டாவாகவும் –
தான் அங்குத்தைக்கு கரண பூதனாகவும் -பிரதி பத்தி பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டி இருக்க -அப்படிச் செய்யாதே -ஸ்வாசார்ய பரதந்த்ரனான இருக்கிற தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைக்கை –

உபதேச பாத்ரனான சிஷ்யனை உள்ளபடி நினையாமல்-மாறாடி நினைக்கை யாவது –
தன்னோபாதி இவனையும் -தன்னுடைய ஆசார்யனுக்கு சிஷ்யனாய் பிரதிபத்தி பண்ணி உபதேசிக்க வேண்டி இருக்க -அது செய்யாதே -இவனை தனக்கு சிஷ்யன் -என்று நினைக்கை –

உபதேச பலத்தை உள்ளபடி நினையாதே -மாறாடி நினைக்கை யாவது -பர உபதேசம் பண்ணும் அளவில் -இவ் ஆத்மா திருந்தி -ஆளும் ஆளார் -என்கிற விஷயத்துக்கு மங்களா சாசனத்துக்கு ஆளாக வேணும் என்னும் இதுவே பலமாக உபதேசியாதே -இவனால் வரும் அர்த்த ஸிஸ்ருஷ ரூபமான த்ருஷ்ட பிரயோஜனத்தை ஆதல் –சிஷ்யனான இவன் சம்சாராது உத் தீர்ணனாய் வாழுகை யாகிற உஜ்ஜீவனத்தை ஆதல் –திரு நந்தவனாதிகளைச் செய்கிற இதிலும் காட்டில் ஓர் ஆத்மாவை திருத்தினால் எம்பெருமான் திரு உள்ளம் உகக்குகையாலே -இப்படி இருந்துள்ள பகவத் கைங்கர்யம் ஆதல் –சம்சாரத்தில் இருக்கும் நாள் தன் தனிமை தீர கூடி வர்திக்கை யாகிற சகவாசத்தை யாதல் –உபதேசத்துக்கு பலமாக நினைக்கை -என்றபடி –

————————————————-

இவன் இப்படி நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் -என்கிற
தஜ்ஜிஞாஸூ ப்ரஸ்னத்தை அனுவதித்துக் கொண்டு -அவை சித்திக்கும் வழி  அருளிச் செய்கிறார் –

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-அவர்ஜ நீயமான -விலக்க முடியாததனான -இந்த நான்கும் -த்ருஷ்ட பலம் ஆச்சார்யருக்கும் மூன்றும் சிஷ்யனுக்கும் -ஆத்மாத்மீயங்கள் அனைத்தும்
ஆச்சார்யர் இடம் சமர்ப்பித்து – -சரீரம் அர்த்தம் பிராணம் சத் குருவிடம் நிவேதயத் –ஆச்சார்ய சேஷம் -சத்தா நிபந்தனம் –
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் போலே –-பரம்பரையா உண்டே –மதீயத்வ எண்ணம் கந்தம் இல்லாமல் தெளிந்த சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் ஆச்சார்யார்க்கு கிட்டும் கட்டாம் தரை மேல் பாட்டம் மழை போலே -அவரது அவர் வாங்கிக் கொள்வதால் இவருக்கும் குறை இல்லை –ப்ராப்த த்ருஷ்ட பலன் -பகவத் பாகவத ஸூவ ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக -இது சித்திக்கும் -என்றவாறு –
நமக்கு எட்டுப் படாமல்மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லாஎதிர்மலைந்து- அசத் கல்பனான இவனை -நமக்கும் நம் உடையாருக்கும் மங்களா சாசனம் பண்ணும்படி திருத்தி திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய இம் மஹாநுபாவன் என்ற கௌரவ புத்தி – திரு உள்ளத்தால் உகக்கவே -ஈஸ்வர ப்ரீதி தானே புண்யம் -பரமம் சாம்யம் உபைதி -மோக்ஷம் சித்திக்கும்
அடுத்து பகவத் கைங்கர்யம் -ஸூவ ஆச்சார்யர் நினைவால் -பூர்வாச்சார்யர் அநுஸந்திக்கும் கிரமத்தில் -உபதேசித்து  பால் பாய திருத்தி மங்களா சாசனத்துக்கு பிராப்தனாக்கி பகவத் கைங்கர்யம் இவன் பண்ணப் பெறுவதே என்று அகவாயிலே நினைக்கும் -அந்த நினைவாலே இது பழுதற சித்திக்கும் —
இனி ஸஹ வாஸம் -உபகார ஸ்ம்ருதியால் -என் நன்றி செய்வேனோ என் நெஞ்சில் திகழ –செயல் நன்றாகத் திருத்தி -பூர்ண விஷயம் அன்றோ நித்ய ஸேவ்யன் என்று பாத சாயையாக வர்த்திக்க ஆசைப்படுவான் –
ஆக ஆச்சார்யர் நினையாது இருக்க -பல சதுஷ்டயமும் சிஷ்ய- -ஈஸ்வர -ஸூவ ஆச்சார்ய -பிரதிபத்தி விசேஷங்களாலே சித்திக்கையாலே –ஆபத்து நீங்கி சம்பத்து -சேஷித்வ அபகாரம் நீங்கி -ஸூ ஆச்சார்ய த்ரவ்ய அபகாரமும் நீங்கி -ஸூத்ர பிரயோஜன ஆகாங்ஷையும் நீங்கி ஸூவ பிரபாவை ஸ்மரணம் ஆகிய குற்றமும் நீங்கி -ஸூ கர்த்ருத்வ ஆரோபண தோஷமும் நீங்கி -ஸூ பூஜா அபேக்ஷையும் ஆகிய தோஷ விஷய பிரசங்கமும் நீங்கி -இதுக்கு தானே ஸஹ வாஸம் எதிர்பார்ப்பு – உஜ்ஜீவனம் தன்னாலே வரும் -கைங்கர்யம் பர்யந்தம் சித்திக்கும் -இதுக்கு மாறாடினால்-சித்திக்காததும் இல்லாமல் தோஷமும் வந்து இருவர் ஸ்வரூபமும் நாசமாகும்-)

(காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்- -பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ– பகவான் நம்மை பெற கிருஷி -என்பதை – அவன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -நாம் ஆச்சார்யர் மூலமே அவனை பெற வேன்டும்)

சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் -என்றது –
சிஷ்யனாவன் தனக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்று அநு சந்தித்து இருக்கையாலே –
கிஞ்சித்காரம் இல்லாதபோது -சேஷத்வம் கூடாது என்று -தன் ஸ்வரூப லாபத்துக்காக
தன்னாலான கிஞ்சித்காரம் பண்ணிக் கொண்டு போருகையாலே -அர்த்த சிஸ்ருஷைகள்
ஆகிற த்ருஷ்ட பலம் -சித்திக்கும் -என்றபடி –

ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றது –
எதிர் சூழல் புக்கு திரிந்து -தன் விசேஷ கடாஷங்களாலே அத்வேஷாதிகளை உண்டாக்கி-
ஆசார்ய சமாஸ்ரயணத்திலே மூட்டி -இவ் வாச்சார்யனுடைய உபதேச அன்வயத்தை
உண்டாக்கி -அதடியாக இவனை சம்சாரத்தின் நின்று அக்கரைப் படுத்த வேண்டுகிற
எம்பெருமானுடைய க்ருபா கார்யமான நினைவாலே சிஷ்யனுடைய உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றபடி –

ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –என்றது –
இவன் ஹிதோபதேசம் பண்ணி மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி சேதனரை திருத்துகிற இது -எம்பெருமான் திரு உள்ளத்துக்கு மிகவும் உகப்பாகையாலே -இது பகவத் கைங்கர்யம் அன்றோ என்று அநு சந்தித்து இருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே -உபதேஷ்டாவான தனக்கு பகவத் கைங்கர்யம் சித்திக்கும் -என்றபடி –

உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –என்றது –
அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி —

———————————————–

இப்படி இவன் நினையாது இருக்க -இப் பல சதுஷ்ட்யமும்-சிஷ்ய ஈஸ்வர -ஸ்வாசார்யர்கள்
நினைவாலே சித்திக்கும் என்னும் இடம் அருளிச் செய்து –
உபதேசத்துக்கு சாஷாத் பலமாய் உள்ளதும் –
உபதேஷ்டாவான ஆசார்ய பரதந்த்ரனுக்கு உபதேச பாத்ரமானவனைக் குறித்து உண்டாம் ஆசார்யத்வமும் -சித்திக்கும் படியை -பிரசந உத்தர ரூபேண அருளிச் செய்கிறார் –

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

(சிஷ்யனுக்கு சாஷாத் பலம்-ஸூ ஆச்சார்யனுக்கு -மங்களா சாசனம் தானே -இவருக்கு ஆச்சார்யத்வம் சித்திப்பதும் சாஷாத் பலன் தானே -இந்த முக்கிய இரண்டு பலங்களை பற்றி இங்கே-இவர் சிஷ்யனுக்கு சாஷாத் பலன் கிடைக்க நினைக்கலாமா என்னில் இத்தை தான் நினைக்க வேன்டும் -பலத்தை மாறாடி தானே நினைக்கக் கூடாது என்றார் கீழே-பலத்தை உத்தேச்யமாக இல்லாமல் மந்த புத்தி உள்ளவனும் செய்ய மாட்டானே-)

(ஆயி ஸ்வாமிகள்ஆப்த தமர் ஆச்சார்யர் -இரக்கம் உடைய தன் நினைவாலே -இவன் நமது ஆச்சார்யருக்கு மங்களா சாசனம் -சூழ்ந்து இருந்து ஏத்த -பரம்பரையாக-சரம ப்ராப்யம் -சித்திக்கும் -நம்மாலும் திருத்த ஒண்ணாத இவன் திருத்த -ஈஸ்வரன் திரு உள்ளது நினைவாலே -சித்திக்கும்
பரம ஆச்சார்யர் -ஈஸ்வரன் அனுக்கிரகத்தால் பேறு கிட்டாதோ
இவருக்கும் ஈஸ்வரன் எதுக்கு பரம ஆச்சார்யர் நினைவாலே கிட்டாதோ -என்னில் –
குரு பரம்பரையால் சிஷ்யனுக்கு நன்மை உண்டாம் என்ற நியதி வேண்டுமே –
ஸூ ஆச்சார்யர் தன்னை ஆச்சார்யராக ஆக்கினால் தானும் சிஷ்யனுக்கு தரலாம் என்ற எண்ணம் வருமே – -ஸாஜாதீய ஸ்வஸ் சித்த புத்தி தவிர்க்க வேண்டுமே -பகவத் சங்கல்பம் அதீனம் ஆச்சார்யத்வம் ஸ்வதஸ் சித்தம் இல்லை என்றவாறு-
ஸ்வரூப சித்திக்கு தன் ஆச்சார்யர் மங்களா சாசனம் -அவர் ப்ரீதிக்காக பரமாச்சார்யருக்கு மங்களா சாசனம் -இப்படி விநியோகம் கொள்ளும் படி ஆக்கிக் கொள்ள வேண்டுமே
பரமாச்சார்யருக்கும் ஸூ ஆச்சார்ய பரமாச்சாரியார் ஒழிந்த -மணக்கால் நம்பி ஆளவந்தார் ஒழிய -பெரிய நம்பி எம்பெருமானார் கூரத் தாழ்வான் —தன் ஆச்சார்யருக்கு இவர்கள் சிஷ்யர் என்ற எண்ணம் வேன்டும் –குருவி தலையில் பனங்காய் போலே -எல்லாம் ராமானுஜர் திருவடிகளில் சேரும் – சிஷ்யனுக்கு சித்த ஆச்சார்ய ஸ்மரணம் -ஒழிய சாதிக்கப் பட்டவர் என்ற எண்ணம் கூடாதே-பகவத் சங்கல்பத்தால் பெற்றோம் என்ற நினைவு வேன்டும்
நினைக்கைக்கு பிராப்தரும் -சக்தரும் -க்ருதஞ்ஞருமாய்ஆச்சார்ய ஈஸ்வர நினைவாலே சிஷ்ய ஆச்சார்ய சாஷாத் பலன்கள் சித்திக்கும் என்றவாறு–நம்மால் திருத்த முடியாத -என்ற செய் நன்றி -உண்டே -இவர்களுக்கு)

(யதா பிரதிபத்தி ரூபம் பொருந்தி இருக்கும் –விப்ரதிபத்தி மாறாடி இருப்பது நினைப்பிடுகை –சங்கல்பம்  யதா ப்ரதிபத்தி யுக்த -உபதேசிக்கும் ஆச்சார்யர் –மந்த்ர ரூப ஹித உபதேசிக்கும் -இவரே ஆச்சார்யர் – வியாச பகவான் -முக்கிய விருத்தி சர்வேஸ்வரன் இடம் தானே மற்றவை உபசார வழக்கு –இதே போல் ஆச்சார்யார் சொல்லும் திரு மந்த்ர உபதேஷ்டாவான அவரிடமே பொருந்தும்  – மற்றவர்கள் இடம் உபசார வழக்கு-பூர்த்தி இவர் இடம் மட்டுமே – பரம்பரையா வந்த ஆச்சார்ய பரம்பரை –பிரகாசம் -பதவி -பகவத் சங்கல்பத்தாலே பிரகாசப்படும்-உடையவர் இடம் விட்டு -74-சிம்ஹாசனாதிபதிகள் மூலம் -ஸத்ய ஸங்கல்பன்  ஜீவாத்மாவை அழிக்க சக்தனாக இருந்தும் ஸத்ய ஸங்கல்பன் என்பதால் நித்யம்-சுலபமாக நாம் அடைய வைத்த வழி தானே இது -சம்பிரதாய அடிப்படை –பகவத் சங்கல்பம் அடியாகவே -ஆச்சார்ய பரம்பரை என்றவாறு-பரதன் ஜ்யேஷ்ட ராம பக்தன் -தம்பியான படியால் இல்லை பரதன் ஆனபடியால் -அதே போலே உபதேசத்தால் மறைந்து உள்ள-வியஞ்சமான- ஆச்சார்யத்வம் சங்கல்பத்தாலே பிரகாசிக்கும்)

சாஷாத் பலமாவது-உபதேச பாத்ரமான இவன் திருந்தி மங்களா சாசனத்துக்கு ஆளாகை-

இது தன் நினைவாலே சித்திக்கை யாவது -உபதேஷ்டாவான தான் விப் ப்ரதிபத்திகள் ஒன்றும் இன்றி இதுவே பலமாக நினைத்து உபதேசிக்க -அவன் அப்படி திருந்தி மங்களா சாசன அதிகாரி ஆகை-

ஆசார்யத்வம் ஆவது -தன்னை ஆசார்ய பரதந்த்ரனாகவே அநு சந்தித்து இருக்கிற இவன்
தன் பக்கல் உபதேசம் கேட்கிறவனுக்கு ஆசார்யன்  ஆகை –

இது -ஈஸ்வரன் நினைவால் சித்திக்கை யாவது –
இப்படி -தன்னையும் -சிஷ்யனையும் -பலத்தையும் -விப் ப்ரபத்தி பண்ணாதே
உள்ளபடி அநு சந்தித்து உபதேசிக்கும் பரிபாகம் உடையனான இவன் -இவனுக்கு
ஆசார்யன் என்று நினைப்பிட்டு அருளுகையாலே இவனுக்கு ஆசார்யத்வம் உண்டாகை-

————————————–

இங்கன் அன்றி க்ரூர நிஷிதமாக அடியில் சொன்ன விப்ரதிபத்தியாலே உபதேசிக்கில்
உபய ஸ்வரூபமும் சித்தியாது -என்கிறார் –

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-இந்த நினைவு மாறாடினால் -இருவர் ஸ்வரூபமும் -நாசமாகும் -ஸூ ஆச்சார்ய பரதந்த்ரனான இவருக்கும் சிஷ்யருக்கும் என்றவாறு)

இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை -என்றது –
கீழ்ச் சொன்னபடியே யதா பிரதிபத்தியோடே உபதேசிக்கில் ஒழிய -ஈஸ்வரன் இவனை
ஆச்சார்யனாக நினைப்பிடாமையாலே -உபதேஷ்டாவுக்கு ஆசார்யத்வம் ஆகிற ஸ்வரூப
ஸித்தி இல்லை-

அப்படி யதா பிரதிபத்தியாலே இவன் உபதேசியாத அளவில் -உபதேச
ஸூத்தி இல்லாமையாலே அவனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூப சித்தி இல்லை -என்கை

—————————————

ஆசார்யனுக்கு இரண்டு குணம் அவஸ்யம் வேணும் என்கிறார் –

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-நியதமாக வேண்டுவது -தத்துவார்த்த உபதேஷ்டா -தத் சாரார்த்த ஸ்ரோதாவாய் வந்து ஆஸ்ரயித்த சிஷ்யர் பக்கல் -சரம அர்த்தம் அறிந்து உஜ்ஜீவிக்க கிருபையும் –இரக்கம் இருந்தாலே போதும் – உரிமை உடையவர் அருளியது தானே – சிஷ்ய ஆச்சார்ய சம்பந்தம் ஈஸ்வர சங்கல்ப அதீனம் தானேதனது ஆச்சார்யர் தனக்கு நியாந்தா -பாரதந்தர்யம் -அவருக்கு கருவியாக உபதேசம் செய்யும் எண்ணமும் வேண்டும்)

அதாவது
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு உஜ்ஜீவிஷூவாய் வந்து உபசன்னான சிஷ்யன் பக்கல்
ஐயோ என்று இரங்கி -அவன் உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பான உபதேசாதிகளை பண்ணுகைக்கு ஈடான கிருபையும் -தன்னைக் கர்த்தாவாக நினையாதே -அத் தலைக்கு கரண பூதனாக அநு சந்திக்கைக்கு ஈடான ஸ்வாசார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யமும் அவஸ்யம் உண்டாக வேணும் என்கை-

—————————————-

இவற்றால் பலிக்கும் அவற்றை அருளிச் செய்கிறார் –

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-தயா நீயானான -சிஷ்யன் -தயாளு ஆச்சார்யர் இத்தைப் பெற -தகுதி உடையவன் -ஸூ அசாதாரண ரூபம் -சரம ஞானமும் அனுஷ்டானமும் –பலம் கிடைக்க இரக்கத்தால் சித்திக்கும்
தனது ஆச்சார்யர் அதீனம் -உபதேச கர்த்தா அவரே தான் கருவி தானே –ஈஸ்வரன் ஆசைப்பட்டு மடியிலே வைத்து கொள்ளலாமே அதே போலே இவர் ஆச்சார்யர் என்ற நினைவால் சித்திக்கும் – ஸூ ஆச்சார்ய நித்ய பாரதந்தர்யம் இவருக்கு உண்டே -உபதேச கர்த்ருத்வம் தட்டாமல் ஆச்சார்யத்வம் சித்திக்கும் –உபதேச ப்ரேரத்வம் -சிஷ்யர் தூண்ட ஆச்சார்யர் உபதேசம்-நம்மாழ்வார் மைத்ரேயர் தானே அவர் அவா இது தூண்டத் தூண்டத் தானே திருவாய் மொழி –இரக்கம் தானே பிரேரிதம்- தூண்டும் -உபதேசம் பண்ண –ஸ்வ தந்த்ர கர்த்தா என்ற தூஷணம் போக்கிக் கொள்ள ஆச்சார்ய பரதந்தர்யர் என்ற எண்ணத்தால் போக்கி கொள்ளலாமே )

அதாவது –
அப்படி அவன் ஸ்வரூபம் திருந்தும் அளவும் உபதேசாதிகளைப் பண்ணிப் போரும்
இவன் கிருபையாலே -நாளுக்கு நாள் ஸ்வரூபம் நிர்மலம் ஆகையாலே சிஷ்யனுடைய ஸ்வரூபம் சித்திக்கும் –

ஸ்வ கர்த்ருத்வ புத்தி அற்று -ஸ்வாசார்ய கரண பூதனாக தன்னை அநு சந்திக்கைக்கும் –
மற்றும் சர்வ கார்யத்திலும் -தத் அதீனாய் வர்திக்கைக்கும் உடலான பாரதந்த்ர்யத்தாலே
ஆசார்யனான தன்னுடைய ஸ்வரூபம் சித்திக்கும் -என்கை –

ஆக
கீழ்ச் செய்ததாய் ஆயிற்று ஹித உபதேச சமயத்தில் ஸ்வ விஷயத்திலும் –
சிஷ்ய விஷயத்திலும் –
பல விஷயத்திலும்
உண்டாம் விப்ரதிபத்திகள் தான் இன்னது என்றும் -308-
இவன் நினையாது இருக்க -த்ருஷ்ட பிரயோஜனாதிகள் வந்து சித்திக்கும் வழியும் -310-
சாஷாத் பல ஆசார்யத்வங்கள் சித்திக்கும் வழியும் -311-
இப்படி அன்றியே விப் ப்ரபுத்த்யா உபதேசிக்கில் உபய ஸ்வரூபமும் சித்தியாமையும் -312-
ஆசார்யனான அவனுக்கு  அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313
தத் உபய பலமும் -314
சொல்லிற்று ஆயிற்று –

——————————————

இப்படி உபதேச  அநு குண நியமங்களை தர்சிப்பித்த அநந்தரம் -உபதேசிக்கும் அளவில் –
இந்த மந்த்ரத்தை உபதேசித்தவனையே -சாஷாத் ஆசார்யன் என்பது -என்கிறார் –

சூரணை -315-

நேரே ஆசார்யன் என்பது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

(ஆயி ஸ்வாமிகள்-சம்சார வர்த்தகம் -ராம கோபால மந்த்ரங்கள் குழந்தை பேற்றுக்கும் ஐஸ்வர்யத்துக்கும்  ஏவம் குண விசிஷ்டன் கிருபை பாரா தந்தர்யம் –
விசிஷ்ட பரிஹிரீத திருமந்திரம் -சடக்கென -ஸக்ருத் உச்சாரண மாத்திரம் -உபய ரஹஸ்யமும் தன் பக்கல் அடங்கும் படியான த்வயம் –ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான குரு பரம்பரையா பூர்வக த்வயம் -தத் ஏக நிஷ்டராய் -நினைவில் மாறாட்டம் இல்லாமல் உபதேசிப்பவன் –சர்வ சங்க்ரஹமாய் -எம்பெருமானே சிஷ்யனுமாய் -உபதேசித்த பெருமை -சம்சார நிவர்த்தக சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான -திரு மந்த்ரம் -என்றும் அருளிச் செய்வார்-சரம ஸ்லோகம் விதிக்கும்-த்வயம் அனுஷ்டானம் -சரணாகதியைக் காட்டிய -சரம ஸ்லோகமும் -என்றுமாம் -ஆக ரகஸ்ய த்ரயமும் அனுசந்தேயம்)

நேரே ஆசார்யன் என்பது –என்கிறது -ஆசார்யத்வம் குறைவன்றி இருக்கச் செய்தே –
ப்ரதீதி மாத்திரம் கொண்டு செல்லும் அளவு அன்றிக்கே -சாஷாத் ஆசார்யன் என்று சொல்லுவது -என்றபடி –

சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்தவனை -என்றது
ஐஹ லவ்கிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப் படியே அகில பல பிரதமாய் இருந்ததே ஆகிலும் –
அந்ய பலங்களில் தாத்பர்யம் இன்றிக்கே -மோஷ பலத்தில் நோக்காய் இருக்கையாலே –
சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாஷரோ ந்ரூணாம் அபுநர்ப்பவ காங்ஷீணாம்-என்கிறபடியே
சம்சார நிவர்தகமாய் -அத ஏவ – மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாணாம் குஹ்ய முத்தமம் பவித்ரஞ்ச பவித்ராணாம் மூல மந்த்ரஸ் சநாதன -என்கிறபடியே
சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான பெருமை உடைத்தான திரு மந்த்ரத்தை –
சம்சார நிவர்தகத்வ பிரதி பத்தி யோடே கூட உபதேசித்தவனை-என்கை –

த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே -இதில் மத்யம சரம பத விவரணமாய் -சரம ஸ்லோகம் பூர்வ உத்தர அர்த்தங்களாலே அதில் பூர்வோத்தர வாக்ய விவரணமாய்
இருக்கையாலே -மற்றைய ரஹஸ்ய த்வயமும் -பிரதம ரஹஸ்யமான இத்தோடே அன்வயமாய் இருக்கையாலே -இத்தைச் சொல்லவே – அவற்றினுடைய  உபதேசமும் தன்னடையே சொல்லிற்றாம் என்று திரு உள்ளம் பற்றி -பெரிய திரு மந்த்ரத்தை உபதேசித்தவனை – என்கிறார் –

ஆகையால் இது ரஹஸ்ய த்ரயத்துக்கும் உப லஷணம் –

———————————————————-

பகவன் மந்த்ரங்களில் ஏதேனும் ஒன்றை உபதேசித்தவர்களுக்கும் ஆசார்யத்வம் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-ஒழிந்த தன் மந்த்ர உபதேஷ்டாக்களுக்கும்-பூர்த்தியும் இல்லை – ருசி பேதத்தால் -ஷூத்ரம் கைங்கர்யமாக ராம கோபால மந்த்ரம் சொன்னால் அவை ஷூத்ரம் ஆகாதே -பலம் கருதி சொன்னால் தானே ஷூத்ரமாகும்- மஹா மந்திரத்துக்கு எதிர்த்தட்டாக -அல்ப அஸ்திரம்-வியாபக மந்த்ரங்கள் மூன்றும் -மற்றவை அவ்யாபக மந்த்ரங்கள் -ஓம் கேசவயா நம -ஓம் நமோ நாராயணாயா –நம முன்பும் திரு நாமம் பின்பும் இவற்றில் மட்டும் தானே -சம்சார நிவர்த்தகம் இவற்றுக்கு என்பதால் -அசிஷ்டர்களும் சொல்லுவார்கள் மற்றவற்றை -அபூர்ண அர்த்தத்வம் இவற்றுக்கு  வியாப்தி –யார் நாராயணன் –யாரை -நாரங்களை –வியாபகம் வியாபகம் வியாப்தி பூர்த்தி பலம் ஐந்தையும்பூர்ணமாக உபாயம் ப்ராப்யமாக -இதில் மட்டுமே —அஷ்ட ஸ்லோகி -சொல்லுமே – மேல் எழுந்த ஆச்சார்யத்வம் மட்டும் ப்ரதீதி- உபசாரமாக மற்றவர்களுக்கு)

அதாவது –
சம்சாரத்தை நிவர்த்திப்பியாத மாத்திரம் அன்றிக்கே -வளர்க்குமவையாய்-
பெருமை அன்றிக்கே ஷூத்ரங்களுமாய் இருந்துள்ள -தத் இதர பகவன் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு -உபதேஷ்ட்ருத்வ பிரயுக்தமான ஆசார்யத்வ பிரதீதி மாத்ரம் ஒழிய தத் பூர்த்தி இல்லை -என்கை –

——————————-

ஷூத்ரங்கள் எனபது -ஷூத்ர தேவதா மந்த்ரங்களை அன்றோ –
பகவந் மந்த்ரங்களை இப்படிச் சொல்லுகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பல த்வாரா –

(ஆயி ஸ்வாமிகள்-விலக்ஷண பகவான் மந்த்ரங்களை -ஷூத்ரம் -என்னலாமோ என்னில் -பலத்தினால் -அபிசந்திக்கு ஈடாக -(விருப்பத்துக்குத் தக்கபடி தருவதால்)

அதாவது –
பர தேவதையான பகவத் விஷயம் ஆகையாலே வந்த பெருமையை உடைய மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்று சொல்லுகிறது -அர்த்த காம புத்திர வித்யாதி ஷூத்திர
பலன்களைக் கொடுக்கிற வழியாலே –

———————————————

சம்சார வர்த்தகங்கள் என்கிறது என் என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்-ஆத்ம பிரதிகூல ரூப துக்கம் -ஆவஹமான அநாதிகால அவித்யா வஸ்யனாய் -மகா பல பிரவர்த்தகம் – சம்சாரிக துக்க பிராய ஷூத்திர பலன் -சுகம் போலே தோன்றும் –கிடைத்தாலே சம்சாரம் வளரும்)

அத்தாலே -என்றது கீழ் சொன்ன பந்தகமான ஷூத்திர பலன்களைக் கொடுக்கையாலே -என்கை –

——————————————

ஆனால் இவற்றுக்கு இது ஸ்வாபாவிகமோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

(ஆயி ஸ்வாமிகள்-இயற்கையிலே இப்படி இல்லை -காரணத்தால் -கொடுக்கும் – சம்சார வர்த்தகம் -உபாதி ப்ரயுக்தமாய் வந்தது-)

இது தான் -என்று ஷூத்ர பல பிரதத்வத்தை பராமர்சிக்கிறது –
 (ஒவ்பாதிகம் -என்றது -உபாதி பிரயுக்தமாய் வந்தது இத்தனை -என்கை –)

—————————————–

அத்தை உபபாதிக்கிறார் –

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –

(ஆயி ஸ்வாமிகள்-மந்த்ர ஜபம் பண்ணும் -பிரகிருதி வஸ்யன்-நிபந்தனமாக ஹீந ருசியாலே வரும் -)

(ஆயி ஸ்வாமிகள்-உபதேசம் -செய்யும் யோக்யதை –பகவத் சங்கல்பத்தால் பிரகாசப்படும் -ஆச்சார்யத்வம் -பண்பு –ஜாதி – குணம் -கிரியை -போதக சக்தி சப்தத்துக்கு -சாப்தம் ஆர்த்தம்-இரண்டும் உண்டே – ஆச்சார்யத்வம் இருப்பது பகவான் இடம் தான் -ஆச்சார்யர் இடம் இல்லை -கீதாச்சார்யன் – திருவாய் மொழியும் -அவன் இடம் தான் –நிஷ்க்ருஷ்ட பகவத் ஸ்வரூப தர்மம்  விசிஷ்ட பகவத் ஸ்வரூபம் இரண்டும் கொண்டு இவற்றை விலக்ஷண ஆத்ம விசிஷ்ட பகவத் ஸ்வரூப தர்மம் -ஆச்சார்யத்வம் -பரம்பரையா உபதேசிக்கும் இடத்தில் – பாரம்பர்ய உபதேசத்திலும் –விலக்ஷண ஆத்ம விஸிஷ்ட ப்ரஹ்மம் -அதாவது ஆச்சார்ய விஸிஷ்ட ப்ரஹ்மம் -நிஷ்க்ருஷ்ட வேஷம் கூடாதோ என்னில் -விசிஷ்ட ப்ரஹ்மம் எதற்கு -குரு பரம்பரைக்கு -ஸ்வரூப ஐக்கிய தோஷம் பிரசங்கிக்கும் —

தத் அதிஷ்டித குரு பரம்பரை ஜீவாத்ம ஸ்வரூப தர்மம் என்று சொன்னால் – –ஆத்ம தர்மம் -ஆத்ம புத்தி தோஷம் பிரசங்கிக்கும் -தேவு மற்று அறியேன் -பொருந்தாதே –
அன்றிக்கே இருவருக்கும் உண்டே -என்று சொல்வோம் ஆகில் -ஆச்சார்யத்வம் பொதுவாக சொன்னால் –பரமாத்மா தர்மம் ஜீவாத்ம தர்மம் இரண்டும் சொல்வது பொருந்தாதே –
ஜாதியே வேறே -ஒரு ஆச்சார்யத்வத்தில் பர்யவசாயம் ஆக முடியாதே- ஸ்வாமி தாச -ஈஸன் ஈஸித்வயம் -ஆத்ம சரீரம் -பர்த்தா பார்யா -அன்றோ –ஏக பத அர்த்த த்வதீய வ்யாவ்ருத்தி தோஷம் வருமே -ஆக பகவத் குணம் என்றே கொள்ள வேணும் –லோக அநல வத்– உருகின இரும்பில் இரும்பும் நெருப்பும் கலந்து -இரும்பை அதிஷ்டானம் செய்த நெருப்பு -தானே-தன்மை இரும்பினதா நெருப்பினதா – நெருப்பின் தான் –அதிஷ்டானம் பண்ணப்பட்ட இரும்பு ஆச்சார்யன் -அதிஷ்டாதா பகவான் -என்றால் பொருந்தும் அன்றோ –தேவு மற்று அறியேன் – -நாராயண வஸதி நம்மாழ்வார் -வடதள சடகோப வாக் வபுஸில் -விலக்ஷண -ஆத்ம உடன் விசிஷ்டமாக இருந்து திருவாய் மொழி அருளினான்
குரு ரேவ பரம் ப்ரஹ்ம -ஆச்சார்யனே ஈஸ்வரன் என்னத் தட்டு இல்லை பரா கதி சாஷாத் அவரே -சாமா நாதி கரண்யம்-இவர் தான் அவர் என்னலாம் –
ஆச்சர்யரை மனுஷ்யர் என்னும் அந்யதா ஞானம் போகும் -ஸ்வரூப ஐக்கியம் குரு பரம்பரை வீண் -பிரமமும் போகும்

ஆச்சார்யர் இடத்தில் பகவத் பிரதிபத்தியை பண்ணுவான் சிஷ்யன் –
ஸூவ விஷயத்தில் -தன்னுடைய ஆச்சார்யர் இடம் பரதந்த்ரர் என்று தன்னை எண்ணுவான்
இரண்டும் மாறாடினால் குறை – பிரதிபத்தி த்வயத்தால் –ஒரே ஆசார்யனை சிஷ்யன் சேஷி என்றும் தான் சேஷன் என்றும் நினைப்பதால் த்வய பிரதிபத்தி உண்டாகும்-
வியாவ்ருத்த ஸ்வரூப விசேஷம் –விபரீத பிரதிபத்தி த்வயத்தாலே ஒன்றிலே ஒதுக்குகை -அவரும் சேஷி என்று நினைத்தால் -தோஷம் உண்டாகும்-அப்பா பிள்ளைக்கு -இருந்தாலும் தன் அப்பாவுக்கு தான் பிள்ளையே – இரண்டும் உண்டாகும் –ஒன்றிலே ஒதுக்கினால் விபரீத பிரதிபத்தி உண்டாகும் -பகவானே இவர் என்று நினைத்தால் -அதிஷ்டானம் என்று நினைக்காமல் குரு பரம்பரை ஐக்கியம் உண்டாகும்
ஸூ -பர பிரதி பத்தியாலும் -ஸூ பர விபாகம் இல்லாமல் இருப்பது சர்வேஸ்வரன் ஒருவன் இடம் தானே -சேஷி -ஏக பிரதிபத்தி – மா முனிகள் இடம் மட்டும் சேஷன் -ஈடு சாதித்த பின்பு – ஸூ பர பிரதிபத்தி த்வயம் மற்ற எங்கும் –ஏக பிரதிபத்தி நடப்பது ஸ்வ தந்த்ர சேஷிக்கு மட்டுமேமற்றவர் பரதந்த்ர சேஷி -ஸூ பிரதிபத்தி பரதந்த்ரர் பர சிஷ்யர் நினைவால் சேஷி தானே
சிஷிதனான இவன் -ஆச்சார்யன்–அஹம் என்ன மாட்டானே -ஞானம் வந்ததே -அப்படி அன்றாகில் சேஷி என்று சொன்னால் பழைய தேவோஹம் என்பதே தலைக் கட்டுமே
சரீர ப்ரயுக்தம் போலே ஆகுமே -தேஹாத்ம அபிமானம் அங்கு –இங்கு உயர் நிலை அபிமானம்-யானைக்கு தக்க வீக்கம் -சேஷனாக இருக்க சேஷி என்ற நினைவு –

ஆச்சார்யத்வம் ஸூவ ஆச்சார்யத்வம் பரமாச்சார்யத்வம் த்விதம் –
பரமாச்சார்யரான ஆளவந்தார் என்பர் எப்பொழுதும் ராமானுஜரை நிலையில் வைத்து அருளிச் செய்வார்
அதில் ஸூவ ஆச்சார்யர் -ஸ்வ தந்த்ர ஆச்சார்யர் என்றும் பரதந்த்ர ஸூவ ஆச்சார்யர் என்றும் இரண்டு –குரு பரம்பரை ஒத்து கொள்ளாமலுமொத்துக் கொண்டும் பரமாச்சார்யரும் இப்படி இரண்டு –
ஸ்வ தந்த்ர ஆச்சார்யருக்கு- ஸூவ ஆச்சார்யர்  சத் பாவ யோக்யதையே இல்லையே –
பர தந்த்ர ஸ்வாச்சார்யருக்கு -பரதந்த்ர பரமாச்சார்யருக்கும் தத் உபயமும்-ஸூவ ஆச்சார்யத்வம் பரமாச்சார்யத்வம்- உள்ளது -)

அதாவது –
பகவன் மந்த்ரங்கள் ஆகையால் -மோஷ ப்ரதத்வ சக்தியும் உண்டாய் இருக்கச் செய்தே -இவற்றினுடைய ஷூத்திர பல ப்ரதத்வம்
பிரகிருதி வஸ்யனான சேதனனுடைய ஷூத்திர பல ருசியாலே வருகையாலே -என்கை –
ஐஸ்வர்ய காமர்க்கு கோபால மந்த்ராதிகளும் –
புத்திர காமர்க்கு ராம மந்த்ராதிகளும் –
வித்யா காமர்க்கு ஹயக்ரீவ மந்த்ராதிகளும் –
விஜய காமர்க்கு -ஸூதர்ஸன நாரஸிம்ஹ மந்த்ராதிகளுமாய் -இப்படி நியமேன
ஷூத்திர பலன்களையே கொடுத்துப் போருகிற இது -சேதனனுடைய ருசி அநு குணமாக
இவ்வோ மந்த்ரங்களில் இவ்வோ பலன்களைக் கொடுக்கக் கடவது என்று ஈஸ்வரன் நியமேன கல்பித்து வைக்க இறே –
அது தான் சேதனருடைய ருசி அநு குணமாக கல்பித்தது
ஆகையாலே அவற்றுக்கு அவை ஸ்வாபாவிகம் அன்று -ஒவ்பாதிகம் என்னலாம் இறே

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -268-307-தத் அதிகாரி க்ருத்யம் -பெறுவான் முறை -பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 28, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்–பெறுவான் முறை-

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307- இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————-

இப்படி புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹானி  வாராதோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -268-

உபாயம் ஸ்வீகார காலத்தில்  புருஷ சாபேஷமுமாய் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும் –
கார்ய காலத்தில்  உபய நிரபேஷமாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்–நிரபேஷமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகாரத்தில் ஸ்வீ கர்த்தாவும் ஸ்வீகரிப்பிக்கும் அவளும் வேணுமே -ஸ்வீகர்த்தா இல்லை என்றால் ஸ்வீ காரமும் இல்லையே – புருஷகாரம் இல்லை என்னில் ஸ்வீகார அதிகாரம் இல்லை
ஸ்வீகார அநந்தரம்  கார்ய பல காலத்தில்  அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி சமயத்தில் இருவரையும் எதிர் பார்க்காமல் தானே செய்யுமே-ஆக நைர பேஷ்யத்துக்கு பங்கம் இல்லையே )

(சரணமாகும் தன தாள் அடைந்தாற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–சரம ஸ்லோகம் -ஏக சப்தம் -இரண்டு பக்ஷங்கள்
என்னை தவிர வேறே ஒன்றுமே உபாயம் இல்லை ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது -புருஷகார புரஸ்காரம் விருத்தம் ஆகாதோ என்னில் –
ஐந்தாம் அதிகாரி –ஸ்வீயகார ஸ்வீகாரம் உபாயம் -சித்த உபாய நைர பேஷ்ய பிரசங்கமே இல்லை –-பிரபத்தியை எதிர் பார்க்கிறார் என்று உபாய பிரதிபத்தி தானே அதுஅங்கே ஏக சப்தார்த்தம்  என்னைப் பற்று -இத்தை தவிர வேறே உபாயம் இல்லை என்றவாறு –என்னை மட்டுமே பற்று என்றவாறு -பற்றுதலாகிற உபாயம் தவிர வேறே ஒன்றையும் பற்றாதே –
பிராட்டிக்கு உபாயத்வமும் -வேதாந்த தேசிகர் பக்ஷம் -ஏக சப்தம் ஸ்வீ காரம் பிரதான பரம் என்பர்-பற்றும் பற்றுதலும் உபாயம் இல்லை -லோகாச்சார்யார் பக்ஷம்  -)

அதாவது
சஹாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம்
சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில்  ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –
ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும்  அபேஷித்து இருக்கும் –

ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற கார்ய காலத்தில் 
புருஷனும்  புருஷ காரமும்  ஆகிற உபயத்தையும் அபேஷியாதே தானே செய்து தலைக் கட்டும் என்கை –

கார்ய காலத்தில் ஸஹகாரி சாபேஷம் உண்டாகில் இறே உபாயத்தினுடைய நைரபேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து

——————————————-

ஸ்வ பிரயோஜன பரரை பிரதி கூலர்  என்று அவிசேஷண அருளிச் செய்தார் இறே –
இந்த ஸ்வ பிரயோஜன பரதை அனுகூல அக்ரேசரான ஆழ்வார்கள் பக்கலிலும் தோற்றி இருக்கையாலே தந் நிபந்தனமான பிரதி கூல்யம் அவர்கள் பக்கல் வராதபடி
பரிஹரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி  தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –

சூரணை -269-

ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –

(ஆயி ஸ்வாமிகள்-பிரதிகூலர் வகையைச் சொல்லுகிறது – விஷய தோஷம் ஒழிய ஆழ்வார்கள் தோஷம் இல்லையே – பேர் அழகு லாவண்யம் ஸுந்தர்யம் குற்றம் -அத்தை ஆழ்வார்களால் விலக்க முடியாதே -)

நமக்கே நலம் ஆதலில் -என்றும் –
நாம் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே -என்றும் –
கண்டு நான் உன்னை உகக்க -என்றும் –
இத்யாதி வசனங்களாலும் –
மடல் எடுக்கை முதலான பிரவிருத்திகளாலும் –
ஆழ்வார்களுக்கும் இந்த ஸ்வ பிரயோஜன பரத்வம் உண்டாகத் தோற்றா நின்றது இறே –
ஆன பின்பு ஸ்வ பிரயோஜன பரரை எல்லாரையும் பிரதி கூலர் என்று சொல்லப் பார்க்கில்
ஆழ்வார்களையும் அப்படி நினைக்க வேண்டி வாராதோ என்று சங்கைக்கு அபிப்ராயம் —

————————————–

அத்தை பரிஹரிக்கிறார் –

சூரணை-270-

இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–

(ஆயி ஸ்வாமிகள்சேஷத்வ ஆஸ்ரயமான ஜீவ ஸ்வரூபத்துக்கு -பர ஏக பிரயோஜனத்துக்கு மட்டும் என்று இல்லாமல் -ஸூ பிரயோஜனமாக -தனக்காக இருந்தமை குற்றம்
பகவத் விஷயத்தில் உள்ள பேர் அழகு என்பதே விஷய தோஷம் -புத்தியை பேதலிக்க வைப்பதே தோஷம் –அத்யந்த அசித்வத் பாரதந்தர்ய நிலையை மாற்றி நினைக்க வைத்த இதுவே தோஷம் என்றவாறு-இணைக் கூற்றங்களோ அறியேன் என்னப் பண்ணுமே திருக் கண்கள்-)

அதாவது –
பிரதி கூலமாக சொல்லுகிற இவ்விடத்தில்  ஸ்வ பிரயோஜனம்  என்கிறது –
அனுபவ கைங்கர்யங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வ பிரயோஜனத்தை என்கை –
இத்தை  ஆஸ்ரய தோஷம் ஜன்யம்  என்று ஒதுக்குகையாலே  ஆழ்வார்களுடைய ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யம் என்று கருத்து –
(இது தன்னை விஷய  தோஷத்தால் வருமவை -சூரணை -272 – என்கிற வாக்யத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார் இறே–)

————————————–

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –

சூரணை -271-

ஆகையாலே தோஷம் இல்லை –

(ஆயி ஸ்வாமிகள்-ஸூ பிரயோஜனத்வம் ஆழ்வார்கள் இடம் இல்லை -வருமா என்ன வேண்டிக் கொள்ள வேண்டுமே ஆழ்வார்கள் நிலையை –ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் -அவித்யா அடியாக வந்தால் தானே தோஷம் -விஷய தோஷமே இங்கு –ஸூ பிரயோஜன பரர்களை மட்டும் பிரதி கூலர் என்னலாம் -)

அதாவது –
பிரதி கூல்ய ஹேதுவாக சொல்லப் பட்ட  ஸ்வ பிரயோஜனம்  ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் 
ஆழ்வார்கள் பக்கல் ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யமாய் இருக்கையாலே –
அந்த பிரதி கூலம் இவர்கள் பக்கலிலும் வரும் என்கிற தோஷம் இல்லை என்கை –

அன்றிக்கே –
ஸ்வ பிரயோஜன பரரை சாமான்யேன பிரதிகூலர் என்று சொல்லும் அளவில் –
அனுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலும் இந்த ஸ்வ பிரயோஜன பரதை தோற்றுகையாலே –
அவர்களையும் பிரதிகூலர் என்று நினைக்க வேண்டி வருகையாலே -ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்கை தோஷம் அன்றோ என்று நினைத்து பண்ணின சங்கையை அநு வதிக்கிறார்-இங்கு  என்று தொடங்கி அர்த்தம் பூர்வவத் நிகமிக்கிறார் –

ஆகையால் தோஷம் இல்லை -என்று –ஆகையால் என்ற இதுக்கு அர்த்தம் -பூர்வவத் -தோஷம் இல்லை என்றது  ஸ்வ பிரயோஜன பரரை பிரதிகூலர் என்று சொன்னதில் தோஷம் இல்லை என்கை  என்று இங்கனே யோஜிக்கவுமாம் –

——————————————–

இப்படி ஆஸ்ரய தோஷ ஜன்யம் அன்றிக்கே  விஷய தோஷ ஜன்யம் ஆனாலும் ஸ்வரூப விருத்தமானது  த்யாஜ்யமாய் அன்றோ  என்ன அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -272-

விஷய தோஷத்தால் வருமவை எல்லாம்  துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —

(ஆயி ஸ்வாமிகள்-துஸ் த்யஜயமாய் – விடவே முடியாது என்றவாறு –விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -நம்மால் தடுக்க முடியாதே –
சேஷனான அதிகாரிக்கு விஷயம் அனுபவத்துக்கும் கைங்கர்யத்துக்கும் –சேஷித்வம் -விக்ரஹ வை லக்ஷண்யம் என்கிற தோஷத்தால் வரும் ஸூ பிரயோஜனத்வம் –
நமக்கே நலமாதலால் -ஸூ போக்யத்வம் அனுசந்தானம் பண்ணி வருந்தி த்யஜிக்க தேடினாலும் போக்க முடியாதே -இருப்பதே என்று பரிக்ரஹிக்கிறார் –
ஆஸ்ரய தோஷத்தால் வந்த அவித்யை அடியாக வந்தால் போக்கத் தக்கதே–ஸ்வரூப ஞானம் பிறக்கவே விட்டுப் போகும் –விஷய தோஷம் அடியாக வந்த –
இது போகவே போகாதே –ஆழ்வார்கள் அனுகூல சீமா பூமி அன்றோ-அனுகூல விசேஞ்ஞர்கள் அன்றோ இவர்கள் – -பிரதி கூல லேசமும் இல்லையே –
விஷய தோஷம் நித்யமாகையாலேஆடவர் பெண்கள் அவாவும் தோளினாய் -தானும் நித்தியமாய் -விடப் பட வேண்டாதாய் -கொள்ளத் தக்கதாய் இருக்குமே –
விக்ரஹ வை லக்ஷண்யம் கல்யாண குணம் ஆகிலும் தோஷத்வ கதனம்-ஸ்வரூப விரோதம் ஸூ பிரயோஜனத்தை தூண்டி விட்டதால் —வருமவை என்றது ஸ்வ பிரயோஜன புத்தி -அதுக்கு அடியான ப்ராவண்யம் -மடல் எடுப்பவை போன்ற பிரவ்ருத்திகள் எல்லாம்)

அதாவது –
அனுபவ விஷயமான அவனுடைய வயிர உருக்காய் ஆண்களையும் பெண் உடை உடுத்தும் படியான விக்ரஹ வைலஷண்யமாகிற தோஷத்தால் வருகிற  ஸ்வ பிரயோஜன பரதை தத் ஹேதுவான ப்ராவண்யம் தத் சித் யர்த்தமான வியாபாரங்கள் ஆகிற இவை எல்லாம் 
ஸ்வரூப விருத்தம் என்று விடப் பார்த்தாலும்  விட அரிதாய் இறே -இருப்பது என்கை –

விஷய தோஷத்தாலே வருமது  என்ற பாடமான போது ஸ்வ பிரயோஜன மாத்ரத்தையே சொல்லுகிறது –

———————————————

விஷய தோஷத்தால் வரும் அதின் துஸ் த்யஜ்யத்வத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சூரணை -273-

ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்யதிச்ச்சதி-

(ஆயி ஸ்வாமிகள்-அனுஷ்டான சேஷமாக விட முடியாததை -காட்டி அருளுகிறார் செவிடரோடு ஊமையர் வார்த்தை போலே இது ஆண்டாள் –நீங்கள் சொல்வதை நான் கேட்க்கும் சக்தர் அல்ல-ஸ்ரீ யபதி விஷயமாக இரு புரி உண்டு வரும் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்கள் அன்றோ -பிராவண்ய விஷயம் –உபேய கோடியிலே நின்ற நான் பட்டது பட்டால் மடல் எடுத்த என் தமப்பனார்கள் தான் அறிவார்
வல் வினையாட்டிகள் தான் அறியலாம்உபாய கோடியில் நின்று அந்த பிராப்யாம் கனா கூட கண்டு அறியாத உங்களுக்குவன் நெஞ்சினர் உங்கள் அறிவுக்கு விஷயம் அன்று
மடுவில் திரு முக்களம் போல் -ஆழ்ந்து உள்ள எனக்கு ஆழம் கால் பட்டு சலனமே இல்லாத எனக்கு நீங்கள் சொல்லும் நிஷேத வசனம் எல்லாம் கேட்பதற்கும் சொல்வதற்கும் கரணம் அற்ற இவள் கேட்க சக்தி அல்லள் –உங்களுக்குத் தெரியாதே பேசுவதும் வெறும் வாய் ஆசைப்பதே —ஹிதம் சொல்லும் தாயாரைப் பார்த்துவிட முடியாது என்பதற்கு பிரமாணம்ஆளவந்தார் -ஸ்ரீ ஸூக்தி -மதுவே ஜீவனமான வண்டு தாமரை தேனில் மூழ்கி நிற்க -முள்ளிப் பூவின் தேனை –போந்தது- என் நெஞ்சு என்னும் பொன் வண்டு தெளி தேனை உண்டு இருக்க -விட முடியுமோ -திரும்பியே பார்க்காதே)-)

(என்னோடு வேறு பட்டு இருந்தீர் -மற்று -என் நெஞ்சினால் நோக்கி காணீர் –
மாதவன் என்பதோர் அன்பு பிராவண்யத்தை நன்றாக கொண்ட எனக்கு இருந்தேன் –நகர முடியாமல் நான் இருக்க –கமனம் தடுக்கும் உங்கள் பேச்சு எல்லாம் -கேட்க சக்தி இல்லாதவரைக் குறித்து பேசுவதற்கு சக்தி இல்லாதவன் பேசுவதோடு ஒக்கும் )

மற்று இருந்தீர்கட்க்கு  என்று தொடங்கி  அத் தலையாலே பேறு என்று அறுதி இட்டால் அவன் வருமளவும் க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண் நீ இங்கனே பதறலாகாது என்ற தாய்மாரைக் குறித்து –
இவ் விஷயத்தில் பிராவண்யமின்றிக்கே என்னுடைய நிலைக்கு வேறாய் இருந்த உங்களுக்கு  எனக்கு ஓடுகிற தசை அறியப் போகாது –
அவன் அவன் என்று வாய் புலத்தும்படி  ஸ்ரீ யபதி  விஷயமான பிராவண்யத்தை மாறுபாடு உருவ உடையளாய் இப்படி அவனை ஒழியச் செல்லாமை உண்டானால்  அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாய் இருக்க  அதுக்கு கால்நடை தாராதபடி  இருக்கிற எனக்கு  நான் அவனோடு சென்று சேராமைக்கு உறுப்பாக நீங்கள் செல்லும் வார்த்தை 
கேட்க்கைக்கு பரிகரம் இல்லாத செவிடரோடே சொல்லுகைக்கு பரிகரமிலாத ஊமைகள் சொன்னால் போலே இருப்பது ஓன்று என்று ஆண்டாள் அருளிச் செய்கையாலும் –

தவாம்ருதச்யந்தினி என்று தொடங்கி வகுத்த சேஷியான தேவருடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளில் போக்யதையில் அழுந்தின நெஞ்சு – மற்றொரு ஸூத்திர விஷயத்தை விரும்பும் படி எங்கனே –
மதுவே ஜீவனமான வண்டு மது பரிபூரணமான தாமரைப் பூ வானது  நில்லா நிற்கச் செய்தே  அதின் சுவடு அறிந்த தான் கிட்டுகை அரிதாய் கிட்டினாலும் நாக்கு நனைக்க போகாதாய் இருக்கிற முள்ளிப் பூவில் சென்று படியாத மாத்ரம் அன்றிக்கே -அத்தை கடாஷிப்பதும் செய்யாதே என்று -ஆளவந்தார் அருளிச் செய்கையாலும் –

விக்ரஹ வைலஷண்யம் கண்டு பகவத் விஷயத்தில் பிரவணரானவர்களை மீட்க அரிது என்று தோற்றுகையாலே விஷய தோஷத்தால் வருமது துஸ் த்யாஜ்யம் என்னுமிடம் சித்தம் -இறே

—————————————————–

ஆக –
தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை
விவரித்தார் கீழ் –
சதாசார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக்  கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –

சூரணை -274-

இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜ்யம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —

(ஆயி ஸ்வாமிகள்-மங்களாசாசனம் -அனுகூல பிரதிகூல -மூன்றையும் விஸ்தரித்த பின்பு -சதாசார்ய பிரசாதத்தால் -விளைந்த வளர்ந்த -தினசரியா அனுசந்தான குணங்கள் –
அதிகார பூர்த்தி யர்த்தமாக -வளர்ந்து கொண்டு போக –
ஹித உபதேசத்தால் ஸ்வரூபம் மாறாத படி சதாசார்ய சந்நிதியும் -தத் அலாபத்தில்- கிடைக்காத பக்ஷத்தில் -அவன் காட்டிக் கொடுத்த அர்ச்சாவதார பகவத் சந்நிதியும் – -பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ குருவி காட்டும் இடத்தில் வாழலாமே –
சம விகல்பம் இல்லை -விவஸ்தித விகல்பம் -கதா சித் கேசவ பக்தி -தத் பக்த பக்தி -சம்சாரம் தாண்ட -விஷ மரம் -கேசவன் தமர் -அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன்
கர்ம பாகத்திலும் ப்ரஹ்மச்சாரி அத்யயனம் குருகுல வாசமே முற்பட விதித்தது
ஞான அனுஷ்டான வைபவம் வாயாரச் சொல்லி -தத் உபய அபாவம் தனக்கு –இது சமுச்சயம் அல்ல -பிரதானம் ஆச்சார்ய வைபவம் –தாழ்ந்த என்னையும் தூக்கி விடும் வைபவம் காட்ட -வேறே ஒன்றையும் பேச கூடாதே என்பதால் இத்தைச் சொன்னதும் அதுக்கு அதிசயகாரம் என்பதை காட்டவே – நீசத்தை பாராமல் அங்கீ கரித்து அருளும் வைபவம்
புன்மையாக -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னை -விசேஷண அன்னையாய் அத்தனாய் ஹித பிரியம் -அருள் மிக்கதே -ஆச்சார்ய வைபவ கதனம்
அநதிகாரிகள் கேளாமல் –ஜப்த்தவ்யம் த்வயம் பூர்வ பாவியான குரு பரம்பரையும் -குரு பரம்பரையை முன்னிட்டு த்வயமும் – இரண்டும் சேர்ந்தே இருக்க வேன்டும் பிரியாதே -சமுச்சயம் பின்னம் இல்லைஸஹ அனுசந்தான நியதி பரம் அத்தனை –
உத்தேசியர் குரு பரம்பரை -ஆச்சார்ய பிரியதயா என்பதால் ஆச்சார்யர் தனியனும் த்வயமும் -சேர்ந்தே அனுசந்திக்க வேன்டும்
ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி –சரணம் சிஷ்யன்- ஸ்வா ச்சார்யவம் சோ ஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த—மேலே மேலே குரு பரம்பரை பகவான் வரைக்கும் என்றபடி –வியாபகம் குரு பரம்பரை -வியாப்யம் த்வயம் –திட பிராமண புத்தி பூர்வகமாக நாத முனிகள் தொடக்கமான –ஸ்வரூபாதி அனுசந்தானம் -வசனமும் அனுரூபமான நிர்மல அனுஷ்டானமும் -பரம பிரமாணம் – சமுச்சயம் சம பிரதானம் இவை இரண்டும் –ஆழ்வார்களுடைய வாக்கால் நாத நுனியால் பரிக்ரஹிப்பட்டதே அருளிச் செயல்கள் –இவர் திருவாயால் பரிக்ரஹிப்பட்டதால் ஏற்றம்-ஆழ்வார் அனுஷ்டானம் நம்மால் பரிக்ரஹிக்கப் பட முடியாதே –வாமனன் மண் இது என்றும் – ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் நம் போல்வாருக்கு –நாத முனிகள் முதலாக இவ்வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய -வசனமும் அனுஷ்டானமும் பரிக்ராஹ்யம் –
ருசி வாசனைகள் உடன் பரித்யாஜ்யம் அவைஷ்ணவ ஸஹ வாஸம் -ஸ்வரூப நாசகார -அபிமானிக்கப் பாடவும் கூடாதே அவர்களால்-நாமும் அபிமானிக்க கூடாதே –
இதுவும் சம பிரதானம்
ஸ்வரூப ப்ராப்தமான கர்தவ்யம் நித்ய சேஷியான ஆச்சார்ய கைங்கர்யமும் -தத் ப்ரீதி வர்த்தகமான பகவத் கைங்கர்யமும் -இந்த சமுச்சயம் -சமம் அல்ல –பிரதானம் முதலில் -சகஜம் -பிற்பட்டது உபாதியால் வந்த -அப்ரதானம் –கிங்கரனனுடைய கைங்கர்யம் சேஷியுடைய அபிமதம் செய்பவன் கிங்கரன் -பலத்தை எதிர்பார்க்காமல் –ஸூவ ரசார்த்த கைங்கர்யமும் -கூடாதே )

இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –

1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் ஹிதைஷியாய் உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும்  அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு அவனுக்கு உகந்த விஷயமாய் தன் பக்கலிலே விசேஷ  கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்சயமும்  அன்று  -சம விகல்பமும் அன்று -ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே  ஆசார்ய சந்நிதியை முற்பட அருளி செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்திதவ் மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –
இனி -வக்தவ்யம் -தொடங்கி -மேல் அடைய -சமுச்சயம் –

2-வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும் –
அதாவது –
இவனுக்கு சர்வ காலமும் வாக்கால் சொல்லப்படுமது துர்கதியே பற்றாசாக தன்னை அங்கீகரித்து அருளின  ஆசார்யனுடைய தயா ஷாண்யாதி வைபவமும் 
எத்தனை யேனும் தயாதி குண பரிபூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அறுவருக்கும் படி நின்ற அநாத்மா குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமும் ஆகிற இவை என்கை –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நன்மையால்-என்ற பாட்டுத் தொடங்கி இவை இரண்டையும் விசதமாக அருளிச் செய்தார் இறே —

3–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –
அதாவது -இவனுக்கு கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் உறுப்பாக (ப்ரபன்னனுக்கு இவை சாதனமாக அல்லவே -அனுபவ ரஸத்துக்காகவே)ரகஸ்யமாக அனுசந்தித்துக் கொண்டு போரப்படுமது -ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி -இத்யாதில் படியே சர்வேஸ்வரன் குளிர நோக்குகைக்கு உடலாய் -ஸ்வா ச்சார்யவம் சோ ஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த -என்கிறபடியே-ஸ்வ ஆசார்யாதி பரமாச்சார்ய பகவத் பர்யந்தையான குரு பரம்பரையும் -அந்த குரு பரம்பரா பிராப்தமாய் ஸ்வ ஆசார்யன் தனக்கு  தஞ்சமாக உபதேசித்த த்வயமும் -என்கை-
இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே இவனுக்கு ரகஸ்யமாக அநு சந்தித்துக் கொண்டு போரப்படும் என்றபடி –
பாஷ்யகாரருக்கு காலஷேபம்  பிரகாரம் அருளிச் செய்கிற இடத்தில்  த்வயம் அர்த்த அநு சந்தாநேன சஹசதைவம்  வக்தா  என்று இறே  பெரிய பெருமாள் அருளிச் செய்தது –

(ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102-ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி –அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-ச து –அந்த எம்பெருமானாரோ-யமுந முநேஸ் குல ப்ரதீபத்வ ஆஸீத் –ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்-ச ச –அந்த ஆளவந்தார் தாமும் நாத வம்ஸ்யஸ் –வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-ச ச -அந்த நாதமுனிகளும் பராங்குச முநேஸ் வம்ஸ்யஸ் –நம்மாழ்வாருடைய வம்சத்தவர்–ச ச ஸோபி–அந்த ஆழ்வாரும் தவ தேவ்யாஸ் தாஸஸ் –உனது பிராட்டிக்கு அடியவர்-இதி தவ கடாக்ஷணீயஸ் அஸ்மி –இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ)

4–பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் -அதாவது –
தனக்கு ஞான அனுஷ்டானங்கள் ஊற்று இருக்கைக்கு உறுப்பாக  கண்ட கண்ட இடங்களில் இவனால் பரிகிரஹிக்கப்படுமது நாத முனிகள் முதலாக இவ் வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசனங்களும் -அந்த வசன அநு ரூபமாக மறுவற்ற அனுஷ்டானங்களும் -என்கை
ஸூவ்யாஹ்ருதாநி மஹதாம் ஸூக்ரதாநி ததச்ததா-சஞ்சின்வன் தீர ஆஸீத் சிலஹாரி சிலம்யதா -என்னக் கடவது இறே —

5-பரித்யாஜம் அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
அதாவது –
ஞான அனுஷ்டான நாசகம் என்னும் பயத்தாலே இவனுக்கு சவாசனமாக விடப்படுமது வைஷ்ணவ லஷணம் இல்லாதவர்களோட்டை சஹவாசமும் –
அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓர் அன்வயங்களால் தம் திறத்தில் பண்ணும் அபிமானமும் என்கை

6-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -அதாவது-இவனுக்கு ஸ்வரூப அனுகூலமாகவே எப்போதும் செய்யப்படுமது –
மகோ உபாகாரகனான ஸ்வ ஆசார்யன் விஷயத்தில் பிரேம பூர்வகமாய் பண்ணும் கைங்கர்யமும்  தந் நியோக பரதந்த்ரனாய் பண்ணும் பகவத் கைங்கர்யமும் -என்கை –

ஆக
தினசர்யையில் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம் சதாச்சார்ய பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போருகை யாவது –
இப்படி இருந்துள்ள
1-வஸ்தவ்ய
2-வக்தவ்ய
3-ஜப்தவ்ய
4-பரிஹ்ராஹ்ய
5-பரித்யாஜ்ய
6-கர்தவ்யங்களை அறிந்து  இவற்றிலே நிஷ்டனாய் போருகை  என்றது ஆயிற்று –

————————————-

இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்-

சூரணை -275-

கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —

(ஆயி ஸ்வாமிகள்-கீழே வஸ்தவ்யாதி அவஸ்ய அனுஷ்டான விசேஷங்களை அருளிச் செய்து -ஆச்சார்ய பிரசாதம் நம் மேல் வளர இவை வேன்டும் —
தினசர்யா நடத்தைக்கு சமதம ஆத்ம குணங்கள் வளர ஆச்சார்ய பிரசாதம் வேண்டுமே –
கைங்கர்யம் -ஸ்வார்த்த -நம் அனுபவம் நம் ரசத்துக்காக -என்ற எண்ணம் இல்லாமல் -வேதாந்த சாஸ்த்ர முகத்தால் – காம ரூபியாக அநு சஞ்சரித்து -பகவானைத் தொடர்ந்து ஏதத் சாம காயன் –சாயுஜ்யம் அடைந்து கிங்கரம் பவதி -உபத்திரவம் இல்லாமல் –
ஆச்சார்ய தாத்பர்ய வசனம் –சாஸ்திரம் பொதுவான சொன்னதை ஆராய்ந்து யாதாம்யா தாத்பர்யம் விலக்கி அருளிச் செய்வார்கள்
கேவல சாஸ்த்ரத்தால் அறிவதை விட தாத்பர்யம் அறிந்து செய்வது ஸ்ரேஷ்டமாகும்
சாஸ்திரமும் சாஸ்த்ர தாத்பர்யமும் -ரஹஸ்ய த்ரய ஞானம் -இரண்டுக்கும் வேண்டும்உபய சாஸ்த்ர முகத்தாலும் விசேஷித்து ஆச்சார்ய கைங்கர்யம் –
இதுக்கும் சாரம் -பால் தயிர் வெண்ணெய் நெய் -போலே –சாஸ்திரம் -சாஸ்த்ர தாத்பர்யம் -திரு மந்திரத்தில் வளர்ந்து –த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருப்பவர் அனுஷ்டானமும்சரம உபதேச சார விசேஷம் – தாத்பர்ய சாரம்.-உபாய பாவத்தில் கண் வைக்காமல் ப்ராப்ய பாவத்தில் கண் வைத்து -கைங்கர்ய நிஷ்டராய் இருப்பது
சாஸ்திரம் பக்தியும் அவனும்  தாத்பர்யம் -உபாய உபேயம்-தாத்பர்ய சாரம் உபேயம் ஒன்றிலே கண் வைத்து – இதில் இருந்து-ஸூஷ்ம தர்சி -சரம தசை ஸ்ரீ ஸூ க்திகள் பரம பிரமாணம் உபய வ்யாவ்ருத்தம் அன்றோ -பரார்த்த கைங்கர்யம் இதனாலே கிட்டும்)

(பரத்வாதி விஷயத்தில் கைங்கர்யம் நித்ய முக்தர்களுக்கு சார்வஞ்ஞதை -விபவம் தத் கால வர்த்திகளுக்கு தத் வசனத்தாலும் -அர்ச்சையில் இப்பொழுது உள்ள அதிகாரிகளுக்கு சாஸ்திரம் ஒன்றுமே பிரமாணம் )

கீழ் -என்றது வஸ்தவ்யாதிகளை சொன்ன இந்த கணனையில் என்றபடி –

பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே -என்றது –
பகவான் இவனுக்கு இப்போது வாய் திறந்து ஒன்றை அருளிச் செய்யாமை யாலே –
தத் பிரதிபாதகமான ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் -என்கை

ஆசார்ய கைங்கர்யம் அறிவது -சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் –என்றது –
ஆச்சார்ய விஷயத்தில் ஸூஸ்ருஷா பிரகாரங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திர முகத்தாலும் –
தனக்கு இஷ்ட அநிஷ்டங்கள் இன்னது என்னும் இடத்தை அவன் அருளிச் செய்த வசனத்தாலும் -என்கை –

—————————————

சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –

(ஆயி ஸ்வாமிகள்-பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபேண இரண்டு வகைப் பட்டு இருக்கும் -பிரமாணம் சொல்லிய பின்பு -லக்ஷணம் அருளிச் செய்கிறார் -)

இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்

—————————-

சூரணை -277-

அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஆச்சார்யாருக்கும் பகவானுக்கும் -இஷ்டம் செய்வதும் -அநிஷ்டம் தவிருவதுவும் -)

(ஸ்வயம் பிரயோஜன- சேஷி இஷ்ட கரண- தத் அநிஷ்ட அகரண அந்நிய தரத்வம் -இரண்டில் ஒன்றாலும் செய்வதே -கைங்கர்ய லக்ஷணம் –-பகவல் திமுக உல்லாசம் -திருமுக மலர்த்தி -இரண்டும் காரணம் –ஏதாவது ஒன்றோ இரண்டுமே கைங்கர்யம் -என்றவாறு)

அது ஆவது என்ன -அதாவது இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்கிறார் –

————————————–

இவை தான் இரண்டும் எத்தை அவலம்பித்து இருக்கும் என்ன அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -278-

இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-வர்ண ஆஸ்ரமங்களையும்- தர்மங்கள் என்று சொல்லாமல்–தேக ஸ்வரூபங்களையும் என்று சொல்லாமல் -ஆத்ம ஸ்வரூபத்தையும்-அவலம்பித்து-பற்றி இருக்கும் -என்றபடி –
இஷ்டங்கள் -வர்ண ஆஸ்ரமங்களையும் ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றி இருக்கும் என்றும்
அநிஷ்டங்கள்-வர்ண ஆஸ்ரமங்களையும் ஆத்ம ஸ்வரூபத்தையும் என்றும் –
மர்ம ஸ்பர்சி ஆத்ம -பழுதிலா ஒழுகல் தேகத்துக்கு – இஷ்டங்கள் செய்வது பிரதானம் அநிஷ்டங்கள் தவிருவது அப்ரதானம் என்று இல்லை –
அச்சு எழுத்து குறைத்தது முன்னால் அல்ப அக்ஷரம் பூர்வம் –
1-மேல் எழுந்து –தேகத்தை பற்றி -வந்தேறி வர்ணாஸ்ரமம் -நித்தியமான சேஷத்வம் -நிரூபகமான ஆத்ம ஸ்வ ரூபம் பார்ப்பதே இஷ்டம்
பாஹ்யமான த்யாஜ்யத்தை- வந்தேறி -அநிஷ்டம் அவலம்பித்தும் -இஷ்டம் ஆந்தரமான ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கும்
2–தேக கதமான வர்ணத்தையும் தத் அனுகுணமான ஆஸ்ரமமும் பற்றுவதும் அநிஷ்டம்
ஸ்வரூப கத சேஷத்வ வர்ணத்தையும் அனுகுண பிரபன்ன ஆஸ்ரமத்தையும் பற்றுவதும் இஷ்டம்
3–போக்தாவாய் கொண்டு சேஷமாய் இருக்கும் ஸ்வரூபம் அநிஷ்டம்
போக்யமாய் கொண்டு பாரதந்திரமாய் இருப்பது இஷ்டம்
சேஷத்வ போக்த்ருவங்கள் போலே இல்லையே பாரதந்தர்ய போக்யங்கள்
இப்படி இஷ்ட அநிஷ்டங்கள் இரண்டிலும் கொள்ள வேன்டும்
அன்றியே
4-தர்சன தூஷணமாக வர்ணாஸ்ரம விபரீதம் செய்வது அநிஷ்டம் -செய்யாது இருப்பது இஷ்டம்
ஸ்வரூப விருத்தங்களை செய்வது அநிஷ்டம்- செய்யாமல் இருப்பது இஷ்டம்-)

(யாதொரு அளவாலே -என்றது -அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது -ஏதோ ஆன மட்டும் இல்லை – முடிந்த அளவும் பண்ண வேன்டும்
அகரணே பிரத் யவாயம் –எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது-என்ற எண்ணம் வேன்டும் –நரகத்துக்கு போவோமே என்ற எண்ணம் வந்தால் ஸ்வார்த்த காரணம் ஆகுமே
இச்சை ஸ்வரூபம் – இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -விநியோக தசையில் சேஷியுடைய இச்சையே –போகத்திலே தட்டு மாறிய சீலம் காட் கரையிலே பிரசித்தம்
பிரபன்னன் ஆந்ரு சம்சயத்தால் -அனுஷ்ட்டித்தால் சாதனம் ஆகாது -இரக்கத்தோடே செய்தால் அவனுக்கு பிடித்தம் ஆகுமே –சம்சாரத்தில் கட்டுப் படுத்தாதே பிரவ்ருத்தி தர்மமாக இருந்தாலும் -ஆகையால் -குறை இல்லை – விநியோகம் பகவல் முக லாபத்துக்காக செய்வது கைங்கர்யமே -பலாந்தர ஹேது வாகாது -கர்மத்தின் ஸ்வரூபமே மாறுமே –பிரியாய மம விஷ்ணோ ச -பிராட்டிக்கு அவனுக்கும் பிரியகரமாய் இருக்குமே -எந்த நினைவுடன் செய்கிறாய் என்பதற்கு தகுந்த பந்த மோக்ஷம் -அதிகாரி –பர கத அதிசயம் -சேஷத்வம் -இச்சையே உபாதேயம் )

அதாவது –
கீழ் சொன்ன கைங்கர்ய பிரதிசம்பந்திகள் இருவருடையவும் இஷ்ட  அநிஷ்டங்கள்
இவ் வதிகாரி உடைய வர்ண ஆஸ்ரமங்களையும் -ஆத்ம ஸ்வரூபத்தையும் -பற்றி இருக்கும் -என்கை –
1-இஷ்ட அநிஷ்டங்கள் வர்ண ஆஸ்ரமங்களை பற்றி இருக்கையாவது –
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான தர்மங்களை பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை இஷ்டமாய் -ஸ்வார்த்த புத்த்யாய்-அநிஷ்டமாய் இருக்கை-

பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை யாவது -லோக சங்கரஹ தயாவாகவும் –
சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும் ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கை –
இவ் வர்த்தத்தை  இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிற இவை சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் அத்தனை 
இப்படி அனுஷ்டியாத போது -பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாச ஹேது வாகையாலே
ஈஸ்வரனுக்கு அநபிமத பூதனாவன் -ஆகையால் யாதொரு அளவாலே லோக
சங்கரஹம் பிறக்கும் -யாதொரு அளவாலே சிஷ்யர் புத்ரருகளுக்கு உஜ்ஜீவனம் உண்டாம்
அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது ஆயிற்று –

பிரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்த தர்மமோபாதி-இந்த நிவ்ருத்த தர்மமும் பிராப்யமாக கடவது –
இவ்விடத்திலே அகரணே பிரத்யவாயம் -எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது -என்று தனி ஸ்லோகத்தில் இவர் தாமே அருளி செய்தார் இறே-

இனி ஸ்வார்த்ய புத்த்யா அனுஷ்டிக்கை யாவது -ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமாக விஹிதமாகையாலே -நமக்கு இவை அனுஷ்டியாது ஒழியில்-
க்ருத்ய அகரண ரூப பாவம் வரும் என்று நினைத்து அனுஷ்டிக்கை –

இஷ்ட அநிஷ்டங்கள் ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கை யாவது –
இச்சை ஸ்வ ரூபம் -என்கிறபடியே -விநியோக தசையில் -சேஷி உடைய இச்சா அநு குணமாக ஸ்வரூபத்தை விநியோகப் படுத்துகை -இஷ்டமாய் –
தட்டுமாறி விநியோகம் கொள்ளும் அளவில் தன்னுடைய சேஷத்வத்தை இட்டு இறாய்த்தல்-
பாரதந்த்ர்யத்தை இட்டு எதிர் விழி கொடாது ஒழிதல் செய்கை அநிஷ்டமாய் இருக்கை –

அங்கன் இன்றிக்கே –
2-இஷ்ட அநிஷ்டங்கள் -இத்யாதி
ஸ்வ  வர்ண ஆஸ்ரம உசிதங்களைச்  செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களைச் செய்கை அநிஷ்டம்-என்றும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமாகச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களைச் செய்கை அநிஷ்டம் 
என்றும் யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
3-ஒவ்பாதிகமாயுமாய்  அநித்யமுமாய்  வர்ண ஆஸ்ரமங்களிலே ஊற்றி இருக்கை அநிஷ்டம்
நிருபாதிக நித்ய சேஷமான ஆத்ம ஸ்வரூபத்தில் ஊற்றி இருக்கை இஷ்டம் -என்றும்
யோஜிக்கவுமாம் –

இங்கன் ஊற்றத்தைப் பற்றிச் சொல்லுகை அன்றிக்கே அநிஷ்டம் வர்ண ஆஸ்ரமத்தைப் பற்றி இருக்கும் –
இஷ்டம் ஆத்ம ஸ்வரூபத்தை அவலம்பித்து இருக்கும் என்று இங்கனே விபஜித்து -வர்ண ஆஸ்ரமத்தை அநிஷ்ட கோடியாக சொல்லப்  பார்க்கில் –
ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஞா ஆஸ்தா முல்லங்க்ய வர்த்த -ஆஜ்ஞாச் சேதி மம த்ரோஹீ மத் பக்தோபி  ந வைஷ்ணவ –என்றும் –
அபிப்லவாய தர்மாணாம் பால நாயகுலசய ச ஸங்கரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ் ததாப நாய ச ப்ரியாய மம விஷ்ணோஸ் ச தேவ தேவஸ்ய சார்ங்கினா மநீஷீ வைதிகாசாரம் மனசாபி நலங்கயேத் யதாஹி வல்லபோ ராஜ்ஞ்ஞோ நதீம் ராஞ்சா ப்ரவர்த்திதாம்
லோகோபயோகி நீம் ரம்யாம் பஹூசஸ் ய விவர்த்திநீம் லங்கயன் ஸூலமா ரோஹேதா அனபேஷாபி தாம்பிரதி–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்– என்றும்
ஏவம் விலங்க கயன் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம் ப்ரியோ சன ப்ரியோ ஸௌமே மதா  ஜ்ஞாவ்யதி வர்த்த நாத் உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜே யேன் மனசா ஸூதீ—ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -என்றும்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் அருளிச் செய்த வசனங்களோடும்  பூர்வாச்சார்யர்களுடைய அனுஷ்டானங்களோடும் விரோதிக்கும் இறே-
ஆன பின்பு கீழ்ச் சொன்ன படியே -இவ் வாக்யத்துக்குப் பொருளாகக் கடவது –

—————————————-

இம் மூன்று யோஜனைக்கும் மேலில் வாக்யத்தோடு சங்கதி என் என்னில் –

சூரணை -279-

புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே

(ஆயி ஸ்வாமிகள்-புண்யத்தை சாதனமாக நினைத்து செய்யாதே என்னில் -புண்யத்தை என் நினைவால் செய்ய வேணும் -அவனுக்கு அநிஷ்டம் என்று விசிஷ்ட வேஷ அனுபந்திகளை விடில் பாப பிரவ்ருத்திகள் வாராதோ என்னில் –வராது –
மோக்ஷ விரோதி என்று புண்யத்தையும் செய்ய அஞ்சுபவன் சாமான்யரும் செய்யாத பாபத்தைச் செய்யான்-த்யஜிக்கைக்கு அடியான பிரவ்ருத்தி ரூபத்வம் – ஆகாரம் இரண்டுக்கும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -கர்மத்தையே –இரு வினைகள் ரூபம் -ஒரே கோஷ்ட்டி –எத்தைப் பண்ணுவான் புண்யத்தை மட்டும் சாதனம் என்று பண்ணாமல் கைங்கர்ய ரூபமாகச் செய்வான் -என்றபடி-)

(தர்மங்களை பரித்யஜ்யம் -என்னில் அதர்மங்கள் புகுராதோ என்னில் -இது பிரபன்னனுக்கு சொன்னது அன்றோ -உபாய புத்தி யுடன் செய்யாதே என்றே அருளிச் செய்தான் அதே போலே இங்கும்)

பிரதம யோஜனையில்-இப்படி வர்ணாஸ்ரம அனுஷ்டானத்தில் பிரதிபத்தி விசேஷங்களிலும்-ஆத்ம ஸ்வரூபத்தினுடைய விநியோக தசையில் அனுகூல்ய பிரதி கூல்யங் களிலுமாக இஷ்ட அநிஷ்டங்களுக்கு விஷய விபாகம் பண்ண வேணுமோ –
வர்ணாஸ்ரம அனுரூபமாயும் ஆத்ம ஸ்வரூப அனுரூபமாயும் உள்ளவற்றைச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களான அக்ருத்யாதிகளைச் செய்கை அநிஷ்டம் என்றாலோ என்ன
அருளிச் செய்கிறார் -மேல் புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-

த்வதீய யோஜனையில் -இப்படி வர்ணாஸ்ரம விருத்தங்களையும் ஸ்வரூப விருத்தங்களையும் செய்கை அநிஷ்டம் என்று இவனுக்குச் சொல்லித்
தவிர்ப்பிக்கை தான் வேணுமோ என்ன -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-

த்ருதீய யோஜனையில் இப்படி வர்ணாஸ்ரமங்களில் ஊற்றம் அறுத்தால் அக்ருத்ய கரணங்கள் வந்து புகுராதோ என்ன – புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்

பகவத் அனுக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சித்தமாக இருக்கச் செய்தேயும் மோக்ஷ விரோதி என்னும் அத்தாலே புண்ணியம் செய்கைக்கு உட்பட அஞ்சுகிற இவ் வதிகாரி
பகவத் நிக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர ஸித்தமாய் நரகாவஹம் என்று சாமான்யரும் உட்படச் செய்யாத பாபத்தை ஒருக்காலும் செய்யான் இறே

————————————-

இவன் புண்ணியத்துக்கு அஞ்சும்படியையும் வத்ஸலனான  ஈஸ்வரனுக்கும் இடம் அறும்படி பாப பிரவிருத்தியில்  அந்வயம் அற்று இருக்கும் படியையும் -தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை -280-

இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –

(ஆயி ஸ்வாமிகள்-பாபத்தையே புண்ணியமாக கொள்ள இருப்பானே வாத்சல்யம் காட்ட வாய்ப்பு என்று -அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் —
இவனோ புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் -இவன் அது செய்யான் -அதனால் அவனுக்கு அந்த பாக்யம் கிட்டாதே
வத்சலனானவனுக்கு இடம் அற -நியதனாய் இருக்கும் -நாட்டார் சுக ஹேது என்று பிரமித்து நினைப்பார்கள் -அல்ப அஸ்திர சுகம் -துக்க ஹேது என்று-த்யஜிக்கும் பாபம் போலே இவன் நினைத்து இருப்பானே -சாம்சாரிக போகம் எல்லாம் துக்கம் -சாதனம் எல்லாம் பாபம் –செய்த குற்றம் எல்லாம் நற்றமாக கொள்ள-கழுகு போலே காத்து இருப்பானே- நம் வாத்சல்ய குணத்துக்கு இறை பெற்றோம் -இது நம் புண்யம்-பெறாப் பேறு என்று இறுமாந்து -என்ற திரு உள்ளம் –ஆசைப்பட்டு பேகணித்து போகிறவனுக்கு துராசையே சேஷிக்கும் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு -பாப ரூபமான போக்யம் ஒருக்காலும் கிடைக்காது -)

(குணம் போனது என்ற குற்றம் வாராதோ என்னில் –வாத்சல்யம் கார்யகரம் ஆக பிராமாதிகமாக செய்யும் உத்தராகம் இருக்குமே -அத்தை இதுக்கு விஷயமாகும்
தேக தோஷம் –அபுத்தி பூர்வக உத்தராகம் -புத்தி பூர்வக பூர்வாகம் உண்டே -புத்தி பூர்வக உத்தராகம் இல்லை -நியதமாக இருக்கும் அதிகாரி —அதிகாராந்தர விஷயத்தில் வாத்சல்யத்துக்கு விஷயம் உண்டே )

அதாவது –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கையாலே –
புண்ணியம் பாபங்கள் இரண்டும் மோஷ விரோதி என்று இருக்கும் இவ் வதிகாரி –
நாட்டார்கள் ஹேது என்று  விரும்பி இருக்கும் புண்ணியத்தை -பகவத் பிராப்தி பிரதிபந்தக தயா அநிஷ்டாவஹம் ஆகையாலே  துக்க ஹேதுவான பாபம் என்று நினைத்து -வெருவி இருக்கும் –

ஆஸ்ரிதர் செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளும் அதிமாத்ர வத்சலனான ஈஸ்வரன் –
இவ் வதிகாரி ஏதேனும் ஒரு பாபத்தைப் பண்ணினாலும் -அத்தைக் குற்றமாக நினையாதே நற்றமாக நினைத்துக் கொண்டு இருக்கும் –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -இவ் வதிகாரி பாப பிரவ்ருத்தியில் அந்வயம் அற்று
நியதனாய் வர்திக்கையாலே -பாபத்தை புண்ணியமாகக் கொள்ளும் வத்ஸலனனான அவனுக்கு ஆசைப்பட்டு போம் இத்தனை ஒழிய கிடையாது என்கை –

ஆக –
கீழ் கர்தவ்யமாகச் சொன்ன கைங்கர்யம் அறிவது இன்னத்தாலே–277-  என்றும் –
கைங்கர்யம் தான் த்விவிதம்–276- என்றும் –
அது தான் இன்னது–277-என்றும் –
தத் உபயமும் இன்னத்தை அவலம்பித்து இருக்கும்-278- என்று சொல்லி –
அதில் பிரசங்கிக சங்கா பரிஹாரமும் பண்ணப் பட்டது –

———————————————-

ஈத்ருச கைங்கர்யம் இவனுக்கு ஏதேனும் ஒரு வழியாலே ஆகிலும் உண்டாக வேணும் -என்று இதனுடைய அவஸ்ய கரணீயத்வத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -281-

கைங்கர்யம் தான் பக்தி மூலம்  வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —

(ஆயி ஸ்வாமிகள்-சர்வஞ்ஞனுக்கும் இடம் கொடுக்காத இந்த அதிகாரிக்குப்ராசங்கிக்கத்தை தலைக்கட்டி -ப்ரஸ்துதமான -கைங்கர்ய விஷயம் –
தினசரியாவில் இறுதியில் அருளிச் செய்ததை தொடர்ந்து -அநிஷ்ட தியாக ரூபம் -இஷ்ட பிரவ்ருத்தி ரூபமான கைங்கர்யம் -பரம பக்தி உந்த –பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் இல்லை யாகிலும் -அகிஞ்சித்கரத்வ சேஷத்வம் சித்திக்காதே –இத்தைக் கண்டாவது செய்வான் –பக்தி மூலம் பிரதானம் -பீதி ரூபம் அப்ரதானம்-)

(தட்டிக் கொட்டிக் கூட்டி வர பீதி அடியாகவாவது வரச் சொல்ல வேண்டுமே–ப்ரேமம் அடியாக என்று சொல்லி -ஒருவரும் பண்ணாமல் போக -பீதி அடியாக வர வழி முறை வைக்க வேண்டுமே -வேற மதஸ்தர்கள் இத்தை முக்கியமாக கொண்டார்கள் -)

பக்தி மூலம் வருகை யாவது -சேஷி உடைய முக மலர்த்திக்கு உறுப்பானவையே செய்து கொண்டு நிற்க வேண்டும்படியான -தத் விஷய ப்ரேமம் அடியாக வருகை –

அல்லாத போது பீதி மூலமாய் வருகை யாவது -அது அன்றிகே ஒழிந்தால் -அகிஞ்சித் கரஸ்யய சேஷத்வ அநுபபத்தி -என்கிறபடியே –
சேஷத்வ விருத்தி இல்லாத போது -சேஷத்வ ஹானி பிறக்கும் என்னும் பீதி அடியாக வருகை –

இதில் பக்தி மூலம் ஆனதுவே முக்கியம் – தத் அலாபத்தில் பீதி மூலம் தாம் ஆகிலும் வேணும் என்றபடி –

—————————————

அது தானும் இல்லா விடில் செய்வது என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -282-

அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம்  இன்றிக்கே ஒழியும்-

(ஆயி ஸ்வாமிகள்-அமுக்யமான பீதி ரூபமும் இல்லாத போது -உபாய உபேய -தத் தத் அனுரூபமான பாரதந்தர்ய போக்யத்வ அதிகாரத்திலும் இழவாக போகும்
அநிஷ்டம் போக கைங்கர்யம் வேன்டும் -இதில் ஈடுபடாவிட்டால் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இழிய வைக்கும் -விஷய பிரவ்ருத்தி இல்லை என்றால் விஷயாந்தரங்களில் மூட்டுமே ஸ்வரூப ஸ்திதி இல்லாமல் ஒழியும்-கைங்கர்யம் இல்லா விடில் என்றோ ஒரு நாள் அடையும் வாய்ப்பும் இழந்து போவான் -)

அதாவது –
அமுக்யமான பீதி மூல கைங்கர்யம் தானும் இல்லாத போது -கிஞ்சித் கார அபாவத்தாலே -சேஷத்வ ரூபமான அதிகாரத்திலும்  –அதிகாரி சா பேஷமாய் இருந்துள்ள சேஷி உடைய கிருபா ரூபமான உபாயத்திலும் –இவனுடைய அனுகூல விருத்தி சா பேஷமான அவனுடைய முக மலர்த்தி யாகிற உபேயத்திலும்- அந்வயம் அற்று விடும் -என்கை –

—————————————————-

ஆக –
கீழ் இரண்டு வாக்யத்தாலும் -கைங்கர்ய அவஸ்ய கர்த்தவ்யமும் -கைங்கர்ய அபாவத்தில்
வரும் அநர்த்த விசேஷங்களும் காட்டப் பட்டது –
ஏவம் வித கைங்கர்யத்தில் சாதன புத்தியைத் தவிர்க்கிறார் மேல் –

சூரணை -283-

கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்

(ஆயி ஸ்வாமிகள்-சாதன புத்தியை தவிர்க்கிறார் இத்தால் -நாம் கொடுக்க வேன்டும் -அவன் கொள்ள வேன்டும் -முக்கியமாகவும் அமுக்கியமாகவும் –
அல்ப அநல்ப போக மோக்ஷ ரூபமான ஏதேனும் ஒரு பலத்துக்கு சாதனம் ஆக்காமல் -பிசகாதே எல்லா பலனும் இதுவே என்ற எண்ணம் –இதுவே புருஷார்த்தம் -என்று நினைக்க வேன்டும் –அதற்கு ஒரு பலன் இல்லை -அதுவே பலம் என்றவாறு)

அதாவது –
இப்படி அவஸ்ய கரணீயமாக -கீழ்ச் சொன்ன கைங்கர்யம் தன்னை பண்ணும் அளவில் –
த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில்-ஏதேனும் ஒன்றுக்கு -சாதனமாக -பிரதிபத்தி பண்ணாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக பிரதி பத்தி  பண்ண வேணும் என்கை –

—————————————–

இத்தை விசதீகரிக்கிறார் மேல்

சூரணை -284-

அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்கப்
பண்ணுகை–

(ஆயி ஸ்வாமிகள்-சாதனத்வ பிரதிபத்தி கந்தம் அற -சித்த ஸாத்ய பிரதிபத்தியே -பலம் என்ற புத்தியே -அவன் அனுக்ரஹத்தால் கிடைத்த இது என்று – –இனிமை முக விலாசம் இதுவே -என்ற எண்ணம் வேன்டும் –
சாதனம் ஆக்காமல் பலம் ஆக்குவது -சேஷத்வ ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாக -உன்னை கைங்கர்யம் கொண்டோமே -இதுக்கு என்ன சமர்ப்பிக்க போகிறாய் –
உன் ஸ்வரூபம் சித்திக்க நாம் கைங்கர்யம் கொண்டோம் -பழைய நிலைமை மறந்து -இதுக்கு கை கூலி கொடுக்கலாகாதோ–என்ற திரு உள்ளம் –
மேலும் கைங்கர்யம் கொடுக்க -கைக் கூலி லஞ்சம் மேலே கைங்கர்யம் செய்வதே -பரிபூர்ணனான அவன் ஏங்கினது போலே குறைவாளனாக கை ஏந்தும் படி —
தன்னை வணங்க வைத்த கரணங்கள் இவை பெற்ற பிரயோஜனம் கைங்கர்யம் -)

(துருவன் -நிறைந்த சோதி வெள்ளம் -உள்ளே இருந்த உருவம் மறைக்க -எதிரே நின்ற -அதே சோதி -பேச முடியாமல் விக்கித்து நிற்க -திருச் சங்காழ்வானால் ஸ்பர்சித்து –தர்சனமே பலன் -தர்சனத்துக்கு பலம் கேட்கக் கூடாதே
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி க்ருணாதிவை ஸ்வயம்-தானே-விரும்பி ஆசைப்பட்டு தலையால் பெற்றுக் கொள்கிறான் –-கடனாக நினைத்து –அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி -)

(ஸ்வயம் பிரயோஜன- சேஷி இஷ்ட கரண- தத் அநிஷ்ட அகரண அந்நிய தரத்வம் -இரண்டில் ஒன்றாலும் செய்வதே -கைங்கர்ய லக்ஷணம் –பகவல் திமுக உல்லாசம் -திருமுக மலர்த்தி -இரண்டும் காரணம் -ஏதாவது ஒன்றோ இரண்டுமே கைங்கர்யம் -என்றவாறு–கைங்கர்ய லக்ஷணம் -ஸ்வயம் பிரயோஜன தன் முக விலாச -உத்தேச்யக -சேஷிக்கு இஷ்டம் செய்து -அநிஷ்டம் தவிருவதாய் –அந்நிய தரத்தில் -இவற்றில் ஓன்று என்று -இருப்பதே கைங்கர்யம் –அகரணம் கரணம் – அந்நிய -பொய் சொல்லாமை -தர்ண பூச மாச யாகம்-இவற்றைக் கைங்கர்யம் என்னக் கூடாதே —அதி வியாப்தி தோஷம் இல்லாத -லக்ஷணம் –-இதனால் முக விலாசம் -சேஷிக்கு இஷ்டமாகவும் -வேன்டும் — தலையில் குட்டி கன்னத்தில் அறைந்து -பிராந்தி ஹேதுக சேஷிக்கு இஷ்டம் என்ற எண்ணம் -அதி வியாப்தி கூடாதே-அந்நிய தரத்வம்-இரண்டில் ஓன்று -என்றது -அவ்யாப்தி இல்லாமல் போகும் இது இல்லாமல் இருந்தால் -உத்தேச்யம் -கைங்கர்யம் -சாஷாத் முக விலாசம்ஆந்ரு சம்சயம் -லோக சங்க்ரஹம்- புத்ராதிகள் நன்றாக இருக்கவும் இரக்கத்துடன் செய்வதும் கைங்கர்யம் ஆகாதே-அது பரம்பரையா முக விலாசத்துக்கு ஹேது -இது சாஷாத் முக விலாசம்
நாம சங்கீர்த்தனம் பண்ண பண்ண பக்தி வளர்ந்து மோக்ஷம் -அதனால் நாம சங்கீர்த்தனம் பரம்பரையா ஹேது பக்தி தான் சாஷாத் ஹேது -என்று விசேஷணம் சேர்த்தே நம் பூர்வர் அதே போலே இங்கும் –கைங்கர்யம் யுக்த லக்ஷணம் -சாஷாத் முக விலாசத்துக்கு ஆகும் –
இரக்கம் பட்டாலும் அவனுக்கு பிடிக்கும் -அது தான் முக விலாசம் ஹேது -அதனால் பரம்பரையா ஹேது -இப்படி வாசி அறிய வேன்டும் –-நித்ய அனுஷ்டானம் செய்யச் செய்ய –ஆந்ரு சம்சயம் -என்ற புத்தி இல்லாமல் நேராக முக விலாசம் என்ற எண்ணத்துடன் செய்ய வேன்டும் -)

அதாவது -என்றது -இத்தை சாதனம் ஆக்காதே பலம் ஆக்குகை யாவது என்றபடி —
தான் கை ஏலாதே அவனை கை ஏற்கப் பண்ணுகை யாவது -கைங்கர்யம் பண்ணுகிற தான்  அதுக்கு பலமாக அவன் பக்கலிலே ஒன்றை அர்த்தியாதே -ஸ்வயம் பிரயோஜனமாக
செய்யா நின்று கொண்டு -கைங்கர்யம் கொள்ளுகிற அவனை –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதி க்ருணாதிவை ஸ்வயம்-என்கிறபடியே
தன் பூர்த்தி பாராதே -சாபேஷனாய் -விரும்பிக் கைக் கொள்ளும்படி பண்ணுகை –

———————————————

இவ்வளவும் போராது-தான் கொடுத்ததை அவன் கொண்டதுக்கு பிரத்யு உபகாரம் பண்ணவும் வேணும் என்கிறார் மேல் –

சூரணை -285-

கொடுத்துக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-கை ஏந்தாதவன் பரம பக்தன் -அவனுக்கு உரிய அடியவனாய் -அவனாலே தூண்டப் பட்டு அவனுக்கு கைங்கர்யம் செய்து பிரஜானாந்தரங்களை பெறாமல் –அவன் கைங்கர்யம் கொண்டதுக்கு மென்மேலும் கைங்கர்யம் கொள்ள உடன்பட்டு கைக் கூலி கொடுக்க வேன்டும்-)

(பெரியாழ்வார் திரு மகள் -என்றது இந்த குணம் அவரால் வந்தது என்பதைக் காட்டவே  ஒன்றுக்கு லக்ஷம் -மேலே கொடுத்து–வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் வாரி விழுங்குமவனுக்கு இது கிஞ்சித் தானே – உன் அபிப்பிராயம் -லக்ஷம்  அவன் அபிப்பிராயம் அந்யத் பூர்ண கும்பத்துக்கும் தாழ்ந்தவை இவை – ஆய்ச்சியர் வெண்ணெய் தானே அவன் உகப்பான் -ஆழ்வார் –ப்ராஹ்மணர் வெண்ணெய் இல்லை – அதனாலே இடைச்சி ஏறிட்டு கொண்டார்கள் இவளும் இவள் திருத் தமப்பனாரும்பால் சோறு மூட நெய் பெய்து கிளறி இன்றும் -பக்தி ஞானம் வைராக்யம் கலந்து -பூர்ணன் வேறே ஒன்றுமே அமுது செய்யாமல் கை எந்தும் அழகர் –கோயில் அண்ணன்-ஸ்ரீ ராமானுஜர் -கைங்கர்யம் கோதாக்ரஜர்–ஞானம் பர்யவசாயம் பரம பக்தியில் –நாள் தோறும் நைந்து ஞானம் கனிந்த நலம் -மதி நலம் -)

அதாவது –
தேஹி மே ததாமி தே -என்கிறபடியே -தான் அவனுக்கு ஒன்றை  சமர்ப்பித்து -அவன் பக்கலிலே ஒரு பிரயோஜனம் கொள்ளாதே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்ற
பெரிய ஆழ்வார் திருமகளைப் போலே -தான் சமர்ப்பித்த த்ரவ்யத்தை அவன் அங்கீகரித்த உபகாரத்துக்காக -அப்படி இருந்துள்ளவற்றை –
தன் அபிநிவேச அநு குணமாக நிறையக் கொண்டு வந்து சமர்ப்பியா நின்று கொண்டு -பின்னையும் அடிமை செய்கையும் ஆகிற கைக் கூலி கொடுக்க வேணும் -என்கை –

——————————————-

ஆக இப்படி அநந்ய பிரயோஜனனாய் கிஞ்சித்கரித்தால் ஆயிற்று ஸ்வரூபம்  உஜ்ஜ்வலம் ஆவது என்னுமத்தை -ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -286-

ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –

(மூவரும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தோள் தீண்டி –அநந்ய பிரயோஜனராய் கைங்கர்யம் செய்வதே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆகும் -கௌஸ்துப ஸ்தானம் தானே ஜீவாத்மா –
அபிமதரான விதுரர் -முடுக்கு சந்தில் தேடி வரும் படி பரிவரான ஸ்ரீ மாலா காரர் -ஸ்பர்சம் பெற்று அங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ கூனி-ஸூவ பிரயோஜன லேச கந்தம் இல்லாத -சேஷத்வ ஸ்வரூபம் உஜ்ஜவலமாகும்)

