Archive for the ‘Divya Names’ Category

ஸ்ரீ தேசிக வைபவம்—ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–அஷ்டோத்தர சத நாமாவளி–

May 4, 2026

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகத ஸ்ப்ருஹம் | ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷு வேங்கடேஸாஹ்வயம் மஹ: ||

தேஸிக ஸப்தத்தில் தே என்ற அக்ஷரம் தேவ: என்பதையும் ஸி என்ற அக்ஷரம் ஸிஷ்ய: என்பதையும் க என்பது கருணையையும் குறிக்கும்.தேவாநுக்ரஹ தாரித்வாத் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் கருணா மய ரூபத்வாத் உச்யதே தேஸிகோ புதை:தேஸிக பதத்தின் முதல் எழுத்து தே, தேவ: என்பதைக் குறிக்கும். தேவ:என்ற ஸப்தத்தை ஸாஸ்த்ரம் தீவ்ய தீதி தேவ: என்றும் ஸ்ரத்தயா தேவ: தேவத்வம் அஸ்நுதே என்றும் பல விதமாக விளக்குகிறது. ஆசார்யர்கள் நமக்கு அநுக்ரஹம் செய்வதற்காகவே தோன்றியதால் தேஸிக ஸப்தத்தின் முதல் எழுத்து தே என்பதை தேவ: என்று சொல்வதுண்டு. ஸிஷ்யர்களுக்கு கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ப்ரபத்தி ஆகியவை பற்றிய ஞானத்தை வழங்கி அநுக்ரஹம் செய்கிறார் ஆசார்யன்.ஆசார்யர்கள் ஸிஷ்யர்களுக்கு அருள வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானிடத்திலே ஞானத்தைப் பெற்றிருக்கிறார்கள். இது தான் ஸிஷ்யாநுக்ரஹ காரணாத் என்பதன் பொருள். கார்ய நியத பூர்வ வ்ருத்தி காரணம் என்றபடி ஸிஷ்யனுக்கு அருளுவதற்கு முன்னரே எம்பெருமானிடத்திலே ஆசார்யன் அநுக்ரஹம் பெற்றுக் கொள்கிறார். இந்தக் காரணம் எப்படிப்பட்ட தென்றால் கருணா மய ரூபத்வாத்-பர துக்க துக்கித்வம் தயை என்று சொல்வார்கள்.அது போல் ஸிஷ்யர்களிடத்திலே தயையுடன் இருக்கக் கூடியவர்கள் ஆசார்யர்கள்.ப்ராதர்த் யூத ப்ரஸங்கேந மத்யாஹ்நே ஸ்த்ரீ ப்ரஸங்கத: ராத்ரௌ சௌர்ய ப்ரஸங்கேந காலோ கச்சத்ய தீ மதாம்||அதாவது,காலையில் சூதாட்டத்திலும், மதியம் பெண்கள் விஷயத்திலும், இரவில் திருட்டுத் தொழிலிலும் காலத்தை வீணடிப்பார்கள் அறிவிலிகள். அறிஞர்கள் அறிவுடையவர்கள் காலையில் மஹா பாரதக் கதை கேட்பதிலும், மதியம் ஸீதா தேவியின் சரிதமான இராமாயணக் கதை கேட்பதிலும், இரவில் நவநீத சோரனான ஸ்ரீகிருஷ்ணனுடைய கதையைக் கேட்டும். காலத்தைக் கழிப்பார்கள்.

குரும் ப்ரகாயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகா -ப்ரகாஸாப்யாம் யேதே ஸம்பதாயுஷ்||
என்று நூற்றெட்டு ஸம்ஹிதைகளில் ஒன்றான தேவ ஸம்ஹிதை சொல்கிறது. இந்த லோகத்தை
ஸ்வாமி தேஸிகன் குருபரம்பரா ப்ரபாவத்திலே மேற்கோள் காட்டுகிறார். ஆசார்ய அநுஸந்தானம்
முக்கியமானது. தேஸிகன் என்ற ப்தத்திற்கே ஆசார்யன் என்று அர்த்தம்.

ஆசரதீதி ஆசார்ய: ஆஸமந்தாத் சரதீதி ஆசார்ய: – ஆசார்ய லக்ஷணம்
ஸத் புத்தி: ஸாது ஸேவீ ஸமுசிதசரிதஸ் தத்வ போதாபிலாஷீ
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந:ப்ரணி பதந பர: ப்ரஸ்ந கால ப்ரதீக்ஷ: 1
ஸாந்தோ தாந்தோ ந ஸூயு: ஸரணமுபகத: ஸாஸ்த்ர விஸ்வாஸ ஸாலீ
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாம் கருதவிதபிமதம் தத்வத: ஸிக்ஷணீய: –ஸிஷ்ய லக்ஷணம் பற்றி ஸ்வாமி தேஸிகன்

ஸூஸ்ரூஷா ஸ்ரவணம் சைவ க்ரஹணம் தாரணம் ததா!
ஊஹா போஹார்த்த விஜ்ஞானம் தத்வ ஜ்ஞானம் ச தீகுணா:
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அநுப்ரவிஸ்ய குருதே யத் ஸமேஹிதம் அச்யுதா என்றபடி எம்பெருமானே ஸ்ரீ ஸடகோபராக, ஸ்ரீ ஆளவந்தாராக, பகவத் ராமானுஜராக, ஸ்வாமி தேஸிகனாக திருவவதாரம்-


ப்ரஸாதாத் தேஸிகேந்த்ராணாம் பராவர விபாகவித் |
ப்ரபந்ந: பரமாத்மாநம் ப்ராப்நோதி பரமம் பதம் II
இந்த ஒரு அனுஷ்டுப் ஸ்லோகத்திலேயே சித், அசித், ஈஸ்வர தத்வம் அனைத்தையும் அடக்கி விட்டார் ஸ்வாமி.-வ்யாகரணத்திலே சொல்வதுண்டு.
அல்பாக்ஷரம ஸந்திக்தம் ஸாரவத் விஸ்வதோ முகம் |
அஸ்தோபமந வத்யஞ்ச ஸூத்ரம் ஸூத்ர விதோ விது: 1
-என்பது ஸூத்ர லக்ஷணம்.
இப்படி சுருங்கச் சொல்வது ஸூத்ரமாகவும், விரித்துச் சொல்வது பாஷ்யமாகவும் இருக்க வேண்டும்.
பதச்சேத: பதார்த்தோக்தி: – விக்ரஹோ வாக்ய யோஜநா |
ஆக்ஷேபஸ்ய ஸமாதாநம் வ்யாக்யாநம் பஞ்ச லக்ஷணம்II

ஸ்ரீராமாயணத்திற்கு ஸமானம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் பாகவதத்திற்கு ஸமானம் யாதவாப்யுதயம். ஸ்வாமியினுடைய யாதவாப்யுதய க்ரந்த மானது மோக்ஷம் கொடுக்கக் கூடிய ஸர்வேஸ்வரனுடைய கிருஷ்ணாவதாரத்தைப் பற்றிக் கூறுகிறது.-அதனால் இது பரம புருஷார்த்தத்தைக் கொடுக்கக் கூடிய க்ரந்தம். இவ் விஷயத்தை ஸ்வாமி முதல் ஸர்கத்தில் எட்டாவது ஸ்லோகத்தில் –விஹாய ததஹம் வ்ரீடாம் வ்யாஸ வேதார்ணவாம்ருதம் |
வக்ஷ்யே விபுத ஜீவாதும் வ தேவஸுதோதயம்|–

வ்யாஸர் இயற்றிய வேதமான மஹா பாரதம் என்ற கடலிலிருந்து எடுக்கப்படும் ஸாரமான அமுதம் அதாவது தேவர்களுக்கும், வித்வான்களுக்கும் அன்னமுமான வஸுதேவருடைய குமாரரான கிருஷ்ணருடைய சரித்திரத்தைச் சொல்லுவேனாக என்று ஸாதிக்கிறார். இப்படி கிருஷ்ணனுடைய பெருமையைச் சொல்வதால் இந்த கரந்தத்தை மஹா பாரதம் என்றும் பாகவதத்தின் தஸம ஸ்கந்தத்தின் சுருக்கம் என்றும் கூறலாம்.-வந்தே ப்ருந்தாவந சரம் வல்லவீ ஜந வல்லபம் |
ஜயந்தீ ஸம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம்|||

க்ரீடா தூலிகயா ஸ்வஸ்மிந் க்ருபா ரூஷி தயா ஸ்வயம் |1
ஏகோ விஸ்வமிதம் சித்ரம் விபு: ஸ்ரீமாந ஜீஜனத்
|-பகவாந் க்ருபை என்கிற வர்ணத்தில் லீலை என்கிற குச்சியைத் தோய்த்து மூவுலகம் என்ற சித்திரத்தை தன்னிடத்தில் தானே எழுதிக் கொண்டான்-

கேவலம் பகவதநுபவத்தையே கொண்டுள்ள பகவதநுபவ ஜனிதமான இது போன்ற காவ்யங்கள் மஹா ஸ்ரேஷ்டமானவை.
விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம் |
தயா நிதிம் தேஹ ப்ருதாம் ஸரண்யம் தேவம் ஹயக்ரீவ மஹம் ப்ரபத்யே —
என்று ஞான வடிவமானவனும், விஸேஷ ஞானத்தை அருளுவதற்காகவே விரதம் பூண்டவனும், கருணைக்கு இருப்பிடமானவனுமான அந்த ஸ்ரீஹயக்ரீவனுடைய அநுக்ரஹமும், ஆசார்ய அநுக்ரஹமும், ராமாநுஜ
தயா பாத்ர பூதரான ஸ்வாமிக்கு ஒருங்கே இருந்ததால் கல்வியானது இவருக்கு வலைப்பட்டிருந்தது-

ஸ்தந்யேந க்ருஷ்ண ஸஹ பூதநாயா:
ப்ராணாந் பபௌ லுப்த புநர்பவாயா: 1
யதத்புதம் பாவயதாம் ஜநாநாம்
ஸ்தநந்தயத்வம் ந புநர்பபூவ II
–நான்காவது ஸர்கத்தில் பூதனா வதத்தை ஒரே ஸ்லோகத்தில் முடித்தார்.
தத்வ டீகா என்று ஒரு க்ரந்தம். அந்த க்ரந்தத்தில் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா – “அத பல பதத்திற்கான விளக்கம் மட்டும் 350 பக்கம் எழுதி யிருக்கிறார் ஸ்வாமி.
விஸேஷேண ராகம் வைராக்யம், விகத ராகம் வைராக்யம் என்று இரண்டு விதமான வைராக்யங்கள்-
மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் |
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம்
||என்றபடி நாம் மஹாத்மாக்களை நினைவிற் கொண்டு நாமும் அவர்கள் வழி நடக்க வேண்டும்.
ஆஹார ஸூத்தி ஆத்ம ஸூத்தி, ஸத்வ ஸூத்தி, தருவா ஸூத்தி, திரவ்யா ஸூத்தி, க்ரியா ஸூத்தி, மந்த்ர் ஸூத்தி அனைத்தும் நிறைந்தவர்..

முக்தி தரும் நகர் ஏழில் முக்கியமானது காஞ்சி மாநகர். அக்காஞ்சி மாநகரில் திருத் தண்கா என்னும் திவ்யதேசம் உள்ளது. அங்கு தீபப் பிரகாசன் என்னும்
திருமாலின் சந்நிதிக்கு வெகு அருகில் தூப்புல் என்னும் ஒர் அந்தணர் வாழ்விடம் (அக்ரஹாரம்) இருக்கிறது.(தூப்புல்- தூய்மை தரும் புல்-விஸ்வாமித்திரம் என்னும் தர்ப்பை நிறைந்த இடம்,அல்லது விஸ்வாமித்திர கோத்திரத்தில் தோன்றிய பெரியோர்கள் அங்கு வாழ்ந்து வந்ததால்,
இவ்விடத்திற்குத் தூப்புள் என்ற பெயர் நிலைத்து விட்டிருக்கலாம்.)

இத் தூப்புல் சேஷத்திரத்தில் அனந்த ஸூரி-தோதாரம்பா என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், குழந்தைப்
பேறு கிடைக்கப் பெறாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.-ிருமலைக்கு இருவரும் யாத்திரையாக சென்று, திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டி குழந்தைப் பேற்றினுக்கு அவனருளை எதிர் நோக்கி அங்கேயே தங்கி இருந்தனர்.ஒரு நள்ளிரவு தோதாரம்பா ஒரு கனவு கண்டார்
எழிலொழுகும் ஓர் இளஞ்சிறுவனாக திருவேங்கடமுடையான் கனவில் தோன்றி, ” ஸ்ரீராமானுஜ ஸித்தாந்தத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்கு அதி மேதாவியான புத்திர ரத்தினத்தை
அளித்தோம்; பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லி திருமலைக் கோயிலில் உள்ள திருமணியைப் போன்ற திருமணியைத் தன் கணவரிடம் கொடுக்க, அந்தத் திருமணியைத் தான் வாங்கிப் பெற்றுக் கொண்டு விழுங்குவது போல் அக் கனவில் கண்டார். இதே கனவை அனந்த ஸூரியும் கண்டதாக மறுநாள் காலையில் கண் விழித்ததும் சொல்லி, தோதாரம்பாவை வியப்பில் ஆழ்த்தினார்.இது இப்படி யிருக்க, மறுநாள் கோயிலில் பரிசாரகர் பூஜைக்குரிய மணியை வழக்கம் போல் எடுத்து வைக்கச் சென்றார். ஆனால் அது காண வில்லை. கைம்மணி யின்றி எப்படி பகவானுக்கு நிவேதனம் செய்வதென்று எல்லோரும் வருத்த முற்றிருந்தனர்.அப்பொழுது பகவான் கோயில் ஜீயர் பால் ஆவேசித்து. “ஸ்ரீராமாநுஜ் ஸம்ப்ரதாய ரஷணத்திற்காக ஒரு மஹானைத் தோற்றுவிப்பதற்குத் திருமணி யாழ்வாரை நாமே அநந்த ஸூரிக்கு அளித்து விட்டோம். ஆகவே இனி என் திருவாராதன காலத்தில் கைம் மணியை ஸேவிக்க வேண்டாம். நிலை மணி (பெரிய மணி)யொன்றை மட்டும் ஸேவித்தால் போதும்” என்று கூறினார்.

சில நாட்களுக்கெல்லாம் தோதாரம்மாள் கர்ப்பவதியானாள். தம்பதிகள் வேங்கடவனிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர் சேர்ந்தனர். காஞ்சியில் இவர்கள் வசித்து வந்த பகுதி தூப்புல் என்பதாகும். இது தீப ப்ரசாசர்’ என்னும் விளக்கொளி எம்பெருமான் விளங்கும் திவ்ய ஸ்தலம்.இந்த ஸ்தலத்தில் தம்பதிகள் இனிது வாழ்ந்து வந்தனர். வேங்கடேச விமல கண்டாவதாரமாய் அவதரிக்கப் போகும் மஹானாதல் பற்றி மற்ற மானவர்களைப் போலன்றி, பன்னிரண்டு ஆண்டுகள் தமது தாயின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்தார்.பிறகு, கலி 4370-வது வருஷத்திற்குக் சரியான (கி.பி. 1268)
சுக்ல புரட்டாசி மாதம் சுக்ல பஷ தசமி திருவோண நக்ஷத்திரம் கூடிய புதவாரத்தில்
தோதாரம்மையின் கர்ப்பமாகிய பாற்கடலினின்று பகலவன் போல் ஒரு ஆண் குழந்தையாக உதித்தார். அப்புள்ளாரும் தமது சகோதரிக்கு வெகுகாலம் கழித்து உதித்த இக் குழந்தையின் தெய்விக ஒளியை மகிழ்ச்சியுடன் நோக்கி வேங்கடவனின் அருளால் தோன்றிய படியால் வேங்கடநாதன் என்றே நாம கரணம் செய்வித்தார்.

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் ஜாதகம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சுக்ல வர்ஷம் கதகலி 4370 க்குச் சரியான (கச்சி நகர்)
அனந்தாசார் தோதாரம்மைக்கு வரத வேங்கட ப்ரஸாதம் ஸ்வப்னத்தில் அருளியபடி- கைரவிணீ தீர்த்த ஸ்நானமும் ஆன பிறகும் புரட்டாசி மாதம் 11ந்தேதி ஞாயிற்றுக் கிழமை11 -28க்கு சுக்ல ஏகாதசி 6 நாழி-19 விநாடிக்கு திருவோண நக்ஷத்திரத்தில் கன்யா லக்னத்தில் (வேங்கட கண்டாம்சம்) அதி மானுஷ புருஷம் ப்ரஜை அவதரணம் அல்லது சுப ஐனனம் – துப்புல் புண்ய பூமி கச்சிநகர். 11 கடிகைகளும் 28 விகடிகையில் ஜனனம்.கர்ப்பச் செல்லு போக சந்திர மஹா தசையில் பாக்கி செல்ல வேண்டியது 0 வர்ஷம் –மீ 9-நா-13

முறைப்படி செளளம், உபநயனம் முதலியவைகளைச் செய்யப் பெற்ற பின் “வேங்கடநாதன் தமது அம்மானான அப்புள்ளாரிடமே காவியம் .நாடகம், சாஸ்திரங்கள் முதலியவைகளை அப்யஸித்து வந்தார். அக் காலத்தில், நடாதூர் அம்மாள் என்னும் ஸ்ரீபாஷ்ய ஸிம்ஹாஸனாதிபதி காஞ்சி ஸ்ரீதேவராஜன் ஸந்நிதியில் சீடர்களுக்குக் கால க்ஷேபம் சொல்லி வந்தார். அப்புள்ளாரும் அம்மாளிடம் காலக்ஷேபம் செய்பவர். ஒரு சமயம் ஐந்து வயது நிரம்பிய மருமகன் வேங்கடநாதனை நடாதூர் அம்மாளுடைய கால ஷேப கோஷ்டிக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார் . மஹா தேஜஸ்வியான இச் சிறுவனைக் கண்டவுடன் அம்மாள் கால ஷேபத்தைச் சற்று நிறுத்தி விட்டு, இச் சிறுவனைப் பற்றி விசாரித்த பிறகு மறுபடியும் கால ஷேபத்தைத் தொடங்குகையில்,முன்பு எங்கே சொல்லி நிறுத்தினேன்?’ என்று சீடர்களை வினவினார்.கால க்ஷேபத்தில் விட்ட இடம் தெரியாமல் அனைவரும் திகைத்து நின்றனர். ஆனால் சிறுவன் வேங்கட நாதனோ, ‘ இந்த இடத்தில் இந்த வாக்கியத்தைச் சொல்லி ஸ்வாமி நிறுத்தியது, என்று சட்டென எடுத்துக் கூறினார். வேங்கடநாதனின் ஜ்ஞாபக சக்தியை மிகவும் புகழ்ந்த நடாதூரம்மாள் கீழ் கண்ட ஸ்லோகத்தினால் இவரை வாழ்த்தினார் .
“ப்ரதிஷ்டாபித வேதாந்த ; ப்ரதிக்ஷிப்த பஹிர்மத
பூயாஸ் த்ரைலோக்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் |

(நீ பிற மதங்களைக் கண்டித்து, விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தி, மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல க்ஷேமங்களையும் அடைவாயாக மற்றும், “இவனே ஸ்ரீ பகவத் ராமாநுஜ தர்சநத்தைப் ப்ரவர்த்திக்க வல்லவன்’ என்றும் ஆசிர்வதித்தார்.
இவ்வாறு,தமது ப்ராசார்யரான நடாதூரம்மாளிடம் ஆசி பெற்று,தமது 20 வயதுக்குள்ளாகவே வேத வேதாங்க தர்க்க மீமாம்ஸாதி ஸகல சாஸ்திரங்களையும் மாதுலரான அப்புள்ளாரிடமே கற்றுத் தேர்ச்சி யடைந்தார்.

இப்படி இருபது ஆண்டுகளுக்குள் ஷட் தரிசனங்களிலும் ஸ்ரீ பாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான ஸகல வேதாந்த கிரந்தங்களிலும் தேர்ச்சி யடைந்த தமது மருகமனுக்கு ஸகல லக்ஷணங்களோடு கூடிய திருமங்கையார் என்னும் கன்னிகையுடன் விவாஹம் செய்வித்து கருஹஸ்த தர்மத்தை அனுஷ்டிக்கும்படி செய்தார்.
இப்படி ஸகல சாஸ்திர ஸம்பந்நராய் விளங்கும் வேங்கடநாதன் விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ஸ்தாபனம் செய்வதற்கு ரக்ஷையாக அப்புள்ளார் வைநதேய (கருட) மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார். இப்படி உபதேசிக்கப்பட்ட மந்த்ரத்தை ஸித்தி செய்துக் கொள்வதற்காக ஏகாந்த ப்ரதேசத்தைத் தேடிச் சென்று. திருவஹீந்திரபுரத்தில் ஸ்ரீ தெய்வநாயகன் ஸந்நிதிக் கெதிரேயுள்ள ஒளஷத கிரியில் ஒரு அரசமரத் தடியில் அமர்ந்து வைநதேய மந்த்ரத்தை ஜபித்து வந்தார். பிறகு, கருத்மான் மனம் மகிழ்ந்து ப்ரத்யக்ஷமாகி, இவருக்கு ஸகல வித்யாதி நாதனான ஸ்ரீஹயக்ரீவனின் மந்தரத்தை உபதேசம் செய்தார். ஸ்ரீ தேசிகனும் நியமங்களுடன் ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஆவ்ருத்தி செய்ய ஸ்ரீ ஹயக்ரீவன் பிரதியஷமாகி, நினைத்த போதெல்லாம் உமது நாவிலமர்ந்து நால் வேதப் பொருளை யெல்லாம் நவில்வேன்’ என அருள் புரிந்தார்.
உடனே தேசிகள் முதன்முதலாக ஹயக்ரீவ ஸ்தோத்ரம், கருட பஞ்சாஸத், அச்யுத சதகம், தேவ நாயக பஞ்சாஸத் என்னும் ஸ்தோத்ரங்களையும் மும் மணிக் கோவை, பத்துப் பா, கழற் பா, அம்மானைப் பா, ஊசல் பா, ஏசல் பா முதலிய தமிழ்ப் பாக்களையும் இயற்றினார்.-ஸம்ஸ்கிருதம். பிராகருதம்,தமிழ் என்னும் மும் மொழிகளிலும் கவிதைகள் புனைவதிலும், தர்க்க வாதங்களால் பிற சித்தாந்திலும் இவருக்குள்ள திறமையை நோக்கி, அக் காலத்திய பெரியோர்கள் ஸ்வாமிக்குக் கவிதார்க்கிக ஸிம்ஹம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிப் போற்றி வந்தனர்.

இப்படி ஞான நிதியாய் விளங்கிய ஸ்வாமி, தமது கிருஹஸ்த ஜீவனார்த்தமாக யாரிடமும் சேவகம் புரியவில்லை; யாரையும் அண்டவுமில்லை. தினந்தோறும் காலையில் நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்ட பின், பகவந் நாம ஸ்மரணத்துடன் வெளியில் சென்று உஞ்ச வ்ருத்தியாகக் கொண்டு வரும் அமுத படியைச் சமைப்பித்து பகவானுக்கு நிவேதனம் செய்த பின் தாம் புசித்துக் குடும்ப நிர்வாஹம் செய்து வந்தார். பாக்ய வசமாக அமைந்த இவரது தர்ம பத்தினியும் இவர் மேற் கொண்ட வ்ருத்தியைப் புனிதமாகக் கருதி அன்புடன் ஸேவை புரிந்து வந்தார்.
ஒரு நாள்,ஸ்வாமி உஞ்ச விருத்திக்குச் செல்லும் போது,ஒரு தனிகரின் பத்தினி, இவர் வறுமை நீங்கி சில நாட்களாவது சுகமாக இருக்கட்டும் என்று எண்ணி உஞ்ச விருத்தி பாத்திரத்தில் அரிசியுடன் பொன் நாணய மொன்றையும் கலந்து சேர்த்து விட்டாள். ஸ்வாமி கிருஹத்திற்குச் சேர்ந்ததும், பாத்திரத்திலிருந்து அரிசியை எடுத்துச் சுத்தம் செய்யும் போது இவரது தேவி அரிசியுடனிருந்த பொன் காசைக் காட்டி இது என்ன?’ என்று கேட்க, ஸ்வாமியும் இது ஒரு விஷப் புழு. இதை வீசி எறிந்து விடு’ என்று கூற, அவ் வம்மையார் அப்படியே அதை வீசி எறிந்து விட்டாராம். இவரல்லவோ வைராக்ய சீலர்! இவ் வம்மை யல்லவோ உத்தம தர்ம பத்தினி! என்று எல்லோரும் போற்றினர்.

தேசிகன் இவ்வாறு வைராக்ய நிதியாய் எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பது தேசமெங்கும் பரவியது. இவரது சக மாணவராக இருந்த வித்யாரண்யருக்கும் இவ் விஷயம் தெரிந்தது-அவர் அப்பொழுது விஜயநகர ஸாம்ராஜ்யத்து ஆஸ்தான வித்வானாக இருந்தார். அரசனிடம் அவருக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. எனவே, எவ்விதமாக வாவது இந்த ஞான நிதியை வர வழைத்து தம்முடன் அரச சபையில் ஆஸ்தான வித்வானாக்கி, இவரது வறுமையை அகற்றி விட வேண்டு மென்று எண்ணினார். அதற்கேற்ப ஒரு தூதுவனை இவரிடம் அனுப்ப, ஸ்வாமியும் தமக்குள்ள வைராக்யத்தைக் கூறாமற் கூறி, வைராக்ய பஞ்சகம்’ என்னும் ஒரு ஸ்தோத்ரத்தை எழுதி வித்யாரண்யருக்கு அனுப்பி வைத்தார். உல்கெலாம் ஆளும் ஆண்டவனுக்கு அடிமை யாகிய நான், இந் நிலவுலகின் ஒரு சிறு பகுதிக்கு அரசனெனக் கூறிக்கொள்பவனுக்கு அடிமையாக மாட்டேன். அன்று குசேலனைக் குபேரனாக்கிய இறைவனை யன்றி மற்றோரிடம் நான் அடிமை செய்யேன்” என்பன போன்ற வைராக்யக் கருத்துக்களைக் கொண்ட இவரது வைராக்ய பஞ்சகத்தைப் படித்த வித்யாரண்யர் இவரல்லவோ மகான் ! என மனத்தால் போற்றி மகிழ்ந்தார்.

இப்படி ஏழ்மையையே உண்மைச் செல்வமாக ஏற்றிருக்கும் இந்த ஸ்வாமியின் ஞானத்தையும் வைராக்யத்தையும் கண்டு பொறாமை கொண்ட சில அந்தணர்கள் இவரை அவமானம் செய்ய வேண்டு மென்று முடிவு செய்து, ஒரு பிரம்மசாரியை அழைத்து, விவாஹம் செய்து கொள்வதற்காகப் பண உதவி செய்ய வேண்டு மென்று நீ ஸ்ரீதேசிகனிடம் கேள் ‘ என்று சொல்லி யனுப்பினார்கள்.-அவன் தேசிகனைத் தெண்டனிட்டு,தனது வறுமையையும் விவாஹம் செய்து கொள்வதற்கான பணத்தின் தேவையையும் கூறி, தனக்கு உதவி புரிந்தருள வேண்டுமென்று கெஞ்சினான்.-ஸ்வாமி தேசிகன், இது சிலரின் சூழ்ச்சி என்பதை நன்கு புரிந்து கொண்டார். ஆயினும் ஆண்டவனிடமுள்ள அசஞ்சலமான நம்பிக்கையால், ஜகன் மாதாவான ஸ்ரீ பெருந்தேவித் தாயார் ஸந்நிதிக்குச் சென்று, ஸ்ரீஸ்துதி’ என்னும் தமது ஸ்தோத்ரத்தால் உருக்கமாகத் தாயாரைப் பிரார்த்தித்து நின்றார். தன்னலம் கருதாது பிறர் நலனுக்காகவே இந்த வைராக்ய மூர்த்தி செய்த பிரார்த்தனைக் கிரங்கி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியும் பொன் மழை பொழிந்தாள். பிரம்மசாரியும் யதேஷ்டமாகப் பொன்களைத் திரட்டிச் சென்று திருமணம் புரிந்து கொண்டான். பொறாமைக்காரர்கள் தேசிகனின் திருவடி பணிந்து மன்னிக்க வேண்டினர் .
பிறருடைய பொறாமைக் குணம் ஸ்வாமியின் பொறுமையை விளக்கிக் காட்டும் உரைக் கல்லாக அமைந்த நிகழ்ச்சிகள் பல. ஒரு சமயம் சில அற்பர்கள் ஸ்வாமி பிஷைக்கு எழுந்தருளும் தெருவழியில். சில செருப்புக்களைத் தோரணமாகத் தொடுத்துத் தொங்க விட்டிருந்தனர். ஸ்வாமி எவ்வித மனக் கசப்போ, முகச் சுளிப்போ இல்லாமல் அந்தத் தோரணத்தைத் தாண்டி,புன் முறுவல் பூத்த திருமுகத்துடன் இவ்வாறு கூறினாராம்:
கர்மாவலம்பகா கேசித் கேசித் ஜ்ஞாநாவலம் பகா :
வயம் து ஹரிதாஸாநாம் பாத ரக்ஷா வலம்பகா ! |

“சிலர் ஸம்ஸார துக்கங்கள் நீங்கி, கடைத் தேறுவதற்காகக் கர்ம மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் ஞான மார்க்கத்தைப் பின்பற்றுகின்றனர். நான் ஹரி தாஸர்களின் பாத ரக்ஷைகளைப்
பற்றுக் கோடாகக் கொண்டு கடைத் தேறுபவன்” என்று கூறித் தமது பொறுமையின் சிறப்பையும் பாகவத காஷ்ட்டையையும் உலகுக்கு அறிவுறுத்தினார்.

ஒரு சமயம் கவிதார்க்கிக ஸிம்ஹம் ஸ்ரீரங்கம் எழுந்தருளி அங்கு சில நாள் தங்கியிருந்தார். அச் சமயம் பிற மதப் பண்டிதர்கள் சிலர் இவரை வாதுக்கழைத்தனர். அவர்களுடன் பல நாட்கள் வாதப் போர் செய்து அவர்களை வெற்றி கொண்டார்.-அவர்களுடன் நடந்த வாதப் பிரதிவாதங்களின் தொகுப்பை தூஷணி’ என்னும் நூலாக உருவாக்கினார் தேசிகன். அதற்கு அரங்கநாதன் மனமுவந்து, வேதாந்த தேசிகன் என்னும் சிறப்பான விருதை இவருக்கு சூட்டினார் –

இதை நோக்கிய அரங்க நாச்சியார் தாமும் இவருக்கொரு விருதமளிக்க விரும்பி, தம் மதத்திலும் பிற மதங்களிலும் தங்கு தடையின்றி புகுந்து ஆராய்ந்து உண்மையை ஒளிவு மறைவின்றி
எடுத்துக் கூறும் இவரது திறமையை மெச்சி,ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்னும் விருதமளித்து வாழ்த்தினார்.-இவ்வாறு அரங்க நகர திவ்ய தம்பதிகளால் வாழ்த்தப் பெரும் பெருமை பெற்ற வேதாந்த தேசிகனுடைய புகழ் நாடெங்கும் பரவியது. ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சி பெற்று-ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரா’ என்று தெய்வ தம்பதிகள் அளித்த விருதைப் பொருளுள்ளதாகச் செய்து கொண்ட நிகழ்ச்சிகள் இவரது வாழ் நாட்களில் பல நேர்ந்தன. அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

சிலருடைய துர்போதனைக் கிணங்கி ஒரு பாம்பாட்டி இவரிடம் வந்து இவர் மீது சில பாம்புகளை ஏவினான் தேசிகன் தம் முன்னே ஏழு கோடுகளைத் தரையில் கீறினார். அவைகளைத் தாண்ட
முடியாமல் பாம்புகள் பின்னடைந்தன. பிறகு அப் பிடாரன் சங்க பாலன்’ என்ற மஹா சர்ப்பத்தை ஏவினான்.அது அந்தக் கீற்றுக்களைத் தாண்டி ஸ்வாமியை நெருங்க, கருட தண்டகத்தால் பெரிய திருவடியைத் துதித்தார். அந்த க்ஷணமே கருட பகவான் சரேலென அப் பாம்பை எடுத்துச் சென்று மறைந்தார். கிடைத்தற்கரிய ஒரு மஹா ஸர்ப்பத்தை இழந்த அப் பிடாரன் தேசிகனின் திருவடி வணங்கி பிரார்த்திக்க, ஸ்வாமியும் கருட பஞ்சாஸத்’ என்னும் ஸ்தோத்திரத்தால் கருத்மானை ஸ்தோத்ரம் செய்து சங்க பாலனை மீட்டுக் கொடுத்தார்

திருவஹீந்திரபுரத்தில் தேசிகன் தங்கி யிருக்கும் காலையில் சில பொறாமைக் காரர்களால் ஏவப்பட்டு. ஒரு கொற்றன் தேசிகனிடம் வந்து, ‘ உங்களுக்குக் கிணறு கட்டத் தெரியுமா? இது தெரியாமல் எப்படி ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரரானீர்கள்?’ என்று கேட்டான்.இதைச் செவியுற்ற தேசிகன் தலைப் பாகைக் கட்டி, கையில் கட்டடச் சாதனங்களுடன் கிணற்றில் இரங்கி, சற்றும் ஏறுமாறில்லாமல் அழகாகக் கற்களை அடுக்கி, கிணற்றைக் கட்டி, கொற்றனைத் திகைக்க வைத்து விட்டார். அந்தக் கிணறு இன்றும் திருவயிந்தையில் தேசிகனது திரு மாளிகையில் இருப்பதைக் காணலாம்

ஸகல கலா நிதியாய் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரென எல்லோரும் போற்றும் நிலையிலுள்ள ஸ்வாமி தேசிகனைக் கண்டு பொறாமை கொண்ட ஒரு சந்நியாசி ஷுத்ர மந்த்ர பிரயோகம் செய்து
தேசிகனின் வயிற்றில் ஜலோதரம் என்னும் வியாதி யுண்டாகும்படி செய்தான். ஸவாமி அதற்குச் சளைக்காமல் தம் எதிரே நிற்கும் கம்பத்தைக் கீறி அதன் வழியே தமது உதரத்திலேற்றிய நீரெல்லாம் வழிந்தோடும்படி செய்தார். அவனும் அவரை வணங்கி மன்னிக்க வேண்டினான்.

ஸ்ரீ தேசிகனுக்கு அளிக்கப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹம். என்னும் விருதைப் பார்த்து பொறாமை கொண்ட ஒரு வித்வான்”ஒரு ராத்திரியில் ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடியை வருணிக்கும் ஆயிரம் ஸ்லோகங்களை நம் இருவரில் யார் இயற்றுகிறோமோ அவருக்குத் தான் கவி தார்க்கிக ஸிம்ஹம்’ என்ற விருது பொருந்தும்” என்று கூறி, தாம் ‘பத கமல ஸஹஸ்ரம்’ இயற்றுகிறேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், அவர் அந்த இரவு முழுவதும் முயற்சி செய்தும் முந்நூறு ஸ்லோகங்களுக்கு மேல் செய்ய முடியாமல் காலையில் ஸ்ரீ ரங்கநாதன் ஸந்நிதியில் வந்து நின்றார். ஸ்ரீ தேசிகனோ ஸ்ரீ ரங்கநாதனுடைய திருவடிகளைத் தாங்கும் பாதுகைகளின் சிறப்பைப் பற்றி பாதுகா ஸஹஸ்ரம் என்ற பெயருடன் பற்பல விருத்தங்கள், சித்திர பந்தங்கள், பத்ததிகள் முதலியவைகளைக் கொண்ட ஆயிரம் ஸ்லோகங்களை அழகாகச் செய்து வந்து எம்பெருமான் ஸந்நிதியில் ஸமர்ப்பித்தார். இந்த ரஸமான-ஸ்தோத்ர ரூபமான காவியத்தைச் செவி யுற்ற அந்த அந்தணர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு தேவரீரே கவி தார்க்கிக ஸிம்ஹம் என்று போற்றிச் சென்றார் –

ஸ்ரீ தேசிகனின் திருத் தகப்பனாரின் திருவத்யயன நாள். அதில் நிமந்த்ரணம் செய்யத் தகுதியுள்ள இருவரை ஸ்வாமி முன்னாகவே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், சில பொறாமைக்காரர்கள் நிமந்திரணத்தன்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டார்கள். ஸ்வாமி நித்ய கர்மா நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அபராஹ்ணத்தில் நிமந்த்ரிதர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர்பார்த்து அவர்கள் வராமையால் பகவானுக்கு நிவேதனம் செய்த பின், மூன்று இலைகளைச் சேர்த்து, பதார்த்தங்களைப் பரிமாறி ப்ரோண பரிஷேசனாதிகளைச் செய்த பின் திரைக்கு வெளியில் வந்து அபிச்ரவண மந்திரங்களை ஸேவித்து வந்தார். என்னே ஆச்சரியம் சிறிது நேரத்திற்கெல்லாம் மூன்று இலைகளில் இருந்த பதார்த்தங்கள் செவ்வனே புசிக்கப்பட்டு, வெளியில் வேடிக்கை பார்க்கும் துஷ்டர்கள் கண்களுக்கு மூன்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் வெளிக் கிளம்பிச் செல்வது போல் காணப்பட்டது. அந்த துஷ்டர்களும் தமது கர்வமழிந்து நின்றனர். அங்னம் நிமந்தரணம் அமுது செய்தது ஸாக்ஷாத் ஹயக்ரீவனும், பேரருளாளனுமே என்பதை ஸ்வாமி அறிந்து பரமானந்தமடைந்தார்

ஸ்ரீ பாஷ்யத்தின் வியாகேயானம் ஸ்ருத ப்ரகாசிகை. இதை இயற்றியவர் சுதர்சன பட்டர் என்பவர். அவர் ஸ்ரீ ரங்கத்தி லிருந்த போது, முகம்மதியர்களால் ஸ்ரீ ரங்கம் ஆக்ரமிக்கப்பட்டது. அப்பொழுது சுதர்சன பட்டர் முதலான பல பெரியோர்கள் துருஷ்கர்களால் கொல்லப்பட்டனர். அந் நிலையில் அங்கிருந்த ஸ்ரீ தேசிகன் சுதர்சன பட்டரின் இரு புதல்வர்களுடன், ஸ்ருத ப்ரகாசிகையையும் கர்நாடக தேசத்திலுள்ள ஸத்யாகாலத்திற்கு எடுத்துச் சென்று காப்பாற்றினார். ஸ்ரீ பாஷ்யத்தின் சிறந்த வியாக்யானமான ஸ்ருத பிரகாசிகையை ரக்ஷித்த பெருமை ஸ்ரீ தேசிகனையே சாரும்.
இப்படி எத்தனையோ ஸத் கரந்தங்களை இயற்றியும், ஸத் காரியங்களைச் செய்தும், தமது ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரத் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டிய ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனுடைய பெருமையை ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனாலும் வருணிக்க இயலாதெனில் மிகையாகாது.ஸ்ரீ தேசிகன் 102 ஆண்டுகள் இம் மண்ணுலகில் வாழ்ந்து ஒரு செளமிய கார்த்திகை மாதத்தில் தமது அவதார ஸமாப்தியைச் செய்தார். ஆனால், இவ்வுலகமுள்ளளவும், இவர் அருளிய கிரந்தங்களாலும் இவர் காட்டிய நன்னெறியாலும் இவர் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து வருவதரகவே நாம் கருதி, இவரடியைப் பின்பற்றுவோமாக,

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த கிரந்தங்களின் எண்ணிக்கை பின் வருமாறு
(1) ஸ்தோத்ரங்கள் 28
(2) வேதாந்த கிரந்தங்கள் 14
(3) வ்யாக்யாந் கிரந்தங்கள் 8
(4) ரஹஸ்ய கிரந்தங்கள் 31
(5) தமிழ்ப்ரபந்தங்கள் 24
(6) காவியங்கள் 4
(7) நாடகம் 1
(8) அநுஷ்டானக் கிரந்தங்கள் 2–ஆக 112 கிரந்தங்கள்

ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸங்கல்ப ஸூர்யோதயமென்னும் நாடகத்தில் காணும் பின் வரும்
ஸ்லோகத்திலிருந்து ஸ்வாமியின் திரு வாக்கினாலேயே இவர் வேங்கடேச கண்டாவதாரம் என்னும் கருத்து ஊர்ஜிதம் செய்யப்படுகிறது –
வித்ராஸிநீ விபுத வைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதெள ப்ரயுக்தா
உத்ப்ரேஷ்யதே புத ஜநை: உபபத்தி பூம் நா கண்டா ஹரே: ஸமஜ நிஷ்ட யதாத்மநேதி

(அதாவது. ப்ரஹ்ம தேவன் பெருமாளை ஆராதிப்பதற்காக எந்த மணியை உபயோகித்தாரோ, எந்த மணியின் நாதம் அசுரர்களைப் பயந்தோடச் செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடகத்தின் ஆசிரியர் (ஸ்வாமி தேசிகன்) என்று ஞானிகளான பெரியோர்கள் தகுந்த காரணங்களைக் கொண்டு ஊஹிக்கிறார்கள்)


கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாந்த குரவே நம்:.


ஸ்வாமிந் ! கபீர , ஸுபகாம் ; ஶ்ரம , ஹாரி , பும்ஸாம் ;
மாதுர்ய , ரம்யம் ; அநகம் ; மணி , பங்க, த்ருஶ்யம் ; |
வேகாந்தரே , விதநுதே ! ப்ரதிபிம்ப , ஶோபாம் ;
லக்ஷ்மீ , ஸர: ; ஸரஸிஜ – ஆஶ்ரயம் ; அங்ககம் , தே ||–[இந்த ஸ்லோகம் , விளக்கொளி எம்பெருமானுடைய , திருமேனிக்கும் , அங்கு உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கைக்கும் , சிலேடைப் பொருள் வைத்துப் பாடப்பட்டது)

விளக்கொளி எம்பெருமானே கம்பீரமானதும்(ஆழமானதும்) அழகியதும் மனிதர்களின் தாபத்தைப் போக்குவதும் இனிமையாய் விளங்குவதும் குற்றம் , அற்றதும் இந்த்ர நீலத் துண்டம் போல காணப் படுவதும் தாமரை (பிராட்டி)க்கு , உறைவிடமாகவும் உள்ள உன் திருமேனியும் லக்ஷ்மீ ஸரஸ் என்ற பொய்கையும் வேகவதி நதியின் நடுவில் சாயலின் அழகை செய்கின்றன !
விளக்கொளி எம்பெருமானே !வேகவதி நதிக்கு , அருகில் உள்ள ‘லக்ஷ்மி ஸரஸ்’ என்ற பொய்கையும் , உன் திருமேனியும் , வேகவதியின் ஜலத்தில் , பிரதிபலிக்கின்றன . அவற்றின் சாயல்கள் நீரில் தெரிகின்றன .உன் திருமேனி கம்பீரமான தோற்றம் உடையது -மிக அழகியது -ஸேவிப்பவர்களின் , ஸம்ஸார தாபத்தைப் , போக்க வல்லது அனுபவிக்க மிக இனியது இழிவான அம்சம் , ஒன்றும் , இல்லாதது -இந்திரநீல மணி போன்ற , நிறம் உடையது -பெரிய பிராட்டிக்கு , உறைவிடமாய் உள்ளது -இத்தகைய உன் திருமேனி , வேகவதி ஆற்றின் நீரின் சாயல் இடுகிறது .
இவ்வாறே , ‘லட்சுமி ஸரஸ்’ என்னும் பொய்கை ஆழமானது மிக அழகியது வெயிலால் வரும் , தாபத்தைப் போக்க வல்லது இனிய நீர் நிறைந்து அழுக்கு , அற்றது இந்திர நீலமணி போல் , சுத்தமாகக் , காணப்படுவது தாமரை மலர்கள் நிறைந்திருக்க பெறுவது இத்தகைய பொய்கையும் , வேகவதி நீரில் கலந்து, சாயல் இடுகிறது .
இவ்விரண்டும் , அந்த ஆற்று நீரில் , பிரதிபலிப்பது , காண்பதற்கு இனிமை பயக்கிறது !


ஸ்ரீ தேசிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

த்யாநம்
அகிலபுவந ரஷா ஸாதநா யாவதீர்ணே
குமதி கலி விலாஸ த்வாந்த திக்மாம்ஸூ ஜாலே
நிரவதி கருணாப்தெள வேத சூடா குரெள மே
பவது பரம பக்தி: ஸ்ரீநிதெள வேங்கடேஸே
-1

அஸ்மத் தேஸிக தத் குரூந் ஸ்ருதி ஸூரஸ் சூடார்ய ராமாநுஜெள
ரங்கேஸம் ரகு புங்கவாஜ குரும் ஸ்ரீமந் நதார்த்திச்சிதம்
ஸ்ரீ ராமாநுஜ பூர்ண யாமுந முநீந் ராமார விந்தேக்ஷணெள
நாத ஸ்ரீ ஸடகோப ஸைந்ய ரமண ஸ்ரீ ஸ்ரீபதிந் பாவயே–
2

ஸ்ரீமத் த்ரயீ ஸேகர தேஸிகஸ்ய நாம்நாம் ஸஹஸ்ரம் குணது: க்ரியாத: ப்ரக்யாது மக்யாதி நிராளி ஸர்வ ஸம்பத் ப்ரதம் ஸா துமுதே தநோமி! 3

ஸ்தோத்ராரம்ப:
வேங்கடேஸ க்ருபா லப்த அநந்தார்ய ஸ்வப்ந சிந்தித:
தோதாரம்பா கர்ப்ப ஸுர்ய ஸங்க்யாப்தாவாஸ் பாஸுர –1-

மது ஸூதந ரங்கேஸ ஸாகூதேஷித ஐந்மக?
நபஸ்ய ஸ்ரவண ஸ்ரீஸ தீர்த்த வாஸர ஐந்மவாந்–2-

தீப ப்ரகாஸ நிகட ஸத்மாவிர்பாவ பாஸுர : ஸ்ரீ கண்டாவதாரத்வ ஜ்ஞாபகாநேக யுக்திமாந்-3-

புண்டரீ காஷாக்ய யஜ்வ பெளத்ரோ நந்தார்ய புத்ரக !
ஆத்ரேய வாதி ஹம்ஸாம்பு வாஹார்ய பகிநீ ஸுத 4

ஸ்வ ஸ்வ காலாநந்த குரு க்ருத ஜாத க்ரியாதி !!
அநந்தார்ய க்ருத ஸ்ரீமத் வேங்கடே ஸாபி தாநக–5-

வரதாசார்ய ராமாநுஜார்யோபய க்ருபேக்ஷித
விஸ்வாமித்ராந் வயாப் தீந்துர் ஜகத் புணய மஹா பலம்–6-

அநந்தார்யாசார்ய ரத்ந க்ருதோப நய ஸம்ஸ்க்ருதி
வாதி ஹம்ஸாம் புவாஹர்ய க்ருததாபாதி ஸம்ஸ்க்ருதி :–7


அதீத ஸாங்க ஸஸி ரஸ்கா கருத்ரிம ஸரஸ்வதி :
வாதி ஹம்ஸாம் புவாஹார்ய ஸம்ப்ராதாகில ஸாஸ்த்ரதீ : |
–8-

கணாத தந்த்ர பாரீண ஆஷபாதீய கௌதம
மீமாம்ஸா மாம்ஸலோ வ்யாகரண தந்த்ர பதஞ்ஜலி: | 9

காவ் யாலங்கார தத்வஜ் கவிதார்க்கிக கேஸரீ |
யதிராஜ பதாம்போஜ த்வந்துவ மாத்வீ மது விரத 10

யாமுநார்ய ப்ரேம மூர்த்தி: நாத யோகிஸ நாதவாந்
பராங்குஸ பதா ஸக்த : பரகாலாங்க்ரி பக்திமாந்! 11

ஸ்ரீபராஸர பட்டார்ய மேக ஸூக்த்யம்பு சாதக :
ஸ்ரீவத்ஸ சிஹ்ந மிஸ்ரேந்து ஸூக்தி ஜ்யோத்ஸ்நா ச கோரக! ||| 12

ஏகாந்தவாஸ ரஸிகோ த்வயசிந்தா பராயண :
தரிரா கக்நஸ் சதுஷ் பாண்டித்ய நிர் விண்ணைக மாநஸ–13-

பஞ்ச ப்ரகார ஸந்துஷ்டி ஷடூர்மி த்வம்ஸ கோவித!
ஸப்த வ்யஸந தத் த்யாக தத் ஸ்வீகார விஸாரத–14-

அஷ்டாங்க பக்திதீ ரஷ்ட புஷ்பீஷ்டாஷ்டாங்க யோகக
நவ வ்யாக்ருதி வித் ஸ்ரீபாஷ்யாத்ய பத்ய தஸார்த்த வித் –15-

ஸதாப்யதிக ஷட் பஞ்சாஸத் தரயீ மௌளி நீதிவித்
ஸஹஸ்ராதி க்ருதி ந்யாய விவேசந துரந்தர | 16

லஷகோடி ஸ்வ ப்ரபாவாம் ஸாநர்ஹ பஜந ஸத்திதி! !
காம க்ரோதாதி நிகில துராத்ம குண வர்ஜித : 17-

பாரதாத் யுக்த ஸகல ஸதாத்ம குண பூஷித
ஸாஸ்த்ரோக்த ஸகலாசார்ய லஷ்மாவாஸ வரஸ்த்தலீ –18-

ஸ்ரீ வைஷ்ணவாநேக லஷ்ம ஸோபித ஸ்வர்ண விக்ரஹ :
அகஸ்த்ய ஸாக ப்ரமுக ஸாத்விகாஹார பாஸூர –19–

ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த ஸ்தாபநாசார்ய தல்லஜ
தேவ நாயக பத்ரா ஸீரர்த்தா ஹீந்த்ர புர ஸ்திதி: 20-

தார்ஷ்ய மந்தர ஜப ப்ரீத தார்ஷ்ய தத்த வர ப்ரியா
தார்ஷ்ய தத்த ஹயக்ரீவ மநு ப்ரீத ஹயாநந –21-

வாகர்த்த ஸித்தித ஹயக்ரீவ ஸ்தோத்ர விதாயக:
ஹயாஸ்யத்த லாலாம்ருதா ஸ்வாதந ஸு போஷித: -22-

தார்ஷ் யாஜ்ஞா க்ருத தார்ஷ்யைக பஞ்சாஸத் பிரீத தார்ஷ்யக:
தேவ நாயக பஞ்சாஸத் ஸ்துதி ஸம்பந்ந ஸத்ய வாக் –23-

ப்ராக்ருதோக் யச்யுத ஸதா ப்ராக்ருதாநந்த ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் த்ரிமணி ஸம் ப்ரோத காதாஸர விதாயக: -24-

க்ருத கந்துக காத: குபேராஷீ கீதிகாரக
குடிகா கீதி க்ருட் டோலா காதா க்ருதி விஸாரத |-25-

உபாலம்பாஸ்வய ஸ்ரீமத் காதாக்ருதி விசக்ஷண: ||
நவ ரத்ந ஸ்ரக் விதாதா பரதர்ஸந பங்கக் கருத்–26-

புராணோக்தாநேக தத்வ ஸ்ருஷ்டி க்ரம் நிரூபக
பரகால க்ருத ஸ்வர்ண பிம்ப ஸ்தேயா விரோத த்ருக்–27-

ஸ்வதந்த்ராஷ்டோத் தரஸத விரோத பரிஹாரவித்
ரகுபுங்கவ கத்ய ஸ்ரக் க்ருத கோபால விம்ஸதி:–28-

கோபபூர் கதி பத்ராஸாஸந துஷ்ட த்ரி விக்ரம:
தேஹளீஸ ஸ்துதி ப்ரீதாதி பக்த ஸ்துத மாதவ!–29-

ஹஸ்தி ஸைலேஸ பஞ்சாஸத் ஸ்துத நாகாசலேஸ்வர! !
ஸ்ரீசிந்ஹமாலாஹ்வ க்ருதி ப்ரீத ஸஜ்ஜந மாநஸ–30-

த்வாத ஸாக்யாந காதா க்ருந் நியாஸகாதா விதாயக:
அர்த்த பஞ்சக ஸங்கராஹி காதா க்ருதி விசக்ஷண–31-

வைஷ்ண வாவஸ்யக திந சர்யா க்ரம விதாயக
ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்ய க்ருத் க்ருதாஷ்ட புஜாஷ்டக!–32-

யாதோக்தகாரி ஸ்துதி க்ருத் க்ருத காமாஸிகாஷ்டக
ப்ரபத்தி தீபிகா ப்ரீத ஸ்ரீமத் தீப பிரகாஸக:–33-

ப்ரபந்நாந்வஹ ஸம்பாவ்ய பரமார்த்த ஸ்துதி ப்ரிய :
ஸூதர்ஸ நாஷ்டகோத்தூத ஸ்ரேயோ பாதக ஸஞ்சயா -34-

ஸஜ்ஜநார்த் யாஸாஸ நார்த்த ஷோடஸாயுத ஸம் ஸ்துதி:
ஸ்ரீமத் வேங்கட நாதீய மங்களா ஸாஸந ப்ரியா –35-

தயாஸதக வீணாகீதி ப்ரீத ஸ்ரீநிவாஸக:
அயோத்யாத் யுத்தர திஸா திவ்யதேஸ கதி ப்ரிய–3
6-

காஞ்சீமாயி யாதி ஷுத்ர நிராஸி ஸ்தம்ப லேகந:
வித்யாரண்ய சமத்கார தாயி வைராக்ய பஞ்சக: !–3
7-

க்ருத ஸேஸ்வவர மீமாம்ஸோ மீமாம்ஸா பாதுகா க்ருதி:
பட்டாதி ஸூத்ர துர்வ்யாக்யா நிராகரண தக்ஷிண!–38-

பரிஸங்யாக்ய வித்யர்த்த நிரூபண துரந்தர!!
ஸ்ரீரங்கநாத ஸேநேஸ ஸாஸநோத்தம் ந ப்ரிய:–39-

பட்டாரகா த்யுக்தரீதி ரங்கி ஸேவாக்ர மோத் ஸுகா
பகவத் த்யாந ஸோபாந வர்த்தித ஸ்ரீஸ பக்திக!||–40-

ஸததூஷண் யபக்ராந்த மாயி துர்வாதி கர்வக
நிர்விஸேஷ ப்ரஹ்ம ஸப்த முக்யா முக்யார்த்த பங்க க்ருத் –41-

நிர்வி ஸேஷ ப்ரஹ்ம் ஜிஜ்ஞாஸ் யத்வ பஞ்ஜந் தக்ஷிண:
கர்ம ப்ரஸ்ம விசாராத்ம மீமாம்ஸைக்ய விதாயக : ! –42-

விதாநாநர்ஹ வாக்யார்த்த ஜ்ஞாந ஹேதுத்வ பஞ்ஜக!
உபாஸநா ஹேது வேத்தா பாதாநு ஸ்ருதி பாதக–43-

யஜ்ஞாதி ப்ரஹ்ம விவிதிஷா ஹேதுத்வ நிரோதக!
ஸாப்தா பரோஷஹா தூத பூர்வ வ்ருத்த சதுஷ்டய–44-

மாயி வாதாதி காரக்நோ நிர்விஸேஷாத்ம பாவஹா
நிர்விஸேஷ பராலம்பி நிர்விகல்பக பஞ்ஜந!–45-

ஸந் மாத்ராத் யஷரோத்தா பேத தோஷோத்தார கோவித!
பரவேதா ப்ரமாணத்வ திருக் த்ருஸ்யத்வா நுமாநஹா–46-

வயாவர்த்தமாந பாவாநு மாந ரோதந தத்பர :
மாயித்ருக் திருஸ்ய ஸம்பந்த நிராஸைக விசக்ஷண:–47-

மாயி பாஹ்ய பிரகாஸாநுப பத்தி ஸ்தாபந க்ஷம.
ப்ரஹ்மாஸ்ர யாஜ்ஞா ந ஹந்தா ப்ரஹ்மா வேத்யத்வ பஞ்ஜக!–48-

ஜ்ஞநா ஜந்ம நிராக்ருத் தீ நிர்விகாரத்வ மாநஹா
தீ நாநாத்வ விரோதிக்நோ நிர்விஸேஷா னுமாநஹா !!–49-

ஸம்விதாத்மத்வ ஹந்தா ஹமர்த்தாத்மத்வா நிரூபக:
ஜ்ஞாத்ருத்வாத்யாஸ ஹந்தா ச ஸாக்ஷி பஞ்ஜந் தத்பர!–50-

சாஸ்த்ராத்யஷ விரோதஜ்ஜோ அந்ருதா ஸாத்ரு தார்த்தவித்
ஜீவன் முக்தத்வஹா பாத ஸாமாநாதி கரண்யஹா –51-

ஸம்வி தத்வைதஹா மாய்யுபாதேஸா நுபபத்தி வித்
நிர்விஸேஷ திரோதாந ஹந்தாத் மாத்வைத பஞ்ஜக: ! 52

ஜீவேஸ் வரைக்ய வாதக்நோ அகண்ட வாக்யார்த்த பாதக 1
பாவ ரூபா ஜ்ஞாந ரோத்தா ஜீவா ஜ்ஞாந விநாஸக! || 53

அவித்யா நுபபத்திஜ்ஜோ மாயா வித்யா விபாகஹா !
குத்ரு குந்நீத ஸம்ஸார நிவர்த்தக நிவர்த்தக! 54

நிவ்ருத் யநுபபத்திஜ்ஞ : ஸப்தா வேத்யத்வ பஞ்ஜக !
நிஷ் ப்ரபஞ்ச நியோகநோ விகல்பாமாநதா ப்ரிய–55-

உப ப்ரும்ஹண வைகட்ய யுக்த துர்மத வேதிதா!
ஐக்யோபதே ஸாந்ய தோபபத்ய ஸம்பவ பாதக:–56-

குத்ருக் ஸாஸ்த்ராதி காரக்நோ முக்த தத்வேத்ய தத்வ வித்
ஸ குணாகுண வேதாந்த வ்யவஸ்தா கரண க்ஷம:–57-

ப்ரஹ்மோ பாதாநவிந் மாயோ பாதாநத்வ நிராஸக !
கார்யா த்யநுபபந்த்வ பரிஹார விசக்ஷண :-58-

ப்ரஹ்மா நந்தத்வ மதிநிர் விஸேஷாநந்த பஞ்ஜக
நிர்விஸேஷ ப்ரஸ்ம நித்ய பாவ பஞ்ஜந தக்ஷிண:–59-

அத்விதீய ஸ்ருதி வ்ராத விஸம்வாத விசாரக :
ஸத்வாஸத்வ விவேக்தா ஜீவைக்ய பங்க விசக்ஷண:-60-

குத்ருக்பக்ஷாப ஸூத்ராதி கரண வ்யாஹதி ப்ரிய:
அதிகாரி விவேகஜ்ஞோ யதி லக்ஷ்ம விவேசக:–61-

அலேபக மதச்சேத்தா மாயி ஸூத்ரார்த்த பாதக:
தஸாவதார ஸ்தோத்ராக்ய ஜகந் மங்கள காரக:–62-

ஸ்வப்ந பாஷ்ய கருதாஜ்ஞப்த வேத சூடா பிரவர்த்தந
யதீந்த்ர ஸப்தத்யாக்யோபசார ஸ்ருத்யந்த தீபக்ருத்–63-

பக்தி ப்ரகர்ஷ விஹித ஸ்ரீ பூ கோதா ஸ்துதி பரிய:
ரங்கேஸாஜ்ஞா க்ருத நியாஸ திலக ஸ்தோத்ர ரத்நக:–64-

ஸ்ரீரங்கநாத தத்த ஸ்ரீ வேதாந்தாசார்ய நாமக :
ரங்கேஸ்வரீ தத்த ஸர்வ தந்த்ர ஸ்வாதந்த்ர்ய பூஷித:–65-

அயத்நக்ருத வாதித்ரய கண்டந நிபந்தந !
தத்வ டீகா வ்யாக்ருத ஸ்ரீமத் பாஷ்யாம்ருத ஸாகர–66-

வாஜிஸாகா ஸிகா வ்யாக்யா க்ருதி ஸம் ப்ரீத மாநஸ
தாத்பர்ய சந்த்ரிகா ஸூஸ்த்த கீதா பாஷ்ய மஹாபத–67-

யாமுநார்யோக்த கீதார்த்த ஸங்கரஹ த்ராண காரக:
பிஷ்ட பஸ்வாதி காதோக்தி வ்யவஸ்தர கரண ஷம–68-

பரத்வம்ஸ ப்ராக பாவதி வ்யவஸ்தா கரண ஷம:
வைத ஹிம்ஸா அஹிம்ஸதா ஸ்தாபந நீதி ஸூநீதிக –69-

முமுஷு ஸூக்த வாகாதி பலோக்தி ததி நீதிவித்
அவாப்த ஸர்வ காமத்வ குண நிர்ணய கோவித: 70-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வ ரூபாநித்யத்வ ஸாதக!!
ஸாங்க கர்ம ஜ்ஞாந பக்தி யோகாவத்ருதி கோவித!! 71-

விபூதி விஸ்வரூபாதி விரோத ஸமநக்ஷம ஆத்மாநாத்ம குண ஷேத்ர தஜ்ஜ்ஞ ஸோதந தக்ஷிண:–72-

புருஷோத்தம தேவாஸூர விபாக நிருக்தி வித்
கர்த்ரு கர்மாதி ஸத்வாதி குணாதீந விபாகவித்–73-

ஏகாயநோக்தா ஸூயாவிர் பாவ வ்யாக்ருதி தக்ஷிண!
உச்சிஷ்டாதந ஹேத்வார்ய பேத நிர்ணய கோவித:–74-

ஸ்த்ரீ ஸூத்ர பகவத் பூஜா தாந்த்ரி கத்வாபி தாயக:
ஸ்வ பராதீநதா யத்த ஸாஸ்த்ர வைய்யர்த்ய பாதக:–75-

தத்வ முக்தா கலாப ஸ்ரக் க்ருத ஸர்வார்த்த ஸித்திக
க்ருதாதி கரண ஸாராவள்யாக்ய க்ரந்த ஸிகாமணி !-76-

ஸாராவளி வ்யாக்ரியாதி கரணாதர்ஸ காரக !
ஸ்ரீமந் ந்யாய பரீ ஸூத்தி விஸூத்தீக்ருத மாநஸ :–77-

ந்யாய ஸித்தாஞ்ஜநோ தஞ்சந் மேய யாதாத்ம்ய போதந:
ஆஷ பாதீய ஸூத்ரார்த்த ஸிஷா கரண தீக்ஷித–78-

அஷ பாத சமத்கார தாயி ஸூத்ர ஸமூஹக்ருத்
வ்யாஸாஷ பாத ஸூத்ரார்த்த விரோத பரிஹாரவித்—79-

த்ரவ்யாத்ரவ்ய பிதா தத்தல் லக்ஷணோக்தி விசக்ஷண
த்ரைகால்யா நேக ஸித்தாந்த நிராஸா ஸம்பவாந்தக:–80-

ரூபாதி பஞ்சகா தாரா பாவ வாத நிராஸக ! தர்ம தர்மித்தவா பலாப வாதத்வாந்த திவாகர!–81-

ப்ருதிவ்யாதி சதுர் த்ரவ்ய மாத்ர பக்ஷ விபேதிதா!
த்ரி குணேந்த்ரிய வர்கா நத்யக்ஷ பாவ விதாயக:–82-

பிரக்ருத்யாகம கம்யத்வ ஜகந் மூலத்வ போதக
சதுர்விம்ஸதி ஸங்க்யாக தத்வ ஸ்ருஷ்டி ப்ரகாரவித்–83-

ஸாங்க்யாதி ஹைதுகோந்நீத ஸ்ருஷ்டி தத் தேது பாதக !
அஷ்டீகரண பஞ்சீக்ருதி த்ரி வ்ருத் க்ருதி விபேதவித்–84-

அந்தயாவயவிஹா அந்யூநா நுத்க்ருஷ்ட பரிமாண வித்
ஸரீரோத்பத் யுபாதநைக பூதோக்தி நிராஸக–85-

ஸாங்க்ய ஸத் கார்ய வாதக்ந க்ஷணிகத்வ மதாந்தக
ஷணோபாதி விஸேஷஜ்ஞோ ஹேது ஸாத்யா பலாபஹா–86-

ப்ரதிஸங்க்யா ப்ரதீ ஸங்க்யா நிரோத மத பஞ்ஜக
அஷ பூத விகாரத்வ ஸாதக ப்ராண நாஸநii 87

பூதேந்த்ரியா ப்யாயகத்வ நிர்த்தாரண விசக்ஷண:
அந்த கரண நாநாத்வ பாஹ்யா ஷைக்ய நிராஸக: 88-

மநோ வ்யாபித்வ நித்யத்வ ஹேந்த்ரிய அணுத்வ வேதிதா
சக்ஷராதி ப்ராப்யகாரி பாவஸாதந தக்ஷிண–89-

ஸப்ததேஸ கத ஸ்ரோத்ர கார்ய க்ருத்வாபி தாயக|
ஸ்வதேஸாகத வ்ருத்தித்வ நிக்ராஹி ஸ்ரோத்ர பாதக:–90-

வ்யோமாத் யக்ஷத்வ நிர்ணேதா காவகா ஹோபகார வித்
ஆகாஸா வரணா பாவ மாத்ரபாவ விபஞ்ஜக–91-

ஆகாஸ நித்யத்வ விபு பாவ வாத விநாஸக
திக் வஸ்து ஸாதகச்சேதீ திக் வ்யோமாபேத ஸாதக! ||-92-

ராஜ ஸாக்ய மஹத் தத்வா பிந்ந ப்ராண விபஞ்ஜந :
ப்ராணாக்ஷத்வா வாயுபாவ வாத நிஹ்நவ தக்ஷிண |–93-

வைஸ்வாநர ஸ்வரூபாதி நிரூபண விசக்ஷண
தேஜோ தர்ம ப்ரபாதேஜோ பாவ ஸாதந தத் பர– 94-

ப்ரபா தீபாத் யவயவ பாவாபாவ விதாயக:!ப்ரபாவிஷய பாஷ்யோக்தி விரோதி ஸமநக்ஷம: 95-

ஸ்திராஸ்திராக்ய தேஜோ விபாக ஜ்ஞாந விசக்ஷண!
தம ஆலோக விரஹத்வாபாவ பருதிவீத்வ வித்11 96-

ப்ருத்வீ பதந பருத்வீ ப்ராமண வாத விநாஸக:
கால ஸ்வரூப கேஸாந்ய பாவஜ்ஞாந துரந்தர:–97-

காலானுத்பத் யஷகம்ய பாவஸ் ஸ்த்தாபந தத் பர
கால ஸர்வ வ்யாபகத்வ ஸர்வ ஸாதகதா ப்ரிய |–98-

ஆத்மாங்க மாநஸாக்ஷஜ்ஞாநாதி பேத ப்ரஸாதக:
ஆத்ம ப்ரத்யகத்வ கர்த்ருத்வ ஸ்வ ப்ரகாஸத்வ ஸாதக:–99-

யத்ந வைபல்ய ஹர்தோபாதிக ஜீவேஸ பேதஹா!
ஸ்வாபாவிகேஸ ஜீவாத்ம பேதாபேத மதாந்த க்ருத்!!–100-

ஏக தந்வேக ஜீவாத்ம மாத்ரபஷ விதாரண : ப்ரஹ்ம ப்ரதிச்சந்த ஜீவ வாத பஞ்ஜந தக்ஷிண–101-

சதுர் விதாத்மா நித்யத்வ வாத ப்ராண விநாஸந!
ஜீவாத்மா நித்யத்வ விபு வாத பஞ்ஜந தத் பர!-102-

ஜீவைககால நைகாங்கா திஷ்டா த்ருத்வா பிதாயக:
ஜீவ வ்யாபித்வோ பபத்திஹா ஜீவாணுத்வ ஸாதக: — 103-

தேஹதுல்ய பரீமாண ஜீவ வாத விநாஸக.
நித்ய ஸம்ஸாரி ஸதஸத் பாவ ஸ்த்தாபந தத் பர |-104

மோஷோபாய ஸு துர்ஜ்ஞாந பாவவாத விபஞ்ஜந
அபவர்கார்த்தி ஸத்தேது வித்யாநாநா விபாக வித் –105-

க்ரியா வித்யோபகாரித்வ ப்ரகார ஜ்ஞாந கோவித:
க்ரியாவித்யா கர்த்ரு ஸம்ஸ்காரத்வ வாத விநாஸக: |||-106-

ஸர்வாஸ்ரமி ப்ரஹ்ம வித்யாதி க்ரியா ஸ்தாபந க்ஷம:
கர்ம வித்யாஸ்ர மாங்கத்வ நித்யத்வாதி விபாகவித்!! | 107

ப்ரவ்ருத்யாக்ய நிவ்ருத்யாக்ய கர்மபேத ஸ்வரூபவித்
த்ரைவர்ணிகாதிகரண ஸர்வாதீகார பேத த்ருக் –108-

தத்வமஸ்யாதி புவந்பாதகத்வ விநாஸக : ஜகந் நிவர்த்தக ஜ்ஞாந நிவர்தக நிவாரக: !-109-

ஜகந் நிவர்த்தக ஞாந வேத்யாபாவ விதாயக
ஜகந் நிவர்த்தக ஞாநாதாராபாவ விதாயக:-110-

ப்ரஹ்ம வித்யா பாப நாஸ காரண த்வோப பத்தி வித்I
வித்யாநாஸ்ய த்ரி வர்காதி ஸூக்ருதோக்தி விசாரக: || 111–

அஸ்லே ஷோத்தர காம்யார்த்த புண்ய ஸம்பவ வேதிதா
விரஜோத்தர தீராந்த த்யக்த துர்வாஸ நோக்திமாந் –112–

முக்த புத்தி விகாஸோத்தர ஸீமா பாவ ஸாதக |
முக்தாத்யைச்சிக தேஹாதி யோக வர்ணந தத் பர: 113-

முக்தாதீச்சா விகாதாபாவ ஸ்தாபந விசஷண!
நிர்துக்க முக்தா நுபவ வேதீ நித்யாக்ய ஸுரிவித்-114-

தேவதாந்தர தாதாத்ம்ய முக்தி வாத தமோநுத
மதாந்தரஸ்த்த ஸாயுஜ்ய ஸ்ப்தார்த்தானுப பத்தி வித்– 115-

முக்தாத்ம புநரா வ்ருத்தி ப்ரஸங்க பரிஹாரக
வைஸேஷிகாதி பாஷாண துல்ய மோஷோக்தி வாரக! 116-

ஸாங்க்யாபிமத ஸம்ஸார மோஷ பக்ஷ நிவாரக
மதாந்தரஸ்த்தாபிமத மோஷ வைவித்ய வாரக!–117-

ஈஸ வேதைக கம்யத்வ வேதாபாத்யத்வ ஸாதக:
உபதேஸாநு மாநே ஸாநுமாந தமந க்ஷம: –118-

ஸாஸ்த்ர யோநித்வ ஸாங்க்யாதி க்ருதி த்வய விரோதஹா
நிமித்ததோ பாதாநத்வ த்வயைகாதார வேதிதா–119–

ஸூக்ஷ்ம ஜீவாசித் விஸிஷ்டே ஸோபாதாநத்வ ஸாதக
மதாந்தரஸ்த்த ப்ரஹமோபாதா நத்வோக்தி நிவாரக!! -120-

ஜீவாசிதீஸ விக்ருதிமத் ப்ரஹ்மோக் த்யபநோத 1
ஸர்வாநு வ்ருத்த ஸந் மாத்ர ப்ரஹ்மத் வோக்தி விபஞ்ஜக: –121-

ஜீவாதி பரிணாமீஸ ஜைநகந்தி மதாந்த க்ருத்
ப்ரஹ்மோபாதிக ஜீவத்வ பாஸ்கரோக்த்யபஹாஸக: || 122-

அவித்யா ஸஹித ப்ரஹ்ம விவர்தோக்த் யுபரோதக |
மதாந்தஸ்தாவித்யாவ லோகநாநுப்பத்தி த்ருக்–123-

ப்ரஹ்ம ஜ்ஞாநாநுமா ஸ்ரெளத பாதோதா ஹரண க்ஷம :
மாயாதிபத ஸத் ப்ரஹ்ம தோஷ ஜ்ஞாபக தாபஹ : || 124-

அவித்யா ஸாதகாஜ்ஞாந கார்யமித்யாத்வ ஸாதக!
கார்யோபாதாந ஸாத்ருஸ்ய நியமோக்தி விபஞ்ஜகா -125-

ஐகந் மித்யாத்வாதுமாந பஹு வ்யாஹதி போதக:”
அநித்ய மித்யா பாவ ப்ரக்லுப்தி பங்க விதாயக -126-

பேதா த்யக்ஷ விருத்தார்த்த நிஷேத ஸ்ருதி போதக:
அபரோஷாபாத்யதா யோக்யா யோக்ய ப்ரத்யஷ வேதிதா| 127-

மாயி ஸாஸ்த்ராத் யஷ மூல தோஷ ஸாம்யோப பாதக
துல்ய தோஷ ப்ரமாணந் யோந்ய ஸம்பாத கதாபஹ! 128-

ஸாஸ்த்ரைக வேத்யாநத்யஷ நாநாபேதோ பாதக
மாயி பெளத்தாதி ஸாம்யாபாதந நிர்வஹண க்ஷம : 129-

மாயி பக்ஷாநேக பாதக விகல்பாபிதாயக:
பர ஸாஸ்த்ரா நூபபத்தி பரிஹாரா விசக்ஷண! -130-

ஈஸ தேஹாதி பஞ்சாபா க்ருதிவாத நிராஸக!
தேவாதி விக்ரஹாபாவ வாத வ்ராத நிராஸக: || 131-

வ்யூஹாதி பஞ்சரூபேஸ பூர்ணஷாட் குண்ய வேதிதா
ஈஸ வ்யூஹ விஸேஷாபி மாநித்வ பரிஹாரக -132-

ஈஸாத்மாசார்ய ஸிஷ்யத்வாபி நீதி பல ஸாரவித் |
ஈஸ சித்ராநேக வ்ருத்தாந்த விஸேஷாதி தத்வ வித்–133-

ஈஸ ஸர்வஜ்ஞ பாவாநுபபத்தி விநிவாரக!
ஸர்வேஸ ஸர்வ ஸக்தித்வ ஸ்வேச்சாவத்வா பிதாயக:–134-

தீஸ்வ பாஸ்யத்வ நித்யத்வ திரவ்யத்வ ஸ்த்தாபந க்ஷம :
புத்யவேத்யத்வ நித்யாநுமேயத்வ மதபஞ்ஜக.–135-

ப்ரமா விபர்ய யத்வாபர தர்கோஹ ஸ்வரூப வித்
ப்ரமாண லக்ஷணஜ்ஞஸ் ஸத் க்யாத்யர்த்த க்யாதி பாதக–136-

அந்யதாக்யாதி ஸந்த்யாக ஸ்வீகார த்வய ஸாதக
ஸந்தேஹ யாதார்த்ய வேத்தா அநிர்வாச் யக்யாதி பங்க க்ருத்–137-

அநிர்வச ஸ்வரூபாதி ரஜதோத்பத்தி பஞ்ஜக :
புத்தோக்த நிரதிஷ்டாந் க்யாதிவாத நிராஸக !–138-

அநெளபாதிக துச்சக்யாதிவாத ப்ராண நாஸக
யோகாசார பரஹர்த்தா ச ஹ்யக்யா த்யநுபபத்திஹா–139

ஆத்மாகார ஜ்ஞாந ஹர்த்தா ஹ்யாத்மக்யா த்யப ஹாரக
நிராலம்பந விஜ்ஞாநா நுமாபஞ்ஜந தக்ஷிண: 140-

பாஹ்யா நெளபாதிகா ஸத்க்யாதி ஸாதந விபஞ்ஜந
தீகதார்த்தோத் பவார்த்தாகார வாத பரிஹாரக! -141-

ஹரித்ரா சூர்ண நீத்யர்த்த தீ யோகோத்தா க்ருதி த்விஷத்|
ஸெளகதோர்தா நதிஷட்டாந க்யாதிவாத நிரோதக: 142-

அநாலம்ப க்யாதி ஹந்தா ஸ்ம்ருதி ஜ்ஞாந ஸ்வரூப வித்
ப்ரத்யக்ஷ லக்ஷண ஜ்ஞாதா திவ்யார்ஷாத்யஷ ஸாதக –143–

வைஸிஷ்டயா கோசர ஜ்ஞாந மதச்சேதந தீக்ஷித:
ஸம்ஜ்ஞாநுவித்த ஸர்வார்த்த புத்தி ஸப்தாத்ய பாதஹா 144-

யோகி ப்ரத்யஷாநுமாந் தூஷணோத்பாவந ஷம 1
மாநஸாத்யஷ பங்கஜ்ஞஸ் ஸந்நிகர்ஷ ஸ்வரூபவித் | 145–

அலௌகிகாக்ய ஸம்பந்த ப்ரத்யஷ மத பாதக
அநுமாநாத் யக்ஷமாந பஹிர் பாவ விதாயக: 146-

அநுமா மாநதா லஷ்மஜ்ஞோ அநுமாபாதி தர்கஹா
அநுமாந்வா பரோத்தார ப்ரகார விதகரணீ: |–147–

உபாதி லக்ஷணோபாதி விதூநந விஸேஷவித் !
வ்யாப்தி ஸ்வரூப வயாப்தி க்ராஹக மாந விசாரக 148-

வ்யாப்தி க்ரஹ ப்ரகார ஜ்ஞாதா வயாப்த்யாதி விபாகவித்1
கேவலாந்வய யநூமாந விஸேஷஜ்ஞாந ஸாதக : – 149-

மஹா வித்யா நிராஸோத்த விரோத பரிஹாரக
கேவல வ்யதிரேக்யா க்யாநுமா பஞ்ஜந தக்ஷிண–150

லக்ஷண ஜ்ஞோந்யவாத் யுக்த லஷணார்த்த த்வயாபஹா I
ஸ்வ பரார்த்தா நுமா ப்ராஜ்ஞோ நியாயாயவ வேதிதா 151

நிக்ரஹஸ்தாந ஹேத்வாபாஸ ஜாதிச்சல வேதிதா
வாத ஜல்ப விதண்டாஜ்ஞோ மாநாபாஸ விவேஸக: 152-

அநுமாநாத்யஷ பாஹ்ய ஸப்தமாந ப்ரஸாதக:
ஆகாங்க்ஷ யோக்யதா ஸக்தி வாக்யார்த்த ஸஹகாரி வித் 153-

பத வாக்ய ஸ்வரூபஜ்ஞோ அந்வி தாபிவதநோத் ஸுக.
அபீஹிதாந்வய ஜ்ஞாதா விஸிஷ்ட பத ஸக்திவித் 154-

விபக்த்யாக்யாத தாதூப ஸர்க தத்தித வேத்யவித்
ஸமாஸாந்வய கருந் முக்ய ப்ரத்யயார்த்த விஸேஷவித்–155-

ஸாப்த போதாகார வேத்தா லக்ஷண பத வ்ருத்திவித்
விஸேஷ்ய முக்ய வ்ருத்தா ப்ருதக் ஸித்த பத ஸக்திவித்–156-

பகவத் ஸர்வ ஸப்தாபி தேயத்வ ஸ்தாபந க்ஷம:
தத்வமஸ்யாதி வாக்யார்த்த நிரூபண விசக்ஷண:–157-

ஸப்தோக்த ஸப்த ஸாமாநாதி கரண்யார்த்த வேதிதா !
ப்ரமோத்பத்தி ப்ரமா ஜ்ஞப்தி ஸ்வதஸ்த்தோத் பாவந க்ஷம:–158-

வேத ப்ரவாஹ நித்யத்வ வேதே ஸாஜநி தத்வவித்
வித்யர்த்த வாத மந்த்ராதி ததர்த்தாவ த்ருதி க்ஷமா–159-

பாஷா மந்த்ர வ்யவஸ்தாவிந் மந்த்ரா வாந்தர பேத வித் !
அத்ர வ்யமாநவித் ஸத்வா ஸத்வ ஸப்தோக்தி பாதக:–160-

ஜநநாதி ம்ருஷாத்வோக்தி மதச்சேதந தத்பர:
த்ரவ்யாத்ர வ்யாநு மேயாத் யஷ பேதாபேத வாரக–161-

பேத பாதக நிஸ்தாரா த்ரயேயத்தா வதாரக
ரஜஸ் தமஸ் ஸத்வ குணோபயோகா தரவ்ய தோக்தி மாந் ;–162-

ஸத்வாத் யவஸ்த்தா வைசித்ர்யாநந்த்ய நிர்ணய கோவித:
ஸப்தாதி க்ராஹகாதார நியமோக்தி விசஷண:–163-

ஸப்தாதி குணயுங்நித்ய விபூதி வ்யாக்ருதி க்ரம
ஸர்வ பூதாஸ்ரிதத்வாநா த்ரவ்யத்வ ஸ்தாபந க்ஷம–164-

ஸெளகதோக்த தீவாநஜைந ஸப்த புத்கல வாதஹா
வர்ண வேதாநித்ய நித்யத்வ ப்ரகாராவதாரக | 165-

அநுஷ்ணாஸீத ஸீதோஷ்ண ஸ்பர்ஸாதார விஸேஷவித்
பூத பஞ்சக வர்ணோக்தி நிர் வோடா ரூபபேதவித் 166-

சித்ரரூபமதச்சித் ஸ்நேஹ குணாந்தர பாதக: நிராக்ருத குருத்வ த்ரவத் வாக்யாந்ய குணத்வய ! 167

குருத்வாகம நிர்வோடா குருத்வாத்யக்ஷ லிங்க நுத்
ஏகத்வ த்வித்வ ஸங்க்யாதி குணாந்தர நிராஸக : |||168

பரிமாண ப்ருதக் த்வாக்ய குணாந்தர நிராஸக
நித்யாநித்யாக்ய ஸம்யோக ஸ்தாபநைக விசக்ஷண -169

பராபர விபக்தத்வ குணத்ரய நிராஸக
விஷயாலம்பிதாபேத தீவைஷம்யாவதாரக: 170-

முக்த புத்தி ஜகத் வ்யாப்தோபபத்தி நிரூபக :
யோகி புத்தி விநஷ்டைஷ்யத் கோசரத்வோபபாதக–171-

அத்ரவ்ய நித்யதீ பக்ஷ விஷயித்வாதி பாதக 11
தீவிகார த்வேஷ்ராக ஸுக துக்க ப்ரயத்நத்ருக்–172–

த்யக்த ஜீவந யோந் யாக்ய யத்ந ப்ராகட்ய தர்ஸந :1
பகவத் ப்ரீதி கோபாந்ய தர்மாதர்ம மதாந்தக–173–

ஸ்யேநாக் நீஷோம வைஷம்ய ஸாதநைக விசஷண:
மந்த்ர ஸ்வார்த்த பரத்வோக்தி விரோத பரிஹாரவித் –174–

தேவதாமுக ஸம்ஸித்த பகவத் ப்ரீதி ஸாதக :
ஸம்ஸ்கார கர்ம பகவத் பரீத் யர்த்தத்வ ப்ரஸாதக– 175–

அபூர்வ விதி வாஸ்யத்வ ப்ராதாந்ய பஹு தோஷவித் 1
வக்த்ர பிப்ராய தேவ ப்ரஸாத லிங்வாச்யதா ஸூதீ; 176-

ஸம்ஸ்காராக்ய குணச் சேத்தா கர்மாக் யார்த்த ஸ்வரூபவித்
ஸம்ஸ்த்தா நோத்தீர்ண கோத்வாதி ஸாமாந் யமத பஞ்ஜக ! !! 177-

ஜாதிவாத நேகவாதி ஸமீரித நிராஸக : 1
ஸாத்ருஸ்யாதி பதார்த்தாந்தர க்லுப்தி ப்ராண நாஸந– 178–

அநேக ஸூந்யா வயவாநுவ்ருத்தி வ்யவஹாரவித்!
விஸேஷ ஸமவாயாக்ய பதார்த்தாந்தர பாதக : –179–

அபா பாவ ரூபத்வ ஸ்வபாவேயத்வ போதக 1
ராமாநுஜீய ஸித்தாந்த ஸர்வோத்க்ருஷ்டத்வ ஸாதக!–180-

ஸச்சரித்ர த்ராண ஸம்யக் த்ராத ஸந்மார்க ஸந்ததி :
கிலாத்யஷ ஸ்ருதி ஸ்தாபித் சக்ராங்கந ஸம்ஸ்க்ருதி:–181-

ஸ்ம்ருதீதிஹாஸ நிர்ணீத தப்தசக்ராதி தாரண :
தப்த முத்ரா நிஷேதாதி வசோ நிர்வாஹ கோவித–182-

ப்ரத்யக்ஷ ஸ்ருதி ரூப ப்ரமாண போத்யோர்த்வ புண்ட்ரக !
ஊர்த்வ புண்டர ப்ரமாண ஸ்ம்ருதீதிஹாஸ புராணவித் 183

ஊர்த்வ புண்டராநநுஷ்டாந நிமித்தா நர்த்த ஸாதக :
ஸர்வ வைதிக கர்மாங்கோர்த்வ புண்டர த்ருதி கோவித : 184

பஸ்ம ஸ்ரீவைஷ்ணவாஸ் ப்ருஸ்ய பாவ ஸாதந தக்ஷிண
ஊர்த்வ புண்டர த்ருதி த்ரவ்ய விஸேஷாவ த்ருதிக்ஷம–185-

அச்சித்ர புண்ட்ரதமநஸ் திர்யக் புண்ட்ர நிஷேதக 1!
பகவத் பாத ஸத்ருஸோர்த்வ புண்ட்ரா க்ருதி வேதிதா –186-

புண்ட்ர ஸச்சித்ரதா வேத்தா புண்ட்ர ஸங்க்யா விசாரக :!
ஊர்த்வ புண்ட்ர த்ருதி ப்ரோக்த பிரகார விவ்ருதிஷம –187–

ஊர்த்வ புண்ட்ராநேக மந்திர வ்யவஸ்தா கரண ப்ரிய :
வர்ணாஸ்ரமாதி நியதோர்த்வ புண்ட்ராங்குளி வேதிதா -188–

ஊர்த்வ புண்ட்ர ஸ்தாந வேத்தோர்த்வ புண்ட்ர த்யேய தேவவித்
ஸ்ருதி ஸ்மருத்யாதி நிர்ணீத விஷ்ணு நைவேத்ய போஜந –189-

விஷ்ண்வர்த்தாந்நா பக்த சக்ஷர் தர்ஸநோத்ஸாரண ப்ரிய
பகவத் புக்த ஸேஷாந்நா பக்த் தாந நிஷேதக–190-

அந்யதேவ நிவேத்யாதி போஜ்யத்வாபாவ ஸாதக : 1
அநந்தாயுத பஷீஸ நைவேத்யாத் யத்வ ஸாதக : –191-

ஸேநேஸ த்வாரபாலாதி நைவேத்யத் யத்வா பாதக !!
ஸேநேஸ ஹவிராலம்பி பக்ஷபேத நிரூபக–192-

விபக்த விஷ்ணு நைவேத்ய சாதுர் வித்யோ பயோகவித்
ஹரி பூஜோ பயுக்தஸ்த்தாயி பூஜாந்தர யோகவித்!!–193-

விஷ்ணு நைவேத்யைகஸாத்ய வைஸ்வதேவ விதி ப்ரிய : விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய பித்ரு ஸ்ராத்த க்ரியாதிக I!–194-

விஷ்ணு நைவேத்யைக ஸாத்ய ப்ராாணாக்நி ஹவநக்ரிய 11
வைஸ்வதேவே ஜ்யோபயுக்த போஜ்யதா வாக்ய ஸோதக !!!–195-

விஷ்ணு நைவேத்ய ஹார்தா நிவேத்யாஸந நிஷேதக
அர்ச்சா ஹார்தாதி ரூபாஸ்ய ஹவிரம்ஸ விஸேஷவித்||–196-

அந்ய ப்ரயுக்தோபஜீவி ப்ராணாநி ஹவநகரிய :
ஸடகோபாதி நைவேத்ய ஸார்த்த ப்ராணாக்நி ஹோத்ரக–197-

ந்யாஸவிம்ஸதி ஸங்க்ஷிப்த நிஷேபா பேக்ஷிதாகில :
ஸங்க்ஷிப்த ந்யாஸ வித்யாங்க ஸ்ரீ ந்யாஸ தஸகப்ரத !–198-

நிஷேப ரக்ஷாக்ருந் ந்யாஸ நிஷேத நவகாந்தக
ஆநுகூல்யா த்யங்க பேத ப்ரபத்யத்யாய பேத த்ருக் || 199-

அந்யதேவ பராசார்ய த்யாக பர்யந்த போத க்ருத்
ஸம்ஹிதாபேத கம்ய ந்யாஸ வித்யா மநு பேதவித் –200–

ந்யாஸ பக்தாபசாராதி நாஸ்யத்வ வயாக்ருதி ஷம :
ந்யாஸ மந்த்ர த்வயந்யாஸ ஸர்வாதி க்ருதி ஸோதக: –201–

பும்ஸு வித்யா நியாஸ வித்யா ஸேஷபாவ பிரகார வித்
ஸங்கல்பித குருபாயா ஸங்க்ராஹ்ய லகு வேதிதா–202–

ஸ்ரீராம சரம ஸ்லோக வ்யாக்யாந கரண க்ஷம
ஸ்ருத்யந்த வேதந க்ராஹ்ய பக்தி ந்யாஸோப பாதக : 203–

ப்ரஹ்ம ஸூக்தாத் யுக்த பக்தி ந்யாஸ வித்யா த்வயோத்ஸு-க 11
மோஷார்த் தாராத நாத் யர்த்த ந்யாஸா வாந்தர பேதவித் –204-

பாஷ்யகாரோக்த கத்ய த்ரய வ்யாக்யாந விசக்ஷண :
கத்ய த்வய வ்யாக்ருதித்வ நிரூபண விசஷண : 205–

கத்ய ப்ரபத்தி ப்ராதாந்ய பரத்வ ப்ரதிபாதக : 1
ப்ரபித்ஸு பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய போதக : 206–

ஸரண்ய பூர்வ மத்யைஷ்யத் கால கர்த்தவ்ய வேதிதா
லஷ்மீ ப்ரபத்தி மோஷார்த்த ப்ரபத்யர்த்தத்வ ஸாதக: 207–

கமலாநுக்ரஹை காந்த்ய பாரம்ய த்ராண தீக்ஷித 1
ஸ்ரீந்யாஸ பாரமைகாந்த்ய பஞ்ஜகத்வ நிவாரக 1 ||| –208–

பரபக்தி பரஞாந பரம ப்ரேம ஸோதக:
ந்யாஸ ஸ்வரூப விஷயாயத்த வைஷம்ய ஸாதக : –209–

பஞ்சாயுதா வாந்தரீய ப்ரயோஜந விசாரக 🙂 பஞ்சாயுத ப்ரமாணீய விரோ தோத்தார கோவித :– 210–

கத்யோக்த பித்ரு மாத்ராதி த்யாக நிர்வாஹ கோவித!!
அக்ருத்ய கருத்யாகரணாபசாராதி விஸேவித் –211–

பக்தாபசார வித் பாப ஸக்திபேத நிரூபக ரஹஸ்ய ஸ்பஷ்ட பச்தாபசாராதி பரிஹாரவித் ! –212–

வர்த்தமாத பவிஷ்யத் காம்ய மார்த்தந யுக்திவித்
ப்ரபந்நாபுத்தி பூர்வைநோ நிஷ் க்ருத் யுக்த்ய விரோதவித் –213–

சதுஸ் லோகீ பாஷ்ய ஸூக்த லஷ்மீ ஸத்வோப பத்திக !
லஷ்மீ விஷய துர்வாதி விருத்தோக்கி நிவாரக : –214–

ஸ்தோத்ரபாஷ்ய க்ருதி வ்யக்த யாமுநாசார்ய மாநஸ
ஸ்வார்த்தாந் யோக்த ஸ்தோத்ர ஸர்வ புருஷார்த் தத்வ ஸாதக–215–

குரு தத்குரு ஸம்பாத கால ப்ராசார்ய தாஸ்ய க்ருத் !
வைகாநஸாகமாத் யுக்த நதிபேத விசாரக: -216–

வகுளாபரணாசார்ய பாவாநேக விரோதஹா !
அத்யஷாகம ஸத் ஸூக்தி நிர்ணீத ஜகதீஸ்வர: 217–

நாராயணாத் யநந்யார்த்த ஸம்ஜ்ஞாஸ் தேதர தைவத :
பாரம்ய ஸூசகாநேகா நந்யதா ஸித்த லிங்க த்ருக்! 218–

வக்த்ரு ஸத்வாத்யநுகுண ஸாத்விகாதி புராண வித்
ஸாத்விகாதி ப்ரவசந ஸாத்விகத்வ ப்ரஸாதக 1 ||| 219–

ஸ்ரீபாஞ்சராத்ரா ரஷாக்ருத் பஞ்சராத்ர ப்ரமாண வித் 1
அஸ்மார்த்த ஸம்ஸ்க்ரியாதீநா ப்ராஹ்மண்யா பத்தி வாரக : 220–

த்ரய்யாக மோக்த கர்மாதிகாரி வைஷம்ய ஸாதக
ஏகாயநா பௌருஷேய பாவ ஸாதந வேதிதா ! 221–

ஸ்ரீபாஞ்சராத்ர ஸித்தாந்த பேத லக்ஷண வேதிதா
சதுர்விதாகம ப்ரஹ்ம ப்ராப்தி ஹேதுத்வ ஸாதக :–222-

ஸித்தாந்த ஸம்ஹிதா தத் தத் ஸாங்கர்ய பரிஹாரவித்
ஸ்வாந்ய ஸித்தாந்த கர்மாதிகாரா பாவ ப்ரஸாதக –223–

ஆகமா வாந்தரோத்கர்ஷா பகர்ஷாதி விதாயக ! |
உத்ருஷ்டஸ்த்த நிக்ருஷ்டோக்த க்ரியாதி க்ருதி போதக?- 224–

வைகாநஸாக்ய தந்த்ர ப்ரமாணத்வ விவ்ருதி ஷம !
வைகாநஸாக மாந்யோந்ய ஸாங்கர்யாஸக்தி பஞ்ஜக : –225-

ஸ்ரீபாஞ்சராத்ர ஸர்வோப ஜீவ்யத் வோக்தி விசஷண:1
ஸூத்ராந்தரஸ்த்தாபி தார்ச்சா தந்த்ர பூஜா விதாயக :–226-

ஸைவாக மாத்ய மாந்யத்வ ஸம்ஸத்தாபந விசக்ஷண1
ப்ராக ப்ரவ்ருத்த பரித்யாகோத் க்ருஷ்டாகம நிரோதவித்–227-

ஸாத்விகாதி விபாகாதீ நாகமாமாந தாபஹ:
பூர்வாகமோத்ருஷ்ட மார்க விதாந ஸூகதி ப்ரத : |–228-

ஸ்வயம் வ்யக்தாதி. பவந தாரதம்ய விதாயக!
தேவ பூஜா முக்ய கெளணாதிகாரி வ்யாக்ருதி க்ஷம–229-

தேவேஜ் யாஷ்டாங்க தோத்கர்ஷ வர்ண நைக விசக்ஷண :
ப்ரயத்நா த்யநபேக்ஷ ஸ்வதஸ் ஸித்தோத்கர்ஷ வஸ்து த்ருக் |–230-

பரமைகாந்தி கர்த்தவ்ய பஞ்சகால க்ரியா ஸூதீ!
பாஷ்யகாராஸ்ரயி பூத பஞ்சகால பிரகாஸக :–231-

வைஸேஷிக த்ரிகாலார்ச்சா பிதாநாத்ய விரோத திருக்!
ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ம்ருத்யைக கண்ட்ய ஸ்தாபந தக்ஷிண :–232-