—————————————-

திருஷ்டாந்த பூதரான அவர்கள் கிஞ்சித்கரித்த பிரகாரம் தன்னை அருளிச் செய்கிறார் –

சூரணை -287-

1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-

(ஆயி ஸ்வாமிகள்-சுரு-அக்னி பட்டு கருகல் இல்லாமல் என்றுமாம் – சோற்றை இட்டு மடியை பிடித்து முடிச் சரக்கை அறுத்து கொள்ளாமல்-அநந்ய பிரயோஜன பக்தி பரவஸ்யம் –
இரண்டும் உள்ள விதுர அன்னாநி -பல வகைகள்ஸூஸீநீ குணம் -மனஸ் சுத்தி ரஸவத்-பாவனத்வ போக்யத்வங்கள் -நாவிலும் நெஞ்சிலும் வேர் விழும் படி நல்லதோர் சோறு
சுருள் சாபலம் வைத்து பார்த்து மோந்து சுருள் நாறா பண்ணி -அக்னி ஸ்பர்சம் போலே இவன் தலை அஹங்கார நெருப்பு பட்ட பூ இல்லாமல்பிரசாத பரமோ நாதவ் மம கேஹம் உபா கதவ் -சந்தில் உள்ள குடில் -தேர்ந்து எடுத்து மம கேஹம்-மால்ய உப ஜீவனம் செய்பவன் -வஸ்திரம் சந்தனம் புஷ்ப்பம் அலங்காரம் நகரப் பெண்களுக்காக —மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூ –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் போலே-அநேகம் பொன் காசி கொடுத்து சந்தனம் ஒரு பிந்து சுண்ணாம்பு தெரிக்கக் கெட்டுப் போகுமே -கலசாமல் –வடிவு அழகுக்குத் தோற்று சாற்றி ஸ்ரீ கூனிபூசும் சாந்து என் நெஞ்சமேபிரயோஜன ஸ்மரண லேசமும் இல்லாமல் -அவன் அர்த்தித்த அநந்தரம் -கொடுத்தாள் )

1-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு  காசு தரலாகாதோ என்று -மடி சீரைச் சோதிக்கைக்காக
மடியைப் பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –
அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –
புக்தவத்ஸூ த்விஜாக்ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே  ஸூஸீனி குண வந்திச-என்று பாவனத்வ -போக்யத்வ -ப்ரசஸ்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –

2-சுருள் மாறாத பூ ஆவது -அக்நி ஸ்பர்சம் உண்டானால் சுருள் நாறும் படி இறே பூவின் ஸ்வாபம் இருப்பது –
அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற சுருள் நாற்றம் இல்லாதபடி -அநந்ய பிரயோஜனத்வ பரிமள யுக்தமாக இடும் புஷ்பம் –
இப்படி இருந்துள்ள புஷ்பம் இறே -பிரசாத பரமவ் நாதவ் மமஹேக முபாகதவ் தந்யோ அஹம் அர்ச்ச இஷ்யாமீ த்யாக மால்யோப ஜீவன -என்று
விசேஷஜ்ஞர்-(பராசரர் )- ஸ்லாகிக்கும் படி -அத்யாதர பூர்வகமாக ஸ்ரீ மாலா காரர் அவனுக்கு கொடுத்தது –

3-சுண்ணாம்பு தடவாத சாந்தாவது -ஆயிரம் பொன் அழிய கூட்டியும் -சுண்ணாம்பு திவலை பட கெடும் படி இறே -சாந்தின் ஸ்வாபம் -அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற தோஷம் இன்றிக்கே -அநந்ய பிரயோஜனமான சாந்து -இப்படி இருந்துள்ள சாந்து இறே –
ஸூகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர் காத்ர சத்ருசம்  தீயதாம நுலேபனம் -என்று அவன் அர்த்தித்த அநந்தரம்- பூசும் சாந்தாம்படி கூனி கொடுத்தது –

ஆக இப்படி அநந்ய பிரயோஜனமாக கிஞ்சித் கரித்தால் ஆயிற்று -கைங்கர்ய ஆஸ்ரயமான
ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது -என்கை

ஆக –
இவ்வளவும் வஸ்தவ்யாதி கணனையில் -சரம உக்தமான -கர்தவ்ய ரூப கைங்கர்யத்தை
சோதித்து -தாத்ருச கைங்கர்யத்தாலே -ஸ்வரூபம் உஜ்ஜ்வலமாம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————-

சூரணை -288-

கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —

(ஆயி ஸ்வாமிகள்-சதாசார்ய பிரசாத விருத்திக்கு ஹேதுவாக கர்தவ்யமான வஸ்தவ்யாதி நியமங்களில் சரமமாக உபய வித கைங்கர்ய சோதனம் –ஆஸ்ரய ஸ்வரூப விரோதம் வராதபடி -சரம பாவி கைங்கர்ய தசை- ஸூவ பிரயோஜன கந்தம் படாத படி பர ஏக பிரயோஜனம் போலே முன்பு உள்ள தசைகளிலும் –அடைவே -வரிசையாக -தசா விசேஷங்களில் தது தது விரோதி விசேஷங்கள் ஸ்பர்சியாத படி பேணிக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேன்டும்-கைங்கர்யம் -முக்த தசையில் என்பதாகக் கொண்டு அதுக்கு முன்புள்ள நான்கு தசைகளையும் இங்கே அருளிச் செய்கிறார் -)

இப்படி அநந்ய பிரயோஜனனாய் கொண்டு கைங்கர்யம் செய்தாலே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது என்று சொன்ன இதிலே – முக்த அவஸ்தையில் -கைங்கர்ய தசையில் ஸ்வரூப உஜ்வல்யமும் அர்த்தாதுக்தம் என்று நினைத்து -இப்படி கைங்கர்ய தசையில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குமோபாதி-ஏதத் பூர்வ தசா விசேஷங்களிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்க வேணும் என்று அருளிச் செய்கிறார் மேல் –

முன்புள்ள தசைகளிலும் -என்றது -கைங்கர்யத்துக்கு பூர்வ தசைகளிலும் -என்ற படி –

——————————————-

சூரணை -289-

முன்பே நாலு தசை உண்டு –

(அழுக்கு சோதித்து ஒவ் ஒரு தசையிலும் எடுக்க வேன்டும் -)

முன்பு எத்தனை தசை உண்டு என்னும் மா காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

————————————–

அந்த நாலு தசையும் தான் எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -290-

அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப ஞான தசை – உபாய வரண தசை / பிராப்ய பிராப்தி தசை – பிராப்தமான ப்ராப்யம் அனுபவிக்கும் தசை –நான்கும் உண்டே முக்தனுக்கு -ஐந்தாவது பிராப்த கைங்கர்யம் -கிரமேண இந்த தசா விசேஷங்கள் உண்டே -)

(-பிரார்த்தனை -வரித்தல் -தேவரீரே உபாயமாக இருக்க வேணும் என்று ஆச்சார்யர் உபதேச பூர்வகமாகப் பற்ற வேண்டுமே -அதிகாரி ஆவதற்கு -ஞப்தி பல முக்தி -விருத்தி -விரக்தி -பக்தி- பிரபத்தி -சக்தி யுக்தம்- பிராப்தி- பூர்த்தி -ஆர்த்தி ஹரத்வம் போலே இங்கும் -)

1-ஞான தசையாவது -ஆசார்ய உபதேசத்தாலே தனக்கு ஞானம் பிறந்து செல்லுகிற தசை –
2-வரண தசையாவது -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை தனக்கு உபாயமாக வரிக்கை-
3-பிராப்தி தசை யாவது -சம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை –
4-ப்ராப்ய அனுபவ தசை -யாவது -ப்ராப்ய பூதனான அவனைக் கிட்டு அனுபவிக்கிற தசை –
இவ் அனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் இறே பரம புருஷார்த்தம் –

பிரதம அபேஷிதமான தத்வ ஞானமும் –
ஞான பலமான உபாய வரணமும் –
வரண பலமான பிராப்தியும் –
ப்ராப்தி பலமான அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமுமாய் இறே க்ரமம் இருப்பது –

ஆகையால் கைங்கர்ய தசை சரம தசையாய் –
பூர்வ தசைகள் நாலும் இதிலே வந்து  யேறுகைக்கு இட்ட படி ஒழுங்காய் இருக்கும் –

—————————————–

இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்கும் படியை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை -291-

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —

(ஆயி ஸ்வாமிகள்-எத்தை வைத்து அணுக வேன்டும் என்று விவரிக்கிறார் -ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்கும் படி -அழுக்கு -விரோதம் நீக்கி -ஞானி – அகங்காரம் மேலிடாத படி -ஞானம் கொண்டு அறிய வேண்டியது சேஷத்வம் -இதுக்கு தானே ஞானம் சம்பாதிக்க வேண்டும் –யானே என்னை அறிய கில்லாத – யானே என் தனதே இருந்தேன் -அறிவு ஒன்றுமே இல்லாத -அடியேன் சிறிய ஞானத்தன் –அஞ்ஞானத்தை முன்னிட்டே உஜ்வலம் ஆக்க வேண்டும் -பிராணவார்த்தம்
நோற்ற நோன்பிலேன்–சரம ஸ்லோகார்த்தம் -ஞானி ஆகிஞ்சன்யம் நிறம் பெரும் படி -அபூர்த்தியை முன்னிட்டு கிஞ்சித் கார லேசம் அபாவ ரூபி அபூர்த்தி -முன்னிட்டே உஜ்வலம் ஆக்க வேண்டும்
ஸஹேதுக கர்மத்தால் சம்சாரம் தொலைந்து -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இல்லாமல் -ஆர்த்தி விளம்ப அஸஹத்வம் -துடிப்பை முன்னிட்டு பிராப்தி –
துடிப்பு தூண்ட ஆத்ம ஸ்வரூபம் ஒளி விடும் இந்த தசையில்
பிராப்ய அனுபவம் -ஸ்வரூப ரூப குணமும் பகல் விளக்கு போலே -நித்ய முக்த ப்ராப்யம் -அங்கும் திருப்தி பிறவாமல் அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களிப்பேனே –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதே –அபி நிவேசம் பொங்கப் பொங்க ஸ்வரூபம் உஜ்வலம் அங்கே -)

ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடுகை யாவது -ஆசார்யன் தனக்கு மேன்மேல் அஞ்ஞாத ஞாபனம் பண்ணும்படி -தத்வ ஹித புருஷார்த்தங்களில்  தன்னுடைய அஞ்ஞானத்தை பலகாலம் விஞ்ஞாபிக்கை –

வரண தசையில் அ பூர்த்தியை முன்னிடுகை யாவது-நோற்ற நோன்பு  இலேன் –
ந தர்ம நிஷ்டோஸ்மி –
சத் கர்ம நைவ கில கிஞ்சன சஞ்சி நோமி –(ஸ்ரீ வைகுண்டம் ஸ்தவம் 88)-இத்யாதி படியே
பேற்றுக்கு ஹேதுவாகக் கொள்ளலாவதொரு ஸூஹ்ருதாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற -ஆகிஞ்சன்யத்தை புரஸ்கரிக்கை

ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடுகையாவது -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராதே
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் இனி-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -இத்யாதிப் படியே விலம்ப அசஹத்வ நிபந்தனமான தன்னுடைய க்லேச அதிசயத்தை தர்சிப்பிக்கை –

ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடுகை யாவது –
பெரு விடாயனுக்கு கொடுத்த தண்ணீர் ஆராதாப் போலே -அனுபூதாம்சத்தால்
திருப்தி பிறவாதே மென்மேலும் தனக்கு விளைந்து செல்கிற அனுபவ அபிநிவேசத்தை
பிரகாசிப்பிக்கை –

ஆக –
ஞான தசை முதலான நாலு தசையிலும் ஸ்வரூபத்தை உஜ்வலம் ஆக்குகையாவது –
இவ்வோ ஆகாரங்களை முன்னிடுகை என்று கருத்து –

—————————————–

இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் -இவனுக்கு இவை சமிப்பது எத்தாலே என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-292-

அஞ்ஞானம் போவது ஆச்சார்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்த்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்-தோஷங்கள் நிவ்ருத்தி -இவற்றால் என்று அருளிச் செய்கிறார் -அபி நிவேசம் குறையக் கூடாதே -அனுபூவ அம்சம் குறைய -அனுபவிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய -அனுபவமும் அபி நிவேசமும் தொடர்ந்தே போகுமே அங்கு -விரோதி ஸ்பர்சம் இல்லாத படி -இந்த தசைகளில் ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆகும் படி –
ஸ்வரூபாதி ஞானம் இல்லாமை அஞ்ஞானம் மேலிடாமல் போவது ஸூ ஆச்சார்யனால் விகசிதமான நிர்மல ஞானத்தால் –நிர்ஹேதுகத்தால் -அனுக்கிரகத்தால் -போகும் –
அகிஞ்சித் கரனாய் கிஞ்சித் கார லேச அபாவம் ஆகிய அபூர்த்தி அவாப்த ஸமஸ்த காமனுடைய நிரபேஷ பூர்த்தியால் போகுமே –
ஆர்த்தி -அடியார்க்கு ஆவா என்று அருளும் பெரு விசும்பு அருளும் பெரிய கிருபையால் போகும்
அபி நிவேசம் -ஸ்வரூபம் ரூபம் குணம் அனுபவிக்க -மேல் மேல் உண்டாகும் பகவத் அனுபவம் –
முன் உள்ள அபி நிவேசம் போக்கி அடுத்த அனுபவத்தில் மூட்டும் -இப்படி தொடரும்)

அதாவது –
தத்வ ஹித புருஷார்த்தங்களில் இவனுக்கு உள்ள அஞ்ஞானம் ச வாசனமாக நிவ்ருத்தமாவது -அவற்றை அலகு அலகாக தர்சித்து –
அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகைக்கு ஈடான ஆசார்யனுடைய  ஞானத்தாலே –

பேற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள சத்கர்மாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற அபூர்த்தி சமிப்பது -இத்தலையில் உள்ளது ஒன்றும் அபேஷியாமல்
கார்யம் செய்யும் உபாய பூதனான ஈஸ்வரனுடைய ஸஹகாரி நைர பேஷ்யம் ஆகிற பூர்த்தியாலே-

அவலம்பேன திருவடிகளைப் பெறாமையாலே உண்டான ஆர்த்தி தீருவது – ஆர்த்தி கண்டால் ஆற்ற மாட்டாதே -அப்போதே கார்யம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பான -பர துக்க அசஹிஷ்ணுத்வம் ஆகிற அவனுடைய கிருபையாலே –

அனுபவ தசையில் அநு ஷணம் பிறக்கும் அபிநிவேசம் அடங்குவது -அவ் விஷயத்தை மென்மேலும் அனுபவிக்கையாலே -என்கை –

————————————————

இவ் அஞ்ஞா நாதி சதுஷ்டயத்துக்கும் ஹேது எது என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

சூரணை -293-

அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –

(ஆயி ஸ்வாமிகள்-ஞான தசையில் அஞ்ஞானத்துக்கு முன்னிடுவதற்கு அடி அபராதம் -ஜனாதி அஞ்ஞான க்ருதமான ஸூ அபராத ஸ்மரணம்-ஞானம் வந்தால் கூட பண்ணின அபராதம் நினைவிட அஞ்ஞானி என்பானே-
வரண தசையில் –ஸூவ கத தத் அங்கீ கார ஹேது ஒன்றுமே இல்லை என்கிற ஞானம் வந்த பின்பு -அபூர்த்தியை முன்னிட்டு சரண வரணம் பண்ணுவோம்
பிராப்தி தசையில் ஆர்த்திக்கு அடி –விளம்ப பிராப்தி அலாபம் -துடிக்க வேன்டும் -அனுபவ தசையில் அபி நிவேசத்துக்கு அடியான -அபிவிருத்திக்கு ஹேதுவான-அழகு தானே)

அதாவது –
ஞான தசையில் -முன்னிடுகிற அஞ்ஞானத்துக்கு மூலம் -அநாதி கால க்ருத்ய  அகரண அக்ருத்ய கரண ஆதி ரூபமான அபராதம்

வரண தசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதானம் -பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கலாவது ஒன்றும் தனக்கு இல்லாமையை தர்சிப்பிக்கைக்கு உடலான ஞான பூர்த்தி 

ப்ராப்தி தசையில் முன்னிடுகிற ஆர்த்திக்கு ஹேது -ப்ராப்ய வஸ்துவை சீக்கிரமாகக் கிட்டப் பெறாமை யாகிற அலாபம் –

ப்ராப்ய அனுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசதுக்கு காரணம் அனுபவித்த அளவால் திருப்தி பிறவாதே மேன்மேலும் ஆசைப்படப் பண்ணும் அவன் வடிவழகு -என்கை –

—————————————————-

ஆர்த்தி அபிநிவேசம் இருக்கும் படி என் -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -294-

ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –

(ஆயி ஸ்வாமிகள்-சரம தசையில் உள்ள ஆர்த்தி அபி நிவேசம் -அர்ச்சிராதி கதி நித்ய அனுசந்தானம், -திரு வேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி -அக்ரூரர் கதி மூன்றும்
பாம்பின் வாயில் சிக்கிய தவளை போலே -இனி இனி இருபதின் கால் கூவி –திருவாணை நின் ஆணை என்று தடுத்தும் வளைத்தும் பெற வேன்டும் படி பரம பக்தி அடியாக ஆர்த்தி
செங்கனிவாய் அனுபவித்து வழு விலா அடிமை செய்ய நாநா தேகம் பரிகரித்து கேட்டவர்களுக்கு ஆர்த்தி அபி நிவேசம் வரும் படி அங்கே அருளிச் செய்தவற்றை படித்து அறிய வேண்டும்)

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று துடங்கி
திருவாணை நின் ஆணை கண்டாய் -என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரம  பக்தி தலை எடுத்தது -என்னும் அளவாக ஆர்த்தி இருக்கும் படியையும் –

செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே
முன்புற்றை அழகை அனுபவித்து -என்று துடங்கி -தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -என்னும் அளவாக அபிநிவேசம் இருக்கும் படியையும்
அந்த பிரபந்தத்திலே ஸூஸ்பஷ்டமான அருளிச் செய்தார் இறே –

ஆக
கைங்கர்ய தசைக்கு முன்னே நாலு தசை உண்டு-289- என்றும் –
அவை தான் இன்னது  -290-என்றும் –
அவ் வவ்   தசை அநு குணமான அஞ்ஞா நாதிகளை முன்னிடவே
அவ் வவ் தசைகளில் ஸ்வரூப உஜ்ஜ்வலம் ஆம் -291-என்றும் –
அவ் வஞ்ஞாநாதிகளைப் போக்குமவை ஆச்சார்ய ஞானாதிகள்–292- என்றும்
அவ் வஞ்ஞாநாதிகளுக்கு நிதானங்களும் சொல்லிற்று ஆயிற்று -293-

—————————————

இந்த தசை சதுஷ்டய பிரசங்கத்திலே -இவனுடைய குண சதுஷ்ட்யத்தையும்
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -295-

இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –

(ஆயி ஸ்வாமிகள்-சம்பாவித ஸ்வபாவமான விருத்த சத் குண யோகத்தை -இந்த அதிகாரிக்கு -வருமே உஜ்ஜவலமான இவனுக்கு –ஸ்வரூப உஜ்ஜ்வல பரிபாக தசைகள் கீழே நான்கும் இங்கு ஒளி பெற்று இருக்கும் பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று கூட்டிக் கொடுக்கும் -)

அதாவது
இவ் வதிகாரிக்கு ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்யதுக்கு உடலாக கீழ்ச் சொன்ன தச சதுஷ்ட்யம் போலே – ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான குண சதுஷ்டயமும் உண்டு என்கை –

—————————————–

அவை தான் எவை என்னும் ஆகாங்ஷையிலே எந்த எந்த குணங்கள் என்று அருளிச் செய்கிறார் –

சூரணை-296-

அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –

(ஆயி ஸ்வாமிகள்-யதார்த்த ஞானம் -உபாதேயமான அஞ்ஞானம் -ஸ்வரூப அநு ரூப சக்தி -ஸ்வரூப விருத்தமான வற்றில் சக்தியும்)

———————————

இவனுடைய குண சதுஷ்டயம் சொன்ன பிரசங்கத்திலே ஈஸ்வரனுக்கும் இவை உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -297-

இது தான்
அவனுக்கும் உண்டு —

(ஆயி ஸ்வாமிகள்-ஈஸ்வரனுக்கும் அஞ்ஞானமும் சக்தியும் உண்டே)

இது தான் அவனுக்கும் உண்டு -அவன் -என்று  கீழ்ச் சொல்லிக் கொண்டு வந்த
ஈஸ்வரனை பராமர்சிக்கிறது –

——————————————

இப்படி இருந்துள்ள இருவருடைய குணங்களுக்கு விஷயங்கள் எவை என்ன அவற்றை விபஜித்து அருளிச் செய்கிறார் –

சூரணை -298-

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –

(ஆயி ஸ்வாமிகள்-இவன் தோஷத்தை அவன் குணம் என்று திருவுள்ளம் -யுகபத் சர்வ தர்சி அவன் –ஞானத்துக்கு -தோஷ துஷ்டனான இவனுடைய தோஷங்களால் மூடிய சிறிய குண திவலை-
வாத்சல்யத்துக்கு முழு இலக்கு -இவனுடைய தோஷம் –-குற்றங்கள் கண்ணில் படாமல் —பட்டும் குணமாக கொள்வதே அவனுடைய அஞ்ஞானம் –
குண லவத்தை மறைக்கும்-புத்தி பூர்வகமாக பண்ணும் அக்ருத் கரணாதி தோஷங்கள் –
அகடிதகடநா சக்திக்கு இலக்கு இவன் ரக்ஷணம் -அசக்திக்கு இலக்கு -தோஷங்கள் கண்டு விட மாட்டாமை)

(இவனுக்கே அநிஷ்டம் நிவர்த்திக்கவும் இஷ்டம் பெறவும் விருப்பம் இல்லாத போது செய்தவதால் சேராததைச் சேர்க்கும் சக்தி வேண்டுமே-கீழே280 -அவனுக்கு அது கிடையாது -மநோ ரதம் பூர்த்தி ஆகாது பார்த்தோம் -இங்கு குற்றம் பண்ணினவன் உண்டே என்னில் அங்கே உத்தம அதிகாரி -இங்கு மத்யம அதமர்கள்)

கீழ் எடுத்த அடைவில் அன்றிக்கே  ஈஸ்வர குண விசேஷங்களை  முந்துற அருளிச் செய்தது
சேதன குண விசேஷங்களைச் சொல்லி  முடித்தால்-அதின் தோஷத்தை சிஷிதாதா தசா துர் வித்யத்தை விஸ்தரேண அருளிச் செய்கைக்காக –

அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் -என்றது
-யஸ் சர்வஜ்ஞ என்றும் –
சகஸ்ராம்ஸூ -என்றும் -சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனான அவனுடைய திவ்ய ஞானத்துக்கு விஷயம் -அத்வேஷ ஆபி முக்கியம் தொடங்கி-இச் சேதனன் பக்கல் உண்டான ஆத்ம குணம் -என்கை

அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் -என்றது –
அவிஞ்ஞாத   சகஸ்ராம்ஸூ -என்றும்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ்ஸூ கமல லேஷணே சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன்நபி ஹ்ருதி ஸ்திதித-என்றும் சொல்லுகிற படியே
சர்வஜ்ஞனாய் இருக்கச் செய்தே -அவிஜ்ஞாதாயாவாய் இருக்கும் அவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம்-பிரக்ருதி வஸ்யனான  இவன் (புத்தி பூர்வகமாக)பண்ணும் அக்ருத்ய கரணாதி தோஷம் என்கை –

சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் -என்றது -பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிற படியே சர்வ சக்தியான
அவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் ஆகிற சக்திக்கு விஷயம் –
இவனுடைய சகல அநிஷ்டங்களையும் போக்கி -ஸ்வரூப  அநு குணமான சகல இஷ்டங்களையும் கொடுக்கிற -ரஷணம் -என்கை –

அசக்திக்கு இலக்கு பரித்யாகம் -என்றது
அப்படி சர்வ சக்தியான அவனுடைய அசக்திக்கு விஷயம் துஸ் சஹமாக இவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கை விடுகை -என்கை-

—————————————————–

இப்படி ஈஸ்வர குணங்களை அருளிச் செய்து -மேல் சேதன குண விஷயங்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -299-

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —

(ஆயி ஸ்வாமிகள்-இல்லாத குண கிரஹணமும் உள்ள தோஷ க்ரஹணமும் பண்ண மாட்டாமை —அரியன செய்து -எளியன விடாமல் –மேல் விழும் படி அபிமதானம் படி
இவனுடைய ஆச்சார்ய கடாக்ஷ விகசித ஞானத்துக்கு அசாதாரணமான இலக்கு -அஞ்ஞான ஞாபக சதாசார்யர் யுடைய ஞான பக்தியாதி குணங்கள்-
விகசித ஞானவான் இவனுடைய ஞான கார்யமான அஞ்ஞானத்துக்கு அவஸ்யம் அபேக்ஷிதமான இலக்கு ஆச்சார்யர் இடம் இல்லாத உடைய ப்ரதிபாதம் –தோற்றம்
மிஸ்ர சத்வம் -சுத்த சத்வம் -வாசி –தூ மணி துவளில் மா மணி -தோஷம் இருக்காது -நம் மந்த புத்திக்கு தெரிய வில்லை என்ற எண்ணம் வேண்டுமே –
ஸூயத்னத்தில் அசக்தனான இவனுடைய சத்தா ப்ரயுக்த ப்ராவண்ய கார்யமான சக்திக்கு சரம இலக்கு-பகவத் கைங்கர்யம் தாண்டி பாகவத கைங்கர்யம் தாண்டி சுலபனாய் நித்தியமான ஆச்சார்ய கைங்கர்யம்
அசக்திக்கு முற்பட இலக்கு ஸூ விருத்த அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் -இது முதலில் வர வேன்டும் -கைங்கர்யாதிகள் அப்புறம் என்றபடி ஸ்வரூபம் உஜ்ஜீவிக்க அபேக்ஷித்தமானவை இந்த நான்கும் -)

(இச்சா கிருபை இரக்கம் இனிமை மூன்றுக்கும் இவை வேண்டுமே-ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால் அதற்குள் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேரும் -இதுவே சரம தசை –)

இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் -என்றது –
இச் சேதனனுடைய ஞானத்துக்கு விஷயம் -மகோ உபாகாரனான ஆசார்யனுடைய சத் குண சமூகம் -என்கை —

அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் -என்றது –
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் -ஆசார்யன் திருமேனி ஸ்வபாவமாய் ஆகந்துகமாய் உள்ள தோஷம் என்கை –

சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் -என்றது-
இவன் பிரவ்ருத்தி சக்திக்கு விஷயம் -ஸ்வ ஆசார்யனுக்கு உகப்பாக செய்யும் கைங்கர்யம் என்கை

அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் –என்றது –
இவனுடைய அசக்திக்கு விஷயம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளான (ப்ரபந்ந ) சாஸ்திர- நிஷித்தங்களில் இவனுடைய அனுஷ்டானம் -என்கை –

——————————————————–

இப்படி இருந்துள்ள நிஷித்தத்தின் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -300-

நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப ஹானி நிவர்த்தக அசக்தி ரூபமான குண விஷயமான -இது தோஷம் இல்லையே -நிஷித்த அனுஷ்டானம் தான் விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட விசேஷத்வேன நான்கு வகைகள் )

(டம்பம் க்ரோதம் அகங்காரம் தர்மம் விட்ட குருவை ஏற்றுக் கொள்ளக் கூடாது -ஸ்ருதி சொல்ல – ஆச்சார்யர்களை ஏற்படுத்தி தனித்து விடாமல் –காரேய் கருணை ராமானுஜன் – தேர்ந்து எடுக்க வேண்டிய பாரம் நம் மேல் இல்லையே – பரம்பரையா கிடைத்த பின் இது பற்றி நினைவிலே கொள்ள வேண்டாமே –மானஸ தோஷம் ஆச்சார்யருக்கு இல்லை -திருமேனி அடியாக உள்ளவையும் -ஆஸ்ரயிக்கும் பொழுது கண்ணிலே படாதே )

அதாவது
உபாதேயமான குண சதுஷ்டயம் போலே -ஹேயமான நிஷித்தம் தானும் சதுர் விதமாய் இருக்கும் -என்கை –

———————————

அந் நாலு படியான அது தான் எது என்னும் -அபேஷையிலே- அவை தன்னை உத்தேசிக்கிறார் -(நாமங்கள் மட்டுமே பெயர் அளவிலே அருளிச் செய்கிறார் )

சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —

(ஆயி ஸ்வாமிகள்-நரக ஹேது -சாஸ்த்ர நிஷித்தம் செய்வதான -அக்ருத்ய கரணம் –க்ருத்ய அகரணம் சொல்லாமல் விட்டது – -விஷித்த கோஷ்ட்டியில் தானே இது உண்டு -இயற்கையிலே க்ருத்யம் பண்ணுபவன் இல்லையே என்றுமாம் –இத்தைப் பற்ற அத்யந்த குரூரமான பகவத் அபசாரம் –சம்சார ஹேது பாகவத அபசாரம் –தத் ததீய விஷயத்தில் சத்தா நாசகமான -ஆத்ம உளன் என்று சொல்லக் கூட முடியாத அஸஹ்ய அபசாரம் -)

———————————————–

இவற்றினுடைய வேஷம் தான் என்னும் ஆகாங்ஷையிலே -இத்தை அடைவே விவரிக்கிறார்

சூரணை -302-

அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –

(ஆயி ஸ்வாமிகள்-அடைவிலே விவரிக்கிறார் -சாஸ்த்ர நிஷித்தம் செய்வது -பகவத் -சரீர பூதர் –சரீர பர்யந்தம் அநர்த்த ஹேதுவாகும் என்ற அறிவு வேண்டுமே –அச்சமும் இல்லாமல் -செய்கிறோம் -தர்ஜன பார்த்ததும் பிரகாரம் போன்ற பர ஹிம்சை
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹமான நாக்கால் அபிராப்தமான அந்நிய ஸ்தோத்ரம்
நரக பீரோக்களான -மாம்சம் உண்ணும் சாமான்யம் – சாமான்யர்களும் செய்யாத பர தார பரிக்ராஹ்யம்பர பொருளை கொள்ள நினைக்கும் பொழுதே நரகம் ஹேது -எடுத்தால் மட்டும் இல்லை-பூதங்கள் நெஞ்சு உளுக்கும் படி -உண்மை விளம்பி –அசத்தியம் கதனம் பிராணியை ஹிம்சை பண்ண உண்மையே பேசினாலும் அசத்யமாகுமே
சாஸ்த்ர நிஷித்தமான அபாஷ்ய பஷணம் -ஜாதியாதி -சிஷ்டர்களால் தொடக் கொடாத அவை உண்ணக் கூடாதே -அஸேவ்ய சேவாதிகள் )

(பர ஹிம்சை -தனக்கு தானே ஹிம்சையும் கூடாது -ஸ்வ இதர ஹிம்சை அர்த்தம் இல்லைஅபிசாரத்தால் பகவத் பாகவத ஹிம்சை பண்ணுமவர்களை -விலக்க வேண்டுமே –தலையை அறுப்பதே கருமம் கண்டாய் உண்டே -கிருத்யமாகுமே -பர தூர -அதிக்கிரமித்து செய்யப்பட ஹிம்சையை சொல்லிற்று என்றவாறு –
பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தைச் சொல்லுகை –பசு மாடு -கண் பார்த்தாலும் பேசாதே -வாய் பார்க்கவில்லை -ரிஷி தப்பிய கதை –
மனு ஸ்ம்ருதி மானஸ -மூன்றும் -அபிதானம் சிந்தனை -வீணான பேராசை – சாஸ்திரம் நிஷித்த வாக்கு தோஷம்  சாரீர த்ரிவிதம் -இப்படி பல உண்டே)

பர ஹிம்சை யாவது -ந ஹிம்ஸ்யாத் சர்வ பூதானி -என்கிற விதியை அதிக்ரமித்து பண்ணும் பிராணி பீடை –

பர ஸ்தோத்ரம் ஆவது -ப்ராப்த விஷய ஸ்தோத்ர அர்ஹமான வாக்கைக் கொண்டு – அப்ராப்த விஷயங்களை  ஸ்துதிக்கை –

பர தார பரிக்ரகம் ஆவது -பிறர்க்கு அனந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ஸ்வீகரிக்கை –

பர த்ரவ்ய அபஹாரம் ஆவது -பிறர் உடைமை யானவற்றை -அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க -பிரகாசமாகவாதல் -அப்ராகாசமாகவாதல் -க்ரஹிக்கை-

அசத்திய கதன -மாவது -யாதாத் த்ருஷ்டார்த்த விஷயமும் -பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தைச் சொல்லுகை –

அபஷ்ய பஷணம் ஆவது -ஜாத்ய ஆஸ்ரம நிமித்த துஷ்டங்களாய் கொண்டு -தனக்கு அப்யபஷம் அன்றிக்கே இருக்கும் அவற்றை பஷிக்கை –

துடக்கமானவை -என்றது –
பர த்ரவ்யேஷ வபித்த்யானம்  மனசா அநிஷ்ட சிந்தனம் விததாபி நிவேசஸ் ச த்ரிவிதம் கர்ம மானஸம்
பாருஷ்ய மன்ரு தஞ்சைவ பைசுநஞ்சைவ சர்வச அநீ பத்த ப்ரலாபஸ் ச வான்மயம் ஸ்யாஸ் சதுர்விதம்
அதத்தா நாமு பாதானம் ஹிம்சா சைவ அவிதானத பர தாரா அபஹாரஸ் ச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் -இத்யாதிகளாலே
மனு ஆதி ஸ்ம்ருதி களிலே சொல்லப் படுகிறவை அநேகம் ஆகையாலே

———————————————

அநந்தரம் பகவத் அபசாரத்தை விவரிக்கிறார் –

சூரணை -303-

பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை

(ஆயி ஸ்வாமிகள்-அத்யந்த நிஷித்தம் இது -தேவதைகள் அங்கம் -என்று கொள்ளாமல் சமமாக சொல்வது -முதல் தெய்வம் மூன்று என்பர் –நம்பாடுவான் பிரதிஜ்ஜை செய்து போன விஷயம் –ப்ரஹ்ம ரஜஸ் கூட செய்யாததை செய்கிறார்களே – அங்கம் என்பதால் இகழவும் கூடாதே -மதிப்பும் வேன்டும் –அங்கி கூட சாம்யம் கொள்ளக் கூடாதே 
கூட பழக்க வந்தவனை சஜாதீய புத்தியுடன் பார்க்கக் கூடாதே -தர்மம் ரக்ஷணத்துக்காக அஜகத் ஸ்வ பாவனாய் ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்தவன் 
கிருபையால் -பெருமையில் ஒன்றுமே குறையாமல் -அவதரித்த -ராம கிருஷ்ண முக்கிய அவதாரங்களில் சஜாதீய புத்தி கூடாதே – அமுக்கிய அவதாரங்கள் மனுஷ்யர் மேல் ஆவேசம் தானே -அங்கே குற்றம் வாராது –
கர்ப்ப வாஸம் -அத்தத்தின் பத்தாம் நாள் -மயங்கும் படி – ஜனன சோகம் மோகம் -சஜாதீய பாவன சாதுர்யம் -அறியாமல் -பாமர மநுஷ்யராக புத்தி பண்ணி அநர்த்தம் படுக்கையும்
தர்சன தூஷண -சாஸ்திரம் படி இல்லாமல் –வர்ணாஸ்ரம விபரீதமான -செய்பவையும் கூடாதே -பிரபன்ன வர்ணம் ஆஸ்ரமம் மாறி -ஸ்வரூப கத விபரீதமான
சேஷத்வமும் பாரதந்தர்யம் இயற்க்கை தானே –உபாயாந்தரங்கள் -ஸூவ கத ஸ்வீகாரம் இவை விரோதம் ஆகுமே -ஸ்வார்த்த ஸ்வ தந்த்ர புத்தியும் கூடாதே
மாத்ரு யோனி பரீஷை யுடன் ஒக்கும் அர்ச்சையில் உபாதான புத்தி பண்ணுவது 
சர்வ பாப சாதன -ஸ்வதந்த்ர -ஆத்ம அபஹாரம் –நம்பினேன் பிறர் நன் பொருளை –
அமுதுபடி சாத்துப்படி பகவத் த்ரவ்யம் திருடுவது -ஆகமம் படி சமர்ப்பிக்கா விட்டாலே திருடு தான் -)

(யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி-பாஷாண்டிகள் -கோரமான நரகத்தில் அழுந்தி சந்த்ர ஸூரியர்கள் இருக்கும் வரை –
உபசாரம்16-ஆரம்பித்து-32- அபசாரங்களை பண்ணுகிறோம் –சர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம)

தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையாவது –
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி நோஞ்ஞேயா சர்வ கர்ம பஹிஷ் க்ருதா யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபி மன்யதே சயாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்று தேவதாந்தரங்களோடு ஈஸ்வரனை சம புத்தி பண்ணலாகாது என்று சாஸ்திரம் சொல்லா நிற்க –
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜாநாநாம் சர்வாத்மா -தமீஸ்வராணாம் பரமம் மகேஸ்வரம் -நதஸ் சமஸ் சாப்ப் யதிகச்ச த்ருஸ் ஸயதே -என்கிறபடியே ஸ்வ இதர சகல நியாமகனாய் -சமாநாதிக ரஹீதனான -ஈஸ்வரனை -அங்கான் அந்ய தேவதா -என்று -தச் சரீர தயா பிரமாதி தேவதைகளோடு சம புத்தி பண்ணுகை-

ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மனுஷ்ய சஜாதீயதா புத்தி -ஆவது –
அஜோபிசந் நவ்யயத்மா பூதானாம் ஈஸ்வரோபிசன் ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய சம்பவாமி யாத்மா மாயா -என்கிறபடியே
அஜகத் ஸ்வாபனாய்-அப்ராக்ருத -திவ்ய சமஸ்தானத்தை -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு –
துயரில் மலியும் மனிசர் பிறவி யில் தோன்றி -நிற்கிற நிலை அறியாதே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின
கர்ப்ப வாச -ஜனன -சோக -மோஹாதிகளை இட்டு -கர்ம வஸ்யரான மனுஷ்யரோடு சஜாதீயனாக நினைக்கை –

வர்ண ஆஸ்ரம விபரீதமான  உபசாரம் ஆவது -தத் ஆராதன தசையில் -த்ரை வர்ணிக அர்ஹமான வைதிக மந்தரங்களாலே  சதுர்த வர்ணரானவர்கள் ஆராதித்தல் -உத்தம ஆஸ்ரமிகள் முதலானோர் க்ருஹஸ்தவத் தாம்பூல நிவேதனாதிகளை பண்ணுதல் துடக்கமானவை –

அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் ஆவது -தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -இத்யாதிப் படியே
ஆஸ்ரிதர்க்கு அபிமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை -திருமேனியாக அங்கீகரித்து -அதிலே அப்ராக்ருத விக்கிரகத்தில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணி எழுந்து அருளி இருக்கிற இத்தை அறியாதே -மாத்ரு யோனி பரிஷிகரைப் போலே -இது இன்ன த்ரவ்யம் அன்றோ என்று விக்ரக உபதானத்தை நிரூபிக்கை-

ஆத்ம அபஹாரம் ஆவது –
யோ அந்யதா சந்த மாத்மான மன்யதா ப்ரதிபத்யதே கிந்தே ந நக்ருதுதம்பம் சோரேணே ஆத்ம அபஹாரிணா –என்று
சகல பாப மூலமாகச் சொல்லப் படுகிற -பகவத் ஏக சேஷ பூதமான ஆத்ம வஸ்துவில் -ஸ்வதந்திர புத்தி –

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றை-பிரகாசமாகவாதல்  -அப்ரகாசமாகவாதல் -தனக்கு ஆக்குகை-

துடக்கமானவை -என்றது –
இன்னும் இப்படி க்ரூரமாக சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவும் உண்டாகையாலே
த்வா த்ரிம்சத அபசாராதிகளும்-(32 அபசாரங்கள் )- உண்டு இறே

—————————————-

கீழ் சொன்ன வற்றோபாதி -பகவத் த்ரவ்ய அபஹாரமும் பகவத் அநிஷ்டமாய் இருக்குமோ
என்கிற சங்கையில் -தான் அபஹரிக்கிற மாத்திரம் அன்றிக்கே-அபஹரிப்பார்க்கு
சஹகரிக்கை முதலானவையும் அவனுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்கிறார் –

சூரணை -304-

பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும் அயாசிதமாகவும்  பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும்–

(ஆயி ஸ்வாமிகள்-சர்வமும் அறிவான் உள்ளே இருந்து -சாஷிகளும் பல உண்டே அச்சம் இல்லாமல் -யாசித்து திருடினவற்றை வாங்குவதும் குற்றம் –அவர்களே தக்ஷிணையாக இவற்றைக் கொடுத்தாலும் குற்றமே-கையே அவனது -இத்தைக் கொண்டு பிடிக்காததை கூச்சம் இல்லாமல் -கொள்வதும் – பாபிஷ்டர்களுக்கு சஹகரிப்பதும் – கோயில் நிலங்கள் அபகரித்து பிரபலம் —செய்வார் செய்வது எல்லாம் அறிந்து தத் அனுரூபமாக தண்டிக்க வல்ல ஞான சக்தியாதி பரிபூர்ணனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் புண்படும் படி இருக்குமே)

தான் அபஹரிக்கையாவது -நேர தானே இதுக்கு கர்த்தாவாகச் செய்கை –

அபஹரிப்பார்க்கு  சஹகரிக்கை யாவது -நாம் அபஹரிக்கிறோம் இல்லை என்று நினைத்து அபஹர்த்தாக்களுக்கு அனுமத்யாதிகளாலே சஹாயம் பண்ணுகை –

அவர்கள் பக்கலிலே யாசிதமாக பரிக்கிரக்கை யாவது -நாம் இவ் அபஹாரத்துக்கு கூட்டு அன்றே என்று நினைத்து தான் அவர்கள் பக்கல் சிலவற்றை அபேஷித்து வாங்கிக் கொள்ளுகை

அவர்கள் பக்கலிலே அயாசிதமாக பரிக்கிரக்கை யாவது-நாம் அபேஷித்திலோம் என்று நினைத்து அவர்கள் தரும் அவற்றை வாங்குகை

பகவானுக்கு அநிஷ்டமாய்  இருக்கும் -என்றது இவை இத்தனையும் -இவனுடைய உஜ்ஜீவ பரனாய் கிருஷி பண்ணிப் போரும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்துக்கு அநபிமதமாய் இருக்கும்  என்கை

——————————————

அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –

சூரணை -305-

பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள்  அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் அபசார பரிபாகமான பாகவத அபசாரம் ஆஸ்ரயத்தை அழிக்கும் அஹங்காரம் அல்ப அஸ்திர அர்த்தம் அடியாகவும் –துர் ஆசையை வர்த்தகம் -சத் ஜனங்கள் வெறுக்கும் காமம் அடியாக இவற்றுக்கு -நிவர்த்தகராய் நிற்கும் பரம பாகவதர்கள் பக்கம் நிலை நின்ற அபசாரம்)

அதாவது
பர உத்கர்ஷம் கண்டு சஹியாமைக்கும் ஸ்வ உத்கர்ஷ புத்திக்கும் உடலான அஹங்காரம் அடியாகவும் – அவர்கள் வைஷ்ண ஆகாரத்தைப் புத்தி பண்ணி -இவர்கள் ஆசைப் பட்டது ஒன்றாகில் இவற்றை விட்டுப் பற்றுவோம் என்று இருக்க மாட்டாமல் -அர்த்த காமங்கள் அடியாகவும் – ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் விரோதம் -என்கை —

——————————————

அநந்தரம் அசஹ்ய அபசாரத்தை விவரிக்கிறார் -(பகவானாலும் சஹிக்க முடியாமல் இருப்பது அன்றோ -)

சூரணை -306-

அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –

அல்லாத அபசாரங்களில் காட்டிலும் -ஈஸ்வரனுக்கு இது அத்யந்த அசஹ்யமாய்
இருக்கையாலே -அசஹ்ய அபசாரம் -என்கிறது –

(அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-பவத் அஸஹநீய ஆகஸீ—ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்-)

நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால்  அசஹமானனாய் இருக்கை யாவது –
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தனமாக அன்றிக்கே -ஹிரணியனைப் போலே பகவத் விஷயமும் பாகவத விஷயமும் என்றால்-காண கேட்க பொறாதபடி இருக்கை-

ஆசார்ய அபசாரம் ஆவது -அவன் அருளிச் செய்த அர்த்தத்தின் படி அனுஷ்டியாமையும் -அவன் உபதேசித்த மந்திர தத் அர்த்தங்களை -அல்ப பிரயோஜனங்களை  நச்சி
அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் -துடக்கமானவை –

தத் பக்த அபசாரமாவது -ஆச்சார்ய பக்தரான ச ப்ரமசாரிகளுடன் ஐக ரஸ்யம் உண்டாய் வர்த்திக்க வேண்டி இருக்க -அது செய்யாமல் –அவர்கள் திறத்தில் பண்ணும் அஸூயையும் அவஞ்சையும்-அவமரியாதையும் – துடக்கமானவை –

————————————————

இப்படி அக்ருத்ய கரணாதி சதுஷ்டைத்தையும் அடைவே விவரித்து அருளி
இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் -இவை தான் இன்னதுக்கு
விரோதியாய் இருக்கும் என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -307-

இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–

(ஆயி ஸ்வாமிகள்-உபய அபசார பரா காஷடை -பகவத் பாகவத -இரண்டுக்கும் எல்லை இது -அர்த்தாத் நிபந்தம் இல்லாமல் அஸஹ்யா அபசாரம் –
ஸ்ருத விபரீத ஆசரணம் -ஆச்சார்யர் இடம் கேட்டதுக்கு விபரீதம் –
ச ப்ரஹ்மசாரிகள் இடம் சமம் புத்தி பண்ணுவதும் ஸ்வரூப நாஸகம் –
சர்வ விரோதி நிவர்த்தக உபாய பூத வைமுக்யத் ஹேதுத்வேண உபாய விரோதி பிராப்திக்கு தடங்கலுமாய் உபேய விரோதியுமாய் இருக்கும்-
அசக்திக்கு இலக்கான நிஷித்த அனுஷ்டானங்களை நான்கையும் விவரித்து
தினசர்யா அனுஷ்டானம் – சரம கைங்கர்ய சோதனம் -பூர்வ தச உஜ்ஜ்வலம் ஆகும் ஸ்வரூபத்தையும் -தத் குண விசேஷங்களும் -இதர தோஷ விசேஷங்களும் சொல்லப் பட்டது)

ஓன்றுக்கு ஓன்று க்ரூரங்களாகையாவது –
அக்ருத்ய கரணத்தில் -பகவத் அபசாரம் க்ரூரமாய் -அதிலும் பாகவத அபசாரம் க்ரூரமாய் -அது தன்னிலும் அசஹ்ய அபசாரம் க்ரூரமாய் இருக்கை-
இதுக்கடி பூர்வங்களில் காட்டில் உத்தர உத்தரங்களில் -பகவன் நிக்கிரஹம் அதிசயித்து இருக்கை –

அக்ருத்ய கரணத்தில் -ஸ்வ ஆஞ்ஞா அதிலங்கனம் அடியான சீற்றம் இறே-

அவ்வளவு அன்றிக்கே -இவ் ஆத்மாவுக்கு ஆத்மாவாய்-அதின் சத்தையே பிடித்துக் கொண்டு போரும் தன் திறத்தில் அபசாரத்தால் வரும் சீற்றம் –

அவ்வளவும் அன்று இறே -ஞாநீத்வாத்மைவ – என்கிற படியே -தனக்கு உயிர் ஆக நினைத்து இருக்கும் பாகவத விஷயங்களில் அஹங்காராதிகள் அடியாக பண்ணும் அபசாரத்தால் வரும் சீற்றம் –

அது தன்னளவும் அன்று இறே நிர் நிபந்தனமாக தன் பக்கலிலும் தன் அடியார் பக்கலிலும் ஆதல் -உபய வைபவ ஞாபகனாய் – உபய அபிமதனான ஆசார்யர் பக்கலிலே ஆதல் -மூவருக்கும் அபிமதரான தத் பக்தர் பக்கலிலே ஆதல் -செய்யும் அபதாரத்தால் வரும் சீற்றம்

ஆகையால் ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாய் இருக்கும் –

அக்ருத்ய கரணத்திலே-பகவத அபசாராதிகளும் அந்தர் பவிக்குமதாய் இருக்க தனித் தனி இப்படிப் பிரித்துச் சொல்லுகிறது இவற்றினுடைய க்ரூர விசேஷங்களைப் பற்ற இறே –

உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாய் இருக்கை -யாவது –
இவ் ஆத்மாவினுடைய உஜ்ஜீவனத்தில் ஒருப்பட்டு -மென்மேலும் கிருஷி பண்ணுகைக்கு உறுப்பான எம்பெருமானுடைய கிருபைக்கும் –
எப்போதும் இவனுக்கு பிராப்யமாய் இருந்துள்ள அவனுடைய முகோல்லாசத்துக்கும் இலக்காய் இருக்கை –
இரக்கம் உபாயம்- இனிமை உபேயம்-என்னக் கடவது இறே –

ஆகையால் இவ் வக்ருத்ய கரணாதிகள்-நீரிலே நெருப்பு எழுமா போலே -அவன் திரு உள்ளத்திலே நிக்ரஹத்தைக் கிளப்பி -அவனுடைய கிருபையும் உகப்பும் –
இவன் பக்கல் அறும்படி பண்ணுகையாலே -அவற்றை உபாய உபேய விரோதிகள் என்னத் தட்டில்லை –

தனக்குத் தானே தேடும் நன்மை-160 -என்று துடங்கி நமஸ் சப்தார்த்தை விஸ்தரேண பிரதிபாதிக்கையாலும் –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயமும்-243 -என்று உகந்து அருளின நில பிரசங்கத்தாலும் –
மேலே -பகவத் கைங்கர்யமும்-274 -என்கிற இடத்தில் -பகவத் சப்தத்தாலும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி பிரதிபாதகமான ஸ்ரீ மத் பத நாராயண -பதார்த்தங்களை ஸூசிப்பிக்கையாலும் –
244-258-மங்களா சாசன பிரகரணத்தாலும்-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும்
பகவத் கைங்கர்யமும் -274-என்று துடங்கி கிஞ்சித் கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது-286- -என்னும் அளவும் சதுர்த்த்யர்தத்தை அருளிச் செய்கையாலும் –
நிஷித்த சாதுர்வித்ய பிரதி பாதன முகேன ப்ராசங்கிகமாக-மீளவும் நமஸ் சப்தார்த்தை பேசுகையாலும்-
இவ்வளவும் உத்தர கண்டார்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஆக-
இப் பிரகரணத்தால்-
கீழ் உக்த உபாயத்தைக் கொண்டு-79-வரை -உபேயத்தை பெரும் சேதனனுக்கு
உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும்-
மேல் 115-133 வரை -பிரபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும் –
பிரபத்தியின் ஸ்வரூப அனுகூலத்வாதியையும் –
ஸ்வ கத ஸ்வீகார அனுபாயத்வத்தையும் –
பரகத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
தத் பிராபல்யத்தையும் –
அவனே ஸ்வீ கரிக்கும் இடத்தில் புருஷகாரத்தை முன்னிடும் படியையும் –
உபயரும் முன்னிடும் அதுக்கு பிரயோஜன விசேஷங்களையும் –
உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலும் -இவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் –
ஸ்வ தோஷ நிவ்ருத்தியும் –
பர அனுபவ விரோதியாம் படியையும் –
மேல் 160-தன்னால் வரும் நன்மை அவனால் வரும் நன்மைக்கும் உள்ள வாசியையும் –
ஈஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் அத்தையும் –
தன்னைத் தான் நசிப்பிக்கும் பிரகாரத்தையும் –
அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்தும்
இவன் ஸ்வரூபத்தை நசிக்கும் படியையும் –
பாகவத அபசார க்ரௌர்யத்தையும் –
தத் பிரசங்கத்திலே பாகவத மகாத்ம்யத்தையும் –
இவன் தினசர்யையும் –
தினசர்யோக்தங்கள் அடைய சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு
அபேஷிதமான வஸ்தவ்யாதியையும் –
தத் சரம உக்த கர்தவ்ய ரூப கைங்கர்ய வேஷத்தையும் –
கைங்கர்ய தத் பூர்வ தசைகளிலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியையும் –
இவனுக்கு உண்டான குண சதுஷ்ட்யத்தையும்-
தத் விஷய விபாகத்தையும் –
அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்யத்தையும்
சொல்லுகையாலே –
அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லப்பட்டது –

ஆறு பிரகரணங்களில் மூன்றாவதான -அதிகாரி நிஷ்டா பிரகரணம் முற்றிற்று –
ஒன்பது பிரகரணங்களில் ப்ரபந்ந தினசர்ய ஐந்தாவது பிரகரணம் முற்றிற்று

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -249-267-தத் அதிகாரி க்ருத்யம் -பெறுவான் முறை -பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 27, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்-பெறுவான் முறை

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307- இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————-

இன்னும் இவ் அர்த்தத்துக்கு உதாரணமாக கீழ்ச் சொன்னவர்கள் காட்டில் வ்யாவிருத்தரான
ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே
என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

(ஆயி ஸ்வாமிகள்-கண்ட காட்சியில் ஸ்நேஹம் இவர்களது -புதியது உண்டு அறியாமல் உள்ளவர்கள் – -நமக்கு நன்மை தேடும் தண்ணியர் -நம் போல் உள்ளவர் என்று தோற்றும்
புரையறக் கலந்த ஆழ்வார்கள் -உத்யோதக கல்பர் -குளப்படி-இவர்கள் ஆழ்வார்களை பார்த்தால் –பிராட்டி ஜனகராஜர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஒழிய இவர்கள் என்றபடி என்பர் ஆய் ஸ்வாமிகள் -)

(மதி நலம் பக்தி ரூபா பன்ன ஞானம்- ப்ரேம யுக்தர் –அத்வேஷ ஆபீ முக்கியம் சம்பந்த ஞானம் நமக்கும் உண்டே சேஷம் என்று அறிவோம்- இதனாலே நாமும் இதிலே அன்வயம் என்கிறார்)

இவர்கள்-என்று சக்கரவர்த்தி முதலாக -கீழ் சொன்ன அதிகாரிகள் அடைய பராமர்சிக்கிறது 
ஆனால் பிராட்டியையும் ஒக்க சொல்லலாமா என்னில் -ஆழ்வார்களில் தலைவரான
நம் ஆழ்வாரைக் காட்டிலும் பெரிய ஆழ்வாருக்கு ஏற்றம் சொல்லுகிறவோபாதி –
போக பரவசையான அவளைக் காட்டிலும் மங்களா சாசனத்திலூற்றத்தாலே
ஆழ்வார்களுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –

ஆனாலும் -நம்முடைய கோடியிலே -என்னலாமோ -என்னில் -இவ் அர்த்த நிஷ்டையில் இவர்களுடைய ஆதிக்யத்தை தர்சிப்பிகைக்காகச் சொன்னது ஆகையாலே விரோதம் இல்லை –

ஆகையால் இவ் விஷய வை லக்ஷண்ய கலுஷ சித்தராய் இதுக்கு என் வருகிறதோ என்று பரிந்து நோக்கினவர்களாகக் கீழ்ச் சொல்லப் பட்டவர்கள் எல்லாரும் என்ற படி –

நம்முடைய கோடியிலே என்னும் படி ஆயிற்று என்றது -இவ் விஷயத்திலே அன்வயித்து இருக்கச் செய்தேயும்  பிரேம பாவத்தாலே மங்களா சாசனத்திலூற்றம் அற்று இருக்கும் நம் போல்வர் மாத்ரம் என்று சொல்லாம் படி ஆயிற்று என்றபடி –

ஆழ்வார்கள் நிலை -என்றது மயர்வற மதி நலம் பெற்றவர்கள் ஆகையாலே நிரதிசய பிரேம யுக்தரான ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டை என்ற படி —

—————————————————–

இவ் வாழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால் தங்களில் ஒப்பர்களோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும்
போல் அல்லர் பெரிய ஆழ்வார்-

(ஆயி ஸ்வாமிகள்–ஏக சப்தத்தால் ஆழ்வார்கள் -பரஸ்பர சாம்யம் இருப்பதால் கீழே சொல்லி  –தாரதம்யம் இல்லா ஞானம் பக்தி வைராக்யம் –பர்வத பரம அணு வாசி உண்டே மங்களா சாசனத்தில் வந்தால் –அனைவரும் கூடினாலும் இவருக்கு ஒரு புடையாக மாட்டார்கள்)

அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடு வாசி உண்டு என்கை-

—————————————–

அவர்களைப் பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –

(கதறுவது எப்போதோ கூடுவோம் இதுவே இவர்களுக்கு நித்யம் -மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்களில் -தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றி -பொங்கும் பரிவால் -பெரியாழ்வார் அன்றோஇலஷ்மணன் பரதன் சத்ருக்கனன் மூவரையும் மற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள்பெருமாளை அன்று மற்று ஓன்று அறியா பரதனை அன்றி மற்று ஓன்று அறியா நிஷ்டையாலேநித்யம் மங்களா சாசனம் இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கைத்தல சேவை யுடன் அரையர் -நித்ய அனுஷ்டானம்
ஆற்றாமையால் வரும் ஸூவ ஸம்ருத்தி அன்வய சம்பாவனை அவர்களுக்கு உண்டே -உயர்நிலை சுயநிலம் –பகவானுக்கு கைங்கர்யம் அடியேனுக்கு அஹங்காரத்தால் இல்லை -ஆற்றாமையால் அன்றோ –பர ஸம்ருத்தி ஏக வேஷம் மங்களா சாசனம் அன்றோ
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -பாட அடியேன் வேண்டுமே -சாமர்த்தியமான -திரு மாங்கல்யம் உடன் நீ நூறு வருஷம் இருக்க வேன்டும் போலே
அவர்களுக்கு தேடிப் பிடிக்கும் படி மங்களா சாசனம் – இவருக்கு பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் -ஸூ ஸம்ருத்தி அன்வய கந்தம் இல்லாத  ஞான திசையிலும் ப்ரேம திசையிலும் இவருக்கு -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்த ஞான தசையிலும் மங்களா சாசனம் உண்டே இவருக்கு –அடியோம் –பல்லாண்டு –சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு –மூன்றையும் காட்டி அடியோம் பல்லாண்டு இந்த விபூதியில் -கலங்கி ப்ரேம தசையில் பல்லாண்டு சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு அங்கே அதீத ஞான தசை – )

(மயர்வற மதி நலம் உடையவர் என்னாமல் பெற்றவர் -நிர்ஹேதுகமாக பகவானால் -அக்லிஷ்ட்ட ஞானம் –சிரமம் இல்லாமல் பெற்ற பகவத் பக்தி ஞானம் வைராக்யம் அன்றோ
பெண்மையை –அவாவும் தோளினாய்–ஸம்ஸ்லேஷிக்க ஆசைப்படுவார்கள் அவர்கள் -இவரோ அஸ்தானே பய சங்கை -போற்றி காதாசித்தம் அவர்களுக்கு -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுவார் இவர் -ஞான தசையிலும் ப்ரேம ஸ்வ பாவம் இவருக்கு)

அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை  ஒத்து இருக்கச் செய்தே -வைர உருக்காய்- ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் பாகவத விக்ரஹ வைலக்ஷண்யத்தை அநு சந்தித்தால் -உத்தோரத்தர அனுபவ காமரராக இருக்கும்  மற்ற ஆழ்வார்களுக்கு
பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம்  எப்போதும் ஒக்க இன்றிகே எங்கேனும் ஒரு தசையிலே தேடிப் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வை லக்ஷண்யத்தை தர்சன அநந்தரம் தத் அனுபவ பரராகை அன்றிகே  அஸ்தானே பய சங்கை பண்ணி  திருப் பல்லாண்டு பாடும் பிரேம ஸ்வாபரான இவருக்கு இந்த மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை —

————————————————–

அதுக்கு ஹேது ஏன் என்ன  அருளிச் செய்கிறார் –

சூரணை -252-

அவர்களுடைய ஆழங்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-அவர்களைப் போல இள நெஞ்சு அல்லாதவர் இவர் -அழகை அனுபவிக்காமல் என் வருகிறதோ என்பர் -ரெங்க ராட்டினம் பார்ப்பத்துக்கும்-எந்த்ரா ரூடேன மாயயா -ரெங்கனே ராட்டினமாக பண்ணுபவன் என்ற எண்ணம் வாசி உண்டே-ஸுந்தர்ய சபலர்-அவர்கள் -சுழித்து குமிழ் நீரூட்டும் அகாத ஸுந்தர்யம் –மங்களா சாசன சபலர் -நாம் ஐஸ்வர்ய சபலர் – அவன் ஆஸ்ரித சபலன் –அனைவருக்கும் சபல புத்தி-ஸுந்தர்யத்தின் இனிமையில் கண் வைப்பார்கள் அவர்கள் – -இவர் மேன்மையில் கண் வைப்பார்-)

(இளவரசன் அழகு -அழகில் முக்யத்வம் அவர்களது -இளவரசில் கண் வைத்தார் இவர்-அனுபவ பரரான அவர்கள்-மரகத குன்றம் ஒக்கும் -அழகு -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -இனிமையே முக்கியம் அவர்களுக்கு -மங்களா சாசன பரரான இவர்-மல்லாண்ட தோள்களுக்கு பல்லாண்டு இவர் -)

அதாவது –
அனுபவ பரரான அவர்களை  த்ருஷ்டி சித்த அபஹாரம் பண்ணி  ஆழங்கால் படுத்தும் அவனுடைய சௌந்தர்யம் தானே  அதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சி  மேன்மேலும் காப்பிடும்படி  மங்களா சாசன பரரான இவர்க்குத் தரித்து நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

————————————-

இவருக்கு பய ஹேது எங்கனே  என்னும்  அபேஷையில் அருளிச் செய்கிறார் –

சூரணை -253-

அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது –
இவருக்கு உபய விருத்திக்கும் ஹேதுவாய்
ஸ்வரூபத்தை கரை ஏற்றும் – 

(பகவத் பாகவத சேஷத்வம் -தத் ததீய -உபய சேஷத்வம்-அழகை அனுபவிக்க கைங்கர்யம் நழுவுமே -ஸ்வரூபம் அழியுமே – உபய விருத்தி -இவருக்கு வளரப் பண்ணும் ஸுந்தர்ய அபிலாஷைகள் -)

(ஆயி ஸ்வாமிகள்-ஆற்றாமை கரை புரண்டு -ஸ்வரூபம் போகுமே-ஸூ பிரயோஜன நிவ்ருத்தி பயன் தத் சேஷத்வ பலன்அந்த சேஷத்வத்தை ஒழிக்கும் இவர்களுக்கு – இதுவே போன பின்பு ததீய சேஷத்வம் பற்றி கேட்க வேண்டுமோநமக்கே நலமாதலில் -ஸூவ பிரயோஜனம் உண்டே -சாதன பக்தி -ஓதி நாமம் குளித்து –பயப்படுத்துகிறார் திருப் புல்லாணி பெருமாளை-ததேக சேஷம் -உருவு அழிக்கும்  ஸுந்தர்யம் தன்னில் ஏக தேசத்தில் அழுத்தி ததீய சேஷத்வத்தை இழக்கப் பண்ணுமே–இது த்யாஜ்யம் அது உத்தேச்யம் என்று போக மாட்டார்களே  ஸுந்தர்யம் வெளி விழுங்கில் என் ஆகும் என்று பீத பீதராய்-அடியோமோடும் –வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு —பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு —அடியோமோடும் முதலில் -யசோதை பாவனை உண்டே –
பகவத் சேஷத்வம் வளர்ந்து அது மூட்ட -ததீயருக்கும் பல்லாண்டு -உபயமும் விருத்தி -அதே அழகு இப்படி அவர்களையும் இவரையும் பண்ணுமே –ததீய சேஷத்வ பர்யந்த தத்சேஷத்வம்பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம் ஆகிய கரை ஏற்றும் – குமிழ் நீர் உண்ணுவார்கள் அவர்கள் ஸூ பிரயோஜனத்தால் –இது தான் நதி -இதன் கரையே பர ஸம்ருத்தி ஸுந்த்ரம் ஆஸ்ரய விஷயத்தில் மங்களா சாசனம் -தத் சேஷத்வ -ததீய சேஷத்வம் –சர்வ ததீய சேஷத்வம் -விருத்தம் -சேவடி -நின்னோடும் தத் சேஷத்வம் – மங்கை ஆழியும் ததீய சேஷத்வம் – அடியோமோடும் -சர்வ ததீய சேஷத்வம்-பிரதம மத்யம பத சித்தம் தானே தத் சேஷத்வமும் ததீய சேஷத்வம் -)

(எட்டாம் பத்தில்-கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்-உபய சேஷத்வத்தையும் -அநு சந்திக்கும் படி – சொல்லி -ஒன்பதாம் பத்தில் –வண்டே கரியாக வந்து கை விட்டு போனார் —
நமக்கே நலமாதலில் -முன்பே திருக் கல்யாணம் ஆனது என்று -பெருமாள் சொல்லும் படியான வார்த்தை -கை விட்ட குற்றம் கூடாதே –பயப்படுத்த -யாம் மடலூர்த்தூம் போலே பயத்திலே ஒருப்படுத்தி கார்யம் கொள்வார்களே  மடல் எடுத்து பலப்படுத்தினார் இவர்மன்னு வட நெறியே வேண்டி பயப்படுத்துவதற்காக சொன்னதும் ஸூ பிரயோஜனம் வர அர்ஹதை காட்டியவை பல இடங்களில் உண்டே –
ஒரே ஸுந்தர்யம் அவர்களை அப்படி பண்ணுவித்து இவருக்கு இப்படி பண்ணுவிக்குமே -பர பிரயோஜனம் இவருக்கு ஸூ பிரயோஜன லேஸம் அவர்களுக்கு காத சித்தகம் நித்யம்  ஆழம்கால் மேடு -ஸ்வரூபம் அழித்து வளர்க்கப் பண்ணும் -என்று மூன்று சூரணைகளில் அருளிச் செய்த அர்த்தங்களை சமன்வயப்படுத்துகிறார் -)

அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்தியம பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே 
போகு நம்பீ-
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வென் சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும்   அழித்து –
பர அதிசய கரத்வமே  வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் என்பது  ஓன்று அறியாதபடி தன் பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌந்த்ர்யம் –

அந்த ஸௌந்தர்ய தர்சனத்தில் அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என் வருகிறதோ என்று வயிறு  எரிந்து காப்பிடுமவரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கையாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக -அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌந்த்ர்யம் -இவருக்கு இப்படிச் செய்கையாலே அவர்களுடைய ஆழங்கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே  அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிக்கே –
மங்களாசாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

————————————————-

மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதாசித்தமாகச் செய்தே -இவர்க்கு நித்யம் ஆகைக்கு  நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -256-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே என்பது –
5-அநிமிஷரைப் பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

(ஆயி ஸ்வாமிகள்-இந்த மங்களாசாசன ஏக யாத்திரை -ஸுகுமார்யத்தால் வந்த தமக்கு பயம் கெட-இவன் மல்லர் நிரசனம் -பிரபல புஜ லஷ்மி ஸ்ரீ மஹா லஷ்மி – சுடர் ஆழி – பாஞ்ச ஜன்யமும் –வீர ஸ்ரீ –ஸ்ரீயபதித்தவம்-– திவ்ய ஆயுதங்கள் காட்ட  -காட்டக் கண்டு –என் வருகிறதோ-கைவல்ய ஐஸ்வர்யார்த்திகளையும் கூட்டி அனுகூலராக்கியும் -அபி சப்தம் பிரதி கூலரையும் -பிரதி யோகி சமுச்சய பரம்ஸ்வ தந்த்ர அபிமான ஸூ போக்த்ருத்வ புத்தியையும்-இந்த இரண்டும் கைவல்யார்த்திக்கு உள்ள தோஷங்கள்  -தேஹாத்ம அபிமானம் -தத் அனுபந்தி போக்த்ருத்வம் -இவை இரண்டும் ஐஸ்வர்யார்த்திகள் தோஷம் அனுகூலர்களை பரம அனுகூலர்களாக்கி சாதனாந்தர சங்கையும் ஸூவ கத ஸ் வீகாரம் மாற்றி – ஸூவ பிரயோஜனத்தையும் மாற்றி –-ராவண வதம் இப்பொழுது நடக்கும் என்று நினைத்து இலங்கை பாழாளாக படை பொருதானுக்குப் பல்லாண்டு பாடுவார் -அதீத அபதானம்-உத்தர காலம் வயிறு எரிவது-பிராப்தி சீமா -பர ஸம்ருத்தி ஏக ஸ்வரூபம் -அங்கும் இதுவே –ஹரி வக்ஷஸ்தல தயா லஷ்ம்யா-தேவர்களுக்கு மங்களத்துக்கு இவளே காரணம்  -விஷ்ணு பராங்முக- அசுரர் -இழந்து-சதா பஸ்யந்தி உன் நித்ரா ஜாக்ரதையாக பார்த்து இருப்பாரையும் சங்கித்து பார்த்து -தாமஸரை உணர்த்துவது போலே –அங்கே சுத்த சத்வமேயாக இருக்கும் -மறந்து பல காலும் உணர்த்த -நியமித்து எழுப்ப -இதுவே தேக யாத்திரையும் கால யாத்திரையும் இவருக்கு -குண அனுசந்தானம் குண அனுபவம் யாத்திரை அவர்களுக்கு -)

(அன்று-இன்று போற்றி -ஆண்டாள் -இவர் சம காலத்தில் போலே-குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற -அன்று இருந்த கோப குமாரர்ர்கள் உடன்-போலே இவரும் குணம் விஷமாகப் படுத்தும் இணைக் கூற்றங்களோ அறியேன் என்றாரே வசம் இழந்து )

அதாவது –
1-தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிஹரிகைக்காக  மல்ல வர்க்கத்தை அநாயாசேன
அழித்த தோள் வலியைக் காட்ட  இந்த தோள் வலியை நினைத்து மதியாதே  அசூர
ராஷச யுத்தத்தில் புகில் என்னாகக் கடவது என்று -அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது –
உண்டான அவமங்களங்கள் போக்குகைக்கும்  இல்லாத மங்களங்கள் உண்டாக்குகைக்கும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்–என்று நம்மைப் பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று  லஷ்மீ சம்பந்தத்தைக் காட்ட -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது —
இந்த பயத்தை பரிஹரிக்கைகாக  இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி  கல் மதிள் இட்டால் போலே இருக்கிற  இவர்களைப் பாரீர் என்று இரண்டு இடத்திலும் ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட  அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
2-அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை மங்களா சாசனத்துக்குத் துணையாக கூட்டிக் கொண்ட அளவால் -பர்யாப்தி பிறவாமையாலே பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும்  ஐஸ்வர்யார்த்திகளையும் திருத்தி  மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-இலங்கை பாழ் ஆளாக  படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ்க் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு  பிற் காலத்திலேயே  சம காலத்தில் போல் வயிறு எரிந்து  மங்களா சாசனம் பண்ணுவது –
4-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே  என்று பகவத் பிராப்திக்கு பலமும் அந்த மங்களா சாசனமே என்பது –
5-ஸ்நேஹாத அஸ்த்தாந ரஷா வ்யசநிபி ரபயம் சார்ங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷா வ்யசநிகள் ஆகையாலே  அநிமிஷராய் இருக்கிற திவ்யாயுத ஆழ்வார்கள்
முதலானவரைப் பார்த்து  குண வித்தராய்  நஞ்சுண்டாரைப் போலே உந்தாமை அறியாது இருத்தல்  அனுபவத்திலே அழுந்தி கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே  உணர்ந்து நோக்குங்கோள் என்று பல காலும் சொல்லுவதாய்க் கொண்டு இவ் மங்களா சாசனமே விருத்தியாய்ச் செல்லும் என்கை –

—————————————————

இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர் ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திருப் பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது -மேல் இவர் உபதேசித்த இடங்களில் அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும் வ்யாவிருத்தி என் என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார்

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்
தனிமையைத் தவிர்க்கை அன்றிக்கே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

(ஆயி ஸ்வாமிகள்-பெரியாழ்வாருக்கும் பாஷ்யகாரருக்கும் சாம்யம் – உபயருக்கும் -உபதேசித்து நிறுத்துவது வேதாந்தம் அறுதி இட்டு -நிர்ணயம் -ஸ்ரீ பாஷ்யம் முகேன-ஆளவந்தாரின் மூன்றில் ஓன்று இது -கிரந்த நிர்மாணம் -பண்ணி – வேண்டிய வேதங்கள் ஓதினார் பெரியாழ்வார் -வேதாந்த நிர்ணயம் சமஸ்க்ருதம் தமிழ் -இரண்டாலும் -நிர்ணயம் -மங்களா சாசனம் தானே வேதாந்த தாத்பர்யம்-பிரதிகூலர் அனுகூலராக மற்ற ஆழ்வார்கள் திருத்தி -இது மங்களா சாசனமாக பர்யந்தம் இவர்கள் இருவருமே
திரு குருகூர் அதனை உள்ளத்து கொள்மின் -உம்மை உய்யக் கொண்டு போக -தனிமை போக -இனி யாரைக் கொண்டு உஸாக –என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -தன் தனிமை தீர்க்கவும் -உபதேசம் உண்டே –
ஆளும் ஆளார் -பூ ஏந்தினால் போலே இருப்பதும் தலை சுமையாக நினைத்துஉபதேச வஸ்துவின் ஸுகுமார்யம் அறிந்து தம்மைப் போலே மங்களா சாசனம் பண்ண ஆள் இல்லாமையால் –குறையை நிறைவேற்ற ஆள் இல்லை -அழுதார் –பகவான் தனிமையை தீர்க்க ஆள் இல்லையே-தனிமையை தவிர்ப்பித்து -பெரியாழ்வார் -பலர் உண்டாக முயன்று வெற்றி அடைந்துசமன்வய அவிரோத சாதன பல ரூப அத்யாய சதுஷ்டய வேதாந்த -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -அவனே காரணம் -அவனே உபாயம் -அவனே பலம் -என்பதே நான்குக்கும் –இப்படி ஆகார வேதாந்தத்தின் -யதார்த்த நிர்ணய ஸ்ரீ பாஷ்யம் —அவனுக்காக வந்து கைங்கர்யம் -அவன் தனிமையை தீர்த்து –திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கி –
கலியும் கெடும் காண்மின் ஸூசிப்பித்து நம்மாழ்வார் பாதுகையாய் இருந்து அவர் ஆசைப்பட்டதை முடித்து வைத்தார் –வேண்டிய வேதங்கள் ஓதி வேதாந்த நிர்ணயம் பண்ணிய பெரியாழ்வார் –அனுகூல பிரதிகூல வாசி இல்லாமல் அனைவருக்கும் –
பிரயோஜனாந்தர பரர்கள் இவருக்கு பிரதிகூலர் – வேதாந்தத்துக்கு பிரதிகூலர்களுக்கு ஸ்ரீ பாஷ்யகாரர் – உபதேச வஸ்துவின் சீர்மையை அறிந்து அவருக்குத் தனிமை தவிர்த்து சகாயம் வேண்டிய இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு வியாவ்ருத்தம் உண்டே -)

(கைங்கர்யத்தில் அந்நிய பரராய் -லீலா விபூதியில் போகத்தில் ஆழ்ந்து-நித்ய விபூதியில் குண அனுபவத்தில் ஆழ்ந்து அந்நிய பரராக இருக்க -இவர் உபதேசித்து திருத்தினார்
இவர்களுடைய ப்ரேம ஆதிக்ய ஹேதுக -அஸ்தான சங்கா க்ருதவிபூதி த்வய மங்களா சாசன அர்ஹ புருஷ அபாவம் -அனுசந்தான ஆயத பகவத் அஸஹாயத்வம் -திருப்பல்லாண்டு -உறகல்-இத்யாதி -உபக்ரம உப சம்ஹாரம் -மங்களா சாசனம் உண்டே –
ஆளவந்தார் மநோ ஹர க்ருத ஸ்ரீ பாஷ்யம் க்ருதம் –-தாத்பர்யம் -காட்டி -யாதாத்ம்ய ஞானம் –உபதேச விதேய சாஸ்திரம் -காரணத்தை தியானித்து -கைங்கர்யத்துக்கு ஆள்களை சேர்த்து –பலமே மங்களா சாசனம் -அனுஷ்டான பர்யந்தமாக காட்டி அருளி-ஸ்ரீ பாஷ்யகாரர் -பெரியாழ்வார் ஆளவந்தார் ஸ்ரீ பாஷ்யகாரர் -சேர்ந்து செய்த இந்த பேசிற்றே பேசும் ஏக கண்டர் -)

அதாவது
பரோ உபதேசத்தில் வந்தால்  மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஜ்ஞாநத்தாலே நல் துணையான பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் 
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில்  போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே  சௌகுமார்ய அநு சந்தானத்தாலே வயிறு மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை  தம் வாசி அறிந்து பரிந்து நோக்குகைக்கும்  ஒரு ஆளும் ஆளுகிறிலர் என்று பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்ய யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று இதுவே பிரயோஜனமாக வாயிற்று –பரம காருணிகரான பிராமாணிகரான ஆச்சர்யர்களில் பாஷ்யகாரரும்  மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில்  இவ் வாழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-

ஆகையால் –
இவ் வாழ்வார் பிரதிகூலரை அனுகூலராக-(அனுகூலர் ஆகும்படியாக )- உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –

எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

—————————————

மயர்வற மதி நலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலேயாக   அன்றோ தோற்றுகிறது-
அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப் போதைக்கு மங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்
பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்-இருப்பதும் செழிப்பாக இருப்பதும் இது ஒன்றாலே – தர்சனம் அனுபவம் கைங்கர்யகளும் இதுக்காக தானே –அபிலாஷை மற்றவர்களுக்கு-அவர் வீதி ஒரு நாள் ஜாலாகிரந்தரத்தாலே காண வாராய் – ஸக்ருத் தர்சனம் போதும் -துவர்ந்து போகாமல் இருக்க –சத்தை இருக்க தர்சனம்–ஸம்ருத்திக்கு அனுபவமும் கைங்கர்யமும் எல்லாம்  சேஷத்வ ரூப ஸம்ருத்தி–இருக்க தர்சனம் -செழிப்பாக இருக்க இவை-அனுபவமும் கைங்கர்யமும் – வேன்டும்-ஸுகுமார்ய ஏக ஸம்ருத்தி -அடியோம் என்கிற  தர்சனம் சத்தைக்கு வாழ இது வேன்டும் சூழ்ந்து இருந்து ஏத்துவார் என்கிற ஸம்ருத்தியும் பல்லாண்டு என்கிற மங்களா சாசனத்தாலே தானே இவருக்கு )

சத்தை யாவது -தாங்கள் உளராகை இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே  தத் தர்சனத்தாலேயாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒரு நாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு ஜாலா கிரந்தரத்திலே ஆகிலும்
ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே ஒரு நாள் போக அமையும் என்று சொல்-என்கையாலே  தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–

சம்ருத்தியாவது  -உளராய் இருக்கிற மாத்ரம் அன்றிக்கே மேலுண்டாய் செல்லும் தழைப்பு -அது அவர்களுக்கு
அந்தாமத்து  அன்பு -முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் —
அன்றிகே –
தர்சன  அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் -கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்ய கார்யமான அனுபவம் இல்லாத போது குலையும்  என்று இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும் –
நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில் அழுகவும் கூட சத்தை இல்லை என்று கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன் என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாகவும் தோற்றுகையாலும்-
சத்தைக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –

மயர்வற மதி நலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு இவற்றுக்கு என் வருகிறதோ என்று வயிறு எரிந்து மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு  மங்களா சாசன விச்சேதம் வரில் தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக  செல்லுகை தானே தழைப்புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலேயாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களா சாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

——————————–

ஆக – மங்களா சாசனத்தில் -பெரிய ஆழ்வாருக்கு உண்டான -அநவரத நிஷ்டையை தர்சிப்பித்தார் கீழ் –
இனி மேல் அவருடைய யாத்ரையே நமக்கு எல்லாருக்கும் யாத்ரையாக வேணும் என்று –
முன்பு தினசரியையில் யுக்தமான மங்களா சாசனத்தினுடைய அவஸ்ய கர்தவ்யதையை அருளி செய்கிறார் –

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை
அநு சந்தித்தால்
ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே
நமக்கு எல்லாருக்கும்
யாத்ரையாக வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-இது நமக்கு உபதேசம் -அவர்களுக்கு தர்சநாதிகளால் பிறக்குமது எல்லாம் மங்களாசாசனம் -தானுகந்த ஊர் எல்லாம்-உகந்து அருளினை நிலங்களுடைய –
வைலக்ஷண்யத்தை -ப்ரீதி புரஸ்தரமாக அனுசந்தித்தால் -உண்ணா நாள் பசி ஆவது ஒன்றுமே இல்லை – உன பாதம் நண்ணா நாள் -உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை –உண்ணாது உறங்காது ஒலி கடலை அடைத்த பெருமாள் –கோல வில்லி ராமன் -வீர ராகவனை நினைக்க –சரீர ஸ்திதி ஹேதுவான -ஊணும் தத் லகுவாக ஹேதுவான உறக்கமும் –மூச்சாடுகை அன்றியே -மங்களா சாசனம் -இவருடைய -மறுவில்லாத -சரம யாத்திரையே வெறும் ஊணும் உறக்கமும் -பல்லாண்டு என்று மேல் எழச் சொல்வது மட்டுமே யாத்திரையாக இருக்கும் நமக்கு -அவர் அருளாலே நிரந்தர யாத்திரையாக வேணும்-இதுவே சேஷத்வ சித்தியாகும் அபாய பஹூள்யமான தேசம் -அநபாயினி–நித்ய பிரிவின்மை – அபாயம் -பிரிவு -)

அதாவது –
அத்யந்த ஸூகுமாரனான சர்வேஸ்வரன் -ஆஸ்ரித ஸூலபத் வர்த்தமாக தன்னை அமைத்துக் கொண்டு -தான் உகந்த வூர் என்னும்படி –
தான் அத்ய ஆதாரத்தைப் பண்ணி வர்த்திக்கும் -கோவில் திருமலை முதலான திவ்ய தேசங்களை அநு சந்தித்தால் –
அபாய பஹூள்யமான தேசம் ஆகையாலே இங்கு எழுந்து அருளி நிற்கிற நிலைக்கு
ஏதேனும் ஒரு தீங்குகள் வரில் என்னாகக் கடவதோ என்னும் வயிறு எரிச்சலாலே
ஆகார நித்ரைகளிலும்  அந்வயம் இன்றிக்கே –
நிரதிசய பிரேம யுக்தரான இவ் வாழ்வாருடைய நிரந்தர மங்களா சாசன யாத்ரையே
சேஷ பூதரான நமக்கு எல்லாம் யாத்ரையாக வேணும் -என்கை-

———————————–

உக்த அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –

சூரணை -258-
ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

(ஆயி ஸ்வாமிகள்-இதுவே தாரகம் -இவருடைய சரம அதிகாரம் -புஷ்ப்ப கைங்கர்யத்தை விட வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தத்தை விட இதுவே பிராரத்த நீயம் -நித்ய மங்களா சாசனமும் இத்தாலே வரும்உபய சேஷத்வ  கைங்கர்ய விருத்தியும் அதுவே தேக யாத்திரை -அதுக்கு ஆள் தேடி பிடிக்கையும் அதுவே சத்தா ஸம்ருத்திக்கு ஹேதுவாகவும் அதுவே ப்ராப்திக்கு பலமாகவும் -இவருடைய விருத்தியே சத் பிரார்த்த நீயம்நிரதிசய ஸுந்தர்ய விசிஷ்ட சேஷிக்கு மங்கள சாசனம் -தத் ஸுகுமார்ய அனுசந்தான ஜெனித ப்ரேம பரவச சேஷ பூத சரம ஸ்வரூப அனுரூபம் -ஸ்வரூப விருத்தம் அல்ல என்று நிகமிக்கிறார்-)

(ராக பிராப்தமான மங்களா சாசனத்துக்கு ஸூ பிரயோஜக பரம்பரயா அவஸ்ய கர்தவ்யம் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு இத்தால் ஓன்று உண்டாக வேண்டாம்–இது ஒரு ஸ்வபாவ விசேஷம் என்று அவன் திரு உள்ளம் நிரதிசய ப்ரீதி அதிசயத்துக்கு ஹேதுவாகுமே -அதிசய ஆசாசனம் ஆகும் – சேஷிக்கு அதிசயத்தை விளைப்பதே சேஷ பூதனுக்கு கர்தவ்யம் -ஏற்புடையதே –)

அதாவது –
இப்படி சேஷ பூதரான வர்களுக்கு எல்லாருக்கும் அவஸ்ய கர்த்தவ்யமாய் இருப்பது ஓன்று ஆகையாலே – மங்களா சாசனம் ஸ்வரூபதுக்கு சேரும் என்கை –
சேஷ வஸ்து வாகில்-சேஷிக்கு அதிசயத்தை விளைத்தே –தன் ஸ்வரூப சித்தி ஆகையாலே 
சேஷிக்கு அதிசயத்தை யாசாசிக்கிற இது சேஷ பூதனான இவனுடைய ஸ்வரூபத்துக்கு அநு குணம் இறே —

——————————————-

இப்படி தினசரியையில் உக்தமான மங்களா சாசனத்தினுடைய ஸ்வரூப விருத்தத்வ சங்கையை பரிகரித்த அநந்தரம்-
அனுகூல சஹவாசம் –என்ற இடத்தில் சொன்ன அனுகூலருடைய லஷணத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப்போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

(ஆயி ஸ்வாமிகள்-இனி -அர்த்தஅந்தர ஸூசகம் -வேறே விஷயம் தொடக்கம் -ஞானாதி பிரேமம் வைராக்யம் -வளர்த்துக் கொடுக்கும் ஸஹவாஸிகள் –
தத்வ த்ரய விஷயீ கரிக்கும் ஞானம் – ஈஸ்வர ஞானம் அடியான பக்தி-ராகம் தத்வ த்வயம் பற்றி வைராக்யம் -நிஸ்ப்ருஹை ‘வைஷ்ணவ அலங்காரங்கள் இவை –
ஒவ் ஒன்றிலே மட்டும் நிலை நில்லாமல் –ஒவ் ஒன்றிலும் நிலைத்து இருப்பவர்கள் -உண்டோ ஒப்பு -பெரியாழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும்-உபதேச ரத்னமாலையில் –
இட்டு மாறினாப் போலே என்றது –வாசனை மிகுந்து — தோள் கண்டார் தோளே கண்டார் போலே –சமுதாய ரூபமான வடிவு -காணலாம் படி புற வெள்ளம் இடும் படி இருக்கும் பரம ஆர்த்தர்  –ஞான அனுரூபமான பிராப்தி அலாபம்–பக்தி அனுரூப அனுபவ அலாபம் – வைராக்ய அனுரூப விரோதி நிவ்ருத்தி அலாபம் -மூன்றாலும் -தவித்து துடித்து –உடன் கூடுவது என்று கொல் -அதனில் பெரிய அவா -பக்தி – பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா —பெரு மிடறு செய்து கூப்பிடுவார்கள் –இவை எங்கே தெரியும் –வடிவிலே தொடை கொள்ளுவார்கள் -என்றது கண்ணிலே தெரியுமே-காணக் கருதும் கண் -ஏக்கம் காட்டுமே – பொன்னி பேர் ஆறு போலே கண்ண நீர் கொண்டு – உருவொடு பேர் அல்லால் கண் -அரங்கவோ என்று அழைக்கும் திருப் பவளம் – ஆடிப் -பாட அழைக்கும் -வாய் அவனை அல்லது வாழ்த்தாது – கையாரத் தொழுவார் -தோள் அவனை அல்லால் தொழா- ஞானம் பக்தி வைராக்யங்கள் காணலாய் இருக்குமே –ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே ஞான வைராக்ய ரத்ன குவியல் -ஆழம் கால் காண முடியாத பக்தி கடல் -)

(இட்டு மாறி -மாறி இட்டால் போல்-பதாந்தரம் -முதல் நிர்வாகம் –அன்றிக்கே -இவர் இடமே உத்பத்தியாய் -ஞானவானாய் இருந்து -அது மாறி -பக்திமானாகி -அது மாறி வைராக்ய சீலராய் இருப்பார் என்றுமாம் –புதியது புதியதாக உயர்ந்த தசை என்றவாறு -ஆஸ்திகன் -பரம ஆஸ்திகன் -வைராக்யம் மிக்கு -ஆர்த்தி மிக்கு இனி இனி என்று இருபதின் கால் கூப்பிடுவார் –இப்படி உள்ளோர்களுடன் நாம் ஸஹவாசம் கொள்ள வேன்டும் என்றவாறு -)

அனுகூலர் ஆகிறார் -என்றது
ஞானாதி வர்த்தகர் ஆகையாலே  சஹவாச யோக்யராய் கீழ்ச் சொல்லப்பட்ட அனுகூலர் ஆகிறார் -என்றபடி –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆவன –
தத்வ யாதாத்ம்ய ஞானமும் – பகவத் ஏஷ விஷையை யான பக்தியும் –
தத் உபய கார்யமாய் வரும் -பகவத் வ்யதிரிக்த விஷய விரக்தியும் -இவை தான் வைஷ்ணவ அலங்காரங்கள் இறே –
இவற்றை இட்டு இறே வைஷ்ணவர்கள் ஏற்றம் சொல்லுவது –
ஆகை இறே நாத முநிகளுடைய திவ்ய வைபவத்தை அருளிச் செய்கிற ஆளவந்தார் –
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே -என்று அருளிச் செய்தது –

இட்டு மாறினாப் போலே -என்றது
ஒரு பதார்த்தம் இருந்த பாத்ரத்திலே -பதார்த்தாந்தரத்தை இட்டு -முன்பு இருந்ததை மாற்றினால் -அதுவே உள்ளதாய் தோற்றுமா போலே –
இந்த ஞானாதிகள் மூன்றும் -ஏக ஆஸ்ர்ய கதமாய் இருக்கச் செய்தே -இவற்றில் ஒரொன்றை பார்க்கும் அளவில் –
ஒன்றை இட்டு மற்றவற்றை மாற்றினாப் போலே இதுவே இவ் வாஸ்ரயத்தில் உள்ளது என்று தோற்றும்படி இருக்கை–

வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை யாவது –
இவர்கள் வடிவு கண்ட போதே இவற்றோடு இவர்களுக்கு உண்டான சம்பந்தம் க்ரஹிக்கலாம் படி இருக்கை –
த்யாஜ்ய உபாதேய விவேக பூர்வகமான பரிமாற்றத்தாலே ஞானம் வடிவிலே தொடை கொள்ளலாம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -காலும் எழா கண்ணா நீரும் நில்லா -இத்யாதிப் படியே இருக்கையாலே -பக்தி வடிவிலே தொடை கொள்ளலாம் –
இதர விஷயங்களை கடைக் கணியாமல் இருக்கையாலே வைராக்கியம் வடிவிலே தொடை கொள்ளலாம் –

அன்றிக்கே –
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்  நவ நவ உன்மேஷ சாலிகளாய் வருகையாலே அபூர்வமான ஞானாதிகளை இட்டு
பூர்வத்தில் அவற்றை மாற்றினால் போலே – தங்கள் வடிவிலே இவை காணலாம் படி இருக்கும் பரம ஆர்த்தர் என்னவுமாம்-

பரம ஆர்த்தர் -என்றது –
சம்சாரத்தில் பொருந்தாமையாலும் – பகவத் விஷயத்தை கிட்டப் பெறாமையாலும் –
இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படியான ஆர்த்தியை உடையவர்கள் -என்கை –

—————————————————-

இவர்களோட்டை ஸஹ வாசத்தால் சித்திக்கும் அது எது -என்ன அருளி செய்கிறார் –

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்
தீரக் கடவதாய் இருக்கும்

(ஆயி ஸ்வாமிகள்-ஞானாதிகள் இல்லாத குறை தீரும்உகந்தவன் உகந்து மடை விடவே விளைவது ஒரு நல்ல வயல் செய்யில் -அரை வயிறு படாமல் நிரம்ப நிரந்தரம் நீர் நின்றால் -உடையவன் உபேக்ஷிக்க உலறும் அசல் செய் -உபேக்ஷை அடியாக ஞானாதிகள் பசை அற்று –உலர்ந்த சம்சாரிக்கும் அந்த ரக்ஷகனான பூர்ண கடாக்ஷத்தாலே-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மான்களுடைய  தர்சன ஸ்பர்ச மாத்திரத்தாலே -ஞானாதி பசை இல்லா உறாவுதல் தீர –வறட்சி கெட தோன்ற பொசிந்து காட்டுமா போலே—நெஞ்சப் பெரும் செய்யை யுடையவராக கடவதாய் இருக்கும் –மடல் எடுக்க பாரித்த திருவாய்மொழி காதல் கடல் புரைய விளைவித்த காரமர் கண்ணன் -அனுகூலர் சஹ வாசத்தால் ஞானாதிகள் நமக்கும் உண்டாகும் -என்றவாறு –ஸஹ வாச ரூப சம்பந்தம் -தர்சனம் ஸ்பர்சம் வேண்டுமே -பூ உடன் சேர்ந்த நாறும் மணக்குமே -)

அதாவது
ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் -நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் -தத் ஆசக்தியால் (தத் அசலாக இருப்பதாலே )வந்த பொசிவாலே வாட்டம் அற்று கிடக்குமா போலே – ஞான பக்தி வைராக்யங்கள் ஆகிய இவை இல்லாமையாலே ஸ்வரூபம் உறாவிக் கிடக்கிறவர்களும் இவற்றால் பரி பூர்ணரான இவர்களோட்டை ஸஹவாச ரூப சம்பந்த்தாலே இவற்றிலே சிறிது அந்வயம் உண்டாய் – இவை நேராக இல்லாமையால் -உண்டான வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்கை

—————————————-

ஏதத் சகவாசத்தால் -இப்படி உறாவுதல் தீர்ந்து கிடக்கும் அளவோ என்னில் –
இவ்வளவும் அன்று -இந்த ஸ்வபாவ விசேஷங்கள் பிராப்திக்குமாக விளைந்து அறும் என்கிறார் –

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே இந்த ஸ்வபாவ விசேஷங்கள்  தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-மோக்ஷ ப்ராப்தியே ஆற்று நீர் -ஞானாதிகள் வெளிப்படும் இந்த நிலையிலே -பூர்ணமாக விளையும் –கீழே பொசியும் -இப்போது உண்டாக காணா விட்டாலும் –மறைந்து இருந்தாலும் -சரம காலத்தில் வெளிப்படும்-புது நீர் இன்றோ நாளையோ அணித்தானால் வற்றிய ஆற்றில் மணல் திரண்டு –பிராப்தி காலம் அணித்த வாறே -விசத தம ஞான பக்தி வைராக்யம்விசதம் -விசத தரம் – விசத தமம் –சிறப்பான விளக்கமான -நிர் யத்னமாக வளர்ந்து -கைங்கர்யம் செய்ய செய்ய -நிறைவேற பிராப்தி ஸூ சகமாக -சரம பாகமாய் விளையும் -அனுகூல ஸஹ வாஸம் அப்பொழுது பலித்து இல்லை யாகிலும் பிராப்தி காலத்தில் பலியாது ஒழியாது என்றவாறு)

அதாவது –
வற்றிக் கிடக்கிற ஆறு- நீர் வரத்து ஆசன்னவாறே -தத் ஸூசகமான மணல் பொசிகை முதலான அடையாளங்கள் உண்டாமா போலே –
பகவத் பிராப்தி ஆசன்னையான வாறே -தத் ஸூசகமான இந்த ஞானாதி ஸ்வபாவ விசேஷங்கள் ஸ்வயமேவ  விளையக் கடவதாய் இருக்கும் -என்கை –

——————————-

இவை இப்படி விளைந்து வரப் புக்கால் -பிராப்தி அணித்தது என்று தோற்றி இருக்குமோ என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று
தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-யானே என்னை அறியகிலாத-நிலை தவிர்ந்து –பிராப்தி அணித்தவாறே நாமே அறியும் படி -நமக்கு தெளிவைக் கொடுக்கும்–ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகள் இது போல்வனவே —திருவாய் மொழி அனுபவ பரம் -இது அனுஷ்டானத்துக்கு வழி கொடுக்கும்
பரதராஜர் ஆஸ்ரமம் -பரத ஆழ்வான் அறிந்தான் – அன்னலனுடை ஒருவனை நணுகினம் நாமே -இதுவே சரம தசை பரதனுக்கு க்ஷணம் தோறும் புதுக்கணித்து பேறு தப்பாது -என்று –சங்கித்து போன தனக்கே சம்சயம் இல்லாமல் தானே அறுதி இடலாம் படி விசத தமமாக இருக்கும் -)

(கர்மாந்தரேஷூ –பலத்துக்காக ஒன்றுமே செய்யாமல் நீர்ப் பண்டமாக உருகி விரக்தி நிறைந்து உகந்து இருக்கும் பாகவத கைங்கர்யத்தில் ஆழ்ந்து சோம்பல் இல்லாமல் சிரத்தை யுடன் ஆடம்ப வர்ஜனம் லோபி இல்லாமல் க்ரோதம் மோகம் இல்லாமல் -பயமும் அற்று –தேக இந்திரிய சுத்தி -த்ரவ்ய தேச சுத்தி -அகால நித்திரை ஆசனம் ஆண் பெண் கூடுதல் இல்லாமல் – –ஸர்வதா சாஸ்திரம் வழி -பாரவஸ்யம் பிரமாணம் -என்று அறிந்து –நிஷித்த வர்ஜனம் -தயா ஷாந்தி அத்ரோகம் சர்வ ஐந்துஷூ -தயை ஷாந்தி –சத் ஸ்வ பாவங்கள் வந்த பின்பு ஜீவன் பகவானை அடைவான் என்று கண்டு கொள்ள வேண்டும்சாண்டில்ய ஸ்ம்ருதிஇந்த குணங்கள் ஞானம் -பக்தி வைராக்யம் அந்தர்கதம்-பக்தியால் உருகி விரக்தி மற்றவற்றில்)

அதாவது –
இப்படி மேன்மேலும் புதுக் கணித்து விளைந்து வருகிற  ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டு இனி நமக்கு ஒரு சரீர பரிக்ரஹம் இல்லை இது சரம சரீரம் என்று தம் மனசுக்கே நிச்சயித்துக் கொள்ளலாய் இருக்கும் -என்கை –

———————————————

ஆக -இப்படி ஸஹவாச விஷயமாக  தினசர்யையில் சொன்ன அனுகூலருடைய
லஷணத்தையும்-தத் ஸஹ வாச பலத்தையும் -அருளிச் செய்து -தத் -அநந்தரம் –
ஸஹ வாச நிவ்ருத்தி விஷயமாகச் சொன்ன பிரதிகூலர் இன்னார் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

(ஆயி ஸ்வாமிகள்-அநு கூல லக்ஷணமும் தத் ஸஹ வாச பலமும் அருளிச் செய்த அநந்தரம் –பிரதி கூல வகை இன்னது என்றும் -உத்தேசயாதி பேதம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –ஞானாதி நாசகராய் கொண்டு -பிரதி கூலர் -ஸஹ வாச யோக்யதை அல்லாத –தேஹாத்ம அபிமானிகள் – ஆத்ம பரமாத்மா விவேகம் அற்ற ஸ்வ தந்த்ரரும்-
பிராப்த சேஷி அபிராப்த சேஷி அறியாத அந்நிய சேஷ பூதரும்-சித்த உபாய விவேகம் அற்ற உபாயாந்தர நிஷ்டரும் -அநு ரூப ப்ரயோஜன பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்-அவன் ப்ரீதிக்கு உகப்பாக -இல்லாமல் அப்ரயோஜன விவேகம் அற்ற – ஸூ ப்ரயோஜன பரர்–)

(ஸ்வம் தந்திரம் -பிரதானம் – ஸ்வ தந்த்ரர்
1-த்ருதீயஅஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –மகாரார்த்தம் -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் -அவ்வானவர்க்கு மவ்வானவன் அடியான்
2-பிரதம அஷரத்தில் -சதுர்தியால் -பகவத் சேஷத்வத்தையும் –ஏறிக் கழிந்த லுப்த சதுர்த்தி ததார்த்தம் —
3-மத்யம அஷரத்தில் -தத் அனந்யார்ஹத்வத்தையும்– -கோவிந்தா உனக்கே நாம் ஆட்ச்செய்வோம் உகாரார்த்தம்
4-மத்யம பதத்தால்-அநந்ய சரண்யத்வத்தையும்–நமஸ் -அர்த்தம்
5-சரம பதத்தால் -அநந்ய போக்யத்வத்தையும்-நாராயணாயா அர்த்தம் –
ஒவ் ஒன்றுமே மேல் மேல் கூட்டிச் செல்லுமே -ஐந்தையும் அறியலாமே-அஷ்ட ஸ்லோகி அர்த்தம்-அனுகூலர் ஸஹ வாஸம் தர்சனம் ஸ்பர்சனம் வேண்டுமே -இங்கே பிரதி கூலர் உதார வீக்ஷணை பார்த்தால் ஆபத்து– தள்ளி இருக்க வேன்டும் -)

பிரதிகூலர் ஆகிறார் -என்றது -ஞானாதி நாசகர் ஆகையாலே -ஸஹ வாச யோக்யர் அல்லாராக கீழ்ச் சொன்ன பிரதி கூலர் ஆகிறார் என்றபடி –
1-தேகாத்ம அபிமானிகள்-இத்யாதி -தேகாத்ம அபிமானிகள் ஆகிறார் -காண்கின்ற தேகத்துக்கு அவ்வருகு ஓர் ஆத்மா உண்டு என்று அறியாதே -தேகத்தில் அஹம் புத்தியைப் பண்ணி  இத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்கள் –
2-ஸ்வ தந்த்ரர் ஆகிறார்  தேக அதிரிக்தமான ஆத்ம வஸ்துவை அறிந்து இருக்கச் செய்தே அத்தை தனக்கு உரித்தாகவே நினைத்து ஒரு விஷயத்திலும் சேஷத்வத்துக்கு இசையாதவர்கள் –
3-அந்நிய சேஷ பூதராகிறார்  சேஷத்வத்தை இசைந்து இருக்கச் செய்தே அத்தை அபிராப்த விஷயங்களில் விநியோகித்து இருக்குமவர்கள்
4-உபாயாந்தர நிஷ்டராகிறார் -பிராப்த சேஷி விஷய சேஷத்வத்தை யுடையராய் வைத்தே தத் பிராப்தி யுபாயம் தத் சரணார விந்த சரணா கதி என்று இருக்கை அன்றிக்கே கர்மாதி யுபாயங்களைப் பற்றி நிற்கிறவர்கள்
5-ஸ்வ ப்ரயோஜன பரராகிறார் ஆகிறார் -பிராப்த  சேஷி கமலங்களை -உபாயமாகப் பற்றி இருக்கச் செய்தே  தாங்கள் பற்றின பற்றை உபாயமாக நினைத்தும் -உபேயமான கைங்கர்யத்தை ஸ்வ போக்யமாக  நினைத்தும் இருக்கும் அவர்கள் –

இப்படி இருக்கிற இவர்கள் பிரணவத்தில்
1-த்ருதீய அஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –
2-பிரதம அஷரத்தில்  சதுர்தியால் பகவத் சேஷத்வத்தையும் –
3-மத்யம அஷரத்தில்  தத் அனந்யார்ஹத்வத்தையும்-
4-மத்யம பதத்தால் அநந்ய சரண்யத்வத்தையும்-
5-சரம பதத்தால்  அநந்ய போக்யத்வத்தையும்  தர்சிக்கும் அதிகாரிக்கு பிரதிகூலர் இறே-

———————————————-

இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி நிபந்தனமான -உத்தேஸ்யாதி பேதங்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேஸ்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி நிபந்தனமான -உத்தேஸ்யாதி பேதங்களை அருளி செய்கிறார்-இவர்களுக்கு -பிரதி கூலர்களுக்கு –விப்ரதிபத்தி -ஸ்வரூபத்தை ஜடம் என்றும் -ஸ்வ தந்த்ரன் என்றும் –
அந்நிய சேஷம் என்றும் -ப்ராப்யம் ஸ்வ யத்ன சாத்தியமும் ஸ்வார்த்தமும் என்றும் -வருகிற விப்ரதிபத்தி உடைய பிரதி கூலர்கள்–இவர்களுக்கு -ஸூ அபிமத பிரதரான உத்தேசியர் வேறே வேறே-ஸூ அபிமத -உபாயங்களும் -ஸூ அபிமத உபேயங்களும் -ரஜஸ் தமஸ் குணம் அடியாக பேதித்து இருக்குமே-)

(பக்தி உபாயம் -உத்தேசியர் பெருமாள் உபாசகனுக்கு -பிடித்ததே புருஷார்த்தம் -ஆக மூன்றும் உண்டே –தத் தத் விப்ரபத்தி அடியாக வேறு பட்டு இருக்குமே -யாகத்து ஜ்யோதிஷட ஹோமம் –யாகம் பண்ணுவது உபாதேயம் -ஸ்வர்க்கம் உத்தேச்யம் -எதனால் என்றால் யாகம் -ஆதரணீயர் இங்கே -அர்த்தம் -அடையப் போகும் புருஷார்த்தம் உபேயத்தில் உண்டே –பிரதிகூலருக்கு உபாதேயத்வமும் உத்தேஸ்யத்வமும் இல்லை ஆகையால் ஆதரிக்கத் தக்கவர் என்பதே கொள்ள வேண்டும்  –பல பிரதரே ஆதரணீயர் -இவரே உத்தேஸ்யம் இவர்களுக்கு)

உத்தேஸ்யர் ஆகிறார் ஆதரணீயர்-
அவர்கள் ஆகிறார் இவ்விடத்தில் ஸ்வ அபிமத பிரதரானவர்கள் –

உபாயங்கள் யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்த சாதனங்கள் –

உபேயங்கள்  யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்தங்கள் –

இவை பேதித்து இருக்கை யாவது –
தத் தத் விப்ரப்ரதிபதி அநு குணமாக வேறு பட்டு இருக்கை —

————————————-

அது தன்னை அடைவே உபபாதிக்கிறார் மேல் –

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேஸ்யர் –
தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–
2-ஸ்வ தந்த்ரர்க்கு உத்தேஸ்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-
3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேஸ்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –
4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேஸ்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –
5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேஸ்யன் -நெஞ்சினால் நினைப்பான்  யவன் -என்கிறவன் 
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் விஷய-ஆத்ம விஷய ஞான கந்தம் அற்ற தேகாத்ம அபிமானிகள்உத்தேச்யர்-பாலும் சோறும் இட்டு -தேக வர்த்திகள் -மரணத்தை தர்மமாகக் கொண்டு இருக்கும் மநுஷ்யர்கள்-
தேக போக உபாயம் -தனமும் தானியமும் பொருளும் –அர்த்த சாத்யம் உபேயம்-ஸ்நானம் பானம் -போஜன லேபனம்-ஐஹிக போகம் -கண்டு கேட்டு உற்று மோந்து உழல்வார்கள்
இரண்டாவது வகை – பரமாத்மா ஞானம் அற்ற -பரதந்த்ரர் என்று அறியாமல் ஸ்வ தந்திரர்க்கு உத்தேஸ்யம் ஸ்வர்க்காதி போக பிரதர் —அல்ப அஸ்திரமான ஸ்வர்க்காதி -அக்னி இந்த்ராதி ப்ரஹ்மாதிகள்  உபாயம் -காம தகா க்ருதம் யாகாதிகள்
பலத்தில் அபிசந்த யுக்த பிரவ்ருத்தி கர்ம அனுஷ்டானம் –ப்ராப்யம் அல்ப அஸ்திர ஸ்வர்க்காதிகள்
மூன்றாவது வகை -அந்நிய சேஷ பூதர்-பகவத் சேஷத்வ தூஷர்களான -தத் அந்நிய சேஷ பூதருக்கு ஸூ அநு ரூப உத்தேஸ்யம் ஷேத்ரஞ்ஞர் –ப்ரஹ்ம ருத்ராதிகள் படைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் கர்ம வஸ்யர்களான-இவர்கள் -உத்தேஸ்யர்-
உபாயம் -துஷ்கரமான தத் சமாஸ்ரயணம் -ராவணன் தலை அறுத்து ஹோமம் -பிள்ளை கறி கேட்க்கும்
பலம் -அவர்கள் லோகம் அடைந்து சாம்சாரிக போக சாயுஜ்யம்
நான்காவது -உபாயாந்தர நிஷ்டர் -ஸாத்ய உபாய நிஷ்டர் -உபாஸ்யனான உத்தேஸ்யர் -அக்னி இந்த்ர- அந்தர்யாமியான சர்வேஸ்வரன் -இவர் தானே இவர்களுக்கும் பலம் கொடுப்பார்
உபாயம் -பல அபிசந்தி ரஹித கர்ம யோகம்இந்திரிய உப ரதி ஒய்வு கொடுத்து -அடக்கியஞான யோகம்உபய சாத்தியமான அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்தைல தாராவத் –பக்தி யோகம் – உபேயம் சோஸ்னுதே -நிரந்தர ஆனந்த நிர்ப்பரே பகவத் அனுபவம்
பிரபன்னர் -பர ஏக பிரயோஜத்வ தூஷக ஸூ பிரயோஜன பரரானதனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே மறந்து – -பிரபதவ்யன் –நெஞ்சினால் நினைப்பான் அவனாகும் நீள் கடல் வண்ணன் –அர்ச்சாவதார எம்பெருமான் உத்தேசம் -கீழ் போலே அந்தர்யாமி தயா இல்லை இவனுக்கு  –(பர ஏக பிரயோஜனராக இருக்கும் அனுகூலர்க்கு யார் உத்தேஸ்யர் என்றால் – அர்ச்சாவதார -வேறே வகை இவனுக்கு -மா முனிகள் அருளிச் செய்கிறாரே )
உபாயம் -அஹங்கார கர்ப்பமான ஸ்வ கீய ஸ்வீ காரம் -தான் பற்றும் பற்றுதல்-உபாயம்
உபேயம் -ஸூ போக்த்ருத்வ கர்ப்பமான ஸ்வார்த்த பகவத் கைங்கர்யம்-)

(மனுஷ்யர்-மரண தர்மம் நினைத்து இருப்பவர்கள் -ஞாத்ருத்வ -கர்த்ருத்வ -போக்த்ருத்வ -யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை-அறிவு இருந்தால் தான்
கர்த்தாவாகவும் அனுபவித்து போக்தாவாயும் -ஆத்மா -மூன்றை மாத்ரத்தையே -சேஷத்வத்தை அறியாத ஸ்வ தந்த்ர புத்தி -ஜீவன் தனித்து ஸ்வர்க்கம் போகலாம்
என்று அறிந்து இருப்பானே -அக்னி இந்திராதி தேவதைகளை உத்தேசித்து பலத்துக்காக யாகம் தானம் ஹோமம் அனுஷ்டானங்களை செய்து –
ஸ்வர்க்காதி -சந்த்ர லோகம் இத்யாதிகள் உண்டே -மேல் அதிகாரி சேஷத்வத்தை அறிந்து -அநந்யார்ஹம் அறியாமல் அனன்ய தேவதா –
வேதம் பிரம்மாவை இந்திரனை அக்னியை வணங்கச் சொல்லி இருப்பதை மேலோட்டமாக அறிந்து -ஆபாத ப்ரதீதி -சித்தம் தானே இது —
ஈ ஆடுவதோ கருடன் எதிரே — இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ நாய் ஆடுவதோ நர கேசரி முன் 
சாயுஜ்யம் உபயோரத்ரா போக்தவ்ய ஸ்யா   விசிஷ்டதா சார்ஷ்ட்டி தாததிர போக்யஸ்ய தாரதம்ய விஹீ நதா—
சாலோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம் -ச யுஜ்யோ பாவ சமான போக்யனாகை ஐகிய பாவம் இல்லை -போக்த்ரு சக்தி தாரதம்யம் —
போக்யம் ஒன்றாக இருந்தாலும் -போக்த்ரு உடைய அனுபவ சக்தி வேறு பாட்டால் -அனுபவம் மாறுமே —சார்ஷ்டித மோக்ஷம் –வஸ்து ஒன்றாகவும் தார தம்யம் இல்லாமல் அனுபவிப்பார் –சக்தியிலும் வேறு பாடு இல்லை என்றவாறு –
சாஸ்திரம் தெளிவாக இப்படி சொல்வதால் ஐக்யம் இல்லையேஅவன் இவர்களை அனுபவிக்கும் பொழுது சமமாக அனுபவிப்பதால் சாயுஜ்யம் –
இவர்கள் அங்கு உள்ளவற்றை அனுபவிப்பதில் வேறுபாடு இல்லாமல் அனுபவிப்பது சார்ஷ்டிதம் என்றவாறு –
ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும் –அந்தர்யாமியாய் இல்லாமல் -இருந்ததே ஆகிலும் -வாசனை –
கர்ம யோகம் தளம் -நிலம் -அகல் விளக்கு போலே கர்ம யோகம் -ஆராத்யனாக இருந்ததால் மறக்க மாட்டானே இவனும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருச்யதே
கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ரா யேன பரதாதிஷூ
கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-
கர்ம யோகத்தால் ஜனகன் -இவர்களுக்கு ஞானம் பக்தி அங்கங்கள்
ஆதி ஜட பரதர் ஞான யோகம் பிரதானம் -கர்ம பக்தி யோகம் அங்கம்
பிரகலாதனுக்கு பக்தி -இவர்களுக்கு கர்ம ஞானம் அங்கம்
இப்படி தனித் தனியே என்றும் பக்தியே உபாயம் இவையே சொன்னது உபசாரத்துக்காக என்றுமாம் – உபாயங்கள் கர்ம ஞான பக்தி -என்று சொல்லாமல் உபாயம் என்றது தனி தனி என்றுமாம் ப்ருதக் உபாயத்வம் ஒத்துக் கொள்ளப்படுகிறது -சாஸ்திரங்களில் –
ந கர்மணா -கேவல கர்மாக்களுக்கு இல்லை– கர்ம யோகத்தால் மட்டும் தான் –
ந அந்நிய பந்தா -தமேவ வித்வான் அம்ருதம் பவதி –வேதனம் தவிர வேறே ஓன்று இல்லை —அந்நிய சப்தம் -கர்ம யோகம் தவிர வேறே என்றவாறு -இது அங்கமாகும் -பரஸ்பர ஸஹிதமாக இவை இருக்கும் –
வித்யா த்வயம் ப்ரதர்தன மது வித்யை -வைஸ்வாரண வித்யை -அந்தர்யாமி -நேராக -சர்வ வித்யா சாதாரணத்வம்-32-வித்யைகளிலும் -சில சாஷாதாக இருந்தாலும் –
கர்மாத் உபாயங்களில் -துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு–ஐந்தாம் அதிகாரி —அநு கூலர் பிராப்தம் இல்லை என்று தானே விடுவார்கள் -இவர்கள் –பிரயோஜன பரர்கள் – எளிதாக இருப்பதாலே பிரபத்தியில் இழிந்த வர்கள்இவர்கள் அர்ச்சாவதாரத்துக்கு அந்தர்யாமியாக நினைப்பார்கள்
அநு கூலர் அர்ச்சாவதாரமான என்று பிரிக்க மாட்டார்கள் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத சுக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்த கீம்தா- நிரஸ்த அதிசயத்வம்– ஆஹ்லாதத்வம் -தாபம் தீர்க்கும்
ஸுகாந்தர அனுபவத்துக்கு போக வேண்டாம் -துக்கம் கலசாத -ஆத்யந்திகம் நித்யம் -என்றவாறு
பேஜஷம் சம்சாரத்துக்கு மருந்து
பரித்யஜ்ய –துஷ் கரம் என்று விட்டு – கீதா ஸ்லோகார்த்தம் –ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் ரஹஸ்ய த்ரயார்த்தம் -வாசி உண்டே
அனுபாய பிரபத்தி -பல பிரபத்தி -பல அனுபத்துக்கு யோக்யதை கொடுப்பதுஉபாய புத்தி இல்லை -அதிகாரி விசேஷணம் தானே
அர்ச்சை தான் உத்தேச்யம் இருவருக்கும் –உபாய பிரதிபத்திக்கு -விசிஷ்டம் அவனுக்கு — இவன் அர்ச்சையே ஸ்வயமேவ உத்தேசித்து இருப்பானே -)

அதாவது –
1-தேகத்தையே தானாக அபிமானித்து இருக்கிறவர்களுக்கு உத்தேஸ்யர் –
தாரக  போஷக போக்ய பதார்த்தங்களை இட்டு தேகத்தை நன்றாக வளர்த்துக் கொண்டு போரும் மனுஷ்யர் –
அபிமத சித்திக்கு உபாயம் – ஸ்வர்ணயாதி யான தனம்
அபிமதமான உபேயம் -இஹ லோகத்தில் உண்டான ஸ்த்ரி அன்ன பானாதி விஷய அனுபவம் –

2-தேக அதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா உளன் அவன் தான் ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ  யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை சாஸ்திர முகத்தாலே அறிந்து தங்களை ஸ்வ தந்த்ரராக நினைத்து இருக்கும் அவர்களுக்கு உத்தேஸ்யர் –அனுஷ்டித்த சாதனத்துக்கு அநு குணமாக ஸ்வர்க்காதி ஆமுஷ்மிக போகங்களைக் கொடுக்கும் அக்னி இந்த்ராதிகளான தேவதைகள் –(ஆதி -ஸூர்யன் போல்வார் )
உபாயம்-ஜோயிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -இத்யாதிகளால் சொல்லப்படுகிற பல அபிசந்தி சஹிதமான யாகாதி கர்ம அனுஷ்டானம் – 
உபேயம்–ஐகிக போகாத் விலக்ஷண ஸ்வர்காத்யனுபவம்-

3-ஜகத்து தெய்வாதீனம் என்னுமத்தை சாஸ்த்ரங்களில் கேட்கையாலே சேஷத்வத்தை இசைந்து  வைத்தே அத்தை பர தேவதா பர்யந்தமாக போக வறியாதே ஆபாத பிரதீத சித்தங்களிலே ஒன்றைப் பற்றி நிற்கும்  அந்ய சேஷ பூதர்க்கு உத்தேஸ்யர் –ஜகத் சர்காதி கர்த்ருதையா பரத்வ புத்தி அர்ஹரான பிரம ருத்ராதிகள் –
உபாயம் -துராராதரானவர்கள் பக்கல் பண்ணும் துஷ்கர சமாஸ்ரண்யம் –
உபேயம் அவர்களோடு -சாமான போக்யானாகை ஆகிற சாயுஜ்யம் –
சாயுஜ்யம்  உபயோரத்ரா போக்தவ் யஸ்யா   விசிஷ்டதா சார்ஷ்ட்டி தாததிர போக்யஸ்ய தாரதம்ய விஹீ நதா-என்னக் கடவது இறே-

4-ஆத்ம ஸ்வரூபம்  பகவத் அனந்யார்க்க சேஷம் என்னும் இடத்தை வேதாந்த முகேனே அறிந்து வைத்தே  அபிமத லாபத்துக்கு அவன் தன்னையே உபாயமாக பரிக்ரஹிக்க அறியாதே  உபாயாந்தர நிஷ்டர் ஆனவர்களுக்கு உத்தேஸ்யன் -அக்னி இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர் யாமியான ஈஸ்வரன் –
இது கர்ம யோகத்துக்கு ஸ்வரசம்–ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும் –கர்மாநுஷ்டானம் தளமாக எழுந்து இருந்தவை ஆகையாலும்  கர்ம ஆராத்யனாவனே ஸ்வ சாதாரண விக்ரஹ விசிஷ்ட வேஷத்தை நமக்கு
பிரகாசிப்பித்தான் என்னும் நினைவு நடக்கையாலும்  தேவதாந்தர அந்தர்யாமியே உத்தேஸ்யனாக சொல்லுகிறது என்று கொள்ள வேணும் –
உபாயம் -தனித்தனியே மோஷ சாதன தயா -சாஸ்திர சித்தங்களான-கர்ம ஞான பக்தி யோகங்கள் –இவை தனித் தனியே உபாயமாம் இடத்தில் -ஓர் ஒன்றுக்கு மற்றவை இரண்டும் அங்கமாய் இருக்கும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருஸ்யதே -கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ராயேன பரதாதிஷூ (ஆதி ஜட பரதர் )கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-என்னக் கடவது இறே —

அன்றிக்கே –
கர்ம ஞான பக்திகள்-என்கிற இடத்தில் -வேதாந்த மரியாதையால் -கர்ம ஞான அநு க்ருஹீதையான -பக்தியே உபாயமாய் -தத் அங்க தயா கர்ம ஞானங்களை உபாயம் என்று உபசரித்து சொல்லுகிறது ஆகவுமாம்-
உபேயம் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹா ப்ரஹ்மண விபச்சிதா -இத்யாதி ஸ்ருதிகளாலும் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்தகீ மதா -இத்யாதி ஸ்ருதி உப ப்ருஹ்மணங்களாலும் சொல்லப்படுகிற நிரதிசய அதிசய ஆனந்த ரூப பகவத் அனுபவம் –
இந்த ஸ்லோகத்தில் -பகவத் பிராப்தி -என்கிற இது -பகவத் அனுபவகமாக இறே
நம் ஆச்சார்யர்கள் (எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தம் -இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு புராணம் )- ஸ்வ பிரபந்தங்களிலே அருளிச் செய்தது –

5-கர்மாத் உபாயங்களில்  துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு (அனுகூலர் அபிராப்தி என்று விட்டு )ஸூகரத்வ புத்த்யா பிரபத்தியில் இழிந்த -ஸ்வ பிரயோஜன பரர்க்கு-உத்தேஸ்யன் -நெஞ்சினால் நினைப்பான் எவன் – என்கிறபடியே ஆஸ்ரிதர் தங்கள் நெஞ்சால் யாதொரு த்ரவ்யத்தை தனக்கு திருமேனியாக கோலினார்கள் அத்தையே தனக்கு திருமேனியாக  அபிமானித்து அதிலே அப்ராக்ருத விக்ரஹத்தில் பண்ணும் ஆதாரத்தை பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கிற அர்ச்சாவதாரமான சர்வேஸ்வரன்(அனுகூலருக்கு -ஆனவன் என்று இல்லாமல் -அர்ச்சாவதாரமே-அர்ச்சையே உத்தேஸ்யம் )
உபாயம்-அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் அவனை உபாயமாக நினைத்து- தான் பற்றின பற்று –
உபேயம் -தனக்கு உகப்பாக பண்ணும் கைங்கர்யம்-

———————————————————–

ஆக உத்தேஸ்யாதி பேதத்தாலே -அவர்களுக்கு உண்டான -அந்யோந்ய விசேஷத்தை தர்சிப்பித்தார் கீழ் –
இவர்களில் பகவத் விஷயத்தோடு ஓட்டற நின்ற மூவருக்கும் -பகவத் விஷயத்தையே பற்றி நின்ற இருவருக்கும் உண்டான விசேஷத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..

(ஆயி ஸ்வாமிகள்-பகவத் பாகவதருக்கு-இந்த ஐவரில் -பிரதி கூலர்கள் —நிக்ரஹ அனுக்ரஹ யோக்யதை இன்னார் என்றும் -266- –கர்ம விநாச ஹேது இன்னது என்றும் -267-அருளிச் செய்கிறார்-ஸஹ படின யோக்யர் -முதல் மூவர் -பகவத் லாபம் உத்தேச்யம் இல்லை -தேக ஸ்வர்க்க ப்ரஹ்மாதி சாயுஜ்ய பிராப்தி தானே இவர்களுக்கு -நேராக பிரதி கூலர் பாகவதருக்கு நிக்ரஹத்துக்கு இலக்காவார் —
தேகாதி விலக்ஷணமாய் பகவத் பர தந்திரமாய் தத் ஏக சேஷமாய் ஸ்வரூபம் என்று தெளிந்த பாகவதர்கள் இவற்றை கால் கடைக் கொண்டு இருக்கும் விலக்ஷணர்கள்
இவர்களுக்கு இம் மூன்று பேரும் -எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் என்று -தள்ளிக் கதவு அடைத்து -காண கண் புதைக்கை ஆகிற நிக்ரஹத்துக்கு நேரே இலக்கு –
மேல் இருவரும் ஸஹ படின யோக்யர்-உபாயாந்தர பரரும் ஸூ பிரயோஜன பரரும் முமுஷுக்கள் -தர்சன ஸ்பர்சன சம்பாஷணத்துக்கு இலக்காவார்கள்-அன்றிக்கே பகவத் நிக்ரஹம் அனுக்ரஹத்துக்கு இலக்கு என்றுமாம்)

அதாவது –
தேக ஆத்ம அபிமானமும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் –
அந்ய சேஷத்வமும் -ஆகிய இவற்றுக்கு அவ்வருகே ஒன்றும் அறியாமையாலே
பகவத் அன்வய கந்த ரஹிதரான மூவரும் -ஷிபாமி -என்கிற பகவத் நிக்ரஹத்துக்கு விஷயம் 

ப்ரக்ருதே பரமாய்  பகவத் அனந்யார்ஹ சேஷமான ஸ்வரூபத்தை அறிந்து  பகவத் அனுபவ கைங்கர்யங்களை புருஷார்த்தமாகக் கொள்ளுகையாலே –
அநந்ய பிரயோஜனராய் –
கர்ம ஞாநாதிகளான உபாயாந்தரங்களிலும்
பிரபதநத்திலும்-
நிஷ்டரான இருவரும் –
ததாமி –
மோஷ இஷ்யாமி –
என்கிற பகவத் அனுக்ரஹதுக்கு விஷயம் -என்கை-

———————————————–

இவர்களுக்கு கர்ம விநாச ஹேது பேதத்தால் வந்த விசேஷங்களை தர்சிப்பிக்கிறார்  மேல்

சூரணை -267-

மூவருடைய கர்மம் அனுபவ விநாஸ்யம்-
நாலாம் அதிகாரிக்கு பிராயச் சித்த விநாஸ்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு புருஷகார விநாஸ்யம் —

(ஆயி ஸ்வாமிகள்–தத் – ததீய -நிக்ரஹத்துக்கு இலக்கான அம் மூவருடைய அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மங்கள் தத் தத் பல சுக துக்க விநாஸ்யம் –
அல்ப அனுக்ரஹத்துக்கு இலக்கு உபாயாந்தர நிஷ்டர் -பாபம் அசத் கர்மம் -பிராயச்சித்த தர்மத்தால் போக்கி கொள்ள வேன்டும்-பிராயச்சித்தம் பண்ணிப் போக்க முடியாத புண்ணியம் பாபம் -இரண்டையும்பகவத் பிரசாதத்தால் போக்கி கொள்ள வேன்டும்
அனுக்ரஹ விசேஷத்துக்கு இலக்காகும் பிரபன்னர் -ஸூவ பிரயோஜன பரர்ந கச்சின் ந அபராத்யதி -பிராட்டி புருஷகார பலத்தால் பொருப்பித்து -அபராத பய நிவ்ருத்தி
அநிஷ்ட நிவர்த்தகம் சித்த உபாய காரியமானாலும் – ஆஸ்ரயண விரோதி நிவ்ருத்தி மாத்திரம்  -தத் சங்கல்பம் அடியாக பிராட்டிக்கு இந்த அதிகாரம் அருளிபிராட்டி கார்யம்-)

அதாவது –
நிக்ரஹத்துக்கு இலக்கான  மூவருடையவும் அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மம் –
அவஸ்யம் அநு போக்தவ்யம் கர்த்தும் கர்ம ஸூபாஸூபம் நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதை ரபி-என்கிறபடியே-அவஸ்யம் தத் பலமுள்ளதை அனுபவித்தால் அன்றி நசியாமையாலே அனுபவ விநாஸ்யம் -என்கிறார்-

அனுக்ரஹத்துக்கு இலக்காகச் சொன்ன இருவரிலும்  வைத்துக் கொண்டு  உபாயாந்தர நிஷ்டனான நாலாம் அதிகாரிக்கு கர்ம ஞான பக்திகள் ஆகிற உபாய விசேஷங்களில் ஒன்றை அனுஷ்டித்தால் அத்தை பிராயச்சித்த ஸ்தாநீயமாக்கி ஈஸ்வரன் சர்வ கர்மங்களையும் கழிக்கையாலே கர்மம் பிராயச் சித்த விநாஸ்யம் என்கிறார் 

பிரபதன நிஷ்டனான ஐஞ்சாம் அதிகாரிக்கு  ஆஸ்ரயண வேளையில் அநாதி கால க்ருத அபராத பீதனாய்  அவற்றை அடைய ஈஸ்வரன் பொறுக்கைக்கு  உறுப்பாக பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே அவளுக்காக இவனுடைய அபராதத்தை எல்லாம் பொறுத்து அங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே புருஷகார விநாஸ்யம்  என்கிறார்-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -243-248-தத் அதிகாரி க்ருத்யம் -பெறுவான் முறை -பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 26, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால்  மூன்றாம் பிரகரணம்-80-30-அதிகாரி நிஷ்டா க்ரமம்-பெறுவான் முறை

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307- இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள்

————————————–

தன்னைத் தானே முடிக்கை யாவது -(180)என்று தொடங்கி-இவ்வளவாக அஹங்காராதிகளின் தோஷம் உபபாதிக்க ப் பட்டது –
அநந்தரம் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கும் பிரபன்ன அதிகாரி உடைய திநசர்யா விசேஷம் சொல்லப் படுகிறது –

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான் ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களைக் கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தைக் கண்டால் போலேயும்  நினைத்து –

அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-காமம் உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் என்னா முன்) பக்கல் அபேஷையும் பிறப்பிக்கும் என்று அஞ்சி –

ஆத்ம குணங்கள் நம்மாலும்  பிறராலும் பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –

7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதன சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்- க்ருபா பலம் என்றாதல் பிறக்கும் ப்ரீதியும் (இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(45விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

(ஆயி ஸ்வாமிகள்-இப்படி -என்று தொடங்கி –உபேய விரோதிகளாக இருக்குமவை -307–உக்த வைபவ விசிஷ்ட பிரபன்னன் – தினசரியா அனுசந்தானம்-
அஹங்கார விஷயங்கள் -ஸ்வரூபேண முடித்தும் -பாகவத விஷய விரோதியாயும் -பிராப்தி பிரதிபந்தகங்கள் –சர்வ பிரகாரம் இம் மூன்றாலும் -அசத் சாம்யா பத்தி ஆக்கும்
சரீரத்தைப் பற்றி வரும் அஹங்காரம்- ஆத்மாவைப் பற்றி வரும் அஹங்காரம் – -தேகாத்ம பிரமம் ஸூவ ஸ்வாதந்த்ர பிரமம் – –விஹித ரூப விஷய ப்ராவண்யம் நிஷித்த ரூப விஷய ப்ராவண்யம் –உத்பத்தி விநாசம் விளை நிலம் -அஹங்கார விஷய ப்ராவண்ய இரண்டுக்கும் காரணமான ஹேய தேகம் –விசிஷ்ட தான் ஆகையால் -சரீரத்தைக் கெட்ட வழியில் -நடத்தும் தானே –அஹங்கார விஷய ரதி க்ராஹ க்ரஸ்தனாய் -முதலைகளால் பிடிக்கப் பட்டவனாய் – பகவத் விமுகனாய்ப் போன தன்னை -ஸ்ரவண -மனன- தர்சனத்தால்-உள்ள படி கண்டால் உருவின வாளும்-எரிந்த விளியும் -இறுக்கின பல்லும்-சத்ருவைக் கண்டால் போலே சரீர விசிஷ்டனான தன்னைக் கண்டால் இது நாஸகம் என்று நினைத்தும் –

இதுக்கு தூபம் போடுவார்கள் சம்சாரிகள் -தத் வசீக்ருதராய்– திரியும் -சம்சாரிகளை காதா சித்கமாக கண்டால்-திவ்ய தேச வசித்தால் இது துர்லபம் தானே -சீறி துஷ்ட சர்ப்பம் போலே பாதகர் என்று நினைத்தும் –கீழே நாஸகம் -இங்கு பாதகம் -சிகிச்சை பண்ணி சரி பண்ணலாம் –

அஹங்காராதிகளில் தோஷ தரிசனத்தை பண்ணுவித்து -பேர் சொல்ல கருக் குலையும் படி சவாசனமாக நிவர்த்தகரான தத் உபய ஸ்பர்சம் அற்ற விலக்ஷண விஸிஷ்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் –ஈட்டம் கண்டிட கூடுமேல் -தூர தேசம் போய் திரும்பி வந்த அபிமத பந்து -சர்ப்பங்கள் -சத்ருக்கள் மத்யத்தில் பயந்து இருப்பவன் அத்தை கெட அபிமத பந்துவைச் சென்று கை பிடித்தது போலே நினைத்தும்

இவர்களை முன்னிட்டு  ஆசைப்பட்ட படி விடாய் தீர அர்ச்சாவதார ஸூலபனான -பிதா போலே -ஹிதம் ஸ்நேஹம் பயம் இரண்டும் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி என்று நினைத்தும்

கையில் கனி என காட்டித் தரும் ஆச்சார்யரை விருப்பத்துடன் பக்தியுடன் -பெரும் பசியால் சேர்ப்பால் சோற்றை கண்டால் போலே அபி நிவேசத்துடன் மேல் விழுந்தும்

ஆச்சார்ய சேவையால் பழுத்த ஞான அனுஷ்டான பூர்ணனான  ஸச் சிஷ்யன் -தான் உகந்த -சேஷத்வ பாரதந்தர்ய ஆத்ம பூஷணங்களைப் பூட்டி –சூடகமே இத்யாதி பராபர குருக்கள் பூட்டும் இவை —வைராக்யம் ஆகிற கட்டுக்குள்ளே அந்நிய த்ருஷ்ட்டி படாதபடி மறைத்து -பகவத் குண அனுபவ போக விஷயம் ஆக்கி நிரந்தரம் நெடு நோக்கு கொள்ளும் விஷயம் -இருந்தான் கண்டு கொண்டே -என்றபடி

ஆக – விரோதி வர்த்தக ஸ்வரூப விஷயத்தில் பாதக பிரதிபத்தியும் -தன் நிவர்த்த விஷயத்தில் ஸ்வரூப வர்த்தக பிரதிபத்தியும் -ஸ்வ தந்த்ர சேஷி பக்கல் ஹிதைஷி பிரதிபத்தியும் -ஆச்சார்ய பர தந்த்ர சேஷி பக்கல் பிராப்ய ஏக பிரதிபத்தியும்- தத் பரதந்த்ரர் பக்கல் ஆதரணீய பிரதிபத்தியும் கொண்டு-

சம்சார ஹேதுவாய் கொண்டு அநர்த்த கரமான –அஹங்காரம் -அர்த்தம் -காமம்ஆஸ்ரயியாய் அஹங்காரம் இது தானே மூலம் -ஸ்வரூப வர்த்தகராய் கொண்டு —
ஸ்ரீ வைஷ்ணவர்களை உபேக்ஷிக்கப் பண்ணும் -ஸூ ஆதிக்ய சாம்யா புத்தி நினைக்க வைக்கும் என்று கருகி குலைக்கும் என்று அஞ்ச வேண்டுமே
அர்த்தம் பிரதி கூலர் பக்கல் சம்சாரிகள் பக்கல் இடா காசுக்குப் பின்னால் தொடர்ந்து நச்சு பண்ணும் ஆத்ம நாசகரமான ப்ராவண்யத்தை பிறப்பித்தும்
அபிராப்த விஷய காமம் -கிருஷ்ண காமம் இல்லை -தன் கால் மேல் விழில் உதைத்துத் தள்ளி -முகம் காட்டாமல் உபேக்ஷிக்கும் ஸ்த்ரீகள் பக்கல் -கால் ஸ்பர்சம் -முகம் தர்சனம் கண்டு ஆனந்தித்து —அபஹாஸ்யம் -என்று அஞ்சியும் -குடல் குலைந்து

ஆத்ம குணங்கள் –தன்னால் வளர்க்க முடியாதே -பிறராலும் –அநாத்ம குண பூதர் -இருப்பதையும் குலைப்பார் –சகல ஆத்ம குண சம்பூர்ணரான சதாச்சார்யர் உடைய நிர்ஹேதுக கடாக்ஷம் அடியாக – –ஞானாதி குண பூர்ணரான –பகவத் கடாக்ஷம் பிரஸாதம் -மூலமே வரும் -என்று துணிந்து-

அஹங்காரம் விஷய வர்த்தகையான தேஹ யாத்ரை-குளித்து உண்டு உடுத்தி -பூசி புலர்த்தி மதரத்து -திரிகை —-கடைக் கணியாமல் உபேக்ஷிக்கையும் –
சத்துக்கள் உடன் சேர்ந்து சதாச்சார்யர் தத்வ அர்த்த சிந்தனை பண்ணி -சம்சார நிவ்ருத்தி ப்ராப்ய அர்ச்சிராதி –ஆத்ம யாத்திரையில் இடைவிடாத விருப்பமும்
அன்னம் பானீயம் நெய் ஷீரம் சந்தனம் பூ வஸ்திரம் தாம்பூலாதி பிராகிருத வஸ்துக்கள் – -ராகம் ஆசை வளர்த்து போக்யதா புத்தியை சவாசனமாக விட்டு
பரமாத்மா கைங்கர்யம் பண்ணி அந்தர்யாமி சமாராதன சதாப்தி பிரசாத பிரதிபத்தி -தத் ததீய பிரசாத பிரதிபத்தி -தேஹ தாரணம்
முமுஷுவான தனக்கு அர்த்த புத்ர விநாச கிலேசம் நினைவில்லாமல் உண்டானால்
பிராப்தி பிரதிபந்தகத்தில் கொஞ்சம் குறைந்ததாக நினைத்து -பிராப்தி காலம் அணித்தாக வந்ததே என்ற எண்ணமும் -வருந்தி பிறக்கும் ப்ரீதியும் –கர்வ ஹேதுவை போக்கி -கிருபா பலம் –
அஹங்காரம் தலை சாய்த்து சம்சாரத்தை அடி அறுத்து வருத்தம் இல்லாமல் பெற்ற ப்ரீதியும்  அத் தலையில் குறை இல்லாதபடி நடுவில் கர்மம் வந்ததே என்ற எண்ணமும் –
பிராரப்த கர்மம் அனுவர்த்திக்கும் – உடம்பே ஆபத்து -உடம்பில் ஆபத்து இல்லை –

கிருபா பல புத்தியில் -ஸமாச்ரயணம் பண்ணின போது –இச்சா ஹேதுக சரீர வாசனா தோஷங்களை கிருபையால் வைத்து மோக்ஷ விருப்பம் பிறப்பித்தும் –
த்வயம் நித்ய அனுசந்தானம் -மோக்ஷ ஹேது என்ற நினைவு இல்லாமல் -சாதன புத்தி இல்லாமல் -ச வாசன நிவ்ருத்தியும்
ஞான பக்தி விலக்ஷணர் பூர்வாச்சார்யர் உடைய நிர்மல ஞான அனுஷ்டானங்களில் நித்தியமான ஆசையும்
உகந்து அருளின நிலங்களிலும்  ஜங்கம ஸ்ரீ விமானம் -பாகவதர் திரு உள்ளம் -ஆதரவு வைக்க வேன்டும் – மங்களா சாசனம் ஆதார அதிசயம் -பாகவதர்களுக்கும்
இதர தோஷ பூயஸ்தம் -அருசியும் ஜுகுப்ஸை வெறுப்பும் -திருஷ்ணை விளைந்து கூப்பிடும் ஆர்த்தியும் -காண வாராய் -துடிப்பும்
ததியர் விஷயத்தில் நீச யுக்தி- விநயம் – அஞ்சலி நமஸ்காரம் -ப்ராக்ருதர் பக்கல் மறந்தும் செய்யாமல் -நிஷித்த பிராகிருத பதார்த்தம் ஸ்பர்சியாமல் –ஆகார சுத்தி -பகவான் கண்டு அருளியது மட்டுமே ஸ்வீகரித்து
ஞான அனுஷ்டான வர்த்தகர் அநு கூல ஸ்ரீ வைஷ்ணவர் -நிரந்தர சக வாசம் -பிரதி கூலர் பக்கல் இருக்க ஒட்டாமல் -க்ஷணம் தோறும் ஆச்சார்யர் அனுவர்த்தனம் பண்ணி தடங்கல் இல்லா நித்ய ப்ரஸாதத்தால் வளரும் –முமுஷு பிரபன்னர் தினசரியா முதல் சூரணை -இது)

(அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் – தேஹாதிரிக்த  ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகை பட்டு இறே இருப்பது – இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –ஆறு பிரகரணங்களாகக் கொள்ளும் போது அதிகாரி நிஷ்டை -மூன்றாவது பிரகரணம் தொடருகிறது -உபாய உபேய அதிகாரங்களில் சில கீழே பார்த்தோம் சக்தி லஜ்ஜை விட்டு இத்யாதி -உதாரணங்களையும் பார்த்தோம் -த்யாஜ்யம் உபாதேயம் -தினசரியா அந்தர்கதம்-
நவ பிரகரணத்தில் -நாலாவது சித்த உபாய நிஷ்டை சொல்லி இது ஐந்தாவது-பிரபன்னர் தினசரியா-
த்வய விவரணம் -நமஸ் அர்த்தம் கீழே சொல்லி – கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் ஆக வேன்டும் -ஸ்யாம்–இருக்க வேன்டும் –தருவித்து கொள்ள வேன்டும் -உத்தம புருஷன் -பிரபத்யே -உத்தம புருஷன்-நான் என்ன மாதிரி இருக்க வேன்டும் – நான் அடியேனாக வேணுமே முதலில் -அதுக்கு தான் தினசரியா -இருக்கும் அளவில்-அதிகாரி விசேஷம் -அனுஷ்டான விஷயம் -இருக்கும் நாள் வரை -இதுவே சங்கதி –
உபாய அதிகாரி மார்பில் கை வைத்து உறங்கலாம் உபேய அதிகாரி இவை எல்லாம் பண்ண வேண்டுமே -ஆகவே இங்கு பட்டியல் இட்டு அருளுகிறார் –
அஹங்கார மூலம் தான் என்கையாலே ப்ரஹ்மாவாய் இழந்து போவது தான் தானே -அதனால் இப்படித் தொடங்குகிறது –
விஹித நிஷித்த ரூப விஷயாந்தரங்களை எனக்கு விருப்பம் -என்றாலே தேகாந்தர புத்தி – பகவத் சேஷ பூதன் என்று அறியாமலும் ஸூ போக்யத்வ புத்தி வரும் –
அஹங்காரம் விஷயாந்தர ப்ராவண்யத்துக்கு விளை நிலம் ஜென்ம பூமி -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி-எத்தாலும் மறைக்க முடியாத ஸ்ரீ வைகுண்டம் தேஜஸ் -அதுக்கே பகவான் ஆதாரம் -இத்தையே மறைக்கும் மாயா -பிரகிருதி காரியம்-சரீரம் – குண த்ரயாத்மகம் -பிரகிருதி பரிணாம ரூபம் – ஸூ கர்ம விசேஷ ஆராப்தமாய் இருக்குமே -கர்மத்தால் தொடங்கிய சரீரம்-கர்ம பலம் அனுபவிக்கத் தானே சரீரம் -ரஜஸ் தமஸ் இவற்றால் கலங்கப் பண்ணுமே -சரீர விசிஷ்டதயா மயங்கி–சரீரமாகவே தான் என்று மதி மயங்கி – –
ஸ்வ தந்தர்ய புத்தி -அபிமானம் -தனக்கு -ஆத்மாவுக்கு –அநர்த்த விஷயங்களில் அதீத ஆதரமும் பண்ணுவான்-அஹம் மாநாதி தூஷிதம்ஸ்தாலீ பாகம் – பானை தண்ணீர் நெருப்பு -போலே ஆத்மா சரீரம் கர்மா -அஹம் அன்னம் –பக்தி உழவன் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-தன்னை –தேக விசிஷ்ட ஸூ பரம் – கண்டால்-தரிசித்தால் -தர்சனம் போலே பார்க்க வைக்கும் -)

(ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இந்திரிய அர்த்தம் திரும்பிப் பார்க்காமல் க்ரோதம் லோபம் மானம் மோகம் ஆலஸ்யம் இல்லாதவர்கள் -அஹங்காரம் தொலைத்து –நமஸ் பத நிஷ்டர்-அநந்யார்ஹ சரண்யத்வம் உடையவர்கள் –இங்கு –ஆத்ம பந்து தானே ஆப்த பந்து ஆவார்கள் பந்து -ஆப்த பதம் என்றவாறு – –தன்னை வணங்க வைத்த கரணங்கள் உமக்கு அன்று என்று சொல்லி உபதேசிப்பார்களே – காருணிகனான சர்வேஸ்வரன் நீர்மையினால் அருள் செய்தான் -நியமன சீலன் -ஸூ ஹ்ருதயம் -)

(ஈஸ்வரனைக் கண்டால் -என்றது அர்ச்சா ஸ்தலங்களில் கண்களாரக் கண்டு
பிறப்பித்தவர் -வித்யா ப்ரவர்த்தகர் -ஸ்நேஹம் பயம் பணிவு -ஹிதைஷி -அரவிந்தம் போன்ற நீண்ட நீண்ட கண்ணானைக் கண்டு கொண்டேனே -பாதீதி பிதா -ரக்ஷகன்
சம்பந்த ஞானம் தெரிந்தால் தானே சத்தாவான் –கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரும் சதாசார்யர்உன் தன் மெய்யில் பிறங்கிய சீர்-திருமேனி யையும் குணங்களையையும் -அனுபவித்து -தாரக போக்யங்களாக – வேன்டும் படி காட்டிக் கொடுப்பார் -)

ஆச்சார்ய அபிமானம் கைங்கர்யம் தவிர வேறே வேண்டாம் என்று இருக்கும் சாத்யாந்த நிவ்ருத்தி உள்ள ஸச் சிஷ்யர்-போதயந்த பரஸ்பரம் -சாத்யாந்தர நிவ்ருத்தாதி-ஆதி பல சாதன சிசுரூஷா -கைங்கர்யம் என்றபடி —

சந்நிதி -அருகில் இருந்தால் என்ற பொருளில் – அர்த்தம் நீச வ்ருத்தி பண்ண வைக்கும் -பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று அலைய வைக்கும் –சேஷத்வ ஸ்வரூப நாஸகம் ஆக்கும் அஹங்காரம் அர்த்தம் காமம் மூன்றும் –

என் நான் செய்கேன் -யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் –பகவத் பிரசாதம் சதாசார்ய பிரசாதத்தாலே வரும் என்று துணிந்து இருக்க வேன்டும் –
காருண்யா சாஸ்த்ர பாணிநா -ஆத்ம குணம் பிறக்க அநாதிகாலம் பிரதிபந்தகங்கள் இருக்க அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்
அயன புண்ணிய காலம் என்றதும் ஸ்ரீ ராமானுஜர் உத்தரீயம் மேலே வீசி மகிழ்ந்து அணுகப் பெரும் நாளிலே ஒரு அயனம் ஒழிந்ததே என்ற திரு உள்ளம் கொண்டாரே –
யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -அனுக்ரஹம் தர இச்சிப்பவனுக்கு சொத்தை பிடுங்கி பந்துக்களை விரோதிகளாக்கி –நோய் நொடிகள் கொடுத்து -செய்வேன் என்றானே ஸ்ரீ கீதாச்சார்யன் பூர்வாகம் உத்தராகம் வெட்டி –சொத்தை அடைவது எப்போதோ என்று-திருவடிகளில் சேர்த்துக் கொள்வது எப்போதோ என்று பார்த்து இருக்கும் ஸ்வாமி அன்றோ -கீழ் சரீரம் பெற்றது நிக்ரஹ பலம் –சரணாகதி அடைந்த இந்த பிறவியில் அனுக்ரஹ பலம் —பரஸ்பர நீச பாவம் பாகவதர்கள் இடத்தில் -பிராகிருத விஷயங்களில் கூடாது -பிரசாதகங்கள்-தூண்டி விடுவது என்றபடி -)

(அனுவர்த்தனம் -ப்ரீதி அனுகுண வியாபாரம் – 1-அருகில் பார்த்து சடக்கென எழுந்து நிற்க வேணும் -பிராண வாயு தானாகவே எழுமே — 2-தள்ளிப் பார்த்தாலும் எழுந்து இருக்க வேணும் -3-தர்சன அனுபவ ப்ரீதி வேன்டும் -4-சாஷ்டாங்க பிராணிபாதனம் –  5-நிவேதனம் -அறிமுகம்- அபிவாதனம் — 6-திருவடி தொழுது வந்தனம் –7-எழுந்து அருள கை கொடுத்து – 8-மார்க்க பிரதர்சனம் – 9-பின்புறம் பக்கவாட்டு முன்னால் நடந்து கூட்டிப் போக வேன்டும் – 10-ஜெய ஜெய வீர பாஷாணம் சொல்லி -பராக் கட்டியம் சொல்லி -11-வீட்டுக்கு மரியாதை உடன் கூட்டி சென்று -12-சாந்தமான இடம் -13-ஆசனம் -14-பாத பூஜை – 15-அர்க்கம் உபகாரம் -16-ஸூஸ்வாகதம்- நல்ல வரவாகட்டும் 17- ப்ரசாதனம் -வீசி – 18-ஷாமணம் அபசாரங்களுக்கு -19-ப்ரீதி -பகவத் சம் கதை -20-உப ஆசனம் –பக்கத்தில் கீழே உட்கார்ந்து -கடாக்ஷம் பெற – 21-ஆஸ்ரயணம்- 22-ஆத்மாத்மீய நிவேதனம் -23-ஆஜ்ஜா -என்ன நியமனம் கேட்டு –24-ஆலோக நிர்தேசம் வசனம் ஆதரவு மூன்றிலும் – 25-சம்பத் சாதனம்-சம்பத்துக்களை கொடுத்தல் – 26-இஷ்ட ஆதார -27-அநிஷ்ட நிவர்த்தனம் -28-விரஹ அநிஷ்ட அஸஹிஷ்ணுத்வம் – 29-தாஸ்ய அபிமானம் -30-அநு வ்ரஜ்யா-அவர் திரு மாளிகை வரை கூடச் சென்று – 31-ஸ்ரவணம் 32-கீர்த்தனம் 33-ஸ்ம்ருதி – 34-பக்தி ஞான சமாச்சார வைராக்யம் கொண்டாட்டம் அனுமோதனம்- 35-சங்கம் இச்சை உப கமனம் -நோக்கி நடத்தல் – 36-அவர் உட்கார்ந்த பின் உட்கார்ந்து -37-சமான சுக துக்கத்வம் -38-பரஸ்பர அர்த்த சிந்தனம் – 38ஆத்ம க்ஷேம கரம் – 39-கிரியா காலே-வரித்து கூட்டி வர வேன்டும் – 40-சதஸ் அக்ரேஸ பூஜ்ஜியம்- சாந்நித்யம் ஸூரிகள் நடுவே 41-ஆஜ்ஜை பெற்ற மேலே கார்யங்கள் -42-தோஷங்களை மறைத்தும் மறந்தும் குணங்களையே நினைத்து- ஆச்சார்யருக்கு பிரியமான தனம் தக்ஷிணை கொடுத்து-இப்படி பலவற்றையும் செய்ய வேன்டும் -பாகவத கைங்கர்யம் மரம் கொடுக்கும் பழம் தானே மோக்ஷம் -பரத்வாஜர் சம்ஹிதை  –ஸ்ரீ பாத தீர்த்தம் புத்ர பத்னி கொடுத்து பாவனத்வம் திருவடி பிடித்து விட்டு- பராசரரும் இது போன்ற பல அனுவர்த்தங்களையும் பட்டியல் கொடுத்தருளி உள்ளார் -)

(ஜாதி ஆஸ்ரய நிமித்த ப்ரயுக்த துஷ்ட ஆகாரங்கள் -தாழ்ந்த ஜாதி வஸ்துவை -வெங்காயம் பூண்டு  ஆஸ்ரய -தர்மம் நழுவி சமைத்த உணவுநிமித்தம் தீட்டு உடன் செய்த அன்னம் கூடாதே கால துஷ்டம் –ஊசிப் போன  தைலம் முதலான தீண்டப்படாத –பழையது உண்ணலாமோ -ஜலத்தில் வைத்த உணவு உண்ணலாம் – ஊறுகாய் சாப்பிடலாமே –கிரியா துஷ்டம் -சூடு பண்ணி பக்குவம் -நெய் இல்லாமல் பண்ணக் கூடாதாம் –சம்சர்க்கம் துஷ்டம் கேசம் புழு இத்யாதி  இப்படி ஆறும் துஷ்டங்கள் -)

(பாகவதர்கள் போனகமே உத்தேச்யம் -ஞானம் அனுஷ்டானம் வளர்த்துக் கொடுக்கும் -சாஸ்திரம் ஆகமம் பார்க்காதவர்கள் இடம் சங்கமம் கொள்ளாமல் இருக்க வேன்டும் -) 

இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி -சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்னும் அளவாக —
இப்படி -என்று கீழ் உக்தமான பிரகாரத்தை பரமார்சிக்கிறது –
சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவாகை யாவது -ஸ்வரூபேண முடித்தும் – பாகவத விரோதத்தை விளைத்து முடித்தும் -பகவல் லாப விரோதியையும் -எல்லாப் படியாலும் -அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பமாம் படி ஸ்வரூபத்தை உருவு அழிய பண்ணுமதாய் இருக்கை-

அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் – தேஹாதிரிக்த  ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகைப் பட்டு இறே இருப்பது –
இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –

அதனுடைய கார்யமான விஷய பிராவண்யத்துக்கும் -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வா தந்திர அபிமானமுமே விஷயங்களை ஸ்வ போக்யத்வேன விரும்புகைக்கு மூலம் ஆகையாலே -விஷய பிராவண்யத்தை அஹங்கார கார்யம் என்கிறது –

விஷய சப்தத்தாலே கீழ் அனுகூலமாகவும் பிரதி கூலமாகவும் சொல்லப்பட்ட -விஹித நிஷித்த தத் ரூப விஷய த்வத்தையும் சொல்லுகிறது –

விளை நிலம் தான் ஆகையாலே -என்றது -இவை இரண்டுக்கும் ஜன்ம பூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளை பண்ணக் கடவ குண த்ரயாத்மாக -பிரகிருதி பரிணாம ரூபமாய் -ஸ்வ கர்ம விசேஷ ஆரப்தமாய் இருக்கிற -சரீர விசிஷ்டனான தான் ஆகையாலே என்றபடி –

கர்ம அனுகுணமாக ரஜஸ் தமஸ்ஸூகளாலே கலங்க வடிக்கும் சரீர விசிஷ்டைதையாலே –
மதி மயங்கி-தான் அல்லாத தேகத்தைத் தானாகவும் -தனக்கு உரியன் அல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவும் அபிமானித்து தனக்கு அநர்த்த கரமான விஷயங்களிலே அத்ய ஆதரத்தைப் பண்ணுவதாம் அவன் தானே இறே –

தன்னைக் கண்டால் -இத்யாதி -இப்படி அநாதி காலம் போந்தவனாய் -இப்போதும் அதுக்கு யோக்யமான சரீர விசிஷ்டனாய் இருக்கிற தன்னை தர்சித்தால்-கொன்று அல்லது விடேன் என்று – ச ஆயுதராய் பல் கவ்வித் திரியும் சத்ருவைக் கண்டால் போலே -குடல் கரித்து -தனக்கு நாசகனாய் நினைத்தும் -தங்களுடைய உக்தி விருத்திகளாலே -துர் வாசனையைக் கிளப்பி -அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் –தத் உபய வஸ்ரான சம்சாரிகளை கண் எதிரே கண்டால்-அணுகில் மேல் விழுந்து அள்ளிக் கொள்ளும் அதிக குரூரமான சர்பத்தைக் கண்டால் போலேயும் அஞ்சி நடுங்கி பிற் காலித்து நமக்கு பாதகர் என்றே நினைத்தும் –

தங்களுடைய உபதேசம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் -அஹங்காராதிகளின் தோஷ தர்சனத்தைப் பண்ணுவித்து -தத் பிரசங்கத்திலே பீத பீதனாம் படி பண்ணி – சவாசனமாக அவற்றை நிவர்திப்பிக்கும் மத்யம பத (-நமஸ்-உகாரம் என்றுமாம்-) நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காணப் பெற்றால்-தன்னுடைய அநர்த்த ஆப்யுதங்கள்
இரண்டும் தங்களதாய்-தீயது விலக்கி-நல்லத்தில் மூட்டி ரஷிக்கும் ஆப்த பந்துக்களைக் கண்டால் போலே அத்ய ஆதரம் பண்ணி நமக்கு நல் துணை யானவர்கள் என்று நினைத்தும் –

அடியிலே கரண களேபரங்களைத் தந்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாமல் நல் வழி நடக்கும் படி சாஸ்த்ரங்களைக் காட்டி -அக்ருத்ய கரணாதிகளில் சிஷித்து சர்வ அவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்து போரும் ஈஸ்வரனை
அர்ச்சா ஸ்தலங்களிலே கண்களாரக் கண்டால் -உத்பாதகனாய் -வித்யா ப்ரதனாய் –
அபேத பிரவர்தகனாதபடி நியமித்து நடத்திக் கொண்டு போரும் ஹிதைஷியான
பிதாவைக் கண்டால் போலே -சிநேக சாத்வச வினயங்களை உடையனாய்க் கொண்டு -நமக்கு ஹித பரன்-என்று நினைத்தும் –

அநாதி காலம் அசந்நேவ என்னும் படி கிடந்த தன்னை -பகவத் சம்பந்தத்தை அறிவித்து –
சத்தானாக்கி மென் மேலும் தன் உபதேசத்தாலே ஞான வைராக்ய பக்திகளை  விளைவித்து  கையில் கனி என பகவத் விஷயத்தை காட்டித்தரும் -மகா உபகாரகனாய் –
உன் சீரே உயிர்க்கு உயிராய் -என்றும் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்றும்
சொல்லும்படி -குண விக்ரஹங்களாலே தனக்கு தாரக போக்யனுமாய் இருக்கும்
சதாச்சார்யனை  கண்ணுக்கு இலக்காகும் படி கண்டால் -கண்ணாஞ்சுழலை இடும்
பெரும் பசியன் -தாரகமும் போக்யமுமான சோற்றைக் கண்டால் போலே
அத்ய அபிநிவேசத்தோடே அனுபவித்து -நமக்கு தாரக போக்ய விஷயம் என்றே நினைத்தும் 

சாத்யாந்தர நிவ்ருத்தாதி சமஸ்த ஸ்வாபவ  சம்பன்னதயா -சம்யக் ஞான பிரேமவானாய்
இருக்கும் சச் சிஷ்யனைக் கண்டால்-தனக்கு ஆனந்த ஆகவமான அபிமத விஷயத்தைக்
கண்டால் போலே -பகவத் குண அனுசந்தான தசையில் -நாம் சொல்லுகிற பகவத் குணங்களை ஆதரித்துக் கேட்ப்பது -அனுபாஷிப்பது -வித்தனாவதாம் ஆகாரங்களாலே நமக்கு ஆனந்த அவஹன் என்று நினைத்தும் –

அஹங்கார அர்த்த காமங்கள் மூன்றும் -இத்யாதி –
இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு -அஹங்காரம் அனுகூலர் பக்கல் -அநாதாரத்தை பிறப்பிக்கும் –அதாவது சேஷத்வத்தை தன் சன்னிதியில் ஜீவிக்க ஒட்டாத படி இறே அஹங்காரத்தின் பலம் இருப்பது –
அஹங்காரி யானவன் -ந ந மேயம் கதஞ்சன-என்று இருக்குமது ஒழிய ஒரு விஷயத்திலும் தலை சாய்க்க இசையானே –
ஆகையாலே அஹங்காரம் மேல் இடுமாகில் -ஸ்வரூப வர்த்தகராய்க் கொண்டு அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் –
நம்முடைய சேஷிகள் என்று துடை நடுங்கி எழுந்து இருந்து பிரணாமாதி பூர்வகமாக அனுவர்தகங்களைப் பண்ண ஒட்டாதே -தன்னை
அவர்களில் அதிகனாவாதல் -அவர்களை தன்னோடு சமராகவதால் -புத்தி பண்ணி அநாதாரிக்கும் படி பண்ணும் என்கை –

அர்த்தம் பிரதி கூலர் பக்கல் ப்ராவண்யத்தை பிறப்பிக்கும் -அதாவது –
ஆரையாகிலும் சென்று அநு வர்த்தித்து -ஒரு காசு பெற்றதாய் விட வேணும் என்னும் படி இறே அர்த்த ராகம்  இருக்கும் படி –
ஆகையால் அது ஸ்வரூப நாசகத்வேன-பிரதி கூலரான சம்சாரிகளைக் கண்டால் –
வெருவி ஓடிப் போக வேண்டி இருக்க -ஒரு காசை நச்சி அவர்களோடே உறவு பண்ணி –
அவர்கள் இருந்த இடங்களிலே -பல காலம் செல்லுவது -அவர்களை அழைத்து விருந்து இடுவது -அவர்கள் குண கீர்த்தனம் பண்ணுவதாம் படி -அவர்கள் விஷயத்தில் பிராவண்யத்தை  உண்டாக்கும் என்கை-

காமம் உபேஷிக்கும் அவர்கள் பக்கல் அபேஷையை பிறப்பிக்கும் -காமயத இதி காம -என்கிறபடி – காம சப்தத்தாலே விஷய சம்போக சுகத்தை சொல்லுகிறது -அது ஈசி  போமின் – இத்யாதிப் படியே -தாரித்ர்ய வார்த்தகாதிகள் அடியாக தன்னை முகம் பாராமல் தள்ளி -கதவடைத்து -உபேஷாவாதம் பண்ணும் ஸ்திரீகள் பக்கலிலே -ஏழையர் தாம் இழிப்ப  செல்வர் -என்கிறபடியே -அவர்கள் உபேஷாவாதம் முதலானவை தன்னையே உத்தேச்யமாய் கொண்டு செல்லும் படிவிலஷணர் கேட்டால் சிரிக்கும் படியான ஹேய அபேஷையை விளைக்கும் என்கை –

ஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் –
ஸ்வரூப வர்த்தகரை அநாதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகரை ஆதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகதையோடே -உபேஷகருமாய் இருக்கும் அவர்களை அபேஷிக்கும் படியும் –
பண்ணும் என்று அவற்றின் கொடுமைகளை அநு சந்தித்து -என் செய்யத் தேடுகிறதோ -என்று அஞ்சி –

அர்த்த காம அபிமானங்கள் மூன்றும் -என்று பாடம் ஆனாலும்-(கர்வ அபிமான அஹங்காரம் என்றும் உண்டே-) அபிமான சப்தத்தாலே அஹங்காரத்தைச் சொல்லுகிறது ஆகையாலே -அனுகூலர் பக்கல் -இத்யாதியை – நிரை நிரை ஆக்காதே -யதா யோகம் கொண்டு கீழ்ச் சொன்ன பிரகாரத்திலே யோசிக்கக் கடவது –

ஆத்ம குணங்கள் -இத்யாதி -சம தமாதி ஆத்ம குணங்கள் -அநாதி காலம்  அஹங்காராதிகளுக்கு விளை நிலமாய் -அநாத்ம குணங்களைக் கூடு பூரித்துக் கொண்டு -கர்ம பரதந்த்ராய் இருக்கிற நம்முடைய யத்னத்தாலும் -ஆத்ம குண உதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய்- அநாத்ம குண பரி பூரணராய் -கர்ம வஸ்ரராய் -இருக்கிற பிறருடைய யத்னத்தாலும் -பிறப்பித்துக் கொள்ள  ஒண்ணாது -ஆத்ம குணங்களுக்கு எல்லாம் கொள்கலாமாய்-அடியிலே தன்னுடைய நிர்கேதுஹ கிருபையாலே நம்மை அங்கீகரித்து அருளி -நமக்கு ஆத்ம குணம் உண்டாவது எப்போதோ என்று பல காலும் கரைவது -பகவானை அர்த்திப்பதாய்க் கொண்டு போரும் சதாச்சார்யன் உடைய பிரசாதம் அடியாக வருகிற நம்முடைய ஆத்ம குண உதய விரோதி பாப ஷயம் பண்ணி -அமலங்களாக விழிக்கும் பகவானுடைய பரிபூர்ண பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று அத்யவசித்து

தேக யாத்ரையில் உபேஷை யாவது -தேக ரஷண அர்த்தமான வியாபாரத்தில் விருப்பமற்று இருக்கை-

ஆத்ம யாத்ரையில் அபேஷை யாவது -சேஷத்வமே வடிவான ஆத்மாவுக்கு தாகரகாதிகளான குண அனுபவ கைங்கர்ய பிரவ்ருத்தியில் -பெற்ற  அளவால் த்ருப்தனாய் இராதே -மேன்மேலும் ஆசைப் படுகை-

பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தி யாவது -அசந ஆசாதனங்களுக்கு-(உண்ணவும் உடுக்கவும் )உறுப்பான பிராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கு அடியான போக்யத்வ புத்தி தவிருகை –

தேக தாரணம் -இத்யாதி -அதாவது -அந்த பிராக்ருத வஸ்துக்களில் தேகம் தரிக்கைக்கு  தக்க அளவு புஜிக்கை– பரமாத்மாவான சர்வேஸ்வரனுடைய சமாராதனத்தின் சமாப்தி ரூபையான பிரசாத பிரதி பத்தி என்கிற -புத்தி விசேஷமும் என்கை –
அன்றிக்கே -பரமாத்ம சமாராதன சமாப்தி -என்கிற புத்தி விசேஷமும் -தத் பிரசாத பிரதி பத்தி என்கிற – புத்தி விசேஷமும் -என்னவுமாம் –

தனக்கு -இத்யாதி -அதாவது -முமுஷுவாய் -பிர பன்னன் ஆனாலும் -பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் -தாபத் த்ரயம் வருவது தவிராது இறே -ஆகையாலே
இச் சரீரத்தோடு இருக்கிற தனக்கு -தாபத் த்ரயங்களில் -ஏதேனும் ஒரு க்லேசம் உண்டானால் -இது அனுபவ விநாஸ்யமான பிராரப்த கர்ம பலமன்றோ -ஏவம் பூதம் கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ இச் சரீரத்தோடு எம்பெருமான் வைக்கிறது-
பிராப்தி பிரதிபந்தங்களில் ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் -துர் வாசனையாலே இவ் வுடம்பை விட இசையாமல்  பிராக்ருத பதார்த்தங்களையும்
ஜீவித்துக் கொண்டு  சம்சாரத்துக்கு உள்ளே பொருந்தி இருக்கிற நம்மை துக்க தர்சனத்தை
பண்ணுவித்து இதில் பற்று அறுத்துக் கொண்டு போக நினைக்கிற சர்வேஸ்வரனுடைய
கிருபையின் பலம் அன்றோ  இது என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் உண்டாகக் கடவ ப்ரீதியும் என்கை –

பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிறவனுக்கு  வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே –
கர்ம பலமான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் -இத் தேகத்தை விட என்றால்
இசையாத இவனை -நிர் துக்கனாக்கி வைப்போம் ஆகில் -இச் சரீரத்தோடு நெடும் காலம்
இருக்க இச்சித்தல் -இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சிக்குதல் செய்யும் ஆகையால் –
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இருக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆன பின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்தது சம்சாரத்தில் நின்றும் இவனை
கடுக திருவடிகளிலே சேர்த்து கொள்ளுகையில் உண்டான கிருபையாலே ஆனாப் போலே –
இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே  இறே – அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் -பகவன் நிக்ரஹ பலம் -இது அவன் அனுக்ரஹ பலம் -யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்றார் இறே– ஆகையால்-இத்தை கிருபா பலம் -என்கிறது –

ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தி -யாவது -பிரபன்னனான தன்னுடைய
அதிகார அநு குணமாக அனுஷ்டித்து கொண்டு போரும் நல் ஒழுக்கங்களை-பேற்றுக்கு சாதனமாக நினையாது ஒழிகை —

விலஷணருடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யாவது -நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணி இருக்கையாலே -நிர்மல ஞான பக்திகராய் இருக்கும் -விலஷணரான பூர்வர்களுடைய விலஷணமான அந்த ஞானமும் அனுஷ்டானமும் நமக்கு உண்டாக வேணும் என்னும் ஆசை –

உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயம் -ஆவது -தான் உகந்த ஊர்  -என்கிறபடியே
சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்ய தேசங்கள் என்றாதல்-
கண்டியூர்  அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் -என்றபடியே
மனஸ் அங்கே மண்டி விழும்படி மென்மேலும் பெருகுகிற  ஆதரம் –

மங்களா சாசனம் ஆவது -அவ்வோ திவ்ய தேசங்களில் விரும்பி வர்திக்கிறவனுடைய சௌகுமாரதையும் -வாசி அறிந்து நோக்கும் பரிவர் இல்லாமையும் –
பிரதிகூலர் வர்க்கங்களின் அதிசயத்தையும் நினைத்து ஏங்கி -என் செய்யத் தேடுகின்றது என்று வயிறு எரிந்து இரவும் பகலும் திருப் பல்லாண்டு பாடுகை –

இதர விஷயங்களில் அருசி யாவது -பகவத் வியதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் -தோஷ தர்சநாதிகளாலே விருப்பம் அற்று இருக்கை –

ஆர்த்தி யாவது -இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான இவ் உடம்போடு இருள் தரும்  மா ஞாலத்தில் இருக்கிற இதில் அடிக் கொதிப்பாலும் – பிராப்ய வைலஷண்ய தர்சனத்தால் வந்த பிராப்தி விளம்ப அசஹத்வத்தாலும் படும் கிலேசம் –

அனுவர்தந நியதி யாவது -பகவத் பாகவத விஷயங்களில் -ஸ்வ சேஷத்வ அநு குணமாக –
நீச உக்தி நீச விருத்திகளாலே பண்ணும் அநு வர்த்தநத்தை -பிராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாது ஒழிகை —

ஆகார நியதி யாவது -ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டங்களாய் -சர்வேஸ்வரனுடையவும் ததீயருடையவும் பிரசாதங்களான வஸ்துக்களையே ஆகாரமாகக் கொள்ளும் அது ஒழிய -தத் இதரங்கள் ஆனவை கொள்ளக் கடவோம் அல்லோம் என்று இருக்கை –

அனுகூல சஹவாசம் ஆவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞானாதிகளை வர்திப்பியா நிற்கும் அனுகூலர் ஆனவர்களுடன் ஷண காலமும் பிரியாதே கூடி வர்த்திகை –

பிரதி கூல சஹவாச நிவ்ருத்தி யாவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞான அனுஷ்டானங்களை நசிப்பியா நிற்கும் பிரதிகூலரானவர்களுடன் ஷண காலமும் கூடி வர்த்தியாது ஒழிகை –

இங்குச் சொன்ன அனுகூலரும் பிரதி கூலரும் இன்னார் என்னும் இடம் மேலே தாமே அருளிச் செய்யக் கடவர் இறே —

சதாச்சார்ய பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -அதாவது –
கீழ்ச் சொன்ன இவை இத்தனையும் – ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணனான சதாச்சார்யன் உடைய சர்வ மங்கள ஆவஹமான பிரசாதத்தாலே தன்னடையே மேன்மேலும்  அபிவிருத்தமாம் படி செய்து கொண்டு-போரக்  கடவன் என்றபடி –

சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி இவன் பண்ணிக் கொண்டு போருகை யாவது – தத் பிரசாதகங்களைச் (ப்ரசாதங்களைத் தூண்டுமவை) செய்து கொண்டு போருகை –

தத் பிரசாதகங்கள் ஆவன -இதனுடைய உபபாதன ஸ்தலத்தில் அருளிச் செய்கிறவை –
போரக் கடவன் -என்று விதி ரூபேண அருளிச் செய்தது -இதனுடைய அவஸ்ய அனுஷ்டேத்யத்வம் தோற்றுகைக்காக-

———————————————-

இந்த திநசர்யையில் சொன்னவற்றை விவரிக்க வேண்டுமவற்றை விவரிப்பதாக
திரு உள்ளம் பற்றி -பிரதமத்தில் மங்களா சாசனத்தை விவரித்து அருளுகிறார் –

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்கும் –  

 (ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப நாஸகம் -வர்த்தகம் -விஷய புத்தியும் -ஆத்ம குணம் வளர்க்க -பிரபன்னன் தினசரியை சொல்லிய அநந்தரம் –மங்களா சாசனம் – அனுகூல ஸஹவாஸ– பிரதி கூல ஸஹவாஸ நிவ்ருத்தி -மூன்றையும் விவரிக்கத் தொடங்கி —
பிரதி கூல சப்தார்த்தம் -சாதனாந்தர நிஷ்டர் -உபாஸகரை பிரதி கூலர் என்னலாமோ ஸூகத ஸ்வீகார நிஷ்டரை எப்படி  ஞான பக்தி வைராக்யம் இருந்தும் மங்களா சாசனம் பண்ணாதார் எந்த கோஷ்ட்டி  மங்களத்துக்கு மங்களம் சர்வ ரக்ஷகர் –மங்களம் போக்கிக் கொள்ள அசக்த ரஷ்ய பூதன் -மேலும் மேலும் அபி நவ -இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் என்று -விபர்யய கரணம் விருத்தம் அன்றோ –-அவனே ரக்ஷகன் -நாம் ரஷக பூதர்-ததேக ரக்ஷகன் அநந்யார்ஹ சேஷ பூதன் என்கிற -ஸ்வரூப ஞான தசையில் –தாத் யர்த்த அனுசந்தானம் அவ ரக்ஷணே தாது – அகார வாச்யன் ரக்ஷகன் மகார வாச்யன் ரஷ்யகம் -பரதந்தர்ய ஸ்வாதந்தர்ய அனுரூபமான நிருபாதிக ரஷ்ய ரஷக பாவங்கள் —தன் கப்பிலே-தன் தன் -ஸ்தானத்தில் மாறாடாமல் இருக்குமே -லாவண்யம் தேஜஸ் ஸுந்தர்ய ஸுகுமார்ய தர்சன -அனுசந்தான -ஜெனித ப்ரேம கலுஷ்ய- உள்ளம் கனிந்து – பொங்கும் பரிவால் – அஸ்தானே பய சங்கை -பக்தியின் முதிர்ந்த நிலை -ப்ரேம தசை –நாராயணாய -சர்வ தேச -சர்வ கால சர்வ அவஸ்தை சர்வ வித கைங்கர்யம் பண்ண பரதந்த்ரன் இடத்தில் ரக்ஷகத்வம் மாறி -ஸ்வ தந்த்ரன் இடத்தில் ரஷ்ய பாவமும்அஸ்தானே பய சங்கை அங்கும் உண்டே– அழல் உமிழும் -ஹாவு ஹாவு சப்தம் கேட்டு –தத் உபய பாவமும் தட்டு மாறி மீட்சி இல்லாமல் மாறாடி இருக்குமே )

(அநுசிதமாயும் அசம்பாவிதமாயும் இருக்கும் -ஹேய ப்ரத்ய நீகன் –அமங்களங்களே இருக்காதே அவன் இடம் -கல்யாண ஏக ஸ்தானம் -மங்கள அசத்தா விரஹம்- இல்லாமை இருக்காதே -ஸ்வ இதர சகல ரக்ஷகன் -இவனை எல்லாரும் உள்ள ஒருவன் சொல்வது பொருந்தாதே)

ஹேய பிரத்ய நீகனாய் -கல்யாண ஏக தானனாய் -ஸ்வ இதர சகல ரஷகனாய் இறே
சர்வேஸ்வரன் இருப்பது -இப்படி இருக்கிறவனை தனக்கு உண்டான அமங்களங்களைப் போக்கி -இல்லாத மங்களங்களை உண்டாக்கிக் கொள்ளக் கடவ தத் ரஷய பூதனான இவன்-தனக்கு ரஷகனானவன் அவனுக்கு தான் மங்களங்களை யாசாஸிக்கை-ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தம் அன்றோ என்கிற சங்கையை அநு வதிக்கிறார்-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் -என்று -அத்தை பரிகரிக்கிறார் –
ஜ்ஞான தசையில் -என்று தொடங்கி-

ஜ்ஞான தசை யாவது -சர்வேஸ்வரனே ரஷகனாகவும் தான் அவனுக்கு ரஷ்ய பூதனாகவும் -பிரணவத்தில் சொல்லுகிறபடியே (ஜ்ஞான தசையில்) தெளியக் கண்டு அநு சந்தித்து இருக்கும் தசை -அந்த தசையில் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் -இத்யாதிப் படியே
தன்னுடைய அநிஷ்ட நிவ்ருத்யாதிகளுக்கு அவனே கடவன் என்று இருக்கையாலே –
ரஷ்ய ரஷக பாவம் தனக்கடைத்த ஆஸ்ரயத்திலே கிடக்கும் –

பிரேம தசை யாவது -சர்வேஸ்வரனுடைய சௌந்தர்ய சௌகுமார்யங்களை அநு  சந்தித்து இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ என்று –
அஸ்தானே பய சங்கை பண்ணி -அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்க ஷமர் அன்றிக்கே நெஞ்சு மறுகிறபடியான தசை –

அந்த தசையிலே ஈஸ்வரனை ரஷிக்க வழி தேடித் தடுமாறுகையாலே- –
ஈஸ்வரன் பக்கலிலே ரஷ்ய பாவமும் -சேதனன் பக்கலிலே ரஷக பாவமும் -தனக்கடைத்த ஆஸ்ரயத்தில் அன்றிக்கே மாறாடிக் கிடக்கும் என்றபடி

——————————————————

உக்தார்த்தத்தை விசதீகரிக்கிறார் –

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-தசா த்வய ஹேதுவான அனுசந்தான பேதம் -விபர்யய ஹேது -ரஷ்ய ரஷக பாவம் –யுக்த அர்த்தம் ஸ்திரமாக்குகிறார்–தாது அர்த்தம் பிறந்து -சர்வ சக்தன் சர்வ ரக்ஷகத்வம் சர்வ நியாந்தா –ததேக மனனாய்–அநிஷ்டம் போக்கும் காக்கும் கடகாக
அபிராப்தமாய் அசக்தமாய் உள்ள –தன்னை ரஷிப்பதில் வாசனை கூட இல்லாமல் நோக்கும்
அவனுடைய விக்ரஹ ஸுகுமார்யத்தை திருமேனி மேன்மை -நாராயண -பதார்த்தம் -இப்பேர் பட்ட திருமேனிக்கு கைங்கர்யம் அனுசந்திக்க –சர்வ சக்தித்வம் மறந்து இத் தலைக்கு என் வருகிறதோ என்று -நிரந்தர மங்களா சாசனம் பண்ணி -கண் எச்சில் வாராத படி நோக்கும்-ஸ்வரூப அனுசந்தானம் யாதாவாக பண்ணும் –ததேக ரக்ஷகத்வம் மாறாதே – ரூப குண அனுசந்தானம் தன் ஸ்வரூபத்தை மாறாடப் பண்ணுமே)

(ஸமஸ்த சப்த மூலத்வாத் -அகாரம் -அவ ரஷனே -காரணத்வம் சொல்லி சர்வ சக்தித்வம் சர்வ ரக்ஷகத்வம் சர்வ நியாந்தா –ஆயிர நாக்கு வாங்கி பேச முடியாது என்று சொல்ல -பேச பிசகும் படியாக இருக்குமே  பிராட்டிக்கு திரு ஆபரணம் சாத்த கண்ணால் பார்க்க-சிவந்து இருக்குமே கண்ணடி பட்டு -கிம் புன நியாய சித்தம் -அவன் ஸுகுமார்யம்-கண்ணடி பட்டா சொல்லடி பட்டா என்று தெரியாதபடியான ஸுகுமார்யம் அன்றோ -சாத்தச் சொல்வதாலா – பொல்லாக் கரு மாணிக்கம் அன்றோ)

அதாவது –
பிரதம அஷரத்தில் சொல்லுகிறபடியே -சர்வஜ்ஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் -சர்வ ரஷகனான -அவனுடைய ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் –
அவனை -தனக்கு அநிஷ்ட நிவாரகனாய்க் கொண்டு -அஞ்ஞனாய் -அசக்தனாய்-பிராப்தனான தன்னை ரஷித்துக் கொள்ளும் –

பேசப் பிசகும் படியான அவன் ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் –
அவனுடைய சர்வ சக்தித்வாதிகளை மறந்து -குழைச் சரக்காக நினைத்து -தன்னை ரஷகனாகக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி அவனை ரஷிக்கும் என்கை-

இவ் விடத்தில் ஸௌந்தர்யம் சொல்லிற்றில்லை ஆகிலும் -அதுவும் மங்களாசாசன ஹேதுவாகையாலும்-மேலே சொல்லுகையாலும் -ஸௌகுமார்யம் இதுக்கும் உப லஷணம்-

——————————————

இப்படி ஸௌ குமார்யாதிகளைக் கண்டு கலங்கி -ரஷகனான அவனுடைய சர்வ சக்தி வைபவத்தை மறந்து -தான் அவனை ரஷிக்கும்  என்கிற இவ் வர்த்தம் -எங்கே காணலாம் என்கிற அபேஷையிலே-இது சிஷ்டாசார சித்தம் என்னுமிடம் காட்டுகிறார் மேல்

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

(ஆயி ஸ்வாமிகள்-சக்தி விசேஷத்தை மறந்து பண்ணக் கண்ட இடம் -அனுஷ்டான சேஷமாக காணலாம் -சர்வ சக்தியாதிகளை மறைத்து -தாடகா தாடகேயர்களை-நிரசித்த
தோள் வலிமை அறிந்து இருந்தும் –ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தத்வம் ப்ராஹ்மணஸ்ய மகா யஸா பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி–பாலர்களை ரஷிக்க -பல் காட்டி அபயம் பெற சரணம் புக்கு –மங்களா சாசனம் –
ஜனகன் -பத்ரம் தே –கையைப் பிடி சொல்லப் போவதை மனசில் நினைத்த க்ஷணமே சொல்வதற்கு முன்னே மங்களா சாசனம் —வில்லிறுத்த சக்தி அறிந்து இருந்தும் ஆபிஜாத்யாதி இயம் சீதா –இத்யாதி –லஜ்ஜித்து நின்ற நிலை நினைத்து காப்பிட்டாரே –
வில்லிறுத்த வீர்யம் அறிந்து இருந்தும் -திரு அபிஷேகத்துக்காக வினீத வேஷத்துடன் சக்கரவர்த்தி கூப்பிடுகிறார் என்றதும் பிறந்த விநயம் –-திரு வாசல் அளவும் பின் தொடர்ந்து -திக்பாலர்கள்–பதியாலே ஸம்மானம் பண்ணப் பெற்று – பர்த்தாரம் அஸி தேக்ஷிணா-கண் ஒளியால் கரி பூசிமைப்படி கண்ணாள் -காப்பிட்டாள்- குபேரன் வருணன் யமன் -இது தான் வால்மீகி கரி பூசுவது -முருகன் போலே அழகு போலே
விச்வாமித்ரர்  துஸ்வஸ்தி ராகவஸ்ய அஸ்து -அஹம் வேத்மி-தெரிந்தும் -நிலத்தைக் கிள்ளி பெருமாள் திரு முகத்தில் அபிமந்திரித்து ஆசீர்வதித்தார்
தண்டகாரண்ய ரிஷிகள் காட்டில் காந்தி தேஜஸ் விட்ட பெருமாளை மங்களா சாசனம்
வீரத்துக்குத் தோற்ற திருவடியும் ஆயதாச்சா -சர்வ பூஷண பூஷணார்ஹ -இத்யாதி-ஆபரணங்கள் இல்லாமல் காட்டி வர வேண்டுமோ -அழகுக்குத் தோற்று -வயிறு எரிந்தாரே பையல் நம் பிராணங்களைக் கொண்டு போனான் –மங்களா சாசனம் செய்த ஜடாயு மஹாராஜர்-மா முனிகள் ஸூக்ரீவ மஹாராஜரையும் சேர்த்து வியாக்யானம்
முக்த சிசு அறியாப் பிள்ளைக்கு –கோபுச்சம் -கொழு மோர் காச்சி -அச்சு தாலி – ஆமைத் தாலி -கூர் வேல் கொடும் தொழிலான நந்த கோபரும்
பொய்யாசனம் இடக் கண்ட பீதியாலே –தாம் இட்ட ஆசனத்தையும் அழுத்திப் பார்த்த ஸ்ரீ விதுரர் மஹா மதி
உருவின வாளும் கையுமாய் இருக்கும் பிள்ளை உறங்கா வல்லி தாசர்
மோஹித்த உடையவர் -நாவல் பழமும்-திதியோதனம் ஒன்றாகக் கொடுத்ததால் –கஷாயம் காய்ச்சி கருட வாஹன பண்டிதர் –
சவுரி ராஜப்பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பு -கண்ணைக் கரிக்கும் என்று வங்கி புரத்து ஆய்ச்சி முன் கையால் வழித்தும்–பால் அமுது சுடும் என்று வாயால் ஊதி   அமுது செய்த பண்ணியும் –)

(பாலானாம்-பால்யத்தை சொன்னது ஸுகுமார்யத்துக்கும் உப லக்ஷணம்தேவர் -தசரதர் -இலக்குமன் பரதன் விபீஷணன் கடல் அரசன் இடம் –ஆறு சரணாகதிகள் உண்டே –
தலை நீர்ப்பாட்டிலே-குளத்தின் அருகில் -ராமன் மஹா சாகரம் முழுவதும் அறிந்த சீதாப் பிராட்டி -தெரியாத அம்சமே இல்லையே-
அஹம் வேத்மி –நான் அறிவேன் அத்தனை போக்கி நீயே அறிய மாட்டாய் —வில்லும் கை புல்லும் கை -ஸ்வர்ண மகுடம் சடையும் முடியும்- ஆசனம் மேல் நீ கீழ்-ராமனுக்கு உலகுக்கு கர்ப்பம் -இப்படி பல அர்த்தங்கள் -உண்மையான வீறு கொண்ட ராமன் -வசிஷ்டோபி மஹா தேஜா – அவரும் ஒத்தும் கொள்ளுவார்
பூஷண பூஷார்ஹா-பூஷணத்துக்கு பூஷணம் -ஆபரணங்களை ஆபரணமாக அன்றோ இவர் –அஸ்மான்  ஹந்தும்54-கோடி வானர முதலிகளையும் சேர்த்து -பெருமாளை உட்க்கொண்டே -நம் அனைவரையும்அநேக சதா சஹஸ்ர வ்யக்திகர்மாக இலக்காக கொண்ட ஏக ஹனன கிரியை ஒருவரால் செய்வது அஸஹ்யம்சர்வ ஜீவித பூதரான -பெருமாளை நலிவதையே உப லஷிக்கிறது –
பிசாசான் தானாவான் -இத்யாதியாலே-ஒரு சொல் மேலே பேசாத பெருமாள் மூன்று வார்த்தைகள்-மித்ரா பாவேந -ஸக்ருத் -இத்யாதி – அன்றோ அருளிச் செய்து சுக்ரீவனை சம்மதிக்க வைத்தார்
கோசல சராசரங்கள் -பெருமாளுக்காக -அர்ச்சனை –சர்வான் தேவன் நமஸ்யந்தி ஆயுசு ஆரோக்யம் -காம்யார்த்தம் –
வினதை அம்ருதம் கொண்டு வர பெரிய திருவடியை ஆசீர்வாதம் பண்ணியது போலே பன்னிரு திங்கள் மணி வயிற்றில் பெற்ற ஸ்ரீ கௌசல்யை மங்களா சாசனம் )

சக்கரவர்த்தி -பெருமாள் பிராட்டியை திரு மணம் புரிந்து – மீண்டு எழுந்து அருளா நிற்க –
பரசுராமன் வந்து தோன்றின  அளவிலே -தாடகா தாடகேய நிரசனங்களாலே -இவருடைய சக்தி வைபவத்தை வியக்தமாக அறிந்து இருக்கச் செய்தேயும் –
இவருடைய பால்யத்தையும் ஸௌகுமாரத்தையுமே பார்த்து -என்னாகப் புகுகிறதோ என்று பீதனாய் -தான் முன்னோடியாகச் சென்று –
ஷத்ர ரோஷாத் ப்ரசாந்தத்வம் ப்ராஹ்மணஸ்ய மகா யஸா பாலானாம் மம புத்ராணாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு –
பின்னையும் அவன் பெருமாள் மேலே அடர்ந்து செல்கிறபடியைக் கண்டு -நிஷ் பிராணனாய் நின்று –
கதோ ராம இதி ஸ்ருத்வா ஹ்ருஷ்ட பிரமுதி தோன்ரூப புனர் ஜாதம் ததா மேன ஸூதா நாத்மான மேவச -என்கிறபடியே
அவன் தோற்று மீண்டு போனான் என்று கேட்ட பின்பு -தானும் பிள்ளைகளும் – மறு பிறவி பிறந்தாராக  நினைத்து இருந்தான் இறே–

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -தலை நீர்ப்பாட்டிலே -இவருடைய வைபவம் எல்லாம் அறிந்து இருக்குமவளாய் இருக்கச் செய்தேயும் –
திரு அபிஷேகம் பண்ணுகைக்காக- அலங்க்ருத திவ்யகாத்ரராய் கொண்டு -சக்கரவர்த்தி திருமாளிகைக்கு எழுந்து அருளுகிற போது-
இவர் அழகிலே தோற்று -இதுக்கு என் வருகிறதோ என்று பிரேமத்தால் கலங்கி –
பதி  சம்மாநிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான் யபிதத்த்னுஷீ -என்று
திருவாசல் அளவும் தான் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு பின் சென்று –
பூர்வாம் திசம் வஜ்ர தரோ தஷிணாம் பாது தோயம் வருண பச்சிமா மாசாம் தனச்தூத்தராம் திசம் -என்று
திக்பாலர்களை இவர்க்கு ரஷகராக அபேஷித்தாள் இறே –

ஸ்ரீ ஜனகராஜன் -என்றும் -திரு மகள் -என்றும் பிரித்துச் சொல்லவுமாம்-
அப்போதைக்கு -ஸ்ரீ ஜனக ராஜன் -மகேஸ்வர தனுர் பங்கத்தாலே-பெருமாளுடைய சக்தி வைபவத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் –
இயம் சீதா மம ஸூத சக தர்ம சரீதவ பிரதீச்ச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா -என்று
ஆபி ஜாதியாதிகளால் வீறு உடையவளான இவளைக் கைக் கொண்டு அருளும் என்று காட்டிக் கொடுக்கும் அளவில் –
இவருடைய அழகையும் ஸௌகுமார்யத்தையும் கண்டு கலங்கி இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வாராது ஒழிய வேணும் என்று -பத்ரந்தே -என்று மங்களா சாசனம் பண்ணினான் என்கை–

விஸ்வாமித்திரன் -தன்னுடைய அத்த்வர த்ராணார்த்தமாக பெருமாளை அழைத்துக் கொண்டு போகிற போது –
நடுவே தாடகை பெரிய ஆரவாரத்தோடு ஆக்கிரமித்துக் கொண்டு வருகிற படியைக் கண்டு 
அஹம் வேத்மி மஹாத்மாநாம்  ராமம் சத்ய பராக்ரமம் -என்கிறபடியே
பெருமாளுடைய சக்தி வைபவத்தை அறிந்து இருக்கச் செய்தேயும் -ஸௌகுமார்யத்தைப் பார்த்துக் கலங்கி –
விஸ்வாமித்ரஸ்து ப்ரஹ்ம ரிஷிர் ஹூங்காரேண அபி பர்த்ஸ்யதாம் ஸ்வஸ்தி ராகவ யோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத—என்கிறபடியே
தான் முன்னே நின்று அவளை ஹூங்கரித்து பெருமாளுக்கும் திருத் தம்பியாருக்கும் ஒரு தீங்கு வாராமைக்கு ஆக மங்களா சாசனம் செய்தான் இறே –

ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள்-
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வாவை தர்ம சாரின மங்களாநி பர யுஜ்ஞானா பிரத்யக்ருக்ணன் த்ருட வரதா -என்று
தங்கள் ஆபத் நிவ்ருத்தியையும் -அபிமத சித்தியையும் -பண்ணித் தருவார் இவரே என்று
சாதன அனுஷ்டானம் பண்ணுகிற தாங்கள் -இவர் சந்நிஹிதர் ஆனவாறே -அவற்றை மறந்து -இவர் வடிவு அழகிலே துவக்குண்டு மங்களா சாசனம் பண்ணினார் இறே –

திருவடி -பிரதம  தர்சநத்திலே-
ஆயதாச்ச ஸூவ்ருத்தாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவி பூஷிதா -என்று கணையங்கள் போலே இருக்கிற திருத் தோள்களிலே மிடுக்கைக் கண்டு -நமக்கு இவர் ரஷகர் ஆகக் குறை இல்லை என்று புத்தி பண்ணி நிற்கச் செய்தேயும் –
அவற்றின் அழகைக் கண்டு ஈடுபட்டு -பிறர் கண் எச்சில் படி என் செய்வது என்று அதிசங்கை பண்ணி -திரு ஆபரணங்களாலே இதை மறைத்திட்டு வையாதே
இப்படி வெளி இடக் காரணம் என் என்று வயிறு பிடித்து -பின்பு பெருமாளுடைய சக்தி விசேஷத்தை பஹூ முகமாகக் காணா  நிற்கச் செய்தேயும் –
ஸௌ குமார்ய அநு சந்தானத்தாலே இவர்க்கு என் வருகிறதோ என்று -துணுக்கு துணுக்கு சர்வ தசையிலும் கூட நின்று நோக்கிக் கொண்டு திரிந்தான் இறே –

மகா ராஜர் -வாலி வதாதிகளாலே பெருமாளுடைய சக்தி கௌரவத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் -சௌ குமாரத்தையே பார்த்து கலங்கி -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நாலு பேரும் தானும் வந்து தோற்றின போது –
ஏஷ சர்வாயுதோபேதச் சதுர்பிஸ் சஹா ராஷசை ராஷசோப்யேதி பஸ்யத்த்வம் அஸ்மான்  ஹந்தும் ந சம்சய –
என்று நமக்கு எல்லாம் ஓர் உயிரான  பெருமாளை நலிகிற வழியாலே -நம்மை எல்லாம் முடிப்பதாக வருகிறான் இவன் என்று அறுதி இட்டு முதலிகளுக்குக் காட்டி –
ராகவம்  சரணம் கத – நிவேதயத மாம்  ஷிப்ரம் -என்கிற உக்திகளைக் கேட்டு வைத்தும் –
வத்த்ய தாமேஷ தீவ்ரென தண்டே ந சசிவைஸ் சக ராவணஸ்ய ந்ருசம்சசஸ் யப் ப்ராதா ஹ்யேஷா விபீஷணா -என்று
ராவண சம்பந்த்தையே பார்த்து -இவனைச் சித்ர வதம் பண்ண வேணும் என்பது
ராவணே ந ப்ரணி ஹிதம் தமவேஹி நிசாசரம் தச்யாஹம் நிஹ்ரகம் மந்யே ஷமம் ஷமவதாம்வர -என்று ராவணன் வரவிட வந்தவன் என்றே அவனை திரு உள்ளம் பற்ற வேணும் -அவனைத் தண்டிக்கையே பிராப்தம் என்று புத்தி பண்ணா நின்றேன் என்பதாய்-இப் புடைகளிலே பலவற்றையும் சொல்லி -இவனை சர்வதாகக் கொள்ள ஒண்ணாது என்று ஒரு நிலை நின்று –
பிசாசான் தானாவான் -இத்யாதியாலே தம்முடைய பலத்தையும் காட்டியும்
கபோதோபாக்யானம் கண்டூபாக்யானம் இவை அருளிச் செய்தும் -தெளிவித்து -பயத்தைக் கெடுத்து –
ஆநயைநம் ஹரி ஸ்ரேஷ்ட -என்ன எண்ணும் படி -பெருமாளை குழை சரக்காக நினைத்து காத்துக் கொண்டும் போந்தான் இறே –

மகாராஜர் -என்று ஸ்ரீ ஜடாயு மகாரஜரையும் சொல்வார்கள் -அதாவது
ஸ்ரீ ஜடாயு மகாராஜர் பிராட்டிக்காக ராவணனோடு பொருது குத்துயிராக கிடக்கிற தம்மை பெருமாள் வந்து கண்ட அளவிலே –
ஜனஸ்தானத்தில் இருந்த பதினாலாயிரம் ராஷசர்களையும் தனி வீரம் செய்து நின்று கொன்ற தோள் வலியை அறிந்து இருக்கச் செய்தேயும் –
யாமோஷதி மிவா யுஷ்மன் நன்வேஷ சிமகாவனே சாதேவீ மம ச பிராணா ராவணநோ பயம் ஹ்ருதம் -என்று
அருமருந்து தேடுவார் அடவிதொரும் தேடுமாருமாப் போலே -எவள் ஒருத்தியை இந்த பரந்த காட்டிலே தேடிக் கொண்டு திரிகிறீர் -உமக்கு நித்ய பிராண சமையானவளும் என்னுடைய பிராணங்களும் -இரண்டும் -ராவணன் ஆகிற பையலாலே அபயஹ்ருதயமாயிற்று காணும்-என்று சொல்லா நிற்கச் செய்தே -இவருடைய விரஹ கிலேசத்தால் வந்த தளர்த்தியையும் – ஸௌகுமாரத்தையும் -ராஷசரோட்டை வான் பகையையும் நினைத்து -என்னாகத் தேடுகிறதோ என்று அஞ்சி -ஆயுஷ்மன்-என்று ஆயுஸ்ஸை பிரார்த்தித்தார் இறே –

ஸ்ரீ நந்தகோபர் -பூதன நிரசனத்தாலே கிருஷ்ணனுடைய திவ்ய சக்தி யோகத்தை கண்டு இருக்கச் செய்தேயும் -சைசவ பிரயுக்தமான ஸௌ குமாரத்தையே பார்த்து கலங்கி வயிறு எரிந்து –
ரஷது த்வாம ஷோனாம் பூதானாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி சமுத்பூத பங்கஜா தவ வஜ் ஜகத் -என்று சர்வ ஜகத் காரண பூதனாய் –ஸகல விரோதி நிரசன சீலனான   சர்வேஸ்வரன் உம்மை ரஷிப்பான் ஆக என்று ரஷை இட்டார் இறே –

ஸ்ரீ விதுரர் -கிருஷ்ணனுடைய சர்வஞ்ஞத்வ  சர்வ சக்தித்வாதிகளை அறிந்து இருக்கச் செய்தேயும் –துர்யோதன கோஷ்டியில் எழுந்து அருளின போது -பொய்யாசனம் இட்டபடியைக் கண்டு அஞ்சி –ப்ரேமாந்ததையாலே-சம் ஸ்புருசன் னாசனம் ஸௌரேர் விதுரஸ் ச மகா மதி -என்று தம்முடைய திரு மாளிகையிலே -தாம் இட்ட ஆசனத்தையும் அதி சங்கை பண்ணி -தன் கையாலே அமுக்கி பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -அத் தலையில் -ஜ்ஞான சக்தி யாதிகளை எல்லாம் அறிந்து 
பெருமாளே நமக்கு ரஷகர் என்று அறிந்து நிற்கச் செய்தேயும் -பிரேம பரவசர் ஆகையாலே –
பெருமாள் உலாவி வரும் போது -எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் -நம் பிராணனை விடும் இத்தனை என்று சொட்டையை உருவிப் பிடித்து கொண்டு சேவிப்பார் என்று பிரசித்தம் இறே

துடக்கமானவர்கள் -என்ற இத்தால் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருன்யச் ச சாயம் ப்ரதாச்ச்மாஹிதா சர்வாந் தேவான் நமஸ்யந்தி ராமஸ் யார்த்தே யசஸ்வின-என்ற திரு அயோத்யா வாசி ஜனங்கள் –
யன் மங்கலம் ஸூபர்ணஸ்ய வினதா கல்பயத் புரா அம்ருதம் பிரார்த்தயா நஸ்ய தத் தே பவது மங்கலம் -என்று ஸ்ரீ கௌசல்யார்-
சாதோசி தேவ தேவே ச சங்கு சக்கர கதா தரா திவ்ய ரூபம் இதம் தேவ பிரசாதே நோப சம்கர-என்ற ஸ்ரீ வஸூ தேவரும் –
உபசம்கர சர்வாத்மன் ரூபமே தச் சதுர் புஜம் ஜானாது மாவதாரந்தே கம்சோசயம் திதி ஜன்மஜ -என்று தேவகிப் பிராட்டி
முதலானோரை எல்லாம் நினைக்கிறது –

————————————————

இவ் விஷய வைலஷண்யம் யாரையும் மங்களா சாசனத்தில் மூட்டும் என்னும் இடத்துக்கு இன்னுமொரு உதாரணம் காட்டுகிறார் –

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குஹப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குஹப் பெருமாள் பரிஹரம் பெருமாளை நோக்கிற்று இறே —

(ஆயி ஸ்வாமிகள்-லஷ்மணன் வைபவம் பற்றி பரதனுக்கு குஹன் சொல்ல –கண்கள் துஞ்சாமல் -இடத்தையும் காட்டி -பெருமாள் பின் செல்ல ஒருவன் இருந்தானே என்று பரதன் மகிழ –விசேஷஞ்ஞர் அவிசேஷஞ்ஞர் வாசி இல்லாமல் -மங்களா சாசனம் என்பதற்கு த்ருஷ்டாந்தம்-இளைய பெருமாள் –ஆதி சேஷம் சிந்தாமணி மடியிலே வைத்து பார்த்து அழல் உமிழிலும் -நாண் ஏற்றினர் இறக்காமல் பட்ட பரிவு-பெருமாள் இறக்க சொல்ல ரிஷி இடம் செல்லும் பொழுது சேவிக்க -தர்ம சாஸ்திரம் எங்கும் சொல்வாரே –
ஏற்றின வில்லுடன் இமையாது நோக்கும்குறும்பு அடித்து திரிந்து அன்று வந்து கண்ட ஸ்ரீ குஹப் பெருமாள்அனுக்ரஹத்துக்கு பாத்திரமான பின்பு ஸுந்தர்யம்ஒரு தம்பி காடேற தள்ள -ஒரு தம்பி பின் வந்து சா யுதாயுதனாய் இடம் பார்த்து நிற்கிறான்உருவின வேலும் தானுமாய் அதி சங்கைஒருவன் கூடப் பிறந்தவன் ஒருவன் குறும்பன் இவர்கள் பொல்லாங்கு நினைத்தால்அதி சங்கை பண்ணி –பரிவரான குகனுக்கு தீர்த்தவர்கள் அடங்க உருவின கத்தியுடன் நோக்கினார்கள் -)

(கீழே வாசிக மங்களா சாசனம் -இது காயிகம் -நடமாடும் மதிள் போலே – லஷ்மணன்-குளத்தின் வைபவத்தை கடலுக்கு பின்பு சொன்னான் என்பர்- அப்ரமேயம் பரதன் -மஹாத்மா  ஸ்லோகம் )

அதாவது –
சுருங்கி பேர புரத்திலே எழுந்து அருளி ஸ்ரீ குகப் பெருமாளை விஷயீகரித்து
அருளின அன்று -பாங்கு அறிந்து இளைய பெருமாள் படுத்து கொடுத்த பர்ண சய்யையிலே  பிராட்டியும் பெருமாளும் பள்ளி கொண்டு அருளா நிற்க -பால்யாத் பிரப்ருதி ஸூஸ்நிக்தர் ஆகையாலே -என் வருகிறதோ என்று அஞ்சி -முதிகில் இட்ட அம்புறாத் துணியும்-கட்டின விறல் சரடும் நாண் ஏறிட்டு நடுக் கோத்த வில்லும் தாமுமாக நடையாடும்
மதிள் போலே வளைய வருகிற இளைய பெருமாளைக் கண்டு ஸ்ரீ குகப் பெருமாள் –
ஒரு தம்பி தாயைக் கொண்டு ராஜ்யத்தை வாங்கி கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டான் –இவனும் அவ்வோபாதி ஒரு தம்பி அன்றோ -தனி இடத்திலே என் செய்ய நினைத்து இப்படி யாயத்தமாய் நின்றான் என்று தெரியாது என்று அதி சங்கை பண்ணி அப்படி ஏதேனும் ஒரு தீங்கு நினைக்கில் இவன் தன்னை தீரக் காணக் கடவோம் என்று வில்லும் கோலுமாய்  கொண்டு -இவர் இட்ட அடியிலே அடி இட்டு நிற்க –
ஸ்ரீ குகப் பெருமாள் யேவல் தொழில் செய்து திரியும் பரிஹரம் -அவன் ஜ்ஞாதி- இவன் குறும்பனான அந்நியன்-இவர்கள் இருவருமாக இவ் விஷயத்தை என் செய்யத் தேடுகிறார்களோ என்று -இருவரையும் அதி சங்கை பண்ணி  அப்படி செய்யில் இவர்களை அழியச் செய்தும் -நாம் அத் தலையை நோக்கக் கடவோம் என்று தனித் தனியே கையில் வில்லுமாகக்  கொண்டு பெருமாளை ரஷித்தது இறே என்கை —

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு விசேஷம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ குஹப் பெருமாள்
நியம்ய ப்ருஷ்டேது தலான் குலித்ரவான் சரஸ்ஸூ பூர்ணாமிஷூதிம் பரந்தப
மகத் தநுஸ் சஜ்யம கோப்ய லஷ்மணோ நிசா மதிஷ்டத்  த்வரிதோ அசய கேவலம் ததஸ்
தவஹந் ஜோத்தம சாப பாண பிருத்  ஸ்திதிதோ பவம் தத்ரஸ் யத்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்ஞாதிபி ஆர்த்த கார் முகைர் மகேந்திர கல்பம் பரிபாலயம் சதா-என்று அந்த ராத்ரியில் விருத்தாந்தத்தைச் சொன்னான் இறே —

——————————————————

ஸ்ரீ குகப் பெருமாளுக்கும் பரிகரத்துக்கும் கண்ட மாத்ரம் ஒழிய -பெருமாள் உடன் முன்பு வாசனை  இல்லை இறே —
இப்படி இருக்கச் செய்தே இவர்களுக்கு இவ்வாகாரம் கூடின படி என் -என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

(ஆயி ஸ்வாமிகள்-ஏக க்ஷணத்தில் என்றபடி -முகம் ஈடுபடுத்த அவயவ ஏக தேசம் – விழித்த- ஸக்ருத் தர்சனம் போதும் -என்கிறது-விழித்தவர்கள் இன்னார் என்பது இல்லை
இது –ஸுந்தர்யம் -ஸ்வரூப குண வியாவர்த்தி -கண்ட காட்சியில் அறிந்தவர்களோ அறியாதவர்களோ மங்களா சாசனத்தில் மூட்டவற்று ஸுந்தர்யம்)

(நள தமயந்திகள் போலே -அன்னப் பறவை சொன்னதை வைத்தே கண்டதும் காதல் கொண்டதும் அன்பு வளர்ந்தது –அந்யோன்ய தர்சனம்-முன்பே கேட்டு அறிந்தவர்களாக இருந்தாலும் இப்பொழுது கடாக்ஷம் முன்பு இழந்த ஒன்றையும் நினைவு படுத்தாதபடி அழுத்தமான பரிந்து நோக்கம் என்றவாறு)

அதாவது –
நெடுநாள் வாசனை பண்ணுகை அன்றிக்கே -ஒருநாள் முக தர்ஸனம் பண்ணினவர்களையும் – அவன் விக்ரஹ வைலஷண்யம் படுத்தும் படி ஆயிற்று இது என்கை– சதா பஸ்யந்தி  பண்ணினாரோபாதி  சக்ருத் தர்சனம் பண்ணினாரையும் 
பிரேமாந்தரராய்  அஸ்தானே பய சங்கையாலே அனுகூலரையும் அதிசங்கை பண்ணி பரிந்து நோக்கும் படி பண்ண வற்றாய் இறே  பகவத் விக்ரக ஸௌந்தர்யம் இருப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -229-242-தத் அதிகாரி க்ருத்யம் -பெறுவான் முறை -சித்த உபாய நிஷ்டா வைபவம்–ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்- ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 25, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்-பெறுவான் முறை

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

இப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –
பெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

(ஆச்சார பிரதான அன்றோ பெருமாள் –ஐவரில் முற்பட்ட நால்வரில் முற்பட்ட மூவரில் முற்பட்ட அனுஷ்டானம் -சந்தேகியாமல் -சஹஜரோடே செய்த புத்ர க்ருத்யம் –
தர்மர் சந்தேகம் இல்லாமல் -விதுரர் நான்காம் வர்ணம் –அசரீரி சங்கை போக்கி ப்ரஹ்ம ஞானிக்கு ஏற்றபடி செய்தார் -பெருமாள் சஹஜரோடே -கூடப் பிறந்த இளைய பெருமாள் உடன் ஜடாயு மஹா ராஜருக்கு செய்த சம்ஸ்காரம் -பெரிய நம்பிகள் புரோடாசமாக செய்த க்ருத்யம் – நிஷ்க்ருஷ்ட வேஷம் அறிந்தவர்களே இவற்றை செய்வார்
-காயம் அன்னம் -ஸ்தலம் சுத்தி மூவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -)
(ஆயி ஸ்வாமிகள் தம்மை அழிய மாறியும் ஸ்ரீ கார்யம் செய்த பெரிய உடையாருக்கு -தாமே பண்ணி அருளினார் -பெருமாளுடைய ஸ்வீ காரத்தை உடையவர் -என்பதால் பெரிய உடையார் -ஸ்ரீ பிராட்டி கார்யம் -என்றுமாம் – சாமான்ய தர்மம் ஸ்தாபனம்-பித்ரு வாக்கியம் பரிபாலனம் – வர்ண தர்மம் பார்ப்பவர் – இருந்தாலும் ஜென்மாதி ஞானம் விருத்தம் இவற்றால் வந்த தாழ்ச்சி பாராமல் -புத்திரர்கள் க்ருஹஸ்தர்களுக்கு- சிஷ்யர் யதிகளுக்கு —சத் புத்ர சத் சிஷ்யர் –நல்லவராக இருக்க வேண்டுமே –பெறாத பேறாக அன்றோ பெருமாள் பண்ணினார் -)

(யுக்தி மாத்திரம் பெரிய பெருமாள்-உடையவருக்கு உபய விபூதியையும் கொடுத்து அருளி -அனுஷ்டானம் திருவேங்கடமுடையான் -சீட்டு கொண்டு வந்தவளுக்கு கொடுத்து காட்டினார் —கர்த்தா காரயிதாச ஸசொல்வான் மட்டும் அன்றி செய்வானும் நானே செய்விப்பானும் நானே -என்று பெருமாள் – ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ -)

(அன்பு காட்டிய பெரிய உடையார்க்கு பெருமாள் ஆதரவு காட்டி –விலக்ஷணர் -என்பதாலாயே -த்விஜாதியருக்குச் செய்ய வேண்டிய ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் சாஸ்திரம் சொல்லுமே-பூஜா நீயர்-தகப்பனார் போலே மஹா யசஸ் -பறவை அரசன் -மஹான் –பெரிய தகப்பனார் -கச்ச லோகான்என்னால் இந்த த்வஜன் சம்ஸ்காரம் செய்யப்படுகிறான் –மந்த்ரம் இல்லாமல் செய்யப்பட வில்லை -பெருமாள் ஜெபித்தார் -உண்டே –த்விஜாதி -விலக்ஷணர் ப்ராஹ்மணர் என்பதால் இந்த சப்தம் –சாதுக்கள் எங்கும் இருப்பார்கள் எந்த யோனியிலும் இருப்பார் -வியக்தி விசேஷ என்பதால் செய்யாமல் பிரேமாதிக்யத்தால் செய்தார்)

(ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த புத்ர க்ருத்யமும்--ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –)

(யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்-பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின நடுவில் ஸ்ரீ திரு வீதிப் பிள்ளை பட்டரும்)

(ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..)

மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ-என்கிறபடியே
லோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே
சாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –
ஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு  ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை -அவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத் தம்பியாரும் கூட இருக்கச் செய்தே -தாமே சாதரமாக பண்ணி அருளினார் இறே –
இத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில் புத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது-

——————————————-

இவ் வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

(ஆயி ஸ்வாமிகள்-வர்ண தர்மத்தயே பேணிப் போரும் -விஸ்வ நீயமான அசரீரி வாக்கியத்தையும் ஸ்ரீ கிருஷ்ண விசேஷ அங்கீகார யோக்ய-ஞான சிறப்பையும் –வர்ண அபகர்ஷம் பாராமல் அனுவர்த்தித்தாரே-)

(சம்ஸ்காரம் செய்ய ஆசையுடன் இருந்த தர்ம புத்திரர் –சந்தேகத்துடன் விருப்பம் இருந்தது —யதி பண்டிதர் போலே -சாஸ்திரம் -எட்டு வித பக்தன் விப்ரர் தலைவன் யதி பண்டிதன் சாஸ்திரம் சொல்லுமே –பகவத் ப்ரீதி -அதிசய -உத்க்ருஷ்டராக்கி -யதிக்கு சிஷ்யர் –மேலாடையில் -வைத்து -அமர்த்தி எழுந்து அருளி வைத்து –திருப் பள்ளிப் படுத்தி -அலங்கரித்து- க்ருஹஸ்தர் என்பதால் -தஹ ஸம்ஸ்காரம்-விதுரரை அக்னியால்யதிகளுக்கும் இப்படியும் உண்டே -ஸ்ருதி சித்தம் -தஹந கஹந ஸம்ஸ்காரம் -இரண்டுக்கும் -தேஜஸ் விசேஷத்தால் ப்ரத்யவாயம் ஒன்றுமே வாராது –இவருக்கு இது தகும் -விசாரம் பண்ணி அசரீரி செல்வதாலும் ஞாநாதிக்யத்தாலும் செய்தார்)

(ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த புத்ர க்ருத்யமும் –ஸ்ரீ பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு ஞானாதிக்யத்தையும் – அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் )

பெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –
இவர் செய்தது இறே அரிது –
ஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேஸ்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு
நழுவுதல் வராத படி சாவதானமாக நடத்திக் கொண்டு போரும் அவர் இறே  இவர் –
இப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தைப் பார்ப்பது –ஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுலப் படா நிற்கச் செய்தே –
தர்மராஜஸ்து தத்ரைநம் சஞ்சிஸ் காரயிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ ப்ரவீத்-போபோ ராஜன் ந தக்த வ்யமேதத்  விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ் சனாதய -லோக வைலக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோசவ் ந சோச பரதர்ஷப –என்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான இவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ ப்ரஹ்மேத சம்ஸ்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-

—————————————-

அநந்தரம் ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ரவணம்
பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

சூரணை-231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

(ஆயி ஸ்வாமிகள்-ரிஷிகள் நெடுநாள் துவண்டு ஸ்ரேயஸ் சாதனமான தர்மங்கள் -அயதா பிரதிபத்தி -தப்பாக அறிந்து -சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட விருத்தாந்தங்கள்- அவள் சொல்ல வந்தீரோ -ஜாதி இதுவாகையால் செய்து கொண்டுள்ளேன் -பிராயச்சித்தம் இது என்ன-தத் தர்சன சம்பாஷணை மாத்ரத்திலேஇவனும் பூதனாய் மேலும் பல சந்தேகங்களைப் போக்கிக்கொண்டான் )

(யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச நித்ய திருவாராதனம் -அருளிச் செயல் அனுசந்தானம் -ஆர்ஜவமான சத்யவாதித்தவம்-திருக் கச்சி நம்பி ஆச்சார்யராக ஒத்துக் கொள்ள வில்லையே –அபிவாதம் பண்ணினார் தர்ம வ்யாதன் -ஆச்சர்யத்வம் பொருந்துமோ என்னில் – அஸ்வபதி கேகேய ராஜா ஷத்ரியன் -இடம் ப்ராஹ்மணர் – ஜனகர் ஷத்ரியன் இடம் ஸ்வேதகேது போல்வார் -ஜாதியால் வணங்கலாம் –ஞானவான் என்பதால்-ஆச்சார்யத்வம் குறை இல்லை –சம்பாவனை விசேஷம் –வணங்குவது சம் பிரதிபன்ன சிஷ்யர் ஆச்சார்யர் இடம் காணலாமேகொண்மின் கொள்மின்)

சதுர் வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்
வேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி ஸ்ம்ரூதியோடே ஜாதன் ஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமான ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு ஸூஸ்ருஷா விசேஷத்தாலும்-சகல தர்ம ஸூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்ம வ்யாதன் வாசலிலே சென்று – மாதா பித்ரு ஸூஸ்ரூஷை  பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான தர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில் சந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-

கச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யாயீ தபோதன
தபஸ்வீ  தர்ம சீலச்ச கௌசிகோநாம  பாரத ஸாங்கோப நிஷாதான்
வேதான் அதீத த்வீஜா சத்தம ச வ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச் சாரயன் ஸ்தித
உபரிஷ்டாஸ் ச வ்ருஷஸ்ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்
ப்ராஹ்மணஸ்ய ததோரசி-என்று தொடங்கி
கௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய் இருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ  மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு நிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன் மார்பிலே பட்டவாறே க்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –
ராக த்வேஷ பலாத்க்ருதராய்க் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று
பல காலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று – பிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்- நில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர ஸூத்தியாதிகளை  பண்ணி பிஷை கொண்டு வருவதாக உத்யோகியா நிற்கச் செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –
பிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை ஸூஸ்ருஷிக்கிற பராக்கிலே –
பிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் -என்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்?-என்று அவன் குபிதன் ஆனவாறே –
அவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தைப் பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –நான் பர்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் ஸூஸ்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை -என்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –என்று வ்யவங்கமாக சொல்லி -க்ருஹ தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-
நான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச் சொல்லிக் காட்டி -இவ் வபராதத்தைப் பொறுக்க வேணும் -பர்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் ஸூஸ்ருஷையிலே பரவசையாய் நின்றேன் இத்தனை -என்னுடைய பதி ஸூஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி – தக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –

குரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய
க்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் விது-என்று தொடங்கி –
காம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –
என்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –
பவநாபி ச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதஸ் ஸூஸி
நது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி
மாதா பித்ருப்யாம் ஸூஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய
மிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி
தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம
வ்யத பரம தர்மாத்மா சதேஸ்  தேச்யதி சம்சயான்-என்று
நீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -ஸூத்தராய் இருக்கச் செய்தேயும் –
தர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –
மாதா பித்ரு ஸூஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய்க் கொண்டு
மிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –
அங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற
அந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்கக் கடவன் -என்ன

அவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –
பஞ்சகாநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகா மதே வ்யாத பரப்ரவீஹி யதா ததம்-என்று -சிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியானவனே – இத்தைச் சொல்ல வேணும்-என்ன –
யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம
பஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று
யஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற பவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும் உளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –
இப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –
உபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயங்கள் தீரப் பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை
தர்ம புத்ரனுக்கு மார்கண்டேயர் அனுக்ஹரித்ததாக ஆரண்ய பர்வதத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி – பதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே

இன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –

இத்தால் ஜன்மாத் யுத்க்ருஷ்டனாவர்களுக்கு  தத் அபக்ருஷ்டரானவர்கள்
ஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –

——————————————

அநந்தரம்-யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை
அருளிச் செய்கிறார் –

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

(புண்டரீகாக்ஷனே என்று விழித்து -உண்மையை சொல்ல -மின்னிடை மடவார் கொண்டாடலாமா என்ற இடத்தில் -உண்மையை உண்மையாகத் தான் பேச வேன்டும்- யதார்த்த கமனம் )
(ஆயி ஸ்வாமிகள்தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி அலங்க்ருத க்ருஹங்களை புறக்கணித்து -ஆனந்த அஸ்ரூ பங்கிலமாய் -கண்ண நீரால் முற்றம் சேவடி சேறு –சதம்ப்ரும ந்ருத்தம் –தடுக் குட்டமாய் பரவி -சந்தோஷ அதிசயத்தாலே -பெருத்த திருமாளிகையிலே –சுசீநி குணவந்திச-என்கிறபடியே-பாவனத்வம் போக்யத்வங்கள் பரிமள சாரஸ்யம் திரு பவளத்திலும் திரு உள்ளத்திலும்ருசி நாக்குக்கு–பாவானத்வம் உள்ளத்துக்கு -உகந்து அமுது செய்தானே -)
(மடி தடவாத சோறு -சுருள் நாறாத பூ -சுண்ணாம்பு கலவாத சந்தனம் -அஹங்கார உபகதம் இல்லாமல் பக்தி உபஹ்ருதம் –தூய்மையும் குணமும் உண்டே -இதுவே பாவனத்வம் போக்யத்வம் – பீஷ்ம துரோணர் க்ருஹம் விட்டது எதற்கு -விதுரர் க்ருஹம் உண்டது எதனால் -என் க்ருஹம் வராதது எதனால் —மூன்று கேள்விகள் –ஒரே பதில் –விரோதி வீட்டில் கை நனைக்கக் கூடாதே மம ப்ராணான் பாண்டவர் நீ த்வேஷிக்கிறாய்-உன் சம்பந்தி அவர்கள் க்ருஹங்கள் போக வில்லை–த்வேஷி சம்சர்க்கமும் அஹங்கார ஸ்பர்சமும் உண்டே இவர்களுக்கு நீ பண்ணின தப்பைத் திருத்திய  விதுரர் உன் சம்பந்தி இல்லை என் சம்பந்தியே –ந ஸூத்திரர் பகவத் பக்தர் -விப்ரர்-த்வேஷ ப்ரயுக்த சண்டாளத்வம் துரியோதனனுக்கு வர -விதுரர்க்கு போனதே-பகவத் பக்தி அதிசயத்வம் தத் ப்ரயுக்த ஸூத்ர நிவர்த்தியும் -அஹங்கார சம்பாவனை இல்லாமையும் உண்டே -)

தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பஸ்யன்
கர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தைப் பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை நன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ் யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித மமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன் ஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –
ஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது ஸூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –
உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த
பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-
அத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவஸரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –
விதுரான் நாதி புபுஜே ஸூஸீநி குணவந்திச-என்கிறபடியே அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம் ஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை -அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –

————————————–

ஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

(ஆயி ஸ்வாமிகள்-பாவன பதார்த்த வாசி அறியும் பெருமாள் -ஞானவாள் பரிவையாயும் இருந்த சபரி -ஜல ஸ்பர்சம் இல்லாத திருக் கையால்முன்பு தான் பரீக்ஷித்து-த்வஜ ஸ்பர்சம் -உள்ள தித்தித்தவற்றை -பல்லால் கடித்த –-த்வஜ-பறவை கிளி கொத்தின பழம் என்றுமாம்–விவித விசித்திர பல மூலாதிகள் –அனுபவ ஏக வேத்யம் -சுவை இருப்பது அறிந்துசஜாதீயங்களில் குணாகுணம் ஸூ சகம் -பழங்களும் வேர்களும் என்றபடி –துறை வாசி அறிந்து -ரஹஸ்ய த்ரய ஞானம் அறிந்து ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினதால் –விலக்ஷண -அதனால் பரம பாவனமுமாய் -பரம போக்யமுமாய்–பிரார்த்த நீயமுமாய் -இருக்குமே -)

(அபிஜாதாதிகளால் -அபிஜாதி ஞானம் வ்ருத்தம் –கோன் வஸ்மின் குணவான் –சாரித்ரான் -நல்ல நடத்தை —அனுஷ்டான ஸ்ரேஷ்டர் -பெருமாள் )

அதாவது –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே குரு ஸூஸ்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆதர அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண – அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-
இத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்ஸம் உள்ளவை ஆத்ம குணைக தர்ஸிகளான விசேஷஜ்ஞர்க்கு அதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————

இப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –
இன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-

(ஆயி ஸ்வாமிகள்-தனக்கு என்ன செய்ய வேன்டும் என்பதைப் பற்றி ஒன்றுமே அருளாமல் மாறனேர் நம்பி எழுந்து அருள -ப்ரஹ்ம மேதம்-ஏற்றி அருள – உடையவர் ஆச்சார்யர் திரு வாக்காக இருக்க வேன்டும் என்று கேட்டார் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -ஸ்ரேஷ்டம் -வேலி நீர் வெட்டலாமோ –தேவரீர் செய்து அருள வேண்டிற்றோ -ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளின் தர்ம புத்ரரில் உயர்ந்தவனா இவர் விதுரர் பெரிய உடையாரின் சிறியரோ-நாட்டார் இயல்வு ஒழிந்தால் தான் நாரணனை நண்ண முடியும்-பயிலும் சுடர் ஒளி இத்யாதிகளில்ததீய சேஷத்வம் இங்கே அந்வயிக்காமல் வேறே எங்கே போய் அந்வயிக்க –உடையவர் உகந்து வித்தரானார் -இவர் ஒன்றுமே அருளிச் செய்யாமல் திரும்ப எழுந்து அருளி -ஸ்லோக த்வயம் காணும் உடையவர்க்கு அனுசந்தானம் –அந்திம தசை என்பதால் இந்த வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி -பெரிய நம்பி மூலம் நயாமி பரமாம் கதம் – வாக்ய த்வயமாகவும் கொள்ளலாம் -பெண் கண்ட பிச்சன் வார்த்தை அன்றோ வராஹ வார்த்தை -இப் பெண்ணின் உடைய நித்ய யோகத்தை அனுசந்தித்து அருள வேண்டாவோ -நித்யை வேஷம் ஜெகன் மாதா அன்றோ –நமக்கு என் குறை –
வராஹ நாயனார்   -பெண் கண்ட பிச்சும் நித்யமாகுமே   -நம்பியும் உகந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி மீண்டும் த்வயம் அருளிச் செய்கிறார் —ஸ்ரோதா ராமானுஜர் த்வய மஹா மந்த்ரம் ஆசைப்பட்டு மீண்டும் பெற்றார் -அருளிச் செய்த வார்த்தை இது அளவும் உணர வேன்டும் ஞானாதிக்யத்தை பார்த்து ததீயரை ஆதரித்து அனுவர்த்திப்பதே ததியர் அனுஷ்டான சித்தம் )

(ஆச்சார்யர் ருசித்து செய்த அனுஷ்டானத்துக்கு ஏற்றம் அன்றோ – பாகவத கைங்கர்யத்துக்கு ஆள் விட்டு செய்யவோ  சாமான்ய சாஸ்த்ர யுக்த விவஸ்தை -பார்க்காமல் விசேஷ சாஸ்த்ர வையர்த்தம் ஆகாமல் போகக் கூடாதே)

(ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த புத்ர க்ருத்யமும்-ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-)

அதாவது –
அபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையவராய் -அத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார் அபிமானித்து அருளின இத் தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று அதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை  நாய்க்கு இடாதே கிடீர் – என்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள –

பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில் காட்டிக் கொடாதே தாமே பள்ளிப் படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள வேண்டிற்றோ -என்ன –

ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதியோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

———————————————-

இனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா  கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி

(ஆயி ஸ்வாமிகள்-ரூபமான உத்கர்ஷம் விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது -ஸூர நர சஜாதீயன் ஆகா நிற்கும்-வாமனன் தேவ சமன் -ராம கிருஷ்ணன் மனுஷ்ய சமன் -போலே –ததீயரும் அப்படியே -என்ற எண்ணம் வேன்டும் -)

ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவ தேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச  குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா   அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –
இத்தால் – அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே ஸூர நர சஜாதீயன் ஆகா நிற்கும்-ததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் -இதில் கர்ஹை இல்லை -ஸ்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –
இனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்
விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –

——————————————

பாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்
வ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த
கழுதையோபாதி என்று சொல்லா நின்றது இறே –

(ஆயி ஸ்வாமிகள்-வேதத்தின் உட்ப்பொருள் பகவத் சம்பந்த ஞானம் அனுஷ்டானம் இல்லாமல் ஸ்தூல தர்சி -ஸூஷ்ம தர்சனம் இல்லாமல் -ததீய போக்யத்தை -வேத பரிமள த்ரவ்ய பாகத்தை அறியாமல் –இருப்பவனை தாக்ஷிண்யம் இல்லாமல் இதை த்ருஷ்டாந்தம் ஆக்கிக் காட்டிற்றே-)

அதாவது –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று வேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே அதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும் பரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –
பூர்வோத்தர பாகங்களால் ஆராதன  ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு – பகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு இருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமணக் கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-

—————————————————-

பகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –
தத் சம்பந்த சஹிதமான திர்யக்காதி ஜந்மமும் சத் ப்ரார்த்தநீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல்

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் – –

(ஆயி ஸ்வாமிகள்-ரமணீயமானவற்றை ஆசைப்படும் குலசேகரப் பெருமாள் –அலாப்ய லாபமாக -திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமான – திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை -ஆசைப்பட்டு பிராத்தித்தாரே )

(வாக்கால் அபசாரப்பட்டால் பக்ஷிகள் -காயத்தால் அபசாரப்பட்டால் திர்யக்- மனஸால் அபசாரப்பட்டால் தாழ்ந்த மனுஷ்ய -சாஸ்திரம் சொல்லுமே –ஏதேனும் ஆவேனே -திருவேங்கடமுடையானாக ஆனாலும் குறையில்லா கைங்கர்யம் வேன்டும் –ஸ்வாதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டாலும் அநந்யார்ஹ சேஷத்வம் வேன்டும் – உத்தர உத்தர அபகர்ஷம் குருகு மீன் செண்பகம் தம்பகம்-இப்படி ஆசைப்பட்டார் )

அதாவது –
த்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே பாப யோநிகளாக சொல்லப்  படா நிற்கச் செய்தே –
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே –
மீனாய் பிறக்கும் விதி உடையேன்   ஆவேனே –
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று
திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைப் பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-

————————————————————

இப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -239-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

(ஆயி ஸ்வாமிகள்-உத்க்ருஷ்ட ஜென்மத்தை ஆசைப்படாத படி -வேண்டிய வேதங்கள் ஓதி வேதார்த்த ஸ்தாபனம் பண்ணும் பெரியாழ்வார்-வேதம் அனைத்துக்கும் வித்தான பிரபந்தம் அருளி பிஞ்சிலே பழுத்த ஆண்டாளும் –முடை நாற்றம் இத்யாதி
தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு நீசமான அறிவு ஒன்றுமே இல்லாத கோப ஜென்மத்தை இடையர் படி வடிவில் தொடை கொள்ளும் படி -தான் அவனாக மீளாத படி ஆஸ்தானம்
தத் ததீய சம்பந்தம் உடைய ஜென்மமே -உத்க்ருஷ்டம் -வையத்தில் இதுவே வாழ்ச்சி – இதர- பகவத் பாகவத சம்பந்தம் அபகர்ஷம் -)

(குலசேகர பெருமாள் ஆசைப்பட்டார் -தசரதன் கௌசல்யை தேவகி ஷத்ரிய வம்சமாக அன்றோ அருளிச் செய்தார் –வித்யா மாஹாத்ம்யாதிகளாலே–ஜென்மம் பிறப்பால் ப்ராஹ்மணர் – சம்ஸ்காரம் பண்ணி த்விஜன் -வித்யையால் விப்ரர் —மூன்றும் சேர்ந்து ஸ்ரோத்ரியர்சத்கர்மங்கள் அத்யயனம் தானம் யஜனம் பண்ணு பண்ணுவித்து -தேவ -பத்து வித விப்ரர்- த்விஜ விப்ரர் -தேவ விப்ரர் – முனி விப்ரர் -ராஜ விப்ரர் – வைஸ்ய விப்ரர் – சூத்ர விப்ரர் – மிலேச்ச விப்ரர் —-உஞ்ச விருத்தி பண்ணி உண்பவன்கிடைத்ததைக் கொண்டு ஸந்துஷ்டன் இந்திரியங்களை அடக்கியதேவ விப்ரர் பெரியாழ்வார் –மாமன் மகளே பிராகிருத சம்பந்தத்தை ஆசைப்பட்டாள் -ஆஸ்தானம் -ஆரோபணம் பண்ணுவது -அபூர்வ கோப ஜென்மாவை —பாவனா பிரகர்ஷா இடை பேச்சும் இடை முடியும் இடை நடையும் – முடை நாற்றமும் உண்டே)

அதாவது –
இனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ்  ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –
வேதப் பயன் கொள்ள அவர் தம்மைப் போலே பேதைப் பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-
ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
என் மகன் கோவிந்தன் –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –
ஆயர்பாடி செல்வச் சிறுமீர்காள் –
நாமும் நம் பாவைக்கு –
ஆய்க் குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –
தான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –
அறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தைப் புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-

——————————————-

இப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும்  ஒழிய -கந்தல் கழிந்தால்
ஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும் வரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

(நிஸ் க்ருஷ்ட வேஷம் -விஸிஷ்ட வேஷத்துக்கு எதிர்மறை)

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-வால்மீமி பூமி புற்றில் இருந்து -ஸ்ரீ ராமாயணம் -பூமா தேவியே ஆண்டாள் சர்வருக்கும் பிராட்டி உடன் சாம்யம் உண்டே -ப்ரக்ருதி -சரீரம் கர்மா கழிந்த பின்பு -அநாதி காலம் பிடித்து ஸ்வரூபத்தை துறுப்பற்றின ஸ்வா தந்தர்யம் -கந்தல் -இரும்பு போல் வலிய நெஞ்சம் தானே -அநாதி காலமாக இருந்ததே -அஹங்காரம் துர் அபிமானம்-தத் அனுக்ரஹத்தாலே தொலைய-ஸ வாஸனமாக கழிந்தால் – பாரதந்த்ரமே வடிவான –உயர்ந்த பிராட்டி அவள் அபிமானத்தாலே தல் லக்ஷணம் பெற வேண்டும்படியாய் -நிரதிசய ப்ரேம அவஸ்தை தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் -)

(நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம்- ஆவிர்பாவம் அடையும் -பக்தி காதல் அன்பு ப்ரேமம் -கோபிகளுக்கு சமம் சொல்லவும் வேண்டாம் என்ற கருத்து-சேது உடைந்தால் நீரை வரச் சொல்ல வேண்டாமே –குடகு மலை வெள்ளம் வந்தால் காவேரி நீர் வருமே -)

அதாவது –
ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்துப் போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –
பகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –
சர்வ லஷண சம்பன்னா  நாரீணா முத்தமா வதூ -என்கிறபடியே –
ஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-

———————————————-

அது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி ஸூத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-இப்படி அவஸ்தை உண்டாகும் வழி என்ன என்ன –அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் -திரு மந்த்ரம் அறிந்து ம்ஸ்லேஷத்தில் தரித்தும் விஸ்லேஷத்தில் தரியாமையும் –ஆய -பிரார்த்தநாயாம் வியக்த சதுர்த்தி ததேக நிர்வாஹத்யம் -சமாசம் -நாரங்களை அயனாக உடையவன் நாரங்களுக்குள் அயனம் –சேஷ பரதந்த்ர ஸ்வரூப சேதன ஸ்வரூப அனுரூபமான -ஸ்வா தந்தர்ய கந்தம் இல்லாமல் பரிஸூத்தமான ப்ரத்யக் ஸ்வரூபம் ஸ்வ பாவ சித்தம் -கடி மா மலர்ப் பாவையுடன் ஸ்வபாவ சாம்யம் ஸூவத சித்தம் -இயற்கை )

அதாவது –
1-அனந்யார்ஹ சேஷத்வம் –
2-அநந்ய சரணத்வம் –
3-அநந்ய போக்யத்வம் –
4-ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை –
5-விஸ்லேஷத்தில் தரியாமை-
6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –
நிஸ்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு
பிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நைசர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –
இந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-
கடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளிச் செய்தது ஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-

———————————————-

இனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –
நிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என்  -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-
அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

(-

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307-அதிகாரி நிஷ்டா க்ரமம்-பெறுவான் முறை

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

இப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –
பெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

(ஆச்சார பிரதான அன்றோ பெருமாள் –ஐவரில் முற்பட்ட நால்வரில் முற்பட்ட மூவரில் முற்பட்ட அனுஷ்டானம் -சந்தேகியாமல் -சஹஜரோடே செய்த புத்ர க்ருத்யம் –
தர்மர் சந்தேகம் இல்லாமல் -விதுரர் நான்காம் வர்ணம் –அசரீரி சங்கை போக்கி ப்ரஹ்ம ஞானிக்கு ஏற்றபடி செய்தார் -பெருமாள் சஹஜரோடே -கூடப் பிறந்த இளைய பெருமாள் உடன் ஜடாயு மஹா ராஜருக்கு செய்த சம்ஸ்காரம் -பெரிய நம்பிகள் புரோடாசமாக செய்த க்ருத்யம் – நிஷ்க்ருஷ்ட வேஷம் அறிந்தவர்களே இவற்றை செய்வார்
-காயம் அன்னம் -ஸ்தலம் சுத்தி மூவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் -)
(ஆயி ஸ்வாமிகள் தம்மை அழிய மாறியும் ஸ்ரீ கார்யம் செய்த பெரிய உடையாருக்கு -தாமே பண்ணி அருளினார் -பெருமாளுடைய ஸ்வீ காரத்தை உடையவர் -என்பதால் பெரிய உடையார் -ஸ்ரீ பிராட்டி கார்யம் -என்றுமாம் – சாமான்ய தர்மம் ஸ்தாபனம்-பித்ரு வாக்கியம் பரிபாலனம் – வர்ண தர்மம் பார்ப்பவர் – இருந்தாலும் ஜென்மாதி ஞானம் விருத்தம் இவற்றால் வந்த தாழ்ச்சி பாராமல் -புத்திரர்கள் க்ருஹஸ்தர்களுக்கு- சிஷ்யர் யதிகளுக்கு —சத் புத்ர சத் சிஷ்யர் –நல்லவராக இருக்க வேண்டுமே –பெறாத பேறாக அன்றோ பெருமாள் பண்ணினார் -)

(யுக்தி மாத்திரம் பெரிய பெருமாள்-உடையவருக்கு உபய விபூதியையும் கொடுத்து அருளி -அனுஷ்டானம் திருவேங்கடமுடையான் -சீட்டு கொண்டு வந்தவளுக்கு கொடுத்து காட்டினார் —கர்த்தா காரயிதாச ஸசொல்வான் மட்டும் அன்றி செய்வானும் நானே செய்விப்பானும் நானே -என்று பெருமாள் – ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ -)

(அன்பு காட்டிய பெரிய உடையார்க்கு பெருமாள் ஆதரவு காட்டி –விலக்ஷணர் -என்பதாலாயே -த்விஜாதியருக்குச் செய்ய வேண்டிய ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் சாஸ்திரம் சொல்லுமே-பூஜா நீயர்-தகப்பனார் போலே மஹா யசஸ் -பறவை அரசன் -மஹான் –பெரிய தகப்பனார் -கச்ச லோகான்என்னால் இந்த த்வஜன் சம்ஸ்காரம் செய்யப்படுகிறான் –மந்த்ரம் இல்லாமல் செய்யப்பட வில்லை -பெருமாள் ஜெபித்தார் -உண்டே –த்விஜாதி -விலக்ஷணர் ப்ராஹ்மணர் என்பதால் இந்த சப்தம் –சாதுக்கள் எங்கும் இருப்பார்கள் எந்த யோனியிலும் இருப்பார் -வியக்தி விசேஷ என்பதால் செய்யாமல் பிரேமாதிக்யத்தால் செய்தார்)

(ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த புத்ர க்ருத்யமும்--ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –)

(யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்-பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின நடுவில் ஸ்ரீ திரு வீதிப் பிள்ளை பட்டரும்)

(ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..)

மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதா ச ஸ-என்கிறபடியே
லோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே
சாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –
ஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு  ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை -அவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத் தம்பியாரும் கூட இருக்கச் செய்தே -தாமே சாதரமாக பண்ணி அருளினார் இறே –
இத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில் புத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது-

——————————————-

இவ் வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

(ஆயி ஸ்வாமிகள்-வர்ண தர்மத்தயே பேணிப் போரும் -விஸ்வ நீயமான அசரீரி வாக்கியத்தையும் ஸ்ரீ கிருஷ்ண விசேஷ அங்கீகார யோக்ய-ஞான சிறப்பையும் –வர்ண அபகர்ஷம் பாராமல் அனுவர்த்தித்தாரே-)

(சம்ஸ்காரம் செய்ய ஆசையுடன் இருந்த தர்ம புத்திரர் –சந்தேகத்துடன் விருப்பம் இருந்தது —யதி பண்டிதர் போலே -சாஸ்திரம் -எட்டு வித பக்தன் விப்ரர் தலைவன் யதி பண்டிதன் சாஸ்திரம் சொல்லுமே –பகவத் ப்ரீதி -அதிசய -உத்க்ருஷ்டராக்கி -யதிக்கு சிஷ்யர் –மேலாடையில் -வைத்து -அமர்த்தி எழுந்து அருளி வைத்து –திருப் பள்ளிப் படுத்தி -அலங்கரித்து- க்ருஹஸ்தர் என்பதால் -தஹ ஸம்ஸ்காரம்-விதுரரை அக்னியால்யதிகளுக்கும் இப்படியும் உண்டே -ஸ்ருதி சித்தம் -தஹந கஹந ஸம்ஸ்காரம் -இரண்டுக்கும் -தேஜஸ் விசேஷத்தால் ப்ரத்யவாயம் ஒன்றுமே வாராது –இவருக்கு இது தகும் -விசாரம் பண்ணி அசரீரி செல்வதாலும் ஞாநாதிக்யத்தாலும் செய்தார்)

(ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த புத்ர க்ருத்யமும் –ஸ்ரீ பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு ஞானாதிக்யத்தையும் – அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் )

பெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –
இவர் செய்தது இறே அரிது –
ஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேஸ்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு
நழுவுதல் வராத படி சாவதானமாக நடத்திக் கொண்டு போரும் அவர் இறே  இவர் –
இப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தைப் பார்ப்பது –ஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுலப் படா நிற்கச் செய்தே –
தர்மராஜஸ்து தத்ரைநம் சஞ்சிஸ் காரயிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ ப்ரவீத்-போபோ ராஜன் ந தக்த வ்யமேதத்  விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ் சனாதய -லோக வைலக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோசவ் ந சோச பரதர்ஷப –என்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான இவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ ப்ரஹ்மேத சம்ஸ்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-

—————————————-

அநந்தரம் ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ரவணம்
பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

சூரணை-231-

ருஷிகள் தர்ம வ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

(ஆயி ஸ்வாமிகள்-ரிஷிகள் நெடுநாள் துவண்டு ஸ்ரேயஸ் சாதனமான தர்மங்கள் -அயதா பிரதிபத்தி -தப்பாக அறிந்து -சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட விருத்தாந்தங்கள்- அவள் சொல்ல வந்தீரோ -ஜாதி இதுவாகையால் செய்து கொண்டுள்ளேன் -பிராயச்சித்தம் இது என்ன-தத் தர்சன சம்பாஷணை மாத்ரத்திலேஇவனும் பூதனாய் மேலும் பல சந்தேகங்களைப் போக்கிக்கொண்டான் )

(யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச நித்ய திருவாராதனம் -அருளிச் செயல் அனுசந்தானம் -ஆர்ஜவமான சத்யவாதித்தவம்-திருக் கச்சி நம்பி ஆச்சார்யராக ஒத்துக் கொள்ள வில்லையே –அபிவாதம் பண்ணினார் தர்ம வ்யாதன் -ஆச்சர்யத்வம் பொருந்துமோ என்னில் – அஸ்வபதி கேகேய ராஜா ஷத்ரியன் -இடம் ப்ராஹ்மணர் – ஜனகர் ஷத்ரியன் இடம் ஸ்வேதகேது போல்வார் -ஜாதியால் வணங்கலாம் –ஞானவான் என்பதால்-ஆச்சார்யத்வம் குறை இல்லை –சம்பாவனை விசேஷம் –வணங்குவது சம் பிரதிபன்ன சிஷ்யர் ஆச்சார்யர் இடம் காணலாமேகொண்மின் கொள்மின்)

சதுர் வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்
வேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி ஸ்ம்ரூதியோடே ஜாதன் ஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமான ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு ஸூஸ்ருஷா விசேஷத்தாலும்-சகல தர்ம ஸூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்ம வ்யாதன் வாசலிலே சென்று – மாதா பித்ரு ஸூஸ்ரூஷை  பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான தர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில் சந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-

கச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யாயீ தபோதன
தபஸ்வீ  தர்ம சீலச்ச கௌசிகோநாம  பாரத ஸாங்கோப நிஷாதான்
வேதான் அதீத த்வீஜா சத்தம ச வ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச் சாரயன் ஸ்தித
உபரிஷ்டாஸ் ச வ்ருஷஸ்ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்
ப்ராஹ்மணஸ்ய ததோரசி-என்று தொடங்கி
கௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய் இருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ  மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு நிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன் மார்பிலே பட்டவாறே க்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –
ராக த்வேஷ பலாத்க்ருதராய்க் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று
பல காலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று – பிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்- நில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர ஸூத்தியாதிகளை  பண்ணி பிஷை கொண்டு வருவதாக உத்யோகியா நிற்கச் செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –
பிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை ஸூஸ்ருஷிக்கிற பராக்கிலே –
பிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் -என்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்?-என்று அவன் குபிதன் ஆனவாறே –
அவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தைப் பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –நான் பர்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் ஸூஸ்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை -என்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –என்று வ்யவங்கமாக சொல்லி -க்ருஹ தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-
நான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச் சொல்லிக் காட்டி -இவ் வபராதத்தைப் பொறுக்க வேணும் -பர்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் ஸூஸ்ருஷையிலே பரவசையாய் நின்றேன் இத்தனை -என்னுடைய பதி ஸூஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி – தக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –

குரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய
க்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் விது-என்று தொடங்கி –
காம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –
என்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –
பவநாபி ச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதஸ் ஸூஸி
நது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி
மாதா பித்ருப்யாம் ஸூஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய
மிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி
தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம
வ்யத பரம தர்மாத்மா சதேஸ்  தேச்யதி சம்சயான்-என்று
நீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -ஸூத்தராய் இருக்கச் செய்தேயும் –
தர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –
மாதா பித்ரு ஸூஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய்க் கொண்டு
மிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –
அங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற
அந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்கக் கடவன் -என்ன

அவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –
பஞ்சகாநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகா மதே வ்யாத பரப்ரவீஹி யதா ததம்-என்று -சிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியானவனே – இத்தைச் சொல்ல வேணும்-என்ன –
யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம
பஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று
யஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற பவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும் உளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –
இப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –
உபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயங்கள் தீரப் பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை
தர்ம புத்ரனுக்கு மார்கண்டேயர் அனுக்ஹரித்ததாக ஆரண்ய பர்வதத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி – பதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே

இன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –

இத்தால் ஜன்மாத் யுத்க்ருஷ்டனாவர்களுக்கு  தத் அபக்ருஷ்டரானவர்கள்
ஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –

——————————————

அநந்தரம்-யத்ய தாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை
அருளிச் செய்கிறார் –

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

(புண்டரீகாக்ஷனே என்று விழித்து -உண்மையை சொல்ல -மின்னிடை மடவார் கொண்டாடலாமா என்ற இடத்தில் -உண்மையை உண்மையாகத் தான் பேச வேன்டும்- யதார்த்த கமனம் )
(ஆயி ஸ்வாமிகள்தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி அலங்க்ருத க்ருஹங்களை புறக்கணித்து -ஆனந்த அஸ்ரூ பங்கிலமாய் -கண்ண நீரால் முற்றம் சேவடி சேறு –சதம்ப்ரும ந்ருத்தம் –தடுக் குட்டமாய் பரவி -சந்தோஷ அதிசயத்தாலே -பெருத்த திருமாளிகையிலே –சுசீநி குணவந்திச-என்கிறபடியே-பாவனத்வம் போக்யத்வங்கள் பரிமள சாரஸ்யம் திரு பவளத்திலும் திரு உள்ளத்திலும்ருசி நாக்குக்கு–பாவானத்வம் உள்ளத்துக்கு -உகந்து அமுது செய்தானே -)
(மடி தடவாத சோறு -சுருள் நாறாத பூ -சுண்ணாம்பு கலவாத சந்தனம் -அஹங்கார உபகதம் இல்லாமல் பக்தி உபஹ்ருதம் –தூய்மையும் குணமும் உண்டே -இதுவே பாவனத்வம் போக்யத்வம் – பீஷ்ம துரோணர் க்ருஹம் விட்டது எதற்கு -விதுரர் க்ருஹம் உண்டது எதனால் -என் க்ருஹம் வராதது எதனால் —மூன்று கேள்விகள் –ஒரே பதில் –விரோதி வீட்டில் கை நனைக்கக் கூடாதே மம ப்ராணான் பாண்டவர் நீ த்வேஷிக்கிறாய்-உன் சம்பந்தி அவர்கள் க்ருஹங்கள் போக வில்லை–த்வேஷி சம்சர்க்கமும் அஹங்கார ஸ்பர்சமும் உண்டே இவர்களுக்கு நீ பண்ணின தப்பைத் திருத்திய  விதுரர் உன் சம்பந்தி இல்லை என் சம்பந்தியே –ந ஸூத்திரர் பகவத் பக்தர் -விப்ரர்-த்வேஷ ப்ரயுக்த சண்டாளத்வம் துரியோதனனுக்கு வர -விதுரர்க்கு போனதே-பகவத் பக்தி அதிசயத்வம் தத் ப்ரயுக்த ஸூத்ர நிவர்த்தியும் -அஹங்கார சம்பாவனை இல்லாமையும் உண்டே -)

தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பஸ்யன்
கர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தைப் பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை நன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ் யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித மமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன் ஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –
ஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது ஸூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –
உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த
பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-
அத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவஸரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –
விதுரான் நாதி புபுஜே ஸூஸீநி குணவந்திச-என்கிறபடியே அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம் ஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை -அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –

————————————–

ஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

(ஆயி ஸ்வாமிகள்-பாவன பதார்த்த வாசி அறியும் பெருமாள் -ஞானவாள் பரிவையாயும் இருந்த சபரி -ஜல ஸ்பர்சம் இல்லாத திருக் கையால்முன்பு தான் பரீக்ஷித்து-த்வஜ ஸ்பர்சம் -உள்ள தித்தித்தவற்றை -பல்லால் கடித்த –-த்வஜ-பறவை கிளி கொத்தின பழம் என்றுமாம்–விவித விசித்திர பல மூலாதிகள் –அனுபவ ஏக வேத்யம் -சுவை இருப்பது அறிந்துசஜாதீயங்களில் குணாகுணம் ஸூ சகம் -பழங்களும் வேர்களும் என்றபடி –துறை வாசி அறிந்து -ரஹஸ்ய த்ரய ஞானம் அறிந்து ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினதால் –விலக்ஷண -அதனால் பரம பாவனமுமாய் -பரம போக்யமுமாய்–பிரார்த்த நீயமுமாய் -இருக்குமே -)

(அபிஜாதாதிகளால் -அபிஜாதி ஞானம் வ்ருத்தம் –கோன் வஸ்மின் குணவான் –சாரித்ரான் -நல்ல நடத்தை —அனுஷ்டான ஸ்ரேஷ்டர் -பெருமாள் )

அதாவது –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே குரு ஸூஸ்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆதர அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண – அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-
இத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்ஸம் உள்ளவை ஆத்ம குணைக தர்ஸிகளான விசேஷஜ்ஞர்க்கு அதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –

———————————————

இப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –
இன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-

(ஆயி ஸ்வாமிகள்-தனக்கு என்ன செய்ய வேன்டும் என்பதைப் பற்றி ஒன்றுமே அருளாமல் மாறனேர் நம்பி எழுந்து அருள -ப்ரஹ்ம மேதம்-ஏற்றி அருள – உடையவர் ஆச்சார்யர் திரு வாக்காக இருக்க வேன்டும் என்று கேட்டார் -வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -ஸ்ரேஷ்டம் -வேலி நீர் வெட்டலாமோ –தேவரீர் செய்து அருள வேண்டிற்றோ -ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளின் தர்ம புத்ரரில் உயர்ந்தவனா இவர் விதுரர் பெரிய உடையாரின் சிறியரோ-நாட்டார் இயல்வு ஒழிந்தால் தான் நாரணனை நண்ண முடியும்-பயிலும் சுடர் ஒளி இத்யாதிகளில்ததீய சேஷத்வம் இங்கே அந்வயிக்காமல் வேறே எங்கே போய் அந்வயிக்க –உடையவர் உகந்து வித்தரானார் -இவர் ஒன்றுமே அருளிச் செய்யாமல் திரும்ப எழுந்து அருளி -ஸ்லோக த்வயம் காணும் உடையவர்க்கு அனுசந்தானம் –அந்திம தசை என்பதால் இந்த வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி -பெரிய நம்பி மூலம் நயாமி பரமாம் கதம் – வாக்ய த்வயமாகவும் கொள்ளலாம் -பெண் கண்ட பிச்சன் வார்த்தை அன்றோ வராஹ வார்த்தை -இப் பெண்ணின் உடைய நித்ய யோகத்தை அனுசந்தித்து அருள வேண்டாவோ -நித்யை வேஷம் ஜெகன் மாதா அன்றோ –நமக்கு என் குறை –
வராஹ நாயனார்   -பெண் கண்ட பிச்சும் நித்யமாகுமே   -நம்பியும் உகந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி மீண்டும் த்வயம் அருளிச் செய்கிறார் —ஸ்ரோதா ராமானுஜர் த்வய மஹா மந்த்ரம் ஆசைப்பட்டு மீண்டும் பெற்றார் -அருளிச் செய்த வார்த்தை இது அளவும் உணர வேன்டும் ஞானாதிக்யத்தை பார்த்து ததீயரை ஆதரித்து அனுவர்த்திப்பதே ததியர் அனுஷ்டான சித்தம் )

(ஆச்சார்யர் ருசித்து செய்த அனுஷ்டானத்துக்கு ஏற்றம் அன்றோ – பாகவத கைங்கர்யத்துக்கு ஆள் விட்டு செய்யவோ  சாமான்ய சாஸ்த்ர யுக்த விவஸ்தை -பார்க்காமல் விசேஷ சாஸ்த்ர வையர்த்தம் ஆகாமல் போகக் கூடாதே)

(ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் சந்தேகியாமல் சகஜரோடு புரோடோசமாக செய்த புத்ர க்ருத்யமும்-ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-)

அதாவது –
அபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையவராய் -அத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார் அபிமானித்து அருளின இத் தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று அதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை  நாய்க்கு இடாதே கிடீர் – என்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள –

பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில் காட்டிக் கொடாதே தாமே பள்ளிப் படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள வேண்டிற்றோ -என்ன –

ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதியோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

———————————————-

இனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா  கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி

(ஆயி ஸ்வாமிகள்-ரூபமான உத்கர்ஷம் விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது -ஸூர நர சஜாதீயன் ஆகா நிற்கும்-வாமனன் தேவ சமன் -ராம கிருஷ்ணன் மனுஷ்ய சமன் -போலே –ததீயரும் அப்படியே -என்ற எண்ணம் வேன்டும் -)

ப்ராதுர்பாவைஸ் ஸூர நர சமோ தேவ தேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச  குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா   அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –
இத்தால் – அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே ஸூர நர சஜாதீயன் ஆகா நிற்கும்-ததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் -இதில் கர்ஹை இல்லை -ஸ்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –
இனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்
விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –

——————————————

பாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்
வ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த
கழுதையோபாதி என்று சொல்லா நின்றது இறே –

(ஆயி ஸ்வாமிகள்-வேதத்தின் உட்ப்பொருள் பகவத் சம்பந்த ஞானம் அனுஷ்டானம் இல்லாமல் ஸ்தூல தர்சி -ஸூஷ்ம தர்சனம் இல்லாமல் -ததீய போக்யத்தை -வேத பரிமள த்ரவ்ய பாகத்தை அறியாமல் –இருப்பவனை தாக்ஷிண்யம் இல்லாமல் இதை த்ருஷ்டாந்தம் ஆக்கிக் காட்டிற்றே-)

அதாவது –
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று வேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே அதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும் பரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –
பூர்வோத்தர பாகங்களால் ஆராதன  ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு – பகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு இருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமணக் கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-

—————————————————-

பகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –
தத் சம்பந்த சஹிதமான திர்யக்காதி ஜந்மமும் சத் ப்ரார்த்தநீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல்

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் – –

(ஆயி ஸ்வாமிகள்-ரமணீயமானவற்றை ஆசைப்படும் குலசேகரப் பெருமாள் –அலாப்ய லாபமாக -திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமான – திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை -ஆசைப்பட்டு பிராத்தித்தாரே )

(வாக்கால் அபசாரப்பட்டால் பக்ஷிகள் -காயத்தால் அபசாரப்பட்டால் திர்யக்- மனஸால் அபசாரப்பட்டால் தாழ்ந்த மனுஷ்ய -சாஸ்திரம் சொல்லுமே –ஏதேனும் ஆவேனே -திருவேங்கடமுடையானாக ஆனாலும் குறையில்லா கைங்கர்யம் வேன்டும் –ஸ்வாதந்தர்யம் ஏறிட்டுக் கொண்டாலும் அநந்யார்ஹ சேஷத்வம் வேன்டும் – உத்தர உத்தர அபகர்ஷம் குருகு மீன் செண்பகம் தம்பகம்-இப்படி ஆசைப்பட்டார் )

அதாவது –
த்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே பாப யோநிகளாக சொல்லப்  படா நிற்கச் செய்தே –
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே –
மீனாய் பிறக்கும் விதி உடையேன்   ஆவேனே –
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று
திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைப் பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-

————————————————————

இப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –

சூரணை -239-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

(ஆயி ஸ்வாமிகள்-உத்க்ருஷ்ட ஜென்மத்தை ஆசைப்படாத படி -வேண்டிய வேதங்கள் ஓதி வேதார்த்த ஸ்தாபனம் பண்ணும் பெரியாழ்வார்-வேதம் அனைத்துக்கும் வித்தான பிரபந்தம் அருளி பிஞ்சிலே பழுத்த ஆண்டாளும் –முடை நாற்றம் இத்யாதி
தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு நீசமான அறிவு ஒன்றுமே இல்லாத கோப ஜென்மத்தை இடையர் படி வடிவில் தொடை கொள்ளும் படி -தான் அவனாக மீளாத படி ஆஸ்தானம்
தத் ததீய சம்பந்தம் உடைய ஜென்மமே -உத்க்ருஷ்டம் -வையத்தில் இதுவே வாழ்ச்சி – இதர- பகவத் பாகவத சம்பந்தம் அபகர்ஷம் -)

(குலசேகர பெருமாள் ஆசைப்பட்டார் -தசரதன் கௌசல்யை தேவகி ஷத்ரிய வம்சமாக அன்றோ அருளிச் செய்தார் –வித்யா மாஹாத்ம்யாதிகளாலே–ஜென்மம் பிறப்பால் ப்ராஹ்மணர் – சம்ஸ்காரம் பண்ணி த்விஜன் -வித்யையால் விப்ரர் —மூன்றும் சேர்ந்து ஸ்ரோத்ரியர்சத்கர்மங்கள் அத்யயனம் தானம் யஜனம் பண்ணு பண்ணுவித்து -தேவ -பத்து வித விப்ரர்- த்விஜ விப்ரர் -தேவ விப்ரர் – முனி விப்ரர் -ராஜ விப்ரர் – வைஸ்ய விப்ரர் – சூத்ர விப்ரர் – மிலேச்ச விப்ரர் —-உஞ்ச விருத்தி பண்ணி உண்பவன்கிடைத்ததைக் கொண்டு ஸந்துஷ்டன் இந்திரியங்களை அடக்கியதேவ விப்ரர் பெரியாழ்வார் –மாமன் மகளே பிராகிருத சம்பந்தத்தை ஆசைப்பட்டாள் -ஆஸ்தானம் -ஆரோபணம் பண்ணுவது -அபூர்வ கோப ஜென்மாவை —பாவனா பிரகர்ஷா இடை பேச்சும் இடை முடியும் இடை நடையும் – முடை நாற்றமும் உண்டே)

அதாவது –
இனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ்  ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –
வேதப் பயன் கொள்ள அவர் தம்மைப் போலே பேதைப் பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-
ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
என் மகன் கோவிந்தன் –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –
ஆயர்பாடி செல்வச் சிறுமீர்காள் –
நாமும் நம் பாவைக்கு –
ஆய்க் குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –
தான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –
அறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தைப் புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-

——————————————-

இப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும்  ஒழிய -கந்தல் கழிந்தால்
ஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும் வரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

(நிஸ் க்ருஷ்ட வேஷம் -விஸிஷ்ட வேஷத்துக்கு எதிர்மறை)

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-வால்மீமி பூமி புற்றில் இருந்து -ஸ்ரீ ராமாயணம் -பூமா தேவியே ஆண்டாள் சர்வருக்கும் பிராட்டி உடன் சாம்யம் உண்டே -ப்ரக்ருதி -சரீரம் கர்மா கழிந்த பின்பு -அநாதி காலம் பிடித்து ஸ்வரூபத்தை துறுப்பற்றின ஸ்வா தந்தர்யம் -கந்தல் -இரும்பு போல் வலிய நெஞ்சம் தானே -அநாதி காலமாக இருந்ததே -அஹங்காரம் துர் அபிமானம்-தத் அனுக்ரஹத்தாலே தொலைய-ஸ வாஸனமாக கழிந்தால் – பாரதந்த்ரமே வடிவான –உயர்ந்த பிராட்டி அவள் அபிமானத்தாலே தல் லக்ஷணம் பெற வேண்டும்படியாய் -நிரதிசய ப்ரேம அவஸ்தை தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் -)

(நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம்- ஆவிர்பாவம் அடையும் -பக்தி காதல் அன்பு ப்ரேமம் -கோபிகளுக்கு சமம் சொல்லவும் வேண்டாம் என்ற கருத்து-சேது உடைந்தால் நீரை வரச் சொல்ல வேண்டாமே –குடகு மலை வெள்ளம் வந்தால் காவேரி நீர் வருமே -)

அதாவது –
ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்துப் போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –
பகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –
சர்வ லஷண சம்பன்னா  நாரீணா முத்தமா வதூ -என்கிறபடியே –
ஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-

———————————————-

அது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி ஸூத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-இப்படி அவஸ்தை உண்டாகும் வழி என்ன என்ன –அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் -திரு மந்த்ரம் அறிந்து ம்ஸ்லேஷத்தில் தரித்தும் விஸ்லேஷத்தில் தரியாமையும் –ஆய -பிரார்த்தநாயாம் வியக்த சதுர்த்தி ததேக நிர்வாஹத்யம் -சமாசம் -நாரங்களை அயனாக உடையவன் நாரங்களுக்குள் அயனம் –சேஷ பரதந்த்ர ஸ்வரூப சேதன ஸ்வரூப அனுரூபமான -ஸ்வா தந்தர்ய கந்தம் இல்லாமல் பரிஸூத்தமான ப்ரத்யக் ஸ்வரூபம் ஸ்வ பாவ சித்தம் -கடி மா மலர்ப் பாவையுடன் ஸ்வபாவ சாம்யம் ஸூவத சித்தம் -இயற்கை )

அதாவது –
1-அனந்யார்ஹ சேஷத்வம் –
2-அநந்ய சரணத்வம் –
3-அநந்ய போக்யத்வம் –
4-ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை –
5-விஸ்லேஷத்தில் தரியாமை-
6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –
நிஸ்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு
பிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நைசர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –
இந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-
கடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளிச் செய்தது ஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-

———————————————-

இனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –
நிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என்  -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-
அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

(ஆயி ஸ்வாமிகள்ப்ராஹ்மண உத்க்ருஷ்டரானவர்கள் -ப்ரஹ்ம ஜென்மத்தை உபேக்ஷித்து கோப ஜென்மத்தை ஆதரிப்பது – அவற்றின் அஹங்காரம்  இவற்றின் அஹங்காரம் இல்லாமை என்பதாலே – சரீரத்துடன் உள்ள வேஷத்துக்கு உத்க்ருஷ்டம் அஹங்காரம் அடியால் –விசிஷ்ட வேஷத்தில் இது அ நகத்தை அஹம் என்ற நினைவே அஹங்காரம் 
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் –சரீரமே இல்லையே -வஸ்துவே இல்லாத போது அஹங்கார ராஹித்யம் உண்டாகும்அஹங்கார ஹேது வர்ணாதிகளாலே-விசிஷ்ட வேஷத்தில் – -உத்கர்ஷம் -சேக்ஷத்வாதிகளாலே நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் உத்கர்ஷம் -உத்க்ருஷட ஜென்மத்தில் உபேக்ஷை -அஹங்கார ஹேது -த்ருஷ்டத்தில் தானே -அபக்ருஷ்ட ஜென்மத்தில் உபேக்ஷை -அநஹங்கார ஹேது -அத்ருஷ்டத்தில் தானே என்றபடி )

(ஷத்ரியன் ராஜ ரிஷி மஹா ரிஷி ப்ரஹ்ம ரிஷி ஆவது விசிஷ்ட -த்ருஷ்டத்தில் அஹங்காரம் அடியாக –வீத கவ்யர் இப்படி விச்வாமித்ரர் போலே -மேலே மேலே அபிவிருத்தமாகும் நிலை-ஆழ்வாராதிகள் அத்யந்த சேஷன் பரதந்த்ரன் அநந்யார்ஹத்ஹவம் அசித் வத் பாரதந்தர்யம் –அத்ருஷ்ட புருஷார்த்தம் –தாழ தாழப் போய் அபிவிருத்தமாகும் நிலை இங்கே)

அதாவது –
ஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
விஸ்வாமித்ராதிகளைப் போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –
சேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
இவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –

————————————————–

இவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

(அதிகார நிஷ்டையில் இறுதி சூரணை இது -அஹங்காரத்தால் இழந்து போவது ப்ரஹ்மாவைப் போலே -அஹங்கார ராஹித்யத்தால் பெற்றாளே சிந்தயந்தி போல்வார் )

(ஆயி ஸ்வாமிகள்த்வி பரார்தாவாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ – –இரண்டு பரார்த்தங்கள் சென்ற பின் நீர் என்னை வந்து அடையலாம் –நா அஹம் -எனக்குத் தெரியாது- என் பிள்ளைகளுக்குத் தெரியாது -எங்கே இருந்து பிறந்தோம் என்று அறியாமல் தன் பிறந்த இடம் போனதும் – தபஸ் பண்ண அசரீரி வாக்கியம் -அந்த தபஸால் கண்ட பெருமாள் வசனம் இது -த்ரயோ தேவா துல்யா -மூன்றுக்கும் மேலே= -பரா அஸ்ய சக்தி-தன்னிகரற்றவனை- பரா சக்தி- மாற்றிச் சொல்லுவார்கள்
கடிக் கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன்-நாபிக் கமலத்தில் இருந்தாலும் -அநர்த்த பட்டானே
அத்ருஷ்டத்தில் முக்திந் கதா கோப கன்யா -அஹங்கார ராஹித்யம் —சிந்தயந்தி -இதுவே நிரூபணம் இவளுக்கு –சிந்தையிலே கண்ணனை நினைத்துக் கொண்டே –கண்ணன் கழலை நண்ணி -எண்ணினாள் -நண்ணினாள் -இதுவே பெயராக-சிந்தயந்தி —
அண்டாதிபத்யம் -விட வேண்டியவை நிறைய உண்டே அவனுக்கு -இவளுக்கு விட ஒன்றுமே இல்லையே –குடிசை பற்றி வரும் அஹங்காரமும் திருக் குழலோசை ஒன்றுமே போதுமே -கடுகப் பெற்றாள்-லாபத்துக்கு ஹேது அநஹங்காரம் -அலாபத்துக்கு ஹேது அஹங்காரம் )

(வந்து அடையலாம் விளம்பிற்று ஆகலாம் -சமஸ்க்ருத பிரமாணம்-பத்மஜா -எந்த பத்மம் என்றும் சொல்ல வில்லையே -இந்த குறைகள் இல்லாமல் —ஜென்ம உத்கர்ஷமும் வாச உத்கர்ஷமும் ஆழ்வார் சொல்லி -பிறந்த இடத்தின் உத்கர்ஷம் சொல்லி -அடிக் கமலம் காண்கிலான் –அகார வாஸ்யா ஜாயதே -அ கார வாஸ்யன் இடம் இருந்து பிறந்தவன் அஜன் –அஜன் -ஆபி ஜாதியம் -கர்ப்ப வாஸம் இல்லையே -அஹங்கார ஹேது இதுவும் -பாதார விந்தம் காண்கிலான் -)

அதாவது –
த்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-
த்வி பரார்த அவாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –
கடிக் கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 -என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –
அஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹிதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-
முக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும்
இவ் வஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –

இப்படி அஹங்கார தத் ரஹித்யங்கள் அவனை-இழக்கைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அநாதரித்து தத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் என்று கருத்து —

(ஆக இப் பிரகரணத்தால் -ஒன்பதில் இது 4 என்று கொள்ள வேன்டும்-சித்த உபாய நிஷ்டருடைய வைபவம் முற்றும் -மேல் அவர்களின் தினசரியா சொல்லும் பிரகரணம்
ஆறு பிரகரணத்தில் இன்னும் மூன்றாம் பிரகாரணம் -307-வரை தொடரும்)

(பகவத் அங்கீகாரம் -புருஷகாரம் வேன்டும் என்றும் அங்கீ க்ருத – குண விருத்தி– தூஷக அஹங்காராதி -ஆதி -விஷய ஸ்பர்சம் -181-சூரணை பார்த்தோம் –
தத் கார்ய அபசார கோரத்தையும் – நிரஹங்கார–ததீய பிரசித்த பாகவத வைபவத்தையும் –
சரீர ஜென்ம தோஷத்தையும் -சேஷத்வ ஞான ஜென்ம உத்க்ருஷ்டத்தையும் அருளிச் செய்தாரே)

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ப்ராஹ்மண உத்க்ருஷ்டரானவர்கள் -ப்ரஹ்ம ஜென்மத்தை உபேக்ஷித்து கோப ஜென்மத்தை ஆதரிப்பது – அவற்றின் அஹங்காரம்  இவற்றின் அஹங்காரம் இல்லாமை என்பதாலே  சரீரத்துடன் உள்ள வேஷத்துக்கு உத்க்ருஷ்டம் அஹங்காரம் அடியால் -விசிஷ்ட வேஷத்தில் இது அ நகத்தை அஹம் என்ற நினைவே அஹங்காரம்
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் –சரீரமே இல்லையே -வஸ்துவே இல்லாத போது அஹங்கார ராஹித்யம் உண்டாகும் – அஹங்கார ஹேது வர்ணாதிகளாலே-விசிஷ்ட வேஷத்தில் – -உத்கர்ஷம் -சேக்ஷத்வாதிகளாலே நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் உத்கர்ஷம் –
உத்க்ருஷட ஜென்மத்தில் உபேக்ஷை -அஹங்கார ஹேது -த்ருஷ்டத்தில் தானே –
அபக்ருஷ்ட ஜென்மத்தில் உபேக்ஷை -அநஹங்கார ஹேது -அத்ருஷ்டத்தில் தானே என்றபடி
ஷத்ரியன் ராஜ ரிஷி மஹா ரிஷி ப்ரஹ்ம ரிஷி ஆவது விசிஷ்ட -த்ருஷ்டத்தில் அஹங்காரம் அடியாக –வீத கவ்யர் இப்படி விச்வாமித்ரர் போலே -மேலே மேலே அபிவிருத்தமாகும் நிலை
ஆழ்வாராதிகள் அத்யந்த சேஷன் பரதந்த்ரன் அநந்யார்ஹத்ஹவம் அசித் வத் பாரதந்தர்யம் –அத்ருஷ்ட புருஷார்த்தம் –தாழ தாழப் போய் அபிவிருத்தமாகும் நிலை இங்கே)

அதாவது –
ஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
விஸ்வாமித்ராதிகளைப் போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –
சேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
இவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –

————————————————–

இவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

அதிகார நிஷ்டையில் இறுதி சூரணை இது / அஹங்காரத்தால் இழந்து போவது ப்ரஹ்மாவை போலே / அஹங்கார ராஹித்யத்தால் பெற்றாளே சிந்தையந்தி போல்வார் /
த்வி பரார்தா வாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ – –இரண்டு பரார்த்தங்கள் சென்ற பின் நீர் என்னை வந்து அடையலாம் –
நா அஹம் -எனக்கு தெரியாது- என் பிள்ளைகளுக்கு தெரியாது -எங்கே இருந்து பிறந்தோம் என்று அறியாமல் தன் பிறந்த இடம் போனதும் –
தபஸ் பண்ண அசரீரி வாக்கியம் -அந்த தபஸால் கண்ட பெருமாள் வசனம் இது -/
த்ரயோ தேவா துல்யா -மூன்றுக்கும் மேலே பரா சக்தி -பரா அஸ்ய சக்தி தன்னிகரற்றவனை மாற்றி சொல்லுவார்கள் /
கடி கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன்-நாபிக் கமலத்தில் இருந்தாலும் -அநர்த்த பட்டானே /
அத்ருஷ்டத்தில் முக்திந் கதா கோப கன்யா -அஹங்கார ராஹித்யம் –சிந்தயந்தி -இதுவே நிரூபணம் இவளுக்கு -சிந்தையிலே கண்ணனை நினைத்துக் கொண்டே –
கண்ணன் கழலை நண்ணி -எண்ணினாள் -நண்ணினாள் -சிந்தயந்தி —
அண்டாதிபத்யம் -விட வேண்டியவை நிறைய உண்டே அவனுக்கு /இவளுக்கு விட ஒன்றுமே இல்லையே /
குடிசை பற்றி வரும் அஹங்காரமும் திருக் குழலோசை ஒன்றுமே போதுமே -கடுக பெற்றாள்-
வந்து அடையலாம் விளம்பிற்று ஆகலாம் -சமஸ்க்ருத பிரமாணம்-பத்மஜா -எந்த பத்மம் என்றும் சொல்ல வில்லையே -இந்த குறைகள் இல்லாமல் –
ஜென்ம உத்கர்ஷமும் வாச உத்கர்ஷமும் ஆழ்வார் சொல்லி -பிறந்த இடத்தின் உத்கர்ஷம் சொல்லி -அடிக் கமலம் காண்கிலான் –
அகார வாஸ்யா ஜாயதே -அ கார வாச்யன் இருந்து பிறந்தவன் அஜன் –
அஜன் -ஆபி ஜாதியம் -கர்ப்ப வாஸம் இல்லையே -அஹங்கார ஹேது இதுவும் -பாதார விந்தம் காண்கிலான் –

அதாவது –
த்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-
த்வி பரார்தா வாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –
கடிக் கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 -என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –
அஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹிதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-
முக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும்
இவ் அஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –
இப்படி அஹங்கார தத் ரஹித்யங்கள் அவனை-இழக்கைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே
ஸ்ரீ குலசேகர பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அநாதரித்து
தத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் -என்று கருத்து —

ஆக இப்பிரகரணத்தால் -ஒன்பதில் இது என்று கொள்ள வேன்டும்-சித்த உபாய நிஷ்டருடைய வைபவம் முற்றும் -மேல் அவர்களின் தினசரியா சொல்லும் பிரகரணம்
ஆறு பிரகாரணத்தில் இன்னும் மூன்றாம் பிரகாரணம் -307-வரை தொடரும்
பகவத் அங்கீகாரம் -புருஷகாரம் வேன்டும் என்றும் அங்கீ க்ருத – குண விருத்தி– தூஷக அஹங்காராதி -ஆதி -விஷய ஸ்பர்சம் -181-சூரணை பார்த்தோம் –
தத் கார்ய அபசார கோரத்தையும் – நிரஹங்கார–ததீய பிரசித்த பாகவத வைபவத்தையும் –
சரீர ஜென்ம தோஷத்தையும் -சேஷத்வ ஞான ஜென்ம உத்க்ருஷ்டத்தையும் அருளிச் செய்தாரே

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -217-228-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 23, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

இவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால

பகவத் ப்ரேமம் சம்பந்தம் அற்ற -உத்க்ருஷ்ட உத்தமன் -விட சம்பந்தம் உள்ள நிக்ருஷ்ட அதமன் என்று பிரமிக்கும் –நாய் மாம்சம் உண்டவனாக இருந்தாலும் விஷ்ணு பக்தி இருந்தவனாக இருந்தாலும் பக்தி இல்லாத -த்விஜ -ப்ராஹ்மணனை விட உயர்ந்தவன் –
மேலே ஆஸ்ரம யதி பற்றி – வர்ணாஸ்ரம கேவல உத்க்ருஷ்ட பிரமம் போக வேண்டுமே /யதியாகவே இருந்தாலும் -ச காரம் – அபி -உம்மைத் தொகை
விஷ்ணு பக்தி உக்தன் -என்றது அநந்யார்ஹத்வ சேஷத்வமும் ஒன்றே -சினேக பூர்வம் அநு சந்தானம்-ஞானம் வளர்ந்தே பக்தி ஆகுமே -அநு சப்தம் இருப்பதால் -பிரதானம் முன் அப்பிரதானம் பின் வருமே -தாழ்ச்சியை நினைத்து சினேகா பூர்வம் அநு த்யானம் -பஜ கீர்த்தனம் பஜ சேவாயாம் -கைங்கர்யத்தைக் காட்டுமே -ச காரம் அபி சப்தம் -உத்க்ருஷ அபகிருஷ நிர்ணயம் இவற்றால் இல்லையே -தாழ்ந்தவனாக இருந்தானே ஆகிலும் –இருப்பவனாக என்று -சொல்ல வில்லை –
பூர்வ வ்ருத்தம் பற்றி தானே இது -பெருமாள் திரு உள்ளத்தில் பூர்வ வ்ருத்த நினைவே இருக்காதே -மறப்பானோ சர்வஞ்ஞன் –ஸத்யஸங்கல்பன் அன்றோ –
கிருபாதீன கார்யம் தான் இதுவும் -அப்ரீதி தானே பாபம் -நினைவு இருக்க பாபம் போகாதே  நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னடையே போகும் என்றானே –
போக்க நினைவும் போக்க முயற்சியும் போன நிலைமையும் வேறே வேறே இல்லை –
உத்க்ருஷ்ட வர்ணம் உத்தம ஆஸ்ரமி -யதி மூன்று வர்ணத்திலும் வழக்கம் இல்லை -ப்ராஹ்மண யதியையே குறிக்கும் -சந்நியாசி -அனைத்தையும் விட்ட த்ரிவித தியாகம் -ஸ்வ பசன் -நாய் மாமிசம் உண்ணுபவன் -பகவத் சம்பந்தமே உத்கர்ஷ ஹேது –விஷ்ணு பக்தியே பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் -கைங்கர்யம் -பஜனம்- சேவை – அதுவே பக்தி என்றதாயிற்று –-உத்தம ஆஸ்ரமம் ப்ராஹ்மணனுக்கே ஆகும்  ப்ராஹ்மண ஜென்மத்திலும் ஏத்தி -உயர்ந்ததில் உயர்ந்தவனை காட்டிலும் என்று காட்ட –சரக்கு அற்று -பசை அறுத்து -ப்ராஹ்மத்வம் யதித்வம் இவைகளைப் போக்கி -சினேக பூர்வ அநு தியானமே –பஜ தாது சேவாயாம் -விஷ்ணு பக்தன் —சாத்தியம் சாதனம் -சம்பந்தம் -நாய் மாமிசம் உண்ணுபவனாக இருந்தானாகிலும் -இது ஹேதுவா விஷ்ணு பக்திக்கு –கிட்டே கொண்டு வருமே -நைச்யன் நீசன் இதை விட வேறே வழி இல்லை போக்கற்ற புத்தி வரும் -கர்ம ஞான சஹ ஹ்ருத கீதையில் சொன்ன பக்தி இல்லையே – நிர்ஹேதுகமாக பகவத் கிருபையால் -நீசன் என்ற எண்ணத்தால் வந்த பக்தி அன்றோ-கறவைகள் பின் சென்ற ஆய்க்குலம் அறிவு ஒன்றுமே இல்லாத –ஒன்றுமே இல்லா விடிலும் -உன் தன்னை புண்ணியம் யாம் யுடையோம் -எல்லாம் உள்ளதே –பள்ள மடையார் கீழே சொன்ன பக்ஷம் இல்லை – இவர் வந்து பிறந்த பின்பு தானே உயர்வு -அதனால் பகவத் சம்பந்தம் பெற்றார்கள் அன்றோ –
பிறவி உயர்வுக்கு காரணம் இல்லையே – விஷ்ணு பக்தனுக்கு உபயோகி நாய் மாமிசம் உண்ணுவது -யதி ப்ராஹ்மணன் அஹங்காரம் வர நிறைய வாய்ப்பு உண்டே--சேஷத்வ விரோதி இல்லை யாகிலும் -ததீய சேஷத்வ பர்யந்தம் கைங்கர்யம் பண்ண விரோதி ஆகலாம் – -விஷ்ணு பக்தன் ஆவதற்கு தடங்கலாக இருக்கும் -பட்டர் கைங்கர்யத்துக்கு இழவுக்கு உறுப்பானால் திரி தண்டத்தை உடைத்து வெள்ளை வஸ்திரம் கொள்வேன் என்றாரே

எக்குற்றவாளர் -இத்யாதி –-மேவும் நல்லோர் -முன்பே எப்படி இருந்தாலும் -அந்த தாழ்வே ஈர்க்கும் -பிடிக்குமோ என்னில்-தீய ஒழுக்கம் பிடித்தால் தப்பு வரும் -நினைவே கூடாதே பூர்வ வ்ருத்தம் பற்றி -அத்தை எனக்கு பிடிக்கும் என்று பறை வேறே சாற்றுவோம் –
ப்ராஹ்மணராகவோ உயர்ந்தவனான் -பேற்றுக்கு இழவுக்கு அவை காரணம் இல்லை –ராமானுஜர் சம்பந்தத்தால் காரேய் கருணை -திருமேனி அழகால்- இல்லை எனக்கு எதிர் என்ன பண்ணுமே -உடையவர் சம்பந்தமே மோக்ஷம் -குற்றம் பிறப்பு இயல்வு -ஜென்ம விருத்தம் ஞானம் ஹேயம் என்ற நினைவு வந்த பின்பு -நிற்கிற உருகும் நிலையே நம்மை ஆள்கொள்ளும் என்றவாறு -அஹங்கார ஹேதுதயா தாழ்ந்ததாக நினைத்து பயப்பட அதுவே உத்தேச்யம் என்றவாறு-
மிஸ்ர ஸம்ப்ரதாயர்–ரஹஸ்ய த்ரய பாஹ்யர்களும் -பள்ள மடையார்–ரஹஸ்ய த்ரய குத்ருஷ்டிகளும் – மூலத்துக்கும் வியாக்யானத்துக்கும் தங்கள் மதப்படி அர்த்தம் சொல்லி- -இரண்டு பக்ஷமும் -நிரசித்து விலக்ஷண ஞான ஜென்ம சித்தாந்தம்
சாமான்ய சப்த பிரயோகம்உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட-மற்றையவன் – ப்ராஹ்மணர் என்றோ சூத்ரர் என்றோ சொல்லாமல் -ஒவ் ஒருவருக்கும் ஒவ் ஒன்றுமே உத்கர்ஷமாகவும் அபகரக்ஷகமாகவும் உள்ளதே –
பள்ளமடையான் பக்ஷம் படி நாய் மாம்சம் உண்பவனும் உத்க்ருஷ்டம் -என்பான் -குலங்களாய நாலில்-ஆபீஜாதியாதிகள் –
அஹங்கரித்து நசிக்கும்-நால்வர் -கும்பி நரகர் ஏத்துவரேலும்-மணி வண்ணனுக்கு ஆளானால் ஆழ்வார் திருவடி தலை மேல் கொள்வார் –
வேத தத் அங்க உபாகங்களிலே ஆபாத ப்ரதீதியாலே மேலோட்டமாக ப்ராஹ்மணாதிகள் உத்க்ருஷ்டம் போலே திராவிட அருளிச் செயல்களிலும் ஆபாத ப்ரதீதி இவன் பக்ஷம் உத்க்ருஷ்டம் -இருவருக்கும் பொது-தேக சம்பந்தம் உபாதியால் –

நிரபேஷ சித்த உபாயம் -பர கத ஸ்வீகாரமோ ஆச்சார்ய அபிமானம் இத்யாதி ஸ்ரீ பாஷ்யத்திலே இல்லை -கர்ம ஞான பக்தி இத்யாதிகளை தானே சொல்லிற்று
நாயமாத்மா சுருதி -சேதன க்ருதி-ப்ரீதி ரூபாபன்ன பக்தி ஹேதுக பகவத் ஸ்வீ காரம் –அனவரத கால ஷேபம் செய்தே இத்தை உணரலாம் 
பிரபத்தி சர்வாதிகாரம் -ஸக்ருத் -பல காலம் நினைக்கில் பேறு நழுவும் – பக்தி துல்ய சாதானாந்தரம் பிரபத்தி – அத்யந்த அபிமதமான ரஹஸ்ய த்ரயம் பிரகிரியை –
அவதார ரஹஸ்ய ஞானத்துடன் பக்தி செய்தால் தேகாவசனத்தாலே மோக்ஷம் -உபாயாந்தரமாக இத்தையும் முமுஷுப்படியில் தேச வாச த்வய சங்கீர்த்தநாத்திகள் -மோக்ஷம் போகலாம் பிரசம்ஹா பாவம் உண்டாகலாம் -கர்மாதீனமான சரீரம் எல்லாம் பய ஜனகம் தானே என்றவாறு –
தூண்டில் போலே -இந்த லகு உபாயங்களை காட்டி நீக்குதியோ -அவற்றில் இழிந்த நித்ய சம்சாரியான நான் அன்றோ -முன்பு நின்ற நிலையம் கெடுமே –
நிரபேஷ உபாய பூதன் ஒருவனே சரண்யன் ஆவான் –
காலேஷு –விலக்ஷண காலம் தேசம் – பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -சோகமும் அச்சமும் சரீர காரணம் –
உபாயாந்தர சம்பந்தம் மஹா பயம் -விஷயாந்தரத்தால் வந்த பயத்துக்கு கிருபையை பிரார்த்திக்கலாம் -அத்தையும் நழுவ விட்டானே –
அச்சுதன்-சர்வ உபாய ஸூன்யராய் இருப்பாரையும் நழுவ விடாதவன் -துவாரகா நிலைய அச்சுத ரக்ஷமாம் -அவள் கை விட்டாள் -நீர் கை விட வில்லையே 
சேஷியுடைய போகத்தை அழிக்கக் கூடாதே -ஞானத்தால் வந்ததால் -திருமந்திர யாதாம்ய அர்த்தம் அறிந்த ஆழ்வார் நிஷ்டை –பிறப்பால் அல்ல —
பாகவதர் இடம் கைங்கர்யம் கொள்ள மேன்மை வேணும் -கைங்கர்யம் செய்ய தாழ்ச்சி உணர வேணும் – என்னை வணங்கினார் -அனுவர்த்தனத்துக்கு – மேன்மையால் இசைவானாகில் ஸ்வரூப நாசகமாகுமே – அத்யந்த பாரதந்தர்யம் ரூப நைச்ய அனுசந்தானத்தால் இசைந்து இருப்பதே — கைங்கர்யம் ஏற்றுக் கொள்ள உத்கர்ஷம் வேண்டாம் –நீசன் இருந்தாலும் அவருக்கு பரதந்த்ரன் அவர் சொல்வதை கேட்க வேண்டுமே
ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் -சேர்க்கும் பொழுது -தம் ஆச்சார்யர் உடைய சிஷ்யன் தாமும் இந்த சிஷ்யனும் என்ற எண்ணம் வேன்டும் – அத்யந்த பரதந்த்ரன் என்ற எண்ணம் வேணும்உத்தவர் சுகர் -நைச்யம் ஸ்தாவர பாகவதர்கள் இடம் –
ஆண்டாள் பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து நைச்யம் இயற்க்கை -சரீரம் பார்க்காமல் ஆத்மாவைப் பார்த்து அன்றோ –

நைச்யம் ஜென்ம சித்தம் -ஸ்வரூப பிராப்தம் – ஸ்தாவர ஜங்கம பாகவதர்களைப் பார்த்தால் நான்காம் வர்ணத்தவர் தங்களை நீசராக நினைக்க மாட்டார்களே- திருமந்திர யாதாம்ய ஞானம் அறிந்தவன் தானே இவ்வாறு நடப்பான் -திருமந்த்ரார்த்த ஸ்ரவண ஜன்ய ஞானம் உள்ளவர்களுக்கே பொருந்தும் – சர்வாதிகார உபாயாந்தர பயம் -தேச வாஸம்-அவதார ரஹஸ்ய ஞானம் – இத்யாதி –

தேகத்தால் உயர்வு சொன்னால் வரும் குற்றங்கள்  -1-பாகவத ஜென்மம் கண்டு தாழ்வாக எண்ண வைக்கும் -2-ஸஹ காரி ஜாதி என்ற குற்றம் வரும்-பகவத் அனுக்ரஹத்துக்கு நிர்ஹேதுகத்வத்துக்கு கொத்தை வருமே-3–துர் ஜாதி தோஷ சஹத்வம் பெருமை பக்திக்கு -4-சாத்யாந்தர சாதனாந்தர அந்வய பயம் 5–தேக உபாதி கொண்டு ப்ராஹ்மண பாகவதர் -ஜென்ம நிரூபணம் அபசாரம் ஆகுமே- 6–ஹே ப்ராஹ்மணரே என்பதும் ஹே சூத்ரன் என்பதும் குற்றமே-அர்ச்சா த்ரவ்யம் உபாதானம் சொல்வது போலே -பாகவதர்களை ஜென்ம நிரூபணம் செய்வதும் —7–என்னை விட எல்லா பாகவதரும் உயர்ந்தவர்கள் -அவர்களுக்கும் சிலர் அவர்கள் அதிகாரம் அடியாக உயர்ந்தார் என்று சொன்னால் குற்றமோ என்னில் -ஆச்சார்யர் சாம்யத்தில் இவர்களை வைக்க வேண்டி இருக்க -இது மேலே 225 226 சூரணைகளில் வரும் -இப்படி சிலரைக் குறைய   நினைப்பதும் குற்றமே –8–நிக்ருஷ்ட ஜென்ம பாகவதர்களை ஆச்சார்யராக நினைக்கச் சொல்லிற்றோ என்னில் –சகலரையும்-சம்சாரிகளிலும் தன்னிலும் -ஈஸ்வரனையும் விட உயர்ந்தவர் —ஆச்சார்யருக்கு சமம் என்றும் கொள்ள வேன்டும் -என்பதே விவரணம்- பிறரைக் காட்டிலும் குறைந்தவர் என்று நினைப்பதும் அபசாரம்-

மீமாம்ச சாஸ்திரம் ஸ்ரீ வசன பூஷணம் -உயர்த்தி சொல்லத் தான் வந்தேன் -அவதி காட்ட தாழ்ச்சி என்பான் என்னில் -ஈஸ்வரன் நீ சம்சாரி இவர்களை விட சொல்லிக் கொள்ளலாமே -எதுக்கு இன்னும் ஒரு பாகவதரைச் சொல்ல வேன்டும்  தன்னைத் தாழ விட்டு வந்து நம்மை திருத்த -கண்ணுற நிற்கிலும் -கணகில்லா -ஆச்சார்யர் உயர்ந்தவர் —மிருத சிலா மயமாக இருந்தாலும் -இவ்வளவு தாழ நின்றவராக இருந்தாலும் -என்று காட்டவே -இந்த வாக்கியம் உபாதானம் சொல்ல வந்தது இல்லை -பாகவதர் ஏற்றம் சொல்லவே வந்தது இந்த உபாதாந சிந்தநை போல் இதுவும் குறையில்லை என்னில்-தாழ்ச்சி சொல்ல தன்மையும் சம்சாரிகளையும் ஈஸ்வரனையே சொல்லலாம் அன்றோ -வேறு ஒரு பாகவதரைச் சொல்வதே குற்றமாகும் –வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசிக்கும் ஆச்சார்யர் ஸ்ரேஷ்டம்  இருப்பதில் தாழ வந்த பெருமாள் நமக்காக -வந்தவர் -என்று காட்டவே – ம்ருத்மயம்
தேஹாத்ம அபிமானிகள் ரிஷிகள் பர்வத பரமாணு -படிக்கட்டு ஏற்றி ஆண்டாள் ஏற்றம் சொல்ல வந்தது –இப்படி உயர்ந்தவர் காட்டி உள்ளார்கள் பூர்வர்– அவரைச் சிரித்து இருப்பார் ஒருவர் -என்று ஒப்பிட்டமை உண்டே – இருந்தாலும் இவற்றை பாகவத அபசாரம் என்பார் இல்லையேஞான தாரதம்யத்தால் சொல்ல வந்தவை -ஜென்ம நிரூபணத்தால் இல்லை – கீழே ஞான உத்கர்ஷம் அபகர்ஷம் சொல்ல வில்லை –
பெரியாழ்வார் ஆண்டாளை விட உத்க்ருஷ்ட ஞானவான் என்பார் இல்லையே – உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு உண்டோ ஒப்பு அனைவருக்கும் சொல்லி – எதனால் சொன்னீர் –
பகவத் அங்கீ காரத்தால் வந்த தாரதம்யமேஅவன் அபிமதத்துக்கு காரணம் சொல்ல முடியாதே -நிவாரகர் இல்லாத ஸ்வா தந்திரம் கொண்டவன் -1-நிர்ஹேதுக கிருபையால் புருஷோத்தமத்வத்தில் ஆழங்கால் பட்டு மஹிஷிகளாகவும் – 2-குணங்களால் ஆழங்கால் பட்டு அற்று தீரும் படி யாவதாத்மா பாவியாக கைங்கர்யம் செய்யவும் -3-அஸ்தானே பய சங்கிகளாக பண்ணி மங்களா சாசனம் – 4-ஆஸ்ரித பரதந்த்ரன் -குணம் காட்டி சரம பர்வ நிஷ்டராக்கி-யாவதாத்மா பாவியாக அடியார்க்கு ஆட்படுத்தும் -இப்படி நான்கு வகைகள் உண்டே –திவ்ய மஹிஷிகள் – மற்ற ஆழ்வார்கள் – பெரியாழ்வார் – மதுரகவி ஆழ்வார் வடுக நம்பி போன்றோர் – இப்படி நான்கு வகைகள் 
தாரதம்ய நிரூபணம் –ஆஸ்ரயத்தில் உள்ள உயர்வு தாழ்வு காரணம் இல்லையே -பகவத் விஷயீ காரம் வாசியால் தானே -உயர்வு தாழ்வு என்பதே இல்லையே –
ஈஸ்வர குண ரூபமாய் இருக்குமே இவை –தேக உபாதி மூலம் சொன்னால் ஆஸ்ரய ஏற்றத் தாழ்வு உண்டாகும் -அபசாரம் ஆகுமே –விலக்ஷண பாகவதர் உயர்ந்தவர் -உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட சப்தம் நீரே சொல்கிறீர் என்னில் –விலக்ஷண பாகவதர் உயர்ந்தவர் -அவிலக்ஷணர் தாழ்ந்தவர் -அவிலக்ஷண பாகவதர் என்று சொல்ல வில்லையே – விலக்ஷணர் விஷயத்தில் பேசும் உயர்வு தாழ்வு தானே அபசாரம் -நான் சொன்ன உயர்வு தாழ்வு அவிலக்ஷணர் என்பான் பூர்வ பக்ஷி இதுக்கும் –

அவிலக்ஷணருக்கு ஜாதி போகாதே — விலக்ஷண பாகவதருக்கு ஜாதி போகுமே -பிரமாணம் இதுக்கு என் என்னில் -நீ தான் -இவ்வளவு சொல்லியும் உம் கண்ணில் இருந்து ஜாதி விஷயம் போகவில்லையே -உம் கண் பார்வையே காட்டிக் கொடுக்கும்
ப்ரத்யக்ஷ சித்தம் -இது -இது இல்லா விடில் தாரதம்யம் சொல்ல மாட்டாய் –பகவத் சம்பந்தமே பிரயோஜகம் -உன் கண்ணில் பட்டதாலேயே -210-சூரணை பிறந்தது –
தனியனில் கோத்ராதிகள் வம்சம் சொல்லுவான் என் என்னில் என்பான் பூர்வ பக்ஷி
சுகர் -வயம் விஷ்ணு தாச யூயம் ப்ராஹ்மண வர்ணர்-என்பார் – ந ப்ராஹ்மண ந சூத்ர ந ஸ்திரீ  நர ஹரி தாச தாச தாச பூதர் -என்று சொல்கையாலே-பிருகு வம்சம் திரு மழிசை ஆழ்வார் -கிருஷ்ணாநாம் -கறுப்பு நெல் -வாயைத் திறவாமல் -வேதம் பெரும் புலியூர் அடிகள் -குலங்களாய ஈரிரண்டில் பிறந்திலேன் –த்ரரை வரண அதிகார வேதம் கற்க வில்லை -வழக்கம் அபிவாதம் சொல்லும் பொழுது அடியேன் ராமானுஜ தாசன் என்றே சொல்லிக் கொள்ள வேன்டும் –லோக ஸங்க்ரஹ அர்த்தம்–பகவத் சம்பந்தம் வளர்க்க -மர்யாதா பாலான அர்த்தம் —சிஷ்யர்களுக்கு பரம போக்யம் -என்பதால் தனியன் கோத்ரம் வம்சம் – ஆச்சார்யர் ஆழ்வார் பூர்வ விருத்தங்கள் எல்லாம் உத்தேச்யம் – விப்ர நாராயணன் பற்றியும் உண்டே-வர்ணாஸ்ரம தர்மம் பண்ணிக் காட்ட வேண்டுமே லோகத்துக்கு –பகவத் ஏக நிரூபணம் தானே பாகவதர் -இவர்களே விலக்ஷணர் –