வ்யாஸ தஷாத் யுக்த தர்ம ஸாஸ்த்ரார்த்த விவ்ருதி க்ஷம 1
ஸர்வ க்ரியா த்யாங்க பூத ஹரி ஸ்மரண போதக !–233-

பஞ்சராத்ரோக்த பகவத் ஜ்ஞாந நித்யத்வ ஸாதக:
அர்ச்சாவதார ரஹித க்ருஹ போஜந தோஷவித்–234-

பகவத் த்யாந ரஹித கால வைய்யர்த்ய ஸாதக!
ப்ராப்த காமார்த்த லிப்ஸா பாரமைகாந்த் யாநுகூல்ய திருக் –235–

கைங்கர்ய காலாவஸ்யாநு ஸந்தேயார்த்த விஸேஷவித் 1
ஸமயாசார நியமா த்யாயோக்தா வஸ்யகத்வ வித்–236-

வைஷ்ணவ ஸ்ரீ தர்மா ஸாஸ்த்ரோ தீரிதா வஸ்யகத்வ வித்
ஆரம்ப மந்த்ர நிர்ணேதா ஸாத்விக த்யாக ஸாதக:–237-

ராத்ர்யந்தோத்தாந ஸமய ஹரி கீர்த்தந ஸாதக 1
நித்ரா நிமித்தா சமநாநுகல்பா வஸ்யகத்வ வித்–238-

பூர்வஷபா விரமித யோக கார்யத்வ வேதிதா
அபியாநாரம்பகால வேத்தா நிர்வேத காலவித் –239–

நிர்வேத பலவித் கார்ய கர ஸாத்விக தைர்ய வித்
மந்த்ராதிகம குர்வந்யோபாய தூஷண வேதிதா–240–

குருத்யா நாநு கர்த்தவ்ய ஹரி த்யாந ஸ்வரூபவித்
கைங்கர்யார்த்தாசார்ய விஷ்ணு த்யாநா நுத்யாந போதக –241–

நித்ய ப்ரயோஜ்ய கைங்கர்ய பூரணார்த்தந மந்த்ர வித் :
ஸ்தோத்ராதி ஸத்தாவஸ்ய கீர்த்ய தேவ தேவ்யாதி நாமவித் –242–

பகவந் மந்த்ர தத் கால சோதிதோசித ஜப்ய வித்
பத ந்யாஸ் மநுஜ்ஞாதா பதக்ரம மநூக்திமா –243–

கதிகாலா வஸ்ய கார்ய கேஸவாஹ்வாந கீர்த்தந :
ஸந்த்யா ஸ்தநோபகரண க்ரஹணைக விசக்ஷண –244–

மலமூத்ர விஸர்கார்த்த தேஸாதி ஸகலார்த்த வித்
சவ்ச ஸங்க்யா க்ரம த்ரவ்ய கால வைஷம்ய ஸாதக : || 245-

தந்ததாவந் காஷ்டாதி வ்யவஸ்த்தா ந்யாய தத்பர :
ஸ்நாந தீர்த்த விஸேஷஜ்ஞ! ஸ்நாந பேத விதாயக! 246–

உஷ்ணோதக ஸ்நாந கால வ்யவஸ்த்தா கரண ஷம
வாஸோ தரண புண்டராங்க தர்ப்பண க்ரம ஸாதக:–247-

ஸந்த்யோபாஸ்தி விஸேஷஜ்ஞோ காயத்ரீ ஸ்தாந ஸாரவித்
காயத்ரீ ஜப ஸங்க்யாந ஸாதநோத்கர்ஷ ஸாரவித்–248–

ஸந்த்யா கலீந நியம வேத்தோபஸ்த்தாந கால வித்
திகாதி நமநாஸக்த ஸாரமைகாந்த்ய பங்கஹா–249-

ஸந்த்யாகாலா வஸ்யகார்ய மூலமந்த்ர ஜபோக்திமாந்
வ்யாக்ருதாதார சக்த்யாதிதேவரிஷி பித்ரு தர்ப்பண:–250-

நித்ய தர்ப்பண கர்மாந்த வாஸ பீடந ஸாதக:
பரமேஜ்யாகாலவித் க்யாத தீர்த்த மந்த்ரோப ஸம்ஹ்ருதி: ||| 251-

தீர்த்தா ஸந்நா நந்த ஸத்ம ப்ரவேஸா ,வஸ்யகத்வ வித்
பகவத் ஸத்ம ஸந்த்யாஜ்ய த்வாத்ரிம்ஸ , தபசாரக : –252–

அப்யுஷாணோஷித க்ருஹோ ஹோம கால விஸேஷவித்
பரகோக்ராஸ தாநர்த்தி ரபியாந ஸ்வரூபவித் –253–

உபாதாநாக்ய ஸமய வேத்தோபாதாந மந்த்ரவித்!
ஹேயோபாதேய தேவார்த்த ஸூமாதி த்ரவ்ய வேதிதா –254–

ஸ்வார்ஜி தாரண்ய மூல்ய க்ரீத யாசித குணாதிவித்
ஸுமநோகத ஸத்வாதி க்ருதோபாதாந ஹாநக ! ! -255–

திதிபேதாதி நியத புஷ்பபேதாதி ஸாதக !திவாநிஸா தேவ யாக வ்யாப்த ஸூந விஸேஷவித் — 256–

ஸாஸ்த்ராநுமத ஸிஷ்டாக்ராஹ்ய புஷ்பாதி நிவாரக:
கருஹால யார்ச்சா நியத வாஸ புஷ்பாதி பேத வித் ல்–257–

ஸ்ரங்மாலா பேத த்ருக் ஸூத்ர க்ரதிதாதி நிஷேதக :
பகவத்யாக வர்ஜ்யோபாதேயாபரண ஸோதக –258–

ப்ராண்யங்க ஸூரபித்ர வ்யோபயோக வ்யாக்ருதி க்ஷம:
ஹேயோபாதேய முகுள பத்ராங்குர விசாரக–259-

திநக்வயாபா ர்யுஷித குஸு மோக்தி விசக்ஷண :
போஜ ராஜா த்யுக்தகால புஷ்ப பேத விசாரக:–260-

க்ராஹ்ய மூல க்ரஹீதா தூப தீப த்ரவ்ய வேதிதா
தஸா விஸேஷாநுமதார் ஜநோபாய விஸேஷவித்–261-

ஸர்வ ப்ரதி க்ரஹ வ்யாப்த மநு நிர்ணய கோவித: 1
யதி புஷ்பக்ர ஹோபாய விஸதீகரண க்ஷம–262-

பூஜாத் யர்ஹாந்த ராத்மீய குணோபாதாந ஸாதக
பாஷ்யகாரோக்த நித்யாக்ய க்ரந்த வ்யாகரண க்ஷம–263-

இஜ்யாகால விஸேஷஜ்ஞ இஜ்யா ப்ராதாந்ய ஸாதக
பரமைகாந்தி ஸப்தார்த்த தந் நிபந்தந வேதிதா –264–

யத்யந்ந தேவ பூஜாதி மஹா தோஷ ப்ரஸாதக !
பரமைகாந்தி ஸந்திருஷ்டாந் யதேவ நாதிபாதக! |– 265–

கர்மண்யதா பாவ ஹேது பாப தச்சாந்தி ஹேது த்ருக்
இஜ்யாதிகார பேதஜ்ஞ இஜ்யா ஸாரார்த்த வேதிதா –266–

ஸ்வாத்யாயகால ஸ்வாத்யாய பேதாதி க்ருதி பேத திருக்
ஸ்வாத்யாய ஸார ஸந்த்ரஷ்டா ஸ்வாத்யாயாங்க விஸேஷவித்| –267–

ஸாயம் ஸந்த்யாஹோம தேவ பூஜா போஜந காலவித்
புஜிலோப நிமித்த ப்ராணாக்நி ஹோத்ர மநூஜப –268–

ப்ரதோஷ வர்ஜித நிஸா யோக்யாதீதி விஸேஷவித்
த்ரயோ தஸீ , பூர்வராத்ரி கார்யமெளந விஸேஷவித் — 269–

ப்ரதோஷகால கர்த்தவ்ய ஸந்த்யா ஸங்கோச வேதிதா!
ப்ரதோஷா வஸ்ய வர்ஜ்யாஷ்டாக்ஷர மந்த்ர ஜபோக்திமாந் — 270–

ஸந்த்யா த்யாஜ்யா ஷ்டாக்ஷராந்ய காயத்ர்யந்ய ஜப க்ரிய
ஆசவ்சகால ஸந்த்யாஜ்ய காயத்ர் யந்ய ஜப க்ரிய–271-

அத்யாயா நர்ஹ விஷு வாத்யநுஜ்ஞாத ஜபாந்தர!!
மெளநக்ரியா ஸமாயாத ஸச்சித்ரத்வ நிராஸக!–272-

ப்ரதோஷ நரஸிம்ஹாந்ய ஹரி தர்ஸந பாதக: I
ப்ரதோஷ காலாநுஜ்ஞாத ஸ்வ க்ருஹார்ச்சா வலோகந !–273–

மத்ய ராத்ர நிஷித்தஸ்வ க்ருஹார்ச்சா பூஜநாதிக:
மத்ய ராத்ரோபராகாதி கால வர்ஜ்யார்ச்ச நாதிக! –274–

ஸர்வகாலாப் யநுஜ்ஞாதா ஸ்தாநஸ்த்த ஹரி தர்ஸந :
அஷ்டாங்க யாக மத்யா நுஜ்ஞாத ஸ்வாத்யாய யோக வித் — 275–

ஸ்ரீபராஸர ஸாண்டில்யா த்யுக்த யோக ஸ்வரூபவித்!
ஸ்ரீபாஷ்ய க்ருத் ஸம்ப்ரதாய ப்ரபந்ந ஜந யோகதிருக் !!–276-

ந்யாஸ கத்யாத்யநுகுண விநியோக விதாயாக!
அர்ச்சாவதார விஷய யோகெளசித்யாபி தாயக !–277–

யோகாங்க ஸம்ஹ்ருதி ந்யாஸ ஸ்தாநா சமந ஸாதக:1
யோகோபகாரி கரண ஸ்ராந்தி ஹேது ஸுஷப்திமாந் –278-

கட்வாதிருப ப்ரஹ்மாதி ஸம்பரிஷ்வங்க பாவந i
ஸாஸ்த்ரீய ஸயநீயாதி நியமாதி விதாயக –279–

ஸ்வாராத்ய பகவத் பாத ஸரோ ஜந்யஸ்த ஸீர்ஷக :
நித்ராரம்பச் சேதகார்ய மாதவத்யாந கீர்த்தந! –280–

ஏகாதஸ்யாதி லுப்தாநு யாக ஸப்தாங்க யாகத்ருக்
த்வாதஸ்யாதி ப்ரபாதாத : பாரணாஸ்தாபந க்ஷம– 281–

பாரணாதித மத்யாஹ்ந ஸப்தாங்கேஜ்யா விசாரக
அநேகேஜ்யா ஸந்நிபாத லுப்தோபாதாந லேஸக!–282-

அஸக்யவஸ்த்தா ஸ்வ ஸமாநர்த்விகாதி க்ருதேஜ்யக
விதுர வரதி ஸந்யாஸி வநஸ்த்தர்த்விங் நிஷேதக:–283-

ஸூதகாதி தஸாத்யாஜ்ய ஸூசிகர்த்தவ்ய கர்மக!
மௌந ஸூந்யா சவ்ச கால கீர்த்ய த்யேய ஹரி ப்ரிய–284-

ஆ சவ்சகால கர்த்தவ்யாபி யாநாக்ய க்ரியாபர1!
ஸர்வக்ரியா ப்ரதிநிதி பகவந்நாம கீர்த்தந:–285-

ரஹஸ்யாம்நாய நிஷ்டா சவ்ச நிஷேத விதாயக:
ப்ரஹ்ம வித்வ நிமித்தாக ஸங்கோச வ்யாஹதி க்ஷமா–286-

ப்ரக்ராந்தோத்ஸவ கார்யாதி ஸூதகாதி நிஷேதக
ஆசவ்ச கால கர்த்தவ்ய மாநஸேஜ்யா விசாரக–287–

ஆசவ்சகால கர்த்தவ்ய ஸந்த்யோபாஸ்தி ப்காரவித்
துஷ்கரத்வ பரிஜ்ஞாந ஷுப்த பும்ஹர்ஷ வர்த்தக: — 288–

பகவத் தர்ம சவ்கர்ய விஸேஷ வ்யாக்ருதி ஷம
இஜ்யோபசார வைகல்ய தோஷாதோஷ விசாரக! 289–

ஸங்கல்ப ஸூர்யோதயாத: க்ருத பாரக்ய நாடக
ஸங்கல்ப ஸர்யோ தயாத்ய பத்ய வ்யக்த ஸ்வவைபவ: — 290–

ச்சாத்ரபத்த த்வஜோத்பாஸி தாஸா ஸாஸௌத மண்டல
ஸ்ரீவைகுண்ட விநோதீ ஸத் கவி நாடக லக்ஷம த்ருக் ||–291-

ஸாந்தியைக ரஸ பாவஜ்ஞ ! ஸ்ருங்காராதி ரஸத்வஹா
கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகார வசோதர:– 292–

பாத்ரீக்ருத விவேகாதி குணாதிஷ்டாத்ரு தைவத !
ஸந்திபஞ்சக ஸம்வேஸ நாடக ஸ்தாந கோவித–293-

ஸர்வஸங்கட வித்வம்ஸி விஸங்கட மநீஷித:
விம்ஸத் வர்ஷாதீத ஸர்வ வித்யாஸந்த்தி பாஸூர–294-

த்ரிம் ஸத்வார ஸ்ராவித ஸ்ரீமச் சாரீரக பாஷ்யக
யதீந்த்ரார்ப்பித துர்வாதி விஜ்யார்த்த பவித்ரக–295-

வாதநாமா வாததோஷ வ்யவஸ்த்தா கரண க்ஷம:
ஸூக்ஷ்ம ஸூஷ்ம தராத்யந்த ஸூஷ்ம ப்ரஸ் நோத்தர க்ஷம–296-

யதீந்த்ர க்ரந்த ஸூரபி மநஸ்க பத ஸேகர !
ஸங்கராதி குத்ருங்மூர்த்த ந்யஸ்த வாம பதோஜ்வல! -297-

குத்ருங் மூர்த்த நீயஸ்தபாத ஸுவர்ண கடகோஜ்வல:
வைகுண்ட லோக ஸ்த்ரீ பும்ஸ மிதுநார்த்தோப பத்தி வித் — 298–

ஸ்வஸில்பஜித கீர்வாண தைத்ய ஸில்ப சமத் க்ருதி:!
ஸமாதி ஸாதகஸ்தாந ஸூபாஸ்ரய நிரூபக: — 299–

அநாத்ம குணகாமாதி நிராஸாதி ப்காரவித்
மஹாத்மாத்மாநாத்ம குண சேஷ்டித ஜ்ஞாபந ஷம: — 300–

ராகவாப்யுதயோத்க்ருஷ்ட யாதவாப்புதய ப்ரத:
ஸ்ரீஸேது ஸடகோபாதி ஸேவா ஸந்துஷ்ட மாநஸ !–301-

சோளதேஸீய பகவத் க்ஷேத்ர ஸேவா ரஸாகுல ;
ஹஸ்தீஸ ஸேவா குலாத்மா நரேந்த்ர மத ஸர்ப்பஹா–302-

நரேந்தர வந்திதஸ் தார்ஷ்ய தண்ட கோத்தம தாத்ருதீ !
புநர் வ்ருஷாத்ரி ரங்கேஸ ஸேவார்த்த கமநோத் ஸூக :–303-

ஆஸ்சர்யாவஹ சாரித்ர வாஜி வக்த்ராதி தைவத!
வரதாசார்ய ஜநகோ ஜீவிதாகில விஷ்டப:–304-

ஹயாஸ்ய பூர்த்த தீர்த்தாஹர் த்ருஷ்ட லஜ்ஜித விக்ந க்ருத்
ராத்ரி நிர்வ்யூட ரங்கேஸ பாதரக்ஷா ஸஹஸ்ரக:–305-

பாதரஷா ஸஹஸ்ரோக்த பாதுகா ஸேவகாபித:
ரங்கேஸ தத்த கவிதார்க்கிக ஸிம்ஹாபி தாநக–306-

ஸம்ப்ரதாய பரீஸூத்தி ஸ்தாபிதாசார்ய ஸத் பத!!
ஸத் ஸம்ப்ரதாய ரஹித ஸாஸ்த்ரா நாதர போதக:–307-

ஸச்சாஸ்த்ர மூலாந்ய ஸம்ப்ரதாயா நாதர போதக!!
கல்யாதி நிகமாந்த ப்ரவர்த்த காவத்ருதி க்ஷம!–308-

ஸட கோபாசார்ய பாவ ஸ்தாபநைக விசக்ஷண
அநு கூலாசார்ய வம்ஸ்ய வித்யாதாந ஸூபாத்ர வித்!!–309-

முக்ய ப்ரதாநாசார்யத்வ ஸ்தாபநைக விசக்ஷண:
ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸம் ப்ரதாய விரோதஹா — 310–

ரஹஸ்ய தத்வ த்ரிதய பதவீ க்ருதி பாஸுர!! ரஹஸ்ய தத்வ ரத்நாவல்யலங்க்ருத ஸூஹ்ருந் மநா : ||| –311–

தத் வரத்நாவளீ ப்ரதிபாத்ய ஸங்க்ரஹ காரக :
தத்வரத்நாவளீ கம்ய ஜ்ஞாந பர்யாப்தி போதக! — 312–

ரஹஸ்ய ரத்னாவள்யாக்ய ரஹஸ்ய வ்யாக்ருதி ப்ரிய:
ந்யாஸ் யுத்தரைந : ப்ரதி பதோக்தா நிஷ்க்ருதி ஸாதக; — 313-

ஸ்ரீதத்வ நவநீத ப்ரீத ஹஸ்தி கிரி நாயக:
ரஹஸ்ய நவநீதோக்தி ஹருஷ்ட வேங்கட நாயக! ||– 314–

காலதாமஸ பாவாதி நிபந்தந விசாரக:
பகவத் த்ரிஸ்த்தலாவாஸ க்ரியா வ்யாக்ருதி தக்ஷிண: — 315–

யுக பேதாதீந வர்ண பகவத்தேஹ தர்ஸந! ஸ்ரீதத்வமாத்ருகா ஹருஷ்ட பகவத் பக்த மாநஸ: | — 316–

ரஹஸ்ய மாத்ருகா தத்த ப்ரபந்நாந்வஹ தோஷக! |
ஸாரஸங்கரஹ க்ருந் ந்யாஸ க்ராஹ்யாக்ராஹ்ய விபாகவித் — 317–

ப்ரபந்த ஸ்வீக்ருதிக்ருத பூர்த்ய பூரீத்தி விசாரக 1
மாநாதி தஸ காலம்பி விவேகி பல போதக! –318–

மாநப்ரமேய விச்சிஷ்யாசார்ய க்ருத்யாதி ஸாரவித் !
வ்யக்தீ க்ருதாகிலோத்கர்ஷ ஸ்ரீரஹஸ்ய ஸிகாமணி — 319–

ஸ்ரீமத்வராஹாவதார ஸர்வாதிக்யா பிதாயாக
வராஹாக்ய புராணாதிஸய வர்ணந தக்ஷிண:–320–

ப்ரபத்திபர வாராஹ சரம லோக போதக : 1
யாமுநோக்தி பரிஷ்கார்யஞ்ஜலி வைபவ காரக! –321-

ப்ரபந்த விஷய ஸ்ரீமததிகப்ரீதி ஸாதக: ! ஸ்ரீமத் தாஸ்யாநந்ய தைவத்வா தந்யார்த் தத்வ சிஹ்ந திருக்-322–

ப்ரதாந ஸதக வ்யக்தீ க்ருத முக்யார்த்த ஸஞ்சயா
ஸதாநு ஸந்தேயார்த்தோபகார ஸங்க்ரஹ காரக!!!–323-

மஹோபகார வித்ஸார ஸாராக்யாந க்ருதி ப்ரிய
பரங்குஸாதி நிர்வ்யாஜ ரக்ஷணோக்தி விரோதஹா !–324-

ரஹஸ்ய தத்வ த்ரிதய சுளகா ஸ்வாதி தாஸ்ரித :
அபய ப்ரதாந ஸார ஸ்பஷ்ட ராமாயணாந்தர :–325-

ஸ்ரீஸாபசார ரஸிக வைஷ்ணவா நாதரோத்திமாந்
ஸ்ரீஸாபசார பக்தாநாதர ஷாபண காலவித்–326-

நியாஸாபேக்ஷித ஸர்வார்த்த வ்யஞ்ஜகாதிம காவ்யவித்
ஸ்ரீமத் க்ருபா பரிணத ஸோபாந பதவீ ப்ரிய –327-

அர்ச்சிராதி மஹாமார்க விரோத ஸமந ப்ரிய
மாதவாத்மஜ பூபார்த்த தத்வ ஸந்தேஸ காரக:–328-

ரஹஸ்ய ஸந்தேஸ க்ருதி ப்ரீத மாதவ புத்ரக :
ரஹஸ்ய ஸந்தேஸ விவரணாக்ய க்ருதி தோஷக.–329-

மாதவாத்மஜ பூபார்த்த ஸுபாஷித விதாநவித்
ஹம்ஸ ஸந்தேஸ விவ்ருத பகவத் ப்ரேம தல்லஜ :–330-

ஸ்ரீமந் மெளளி க்ரமாபிக்ய க்ரந்த நிர்மாண கோவித :!
லோகாசார்யாதி ஸச்சிஷ் யார்ப்பித ஸாரீர பாஷ்யக:–331-

ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ராதி ஸிஷ்யார்ப்பித ரஹஸ்யக
க்ருதாஸீதி ஸஹஸ்ர த்ரமிடாகம பரீமள:–332-

முநிவாஹந போகாக்ய க்ரந்த ஸம்ப்ரீத ஸஜ்ஜந : 1
ஸ்ரீமந்மதுரகவ் யுக்தி காதா வ்யாக்யாந தஷிண ! !!–333–

த்ரமிடாம்நாய தாத்பர்ய ரத்நாவளி விதாயக:
த்ரமிடோபநிஷத் ஸார ப்ரபந்தோஜ்வல மாநஸ–334-

ஸ்லோக த்ரயோக்த பகவதாராதந விதி க்ரம:
நவஸ் லோகீ ஸங்க்ருஹீத ப்ரஹ்ம ஸத்ர விதாநக :–335-

ப்ரபந்த ஸார நிர்மாதா ஆஹார நைய்யத்ய கீதி க்ருத
மூல மந்த்ரார்த்த ஸங்கராஹி காதாக்ருதி விஸாரத:–336-

த்வய மந்த்ரார்த்த ஸங்க்ராஹி காதாகரண தக்ஷிண:
சரம ஸ்லோக ஸங்கராஹி காதா ஸங்க்ரஹ கோவித–337–

ப்ரபத்தி கர்ப்ப கீதார்த்த காதாக்ருதி விசக்ஷண:1
லக்ஷ்மணாசார்ய ரோகக்ந பாத தீர்த்த ப்ரபாவக: |||–338-

ஸ்ருத ப்ரகாஸிகா ரக்ஷா ரக்ஷிதாத்யாத்ம பாஷ்யக:
யாதவாசல பத்ரா ஸாஸநார்த்த கதிபாஸூர :–339-

அபீதி ஸ்தவ ஸஞ்ஜாதாபீதி ரங்கபுரீ கதி:1 ரங்க ப்ராபித ரங்கேஸ கோபணார்ய ஸ்துதிப்ரிய :–340-

ரஹஸ்யத்ரய ஸாரோஜ்ஜீவித சேதந ஸஞ்சய
த்ரமிடோபநிஷத் த்ரஷ்ட்ரு ஸூரி ப்ருந்தோபகாரவித்–341-

மோக்ஷைக ஸாதநாசார்ய வத்தா ஸாதந தத் பர:
ஸ்வாசார்யாதி ஸரண்யாந்த பக்தி க்ரம விஸேஷவித்–342-

ஸ்ரீமத் பகவதாசார்ய பாவபாதக பாதக!
ஸடாரிநாத யோகீந்த்ர குரு ஸிஷ்யத்வ ஸாதக — 343–

அபரீஷய ரஹஸ்யாதி ப்ரதாந பஹு தோஷவித்
பக்தி ப்ரகாஸித குரு வம்ஸ ஸிஷ்ய நிபந்த ! –344–

அஸம்பாஷ்யாதி ஸம்பாஷண நிஷ்க்ருதி குருஸ்ம்ருதி!!
மோக்ஷார்த்த ஸாஸ்த்ராநாரம்ப ஹேது திக்க்ருதி தக்ஷிண!!|| 345-

ஆசார்ய நிகடப்ராப்தி ஹேது ஷட்க நிரூபக!
ஸார நிஷ்கர்ஷ குஸல! ப்ரதாந ப்ரதிதந்த்ர வித் !! –346–

ஈஸா தாரகதா ஸேஷித்வ நியந்த்ருத்வ போதக : I
ஜீவாதேயத்வ ஸேஷத்வ நியாம்யத்வ நிரூபக: –347–

ஸங்கல்பாதீந நித்யாக்ய வஸ்து ஸ்திதி விஸேஷவித்
ஸேஷஸேஷ்யாதி ஸம்பந்த பலிதார்த்த விஸேஷவித் –348–

அர்த்த பஞ்சக தத்வஜ்ஞஸ் தத்வ த்ரய விஸேஷவித்
ஸ்வாதீந திரிவிதாசித் சித் ஸ்வரூப ஸ்திதி வ்ருத்தி த்ருக் — 349–

ப்ரமாண கம்ய தர்மி ஸ்வரூப ரூபக தர்மவித் !
ஜீவ லக்ஷண தத்வஜ்ஜோ பத்த லக்ஷண லக்ஷிதா — 350–

பத்த ஸ்திதி ப்ரவருத்திஜ்ஞோ முக்த லக்ஷண லக்ஷிதா நித்யஸ்திதி பரவருத்திஜ்ஞோ நித்யாத் யந் யோந்ய பேத த்ருக்– 351–

நித்ய முக்தாத்ம கைங்கர்ய ஸார்வ வித்ய நிரூபக
த்ரிகுணஸ்திதி வ்ருத்தி ஜ்ஞ : ஈஸ லக்ஷண லக்ஷிதா –352–

அவதார ரஹஸ்யஜ்ஞ! பர வ்யூஹாதி பேத த்ருக்!
ஸ்ரீ ஜகத் காரணத்வாதி ஸாதகாநேக யுக்தி மாந் — 353–

ஸ்ரீமந் நாராயண பர தேவதா நிர்ணயக்ஷம : 1
ஸர்வ தேவ பரப்ரஹமா பேது கண்டந தக்ஷிண : — 354–

த்ரிமூர்த்தி ஸாம்ய தமநஸ் த்ரிமூர்த்யைக்ய விநாஸக !
த்ரிமூர்த் யுத்தீர்ண பரம் தேவதா கண்டந க்ஷம– 355–

த்ரிமூர்த் யந்தர்கத ப்ரஹம ருத்ர பாரம்ய கண்டந 1
ப்ரஹ்ம ருத்ராதி கார்யத்வ கர்ம வஸ்யத்வ ஸாதக !–356–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பாரதந்த்ர்ய விசாரக
ப்ரஹ்மாதி பகவந் மாயா யத்ததீ ஹ்ராஸ வ்ருத்தி த்ருக் – 357–

விஷ்ணு தர்ஸித ஸர்கோப ஸர்காதி விதி ஸம்பு த்ருக்
ஸூபாஸ்ரயத்வ ரஹித ப்ரஹ்ம ருத்ராதி ஸாதக! — 358–

ப்ரஹ்ம ருத்ராதி திரிகுண பாரவஸ்ய நிரூபக
ப்ரஹ்ம ருத்ராதி பகவதாஸ்ரி தத்வ விதாயக: — 359–

ப்ரஹ்ம ருத்ராதி பகவத் விபூதித்வ நிரூபக: ப்ரஹ்ம ருத்ராதி பகவத் பரகாரத்வா பிதாயக– 360–

ப்ரஹ்ம ருத்ராதி பகவச் சரீரத்வ பிரகாஸக ப்ரஹ்ம ருத்ராதி பகவத் தாஸத்வ ஸ்தாபந ஷம —361-

ஸாத்விகத் வோத்பத்தி ஹேது மது ஸூதந த்ருஷ்டி த்ருக்
ரஜஸ் தமோ குணா ஸக்தி ஹேது ப்ரஹ்மாதி திருஷ்டி த்ருக் –362-

ப்ரஹ்ம ருத்ராதி மோஷார்த்தி ஜநோபாஸ்யத் பாதக:1 ப்ரஹ்ம ருத்ராத்யுபாஸ் யத்வ வசோ நிர்வாஹ காரக : — 363–

ப்ரஹ்ம ருத்ராதி பாரம்ய த்ருக் கர்மா நர்ஹதாதி த்ருக் 1
ப்ரஹமாதி பகவத் ஸாம்ய த்ருக் பாஷண்டித்வ ஸாதக!! — 364 —

விஷ்ணு நிக்ராஹ்ய பாத்ரத்வ ரஹிதேதர தைவ த்ருக்
க்ஷிப்ரேதர பல ப்ராப்தி ஸாதநேதர தேவ த்ருக்-365–

காம்யாத் யர்த்தாஸ்ரிதாநந்த புருஷார்த்த விஷ்ணுதீ
அஜ்ஞாந்ய தேவ யஜந ப்ரீத விஷ்ணு ப்ரகாஸக : — 366–

அஜ்ஞாந்ய தேவ யஜந பல வைகல்ய ஸாதக:
விஷண் வாத்மகாந்ய தேவஜ்ஞ கர்ம பௌஷ்கல்ய ஸாதக — 367–

நிஷ்காம விஷ்ணு ஸேவா நுஷங்காந்ய பல ஸித்தி த்ருக்
பராங்குஸாதி ஸ்ரீஸுக்தி ஸாதிதோத்ருஷ்ட மாதவ –368–

முமுக்ஷாஹேது ஸாரஜ்ஞஸ் சாதிகாரி விபாகவித்
ப்ரபத்ய வாந்தரபிதா வேத்தோபாய விபாகவித் — 369-

ப்ரபத்யதி க்ரியா பஞ்சதஸ நிர்ணய தூர்வஹ!
ந்யாஸ வித்யாங்க பஞ்சத்வோபகார வ்யாக்ருதி க்ஷம –370-

விஸ்வாஸோத்கர்ஷ விஹதி காரண வ்யாஹதி க்ஷம
விஸ்வாஸ கோபத்ரு வரண ஸப்தார்த் தத்வ ப்ரகாரவித்–371-

ப்ரபத்தி லக்ஷணாபிஜ்ஞோ ந்யாஸ வித்யாங்கி வேதிதா
திரிவர்க மோஷ ஜநக ந்யாஸ வித்யா விஸேஷவித்–372-

ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ப்ரயோக விதி ஸாதக
ஸாங்க ப்ரபத்யநுஷ்டாந ஸக்ருத்வ ஸ்தாபந ஷம –373-

ஸஹேதுக்ருத க்ருத்யத்வாநுஸந்தாந விஸாரத
ஸ்வ ஸ்வரூபோபாய பல நிஷ்டா த்ரய விவேகவாந்–374–

பிரபத் யுத்தர கர்த்தவ்ய க்ருத்ய நிர்ணய தக்ஷிண!
பகவத் தாஸ கைங்கர்ய தாஸ்ய த்வைவித்ய வேதிதா — 375 —

பகவத் தாஸ தாஸ்ய ப்ராப்தா நந்யத்வ விரோதஹா
ஸ்ரீமத் பாகவதாந்யோந்ய தாஸ்ய ஸாதந தத் பர–376-

ப்ரபந்நாந்வஹ ஸங்க்ராஹ்ய ஸாஸ்த்ரீய நியம ப்ரிய:
பாஷ்யகாரோக்த ஸாஸ்த்ராநு மத கைங்கர்ய ஸாரவித் –377–

உல்லங்கி தாஜ்ஞாகரணா வைஷ்ணவத்வ ப்ரஸாதக:
ப்ரபந்நாஜ்ஞாதி க்ரமாதி ப்ராயஸ் சித்த விஸேஷவித் !–378 —

ஏநோநிஷ்க்ரு த்யுதாஸீந ப்ரபந்த லகு தண்ட த்ருக்
ஆஜ்ஞாதி லங்கி கடிந ப்ரபந்ந நரகாப்ரிய: | –379–

ப்ரபந்த புத்தி பூர்வைந ப்ராயஸ் சித்த விஸேஷவித்
மஹா பாத ப்ரபந்ந ப்ரஸித்த நிஷ்க்ருதி வேதிதா — 380–

கடிநாநியதாயு : ப்ரபந்நாயுர் வ்ருத்தி ஸாதக
மோக்ஷார்த்த ந்யாஸ ஸம்ஹார்ய தீ பூர்வோத்தர பாபஹா — 381–

க்ருதபாதக நாஸார்த்த ஸரணாகதி வேதிதா
ப்ரபந்நாந்வஹ வாஸார்ஹ ஸ்தாந வ்யாக்யாந கோவித — 382–

விகலாங்க ந்யாஸ வித்யா பூர்ண ஹேதுத்வ ஸாதக:
தேவாந்தர த்ருடாஸக்த ப்ரபந்த நரகோக்திமாந் — 383–

வித்வதேகாந் தோத்க்ரமண க்ரம தர்ஸந தோஷித:
உபாயாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட பூர்வோத்தர பாப த்ருக் — 384–

இஷ்டாவ தூதாந்ய பல தீ வைமுக்ய ப்ரபந்ந வித்
விநஷ்டாஸ் லிஷ்ட புண்யாக விதூநந பதார்த்தவித் — 385–

புதபுண்யாக மித்ராரி ஸங்க்ராந்தி வ்யாஜ போதக
அர்ச்சிராதி கதிஜ்ஞாதா ஸுஷ்மதேஹ விஸர்கவித் — 386–

திவ்ய தேஸ ப்ராப்தி பூர்வ க்ரம தர்ஸந தக்ஷிண:
முக்த ப்ரபந்ந ஸாநந்த விபுஜ்ஞாந துரந்தர–387–

மதுவித்யாத்யதீகாரி கத்யந்தர வி ஸேஷவித் !
முக்த்யவஸ்தாநந்த தாரதம்ய வரத விநாஸக! –388–

ஜகத் ஸ்ரஷ்ட்ரு பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
பரிபூர்ண பர பரஹ்மாநுபவ ஸ்ருதி வேதிதா : — 389–

ஸுநிஸ் சித்தார்த்த பரம பிரஹ்மாநுபவ ரீதிக;
ஸம்ஸார ப்ரதி கூலார்த்த முக்த்ய வஸ்த்தாநுகூல்ய திருக்–390-

ஸ்ரீபதித்வ பர ப்ரஹ்ம துல்யா நந்த விமுக்தி த்ருக்
ஸதாசார் யோபதேஸை காதிகாரி ஜ்ஞாபந க்ஷம–391-

ஸஸத் தர்கோபதே ஸாதிகாரி வ்யாக்ருதி கோவித!
வ்யாஜாந பேக்ஷ பகவத் ரக்ஷகத்வோக்தி வாரக–392-

ஸ்ரீமத் ஸ்வாதந்த்ர்ய காருண்யோபயோக வ்யாக்ருதி க்ஷம;
ப்ரபத்யதி க்ரியாவத் விஸேஷணத்வ நிரோதக–393-

மோக்ஷ நுபாய ஸரண வரஜ்யாவாத விநாஸக;
ப்ரதிபந்து நிராஸை கோபயுக்து வ்யாஜ வேதிதா–394-

தேவ ஸ்வாதந்த்ர்ய கருணா மூல வ்யாஜ நிராஸஹா
ஸ்ரீமத் ஸம்பந்த மூல வ்யாஜ நிராஸ மதாந்தக: — 393–

அவ்யாஜ பகவத் பாத்ர பாவ மாநோபபத்திஹா
த்வய பூர்வ ஸ்ரீபதோப லஷகத்வ விநாஸக–396–

ஸ்ரீவிஸேஷண பாவார்த்தோபாய த்வித்வ விபஞ்ஜக: |
நிர்வ்யூட ஸரண வ்ரஜ்யா விஸ்வாஸா பேத பூர்வ வாக் — 397–

ப்ரபத்தி ப்ரார்த்தநா பேத வாங் நிர்வாஹ விசக்ஷண
வாக்ய ஜந்ய ஜ்ஞாந மோஷோபாயத்வ மதபஞ்ஜக — 398–

ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபார நிவ்ருத் யுத்திதி தூர்வஹ!
ப்ரபத்தி மோஷோபாயத்வ பாதக வ்ராத நாஸக –399–

சரம ஸ்லோக நிகில தர்ம த்யாக பரத்வஹா
நிஷித்த வர்ஜநா தர்ம பாவத்வோக்த்ய பநோதந :–400–

உபாஸந ஸ்வரூபோபாய ஸ்வரூப விரோதஹா !
வர்ணாஸ்ரமாதி தர்ம ஸ்வரூபரோத விநாஸக — 401–

ஐகாந்த்யச் சேத் யந்யதேவ பர வர்ணாதி தர்மஹா
பக்தி வித்யா ஸித்த ஹேது ப்ரரோசந கரத்வஹா –402–

பக்தி வித்யா ஸிஷ்டலோகா பரிக்ரஹ நிவாரக
பர ந்யாஸாதி ஸகல கரல தர்மத்வ பஞ்ஜந–403–

ந்யாஸ ப்ரஸம்ஸகோ ந்யாஸ பக்த் யாதிக்ய ப்ரதர்ஸக
அநுகூலத்வ ஸங்கல்பாத்ய வஸ்யம்பாவ வேதிதா — 404–

விஸ்வாஸாங்க மஹத்வாந்தராய பங்க விசக்ஷண:!
ப்ரபந்ந பகவத் ப்ரேம தாரதம்ய விதாயக–405–

குரு பக்தி லகு ந்யாஸ பலைக்யோக்தி விசக்ஷண:
பூர்வ பூர்வாக்ருதாம் ஸார்த்த புந! ப்ரபதநோக்திமாந் –406–

ஐஹிகார்த்த நியாஸ கர்த்ரு ஹேது வைகல்ய ஸாதக 1
அபியாநாதி பஞ்சாவஸர க்ருத்ய பலோக்திமாந்–407-

விஷ்ணு பக்த சதுர்த்தாதி ப்ராஹ்மண்ய விநிவாரக!
விதுராதி ஸ்வ ஜாத்யுக்த தர்ந மாலங்க த்ருஷ்டிமாந்–408-

நிர்வ்யூட விதுர ப்ரஹ்மமேத ஸம்ஸ்க்ருதி ஸூக்திகா
யஜ்ஞே விதுராந்நாதநோக்தி நிர்வாஹ தக்ஷிண; –409–

அதிதேஸா நர்ஹகாரி ஸூநுவிருத்த பிரகாஸக:
பகவத் பக்த ஸூத்ராதி தீதானாதி க்ருதி ப்ரிய – 410–

சைத்தகாயிக ஸூத்ரத்வ பேத வ்யாக்யாந தஷிண
நாராயனைக நிஷ்டேதி வசநார்த்த பிரதர்ஸக! –411-

நிஷித்த த்யாக தர்மாக்யா முக்யார்த் தத்வ விபஞ்ஜக:
ஸ்ரீமத் ப்ரபாவ ஸந்த்ராதோபாய மாஹாத்ம்ய ரஷக: | — 412–

பகவத் ஷேத்ர மாஹாத்ம்ய த்ருக் வைஷ்ணவ மஹத்வவித்
ஸெளம்காரமூல மந்த்ராஷ்டாக்ஷரத்வ த்ராண தீக்ஷித!! — 413–

த்வய மூல மநு வ்யாக்யா ரூபத்வ பரிஸோதிக !
மூல மந்த்ர அஷ்டாக்ஷர பத் தத்வார்த்த விஸேஷவித் — 414–

மூல மந்த்ர மஹா வாக்ய யோஜநா ஸத காரக:
த்வய ப்ரபாவ விஜ்ஞாதா த்வய ஸப்த நிருக்தி வித் – 415–

த்வய த்ரயீ மூல தாந்த்ர மந்திரத்வ ஸ்த்தாபந க்ஷம :
லஷ்மீ புருஷகாரத்வ மாநஜ்ஞ : ஸ்ரீபதார்த்த வித் — 416–

த்வய மந்த்ர பத ப்ராத ப்ரத்யேக வ்யாக்ருதி ப்ரிய 1
ஸ்ரீ ஸோபா யாந்தர ஸ்தாநாபத்தி ஸாரார்த்த போதக!!-417–

கார்பண்ய கோப்த்ரு வரண ஸார்த்தோபாயத்வ யாசந:1
உபாய வரணாத்யாத்ம நிஷேபாங்கித்வ ஸாதக: |–418-

த்வயோத்தரார்த்த கம்யார்த்த புருஷார்த்த நிரூபக
த்வய மந்த்ர மஹா வாக்ய யோஜநா த்ரய ஸாதக:–419-

ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகாவதார வ்யாக்ருதி ஷம
சரம ஸ்லோக தர்மோக்தி வேத்ய நிர்ணய கோவித: — 420–

புருஷோத்தம தீமோஷ ஹேதுத்வ மதபஞ்ஜக
அவதார ரஹஸ்ய ஜ்ஞாநாதி மோஷ கரத்வஹா! — 421–

சரம ஸ்லோக தர்ம த்யாகாநுவாத மத ப்ரிய:
ப்ரபத்தி ஸர்வ தர்ம த்யாகங்கோக்தி விதி பஞ்ஜக: –422–

க்ஷேத்ரஜ்ஞோபாஸநோபாய நித்யா ஸக்தத்வ பஞ்ஜக !
ஏக வாக்ய விதித்வாநு வாதத் வாநுப பத்தி வித் — 423–

குரூபாய லகூபாயகீ ! ப்ரரோசகதா ப்ரிய:1
பக்தி வித்யா மந்ததீகாதி காரித்வ மதாந்தக — 424–

உபாஸநா மந்த விஸ்வாஸாதி காரித்வ நாஸக : I
உபாஸநா லோக ஸங்கரஹார்த்தித்வ மதமாரக: — 425–

ப்ரபத்தி ரூப ஸகல தர்மத்யாக மதாந்தக ! ப்ரபத் யநுஷ்டாந கால ஸர்வ தர்ம விமுக்திஹா–426-

ப்ரதக்ஷிண ப்ரணாமாத்யநுஜ்ஞா கைங்கர்ய ஹேது த்ருக்
அவஜ்ஞாக்ருத பக்தாதி ஜந்ம சிந்தாதி தோஷ த்ருக்–427–

ஸாஸ்த்ர வ்யவஸ்த்தா ஸித்யர்த்த பக்த ஜந்மாதி சிந்தக:
ஸாரகல்க ஸ்வரூப ஸ்ரீமத் கைங்கர்ய விபாக த்ருக்||–428-

ஸம்பந்ததீ முகாநேக மோக்ஷஹேது மதாந்தக
சரம ஸ்லோக நிகில தர்ம த்யாகி ஷடர்த்தவித்–429-

சரம ஸ்லோகைக ஸப்த ஷடர்த்தோக்தி விசக்ஷண:
பரதந்த்ர ஸ்வபாவாத்ம வித்ய நர்ஹத்வ பஞ்ஜக!!–430-

பரதந்த்ராத்ம கர்த்ருத்வ ஸ்வரூப விஸதோக்திமாந்
ஸ்ரீமத் கர்த்ரு ப்ரேராகாநு மந்த்ரு காரயித்ருத்வ வித் ||–431-

க்ரியமாணாக வித்வம்ஸி ப்ரபத்தி ப்ரதிபாதக
ப்ரஹ்ம வித்யாரம்ப நஷ்டாஸ் லிஷ்ட கர்ம ஸ்வரூபவித்–432-

ப்ரியா ப்ரியோப ஸங்க்ராந்த வித்வத் புண்யாக வேதிதா
ப்ராப்த் யந்தராய வித் ஸாத்யோபாய ரோதி விஸேஷவித் |–433-

ப்ரதிகூலாநு பூத்யாதி ஹேது பாப ஸ்வரூப வித்
குணாஷ்ட காவிர்ப்பா வோக்தி வேத்யார்த்த பரிஸோதக:–434-

கைவல்யாக்ய புமர்த்த ஸ்வரூப நித்யத்வ பாதக
மா ஸூச ஸப்த நிரணுந்த ஸோகாநேக விதத்வவித் — 435–

ஆசார்ய க்ருத்யவிச் சிஷ்ய க்ருத்ய வேதந தீக்ஷித!!
யதீந்த்ரமாஹாநஸிக ஸம்ப்ரதாய ஸூதாப்ரத: || -436–

விரோத பரிஹார ஸ்ரீஸார ஸாராக்ஷி யுக்மத !
ஸெளம்ய கார்த்திக ராகாஸ்ரீ பர்யங்காரோஹண ப்ரிய –437–

அத்ரார்ச்யா ஜகத் ஸர்வம் பாலயந் ஜயதி ஹ்யஸெள–438-

இதம் குரோர் திவ்ய ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் மஹார்த்தம் ஸர ஸார்த்த போதம்!
படந்தி யே ஸர்வ ஸமீஹிதார்த்த ஸித்திம் லபந்தே அத்ர பரத்ர சாபி –439–

பலாநபேஷோபி குரோ ப்ரஸாதாத் ஸித்திம் ஸமாப்நோ த்யநுஷங்க ஸித்தாம் ஸ்ரமாபநோதாய க்ருதாவகாஹம் கங்கா பவித்ரீ குருதே ஹி ஐந்தும் — 440–

கோபால தாஸஸ்ய குருத்த மாங்க்ரி பக்தி ஸ்ரவந்தீ ஹ்ருதயாப்ஜ கோஸாத்
நிர்கத்ய தந்நாம ஸஹஸ்ர ரூபா தத் த்யாயிந! ஸர்வ ஜநாந்புநாதி–441–

இத்யாத்ரேய க்ருஷ்ணார்ய தநூஜஸ்ய ஸ்ரீமத் வேதாந்த ராமாநுஜ மஹா தேஸிக கடாஷ லப்த ஸார்வஜ்ஸ்ய கோபாலார்ய மஹாதேஸிகஸ்ய க்ருதிஷு தேஸிக திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீமதே கோபாலார்ய மஹா தேஸிகாய நம
ஸ்ரீமதே நிகமாந்த தேஸிகாய நம

ஸ்ரீ தேசிக அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்–

ஸாங்க்ய ஸெளகத சார்வாக ஸாங்கராதி தமோநுதம்!
த்ரய்யந்த தேஸிகம் வந்தே வேங்கடேஸாஹ்வயம் மஹ:–

ஸ்ரீமத் வேங்கட நாதஸ்ய நாம்நாம் அஷ்டோத்தரம் ஸதம்
ஸங்க்ருஹ்ய தத் ப்ரஸாதாய வஹ்யே ஸர்வார்த்த ஸித்திதம்–1-
கண்டாவதாரோ அநந்தார்ய தநயோ வேங்கடாதிப :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோக்யம்ஸோ வரதாசார்ய வீக்ஷித: –2-
ராமாநுஜாரர்ய ஸந்த்ருஷ்ட: ஸெளபர்ண மனுசிந்தக
தார்ஷ்ய தத்த வர ஸூத்த! ப்ரஸாதித ஹயாதந –3-
அதீத ஸாங்கஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி விதக்ரணீ;
இதிஹாஸ புராணஜ்ஞ ! ஸூகவிஸ் தர்க்க தத்வ வித்–4-
பாஷ்யகாரோ பயஹர ஸுதாஸீ துக்க ராசி க்ருத்
ப்ரதாந ப்ரதிதந்த்ரஜ்ஞ தேவதா பாரமார்த்யவித் ||–5-
ஸ்ருத வித்யா ஸ்ராவயிதா ஸ்ருத பால ஸ்ருத ப்ரத:
ஸ்ரித: பாண்டித்ய தாதா ச க்ருதக்ருதிய : க்ருதீ ஸூதீ–6-
நிரஸ்த ஸாங்கய ப்ரத்யுக்த யோக காணாத பஞ்ஜந
அசிச்சை தந்ய வாதக்ந க்ஷணி காணுமதார்தந–7-
ஸாகாராதீ நிராகர்த்தா ஸூந்யவாத தமோநுத
குத்ருஷ்ட்யுரக பஷீஸ ஸப்த பங்கீ விலோபந–8-
பேதாபேத மதச்சேத்தா தூதயாதவ கல்பந
அநீஸவாதி தம்போளி : பாஷண்ட மத கண்டந–9-
ஸம்ரக்ஷிதாகம! ஸங்க சக்ர தாரண ரக்ஷிதா
ஊர்த்வ புண்ட்ராங்கந த்ராதா ஸூத்த ஸத்வ மயா க்ருதி–10-
யத்யாசார ப்ரதிஷ்ட்டாதா ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதீ :
அவதார ரஹஸ்யஜ்ஞா அர்ச்சா சவ்ந்தர்ய ஸக்ததீ? ||–11-
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞ ! தத்வ த்ரய விஸேஷவித் | பக்தி யோக விரோதிக்ந ! பக்திமாந் பகவத் ப்ரிய–12-
ஞாநைகஸாரோ த்வயவித் விபக்தாதி க்ருதி த்ரய:
சதுஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞ! ஸம்யக் ஜ்ஞாதாங்க பஞ்சக –13-

ஷ்டங்கயோக நிர்ணேதா ஸப்த தந்து க்ருதுத்தம:
அஷ்டாக்ஷரைக நிரத நவமைகரஸாஸ்ரய–14-
தஸ தாத்பர்ய விஜ்ஞாதா ஸத க்ருச்ச ஸஹஸ்ரவித்
ஸ்தூல லஷோ அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தக–15-
தர்ம ஸங்குஸ் ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸரோருஹ:
பத்மாக்ஷாநந்த ஜநக ததாநந்த குணாகர!–16-
த்யாக ஸப்தார்த்தவித் தர்மவேதீ விதி விஸேஷவித் !
உத்தம ஸ்லோக பாவஜ : பஞ்ச கால பராயண:–17-
ஸு ரஸேவ்ய பூர்ண மநா : ஸூரீந்த்ர ப்ரதி ரூபக!
கவிதார்க்கிக பஞ்சாஸ்ய நிகமாஞ்சல தேஸிக!–18-
வைத்யோ முநீந்த்ரஸ் ஸர்வஜ்ஞ உபகர்த்தா குரூத்தம !
ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதீ: அநகஸ் ஸத்ய வாகபி –19-
ஸாது வ்ருத்திர் முக்தடம்ப !: ஜிதாஷோ தீர்க்க பந்துமாந்!
தயாளு: ஸாஸிதா ஸர்வ ஹிதாசரண தத்பர:–20-
மஹா குரு’: ஸ்வர்ண வர்ண: ஸூபாஹு ! புண்டரீக த்ருத்
பவித்ர பாணிர் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜ–21-
ஸவ்யபாணி தலந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷண:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்ஜவல –22-
பல ஸ்ருதி :
இதீதம் தேஸி கேந்த்ரஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஸதம்
ஸங்கீர்த்தயே தநுதிநம் ஸர்வ பாபாபனுத்தயே–23-
படந் நாம ஸதம் பக்த்யா ஸ்ருத்வா குரு முகாம்புஜாத்
ப்ரஸாதாத் தேஸிகேந்த்ரஸ்ய புக்தி முக்தீ ஸமஸ்நுதே–24-
ஏகைகமபி தந்நாம கீர்த்தயந் ஸக்ருதுத்தமம்
ஸர்வாந் காமான வாப்நோதி கிமுதாஷ்டோத்தரம் ஸதம் –25-
இதி ஸ்ரீ நிக மாந்த மஹாதேஸிகாஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ஸ்ரீ நிகமாந்த தேசிகாஷ்டோத்தர சத நாமாவளி:
ஓம் கண்டாவதாராய நம:
“அநந்தார்ய தநயாய நம :
வேங்கடாதிபாய நம:
ஸ்ரீமல்லக்ஷ்மண யோக்யம்ஸாய நம
வரதாசார்ய வீக்ஷிதாய நம
ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஸௌபர்ணமநு சிந்தகாய நம

தார்ஷ்ய தத்த வராய நம :
ஸூத்தாய நம ,י
ப்ரஸாதித ஹயாநநாய நம

அதீத ஸாங்க ஸகல ஸ்ருதயே நம
ஸ்ம்ருதி விதே நம
அக்ரணயே நம:
இதிஹாஸ புராணஜ்ஞாய நம
ஸு கவயே நம:
தர்க்க தத்வ விதே நம
பாஷ்யகாராய நம
பய ஹராய நம:
ஸூதா ஸிநே நம
துக்த ராஸி க்ருதே நம

பிரதான ப்ரதி தந்த்ரஞ்ஞாய நம
தேவதா பாரமார்த்ய விதே நம:
ஸ்ருத வித்யாய நம
ஸ்ராவயித்ரே நம
ஸ்ருத பாலாய நம:
ஸ்ருத ப்ரதாய நம
ஸ்ரிதாய நம
பாண்டித்ய தாத்ரே நம

க்ருத க்ருத்யாய நம
க்ருதிநே நம
ஸூதியே நம:
நிரஸ்த ஸாங்க்யாய நம:
ப்ரத்யுக்த யோகாய நம.
காணாத பஞ்ஜநாய நம
அசிச்சைதந்ய வாதக்நாய நம
க்ஷணிகாணு மதார்தநாய நம

ஸாகாரதீ நிராகர்த்ரே நம:
ஸூந்யவாத தமோ நுதாய நம
குத்ருஷ்ட்ரக பஷீஸாய நம
ஸப்த பங்கீ விலோபாநாய நம

பேதாபேத மதச் சேத்ரே நம
தூதயாதவ கல்பநாய நம
அநீஸவாதி தம்போளயே
பாஷண்ட மத கண்ட்டநாய நம:
ஸம் ரக்ஷிதாகமாய நம
சங்க சக்ர தாரண ரஷித்ரே நம:
ஊர்த்வ புண்ட்ராங்க த்ராத்ரே நம
ஸூத்த ஸத்வ மயா க்ருதயே நம
யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரதியே நம– 50

அவதார ரஹஸ்யஜ்ஞாய நம
அர்ச்சா ஸெளந்தர்ய ஸக்ததியே நம:
அர்த்த பஞ்சக தத்வஜ்ஞாய நம
தத்வ த்ரய விஸேஷவிதே நம
பக்தியோக விரோதிக்நாய நம:
பக்திமதே நம!
பகவத் பிரியாய நம:
ஜ்ஞாநைக ஸாராய நம
த்வய விதே நம
விபக்தாதி க்ருதி த்ரயாய நம :—60

சதுஸ் ஸ்லோக்யர்த்த ஸாரஜ்ஞாய நம:
ஸம்யக் ஞாதாங்க பஞ்சகாய நம
ஷடங்க யோக நிர்ணேத்ரே நம:
ஸப்த தந்து க்ருதுத்தமாய நம
அஷ்டாக்ஷரைக நிரதாய நம.
நவமைக ரஸாஸ்ரயாய நம.
தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஸதக்ருதே நம
ஸஹஸ்ர விதே நம
ஸ்தூல் லக்ஷாய நம –70

அநேக நாநா கோடி ஜ்ஞாந நிவர்த்தகாய நம
தர்ம ஸங்கவே நம
ஸாது ப்ருந்த வந்தி தாங்க்ரி ஸ்ரோருஹாய நம:
பத்மாக்ஷாநந்த ஜநகாய நம
அநந்த குணாகராய நம:
த்யாக ஸப்தார்த்த விதே நம
தர்ம வேதிநே நம
விதி விஸேஷ விதே நம
உத்தம ஸ்லோக பாவஜ்ஞாய நம!
பஞ்ச கால பராயணாய நம–80–

ஸூர ஸேவ்யாய நம:
பூர்ண மநஸே நம :
ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
கவிதார்க்கிக பஞ்சாஸ்யாய நம:
நிகமாஞ்சல தேஸிகாய நம
வைத்யாய நம:
முநீந்த்ராய நம!
ஸர்வஜ்ஞாய நம:
உபகர்த்ரே நம :
குரூத்தமாய நம –90-

ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதியே நம
அநகாய் நம:
ஸத்ய வாசே நம.
ஸாது வ்ருத்தயே நம:
முக்த டம்பாய நம
ஜிதாஷாய நம:
தீர்க்க பந்துமதே நம:
தயாளவே நம :
ஸாஸித்ரே நம:
ஸர்வ ஹிதா சரண தத் பராய நம: 100-

மஹா குரவே நம
ஸ்வர்ண வர்ணாய நம.
ஸூபாஹவே நம
புண்டரீக த்ருஸே ந :
பவித்ர பாணயே நம:
வ்யாக்யாந முத்ராங்கித் கராம்புஜாய நம:
ஸவ்ய பாணிதல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம:
பர ஸீர்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடகோஜ்லவாய நம –108–

ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜய த்வஜம்!
விஸ்வாமித்ர குலோத் பூதம் வரதார்ய மஹம் பஜே

வித்வந் மதங்கஜ ஸிகாபரணாய மாநௌ விஸ்வாதிஸாயி மஹிமாம்பு நிதாந பூதெள
வித்வேஷி வாத மகுடீ க்ருத குட்டநௌதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–1-

விஸ்வம்பரா மதிதராமபி பாஸயந்தெள விந்யாஸதோ விவித ஸஜ்ஐந தாநுபாயெள
விஸ்தீர்ண ஸம்ஸ்ருதி மஹார்ணவ் கர்ண தாரெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் ப்ரபத்யே–2-

விஸ்வாந் தராந்த தமஸ க்ஷபண ப்ர வீணவ் வித்யோதமாந நகரேந்து மயூக ஜாலை!
விக்யாத தாமரஸ ஸங்க ரதாங்க சிஹ்நெள
வேதாந்த ஸூரி சரணெவ் ஸரணம் ப்ரபத்யே-3-

வித்வேஷமாந மதமத்ஸர வித்விஷெளயௌ விஷ்ண் வாலாயாநுகம நோத்தம நித்ய க்ருத்யெள
வேதாந்த வ்ருத்த விஹிதாஞ்ஜலி கோசரெள தெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–4–

விஷ்ண் வர்ப்பிதாத்மஜந பாக்ய விபாக பூதெள விப்ராஜமாந் நவகோக நதாநுகல்பெவ்
வேஷாந்தரோபகத பல்லவ தல்லஜெளதெள
வேதாந்த ஸூரி சரணௌ ஸரணம் பிரபத்யே–5–

வேதோ முகைரபி ஸூரைர் விஹித ப்ரணாமௌ வேலாதிலங்கி ஸுஷமா குமரபாவெள
விஸ்மேர கேஸரலஸந் ம்ருது வாங்குலீகௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–6-

வித்ரா விதோத்பட விகார ரஜோ குணெள தெள விக்யாத பூரி விபவேந் ரஜ கணேந
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரௌ வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பரபத்யே–7-

விஷ்ண்வங்கரி நிர்கத ஸரித் ப்ரவராநு பாவ்யெள
வித்யா விநீத ஜநிதைர் விமலை ஸ்வ தீர்த்தை!!
வ்யாநம்ர ஸிஷ்ய ஜந ரக்ஷண ஜாகரூகெள வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் பிரபத்யே–8–

வீதீஷு ரங்க நகரே க்ருத சங்கரமௌதெள விஷ்ணூத்ஸவேஷு விதி வாஸவ ஸேவிதேஷு
வித்யா விநீத ஐநதா விஹிதா நுஸாரெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–9-

விஸ்வாஸ விஷ்ணு பத பக்தி விரக்தி ஸூந்யம் |
விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு ஸக்தம்
வித்வத்ஸபாநு கதி யோக்ய மிஹாததாநெள
வேதாந்த ஸூரி சரணெள ஸரணம் ப்ரபத்யே–10-

ஸ்ரீமதே வேதாந்த தேஸிகாய நம:

ஸ்ரீ தேசிக மங்களாசாஸநம்-

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய : கவி தார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நி தத்தாம் ஸதா ஹ்ருதி |

ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்ய மஹம் பஜே

ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ராய ஸிம்ஹாய கவிவாதிநாம்!
வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேஸாய மங்களம் !–1-

நபஸ்யமாஸி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே
விஸ்வாமித்ராந் வயாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்|| 2||

பிதா யஸ்யாநந்த ஸுரி! புண்டரீகாஷ யஜ்வந:)
பெளத்ரோ யஸ் தநயஸ் தோதாரம்பாயாஸ் தஸ்ய மங்களம்–3-

வேங்கடேஸாவதாரோயம் ததி கண்டாம் ஸோ அதவா பவேத்
யதீந்த்ராம்ஸோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் –4-

ஸ்ரீ பாஷ்யகார பந்தாந மாத்மநா தர்ஸீதம் புந!!
உத்தரத்து மாகதோ நூந மித்யுக்தா யாஸ்து மங்களம் | -5-

யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம்
அவாப்ய வ்ருத்திம் கமிதஸ் தஸ்மை யோக்யாய மங்களம் 6|||

ராமாநுஜார்யா தாத்ரேயாந் மாதுலாத் ஸ்கலா கலா!
அவாப விம்ஸத் யப்தேயஸ் தஸ்மை ப்ராஜ்ஞாய மங்களம் –7-

ஸ்ருத ப்ரகாஸிகா பூமெள யேநாதெள பரி ரஷிதா
ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ தஸ்மை ஸ்ரேஷ்டாய மங்களம் –8-

ஸாம்ஸ்க்ருதீபிர் த்ராமிடீபிர் பஹ்வீபி க்ருதிபிர் ஜநாந்
யஸ் ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் –9-

ய : க்யாதி லாப பூஜாஸு விமுகோ வைஷ்ணவே ஜநே!
க்ரயணீய தஸாம் பராப்த : தஸ்மை பவ்யாய மங்களம் –10-

யஸ்மா தேவ மயா ஸர்வம் ஸாஸ்த்ர மக்ராஹி நாந்யத :
தஸ்மை வேங்கட நதாய மம நாதாய மங்களம் –11-

பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச
ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஸாய மங்களம்–12-

ய கருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம்
ஆஸாஸ்தே அநு திநம் ஸோ அபி பவேந் மங்கள பாஜநம் || 13 ||

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண ஸாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

ஸ்ரீ தேசிக ஸ்துதி: –
ஸ்ரீ தொட்டையாசார்யர் (வைபவ ப்ரகாசிகை)
ஜயது நிகம சூடா தேஸிகேந்த்ரோ தயாளு
ஜயதி ஸுமதி ஸேவ்யா ஸோபநா தஸ்ய ஸூக்தி:
ஐயதி ஸூப தம் ஸீலயந் ஸூரி ஸங்க:
ஜயதி வஸூ மதீயம் தஸ்ய ஸஞ்சார தந்யா-

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன்
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபஹத ஸ்ப்ருஹம் !
ஸ்வதந்த்ரம் ஸர்வ தந்த்ரேஷ வேங்கடேஸாஹ்வயம் மஹ :

ஸ்ரீ அண்ணயார்ய மஹா தேசிகன்
கவிதார்க்கிக கண்டீரவ சரணாப்ஜம்
பிப்ருத மெளலி பாகேஷு
விலஸதி வ ஸார்வஜ்ஞம் விபுத ஐநா : ஸர்வ மங்களோல்லலிதம் |

ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர பரகால யதீந்த்ரர்
வாதி த்விய ஸிரோ பங்க பஞ்சாநந பராக்ரம:
ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கிரம் விஐயதாம் புவி|

ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம்

ஸ்மயமாநாநநாம் போஜம் தயமாந த்ருஸம் குணாந் !
அயமாநம் குரும் ஸ்ம்ருத்வா வயமாநந்த பூரிதா | :

பரிமித மதி துஷ் பரவேஸா கிலாம்நாய கோடீ குஹாந்தர் நிராபாத ஸஞ்சார தீவ்யத் பர ப்ரஹ்ம பஞ்சாஸ்ய நிஸ் ஸங்க ஹஸ்த க்ரஹா பூர்வ திவ்யெளஷ தீபூத ஸூக்தி ச்சலோதீத திவ்யாபகா பூர நிர்த்தூத விஸ்வம்பரா பாப பாளீக நாளீக ஜந்மா த்யமேய ப்ரபாவ ப்ரதிஷட்டாபிதா ஸேஷ ராமாநுஜாசார்ய ஸித்தாந்த ஸேதோ ! பஜத் பவ்ய ஹேதோ ! சிராவ்ருத்த ஸம்ஸார பாதோதி நிர்மக்ந லோகாவநோத்யத் தயாஸார ஸேஷாசலாதீஸ ஸங்கல்ப ஸம்பூத கண்டாவதாரா கமாந் தார்ய நிஸ் ஸீம நிர் ஹேது காருண்ய ஸிந்தோ! ப்ரபந்கைக பந்தோ! தியாந்தம் மதாந்தம் பவாப்தெள நிமக்நம் கதாசார
கந்தம் பவத்பாத பங்கேருஹ ப்ரேம பந்தம் குருஷ்வ ப்ராபோமாம் க்ருதாஜ்ஞாந பங்கை: பயோஜாந்தரங்கை ரபாங்கை ருதீக்ஷஸ்வ ரக்ஷ ஸ்வயம் — 1–

ஐயது நிகம சூளிகா தேஸிகோ நிர்மம ஸ்தோம துஸ்ஸாத நித்யாந மந்தாந நிர்மத்ய மாநாத்ம சேத: பயோராஸி நிர்யத் ஸுதாபாநு ரேகாயிதாமந்த விஜ்ஞாந ஸந் மல்லிகா மஞ்ஜரீ வாஸிதாபஷ திங்மண்டலோ வித்விஷந் மண்டலி பூமி ப்ருத் கண்டநா கண்டல: குண்டலீஸ ப்ரதா ஹாரி பாண்டித்ய
பாக் சண்டபாது ப்ரபா ஸ்பர்த்தி காய த்யுதிர் நிஸ்துல க்ரந்த நிர்மாண வைசித்ர்ய கண்டாபதீ பூத
துஷ்ப்ராப நிஸ்ரேயஸாஸ்த்தா நிஷித்தாகமாளி விருத்த ப்ரசார; ப்ரபந்ந ப்ரஸித்தாபதாந ப்ரணாடீ விநிஸ்சேய ஸஞ்சாரி லக்ஷ்மீ ஸஹாயாவதாரோ மஹாந் — 2-

ப்ரபதந ஸரணி ஸ்வரூப ப்ரமாண ப்ரசாரேஷு புங்காநு புங்காயிதாநேக துர்வார ஸந்தேஹ ஸந்தோஹ காடாந்தகார ப்ரதாந ப்ரதிக்ஷேப பாலாருணாகார நிக்ஷே பரக்ஷாதி ஸங்க்ஷிப்த யுக்த்யா விபக்ஷோக்தி ஸிக்ஷாதி தக்ஷம் ஜகத் பங்க பங்கா ப்ரகங்கா ஸமுத்பாதி துங்காநு பாவாந்த ரங்கேஸ பூவாத
ஸங்கோதயத் பாஷ்ய வாதாவளீ யுக்ம ஸம்பந்ந மாநந்த வாசா ஸுதாபூர தோராஹவோத்யுக்த ஸராதிக ஸ்தோத்ர விஸ்மாபிதாஸேஷ வித்வஜ்ஜந ஸ்தோம ஸம்பாவ்யமாநம் பவாநீ தவாம்போஜ ஸம்பூத ஜம்பாரி முக்யாமர வ்ராத நிஸ் ஸங்க ஜ்ரும்பத் ஸ்வ வீராயீ தாநங்க தாஸீ க்ருதி ப்ரௌட கம்பீர சித்த ப்ரவ்ருத்தம் பதாம்போஜ ஸக்தாப தம்போநிதி க்ராஸ கும்பீ குமாரம் பஜேஹம் துராசார துர்போத தூர்வாத ஸந்தேஸ வைதேஸிகம் தேஸீகம் || 3 ||

பவ ஹ்ருதய சிரத்நகீ ரஞ்சலாசார்ய வர்யேத்புதா நந்தசர்யே விசார்யேஹ கத்யந்தாரபாவ முத்புல்ல பத்ம ப்ரவாள ப்ரதி ஸ்பர்த்தி பாதே, கதா யோதநோத்யுக்த ஸச்சாத்ர ஜைத்ரோதயத் காஹளீ ஸோபி ஜங்கா யுகீபாஜி, ரம்பா வநஸ் தம்ப கும்பீந்த்ர ஸூண்டோபமாநோரு காண்டே, வளக்ஷாம் ஸூக த்வந்த்வ ராஜத்கடீகே, ஸமுத்யத் விவஸ்வத் ப்ரபா புஞ்ஜதிக்காரி தேஜ:ப்ரவாஹாந்த விப்ராம்யதாவர்த்த ஸங்காஸ்பதி பூத கம்பீர நாபௌ, கவாடப்ரமாதாயி வஷோ விலோலத்
துலஸ்யப்ஜ பிஜாக்ஷமாலே, கராம்போஜ நாளாயிதாஜாநு ஸம்லம்பி பாஹௌ, களஜ் ஜ்யோதிஷாதோ பவத் கம்புகாந் தெள, ஸரத்பர்வ ஸோமாபி ராமாந நாம்போ ருஹாந்தர் ப்ரமத் ப்ருங்க யுக்மீ பவல் லோசநே,மோசநே துஷ்க்ருதாளேர் பஹிர்நிர்ய தந்தஸ்த்த ஸத்வாம்ஸ ஸந்தேஹ பாத்ரீபவத்
காத்ர ஸக்தோர்த்வ புண்ட்ர ஸ்ரியாலங்க்ருதே, வேங்கடேஸே குரௌ| | 4

ஷட் ஸப்ததி கணோபேத சரணோ ம்ருது பந்தந !!
படதாம ஸூபச்சேதீ த்ரய்யந்தாசார்ய தண்டக–

ஸ்ரீதேசிகன் வாழித் திருநாமம்-நேரிசை வெண்பா
வாழி யிராமாநுசப் பிள்ளான் மாதகவால்
வாழு மணிநிக மாந்த குரு – வாழியவன்
மாறன் மறையுமிராமானுசன் பாடியமும்
தேறும் படியுரைக்குஞ் சீர்.

எண்சீராசிரிய விருத்தம்
வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே
கஞ்சத் திருமங்கை யுகக்க வந்தோன் வாழியே
கலியனுரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே
தண்டமிழ்த் தூப்புல் திருவேங் கடவன தாள் வாழியே!

நேரிசை வெண்பா
நானிலமுந்தா வாழ நான் மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ- ஞானியர்கள்
சென்னி யணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றணடிரும்

திருவோலக்கப் பாட்டு
வாழி யணி தூப்புல் வரு நிகமாந் தாசிரியன்,
வாழி யவன் பாதார விந்த மலர் – வாழியவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள்

திருநாள் பாட்டு
வாதா சனவர ரிவரென வருமா பாடியம் வகை பெறு நாள்
வகுளா பரணப் பெருமாள் தமிழின் வாசி யறிந்திடு நாள்
பேதா பேதம் பிரம மெனாவகை பிரமந் தெளிவுறு நாள்
பேச்சொன் றுக்குச் சததூடணியைப் பேசிய தேசிக நாள்
தீதா கியபல மாயக் கலியைச் சிக்கென வென்றிடு நாள்
திக்கெட்டும் புகழ் சீபா டியத்தைத் தெளிய வுரைத்திடு நாள்,
ஓதா தோதும் வேதாந்தாரிய னுதயஞ் செய்திடு நாள்
உத்தமமான புரட்டாசித் திருவோண மெனுந்நாளே–

செங்கமலத்தய னனனவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்
சீர் கொளிராமா நுசவெனுமந்திரம் பதிகளில் வாழ் திரு நாள்
செங்கல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு
சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடுநாள்,
தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடுநாள்,
சீர்மதி யாகம மெளலி தந் தேசிகர் பிறந்து வளர்ந்திடுநாள்,
பங்கய மா மலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்,
பார் திகழ் பாத்திர பதத் திருவோணமெனு திரு நன்னாளே

ஸ்ரீ தேசிகனின் திருநக்ஷத்ரம்

கந்யா ஸ்ரவண ஸம்பூதம் கண்டாம்ஸம் வேங்கடேஸிது
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்!

———————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி–ஸ்ரீ நரசிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்–

November 14, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
  3. ஓம் வஜ்ரிணே நம:
  4. ஓம் வஜ்ரதேஹாய நம:
  5. ஓம் வஜ்ராய நம:
  6. ஓம் வஜ்ரநகாய நம:
  7. ஓம் வாஸுதேவாய நம:
  8. ஓம் வந்த்யாய நம:
  9. ஓம் வரதாய நம:
  10. ஓம் வராத்மநே நம:
  11. ஓம் வரதாபயஹஸ்தாய நம:
  12. ஓம் வராய நம:
  13. ஓம் வரரூபிணே நம:
  14. ஓம் வரேண்யாய நம:
  15. ஓம் வரிஷ்டாய நம:
  16. ஓம் ஸ்ரீவராய நம:
  17. ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
  18. ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
  19. ஓம் பராத்பரபரேஶாய நம:
  20. ஓம் பவித்ராய நம:
  21. ஓம் பிநாகிநே நம:
  22. ஓம் பாவநாய நம:
  23. ஓம் ப்ரஸந்நாய நம:
  24. ஓம் பாஶிநே நம:
  25. ஓம் பாபஹாரிணே நம: 25
  1. ஓம் புருஷ்டுதாய நம:
  2. ஓம் புண்யாய நம:
  3. ஓம் புருஹூதாய நம:
  4. ஓம் தத்புருஷாய நம:
  5. ஓம் தத்யாய நம:
  6. ஓம் புராணபுருஷாய நம:
  7. ஓம் புரோதஸே நம:
  8. ஓம் பூர்வஜாய நம:
  9. ஓம் புஷ்கராக்ஷாய நம:
  10. ஓம் புஷ்பஹாஸாய நம:
  11. ஓம் ஹாஸாய நம:
  12. ஓம் மஹாஹாஸாய நம:
  13. ஓம் ஶார்ங்கிணே நம:
  14. ஓம் ஸிம்ஹாய நம:
  15. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  16. ஓம் ஜகத்வஶ்யாய நம:
  17. ஓம் அட்டஹாஸாய நம:
  18. ஓம் ரோஷாய நம:
  19. ஓம் ஜலவாஸாய நம:
  20. ஓம் பூதாவாஸாய நம:
  21. ஓம் பாஸாய நம:
  22. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
  23. ஓம் கட்கிநே நம:
  24. ஓம் கட்கஜிஹ்வாய நம:
  25. ஓம் ஸிம்ஹாய நம: 50
  1. ஓம் கட்கவாஸாய நம:
  2. ஓம் மூலாதிவாஸாய நம:
  3. ஓம் தர்மவாஸாய நம:
  4. ஓம் தந்விநே நம:
  5. ஓம் தநஞ்ஜயாய நம:
  6. ஓம் தந்யாய நம:
  7. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  8. ஓம் ஶுபஞ்ஜயாய நம:
  9. ஓம் ஸூத்ராய நம:
  10. ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
  11. ஓம் நிரஞ்சநாய நம:
  12. ஓம் நீராய நம:
  13. ஓம் நிர்குணாய நம:
  14. ஓம் குணாய நம:
  15. ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
  16. ஓம் நிர்வாணபதாய நம:
  17. ஓம் நிபிடாய நம:
  18. ஓம் நிராலம்பாய நம:
  19. ஓம் நீலாய நம:
  20. ஓம் நிஷ்கலாய நம:
  21. ஓம் கலாய நம:
  22. ஓம் நிமேஷாய நம:
  23. ஓம் நிபந்தாய நம:
  24. ஓம் நிமேஷகமநாய நம:
  25. ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
  1. ஓம் நிராஶாய நம:
  2. ஓம் நிஶ்சயாய நம:
  3. ஓம் நிஜாய நம:
  4. ஓம் நிர்மலாய நம:
  5. ஓம் நிபந்தாய நம:
  6. ஓம் நிர்மோஹாய நம:
  7. ஓம் நிராக்ருதே நம:
  8. ஓம் நித்யாய நம:
  9. ஓம் ஸத்யாய நம:
  10. ஓம் ஸத்கர்மநிரதாய நம:
  11. ஓம் ஸத்யத்வஜாய நம:
  12. ஓம் முஞ்ஜாய நம:
  13. ஓம் முஞ்ஜகேஶாய நம:
  14. ஓம் கேஶிநே நம:
  15. ஓம் ஹரீஶாய நம:
  16. ஓம் ஶேஷாய நம:
  17. ஓம் குடாகேஶாய நம:
  18. ஓம் ஸுகேஶாய நம:
  19. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  20. ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
  21. ஓம் ஜலேஶாய நம:
  22. ஓம் ஸ்தலேஶாய நம:
  23. ஓம் பத்மேஶாய நம:
  24. ஓம் உக்ரரூபிணே நம:
  25. ஓம் குஶேஶயாய நம: 100
  1. ஓம் கூலாய நம:
  2. ஓம் கேஶவாய நம:
  3. ஓம் ஸூக்திகர்ணாய நம:
  4. ஓம் ஸூக்தாய நம:
  5. ஓம் ரக்தஜிஹ்வாய நம:
  6. ஓம் ராகிணே நம:
  7. ஓம் தீப்தரூபாய நம:
  8. ஓம் தீப்தாய நம:
  9. ஓம் ப்ரதீப்தாய நம:
  10. ஓம் ப்ரலோபிநே நம:
  11. ஓம் ப்ரச்சந்தாய நம:
  12. ஓம் ப்ரபோதாய நம:
  13. ஓம் ப்ரபவே நம:
  14. ஓம் விபவே நம:
  15. ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
  16. ஓம் பாந்தாய நம:
  17. ஓம் ப்ரமாய நம:
  18. ஓம் அப்ரமிதாய நம:
  19. ஓம் ப்ரகாஶாய நம:
  20. ஓம் ப்ரதாபாய நம:
  21. ஓம் ப்ரஜ்வலாய நம:
  22. ஓம் உஜ்ஜ்வலாய நம:
  23. ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
  24. ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
  25. ஓம் ஜ்வாலிநே நம: 125
  1. ஓம் மஹோஜ்ஜவலாய நம:
  2. ஓம் காலாய நம:
  3. ஓம் காலமூர்த்திதராய நம:
  4. ஓம் காலாந்தகாய நம:
  5. ஓம் கல்பாய நம:
  6. ஓம் கலநாய நம:
  7. ஓம் க்ருதே நம:
  8. ஓம் காலசக்ராய நம:
  9. ஓம் சக்ராய நம:
  10. ஓம் வஷட்சக்ராய நம:
  11. ஓம் சக்ரிணே நம:
  12. ஓம் அக்ரூராய நம:
  13. ஓம் க்ருதாந்தாய நம:
  14. ஓம் விக்ரமாய நம:
  15. ஓம் க்ரமாய நம:
  16. ஓம் க்ருத்திநே நம:
  17. ஓம் க்ருத்திவாஸாய நம:
  18. ஓம் க்ருதஜ்ஞாய நம:
  19. ஓம் க்ருதாத்மநே நம:
  20. ஓம் ஸங்க்ரமாய நம:
  21. ஓம் க்ருத்தாய நம:
  22. ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
  23. ஓம் அரூபாய நம:
  24. ஓம் ஸரூபாய நம:
  25. ஓம் ஹரயே நம: 150
  1. ஓம் பரமாத்மநே நம:
  2. ஓம் அஜேயாய நம:
  3. ஓம் ஆதிதேவாய நம:
  4. ஓம் அக்ஷயாய நம:
  5. ஓம் க்ஷயாய நம:
  6. ஓம் அகோராய நம:
  7. ஓம் ஸுகோராய நம:
  8. ஓம் கோரகோரதராய நம:
  9. ஓம் அகோரவீர்யாய நம:
  10. ஓம் லஸத்கோராய நம:
  11. ஓம் கோராத்யக்ஷாய நம:
  12. ஓம் தக்ஷாய நம:
  13. ஓம் தக்ஷிணாய நம:
  14. ஓம் ஆர்யாய நம:
  15. ஓம் ஶம்பவே நம:
  16. ஓம் அமோகாய நம:
  17. ஓம் குணௌகாய நம:
  18. ஓம் அநகாய நம:
  19. ஓம் அகஹாரிணே நம:
  20. ஓம் மேகநாதாய நம:
  21. ஓம் நாதாய நம:
  22. ஓம் மேகாத்மநே நம:
  23. ஓம் மேகவாஹநரூபாய நம:
  24. ஓம் மேகஶ்யாமாய நம:
  25. ஓம் மாலிநே நம: 175
  1. ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
  2. ஓம் வ்யாக்ரதேஹாய நம:
  3. ஓம் வ்யாக்ரபாதாய நம:
  4. ஓம் வ்யாக்ரகர்மணே நம:
  5. ஓம் வ்யாபகாய நம:
  6. ஓம் விகடாஸ்யாய நம:
  7. ஓம் வீராய நம:
  8. ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
  9. ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
  11. ஓம் விஷ்வக்ஸேநாய நம:
  12. ஓம் ஸேநாய நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் பலாய நம:
  15. ஓம் விரூபாக்ஷாய நம:
  16. ஓம் வீராய நம:
  17. ஓம் விஶேஷாக்ஷாய நம:
  18. ஓம் ஸாக்ஷிணே நம:
  19. ஓம் வீதஶோகாய நம:
  20. ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
  21. ஓம் விதாநாய நம:
  22. ஓம் விதேயாய நம:
  23. ஓம் விஜயாய நம:
  24. ஓம் ஜயாய நம:
  25. ஓம் விபுதாய நம: 200
  1. ஓம் விபாவாய நம:
  2. ஓம் விஶ்வம்பராய நம:
  3. ஓம் வீதராகாய நம:
  4. ஓம் விப்ராய நம:
  5. ஓம் விடங்கநயநாய நம:
  6. ஓம் விபுலாய நம:
  7. ஓம் விநீதாய நம:
  8. ஓம் விஶ்வயோநயே நம:
  9. ஓம் சிதம்பராய நம:
  10. ஓம் வித்தாய நம:
  11. ஓம் விஶ்ருதாய நம:
  12. ஓம் வியோநயே நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் விகல்பாய நம:
  15. ஓம் கல்பாதீதாய நம:
  16. ஓம் ஶில்பிநே நம:
  17. ஓம் கல்பநாய நம:
  18. ஓம் ஸ்வரூபாய நம:
  19. ஓம் பணிதல்பாய நம:
  20. ஓம் தடித்ப்ரபாய நம:
  21. ஓம் தார்யாய நம:
  22. ஓம் தருணாய நம:
  23. ஓம் தரஸ்விநே நம:
  24. ஓம் தபநாய நம:
  25. ஓம் தரக்ஷாய நம: 225
  1. ஓம் தாபத்ரயஹராய நம:
  2. ஓம் தாரகாய நம:
  3. ஓம் தமோக்நாய நம:
  4. ஓம் தத்வாய நம:
  5. ஓம் தபஸ்விநே நம:
  6. ஓம் தக்ஷகாய நம:
  7. ஓம் தநுத்ராய நம:
  8. ஓம் தடிதே நம:
  9. ஓம் தரளாய நம:
  10. ஓம் ஶதரூபாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶத்தாராய நம:
  13. ஓம் ஶதபத்ராய நம:
  14. ஓம் தார்க்ஷ்யாய நம:
  15. ஓம் ஸ்திதயே நம:
  16. ஓம் ஶதமூர்த்தயே நம:
  17. ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
  18. ஓம் ஶாஶ்வதாய நம:
  19. ஓம் ஶதாத்மநே நம:
  20. ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
  21. ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
  22. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  23. ஓம் தேவாய நம:
  24. ஓம் திஶஶ்ரோத்ராய நம:
  25. ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
  1. ஓம் மஹாஜிஹ்வாய நம:
  2. ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
  3. ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
  4. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  5. ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
  6. ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
  7. ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
  8. ஓம் ஸ்தூலாய நம:
  9. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  10. ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
  11. ஓம் ஸுக்ஷுண்யாய நம:
  12. ஓம் ஸுபிக்ஷாய நம:
  13. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
  14. ஓம் ஸௌரிணே நம:
  15. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
  16. ஓம் தர்மாய நம:
  17. ஓம் லோகாத்யக்ஷாய நம:
  18. ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
  19. ஓம் ஶிக்ஷாய நம:
  20. ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
  21. ஓம் காலாத்யக்ஷாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணாய நம:
  23. ஓம் மூலாத்யக்ஷாய நம:
  24. ஓம் அதோக்ஷஜாய நம:
  25. ஓம் மித்ராய நம: 275
  1. ஓம் ஸுமித்ரவருணாய நம:
  2. ஓம் ஶத்ருக்நாய நம:
  3. ஓம் அவிக்நாய நம:
  4. ஓம் விக்நகோடி ஹராய நம:
  5. ஓம் ரக்ஷோக்நாய நம:
  6. ஓம் தமோக்நாய நம:
  7. ஓம் பூதக்நாய நம:
  8. ஓம் பூதபாலாய நம:
  9. ஓம் பூதாய நம:
  10. ஓம் பூதாவாஸாய நம:
  11. ஓம் பூதிநே நம:
  12. ஓம் பூதவேதாளகாதாய நம:
  13. ஓம் பூதாதிபதயே நம:
  14. ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
  15. ஓம் பூதஸம்யமிநே நம:
  16. ஓம் மஹாபூதவே நம:
  17. ஓம் ப்ருகவே நம:
  18. ஓம் ஸர்வபூதாத்மநே நம:
  19. ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
  20. ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
  21. ஓம் ஸர்வாதாராய நம:
  22. ஓம் ஶர்வாய நம:
  23. ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
  24. ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
  25. ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
  1. ஓம் ஸர்வாக்ஞாய நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் ஸர்வஶக்திதராய நம:
  4. ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
  5. ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
  6. ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
  7. ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
  8. ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
  9. ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
  10. ஓம் பிங்காக்ஷாய நம:
  11. ஓம் ஏகஶ்ருங்காய நம:
  12. ஓம் த்விஶ்ருங்காய நம:
  13. ஓம் மரீசயே நம:
  14. ஓம் பஹுஶ்ருங்காய நம:
  15. ஓம் லிங்காய நம:
  16. ஓம் மஹாஶ்ருங்காய நம:
  17. ஓம் மாங்கள்யாய நம:
  18. ஓம் மனோஜ்ஞாய நம:
  19. ஓம் மந்தவ்யாய நம:
  20. ஓம் மஹாத்மநே நம:
  21. ஓம் மஹாதேவாய நம:
  22. ஓம் தேவாய நம:
  23. ஓம் மாதுலுங்கதராய நம:
  24. ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
  25. ஓம் ப்ரஸ்துதாய நம: 325
  1. ஓம் மாயிநே நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் அநந்தரூபாய நம:
  4. ஓம் மாயிநே நம:
  5. ஓம் ஜலஶாயிநே நம:
  6. ஓம் மஹோதராய நம:
  7. ஓம் மந்தாய நம:
  8. ஓம் மததாய நம:
  9. ஓம் மதாய நம:
  10. ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
  11. ஓம் மாதவாய நம:
  12. ஓம் முராரயே நம:
  13. ஓம் மஹாவீர்யாய நம:
  14. ஓம் தைர்யாய நம:
  15. ஓம் சித்ரவீர்யாய நம:
  16. ஓம் சித்ரகூர்மாய நம:
  17. ஓம் சித்ராய நம:
  18. ஓம் சித்ரபாநவே நம:
  19. ஓம் மாயாதீதாய நம:
  20. ஓம் மாயாயை நம:
  21. ஓம் மஹாவீராய நம:
  22. ஓம் மஹாதேஜஸே நம:
  23. ஓம் பீஜாய நம:
  24. ஓம் தேஜோதாம்நே நம:
  25. ஓம் பீஜிநே நம: 350
  1. ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
  2. ஓம் சித்ரபாநவே நம:
  3. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் துஷ்டாய நம:
  5. ஓம் புஷ்டிகராய நம:
  6. ஓம் ஶிபிவிஷ்டாய நம:
  7. ஓம் ஹ்ருஷ்டாய நம:
  8. ஓம் புஷ்டாய நம:
  9. ஓம் பரமேஷ்டிநே நம:
  10. ஓம் விஶிஷ்டாய நம:
  11. ஓம் ஶிஷ்டாய நம:
  12. ஓம் கரிஷ்டாய நம:
  13. ஓம் இஷ்டதாயிநே நம:
  14. ஓம் ஜ்யேஷ்டாய நம:
  15. ஓம் ஶ்ரேஷ்டாய நம:
  16. ஓம் துஷ்டாய நம:
  17. ஓம் அமிததேஜஸே நம:
  18. ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
  19. ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
  20. ஓம் வைகுண்டாய நம:
  21. ஓம் விகுண்டாய நம:
  22. ஓம் கேஶிகண்டாய நம:
  23. ஓம் கண்டீரவாய நம:
  24. ஓம் லுண்டாய நம:
  25. ஓம் நிஶ்ஶடாய நம: 375
  1. ஓம் ஹடாய நம:
  2. ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
  3. ஓம் ருத்ராய நம:
  4. ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
  5. ஓம் ருதுத்வஜாய நம:
  6. ஓம் வஜ்ராய நம:
  7. ஓம் மந்த்ரராஜாய நம:
  8. ஓம் மந்த்ரிணே நம:
  9. ஓம் த்ரிநேத்ராய நம:
  10. ஓம் த்ரிவர்காய நம:
  11. ஓம் த்ரிதாம்நே நம:
  12. ஓம் த்ரிஶூலிநே நம:
  13. ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
  14. ஓம் த்ரிதேஹாய நம:
  15. ஓம் த்ரிதாத்மநே நம:
  16. ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
  17. ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
  18. ஓம் அக்ஷோப்யாய நம:
  19. ஓம் அநிருத்தாய நம:
  20. ஓம் அப்ரமேயாய நம:
  21. ஓம் பாநவே நம:
  22. ஓம் அம்ருதாய நம:
  23. ஓம் அநந்தாய நம:
  24. ஓம் அமிதாய நம:
  25. ஓம் அமிதௌஜஸே நம: 400
  1. ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
  2. ஓம் அபஸ்மார விகாதிநே நம:
  3. ஓம் அந்நதாய நம:
  4. ஓம் அந்நரூபாய நம:
  5. ஓம் அந்நாய நம:
  6. ஓம் அந்நபுஜே நம:
  7. ஓம் நாத்யாய நம:
  8. ஓம் நிரவத்யாய நம:
  9. ஓம் வேத்யாய நம:
  10. ஓம் அத்புதகர்மணே நம:
  11. ஓம் ஸத்யோஜாதாய நம:
  12. ஓம் ஸங்காய நம:
  13. ஓம் வைத்யுதாய நம:
  14. ஓம் அத்வாதீதாய நம:
  15. ஓம் ஸத்வாய நம:
  16. ஓம் வாகதீதாய நம:
  17. ஓம் வாக்மிநே நம:
  18. ஓம் வாகீஶ்வராய நம:
  19. ஓம் கோபாய நம:
  20. ஓம் கோஹிதாய நம:
  21. ஓம் கவாம்பதயே நம:
  22. ஓம் கந்தர்வாய நம:
  23. ஓம் கபீராய நம:
  24. ஓம் கர்ஜிதாய நம:
  25. ஓம் ஊர்ஜிதாய நம: 425
  1. ஓம் பர்ஜந்யாய நம:
  2. ஓம் ப்ரபுத்தாய நம:
  3. ஓம் ப்ரதாநபுருஷாய நம:
  4. ஓம் பத்மாபாய நம:
  5. ஓம் ஸுநாபாய நம:
  6. ஓம் பத்மநாபாய நம:
  7. ஓம் மாநிநே நம:
  8. ஓம் பத்மநேத்ராய நம:
  9. ஓம் பத்மாய நம:
  10. ஓம் பத்மாயா: பதயே நம:
  11. ஓம் பத்மோதராய நம:
  12. ஓம் பூதாய நம:
  13. ஓம் பத்மகல்போத்பவாய நம:
  14. ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
  15. ஓம் பூபத்மோத்தரணாய நம:
  16. ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
  17. ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
  18. ஓம் ப்ரஹ்மணே நம:
  19. ஓம் ப்ரஹ்மரூபாய நம:
  20. ஓம் பத்மநேத்ராய நம:
  21. ஓம் ப்ரஹ்மதாய நம:
  22. ஓம் ப்ராஹ்மணாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
  25. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
  1. ஓம் தேவாய நம:
  2. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
  3. ஓம் த்ரிவேதிநே நம:
  4. ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
  5. ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
  6. ஓம் அஶ்வஶிரஸே நம:
  7. ஓம் அதர்வஶிரஸே நம:
  8. ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
  9. ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் லோலாய நம:
  11. ஓம் லலிதாய நம:
  12. ஓம் லாவண்யாய நம:
  13. ஓம் லவித்ராய நம:
  14. ஓம் பாஸகாய நம:
  15. ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
  16. ஓம் லக்ஷாய நம:
  17. ஓம் லக்ஷணாய நம:
  18. ஓம் லஸத்தீப்தாய நம:
  19. ஓம் லிப்தாய நம:
  20. ஓம் விஷ்ணவே நம:
  21. ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
  22. ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
  23. ஓம் க்ருஷ்ணாய நம:
  24. ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
  25. ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
  1. ஓம் ஹாரிணே நம:
  2. ஓம் வநமாலிநே நம:
  3. ஓம் கிரீடிநே நம:
  4. ஓம் குண்டலிநே நம:
  5. ஓம் ஸர்வாங்காய நம:
  6. ஓம் ஸர்வதோமுகாய நம:
  7. ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
  8. ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
  9. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  10. ஓம் ஸதாதுஷ்டாய நம:
  11. ஓம் ஸமர்த்தாய நம:
  12. ஓம் ஸமரப்ரியாய நம:
  13. ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
  14. ஓம் பஹுயோஜந மாயதாய நம:
  15. ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
  16. ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
  17. ஓம் மஹாரூபாய நம:
  18. ஓம் மஹாவக்த்ராய நம:
  19. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  20. ஓம் மஹாபுஜாய நம:
  21. ஓம் மஹாநாதாய நம:
  22. ஓம் மஹாரௌத்ராய நம:
  23. ஓம் மஹாகாயாய நம:
  24. ஓம் மஹாபலாய நம:
  25. ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
  1. ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
  2. ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
  3. ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
  4. ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
  5. ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
  6. ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
  7. ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
  8. ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
  9. ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
  10. ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
  11. ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
  12. ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
  13. ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
  15. ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
  16. ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
  17. ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
  18. ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
  19. ஓம் புவநைகஸிம்ஹாய நம:
  20. ஓம் பவிஷ்ணவே நம:
  21. ஓம் ஸஹிஷ்ணவே நம:
  22. ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
  23. ஓம் ஜிஷ்ணவே நம:
  24. ஓம் ப்ருதிவ்யை நம:
  25. ஓம் அந்தரிக்ஷாய நம: 525
  1. ஓம் பர்வதாய நம:
  2. ஓம் அரண்யாய நம:
  3. ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
  4. ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
  5. ஓம் அஹோராத்ராய நம:
  6. ஓம் த்ரிஸந்த்யாய நம:
  7. ஓம் பக்ஷாய நம:
  8. ஓம் மாஸாய நம:
  9. ஓம் ருதவே நம:
  10. ஓம் வத்ஸராய நம:
  11. ஓம் யுகாதயே நம:
  12. ஓம் யுகபேதாய நம:
  13. ஓம் ஸம்யுகாய நம:
  14. ஓம் யுகஸந்தயே நம:
  15. ஓம் நித்யாய நம:
  16. ஓம் நைமித்திகாய நம:
  17. ஓம் தைநாய நம:
  18. ஓம் மஹாப்ரளயாய நம:
  19. ஓம் கரணாய நம:
  20. ஓம் காரணாய நம:
  21. ஓம் கர்த்ரே நம:
  22. ஓம் பர்த்ரே நம:
  23. ஓம் ஹர்த்ரே நம:
  24. ஓம் ஈஶ்வராய நம:
  25. ஓம் ஸத்கர்த்ரே நம: 550
  1. ஓம் ஸத்க்ருதயே நம:
  2. ஓம் கோப்த்ரே நம:
  3. ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
  4. ஓம் ப்ராணாய நம:
  5. ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
  6. ஓம் ஸுஜ்யோதிஷே நம:
  7. ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
  8. ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
  9. ஓம் ஸநாதநாய நம:
  10. ஓம் ஜ்யோதிஷே நம:
  11. ஓம் லோகஸ்வரூபாய நம:
  12. ஓம் ஜ்யோதிஷே நம:
  13. ஓம் ஜ்ஞாய நம:
  14. ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
  15. ஓம் ஸ்வாஹாகாராய நம:
  16. ஓம் ஸ்வதாகாராய நம:
  17. ஓம் வஷட்காராய நம:
  18. ஓம் க்ருபாகராய நம:
  19. ஓம் ஹந்தகாராய நம:
  20. ஓம் நிராகாராய நம:
  21. ஓம் வேகாகாராய நம:
  22. ஓம் ஶங்கராய நம:
  23. ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
  24. ஓம் ஓம்காராய நம:
  25. ஓம் லோககாரகாய நம: 575
  1. ஓம் ஏகாத்மநே நம:
  2. ஓம் அநேகாத்மநே நம:
  3. ஓம் சதுராத்மநே நம:
  4. ஓம் சதுர்ப்புஜாய நம:
  5. ஓம் சதுர்மூர்த்தயே நம:
  6. ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
  7. ஓம் சதுர்வேதமயாய நம:
  8. ஓம் உத்தமாய நம:
  9. ஓம் லோகப்ரியாய நம:
  10. ஓம் லோககுரவே நம:
  11. ஓம் லோகேஶாய நம:
  12. ஓம் லோகநாயகாய நம:
  13. ஓம் லோகஸாக்ஷிணே நம:
  14. ஓம் லோக பதயே நம:
  15. ஓம் லோகாத்மநே நம:
  16. ஓம் லோகலோசநாய நம:
  17. ஓம் லோகாதாராய நம:
  18. ஓம் ப்ரல்லோகாய நம:
  19. ஓம் லோகாலோகமயாய நம:
  20. ஓம் விபவே நம:
  21. ஓம் லோககர்த்ரே நம:
  22. ஓம் விஶ்வகர்த்ரே நம:
  23. ஓம் க்ருதாவர்த்தாய நம:
  24. ஓம் க்ருதாகமாய நம:
  25. ஓம் அநாதயே நம: 600
  1. ஓம் அநந்தாய நம:
  2. ஓம் அபூதாய நம:
  3. ஓம் பூதவிக்ரஹாய நம:
  4. ஓம் ஸ்துதயே நம:
  5. ஓம் ஸ்துதாய நம :
  6. ஓம் ஸ்தவப்ரீதாய நம:
  7. ஓம் ஸ்தோத்ரே நம:
  8. ஓம் நேத்ரே நம:
  9. ஓம் நியாமகாய நம:
  10. ஓம் கதயே நம:
  11. ஓம் மதயே நம:
  12. ஓம் பித்ரே நம:
  13. ஓம் மாத்ரே நம:
  14. ஓம் குரவே நம:
  15. ஓம் ஸக்யே நம:
  16. ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
  17. ஓம் மந்த்ர ரூபாய நம:
  18. ஓம் அஸ்த்ர ரூபாய நம:
  19. ஓம் பஹுரூபாய நம:
  20. ஓம் ரூபாய நம:
  21. ஓம் பஞ்சரூபதராய நம:
  22. ஓம் பஞ்சரூபாய நம:
  23. ஓம் ரூடாய நம:
  24. ஓம் யோகரூடாய நம:
  25. ஓம் யோகிநே நம: 625
  1. ஓம் ஸமரூபாய நம:
  2. ஓம் யோகாய நம:
  3. ஓம் யோகபீடஸ்திதாய நம:
  4. ஓம் யோககம்யாய நம:
  5. ஓம் ஸௌம்யாய நம:
  6. ஓம் த்யாநகம்யாய நம:
  7. ஓம் த்யாயிநே நம:
  8. ஓம் த்யேயகம்யாய நம:
  9. ஓம் தாம்நே நம:
  10. ஓம் தாமாதிபதயே நம:
  11. ஓம் தராதராய நம:
  12. ஓம் தர்மாய நம:
  13. ஓம் தாரணாபிரதாய நம:
  14. ஓம் தாத்ரே நம:
  15. ஓம் ஸந்தாத்ரே நம:
  16. ஓம் விதாத்ரே நம:
  17. ஓம் தராய நம:
  18. ஓம் தாமோதராய நம:
  19. ஓம் தாந்தாய நம:
  20. ஓம் தாநவாந்தகராய நம:
  21. ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
  22. ஓம் பேஷஜாய நம:
  23. ஓம் ஸீரத்வஜாய நம:
  24. ஓம் ஸீதாய நம:
  25. ஓம் வரதாய நம: 650
  1. ஓம் அப்ரமிதாய நம:
  2. ஓம் ஸாரஸ்வதாய நம:
  3. ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
  4. ஓம் அக்ஷமாலிநே நம:
  5. ஓம் அஸிதர்மதராய நம:
  6. ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
  7. ஓம் விகர்மாய நம:
  8. ஓம் ஸுகர்மாய நம:
  9. ஓம் பரகர்மவிதாயிநே நம:
  10. ஓம் ஸுகர்மணே நம:
  11. ஓம் மந்மதாய நம:
  12. ஓம் வர்மாய நம:
  13. ஓம் வர்மிணே நம:
  14. ஓம் கரிசர்மவஸநாய நம:
  15. ஓம் கராளவதநாய நம:
  16. ஓம் கவயே நம:
  17. ஓம் பத்மகர்பாய நம:
  18. ஓம் பூதகர்பாய நம:
  19. ஓம் க்ருணாநிதயே நம:
  20. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  21. ஓம் கர்பாய நம:
  22. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  23. ஓம் தூர்ஜடயே நம:
  24. ஓம் விஶ்வகர்பாய நம:
  25. ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
  1. ஓம் ஜிதாரயே நம:
  2. ஓம் ஹிரண்ய கர்பாய நம:
  3. ஓம் ஹிரண்ய கவசாய நம:
  4. ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
  5. ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
  6. ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
  7. ஓம் ஹிரண்யநயநாய நம:
  8. ஓம் ஹிரண்யரேதஸே நம:
  9. ஓம் ஹிரண்யவதநாய நம:
  10. ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
  11. ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
  12. ஓம் ஶ்ருங்கிணே நம:
  13. ஓம் பைரவாய நம:
  14. ஓம் ஸுகேஶாய நம:
  15. ஓம் பீஷணாய நம:
  16. ஓம் ஆந்த்ரமாலிநே நம:
  17. ஓம் சண்டாய நம:
  18. ஓம் ருண்டமாலாய நம:
  19. ஓம் தண்டதராய நம:
  20. ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
  21. ஓம் கமண்டலுதராய நம:
  22. ஓம் கண்டஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
  24. ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
  25. ஓம் பீதஸிம்ஹாய நம: 700
  1. ஓம் நீலஸிம்ஹாய நம:
  2. ஓம் நீலாய நம:
  3. ஓம் ரக்தஸிம்ஹாய நம:
  4. ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
  5. ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
  6. ஓம் மூலஸிம்ஹாய நம:
  7. ஓம் மூலாய நம:
  8. ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
  9. ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
  10. ஓம் பர்வதவாஶிநே நம:
  11. ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
  12. ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
  13. ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் சண்டஸிம்ஹாய நம:
  15. ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
  16. ஓம் அநந்தகதயே நம:
  17. ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
  18. ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
  19. ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
  20. ஓம் நரஸிம்ஹாய நம:
  21. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  22. ஓம் நரஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
  24. ஓம் ஸத்யாய நம:
  25. ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
  1. ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
  2. ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
  3. ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
  5. ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
  6. ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
  7. ஓம் ஸ்வச்சாய நம:
  8. ஓம் ஸ்வச்சரூபாய நம:
  9. ஓம் ஸ்வச்சந்தாய நம:
  10. ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
  11. ஓம் ஸுவேஷாய நம:
  12. ஓம் ஶ்ருதயே நம:
  13. ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
  14. ஓம் ஶுசிஸ்ரவாய நம:
  15. ஓம் ஶூராய நம:
  16. ஓம் ஸுப்ரபாய நம:
  17. ஓம் ஸுதந்விநே நம:
  18. ஓம் ஶுப்ராய நம:
  19. ஓம் ஸுரநாதாய நம:
  20. ஓம் ஸுப்ரபாய நம:
  21. ஓம் ஶுபாய நம:
  22. ஓம் ஸுதர்ஶநாய நம:
  23. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  24. ஓம் நிருக்தாய நம:
  25. ஓம் ஸுப்ரபாய நம: 750
  1. ஓம் ஸ்வபாவாய நம:
  2. ஓம் பவாய நம:
  3. ஓம் விபவாய நம:
  4. ஓம் ஸுஶாகாய நம:
  5. ஓம் விஶாகாய நம:
  6. ஓம் ஸுமுகாய நம:
  7. ஓம் முகாய நம:
  8. ஓம் ஸுநகாய நம:
  9. ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் ஸுரதாய நம:
  11. ஓம் ஸுதாய நம:
  12. ஓம் ஸாங்க்யாய நம:
  13. ஓம் ஸுரமுக்யாய நம:
  14. ஓம் ப்ரக்யாதாய நம:
  15. ஓம் ப்ரபாய நம:
  16. ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
  17. ஓம் கேடமுத்கரபாணயே நம:
  18. ஓம் ககேந்த்ராய நம:
  19. ஓம் ம்ருகேந்த்ராய நம:
  20. ஓம் நாகேந்த்ராய நம:
  21. ஓம் த்ருடாய நம:
  22. ஓம் நாக கேயூரஹாராய நம:
  23. ஓம் நாகேந்த்ராய நம:
  24. ஓம் அகமர்திநே நம:
  25. ஓம் நதீவாஸாய நம: 775
  1. ஓம் நக்நாய நம:
  2. ஓம் நாநாரூபதராய நம:
  3. ஓம் நாகேஶ்வராய நம:
  4. ஓம் நாகாய நம:
  5. ஓம் நமிதாய நம:
  6. ஓம் நராய நம:
  7. ஓம் நாகாந்தகரதாய நம:
  8. ஓம் நரநாராயணாய நம:
  9. ஓம் மத்யஸ்வரூபாய நம:
  10. ஓம் கச்சபாய நம:
  11. ஓம் யஜ்ஞவராஹாய நம:
  12. ஓம் நாரஸிம்ஹாய நம:
  13. ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
  14. ஓம் வாமநாய நம:
  15. ஓம் மஹௌஜஸே நம:
  16. ஓம் பார்கவராமாய நம:
  17. ஓம் ராவணாந்தகராய நம:
  18. ஓம் பலராமாய நம:
  19. ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
  20. ஓம் புத்தாய நம:
  21. ஓம் புத்தரூபாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
  23. ஓம் கல்கிநே நம:
  24. ஓம் ஆத்ரேயாய நம:
  25. ஓம் அக்நி நேத்ராய நம: 800
  1. ஓம் கபிலாய நம:
  2. ஓம் த்விஜாய நம:
  3. ஓம் க்ஷேத்ராய நம:
  4. ஓம் பஶுபாலாய நம:
  5. ஓம் பஶுவக்த்ராய நம:
  6. ஓம் க்ருஹஸ்தாய நம:
  7. ஓம் வநஸ்தாய நம:
  8. ஓம் யதயே நம:
  9. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  10. ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
  11. ஓம் தத்போக்த்ரே நம:
  12. ஓம் முமுக்ஷவே நம:
  13. ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
  14. ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
  15. ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
  16. ஓம் ஶிலாவாஸாய நம:
  17. ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
  18. ஓம் மஹாவாஸாய நம:
  19. ஓம் குஹாவாஸாய நம:
  20. ஓம் குஹ்யாய நம:
  21. ஓம் குப்தாய நம:
  22. ஓம் குரவே நம:
  23. ஓம் மூலாதிவாஸாய நம:
  24. ஓம் நீலவஸ்த்ரதராய நம:
  25. ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
  1. ஓம் ஶஸ்த்ராய நம:
  2. ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
  3. ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
  4. ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
  5. ஓம் துரந்தராய நம:
  6. ஓம் தூர்த்தாய நம:
  7. ஓம் துர்தராய நம:
  8. ஓம் தராய நம:
  9. ஓம் துர்மதாய நம:
  10. ஓம் துரந்தாய நம:
  11. ஓம் துர்தராய நம:
  12. ஓம் துர்நிரீக்ஷாய நம:
  13. ஓம் நிஷ்டாய நம:
  14. ஓம் துர்தர்ஶாய நம:
  15. ஓம் த்ருமாய நம:
  16. ஓம் துர்பேதாய நம:
  17. ஓம் துராஶாய நம:
  18. ஓம் துர்லபாய நம:
  19. ஓம் த்ருப்தாய நம:
  20. ஓம் த்ருப்தவக்த்ராய நம:
  21. ஓம் அத்ருப்த நயநாய நம:
  22. ஓம் உந்மத்தாய நம:
  23. ஓம் ப்ரமத்தாய நம:
  24. ஓம் தைத்யாரயே நம:
  25. ஓம் ரஸஜ்ஞாய நம: 850
  1. ஓம் ரஸேஶாய நம:
  2. ஓம் அரக்தரஸநாய நம:
  3. ஓம் பத்யாய நம:
  4. ஓம் பரிதோஷாய நம:
  5. ஓம் ரத்யாய நம:
  6. ஓம் ரஸிகாய நம:
  7. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  8. ஓம் ஊர்த்வரூபாய நம:
  9. ஓம் ஊர்த்வரேதஸே நம:
  10. ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
  11. ஓம் ஸிம்ஹாய நம:
  12. ஓம் ஊர்த்வபாஹவே நம:
  13. ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
  14. ஓம் ஶங்கசக்ராய நம:
  15. ஓம் கதாபத்மதராய நம:
  16. ஓம் பஞ்சபாணதராய நம:
  17. ஓம் காமேஶ்வராய நம:
  18. ஓம் காமாய நம:
  19. ஓம் காமபாலாய நம:
  20. ஓம் காமிநே நம:
  21. ஓம் காமவிஹாராய நம:
  22. ஓம் காமரூபதராய நம:
  23. ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
  24. ஓம் ஸோமபாய நம:
  25. ஓம் ஸோமாய நம: 875
  1. ஓம் வாமாய நம:
  2. ஓம் வாமதேவாய நம:
  3. ஓம் ஸாமஸ்வநாய நம:
  4. ஓம் ஸௌம்யாய நம:
  5. ஓம் பக்திகம்யாய நம:
  6. ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
  7. ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
  8. ஓம் பீஷ்மாய நம:
  9. ஓம் பீஷதாய நம:
  10. ஓம் பீமவிக்ரமணாய நம:
  11. ஓம் ம்ருகக்ரீவாய நம:
  12. ஓம் ஜீவாய நம:
  13. ஓம் ஜிதாய நம:
  14. ஓம் ஜிதகாரிணே நம:
  15. ஓம் ஜடிநே நம:
  16. ஓம் ஜாமதக்ந்யாய நம:
  17. ஓம் ஜாதவேதஸே நம:
  18. ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
  19. ஓம் ஜப்யாய நம:
  20. ஓம் ஜபிதாய நம:
  21. ஓம் ஜராயுஜாய நம:
  22. ஓம் அண்டஜாய நம:
  23. ஓம் ஸ்வேதஜாய நம:
  24. ஓம் உத்பிஜாய நம:
  25. ஓம் ஜநார்தநாய நம: 900
  1. ஓம் ராமாய நம:
  2. ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
  3. ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
  4. ஓம் ப்ரத்யும்நாய நம:
  5. ஓம் ப்ரமோதிநே நம:
  6. ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
  7. ஓம் ருத்ராய நம:
  8. ஓம் வீரபத்ராய நம:
  9. ஓம் சித்ரூபாய நம:
  10. ஓம் ஸமுத்ராய நம:
  11. ஓம் கத்ருத்ராய நம:
  12. ஓம் ப்ரசேதஸே நம:
  13. ஓம் இந்த்ரியாய நம:
  14. ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
  15. ஓம் இந்த்ராநுஜாய நம:
  16. ஓம் அதீந்த்ரியாய நம:
  17. ஓம் ஸாராய நம:
  18. ஓம் இந்திராபதயே நம:
  19. ஓம் ஈஶாநாய நம:
  20. ஓம் ஈட்யாய நம:
  21. ஓம் ஈஶித்ரே நம:
  22. ஓம் இநாய நம:
  23. ஓம் வ்யோமாத்மநே நம:
  24. ஓம் வ்யோம்நே நம:
  25. ஓம் வ்யோமகேஶிநே நம: 925
  1. ஓம் வ்யோமாதாராய நம:
  2. ஓம் வ்யோமவக்த்ராய நம:
  3. ஓம் அஸுரகாதிநே நம:
  4. ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
  5. ஓம் வ்யோமவாஸாய நம:
  6. ஓம் ஸுகுமாராய நம:
  7. ஓம் ராமாய நம:
  8. ஓம் ஶுபாசாராய நம:
  9. ஓம் விஶ்வாய நம:
  10. ஓம் விஶ்வரூபாய நம:
  11. ஓம் விஶ்வாத்மகாய நம:
  12. ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
  13. ஓம் ஜ்ஞாநாய நம:
  14. ஓம் விஶ்வேஶாய நம:
  15. ஓம் பராத்மநே நம:
  16. ஓம் ஏகாத்மநே நம:
  17. ஓம் த்வாதஶாத்மநே நம:
  18. ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
  19. ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
  20. ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
  21. ஓம் நித்யாய நம:
  22. ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
  23. ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
  24. ஓம் விரக்தாய நம:
  25. ஓம் பாவஶுத்தாய நம: 950
  1. ஓம் ஸித்தாய நம:
  2. ஓம் ஸாத்யாய நம:
  3. ஓம் ஶரபாய நம:
  4. ஓம் ப்ரபோதாய நம:
  5. ஓம் ஸுபோதாய நம:
  6. ஓம் புத்திப்ரியாய நம:
  7. ஓம் ஸ்நிக்தாய நம:
  8. ஓம் விதக்தாய நம:
  9. ஓம் முக்தாய நம:
  10. ஓம் முநயே நம:
  11. ஓம் ப்ரியம்வதாய நம:
  12. ஓம் ஶ்ரவ்யாய நம:
  13. ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
  14. ஓம் ஶ்ரிதாய நம:
  15. ஓம் க்ருஹேஶாய நம:
  16. ஓம் மஹேஶாய நம:
  17. ஓம் ப்ரஹ்மேஶாய நம:
  18. ஓம் ஸ்ரீதராய நம:
  19. ஓம் ஸுதீர்த்தாய நம:
  20. ஓம் ஹயக்ரீவாய நம:
  21. ஓம் உக்ராய நம:
  22. ஓம் உக்ரவேகாய நம:
  23. ஓம் உக்ரநேத்ராய நம:
  24. ஓம் உக்ரகர்மரதாய நம:
  25. ஓம் வ்யக்ராய நம: 975
  1. ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
  2. ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
  3. ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
  4. ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
  5. ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
  6. ஓம் வ்ருஷத்வஜாய நம:
  7. ஓம் வ்ருஷண்யாய நம:
  8. ஓம் வ்ருஷாய நம:
  9. ஓம் வ்ருஷபாய நம:
  10. ஓம் உக்ரஶ்ரவாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶ்ருதிதராய நம:
  13. ஓம் தேவதேவேஶாய நம:
  14. ஓம் மதுஸூதநாய நம:
  15. ஓம் புண்டரீகாக்ஷாய நம:
  16. ஓம் துரிதக்ஷயாய நம:
  17. ஓம் கருணாஸிந்தவே நம:
  18. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
  19. ஓம் நரஸிம்ஹாய நம:
  20. ஓம் கருடத்வஜாய நம:
  21. ஓம் யஜ்ஞநேத்ராய நம:
  22. ஓம் காலத்வஜாய நம:
  23. ஓம் ஜயத்வஜாய நம:
  24. ஓம் அக்நிநேத்ராய நம:
  25. ஓம் அமரப்ரியாய நம: 1000
  1. ஓம் மஹாநேத்ராய நம:
  2. ஓம் பக்தவத்ஸலாய நம:
  3. ஓம் தர்மநேத்ராய நம:
  4. ஓம் கருணாகராய நம:
  5. ஓம் புண்யநேத்ராய நம:
  6. ஓம் அபீஷ்டதாயகாய நம:
  7. ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
  8. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  9. ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
  10. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  11. ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