பகவத் பக்தி -சர்வ விஷய உத்கர்ஷத்துக்கு ஸூவ ஆஸ்ரயத்துக்கு கொடுக்கும் -படிப்படியாக -இரண்டு அவஸ்தைகள் -பூர்வ உத்தர அவஸ்தைகள்-பூர்வம் ஞான அவஸ்தை – உத்தர ப்ரேம அவஸ்தைகள் -சம்பந்த உபாய பலன்களுக்கு –-தோழி தாய் மகள் – பக்திஸ் ச ஞான விசேஷ– தச வித நிலைகளை உண்டாக்கும் பகவத் பக்தி ப்ரேமம் -விவித உத்கர்ஷம் 2 அவஸ்தைகளில் -பூர்வ பூர்வ அபேக்ஷயா உத்தர உத்தர ஸ்ரேஷ்டம்
1- அத்வேஷம் –வெறுக்காமல் –ஹரி லோக நியமனம் லோக பாவனம்- ஸ்ரீ வைஷ்ணவர்களைத் த்வேஷிக்காமல் கிருஷி பலித்தது என்ற நினைவால் வெறுக்காமல்
2-ஆனுகூலஸ்ய — அநு வர்த்தனங்களுக்கு -பகவத் பாகவத விஷயங்களில் அனுவர்த்தங்களுக்கு அனுகூலமாக 
3–திவ்ய நாம தாரி -பெயராக வைத்து ப்ரீதி விஷய அனுகூல்ய ஞானம் – விரலை வெட்டி ஏகலைவன் – நெஞ்சில் பச்சை குத்தி –
4—சக்ராங்கிதம் -பொறி ஒற்றிக் கொண்டு -வைஷ்ண ரூபம் துளசி மலை  தரித்து -தேவதாந்த்ர பஜனம் இல்லாமை
5—மந்த்ர பாடித்வம் -ரஹஸ்ய த்ரயம் -த்வயம் உச்சாரணம் – சாதன அபேக்ஷை பிறந்து ஸூகர சாதனம் இழிந்து
6–வைஷ்ணவத்வம் -பக்தி உபாயம் -சாதனாந்தர நிஷ்டர்கள்  -புருஷார்த்தங்களை விட்டு -அரதி -விரக்தனாய் அவனைப் பெற -தேக பந்துக்களை விடாமல்
7-ஸ்ரீ வைஷ்ணவத்வம்-தேக பந்துக்களை விட்டு – ச வாசனமாக விட்டு -விஷயாந்தர பரர்களை விட்டு -ஆத்ம பந்துக்கள் உத்தேச்யம் -பகவத் விஷய ஞானத்தால் விளைந்ததாய் இருக்க வேன்டும்
8–பிரபன்னத்வம் ஆவது –பக்திக்கு அங்கமாக -அங்க பிரபன்னர்-இவரும் சாதனாந்தர நிஷ்டர் -ஸூ தேக விருப்பத்தையும் விட்டு சாதன பக்தன் -பக்தி ஆரம்ப விரோதி போக்க பிராயச்சித்த ஸ்தானத்தில் பிரபத்தி —
9—ஏகாந்தி –கிருஷ்ணனே ஏக சாதனம் -சாதனாந்தரங்களை ச வாசனமாக விட்டு -தான் உபாயமாக பகவானைப் பற்றி இருக்கை-தூ மணி மாடம் கோபி -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் 
10–பரமை காந்தி -கிருஷியால் -அவனே உபாயம் -ஸூவ கத ஸ்வீகார நிஷ்டர் கீழே  பர கத நிஷ்டர் இவர் -நீரே உபாயம் உபேயம் –தன்னையும் இல்லை என்று இருப்பவர் பரமை காந்தி-நம்மை நம் வசத்திலே விட வேண்டாம் – தன் திருவடிக்குக் கீழே வைத்து கைங்கர்யம் அருளி  சித்த உபாய வரணத்தையும் விட்டு -காம்பற தலை சிறைத்து –
நோற்று ஸ்வர்க்கம் கோபி இது–யாருக்கு ப்ரஹ்மத்தால் ஆனந்தம் ஊட்டப் பட்டனோ – – 
அதுவும் அவனது இன்னருள் –யானும் தானாய் ஒழிந்தானே -அவன் பண்ணும் ஸ்வீ காரம்
கீழே இவன் பண்ணும் உபாய வரணம் – ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் -தூது -திரு வண் வண்டூர் -பிராப்தியை அறிவிக்கத் தானே ஓடி வருவானே –
11-பக்தத்வம்–ப்ரேம அவஸ்தா கார்யங்கள் மேலே -கீழே பத்தும் ஞான அவஸ்தா  கார்யங்கள் –வேறே யாரையும் அண்டாமல் என் பக்தர்கள் இடம் பிரியம் -அடியார்க்கு அடியார் –மத் பக்த ஜன பிரியர் -சினேக ரூபமாய் -பாகவதர் வரை வந்தவர் —
ஒருவன் பக்கல் ஞானம் ஏற்பட்டால் கூட இருப்பவர் கண்டு கொள்ளாமல் – பகவத் விஷய பிரியம் வந்தால் தான் சம்பந்தி சம்பதிகள் அளவும் போகுமே
12–பாகவதத்வம் -அர்த்த பஞ்சகம் -ஆகார த்ரய சம்பன்ன -சகலார்த்த விஷயமாய் -பர கத ஸ்வீகார நிஷ்டர்- ஆச்சார்ய அங்கீ கார விஷயீ க்ருதராய்–பாகவதர் இடத்தில் அநந்யார்ஹ சேஷத்வ சரண்யத்வ போக்யத்வ–பூர்வர்கள் ஈஸ்வர பரதந்த்ரர்கள் இவரே ஆச்சார்ய பரதந்த்ரர்-
ஆக —முதல் ஒன்பது -சர்வாத்மா -முழுவதுமாக பகவத் பக்தி இல்லை -கார்யங்களைத் தன் தலையிலே ஏறிட்டு கொள்ளாமல் -யாவச் சரீர பாவம் ஜாதி போகாது
பத்தாம் அதிகாரி முழுவதும் பகவானைப் பற்றியதால் -நதி கடலில் கலக்க பெயர் ரூபம் போகுமே -முனையில் கலந்தால் இரண்டு வர்ணமும் தெரியுமே – வர்ணம் ஜாதி என்றுமாம்
விஷ்ணு நாமம் கோத்ரம் சரண ஸூத்ர கூடஸ்தர்– பராங்குச பரகால யதிவராதிகள்  நிரதிசய ப்ரீதர் -ஆத்ம சத்தை உண்டாக பெற்றிலன் —அத்யந்த ப்ரீதிக்கு விஷயம் ஆக வில்லையே -பகவத் விஷயீ க்ருதன் இல்லை
அடுத்த அதிகாரி -பாகவத விஷயத்தில் சினேக பூர்வ பக்தி தான் பூஜ்ய விஷயம் இல்லை -தனக்கு சமம் என்கிற நினைவில் உள்ளான் – அத்யந்த அபிமதம் இவனுக்கும் இல்லை
பன்னிரண்டாம் அதிகாரி -ததீய பக்தி -தேவன் இடம் பக்தி ஆச்சார்யர் இடம் பண்ணுபவன் -சத்தை பற்று -பாகவதத்வம் என்ற ஜாதி பிறந்து சர்வ உத்க்ருஷ்டன் -ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும்
பயிலும் சுடர் ஒளிக்கும் நெடுமாற்க்கு அடிமை நெடு வாசி -இது தான் -11–12- அதிகாரிக்கும் வாசி – கொடு மா வினையேன் -என்று பாகவத சேஷத்வம் இழந்தேன் – என்பது முதல் -9-அதிகாரிகள்  ஆழ்வார்களும் இதனாலே பத்தும் இரண்டும் -ஆண்டாளும் மதுரகவி ஆழ்வாரும் சரம பர்வ நிஷ்டர்கள் – எதிராசரைச் சேர்த்து இவர்களையும் ஒரே பாசுரத்தால் மா முனிகள் –
னக்கு சமம் என்ற புத்தி இல்லாமல் பாகவத விஷயத்தில் மஹாநீய விஷய பக்தியும் ப்ரீதியும் கொண்டவன் -12-அதிகாரி -எம்மை ஆளும் பரமர் -சேஷிகள் என்றவர்
ஸ்வாமி என்றும் பரம போக்யன் என்றும் அறிந்து அடியார் அடியோங்கள் கூடவே இருக்க -முனி மா பிரம முதல் தனி வித்தாய் –தனி மா தெய்வம் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவர் அடியார் –எடுத்துக் கழிக்க இவ்வளவு பெருமை சொல்லி -அடியார் நனி மா கல்வி இன்பம் -போகம் அனுபவிக்க ஆசைப் பட்டார் 
சயமே அடியார் -தலை நின்றார் படியும் –நீக்கமில்லா அடியார் -கோதில் அடியார் -மூவர் நிலையையும் கொண்ட அடியாருக்கு அடியாராக ஆசைப்பட்டார்-
இது வரை தான் ஸ்ரீ எம்பார் ஸ்வாமி அரும் பதம் காணப்படுகிறது -)

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-
உத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரமியுமாய்  இருந்தானே ஆகிலும்
பகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று
வர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாகச் சொல்லுகையாலே –
பிரம சம்பாவனாதிகளாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து
இங்கன் அன்றாகில் -கீழ்ச் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே-

——————————-

ஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜன்மங்கள் இன்னது என்று நிரூபிக்கப் பட்டது கீழே-
அதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் மேலே –

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்தத்தாலே-

(ஆயி ஸ்வாமிகள் -அஹங்கார கர்ப்பமான -ஜென்மம் -பகவத் சம்பந்தம் இல்லாத -துஷ்ட ஜென்மம் –துஷ் ப்ரதிக்ரியா தோஷம் -பிராயச்சித்தம் பண்ணி போக்கிக் கொள்ள முடியாதே
மேலிடாமல் சமிப்பது -நெருப்பில் இட்டது போலே-தீயினில் தூசாகும் – ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலன் -அதில் உள்ள பிரதிபத்தியை விட்டேன் -தாஸ்ய ஜென்மமே உயர்ந்தது -என்றவாறு -ச தோஷ ஜென்ம சம்பந்தம் –உபாயாந்தர சம்பாவனை இல்லாமலும் நைச்யம் பாவிக்க வேண்டாத -இரண்டு தோஷங்களும் இல்லாமல் -தேக உபாதியால் வருமவை இல்லாமல்ஸ்வரூப அனுரூப ஜென்ம வ்ருத்தராய்–ஹீந ஸ்பர்ஸம் பொறுக்காத விலக்ஷணரான சரம ததியர்கள்- தர்ஸன-ஸ்பர்ஸநாதி சம்பந்தத்தால் போகும் -)

அதாவது
அஹங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது  – ஜன்ம சித்தமான நைச்யத்தை உடையவராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த ரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை-(தர்சித்து ஸ்பர்சித்து கைங்கர்யம் பண்ண தோஷங்கள் விலகும்)

—————————————–

தத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

(ஆயி ஸ்வாமிகள்-பாக்ய வசத்தால் தத் சம்பந்தம் ஏற்படும் பொழுது – அஹங்காரம் போவது பாகவத சம்பந்தத்தால் -அது ஏற்பட இது போக வேன்டும் –விலக்ஷண சம்பத்தை தூஷகமான துர் அபிமான தூஷித்தமான நிக்ருஷ்ட ஜென்மம் -அஹங்கார ஜென்மம் -ச வாசனமாக போகும்-அனுகுணமான யோக்யதைஅஹங்காரம் தொலைந்தால்–துளி மாறினால் அதிகாரம் பிறக்கும் –– இல்லை போல் இருக்கு என்று வாய் மாத்திரம் சொன்னாலே போதும்-ஜென்ம கொத்தை ச வாசனமாக போகும்அஹங்காரம் மறுவல் விடாதபடி போகும் -திரும்ப முளை விடாதபடிக்கு நிவ்ருத்தமாகும்)

(இந்திரியங்கள் வசப்பட என்னைத் தியானி  என்னைத் தியானிக்க வசப்படுத்து என்றால் போலே இங்கும் அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் –சத்வ குணம் வளர – ஞானம் வளர இவை போலே பய க்ருதும் பய நாசகனும் அவனே -ஆஜ்ஜை அதி லங்கனம் பண்ணுபவனுக்கு பயம் உண்டாக்கி —ஆஜ்ஜா அனுவர்த்திகளுக்கு பயம் போக்கி  தான் ஏற நாள் பார்த்து இருப்பானே –நிவேதியத மாம் சிப்ரம் -என்றானேஅபிஜன அபிமானம் போனால் தான் பாகவத சம்பந்தத்தால்  ச வாசனமாக போக்கும் பாகவத சம்பந்தம் -ஆத்ம ஞானம் வந்து கர்ம யோகத்துக்கு வந்து பண்ணப் பண்ண சித்தம் நிர்மலமாகி ஞான யோகம் நிலைத்து ஞானம் வளரும்- –ஆத்மா தேக விலக்ஷணம் என்கிற ஞானம் வந்தால் தானே கர்ம யோகத்துக்கே வருவான் -அது கீழ் நின்ற ஞானம் -இது மேல் உள்ள ஞான நிலைகள் –அதே போலே அஹங்காரம் மாத்திரம் தொலைந்து விலக்ஷண சம்பந்தம் ஏற்பட்டு -மேல் நிலைகள் -ஸ்வாமி போக்யம் இத்யாதி நிலைகள் வரும் -)

அதாவது
அவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது
தன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி

————————————————–

ஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்கு பரிகாரம் ஏது ?-என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

(ஆயி ஸ்வாமிகள்-ஸூஷ்ம தர்சி ஸூ வியக்தமாக அருளிச் செய்கிறார் -பழுது குற்றம் இல்லாத பிரவாஹ ரூபமான ஜென்மம் -பேதிமார்களே -சதுர் வேதிகளை கூப்பிட்டு –
இழி குலத்தவர்கள் ஆகிலும் எம் அடியார்களாகில் –நின்னோடும் ஓக்க -உம்மை -கடைசி பக்ஷம் என் அளவாகாவாது -என்றவாறு -மதிள் திருவரங்கத்தானே -அனுஷ்டான பர்யந்தமாக காட்டி -லோக சாரங்க முனிவர் -திருப் பாண் ஆழ்வார் -ஜன்மத்துக்கு கொத்தை -ஒழுகல் ஆறா -சதுப்பேதிமார்கள் போக்க பரிகாரமும் காட்டி  தொண்டர் அடிப் பொடியை தலையிலே சூட்டி – பெயரே பிரமாணம் தானே -விப்ர நாராயணர் பேர் மறந்து –அடியார்க்கு ஆட்படுத்த பிரார்த்தித்து அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் –ஏக கண்டர்-நெடுகப் போகும் வம்ச பரம்பரை —உள்ள அனைவரையும் விழித்து உபதேசம் – பரம பக்தனை பிராணாயாமம் நமஸ்காரம் பண்ணி – ஞானம் ஆதரித்து சொல்லியும் -கேட்டும் க்ருதார்த்தராக வேன்டும்  பரம சேஷி என்னும் அளவுக்காகவாது -பிரிய ஞானி அத்யந்த பிரியம் -அங்கும் இப்படியே அருளிச் செய்வான் -த்வார சேஷிகளையும் நினைத்து நாயகனாய் நின்ற நந்த கோபன்  நாயகனாய் நின்ற கோயில் காப்பான்  நாயகனாய் நின்ற வாசல் காப்பான் –பரம ரஹஸ்யம் -அர்த்தம் விசேஷித்து காட்டி அருளினான் மதிள் திருவரங்கத்தான் -அபிஜனம் அபிமானம் ஜன்மத்துக்கு கொத்தை – தொலைத்து விலக்ஷண ததியர் -எம் அடியார்களாகில் -அநந்யார்ஹ சேஷத்வம் -அருளிச் செய்ததை அனுசரித்து வித்தாராகிறார் பிள்ளை லோகாச்சார்யார் -)

(வித்யா தானம் -ஆச்சார்யத்வ ப்ரீதி – கொடுமின் கொள்மின் -ஞான தான ஆதாயம் -என்றவாறு -சரீர சம்பந்தம் இல்லையே -)

அதாவது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர நெடுகப் போகிற வம்ச பிரவாஹத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்-
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  யாகிலும்
என்னோடு உண்டான அசாதாரண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்துச் சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என் மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழிப் போகுங்கோள் என்ற இந்தப் பரம ரகஸ்யத்தை –
பக்திர் அஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம்-என்று
பரம ஆப்தரான தேவர் அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ ?
இப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்
தலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் வர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –
இப் பாட்டிலே -அபிஜனாத்ய  அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத
விலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்குப் பரிஹாரம் என்று- ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை-

(1-மத் பக்த ஜன வாத்சல்யம்
2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து
3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி
6-சுர நேத்ர அங்க விக்ரிதா
7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும் தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர் இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-)

——————————————–

ஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே
இவனும் விலக்ஷணனாய் விடுமோ என்ன அருளிச் செய்கிறார் —

சூரணை -221–

வேதகப் பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

(ஆயி ஸ்வாமிகள்-ரஸ குளிகை –வேதகம் பேதனம் மாற்றி விடும் -பேதம் பண்ணும் பொன் என்றபடி -பித்தளை ஹாடகம் பித்தலாட்டம்-இது நிஜமாகவே மாற்றும் –சாம்யா பத்தியை கடுக உண்டாக்கும் -ஸ்பர்சம் தர்சனம் கைங்கர்யம் மூலம் உண்டாக்கும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய வேன்டும் என்று -இடையர்கள் அறிந்தவாறு என் என்னில்-ரஸ குளிகை போலே கண்ணன் இருக்க இவர்கள் கிருத்யம் இதுவாகும் –சேஷத்வ பாரதந்தர ஞானம் பெருக பெருக பழைய நிலை ச வாசனமாகப் போகுமே —சதாசார்ய கைங்கர்யம் செய்யச் செய்ய -கசடு அற்ற ஞானம் பிறந்து –அஹங்கார தூஷிதராய் -அசத் கல்பராய் இருந்தவர்களையும் –விலக்ஷணர் ஆக்குமே )

வேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளிச் செய்கிறார்-
வேதகப் பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு  -பல கால் உருக்கி குளியையாகப் பண்ணி  ரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பைப் பொன்னாக்குமாம் போலே ஆய்த்து–
ஜன்ம சித்தமான நைச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தைப் போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –

————————————–

ஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி இருக்க வேணும் என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் —

(ஆயி ஸ்வாமிகள்இவர்கள் –இதம் ஸ்வ சம்பந்த ஹேதுக சாம்யாபத்தி பிரதானரான விலக்ஷணர் -சமமானவர்களாயும் உயர்வானவர்களையும் என்றது -ஆச்சார்யருக்கு சாம்யம்  சம்சாரிகளிலும் தன்னிலும் ஈஸ்வரனிலும் உயர்ந்தவர்கள் -கீழேயே பார்த்தோமே
இவர்கள் – ஸூவ சம்பந்த ஹேதுக -சாம்யா பத்தி பிரதத்வ ரூபஉபய தோஷ ராஹித்யம் -உள்ள -விலக்ஷணர் -உத்க்ருஷ்ட தமரான ஆச்சார்யருக்கு சாம்யம் -நிக்ருஷ்ட சம்சாரிகளிலும்- உத்க்ருஷ்ட ஈஸ்வரனை விட ஆதிக்ய புத்தி-)

இவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும்  ஆதிக்ய புத்தியும் நடக்க வேணும் என்று –

—————————————–

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும்
அதிகர் என்றும் நினைக்கை-

(ஆயி ஸ்வாமிகள்-புத்தி த்வயம் -ஆத்ம ஈஸ்வர விலக்ஷணரான சதா ஆச்சார்யர் சாம்யம் – ஞானம் இல்லா சம்சாரிகளை விட ஞானம் இருந்தாலும் சேஷியான தன்னில் அதிகராய் – ஸூ ஆச்சார்ய பரதந்த்ரராய் -உபதேசித்து –திருத்தும் -பெருமாள் உதாசீனராய் -ஸ்வ தந்தரராய் மௌனியாய் இருக்க –மூன்றாலும் அதிகராய் அன்றோ லீலையிலும் விநியோகம் கொள்ளக் கடவனாய்-உம்மை தொகை -போகத்தில் ஆழ்வாராதிகளை விநியோகம் கொள்ளுவான் –ஸ்வரூப அனுகுணமாகவே -ஸ்வா தந்த்ர ஹேதுக கர்ம அனுகுணமாக -கர்ம பரதந்த்ரனாக வேஷம் ஏறிட்டுக் கொண்டு -ஸ்வா தந்த்ரனாய் இருந்தே ஸ்வரூப விருத்தனாய் அன்றோ ஈஸ்வரன் -அவனைப் போலே இல்லாமல் ஆச்சார்யர்கள் –ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளுவார்கள் -)

(ஈஸ்வரனுக்கு உண்டான சேஷித்வ ப்ராபகத்வ ஸ்வரூப ஞான ஹேதுத்வ அநந்யார்ஹ சேஷ பூதன் தாரகத்வ  ப்ராப்யத்வ  ஐந்தும் போல்-சரம சேஷித்வ-சரம ப்ராபகத்வ -சரம ஸ்வரூப ஞான ஹேதுத்வ–அநந்யார்ஹ சேஷ பூதன் என்ற ஞானமும் இவரால் –சரம -சரம –சரம ப்ராப்யத்வ –-திருமந்த்ரார்த்த தாத்பர்யம் இது தானே -சர்வ பிரகாரத்தாலும் ஆச்சார்யருக்கு துல்யர் என்றது -மாதா பிதா -விபூதி சர்வம் போலே —
சத்தா ஞான -தாரகம் ஆச்சார்யர் தானே –ஆகவே சர்வ பிரகாரத்வம் -இப்படி ஐந்தும் உண்டே 
கொண்ட பெண்டிர் -மக்கள் உற்றார் -அனைத்தும் அவனே-9–1- அந்த உறவுக்கு ஏற்ற கைங்கர்யம் பண்ண வேண்டுமே –9–2-எல்லா உறவின் காரியமும் பண்டை நாளாலே-நின் கடைத்தலை -பிரார்திக்கிறார் -ஆச்சார்யர் பகவானே ஆழ்வாருக்கு –ஜாதியாதி ஜாதி ஜென்ம விருத்தம் ஞானாம் — ஞானாதிகள்ஞானம் பக்தி வைராக்யம்ஞானம்-வேதம் வேதாங்கம் ஞானம் –ஸ்வரூப யாதாம்ய ஞானம் பாகவத அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் )

ஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரஹ்ம-இத்யாதிப் படியே-
தனக்கு சர்வ பிரகார  உத்தேஸ்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –
சம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே  -ஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
தன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே -அத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
ஈஸ்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே -கர்ம அனுகுணமாக லீலையிலும் (உம்மைத் தொகை போகத்திலும் -ஆழ்வார்கள் )விநியோகம் கொள்ளக் கடவனாய்- ஸ்வ சரண கமல சமாஸ்ராயண தசையில்  புருஷகாரம் வேண்டும் படியாய் -உகந்து அருளின நிலங்களிலே -சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே இருக்கும் அவனைப் போல் அன்றியே (அவன் கர்ம அனுகுணமாக நன்மை விநியோகம் கொள்ளுகிறான் அன்றோ -ஸ்வரூபம் ஸ்வா தந்திரமாக இருக்க இப்படி இருப்பது ஸ்வரூப விருத்தம் அன்றோ-பரதந்த்ரமாய் இருந்து வைத்தும் தமது ஆச்சார்யருக்கு கைங்கர்யமாக நம்மை விநியோகம் கொள்ளும் ஆச்சார்யர் )-ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் -ஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு போரும் அவர்கள் ஆகையாலே -ததிகர் என்று பிரபத்தி பண்ணுகை-

—————————————–

ஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –
ஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

(ஆயி ஸ்வாமிகள்-ரஜோ குணத்துடன் சொன்ன புராணங்களை அப்ரதானமாகம் -சொன்னது ப்ரஹ்மாவே சாத்விக புராணத்திலே ஆச்சார்யத்தை விரும்பிய ஈஸ்வரனே சொன்னதாகவும் உண்டே-ஸ்ருத பலத்தால் -ஸ்ரீ கீதையில் -உண்டே –ஜாதியாதிகளால் சம்சாரி சாம்யமும் -ஞானாதிகளால் ஸூ சாம்யமும் -சங்கை வருமே பாகவதர்களையும் நினைக்கத் தோன்றுமே -ஞானாதிக்த்வ சேஷித்வங்கள் இவற்றைத் தடுக்க வேன்டும் -தத் உபய ஆதிக்ய புத்தியை பிறப்பிக்கும் – அஞ்ஞானம் இருளை போக்கும்-அஞ்ஞானம் போக்கும் இவர்களும் ஈஸ்வரனும் -சாம்யா புத்தி வந்தாலும் -பர ஹிதை மட்டுமே நினைக்கும் இவர்கள் -புருஷகாரமாகவும் இருப்பதால் பகவானை விட ஆதிக்யம் -சர்வாதிக-ஆச்சார்யருக்கு சாம்யா புத்தி சாதிக்க –கிரமமாக -நிக்ருஷ்ட –மத்யம -உத்க்ருஷ்ட -அதிகராயும் -சர்வ உத்க்ருஷ்ட சாம்யருமான -புத்தி -சம்சாரி வைஷ்ணவ ஈஸ்வர ஆதிக்யம் – பரம்பரையா ஹேது கீழ் இரண்டும் – சாஷாத் ஹேது மூன்றாவது -ஸங்க்ரஹம் ஆச்சார துல்யர் என்பது எதனால் என்றால் -தத் இதர சர்வாதிக புத்தி விவரணம் -)

(குரு ரேவ -ஏவ சப்தம் இந்த ஸூ இதர சர்வாதிக்யம் சொல்லுமே-ஆத்ம சிந்தனையில் ஈடுபட்டு -இதர விஷயாந்தரங்களை விட்டு -உபாஸ்ய நித்யம் வைஷ்ணவன் –பிரகார விசேஷ ஆகாங்கஷையிலே —ஆச்சர்யவத்–தெய்வவத் –மாதாவத் –ராஜாவத் –சமம் என்பதுக்கு பிரமாணம் -பக்திர் அஷ்டவிதஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு கீதாச்சார்யன் — என்னைப் போலே பரம பாகவதனை -என்றானே –இத்தாலும் ஆச்சார்ய சாம்யம் – ச பூஜயக-என் அளவிலாவது பூஜிக்கத் தக்கவன் -சாஸ்த்ர அனுகுண தத் வசன மூலம் -குரு ரேவ -இந்த விலக்ஷண பாகவதர்களைத் தவிர வேறே யாரையும் கொள்ளக் கூடாது என்றபடி -ஆகாரங்களைப் பற்ற தெய்வவத் -ஆச்சார்யவத்- மாத்ருவத்-உண்டே என்னில் –சர்வ பிரகாரத்தாலும் -ஒவ் ஒரு பிரகாரத்தாலும் இவர்கள் சமம் என்றபடி 
ஆச்சார்யர் போலே ஸமாஸ்ரயணம் பண்ணாதார்கள் அன்றோ இவர்கள் )

(ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு கீதாச்சார்யன் — என்னைப் போலே பரம பாகவதனை -என்றானே-ச பூஜயக-என் அளவிலாவது பூஜிக்கத் தக்கவன் –பக்திர் அஷ்டவித-1-மத் பக்த ஜன வாத்சல்யம்-2-பூஜா யாஞ்ச அநு மோதனம்–பிறர் செய்யும் கைங்கர்யம் உகந்து-3-ஸூயம் அப்யக்தம் சைவ–தானும் கைங்கர்யம் செய்து
4-மத் அர்த்த டம்ப வர்ஜனம்-இதுக்கு கர்வம் அடையாமல் -டம்பம் இல்லாமல்-
5-மத் கதா ஸ்ரவண ப்ரீதி-6-சுர நேத்ர அங்க விக்ரிதா-7-மம அநு ஸ்மரணம் நித்யம்
8-எச்சமாம் நோப ஜீவதி -ப்ரயோஜனாந்தரம் இல்லாமல் அஷ்டவித பக்தி இருந்தால் மிலேச்சராக இருந்தாலும் தொழுமினீர் ப்ராஹ்மண ஸ்ரேஷ்டர்-ஆவோம் -கொடுமின் கொள்மின் நின்னோடும் ஓக்க அருளினீர் இப்படிப்பட்ட பக்தர்களை தனக்கு ஆத்மாவாகக் கொள்கிறான்-)

அதாவது ஆச்சார்ய சாம்ய பிரதிபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று உபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-

——————————————–

இப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

(ஆயி ஸ்வாமிகள்-அகரணே ப்ரத்யவாயம் உண்டே – ஆச்சர்ய சமமாக சொல்வது தன் நினைவால் இல்லை -ஆச்சார்ய வசனம் அடியாக சொல்வதால் விகல்பிக்காது -பகவானைப் போலே பூஜிக்கத் தக்கவன் –இத்யாதி சொன்னதால் –ஆச்சார்ய வசனம் கேட்க்காமல் இருந்தால் பகவத் பாகவத -அஸஹ்யா அபசாரமாகவும் ஆகும்-)

(அபாகவதர்களைக் கண்டு வையாமல் விலகுவது போலே இங்கும் வாழ்த்தாமல் போனால் அபசாரம் ஆகும் -காம்ய விதி செய்யாமல் இருந்தால் பாபம் வராதே – நித்ய விதி நைமித்திக விதி செய்யாமல் விட்டால் பாபம் வருமே-பூர்வ யுக்த ஜென்ம நிரூபணம் அபசாரம் போலே-இங்கே சொல்லாமல் விடுவதும் ஜென்ம நிரூபணம் அடியாக நினையாமல் வாழ்த்தாமல் போவதும் -குருவின் இடத்திலும் பாகவதர்கள் இடத்திலும் கௌரவ புத்தி அபாவமும் அபசாரமும்)

அதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை அபசாரம் ஆனாப் போலே –
இப்படி கௌரவித்து நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி –

——————————————

இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை -226-

இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

(ஆயி ஸ்வாமிகள்-இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –சாத்விகர்கள் பிரமாணம் காட்டி அருளுகிறார் -ஆப்த தமர்கள் அன்றோ –ஜென்மாதி மினுக்கும் அற்ற ததீயரும்-ஒளிக்கு மினி மினி சப்தமே இது த்யாஜ்யம் என்று காட்டும்-ஜென்மாதி –ஞான ஜென்மத்தால் – உத்க்ருஷ்ட பஹுமந்தவ்யர் -இவர்கள் –சமேவ பூஜ்ய -மத் பக்தன் நாய் மாமிசம் உண்பவராகிலும் –பகவத் பக்தர்களாகில்  பாகவதர்கள் சேஷிகள் -ஜென்ம விருத்த விபாகமற  குண ஏக தாரகர்-பரம சேஷியர் பயிலும் சுடர் ஒளி-பரம போக்யர் நெடுமாற்கு அடிமைஸ்மரணாதி ரஸ்யதை கண் சோர வெங்குருதிஅர்ச்சாவதார ப்ரவணர் சேஷிகள் நண்ணாத வாளவுணரிலும் –பக்தி பரவசர்கள் தர்ச நீயர்கள் தேட்டரும் திறல் தேனிலும் -வாழும் சோம்பரை யுகத்தி -ஈஸ்வரன் உகப்பைக் காட்டி அடுத்து –ஜென்மாதி மினுக்கும் இல்லாகடமை பட்ட குக்கர் -ததியர் முடியினில் துளவம் மொய் கழற்கு அன்பு செய்யும் -சிரஸாவாஹ்யர்-அருவினை பயனை அடையார் ஸூ பாவன ப்ரசாதர் போனகம் செய்த சேதம் தருவரேல் புனிதம் அன்றே –ஞான ப்ரதிக்ரஹ யோக்யர் கொடுமின் கொள்மின்
தன் நிந்தையர் கர்ம சண்டாளர் -நுமர்களை பழிப்பராகில்—-  — புலையர் போலும் – துர் லப பல லாபிகள் -வெள்கி நிற்ப —ஆனைக்கு அன்று அருளை ஈந்த – மேலில் பாட்டுக்களில் -ஆறு பாசுரங்களிலும்-சம்சயம் இல்லாமல் விசதமாக நிதி தர்சனவத் -த்வியைக நிஷ்டையர்கள் பக்கலில் ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதம் -யுகத்தி போலும் )

(ஸ்ரீ ராமாயணத்தில் இந்த அர்த்தம் பிரமாணம் நிறைய இடங்களில் இல்லை -பெருமாள் அன்றோ – கண்ணன் தானே தாழ நின்று தூதுவனாய் இத்யாதி காட்டி அருளினான்-)

(மெய்யடியார்கள்-அடியார்-மெய் சிலிர்ப்பவர் – -பாகவத நிரூபணம் மட்டுமேசாதி பற்றி நம்மாழ்வார் மட்டும் -நாலிலும் கீழ் இழிந்த  பேர் ஆறு போல் கண்ண நீர் கொண்டு -தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே —பகவத் பக்தி பாரவஸ்யமே-இவர்களுக்கு நிரூபகம்  த்வயத்தில் த்வி வசனம் –இரண்டு திருவடித் தாமரைகளை -உபாய நிர பேஷம் ஸூசகம் – சரம ஸ்லோகம் விதியை காதில் வாங்கிய பின்பு தானே த்வயம் அனுஷ்டானம் –மாம் -கண்ணன் தொட்டுரைத்த திருமேனி வாசகம் – -ஸ்ரீ மன் நாராயண அர்த்தம் -சரணவ் – –குண பூர்த்தி உள்ள இடமே சரண்யம் -அர்ச்சாவதாரம் -அர்ச்சா திருமேனி வரை –தாய்க்கு பால் பிரவஹிக்கும் ஸ்தனம் போலே திருவடிகள் -உபாயமும் பிராப்யமும் இங்கே – மாம் -அஹம் இரண்டும் காட்ட இரண்டு திருவடிகள்சாதனாந்தரம் விட்டதையும் –பிரயோஜனாந்தரம் விட்டதையும் -ஸூவ போக்யத்வம் விட்டதையும் — காம்பற -என்று காட்டிப்ரபத்யே -வர்த்தமானம்வாழும் சோம்பர்கள் –கால ஷேபம் போக ஹேது – யுகத்தி போலும் -நிரதிசய ப்ரீதி காட்டுவான்-சம்பாவன விஷயம் —மொய் கழல் சரண சப்தார்த்தம் – திரு மறு மார்பா -ஸ்ரீ மத் சப்தார்த்தம் -மேலில் பாட்டுக்களை த்வயார்த்தம் தானே -)

(போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே-பாத்திர சேஷம் இருக்குமே அத்தை – சொல்லுமோ என்னில் — விளம்பிதம் ஆகும் -சாப்பிட்ட இலையில் உள்ளதே –
ஆச்சார்யர் விஷயத்தில் ஒக்கும் – இங்கே பாகவதர்கள் விஷயத்திலே தானே -உச்சிஷ்டம் கூடாதே- கீதை -குருக்கள் முதலாமவர் தவிர -கீதா பாஷ்யம் –
ஆச்சார்யர் -பிதா- ஜ்யேஷ்ட பிராதா -பர்த்தா -பரம பாகவதர்கள் -தேசிகன் – நாராயண ஏக நிஷ்டர்கள் செய்யும் அனைத்தும் உத்தேச்யம் -ஜல்பம் தான் ஜபம் –
சேஷம் பாவனம் -ஸ்ரீ பாத தீர்த்தத்துக்கு நிகர் இல்லை -யுக்தியே மந்த்ரம் -இந்த பிரமாணத்தில் உச்சிஷ்டம்–இலை சேஷம் – –மோர் முன்னால் ஐயன் -உண்டே -ஆத்மா சத் ப்ரஹ்மம் பொது சொற்கள்-நாராயண -சாமான்ய விசேஷ பர்யவசயாம் –நாராயண ஏக நிஷ்டர் பொது– குரு விசேஷம் -பர்யவசான விதி கொள்ளலாமோ என்னில் –வேத அத்யயனம் பண்ணி வைத்த குருவைப் பற்றி சொல்லிய வசனம் –வேத அத்யயனம் பண்ணுபவர்கள் எல்லாம் நாராயண ஏக நிஷ்டராக இருக்க மாட்டார்களே -பரத்வாஜ சம்ஹிதை -பிரமாணம் –திரு மந்த்ரம் அருளிய -குரு உச்சிஷ்டம் பாவனம் வசனம் உண்டே – பாதம் வந்தால் தானே பொது வசனம்- விசேஷ அர்த்தத்தில் பர்யவசாயம் பண்ண வேன்டும் –தூய பெரு நீர் யமுனை –கோபிகளும் கண்ணனும் கொப்பளித்த தூய்மை உண்டே)

இவ் வர்த்தம் என்று -கீழ் விஸ்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –

மகா பாரதத்தில் -மத் பக்தம் ஸூத்திர சாமான்யத் அவமன்யந்தி யே நரா நரகேஷ்வ வதிஷ்டந்தி வர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும்

ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணேஷு தே ஸூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –

மத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-ஸூயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம் மத் கதா ஸ்ரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ஸ்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோப ஜீவதி- பக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித
நமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ஸ்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ  யதாக்யகம்-இத்யாதியாலும் –
பல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்

இதிகாச உத்தமத்தில் -ஸூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ஸ்வபசம் ததா வீஷதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் –பாகவத பிரபாவம் பிரகீர்திதம் –

இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது

ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம்  ஸ்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே  நரா:, பத்மகோடி  சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்

ஸ்ரீ பாகவதத்திலே – “ஸ்வபசோபி  மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி  விகீநஸ்து  யதிச்ச  ஸ்வபதாசம :”.
“விப்ராத்  த்விஷட் குணயுதாத்   அரவிந்த நாப பாதார விந்த  விமுகாஸ் ஸ்வபசம் வரிஷ்டம்–
மந்யே  ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த  ப்ராண: புநாதி ஸகலம்  நது பூரி மாந:” இத்யாதிகளாலே  பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –

லைங்கத்திலும் “வைஷ்ணவானாம்  விசேஷோஸ்த்தி விஷ்ணோ ராயாதனம்  மஹத
ஜங்கம ஸ்ரீ  விமாநாநி ஹிருதயாதி மநீஷிணாம் . ய: பஸயதி ஸூபாசாரம்  வைஸ் ணவம்
வீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குலேஜாதம்  பிரணமேத்  தண்டவத்புவி ” இத்யாதியாலே  – பாகவத வை பவம்  ப்ரதிபாதிதம்-

இப்படி  பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம்  பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-

இதிகாசாதிகளில் உபாதித்த வசனங்களிலே–
1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –
2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –
3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்களுமாய் -பரம சேஷியான ஈஸ்வரனோபாதி பூஜ்யரும் ஆவர்கள் என்னும் இடமும் –
4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –
5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர்  அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –
6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –
7–அவர்களைக் கண்டால்  தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச  புராணங்களிலும் –

நம் ஆழ்வார்
பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –
பகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே தமக்கு சேஷிகள் என்னும் இடத்தை பிரதி பாதித்து அருளும் இடத்தில் –
யவரேலும் அவர் கண்டீர் –
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் –
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று
ஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு மிகவும் உத்தேஸ்யர் என்று அருளிச் செய்த -பயிலும் சுடரொளி யிலும் –

கொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு என்பது என் அந்தோ -என்று தொடங்கி –
பாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –
சயமே அடிமை தலை நின்றார் –
அவன் அடியார் –
மணி மலை போல் கிடந்தான் தமர்கள் –
கோதில் அடியார் –
நீக்கமில் அடியார் –
என்று பகவத் ஸூவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு ) தோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –

திரு மங்கை ஆழ்வார் –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே ) அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் (கீழே பயிலும் சுடரொளி ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் -மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு )எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -ஸூரிகளிலும் கைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –அவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும்  இனியதாக  நின்றது –அவர்களைக் கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –அவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –
அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –
என்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும் ஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் –(நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே)

கடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று
ஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை
அனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மைக் கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –
அவர் எங்கள் குல தெய்வமே -என்று –
உகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று
அருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –
மெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –
இத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை  பிரதிபாதிக்கிற அளவில் –
ஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவஸ்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
த்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் – எத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –
1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் – திரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸா  வாஹ்யர் என்றும் –
2-ஜன்மத்தால் வந்த தண்மையே  அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்
உடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –
3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு
சம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ஸ்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –
4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-ஜன்ம விருத்தாதிகளால்  உயர்ந்தவர்களுக்கு ஸர்வேஸ்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதி க்ரஹங்களுக்கு  அர்ஹர் ஆவார் என்றும் –
5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை -பகவத் பிரபாவத்தால் வந்த வைலஷண்யத்தைப் புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி தாழ நினைத்தார்கள்  ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –
6-இப்படி பிரசாதித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம்  ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை திர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -(கஜேந்திர ஆழ்வான்) -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –
விசத தமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –

—————————————————

இப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –
ந ஸூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா ச விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் ச யதிஸ் சச பண்டித -என்று சொன்ன விப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் -அந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா அருளிச் செய்கிறார் –

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

(ஆயி ஸ்வாமிகள் -தேகத்தோடே இருக்கும் பொழுது அந்த பிறவியிலே சாதி போகுமோ என்ற சங்கைக்கு -வசிஷ்டர் வாக்கால் ப்ரஹ்ம ரிஷி பட்டம் பெற்ற வ்ருத்தாந்தம்
கர்ம விசேஷத்திலே -வர்ணாந்தரம் காண்கையாலே- வர்ணம் அநித்தியம் என்பது சித்தம் -அல்ப சக்தன் வசிஷ்டராலே முடிந்தால் விலக்ஷண -சர்வ சக்தி சம்பந்தம் பண்ணும் என்று சொல்ல வேணுமோ -)

(சரு வால் ஏற்பட்டது இல்லை –தபோ விசேஷத்தால் மாறினார் பிரமாணம் – ரிஜிகர் பிள்ளை ஜமதக்கினி பிள்ளை பார்கவ ராமர் -சத்யவதி இரண்டு சரு கொடுக்க -மாறி போக-ஷத்ரியருக்கு உண்டான –க்ரூர பிள்ளை பிறந்து -தாயார்-ப்ராஹ்மணருக்கு உள்ள தபோ பிள்ளை உள்ளுக்குள்ளே ப்ராஹ்மண தன்மை வெளிப்பட்டது என்று ஆஷேபம் – சரு மாறாட்டம் தன்மைக்கு தான் காரணம் -ஜமதக்கினி -விச்வாமித்ரர் – தபஸுக்கு முன்பே இருந்தது சொல்ல முடியாதே –ஸ்ரீ ராமாயணம் வஸிஷ்டர் வாக்கால் வந்தது -பிராபல்ய பிரமாணம் -சருவுக்கு ப்ராஹ்மண உத்தேச்யம் இல்லை  -சம தமத்துடன் பிள்ளை கேட்டே சரு  ஜாதி பெற்றவர்கள் இடம் வரும் – புத்ரன் நிச்சயம் இல்லை -அவற்றை சரு கொடுக்கும்  அதே போலே சாதுர்யம் வீரம் -மாற்றி கொடுத்ததால் விபரீதம் -ஜாதி பிரயுக்தம் சொல்ல வில்லை –பூர்வம் செய்த வர்ணாஸ்ரம சம்ஸ்காரங்கள் -செல்லுபடியாமல் போகுமே –
அனவதிக சக்திக -ப்ரஹ்ம ஸூத்ரம் -2-1–27–28—ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –2-1-27-ஆத்ம நிச ஏவம் விசித்ராச் சஹி –2-1-28-உபாதானம் -நிர்விகாரம் நிர் அவயவம் சேர்ந்து இருப்பது -ஸ்ருதியில் சொல்லி இருக்கிறபடியால் ஒத்துக் கொள்ள வேண்டும் -மண் குயவன் -சப்த மூலத்வாத் -ப்ரத்யக்ஷத்துடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாதே -ப்ரஹ்மம் அறிந்ததே சப்தம் மூலம் தானே -விசித்திர சக்தி படைத்து இருக்கிற படியால் பொருந்தும் -இங்கே பரசுராமனை சொல்லாமல் விச்வாமித்ரர்–அபசாரம் பட்ட கோபத்தால் தான் ஷத்ரிய தன்மை திரிசங்கு விருத்தாந்தம் சொல்ல வில்லை – இங்கு லஷ்யம் வஸிஷ்டர் வசனத்தால் உயர்ந்ததை காட்ட வேன்டும் -அந்த இரண்டிலும் இப்படி சொல்ல முடியாதேஸூவசனத்தால்- தன்னுடைய வசனத்தாலே இத்தை ஆக்கினார் பட்டர் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் உண்டே -)

அதாவது
ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன்- அந்த ஜன்மத்திலே- தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக – வசிஷ்ட வாக்யத்தாலே- ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷியாய் விட்டான் இறே-
ஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் -அந்த சரீரம் தன்னோடே-
அனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே -அத்யந்த உத்க்ருஷ்ட
குலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –
அல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-

(புஷ்ப தியாக போக மண்டபங்களில் பணி பூவும் ஆல வட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும் வைதிகோதமரும் மகா முனியும் அனுவர்தித்த க்ரமும் )

——————————————–

இதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —
சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார்  மேல் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம் வேதாஸ் ச  -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே சிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில்
பிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று கீழ்ச் சொன்ன அர்த்தத்தை ஸ்த்ரீகரிக்கைகாக ராவண அனுஜனைக் குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ஸ்யனாக நினைத்து
வார்த்தை அருளிச் செய்கிறார் –

(புதல்வரால் பொலிந்தான் உந்தை –புகல் அரும் கானம் தந்ததே இதற்கு தானே -இஷுவாகு வம்சனாக கொண்டாரே பெருமாள் –
ஆயி ஸ்வாமிகள்-பஹுமதி பண்ணினத்துக்கு திருஷ்டாந்தம்-பெருமாள் முதலானோர் -பலர் உண்டு -மேலே ஆறு சூரணை காலிலே விவரணம்
விபீஷணஸ்து தர்மாத்மா -சூர்ப்பணகை வாக்கியம் -ந து ராக்ஷஸ சேஷ்டிதா-பிரதீயதாம் தாசாரதி மைதிலி சொன்னதே காரணமாக குபிதனான ராவணன் -குலத்துக்கு கோடரி காம்பே -அதர்ம செடியில் களை போலே இது -தள்ளுண்டவனை அஸ்மாத் துல்ய பவது –
ஸூக்ரீவன் வாக்கியம் -தங்கள் நால்வரையும் பெருமாள் சொன்னதாக -தம்பி ஆக்கிக் கொண்டாரே பெருமாள் -திரு உள்ளம் பற்றி -திருவாய் மலர்ந்து கைக் கொண்டார்
இத்தால் – ஸூவ ஜனம் கை விட்டவனை பெருமாள் கைக் கொண்டது அறிகிறோம் -)

(தர்மஞ்ஞய சமய பிரமாணம் வேதாஸ் ச -தர்மம் அறிந்தவனின் அனுஷ்டானமும் பிரமாணம் -முதலில் சொல்லி அப்புறம் வேதம் பிரமாணம் -அதுவே பிரதானம் –
கலை இலங்கு மொழியாளார்–திருக் கண்ண புரத்தில் -திண்ணைப் பேச்சும் வேதார்த்தம் அன்றோ -வேத வேத்யனை கையிலே வைத்தவர்கள் –வேதம் இவர்கள் பின் செல்லுமே – த்வதீய கம்பீர மனஸ் அநு சாரி -ஆளவந்தார்-உங்கள் பலாபலம் -கேட்க்காமல் ராக்ஷஸ ஜாதி அபிமத விரஹமும் –ராவண வதம் அநந்தரம் -உனக்கு எப்படியோ எனக்கும் அப்படியே –ஸூ பிராதா என்றாரே –தனக்கு உடன் பிறந்தவராக திரு உள்ளம் –அனுகூல புத்தியால் சஜாதீய வ்யாவ்ருத்தம் வருமே — குலத்துக்கு கோடாலி என்பதாலே வியாவ்ருத்தம்உத்க்ருஷ்டம் பெருமாள் அங்கீ கரித்த பின்பு தானே -ஆக இரண்டு நிலைகள் இத்தால் அறிவோம்-நாயகா நாயினேனை உடன் உதித்தவர் உடன் ஒருவனாக நினைத்தீர் -குடல் துவக்கு உடையார் – கோஷ்ட்டி –விபீஷணன் கூட வந்த நால்வரையும் –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் -கேசவ தமர் ஆழ்வார் -21-சம்பந்திகளும் நம் வரை பாயுமே)

அதாவது –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் குபிதனாய் த்வாந்து திக் குல பாம்ஸ்னம் -என்று இக் குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –
இஷ்வாகு குல நாதனான பெருமாள்  இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-
ஆக்க்யாஹி மம தத்வே நராஷா ஸாநாம் பலாபலம் -என்று ராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும்  என்கையாலே இவனை ராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதி யாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –
இவ் வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே பாகவத அனுகூல்யம் உண்டாகவே -ப்ராக்ருதர் இவன் நமக்கு உடல் அல்லன் என்று கை விடுவார்கள் என்னும் இடமும் – பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும்   என்னும் இடமும் சொல்லப் பட்டது-

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -194-216-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– -ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 21, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

இப்படிப் பட்ட பாகவத அபசாரத்தின் வைவித்யத்தை அருளிச் செய்கிறார் இத்தால்-

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

(ஆயி ஸ்வாமிகள்-அநேக விதம் என்றது –ஜன்ம நிரூபணம் -ஞான நிரூபணம் -விருத்த நிரூபணம்-ஆகார நிரூபணம்- அவயவ நிரூபணம்-பந்து நிரூபணம்- (வாச நிரூபணம்-மா முனிகள் ) இத்யாதிகளால்- பல படிப் பட்டு இருக்கும் )

(சர்வலோக சாஷிகமாக மற்றவை பேதிக்கையால் ஜென்ம நிரூபணம் பிரதானம் — நித்ய முக்தர் விட தாழ்ந்த ஜனகாதிகள் -தேவர் அசுரர் ராக்ஷஸடீ விட மனுஷ்யர் -ப்ராஹ்மணர் விட சூத்திரர் -ஸ்தாவரம் வரையில் இது உண்டே—அவயவ நிரூபணம் -ஆய் ஸ்வாமிகள் சேர்த்து – பாகவத சமாஹம் முக்கியம் -சாண்டில்ய -பெரிய திருவடி -அபசாரம் பிரபலம் -பங்கு வக்கிரம் -ஆகாரம்-போன்றவை – ஆரண்ய சண்டாளர் இடங்கள் ஸ்தாலீ பாக-நியாயம் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் -ஜென்ம நிரூபணம் முதலில் -உலகம் முழுவதும் பேசப்படுவதால் -இன்றும் இதுவே பிரதானம் -ஞானம் விருத்தம் -அனுஷ்டானம் -பாகவதர் சொன்னதும் வரும்-ஆகாரம் குள்ளம் குருடு -கூன் -மாற்ற முடியுமே -பிறந்த ஜென்மம் மாறாதே -நிகர்ஷம் -நித்ய முக்தர் -சனகாதி தேவாதி -அசுரர் ராக்ஷசர் —
மனுஷ்யர் -பிராமணர் -சூத்திரர் -சண்டாளர் -எறும்பு திர்யக்குகள் -ஸ்தாவரங்கள் -இப்படி மேல் இருந்து கீழ் உண்டே சரீரகத ப்ராஹ்மணன் -வேறே தான் -பஞ்ச சம்ஸ்காரம் -அர்த்த பஞ்சகம் -அறிந்த -பஞ்ச உபாய நிஷ்டர் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம்-பஞ்ச சம்ஸ்காரம் அர்த்த பஞ்சகம் -அறிந்தவர் அஞ்ச வேண்டாமே —வர்ணத்தால் பஞ்சமாக இருந்தாலும்- -விஷ்ணு பக்தர்களாக இருந்து -பஞ்ச கால பராயணராக -இருந்தே பாகவதர்களாக வேணும் -மத் பக்த ஜன வாத்சல்யம் –எட்டு வித பக்தி -கதை கேட்டு கண்ணீர் விட்டு – எதையும் எதிர்பார்க்காமல் -முனி ஸ்ரீ மான் யதி பண்டிதன் –மிலேச்சனாக இருந்தாலும்விஷ்ணு பக்தத்வம் என்பது இருந்தும் -வர்ண சதுஷ்ட்யம் தாண்டி பஞ்சமம் -இதுவே விஷ்ணு பக்தன் -திருக் குலத்தார் -என்ற பெயர் –ஞான தானம் கொடுக்கவும் பெற்றுக் கொள்ளவும் யோக்யமாய்-ஐந்து வர்ணத்தவர்களும் விஷ்ணு பக்தர்களாகலாம் -மேலுள்ள வர்ணத்தவர்களுக்கு அஹங்கார ஹேது இருக்குமே – – ஈஸ்வர ஆராதன சமமுமாய் -பகவானுக்கும் ஆராத்யனுமாய் –இருப்பார்களே -ஆழ்வார்களும் அருளிச் செயல்களையும் தாழ்வாக நினைக்க கூடாதே -வர்ணம் கொண்டும் -பாஷை கொண்டும் -நினைத்தால் நரகில் வாழ்வார்கள் – ஏகாந்தி -நைவ கிராமம் குலம் கோத்ரம் -விஷ்ணு வைத்தே அடையாளம் -பெண் பிள்ளை ரஹஸ்யங்கள் உண்டே -பாண்டிய தேசத்தில் சரம நிஷ்டை உறுதி நிறைய உண்டே- திருவடித் தாமரை நெருப்பால் தாழ்ந்த ஜாதி அழுக்கை போக்கி-புடம் போட்டப்பட்டு -ஜ்வாலா பேதம் அறியாமல்–திரி குறைந்து வந்தாலும் -ஒரே ஜ்வாலை என்னுமா போலே -மனுஷ்யோகம் தேவோஹம் -ஷூத்ரோஹம் –ஜென்ம நிரூபணம் சகல லோக வியாபகம் -சாஸ்த்ர கண்ணோட்டம் வேண்டுமே உண்மை அறிய -)

அநேக விதம் என்றது –ஜன்ம நிரூபணம் -ஞான நிரூபணம் -விருத்த நிரூபணம்-
ஆகார நிரூபணம்- (அவயவ நிரூபணம்-ஆயி ஸ்வாமிகள்)-பந்து நிரூபணம்- வாச நிரூபணம் இத்யாதிகளால்- பல படிப் பட்டு இருக்கும்

———————————————————

அவற்றில் வைத்து கொண்டு,ஜன்ம நிரூபணத்தின் உடைய க்ரைர்யத்தை அருளிச் செய்வதாக அத்தை உபாதானம் பண்ணுகிறார் இதில்-

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

(ஆயி ஸ்வாமிகள்-இவை எல்லாம் ஒரு தட்டும் -ஜென்ம நிரூபணம் ஒரு தட்டு -அத்விதீயமாய் -சத்தா நாசகமாய் இருக்கும் -)

(அவதீர்ணம்–ஆழ்வாராதிகளும் அவதாரம் போலே தாழ விட்டு –சம்சாரிகளை தூக்கி விட அவதரிக்கிறார்கள் பிறப்பு எப்படி இருந்தாலும் விஷ்ணு பக்தியே வேண்டுவதே பிரவாஹ ரூபம் தேவர் மனுஷ்யர் -இத்யாதி-பகவத் ஸ்வரூபாதிகள் திரோதானம் –தேக ஆரம்ப கர்ம விசேஷ உபாதிகள்–சாதனாந்தர சாத்யாந்தர நிஷித்த பிரவ்ருத்திகளில் ஈடுபட்டு உள்ளாரை உத்தரிக்க – கீழ் குலம் புக்க வராஹ கோபாலர்களைப் போலே மக்களை உத்தரிக்க ஆழ்வார்கள் -ஜகத் உஜ்ஜீவன ஹேது -என்பதால் அவதீர்ணம் சப்தம் – தத்தாத்தரயர் -ஜமதக்னீ -பங்கிரதர் -வஸூ நந்த ஸூனுயுக கிரமம் வர்ண கிரமம் நான்காவது யுகம் நான்காவது வர்ணம் -ஆழ்வார் -சர்வ உத்க்ருஷ்டம் பகவத் பக்தியால் அழும் தொழும் பத்திமை நூல் வரம்பில்லாமல் –சர்வ பிரகார பூஜ்ய அர்ஹராய் எம்பெருமானுக்கு கூட பூஜா நீயராய்-பக்தன் வீட்டு செடி கொடி கூட மோக்ஷம் போகுமே  தர்சன மாத்ரத்தால் பாபங்கள் மாய்ந்து போகுமே  அத்யந்த பாவன தர்சநாதிகளை யுடையவர்கள்  சம தர்சனம் ஷாந்தி -திருவடித் துகள்களால் பாவனம் ஆகும் -நானும் விரும்புகிறேன் – விமல சரம திருமேனி கூட பாவனம் –பாஞ்ச ராத்ரமும் கோஷிக்குமே தீர்த்தம் பிரசாதித்த பின்பும் -பிருந்தாவன தர்சனமே உத்தரிக்கும் -ஸம்ஸ்கார பஸ்மமும் -உத்தரிக்கும் கங்கை யமுனை விட பாவனம் இவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் –அகல்யா சாப விமோசனம் பெருமாளாலே -நம் போல்வாருக்காக ராம பக்தர்கள் -பராசர ஸ்ம்ருதி சொல்லுமே சபரி தேவி நித்ய ஸ்நானம் தீர்த்தத்தை கங்கைக்கு தெளித்து புனிதம் பெருமாள் கோதண்டத்தால் -சாரங்க கோடி யால் அருளினான் பாத்திமா புராணம் சொல்லும்பாகவதருடைய ஜல்பத்தையும் ஜெபமாக கொள்கிறான் உண்ட மிச்சம் உண்பதே பாவனம் -அப்ரதிம வைபவம் கண்ட கோஷமாக அனைத்தும் சொல்லுமே நிகர்ஷ புத்தியா -யாரேனும் ஒருவர் ஜென்மத்தை காட்டிலும் ஒப்பிட்டு தானே -சொல்லுவோம் -தார தம்யம் -உயர்ந்தது -மிக உயர்ந்தது என்கிற விசாரம் –பகவானை விட தாழ்ந்தது என்றும் கொள்ளக் கூடாதே -இதுவும் அபசாரம் ஆகும்– அவன் திரு உள்ளம் இப்படியே தானே -ப்ராஹ்மண பாகவதர் அஹங்காரம் இருக்கும் என்றும் சொல்லக் கூடாது என்றுமாம் -சங்கை இல்லாமல் ஜென்ம நிரூபணம் பண்ணக் கூடாது என்கை -ஒரு படியாலும் நிகர்ஷத்துக்கு உடலாகாதே -பாகவதர் என்றாலே அவதாரம் போலே என்ற எண்ணம் வேண்டும் -பக்த பாகவதர் என்றே கொள்ள வேண்டும் —நிகர்ஷ புத்தியா நிரூபணம் -சிந்திக்கையே -அபசாரம்-வாத்சல்யயாதி-ஸுலப்யம் முதலியவை ஆதி – குணங்களாலே –கலந்து -என்நின்ற யோனியுமாய் பிறந்து அந்த அந்த ஸ்வ பாவங்களைக் கொண்டு –இரண்டறக் கலந்து -அதே பிறவி அதே ஒழுக்கம் கொண்டு -இருக்க எப்படி தாழ்ந்த பிறவி என்று சொல்ல முடியும் –மீனாகவும் ஆமையாகவும் வராஹமாகவும் -அவதாரம் போலே இந்த பாகவதரும் –எக் குற்றவாளர் -ஏது பிறப்பு ஏது இயல்வு —எக் குலத்தார் — அக் குற்றம் அப் பிறப்பே அவ் வியல்வே -நம்மை ஆள் கொள்ளுமே –ராமானுஜர் திருவடிகளைப் பற்றி பின்பு இவை இருக்காதே -)

ஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை
பகவதீயத்வ பிரயுக்தமான மஹாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை-

————————————

இதன் உடைய க்ரைர்யம் தன்னை அருளி செய்கிறார் இத்தால்-

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

(ஆயி ஸ்வாமிகள்-சீதா பிராட்டி -சிறிய பெரிய அபசாரம் இத்தை விளக்கிக் காட்டி -பிரசித்தம் வைத்து புரிய வைக்க -ஸ்ரீ ராமாயணத்தில்- மூலப் பொருள் ஆராய்வதை விட பாகவத ஜென்ம நிரூபணம் குரூரம் –பூர்ண விஷயமான அர்ச்சாவதாரத்தில் உபாதான சிந்தனை விட இது -குரூரம் –ஸூ வ சத்தா நாசகாரம் இது -)

(அவதாரம் -ஆவிர்பாவ வாசகம் -அர்ச்சாவதாரம் என்பது –உபாதானம் மூலப் பொருள் மாறுபாட்டுக்கு உட்படும் –ஸ்ம்ருதி சிந்தா வாசகம்-ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யத்தை தனக்கு திவ்ய சமஸ்தானம் ஆக்கிக் கொண்டு இருக்கும் வைபவம் –)

(ஸ்வயம் வியக்தம் -8-ஷேத்ரங்கள் -தேவர்- சித்தர்- ரிஷிகள்- மனுஷ்யர் மூலம் பிரதிஷ்டம் உண்டே –பஞ்சவிதம் -அர்ச்சைகள்-பாஞ்ச ராத்ர ஆகமங்கள் ஸ்ம்ருதிகள் அர்ச்சா எழுந்து அருளப் பண்ண உபாதானங்கள் பற்றி ஸ்ரீ ஸூக்திகள் உண்டே -ஸ்வயம் வியக்தத்தில் இவை ஒன்றுமே பேசப்பட வில்லையே அக்ருதகம்-உருவானது இல்லை –இந்த திவ்ய தேசத்தில் வியக்தமானவை -ஏற்கனவே சித்தம் இவை –திருவாய் மொழி வேதங்கள் போலே –இவை அக்ருதகம் -உபாதான ஸ்மரண அர்ஹதையே இல்லையேவியக்தம் என்றாலே மறைந்து இருந்தவை வெளியே தெரியும் படி ஆனவை என்றபடி -செப்பால்- வெள்ளியால் – ஸ்வர்ணத்தால் -ரத்னத்தால்–மேல் மேல் ஆயிரம் மடங்கு உயர்ந்தது -ஸ்ரீ விஷ்ணு தர்மம் போன்றவற்றில் உண்டே -பராசர சம்ஹிதை பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷணம் -திரு மந்த்ரம் சொல்லி -மண்ணால்- தண்ணீரால் –-நமஸ்தே அர்ச்சே –விஸ்வகர்மணா -அசேஷ ஜகத் தவதீ -ரஹிதா த்ரவ்ய தோஷம்சொல் அளவில் உபாதானம் உண்டே -இதில் உபாதான சிந்தனை கிரூரம் என்றால்-ஸ்வயம் வியக்தத்தில் கை முதிக நியாய சித்தம் -சாஷாத் சித்தம் விட கை முதிக நியாயம் பிரபலம் -க்ரூர அதிசயம் சித்திக்கும் அசாதாரணமான திருமேனி- போக ஸ்தானம் என்று சங்கல்பம் ஆகம சாஸ்திரம் சில்ப சாஸ்திரம் பகவத் சரீரம் அல்லாத தொரு வஸ்துவே இல்லையே சர்வ வியாபகம் -அர்ச்சைக்கு ஏற்றம் – நூல் புடவை சொல்லக் கூடாதே-நூலுக்குள்ளும் அவன் உள்ளான் குத்ருஷ்டிகள் கேள்வி  –வஸ்து சத்தைக்காக இவற்றுள் போகத்தை பாகவதர்கள் உடன் அனுபவிக்க அர்ச்சா -போக ஆயதனம்-மற்றவை லீலா காரியம் -அர்ச்சையில் தான் ஹாரம் தீபம் திருவாராதனம் கொள்வதை சங்கல்பித்து உள்ளான்- நெஞ்சினால் நினைப்பவன் எவன் –ஆஸ்ரிதர் தமர் உகந்த உருவம்  –கிருபா வசத்தால் ஏற்றுக் கொண்ட பிராகிருத மூர்த்தி- கர்ம நிபந்தனம் இல்லை- த்வயம் உச்சாரண ரூப கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும் அத்தை அடைய -ஆச்சர்ய அபிமானமே உத்தாரக உபாயம் என்றும் – – அதுக்கு விரோதி பாகவத அபசாரம் என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்வார் -)

பாகவத ஜன்ம நிரூபணத்தை பராமர்சிகிறது –ஆஸ்ரிதர் உகந்த ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை
தனக்கு திருமேனியாகக் கொண்டு ,அதிலே அப்ராக்ருத திவ்ய விக்கிரகத்தில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணி எழுந்து அருளி இருக்கும் வைபவத்தை அறியாதே ,நிகர்ஷ புத்தி பண்ணி ,விக்ரக உபாதான த்ரவ்யம் இன்னது அன்றோ என்று சிந்திக்கை–அதிலும் காட்டிலும் க்ரூரம் ஆகையாவது -அத்தைப் பற்றவும் சர்வேஸ்வரனுக்கு அத்யந்த  நிக்ரஹ ஹேது வாகை

—————————————

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

சூரணை -197–

அத்தை மாத்ரு யோனி பர்ஷை யோடு ஒக்கும் என்று சாஸ்திரம் சொல்லும் —

(அச்சு எழுத்து குறைவாக உள்ளது முதலில் -சமமான பிரதானம் – இதிஹாச புராணம் போலே -அத்தாலே அது முற்பட்டது –இங்கு வைஷ்ணவ உத்பத்தி -எழுத்து குறை -அபசாரம் எதிர்மறை -அதனால் இது முன்னாக -வந்தது )

(ஆயி ஸ்வாமிகள்-அர்ச்சா அவதாரத்தில் உபாதான ஸ்ம்ருத்திக்கு நிதர்சனமாம் இத்தனை
வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் அதிலும் குரூரம்)

(யதா ஸ்ருதம் –மேல் எழுந்தவாறு -சமமாகஉள்ளே புகுந்து பார்த்தால் வைஷ்ண உத்பத்தி சிந்தனம் அதி குரூரம் –சாதக பாதக யுக்தி விசேஷம் பண்ணி–கர்மாதீன பிராகிருத சம்பந்தம் இந்த மாதா –நிருபாதிகம் ஸ்வரூப பிராப்தம் சர்வவித பந்துவாக -உள்ள பகவத் பாகவத விஷயத்தில் -அது தானே குரூரம் – பகவத -பாகவத -ஆச்சார்ய -தத் பக்த விஷய குரூரம் மேலே மேலே க்ரூரம் ஆகும் -வ்யாக்ர பசு ப்ராஹ்மணர் ஹத்தி தார தம்யம் போலே  மாத்ரு யோனி -அர்ச்சாவதார உபாதானம் -வைஷ்ணவ உத்பத்தி -இவையும் மேலே மேலே க்ரூரங்கள்)

அர்ச்சாவதார உபாதான-( சிந்தனம் ) வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் -மாத்ரு யோனி பர்ஷாயஸ் துல்யம் ஆஹூர் மனீஷின–என்ன நின்றார் இறே –
இப்படி உபயத்தையும் மாத்ரு யோனி பரிஷா சமமாக சாஸ்திரம் சொல்லிற்றே ஆகிலும் அது அர்ச்சா அவதாரத்தில் உபாதான ஸ்ம்ருத்திக்கு நிதர்சனமாம் இத்தனை
வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் அதிலும் குரூரம் என்று இவர் கருத்து
அந்நிய ஸ்திரீ யோனி வைலஷண்யா வைலக்ஷண்ய நிரூபண வாசனையாலே இத்தையும் அப்படி நிரூபிக்கை
இப்படி நிரூபித்தால்,அதுக்கு எத்தனை பாபம் உண்டு –அர்ச்சா அவதார உபாதான சிந்தையிலும் அத்தனை பாபம் உண்டு என்ற படி.

———————————————–

இவ்வபசாரத்துக்குப் பலம் தக்த படம் போலே நஷ்ட கல்பனாய் இருந்து தேக அவஸானத்திலே வுருமாய்ந்து போம் அளவே அல்ல – இவ்வபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் -திரிசங்குவைப் போலே-என்று தொடங்கி –

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட
யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

(ஆயி ஸ்வாமிகள்-உத்தம வர்ணத்தவனை நீச வர்ணத்தவன் ஆக்குமே பாகவத அபசாரம் -இதுக்கு த்ருஷ்டாந்தம் ச சரீர ஸ்வர்க்கம் பெற விபரீத ஆசை கொண்ட திரிசங்கு -இஷுவாகு வம்ச அரசன் -முற்பட வசிஷ்டரையும் சிஷ்யர்களை அபேக்ஷிக்க -எங்களால் முடியாது -விசுவாமித்திரர் பக்கல் போ என்ன – அவரும் பண்ணிக் கொடுக்க -வசிஷ்டர் கோபத்தால் சபிக்க -ஒழுக்கக் கேட்டால் கர்ம சண்டாளன் -வாராகப் போனதே சண்டாள வேஷம் -திரிசங்கு ராஜா ஆனான் –அதே போலே பாகவத அபசாரம் பண்ணினால் உத்தம லக்ஷணமும் நீச லக்ஷணம் ஆகுமே -ஞான கண்களுக்குப் புலப்படும் -ஞானிகள் இவனைத் தள்ளி வைப்பார்கள் -என்றவாறு -)

(குல குரு தானே ஸ்ரேஷ்டர்-குலம் குலமாக ஆச்சார்யர் வம்சம் ஸ்ரேஷ்டம் அன்றோ- ஜாதி ஷத்ரியன் -கர்ம சண்டாளன் ஆனான் –பரம்பரை ஆச்சார்யன் –கிருபா மாத்ர பிரசன்ன ஆச்சார்யர் —இவன் குடும்ப முன்னோரையும் அறிவாரே-ப்ரத்ய அக்ரரர்-அப்போது கிடைத்த -ஆச்சார்யர் -அனுவர்த்த பிரசன்னாச்சார்யார் இவர் –-35-ராஜா பெருமாள் -வசிஷ்டர் குலம் குலமாக ஆச்சார்யர் இஷுவாகு வம்சத்துக்கு – அவர் அனுமதி இல்லாமல் வேறே ஆச்சார்யர் இடம் போனதே அபசாரம் –

பாஞ்சராத்ரம் – 9 அத்தியாயத்தில் —பிராட்டியும் பெருமாளும் ஐந்து ரிஷிகளுக்கு உபதேசம்
குல க்ரமத்தில் ஆகாத -வந்தார் -ஏஷ நாராயணா போலே –காருண்யன் பரதந்த்ர வேஷத்துடன் ஏறிட்டுக் கொண்டு வந்தவர்
ஏழாட் காலும் பழிப்பிலோம் -பரார்த்தமாகவே கர்மங்கள் இவரது –அவிச்சின்ன பரம்பரை -தத்வ போதனம் பண்ணவே வந்தார் – பூர்வ தேசிக அபாவத்தால் –
இன்று கண்ணில் கிடைத்தவரை அனுவர்த்தித்து -பஞ்ச சம்ஸ்காரம் தீக்ஷை அருளி -ஸமித் சிஷ்ருஷை பண்ணி அனுசரித்து -வைஷ்ணவன் ஆகி – குல ஆச்சார்யர் பூஜை நூறு யாகங்களின் பலன் -நிர்ஹேதுகமாக மதீயம் என்று அபிமானித்து-அஞ்ஞான தசையிலும் பூர்வர் திருவடிகள் என்று வம்சத்துக்கும் உஜ்ஜீவனம் இவரால் —இந்த லாபம் ப்ரத் அக்ர ஆச்சார்யர் மூலம் கிடைக்காதே – இந்த சமஸ்தானம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஏற்படுத்தி அருளினார் அனுவர்த்தி ப்ரசன்னாச்சார்யாரோ ஆஸ்ரயிக்கும் இவன் ஒருவனை மட்டுமே உஜ்ஜீவிக்கிறார் – ஸூவ ஆச்சார்ய அபிமானத்தால் ஐஹிகத்தில் யோக க்ஷேமமும் –
பகவத் மூலமாகவும் ஆமுஷ்மிகத்தில் ச குடும்பத்துக்கும் தானாகவே பிராப்தி உஜ்ஜீவனம் அருளுகிறார் -ஆத்ம லாபம் இவர் கையிலே தானே –
ஒரு ப்ரஹ்ம வித்தால் –ஏழு ஏழு தலைமுறைகளுக்கும் கேசவன் தமர் மா சதிர் பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றதே என்றபடி 
தலை கீழாக இருக்கவே நரக துல்யமே  ஆச்சார்யர் வாக்கியம் மீறி – விஸ்வாமித்திரர் கொடுத்த  ஸ்வர்க்கமே நரகமாயிற்றே -நரகம் ஸ்வர்க்கம் -ஆனதே -கத்திரபந்து அன்றோ பராங்கதி பெற்றான் -நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி அன்றோ 

மானஸ அபசாரம் -மற்ற ஒருவரை சமமாக  காயிக அபசாரம் -விசுவாமித்திரர் இடம் சென்றது அபசாரத்தினாலே சண்டாளனாவான் –
சண்டாளனாவாய் என்று சபித்தது வசிஷ்டர் புத்ரர்களுடைய கோபமே ஹேது
ஆச்சார்யர் அபசாரம் பட்டானே என்ற கோபத்தால்  விஷயம் இவர் கை மீறி பகவான் இடம் போகுமே ஆச்சார அபச்சாரம் பண்ணினால் –
ஜாதி சண்டாளன் இல்லை -அபசாரத்தாலே – கர்ம சண்டாளனாக இருந்தவனை வேஷத்தாலும் சண்டாளனாக சாபம் பண்ணிற்றே -பூர்ண சண்டாளன் ஆனான்
தேசாந்தரத்திலோ காலாந்தரத்திலோ தேகாந்தரத்திலோ இல்லையே –அபசாரம் பண்ணின போதே – யோக சாமர்த்தியம் இல்லா பாகவதர் இடம்-அபசாரம் பட்டால் அந்த க்ஷணமே சித்திக்கும் கர்ம சண்டாளத்வம் 
யஜ்ஜோ பவித்ரம் பரமம் பவித்ரம் —தானே -மற்றும் அவன் உடன் சம்பந்தித்த தண்டம் குண்டலம் எல்லாம் சண்டாளனுக்குத் தக்க படி ஆகுமே –
திரிசங்கு விஷயத்தில் பிரத்யக்ஷம் -மற்றவர் விஷயத்தில் சாஸ்த்ர சித்தம் –-வேஷ சண்டாளம் லௌகீகம் – கர்ம சண்டாளத்வம் அலௌகீகம் –
சாபம் -கொடுக்காத ஷமா நிதிகள் இருப்பதால்-பாகவதர்கள் விஷயத்தில் அபராதம் செய்து கொண்டு இருந்தாலும் -கர்ம சண்டாளன் மட்டும் இங்கே  பகவான் திரு உள்ளம் சங்கல்பத்தால் கர்ம சண்டாளத்வம் அலௌகீகம்-வசிஷ்டர் புத்ராதிகள் லோகத்தில் இருப்பதால் சாபம் மூலம் வந்த சண்டாளத்வம் -லௌகீகம்
ஞான கண் மூன்று விதம்திவ்யம் ததாமி தே சஷூஸ் போலே -பகவத் பிரசாதத்தால் தெய்வ கண் –ஆர்ஷ சஷூஸ்ரிஷிகள் யஜ்ஜம் தானம் தபஸ் மூலம் பெற்ற சாதானாந்தர உபாசன ஞான த்ருஷ்ட்டி –ஆகாம்யகம்சாஸ்த்ர ஜன்ய ஞானம் மூன்றாவது -சஞ்சயன் கண்டான் -பத்தாஞ்சனம் -பூசிய -சாஸ்த்ர கண்ணால் ஜனார்த்தனை பார்க்கிறேன் -என்றானே  பாகவத அபசாரம் –ஞான த்ருஷ்டியால் தானே அலௌகிக சண்டாளத்வம் பார்க்க முடியும்

ஆச்சார்யர் தேசாந்தரம் சென்று இருந்தால் அவர் குமாரர்களோ சகோதரர்களோ- இவர்களிடம் க்ரந்த கால க்ஷேபங்கள் பண்ணக் கடவன் -புத்ராதிகளும் இல்லை என்றால் தத் துல்ய வேறு ஒருவரைப் பற்றலாம் – இவரைப் போல் கிருபாமாத்ராச்சார்யாராக இருக்க வேண்டும் -கிளைகள் பிரிந்து இருப்பதால் மூல ஆச்சார்யர் கிளைகளில் ஒருவரைப் பற்றலாம் -வரவர முனி ப்ருத்யர் -தாஸர் -இருந்தாலும் இவர்களும் உடையவருடைய 74 ஸிம்ஹாசனாபதிகளுள் ஒரு வம்சத்தில் வந்தவராகவே இருப்பர் -ஆலமர நிழல் போல் இருக்கவே இப்படி குரு பரம்பரை-தேசாந்தரம் சென்றவர் திரும்பி வந்த பின்பு அவர் இடமே சேவிக்கக் கடவன் –குலக்ரம ஆச்சார்யர் மஹிமையைச் சொன்னவாறு –

அநாசாரான் துராசாரான் அஞ்ஞானம் –மூன்றும் இருந்தாலே —ஹீன ஜன்ம க்ருத்ய அகரணம் அ நாசாரம்  அக்ருத்ய கரணம் -துராசாரன் -அஞ்ஞானம் ஒன்றுமே அறியாமல் அவற்றுக்கு மூல காரணம் –புரா -திருவடிகளை ஆஸ்ரயிப்பதற்கு முன் தான் இவை இருக்கும் – பக்தர்களுக்கு இவை இல்லையே  -குளிர்ந்த நெருப்பைக் கொண்டு வர முடியாதே- ஆகையால் புரா தருவித்து அர்த்தம்அபி எவ்வளவு தாழ்ந்தவனும் மாறலாம் -என்றவாறு –மத் பக்தன் -முன்னால் சொல்லும் குற்றங்கள் க்ஷணம் பொழுதில் அழிக்கும் பின்னால் எப்படிப் பட்டவனும் இவன் மேல் அபசாரம் பட முடியாமல் அவனை எரிக்கும் பலம் உண்டே –அபசாரம் பட்டால் சடக்கென சண்டாளத்வம் -ஸ்ரீ ராமாயணத்தில் விஸ்வாமித்திரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டாரே -பெருமாள் இளைய பெருமாள் இடம் )

அதாவது -இஷ்வாகு வம்சனாய் இருக்கிற திரிசங்குவாகிற ராஜா தன் குல குருவாய் இருக்கிற வசிஷ்ட மகரிஷியை –ச சரீர ஸ்வர்க்க அவாப்த அர்த்தமாக என்னை யஜிப்பிக்க வேணும் -என்று அபேக்ஷிக்க –
மஹரிஷி நமக்கு அசக்யம் -என்ன –
அங்கு நின்றும் தத் புத்திரர்கள் தபஸ்ஸூ பண்ணுகிற இடத்திலே சென்று இச் செய்தியைச் சொல்லி அவர்களை மிகவும் அநு வர்த்தித்து –
நீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் -என்று நிர்பந்திக்க
நீ துர் புத்தியாய் இருந்தாய் -மஹரிஷி போகாது என்றத்தை எங்களால் செய்யப் போமோ என்ன
தேஷாம் தத் வசனம் ஸ்ருத்வா க்ரோத பர்யாகுலா ஷரம் ச ராஜா புநேரேவைதா நிதம் வசந அப்ரவீத் ப்ரத்யாக்கயாதோ பகவதா குரு புத்ரைஸ் தத்தைவ ச அந்யாம் கதம் கமிஷ்யாமி ஸ்வஸ்தி வோஸ்து தபோதநா -என்று அவன் க்ருத்தனாய்
குருவானவரும் -தத் புத்ரர்களான நீங்களும் மாட்டோம் என்றிகோள் ஆகில் நான் மற்றொர் இடத்தில் போகிறேன் நீங்கள் ஸூகமாய் இருங்கோள் -என்ன
ருஷி புத்ராஸ்து தஸ் ஸ்ருத்வா வாக்கியம் கோராபி சம்ஹிதம் சோபு பரம சங்க்ருதாச் சண்டாளத்வம் கமிஷ்யசி -என்று ஸ்வாச்சார்யனையும் தத் புத்ரர்களான தங்களையும் இவன் அவமதி பண்ணிச் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவர்கள் மிகவும் க்ருத்தராய்
நீ சண்டாளனாகக் கடவாய் -என்று சபிக்க
அத ராத்ரியாம் வ்யதீதாயாம் ராஜா சண்டாள தாங்கத நீல வஸ்திர தரோ நீல புருஷோ த்வஸ்த மூர்த்தஜ சித்ர மால் யாங்க ராகாச்ச ஆயாசா பரனோ பவேத் -என்கிறபடியே
அநந்தரம் அவன் கர்ம சண்டாளனாய் விட்டான் இறே
அப்படியே பாகவத அபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் – ப்ரஹ்ம வர்ச்சஸ்வத்துக்கு உறுப்பாக மார்பிலிட்ட யஜ்ஜோபவீதம் தான் சண்டாள வேஷத்துக்கு அடைத்த வாராய் விடும் என்கை –
அங்கு சாப சித்தமாகையாலே ப்ரத்யக்ஷமாய்த்து -இங்கு சாஸ்த்ர சித்தமாகையாலே ஞான த்ருஷ்ட்டி விஷயமாக இருக்கும்
அநாசாராந் துராசாராந் அஞ்ஞாத்ருந் ஹீந ஜன்மன -மத் பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் சத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் -(ப்ரஹ்மாண்ட புராணம் )என்னக் கடவது இறே

—————————————–

சண்டாளனோபாதி யாகிலும் இவனும் ஒரு காலத்திலே ஈடேறும் என்று நினைக்கைக்கு அவகாசம் இல்லாதபடி – ஜாதி சண்டாளனில் கர்ம சண்டாளனுக்கு உள்ள தண்மையை அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –
அதுவும் இல்லை இவனுக்கு –

(ஆயி ஸ்வாமிகள்-கர்ம சண்டாளனுக்கு இதுவும் இல்லையே -மீளாத கதி -ஜன்மாந்தரத்திலே -ஜாதி சண்டாளன் -பாகவத சமாகத்திலோ ஆச்சார்ய கடாக்ஷத்தாலோ பகவத் ஸூஹ்ருத்வத்தாலோ மாறலாம் – சர்வ சக்தன் அன்றோ -அவன் மஹாத்ம்யத்தாலே ஈடேறலாம் –ஸத்ய சங்கல்பம் -தன் சம்பந்தம் அற்றதாக திரு உள்ளத்தில் கொள்வான் இந்த கர்ம சண்டாளனை)

அதாவது ஜாத்ய சண்டாளனுக்கு தஜ் ஜென்மத்தில் யாதல் ஜன்மாந்தரத்திலே யாதல் பகவத் கடாக்ஷம் உள்ளதொரு கால விசேஷத்திலே நாம ரூபங்களை யுடையவனாய் பகவத் சம்பந்த நிருபிதனாகைக்கு யோக்யதை யுண்டு
அந்த யோக்யதையும் இல்லை -பாகவத அபசார ரூப கர்மத்தால் சண்டாளனான இப் பாபிஷ்டனுக்கு

———————————-

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆகிற உயர்ந்த நிலத்திலே ஏறி -பாகவத அபசாரம் பெரும் காற்று தள்ள -சம்சார ஆர்ணவத்தில் அழுந்தி ஈடேற விரகே இல்லை-)

(நெல் நுனி அபசாரம் செய்தாலும் கல்ப கோடி ஜென்மம் ஆனாலும் மீளான்-ஷமா நிதி- தயாளு- வத்சலன்- ஸ்ரீ சகன்- ஸ்திர- வீரன் -இருந்தாலும் பிராணன் போன்ற பக்தர் -அபசாரத்தால் கலங்கி ந ஷமாமி-அதீத நிக்ரஹம் ஹேது ஆகுமே )

அதுக்கடி பாகவதத்வமாகிற உயர்ந்த நிலத்திலே ஏறி -பத்ம கோடி சதே நாபி ந ஷாமாமி என்னும்படி அதி குரூரமான பகவத் நிக்ரஹத்துக்கு ஹேதுவான பாகவத அபசாரத்தாலே பாற வடியுண்டு அதி பதித்தவனாகையாலே –

—————————————

இது தான் ஜென்மாதிகளாலும் ஞானாதிகளாலும் அபக்ருஷ்டரானவர்கள் உத்க்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலேயே அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலே ஒக்குமோ என்ன அருளிச் செய்கிறார்

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

( ஆயி ஸ்வாமிகள்-அபசாரப் படுபவனுக்கு அதிகாரி நியமம் இல்லை -உயர்வு தாழ்வு இல்லை –மேலே மூன்று சூரனைகளிலே அபசாரம் யார் இடம் என்கிற அதிகாரி நியமம் இல்லை -என்பார்-அதிபதிப்பிக்கும் -தாழ விழ வைக்கும் பாகவத அபசாரம் -பெரியவன் பட்டால் ஆரூட பதிதன் பார்த்தோம் – சிறியவன் பட்டாலும் அவ்வளவு உண்டே -)

(ஜென்மாதி -ஆதி ஆகாரம் பந்து வாஸம் இத்யாதிகள் – ஞான ஆதி -சப்தம் சம தமாதிகளை சொன்னபடி –அபக்ருஷ்டர் இவைகள் எல்லாவற்றாலும் -அன்றிக்கே ஏதாவது ஒன்றாலும் இருந்தாலும் பட்டது பட்டதே —நாலு வகைப்பட்ட பாகவதர்கள் இடமும் அபசாரம் ஸ்வரூப நாசா ஹேது-பாஹ்ய குத்ருஷ்டிகர்கள் இருவரையும் -கானல் நீர் தேடிப் போன மான் நிஜ நீர் குடுக்கும் மான் புலியால் கொல்லப்பட்டால் இரண்டும் சமம் என்பது போலே– பாகவத சம்பந்தம் பேர் சம்பத்து அபசாரம் பேர் ஆபத்து -)

அதாவது பாகவத அபசாரத்துக்கு அப்படி இருபதொரு அதிகாரி நியமம் இல்லை என்கை –

——————————————————–

இது தனக்கு பிரமாணம் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே

(ஆயி ஸ்வாமிகள்-மேம்பொருளில் மேலில் பாட்டுக்கள் ஆறு —சதுப்பேதிமாரில் -சதிர்வேதம் அறிந்தவர்களின் -இழி குலத்தவர்களாகிலும் எம் அடியார்கள் ஆகில் -தொழுமினீர் -பெருமாள் ஸ்ரீ ஸூக்தி-இப்படி உபசாரம் பண்ண வேண்டும் என்று அருளிச் செய்த பின்பு அடுத்த பாசுரத்தில் -ஆறு அங்கங்களையும் நன்றாக அமர ஓதிபக்தர்களில் தலைவர் -சாதியால் அந்தணர்களாக இருந்தாலும் நுமர்களை பழித்தால் -நொடிப்பதோர் அளவில் -அந்த க்ஷணமே சண்டாளன் ஆவான் -புலையைர் போலும் —சதுர் வேத ஆறு அங்கம் எட்டு உப அங்கம் -படித்த உத்க்ருஷ்டர் –ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில் -பேர்த்து அடி இடுவதற்கு முன் -புலையர் ஆவார் -முகம் பார்க்க யோக்யதை அற்றவர்கள் –சண்டாளரை போலியாகச் சொல்வதற்கு ஒக்கும்-அவர்களிலும் நீசர்தத்வ யாதாம்ய தர்சிகளான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்கையாலே –)

(பாடி -நிற்க்கப்பாடி வேதத்தின் உட்ப்பொருள் -தத்வ யாதாம்ய தர்சி -பாகவத சேஷத்வம் பாகவத பாரதந்தர்யம் -ச அங்கமாக வேதங்கள் – பாதி உடன் கூடிய ஐந்து மாதம் அத்யயனம் -ஆவணி பவ்ர்ணமி முதல் நான்கும் பாதி மாசமும் -மீதி உள்ள நாள்களில் சுக்ல பக்ஷம் திருவாய் கிருஷ்ண பக்ஷம் இதிஹாச புராணம் அங்கங்கள் –விப்ரான் மாஸான் அர்த்த பஞ்சமான் –ஞான உத்கர்ஷம் சொல்கிறது -அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி –சாதி அந்தணர்களேலும் -மா முனிகள் பாசுரம் தழுவியே வியாக்யானம் 
ததீயர்களில் ஸ்ரேஷ்டர் ஆவது இப்படி வேதங்களையும் அங்கங்களையும் அத்யயனம்  சகல வேதம் திராவிட வேதங்களையும் சேர்த்து –உம்மை தொகை அப்ரதானம் என்பதால் இல்லை  ப்ராஹ்மண்யம் வைஷ்ணத்வம் சித்திக்க திராவிட வேதம் அத்யயனம் வேணும் –செய்ய மறை தன்னுடனே சேர்ந்து கீழே மா முனிகள் ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி என்று அருளிச் செய்த அநந்தரம் –மார்க்கண்டேய புராணம் -பராங்குசர் -திராவிட சம்ஹிதம் நித்யம் -கலி யுகம் தோறும் ஞான யோகிகள் பிரசாதிப்பார்கள் -வேத வியாசர் பிரித்து அருளுவது போலே -நித்ய ஸூரிகள் அம்சம் -சனத் குமாரர் விஷ்வக் சேனர் சம்வாதத்தில் உண்டே இதில் நம் பிள்ளை போல்வார் பொழுது போக்கு அருளிச் செயலில் ருசி வளர –
சமஸ்க்ருத வேதம் உண்மையை அறிய மட்டும் -ஆதித்ய புராணமும் சொல்லும் –திராவிட ஆம்நாயம் அறியாதவர் -துர் மதி -மூன்று தலைமுறை சொல்லா விட்டால் ப்ராஹ்மணத்வம் நழுவும் –பிரணவம் போலே இவையும் -அநிருத்தர சம்ஹிதையும் சொல்லும் —
ப்ராஹ்மணாதிகளுக்கு ஏற்றமாகச் சொன்னது இது கொண்டு பகவானை ஆராதிப்பது -செம்புகன் தன்னை -வர்ணாஸ்ரமத்துக்கு தக்கபடி செய்ய வில்லையே 
தலை கீழே நின்று தபஸ் இருந்தான் அவனைக் கொன்று செற்ற பிள்ளையை மீட்டார் பெருமாள்  புருஷ ஸூக்தாதிகளாலே ஆராதித்தால் அதுக்கு இட்ட ஜென்மம் இல்லா விட்டாலும்  பண்ண வேண்டியவன் பண்ணாமல் இருந்தாலும் குற்றமே 
அஷ்ட வித பக்தி ஏதேனும் ஒன்றாவது இருந்தாலும் மிலேச்சனாக இருந்தாலும் பக்தியே நெருப்பாகி குற்றங்களை எரித்து அழிக்கும் நான்கு வர்ணங்களிலும் ஆஸ்ரயங்களிலும் இல்லாமல் -இருந்தாலும் -நரஹரி திருமேனி தாச தாச சம்பந்தம் –அல்லி மாதர் புல்க நின்ற சிங்க வேழ் குன்றத்தான் இடம் கைங்கர்யமே நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீவைஷ்ணவர்களை -பாகவதர்களை என்று சொல்லாமல் -கிரம குலம் சொல்லாமல் சர்வம் வாசுதேவ ஏக குடும்பம் என்று —விப்ரர்க்கு –பரசார பராங்குச யதிவராதிகள் கோத்ராதிகள் -சரண கூடஸ்தர் -இவர்களே –நதிகள் -பதி சமுத்திர ராஜன் இடம் சேர்வது போலே நாம ரூபங்கள் இல்லாமல் இருக்குமே –விஷ்ணு சம்பந்தம் இட்டே வைஷ்ணவர்கள்  பகவத் சம்பந்தத்தால் நிவர்த்தமான ஜென்மாதிகளை ஆரோபித்து அபசாரம் —கர்மாந்தரங்கள் தேசாந்தரத்தில் தேகாந்தரங்களில் காலாந்தரங்களில் பலம் கொடுப்பது போலே இல்லாமல் அப்பொழுதே – அவ்விடம் தன்னிலே -நிரபேஷ சாதனம்-கர்மங்களால் பலன் கொடுக்க முடியாதே -பகவானை எதிர்பார்த்து இருக்க வேண்டுமே -இங்கு அப்படி இல்லையே -)

அதாவது –ச அங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் இருந்தார்களே யாகிலும் தேவரீர் திருவடிகளில் சம்பந்த ஏக நிரூபகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில்
காலாந்தரே தேசாந்தரே அன்றிக்கே -அப்போதே அவ்விடம் -தன்னிலே அவர்கள் தாங்கள் சண்டாளரும் –இவர்களுக்கு ஒரு போலி மாத்திரம் என்னும் படி அவர்களில் காட்டில் அத்யந்த நீசராவார் என்று தத்வ யாதாம்ய தர்சிகளான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்கையாலே என்கை –

————————————————–

இவ் வார்த்தை விஷயமாக இரண்டு ஐதிக்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் –

சூர்ணிகை -203-

இவ்விடத்தில் வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது

(ஆயி ஸ்வாமிகள்-இதிஹாச த்வயத்தையும் ஸ்மரிப்பது – காலவன் ச ப்ரஹ்மச்சாரி பெரிய திருவடி -விந்திய பர்வதத்தில் நடந்த விருத்தாந்தம் –விம்மல் பொருமலாய் -மன்னிக்க பிரார்த்திக்க-அபராத ஷாமணம் பண்ண -திருக் கைகளால் ஸ்பர்சிக்க -ஸ்வஸ்த மானார் -பிள்ளைப்பிள்ளை ஆழ்வானைக் காணாமல் கூரத்தாழ்வான் ஆண்டாளிடம் கேட்க -குருவியின் கழுத்தில் பனங்காயை வைத்தால் போலே ஏதேனும் அருளிச் செய்தது உண்டோ என்ன ஆண்டாள் ஆழ்வான் இடம் கேட்க –ஆம் என்று திரு மாளிகை எழுந்து அருளினார் -அபசார ஹேது சரீரம் விடாமல் படுத்துகிறதே -முன்பு ஸந்தோஷம் –இவ்வளவு அனுதாபம் பிறந்ததே –வாசகம் தவிர்ந்து இரும் -நுணலும் தன் வாயால் கெடும் மௌனியாய் பெறும்படி பணித்தது நித்ய ஸூரிகள் முமுஷு இருவருக்கும் பாகவத அபசாரம் இல்லாமல் வர்த்திக்க வேண்டும் என்று இவ்விரண்டும் காட்டுமே -)

(ஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாத நாதிகளை பண்ண – லிங்க புராணம் சொல்லுமே-வைஷ்ணவனை கண்ட உடன் தண்டவத் பிராணாமம்- வைகுண்ட பரே லோக ஸ்லோகமும் லிங்க புராணத்தில் உண்டே –சங்கு சக்கர லாஞ்சனையிருந்தால் உடனே வணங்க தக்கவன் -ஸ்திரீயாக இருந்தாலும் வணங்கா விடில் சாஸ்திரம் கற்ற பலனே இல்லை -தாஸ்ய நாம கீர்த்தனா பூர்வகமாக வணங்குவதே அபிவாதனம் வைகுண்ட பிரிய தர்சனம் –வைகுண்ட நாதனுக்கு பிரியமான பாகவதர்கள் -அன்றோ -பாகவதை விஷயத்தில் -அபசாரம் –அவளை தாழ நினைத்ததும் -அவள் இருந்த இடத்தை தாழ நினைத்ததுவும் அபசார கோஷ்ட்டி -வேதாந்த உபப்ரும்ஹணம் இதிகாசம் –  வேத உபப்ரும்ஹணம் ஸ்ம்ருதி தானே –விஷ்ணு தாசர் -வேறே துறையில் நீராடி -விஷ்ணு கிங்கரர் இந்திரிய கிங்கரர் -தாச விருத்திகள்-இப்படி விலக்ஷணமாக இருந்தும்
-லோக விலக்ஷணம் இல்லாமல் என்று நினைத்தது – -குணங்களை -அனுபவிக்க வகுத்த இடம் –லீலா விபூதிக்கு விலக்ஷணம் திவ்ய தேசம் -பாலை வனத்தில் சோலை வனம் —த்ருதீய விபூதி என்னலாம் படி –பூ வைகுண்டம்குண அனுபவம் பகவானது பாகவத கைங்கர்யங்கள் செய்யலாமே இங்கு –இப்படி மனத்தில் ஆலோசனம் பண்ணினார் –வராஹ புராணம் சொல்லும் -மூன்று யோஜனை தூரம் சங்கு சக்கரம் லாஞ்சனை உள்ளவர் இடம் எனது க்ஷேத்ரம் -நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே-பிராப்ப்ய பூமி -வைகுந்தம் -நம்புவார் வாழும் பதியே வைகுந்தம் -இரண்டும் உண்டே – இவள் சம்பந்தத்தால் ஏற்றம் -சிறகுகளும் உம்மை தொகை – முதலிலேயே பகவானது அத்யந்த அபிமதம் போகுமேகர்ம சண்டாளத்வம் முதலில் -வேஷ சண்டாளம் அப்புறம் –சத்தா நாசம் முதலிலே உண்டாகும் – முடவன் போலே நிஸ் சேஷ்டித்தர் பாத சாரியை போகவும் செல்ல முடியாதே –சண்டாளர் தானே ஆக வேண்டும் -ஸ்ரோத்ரியா நிந்தைக்கு – ஆணவத்தால் அபசாரம் பட்டார் -வீசும் சிறகால் பரப்பாரே-அத்தை அழிக்க வேன்டும் –-ஸ்ரோத்ரிய அபிமானத்தால் நிந்தித்தால் அது போகும்  விருத்த அபிமானத்தால் அபிமானத்தால் ஆச்சாரம் இல்லா இடத்தில் பிறப்பான் -யாவர் யாவர் எவை எவை காரணத்தால் நிந்தித்தாலும் அந்த அபிமானத்தை -அழிக்க நேர் எதிராக பலம்  இவள் இங்கே இருப்பது இட்ட கால் இட்ட கைகளாக இருப்பதை சக்தியாக நினைத்து பக்ஷி ராஜனான நான் இவளை இடுக்கிச் செல்லலாம் என்று நினைத்து  சர்வேஸ்வரனுக்கு வாஹனம் என்ற நினைப்பால்- சர்வேஸ்வரனை எழுந்து அருளி போவது போலே என்னாமல் காலவனை இடுக்கிப் போவது போலே இவளை இடுக்கிச் செல்ல நினைந்த எண்ணத்தாலும் அபசாரம் –தான் கூட சஞ்சரிக்க முடியாமல் பாத சலனமும் பண்ண முடியாமல் நிர் விகாரமாய் போனதே -வியபிசாரம் ஆவது–பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு இட்டு பிறந்த கரணங்களை –கொண்டு – பாகவதை யாகிற விஷயத்திலும் தேச விஷயத்திலும் அபசாரம் -எம்பெருமானை விடக் குறைந்தவள் என்ற நினைவு  திவ்ய தேசம் விடக் குறைவு என்ற நினைவு –அவள் இடம் ஷாமணம் -பிரார்த்தனை குற்றம் போக்கும் -ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேட கூடாதே -பகவான் இடம் கேட்க்காமல் -அவள் இடமே –பிரணிபாத மாத்ர பிரசன்ன மாத்திரத்தாலே க்ஷமித்தாள் அன்றோ  -பக்தனுக்காக அவனே விரும்பி திவ்ய தேசத்துக்கு வாஸம் செய்பவனாக இருக்க -சதா முக்தன் பக்தானாம் பாசக் கயிற்றால் கட்டுப்பட்டு -அவர்களால் ஜெயிக்கப்பட்டவன் அவிதேயாத்மா  கிம் கார்யம் சீதையா மம என்பவன் அன்றோ –ஆத்மாத்மீயங்கள் வீண் இவள் கிடைக்காமல் என்று நினைப்பவன் அன்றோ -அவனையும் கூட தொழ விப்பவள் -தொல்லை இன்பத்து இருதி கண்டாள் யசோதை-ஜென்மாதிகள் ஞானாதிகள் நிறைந்த –பெரிய திருவடி -மானஸ அபசாரம் -ஷாமணம் பண்ணி நீங்கப் பெற்றார் -பிராமாதிகமாக வருமானால் -கவனக் குறைவால் -ஷமை கொள்ள ஷமிக்கும்- பெண்ணைத் தரக் குறைவாக நினைக்க வில்லை -அதி விலக்ஷணம் இவள் என்று நினைத்தார் –அவள் இருக்கும் தேசமும் விலக்ஷணமும் என்ற நினைவு தானே இல்லை இவருக்கு-இவள் இருந்த இடமே புண்ய க்ஷேத்ரம் என்ற நினைவில்லாமையால் பிராமாதிகமாக வந்தால் க்ஷமை பிரார்த்தப் பெற்ற பின்பு போனதே )

(இங்கும் மானஸ அபசாரம்-கீழே பாகவத அபசாரம் மட்டுமே இருந்தது-அதிகாரி நியதமும் இல்லை இங்கும் காட்டப்பட்டதே -வாசிக அபசாரம் அத்யந்த க்ரூரம் என்றும் காட்டப்பட்டது இவருக்கு முன்னால் -இப்பொழுது ஆச்சார்யருக்கு தானமாக கொடுத்த பின்பும் செய்ததால் ஆச்சார்ய அபசாரமும் வந்ததே-தாரா பூர்வகமாக தத்தம் பண்ணினால் மீண்டும் கொள்ளார்களே சம்சாரிகளும் கூட -விஷத்துக்கு ப்ரதிக்ருத்யம் உள்ளது -ப்ரஹ்ம சொத்தை திருடியவனுக்கும் பாகவத அபசாரம் செய்தவனுக்கும் -மாற்று மருந்தே இல்லையே- -அனுதாபம் உண்டாகவே ஈஸ்வரன் மானஸ அபசாரம் பொறுப்பான்- பேறு இழவுகள் ஆச்சார்யரது-பெற்றோமே என்கிறார் கூரத் தாழ்வான் -அவ்வளவு பொறுப்பு ஆச்சார்யர் எடுத்துக் கொள்ள வேண்டும் -மானஸ அபசாரத்துக்கும் வாயாலே ஷாமணம் கேட்க வேணுமே -அனுதாபம் ஏற்பட்டத்தை தெரிவிக்க -வெட்கம் பட கூடாது -வாயாலே சொல்ல  பெரிய திருவடிக்கு அனுதாபம் முதலிலே வந்தது -அதனால் சிறகு உண்டாக வில்லை -அனுதாபம் தூண்ட -அதுக்கு பின்பே அனு வர்த்தனம் பண்ணினார் –பின்பே சிறகுகளைப் பெற்றார் )

வைநதேய விருத்தாந்தமாவது –விஸ்வாமித்ரன் பக்கலிலே வித்யைகள் எல்லாம் அதிகரித்த காலவன் என்கிற ப்ராஹ்மணன் குரு தக்ஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ்வித்யைகள் நிலை நில்லாது என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தக்ஷிணையாகத் தரத் தக்கது ஏது-என்று கேட்க
நீ நமக்கு ஒன்றுமே செய்ய வேண்டா -நாம் உன்னுடைய ஸூஸ்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதரானோம் இனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று பலகாலும் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே ஸர்வதா என் பக்கலில்
தக்ஷிணை வாங்கிக் கொள்ள வேணும் என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே
கிஞ்சிதா கத சம்ரம்போ விஸ்வாமித்ரோ பிரவீதிதம் ஏக தஸ் ஸ்யாம கர்ணா நாம் சதான் யஷ்டவ் து தேஹி மே ஹயா நாம் சந்த்ர ஸூப்ராணம் கச்ச காலவ மா சிரம் -என்று
அவன் குபி தானாய் இவனைப் பார்த்து -உடம்பு எங்கும் சந்த்ர மண்டலம் போலே வெளுத்து ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா
என்ன -இத்தைக் கேட்டு மஹா வ்யாகுலனாய் -இதுக்கு இனிச் செய்வது என் –
என்று பஹு முகமாக விசாரித்து சர்வ அபேக்ஷித பிரதானனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் என்று உத்யோகிக்கிற அளவிலே முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற பெரிய திருவடி நாயனார் இவனுக்கு முன்னே வந்து நிற்க அவரை ஸ்தோத்ரம் பண்ணி
இதுக்கு செய்ய அடுத்து என் என்று கேட்க
அவர் – உன்னை நான் இப்பூமி எங்கும் கொண்டு போகிறேன் இருவரும் கூட ஆராய்வோம் வா என்று இவனை இடுக்கிக் கொண்டு திரிகிற அளவிலே
இளைப்பானவாறே -இங்கே இளைப்பாறிப் போகக் கடவோம் என்று மேல் சமுத்ரத்திலே ரிஷபம் என்கிற பர்வதத்தின் மேலே வசியா நிற்பவளாய்
ஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாதநாதிகளைப் (ஆதி நமஸ்காரம் போல்வன)பண்ண -அவள் அத்யாதரத்தோடே மிகவும் சத்கரிக்க
அநந்தரம் விஸ்ராந்தராய் சயிக்கிற அளவிலே -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற இவள் ஒரு விலக்ஷண தேசங்களிலே வசிக்கப் பெற்றதில்லையே என்று
பெரிய திருவடி நாயனார் விசாரித்து இவளை இங்கு நின்றும் நாம் ஒரு திவ்ய தேசங்களிலே கொண்டு போய் வைக்கக் கடவோம் என்று
நினைத்துக் கொண்டு கிடக்கச் செய்தே அந்த பாகவதை இருந்த தேசத்தைக் குறைய நினைத்த இவ் வாபசாரத்தாலே சிறகுகளும் உதிர்ந்து நிஸ் சேஷ்டராய் விட
இத்தைக் கூடப் போன ப்ராஹ்மணன் கண்டு -கிந்னு தே மனசா த்யாதம் அஸூபம் பததாம் வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று
ஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தால் தீங்கு நினைத்தது உண்டோ- தேவரீருக்கு அல்பமும் வியபிசாரம் வருகைக்கு யோக்யதை இல்லை என்ன
உண்டாய்த்து காண் -என்று தாம் அந்த பாகவதை விஷயத்தில் நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளிச் செய்து –
அநந்தரம் இத்தைப் பொறுக்க வேணும் என்று  அவளைச் சென்று வர்த்தித்து அவள் அனுக்ரஹத்தாலே
அவ்வபசாரம் நீங்கி முன்பு போலே ஆனார் என்கிறது
இது தான் கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது நாரதாதி மஹரிஷிகள் பலரும் வந்து இருக்கிற அளவிலே கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை
பின் செல்லுகைக்கு உறுப்பாக த்ருதராஷ்ட்ரனைக் குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்திலே
ஸ்ரீ நாரத பகவான் அனுக்ரஹித்ததாக உத்யோக பர்வதத்தில் யுக்தமாகையாலே வேதாந்த உப ப்ரும்ஹண சித்தம் இறே(ஸ்ம்ருதி வேதத்துக்கு  உப ப்ரும்ஹணம் -இதிஹாச புராணம் வேதாந்தத்துக்கு உப ப்ரும்ஹணம் )

பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை யாவது
பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை அங்கீ கரித்து நாளிலே -இவர் ஆபிஜாதியாதிகளாலே உத்க்ருஷ்டராகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக
வர்த்தித்திக் கொண்டு போகிறபடியைக் கண்டு –
இவருக்கு இப் பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் கீழ்ப் படுத்தி தானே மேலாய் விநாச பர்யந்தம் ஆக்கி விடும்
அதுக்கு வேலியிட்டு வைக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவிலே இவரைப் பார்த்து
எல்லாரும் தானம் பண்ணுகிற காலத்தில் நீரும் நமக்கு ஒரு தானம் பண்ண மாட்டீரோ என்ன –
அடியேன் எத்தைத் தானம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே என்ன
அர்த்த ஸ்திதி அன்றோ ஆவது -அவ்வளவும் போராது-கரணத் த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வர்த்திக்கக் கடவன் என்று நம் கையிலே உதகம் பண்ணித் தர வேணும் என்ன –
அப்படியே இவரும் உதகம் பண்ணிக் கொடுத்த அநந்தரம்  -ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து நாம் இனி முடிந்தோம் என்று பயப்பட்டு
மூடிக் கொண்டு தன் திரு மாளிகையில் கண் வளர -இவர் முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திரு மாளிகையில் எழுந்து அருளி
ஏன் தான் முசிப்பு என் என்று வினவி அருள -தான் மனத்தால் நினைத்ததை விண்ணப்பம் செய்து -கரணத் த்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி
இத் தேகத்தோடே வர்த்திக்கை அரிதாய் இரா நின்றது -என் செய்யக் கடவேன் என்று திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிலேசிக்க
இத்தனை அனுதாபம் இவருக்கு உண்டாகப் பெற்றோமே -என்று உகந்து அருளி மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே ஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது -(நலிய மாட்டீர் என்றபடி )
ஆன பின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் –
இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு (அடக்கிக் கொண்டு )வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –

——————————————————-

பகவல் லாப ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பரிபூர்ணனாய் யுடையான் ஒருவனுக்கு பாகவத அபசாரம் யுண்டாய்த்தாகிலும் பகவான் அதுக்கு லகுவானதொரு தண்டனைகளைப் பண்ணிக் கூட்டிக் கொண்டு விடானோ
அவை இரண்டும் அசத் சமமாய் அபசாரம் பிரபலமாய் எம்பெருமானை இழந்தே போய் விடும் என்னலாமோ என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

(ஆயி ஸ்வாமிகள்-ததீய சம்பந்தமும் ததீய அபசாரமும் -பேற்றுக்கும் இழவுக்கும் ஹேது ஆகுமே ததீய கைங்கர்ய பர்யந்தமான பேற்றுக்கும் –ஞான அனுஷ்டான பூர்ணரான பாகவதர் பக்கல் தர்சனம் ஸ்பர்சனாதிகளே பெற்றுத் தரும் -அவர்கள் சம்பந்தமே –
பகவத் கடாக்ஷம் தொடங்கி பாகவத கைங்கர்யம் பர்யந்தமான– பேற்றின் இழவுக்கு அபசாரம் மாத்திரமே -நிரபேஷ ஹேதுவாகுமே -)

(பசுர் மனுஷ்ய பஷீ வா-நடுவில் மனுஷ்யர் -இதனால் வாசி இல்லை -வைஷ்ணவன் திருவடிகளைப் பற்றியதே காரணமாக அடைகிறார்கள் -யத்தை எத்தை யாரை யாரை தொடுகிறானோ கடாஷிக்கிறானோ அவர்களுக்கே உண்டே –ஞான அனுஷ்டான ங்களுக்கு யோக்யதையே இல்லாததவையும் பேறு பெரும் என்பதால்-பந்துக்களுக்குக் கிடைப்பது சொல்ல வேணுமோ-சம்பந்தம் ஒன்றையே மனசால் ஏற்றுக் கொள்ள வேன்டும் – மோக்ஷ இச்சையும்- வேறே ஹேது இல்லை என்ற எண்ணமும் வேணும் –
பரம பாகவத சம்பந்தமே ஹேதுவாக விசேஷ கடாக்ஷம் பண்ணி இச்சையும் விளைவித்து -ருசியையும் வளர்த்து சடக்கென மோக்ஷம் –பெருமாள் உகந்த திருமேனி என்ற பிரதிபத்தி வேணுமே பாகவதர்கள் மேலே –திரும்ப பார்க்க வைத்து -கடாக்ஷம் பொழிய மாறன் சொல் வேராகும் வீடு -ஞானம் அனுஷ்டானம் பலம் -கைங்கர்யம் செய்வதே -ஞான அனுஷ்டானங்களுக்கு அர்ஹம் இல்லாத ஸ்தாவரங்களும் -இதர நிரபேஷனான பாகவத சம்பந்தமே ஹேதுவாக பகவத் பிராப்தி பிரதிபந்தகங்களான சம்சாரத்தில் இருந்து விடுப்பட்டன என்றால் இவன் பந்துக்கள் பிராப்தி பற்றி பேச்சுக்கு இடமே இல்லையே –

நிரபேஷ சாதனம் என்றது – உபாஸனாதிகள் சா பேஷன் –கர்ம ஞான யோகங்கள் அங்கமாக வேண்டுமே -அங்கங்கள் எதிர்பார்க்காத –சித்த உபாயம் –பக்தி கைங்கர்யம் ரூபமாக வேண்டும் -உபாய அதிகார -தன்னைப் பேணாமை தரியாமை இத்யாதிகள் முன்பே பார்த்தோம் –ஞான அனுஷ்டான சா பேஷம் இதுக்கும் உண்டே–ஆக கர்ம ஞானங்கள் வேண்டுமே -சீதை திரௌபதி திருக் கண்ண மங்கை ஆண்டான் –அதிகார ஞானம் வேண்டும் -நிவ்ருத்தி அனுஷ்டானமும் வேண்டுமே -எதிர்பார்க்கும் சித்த உபாயம் போலே அன்றிக்கே பாகவத சம்பந்தம் ஒன்றே -போதுமே —சரம பர்வ நிஷ்டருக்கு -அதிகார ரூபமான ஞான அனுஷ்டானங்களும் வேண்டாம் –ஒன்றே எதிர்பார்க்கும் இது நிரபேஷ உபாயம் என்ற ஞானம் இருக்க வேண்டுமோ என்னில் –ஸ்தாவரங்களும் சம்பந்தத்தால் –தர்சன கடாக்ஷம் மூலம் பசு பக்ஷி ஸ்தாவரங்களும் பெற்றனவே – பிரகலாதனன் விரோசனன் மஹா பலி –
பாகவத சம்பந்தமே பற்றாசாக -எப்பொழுதாவது பிராப்தி உண்டே இப்பொழுது இல்லை என்றாலும் -உபாய அதிகார பூத ஞான அனுஷ்டானங்களை வேண்டாமே —கைங்கர்யம் பர்யந்தமாக பகவத் பிராப்திக்கு த்ருஷ்ட த்வாரா காரணங்களாய் உபேய அதிகாரங்களாய் -அனுகுணமாக ஞானம் அனுஷ்டானம் –கோசல கோகுல சராசரங்களை கூட ஸூ சம்ஸ்லேஷ விஸ்லேஷ சுக துக்கங்கள் அனுபவிக்கும் படி பண்ணி – ஏற்படுத்திய மோக்ஷம் -இது தானே உபய அதிகாரம் -ருசி வளர வேண்டுமே -சரம தசையில்-ஸூந்தர்ய ஆவிஷ்காரத்தாலே —சேவித்த க்ஷணத்தில் அனைத்து பாபங்களும் புண்ணியங்களும் போகுமே –அப்படியே பாகவத சம்பந்திகளுக்கும் -சரா சரங்களுக்கும் -யம் யம் ஸ்ப்ருஷதி– பசு பக்ஷி மனுஷ்ய ஸ்லோகங்கள் படி – -பக்தி ரூபா பன்ன ஞானங்களையும் -தத் அனுரூப இதர விஷய வைராக்யங்கள் -புருஷார்த்தாந்தர நிவ்ருத்தி அனுஷ்டானமும் அருளி
ஸூ சம்ஸ்லேஷ சுகம் விஸ்லேஷ துக்கம் உண்டாக்கி ஒரு நாள் முகத்தில் விழித்தாரை படுத்தும் பாடு அன்றோ ஸூந்தர்யம் –இப்படி உபேய அதிகாரமும் உண்டாக்கி பிராப்தி அருளுகிறார் —பகவத் அபிமதம் ஆவான் -என்றது கிம் கார்ய சீதயா மம–பரதன் லஷ்மணன் சத்ருக்கனை அடைந்தும் லாபம் இல்லை என்னாலும் எனக்கு லாபம் இல்லை –
சாதுக்கள் ஹிருதயம் -அந்தரங்கர் -தாரகம்-ஸூஹ்ருத் பல காலம் அருளிச் செய்கிறானே)

அதாவது -உபாப்யாம் ஏவ பஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்க்கு எளிது-திரு விருத்தம் -54- -என்றும் சொல்லுகிறபடியே
பகவல் லாப ஹேதுவான தத்வ ஞானமும் தத் அனுரூப அனுஷ்டானம் இன்றிக்கே ஒழிந்தாலும்
பகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ ஸம்ஸரயா தேநைவ தே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -(பாரத்வாஜ ஸ்ம்ருதி )-என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பஸ்யதி சஷூஷா ஸ்தாவராண்யபி முஸ்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா -(பராசர ஸ்ம்ருதி )-என்றும் சொல்லுகிறபடியே
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனம் ஆகிறாப் போலே அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற யுண்டாய்த்தாகிலும்
பகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாகப் போரும் என்றபடி –

———————————————-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் யுண்டோ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை

(ஆயி ஸ்வாமிகள்-ஞான அனுஷ்டான ஹீனரும் ததீய சம்பந்தம் -கொண்டே உஜ்ஜீவிக்க – ஞான அனுஷ்டான பூர்ணரும் பாகவத அபசாரத்தால் உஜ்ஜீவிக்காமல் அசலாவார்
ஜென்மாதிகளால் மினுக்கும் அற்ற பாகவதருடைய சம்பந்தம் -பேறு இல்லை என்றும் மினுக்கும் உள்ள பாகவதருடைய சம்பந்தத்தால் பேறு என்றும்-மினுக்கம் உள்ளவர் அபசாரம் பட்டாலும் இழவு என்றும் -மினுக்கும் இல்லாதவர் அபசாரம் பட்டால் தான் இழவு என்கிற நியதிகள் இல்லை)

(பாகவதர்கள் அபக்ருஷ்டர்களே இல்லை -பிறப்பால் பார்த்து பிரமிக்கிறோம் –
சம்பந்தம் ஒன்றே சாதனம் -போலே அபசாரமே-சாஸ்த்ர சாதன அபாவம் -வைஷ்ணவ சம்பந்தமே பேறு – சாஸ்த்ர ஞான அனுஷ்டான பூர்த்தி இருந்தும் தத் அபசாரமே பகவத் பிராப்தி அபாவ ஹேது-லகு தண்டனை -கொடுத்து பிரபன்னனை திருவடி சேர்ப்பது பாகவத அபசாரத்துக்கு உட்படாத ஒருவனை –ஆழ்வான் மேலே அபசாரம் பட்ட ஸ்ரீ வைஷ்ணவன் கபோதமாக பிறந்தது பிரசித்தம் இறே-சரம உபாய நிர்ணயத்தில் அருளிச் செய்யப்பட்டுள்ளது )

இதில் என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும் என்று சொன்ன இவை இரண்டிலும் -என்றபடி –
ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோடு யுண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேது வாவது
அவற்றால் அபக்ருஷ்டரான வர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற நியமுமம் –
ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது
அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற நியமுமம் இல்லை என்றபடி –

—————————————

இவ்வர்த்தம் காணலாம் இடம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை –206–

இவ்வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

(ஆயி ஸ்வாமிகள் மினுக்கும் இல்லாத நம்பாடுவான் சரித்திரம் – மினுக்கும் உள்ள உபரிசர வஸூ சரித்திரம் -ஆடி மாசம் சுக்ல பக்ஷம் -சயன ஏகாதசி —கார்த்திகை மாசம் சுக்ல பக்ஷம் ஏகாதசி -தேவர்கள் வர்ஷம் படி – உத்தான ஏகாதசி-என்ற பெயர் உண்டே –
இந்த சரித்திரம் வந்த பின்பே கைசிக ஏகாதசி பெயர் –மஹேந்திர கிரி -திருக்குறுங்குடி -சுந்தர பரிபூர்ணன் —புஷ்ப தியாக போக மண்டலங்களில் –அநு வர்த்தித்த க்ரமம் வீணையும் கையுமாக –கர்வித்து உபரி சரவஸூ -தேவ பக்ஷபாதியாக இருப்பதால் ரிஷிகள் சபிக்க -பாதாளம் வரை விழுந்தான் -மினுக்கும் உள்ளவன் அபசாரம் பட்டாலும் –ஜென்மாதி மினுக்கும் அற்ற பாகவத அங்கீ காரம் உத்தாரகம் -அம்மினுக்கம் உள்ளவனுக்கு அபசாரம் பட்டால் அநர்த்தகரம்-என்றதாயிற்று )

(சித்தாஸ்ரமம் -வாமன ஆஸ்ரமம் -குறுக்கியவனுடைய குடி திருக்குறுங்குடி வைஷ்ணவ வாமனத்திலே நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் குறுங்குடி நெடுந்தகை–வாமன திருவிக்ரமன் -என்கிறார் கலியன் – -கரண்ட மாடு பொய்கை காக்கை உட்க்கார்ந்து பனங்காய் விழும் )

(ப்ரத்யக்ஷ பசுவுக்கும் சுருதி வாக்கியம் உண்டே -பிட்ட பசுவும் உள்ளது – வேறே வேறே அதிகாரிகளுக்கு –யார் என்று பார்த்து இவன் பதில் -கிருத யுகம் -கலி யுக தர்மம் என்று கொள்ளலாமோ என்னில் இது அஹிம்சை பற்றிய பேச்சுபரமை காந்தி பிஷ்ட பசுவையும் -பிரத்யக்ஷ பசு மற்றவர்க்கும் -கர்தவ்யம் என்றவாறு-இரண்டு யுகத்திலும் அஹிம்சை -அஹிம்சையுடன் கூடிய யாகம் ஏற்புடையது –தேசிகன் )

(சாண்டில்யை– பிள்ளைப் பிள்ளை ஆழ்வான்- இந்த இரண்டு சரித்திரம் நான்கும் -மூலம் தொண்டர் அடி பொடி ஆழ்வாரது -அங்கே பாகவத அபசாரத்துக்கு நியமம் இல்லை – ஞானத்தால் ரிஷிகள் தாழ்வு -பிறப்பால் உயர்ந்தது -இந்த வாசி இதில் மட்டுமே 
நம்பாடுவான் உயர்ந்த ஜன்மா -அஹங்காரம் யோக்யதை இல்லாத ஜென்மம் இவனது பிள்ளை பிள்ளை ஆழ்வான் -அஹங்கார ஹேது பிறவி –வைநதேயனும் அஹங்காரம் மிக்கு -சாண்டில்யை உயர்ந்த ஜென்மம் –மூன்று சரித்ரங்களிலும் அபசாரம் பட்டவர்கள் மீண்டும் நல்ல கதி –  உபரி சரவஸூ மட்டும் இழந்தே போனான் -இத்தைக் காட்டவே இந்த விருத்தாந்தம் –ஞான ஜென்மம் பற்ற–ஞானம் என்றாலே அஹங்காரத்துக்கு ஹேது ஆகாதே – வைதிக ஜென்மம் -அஹங்கார ஹேது -ஆகவே உத்க்ருஷ்டம் தேக ஜன்மா விட -சாண்டில்யய்யும் வைநதேயரும் -தேவ பிறவி -அஹங்காரம் கொடுக்கும் –ஆகையால் அபக்ருஷ்ட வர்கள் உத்க்ருஷ்ட விஷயத்தில் அபசாரம் – மத் பக்தன் -சப்தத்தால் திக்குற்ற கீர்த்தி–பாசுரம் படி -அதுவே ஆள் கொள்ளும் -குணம் போலே அனுபாவ்யமாய் -இருக்கும் என்றபடி – –பாகவத சம்பந்தம் உஜ்ஜீவனம் –ப்ரஹ்ம ராஜஸூ -நம்பாடுவான் சரித்திரம் – ப்ரமாதிக அபசாரம் அப்போதே க்ஷமை கொண்டு நிவர்த்திக்க வைநதேயன் சரித்ரம் -மானஸ அபசாரத்துக்கு பகவானிடம் பிரார்த்தித்து பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் உய்ந்து போனார் -அனுதாபமும் படாமல் உபரிசரவஸூ போல் நசித்தே போவார்-அபசாரப்பட்ட பாகவதர் அசந்நிஹிதராய் பரமபதம் சென்று இருந்தாலும் பிரார்த்தித்திக் கொண்டே இருந்தால் அங்கு இருந்தே அறிந்து க்ஷமிக்கலாம் -)

அதாவது -சரக குலோத்பவனான சோம சர்மாவாகிற ப்ராஹ்மணன் யாகத்தைச் செய்வதாக உபக்ரமித்து -யதா க்ரமம் அனுஷ்டியாமல்
அது சமாபிப்பதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே ப்ரஹ்ம ராக்ஷசனாய் பிறந்து திரியா நிற்க –
மத்பக்தம் ஸ்வ வசம் வாபி-என்கிறபடியே ஜென்ம ஸித்தமான நைச்யத்தை யுடையராய் -பகவத் பக்தியே நிரூபகமாம் படி இருப்பார் ஒரு பாகவதர்
உத்தான ஏகாதசி யன்று ராத்திரி சித்தாஸ்ரமமான திருக் குறுங்குடியிலே நம்பியைப் பாடிப் பறை கொள்வதாக வீணா பாணியாய்க் கொண்டு போகா நிற்கச் செய்தே
அவரை பஷிப்பதாக வந்து அடர்க்க அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான அநேக சபதங்களைப் பண்ணிக் கொடுத்து தத் அனுமதி கொண்டு போய்
யதா மநோ ரதம் சேவித்து ஹ்ருஷ்டராய் அந்த ப்ரஹ்ம ராஷசன் நிற்கிற இடத்தில் மீளவும் விரைந்து வந்து யதேஷ்டம் இனி என் சரீரத்தை நீ புஜி என்ன
அவன் அவருடைய சத்யத்வாதி வைபவத்தைக் கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தைத் தா -நான் உன்னை பிராணனோடு போகவிடும்படி என்ன
அவர் அதுக்கு இசையாது ஒழிய -அர்த்த ராத்ரத்தில் பலம் -ஏக யாமத்தில் பலம் (த்ரியாமம் ஒரு இரவு )என்றால் போல் சொல்லிக் கொண்டு வந்த அளவிலும்
நான் அது செய்வது இல்லை -முன்பு நீ சொன்ன படியே என்னை பஷிக்கும் அத்தனை -என்று ஒரு நிலை நின்ற படியால்
த்வம் வை கீத பிரபாவேந நிஸ் தாரயிதும் அர்ஹஸி ஏவம் உக்த்வாத சண்டாள ராக்ஷஸம் சரணம் கத -என்கிறபடியே
நீ உன்னுடைய கீதா ப்ரபாவத்தாலே என்னை இப் பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேன்டும் என்று சரணம் புகுர-அந்த பாகவதர்
யன்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிமம் உத்தமம் -இத்யாதி படியே தாம் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தைக் கொடுத்து
கர்ம தோஷத்தால் வந்த ராக்ஷஸ வேஷத்தை கழித்து முன்பு போலே ப்ராஹ்மணனாய் -அதுக்கும் மேலே பாகவதனுமாய்
உஜ்ஜீவிக்கும்படி பண்ணினார் என்கிற கைசிக வ்ருத்தாந்தத்திலே -ஜென்மாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோட்டை சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது வாவது –
அவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேதுவாகாது -என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம்

ரிஷிகளும் தேவர்களும் தன் பக்கலிலே தர்ம சந்தேகம் கேட்க்கும்படி வித்யாதிகனுமாய் -ஸ்வ வரண அனுரூப மாத்திரம் அன்றிக்கே
ஸாத்வத தந்த்ர ( பாஞ்சராத்ர )நிஷ்ணாதனாய்-பாகவத ஆராதன தத் பரனாய்க் கொண்டு போருகையாலே வந்த வ்ருத்தாதிகனுமாய்
ஸ்வ தபோ பலத்தால் ச வாஹன பரிவாரனாய்க் கொண்டு அந்தரிக்ஷ சரனாய் திரியும் உபரி சரவஸூ என்கிற மஹா ராஜாவானவன்
யாகார்த்தமான பசு நிமித்தமாக ரிஷிகளும் தேவர்களும் தங்களிலே விவாதம் பண்ணுகிற அளவில்
மார்க்கா கதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம் தேசம் ப்ராப்தவான் வஸூ -அந்தரிக்ஷ சரஸ் ஸ்ரீ மான் சமக்ர பல வாஹன
தம் த்ருஷ்ட்வா ஸஹாஸ யாந்தம் வஸூம் தேவந்தரிக்ஷகம் ஊசுர் த்வி ஜாதயோ தேவா ஏஷச் சேத்ஸ் யதி சம்சயம் -என்று
ஆகாசத்தில் போகா நின்ற இவனைக் கண்டு இவன் நம்முடைய ஸம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு
இவனைச் சென்று கிட்டி செய்ய வடுப்பது ஏது என்று கேட்க –
அவன் உம் தாமுடைய மதங்களைச் சொல்லுங்கோள் என்ன
தாந்யைர் யஷ்டவ்ய மித் யேஷ பஷ அஸ்மாகம் நராதிப தேவதா நாம் ஹி பசுபி பஷோ ராஜன் வதஸ் வன என்று
தான்யங்களாலே யஜிக்கப்படும் என்று எங்களுக்கு பக்ஷம் -பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பக்ஷம் –
நாங்கள் செய்வது என் சொல் என்று ரிஷிகள் கேட்க
தேவா நாத்து மதம் ஸ்ருத்வா வஸூநா பக்ஷ ஸம்ஸரயாத் சாகேந அஜேந யஷ்டவ்யமேம்வ யுக்தம் வசஸ் ததா -என்கிறபடியே
அவன் தேவர் அளவில் பக்ஷபாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் என்ன
குபிதாஸ் தே ததா சர்வே முனயஸ் ஸூர்ய வர்ச்சச ஊசுர்வஸூம் விமாநஸ்த்தம் தேவ பஷார்த்த வாதிநம்
ஸூர பஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத அத்ய ப்ரப்ருதி தே ராஜன் ஆகாஸே விஹதா கதி அஸ்மச் சாபாபி காதேந மஹீம்
பித்த்வா பிரவேஷ்யஸி விருத்தம் வேத ஸூத்ராணாம் யுக்தம் யதி பவேந் ந்ருப வயம் வ்ருத்த வசநா யதி ததா பதா மஹே-என்று
ரிஷிகள் எல்லாம் குபிதராய்-தேவ பஷபாதியாய் வார்த்தை சொன்ன நீ த்யவ்வில் (ஆகாசத்தில் )நின்றும் அதர்பதியாய்-இப்போது தொடங்கி யுன்னுடைய
ஆகாச கமனமும் மாறி பாதாளத்தில் விழக் கடவை-நாங்கள் தான் வ்ருத்த வசனம் சொன்னோமாகில் அப்படியே
பாதாளத்தில் விழக் கடவோம் என்று சொல்லி சபிக்க
ததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததோ அதோவை சம்ப பூவாசு பூ மேர் விகரகோ ந்ருப -என்கிறபடியே –
அப்போதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற உபரி சரவ ஸூ வ்ருத்தாந்தத்தில் ரிஷிகளும் தர்ம சந்தேகங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளில்
அவர்களிலும் உத்க்ருஷ்டனாவான் அவர்கள் திறத்தில் அபசாரத்தால் அதிபதித்தமை காண்கையாலே
ஜென்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது –
அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில் பண்ணும் அபசாரம் இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் என்கை –
ஜென்ம ஆதிக்யம் ரிஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆதிக்யம் இவனுக்கு உண்டாகையாலே அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை
ஜென்மமும் ஞானாதிகளும் ஒரு தலையானால் ஞானாதிகள் பிரபலங்களாய் இறே இருப்பது –

கைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராஹ புராணத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது ஆகையாலும்
உபரி சரவஸூ விருத்தாந்தம் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே மோக்ஷ தர்மத்தில் தர்ம புத்ரர்க்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்டது ஆகையாலும்
இவை தான் ஆப்த பிராமண சித்தம் இறே

—————————————————-

இப்படி ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷத்தில் பசை இல்லை என்று சொல்லாமோ –சாஸ்திரங்கள் எல்லாம் பிராமணியத்தை அத்யாதரம் பண்ணிச் சொல்லா நிற்கச் செய்தே என்ன -அருளி செய்கிறார் -மேல் –

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-
வேதாத்யயநாதி முகத்தாலே-
பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –
த்யாஜ்யமாம் இறே —

(ஆயி ஸ்வாமிகள்-சரீரகதமான ப்ராஹ்மண ஜென்மம் – குண கர்ம விபாகத்துக்காக சாதுர் வர்ணயமாக ஸ்ருஷ்டித்து  சத்வ குணம் வளர்க்க சாஸ்த்ர அத்யயனம் பண்ணி  பிரயோஜனம் பட வேண்டுமே -ப்ரஹ்மத்தை அடைய கொடுத்த கரணங்கள் கொண்டு வேறே இலக்கை நோக்கி போனால் அபக்ருஷ்டம் ஆகுமே –
வர்ணங்களில் ஸ்ரேஷ்டம் ப்ராஹ்மண்யம் -குரு –அதுவும் -அபசார ஹேதுவாகும் பொழுது த்யாஜ்யமாகுமே –ஜென்மாதிகள் – ஜென்ம வ்ருத்தங்கள் அத்யாயனாதிகள் -அத்யயனம் அனுஷ்டானம் -)

(மீமாம்சாதிகளாலே-வேத வேதாந்தம் இதிஹாசம் புராணங்கள் -உபாசனாதிகளில் இழிந்து-பக்திகளிலும் பிரபத்திகளிலும் இழிந்து – விதி பரதந்த்ரன் -விதி வஸ்யனாய் -சாஸ்திரம் விதிக்கும் –பசு மனுஷ்ய பக்ஷி -பாகவத சம்பந்தத்தால் -பரம புருஷ பிராப்திக்கு ஜென்ம ஸ்ரேஷ்டம் வேண்டாமே-நம்பாடுவான் உஜ்ஜீவித்தானே அதுக்கும் வேண்டாம் -பாகவத அபசாரம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் வேண்டாம் –ராஜ புத்ர அபராத நியாயம்தள்ளுபடி ஆகாதே உபரி சரவஸூ வ்ருத்தாந்தம் -மூலம் அறிந்தோம் -அதிகாரி விசேஷணமாகவும் அபேக்ஷிதம் இல்லை -உத்கர்ஷமும் அநர்த்த ஹேது வேதம் எஜ்ஜம் தேவதைகள் ப்ராஹ்மணர்கள் -கீழ் சொன்னது மேல் சொன்னதுக்கு அடிமை -ப்ரஹ்மம் பூஜிப்பது போலே ப்ராஹ்மணர்களும் பூஜிக்கப் பட வேண்டியவர் -சுருதி வாக்கியங்கள் உண்டே  நிந்திக்கில் நாயாய் பிறப்பார்கள் -இப்படி சொல்லா நிற்கச் செய்தாலும் –இவை சொன்னது ப்ரஹ்ம ப்ராப்திக்கு வகுத்த ஜென்மம் என்பதால் அதுக்கு குறை இல்லாமல் நடக்க வேண்டுமே –
கேவல ப்ராஹ்மண ஆதிக்ய வாதி–கேவல சப்தம் -ஜென்மத்தால் மட்டும் -பாகவதராக இல்லாமல்  மற்றவரை விட உயர்வு என்று அஹங்கரித்து –ப்ராஹ்மண்யம் விலை செல்லுகிறது –என்றது -கோத்வம் அஸ்வத்தாதிகள் பிரத்யக்ஷம் –ப்ராஹ்மண்யம் ப்ரத்யக்ஷம் இல்லையே -சமஸ்தானம் விசேஷம் இல்லை -சிகை யஜ்ஜோபவீதம்-சத் சூத்திரர்களை விட அசத் சூத்திரர்கள் இடமும் காணலாமே  -விசுவாமித்திரர் ப்ராஹ்மணர் இடம் பிறக்க வில்லையே –பின்னை ப்ராஹ்மண்யம் ஏது -கர்ம விசேஷம் அடியாக ரஜஸ் தமஸ் அவிபவித்துக் கொண்டு சத்வம் உயரும் சரீர விசேஷ சம்பந்தம் -பிறப்பால் –
அதுக்கு மேலே ஸ்வயம் பிரயோஜன பகவத் கைங்கர்ய ரூபமான -யஜானாதி-தானம் -அத்யயனம் அத்யயனம் -பண்ணி பண்ணுவித்து -ஆறு வித கர்மங்கள் செய்ய வேண்டிய
-ஆத்ம குணங்கள்–12- எல்லாம்-சமம் தமம் இத்யாதிகளை அநாயாசேன உண்டு பண்ண யோக்கியன் –
அதிருஷ்ட பிரயோஜனம் –ஸ்வரூபத்துக்கு ஆஸ்ரயம் -ஆறு கர்தவ்யம் பண்ண பகவானுக்கு ஆனந்தம் -கண்ணுக்குத் தெரியாதே -பலம் அனுமானிக்கலாம் -ஆதரிக்கத் தக்கதால் விலை செல்லுமே -இவ்வளவு இருந்தும் அஹங்கார ஹேதுவாய் -தேக விசேஷம் இருப்பதால் –கர்மம் அடியாக பெற்ற சரீரம் கொண்டு -நிர்ஹேதுக கடாக்ஷத்தால் பெற்ற சரீரமாக இருந்தால் சத்வ மயமாக இருக்கும் -இங்கு சத்வ காதாசித்தம் –வளர்க்கப் போகிறானா இழக்கப் போகிறானா என்பது இவன் கையில் -அஹங்காரத்துக்கு தோள் தீண்டி ரஜஸ் தமஸ்–ஒன்றுக்கு ஓன்று பேசி மூன்றும் வளரும்  அசலாகப் போக உறுப்பாகும் –அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் நீடிக்கும்-கீழே ரஜஸ் தமஸ் அடக்கி கொஞ்சம் சத்வம் காதா சித்தம் -குண அனுபவம் இழந்தது அன்றிக்கே -ஸ்வரூபம் சத்தையும் இழந்து சண்டாளர் போலே தூரஸ்தானாய் அகன்றே போவான் –உறுப்பாகில் –ஆகில் -என்றது ப்ராஹ்மண ஜென்மம் பகவத் லாபத்துக்கு உறுப்பாம் என்பவர் பக்ஷம் தள்ளுபடி -பிறந்ததால் இழவு இல்லை -அஹங்காரம் பட்டதால் தானே –இருக்குமானால் தள்ளத் தக்கது -சம்பாவனை உண்டு அத்தனை என்றபடி —உண்ண புக்க சோற்றில் விஷம் இருக்க சம்பாவனை உண்டாகில் உண்ண மாட்டோம் இறே -த்யாஜ்யமாவது போலே இங்கும் —சத்தா நாசத்துக்கு அன்றோ இங்கே -அநர்த்த ஹேதுவாக சம்பாவனை உண்டே -சேஷத்வ விபவ பஹிர் பூர்வமாக இருந்தால் ப்ரஹ்ம பதமும் வேண்டாம் –தாஸ்யம் அறிந்தவன் குடிலில் புழுவாவது பிறப்பேனே என்பார்களே தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப் பூதம்-நாத -க்ஷணம் அபி ஸஹ–யாது ஸததா நாசம் சத்யம் -ஆளவந்தார் -த்ரிகுண தேக சம்பந்தம்-உபாதி பூத தேக ஸ்வ பாவத்தால் இழவுக்கு உறுப்பாகும் போது -என்றபடி-அஹங்கார ஹேதுக்கள் எல்லாம் த்யாஜ்யம் தானே  –அஹங்காரம் நான்கு வர்ணத்தவர்களுக்கும் வரலாம்- நான்காவது வர்ணம் உத்தேச்யம் என்றும் சொல்ல முடியாது அஹங்காரம் வாய்ப்பு இல்லை –கண்டிப்பாக நமக்கு பிராப்தி உண்டு என்ற எண்ணமே அஹங்கார ஹேது ஆகுமே அவர்களுக்கும் )

விலை செல்லுகையாவது -விருப்பத்துக்கு விஷயமாகச் செல்லுகை –
வேதாத்யயநாதி முகத்தாலே பகவல் லாப ஹேது ஆகையாவது –சர்வ வேதா யத்பத மாமநந்தி -என்றும் –
வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்யே -என்றும் சொல்லுகிறபடியே –
ஆராதன ஸ்வரூபத்தையும் -ஆராத்ய ஸ்வரூபத்தையும் -பூர்வோத்தர பாகங்களாலே
பிரதிபாதியா நின்று கொண்டு -பகவத் ஏக பரமாய் இருக்கிற வேதத்தை – ஸ்வத்யாயோ அத்யேதவ்ய-என்கிற விதி பரதந்த்ரனாய் -அத்யயனம் பண்ணி -மீமாம்சாதிகளாலே ததர்த்த நிர்ணயம் செய்து –பகவத் உபாசனாதிகளில் இழிந்து பகவத் விஷயத்தைப் பெருகைக்கு உறுப்பாகை-
அது தானே இழவுக்கு உறுப்பாகில்-என்றது -அந்த ப்ராஹ்மண்யம் தானே
அஹங்கார ஹேதுவாய் கொண்டு -மத் பக்தான் ஸ்ரோத்ரியோ  நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத் -என்கிறபடியே –பகவத் அத்யந்த நிக்ரஹ ஹேதுவான பாகவத அபசாரத்தைப் பண்ணி –பகவத் விஷயத்துக்கு அசலாய் போகைக்கு உறுப்பாகில் என்றபடி 
த்யாஜ்யமாம் இறே -என்று பிரசித்தி தோற்ற அருளிச் செய்தது –
யாதொன்று பகவல் லாபத்துக்கு உறுப்பு அது உபாதேயம் –
யாதொன்று தத் அலாபத்துக்கு உறுப்பு அது த்யாஜ்யம் ஆய்த்த பின்பு
இதுவும் இழவுக்கு உறுப்பான போதே அப்படியாகக் குறை இல்லை என்கிற நிச்சயத்தாலே –

——————————–

இப்படி உத்க்ருஷ்ட ஜன்மாதிகள் இழவுக்கு உறுப்பாகில் அபக்ருஷ்ட ஜன்மாதிகள் பேற்றுக்கு உடலாமோ என்ன – அருளிச் செய்கிறார் –

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய
உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும்
அப்ரயோஜகம் –

(ஆயி ஸ்வாமிகள்ப்ரயோஜகம் –பலிப்பிக்குமது-ப்ராஹ்மண்யம் என்பது பாகவதர்கள் மேல் -அபசாரப்பட்டு இழவுக்கு உறுப்பாக சம்பாவனை த்யாஜ்யம் என்று பார்த்தோம் ஆகில்
ஜென்மத்தின் உத்கர்ஷம் பேற்றுக்கு அப்ரயோஜம் -இழவுக்கு அப்ரயோஜம்-விருத்தங்களின் உத்கர்ஷம் பேற்றுக்கு அப்ரயோஜம் -இழவுக்கு அப்ரயோஜம்-
இதே போலே ஜென்மத்தின் அபகர்ஷமும் -விருத்தங்களினுடைய உபகர்ஷமும் அபகர்ஷமும் இவை காரணம் ஆகாது -ஏது காரணம் ஆகும் அடுத்த சூர்ணிகை -பேறு பகவத் லாபம் – இழவு தத் அ லாபம் -இரண்டு வகையிலும் சிலர் பெறுவாரும் இழப்பாருமாக காண்கிறோம் -அவை அவற்றுக்கு பிரயோஜகம் இல்லை )

(சர்வ வரண சாதாரண -அஹங்காரம் -த்வாரா –பாகவத அபசாரம் ஹேதுவாக –கேவல அபக்ருஷ்ட வர்ணி ஸூ உத்கர்ஷத்துக்கு அவகாசம் உண்டோ என்று-பார்த்து கேட்பது போலே ஜிஜ்ஜாஸூ சாயை -விருப்பம் போலே கேட்க பதில் இது –ஸ்ரோத்ரியத்வம் -வேதம் கற்றவன் –பாகவத வைபவ ஞானத்துக்கு உடலாக இருக்கையாலே —நிந்திக்க ஹேது என்னலாமோ என்னில் –ஸ்ரோத்ரியம் வேறு ப்ராஹ்மண்யம் வேறு-ஸ்ரோத்ரியம் -வேதம் கற்று -ப்ராஹ்மண்யம் சரீர சம்பந்தம் -படித்தது அறிந்து அனுஷ்டானம் -சத்வ குணம் வளர்ந்து -இல்லாமல்– இழவுக்கு உறுப்பாகில் –ஆகில் சப்தம் -இதுக்கு சம்பாவனை –தெளிவு படுத்துகிறார் –ரஜஸ் தமஸ்-கலக்கும் பொழுது -நாம் ஸ்ரோத்ரியர் அன்றோ -இது தானே பற்றுக் கொம்பு ஆகிறது – பரம பாகவதர் -நமக்கு இல்லையே –சிசுரூஷை பண்ணப் பிறந்தோமே சூத்திரர் சோகத்தை தவிர்க்கிறார் பரிசரியையால் –ஜென்ம சித்தம் என்று அவர்களும்-ஸ்த்ரீகளும் பாரதந்தர்யம் உண்டே யென்று அஹங்கரிக்கலாமே– இத்யாதியால் இவை எல்லாம் –ஸ்ரோத்ரியத்வம் பாகவதத்வம் ஸூத்ரத்வம் ஸ்த்ரீத்வம் ஸூஸத்வம் –அஹங்கார ஆலம்பனமாகக் காண்கிறோம் -விஷம் தலைக்கு ஏறினவனுக்கு பாயாசம் கசக்குமா போலேயும்- கடுக்காய் இனிப்பானது போலேயும் -இந்திரிய குறை பதார்த்த குறை இல்லையே –நிந்தைக்கு ஹேது ஸ்ரோத்ரியத்வம் ஹேது இல்லையே அக்ருத்ய கரணாதிகள்-ரஜஸ் தமஸ் தூண்ட செய்கிறார்கள் –நுமர்களை பழிப்பராகில் -அங்கே -ஆகில் –சாதி அந்தணர்கள் ஆகிலும் -பழிக்க மாட்டார்கள் என்று முதலில் அறிந்து கொள்–ஆகில் -ஒரு வேளை -செய்வார்கள் ஆகில் -ஸ்ரோத்ரிய -நிந்தனை துர்லபம் –என்றவாறு  இழவுக்கு உறுப்பாகும் என்று சொல்லாமல் உறுப்பாகில் என்று அன்றோ உள்ளது –ப்ராஹ்மண்யம் தேக சம்பந்த உபாதி காரணம் -முக்குண மயம் -புலி கிடந்த தூறு போலே பயப்பட இடம் கொடுக்கும் -நான்கு வர்ணங்களுக்கும் இது-தேக சம்பந்த உபாதி காரணம் -முக்குண மயம்- உண்டே -உத்க்ருஷ்ட ஜென்மம் இழவுக்கு உறுப்பாகும் என்றால் அபக்ருஷ்ட ஜென்மம் பேற்றுக்கு உறுப்பாகுமோ என்றாலோ-நாயை அடித்து உண்பானாக இருந்தாலும் விஷ்ணு பக்தி உண்டாகில் ப்ராஹ்மணரில் உயர்ந்தவன் -யதியாய் இருந்தாலும் விஷ்ணு பக்தி இல்லை என்றால் நாய் மாமிசம் உண்பானுக்கும் தாழ்வு -இவனுக்கு விஷ்ணு பக்தி பகவானை எதிர்பார்த்தே -அத்யயனம் இல்லையே -வாத்சல்யாதிகள் -தோஷம் கொண்டே பிரகாசிக்கும் -தானே மேல் விழுந்து —பெரியாழ்வார் ஆண்டாள் இடையர் குலத்தை ஆசைப்பட்டதாலும் -கோப ஜென்மம் ஆஸ்தானம் –நிக்ருஷ்ட ஜென்ம விருத்த ஞானம் இவை மூன்றும் பேற்றுக்கு காரணம் ஆகுமோ என்னில் -ஆகாது –பேற்றுக்கும் இழவுக்கும் அசாதாரண ப்ரயோஜகம் அன்று இவை அனைத்தும் –உத்க்ருஷ்ட ஜென்மம் இழவுக்கு உறுப்பு என்று சொல்லாமல் உறுப்பாகில் என்று அன்றோ அருளிச் செய்கிறார் – பாகவத அபசாரம் விளைய சம்பாவனை -பழிப்பர் ஆகில் –நிக்ருஷ்ட –கஜேந்திர தாசர்-திருக் கச்சி நம்பி -ஸமாஸ்ரயணம் பண்ண ராமானுஜர் பிரார்த்திக்க- -கொடுக்கலாம் கொள்ளலாம் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –-ஞானம் –விசேஷ சாஸ்த்ர மரியாதைக்குப் போகும்வைதிக மரியாதைக்கு ஒவ்வாது என்று விலக்கி ராமானுஜரை இழந்தார் வைஸ்யர் –-இவர் பேறு இந்த லக்ஷணம் – பகவத் பக்தி மஹாத்ம்யத்தாலே நிவ்ருத்தமானதே இவரது நிக்ருஷ்ட ஜென்மம் –சிஷ்யார்ஜமான பேற்றை இழந்தது-பூர்வ கால சம்பந்தம் -வைஸ்ய தேக சம்பந்தம் – இப்பொழுது தேவ பெருமாள் சம்பந்தம் நிக்ருஷ்ட ஜென்மம் இழவுக்கு காரணம் ஆனதே என்னில் –லாபம் –கேவல பரார்த்த  -குண அனுபவ கைங்கர்யம்தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே-பகவத் பாகவத ஆச்சார்யர் –அனுபவ கைங்கர்ய விசிஷ்ட வேஷத்தாலே முமுஷுக்களுக்கு ப்ராப்யம் ஆகிறான்-இழவாவவது இதற்கு அசலாகப் போவது )

அதாவது –
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷமும் இவை இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று -என்கை –
அன்றிக்கே –
இதில் ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை -(205)என்பது இழவுக்கு உறுப்பமாகில் த்யாஜ்யம் இறே -(207)என்பதாகா நின்றீர் -இங்கனே சொல்லலாமோ -வேதத்யாயநாதி முகத்தாலே பகவல் லாப ஹேதுவாகையாலே-ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு உடலாகவும் –அவற்றினுடைய அபகர்ஷம் அத்யயநாதிகளுக்கு அனர்ஹம் ஆகையாலே இழவுக்கு உடலாகவும் கொள்ள  வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார் –ஜன்ம விருத்தங்களினுடைய என்று தொடங்கி-
அதாவது
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷம் இழவுக்கு பிரயோஜகம் அன்று என்கை –
பேறு இழவுகள் ஆவன -பகவல் லாப -தத் அலாபங்கள் – பிரயோஜகம் ஆவது -பலிக்குமது
உத்க்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களில் சிலர் இழப்பாரும் – சிலர் பெறுவாருமாக காண்கையாலும் –அபக்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களிலும் அப்படியே இரண்டு வகையும் உண்டாகக் காண்கையாலும்-இவை இரண்டும் இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று என்னும் இடம் பிரத்யஷ சித்தம் இறே

——————————————–

ஆனால் பேறு இழவுகளுக்கு பிரயோஜகம் ஆவது என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

சூரணை-209–
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்-
தத் அசம்பந்தமும் –

(ஆயி ஸ்வாமிகள்-பிரயோஜகம் தல் லாபம் பேறு –சதாச்சார்ய அங்கீ கார ரூப பகவத் சம்பந்தம்  -அங்கீகார மூலம் இல்லை -அங்கீகாரமே பேறு–தத் அபாவ ரூபமே இழவு  உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட நிர்பந்தம் இல்லை -தத் அங்கீ கார விசேஷம் இத்தை அயன சம்பந்தம் என்னாமல்–அது இல்லாதார் இல்லையே – ஆச்சார்ய சம்பந்தம் தானே அசாதாரணம் –உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துள்ளதால் பகவத் சம்பந்தம் – அது லாபம் இல்லையே அது இல்லை இழவு என்னக் கூடாதே -பகவத் சம்பந்தம் இல்லாத ஒன்றே இல்லையே —ஆச்சார்ய சம்பந்தம் இருந்தால் பசுவோ மனுஷமோ பஷியோ பாகவத ஆச்சர்ய சம்பந்தத்தால் பேறு -பகவத் சம்பந்தம் பொது -சர்வாத்மா அந்தராத்மா இல்லாமல் பகவத் கடாக்ஷம் என்னலாமோ என்னில் அது ஆச்சார்ய சம்பந்தம் மூலமேசாஷாத் நாராயண தேவோ பீதக வாடைப் பிரானார் -என்பதால் பேறு பகவத் சம்பந்தம் என்னவும் குறை இல்லையே –அவன் ஆச்சார்ய பீடத்தை ஆசைப்பட்டதால் -ஆச்சார்ய ரூபமான பெருமாள் சம்பந்தம் – பந்த மோக்ஷ ஹேது பெருமாள் – ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது )

(பாப யோனிகள் என்னை அடைகிறார்கள் -ஸர்வத்ர ஸ்திரீகளோ -சர்வ வர்ணத்தவர்களோ -என்றானே கீதாச்சார்யர்-அநந்யார்ஹ சேஷபூதர் என்ற ஞானம் இருந்தால் தானே பகவத் சம்பந்தம் -இந்த ஞானம் இல்லாமல் அன்றோ இழக்கிறோம் –ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேணும் -விலக்காமை வேணும் என்றாரே –அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் உள்ளவன் விலக்க மாட்டானே -அவனுக்கு பெருமை சேர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டுமே )

அதாவது –
பகவல் லாபமாகிற பேற்றுக்கு பிரயோஜகம் -நாம் பகவத் அனந்யார்ஹ சேஷ பூதர் என்று இருக்கை யாகிற பகவத் சம்பந்தம் –
தத்  அலாபமாகிற இழவுக்கு பிரயோஜகம் -தத் அனந்யார்ஹ சேஷத்வ ஞான  அபாவம் ஆகிற தத் சம்பந்த அபாவம்  என்றபடி –

—————————————-

உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களில் இருவருக்கும் பகவத் சம்பந்தம் உண்டானால் பாகவதத்வ சாம்யம் அன்றோ உள்ளது -அத்தோடு ஜன்ம உத்கர்ஷமும் உடையவன்
மற்றை அவனைப் பற்ற விசிஷ்டன் அன்றோ என்று நினைத்து பண்ணுகிற பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

சூரணை -210-

பகவத் சம்பந்தம்
உண்டானால்
இரண்டும் ஒக்குமோ என்னில் –

(ஜென்மத்தால் உத்க்ருஷ்டர் -அபக்ருஷ்டர் -இருவருக்கும் பகவத் சம்பந்தம் உண்டானால் -இருவருக்கும் அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் இருந்தால் – தார தம்யம் உள்ளதோ என்னில்-அடுத்த சூரணையில் உண்டு என்கிறார் – –
இரண்டு பூர்வபக்ஷம் –வேதா பாஹ்யர் குத்ருஷ்டிகள் -இரண்டு வர்க்கம் –ரஹஸ்ய த்ரயம் ஆத்மாவைப் பார்க்கும் – சாஸ்திரம் சரீரத்தைப் பார்க்கும் -மர்ம ஸ்பர்சி அது தோல் புரையே போகும் –இங்கு ரஹஸ்ய த்ரய பாஹ்யர்கள் ரஹஸ்ய த்ரய குத்ருஷ்டிகள் -பிரமாணம் என்று ஒத்துக் கொள்ளாதவர் -தப்பு அர்த்தம் சொல்லுபவர் -இரண்டு வர்க்கம்-பள்ள மடையார்–தப்பு அர்த்தம் சொல்பவர்களுக்கு இந்த பெயர் -மிஸ்ர ஸம்ப்ரதாயர் பாஹ்யர் -பிரமாணம் என்று கொள்ளாதவர் –ஜென்மத்தால் ப்ராஹ்மணன் தானே உசந்தவனாக இருக்க வேன்டும் -என்பர் பாஹ்யர்  நைச்யம் வராதே இவர்களுக்கு -அருள் பள்ள மடையாக ஓடி வருவது நிஹீன ஜென்மம் தானே-மேலும் உபாயாந்தரங்களில் போக மாட்டானே -அதனால் இதுவே – உயர்ந்தது என்பான் பள்ள மடையார் –இரண்டும் ஒக்குமோ என்று இந்த இருவர் கேள்விகளையும் சேர்த்தே சூரணை –சமம் இல்லை -என்ற பதில் – பாகவதத்வ சாம்யம் மட்டுமே உண்டானது -சரீரதயா-ஜன்ம உத்கர்ஷமும் உடையவன் மற்றவனைப் பற்ற –
பூர்வ பக்ஷம் இரண்டு என்பதால் பொதுவான சப்தம் -இதனால் அபகர்ஷ என்று சொல்லாமல் மற்றவன் என்கிறார் –
கீழே ஒருவன் மற்றவனைப் பற்றி என்று சொல்லாமல் உத்க்ருஷ்டன் என்றது பூர்வ பக்ஷிகள் இரண்டு பூர்வபக்ஷம்-தங்கள் தங்கள் பக்ஷம் உத்க்ருஷ்டன் என்று நினைத்து இருப்பதால் இருவர் நினைவும் தப்பு தானே —கேவல ப்ராஹ்மணர் கேவல சூத்ரன் எல்லை -பாகவத ப்ராஹ்மணர் பாகவத சூத்ரன் எல்லை பற்றி கேள்விகளும் பதிலும்
மத பேதத்தால் உத்க்ருஷ்ட நிக்ருஷ்ட ஜன்மாக்கள் பகவத் சம்பந்தத்துக்கு  சஹகாரம் என்பர் இந்த இரண்டு பூர்வ பக்ஷிகளும் – பாகவதத்வம் -பகவத் சம்பந்த கார்யமது ஒழிய முன்பு கேவல ஜென்ம வர்ணம் –இப்பொழுது பாகவதர்  பழைய நிலை நினைவே வராதே-அநந்யார்ஹ சேஷபூதனான பின்பு இந்தக் கேள்வியே வராதே- இவனுக்கு  நினைவு வந்தால் அதே கேவல நிலைமை வருமே-பகவத் கிருபா விசேஷத்தாலே
மிஸ்ர சத்வம் போக்கி சுத்த சத்வம் கொடுப்பார் – தமோ குணம் போக்கி சுத்த சத்வ குணம் கொடுப்பார் -அதனாலே பள்ள மடையாய் பாயும் என்பதும் சேராதே-பாரமாய் பழ வினை பற்று அறுத்த பின்பு -பழைய தமோ குணம் இருக்காதே -பள்ள மடை வாதம் ஒவ்வாதே -பாணர் குலத்தில் இருந்தாலும் தள்ளுபடி இல்லை என்பதே-பாணர் குலத்தில் பிறந்தால் தான் என்பது இல்லையே -பகவானை நெருங்க வேண்டிய சஹகாரம் இருவருக்கும் பகவத் கடாக்ஷம் அடியாக வந்த சத்வ குணம் தானே –நம்மைப் பார்க்காமல் தன்னைப் பார்த்து -தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே நாங்கள் வேண்டுவது -இதுவே நிலை நிற்கும் – பாகவத ஜென்ம நிரூபணம் பண்ணக் கூடாதே முன்பே அருளிச் செய்தாரே -ஜென்ம சித்த நைச்சியம் -உபாயாந்தர அதிகாரம் இல்லாமை இத்யாதிகளால் பிறப்பால் தாழ்ந்தாலும் உயர்ந்தது என்று ஒரு பக்ஷமும்-மிஸ்ர சத்வ குணம் இருப்பதாலும் வேத அத்யயயன அதிகாரம் இருப்பதால்-சாஸ்திரம் கொண்டே அவன் அபிமதம் ஏது என்று அறிந்து -அறிவித்து -இதனால் உயர்ந்த ஜென்மம் -பகவத் சம்பந்தம் ஆனுகூல்யம் இருப்பது என்று ஒரு பக்ஷமும் –அனைவரும் அறியவே அருளிச் செயல்கள் தமிழில் –ஸ்ருஷ்ட்டி முழுவதும் வாசியாய் இருந்தாலும் சமோஹம் சர்வ பூதானாம் -விஷம ஸ்ருஷ்ட்டி லீலோ பின்ன ருசி –வேதம் வர்ணாஸ்ரமம்-இத்யாதி சொல்லி உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களையும் சொல்லி அருளிச் செயல்களும் அனைவருக்கும் பகவல் லாபத்தை அருளுகிறார் தன் பேறாக என்றும் அறிவித்து -சர்வம் சமஞ்சயம் இது கொண்டு ஒருங்க விடுவாரே -)

பகவத் சம்பந்தம் உண்டானால் இரண்டும் ஒக்குமோ என்னில் -என்று -இரண்டும் -என்று
உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மங்களைச் சொல்லுகிறது –

——————————————–

சூரணை -211-

ஒவ்வாது –

(ஆயி ஸ்வாமிகள்-இது சித்தாந்தம் -கீழே பூர்வ பக்ஷங்கள் வாக்கியங்கள் – லாப ஹேதுவான இந்த பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் – ஒக்குமோ -பிரஸ்னம் கீழே-ப்ருஷ்டா கேள்வி கேட்டவன்-நினைவு மாறி அன்றோ கொண்டான் -தாழ்ந்ததை உயர்ந்ததாகவும் உயர்ந்தத்தை தாழ்வாகவும்-இரண்டு பக்ஷங்களும் —நினைத்ததை -ஒத்தது ஆகாது -என்று உத்தரம் அருளிச் செய்கிறார் -)

(கேட்ட படியே இல்லை வாக்ய வையர்த்யம் -பொருந்த வேண்டுமே -இரண்டு வாதங்களும் தொடரும் -ப்ரச்னத்தில் சப்தம் மாத்திரம் ஏக ரூபமாய் -நினைவுகள் மாறி அன்றோ இருந்தது சொல்லு மட்டும் ஓன்று -அர்த்தம் வேறே தானே -பிராகிருத சரீரத்தால் வருமவை எல்லாம் த்யாஜ்யம்  -பகவத் கிருபையால் நிர்ஹேதுகமாக வருமவை எல்லாம் உத்தேச்யம் –
தேக உபாதியால் வந்த எதுவானாலும் அநர்த்த ஹேதுக்களாக கொண்டு -என்பதால் இரண்டு பக்ஷங்களும் நிரஸ்தம் –அவற்றில் சிலவற்றைக் கொண்டு -பகவத் சம்பந்தத்துக்கு அனுகூலமாகவும் -பிரதிகூலமாகவும் – இருவரும் வாதம் செய்வது வியர்த்தம் தானே –
அனுகூலமானவற்றையுமே த்யாஜ்யம் என்றதன் பின்பு பிரதிகூலங்களைச் சொல்ல வேணுமோ -யதாவஸ்திதமாக திரு உள்ளம் பற்ற வேன்டும்-சில விஷயம் நீ குணம் என்பதே தோஷம் . தோஷம் என்பதே குணம் கிருபையால் சத்தை பெற்றால் நீங்கள் சொன்ன குணங்கள் அனைத்தும் இருவருக்கும் வரும் எல்லாம் உத்க்ருஷ்டம் அபக்ருஷ்டம் என்று சொல்லாமல் -நீ நினைப்பது ஒவ்வாது -தேக உபாதியால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாதே முதலிலே பார்த்தோமே –பாகவதத்வம் பார்த்த பின்பு இன்னும் அத்தை பார்க்கலாமா – சித்தாந்தி -விலக்ஷணன்-என்பது இருவர் இடமும் பூர்வ பக்ஷி சொன்ன நான்கு குணங்களும் உள்ளவன் –ப்ராஹ்மணரும் இல்லை சூத்ரரரும் இல்லை எதிர்மறையால் அவை சித்திக்கும் –அது தான் விலக்ஷணம் -த்ருதீய விபூதி போலே கருணை அடியாக வந்தவை -தேகம் இருந்தாலும் இந்த நல்லவை இருக்குமே கேவலம் மதிய தயை -என்பான் பிராட்டி புருஷகாரம் செய்த பின்பு -சந்தோஷமாக பிராட்டியும் ஆச்சார்யர்களும் மகிழ்வார்கள் –சொத்து ஸ்வாமி இடம் சேர்ந்ததே தம்மை போலே -என்று -அதே போலே இங்கும் —விஷயீகாரத்துக்கு பின்பு சரீரகத தோஷங்கள் அனைத்தும் நீங்கி எல்லாமே உத்க்ருஷ்டமாகுமே -ரஜஸ் தமஸ் கலசாத சுத்த சத்வம் அன்றோ-விலக்ஷணர்-இரண்டு வர்ணத்தவரும் என்று பிரதிபக்ஷம் மீண்டும் சொல்ல விலக்ஷணம் என்றாலே -வேறு பட்ட உயர்ந்த –என்பதால்-ப்ராஹ்மணரும் அல்லர் சூத்ரரும் அல்லர் – விலக்ஷணர்-அனைவரும் எந்த வர்ணத்தவராக முன்பு இருந்தாலும் உத்க்ருஷ்டர் என்பது பலிக்குமே)

ப்ருஷ்டாவானவன் -உத்க்ருஷ்டமாக நினைத்ததை அபக்ருஷ்டமாகவும்  அபக்ருஷ்டமாக நினைத்ததை உத்க்ருஷ்டமாகவும் திரு உள்ளம் பற்றி அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறார் -ஒவ்வாது -என்று –

————————————-

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-
பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

(ஆயி ஸ்வாமிகள்-ஜிதந்தே ஸ்லோகம்=புண்ய காலம்-புண்ய தேசம்-புண்ய தீர்த்தம் – சரீரம் இருக்க பயமாக உள்ளதே -சரீரம் தர்ம சாதனம் -அவனே உபாயம் என்கிற விசுவாசம் குலையுமே இவற்றால் -ச வாசனமாக த்யஜித்த -சர்வ தர்மான் பரித்யஜ்ய -ஸ்வரூப விருத்தம் என்று விட்டோமே -இவை மீளவும் மூட்டுமே-தையும் அம்மாவாசையும் திருப்புல்லாணியும் சரீரமும் இருக்க பயமாகுமே –அவற்றை ஒழிக்க வேண்டாம் -சரீரத்தை விலக்கலாமே-நிவ்ருத்தி அதிகார பிரம்சத்தை பிறப்பிக்கும் -தியாக நிஷ்டருக்கு மஹா பயத்தை விளைவிக்கதாய் இருக்கும் -)

(ஆபிஜாதி யாதிகளாலே-ஆதி வித்யா விருத்தங்களை சொல்லும்-அதஸ்மின் தத் புத்தியாலே-அது அல்லாததில் அது புத்தியால் என்றவாறு -விரோதங்களை நல்லது என்று -தமோ குணம் உயர்ந்தது என்றானே பள்ளமடை வாதி  கர்மத்தால் வந்த இவை  பயத்துக்கு காரணமான சரீரத்தால் வந்த ஜென்மங்களை உத்க்ருஷ்டம் என்று இரண்டு பேரும் சொல்கிறீர்களே -என்று நிரசிக்கிறார் –தது தது குண தோஷங்களை ஐந்து வாக்யங்களால் தர்சிப்பிக்கிறார்  உயர்ந்த குலம் –அநந்யார்ஹ சேஷத்வ அனுகூல தயா – உத்தம குலம் – பிறப்பால் இல்லை – மாறனேர் நம்பி – விளாஞ்சோலை பிள்ளை போல்வார் -உறி அடி கோஷ்ட்டியில் பட்டர் -கிருபை பொழியும் குலம் – கருணை விஷயமாகவே வேண்டுவது —பள்ள மடையானுக்கு -சூத்ர ஜென்மம் உயர்ந்தது -சம்பந்தத்துக்கு அனுகூலமாக இருக்கும்  மிஸ்ர ஸம்ப்ரதாயனுக்கு த்ரை வர்ணிக குலம்  இரண்டும் பிராகிருத உபாதியால் வந்தவை என்பதால் -அஹங்கார ஹேதுக்கள் ஆகுமே -அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைய அவர் உண்டே – சத்வ குணம் வேணும் தமோ குணம் கூடாது -சாஸ்திரம் வேன்டும் -உபாயாந்தரங்கள் கூடாதே-பகவத் இச்சாதீன தேக ஸ்திதி வந்தால் –கிருபாதீனமாக -மிஸ்ர தத்துவமே இருக்காதே –பிராகிருத தேசத்தில் உண்டே சாஸ்திரம் சொல்லுமே -சுத்த சத்வத்துக்கு நிகரான என்றவாறு –குலம் தரும் செல்வம் தரும் என்றாரே
பகவத் இச்சாதீன குலம் என்றவாறு -பூர்வமே நிவர்த்தங்கள் குலம் கிராமம் கோத்ரம் சரணம் இவை இல்லை என்றாலும் மோக்ஷம் பர்யந்தம் ப்ராரப்தம் —பஞ்ச விம்சதி பிராக்ருதி அனுவர்த்தித்துக் கொண்டே இருக்குமே-ஸ்வ பாவத்தால் அஹங்காரத்தை விளைக்காதோ–துளியும் குறையாமல் – பகவத் பாகவத அனுவர்த்த அர்த்தமாக -பக்தி மாஹாத்ம்யத்தாலே –
நிர்ஹேதுக கடாக்ஷ ஆயத பகவத் பக்தி -ரஜஸ் தமஸ் பல் வாங்கின பாம்பு போலே -இருக்கும் – பாம்பு தான் -சரீரம் -பல்லை பிடுங்கின பின்பு பயம் இருக்காதே 
இருந்தாலும் பாம்பு பாம்பு தானே -சரீரம் சரீரம் தான் ரஜஸ் தமஸ் நீக்கப்பட்டு நிரவீர்யமாய் -அவற்றால் காதா சித்கமாக அபிபவம் பண்ண முடியாமல் -அபிபவ -அர்ஹதை இருக்காதே -வாய்ப்பு ஒழிந்து -போனதே–ஞான ஜென்மம் வந்ததே -அபி விருத்த தமோ குண தேகமும் போகுமே -அவித்யைகளும் அஹங்காரமும் உண்டாக யோக்கியதையும் இருக்காதே –சரீர ரூப ஜென்மம் கழிந்து ஞான ரூப ஜென்மம் அன்றோ இவர்களுக்கு -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -)

(நின்றது ஊரகத்து -இருந்தது பாடகத்து-கிடந்தது திருவெஃகா முன்பு –நின்றதும் இருந்ததும் -கிடந்ததும் -என் நெஞ்சுள்ளே இப்பொழுது –அனவரத கால ஷேபம்-திரு மந்த்ராதிகள் -சகல அஞ்ஞானம் நிவர்த்தகம் -ஆன பின்பு விலக்ஷணன் ஆவான்
மகாரம் தேஹாத்ம  ஆய ஸூவ ஸ்வதந்த்ர அஞ்ஞானம் – உகாரம் அந்நிய சேஷத்வம்-நமஸ் -ஸூவ சேஷத்வ  உபாயாந்தர -ஆபாச பந்து நாராயண -பிராப்யாந்தர ஆய –அல்வழக்கு ஒன்றுமே இல்லா -ஏழும் -ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்களையும் தொண்டைமான் சக்கரவர்த்திக்கு உபதேசித்து விஸ்ம்ருதி இன்றிக்கே அனுவ்ருத்தமாய் செல்லுமே – -அஹங்கார யோக்யதை இல்லையே  அ விலக்ஷணர் எல்லா வர்ணங்களிலும் –
பாகவத அனுவர்த்தனத்துக்கு இசையாதார்கள் –பகவத் விஷயத்தில் அத்யந்த அநு கூல்யம் இல்லையே –சர்வேஸ்வரன் பிரதம பிரவ்ருத்தியில் – மகனே உன் சமத்து-கர்மாதீனம் -ஜென்மம் அஹங்காரம் வர குறை இல்லையே  விலக்ஷணர்பாகவத அனுவர்த்தனத்துக்கு இசைந்து விசேஷ அபிமதத்துக்கு ஆள் ஆவோம் -த்வத் ஏக ரக்ஷகம்-பிரார்த்திக்குமவர்கள் பக்கல் -கல்யாண புத்தி யோகம் குருவன் கல்யாண பிரவ்ருத்தியில் மூட்டுவான் –
அதிமாத்ரம் அனுகூல்ய பிரவர்த்தி விஷயத்தில் அருளுவான் –பாகவத அபசாரம் கிருபையை அழிக்குமே– சர்வ அதிகாரங்கள் -சாதனாந்தரங்கள்–புண்ய காலம் புண்ய தேசம் விசேஷங்கள் உண்டே – பல தாரதம்யங்கள் உண்டே-பய ஹேதுக்கள் –அநந்ய உபாயத்வ நிஷ்டை குலையுமோ -என்ற அதிசங்கை உண்டே – கேவல பகவத் இச்சைக்காக செய்கிறோம் கைங்கர்ய ரூபமாக செய்ய வேண்டுமே – திருமந்திரம் அனவரத கால ஷேபம் மூலமாகவே அநந்ய சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் ஞானம் கொண்டு உபாயாந்தர கந்தம் மானஸ ரூபமாக அடுத்தவர் ஒருவர் நினைக்க அவர் முகம் பார்க்கவும் சகிக்க மாட்டார் –இந்த அதிகாரி – இவை எதில் மூட்டி அழிக்கும் என்ற பயம் இருக்குமே சரீரம் இருக்கும் வரை -)

ஆபிஜாதி யாதிகளாலே -அஹங்கரித்து நசிக்கைக்கு உறுப்பு ஆகையாலே -அபக்ருஷ்டமாக இருக்கிற இத்தை – உத்க்ருஷ்டமாக நினைத்து -பிரஸ்னம் பண்ணிற்று -அதஸ்மின் தத் புத்தியாலே -என்னும் இடம் தோற்ற – உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் -என்கிறார் –

பிரசம்ச  சம்பாவனையாவது –உபாயாந்தரங்களில் அன்வயத்தாலே அன்யோபாவத்யமாகிற வதிகாரத்தின் நின்றும் நழுவதல் வருகைக்கு யோக்யமாய் இருக்கை –
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –என்றது -காலேஷ் வபிச சர்வேஷு -என்று தொடங்கி –
உபாயாந்தர அனுஷ்டானந்தத்துக்கு யோக்யங்கள் ஆகையாலே -பய ஹேதுக்கள்  ஆனவற்றைச் சொல்லி வருகிற அடைவிலே -அவை எல்லா வற்றிலும் பிரதானமாக -சரீரேச வர்த்ததே மே மகத்பயம் ஆகிற-என்று சொல்லுகிற படியே
ஸ்வரூப யாதாத்ம்ய வித்துகளாய்-உபாயாந்தர கந்த அசஹயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு இது இருக்க இருக்க – என் செய்யத் தேடுகிறதோ -என்னும் பயத்தை விளைக்குமதாய் இருக்கும் என்ற படி–

—————————————

இன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளிச் செய்கிறார் –

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும் –

(ஞான ஜென்ம ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் ஏறிட்டு கொள்ள வேன்டும் –கர்மாதீன சரீரத்துக்கு -உத்க்ருஷ்டமாக பிரமித்த சரீரத்துக்கு இரண்டு பக்ஷங்களும் இதில் அடக்கம் – -தோஷம் சொல்லும் சூரணை இதுவும் – இன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளி செய்கிறார் –இதிலும் இரண்டு கோஷ்டிகள்-ப்ராஹ்மணர்க்கு இயற்கையில் வராது –பாவிக்க வேன்டும் அறிய முடியும் –ஸ்வரூப பிராப்தம் என்றது பள்ள மடையானுக்கும் சேர்த்து அருளிச் செய்கிறார் -தேக ப்ராப்தமான நைச்யத்தை சொல்ல வில்லையே 
விசிஷ்ட ஜன்மத்துக்கு )

( ஆயி ஸ்வாமிகள்-சேஷத்வ ரூப ஸ்வரூப–ஞான ஸ்வரூப – ப்ராப்தமான நீச பாவத்தை –ஸ்வாதந்த்ரத்துக்கு எதிர்மறை சேஷத்வ ரூபம்- ஸ்வரூப பிராப்தம் என்றதால் தேக பிராப்தம் இல்லை -விலக்ஷணர் கோஷ்ட்டி தானே இது —பாகவத அனுவர்த்த நாதிகளில்-வந்தால் தானே பகவத் விசேஷ கடாக்ஷம் கிடைக்கும் )

(பாவித்தல் என்றது பிறர் பண்ணப் பார்த்து அறிந்து செய்ய வேன்டும் என்றபடிதத் பாத தீர்த்த ஸ்வீகாரம் –அவஸ்ய அபேக்ஷிதம் — ஸ்வரூபத்துக்கு சேராத தாழ்ச்சி கூடாதே -தேவ பாகவதர் நாரதர் -மனுஷ்ய பாகவதர் -த்ரை வர்ணிக பாகவதர்  இத்யாதி தேக பிராப்தம் கூடாதே-ஆத்ம ஸ்வரூபம் பார்த்து தாழ்ச்சி வர வேன்டும் – சகல பாகவத சேஷத்வ பர்யந்தம் தாழ்ச்சி கற்று கொள்ள வேன்டும் –ஞான ஜென்மம் உடையவனும் இயற்கையாக இருக்கும் -அனுஷ்டானம் பல காலம் கண்டு கற்று கொள்ள வேன்டும் –அபிமான விஷய பூதர்கள் எத்தனை ஹீனர்களாக இருந்தாலும் அடியில் தங்கள் முடியிலும் அல்லாதார் எத்தனை உயர நின்றாலும் அவர்கள் முடியில் தங்கள் முடியுமாக இருப்பார்கள் ஞான ஜென்ம விசேஷணர்கள்)

அதுக்கு -என்று கீழ்ச் சொன்ன ஜென்மத்தை பராமர்சிக்கிறது –
ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் பாவிக்க வேணும் –என்றது-பாகவத அனுவர்த்த நாதிகளில் வந்தால் சேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு தகுதியான தாழ்ச்சி – பிறர் செய்கிறது கண்டு அனுகரித்து கற்க வேணும் என்ற படி –

———————————–

ஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய தோஷ பாவத்தை அருளிச் செய்கிறார்-

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த
உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

(ஆயி ஸ்வாமிகள்--நிர்பயர் ததீயரை அனுவர்த்திக்கும் இடத்தில் ஜென்மம் உடைய நாம் அனுவர்த்திக்கிறோம் என்ற -எண்ணம் -சேஷத்வம் நிரூபிக்காமல் தானே உண்டாகும்-நிவ்ருத்தி அதிகாரம் போகாதே –சேஷத்வ ஸ்வரூப பிரயுக்த எண்ணம் தானே -அநந்யார்ஹ சேஷ பூதன் அன்றோ -சம்பாவனை வாய்ப்பே இல்லையே நழுவ -நிஷ்க்ருஷ்ட வேஷம் -பய ஜனகமும் இல்லை  இரண்டு பிரபல தோஷமும் இல்லை –  

(திருமந்திரம் அறியவே குலம் தரும் என்றது நிலை நிற்குமே -சேஷத்வ அனுகூலம் தானே –
ஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய–கர்மாதீனம் -அசித் 24-அதனால் உருவாக்க அதி ஹேயம் -யாவன் மரண பாவி -அஹங்கார மமகார -புண்ய பாபம் கர்மங்கள் ஆர்ஜிதமாய் – கிராமம் குலம் -உத்க்ருஷ்டமாக பிரமிக்கப்பட்டதாய் – தோல் புரையே போமது -சரீர ஜென்மம் -எதிர் மறை கிருபையால் -யாவதாத்மா பாவி -அஹங்கார மமகார பிரதிபடமாய் புண்ய பாப நிவர்த்தகமாய் -தாஸ்ய ஏக வியாபதேசம் ஆபாதகமாய் —
மர்ம ஸ்பர்சி -பயம் இல்லை -ஜென்ம சித்த நைச்யம் –ஆகார த்ரய ஞான விசிஷ்டானாய் கொண்டு -பாகவதர் என்று மட்டும் பார்த்து அனுவர்த்தனம் -பூர்வ அபாகவதம் என்று பாராமல் —சனகன் நாரதாதி தேவ பாகவத -கஜேந்த்ராதி திர்யக்-சபரி மனுஷ்ய பாகவத  பிருந்தாவன ஸ்தாவர பாகவத கொடி புல் அனைத்தும் -அனைவருக்கும் நைச்ய பாவம் -அறிய வேன்டும் -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே என்பார்களே  கண்ணன் -கோபிகள் திருவடி பட்ட லதையாகவோ ஓவ்ஷதியாகவோ-
அணைய ஊர புனைய –அடியும் பொடியும் பட –பர்வத பவனங்களிலே –தாஸ்ய ஸூகம் கிரீட ஜென்மம் -உத்பத்தி விநாசங்கள் அங்கேயும் படியான ஜென்மம் -ஆசைப்பட்ட பெரு மக்கள் – அத்யாதரத்துடன் பிரார்த்திப்பார்கள் -திருக் கண்ண மங்கை நாயை பார்த்தும் அறிந்தும் -அனந்தாழ்வான் எறும்பு அனுவர்த்தித்தாப் போலேயும் -பெருமாள் பெரிய உடையார் இடத்தில் செய்தபடியும் -கச்ச லோகான் அநுத்தமான் -நிவாஸ செய்யா -சென்றால் குடையும் -அணி விளக்கம் -தாச சஹா -ஸ்தாவராதி சரீர ஆஸ்தானம் பண்ணின படியையும்–நெருப்பு கூண்டுக்குள் சிக்கி -சவுரி பெருமாளை சிந்திக்காமல் இருப்பவர் உடன் இருப்பது -எண்ணாத மானுடத்தை இறை பொழுதில் எண்ணோமே -புல்லை திணிமினே-ஆளாகாதாரை அநாதரித்து வாழ வேண்டுமே –அவைஷ்ணவர்கள் கூட சகவாசம் இல்லாமல் வைஷ்ணவர்களுக்குள் தார தம்யம் பாராமல் நாள் தோறும் அனுவர்த்தித்தும் –திட விசுவாசம் விலக்ஷணர்களுக்கு ஜென்ம சித்தம் -கற்றுக் கொள்ள வேண்டாம் -)

ஆபிஜாத்யாதிகளால் -வரும் அகங்கார யோக்யதை இன்றிக்கே -சேஷத்வ அனுகூலமாய் இருக்கையாலே -உத்க்ருஷ்டமாய் இருக்கிற இத்தை அபக்ருஷ்டமாக நினைத்ததும் அதஸ்மிம்ஸ் தத் புத்தி என்னும் இடம் தோற்ற -அபக்ருஷ்டமாக பிரமித்த உத்க்ருஷ்ட ஜென்மம்-என்கிறார்-
இரண்டு தோஷமும் இல்லை -என்றது பிரமச சம்பாவனையாலே வரும் பய ஜனகத்வமும் –
ஸ்வரூப பிராப்தமான நைச்யம் பாவிக்க வேண்டுகையும் ஆகிற தோஷ த்வயமும் இல்லை என்ற படி-

——————————————

பிரசம்ச சம்பாவனை அன்றோ இல்லாதது -நைச்ய பாவனை இல்லையோ என்ன -அருளி செய்கிறார் –

சூரணை -215-

நைசயம் ஜன்ம சித்தம்-

(ஆயி ஸ்வாமிகள்-ஜென்ம சித்தம் -ஞான ஜென்மம் என்பதே இங்கே –பள்ள மடையார் -மிஸ்ர ஸம்ப்ரதாயத்தார் -இருவர் பக்ஷமும் நிரசனம் முன்னமே -திருமந்த்ரார்த்தம் அறிந்து -காலஷேபம் பல காலும் –ததீய அனுவர்த்தனம் -ததீய விஷய நைச்யம் ஞான ஜென்ம பிறந்த உடனே பிறக்கும் -தகுமோ என்னும் பிரபத்தியால்திரியக் ஸ்தாவர பாகவதர்கள் ஒவ் ஒருவரும் மற்றவர் இடம் நைச்யம் சித்தம் -)

(பிரசம்ச சம்பாவனை அன்றோ இல்லாதது –நமஸ் அர்த்தம் வந்ததும் -ப்ரம்ச சம்பாவனை -நழுவுதல் -உபாயாந்தர சம்பந்த சம்பாவனை வராதே -ததேக ஏக உபாயத்வ புத்தி ஸ்திரமாகும் -பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் –பாகவத அனுவர்த்தனம் -அத்யந்த அபிமதம் –பிரதம பிரவ்ருத்தியும் தான் ஏற்றுக் கொள்வான் –
சகல பாகவதர்களுக்கும் நீசன் – நினைத்தால் மட்டும் போதாது முன்பு போலே -இங்கே கைங்கர்யம் பண்ண வேண்டுமே ததீயர்களுக்கு –விலக்ஷண ஜென்மம் உடையவர்களுக்கு நைச்யம் பாவிக்க வேண்டிய தோஷம் இல்லையோ என்ன ஜென்ம சித்தம் என்ற பதில் -வசிஷ்டாதி பாகவதர்களை மட்டும் சகல பாகவத அனுவர்தனம் -பூர்வ அபாகவத்பவ நினைவும் இல்லாமல் செய்கிறார்களே -பிறந்து உடைமை –பால்யாத் ப்ரவ்ருத்தி போலே இவர்களுக்கு பள்ள மடையாக தாழ்ச்சி உண்டே -மந்த்ரம் தாயாக பெற்றவர்கள் அன்றோ –
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருப்பார்கள் —
சேஷத்வ ஞானம் ஏற்பட்டதால் –வித்யை தாயாகப் பெற்று –விலக்ஷண ஜென்மம்
நமஸ் -தாத்பர்யம் ததீய சேஷத்வ ஞானம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –நின் திரு எட்டு எழுத்தும் கற்று -புத்தியில் பட்டால் போதாது -உபாயாந்தரங்கள் உபாயம் இல்லை -பண்ணிக் காட்ட முடியாதே -பிரவ்ருத்தி விஷயம் – கைங்கர்யம் பண்ணிக் காட்ட வேண்டுமே -வாசி உண்டே-பிரதிபத்தி தியாக புத்தி மட்டும் அங்கே போதும் -இங்கே வ்ருத்தி ரூப நைச்யம் அனுஷ்டான ரூபம் -சதுர்வித பாகவதர்களுக்கும் த்ரிவித கரணங்களாலும் செய்யும் கைங்கர்யம் -பகவத் அபிமத விசேஷம் பிறந்த பின்பு தானே இவன் ஜென்மம் -அனுஷ்டான பர்யந்தமான காஷடை –விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பாரே –
செயல் படுத்தும் எல்லை -அநந்யார்ஹாதி சேக்ஷத்வாதி –பாகவத அநந்யார்ஹ சேஷத்வ சரண்யத்வ போக்யத்வ —ஆகார த்ரய ஞானத்தால் உண்டானது–ததியர் அளவும் கூட்டிப் போகுமே–செறிவு அடைந்து -இதற்காக அனவரத கால ஷேபம் -பிறந்து உடைத்தாய் -பிறப்பதற்கு முன்பே இருக்க வேன்டும் –அனந்தம் பிரதம ரூபம் -இருந்ததால் தானே பால்யாத் ப்ரவ்ருத்தி போலே ஜென்மத்துக்கும் பூர்வ பாவியாய்க் கொண்டு -அத்தோடு -பிறந்த காலத்தில் கூட வருமே நைச்யம் கற்று வல்லரானார் ஆயிற்றுசந்தங்கள் ஆயிரம் அறிய கற்று வல்லார் வைஷ்ணவர் -கற்றார் ஞான மாத்திரம் கற்று -வல்லார் அனுஷ்டான பர்யந்தம் -கற்று அதற்குத் தக்க நிற்க வேண்டுமே – சரீர ஜென்மமத்தில் பிறந்து ஞானம் பெற்று அனுஷ்டானம் –ஞான ஜன்மத்துக்கு அப்படி இல்லை-தொழுது எழு -இரண்டு கிரியை இல்லை – தொழுதால் உயர்வது -உயர்ந்தவன் தொழுவான் -பிறக்கை வேறே உயர்தல் வேறே இல்லை பிறந்தார் உயர்ந்தே )

அதாவது பாகவத அனுவர்தனாதிகளுக்கு உறுப்பான தாழ்ச்சி பிறந்து உடைமையாய் இருக்கையாலே – பாவிக்க வேண்டாதே பள்ள மடையாய் இருக்கும் என்ற படி-

————————————————-

இவ் வர்த்தத்தை நிகமிக்கிறார்-

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப உசிதம் -சம்பந்த ரூபம் -அபக்ருஷ்ட ஜென்ம தோஷ த்வயமும் இல்லையே -ஸ்வபாவ-ப்ரம சம்பாவனை இது உபாயாந்தாரா சம்பந்த சம்பாவனை 
பாவனையும் -நைச்யம் பாவிக்க வேண்டிய தேவை இல்லையே  -ஸ்வரூப அனுகுணமாக இருக்குமே -)

(அது தேகத்தால் வந்த ஜென்மம் -இது ஞான ஜென்மம் )

(1-ஆபீஜாத்யாதி பிரயுக்த அஹங்காராதி தோஷம் 
2 உபாயாந்தர அன்வயம் யோக்யதையால் பய ஜனகம் 
3–பகவத் அபிமதத்துக்கு அவஸ்யம் அபேக்ஷிதமான பாகவத அனுவர்த்தனத்துக்கு நைச்யம் பாவிக்க வேண்டுமே
இந்த மூன்று குறைகளும் இதுக்கு இல்லை – த்விஜன் இரண்டு பிறவி -ஞான ஜென்மமே உயர்ந்தது என்றவாறு)

ஆகையால் -என்றது இப்படி அது ச தோஷமும் இது நிர் தோஷமும் ஆகையால் என்ற படி –
உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம் -என்றது –சேஷத்வ உசிதமாய் கொண்டு உத்க்ருஷ்டமாய் இருக்கிற இந்த  ஜன்மமே ததுநிசித ஜென்மத்தைப் பற்ற ஸ்ரேஷ்டம் என்ற படி-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -175-193-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 18, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

இப்படி தோஷ நிவ்ருத்தி பர அனுபவத்துக்கு விலக்கு என்னும் இடம் ஸூஸ்பஷ்டமாம் படியான ஹேதுக்கள்–பலவற்றையும் அருளிச் செய்கையாலே அத்தை சித்திப்பித்தராய்–,அது தன்னை திருஷ்டாந்தம் ஆக்கி-சிம்ஹா அவலோகன நியாயத்தாலே கீழ் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஆத்ம குணத்தின் உடைய பர அனுபவ விரோதித்வத்தை  ஸ்தீரிக்கிறார்—ஆகையாலே என்று தொடங்கி-

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே
ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

(ஆயி ஸ்வாமிகள்-ப்ரஸ்துதமான ப்ராசங்கிகமான அர்த்தத்தை நிகமிக்கிறார் – உவமானம் உபமேயம் மாறாடலமே – உண்மை ஸ்வரூபமும் அபிமதமும் மாறாடலாமே -அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லை – குணம் -ஞான ஆனந்தங்கள் -ஆந்திர குணம் -சேஷத்வ பாரதந்த்ரங்கள் -கேவல சேஷத்வ பாரதந்தர்யங்கள் தானே விரோதி யாகும்
ஸ்வாதீன தோஷ நிவ்ருத்தி -நிர்பந்தித்து பண்ணுதல் -பராதீன ஸ்வரூபத்துக்கு விரோதி உனக்கும்  அவனுக்கு அதீனமான பாரதந்தர்யம் இருந்தால் நைச்ய அனுசந்தானம் பண்ணி போக மாட்டான்அவனுக்கு அதீனமான சேஷத்வம் இருந்தால் எதிர்விழி கொடுப்பான் )

(குணம் போலே-ஜாதி வாக்கியம்-பஹு முகமாக – என்றும் பாரதந்தர்யம் என்றுமாம் –
குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றத்தை மாறாடி அருளிச் செய்து ஸ்தீகரித்து நிகமிக்கிறார் -)

ஆகையாலே என்று கீழே சித்திப்பித்த அர்த்தத்தை அனுவதிக்கிறார் –தோஷ நிவ்ருத்தி -போலே என்றது-தோஷம் கழிகை  ஸ்வரூப உஜ்வல்யத்துக்கு உறுப்பாய் இருக்கச் செய்தேயும் தோஷத்தையே போக்யமாய் விரும்புகிற பிரணயியான   அவனுக்கு அபிமதம் ஆகையாலே யாதொரு படி பர அனுபவத்துக்கு விரோதி ஆகிறது- அது போலே என்ற படி ஆந்தர குணம் -என்கிறது (கேவல)சேஷத்வ பாரதந்த்ர்யங்களை–இவற்றை ஆந்திர குணம் என்கிறது-ஞான ஆனந்தங்களிலும் காட்டில் ஆத்மாவுக்கு அந்தரங்கம் ஆகையாலே–
இதன் உடைய  பர அனுபவ விரோதி பிரகாரம்  கீழ்ச் சொல்லப் பட்டது இறே–
இவ் விடத்திலும் ஆந்தர குணம் என்றது பார தந்த்ர்யம் ஒன்றையுமாம்-

————————————–

இப்படி சொல்லுகைக்கு தோஷ நிவ்ருத்தியில் வரும் தோஷம் ஏது என்ன ;வேறு ஒரு தோஷமும் வேண்டா-இது தானே தோஷமாம் என்கிறார் –தோஷ இத்யாதியால்-

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வாதீன தோஷ நிவ்ருத்தி தானே -நாமே நிர்பந்தித்து போக்கிய தோஷம் -தோஷத்துக்கு சாதனமாக இல்லாமல் -மட்டும் இன்றி அதுவே பரதந்த்ர ஸ்வரூப நாசகமான தோஷமாகவே இருக்கும் -சரீரத்தை போக்க கேட்பதே தோஷம் -என்றவாறு -சரீரம் போனதை பற்றிச் சொல்ல வில்லை -)

(விரோதி என்றது தோஷ அனுபந்தியை தானே-கர்மம் போலே – -இந்த தோஷ நிவ்ருத்தியை சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னில் -தோஷத்தை இது கட்டி வைக்காதே -போக்குமது அன்றோ -அனுபந்துத்வம் வராமல் எவ்வாறு விரோதி என்னலாம்–நமக்கு மோக்ஷ விரோதி சரீரம் -கர்மம் தோஷ அனுபந்தி -தத் த்வாரா தோஷ அனுபந்திக்கும் விரோதித்வம் வரும் —தோஷ நிவ்ருத்தி தோஷத்தில் மூட்டி -விடுவது போலே -விமல சரம சரீரம் -அவனுக்கு பிடித்தமாய் உள்ளதே -சாண்டில்ய ஸ்ம்ருதி பிரமாணம் -விசுத்த தந்த தோஷம் அற்ற திருமேனி -மநோ வாக் காயங்கள் ஒருமைப்பாட்டு பிரசன்ன ஆத்மா -இருப்பதைக் கொண்டு வாழ்பவர் கிடைத்தால் -தேவிகள் சரீரம் பர்த்தாவுக்கு அபிமதம் போலே உபாதேயத்வம்- குணம் தோஷம் சப்தங்கள் யார் கோணத்தில் பார்த்து -நரகம் ஸ்வர்க்கம் -சீதை பெருமாளுக்குச் சொன்னது போலே பகவத் அபிப்ராயத்தால் எது குணம் தோஷம் புண்ய பாப லக்ஷணம் –உனக்கு பிரியம் அது தானே புண்யம் -இல்லாதது பாபம் -கூரத் தாழ்வான் சித்துக்கும் அசித்துக்கும் சத்தை ஸ்திதி நியமனம் அனைத்தும் தன்னை நோக்கியே ரெங்கநாதர் நீர் செய்து அருளுகிறீர் –பட்டர்-நிருபாதிக உபாதாதா அவரே -தன்னைக் கொண்டே –உத்தேசித்து நம்மை வைத்து தோஷ நிவ்ருத்திக்கு அர்த்தம் கொள்ளக் கூடாதே -சரீரம் நம் அபிப்ராயத்தால் தோஷம் – ஆக தோஷ நிவ்ருத்தி குணம் நிவ்ருத்தி ஆகுமே )

அதாவது காமிநியானவள் தன் உடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அந்வயிக்க இச்சிக்குமா போலே-ஸ்வத பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷத்தைக் கழித்து ஸ்வ சேஷிக்கு  போக்யமாக விநியோகப் பட வேணும் என்ற ஸ்வ நிர்பந்தத்தாலே இவன் பண்ணுவித்துக் கொள்ளுகிற சேஷ நிவ்ருத்தி தானே-காமிநி உடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே தோஷமே அபிமதமாய் இத்தோடே தன்னை புஜிக்க ஆதரிக்கிற அவன் உடைய போகத்துக்கு விலக்கு ஆகையாலே தோஷம் ஆம் இறே என்கை-அவனுக்கு அநிஷ்டம் ஆவது இறே தோஷம் ஆவது –இறே -என்று பிரசித்தி தோன்ற அருளிச் செய்தது கீழ் உபாதித்ததை எல்லாம் நினைத்து-

——————————————

ஆக நன்மை தானே தீமை ஆயிற்று என்றும் தனக்குத் தான் தேடும் நன்மை தீமை யோபாதி விலக்காய் இருக்கும் -என்றும் -தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே -என்றும் –தான் தனக்குத் தேடும் நன்மை ஹேயம் என்னும் இடம் சொல்லுகையாலே -அவன் தேடும் நன்மையே உபாயதேயம் என்னும் இடம் பலித்தது இறே —
இப்படித் தான் தனக்குத் தேடும் நன்மை ஹேயம் அவன் தேடும் நன்மை உபாதேயம் என்னும் இடத்தை -ஆப்த வசநத்தாலே தர்சிப்பிகிறார்  மேல்-தன்னால் -என்று தொடங்கி-

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை

(கீழே உபாய அதிகாரி விஷயத்தில் ஸ்வகத ஸ்வீ காரத்துக்கும் பரகத ஸ்வீ காரத்துக்கும் வாசி -ஸ்ரீ குகப் பெருமாள் -ஸ்ரீ பரத ஆழ்வான் விஷயத்தில்-முன்பு பார்த்தோம் –
கீழே மதுரா பிந்து அஹங்கார கர்ப்பம் -பிள்ளான் வார்த்தை-ஆப்த வசனம் பார்த்தோம்
இங்கு ப்ராப்ய விஷயத்தில் –ஆப்த வசனத்தால் -பிள்ளான் -அபிமான புத்திரர் நம் ஸ்வாமிக்கு -)

(ஆயி ஸ்வாமிகள் -தோஷம் நிவ்ருத்தி கேட்டாலே தோஷம் என்றால் சுபத்துக்கு ஆர்ஜனம் செய்யலாமோ என்னில் -நாம் தேடும் நன்மை ஹேயம்-திருமாலை -தோஷங்கள் எல்லாம் உண்டு நன்மைகள் இல்லை என்ற பத்து பாசுரங்கள் போலே -தனக்கு உரியன அல்லாத தன்னால் –அடியேன் -சொல்ல வேண்டுமே –தனக்கு வருத்தப்பட்டு வரும் ஞான பக்தியாதிகள்-நன்மை விலைப் பால் போலே –சுபத்துக்கு ஆர்ஜனம் விரசமுமாய் அபிராப்தமுமாய் இருக்கும் -கன்றுக்குட்டிக்கு உரியதால் அப்ராப்தம் தானே -நீர் கலந்து விரசம் காசு கொடுத்து -மூன்று குற்றங்கள் உண்டே -தாய் பால் நிருபாதிகம் – ரசம்- பிராப்தம் அன்றோ-தனக்கு உரியன் அல்லாத தன்னால்-நான் -மாற்றி அடியேன் -சொல்கிறோம் தனக்கு வருத்தப்பட்டு தேடும் நன்மை அபிராப்தமாய் இருக்கும் – தனக்கு உரிய ஸ்வாமியால் வருத்தமற்று வரும் -ஸ்வரூப ஞானம்-மயர்வற மதி நலம் -ரசம்- பிராப்தம்-)