பரப்ரஹ்மணே நம:  1011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:

———-

ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:

இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே

மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்

ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.

ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்

ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்

ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.

ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே

வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்

நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம். 

நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே

ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச

கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்

த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே

நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே

ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்

ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ கிருஷ்ண சத நாமாவளி! —

October 21, 2025

சதநாமாவளி! – சாந்திபர்வம் பகுதி – 43-நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) “ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)அண்டத்தின் படைப்பாளனே, உனக்கு வணக்கம். நீயே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறாய், அண்டமானது உன்னிலிருந்தே எழுந்திருக்கிறது. விஷ்ணு நீயே, ஜிஷ்ணு நீயே, ஹரி நீயே, கிருஷ்ணன் நீயே, வைகுண்டன் நீயே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே {புருஷோத்தமன் நீயே}.(5) புராணங்களில் சொல்லப்படுவதைப் போல அதிதியின் கருவறையில் ஏழு முறை பிறப்பை எடுத்தவன் நீயே. பிருஸ்னியின் கருவறையில் பிறப்பெடுத்தவன் நீயே[2]. கல்விமான்களால் மூன்று யுகங்கள் {திரியுகன்} என்று சொல்லப்படுபவன் நீயே[3].(6) சாதனைகள் அனைத்தாலும் புனிதமானவன் {சுசிஸ்ரவஸ்} நீயே. எங்கள் புலன்களின் தலைவன் {ஹ்ருஷீகேசன்} நீயே. வேள்விகளில் வழிபடப்படும் பெருந்தலைவன் {க்ருதார்ச்சிஸ்} நீயே. பெரும் அன்னம் {ஹம்சன்} என்றழைக்கப்படுபவன் நீயே, முக்கண் சம்பு நீயே. விபு மற்றும் தாமோதரன் என்று அழைக்கப்பட்டாலும் ஒருவனாகவே இருப்பவன் நீயே.(7) பெரும்பன்றி {வராகன்} நீயே, நெருப்பு {அக்னி} நீயே, சூரியன் {பிருஹத்பானு} நீயே, கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்டவன் {ரிஷபன்} நீயே, கருடனையும் சின்னமாகக் கொண்டவன் {தார்க்ஷ்யலக்ஷணன்} நீயே. பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவன் {அநீகஸாஹன்} நீயே, அண்டத்தின் அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவியிருப்பவன் {புருஷன்} நீயே, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் {சிபிவிஷ்டன்} நீயே.(8) அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானவன் {உருக்ரமன்} நீயே, கடுமையானவன் {வரிஷ்டன்} நீயே, போரின் படைத்தலைவன் {உக்ரஸேநாநீ} நீயே, உண்மை {ஸத்யன்} நீயே, உணவை அளிப்பவன் {வாஜஸநி} நீயே, (தேவர்களின் படைத்தலைவனான) குஹன் நீயே, எதிரிகளின் ஒளியை மங்கச் செய்து அவர்களை வீணாகச் செய்யும் மங்காதவன் {அச்சுதன்} நீயே, தூய இரத்தம் கொண்ட பிராமணன் {ஸம்ஸ்கிருதன்} நீயே, கலப்பில் பிறந்தவன் {விக்ருதி} நீயே, பெரியவன் {வ்ருஷன்} நீயே.(9) உயர்வாக நடப்பவன் {கிருஷ்ணதர்மன்} நீயே, மலைகள் {ஆதி} நீயே, விருஷதர்ப்பன் என்றும், வ்ருஷாகபி என்றும் அழைக்கப்படுபவன் நீயே, பெருங்கடல் {ஸிந்து} நீயே, பண்புகளற்றவன் {விதூர்மி} நீயே, மூன்று கூன்களைக் கொண்டவன் {த்ரிககுப்} நீயே, மூன்று வசிப்பிடங்களைக் கொண்டவன் {த்ரிதாமா} நீயே, சொர்க்கத்தில் இருந்து இறங்கி பூமியில் மனித வடிவங்களை எடுப்பவன் {த்ரிவ்ருத்} நீயே.(10) பேரரசன் {ஸம்ராட்} நீயே, விராட் நீயே, ஸ்வராட் நீயே[4]. ஸ்வாராட் நீயே, தேவர்களின் தலைவன் நீயே, அண்டம் உதித்த காரணம் {பூதமயன்} நீயே, எல்லாம் வல்லவன் {பவன்} நீயே, எல்லாம் வல்லவன் {விபு} நீயே, அனைத்து வடிவிலும் இருப்பவன் {பூ} நீயே, வடிவமற்றவனும் {அதிபூவும்} நீயே, கிருஷ்ணன் நீயே, நெருப்பு {கிருஷ்ணவர்த்மா} நீயே.(11)படைப்பாளன் {ஸ்விஷ்டகிருத்} நீயே, தெய்வீக மருத்துவர்களின் தந்தை {பிஷஜாவர்த்தன்} நீயே, (தவசி) கபிலன் நீயே. உயரம் குறைந்தவன் {வாமனன்} நீயே[5].(12) வேள்வியின் வடிவம் {யக்ஞன்} நீயே, துருவன்[6] நீயே, கருடன் {பதங்கன்} நீயே, யக்ஜசேனன் {ஜயத்ஸேனன்} என்றழைக்கப்படுபவன் நீயே. சிகண்டி நீயே, நகுஷன் நீயே, பப்ரு நீயே, ஆகாயத்தில் விரிந்திருக்கும் புநர்வஸு நீயே,(13) பழுப்புநிறம் கொண்டவன் {ஸுபப்ரு} நீயே, உக்தம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி {ருக்மயஜ்ஞன்} நீயே, ஸுஷேணன் நீயே, அனைத்துப் பக்கங்களிலும் ஒலியை எழுப்பும் பேரிகை {துந்துபி} நீயே. எடை குறைந்த தேர்ச்சக்கரத்தைக் கொண்டவன் {கபஸ்திநேமி} நீயே, செழிப்பின் தாமரை {ஸ்ரீ பத்மன் நீயே}, புஷ்கரன் என்றழைக்கப்படுபவன் நீயே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவன் {சுஷ்மதாரணன்} நீயே.(14) செழிப்புமிக்கவன் {ருபு} நீயே, பலமிக்கவன் {விபு} நீயே, மிக நுட்பமானவன் {ஸர்வஸூக்ஷ்மன்} நீயே, வேதங்களை விளக்குபன் {தரித்ரீ} நீயே. பெரிய நீர் கொள்ளிடம் {அம்போநிதி} நீயே, பிரம்மன் நீயே, புனிதமான புகலிடம் {பவித்ரதாமன்} நீயே, அனைத்து வசிப்பிடங்களையும் அறிந்தவன் {தாமவித்து} நீயே, ஹிர்ணயகர்ப்பன் நீயே, ஸ்வதா நீயே, ஸ்வாஹா நீயே, கேசவனும் நீயே.(15) இவ்வுலகத்துடைய இருப்பின் {உற்பத்திக்குக்} காரணமும், இல்லாமையின் {அழிவின்} காரணமும் நீயே. முதலில் இந்த உலத்தைப் படைத்தவன் நீயே. ஓ! அண்டத்தைப் படைத்தவனே, இவ்வண்டம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஓ! சாரங்கம், சக்கரம் மற்றும் வாளைத் தரிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}[7].(16)சபைக்கு மத்தியில் வைத்து நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு துதிக்கப்பட்ட தாமரைக்கண்ணனான கிருஷ்ணன் நிறைவடைந்தான். பிறகு அந்த யாதவர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஏற்புடைய பேச்சுகள் பலவற்றால் பாண்டுவின் மூத்த மகனைத் திளைக்க வைக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த நூற்றெட்டுத் திரு நாம மாலை-பன்னிரு திருநாம மாலை

July 16, 2025

ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த நூற்றெட்டுத் திரு நாம மாலை

1-அமரர்களதிபதியே போற்றி
2 அருளாழியம்மானே போற்றி
3 ஆழ்கடலைக்கடைந்தாய் போற்றி
4 ஆழியங்கையனே போற்றி
5 இமையோர்தலைவா போற்றி
6 இரணியனுடலிடந்தாய் போற்றி
7 ஈரிரண்டுமால் வரைத்தோளா போற்றி
8 ஈசற்கும் நான்முகற்குந்தெய்வமே
9 உலகமுண்ட பெருவாயா போற்றி
10 உள்ளுவாருள்ளத்துறைவாய் போற்றி
11 ஊற்றமுடைய பெரியாய் போற்றி
12 ஊணாகப்பேய்முலை நஞ்சுண்டாய்போற்றி
13 எல்லாவுலகுமுடையாய் போற்றி
14 எம்பிரானே யென்னையாள்வாய் போற்றி
15 ஏரார்ந்தகருநெடுமாலே போற்றி
16 ஏழ்விடைசெற்ற பெருமானே போற்றி
17 ஐம்படையேந்துகையினாய் போற்றி
18 ஐவர்க்கருள்செய்தவம்மா போற்றி
19 ஒண்டாமரையாள்கேள்வா போற்றி
20 ஒன்றியொன்றியுலகம் படைத்தாய்
21 ஓதம்போல்கிளர்வேதனே போற்றி
22ஓதநீர்வண்ண வண்ணலே போற்றி
23கண்ணனென்னுங்கருந்தெய்வமே
24காக்குமியல்வினனானாய் போற்றி
25 கிட்டினாரை மயக்குங்கேசவா போற்றி
26 கீதையமுதமீந்தாய் போற்றி
27 குருந்தொசித்தகோபாலா போற்றி
28 கூனிகூன்நிமிர்ந்தகோவிந்தா பேர்ற்றி
29 கெண்டையுங் குறளும்புள்ளுமானாய்,,
30 கேழல்திருவுருவானாய் போற்றி
31 கையாருஞ்சக்கரத்தண்ணலேபோற்றி
32 கொண்டல்வண்ண குடக்கூத்தாபோற்றி
33 கோவர்த்தனமலையெடுத்தாய்போற்றி
34 கோவலர் தங்கோவே போற்றி
35 சன்மம்பலபல செய்தாய் போறறி
36 சாளக்கிராமமுடையாய்போற்றி
37 சிந்தனைக்கினிய செல்வனேபோற்றி

38 சீதைவாயமுதமுண்டாய் போற்றி
39 சுடர்கொள் சுடராழியாய் போற்றி
40 சூழல்பலபலவல்லாய்போற்றி
41 செங்கண்மாலெங்கள்மாலேபோற்றி
42 சேயனணியன் சிறியன் பெரியாய் .
43 சொன்னவண்ணஞ் செய்வாய் போற்றி
44 சோலை சூழ்குன்றெடுத்தானே போற்றி
45 ஞால மேழுமுண்டாய் போற்றி
46 ஞானங்கனிந்த நலந்தவருவாய்போற்றி
47 தண்டாமரைக்கண்ணனேபோற்றி
48 தாவியன்றுலகளந்தாய்போற்றி
49 திருவுக்குந்திருவாகிய செல்வாபோற்றி
50 தீங்கரும்பின் தெளிவே போற்றி
51 துரங்கம்வாய் பிளந்தாய் போற்றி
52 தூவியம்புள்ளுடையாய்போற்றி
53 தெய்வத்துக்கரசான தெய்வமே அ
54 தேனிலினியபிரானேபோற்றி
55 தைத்திரியா சாமவேதியனே போற்றி
56 தொண்டர்க்கினிய பெருமானே போற்றி
57 தோள்களாயிரத்தானே போற்றி
58 நலந்திகழ் நல்லநாரணாபோற்றி
59 நான்முகனைப் படைத்தாய்போற்றி
60 நிறமுடைநால் தடந்தோளனே போற்று
61 நீண்டதோளுடையானே போற்றி
62 நுடங்கெயிலிலங்கை செற்றாய் போற்றி
63 நூற்றுவரையன்று மங்க நூற்றாய்,
64 நெடுமையாலுலகேழளந்தாய்போற்றி
65 நேமிசேர்தடங்கையா போற்றி
66 நைமிசா ணியத்தெந்தாய் போற்றி
67 நொந்தாராக்காதலைத்தருவாய் போற்றி
68 நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
69 பயிலுஞ்சு டரொளி மூர்த்தியே போற்றி
70 பாற்கடல் துயின் ற பரமனே போற்றி
71 பின்னானார் வணங்குஞ் சோதீ போற்றி
72 பீதகவாடையுடையாய் போற்றி
73 புவனியெல்லாம் படைத்தபுனிதா
74 பூவைப் பூவண்ணமேனியாய்போற்றி

75-பெருமக்களுள்ளவர்தம் பெருமானே போற்றி,
76 பேய்ச்சிமுலையுயிருண்டாய் போற்றி
77 பைந்துளவத்தாரணிந்த வெந்தாய்,
78 பொருமாழிசங்குடையபெம்மான் ‘
79 பேரதார் தாமரையாள் கேள்வா போற்றி
80 பௌவங் கொண்ட திருவாளா போற்றி
81 மலர்மேல்மங்கை மணவாளா போற்றி
82 மாயமான்மாயச் செற்றாய் போற்றி
8 மின்னுமழைதவழும்மேகவண்ணா,,
84 மீனாயேனமுமானாய் போற்றி
85 முந்நீர்ஞாலம் படைத்தாய் போற்றி
86மூவரில் முந்திய முதல்வா போற்றி
87 மெய்யமர்பல்கலன் நன்கணிந்தாய்,
88 மேலையார்க்கெல்லாம் மேலையாய் போற்றி
89 மைந்நிறக்கடல் வண்ணனே போற்றி
90 மொய்யநீ குழல்சேர்தோளினாய்,
91 மோரார்குட முருட்டினாய் போதிறி

92 மெளவல்குழலாய்ச்சியன்பனே போற்றி
93 யவையும் யாவருமானாய் போற்றி
94 யானையின் துயரம் தீர்த்தாய் போற்றி
95 வங்கமா கடல்வண்ணா போற்றி)
96 வாசத்தடம்போல் வருவாய் போற்றி
97 விண்ணவர் தங்கள் தெய்வமே போற்றி
98 விட்டுசித்தன் மனத்துறைவாய் போற்றி
99 லீவிலின்பம் மிகத்தருவாய் போற்றி
100 வெற்பெடுத்தா நிரைகாத்தாய் போற்றி
101 வெம்மாவாய் கீண்டகண்ணாபோற்றி
102 வேதியர் தொழுந்தெய்வமே போற்றி
103 வேதங்களேத்தும் விமலா போற்றி
104 வையமெல்லாந்தொழ நின்றாய் போற்றி
105 வைதிகன்பிள்ளைகளீந்தாய்போற்றி
106 வாழிவாழி மாயோய்வாழி
10 நெடியோய்வாழி நீண்ட நாள்வாழி
108நிச்சலும்வாழி நீடுலகம்வாழ

—————————

ஸ்ரீ திவ்வியப் பிரபந்தங்களிலிருந்து ஸ்ரீ காஞ்சி அண்ணங்கராசாரியர் தொகுத்த பன்னிரு திருநாம மாலை

1-பொய்கையார் புகழ்ந்த புனிதா போற்றி
2-பூதத்தாழ்வார் புனைந்த பெருமாள் போற்றி
3-பேயார்பணிந்த பெருமாள்! போற்றி
4-மழிசைப்பிரான் மகிழ்ந்த மாதாவா போற்றி
5-பராங்குச னேத்தும் பரமனே போற்றி
6-மதுரகவி வணங்கும் மாயவன் போற்றி.
7-குலசேகர னேத்துங் கொண்டலே போற்றி
8-பட்டர்பிரா னேத்தும் பவித்திரனே போற்றி
9-கோதைமலர் சூடுங்குழகனே போற்றி
10-துளவத் தொண்டரேத்தும் தூயாய் போற்றி
11-பாண் பெருமா ளேத்தும் பரமனே போற்றி
12-மங்கையர்கோ னேத்தும்மாதவா போற்றி

ஆழ்வார்க ளேத்துமழகா போற்றி
ஆரியர்க ளேத்து மனந்தனே போற்றி.
உலகங்கட் கெல்லா முயிரேபோற்றி


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்-108 திவ்யதேசங்களின் தாயார் பெருமாள்–

August 13, 2024

ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்
1- ஸ்ரீ -பெரியபிராட்டியார்
2- அம்ருதோத்பவ -அம்ருதவல்லித் தாயார் சோளிங்கர்
3-கமலா -கமலாவல்லித் தாயார் உறையூர்
4-சந்த்ர ஷோபநா -பரிமள வல்லித் தாயார் இந்தளூர்
5-விஷ்ணு பத்நீ –வஞ்சுள வல்லித் தாயார் -திருநறையூர்
6-வைஷ்ணவீ -யதுகிரி நாச்சியார்
7-வரரோஹா -ஸ்ரீ வரமங்கத் தாயார்
8-ஹரிவல்லபா -கோதா நாச்சியார்
9-சார்ங்கிணீ -கோமள வல்லித் தாயார்
10-தேவ தேவிகா –பெரும் தேவித் தாயார்-காஞ்சிபுரம்
11-ஸ்ரீ மஹா லஷ்மி -பத்மாவதித் தாயார்
12-லோக ஸூ ந்தரீ –ஸுந்தரவல்லித் தாயார் -திரு நாகை

108 திவ்யதேசங்களின் தாயார் பெருமாள்–

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

—————-—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருநாம ஸங்கீர்த்தன மஹிமை -பிரமாணங்கள் –

May 17, 2023

தத் அஸ்ம-ஸாரம் ஹৃদயம் படேதம் ய
দ் গৃஹ்யமாநைர் ஹரி-நாம-தேயைঃ
ந விக்ரியேதথ யதா விகாரோ
நேத்ரே ஜலம் গத்ர-ருஹேஷு ஹர்சঃ(பக. 2.3.24)

“நிச்சயமாக அந்த இதயம் எஃகு கட்டமைக்கப்பட்டுள்ளது,
ஒருவர் இறைவனின் புனித நாமத்தை ஒருமுகத்துடன் உச்சரித்தாலும்,
அது மாறாது மற்றும் பரவசத்தை உணராது,
அந்த நேரத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்கும் மற்றும் முடிகள் முடிவடையும்.”

——————

தர்மா ப்ரோஜ்ஜித-கைதவோ ‘த்ர பரமோ நிர்மத்சரணம் ஸதம் வேத்யம் வஸ்தவம்
அத்ர வஸ்து சிவதம் தப-த்ரயோன்மூலானாம்
ஸ்ரீமத்-பகவதே மஹா-முனி-கৃதே கிம் வா பரைர் ஈஸ்வரঃ
ஸத்யோ ஹৃদி ஆவருத்யதே’ த்ர கிருதிபிঃ ஸ்ருத்ஸுபிঃ ஸுஸ்ருʼத்ஸுபிஹ் ஸ்.(SB 1.1.2)]

“உடல் உந்துதல் கொண்ட அனைத்து மதச் செயல்களையும் முற்றிலுமாக நிராகரித்து,
இந்த பகவத் புராணம் மிக உயர்ந்த உண்மையை முன்வைக்கிறது,
இது முழு மனத் தூய்மை உள்ள பக்தர்களால் புரிந்து கொள்ள முடியும்.
உயர்ந்த உண்மை என்பது மாயையிலிருந்து வேறுபடுத்தப்பட்ட உண்மை.
மும்மடங்கு துன்பங்கள்.மகா முனிவரான வியாசதேவரால் தொகுக்கப்பட்ட இந்த அழகான
பாகவதம் கடவுளை உணர போதுமானது,
வேறு எந்த வேதத்தின் தேவை என்ன?
பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனமாகவும் பணிவாகவும் கேட்டவுடன்,
இந்த அறிவுப் பண்பாட்டின் மூலம் பரம பகவான் அவரது இதயத்தில் நிலை பெற்றுள்ளார்.”

—————-

பக்தி-யோகேன மனஸி
ஸம்யக் ப்ராணிஹிதே ‘ஆண்
அபஸ்யத் புருசம் பூர்ணம்
மயம் ச தத் அபாஸ்ரயம்(SB. 1.7.4)

“பக்தி-யோகத்தின் சக்தியால், ஸ்ரீல வியாசதேவர், தூய்மையான மனதுடன் தியானத்தில்
உறுதியாக ஒருமுகப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரை முழுவதுமாக ஆன்மிகப் பிரகாசமும்,
முழுப் பகுதியும், மற்றும் ஸ்வரூப-சக்தியின் உள்ளார்ந்த ஆற்றலும் கொண்டதைக் கண்டார்.
அவரது வெளிப்புற ஆற்றல் மாயா, ஒரு கீழ்த்தரமான இயல்பு,
அவரது கட்டுப்பாட்டின் கீழ் பின்னணியில் காணப்பட்டது.”

————–

தக்தஸயோ முக்த-ஸமஸ்த-தத்-குணோ
நைவாத்மனோ பஹிர் அந்தர் விகாஸ்தே
பரத்மநோர் யத்-வ்யவதானம்
புரஸ்தத் ஸ்வப்நே யதா புருஷஸ் தத்-விநாஸே(SB 4.22.27)]

“ஒருவன் எல்லாப் பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, எல்லாப் பௌதிகக் குணங்களிலிருந்தும் விடுபடும்போது, ​​
அவன் வெளி மற்றும் அகச் செயல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து செல்கிறான்.
அப்போது ஆன்மாவிற்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு, சுய-உணர்தல் முன் இருந்த, அழிகிறது.
ஒரு கனவு முடிந்ததும், கனவுக்கும் கனவு காண்பவருக்கும் இடையே வேறுபாடு இருக்காது.

————-

ஸங்கேத்யம் பரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலநம் ஏவ வா
வைகுந்த-நாம-க்ரஹணம் அஸேசஹ-ஹரம் விதுঃSB 6.2.14)]

“ஒருவர் வேறு எதையாவது (சங்கேத), நகைச்சுவையாக (பரிஹாச), விரோதமாக (ஸ்தோபா)
அல்லது அவமரியாதையாக (ஹேல) குறிக்க ஸ்ரீ-கிருஷ்ண-நாமாவை உச்சரிக்கலாம்.
இந்த நான்கு வகையான நிழல் நாமபாசங்கள் வரம்பற்ற பாவங்களை அழிக்கும்
என்பதை கற்றறிந்தவர்கள் அறிவார்கள்.”

——–

யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சன
ஸர்வைர் ​​குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரஹ்
ஹரவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குண
மனோரதேநாசதி தவதோ பஹிஹ்–

[“அனைத்து தேவர்களும், மதம், அறிவு, துறவு போன்ற அவர்களின் உயர்ந்த குணங்களும்,
பரம புருஷ பகவானான வாசுதேவரிடம் கலப்படமற்ற பக்தியை வளர்த்துக் கொண்டவரின் உடலில் வெளிப்படுகின்றன.
மறுபுறம், பக்தித் தொண்டு இல்லாதவர் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் நல்ல குணங்கள் இல்லை.
அவர் மாய யோகப் பயிற்சியில் வல்லவராக இருந்தாலும் அல்லது குடும்பம் மற்றும் உறவினர்களைப் பராமரிக்கும்
நேர்மையான முயற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர் தனது சொந்த ஊகங்களால் உந்தப்பட்டு
இறைவனின் சேவையில் ஈடுபட வேண்டும்.
‘வெளி ஆற்றல். அப்படிப்பட்ட ஒருவரிடம் எப்படி நல்ல குணங்கள் இருக்க முடியும்?

——

நௌமித்ய கே ப்ரா வபுஸே ததித் அம்பராய
குஞ்ஜவதம்ஸ-பரிபிச்ச லஸன் முகயா
வண்யா ஸ்ரஜே காவல வேத்ர விசானா வேணு
லக்ஷ்ம ஶ்ரீயே மৃது-பதே புஷ்பானங்கஜய (SB 10.14.1)

“ஓ ஆண்டவரே, முழு உலகிலும் எங்கள் பிரார்த்தனைகளுக்குத் தகுதியானவர் நீங்கள் மட்டுமே.
ஓ வ்ரஜேந்திரநந்தனா, உங்கள் உடல் ஒரு புதிய மழை மேகம் போன்றது,
மிகவும் நேர்த்தியாகவும், பீடம்பரத்தால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது
உங்கள் காதுகள் மற்றும் உங்கள் தலையில் ஒரு மயில் இறகு, உங்கள் தாமரை முகம் பிரகாசமான பிரகாசத்தை வெளியிடுகிறது,
மேலும் பல வண்ண வன மலர்கள் மற்றும் இலைகள் கொண்ட மாலை உங்கள் கழுத்தில் தொங்குகிறது.
மாடு மேய்க்கும் குச்சியும் எருமைக் கொம்பும் உங்கள் கமர்பண்டில் ஒட்டிக்கொண்டது.
உன்னுடைய மென்மையான தாமரை கையில் சாதம் மற்றும் தயிர் துண்டுகள் உள்ளன,
மாடு மேய்ப்பவரின் இந்த இனிமையான உடையில் தோன்றி, அனைவரையும் கவர்ந்திழுக்கிறாய்,
தாமரை மலர்களை விட மென்மையான உன்னுடைய மென்மையான தாமரை பாதங்கள், மங்கள சின்னங்களால் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த தாமரை பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் மீண்டும் தண்டவத் பிராணங்கள்.” ]

———

தத் தே ‘நுகம்பம் ஸு-ஸமீக்ஸமாநோ
புஞ்ஜந ஏவாத்ம-கৃதம் விபாகம்
ஹৃத்-வாக்-வபுர்பிர் விததாந் நமஸ் தே
ஜீவேத யோ பக்தி-பதே ச தயா-பக்(SB 10.14.8)]

“உன் கருணையை நாடி, தன் கடந்தகால செயல்களின் கர்மாவின் காரணமாக அனைத்து
வகையான பாதகமான நிலைமைகளையும் பொறுத்துக்கொள்பவன்,
எப்போதும் உனது மனத்தாலும், வார்த்தையாலும், உடலாலும் உனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு,
எப்பொழுதும் உனக்கே வணக்கம் செலுத்துபவனே. உங்களின் அன்பற்ற பக்தராக
மாறுவதற்கு ஒரு நேர்மையான வேட்பாளர்.”

————-

தத் அஸ்து மே நாத ச பூரி-பாகோ பாவே ‘த்ர வன்யத்ர து வா திராஶ்சம் யேனாஹம்
ஏகோ ‘பி பவஜ்-ஜனனம் பூத்வா நிசேவே தவ பத-பல்லவம் (SB 10.14.30)

“என் அன்பான ஆண்டவரே, இந்த ஜென்மத்தில் பிரம்மாவாகவோ அல்லது வேறொரு பிறவியிலோ,
நான் எங்கு பிறந்தாலும், உமது பக்தர்களில் ஒருவனாக எண்ணப்படுவதற்கு நான்
மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
நான் எங்கிருந்தாலும், விலங்கு இனங்களில் கூட, உனது தாமரை பாதங்களுக்கு
நான் பக்தி சேவையில் ஈடுபட முடியும்.”

———–

அலব்தே வா விநஸ்தே வா பக்ஷ்யச்ছாதந-ஸா
ধநே அவிக்லவ-மதிர் பூத்வா ஹரிம் ஏவ தியா ஸ்மரேத்(பத்ம புராணம்)

“உணவும் வஸ்திரமும் எளிதில் கிடைக்காவிட்டாலும், அல்லது கிடைத்தாலும், தொலைந்தாலும்,
புனித நாமத்தை அடைக்கலம் புகுந்தவனின் மனம் கலங்குவதில்லை.
எல்லாப் பௌதிகப் பற்றுகளையும் விட்டு, கோவிந்தனிடம் பூரண தஞ்சம் அடைகிறான்.”

————

சோகமர்ஸாதிபிர் ভவைர் அக்ராந்தம் யஸ்ய

மாநஸம் கதம் தஸ்ய முகுந்தஸ்ய ஸ்பூர்த்திঃ ஸம்ভவநா ভவேத் ॥(பத்ம புராணம்)]

“கோபம் அல்லது பெருமை, அல்லது தனது மனைவி அல்லது மகன்களின் நிலையைப் பற்றிய
புலம்பல் நிறைந்த ஒருவரின் இதயத்தில், கிருஷ்ணர் வெளிப்படுவதற்கான சாத்தியம் இல்லை.”

————–

இடம் ஶரீரம் ஸத-ஸந்தி-ஜரிஜ்ஜரம்

படடி-அவஸ்யம் பரிணாம-பேசலம்
கிம்-ஔசதிம் ப்ருச்சஸி மூதா துர்மதே
நிராமயம் கிருஷ்ண-ரசாயனம் பிபா(முகுந்த-மாலா ஸ்தோத்ரம், 37, ஸ்ரீமத் குலசேகரரால்)]

“முட்டாள்! மந்தமான தலைப் பிராணியே! எண்ணற்ற பற்றுதல்களால் பீடிக்கப்பட்ட இடைவிடாமல்
மாறக்கூடிய இந்த உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும்.
இந்நிலையைப் போக்க என்ன மருந்து தேடுகிறாய்?
ஸ்ரீ என்ற திருநாமத்தின் மருந்தை இடைவிடாமல் குடியுங்கள்.
மற்ற எல்லா நோய்களுக்கும் மூலமான இந்த ஜட வாழ்வின் நோயை அழிக்கும் கிருஷ்ணர்.”(பத்ம புராணம்)]

———–

பக்திঃ பரேசாநுভவோ விரக்திர்

அந்யத்ர சைசா த்ரிகா ஏக-காலঃ
ப்ரபத்யமானஸ்ய யதாஸ்நாதঃ ஸ்யுஸ்
துஸ்திঃ புஸ்திঃ க்ஷுத்-அபயோ ‘நு-காசம்-(SB 11.2.42)]

“பக்தி, பரமாத்மாவின் நேரடி அனுபவம், மற்ற விஷயங்களிலிருந்து பற்றின்மை –
இவை மூன்றும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன,
பரம புருஷ பகவானிடம் அடைக்கலம் பெற்றவருக்கு, இன்பம், போஷாக்கு மற்றும் பசி நிவாரணம்
ஒரே நேரத்தில் வருவது போல. பெருகிய முறையில், உண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு ஒவ்வொரு கடிக்கும்.”

———-

அர்ச்சயம் ஏவ ஹரயே பூஜாம் யஹ் ஸ்ரத்தாயேஹதே
ந தத்-பக்தேஷு கன்யேஷு ச பக்தா ப்ரகரிதா ஸ்மிருதா (SB 11.2.47)]

“பகவானின் அர்ச்ச மூர்த்தியை ஸ்ரீ ஹரியாக ஏற்றுக்கொண்டு, அவரை நம்பிக்கையுடன் வணங்கினால்,
கிருஷ்ணரின் பக்தர்களையோ அல்லது பிற ஜீவர்களையோ உண்மையாக வழிபடாமல் இருந்தால்,
ஒருவன் ஜட பக்தன் (கனிஸ்த) ஆவான்.”

—————–

ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நமைவ கேவலம்

கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அந்யதா

“சண்டை மற்றும் கபடம் நிறைந்த இந்த யுகத்தில், இறைவனின் சக்தி வாய்ந்த திருநாமங்களை உச்சரிப்பது
மட்டுமே விடுதலைக்கான ஒரே வழி. வேறு வழியில்லை; வேறு வழியில்லை; வேறு வழியில்லை

————-

நமঃ சிந்தாமணிঃ கிருஷ்ணஸ்

சைதன்ய-ரஸ விக்ரஹ
பூர்ணঃ ஸுத்தோ நித்ய முக்தோ
பிந்நத்வாந் நாம-நாமினோঃ

“கிருஷ்ணரின் புனித நாமம் ஆழ்நிலை பேரின்பமானது.
இது அனைத்து ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அளிக்கிறது, ஏனென்றால் அது கிருஷ்ணரே,
எல்லா இன்பங்களுக்கும் நீர்த்தேக்கம். கிருஷ்ணரின் பெயர் முழுமையானது
மற்றும் அது அனைத்து ஆழ்நிலை மெல்லிசைகளின் வடிவம். இது ஒரு பொருள் பெயர் அல்ல.
எந்த நிலையும், அது கிருஷ்ணரை விட சக்திக்குறைவானது அல்ல,
கிருஷ்ணரின் பெயர் ஜடக் குணங்களால் மாசுபடாததாலும், மாயாவுடன் தொடர்பு கொள்வதில்
எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாலும்,
கிருஷ்ணரின் பெயர் எப்போதும் விடுதலை மற்றும் ஆன்மீகம்;
அது ஒருபோதும் பொருள் விதிகளால் மாசுபடுவதில்லை. ஏனெனில்,
கிருஷ்ணரின் பெயரும், கிருஷ்ணரின் பெயரும் ஒரே மாதிரியானவை.”

———–

நிகில-ஸ்ருதி-மௌலி-ரத்ன-மாலா-

த்யுதி-நிரஜித-பதா-பங்கஜந்த
ஆயி முக்த-குலைர் உபஸ்யமானம்
பரிதஸ் த்வம் ஹரி-நாம ஸம்ஸ்ரயாமி

“ஓ ஹரி-நாமா! அனைத்து வேதங்களின் மணிமகுடங்களான உபநிடதங்கள் என்று
அழைக்கப்படும் ரத்தினங்களின் சரத்திலிருந்து வெளிப்படும் ஒளிரும் பிரகாசத்தால்
உமது பாதங்களின் கால்விரல்களின் நுனிகள் தொடர்ந்து வணங்கப்படுகின்றன.
நீங்கள் முக்தியடைந்த ஆத்மாக்களால் நித்தியமாக வணங்கப்படுகிறீர்கள்.
நாரதர் மற்றும் சுகதேவர் போன்றவர்கள். ஓ ஹரி-நாமா! நான் உன்னிடம் முழு அடைக்கலம் பெறுகிறேன்.”

———–

தன்-நாம-ரூப-சரிதாதி-சுகிர்தநநு-

ஸ்ம்ருத்யோஹ் க்ரமேண ரஸந-மானஸி
நியோஜ்ய திஸ்தான் வ்ரஜே தத்-அநுராகி-ஜாநனுகாமி
கலாம் நயேத் அகிலம் இத்ய உபதேச-சாரம்

“ஸ்ரீ கிருஷ்ணர் மீது உள்ளார்ந்த தன்னிச்சையான அன்பைக் கொண்ட வ்ரஜாவின்
நித்திய குடியிருப்பாளர்களைப் பின்பற்றுபவர்களாக வ்ரஜத்தில் வசிக்கும் போது, ​​
ஒருவர் தனது முழு நேரத்தையும் நாக்கையும் மனதையும் வரிசையாக உன்னிப்பாக உச்சரிப்பதிலும்,
வ்ரஜந்திரநந்தனான ஸ்ரீ கிருஷ்ணரின் நாமங்களை நினைவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். ,
வடிவம், குணங்கள் மற்றும் பொழுதுகள். இதுவே அனைத்து அறிவுறுத்தலின் சாராம்சம்-

————–

மதுரம் அதாரம் ஏதன் மங்களம் மங்களம்

ஸகல-நிகம-வல்லி ஸத்-பலம் சித்-ஸ்வரூபம்
சக்ருத் அபி பரிகீதம் ஸ்ரத்தாய ஹேலய வா
ப்ருகுவரா! நர-மாத்ரம் தாராயேத் கிருஷ்ணாமா

“கிருஷ்ண நாமம் இனிமையானது மற்றும் மங்களகரமான அனைத்திலும் மிகவும் மங்களகரமானது.
இது செழித்து வளரும் கொடியும், பாகவதத்தின் நித்தியமான, முழுமையாக பழுத்த பழம்,
மற்றும் அறிவின் உருவகம், சிட்-சக்தி. ஓ சிறந்தது.
ப்ருகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள், நம்பிக்கையுடன் அல்லது அலட்சியத்துடன் (ஹேலா) புனித நாமத்தை
ஒருமுறை மட்டுமே உச்சரித்தாலும், அவர் இந்த பிறப்பு மற்றும் இறப்புக் கடலில் இருந்து
உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.

—————

அனுகுல்யஸ்ய ஸங்கல்ப ப்ரதிகுலஸ்ய வர்ஜநம்
ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸோ கோப்த்வৃத்வே வாரணம் ததா

“சரணாகதியின் ஆறு பிரிவுகள்:
பக்தித் தொண்டிற்கு சாதகமானவற்றை ஏற்றுக்கொள்வது,
பாதகமான விஷயங்களை நிராகரிப்பது,
கிருஷ்ணர் பாதுகாப்பைத் தருவார் என்ற நம்பிக்கை,
இறைவனை ஒருவரின் பாதுகாவலராக அல்லது எஜமானராக ஏற்றுக்கொள்வது,
பணிவு மற்றும் முழு சுயம். -சரணடை

————

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!’

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாராயண–ஸ்ரீ அச்யுதன் -ஸ்ரீ அநந்தன் -ஸ்ரீ கோவிந்தன் -திரு நாம வைபவங்கள் —

May 11, 2023

“நாராயண பரா வேதா தேவா நாராயணாங்கஜா: |
நாராயண பரா லோகா நாராயண பரா யாகா : |!”

[வேதங்கள்‌ நாராயணனைச்‌ சொல்லுபவை; தேவர்கள்‌ 
நாராயணனுடைய அங்கத்திலிருந்து உண்டானவர்கள்‌; 
உலகங்களும்‌ நாராயணனையே பற்றியிருப்பவை; யாகங்களும்‌ 
நாராயணனையே ஆராதீப்பவை.] என்னும்‌, 

நாபிர்‌ போக்‌ நிர்‌ முகமம்பு, ரேதோத்‌,யெள: ஸீர்ஷமாமமா: ம்ருதிரங்க்‌,ரிருர்வீ | 
சந்த்‌ரோ மகோ யஸ்ய த்ருகள்க்க ஆத்மா ஹ்யஹம்‌ ஸமுத்‌,ரோ ஜடம்‌ பு,ஜேந்த்பா: ॥ 
ரோமாணி யஸ்யெளவத,யோம்பு,வாஹா: கேமரா விரிஞ்சோ தி,ஷணா விஸர்க்க;: | 
ப்ரஜாபதிர்‌ ஹ்ருதயம்‌ யஸ்ய தர்ம: ஸ வை பவார்‌ புருஷோ லோககல்ப: ||
 
[நாபியே ஆகாசம்‌; அக்நி முகம்‌; ஜலம்‌ ரேதஸ்‌, ஸ்வர்க்கம்‌ 
தலை: திக்குகளே செவிகள்‌; திருவடிகள்‌ பூமி; சந்த்ரன்‌ 
மனஸ்‌. ஸூர்யன்‌ கண்‌; அஹங்காரம்‌ சிவனாகிய நானே; 
சமுத்திரம்‌ வயிறு; இந்திரன்‌ புஜங்கள்‌; ` ஓஷதிகள்‌ 
ரோமங்கள்‌; மேகங்கள்‌ தலைமயிர்‌; பிரமனே புத்தி; பிரஜா 
பதியே ஆண்குறி; தர்மமே ஹ்ருதயம்‌; (இப்படிப்பட்ட) 
நீரே உலகத்தை சரீரமாகக்கொண்ட விராட் புருஷனாக நீர்‌. ] 
என்றும்‌ ஸ்ரீபாகவதத்தில்‌ சொல்லப்பட்டிருக்கிறது. 

“ஜ்யோதிம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணு: விஷ்ணுர்‌ கிரயோ திலுமச | 
நத்‌,யஸ்‌ ஸமுத்‌,ராமச௪ச ஸ ஏவ ஸர்பம்‌ யத,ஸ்தி யந்நாஸ்தி ௪ விப்ரவர்ய |!” 
[விப்ர ஸ்ரேஷ்டரே! சந்திரன் முகலிய சோதிகளும்‌ 
விஷ்ணுவே; உலகங்களும்‌ விஷ்ணுவே; வனங்களும்‌, மலை 
களும்‌. திசைகளும்‌ விஷ்ணுவே. நதிகளும்‌, சமுக்திரங்களும்‌. 
விகாரமடைபவையும்‌,  விகாரமடையாதவையும்‌ ஆகிய எல்லாம்‌ ௮வனே.] என்றும்‌. 

“ஸர்வ ரத்ன மயோ மேரு: ஸர்வாங்சர்யமயம்‌ நப: | 
ஸர்வதீர்த்தமமி க,ங்கள ஸர்வ தேவ மயோ ஹரி: |." 
[மேருமலை ஸர்வ ரத்னங்களையும்‌ கொண்டது; ஆகாசம்‌ எல்லா 
ஆச்சரியங்களையும்‌ உடையது; கங்கை ஸர்வதிர்த்தமய 
மானது; ஹரி எல்லா கேவதைகளையும்‌ சரிரமாகக்‌ 
கொண்டவர்‌.  என்றும்‌ பராசர செளனகாதி ரிஷிகள்‌  சொல்லியிருக்கிறார்கள்‌. 

“ஸு ஆத்மா அங்கங்ளந் யந்யர தேவதா: `` [அந்தப்‌ பரம 
புருஷன்‌ ( எல்லாருக்கும்‌ ) ஆத்மாவாயிருக்கிறான்‌; மற்ற 
தெய்வங்கள்‌ அங்கங்களாகின்‌றனர்‌.] என்று வேதமும்‌  விளம்பிற்று. 

ஸ்ரீமந் நாராயணனே பரமாத்மாவென்றும்‌, 
மற்றவர்களெல்லாராம்‌ அவனுக்கு சரீரபூதர்களான ஜீவர்‌ 
களே என்றும்‌ ஸகல ஸாஸ்த்ரங்களும்‌ கோஷிக்கின்‌றன. 

இதையே பாரரரீரக மீமாம்ஸாமாஸ்த்ரமும்‌ உத்கோஷிக்கறது. 

தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர சரிரங்களிலிருக்கும்‌ ஆத்மாக்களை 
யெல்லாம்‌ தரிப்பவன்‌ தாமோதரனே; நியமிப்பவன்‌ 
நாராயணனே; ஸ்வாமியாயிருப்பவன்‌ ஸ்ரீதரனே. இப்படி 
ஜீவ பரர்கள்‌ ஒருவரை யொருவர்‌ பிரித்துப்‌ பார்க்கமுடி 
யாத படி ஒன்று சேர்ந்திருப்பதினால்‌ ஜீவாத்‌மாக்களைச்‌ 
சொல்லும்‌ பதங்களெல்லாம்‌ அபர்யவஸாய வ்ருத்‌தி யினால்‌ 
அந்தர்யாமி பகவான்‌ வரையிலும்‌ குறிக்கும்‌. 
இவ்விஷயங்களை 
“ய ஆத்மநி திஷ்ட்டந் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத, 
யஸ்ய மாத்மா சரீரம்‌ ய ஆத்மா ந வேத அந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத்‌: |!"
[எவன்‌ ஆத்மாவிலிருந்து கொண்டு , எவனை ஆத்மா அறிய 
வில்லையோ. எவனுக்கு ஆத்மா சரீரமோ , எவன்‌ ஆத்மாவை 
உள்ளிருந்துகொண்டு நியமிக்கிறானோ. அழிவற்றவனான 
அவனே உனக்கும்‌ ஆத்மாவாகவும்‌. உள்ளிருந்து நியமிப்ப 
வனாகவுமிருக்கிறான்‌.] என்றும்‌. 
ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகே நாராயண:'' [பரம 
பதத்திலிருக்கும்‌ இந்த நாராயணன்‌ ஒருவனே, தோஷ 
மற்றவனாகவும்‌ எல்லா ஜீவராசிகளுக்கும்‌ அந்தராத்மாவாக 
வும்‌ விளங்குகிறான்‌. ] என்றும்‌. 
“யஸ்ய ப்ருதிீவீ மமரீரம்‌ ய: ப்ருதி,வீமந்தரே ஸஞ்சரர்‌ யம்‌ ப்ருதி,வீ ' வேத,--எவனுக்கு 
பூமி இத்யாதிகள் சரீரமோ , எவன்‌ பூமியினுள்‌ ஸஞ்சரித்துக்கொண்டி 
ருக்கிறானோ. . எவனை பூமியானது ௮றியவில்லையோ--என்றும்‌. -
அந்த: ப்ரவிஷ்ட: மராஸ்தா ஜநாநாம்‌ ஸர்வாத்மா'' 
[ஸர்வாந்தர்யாமியான நாராயணன்‌ ஜனங்களை உள்‌ 
நுழைந்து நியமிக்கிறான்‌.] என்றும்‌, 
“ அந்தர்‌ பஹிஸ்ச தத்‌ ஸர்வம்‌ வ்யாப்ய நாராயண: " [நாராயணன்‌ 
அவையெல்லா வற்றையும்‌ உள்ளும்‌, புறமும்‌ வியாபித்து 
நிற்கிறான்‌.] என்றும்‌. 
ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்‌,ர:  ஸோஃக்ஷர: பரம: ஸவராட்‌ "` --அவனே பிரமனுக்கும்‌. சிவ 
னுக்கும்‌, இந்திரனுக்கும்‌. அழிவற்றவனும்‌. கர்மவசப்படாத 
வனும்‌, மேலானவனுமான முக்காத்மாவுக்கும்‌ அந்தர்யாமி,--என்றும்‌. 
பல பல வாக்யங்களில்‌ வேதம்‌ விளக்கிற்று. 

எல்லாப்‌ பொருள்களுக்கும்‌  அந்தர்யாமியாயிருப்பதால்‌ 
ஸ்ரீமந் நாராயணன்‌ ஸர்வ ஸப்த வாஸயனாயிருக்கறான்‌ என்று 
ஆசார்யர்களும்‌ நிர்வஹித்திருக்கிறார்கள்‌. 

இப்படிப்பட்ட ஸ்ரீமந் நாராயணனை அடைவதற்கு பக்தி 
ரூபமான ஜ்ஞாநமே ஸாதநமென்பதை “'தமேவம்‌ வித்‌வான்‌ 
அம்ருத இஹ ப,வதி'' [அவனை இம்மாதிரி அறிபவன்‌ இந்த 
ஜன்‌மத்திலேயே மோக்ஷம்‌ அடைகிறான்‌.] என்றும்‌. 
“யோ வேத, நிஹிதம்‌ கு,ஹாயாம்‌ பரமே வ்யேரமந்‌। ஸோூஸ்நுதே 
ஸர்வாந்‌ காமாக்‌ ஸஹ ப்‌,ரஹ்மணா விபம்சிநேதி |” [ஹ்ருதய 
குலையிலிருக்கும்‌ பரமாத்மாவை எவன்‌ அறிகி றானோ, 
அவன்‌ பரமபதத்தில்‌ ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன்‌ அவ 
னுடைய கல்யாண குணங்கள்‌ எல்லாவற்றையும்‌ அநுபவிக்‌ 
கிறான்‌.] என்றும்‌ வேத வாக்யங்கள்‌ விளக்குகின்‌றன. 
ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும்‌. இந்த விஷயமே பிரஸித்தப்படுத்தப்பட்டிருக்கிறது. 
“அநந்யாம்‌ சிந்தயந்தோ மாம்‌ யே ஜரா: பர்யுபாஸதே | 
தேஷாம்‌ நித்யாபி,யுக்தாநாம்‌ யோக,க்ஷேம்‌ வஹாம்யஹம்‌।।”' 
[மற்ற எதையும்‌ நினையாதவர்களாய்‌. என்னையே எந்த 
ஜனங்கள்‌ உபாஸிக்கிறார்களோ , எப்போதும்‌ என்னுடன்‌ 
சேர்ந்திருக்கையை விரும்பும்‌ அவர்களுடைய யோக 
ஷேமத்தை நான்‌ வஹிக்கறேன்‌.] என்றும்‌, 

“விசார்ய ச புராணார்த்த,ாம்‌ ஸவேதரநாத்மடி ஸ்திதம்‌ । 
விஷ்ணும்‌ ஸத,ா ஹ்ருதி, த்‌,யாயேத்‌ ஸம்ஸாராக,விமுக்தயே।/”' 
[வேதங்களுடன்‌ கூடிய புராணங்களின்‌ பொருள்களை 
விசாரித்து. ஆத்மாவினாள்ளிருக்கும்‌ விஷ்ணுவை. ஸம்ஸார 
பாபங்கள்‌ நீங்குவதற்காக எப்போதும்‌ ஹ்ருதயத்தினுள்‌ தியானிக்கவேண்டும்‌.] என்றும்‌, 

“ஆலோட்‌,ம ஸர்வமாஸ்த்ராணி விசார்ய ௪| 
இத,மேகம்‌ ஸுநிஷ்பந்நம்‌ த்‌,யேயோ நாராயணஸ் ஸதா ॥!”' 
[எல்லா சாஸ்திரங்களையும்‌ பார்த்து, மறுபடியும்‌ மறுபடி 
யும்‌ விசாரம்‌ செய்தால்‌ நாராயணனே எப்போதும்‌ 
தியானிக்கத் தக்கவன்‌ '' என்னுமிது ஒன்றே நன்றாகத்‌ தேறி  நிற்கும்‌.] என்றும்‌, 

“யஸ்ய த்வாபரோ மர்த்யோ ப்ரஹ்மஹத்த்யாதி,தோஷஜம்‌। 
ஈாமாயேத்‌ பாதகம்‌ ஸத்‌,ய: இம்‌ புக: கத்‌,யதே பரம்‌ |” 
[எவனை தியானிப்பதில்‌ ஈடுபட்டிருக்கும்‌ மனிதன்‌ ப்ரஹ்ம 
ஹத்தி முதலிய தோஷங்களாலேற்படும்‌ பாபத்தை உடனே 
போக்கடிக்கிறானோ, (அவன்‌ விஜயத்தில்‌) மற்ற பாபங்களைப்‌ 
பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?] என்றும்‌, 

“ஹரிர்‌ ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: | 
அரிச்ச,யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: ॥” 
[கெட்ட மனமுடையவர்களாலும்‌ நினைக்கப்பட்ட ஹரி 
பாபங்களைப்‌ போக்கடிக்கிறான்‌. இஷ்டப்படாமல்‌ தொடப்‌ 
பட்டபோதிலும்‌ நெருப்பு தஹித்தே தீருமன்‌றே. ] என்றும்‌, 

“ருக் யஜூம்ஷி ஸாமாதி யோ தீ,தே ஸக்ருத;ஞ்ஜஸா | 
ஸக்ருந் நாராயணம்‌ ஸ்ம்ருத்வா பலம்‌ தஸ்ய ஸமந் நுதே |” 
[ எவனொருவன்‌. ருக்‌. யஜுஸ்‌ ஸாம வேதங்களைப்‌ பலதடவை 
நன்றாக அத்யயனம்‌ செய்கிறானோ. அவனுடைய டலனை ஒரு 
தடவை நாராயணனை நினைப்பதினால்‌ அடைகிறான் ] என்றும்‌, 

“வ்ரஜந்த்யகந்ய மநஸோ ஜ்ஞாத்வா பூ,தாதிமவ்யயம்‌ | 
யே பஹந்தி து மாம்‌ ப,க்த்யா மயி தே தேஷு சரப்யஹம்‌ |॥'” 
[வேறொன்‌றிலும்‌ செல்லாத மனமுடையவர்களரய்‌. என்னை 
பூதங்களுக்குக்‌ காரண பூதனாகவும்‌. அழிவறவனாயும்‌ அறிந்து 
எவர்கள்‌ பக்தியுடன்‌ ஆராதிக்கிறார்களோ. அவர்கள்‌ 
என்னிடத்திலிருக்கிறார்கள்‌; நனும்‌ அவர்களிடத்திலிருக்‌ 
கிறேன்‌.] என்றும்‌ சொல்லப்பட்ட தன்றோ. 
இந்த விதி  வாக்கியங்களிலிருந்து நாராயணனையே நாம்‌ பஜனம்‌
செய்யவேண்டுமென்றும்‌. தியானம்‌, மனனம்‌. பஜனம்‌. 
ஸ்மரணம்‌ முதலிய பதங்களினால்‌ சொல்லப்படும்‌ பக்தி 
அவனை அடைவதற்கு உபாயமென்றும்‌ ஏற்படுகிறது. 

இப்படிப்பட்ட இந்த பக்திக்கு அங்கம்‌ கர்மமே என்று 
ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ ப்ரஸித்தம்‌. மநோ வாக்‌ காய 
கர்மங்களால்‌ அந்த பகவானுக்கு ஆராதனம்‌ செய்ய வேண்டுமென்பது 
“தஸ்மாத் அநந்ய ப௱வஸ்த்வம்‌ தே,வதே,வம்‌ | 
ஆராதயாந்‌ ஹ்ருஷீகேஸ மாம்‌ மநோ வாக் காய கர்மபி,:॥  
[ ஆகையால்‌. நீ வேறொன்றிலும்‌ நினைவில்ல: கவனாய்‌ தேவ 
தேவனும்‌.இந்திரியங்களை நியமிப்பவனுமானஜநார்த்தனனை.. 
 வாக்‌ காய கர்மங்களால்‌ ஆராதித்துக் கொண்‌டிருப்பாயாக.] என்றும்‌. 

“ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி தச்சித்தம்‌ யத்‌ ததர்ப்பிதம்‌| 
தாவேவ = கரெள ங்லாக்‌,யெள யெள தத்பூஜநதத்பரெள |!” 
. [எது ஹரியைத்‌ துதிக்கிறகோ அதுவே நாக்கு; அவனிடம்‌ 
எது செலுத்தப்பட்டிருக்கிற கோ அதுவே மனம்‌; எக்கை 
கள்‌ அந்தப்‌ பரமாத்மாவைப்‌ பூஜிப்பதில்‌ ஈடுபட்டிரறாக்‌ 
கின்‌றனவோ, அக்கைகளே சிறந்தவை] என்றும்‌. 
“ஸ்ருதி ஸ்ம்ருத்யுதி,தம்‌ ஸம்யக்‌ நித்யமாசாரமாசரேத்‌ |” 
[ஸ்ருதி ஸ்ம்ருதிகளிற்‌ சொல்லப்பட்ட ஆசாரங்களை நன்றாக 
எப்போதும்‌ அநுஷ்டிக்க வேண்டியது.] என்றும்‌. 
“ஆசாரப்ரப,வோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: |!" 
[ஆசாரத்தைக்‌ காரணமாகக் கொண்டது தர்மம்‌; தர்மத்திற்கு 
அச்யுதனே ஸ்வாமி.] என்றும்‌ சொல்லப்பட்ட து.
நாராயண பரம்‌ ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | 
நாராயண பரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: |!” என்று வேதம்‌ 
நாராயணனையே- ப ப்ரஹ்மமாகவும்‌. பர் தத்வமாகவும்‌. 
பரஞ்சோதி யாகவும்‌ பரமாத்மாவாகவும்‌ ஸந்தேஹத்‌திகு இடமில்லாமல்‌ நிர்ணயித்தது.

ப்ரஹ்மமாகிற நாராயணனைப்‌ பற்றிய உபதேசத்தைப்‌’ பெறுவதற்குத்‌ தகுந்த யோக்பதையையும்‌
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ உண்டாக்குகின்றன.
பாஹ்ய ( வெளி ) ` சத்தியை மட்டுமல்லாமல்‌
மநோ வாக் காயங்களாகிற
த்ரிகரணங்களின்‌’ சித்தியையும்‌
இந்த ஸம்ஸ்காரங்கள்‌ கொடுக்கின்‌ றன.
மேலும்‌ அவைகள்‌ படிப்படியாக ஜீவாத்மாவை நாராயணனுக்கு தாஸனாக ஆக்குகின்‌றன.
“* லரநபஷி இவாண்டஹ: ” என்கிறபடி
சிறகொடிந்த பக்ஷி போல்‌ சரீரம் யில்லாமல்‌
திண்டாடித்‌ திரியும்‌ ஜீவனுக்கு சரீரத்தைக்‌ கொடுப்பது
கர்ப்ப ஆதரத்தின்‌ நோக்கமாகும்‌.
° சரிரமாத்யம்‌ கலு தர்ம ஸாதநம்‌ ” [சரீர
மன்றோ முதலாவதான தர்ம ஸாதனம்‌.] என்கிறபடியே
சரீரமில்லாமல்‌ மோக்ஷோபாயங்களை அநுஷ்டிக்கமுடியா து.
வைஷ்ணவத்வம் உண்டாகவேண்டுமென்று பகவான்‌
விஷ்ணுவிடம்‌ விஜ்ஞாபனம்‌ செய்வதே
கர்ப்பதாந மந்த்ரங்களிலிருந்து தேறி நிற்கும்‌ பொருளாகும்‌.

அப்படி: உண்டான கர்ப்பம்‌ புருஷ ப்ரஜையாக வேண்டு
மென்பதற்காக, புருஷா ஸூக்த உத்தரா நுவாகத்தின்‌ முதல்‌ ருக்கும்‌.
“ ஸாபர்ணோ அஸி கருத்மாக்‌ ‘ என்று தொடங்கும்‌
வேதமந்திரங்களும்‌ பும்ஸவநத்தன் போது அநுஸந்திக்கப்‌
படுகின்றன.
வேத ஸ்வரூபனான கருடனையும்‌. கருட (வேத ) வாஹனனான நாராயணனையும்‌
வேதாந்த வித்தான வைஷணவ புருஷ ப்ரஜை உண்டாக வேண்டு மென்று பிரார்த்திப்பதே இதன்‌ ரஹஸ்யார்த்தம்‌.
விஷ்ணு பலியாகிற பாயஸ ப்ரதானத்தினாலும்‌. ஸீமந்த மந்த்ரங்களாலும்‌. `
கர்ப்பத்தைக்‌ கடாக்ஷித்துக்‌ காப்பாற்ற வேண்டு
மென்று எம்பெருமானும்‌,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியும் ஸ்துதிக்கப் படுகிறார்கள்‌.
இந்த ஸமயத்திலிருந்து ஜனனம்‌ வரையில்‌ ஸாத்விகனான வைஷ்ணவ ப்ரஜைக்கு
எம்பெருமான்‌ ஸேவை ஸாதிப்பதை
“கருக்‌ கோட்டியுள்‌ கிடந்தது கை தொழுதேன்‌ கண்டேன்‌
திருக்கோட்டி யெந்தை நிறம்‌ என்று பூதத்தாழ்வார்‌ பாடினார்‌.

ஜாயமாநந்து புருஷம்‌ யம்‌ மது,ஸூதந ; |
ஸாத்விகஸ்‌ ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த, சிந்தக:।|
பிறக்கும்போது எந்த ஜீவனை மதுஸூதனன்‌ கடாக்ஷிக்‌
கிறானோ அவன்‌ ஸத்வ குணத்தை யுடையவனென்று அறியத்‌ தக்கவன்‌.
மோக்ஷத்தை அடைய வேண்டுமென்ற சிந்தனை
யுடையவன்‌ அவனே. ] என்றும்‌ சொல்லப்பட்டது.
குழந்தை பிறந்தவுடன்‌
“விஸ்வஸ்ய கேதுர்‌ பு,வநஸ்ய நாத ஆப்ருணாத்‌ ஜாயமாந ;”’ முதலிய மந்திரங்களாலும்‌.
“ஓம்‌ ஸத,ஸஸ்பதிமத்‌,பு,தம்‌ ப்ரியமிர்த்‌,ஸ்ய காம்யம்‌
ஸநிம்‌ மேதாமயாஸிஷம்‌ ஸ்வாஹா”‘ என்னும்‌ மந்திரத்தாலும்‌
ஞான மயனும்‌. ஜ்யோதிஸ்‌ ஸ்வ ரூபனுமான ஜீவாத்மா உலகத்திற்குக்‌ கொடி போன்‌றவனாகவும்‌,
மால்‌ சமயத்திற்கோர்‌ மாலையிட்ட தீபமாகவுமாகி, பரம
புருஷனுடைய அன்புக்குப்‌ பாத்ரமாகி
நித்யஸுரிகளின்‌ கோஷ்டியில்‌ சேரக் கடவனென்று பிரார்த்திக்கப்படுகிறது.
ரூபமற்றவனாயிருந்‌து. சரீரத்தைப்‌ பெற்று ரூபமடைக்த
ஜீவனை அடையாளம்‌ கண்டு பிடிப்பதற்காக நாம கரணம்‌
செய்யப்படுகிறது.

“ஏகாந்த வயபதே,ஷ்டவ்யோ நைவ க்,ராமகுலாதி,பி,: |
விஷ்ணுநா வ்யபதே;ஷ்டவ்யச தஸ்ய ஸர்வம்‌ ஸ ஏவஹி ||”

பரமை காந்தியானவன்‌. க்ராமம்‌. குலம்‌ முதலியவைகளால்‌
பெயரிடத்தக்கவனல்லன்‌ ;
விஷ்ணுவின்‌ பெயரினாலேயே
சொல்லத்தக்சுவன்‌;
வனுக்கு (உண்ணும்‌ சோறு பருகு
நீர்‌ தின்னும்‌ வெற்றிலை முதலிய) எல்லாம்‌ அப்பெருமானே யன்றோ.] என்று
பகவானுடைய பெயர்களை வைஷ்ணவனுக்கு வைக்க வேண்டுமென்று சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இப்படிப்‌ பெயர்‌ வைப்பது பாபம்‌ போவதற்கும்‌,
வைஷ்ணவத்வ ஸித்திக்குமேயாகும்‌.
“நாம மே தேஹி பாப்மகோ அபஹத்யை ”
எம்பெருமானுடைய ) பெயர்களை
என்னுடைய பாபங்கள்‌ போவதற்காகக்‌ கொடுப்பீராக. ]
என்று ருக்ரன்‌ பிரமனைக்‌ கேட்டதாகவும்‌,
அவன்‌ நாராயணனுடைய எட்டு பெயர்களைக்‌ கொடுத்ததாகவும்‌
வேதத்தில்‌ உத்கோஷிக்கப்பட்டது.
இப்படி நாம கரணம்‌ செய்வது தானும்‌ தன்னை அழைக்கும்‌ மாதா பிதாக்களும்‌, மற்றவர்களும்‌ உஜ்ஜீவிக்க ஹேதுவாகிறது .
நாராயண நாம ஸ்மரணம்‌, உச்சாரணம்‌. கேட்பது முதலியவையும்‌ உய்வதற்கு உபாயமாகின்றனவன்றோ.
மாதவன்‌ மாதா கொடு உலகம்‌ புகாள்‌; நாரணன்‌ தமப்பன்‌ நரகம்‌ புகான்‌ என்று
நாம கரணத்தின்‌ மற்ற விசேக்ஷங்கள்‌ பெரியாழ்வார்‌
ப்ரபாவத்தில்‌ விஸ்தாரமாகக்‌ காணலாம்‌.
“அந்நம் ப்‌ரஹ்மேதி . வ்யஜாநாத்‌” எனப்பட்ட அந்நத்தை ஊட்டுவதாகிற அந்ந ப்ராணனமும்‌ பகவானை அடைவதற்கு ஒரு படியாகும்‌.
செளளம்‌ எனப்படும்‌ ஸம்ஸ்காரம்‌ மூன்றாவது வருஷத்தில்‌
செய்யப்படுகிறது;
ப்ரஹ்மம்‌ ப்ரவேசிப்பதும்‌. ஜீவன்‌ முக்தியடையும்‌ காலத்தில்‌ சிரஸ்ஸை பேதித்துக் கொண்டு
போவதுமான இடம்‌ ப்ரஹ்மரந்த்ரமெனப்படுகிறது,
ஊர்த்‌வ க,திக்கு அடையாளமான ஊர்த்வ புண்ட்‌,ரத்தைப்‌
போன்ற ஊர்த்‌வ சிகை ப்ரஹ்மரந்த்த்தில்‌ வைக்கப்பட
வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது.
மற்ற சிகை களுக்கும்‌ ஸ்லோகங்கள் விதிக்கப்பட்டிருக்கின்‌றன.

------------

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

—————

அச்சுதன் (7)
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/3,4
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/1,2

அச்சுதன்-தன்னை (2)
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2

அச்சுதனுக்கு (2)
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4

அச்சுதனே (2)
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/3,4

அச்சுதனை (5)
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2

அச்சுதா (1)
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2

—————-

அச்யுதன்‌, அநந்தன்‌ முதலிய திருநாமங்களின்‌ சப்தத்தின்‌ சீர்மையும்‌. 
அர்த்தத்தின்‌ பெருமையும்‌ விவரிக்கப்படுகின்‌ றன.

அஜஸ் சர்வேச்வரஸ் சித்தஸ் சித்திஸ் சர்வாதிரச்யுத
வ்ருஷாக அபிரமேயாத்மா சர்வ யோக விநிஸ் ஸ்ருத –11-

101-அச்யுத
தன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –

தேப்ய ப்ரபன்நேப்யோ நாபகத
அச்யுத

யஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா
நான் எப்போதும் என் பக்தர்களைக் கை விடுவது இல்லை
இதனால் அச்யுதன் எனப்படுகிறேன்

தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-
யார் என்னை எங்கும் காண்கிறானோ அவன் பார்வையில் இருந்து நான் மறைவது இல்லை

நத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-நண்பன் என்று வந்தவனை நான் கை விட மாட்டேன்

தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –தோஷமே இருந்தாலும் மித்ர வேஷம் பூண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்

ஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம்
கார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று
அச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-

தம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்

தேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

ஓம் அச்சுதாய நம
அடியார்களை விடாதவன் —மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்

————–

“அச்யுதா அநந்தா கோவிந்தா , நாம உச்சாரண பேஜாத்‌ | 
நமங்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம்‌ ஸத்யம்‌ வதாம்யஹம்‌ |!" 
அச்சுதன்‌. அநந்தன்‌. கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களை உச்சரிப்பதாகிற மருந்தினால்‌. 
எல்லா வியாதிகளும்‌ நாசமடைகின்‌றன. 
உண்மை உண்மை' என்று இரு கால்‌ ஸத்யம்‌ செய்து சொல்லுகிறேன்‌ நான்‌.என்று 
அச்யுதன்‌. அனந்தன்‌ , கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமங்களின்‌ பெருமை 
ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில்‌ உத்கோஷிக்கப்படுகிறது .

ஆர்த்தா விஷண்ணா: சி’திலாஸ்ச பீதா:
கோரேஷுச வ்யாதிஷு வர்த்தமானா: |
ஸங்கீர்த்ய நாராயண ச’ப்த மாத்ரம்‌
விமுக்தது: கா: ஸுகினோ பவந்து ||–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸங்கீர்த்தன பல ஸ்ருதி

ஆத்யாத்மிகம்‌, ஆதி பவ்திகம்‌, ஆதிதைவிகம்‌ என்னும்‌ தாபங்களினால்‌ தபிக்குமவர்களும்‌.
பயந்தவர்களும்‌. கோரமான வியாதிகளினால்‌ துன்பமடைபவர்களும்‌
நாராயணன்‌ என்னும்‌ சப்தத்தை மட்டும்‌ கீர்த்தனம்‌ செய்வதாலேயே
எல்லா துக்கங்களும்‌ நீங்கப் பெற்று, மோக்ஷ ஸுகத்தையும்‌ அடைகிறார்கள்‌
என்று பாரதத்தில்‌ பேசப்பட்டது.

 “நாராயணேதி ஸாப்‌தம் அஸ்தி வாக் அஸ்தி வமவர்த்திநீ | 
ததராபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்‌ ॥'' 
நாராயணன்‌ என்னும்‌ சப்தமிருக்கிறது; 
வாயும்‌ வசத்திலிருக்கிறது. 
அப்படியும்‌ கோரமான நரகத்தில்‌ பலர்‌ விழுகின்றனர்‌ என்பது என்ன ஆச்சரியம்‌!
என்று புராணங்‌களில்‌ பேசப்பட்டது.

பொய்கையாழ்வாரும்‌ இதையே ` 
“நா வாயிலுண்டே நமோ நாரணா வென்று 
ஓவா துரைக்கும்‌ உரை யுண்டே-— மூவாத 
மாக் கதிக் கண்‌, செல்லும்‌ வகை யுண்டே என்னொருவர்‌ 
தீக் கதிக் கண்‌ செல்லும் திறம்‌.”' —என்று அருளிச்செய்தார்‌.

*“அவமேநாபி யந் நாம ஸங்கீர்த்திதே ஸர்வ பாதகை: | 
புமாந்‌ விமுச்யதே ஸத்‌ய: ஸிம்ஹத்ரஸ்தைர்‌ ம்ருகை,ரிவ |) 
யந் நாம கீர்த்தநம்‌ ப,க்த்யா விலாயநமநுத்தமம்‌ | 
மைத்ரேயாபமோஷபாபாநாம்‌ த, தூ௩காமிவ பாவக: |" (ஸ்ரீ விஷ்ணு பு. (6-8)] 
அந்த பகவானுடைய திருநாமம்‌ யதேச்சையாக கீர்த்‌திக்கப்பட்ட போதிலும்‌. 
ஒரு மனிதனுடைய பாபங்கள்‌ ஸிம்ஹத்தினால்‌ பயமுறுத்தப்பட்ட ம்ருகங்கள்‌ 
விலகிப்‌ போவது போல்‌, விட்டோடிப் போகின்‌றன. 
மைத்ரேயரே! ஸுவர்ணம்‌ முதலிய தாதுக்களுடைய அழுக்கை நெருப்பு போக்குவது போல்‌, 
பக்தியுடன்‌ அப் பெருமானுடைய திரு நாம ஸங்கீர்த்தனம்‌ செய்வது 
எல்லாப் பாபங்களையும்‌ போக்கடிக்கும்‌ ஒப்பற்ற ஸாதனமாகும்‌.என்றும்‌.

“த்‌யாயாந்‌ க்ருதே யஜந்‌ யஜ்ஞைஸ் : த்ரேதாயாம்‌ த்‌,வாபரே அர்ச்சயந்‌ |
யத் ஆப்நோதி கலெள ஸங்கீர்த்ய கேஸவம் ॥ [ஸ்ரீ வி. பு. (6-2-17)] 
பகவானை தியானிப்பதால்‌ க்ருத யுகத்திலும்‌, 
யஜ்ஞங்களைக்‌ கொண்டு ஆராதிப்பதால்‌ த்ரேதா யுகத்திலும்‌. 
அர்ச்சனை செய்வதால்‌ த்வாபர யுகத்திலும்‌ 
எதை அடைகிறானோ அதைக்‌ கலியுகத்தில்‌ 
கேசவனை ஸங்கீர்த்தனம்‌ செய்வதாலேயே அடையலாம்‌.] என்றும்‌

“கிம்‌. சித்ரம்‌ தத,க,ம்‌ ப்ரயாதி விலயம்‌ தத்ர அச்யுதே கீர்த்திதே'' 
அச்யுதனுடைய நாமம்‌ கீர்த்திக்கப்பட்டவுடன்‌ அவ்‌ விடத்திலேயே பாபங்கள்‌ நாசமடைகின்‌றன 
என்னுமிவ்‌ விஷயத்தில்‌ ஆச்சரியம்‌ என்ன? என்றும்‌ 
ஸ்ரீ விஷ்ணு புராணத்‌தில்‌ உரைக்கப்பட்டது

“அஜ்ஞாநதோ ஜ்ஞாநதோ வா வாஸுதே,வஸ்ய கீர்த்தநாத்‌ | 
தத் ஸர்வம்‌ விலயம்‌ யாதி தோயஸ்த,ம்‌ லவணம்‌ யத |” 
அறிந்தோ, அறியாமலோ வாஸுதேவனுடைய திரு நாமத்தைச்‌ சொன்னானாகில்‌ 
அவனுடைய பாபமெல்லாம்‌ 'தண்ணீரினுள்ளிருக்கும்‌ உப்பைப் போல்‌ 
கரைந்துவிடுகின்றன.] என்றும்‌,


“முமாயாலம்‌ ஜலம்‌ வந்ஹேஸ்‌ தமஸோ பாஸ்கரோதவ: | ` 
ஸாந்தி: கலேரகெ,ளக,ஸ்ய நாம ஸங்கீர்த்தகம்‌ ஹரே: ॥” 
நெருப்பை அணைப்பதற்கு நீரும்‌. இருட்டைப்‌ போக்கடிக்க ஸூர்யோதயமும்‌ போதுமானவை. 
(௮து போலவே ) கலி கோலாஹலத்தினால் உண்டாகும்‌ அஞ்ஞானங்களைப் போக்கடிப்பது 
ஹரியின்‌ திரு நாம ஸங்கீர்த்தனமே,] என்றும்‌.

“ஸங்கீர்த்தநதோ விமுச்யதே”
[எவனுடைய திரு நாம ஸங்கீர்‌த்தனத்தினால்‌ மோக்ஷம் அடையப் பெருகிறது ] என்றும்‌.

‘யந் நாம ஸங்கீர்த்த கதோ மஹாபயாத்‌,; விமோக்ஷமாப்நோதி ந ஸம்மாயம்‌ நர: ‘
எவனுடைய திருநாம ஸங்கீர்த்தனத்தால்‌ மனிதன்‌ மஹா பயத்தினின்‌றும்‌ ஸந்தேஹயில்லாமல்‌
விடுதலை யடைகிறானோ — என்‌றும்‌,

“ஹக்ருது,ச்சரிதம்‌ யே ஹரிரித்யக்ர த்‌வயம்‌ | பத்த, பரிகரஸ்தேர மோஷ தாயகமம்‌ ப்ரதி” 
ஹரி என்னும் இவ்விரண்டெழுத்‌தும்‌ எவனால்‌ ஒருதடவை உச்சரிக்கப்பட்டதோ. 
அவன்‌ மோஷத்துக்குப்‌ போவதற்‌காகச்‌ செய்ய வேண்டியவைகளைச்‌ செய்து விட்டான்‌ ]என்றும்‌,

“யஸ்ய நாம்நி ஸ்ம்ருதே மர்த்யஸ்‌ ஸமுத்க்ராங்தேரந்தரம்‌ ! 
ப்ராப்நோதி வைஷ்ணவம்‌ ஸ்தாநம்‌ புநராவ்ருத்தி வர்ஜிதம்‌ |!” 
எவனுடைய திருநாமத்தை நினைத்த மனிதன்‌ இறந்த பின்பு: திரும்பி வருகை யற்றதான 
விஷ்ணுவினுடைய பரம பதத்தை அடைகிறானோ-
என்றும்‌ விஷ்ணு தர்மத்தில்‌ பலவிடங்களில்‌ பேசப்பட்டதன்றோ

“ஸர்வாந்‌ காமாந்‌ ப்ராப்நுவந்தே வியாலாந் த்ரைலோக்யே அஸ்மிந்‌ க்ருஷ்ண நாம அபிதாநாத்‌ ” [
இம்மூவுலகிலுமுள்ள மிகப்பெரிய இஷ்ட வஸ்‌து க்கள் எல்லாவற்றையும்‌ கிருஷ்ணனென்னும்‌
திருநாமத்தைச்‌ சொல்லு வதன்‌ மூலமாகவே அடைகிறார்கள்‌] என்று கோஷிக்கப்‌ பட்டது.

“ஸங்கீர்த்தயேஜ் ஜகந்நாதம்‌ வேதம்‌ வாபி ஸமீரயேத்‌”
ஜகந் நாதனான பெருமானை ஸங்கீர்த்தனம்‌ செய்ய்க் கடவன்‌;
அல்லது வேதத்தையாவது ஒதக் கடவன்‌ என்று
நாராயண நாம ஸங்கீர்த்தனம்‌ வேதாத்யனத்தைக் காட்டிலும்‌ மேல் என்று உணர்த்தப்பட்டது,

இவையெல்லாவற்றிற்கும்‌ மூலமான வேதத்திலும்‌ – த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ: ”
இவனைக்‌ கீர்த்திக்கும்‌ ஜனங்கள்‌ நிலையான மோஷஸ்தாநத்தை அடைகிறார்கள்‌
என்‌று உத் கோஷிக்‌ கப்பட்டது.

“கெடுமிடராயவெல்லாம்‌ கேசவாவென்ன நாளும்‌ 
கொடுவினை செய்யும்‌ கூற்றின்‌ தமர்களும்‌ குறுககில்லார்‌ 
என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌. 