(அரும்பதம் தன்னால் வரும் நன்மை -பக்தி யோகத்துக்கும் பலன்-அவன் தானே அருளுகிறவன் -என்ன குற்றம் -என்னில் -ஞானம் பக்தி வளர்க்கும் பொழுது நானும் இருக்கிறோம் -தன்னால் சொல்லும் பொழுது அவனாலும் இருக்க தனித்தனியே சொல்ல வேணுமோ -என்னில் -இரண்டு இடத்திலும் -மூன்றாம் வேற்றுமை -கரணே -கருவியாகக் கொண்டு -இல்லாமல் -கர்த்தா யார் -முயற்சி செய்பவர் என்று கொள்ள வேண்டும் –
த்ருஷ்டாந்தத்தில் காரணம் பற்றி-மூல்யம் -விலை கொடுத்து பெற வேண்டும் -விரஸத்வம் -தண்ணீர் கலந்த பால் -பேராசையால் -கலப்பார்கள் -அப்ராப்தமாயும் இருக்கும் –
அப்ரதான கர்த்ருத்வ போக்த்ருத்வ நாம் -என்ற எண்ணம் ஸூஷ்ம அஹங்கார மிஸ்ரமாய் இருக்கும் -இது தான் விலை-உதாரணம் -ஸ்வார்த்த கலந்து தண்ணீர் போல் -அவதாரணம் -ஏவகாரம் -கூடிய சேஷத்வ பாரதந்தர்யம் -அப்ராப்தம் -மூன்றும் சமன்வயப்படுத்தி த்ருஷ்டாந்தம் கொள்ள வேண்டும் -)

தன்னால் வரும் நன்மை யாவது -ஸ்வ யத்னத்தாலே தான் தனக்கு உண்டாக்கிக் கொள்ளும் நன்மை -விலைப் பால்-போலே -ஔபாதிகமாய் -விரசமுமாய் -அபிராப்தமுமாய் இருக்கும்
அவனால் வரும் நன்மை யாவது நிருபாதுக   ஸ்வாமியான அவன் தானே இவனுக்கு இது வேணும் என்று உண்டாக்கும் நன்மை முலைப் பால் போலே என்றது நிருபாதிகமாய்- சரசமுமாய் – பிராப்தமுமாய் இருக்கும் என்கை

———————————————

இவ்வளவு அன்றிக்கே -எம்பெருமானை ஒழிய தான் தனக்கு நன்மை தேட இழிந்தால்
ஸ்வ விநாசமே பலிக்கும் என்னும் இடத்தை ச நிதர்சனமாக-அருளிச் செய்கிறார் –

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே
காட்டிக் கொடுக்குமா போலே –
இருப்பது ஓன்று –

(ஆயி ஸ்வாமிகள்-ப்ராப்தனுமாய் ஆப்தனுமான -அவன் -தன் உடைமையான இவனுக்கு நன்மையை அவன் தேடுவது ஒழிய அப்ராப்தனுமாய் அநாப்தனுமுமாய் -பிரிய ஹித பரையாய் ரஷிக்கிற மாதா பிதாக்கள் கையில் இருந்தும் கத்தக் கத்த பறித்து வாங்கி துடிக்க துடிக்க வெட்டி வியாபாரம் செய்யும் ஆட்டு வாணியன் இடம் பயலை பசலை பேணி ரஷிக்கக் கொடுப்பது போலே உயிர்க் கொலை போலே அன்றோ-)

(பிராப்தம்–ஸூவ -வஸ்து ரஷிக்க உசிதம் பொருத்தம் – ஆப்தம் -ரக்ஷணத்துக்கு உசிதமாக உண்மையைக் கண்டவன்-ஜீவாத்மா -அநந்ய பர சேஷத்வம் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-)

அதாவது –
பிராப்தனுமாய் ஆப்தனுமான அவன் இவனுக்கு நன்மை தேடுமது ஒழிய -அதற்க்கு எதிர்த் தட்டான தான் தனக்கு உஜ்ஜீவன அர்த்தமான நன்மை சம்பாதிகையாவது -ஸ்வ ரக்ஷண உபயோகியான ஞான சக்திகள் ஒன்றும் இன்றிகே -ஸ்வ மாத்ரதிகள்  உணர்ந்து நோக்க வேண்டும்படியான ஸ்த நந்தய பிரஜையை -ரஷகரான மாதா பிதாக்கள் கையில் நின்றும் வலிய வாங்கி – கொலைக்குக் கூசாதே உயிர்க் கொலையாக கொன்று மாம்சங்களோடு கலசி விற்று விடும் காதுகனான ஆட்டு வாணியன் கையிலே -இத்தை நோக்கிக் கொள் என்று -காட்டிக் கொடுக்குமா போலே இருப்பது ஓன்று என்கை -இத்தால் சர்வேஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் இடம் சொல்லப் பட்டது —

——————————————–

இப்படி இவன் தன்னை தானே முடித்து கொள்ளுமோ என்ன – அருளிச் செய்கிறார்-

சூரணை -179-

தன்னைத் தானே இறே முடிப்பான் –

(ஆயி ஸ்வாமிகள்-பிராப்தம் ஆப்தன் ஸ்வாமி அவன் – ததேக ரக்ஷகனான -தன்னை -தீமையை நன்மை என்று தேடி ஹிம்சித்துக் கொள்ளும் அஹிதகரனான தான் –அசந்நேவ  -என்னும்படிசத்தா ஹானி போகும் படிஸ்வரூபம் மாறி அசத் சமம் ஆகும் படி -உரு மாயும் படி -கண்ணற்று முடித்துக் கொள்ளுமே )

(யானே என்று –நான் தேகம் ஸ்வ தந்த்ரன் என்னுடைய உடைமை – யான் சொல்லாமல் யானே -ஏகாரம் -பகவான் நாசகரன் அல்லன் -என்றாரே -எதிர் சூழல் புக்கு உபாயமாக அவன் இருக்க– -என் இழவு பகவத் க்ருதம் இல்லையே -)

அதாவது –
சர்வேஸ்வரன் இவனை உஜ்ஜீவிப்பிக்கைக்கு அவசர ப்ரதீஷனாய் போரும் அவன் ஆகையாலே –இவனுடைய விநாசதுக்கு ஒரு நாளும் அவன் ஹேது அன்று -இனி -அசந்நேவ  -என்னும்படி தன்னை நசிப்பித்துக் கொள்ளுவான் தானே இறே என்கை –
யானே என்னை-திரு வாய் மொழி -2 -9 -9 – என்கிற பாட்டிலே யானே -என்று என் இழவு பகவத் க்ருதம் அல்ல –அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க நானே கிடீர் விநாசத்தை சூழ்த்துக் கொண்டேன் – என்றார் இறே ஆழ்வார் –

—————————————————

இவன் தன்னை தானே முடிக்கை யாவது ஏது-என்னும் ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

சூரணை -180-

தன்னைத் தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

(ஆயி ஸ்வாமிகள்-தேஹாத்ம அபிமானம் விரும்புகையும் -ஸூவ ஸ் வா தந்திர அபிமானம் விரும்புகையும் – -விரும்புகையும் -விஹித விஷயங்கள் விரும்புகையும் – நிஷித்த விஷயங்கள் -ஆத்ம ஸ்வரூப நாசம் இவற்றால் -சேஷத்வ பாரதந்தர்யங்களை அழிப்பதே-இவை தானே ஆந்திர குணங்கள் -கீழில் அர்த்த நிகமான மேலில் அர்த்த அவதாரிகை
ஸ்வ அதீனம் தோஷ நிவ்ருத்தம் –பர அதீன ஸ்வரூபத்தை முடிப்பதே யுக்த அர்த்த நிகமனம் -கேவல சேஷத்வமும் பாரதந்த்ரமும் கூடாதே -ஸ்வரூப நாஸகம் –அநர்த்தகரம் அபோக்யம் என்று அறியாமல் விளக்கை விரும்பு மாயும் வீட்டில் பூச்சி போலே -இதுவே தன்னைத் தானே முடிக்கை -)

(திருமந்த்ரத்திலே இவை எல்லாம் போனதே –ஸூ போக்த்ருத்வ நிவ்ருத்தி மட்டுமே உத்தரார்த்த நமஸ் -புருஷார்த்தத்துக்கு இடையில் உள்ள- ஆய -கைங்கர்யத்துக்கு -உள்ள – பிரதிபந்தகங்கள் போக வேண்டும் மநோ வாக் -கத்ய த்ரயத்தில் உண்டே -எல்லாமே-அசேஷமாக தள்ளுண்ண பிரார்த்தித்தார் – முமுஷுப்படியில் -இந்த உத்தர நமஸ் -அவித்யாதிகளும் போக வேணும் என்று அருளிச் செய்தார் –கைங்கர்யத்தில் ஸ்வார்த்ததை கூடாதே – -இது அந்யதா ஞானத்தால் வரும் -அது பிரகிருத சம்பந்தத்தால் தானே –
சரீரம் இருக்கவே -அழுக்கு உடும்பு -இது பொல்லா ஒழுக்கம் பண்ண வைக்கும் -இது பொய் நின்ற ஞானம் மூலம் -)

அஹங்காரம் ஆவது -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வாதந்த்ர்ய அபிமானமும்
விஷயங்கள் ஆவன -விஹித நிஷித்த விஷயங்கள் –
இவற்றை விரும்புகையாவது -இவற்றிலே மிகவும் பிரவணனாய் இருக்கை –
ஆத்ம ஸ்வரூபம் தான் -பகவத் அனந்யார்க்க விசேஷமாய் -பகவத் ஏக போகமாய் இறே இருப்பது –
தாத்ருச ஸ்வரூபத்தை நசிப்பிகை இறே -இவற்றிலே இவன் பிரவணன் ஆகையாவது –

உத்தர வாக்ய நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிறார் ஆகில் -இவை எல்லாம் என் என்னில் –
உத்தர வாக்யத்திலே நமஸ்ஸிலே-புருஷார்ததுக்கு  இடைச் சுவரான விரோதிகள் எல்லாம்
தள்ளுண்ணும் என்னும் இடம் தோற்ற இறே -மநோ வாக் காயை  -என்று தொடங்கி மூன்று
சூர்ணையாலே சகல விரோதி நிவ்ருதியையும் பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
இவர் தாமும் முமுஷுப் படியில் -இந்த நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிற அளவில் –
இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் -என்றார் இறே –

ஆகையால்-இவ் விடத்திலும் -தேகாத்ம அமிமானாதி ரூபமான அஹங்காரம் –
தத் கார்யமான விஷய ப்ராவண்யம் –
தத் உபய கார்யமான பாகவத அபசாரம் –
முதலான விரோதிகள் எல்லாம் பிரசக்த அனு பிரசக்தமாக அருளிச் செய்கிறார் –
ஆகையால் விரோதம் இல்லை-

—————————————–

இவ் அஹங்காராதிகளின் கொடுமையை விஸ்தரேண உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்கிறார் –

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

(முந்துற அஹங்கார கொடுமையை இத்தாலும் அடுத்த சூரணையாலும் விசதீகரிக்கிறார் –
பட்ட இடம் எங்கும் எரிக்குமே-அதே போலே ஆத்ம ஸ்வரூபமும் அழியும் –
தேஹாத்ம அபிமான ரூபமாயும் விஷய ப்ராவண்ய ஜனகமாயும் -இது கொண்டு விஷயாந்தரத்திலும் மூட்டும்–இவை தானே காரிய காரண பாவமாயும் இருக்கும் –
வேம் உயிர் -விரஹ தாபத்தால் ஆழ்வாருக்கு -சித்தம் –உடல் ஆத்ம தர்மம் கொள்ள -உருகிற்றே-நல்ல கோணத்தில் அது -இங்கு அஹங்காரம் பட்டு கெட்டதால்-காற்று உலர்த்தாது இத்யாதியால் சொல்லி இவை பண்ணாது என்னால் முடியும் –
விரஹ தாபத்தால் பண்ணுவேன் -ஆழ்வாரை நினைத்தே ஸ்ரீ கீதா ஸ்லோகம்
ஆஸ்ரய அசியாய் -உண்ட வீட்டுக்கு இரண்டகம் -அசனம் சாப்பிடுவது -)

அக்நி ஸ்பர்சம் போலே என்றது -அக்நி ஸ்பர்சம் ஆனது அன்வயித்த இடம் எங்கும்
சுட்டு உரு அழிக்குமா போலே -இதுவும் ஆஸ்ரய அசியாய் ஸ்வரூபத்தை நேராக
உரு அழித்து விடும் -என்கை-

(ஆஸ்ரய அசியாய்-உண்ட வீட்டுக்கு இரண்டகம் -ஆஸ்ரயித்த ஒன்றையே உண்ணும்)

———————————

இவ் வஹங்கரத்தினுடைய க்ரௌர்யத்துக்கு பிரமாணங்கள் காட்டுகிறார் மேல் –

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் -ந பிராணன் –
எம்மா வீட்டு திறமும் –

(பட்டு அறிந்து அருளிய இந்த வார்த்தைகள் -ஜிதந்தே -சீதா வசனம் –ஆளவந்தார் ஆழ்வார் -நான்கும் -கீழே கீழே இருப்பதை விட மேலே மேலே உயர்ந்தது-தீர்க்க சிந்தையந்தி கீழேயே நான்கு பேரையும் பார்த்தோமே அதே போலே –அஹங்காரம் ஸ்பர்சம் உள்ள அனைத்தும் பரித்யாகம் –பகவானால் விரும்பப்பட்ட ஒன்றையே பற்ற வேண்டும் –
ஆத்மாத்மீயங்கள் வைராக்யம் -ஏறாளும் இறையோன் பதிகம் –நம்மால் விரும்ப பட்டது அஹங்காரம் -ஒரு நாயகம் ஐஸ்வர்யம் –சொன்னால் விரோதம் அஸேவ்ய சேவை வைராக்யம் – கலுஷம் ஆளுக்காள் கலங்காமல் சித்தம் தெளிந்து -வைஷ்ணவத்தும் ஒன்றே விரும்புவேன் –)

ஜிதந்தேதிருவடி வட்டத்துக்குள்ளே வைத்து அருள் -வைகுண்டாதி காமத்தாலும் கலங்காதே –அவை எல்லாம் உன்னை பற்றி அல்லாமல் என்னைப் பற்றி வந்தால் த்யாஜ்யங்கள்ஜிதந்தே -ஜிதம் சேஷித்வம் புண்டரீகாக்ஷ போக்யத்வம் காம சப்தம் -இங்கே ஜென்மம் அற்றதை காட்டி -ஸ்ரீ வைகுண்டமும் வேண்டாம் -கீழே வைஷ்ணத்வம் ஜன்மா பிரார்த்திப்பதால்-போந்து என் நெஞ்சு என் பொன் வண்டு-தேவரீர் திருவடிகளில் வ்யவஸ்திதமான என் நெஞ்சு- சர்வ ஜன்மங்களிலும் –தேவர்க்கே ரசமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றதுதுது-அத்தை மட்டுமே -என்று சொல்லி –உனக்காகவே -தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே வேண்டுவது -சரக் சந்தனாதிகளைப் போலே –

ராமனைப் பிரிந்து ராக்ஷஸி மத்யத்தில் உள்ளேன் அவன் திருவடி பார்ஸ்வத்தில்லே இருக்க விரும்புகிறேன் –சீதா வசனம் -ஜீவனமோ அர்த்தமோ பூஷணமோ -என்னது என்றால் தூஷணம் -நான் என்னது என்று அழுக்கு த்யாஜ்யங்கள் –உபேஷா விஷயங்கள் –
அர்த்தம் -பிரயோஜனம் -தாதர்த்தம் -அவனுக்காகவே -மகா ரதனான பெருமாளை பிரிந்து இவற்றால் என்ன பிரயோஜனம் –பிராணாதிகள் எல்லாம் அத்தலைக்கு வினியோகம் கொள்ளவே -இதில் –அஹங்கார குரூரம் -அநதிஸ்ப்ஷடை-ராமனை விட்டு பிரிந்ததால் –விநா சப்தம் கொண்டு அர்த்தாத் சித்தம்தேக சுகம் வேண்டாம் சொல்ல வில்லையே —ஆத்மாவைச் சொல்ல வில்லையே குறைவு உண்டே

ஸ்தோத்தர ரத்னம் -57-மது கைடவரை அழித்தவனே -தேகம் பிராணம் சுகம் அசேஷ அபிலாஷைகள் ஆத்மாநாம் தன்னது என்று நினைக்கும் எதிலும் விருப்பம் இல்லை —
தேவர் சேஷத்வத்துக்கு உள்ளே இருப்பாரையே வேண்டும் -பஹிர்பூதம் வெளியே உள்ளவற்றில் காமம் இல்லை -க்ஷணம் கூட சமிக்க மாட்டேன்-
நூறு நூறு பற்றி அருள வேண்டும் –விஞ்ஞாபனம் உண்மை – மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -இது மெய் – சத்யம் சத்யம் -சரீரத்தில் இருந்து கேட்டு அருள வேண்டும் என்றும் -மெய் -இருபதின் கால் இனி இனி —
மாதா பிதா எல்லாம் ஆழ்வார் -சொட்டை குலத்தில் உதித்தார் வந்தார் உண்டோ -ஆழ்வார் பாசுரத்தை சத்யம் என்று தமிழ் படுத்தி இந்த ஸ்லோகம்
இமையோர் தலைவா அங்கு -மது சூதனன் -இங்கே -மாம் மதியஞ்ச அசேஷமும் – தேசிகன் -வரத தேவரீர் கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆக்கு -சேஷத்வத்துக்கு வெளி போனால் ஆத்மாத்மீயங்களுக்கு சத்தை இல்லையே -இருந்தும் இல்லாததும் சமம் –
தேகத்தையும் ஸஹியேன் -தாரகமான பிராணன் -இவற்றால் வரும் சுகம் -அசேஷ அபிலாஷைகள் –ஆத்மாவையும் கூட -குறை கழிந்து -ந அந்யத் புத்ர மித்ராதிகள் -வேண்டேன் -ஆத்மாவைச் சொன்ன பின்பு அ அந்யத் என்றது -அசேதனங்களைச் சொல்லி ஆத்மாவைச் சொல்லி சேதனங்களை அப்புறம் சொல்கிறார் – வந்த கோபத்துக்கு அக்ரமமாக சொல்கிறார் என்றுமாம் –இப்படி அல்லா விடில் மது பட்டது நான் பட வேண்டும் -சத்யம் என்கிறார் –-தத் வி நாசம் -அவை எல்லாம் நாசமாகட்டும் இது சத்யம் –முகம் மாற வைத்து சொல்கிறார் —ஆத்மாவை –நிர் அவயவம் -விசேஷண-சேஷத்வம் குணம் போகும் -குணி போகாதே -நடை பிணம் போலே இருக்குமே விசேஷணம் போன பின்பு
மதுவை நிரசித்தவனுக்கு ஆத்மாவையும் போக்கும் அகடி கடனா சாமர்த்தியம் உண்டே அதனாலும் சொல்கிறார்பகவத் ஏக ரஸ விநியோக அர்ஹம்சேஷத்வம் சப்தத்தில் மறைந்த குறை இங்கு உண்டு – மோக்ஷம் வேண்டாம் சொல்ல வில்லையே அதனாலும் குறை 

எம்மா வீட்டு திறமும் செப்பம் -பேர் கூட சொல்ல அர்ஹதை -இல்லையே -ஆழ்வார் —நின் செம் மா பாதம் தலை சேர்த்து ஒல்லை –-பெரும் தாளுடை பிரான் — நெருப்பு வாயாலே சொன்னாலே சுடுமே -நினைத்தாலே சுடுமே இவை செப்பம்-மூன்று -திருவடி முதலில் சொல்லி —வெந்து போன வாயுக்கு தண்ணீர் வைக்கிறார் பின்பு ஒல்லை -குளிர்ந்த நீரை சடக்கென வை –என்கிறார் -ராமன் திருவடிகளை தரிக்கும் வரை தாங்காது -வழி எல்லாம் ராஜன் சொல்லிய சூட்டை தணிக்கச் சொல்லிக் கொண்டே பரதன் வந்தது போலே –பிரார்த்தித்து வந்ததாய் இருந்தால் அஹங்கார கர்ப்பமாக இருக்குமே – விலக்ஷணமாய் இருந்தாலும் -அதாகும் போலே-எடுத்துக் கழிக்கவும் கூடாது-பேதம் பாலகன் அதாகும் போல் -தத்வஞ்ஞர் ஸ்ரீ ஸூக்தி —சண்டாளர் ஸ்பர்சம் த்யாஜ்யம் போலே –அஹம் மம என்றால் சண்டாளன் ஆவான் –இது கொண்டு ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார் ஸ்ரீ பாஷ்ய காரர்

(ஜிதந்தா -இதிகாசம் -ஸ்தோத்ர ரத்னம் -சமஸ்க்ருதம் –இவை ஒன்றை நினைக்கும் ஒன்றை சொல்லுமே –தாத்பர்யம் சொல்ல ஆழ்வார்கள் அருளிச் செயல் – சாத்விகர்களுக்கு மட்டுமே -அதிக்ருதா அதிகாரம் –வர்ணாஸ்ரம த்ரை வர்க்கத்துக்கு வேதம்- அருளிச் செயல் அனைவருக்கும் என்றாலும் முக்குணத்தவர்களுக்கும் இல்லை –ஸ்ருதியாதி உபாதானம் அநந்தரம் தாத்பர்யம் சொல்ல இங்கும் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகள்—இடையாட்டம் -பிரகாரம் -என்றவாறு –செப்பம் -நான் சொல்ல மாட்டேன்- உத்தம புருஷ வினை சொல் -நின் செம் மா பற்பு தலை சேர்த்து மன்னு -விஹித வியதிரிக்த விஷயத்தை நிஷேதம் -வைகுந்தம் விஹித விஷயம் தானே செப்பம்- வேண்டாம் என்கிறார் –மோக்ஷம் வேண்டாம் என்கிறார் அல்லர் -என் உகப்புக்காக என்ற விசேஷணம் -இன்று அங்கே தான் உள்ளார் -அவன் உகப்புக்காக தானே —மறுக்கும் வார்த்தையும் வேறே இல்லை செப்பம் -தானே அனைத்துக்கும் -இடையாட்டமும் வேண்டாம் என்பதால் —செப்பம் இருவருக்கும் -பிரஸ்தாபமே வேண்டாம் –செப்பு -செப்பல் சொல்லாமல் செப்பம் -உத்தம புருஷ பன்மையால் – நீயும் பிரசங்கிக்கவும் வேண்டாம் நானும் வேண்டாம் என்று சொல்லவும் வேண்டோம்-என்கிறார் -)

அதில் பிரதமத்தில் -ருக்வேத கிலமான ஜிதந்தா வசனத்தை அருளி செய்கிறார் –
ந காம கலுஷம் சித்தம் மமதே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத்வந்து  சர்வ ஜன்மஸூ  கேவலம் -இதுக்கு அர்த்தம் –
நிருபாதிக   சேஷியாய் நிரதிசய போக்யரான தேவரீர் திருவடிகளிலே வ்யவஸ்திதமான என் நெஞ்சு ஆனது -ஸ்ரீ வைகுண்டாதிகள் ஆகிற வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்கி இருக்கிற தன்று -சர்வ ஜன்மங்களிலும் தேவர்க்கே ரஸமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றது என்று –
கேவல பதத்தாலே -இத் தலைக்குமாய் இருக்கும் இருப்பை கழிக்கிறது-
து சப்தம் அவதாரண அர்த்தம் –
இத்தால் -மோஷ பர்யந்தமாக தான் உகப்பால் வரும் அது எல்லாம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

அநந்தரம் பிராட்டி வசனத்தை அருளிச் செய்கிறார் –
நஹிமே ஜீவிதே நார்த்தோ நைவார்த்தைர் ந ச பூஷணை
வஸந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மகா ரதம் -இதுக்கு அர்த்தம்
மகா ரதரான பெருமாளைப் பிரிந்து ராஷசிகள் நடுவே வஸியா நிற்கிற
எனக்கு பிராணனால் ஒரு பிரயோஜனம் இல்லை –
அர்த்தங்கலாளுமொரு பிரயோஜனம் இல்லை –
ஆபரணங்களாலும் ஒரு பிரயோஜனம் இல்லை -என்று –
இத்தால் -பிராணாதிகள் எல்லாம் அத்தலையில் வினியோகத்துக்கான அன்றிக்கே –
தனக்கான போது-அஹங்கார ஸ்பர்சி ஆகையாலே -த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது

அநந்தரம் பரமாச்சார்யான ஆளவந்தார் வசனத்தை அருளிச் செய்கிறார் –
ந தேஹம் ந பிராணான் ந ச சுக மசேஷாபிலஷிதம் நசாத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர் பூதம் நாத
க்ஷணம் அபி சஹே யாது சததா விநாசம் தத் சத்யம் மது மதன விஞ்ஞா பநமிதம்-
இதுக்கு அர்த்தம் -எனக்கு வகுத்த சேஷியானவனே-உன்னுடைய சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யதுக்கு புறம்பான தேகத்தையும் -ஷணமும் சஹியேன் இத் தேகத்துக்கு தாரகங்களானே பிராணங்களையும் சஹியேன் -எல்லாராலும் ஆசைபடபட்ட சுகத்தையும் சஹியேன் – புத்திர மித்ர களத்ராதிகளான மற்று ஒன்றையும் சஹியேன் –
இவை இத்தனைக்கும் போக்தாவான ஆத்மா தன்னையும் சஹியேன் –
இது எல்லாம் உருக் காண ஒண்ணாதபடி சததாவாக  நசித்து போக வேணும் –
இந்த விஜ்ஞாபனம் சத்யம் –
இங்கன் அன்றாகில் தேவர்க்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்று –
இத்தால் -இத் தலையில் சேஷத்வத்துக்கு புறம்பானது எல்லாம்
அஹங்கார துஷ்டம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது —

அநந்தரம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களில் தலையானவர் வசனத்தை அருளிச் செய்கிறார் -எம்மா வீட்டு திறமும் -என்று –
அதாவது –
ஆழ்வார் மோஷத்தை கொள்ளும் -என்ன-
என் உகப்புக்காக தரும் மோஷம் -எப் பிரகாரத்தாலும் விலக்ஷணமாய் இருந்ததே ஆகிலும்
அதின் இடையாட்டமும் பிரசங்கிக்கக் கடவோம் அல்லோம் என்கை –
இத்தால் -தன் உகப்பால் வரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
ஐஸ்வர்யாதிகளோபாதி த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

———————————————

ஆக அகங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்தார் கீழ்–விஷயங்களின் கொடுமையை அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே

(விஷயாந்தரங்கள் அனுகூலமாகவும் பிரதிகூலமாகவும் இருக்குமே – நேரான விஷம் பிரசாதத்தில் கலந்த விஷம் போலே இவை -பகவத் ஏக போகத்வமாக இவை இருக்காதேஆத்ம நாச கரம் – சாஸ்த்ர நிஷேத நரக ஹேது -அறிந்து அறிந்து -முடிக்கும் பிரதிகூல விஷயாந்தரங்கள் -சாஸ்திரம் விலக்காத விஷய விஷயாந்தரங்கள் –இவையும் பகவத் வியதிரிக்தம் -மேலோட்டமாக நன்மையாய் இருந்தாலும் தள்ளத் தக்கது –
-அப்ராப்தம் -வாசி அற்று நிலை நின்ற சரம வேஷம்  அநந்ய போகத்வத்தை கொன்று முடிக்கும் இரண்டும்  – –ஓன்று சாஸ்த்ர நிஷிதம் -மற்று ஓன்று ஸாஸ்த்ர விஹிதமாய் இருந்தாலும் சாஸ்த்ர தாத்பர்ய நிஷிதம் -சாஸ்திரம் முக்குணத்தாருக்கும் தானே -உபய விஷய நினைவே விஷ ஸ்பர்சத்தை விட கொடியதாகுமே -அத்யந்தம் தூரம் அந்தரம் – விசிஷ்ட வேஷ அனுகூலமாக இருந்தாலும் -அநந்ய போகத்வத்துக்கு எதிராகுமே -)

லோக விருத்தமுமாய் நரக ஹேதுவுமுமாய் இருந்து உள்ள நிஹித்த விஷயம் பிரதி கூல விஷயம்-தத் ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் என்றது -பிரதிகூலமே என்று தோற்ற நின்று  ஸாஸ்த்ர நிஹிதம் என்று பிரஸித்தமாய் -பிராணனையும் ஸ்வரூபத்தையும் முடிக்கும்-
அனுகூல விஷயம் லோக விருத்தமும் அன்றிக்கே நரக ஹேதுவும் இன்றிக்கே விஸிஷ்ட வேஷ அனுகூலமாய் இருக்கும் விஹித விஷயம் -தத் (அனுகூல விஷய )ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே அநந்ய போகத் ரூபமான ஸ்வரூபத்தை அழிக்கும்–
விஷம் உண்டால் தான் முடிக்கும்– இதுவோ நினைத்தாலே முடிக்கும் -விஷயம் அதி க்ரூரம்

————————————————–

இப்படி விநாசகரமான விஷயங்களில் பிரவணனாய் ஸூகிக்க நினைக்குமது -விபரீத ஞான கார்யம் என்னுமத்தை பிரமாண பிரசித்த த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார் –

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவணனாய் ஸூகிக்க நினைக்கை —

(ஆயி ஸ்வாமிகள்-விஷயாந்தரங்கள் சுகத்தால் மேல் விழ பண்ணுமே -விபரீத ஞானமே –விழுங்குவதுவோ ஒதுங்குவதோ வேண்டாம் விழுங்க ஒதுங்க நினைப்பதே ஆபத்தே
சேர்ந்து குளிர்ந்த தண்ணீரால் விடாய் கெடாதே -கொழுந்து பட்டு சிவந்து உள்ள அக்னி ஜ்வாலை -சப்த ஜிஹ்வா ஏழு மனைவிகள் அக்னிக்கு–மிடறு நாக்கு பல்லும் குளிர்ந்து விடாய் தீரலாம் என்று நினைந்து மநோ ரதம் ஆசை கொண்டு விழுங்க நினைப்பது போலே தானே விஷயாந்தரங்களால் ஸூகிக்க நினைக்கை -தேக பாதகங்கள் இவற்றை -பிரமத்தால் ஸூகிக்க நினைப்பது -ஸ்வரூப பாதகங்கள் அவற்றை பிரமத்தால் ஸூகம் என்று நினைப்பது )

அதாவது -ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூக சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூகம் நர ந்ருத்யத பணிநச் சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே தண்ணீருக்கு விடாய்ப்பட்டவன் விபரீத ஞானத்தால் தாப ஹேதுவான அக்னி ஜ்வாலையை விழுங்கித் தன் விடாய் தீர நினைக்குமா போலேயும்
ஆதித்ய கிரணங்களாலே அதி மாத்ர தப்தனானவன் அந்த தாபத்தை ஆற்றுகைக்காக நிழல் என்கிற மாத்ரத்தைக் கொண்டு ஆகாம்ய அநர்த்தத்தை நிரூபியாதே
அத்யந்த குபிதமாய் படத்தை விரித்து நின்று ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும் இருப்பது ஓன்று –
பாதக விஷயங்களை ஸூகாவஹமாக பிரமித்து அவற்றில் பிரவணனாய்  அவற்றை அனுபவித்து ஸூகிக்க நினைக்குமது என்றபடி –

————————————

விஷய ஸ்பர்சம் ஸ்வரூப நாஸகம் -விஷய ப்ரவணனாய் ஸூகிக்க நினைக்குமது விபரீத ஞான கார்யம் என்று இறே கீழ்ச் சொல்லி நின்றது –
இவ் விஷய ஸ்பர்சம் வேண்டா -பகவத் குணங்களில் நைந்து இருக்குமவன் இவற்றை காணவே முடியும்-என்கிறார் -மேல் –

சூரணை -185–
அசுணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

(ஆயி ஸ்வாமிகள்ம்ருது பிரகிருதி பக்ஷி விசேஷம் -அசுணமா — தர்சன மாத்ரத்திலே -மானிடவற்கு என்று பேச்சுப்படில் வாழ கில்லேன் –ஸூ போக விதுரமாக ஸ்வாமி போக ஏகைக பரனாய் –ஸ்வாமி தான் சொத்தை அனுபவிக்க வேணும் -ஸ்வாமி இவனை அனுபவிக்க இசைந்து-நினைந்து நினைத்து உள் கலங்கி நைந்து இருப்பவனாய் –விஷயாந்தரங்களைக் கண்டாலே பீத பீதனாய் முடிந்ததே போவான் -ம்ருது பிரகிருதி உடலாலும்-மனசில் அனுபவத்தாலும் உள்ளத்தாலும் –என்றபடி-)

அசுணமா என்கிற பஷி அதி மதுரமான கான ஸ்ரவணத்தாலே
நெஞ்சு நீர் பண்டம் ஆகி இளகின தசையிலே அதி கடினமான பறையை அடிக்கக் கேட்டு
பட்டு கிடக்கும் போல் ஆய்த்து
பகவத் அனுபவம் ஒன்றிலுமே தத் பரனாய்-தத் குண  ரசத்திலே நைந்து ,
இதர விஷய பேர் கேட்கிலும் மாய்ந்து போம் படி ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன்
பகவத் ஏக போகத்வ ரூப  ஸ்வரூப நாசகங்களான விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும் படி என்கை

————————————————-

ஆப்த வசனத்தாலே இந்த அர்த்தம் இசைவிகிறார்-

சூரணை -186–

காட்டிப் படுப்பாயோ என்னக் கடவதிறே—

(ஆயி ஸ்வாமிகள்பல நீ காட்டு படுப்பாயோ -6–9–9–பஹு வித த்ருஷ்ட்டி விஷயங்களை -விஹிதமாக காட்டி –ஆவி திகைக்க ஐவர் -மனம் திகைக்கும் படி குமைக்கும் சிற்றின்பம் –
படுப்பாயோ -ஸ்வரூப நாஸகம் -பட்டு போதல் -கெட்டு போதல் -ஆழ்வார் பிராமண பலத்தால் இந்த பிரயோகம் –விஷயாந்தரங்களைக் கண்கள் பெற வாங்கும் படி -அகல விரித்து -பார்க்கும் படி -பண்ணி -பாவியேனைகர்மங்களால் தானே -வைஷம்யம் இல்லையே உனக்கு -இவ்வாறு ம்ருதி பிரக்ருதிகள் சொல்லுவார்கள் -இவற்றுடன் பொருந்தாமல் -அவற்றுக்கு பாங்கான நிலத்தில் இருக்கும்படி பாபங்களை பண்ணி உள்ளேன் -)

அல்ப ரசங்களாய் அநேக விதங்களாய் இருக்கிற துர் விஷயங்களைக் காட்டி
அவற்றுக்குப் பொருந்தாத படியாய் அவற்றுக்கு பாங்கான நிலத்திலே இருக்கைக்கு ஈடான
பாபத்தைப் பண்ணின என்னை முடிக்கப் பார்கிறோயோ  -என்கிறார் ஆழ்வார்-

————————————-

ஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –
இத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை-187–

அஜ்ஞனான விஷய பிரவணன்
கேவல நாஸ்திகனைப் போலே –
ஞானவானான விஷய பிரவணன்
ஆஸ்திக நாஸ்திகனைப் போலே –

(ஆயி ஸ்வாமிகள்-ராவண பிரகிருதி -ராமனை பற்றி அறிந்து வைத்தும் ஸ்வ பாவம் திருத்த முடியாமல் –விஷயாந்தரம் அநேக தோஷ துஷ்டம் என்றும் தத் ப்ராவண்யம் அநர்த்த ஹேது என்று அறியாமல் அஞ்ஞனானவன் கேவல நாஸ்திகன்-ஸ்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –மனம் போல் திரியும் சுத்த நாஸ்திகன் –ஹிதம் சொன்னால் இசைந்து விரக்தனாய் திருந்த யோக்யதை உள்ளவன்-குழந்தை மண் உண்டால் தாய்-விலக்க -முதலில் ரஷிக்க -அறிவித்து திருத்துமா போலே –  சக்தன் ஞானவான்-அறிந்து வைத்தும்
விஷயாந்தர பிரவணனான இவன் -சொல்லிற்று கேட்டு திருந்த யோக்யதை இல்லை )

அஞ்ஞனான விஷய பிரவணன் ஆகிறான் -விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்-
ஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –
கேவல நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்ம பர லோக சேதன ஈஸ்வராதிகளுக்கு
பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாண்ய புத்தி ஒன்றும் இன்றிக்கே –
ஸ்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –
ஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-விஷயங்களினுடைய தோஷ
துஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை
விரும்பி மேல் விழுகிறவன் –
ஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று இசைகையாலே -ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-
அந்த சாஸ்திர மரியாதையில் (ஸாஸ்த்ர போதித ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளில் )அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக
சமனாய் இருக்கும் அவன் –

——————————————————

த்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை
ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

(ஆயி ஸ்வாமிகள்-சாஸ்த்ர தர்மாதிகளிலே பிரமாண புத்தி இல்லாத கேவல நாஸ்திகனை நியாய உபதேசத்தால் மெல்ல திருத்தலாம் -அறிந்தும் உதாசீனனாய் மனம் போலே யதா இஷ்டம் சஞ்சரிப்பவனை கால தத்வம் உள்ளதனையும் சர்வ சக்தனாலும் திருத்த ஒண்ணாது -அஜ்ஞ்ஞஸ் ஸூகமாராத்யஸ் ஸூக தர மாராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவ துர் விதத்தம் பிரஹ்மாபி நரம்  நரஞ்சயதி
 –அஜ்ஞ்ஞஸ் -குண தோஷ விவேகம் ஹீனன் ஸூகமாராத்யஸ் -ரஞ்சனம் இது நல்லது தீயிடத்துய் புரிய வைக்கலாம் இசைவடைய செய்யலாம் எளிதாக –ஜ்ஞான லவ துர் விதத்தம் பிரஹ்மாபி நரம்  நரஞ்சயதி ப்ரமாவாலும் ரஞ்சனம் செய்ய முடியாதே- களிமண் ஈரமாக இருக்க பானை பண்ணலாமே -தூங்குபவனை எழுப்பலாம் -பாவனை பண்ணுபவனை எழுப்ப முடியாதே )

அதாவது –
சாஸ்த்ரத்தை இல்லை  என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-
சாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –
விதி நிஷேத வஸ்யனாம் படி திருத்தலாம் –
சாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும்
அறிந்து வைத்து -பாப பயம் இன்றியே -நாஸ்திகவத் ஸ்வைரம் சஞ்சரிக்கிறவனை
சொல்லி  அறிவிக்க தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும்
திருத்த ஒண்ணாது என்கை –
இத்தால் அஞ்ஞனான விஷய பிரவணனை -விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே
விரக்தனாம் படி திருத்தலாம் -ஞானவானான விஷய பிரவணனை -விஷய தோஷாதிகளை
வ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே -தத் உபதேசத்தால்
ஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-
அஜ்ஞ்ஞஸ் ஸூகமாராத்யஸ் ஸூக தர மாராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவ துர் விதத்தம் பிரஹ்மாபி நரம்  நரஞ்சயதி -என்னக் கடவது இறே-
ஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து –

——————————————-

தன்னைத் தானே -சூரணை -180 – என்ற வாக்யத்தின் ஸ்வரூப நாசகங்களாகச் சொன்ன
அஹங்காரத்தின் உடையவும் -விஷயங்களின் உடையவும் க்ரௌர்யத்தை தனித் தனியே
அருளிச் செய்தார் கீழ் -உபயத்துக்கும் உள்ளதொரு க்ரௌர்ய விசேஷத்தை தந்த்ரேனே( சேரப் பிடித்து ஒரே வாக்கியமாக ) அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

(அஹங்காரமும் விஷயாந்த்ர ப்ராவண்யமும் சேர்ந்து விளைக்கும் அநர்த்தத்தை அருளிச் செய்கிறார் – பாகவத அபசாரம் உண்டாகும்-பகவத் சம்பந்தம் உணர்ந்து இருந்தால் வேறே எங்கும் தப்பு சொல்லாமல் நாநா வித வினைகளை நாமே செய்வதாக சொல்லிக் கொள்வோமே –விரோதம் -வேறே அபசாரம் வேறே -இங்கே விரோதம் பகைமை பாராட்டி -அபசாரத்துக்கு மேலே -என்றவாறுஸ்வரூப நாசத்தையும் -பாகவத விரோதத்தையும் -விளைத்தும் முடிக்கும் –வந்தே தீரும் கூட்டணி பலத்தால் -)

(ஆயி ஸ்வாமிகள்-ஸ்வரூப உஜ்ஜீவன யோக்யதையும் அழிக்கும் -அஹங்காரம் ஸ்வரூபம் மழுங்கி -திருந்த யோக்யதை உண்டே -நித்ய சம்சாரி ஆக்கி விடும் இது –நிலை நின்ற பாகவத விரோதம் வளர்க்கும் -)

(தானான தீமை -என்றது ஸ்வ அசாதாரணம் -தீமை  சேர்ந்தால் பலம் மிக்கு -அத்வாரக சத்வாராக தீமைகள் சேர்ந்து -அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய போக்யத்துவுக்கும் ஹானி தானான தீமை –நரகாதி துக்க அனுபவத்துக்கு ஹேது இவைகள் –இவை நீங்கினால் ஒரு காலத்தில் அனுக்ரஹத்துக்கு இலக்காக்கலாம் -பாகவத அபசாரமோ என்றால் -ஸ்வரூப நாசம் -பண்ணி அனுக்ரஹத்துக்கு இலக்காவது மாத்திரம் இன்றிக்கே -நிக்ரஹத்துக்கும் இலக்காகுமே- விஷ்ணு பக்தர்களை பூஜிப்பதே புருஷார்த்தம் –அபசாரம் அதி குரூரம் -காலாந்தரத்திலும் உஜ்ஜீவனத்துக்கு யோக்யதை இல்லாமல் ஆக்குமே -பகவத் அபிமதம் இருந்தால் தானே நமக்கு ஸ்வரூபம் -பாகவத அபசாரம் சத்தையும் நசிப்பிக்கும் –கல்ப கோடி சஹஸ்ரானாம் ஜன்மானாம் – –ந ஷாமாமி கதாசன -வராஹ புராணம் -என்று தானே அருளிச் செய்கிறானே -இவன் என்னுடையவன் அல்லன் -என்று -இவன் ஒதுங்க -கால தேவாதிகள் இடையாட்டம் இனி உண்டே இவனுக்கு )

அதாவது –
உக்த தோஷ யுக்தமான இவ் அஹங்காரமும் விஷய ப்ராவண்யமும் ஆகிய இரண்டும்
தானான ஆகாரத்திலே நின்று நசிப்பிக்கும் அளவு அன்றிக்கே –
பாகவத அபசாரம் ஆகிற மஹா அனர்த்தத்தையும் விளைத்து -ஸ்வரூப நாசத்தையும் பண்ணும் என்கை-
ஸ்வரூபேண என்றது -ஸ்வேன ரூபேண என்றபடி –
அஹங்காராதிகளிலே ப்ரவணனானால் உள்ள அளவு அன்று இறே
பாகவத அபசாரம் பண்ணினால் உள்ள பகவத் நிக்ரஹம்-

————————————————-

ஆனால் பாகவத விரோதம் விளைந்த போதே ஸ்வரூப நாசம் பிறக்கும் ஆகில்
பாகவத விரோதத்தை பண்ணிப் போரா நிற்கச் செய்தே -ஸ்வரூப அநு ரூபமான
நாம ரூபங்களை உடையராய்க் கொண்டு இருக்கிற படி எங்கனே என்ன –
அருளிச் செய்கிறார் –

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்
தக்த படம் போலே –

(ஆயி ஸ்வாமிகள்– வைஷ்ணவர்களை விசேஷித்து உரு மாய்க்கும் பாகவத அபசாரம் -வெந்து போன புடவை போலே -உண்டை பாவு இருந்தாலும் காற்று அடிக்க பறந்து போகுமே – பகவத் சீற்றம் தான் காற்று – வைஷ்ணவ நாமம் -தாஸ்ய நாமம் -இருந்தாலும் -திரு இலச்சினைகளும் -இருந்தாலும் -உள்ளு போட்கனாய் அஹங்காரத்தால் பீடித்து பாகவத விரோதம் பண்ணினவர்கள் வெந்தும் உருவம் உடைத்தால் போலே இருப்பார்கள் –
அவனுக்கு இவன் விஷயம் ஆக மாட்டானே -புடவையை அணிய முடியாதாப் போலே -பயன் பட மாட்டான் -அநர்த்தம் —பகவத் கோபத்தால் எரிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்)

அதாவது வைஷ்ணத்வ சிஹ்னமான தாஸ்ய நாமத்தையும் -தத் அநு குணமான ரூபத்தையும் உடையராய்க் கொண்டு -உள்ளொரு பசை இன்றிக்கே -அஹங்காராதி வஸ்யராய் பாகவதர்கள் திறத்தில் விரோதியைப் பண்ணிப் போருமவர்கள் -உருக்குலைய வெந்து இருக்கச் செய்தே உருவுடைத்துப் போலே தோற்று இருக்கும் தக்த படத்தோடு சத்ருசர் என்கை-

—————————————

தக்த படத்தின் படி தன்னை தர்சிப்பிகிறார் மேல் -மடி என்று தொடங்கி-

சூரணை -191–

மடிப் புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்து கிடக்கும் -காற்று அடித்தவாறே பறந்து போம் –

(ஆயி ஸ்வாமிகள்-உண்டை குற்றிழை- பாவு நெடும் இழை – சாம்பலும் காண ஒண்ணாத படி -சிற்றாறு பட்டுப் போகுமே -அருகில் உள்ளாரையும் துன்புறுத்தும்-அதே போலே  அபசாரம் -நிலை நின்ற பாகவத அபசாரத்தால் -பசை அற சேஷத்வ சத்தை அகன்று -நூல் சத்தை இல்லை -சாம்பலாகவே இருக்கும் – -நிக்ரஹத்தால் உரு மாய்ந்து போவார்கள் -என்றவாறு பத்தராவியின் சீற்ற பெரும் காற்று -பக்தர்களை ஆவியாக கொண்டவன் அன்றோ —கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -அசன்னநேவ-அசத் சமமாக ஆவார்கள் -)

அதாவது தட்டி மடித்து இருக்கிற புடைவை யானது தட்டுருவ மெங்கும் வெந்து இருக்கச் செய்தே- உண்டையும் பாவும் முன்பு போலே ஒத்திருக்கும் ..ஒரு காற்று வந்து சிதறிடித்தவாறே- உருக் காண ஒண்ணாத படி பாறி பறந்து  போம் என்கை ..
அப்படியே அபசார அக்நி தக்தராய் வைத்து நாம ரூபங்களோடு இருக்கிறவர்களும்-(திருமண் தாசர் அடையாளம் இருந்தாலும் )- பகவத் நிக்ரக விசேஷத்தாலே பாற அடி உண்டு   ,  உருமாய்ந்து போவார்கள் என்று கருத்து

—————————————-

பாகவத அபசாரம் பண்ணினால் ஈஸ்வரன் அசஹமானாய் உசித தண்டம் பண்ணும் என்னும் அத்தை ஆப்த வசனத்தாலே அருளிச் செய்கிறார் —

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளிச் செய்வார்-

(ஆயி ஸ்வாமிகள்-பூமியை ரஷிக்க -ஈஸ்வரன் நியாந்தா -தாழ நின்று பரிமாறி -பூ பாரம் நீக்கி -ஸ்ரீ பூமி பிரஹ்லாத விபீஷணன் –சீதா பிராட்டி பூமி தேவி – – ஆள் இட்டு செய்யாமல் தானே பாகவதருக்கு அனுக்ரஹித்து ராவணாதிகளை நிரசனம் சித்ரவதம் –ஆனைத் தொழில்கள் அதி மானுஷ சேஷ்டிதங்கள்-சாது பரித்ராணாம் பிரதானம் எம்பெருமானார் – நஞ்சீயர் பாகவத அபசாரம் பொறாமை தான் பிரதானம் -)

(ரோஷ ஆதிக்யம் -சேஷ்டிதங்கள் மூலமாக காட்டி அருளுகிறார் – ராகவ யாதவ நர ரெங்கேந்திர ஸிம்ஹங்கள்-கார்ய வைகுண்டத்தில் இருந்து ஜனகாதிகள் நுழை தடுத்த -காரணத்தால் ஜெய விஜயர்கள் சாபம் -மூன்று யுகம் -இரண்டு இரண்டு – இவர் சொல்லி நடந்தது தானே –இவர் சங்கல்பத்தால் நடந்த விஷயத்திலே இவ்வளவு கோபம் என்றால் -ஸூ இச்சை அன்றிக்கே கேவலம் அஹங்காரத்தால் பாகவத அபசாரம் பட்டால் கேட்க வேண்டாமே –உசித தண்டனை – கீழ் லோகம் ஜென்மம் இவர்களுக்கு என்றால் -26-நகரமாக இருக்கலாம் -சொல்லவே முடியாதே -என்றவாறு -)

அதாவது சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ,சர்வ சக்தியான சர்வேஸ்வரன் தன்னை- அழிய மாறி  இதர ,சஜாதீயனாய் ,அவதரித்ததும் ,கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபம் இத்யாதி அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகலாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் சகியாமையாலே என்று ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் என்கை –

————————————

இந்த பாகவத அபசாரத்தின் உடைய க்ரவ்யத்தில் பகவத் யுக்தியை தர்சிப்பிகிறார் இத்தால்-

சூரணை -193–

அவமாந க்ரியா–

(ஆயி ஸ்வாமிகள்-என் இடம் உள்ள பக்தி போலே பக்தர்கள் இடம் அதே அளவு அன்பு வை -எப்பொழுதும் வேண்டும்-அபசாரம் செய்தால் சர்வ ஜகத்தையும் சம்ஹரிக்கும் -ராவணனுக்காக இலங்கையே போனதே -ஈஸ்வரன் நிரபேஷையாக இந்த செயலே ஜகத்தை அழிக்கும் —அவமான க்ரியா தேஷாம் சம்ஹரித் அகிலம் ஜக-பகவான் வருந்த வேண்டாம்படி –ஜகமே சம்ஹரிக்கும்)

(நல்லவனுக்கு பெய் என பெய்யும் மழை -ஆழ்வார் சம்பந்தம் நாம் வாழ –
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாஸ்துதே –பாகவத விஷயத்தில் பகவத் விஷயத்து அளவாகிலும் வை – அப்படிச் செய்யா விடில் வரும் அநர்த்தம் மேலே –
சர்வஞ்ஞன் சர்வ சக்தன் கூட அளவிட்டுச் சொல்ல முடியாத ப்ரீதி அவர்களது –என்னாலும் அவ்வளவு பிரியம் வைக்க முடியாதே –மஹா நீயா விஷய பிரியம் பக்தி -ஏக தேச லேசத்தையும் அனுபவித்து முடிக்க – முடியாத என்னிடத்தில் மட்டும் இருந்தால் வியக்தமாகுமே-காட்டில் எரித்த நிலா போலே —என் ப்ரீதி கூட கடலில் இட்ட பெருங்காயம் போலே அல்பம் அன்றோ —மஹாத்மா ஸூ துர்லபம் -அறப் பெரியவர்கள் – -யான் பெரியவன் -நீ பெரியை என்பதனை  யார் அறிவர் -பக்திக்கு வகுத்த விஷயம் மத் பக்தேஷூ-அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே –கதா சித் கேசவ பக்தி – தத் பக்த பக்தி -துல்ய விகல்பம் இல்லை விவஸ்தித விகல்பம் ஸ்ரீ -ராமானுஜர் –இடைவிடாமல் பாகவத பக்தி –விஷயாந்தர ப்ராவண்யம் போலே தன்னிடம் மட்டும் வைக்கும் ப்ரீதி அசத் கல்பம் -என்பதே இவன் கருத்து –பாகவத சமாஹம் முக்கியம் – விவேகம் பண்ணாமல் கைக்கு எட்டின வற்றை உண்ணுமா போலே பகவத் விஷய ப்ரீதி -பாகவதர்கள் பெருமைக்கு தக்க பிரியம் வைக்க முடியாவிடில் என் இடம் உள்ள அளவாவது வைக்க வேண்டும்-பக்தி பண்ணா விடில் -அவமானம் ஆகுமே -ஸூஷ்ம அம்சமும் மீளாத படி சம்ஹரிக்கும் – இவன் சம்ஹாரத்தில் ஸூஷ்ம அவஸ்தை உண்டே -மஹான்கள் தொட்டாலே எந்த சின்னதும் மேலாகும் -அவமதித்த ஒருவன் இடம் சம்பந்தம் உள்ள அனைத்தும் -மீளவும் சர்க்க யோக்யதை இல்லாமல்-ஸூஷ்ம அம்சமும் இல்லாத படி -தத்வ த்ரயமும் நித்யம் -இருந்தாலும் -நடைப் பிணமாகுமே ஈஸ்வரன் இடம் இவ்வளவு கோபம் வந்தால் -பகவானை சிந்தித்து சரணாரவிந்தம் அடைந்து பிரதிபந்தகங்களைப் போக்கிக் கொண்டவனும் -அவனை யார் ஒருவன் நிந்தித்தால் – அவனது பிள்ளை பெண் நிலம் புலம் எல்லாம் நாசமாகும்-திரி ஸூலம் வஜ்ராயுதம் -பயம் வேண்டாம் ப்ரஹ்ம வித்தை அவமதித்தால் பெரிய துக்கம் பாகவதம் சொல்லுமே -)

யா பிரீதிர் மயி சம் விருத்தா மத் பக்தேஷு சதா ஸ்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –ஆஸ்வேத்கம பர்வம் மகா பாரதம்-என்று அருளினான் இறே

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -160-174-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 17, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————————

அவதாரிகை –
இப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது பிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-
அது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின கிரமத்தில் (காலத்திலே )நம சப்த அர்த்தம் முன்னாக அருளிச் செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் (அந்த பிரணவ நமஸ்ஸு இல்லை )பிராப்ய விரோதி (ஸூ போக்த்ருத்வ புத்தி)நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,பிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி பிரதமம் அவற்றிலே ஒன்றை (சேஷத்வமாகிய ஒன்றை இங்கு)அருளிச் செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–

சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

(ஆய் ஸ்வாமிகள் சேஷத்வ பாரதந்த்ர்யம் ஸ்வரூப அந்தரங்க குணங்கள் -ஸூ கதமானவை -இவையும் தீமையாகும் -அவன் அனுபவத்துக்கும் போகத்துக்கும்-இங்கே –இஷ்ட விநியோக அர்ஹமான சேஷத்வத்தால் வரும் தீமை –-பிரமிக்கிற தான் -இந்த தசையில் கூடாதே -சேஷி இத்தை அழித்து விநியோகிக்கும் தசை –-தான் என்னை முற்றப் பருக -ஆள் கொள்வான் ஒத்து -போகத்திலே தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை யழிக்கும் -விண்ணாட்டவர் மூத்தவர் -இவர் இங்கே பட்டத்தை யார் படுவார்-ஆர் உயிர் பட்டது – என்கிறாரே ஆழ்வார்–ஆர்ஜிக்கும் ஸ்வ சேஷத்வமாகிய நன்மையை -ஸ்வார்த்தமாக –தனக்கு அர்ஹமான சேஷத்வமாகிய நன்மை தீமையாகும் -சேஷியின் அனுபவ விரோதி -அநாதி கால ஆர்ஜிதமான பல தீமைகள் போல் இருக்கும் -அவர் போக அனுரூபமாகவே இருக்க வேண்டும் –)

(மநோ வாக் காயை –என்று தொடங்கி -நாநா வித அபசாரங்கள் பிரதிபந்தகங்களை க்ஷமிக்க –க்ஷமஸ்வ -என்று பிரார்த்தித்தால் போலே –நமஸ் -சப்தார்த்தம் முன்னால் –திருமந்திர நமஸ் இல்லை த்வயத்தில் உள்ள உத்தர வாக்ய நமஸ் அர்த்தம் –
ப்ராப்ய விரோதி -இந்த நமஸ் தான் -என்று மா முனிகள் காட்டி -அருளுகிறார் -ஸூ போக்த்ருத்வ புத்தி கூடாதே -சேஷத்வத்தை -ஸூ அர்ஹ சேஷத்வம் ஆகிய நன்மை -பர அர்ஹம் இல்லாமல் -தனக்கு தான் தேடும் சேஷத்வம் ஆகிய நன்மை —அநாதி கால ஆர்ஜித தீமைகள் -அக்ருத கரண –நாநா வித -அவற்றுக்கு சமம் ஆகுமே –ஸூவ அர்ஹ சேஷத்வத்தையும் போக்கி அருள பிரார்த்திக்க வேண்டும் -பாஷ்யகாரர் அருளிச் செய்தவற்றுக்கு மேலே-இத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் -)

கீழே  ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி
சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக் கட்டும் படி சொன்ன இத்தாலே உபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய்-இப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம் அருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —

தனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9 என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ என்று ஸ்வ நைச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம்  ஸ்வதந்த்ரோஹம் என்று இருந்த தீமையோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —
தீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம் –

————————————————-

சேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்
போக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

(ஆய் ஸ்வாமிகள்-நாயகன் உகக்கும் அழகுக்கு இட்ட சட்டை -போக தசையில் அணைக்கைக்கு கழற்றி வைக்குமா போலே –ஆத்ம அலங்காரம் சேஷத்வம் போகத்துக்கு ஏற்புடையாமல் இருந்தால் விலக்கி வைக்க வேண்டுமே–அனுரூபமில்லாமல் இருந்தால் விரோதியாகுமே )

(கௌஸ்துபத்துக்கு பிரபை போலே -ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வம் அலங்காரம் -சட்டை போலே ஸ்த்ரீக்கு -இந்த அலங்காரம் சப்தம் பிரயோஜகத்வேனே வியபதேச அர்ஹம்-)

அதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் ,போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-

————————————–

அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று-

சூரணை -162–

ஹாரோபி—162–

(ஆய் ஸ்வாமிகள்-இப்படி இருந்தும் – நூறு யோஜனை கடலும் மலையும் மரங்களும் பிரித்து வைத்து உள்ளதே என்று சட்டை போலே ஹாரம் -அலங்காரத்துக்கு தானே இது –அபிமத ஆபரணமும் தசா விசேஷத்தில் அநபிமதமானதே -ஹாரோபி -ஹாரம் கூட —சின்மயமான நித்ய ஸூ ரிகள்-தானே -லௌகிக ஹாரம் இல்லையே -ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -நித்ய ஸூ ரிகள் -பிரியா அமரர்கள் –கூட இல்லாமல் —அபி சப்தம் இதனாலேயே –)

(பால் வழு லிங்க வியாக்த்யாயம் -பீருவா ஸ்த்ரீ லிங்கம் வர வேண்டும் -பீருணா-என்பது –ரிஷிகள் இந்த பால் வழு பண்ணலாமே –பயப்பட்டது சீதை –பயந்து தன் கழுத்தில் தான் அணியவில்லை என்றவாறு –அன்றிக்கே-ராமன் என்றும் கொள்ளலாமே -ராமன் பயந்து அணிவிக்காமல் இருந்தான் என்றுமாம் -எடுத்து கொடுத்து பூணுவாள் -இவருக்கு பிடித்த சேஷத்வம் – இந்திரன் பட்டாபிஷேகத்துக்கு முத்து வடம் வர வளைத்து -பிராட்டிக்கு பிடித்ததால் தான் திருக் கண்ணால் நோக்கி திருவடிக்கு ஆம் பரிசு அருளினார்கள்-ஸூ பிரகாசம் தானே விளங்கும் – மற்றவற்றை விலக்கும் —விலகாது இருந்தாலும் பீதி அதிசயத்தாலே அதுவும் பூண வில்லை-என்றும் அபி சப்தத்துக்குத் தாத்பர்யம் )

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்று-சம்ஸ்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை என்றார் இறே (பரம போகியான ) பெருமாள் –பீருணா என்கிற லின்க வ்யத்யயம்  ஆர்ஷம் ..
அன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம் அறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்கவுமாம் –
பீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை என்றும் (பிரணயித்வத்தால் அவளுக்கு அணிவிக்கவும் இல்லை என்றுமாம்)கொள்ளலாம் பிரதி கூல விஷய   ஸ்பர்சம்  விஷ ஸ்பர்சம் போலே–

——————————————

ஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளிச் செய்கிறார் மேல்-

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

(புண்யம் த்ருஷ்டாந்தம் -இங்கு -பாபங்களும் புண்யங்களும் விலக்காக வேண்டுமே —
பாப புண்யம்- சேஷத்வ பாரதந்தர்யம் –சஜாதீயம் விஜாதீய சாம்யம் மூன்றும் உண்டே இவற்றுக்கும்-கர்மம் ஒரே ஜாதி இவை இரண்டும் – மோக்ஷ விரோதி என்பதால் சாம்யம்  சுகம் துக்கம் கொடுக்கும் என்பதால் விஜாதீயம்-சேஷிக்கு பிரியம் -சஜாதீயம் -சேஷத்வம் மட்டும் -நைச்ய அனுசந்தானம் பண்ணி நகரலாம் -பாரதந்தர்யம் அறிந்தவன் நகர முடியாதே -இதனால் -விஜாதீயம் -அனுபவிக்க இரண்டும் விரோதியாய் இருந்தால் அவனுக்கு பிடிக்காதே –புண்யம் -நன்மை என்றும் – ஸத் கர்மா போலவும் –துரும்பு போலே விலக்க வேண்டும் –அநாதி கால ஆர்ஜித புண்யம் மோக்ஷத்துக்கு விலக்காகுமே–பர அனுபவத்துக்கும் மோக்ஷம் போவதற்கும் என்று -)

( ஆய் ஸ்வாமிகள்-ஸூ வாதீன சேஷத்வ பாரதந்தர்யங்கள் த்யாஜ்யம்போக அதீனமானவை போக உபகரணங்கள் போலே உபாதேயம் – தத் போக அனு ரூபமான சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அதிசயத்வேன-சேஷித்வ ஸ்வ தந்த்ரனுடைய சரம -பரா காஷ்டை போலே இருக்க வேண்டுமே – – போகத்துக்கு அனுகுணமாக எது இருப்பதோ அதுவே ஸ்வரூபம் -ஆர்ஜித புண்யம் மோக்ஷத்துக்கு விலக்கடியாமாம் போலே என்றுமாம் )
கேவல பாரதந்தர்யம் -எதிர் விழி கொடுக்காமல் இருப்பது  கேவல சேஷத்வம் -நைச்ய அனுசந்தானம் பண்ணி விலகுவது – இரண்டுமே அவனுக்கு – போக விரோதிகள் தானே –
நைச்ய அனுசந்தானம் பண்ணி விலக்க மாட்டானே இவன் -அனுபவிக்கும் போது விலக்காமல் இருக்க வேண்டும் -பரதந்த்ரன் விலக்க மாட்டான் -எதிர் விழி கொடுக்க மாட்டான் -அவனை விட கொஞ்சம் தேவலை -அது விஜாதீயத்வம் -கேவல இல்லாமல் சேஷத்வமும் பாரதந்த்ரயமும் சேர்ந்தே இருக்க வேண்டும் -என்றவாறு –போக அனுரூபமாக இருந்தால் தான் உபாதேயம் )

புண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ்ச் சொன்ன படியே ஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும்-அப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான கேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-
அன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –
வியாவிருத்தமாய் இருக்கச் செய்தே  -பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் -அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான சேஷத்வத்தில் காட்டில் ,அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே- வ்யாவிருத்தமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே- பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமுமாம்-என்னவுமாம்
இத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே  போக விரோதியாய் நிற்கும்-
பாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை

—————————————–

இப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்த அநந்தரம்-பிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி- பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–

சூரணை -164–

குணம் போலே தோஷ நிவ்ருத்தி –164–

(சரம சரீர ஆசை உண்டே -நிர்பந்திக்கக் கூடாதே –கேவல சேஷத்வ பாரதந்தர்யங்கள் பிடிக்காதது போலே இதுவும் -பர அனுபவத்துக்கு இலக்கு -நிச்சய அனுசந்தானம் கூடாதாப் போலேயும் – எதிர்விழி கொடுக்காமல் இருந்தாப் போலேயும் இதுவும் -சேஷத்வ பாரதந்தர்ய -குணம் போல்-பிடிக்காதது போல் -சரீர நிவ்ருத்தி -தோஷ நிவ்ருத்தி -சேஷிக்கு அபிமதமே ஆனாலும் -இதுவும் அவராக மனம் உவந்து செய்ய வேண்டுமே – பர அனுபவத்துக்கு இதுவும் விலக்காகுமே – அருள் பெறுவார் தசையில் -திருவட்டாறு எம்பெருமானும் இருக்க –
ஆழ்வார் நிர்பந்திக்கும் சந்தர்ப்பம் பிராப்தி தசையில் இவனுடைய நிர்பந்தம் மூலமாக தோஷ நிவ்ருத்தியும் விலக்கு தானே -குணம் ஏக வசனம் இங்கு –அந்தரங்க குணமாக இவை இருப்பதால் -ஏக வசனம் -ஜாதி ஏக வசனம் – காம க்ரோத சத்ருவை வெல்ல வேண்டும் -ஒரே தாய் பிள்ளைகள் போலே –தத்வமஸி போலே நடுவில் உள்ளவற்றை சேர்த்தே அர்த்தம் கொள்ள வேண்டும்)

(இந்த சூரணைக்கு-மங்க ஒட்டு உன் மா மாயை -விலக்கு ஆகுமே —எம்பார் ஸ்வாமி அரும் பொருளில் இதுக்கு சமாதானம் உண்டே –விமல சரம திருமேனியில் ரமித்து இருப்பான் -ரமதே தஸ்மத் ஜீரண -ஸ்ருதி ஸ்வரூபஞ்ஞர் ஆழ்வார் -வேர் சூடுபவர் –விக்ரகத்தோடே ஆதரிக்கும் –வஞ்சக் கள்வன் -பாட்டை  அவனுக்கே அருசி பிடிக்கும் படி உபதேசித்து –தேகத்தின் ஹேயத்தை அறிவித்து அவனைக் கொண்டே விடுவித்துக் கொண்டாரே -தோஷ நிவ்ருத்தி தன் விருப்பம் படி இல்லை-அவன் கேட்டு அவனே தள்ளினார் -மாற்றி நினைக்கும் மருள் உண்டோ பகவானுக்கும் –ஆஸ்ரித வியாமோஹத்தால் வந்த மருள் தெருள் தானே -ஸார்வ பவ்மன் உண்ணப் புக்கால் –நாலு ஆறும் அறிவிக்கும் ஆழ்வார் –உண்மை ஸ்வ பாவம் அருளிச் செய்யத் தானே அடியிலே நீர் மயர்வற மதி நலம் அருளினீர் என்று -அறிவிக்க -ஸ்வ பாவம் அறிந்த ஸார்வ பவ்மன்– – சொல்லிக் கொண்டு இருக்கும் தனது தொழிலைச் செய்யாமல் இருந்தால் மஹா அபராதம் -சர்வ விஷயங்களையும் அறிவிக்கத் தானே இவன் கொடுத்த மதி நலம் இதைப் பெற்ற இடத்திலேயே திரு நகரியிலே அங்கேயே சமித்து -பொலிந்து நின்ற பிரான் தன் திவ்ய ஆஸ்தானத்திலே – இந்த சரீரம் பரம பதம் கூட்டிப் போக மாட்டேன்–இங்கேயே அனுபவிக்கக் குறை இல்லையே – -பொலிந்து நின்ற பிரான் அனுபவித்திக் கொண்டே இருக்கிறானே -ஆத்மாவை அனுபவிக்கும் இடத்தில் அத்தை அங்கே அனுபவித்து -இத்தை இங்கேயே அனுபவித்திக் கொண்டு இருக்கிறானே -ஆகையால் விவஷித விபரீதம் இல்லை)

குணம் என்கிறது -கீழ் விரோதியாகச் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-
இவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய்  இறே இருப்பது —
இது போலே தோஷ நிவ்ருத்தி என்றது-இவ் வாத்ம குண த்வயமும் கீழ்ச் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது
அப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் -சரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..
குணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–

———————————————

தோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அத்தனை அன்றோ-ஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்கக் கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்–ஆபரணம் என்று தொடங்கி-

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் இரா நின்றது இறே  –

(ஆய் ஸ்வாமிகள்-தோஷம் அபிமதமாய் ஸூ தோஷத்தை போக்கும் அதுவும் அநபிமதமாகுமோ -என்னில்  கண் மூடித் தனமாக ஒருவரை ஆசை கொண்டால் -அசோக வனிகை பிராட்டி அணிந்த ஆபரணம் பெருமாளுக்கு அந பிதமாய் -பத்து மாதம் -உடை முடி பேணாத அழுக்கு அபிமதமாய் இருந்ததே -அப்படியே ஸூ யத்ன க்ருத நிர் தோஷத்வம் –சரீரம் கழற்றும் பொறுப்பு அவரது -அங்கீ கார தசையில் அநபிமதமாய் -ச தோஷத்வமே வத்சலனான ஸ்வாமிக்கு அபிமதமாய் இருக்குமே -உண்ணும் சோற்றை திரு வாயில் இருந்து விலக்குவதுக்கு ஒக்குமே – -)

(லௌகீகத்திலே இப்படி காண்கிறோமே–நீண்ட கண்கள் காது வரை நீலோத்பல புஷ்பம் போலே இருக்க வேறே பூ வேண்டுமோ -வீண் தானே -அழுக்குடன் பீளை இருக்குமே -அது உகந்தானே -மலர்ந்த மார்பு இருக்க ஹாரம் பாரம் தானே -இயற்க்கை மணம் இருக்க சந்தனம் வீணே)

அதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-

——————————————-

இது தான் லௌகிகத்தில்  அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு ஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது  –166-

(ராம வார்த்தை -சீதா வார்த்தை – இருவர் அபிப்ராயப்படி அருளிச் செய்த ஸ்லோகங்கள் உண்டே -திருவடி நினைவு படுத்த பரபரப்புடன் விபீஷண பெருமாள்
அஸ் நாதா தர்ச இதி த்ரஷ்டும் இச்சாமி சீதை சொல்ல- ராமர் வார்த்தையை உள்ளர்த்தம் புரியாமல் விபீஷணன் சொல்ல -சதஸ் வார்த்தை -வேறே உள்ளக் கருத்து வேறே -விபீஷணன் நிர்பந்தம் -ஸ்வஸ் ஸூத்தமாய் ஸ்வ சம்பந்தத்தால் வஸ்த்தாந்தரத்துக்கும் பிரகாச ஸூத்திகளைப் பண்ணக் கடவ தீப உஜ்ஜ்வல்யம்- கண் நோய் இருப்பவனுக்கு அப்ரகாச ஹேது மாலின்யமாய் -தீபத்தின் அழுக்கு தானே இவனுக்குப் பிடிக்கும் -விரஹ நோய் உள்ளவனுக்கு அழுக்கு அபிமதம் ஆகும் அன்றோ -பரம ரசிகர் –பிணிப்புண்டு கிடக்கும் பெருமாள் திரு உள்ளத்துக்கு ஸ்நாநம் செய்து வந்தது அபிமதமாக இருக்காதே-ஸ்நாதாதிகளுக்கு அவகாசம் இல்லாமல் இருக்க ஆந்ரு ஸம்ஸயத்தால் விஜயமானவற்றை இப்படி -சொல்லி -அவள் எனது அபிப்ராயம் அறிந்தும் -உசிதம் லோக அபவாதம் வாராமைக்காகவும் -இரண்டாலும் அறிந்து அப்படியே வர வேண்டுமே – -ராவண பவன வாச ப்ரயுக்த அதிசங்கா மூலம் இல்லை –பிராட்டி மருந்து ஸ்நாநம் -முதலிகளைத் தள்ளிய அபசாரம் மூடு பல்லக்கில் கூட்டி வந்ததை தப்பாகக் கொண்டு -இது இரண்டாவது காரணம் பெருமாள் கோபம் கிளப்ப-பார்க்க பிரதிகூலயை-கண் புரை வந்த வனுக்கு தீபம் போலே  ராக்ஷஸாதிப -என்னை இப்படியே காட்ட ஆசைப்படுகிறேன் -பர்த்தா ஆஜ்ஜா இது -வாய் வார்த்தையாக சொன்னதை –திருவடி பிராட்டி கருத்து அறிந்து விபீஷணனுக்கு கண்ணும் கண்ண நீருமாய் அழுக்கு உடம்புடன் ஸ்நானம் பண்ணாமல் இருக்கும் தன் திரு உடம்பை பெருமாளுக்கு காட்ட ஆசை கொண்டதை –அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப  — அறிவிக்க  பெருமாளுக்கு உண்டான ஹார்த்த பாவம் கண் மூக்கு தோள் இவை காட்டினாலும் -அறியாமல் வாய் வார்த்தை மட்டும் கேட்டு நிர்பந்தித்தான் –ஸ்நானம் பண்ணி வந்தால் பர்தாவுக்கு ரோஷம் வரும் என்று பிராட்டி சொன்னதாகவும் கொள்ளலாமே -)

அதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற- தீபோ நேத்ரா துரஸ்யேவ பிரதிகூலாசி மே த்ருவம் –என்கிற வார்த்தையை இவ் வர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-
சபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவைக் காண ஆசைப் பட்டு இருந்தவருக்கு
இவள் திரு மஞ்சனம் பண்ணி வந்த இது  ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..
ஆனால் தீர்க்க முஷ்ணம் விநிஸ்வஸ்ய மேதிநீவ மவலோகயன்  உவாச மேக சங்காசம் விபீஷண உபஸ்திதம் —திவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம்  இஹா சீதாம் சிரஸ்ஸ்னாதாம் முபஸ்தாபாய மாசிரம்-என்று இவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்துக் கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..
இப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் ..  நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ என்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராகக் கூடாது இறே அவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,
யாதாஹா ராமோ   பார்த்தா தே ததா தத் கர்த்து மர்கசி–என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —
அவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே-எல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது ,திரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே-அது அவ் விருப்பு காண ஆசைப் பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை
அன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து அருளச் சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே ரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று பிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..
ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ்ச் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்

——————————————

இப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே ஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை ஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்சக் கள்வன் -இத்யாதியாலே-

சூரணை -167–

வஞ்சக் கள்வன் மங்க ஒட்டு —

( ஆய் ஸ்வாமிகள்அனுஷ்டான சேஷமாக ஆஸ்ரிதர் அழுக்கை உகப்பது இதில் –கீழே அனுஷ்ட்டிக்க முடியாமல் கோபம் -10–7-வஞ்சக் கள்வன் தொடங்கி-மங்க ஒட்டு என்னும் அளவாக பத்து பாட்டுக்கள்-பூவோடு ஏறின நாறு -சம்பந்தம் கொண்டு விரும்புமா போலே ஒரு நீராகக் கலந்து –நின்றார் அறியா வண்ணம் -பெரிய பிராட்டியாரும் அறியாத படி
ஆத்மாத்மீயங்களை நெஞ்சும் உயிரும் உண்டு தானே போக்தாவாயும் பரிபூரணனனுமாய் ஆனான் -விட இசையாமல் விரும்பி -ஆழ்வார் த்யாஜ்யமான தேகம் -அபிமத விஷயம் –)

(ஆத்ம ஞானம் பிறந்த இவன்-அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று கழிக்கும் தேகத்தை அன்றோ விரும்புகிறான் -அதீத சபலமாக -விமல சரம திருமேனியுடன் திரு நாட்டுக்கு கொண்டு போக -இதனுடைய தோஷங்களை உணர்த்தி -மங்கும் படி இசைய கால் கட்டி –
நன்கு என் உடலம் கை விடான் -என்னை முற்றும் உயிர் உண்டான் –நாங்கள் குன்றம் கை விடான் -திருமலை அளவு இவர் இடம் வ்யாமோஹம் -)

அதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே , அத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.
அவ் வளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு போவதாக அவன் அபிவிநிஷ்டனாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப்படி செய்து அருள ஒண்ணாது – என்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது  மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி , அவன் இத்தை விடுவித்துக் கொண்டு ,போம்படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–

————————————

அபிமத விஷயத்தில் –அழுக்கு போலே ஆதரிப்பது மட்டும் இல்லை -கோபம் வரும் -பிடிக்காதது மட்டும் இல்லை –கீழே பார்த்தோம் –ஆதரிப்பது மட்டும் இல்லை –தேகத்தை கழற்ற ஒட்டான்-தேகம் படைத்த அனைவருக்கும் இப்படி பட்ட ஆழ்வாரைக் காண்பது கர்தவ்யம் அன்றோ -ஞான பரிமளம் தோற்றும் இந்த விக்ரஹத்திலே- த்ருஷ்டானத்துடன் தர்சிப்பிக்கிறார்

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

த்யாஜ்ய தேக வியாமோஹம் -மணத்தின் வாசி அறிந்து போகிகள் -மண்ணை உதறினால் மணம் குன்றும் என்னுமா போலே-பரம போகியான எம்பெருமானும் விமல சரம தேகியான ஞானியை -விக்ரஹத்தை விடுவிக்கில் ஞான வாசனை செவ்வி குலையுமே என்று ஆதரிப்பான்

ஆக- குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும்
பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் தாதாரத்தைப் பண்ணும் படியையும் ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும் பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் ,சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்
அதின் எல்லையையும் ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்
ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும் அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————

இன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்தில்- அவன் விருப்பத்தை-தர்சிப்பிக்கிறார் –

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

(ஆய் ஸ்வாமிகள்-பகவத் ஸ்வா தந்தர்யம் -யாராலும் தாண்ட முடியாதே –இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை –சம்சாரம் அடிக் கொதித்து -உடன் கூடுவது என்று கொலோ திருஷ்ணை அதிகரித்துபரம ஆர்த்த திருப்த பிரபன்னனுடைய நிர்மூல கர்ம சரீரத்தை, -வஸ்து வாசி அறிந்த அவன் இச்சையால் -முமுஷுத்வ பரிபாகம் ஏற்பட்ட பின்பும் இருக்கைக்கு அடி -நித்ய போக்தாவின் இச்சையே -போக அனுகுண கேவல இச்சை -முன்பு உள்ளது -லீலா அனுகுண கர்ம நிபந்தன இச்சை )

(வேறே கோணத்தாலே -என்றது –கீழே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்தி கொண்டு மங்க ஒட்டு இத்யாதி -இப்பொழுது பிரபத்தி ஸ்வ பாவம் விளக்கும் சாஸ்திரம் –பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பு சரீரம் தொலைந்து போவான் -இதுவும் அவன் இச்சித்தால் தான் நடக்கும் -சக ஹ்ருதயம் –வேண்டுமே -பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும்-வர்த்தமான பிராரப்த கர்மம் உண்டே இவனுக்கு –பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே)

பரம ஆர்த்தன் ஆகிறான் –
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை -திருவிருத்தம் -1
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -திருவாய்மொழி -3-2-2 –
எங்கு இனி தலை பெய்வன் -திருவாய்மொழி -3-2-9 – – –
நாளேல் அறியேன் -திருவாய்மொழி -9 -8 -4 –
தரியேன் இனி -திருவாய்மொழி – 5- 8- 7-
கூவிக் கொள்ளும்  காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6 -9 -9 – என்று
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
பகவத் அனுபவத்தில் பெரு விடாயாலும் –
இதுக்கும் மேல் இல்லை என்னும்படி ஆர்த்தி விளைந்தவன் -ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திதிக்கு ஹேது- பிராரப்த  கர்மம் என்ன ஒண்ணாது இறே –சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதோடு விரோதிக்கையாலே –
ஆர்த்தாநாம் ஆஸூ பலதா சக்ருதேவ  க்ருதாஹ்யசவ் த்ருப்தாநாம் அபி ஜந்தூனாம் தேஹாந்தர  நிவாரிணீ-ஸ்ரீ பாஞ்சராத்ரம் -என்று இறே பிரபத்தி ஸ்வாபம் தான் இருப்பது –
ஆகையால் இவனுடைய  சரீர ஸ்திதுக்கு ஹேது -இன்னமும் சில நாள் இவனை  இச் சரீரத்தோடே வைத்து அனுபவிக்க வேணும் -என்கிற ஈஸ்வர இச்சை ஒழிய வேறு ஓன்று இல்லாமையாலே -கேவல பகவத் இச்சை இறே -என்கிறார்-
(வர்த்தமான சரீர) பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும் -பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

——————————————————-

இப்படி தன் விருப்பத்துக்கு விஷயமான இவன் சரீரத்தை அவன் விரும்பும் பிரகாரம் அருளிச் செய்கிறார் மேல் -திருமால் இரும் சோலை மலை-என்று தொடங்கி –

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்

(ஆய் ஸ்வாமிகள்-கேவல ஸூவ இச்சையாஸ்திதமான இவன் விமல சரம தேக ஏக தேசத்தில் –ஆழ்வார் -உகந்து அருளின நிலங்கள் -இருப்பது கிடப்பது நிற்பது -மால் செய்கின்ற மால் அனைத்து வியாபாரங்களையும் ஒரு மடை கொண்டு தான் உகந்து அருளின நிலமான-அவ்வுருவான – ஆழ்வார் திருமேனி ஏக தேசத்தில் செய்கிறார் -)

(இவ்வளவு நாளும் தன் விருப்பமான சரீரத்தை-வெறுத்து -மால் பால் மனம் சுளித்து முமுஷுவான பின்பு அதில் -அவன் விருப்பம் கொள்ளும் பிரகாரத்தை அருளிச் செய்கிறார் -நாம் சரீரம் விரும்ப ஆத்மாவை அவன் வெறுப்பான் -நாம் சரீரத்தை வெறுக்க -அவன் இந்த அசேதனத்தை கூட விரும்புகிறான் – நாம் மேலோட்டமாக பாதுகாக்க அவன் திவ்ய தேசம் போலே அன்றோ பார்க்கிறான் -)

அதாவது தெற்குத் திருமலையையும் திருப் பாற் கடலையும்-என் உத்தம அங்கத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –
ஸ்ரீ வைகுண்டத்தையும் வடக்குத் திரு மலையையும் -என்னுடைய சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் என்றார் இறே ஆழ்வார் –
இப்படி ஓரோர் அவயவங்களிலே இரண்டு இரண்டு திருப்பதிகளில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினான் என்ற இது எல்லா திருப்பதிகளில் பண்ணிய விருப்பத்தை ஓரோர் அவயவங்களிலே பண்ணி நின்றான் என்னும் அதுக்கு உப லக்ஷணம் –
(பிரதானம் -விபூதி அத்யாயம் அருளிச் செய்தது போலே -இங்கும் -பிரதான இந்த திவ்ய தேசங்களை அருளிச் செய்கிறார் – அப்ரதானம் உப லக்ஷணம் உண்டே –)
ஆகையால் அப் பாட்டில் சொல்லுகிறபடியே தனக்கு அபிமதமான திவ்ய தேசங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை ஞானியான இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் என்கிறார்

————————————————-

உகந்து அருளின தேசங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ் விஷயம்
ஒன்றிலுமே பண்ணும் என்றார் கீழ் -இவ் விஷயம் சித்தித்தால் உகந்து அருளின நிலங்களில் ஆதாரம் அவனுக்கு சங்குசிதமாம் என்னும் இடம் அருளிச் செய்கைக்காக -இரண்டு இடத்துக்கும் உண்டான வாசியை அருளி செய்கிறார்-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

(ஆய் ஸ்வாமிகள்-இரண்டு இடத்துக்கும் உள்ள வாசியை அருளிச் செய்கிறார் -இரண்டும் சமம் இல்லை அவனுக்கு —திருக்கடித்தானமும்ஸாத்ய ஹ்ருத்யஸ்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் கிருதஞ்ஞயா கந்தம் தாயப்பதியிலே –பரமபதாதி திவ்ய தேச அங்குத்தை வாஸம் – -அலப்ய வாஸம் பெற -சித்த சாதனங்கள் -பிராப்யம் இங்குத்தை நிச்சிந்தை வாஸம் -அவனுக்கு ஆழ்வார் திரு மேனி -சரம சாத்தியம் –சாதன அனுஷ்டான யோக்கியமான தத் தத் ஸ்தலங்கள்திருமால் வைகுந்தமும்அதுவும் -சாதன பூமி ஆழ்வார் திருமேனி அடைய -இத்தால் சாபேஷ்ய சாதனத்தைப் பற்ற நிரபேஷ சாத்தியம் ஏற்றம் வைபவம் யுடையது என்றவாறு -)

(நான்கு யானைகள் -ஒருத்தனை வளைக்க ஊரை வளைப்பாரைப் போலே அன்றோ
நாகத்தணை -குடந்தை நாகத்தணை நாகத்தணை வெக்கா நாகத்தணை எவ்வுள் நாகத்தணை அன்பில் நாகத்தணை திருப் பாற் கடலிலும் – கிடக்கும் –அணைப்பார் கருத்தனாவான்மலை மேல் தான் நின்று –(திருமலையில் நின்று) என் மனத்துள் இருந்தவனை -சாதன சாத்தியம் இங்கும் -பனிக் கடலில் -பள்ளி கொள்ளுகையை மறந்து விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -சுகிக்க வல்ல —ஆஸ்ரித ஹிருதய வாஸம் சாத்தியம் – நின்று திருமலையில் வாசத்துக்கு அங்கத்தவமும் -ஆழ்வார் திரு உள்ளம் அங்கி சித்திக்கும்  பள்ளி கோள் வாழ்வு –சாதன ஸாத்ய தசைகள் ஸ்பஷ்டம் இங்கு எல்லாம் –பனிக்கடலில் இவரை அடைய யோக நித்திரை சிந்தனை செய்து இருந்தானே )

உகந்து அருளின நிலங்களில் விரும்பி வர்திக்கிறது -உசித உபாயங்களாலே சேதனரை
அகப்படுத்திக் கொள்ளுகையாலே -அங்குத்தை வாசம் சாதனம் -என்கிறது –
இச் சேதனன் திருந்தி இவன் ஹ்ருதயத்தினுள்ளே தான் வசிக்கப் பெற்ற இது அங்கு நின்று பண்ணின கிருஷி பலம் ஆகையாலே -இங்குத்தை வாசம் சாத்யம் -என்கிறது –
நாகத்தணை குடந்தை -நான்முகன் திரு வந்தாதி – -36 –
மலை மேல் தான் நின்று -திரு வாய் மொழி -10 -4 -4 –
பனிக் கடலில் பள்ளி கோளை -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 -4 -9 –
இத்யாதிகளிலே இவற்றினுடைய சாதன சாத்யத்வங்கள் தோற்றா நின்றது இறே —

———————————————

இந்த சாதன சாத்யத்வ பிரயுக்தமான ஆதர தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம்
மட்டமாய் இருக்கும் –

( ஆய் ஸ்வாமிகள்-திவ்ய தேசங்கள் ஆதாரம் த்ருணவத் கரிக்கும் படியே இவர் திரு மேனியாகிய ஸாத்ய தேசம் தனக்கே அற்றுத் தீரும் படி நேராக சித்தித்து-அத்தால் சாதனமான அந்த திவ்ய தேசங்களின் ஆதாரம் முன்பு போல் அன்றியே இருக்கிலுமாம் போகிலுமாம் -வைவாஹிக கிருஹாஸ்த்தனுக்கு -ஸ்வ கிருஹம் ரஸிக்காதே –ஸாத்யத்தின் போக்யதா அதிசயம் -காணக் காண அதிசயிக்கிற சாதன அதிசயம் இது கிட்டினவாறே அதில் ஆதாரம் மட்டுப்படும்-இவருடைய சாத்தியம் அவனுக்கு சாதனமாய் அவனுக்கு சாத்தியம் -ஆழ்வார் திருமேனி-இவருக்கு த்யாஜ்யமானதே -)

(சாத்யத்தில் -ஆழ்வார் திருமேனி- ஸ்வாரஸிக இச்சையும் -சாதனத்தில் தாதாத்மிக -ஆழ்வார் உகந்ததால் அவன் உகக்கிறான் -இது தான் அவனுடைய தாரதம்யம் )

அதாவது
தன் திரு உள்ளத்தில் புகுந்த பின்பு தனக்கு புறம்பு ஒன்றிலும் ஆதரம் இல்லை என்று தோற்றும்படி அவன் இதிலே அத்ய ஆதரத்தைப் பண்ணி -நித்ய வாசம் பண்ணுகையாலே –
திரு மலையும் -தன் சந்நிதானத்தாலே கோஷிக்கிற திரு பாற் கடலும் – –
ஒருத்தருக்கும் எட்டாத பரம பதமான தேசமும் புல்லிய வாய்த்தினவோ என்றார் இறே ஆழ்வார் –
இப்படியே சாத்தியமான இச் சேதன ஹ்ருதயம் சித்தித்தால் -இதுக்கு சாதனமாக முன்பு விரும்பிப் போந்த திவ்ய தேசங்களில் ஆதரம் சங்குசிதமாய் இருக்கும் என்கை –
சாத்யம் கை புகுரும் அளவும் இறே சாதனத்தில் ஆதரம் மிக்கு இருப்பது –

———————————————

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

(ஆய் ஸ்வாமிகள்-ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் —பாலாலயம் -பெரிய ஆலயம் ஆழ்வார் திரு உள்ளம் -வடக்கு திருமலையும் தெற்குத் திருமலையும் இவை தான் நமக்கு கிடைத்தன என்று நின்று கொண்டு இருந்தானாம் -இவர் வலிய மூட்டும்படி யாய்த்து அவனது ஆதாரம் இவற்றின் மேல் -)

(தியாக அபாவ பிரார்த்தனை -தியாக அதிசங்கை அர்த்த சித்தம் –க்ருதஞ்ஞா ஹேதுகை இதுவே -உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் -முன்னம் சொல்லி இளம் கோயில் பின் இருப்பதாலே -)

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-இவனுக்கு எல்லை நிலமான திருமலை அளவும் அவர் விரும்பின வாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக நினைத்து இருக்கும் திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே
பண்ணினானாய் இருக்கிறது –என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின –பாலாலயமான திருப் பாற் கடலை க்ருதஜ்ஜத்தை தோற்றவும்- உன் உகப்பைப் பற்றவும் -பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

அதாவது-
ஸ்ரீ பூதத்தார் தம்மை பெருகைக்கு உறுப்பாக முன்பு தான் விரும்பின திவ்ய தேசங்களில் முன்புத்தை ஆதரம் இன்றிக்கே -தன் திரு உள்ளத்திலே அத்ய ஆதரத்தை பண்ணிச் செல்லுகிற படியை கண்டு -அவ்வோ திவ்ய தேசங்களில் கை விடப் புகுகிறானோ என்று அதி சங்கை பண்ணி – என் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு பால ஆலயமான திரு பாற் கடலை கை விடாது ஒழிய வேணும் என்றார் இறே –
ஆகையால்-இப்படி இவன் பிரார்த்திக்க வேண்டும்படி ஆய்த்து அவனுக்கு அவற்றில் ஆதரம்
மட்டமாம் படி -என்கை-

————————————————

இப்படி இவன் அர்த்திததாலும் -சாத்யம் சித்தித்த பின்பு அவனுக்கு அவை
அபிமதங்களாய்  இருக்குமோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

(ஆய் ஸ்வாமிகள்-1-ப்ராப்ய ப்ரீதி விஷயத்துவத்தாலும் -ஆழ்வார் உகந்த திவ்ய தேசங்கள்–மண்டியே இருப்பார்களே – என்பதாலும் 2-கிருதஞ்ஞதையாலும் – பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் -சாத்தியம் கை புகுந்த பின்பும் ஏறி வந்த ஏணி விட்டு விடாமல் இருக்க இரண்டு காரணங்கள் —அபிமத தமமான சாத்தியத்தை பற்றின பின்பு -அபிமத தர சாத்தியம் -அபிமத சாத்தியம் —ஆகார த்வயம் -மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் பொலிந்து நின்ற பிரான் -இவர்களுக்குள் சம்பந்தம் போலே இங்கும் —சரம ப்ராப்யம் ஆழ்வார் -போக்தாவான பெருமாள் -போக்யதா அதிசயமான ஆதாரம் மட்டும் அன்றிக்கே –
குயில் இனங்கள் சோலை இத்யாதி மட்டும் அன்றிக்கே –பதின்மர் பாடும் பெருமாள் -இவர்கள் மண்டி இருப்பதால் -தத் சாதனத்வேன வந்த ஆதாரம்)

பிராப்ய ப்ரீதி விஷயத்வம் ஆவது -தனக்கு பிராப்ய பூதனான இச் சேதனனுடைய
உகப்புக்கு விஷயமாய் இருக்கை-
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை -திரு குறும் தாண்டகம் – 19-
என்று மண்டி இறே இவன் இருப்பது –
க்ருதஜ்ஜதையாவது -இவ்வோ தேச வாசத்தால் அன்றோ நாம் இவனைப் பெற்றது என்று
அத்தேசம் தமக்கு பண்ணின உபகாரத்தை அநு சந்திக்கை –
இவை இரண்டாலும் சாத்தியமான இச் சேதனன் கை புகுந்து இருக்கச் செய்தேயும்
அவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களாய்  இருக்கும் -என்கை

(ஆக -11-சூரணை களாலே அருளிச் செய்தவற்றை தொகுத்து அருளிச் செய்கிறார்
குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும் –164–பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி –தத் உபபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில் அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —165-
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் யாதரத்தை பண்ணும் படியையும் -167-
ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும்–168-
(மண் பற்று -ரஹஸ்ய த்ரயம் விளைந்த மண் என்று மா முனிகள் அபிமதமாய் விடாமல் இருந்தால் போலேயும் )பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,—169-
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் —-170-
சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்-172-
அதின் எல்லையையும்-173- ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வ சாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும் ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும்–174- அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -142-159-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /உபாயாந்தர தோஷம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

December 16, 2017

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை -மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————————

இப்படி பிரஸ்துதையான  பிரபத்தியினுடைய அநு உபாயத்வத்தையும் தத் பிரதி கோடியான பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் –இது தன்னை பார்த்தால் -சூரனை – 54-இத்யாதியாலும் -பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு -சூரனை -66 -இத்யாதியாலும் – கீழ் அருளிச் செய்தபடி அன்றியே -முகாந்தரேண அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -142-

இவன் அவனைப் பெற நினைக்கும் போது
இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )

(ஆய் ஸ்வாமிகள்-ப்ராப்தா ப்ராப்யன் பாவம் இருவருக்கும் –சம்பந்தம் -சரியான தலையில் இருக்க வேண்டுமே கார்யகரம் ஆவதற்கு-இது முதல் -மேல் –ப்ரஹ்மாவாய் இழந்து போதல் – இடைச்சியாய் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும் –242சித்த உபாய வைபவம்
கீழ்ச் சொன்ன பிரபத்தி —பரதந்த்ரனான இவன் ஸ்வதந்த்ரனான அவனை தான் -பலியாய் -ப்ராப்தாவாய் -பெற நினைக்கும் பொழுது -அவன் நினைவு கூடாதாகில் – ஸ்வரூபத்துக்கு அனுரூபமான இதுவும் அவனை இழக்க ஹேது வாகுமே -உபாயமாகாதே அபாயமாகவே யாகும் -)

(வேறே முகத்தால் இங்கு அருளிச் செய்கிறார் -அடுத்த நான்கு சூரணைகளால்–ஆனந்த மயன் அறிந்தவன் அடைகிறான்--தூ மணி விஷய வாக்கியம் அவன் இவனுக்கு ஆனந்தம் கொடுக்கிறான் –நோற்காமலே பெற்ற கோபி –நோற்று ஸ்வர்க்கம் பாசுரம் -இயற்கையால் பரதந்த்ரன் நான் ஸ்வீ கரிக்கிறேன் என்ற ஸ்வ தந்த்ர நினைவு வந்தால் சாதனம் ஆகாது -பாதகம் ஆகும்-பிரபத்தியும் -கீழ் சொன்ன ஏற்றங்கள் இருந்தாலும் உபாயாந்தர கோஷ்ட்டிக்குள் புகும் –சரண்ய ஹிருதய அனுசாரியாக இருப்பதும் இல்லாமையும் -வேறு முகமாக இதில் —அபராத கோடி கடித அப்ரயுக்த ஷாமணீயத்வாதிகள் -பொறுத்து அருள் -என்று பண்ணின பிரபத்திக்கும் கேட்க வேண்டுமே-அபராத கோடியில் சேராமல் -அவன் திரு உள்ளத்துக்கு சேரும் படி இருக்க வேண்டும் –பிரபத்வ்யன் ஸ்வ தந்த்ரன் தானே உபாயமாகும் – பக்தியும் ஸ்வா தந்தர்ய அபிமானதுடன் பண்ணி உபாயத்வம் வருமே -இது– யாதிருச்சிகமாக –அவன் ஸ்வா தந்தர்யம் குறைக்க நாம் யார் —ஸ்வரூப அனுரூபமாகவும் உபாயத்வமும் இல்லாமல் இருக்க வேண்டுமே -உபாய பிரபத்திக்கு -உபாஸனாதிகளைப் போலே அஹங்கார கர்ப்பம் குற்றம் வரும் போலே அனுரூபமாய் இருக்காதே
பரத ஆழ்வான்-ஸ்ரீ பாஷ்ய காரர் பிரபத்திகள் —அதிகார விசேஷண பிரபத்தி -பல பிரபத்தி -அனுபாய பிரபத்தி -பர்யாய சப்தங்கள் —அதிகாரி விசேஷணமாய் ஸ்வரூப அனுரூபமாய் உபாயத்வம் இல்லாமல் –இருந்தாலும் -பரத பிரபத்தி பலம் கிடைக்காதது –
ஷாமணியத்வம் -கத்யத்தில் ஸ்ரீ பாஷ்யகாரர் -பொறுத்து கொள்ள பிரார்த்திக்கிறாரே பிரபத்தி பண்ணினத்துக்கும் -இருவருக்கும் கேட்டே பொழுதே இல்லையே –
சரண்ய ஹிருதய அனுசாரியாய் -இல்லாமல் பலம் இல்லை என்பது கண்டால் உபாய பிரபத்திக்கு சொல்ல வேணுமோ –ஆகவே அவன் திரு உள்ள நினைவே உபாயம் என்றவாறு -உடைமையை -உடையவன் -ஸ்வாமி தானே அங்கீ கரிக்க வேண்டும் –
சொத்தை ஸ்வாமி தானே ரஷிப்பாரே- நாதன் உள்ளவர் தங்கள் ரக்ஷண கார்யம் செய்ய மாட்டார்களே )

அதில் இப்படி ஸ்வரூப அனுரூபமான இத்தை சாதனம் ஆக்கிக் கொண்டு ஸ்வ தந்த்ரனான அவனை இவன் பெறப் பார்க்கும் அன்று –அவன் நினைவு கூடாதாகில் -இது விபலிக்கும் என்கிறார் –
அதாவது –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல் லாப சாதனம் ஆகாது என்றபடி –

—————————————-

இனி அவனே ஸ்வீகரிக்கும் அளவில் உள்ள வாசி சொல்லுகிறார் –

சூரணை-143-

அவன் இவனைப் பெற நினைக்கும் போது
பாதகமும் விலக்கு அன்று —

(ஆய் ஸ்வாமிகள்-ஸூவ இச்சையால் –ஸ்வ தந்த்ர ஸ்வாமி – பரதந்த்ர சொத்தை பெற நினைக்கும் பொழுது -அநாதி காலமாக புத்தி பூர்வகமாக அநேக மஹா பாதகங்களும் -அவனைப் பெறுகைக்கு விலக்கு அன்று -)

(பாவங்கள் பாதகங்களை விட சிறியவை –ஸ்வ தந்த்ர ஸ்வாமி-லாப கிரியா நிஷ்பத்தி -இச்சாயம் சத்தா நிவாரகர் இல்லா ஸ்வா தந்திரம் –சங்கல்பத்தாலே அடைகிறான் -லப்தவ்யம் அடையப்படும் பொருள் சொத்து-உபாய அந பேஷ ரக்ஷண சங்கல்பம் தான் பரகத ஸ்வீ காரம் -நரகங்களில் விழப் பண்ணுவதால் பாதகம் -நிலையில் இருந்து நழுவுதலால் பாதகம் -என்றுமாம் -)