“காவலிற்‌ புலனை வைத்துக்‌ கலி தன்னைக்‌ கடக்கப் பாய்ந்து 
நாவலிட்டுழிதருகின்றோம்‌ ஈமன்தமர்‌ தலைகள்‌ மீதே 
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்‌ நாமங்கற்ற 
ஆவலிப்புடைமை கண்டாய அரங்கமா நகருளானே! | என்றும்‌,

“பச்சை மா மலை போல்‌ மேனிப் பவளவாய்க்‌ கமலச் செங்கண்‌ 
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்‌ கொழுந்தே! என்னும்‌ 
இச் சுவை தவிர மான்‌ போய்‌ இந்திரலோகமாளும்‌ 
அச் சுவை பெறினும்‌, வேண்டேன்‌ அரங்கமா நகருளானே!'' _என்றும்‌, 

“மொய்த்த வல்‌ வினையுள்‌ நின்று மூன்றெழுத்துடைய பேரால்‌ 
கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான்‌ "என்றும்‌, 

“நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள்‌ கேட்க 
நரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய நம்பி'” 
என்றும்‌ தொண்டரடிப்பொடியாழ்வார்‌ திரு நாம ஸங்கீர்த்‌தன 
ப்ரபவத்தைப்‌ பலகால்‌ அருளிச் செய்தருளினார்‌. 

திருமங்கையாழ்வாரும்‌ முதல்‌ திருமொழியில்‌ நரராயண 
திரு நாமப்ரபாவத்தைப்‌ பலபடியாகப்‌ பேசியருளினார்‌. 

” இத் திரு நாமந்தான்‌ ப்ரயோஜநாந்தர பரர்க்கு ப்ரயோஜனத்தைக்‌ கொடுக்கும்‌;
உபாயார்தர நிஷ்டர்க்குப்‌ பாவநமாயிருக்கும்‌;
ப்ரபந்நர்க்கு தேஹ யாத்ர சேஷேமாயிருக்கும்‌;
முத்துப்படும்‌ துறையில்‌ முழுகுவார்‌ முத்தைக்‌ கொடுத்துப்‌ பலங்கொள்ளுவர்கள்‌;
செழு முத்து வெண்ணெற் கெனச்‌ சென்று’ மாறுவர்களிறே.
விலையறியும்‌ செட்டிகள்‌ பக்கல்‌ புகுவார்களிறே
பெரு விலையனாம்‌ செருக்கரானார்‌ இத்தைப் பூண்டு அதுபவிப்பார்கள்‌;
அப்படியே ப்ர யோஜநார்‌தர பரர்க்கும்‌ உறுப் பாய்‌, ஸாதநாந்தர நிஷடரர்க்‌கும்‌ உறுப்பாய்‌,
ப்ரபநர்க்கு ஸ்வயம் ப்ரயோஜாமுமாயாய்த்து இத் திருநாமமிருப்பது ‘” என்றும்‌.
“ இப்படிச்‌ சேதனன்‌ தான்‌ மூலையடியே திரிந்தாலும்‌,
அவன்‌ தோஷங்களைப்‌ போக்கி,
மேல்‌ செல்லுகிற நன்மைகளைக்‌ கொடுக்கும்படி யாய்த்‌து
திரு நாமத்தினுடைய ப்ரபாவமிருப்பது ” என்றும்‌, “

பக்தியினுடைய துஷ்கரதையோபாதி ப்ரபத்தி நிஷ்டா ஹேதுவான மஹா விஸ்வாஸமும்‌
சிலர்க்குக்‌ கிட்டுகை அரிதாகையாலே இதில்‌ இழியக்‌ கூசினவர்களுக்கு
ஸர்வாதிகாரமான யாத்ருச்சிக பகவந் நாம ஸங்கீர்த்தனமே
சேதநருடைய பாபத்தைப்‌ போக்கி
ஸா க்ருத அனுகூலமாகக்‌ கர்ம யோகாதிகளிலே கூட்டுதல்‌.
ப்ரபத்தியிலே மூட்டுதல்‌, விரோதியைப்‌ போக்கி ப்ராப்யத்தைக்‌ கொடுக்கைக்குத்‌
தானே நிர்வாஹக மாதலாம்படியான வைபவத்தை உடைத்‌ தாயாய்த்து இருநாமத்தினுடைய வைபவயிருப்பது”
என்‌றும்‌ பரம காருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச்‌ செய்தார்‌.

இவையெல்லாவற்றையும்‌ வேதாந்தாசார்யரர்ன பட்டரும்‌ ஸ்ரீ ஸஹஸ்ர நாமபாஷ்யத்திலே
பர பக்ஷ நிரசன பூர்வகமாகப்‌ பரக்க அருளிச் செய்தார்‌.

அபியுக்த அக்‌ரேஸரரான பிள்ளைலோகாசார்யரும்‌,
“ வாச்ய ப்ரபாவம்‌ போலன்று வாசக ப்ரபாவம்‌.
அவன்‌ தூரஸ்த்தனானாலும்‌ இது கிட்டி நின்று உதவும்‌.
த்‌ரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே.
சொல்லும்‌ க்ரமமொழியச்‌ சொன்னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெட நில்லாது.
இதுதான்‌ “குலந்தரும்‌’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்‌ கொடுக்கும்‌.
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களை ஆசைப்‌ பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌.
கர்ம ஜ்ஞாந பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி,
அவற்றைத்‌ தலைக் கட்டிக்‌ கொடுக்கும்‌.
ப்ரபத்தியிலே இழிந்‌தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப்‌ பிறப்பித்துக்‌ கால ஷேபத்துக்கும்‌
போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌” என்று
முமுஷுப்படியில்‌ அருளிச் செய்தார்‌.

இனி. அமுதிலும்‌ இனியவையான அச்யுதாதி நாமங்களின்‌ அரும் பொருள்கள்‌ அறிவிக்கப்படுகின்‌ றன.

(அச்யுதன்‌) ** யஸ்மாத்‌ ப்ராப்தா ந ச்யவந்தே '' என்கிற படியே 
அடியவர்களை நழுவவிடாதவன்‌; 
எல்லாரையும்‌ எல்லா அவஸ்தைகளிலும்‌ ரக்ஷிக்குமவன்‌ °

“யஸ்மாந் அச்யுத பூர்வோ அஹம் அச்யுதஸ்தேந கர்மணா”
அடியவர்களிடமிருந்து நழுவாமல் இருக்கறேனாகையால்‌ நான்‌ அச்சுதனெனப் படுகிறேன்‌
என்று சாஸ்திரம்‌ சொல்லிற்று.

( அச்யுதன்‌ )
ப்ரளய காலத்தில்‌ இவர்கள்‌ படும்‌ நோவு பொறுக்க மாட்டாமல்‌. தன்‌ வயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவன்‌;
ஸ்ருஷ்டி காலத்தில்‌ அசித் ஸமராய்க்‌ கிடக்குமிவர்‌களைக்‌ கண்டு இரங்கிக்‌
கரண களேபரங்களைக்‌ (சரீர இந்தரியங்களைக்‌) கொடுக்குமவன்‌.

“ஆதுமில்‌ காலத்தெந்தை அச்சுதன்‌ ” என்று இவ் வர்த்தத்தை ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தார்‌.
(அச்யுதன்‌ )
தமர்கள்‌ நெருப்பிலே விழுந்தாலும்‌. அவர்களைத்‌ தீங்கு வாராதபடி காப்பாற்றுமவன்‌.
“அறியும்‌ செந்தீயைத்‌ தழுவி அச்சுதன்‌ என்னும்‌ மெய்‌ வேவாள்‌” என்றார்‌ ஆழ்வார்‌.
(அச்யுதன்‌)
தன்னடியார்களை நமன்‌ தமர்‌ கையிலே காட்டிக்‌ கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌;

“அயர வாங்கும்‌ நமன்‌ தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்‌ தன்னை '' என்றார்‌ ஆழ்வார்‌. 
( அச்யுதன்‌ ) 
சேதனர்களைத்‌ தங்கள்‌ கையில்‌ காட்டிக் கொடாமல்‌ ரஷிப்பதற்காக அவர்‌களோடு ஓருவனாகத்‌ தோன்‌றுமவன்‌. 
“தேவகி தன்‌ வயிற்றில்‌ அத்தத்தின்‌ பத்தாம்‌ நாள்‌ தோன்றிய அச்சுதன்‌'' என்று பெரியாழ்வாரும்‌,

“'அச்யுத பாநுநா தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம் ஆவிர்ப்பூதம்‌ 
அச்சுதனாகிற ஸூர்யன்‌ தேவகியாகிற ப்ராத:ஸந்த்‌,யா காலத்தில்‌ தோன்றினான்‌. “ 
என்று அருளிச் செய்தனர்‌. 
(அச்யுதன்‌ ) 
தன்னிடம்‌ அன்புள்ளவரைக்‌ கை நழுவ விடாதவன்‌. 
“'அரிமுகன்‌ அச்சுதன்‌ கை மேல்‌ என்‌ கை வைத்து” என்று ஆண்டாள்‌ அருளிச் செய்தாள்‌. 
( ௮ச்யுதன்‌ ) 
“சங்கு ,சக்ர க,தாபாணே! த்‌வாரகா நிலய அச்யுத!'” 
சங்க சக்ர கதைகளைக்‌ கையில்‌ கொண்டவனே! 
த்வாரகா வாஸியே! 
அடியாரை நழுவ விடாத அச்சுதனே! என்றழைத்த த்ரெளபதிக்குத்
துகிலளித்ததும்‌ இத் திரு நாமமேயன்றோ. 
(அச்யுதன்‌) 
“மித்ர பாவேந ஸம் ப்ராப்தம்‌ நத்யஜேயம்‌ கதஞ்சந''
நண்பனென்‌ற வேஷத்துடன்‌ என்னை ,அடைந்தவனையும்‌ நான்‌ 
ஒரு போதும்‌ விடமாட்டேன்‌-- என்றும்‌,
“ஆநயைநம்‌ ஹரி ஸ்ரேஷ்ட, தத்தமஸ்யாப,யம்‌ மயா | 
விபீஷணோ வா -- யதி, வா ராவண: ஸ்வயம்‌ |'' 
வாநரத் தலைவனான ஸாக்ரீவனே! இவன்‌ வீபீஷணனாயிருந்‌தாலும்‌, 
ராவணன்‌ தானேயாயிருந்தாலும்‌ இவனுக்கு நான்‌ அபயமளித்து விட்டேன்‌. 
நீ இவனை அழைத்து வா | என்றும்‌, 
“ஸக்ருதேவ ப்ரபந்நாய த்வாஸ்மீதி ௪ யாசதே | 
அபயம்‌ ஸர்வ பூ,தேப்‌யோ யேதத்‌, வ்ரதம்‌ மம।॥'' 
ஓரு தடவை சரணமடைந்தவனுக்கும்‌ 'உன்னடியேன்‌ நான்‌' என்று யாசிப்பவனுக்கும்‌ 
எல்லா பூதங்களினின்‌ றும்‌ அபய மளிக்கிறேன்‌. இதுவே என்னுடைய விரதம்‌.என்று
அடைந்தவர்களை அளிப்பதையே விரதமாகக்கொண்ட சக்கரவர்த்தித் திருமகனாய்‌ 
அவதரித்தவன்‌, 
'' அச்சுதன்‌ தன்னைத்‌ தயரதற்கு மகன்‌ தன்னை யன்றி மற்றிலேன்‌ தஞ்ச மாகவே '' 
என்‌று சடகோபன்‌ அருளினாரல்லவா.
(அச்யுதன்‌ ) 
பாநுநா ஆவிர்ப்பூதம்‌ '' 
"தேவகி தன்‌ வயிற்றில்‌ தோன்‌றிய அச்சுதன்‌” என்‌கிறபடியே 
சேதனர்களை நழுவ விடவொண்ணாமையாலே கிருஷ்ணனாய்‌ அவதரித்து, 
“ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ மரணம்‌ வ்ரஜ । 
அஹம்‌ த்வா ஸர்வபாபேப்‌,யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச:।?' 
எல்லா மோக் ஷஸாதனங்களையும்‌ வாஸனையுடன்‌ விட்டு என்னையே சரணமடை. 
நான்‌ உன்னை எல்லாப்‌ பாபங்‌களினின்றும்‌ விடுவிக்கறேன்‌; வருந்தாதே.] என்று அருளிச்செய்தவன்‌. 
(அச்யுதன்‌ ) 
ஸ்வாங்ரிதர்களை அஜ்ஞாந அந்யதா அஜ்ஞாந விபரித அஜ்ஞாநங்களின்‌ 
கையில்‌ காட்டிக்‌ கொடாமல்‌ காப்பாற்றுமவன்‌. 
“நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்‌ லப்‌தா த்வத் ப்ரஸாதராந்‌ மயா 
அச்சுதனே! 
வீபரித ஜ்ஞானமாகிய மோஹம்‌ நசித்தது;
உன்னருளால்‌ உண்மை அறிவு என்னால்‌ அடையப்பட்டது என்பதல்லவோ அர்ஜுனன்‌ வார்த்தை.
(அச்யுதன்‌) 
இவ்‌ வுலகிலிரு்து மோக்ஷமடைந்த முக்தரையும்‌. நித்ய ஸுரிகளையும்‌ -
'புணை கொடுக்கிலும்‌ போக வொட்டார்‌?' என்கிற படியே 
அங்கிருந்து நழுவ விடாதவன்‌. 
௮ச்சுதனை........ அநந்தன்‌ தன் மேல்‌ நண்ணி நன்குறைகின்றானை '' என்று 
நம்மாழ்வாரும்‌, 
“அச்சம்‌ நோயோடல்லல்‌ பல்‌ பிறப்பவாய மூப்பிவை 
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானி லேற்றுவான்‌ 
அச்சுதன்‌ அநந்த கீர்த்தி ஆதியந்தமில்லவன்‌ 
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌'' என்று திருமழிசையாழ்வாரும்‌ 
“ அச்சுதா அமரரேறே ' ' என்று தொண்டரடிப்பொடிகளும்‌ 
இவ் வர்‌த்தத்தை அநுஸந்தித்‌த்ருளினார்கள்‌. 
(அச்யுதன்‌) 
இத்தால்‌ அடைந்தவர்களுக்கு அல்லல்‌ வந்தபோது அவர்‌ களை விட்டகலும்‌ 
ருத்ராதிகளைக்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி ( வேறுபாடு ) சொல்லப்படுகிறது. 
இதனாலேயே யன்றோே “ஸிவம்‌ '' என்று சொன்ன நாராயணானுவாகமும்‌. 
இது ருத்ரனைக்‌ குறிக்கும்‌ பதமல்ல என்று தெளிவிப்பதற்காக “அச்யுதம்‌ என்று படித்தது. 
“பரிவின்றி வாணனைக்‌ காத்துமென்றன்று படையொடும்‌ வந்தெதிர்ந்த 
திரிபுரம்‌ செற்றவனும்‌ மகனும்‌ பின்னும்‌ அங்கியும்‌ போர் தொலைய 
பொரு சிறைப்‌ புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப்‌ 
பொற் சக்கரத்‌ தரியினை அச்சுதனைப்‌ பற்றி யான்‌ இறையேனும்‌ இடரிலனே,”' என்று 
வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ இவ்விஷயத்தை உணர்த்தினார்‌. 
(அச்யுதன்‌ ) 
அடியவர்களை நழுவ விடாதவன்‌” என்னுமிந்த மஹா குணத்தைத்‌ தெரிவிக்கும்‌ 
திருநாம மாகையாலே, 
இதை வேதமும்‌. 
வைதிகர்களும்‌, 
பக்தர்களும்‌ மிகவும்‌ ஆதரிப்பர்கள்‌. 
ஆழ்வார்கள்‌ இத்திருநாமத்தை அதரித்த ப்ரகாரத்தை மேலே விவரித்தோம்‌.

“யந்நாயம்‌ ப,க,வாம்‌ ப்ரஹ்மா ஜாநாதி பரமம்‌ | 
தந்ததா: ஸ்ம தவ ஸர்வ கதாச்யுத ॥" 
௮ச்சுதனே! ஸர்வ வ்யாபியே! மேலான ப்ராப்யமான எதை பகவானான பிரமனும்‌ அறியானோ. 
உலகிற்கெல்லாம்‌ இருப்‌பிடமான அந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம்‌. 
என்று ப்ரயோஜனாந்தர பரரான தேவர்களும்‌,
“ ஸர்வேஸ்வர ஸர்வ பூ,தாத்மந்‌ ஸர்வ ஸர்வஆஸ்ரய யச்யுத ”' என்று 
அவர்களுக்குத்‌ தலைவனான பிரமனும்‌,

“அவலோகந ததாநேக ப,யோ மாம்‌ பாலயாச்யுத'' என்று 
அநந்ய ப்ரயோ ஜனனான ப்ரஹ்லாதாழ்வானும்‌. `
" த்வாரகா நிலயாச்யுத” என்‌று க்ருஷ்ணையும்‌. 
த்வத் ப்ரஸாதநமயாச்‌யுத” என்று நரனாகிய அர்ஜுனனும்‌.
“ஹத வீர்யோ ஹத விஷோஹம்‌ த்வயாச்யுத "" என்று காளியனும்‌ 
இத் திரு நாமத்தை அநுஸந்தித்தார்‌களன்‌றோ . 
இது வரையில்‌ அச்யுத சப்தத்துக்கு அடியவர்களை நழுவ விடாதவன்‌' என்னும்‌ பொருள்‌ விவரிக்கப்பட்டது. 
இனி நழுவாத ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவன்‌ என்னும்‌ அர்த்தம்‌ விளக்கப்படுகிறது,

(அச்யுதன்‌)
” ச்யவதே இத்‌ யச்யுத:’ என்றபடியே, ப்ரஹ்ம ருத்ராதிகளைப்‌ போலின்‌றியே ஒருபடியாலும்‌ அழிவில்லாதவனாயிருப்பவன்‌ .
“ச்யவநோத்பத்தியுக்தேஷு ப்‌,ரஹ்மேந்த்‌,ரவருணாதிஷு |
யஸ்மாந்ந ச்யவஸே ஸ்தரநாத்‌ தஸ்மாத்‌ ஸங்கீர்த்யஸே அச்யுத; ॥”
நழுவுதலென்னும்‌ மரணம்‌, பிறப்பு ஆகிய இவற்றுடன்‌ கூடிய பிரமன்‌ . இந்திரன்‌, வருணன்‌ முதலிய தேவர்கள்‌,
போல் இன்றிக்கே தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நழுவாதவனாகையால்‌ நீ அச்யுதனெனப்படுகிறாய்‌–
என்று ஸாஸ்த்ரம்‌ சொல்லிற்று.
“ஜாயதே அஸ்தி வர்த்‌,த,தே பரிணமதே அபக்ஷீயதே விநங்யதி இதி ஷட்‌,பாவ விகார ரஹிதத்வாத,ச்யுத: ”
பிறக்கிறான்‌. உயிர் வாழ்கிறான்‌, வளருகிறான்‌. பரிணாமமடைகிறான்‌, குறைவடைகிறான்‌ ,
நாசமடைகிறான்‌ என்னும்‌ ஆறு விகாரங்‌ களும் அற்றவனாகையாலே அச்யுதனெனப்படுகிறான்‌-
என்று சங்கரர்‌ பாஷ்யம்‌ செய்தபடியே இங்கு விநாசத்தைச்‌ சொன்னது ஷட்‌பாவவிகாரங்களுக்கும்‌ உபலக்ஷணம்‌.

ஆழ்வார்களும்‌ இவ்வர்த்தத்தைப்‌ பலவிடங்களில்‌ அநுஸந்தித்‌ தருளினார்கள்‌.
“பச்சை மா மலை போல்‌ மேனி பவள வாய்‌ கமலச் செங் கண்‌ அச்சுதா” என்று தொண்டரடிப் பொடியாழ்‌வார்‌
அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனென்‌ பதை உணர்த்தினார்‌.
“` அச்சுதன்‌ அநந்த மூர்த்தி” என்று திருமழிசையாழ்வாரும்‌. “ ஆர்ந்த புகழச்சுதன்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
அழியாத புகழுடையவன்‌ என்று அச்யுத சப்தத்துக்கு வியாக்யானம் செய்தார்கள்‌.
சங்க,சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத” என்ற துரெளடதியும்‌
ஸர்வேங்வரன்‌ நித்யவிபூ,தியோடும்‌ லீலாவீபூ,தியோடும்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்புக்கு
என்‌றும்‌ அழிவில்லை என்று உணர்த்தினாள்‌.
(௮ச்யுதன்‌ )
ஸகல சேதநாசேதனங்களையும்‌ விடாமல்‌ வியாபித்தும்‌ தரித்தும்‌ நிற்பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
இத்தால்‌
ஸர்வ வ்யாபகத்வமும்‌,
ஸர்வ தராரகத்வமும்‌
சொல்லப்பட்டதாகிறது.
‘ அடியவர்‌ களை நழுவ விடாதவன்‌ ” என்னும்‌ பொருளைத்‌: தெரிவிக்கை யாலும்‌,
மற்றும்‌ பல அரும்பொருள்களையும்‌ உடைத்தாயிருக்‌ கையாலும்‌,
வேதத்தாலும்‌,
இதிஹாஸபுராணாதிகளாலும்‌,
ஆம்வார்களாலும்‌
மிகவும்‌ ஆதரிக்கப்படுகையாலும்‌ இக்திரு நாமம்‌ ஆசமனத்தின்‌ ஆரம்பத்தில்‌ அநுஸந்திக்கப்படுகிறது.

நிற்க; ஆழ்வார்களுடைய ஸ்ரீ ஸூக்திகளுக்கு ஸ்ரீ பெரிய வாச்சான்பிள்ளை முதலிய மஹாசார்யர்களால்‌
விவரிக்கப்‌ படாத சில அர்த்தங்கள்‌ இங்கு கொள்ளப் பட்டிருக்கின்‌றனவே;
அவை எப்படிப்‌ பொருந்தும்‌ என்று சிலர்‌ சங்கிக்கக்‌ கூடும்‌. அவர்களுக்குச்‌ சொல்லுகிறோம்‌:
ஆழ்வார்களின்‌ ஆழ்கடல் போன்‌ற அருளிச் செயல்களின்‌ அர்த்தங்களாகிய ரத்னங்களையெல்லாம்‌
நமக்கு ஆக்குவது முடியாத காரிய மாகையாலே, நம்மாசார்யர்கள்‌ அவைகளின்‌ ஸாரமான பொருளை
ஏடுபடுத்தியருளினார்கள்‌.
ஆகையால்‌ அவ்வாழ்வாராசாரியர்களுடைய ஸ்ரீஸூக்திசளுக்கு அவிருத்தமாயும்‌,
ப்ரகரணந்திற்குப்‌ பொருந்தியவையாயுமுள்ள பொருள்களையும்‌ கொள்வதில்‌ தவறில்லை.
ஆழ்வார்களின்‌ அமுதினுமினிய அருளிச் செயல்களின்‌ ஆழ்பொருன்களையெல்லாம்‌ ஆரே அள விட்டு அறியவல்லார்‌? –

————————————

இனி அநந்தன்‌” என்னும்‌ நாமத்தின்‌ அரும் பொருள்‌ அறிவிக்கப்படுகிறது. 
இத் திரு நாமமும்‌ அச்யுத நாமத்தைப்‌ போல்‌ அரு மறையால்‌ ஆதரிக்கப்பட்டது. 
அச்சுதன்‌ அநந்த கீர்த்தி” என்று அச்யுத நாமத்திற்கு அர்த்த மருளிய திருமழிசை யாழ்வார்‌ 
* ஆதியந்தமில்லவன்‌ ” என்று அநந்த நாமத்தை அடுத்த படியாக விவரித்தருளினார்‌. 
நம்மாழ்வரும்‌ “அண்ணலை அச்சுதனை அநந்தனை" என்று
இத் திருநாமங்‌கனைச்‌ சேர்த்துப்‌ படித்தார்‌. 
'அச்யுதன்‌” என்னும்‌ திருநாமம்‌ " அடியவர்களை நழுவ விடாதவன்‌ ' என்று உரைக்கிறது, 
தமர்களைக்‌ கைவிடாமைக்காக அநேக அவதாரங்களை எடுத்‌தும்‌,
அளவற்ற குணங்களை வெளிப்படுத்தியும்‌ 
எல்லாவற்றையும்‌ வியாபித்‌தும்‌ விளங்குமவன்‌ என்பதை அநந்த நாமம்‌ அறிவிக்கின்‌றது. 
“கந்தர்வ அப்ஸரஸஸ்‌ ஸித்‌தாஸ் : கிங்கரோரக,சாரணா: | 
நரந்தம்‌ குணாநாம்‌ க,ச்ச;ந்தித அநந்தோயம் அவ்யய: |!” (2-6-24) 
கந்தர்வர்கள்‌, அப்ஸரஸ்ஸூகள்‌, ஸித்தர்கள்‌. கின்னரர்கள்‌, நாகர்கள்‌, சாரணர்கள்‌
ஆக எல்லாரும்‌ இவனுடைய குணங்களை முடிவு காண்பதில்லை. 
ஆகையால்‌ இவன்‌ அநந்தனெனப்படுகிறான்‌ என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில்‌
அநந்த சப்தார்த்மும்‌ சொல்லப்பட்டது. 
இத்தால்‌ குணங்‌களாலும்‌. சரீரங்களாலும்‌, ஐஸ்வர்யத்தாலும்‌ அளவற்றவன்‌
அநந்தன்‌ எனப்பட்டதாகிறது.

“நமோ$ஸ்த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே ஸஹஸ்ர பாத;அக்ஷி மிரோருபாஹவே | 
ஸஹஸ்ரநாம்கே புருஷாய மராங்வதே ஸஹஸ்ர கோமீயுக,தாரிணே நம: |!" 
கணக்கற்ற சரீரங்களை உடையவனும்‌. அளவற்ற பாதங்‌ களையும்‌. கண்களையும்‌.
தலைகளையும்‌. தொடைகளையும்‌.கைகளையும்‌ உடையவனும்‌,
கணக்கற்ற திரு நாமங்களை உடையவனும்‌ நித்ய புருஷனும்‌. அளவு கடந்த யுகங்களை தரிப்பவனுமான 
அநந்தனுக்கு நமஸ்காரம்‌--என்று பிரமனால்‌ அநந்தனென்‌னும்‌ திருநாமத்தின்‌ அர்த்கம்‌ அநு ஸந்திக்கப்பட்ட து, 
( அநந்தன்‌ ) காலத்தாலும்‌. தேசத்தாலும்‌, வஸ்துவாலும்‌ அளவு பட்டிராத ஸ்வரூபத்தை உடையவன்‌. 
ஸத்யம்‌ ஜ்ஞாநம்‌ அநந்தம்‌ ப்ரஹ்ம "` 
ப்ரஹ்மம்‌ விகாரமற்றதாகவும்‌, ஞான ஸ்வரூபமாகவும்‌. -
கால தேச வஸ்து ஆகிய மூன்று விதமான அளவுமற்றதாக வும்‌ உள்ளது] 
' அதைதஸ்யைவாந்தோ நாஸ்தி யத்‌, ப்‌,ரஹ்ம'' 
ப்ரஹ்மமென்று யாதொன்றுள்ளதோ அதற்கு முடிவில்லை ' 
அநந்தம்‌....ஸமுத்‌,ரேந்தம்‌ 
'' பாற்கடலில்‌ தயிலும்‌ அநந்தன்‌ |. என்று வேதங்களிலும்‌. “ 
நாஸ்த்‌- யந்தேச விஸ்தரஸ்ய மே'' என்னுடைய ஐஸ்வர்யத்துக்கு அளவில்லை.-என்று கீதையிலும்‌, 
“ஆதியந்த மில்லவன்‌'' 
“அச்சுதனை அநந்தனை'' என்று ஆழ்வார்களாலும்‌ சொல்லப்‌ பட்டவை 
இவ் விஷயத்தில்‌ ப்ரமாணங்கள்‌.
----------

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

———-

அனந்த (2)
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3
அனந்தம் (1)
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் – நாலாயி:663/1
அனந்தன் (5)
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் – நாலாயி:670/3
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் – நாலாயி:2296/3
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
அனந்தன்-தன் (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
அனந்தன்-பாலும் (1)
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1
அனந்தனை (1)
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2

——————–

அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்தம்‌ விவரிக்கப்படுகிறது. 
“அநந்தன்‌' என்று புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது. 
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக. 
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ 
ஒரு நீராகக் கலந்து  பரிமாறுமவன்‌' என்னும்‌ பொருளை யுடைய 
கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது. 
“அச்சுதா! அமரரேறே!' என்று அச்யுத அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த 
தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌. 
“ஆயர்தம்‌ கொழுந்கதே!'' என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை 
அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ ) 
“ காவ: விந்த,தி '' [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே, 
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான 
பசுக்களை அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,
“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:। 
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||." 
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌. 
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌. 
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌--
என்று ஹரிவம்‌சத்தில்‌ கோவர்த்தனதாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ. 
கோவிந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌ 
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ " என்றும்‌ 
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி. 
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌. 
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே 
தனக்கு ப்ராண பரமாகக்‌ கொண்டிருந்தாள்‌. 
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌ 
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ''-என்றும்‌, 
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே 
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌'' என்‌றும்‌, 
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா'' என்றும்‌. 
சொல்லும்படி யன்‌றோ 
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌. 
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போதும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ '' என்று 
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது. 
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று 
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

“கேளவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ | 
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥'* 
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌று த்ரெளபதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த 
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று-- அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌ 
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே. 
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னி யுரைக்குங்கால்‌ பாரதமாம்‌. 
(கோவிந்தன்‌ ) 
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌ 
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
'மஹா வராஹோ கோவிந்த,: "என்று ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது . 
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ | 
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ' 
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ 
தேடி யடைந்கதேனாகையால்‌.  தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது. 
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து. 
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! 
நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌ 
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌ 
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌ 
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌ 
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே' 
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌ 
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!'' —என்‌றும்‌, 
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌ 
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌றியாம்‌ 
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌ 
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌ 
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“'கெளரேவைஷா ததா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ | 
கோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌ 
கோ சப்தமான து :'கெள:' என்று சொல்லப்படுகிறது. 
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ 
சொல்லப்படுகிறீர்‌.  என்கிற நிர்வசன த்தின்‌ படியே 
ஸர்வ சப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌. 
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ'' என்று 
திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அனுஸந்தித்தார்‌. 
(கோவிந்தன்‌ ) 
கோ சப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு 
வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌. 
அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌ நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ '' என்று 
அச்சுதன்‌. அநந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -'
வேத கதனே ”' என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌. 
(கோவிந்தன்‌ ) 
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌ 
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌. 
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌ 
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌
(கோவிந்தன்‌) 
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. 
நம்மாழ்வாரும்‌
“பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌ 
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற 
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌ 
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே '' என்று இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌. 
“நாராயண பரோ ஜ்யோதி:'' என்றும்‌. 
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய '' என்றும்‌. 
ˆ" ஆதித்ய வர்ணம்‌ '' என்றும்‌, 
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: | 
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமிதம்‌ ॥” 
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை; 
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை. 
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ? 
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌றன. 
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌ 
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா | 
யதி, ஸத்‌ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥” 
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. 
அவ்வொளி அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று 
கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ. 

-------------------

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் 
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

-----------

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் - நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களின் மஹிமை —

April 29, 2023

ஸ்ரீ தாயாருடைய பன்னிரு திருநாமங்கள்
1- ஸ்ரீ -பெரியபிராட்டியார்
2- அம்ருதோத்பவ -அம்ருதவல்லித் தாயார் சோளிங்கர்
3-கமலா -கமலாவல்லித் தாயார் உறையூர்
4-சந்த்ர ஷோபநா -பரிமள வல்லித் தாயார் இந்தளூர்
5-விஷ்ணு பத்நீ –வஞ்சுள வல்லித் தாயார் -திருநறையூர்
6-வைஷ்ணவீ -யதுகிரி நாச்சியார்
7-வரரோஹா -ஸ்ரீ வரமங்கத் தாயார்
8-ஹரிவல்லபா -கோதா நாச்சியார்
9-சார்ங்கிணீ -கோமள வல்லித் தாயார்
10-தேவ தேவிகா –பெரும் தேவித் தாயார்-காஞ்சிபுரம்
11-ஸ்ரீ மஹா லஷ்மி -பத்மாவதித் தாயார்
12-லோக ஸூ ந்தரீ –ஸுந்தரவல்லித் தாயார் -திரு நாகை

————–

ஸ்ரீ பன்னிரு திருநாமப் பாடல்கள்

 ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி:2.3.1-13

 ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய்மொழி: 2.7.1-13

———–

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி 2-3 -ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –

(பன்னிரு திரு நாமப் பதிகம் இது
இதே போல் கேசவன் தமர் –2-7-திருவாய் மொழியும்
கலியனும் )

அவதாரிகை –
கீழில் திருமொழியில் –
இவனுடைய பால்ய அனுகுணமாக முலை உண்கையை மறந்து கிடந்து
உறங்குகிறவனை எழுப்பி -முலை உண்ண வேண்டும்  என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் விடாதே -பஹுமுகமாக நிர்பந்தித்து –
யசோதை பிராட்டி முலை ஊட்டின பிரகாரத்தை –
அவளுடைய ப்ராப்தியையும் ( மாத்ரு பாவநா ) சிநேகத்தையும் உடையராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து பேசி அனுபவித்து இனியரானார் –

அவள் அவனுக்கு
1-காது குத்தி –
2-காது பெருக்கி –
3-காது பணிகளும் இட்டு அனுபவிக்க ஆசைப்பட்டு –
காது குத்துகையாகிற உத்சவத்துக்கு -ஊரில் பெண்களை எல்லாம் அழைத்து விட்டு –
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான பதார்த்தங்களும் சம்பாதித்து வைத்து –
அவனை-காது குத்த -என்று அழைக்க

அவன் -நோம் -என்று அஞ்சி -மாட்டேன் -என்னச் செய்தேயும் –
(இது நோவு அறிகிற பருவம்
கீழே முலை உண்ணாமல் உறங்கினான் )
அவன் அஞ்சாதபடியான வசனங்களைச் சொல்லியும் –
அவனுக்கு அபிமதமான பதார்த்தங்களை காட்டியும் உடன் படுத்திக் கொண்டு –
காது பெருக்கின பிரகாரத்தை –
தாமும் அவளைப் போலே அனுபவிக்க ஆசைப்பட்டு –
தத் அவஸ்த ஆபந்னராய் கொண்டு –
தத் காலம் போலே அவனைக் குறித்து
அப் பாசுரங்களைப் பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் இத் திருமொழியில் –

——————————–

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும்  இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – 2-3 1- –

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

போய் இத்யாதி –
பாடுடைய நின் தந்தையும் -போய் -தாழ்த்தான் -புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் –
இடமுடைய நெஞ்சை உடையனான -உன்னுடைய பிதாவும் -பசுக் கடையிலே சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று போய் வரவு தாழ்த்தான் –

அன்றிக்கே –
போய் -என்ற இது –
மிகுதிக்கு வாசகமாய் -(போய்ப்பாடு-மிகுதியான பாடு -ரக்ஷணம் )
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணத்தில் மிகவும் அளவு உடையனாய் –
கூர்  வேல் கொடும் தொழிலன் -என்கிறபடியே நீ பிறந்த அன்றே தொடங்கி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடித்து -தொட்டில் கீழே ஒரு எறும்பு ஊரிலும் –
சிம்ஹத்தின் மேலே சீறுமா போலே சீறி -உன்னை நோக்கிக் கொண்டு திரியும்
பிதாவானவனும் கார்யார்தமாக போன இடத்தே விளம்பித்தான் என்னவுமாம் –

பொரு திறல் கஞ்சன் கடியன் –
பொருகையில்  மிடுக்கை உடையனான கம்சன் -உன்னளவில் மிகவும்
க்ரூரன்-உன்னை நலிகைக்கு இடம் பார்த்து திரிகிறவன் ஆகையால் –
ஆரை வரவிடும் -எது செய்விக்கும் -என்று தெரியாது –

காப்பாரும் இல்லை –
அதுக்கு மேலே விரகு அறிந்து -ரஷிக்க வல்லாரும் இங்கு இல்லை –
ரஷகரான அவர் வந்திலர் –
நானோ அபலை -வேறோர் பரிவர் காண வில்லை -யார்தான் ரஷிப்பார்

கடல் வண்ணா உன்னை –
தன்னேராயிரம் பிள்ளைகள்-என்கிறபடியே -இவ்வூரிலே திரிகிற அநேகம்
பிள்ளைகளுக்கு உள்ளே நானும் ஒருவனாய் திரியா நின்றால்
என்னை  அவர்கள் அறிய புகா நின்றார்களோ என்றால்-
என்னை அவர்கள் அறியப் புகா நின்றார்களோ என்று – நீ நினைக்க வேண்டா –
கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற உன் வடிவழகே உன்னை காட்டிக் கொடாதோ –
இப்படி இருக்கிற உன்னை உணர்ந்து ரஷிப்பாரும் இல்லை -என்னுதல்-

ஒரு விரோதிகளே இல்லை ஆயினும் -அஸ்த்தானே பய சங்கை  பண்ணி
மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான அழகு உடைய உன்னை –
விரோதி பூயிஷ்டமான இவ்விடத்தில் பரிவராய் ரஷிப்பார் யாருமில்லை என்னுதல் –

தனியே போய் எங்கும் திரிதி –
பிள்ளைகள் தன்னோடு திரிகிறாய் என்னவும் ஒண்ணாதபடி –
அவர்களையும் விட்டு தனியே போய் எங்கும் சஞ்சரியா நின்றாய்
அவர்கள் தன்னோடு கூடப் போனால் தான் பிரயோஜனம் என்-

பேய்ப் பால் முலை உண்ட பித்தனே –
பேயானவள் தாய் வடிவை கொண்டு வர -அவளைத் தாயாகவே நினைத்து –
அவள் முலைப்பாலை இருந்துண்ட  பிராந்தன் நீ அல்லையோ –
ஆகையால் -மாயா ரூபிகளான அசுரர்கள் ஒக்க வடிவுடைய
பிள்ளைகளோடு ஒத்த வடிவைக் கொடு வந்து கலசி நின்றாலும் -அவர்களை பிள்ளைகளோ பாதி
தோழன் மாறாக நினைப்பான் ஒருவன் இறே நீ என்கை

கேசவ நம்பீ –
இப்படி நீ என் செய்ய பயப்படுகிறது -நான் கேசவ நம்பி அன்றோ -என் கையிலே
கேசி பட்டது அறியாயோ என்று -தன் ஸௌர்ய பூர்த்தியை காட்ட –
அத்தை (அந்த பயத்தை ) அவ்வளவிலே விட்டு –
தான் உபக்ரமித்த கார்யத்தில் புரிந்து –

நானே அன்று காண்-
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்கள்-
வந்தவர்களை சம்பாவிகைக்கு ஈடான அடைக்காய் முதலானவையும் நான் திருத்தி வைத்தேன் –
ஆன பின்பு நீ காது குத்தும்படி வர வேணும் -என்கிறாள் –

——————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர் பாத கிண் கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே -திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகு உடைய கனகக் கடிப்பும் இவையா -2 3-2 – –

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியை யிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகை யுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணம் இத்யாதி –
ஆகரத்தில் பிறக்கையாலே நிறம் உடைத்தாய் இருந்துள்ள -பவளத்தினுடைய வடத்தை –
அது தனக்கும் அழகு கொடுக்க வற்றான திரு வரையில் சாத்தி –

மலர் இத்யாதி –
தாமரைப் பூ போலே இருக்கிற திருவடிகளில் சதங்கைகளானவை த்வநிக்க-

திரு வரையும் பவள வடமுமான சேர்த்தி அழகு தோற்றும்படியாகவும் –
திருவடிகளில் சாத்தின சதங்கை த்வநிக்கும் படியாகவும்
வர வேண்டும் என்று கருத்து –

நண்ணி இத்யாதி –
அஹங்காராதிகளாலே உன்னை அகன்று திரிகை அன்றிக்கே –
தத் ராஹித்யத்தாலே உன்னைக் கிட்டி –
ஸ்வ சேஷத்வ அனுரூபமாக தொழுகையே யாத்ரையாக இருக்கும் அவர்களுடைய நெஞ்சை –
நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் (பெரிய திருவந்தாதி )-என்கிறபடியே
இஷ்ட சர்வ சேஷ்டா விஷயமாகக் கை கொண்டு
ஷண காலமும் விட்டுப் பிரியாதே வர்த்திக்கும் –
நாராயணனே நான் அழைக்கிற இவ் விடத்தே வராய் –

எண்ணற்கு அரிய பிரானே –
உன் பக்கல் சிநேகம் இல்லாதவர்க்கு -நினைக்கைகும்  கூட அரியனாய்
இருக்கும் உபகாரனானவனே-

1-ஆஸ்ரிதருக்கு சுலபனாய் இருக்கையும் –
2-அநாஸ்ரிதர்க்கு துர்லபனாய் இருக்கையும் –
3-மங்களா சாசன பரராய் இருப்பார்க்கு தம் பேறாய் இறே இருப்பது –

நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய இடுக்கைக்கு அன்றோ என்ன –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
திரியை உன் காதுகளுக்கு எரிச்சல் வாராதபடி
அனுகூலமாக இடுவன் –

கண்ணுக்கு இத்யாதி –
திரி ஏற்றி காது பெருக்கினால் -உனக்கு இடுதலாக சமைத்த –
கண்ணுக்கு மிகவும் அழகை உடைத்தாய் இருக்கிற -பொற் கடிப்புகளான இவையும்
இருக்கிறபடி பாராய் –
அழகும் என்ற இடத்தில் -ச சப்தம் அவ்யயம் –

நன்றும் அழகும் உடைய என்றும் –
கனகப் கடிப்பு என்றும் -சொன்ன இவை இரண்டாலும் –
பணித் திருத்தமும்
உபாதான வைலக்ஷண்யமும் சொல்லுகிறது –

———————————————————–

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய இவ்வாயர்  குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையின்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் 2- 3-3 –

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக் குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீ யபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸிலே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்து கொண்டு
இங்கே வாராய்:-.

வையம் இத்யாதி –
பொற் கடிப்பு அளவே அல்ல -காது பெருக்கினால் இடும்படியாக பூமி எல்லாம்
பெறும்  பெரு விலையனான-நீண்ட கடலிலே வர்த்திக்கும் பெரிய மகரம் போலே இருக்கிற காதுப்
பணி கொண்டு வைத்தேன்  -என்ன –

நீ இது சொல்லுகிறது -இப்போது என் காதுக்கு திரி இடுகைகாக
அன்றோ -திரி இட்ட போதே காது தினவு தின்று வரும் -எனக்கு வேண்டா என்ன –

வெய்யவே காதில் திரியை இடுவன் –
தினவு-கண்டூதி சமிக்கும்படி –
வெச்சாப்போடே-அல்பமான உஷ்ணத்தை யோடு -காதுகளில் திரியை இடுவன் என்ற
இடத்திலும் -அவன் இசையாமையாலே -இசைகைக்காக –

நீ வேண்டியது எல்லாம் தருவன் –
நீ விரும்பி இருக்கும் அபூப  பலாதிகள் எல்லாம் தருவேன் என்ன-
அவ் வளவிலும் அவன் வாராமையாலே –

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே –
இருந்ததே குடியாக குடி (இருந்ததே ஹேதுவாக )உஜ்ஜீவிக்கும்படி இவ்விடைக் குலத்தில் வந்து பிறந்து –
அது தானே உனக்கு மிகவும் தேஜஸ்சாம்படி இருப்பானாய்-
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே –
இடையருக்கு ஒரு வியசனம் வரில் -முந்துற உன் முகம் வாடும்படி -அவர்களுக்கு தலைவன் ஆனவனே –

மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே
ஒரு பருவத்தின் இடைப் பெண்களை உன்னுடைய ஸுந்த்ர்யாதிகளாலே மதி மயங்கும்படி பண்ணி –
அவர்களுடைய நெஞ்சுக்கு சர்வ காலமும் -விஷயமாம்படி இருப்பானாய் –

மாதவனே
உன்னுடைய நெஞ்சத்து இறை (அபஹரித்து )கொள்ளும் பிராட்டிக்கு வல்லபன் ஆனவனே –

இங்கு வாராய் என்று
ஸ்துதி பூர்வகமாக அழைக்கிறாள் –

——————————————————–

வண நன்றுடைய வைரக் கடிப்பு இட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் -2 3-4 – –

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

வணம் இத்யாதி –
இப்படி ஸ்துத்திக் கொண்டு அழைத்த இடத்திலும் வாராமையாலே -இது தன்னை
சொன்னாகிலும் வருமோ என்று –
இந்த இடை பிள்ளைகள் ஆனவர்கள் -நல்ல நிறத்தை உடைத்தான வயிரக் கடிப்பிட்டு –
ஒழுகு நீண்ட காதானது தோள் அழவும் தாழும் படி பெருக்கி –
தாய்மார் முதலானோர் சொல்லிற்று செய்து மிகவும் குணம் உடையராய் இருக்கிற படி பாராய் –
நீயும் இப்படி இருக்க வேண்டாவோ

கோவிந்தா -நீ சொல்லுக் கேளாய் –
ஸுலப்யதுக்கு  கோவிந்தன் என்று பேர் இட்டு கொண்டு இருக்கிற நீ –
என் சொல்லு  கைக் கொள்ளுகிறாய் இல்லை என்ன –

உன் சொல்லு கேட்டு நான் கடிப்பு இடுவித்துக் கொண்டால் எனக்கு என்ன தருவாய் என்ன –

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய் -மிகவும்
அழகியதாய் இருக்கிற இந்த கடிப்பை இட்டால்-

இனிய பலாப் பழம் தந்து –
உனக்கு இனிதான பலாப் பழம் தந்து –

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் –
நான்-சுணங்கை உடைத்தாய் –
நன்றாய் அழகியதான -முலையை நீ அமுது செய்யும்படி தருவன் நான் என்ன –
சுணங்கு -முலை போல் தோன்றும் நிறம்
நன்றாகை-மிருதுவாக இருக்கை
(சன்னிவேச வை லக்ஷண்யம் )

சோத்தம்பிரான் இங்கே வாராய் –
இப்படி சொன்ன அளவிலும் வாராமையாலே
பிரானே உன்னைக் கும்பிடுகிறேன் -இங்கே வாராய் என்று இரந்து அழைக்கிறாள்

சோத்தம் -என்கிற இது –
அஞ்சலி பண்ணும் அவர்கள் அதுக்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற
சொல்லுவதொரு சப்த விசேஷம் –

————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரோடு நீ போய்
கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடிவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  அப்பம் தருவன் பிரானே திரி இட ஓட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் -2 3-5 –

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன் –
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம் இத்யாதி –
சோத்தம்பிரான் இங்கே வாராய் -என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –
பிரானே உன்னைத் தொழுகிறேன் என்று -இரந்தாலும் –
என் சொல்லைக் கை கொண்டு -நீ வருகிறாய் இல்லை என்றவாறே –

நீ அழைக்க நான் வந்த இடத்தில் குணம் கொள்ளாமல் –
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

அதுவோ –
சுரி குழலாரோடு நீ போய்  கோத்து குரவை பிணைந்து இங்கே வந்தால் -குணம் கொண்டாடுவனோ நம்பீ –
ஆளற்ற இடத்தில் நீ போய் -சுருண்ட குழலை உடையராய் இருக்கும் பெண்களோடு கை கோத்து –
குரவை பிணைந்து ஆடி இங்கே வந்தால் பொடியாதே குணவான் என்று உன்னைக் கொள்வனோ நம்பீ
என்று இவள் சொன்னவாறே-

நிருத்தரனாய் நிறக –

அவ்வளவிலே கையில் திரியை எடுத்து -இத்தை இடும்படி வாராய் -என்ன –

அவன் -இது இட ஒட்டேன் -என்ன

பிரானே திரி இட ஓட்டில் பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் –
எனக்கு எல்லாப் படியாலும் உபகாரன் ஆனவனே –
திரி இத்தனையும் இட ஒட்டுதியாகில் -நீ சிறிது சிறிது என்று பொகடப் பொகட நீ விரும்பும்படி
பெரியனவான அப்பங்களை தருவேன் என்ற இடத்திலும் -அவன் வாராமையாலே –

வேய் இத்யாதி –
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் மூங்கில் போலேயாய் –
பெருத்து இருந்துள்ள தோளை உடையரான பெண்கள் விரும்பும்படியாய் –
இருண்டு நீண்ட திருக் குழலை உடையனான

விஷ்ணுவே -நீ இங்கே வாராய் என்று –
அவன் வைலக்ஷண்யத்தை சொல்லி –
புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

—————————————————-

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம்  கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே – 2-3 6- –

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண் இத்யாதி –
மண் தின்றாய் -என்று அடித்தவாறே –
ஆ -என்ன –
ஆகாசப் பரப்பு அடங்கலும்
கேட்க்கும்படி அழுத உன்னுடைய வாயில் –
மண் உண்ட சுவடு உண்டாகில் பார்ப்போம் -என்று
விரும்பி அத்தை நான்  பார்த்த அளவில் –

முன்பு போலே வாய் வழியே பூமி எல்லாம் உள்ளே இருக்கிறபடியை கண்டு –
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே -என்று
என் மனசிலே பயப்பட்டு –
இவன் நம்முடைய பிள்ளை அல்லன் –
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன் – என்றவாறே –

அஹம் வோ பாந்தவ ஜாத-என்னும் அவனாகையாலே –
இவள் அந்யனாக்கி வார்த்தை சொன்னது சகியாமையாலே அத்தை மறப்பித்து –
தன் பிள்ளை -என்று
இவள் அணைத்துக் கொள்ளும்படி வந்து கிட்டி நிற்க –

அவ்வளவிலே இவள் –
காதுக்கு கடிப்பு இடுவதாக உத்யோகிக்க –
என்னுடைய காது புண் -எனக்கு அது வேண்டா -என்று அவன் சொல்ல –

புண் ஏதும் இத்யாதி –
புண் ஒன்றும் இல்லை -உன்னுடைய காது தண்டு புரளும் –
சற்றுப் போது பொறுத்து இரு நம்பீ என்ன –

அவன் பொறுத்த படியால் ப்ரீதையாய்
கண்ணா –
எனக்கு சுலபன் ஆனவனே

என் கார் முகிலே –
ஜல ஸ்தல விபாகம் பாராமல் -உபகரிக்கும் காள மேகம் போலே
எனக்கு உன்னை உபகரித்தவனே

கடல் வண்ணா –
எனக்கு அனுபாவ்யமான கடல் போன்ற நிறத்தை உடையவனே

காவலனே –
எனக்கு ரஷகன் ஆனவனே –
என்று ஸ்தோத்ரம் பண்ணி
முலை உண்ண  வேணும் என்று அபேஷிக்கிறாள்

———————————————-

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி –
இப்படி ஸ்தோத்ரம் பண்ணி முலை உண்ண சொன்னவாறே –
முலை உண்பானாக தொடங்கின அளவிலே –
கடிப்பை எடுத்து காதிலே இட –
அத்தாலே சீறி –
முலை ஏதும் வேண்டேன்  என்று ஓடி –
நீ தருகிற முலையும்-மற்றும் உண்டான அபூபாதிகளும் -வேண்டேன் என்று –
எனக்கு பிடி படாது கை கழிய ஓடி –
நான் பின் தொடர்ந்த அளவில் எனக்கு தரிப்பாக –

நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு –
உன் காதில் இட்ட கடிப்புகளை க்ரோதம் தோற்ற பிடுங்கி –
என் முன்னே எறிந்து பொகட்டு-

அவ்வளவிலே இந்திரன் பசிக் கோபத்தாலே வர்ஷிப்பிக்க –
அதில் ரஷ்ய வர்க்கம் நோவு படாதபடி -மலையை எடுத்து -முன்பு ரஷகம் என்று சொன்ன
கோவர்த்தன கிரி தன்னையே குடையாக எடுத்து –

மகிழ்ந்து –
மலையை சுமந்து கொடு நிற்கிற அளவில் -சற்றும் இளைப்பு இன்றிக்கே –
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்  பண்ணப் பெற்றோம் -என்று உகந்து –

கன் மாரி காத்து –
அந்த கல் வர்ஷத்தில் ஒரு பசு மேலே  ஆதல் -ஒரு இடையன் மேலே ஆதல் –
ஒரு துளி விழாதபடி ரஷித்து-

பசு நிரை மேய்ததாய் –
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க-( திருவாய் -7-4-) -என்கிறபடியே –
மலை பசு மேய்க்கிற இடம் தன்னில்
சென்று ஏங்கும் ஒக்க கவிகையாலே -பசுக்களை இடையர் மேய்க்கும்படி பண்ணினவனே-

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

திரிவிக்ரமா –
இந்திரன் இழந்த ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்கைக்காக -எல்லை நடப்பாரைப் போலே
திருவடிகளால் -சர்வ லோகத்தையும் அளந்தவனே –

திரு ஆயர்பாடிப் பிரானே –
திரு ஆய்ப்பாடியில் உள்ள ஜனங்களுக்கு சர்வ பிரகாரத்தாலும்
உபகாரன் ஆனவனே –
(குடை பிடித்த ஒன்றை கீழே சொல்லி –
இங்கு மற்ற ஸர்வ பிரகார ரக்ஷணம் )

இப்படி எல்லாருக்கும் உபகாரன் ஆன-நீ –
என்னுடைய அபேஷிதமும் செய்ய வேணும்  காண் என்று –
முன்பு பறித்து எறிந்த கடிப்புகளை இடுவதாக உத்யோகிக்க –
அவன் அதுக்கு இசையாது ஒழிய –

தலை நிலா இத்யாதி –
தலை செவ்வே நில்லாத இளம் பருவத்திலே உன்னுடைய காதுகளைப்
பெருக்காதே -விட்டு இட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ –
உன்னை வெறுக்கிறது என் என்று தன் செய்தி தாழ்வை சொல்லி நோவு படுகிறாள் –

——————————————–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

செல்லுகேன் -என்ற பாடம் ஆன போது –
உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே
கடக்கப் போய் விடுகிறேன் -என்று பொருளாகக் கடவது

என் குற்றம் இத்யாதி –
நீ உன் குற்றம் சொல்லி வெறுக்கிறது -நான் உன் சொல்லிற்று செய்திலன் என்று –
என் குற்றத்தை நினைத்தன்றோ -என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் -என்ன –
உன் குற்றம் இல்லையோ -என்ன –

உன்னை நான் என் செய்தேன் -என்ன –

என்னை நான் மண் உண்டேனாக –
மண் உண்ணாத என்னை
நான் மண் உண்டேனாக நினைத்து –

அன்புற்று நோக்கி –
ஸ்நேஹிதிகளைப் போலே -என்னுடைய வாயிலும் கையிலும் மண் சுவடு உண்டோ என்று பார்த்து –

அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையோ –
சுவடு கண்டாரைப் போலே என்னை பிடித்தும் –
அவ்வளவும் அன்றிக்கே –
அடித்தும் –
பாரிகோள் இவன் மண் தின்னும்படி -என்று எல்லோர்க்கும்
காட்டிற்று இலையோ -என்ன

கஸ்மா ன்ம்ருத மதாந் தாத்மன் பவான் பஷிதவான் ரஹ
வதந்தி தாவ காஹ்யேத குமாராஸ்தே அக்ரஜோப்யயம் நாஹம் பஷித வா நம்ப
ஸர்வேம் இத்யாபி ஸம் ஸிந யதி ஸத்ய கிரஸ் தர்ஹி சமஷம் பஸ்யமே முகம் -என்றது அனுசந்தேயம்

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பீ
வலிய புற்றிலே  பாதக பீதியாலே கிடக்கும் பாம்புக்கு -பகையான கருடனை த்வஜமாக உடையவனை –
கொடும் கோளால் நிலம் கொண்ட வாமனான முதலியானவனே-

இத்தால்
திரு வனந்த ஆழ்வானை படுக்கையாக கொண்டு –
பெரிய திருவடியை த்வஜமாக கொண்டு இருப்பான் ஒருவன் என்கையாலே –
லோகத்திலே ஒன்றுக்கு ஓன்று சேராதாய் உள்ளவற்றை சேர்த்து நடத்த வல்லனுமாய்-
(வெல்லும் வ்ருத்த விபூதி நாயகன் அன்றோ இவன் )
க்ரூரமாக செய்தவற்றை ந்யாயமாக்கவும் வல்லவன் அன்றோ -என்கை

உன் காதுகள் தூரும்-
இப்படி நீ ஓன்று சொல்ல –
நான் ஓன்று சொல்லிப் போது போக்கி இருந்தால்
உன்னுடைய காதுகள் தூரும் காண் –

துன்புற்றவன எல்லாம் தீர்ப்பாய் பிரானே –
ஆஸ்ரிதரனாவர்கள் துக்கப்படும் அவை எல்லாம்
போக்கும் உபகாரகன்  ஆனவனே -என்ன –

நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா –
இனி முன் போல் பிடிக்குதல் அடிக்குதல்  செய்யேன் -என்று மெய்யாக ஒரு வார்த்தை சொல்லு –
நான் திரி இடுகைக்கு இசையும்படி என்ன –

திரி இட்டுச் சொல்லுகேன் மெய்யே –
திரியை இட்டு விட்டவாறே பின்னை மெய்யே சொல்லக் கடவேன் -என்கிறாள் –

————————————————–

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதை மேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் இத்யாதி –
திரி இட்டு சொல்லுகேன்  மெய் -என்றவாறே –

உன் வார்த்தை விஸ்வசிக்க போகாது –
சொன்னார் சொன்ன வார்த்தை கேட்டு -என்னை சிஷிப்பாள் ஒருத்தி
அன்றோ -என்ன –

நான் அப்படி செய்தது உண்டோ -என்ன –

மெய்யென்று சொல்லுவார் சொல்லை  கருதி –
இவன் வெண்ணெய் களவு கண்டான் -என்று சொல்லுவார் சொல்லும் வார்த்தையை மெய்யென்று புத்தி பண்ணி –
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று -வெண்ணெயை களவிலே ஜீவித்தாய் என்று-தொடுப்பு -களவு

கையை பிடித்து இத்யாதி –
என் கையை பிடித்துக் கொண்டு -பாரமான கரை உரலோடே-எல்லாரும்
காணும் படி என்னை கட்டிற்று இலையோ என்று சொல்லி மந்த ஸ்மிதம் செய்து இருக்க –
கரை உரலாவது -விளிம்பு சுற்றணையான  உரல்

செய்தன இத்யாதி-
இப்படி நான் செய்த குற்றங்களை சொல்லி -ஸ்மிதம் பண்ணிக் கொண்டு
என் பக்கல் வாராதே போது போக்கி -நீ அங்கே இருக்கில்

ஸ்ரீதரனே-உன் காது தூரும் காண் –
அவர்களுக்கு ஆகவாகிலும் வா என்ன –

அவ்வளவிலும் அவன் வாராமையாலே –

கையில் திரியை இத்யாதி –
நீ விரும்ப தக்க அழகை உடையார் -உன் பக்கல் ப்ராவண்யத்தால் –
உன்னை விட்டு போக மாட்டாமல் சந்நிஹிதைகளாய் நிற்கிற இப் பெண்கள் ஆனவர்கள்-
கூழைக் காது சுணைக் காது – என்றால் போலே சொல்லி சிரியாதபடி
உன் காது பெருக்கும்படி என் கையில் திரியை இடு கிடாய் என்கிறாள்

——————————————————-

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 -10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகையார் இத்யாதி –
கையிலே திரியை இடு கிடாய் -என்றவாறே –

சிரிக்கிற காரிகையார்க்கும் -திரி இட வந்து நிற்கும் உனக்கும் -ஏதேனும் சேதம் உண்டோ –
என்னுடைய காதுகள்;வீங்கி எரியுமாகில் -என்று அவன் சொல்லி -கைக்கு எட்டாதபடி நிற்க –

தாரியாதாகில் இத்யாதி –
இளம் பருவத்திலே காதை பெருக்கலாய் இருக்க –
திரி முதலானவற்றை இடுகிறது பொறாதாகில்-
உன் தலையிலே நோக்காடு உண்டாம் என்று -அப்போது செய்யாமல்
விட்டு வைத்த என்னுடைய குற்றமே அன்றோ -என்ன –
தன்னை வெறுத்து -பின்னையும் விடாதே

(லோகத்தில் இளம் பிள்ளைகளுக்கு
காது குத்தினால் சிலருக்கு நோம்
சிலருக்கு குத்தா விடில் நோம் -அரும்பதம் )

சேரி இத்யாதி –
இவ்வூரில் உன் திறத்தின் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காணா
நின்றாய் இறே என்றவாறே –
அவன் அனுமதி தோற்ற நிற்க –

ஏர் விடை இத்யாதி –
வம்பு அவிழ் கானத்து மால் விடை -என்கிறபடியே -காட்டுக்குள்ளே உன்னை நலிவதாக எதிர்ந்து வந்த –
அரிஷ்ட நேமியாகிற ரிஷபத்தை நிரசித்து –
கன்றுகள் மேய்கிற இடத்தில் – இளம் கன்றான வடிவை கொண்டு வந்து -ஓர் அசுரன் நிற்க -அந்த கன்றை எடுத்து
விளவாய் நின்ற அசுரன் மேலே எறிந்து -இரண்டு தலையும் -முடித்து –
அவற்றின் கையிலே அகப்படாதே –
உன்னை நோக்கித் தந்தவனாய்-உன்னைக் கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன் வசமாக்கிக்
கொள்ளுகையாலே ஹிருஷீகேசன் என்னும் திரு நாமத்தை உடையவனாய் –
எனக்கு திருஷ்டி பூதனானவனே என்று உகந்து சொல்லுகிறாள் –
(கண்ணாவான் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் அவனே
இவருக்கு எல்லா அவஸ்தையிலும் கண்ணாவான் அவனே காணும் )

—————————————

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
இள வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் அவன் ஆகையாலே –
கண்ணைக் குளிரக் கலந்து –
உன்னுடைய கண்ணை அவர்களுடைய கண்களோடு குளிரக் கலந்து –
இத்தால் -கண் கலவியை சொன்னபடி –

எங்கும் நோக்கி –
அவர்கள் வடிவை சமுதாயேன பார்த்து

கடி கமழ் பூம் குழலார்கள் –
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்ருதமாய் இருந்துள்ள குழலை உடையவர்களுடைய –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பிரானே –
நெஞ்சுக்கு உள்ளே சர்வ காலமும் இருந்து -ரசிக்கும் பெரியோனே –

அன்றிக்கே –
கண்ணை -என்கிற இடத்தில் –
ஐகாரத்தை அவ்யயமாக்கி –
கடி கமழ் பூம் குழலானவர்கள் தங்கள் கண் குளிரும்படியாக
உன்னுடைய அவயவ சோபையை கலக்கக் கொண்டு
எங்கும் ஒக்க பார்த்து –
உன்னுடைய கலவியின் பிரகாரங்களை எண்ண-
அவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் -அதுக்குள்ளே என்றும் ஒக்க இருந்து –
அவர்களுக்கு நிரதிசய போக்கினாய் நிற்கும் பெருமையை உடையவனே -என்னவுமாம் –

எங்கள் அமுதே –
எங்களுடைய நிரதிசய போக்யனுமாய் -சத்தா தாரகனுமாய் இருக்கிறவனே –
உனக்கு அபிமதைகளான அவர்களுக்கும் –
பரிவரான  எங்களுக்கும் உகப்பாம்படி –
உன் காது பெருக்குகைக்கு வா -என்ன-

நான் வருகிறேன் -நீ எனக்கு என்னம் தருவாய் என்ன –

உண்ணக்  கனிகள் தருவன் –
நீ விரும்பி அமுது செய்யும் படி உனக்கு பழங்கள் தருவேன் -என்ன

ஆனாலும் கடிப்பு இடப் புகுந்தால் காது நோவுமே என்ன –

கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் –
சற்றும் நோவு வாராதபடி உன் காதுகளுக்கு கடிப்பு
இடுவேன் என்றவாறே

உடன் பட்டமை தோற்றா நிற்க –

பண்ணை இத்யாதி –
கண் வளர்ந்து அருளுகிற தனி இடத்திலே -காவல் வைத்த
சகடம் அசூர விசிஷ்டமாய் உன்னை நலிய வர -அத்தை கோப்பு குலைய உதைத்துப்
பொகட்டு ஜகத்துக்கு வேர்ப் பற்றான உன்னை நோக்கித் தந்தவன் அல்லையோ –

இங்கனே வாராய்
என்று புகழ்ந்து கொண்டு அழைக்கிறாள் –

———————————————————–

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா இத்யாதி –
பத்ம நாபா இங்கே வாராய் என்றவாறே –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து –
என்னை வா என்று சொல்லி அழைத்து –
நான் வரக் கொள்ள –
என் கையை உறைக்கப் பிடித்துக் கொண்டு –

வலியவே காதில் கடிப்பை நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் –
பலாத்காரேன என் காதில் – கடிப்பை நோம்படி திரிகி இடுவுதியாகில்
உனக்கு இங்கு சேதம் ஆவது உண்டோ –
என் காதுகள் நோம் காண்-வர மாட்டேன் என்ன –

நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ –
இவன் வருகைக்காக -நீ உகக்கும் நாவற் பழம் கொண்டு வைத்தேன் –
இவற்றை பாராய் நம்பீ -என்று காட்ட –
அத்தைக் கண்டவாறே -வருவாரைப் போலே நிற்க –

முன் இத்யாதி –
முன்பு தன் வடிவை மறைத்து -தாய் வடிவு கொண்டு -வஞ்சகையாய் வந்த பேய்ச்சியை
சாம் படியாக முலைப் பாலை உண்டு –
நலிவதாக மேலிட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து பொகட்டு –
அவ் விரோதிகள் கையில் அகப்படாமல் -உன்னை நோக்கித் தந்தவனாய் –

அந்த சக்திமானாய் இருக்கச் செய்தே –
அசக்தரைப் போலே என் கையிலே பிடி உண்டு –
நான் கட்டின கயற்றின் தழும்பு உன் வயற்றிலே கிடைக்கையாலே தாமோதரன் என்று பேராம்படி
என் கையாலே கட்டுண்டு நின்ற நீர்மையை உடையவன் அன்றோ –

இங்கே வாராய் என்று
உகந்து அழைக்கிறாள் –

——————————————

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச் சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்-அந்தரங்க கிங்கராவார் –

வார் இத்யாதி –
ஸ்வபாவமே ஒழுகு நீண்ட காது வேண்டும் அளவும்  தாழப் பெருக்கி –
மட்டிலே அமைத்து -மகரக் குழை சாத்த வேண்டும் என்று ஆசைப் பட்டு-

சீரால் இத்யாதி –
சீர்மை குன்றாதபடி யசோதை பிராட்டி –
ஸ்ரீ யபதியானவனைக் குறித்து சொன்ன சொலவுகளானவை

சிந்தையுள் நின்று திகழ –
தம்முடைய திரு உள்ளத்தின் உள்ளே சர்வ காலமும் நின்று விளங்க –

பார் இத்யாதி –
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமம் இத்யாதி –
வைஷ்ணவ சிஹ்னமான திரு த்வாதச நாமங்களோடே அருளிச் செய்ததாய் –
அத ஏவ
அனுபவிதாக்களுக்கு ஒரு காலும் திருப்தி பிறவாதே –
மேன் மேலும் அபேஷிக்கும்படி-நிரதிசய போக்யமாய் இருக்கிற –
அந்தாதியான இவை பன்னிரண்டு பாட்டையும் –
சாபிப்ராயமாக வல்லவர்கள்

அச்சுதனுக்கு அடியாரே –
ஆஸ்ரிதரை ஒருகாலும் நழுவ விடாத ஸ்வபாவன் ஆனவனுக்கு
அநவரத கிஞ்சித்கார பரராகப் பெறுவர்-

————————————————–

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் -(வைகுந்த மணி வண்ணா -அதி சங்கை போக்கி -இதில் -எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அதி சங்கா நிவர்த்தகம் அங்கு-இங்கு -ஆழ்வார் சம்பந்திகள் அளவும் –
உன்னை நான் பிடித்தேன் சிக்கனவே -உன்னை எங்கனம் – விடுவேனோ -முடிவில் இதுவே லஷ்யம் அங்கு –உபக்ரமம் அப்பியாசம் உப சம்ஹாரம் –
இங்கு -முதல் – எமர் கேசவன் தமர் ஆனார்கள் –மேவும் தன்மையன் -ஆக்கினான் -பகவத் வ்யாமோஹ பரம் இங்கு)

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே (போகங்கள் இங்கும் ஸ்வர்க்கத்திலும் -திவ்ய லோகம் அடைவாய் -தர்மத்தில் உன் உள்ளம் நிற்கும் -சந்ததிகளுக்கு தீர்க்க ஆயுள் -ஸ்வர்க்கம் கிட்டும் -ஸூர்யன் இருக்கும் வரை இவை இவை நடக்கும் -என்று ப்ரஹ்மாதிகள் போலே அன்றோ ப்ரீதியால் கண்ணன் மாலா காரருக்கு அருளினான்  )
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-(ஸ்வர்க்கமும் அடைந்து இந்திரன் போலே அனுபவித்து -சாயுஜ்யம் அடைவாய் -இவன் தம்பிக்கு இவன் போவதற்கு முன் நீயும் அடைவாய் )
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீகார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாராயணனாலே – நிரதிசய வாத்சல்யத்தால் –எமர் எல்லாம் கேசவன் தமர் -அவன் தமர் இவர் எமரானால் தான் –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -வாழ்வு என் என்று கொண்டாடுகிறார்
ஏழு ஏழு -நம் அளவும் வர மீண்டும் மீண்டும் இத்தையே அனுசந்தானம் செய்ய வேண்டுமே-

கேசவன் தமர்
1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-(1-ஸ்வரூபம் -ப்ரஹ்மாதிகளுக்கும் -நியாந்தா/ 2-ரூபம் -ஸுரி பெருமாள் -பிரசஸ்த கேச பாசம் உள்ளவன் / 3-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே /4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா –நான்கையும் சொல்லும் கேசவ திரு நாமம் )
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
1-விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
2-மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
3-தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன் மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா-(உபாயமாக நாராயணனை பற்றி )
நாராயணனாலே என்ற இடம் –மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு -(நாராயணனாலே -முதல் வேற்றுமை ஆக்கி ஆகிய – வாத்சல்யம் -மா சதிர் – கிருபை -ஆகிய பேறு)

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

நாச்சியாரும்
நாராயணன் மூர்த்தி கேசவன்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை -மாதவனான பின்பு கேசவனானான்
கேசவன் நம்பியைக் கால் பிடிப்பான்
கள்ள மாதவா கேசவா

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

கீழ் யுக்தமான –நாராயண -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே
வேதமயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் –நாராயணனையே குறிக்கும் –
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை-த்ரிவித காரணமும் இவனே –
காரணம் -கிரியா ஹேது -தண்டம் சக்கரம் – கிரியை -சுழலுதல் –கருமம் -குடம் –அந்தர்யாமி -நிர்வாககன்-என்றபடி –
சீரணங்கு அமரர்-குணத்தால் உயர்ந்த திவ்யர் —ஸ்ரீ லஷ்மி -சீரணங்கு என்றுமாம் –
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று-தேவர் முனிவர் மனுஷ்யர் -யாவரும் தொழுது ஏத்தும் படி
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே-எனக்கு பிரகாசித்த -ஸமஸ்த விபூதி நாதன் இவற்றை காட்டி பிரகாசிப்பித்து அருளிய உபகாரம் –
அமலன் ஆதி பிரான் -தானே அமலன் ஆதி என்று காட்டி அருளிய உபகாரகன் போலே
என்னை அநந்யார்ஹன் ஆக்கி அருளிய சேஷி -ஸ்ரீ யபதி-என்றவாறு –
கேசவன் நாராயணன் மாதவன் -ஸ்ரீ யபதி –மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு –
வங்க கடல் கடைந்த –மாதவனை கேசவனை –நாராயணனே முதல் பாசுரம் -கேசவன் மூர்த்தி சொல்லி-அவனே -திருமாலே -கோதோ உபநிஷத்

நாரணன் –இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன் விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் க்ரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்-(காரணம் -மண் / கார்யம் -குடம் / கிரியை -தண்ணீர் கொண்டு வரும் பலன் -போலவே-பஞ்ச பூதங்கள் /அண்டாதிகள் /ஆத்மாக்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பலனுக்காக- -)
காரணம்-செயல்பாடு -பலன் -என்றுமாம் (விசிஷ்ட ப்ரஹ்மம் -மூன்றுக்கும் -நிமித்த உபாதான சஹகாரி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டா ப்ரஹ்மம் -மண் மாறும் -/ சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த -குயவன் / ஸ்தூல விசிஷ்ட சித் அசித் ப்ரஹ்மம் பலன் -ஞான சக்தாதி கல்யாண குண- விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி-அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம் –சதேவ சோம்ய- -ஏக மேவ அத்விதீயம் /)
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வபாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கி ஏத்தும் படி நின்று-(அங்குலி விச்சேதம் -ஏகலைவன் போலே -அக்ஷரம் எழுதுவது-உதிரத்தில் பதித்து -குழந்தைக்கு பெயர் -தாஸ்யம் சதுஷ்ட்யம் என்பர் )
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் –ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படியாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்-

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே –மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் –ஜாமாதா-தயிதஸ்தவேதி -பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம –என்றார் இ றே பட்டர் -(என் திருமகள் –சேர் மார்வன் –என்றபடி -அந்தப்புர வாசிகள் –ஸ்ரீ வைஷ்ணவ வார்த்தை அன்றோ –நாராயணன் -கேசவன்- உபாசகர்களும் சொல்வார்களே)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு –அஹ்ருதய யுக்தி
என்னை –வாசி அறியாத என்னை
இனி -உக்திக்கு அனந்தரம்
இப்பால் பட்டது-மேல் உள்ள காலங்கள் எல்லாம்
யா தவங்களும் சேர்கொடேன்-அவித்யாதிகள் சேரக் கூடாது என்று சங்கல்பித்து
என்று என்னுள் புகுந்திருந்து-என் நெஞ்சுக்குள் புகுந்து -அநன்ய பேரனாக இருந்து
தீதவம் கெடுக்கும் -தீது புத்தி பூர்வகமாக -தெரியாமல் இரண்டையும் கெடுத்து
அமுதம் செந்தாமரை கட்குன்றம்-ஸ்திரமான அழகான வடிவு
கோதவமிலன் -குற்றம் இல்லாத
கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே-கருப்புக்கட்டி –கோதும் அவமும் -இல்லாத –அபூத உவமை -ஜாலம் சேர்த்தால் தானே சக்கரை உண்டாகும் -ஜல வாசனை வருமே -வஸ்து அந்தர சம்சாரக்கம் -பாக தோஷம் –உண்டாகும் –ஈஸ்வரனுக்கு கோது அவன் -உபகார ஹேது ஸகத்வத்வமும் -அபேஷா நிரபேஷமாக செய்யும் –அவம்-ஸூ பிரயோஜன அர்த்தத்வமும் -சொத்தை ஸ்வாமி பெறுவது போலே /என் அமுதம் கறுப்புக் கட்டி கண்ணனே -தானே –

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
என்னை-அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இறே
மேல் அத்யல்ப காலமாய்த் தோன்றா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர் கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இறே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்-
2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்-
4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
இருந்து-ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி- என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இறே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போக்ய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்யம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இறே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

ஸூ சம்பந்த குல சம்பந்தி பர்யந்தமாக செய்ய வல்ல சாமர்த்யன்
கோ விந்தன் -கோ ஸம்ருத்தி
குடக்கூத்தன் -தனம் விஞ்சி ப்ராஹ்மணர் -யாகாதிகள் போலே ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
கோவலன்-ஐஸ்வர்யம் சேஷ்டிதம் அனுகூலமான ஜென்மம்
என்று என்றே குனித்து–தனி தனி கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் -ஒன்றுக்கும் ஒரு சஹஸ்ர நாமம் -சொல்லி –
பரத்வ -ஸ்ரீ யபதி ஸுலப்யம் -சொல்லி கூத்தாடி
தேவும் தன்னையும் -பரத்வத்தையும் தானான நீர்மையையும்
பாடியாடத் திருத்தி-நித்யர்களில் ஒரு கோவையாக்கி
என்னைக் கொண்டு என்-பாவம் தன்னையும் பாறக் கைத்து -பிரதிபந்தகங்களை ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் -தன்னை பிராபிக்கும் தன்மை
வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்ததை செய்யும் வல்லவன் -சர்வ வ்யாபி -ஒருவரை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இறே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இறே -(வாக்மி ஸ்ரீ மான் -பூமி -பசுக்கள் -பெருமாள் வராஹ கிருஷ்ணன் மூவருக்கும் கோவிந்தன் சப்தார்த்தம் உண்டே )
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று –
குடக்கூத்தாவது –அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இறே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இறே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் –பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்-
இங்கு ஐஸ்வர்யமும் சௌலப்யமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொல்லவுமாம்
அன்றிக்கே என்று- என்றே- என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் –குனிக்கையாவது – உத்தியோகத்து அளவாய்
இங்கு-பாடியாட -சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி-
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வபாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

ச பரிகரமாக அங்கீ கரித்ததால் வந்த உஜ்வலம்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விஷ்ணு -உடைய -முதல் திரு நாமம் –பாட்டுகளில் மரியாதை குலைய கூடாதே -உகரம் குற்றியலாக கொள்வது
இலங்கு -விளங்கும் -என்றவாறு
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு-விகசிதம் -விளங்கா நிற்கும் -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி-அம் சாரியை -மதி சீர் சங்கு -/ மலையே திரு உடம்பு -தாமரையே பாதம் -சாமானாதி கரண்யம்-/ உபமானமே உபமேயம் -பொருந்திய படியால் –
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் –தம்மை அணைத்த கை –குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே –விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது (பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும் திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே -ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன் புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனுக்கு –(மது சூதனன் தனக்கு என்றும் –மது சூதனனான விஷ்ணுவுக்கு என்று இரண்டு அன்வயம் )
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன் பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன் கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

கிருபா பாரவஸ்யம் -உஜ்வல்யம் -உபகாரம் -விட்டு வல்லன் -இவற்றுக்கு ஹேது -கிருபை தானே
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
மது கைடபர் –ஹய சிரஸ் / கண்ணன் -/ உபாயாந்தர ப்ராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமல்
நம் பிரதிபந்தகங்களை போக்கி என்றபடி -/அஹங்காராதிகள்–/ காரியமே அற்று –
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ர பாடல்களால் சூழ்ந்து -கல்ப கல்ப காலம் -பாடுவது -கல்ப கல்ப காலமும் நாம் ஒரு கால் பாட -அவன் அனுக்ரஹம் பண்ண
அவன் குணக் கூட்டங்களை சூழ்ந்து -ஸ்வயம் பிரயோஜனமாக -நின்று பாடி ஆட -பிறப்புக்கள் தோறும் -கல்ப கல்பம் -பல் நெடும் காலமாக -திருத்த முயலுவான் -அபிமுகனாக ஈடாக
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –
அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
கிருபை தடுக்க ஒண்ணாத்தாதே -அதுவே விதி -/ஏலு கிற பொருந்துகிற –எனக்கு தகுதியான -தாழ்ந்த நீசனுக்கு தக்கபடி என்றபடி –கிருபை -என்னை சூழ்ந்து -திரிவிக்ரமனையும் சூழ்ந்து -என்றபடியே -என் அளவுக்கு தன்னை தாழ்த்துக் கொண்டு கிருபை செய்து அருளினான் என்றபடி-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது (வேதங்களை மீட்ட மதுசூதனன் -கொழுப்பு -ரஜஸ் தமஸ்- கோடரி போலே உலகத்துக்கு -இருவர் -தானவர்களில் கொடியவர் -ஹயக்ரீவர் முகத்தில் வந்து –மது சூதனை )
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இறே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
1-ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
2-ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததாமி தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –
எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -குள்ளர்களை திரிவிக்ரமன் என்று சொல்லும் படியான குறள் மாணாய் போலே-
சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு-(எனக்கே -இரண்டு தடவை /ஸ்வாமி -எனக்கே அசாதாரணமான / உபகாரம் -பண்ண ஒரு தடவை / கிருபையால் அருள்கள் செய்ய எனக்கே / எனக்கு என்ன கிருபையும் உபகாரமும் என்றபடி -)
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

——

அவதாரிகை –

உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

பிரயோஜனம் முதலில் சொல்லி -உபாயமான வாமனன் பின்பு சொல்லுமே –
திருவிக்ரமன் திருக்கண்களை -எப்படி சேவித்தார் ஆழ்வார் –
ஸூவ அனுபவ யோக்யமான சர்வ உத்தரமான மனசைத் தந்து அருளினான் –என்கிறார் –
திரிவிக்ரமன் -அனன்யார்ஹன் ஆக்கினான் உலகத்தை
செந்தாமரைக் கண் -ஆழ்வாரை வெல்ல இந்த உபகரணம் -ஜிதந்தே புண்டரீகாஷ-தாமரை கண்ணனை விண்ணோர் பரவும்
எம்மான் -அடிமை ஆக்கிக் கொண்டவன்
என் செங்கனி வாய் உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்-உருவம் -நிறம் –பொலிந்த-ஸ்படிகம் போலே
-திருப் பற்கள் -ஸ்மிதம் -மந்த -திரு முத்து நிறத்தை
என்று என்று-தனித் தனியே —உள்ளி-சேஷ்டிதம் கண் அழகு முறுவலையும் நெஞ்சாலே அனுபவித்து
பரவிப் பணிந்து -உள்ளடங்காமையாலே அக்ரமாக பரவி -பணிந்து -ப்ரீதி ப்ரேரிதனாய் கொண்டு திருவடிகளில் விழுந்து
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே -பல காலம் -கல்பங்கள் -பிராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகளில்
மருவித் தொழும் மனமே தந்தாய்-அனன்ய பிரயோஜனமான அடிமை ஆக்கி அருளிய -சக்தன் –

திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியன் –
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்-
காலும் கண்ணும் -சம்பந்தம் -திருமழிசை ஆழ்வார் -கட்டை விரலிலே கண் -பக்தி சாரர்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
முத்துப் பல் வரிசை –
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி- அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாததாய் இருக்கும் இறே-(விஷயாந்தரங்கள் விஷயத்தில் அகவாய் -உள்ளே உள்ள ஜலம் இத்யாதி நினைவில் வர ஸ்மிதம் விடுவோமே என்றவாறு  )
அக வாய் —இதர உள் விஷயம் என்றும் பகவத் ஸ்மிதம் என்றும் –சாடு -இது -பகவத் ஸ்மிதம்-மாறாதே அனுசந்திக்கலாம் இறே
அழகு ஆறு திரு அபிஷேகத்தில் இருந்து விழ –ஸ்மிதம் -அழகு சேர -ஹார அழகு பிராட்டி அழகு சேர
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட –
-இடை சிறுத்துததால் சுழல் -திரு நாபி சரஸ் -ஆனதே –
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய் -என்றுமாம்
3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –

———————————————————————————————

அவதாரிகை –

எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-

வாமனன் -குள்ளன் மட்டும் இல்லையே —ஸூகம் நயதி -திரு மேனி காந்தியால் சேவித்தவர்கள் மகிழ்வார்
பொல்லாங்கை நீக்கி -அனுபவத்துக்கு உறுப்பு அல்லாத -இதற்கு பிரத்யுபகாரம் உண்டோ
என் மரகத வண்ணன்-வடிவு அழகு –தாமரைக் கண்ணினன்-போக்தாவை குளிர நோக்கும்
காமனைப் பயந்தாய் -உத்பாதகன் ஆனவன் –சாஷாத் மன்மத மன்மதன்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து தூ மனத்தனனாய் -பிரயோஜ நாந்தரங்களில் போகாமல்
பிறவித் துழதி நீங்க என்னைத் தீ மனம் கெடுத்தாய் -விஷயாந்தரங்களில் போகும் தீமையை கெடுத்து அருளி
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே-பூரணன் -அவாப்த சமஸ்த காமன் -ஸ்ரீ யபதி என்ன செய்வேன் –

வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் -இனிய அனுபவங்களைக் கொடுப்பவன் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்-
அப்பாஞ்ச ஜன்யமே -முன்னிலையாக இருந்து படர்க்கையாக அங்கும் –
இவை இரண்டுக்கும் அடி அபிநிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு —தூர் -துக்கம் -அது நீங்கும் படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி ஆத்ம பாவஸ்ய -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் –சிரீதரனே-புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்

—————————————————————————————–

அவதாரிகை –

ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே –பிரதி பந்தகங்களும் நீங்கி— நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –

சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –-2-7-9-

விஸ்லேஷ துக்கும் தீரும் படி என் நெஞ்சுக்குள் புகுந்து நான் ஹ்ருஷ்டராம் படி அனுபவிப்பித்தான் -தூ மனத்தில் தோற்றும் -பக்திக்கு விஷயமாம் படி –
அழுக்கு நீக்கி -நல்ல நெஞ்சு -அதற்கு விஷயம் -மூன்று பாசுரங்கள்
சிரீ இதரன்-ஸ்ரீ பீடன் – செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து -எங்கும் நாடி நாடி கண்கள் நீர் மல்கிகுவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
வெவ்வுயிர்த்து உயிர்த்து –மரீ இய தீ வினை -ஆடியாடியில் உள்ள விசனம்
மாள இன்பம் வளர-2-4 தீ வினை /2-5 கலந்த இன்பம் -அந்தாமத்து அன்பு வளர – வைகல் வைகல் இரீஇ
உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே-விதேயமான நெஞ்சில் -இருத்தி –பைந்தாமரைக் கண்ணன் எங்கும் பக்க நோக்கு அறியாமல்
பக்தி பாரவச்யத்தால் வந்த ஆழ்வார் துடிப்பை -விகாரம் –தீ வினை-பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தி -பூர்வகமாக —இன்பம்  வளர – -அனுபவ ஆனந்தம்-வளரும் படி செய்து அருளினான் –

சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே –பட்டர்
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும்
ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு -தொடங்கி- கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது –இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது- எங்கும் நாடி நாடி- என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது –தன் குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது –உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே –ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இறே -இந்த்ரியங்கள் என்னது — ஈசன் நீ —

———————————————————————————-

அவதாரிகை –

நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-

சர்வ பிரகார உபகாரன் -விடாமையில் உண்டான அபேஷையை வெளியிடுகிறார்
இருடீகேசன் -தச இந்த்ரிய ஆனனன்-மானச இந்த்ரியத்தை நியமித்து
எம்பிரான் -உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -எனக்கு செய்தது இதுவும் என்கிறார் -முருடான ராவணனை
லோக கண்டகன் கொடூரமான-ராஷச குலத்துக்கு பலமான ராவணன்
எம்மான் -என்னை அனுபவிப்பித்த ஸ்வாமி
அமரர் பெம்மான் என்று என்று -பலபடியாக அனுசந்தித்து
தெருடியாகில் நெஞ்சே வணங்கு -அறிவுடையை -தெளிவு -ஆகில் -வணங்கும் படி
திண்ணம் அறி அறிந்து -புத்தி பண்ணி -உறுதியாக -சிக்கென
மருடி யேலும் விடேல் கண்டாய் -அயோக்யா அனுசந்தானம் கலக்கம் வந்தாலும் -இதுவே மருள் –
நம்பி பற்ப நாபனையே–குண பூர்ணனான -காரண பூதன் -இம் மஹா உபகாரகனை -விட்டு விடாதே

இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப்படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம்படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன் –நாடாத மலர் நாடி –வைக்கவே வைக்கின்றது-
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் –நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
விபரீத ஆகாரதையை போக்கின படி -மனசுக்கு ஞானம் உண்டோ -வெளி புறப்பட வழி- மனஸ் சஹகாரத்தா
ஞான இந்த்ரியங்கள் வேலை என்பதால் –
யோகிநாம் -தச இந்த்ரியங்கள் -கோரம் மநோ ராஜநீசரண் -ராஷசர் போலே –விவேக சரம் -ராம பானம் போலே -யோக மார்க்கம் –
தேகாத்ம விவேகம் -அந்ய சேஷத்வ -விவேகம் -ஸ்வ ஸ்வா தந்த்ர்யா விவேகம் -ஆகிய சரம் என்றவாறு
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு –
வார்த்தை பதின் கலம்-வழியில் ஓர் எண் கலம் -தெரு முலையில் அறு கலம் –
கொடுத்தது முக்கலம் -ஆள் கலம் போக்கி பதர் கலம் போக்கி கிடைத்தது ஒரு கலம் -சபை வார்த்தை –
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இறே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கையாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப்பார் கிடாய்
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
மண்ணை அளந்தவனும் அவன் -உண்டவனும் அவன் உமிழ்ந்தவனும் அவன் –ஜகமே நியத பிரகார சரீரம் –
1-அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே —நம்பி
2-வடிவு அழகு இருந்தபடி கண்டாயே —பத்ம நாபனையே –கொப்பூழில் ஏழு கமலப் பூ அழகர்
3-முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே–நம்பி-பத்ம நாபனையே –இருடீகேசன்

——————————————————————————————–

அவதாரிகை –

பற்பநாபன்-அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து –தாமோதரனே-அத்யந்த ஸூலபனாய்
எந்தை-என்னை அடிமை கொண்டவன் –எற்பரன்-என்னை யல்லது அறியானானான் என்கிறார் –

பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-

சர்வ பிரகாரன் ஆனான் என்கிறார் -போக்கிடம் இல்லை என்று நெஞ்சு இங்கேயே இருக்கப் பண்ணினானே
பற்பநாபன்-ஜகத் உத்பத்தி ஹேதுவான திரு நாபி கமலம் உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் -உத்பன்ன ஜகத்தை ரஷிக்க பெரும் சக்தன்
எற்பரன் -இந்த மேன்மை யுடனே சிலபனாக என் பரமாகவே உள்ளான் -நானே இலக்காக உள்ளானே
என்னை யாக்கிக் கொண்டு -என்னை அங்கீ கரித்து
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -ஏவகாரம் -அசாதாராண -சம்பந்த சம்பந்திகள் நமக்கும் உண்டே
என்னமுதம் -பரம போக்கியம்
கார் முகில் போலும்-தரம் பார்க்காமல் உபகரிக்கும்
வேங்கட நல் வெற்பன் -யோக்ய ஸ்தலமான -வெண்நீல மேகங்கள் விரித்தால் போல் –
விசும்போர் பிரான் -ஆஸ்ரித பவ்யத்தை உடையவன்
எந்தை எனது ஸ்வாமி
தாமோதரனே-ஆஸ்ரிதர் கட்டும் படி
எனக்கே தன்னைத் தந்த -1-அர்த்தியை உண்டாக்கியும் -2–அவனைத் தானே ச்வீகரிக்கையும் -3–அபேஷிதத்தை கொடுக்காமல் தன்னையே கொடுக்கையும் –
4-தானே போக்யமாகவும் இருப்பதால் கற்பக வியாவ்ருத்தி உண்டே இவனுக்கு

பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னையாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இறே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –என்னையாக்கிக் கொண்டு
1-அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இறே அதுக்கு
எனக்கே –
2-ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
தன்னைத் தந்த –
3-சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இறே அதுக்கு
என்னமுதம் –
4-தான் போக்யமாய் இருக்குமது இல்லை இறே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
ஒரே சரம் ஒரே சொல் -சக்ருத்-துர் நாபிபாஷதே
கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்-
சஹ்யம் பற்றின ஔதார்யம் இறே -பிரவாஹம் நீர் வீழ்ச்சி என்றவாறே –
சஹ்யாத்ரி -காவேரி -போலே -ஔதார்யத்துக்கு சங்கோசம் இல்லை –
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வபாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே –
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச்செயலாலே அடிமை கொண்டவன் -பிரதம விபூஷணம் -உதர பந்தனம் –
விசும்போர் பிரானாய்–எந்தையே –என் அமுதம் ஆனவன் -என் பரன் -என்று அந்வயம்-
உபாயத்வம் –ஆக்கிக் கொண்டு -/அமுதம் -உபேயத்வம் /பரத்வம் /சௌலப்யம் /சௌர்யம் வீர்யம் பராக்கிரமம்
அனைத்தும் சொல்லி –தன்னை ஒழிய போகாதவன் –
தாயார் -குழந்தை பிதற்றலை கேட்டு சயனித்து -நாபியில் –நாஹம் -அறிய வில்லையே சொல்லி பிதற்றி -ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யே -தேசிகன்

——————————————————————————–

அவதாரிகை –

எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல்-நிர்ஹேதுக அனுக்ரஹம்- செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு அறியப் போகாது என்கிறார்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே —2-7-12-

அதிசயித ஞானாதிகருக்கும் தன்னளவில் செய்த உபகாரம் அறியார்
தாமோதரனைத் -ஆமோ தரமறிய-இப்படி என்றால் நாராயணனை அறிய முடியுமோ-ஆஸ்ரித பரதந்த்ரன்
தனி முதல்வனை -நிமித்த -உபாதான காரணம் -சமஸ்த ஜகத் ஏக காரணத்வன்
ஞாலம் உண்டவனை -பிரளயத்தில்
ஆமோ தரமறிய ஒருவர்க்கு -தங்களை தவிர வேறு யாராலும் முடியாதே -ஆகாது –
என்றே தொழுமவர்கள்-
தாமோதரன் உருவாகிய –சிவற்கும் திசை முகற்கும்-சரீரம் தானே -இவர்கள் இப்படி சொல்லி தொழுகிறார்கள் –
பிரகாரதயா சேஷம் -பிரியாமல் சார்ந்து
கடுகிலே கடலை மடுத்தால் போலே -என்னிடம்
ஆமோ தரமறிய -இவர்களா தெரிந்து கொள்வார்கள் -இவர்கள் அந்த பரத்வன் தாமோதரன் என்பார் -என்னிடம் கலந்தது அறியாதார்களே
தாமோதரனாக வந்து என்னளவு வந்தது அறியாதவர்கள் -என்றவாறு
எம்மானை என்னாழி வணனையே -சமுத்திர வர்ணன் -கடுகிலே கடலை மடுத்தால் போலே –(குண ஆர்ணவம் -என்னுள் வைத்த உபகாரகம்- தாமோதரத்வம் பரத்வம் என்னலாம் படி அன்றோ )-இந்த சௌலப்யம் யாரே அறிவார் –
விசேஷ உபகாரம் அறிவது அரிது -யசோதை கையால் கட்டுப்பட்டதை அறிந்தாலும்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
யஸ்ய மதம் அமதம் -யஸ்ய அமதம் தஸ்ய மதம் -அப்பால் பட்டவன் என்றே சொல்ல முடியும் –
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ –என்று அந்வயம் –

————————————————————————————————-

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்  
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-

பகவத் பிராப்தியே பலம்
வண்ண மா மணிச் சோதியை -நிறம் -பெரு விலையனான -நீல மணி -தேஜஸ் -ஜோதி மணி உருவம் -விக்ரகம் என்றுமாம்
அமரர் தலைமகனை -நித்ய ஸூ ரிகளும் அழகை பரிச்சேதிக்க ஒண்ணாத படி
கண்ணனை –ஆஸ்ரிதரை -தானே அனுபவிப்பிக்கும் -சௌலப்யம்
நெடுமாலைத் -வ்யாமோஹம்
தென் குருகூர்ச் சடகோபன்  -அழகிய –நிர்வாஹகர்
பண்ணிய -செய்த -பகர்ந்த -பண்ணில் அமைத்து அருளிச் செய்த
தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -சர்வாதிகாரம் -திராவிட சந்தர்பம் கூட்டு –
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு -பண்ணிலே வர்த்திக்கும் திரு த்வாதச திரு நாமம்
அண்ணல் தாள் அணைவிக்குமே-கேசவன் தமராக்கும் -சர்வேஸ்வரன் திருவடிகளை பிராபிக்கும் –

வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ்சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது –அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன் அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூர்ச் சடகோபன்  பண்ணிய –தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
சடாரி -ஸ்ரீ ஸூ க்தி -அகில ஹேய -ஞான அனுதயம் -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -கர்மா வாசனா ருசி போக்கி
-சகல ஹேய நிரசன பூர்வகம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் வார்த்தை அன்றோ
பகவத் பிரசாத லப்த பரி பூர்ண ஞான வைபவம் அகில சேதன உஜ்ஜீவன ஆசை கொண்ட ஆழ்வார் –
பிரத்யஷ சமாநாகார பரிவாஹ-வேதத்துக்கு இதுவும் அடியாய் இருக்கும் -சாஷி – உயர்ந்த பிரமாணம் ஆகுமே –வக்த்ரு விசேஷம்
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –

முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

————————————————————–

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————————————————————–

திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————————————————–

திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 17-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்-

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை——–——17-

———————————————————————–
அவதாரிகை –

இதில்
கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும்
தம்முடைய சம்பந்தத்தாலே
பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும்
சுவறி விடுகை அன்றிக்கே
தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே
பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான
அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை
கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —

———————————————————————————

வியாக்யானம்–

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த –
எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் –
கேசவன் தமர் -ஆனார்கள்
மாசரிது பெற்று –
அத்தாலே –நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –

கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்
விரோதி நிரசனம் பண்ணுமவனாய் –
பிரசஸ்த கேசவனான
அவனாலே

மதீயர் தேசு அடைந்தார் என்று
தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று –
கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே
கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும்
லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே
அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய்
வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் –
என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து
ஹ்ருஷ்டராய்
அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –

வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும்
வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான
வைபவத்தால்
வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஆழ்வார் உடைய-

மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே
நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம்
உஜ்ஜீவிக்கைக்கு
உசித உபாயம் என்று –

நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்
அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய்
சௌமனச்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–

நாராயணனாலே -என்று –
அவனுடைய ச்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின்
அனுவாதமான
கேசவனால் என்கிற இப்பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு –விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது –என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்
அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-

——————————————————————————————

1) கேசவா – நீண்ட கேசத்தை உடையவன்; கேசி என்ற அரக்கனை வென்றவன்.
2) மாதவா – திருமகள் மணாளன்
3) நாராயணா – உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
4) கோவிந்த-பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன்; பசுக்களை மேய்த்தவன்
5) விஷ்ணு – அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6) மதுஸுந-இந்திரியங்களை ஈர்ப்பவன்; மது என்னும் அரக்கனை வென்றவன்
7) திரிவிக்ரமா – மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8) வாமனா – குள்ளமான உருவம் உடையவன்
9) ஸ்ரீதரா – ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10) ருஷீகேசா – தன் ஆணைப்படி புலன்களை நடத்துபவன்
11) பத்மநாபா – நாபியில் தாமரையை உடையவன்
12) தாமோதரா-கயிற்றால் கட்டப்பட்ட தழும்பு கொண்ட வயிறு உடையவன்.

இப்பன்னிரு திரு நாமஙகளை “வைகுந்தவாசன்வாமனாவதாரன்கிருஷ்ணாவதாரன் நாமங்கள்” என மூன்று வகையாக பிரிக்கலாம்.

 வைகுந்தவாசன்: நாராயணா, விஷ்ணு.
 வாமனாவதாரன்: திரிவிக்ரமா, வாமனா.
 கிருஷ்ணாவதாரன்: கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, ஸ்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

———–

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ||

புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநதப்ரபு: |
பஸ்சாந் நாரயண: சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 1 ||

இந்தீவர தளஸ்யாமோ மாதவோர்த்வம் சுதாதர: |
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே-
-தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 2 ||

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்பகிஞ்ஜல்க ஸந்நிப: |
ஆக்நேயாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதன: || 3 ||

த்ரிவிக்ரம: கட்கபாணிர் நிர்ருத்யாம் ஜ்வலநப்ரப: |
வாயவ்யாம் வாமநோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமாந் || 4

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப:|
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 6 ||

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோ ऽபராஜித: |
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம்-
– வ்யாப்ய தாமோதரஸ்தித: || 7 ||

ஏவம் ஸர்வத்ர மச்சித்ரம் .நாம த்வாதசபஞ்ஜரம் |
ப்ரவிஷ்டோऽஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந: || 8 ||

பயந்நாஸ்தி கதாசந ஓம் நம இதி |

|| ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம் ஸம்பூர்ணம் ||

——————-

புரஸ்தாத் கேசவ பாது , சக்ரீ ஜாம்பு நாத பிரபா, பச்சன் நாராயண சங்கீ நீலா ஜீமூத சன்னிபா. 1 

கிழக்கே முகமாய், உருகிய தங்கச் சக்கரத்தை ஏந்திய கேசவனால் நான் காக்கப்படுகிறேன், மேற்கில் நான் நாராயணனால் காக்கப்படுவேன்.
சங்கு வைத்திருப்பவர், செழுமையான நீலமேகத்தை ஒத்தவர்.

இந்தீவர தல ஷ்யாமோ மாதவோ ஊர்த்வா கதாதர,
கோவிந்தோ, தக்ஷிணே பார்ஸ்வே தந்வீ சந்த்ர ப்ரபோ மஹான். 2

உச்சியில் இருந்து, நீல அல்லி நிறமும் சூலாயுதமும் கொண்ட மாதவனால் என்னைக் காக்கட்டும்,
தெற்கில் சந்திரனின் குளிர்ந்த பிரகாசத்தை உடையவனும் அம்பு ஏந்தியவனுமான கோவிந்தனால் என்னைக் காக்கட்டும்.

உத்தரே ஹல ப்ருத் விஷ்ணு, பத்ம கிஞ்சல்க சன்னிபா,
அக்நேயம் அரவிந்தபோ முசலீ மதுசூதனா. 3

வடக்கே என்னை விஷ்ணு பகவான் காக்கட்டும்.
தாமரை இழையின் நிறமுடையவனும், கலப்பையை வைத்திருப்பவனும்,
தென்கிழக்கில், தாமரையைப் போன்றவனும், பூச்சியை ஏந்தியவனுமான மதுவைக் கொன்றவனே என்னைக் காக்கட்டும்.

த்ரிவிக்ரம கட்க பாணி, நிர்யாத்யம் ஜ்வலனா பிரபா,
வாயவ்யம் வாமனோ வஜ்ரி தருணாதித்ய தீப்திமான். 4

தென் மேற்கில் திரிவிக்ரமனால் என்னைக் காக்கட்டும்.
வாளை ஏந்தி நெருப்பு போல் பிரகாசிப்பவன்,
வடமேற்கில் வாமனனால் காக்கப்படுபவன்,
இடியை ஏந்தி இளம் சூரியனைப் போல் பிரகாசிப்பவன்.

ஜசாந்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயத: |
வித்யுத்ப்ரபோ ஹ்ருஷீகேசோ– ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 5 ||

வடகிழக்கில் தாமரையின் நிறமும் ஈட்டியும் ஏந்திய ஸ்ரீதரால் என்னைக் காக்கட்டும்,

கீழே இருந்து மின்னலைப் போலவும் சுத்தியலைப் பிடித்தவனுமான ஹிருஷிகேசனால் என்னைக் காக்கட்டும் .

ஹ்ருத் பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ர அர்க ஸம ப்ரபா, ஸர்வாயுத ஸர்வ சக்தி ஸர்வஜ்ஞ ஸர்வதோ முக. 

கோடி சூரியன்களின் பிரகாசத்துடன், என் இதயத்தை ஆக்கிரமித்து, அனைத்து ஆயுதங்களுடனும், அனைத்து சக்திகளுடனும், அனைத்தையும் அறிந்தவராகவும், பத்மநாபா பகவான், எல்லாத் திசைகளிலும் முகங்களுடன் என்னை எப்போதும் காக்கும்.

இந்த்ர கோப ஸங்காஸ பாஸ ஹஸ்தோ அபராஜித,
ஸ பாஹாய அந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர ஸ்திதா. 7

எனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தாமோதரன்,
நீலத் தேனீயின் நிறத்தை உடையவனும்,
கைகளில் கயிறுகளை உடையவனும்,
வெல்ல முடியாதவனுமான தாமோதரன் என்னை எப்போதும் காக்கட்டும்.

ஏவம் ஸர்வத்ர மச் சித்ரம் நாம த்வாதச பஞ்சரம்,
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாச்சன. 8

இவ்வாறு உடைக்க முடியாத கூண்டுக்குள் நுழைந்து,
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பன்னிரண்டு பெயர்களில்,
நான் எப்போதும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படுகிறேன்,

பயம் நாஸ்தி கதாசன ஓம் நம இதி.
எந்த நேரத்திலும் பயப்பட வேண்டாம்.

எந்த நேரத்திலும் பயம் இல்லை.

——————–

துவாதச புண்டரம் :

[ஶ்ரீசூர்ணம் (தாயார்) – திருமண் (பெருமாள்) – ஸ்தாநம் – நிறம்]

கேசவன் 
தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் — வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !
அன்னை சிரிதேவி யாம்!
நாரணன் 
சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்
மங்கலத் தாளினன்! தேவியும் — பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!
மாதவன் 
கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் — பொருந்தும்
அமலன்அங் கைமா தவன்தன் தேவி
கமலையும் சேரிடம் மார்பு!
கோவிந்தன் 
 
குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும்
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து — அளிபொறை
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.
விஷ்ணு 
 
தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள்
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் — நமக்கு
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.
மதுசூதனன் 
உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும்
மாலாய் உலகாளும் மாயோன் — வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும்
தவ்வை அவள்வௌவல் மாய்த்து.
திரிவிக்ரமன் 
 
அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும்
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் — கோனவன்தோள்
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்
தீட்டும் கழுத்தின் வலத்து .
வாமனன் 
அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் – பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும்
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.
ஸ்ரீதரன் 
 
வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும்
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் —  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.
ஹிருஷீகேசன்
மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் — மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.
பத்மநாபன் 
பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை — திகழ்வதாம்
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .
தாமோதரன் 
உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல — நாதனும்
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.

——————————————-

ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே –ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில்
அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் –
அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை –
நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் –

———————————

பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத்
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்
மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —சிறப்புத் தனியன் –

மின்னிரு நூலார் வேங்கட நாதன் நம் தேசிகன் —பிரகாசம் பொருந்திய திரு யஞ்ஜோபவீதம் அமைந்த திரு தூப்பூல் திருவேங்கடமுடையான் ஆகிய நம் தேசிகர்
பன்னிரு நாமம் திருவத்தியூர்ப் பரன் பாதம் என்று -பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களும் பெருமை பொருந்திய ஸ்ரீ ஹஸ்திகிரி நாதனான
பேர் அருளாளனுடைய திருவடி வடிவம் கொண்டன என்று நினைத்து
நன்னிற நாமம் படை திக்கு இவை யாவையும் நாம் அறியத் -அந்த புறங்களின் தேவதையாகிய எம்பெருமானுடைய
சிறந்த நிறம் திரு நாமம் திவ்ய ஆயுதம் வசிக்கும் திசை ஆகிய அனைத்தையும் நாம் அறியும் படி
தென்னம் தமிழ்த் தொடைச் சீரார் கலித்துறை யோதி ஈந்தான்-தெற்கே வழங்கும் அழகிய தமிழினால் ஆகிய பாட்டுக்களுக்குள் சிறப்புப் பொருந்திய
கட்டளை கலித் துறை என்னும் பாவினத்தால் அருளிச் செய்து நாம் அனுசந்திக்கத் தந்து அருளினார் –

——————————-

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர்
சீர் கொண்ட தூப்பூல் திருவெண்காடாரியன் சீர் மொழியை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —சிறப்புத் தனியன் –

கார் கொண்ட மேனியன் பாதாம் புயத்தைக் கருத்திருத்தி –மேகத்தை ஒத்த திருமேனியையுடைய பேர் அருளானுடைய
திருவடித் தாமரையை மனத்தில் உறுதியாகத் தியானித்து
ஏர் கொண்ட கீர்த்தி இராமானுசன் தன் இணை அடி சேர் –அழகிய புகழையுடைய ஸ்ரீ பாஷ்யகாரருடைய இரண்டு திருவடித் தாமரைகளை சேர்ந்த
சீர் கொண்ட தூப்பூல் திருவேங்கடாரியன் சீர் மொழியை-பெருமை பெற்ற ஸ்ரீ தூப்பூல் திருவேங்கடமுடையானுடைய சிறந்த ஸ்ரீ ஸூக்தீயை
யார் கொண்டு போற்றிடினும் அம்மாள் பாதத்தை அடைவிக்குமே —மனத்தில் கொண்டு யார் ஸ்துதித்தாலும்
அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அந்த ஸ்ரீ ஸூக்திகளே பெறுவிக்கும் –

—————————————————–

கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும் மறையதனால்
ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –1- ஸ்ரீ கேசவன் -பொன் நிறம் -நான்கு திருச் சக்ராயுதங்கள்- கிழக்கு -புண்டர ஸ்தானம் நெற்றி –

மறையதனால் ஆசை மிகுத்த யயன் மக வேதியில் அற்புதனே –வேதாந்தார்த்த நிச்சயத்தால் பேர் அருளானனே பரன் என்று தேறி
அவனிடம் அன்பு மிகுதியாகப் பெற்ற ப்ரஹ்மாவினுடைய யாக வேதியிலே திரு அவதரித்த அதிசய சேஷ்டிதங்களை யுடைய பேர் அருளாளன்
கேசவனாய் நின்று கீழைத் திசையிலும் நெற்றியிலும் -கேசவன் என்னும் திரு நாமத்தை யுடையனாய் கிழக்குத் திசையிலும் பாகவதர்கள் நெற்றியிலும்
தேசுடை ஆழிகள் நான்குடன் செம் பசும் பொன் மலை போல்
வாசி மிகுத்து என்னை மங்காமல் காக்கும்–பிரகாசமுள்ள திருச் சக்ராயுதங்கள் நான்குடன் சிவந்த மாற்று உயர்ந்த பொன்னினால் அமைந்த
மலை போல் நிலை பெற்று சிறப்பு மிகுந்து என்னைக் கெட்டுப் போகாமல் ரஷித்து அருளுகிறார் –

————————————–

நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–2-ஸ்ரீ நாராயணன் -நீல நிறம் -நான்கு திவ்ய சங்காயுதங்கள் -மேற்கு -புண்ட்ர ஸ்தானம் வயிறு –

நாரணனாய் நல் வலம் பூரி நாளும் உகந்து எடுத்தும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும்
வாரண வெற்பின் மழை முகில் போல் நின்ற மாயவனே–நாராயணன் –ஸ்ரீ ஹஸ்த கிரியிலே குளிர்ந்த மேகம் போலே நிற்கின்ற அதிசய சேஷ்டிதங்களையுடைய பேர் அருளாளன்
நாரணனாய் நல் வலம் புரி நாலும் உகந்து எடுத்தும் -நாராயணனாய் இருந்து சிறந்த வலம் புரிச் சங்கங்கள் நான்கையும் மகிழ்ந்து திரு க் கையில் ஏந்தியும்
ஊர் அணி மேகம் எனவே உதரமும் மேற்கும் நின்றும் -நிலத்தில் சஞ்சரிக்கும் அழகிய மேகம் என்னும்படியாகவும் வயிற்றிலும் மேற்குத் திசையிலும் நின்றும்
ஆரண நூல் தந்து அருளால் அடைக்கலம் கொண்டு அருளும் -வேதமாகிய சாஸ்திரத்தைப் பிரவர்த்திப்பித்து கிருபையால்
அடியேனை ரஷிக்கப் பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்டு அருள்கிறான் –

————————————————————-

மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப்
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும்
தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே –3-ஸ்ரீ மாதவன் –இந்த்ர நீல நிறம் -நான்கு திவ்ய கதைகள் –ஊர்த்வ திசை -புண்ட்ர ஸ்தானம் -மார்பு —

தூதனும் நாதனுமாய தொல் அத்தி கிரிச் சுடரே -பாண்டவர்களுக்குத் தூதனாயும் அனைவருக்கும் ஸ்வாமியாயும் உள்ள அநாதியான
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள தேஜஸ்ஸாகிய பேர் அருளாளன்
மாதவ நாமமும் வான் கதை நான்கும் மணி நிறமும் -மாதவன் என்கிற திரு நாமத்தையும் -வலிய திவ்ய கதை நான்கையும் -இந்த்ர நீல ரத்னத்தின் நிறத்தையும்
ஓதும் முறைப் படி ஏந்தி யுரத்திலும் மேலும் அல்கிப் -சாஸ்திரங்களில் கூறும் முறைப்படி தரித்து -மார்பிலும் மேல் நோக்கும் திசையிலும் இருந்து
போதலர் மாதுடன் புந்தியில் அன்பால் புகுந்து அளிக்கும் -அடியேன் இடம் அன்பினால் என் மனசில் தாமரை மலரில் விளங்கும் பிராட்டியுடன் பிரவேசித்து ரஷித்து அருள்கிறான் –

——————————————-

கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்
பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே -4-ஸ்ரீ கோவிந்தன் –சந்த்ரநிறம் -நான்கு திவ்ய வில்கள்௦புன்ற ஸ்தானம் உட் கழுத்து –

பூவன் தொழ வத்தி மா மலை மேல் நின்ற புண்ணியனே –கமலத்தில் அவதரித்த ப்ரஹ்மா சேவித்து அனுபவிக்கும் படி
ஸ்ரீ ஹஸ்த மஹா கிரியின் மேல் நிலை பெற்று நின்றவனுமான புண்ய ஸ்வரூபனான பேர் அருளாளன்
கோவிந்தன் என்றும் குளிர் மதியாகிக் கொடியவரை -கோவிந்தனாகவும் நிறத்தில் எப்பொழுதும் குளிர்ந்த சந்த்ரனாகவும் இருந்து துஷ்டர்களை
ஏவும் தனுக்களுடன் தெற்கிலும் உட் கழுத்திலும் நின்று -போக்குகின்ற நான்கு திவ்ய விற்களுடன் தெற்குத் திசையிலும் கழுத்தின் உட் புறத்திலும் நிலை பெற்று நின்று
மேவும் திருவருளால் வினை தீர்த்து எனை யாண்டு யருளும்–பொருந்திய சிறந்த கருணையால் பாபங்களை போக்கி அடியேனை அடிமையும் கொண்டு அருள்கிறான் –

———————————————————-

விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும்
கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -5-
ஸ்ரீ விஷ்ணு -தாமரைத் தாதுவின் பொன்நிறம்–நான்கு திவ்ய கலப்பைகள் -வடக்கு திசை -புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் வலப் புறம் –

கட்டு எழில் சோலைக் கரிகிரி மேல் நின்ற கற்பகமே -மிக்க அழகுள்ள சோலைகள் சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்தி கிரியின்
மேலே எழுந்து அருளி யுள்ள கல்பவ்ருக்ஷம் போன்ற பேர் அருளாளன்
விட்டு வல வயிற்றின் கண் வடக்கும் விடாது நின்று –விஷ்ணுவாக இருந்து வயிற்றின் வலப் புறத்திலும் வடதிசையிலும்நீங்காது தங்கி
மட்டவிழ்த் தாமரைத் தாது நிறம் கொண்ட மேனியனாய்த் -தேன் ஒழுகுகின்ற தாமரையின் மகரந்தத்தை நிறத்தைக் கொண்ட திருமேனியுடையனாய்
தொட்ட கலப்பைகள் ஈர் இரண்டாலும் துயர் அறுக்கும் –கையில் ஏந்திய கலப்பைகள் நான்கினாலும் அடியேன் துன்பத்தை போக்கி அருள்கிறான் –

——————————————————————-

மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால்
மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே -6-
ஸ்ரீ மது ஸூ தனன் -தாமரை நிறம் –நான்கு திவ்ய உலக்கைகள் –தென் கிழக்கு –புண்ட்ர ஸ்தானம் –வலது புஜம் —

மதுவார் இளம் பொழில் வாரண வெற்பின் மழை முகிலே –தேன் நிறைந்த இளம் சோலை சூழ்ந்த ஸ்ரீ ஹஸ்திகிரியில்
எழுந்து அருளியுள்ள வர்ஷா கால மேகம் போன்ற பேர் அருளாளன்
மதுசூதனன் என் வலப் புயம் தென் கிழக்கு என்று இவற்றில் -மது ஸூ தனனாக இருந்து எனது வலது புஜமும் தேன் கிழக்கும் ஆகிய இந்த ஸ்தானங்களில்
பதியாய் இருந்து பொன் மாது யுறை பங்கய வண்ணனுமாய் -ஸ்திரமாய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பிராட்டி நித்ய வாசம் செய்கின்ற தாமரையின் நிறம் யுடையவனாய்
முது மா வினைகள் அறுக்கும் முயலங்கள் ஈர் இரண்டால் -திவ்ய உலக்கைகள் நான்கினால் என்னுடைய அநாதியான பெரிய கர்மங்களை ஒழித்து அருள்கிறான் –

————————————————

திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்
உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி வலக் கழுத்தும்
செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் இறை
மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவனே -7-
ஸ்ரீ திரிவிக்ரமன் –அக்னி நிறம் -நான்கு திவ்ய வாள் –தென் மேற்கு திசை -புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் வலப்புறம் –

மருவிக் கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் இறை –ஸ்ரீ ஹஸ்திகிரியின் மீது பொருந்தி வேண்டிய வரத்தைக் கொடுத்து அருள்கின்ற சக்கரவர்தியாகிய பேர் அருளாளன்
திரிவிக்ரமன் திகழ் தீ நிறத்தன் தெளிவுடை வாள்-உருவிக் கரங்களில் ஈரிரண்டு ஏந்தி -ஸ்ரீ திரிவிக்ரமனாய் இருந்து ஜ்வலிக்கின்ற அக்னி போன்ற நிறம் உடையவனாய் –
திருக் கைகளிலே பிரகாசம் பொருந்திய திரு வாள்கள் நான்கையும் உருவித் தாங்கி
வலக் கழுத்தும் -செரு விக்கிரமத்து அரக்கர் திக்கும் சிறந்து ஆளும் -கழுத்தின் வலப் புறத்திலும் போரில் வலிமையைக் காட்டுகின்ற
ராக்ஷஸர்களுடைய திசையாகிய நைருதி-தென் மேற்கு திக்கிலும் சிறந்து நின்று ரஷித்து அருள்கிறான் –

—————————————

வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும்
நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே -8-
ஸ்ரீ வாமனன் –நான்கு திவ்ய வஜ்ரம் –வட மேற்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -வயிற்றின் இடது புறம் –

நா மங்கை மேவிய நான்முகன் வேதியில் நம் பரனே –சரஸ்வதி உடன் பொருந்திய ப்ரஹ்மாவின் யாக வேதியில் திரு அவதரித்த நம் சர்வேஸ்வரனான பேர் அருளாளன்
வாமனன் என் தன் வாமோதரமும் வாயுவின் திசையும் –வாமனனாய் என் இட வயிற்றையும் வாயுவின் திசையான வட மேற்கையும்
தாமம் அடைந்து தருண அருக்கன் நிறத்தனுமாய்ச் –ஸ்தானமாகக் கொண்டு உதித்த ஸூர்யன் யுடைய நிறமுடையவனாய்
சேம மரக்கலம் செம் பாவி ஈர் இரண்டால் திகழும் –அடியார்களை சம்சார சமுத்திரத்தில் இருந்து கரை சேர்த்து க்ஷேமத்தைக் கொடுக்கும்
ஓடமாக இருந்து சிவந்த திவ்ய வஜ்ராயுதம் நான்கினோடு பிரகாசித்து அருள்கிறான் –

———————————-

சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும்
ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே-9-
ஸ்ரீ தரன் –வெண் தாமரை நிறம் –நான்கு திவ்ய பட்டாக் கத்தி -வட கிழக்கு திசை –புண்ட்ர ஸ்தானம் -இடது புஜம் –

ஆரா வமுது அத்தி மா மலை மேல் நின்ற அச்சுதனே—எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுதமாய் உள்ளவனும்
ஸ்ரீ ஹஸ்தி மஹா கிரியின் மேல் நிலை பெற்றவனும் அடியவர்களைக் காய் விடாதவனுமான பேர் அருளாளன்
சீரார் சிரீதரனாய்ச் சிவன் திக்கும் இடப் புயமும் –சிறப்பு நிறைந்த ஸ்ரீ தரனாய் சிவனுடைய திசையாகிய வட கிழக்கையும் இடது புஜத்தையும்
ஏரார் இடம் கொண்டு இலங்கு வெண் தாமரை மேனியனாய்ப் -அழகு பொருந்திய ஸ்தானமாகக் கொண்டு பிரகாசிக்கின்ற வெண்மையான தாமரையின் நிறமுடையவனாய்
பாராய பட்டயம் ஈர் இரண்டாலும் பயம் அறுக்கும் -பருத்த பட்டயம் என்னும் ஒருவகையான திவ்ய வாள்கள் நான்கினாலும் என் பயத்தைப் போக்கி அருள்கிறான் –

———————————————

என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும்
பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -10-
ஸ்ரீ ஹ்ருஷீ கேசன் –மின்னல் நிறம் -நான்கு திவ்ய சம்மட்டி –கீழ்ப் பாகம் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் இடப் புறம் —

பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் -பொன்னையும் அகில் கட்டையையும் கொண்டு
அலை மோதுகின்ற ஜலத்தை யுடைய வேகவதி நதியின் வடகரையில்
தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே -புண்ய ராஜன் மகிழ்ந்து வணங்குகின்ற தேனம் பாக்கத்தில் உள்ள
வைதிகப் பெரியோர்களின் ஒரே தெய்வமாகிய பேர் அருளாளன்
பெருமாள் கோயிலுக்கு மிகச் சமீபத்தில் தேனம் பாக்கம் என்னும் ஸ்ரீ கிராமம் –இத்தை ஸ்ரீ காஞ்சீ புரத்து ஒரு வீதியாகவும் கொள்ளலாம் –
அங்கு ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரங்களில் கரைகண்ட பரம பாகவதர்கள் எழுந்து அருளி இருந்து பேர் அருளாளனை குல தெய்வமாகக் கொண்டு
வழுவாது திரு வாராதானம் செய்து வந்தனர்
அவர்களுடைய ஆத்மகுணங்களைக் கண்ட ஆஸ்திக சிகாமணியான பாண்டிய ராஜன் ஒருவன் அவர்களுக்கு ஸம்மானம் அளித்து
அவர்களை வணங்கி வந்தான் என்னும் வரலாறு கர்ண பரம்பரையாக அறியக் கிடக்கின்றது –
மேலும் பெருமாள் கோயில் பாண்டிய நாட்டில் அடங்கியதாகச் சில காலம் இருந்ததாகவும் அப்பொழுது பாண்டிய ராஜன் பேர் அருளாளன் யுடைய அருளாலே
பெருமை பெற்று வாழ்ந்து வந்தது பற்றியும் அவ்வரசன் பேர் அருளாளனைத் தொழுது வந்ததாகவும் சிலா சாசனம் உளது என்றும் சிலர் பணிப்பர்
என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் -ஹிருஷீகேசன் என்னும் என் ஸ்வாமியாய் இருந்து கீழ்ப் பாகமும் கழுத்தின் இடப் புறமும்
ஆகிய இந்த இடங்களில்
நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் -நன்கு நிலை பெற்ற மின்னைப் போன்ற நிறமுடையவனாய் இருந்து
நான்கு திவ்ய சம்மட்டிகளை திவ்ய ஆயுதமாகக் கொண்டு ரஷித்து அருள்கிறான் –

————————————————

எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும்
செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே -11-
ஸ்ரீ பத்ம நாபன் –ஸூர்யன் நிறம் –திவ்ய சக்கரம் சங்கு வாள் வில் தண்டு என்னும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் -ஸ்தானம் -மனாஸ் -புண்ட்ர ஸ்தானம் -பின்புறம்

செம் பொன் திரு மதிள் சூழ் சிந்துரா சலச் சேவகனே –சிவந்த பொன்னாலாகிய அழகிய மதிள் சூழ்ந்த ஸ்ரீ ஹதிகிரியில் உள்ள மஹா வீரனான பேர் அருளாளன்
எம் பற்பநாபனும் என் பின்மனம் பற்றி மன்னி நின்று -எம்முடைய பத்ம நாபனுமாகி என்னுடைய பின் பாகத்தையும் மனசையும் பற்றிக் கொண்டு ஸ்திரமாய் நின்று
வெம் பொன் கதிரவன் ஆயிரம் மேவிய மெய் உருவாய் -உஷ்ணமான சிவந்த ஆயிரம் ஸூர்யனோடு ஒப்பான திரு மேனி நிறமுடையவனாய்
அம் பொன் கரங்களில் ஐம் படை கொண்டு அஞ்சல் என்று அளிக்கும் -அழகிய சிவந்த திருக்கைகளில்
திவ்ய பஞ்ச ஆயுதங்களைத் தரித்து அஞ்சாதே என்று கூறி ரஷித்து அருள்கிறான் –

——————————

தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும்
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும்
மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே-12-
ஸ்ரீ தாமோதரன் –உதிக்கின்ற ஸூர்யன் நிறம் -நான்கு திவ்ய பாசங்கள் -சரீரத்தின் உட் புறமும் வெளிப் புறமும் –புண்ட்ர ஸ்தானம் –கழுத்தின் பின் புறம்

மா மோகம் மாற்றும் மதிள் அத்தியூரில் மரகதமே–பெரிய அஞ்ஞானத்தைப் போக்குகின்ற திரு மதிள்கள் சூழ்ந்த
ஸ்ரீ ஹஸ்திகிரியில் உள்ள மரகத ரத்னம் போன்ற பேர் அருளாளன்
தாமோதரன் என் தன் தாமங்கள் நாலு கரங்களில் கொண்டு -என் தாமோதரனாகி நான்கு திவ்ய பாசங்களை திருக் கைகளிலே ஏந்திக் கொண்டு
ஆமோ தரம் என ஆக்கத்தின் உட் புறம் பிற் கழுத்தும் -இந்தப் பெருமை மற்றவருக்கு உண்டோ என்னும் படி சரீரத்தின் உள்ளேயும் வெளியிலும் கழுத்தின் பின் புறத்தும் நின்று
தாம் ஓர் இளம் கதிரோன் என என் உள் இருள் அறுக்கும் -தான் ஓர் உதிக்கின்ற ஸூர்யன் என்னும்படி நிறமுடையவனாய் இருந்து
எனது மனத்துள் இருக்கும் அஞ்ஞானம் ஆகிய இருளை போக்கி அருள்கிறான் –

————————————–

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -13-

கத்தித் திரியும் கலைகளை வெல்லும் கருத்தில் வைத்துப் -சாரம் இல்லாமல் ஆடம்பரத்தோடு கத்திக் கொண்டே திரிகின்ற
பயன் அற்ற வித்யைகளை வாதத்தில் ஜெயிக்க கூடிய உறுதியை யுடைய மனசில்
பத்திக்கு உரு துணை பன்னிரு நாமம் பயில்பவர்க்கு –பக்திக்குத் தக்க சாதனமான கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும் ஊன்றி அனுசந்தித்து பரிச்சயம் செய்பவர்க்கு
முக்திக்கு மூலம் எனவே மொழிந்த இம்மூன்றும் நான்கும் -மோக்ஷம் அளிக்க காரணமாகும் என்னும்படி அருளிச் செய்த இந்த பன்னிரண்டு பாசுரங்களும்
தித்திக்கும் எங்கள் திருவத்தி யூரரைச் சேர்பவர்க்கே -எங்கள் பேர் அருளாளரை ஆஸ்ரயித்த பாகவதர்களுக்கே பரம போக்யமாய் இன்பம் கொடுப்பனவாகும் –

—————-

அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….கிரேசி மோகன்
—————————————————————————————————————

“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….

கேசவன்
——————

“களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்  கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை பலமுற காட்டினை பாதையதை
பொலபொல என்றுதி காலையை முந்திடும் பரவசக் கோதையின் பாசுரத்தால்
அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
ஹரிஹரி கோகுலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

நாராயணன்
————————–
“சரிய பிதாம்பரம் நழுவ கதாயுதம் பிளிறும் கஜேந்திரன் குரல் கேட்டு
பறவைசு தாகரம் விரையவ னாந்திரம் எறிய சுதர்சனம் விரல்விட்டு
துரிதநி வாரண முனிகள் தபோவனம் பறையும் கதாம்ருத காரணனே
முரளி மனோகர கமல பதாம் புய அனந்த”நாராயண” பூரணனே”….(2)
ஹரிஹரி கோகுல பாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மாதவன்
——————

“அவையென இவையென அளவிடல் தவறென கவிமணி மலையணில் கூட்டியதை
புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட குளிர்மழை காத்தனை யாதவனே
கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக் கரணம் செய் காக்கும் ”மாதவனே”….(3)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

கோவிந்தன்
————————

“அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் புகல்ஜர கண்டியில் வாழயிலை
துளசியை மென்றிட குறையிலை என்றிடும் நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில் வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

விஷ்ணு
—————-

“செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்முகநுனி தாரணி கொண்டவனே
சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்விதவித பந்தியில் உண்டவனே
விதையுழு ராமனும் மழுமுனி ராமனும் தொழுரகு ராமனும் பாகவதக்
கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும் சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

திரிவிக்ரமன்
—————————-

“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம் உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்”திரி விக்ரம” வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம் பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை சரணடை கோவண சந்நிதியில்”….(6)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

வாமனன்
——————

“சிறைவசு தேவகி கருவச மாகிட இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன் தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும் குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

சீதரன்
————

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள் திருமகள் பூணிடும் ”சீதரனே”
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும் சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும் விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ரிஷிகேசன்
——————–
“அசுரநி சாசரர் அதரும நீசர்கள் அழியச ராசரம் வந்தவனை
தசவித வேஷனை முனிமன வாசனை தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும் ரகுபதி ராகவ ரூபமெடு
தசரத மைந்தனை குகனோடு ஐந்தென தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

பதுமநாபன்
————————
“கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை தசமுக பூஷனை இம்சைதரும்
இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன் துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
குறைசிசு பாலனை மதுகைட பாணனை வதம்புரி மாலனை நம்பிடுவாய்
பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

தாமோதரன்
————————-

“கரமொடு களவாய் பிடிபட உனதாய் உரலிட இழு”தா மோதரனே”
மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர் மறுவுல கேத்திடும் ஆதரவே
புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை வெளியுற வைத்திடும் யவ்வனனே
சரியென தப்பென அறியும்ம னத்தினை அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

மதுசூதனன்
———————

“மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை துருபதைக் எட்டிட பட்டதனை
புகுவிட பூதனை விடவுடல் வேதனை முலையுறி மா”மது சூதனனே”
புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…

———————-

திருவாய்மொழி நாராயணனுக்கே

பரமாத்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருப்பினும், (விஷ்ணு சஹஸ்ரநாமம்), துவாதச நாமங்கள் என்று பன்னிரண்டு நாமங்கள் இருப்பினும், (கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேச, பத்மநாப மற்றும் தாமோதர), வியாபக நாமங்களாக (வியாபகம் என்றால், விரிந்து பரந்து எங்கும் இருப்பது). மூன்று (விஷ்ணு, வாசுதேவ, நாராயண) சொல்லப்பட்டாலும், ஆழ்வார் நாராயணன் என்ற நாமத்தையே திருவாய்மொழியில் அறுதி இட்டு சொல்லி உள்ளார்.

வனமாலீ  கதீ  சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ, ஸ்ரீமான் நாராயணோ  விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது.” என்ற ஆதிசங்கரரின் ஸ்லோகம் இங்கே குறிப்பிடலாம். இங்கு ஆதிசங்கரர் விஷ்ணுவின் வியாபக நாமங்களான நாராயண, விஷ்ணு மற்றும்  வாசுதேவ என்ற மூன்றையும் குறிப்பிட்டு உள்ளார்.  ‘வனமாலி என்ற மாலையை அணிந்து கௌமோதகி என்னும் கதை, பாஞ்சசன்னியம் என்னும் சங்கு, சுதர்சன என்னும் சக்கரம், சார்ங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள் ஆகியவற்றுடன் விளங்கும் நாராயண, விஷ்ணு, வாசுதேவன் என்ற நாமங்களைக் கொண்ட திருமால் என்னைக் காக்க வேண்டும்’ என்பது இதன் பொருள்.

கண்ணன், இராமன், நரசிம்மன், த்ரிவிக்ரமன் மற்றும் வராகன் போன்ற அவதார நாமங்களை ஆழ்வார் திருவாய்மொழியின் பல இடங்களில் உபயோகித்து இருந்தாலும், ‘நாராயணன்’ என்ற நாமமே பரமாத்மாவின் முக்கியமான விஷேச குணநலன்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நாமம் ஆகும். அதனால்தான், நாராயண  நாம அர்த்தத்தை, நாம், நம் ஆச்சார்யனிடம் கேட்டு தெரிந்து .கொள்ள வேண்டும்.

முதலில் நாராயணன்

திருவாய்மொழியின், முதல், இடை, முடிவு எல்லாம் பரமாத்மாவான நாராயணனையே சொல்லும்.

முதல் திருவாய்மொழியிலே ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று தொடங்கி, நாராயணனே பரம்பொருள் என்பதற்காக ‘நாராயண‘ சப்தத்தின் பொருளை முதல் பதிகத்திலேயே அருளிச் செய்தார்.   ‘நாராயணன்’ என்பதின் பொருள், தனக்கு நிகரோ, மேம்பட்டவர்களோ இல்லாதவன், எல்லா நல்ல குணங்களும் கொண்டவன், எல்லா உலகங்களுக்கும் தன்னிகரில்லாத தலைவன் என்பதாகும்.  ‘வண்புகழ் நாரணன்’  (1.2.10) என்று இரண்டாம் பதிகத்தில் தொடங்கி, பின் ‘செல்வ நாரணன்’(1.10.8), ‘நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன்’(2.7.2), ‘திருநாரணன்’ தாள் காலம் (4.1.1) என்று ஆழ்வார் திருவாய்மொழி முதல் சில பத்துகளில் நாராயணன் பெயரைக் கூறி உள்ளார்.

இடையில் நாராயணன்

திருவாய்மொழி திருமந்திரத்தின் அர்த்தத்தை சொல்கின்றன என்று நம்  ஆச்சார்யர்கள் சொல்வார்கள். திருவாய்மொழியின் இடையில் வருகின்ற ஆறாம் பத்து (6.10) திருமந்திரத்தின் முதல் பதமான “ஓம்” என்பதனையும், மற்றும் ஏழாம் பத்தில் உள்ள பதிகங்கள் 7.1 இரண்டாம் பதமான “நம” என்பதனையும் மற்றும் 7.2 மூன்றாம் பதமான நாராயணாய என்பதனையும்   குறிக்கும்.

கங்குலும் பகலும் (7.2) என்ற பதிகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் மூலம், ஆழ்வார் தான் திருவாய்மொழியில், பத்து பத்துக்களால் என்ன சொல்லவந்தோம் என்பதை தேறிய பொருளாக தெரிவிப்பதாலும், முன்பு சொன்னதுபோல், திருவாய்மொழி நாரயணனுக்கே என்பதாலும்,  திருவாய்மொழி இடையிலும் நாராயணனே உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியில் நாராயணன்

‘காராயின காள நன்மேனியன் நாராயணன்’ (9.3.1), ‘திண்ணம் நாரணம்,’ (10.5.1) ‘வாழ் புகழ் நாரணம் (10.9.1) என்று திருவாய்மொழி இறுதியிலும் நாரணனையே கூறி ஆழ்வார் முடிக்கிறார்.

மேலே சொல்லியவை ஒரு சில உதாரணங்களே, இருப்பினும், ஆழ்வார் திருவாய்மொழி முழுவதும் நாராயணனைக் கொண்டே சுவாசித்து உள்ளார்.

——————

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ரங்களுக்கும்‌ இப் பன்‌னிரண்டு திரு நாமங்களும் ௮நுஸந்திக்கப்படுகின்‌றன,
புருஷோத்தமனுடைய அம்ஸ சாரத்தைப்‌ பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும்‌ இப் பன்னிரு நாமங்களே கூட்டப்‌ பெற்றிருக்கின்‌றன.
எம்பெருமானுக்குப்‌ பரம்‌, வியூஹம்‌, விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள்‌ உள்ளனவென்பது
ஸகல ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில்‌ கோஷிக்கப்படுகின்றது.
இவ்வைந்து அவஸ்தைகளும்‌ இப் பன்னிரு நாமங்களிலும்‌ அநுஸந்திக்கப்‌ படுகின்‌ றன.
மாலரி கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே “
கேசவன்‌ நாராயணன்‌, மாதவன்‌ கோவிந்‌தன்‌ ” என்னுமிந்த நான்கு திருநாமங்களும்‌
ஸ்ரீவைகுண்ட நாதனாய் எழுந்தருளியிருக்கும்‌ பராவஸ்தையைக்‌ குறிக்கின்‌றன வென்‌பது விளங்குகிறது,

“விஷ்ணு” எனும்‌ அடுத்த திரு நாமம்‌ அநிருத்த நாரரயணனாகிய வியூஹத்தைக் குறிப்பதன்‌ மூலம்‌
மற்ற வியூஹங்களையும்‌ உணர்த்துகிறது.
மது ஸூதன்ன்‌’ என்பதும்‌ அந்த வியூஹ மூர்த்தியின்‌ சேஷ்டிதத்தைச்‌ சொல்லுகிறது.
“திரிவிக்ரமன்‌. வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ திரு நாமங்கள்‌ விபவாவதாரங்களைச்‌ சொல்லுகின்‌றன.
ஸ்ரீதரன்‌” என்னும்‌ திருநாமம்‌ அவ் விபவ அவதாரங்களிலும்‌ பகவான்‌ பிராட்டியுடனேயே
அவதரிக்‌ கிறானென்று காட்டுகிறது.
“ஹ்ருஷீகேசன்‌’ என்னும்‌ திரு நாமம்‌ அந்தர்யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமிக்கும்‌ இருப்பை உரைக்கிறது.
‘ஸ்ரீதரன்‌” , எல்லாத்‌ திரு நாமங்களும்‌ திருமலை முதலிய திவ்ய ஷேத்ரங்களில்‌ எழுந்து யிருக்கும்‌
ஸ்ரீநிவாஸன்‌ முதலிய அர்ச்சா மூர்த்திகளையும்‌ உணர்த்துகின்‌ றன.
“பத்மாபன்‌’ என்று இவ் வவதாரங்‌களுக்கெல்லாம்‌ மூல அவதாரமான க்ஷீராப்தி நாதனைப்‌ பேசுகிறது. ,
ஆக, இப்படி ஐந்து அவஸ்தைகளும்‌ இந் நாமங்களில்‌ அநுபவிக்கப்படுகின்‌றன.

————

இனி இத் திருநாமங்களின்‌ அர்த்‌ தங்களைச்‌ சிந்திப்போம்‌.
(கேசவன்‌ )
ககாரத்தினால்‌ சொல்லப்‌ படும்‌ பிரமனையும்‌,
“ஈசன்‌? என்று பெயர்‌ பெற்ற சிவனையும்‌ உண்டாக்கினவன்‌,
“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈஸ்வர அஹம் ஸர்வ தே,ஹிநாம்‌ | .
ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூதெள தஸ்மாத்‌ கேஸவ நாமவார்‌ ||”
[‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப் பெயர்‌;
தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌;
ப்ரஹ்ம ருத்ரர்களாகிய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌றும்‌ பிறந்‌தோம்‌;
ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌.
என்‌று ஹரிவம்சத்தில்‌ பேச நின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.
-‘நாராயணாத்‌, ப்‌,ரஹ்மா ஜாயதே। நாராயணாத்‌, ருத்ரோ ஜாயதே|”
நாராயணனிடமிருந்து பிரமன்‌ பிறக்கிறான்‌:
நாராயணனிடமிருந்து ருத்திரன்‌ உண்டாகிறான்‌.
என்பது முதலான வேதவாக்கியங்களையும்‌.
மற்ற ப்ரமாணங்களையும்‌,
“தெய்வ நான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (–முதலிய ஆழ்வார்‌ அருளிச்செயல்களையும்‌
இவ்விடத்தில்‌ அநுஸந்திப்பது.
(கேசவன்‌ )
பிரமனையும்‌ சிவனையும்‌ தன் வசத்தில்‌ வைத்திருப்‌பவன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
‘நாராயணாத்‌ ப்ரஜா யந்தே।| நாராயணாத்‌ ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।’்‌
பிரமன்‌ முதலிய எல்லாரும்‌ நாராயணனிடமீருந்து உண்டாகிறார்கள்‌:
நாராயணனால்‌ வாழ்கிறார்கள்‌:
நாராயணனிடமே லயமடைரார்கள்‌. என்று சொல்லிற்று

சுடர்மிகு சுருதியும்‌,
“கள்வா! எம்மையும்‌ ஏழுலகும்‌ நின்‌ உள்ளே தோற்றிய இறைவ! என்று
வெள்ளேறன்‌ நான்முகன்‌ இந்திரன்‌ வானவர்‌ புள்ளூர்தி கழல்‌ பணிந்(து) ஏத்துவரே.”’ _என்‌றும்‌,
“நெற்றியுள்‌ நின்றென்னையாளும்‌ நிறைமலர்ப் பாதங்கள்‌ சூடி
கற்றைத்‌ துழாய்‌ முடிக் கோலக்‌ கண்ணபிரானைத்‌ தொழுவார்‌
ஒற்றைப் பிறையணிந்தானும்‌ நான்முகனும்‌ இந்திரனும்‌” என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
“விண்ணோர் தலைவா கேசவா” என்று நம்மாழ்வார்‌ இத் திரு நாமத்துக்குப்‌ பொருள்ள உரைத்தார்‌,
“கேசவா புருடோத்தமா” என்றார்‌ பெரியாழ்‌வாரும்‌.
உத்க்ருஷ்ட புருஷர்களான ப்ரஹ்ம ருத்ரர்களைக்‌ காட்டிலும்‌ மேலானவன்‌ என்றபடி.
(கேசவன்‌ )
சோதி மயமான ஸூர்யன்‌ முதலியவைகளின்‌ கரணங்கள்‌ கேச ஸப்தத்தினால்‌ சொல்லப்படுகின்‌ றன,
அவைகளைத்‌ தன்‌ வசக்தில்‌ கொண்டிருக்கையால்‌ கேசவன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

“அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: |
ஸர்வஜ்ஞா: கேஸவம்‌ தஸ்மாந்‌ மம ஹார்த்‌,விஜஸத்தமா:।’”
உலகில்‌ பிரகாசிக்கும்‌ என்‌னுடைய கிரணங்கள்‌ கேசமெனப்‌படுகின்‌ றன.
ஆகையால்‌ எல்லாமறிந்த ப்ராஹ்மண ஸ்ரேஷ்‌டர்கள்‌ என்னைக்‌ கேசவனென்‌று சொல்லுகிறார்கள்‌.
என்று மஹாபாரதத்தில்‌ சொல்லப்பட்டது .
கோவிந்த நாம வியாக்கி யானத்தில்‌ எடுக்கப்பட்டவையான ” தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும்‌ அநுஸந்திப்பது.

“திருவடியை நாரணனைக்‌ கேசவனைப்‌ பரஞ்சுடரை ‘ என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை உணர்த்தினர்‌.
(கேசவன்‌ )
“கேயாாத்‌, வோ அந்யதரஸ்யாம்‌” பூ மநிந்த; ப,வந்தி மதுபளத,ய: ‘ என்கிற வியாகரண விதிகளின் படி
கேயாப்தத்தின்மேல்‌ வ:’ என்னும்‌ ப்ரத்யயம்‌ வந்து “ப்ரஸஸ்த கேஸ வான்‌’
( புகழ்ப் பெற்ற கேசங்களை உடையவன் ) என்னும்‌ பொருளைத் தருகிறது.
அதாவது: “ய ஏஷ அந்த ராதித்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே ஹிரண்ய ஸ்ம்ருர்‌ ஹிரண்ய கேஸ ;”
ஸூர்யனுக்கு நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ விளங்குகிறானோ,
அவன்‌ ஸூவர்ணம்‌ போன்று அழகான மீசையையும்‌.கேசங்களையும்‌ உடையவன்‌.
என்று வேதத்தாலும்‌ புகழப் பெற்ற மயிர் முடிகளை உடைய வன்‌ என்று பொருள்‌.
“கொள்கின்ற கோளிருளைச்‌ சுகிர்ந்திட்ட கொழுஞ்சுருளின்‌
உள்கொண்ட நீல நன்னூல்‌ தழைகொல்‌? அன்று
மாயன்குழல்‌ விள்கின்‌ற பூ்ம் தண் துழாய்‌ விரைகால்
வந்தென்னுயிரைக்‌ கொள்கின்றவாறறியீர்‌ அன்னைமீர்‌ கழறா நிற்றீரே.” என்றும்‌.
“முன்னமுகத்தணியார்‌ மொய்குழல்கள்‌ ‘ என்றும்‌,
“சுருண்‌ டிருண்ட குழல்‌ தாழ்ந்த முகத்தான்‌” என்றும்‌ –
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ”’ என்றும்‌,
“குழலழகர்‌” என்றும்‌ ஆழ்வார்கள்‌ இக் கேச லெளந்தர்யத்தை அநுடவித்தார்கள்‌.
(கேசவன்‌ )
இத்தால்‌ சிக்குத்தலையரான இதர தெய்வங்களிற்‌ காட்டிலும்‌ வ்யாவ்ருத்தி சொல்லப்படுகிறது.”
“பிங்கள ஜடோ தே,வ:’ என்றும்‌,
“ஒருருவம்‌ பொன்னுருவம்‌ ஒன்று செந்தீ ” என்றும்‌ சொல்லுகிற
ப்ரஹ்ம ருத்ரர்கள்‌ மயிர் போலே யன்‌ றிக்கே,
* நீல குஞ்சத மூர்த்‌ த,ஜம்‌ *,
* குழலிருண்டு சுருண்டு ‘ என்கிறபடியே
கண்டவர்‌கள்‌ கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ஸ்யாமளமா யிருக்கை”என்‌று
மை வண்ண நறுங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ கலி த்‌வம்ஸநாசார்யர்‌ அருளிச் செய்தது
இங்கு அநுஸந்திக்கத்‌ தக்கது.

“நரகே பஸ்யமாநஸ்து யமேந பரிபாவஷித: |
கிம்‌ த்வயா நார்ச்சிதோ தே,வ: கேஸவ: க்லேஸ நாஸந : ||”
நரகத்தில்‌ வேதனையை அனுபவிக்கும்‌ ஒரு மனிதன்‌
“அடே! உன்னால்‌ கிலேசங்களை யெல்லாம்‌ போக்கும்‌ சேசவன்‌ ஏன்‌ அர்ச்சிக்கப்படவில்லை?” என்‌று
யமனால்‌ கேட்கப் பட்டான்‌. –என்று புராணம்‌ சொல்லிற்று.
கேஸவ: க்லேஸமநாமரந: ‘ என்றதின்‌ தாத்பர்யத்தை.
“தாப த்ரயாதுரரோடு விரஹதாபதுரரோடு வாசியற ஸர்வருக்கும்‌ ஸ்ரமஹரமாம்படி
காண்‌ திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்தபடி;
*கேமரவ: க்லேஸ நாஸநா சமா:”? என்னக் கடவதிறே ;.
த்ருஷ்டி மாத்ர ப்ரியமாயிருக்கை யன்‌றிக்கே நெஞ்சில்‌ ஸ்ரமமெல்லாம்‌ போம்படி காண்‌
திருக்குழலின்‌ பரிமளம்‌ மிகுந்து இருக்கும்படி ” என்று
பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை மை வண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில்‌ அருளிச் செய்தார்‌.

(கேசவன்‌ )
கேசி என்னாம்‌ அஸுரனைக்‌ கொன்‌ற க்ருஷ்ணன்‌ என்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌ த்வயைவ துஷ்டாத்மா ஹத; கேஸவ ஐநார்த்தந ; |
தஸ்மாத்‌ கேஸவ நாமா தவம்‌ லோகே க்ஹவாதிம்‌ கமிஷ்யஸி।”’
ஜனார்த்தனனே! ( உன்னைக்‌ கொல்ல வேணுமென்னும்‌ ) கெட்ட எண்ணத்துடன்‌ வந்த கேசி
உன்னாலேயே கொல்லப்‌ பட்டானாகையால்‌ நீ உலகில்‌ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்‌தால்‌ கீர்த்தி பெறுவாய்‌.
என்று நாரதரால்‌ ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில்‌ இப்பொருள்‌ பேசப்பட்டது.
கேஸவம்‌ கேஸி ஹந்தாரம்‌” என்றும்‌ மற்றோரிடத்தில்‌ இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட து. –
கேஸவ: கேஸி ஹந்தா ”’ என்று இப் பொருள்‌ ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும்‌ ஆதரிக்கப்பட்டது
“கண்ணன்‌ கேசவன்‌” என்றும்‌, `
” நாராயணன்‌ மூர்த்தி கேசவன்‌” என்றும்‌
ஆழ்வார்களாலும்‌ இவ் வர்த்தம்‌ அறு ஸந்திக்கப்பட்டது.
இப்படிப்‌ பொருள் கொள்ளும் போது எம்பெருமானுடைய விரோதி , நிரஸன ஸீலத்வம்‌ தோற்றுகிறது.

கண்ணன்‌ கேசவன்‌ நம்பி’ :
கேசவ நம்பீ உன்னைக்‌ காது குத்த”
“கேசவ நம்பியைக்‌ கால் பிடிப்பாள்‌ என்னுமிப்‌ பேறு எனக்கு அருள் கண்டாய்‌” என்று
இத் திருநாமத்தின்‌ குண பூர்த்தியை அனுஸந்தித்தார்கள்‌.
“கேஸவ ; க்லேஸ நாஸநா -மஹா லோகே த்‌வை ரூப்யேண ஸ்திதெள ஸ்தித: |
மதுராக்‌,யே மஹாஷேத்ரே வாராணஸ்யாமபி த்‌விஜ ॥”’
விப்ரரே! கிலேசங்களைப் போக்கடிக்கும்‌ குழலழகையுடைய பெருமான்‌.
மதுரை என்னும்‌ மஹா ஷேத்திரத்திலும்‌
வாராணஸி எனப்படும்‌ காசியிலும்‌
பூமியில்‌ கோயில் கொண்‌ டெழுந்தருளியிருக்கிறான்‌..] என்னும்‌ ப்ரமாணத்தைக் காட்டி.
பட்டர்‌ இத் திருநாமத்தை அர்ச்சாவதார பரமாக வியாக்கியானம்‌ செய்தருளினார்‌.
இப்படிப்‌ பர விபவ அர்ச்சாவதாரங்‌களைக் குறிக்கக்‌ கூடியதே யாகிலும்‌
கேசவன்‌ நாரணன்‌ சீமாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌?’ என்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்கையால்‌.
இத் திருநாமத்துக்குப்‌ பராவஸ்தை யைக் குறிக்கும்‌ பொருளே இங்கு முக்கியார்த்தமாகக்‌ கடவது.

——————

கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ பிரம ருத்திரர்‌ களுக்கும்‌ உத்பாதகன்‌ என்‌ று உரைக்கப்பட்ட து.
இப்படிப்‌ பட்டவன்‌ யார்‌ என்னும்‌,கேள்வி எழ.
‘நாராயணன்‌’ என்று வேதாந்த ஸித்தமான அஸாதாரணமான திருநாமத்தைப்‌ படிக்கிறது.

இத் திருநாமத்தை வேதங்களும்‌. இதிஹாஸ புராணங்களும்‌ ஆழ்வார்களும்‌ மிகவும்‌ ஆதரித்துப் போந்‌ தார்களென்பது ஸுப்ரஸித்தம்‌.
இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும்‌ இத் திரு நாமம்‌ பொருந்தா தென்பதைக்‌ காட்டுகிறது.
இத் திருநாமத்தின்‌ அர்த்தங்‌களோ ஆயிரம்‌ நாவுடடைத்த ஆதிசேஷனாலும்‌ அளவிட்டுச்‌ சொல்லமுடியாதவை.
நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும்‌ அறியலாம்‌;
நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும்‌ அறியமுடியாது.
பரம காருணிகர்களும்‌ ஸர்வஜ்ஞ ஸார்வ பெனமர்களுமான நம்‌ ஆழ்வார்களும்‌ ஆசாரியர்களும்‌
இத் திருநாமத்தின்‌ பொருளைப்‌ பலவிடங்களில்‌ பேசியிருக்கிறார்கள்‌.
அந்த ஸ்ரீஸக்திகளைத்‌ துணையாகக் கொண்டு நாமும்‌ இத் திரு நாமத்தின்‌ பொருட்‌ பெருமையை
இயன்‌ற வரையில்‌ அநுபவிக்க முற்படுவோம்‌.

“ ரிங்‌-க்ஷயே ”’ என்று தாதுவாகையாலே. ‘ர’ என்னும்‌ எழுத்து க்ஷயித்துப்போகும்‌ பதரர்த்தங்களைக்‌ குறிக்கிறது. ந’ என்னும்‌ எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய்‌ விளங்கும்‌ வஸ்துவைக்‌ குறிக்கிறது. *“நராணாம்‌ ஸமூஹ: நார: என்‌ கிறபடியே “- நர என்‌னும்‌ பதம்‌ இப்படிப்பட்ட நித்யவஸ்‌துக்களின்‌ ஸமூஹத்தைக்‌ குறிக்கிறது. ‘நாரா:’ என்னும்‌ பன்மையால்‌ அப்படிப்பட்ட நித்ய வஸ்‌துக்களின்‌ ஸமூஹங்கள்‌ பல உள என்று உணர்த்தப்‌ படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்ய வஸ்‌ துக்களின்‌ ஸமூஹங்கள்‌ எவை என்‌பதைப்‌ பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ்‌, யாத்ம குணங்களும்‌, குண ப்ரகாஸ்கமான திவ்யமங்கள விக்ரஹங்களும்‌. விக்ரஹ குணமான ஸெளந்தர்யாதிகளும்‌. அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூத்தாப்போலே சாத்தின கிரீடமகுடாதி திவ்யா பரணங்களும்‌, அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான சங்க,சக்ராதி திவ்யாயுதங்களும்‌, இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலாவாகாதபடி அருகே யிருந்து அனுபவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌, அச் சேர்‌த்தியிலே அடிமை செய்கிற அநந்‌த கருட விஷ்வக்ஸேந ப்ரமுகரான ஸூரி ஸங்க,மும்‌, அவர்களோபாதி போய்‌ அடிமை செய்கிற ( அவர்களுக்கு அடிமை செய்கைக்குப்‌ பரிகரமான சத்ர சாமராதி,பரிச்‌ச- அவ்வடிமைக்கு வர்த்த,கமாய்‌ பஞ்சோபனிஷந் மயமான  குண த்ரயாத்மிகையான மூலப்‌ரக்ருதியும்‌, புருஷ சமஷ்டியும்‌, அஹோ ராத்ராதி விபாக யுக்தமான காலதத்வமும்‌. ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதாதிகளும்‌. தத் கார்யமான அண்டங்‌களும்‌. அண்டாரந்தர்வர்த்திகளான சதுர் வித பூதங்களும் .

பஞ்சோபனிஷஹ மயமாகையாலே பரமபதமும்‌ மஹாத்மகமாயிருக்கும்‌; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும்‌ ஸமூஹுத்மகையாயிருக்கும்‌ அஹோராத்‌ ராதி,விபாகங்கள்‌ காலமும்‌ ஸமூஹாத்மகமாயிருக்கும்‌” என்று பரந்த ரஹஸ்யத்தில்‌ பரகக அருளிச்செய்தார்‌.

அடுத்தபடியாகவுள்ள அயந சப்தம்‌ பல பொருள்களை உடையது. அவைகளில்‌ இருப்பிடம்‌ ‘ என்பதும்‌ ஒன்று.  அயநம்‌ யஸ்ய ஸூ;-—நாராயண:” [நித்ய பதரர்த்த ஸமூஹங்களாகிற நாரங்கள்‌ எவனுக்கு இருப்பிடமோ. அவன்‌ நாராயணன்‌ ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள்‌ ஏற்படுகிறது. இத்தால்‌ இவன்‌ எல்லாப்‌ பதார்த்தங்‌களையும்‌ : உடல்‌ மிசை உயிரெனக்கரந்தெங்கும்‌ பரந்துளன்‌ ‘. என்று சொல்லப்பட்டதாகிறது.

“சேதநாசேதநம்‌ ஸர்வம்‌ விஷ்ணோர்‌ யத்‌, வ்யதிரிச்யதே |
நாரம்‌ தத,யநஞ்சேத,ம்‌ யஸ்ய நாராயணஸ்து ஸ: ॥”
விஷ்ணுவைக் காட்டிலும் வேறுபட்டதான எல்லாச்‌ சேதநா சேதனங்களும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்படுகின்‌றன.
அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளதோ அப்பரமாத்மா நாராயணன் எனப்படுகிறான்‌.–என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம்‌ சொல்லிற்று.
இந்த பஹுவ்ரீஹி ஸமாஸப்‌ பொருளில்‌ அந்தர் வ்யாப்தியும்‌, அடுத்தபடியாகச்‌ சொல்லப்படும்‌
தச்புருஷ ஸமாஸப்‌ பொருளில்‌ பஹிர் வ்யாப்தியு
உணர்த்‌தப் படுகின்றன என்று ஆசார்யர்கள்‌ அருளிச் செய்வர்‌.

“யச்ச கிஞ்சித்‌ ஜக,த்யஸ்மிர்‌ த்‌,ருங்யதே ங்ரூயதே$பி வா |
அந்தர்‌ ப,ஹிம்ச தத்‌ ஸர்வம்‌, வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: |” [
இவ்வுலகில்‌ காண்பனவும்‌. கேட்பனவுமான எல்லா வஸ்துக்‌ களிலும்‌ உள்ளும்‌ புறமும்‌ நாராயணன்‌ வியாபித்து நிற்கிறான்‌–என்று பண்டை மறையிலும்‌,
“ஆக்கையுள்ளும்‌ ஆவியுள்ளும்‌ அல்ல புறத்தினுள்ளும்‌ நீக்கமின்றி எங்கும்‌ நின்றாய்‌! ‘ என்று தமிழ்‌ வேதத்திலும்‌
இவ்வர்த்தம்‌ சொல்லப்பட்ட.து.
இப்பொருளில்‌ எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம்‌ சொல்லப்படுகிறது.
“நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ:”
நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன்‌ இருப்பிடமாயிருக்‌கிறானோ
அவன்‌ நாராயணன்‌ – என்ற தத்புருஜ ஸமாஸத்தின்‌ படியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இத்தால்‌ எல்லா வஸ்துக்‌ களையும்‌ நாராயணன்‌ தரிக்கிறான்‌ என்று சொல்லப்படுகிறது, ^”
நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: ” [63-62]
நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ நித்யவஸ்‌துஸமுஹங்‌ களுக்கு இருப்பிடமாயிருப்பதால்‌ நரராபணனெனப்படு கிறான்‌-
என்று இவ்வர்த்தம்‌ பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உரைக்கப்பட்ட து.

நார சப்சத்துக்கு மற்றொரு வகையாகவும்‌ பொருளுரைப்பதுண்டு.
நார:’ என்று ஸ்வரூபத்திலும்‌ ஸ்வபாவத்திலும்‌ சிறிதும்‌ விகாரம் அற்றவனான பரமபுருஷன்‌ சொல்லப்படுகிறான்‌.
*நராத்‌ ஜாதாநி ‘ என்கிறப்டியே புருஷோத்தமனிடமிருந்‌து உண்டானவை நாரங்க ளெனப்படுகின்‌றன.
அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும்‌, அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும்‌
நாராயணனெனப்படுகிறான்‌ என்று
முன் போலவே இருவகையாகவும்‌ பொருள்‌. ““நராஜ்ஜாதாநி தத்த்வாதி நாராணீதி ததோ விது, |
தாந்யேவ சாயநம்‌ தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத: |!”
நரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென்‌ று அறிகின்றார்கள்‌.
அவைகளையே இருப்பிடமா யுடையவனாயிருப்பதால்‌ அவன் நாராயணனெனப்படுகிறான்‌–
என்று இவ்வர்த்தம்‌ ஹரி வம்சத்திலும்‌ சொல்லப்பட்டது,
இவ்வர்‌த்தத்தை “யாவையும்‌ யாவரும்‌ தானாம்‌ அமைவுடை நாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளி செய்தார்‌.

° நார பதத்தில்‌ சொல்லப்பட்ட அநந்தமான வஸ்த்துக்களில்‌ சிலவற்றைச்‌ சிற்சில விடங்களில் எடுத்து ஆழ்வார்கள்‌ நாராயண சப்தத்துக்கு வியாக்யானம்‌ செய்து அருளி இருக்‌கிறார்கள்‌.
நார சப்த்த்‌துக்கு அநந்த கல்யாண குணங்களையும்‌ பொருளாகக் கொண்டு
“: ஈறில வண்‌ புகழ்‌ நாரணன்‌ ” என்‌றும்‌
` வாழ் புகழ்‌ நாரணன்‌” என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
நல முடை நாரணன்‌ என்று பெரியாழ்வாரும்‌,
நலந்திகழ்‌ நாரணன்‌” என்று குலசேகராழ்வாரும்‌ செய்தருளினார்கள்‌.

நார சப்தத்‌.துக்கு திவ்ய மங்கள விக்ரஹத்‌தையும்‌ அதன்‌ குணங்களையும்‌ பொருளாகக்‌ கொண்டு.
“ காராயின காளநன்‌ மேனியினன்‌ நாராயணன்‌ ” என்று . நம்மாழ்வாரும்‌.
“‘ கார்மேனிச்‌ செங்கண்‌ கதிர்மதியம்போல்‌ முகத்தான்‌ நாராயணனே ” என்றும்‌,
` நாற்றத்துழாய்‌ முடி நாராயணன்‌” என்றும்‌ ஆண்டாளும்‌ அருளிச் செய்தனர்‌.

திவ்யா பரணங்களை நார சப்தத்‌தக்குப்‌ பொருளாகக் கொண்டு
“உடையார்ந்த வாடையன்‌ கண்டிகையன்‌ உடைநாணினன்‌
புடையார்‌ பொன்னூலினன்‌ பொன்முடியன்‌ மற்றும்‌
பல்கலன்‌ நடையாவுடைத்‌ திருநாரணன்‌” என்று நம்மாழ்வார்‌ அருளினார்‌.
“லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌” என்று ஆச்சான் பிள்ளையால்‌ அருளிச் செய்யப்பட்
பிராட்டிமார்‌ களை நார சப்தத்‌துக்குப்‌ பொருளாகக்கொண்டு “
செல்வ நாரணன்‌ என்‌று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.
விண்ணோர்‌ நாயகன்‌ நாராயணன்‌ ” என்று வேதம்‌ தமிழ் செய்த மாறன்‌
நார சப்தத்துக்கு நித்ய முக்தர்களைப்‌ பொருளாக அருளிச்‌ செய்தார்‌.

நாரசப்தத்துக்குச்‌ சேதனர்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு “`
எண் பெருக்கந்நலத் தொண் பொருள்‌ ஈறில வண்புகழ்‌ நாரணன்‌ ” என்றும்‌,
“’ எம்பிரான்‌ எம்மான்‌ நாராயணன்‌ ” என்றும்‌ சடகோபனும்‌, =
`” நம்மை யுடையவன்‌ நாராயணன்‌ ” என்றும்‌.
“’ என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும்‌ ஆண்டாளும்‌
நாராயணன்‌ என்னை யாளி ” என்று திருமழிசைப் பிரானும்‌ அருளிச்செய்தனர்‌.

நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும்‌ பொருளாகக்கொண்டு
“நாரணன்‌ முழுவேழுலகுக்கும்‌ நாதன்‌ “என்று நம்மா ழ்வாரும்‌.
” நாயகன்‌ நாரணன்‌” என்று பெரியாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌. .

( நாராயணன்‌ )
நரனாகிற பெருமானால்‌ படைக்கப்பட்ட ஜலத்தை நார சப்தத்திற்குப்‌ பொருளாகக்‌ கொண்டு
அதை இருப்பிடமாகக்‌ கொண்டவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌,
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: |
தா யத,ஸ்யாயந௩ம்‌ பூர்வம்‌ தேந நாராயண: ஸ்ம்ருத: |”
நரனாகிற ஸர்வேஸ்வரனால்‌ படைக்கப்பட்ட ஜலம்‌ “நாரம்‌ ‘ எனப்படுகிறது.
அது ஆதி காலத்தில்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கையால்‌ இவன் நாராயணனெனப்படுகிறான்‌. ] என்று
மநுஸ்ம்ருதியிலும்‌, விஷ்ணுபுராணத்திலம்‌ உரைக்கப்‌ பட்டது.
இவ்வர்த்தம்‌ “” நடுக்கடலுள்‌ துயின்‌ற நரராயணனே!”’ என்று ஆழ்வராரலும்‌.
“ ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந; ‘”
இவனே பாற்கடலில்‌ பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாராயணன்‌
என்று புராணத்திலும்‌ பேசப்பட்டது.

“ஸ்ருஷ்ட்வா நாரம்‌ தோயமந்த:ஸ்தி,தோஹம்‌ =, யேரு ஸ்யாந்மே நாம நாராயணேதி”’ [நார சப்தத்தனால்‌ சொல்லப்படும்‌ ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுள் நான்‌ வசித்தபடியால்‌ எனக்கு நாராயண னென்னும்‌ நாமம்‌ ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹ புராணத்‌ தில்‌ பகவானாலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது.

(நாரா யணன்‌) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப்‌ பொருளாகக்‌ கொண்டு. ப்ரளய காலத்தில்‌ அவைகளுக்குச்‌ சேருமிடமாயுள்ளவன்‌ என்றும்‌ பொருள்கொள்ளலாம்‌. = “” ஞாலமுற்றுமுண்டாலிலைத்‌ துயில்‌ நாராயணனுக்கு ” என்று பெரியாழ்வாரும்‌, ** ஞாலமுற்றும்‌ உண்டுமிழ்ந்த நாராயணனே! ” என்றும்‌. “ஞாலமுண்டாய்‌! ஞானமூர்த்தி! நாராயணா!” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ இவ்‌ வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள்‌. இத்தால்‌ ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும்‌ சொல்லப்பட்ட தாயிற்று.

(நாராயணன்‌) * நர’ சப்தத்தினால்‌ அழிவற்ற ஸ்வரூபத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம்‌ ஆத்ம ஸமூஹுத்தைச்‌ சொல்லுகிறது. அயநசப்தம்‌ : இண்‌ க,தெள ‘ : அய-க,தெள ‘ என்னும்‌ தாதுக்கள்‌ ஒன்‌ றிலிருந்து உண்டானதாகையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும்‌, போய்ச் சேரும்‌ வழியான உபாயத்தையும்‌ குறிக்கும்‌

ஆக “நாராயணன்‌ ‘. என்று சேதன வர்க்கத்‌திற்கு
மோக்ஷப்ராப்யமாகவும்‌,
மோக்ஷ  உபாயமாகவும்‌ இருப்பவன்‌ என்று பொருள்‌படு கிறது.
இவ்வர்த்தம்‌ “நாரஸ் த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகீர்த்தித:
க,திராலம்ப;ம்‌ தஸ்ய தேக நாராயண: ஸ்ம்ருத: || ”
நாரமென்‌று சேதனருடைய ஸமூஹம்‌ சொல்லப்‌ படுகிறது.
அச்சேதன சமூகத்துக்கு உபாயமும் உபேயமுமாயும் இருப்பதால்‌ நாராயணனென் று சொல்லப்படுகிறான்‌. ] என்றும்‌.
“நரரோ நராணாம்‌ ஸங்கா தஸ்‌ தஸ்யாஹமயநம்‌ க,தி:।
தேநாஸ்மி முநிபிர்‌ நித்யம்‌ நாராயண இத்ரித: || ”
நரர்களின்‌ கூட்டம்‌ நாரமெனப்படுகிறது.
அதற்கு நான்‌ ப்ராப்யமாகவும்‌. ப்ராபகமாகவும்‌ இருக்கிறேனாகையால்‌ முனிவர்களால்‌
எப்போதும்‌ நான்‌ நாராயணன்‌ என்று சொல்லப்படுகிறேன்‌.] என்றும்‌ ।
“ ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! |
தேஷாமயநபூ,தத்வாந்‌ நாராயண இஹோச்யதே |
தஸ்மாந் நாராயணம்‌ பந்தும்‌ மாதரம்‌ பிதரம்‌ குரும்‌ |
நிவாஸம்‌ சரணம்‌ சாஹார்‌ வேத,வேதராந்த பாரகத : |
நார சப்தத்தனால்‌ ஜீவ ஸமூஹம்‌ பெரியோர்களால்‌ சொல்லப்‌ படுகிறது.
அவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால்‌ நாராயணன்‌ என இங்கு சொல்லப்படுகிறான்‌ .
ஆகையால்‌ நாராயணனை
பந்து வாகவும்‌.
தாயாகவும்‌.
தந்தை யாகவும்‌.
ஆச்சார்யனாகவும்
இருப்பிடமாகவும்
வேத வேதார்தங்களைக்‌ கரை கண்டவர்கள்‌ சொல்லு கிறார்கள்‌–
என்றும்‌ சாஸ்திரங்களில்‌ இவ்வர்த்தம்‌ வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது.

“ நாராயணனே நமக்கே பறை தருவான்‌ ” என்‌று ஆண்டாளும்‌,
‘வீடாக்கும்‌ மெய்ப்‌ பொருள் தான்‌……நாராயணன்‌ ” என்றும்‌,
நாராயணன்‌ என்னை யாளி நரகத்தில்‌ சேராமல்‌ காக்கும்‌ திருமால்‌ தன்‌ ”’ என்‌றும்‌ திருமழிசைப்‌ பிரானும்‌
இவ் வர்‌த்தத்தை நாராயண சப்தத்தக்குப்‌ பொருளாக அநுஸந்தித்தார்கள்‌.
“நாரணம்‌ கதிர்‌ நாராயண:”’
நாராயணனே மோக்ஷத்தில்‌ அடையப்‌ படுமவனும்‌, அடைவதற்கு வழியுமாவான்‌.
என்று வேதமும்‌ இவ்வர்ததத்தை உத்கோஷித்தது. (நாராயணன்‌)
° நர: என்று அழிவற்றவனான எம்பெருமானையும்‌ குறிக்கும்‌ என்று முன்னரே சொல்லப்பட்ட து.
“ ஜந்ஹார்‌ நாராயணோ நர: ” என்று அவனுடைய நாமமாக வும்‌ படிக்கப்பட்ட து.
`” நரஸ்யே இமே- நாரா: ” (சேர்ந்தவர்கள்‌ நாரங்கள்‌] என்கிற வ்யுத்பத்தியின்‌ படி
“ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்‌ [ஞானி எனக்கும்‌ ஆத்மாவாயிருப்பவனென்று என்‌ ஸித்தாந்தம்‌]
என்று எம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச்‌ சொல்லுகிறது.
“நாரா அயநம்‌ யஸ்ய ஸ; ” என்று தன்னடியார்களையே தனக்குப்‌ பரம ப்ராப்யமாகக்‌ கொண்‌டு இருக்குமவன்‌ என்‌று பொருள்‌ படுகிறது. –
‘ நச்சுவார்‌ முன்‌ நிற்கும்‌ நாராயணன்‌ “என்றும்‌.
நண்ணித் தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌;
* அற்புதன்‌ நாராயணன்‌ …நிற்பது மேவி இருப்பதென்‌ நெஞ்சகம்‌ ” என்று நம்மாழ்வாரும்‌
இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள்‌.
“நானுன்னை யன்‌றியிலேன்‌ கண்டாய்‌ நாரணனே! ” என்று:
மோக்ஷ உபாயத்வம்‌.
ஸர்வ வ்யாபகத்வம்‌,
ஸர்வ தரரகத்வம்‌ முதலிய குணங்களை
நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்தருளிய திருமழிசையாழ்வார்‌.
நீ என்னை யன்றி இலை’” என்று பக்தரைத் தாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார்‌,

“நண்ணித்‌ தொழுமவர்‌ சிந்தை பிரியாத நாராயணா” என்னுமிடத்துக்கு வியாக்கயானம்‌ செய்தருளிய
பரம ரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை
“* இவருடைய நாராயண சப்தார்த்‌ தம்‌ இப்படிப் போலே காணும்‌ இருப்பது ” என்று அருளிச்‌ செய்தார்‌
( நாராயணன்‌ )
நரர்கள்‌ என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச்‌ சொல்லுகிறது.
நாரம்‌ என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச்‌ சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு எழுந்தருளியிருக்கையாலே *
நாராயணன்‌ ‘ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“திருக்கோட்டியூர்‌ மன்னு நாரணன்‌ ” என்றும்‌,
“ தென்திரை சூழ் திருப்பேர்க்‌ கிடந்த திரு நாரணா!” என்றும்‌ பெரியாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌.

“ நர ஸம்பந்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: |
நயத்யலெவிஜ்ஞா௩ம்‌ நாமாயத்யகிலம்‌ தம: ॥
ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத்‌ |
நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா சேதநாத்மகா: ||
நபிதவ்யதயா நாரா தரார்யபோஷ்யதயா ததர |
நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ்‌ ததா ॥
அயதே நிதிலாக்‌ நாராந்‌ வ்யாப்நோதி க்ரியயா ததா |
நாராம்சாப்யாயநம்‌ தஸ்ய தைஸ்தத்‌,பாவநிரூபணாத்‌ ॥
நாராணாமயநம்‌ வாஸஸ்‌ தே ச தஸ்யாயநம்‌ ஸதா |
பரமா ச க,திஸ்தேஷாம்‌ நாராணாமாத்மநாம்‌ ஸதா |
ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ச ।
அதோ நாராயணோ நாம ஹேதுபிர்‌ தர்மமித: பர: ॥ ”’
நரனுடன்‌ ஸம்பந்தம் பெற்றவைகள்‌ நாரங்கள்‌.
புருஷோத்‌ தமனே நரன் எனப்படுகிறான்‌.
தன்னைப் பற்றிய எல்லா அறிவையும்‌ அடைவிக்கிறான் ஆகையா லும்‌,
எல்லா இருளையும்‌ போக்கடிக்கறானாகையா லும்‌.
எங்கும்‌ விகாரமற்றவனாயிருப்ப தாலும்‌,
ஸர்வேஸ்வரனான அப்பரமபுருஷன்‌ நரனெனட்படுகிறான்‌.
நரனாகிய அப்பெருமானுடன்‌ ஸம்பந்தம்‌ பெற்றிருக்கும்‌ எல்லாச்‌ சேதநாசேதநங்களும்‌,அவனால்‌
ஆளப்படுகையா லும்‌,
தரிக்கப்படுகையாலும்‌.
போஷிக்கப்படுகையா லும்‌,
நியமிக்‌ கப்படுகையா லும்‌,
ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும்‌.
வியாபிக்கப்‌ படுவதாலும்‌.
தாங்கப்படுகையா லும்‌
நாரங்களாகின்‌ றன.
எல்லா நாரங்களையும்‌ (ஸ்வரூபத்தால்‌) அடைவதாலும்‌,
முற்கூறிய செய்கைகளால்‌ வியாபிப்பதாலும்‌.
அவைகளை யிட்டே அவனை நிரூபிக்க வேண்டியிருக்கையாலும்‌
நாரங்கள்‌ அப்புருஷோத்தமனுக்கு அயநமாகின்‌ றன.
இவன்‌ நாரங்‌ களுக்கு இருப்பிடமாயிருக்கிறான்‌:
அவைகளும்‌ எப்போதும்‌ இவனுக்கு இருப்பிடமாயுள்ளன.
நார ஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும்‌, ப்ராபகமாகவும்‌, இவன்‌ விளங்குகிறான்‌.

ஜலமும்‌ நார சப்தத்தால்‌ சொல்லப்‌ படுகிறது.
அதுவும்‌ இவனுக்கு இருப்பிடமாயிருக்கிறது,
ஆகையால்‌, இக் காரணங்களால்‌ நாராயணன்‌ என்னும்‌ திருநாமம்‌ மேலானதென்று காட்டப்படட்டது.
என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில்‌, ( 52-50,…65 )
நரன்‌, நாரம்‌, நாராயணன்‌ என்னும்‌ பதங்கள்‌ வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும்‌ இவ்விடத்தில்‌ அநுஸந்திக்கத்தக்கது.
“நாராயணன்‌ ‘ என்று ஸர்வேஸ்வரன்‌ உபய விபூ,தி நிர்வாகஹனாய்‌ ஸ்ரீவைகுண்ட்த்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லிற்று.

———————-

அப்படியிருக்குமவன்‌ ப்ரஹ்மசாரி நாராயணனல்ல, ஸ்ரீமந் நாராயணனே என்னுமத்தைச்‌ சொல்லுகிறது
மாதவன்‌ ‘ என்னும்‌ திருநாமம்‌.
சிவ புராணத்திலும்‌. “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம்‌ |
ஆஸ்தே விஷ்ணுர் சந்த்யாத்மா ப,க்தைர்‌ பாக,வதை: ஸஹ”
வைகுண்டமென்னும்‌ மேலான உலகத்தில்‌, உலகிற்கெல்‌லாம்‌ ஸ்வாமியும்‌, எண்ண முடியாத
ஸ்வரூபத்தை யுடையவனுமான பகவான்‌ விஷ்ணு, ஸ்ரீதேவியுடன்‌ கூடியவன்‌,
குண நிஷ்டர்களான பக்தர்களுடனும்‌, கைங்கர்ய நிஷ்டர்‌களான பாகவதர்‌களுடனும்‌ எழுந்தருளியிருக்கிறான்‌–என்று சொல்லப்பட்ட தன்றோ.
(மாதவன்‌)
(மா’ என்னும்‌ பதம்‌ ஸ்ரீதேவியைச்‌ சொல்லுகிறது.
தவ:’என்னும் சொல்‌ “நாதன்‌” என்னும்‌ “பொருளை யுடையது.
“மாயா: தவ: மாதவ: ‘ என்கிறபடியே. மாதவன்‌ என்னும்‌ திருநாமம்‌ லக்ஷ்மீ நாதன்‌’ என்னும்‌ அர்த்தத்தை உடையது.
“மானேய்‌ நோக்கி ம்டவாளை மார்பில்‌ கொண்டாய்‌ மாதவா! ”என்‌று
நம்மாழ்வார்‌ இப் பொருளை மாதவ சப்தரர்த்தமாக அருளிச் செய்தார்‌.
இத் திருநாமம்‌ பகவான்‌ பரம பதத்தில்‌ பெரிய பிராட்டியாருடன்‌ எழுந்தருளி யிருப்பதைக்‌ குறிக்கிறது என்பர் .
,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும்‌, –
மா மாயன்‌ மாதவன்‌ வைகுந்தன்‌ ” என்றும்‌,
மன்னிய மாதவனோடு வைகுந்தம்‌ புக்கிருப்பாரே ” என்றும்‌ ஆண்டாளும்‌, :
கேசவன்‌ நாரணன்‌ மாதவன்‌ கோவிந்தன்‌ வைகுந்தன்‌” என்றும்‌,
“ வடிவுடை மாதவன்‌ வைகுந்தம்‌ ” என்றும்‌ நம்மாழ்வாரும்‌ அருளிச் செய்தனர்‌.
பெரிய பிராட்டியார்‌ எல்லா தசைகளிலும்‌ எம்பெருமானை விட்டுப் பிரியாமலிருப்பவராகையாலே.
எம்‌ பெருமானையும்‌ இப் பிராட்டியை யிட்டு நிரூபிக்க வேண்டு மென்று இத் திருநாமம்‌ உணர்த்துகிறது.

“ ஹ்ரீஸ்ச தே’ லக்ஷ்மீஸ் ச பத்ந் யெள ” என்று வேதமும்‌ பரம புருஷனைப்‌ பிராட்டியை யிட்டு நிரூபித்தது.
“ஸர்வேஷாமேவ லோகாநாம்‌ பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்‌,வமேநம்‌ நாரணம்‌ மாரண்யம்‌ புருஷர்ஷபா : |”
பருஷ ஸ்ரேஷ்டர்களே! எல்லா வுலகுக்கும்‌ லக்ஷ்மீநாதனே தாயாகவும்‌. தந்தையாகவும்‌ விளங்குகிறான்‌; (
ஆகையால்‌) இந்த மாதவனை சரணமடையுங்கள்‌.] என்று
புருஷகார பூதகையான பிராட்டிபுடன்‌ கூடிய நாராயணனே நமக்கு உபாயமாகவும்‌, ஸ்வாமியாகவும்‌ ஆகிறான்‌ என்று பாரதத்தில்‌ பேசப் பட்டது.

“ கடிவார்‌ தீய வினைகள்‌ கொடியாருமள வைக்கண்‌
கொடியா அடுபுள்‌ உயர்த்த வடிவார்‌ மாதவனாரே ” என்று
ஆழ்வாரும்‌ மாதவனே உபாயமாகிறானென்‌று உணர்த்தினார்‌.
“ மாதவன்‌ பூதங்கள்‌ ” என்றும்‌.
`” மாதவனோடு வைகுந்தம்‌ புக்கருப்பாரே ” என்றும்‌
மாதவனே ஸர்வ ஸேஷியாகவும்‌. மோக்ஷ ப்ராப்யனாகவும்‌ ஆகிறானென்று அருளிச்செய்தார்‌கள்‌.
ஸர்வேஸ்வரன்‌ ஜகத் காரணமாம் போ தும்‌. பிராட்டிக்கு ப்ரேரகத்வ ருபமான அந்வயம்‌ உண்டென்பதை
ஆளவந்தார்‌, ஆழ்வான்‌. பட்டர்‌ முதலானோர்‌ தம்‌ ஸ்தோத்ரங்களில்‌ அருளிச்‌ செய்தனர்‌.
பெரியவாச்சான்பிள்ளையும்‌, அவருடைய திருக்‌ குமாரரான நாயனாராச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தது:
ச்லோஹ வியாக்கியானங்களிலும்‌ இவ்விஷயம்‌ விவரிக்கப்‌ பட்ட து
எம்பெருமான்‌ சேதனர்களுடைய ஹ்ருதய கமலத்தில்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென்‌பது
“ஸர்வ பூ,தஹ்ருத,ப்ஜஸ்த; “என்று ப்ராஹ்ம புராணத்திலும்‌,
“மார்வ மென்பதோர்‌ கோயிலமைத்து மாதவனென்‌னும்‌ தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும்‌
பேசப்‌ பட்ட ச, வ்யூஹ விபவார்ச்சாவதாரங்களிலும்‌ இவளுடன்‌ கூடியவனாகவே எம்பெருமான்‌
விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாண ஸித்தம்‌.

(மாதவன்‌) ” என்று
புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாதனமான பர வித்யை சொல்லப் படுவதாகவும்‌
அந்த வித்யைக்கு ப்ரவர்த்தகனாகையால்‌ இவன்‌ மாதவ னெனப்‌ படுகரொனென்‌ றும்‌ கொள்ளலாம்‌.
“மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந |
தஸ்மாந் மாதவ நாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்‌,தி,த: | “` ‘
என்று ஹரியை ப்ரதிபாதிக்கும்‌ வித்யை சொல்லப்‌ படுகிறது.
அதற்கு ஸ்வாமியாயிருப்பதால்‌ நீர்‌ மாதவ னென்று சொல்லப்படுகதிறீர்‌.
* தவன்‌ ‘ என்றும்‌ ஸ்வாமியென்‌ னும்‌ பொருளையுடையது. -என்று இவ் வர்த்தம்‌ ஹரி வம்ஸத்தில்‌ ஆதரிக்கப் பட்டது.

“மளநாத்‌ த்‌யாகாச் ச யோகாச்ச வித்‌,தி, பாரத மாதவம்‌ ”’
பரதகுலத்‌துதித்தவனே! மெளநத்தினாலும்‌. தியானத்தி னலும்‌. யோகத்தினாலும்‌ மாதவனென்று அறிவாயாக. |
என்று வியாஸர்‌ சொல்லியபடியும்‌ மாதவநாமத்திற்குப்‌ பொருள்‌, கொள்ளலாம்‌.
“மது,வித்வா 5வபே த்‌,யத்வாத்‌,வா”
மது வித்யையினால்‌ அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான்‌ -என்றும்‌ சங்கரர்‌ பொருளுரைத்தார்‌. “
மது,குலே ஜாதத்வாந்‌ மாத,வ: ”
மது குலத்தில்‌ பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான்‌ ] என்றும்‌ பொருள்கொண்டனர்‌.
“மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:”
என்று லக்ஷ்மியும்‌. “தீ; ‘ என்று ஸரஸ்வதியும்‌ சொல்லப்‌ படுகின்‌றனர்‌.
அவர்களை ரக்ஷிக்கிறானாகையால்‌ மாதவனா கிறான்‌-என்றும்‌ சங்கரர்‌ பொருள்‌ கொண்டார்‌.
இப்படிப்‌ பல பொருள்களை உடையதாயிருந்த போதிலும்‌, எல்லா ஆழ்வார்களாலும்‌ .ஆதரிக்கப்பட்டதான
லக்ஷ்மீநாதன்‌ என்‌னும்‌ பொருளே இவ்விடத்திற்குப்‌ பொருளாகக் கடவது.

—————-

இப்படி
அச்யுதனாகவும்‌,
கோவிந்தனாகவும்‌,
கேசவனாகவும்‌,
நாராயணனென்‌னும்‌ அஸாதாரணமான திருநாமத்தை உடையவனாகவும்‌,
பிராட்டியுடன்‌ கூடியவனாகவும்‌
எழுந்‌தருளியிருக்கிறவன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்று இது வரையில்‌ கூறப்பட்டது.

—————

இப்படிப்பட்ட பெருமைகளை யுடையவனாக இவன்‌ எழுந்தருளியிருக்கிறான்‌ என்‌னுமிடத்துக்கு
ப்ரமாண மென்ன? என்ற ப்ரஸ்னம்‌ பிறக்க,
வேத வாக்கியங்களே இவ் விஷயத்தில்‌ ப்ரமாணம்‌ என்று சொல்லுறது
கோவிந்தன்‌ என்னும்‌ திருநாமம்‌,
கோ சப்,தத்தினால்‌ வேத வாக்கியங்‌களைச்‌ சொல்லுகிறதாகையால்‌
வேதத்தால்‌ ப்ரதிபாதிக்கப்‌ படுமவன்‌ என்று கோவிந்த நாமத்திற்குப்‌ டொருள் ஏற்படுகிறது.
இவன்‌ அடியவர்களை நழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம்‌
* மமாங்வதம்‌ மபிவமச்யுதம்‌ நாரா யணம்‌ ” என்னும்‌ நாராயணா நுவாகம்‌.
த்ரிவித,பரிச்சேத , மற்றவனாகவும்‌, அளவற்ற ரூப குண விபங்களையுடையவனாகவுமுள்ள
அநந்தன்‌ என்பதற்கு
ˆ” ஸத்யம்‌ ஜ்ஞாநம் அநந்‌தம்‌ ப்‌,ரஹ்ம”
“யதே,கமவ்யக்தமநந்தரூபம்‌” –
அநந்தமவ்யயம்‌ கவிம்‌ ஸமுத்‌,ரேந்தம்‌”
முதலான தைத்திர்ய உப நிஷத்‌ வாக்யங்களும்‌.
‘*அநந்தணங்சாத்மா விஸ்வ ரூபோ ஹ்யகர்த்தா” என்னும்‌
வேதாமவதர வாக்கியமும்‌ ப்ரமாணமாகின்‌றன.
இப் பரம புருஷனே பல அவதாரங்களெடுதக்து. தாழ்ந்தோ ருடன்‌ ஒரு நீராகக்‌ கலந்து பரிமாறும்‌ கோவிந்தனாகிறான்‌ என்பதற்கு ப்ரமாணம்‌ —
அஜாயமாநோ பஹுதா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்‌’”
பிறப்பில்லாத புருஷோத்தமன்‌ பலபடியாகப்‌ பிறக்கிறான்‌.
புத்திமான்‌களில்‌ சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின்‌ ரஹஸ்யத்தை அறிதிறார்கள்‌.
“யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத்‌ | ஸ உ ஸ்ரேயோாந்‌ பவதி ஜாயமாந ! தம்‌ தீ,ராஸ: கவய உந்நயந்தி |”
யெளவனத்தை உடையவனாகவும்‌, அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும்‌. (நித்ய ஸூரிகளால்‌) கூறப்‌ பட்டவனாகவும்‌ அப்பரமபுருஷன்‌ தோன்‌றினான்‌.
அவன்‌ பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான்‌. அவனை ஞானிகளான கவிகள்‌ அறிகிறார்கள்‌.

“பிதா புத்ரேண பித்ருமாக்‌ யோநியோநெள ஈந வேத,விந்மநுதே தம்‌ ப்‌ருஹந்தம்‌ ‘
ஸர்வலோக பிதாவான புருஷோத்தமன்‌, ஒவ்வொரு அவதாரத்திலும்‌ தன்னால்‌ பிறப்பிக்கப்பட்ட
ஒருவனைப்‌ பிதாவாகக் கொண்டு பிறக்கிறான்‌.
வேதத்தை அறியாதவன்‌ அவனுடைய பெருமையை அறியமாட்டான்‌-முதலியவை.
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்மும்‌ உத்பாதகனாய்‌, புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன்‌ இவனே என்பதை
“நாராயணாத்‌ ப்ரஹ்மா ஜாயதே | நாராயணாத்‌ ருத்‌;ரோ ஜாயதே?
நாராயணன் இடமிருந்து பிரமன்‌ பிறக்‌கிறான்‌. நாராயணனிடமிருந்து உருத்திரன்‌ உண்டாகிறான்‌.
‘ஹிரண்யகேஸ ரு:”
ஸுவர்ணம்‌’ போன்‌று அழகிய திருக் குழல்‌ கற்றைகளை உடையவன்‌] முகலிய வேதா வாக்கியங்கள்‌ உத் கோஷித்தன.
இவன்‌ நாராயண முகேந எழுந்தருளியிருக்கும்‌ இருப்பும்‌, =
`” விஸ்வம்‌ நாராயணம்‌ ” என்று தொடங்கி
“ நரராயண பரம் ப்‌,ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: | நாராயண பரோ ஜ்யோதிர் ஆத்மா நாராயண: பர:।
யச்ச கிஞ்சிஜ் ஜக,த்‌ யஸ்மிந்‌ த்‌ருஸ்ய்தே ஸ்ரூயதே5பி வா। அந்தர்‌ பஹிஸ் ச தத்‌ சர்வம்‌ வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ ”
என்று நாராயண அனுவாகத்திலும்‌,
“ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌ ” முதலிய வாக்கியங்களால்‌ மஹோபநிஷத்திலும்‌.
“ சாக்ஷாங்ச த்ரஷ்ட. வ்யஞ்ச நாராயண:।ஸ்ரோத்ரஞ்ச ஸ்மரோதவ்யஞ்ச நாராயண:” என்று தொடங்கி, —
ஸ்ருங்ச ப்ரதி,மமஸ் ச ஸர்வம்‌ ஈாராயண:”‘ என்று ஸுபாலோபனிஷத்திலும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்த- ராத்மா…….. ஏகோ நாராயண: ” என்று அந்தர்யாமி ப்ரஹ்மணத்திலும்‌.
மற்றுமுள்ள நாராயண உபனிஷத்‌ முதலியவைகளிலும்‌ கோஷிக்கப்பட்டன.
இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடவே எழுந்தருளியிருக்கிறான்‌ என்பது, ^°
ஹ்ரீஸ் ச தே லக்ஷ்மீஸ் ச பத்ந்யெள ”
உனக்கு ஸ்ரீ பூமிதேவிகள்‌ பத்னிகள்‌.
“’ அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்ந்யா ”
இப் பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும்‌, விஷ்ணு வுக்குப்‌ பத்தினியாகவும்‌ இருக்கிறாள்‌.
“ஸ்ரத்‌,த,யா தேவோ தேவத்வம் அஸ் நுதே’”
ஸ்ரீ என்னும் சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியினா லேயே ஈஸ்வரன்‌ ஈஸ்வரத் தன்மையை அடைகிறான்‌.
“ஆநீதவாதம்‌ ஸ்வத,யா ததே,கம்‌?’
ஒன்றுமில்‌லாத ப்ரளய காலத்தில்‌ ஸ்வதா சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ பிராட்டியுடன்‌ கூடிய பகவான்‌ ஒருவனே இருந்தான்
முதலிய ஸ்ருதி வாக்கியங்களில்‌ கோஷிக்கப்டட்டது.

அச்யுதா என்றும் .“அநந்தன்‌’ என்றும் புருஷோத்தமனுடைய பரத்வம்‌ பேசப்பட்டது.
“அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதி நிஹீனரான நம்மால்‌ அணுக முடியுமோ என்று அடியவர்‌ அஞ்சாமைக்காக.
*இடக் கையும்‌ வலக் கையுமறியாத ஆயர்களோடும்‌. பகுத்தறிவற்ற பசுக்களோடும்‌ ஒரு நீராகக் கலந்து
பரிமாறுமவன்‌’ என்னும்‌ பொருளை யுடைய கோவிந்த நாமம்‌ சொல்லப் படுகிறது.
“அச்சுதா! அமரரேறே!’ என்று அச்யுக அநந்த சப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப் பொடியாழ்வாரும்‌.
“ஆயர்தம்‌ கொழுந்கதே!” என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த்‌ தத்தை அருளிச்செய்தாரன்றோ.
(கோவிந்தன்‌ )
“ காவ: விந்த,தி ” [ பசுக்களை அடைகிறான்‌ ] என்ற வ்யுத்பத்தி யின்படியே,
நித்ய ஸூரிகளின்‌ நாதனாயிருக்குமிருப்பில்‌ பொருந்தாமல்‌ அறிவற்றவைகளான பசுக்களை
அடைவதற்‌காக கிருஷ்ணனாய்‌ வந்து திருவவதரித்தவன்‌.,

“அஹம்‌ கிலேந்த்‌,ரோ தேவாநாம்‌ த்வம்‌ க,வாமிந்த்தாம்‌ க,த:।
கோவிந்த, இதி லோகாஸ்த்வாம்‌ ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம்‌ ||.”
நான்‌ தேவர்களுக்கெல்லாம்‌ இந்திரனாயிருக்கிறேன்‌.
நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும்‌ தன்மையைத்‌ தானாகவே அடைந்தாய்‌.
ஆகையால்‌ இவ்வுலகில்‌ கோவிந்தன்‌ என்று எல்லாரும்‌ எப்போதும்‌ உன்னைத்‌ துதிப்பார்கள்‌–
என்று ஹரி வம்‌சத்தில்‌ கோவர்த்தன தாரியான
ஸ்ரீ கிருஷ்ணனைக் குறித்து தேவேந்திரன்‌ துதித்தானன்றோ.
கோ விந்தேத்தி என்றபடியே பசுக்களுக்குப்‌ புகலிடம்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“சட்டித் தயிரும்‌ தடாவினில்‌ வெண்ணெயும் உண்‌ பட்டிக்கன்றே!” என்றும்‌
“பட்டி மேய்ந்தோர்‌ காரேறு பல. தேவற்கோர்‌ கீழ்க்கன்றாய்‌ ” என்றும்‌
அருளிச் செய்யும்படி. யன்‌றோ இவன்‌ பசுக்களுடன்‌ புரையறக் கலக்கும்படி.
இந்த மஹா குணத்தை நினைத்து ஆழ்வார்கள்‌ அடிக்கடி வாய் வெருவுவர்கள்‌.
“கோவிந்தன்‌ குணம் பாடி ஆவி காத்திருப்பேனே” என்று ஆண்டாள்‌ இக் குணத்தையே தனக்கு ப்ராண பாரமாகக்‌ கொண்டிருந்தாள்‌.
“கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப் பெற்றான்‌ காடுவாழ்‌ சாதியும்‌ ஆகப்பெற்றான்‌
பற்றி யுரலிடை ஆப்புமுண்டான்‌ பாவிகாள்‌! உங்களுக்கேச்சுக்கொலோ”-என்றும்‌,
“இக் கொம்மை முலைகள்‌ இடர்‌தீரக்‌ கோவிந்தற்கு ஓர்குற்றேவல்‌ இம்மைப்பிறவி செய்யாதே
இனிப்‌ போய்ச்செய்யும்‌ தவம் தான் என்‌” என்‌ றும்‌,
“கொங்கைத்‌ தலமிவை நோக்கிக்‌ காணீர்‌ கோவிந்தனுக்கல்லால்‌ வாயில்‌ போகா” என்றும்‌.
சொல்லும்படி யன்‌றோ
கோதைப் பிராட்டிக்குக்‌ கோவிந்கனிடமுள்ள காதல்‌.
“கூட்டிலிருந்‌ து கிளியெப்போ தும்‌ கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்‌ ” என்று
இவளுடைய கிளியும்‌ இத் திரு நாமத்தை யன்றோ வாய் புலத்துவது.
நம்மாழ்வாரும்‌ “கோவிந்தன்‌ குடக்கூத்தன்‌ கோவலன்‌ என்றென்றே குனித்து” என்று
தமக்கு இத் திரு நாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப்‌ படுத்தினார்‌.

““கோவிந்தே,தி யதரக்ரந்த,த்‌ க்ருஷ்ணா மாம்‌ தூ,ரவாஸிநம்‌ |
ருணம்‌ ப்ரவ்ருத்‌,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥’*
வெகு தூரத்திலிருந்த என்னை“கோவிந்தா”என்‌ று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த
கடன் போல்‌ என்‌ மநஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.
என்று. அச்யுதாதி நாமங்‌ களையும்‌ அவள்‌ உச்சரித்தருந்த போதிலும்‌
பகவானுடைய திருவுள்ளத்தைப்‌ புண்படுத்திற்று இத் திருநாமமே யன்றே.
இத் திருநாமத்தன்‌ பெருமையைப்‌ பன்னியுரைக்குங்கால்‌ பாரதமாம்‌.
(கோவிந்தன்‌ )
கோ ஸப்‌தம்‌ பூமியையும்‌ குறிக்கு மாகையால்‌
*கோம்‌ விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில்‌ நின்றும்‌ குத்தியெடுத்த வராஹ மூர்த்தியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
‘மஹா வராஹோ கோவிந்த,: “என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும்‌ இவ்வர்த்தம்‌ ஆதரிக்கப்பட்டது .
“நஷ்டாம்‌ வை தரணீம்‌ பூர்வமவிந்த;ம்‌ வை கு,ஹாசு,தாம்‌ |
கேவிந்த, இதி தேநாஹம்‌ தே,வைர்‌ வாக்‌,பிரபிஷடுத: | ‘
பாதாளத்தில்‌ ஓளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை முன்‌ னொரு காலத்தில்‌ நான்‌ தேடி யடைந்கதேனாகையால்‌.
தேவர்‌களால்‌ கோவிந்தன் என்‌று ஸ்தோத்ரம்‌ செய்யப் பெற்றேன்‌.
என்று பாரதத்தில்‌ மோஷ தர்மத்தில்‌ பகவானாலேயே சொல்லப்பட்டது.
இத்தால்‌ ஆபத்துக் காலத்தில்‌. ரக்ஷ்ய வஸ்தவின்‌ அபேஷையை எதிர்பாராமலே மேல் விழுந்து.
தன்‌ பெருமைக்குப் பொருந்தாத உருவத்தையும்‌ கொண்டு ரக்ஷிக்கும்‌ பெருங்குணம்‌ பேசப்படுகிறது.
“உத்‌,த்‌,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `பூமிப்பிராட்டியே! நூறு கைகளை உடையவனும்‌, அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால்‌
எடுக்கப்பட்டவளாய்‌ இருக்கிறாய்‌. என்று பண்டை மறையிலும்‌,
“ஈனச்‌ சொல்லாயினுமாக எறிதிரை வையம்‌ முற்றும்‌
ஏனத்துருவாய்‌ இடந்தபிரான்‌ இருங்கற்பகம்‌ சேர்‌
வானத்தவர்க்கும்‌ அல்லா தவர்க்கும்‌ மற்றெல்லாயவர்க்கும்‌
ஞானப்பிரானையல்லால்‌ இல்லை நான் கண்ட நல்லதுவே’
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்ததொப்பக்‌
கோலவராகமொன்றாய்‌ நிலம்‌ கோட்டிடைக்‌ கொண்ட எந்தாய்‌!” —என்‌றும்‌,
° பாசிதூர்த்துக்‌ கிடந்த பார்மகட்குப்‌ பண்டொருநாள்‌
மாசுடம்பில்‌ நீர்வாரா மானமிலாப்‌ பன்‌ றியாம்‌
தேசுடைய தேவர்‌ திருவரங்கச்‌ செல்வனார்‌
பேசியிருப்பனகள்‌ பேர்க்கவும்‌ பேராவே” _ என்‌றும்‌
தமிழ்‌ மறைகளிலும்‌ இப்பெருமானின்‌ பெருமைகள்‌ பேசுப்‌ பட்டனவன்‌றோ.

“’கெளரேவைஷா தத;ா வாணீ தாம்‌ ச யத்‌, விந்த,தே ப,வார்‌ |
கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்‌,யதே ப,வாந்‌
கோ சப்தமான து :’கெள:’ என்று சொல்லப்படுகிறது.
வார்த்தை களையெல்லாம்‌ நீரே அடைவதால்‌ நீர்‌ கோவிந்தனென்று முனிவர்களால்‌ சொல்லப்படுகிறீர்‌.
என்கிற நிர்வசன த்தின்‌ படியே ஸர்வமாப்‌,த,வாச்யன்‌ என்றும்‌ இத் திருநாமத்துக்குப்‌ பொருள் கொள்ளலாம்‌.
“சொல்லினால்‌ தொடர்ச்சி நீ சொலப்‌ படும்‌ பொருளும்‌ நீ” என்று திருமழிசையாழ்வார்‌ இல்வர்த்‌தத்தை அறுஸந்தித்தார்‌.
(கோவிந்தன்‌ )
கோசப்தம்‌ வேத வாக்கியங்களைக்‌ குறிப்பதாகக் கொண்டு வேதத்தினால்‌ சொல்‌லப்படுமவன்‌ என்றும்‌
பொருள்கொள்ளலாம்‌.
அச்சம்‌… ஏற்றுவான்‌ அச்சுதன்‌ அநந்த கீர்ந்தி ஆதியந்தமில்லவன்‌
நச்சராவணைக்‌ கிடந்த நாதன்‌ ” என்று
அச்சுதன்‌. அந்தன்‌ என்னும்‌ திருநாமங்களுக்கு அர்த்தம்‌ செய்த திருமழிசை யாழ்வார்‌ -‘
வேத கதனே ”’ என்று கோவிந்த சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
(கோவிந்தன்‌ )
எந்த தேவதையைக்‌ குறித்து ஸ்தோத்ரம்‌ செய்தாலும்‌ அவை இவனையே அடைவதால்‌
கோவிந்தன்‌ எனப்படுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
“ நும்‌இன்‌ கவிகொண்டு நும்‌நும்‌ இட்டாதெய்வமேத்தினால்‌
செம்மின்‌ சுடர்முடி என்‌ திருமாலுக்குச்‌ சேருமே என்றார்‌ நம்மாழ்வார்‌.
(கோவிந்தன்‌)
கோ சப்தம்‌ ஒளியைக் குறிப்பதால்‌ பரஞ்சோதியாய் இருப்பவன் என்‌றும்‌ பொருள்‌ கொள்ள லாம்‌.
நம்மாழ்வாரும்‌ “பரஞ்சோதி நீ பரமாய்‌ நின்னிகழ்ந்து பின் மற்றோர்‌
பரஞ்சோதியின்‌ மையின்‌ படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம்‌ படைத்த எம்‌
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே ” என்று
இப் பொருளை அதுஸந்தித் தருளினார்‌.
“நாராயண பரோ ஜ்யோதி:” என்றும்‌.
** பரம்‌ ஜ்யோதி ருப ஸம்பத்‌,ய ” என்றும்‌.
ˆ” ஆதித்ய வர்ணம்‌ ” என்றும்‌,
“ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரஜ தாரகம்‌ நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்‌,நி: |
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்‌ தஸ்ய பாஸா ஸர்வமித,ம்‌ ॥”
அப் பரம புருஷனுக்கு முன்‌ ஸூர்யனும்‌ பிரகாசிப்பதில்லை;
சந்திரனும்‌, நக்ஷத்திரங்களும்‌. இந்த மின்‌னல்களும்‌ பிரகாசிக்‌கிறதில்லை.
அக்னியைப்‌ பற்றிச்‌ சொல்லவும்‌ வேண்டுமோ?
ஒளிவிடும்‌ அவனை அநுஸந்தித்தே எல்லாம்‌ ஓளிவிடுகின்‌ றன.
அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம்‌ பிரகாசிக்கின்‌றன.என்றும்‌ வேதங்களிலும்‌
“ ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய ப,வேத்‌, யுகவது,த்தி,தா |
யதி, ஸத்‌,ருமீ ஸா ஸ்யாத்‌, பாஸஸ்‌ தஸ்ய மஹாத்மந:।॥”
ஆகாயத்தில்‌, ஒரே ஸமயத்தில்‌ ஆயிரம்‌ ஸூர்யர்களுடைய ஒளி தோன்றிற்றாகில்‌. அவ்வொளி
அந்த மஹாபுருஷனுடைய ஒளிக்கு ஒப்பாகலாம்‌. என்று கீதையிலும்‌ ஒதப்‌ பட்ட தன்றோ.

அந்த கோவிந்தநாமதீதால்‌ ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம்‌ பேசப்படுகிறது. ஆகையால்‌ புநருக்தியில்லை,

—————

ஆக, கேசவன்‌ முதலான நான்கு திருநாமங்களால்‌ பரத்வம்‌ பேசப்பட்டது.
இனி விஷ்ணு என்னும்‌ திரு நாமத்தினால்‌ நான்காவது வியூஹமான அநிருத்த மூர்த்தி சொல்லப்படுகிறார்‌.
இவ் விடத்தில்‌ “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹ!ரார்த்தஹமாகவும்‌.
ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும்‌,
உபாஸக அனுக்ரஹ மர்த்தமாகவும்‌.
ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்‌த ருபேண நிற்கும்‌ நிலை.
பரத்வத்தில்‌ ஜ்ஞாநாதிகளாறும்‌ பூர்ணமாயிருக்கும்‌.
வ்யூஹத்தில்‌-முற்று இரட்டை குணங்கள் ப்ரகடமாயிருக்கும்‌,
அதில்‌ ஸங்கர்ஷணர்‌ ஜ்ஞாந பலங்கள்‌ இரண்டோடும்‌ கூடி
ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து,
அத்தை ப்ரக்ருதியில்‌ நின்றும்‌ பிரிக்கும் அவஸ்தையையும் பஜித்து,
ஸரஸ்த்ர ப்ரவர்த்தன பண்ணக் கடவராயிருப்பர்‌.
பிரத்யும்நர்‌ ஐஸ்வர்ய வீர்யங்களோடும் கூடி
மநஸ் தத்வத்தை அதிஷ்டி,த்து.
தர்ம உபதேசத்தையும்‌.
மநுஷ்யாதி தொடக்கமான வர்க்க, ஸ்ருஷ்டியையும்‌ பண்ணக் கடவராயிருப்பர்‌.
அநிருத்தர்‌; சக்தி தேஜஸ்ஸுக்கள்‌ இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்‌,
தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும்‌
கால ஸ்ருஷ்டிக்கும்‌, கடவராயிருப்பர்‌. ” என்று
பிள்ளைலோகா சார்யர்‌ தத்வ த்ரய த்தில்‌ அருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்‌ அநு ஸந்திக்கத்தக்கவை,
விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்படுகிறவர்‌ அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்‌:
“த்ரிபாதூர்த்‌,வ உதைதத்‌ புருஷ: பாதேர ஸ்யேஹாப,வாத்‌ புந;!
ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ஸா முகா அபி, |”
பரமபதத்திலுள்ள பரமபுருஷன்‌ மூன்‌று உருவங்களை உடையவராய் ஸங்கல்பித்தார்‌.
பரமபத நாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர்‌ மறுபடியும்‌ இங்கு அவதரித்தார்‌.
அதன் பிறகு ஸர்வ விதமான சேதனர்களையும்‌ ரஷிப்பதற்காக இவ் வுலகையெல்லாம்‌ (
அவதாரம்‌ செய்தவன்‌ மூலம்‌) வியாபித்தார்‌.] என்று புருஷ ஸூக்தத்தில்‌ அநிருத்தரைக் குறித்து விஷ்ணுசப்தார்த்தம்‌ அநுஸந்திக்கப்பட்டது.
மேலும்‌, அநிருத்தரே ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு . இடையில்‌ பத்ம நாபராகிய விஷ்ணுவாக அவதரித்தார்‌ என்று சாஸ்த்ரங்கள்‌ சொல்லுகையாலும்‌.
கார்ய வாசி சப்தம்‌ காரணமாகச் சொல்லுமாகையாலும்‌, “பத்மநாபர்‌’ என்று ப்ரதமாவதாரமான விஷஸ்ணுவைத்‌ தனியே இங்கு எடுக்கையாலும்‌
இங்கு விஷ்ணுசப்தம்‌ அநிருத்த நாராயணனைச்‌ சொல்லக்கடவது.
மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிருத்தரை எடுத்த துக்குக்‌ கருத்தென்னெனில்‌:
“பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ்‌ ததைவ ச |
ஷட்த்ரிம்மமத்ஸங்க்‌,யாஸங்க்‌,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |!
ஷட்த்ரிம்ப்த்‌,பே,த,பி,ந்காஸ்தே பத்‌மநாபாதி,கா: ஸுரா: |
ஸமுத்பந்நா தீ,பாத்‌, 8,பா இவேங்வரா: |”
விஷ்வக்ஸேநரே! பத்மநாபன்‌ முதலிய முக்கியமான விபவா வதாரங்கள்‌ முப்பத்தாறாகும்‌.
இப்படி பத்மநாபன்‌ முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும்‌. விளக்கிலிருந்து உண்டான
விளக்குகள்போல்‌ அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித்‌ தார்கள்‌. என்று விஷ்வக்ஸேந ஸம்‌ ஹிதையில்‌ சொல்லிய படியே,
பின்‌ சொல்லப் போகும்‌ பத்மநாபன்‌ , திரிவிக்கிரமன்‌ , வாமனன்‌. தாமோதரன்‌ என்னும்‌ மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி
அநிருத்தரேயாகையால்‌ அவரை இங்கு எடுக்கிறது. நிற்க;
விஷ்ணு பதத்தின்‌ பொருளை இனி விவரிட்மோம்‌.
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌ ” என்று அவதாரத்தினால்‌ வியாபித்திருப்பதை ,
விஷ்ணு சப்தார்த்தமாகப்‌ புருஷ ஸூக்தத்‌தில்‌ பேசப்பட்டது,
“வ்யாப்ய ஸர்வாநிமாக்‌ லோகாந்‌ ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ:
ததமச விஷ்ணுநாமாஸி விமோர்‌ தளாதோ: ப்ரவேமுநாத்‌ |!”
கேசவனாகிற தேவரீர்‌ இந்த எல்லா உலகங்களையும்‌ எங்கும்‌ வியாபித்து நிற்கிறீர்‌;
ஆகையால்‌ விஷ்ணுவென்னும்‌ திரு நாமத்தை யுடையவராய்‌ விளங்குகிறீர்‌ ‘
விம’ என்னும்‌ தாது ப்ரவேசித்தல்‌ என்னும்‌ பொருளை யுடைத்தாயிருப்பதால்‌. என்று
ஸ்ரீவராஹபுராணத்தில்‌ சொல்லப்பட்டபடியே எங்‌கும்‌ தன்‌ ஸ்வரூபத்தால்‌ வியாபித்து நிற்பவன்‌ விஷ்ணு வென்றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“யஸ்மாத்‌, விஷ்டமித,ம்‌ விஸ்வம்‌ தஸ்ய முக்த்யா மஹாத்மர: |
தஸ்மாத்‌ ஸ ப்ரோச்யதே விஷ்ணுர்‌ விமேர்‌ த,௱தோ: ப்ரவேமாநாத்‌ ||”
மஹாத்மாவான அப் பரம புருஷனுடைய சக்தியினால்‌ இவ்‌ வுலகமெல்லாம்‌ வியாபிக்கப்பட்டிருப்பதால்‌
அவன்‌ விஷ்ணு வெனப்படுகீறான்‌;
விம ‘ என்னும்‌ தாது வியாபித்தலைச்‌ சொல்லுவதால்‌–என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும்‌, ஆதித்ய புராணத்திலும்‌ சொல்லியபடியே
சக்தியினால்‌ எல்லா வஸ்துக்களையும்‌ வியாபித்திருப்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா |
ஸம்ஸாரவேமுநாத்‌ பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥
பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியானது ஆகாயம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்கிறது.
இப்படி இவ்‌ வுலகம்‌ முழுவதும்‌ வியாபித்து நிற்பதால்‌ நான்‌ விஷ்ணு வென்று சொல்லப்படுகிறேன்‌.–என்று மஹாபாரதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வ வ்யாபினியான விக்‌ரஹ காந்தியை உடையவன்‌ என்றும்‌ விண்ணுசப்தத்துக்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

* யதள ஸர்வக,தோ விஷ்ணு: ”
விஷ்ணு வானவர்‌ எப்படி ஸர்வ வியாபியாயிருக்கிறோரோ….] என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில்‌ சொல்லியபடியே
விக்ரஹத்தாலே எங்கும்‌ வியாபித்து நிற்பவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ் வர்‌த்தங்களெல்லாம்‌
” ‘ விஷ்ணுர்‌ விக்ரமணாத்‌ தேவ: “‘ என்று பாரதம்‌ உத்யோக பர்வத்தில்‌ உணர்த்தப்‌பட்டது.

இப்படி இவன்‌ எல்லாவற்றையும்‌ வியாபித்து விளங்குவதால்‌ எல்லாம்‌ இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென்‌பதை
“ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்‌ பு,வநாநி விஷ்ணுர்‌ வநாநி விஷ்ணுர்‌ கி,ரயோ தி,மமமச |
ஈத்‌,ய: ஸமுத்‌,ராமங்ச ஸ ஏவ ஸர்வம்‌ யத,ஸ்தி யந்காஸ்தி விப்ரவர்ய ॥”’
விப்ரஸ்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும்‌ விஸ்ணுவே;
புவனங்களும்‌ விஷ்ணுவே;
வனங்களும்‌ விஷ்ணுவே:
மலைகளும்‌. திக்குகளும்‌, நதிகளும்‌. ஸழுத்ரங்களும்‌, “ இருக்கிறது என்று
எப்போதும்‌ சொல்லப்படும்‌ ஜீவ தத்வமும்‌.
இல்லை என்னும்‌ வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும்‌ ஆகிய எல்லாம்‌
அந்த பகவான்‌ விஷ்ணுவே. என்று ஸ்ரீ விஷ்ணு புராணம்‌ உத்கோஷித்தது.
“ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்‌,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம்‌ பஜாமறஹே ”
விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும்‌ நாங்கள்‌. உன்னுடையது போன்‌ற தேஜஸ்ஸையும்‌
தெளிவான ஞானத்தையும்‌ அடைகிறோம்‌. என்று ருக்வேதத்திலும்
தத்‌, விஷ்ணோ: பரமம்‌ பத, என்றும்‌.
`” விஷ்ணோர்‌ யத்‌’பரமம்‌ பத,ம்‌” என்றும்‌,
“ மம ம்நோ விஷ்ணுருருக்ரம: ” என்றும்‌,
பரமே மத்‌,வஉத்ஸ.:”’
வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ருத தரைகள்‌ பொழிகின்‌றன.– என்றும்‌,
மற்றும்‌ பல பலவேத வாக்கியங்களிலும் இத் திரு நாமம்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டது .
“தஸ்மாத்‌, விராட் ,ஜாயத”
அந்த அநிருத்‌த நாராயணனிட யிருந்து பிரமன்‌ உண்டானான்‌. ] என்றும்
ஐகந் நாதோ ப்‌,ரஹ்மாணமஸ்ருஜத்‌ புக: ।”’
நான்காவது மூர்த்தியான பிரமனை ஸ்ருஷ்டித்தார்‌–என்றும்
ஸம்ஹிதையிலும்‌ சொல்லப்பட்டடடியே
பிரமனைப்‌ பிறப்பித்தவரான அநிருத்த மூர்த்தி விஷ்ணு சப்தத்தால்‌ சொல்லப்பட்டார்‌,

————-

அடுத்த படியாக, அப் பிரமனைப்‌ பிறப்பிக்குமளவே யன்று.
அவனுக்குத்‌ துன்பம்‌ வந்த போது அதைப் போக்‌ கடிப்பவனும்‌ இவனே என்று உணர்த்துகிறது
மதுஸூதன்‌” என்னும்‌ திருநாமம்‌.

கேசவன்‌ என்று தொடங்கி கோவிந்தன் என்பது வரை பரத்வம்‌ பேசப்பட்டது.
விஷ்ணுவென்று வியூஹம்‌ உணர்த்தப்பட்டது.
மதுஸூதனன்‌ என்னும்‌ இத் திருநாமம்‌ தொடங்கி விபவாவதாரம்‌ விவரிக்கப்படுகிறது. .

*’ யோ வித,த,தி பூர்வம்‌ யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ”
எவனொருவன்‌ பிரமனை முதலில்‌ பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக்‌கிறானோ என்று
வேதத்தில்‌ சொல்லியபடியே ஸர்வேஸ்வரன்‌ வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தருளினான்‌.
நான்கு சிசு ரூபமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும்‌, மது.கைடபன்‌ என்னும்‌ இரு அஸூரர்கள்‌
பிரமனிட மிருந்து பறித்துக் கொண்டு போய்‌, ரஸா தலத்தில்‌ ஒளித்து வைத்தனர்‌.
வேதங்களை இழந்த அப் பிரமனும்‌, “ கண்ணிழந்‌ தேன்‌. தனமிழந்தேன்‌ ‘ என்‌று கேசவனை நோக்கிக்‌ கதறினான்‌.
இக் கூக்குரலைக் கேட்ட கருணா வள்ளலான அப்பெருமானும்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து
மது கைடபர்களை ஸம்ஹரித்துப்‌ பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான்‌
இப்படி ப்ரதம ஜனான (முதலில்‌ பிறந்தவனான ) பிரமனுக்குச்‌ செய்த உபகாரமாகையாலே
இது அவதாரங்களுள்‌ முதலில்‌ அநு ஸந்திக்கப்படுகிறது.
( மதுஸூதனன்‌ )
மதுவென்னும்‌ அஸாரனைக்‌ கொன்‌ றவன்‌.
“கர்ணமிங்ரோத்‌,ப,வம்‌ சாபி , மஹாஸுரம்‌ |
ப்‌ரஹ்மணோபசிதிம்‌ குர்வங்‌ ஜக, புருஷோத்தம: |
தஸ்ய தாத இத்யாஹு: |”
பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும்‌ பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப்‌ புருஷோத்தமன்‌ கொன்றான்‌.
குழந்தாய்‌! அவனைக்‌ கொன்றதாலேயே., தேவர்கள்‌. அஸூரர்கள்‌, மனிதர்கள்‌. ரிஷிகள்‌ ஆகிய யாவரும்‌ ஐநார்‌தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்‌.] என்று மஹாபாரதத்தில்‌ இந்த நாமத்தின்‌ பொருள்‌ உரைக்கப்பட்டது .
“த,த்‌ருமாதேரவிந்த,ஸ்தழம்‌ ப்‌,ரஹ்மாணமமிதப்ரப,ம்‌ |
ஸ்ருஐஜந்தம்‌ ப்ரத,மம்‌ வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள |
ததோ விக்‌,ரஹிணஸ்தாம்ஸ்‌ த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள |
வேதஞ்ஜக்‌,ருஹதூ ராஜம்‌ ப்‌,ரஹ்மண: பங்யதஸ்‌ ததா ॥
அத, தெள தளநவங்ரேஷ்டெள க்‌,ருஹீத்வா தாந்‌ ஸ௩ராதநார்‌ |
ரஸாம்‌ விவிமதுஸ்‌ தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள ||
ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்‌,ரஹ்மா கங்மலமாவியத்‌ |
ததோ வச௩மீமா௩ம்‌ ப்ராஹ வேதைர்‌ விநாக்ருத: ॥
ப்‌,ரஹ்மா:-வேத;ா மே பரமம்‌ சக்ஷார்‌ வேதா மே பரமம்‌ தம்‌।
வேதா மே பரமம்‌ வேத; மே ப்‌,ரஹ்ம சோத்தமம்‌ |
மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்‌,யாம்‌ ப,லாதி,த: |
அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள்‌ விவர்ஜிதா: ||
வேதே, ஹ்ருதே5ஹம்‌ கம்‌ குர்யாம்‌ லோகாந்‌ வை ஸ்ரஷ்டுமுத்‌,யத: |
அஹோ பத மஹத்‌, து, க்சும்‌ வேத;ாமமாஜம்‌ மம |
ப்ராப்தம்‌ துநோதி ஹ்ருதயம்‌ தீவ்ரரேர காமயஸ்த்வயம்‌ |
கோ ஹி மோகார்ணவே மக்‌,நம்‌ மாமிஹாத்‌,ய ஸமுத்‌.த,ரேத்‌।
இத்யேவம்‌ ப,௱ாவுமாணஸ்ய ப்‌,ரஹ்மணோ ந்ருபஸத்தம |
ஹரிஸ்தோத்ரார்த்தமுத்‌;,பூ,தா புத்‌,திர்‌ புத்திமதாம்‌ வர॥
ததோ ஐகெள பரம்‌ ஜப்யம்‌ ப்ராஞ்ஜலி: ப்ரக்‌,ரஹம்‌ ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ்‌ தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்‌,ராஹ வேதளநகலொந்‌ ரஸாதலக,தாந்‌ ஹரி: ॥
ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர்‌ தத: ஸ்வாம்‌ ப்ரக்ருதிம்‌ யயெள ॥
ததஸ்தயோர்‌ வதே,நா மரு வேதாபஹரணேந ச |
போ காபநயநம்‌ சக்ரே ப்‌, ஹ்மண: புருஷோத்தம: || ””
மது கைடடன்‌ என்னும்‌ அஸுரர்கள்‌ அளவற்ற ஒளியை யுடையவனும்‌. தாமரைமலரில்‌ வீற்றிருப்பவனும்‌,
அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும்‌ முதன்முதலில்‌ ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப்‌ பார்த்தனர்‌
சரீரத்துடன்‌ கூடிய அவ் வேதங்களைக் கண்ட அந்த அஸூரர்கள்‌ பிரமன்‌ கண்டு கொண்டிருக்கும் போதே அவைகளை எடுத்துக்‌ கொண்டனர்‌.
பிறகு அவ் வஸூர ஸ்ரேஷ்டர்கள்‌ பழமை யான அவ்வேதங்களை எடுத்துக் கொண்டு.
நீர் நிறைந்த கடலினுள்ளிருக்கும்‌ ரஸாதலத்தினுள்‌ விரைவில்‌ நுழைந்‌தனர்‌.
இப்படி வேதங்கள்‌ கவரப்பட்டபின்‌ பிரமனைத்‌ துக்கம்‌ பீடித்தது.
அதன் பின்‌ வேதங்களை இழந்த நான்முகன்‌ ஈஸ்வரனைக்‌ குறித்துப்‌ பின்வருமாறு உரைத்தனன்‌ -—
“வேதங்களே எனக்கு மேலான கண்‌; வேதங்களே எனக்கு மேலான தனம்‌. வேதங்களே எனக்கு மேலான ஓளி.
எனக்குப்‌ பெருமையைக்‌ கொடுப்பவைகளில்‌ வேதங்களே சிறந்தவை.
அஸூரர்களுடைய பலத்தினால்‌ என்னுடைய வேதங்களெல்லாம்‌ இங்கிருந்து பறிக்கப்பட்டன.
வேத மற்றவையான இவ்வுலகங்கள்‌ இருள்‌ சூழ்ந்தவையாயின.
லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான்‌ வேதமில்லாமல்‌ என்ன செய்வேன்‌ ?
வேதங்கள்‌ நசித்ததினால்‌ எனக்குப்‌ பெருந்துன்பம்‌ ` வந்தடைந்துவிட்டது..
தீவிர சோகமான இந்த வியாதி : என்‌ மனத்தைத்‌ துன்புறுத்துகிறது.
இத்‌ துன்‌பக்கடலில்‌ முழுகும்‌ என்னை யார்தான்‌ | கரையேற்ற முடியும்‌ ?”
என்று இம்மாதிரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது
‘ ஹரியை ஸ்தோத்ரம்‌ செய்யவேண்டுமென்‌ னும்‌ புத்தி அவருக்கு உண்டாயிற்று.
அதன் பிறகு ப நின்று, மிகச்‌ சிறந்த இந்த ஸ்தோத்ரத்தைப்‌ பாடினார்‌………
இதற்கிடையில்‌ பகவான்‌ ஹரி குதிரை போன்ற முகத்தையுடைய ஹயக்ரீவராய்‌ அவதரித்து, .
ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும்‌ எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம்‌ கொடுத்தருளினார்‌.
அதன்பின்‌ பிரமன்‌ தன்‌ இயற்கை நிலையை அடைந்தனன்‌.
இப்படி அந்த அஸூரர்களைக்‌ கொன்றும்‌. வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும்‌
ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப்‌ புருஷோத்தமன்‌ போக்கடித்தான்‌.] என்று
மஹாபாரதத்‌ தில்‌ இந்த விருத்தாந்தம்‌ விவரிக்கப்பட்ட து.

“ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரூப்யதரர்ப்பம்‌ |
ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || ”
மது `கைடபர்களுடைய கொழுப்பைக்‌ குலைத்தது போல்‌, வாழைத் தண்டு, கதையின்‌ வெளிப்புறமான கரப,ப்ரதேசம்‌;
யானைத்‌ துதிக்கை ஆகிய இவைகளின்‌ அழகுச் செருக்கையும்‌ அடக்கி, –
அந்த கர்வத்தினால்‌ பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை
உபமான மாகச்‌ சொல்லுவோம்‌] என்று பட்டர்‌ ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும்‌. ‘
“யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள ”
மது கைட்பர்களாகிய துஷ்டப் புழுக்களைப்‌ பிசைந்து கொன்றவை களான இத் திருத்துடைகள்‌] என்று
ஆழ்வான்‌ ஸூந்தர பாஹுஸ்தவத்திலும்‌ அருளிச்செய்தபடியே
மது கைடபர்‌ கள்‌ பகவானால்‌ தொடையினால்‌ இறுக்கிக்‌ கொல்லப்பட்டனர்‌ என்பது பிரஸித்தம்‌.

” காய்ந்திருளை மாற்றிக்‌ கதிரிலகு மாமணிகள்‌
ஏய்ந்த பணக்குதிர்மேல்‌ வெவ்வுயிர்ப்ப-—
வாய்ந்த மதுகைடபரும்‌ வயிறுருகி மாண்டார்‌
அதுகேடவர்க்திறுதியாங்கு ” [மூன்‌ திருவ 68] என்று
எம்பெருமானுடைய . திவ்ய வாஸத்தாலேயே மதுகைடபர்கள்‌ மாண்டனர்‌ என்று
பேயாழ்வார்‌ அருளிச்செய்தார்‌,

அன்‌ றிக்கே.
எம்பெருமான்‌. ஆயாஸம்‌ சிறிதுமின்‌ றி அவர்‌களை முடித்தபடியைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.
இந்த மது கைடபர்கள்‌ பிரமனுடைய கர்மாநுபவத்தின்‌ பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர்‌.
ரஜஸ்‌ தமோ குணங்களே வடிவெடுத்தவர்கள்‌ இவர்களென்‌ று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில்‌ சொல்லப்பட்ட து.
பிறக்கும்‌ போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக்‌ குறித்துத்‌ தாங்கள்‌ சொல்லுகிறார்களோ
அவர்களாலேயே சாவு நேர வேண்டுமென்ற வரத்தைப்‌ பெற்றனர்‌.
வேதங்‌ களுடன்‌ கூடிய ப்ரஹ்மாவைக் கண்டு வேதங்களைக்‌ கவர்ந்து ரஸாதலத்தில்‌ ஜநித்தனர்‌. .
பிரமனால்‌ ஸ்தோத்ரம்‌: செய்யப்‌ பட்ட பகவான்‌ ஹயக்ரீவாவதாரம்‌ செய்து ஓர்‌ இனிய இசையைப்‌ பாட. அவ்வொலியைக் கேட்ட அவ்வஸுரர்கள்‌
வேதத்தை வைத்து விட்டு ஒலி வரும்‌ வழியில்‌ சென்றனர்‌.
பகவான்‌ மற்றொரு வழியாகச் சென்‌று வேதங்களை மீட்டுப்‌ பிரமனிடம்‌ கொடுத்தருளினான்‌.
வேதங்களைக்‌ காணாத அவ்‌ வஸுரர்கள்‌ பாற்கடலில்‌ பையத் துயின்ற பரமனைக் கண்டு
அவனுடன்‌ நெடுங்காலம்‌ போர் செய்தனர்‌.
பல பல காலம்‌ போர் செய்தும்‌ சோர்வடையாத திருமாலைக் கண்டு மனமுவந்து.
“ நீ வேண்டும்‌ வரத்தைக்‌ கேள்‌” என்றார்கள்‌ அவ்‌ வஸுரர்கள்‌.
* உங்களை நான்‌ கொல்லவேணும்‌ ” என்னும்‌ வரத்தை மாயாவியான அம்மாதவன்‌ தன்னால் படைக்கப்‌ பட்‌.டவர்களான அவர்களிடம்‌ வேண்டினான்‌.
அவர்களும்‌ ௮தற்கு இசைந்தவளவில்‌, “ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக்‌ கொள்ளுங்கள்‌” என்‌ று பரம புருஷன்‌ உரைத்தான்‌,
* ஒருவரும்‌ சாகாத இடத்தில்‌ நாங்கள்‌ சாக வேண்டும்‌” என்று அவர்கள்‌ வரம்‌ வேண்டினார்கள்‌.
புருஷோத்தமனும்‌ திருத்‌ தொடைகளால்‌ அவர்களை இறுக்கிக்கொன்றான்‌ என்று
இம்‌ மாதிரியாக சாஸ்‌த்ரங்கள்‌ இவ்விருத்தாந்தை விவரிக்கின்‌ றன.
*மது,ஸூத,னன்‌’ என்னுமித் திருநாமத்தில்‌ மதுவைச்‌ சொன்‌ னது ,கைடபனுக்கும்‌ உபலக்ஷணம்‌.
* கைடபாரி ‘ என்றும்‌ எம்பெருமானுக்கு ஒரு திருநாமம்‌ வழங்கி வருகிறது.

இனி, மதுஸூதனன்‌ என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும்‌ சில பொருள்களை விவரிப்போம்‌.
(மதுஸுதனன்‌)
மது,” என்று “ பிப்பலம்‌ ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப்‌ பொருள்களான அசேதன தத்வத்தையும்‌.
ஆநந்த,ஸ்வரூபியும்‌, பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல்‌ இனியவனுமான சேதன தத்வத்தையும்‌ சொல்லுகிறது.
‘ஸூதனன்‌” என்னும்‌ பதம்‌ தன்‌ வசத்திற்கு அழைத்துச்‌ செல்பவன்‌ என்னும்‌ பொருளை உடையது.
ஆக, ஸர்வ தத்வங்களையும்‌ அழைத்துச்‌ செல்பவன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ ஸர்வ தத்வநயநாச்சைவ மதுஹா மதுஸூதந: ”
எல்லாத்‌ தத்துவங்களையும்‌ அழைத்துச்‌ செல்வதாலும்‌ பகவான்‌ மதுஸூதனனாகிறான்‌.
என்று சாஸ்திரம்‌ இப்பொருளை ஆதரித்தது,
* மது, ஸூத,னன்‌ ‘ என்பது ஸகல தத்வங்களாகிற குதிரைகளைத்‌ தூண்டுபவன்‌ என்றும்‌ பொருள்படும்‌. “
மதுரிந்த்‌,ரியநாமா ஸ ததோ மதுநிஷூதந: ”’ [
மது,’ என்று இனியவைகளான இந்திரியங்கள்‌ சொல்லப்‌ படுகின்‌ றன.
அவைகளை அடக்குமவனாகையாலே இப் பெரு மான்‌ மதுஸூதனனாகிறான்‌.என்றும்‌
மதுஸூதந சப்தார்த்‌ தம்‌ விவரிக்கப்பட்ட து.

ஆக, இப்பொருள்களால்‌ விரோதி நிரஸன ஸீலன்‌ மதுஸூதனன்‌ என்றதாயிற்று.
“ கொடு யேனிடர்‌ முற்றவும்‌ மாய்த்தவம்மான்‌ மதுஸூதவம்மான்‌”என்று இவ்வர்‌ததத்தை ஆழ்வார்‌ அருளிச்செய்தார்‌.
இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குணத்துக்குத் தோற்று
“ மது ஸூதனென்னம்மான்‌ தானும்‌ யானுமெல்லாம்‌ தன்னுள்ளே கலந்தொழிந்தோம்‌
தேனும்‌ பாலும்‌ நெய்யும்‌ கன்னலும்‌ அமுதுமொத்தே ‘* என்றும்‌,
வள்ளலே ! மதுஸூதனா ! “” என்றும்‌.
“ மதுஸூதனை யன்றி மற்றிலேன்‌ ” என்றும்‌. °
வைத்த மா நிதியாம்‌ மதுஸூதனையே அலற்றி” என்றும்‌, நம்மாழ்வார்‌ தம்மை எழுதிக் கொடுத்தார்‌

————
மதுஸூதனன்‌ என்று. பிரமனுக்குச்‌ செய்த உபகாரத்‌தைப்‌ பேசிற்று,

அடுத்தபடியாக, திரிவிக்கிரமன்‌ என்று
இவ் வுலகுக்கெல்லாம்‌ அபேஷா நிரபேக்ஷமாகத்‌ தன்னைக்‌ கொடுத்தபடியைப்‌ பேசுகிறது.
மஹாபலி என்பானோர்‌ அஸுரன்‌ தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனை யுள்‌ளிட்ட மூவுலகையும்‌ ஜயித்துத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்‌டான்‌.
இந்திரன்‌ முதலிய தேவர்கள்‌ எம்பெருமானிடம்‌ சென்று முறையிட. அப்பெருமானும்‌
காஸ்யபருக்கும்‌ அதிதிக்‌கும்‌ புத்திரனான வாமனனாய்ப்‌ பிறந்து மஹாபலி யாகம்‌ செய்கையில்‌
அவனிடம்‌ மூவடி மண்ணை யாசித்துப் பெற்று, திரிவிக்ரமனாக வளர்ந்து,
ஈரடியால்‌ உலகங்களையெல்லாம்‌ அளந்து, மூன்றாவதடியை மாவலியின்‌ தலையில்‌ வைத்து,
பாதாள லோகத்தில்‌ அவனுக்கும்‌ பெருமையை உண்டாக்கி வைத்தான்‌ என்னும்‌ விருத்தாந்தம்‌
ஸர்வ லோக ப்ரஸித்தமானது.
இப்படி, ப்ரயோஜநாந்தர பரனான இந்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற-ஸர்வரையும்‌ ரக்ஷித்‌த அவதாரமாகையாலும்‌, ,
உறங்குகிற ப்ரஜையைத்‌ தடவிக் கொண்டு கிடக்கும்‌ தாயைப்போலே,
உலகங்களையெல்லா।ம்‌ தன்‌ திருவடிகளாலே அபேக்ஷா நிரபேஷமாகத்‌ தடவிக் கொடுத்த பெருமையை உடையதாகையா லும்‌.
பரத்வமும்‌, ஸெளலப்‌யமும்‌ ஒருங்கே ஒளிவிடுகின்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும்‌,
அடியார்க்காகத்‌ தன்னை அழிய மாறியும்‌ அளிக்கும்‌ அருங்‌ குணத்தை அறிவிப்பதாகையாலும்‌.
வேதங்களோடு. இதிஹாஸ புராணங்களோடு. ஆழ்வார்களோடு வாசி யற எல்லாரும்‌ இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள்‌. .
“ இதம்‌ விஷ்ணுர்‌ விசக்ரமே ”
“ த்ரீணி பத; விசக்ரமே ” –
“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம்‌ கத்ராய விஷ்ணு: ” .
மூவடி மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம்‌ அளந்தான் விஷ்ணு]:
“த்ரிர்‌ தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”’ “
ம்‌ நோ விஷ்ணுருருக்ரம:
பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ்ணு வானவன் நமக்கு மங்களத்தைத் தருவானாக,
“ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே ”
விஷ்ணுவினால்‌ அளக்கப்‌ பட்ட பூ தேவீயே] என்று பல பல விடங்களில்‌ பண்டை மறை வாய்‌ வெருவிற்று.
“கண்டாயே நெஞ்சே! கருமங்கள்‌ வாய்க்கின்றோர்‌
எண்தானுமின்‌றியே வந்தியலுமாறு
உண்டான்‌ உலகேழும்‌ ஓர்‌ மூவடி கொண்டானைக்‌
கண்டு கொண்டனை நீயுமே ” என்றும்‌.
“அடியை மூன்‌றை யிரந்தவாறும்‌ அங்கே நின்றாழ்கடலும்‌
மண்ணும் விண்ணும்‌ முடிய ஈரடியால்‌ முடித்துக் கொண்ட முக்கியமும்‌
நொடியுமாறவை கேட்குந்தோறுமென்‌ நெஞ்சம்‌ நின்றனக்கே கரைந்துகும்‌
கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல்‌ கூடுவதே ?”” என்றும்‌.
“பாயோரடி வைத்த தன்‌ கீழ்ப்‌ பரவை நிலமெல்லாம்‌
தாயோரடியால்‌ எல்லா வுலகும்‌ தடவந்த மாயோன்‌
உன்னைக்‌ காண்பான்‌ வருந்தி எனை நாளும்‌ .
தீயோடுடன்‌ சேர்‌ மெழுகாயுலகில்‌ திரிவேனோ ?” என்றும்‌,
“ உலகமெல்லாம்‌ தாவிய வம்மானை எங்கினித்‌ தலைப் பெய்‌வனே ? ” என்றும்‌,
`” தாவி வையம்‌ கொண்ட எந்தாய்‌! ” என்றும்‌,
“பாமரு மூவுலகுமளந்த பற்ப பாதாவோ !’”’ என்றும்‌
நம்மாழ்வார்‌ பிராட.டிமார்‌ தொட்டாலும்‌ சிவக்கும்‌ திருவடி களைக் கொண்டு காடுமோடெல்லாமளந்த
இந் நீர்மையிலே உருகா நிற்பர்‌,
என்னிது மாயம் — வண்ணமே கொண்டளவாய்‌ என்ற மன்னு நமுசியை வானிற் சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும்‌,
^” ஒருப்படுத்‌ திடுமின்‌ இவளை உலகளந்தானிடைக்கே ”’ என்‌றும்‌, பெரியாழ்‌வாரும்‌,
“ ஓங்கி உலகளந்த உத்தமன்‌ ” என்றும்‌.
“ தேச முன்னளந்தவன்‌ திரிவிக்கரமன்‌ திருக்கைகளால்‌ என்னைத்‌ தீண்டும்‌ வண்ணம்‌ ” என்றும்‌
பொல்லாக்‌ குறளுருவாய்ப்‌ பொற்கையில்‌ நீரேற்று
எல்லாவுலகும்‌ அளந்‌து கொண்ட எம்‌ பெருமான்‌ ‘* என்றும்‌, “
மாணியுருவாயுலகளந்த மாயனைக்‌ காணில்‌ தலைமறியும்‌ ‘” என்றும்‌ ஆழ்வார்‌ திருமகளாரும்‌
இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர்‌.
“ஏக: ப்ராஸீஸரத்‌ பாதமேக: ப்ராச்க்ஷளந்முத |
அபரோப்யதரந்மூர்த்‌ கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம்‌ ॥ ””
ஒருவன்‌ திருவடியை நீட்டினான்‌;
(பிரமனாகிய) மற்றொரு வன்‌ மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான்‌.
(சிவனாகிய) வேறு ஓருவனும்‌ களிப்புடன்‌ அந்நீரைத்‌ தலையிலே தரித்தான்‌.
இவர்களில்‌ எவன்‌ பெரியவன்‌ என்பதை நினைத்‌துப் பாருங்‌கள்‌- என்கிறபடியே
பரம் பொருள்‌ யாரென்பதை நிலை நாட்டித் தருவதன்றோ இவ்வவதாரம்‌.
( திரிவிக்ரமன்‌ )
த்ரயோ விக்ரமாஸ்‌ த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”’
[மூவுலகங்களையும்‌ அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன்‌ | என்றும்‌. –
த்ரயோ லோகா: க்ராந்தா யே ?’
மூன்று உலகங்களும்‌ எவனால்‌ கடக்கப்பட்டனவோ ௮வன்‌ ] என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌. –
த்ரீணி பத; விசக்ரமே ‘* என்றது வேதம்‌.
“ த்ரிரித்யேவம்‌ த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்த்ரித, ஸர்வாந்‌ த்ரிக்ரமோ$ஸி ஜநார்த்தந।”
(*மூவுலகங்களும்‌ முனிவர்களால்‌ சொல்லப்‌ படுகின்‌ றன. ஓ ஜநார்த்தனனே! அவையெல்லாவற்றையும்‌ மூன்‌ றடிகளால்‌ தாவியபடியால்‌ நீ திரிவிக்கரமன் ஆனாய் ]
என்று ஹரி வம்‌ஸத்தில்‌ சொல்லப்பட்ட து.
“பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம்‌ பூர்‌ நரேங்வர।
அந்தரிக்ஷம்‌ த்‌,விதீயேக த்‌,யெளஸ்‌ த்ருத்யேந ஸத்தம |
”’இவ்வுலகம்‌ ஒரு அடி வைப்பினால்‌ அளக்கப்பட்டது.
இரண்‌ டாவது அடிவைப்பினால்‌ அந்தரிஷமும்‌
மூன்றாவதடியால்‌ தேவலோகங்களும்‌ அளக்கப்பட்டன.] என்று
நாரஸிம்ஹ புராணத்திலும்‌ சொல்லப்பட்ட து.
முதலடியினால்‌ ழுலகங்க ளெல்லாவற்றையும்‌.
இரண்டாவதடியினால்‌ மேலுலகங்க ளெல்லாவற்றையும்‌,
மூன்றாவதடியினால்‌ மஹாபலியின்‌ ஸிரஸ்ஸையும்‌ அளந்தவன்‌ என்றும்‌ கொள்ளலாம்‌.
“த்ரிரித்யேவம்‌ த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: |
க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந்‌ த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”’
த்ரி’ என்னும்‌ பதத்தினால்‌ மூன்‌று வேதங்களும்‌ முனிவர்‌ களால்‌ சொல்லப்படுகின்‌றன.
அவை யெல்லாவற்றையும்‌ வியாபித்திருப்பதால்‌ திரிவிக்கரமனெனப்படுகிறாய்‌. | என்று
சொல்லப்பட்டபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

வேதங்களால்‌ மிகவும்‌ ஆதரிக்கப்பட்டதாகையாலும்‌,
பரத்வத்தையும்‌. ஸெளலப்யத்தையும்‌ ஒருங்கே காட்டுவ தாகையாலும்‌.
எல்லார்‌ தலையிலும்‌ ஓக்கத்‌ திருவடியை வைத்த பெருங்குணத்தைப்‌ பேசுவதாகையாலும்‌
திரிவிக்ரமாவதாரம்‌ முதலில்‌ அதுபவிக்கப்பட்டது.

————-

அடுத்த படியாக இத் திரிவிக்ரம மூர்த்திக்கும்‌ காரண பூதமான வாமன மூர்த்தியின்‌ பெருமை பேசப்படுகிறது,
“த்ரஷ்ட்ரூக்‌ ஸ்வகாந்த்யா வாமாநி ஸுகரி நயதி’
காண்ப வர்களைத்‌ தன்‌ ஓளியால்‌ ஸுகமுள்ளவர்களாகச்‌ செய்கிறான்‌ என்று வாமன சப்தத்துக்குப்‌ பொருள்‌. “
ஸர்வாணி வாமாநி நயதி “ˆ [எல்லாரையும்‌ ஸுகமுடையவர்களாகச்‌ செய்கிறான்‌.] என்‌ று
சாந்தோக்ய உபனிஷத்‌ இவ்வர்த்தத்தை ஆதரித்தது,
“ கொள்ள மாளா இன்பவெள்ளம்‌ கோதில தந்திடும்‌ என்‌ வள்ளலேயோ!
வையங்கெண்ட வாமனாவோ!” என்று வேதம்‌ தமிழ்‌ செய்த மாறனும்‌ வாமன சப்தார்த்தத்தை அருளிச் செய்தார்‌.
“ வாமஸ்‌ ஸுந்தர மூர்த்யோ:” என்கிற படியே
மிகுந்த வடிவழகையுடையவன்‌ என்‌ றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
இவ்விரண்டு பொருள்களாலும்‌ அவன்‌ அலௌகிக ஆகர்ஜஹகமான வடிவழகையுடையவன்‌ என்ற தாயிற்று.
கடலைக்‌ குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரம மூர்‌த்தியின்‌ ஸெளந்தர்யமெல்லாம்‌
இச் சிறிய உருவில்‌ வெள்ளமிடுமாகையாலே இப்பெருமானின்‌ அழகு பேச வொண்ணாததாயிருக்கும்‌.
அவாங்மநஸ கோசரமான இவ்வழகிலே வேதமும்‌. புராணங்களும்‌. ஆழ்வார்‌களும்‌ ஆழங்காற்படுவர்கள்‌.
“ ஸர்வாணி வாமாமி நயதி ”’ என்றது வேதம்‌,
ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத்‌ ருக்‌ ”
திவ்யமான சரீரத்தையுடையவன்‌ வாமனன்‌.என்று புராணம்‌ பேசிற்று.
“மரயக் கூத்தா! வாமனா! வினையேன்‌ கண்ணா! கண்‌ கை கால்‌
தூய செய்ய மலர்களா சோதிச்செவ்வாய்‌ முகிழதா
சாயல்‌ சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள்‌
வாசத்தடம்போல்‌ வருவானே! ஒருநாள்‌ காண வாராயே?’ என்றும்‌,
“ஒருமாணிக் குறளாகி நிமிர்ந்த அக் கரு மாணிக்‌கம்‌” என்றும்‌,
°” வாமனன்‌ என்‌ மரதக வண்ணன்‌ தாமரைக்‌ கண்ணினன்‌ காமனைப் பயந்தாய்‌ !” என்றும்‌
“ மாண் குறள்‌ கோல வடிவு காட்டி ” என்றும்‌.
“ குரை கழல்கள்‌ நீட்டி மண்கொண்ட கோல வாமனா” என்றும்‌ நம்மாழ்வாரும்‌,
“சத்திரமேந்தித்‌ தனியொரு மாணியாய்‌ உத்தரவேதியில்‌ நின்ற ஒருவனை
கத்திரியர் காணக்‌ காணி முற்றும்‌ கொண்ட பத்திராகாரன்‌ ”’ என்றும்‌,
“காமர்‌ தாதை கருதலர்‌ சிங்கம்‌ காணவினிய கருங்குழல்‌ குட்டன்‌ வாமனன்‌
“ கொண்ட கோலக்‌ குறளுரு ” என்று: ஆண்டாளும்‌
வேதம்‌ புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்‌.’
(வாமனன்‌ )
இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன்‌றியில்‌ குணங்களாலும்‌ பிறரை ஆநந்திப்பிப்பவன்‌ என்றும்‌ பொருள்‌. கொள்ளலாம்‌.
“மிக்க பெரும்புகழ்‌ மாவலி வேள்வியில்‌ தக்கதிதன்றென்று தானம்‌ விலக்கிய சுக்கிரன்‌ கண்ணைத்‌ துரும்பால்‌ செறிய சக்கரக்கையனே!” _என்றும்‌,
“ மதியினால்‌ குறுள்மாணாய்‌ உலரகு அளந்த கள்வற்கு” என்றும்‌,
“வாட்டமில்‌ புகழ்‌ வாமனனை” என்‌றும்‌,
** வன்மாவைய மளந்க எம்‌ வாமனா!” என்றும்‌,
“ஞாலங்கொள்வான்‌ குறளாகிய்‌ வஞ்சனே!” என்றும்‌.
“கொள்வன்‌ நான்‌ மாவலி மூவடி தா என்ற கள்வனே!” ‘என்றும்‌
அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும்‌ தன்னை அழியமாறி அளிக்கும்‌ அருங்குணத்தில்‌ ஆழ்வார்கள்‌ ஆழங்காற்ப்ட்டார்கள்‌
(வாமனன்‌)
“ வடிவழகைச்சொல்லுகிறதென்‌ னுதல்‌;
நன்மை களைத்‌ தருமவனென்னுதல்‌ ” என்று நம்பிள்ளை ஈட்டில்‌ (2-27-6) அருளிச்செய்தபடியே,
வாம சப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்‌:
வஸ்துக்களைச் சொல்லி வாமனன்‌ ‘ என்று அவைகளைத்‌ தருமவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

“மருவித்‌ தொழும்‌ ‘மனமே தந்தாய் வல்லை காண என் வாமனனே என்று இவ் வர் த்தத்தை அருளிச்செய்தார்‌.
(வாமனன்‌)
ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும்‌.
மஹாபலிக்குப்‌ பாதாளத்திலே நிலையான ஸாம்‌ ராஜ்யத்தைக்‌ கொடுத்தும்‌,
உலகிலுள்ள: எல்லாச் சேதனர்‌கள்‌ தலையிலும்‌ தன்‌ திருவடிகளை வைத்தும்‌, –
இப்படி எல்லாருக்கும்‌ ஸுகத்தைத்‌ தந்தவன்‌ என்றும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
* வாமனன்‌ ‘ என்னும்‌ திருநாமத்துக்குச்‌ சிறிய உருவை உடையவன்‌ என்றும்‌ பொருளுண்டு என்பது பிரஸித்தம்‌.
இதையே எல்லா ஆழ்வார்களும்‌ குறளுரு என்று அருளிச்செய்தனர்‌.
(வாமனன்‌) .
‘ மத்யே வாமந மாஸீநம்‌ விங்வே தே,வா உபாஸதே ‘
ஸர்வ சேதனர்களின்‌ ஹ்ருதயத்திலும்‌ வீற்றிருக்கும்‌ வாமனனை ( எல்லா தேவர்‌ களும்‌ உபாஸிக்கிறார்கள்‌.]
என்று வேதத்தில்‌ சொல்லிய படியே ஹ்ருதய கமலத்தில்‌ அங்குஷ்ட மாத்ரனாயெழுந்தருளி யிருக்கும்‌
பெருமான்‌ வாமன சப்தத்தால்‌ சொல்லப்படுவ தாகவும்‌ கொள்ளலாம்‌.
“வாமனன்‌ நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார்‌ இவ் வர்த்தத்தை என்‌ நெஞ்சகம்‌ என்று உணர்த்தினார்‌.

—————-

ஆக: இப்படி வாமனாவதாரத்தைச்‌ சொன்னபின்‌ இப்படி ப்ரஹ்மசாரியாய்‌ அவதரித்த அவதாரத்திலும்‌
பிராட்டியை விட்டுப்‌ பிரியாமல்‌ மார்பிலே தரித்திருப்பவன்‌ என்று உரைக்கிறது
* ஸ்ரீ தரன் . என்னும்‌ திருநாமம்‌.
“ வாமனனே மாதவா ˆ” என்று ஆழ்வாரும்‌ இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார்‌.
“க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம்‌ வதூ,ம்‌ வக்ஷ:ஸ்த,லாலயாம்‌”
திருமார்பிலே கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால்‌ மறைத்‌துக்‌ கொண்டு வந்தான்‌
என்கிற படியே. மஹாபலியின்‌ யாக சாலைக்கு எழுந்தருளிய போதும்‌. திருமார்பிலிருந்த பிராட்டியை
மான்‌ தோலினால்‌ மறைத்துக்கொண்டு வந்தான்‌ வாமனன்‌ என்று ப்ரஸித்தமிறே.
“ஏவம்‌ ஜகத்ஸ்வாம்‌ தேவதே,வோ ஜரார்தந: |
அவதாரம்‌ கரோத்யேஷா தத்ர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! .
ராக,வத்வே ப,வத்‌ ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி |
அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.அநபாயிநீ ॥
தேவத்வே தே,வதே,ஹயம்‌ மறுஷ்யத்வே ச மாநுஷீ |
விஷ்ணோர்‌ தே,ஹா நுரூபாம்‌ வை கரோத்யேஷாத் மநஸ்த நும்‌।।”
தேவ தேவனாயே பகவான்‌ அவதாரம்‌ செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும்‌ அவனுக்குத்‌ துணையாகத்‌ தோன்று கிறாள்‌.
எம்பெருமான்‌ ராகவனாய்‌ அவதரித்த போது இவள்‌ ஸீதை யானாள்‌.
அவன்‌ கிருஷ்ணனாய்ப்‌. பிறந்தபோது இவள்‌ ருக்மிணியானாள்‌.
மற்ற அவதாரங்களிலும்‌ இவள்‌ விஷ்ணுவை விட்டுப்‌ பிரியாதவளாயிருக்கிறாள்‌.
அவன்‌ தேவனாகும் போது தேவ தேஹத்தைக்‌ கொண்டவளாயும்‌
மனிதனாகப் பிறக்கும்‌ போது மனித வுருவம்‌ கொண்டவளாயும்‌,
இப்படி விஷ்ணு வினுடைய தேஹத்திற்குப்‌ பொருந்தியதாகத்‌ தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹத்தைச்‌ செய்து கொள்ளுகிறா பிராட்டி.என்று
விஷ்ணு புராணத்தில்‌ உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது.
“தாம்‌ ரத்நமிவ அர்ச்சிஷம்‌ புஷ்பமிவ ஸூரபிம்‌ இந்துரிவ சந்த்‌ ரிகாம்‌ அம்ருதமிவ ஸ்வாதுதாம்‌
ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதர :।
“ஹி ஹாது மியம்‌ மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”’ ரத்னம்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,பூ மணத்தை தரிப்பது போலவும்‌ சந்திரன்‌ தன்‌ ஒளியை தரிப்பது போலவும்‌,
அம்ருதம்‌ இனிமையை தரிப்பது போலவும்‌, அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்பந்தத்தினால்‌
தரிக்கிறனாகையால்‌ ஸ்ரீதரனாகிறான்‌.
“மனத்தை ஜயித்தவர்களைக்‌ கீர்த்தி வீட்டுப்‌ பிரிய வொண்ணாமல்‌ விளங்குவது போல்‌
இப் பிராட்டியும்‌ ` இப் பெருமானை விட்டுப்‌ பிரியவல்லளல்லள்‌ ” என்று சொல்லப்பட்ட து.
என்‌ று ஆசார்யாக்‌ரேஸரரான பராசர பட்டர்‌. வியாக்க்யானம்‌ செய்தருளினார்‌.
(ஸ்ரீதரன்‌)
‘ ஸ்ரீ்‌ என்று பெரிய பிராட்டியார்‌ சொல்லப்படுகிறார்‌.
அவரைத் தரிப்பவனாகையால்‌ புருஷோத்தமனும்‌ ஸ்ரீதரன்‌ எனப்படுகிறான்‌.
பகவானுக்கு நாராயண நாமம்‌ அஸாதாரணமாய்‌ விளங்குவது போல்‌
பிராட்டிக்கும்‌ ‘ ஸ்ரீ: ‘ என்னும்‌ இத்திரு நாமம்‌ அஸாதராரணமாயிருக்கிறது.
“ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம்‌ த்வாம்‌ வயம்‌ ‘”
பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:’ என்பது திருநாமம்‌. உம்‌ டெருமையை ஈாங்கள்‌ எப்படிச்‌ சொல்லுவோம்‌]
என்றாரன்றோே ஆள வந்தார்‌.

நாராயண நாமத்தைப்போல்‌ இத் திருநாமமும்‌ பல பொருள்‌களை உடையது.
அவைகளை இனி விவரிப்போம்‌.
” மிங்‌-ஸேவாயாம்‌ ” என்கிற தாதுவிலிருந்து இந்த ஸ்ரீப்தம்‌ உண்டான்தாகக்கொண்டால்‌.
* (அகில சேதனர்‌ களாலும்‌ ) ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌ ”’ என்றும்‌ “
(எம்பெருமானை) ஆஸ்ரயித்திருக்கிறாள்‌ ” என்‌றும்‌ இரு பொருள்கள்‌ ஏற்படும்‌.
°” ய்ரூ-விஸ்தாரே ” என்னும்‌ தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம்‌ தோன்‌ றியதாகக்‌ கொண்டால்‌,
“(அடியார்களுடைய குணங்‌களை) விருத்‌தி யடையச் செய்கிறாள்‌ ” என்றும்‌,
“(தன்‌ குணங்களாலும்‌ விக்‌,ரஹங்களா லும்‌ உலகை யெல்லாம்‌)வியாபித்திருக்‌ கிறாள்‌” என்றும்‌ பொருள்படும்‌;
“’ங்ரு-ஹிம்ஸாயாம்‌” என்கிற தாதவிலே ஸ்ரீ சப்தம்‌ நிஷ்பந்கமாகிறதென்‌ றுகொண்டால்‌, ”
” (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்‌) போக்கடிப்ப வள்‌ ” என்று ஸ்ரீசப்தத்துக்குப்‌ பொருளாகும்‌
“ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம்‌ உண்டாகிற தென்‌ று கொண்டால்‌
^ (அடியார்களுடைய முறையீடுகளைக்‌) கேட்டவள்‌ ^ என்றும்‌,
^” அவைகளை எம்பெருமானைக்‌ கேட்பிப்பவள்‌ ” என்றும்‌ பொருள்படும்‌.
இப்‌ பொருள்களெல்லாம்‌
“” மருணாதி நிகிலாந்‌ தேஷாம்‌ ங்ரூணாதி = குணைர்‌ ஜகத்‌ |
ஸ்ரீயதே சாகிலேர்‌ நித்யம்‌ ஸ்ரயதே ச பரம்‌ ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம்‌ ங்ருணதீமபி ||”
சேதனர்களுடடய எல்லாப்‌ பாவங்களையும்‌ போக்கடிக்கிறாள்‌ ;
உலகம்‌ முழுவதையும்‌ குணங்களால்‌ வியா பிக்கிறாள்‌;
எல்லாச்‌ சேதனர்களாலும்‌ எப்போதும்‌ ஆஸ்ரயிக்கப்படுகிறாள்‌
பரம ப்ராப்யமான பரம புருஷனை ஸர்வ காலமும்‌ ஆஸ்ர யித்திருக்றொள்‌;
(௭ம்பெருமானை) ஆஸ்ரயித்திருப்பவளா கவும்‌, (மற்றவர்களால்‌) ஆஸ்ரயிக்கப்படுபவளாகவும்‌.
(சேதனர்‌ களின்‌ குறைகளைக்‌) கேட்பவளாகவும்‌,- எம்பெருமானை அக்குறைகளைக்‌ கேட்பிப்பவளாகவும்‌
இவளை அறிகிறார்கள்‌ – என்று பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ பேசப்பட்டன,
“ அதில சேதனர்க்கும்‌ ஆஸ்ரயணீயையாய்‌. தான்‌ அவனை ஆஸ்ரயித்து லப்‌,த.ஸ்வரூடையாய்‌,
ஆஸ்ரித குணங்களை விஸ்தரிப்பித்து, ஆஸ்ரித யோக்திகளை வளர்த்து ,
இவர்களை அங்கீகரிக்கைக் கனுகுணமான வாகாரங்களை அவனுக்கு காட்டி அருளுதல்
முதலான ஆகாரங்கள்‌
புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேஷிதங்களாகையாலே, .
இந்த நிருக்திகளெல்லா த்தையும்‌. ஸ்ரீயப்தத்துக்கு அர்‌ த்தமாகஆசார்யர்கள்‌ அனு சந்திப்பார்கள் ” என்று
(அழகியமணவாளப்பெருமாள்‌) நாயனாராச்சான்‌ பிள்ளை சதுஸ் லோக வியாக்கியானத்திலே அருளிச் செய்தார்‌.
இவருடைய திருத் தமப்பனாரான பெரியவாச்சான்‌ பிள்ளை பிராட்டி இச் சேதனனுடைய குறைகளைக்‌ கேட்கும்‌ ப்ரகாரத்‌ தையும்‌,
எம்பெருமானைக்‌ கேட்பிக்கும்‌ ப்ரகாரத்தையும்‌, பரந்த ரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீஸூக்திகள்‌ பின்வருமாறு: —
“ ஸ்ருணாதி’ என்‌ று கேட்குமென்கையாலே சேநரோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
*ஸ்ராவயதி ‘ என்‌ று கேட்பீயாநிற்கும்‌ என்‌கையாலே ஈஸ்வர னோடுண்டான பந்த கார்யத்தைச்‌ சொல்லுகிறது.
அதாவது:- “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜனனியான தேவரீர்‌ திருவடிகளொழுியப்‌ புகலில்லை;
இனி நான்‌ ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய்‌ ரக்ஷித்தல்‌, அவனுக்கு , ஸ்வாதந்தர்ய பாத்ரமாய்‌
நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநந்ய க,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து
ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்‌’ என்று இவன்‌ சொன்ன வார்த்தையைக்‌ கேட்கையும்‌;
அதுக்கு மேலே வெந்நீருக்குக்‌ குளிர் நீர்போலே, நிரங்குச ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்‌” என்‌கிறபடியே
அநபி,ப,வநீயனான ஈஸ்வரனைச்‌ தன்னுடைய போக்யதா தியயத்தாலே பதமாக்கி:
நாயன்தே! இச் சேதனனை அங்கீகரித்தருளீர்‌ ‘ என்னும்‌; :
ஆவதென்‌? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா ‘ என்‌று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான ஸாஸ்த்ர மர்யாதையை அதிலங்கி,த்து
நம்‌ நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம்‌ பண்ணிப் போந்தவனல்‌ லனோ ?
இவனை யங்கீகரிக்கையாவதென்‌ ? ‘ எள்னும்‌ ஈஸ்வரன்‌ *
அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்‌கி ரக்ஷித்கருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; ‘
பொறையை நோக்குகைக்காக ஸாஸ்‌த்ர மர்யாதையைக்‌ குட நீர்வழியவோ?” என்னும்‌ ஈஸ்வரன்‌; ”
சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வபாவிகமான க்ஷமா தத்வத்தைக்‌ குடநீர்‌ வழியவோ?’ என்னும்‌ பிராட்டி; :
ஷமையை நோக்கில்‌, சாஸ்த்ர மர்யாதை குலையும்‌;
சாஸ்த்ர மர்யாகையை, நோக்கினால்‌ க்ஷமா தத்வம்‌ குலையும்‌;
இரண்டும்‌ குலையாதொழிய வேண்டும்‌; செய்யவடுப்பதென்‌?’ என்னும்‌ ஈஸ்வரன்‌; “
கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால்‌ அத்தனையே; அவை இரண்டும்‌ குலையாதபடி வழி சொல்லுகிறேன்‌ :
அப்படியே செய்தருளீர்‌ ‘ என்னும்‌ பிராட்டி; :
இரண்டும்‌ குலையாமல்‌ இச் சேதனனை நோக்க வழியுண்டாமாகில்‌ நமக்குப்‌ பொல்‌ லாதோ?
சொல்லிக் காண்‌! ‘ என்னும்‌ ஈஸ்வரன்‌; :
ஆனால்‌. சாஸ்தர மர்யாதையை விமுகர்‌ விஷயமாக்குவது:
உம்முடைய ஷமையை அபிமுகன் விஷயமாக்குவது;
இரண்டும்‌ ஜீவித்த தாயறும்‌ ` என்னும்‌ விஷயவிபாக;ம்‌ பண்ணிக் கொடுக்கும்‌ பிராட்டி;
அத்தைக்‌ கேட்டு : அழகிய விபாக;ம்‌!’ என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும்‌ ஈஸ்வரன்‌;
ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈஸ்வரன்‌ அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக்‌ கேட்பித்தருளுகையும்‌.
” இப்படிப்‌ பிராட்டியால்‌ புருஷ காரம்‌ செய்யப்பெற்ற சேதனனையே ‘ ஸர்வேஸ்வரன்‌ அங்கிகரிக்கிறான்‌ என்பதை
“என்னைத்‌ தீ மனம்‌ கெடுத்தாய்‌ உனக்கென்‌ செய்கேன்‌? என்‌ சிரீதரனே!” ` என்று ஆழ்வாரும்‌ அருளிச் செய்தார்-

“மாதவன்‌ ‘ என்று
எம்பெருமான்‌ வைகுண்டத்தில்‌ பிராட்டியுடன்‌ எழுந்தருளியிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்‌லிற்று.
‘ஸ்ரீ தரன்‌’ என்று
அவதாரம்‌ செய்யும் போதும்‌ அவளைத் தரித்திருககிறான் என்கிறது.
ஆகையால்‌ புநருக்‌தி தோஷம் இல்லை..

த்வயத்தில் போல் உபாயத்வ உபேயாத்வ இரண்டு ஆகாரங்களும் உண்டு என்று காட்டவே இந்த இரண்டு திரு நாமங்களும்

“—————

இப்படிப்‌ பராவஸ்தையையும்‌,
வியூஹ விபவாவதாரங்‌ களையும்‌ அநுபவித்த பிறகு,
* ஹ்ருஷீ கேஸன்‌ ‘ என்று
ஸர்வேஸ்வரன்‌ மனுஷ்யர்களுடைய ஹ்ருதயத்தில்‌ அந்தர்‌ யாமியாய்‌ நின்று இந்திரியங்களை நியமித்துக் கொண்டு
வீற்றிருக்கும்‌ இருப்பு அநுபவிக்கப்படுகிறது.

ஸ்ரீதரன்‌ என்ற திருநாமத்திற்குப்பின்‌ படிக்கையாலே
இந்த அந்தர்‌யாம்யவஸ்தையிலும்‌ எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியவனாகவே
எழுந்‌தருளி யிருக்கிறான் என்பது தோற்றுகிறது.

“ஹ்ருஷீ காணீந்த்‌ரியாண்யாஹுஸ்‌ தேஷாமீமோ யதோ பூவாந்‌ |
ஹ்ருஷீகேமுஸ்‌ ததோ விஷ்ணு: க்‌யாதோ தேவேஷு கேஸவ: ॥’
ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச்‌ சொல்‌லுகிறார்கள்‌;
அவ்விந்திரியங்களை நியமிப்பவராயிருப்பதால்‌. விஷ்ணு கேசவன்‌ என்னும்‌ திருநாமங்களையுடைய நீர்‌
தேவர்களுள்‌ * ஹ்ருஷீகேசன்‌ எனப்படுகுகிறீர்‌.
என்று ஹரிவம்‌சத்தில்‌ ஹ்ருஷீகேச சப்தார்‌த்தம்‌ சொல்லப்பட்ட து.
( ஹ்ருஷீ கேசன்‌ )
ஹ்ருஷீகேச சப்தத்தினால்‌ பத்து இந்திரியங்களாகிய தலைகளைக்‌ கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்‌: சொல்லப்படுகிறது,
அந்த ராவணனை தன்னைப் பற்றின அறிவாகிய அம்பை ஏவிக்‌ கொல்லுமவனாகையாலே
இப்பெருமான்‌ ஹ்ருஷீகேசனெனப்படுகிறான்‌.
“தஸ ,இந்த்‌,ரியாஙகம்‌ கேரம்‌ யோ மநோரஜநீசரம்‌ |
விவேகமாரஜாலேந மமம்‌ நயதி யோகிநாம்‌ | ”’
யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாகிற பயங்கர ராஷஸனை.
தன்னைப் பற்றிய அறிவாகிய அம்புக் கூட்டங்களால்‌ அடக்குகிறான்‌- என்று சொல்லப்பட்ட தன்றோ.
“இருடீகேசன்‌ எம்பிரான்‌ இலங்கை யரக்கர் குலம்‌ முருடுதீர்த்த பிரான்‌ எம்மான்‌” _என்‌று
நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்தினார்‌. “
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்‌ டக்குலத்தை எடுத்துக்‌ களைந்த இருடீகேசன் தனக்கு ‘
என்று பெரியாழ்வாரும்‌ இதைப்‌ பாசுரமிட்டருளினார்‌.
*இருடீகேசன்‌ என்னும்‌ இத் திரு நாமத்தினாலும்‌ விரோதி நிரஸந ஸீலத்வம்‌ சொல்லப்படுகிறது.
“ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா”என்‌ று பெரியாழ்வார்‌ இக்குணத்தைப்‌ பேசினார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
தன்னைக்‌ கண்டவர்களுடைய இர்திரியங்‌களை வசப்படுத்துமவன்‌.
ரூப ஒவ்தார்ய குணை: பும்ஸாம்‌ த்‌,ருஷ்டி சித்த அபஹாரிணம்‌ “”
தன்னுடைய ரூபம்‌, வண்மை, குணங்கள்‌ முதலியவற்றால்‌ ஆண் பிள்ளைகளுடைய கண்ணையும்‌. மனத்தையும்‌
அபஹரிக்குமவன்‌- என்று சொல்லப்‌ பட்டதன்றோ. ‘
முடியானே ” என்னும்‌ திருவாய்மொழியில்‌ நம்மாழ்வார்‌ :-:
நெடியானே! என்று கிடக்கும்‌ என்‌ நெஞ்சமே” என்றும்‌, ‘*
வஞ்சனே! என்னுமெப்போதுமென்‌ வாசகமே ‘” என்‌ றும்‌. “
தாயவனே! என்று தடவும்‌ என்‌ கைகளே ” என்றும்‌.
“உன்னை மெய் கொள்ளக்‌ காண விரும்புமென்‌ கண்களே ” என்றும்‌. :
‘பண் கொண்ட புள்ளின்‌ சிறகொலி பாவித்துத்‌
திண் கொள்ள ஒர்க்கும்‌ கடந்தென்‌ செவிகளே ” என்றும்‌
தம்முடைய இர்திரியங்கள்‌ ஒவ்வொன்றும்‌ எல்லா இந்திரியங்களின்‌ அ.நுபவத்தையும்‌ ஆசைப்பட்டு
எம்பெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ.
” நாக்கு நின்னை யல்லாலறியாது ” ,
“கண்டு நானுன்னை உகக்க ”
“ வேறொருவரோடென்‌ மனம்‌ பற்றாது ^”
“என்னப்பா என்னிருடீகேசா ” என்று
தம்முடைய இந்திரி யங்களெல்லாம்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ ஈடுபட்டபடியைப்‌ பெரியாழ்வாரும்‌ பேசியருளினார்‌.
தன்னுடைய அவயவ சோபை யாலும்‌. ஆபரண சோபையா லும்‌ பிறருடைய இந்திரியங்களை வசப்படுத்துகிறான்‌ -என்று பெரியாழ்வாரும்‌
“மின்னுக் கொடியும்‌ ஓர் வெண் திங்களும்‌ சூழ்‌ பரிவேடமுமாய்‌
பின்னல்‌ துலங்குமரசிலையும்‌ பீதகச்சிற்றுடையொடும்‌
மின்னில்‌ பொலிந்ததோர்‌ கார்முகில்போலக்‌ கழுத்தினில்‌ காறையொடும்‌
தன்னில்‌ பொலிந்த இருடீகேசன்‌ தளர்நடை’ நடவானோ ”” என்று அருளிச்செய்தார்‌,
“இருடீகேசன்‌ வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல்‌
செய்ய வாயும்‌ முலையும்‌ அழகழிந்தேன்‌ யான்‌” என்று ஆண்டாளும்‌
தன்னுடைய இர்திரியங்‌களெல்லாம்‌ இருடீ கேசனிட்ட வழக்காயிருக்கின்‌றன என்று அருளிச்செய்தாள்‌.
இப்படி எம்பெருமான்‌ ஹ்ருதய கமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்‌துடன்‌ அந்தர்யாமியாய்‌
எழுந்கருளியிருக்‌ கிறான்‌ என்னுமிடத்தை
“ வெள்ளைச்‌ சுரிசங்கொடாழியேந்தித்‌ தாமரைக்கண்ணனென்‌ நெஞ்சினூடே
புள்ளைக்கடாகின்‌ற வாற்றைக்‌ காணீர்‌ என் சொல்லிச் சொல்லுகேன்‌ அன்னைமீர்காள்‌? “என்றும்
“கல்லும்‌ கனை கடலும்‌ வைகுந்த வானாடும்‌
புல்லென்றொழிந்தன கொல்‌ ஏ பாவம்‌!-—வெல்ல
நெடியான்‌ நிறம்‌. கரியான்‌ உள் புகுந்து நீங்கான்‌
அடியேனதுள்ளத்தகம்‌ ?’ _— என்றும்‌ நம்மாழ்வாரும்‌.
“நிற்பதும்‌ ஒர்‌ வெற்பகத்‌(து) இருப்பதுவும் விண்‌ கிடப்பதும்‌
நற்பெரும்‌ திரைக்கடலுள்‌ நானிலாத முன்னெலாம்‌
அற்புதன்‌ அநந்த சயனன்‌ ஆதிபூதன்‌ மாதவன்‌
இருப்பதும்‌ கிடப்பதும்‌ என்‌ நெஞ்சுள்ளே ”’ என்று திருமழிசைப்பிரானும்‌,
“வடதடமும்‌ வைகுந்தமும்‌ மதிள்‌ துவராபதியும்‌ இடவசைகள்‌ இகழ்ந்திட்டென்பால்‌ இடவகை கொண்டனையே” என்றும்‌,
“அநந்தன் பாலும்‌ கருடன் பாலும்‌ ஐது நொய்தாக வைத்தென்‌ மனந்தன்னுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய்‌ எம்பிரான்‌!” என்றும்‌ பெரியாழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌.
வேதமும்‌ “நீல தோயத மத்‌ யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா” முதலான விடங்களில்‌ இவ்விஷயத்தைச்‌ சொல்லிற்று.
“ லாபஸ்தேஷாம்‌ ஜயஸ்தேஷாம்‌ குதஸ்தேஷாம்‌ பராபவ: |
யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ””
எவர்சளுடைய ஹ்ருதயத்தில்‌ காயாம் பூ வண்ணனான பெருமான்‌ நன்கு பொருந்தி யிருக்கிறானோ,
அவர்களுக்கே லாபமும்‌ ஜயமும்‌ உண்டாம்‌;
அவர்களை அவமானம்‌ அணுகாதே என்று ருஷி களும்‌ இவ்விஷயத்தைச்‌ சொன்னார்கள்‌
“நஞ்சீயர்‌ கோயிலுக்கு எழுந்தருளா நிற்க வழியிலே பிள்ளானைக் கண்டு.
‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும்‌ உண்டோ?’ என்று. பிள்ளானைக்‌ கேட்க.
பாஷ்யகாரர்‌ தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்திய।யிருக்கும்‌;
ஆகிலும்‌, எம்பார்‌ ஒருநாள்‌. உபாஸக அநுக்ரஹ ஸஹார்த்தமாக ஆஸ்ரிதருடைய நெஞ்சிலே
விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்‌? என்று அருளிச்செய்யக்கேட்டேன்‌? என்று பணித்தான்‌ ‘
என்று ஈட்டில்‌ எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும்‌. இவ்விடத்தில்‌. அனுஸந்திக்கத் தக்கது.
பிள்ளைலோகாசார்யரும்‌ “அந்தர்யாமித்வமாவது: அந்த:ப்ரவிஸ்ய நியந்‌தா வாயிருக்கை.
ஸ்வர்க்காதி ப்ரவேசாதி, ஸர்வாவஸ்தைகளிலும்‌, ஸகல சேதநர்க்கும்‌ துணையாய்‌. அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே
ஸூ பாஸ்ரயமான திருமேனியோடே ‘கூடிக்கொண்டு அவர்‌ களுக்கு த்‌யேயனாகைக்காகவும்‌,
அவர்களை ரக்ஷிக்கைக்காகவும்‌ -அந்தர் பூதனாய் கொண்டு ஹ்ருதய கமலத்‌திலே எழுந்தருளி யிருக்கும்‌ இருப்பு.” என்று
தத்வ த்ரயத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.
(ஹ்ருஷீகேசன்‌)
` ஹ்ருஷ்‌ ” என்னும்‌ தாது அனந்தத்‌தைக் குறிக்கும்‌.
௧” என்னும்‌ பதம்‌ ‘ஸுகம்‌’ என்னும்‌ பொருளையுடையது.
கம்‌ ப்ரஹ்ம ‘ என்ற வேதவாக்யம்‌ காண்க,
ஸம்‌ என்னும்‌ பதம்‌ ஐஸ்வர்யத்தை உடையவன்‌ என்று பொருள்படுகிறது.
ஆக, ஹ்ருஷீகேசன்‌ ‘ என்னும்‌ திருநாமத்தால்‌, ஹர்ஷத்தையும்‌, ஸெளக்யத்தையும்‌, ஐச்வர்‌ யத்தையும்‌
உடையவன்‌ என்று சொல்லப்பட்டதரகிறது,
“ ஹர்ஷாத்‌ ஸெளக்‌,யாத்‌ ஸுகைஹ்வர்யாத்‌ ஹ்ருஷீகேமத்வமங்நுதே ‘
ஹர்ஷத்தையும்‌. ஸெளக்யத்தையும்‌, ஸுகமான ஐஸ்வர்யத்‌ தையும்‌ உடைத்தாயிருக்கையால்‌
ஹ்ருஷீகேசனாயிருக்கும்‌ தன்மையை அடைகிறாய்‌.
என்று இவ்வர்த்தம்‌ புராணங்‌களில்‌ பேசப்பட்டது.
“ஸூர்யாசந்த்‌,ரமஸோ: மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:।
பேளதயந்‌ ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்‌॥
பேதநாத்‌ ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம்‌ பவேத்‌ ।
அக்‌நீஷோமக்ருதைரேவம்‌ கர்மபி,: பாண்டு,நந்தந ॥
ஹ்ருஷ்கேஸ மோ ஹமீமமா நேர வரதே, லோகபாவந: ||
கேசங்கள்‌ எனப்படும்‌ ஸூர்ய சந்திர கிரணங்களால்‌ நான்‌ உலகிலுள்ளவர்களை யெல்வாம்‌ எழுப்பிக் கொண்டும்‌
தூங்கச்‌ செய்து கொண்டும்‌ வீளங்குகிறேன்‌. இப்படி எழுப்புவதி னாலும்‌, தூங்கச்செய்வதா லும்‌
உலகிற்கு ஹர்ஷம்‌ உண்டாகும்‌. பாண்டவ !
ஸூர்ய சந்திரர்களைக் கொண்டு செய்யப்படும்‌ -இக்கருமங்களால்‌, ஈஸ்வரனும்‌. வரமளிப்பவனும்‌,
லோக பாவனனுமான நான்‌ ஹ்ருஷீ கேசன்‌ எனப்படுகிறேன்‌. என்று மோக்ஷதர்மத்தில்‌
ஹ்ருஷீகேச சப்தத்தின்‌ மற்றொரு பொருள்‌ விவரிக்கப்பட்டது.
* ஸூர்யரங்மிர்‌ ஹரிகேஸ : புரஸ்தாத்‌ ”
ஸுூர்ய கிரணமானது பகவான்‌ ஹரியீன்‌ கேச மெனப்படுகிற. து] என்று வேதமும்‌ இவ்வர்த்தத்தை உணர்த்திற்று.
” கேஸ ‘ சப்தத்தினால்‌ எம்பெருமானுடைய திருக்குழல்கற்‌றை சொல்லப்படுவதாகக்கொண்டு.
கண்டவர்களுக்கு ஹர்ஷத்‌ தைக்கொடுக்கும்‌ மயிர்முடியை உடையவன்‌ என்றும்‌ ஹ்ருஷீ கேச சப்தத்திற்குப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
கேசவன்‌ என்னும்‌ திருநாமத்திற்கும்‌, இப்படி ஒரு பொருள்‌ உரைக்கப்‌ பட்டது.
அங்கு அநுஸந்‌ திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும்‌ படிப்பது.
இப்படிப்‌ பலபொருள்களை உடையதேயானாலும்‌. *அந்தர்யாயியாய்‌ இந்திரியங்களை நியமித்திக் கொண்டு எழுந்‌தருளியிருக்குமவன்‌ ‘ என்னும்‌ பொருளே இங்கு முக்ய மாகக் கடவது.

————–

இம் மாதிரியாக விபவ மூர்த்திகளையும்‌.
அந்தர்யாம் யவதாரத்தையும்‌ அதுபவித்த பிறகு.
இம்மூர்‌த்திகளுக்கெல்லாம்‌ மூலாவதாரமாய்‌ விளங்குபவனும்‌,
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்தி நாதனை அனு ஸந்திக்கிறது
பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமம்‌.
இங்கு சில விஷயங்களை அறியவேண்டும்‌.
அநிருத்த நாராயணனே பிரமனைப்‌ பிறப்பித்தவனென்றும்‌.
எல்லா அவதாரங்‌களுக்கும்‌ மூலமூர்த்தி யென்றும்‌ சொல்லும்‌ ப்ரமாணங்கள்‌ முன்பே காட்டப்பட்டன.
பத்ம நாபன்‌ என்‌ னும்‌ பெயரிலிருந்து ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு நடுவில்‌ படிக்கப்படும்‌
இவ் விஷ்ணு மூர்த்தியே பிரமனைப்‌ படைத்தவரென்று தோற்றுகிறது.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷரார்ணவ நிகேதந 😐
நாக பர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌॥’
என்‌று திருப் பாற் கடலில்‌ துயிலும்‌ பெருமானே கிருஷ்ணன்‌ முதலிய அவதார மூர்த்திகளுக்கு
மூல பூதர்‌ என்றும்‌ சொல்லப்படுகிறது.
இவை எப்படிப்‌ பொருந்தும்‌ எனில்‌:
அநிருத்தனிடமிருந்து ஷீராப்தி நாதன்‌ தோன்‌றுகிறான்‌ என்றும்‌
அவரிடமிருந்து மற்ற அவதாரங்கள்‌ எற்படுகின்‌றன என்றும்‌ கொண்டால்‌
அவதார மூர்த்திகளுக்கு அநிருத்தரையும்‌.
திருப்பாற்கடல்‌ நாதனையும்‌ மூல மூர்த்‌தியாகச்‌ சொல்லலாம்‌.
“ பத்ம நாபாதிகா: ஸர்வே….அநிருத்‌,தாத்‌ ஸமுத்பந்நா பாத்‌, இவேஸ்வரா:” என்று
முன்‌ எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும்‌ இது பொருந்தும்‌.
மஹா ப்ரளயத்தில்‌ .அநிருத்தரும்‌.
நைமித்திக ப்ரளயத்தில்‌ க்ஷீராப்தி நாதனும்‌ பிரமனைப்‌ பிறப்பிப்பதாகக்‌ கொள்ளலாம்‌.
அன்‌றிக்கே
தர்ம்யைக்யத்தாலே இருவரையும்‌ ப்ரஹ்மோத்பா தகர்களாகக்‌ கூறுவதாகவும்‌ கூறலாம்‌,
புருஷ ஸூக்தத்திலும்‌, *பாதேள5ஸ்ய” என்று அநிருத்தரை எடுத்து. :
இஹாபவாத்புக:” [இங்கு மறுபடியும்‌ அவதரித்தார்‌] என்று அவருடைய அவதார பூ,தரான ஷீராப்‌தி நாதனைச்‌ சொல்லுவதாகவும்‌,
“ததோ விஷ்வங்‌ வ்யக்ராமத்‌’ என்று அவருடைய அவதார வ்யாப்தியைச்‌ சொல்லுவதாகவும்‌,
* தஸ்மாத்‌ விராட,ஜாயத’ என்று
அந்த ஷீராப்தி நாதனிடமிருந்தே பிரமன்‌ பிறந்தான்‌ என்று சொல்லுவதாகவும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும்‌ பத்மநாபே அமரப்‌ரபு,:’ என்று
வ்யூஹத்தில்‌ நான்காவதான அநிருத்தரைக் குறித்தும்‌,
பத்மநாப; ப்ரஜாபதி: ‘ என்று முதல்‌ அவதாரமான விஷ்ணுவைக் குறித்தும்‌
பத்மநாப சப்தம்‌ ப்ரயோகிக்கப்‌ பட்டிருப்பதையும்‌,
பத்மநாப: ப்ரஜாபதி: ‘ , என்‌ற விடத்தில் பாஷ்யத்தில்‌
நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயம்‌ சைதத்‌ த்‌ஸஏஷ்டவ்யம்‌ ”
இந்த ப்ரஹ்ம ஸ்ருஷ்டி நைமித்திக ஸ்ருஷ்டி ப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும்‌ |
என்‌று பட்டர்‌ அருளிச் செய்ததையும்‌ இங்கு அதுஸந்திப்பது.

இனி இப்பத்மநாப சப்தார்த்தை விவரிப்டோம்‌.
(பத்மநாபன்‌) =
“” ஸர்வ ஜகத் காரணம்‌ யஸ்ய ஸ:””
எல்லா ஜகத்துக்கும்‌ காரணமான “பத்மத்தை . நாபியில்‌ உடையவன்‌ எவனோ அவன்‌.
என்று சங்கர பாஷ்யத்தில்‌. பொருளுரைக்கப்பட்டது . ”
பாமரு மூவுலகும்‌ படைத்த பற்பநாபாவோ!” என்று ஆழ்வாரும்‌. –
* ஊழிமுதல்வன்‌…….. பாழியந்தோளுடைய பற்பநாபன்‌ ” என்று ஆண்டாளும்‌
பத்மநாப சப்தத்திற்கு அர்த்தம்‌ பண்ணினார்கள்‌.
“ தாதோத்‌ தார: ஸம்விமரதி பஞ்சவர்‌ஷமாதாநி து ”
(பத்ம ஸம்பவனான ) பிரமன்‌ (தாமரைக் கொடியில்‌ ) மேல்‌ நோக்கியவனாய்‌ ஐநூறு வருஷங்கள்‌ நுழைந்கான்‌.-என்றும்‌
“ தர்த்துர்‌ நாப்‌,யாம்‌ புஷ்கரம்‌ ப்ராதுர்பவதி”
ஸர்வ லோகத்தை தரிப்பவனான நாராயணனுடைய நாபியில்‌ தாமரை உண்டாயிற்று.] என்றும்‌,
^ அஜஸ்ய நாபாவத்‌,யேகமர்ப்பிதம்‌ ”
பிறப்பிலி யான பெருமானின்‌ நாபியில்‌ ஒரு ( தாமரை ) தோற்றுவிக்கப்பட்டது.] என்‌றும்‌,
‘யந் நாபி பத்மநாப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர்‌ விஸ்வஸ்ருட்‌, விஸ்வரூப:”
உலகை உருவ மாகச்‌ கொண்டவனும்‌, உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன்‌
எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன்‌நினானோ ….] என்றும்
மஹா உப நிஷத்திலும்‌, “ ப்ரஹ்ம வை ப்‌,ரஹ்மாணம்‌ புஷ்கரே$ஸ்ருஜத்‌”
ப்ரஹ்மம்‌ பிரமனைத்‌ தாமரையில்‌ தோற்று வித்தது என்றும்
அதர்வண வேதத்திலும்‌, “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸம்ப,வத்‌””
அந்தப்‌ பிரமன்‌ ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில்‌ தோன்‌ நினான்‌– என்றும்‌
பல வாக்கியங்களால்‌ வேதத்திலும்‌
“யத்‌ தத்‌ பத்மமபூத்‌ பூர்வம்‌ தத்ர ப்‌ரஹ்மா வ்யஜாயத |
` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: இத்யவதரர்யதாம்‌ |
ஸரிவாத்‌ ஸ்கந்தஸ்‌ ஸ்ம்பபபூவ ஏதத்‌ ஸ்ருஷ்டி சதுஷ்டயம்‌ (|
(பகவானுடைய’ உந்தியிலிருந்‌து) யாதொரு தாமரை முன்‌ உண்டாயிற்றோே அதில்‌ பிரமன்‌ பிறந்தான்‌,
பிரமனிட மிருந்தே-சிவன்‌ பிறந்தானென்று அறியத்தக்கது.
சிவனிட மிருந்து ஸ்கந்தன்‌ உண்டானான்‌.
இது (முதலில்‌ ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும்‌
“கதாசித்‌ தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்‌,யாம்‌ காமாத,ஜாயத |
திவ்யமஷ்டதனம்‌ பூரி பங்கஜம்‌ பார்த்தி,வம்‌ மஹத்‌ ॥
யஸ்ய ஹேமம திவ்யா கர்ணிகா மேருருச்யதே |”
அப் பெருமான்‌ ஒரு ஸமயம்‌ யோக நித்திரை செய்து கொண்டிருக்கும் போது. அவனுடைய ஸங்கல்பத்தினால்‌
அவனுடைய திருநாபியில்‌, எட்டு தளத்தையுடையதும்‌, ப்ருதிவி ஸம்பந்த முள்ளதும்‌, மிகப்டெரியதும்‌ அழகியதுமான தாமரை உண்டாயிற்று.
அதனுடைய ஸுவர்ண மயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்‌படுகிற து. என்று
பாத்ம புராணத்திலும்‌ சொல்லட்பட்ட து.
“’நாவியுள்‌ நற்கமல நான்முகனுக்‌ கொருகால்‌ தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும்‌.
நாட்டைப் படையென்றயன்‌ முதலாத்‌ தந்த நளிர்‌ மாமலருந்தி
வீட்டைப்‌ பண்ணி விளையாடும்‌ விமலன்‌ தன்னைக் கண்டீரே ” என்று ஆண்டாளும்‌
தாமரை மேல்‌ அயனவனைப்‌ படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும்‌,
“போது தங்கு நான்முகன்‌ மகன்‌ அவன்‌ மகன்‌ சொலில்‌
மாது தங்கு கூறன்‌ ஏறதூர்தி என்று
வேதநூல்‌ ஓதுகின்‌றதுண்மை அல்லதில்லை
மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும்‌.
** அயனைப்‌ படைத்ததோர்‌ எழில்‌ உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும்‌.
‘ அங்கமலத்தயன்‌ ” என்றும்‌. “்‌
ஒருவனை உந்திபூமேல்‌ ஓங்குவித்து” என்றும்‌, திருமங்கைமன்னனும்‌.
“செய்ய மறையான்‌ நின்‌ உந்தியான்‌” என்‌ றும்‌,
“நான்முகற்குப்‌ பூமேல்‌ பகரமறை பயந்த பண்பன்‌ ` என்றும்‌ பொய்கைப்பிரானும்‌. —
இரும் தண்‌ கமலத்‌ திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத்‌ தந்தாய்‌” என்று பூதத்‌ தாழ்வாரும்‌.
“அலரெடுத்த உந்தியான்‌”என்‌ று பேயாழ்வாரும்‌,
“’ ஒரு தானாகித்‌ தெய்வ நான்முகக்‌ கொழுமுளை ஈன்று
முக்‌ கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம்‌ விளைத்த
உந்தி மாயக்கடவுள்‌ மாமுதலடியே”’ என்று நம்மாழ்வாரும்‌
எம்‌ பெருமான்‌ ஸர்வ ஜகத் காரணமான பத்மத்தை நாபியிலே கொண்டு விளங்குவதை அநுபவித்தார்கள்‌.

“’அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:”
எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம்‌ உண்டாயிற்று] என்றார்‌ ஆளவந்தாரும்‌.
“த்ரயோ தேவாஸ்‌ துல்யாஸ்‌ த்ரிதயமிதமத்‌,வைதமதி,கம்‌ த்ரிகாத,ஸ்மாத்‌ தத்த்வம்‌ பரமிதி விதர்க்காந்‌ விகடயர்‌ |
நாபீ பத்‌,மோ ப்‌ரூபங்கீ,பரவதி,தி ஸித்‌,த,ாந்தயதி ந: |”
மும்மூர்த்திகளும்‌ ஸமர்‌’ மூவரும்‌ ஒன்றே “மூன்றைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது பரதத்வம்‌ ‘ என்னும்‌
விதண்டா வாதங்களைப்‌ போக்கடிப்பதாய்‌,
பிரம ருத்திரர்களுக்கு முதற்கிழங்கரயிருப்பதுமான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து
அவனையொழிந்த மற்றவையெல்லாம்‌ அவனுடைய புருவ நெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித்‌ தருகின்‌ றது.
என்று பட்டர்‌ அருளிச்‌ செய்தபடியே பரத்வ நிர்த்தாரணம்‌ செய்துதரும்‌ திருநாமமன்றோ இது.
(பத்மநாபன்‌)
” பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:””
தாமரை போன்‌ற உந்தியை உடையவன்‌ | என்‌ றும்‌ பொருள் கொள்ளலாம்‌.
“ ஹ்ருத்பத்மஸ்ய நாபெள மத்‌,யே ப்ரகாமாமாஈத்வாத்‌ வா பத்மநாப;””’
ஹ்ருதய கமலத்தின்‌ ஈடுவில்‌ பிரகாசிப்பதால்‌ பத்மநாபனாகிறான்‌.. என்றும்‌ சங்கரர்‌ பொருள் கெண்டார்‌.
இப்படி ஸகலாவதார மூல மூர்த்தியான பத்மநாபாவதாரம்‌ அநுபவிக்கப்பட்டது.

————–

அடுத்தபடியாக அப்‌ பெருமானுடைய முக்யாவதாரமாகிய க்ருஷணாவதாரம்‌ தாமோதர நாமம்‌ அநுபவிக்கப்படுகிறது.
“பத்மநாபன்‌ என்னும்‌ திருநாமத்தினால்‌ அவதாரத்திலும்‌ பரத்வம்‌ பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது.
தாமோதரன்‌’ என்று ஓரிடைச்சிக்குக்‌ கட்டவும்‌ அடிக்கவுமாம்படி நின்ற ஸெளலப்‌, யத்தின்‌ எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது.
* தாம” என்று விந்‌-16 கயிற்றுக்குப்‌ பெயராகையால்‌ கயிற்றை வயிற்றிலுடையவன்‌ என்று
தாமோதர நாமத்திற்குப்‌ பொருளாகிறது.
“ தயோர்‌ மத்‌,யக,தம்‌ பத்த,ம்‌ த௱ம்நா கடம்‌ தயோத;ரே |
ததங்ச தமோத,ரதாம்‌ ஸ யயெள தாமப,ந்த நாத்‌ |!”
அந்த யசோதையால்‌ வயிற்றில்‌ கயிற்றினாலே கட்டப்‌ பட்டவனாய்‌ அம்மரங்களினிடையில்‌ சென்றான்‌.
கயிற்றால்‌ கட்டப்பட்டதால்‌ தாமோதரனாயிருக்கும்‌ தன்மையை அடைந்தான்‌ என்று சாஸ்த்ரம்‌ சொல்லிற்று,
“தாம்கா சைவோத;ரே பத்‌,த்‌,வா ப்ரத்யப,த்‌,நாதுலூகலே”
கயிற்றால்‌ வயிற்றில்‌ கட்டி உரலில்‌ பிடித்துக்‌ கட்டினாள்‌-என்று விஷ்ணு புராணத்திலும்‌ இத்திருநாமம்‌ விவரிக்கப்‌ பட்டது.
ஸர்வ ஸ்மாத் பரன்‌ ஓரிடைச்சியின்‌ கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு
“‘எத்திறம்‌! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே” என்று நம்மாழ்வார்‌ ஆறு மாதம்‌ மோஹித்துக்‌ கிடந்தார்
“கண்ணிநுண்‌ சிறுத்தாம்பி னால்‌ கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்‌’” என்று மதுரகவிகளும்‌.
“கண்ணிக்‌ குறுங்கயிற்றால்‌ கட்டுண்டான்‌ காணேடீ ” என்று திருமங்கையாழ்வாரும்‌
இந்நீர்மையிலே ஈடுபட்டனர்‌.
“தாமாநி பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தமோத,ரோ ; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித:
தாம சப்தத்தினால்‌ சொல்லப்படும்‌ லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம்‌ ( பிரளயகாலத்தில்‌ )
அவனுடைய வயிற்றினுள்‌ விளங்குகிறபடியால்‌ ஸ்ரீதரன்‌ தாமோதரனாகிறான்‌.
என்று புராணத்தில்‌ சொல்லியபடியும்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.
“‘ தாமோதரனைத்‌ தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார்‌ இவ்வர்த்தத்தை உணர்த்‌தினார்‌.
“தமாதி, ஸாதநேந உதாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா இதி தமோதர ;,:’
தமம்‌ முதலிய ஸாதனங்‌களால்‌ உதாரமாய்‌ ( உயர்ந்ததாய்‌ ) விளங்கும்‌ புத்தி தமோதரா ‘ எனப்படும்‌.
அந்த புத்தியால்‌ அறியப்படு மவன்‌ தாமோதரன்‌ . என்றும்‌ சங்கரர்‌ பொருள் உரைத்தார்‌.
“தாமாத்‌, தமோதரம்‌ விது;
தாமோதரனை தாமத்தினால்‌ அறிகிறார்கள்‌ என்ற பகவத் வசனம்‌ இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம்‌.
“ தேலாநாம்‌ ஸூகமும் ஸித்வாத்‌ த;மாத்‌, தமோதரம்‌ விது; “` தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும்‌.
கயிற்றினால்‌ கட்டப்பட்டகாலும்‌ தாமோதரனென்று அறிகிறார்கள்‌.
என்ற ப்ரமாண த்தின்‌ படியும்‌ பொருள்‌ சொள்ளலாம்‌.

ஆக. இப்பன்னிரு நாமங்களின்‌ பொருளும்‌ விவரிக்கப்‌ பட்டதாயிற்று.
வாஸுதேவன்‌ முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும்‌
மூன்று மூன்று மூர்த்திகளாகத்‌ தோன்‌றிய கேசவாதி மூர்த்யந்தரங்களுள்ளதாகவும்‌,
இவர்‌கள்‌ நெற்றி முகலிய அவயவங்களில்‌ நின்‌று கொண்டு சரிரத்தை ரக்ஷிக்கறார்களென்றும்‌.
தியானிப்பவர்களுடைய தாபங்களைப்‌ போக்கடிக்கிறார்களென்றும்‌
பாஞ்சராத்ர சாஸ்த்ரத்‌தில்‌ ப்ரதிபாதிக்கப்பட்டது.
இக் கேசவாதி நாமங்‌ கள்‌ அவர்களைச்‌ சொல்லுவதாகவும்‌ கொள்ளலாம்‌.

———————————–

தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம்
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

————

கேசவ (2)
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4

கேசவநம்பீ (1)
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3

கேசவற்கு (1)
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1

கேசவன் (10)
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/2
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ – நாலாயி:381/3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

கேசவன்-தன் (1)
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2

கேசவனே (2)
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3

கேசவனை (6)
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/1,2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

கேசவனோடு (1)
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3

கேசவா (10)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/3,4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1

கேசனே (1)
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

————-

நாராயணமே (9)
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1538/4
நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1539/4
நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1540/4
நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ_நாராயணமே – நாலாயி:1541/4
நடையா உண்ண கண்டான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1542/4
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4

நாராயணன் (12)
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
நம்மை உடையவன் நாராயணன் நம்பி – நாலாயி:563/2
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
நற்பொருள் தான் நாராயணன் – நாலாயி:2394/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4

நாராயணன்-தன்னை (1)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2

நாராயணனாலே (1)
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4

நாராயணனுக்கு (1)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1

நாராயணனே (4)
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று – நாலாயி:3258/2

நாராயணனை (2)
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

நாராயணா (17)
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/2

நாராயணாய (3)
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

—————

மாதவ (1)
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1

மாதவம் (1)
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

மாதவர் (1)
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மாதவன் (20)
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/3,4
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/1,2
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மாதவன்-தன் (3)
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2

மாதவன்-பால் (1)
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1

மாதவனாரே (1)
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4

மாதவனே (9)
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/2,3
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/1,2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
வாயான் மாதவனே – நாலாயி:3940/4

மாதவனை (9)
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் – நாலாயி:2387/3
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும் – நாலாயி:2446/2
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/3,4
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1

மாதவனோடு (1)
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4

மாதவா (8)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/1,2
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/2,3
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/2,3
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1

————

கோவிந்தற்கு (1)
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1

கோவிந்தன் (20)
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

கோவிந்தன்-தன் (2)
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

கோவிந்தன்-தனக்கு (1)
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

கோவிந்தனாம் (1)
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

கோவிந்தனாரே (2)
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

கோவிந்தனுக்கு (1)
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

கோவிந்தனுடைய (1)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

கோவிந்தனே (1)
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

கோவிந்தனை (5)
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

கோவிந்தனோடு (2)
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

கோவிந்தா (15)
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

கோவியர் (1)
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3

கோவினார் (1)
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2

கோவினை (5)
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

கோவே (22)
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

கோவை (14)
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

——–

விட்டுசித்தர் (2)
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2

விட்டுசித்தன் (30)
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/3
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/3,4
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2

விட்டுசித்தன்-தன் (1)
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4

விட்டுவே (2)
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4

———–

மதுசூத (2)
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2

மதுசூதற்கு (1)
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3

மதுசூதன் (8)
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3

மதுசூதன்-தன்னை (1)
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2

மதுசூதனன் (5)
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4

மதுசூதனன்-தன்னை (1)
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3

மதுசூதனனே (2)
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4

மதுசூதனனை (2)
வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1

மதுசூதனா (2)
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மதுசூதனே (2)
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மதுசூதனை (2)
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மதுசூதனையே (1)
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மதுசூதா (5)
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1

————–

திரிவிக்கிரமன் (5)
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1

திரிவிக்கிரமனையே (1)
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

திரிவிக்கிரமா (1)
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3

———-

வாமன் (3)
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/2,3
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண் – நாலாயி:2693/1

வாமன (2)
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1

வாமனன் (13)
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/2,3
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/1,2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4

வாமனனாய் (2)
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4

வாமனனார் (1)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/1,2
வாமனனே (4)
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா – நாலாயி:3256/2
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1

வாமனனை (2)
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1

வாமனா (4)
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/1,2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1

வாமனாவோ (1)
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2

—————

சீதனையே (1)
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
சிதை_மணாளனை (1)
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4

சீதை_மணாளா (1)
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
மாதவன் (1)
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
சீரன் (1)
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
சீராமா (2)
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
சீராளா (1)
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3

சீரான் (2)
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/3,4

சீரானை (3)
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4

————–

இருடீகேசன் (6)
தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1

இருடீகேசன்-தனக்கு (1)
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3

இருடீகேசனுக்கு (1)
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4

இருடீகேசனே (1)
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

இருடீகேசா (3)
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4

————-

நாபனுக்கு (1)
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4

நாபி (1)
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3

நாபியான் (1)
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
பற்பநாபன் (4)
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1

பற்பநாபனையே (1)
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

பற்பநாபனோடும் (1)
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2

பற்பநாபா (3)
பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1

பற்பபாதன் (1)
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4

பற்பபாதா (1)
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

———

தாம்பால் (4)
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/2,3
தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக – நாலாயி:2602/1

தாம்பினால் (2)
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/2,3

தாம்பு (1)
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2

தாம்புகளால் (1)
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/3,4

தாம்பே (1)
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு – நாலாயி:2103/4
தாமோதரற்கு (1)
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2

தாமோதரன் (6)
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/3,4
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3
சார்வே தவநெறிக்கு தாமோதரன் தாள்கள் – நாலாயி:3924/1

தாமோதரன்-தன் (1)
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4

தாமோதரனாய் (1)
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2

தாமோதரனார் (1)
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/1,2

தாமோதரனே (1)
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4

தாமோதரனை (3)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/4,5
தாமோதரனை தனிமுதல்வனை ஞாலம் உண்டவனை – நாலாயி:3086/1

தாமோதரா (8)
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2

———–

(துவாதச திருநாமங்கள் வரிசையிலே இப்பாசுரம் -கேசவன் நாராயணன் மாதவன்
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு-பல்லாண்டு பாட -ஆள்செய்ய -கைங்கர்யம் செய்ய தூண்டுகிறார் )

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–பெரிய திருவந்தாதி-65-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ திவாகர அஷ்டோத்திர சதநாம வளி — ஸ்ரீ யதிராஜ மங்களம் ஸ்லோகம் —

January 28, 2023

ஸ்ரீ ராமானுஜ திவாகர அஷ்டோத்திர சத நாம வளி –

ஓம் ஸ்ரீ ராமானுஜாய நம

ஓம் புஷ்கராஷயா நம

ஓம் யதீந்திராயா நம

ஓம் கருணாராயா நம

ஓம் காந்திமத்யாத்மஜாயா நம

ஓம் ஸ்ரீ மதே நம

ஓம் லீலா மானுஷ விக்ரஹயா நம

ஓம் சர்வ ஸாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞயா நம

ஓம் சர்வஜ்ஞயா நம

ஓம் சஜ் ஜன ப்ரியா நம

ஓம் நாராயண க்ருபா பாத்ராயா நம

ஓம் ஸ்ரீ பூத புர நாயக நம

ஓம் அநகாய நம

ஓம் பக்த மந்தாராயா நம

ஓம் கேசவ ஆநந்த வர்த்தனாய நம

ஓம் காஞ்சி பூர்ண ப்ரிய ஸஹாயா நம

ஓம் ப்ரணரார்த்தி விநாசனாய நம

ஓம் புண்ய சங்கீர்த்தனாய நம

ஓம் புண்யாய நம

ஓம் ப்ரஹ்ம ராஷச மோசகாய நம

ஓம் யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேத குடாரகாய நம

ஓம் அமோகாய நம

ஓம் லஷ்மண முனயே நம

ஓம் சாரதா சோக நாசனாய நம

ஓம் நிரந்தரம் அஜ்ஞான நிர்மோசன விசஷணாயே நம

ஓம் வேதாந்த த்வய சாரஜ்ஞாய   நம

ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம

ஓம் பராபிப்ராய தத்வஜ்ஞாய   நம

ஓம் யாமுந அங்குலி   மோசகாய நம

ஓம் தேவராஜா க்ருபா லப்த ஷட் வாக்யார்த்த மஹோ ததயே நம

ஓம் பூர்ணார்ய லப்த  சந்மந்த்ராய நம

ஓம் சௌரி பாதாப்ஜ ஷட் பதாய நம

ஓம் த்ரிதண்ட தாரினே நம

ஓம் ப்ரஹ்மஜ்ஞாய நம

ஓம் ப்ரஹ்ம ஜ்ஞான பராயணாய நம

ஓம் ரங்கேச கைங்கர்ய ரதாய நம

ஓம் விபூதி த்வ்ய நாயகாய நம

ஓம் கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ர ராஜ ப்ரகாசகாய நம

ஓம் வர ரங்க அநுகம்பாத்த  த்ரவிடாம் நாய பாரகாய நம

ஓம் மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிட ஆம்நாயா தத்வதீயே நம

ஓம் சதுஸ் சப்ததி சிஷ்டாப்யாய நம

ஓம் பஞ்சாசார்யா பதாச்ரயாய நம

ஓம் பிரபீத விஷ தீர்த்தாம்பசே நம

ஓம் ப்ரகடீ க்ருத வைபவாய நம

ஓம் பிரணதார்த்தி ஹராசார்யா தத்த பிஷைக போஜனாயா நம

ஓம் பவீத்ரா க்ருத கூரேசாய நம

ஓம் பாகி நேயத்ரி தண்டகாய நம

ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரகாஸகாய நம

ஓம் ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவாய நம

ஓம் தேவ ராஜ அர்ச்சந ஆராதாய நம

ஓம் மூக முக்தி ப்ரதாயகாய நம

ஓம் யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாத்ரே நம

ஓம் மந் நாதாய நம

ஓம் தரணீ தராய நம

ஓம் வரதாசார்ய சத் பக்தாய நம

ஓம் யஜ்ஞே சார்த்தி  விநாசகாய நம

ஓம் அனந்தாபீஷ்ட பலதாய நம

ஓம் விடலேந்திர ப்ரபூஜீதாய நம

ஓம் ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயண அர்த்தகாய நம

ஓம் பிரபத்தி தர்மக ஏக ரதாயா நம

ஓம் கோவிந்தாய பிரியாநுஜாய நம

ஓம் வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞாய நம

ஓம் போதாயன மதாநுகாய நம

ஓம் ஸ்ரீ பாஷ்யாதி மஹாக்ரந்த காரகாய நம

ஓம் கலி நாசனாய நம

ஓம் அத்வைத மத விச்சேத்ரே நம

ஓம் விசிஷ்டாத்வைத பாரகாய நம

ஓம் குரங்க நகரீ பூர்ண மந்திர ரத்நோபதேசகாய நம

ஓம் விநா சிதாகில மதாய நம

ஓம் சேஷீ க்ருத ரமாபதயே நம

ஓம் புத்ரீ க்ருத சடாராதினே நம

ஓம் சடஜித் த்ருண மோசகாய நம

ஓம் பாஷா தத்த ஹயக்ரீவாய நம

ஓம் பாஷ்யகாராய நம

ஓம் மகாயசஸே நம

ஓம் பவித்ரீ கருட பூ பாகாய நம

ஓம் கூர்ம நாத ப்ரகாசகாய நம

ஓம் ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்க சக்ர  ப்ரதாயகாய நம

ஓம் ஸ்ரீ வெங்கடேச ச்வசுராய நம

ஓம் ஸ்ரீ ராம சக தேசிகாய நம

ஓம் க்ருபாமாத்ர ப்ரசன்னார்யாய நம

ஓம் கோபிகா மோஷ தாயகாய நம

ஓம் சமீசீ நார்ய சச் சிஷ்ய சத் க்ருதாய நம

ஓம் வைஷ்ணவ ப்ரியாய நம

ஓம் க்ருமி கண்ட  ந்ருப த்வம்சீனே நம

ஓம் சர்வ மந்திர மஹோததயே நம

ஓம் அங்கீ க்ருதாந்திர பூர்ணார்யாய நம

ஓம் சால க்ராம ப்ரதிஷ்டிதாய நம

ஓம் ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேசாய நம

ஓம் விஷ்ணு வர்த்தன ரஷகாய நம

ஓம் பௌத்த த்வாந்த சஹாஸ்ராம்சவே நம

ஓம் சேஷ ரூப ப்ரதர்சகாய நம

ஓம் நகரீ க்ருத வேதாத்ரினே நம

ஓம் டில்லீச்வர சமர்ச்சித்தாய நம

ஓம் நாராயண ப்ரடிஷ்டாத்ரே நம

ஓம் சம்பத் புத்ர விமோசகாய நம

ஓம் சம்பத் குமார ஜனகாய நம

ஓம் சாது லோக சிகாமணயே நம

ஓம் ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜாய நம

ஓம் பூர்ண மநோரதாய நம

ஓம் கோதாக்ரஜாய நம

ஓம் திக் விஜேத்ரே நம

ஓம் கோதா பீஷ்ட ப்ரபூரகாய நம

ஓம் சர்வ சம்சய விச்சேத்ரே நம

ஓம் விஷ்ணு லோக ப்ரதாயகாய நம

ஓம் அவ்யாஹத மஹத்வர்தம்மே நம

ஓம் யதிராஜாய நம

ஓம் ஜகத்குரவே நம

ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம்
யா படத் ச்ருணுயாத் வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந  மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ் ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ யதிராஜ மங்களம் -ஸ்லோகம் —

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-

நாத பன்மாஷ ராமார்ய பாத பங்கஜ சேவிநே
சேவ்யாய சர்வ யமி நாம் யதிராஜாய மங்களம் –2

பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ராயாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-

சம்சேவ்ய யாமு நாசார்யமே கலவ்யோசம் யஹம் குரோ
அன்யன்னேதி பதே நித்யம் யதிராஜாய மங்களம் –4

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிச்ரோக்த ரஹச்யார்த்தவிதே சதா
தேவராஜா ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் -5

ஸ்ரீ மத் கோஷ்டீபுரீ பூர்ண திவ்யாஜ்ஞாம் குர்வதே முதா
ச்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் –6

கூரேச குருகா நாத தாசரத்யாதி தேக்கா
யச்சிஷ்யா பாந்தி தே தஸ்மை யதிராஜாய மங்களம் -7

சரமச்லோக தத்வார்த்தம் ஞ்யாத்வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தத்தே தம் ஸ்வ கீயோப்யோ யதிராஜாய மங்களம் -8

ஸ்ரீ சைல  பூர்ணக்ருபயா ஸ்ரீ ராமாயண மர்த்ததா
பக்த்யா யேன ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம் –9

சங்கராதி குத்ருஷ்டீ  நாம் பாஹ்யா நாம் நித நாய்ச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் -10-

குர்வந்துப நிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தயா பரதந்த்ராய பாஷ்யகராய மங்களம் -11

த்ரமிடோப நிஷத்வ்யாக்யாம் வதேதி மத நுஜ்ஞயா
சாசதே குருகேசம்தம் பாஷ்யகராய மங்களம் –12

கத்வாது சாரதா பீடம் வ்ருத்திம் போதைய நச்யச
அவலோக்யா கதா யாஸ்து பாஷ்யகராய மங்களம் -13

பரமாணும்ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத் பாஷ்யகராய மங்களம் –14

ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத்  தஸ்யாபி பாஷ்யகராய மங்களம் -15

தத்வா வ்ருஷகிரி சாஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரமப்ரீதி யுக்தாய பாஷ்யகராய மங்களம் –16

ஸ்ந்யாசம் குருதே காஞ்ச்யாம் அநந்த சரஸீ தடே
வரதே விசத பாராய பாஷ்யகாராய மங்களம் -17-

ஸ்ரீ மத் மகா பூத புரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூ தாயா யதிராஜாய மங்களம் -18

சேஷதிவா சைன்யநாதோவா ஸ்ரீபதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மகா ப்ராஜ்ஞை எதிராஜாயா மங்களம் –19

ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிதாம்
ப்ரபன்ன சார்த்தவாஹாய யதிராஜாய மங்களம் -20-

வேதாத்மக  ப்ரமாணே  சத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயண சஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதிசேகர–21

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 471-502-திரு நாமங்கள்–

December 20, 2022

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

(திருநாமங்கள் 471 முதல் 482 வரை – தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)
(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

————–

471. வத்ஸராய நமஹ (Vathsaraaya namaha)

தர்ஷன் ஹர்ஷன் என்ற இரண்டு நண்பர்கள் பண்டரிபுரத்தில் சந்திரபாகா நதிக்கரையிலே அமர்ந்திருந்தார்கள். தாங்கள் உண்பதற்காக இருவரும் ரொட்டிகள் எடுத்து வந்திருந்தார்கள். தர்ஷன் ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தார். ஹர்ஷன் மூன்று ரொட்டிகள் வைத்திருந்தார்.அப்போது அந்த வழியே வழிப்போக்கர் ஒருவர் வந்தார். அவர் இருவரையும் பார்த்து, “நான் நீண்ட நாள்களாகப் பசியால் வாடி வருகிறேன்! எனக்கு ஏதாவது கொஞ்சம் ரொட்டி தர முடியுமா?” என்று கேட்டார். தர்ஷனிடம் உள்ள 5 ரொட்டிகளையும், ஹர்ஷனிடம் உள்ள 3 ரொட்டிகளையும் சேர்த்து மூவருக்குமாகச் சமமாகப் பிரிக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை. எட்டை மூன்றால் வகுக்க முடியாதல்லவா?

அந்த வழிப்போக்கர், “இதற்கு ரொம்ப எளிமையான வழி இருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று மூன்று துண்டு களாக வெட்டி விடுங்கள். எட்டு ரொட்டிகளையும் மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால், 24 துண்டுகள் கிடைக்கும். அதன்பின் ஆளுக்கு எட்டு துண்டுகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமே!” என்று சொல்ல, இந்த ஆலோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது என்று தர்ஷன் ஹர்ஷன் இருவருமே ஏற்றார்கள்.

ஆளுக்கு எட்டுஎட்டு ரொட்டித் துண்டுகள் என்று மூவரும் எடுத்துக் கொண்டபின், அந்த வழிப்போக்கர் தர்ஷன் – ஹர்ஷனிடம் எட்டுத் தங்க நாணயங்களைத் தந்து விட்டுப் போனார். தர்ஷன் ஹர்ஷனிடம், “நான்  நான்கு தங்கக் காசுகள் எடுத்துக் கொள்கிறேன். நீ நான்கு தங்கக்காசுகள் எடுத்துக் கொள். நமக்குள் சரிசமமாகப் பிரித்துக் கொள்வோம்!” என்று சொன்னான். ஆனால், ஹர்ஷன் ஒத்துக்கொள்ளவில்லை.

“தர்ஷன்! நீ செய்த தானத்தை விட நான் செய்த தானமே உயர்ந்தது. நீ ஐந்து ரொட்டிகள் வைத்திருந்தாய், நான் மூன்றுதான் வைத்திருந்தேன். ஐந்து ரொட்டிகள் வைத்திருப்பவன் தானம் செய்வது பெரிய விஷயம் இல்லை. மூன்று ரொட்டிகள் இருந்தபோதும் தானம் செய்தேனே, அதுதான் உயர்ந்த தானம். அதனால், எனக்குத் தான் நிறைய தங்கக் காசுகள் தரவேண்டும். சரிசமமாகப் பிரிப்பதை நான் ஏற்க மாட்டேன்!” என்றான்.

இதை தர்ஷன் ஏற்கவில்லை. சரிசமமாகத் தான் பிரிக்க வேண்டும் என்றான். இருவருக்குள்ளும் அது பெரிய வாக்குவாதமானது. இருவரும் ராஜாவிடம் சென்றார்கள். ராஜா வழக்கை விசாரித்து விட்டு, “எத்தனையோ அரசுப் பணிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு வழக்கா? நாளை பார்க்கலாம்!” என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்து விட்டார். அடுத்த நாள் காலை, ராஜா அரசவைக்கு வந்தார். தர்ஷன் ஹர்ஷன் இருவரும் வந்தார்கள். “தர்ஷனுக்கு ஏழு தங்க நாணயங்களும் ஹர்ஷனுக்கு ஒரு தங்க நாணயமும் வழங்கப்படும்!” என்று ராஜா தீர்ப்பு.

தீர்ப்பின் தாத்பரியம் புரியாமல் எல்லோரும் விழிக்க, ராஜா சொன்னார், “தர்ஷனுக்கும் ஹர்ஷனுக்கும் வழிப்போக்கனாக வந்து காட்சி தந்தவன் சாட்சாத் பாண்டுரங்கன். அதே பகவான்தான் என் கனவிலும் வந்து காட்சி தந்து, எனக்கு ஒரு கணக்கைச் சொல்லிக் கொடுத்தார். தர்ஷனிடம் ஐந்து ரொட்டிகள் இருந்தன. அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் 15 ரொட்டித் துண்டுகள் தேறும். ஹர்ஷனிடம் மூன்று ரொட்டிகள் இருந்தன.

அவற்றை மூன்றுமூன்று துண்டுகளாக வெட்டினால் ஒன்பது ரொட்டித் துண்டுகள் தேறும். 15 துண்டுகள் வைத்திருந்த தர்ஷன், 7 துண்டுகளைத் தானமாக வழங்கிவிட்டான். 9 துண்டுகளை வைத்திருந்த ஹர்ஷன், ஒரு துண்டுதான் தானமாகக் கொடுத்திருக்கிறான். ஏழு ரொட்டித் துண்டுகள் கொடுத்தவனுக்கு ஏழு தங்கக் காசுகள், ஒரே ரொட்டித் துண்டு கொடுத்தவனுக்கு ஒரு தங்கக் காசு. இதுதான் பாண்டுரங்கன் தீர்ப்பு!” என்று விளக்கினார்.

இதன் மூலம் நாம் உணர்வது என்னவென்றால், நாம் செய்யும் தர்மம் அதர்மம் ஆகியவற்றை எல்லாம் பகவான் நம் கூடவே இருந்து கண்காணிக்கிறார். நாம் தர்மத்தைச் செய்தால் நமக்கு நன்மையை வழங்குகிறார். அதர்மத்தைச் செய்தால், அதற்குரிய தண்டனையை வழங்குகிறார். அந்தத் தர்மத்திலுமே ஏழு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஏழு தங்கக் காசுகள், ஒரு ரொட்டித் துண்டு கொடுத்தால் ஒரு தங்கக் காசு என்ற ரீதியில், என்ன தர்மம் செய்கிறோமோ அதற்குத் துல்லியமான கூலியைத் தருகிறார்.

இப்படியாக நம்மைக் கண்காணிப்பதற்காக நம் அனைவருள்ளும் எழுந்தருளி இருப்பதாலே, திருமால் ‘வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுதான் விஷ்ணு ஸகஸ்ரநாமத்தின் 471-வது திருநாமம். ‘வத்ஸர:’ என்றால் உள்ளே வசிப்பவர் என்று பொருள்.
நாமும் “வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், நம்முடைய தர்மங்களுக்கான சரியான பலன்
நம்மை வந்து சேரும்படி திருமால் நமக்கு அருள்புரிவார்.

———————-

472. வத்ஸலாய நமஹ: (Vathsalaaya namaha)

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய அற்புதமான ஒரு பாசுரம்:

“சினவில் செங்கண் அரக்கர் உயிர்மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தந்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்றேத்தும் மாமுனியை மரமேழ் எய்தமைந்தனை
நனவில் சென்றார்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்கண்ணிணைகள் களிப்பக் களித்தேனே”

அன்று எந்தத் திருமால், ராமனாக அவதரித்து, சீதையைத் தன்னிடம் இருந்து பிரித்து வைத்த ராவணனையும் அரக்கர்களையும் அழித்தாரோ, அதே திருமால் இப்போது நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அவதரித்து, ஜீவாத்மாக்கள் தன்னை அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்துப் பாபங்களையும் போக்கி அருளிக்கொண்டு இருக்கிறார். தன் பக்தர்களான ஜீவாத்மாக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதைப் பற்றியே அனவரதமும் சிந்தித்துக் கொண்டு இருப்பதால், முனி – எந்நாளும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர் – என்று போற்றப்படுகிறார் அந்த ஸ்ரீநிவாசப் பெருமாள்.

ராமாவதாரத்தில், ராமனின் வலிமை மீது சந்தேகம் கொண்டிருந்த சுக்ரீவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக ஒரே பாணத்தால் ஏழு மரங்களைத் துளைத்துக் காட்டினார். கலியுகத்தில், நம்பிக்கை இல்லாதிருக்கும் நம் போன்றோருக்கு நம்பிக்கையை அருள நம்பிக்கை நட்சத்திரமாக நாச்சியார்கோவிலில் கோயில் கொண்டுள்ளார்.தெளிந்த ஞானம் பெற்ற மகான்களாலும் கூடக் காணமுடியாதவனாக விளங்கும் அந்த ஸ்ரீநிவாசன், ஞானமில்லாமல் கலங்கிய மனநிலையில் இருக்கும் அடியேனுக்குத் தன் கருணையால் தரிசனம் தந்தருளினான். அவ்வாறு அவனைத் தரிசித்த அளவிலே, என் கண்கள் களிப்பக் களிப்புற்றேன்!” என்று இப்பாசுரத்தில் தெரிவித்தார் திருமங்கையாழ்வார்.

இந்தத் தமிழ் அமுதைக் கேட்ட நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசன், திருமங்கை ஆழ்வாரிடம், “நான் உங்களுக்கு வலிய வந்து இப்படிக் காட்சி தந்தமைக்கு என்ன காரணம் என்று கூறுங்கள் பார்க்கலாம்!” என்றார். அடுத்த பாடலைப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்:

“தாய்நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்த தான் எனக்கு
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இவ்வையம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை”

“இறைவா! தாய்ப்பசுவின் ஸ்தானத்தில் இருக்கும் நீ, உன் கன்றுக்குட்டியான அடியேன்மீது இரக்கம் கொண்டாய். கன்றுக்குட்டி தன் தாயை நினைப்பது போல், அடியேன் உன்னை நினைத்திருக்கும்படி நீயே அடியேனுக்கு அருள்செய்தாய். நான் உன்னை நினைத்ததை நீ அங்கீகரிக்கவும் செய்து, இப்பேரருளையும் நீயே தந்து விட்டாய்!” என்று இப்பாசுரத்தில் பதில் உரைக்கிறார் ஆழ்வார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், தன்னிடம் சரணாகதி செய்யும் அடியார்களைத் தனது கன்றுக்குட்டியாய்க் கருதி, அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களின் மனங்களுக்குள் திருமால் குடிவந்துவிடுகிறார். அந்த பக்தர்களையும் தன்னுள் நிலைநிறுத்தி விடுகிறார்.

திருமங்கையாழ்வார் என்னும் கன்றுக்குட்டி, தாய்ப்பசுவான ஸ்ரீநிவாசனை நினைக்கும்படி, ஸ்ரீநிவாசன் அருள்புரிந்தார். அதன்விளைவாக, அவர் மனதில் ஸ்ரீநிவாசன் குடிகொண்டார். இன்றும் திருவாலி திருநகரியில் எழுந்தருளியிருக்கும் திருமங்கை ஆழ்வாரின் திருமார்பில், பதக்க வடிவில் நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

இப்படித் தாய்ப்பசு கன்றிடம் அன்பு காட்டுவது போல், சரணாகதியானவர்களிடம் அன்பு காட்டி, அவர்களுக்குள் வசிப்பதால், திருமால் ‘வத்ஸல:’ என்று அழைக்கப்படுகிறார். ‘வத்ஸல:’ என்றால் குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 472-வது திருநாமம்.“வத்ஸலாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மீது திருமால் எல்லையற்ற தாயன்பைப் பொழிந்தருள்வார்.

————

473. வத்ஸிநே நமஹ: (Vathsiney namaha)

கண்ணன் பசுக்கள், எருமைகள், ஆடுகள் ஆகிய மூன்றையுமே மேய்த்திருக்கிறான் என்று புராணங்களைப் பார்க்கும்போது நமக்குத் தெரிய வருகிறது. ஆனாலும், நாம் எந்தத் திருக்கோயிலுக்குச் சென்றாலும், அங்கே ராஜகோபாலனாகப் பசுவோடுதான் கண்ணன் காட்சி தருகிறானே தவிர, எருமையோடோ ஆடுகளோடோ கண்ணன் காட்சி தருவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தேன்.

அடியேனுடைய ஸ்ரீபாஷ்யாதி கிரந்த ஆசார்யன் டாக்டர் ஸ்ரீஉ.வே.கருணாகராச்சாரியார் சுவாமி, நகைச்சுவையோடு ஒரு விஷயம் கூறுவார். “எருமைமாடு யமனுடைய வாகனமாக இருப்பதாலே, கண்ணனை யமன் என்று தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் அஞ்சி விலகிவிடுவார்களோ எனக் கருதி, எருமையைத் தவிர்த்திருப்பார்கள். அவ்வாறே ஆடு என்பதும் வேறு நாடுகளிலும், மதங்களிலும் பயன்படுத்தப்படுவதால், கண்ணன் எந்த மதம் என்று கலக்கம் பிறக்க வாய்ப்பு வரும் என்று கருதி ஆட்டைத் தவிர்த்திருப்பார்கள். மீதமுள்ளது பசுதான், அதனால் அதனைப் பயன்படுத்துகிறார்கள்!” என்று ஹாஸ்யமாக ரசித்துச் சொல்வார்.

அந்த ஆசார்யரது திருவடிகளை அடியேன் தியானித்தபோது, அவரது திருவருளால் இதில் மற்றொரு விஷயம் பிடிபட்டது. மாடு, ஆடு வேறுபாட்டுக்குள் போகாமல், அவை உணர்த்தும் தத்துவங்களின் அடிப்படையில் மட்டும் இக்கருத்தை அணுகுமாறு வேண்டுகிறேன். என்னவென்றால், பசுமாடு சத்துவ குணத்தைக் குறிக்கிறது. ஆடு ரஜோகுணத்தைக் குறிக்கிறது. எருமை மாடு தமோ குணத்தைக் குறிக்கிறது.

பசு, எருமை, ஆடு ஆகிய மொத்தக் கால்நடைகளையும் மேயவிட்டுவிட்டுக் கண்ணன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து கொள்வான். அவற்றுள் எருமைகளும் ஆடும் புல் மேய்வதிலேயே தங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்தி விட்டுக் கண்ணனையே மொத்தமாக மறந்துவிடுமாம். ஆனால், பசுமாடுகள் மட்டும் கண்ணனின் குழலோசையில் மனதைப் பறிகொடுத்து, கண்ணனின் திருவடிகளையே நாடி வந்து, அத்திருவடித் தாமரைகளில் பொங்கும் தேனைப் பருகியபடி இருக்குமாம்.

இது உணர்த்துவது என்னவென்றால், இவ்வுலகில் உள்ள பல்வேறுபட்ட உயிர்களுக்குள், எருமை மாட்டால் உருவகப் படுத்தப்படும் தமோகுணம் மிக்கவர்களும், ஆடுகளால் உருவகப் படுத்தப்படும் ரஜோ குணம் மிக்கவர்களும் புல் மேய்வது போல் உலகியல் விஷயங்களை அனுபவித்து இன்பம் துய்ப்பதையே தங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டு, கண்ணனாகிய இறைவனை மறந்து தங்கள் காலத்தைக் கழிக்கிறார்கள்.

ஆனால், பசு மாடுகளால் உருவகப் படுத்தப்படும் சத்துவகுணம் மிக்கவர்கள், உலகியல் விஷயங்களாகிய புல்லை மேய்வதில் மனம் செலுத்தாமல், இறைவனான கண்ணனின் திருவடிகளை அடிபணிந்து, அவனையே சிந்தித்தபடி, அவனுக்குத் தொண்டுசெய்து வாழ்ந்து உய்கிறார்கள்.அதனால்தான் திருக்கோயில்களில் கண்ணனுக்கு அருகில் பசுமாடும், பசுங்கன்றுகளும் மட்டுமே நிற்பதாகச் சித்தரித்துள்ளார்கள். பல புகைப்படங்களிலும் கூட, எருமைகளும் ஆடுகளும் வெவ்வேறு திசைகளில் மேய்ந்துகொண்டிருக்க, பசுமாடு மட்டும் கண்ணன் திருவடிகளை வருடியபடி இருப்பதைக் காணமுடிகிறது.

ஆனாலும் கண்ணன், தன்னைக் கணிசிக்காத எருமை மாடுகளையோ, ஆடுகளையோ கைவிடுவதில்லை. பசுமாடுகளை மேய்ப்பது போலவே அவற்றையும் மேய்த்து அவைகளுக்குத் தேவையான உணவையும் அளித்துக் கொண்டுதான் இருக்கிறான். அதுபோலத்தான், இறைவனை அண்டாதவர்களுக்கும் கூட இறைவன் நன்மையைச் செய்து, அவர்கள் மெல்லமெல்லப் பக்குவம் அடையும்படி அருள்புரிந்து, அவர்களும் தன்னை வந்தடைய வழிகாட்டிக் கொண்டேதான் இருக்கிறான்.

இப்படி உயிர்கள் அனைத்தையும் தன் கன்றுகளாகக் கருதி, அவைகளிடம் அன்பு காட்டும் தாயாகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘வத்ஸீ’ என்று அழைக்கப்படுகிறார். வத்ஸ என்றால் கன்றுக்குட்டி. ‘வத்ஸீ’ என்றால் கன்றுகளை உடையவர். இங்கே ஜீவாத்மாக்களே திருமாலுக்குக் கன்றுகளின் ஸ்தானத்தில் உள்ளார்கள் என்பதை இத்திருநாமம் குறிக்கிறது. ‘வத்ஸீ’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 473-வது திருநாமம்.“வத்ஸினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைக் கண்ணன் நல்வழிப்படுத்திக் காத்தருள்வான்.

—————

474. ரத்னகர்ப்பாய நமஹ (Rathnagarbhaaya namaha)

சுமார் பத்து வருடங்கள் முன்பு கேரளாவில் உள்ள திருச்சூர் பேருந்து நிலையத்தில் ஒரு பிச்சைக்காரர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். குருவாயூரப்பனின் பெருமைகளையும், குருவாயூரப்பனுக்குச் சமர்ப்பிக்கப்படும் துலாபாரக் காணிக்கையைப் பற்றியும் அவர் கேள்விப்பட்டார். உடனே, “குருவாயூரப்பா! இன்று பிச்சைக்காரனாக இருக்கும் என்னை, நீ மட்டும் கோடீஸ்வரனாக ஆக்கிவிட்டால், உனக்கு என் எடைக்கு எடை தண்ணீரைத் துலாபாரக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்!” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டார். விரைவிலேயே அந்தப் பிச்சைக்காரர், கையில் ஒரு லாட்டரி சீட்டு கிடைத்ததாம்.

அந்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ஒரு கோடி அவருக்குக் கிடைத்துவிட்டது. கண்கண்ட தெய்வமான குருவாயூரப்பன் செய்த இன்னருளை நினைத்து வியந்து போனார் அந்த நபர். பிரார்த்தனை செய்துகொண்ட படிக்காணிக்கையைச் செலுத்தி விடலாம் என்ற முடிவோடு குருவாயூரப்பனின் கோவிலுக்குச் சென்றார். ஆனால், அந்தப் புதிய கோடீஸ்வரருடைய மனதில் ஒரு சிறிய குறை இருந்ததாம். “குருவாயூரப்பனின் பேரருளும் கருணையும் மிகவும் உயர்ந்ததாக இருக்க, அவனுக்குக் காணிக்கையாக வெறும் தண்ணீரையா அளிப்பது?” என்று சிந்தித்து, தண்ணீருக்குப் பதிலாக எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பிக்கத் தீர்மானித்தார் அவர்.

துலாபாரத்தின் ஒரு தட்டில் கோடீஸ்வரர் அமர்ந்தார். மறுதட்டில் அவருடைய எடைக்கு இணையாகக் கற்கண்டை வைத்தார்கள். எவ்வளவு மூட்டை மூட்டையாகக் கற்கண்டு வைத்தாலும், அந்தக் கற்கண்டின் அளவு இவரது எடைக்கு நிகராக வரவில்லை. சுமார், 150 கிலோவுக்கு மேல் கற்கண்டு வைத்தும் கோடீஸ்வரர் அமர்ந்த தட்டுதான் கீழே இருந்தது.அதன்பின் திருக்கோயில் அர்ச்சகரை அழைத்து என்ன செய்வது என்று கேட்டார்கள்.

அவர் சிந்தித்துப் பார்த்து விட்டு, “நீங்கள் கற்கண்டு துலாபாரம்தான் பிரார்த்தித்திருந்தீர் களா? அல்லது வேறு ஏதாவது வேண்டிக் கொண்டீர்களா?” என்று கேட்டார். கோடீஸ்வரர், “நான் தண்ணீரைத் தான் எடைக்கு எடை தருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு செல்வத்தைக் குருவாயூரப்பன் அருளி இருக்கையில், வெறும் தண்ணீரையா அவனுக்குக் கொடுப்பது? அதனால்தான் எடைக்கு எடை கற்கண்டை அளிக்கலாம் என முடிவெடுத்து விட்டேன்!” என்றார்.

அர்ச்சகர், “நீங்கள் என்ன வேண்டிக் கொண்டீர்களோ அதைக் கொடுத்தால்தான் குருவாயூரப்பன் ஏற்பான். அவன் என்ன செல்வம் இல்லாதவனா?  சொத்து இல்லாதவனா?  இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே அந்த பகவானின் சொத்துதான். நீங்கள் துலாபாரம் சமர்ப்பித்தால், உங்கள் பக்தியின் எடையைத்தான் குருவாயூரப்பன் பார்க்கிறானே ஒழிய, நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளின் எடையை அவன் பார்ப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் பொருளுக்காக அருள்புரிபவன் அல்லன் அவன். நீங்கள் சமர்ப்பிக்கும் பொருளால் புதிதாக அவனுக்குச் சொத்து வரவேண்டிய தேவையும் இல்லை. பிரார்த்தித்ததைச் சரியாகச் சமர்ப்பியுங்கள்!” என்றார்.

அவ்வாறே எடைக்கு எடை தண்ணீரைக் காணிக்கையாக இவர் சமர்ப்பித்தவாறே, துலாபாரம் நேராக நின்றது. காணிக்கையைக் குருவாயூரப்பனிடம் சமர்ப்பித்து விட்டு,குருவாயூரப்பனிடம் சென்ற கோடீஸ்வரர், “பகவானே!  அடியேனுக்குக் கிடைத்த இந்த ஒரு கோடி ரூபாய் செல்வமும் கூட உன் சொத்தில் இருந்து நீ அருளியது தானே? அதை உணராமல் உனக்குப் புதிதாக ஒரு சொத்தை நான் தருவதாக எண்ணி விட்டேனே! தவறு! என்னை மன்னித்தருள்வாயாக! எல்லையில்லாத சொத்தை உடைய நீ, உன் அடியார்கள் விரும்பினால், அவர்களுக்கு அச்செல்வத்தை அருள்கிறாய் என்று உணர்ந்தேன்!” என்று கூறிவிட்டுத் தன் இல்லம் திரும்பினார்.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், எல்லையில்லாத சொத்துகளை உடைய திருமால், செல்வம் வேண்டி வரும் அடியார்களுக்கு அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்கிறார். எனவே, நம்மிடம் செல்வம் இருக்கிறது என்று நாம் கர்வம் கொள்ளாமல், அவன் அருளிய செல்வம் என்று உணர்ந்து நன்றியுடன் இருப்பதே நலம்.

இவ்வாறு எல்லையில்லாத செல்வத்தோடு திகழ்வதால் திருமால் ‘ரத்னகர்ப்ப:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 474-வது திருநாமம்.“ரத்னகர்ப்பாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வம் குறைவின்றி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

—————–

475. தனேஸ்வராய நமஹ (Dhaneshwaraaya namaha)

கண்ணபிரானின் பால்ய சினேகிதரான குசேலர் மிகவும் வறுமையில் வாடிவந்தார். அவரது மனைவியின் ஆலோசனையின் பேரில், நான்கு கைப்பிடி அவலை எடுத்துக் கொண்டு, தன் இளமைக்காலத்து நண்பன், கண்ணனைச் சந்திப்பதற்காகத் துவாரகைக்குச் சென்றார் குசேலர்.துவாரகையிலே பிரம்மாண்டமான அரண்மனையில், ரத்தினங்களால் இழைக்கப்பட்ட பொன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணன், குசேலரைக் கண்டதும் எழுந்து வந்து அவரை வரவேற்றான். தான் அதுவரை அமர்ந்திருந்த ஆசனத்தில் குசேலரை அமர்த்தினான். அதுவரை தனக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்த ருக்மிணியிடம் குசேலருக்குச் சாமரம் வீசுமாறு கூறினான். அவளும் அவ்வாறே செய்தாள்.

பின், குசேலரின் பாதங்களுக்குப் பூஜை செய்து அவரது திருவடி நீரைத் தன் தலை மீதும், ருக்மிணியின் தலைமீதும் தெளித்துக்கொண்டான் கண்ணன். மேற்கொண்டு குசேலரைக் குசலம் விசாரித்த கண்ணன், “எனக்காக என்ன எடுத்து வந்திருக்கிறீர்கள்?” என்று குசேலரைப் பார்த்துக் கேட்டான். கண்ணனின் பிரம்மாண்ட அரண்மனை, அங்கே அவன் அனுபவித்து வரும் ராஜபோகங்கள், அவனது ஆடை அலங்காரங்கள் போன்றவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போன குசேலர், நாம் வெறும் அவல் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால், அது கண்ணனின் பெருமைக்கு இழுக்காக இருக்குமோ என்று கருதி ஏதும் பேசாமலேயே இருந்துவிட்டார்.

ஆனால், கண்ணன் குசேலரோடு உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அவரது மேலாடைக்குள்ளே ஒளித்து வைத்திருந்த அவல் மூட்டையைப் பார்த்துவிட்டான். அதென்ன மூட்டை என்று கேட்டபடி அதை உருவிப் பிரித்துப் பார்த்தான். நான்கு பிடி அவல் அதில் இருந்தது.

முதல் பிடி அவலை எடுத்து கண்ணன் தனது வாயில் போட்டுக் கொண்டான். அடுத்த பிடி அவலை ருக்மிணிக்கு அளித்தான். தொடர்ந்து இன்னொரு பிடி அவலைத் தன் வாயில் கண்ணன் போட முற்படுகையில், ருக்மிணி கண்ணனைத் தடுத்து, “சுவாமி! நீங்கள் குசேலருக்குச் செல்வத்தை அருள்வதற்கு அந்த முதல் பிடி அவலே போதுமானதாயிற்றே. அதற்கு மேலும் ஒரு பிடி அவலை உண்டால்தான் அருள் புரிவீர்களா?” என்று கேட்டாளாம் ருக்மிணி.

அதற்கு கண்ணன் ரகசியமாக ருக்மிணியிடம், “ருக்மிணி! உனக்குத் தெரியாதா? ஏற்கனவே, தான் குசேலர் வீட்டில் தங்கமழை பொழிந்தாகிவிட்டதே!” என்றானாம். “எனக்குத் தெரியாமல் எப்போது பொழிந்தீர்கள்?” என்று ருக்மிணி தன் பார்வையாலேயே கேட்டாள்.அதற்கு ருக்மிணியின் காதில் கண்ணன், “குசேலர் இத்தனை நாட்கள் வறுமையில் வாடியதற்குக் காரணம் அவரைப் பிடித்திருந்த தரித்திரம் எனப்படும் அலக்ஷ்மியே ஆகும்.

அந்த அலக்ஷ்மி அவரை விட்டு நீங்க வேண்டும் என்பதற்காகத் தான் உன்னை அழைத்து அவருக்குச் சாமரம் வீசச் சொன்னேன். லக்ஷ்மியான நீ சாமரம் வீசியபின், உன் அக்காளான அலக்ஷ்மி அங்கே இருக்க மாட்டாள் இல்லையா? எனவே நீ எப்போது சாமரம் வீசினாயோ, அப்போதே தங்கமழை அவர் வீட்டில் பொழிந்துவிட்டது. அவர்மீது உள்ள அன்பினால் அவர் தந்த அவலை வாங்கி உட்கொண்டேனே ஒழிய, அவலுக்காகத் தங்க மழை பொழியவில்லை. அவரது அன்புக்காக அப்போதே பொழிந்துவிட்டேன்!” என்று கூறினான்.

ஆனால், அது குசேலருக்குத் தெரியாதே என்றாள் ருக்மிணி. இப்போது சொல்ல வேண்டாம் அவரே தன் இல்லம் திரும்பும் போது அனைத்தையும் புரிந்துகொள்வார் என்று சொல்லிவிட்டான் கண்ணன். இப்படித் தனது அடியார்களுக்குச் செல்வத்தை அருளும் போது, காலம் தாழ்த்தாமல் மிக விரைவாக அந்தச் செல்வத்தை அவர்களுக்கு அள்ளி வழங்கிவிடுவதால், திருமால் ‘தனேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தன’ என்றால் செல்வம், ‘ஈஸ்வர:’ என்றால் இவ்விடத்தில் விரைந்து அருள்பவர் என்று பொருள். ‘தனேஸ்வர:’ என்றால் செல்வத்தை விரைந்து அருள்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 475-வது திருநாமம்.“தனேஸ்வராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு விரும்பிய செல்வம் விரைவில் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———————-

476. தர்மகுபே நமஹ (Dharmagupey namaha)

காஞ்சிபுரத்தில் சுவாமி வேதாந்த தேசிகன் வாழ்ந்துவந்த காலம். அதே காஞ்சியில் வசித்து வந்த ஒரு பிரம்மச்சாரிக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. ஆனால், அக்காலத்தில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்குக் `கன்யாசுல்கம்’ என்று செல்வத்தை அளித்துத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஏழையான இந்த பிரம்மச்சாரி கன்யாசுல்கம் கொடுப்பதற்குச் செல்வம் வேண்டிக் காஞ்சியில் உள்ள பலரை அணுகினான்.

அவர்களுள் சிலரிடம் பணம் இருந்தாலும் அதைத் தருவதற்குரிய மனம் இல்லாததால், அவர்கள் பிரம்மச்சாரியிடம், “நம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் என்று ஒருவர் இருக்கிறாரே! அவர்தான் இந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர்! நீ அவரது உதவியைப் போய் நாடு!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். உண்மையில் சுவாமி வேதாந்த தேசிகன், பேரருளாளப் பெருமாளையும் பெருந்தேவித் தாயாரையுமே தமக்குச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்து வந்தாரே ஒழிய, உலகியல் செல்வத்தை எல்லாம் அவர் கையாலும் தொட்ட தில்லை. அவரைச் சோதித்துப் பார்ப்பதாக எண்ணி இந்த பிரம்மச்சாரியை அவரிடம் சிலர் அனுப்பி வைத்தார்கள்.

அந்த பிரம்மச்சாரியும் அவர்களின் கூற்றை நம்பி சுவாமி வேதாந்த தேசிகனிடம் சென்று தான் திருமணம் செய்துகொள்வதற்குரிய செல்வம் வேண்டும் என்று கேட்டான். “நீ எதற்காகத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்டார் தேசிகன். அப்போது அந்த பிரம்மச்சாரி, “நான் வேதங்களைக் கற்று விட்டேன். மேற்கொண்டு அந்த வேதங்கள் கூறும் தருமங்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். அதைச் செய்ய வேண்டும் என்றால் ஒரு நல்ல இல்வாழ்க்கை வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!” என்றான்.

இதைக் கேட்டு வியந்தார் தேசிகன். “வெறும் இல்லற சுகத்தில் நாட்டம் கொள்ளாமல், இறைவனுக்கு ஆராதனமான தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி இவன் இல்வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறானே!” என்று பெருமைப்பட்டார். அந்த பிரம்மச்சாரியைக் காஞ்சிபுரத்தில் கல்யாணகோடி விமானத்தின் கீழே கோயில் கொண்டுள்ள பெருந்தேவித் தாயாரின் சந்நதிக்கு அழைத்து வந்தார். பெருந்தேவித் தாயாரைக் குறித்து `ஸ்ரீஸ்துதி’ என்ற அற்புதமான துதியை இயற்றி அருளினார் தேசிகன். அதிலே,

“யோகாரம்ப த்வரிதமனஸோ யுஷ்மத் ஐகாந்த்ய யுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமம் இஹ யே தாரயந்தே தனாயாம்
தேஷாம் பூமேர் தனபதி க்ருஹாத் அம்பராத் அம்புதேர் வா
தாரா நிர்யாந்தி அதிகம் அதிகம் வாஞ்சி தானாம் வஸூனாம்”
என்ற பதினாறாவது ஸ்லோகத்தை வேதாந்த தேசிகன் சொன்னவாறே, பெருந்தேவித் தாயார் தங்கமழையை அங்கே அப்போதே பொழிந்து விட்டாள். “இல்லற தருமத்தை அனுஷ்டிக்க விரும்பி, யார் ஒருவர் திருமகளையும் திருமாலையும் நாடி வருகிறார்களோ, அவர்களுக்கு பூமியில் இருந்தும் குபேரன் வீட்டில் இருந்தும் வானில் இருந்தும் கடலில் இருந்தும் எல்லாச் செல்வங்களும் வந்து மழையாகக் கொட்டும்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். பெருந்தேவித் தாயார் பொன்மழை பொழிந்த இக்காட்சி இன்றும் காஞ்சி பெருந்தேவித் தாயார் சந்நதியின் பிராகாரத்தில் சித்திர வடிவில் சித்தரிக்கப் பட்டுள்ளது.

செல்வத்துடன் புறப்பட்ட பிரம்மச்சாரி, தேசிகனிடம், “சுவாமி! பெருமாளும் தாயாரும் அடியேனுக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைத் தந்து விட்டார்களே! இதனால் என் மனம் மாறி, தருமத்தையும் நான் மறந்து, ஒருவேளை செருக்குற்றுச் சுகபோகத்தில் திளைக்கத் தொடங்கிவிட்டால் என்ன ஆவது?” என்று கேட்டார்.

அதற்கு தேசிகன், “இது நீயாகத் தேடிய செல்வம் அன்று. திவ்ய தம்பதியர் அருளிய செல்வம். நாமாக ஈட்டிய செல்வமாக இருந்தால், அது நமக்கு கர்வத்தைக் கொடுக்கும். திவ்ய தம்பதியர் நமக்குச் செல்வத்தை அருளினால், செல்வத்தை அருளியதோடு அப்படியே விட்டு விடாமல், நாம் அதைக் கொண்டு அறவழியால் வாழ்கிறோமா என்பதையும் அவர்களே கண்காணித்து நம்மைக் காப்பார்கள். தன் அடியார்கள் தர்மத்தில் இருந்து விலகாமல் எப்போதும் காக்கும் அந்தப் பேரருளாளனும், பெருந்தேவியும் துணை நிற்க நீ அஞ்ச வேண்டாம்!” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இப்படி அடியார்கள் தருமத்தில் இருந்து விலகாமல் அவர்களைக் காப்பதால் திருமால் ‘தர்மகுப்’ – அடியார்களைத் தருமத்தில் இருந்து விலகாதபடி காப்பவர் – என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 476-வது திருநாமம்.“தர்மகுபே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், தருமத்தில் இருந்து என்றும் விலகாதபடி திருமால் காத்தருள்வார்.

—————–

477. தர்மக்ருதே நமஹ (Dharmakruthey namaha)

பட்டாபிஷேகத்தைத் துறந்து ராமன் வனவாசம் புறப்படும் சமயத்தில், தன் தாயான கௌசல்யாதேவியைச் சந்தித்து விடைபெறுவதற்காக அவளது அரண்மனைக்குள்ளே நுழைந்தான் ராமன். அவனை வரவேற்று ரத்தின சிம்மாசனத்தில் அமரச் சொன்னாள் கௌசல்யா. ஆனால் ராமன், “அம்மா! நான் தர்ப்பைப் புல்லால் ஆன ஆசனத்தில் தான் அமர வேண்டும். சிம்மாசனத்தில் அமரக்கூடாது. தந்தை என்னைப் பதினான்கு வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளுமாறு ஆணையிட்டிருக்கிறார்.

அதை நிறைவு செய்துவிட்டு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன்!” என்றான்.இதைக் கேட்டு அதிர்ந்து போனாள் கௌசல்யா. “என்ன ராமா சொல்கிறாய்? உனக்கு இன்று பட்டாபிஷேகம் என்று நாங்கள் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, வனவாசம் என்கிறாயே! உன்னைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்? என் உயிரை மாய்த்துக்கொள்ளும் சக்தி ஒருவேளை எனக்கு இருந்தால் இப்போதே என் உயிரை விட்டுவிடுவேன்! ராமா! என்னை விட்டு நீ போகவே கூடாது!” என்றாள்.

மேலும், “ராமா! நான் உனக்கு உயர்ந்த தருமம் ஒன்றைச் சொல்கிறேன்! அதைச் செய்! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தை மனதில் கொண்டு வனம் போக விரும்பினாய்! ஆனால், இந்த உலகிலேயே மிகவும் உத்தமமான தருமம், தாய்க்குத் தனயன் பணிவிடை செய்வதே ஆகும். இப்போது உன் தாயான நான் ஆணை இடுகிறேன். எனக்குப் பணிவிடை செய்து கொண்டு, நீ அயோத்தியில் இருக்க வேண்டும்!” என்று ராமனுக்கு ஆணை இட்டாள் கௌசல்யா.

அதற்கு ராமன், “தாயே! நீங்கள் சொன்னது மிகவும் உயர்ந்த தருமம்தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால், தந்தையின் சொல்படி வனவாசம் என்ற ஒரு விரதத்தை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். இப்படித் தொடங்கிய ஒரு விஷயத்தில் இருந்து பின்வாங்குவது என்பது தருமம் ஆகாது. மேலும், நான் தருமத்தின் வழி நடக்க விரும்புவோருக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்க விழைகிறேன். நானே இப்போது திடீரென்று, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தருமத்தில் இருந்து விலகி, தாய் சொல்லைத் தட்டாதே என்ற தருமத்தைக் கடைபிடிக்கப் போகிறேன் என்று சொன்னால், அது பின்னால் வருவோருக்குக் குழப்பத்தையே விளைவிக்கும்.

எனவே, தாயே! நீங்கள் இட்ட கட்டளையை அவசியம் நான் நிறைவேற்றத் தான் போகிறேன். அதை நான் மீற மாட்டேன். ஆனால், முதலில் தந்தையின் கூற்றுப்படி பதினான்கு வருட வனவாசத்தை நிறைவு செய்து விடுகிறேன். அதன்பின் நாட்டுக்குத் திரும்ப வந்து, உங்களுக்குக் கூடவே இருந்து அனைத்து விதமான பணிவிடைகளையும் செய்து உங்கள் கட்டளையையும் நிறைவேற்றுகிறேன்!” என்றான்.

இனியும் ராமனைத் தன்னால் தடுக்க முடியாது என்று உணர்ந்து விடுகிறாள் கௌசல்யா. அதனால், பலவிதமான ஆசீர்வாத வார்த்தைகளைச் சொல்லி ராமனைக் காட்டுக்கு வழியனுப்பி வைக்கிறாள் கௌசல்யா தேவி. இதிலிருந்து, தருமத்தில் இருந்து இம்மிகூட விலகாமல் ராமன் பின்பற்றிக் காட்டினான் என்பதை நம்மால் அறிய முடிகிறதல்லவா? தருமங்களை உலகுக்கு விதித்தவரும், உலகியல் சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவருமான திருமால், தானே ராமனாக அவதரித்தார்.

அந்தத் திருமால் எதற்காக இவ்வளவு தூரம் அந்தத் தருமத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் அத்தகைய தேவை அவருக்கு உள்ளதா? அவர் தருமங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் தான். ஆனால், மனிதர்கள் எல்லோரும் தருமத்தைப் பின்பற்றி அதன்வழி நடக்க வேண்டும் என்று திருமால் நினைக்கிறார். அதனால், தானே முன்னுதாரணமாக இருந்து பிறருக்கு வழிகாட்டி, அவர்களும் தரும வழியில் நடக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் திருமால் ‘தர்மக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். தர்மக்ருத் என்றால் தருமத்தைக் கடைப்பிடிப்பவர் என்று பொருள். அவருக்கு அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், அடியவர்களான நாம் தருமத்தில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காக அவர் தருமத்தைக் கடைப்பிடிக்கிறார். ‘தர்மக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 477-வது திருநாமம்.“தர்மக்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் தரும சிந்தனை என்றும் நிலைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

————-

478. தர்மிணே நமஹ (Dharminey namaha)

சீதையோடும் லக்ஷ்மணனோடும் வனவாசம் புறப்பட்டுச் சென்ற ராமன், வனவாசத்தின் இரண்டாம் நாள் இரவு வத்ச தேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தங்கினார்கள். அங்கே சயனித்தபடி தன் தாயான கௌசல்யாவை நினைத்து வருந்தி அழுதான் ராமன்.அதைக் கண்ட லட்சுமணன், “அண்ணா! நீங்கள் அன்னை கௌசல்யாவின் பேச்சைக் கேட்டு நாட்டிலேயே இருந்திருக்கலாமே!” என்று கேட்டான். ஆனால் ராமனோ, “இல்லை லட்சுமணா! தந்தை முதலில் கட்டளையிட்டு, அதை நான் ஏற்றபின் நடுவில் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாதல்லவா? அதனால்தான் காட்டுக்கு வந்தேன். ஆனால், ஒரு மகனாக இருப்பவன் தன் தாயை மகிழ்வித்துப் பார்க்க வேண்டும். தன் தாய் கண்ணீர் விடுவதற்கு மகனே காரணமாகக் கூடாதல்லவா? இப்போது நான் காட்டுக்கு வந்து, அங்கே என் அன்னை நிராதரவாகக் கண்ணீர் சிந்தி வருந்த நானே காரணமாகி விட்டேனே!” என்று கலங்கி அழுதான்.

மேலும் லட்சுமணனிடம், “இந்த அவதாரத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கருத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து அவதரித்ததால், இப்படித் தாயைப் பிரியும் சூழல் வந்து விட்டது. அடுத்த அவதாரத்தில் பார்! அவதரித்த நாள் தொடங்கி நான் தாய் சொல்லைத் தட்டாமல் வாழ்ந்து காட்டப் போகிறேன்!” என்றானாம் ராமன். அதனால் தான் அடுத்த கிருஷ்ணாவதாரத்தில், ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாள் அன்று நள்ளிரவில், மதுராவில் உள்ள கம்சனின் சிறைச்சாலையில், தேவகி வசுதேவரின் மகனாகக் கண்ணபிரானாக அதே பகவான் வந்து அவதரித்தான்.

அற்புதக் குழந்தையாக, நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், தாமரைக் கண்களோடும், ஆச்சரியமான திரு ஆபரணங்களோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், நீலமேக சியாமள வண்ணத்தோடும் வந்து தோன்றிய கண்ணனைப் பார்த்த தேவகி, “குழந்தாய்! எட்டாவது குழந்தையான நீ நாராயணனாக இருப்பாயோ என்று ஏற்கனவே கம்சன் தேடிக் கொண்டிருக்கிறான். நீ பிறந்தவுடன் உன்னை அழிக்க வேண்டும் என்று துடிக்கிறான். இந்த நிலையில் நீயே உன்னை அடையாளம் காட்டிக் கொடுப்பது போல் இப்படி திருமாலுக்குரிய அடையாளங்களோடு வந்து தோன்றி விட்டாயே! கம்சன் இதைப் பார்த்து, நீ திருமால் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டால் என்ன செய்வது?” என்று அஞ்சி நடுங்கினாள்.

மேலும், “குழந்தாய்! தயவு செய்து உனது கூடுதலான இரண்டு திருக்கரங்களையும் சங்கு சக்கரங்களையும் மறைத்துக் கொண்டு சாதாரண மனிதக் குழந்தையாக நீ மாற வேண்டும்!” என்று வேண்டினாள் தேவகி.

“உபஸம்ஹர விச்வாத்மன் அதோ ரூபம் அலௌகிகம்-

சங்க சக்ர கதா பத்ம ச்ரியா ஜுஷ்டம் சதுர்புஜம்”–என்று ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்லோகம் வருகிறது.
இவ்வாறு தேவகி சொன்னவாறே, கண்ணன் சிரித்துக்கொண்டே, “அம்மா! இந்த அவதாரத்தில் தாய் சொல்லைத் தட்டக்கூடாது என்பதே என் சங்கல்பம். இப்போது பாருங்கள்!” என்று அடுத்த நொடியே இரண்டு கைகளைக் கொண்ட சாதாரணக் குழந்தையின் வடிவத்துக்கு மாறி விட்டானாம். அது மட்டுமில்லை, தனது பதினொன்றாவது வயதில் கம்சனை அழித்தான் கண்ணன். அழித்தவுடன், மறைத்து வைத்திருந்த இரண்டு கைகளையும் சங்கு சக்கரங்களையும் வெளியே கொண்டு வந்து, அதன்பின் அவதாரம் முழுவதும் நான்கு கைகளோடும் சங்கு சக்கரத்தோடுமே எழுந்தருளி இருந்தான்.
“பூய: ப்ராதுரபூத் தஸ்ய புஜயுக்மம் திரோஹிதம்”என்று இதை “யாதவாப்யுதயம்’’ என்னும் காவியத்தில் வேதாந்த தேசிகன் பாடியுள்ளார்.“ஏன் கைகளை வெளிக்கொணர்ந்தாய்?” என்று தேவகி கேட்டபோது, “தாய் சொன்னதைச் சொன்னபடி செய்பவன் நான். கம்சன் மீதுள்ள பயத்தால் கைகளை மறைத்துக் கொள் என்று நீங்கள் கட்டளை இட்டிருந்தீர்கள். அப்படியானால், கம்சன் அழிந்தபின் கைகளை வெளியே கொண்டு வரலாம் என்று தானே பொருள்படும். தாயின் கூற்றை இம்மி கூடப் பிறழாமல் கடைப்பிடிக்க விரும்புபவன் நான். எனவே இப்போது கம்சனை அழித்துவிட்டதால், இனி நான்கு கைகளோடும் சங்கு சக்கரங்களோடுமே இருப்பேன்!” என்றானாம் கண்ணன்.
ஆக, கண்ணன் நான்கு கைகளை இரண்டு கைகளாக ஆக்கிக் கொண்ட லீலைக்கும், மீண்டும் இரண்டு கைகளை நான்கு கைகளாக ஆக்கிக் கொண்ட லீலைக்கும் எது காரணம் என்றால், தாய் சொல்லை மீறக் கூடாது என்ற தருமமே காரணம். இப்படித் தான், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தருமத்தையே கருவியாகக் கொண்டு, தருமத்தின் அடிப்படையில் செயல்படுவதால் திருமால் ‘தர்மீ’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தர்மீ’ என்றால் தருமத்தைக் கருவியாகக் கொண்டு செயல்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 478-வது திருநாமம்.“தர்மிணே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் செயல்கள்யாவும் அறநெறிப்படி, விளங்கும்படி திருமால் அருள்புரிவார்.
———————–
479. ஸதே நமஹ (Sathey namaha)
(ஸ்ரீ பராசர பட்டருடைய விளக்கவுரையின் அடிப்படையில், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 479 முதல் 482 வரை உள்ள திருநாமங்கள்;“ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்”என்ற வரிசையில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. பொதுவாக நாம் சஹஸ்ரநாமம் சொல்லும் போது “ஸத் அஸத் க்ஷரம் அக்ஷரம்” என்று சொல்லிவந்தாலும், “ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்” என்று கொள்வது சிறப்பாகும் என்று பராசர பட்டர் விளக்குகிறார்.மேலும், இத்தொடரைத் திருநாமங்களாகப் பிரிக்கையில்,
479 – ஸத்
480 – அக்ஷரம் ஸத்
481 – அஸத்
482 – அஸத் க்ஷரம்
என்று பிரித்துள்ளார். எனவே ஸ்தோத்திரமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொல்லும் போது “ஸத் அக்ஷரம் அஸத் க்ஷரம்” என்று சொல்ல வேண்டும். தனித்தனித் திருநாமங்களாகச் சொல்லும்போது, ஸத், அக்ஷரம் ஸத், அஸத், அஸத்க்ஷரம் என்று சொல்ல வேண்டும்.) திருவரங்கத்தில் ராமானுஜர் சாந்தோக்ய உபநிஷத்தைத் தமது சீடர்களுக்கு விளக்கிவந்தார். அதில், “ஸத் ஏவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகம் ஏவ அத்விதீயம்” என்ற வாக்கியம் வந்தது.
“இந்த வாக்கியத்துக்கு மேலோட்டமான அர்த்தம் என்னவென்றால், ‘ஸத்’ என்ற இறைவன் ஒருவன் மட்டுமே இருக்கிறான், அவனைத் தவிர இரண்டாவது பொருளே இல்லை!” என்றார் ராமானுஜர். அதைக் கேட்ட சீடர்கள், “அப்படியானால் உலகில் நாம் பார்ப்பவை அனைத்தும் பொய்த் தோற்றங்களா? நிற்பதும் நடப்பதும் பறப்பதும் எல்லாம் வெறும் சொப்பனம்தானா? பல தோற்ற மயக்கங்களா? கற்பதும் கேட்பதும் கருதுவதும் எல்லாம் அற்ப மாயங்களா? அவற்றுள் ஆழ்ந்த பொருள் இல்லையா?” என்று கேட்டார்கள்.
அதற்கு ராமானுஜர், “உலகம் பொய் அன்று. உலகம் சத்தியம். இவ்வுலகில் நமக்குக் கண்ணெதிரே எத்தனை அனுபவங்கள் ஏற்படுகின்றன? கானல்நீர் போலவோ கனவு போலவோ இவ்வுலகம் மறைந்து போகாது. இறைவனும் உண்மை, உயிர்களும் உண்மை, உலகமும் உண்மை!” என்றார்.“அப்படியானால் இறைவன் ஒருவனே இருக்கிறான், அவனைத் தவிர இரண்டாவது பொருளே இல்லை என்ற உபநிஷத் வாக்கியத்தை எவ்வாறு புரிந்துகொள்வது?” என்று சீடர்கள் கேட்டார்கள்.
அதற்கு ராமானுஜர், “இந்த உலகில் சோழ மன்னன் ஒருவன்தான் இருக்கிறான் என்று சொன்னால், சோழமன்னன் ஒருவன் மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறான், மற்றவர்கள் எல்லாம் பொய் என்றா பொருள்? அல்லவே! சோழ மன்னன் சிறப்பானவனாக, ஒப்பற்றவனாக இருக்கிறான். இந்தச் சோழ மன்னனைப் போல இன்னொருவன் இலன் என்று தானே பொருள்?
அதுபோலத் தான் “ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா” என்று நம்மாழ்வார் பாடிய படித் தனக்குச் சமமானவரோ, தன்னை விஞ்சியவரோ இல்லாதபடி ஒப்பற்ற ஒருவனாக இறைவன் இருப்பதாலே, ஸத் எனப்படும் இறைவன் ஒருவன்தான் இருக்கிறான்.
அவனைப் போல இரண்டாம் நபர் எவரும் இலர் என்று இங்கே உபநிஷத் சொல்கிறது. எனவே, உலகம் பொய் என்று கருதக் கூடாது!” என்று விளக்கினார். மேலும், `ஸத்’ என்ற வார்த்தைக்கு இருப்பவர் என்றும் பொருள் உண்டு, உயர்ந்து இருப்பவர் என்றும் பொருள் உண்டு. இங்கே சாந்தோக்ய உபநிஷத்தில் மிகவும் உயர்ந்தவராக இருப்பவர் என்ற பொருளில் `ஸத்’ என்ற வார்த்தை வந்துள்ளது.
உயர்ந்த தருமங்களைத் தன்னகத்தே கொண்டவராக, அவரைப்போல் இன்னொருவர் இலர் என்னும்படி மிக உயர்ந்து விளங்குவதாலே மிக உயர்ந்து இருப்பவர் – ‘ஸத்’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 479-வது திருநாமம்.“ஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில், மேன்மேலும் பல முன்னேற்றங்களைக் காணும்படி திருமால் அருள்புரிவார்.
————–
480. அக்ஷர ஸதே நமஹ:(Akshara Sathey namaha)

(திருநாமங்கள் 471 முதல் 482 வரை – தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)

நான்கு மாணவர்கள் கல்லூரி வகுப்புக்குத் தாமதமாகச் சென்றார்கள். பேராசிரியர் நால்வரிடமும் தாமத வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அப்போது, நால்வரும் ஒரே குரலில், “எங்கள் காரின் சக்கரம் பஞ்சராகி விட்டது. அதனால்தான் தாமதமாக வந்தோம்!” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பேராசிரியர், நால்வரையும் வகுப்புக்குள்ளே அனுமதித்தார். ஆனால், நால்வரையும் வகுப்பின் நான்கு மூலைகளிலே தனித்தனியாக அமர்த்தினார். அதன்பின் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பேப்பரை வழங்கினார். நால்வரையும் பார்த்து, “நீங்கள் வந்த கார் பஞ்சர் ஆனது என்று சொன்னீர்கள் இல்லையா? எந்த டயர் பஞ்சர் ஆனது என்பதை இந்தத் தாளில் நீங்கள் ஒவ்வொருவரும் வரைந்து காட்ட வேண்டும்!” என்று சொன்னார்.

நால்வரும் தாள்களோடு அமர்ந்திருக்க, பாடம் எடுக்கத் தொடங்கினார் பேராசிரியர். “உண்மை என்பது எப்போதும் மாறவே மாறாது. பொய் என்பது மாறிக்கொண்டே இருக்கும்!” என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அவர். இந்த மாணவர்கள் நால்வரும் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்கள். பேராசிரியரிடம் வசமாக மாட்டிக் கொண்டோமே, எப்படித் தப்பிப்பது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் நால்வரும் பேராசிரியர் சொன்னபடி அந்தத் தாளில் படத்தை வரைந்து பேராசிரியரிடம் வழங்கினார்கள்.

நான்கு தாள்களையும் எடுத்துக் கொண்டு கரும்பலகை அருகே சென்ற பேராசிரியர், அவற்றைத் தூக்கி வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுக்கும் காட்டினார். பார்த்தால், முதல் மாணவர் காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கை பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். இரண்டாவது மாணவர், காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கையின் எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். மூன்றாம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநர் பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். நான்காம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநருக்கு எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார்.

நான்கு தாள்களையும் மாணவர்களிடம் காட்டிவிட்டுப் பேராசிரியர் சொன்னாராம், “நான் அப்போதே சொன்னேன் அல்லவா? உண்மை என்பது என்றுமே மாறாது. பொய் என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று! இதோ இந்தத் தாள்களைப் பாருங்கள். இவர்கள் கார் பஞ்சர் என்று சொன்னது பொய். அதனால்தான் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு விதமாக மாறிமாறிப் படம் வருகிறது. உண்மையாகவே கார் பஞ்சர் ஆகியிருந்தால், மாறாமல் ஒரே மாதிரி வந்திருக்கும் அல்லவா?” என்று.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், இறைவனை ஸத்யம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஸத்யம் என்றால் உண்மை என்று பொருள். அதாவது, மாறாமல் இருப்பவர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடமொழியில், `க்ஷரம்’ என்றால் அழிவது தேய்வது என்று பொருள். `அக்ஷரம்’ என்றால் அழியாமல் தேயாமல் மாறாமல் இருப்பது என்று பொருள். திருமால் எந்த ஒரு மாறுதலுக்கும் உட்படாமல் இருப்பதால் ‘அக்ஷரம்’ என்று அழைக்கப்படுகிறார்.

அதனால்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் அவரை ‘அக்ஷரம் ஸத்’ என்று அழைக்கிறது.`அக்ஷரம்’ (Aksharam) என்றால் மாறாதவர்,ஸத் என்றால் உயர்ந்து இருப்பவர் (கடந்த திருநாம விளக்கத்தில் இதன் விரிவு உள்ளது). ‘அக்ஷரம் ஸத்’ (Aksharam sath) என்றால் தன்நிலை மாறாமல் எப்போதும் உயர்ந்து இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 480-வது திருநாமம்.

“அக்ஷரஸதே நமஹ:” (Akshara Sathey namaha) என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், அறநெறியிலிருந்து மாறாமல் இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.

———–
481. அஸதே நமஹ: (Asathey namaha)

திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு சனத்குமார முனிவர்கள் நால்வரும் சென்றார்கள். அங்கே வாயில் காப்பாளர்களாக நின்றிருந்த ஜயனும் விஜயனும் தடுத்தார்கள். “அடியார்கள் பகவானைத் தரிசிக்கச் செல்லும்போது, அவர்களைத் தடுக்கும் உரிமை யாருக்குமே கிடையாது! அப்படியிருக்க, எங்களை எப்படி நீங்கள் தடுக்க முடியும்? இறைவனின் தொண்டர்களாக இருக்கும் தகுதியே உங்கள் இருவருக்கும் இல்லை! ஆகவே, நீங்கள் பூமியில் போய்ப் பிறக்க வேண்டும்!” என்று சனத்குமாரர்கள் ஜய – விஜயர்களுக்கு சாபம் கொடுத்தார்கள்.

வெளியே நடப்பதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்த திருமால், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து சனத்குமாரர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அவரைத் தரிசித்த சனத்குமாரர்கள், திருமாலைப் பலவாறு துதிசெய்தார்கள். அதன்பின், “இறைவா! உனது அனுமதி இல்லாமல் உன் தொண்டர்களான ஜய – விஜயர்களை நாங்கள் சபித்துவிட்டோம்! எங்களை மன்னித்தருள வேண்டும்! தொண்டர்கள் தவறு செய்தால், தலைவனிடம் முறையிடுவது தானே முறையாகும்? நாங்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளலாமா? எங்களை மன்னிப்பாயாக!” என்று வேண்டினார்கள்.

அப்போது திருமால், “இல்லை முனிவர்களே! என் பக்தர்களுக்கு விரோதமாக இருக்கும் எதையுமே நான் விரும்பமாட்டேன். என் கை, என் பக்தர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால் என் கையை வெட்டிக் கொள்ளவும் நான் தயங்க மாட்டேன். எப்போது என் பக்தர்களான உங்களிடம் இவர்கள் அபச்சாரப்பட்டு விட்டார்களோ, இவர்களுக்கு சாபம் தந்ததில் எந்தத் தவறும் இல்லை!” என்றார். மேலும் ஜய – விஜயர்களைப் பார்த்து, “நீங்கள் ஆயிரம் ஜன்மங்கள் பூமியில் பிறக்க வேண்டும்!” என்று சொன்னார் திருமால். “ஆயிரம் ஜன்மங்கள் உன்னைப் பிரிந்திருக்க எங்களால் முடியாதே!” என்று பகவானிடம் கெஞ்சினார்கள் ஜய – விஜயர்கள். சனத்குமாரர்களின் பாதங்களிலும் விழுந்து தங்களை மன்னித்தருளுமாறு கோரினார்கள்.

மனம் இரங்கிய சனத்குமாரர்கள் திருமாலிடம், “இவர்களுக்கு நீங்கள் வழங்கிய தண்டனையைச் சற்றே குறைத்தருள வேண்டும்!” என்றார்கள். உடனே திருமால், “ஜய விஜயர்களே! உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். ஒன்று, நல்ல பக்தர்களாகப் பல பிறவிகள் பிறக்கிறீர்களா? அல்லது தீயவர்களாக மூன்றே பிறவி எடுக்கிறீர்களா?” என்று கேட்டார். “தீயவர்களாயினும் மூன்றே பிறவிகள் போதும்! அதற்கு மேல் பிறவிகள் வேண்டாம்!” என்றார்கள் ஜய – விஜயர்கள். “மூன்று பிறவிகளிலும் நானே உங்களை வந்து அழிப்பேன்! நீங்கள் அதன்பின் இதே காரிய வைகுண்டத்துக்குத் திரும்ப வந்துவிடுவீர்கள்!” என்று பதில் அளித்தார் திருமால்.

அதன்படி ஜயனும் விஜயனும் ஹிரண்ய கசிபுவாகவும், ஹிரண்யாட்சனாகவும் பிறந்தார்கள். அவர்களை முறையே நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் ஆகிய இரு அவதாரங்களால் அழித்தார் திருமால். அடுத்து ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் அவர்களே வந்து பிறக்க, ராமாவதாரத்தில் அவர்களை முடித்தார் திருமால். முடிவாக, சிசுபாலனாகவும் தந்தவக்த்ரனாகவும் வந்து பிறக்க, அவர்களைக் கிருஷ்ணாவதாரத்தில் முடித்தார் திருமால். இப்படி மூன்று பிறவிகளை நிறைவு செய்தபின், அவர்கள் பழையபடி வாயில் காப்பாளர் பதவிகளைப் பெற்றுவிட்டார்கள்.

ஆக, ஜய விஜயர்களைப் போல் அடியார்களுக்குத் தீங்கிழைத்தல் போன்ற பாபச் செயல்களில் ஈடுபடுவோர்க்குப் பிறவிப்பிணி என்னும் தண்டனையைத் திருமால் அளிக்கிறார். உலகியல் வாழ்க்கையாகிய பிறவிச் சுழற்சிக்கு அஸத் என்று பெயர். பாபிகளுக்கு அந்த அஸத் ஆகிய பிறவிச் சுழற்சியைத் தருவதாலே, திருமால் ‘அஸத்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 481-வது திருநாமம்.“அஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எந்தச் சூழலிலும் சிக்கிக் கொள்ளாதபடி திருமால் காத்தருள்வார்.

————-
482. அஸத் க்ஷராய நமஹ:(Asath-Ksharaaya namaha)
(குறிப்பு: ஸ்ரீபராசர பட்டர் தமது விளக்கவுரையில், அஸத்க்ஷரம் ஆகிய இரு பதங்களை ஒன்றாகச் சேர்த்து அஸத்க்ஷரம் என்று 482-வது திருநாமம் அமைந்திருப்பதாக விளக்கியுள்ளார்)
மகாபாரதப் போர் தொடங்கப் போகிறது. எந்தெந்த மன்னர்கள் யாரோடு கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்பதே அனைவரின் மத்தியிலும் பரபரப்பான பேச்சாக இருந்தது. கண்ணபிரானின் ஆதரவு யாருக்கு என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக விவாத மேடைகளில் இடம்பெற்று வந்தது.இந்தச் சூழலில், தர்மபுத்திரர் அர்ஜுனனிடம், “கண்ணன் எப்படியும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார். எனவே, அவரது ஆதரவு நமக்குத்தான். இருந்தாலும்கூட, நாம் பகவானிடம் முறைப்படி சென்று அவரது ஆதரவு வேண்டும் என்று கோருவதுதான் முறை. அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது. எனவே நீ போய்க் கண்ணனைச் சந்தித்து அவரது ஆதரவையும் ஆசியையும் பெற்று வா!” என்று சொல்லித் துவாரகைக்கு அனுப்பிவைத்தார்.மறுபுறம் சகுனி துரியோதனனிடம், “போர் என்று வந்துவிட்டால் மானம் அவமானம் எல்லாம் பார்க்கக் கூடாது. யார் நம் பக்கம் வந்தாலும் அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாண்டவர்களுக்குக் கண்ணன் மாமன் மகன் என்றால், உனக்குக் கண்ணன் சம்பந்தி ஆவான். எனவே கண்ணனின் ஆதரவைக் கேட்டு நமக்கு வாங்கி வந்து விடு!” என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தான். அர்ஜுனன் துரியோதனன் இருவரும் துவாரகையை அடைந்தார்கள். இதை அறிந்த கண்ணன், தனது பணியாட்களை அழைத்து, அரண்மனையில் உள்ள அனைத்து ஆசனங்களையும் ஒளித்து வைக்கச் சொன்னான். தனக்கே உரிய கட்டிலில் கண்ணன் பள்ளிகொள்ள, அவனது தலைமாட்டில் ஓர் ஆசனமும், திருவடிவாரத்தில் ஒரு முக்காலியும் மட்டுமே போடப்பட்டிருந்தன.முதலில் உள்ளே வந்த துரியோதனன், கண்ணன் துயில்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்? இந்த மாடு மேய்ப்பவன் விழிக்கும் வரை காத்திருந்துதான் ஆதரவு பெற வேண்டுமோ?” என்று சிந்தித்தபடி, தனது தலைகனத்துக்கு ஏற்றபடித் தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அடுத்து வந்த அர்ஜுனன், கண்ணன் விழித்துக் கொள்ளும் வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன், அடியவன் என்ற முறையில் கண்ணனின் திருவடிவாரத்தில் இருந்த முக்காலியிலே அமர்ந்து கொண்டான். இருவரும் வந்ததை அறிந்துகொண்ட கண்ணன் கண்விழித்து, “அர்ஜுனா! வா.. வா!” என்ன விஷயம் என்றான். துரியோதனன், “நான்தான் முதலில் வந்தேன்! என்னைக் கவனிக்கவில்லையா?” என்று கேட்டான்.கண்ணனோ, “நீ முதலில்
வந்திருக்கலாம். ஆனால், நான் முதலில்
அர்ஜுனனைத் தானே பார்த்தேன்!”

என்றான்.இருவரும் கண்ணனின் ஆதரவு யாருக்கு என்று கேட்டார்கள். அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்குமே உதவ நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனது நவகோடி நாராயண சேனையை விரும்புவோர் அதைக் கேட்கலாம். ஆயுதமே எடுக்காத என்னை விரும்புவோர் என்னைக் கேட்கலாம்!” என்றான்.“முதல் வாய்ப்பு இளையவனான அர்ஜுனனுக்கே! கேள் அர்ஜுனா!” என்று கண்ணன் சொல்ல, “எனக்கு நீ மட்டும் போதும்!” என்று சொல்லி விட்டான் அர்ஜுனன். துரியோதனனோ, பெரும் மகிழ்ச்சியோடு நவகோடி நாராயண சேனை என்ற மிகப்பெரிய சேனையைக் கண்ணனிடம் வாங்கிச் சென்றான். ஆனால், முடிவில் என்ன ஆனது? கண்ணனின் அருளும் வெற்றியும் அர்ஜுனனுக்குத் தான் கிடைத்தது. தலைக்கனத்தைக் காட்டிய துரியோதனனுக்கோ தோல்வியும் மரணமுமே கிடைத்தது.துரியோதனனைப் போல தீய எண்ணம் கொண்டவர்களுக்கு அஸத் என்று பெயர். க்ஷரம் என்றால் நிலையில்லாதவன் என்று பொருள். ‘அஸத்க்ஷரம்’ என்றால் தீயவர்களிடத்தில் நிலைத்து நிற்காதவர் என்று பொருள். நல்லவர்களை இறைவன் சோதித்தாலும் கைவிடமாட்டார், தீயவர்களுக்கு இறைவன் நிறைய கொடுப்பது போல் இருந்தாலும் கைவிட்டுவிடுவார் என்று பிரசித்தமாகச் சொல்லப்படுகிறது அல்லவா?

இப்படித் தீயவர்களிடம் நிலைத்து நில்லாமல் இருப்பதால், திருமால் ‘அஸத்க்ஷரம்’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 482-வது திருநாமம். “அஸத்க்ஷராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களிடம் திருமால் என்றும் நிலைத்திருந்து, மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி அருள்வார்.

————–
483. அவிக்ஞாத்ரே நமஹ: (Avignaathrey namaha)
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்”
என்று பெரியாழ்வார் பாடுகிறார்.இதன் கருத்து யாதெனில், ஒரு ஜீவாத்மா பற்பல தவறுகள் செய்துவிட்டு, பின்னொரு சமயம் மனம் திருந்தித் திருமகளின் திருவடிகளைப் பற்றி அவளது பரிந்துரையோடு திருமாலிடம் சரண் அடைகிறான். திருமகளின் பரிந்துரையை ஏற்ற திருமால், அவனை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்து விடுகிறார்.திருமால் சம்மதித்த பின் திருமகள்,“சுவாமி! இவன் இதுவரை செய்த பாபங்களை எல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? பலப்பலப் பொய்கள் பேசி இருக்கிறான். பிறருக்கு எந்த உதவியும் இவன் செய்ததில்லை. மனதில் ஈரமோ இரக்கமோ இல்லாதவனாக இருந்திருக்கிறான். இவனுக்குப் போய் அருள்புரியப் போகிறீர்களா? உங்கள் முடிவைச் சற்றே மறுபரிசீலனை செய்யுங்களேன்!” என்று சொல்கிறாளாம்.இப்படி மகாலட்சுமி சொன்னவாறே, திருமால், “இல்லை தேவி! அவன் எனது பக்தன் என்று அபிமானித்து விட்டேன்! அங்கீகரித்து விட்டேன்! என் பக்தன் அப்படிப்பட்ட தவறை ஒருநாளும் செய்ய மாட்டான்!” என்று பதில் சொல்வாராம். அவன் குற்றம் செய்தமைக்கான ஆதாரத்தைத் திருமகள் எடுத்துக் காட்டினாலும், “அப்படி என் பக்தன்தான் செய்திருக்கிறான் என்றால் அவன் நன்றாகத் தான் செய்திருக்கிறான், நல்ல செயல்தான் செய்திருக்கிறான் என்று பொருள்!எனவே, நான் அவனைக் காப்பாற்றியே தீருவேன்!” என்று பதில் சொல்வாராம்.தான் பரிந்துரைத்துத் திருமால் திருவடி களில் சேர்த்த பக்தன் மீது திருமகளே ஏன் பழிசொல்ல வேண்டும்? ஏனெனில், நாம் ஒரு குச்சியைப் பூமியில் நட்டால் அதை ஆட்டிப் பார்ப்போம். அது குச்சியை வெளியே எடுப்பதற்காக அன்று. குச்சி நன்றாக ஊன்றி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தானே?அதுபோலத்தான், மகாலட்சுமி பக்தனுக்காகத் திருமாலிடம் பரிந்துரை செய்துவிட்டு அந்த பக்தனைக் காப்பதில் அவருக்கு எவ்வளவு தூரம் உறுதி இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே அவரிடம் அப்பக்தனைப் பற்றிச் சில குறைகளைச் சொல்லிப் பார்க்கிறாள். “என் அடியார் அது செய்யார்!” என்றோ “என்னடி? யார் அது செய்யார்?” என்றோ திருமால் உறுதியாகப் பதில் சொன்னால், “நாம் செய்த பரிந்துரை பலித்துவிட்டது! இந்த பக்தனை இவர் நிச்சயம் காத்துவிடுவார்!” என்ற நம்பிக்கையைப் பெற்று மகாலட்சுமி மகிழ்கிறாள் என்பதுதான் இதில் உள்ள நுட்பம்.இதே கருத்தை ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், தமது வரதராஜ ஸ்தவம் என்ற துதியில், காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாளைப் பார்த்து,“அனன்யாதீனத்வம் தவ கில ஜகௌ வைதிக கிர:
பராதீனம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மனுமஹே
உபாலம்போ யம் போ ச்ரயதி பத ஸார்வஜ்ஞம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவாகலயஸி”

“வரதராஜா! நீ யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், நீயோ பக்தர்களுக்குக் கட்டுப்படுபவனாக இருக்கிறாய். நீ எல்லாம் அறிந்தவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், உனக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உன் பக்தர்கள் செய்யும் தோஷங்கள் மட்டும் உன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதாவது, அவற்றை நீ கண்டாலும், பக்தர்கள் மீதுள்ள அன்பால் கண்டு கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறாய்!” என்று தெரிவிக்கிறார்.

இப்படித் தன் அடியார்கள் செய்யும் குற்றங்களின் விஷயத்தில் அதை அறியாதவர் போல் இருந்து அவர்களை மன்னித்து விடுவதால், திருமால் அவிக்ஞாதா என்று அழைக்கப்படுகிறார். ‘அவிக்ஞாதா’ என்றால் அறியாதவர் – அடியார்கள் செய்யும் குற்றங்களை அறியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 483-வது திருநாமம். விளக்கவுரை வழங்கிய ஸ்ரீபராசர பட்டர், ‘ப்ரபன்ன க்ருத பாபானாம் கிஞ்சிதபி அவிசாரணாத் அவிக்ஞாதா’ என்று விளக்கியுள்ளார். சரணாகதர்கள் செய்த பிழை களைக் கொஞ்சமும் அறியாதவர் போல் இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.

“அவிக்ஞாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பிழைகளைத் திருமால் நிச்சயம் பொறுத்தருள்வார்.

—————
484. ஸஹஸ்ராம்சவே நமஹ: (Sahasraamshavey namaha)

கலி என்ற அசுரன் சிவனைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். அவனுக்குப் பரமசிவன் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “எனக்கு வைரம் பாய்ந்த உடல் என்னும்படி வலிமை மிக்க உடல் கட்டமைப்பு வேண்டும்! திருமால் என்னைக் கொல்லக் கூடாது!” என்று இரண்டு வரங்களைக் கேட்டான் கலி. சரி என்று வழங்கிவிட்டார் சிவன். வரங்களைப் பெற்று அதனால் கர்வம் அடைந்த கலி, பார்வதியிடம் அபச்சாரப் பட்டு விட்டான். “என் கணவர் தந்த வரங்களைப் பயன்படுத்திக் கொண்டு என்னிடமே தவறிழைக்கப் பார்க்கிறாயா? நீ இடுப்புக்கு மேல் வஜ்ரம் பாய்ந்த உடம்போடு இருந்தாலும் இடுப்புக்குக் கீழே வலிமையற்றவனாக ஆகிவிடுவாய்!” என்று சபித்து விட்டாள் பார்வதி.

பரமசிவனுடைய வரத்தையும், பார்வதியின் சாபத்தையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு, பூமியிலே வந்து பிறவி எடுத்தான் கலி அசுரன். அவன்தான் துரியோதனன். இது வியாச பாரதத்தில் வன பர்வத்தில் கோஷயாத்ரா உப பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ரகசியத்தை இளம்வயதில் அறிந்து கொண்ட துரியோதனன், கதாயுத்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். ஏனெனில், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கக்கூடாது என்ற விதி உள்ளது. மற்ற போர் முறைகளில் இடுப்புக்குக் கீழே தாக்கப்பட்டால் உடனே துரியோதனன் அழிந்து விடுவான். எனவே தன்னைக்காத்துக்கொள்ள கதாயுத்தம் மட்டுமே புரியவேண்டும் என்று தீர்மானித்து விட்டான் அவன்.

எந்த பலராமனிடம் பீமன் கதாயுத்தம் பயின்றானோ, அதே பலராமனிடம் கதாயுத்தம் கற்றான் துரியோதனன். அதன் விளைவாகவே கர்வம் தலைக்கு ஏறி, பாண்டவர்களைச் சூதுக்கு அழைத்து, திரௌபதியை அவமானப்படுத்தி பல கொடுமைகள் செய்தான். அவமானப்பட்ட திரௌபதி, “எந்தத் தொடையில் வந்து என்னை அமரச் சொன்னாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தனது கதையால் அடித்துப் பிளப்பான்!” என்று சபதம் செய்தாள். நான் அவ்வாறே செய்வேன் என்று பீமனும் சபதம் செய்தான்.

ஆனால், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கவே முடியாதே. எப்படித் தொடையில் அடிப்பது இந்தச் சபதமே தவறான சபதம் ஆகும். ஆனாலும், தனது பக்தர்கள் செய்த சபதத்தை நியாயப் படுத்த விழைந்தான் கண்ணன். அதனால், மைத்ரேய முனிவரைத் துரியோதனனிடம் அனுப்பி அவனுக்கு அறிவுரை வழங்க வைத்தான். பங்காளிகளைப் பகைத்துக் கொள்ளாமல், உரிய பங்கை அவர்களுக்குத் தருமாறு மைத்ரேய முனிவர் அறிவுரை சொல்ல, அதனால் கோபம் கொண்ட துரியோதனன் அலட்சியமாகத் தொடையைத் தட்டி, “நீங்கள் எல்லாம் வந்து எனக்கு அறிவுரை சொல்வதா?” என்றான். கோபம் கொண்ட மைத்ரேயர், “என்னை அவமானப் படுத்தும் விதமாக, எந்தத் தொடையை நீ தட்டினாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தன் கதையால் அடித்துப் பிளந்து விடுவான்!” என்று சாபம் கொடுத்தார். இப்போது இது ஒரு முனிவரின் சாபமாக மாறிவிட்டதால், பீமன் செய்த சபதம் நியாயப்படுத்தப்பட்டு விட்டது.

பாரதப் போரின் முடிவில், துரியோதனனைப் பீமன் தொடையில் அடித்து வென்ற போது, பலராமன் கோபம் கொண்டு பீமனைத் தாக்க வந்தார். “என்னிடம் கதாயுத்தம் பயின்றவன் என்று சொல்லிக்கொண்டு இப்படித் தவறான முறையில் தொடையில் அடிக்கலாமா?” என வெகுண்டார் பலராமன். அப்போது அவரைத் தடுத்த கண்ணன், “அண்ணா! பீமன் சரியாகத் தான் போரிட்டான். ஆனால் என்ன செய்வது? ரிஷியின் சாபம் வலிமையானது அல்லவா? தொடையில் அடிபட்டு இவன் மாளவேண்டும் என்பது மைத்ரேயர் துரியோதனனுக்கு இட்ட சாபம்! அதன்படி அவன் விதி முடிந்து விட்டது!” என்றான். பலராமனும் சமாதானம் அடைந்துவிட்டார்.

இங்கே கண்ணன் எவ்வளவு விஷயங்களை அறிந்து இந்த லீலையைச் செய்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். இடுப்புக்குக் கீழே வலிமையற்றுப் போவான் என்று துரியோதனனுக்குப் பார்வதி தந்த சாபம், நாராயணனால் மரணம் இல்லை என்று சிவன் கொடுத்த வரம், திரௌபதியும் பீமனும் செய்த சபதம் ஆகிய அனைத்தின் அடிப்படையிலும் பீமன், துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து அவனை வதைக்கும்படி கண்ணன் செய்தான். மேலும், பலராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதையும் முன்கூட்டியே அறிந்து, பீமன் செய்த சபதத்தை முனிவர் தந்த சாபமாகவும் மாற்றிவிட்டான்.

இப்படி அனைவரின் மனப்போக்கையும் அறிந்திருப்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ஸஹஸ்ராம்சு:’ என்றழைக்கப்படுகிறார். அம்சு என்றால் பொதுவாகக் கிரணம் என்று பொருள். இங்கே அம்சு என்ற வார்த்தை அறிவுக் கிரணத்தைக் குறிக்கிறது. ஸஹஸ்ரம் என்றால் ஆயிரக் கணக்கான என்று பொருள். ‘ஸஹஸ்ராம்சு:’ என்றால் ஆயிரக் கணக்கான அறிவுக் கிரணங்களைக் கொண்டவர் அதாவது, எல்லாம் அறிந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 484-வது திருநாமம்.“ஸஹஸ்ராம்சவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தைத் திருமால் அளித்தருள்வார்.

 ———————–

485. விதாத்ரே நமஹ (Vidhaathrey namaha)

அஜாமிளன் என்பவன் இளமைக் காலத்தில், தருமத்தில் நாட்டம் கொண்டவனாக நல்ல முறையில் இல்வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால், காலப்போக்கில் தீய சகவாசத்தால், தருமத்தை மறந்து அறநெறிக்குப் புறம்பான வாழ்க்கையை வாழத் தொடங்கிப் பற்பல தீய செயல்களிலே ஈடுபடத் தொடங்கினான். வயது முதிர்ந்து அவனது ஆயுள் முடியும் தறுவாய் வந்த போது, யம தூதர்கள் அவன்மீது பாசக் கயிற்றை வீசுவதற்காக வந்தார்கள்.

அச்சமயம், அவன் இளம்வயதில் செய்த பக்தியின் நினைவு அவன் மனதில் தோன்றியது. எப்போதுமே நாம் செய்த சிறிய தருமச்செயல் கூட வீண் போகாது. அந்த நற்செயலின் பயனாக, தனது கடைசி மகனை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் அஜாமிளன் மனதில் தோன்றியது. அந்த மகனின் பெயர் நாராயணன். இவன் திருமாலை எண்ணிக் கூப்பிடாவிட்டாலும், மகனை எண்ணி “நாராயணா!” என்று அழைத்தான்.

உடனே, அங்கே விஷ்ணு தூதர்கள் வந்தார்கள். யம தூதர்களைப் பார்த்து, “இவன் பகவானின் திருநாமத்தை உச்சரித்துவிட்டான். இனி இவனை நாங்கள் விஷ்ணு லோகம் அழைத்துச் செல்வோம்! நீங்கள் யம லோகம் அழைத்துச் செல்லக்கூடாது!” என்றார்கள். இதைக் கேட்ட யமதூதர்கள், “என்ன சொல்கிறீர்கள்? இவன் தனது மகனின் பெயரைத் தானே சொன்னான்?” என்று கேட்டார்கள்.

அதற்கு விஷ்ணு தூதர்கள், “அவன் யாரை நினைத்துச் சொல்லி இருந்தாலும், சொன்னது திருமாலின் திருப்பெயர். அதற்குப் பலன் உண்டு. நீங்கள் நெருப்பில், தெரிந்து கை வைத்தாலும் தெரியாமல் கை வைத்தாலும் சுடும். மருந்தைத் தெரிந்து உட்கொண்டாலும், தெரியாமல் உட்கொண்டாலும் நோய் தீரும். அதுபோலத்தான் பகவானின் திருநாமங்களும்!” என்று விடையளித்தார்கள். “அப்படியே இருந்தாலும், ஒருமுறைதானே இவன் நாராயணா என்று சொன்னான்?” என்று கேட்டார்கள் யமதூதர்கள். விஷ்ணு தூதர்கள், “ஆயிரம் வருடங்கள் இருட்டாக இருந்த ஓர் அறையில், விளக்கை ஏற்றினால், அந்த நொடியே வெளிச்சம் வந்து விடுகிறது அல்லவா? அதுபோலத் தான் எத்தனையோ பிறவிகளாகப் பாபம் செய்திருந்தாலும், ஒருமுறை பகவானின் திருப்பெயரை உச்சரித்தவாறே பாபங்கள் நீங்கி, அவர்கள் தூய்மை அடைந்துவிடுகிறார்கள்.

அதன்பின், அவர்களின் மனம் பாபச் செயலில் ஈடுபடுவதில்லை!” என்று விளக்கினார்கள். அதைக் கேட்ட யமதூதர்கள், யம லோகத்துக்கே திரும்ப வந்துவிட்டார்கள். விஷ்ணு தூதர்கள், அஜாமிளனை நல்லோர்கள் இருக்கும் இடத்தில் கொண்டு சென்று சேர்த்தார்கள். அடியார்களோடு கூடியதால், மனம் திருந்தி பக்தி வளரப்பெற்ற அஜாமிளன், அதன்பின் திருமாலைத் தஞ்சம் அடைந்து படிப்படியே முக்தி பெற்றான்.

யமதூதர்கள் யமனிடம், “நாங்கள் அஜாமிளனைப் பிடித்துவரச் சென்றபோது விஷ்ணு தூதர்கள் எங்களைத் தடுத்து விட்டார்கள்! இப்படிக் கடமை செய்யும் போது இடையூறு ஏற்படாமல் நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கோரினார்கள்.யமனோ, “அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? பகவானின் திருநாமங்களைச் சொல்வோருக்கு அருகில் நீங்கள் செல்லவே கூடாது! தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கிறார் என்றால், அவர்களை உங்களுக்குத் தலைவர்களாகக் கருதி வணங்கிவிட்டு நீங்கள் திரும்ப வந்துவிடுங்கள். உலகில் உள்ள மற்றவர்களுக்கு வேண்டுமானால் நான் தலைவனாக இருக்கலாம். ஆனால், எனக்கும் மேல் தலைவராக இருப்பவர் திருமால். எனவே, அந்தத் திருமாலின் தொண்டர்களிடம் நீங்கள் அபச்சாரப் பட்டு விடாதீர்கள்!” என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னானாம்.

இப்படி யமன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்கள், முனிவர்கள், கிரகங்கள் எல்லோரையும் நியமித்து இயக்குபவராகத் திருமால் விளங்குவதாலே, அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார். ‘விதாதா’ என்றால் நியமித்து இயக்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 485-வது திருநாமம்.“விதாத்ரே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, யமபயம் வாழ்வில் ஏற்படாதபடித் திருமால் அருள்புரிவார்.

——–

486. க்ருதலக்ஷணாய நமஹ (Krutha Lakshanaaya namaha)

வானமாமலை மடத்தின் முதல் ஜீயரான பொன்னடிக்கால் ஜீயரைத் தரிசிக்க, அவரது சிஷ்யையான சின்னியம்மாள் என்ற பெண் தரிசிக்கச் சென்றார். ஜீயரின் திருவடிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தார் சின்னியம்மாள். வந்து நமஸ்கரித்த சிஷ்யையைப் பார்த்து பொன்னடிக்கால் ஜீயர், “உன் ஊர் என்ன?” என்று கேட்டாராம். சின்னியம்மாள், “நம்மாழ்வாரின் அவதாரத் திருத்தலமான திருக்குருகூர் தான் அடியேனுக்குப் பிறந்த ஊர்!” என்று சொன்னாராம். “நீ எந்தக் குலம்?” என்று ஜீயர் கேட்க, “அச்சுத குலம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.

(இறையடியார்களுக்குள் என்றுமே ஏற்றத்தாழ்வு கிடையாது. அச்சுதனாகிய திருமாலைப் பற்றிய அனைவரும் அச்சுத குலம் என்ற ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் தானே?) “உன் கோத்திரம்?” என்ன என்று ஜீயர் கேட்க, “பராங்குச கோத்திரம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். (வசிஷ்டர், விஸ்வாமித்ரர், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களின் பெயர்களில் கோத்திரங்கள் உண்டு. ஆனால், அவர்களை விட ஏற்றம் பெற்ற பராங்குசரான நம்மாழ்வாரை இட்டு, அவரது கோத்திரம் என்று இப்பெண் பதில் சொல்லியிருக்கிறார்.)

“நீ எந்த வேதத்தைப் பின்பற்றுகிறாய்?” என்று கேட்டார். ரிக்வேதமோ, யஜுர் வேதமோ, ஸாமவேதமோ, அதர்வண வேதமோ எதையுமே சொல்லாமல், “திராவிட வேதம்!” என்றார் சின்னியம்மாள். தமிழ்வேதமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களின் நெறியில், தான் நிற்பவள் என்று உணர்த்துகிறார். “உன் உறவினர்கள் யார்?” என்று ஜீயர் கேட்க, “ஆத்ம பந்துக்கள்!” என்று சொன்னார் சின்னியம்மாள். (உடல்ரீதியான உறவுகளுள் பக்திக்கு விரோதமாக இருப்போர் உண்மையான உறவினர்கள் அல்லர்.

ஆத்மா பரமாத்மாவை அடைய உதவும் சிறந்த பக்தர்களே உண்மையான உறவினர்கள் ஆவர் என்பது தாத்பரியம்)“உன் பெற்றோர் யாவர்?” என்று கேட்டார் ஜீயர். தனது ஊரான வானமாமலையில் கோவில் கொண்டுள்ள பெருமாள் – தாயாரின் திருப்பெயர்களையே தன் பெற்றோர் பெயராகக் குறிப்பிட்டு, “தெய்வநாயகனும் – ஸ்ரீவரமங்கைத் தாயாரும்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.

“உன் தொழில் என்ன?” என்று ஜீயர் கேட்க, “பாகவத கைங்கர்யம் – அடியார்களுக்குத் தொண்டு செய்வது!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். “அதற்கு என்ன பயன்?” என்று ஜீயர் கேட்டார். “அதுவே பிரயோஜனம், அடியார்களுக்குக் கைங்கரியம் செய்யும் பேற்றுக்கு மேல் வேறென்ன கூலி வேண்டும்?” என்று பதில் அளித்தார் சின்னியம்மாள்.

“என்ன பிரார்த்தனையோடு என்னிடம் வந்திருக்கிறாய்?” என்று ஜீயர் கேட்டார். “உங்களுக்கும் இறை அடியார்களுக்கும் இடைவிடாது தொண்டு செய்யும் பேற்றை அடியேனுக்கு அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் சின்னியம்மாள்.இந்த பதில்களைக் கேட்டு மகிழ்ந்த ஜீயர் சுவாமிகள், “உன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்த போதும், நான் உன்னிடம் இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்டேன் தெரியுமா? ஒரு பக்தனுக்குரிய இலக்கணங்கள் என்ன என்பதை உலகம், உன்மூலம் அறியட்டும் என்பதைக் கருதியே நான் கேட்டேன். நீ சொன்னது போல், தன் ஊருக்கு அருகிலுள்ள ஆழ்வாரின் அவதாரத் தலத்தையே தன் பிறந்த ஊராக ஒவ்வொரு பக்தனும் சொல்லிக்கொள்ளவேண்டும்.

அச்சுத குலம் என்றுதான் தன் குலத்தைக் குறிப்பிட வேண்டும். ஆழ்வாரை இட்டுப் பராங்குச கோத்திரம் என்றும், ஆழ்வார் பாசுரங்களை இட்டு திராவிட வேதம் என்றும் தனது உட்பிரிவுகளைக் குறிப்பிட வேண்டும். இறைவனையும் இறைவியையுமே பெற்றோராகவும், இறை அடியார்களையே உறவினர்களாகவும் கொள்ளவேண்டும். இறைவனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு செய்வதையே வாழ்வின் பயனாகக் கருதவேண்டும். இந்த இலக்கணங்கள், நீ தந்த எளிய பதில்கள் வாயிலாக உலகத்தோரின் மனங்களில் பதியட்டும்!” என்று ஆசீர்வாதம் செய்து அருளினார்.

இப்படித் தனது அடியார்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இலக் கணங்களைத் திருமாலே ஆசார்யர்கள் மூலம் வகுத்துக் கொடுத்திருப்பதால், திருமால் ‘க்ருதலக்ஷண:’ என்று அழைக்கப்படுகிறார். க்ருத என்றால் வகுத்தவர். லக்ஷண என்றால் இலக்கணம். ‘க்ருதலக்ஷண:’ என்றால் அடியார்களுக்கான இலக்கணங்களை வகுத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 486-வது திருநாமம். “க்ருதலக்ஷணாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு, அடியார்களுக்கு உரித்தான அங்க அடையாளங்கள் அனைத்தும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————————–

488. ஸத்வஸ்தாய நமஹ (Sathvasthaaya namaha)

ஆழ்வார்களுள் ஒருவரான திருமழிசைப் பிரான், கும்பகோணத்தில் கோவில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைத் தரிசிக்கும், ஆவலுடன் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டுக் கும்பகோணத்தை நோக்கிப் பயணித்தார். வழியில் உள்ள பெரும்புலியூர் என்ற கிராமத்தில், ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்தார் திருமழிசைப்பிரான். அத்திண்ணையிலே வேதம் ஓதிக்கொண்டிருந்த அந்தணர்கள் திருமழிசைப் பிரானைக் கண்டு, `தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த இவர் கேட்க நாம் வேதம் ஓதுதல் தகாது’ என்று எண்ணி, வேதம் சொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

திருமழிசைப் பிரான் அவர்களின் கருத்தை அறிந்து திண்ணையை விட்டு இறங்கினார். மறையவர்கள் உடனே வேதம் ஓதத் தொடங்கினார்கள். ஆனால், விட்ட வாக்கியம் தோன்றாமையால் தவறித் தடுமாறினார்கள். ஆழ்வாரும் அதைக் கண்டு, கருநெல்லை நகத்தால் பிளந்து, “க்ருஷ்ணானாம் வ்ரீஹீணாம் நக நிர்ப்பின்னம்” என்ற வேதத் தொடரைத்தான் நீங்கள் சொல்லி வந்தீர்கள் என்று குறிப்பால் காட்டியருளினார்.

அவர்கள் தெளிந்து வந்து ஆழ்வாரை வணங்கி, பிழையைப் பொறுத்தருள்க என வேண்ட, திருமழிசைப் பிரானும், அவர்களுக்குப் பல இன்மொழிகளைக் கூறி விடை பெற்றுக்கொண்டு சென்றார்.பின்னர், அந்தப் பெரும்புலியூர் திருக்கோவிலின் வெளிப்புறத்தைத் திருமழிசைப் பிரான் பிரதட்சிணம் செய்ய, உள்ளே எழுந்தருளியிருக்கும் பெருமாள் இவ்வாழ்வார் எழுந்தருளுகிற திருவீதிகள் தோறும் தம் திருமுகத்தைத் திருப்பிக்கொண்டே வந்தார். இந்தச் செயலை அக்கோயில் அர்ச்சகராகிய நம்பி கண்டு, சில பக்தர்களுக்கும் காட்டினார். அந்தக் கிராமத்தில், பெரும்புலியூர் அடிகள் என்ற பெரியவர் யாகம் செய்துவந்தார்.

அந்தப் பெரும்புலியூர் அடிகளின் யாகசாலைக்குச் சென்று ஊர்மக்கள் இவரது பெருமையைக் கூறினார்கள். பெரும்புலியூர் அடிகள் உடனே அங்கு வந்து, திருமழிசைப் பிரானை வணங்கி யாகசாலைக்கு எழுந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். திருமழிசைப் பிரானும் சம்மதிக்கவே, அவரை யாகசாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார் பெரும்புலியூர் அடிகள். பின்னர் யாகத்தில் செய்யும் `அக்கிர பூஜை’ என்ற முதல் மரியாதையை ஆழ்வாருக்குச் செய்தார் பெரும்புலியூர் அடிகள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வேள்விச் சடங்கர்கள், திருமழிசைப் பிரானை இழிவுபடுத்திப் பேசினார்கள். ஆழ்வாரும் வெறும் சடங்குகளை மட்டுமே பற்றி நிற்கும் அவர்களுக்கு நல்லறிவு உண்டாகும்படிச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்துடன் எம்பெருமானை எண்ணி,

“அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்மை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே”

– என்று பாடியருளினார்.

என் இதயத்தில் நீ இருப்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று திருமாலிடம் கோரினார் ஆழ்வார்.திருமாலும், யாவரும் காணும்படி ஆழ்வாரின் உள்ளத்தில், தான் பள்ளி கொண்டிருக்கும் காட்சியைக் காண்பிக்க, ஆழ்வாரை இகழ்ந்து பேசிய சடங்கர்கள் எல்லோரும் இக்காட்சியினால் உள்ளம் மாறி ஆழ்வாரது திருவடிகளில் விழுந்து வணங்கி, “ஆழ்வாரே அக்கிர பூசைக்கு உரியவர்!” எனப் பன்முறை போற்றி, தாம் செய்த செயல்களை மன்னித்தருளுமாறு வேண்டினர்.

திருமழிசைப் பிரானும் அவர்களுக்குப் பல நன்மொழிகளைக் கூறி, பெரும்புலியூர் அடிகளிடத்தும் விடை பெற்றுக்கொண்டு திருக்குடந்தைக்கு எழுந்தருளினார். ஆக, திருமழிசைப் பிரான் போன்ற சிறந்த அடியார்களின் இதயத்தில் எப்போதும் வசிப்பதால் திருமால், ‘ஸத்வஸ்தஹ’ என்று அழைக்கப்படுகிறார். ஸத்வ என்பது இதயத்தைக் குறிக்கிறது. ஸ்த என்றால் நிலைநிற்பவர். ‘ஸத்வஸ்த:’ என்றால் அடியார்களின் உள்ளத்தில் வசிப்பவர். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 488-வது திருநாமம். “ஸத்வஸ்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் திருமால் எப்போதும் குடியிருப்பார்.

————

489. ஸிம்ஹாய நமஹ (Simhaaya namaha)

அம்பரீஷன் என்ற மன்னன் இட்சுவாகு குலத்திலே தோன்றியவன், ராமனுக்குக் குலமுன்னவர். அம்பரீஷனின் பக்திக்கு உகந்த திருமால், தனது சுதர்சன சக்கரத்தை அம்பரீஷனிடம் கொடுத்து, உனக்கு என்ன ஆபத்து நேர்ந்தாலும் இந்தச் சக்கரம் உன்னைக் காக்கும் என்று கூறியிருந்தார். இத்தகைய சிறந்த பக்தரான அம்பரீஷன், மதுவனம் என்னும் இடத்தில் ஒரு வருடம் தங்கி இருந்து நிறைய தானங்கள் செய்து ஏகாதசி விரதமும், அனுஷ்டித்து வந்தான்.

இப்படிப் பதினொரு மாதங்கள் ஏகாதசி விரதம் நிறைவு செய்த நிலையில், பன்னிரண்டாவது மாதம் வந்தது. ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் நீராடி, திருமாலுக்குப் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்யும் நேரம். அப்போது, துர்வாச முனிவர் தம் சீடர்களுடன் அங்கே வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றான் அம்பரீஷன். “இத்தகைய மகான் இங்கே வந்தது அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நீங்கள் தங்கி இருந்து உணவு அருந்தி எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

துர்வாசரோ, “அம்பரீஷா! நான் எனது அனுஷ்டானங்களை இன்னும் நிறைவு செய்ய வேண்டிய உள்ளது. நான் நிறைவுசெய்துவிட்டு வந்து உண்கிறேன்!” என்றார். “சரி! அதுவரை காத்திருக்கிறேன்!” என்று மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டான் அம்பரீஷன். ஆனால், சிஷ்யர்களோடு நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றச் சென்ற துர்வாசர், வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. துவாதசி திதி நிறைவடைவதற்குள், பாரணை உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டிய நிலையில், காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதால் அம்பரீஷன் கலங்கினான்.
ஒருநிலையில், தன் குருவிடம் அம்பரீஷன், “சுவாமி! துவாதசி திதி முடியும் தறுவாய் வந்துவிட்டது. வந்திருக்கும் விருந்தினரான துர்வாசருக்கு உணவளிக்காமல் உண்டாலும் தவறாகிவிடும். அதே சமயம், துவாதசி திதி நிறைவடைவதற்குள் உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்யாவிட்டாலும் தவறாகிவிடும். என்ன செய்வது?” என்று கேட்டான்.

அம்பரீஷனின் குரு, “நீ பெருமாளின் ஸ்ரீபாத தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்து விடு. தண்ணீரை உட்கொண்டதால், விரதம் நிறைவானதாகவும் கொள்ளலாம். அதே சமயம், வேறு உணவு உட்கொள்ளாததால், விருந்தினருக்கு முன் `உண்டாய்’ என்ற தோஷமும் வராது!” என்று வழிகாட்டினார். அப்படியே செய்தான் அம்பரீஷன். இறைவனின் திருவடி தீர்த்தத்தை அம்பரீஷன் உட்கொண்ட அடுத்த நொடி, அங்கே துர்வாசர் சீடர்களோடு வந்துவிட்டார்.

“எனக்கு உணவளிக்காமல் எப்படி நீ விரதத்தை நிறைவு செய்தாய்?” என்று கோபத்துடன் முழங்கினார். அம்பரீஷனை அழிப்பதற்காக ஒரு பிசாசை அவன்மீது ஏவினார் துர்வாசர். பகவான்மீதுள்ள நம்பிக்கையால், கலங்காமல் நின்றான் அம்பரீஷன். அவனுக்குக் காவலாகத் திருமால் தந்திருந்த சுதர்சனச் சக்கரம், துர்வாசர் ஏவிய பிசாசை விழுங்கியது. அந்தச் சக்கரத்தாழ்வார் அதன்பின் துர்வாசரைத் துரத்தத் தொடங்கினார். சக்கரத்தாழ்வார் துரத்த, பிரம்மா, ருத்ரன் என்று எல்லாத் தேவர்களின் உதவியையும் நாடினார் துர்வாசர். யாரும் அடைக்கலம் தரவில்லை.

திருமாலின் திருவடிகளில் விழுந்தார் துர்வாசர். “என் பக்தனிடம் மன்னிப்பு கேட்டாலே ஒழிய என் சக்கரம் உங்களை மன்னிக்காது!” என்று சொல்லிவிட்டார் திருமால். அதன்பின் நிறைவாக, அம்பரீஷனின் பாதங்களில் வந்து விழுந்தார் துர்வாசர். “ஆஹா! சுவாமி! நீங்கள் என் பாதங்களில் விழுவதா?” என்று பதறிய அம்பரீஷன், சக்கரத்தாழ்வாரைத் துதித்தான். அதனால், உகந்து சக்கரத்தாழ்வார் சாந்தம் அடைந்தார். இனி அடியார்களிடம் நாம் தெரிந்தோ தெரியாமலோ மோதவே கூடாது என்று சொல்லிக் கொண்டே, அம்பரீஷனிடம் இருந்து விடைபெற்றாராம் துர்வாசர்.

இப்படித் தன் அடியார்களுக்குத் தீங்கு இழைக்க நினைப்போரைத் தண்டிப்பதால், திருமால் ‘ஸிம்ஹ:’ தண்டிப்பவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 489-வது திருநாமம்.“ஸிம்ஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்க்கையில் எந்தத் தடைகளும் வராதிருக்கும்படிதிருமால் அருள்புரிவார்.

——————

490. பூதமஹேஸ்வராய நமஹ (Bhootha Maheshwaraaya namaha)

கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரம் என்ற திவ்யதேசத்தின் தலவரலாறு இது.தேவ-அசுரப் போரில் அசுரர்களின் கை ஓங்க, தேவர்கள், திருமாலின் உதவியை நாடினார்கள். தீயசக்திகளான அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதாக திருமால் தேவர்களுக்கு அபயம் அளித்தார். அசுரர்கள் பிரம்மாவின் உதவியை நாடி, எங்களுக்கு ஏதாவது புகலிடம் காட்டுங்கள் என்று கோரினார்கள். நீங்கள் சிவபெருமானின் உதவியை நாடுங்கள் என்று அவர் களிடம் சொன்னார் பிரம்மா. அசுரர்கள் சிவனின் உதவியை நாட, சிவனும் அவர்களைக் காப்பதாக வாக்களித்துவிட்டார். அடுத்து தேவ அசுரப் போர் நடந்தபோது, தேவர்களின் பக்கம் திருமாலும், அசுரர்களின் பக்கம் சிவபெருமானும் நின்றார்கள். திருமாலுக்கும் சிவனுக்கும் எதிராகப் பெரும் போர் மூண்டுவிட்டது.

(அடடா!!! சைவ-வைணவச் சண்டைகளே வேண்டாம் என்று சொல்லும் காலத்தில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை என்று நீ கதை எழுதுகிறாயே என்று நீங்கள் புருவங்களை உயர்த்த வாய்ப்புண்டு. ஆனால் இப்போதே முன் முடிவுக்கு வராமல், கதையை முழுமையாகப் படித்தால் ஒரு தத்துவம் நமக்குக் கிட்டும்.)

சிவபெருமான் தனது சூலத்தைத் திருமாலின் மீது ஏவினார். திருமாலின் சக்ராயுதம், சிவனின் சூலத்தை மறைத்துவிட்டது. “இனி என் கையில் ஆயுதமே இல்லை! நான் நாராயணனைச் சரண் அடையப்போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டு, திருமாலிடம் சரணடைந்தார் சிவபெருமான். “அடடா! நமக்குத் தலைவராக வந்த சிவனே திருமாலின் பாதங்களில் விழுந்துவிட்டாரே! இனி நாம் என்ன செய்வது?” என்று தெரியாமல் திகைத்தார்கள் அசுரர்கள். அப்போது, திருமால் மும்மூர்த்தி வடிவமாகத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காட்சி அளித்தார். திருமால் பிரம்மாவுக்குள் அந்தர்யாமியாக இருந்து உலகைப் படைக்கிறார்.

விஷ்ணுவாகத் தானே இருந்து காக்கிறார். ருத்திரனுக்குள் அந்தர்யாமியாக இருந்து அழிக்கிறார். இதை உணர்த்த, தனது திருக்கரத்தில் பிரம்மாவுக்கு அடையாளமான தாமரையை ஏந்தி இருந்தார். சிவபெருமானைக் குறிக்கும் விதமாக நெற்றியிலே மூன்றாவது கண்ணோடு விளங்கினார். அதனால் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் பெயர் பெற்றார்.இந்தக் கோலத்தில் காட்சி அளித்த தெய்வநாயகப் பெருமாள், “ஏ அசுரர்களே! நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! பிரம்மாவும் எனக்கு உடலாக இருக்கிறார். சிவனும் எனக்கு உடலாக இருக்கிறார். என் உடலைக்கொண்டு என்னையே அழிக்கப் பார்க்கிறீர்களா? என் கையைக் கொண்டு என் கண்ணையே குத்தமுடியுமா? முட்டாள்களே! நாங்கள் மூவரும் என்றைக்குமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்!” என்று கூறினார்.

“இனி வேறு வழியில்லை!” என்று உணர்ந்த அசுரர்கள், அத்தனை பேரும் திருமாலின் திருவடிகளை வந்து அடிபணிந்து மனம் திருந்தினார்கள். இன்றும் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரத்தில் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் திருநாமத்தோடு, மூன்றாம் கண்ணோடும் கையில் தாமரையோடும் எழுந்தருளி உள்ளார் திருமால்.

திருமங்கை ஆழ்வாரும் அப்பெருமாளைப் பாடும்போது, “மூவராகிய மூர்த்தியை மூவுலகு உண்டு உமிழ்ந்தானை” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இப்படி எல்லாத் தேவர்களையும் தனக்கு சரீரமாகக்கொண்டு, அவர்களையும் இயக்கும் தலைவராகத் திகழ்வதால் திருமால் ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். பூத என்பது உலகில் படைக்கப்பட்ட உயிர்களைக் குறிக்கும். பூதேஸ்வர: என்பது அந்த உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்னும் ஸ்தானத்தில் இருக்கும் பிரம்மா, இந்திரன் போன்றோரைக் குறிக்கும்.

பூதமஹேஸ்வர: என்றால், தலைவர்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களுக்கும் தலைவராக இருப்பவர் என்று பொருள். அப்படி, தேவர்களுக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதாலே, ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 490-வது திருநாமம், ‘பூதமஹேஸ்வர:’ என்றால் அனைத்து உயிர்களுக்கும் பெருந்தலைவர் என்று பொருள்.

“பூதமஹேஸ்வராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், யாரும் நம்மை வெறுக்காதபடி அனைவரோடும் நல்லிணக்க உணர்வுடன் இணைந்து வாழும் பக்குவத்தைத் திருமால் நமக்கு அருள்வார்.

———–

491. ஆதிதேவாய நமஹ (Aadhi Devaaya namaha)

முதலையிடம் சிக்கிக் கொண்ட கஜேந்திரன் என்ற யானை,
“நமோ நமஸ்தே அகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய”

– என்று திருமாலை அழைத்தது என்று ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்கிறது.

‘அகிலகாரண’ என்றால் அனைத்து உலகுக்கும் காரணமானவர். ‘நிஷ்காரண’ என்றால் தனக்கொரு காரணம் இல்லாதவர் என்று பொருள். ‘அத்புதகாரண’ என்றால் உலகியலில் நாம் காண்கின்ற காரண-காரியங்கள் போல் அல்லாமல், தானே உலகுக்கு மூலப்பொருளாகவும் படைப்பாளியாகவும் இருப்பவர் என்று பொருள். இதன் சுருக்கமாகவே, ஆதிமூலம் என்ற சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம்.யானை, முதலில் காரணப் பொருள் என்னைக் காக்கட்டும் என்று அழைத்தவாறே, அதைக் காக்க இந்திரன் புறப்பட்டானாம். “நாம்தான் தேவலோகத்தில் நடைபெறும் பல விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறோம்! எனவே யானை நம்மைத்தான் அழைக்கிறது!” என்ற எண்ணத்தில் போனான் இந்திரன்.

ஆனால், `அகில காரணாய’ என்று யானை சொன்னவாறே, “அடடா! நாம் அகில உலகுக்கும் காரணம் ஆகமாட்டோமே! அனைத்து உலகையும் படைத்தவர் பிரம்ம தேவர்தானே? இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டான் இந்திரன்.`அகில காரணாய’ என்ற வார்த்தையைக் கேட்டு யானையைக் காக்க பிரம்மதேவர் விரைந்தார். ஆனால் யானையோ, `நிஷ்காரணாய’ தனக்கொரு காரணம் இல்லாதவன் என்று மேலே குறிப்பிட்டது. இதைக் கேட்ட பிரம்மா, “நமக்கும் காரணப் பொருளாக நம்மைப் படைத்த திருமால் இருக்கிறாரே! அப்படியானால் இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டார்.

`அத்புத காரணாய’ என்று யானை கூறியவாறே உலகுக்கு ஒப்பற்ற காரணமாக விளங்கும் திருமாலையே யானை குறிப்பிடுகிறது என்பதை எல்லாருமே ஒருவாறு அறிந்து கொண்டார்கள். ஆனால், அதற்குள் யானையைக் காக்க வேண்டும் என்ற துடிப்போடு திருமால் வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு கருட வாகனத்திலே பறந்து கொண்டிருந்தாராம்.

அப்போது பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாரும், `இந்த கேஸ்’ அவரது ‘கேஸ்’ என்று சொல்லிவந்தோம்! இது உண்மையிலேயே ‘கேசவரது கேஸ்’ தான்! அதனால் தான் கேசவனே செல்கிறான்!” என்று கொண்டாடினார்களாம் (க என்பது பிரம்மாவைக் குறிக்கும், ஈச என்பது சிவனைக் குறிக்கும். க, ஈச ஆகிய இருவரையும் படைத்து இயக்குபவருக்குக் கேசவன் என்று திருநாமம். நான்முகன், ருத்திரன் போன்றோருக்கும் காரணமான ஆதிமூலம் திருமால் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.)

இப்படி தேவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலே, திருமால் குளக்கரையையே அடைந்துவிட்டார். விரைவாக முதலையை அழித்து கஜேந்திரனைக் காப்பாற்றி அதற்கு முக்தியும் அளித்தார். `ஆதி’ என்றால் மூலக் காரணமாக இருப்பவர் என்று பொருள். நான் முகனை, நாராயணன் படைத்தான் என்ற திரு மழிசைப் பிரான் பாசுரமும், தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதிகவயே என்ற ஸ்ரீமத் பாகவத சுலோகமும் காட்டுவது போல், பிரம்மாவைத் தனது உந்தித் தாமரையில் படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர் திருமால்.

உலகைப் படைக்கும் பிரம்மாவையே படைத்தவர் என்பதன் மூலம், அவரே ஆதிகாரணமானவர் என்பதை அறிகிறோம். தேவர்களுக்கு ஆதிகாரணமாக இருப்பதால் திருமால், ‘ஆதி:’ என்று குறிப்பிடப்படுகிறார்.‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) ஒளிமிக்கவர் என்று பொருள். தனது பொலிவின் முன் தேவர்கள் அத்தனை பேரும் மங்கிப்போகும் படி ஒளி வீசிக்கொண்டு திகழ்வதால் திருமால், தேவ என்று அழைக்கப்படுகிறார்.

ஆக, தேவர்களுக்கு ஆதியாகவும், மற்ற தேவர்களின் ஒளி தன் ஒளியின் முன் மங்கிப் போகும்படியாகவும் விளங்குவதால் திருமால் ‘ஆதிதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 491-வது திருநாமம். ஆதி மற்றும் தேவன் ஆகிய இரு பொருள்களையும் விளக்கும்படி நம்மாழ்வார் திருவாய்மொழியில், நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழியில்,

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?— என்றும்,

பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே
– என்றும் போற்றி இருக்கிறார்.

“ஆதிதேவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஒளிமயமான எதிர்காலமும் தலைமைப் பண்பும் நிறையும்படி அருள்புரிவார்.

————

492. மஹாதேவாய நமஹ (Mahaa Devaaya namaha)

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் என்ற மகான் திருவேங்கடமலையில் தங்கி, ராமானுஜன் என்ற தோட்டமும், இராமானுஜப் புத்தேரி என்ற பொய்கையும் ஏற்படுத்தி, அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்துத் திருவேங்கடமுடையானுக்குப் புஷ்பகைங்கர்யம் செய்துவந்தார்.ஒருநாள் இரவு அனந்தாழ்வானின் தோட்டத்துக்குள் ஒரு தம்பதியர் நுழைந்தார்கள். அந்தக் கணவன், தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொய்து அவற்றைத் தனது மனைவியின் மீது வீசி விளையாடினான்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த அனந்தாழ்வான், பெருமாளுக்கு என்று உள்ள பூக்களைக் கொய்து, இப்படி ஒரு தம்பதியர் விளையாடுவதைக் கண்டு கோபமுற்றார். அவர்களைப் பிடிக்க முயன்றபோது, கணவன் தப்பித்து ஓடிவிட்டான். மனைவியைப் பிடித்து அங்கிருந்த ஒரு சம்பங்கி மரத்தில் கட்டிவைத்தார் அனந்தாழ்வான். “உன்னை மீட்டுச் செல்ல உன் கணவன் வருவான் அல்லவா? அவன் வரும்போது அவனைக் கவனித்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி அந்த மரத்தின் எதிரிலேயே ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டார் அனந்தாழ்வான்.

இரவு முழுவதும் அந்த இளைஞனின் வருகைக்காக அனந்தாழ்வான் காத்திருந்தும், மனைவியைக் காப்பதற்காக அவன் வருவதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணும் அனந்தாழ்வானிடம், “சுவாமி! உங்களைப் பார்த்தால் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள்! தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்!” என்று கெஞ்சினாள். அனந்தாழ்வானோ, “நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மலையில் பூக்கும் அனைத்துப் பூக்களும் பெருமாளுக்கு மட்டுமே. ஆனால், அந்தப் பூக்களைக் கொய்து மானிடர்களான நீங்கள் இருவரும் விளையாடி இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? உன் கணவன் வரட்டும் நான் பேசிக்கொள்கிறேன்!” என்று கோபத்துடன் சொன்னார்.

இரவு நகர்ந்து நகர்ந்து, பிரம்ம முகூர்த்த நேரம் வந்தது. அர்ச்சகர்கள் திருவேங்கடமுடையானின் திருக்கோவிலைத் திறந்தார்கள். கருவறையைத் திறந்தால், மலையப்பனின் மார்பை அலங்கரிக்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. அடடா! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனின் மார்பில் அலர்மேல் மங்கை அகன்று விட்டாளே! என்ன ஆனதோ என்று எல்லாரும் திகைத்துப்போனார்கள்.

அப்போது திருவேங்கடமுடையானே வாய் திறந்து, “அலர்மேல் மங்கை நாச்சியார் அனந்தாழ்வானின் தோட்டத்தில் இருக்கிறாள். அனந்தாழ்வானின் பூக்கூடையில் அவளை எழுந்தருளச் செய்து இங்கே அழைத்து வரச்சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார்.இச்செய்தியை அர்ச்சகர்கள் சென்று அனந்தாழ்வானிடம் தெரிவிக்க, “ஆஹா! தம்பதியாக வந்தவர்கள் மலையப்பனும் மகாலட்சுமியுமான திவ்ய தம்பதியரா? அதை அறிந்து கொள்ளாமல் அபச்சாரப்பட்டுவிட்டேனே!” என்று கலங்கினார்.

பக்தனின் கட்டை அவிழ்த்துக் கொள்ள முடியாதவள் போல் கட்டுண்டு கிடந்த மகாலட்சுமியை அவிழ்த்துவிட்டார். பெருமாளின் நியமனப்படி அலர்மேல் மங்கைத் தாயாரைத் தன் பூக் கூடையில் அமரவைத்து, அவளைத் தலைமேல் சுமந்து கொண்டு பெருமாளின் கருவறை நோக்கி நடந்தார் அனந்தாழ்வான். “வாரும் மாமனாரே!” என்று அனந்தாழ்வானை வரவேற்றான் மலையப்பன். “நாச்சியார் உம்மைத் தந்தை என்று நேற்றிரவு அழைத்தாள் அல்லவா? அதனால் இன்று முதல் நீர் எமக்கு மாமனார் ஆவீர்!” என்று திருவாய் மலர்ந்தருளினான் மலையப்பன்.

ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கரியமாக எண்ணி, புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வான் என்ற பக்தரைக் கௌரவிப்பதற்காக இந்த விளையாட்டை அந்த திவ்ய தம்பதியர் செய்திருக்கிறார்கள். இப்படித் தனது பக்தர்களைக் காப்பதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் பற்பல லீலைகள் செய்வதால் திருமால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) விளையாடு பவர் என்று பொருள். ‘மஹாதேவ:’ என்று மிகப்பெரிய விளையாட்டை விளையாடுபவர் என்று பொருள். தோட்டத்தில் பூக்கொய்வது தொடங்கி, உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற அத்தனைச் செயல்களையும் விளையாட்டு போல் அனாயாசமாகச் செய்ய வல்லவர் திருமால். அதனால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 492-வது திருநாமம்.“மஹாதேவாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள், விளையாட்டுத் துறையில் உச்சம் தொடுவதற்குத் திருமால் அருள்புரிவார்.

———–

493. தேவேசாய நமஹ (Deveshaaya namaha)

திருமாலைக் குறித்துத் தியானத்தில் ஈடுபட விழைந்தார் பிரம்மா. ஆனால், அவரது முன் வினைகளாகிய கர்மா அவரது தியானத்துக்குத் தடையாக இருந்தன. அதனால், அவருக்குத் தியானத்தில் மனம் லயிக்கவில்லை. இறைவனின் வடிவைத் தியானிக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் பிரம்மா. அவரிடம் அசரீரியாகப் பேசிய திருமால், “பிரம்ம தேவனே! உங்கள் பாபங்கள் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்ய வேண்டும். அதன்பின்தான் உங்களுக்குத் தியானம் கைகூடும்!” என்றார்.

“ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆயிற்றே! என் துன்பத்தை விட அதற்கான பரிகாரம் கடினமானதாக உள்ளதே!” என்று பிரம்மா கேட்டார். “அப்படியானால் காஞ்சீபுரத்தில் ஒரு அஸ்வமேத வேள்வி செய்யுங்கள். அங்கே ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்விகள் செய்ததற்குச் சமம்!” என்று சொன்னார் திருமால். அதன்படி, காஞ்சீபுரத்தில் வேள்விச் சாலை அமைத்து, கிழக்குமுகமாக அமர்ந்து வேள்வி செய்யத் தொடங்கினார் பிரம்மா. அந்த வேள்வி செய்யும் போது, அவருக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அவை அனைத்தையுமே திருமால் போக்கிக் கொடுத்து, அவரது வேள்வி தொடர்ந்து இடையூறின்றி நடப்பதற்கு அருள்புரிந்தார்.

வேள்வியின் நிறைவுப்பகுதி வந்தது. வேள்வியில் அர்ப்பணிக்கப் படும் குதிரையின் வயிற்றுப் பகுதியைக் கொண்டு செய்யும் `வபா’ ஹோமத்தைச் செய்தபோது, பிரம்மாவுக்கு நடுக்கம் ஏற்பட்டதாம். எந்த ஒரு செயலுமே எடுத்து நடத்தும் போது, நிறைவுப் பகுதி வருகையில், அது நன்றாக நிறைவடைய வேண்டுமே என்ற நடுக்கம் வருவது இயற்கையல்லவா? தன் மகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் தந்தை, மகள் கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரத்தில் இனிதாகத் திருமணம் நிறைவடைய வேண்டுமே என்ற ஒருவிதப் பதற்றத்தில் இருப்பார் அல்லவா?

அதுபோல் பிரம்மாவும், “யாகத்தின் நிறைவுப் பகுதி நன்றாகப் பூர்த்தியாக வேண்டுமே! அந்தந்த தேவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகங்களைச் சரியாகத் தந்துவிட வேண்டுமே! யாருக்கும் எந்தக் குறையும் வரக்கூடாதே!” என்றெல்லாம் பலவாறாகப் பதறி நடுங்கிக் கொண்டிருந்தாராம். இந்த நடுக்கத்துடன் வபாஹோமத்தைப் பிரம்மா செய்ய, அந்த வேள்வித் தீயிலேயே அத்திகிரி வரதராஜப் பெருமாளாகத் திருமால், பிரம்மாவுக்குக் காட்சி அளித்தார்.

“அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரந்தரும் தெய்வப் பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்
உத்திரவேதிக்கு உள்ளே உதித்தார் வந்தார்
உம்பர்தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!”

என்று தேவர்கள் போற்றிப் பூமாரி பொழியத் தோன்றிய வரதராஜப் பெருமாள், “பிரம்மா! உனது பாபங்கள் நீங்கிவிட்டன. நீ விரும்பியபடி நான் உனக்குக் காட்சி தந்துவிட்டேன் பார்!” என்று சொன்னார்.அப்போது பிரம்மா, “தேவர்கள் எனக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றாலும்கூட அவரவர்க்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகம் சரியாகப் போய்ச் சேர்ந்து எல்லாத் தேவர்களும் திருப்தி அடைய வேண்டுமே என்ற பெரும் கவலையோடு இருக்கிறேன்!” என்றாராம்.

அதற்கு வரதராஜன் பெருமான், “பிரம்மனே! அதைக் குறித்து நீங்கள் அஞ்சவே வேண்டாம்! தேவர்களின் தலைவனான நானே இப்போது தோன்றி, நீங்கள் சமர்ப்பித்த ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டுவிட்டேனே! தலைவனே திருப்தியடைந்த பின் தொண்டர்கள் குறைசொல்ல இனி ஒன்றுமில்லை! யாகம் இனிதே நிறைவேறிவிட்டது!” என்று சொல்லி
பிரம்மாவைத் தேற்றினார்.

“முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே!”

என்று ஆண்டாள் பாடிய பாசுரம், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னே யாகசாலைக்கு வந்து, அவர்களுக்கெல்லாம் பிரம்மா கப்பம் கட்ட வேண்டாதபடித் தவிர்த்து, மிடுக்கோடு நின்ற வரதராஜனைக் குறிப்பதாகவும் ரசிப்பதற்கு இடமுள்ளது. இப்படி எல்லாத் தேவர்களுக்கும் தலைவராக, அயர்வறும் அமரர்கள் அதிபதியாக, இமையோர் தலைவராக, தேவராஜனாக – திருமால் விளங்குவதாலே, ‘தேவேச:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 493-வது திருநாமம்.“தேவேசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், எடுத்த காரியம் அனைத்தும் இனிதே நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.

————-

494. தேவப்ருதே நமஹ (Devabhruthey namaha)

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதார ஸ்தலமான தேரழுந்தூரின், ஸ்தல புராணத்தில் உள்ள ஒரு சரித்திரம். (அங்குள்ள பெருமாள் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் இணைத்து ஸ்தல புராணம் இருப்பதை வேற்றுமை நோக்கில் காணாது, ஒற்றுமைநோக்கில் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.)பரமசிவனும் திருமாலும் சொக்கட்டான் விளையாட, பார்வதிதேவி நடுவராக அமர்ந்திருந்தாள். போட்டியில் ஒருநிலையில், “நான்தான் வென்றேன்!” என்று திருமால் கூறினார்.

“ஆம்! ஆம்!” என்று பார்வதி தலை ஆட்டினாள். “ஓஹோ! புகுந்த வீட்டை விடப் பிறந்த வீடுதான் உனக்கு முக்கியமோ? கணவனைவிட உன் அண்ணன்தான் உனக்கு முக்கியமோ? அவர் வென்றேன் என்று சொல்ல, நீயும் மாடு போல் தலை ஆட்டுகிறாயே! நீ மாடாகப் பூமியில் பிறப்பாய்!” என்று பார்வதியைச் சபித்தார் சிவன். (நம் வீட்டில் வரும் சண்டைகளைப் போலே சிவன்-பார்வதிக்குள் சண்டை வருமா என்று எண்ணிவிட வேண்டாம்! பூமியில் தேரழுந்தூர் திருத்தலம் உருவாவதற்காக அவர்கள் செய்யும் விளையாட்டு!)

சோழநாட்டிலுள்ள தேரழுந்தூரில் பசுவாக வந்து தோன்றினாள் பார்வதி. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று சொல்வதற்கேற்ப, பார்வதியைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தார் சிவன். அதனால் அவரும் தேரழுந்தூர் க்ஷேத்திரத்துக்கு வந்து, வேதபுரீஸ்வரர் என்ற பெயரோடு தவத்தில் ஈடுபட்டார்.நாம் விளையாடிய சொக்கட்டான் விளையாட்டால்தானே பார்வதியும் பரமசிவனும் பிரிய நேர்ந்தது. நாமே அவர்களை இணைத்து வைத்து விடுவோம் என்று முடிவெடுத்த திருமால், மாடு மேய்க்கும் கண்ணனாக ஆமருவி அப்பன் என்ற திருநாமத்தோடு தேரழுந்தூருக்கு வந்தார். மாடு வடிவில் வந்த பார்வதி தேவியை அவளது சகோதரனாகிய கண்ணன் காத்து ரக்ஷித்தார்.

கண்ணன் மாடு மேய்ப்பதைப் பார்த்த வேதங்கள், கன்றுக்குட்டிகளாக அவனை நாடி வந்துவிட்டன. கண்ணன் மேய்க்கும்போது அவனது திருக்கரத்தின் ஸ்பரிசம் பசுங்கன்றுகள் மீது படும் அல்லவா அதை விரும்பி வேதங்கள் கன்றுகளாயின.இப்படிப் பசுவையும், கன்றுகளையும் கண்ணன் மேய்த்து வருவதைச் சத்தியலோகத்தில் இருந்து பார்த்த பிரம்மா, அந்தப் பசுவையும் கன்றுகளையும் ஒரு குகைக்குள் ஒளித்து வைத்துவிட்டார். ஆமருவியப்பன் தன் திருமேனியில் இருந்தே பசுவையும் கன்றுகளையும் வெளியிட்டார்.

அதைக் கண்ட பிரம்மா தனது கர்வம் நீங்கப்பெற்று, ஆமருவியப்பனை அடிபணிந்தார்.“கண்ணா! நீதான் தேவர்களான எங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அதைப் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் அபச்சாரப் பட்டுவிட்டேனே!” என்று மன்னிப்பு கோரினார். அதன்பின் தொடர்ந்து மாடு கன்றுகளை மேய்த்தபடி சிவபெருமான் தவம் புரிந்து வந்த மரத்தின் அடிக்கு ஆமருவியப்பன் எழுந்தருளினார். அவரைப் பார்த்தவாறே, அவர்தான் திருமால் என்று பரமசிவன் புரிந்து கொண்டார்.

பசுவின் வடிவில் இருப்பவள் பார்வதி என்பதையும் புரிந்து கொண்டார். “உங்களிடம் பார்வதியை ஒப்படைக்கப் போகிறேன்!” என்று சிவனிடம் சொன்னார் ஆமருவியப்பன். சிவபெருமான், “நான் உனது ராமாவதாரத்தில் அதிகமாக ஈடுபட்டு இருப்பவன். எனவே நீ ராமன் வடிவில் வந்து பார்வதியை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்!” என்று ஆமருவியப்பனிடம் கோரினாராம். அப்படியே ஆகட்டும் என்றார் ஆமருவியப்பன். மாசிமாதம் புனர்ப்பூச நட்சத்திர நன்னாளில் சீதா லட்சுமணனோடு கூடிய ஸ்ரீராமனாகப் பரமசிவன் முன்தோன்றிய ஆமருவியப்பன், பசுவின் வடிவில் இருந்த பார்வதியைப் பழைய வடிவத்துக்கு மாற்றிப் பரமசிவனோடு இணைத்துவைத்தார். மீண்டும் பார்வதியை மணந்தபடி வேதபுரீஸ்வரராகத் தேரழுந்தூரிலே கோவில் கொண்டார் சிவபெருமான்.

ஆமருவியப்பனாகத் தேரழுந்தூரிலேயே கோவில் கொண்டார் திருமால். ஆண்டுதோறும் மாசிப் புனர்ப்பூசத்தன்று ஆமருவியப்பன் ராமனாகவும், தேரழுந்தூர் ரங்கநாதப் பெருமாள் சீதையாகவும், தேரழுந்தூர் கோவிந்தராஜப் பெருமாள் லட்சுமணனாகவும் வடிவம்கொண்டு, பசுவோடு புறப்பாடு கண்டருளி, வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சிவபெருமானிடம் பசுமாட்டைச் சேர்ப்பதாக இந்த உற்சவம்நடைபெற்று வருகிறது.

சக்தியால்தான் சிவனுக்குப் பெருமை என்று சொல்லப்படும் நிலையில், அந்தப் பார்வதியைப் பிரிந்த சிவனுக்கு அவளைப் பழையபடி மீட்டுத் தந்து, அவருக்கு அப்பெருமையைப் பெற்றுத் தந்தார் திருமால். அதுபோல், பிரம்மா போன்ற அனைத்துத் தேவர்களுக்கும் அவரவருக்குத் தேவையானவற்றைத் தந்து அவர்களைத் தாங்கிப் பிடிப்பதால், ‘தேவப்ருத்’ – தேவர்களைத் தாங்குபவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். தேரழுந்தூரில் மூலவருக்கு தேவாதிராஜன் என்றே திருநாமம்.

உற்சவர் ஆமருவியப்பன். தேவாதிராஜன் என்பதன் மற்றொரு வடிவமே தேவப்ருத் – தேவர்களுக்குத் தலைவராக இருந்து அவர்களைத் தாங்குபவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 494-வது திருநாமம்.“தேவப்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் அனைத்துப் பெருமைகளும் கிட்டும்படித் திருமால் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.

————-

495. குரவே நமஹ (Guravey namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

தன் உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்திலே அமர்த்தினார். ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் படைப்புக் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது. நாம் வேதம் வல்லவர், நம்மை விஞ்சியவர் யாரும் இலர் என்று கருதினார் பிரம்மா. “பதவி வரும்போது பணிவு வராமல் பகட்டோடு இருக்கிறாரே இவர்!” என்று கருதிய திருமால், ஓர் அசுரனை அனுப்பி வைத்து, பிரம்மாவிடம் உள்ள வேதங்களை அபகரித்து வரச்சொன்னார். அவனும் வேதங்களைப் பிரம்மாவிடம் இருந்து அபகரித்து வந்துவிட்டான். வேதங்களை இழந்த நிலையில் பிரம்மாவால் படைப்புத் தொழிலைத்தொடர இயலவில்லை.

“அடடா! நாம் பெரியவன் என்று தவறாக நினைத்து, இறுமாந்து இருந்துவிட்டோமே! நம்மைப் படைத்தவன் ஒருவன் உள்ளானே! அந்த பகவான்தானே நமக்கு வேதங்களைத் தந்து இப்பதவியில் நம்மை அமர்த்தினான்? அவனது அருளும் அவன் தந்த வேதங்களும் இல்லாவிட்டால் நமக்கு எந்தப் பெருமையும் கிடையாதே!” என்று அப்போதுதான் உணர்ந்தார் பிரம்மா. மொத்த கர்வத்தையும் விட்டுத் திருமாலின் திருவடிகளைச் சரண் புகுந்தார். “பிரம்மதேவரே உங்களுக்குக் கொஞ்சம்பக்குவம் வர வேண்டிஉள்ளது. அந்தப் பக்குவம் வந்தால்தான் பிரம்மதேவன் என்ற பதவியால் வரும் செருக்குக்கு நீங்கள் ஆளாக மாட்டீர்கள். எனவே மனப்பக்குவம் பெறப் பூமியில் காவிரிக் கரையில் போய்த் தவம் இயற்றுங்கள்!” என்று கூறினார் திருமால்.

அதன்படி பூமிக்கு வந்தார் பிரம்மா. காவிரிக் கரையில் கும்பகோணத்தில் பிரம்மா தவத்தில் ஈடுபட்டார். அந்தத் தவம் நிறைவடையும் தறுவாயில், மகாலட்சுமியோடு திருமால் வந்து பிரம்மாவுக்குக் காட்சி தந்தார்.“பிரம்மனே! உங்களுக்கு இப்போது நல்ல மனப்பக்குவம் வந்துவிட்டது. இனி நீங்கள் உங்கள் பணிகளைப் பணிவோடு தொடர்வீர்கள். நானே உங்களுக்கு வேதங்களை உபதேசிக்கிறேன். இந்த வேதங்கள் உங்களை விட்டு நீங்காமல் எப்போதும் இருக்கும். என் அருளையும் இவை உங்களுக்கு நினைவூட்டும்!” என்று சொல்லிப் பிரம்மாவுக்கு வேதங்களை மீண்டும் உபதேசித்து அவரை மீண்டும் படைப்புக் கடவுள் என்ற பதவியிலே அமர்த்தினார் திருமால்.

இவ்வாறு பிரம்மாவுக்குத் திருமால் வேதங்களை உபதேசித்த அந்த இடம்தான் இன்றும் கும்பகோணத்தில் வேதநாராயணப் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. வேதநாராயணனாகத் திருமால் காட்சி தருகிறார். இன்னும் பிரசித்தமாக அது பிரம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில் பிரம்மாவுக்கென்று உள்ள வெகுசில கோவில்களில் இந்த பிரம்மன் கோவிலும் ஒன்றாகும். அட்சய திருதியை அன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை வைபவத்தில் முன்வரிசையில் இந்த வேதநாராயணப் பெருமாள் எழுந்தருள்வது வழக்கம்.

வேதங்களை அவர்மூலம் பெற்ற பிரம்மா, “வேதநாராயணா! முன்பு மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் என்னிடமிருந்து வேதங்களை அபகரித்துச் சென்றார்கள். அப்போது நீ குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாளாக அவதாரம் செய்து, அவர்களை அழித்து வேதங்களை எனக்கு மீட்டுத் தந்தாய். இப்போது எனது கர்வத்தின் காரணமாக நான் வேதங்களை இழந்த போதும், மீண்டும் நீயே வேதநாராயணனாக வந்து அவற்றை அடியேனுக்கு உபதேசித்து மீட்டுத் தந்துவிட்டாய். உன்னை என்சொல்லி வாழ்த்துவேன்?” என்று துதித்தார்.

“ஒரு மிகப்பெரிய வேள்வியை இங்கே செய்து உன்னை ஆராதிக்கப் போகிறேன்!” என்று சொல்லி பிரம்மா வேள்விக்கான ஏற்பாடு களைச் செய்தார். வேள்விக்கு உதவியாக ஒரு நீர்நிலை இருந்தால் நன்றாக இருக்குமே என்று பிரம்மா நினைக்க, திருமால் இங்கே ஒரு நதி உருவாகட்டும் என்று சொல்லித் தன் கதையால் நிலத்தைக் கீற, ஓர் ஆறு தோன்றியது. அரியின் சொல்லால் உருவான அந்த ஆறு அரிசொல் ஆறு என்று பெயர் பெற்றது. அதுதான் அரசலாறு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அதன்பின் அந்நீரைக் கொண்டு வேள்வி செய்து திருமாலை ஆராதித்தார் பிரம்மா.இப்படிப் பிரம்மா உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் குருவாக இருந்து வேதங்களை உபதேசிப்பதால் ஹயக்ரீவப் பெருமாள் ‘குரு:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 495-வது திருநாமம்.“குரவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல ஞானத்தைத் திருமால் அருள்வார்.

———-

496. உத்தராய நமஹ (Uttharaaya namaha)

ஆதிகேசி என்று ஓர் அசுரன் வாழ்ந்துவந்தான். அவன் தேவர்களைப் பலவாறுதுன்புறுத்திவந்தான். அவனால் பெருந்துயருக்கு ஆளான தேவர்கள், பிரம்மாவின் உதவியை நாடினார்கள். ஆதிகேசியை அழிக்கும் ஆற்றல் திருமால் ஒருவருக்கே உண்டு என்று சொல்லித் திருமாலின் உதவியை நாடுமாறு வழிகாட்டினார் பிரம்மா. பிரம்மா தலைமையில் அனைத்துத் தேவர்களும் திருப்பாற்கடலுக்குச் சென்றார்கள். தீராத இன்னல் தரும் ஆதிகேசியைத் தீர்த்துக் கட்டித் தம்மை ரட்சிக்குமாறு திருமாலின்திருவடிகளைப் பணிந்தார்கள். அப்போது திருமால், “தேவர்களே! என் திருவடியில் பணிந்தவர்கள் எப்படிப் பிரார்த்தனை செய்கிறார்களோ, அதை அப்படியே நிறைவேற்றுபவன் நான்! அந்த அசுரனை நான் எப்படி அழிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுங்கள்! அப்படியே செய்துவிடுகிறேன்!” என்றார்.

தேவர்கள் தங்களுக்குள் ஆலோசித்துவிட்டுத் திருமாலிடம், “இறைவா! ஒவ்வோர் அசுரனும் ஏதோ ஒரு சக்தியைப் பெற்றுக் கொண்டு எங்களைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த ஆதிகேசியை வீழ்த்திவிட்டு அவன்மீதே பள்ளி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தீமை செய்ய நினைக்கும் அசுரர்கள் உனக்குக் கீழ் இருக்கும் ஆதிகேசிக்கு நிகழ்ந்ததைப் பார்த்து அஞ்சியாவது தீங்கு செய்யாதிருக்க வாய்ப்புண்டு!” என்று கோரினார்கள்.அப்படியே செய்கிறேன் என்று தேவர்களுக்கு வாக்களித்தார் திருமால். திருமால் ஆதிகேசியை எதிர்த்து மல்யுத்தம் புரிந்தார். அவனைத் தாக்கிக் கீழே தள்ளியபின் அவனுக்கு மேல் தனது ஆதிசேஷப் படுக்கையை இட்டு, ஆதிகேசியை அழித்தவன் என்பதற்குச் சான்றாக “ஆதிகேசவன்’’ என்ற திருநாமத்தோடு அவ்விடத்தில் பள்ளி கொண்டார்.

ஆதிகேசியின் மனைவியான அசுரப் பெண், கங்கை நதியின் உதவியை நாடினாள். “தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்த என் கணவனை அழித்துவிட்டு அவன்மீது திருமால் பள்ளி கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணின் மனதை மற்றொரு பெண்தானே அறிவாள்? எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று வேண்டினாள்.அதைக் கேட்ட கங்கை, தாமிரபரணி நதிக்குள்ளே நுழைந்தாள். ஆதிகேசி மீது பள்ளி கொண்டிருந்த ஆதிகேசவன் மீது மோதுவது போல் தாமிரபரணிக்குள் நுழைந்த கங்கை வந்தாள்.

திருமால், பூமிதேவியை ஒரு பார்வை பார்க்க, பூமிதேவி அப்பகுதியை மட்டும் சற்றே நிலப்பரப்புக்கு மேலே உயர்த்திவிட்டாள். வேகமாக வந்த கங்கையும் தாமிரபரணியும் அந்த உயர்ந்த நிலத்தில் மோதி அதைச் சுற்றி வட்டமாக ஓடத் தொடங்கின. மோதிய வேகத்தில் மனமாற்றம் அடைந்த காவிரியும் தாமிரபரணியும் திருமாலின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினார்கள். கங்கை, தாமிரபரணி இருவரையும் பார்த்து, “நீங்கள் எனக்கு வட்டமாக மாலை சூட்டித் தொண்டு செய்ததாக நான் அங்கீகரிக்கிறேன்!” என்று சொல்லி அருள்புரிந்தார் திருமால். ஆறு வட்டமாக ஓடியதால், அவ்விடம் வட்ட ஆறு, (வட்டாறு) என்று பெயர் பெற்றது. அதுவே ‘திருவட்டாறு’ என்ற திவ்யதேசமாக ஆனது. நம்மாழ்வார் ‘திருவாட்டாறு’ என்று இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

“அருள்பெறுவார் அடியார்தம் அடியனேர்க்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்து இனிப்பிறவி யான்வேண்டேன்
மருள் ஒழிநீ மடநெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே”

என்ற பாசுரத்தில், அடியார்கள் எப்படி விதிக்கிறார்களோ, அதாவது கட்டளை இடுகிறார்களோ, அப்படியே அருள்புரியும் பெருமாள் என்ற ஆதிகேசவப் பெருமாளைக் கொண்டாடுகிறார் நம்மாழ்வார். தேவர்கள் விரும்பிய படி ஆதிகேசியை வதைத்தமையைத் திருவுள்ளத்தில் கொண்டு இவ்வாறு ஆழ்வார் பாடியதாகப் பெரியோர்கள் ரசிப்பார்கள்.

பிரம்மாவிடமிருந்து வேதங்களை மது, கைடபர்கள் அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்துக் காத்தார் அல்லவா திருமால்? இதுபோல் தேவர்களுக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும், அந்த ஆபத்துகளில் இருந்து காப்பதால் திருமால் ‘உத்தர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உத்தர:’ என்றால் ஆபத்தில் காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 496-வது திருநாமம். “உத்தராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆபத்துகள் நேராதபடித் திருமால் காத்தருள்வார்.

————

497. கோபதயே நமஹ (Gopathaye namaha)

வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.

பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்!  இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.

சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.

இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.

பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.

பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.

இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.

இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———-

498. கோப்த்ரே நமஹ (Gopthrey namaha)

முன்னொரு சமயம் வாசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த பல முனிவர்கள் நம் தமிழகத்தில் காவிரிக் கரை ஓரமாக வசித்துவந்தார்கள். அம்முனிவர்கள் ஒன்றுகூடித் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறை என்ன என்று அறிய விரும்பினார்கள். அதற்காகப் பல முனிவர்களை அவர்கள் அண்டினார்கள். பாரததேசம் எங்கும் உள்ள பல முனிவர்களிடம் அவர்கள் சென்று பிரார்த்தித்த போதும், “திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையான ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம் இப்போது வழக்கொழிந்து போய்விட்டது! அதனால் எங்களுக்குப் பூஜை முறைகள் தெரியாது!” என்று சொல்லிவிட்டார்கள்.

அதன்பின் அவர்கள் கஹோலர் என்ற முனிவரைச் சென்று பற்றினார்கள். கஹோலமுனிவர், “வேதங்களில் சொல்லப்பட்ட வேள்வி முறைகளை நான் அறிவேன். அவற்றின் மூலம் திருமாலை ஆராதித்து வருகிறேன். ஆனால் வீட்டிலோ, கோவிலிலோ, விக்கிரக வடிவில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்குப் பூஜை செய்யும் முறைகளை நான் அறியவில்லை. மேரு மலை அடிவாரத்தில் ஏகதர் என்றொரு முனிவர் உள்ளார். அவரிடம் சென்று பிரார்த்தியுங்கள்!” என்று சொன்னார்.

“யார் அந்த ஏகதர்?” என்று முனிவர்கள் கேட்க, கஹோலர், “பிரம்மாவுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஏகதர், த்விதர், த்ரிதர் என்று அவர்களுக்குப் பெயர். ஏகதர் என்பவர் மூத்த மகன். த்விதரும், த்ரிதரும் உலகில் க்ஷேமமாக வாழ என்ன வழி என்பதைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். ஆனால் ஏகதரோ, திருமகளின் கேள்வனான திருமாலுக்குப் பூஜை செய்து வழிபட என்ன வழி என்று சிந்திக்கத் தொடங்கினார். நீண்ட நாட்கள் திருமாலைக் குறித்துத் தவம் புரிந்தார் ஏகதர். திருமால், அவருக்குக் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்ற கேட்டபோது, திருமாலை ஆராதிக்கும் முறைகளையும், அவரைச் சரண் அடைந்து முக்தி அடையும் முறையையும் தனக்கு உபதேசிக்குமாறு பிரார்த்தனை செய்தார்.

திருமால், தன்னைப் பூஜிக்கும் முறையான “ஸ்ரீபாஞ்சராத்ரம்’’ என்ற ஆகமத்தின் ஒரு பகுதியான “ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதை’’ என்ற பகுதியை ஏகதருக்கு உபதேசம் செய்தார். எனவே நீங்கள் ஏகத முனிவரை நாடி, அவரிடம் இருந்து ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் அப்பகுதியை அறிந்து கொள்ளலாம்!” என்று சொன்னார்.

அதன்படி மேருமலை அடிவாரத்தில் உள்ள ஏகத முனிவரின் ஆசிரமத்துக்கு இந்த முனிவர்கள் சென்றார்கள். ஏகதரை வணங்கிப் பூஜித்தார்கள். “என்ன காரணமாக என்னைத் தேடி வந்துள்ளீர்கள்?” என்று முனிவர்களிடம் கேட்டார். “ஏகத முனிவரே! நாங்கள் திருமகளையும் திருமாலையும் பூஜிக்கும் முறையை அறிய விரும்பி வந்துள்ளோம்!” என்று முனிவர்கள் ஏகதரிடம் கூறினார்கள்.

ஏகதரும் கருணையோடு அவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தின் பகுதியான ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையை உபதேசம் செய்தார். அந்தப் பகுதி முழுவதும் மகாலட்சுமி திருமாலிடம் பூஜை முறைகள் குறித்துக் கேள்விகள் கேட்க, அதற்குத் திருமால் பதில் அளிப்பதாக அமைந்துள்ளது. இதை உபதேசம் செய்த ஏகதர், “முனிவர்களே! வாருங்கள்! பாரத தேசத்தின் தெற்குப் பகுதியில் காவிரிக் கரையில் உள்ள பாஸ்கர க்ஷேத்ரமான கும்பகோணத்தில் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் எழுந்தருளி உள்ளார். அவருக்குத் தொன்றுதொட்டு இந்த முறையில்தான் பூஜை நடந்துவந்தது. இடையில் இது வழக்கொழிந்து போய்விட்டது.

நாம் மீண்டும் அவரை இதே ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையின் அடிப்படையில் ஆராதிக்கலாம்!” என்று முனிவர்களை அழைத்தார். மேரு மலையில் இருந்து மீண்டும் காவிரிக் கரைக்கு ஏகதரோடு வந்து அம்முனிவர்கள் ஸ்ரீபிரச்ன ஸம்ஹிதையில் காட்டப்பட்ட முறையின்படி, ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாளையும், கோமளவல்லித் தாயாரையும் ஆராதித்தார்கள்.

ஸ்ரீசாரங்கபாணி திருக்கோவிலின் சந்நதித் தெருவிலேயே தமது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு ஏகதர் தங்கிவிட்டார். இன்றும் அந்த ஆசிரமத்தைக் கும்பகோணத்தில் காணலாம். ஆக, உலகில் வேதங்களோ, வேதாந்தமோ, ஆகம சாஸ்திரங்களோ, ஆழ்வார் பாசுரங்களோ அடிக்கடி வழக்கொழிந்து போவதுண்டு. ஆனாலும் இறைவன் அவை அப்படியே அழிந்துபோகும்படி விட்டுவிடுவதில்லை. மறைந்துபோன, மறந்துபோன அந்த வித்யைகளைப் பலவித முறைகளைக் கையாண்டு திருமாலே மீட்டுத் தந்துவிடுகிறார்.

பூஜை முறையான ஸ்ரீபாஞ்சராத்திரம் வழக்கொழிந்துபோன போது, ஏகதர் மூலம் மீட்டார் அல்லவா..? ஆழ்வார்களின் பாசுரங்கள் வழக்கொழிந்து போன போது, நாதமுனிகள் மூலம் மீட்டார் அல்லவா..?அதுபோலத்தான் பிரம்மாவிடம் இருந்து மது, கைடபர் என்னும் அசுரர்கள் வேதங்களை அபகரித்தபோது, ஹயக்ரீவராக அவதரித்து வேதங்களை மீட்டுத் தந்தார் திருமால்.

அதனால்தான் கோப்தா – வித்யைகள் அழிந்துபோகாமல் காப்பவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 498-வது திருநாமம். “கோப்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு மறதி இல்லாத நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

499. ஞான கம்யாய நமஹ (Gnaana gamyaaya namaha)

1268-ம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், திருமலையப்பனின் மணியின் அம்சமாகக் காஞ்சிபுரத்தில் அவதரித்தவர் சுவாமி வேதாந்த தேசிகன். அவரின் இயற்பெயர் வேங்கடநாதன் என்பது. தேசிகனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவரது தாய் மாமாவான அப்புள்ளார் என்பவர் தன் மருமகனைப் பார்ப்பதற்காக அவரது இல்லத்துக்கு வந்திருந்தார். ஐந்து வயது தேசிகனைக் கொஞ்சி விட்டுக் காஞ்சிபுரம் வரத ராஜப் பெருமாள் திருக்கோவிலுக்குப் புறப்பட்டார் அப்புள்ளார்.

“மாமா! எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார் தேசிகன். “குழந்தாய்! அத்திகிரி வரதர் சந்நதியில் நடாதூர் அம்மாள் என்ற மகான் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை விளக்கி வருகிறார். அவரது விளக்கவுரையைக் கேட்கச் செல்கிறேன்!” என்றார் அப்புள்ளார்.“நானும் வருவேன்!” என்று அடம்பிடித்தார் தேசிகன். “ஐந்து வயது குழந்தையான உனக்கு ஸ்ரீபாஷ்யம் புரியாது!” என்றார் அப்புள்ளார். ஆனால், தேசிகன் வந்தே தீருவேன் என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் தேசிகனையும் தம்மோடு வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் அப்புள்ளார்.

நடாதூர் அம்மாள், ஸ்ரீபாஷ்ய விளக்கங்களை வழங்கிக்கொண்டிருக்க, நடுவே ஐந்து வயது பாலதேசிகனோடு அப்புள்ளார் நுழையவே, தேசிகன் முகத்தில் இருக்கும் பொலிவைப் பார்த்து அங்கிருந்தோர் அத்தனை பேரும் மயங்கி விட்டார்கள். உரையாற்றிக் கொண்டிருந்த நடாதூர் அம்மாளும், தான் விட்ட இடத்தை மறந்துவிட்டார், கேட்டுக் கொண்டிருந்த சிஷ்யர்களும் மறந்துவிட்டார்கள்.

எல்லாரும், பிரமிப்புடன் தேசிகனையும் அப்புள்ளாரையுமே பார்த்துக்கொண்டிருக்க, “ஏன் மாமா எல்லாரும் விழிக்கிறார்கள்?” என்று அப்புள்ளாரிடம் கேட்டார் தேசிகன். “சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நடுவில் போனால் இப்படித் தான் கவனம் சிதறும். நாம் நடுவில் வந்துவிட்டோம் அல்லவா? அதனால் எங்கே நிறுத்தினோம் என்று தெரியாமல் விழிக்கிறார்கள்! தவறு நம் மீதுதான்!” என்றார் அப்புள்ளார்.

தேசிகன் சிரித்துக்கொண்டே, “இதுதானா பிரச்னை? படஇ பராஸர ஸத்தம் என்ற இடத்தில் நடாதூர் அம்மாள் நிறுத்திவிட்டார்கள்.
மேற்கொண்டு சொல்லச் சொல்லுங்கள், கேட்போம்!” என்றார். ஐந்து வயது குழந்தையின் இந்த ஞானத்தைப் பார்த்து வியந்த நடாதூர் அம்மாள் தேசிகனை அழைத்துத் தம் மடியில் அமர்த்தி, “ப்ரதிஷ்டாபித வேதாந்த: ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயாஸ் த்ரைவித்ய மான்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜனம்” என்று வாழ்த்தினார். நீ வேத நெறியை நன்கு நிலைநாட்டி, சான்றோர்களால் கொண்டாடப் படுபவனாக, மங்கலங்கள் எல்லாம் நிறையப் பெற்றவனாக விளங்குவாய் என்பது இந்த சுலோகத்தின் கருத்து.

இப்படி வாழ்த்தியபின் அப்புள்ளாரை அழைத்த நடாதூர் அம்மாள், “நான் உங்களுக்கு உபதேசித்த எல்லா சாஸ்திரங்களையும் உரிய காலத்தில் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்! குறிப்பாக நான் உபதேசித்த கருட மந்திரத்தையும் இவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறினார். அதன்படி அப்புள்ளாரும் உரிய காலத்தில் தேசிகனுக்கு எல்லா சாஸ்திரங்களையும் உபதேசிக்க, 20 வயதுக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பண்டிதராக ஆகிவிட்டார் தேசிகன். அப்புள்ளார் உபதேசித்த கருட மந்திரத்தை நன்றாக மனதில் நிறுத்திக் கொண்டு, கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஔஷதகிரி மலையில் அமர்ந்து, கருட மந்திரத்தை ஜபித்து கருடனைத் தியானித்தார் தேசிகன்.

கருடன் அவருக்குக் காட்சி தந்து, ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த ஹயக்ரீவ மந்திரத்தை தேசிகன் ஜபிக்க, ஹயக்ரீவர் தேசிகனுக்குத் தரிசனம் தந்து, தனது திருவாய் அமுதை தேசிகனுக்கு அருளினார். அந்த அருளால் மிகச்சிறந்த வாக்கு வன்மை பெற்று, கவிபாடுவதிலும், தர்க்கத்திலும் ஒப்பற்றவராக விளங்கினார் தேசிகன். கவிதார்க்கி சிம்மம் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்றும் விருதுகள் பெற்றார்.

தேசிகன், ஹயக்ரீவரின் தரிசனத்தையும்அருளையும் பெற்றதற்கு என்ன காரணம்? முதலில் அவர் பெற்ற நடாதூர் அம்மாள், அப்புள்ளார் போன்ற ஆசார்யர்களின் திருவருள். அதைத் தொடர்ந்து அவர் செய்த கருட மந்திரஜபமும், ஹயக்ரீவ மந்திரஜபமும். இப்படி குருவின் அருளோடு இறைவனை முறைப்படி தியானிப்பதற்குப் பரவித்யை என்றும் ஞானம் என்றும் பெயர்.

அந்தப் பரவித்யையாகிய ஞானத்தால் அறியப்படும் ஹயக்ரீவருக்கு ‘ஞானகம்ய:’ என்று திருநாமம். ‘ஞானகம்ய:’ என்றால் ஞானத்தால் அறியப்படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 499-வது திருநாமம்.“ஞானகம்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானம் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

500. புராதனாய நமஹ (Puraathanaaya namaha)

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்) –

ஓர் ஊரிலே ஒரு பெரிய அமுதக் கடல் இருந்ததாம். விவசாயம் செழித்துப் பயிர்கள் விளைய வேண்டும் என்று அக்கடல் ஆசைப்பட்டது. ஆனால் கடல்நீர் நேராக வயலுக்குள் வந்தால் வயல் தாங்குமா அதனால் அக்கடல் ஒரு மேகத்தை அழைத்தது. என்னிடமிருந்து தண்ணீரை மொண்டு சென்று மழையாகப் பொழிவாய் என்றது.மேகம் அமுதை மொண்டு எடுத்துச் சென்று மழைபொழியப் பார்த்தது. ஆனால் பெரு மழையாக நேரே பொழிந்தால், பெரு வெள்ளம் ஆகி விடுமே என்று கருதிய மேகம், முதலில் ஒரு மலை உச்சியின் மேல் மழையைப் பொழிந்தது. அமுத மழையை உள்வாங்கிக் கொண்ட மலை, அதை இரண்டு அருவிகளாகப் பிரித்து விட்டது.

அவ்விரண்டு நீர்வீழ்ச்சிகளும் இணையவே ஒரு பெரும் காட்டாறு உருவானது. அது ஐந்து கிளைகளாகப் பிரிந்தது. அவை ஓர் ஏரியில் போய் இணைந்தன. அந்த ஏரியில் எழுபத்து நான்கு மடுக்களை அமைத்துத் தண்ணீரை நீர்ப்பாசனத்துக்காக வயல்நோக்கித் திருப்பினார்கள். அதன் விளைவாக விவசாயம் நன்றாகச் செழித்தது.அந்த அமுதக் கடல் வேறு யாரும் அல்லர், சாட்சாத் திருமால்தான். ஜீவாத்மாக்கள்தான் நெற்பயிர்கள்.

நெற்கதிர்கள் ஓங்கி வளர்வது போல் நம் உள்ளத்தில் சரணாகதி நிஷ்டை ஓங்கி வளர வேண்டும் என்று அமுதக் கடலாகிய திருமால் விரும்பினார். ஆனால் கடலாகிய அவர் நேரே பாய்ந்தால், அவ்வளவு அருளை நம்மால் தாங்க முடியாதல்லவா -அதனால் திருமால் என்னும் அமுதக் கடல், நம்மாழ்வார் என்னும் மேகத்தை அழைத்து அவரை மழையாகப் பொழியச் சொன்னார். நம்மாழ்வார் திருமால் அருளிய அந்த உபதேசத்தையே திருவாய்மொழி என்னும் அமுத மழையாக நாதமுனிகள் என்னும் மலைக்குமேல் பொழிந்தார்.

நாதமுனிகள் என்ற மலை, உய்யக்கொண்டார் என்றும் மணக்கால்நம்பி என்றும் இரண்டு அருவிகளாக அவ்வுபதேச மழை பாயும்படிச் செய்தார். அவ்விரண்டு அருவிகளும் சேர்ந்து ஆளவந்தார் என்னும் காட்டாறாக ஆயின. அக்காட்டாறு பெரிய நம்பி, திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் என்னும் ஐந்து கிளைகளாகப் பிரிந்தது.

ஐந்து கிளைகளும் ராமானுஜர் என்னும் ஏரியில் வந்து இணைந்தன. கடல்நீரோ, மழைவெள்ளமோ, அருவியோ, காட்டாறோ விவசாயத்துக்குப் பயன்படாது. ஏரி நீரே பயன்படும். அவ்வாறு ராமானுஜர் என்னும் ஏரியின் மூலம் தான் உலகில் அனைத்து மக்களுக்கும் எல்லா நல் அர்த்தங்களும் சென்று சேரும்.எனவேதான் ராமானுஜர் என்னும் ஏரியிலிருந்து எழுபத்து நான்கு மடுக்களைப் போலே எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகள் என்னும் ஆசார்யர்கள் உருவானார்கள். ராமானுஜர் அவர்கள் மூலம் சிஷ்யர்களுக்கு அனைத்து வித உபதேசங்களும் சென்றுசேர ஏற்பாடு செய்தார். குலம், பாலினம், கல்வி, செல்வம் உள்ளிட்ட எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் ஆசையோடு வருவோர் அனைவருக்கும் உபதேசிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கொள்கையை வலியுறுத்தினார் ராமானுஜர்.

அதன் விளைவு, உலகில் சரணாகதர்கள் என்னும் பயிர்கள் நன்றாக விளைந்தார்கள். நம் போன்ற பாமரர் வரை அனைவருக்கும் ஞானம் என்பது வந்து சேர்ந்தது. அந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளின் வழியில் வந்த மகான்கள் இன்றளவும் எழுந்தருளி இருந்து சிஷ்யர்களைத் திருத்திப் பணிகொண்டு ராமானுஜர் திருவடிகளில் சேர்த்து வருகிறார்கள்.அவர்கள் மூலம் நாம் பெறக்கூடிய அந்த உபதேசம் என்னும் அமுதம் உண்மையில் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், திருமால் என்னும் அமுதக் கடலிலிருந்தே வந்தது. தினகரன் அருள் தரும் ஆன்மீகம் இதழ்மூலம் நாம் அறியும் இந்தப் பொருள்களும் கூட உண்மையில் அந்த அமுதக் கடலில் இருந்து வந்தவையே.

இப்படி எல்லோருக்கும் புராதனமான, பழமையான குருவாக இருந்து, நாம் பெறும் அனைத்து உபதேசங்களுக்கும் மூலக் காரணமாக இருக்கிறார் . அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 500வது திருநாமம்.
புராதனாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தையும் குரு பக்தியையும் திருமால் தந்தருள்வார்.

—————–

502. போக்த்ரே நமஹ (Bhokthrey namaha)

தமது பரமாசார்யரான ஆளவந்தாரைத் தரிசிக்கப் பெரிய நம்பிகளோடு திருவரங்கத்துக்கு விரைந்தார் ராமானுஜர். ஆனால் ராமானுஜர் வருவதற்குள் ஆளவந்தார் பரம பதத்தை அடைந்துவிட்டார். ஆசார்யனைப் பிரிந்து துயரால் பலவாறு வாடி வருந்தினார் ராமானுஜர். பெரிய நம்பிகள் உள்ளிட்டோர் ஒருவாறு அவரைத் தேற்றினார்கள்.அதன்பின் ஆளவந்தாரின் சரமத் திருமேனியைத் திருவடி முதல் திருமுடி வரை உற்று நோக்கினார் ராமானுஜர். ஆளவந்தாரின் வலக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பதைக் கண்டார். அதற்கு முன்பு அப்படி மடங்கி இருந்ததில்லை என்று சுற்றி இருந்தவர்களும் வியந்து கூறினார்கள். அப்படியானால் ஆளவந்தாருக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் உண்டா என்று விசாரித்தார் ராமானுஜர்.

1. வேத வியாசர், பராசர முனிவர் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட இரண்டு ஆசார்யர்களை உருவாக்க வேண்டும்.

2. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு விளக்கவுரையை உருவாக்க வேண்டும்.

3. போதாயன முனிவர் இயற்றிய விருத்தி நூலின் அடிப்படையில் வியாசரின் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுத வேண்டும்.

ஆகிய இம்மூன்றுமே ஆளவந்தாரின் ஆசைகள் என்று சிஷ்யர்கள் தெரிவித்தார்கள். இந்த வரிசையை மாற்றியும் சொல்வதுண்டு, எப்படிக் கொண்டாலும் மூன்று ஆசைகளில் மாற்றமில்லை. இம்மூன்றையும் நிறைவேற்றியே தீருவேன் என்று ராமானுஜர் சபதம் செய்தவாறே மடங்கியிருந்த விரல்கள் மீண்டும் நீண்டுவிட்டன. கூரத்தாழ்வானின் இரு மகன்களுக்குப் பராசர பட்டர், வேதவியாச பட்டர் என்று பெயர்சூட்டி முதல் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான் மூலம் ஆறாயிரப்படி என்ற திருவாய்மொழி விளக்கவுரையை உருவாக்கி இரண்டாம் ஆசையை நிறைவேற்றினார் ராமானுஜர். மூன்றாவது ஆசையின்படி பிரம்ம சூத்திர விளக்கவுரை எழுத, முதல்நூலான போதாயன விருத்தி என்ற நூலைத் தேடிக் காஷ்மீர் சாரதா பீடத்துக்குத் தம் சீடர் கூரத்தாழ்வானுடன் சென்றார் ராமானுஜர்.

அங்குள்ள பண்டிதர்கள் அவ்வளவு எளிதில் அந்த நூலைத் தருவதாக இல்லை. அவர்கள் அத்தனை பேரோடும் வாதம் செய்து அவர்களை வென்று போதாயன விருத்தி நூலைப் பெற்றார் ராமானுஜர்.அதைத் தமது இருப்பிடத்துக்கு எடுத்து வந்து நான்கு அத்தியாயங்களுள் ஓர் அத்தியாயத்தை மட்டும் முழுமையாகப் படித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார் ராமானுஜர். மறுநாள் காலை காஷ்மீர் பண்டிதர்கள் வந்து இனி நூல் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லிப் பறித்துச் சென்று விட்டார்கள். அடடா இன்னும் மூன்று அத்தியாயங்களை நாம் படிக்கவில்லையே என்று ராமானுஜர் வருந்தியபோது, சீடர் கூரத்தாழ்வான், குருவே அடியேனை மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு செயல் செய்துவிட்டேன். இரவு நீங்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் மொத்த போதாயன விருத்தியையும் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். அவற்றை இங்கே ஒப்பிக்கட்டுமா அல்லது இரு காவிரிக்கு மத்தியில் திருவரங்கத்தில் வந்து ஒப்பிக்கட்டுமா என்று கேட்டார்.ஆஹா இப்படி ஒரு சிஷ்யன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ என்று மனம் மகிழ்ந்த ராமானுஜர் கூரத்தாழ்வானோடு திருவரங்கம் திரும்பினார். அவரது உதவியோடு பிரம்ம சூத்திர விளக்கவுரையை எழுதி நிறைவு செய்தார்.

பின்னாளில் ராமானுஜர் காஷ்மீர் யாத்திரை சென்றபோது, காஷ்மீர் சாரதா பீடத்தில் உள்ள சரஸ்வதி தேவி ராமானுஜரின் பிரம்ம சூத்திர விளக்கவுரையைப் பார்த்துவிட்டு, ஆஹா எனக்குக் குருவாய் விளங்கும் ஹயக்ரீவப் பெருமாளே இதில் தெரிகிறாரே என்று சொல்லி வியந்து தான் பூஜிக்கும் ஹயக்ரீவர் திருவடிகளில் அந்த நூலை அர்ப்பணித்தார்.

அதன்பின் அதை முழுமையாகப் படித்து விட்டு, இனி இது ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்படும் என்று கொண்டாடினார் சரஸ்வதி. தான் அதுவரை பூஜித்து வந்த ஹயக்ரீவ விக்கிரகத்தை ராமானுஜருக்கு அளித்தார் சரஸ்வதி. அதன்பின் ராமானுஜரின் அந்நூலுக்கு ஸ்ரீபாஷ்யம் என்றும், ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யகாரர் என்றும் பெயர் ஏற்பட்டது.வேதங்களை வழங்கிய பிரம்மாவுக்கும் கல்விக்குத் தலைவியான சரஸ்வதிக்கும் என அத்தனை பேருக்கும் குருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். எனவேதான் தேவர்கள் எந்த ஒரு பொருளைத் தாங்கள் பெற்றாலும் தங்களுக்கெல்லாம் குருவான ஹயக்ரீவருக்கு முதலில் அதை அர்ப்பணித்துவிட்டு அதன்பின் தான் தாங்கள் எடுத்துக் கொள்வார்களாம்.

எனவே தேவர்களுள் யாருக்கு எதை அர்ப்பணித்தாலும், அது ஹயக்ரீவருக்கு முதலில் போய்ச் சேர்கிறது. அவர் முதலில் அனுபவிக்கிறார். அவரது பிரசாதமாகவே தேவர்கள் அதன்பின் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் நாம் சமர்ப்பிக்கும் அனைத்தையும் அனுபவித்து மகிழ்பவர் – போக்தா என்று ஹயக்ரீவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 502-வது திருநாமம்.போக்த்ரே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குறையாத ஞானம் நிறைந்து பாரோர் புகழ விளங்கும்படி ஹயக்ரீவர் அருள்புரிவார்.
———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்