அதாவது –
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் -பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் – பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யே து நைவாஸ்ய பிரதிஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–

—————————————–

இப்படி இவை இரண்டும் காணலாம் இடமுண்டோ என்ன – அருளிச் செய்கிறார் –இவை என்று தொடங்கி 

சூரணை -144-

இவை இரண்டும்
ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும்
ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும்
காணலாம் –

(உறவுள்ள ஸ்ரீ பரத ஆழ்வான் இழக்க – தோஷமே பச்சையாக பெருமாள் உறவு கொண்ட-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி – – ஸ்ரீ குகப் பெருமாள் பெற்றானே-)

————————————-

அவர்கள்  தங்கள் பக்கல் இவை கண்டபடி என்னவென்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -145-

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று –
ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –

(ஆய் ஸ்வாமிகள்-தானே ப்ராப்தாவாக நினைத்த ஸ்ரீ பரத ஆழ்வான் -பிரபதனமான நன்மை தானே -அனைத்துக்கும் பிராயச்சித்தம் இது என்ற நன்மை இருந்தாலும் – –
பெருமாள் திரு உள்ளம் கன்னி -அவ்வருகே -சித்ர கூடம் விட்டு தண்ட காரண்யம் போகும் படி பண்ணிற்றே-ஸ்ரீ குகப் பெருமாளுக்கு அஞ்ஞானம் இத்யாதிகள் அங்கீகார ஹேதுவான நன்மையாயிற்றே -)

( ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பா ஐயங்கார் ஸ்வாமிகள் அரும்பதம் -ராச க்ரீடை -கொண்டாட்டம் -உன் திரு உள்ளம் உகந்து இருந்தால் புண்யம் -ஈஸ்வர ப்ரீதியும் கோபமும்  பாபம் புண்யம் இந்த லக்ஷணமே –சிரஸா யாஜிதோ மயா- பிராது- சிஷ்யஸ்ய- தாஸஸ்ய -பிரசாதம் கர்த்தும் அர்ஹதி –தானே ப்ராப்தா என்ற மநோ ரதம்–ஆர்த்தி யுடன் –
இன்றே திரு அபிஷேகம் –ஆர்த்த பிரபத்தி இது -துடிப்பு –முன் நின்றே செய்தான் –ஆர்த்த பிரபத்திக்கு அங்கங்கள் எல்லாம் சரி -பூர்ணம் –
ராமஸ்ய பாதவ் சிரஸா ஜாக்ர -விதிவத் புன -விதி வழி திருவடிகளில் மேல் தலையை வைத்தான் —தேவ ப்ரபத்தியிவ் வ்யாவர்த்தி அது திருப்த பிரபத்தி -ஆனாலும் பலம் விளம்பப் பெற்றானே —சீக்ர கால அநவச்சின்ன சரணாகதி ராவண வதம் -ரூபம் அது
தேவ பரத பிரபத்தி விருத்த பலன்கள் —காரண கிரமத்தால் கொடுத்தான் என்று சொல்ல முடியாதே -இந்த பிரபத்தி லக்ஷணம் உடனே கொடுத்து இருக்க வேண்டுமே –
பிரபல பிரதபந்தகங்களும் இல்லை –பரத ஆழ்வான் அகர்ம வஸ்ய அவதாரம் அன்றோ –
பித்ரு வசனத்தில் பெருமாள் மனம் வைத்து —இவன் பண்ணின ஆர்த்த பிரபத்தியும் –நன்மையாகிய இது தீமையாகப் போனதே-நியதி சாதனத்வம் உண்டே பிரபத்திக்கு -இருந்தாலும் சாத்தியம் இல்லையே இங்கு –சாஸ்த்ர விசுவாசம் குறையுமே –பலம் தள்ளி வந்ததே -உபாயம் ஆகாது என்று சொல்ல வந்தீரே அத்தை சொல்ல முடியாதே என்னில் -இவனது ஆர்த்த பிரபத்தி -அன்றோ -திருப்த பிரபத்தி போலே பலன் கிடைத்தது -சர்வஞ்ஞனுக்கும் நித்ய சூரிக்கும் -பாஞ்சஜன்ய அம்சம் -அங்கம் குறை சொல்ல முடியாதே -அப்ராமாண்ய பிரசங்கம் இல்லை சாஸ்த்ரங்களுக்கும் சரண்ய ஹிருதய அனுசரணமாக இருக்க வேண்டும்-மதி -இச்சா -கமனம் அநிஷ்டம் -தத் த்வாரா இதுவும் அநிஷ்டம் -சரண்யனுக்கு அதீனப்பட்ட பலன் கிடைக்காதே –திரு உள்ளம் – விருப்பம் இல்லையே – ப்ரயோஜகத்வம் ஸித்தியாது அனுபாயமாகும் –
ஏழை இத்யாதி ஞான ஹீனன் -இத்யாதி தோஷங்கள் மீனை பிடித்து வெட்டுவது அவனுக்கு ஜீவனம் பெருமாளுக்கு ரக்ஷகமே ஜீவனம் புண்ய பாபங்கள் கடம் படம் போலே இல்லை-ஒரே மாதிரி இவை இருக்காதே -இந்த தேசம் இந்த காலம் பொறுத்தே பாபங்களும் புண்யங்களும் -நியதங்கள் இல்லை-தேச கால அதிகாரி பேதத்தால் மாறுமே –
அவன் திரு உள்ளத்தைப் பொறுத்தே இஷ்டாவஹம் புண்யம் அனிஷ்டவஹம் பாபம்  நன்மையையும் தீமையும் தீமையாகவும் நன்மையாகவும் குறை இல்லை -)

(ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் அரும்பதம் -வந்த கார்யம் இன்னது என்பதை சிற்றம் சிறுகாலையில் வைத்தாள் ஆண்டாள் –அசமயத்தில் கேட்க்கும் பரத ஆழ்வானைப் போலே அசடு இல்லையே சர்வ லோக சரண்யன் -வேடன் வேடுவிச்சி பக்ஷி குரங்கு ராக்ஷசர் விஷயங்களில் தான் முற்பாடானாய் -அவர்கள் இருக்கும் இடத்தில் தானே சென்று அனுக்ரஹிக்க திரு உள்ளம் இருக்க –அனுஷ்டான சேஷம் ஆக்கிக் காட்ட வேண்டும் –
பித்ரு வாக்ய பரிபாலனம் வியாஜ்யமாக -அனலோசித அசேஷ சரண்யன் என்று லோகத்துக்கு காட்ட வேண்டுமே பரதன் சொல்வதை சுமந்திரன் நிறை வேற்றாமல் -பண்ணாமல் இருக்க -பெருமாள் திரு உள்ளம் அறிந்து -அந்த பரதனோ என்னில் –
திரு உள்ளம் அறியாதவன் என்று -அந்த திரு முகத்தையும் பார்த்த பின்பு தர்பம் தானே பரப்பி -கூட்டிக் கொண்டு போக துடிப்பாலே –ஆர்த்தியால் கலங்கி -திரு முன்பே
பிராய உபவாசம் வடக்கு பார்த்து பட்டினி இருந்து உயிர் விட இருக்க -விஸ்லேஷ பயத்தால் பெருமாளும் கலங்கி -சர்வஞ்ஞனான அவனும் ஸூவதந்திரத்தால் — செய்த காரியத்தால் -ராஜன் என்று அவள் ஏத்தியதால் அழுதவன் தானே தலையில் ஏறிட்டுக் கொண்டு
ஸ்வ ரூப விரோதமான ஸூவ பிரவ்ருத்தியில் அன்வயித்து – அக்ருத்யம் -செய்யக் கூடாதே–சேஷிக்கு சேஷ பூதனை -எதேஷ்டம் விநியோகம் கொள்ளுகை-சேஷிக்கு உண்டே – –
ஸ்வரூப அனுரூபம் தானே பிராயோ உபவாசம் -பிரபத்தி போலே-அதை நடத்த என் திரு உள்ளம் இல்லையே –இருந்தால் தான் உனக்கு ஸ்வரூப அனுரூபம் எனக்கு தாண்ட முடியாதே – கடல் கரையை தாண்ட முடியாதபடி –சரணாகதன் படி நடக்க வேண்டுமே இவனுக்கும் உன்னைப் பார்த்து வரவா என்னைப் பார்த்து போகவா -தர்ம சங்கடம் உபவாசமும் ஷத்ரியனுக்கு ஆகாது என்றும் அபிஷிக்த ராஜாவுக்கும் கூடாதே என்ற பெருமாள் சொன்னது நியாயம் இல்லை-இவரே சமுத்திர ராஜன் இடம் செய்தாரே-
தனது பாதுகையே பட்டாபிஷேகம் -இரண்டு காரணத்தாலும் கூடாதே  சேது பந்தம் -சாகரம் வற்ற தபஸாக – பிராய உபவாசம் -பிரதம ஹேதுவாக பண்ணினார் சாமர்த்தியம் உள்ள ஷத்ரியன் பண்ணக் கூடாதே –ஜலக்கடல் முன்னே குணக்கடல் கிடந்ததே மரணமோ தரணமோ இரண்டில் ஓன்று நடக்கும் என்று நிச்சயித்துசர்வாதிகார பிராயோ உபவாச ரூப பிரபத்தி –யாரும் பண்ணலாம்ஷத்ரியனும் பண்ணலாம் முடி சூடியவனும் பண்ணலாம் –
இவரே பண்ணி உள்ளாரே-சில அதிகார தோஷங்களைத் தப்பாகச் சொல்லி அத்தை அக்ருத்ய கரணமாக்கி —பிராயச்சித்தம் பண்ணச் சொல்ல-பெருமாள் தன்னைத் தொட்டு
நிஷ்கிருஷ்ட வேஷ பிராயச்சித்தம் பண்ணச் சொல்லியும்  -விஸிஷ்ட வேஷ பிராயச்சித்தம்- மந்தாகினி நீரைத் தொட்டு — இரண்டையும் பண்ணச்சொல்ல -பரத ஆழ்வான் செய்யாமல் -நான் பண்ணினது உபாயம் இல்லை -மடல் தூது போன்றவை தானே இவை -ப்ராப்ய அந்தர்கதம் தானே -அதனால் பண்ணவில்லை பரதனும் துடிப்பால்— லோக அபவாதம் வரக் கூடாதே-மந்தாகினி தீர்த்தம் மட்டும் ஆடினான் அதனால் -விசிஷ்ட வேஷம் அனுகுணம் இது லோக அபவாதம் வரக் கூடாதே 

தோஷமே பச்சையாக என்றது -ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது -விண்ணப்பம் கூட செய்யாமல் இருக்கவும் அங்கீ கரித்தானே -அகிஞ்சனன் -அநந்ய கதித்வம் –துக்க தர்சன மாத்ரத்தால் இரக்கம்-விஷய சபலமும் ஏழை  ஏதலன் – ஸ்வாபாவிக சர்வ ஐந்து சத்ருத்வம்  கீழ் மகன் – அத்யந்த கீழ் ஜென்மமும் ஜென்ம ஞான விருத்த குறைகளைக் கண்டு –உத்கர்ஷ விரோதிகளைக் கண்டு -பெருமாள் இரங்கினான் நன்மையே தீமையாயிற்று  தோஷமே பற்றாசாக – பசிக்குத் தகுந்த தொரு அன்னம் போலே மேல் விழுந்து அன்றோ அங்கீ கரித்தான் —வாத்சல்யத்துக்கு கிடைத்த அன்னம் -மூக்கு சுழியாமல் செய்தாரே  அபராத ஆலயமாக இருப்பான் ஒருவன் உண்டோ என்று தேடிக் கிடைத்த லாபம்  நெஞ்சு உடையாமல் பெற்ற திருப்தி -இது ஒரு விஷயம் தெய்வாதீனத்தாலே கிடைக்கப் பெற்றேன் என்று சாஷாத் தர்மமே சொல்லிக் கொள்ளும் படி -இது நிலைக்குமோ —நீசதைக்கு நின் இருள் என் கண் அன்றி புகல் ஒன்றுமே இல்லை -அருளுக்கும் அதே புகல் பயன் இருவருக்குமான பின்பு -இனி நான் பழுதே அகலும் படி என் உமக்கே லாபம் -ராம ராமானுஜர் நிலைகள்  அங்கே ஒரே குகன் இங்கு நாம் அனைவரும்  தம்மோடு ஓக்க சமான -ஆத்ம சம சக பர கத ஸ்வீ கார நிரூபகமே ஸ்ரீ குகப் பெருமாள் மட்டுமே தானே 
தனக்கு தாரகமாக நினைத்து -ஞானீத் ஆத்மை மே மதம் -அறிவார் உயிரானார் சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் வியாபாரம் -பிரதியுபகாரம் கணிசியாமல் இங்கு மட்டுமே தானே அங்கு எல்லாம் வேறே பிரயோஜனம் இல்லையே – மற்ற நதிகளை இவர்களே தாண்டினார்களே சீரணிந்த தோழமை கொண்டதும் ஒரு அடையாளம் –குகன் உடன் உம் ராமரை தவிர வேறு யாரால் முடியும் என்றவாறு இங்கு ஒழி–நீ இங்கு இரு –பிரிந்தால் தான் பின்பு சேரும் பொழுது கூடினால் ரசிக்கும் -தேன் உள-நாய் குகன் உளன் சொன்னாலும் வழி அடி கெடாமைக்காக -இங்கு ஒழி -வழி பறிப்ப்பாகிய இவனுடைய ஹீன விருத்தியையும் இப் பாசுரம் சொன்ன ஆழ்வாருடைய வழி பறியைப் போலே போக்யமாக கொள்ளுவார் -புத்த விக்ரஹத்தை வைதிகம் ஆக்கி – ஒழுங்காக திருந்தி வாழாமல் வழி பறி பண்ணிக் கொண்டு – உன் குற்றத்தை பச்சையாக கொண்டதாகவே இருக்க வேண்டுமே –
படை வீடு கெடாமைக்கு ஒருத்தனை வைத்தோம் காடு கெடாமைக்கு உன்னை வைத்தோம் –
வழி பறிப்பாகிய வழி அடி –ஜென்ம ஸித்தமான ராஜ்ய பரிபாலனம் உகப்பது போலே உன்
ஜென்ம ஸித்தமான வழி பறி வேடனுக்கு இது தானே பிரியதமம் எனக்கு
பிராணி ஹிம்சை -ஆட்டு -ஹோமத்தில் உண்டே -அதே போலே சாஸ்த்ர சம்மதம் பெருமாளுக்கு பிடித்தது போலே வழி பறிப்பும் – சிங்கி பேர புரத்தில் நான் வைக்க இருந்து கொண்டு -பரதனை நாட்டில் வைத்தது போலே -இந்த கார்யம் செய்து இரு –
ராமன் இருக்கச் சொல்லி இருப்பதால் -அவர் திரு உள்ளபடியே இருவரும் தான் போன பின்பு –அயோத்யை-என் வழி அடி அறியான் –காட்டிக் கொடுக்கும் ஆதி வாஹிகர் போலே காட்டவே இவனை வைத்து போந்தார் பெருமாள் காள மேகப் பெருமாள் –ஆப்தன்  குகனும் கரிய திரு மேனி  ராமன் உள்ள இடமே ஸ்ரீ வைகுண்டம்  அயோத்யை மதுரை பெற்றும் பேர் இழக்க  காடு கோகுலமும் பூ முடி சூடிற்றே பராத் பர புருஷன் -சாஸ்த்ர மரியாதா லங்கனம் பண்ணலாமா– அந்தராத்மா இவன் தானே அனைவர் இடமும்  கணவனோ பிள்ளையோ குரு ஜனங்களோ புண்ணியமான படியாலோ அவனுக்கு அபிமதம் என்பது இல்லை  அவனுக்கு அபிமதம் என்பதால் புண்ணியம்  அவன் இடம் உள்ளவற்றுக்கு நல்ல குணம் என்ற பெயர் கிட்டும் ஸ்வ தந்த்ரனான படியால் இதுக்குக் குறை இல்லையே – ஸ்வாதந்திரத்தால் ஏற்றுக் கொண்ட ஆஸ்ரித பாரதந்தர்யம் அவனுக்கு-மஹா பாப ரூபமான அது ஜென்ம சித்தம் என்றாலும் அது பெருமாளுக்கு பிரியம் என்பதால் புண்ணியம் ஆகுமே பாபமானது அனுமதிக்கலாமா கேள்விக்கு அவருக்கு அபிமதம் ஆனதாலேயே புண்ணியம் ஆகுமே அவரை ஒதுக்கி சாஸ்திரம் மட்டும் பார்க்கக் கூடாதே -அதனாலே புண்ய பாப லக்ஷணம் மேலே அருளிச் செய்கிறார் ராஸக்ரீடை -கோபிகள் செய்த அதிக்ரமம் அபிமதமானால் போலே -)

அதாவது –
பெருமாளை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவித்து –
தன் ஸ்வரூப அநு ரூபமான அடிமையைப் பெற்று வாழுகைக்காக-
ஏபிஸ் ச  சசிவைஸ் ஸார்த்தம்-இத்யாதி படியே –
வழியே பிடித்து மநோ ரதித்து கொண்டு சென்று -பெரிய ஆர்த்தியோடே அவர்
திருவடிகளில் பிரபத்தி பண்ணிய ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -அவன் பண்ணின பிரபத்தி ஆகிற நன்மை தானே –
சரண்யரான பெருமாள் திரு உள்ளத்துக்கு அநிஷ்டம் ஆகையாலே தீமையாய் விட்டது –
ஏழை ஏதலன்-பெரிய திரு மொழி -5 -8 -1- இத்யாதிபடியே பெருமாள்  தாமே வந்து
அங்கீகரிக்கப்   பெற்ற ஸ்ரீ குகப் பெருமாளுக்கு -தோஷமே பச்சையாக அங்கீகரிக்கையாலே -பாதகம் ஆகிற தீமை தானே நன்மையாய் விட்டது என்கை –
யத் த்வத் ப்ரியம் ததிஹா புண்யம் அபுண்யம் அந்யத்-என்று இறே புண்ய பாப லஷணம்-
ஆகையால் இவர்கள் பக்கல் காணலாம் என்கை –

————————————————

இவன் பண்ணும் பிரபதனம் –சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது – அபராத கோடி கடிதமாம் என்னும் இடம் அருளிச் செய்தார் கீழ் –
இது தான் இவனுடைய பூர்வ விருத்தத்தை பார்த்தாலும் -அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கைகாக -பாஷ்ய காரருடைய அனுஷ்டான பிரகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –

சூரணை -146-

சர்வ அபராதங்களுக்கும் பிராயச்சித்தமான
பிரபத்தி தானும் –
அபராத கோடி யிலேயாய்
ஷாமணம் பண்ண வேண்டும் படி
நில்லா நின்றது இறே —

(சாஸ்த்ர சம்பிரதாய பரமாக அரும்பதம் – பெருமாள் திரு உள்ளம் கருத்தும் பார்த்தோம்  பிரபத்தியே அபராத கோடி –வியபிசாரம்- காரணம் இருந்தும் கார்யம் இல்லாமல்- பலம் கிடைக்காத குற்றம் பரதன் இடம் ஷாமணம் பிரார்த்திக்கும் படியும் கத்ய த்ரயத்தில் உண்டே திரு உள்ளக் கருத்துக்கு அனுசாரியாய் இருக்க வேண்டுமே -)

(ஆய் ஸ்வாமிகள்-பகவத் அபசாராதி பாகவத அஸஹ்ய அபசாரங்களும் -ஆற்றி விட பிராயச்சித்தம் -பூர்வ கத்யத்தில் – பண்ணின பிரபத்தியும் ஸ்வ கதயாம் என்னும் பீதியாலே நாநா வித அபசாரங்களுடன் இத்தையும் சேர்த்து திரு உள்ளம் பற்றி புத்ராதிகள் குற்றத்தை பித்ராதிகள் பொறுப்பது போலே – பந்த விசேஷங்களை விண்ணப்பம் செய்து கொண்டு தஸ்மாத் ப்ரணம்ய முக் கரண பிரபத்தி திரு முன்பே கூசாமல் வந்து நின்று -பூர்வ விருத்தத்தைப் பார்க்காமல் -பிரபத்தி பண்ணின இதுக்கு ஷாமணம் – இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -)

(அநாதி காலம் அபராதம் பண்ணி ஆபி முக்கியம் பண்ணினான் ஆகிலும் -அவனைப் பார்த்தால் அவருக்கு தேட்டம் அது –ராவணனனே வந்தாலும் கூட்டிவா -என்று இருக்கும் ஈஸ்வர ஹிருதயம் –நம்மையும் நம் பூர்வ விருத்தத்தையும் பார்த்தால் பண்ண வேண்டி இருக்குமே- பீதனான படியால் -மாம் ஏகம் –பற்றும் பற்றும் உபாயம் ஆகாது -ஸ்வீ காரத்தில் உபாய பாவம் கூடாது- உபாய வரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும் -ஸ்வீகார பர கத ஸ்வீ காரம் -பிராப்தா யார் – பலி-யார் – அடைபவன் யார் -நாமா அவனா என்ற வாசி உண்டே -சரண்ய ஹ்ருதய அனுசாரி முன்னே சொல்லி இங்கு பூர்வ விருத்தத்தையும் பார்த்து உம்மைத் தொகை -இரண்டு காரணங்களால் அபராத கோடியிலே ஆகுமே -திருமுக மண்டல மலர்த்திக்காகவே சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அதி பிரசன்னமாகி ஆவான்- சொத்தை அடையப் பெற்றோமே என்று –தான் ஏற இடம் பார்த்து மடி மாங்காய் இட்டு -அவன் இருக்க -நான் உன்னைப் பற்றுகிறேன் -என்றால் திரு உள்ளம் கன்னும் அன்றோ –த்வமேவ -என்று தொடங்கி –உற்றேன் உகந்து பணி செய்தேன் சொல்லாமல் -பந்த விசேஷங்களை விண்ணப்பம் செய்து -குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை -பரதன் அனைவரையும் கூட்டிப் போனது போலே அனைத்து உறவுகளையும் சொல்லிக் கொண்டு —பிரபத்தி பிராயச்சித்தமாக அருளிச் செய்கிறார் -)

(சர்வ பாபங்கள் என்னாமல் அபராதங்கள் –அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய -என்பதால் –
பிராயா =பாவம் – சித்தம் -விஜானீய சோதனம் போக்கும் செயல் -த்வா-பிரபத்தி அதிகாரி விசேஷணமாக மீண்டும் –கீழே சரணம் வ்ரஜ -சொல்லி இங்கு -பாப நிவ்ருத்தி நிமித்தமாக சரணாகதி பண்ணு எங்கே உள்ளது என்னில் – பிராப்தி பந்தக நிவ்ருத்தி -பிரார்த்திக்கிற அடியேன் –பிரபத்தி அனுஷ்டித்தவனை குறித்து சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாம் என்பதால் -பிராத்த பண்ணினதால் அல்லவே -ஸ்ரீ மன் விழித்து த்வயம் அர்த்தம் கொண்டால் த்வத் சரணம் -உன்னுடைய திருவடிகளை என்று அத்யாஹாரம் கொள்ள வேண்டும் -ஸ்ரீ மன் நாராயண -சமஷ்டி யாக கொண்டால் அவர் திருவடிகளில் -என்று கொண்டு த்வத் வேண்டாமே -ஸ்ருஷ்ட்டி அர்த்தமாக ரக்ஷித்து மாதா -பிதாவும் நீயே – உள்ளே நியமித்து நல் வழி படுத்தும் பந்து –குரு வித்யா தனம் சர்வரும் நீரே -தேவதேவ –
ஞானப் பிதா பூஜ்யத்தின் எல்லை ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் வார்த்தைகளை மீண்டும் கத்யத்தில் அருளி –
தேவரீரை பிரகாசப்படுத்த பிரதிபத்தி –அபராத ஷாமணம் -)

(அபராத அனுகுண தண்டனை நிவர்திக்க சங்கல்பம் –ஒரு பந்துவே இல்லாமல் சத்ருவாய் இருந்தாலும் பிரபத்தி மாத்ரத்திலே ரஷிப்பவன் –ஆர்த்தோ வா -சுக்ரீவன் இடம் பிராணனை விட்டே இஷ்வாகு வம்ச சரணாகதி ஈசானம் தர்மம் பெருமாள் சொன்னாரே –
அவதாரத்தில் மெய்ப்பாட்டாக முன்னோடியாக பாஷ்யகாரர் காட்டி அருளுகிறார் கத்யத்தில் -சேஷ அவதாரமாய் இருக்க பூர்வ விருத்தங்கள் இவருக்கே இல்லையே என்னில் நமக்காக என்று பாவனா மாத்ரமாகில் என்றால் -வர பிரசாதமும் பாவனா மாத்ரமாகுமே —
ந்யாஸ திலகம் இறுதியும் ஆர்த்தி பிரபந்தம் இறுதி பாசுரமும் ஒரே கருத்து -நீர் கொடுத்த வரத்தை கேட்டு புது தெம்பு-சாத்விக – அஹங்காரம் எனக்கு வந்தது -அடியேன் ராமானுஜ தாசன் என்ற மதத்தால் சம்சார காட்டில் அலைகிறேன்–ஸ்ரீ ரெங்க நாதா –
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் நம்மதன்றோ மா முனிகள் -பாவனா மாத்திரம் என்று சொல்ல ஒண்ணாது பாரமார்த்தகமாகும்பிரஜை செய்த குற்றத்தை அத்தோடு உண்டான பந்தத்தால் தங்களது என்று கொண்டு -ஏறிட்டுக் கொள்வது போலே -பாரமார்த்திகமே -தாச பூதம் -அடியேனை தாண்டுவிப்பாய் பிரார்த்தனை உண்டே -என்னுடையவர் பாபங்களை என்னைக் குறித்து சொல்ல வேண்டாமோ என்னில் -மாம் -அஸ்மாதாதிகள் அந்தர்பூதம் ஆகையால் விரோதம் இல்லை நிழல் தாண்டாமல் நாம் அவருடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் அவருடைய மாம் சப்தத்துக்குள் இருக்க வேண்டுமே -அபிமானத்துக்குள் ஒதுங்கியவர்களை தம்மோடு சேர்த்து கொள்ளலாமே -)

(த்வயி சாதி ரங்க துர்ய சரணாகத காமதுகே நிருபதிக ப்ரவாஹ கருணா பரிணாஹவதி
பரிமித தேச கால பலதான் பல தாக்ருதிக்காந் கதமதி குர்மஹே விதி சிவ ப்ரமுகாந முகாந்ந்யாஸ திலகம் –29–ஸ்ரீ ரெங்க நாதா –அடியேன் ராமானுஜ தாசன் என்ற மதத்தால் சம்சார காட்டில் அலைகிறேன்-)

(இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-)

அதாவது –
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -என்கிறபடியே -அபராதங்களுக்கு எல்லாம் கொள்கலமாய் இருக்கிற இச் சேதனன் பிரபத்தி பண்ணவே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்னும் படி இவன் அளவில் சர்வேஸ்வரன் திரு உள்ளம் பிரசன்னமாய் விடுகையாலே –
சர்வ அபராதங்களுக்கும் பிராயச் சித்தமாய் இறே பிரபத்தி தான் இருப்பது –
இப்படி இருந்துள்ள பிரபத்தியை -த்வத் பாதாரவிந்த யுகளம் சரணம் அஹம் பிரபத்யே -என்று பண்ணி அருளிய பாஷ்ய காரருக்கு -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்த வாறே -அது தானும் அபராத கோடி யிலேயாய் –
த்வமேவ  மாதா ச -என்று தொடங்கி -இத் தலையில் அபராதத்தை பொறுக்கைக்கு
உறுப்பான பந்த விசேஷங்களை எல்லாம் விண்ணப்பம் செய்து கொண்டு –
தஸ்மாத் பிரணம்ய-இத்யாதியாலே இப்படி திரு முன்பு கூசாமல் வந்து நின்று பிரபத்தி பண்ணின இவ் வபராதத்தை பொறுத்து அருள வேணும் என்று ஷாமணம் பண்ண வேண்டும் படி நில்லா நின்றது இறே என்கை –
ஆகையால் இவ் வழியாலும் இது அபராத கோடி கடிதமாய் இருக்கும் -என்கை –
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணி பின்பு ஒரு நாளிலே ஆபிமுக்யம் பண்ணினானே ஆகிலும் –
ரிபூணாபி வத்சல –
யதி வா ராவணஸ் ஸ்வயம் -என்று
இருக்கும் ஈஸ்வர ஹ்ருதயத்தை பார்த்தால் அவன் கைக் கொள்ளக் ஒரு  குறை இல்லை –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -தன் பூர்வ விருத்தத்தை உணர்ந்தால் இவன் இத்தை அபராதமாகவே நினைத்து ஷாமணம் பண்ண வேண்டும் படியாய் இறே இருப்பது –

——————————————–

இவன் பண்ணும் பிரபத்தி -ஸ்வ பூர்வ விருத்தத்தை அனுசந்தித்தால் -அபராத கோடி யிலேயாய் இருக்கும் என்னுமத்தை -திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் -மேல் –

சூரணை -147-

நெடு நாள் அந்ய பரையாய் போந்த பார்யை லஜ்ஜா பயங்கள் இன்றிக்கே –
பர்த்ரு ஸஹாத்திலே நின்று -என்னை அங்கீகரிக்க வேணும் -என்று அபேஷிக்குமா போலே இருப்பது ஓன்று இது இறே-இவன் பண்ணும் பிரபத்தி –

(இதுக்கு மூலம் பெரியவாச்சான் பிள்ளை சரணாகதி கத்ய வியாக்யானம்
தஸ்மாத் ப்ரணம்ய -இத்யாதி-அநந்தரம் கீழ் சரணம் புக்கவதுக்கு ஷாமணம் பண்ணுகிறது
யாருடைய ஹ்ருதயத்தாலே என்னில் -ஸ்வ ஹ்ருதயத்தாலே
அது என் என்னில்
அநாதி காலம் அபராதத்தைப் பண்ணிக் கூடு பூரித்தவன் இன்றாக ஆபி முக்யம் பண்ணினானே யாகிலும்
ரிபூணம் அபி வத்ஸல –
யதிவா ராவணஸ் ஸ்வயம் –
என்கிற அவன் படி பார்த்தால் இவனைக் கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையும் இல்லை
ஆகிலும் பதி விரதையாய் இருப்பவள் நெடு நாள் வியபசரித்துப் பின்பு பார்த்தா வானவன் பழி யாளன் என்கிற இதுவே ஆலம்பனமாக வந்து என்னை ரக்ஷிக்க வேணும் என்று முன்னே நின்றால் வருகை தானே அபராதமாய் அதுக்கும் மேலே
என்னை ரக்ஷிக்க வேணும் என்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹானியுமாயும் இருக்கும் இறே -)

(அழகிய மணவாளனே பார்த்தா -இங்கு –மாதரார் கயல் கண்
பண்டு காமன் ஆனவாறும் பாவையர் அமுது உண்டவாறும் -ஓடினேன் ஓடினேன் -இதை போலே முகம் சுளிக்கும் படி அன்றோ பிரபத்தி -கீழே
ஸ்ரீ பரத ஆழ்வான் – ஸ்ரீ பாஷ்யகாரர் அனுஷ்டானம் அருளிச் செய்து –
இங்கு நமக்கு தெரிந்த ஒன்றால் விளக்கி அருளுகிறார் -)

(ஆய் ஸ்வாமிகள்-லஜ்ஜையும் பயமும் இல்லாமல் திரும்பி -சக்திமான் இடம் திரும்பி -துஸ் சரிதம் கேட்டு கண்டு கிளர்ந்து இருக்கிற –ஸ்வ தந்த்ர பர்த்தா இடம் அருகே சென்று தொடை நடுங்காமல் காலில் விழுவது அதி சாஹசமாய் அந்நிய பரனாய் அநாதி காலம் -பரம சேதனன் அறியும் படி -நிருபாதிக –சம்சாரத்தில் வந்த பொழுதும் -அர்ச்சாவதார -முன்னே போகாமல் – திரிந்து -அவன் முன்னே வெட்கம் இல்லாமல் போக -பர புருஷ காமினி ஆசை என்றும் கமனம் -கூடச் செல்வதும் அர்த்தம் – குற்றம் கணக்கிட்டு ஷிபாமி என்னும் ஸ்வ தந்த்ர ஸ்வாமி முன்னே -நின்று -சரண வரண ப்ரபத்தியும் –ஆக-பலித்தவ அபிமானம் அற்ற பர தந்த்ரன் பண்ணும் பிரபத்தி உபாயமாகாது-பலியுமாய் ஸ்வ தந்திரனுமாய் தான் வரிக்கும் உபாய பிரபத்தி அபாயகரமாகுமே ஸஹஸாரம் -கூடவே போகும் காரணமும் காரியமும்– சார செல்லுதல் -அபிசார – வியபிசாரம்-வேறே வேறே சப்த பிரயோகங்கள் -)

அதாவது –
நெடும் காலம் பர்த்தாவோடு ஓட்டற்று -பர புருஷ காமிநியாய் -தந் நிக்ரஹ பாத்ரமாய் -போந்தாள்  ஒரு பார்யை –இப்படி பட்ட நாம் அவன் சந்நிதியிலே கூசாமல்  சென்று நிற்கும் படி என் -என்கிற லஜ்ஜையும் –இத்தனை காலமும் நாம் செய்து திரிந்தது எல்லாம் கண்டு இருக்கிற இவன் -இப்போது  நம்மை வந்து இப்படி நம்மை அபேஷிப்பதே என்று தண்டிக்கில்  செய்வது என் -என்னும் பயமும் இன்றிக்கே –அவன் முன்னே சென்று நின்று என்னை அங்கீ கரிக்க வேணும் என்று அபேஷிக்கும் அளவில் –எத்தனை அபராதம் உண்டு –அப்படியே இருப்பது ஓன்று இறே –
பகவத் அனந்யார்ஹனாய் வைத்து அநாதி காலம் அவனுடன் பற்று இன்றிக்கே அந்ய பரனாய் போந்த இவன் – ஸ்வ பூர்வ விருத்த அனுசந்தாநத்தால் வரும் லஜ்ஜையும் –
ஸ்வ தந்த்ரனான அவன் தண்டிக்கில் செய்வது என் -என்ற பயமும் இன்றிகே
தத் சந்ந்நிதியிலே சென்று நின்று தன்னை அங்கீகரிக்க வேணும் என்று பண்ணுகிற சரண வரணம்-என்கை –

ஆக இவ்வளவும் ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்-பரகத ஸ்வீகார  உபாயத்வமும் -பிரதி பாதிக்க பட்டது –

———————————————

இனி -இவன் ஸ்வீகாரம் கண்டு இரங்கி -அவன் இவனுக்கு பர தந்த்ரன் ஆவதிலும் –
தந் ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பரதந்த்ரன் ஆவதே பிரபலம் என்கிறார்-

சூரணை -148-

கிருபையால் வரும் பாரதந்த்ர்யத்தில் காட்டில்
ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் பாரதந்த்ர்யம் பிரபலம் –

(அவிதேயாத்மா -அடங்காதவன் சங்கர பாஷ்யம் — விதேயாத்மா-அடங்கினவன் –பற்றுடை அடியவர்க்கு எளியவன் -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் இரங்கி-கிருபா காரியமாகவும் ஸ்வா தந்த்ரமாகவும் பாரதந்தர்யம் வருமே -தானே ஸ்வா தந்ரத்ரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் -குறுக்கே கேட்க ஆள் இல்லை -கிருபைக்கு குறுக்கே ஸ்வா தந்தர்யம் வரலாமே )

(ஆய் ஸ்வாமிகள்-ஸ்வகத ஸ்வீ காரத்தால் இரக்கம் கிருபை வரும் – பரகத ஸ்வீ காரம் ஸ்வா தந்தர்யம் அடியாக சம்சார சக்கரத்தால் கர்மம் அடியாக சுற்றி -துக்கத்தில் உழல -காபி யார் இடமோ (-காபி சபரி -தயா சதகம் )-கிருபா ஏற்பட்டு -பிரகாரதயா சேஷபூதன் –
கிருபைக்கு வசப்பட்டு -கடாக்ஷித்து அங்கீ கரிக்குமதில் காட்டில் — இத்தலையில் சுக துக்கங்கள் காணாமல்-இச்சா காரியமாக ஸ்வா தந்திரம் அடியாக பாரதந்த்ரன் –
உகந்தார் ஒருவனை யானை தலையிலே வைத்துக் கொள்ளுமா போலே -செருக்கால் மேல் விழுந்து அங்கீ கரிக்குமதே பிரபலம் -இரக்கப்பட்டு அனைவருக்கும் மோக்ஷம் கொடுத்தால் லீலா விபூதி நீடிக்கவும் சாஸ்திரம் ஜீவிக்கவும் ஸ்வா தந்திரம் சொல்லலாமே —
சிறை இட்டவனே சிறை வெட்டுவதே சிறப்பு-கடாக்ஷ பிரேரகமாகும் அளவு இல்லாமல் மேல் விழுந்து அங்கீ கரிப்பதே உசிதம் ஸூ இச்சா அனுரூப கிருபா விகாச விசிஷ்டானாவதை விட  ஆகாராந்தர ஆபன்ன ஸ்வாதந்த்ர விகாச விசிஷ்டானாவது உயர்ந்தது என்றபடி -)

(ஸ்வ தந்த்ர ஸ்வரூபம்- ஸ்வதந்த்ர பரதந்த்ரமான -தனது குணத்துக்கு தானே -பரதந்த்ரம் படுகிறான் – அவன் நினைவு கூடின போது -இவனுடைய ஆர்த்தி அதிசய காரி ஸ்வீ காரம் அவனுக்கு கிருபா ஜனகம் -ஸ்வ கத ஸ்வீ காரம் -கிருபையை தோற்றுவிக்கும் -பரகத ஸ்வீ காரத்தோடு துல்யமாக இருக்காதேபலத்தில் வேறு பாடு உண்டே –ஸ்வார்த்த பலம் அதுக்கு -பரார்த்த பலம் இதுக்கு கிருபையை ஸ்வா தந்தர்யம் தடுக்குமோ என்னில் –இன்புறும் இவ் விளையாட்டுடையான் அன்றோ –-லீலா விபூதியும் நித்யம் அன்றோ -தத் அபிமத நித்ய விபூதி விருத்தமான லீலா விபூதி வர்த்தமாவதற்கு தடுக்கலாம் )

அதாவது –
ஆர்த்தராய் -அநந்ய சரண்யராய் தன் திரு அடிகளில் வந்து சரணம் புகுந்தவர் அளவில் –
தனக்கு உண்டான கிருபையாலே -அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரன் ஆகையும் பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசும் போலே தன் நிரந்குச ஸ்வாதந்த்ரத்தால் நிர்ஹேதுகமாக சிலரை அங்கீகரித்து -தன்னை அவர்கள் இட்ட வழக்காக்கி வைக்கையும்-
இரண்டும் ஈஸ்வரனுக்கு உள்ளது ஓன்று –
இதில் முற்பட்டது -ஒரோ திசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவும்-(பலத்தோடு சேராமல் )  கூடும் –
பிற்பட்டது -அப்ரதிகதம் ஆகையாலே ஒருக்காலும் கண் அழிவு இல்லை –
ஆகையால் அதிலும் காட்டிலும் இது பிரபலம் என்கை –

——————————————–

இவ் அர்த்தம் தான் வேத அபிமதம் என்கிறார் மேல் –

சூரணை -149-

இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்-

(தானே வரித்து -என்ற பிரமாணம்–யாரோ ஒருவனை -என்றது -சேதனனுடைய அபேக்ஷை கல்பிதமாக உள்ளது -ரஷிக்க வேண்டும் என்று-அபேக்ஷித்தவனை என்றவாறு –பூர்வ பக்ஷம் – இல்லையாகில் வைஷம்யாதி தோஷம் வருமே –ரஷ்யாம் அபேக்ஷை சாஸ்திரமும் சொல்லுமே -புருஷ அபேக்ஷை இல்லையாகில் புருஷார்த்தம் ஆகாதே -ஆகவே திருவடி குகப் பெருமாள் இருவருக்கும் அபேக்ஷை -ஏழை ஏதலன் – வாத மா மகன் -இரண்டும் பிரார்த்தித்து பெற்றார் என்பர் பூர்வபஷி -நாதவ் புருஷகாரம் -நாதவ் -புருஷகாரமும் வேண்டாம் -ஸூ இச்சையாலேயே யாரையாவது எப்போதோ கூட்டிப் போவேன் —
கஞ்சன-இந்த ஸ்லோகத்தில் -அபேஷித்த ஒருவனை என்று பூர்வபஷி –
யமேவைஷ-– ஏவ ஈஷா யார் ஒருவன் இந்த பரமாத்வாவின் இடத்தில் உபாசனத்தில் உள் அடங்காமல் காதல் உடன் உள்ளவன் ஸ்ரீ பாஷ்யகாரர்-நிர்வஹிக்க -பரகத ஸ்வீ காரம் என்று சொல்ல முடியாது –
நாய மாத்மா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ஸ்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய தஸ்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்- இந்த ஜீவன் -ஞான பிரசாதத்தால் – பரமாத்மாவை -எதனால் அடைய முடியாது –பிரவசனம் பண்ணி மனனம் பண்ணி லபிக்க முடியாதுநமேதையா-பக்தி உபாசனத்தாலும் முடியாது -ப்ரீதி ரூபாபன்ன உபாசன பரம்-யாரை பரமாத்மா இச்சிகிறானோ அந்த சேதனனால் மட்டுமே லபிக்கப் படுகிறான் -தன்னுடைய ஸ்வரூபாதிகளை தர்சிப்பிக்கிறான் -யமேவ-அநீயத வியக்தி- கேவல -ஸ்வாதந்தர்யம் அடியாக வந்தது தானே —-கட வல்லி யிலும் முண்ட உபநிஷத்தில் -உம்மை தொகை அனைத்திலும் பர கத ஸ்வீ காரம் பிடித்ததாக உண்டேகுகன் திருவடி விபீஷணன் மூவரும் கொஞ்சம் வந்தது -அபேஷா காரணம் என்பர் பூர்வபஷி -தாத்பர்யம் அறிய உபக்ரம உபஸம்ஹாரம் திரும்ப திரும்ப சொல்வது-அசக்ருத் கீர்த்தனம்- அடையாளம் காட்டுவது -தட்டுங்கள் திறக்கப்படும் என்பர் இத்தை கொண்டே அபேஷா கார்யம் –யமேவ -யாரை வரிக்கிறானோ -சொல்வது ஸ்வாரஸ்யம் -கல்பித்து பிரார்த்தனை பண்ணினவர்களுள் ஒருவனை சொன்னால் ரசிக்குமோ-பிரிய தமத்தை-இதில் வைத்தால் அவனை விருப்பமுடன் ஏற்கிறான் –பிரிய ரூப உபாசனத்தால் அடைய முடியாது சொன்ன பின்பு இது அதுக்கு விரோதம் வரும் –யமேவ என்பதால் – வைஷம்யம் குற்றம் வராது -தர்மி -பகவான் கிரஹநம் மான பிரமாணம் -இன்னான் என்று சொல்லும் பிரமாணம் –வைஷம்யம் கிடையாது என்கிறதே வேதமும் இயற்கையில் இப்படி தானே கிரஹிக்க வேண்டும் -மான சித்தம் ஆகையால் தோஷம் இல்லை -சித் அசித்தாக பிறவி எடுக்க முடியாதே -அசேதனமும் சித்தாக முடியாது உருவாகாது அழியாது -வைஷம்யம் இது என்று சொல்ல முடியாது
ஸ்ரீ மஹா லஷ்மீ பூமா தேவி வியக்திகள் மாறாமல் தானே உண்டு –உபாசன விதி வையர்த்தமும் இல்லை -குக மாருதி விஷய அனுஷ்டானமும் சுருதி அர்த்த -பிடித்த பரகத ஸ்வீ காரமே என்றதாயிற்று-ரக்ஷகத்வம் நிருபாதிகம் கல்யாணத்வம் சித்தியாது அபேக்ஷை எதிர்பார்த்தால் -சிக்ஷணமும் ரக்ஷணமும் சமம் -தவறு செய்தால் சிக்ஷிக்கிறான் –நல்லது செய்தால் ரக்ஷிக்கிறான் ஆகவே இரண்டுமே சோபாதிகம் சமம் என்பர் பூர்வபஷி– ரக்ஷகத்வம் இயற்க்கை சிக்ஷகத்வம் வந்தேறி அன்றோ—ஈஸ்வரனே பலி –புருஷன் பிரார்த்திக்காமல் புருஷார்த்தம் இல்லை என்றால் -சேதன அபேக்ஷை இல்லாமலேயே -புருஷ சப்தம் ப்ரஹ்மத்தையே குறித்து-ஈஸ்வரனே வெகு நாளாக இவனை அடைய யத்னம் பண்ணி இருக்கிறான் -அன்றோ இவ்வாறு அனைத்து பூர்வ பஷ வாதங்களையும் நிரசித்து அருளுகிறார் -)

இவ் அர்த்தம் -என்கிறது -கீழ் பிரபலமாக சொல்லப் பட்ட பரகத ஸ்வீகாரத்தை –
வேத புருஷன் இத்தை அபேஷித்தான் -என்றது –
நாய மாத்மா பிரவசநேன லப்ய- நமேதையா ந பஹூன ஸ்ருதேன- யமேவைஷ வ்ருணத தேன லப்ய தஸ்யைஷா ஆத்மா விவ்ருனதே தநூம் ஸ்வாம்-என்று
கட வல்லியிலும் -முண்டக உபநிஷத்திலும் சொல்லுகையாலே ஆதரித்தான் -என்கை –
அஸக்ருத் கீர்த்தனம் அபேஷா கார்யம் இறே –

———————————-

இத் தலையில் அபேஷை  இன்றிக்கே  இருக்க -இவ் விஷயீகாரம் சித்திக்கப் பெற்றவர்கள் உண்டோ என்ன -அருளிச் செய்கிறார் –

சூரணை -150-

அபேஷா நிரபேஷமாக
திருவடிக்கும் -ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இது உண்டாயிற்று –

(ஆய் ஸ்வாமிகள் -வைஷம்யம் அவனுக்கு இல்லையே –ஸ்வா தந்தர்யம் உள்ளது என்கிற வேத புருஷனே வைஷம்யம் இல்லை என்கிறான் –திர்யக் ஜென்ம-மற்றோர் ஜாதி பாட்டு  -கீழ் மகன் இருவருக்கும் உண்டே –ஸ்வா தந்த்ரனுடைய அங்கீகாரம் நினைவற உண்டாயிற்றே)

(உப ப்ருஹ்மணம் – சுருதி போலே –த்வமேவ உபாய பூத -ரஷ்யாபேஷாம் ப்ரதீஷ்யதே -உபாசனம் விதித்து -அபேக்ஷை -நாயமாத்மா -எத்தாலும் அடைய முடியாது -நாசவ் புருஷகாரேண கேவலம் மதீய இச்சாயா -கேவலம் இச்சா ஏவ யாரையோ எப்போதோ -கர்மத்தால் மட்டுமே -சம்சித்தி -ஜனகர் போலே – அதே போலே இடைவெளி இல்லாமல் சித்தி சொல்ல வில்லையே –கடாக்ஷித்து பலம் உண்டு என்று சொல்ல வில்லையே -பல உபாதானம் வேணுமே –யாரையும் கடாஷிப்பேன் என்றாரே ஒழிய அத்தால் சம்சித்திம் சொல்ல வில்லையே -பிரதம கடாக்ஷம் நிர்ஹேதுகம் தான் –இதுக்கு பின்பும் விஷயாந்தர வாசனை ருசிகளால் பிரதிபந்தகங்கள் வருமே -பல சித்தி இவை தொலைந்த பிறவியில் தான்-ஆக கடாக்ஷத்துக்கு பின்பும் -மோக்ஷம் போகாதவர் உண்டே –பர கத ஸ்வீகாரம் மோக்ஷத்துடன் இணைக்க வேண்டுமே-அதுக்கு பதில் -இந்த சூர்ணிகை – அபேஷா எதிர்பார்க்காமல் -பம்பா தீரத்தில் -கூடினார் என்கிற இத்தையும் குகனை அடைந்து ஸந்தோஷம் –இரண்டாம் வேற்றுமை உடன் வருவதே -கர்மா -தானே ப்ராப்யம் – குகனை -பிராப்யம் -ராமன் பிராப்தா -பலி இவன் என்றால் எல்லாம் பொருந்தும்
ஹநுமதா உடன் சேர்ந்தார்-சங்கதா –த்ருதீய வேற்றுமை இங்கு -சைத்ரன் மைத்ரனோடே அடைந்தார் போலே -ராமன் ஹநுமானோடே சேர்ந்தான்-பெருமாள் எழுந்தருளி சங்கதரானபடியைச் சொல்லிற்று –கர்த்தா உடைய கிரியையாக மூன்றாவது வேற்றுமை -ராமனுக்கு தான் வேலை -கர்த்தா -இவன் தானே –அத்யந்த தூரம் பெருமாளும் கிஞ்சித் தூரம் இவர்கள் – கபட சந்நியாசி வேஷம் -சரண் அடைய வரவில்லையே-சாதூனாம் பரித்ராணாம் பெருமாள் வந்த காரணம்-ஹேத்வந்தரத்தால் வந்தது அசத் கல்பமாகுமே -இவர்கள் கிஞ்சித் செய்ததும் மற்ற காரணத்துக்காகவே வந்தார்கள் – இரண்டாம் வேற்றுமை துணியை –உத்பாதகத்வம் -ஸம்ஸ்காரத்வம் -விகார்யத்வ -மூன்றாலும்–இல்லை என்றால் அடைதல் விகார்யத்வ-மண்ணைக் குடமாக்கி –ஸம்ஸ்காரத்வம்-தண்ணீரைத் தெளித்து போலே-ராமன் மூன்றாலும் இல்லை-அடைந்தார்–திருக்குறுங்குடியை அடைந்தார் பிராப்பியமாக -நாலாவது காரணமே இங்கும் –பலியாவார் பரகத ஸ் வீ காரம் தானே –தர்மாத்மா ராமன் அடைந்தார் என்பதாலே அபேக்ஷை எதிர்பார்க்க வில்லையே -அன்புக்கு இருப்பிடம் ராமன் விஷயம் குகன் -அங்கு தானே பிரபலமாய் இருக்கும் பிரியம் என்று தான் யாரை விரும்புகிறானோ -விருப்பம் அவர் இடம் பிராப்யம் அவரே -பர கத ஸ்வீ கார்த்தம் தெளிவாக -விவரணமாக அடுத்து -திருமந்திரம் த்வயம் சரம–விவரண பாவம் என்பதால் முமுஷுப்படியில் இந்த க்ரமம் -திருமந்திரம் – சரம- த்வயம் -மற்ற இடங்களில் ஞானம் உபதேசம் அனுஷ்டானம் என்பதால் க்ரமம் –இங்கு இரண்டாம் வேற்றுமையில் தெளிவாக ப்ராப்யம் அவன் என்று காட்டுவதால்-குகன் ஆஸாத்யா-இரண்டாம் வேற்றுமை -ஹநுமாதா சங்கதா -மூன்றாம் வேற்றுமை –அஸ்பஷ்டமானவற்றை முதலில் திருவடி விஷயத்தை -முதலில் சொல்லி பின்பு ஸ்பஷ்டமான குகன் விஷயத்தை பின்பு வைத்தார் -முன்னால் இது நடந்ததாகிலும் -விவரண பாவமாக இங்கு அருளிச் செய்கிறார் –)

அதாவது –
தம் தாம் பக்கல்-( இருவர் உண்டே என்பதால் பன்மை ) அபேஷை இன்றிக்கே இருக்கச் செய்தே –
பம்பா தீரத்திலும் –
கங்கா கூலத்திலும் –
பெருமாள் தாமே சென்று அங்கீகரிக்கப் பெற்ற திரு வடிக்கும் ஸ்ரீ குகப் பெருமாளுக்கும்
இந்த பரகத ஸ்வீகாரம் உண்டாய்த்து -என்கை –

——————————————-

இப்படி ஸ்வதந்த்ரனானாய் இவர்களை அங்கீகரித்த இடத்திலும் –
தமப்யபாஷ ஸௌமித்ரே  ஸூக்ரீவ  ச சிவம் கபிம் -கிஷ்கிந்தா காண்டம் -3 -27 –
மாழை மான் மட நோக்கி வுன் தோழி உம்பி எம்பி– பெரிய திரு மொழி -5- 8- 1 என்று
இளைய பெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப் போலே
மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்த இடம் காணலாமோ -என்ன
அருளிச் செய்கிறார் –

சூரணை -151-

இவன் முன்னிடும் அவர்களை-அவன் முன்னிடும் என்னும் இடம்-
அபய பிரதாநத்திலும் காணலாம் –

(உம்மைத் தொகையால் கீழ் குகனை பிராட்டிக் மூலம் -இங்கு லஷ்மண மூலம் திருவடி -ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருந்தும் அதே ஸ்வா தந்த்ரம் அடியாக இவர்களை வைத்தால் என்றே கொள்ள வேண்டும்)

(சம்பிரதாயத்தில் அபய பிரதானம் என்றால் ஸ்ரீ விபீஷண விஷயீ காரம் – புருஷகாரம் எதிர்பார்க்காமல் கேவலம் இச்சையால் என்பான் என்னில்-இதுவே இயற்க்கை -ஸ்வா பாவிகம் – இருந்தாலும் ஸ்வா தந்தர்யம் அடியாக புருஷகாரமாக ஏற்படுத்தி வைத்து உள்ளான்-நிரதிஷ்டா ஸ்ருதியும் சொல்லுமே-யாரும் யாதும் இல்லாமலும் இவன் பண்ணுவான் – -இவள் மூலமாகவே தான் பண்ணுவான் -இரண்டும் உண்மை –
நமக்கு கைங்கர்யம் தருமா போலே இவளுக்கும் இது -)

(ஆய் ஸ்வாமிகள்-ஆஸ்ரயண உன்முகனான சேதனன் ஸூ அபராத பய நிமித்தமாக -முன்னிட்டும் புருஷகார பூதனை முன்னிட்டே கைக் கொள்ளும் ஆஸ்ரயணீயனும் முன்னிட்டே கைக் கொள்ளும் – சுக்ரீவாதிகளை -பெருமாளும் முன்னிட்டு -ஸூ ஸ்பஷ்டமாக காணலாம் -பிரதானரை முன்னிடவே அப்ரதானரும் அந்தர்கதம் தானே முதலிகள் அனைவரும் ஸூக்ரீவன் இடமும் அந்தர்கதம் தானே –விபீஷணன் வானர உத்தமர்களை முன்னிட்டு பெருமாள் சுக்ரீவனை அழைத்து வரச் சொன்னாரே -பிராட்டியையும் முன்னிட்டு -உம்மைத் தொகை -மேலே வானர முதலிகளையும் புருஷகாரமாகப் பற்றினான்-என்பதால்)

(அவதார பிரயோஜனம் ஸ்ரீ விபீஷணனை அங்கீ கரிக்கத் தானே -கீழ் எல்லாம் முன்னுரை -அபய பிரதானம் சாரம் -பரதந்த்ரை -பிராட்டிக்கு ஸ்வரூபம் -இதனாலே வலிய சிறை புகுந்தாள்–இதனாலே இங்கும் பரகத ஸ்வீ காரம் தானே-
ஹனுமான் ப்ரஹ்ம பட்டத்துக்காக தபஸ் புராணாந்தரம் சொல்ல- பகவத் விஷயீகாரம் உச்சிதமோ என்னில் -பூர்வ சதகம் –57-விஷ்வக் சேனர் விபீஷணன் ஹனுமான் மோக்ஷம் உபேக்ஷித்து ஸ்ரீ ரெங்காதனத்தில் பெரிய பெருமாளை ஸந்தோஷம் படுத்திக் கொண்டே –
குண அனுபவ ஏக பரர்கள்-அகிலமும் காணும் படி எழுந்து அருள-புராணாந்தரங்கள் கல்பாந்தர ஹனுமான் பற்றி -நமக்கு தெரிந்த கல்ப திருவடியை சொல்ல வில்லை இது)

(மாழை-அழகு – மான் போன்ற பவ்யமான கண்கள் – வால்மீகி மித்ரன் -என்பர் -தம்பி ஆழ்வார்கள் –புதல்வரால் பொலிந்தான் கம்பர் -முதல் வேற்றுமை கர்த்தா -இரண்டாம் வேற்றுமை கர்மா -மூன்றாம் வேற்றுமை-கருவி உண்டே  -கர்மீ பவித்தல் ஆளாவது என்றவாறு -விபீஷணன் விஷயத்தில் தான் பலர் எதிர்க்க இவன் அங்கீ கரித்தான் – ச பக்ஷ விஷயம் அபய பிரதானம்–புகை ஹேது மலை பக்ஷம் நெருப்பு சாத்தியம் -மடப்பள்ளி ச பக்ஷம் -என்பது போலே –
ஹநுமாதா சங்கதா- குகன் ஆஸாத்யா – விபீஷணன் சங்கமித்தான் -சுவாரஸ்யம் தத் தத் உத்தேச்யம் -தூரத்தில் நின்றும் தத் தத் தேசம் வரை வந்து -தத் தத் சம்ச்லேஷ -தத் தத் இவர்களை கர்மமாகக் கொண்டு பகவான் கர்த்தா -பர கத ஸ்வீ காரம் சித்தம்
யாதிருச்சிகமாக இவர்களும் சில தூரம் நடக்க – ஆஜகாம -முஹுர்த்தேன அதி பலஸ்ய லஷ்மணன் -முன்னிட்டு திருவடி  ஸுமித்ரே அவரையே பெருமாளும் முன்னிட்டு அங்கீ கரித்தது ஸ்பஷ்டம் -குகனும் பிராட்டி மூலம் –சீதை யுடன் கூடி ரதத்தில் நின்றும் இறங்கினான் என்பதால் — தத்வ தர்சி வாக்கியத்தில் ஸ்பஷ்டம் -நிர்ஹேதுக பரகத ஸ்வீகாரமே தாத்பர்யம் – யாதிருச்சிகமாக சரணாகதி போலே இவர்கள் கிஞ்சித் காரம் -மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யேஜ்யம் -அபயம் சர்வ பூதானாம் -நிவேதயதே கூட்டத்தை முன்னிட்டு-சுக்ரீவனையும் நோக்கிச் சொன்னான் -ஹரி சிரேஷ்ட சுக்ரீவ -சப்தம் –
அவனுக்குள் குரங்கு கூட்டமும் அடங்கும் – -சுக்ரீவன் மூலம் பெருமாள் ப்ராஹ்மணர்களும் வந்தார் வசிஷ்டரும் வந்தார் போலே பிரதானரை தனித்து சொன்னது போலே
பிரதான கிருதம் ஸர்வத்ர கிருதம் பவதி -ஆச்சார்யருக்கு மட்டுமே அச்சதை கொடுக்க வேண்டும் -கிருஷ்ணன் ஒரு பருக்கை சாப்பிட அனைவரும் உண்டதாகவும் உண்டே
ஐந்து வானரங்களை பிராட்டி கண்டாள் ரிஷ்யமுக பர்வதம் –தேஷாம் மத்யே விசாலாட்ஷி
கனக ப்ரபம்கௌசேயம் -பொன்னாடையில் பொன் ஆபரணம் — மாழை மான் மட நோக்கி வார்த்தை போலே இங்கே விசாலாட்ஷி சப்தம் – கடாக்ஷ விசேஷம் -நிர்ஹேதுக பகவத் அங்கீ காரத்துக்கு அவன் விரும்புவது அன்றோ இது-த்ரிஜடை உடன் பிறந்தவள் — சரமா-மனைவி – அனலா -பெண் மூவரும் -துல்ய நியாயம் – சரமா உடன் சீதா தோழமை என்பதால் விபீஷணன் உடன் பெருமாள் அபிபாகம் -வேறு பாடு இல்லையே இருவருக்குள்ளும்  ராவணனையே திருத்தப் பார்த்தாளே ராமஸ்ய வியவஸ்தாயா அது வழியே நடப்பதே இவளுக்கு ஸ்வரூபம் – இவளது கடாக்ஷம் பரகத ஸ்வீ கார உபயோகி -)

அதாவது –
இச் சேதனன் தான் ஆஸ்ரயிக்கிற போது புருஷகாரமாக முன்னிடும் அவர்களை
அவனும் அங்கீகரிக்கும் போதும் முன்னிடும் என்னும் இடம் –
திருவடியையும் ஸ்ரீ குகப் பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரம் அன்றிக்கே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாம் என்கை –
எங்கனே என்னில் –
சோஹம் பருஷி தச்தேன தாசவச் ச அவமானித த்யக்த்வா புத்ராம்ஸ் ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று சரணம் புகுந்து –
சர்வ லோக சரண்யாய ராகவாய மகாத்மனே நிவேதயதே மாம் ஷிப்ரம் விபீஷணம் உபஸ்திதம்-என்று நின்ற விபீஷண ஆழ்வானை
அபய பிரதான பூர்வகமாக -அங்கீகரிக்கிற இடத்தில் –
ஆனையேநம் ஸ்வயம் -என்று முதலிகளுக்கு எல்லாம் மூல பூதரான மகா ராஜரை முன்னிட்டு இறே அங்கீகரித்தது –
திருவடியையும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானையும் அங்கீகரித்த இடத்தில் பிராட்டி சந்நிதிஹை
அல்லாமையாலே அவளை முன்னிட்டமை தோற்றிற்று இல்லை ஆகிலும் –
பிராட்டி இலங்கைக்கு எழுந்து அருளுகிற போது மகா ராஜரும் திருவடியும் நிற்கிற இடத்திலே –திரு ஆபரணங்களை பொகட்டு கடாஷித்து வைத்துப் போகையாலும்-
இலங்கையிலே எழுந்து அருளின போது ஸ்ரீ விபீஷண ஆழ்வானை பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாஷித்து அருளுகையாலும் –
பெருமாள் இருவரையும் அங்கீகரிக்கும் இடத்தில் பிராட்டியை முன்னிட்டு அங்கீகரித்தார் என்றே கொள்ள  வேண்டும் –
பரதந்த்ரையான அவளுக்கு இத் தலையில் நினைவு ஒழிய தனித்தொரு பிரவ்ருத்தி கூடாது இறே –
ஆகையால் இறே –
பரகத ஸ்வீகாரம் சொல்லுகிற இடத்திலே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அங்கீகரித்த அத்தையும் சஹ படித்தது

—————————————————-

இவன் நிருபாதிக சேஷ பூதனாய்- அவன் நிருபாதிக சேஷி பூதனாய் இருக்கையாலே-அவ்யவதாநேன , ஆஸ்ரயிக்கவும் அங்கீ கரிக்கவும் அமைந்து இருக்க –
இப்படி இருவரும் புருஷ காரத்தை முன் இடுகிறது எதுக்கு என்ன அருளிச் செய்கிறார்– இருவர் என்று தொடங்கி–

சூரணை –152

இருவர் முன் இடுகிறது- தம் தாம் குற்றங்களை சமிப்பிக்கைகாக –

(ஆய் ஸ்வாமிகள்-ஆஸ்ரய உன்முகனும் ஆஸ்ரயணீயனும் புருஷகாரரை முன்னிட்டு –அநாதி கால வைமுக்யம் -அன்யா விஷய ப்ராவண்யராய் ஆஜ்ஜா அதிலங்கராய் –அநாதி காலம் உபேக்ஷிப்பதால் வந்த குற்றங்கள் –என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமால் -அவர்ஜனீய சம்பந்தம் -விட்டு ஒழிக்க ஒண்ணாத சம்பந்தம் – உசித உபாயம் எடுத்து சொல்லி சீறாமல்- கிருதி ஸாத்யராய்–சமிப்பிக்கைக்கு –போக்கி விடுகை -இத்தை நினைத்து சேதனன் வெருவாதப்படி பண்ணி அகன்று போகாமல் இருக்கப் பண்ணுகை -என்றவாறுபிராட்டி பேச நமக்கு பயம் போகும் -அவளது -கிருதி சாத்தியம் -)

(அனலா பற்றி-சுந்தர காண்டம் -தாயார் தூண்ட சீதை இடம் சொன்னதை-தோழி -என் கையைப் பிடித்து ஆசுவாசப்படுத்தினாள்-திருவடியிடம் தெரிவிக்கிறாள் –மாத்ரா தாயாரால் தூண்ட இவள் தோழி போலே சொல்ல – ச குடும்பராக-அனலா சரமா திரிசடை — தன் திரு உள்ளத்திலே உகப்புக்கு ஊன்றி போனார்கள் –இந்த விஷயத்தை பெருமாள் திரு உள்ளத்தில் படுத்த அன்றோ திருவடி இடம் தாயார் இவ்விடம் அருளிச் செய்கிறாள் -)

சேதனனுக்கு குற்றம் ஆவது -அநாதி காலம் அவன் பக்கல் விமுகனாய்,அந்ய விஷய பிரவணனாய் ததாஜ்ஞா அதி லங்கமே பண்ணி    கூடு பூரித்து வைத்த அபராதம்
ஈஸ்வரனுக்கு குற்றம் ஆவது –அவர்ஜநீயமான சம்பந்தம் உண்டாய் இருக்க –
அபராததையே கணக்கிட்டு ,அநாதி காலம் இவனை அகல அடித்து இருந்தது இது
இவன் தன குற்றத்தை சமிப்பிக்கையாவது –இத்தை பார்த்து ஈஸ்வரன் சீறாத படி பண்ணுகை-
அவன் தன் குற்றத்தை சமிப்பிக்கை யாவது -இத்தை நினைத்து சேதனன் வெருவாத படி பண்ணுகை-

————————————

இவ்வளவே அன்றி -இன்னும் இதுக்கு ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார் -ஸ்வரூப இத்யாதியால்–

சூரணை-153 —

ஸ்வரூப சித்தியும் அத்தாலே –

(ஆய் ஸ்வாமிகள்-ரஷ்யமாயும் ரஷித்தும் போகிற இருவருக்கும் -ரஷிப்பிக்கும் புருஷகாரம் –இரண்டுமே நித்யமானாலும் -பிரேரிகை தூண்டுவது இவள் அன்றோ –இதனால் ஸ்வரூபம் சித்திக்கும் இருவருக்கும் -கீழே – குற்றத்தை சமிப்ப்பிக்கைக்காக புருஷகாரத்தைச் -சொல்லி இங்கு இன்னும் ஒரு பிரயோஜனம்-ஆஸ்ரியையும் ததீயையும் பிராட்டி தானே –நமக்கு ததீய பாரதந்தர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -நடுவில் பிராட்டிக்கு இரண்டு ஆகாரங்கள் இதற்காக -அவளே ததியை உடைமை – நம்மை ஆஸ்ரயித்தவள் சொல்வதால் நம்மை ரஷிக்க என்று அவனும் ரக்ஷிப்பானே -)

(தேவும் தன்னையும் -தானான தன்மை யன்றோ ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸ்வரூபமாவது -சேதனனுக்கு ததீய பாரதந்தர்யம் -உடைமைக்கு -பிரணவம் சப்த ஜாலம் அடங்கி இருப்பது போலே அறிகிறோம் –
ஈஸ்வரனுக்கு ஸ்வா தந்தர்யம் தானே ஸ்வரூபம் –பரதந்தர்யமானால் உபாயத்வம் வராதே -இத்தை ஸ்தாபிக்க -பிராமணம் -கொண்டு –தேவத்வம் பரத்வம் தன்னையும் ஸ்வரூபம்- தத் ப்ரத்ய நீகமான ஆஸ்ரித பாரதந்தர்யம் –ஆத்மாநாம் நாதி வர்த்ததே உன்னை நீ மீறாதே என்று லஷ்மணனும் பரதனும் சொல்வதும் மர்மம் நாடி பிடித்து ஆஸ்ரித பாரதந்தர்யத்தை மீறாதே என்று பிரார்த்திக்கிறார்கள் –
கடலை தன் கரையை மீறி வராமல் இருக்கத் தானே பிரார்த்தனை –சமுத்திர இவ காம்பீரம் இவனுக்கு -கரை கடலுக்கு சொந்தமே தானே-வேதாந்தத்திலும் -ஈசித்திருத்தவம் ஸ்வரூபம் என்றும் – ப்ரணத ஸுலப்யம் ஸ்வ பாவம் என்றும் -வேதாந்த ஸங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம் ஸ்ருத பிரகாசிகையில் இவை இரண்டுமே உண்டே -வியாக்யானம் உண்டே -)

ஸ்வரூபம் ஆவது- இவனுக்கு ததீய பார தந்த்ர்யம் -அவனுக்கு ஆஸ்ரித பாரதந்தர்யம் -தேவும் தன்னையும் என்று-ஆஸ்ரித பாரதந்தர்த்தை இறே இவனுக்கு தானான தன்மையாக ஆழ்வார் அருளிச் செய்தது
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து-
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்-
பாவம் தனையும் பாற கைத்து எமர் எழ ஏழு பிறப்பும்-
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே-திரு வாய்மொழி -2-7-4-

இவை இரண்டும் இருவருக்கும் சித்திப்பது , புருஷகார புரஸ் கரணத்தாலே என்கை–

—————————-

கீழே ஸ்வரூபம் என்று சொன்னதை உபபாதிகிறார்-

சூரணை-154–

ஒவ்பாதிகமாய்-நித்யமுமான-பாரதந்த்ர்யம் இருவருக்கும் உண்டு இறே—

(ஆய் ஸ்வாமிகள் -ஸ்வ தந்த்ர ரக்ஷணம் உள்ளவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் ரக்ஷித்தால் கொத்தை அன்றோ -தத் ஏக பரதந்த்ரமான சேதனன் ஸ்வரூபத்துக்கும் கொத்தை வருமே என்னில்-இருவருக்கும் காரணத்தைப் பற்றி உபாதி ஓவ்பாதிகம் -காரணம் பற்றி வந்தால் காரணம் போனால் காரியம் போகும் –பிராட்டிக்கு பரதந்த்ரன் -சொல் படி ரக்ஷித்தால் குறை -வராதோ -தத் ஏக ரக்ஷகத்வம் சேதனனுக்கும் பிராட்டியால் பெற்ற ரக்ஷணம் குறை அன்றோ என்னில் –குறை இல்லை-காரணமே நித்யம் அன்றோ இங்கு -போகாமல் நித்யம் -அவள் எப்போதும் உடைமை –ததியை ஆகாரமும் ஆஸ்ரயியை ஆகாரமும் போகாதே
பிரணயி பிரணயினி சம்பந்தம் அபங்குரா-அழிவில்லாத காதல்- தொடர்ந்து இருக்கும் –
ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கு மேலே இவள் இடம் ப்ரணயித பாரதந்தர்யமும் உண்டே
ததீயத்வ நிபந்தனம்–அவனுக்கும் அவன் உடைமைக்கும் உள்ள சம்பந்தமும் அபங்குரம் தானே -இந்த ததீயத்வ உபாதி அடியாக வந்தவை அன்றியே -இயற்கையையிலே-நிருபாதிக – நிராங்குச ஸ்வாதந்த்ரயமும் -தத் ஏக பாரதந்தர்யமும் நமக்கு உண்டே -இவை தானே இருவர் ஸ்வரூபம்-இருவர்களுடையபுருஷகார சாபேஷை -ரக்ஷகத்வ ரஷ்யத்வங்கள் -நிருபாதிக சம்பந்த சித்த -ஸ்வா தந்தர்ய பாரதந்தர்யங்களுக்கும் கொத்தை ஆகாதேஆக -ஈஸ்வரனுக்கு நிருபாதிகவுமாம் நித்யமுமாய் ஸ்வ சித்த வேஷம் ஸ்வா தந்திரம் ஒவ் பாதிகமாய் நித்யமுமாய் பிரணயித்தவ பாரதந்த்ரம்-சேதனனுக்கு நிருபாதிக நித்ய பகவத் பாரதந்தர்யம் ஸ்வ சித்த வேஷம் – ததீய பாரதந்தர்யம் ஓவ் பாதிகமாயும் நித்யமுமாயும் இருக்கும் என்றவாறு – பிரணயித்தவ ததீய பாரதந்த்ர்யத்துக்கு பிரதம விஷயம் பிராட்டி -சரம விஷயம் ததியர் -நம் வரை அவன் விஷயீ கரிப்பானே-ததீய பாரதந்த்ரயத்துக்கு பிரதம விஷயம் பிராட்டி -சரம விஷயம் அவனும் ததீயரும் அடியார் அடியார் அடியோம் ஆக வேண்டுமே-)

(இந்த இரண்டில் வலிமை -யுடையது -பிரணயித்தவம் போலே கதாசித் கிலாய்ப்பதுக்கு சம்பாவனை இல்லை-ஊடல் திறமோ பிரிவோ இல்லையே-கிம் கார்யம் சீதயாம் மம -சுக்ரீவன் ஆஸ்ரித சம்பந்தம் முக்கியமாக கொண்டானேபத்நீத்வம் ஆஸ்ரிதத்வம் இரண்டும் பிராட்டிக்கு -இரண்டு ஆகாரங்கள் -இதிலும் ஆஸ்ரயித்வமே பிரதானம் – நித்யத்வம் உத்பத்தி விநாசம் இல்லை -பிரசித்த பிரமாணங்கள் —  பும் பிரதான ஈஸ்வர ஈஸ்வரீ-மூன்று ஆகாரம்-– பும்ஸாம் சேதனானாம் த்ரிகுணம் பிரகிருதி ஈஸ்வரனுக்கு -ஸ்வரூபதயா ஜீவனுக்கு  பத்நீத்வத்தால் அசேதனத்துக்கு ஈஸ்வரி -மனைவியான படி  -பிரணயித்தவம் ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரி —இப்படி -தானான பத்னி காதல் மூன்று ஆகாரங்கள்  ஸ்ரீ ஸ்ரயதே –ஆறு வித்புத்தி ஆஸ்ரயிக்கிறாள் ஆஸ்ரயிக்கப்படுகிறாள் -)

அதாவது சேதனனுக்கு இவ் (பிராட்டி)விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ பிரயுக்தம் ஆகையாலே –ஒவ்பாதிககுமாய் – அவ் வுபாதி தான் நித்யம் ஆகையாலே ,நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யதோ பாதி-நித்யமுமாய் இருக்கும் —
ஈஸ்வரனுக்கு இவ் விஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆஸ்ரித்வ பிரயுக்தம் ஆகையாலே ஒவ்பாதிகமமாய்– அவ் வுபாதி நித்யம் ஆகையாலே அது தானும் நித்யமுமாய் இருக்கை என்கை–
இருவருக்கும் உண்டு என்னாதே- உண்டு இறே – என்றது இவ் வர்த்தத்திலே பிரமாண பிரசித்தியை- தோற்று விக்கைகாக-
ஒவ்பாதிகம்-காரணத்தின் அடிப் படையில்-

————————————

இவ்வளவு இன்றி இன்னும் ஒரு பிரயோஜனம் உண்டு என்கிறார்-

சூரணை-155–

அநித்தியமான இருவர் பாரதந்த்ர்யமும்- குலைவது அத்தாலே —

(ஆய் ஸ்வாமிகள்கர்ம பாரதந்தர்யம் அநித்தியம் தானே – நமக்கு மட்டும் இல்லை –பகவானும் நம் கர்மங்களுக்கு பர தந்திரம் -வைஷம்யம் இல்லை அவனுக்கு – –கர்மங்களை எதிர்பார்த்தே தண்டனை -ஆகந்துக பாரதந்தர்யம் குலைக்கும்-புருஷகாரத்தால் -கர்மம் குலையும் -அநித்யமாய் -தான் பண்ணின கர்மம் தானே அனுபவிக்கிறான் -கர்மத்தின் தலையிலே ஸ்வாதந்தர்யம் வைத்து தன்னைக் கொண்டு நழுவுகை தானே -ஈஸ்வரனுக்கு நம்முடைய கர்ம பாரதந்தர்யம்–தேவரீர் ஒழிய கர்மத்துக்கு ஒரு மூச்சு உண்டோ –சாஸ்திரம் விதிக்கலாம் -பிராட்டி சொல்வாள் – உம்மை தவிர்த்தா இவை -சும்மெனாதே ஓடாதோ -புருஷகார பூர்வகமாக – சித்த உபாய -ஸ்வீகார வர்ணத்தால் இவை விநாசம் அடையும் -அநித்தியம் –நெடும் காலம் கர்மம் இட்ட வழக்காய் -பகவத் பரதந்த்ரனாய் இல்லாமல் கர்மத்துக்கு அன்றோ வசமாக்கி உழல்கிறான் என்று பிராட்டி திரு உள்ளம் கொள்ள- திருத்தி -குலைய வைக்கிறாள் -சமிப்பிக்கும் அங்கு பிராட்டி கார்யம் செய்ய வேண்டும் அங்கு எல்லாம் -இங்கு கர்மம் குலையும் -குலைப்பிக்கும் என்பது இல்லையே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்றதும் தானே போகுமே தன்னடையே போகுமே நீயும் வேண்டா நானும் வேண்டா ரஷ்ய ரஷக பாவேனே சேரும் படி அன்றோ அவள் கார்யம்-இது கீழே சொல்லப்பட்டாலும் இங்கு அநித்தியம் சொல்வதால் புநர் யுக்தி தோஷம் இல்லை -)

அநித்தியமான பாரதந்த்ர்யம் ஆவது கர்ம பார தந்த்ர்யம்–
அதில் சேதனனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது-அவஸ்யம் அனு போக்தவ்யங்களான சுப அசுப கர்மங்களின் வசத்தில் இழுப்புண்டு சம்சரிக்கை–
ஈஸ்வரனுக்கு கர்ம பாரதந்த்ர்யம் ஆவது –
தான் செய்த கர்மம் தான் அனுபவிக்கிறான் ஆகில் நாம் செய்வது என் என்று
இவன் செய்த கர்மத்தையே பிரதானம் ஆக்கி அதுக்கு ஈடாக நிர்வஹித்து போருகை–
இது நடப்பது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-என்னும் அளவும் ஆகையாலே இத்தை அநித்தியம் என்கிறது .-
இவை புருஷ கார புரஸ் கரணத்தாலே குலைகை ஆவது –இவன் முன்னிட்டும் அளவில் அத் தலையைத் திருத்தியும் , அவன் முன்னிடும் அளவில் இத் தலையைத் திருத்தியும்
இரண்டு தலையும் ரஷ்ய ரஷக பாவேன சேரும் படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தம் ஆகை-

———————————–

அநாதி கால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கி திரிந்தவன் இன்று இறே ஆபிமுக்யம் பண்ணிற்று பிரகிருதியோடு இருக்கையாலே துர் வாசனை மேல் இட்டு  ஆஸ்ரயண அங்கீ காரங்களாலே உத்பூதமான இந்த ரஷ்ய ரஷக பந்தத்தை இல்லை செய்து -பழைய படியே போக பார்க்குதல்- நிரந்குச ஸ்வதந்த்ரனாய் கர்ம அனுகுணமாக இவனை லீலையிலே அநாதி காலம் விநியோகம் கொண்டு போந்த ஈஸ்வரன் தான் இப் பந்தத்தை இல்லை செய்து முன்பு போலே இவனை கர்ம அனுகுணமாக நிர்வகிக்கப் பார்க்குதல் செய்யிலோ என்ன அருளிச் செய்கிறார் -ஸ ஸாஷிகம் என்று தொடங்கி–

சூரணை-156–

ஸ ஸாஷிகம் ஆகையாலே-
இப் பந்தத்தை இருவராலும் இல்லை செய்ய போகாது —

(அரும்பதம்-உத்தர வாக்ய அவதாரிகை –பிரபன்னன் ஆகவே இருந்தாலும் ஹி பிரசித்தம் -கர்ம கிருத தேகம் ஒட்டிக் கொண்டே இருக்க -அதன் ஸ்வரூபம் காட்டுமே-சடக்கென பலாத்காரத்தாலே தீய பாதைக்கு இழுத்துக் கொண்டே போகுமே துரிதங்கள் வழியாக -இந்த ப்ராமணம் கொண்டு இந்த சூரணை -சாக்ஷி பிராட்டி இருப்பதால் ஆஸ்ரயணத்துக்கும் அங்கீ காரத்துக்கும் -இரண்டுக்கும் சாக்ஷி உண்டே -பந்தம் இருவராலும் ஒழிக்க முடியாதே -)

(ஆய் ஸ்வாமிகள்  புருஷகாரத்தால் வந்த நன்மை சாத்தியம் இதுவே உபய அனுமத சாக்ஷி இருவருக்கும் அபிமதம் தானே இவள் -ரஷ்ய ரஷக சம்பந்தம் -ஸ்வத சித்தம் பந்தம் -சம்பந்தம் தெரியாமல் தவித்து இருக்க –  ரஷகமான அவனாலும் ரஷியாமல் இல்லை செய்ய ஒண்ணாது -ரஷ்யகமான இவனால் அதுக்கு இலக்கு ஆகாமல் இல்லை செய்ய முடியாதே –ரஷ்யமாக இல்லாமல் என்னாமல் அதுக்கு இலக்கு ஆகாமல் -என்று அருளிச் செய்தது -கர்தவ்யம் ஈஸ்வரனுடையதே என்பதால் -)

அதாவது இந்த ரஷக ரஷ்ய சம்பந்தம் இரண்டு தலையும் (மட்டுமே)அறிந்ததாக வந்தது அன்றிக்கே -புருஷ கார ரூப சாஷி சஹிதமாக வந்தது ஆகையாலே -இத்தை இருவராலும் அழிய மாறப் போகாது என்கை—

——————————————

இதுக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சூரணை -157-

என்னை நெகிழ்க்கிலும்-
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

(சேதன ஆஸ்ரயத்துக்கும் -இவன் முன்னிடும் -முதல் பிரமாணம் -அவன் அங்கீகாரத்துக்கு அடுத்த பிரமாணம்)

(ஆய் ஸ்வாமிகள் -பிரமாணம் காட்டுகிறார் கீழே சொன்ன அர்த்தத்துக்கு – என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க கில்லான்-நப்பின்னை பிராட்டி சாக்ஷி உண்டே -ஆஸ்ரயணத்துக்கு இந்த பிரமாணம்-அமரர் முழு முதன் -நித்ய ஸூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு சர்வ சக்தியான தானும் கில்லான்
என் அன்பேயோ -சொல்வதற்கு முன் -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய -அங்கீகாரத்துக்கு இந்த பிரமாணம் – பிராட்டி பக்கல் உள்ள பரிவு அவள் பரிக்ரமமான என் அளவும் வந்ததே –முற்பட்டதில் சம்பந்தத்தில் சிதிலம் ஆகாமையையும் -கீழ்
அதில் பிராட்டி புருஷகார பூர்வகமாவதையும் ஸ்பஷ்டமாக உண்டே 
இவன் முன்னிட்டும் அவர்களை அவன் முன்னிட்டும் என்பதால் இந்த க்ரமத்திலே அருளிச் செய்கிறார் )

(இருவராலும் -சொன்னாலும் அவன் விடாமல் இருப்பதே பிரதான்யம் -பரகத ஸ்வீ கார முக்யத்வ பிரகரணம் நப்பின்னை -கடகத்வம்-பிராட்டி செய்யும் கைங்கர்யம் இவர்களாலும்-நிழல் போலவே -)

இதுக்கு பிரமாணம் காட்டுகிறார்நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக நித்ய ஸூரிகள் நடுவே என்னை அங்கீ கரித்த பின்பு ஸர்வ ஸக்தனான தானும் கைவிட மாட்டான் என்கையாலே அவனாலே இப் பந்தத்தை இல்லை செய்யப் போகாது என்பதற்கு பிரமாணம் -அகல்விக்க தானும் கில்லான் -பெரிய பிராட்டியாருக்கு ஸ்னேஹி -அவள் பரிக்ரமான என் பக்கலிலே அதி ஸ்நேகிதியாய் –
(அவள் இடம் அன்பு காட்டி என்னிடம் அன்பே உருவாகி -அதி சப்தம் இதனாலே -)
அரியன செய்து-(கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் -இதனாலே வந்து என்னுடன் கலந்த-என்கிறார் )இனி நான் நழுவ விடுவேனோ -என்கிறார்
புருஷகாரம் முன்னாக வந்த பந்தத்தை சேதனனாலும் இல்லை செய்யப் போகாதே –
அங்கே அவனாலே இல்லை செய்யப் போகாது -இங்கே சேதனலாலேயும் போகப் போகாது –
உம்மைத் தொகை பகவானால் இல்லை செய்யாமல் போகாதே என்பதே முக்கிய அர்த்தம் என்றவாறு –

—————————–

ஸ சாஷிகமான இப்பந்தத்தை இல்லை செய்ய போகாது -என்றது –
சாஷியான புருஷகார விஷயத்தில் இருவருக்கும் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தை பற்ற வகையாலே -இருவருக்கும் இவ் விஷயத்தில் உண்டான நித்ய பாரதந்த்ர்யத்தில் பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சூரணை -158-
கர்மணி வ்யுத்பத்தியில்
ஸ்வரூப குணங்களால் வருகிற
கர்த்ரு சங்கோச ராஹித்யத்தை
நினைப்பது –

(வாத பிரதிவாதங்கள் இருந்தால் தானே சாக்ஷி வேண்டும் -நீதிபதியே ஒரு கட்சி வக்கீலாக இருக்க சாக்ஷி எதற்க்காக -கர்த்தா-நாமும் பகவானும் -பிராட்டியை குறித்து கர்த்தா -சேஷி சேஷ நமக்கு–ஸ்வரூபம் இது – பிரணயித்தவம் அடியால் அவருக்கு -குணம் இது
-கர்த்ரு சங்கோசம் செய்ய ஆள்கள் இல்லாமல் —ஸ்ரீயதே -ஆஸ்ரயிக்கிறோம் –கர்தரி முதல் வேற்றுமை – கர்மணி இரண்டாம் வேற்றுமை – கரணே வ்யுதோசத்தி மூன்றாம் வேற்றுமை – ராமன் ராவணனை வில்லாலே கொன்றான் –இருவரையும் நியமிக்கும் சாமர்த்தியம் உண்டே -இல்லை செய்ய முடியாமல் உபயருடைய சாக்ஷி பாரதந்தர்யம் -உண்டேஅன்பால் அவன் -ஸ்வரூபத்தால் நாம் – )

( ஆய் ஸ்வாமிகள்-இதுக்கு பிரமாணம் ஸ்ரீ -திரு நாமத்தின் வயுத்தபத்திகளே பிரமாணம்-ஸ்ரீ யதே கர்மணி வ்யுத்பத்தி மிதுன சேஷத்வ ஸ்வரூபம் -ஸ்வ ஸ்வ அனுகுணமாக அவளுடைய சேவா கர்த்தாக்கள் இல்லாமல் போகாதே – அனைவரும் சேவா கர்த்தா -நாம் ஸ்வரூபத்தால் அவன் அன்பால் –புருஷகார பரதந்தர்யம் –நினைத்தாலே சாக்ஷி வீண் ஆகாதே – இருவரும் பெரியதாக மதிக்கும் சம்பந்தம் இப்புருஷகாரத்துக்கு உண்டே-உன்மேஷித பந்தம் –தூண்டி கிளப்பிய பந்தத்தை இருவராலும் இல்லை செய்யப் போகாதே -)

(நிருபாதிக சேஷத்வ லக்ஷணம் -ஸ்வரூபம் -நமக்குத் தானே -பிரணயித்தவ சேஷத்வம் அவனுக்கு -ஆக இரண்டாலும் அனைவருக்கும் உண்டே –ஆகவே சேஷத்வ குண இரண்டையும் அருளிச் செய்தது –நியாய சித்த அர்த்தத்தை -தான் ஆஸ்ரயிக்கிறாள் -அகிலமும் இவளை ஆஸ்ரயிக்கப்படுகிறாள் -சகல -அகில வாசி ஓன்று விடாமல் காட்ட அகில – நிகில-வும் இதே அர்த்தம் –அகில புவன ஜென்ம -இதனால் -சகல சொன்னால் கர்த்ரு சங்கோசம் வருமே-எல்லாமும் மட்டுமே சொல்லாமல் ஒருவர் இடாமல் அனைவரும் –அகில பரமாத்வாயையும் சேர்த்து அகார வாஸ்யனையும் சேர்த்து சொல்லுமே -)

கர்மணி வ்யுத்புத்தி யாவது -ஸ்ரீன் சேவாயாம்-என்கிற தாதுவிலே –
ஸ்ரீ யதே -என்ற வ்யுத்புத்தி -இதுக்கு அர்த்தம் -சேவிக்க படா நின்றாள்  என்று இறே –
இவ் வ்யுத்பத்தியில் -ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு சங்கோச ராஹித்யம் ஆவது –
சேஷத்வம் ஆகிற ஸ்வரூபத்தாலும் -பிரணயித்வம் ஆகிற குணத்தாலும் -வருகிற சேதன
பரம சேதனர்கள் ஆகிற சேவா கர்த்தாக்களுக்கு சங்கோசம் இல்லாமை –
அதாவது –
இரண்டு தலைக்கும் இவள் விஷயத்தில் உண்டான சேவை அவிச் சின்னமாய் செல்லுகை-
இத்தை -நினைப்பது -என்றது -இவ் விஷயத்தில் இரண்டு தலைக்கும் உண்டான
பார தந்த்ர்யத்தை ஸ்மரிப்பது என்ற படி –

——————————————

இப்படி இருக்கையால் இப் புருஷகாரம் பிரபத்தி அதிகாரிகள்  எல்லாருக்கும் அவஸ்ய அபேஷிதம் என்கிறார் மேல்

சூரணை -159-

அதிகாரி த்ர்யத்துக்கும் புருஷகாரம்
அவர்ஜநீயம் –

(அதிகாரி சித்தி அர்த்தத்துக்கு புருஷகாரம் அவர்ஜனீயம் –அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர்-ஐஸ்வர்யார்த்தி கைவல்ய பகவத் லாபார்த்தி மூவருக்கும் உண்டே என்பர் மா முனிகள் –ஆயி ஸ்வாமிகள் அப்ரஸ்துதம் என்பர் -அவர்களுக்கு பிராயச்சித்தம் தவிர புருஷகாரம் வேண்டாம் என்பர் -சூரணை -267-நாலாம் அதிகாரிக்கு -அனுக்ரஹத்துக்கு இலக்கு –அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர்-பிரபத்தி அதிகாரி த்ரயத்துக்கும் அபசார பய நிவ்ருத்திக்கு -ஸ்வ ஸ்வ அதிகாரி நியதி பூர்வ பாவியைப் பற்ற -இடத்தாலும் காலத்திலும் அவர்ஜநீயமாய் -பக்தி நிஷ்டருக்குப் போல பிராயச்சித்தம் தோஷங்கள் பண்ணிப் போக்காமல் புருஷகாரம் பண்ணி-பூ மேல் இருப்பவள் வினை தீர்க்கும் -விநாஸ்யமாய் இருக்கும் -இத்தை ஒழிய ஸித்த உபாயம்  பலியாமையாலும் பிரபத்தி அதிகாரிகள் அனைவருக்கும் வேண்டும் -அதிகாரி த்ரயம் -என்று ஐஸ்வர்யாதி த்ரயங்களையும் கொள்ளுவது -அப்ரஸ்துதம் ஆகையாலும் -அவர்களுக்கு தத் தத் தோஷம் போக்க பிராயச்சித்தம் ஒழிய வேண்டியதில்லை -267 நான்காம் அதிகாரிகளான உபாயாந்தர நிஷ்டருக்கு உபாயாந்தர நிஷ்டருக்கு பிராயச்சித்தம் விசேஷம் என்று இவர் தாமே விசேஷிக்கையாலே — ஸ்ரீ யபதியைப் பற்ற உபாஸிக்க  சொல்வதாலேயே புருஷகாரம் வேண்டும் என்பது இல்லை -நான்கு காரணங்களால் ஐஸ்வர்யாதிகளைச் சொல்ல முடியாது என்பர் ஆயி ஸ்வாமிகள் –இங்கே நாம் பேசுவது பிரபத்தி நிஷ்டரை பற்றியே என்பதால் கொள்ளலாம் என்பர் மா முனிகள்-பிரபத்தி பண்ணியும் பிரயோஜனாந்தரம் பெறலாமே -பிரயோஜனம் பகவானே என்பதே அஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் என்கிற மூவருக்கும் -268-13)

(அரும்பதம் -ஐஸ்வர்யம் அக்ஷய மோக்ஷ கதிக்கும் அவள் தேவை -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று லஜ்ஜித்து இருப்பாள் – ஆகையால் அனைவருக்கும் புருஷகாரம் அபேக்ஷிதம்-உத்தர வாக்கியம் அவனுக்கு நாம் சொல்லும் மா ஸூ ச -பூர்வ வாக்கியம் -பல சதுஷ்ட்யங்கள் நான்குக்கும் பொது அன்றோ
அப்ரஸ்துதம் -இல்லையே அஞ்ஞர் என்பதே ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்திகளையே —
சாதனாந்தரம் மூலம் பிரயோஜனாந்தரம் பெற புருஷகாரம் வேண்டாம் -பகவானைப் பற்றி பிரயோஜனாந்தரம் பெறும் பொழுது -பிரபத்திக்கு புருஷகாரம் வேணும் –
நாலாம் அதிகாரி பிரபன்னரே இல்லையே -267-சூர்ணிகையில் சொன்னது-உபாயாந்த நிஷ்டர் தானே இவர்கள் –அபின்ன -வக்தா -பிள்ளை லோகாச்சார்யார் -பிரபந்தாந்தரங்களில்-நிறைய அருளிச் செய்து -சமான அர்த்தம் –தத் அனுஜராலே நாயனார் ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே –ஆகவே நாலு தோஷங்களும் இல்லை -இரண்டு யோசனைகளும் உப பன்னமே)

அதிகாரி த்ர்யமாவது -அஜ்ஞ்ஞர் ஞானாதிகர் பக்தி பரவசர் -என்கின்ற மூன்று அதிகாரிகளும் -இவர்களுக்கு -புருஷகாரம் அவர்ஜ நீயம் -என்கிறது -குற்றத்தை சமிப்பிக்கை -முதலான வற்றுக்கு புருஷகாரம் அந்வயம் வேண்டுகையாலே -சர்வதா கை விட ஒண்ணாது என்கை –
அதவா –
இப் புருஷகாரம் தானே -அநந்ய பிரயோஜனராய் பிரபத்தி பண்ணும் அவர்களுக்குயேயோ பிரயோஜனந்த பரராய் பண்ணும் அவர்க்கும் வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார்

அதிகாரி த்ரயம் என்கிறது -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்த்திகள்-
இவர்கள் மூவருக்கும்  புருஷகாரம் அவர்ஜநீயம்  என்றது -ஸ்வ ஸ்வ அபிலஷித
சித்திக்கு ஈஸ்வரனை உபாயமாக ஸ்வீகரிக்கும் அளவில் -இவர்கள்
அபராதங்களைப் பொறுத்து அவனை அங்கீகரிக்கும் படி பண்ணுகைக்கு புருஷகாரம் அவஸ்ய அபேஷிதம் என்கை –
பூர்வ வாக்யத்திலே -புருஷகார பூர்வகமான உபாய வர்ணம் பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாகையாலே இறே –உத்தர வாக்யத்தாலே அநந்ய பிரயோஜனத்வத்தை பிரகாசிப்பிக்க வேண்டுகிறது – பூர்வ வாக்யத்தில் பிரதி பாதனமான சாதன விசேஷம் -பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இறே இருப்பது –அதில் இவ் வதிகாரிக்கு அபிலஷிதமான பல விசேஷம் இன்னது என்னும் இடத்தை பிரகாசிப்பிகிறது இவ் வாக்கியம் -என்று -பரந்த படியிலும் –கீழ்ச் சொன்ன சாதனம் பல சதுஷ்ட்ய சாதாரணமாய் இருக்கையாலே  இவனுக்கு அபேஷிதமான பல விசேஷத்தைச் சொல்லுகிறது -என்று ஸ்ரீ யபதிப்  படியிலும் –
உத்தர வாக்யத்தாலே பிராப்யம் சொல்லுகிறது -பிராப்யாந்தரத்துக்கு அன்று என்கை – இத்யாதியாலே முமுஷுப் படியிலும் -இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
திருமாலைக் கை தொழுவர் -முதல் திருவந்தாதி -52 –
அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திரு வாய் மொழி -1 -5 -7 – என்கிறபடியே புருஷகாரம் முன்னாகப் பற்றி-பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே அவற்றை ஒழிந்து-ஒண் டொடியாள் திருமகளும் அவனுமான சேர்த்தியில்-திரு வாய் மொழி -4 -9 -10 –
அடிமையைப் பேறு என்று கீழ் சொன்ன உபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு -என்று இறே இவர்  திருத் தம்பியாரும் அருளிச் செயல் ரஹஸ்யத்தில் அருளிச் செய்தது –

ஆக –
இவன் அவனை  பெற -சூரணை -142 – என்று தொடங்கி இவ்வளவாக –
ஸ்வகத ஸ்வீகார அநு உபாயத்வமும்- பரகத ஸ்வீகார உபாயத்வமும் -தத் பிராபல்யமும் –
அவனே ஸ்வீகரிக்கும் அளவில் புருஷகாரம் முன்னாகவே -ஸ்வீ கரிக்கும் படியையும் –
இருவரும் இப் புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு பிரயோஜனம் இன்னது என்னும் இடமும் –பிரபத்தி அதிகாரிகள் எல்லாருக்கும் புருஷகாரம் அவர்ஜநீயம் என்னும் அதுவும்-சொல்லப் பட்டது –

பிரதம பிரகரணத்திலே புருஷகார வைபவ கதன முகேன ஸ்ரீமத் பத அர்த்தத்தையும் ,
உபாய வைபவ கதன முகேன -நாராயண சரணவ் சரணம் -என்கிற  பதங்களின் அர்த்தங்களையும்-பிரதி பாதித்த அனந்தரம்-
பிரபத்திக்கு தேச நியமம் என்று தொடங்கி–80-பிரபத்யே என்கிற பதத்தால்-
சொல்லப் படட பிரபத்தி உடைய தேச கால நியம அபாவத்தையும்-
அதுக்கு விஷயம் சொல்லுகைக்காக  -குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-என்று தொடங்கி முக்த கண்டமாக மீளவும் நாராயண  -பத அர்த்தத்தையும்-
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -என்று உத்தமனாலே ஆஷிப்தனான அதிகாரியையும்-
பிரபத்தியில் சாதனத்வம்  இல்லாமையையும்-
பிரபத்தி அதிகாரி அபேஷிதமான சக்தி லஜ்ஜா யத்ன நிவ்ருத்தி சம தம அதிசயம் முதலான வற்றையும்
பிரபத்தி அங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தின் உடைய தோஷ பூயஸ்வத்தையும்
தத் பிரதிகோடிதயா பிரபத்தியினுடைய நைர்தோஷ்யாதிகளையும்  –பிரபத்தி பிரசங்கத்தாலே-
முக பேதேன ஸ்வகத ஸ்வீகார அனுபாயத் வத்தையும் -பர கத ஸ்வீகார உபாயத்வத்தையும் 
தத் பிராபல்யத்தையும் அவனே ஸ்வீகரிக்கும் அளவிலும் -புருஷகாரத்தை முன் இட்டே ஸ்வீகரிக்கும் என்னும் இடத்தையும் ,
உபயரும் புருஷகாரத்தை முன் இடும் அதுக்கு உண்டான பிரயோஜன விசேஷங்களையும் ,
அதிகாரி த்ரயத்துக்கும் புருஷகார அவர்ஜநீயம் என்னும் அத்தையும் பிரதிபாதிக்கை யாலே இவ்வளவும் பூர்வ கண்ட அர்த்தத்தை அருளி செய்தார் ஆய்த்து-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –