Archive for February, 2020

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மூல ஸ்ரீ ஸூக்திகள் –72-112-அத ஸ்வ மத விஸ்தாரம் – உத்தர பாகம் —

February 29, 2020

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ்யாஸ் பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய நமஸ்கார ரூபம்-

—————-

(நிர்விசேஷ அத்வைதம் அவர்கள் நம்மது ச விசேஷ அத்வைதம் -)

72–ய ப்ருதிவ்யாம் திஷ்டந் ப்ருதிவ்யாந்த ரோயம் பிருதிவி ந வேத யஸ்ய ப்ருதிவீ சரீரம்
ய ப்ருத்வீன் அந்தரோ யமயதி ஏஷத ஆத்மாந்தர் யாம்ருத –ஸூக்ல யஜுர் ப்ரு -கண்வ

ய ஆத்ம திஷ்டந் ஆத்மநோ யந்த ரோயம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மந அந்தரோ யமயதி
ச த ஆத்மாந்தர் யாம்ருத –ஸூக்ல மாந்யந்திந

(தத்வ அதிகரணம் அடுத்து பர தேவதா அதிகரணம் -பரமை காந்தி ஆவதற்கு தத்வத்துக்கும் மேல் ஸ்வரூபம் ரூபம் இத்யாதிகளை அறிய வேண்டுமே)

ய -ப்ருத்வீ மந்தரே சஞ்சரன் யஸ்யப் ப்ருத்வீ சரீரம் யாம் ப்ருத்வீ ந வேத இத்யாதி யோஷர மாந்தரே சஞ்சரன்
யஸ்யாஷரம் சரீரம் யமக்ஷரம் ந வேத யோ ம்ருத் யுமந்தரே சஞ்சரன் யஸ்ய ம்ருத்யு சரீரம் யம் ம்ருத்யுர் ந வேத
ஏஷ சர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபாலோபநிஷத்

த்வா ஸூபர்ணா சாயுஜா சகாயா சமாநம் வ்ருஷம் பரிஷஸ்வ ஜாதி தயோர் அந்ய பிப்பலம்
ஸ்வா த்வத்ய நஸ்ரந் அநந்யோ அபிசாக ஸீதி –முண்டக-3-1-1-

அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிசது தத் அநு ப்ரவிஸ்ய-
ஸச் ஸத்யச் சா பவது இத்யாதி ஸத்யந்சாந்ரு தந் சாசத்யம பவது –தைத்ரியம்

அநேந ஜீவேநாத்மநா –இத்யாதி -சாந்தோக்யம்

ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருதத்வமேதி போக்தா போக்யம் ப்ரேரிதாரம்
ச மத்வா சர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம ஏதத் –மந்திரிகோ

நித்யோ நித்யாநாம் சேதநஸ் சேதநாநாம் ஏகோ பஹுநாம் யோ விததாதி காமாந் –கடவல்லி

பிரதான ஷேத்ரஞ்ஞ பதிர் குணேச(பதி சேஷி -நியாந்தா குணங்கள் தேவையான பொழுது காட்டி )

ஞாஜெவ் த்வாவ் அஜவ் வீசனீசவ் இத்யாதி ஸ்ருதி சதை –மந்த்ரிகா

தத் உப ப்ரஹ்மண

ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யாம் தேவ ஸூதா தலம்–ஸ்ரீ ராமாயணம் -அதிதி தேவி ஸ்துதி

யத் கிஞ்சித் ஸ்ருஜ்யதே யேந சத்வாஜா தேநவை த்விஜ தஸ்ய ஸ்ருஜ்யஸ்ய ஸம்பூதவ்
தத் சர்வம் வை ஹரேஸ்தநு –ஸ்ரீ விஷ்ணு புராணம்

அஹமாத்மா குடா கேச சர்வ பூதாசய ஸ்திதி -ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி சந்நிவிஷ்டோ மத்த ஸ்ம்ருதிர்
ஞாநம் அபோஹநம் ச –ஸ்ரீ கீதா

இத்யாதி வேத வித் அக்ரேஸர வால்மீகி–பராசர -த்வைபாயன -வாசோபிஸ் ச
பரஸ்ய ப்ரஹ்மண ஸர்வஸ்ய ஆத்மத்வா வகமாத்-சித் அசித் ஆத்ம கசிய வஸ்து ந தச் சரீரத்வாவகமாச் ச சரீரஸ்ய ச சரீரிணம்
பிரதி பிரகார தயைவ பதார்த்ததவாத் சரீர சரீரிணஸ் ச தர்ம பேதே அபிதயோர சங்கராத் சர்வ சரீரம் ப்ரஹ் மேதி
ப்ரஹ்மணோ வைபவம் ப்ரதிபாதயத்யபி சாமாநாதி கரண்யாதிபுபி முக்ய வ்ருத்தை –
சர்வ சேதந அசேதன பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அபி தீயதே

(அஹம் கச்சாமி -அஹம் ஆத்மாவைக் காட்டாது -தேகத்துடன் சேர்ந்த ஆத்மாவையே காட்டும்)

(கார்யம் செய்ய சரீரம் சுகம் துக்கம் அனுபவிக்க ஆத்மா -ஞானம் இதுக்குத் தானே -ஆகவே இரண்டும் சேர்ந்ததும் அஹம்
அனுகூலமாக இருக்கும் பொழுது பேத வியவஹாரமும் -பிரதிகூலமாக இருக்கும் பொழுது அபேத வியவஹாரமும் செய்கிறோம்)

(சாமானாதி கரண்யம் -ஏகார்த்த ப்ரதிபாதிதம் -விசேஷண விசேஷ்ய கொள்ளாமல் சங்கரர்)

(பின்ன பிரவ்ருத்தி நிமித்த ஏகஸ்மின் அர்த்தே ப்ரதிபாதிதம் -பர்யாய சப்தங்கள் இல்லாமல் -ஒரே பதார்த்தத்தை வெவ்வேறே பிரகாரம்
ஸ்யாமோ யுவ தேவதத்தன் -இவனை வியாவ்ருத்திக்க இரண்டு பிரகாரங்கள்)

சாமா நாதி கரண்யம் ஹி த்வயோ பதயோ பிரகார த்வய முகேந ஏகார்த்தநிஷ் டத்வம்
தஸ்ய ச ஏதஸ்மிந் பக்ஷே முக்யதா ததாஹி -தது த்வம்-இதி சாமாநாதி கரண்யே –
தது-இத்யேந ஜகத் காரணம் சர்வ கல்யாண குணாகரம் நிரவத்யம் ப்ரஹ்ம உச்யதே
த்வம் இதி ச சேதன சாமாநாதி கரண வ்ருத்தேந ஜீவ அந்தர்யாமி ரூபி -தச் சரீரம் ததாத்மதயா அவஸ்திதம்
தத் பிரகாரம் ப்ரஹ்ம உச்யதே
இதரேஷு பக்ஷேஷு சாமாநாதி காரண்ய ஹாநி ப்ரஹ்மண ச தோஷதாச ஸ்யாத் –

73–ஏதத் யுக்தம் பவதி
ப்ரஹ்ம ஏவ ஏவமவஸ்திதம் -இத்யத்ர -ஏவம் -சப்தார்த்த பூத பிரகார தயைவ விசித்ர சேதன அசேதநாத்மக
பிரபஞ்சஸ்ய ஸ்தூலஸ்ய ஸூஷ்மஸ்ய சத் பாவ -ததாச பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இதி அயமர்த்த ஸம்பந்நோ பவதி –
தஸ்யைவ ஈஸ்வரஸ்ய கார்ய தயா காரண தயா ச சமஸ்தான சமஸ்தி தஸ்ய சமஸ்தான தயா சித் அசித் வஸ்து ஜாதம வஸ்திதமிதி –

(பஹு -பல மட்டும் அல்ல -பரஸ்பர பின்னமான எல்லாமாகக் கொள்ள வேண்டும் நானே(ப்ரஹ்ம சரீரத்துக்கு -நானே )-ஸமஸ்த பதார்த்தமாக ஆகிறேன்)

74 —நநு ச -சமஸ்தான ரூபேண ப்ரகாரதயா-ஏவம் -சப்தார்த்தத்வம் ஜாதி குணயோ ரேவ த்ருஷ்டம் –
ந த்ர வ்யஸ்ய ஸ்வ தந்த்ர ஸித்தியோக் யஸ்ய பதார்த்தஸ்ய ஏவம் சப்தார்த்ததயா ஈஸ்வரஸ்ய பிரகார மாத்ரத்வம யுக்தம்
இதி சேத்ப உச்யதே த்ரவ்யஸ்யாபி தண்ட குண்டலாதே த்ரவ்யாந்தர பிரகாரத்வம் த்ருஷ்டமேவ —

75–நநுச தண்டாதே ஸ்வ தந்த்ரஸ்ய த்ரவ்யாந்தர பிரகாரத்வே மத்வர்த்தீய ப்ரத்யயோ த்ருஷ்ட –
யதா தண்டி குண்டலீ இதி அத கோத்வாதி துல்ய தயா சேதன அசேதநஸ்ய த்ரவ்ய பூதஸ்ய வஸ்துந ஈஸ்வர பிரகார தயா
சாமாநாதி கரண்யே ந ப்ரதிபாதநம் ந யுச்யதே அத்ரோச்யதே –கவ்ரஸ்வோ மனுஷ்யோ தேவ இதி பூத சங்காதா ரூபாணாம்
த்ரவ்யாணாமேவ -தேவ தத்தோ மனுஷ்யோ ஜாத புண்ய விசேஷேண யஜ்ஜ தத்தோ கவ்ர் ஜாத பாபேந கர்மணா
அந்யஸ் சேதந புண்யாதிரேகேண தேவோ ஜாத இத்யாதி தேவாதி சரீராணாம் சேதன பிரகார தயா லோக
வேதயோ சாமாநாதி கரண்யே ப்ரதிபாதனம் திருஷ்டம்

(த்ரவ்யம் த்ரயம் சம்யோகம்-யுவா ஸ்யாம தேவ தத்தன் அப்ருதக் சமஸ்தானம்
குண்டலி தேவதத்தன் ப்ருதக் ஸம்ஸ்தானம்-ஜீவன் அசேதனன் ப்ரஹ்மம் -மூன்றும் த்ரவ்யம் -அப்ருதக் ஆக பிரகாரங்கள் ஆக வேண்டுமே )

த்வர்த்தீய ப்ரத்யயம் -புவநாநி விஷ்ணு -விஷ்ணு இன்றி தனித்து இயங்காத புவனம்
மத்வர்த்தீய ப்ரத்யயம் –அப்ருதக் சித்தம் –

76–அயமர்த்த -ஜாதிர் வா குணோ வா ந தத்ர ஆதரந-கஞ்சன த்ரவ்ய விசேஷம் பிரதி விசேஷண தயைவ
யஸ்ய சத் பாவ -தஸ்ய தத் அப்ருதக் சித்தே தத் ப்ரகாரதயா தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாதநம் யுக்தம்
யஸ்ய புந த்ரவ்யஸ்ய ப்ருதக் சித்தஸ்யைவ கதாசித் க்வசித் த்ரவ்யாந்தரப் பிரகாரத்வ மிஷ்யதே
தத்ர மத்வர்த்தீய ப்ரத்யய -இதி விசேஷ –

77–ஏவமேவ ஸ்தாவர ஜங்கமாத்மகஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ஈஸ்வர சரீரத்வேந தத் பிரகார தயைவ ஸ்வரூப சத் பாவ இதி
தத் பிரகாரீ ஈஸ்வர ஏவ தத் தத் சப்தேந அபிதீயதே இதி தத் சாமாநாதி கரண்யேந ப்ரதிபாத நம் யுக்தம்
ததே தத் பூர்வமேவ நாம ரூப வியாகரண ஸ்ருதி விவரனே பிரபஞ்சிதம் —

78–அத ப்ரக்ருதி புருஷ மஹத் அஹங்கார தந் மாத்ர பூதேந்த்ரிய -ததாரப்த-சதுர்தச புவநாத்மக ப்ரஹ்மாண்ட தத் அந்தர்வர்த்தி
தேவ திரியக் மனுஷ்ய ஸ்தாவராதி சர்வ பிரகார சமஸ்தாந ஸம்ஸ்திதம் கார்யமபி சர்வம் ப்ரஹ்ம ஏவ இதி காரண பூத
ப்ரஹ்ம விஞ்ஞாநாதேவ சர்வம் விஞ்ஞாதம், பவதீதி ஏக விஞ்ஞானம் உப பந்நதரம்-ததேவம் கார்ய காரண பாவாதி முகேந
க்ருஸ்த்ரஸ்ய சித் அசித் வஸ்துந பாரா ப்ரஹ்ம பிரகார தயா ததாத் மகத்வம் யுக்தம் –

79–நநு ச பரஸ்ய ப்ராஹ்மண ஸ்வரூபேண பரிணாம ஆஸ்பதத்வம்-நிர்விகார நிரவத்ய ஸ்ருதி வ்யாகோப ப்ரசங்கேந நிவாரிதம்-
ப்ரக்ருதிஸ் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் இதி ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஞ்ஞா
ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தாப்யாம் பரம புருஷஸ்ய ஜகாத் உபாதான காரணத்வம் ச ப்ரதிபாதிதம்
உபாதான காரணத்வம் ச பரிணாம ஆஸ்பதத்வ மேவ கத மிதமுபபத்யதே அத்ரோஸ்யதே -ச ஜீவஸ்ய பிரபஞ்சஸ்ய
அவிசேக்ஷண காரணத்வம் யுக்தம் தத்ர ஈஸ்வரஸ்ய ஜீவ ரூப பரிணாமாப் யுபகமே
நாத்மாஸ்ருதேர் நித்யத்வாச் ச தாப்ய–ப்ரஹ்ம சூத்ரம் -2-3-3-
இதி விருத்யதே-வைஷம்ய நைர் க்ருண்ய பரிகாரஸ் ச ஜீவாநாமநாதித் வாப்யுகமேன
தத் கர்ம நிமித்தயா ப்ரதிபாதித -வைஷம்ய நைர்க்ருண்யே ந சா பேஷத்வாத் -2-1 -34—
ந கர்ம விபாகதிதி சேண்ந அநாதித்வாது ப பத்யதே சாப்யு பலப்யதேச -2-1-35-இதி
அக்ருதாப்யாகம க்ருத் விபிரணாச பிரசங்கஸ் ச அநித்யத்வே அபிஹித ததா ப்ரக்ருதே ரப்யநாதிதா ஸ்ருதிபி ப்ரதிபாதிதா –
அஜாமேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் வஹ்நீம் ப்ரஜாம் ஜன யந்தீம் ச ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமானே நுசேதே
ஜஹாத்யேநாம் புக்த போகாம ஜோந்ய இதி ப்ரக்ருதி புருஷயோரஜத்வம் தர்சயதி–

80–அஸ்மாந் மாயி ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிந் சாந்யோ மாயயா சந்நிருத்த -மாயம் து ப்ரக்ருதிம் வித்யாந் மாயி நந்து மஹேஸ்வரம்
இதி ப்ரக்ருதிரேவ ஸ்வரூபேண விகாராஸ்பத மிதிச தர்சயதி-கௌரநாத் யந்தவதி ச ஜநித்ரி பூத பாவிநீ இதிசா
ஸ்ம்ருதிஸ் ச
ப்ரக்ருதிம் புருஷஞ்ச ஏவ வித்யாநாதி உபாவபி -பூமிர் ஆபோ அநலோ வாயு கம் -மநோந் புத்தி ரேவச அஹங்கார
இதீயம் மே பிந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா -அபரேயமிதஸ் த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்திமே பராம் –
ஜீவ பூதாம் மஹா பாஹோ யாயேதம் தார்யதே ஜகத்
பிரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந புந மாயா த்யஷேண ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் இத்யாதிகா
ஏவம் ச ப்ரக்ருதேரபி ஈஸ்வர சரீரவத் ப்ரக்ருதி சப்தோ அபி ததாத்ம பூதஸ்ய ஈஸ்வரஸ்ய தத் பிரகார சமஸ்திதஸ்ய வாசக
புருஷ சப்தோ அபி தத் ஆத்மக பூதஸ்ய ஈஸ்வரஸ்ய புருஷ பிரகார சமஸ்திதஸ்ய வாசக –
அத தத் விகாராணமபி தயைவ ஈஸ்வர -ஆத்மா -ததாக வ்யக்தம் விஷ்ணுஸ் ததா அவ்யக்தம் புருஷ கால ஏவச
ச ஏவ ஷோபகோ ப்ரஹ்மந் ஷோப்யஸ் ச பரமேஸ்வர -இதி அத ப்ரக்ருதி பிரகார சமஸ்திதே பரமாத்மநி பிரகார பூத
ப்ரக்ருதி அம்சே விகார பிரகார்யம்ஸோ நியாந்தா நிரவத்ய சகல கல்யாண குணாஸ்ரய ஸத்யஸங்கல்ப
ஏவ ததாச சதி காரண அவஸ்தோபி ச ஏவேதி கார்ய காரணயோர் அநந்யத்வம் சர்வ ஸ்ருதி விரோதஸ் ச பவதி-

81–ததேவம் நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்மத சாபந்ந பிரகிருதி புருஷ சரீரம் ப்ரஹ்ம காரணாவஸ்தம் –
ஜகத ததாபத்திரேவ ச ப்ரலய நாம ரூப விபாக விபக்த ஸ்தூல சிதசித் வஸ்து சரீரம் ப்ரஹ்ம கார்யாவஸ்தம் ப்ராஹ்மண
ததாவித ஸ்தூல பாவ ஏவ ஸ்ருஷ்ட்டி இத்யுச்யதே –
யதோக்தம் பகவதா பராசரேண-பிரதான பும்ஸோரஜயோ -காரணம் கார்ய பூதயோ-இதி தஸ்மாத் ஈஸ்வர பிரகார பூத
சர்வாவஸ்த ப்ரக்ருதி புருஷ வாஸிந ஸப்தா தத் பிரகார விஸிஷ்ட தயா அவஸ்திதே பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே
ஜீவாத்மவாஸி தேவ மனுஷ்யாதி சப்தவத் யதா தேவ மனுஷ்யாதி ஸப்தா தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷனாம்
ஜீவாத்ம பிரகார தயைவ பதார்த்தத்வாத் பிரகாரிணி ஜீவாத்மநி முக்ய தயா வர்த்தந்தே தஸ்மாத் ஸர்வஸ்ய
சிதசித் வஸ்துந பரமாத்ம சரீரதயா தத் பிரகாரத்வாத் பரமாத்மநி முக்ய தயா வர்த்தந்தே சர்வே தத் வாசகா ஸப்தா —

82–அயமேவச ஆத்ம சரீர பாவ -ப்ருதக் சித்யநர்ஹ தாராதேய பாவ -நியந்த்ரு நியாமய பாவ -சேஷ சேஷி பாவஸ் ச
சர்வாத்மநா ஆதார தயா நியந்தரு தயா -சேஷி தயா ச ஆப்நோதீதி -ஆத்மா சர்வாத்மநா ஆதேய தயா நியாம்ய தயா சேஷ தயா ச
அப்ருதக் சித்த பிரகாரத்வாத்-அப்ருதக் சித்தம் -ஆகார சரீரம் ஏவமேவஹி ஜீவாத்மந-
ஸ்வ சரீர சம்பந்த ஏவமேவ பரமாத்மந-சர்வ சரீரத்வேந சர்வ சப்த வாச்யத்வம் —

(சரீராத்ம பாவம்-சர்வாத்மனா ஆப்நோதி -விசேஷ வியாப்தி -தேச கால அவஸ்தா வாசி இல்லாமல் -ஆதாரம் நியாம்யம் சேஷி அப்ருதக் சித்தம் -பிரகாரம்-சர்வ ஸப்த வாஸ்யன் இதனாலேயே-பர்யவசான வ்ருத்தி )

83–ததாஹ ஸ்ருதி கண–சர்வே வேதா யத்பதமாமநந்தி -சர்வே வேதாயத்ரைகம் பவந்தி -(இந்த கட உபநிஷத் ஸ்ருதி -கீதை 2-8 அத்யாயத்திலும் ஸ்லோகம் இவற்றைக் கொண்டே உண்டே )

(ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை)

(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்தஸ் தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

நாரங்களுக்கு எல்லாம் ஆஸ்ரயமே -அயனமே நாராயணன் -சர்வ ஆராதத்வம் தாரகன் –
எங்கும் வியாபித்து -உள்ளும் புறமும் -ஸர்வ வியாபகத்வம் -ஸர்வ அந்தர்யாத்மா-சரீர ஆத்மா -அந்தர்யாமி -நியமனம்)

இதி தஸ்ய ஏகஸ்ய வாஸ்யத்வா தேகார்த்த வாஸிநோ பவந்தி-இத் யர்த்த
ஏகோ தேவா பஹுதா சந்நிவிஷ்ட
சஹைவ சந்தம் நவிஜாநந்தி தேவா –இத்யாதி
தேவா இந்திரியாணி தேவ மனுஷ்யாதி நாமாந்தாயா மித்யா ஆத்மத்வேந நிவிஸ்ய -சஹைவ சந்தம் –
தேஷாம் இந்திரியாணி மந பர்யந்தாணி ந விஜாநந்தி இத்யர்த்த

(மனஸ் -ஏக ஆஸ்ரயம் அவனுக்கும் இந்திரியங்களுக்கும் -இருந்தாலும் இவை அறிய வில்லையே)

ததா ச பவ்ராணிகாநி வசாம்சி
நதா ஸ்ம சர்வ வசஸாம் பிரதிஷ்டா யத்ர ஸாஸ்வதீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-வாஸ்யேஹி வசச பிரதிஷ்டா காரணம் பூர்வம் வசஸாம் வாஸ்ய முத்தமும் -(ஜிதந்தே )
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வித்யா –இத்யாதீ நி ஸர்வாணி ஹி வாஸாம்சி ச சரீராத்ம விஸிஷ்ட -மாந்தர்யாமிணமேவ ஆசஷதே–
ஹந்த ஹபீமா திஸ் ரோதேவதா அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி இதி ஹி ஸ்ருதி –

ததா ச மாநவம் வச–பிரசாசிதாரம் ஸர்வேஷா மணீயாம் ச மணீயசாம் ருக்மாபம்-ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷன் பரம்
அந்த பிரவிஸ்ய-அந்தர்யாமிதயா ஸர்வேஷாம் பிரசாசிதாரம் -நியந்தாரம் அணீயாம் ச ஆத்மாந க்ருத்ஸ்ரஸ்யா சேதநஸ்ய வ்யாபகதயா
ஸூஷ்ம பூதா தேஷாம் அபி வ்யாபகத்வாத் தேப்யோபி ஸூஷ்ம தர இத்யர்த்த ருக்மாப-ஆதித்ய வர்ண –
ஸ்வப்ந தீ கம்யம் ஸ்வப்ந கல்ப புத்தி ப்ராப்யம் விசத தம ப்ரத்யக்ஷதாபந்ந அநு த்யாநை கல்ப்ய-இத்யர்த்த –
ஏநமே கே வதந்த் யக்நிம் மருதோநய ப்ரஜாபதிம் இந்திரமேக பரே ப்ராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம் இதி ஏகே வேதா இத்யர்த்த
உக்தரீத்யா பரஸ்யைவ ப்ரஹ்மண-சர்வஸ்ய ப்ரசாசித்ருத்வேந சர்வ அந்தராத்மதயா ப்ரவிஸ்ய அவஸ்திதத்தவாத்
அஞ்ஞாய தயோபி ஸப்தா சாஸ்வத ப்ரஹ்ம சப்தவத் தஸ்யைவ வாசகா பவந்தி இத்யர்த்த –

ததாச ஸ்ம்ருத் யந்தரம்
யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் சஹு தாசநாந் சர்வ பூத அந்தராத்மநாம் விஷ்ணுமே வ யஜந்தி தே இதி
பித்ரு தேவ ப்ராம்ஹண ஹுதாசநாதி ஸப்தா தந் முகேந ததந்தராத்ம பூதஸ்ய விஷ்ணோ ரேவ வாசகா இத்யுக்தம் பவதி —

84–அத்ரேதம் சர்வ ஸாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மாந ஸ்வயம் அங்குசித அபரிச்சின்ன நிர்மல ஞான ஸ்வரூபா சந்த-
கர்ம ரூப அவித்யா வேஷ்ட்டிதா-தத் காம அநு ரூப ஞான சங்கோச மாபந்நா ப்ரஹ்மாதி ச தம்ப பர்யந்த விவித விசித்ர
தேஹேஷு ப்ரவிஷ்டா தத் தத் தேஹோசித லப்த ஞான பிரசரா தத் தத் தேஹாத்ம அபிமாந தத் உசித கர்மாணி குர்வாணா-
தத் அநு குண ஸூக துக்கோப போக ரூப சம்சார ப்ரவாஹம் பிரதிபத்யந்தே -ஏதேஷாம் சம்சார மோசனம்
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே இதி –

(கர்மாவும் அவித்யாவும் பகவத் நிக்ரஹ ரூபமே-வேஷ்ட்டிதா-மூடப்பட்டு)

85–ததர்த்தம் பிரதம மேஷாம் தேவாதி பேத ரஹித ஞாநைக ஆகார தயா ஸர்வேஷாம் சாம்யம் ப்ரதிபாத்ய –
தஸ்யாபி ஸ்வ ரூபஸ்ய பகவச் சேஷதைக -ஸ்வரூபைக ரசதயா பகவதாத் மகதாமபி ப்ரதிபாத்ய -பகவத் ஸ்வரூபம்
ச ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந தயா சகல இதர விஸஜாதீயம் -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண ஆஸ்ரயம் –
ஸ்வ சங்கல்ப ப்ரவ்ருத்த ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாத தயா ஸர்வஸ்ய ஆத்ம பூதம் ப்ரதிபாத்ய
தத் உபாஸநம் சாங்கம் தத் ப்ராபகம் ப்ரதிபாத யந்தி சாஸ்த்ராணீதி —

86–யதோக்தம் -நிர்வாணமய ஏவாயமாத்மா ஞாநமய அமல -துக்க அஞ்ஞான மலா தர்மா ப்ரக்ருதேஸ்தே நசாத்மந
ப்ரக்ருதி சம்சர்க்கக் க்ருத கர்ம மூலத்வாத் ந ஆத்ம ஸ்வரூப ப்ரயுக்தா தர்மா
இத்யர்த்த ப்ராப்த அப்ராப்த விவேகேந ப்ரக்ருதி ரேவ தர்மா இத்யுக்தம் –

87–வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணேகவி ஹஸ்திநி ஸூநி ஸைவ ஸ்வ பாகே ச பண்டித சம தர்சிந –ஸ்ரீ கீதை -5–18-இதி
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப ப்ரக்ருதி ஸம் ஸ்ருஷ்டஸ்ய ஆத்மந ஸ்வரூப விவேசநீ புத்தி ஏஷாம் தே பண்டிதா-
தத் ப்ரக்ருதி விசேஷ வி யுக்த ஆத்ம யாதாத்ம ஞான வந்த -தத்ர தத்ர அத்யந்த விஷம ஆகாரே வர்த்த மாநம் ஆத்மாநம்
சமாநா காரம் பஸ்யன்தீதி சம தர்சிந இத்யுக்தம்
ததிதமாஹ-இஹைவ தைர்ஜித ஸ்வர்க்கோ ஏஷாம் சாம்யே ஸ்திதம் மந நிர்தோஷம் ஹி சமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தேஸ்திதா –
இதி நிர்தோஷம் தேவாதி ப்ரக்ருதி விசேஷ ரூப சம்சர்க்க தோஷ ரஹிதம் ஸ்வரூபேணா வஸ்திதம் சர்வம் ஆத்ம வஸ்து
நிர்வாண ரூப ஞான ஏக ஆகாரதயா சமம் இத்யர்த்த —

88–தஸ்யைவம் பூதஸ்ய ஆத்மந பகவஸ் சேஷதகை ரஸதா தந் நியாம்யதா ததேக ஆதாரதா ச தத் தத் சரீர –
தத் தநு ப்ரப்ருதிபிஸ் சப்தை-தத் சாமாநாதி கரண்யேந ச ஸ்ருதி ஸ்ம்ருதி இதிகாச புராணாதிஷு
ப்ரதிபாத்யதே இதி பூர்வமேவ யுக்தம் —

89–தைவிஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா
மாமேவயே பிரபந்த்யந்தே மாயா மேதாம் தரந்திதே –ஸ்ரீ கீதை -7-14–இதி
தஸ்யை தஸ்ய ஆத்மந கர்ம க்ருத விசித்ர குண மய ப்ரக்ருதி ஸம் சேர்க்க ரூபாத் சம்சாராத் மோக்ஷ
பகவத் பிரபத்தி மந்தரேண நோபபத்யதே
இத்யுக்தம் பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிபி ஸ்ருதி பிஸ் ச —

90—மயாததமிதம் சர்வம் ஜகதவ்யக்த மூர்த்திநா
மத்ஸ்தாநி சர்வ பூதாநி ந சாஹம் தேஷ்வ வஸ்திதா –ஸ்ரீ கீதை
ந ச மத் ஸ்தாநி பூதாநி பாஷ்யமே யோகம் ஐஸ்வர்யம்
இதி சர்வ சக்தி யோகாத் ஸ்வ ஐஸ்வர்ய வை சித்ரியமுத்தம்
ததாஹ-விஷ்டப்யாஹமீதம் க்ருத்ஸனமேகாம் சேந ஸ்திதோ ஜகத் இதி
அநந்த விசித்ர மஹா ஆச்சர்ய ரூபம் ஜகத் மம அயுதாம் சாம்சேந ஆத்ம தயா பிரவிஸ்ய
சர்வம் மத் சங்கல்பேந விஷ்டப்ய அநேந ரூபேண அநந்த மஹா விபூதி அபரிமிதோதோர குண சாகர
நிரதிசய ஆச்சர்ய பூத ஸ்தித அஹம் -இத்யர்த்த –

91–ததிதமாஹ-ஏகத்வே சதி நாநாத்வம் நாநாத்வே சதி ஸைகதா -அசிந்த்யம் ப்ரஹ்மணோ ரூபம் கஸ்தத் வேதிதும் அர்ஹதி –
இதி பிரசாசி த்ருதவேந ஏக ஏவ சந் விசித்ர சித்சித் வஸ்துஷு அந்தராத்மதயா பிரவிஸ்ய–தத் தத் ரூபேண
விசித்ர பிரகார விசித்ர கர்ம காரயந் நாநா ரூபதாம் பஜதே-
ஏவம் ஸ்வ அல்பாம்சேந து ஸர்வாஸ்சர்யமயம் நாநா ரூபம் ஜகத் தத் அந்தராத்மதயா பிரவிஸ்ய
விஷ்டப்ய நாநாத்வேநா வஸ்திதோபி சந்
அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண -ஸர்வேச்வரேச்வர பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம நாராயண
நிரதிசய ஆச்சர்ய பூத நீல தோய்த்த சங்காச புண்டரீக தல அமலாய தேஷண-சஹஸ்ராம்ஸூ சஹஸ்ர கிரண
பரம வ்யோம்நி தத் அக்ஷரே பரமே வ்யோமந் -இத்யாதி ஸ்ருதி சித்த ஏக ஏவ அதிஷ்டதே —

ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய கஸ்ய சித் பி வஸ்துந ஏக ஸ்வபாவஸ்ய -ஏக கார்ய சக்தி யுக்தஸ்ய –
ரூபாந்தரயோக ஸ்வ பாவாந்தர யோக -சக்தி யந்திர யோகஸ் ச நகடதே தஸ்ய ஏதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-
சர்வ வஸ்து விஸாஜாதீய தயா சர்வ ஸ்வாபவத்வம் சர்வ சக்தி யோகஸ் சேதி ஏகஸ்யைவ விசித்ர அநந்த நாநா ரூபதா
ச புநரபி அநந்த அபரிபித ஆச்சர்ய யோகேந ஏக ரூபதா ச ந விருத்தா இதி வஸ்து மாத்ர சாம்யாத்
விரோத சிந்தந யுக்தா இத்யர்த்த -யதோக்தம்
சக்த்ய சர்வ பாவாநாம் அசிந்ய ஞான கோஸரா யாதோதோ ப்ரஹ்மணஸ் தாஸ்து சர்காத்யா பாவ சக்தய பவந்தி
தபாதாம் ஸ்ரேஷ்ட பாவ கஸ்ய யதோஷ்ணதா–ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இதி -ஏதத் யுக்தம் பவதி -ஸர்வேஷாம் அக்னி ஜலாதீநாம் பாவாநாம் ஏகஸ்மின்நபி பாவே த்ரஷ்டைவ சக்தி தத் விஸாஜாதீய
பாவாந்தரேபி இதி ந சிந்தயிதும் யுக்தா ஜலாதவ் அத்ருஷ்டாபி தத் விசாஜாதீயே பாவகே பாஸ்வரத்வ உஷ்ணத்வாதி சக்தி
யாதாருச்யதே ஏவமேவ சர்வ வஸ்து விஸாஜாதீயே ப்ரஹ்மணி சர்வ சாம்யம் நாநு மாதும் யுக்தம்
இதி அத விசித்ர அநந்த சக்தி யுக்தம் ப்ரஹ்ம இத்யர்த்த ததாஹ
ஜெகதே தந் மஹா ஆச்சர்யம் ரூபம் யஸ்ய மஹாத் மந தேநாஸ்சர்ய வரேணாஹம் பவதா கிருஷ்ண சங்கத்தை இதி –ஸ்ரீ பாகவதம் –

ததே தத் நாநாவித அநந்த ஸ்ருதி நிகர -சிஷ்ட பரிக்ருஹீத தத் வ்யாக்யான பரிஸ் ஸ்ரமாத் அவதாரிதம்
ததாஹி -பிரமாணாந்தரா பரி த்ருஷ்ட -அபரிமித பரிணாம-அநேக தத்வ நியத க்ரம விஸிஷ்டவ்
ஸ்ருஷ்ட்டி ப்ரலயவ் ப்ராஹ்மண அநேக விதா ஸ்ருதயோ வதந்தி
நிரவத்யம் -நிரஞ்சனம் -விஞ்ஞானம் -ஆனந்தம் -நிர்விகாரம் -நிஷ்க்ரியம் -சாந்தம் -நிர்குணம் -இத்யாதிகா
நிர்குணம் ஞான ஸ்வரூபம் ப்ரஹமேதி காஸ்சந ஸ்ருதயோ அபி ததபி
நேஹ நாநாஸ்தி கிஞ்சன ம்ருத்யோஸ் ச ம்ருத்யு மாப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி
யத்ரத்வஸ்ய ஸர்வாத்மைவாபூத் தத்கேந கம்பஸ்யேத் தத்கேந கம் விஜாநீயாத்–இத்யாதிகா
நாநாத்வ நிஷேதவாதிந்ய சாந்தி காஸ்சந ஸ்ருதய
யஸ் சர்வஞ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வாபி வதந் யதாஸ்தே –
சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத் புருஷா ததி-

(நிரவத்யம் –கர்மா சம்பந்தம் அற்றது –நிரஞ்சனம்-கர்மா பல சம்பந்தம் அற்றது-நிஷ்க்ரிய-அதனால் நிர் அயவவம் )

(ஸாஸ்த்ர ஞானமும் ஞான பலனும் சாந்திக்கு ஹேது -கிரியைகளும் கிரியைகளின் பலமும் அஷாந்திக்கு ஹேது)

அபஹத பாப்மா விஜரோ வி மிருத்யு விசோகோ விஜிகத்ஸ்ஸோபிபாச சத்யகாம ஸத்யஸங்கல்ப இதி சர்வஸ்மிந்
ஜகதி ஹேய தயா அவகதம் சர்வம் குணம் ப்ரதிஷித்ய-நிரதிசய கல்யாண குண அநந்த்யாம்
சர்வஞ்ஞதாம் சர்வ சக்தி யோகம் சர்வ நாம ரூப வியாகரணம் ஸர்வஸ்ய ஆதாரதாம் காஸ்சந ஸ்ருதய ப்ருவதே
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநி-
ஐததாத் மியமிதம் சர்வம் ஏகஸ்மிந் பஹுதாவிஜாரா இத்யாதிகா
ப்ரஹ்ம ஸ்ருஷ்டம் ஜகத் நாநாகாரேம் ப்ரதிபாத்ய தத் ஐக்யம் ச ப்ரதிபாத யந்தி காஸ்சந ஸ்ருதய
ப்ருதக் ஆத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா
போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா
பிரஜாபதிரகாம யாத பிரஜா ஸ்ருஜயேதி
பதிம் விஸ்வ ஸ்யாத் மேஸ்வரம் சாஸ்வதம் சிவமச்யுதம்
தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்
ஸர்வஸ்ய வசீ சர்வஸ் யேசாந இத்யாதிகா ப்ரஹ்மண சர்வஸ்மாத யந்யத்வம் ஸர்வஸ்ய ஈஸி தத் யத்வம் ஈஸ்வரத்வம்
ச ப்ரஹ்மண -ஸர்வஸ்ய சேஷதாம் பதித்வம் ச ஈஸ்வரஸ்ய காஸ்சந் ப்ரதிபாத யந்தி
அந்தப் ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜெநாநாம் சர்வாத்மா -ஏஷத ஆத்மா அந்தர்யாம் அம்ருத
யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆப சரீரம் யஸ்ய தேஜஸ் சரீரம் இத்யாதி
யஸ்ய அவ்யக்தம் சரீரம் யஸ்ய அக்ஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யு சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் இதி
ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய வஸ்துந ப்ரஹ்மணஸ் ச சரீராத்ம பாவம் தர்சயந்தி காஸ்சந இதி
நாநா ரூபாணாம் வாக்யாநாம் அ விரோத முக்யார்த்த பரித்யாகஸ் ச யதா சம்பவதி ததைவ வர்ணனீயம் –

வர்ணிதம் ச -அதிகார ஸ்ருதய ஸ்வரூப பரிணாம பரிஹாரா தேவ முக்யார்த்தா–நிர்க்குண வாதாஸ் ச பிராகிருத ஹேய குண நிஷேத
விஷய தயா வ்யவஸ்திதா நாநாத்வ நிஷேத வாதாஸ் ச ஏகஸ்யைவ ப்ரஹ்மண சரீர தயா பிரகார பூதம் சர்வம் சேதன அசேதனம் வஸ்த்விதி
சர்வஸ்யாத் மதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்திதமிதி ஸூ ரஷிதா-சர்வ விலக்ஷணத்வ பதித்தவ ஈஸ்வரத்வ-கல்யாண குணாகரத்வ –
ஸத்ய ஸங்கல்பத்வாதி வாக்யம் ததப்யுபகமாதேவ ஸூ ரஷிதாம் ஞான ஆனந்த மாத்ர வாதிச -ச்ரவஸ்மாதந் யஸ்ய சர்வ கல்யாண
குணாஸ்ரயஸ்ய சர்வேஸ்வரஸ்ய சர்வ சேஷிணே -சர்வ ஆதாரஸ்ய சர்வ உத்பத்தி ஸ்திதி ப்ரலய ஹேது பூதஸ்ய
நிரவத்யஸ்ய நிர்விகாரஸ்ய சர்வாத்ம பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண ஸ்வரூபநி ரூபக தர்ம -மல ப்ரத்யநீக அநந்த ரூப
ஞானமேவேதி ஸ்வ பிரகாச தயா ஸ்வரூபமபி ஞானமேவேதி ச ப்ரதிபாதநாத் அநு பாலிதம் ஐக்ய வாதாஸ் ச
சரீராத்ம பாவேந சாமாநாதி கரண்ய -முக்யார்த்ததோப பாதநாதேவ ஸூஸ்திதா —

(இரண்டுமே சம ப்ராதான்யம் என்பதால் அபஹத பாப்மாதகாதிகளையும் சொல்லி ஸத்ய காம்தவம் ஸத்ய சங்கல்பத்துவம் ஒரே வாக்கியத்தில் சொல்லிற்று)

93–ஏவம் ச சதி அபேதா வா போதோ வா வ்யாத்யாத்ம கதாயா வா -வேதாந்த வேத்ய-கோயம் அர்த்த சர்மர்த்திதோ பவதி ?
ஸர்வஸ்ய வேத வேத்யத்வாத் சாவம் சமர்த்திதம் -சர்வ சரீரதயா சர்வ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ அவஸ்த்திதம் இதி -அபேத சமர்த்தித-
ஏகமேவ ப்ரஹ்ம நாநா பூத சித் அசித் வஸ்துப் பிரகாரம் நாநாத் வேந அவஸ்திதம் இதி பேதா பேதவ்
அசித் வஸ்து நஸ் ச சித் வஸ்து நஸ் ச ஈஸ்வரஸ்ய ச ஸ்வரூப ஸ்வபாவ வை லஷண்யாத் அசம்காராஸ் ச பேத சமர்த்திதா —

94–நநு ச -தத்வமஸி ஸ்வேத கேதோ -தஸ்யதா தேவ சிரம் -இதி ஐக்ய ஞான மேவ பரம புருஷார்த்த லேசான மோக்ஷ சாதனம்
இதி கம்யதே நைத தேவம் -ப்ருதகாத்மாநம் பிரேரிதாரம் சமதவா ஜூஷ்டஸ்தஸ்தே நாம்ருதத்வமேதி
இதி ஆத்மாநம் பிரேரிதாரம் ச அந்தர்யாமிணம் ப்ருதக்மத்வா தத ப்ருதக்த்வ ஞானத்தோதோ தேந பரமாத்மநா ஜூஷ்ட அம்ருதத்வமேதி
இதி சாஷாத் அம்ருதத்வ பிராப்தி சாதனம் ஆத்மந நியந்துஸ் ச ப்ருதக்பாவ ஜினாமம் இத்யவகம்யதே
ஐக்ய வாக்ய விரோதாத் ஏதத் ஏதத் அபரமார்த்த ச குண ப்ரஹ்ம பிராப்தி விஷயமிதி அப்யுப கந்தவ்யம்
இதி சேத் ப்ருதக் ஞானஸ்யைவ சாஷாத் அம்ருதத்வப் பிராப்தி சாதனத்தவ ஸ்ராவணாத் விபரீதம் கஸ்மாத் ந பவதி –

ஏதத் யுக்தம் பவதி -த்வயோ துல்யயோ விரோதே சதி அவிரோதந தயோ விஷய விவேச நீய -இதி கதம விரோத இதி சேத்
அந்தர்யாமி ரூபேண அவஸ்தித தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண சரீர தயா பிரகாரத்வாத் ஜீவாத்மந-தத் பிரகாரம் ப்ரஹ்ம ஏவ தவம்
இதி சப்தேந அபி தீயதே ததைவ ஞாதவ்யம் இதி தஸ்ய வாக்யஸ்ய அர்த்த ஏவம் பூதாத் ஜீவாத் ததாத்மதயா அவஸ்தி தஸ்ய
பரமாத்மநோ நிகில தோஷ ரஹிததயா ஸத்யஸங்கல்பத்வாத் யநவதிக யதிசய அஸங்க்யேய கல்யாண குணாகரத்தவே
ந ச ய ப்ருதக்பாவ ஸோநுசந்தேய இதி அஸ்ய வாக்யஸ்ய விஷய இத்யயமர்த்த பூர்வமேவ அஸக்ருத் யுக்த –

95–போக்தா போக்யம் பிரேரிதாரம் ச மத்வா-இதி போக்ய பூதஸ்ய வஸ்துந அசேதனத்வம் பரார் தத்வம்-சதத விகாராஸ்ப தத்வம் –
இத்யாதய ஸ்வபாவா போக்து ஜீவாத்மநஸ் ச அமல அபரிச்சின்ன ஞான ஆனந்த ஸ்வ பாவஸ்யைவ அநாதி கர்ம ரூபா வித்யாக்ருத
நாநாவித ஞான சங்கோச விகாசவ் போக்ய பூதா சித் வஸ்து சம்சர்க்கஸ் ச பரமாத்மா உபாஸநாத் மேஷஸ் ச இத்யாதய
ஸ்வ பாவா ஏவம் பூத போக்த்ரு போக்யயோ அந்தர்யாமி ரூபேண அவஸ்தாநம் ஸ்வரூபேண
ச அபரிமித குணவ்க ஆஸ்ரயத்வேந அவஸ்தானம் இதி பரஸ்ய ப்ரும்ஹண த்ரிவிதா வஸ்தாநம் ஞாதவ்யம் இத்யர்த்த —

96 —தத்வமஸி -இதி சத் வித்யாயாம் உபாஸ்யம் ப்ரஹ்ம ச குணம் ச குண ப்ரஹ்ம பிராப்திஸ் ச பலம் –
இத்யபியுக்தை பூர்வாசார்யை வ்யாக்யாதம்
யதோக்தம் வாக்யகாரேன-யுக்தம் தத் குணக உபாஸநாத் -இதி வ்யாக்யாதம் ச த்ரமிட ஆச்சார்யேனே வித்ய விகல்பம் வததா-
யத்யபி சச்சித்தோ ந நிர்புக்ண தைவதம் குண கணம் மனசா அநுதாவேத் தாதாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே
இதி தத்ரபி ச குண ஏவதா ப்ராப்யதே -இதி சச்சித்த ஸத்வித்யா நிஷ்ட –
ந நிர் நிர்புக்ணதைவதம் குண கணம் மனசாநுதா வேத்-
அபஹத பாப்மத்வாதி கல்யாண குண கணம் தைவதாத் விபக்தம் யத்யபி தஹர வித்யா நிஷ்ட இவ
சச்சித்தோ நஸ்மரேத் ததாபி அந்தர் குணாமேவ தேவதாம் பஜதே-தேவ ஸ்வரூப அநு பந்தித்வாத்-
சகல கல்யாண குண கணஸ்ய கேநசித் பரதேவதா அசாதாரண்யேந நிகில ஜகாத் காரணத்வாதிந குணேன உபாஸ்யமாநோபி
தேவதா வஸ்துந ஸ்வரூப அநு பந்தி சர்வ கல்யாண குண விஸிஷ்ட ஏவ உபாஸ்யதே அத ச குணம் ஏவ ப்ரஹ்ம
தத்ராபி ப்ராப்யம் இதி ஸத்வித்யா தஹர வித்யயோ விகல்ப இத்யர்த்த –

97–நநு ச ஸர்வஸ்ய ஐந்தோ பரமாத்மா அந்தர்யாமி தந் நியாம்யம் ச சர்வம் -இத்யுக்தம் –
ஏவம் ச சதி விதி நிஷேத சாஸ்த்ராணாம் அதிகாரி ந த்ருச்யதே ய ஸ்வ புத்யைவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸக்த-
ச ஏவம் குர்யாத் ந குர்யாதிதி விதி நிஷேத யோக்ய ந ஸைஷ த்ருச்யதே -சர்வஸ்மிந் ப்ரவ்ருத்தி ஜாதி
ஸர்வஸ்ய பிரேரக பரமாத்மா காரயிதா -இதி தஸ்ய சர்வ நியமனம் ப்ரதிபாதிதம் ஸ்ரூயதே ச ஏஷ ஏவ சாதுகர்ம காராயதி
தம்யமேப்யோ லோகேப்யே உந்நிநீஷதி ஏஷ ஏவ அசாது கர்ம காராயதி தம் யமதோ நிநீஷதி
இதி சாத்வ சாது கர்ம காரயித்ருத்வாத் நைர் க்ருண்யம் ச –

அதிர உச்யதே -ஸர்வேஷாமேவ சேதநாநாம் சிச் சக்தி யோக ப்ரவ்ருத்தி சக்தி யோக -இத்யாதி
சர்வம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பரிகரம் சாமாந்யேந சம்பவித்தாய தந் நிர்வஹணாய-தத் ஆதாரோ பூத்வா அந்தப் பிரவிஸ்ய
அநுமந்த்ரு தயா ச நியமனம் குர்வந் -சேஷித்வேந அவஸ்தித பரமாத்மா ஏததாஹித சக்திஸ் ஸந் ப்ரவ்ருத்தி நிவ்ருத்யாதி
ஸ்வயமேவ குருதே-ஏவம் குர்வாண மீஷமாண பரமாத்மா உதாசீந ஆஸ்தே அத சர்வம் உபபந்நம் –

சாத்வ சாது கர்ம காரயித்ருத்வம் து வ்யவஸ்தித விஷயம் ந சர்வ சாதாரணம் –
யஸ்து பூர்வம் ஸ்வயமேவ அதி மாத்ரம் ஆநு கூல்யே ப்ரவ்ருத்த தம் பிரதி ப்ரீதி -ஸ்வயமேவ பகவான்
கல்யாண புத்தி யோகதானம் குர்வந் கல்யாணே ப்ரவர்த்தயதி
ய புந அதி மாத்ரம் பிராதி கூல்யே ப்ரவ்ருத்த தஸ்ய து க்ரூராம் புத்திம் ததந் ஸ்வயமேவ க்ரூரேஷ் வேவ கர்மஸூ பரேரயதி பகவாந்
யதோக்தம் பகவதா-தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேந மாம் உபயாந்தி தே
தேஷாமேவாநுகம் பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாஸாயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா
தா நஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷு நராதமாந் ஷிபாம் யஜஸ்ரம ஸூபாந் ஆஸூரீஷ் வேவ யோநிஷு இதி –

98–சோயம் பரப் ப்ரஹ்ம பூத புருஷோத்தம நிரதிசய புண்ய சஞ்சயஷீண -அசேஷ ஜென்ம உபசித பாபராஸே
பரம புருஷ சரணாரவிந்த -சரணாகதி ஜெநித ததாபி முக்யஸ்ய -தத் ஆச்சார்ய உபதேச உப ப்ரும்ஹிதா சாஸ்த்ராதி கத
தத்வ யாதாத்ம்ய அவ போத பூர்வக -அஹர் அஹர் ரூப சீயமாந -சம தம தப ஸுவ்ஸ-ஷம-ஆர்ஜவ -பய அபய ஸ்தாந விவேக தயா –
அஹிம் சாத்யாத்ம குணா பேதஸ்ய-வர்ணாஸ்ரம உசித பரம புருஷ ஆராதன வேஷ-நித்ய நைமித்திக கர்ம உப சங்ஹ்ருதி –
நிஷித்த பரிகார நிஷ்டஸ்ய-பரம புருஷ சரணார விந்தை யுகள ந்யஸ்தா
ஆத்மாத்மீயஸ்ய தத் பக்தி காரிதா நவரதஸ்துதி -ஸ்ம்ருதி -நமஸ் கிருதி யதந கீர்த்தன குண ஸ்ரவண -வசந-த்யான –
அர்ச்சன பிரணாமாதி ப்ரீதி பரம காருணிக புருஷோத்தம பிரசாத வித்வஸ்தஸ்வாந் தஸ்ய அநந்ய ப்ரயோஜன
அநவரத நிரதிசயப் பிரிய விசத தம ப்ரத்யக்ஷதா பந்ந அநு த்யான ரூபக்த்யைக லப்ய —

99–ததுக்கதம் பரம குருபிஸ் பகவத் யாமுனாச்சார்ய பாதவ் –
உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய -இதி ஞான யோக கர்ம யோக
ஸம்ஸ்க்ருத அந்தக் கரணஸ்ய–இத்யர்த்த –
ததாச ஸ்ருதி —
வித்யாஞ்ச அவித்யாஞ்ச யஸ் தத்வே தோபயம் ஸஹ அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயா அம்ருதம் அஸ்நுதே –இதி –
அத்ர அவித்யா சப்தேந வித்ய இதரத் வர்ணாஸ்ரம ஆசாராதி பூர்வோக்தம் கர்ம உச்யதே
வித்யா சப்தேந பக்தி ரூபாபந்ந த்யானம் உச்யதே —

யதோக்தம் -இயாஜஸோபி ஸூ பஷந் யஞ்ஞாந் ஞாந வ்யாபாஸ்ரய –
ப்ரஹ்ம வித்யாம் அதிஷ்டாய தர்த்தும் ம்ருத்யும் அவித்யயா இதி
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நாந்யப் பந்தா அயநாயா வித்யதே
ய ஏநம் விதுரம்ருதாஸ்தி பவந்தி –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மை பவதி -இத்யாதி வேதந சப்தேந த்யானமேவா பிஹிதம்
நிதித்யாசி தவ்ய-இத்யாதிநா ஐக அர்த்யாத்-ததேவ த்யானம் புநரபி விசிநஷ்டி –
நாயமாத்மா ப்ரவசனேந லப்ய -நமேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷா வ்ருணுதே தேந லப்ய-
தஸ்யைஷா ஆத்மா விவ்ருணுதே தநும் ஸ்வாம் -இதி பக்தி ரூபா பந்ந அநு த்யாநேநைவ லப்யதே
ந கேவல வேதேந மாத்ரேண நமேதயா-இதி கேவலஸ்ய நிஷித்தத்வாத் ஏததுக்தம் பவதி –
யோயாம் முமுஷு வேதாந்த விஹித வேதந ரூப த்யாநாதி நிஷ்ட-யதா தஸ்ய தஸ்மிந் நேவ அநு த்யாநே
நிரவதிக அதிசயா ப்ரீதி ஜாயதே ததைவ தேந லப்யதே பர புருஷ இதி –

(தத்வமஸி-மோக்ஷ சாதனா உபதேசம் -அத்வைதிகள் ஞான மாத்திரம் -ஐக்ய ஞான விசேஷம் உண்டான அனந்தரம் மோக்ஷம்
உபாஸனமே மோக்ஷ சாதனம் -பக்தி ஒன்றிய பக்தி -உடன் சேர்ந்து- துஷ்ட -குண அனுபவம்-பிராட்டி போல பிரிக்க முடியாமல் -)

யதோக்தம் பகவதா புருஷஸ்ய பரப் பார்த்தா பக்த்யா லப்யஸ் த்வந் அநந்யயா -பக்த்யாத்வ நந்யயா ஸக்ய
அஹமேத்வம் விதோர்ஜூந ஞானம் த்ருஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப பக்த்யாம் மாம் அபி ஜாநாதி
யாவாந் யஸ் சாஸ்மி தத்வத-ததோ மாம் தத்வதோ ஞாத்வா விசதே ததந்தரம் -இதி ததனந்தரம் மாம் தத ஏவ பக்கத்தே விசாதே
இத்யர்த்த பக்திர் அபி நிரதிசய ப்ரிய அநந்ய ப்ரயோஜன ஸ்வ இதர வை த்ருஷ்ண்யாவஹ ஞான விசேஷ
ஏவேதி தத் யுக்த ஏவ தேந பரேண ஆத்மநா வரநீயோ பவதீதி தேந லப்யதே இதி ஸ்ருதி யர்த்த
ஏவம் வித பயபக்தி ரூப ஞான விசேஷஸ்ய உத்பாதாக -பூர்வ யுக்த அஹர் அஹர் ரூப ஸீயமாந ஞான பூர்வக –
கர்ம அநு க்ருஹீத பக்தி யோக ஏவ –

யதோக்தம் பகவதா பராசரேன
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமாந்
விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நாணய தத் தோஷகாரக -( ஸ்ரீ விஷ்ணு புராணம் -காண்டிக்ய கேசித்வஜ உபாக்யானம் -)
இதி நிகில ஜகத் உத்தாரணாய அவநிதளே அவதீர்ண பர ப்ரஹ்ம பூத புருஷோத்தம ஸ்வயமேவ ஏதத் உக்தவாந்
ஸ்வ கர்ம நிரதஸ் சித்தம் யதா விந்ததி தச் ச்ருணு -யத ப்ரவ்ருத்தி பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய சித்திம் விந்ததி மாநவ –இதி யதோதித க்ரம பரிணத பக்த்யேக லப்ய ஏவ —

100-பகவத் போதாயன -டங்க-த்ரமிட -குஹதேவ-கபர்தி -பாருசிப்ரபிருதி -அவிகீத-சிஷ்ட பரிக்ருஹீத –
புராதன வேத வேதாந்த வ்யாக்யான ஸூவ்யக் தார்த்த ஸ்ருதி நிகர நிதர்சிதோயம் பந்தா —
அநேந -சார்வாக -சாக்ய-ஓவ்லூக்ய -அஷபாத -ஷபனிக-கபில -பதஞ்சலி -மத அநு ஸாரினோ
வேத பாஹ்யா வேதா வலம்பி குத்ருஷ்ட்டி பிஸ் ஸஹ நிரஸ்தா –
வேதா வலம்பிநாம் அபி யதா வஸ்தித வஸ்து விபர்யஸ்த த்ருஸாம் பாஹ்ய சாம்யம் மநுநைவ யுக்தம்
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யஸ்ஸ காஸ் ஸ குத்ருஷ்டய
சர்வஸ்தா நிஷ்பல ப்ரேத்ய தமோந் நிஷ்டா ஹி தா சம்ருதா இதி
ரஜஸ் தமோப்யாம ஸ்ப்ருஷ்டம் உத்தமம் சத்வமேவ ஏஷாம் ஸ்வாபாவிகோ குண தேஷாமேவ வைதிகீ ருசி –
வேதார்த்த யாதாத்ம்ய அவபோதஸ் ச இத்யர்த்த –

யதோக்தம் மாத்ஸ்யே —

ஸங்கீர்ணா சாத்விகாஸ் ஸைவ ராஜசா தமஸாஸ் தயா இதி கேசித் ப்ரஹ்ம கல்பா ஸங்கீர்ணா –
கேசித் சத்வ பிராயா -கேசித் ரஜஸ் பிராயா -கேசித் தமஸ் பிராயா -இதி கல்ப விபாக முத்தகா சத்வ ரஜஸ் தமோ மாயாநாம்
தத்வாநாம் மஹாத்ம்ய வர்ணனஞ்ச தத் தத் கல்ப ப்ரோக்த புராணே ஷு சத்வாதி குண மயேந ப்ரஹ்மணா க்ரியதே இதி ச யுக்தம் –
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா-தஸ்ய தஸ்ய து மஹாத்ம்யம் தத் ஸ்வரூபேண வர்ணயதே இதி
விசேஷ தஸ் ச யுக்தம்
அக்ரேஸ் சிவஸ்ய மஹாத்ம்யம் தமசேஷு ப்ரகீர்த்யதே
ரஜஸே ஷு ச மஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ வித்து
சாத்விகேஷ்வத கல்ப்பேஷு மஹாத்ம்யம் அதிகம் ஹரே
தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம்
சங்கீர்ணேஷு சரஸ்வத்யா பித்ரூணாஞ்ச நிகத்யதே–இத்யாதி
ஏதத் யுக்தம் பவதி–ஆதி ஷேத்ரஞ்ஞத்வாத் ப்ரஹ்மண தஸ்யாபி கேஷுசிதஹஸ் ஸூ சத்வம் உத்ரிக்தம் கேஷுசித் ரஜஸ் கேஷுசித் தமஸ்–

யதோ யுக்தம் பகவதா
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வாதிவிதேவே ஷு வா புந
சத்வம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத்ரிபிர் குணை இதி –ஸ்ரீ கீதை
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச ச ப்ரஹினோதி தஸ்மை -இதி ஸ்ருதே
ப்ரஹ்மணோபி ஸ்ருஜ்யத்வேந ஸாஸ்த்ர வஸ்யத் வேந ச ஷேத்ரஞ்ஞத்வம் கம்யதே சத்வ ப்ராயேஷு அஹஸ் ஸூ தததிரோஷூ
ச யாநி புராணாநி ப்ரஹ்மணா ப்ரோக்தாநி தேஷாம் பரஸ்பர விரோதி சாதி சாத்விகாஹஸ் ப்ரோக்தம் புராணமேவ யதார்த்தம்
தத் விரோதி அந்யத் அத்யர்த்தம் -இதி புராண நிர்ணயாயைவ இதம் சத்வ நிஷ்டேந ப்ரஹ்மணா அபிஹிதமிதி விஞ்ஞாயதே இதி –

101–சத்வாதிநாம் கார்யஞ்ச ச பகவதைவ யுக்தம்
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம் -ரஜசோ லோப ஏவ ச பிரமாதமவ் ஹவ் தாமச பகவதோ ஞான மேவ ச
ப்ரவ்ருத்திஞ்ச நிவ்ருத்திஞ்ச கார்ய அகார்யே பய அபயே பந்தம் மோக்ஷம் ச யோ வேத்தி புத்திஸ் சா பார்த்த சாத்விகீ –
யயா தர்மம் அதர்மஞ்ச கார்யஞ்ச அகார்யமே வச-அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் சா பார்த்த ராஜஸீ
அதர்மம் தர்மம் இதியா மந்யதே தமஸா ஆவ்ருதா சார்வார்த்தாந் விபரீதாம்ஸ்
ச புத்திஸ் சா பார்த்ததாமஸீ இதி–ஸ்ரீ கீதை -18-30-/31-/32—
சர்வான் புராணார்த்தாந் ப்ரஹ்மணஸ் ச காசாத் அதிகம் யைவ ஸர்வாணி புராணாநி புராண காரா சக்ரு யதோக்தம்
கதயாமி யதா பூர்வம் தஷாத்யை முநி சத்தமை பிருஷ்ட ப்ரோவாச பகவான் அப்ஜ யோநி பிதாக–இதி ஸ்ரீ விஷ்ணு புராணம்
அபவ்ருஷேயேஷு வேத வாக்யேஷூ பரஸ்பர விருத்தேஷு கதமிதிசேத் தாத்பர்ய நிஸ்சயாத் அவிரோத பூர்வமேவ யுக்த —

102– யதபிசேதம் விருத்தமிவ த்ருஸ்சதே
ப்ராணம் மனசை ஸஹ கரணை நாதாந்தே பராத்மநி ஸம்ப்ரதிஷ்டாப்ய த்யாயீத ஈஸாநாம் ப்ரத்யாயீத ஏவம் ஸர்வமிதம்–அதர்வண சிகா
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்த்ராஸ் தே சர்வே ஸம்ப்ரா ஸூயந்தே ந கரணம்—
காரணம் து த்யேய–
சர்வைஸ்வர்ய சம்பன்ன சர்வேஸ்வர சம்பு
ஆகாச மத்யே த்யேய –அதர்வண சிகா
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்திகஸ் சித் விருக்ஷ ஏவஸ் தப்தோ திவி திஷ்டத்
ஏக தேநேதம் பூர்ணம் புருஷேண சர்வம் ததோ யதுத்ர தரம் ததுரூப மநா மயம் ய ஏதத் விதுர ம்ருதாஸ்தே பவந்தி
அதேதர து ஸ்வ மேவாபி யந்தி சர்வாணன சிரோக்ரீவ சர்வ பூத குஹாஸய சர்வ வ்யாபிச பகவான் தஸ்மாத் சர்வ ததஸ் சிவ –அதர்வ சிகா
யதா தமஸ் தன்னாதிவா ந ராத்ரி ந சந் ந சாசச் சிவ ஏக கேவல ததஷரம் தத் ஸவிது வரேண்யம்
பிரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ –ஸ்வேதாசவதரா-
இத்யாதி -நாராயண பரம் ப்ருஹ்ம இதி ச பூர்வமேவ ப்ரதிபாதிதம் தேநாஸ்ய கதம விரோத —

103–அத்யல்பமேதத்
வேதவித் ப்ரவரப்ரோக்த வாக்ய அந்யய உப ப்ரும்ஹிதா வேதாஸ் சாங்கா ஹரிம் பிராஹு ஜகாத் ஜென்மாதி காரணம்
ஜன்மாத்யஸ்ய யதஸ்
யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்ய அபி சம்விசந்தி தத் விஞ்ஞாசஸ்வ தத் ப்ரஹ்மா இதி
ஜகத் ஜென்மாதி காரணம் ப்ரஹமேத்யவ கம்யதே-தச்ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ப்ரலய ப்ரகரனேஷ் ஏவ அவ கந்தவ்யம்
ச தேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
இதி ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா ஜகாத் அந்தர்யாமிதாதி முகேந பரம காரணம் சச் சப்தேந ப்ரதிபாதிதம் –

அயமேவார்த்த-
ப்ரஹ்ம வா இதமே கமே வாக்ர ஆஸீத் -இதி சாகாந்தரே ப்ரஹ்ம சப்தேந ப்ரதிபாதித
அநேந சச் சப்தாபி ஹிதம் ப்ரஹமேத் யவகதம்
அயமேவார்த்த சாகாந்தரே
ஆத்மா வா இதமேக ஏவாக்ரா ஆஸீத் -நாந்யத் கிஞ்சந மிஷத்-இதி
ததா -சத் -ப்ரஹ்ம -சப்தாப்யாம்-ஆத்மைவ அபிஹித -இதயவ கம்யதே-
ததாச சாகாந்தரே
ஏகோ ஹவை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாந நேமேத்யா வா ப்ருத்வீ -இத்யாதிநா
சத் ப்ரஹ்ம ஆத்மதி பரம காரண வாஸிபி சப்தை நாராயண ஏவ அபிதீயதே இதி நிஸ் ஸீயதே —

104–ய மந்தஸ் சமுத்ரே கவயோ வயந்தி இத்யாரப்ய-நைந மூர்த்வம் நதிர் யஞ்சம் ந மத்யே பறி ஜக்ரபது –
ந தஸ்யேசே கஸ்சன் தஸ்ய நாம மஹாத் யசஸ்
ந சந்த்ருசே திஷ்டதி ரூப மஸ்ய ந சஷூஷா பச்யதி கஸ்ச நைநம் -ஹ்ருதா மநீஷா மனசா அபிக்லுப்தோ
ய ஏனம் விதுரம் ருதாஸ்தி பவந்தி -இதை சர்வ ஸ்மாத் பரத்வம் அசய ப்ரதிபாத்ய -நதஸ் யேசே கஸ்சன-
இதி தஸ்மாத் பரம் கிமபி ந வித்யதே இதி ச ப்ரதிஷித்ய
அத்ப்ய ஸம்பூதோ ஹிரண்ய கர்ப இத்யஷ்டவ இதி தேந ஏக வாக்யதாம் கமயதி தச்ச மஹா புருஷ பிரகரணம்-
ஹரீஸ் சதே லஷ்மீஸ் ச பத்ந்யவ இதி நாராயண எவேதி த்யோதயதி-

105-அயமர்த்த-
நாராயண அநுவாகே பிரபஞ்சித -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இத்யாரப்ய-ச ப்ரஹ்ம ரஸசீவ சேந்த்ர ச அஷரா பரம் ஸ்வராட்
இதி சர்வ சாகாசூ பரதவ ப்ரதிபாதந பராந் அக்ஷர-சிவ -சம்பு -பர ப்ரஹ்ம பரஞ்சோதி -பரதத்வ -பாராயண -பரமாத்மாதி –
சர்வ சப்தாந் தத் குண யோகிந நாராயண ஏவ ப்ரயுஜ்ய தத் வ்யதிரிக்தஸ்ய சமஸ்தஸ்ய ததா யத்ததாம் —
தத் வ்யாப்யதாம் -தத் ஆதாரதாம்-தந் நியாம்யதாம்-தத் சேஷதாம் -ததாத்மகதாம்-ச ப்ரதிபாத்ய ப்ரஹ்ம சிவயோர் அபி
இந்திராதி சமாந ஆகார தயா தத் விபூதித்வம் ச ப்ரதிபாதிதம்
இதம் ச வாக்யம் கேவல பாதத்வ ப்ரதிபாதந பரம் அந்யத் கிஞ்சிதபி அத்ர நவிதீயதே-அஸ்மின் வாக்யே ப்ரதிபாதி தஸ்ய
சர்வஸ்மாத் பரத்வேந அவஸ்திதஸ்ய ப்ரஹ்மண வாக்யாந்த்ரேஷு ப்ரஹ்ம விதாப் நோதி பரம் இத்யாதிஷு உபாஸநாதி விதீயதே —

106–அத -ப்ராணம் மனசை ஸஹ கரணை -இத்யாதி வாக்கியம் சர்வ காரணே பரமாத்மநி காரண
பிராணாதி சர்வம் விகார ஜாதம் உப ஸம்ஹ்ருத்ய -தமேவ பரமாத்மாநாம் ஸர்வஸ்ய ஈஸாநாம் த்யாயீத இதி
பர ப்ரஹ்ம பூத நாராயணஸ்யை வத்யாநம் விதாதி-
பதிம் விஸ்வஸ்ய
ந தஸ்யேஹ கஸ்சந-இதி தஸ்யைவ சர்வேசாநதா ப்ரதிபாதிதா–அத ஏவ சர்வ ஐஸ்வர்ய சம்பந்ந
சர்வேஸ்வர சம்பு ஆகாச மத்யே த்யேய -இதி
நாராயணஸ்யைவ பரம காரணஸ்ய சம்பு சப்த வாஸ்யஸ்ய த்யானம் விதீயதே -கஸ்ச த்யேய -இத்யாரப்ய-காரணம் து த்யேய –
இதி கார்யஸ்ய அத்யே யதா பூர்வக காரணைக த்யேயதா பரத்வாத் வாக்யஸ்ய –
தஸ்யைவ நாராயணஸ்ய பரம காரணதா சம்பு சப்த வாச்யதா ச பரம காரண பிரதி பாதனைக பரே நாராயண
அநு வாக ஏவ பிரதி பந்நா இதி தத் விரோதி அர்த்தாந்தர பரி கல்பனம் காரணஸ்யைவ த்யேயத்வ விதி வாக்யே ந யுஜ்யதே –

107–யதபி–ததோ யதுத் தர தரம் -இத்யத்ர புருஷாதந் யஸ்ய பரதர தத்வம் பிரதீயதே -இத்யப்யதாயி -ததபி
யஸ்மாத் பரந் ந அபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ ஸ்தி கஸ்சித்–இத்யத்ர
யஸ்மாத் அபரம்-
யஸ்மாத் அந்யத் கிஞ்சித் அபி பரம் நாஸ்தி கேநாபி பிரகாரேண புருஷ வ்யதிரிக்தஸ்ய பரத்வம் நாஸ்தி -இத்யர்த்த
அணீயஸ்த்வம் -ஸூஷ்மத்வம்-ஜ்யாயத்வம் -ஸர்வேஸ்வரத்வம் -சர்வ வ்யாபித்வாத் -சர்வேஸ்வரத்வாத்-அஸ்ய
ஏதத் வ்யதிரிக்தஸ்ய கஸ்யாபி அணீயஸ்த்வம் ஜ்யாயஸ்த்வம் ச நாஸ்தி இத்யர்த்த
யஸ் மாந் நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஸ்சித்-இதி புருஷா தந்யஸ்ய கஸ்யாபி ஜ்யாயஸ்த்வம் நிஷித்தம் இதி –
தஸ்மாதந் யஸ்ய பரத்வம் ந யுஜ்யதே இதி ப்ரத்யுக்தம் –

கஸ்தர் ஹி அஸ்ய வாக்யஸ்ய அர்த்த ?
அஸ்ய பிரகரணஸ்யோபக்ரமே-தமேவ விதித்வாதி ம்ருத்யு மீதி -நாந்ய பந்தா வித்யதேயநாய -இதி
புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுதாம் -தத் வ்யதிரிக்தஸ்ய அபததாம் ச ப்ரதிஞ்ஞாய -யஸ்மாத் பரம் ந அபரமஸ்தி கிஞ்சித் —
தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் –இத் யேததந்தேந புருஷஸ்ய சர்வ ஸ்மாத் பரத்வம் ப்ரதிபாதிதம்-
யத புருஷ தத்வமேவ உத்தர தரம் -ததோ யதுத் தரதரம் -புருஷ தத்வம் ததேவ அரூபாம் -அநாமயம்-ய ஏதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி–
அதே தர துக்கமே வாபி யந்தி இதி புருஷ வேதநஸ்ய அம்ருதத்வ ஹேதுத்வம் ததிதரஸ்ய ச அபதத்வம்
ப்ரதிஞ்ஞாதம் ச ஹேதுகமுப ஸம்ஹ்ருதம் -அந்யதா உப க்ரமகத ப்ரதிஞ்ஞாப்யாம் விரூத்யேத
புருஷஸ் யைவ ஸூத்தி குண யோகே சிவ சப் தாபி -தே யத்வம் சாஸ்வதம் சிவமச்யுதம்–இத்யாதிநா
ஞாதமேவ புருஷ ஏவ சிவ சப்தாபி ஹித-இதி அநந்தரமேவ வததி–மஹாந் ப்ரபுர்வை புருஷ சத்வஸ்யைஷ ப்ரவர்த்தக இதி –

108–உக்த்தேநைவ ந்யாயேந -ந சந்ந சா சச் சிவ ஏவ கேவல –இத்யர்த்த சர்வம் நேயம்
கிஞ்ச-
அம்பஸ்ய பாரே –இத்யனு வாகே -ந தஸ்யேசே கஸ்சந இதி நிரஸ்த சாமாப்யதிக சம்பவாநஸ்ய புருஷஸ்ய –
அணோர் அணீயாந் -இத்யஸ் மிந்நதுவாகே வேத -ஆந்யந்தா ரூபதயா வேத பீஜ பூத ப்ரணவஸ்ய ப்ரக்ருதி பூத
அகார வாச்யதயா மஹேச்வரத்வம் ப்ரதிபாத்ய தஹர புண்டரீக மத்யஸ்தாகாச வர்த்திதயா உபாஸ்யத்வம் யுக்தம் –
அயமர்த்த
சர்வஸ்ய வேத ஜாதஸ்ய ப்ரக்ருதி பிரணவ யுக்த -ப்ரணவஸ்ய ச ப்ரக்ருதி அகார -பிரணவ விகாரோ வேத ஸ்வ ப்ரக்ருதி பூதே
பிரணவ லீன -ப்ரணவோபி அகார விகார பூத ஸ்வ பிரகிருதவ்-அகாரே லீன -தஸ்ய பிரணவ ப்ரக்ருதி பூதஸ்ய-
அகாரஸ்ய-ய பர வாஸ்ய ச ஏவ மஹேஸ்வர இதி சர்வ வாசக ஜாத ப்ரக்ருதி பூத அகார வாஸ்ய சர்வ வாஸ்ய ஜாத
ப்ரக்ருதி பூத நாராயணோ ய ச மஹேஸ்வர -இத்யர்த்த –

யதோக்தம் பகவதோ –
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகாத்தை பிரபவ ப்ரலயஸ் ததா மத்தப் பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்சய —
அக்ஷராணாம் அகாரோஸ்மி-ஸ்ரீ கீதை –
இதி அ இதி ப்ரஹ்ம இதி ஸ்ருதே –
அகாரேவை சர்வ வாக் -இதி ச வாசக ஜாதஸ்ய அகார ப்ரக்ருதித்வம் வாஸ்ய ஜாதஸ்ய ப்ரஹ்ம ப்ரக்ருதித்வம் ச ஸூ ஸ்பஷ்டம்
அத -ப்ரஹ்மண-அகார வாச்யதா ப்ரதிபாதநாத் அகார வாஸ்யோ நாராயண ஏவ மஹேஸ்வர -இதி சித்தம் –
தஸ்யைவ -சஹஸ்ர சீர்ஷம் தேவம் -இதி கேவல பரதத்வ விசேஷ ப்ரதிபாதந பரேண-நாராயண அநு வாகேந சர்வ ஸ்மாத் பரத்வம் பிரபஞ்சிதம் –
அநேந அநந்ய பரேண ப்ரதிபாதிதமேவ பரதத்வம் -அந்ய பரேஷு சர்வேஷு வாக்யேஷு கேநாபி சப்தேந ப்ரதீயமாநம்
ததேவேதி அவகம்யதே-இதி -ஸாஸ்த்ர த்ருஷ்டயாதூபதேசோ வாமதேவ வைத்த –இதி ஸூத்ரா காரேண நீர்நீதம்
ததேதத்க்வ பரம் ப்ரஹ்ம சித் ப்ரஹ்ம சிவாதி சப்தாவகதமிதி கேவல ப்ரஹ்ம சிவயோ ந பரதவ பிரசங்க –
அஸ்மின் அநந்ய பரே னுவாகே தயோர் இந்திராதி துல்ய தயா தத் விபூதித்வ ப்ரதிபாதநாத் கசித் ஆகாய பிராணாதி சப்தேந
பரம் ப்ரஹ்மாபிஹிதம் இதி பூதாகாச பிராணாதே யதா ந பரத்வம் –

109–யத் புநர் இதமா சங்கிதம்-
அதயதிதம் அஸ்மின் ப்ரஹ்ம புரே தஹரம் புண்டரீகம் வேஸ்ம -தஹரோஸ்மிந் நந்தராகாச -தஸ்மிந் யதந்தஸ் தந்வேஷ்டவ்யம்
ததுவாத விஜிஞ்ஞாசித்வயம்-இத்யத்ர ஆகாச சப்தேன ஜகதுபாதாந காரணம் ப்ரதிபாத்ய தத் அந்தரவர்த்திந –
கஸ்யசித்த தத்வ விசேஷஸ்ய அந்வேஷ்டவ்யதா ப்ரதிபாத்யதே அஸ்ய ஆகாசஸ்ய நாம ரூபயோ நிர்வஹகத்வ ஸ்ரவணாத்
புருஷ ஸூக்தே புருஷஸ்ய நாம ரூபயோ கர்த்ருத்வ தர்சநாஸ்ச-ஆகாச பர்யாய பூதாத் புருஷாத் அந் யஸ்ய அந் வேஷ்டவ்யதயா
உபாஸ்யத்வம் பிரதீயதே இதி
அநாதிதா வேதாநாம் அதிருஷ்ட ஸாஸ்த்ர விதாம் இதம் சோத்யம் -யத தத்ர ஸ்ருதிரேவ அஸ்ய பரிகார மஹா வாக்யகாரஸ் ச –

தஹரோ அஸ்மின் நந்தர் ஆகாச -கிம் தத்ர வித்யதே யத் அந்வேஷ்டவ்யம் யத் வாவ விஜிஞ்ஞாசிதவ்யம் இதி சோதிதே-
யாவான் வா அயம் ஆகாச தாவநேஷோந்தர் ஹ்ருதய ஆகாச -இத்யாதிநா -அஸ்ய அகார சப்த வாஸ்யஸ்ய -பரம புருஷஸ்ய –
அநவதிக மஹத்வம் சகல ஜகத் காரணத்தயா -சகல ஜகத் ஆதாரத்வம் ப்ரதிபாத்ய -அஸ்மின் காமா ஸமாஹிதா
ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ வி மிருத்யு ஸத்யஸங்கல்ப -இதி
அபஹதபாப்மத்வாதி -ஸத்யஸங்கல்பத்வ பயந்த குண அஷ்டகம் தஸ்மிந் நிஹிதம் இதி பரம புருஷவத்-பரம புருஷ குண அஷ்டகஸ்யாமி
ப்ருதக் விஜிஞ்ஞாசி தவ்யதா ப்ரதிபாதித யிஷயா தஸ்மிந் யதந்தஸ்ய தன்வேஷ்டவ்யம் இதயுக்தம் இதி ஸ்ருதியைவ சர்வம் பரிஹ்ருதம் —

ஏதத் யுக்தம் பவதி -கிம் ததத்ர வித்யதே யதந் வேஷ்டயம் இத்யஸ்ய சோத்யஸ்ய -தஸ்மிந் ஸர்வஸ்ய ஜகத ஸ்ரஷ்டத்வம்-ஆதாரத்வம் –
நியந்த்ருத்வம் -சேஷித்வம் -அபஹத பாப்மாதயோ குணாஸ் ச வித்யந்தே-இதி பரிகார இதி
ததாச வாக்யகார வசனம்–தஸ்மிந் யதந்த-இதி காம வ்யபதேச -இதி காம்யந்தே இதி காமா அபஹத பாப்மத் வாதயோ குணா இத்யர்த்த
ஏதத் யுக்தம் பவதி -யத் ஏதத் தஹர ஆகாச சப்தாபி தேயம் -நிகில ஜகத் உதய விபவ லய லீலம்-பரம் ப்ரஹ்ம
தஸ்மிந்யத் அந்தர் நிஹிதம் அநவதிக அதிசயம் அபஹத பாப்மத்வாதி குண அஷ்டகம் தத் உபயமபி அன்வேஷ்டயம் விஜிஞ்ஞாசி தவ்யம் இதி
யதா ஆஹ-அதய இஹாத்மாந மனு வித்யா வ்ரஜயந்த்யே தாம்சச சத்யாந் காமாம் ஸ்தேஷாம் சர்வேஷு லோகேஷு காம சாரோ பவதி -இதி –

110–ய புந -காரணஸ்யைவ த்யேயதா ப்ரதிபாதந பரே வாக்யே-விஷ்ணோ அநந்ய பரவாக்ய ப்ரதிபாதித பரதத்வ பூதஸ்ய
கார்ய மத்யே நிவேச ச -ஸ்வ கார்ய பூதத்வ சங்க்யாபூரணம் குர்வத-ஸ்வ லீலயா ஜகத் உபகாராய ஸ்வ இச்சாவதார இத்யவ
கந்தவ்ய யதா லீலயா தேவ சங்க்யா பூரணம் குர்வத-உபேந்த்ரத்வம் பரஸ்யைவ யதாச ஸூர்ய வம்சோத்பாவ
ராஜ சங்க்யா பூரணம் குர்வதா -பரஸ்யைவ ப்ரஹ்மணோ தாஸாதி ரூபேண ஸ்வ இச்சாவதார –
யதா ச ஸோம வம்சங்க்யா பூரணம் குர்வதோ பகவத-பூ பாராவ் தரணாய
ஸ்வ இச்சயா வஸூ தேவ க்ருஹேவதாரா ஸ்ருஷ்ட்டிப் பிரளய ப்ரகாரனோஷு நாராயண ஏவ
பரம காரண தயா ப்ரதிபாத்யதே இதி பூர்வமே வோக்தம் —

111–யத் புந -அதர்வ சிரஸ் -ருத்ரேண ஸ்வ சர்வ ஐஸ்வர்யம் பிரபஞ்சிதம் தது-
சோ அந்தராதந்தரம் ப்ராவிசது-இதி பரமாத்ம பிரவேசாதுக்தம் -இதி ஸ்ருதியைவ வ்யக்தம் –
ஸாஸ்த்ர த்ருஷ்ட்யாதூபதேசா வாம தேவவத் -இதி ஸூத்ர காரேண ஏவமாதீநாம் அர்த்த ப்ரதிபாதித
யதோக்தம் ப்ரஹ்லாதேநாபி –
சர்வ கத்வாதநந் தஸ்ய ச ஏவாஹ மவஸ்திதித–ஏரவாஹ மத்தஸ் சர்வம் மஹம் சர்வம் மயி சர்வம் சநாதநே–இத்யாதி
அத்ர சர்வகத்வாத நந்தஸ்ய இதி ஹேதுருத்த ஸ்வ சரீர பூதஸ்ய ஸர்வஸ்ய சிதசித் வஸ்துந ஆத்மத்வேந சர்வகத பரமாத்மா
இதி சர்வே சப்தா சர்வ சரீரம் பரமாத்மாநாமே அபிதத தீத் யுக்தம் அத காம் இதி சப்த ஸ்வாத்ம பிரகாரிணம் பரமாத்மநமேவ ஆசஷ்டே
அத இதம் உச்யதே
ஆத்மேத்யேவ து க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தன்னிஷ்பதே இத்யாதிநா காம் க்ருஹண உபாஸநம் வாக்ய காரேண –
கார்யாவஸ்த காரணாவஸ்தாஸ் ச ஸ்தூல ஸூஷ்ம அசித் சித்த வாஸ்து சரீர பரமாத்மைவ இதி -ஸர்வஸ்ய தந்நிஷ் பத்தே -இத்யுக்தம்–
ஆதமேதி தூப கச்சந்தி க்ராஹயந்நி ச-இதி ஸூத்ரா காரேண ச —

112–மஹா பாரதே ச ப்ரஹ்ம ருத்ர சம்வாதே ப்ரஹ்மா ருத்ரம் ப்ரத்யாஹ-
தவாந் தராத்மா மம ச யே சாந்யே தேஹி சம்தா–இதி ருத்ரஸ்ய ப்ரஹ்மணஸ் ச-அந்யே ஷாஞ்ச தேஹினாம்
பரமேஸ்வரோ நாராயண அந்தராத்மதயா வஸ்தித -இதி-
ததாதத் ரைவ -விஷ்ணுர் ஆத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச-தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மஹேஸ்வர –
இதி தத்ரைவை -ஏதவ் த்வவ் விபுதஸ்ரேஷ்டவ் பிரசாத க்ரேதஜவ் ஸ்ம்ருதவ் ததா தர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரகவ் –
இதி அந்தராத்மதயா அவஸ்தித நாராயண தர்சித பதவ் ப்ரஹ்ம ருத்ரவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார கார்யகரவ்–இத்யர்த்த –

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்–மூல ஸ்ரீ ஸூக்திகள் –1-71-பூர்வ பாகம் -பிரதிபக்ஷ நிரசனம் –

February 29, 2020

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே|
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ: ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

அசேஷ-சித்-அசித்-வஸ்து-சேஷிணே-சேஷசாயினேI
நிர்மலானந்த-கல்யாண-நிதயே விஷ்ணவே நம: I I –இஷ்ட தேவதை நமஸ்கார ரூபம் –

சேஷிணே என்று -ஸ்வரூபம் சொல்லிற்று
சேஷசாயினேI -என்று திவ்ய மங்கள விக்ரஹம் சொல்லிற்று -ஸூபாஸ்ரயம்

நிர்மலானந்த-கல்யாண-நிதயே–அகில ஹேய ப்ரத்ய நீக திவ்ய குணங்கள் அனைத்துக்கும் உப லக்ஷணம்

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபஸ் யாஸ்பதமிதி I
ச்ருதி நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தமோ யேநாபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்ம ஏவ அஞ்ஞம் ப்ரம பரிகதம் ஸம்ஸரதி தத்
பர உபாத்யா ஆலீடம் விவசம் அஸூபஸ்ய ஆஸ்பதம் இதி I
ஸ்ருதிர் நியாயா பேதம் ஜகதி விததம் மோஹனமிதம்
தம ஏவ ந அபாஸ்தம் ஸஹி விஜயதே யாமுன முனி: II–ஆச்சார்ய-ஆளவந்தார்- நமஸ்கார ரூபம்-

பரம் ப்ரஹ்மைவாஞ்ஞம் -ப்ரஹ்மமே அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ப்ரம பரிகதம் -பிரமங்கள் -தனக்கு உள்ள ஏகத்துவம் அத்விதீயம் உணராமல்
ஸம்ஸரதி -தானே சம்சாரத்தில் உழன்று -சங்கர மதம்
தத் பரோபாத்யாலீடம் விவசம் -பாஸ்கர மதம் உபாதிக்கு அதீனம் -பர உபாதி -மேம்பட்ட -தன்னை விட வேறுபட்ட கர்மம்
தன் வசம் இல்லாமல் -ஸ்வதந்த்ரம் என்று கொள்ளாமல் பரதந்த்ரம் கல்பித்து -விவசத்வம் என்பர்
அஞ்ஞாத்வம் சங்கரர் விவசாத்வம் இவர்கள்
அசுபஸ் யாஸ்பதமிதி I-அசுபங்களுக்கு இருப்பிடம் -யாதவ பிரகாசர் -உபாதையும் இல்லை அஞ்ஞானமும் இல்லை -ஸ்வரூப பரிமாணம்
தோஷங்கள் எல்லாம் ப்ரஹ்மத்துக்கு என்பர்
ச்ருதி நியாயா பேதம் -ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி –
மூன்றும் சேர்ந்து சமுதாயமாக அத்வைதம்
ஜகதி விததம் -உலகம் எங்கும் இது பரவி
மோஹனமிதம்-அஞ்ஞானம் உண்டு பண்ணி -மோஹிக்கப் பண்ணும்
தமோ யேநாபாஸ்தம் -இவை எவரால் போக்கடிக்கப்பட்டதோ -அந்த
ஸஹி விஜயதே யாமுன முனி-ஆளவந்தார் பல்லாண்டு வாழட்டும்

—————-

இனி மேலே கத்யமாகவே அருளிச் செய்கிறார் –

3–அசேஷ ஜககதித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி
அத்யர்த்தப்பிரிய -தத் பிராப்தி பல

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னுட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

அஸ்ய ஜீவாத்மநோ அநாதி அவித்யா சஞ்சித புண்ய பாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக
ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ பிரவேச க்ருத
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய பவ பய வித்வம்சநாய –

(அஸ்ய ஜீவாத்மநோ அநாதி அவித்யா சஞ்சித புண்ய பாப ரூப கர்ம ப்ரவாஹ ஹேதுக-இவையே ஹேதுக்கள் –
ப்ரஹ்மாதி ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மக சதுர்வித தேஹ பிரவேச க்ருத-இவற்றால் வரும் நான்கு வித தேக ப்ரவேசத்தால் வரும்
தத் தத் ஆத்ம அபிமான ஜெனித அவர்ஜனீய -ஒருவராலும் விலக்க முடியாத
அழியாத ஆத்ம வஸ்துவை அழியும் தேகமாக அபிமானிப்பதால் வரும்
பவ பய வித்வம்சநாய -சம்சார பீதியை ஒழிக்கவே வேதாந்தங்கள் ப்ரவர்த்திக்கின்றன
நாஸம் -விநாஸம் -த்வம்ஸம் -)

தேஹாதிரிக்த ஆத்ம ஸ்வரூப -தத்தத் ஸ்வபாவ -தத் உபாசன-பத பல பூதாத்ம-
ஸ்வரூப ஆவிர்பாவ பூர்வக அநவதிக -அதிசய -அநந்த -ப்ரஹ்ம அனுபவ ஞாபனே ப்ரவ்ருத்தம்

(தேஹாதிரிக்த ஆத்ம ஸ்வரூப -தேகத்தை வேறுபட்ட ஆத்ம ஸ்வரூபம் போதித்து -இதற்கும் மேல்
தத் தத் ஸ்வபாவ -அவற்றின் ஸ்வ பாவங்களையும் போதித்து -அனைத்தையும் அறிந்து அனுஷ்ட்டிக்க
அந்தராத்மாவாக உதவ பர ப்ரஹ்மம் -அவன் ஸ்வ பாவமும் உணர்ந்து
ஆழிப்பிரான் எனக்கே உளன் -என்று அறிந்து அவனை வசப்படுத்த
தத் உபாசன-பத பல பூதாத்ம-
ஸ்வரூப ஆவிர்பாவ பூர்வக அநவதிக -அதிசய -அநந்த -ப்ரஹ்ம அனுபவ ஞாபனே ப்ரவ்ருத்தம்-இவற்றை அறிவிக்கவே வேதாந்தம் ப்ரவ்ருத்திக்கின்றன)

ஹி வேதாந்த வாக்ய ஜாதம்-(ஏழு ஸ்ருதி வாக்கியங்கள் இவற்றுக்கு பிரமாணங்கள் )
1-தத்வமஸி
2-அயமாத்மா ப்ரஹ்ம
3-ய ஆத்மநி திஷ்டன் நாதமந அந்தரோ யமாத்மா நவேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மாந்தர்யாம் யம்ருத
4-ஏஷ –சர்வ பூதாந்தராத் அபஹத பாப்மா திவ்யோ ஏகோ நாராயண
5-தமேதம் வேத அநு வசனனேந ப்ரஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேன தானேந தபஸாந சகேந
6-ப்ரஹ்ம விதாப்நோதி பரம்
7-தமேவம் வித்வாநம் ருதமிஹ பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிகம் —

(1-தத்வமஸி-ப்ரஹ்மம் -அப்ருதக் சித்தமாக சரீர பூதமாக வேறுபட்டு நித்தியமாக –அஸி -வர்த்தமானம் -மூன்று காலங்களுக்கு விரோதம் இல்லாமல் –
குறிப்பிட்ட ஒருவனை சொல்லி -இது உபதேசிக்கப்பட்ட ஒருவனுக்கு மட்டும் அல்ல என்று காட்ட மேல்
2-அயமாத்மா ப்ரஹ்ம-ஸர்வ ஆத்மாக்களுக்கு இது பொருந்தும் என்று காட்டி
இவை ஜீவ பர யாதாத்ம்யம்
3-ய ஆத்மநி திஷ்டன் நாதமந அந்தரோ யமாத்மா நவேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மாந்தர்யாம் யம்ருத
இருவருக்கும் உள்ள சம்பந்தம் காட்டி -உள்ளே இருந்து நியமிக்கிறார் -முழுவதும் வியாபிக்கிறான் -அறியாமலேயே -பிரார்த்திக்காமலேயே -நிருபாதிகமாக –
அறிந்து பிராரத்த பின்பு செய்யாமல் என்று காட்டவே ஆத்ம ந வேத
அந்தராமி ஸ்வரூபம் இதனால் சொல்லி மேல் ஸ்வ பாவம்
4-ஏஷ –சர்வ பூதாந்தராத் அபஹத பாப்மா திவ்யோ ஏகோ நாராயண-இத்தால் ஸ்வ பாவம் சொல்லி மேல் உபாசனம் பலம் வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டான பூர்வகம்
5-தமேதம் வேத அநு வசனனேந ப்ரஹ்மணா விவிதி ஷந்தி யஜ்ஜேன தானேந தபஸாந சகேந
ப்ரஹ்மத்தை அடையும் நோக்கு கொண்டவன் ப்ராஹ்மணா -உபாசிக்கிறான்
சதாச்சார்யன் திருவடிகளில் அத்யயனம் பண்ணி -உச்சாரண அநு உச்சாரண -பூர்வக அக்ஷர ராஸி -அர்த்தம்
அறியக் கற்று வல்லவரானால் வைஷ்ணவ ஸித்தி பெறலாம்
யஜ தேவ பூஜாம் -ஆராதனை –
தானம் -நியாமாக அர்ஜித்த த்ரவ்யம்
தபஸ் -அநாசக -ஆசை அற்று -த்ரிவித -தியாகம் உடன் உபாஸனை
6-ப்ரஹ்ம விதாப்நோதி பரம்– ப்ரஹ்ம வித் -உபாசனை–ஆப் நோதி பலம்
7-தமேவம் வித்வாநம் ருதமிஹ பவதி நாந்யப் பந்தா அயநாய வித்யதே –இத்யாதிகம் —
இது ஒன்றே வழி -வேறே ஒன்றும் இல்லை)

(தத்வ ஹித புருஷார்த்தம் மொத்தமாக சொல்லி மேல் விளக்கம்)

4–ஜீவாத்மந ஸ்வரூபம்
தேவ மனுஷ்யாதி ப்ரக்ருதி பரிணாம விசேஷ ரூப நாநாவித பேத ரஹிதம்
ஞான ஆனந்த ஏக குணம்
தஸ்யை தஸ்ய கர்ம க்ருத தேவாதி பேத வித்வஸ்தே ஸ்வரூப பேதோ வாசா மகோசர ஸ்வ சம்வேத்ய
ஞான ஸ்வரூபம் இத்யேதாவ தேவ நிர்தேஸ்யம் தச்ச ஸர்வேஷாம் ஆத்மாநாம் சமாநம்

(மோக்ஷ தசையில் ஸ்வரூப பேதம் மட்டுமே இருக்கும் -எல்லா ஆத்மாக்களும் சமம் -தேவாதி பேத ஆகாரங்கள் போன பின்பும் வெவ்வேறே ஜீவன்)

(ஸ்வ சம்வேத்ய-ஸ்வயம் வேத்ய -ஸ்வயம் ப்ரகாஸம்)

5-ஏவம் வித சித் அசித்தாத்மக பிரபஞ்சஸ்ய -(ஸ்ருஷ்டிக்கப்பட்ட ) உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தன ஏக ஹேது பூத
ஸமஸ்த ஹேய பிரத்ய நீக தயா-அநந்த கல்யாணைக தான தயாஸ(ஏக தான தயா அனைத்துக்கும் ஏக ஆஸ்ரயம் இவனே )-(இரண்டாலும் விலக்ஷணன் )
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப -அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண
சர்வாத்ம
பர ப்ரஹ்ம
பரஞ்சோதி
பரமாத்மா
சதாதி சப்த பேதைர் நிகில வேதாந்த வேத்யோ பகவான் நாராயண புருஷோத்தம
இத் யந்தர்யாமி ஸ்வரூபம்

(ஸ்வரூபம் விளக்கி மேல் ஸ்வ பாவம்)

தஸ்ய ச வைபவ ப்ரதிபாதன பரா பேத ஸ்ருதய
ஸ்வ இதர ஸமஸ்த சித் அசித் வஸ்து ஜாதாந்தர ஆத்ம தயா நிகில நியமனம்
தத் சக்தி -ததம்ச -தத் விபூதி -தத் ரூப -தத் சரீர -தத் தனு -ப்ரப்ருதிஸ் சப்தை தத் சாமாநாதி கரண்யேந ச ப்ரதிபாத யந்தி

(சக்தி ரூபம் -அகிலம் ஜகத்
அம்சம் -அம்சாதிகரணம்-அப்ருதக் ஸித்த விசேஷணம் -branch office போல்
விபூதி -விபூதிமான்
ரூப -சரீர -தனு)

————

6-தஸ்ய வைபவ ப்ரதிபாதன பராணாம் ஏஷாம் சாமாநாதி கரண்ய அதீநாம்

(ப்ரஹ்மம் வைபவம் காட்டும் சாமானாதிகார பரமான ஸ்ருதி வாக்கியங்கள் -ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சேஷ சேஷி -நியந்தரு நியாம்ய சரீரி சரீர- ஆதார ஆதியே பாவம்-ஒன்றும் ஒன்றியே இருக்கும்-
ஒன்றும் தேவும் யாதும் இல்லா அன்று –)

விவரணே ப்ரவ்ருத்தா கேசந(அநாதரணீயம் -ஐக்யம் சொல்லி மேல் மேல் )
நிர்விசேஷ ஞான மாத்ரமேவ ப்ரஹ்ம–(சின் மாத்ர -ஒன்றை விலக்க மாத்ர பத பிரயோகம் -சித் ஏவ -வேறே ஒன்றை விலக்கும்
சித் -ஞானம் ஒன்றே -ஞாதா -ஜேயமும் இல்லை )தச்ச நித்ய முக்த ஸ்வ பிரகாசம் அபி
தத்வமஸ்யாதி சாமாநாதி கரண் யவகத ஜீவ ஐக்யம்(தத் ஸப்த வாசியான ப்ரஹ்மம்- த்வம் ஸப்த வாசியான ஸம்ஸாரி ஜீவன் உடன் ஐக்யம் )
ப்ரஹ்மைவ அஞ்ஞம்  முச்யதேச (அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம் ப்ரஹ்மமே ப்ரஹ்மம் ஏவ பத்த ஜீவன் முக்த ஜீவன் ) நிர் விசேஷ சின்மாத்ராதி ரேகி
ஈஸ ஈஸிதவ்ய (பதார்த்த தாரதம்யங்களுக்கு உப லக்ஷணம் )அநந்த விகல்ப ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஜகத் மித்யா(கயிறு பாம்பு யாதாத்ம்ய ஞானத்தால் அறிவது போல் இதம் ப்ரஹ்மம்-ஞான நிவர்த்ய பதார்த்தம் மித்யா -ஞான மாத்திரம் மோக்ஷம் அவர் பக்ஷம் )
கஸ்சித் பத்த கஸ்சித் முக்த இதீயம் வ்யவஸ்தா ந வித்யதே(பந்தப்படுவதும் விடுபடுவதும் மித்யா-வ்யவஸ்தையும் மித்யா )
இத பூர்வம் கேசந முக்தா இத்யயம் அர்த்தோ மித்யா
ஏகமேவ சரீரம் ஜீவவத் நிர் ஜீவாநி தாராணி சரீராணி(ஓன்று மட்டுமே ஜீவன் உள்ள சரீரம் -மற்றவை ஜீவன் இல்லா சரீரங்கள்-நாநாவித தோற்றம் வாசனையால் -அநாதி )
தச்ச சரீரம் கிமிதி ந வ்யவஸ்திதம் ஆசார்யோ ஞானஸ் யோபதேஷ்டா மித்யா -ப்ரமாதா மித்யா –
ஸாஸ்த்ரம் ச மித்யா -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் ச மித்யா-
ஏதத் சர்வம் மித்யா- பூதேநைவ சாஸ்த்ரேணாவகதம் -இதி வர்ணயந்தி(இப்படி சிலர் வியாக்யானம் பண்ணுகிறார்கள் )

(ஞானம் -ஆச்சார்யன் இரண்டு இருக்க முடியாதே
ஞானத்துக்கு ஆஸ்ரயமான ஆச்சார்யன் -அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமான சிஷ்யன்-

ப்ரமாதா ப்ரமாணம் ப்ரமேயம் அனைத்தும் மித்யா-தத்வமஸி வாக்கியமும் ப்ரஹ்ம வ்யா வ்ருத்தி அதுவும் மித்யா )

அத பாஸ்கர பஷ சங்க்க்ஷேபம்
7-அபரே து–அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணோ பேதாமபி ப்ரஹ்ம -ஏதேனைவ ஐக்யாவ போதேந முச்யதே
நாநாவித அமல ரூப பரிணாம ஆஸ்பதம் ச இதி வ்யவஸ்திதா

(ப்ரஹ்மம் நிர் விசேஷம் அல்ல -ஜகத்தும் -மித்யை அல்ல -சத்யம் என்பர்-உபாதி -கல்பித்து -புண்ய பாப கர்மாவே உபாதி இவையும் சத்யம் மித்யை அல்ல
உபாதியால்  ப்ரஹ்மமே பரிணாமம் அடைந்து அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமாகி நாநா விதமாக தோன்றுகிறது என்பர்-ஏகமேவ அத்விதீயமாக இருக்க -உபாதி -ஸ்வா பாவிக தர்மத்துக்கு விபாகம் உண்டாக்கும் -முக்த தசையில் ஐக்யம் என்பர் -)

அத யாதவ பிரகாச பஷ சங்க்க்ஷேபம்
8–அந்யே புந ஐக்யாவ போத யாதாத்ம்யம் வர்ணயந்த
ஸ்வாபவிக நிரதிசய அபரிமித உதார குண சாகரம் ப்ரஹ்மைவ -ஸூர நர திர்யக் ஸ்தாவர -நாரகி ஸ்வர்க்ய பவர்கி –
சேதனைக ஸ்வபாவம்– ஸ்வபாவதோ விலக்ஷணம் அவிலக்ஷணஞ்ச வியதாதி நாநாவித பரிணாம
ஆஸ்பதம்ச இதி ப்ரத்யவதிஷ்டந்தே

(நாரகி ஸ்வர்க்ய பவர்கி –நரகம்-ஸ்தான விசேஷம் இல்லை -நரக அனுபவம் செய்யும் ஆத்மா -நாரகி
பாப பல ரூப துக்க அனுபவம் செய்பவனாகவும் -புண்ய பல ரூப இன்ப அனுபவம் செய்பவனாகவும்

அபவர்க்கி -இதுவும் ஸ்தான விசேஷம் இல்லை -அனுபவத்தை சொன்னவாறு

ப்ரஹ்மமே ஸ்வரூபேண பரிணாமம் அடைகின்றது என்பர் )

————————

அத சங்கர பஷ ப்ரதிஷேபம்
9–தத்ர பிரதம பக்ஷே ஸ்ருத்யர்த்த பர்யா லோசன பரா-துஷ் பரிஹராந் தோஷாந் உதாஹரந்தி

பிரகிருத பராமர்சி தச் ஸப்தாவக தஸ்ய ப்ரஹ்மண ஸ்வ சங்கல்ப கிருத ஜகத் உதய விபவ லயாதய
(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் வாக்கியம் )தத் ஐஷ்த பஹுஸ்யாம் ப்ரஜாயேய இத்யாரம்ய
சந் மூலா (ஸத் ப்ரஹ்மமே மூலமாகக் கொண்டு )ஸோம்யேமாஸ் சர்வாஸ் ப்ரஜாஸ் சதாயதநாஸ் (ஆயதனம் இருப்பிடம் )சத் பிரதிஷ்டாஸ் (அதிலேயே லயம் )இத்யாதிபிஸ் பதைஸ்
ப்ரதிபாதிதாத் சம்பந்தி தயா பிரகாரணாந்தர நிர்திஷ்டா(இதே போல் வேறே பிரகரணங்களிலும் உண்டே )
சர்வஞ்ஞதா -சர்வ சக்தித்வ-(ஸங்கல்ப மாத்ரத்தால் செய்யும் சக்தி )சர்வேஸ்வரத்வ (நியந்த்ருத்வம் )-சர்வ பிரகாரத்வ -(சரீர சரீரீ பாவம் )சமாப்யதிக நிவ்ருத்தி -சத்ய காமத்வ -ஸத்ய ஸங்கல்பத்வ –
சர்வ அவபாசகத்வாத் (இவன் அதீனத்தாலே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள் )யநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கணா
அபஹதபாப்மா இத்யாதி அநேக வாக்யாவகத் நிரஸ்த நிகில தோஷதா ச சர்வே தஸ்மிந் பக்ஷே விஹன்யந்தோ –(நிர்விசேஷ ப்ரஹ்மம் ஸித்திக்காதே )

10-அத ஸ்யாத் -(மேல் அத்வைதிகள் வாதம் )-உபக்ரமேபி (ப்ரகரண ஆரம்பத்தில் )ஏக விஞ்ஞாநேந-சர்வ விஞ்ஞான முகேன காரணஸ்யைவ சத்யதாம் ப்ரதிஜ்ஜாய(இது அனுப பன்னம் என்று சொல்ல மூன்று த்ருஷ்டாந்தங்கள்-ம்ருத் பண்டம் -நாம ரூபங்கள் அசத்தியம்-அழியுமே – மண் என்பதே ஸத்யம் -ஸ்வரூப மாத்ரம் ஸத்யம்- இதர ஸர்வம் மித்யா )
தஸ்ய காரண பூதஸ்யைவ சத்யதாம் விகார பூதஸ்ய ச அசத்தியதாம் ம்ருத் திருஷ்டாந்தேந தர்சியித்வா ஸத்ய பூதஸ்யைவ ப்ரஹ்மண
சதேவ ஸோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதி(சத்தாகவே இருந்தது விஜாதீயம் இல்லை -ஒன்றாகவே இருந்தது ஏகமேவ -சஜாதீயம் இல்லை -அத்விதீயம் ஸூவ கத பேதமும் இல்லை )
சஜாதீய விஜாதீய  நிகில பேத நிரசநேன–நிர்விசேஷ தைவ ப்ரதிபாதிதா –
ஏதச் சோதகாநி ப்ரகாராணந்தர வாக்ய அந்யபி
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம
நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
விஞ்ஞானம் -ஆனந்தம் -இத்யாதீனி சர்வ விசேஷ ப்ரத்யநீகைககாரதாம் போதயந்தி
ந ச ஏகாகார அவபோதநேபி பதாநாம் பர்யாயதா ஏகத்வேபி வஸ்துன சர்வ விசேஷ ப்ரத்ய
நிகாகாரத்வோபஸ்தாபநேந சர்வபதானாம் அர்த்வத்வாத் இதி

(ஞான ஸ்வரூபம்-ஸ்வயம் பிரகாசம் சேதனம் ஸஜாதீயம் -விஜாதீயம் அசேதனம் -ஸ்வ கத குணங்கள்-விசேஷணங்கள் இத்யாதி அனைத்துமே மித்யா

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-சத்யம் ப்ரஹ்மம் ஞானம் ப்ரஹ்மம் அநந்தம் ப்ரஹ்மம் -மூன்று ப்ரஹ்மம் ஆகும் என்பர் ஏகத்வம் போகும்
வேறுபட்டது என்று சொல்லவே வந்தது -என்பர்-விசேஷணமாகக் கொள்ளாமல் ஸ்வரூப பரமாகக் கொண்டு வியாக்யானம் செய்வர் –
நிர்விகாரம் சத்யம் -அஜடம் வேறுபட்டது -அளவு பட்டவையில் வேறு பட்டது -என்பர் )

(நிஷ்களம்-நிஷ்க்ரியம் -நிர்க்குணம் -நிரவத்யம் -நிரஞ்சனம்(ஐதரேயம் )
கள -அவயவம்- அவயவங்கள் இல்லாமல் -அதனால் கார்யங்கள் செய்யாமல் -ப்ரவ்ருத்தி இல்லாமல்-குணங்கள் இல்லாமல்
நிரவத்யம் -நிரஞ்சனம்-கர்ம சம்பந்தமும் பலமும் அற்ற குறை இல்லாமல் -திர்யக் கர்ம சம்பந்தம் இல்லாமல் கர்ம பல சம்பந்தம் மட்டுமே கொண்டது -)

11-நைததேவம் (அவ்வாறு அல்ல )-ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞானம் ஸர்வஸ்ய மித்யாத்வே ஸர்வஸ்ய ஞாதவ்ய
ஸ்யாபாவாது நசேத்ஸ்யதி ஸத்ய மித்யாத்வயோ ஏகதா ப்ரஸக்திர்வா
அபிது ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிக்ஞா ஸர்வஸ்ய ததாத்மகத்வே நைவ சத்யத்வே சித்யதி –

(ஏவம் அஸ்தி விஞ்ஞானேந ஸர்வம் நாஸ்தி விஞ்ஞானேந அல்லவே

ஏக விஞ்ஞாநேன-கரண த்ருதியீ அல்ல -அபேதே த்ருதியீ -ஒன்றை அறிவதில் மற்றவற்றை அறிவது எல்லாம் அடங்கி இருக்கும் என்றவாறு )

12-அயமர்த்த-ஸ்வேத கேதும் ப்ரத்யாஹ
ஸ்தப்தோசி உததம ஆதேசம் பிராஷ்ய இதி
பரிபூர்ண இவ லஷ்யஸே தானாச்சார்யான் பிரதி தமப்ய ஆதேசம் ப்ருஷ்ட்வானசி
இதி ஆதிஸ்யதே அநேநேத்ய ஆதேச ஆதேச பிரசாசனம்

(ஆதேசம்-உபதேச விஷயம் -அத்வைத மதத்தில் -ஞானத்துக்கு விஷயம் மித்யை -ஞான பின்னம் ஜேயம்-
ஞான மாத்ரம் ஸத்யம் என்பர் -அறியப்படும் விஷயம் இல்லையே
ப்ரஹ்மம் தவிர மற்றவை மித்யை என்பதே உபதேச விஷயம்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வமஸி -நீ த்வம் அல்ல -அந்த தத் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்
அந்த விஷயத்தைக் கேட்டு அறிந்து கொண்டாயா –
ஏக விஞ்ஞானம் -இதர ஸர்வம் மித்யை
நாமோ ஆவேசம் -உபதேச அர்த்தம் இல்லை -ஆதேச கர்த்தா-சர்வ நியந்த்ருத்வம்-பகவத் பரமாகவே நாம் அர்த்தம்   -அவர்கள் கர்மணி –
நியமனம் ஏஷ ஆவேச -ஏஷ உபதேச -இரண்டும் சுருதி சொல்லும்
ஆ உப இரண்டும் -உபதேச பலம் சிஷ்யனுக்கு

(சதேவ -காரண ஸ்ருதி -ஸத்தில் இருந்தே உருவானது -ப்ரஹ்மம் ஒன்றும் மட்டுமே காரண அவஸ்தையில் -மற்றவை இதில் ஒன்றி –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று –
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூப ரஹிதம்-ஏகமேவ -அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மம் -அத்விதீயம் லோகத்தில் காண்பது போல் அல்லவே -ஸகல இதர விலக்ஷணம்-ஸர்வ ஸரீரத்வம் -ஸர்வ கல்யாண குணாத்மகம் அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே -)

(அக்ரே இதற்கு முன்னால் -பூர்வ காலீத்வம் -சதேவ -ஸத் ஒரே பதார்த்தமாக இருந்து -அதுவே உபாதான காரணம்
சர்வஞ்ஞத்வ குண விஸிஷ்ட ப்ரஹ்மமே
ஏகமேவ -அதுவே நிமித்தமும் உபாதானமும் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
லோகத்தில் இது போல் இல்லையே என்ன இது அத்விதீயம்)

ஏதஸ்யவா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்யா சந்த்ரமசவ் வித்ருதவ் திஷ்டத இத்யாதிபிரை ததாச மாநவம் வச
பிரசாசிதாரம் ஸர்வேஷாம் இத்யாதி அத்ராபி ஏகமேவ இதி ஜகதுபாதாநதாம் ப்ரதிபாத்ய அத்விதீய –
பதேந அதிஷ்டாத்ரந்தர நிவாரணாத் அஸ்யைவ ப்ரதிபாத்யநே
அத -தம் பிரசாசிதாரம் ஜகத் உபாதான பூதமபி ப்ருஷ்ட்வானசி -யேந ஸ்ருதேந மதேந அஸ்ருதம மதம விஞ்ஞாதம்
ஸ்ருதம் மதம் விஞ்ஞாதம் பவதி -இத்யுக்தம் ஸ்யாத் -நிகில ஜகத் உதய விபவ விலயாதி காரண பூதம் ஸர்வஞ்ஞத்வ –
சத்ய காமத்வ-ஸத்ய ஸங்கல்பத்வாத்ய-அபரிமித உதார குண சாகரம் கிம் ப்ரஹ்ம த்வயா ஸ்ருதம் –இதி ஹார்த்தோபாவ —

13–தஸ்ய நிகில காரணதயா காரணமேவ நாநா சமஸ்த்தான விசேஷ ஸம்ஸ்திதம் கார்யம் இதயுச்யத இதி காரண பூத
ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரக ப்ரஹ்ம விஞ்ஞாநேன கார்ய பூதம் அகிலம் ஜகத் விஞ்ஞாதம் பவதீதி ஹ்ருதி நிதாய –
யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம்-ஸியாத் இதி புத்ரம் பரதி ப்ருஷ்டவான் பிதா —

14–ததேதத் சகலஸ்ய வஸ்து ஜாதஸ்ய ஏக காரணத்வம் பித்ரு ஹ்ருதி நிஹித மஜானன் புத்ர பரஸ்பர விலக்ஷணேஷு
அந்யஸ்ய ஞானேந ததந்ய ஞானஸ்ய கடமானதாம் புத்தா பரிசோத யதி –கதந்நு பகவஸ் ச ஆதேச இதி –

15–பரிசோதித புந ததேவ ஹ்ருதி நிஹிதம் ஞானானந்த அமலத்வ ஏக ஸ்வரூபம் அபரிச்சேத்ய மஹாத்ம்யம் –
ஸத்ய சங்கல்பத்வ மிஸ்ரை அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணைர் ஜுஷ்டம் அதிகார ஸ்வரூபம்
பரம் ப்ரஹ்மைவ நாம ரூப விபாக அநர்ஹ ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீரம் -ஸ்வ லீலையைவ ஸ்வ சங்கல்பேந –
அநந்த விசித்ர ஸ்திரத் ரஸ ரூப ஜகத் சமஸ்த்தானம் ஸ்வாம் சேநாவஸ்தி தமிதி தத் ஞானேந அந்யஸ்ய
நிகிலஸ்ய ஞாததாம் ப்ருவன் லோக த்ருஷ்டம் கார்ய காரணயோர் அநந்யத்வம் தர்சயிதும் த்ருஷ்டாந்தமாஹ

16–யதா ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந சர்வம் ம்ருண் மயம் விஞ்ஞாதம் ஸ்யாத் வாசாரம்பணம் விகாரோ நாமதேயம்
ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி ஏகமேவ ம்ருத் த்ரவ்யம் ஸ்வ ஏக தேசேந நாநா வியவஹாராஸ் பதத்வாய-
யதா கட சரா வாதி நாநா ஸமஸ்த்தாநா அவஸ்தா ரூப விகாரபந்நம் நாநா நாமதேயமபி ம்ருத்திகா சமஸ்த்தான விசேக்ஷத்வாத்
ம்ருத் த்ரவ்யமேவேதி வியவஸ்திதம் நவாஸ்த வந்தரம் இதி யதா ம்ருத் பிண்ட விஞ்ஞாநேன தத் சமஸ்த்தான விசேஷ
கட சராவாதி ரூபம் சர்வம் விஞ்ஞாதம் ஏவ பவ்தீத்யார்த்தா

17–ததஸ் க்ருத்ஸ்ரஸ்ய ஜகதோ ப்ரஹ்ம ஏக காரண தாம ஜாநந் புத்ர ப்ருச்சதி -பகவாம்ஸ் த்வமேவ மே தத் ப்ரவீது-
இதி ததஸ் சர்வஞ்ஞம் சர்வசக்தி ப்ரஹ்ம ஏவ சர்வ காரணம் இத் யுபதிசந் சஹோவாச
சதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
இதி அக்ர இதம் இதி ஜகந் நிர்திஷ்டம்
அக்ர இதிச ஸ்ருஷ்டே பூர்வ கால தஸ்மிந் காலே ஜகத் சதாத்மகதாம்
சத் ஏவ இதி ப்ரதிபாத்ய தது ஸ்ருஷ்ட்டி காலே அப்யவிசிஷ்டம் இதி க்ருத்வா
ஏக மேவ இதி ஸ்தாபந் நஸ்ய ஜகத்-ததா நீம விபக்த நாம ரூபதாம் ப்ரதிபாத்ய தத் ப்ரதிபாத்தேநேந
ஏவ சதோ ஜகத் உபாதானத்வம் ப்ரதிபாதிதம் இதி ஸ்வ வ்யதிரிக்த நிமித்த காரணம் அத்விதீய பதேந ப்ரதிஷித்தம் இதி —

18–தமாதேசம பிராஷ்யோ யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி -இதி ஆதாவேவ பிரசாசிதைவை ஜகத் உபாதானம் இதி
ஹ்ருதி நிஹிதம் இதாநீ மபிவ்யக்தம் ஏததேவோப பாதயதி–ஸ்வயமேவ ஜகத் உபாதானம் -ஜகந் நிமித்தம் ச சத்
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய –இதி ததேதத் ஸச் சப்த வாஸ்யம் பரம் ப்ரஹ்ம -சர்வஞ்ஞம்-சர்வசக்தி -ஸத்யஸங்கல்பம் –
அவாப்த ஸமஸ்த காமமபி லீலார்த்தம் -விசித்ர அநந்த சித் அசிந் மிஸ்ர ஜகத் ரூபேண காமேவ பஹுஸ்யாம் தளர்த்த ப்ரஜாயேய –
இதி ஸ்வயமேவ சங்கல்ப்ய ஸ்வாம்ஸைக தேசாதேவ வியதாதி பூதாநி ஸ்ருஷ்ட்வா புநரபி ஸைவ ஸச் சப்தா பிஹிதா பரா தேவதா
ஏவம் ஐஷத ஹந்தாஹா மிமா ஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேந ஆத்ம அநு பிரவிஸ்ய நாம ரூபே வ்யாகர வாணி இதி –
அநேந ஜீவேந ஆத்மநா இதி ஜீவஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாத்ய ப்ரஹ்மாத்மக ஜீவ அநு ப்ரவேசாதேவ க்ருதஸ்நஸ்ய
அசித் வஸ்துநோ நாம ரூப பாத்தகம் இதிச தர்சயதி

19–ஏதத் யுக்தம் பவதி (இவ்வாறு சொல்லப்பட்டது சாரம் )ஜீவாத்மாது ப்ரஹ்மண-சரீர தயா பிரகாரத்வாத் ப்ரஹ்மாத்மக
யஸ்ய ஆத்மா சரீரம் -இதி ஸ்ருத் யந்தராத்-ஏவம் பூதஸ்ய ஜீவஸ்ய சரீரதயா பிரகார பூதாநி
தேவ மனுஷ்யாதி ஸமஸ்த்தாநாநி வஸ்தூநி இதி ப்ரஹ்மாத்ம ஏகாநி தாநி ஸர்வாணி
அத தேவோ மனுஷ்ய யஷோ ராக்ஷஸ பஸூ ம்ருக பஷீ வ்ருஷோ லதா காஷ்டம் சிலா த்ருணம் கட பட இத்யாதயஸ்
சர்வே ப்ரக்ருதி ப்ரத்யய யோகேந அபிதாய கதயா பிரசித்தா ஸப்தா லோகே தத் த்ரவ்ய வாஸ்ய தயா பிரதீயமான
தத் தத் சமஸ்தான வஸ்து முகேந தத் அபிமாநி ஜீவ –
தத் அந்தர்யாமிப் பரமாத்மா பர்யந்தம் ஸங்காதஸ் யைவ வாசக –இதி –

தத்வமஸி -ஸ்ருத்யர்த்தம்
20–ஏவம் சமஸ்தஸ்ய சித் அசித் ஆத்மகப் பிரபஞ்சஸ்ய சதுபாதாநதா -சந் நிமித்தா சத் ஆதாரதா –
சந் நியம்யதா-ஸச் சேஷதாதி சர்வம்ச -சந் மூலா ஸோம்யேமா சர்வா பிரஜா ஸதாயதநா சத் பிரதிஷ்டா -இத்யாதிநா
விஸ்தரேண ப்ரதிபாத்ய கார்ய காரண பாவாதி முகேந
ஏததாத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம்
இதி க்ருத்ஸ் நஸ்ய ஜகத்தை ப்ரஹ்மாத்மகத்வம் ஏவ சத்யம் இதி ப்ரதிபாத்ய க்ருத்ஸ் நஸ்ய ஜகத ச ஏவமாத்மா க்ருத்ஸ்நம்
சஜகது தஸ்ய சரீரம் தஸ்மாத் த்வம் சப்த வாஸ்யமபி ஜீவ பிரகாரம் ப்ரஹ்ம ஏவ ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிஜ்ஞாதம்-
தத் த்வமாய் -இதி ஜீவ விசேஷ உப ஸம்ஹ்ருதம் -ஏதத் யுக்தம் பவதி
ஐதாத்ம்யம் இதம் சர்வம் -இதி சேதன அசேதன பிரபஞ்சம்
இதம் சர்வம்
இதி நிர்திஸ்ய-தஸ்ய பிரபஞ்சஸ்ய ஏஷ ஆத்மா இதி ப்ரதிபாதித பிரபஞ்ச உத்தேசேந
ப்ரஹ்மாத்மகத்வம் ப்ரதிபாதிதம் இத்யர்த்த —

(ஞானம் எல்லாம் அனுஷ்டான பர்யந்தமாக ஆக வேண்டும் அன்றோ -உபாசனத்துக்காக அளிக்கப்பட ஞானம் )

21–தத் இதம் ப்ரஹமாத் மகத்வம் கிம் ஆத்ம சரீர பாவேந –
உத ஸ்வரூபேண –
இதி விவேச நீயம்-ஸ்வரூபேண திசேத் ப்ரஹ்மண-ஸத்ய ஸங்கல்பத்வாதய
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத் யுபக்ரம அவகதா பாதிதா பவந்தி
சரீராத்ம பாவேந ச ததாத்மகத்வம் ஸ்ருத் யந்தராத் விசேஷதோ அவகதம் அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம்
சர்வாத்மா இதி பிரசாசி த்ருத்வ ரூபாத்மவேந ஸர்வேஷாம் ஜனாநாம்
ஆத்மா சர்வம் சாஸ்ய சரீரம் இதி விசேஷதோ ஞாயதே ப்ரஹமாத் மகத்வம்
ய ஆத்ம திஷ்டந் ஆத்மாநம் அந்தரோ யமயதி சதே ஆத்மா அந்தர்யாம் யம்ருத-இதிச –
அத்ராபி அநேந ஜீவேநாத்மநா இதி இதமேவ ஞாயத இதி பூர்வமே வோக்தம் —

(சரீராத்மா -என்பதால் ப்ரஹ்மாத்மகம் -ஸ்வரூபேணே இல்லை-ஸ்வரூபத்தால் ஒன்றானால் ஸ்ருதி வாக்கியங்கள் பாதகம் ஆகுமே )

22–அத -ஸர்வஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம சரீரத்வாத் சர்வ சரீரம் சர்வ பிரகாரம் சர்வை சப்தை
ப்ரஹ்மைவாபி தீயத இதி-ததுத்வம் -இதி சாமாநாதி கரண்யே ந ஜீவ சரீரதயா ஜீவ பிரகாரம் ப்ரஹ்மை வாபிஹிதம் –
ஏவமபிஹிதே சதி அயமர்த்தோ ஞாயதே த்வம் இதிய பூர்வம் தேஹஸ் யாதிஷ்டாத்ருதயா பிரதித ச பரமாத்ம சரீரதயா
பரமாத்ம பிரகார பூத பரமாத்மா பர்யந்த ப்ருதக் ஸ்திதி -ப்ரவ்ருத்தி –அநர்ஹ—அத –த்வம்-இதி சப்த
தத் பிரகார விசிஷ்டம் தத் அந்தர்யாமிணமே வாசஷ்டே இதி அநேந ஜீவேந ஆத்மநா அநு பிரவிஸ்ய நாம ரூபே வியகரவாணி –
இதி ப்ரஹ்மாத்மகதயைவ ஜீவஸ்ய சரீரிண ஸ்வ நாம பாக்த்வாத்
தது த்வம் இதி சாமா நாதி கரண ப்ரவ்ருத்தயோர் த்வயோரபி பதயோ ப்ரஹ்மைவ வாஸ்யம் -தத்ர -தது- பதம் –
ஜகத் காரண பூதம்-சர்வ கல்யாண குணாகரம் -நிரவத்யம்-நிர்விகாரமா சஷ்டே த்வம் இதிச -ததேவ ப்ரஹ்ம ஜீவ அந்தர்யாமி
ரூபேண ஸ்வ சரீர ஜீவ பிரகார விசிஷ்டமாசஷ்டே ததேவம் ப்ரவ்ருத்தி நிமித்த பேதேந ஏகாஸ்மின் ப்ரஹ்மணயேவ ததுத்வம் –
இதி த்வயோ பதயோர் வ்ருத்திருக்தா-ப்ரஹ்மணோ நிரவத்யத்வம் நிர்விகாரத்வம்
சர்வ கல்யாண குணாகரத்வம் ஜகத் காரணத்வம் ச அபாதிதம் –

23-அஸ்ருத வேதாந்தா புருஷா (சதாச்சார்ய உபதேசம் ஸ்ரவணம் பண்ணாதார்- )சர்வே பதார்த்தம் சர்வே ஜீவாத் மனஸ் ச ப்ரஹ்மாத்மகா இதி ந பஸ்யந்தி
சர்வ ஸப்தாநாம் ச கேவலஷு தத் தத் பதார்த்ததேஷூ வாஸ்யைக தேசேஷூ வாஸ்ய பர்யவஸாநம் மன்யந்தே
ஸ்ருத வேதாந்தஸ்து (கற்றார் அதயேவ நான்மறையாளர் ஆவார்)வேதாந்த வாக்ய ஸ்ரவணேன ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா
ச ஸர்வஸ்ய ப்ரஹ்மாத்மகத்வம் சர்வ ஸப்தாநாம் தத் தத் பிரகார ஸம்ஸ்திதா ப்ரஹ்ம வாசித்வம் ச ஜாநந்தி —

(வாசக அர்த்தம் ப்ரஹ்மம் வரை பர்யவசிக்கும்-ப்ரஹ்ம கார்யதயா தத் அந்தர்யாமிதயா-வேதத்தின் உட் பொருள் நிற்க்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -பிரதான பரதந்தர அர்தம் )

24–நந் வேவம் கவாதி ஸப்தாநாம் தத் தத் பதார்த்த வாசிதயா வ்யுத்பத்திர் பாதிதா ஸ்யாத்
நைவம் சர்வே ஸப்தா அசிஜ் ஜீவ விசிஷ்ட்ட பரமாத்மநோ வாசகர் இத்யுக்தம் நாம ரூபே வ்யாகரவாணி இத்யத்ர
தத்ர லௌகிகாஸ்து புருஷா சப்தம் வ்யவஹரந்தஸ் சப்த வாஸ்யே பிரதாநாம் சஸ்ய பரமாத்மன ப்ரத்யஷாத் யபரிசேத்யவாத்
வாஸ்யைகதேச பூதே வாஸ்ய சமாப்தி பர்யவசாதே வேதாந்த ஸ்ரவணேந ஹி வ்யுத்பத்தி பூர்யதே –
ஏகமேவ வைதிகாஸ் ஸப்தா சர்வே பரமாத்மா பர்யந்தாந் ஸ்வார்த்தாந் போத யந்தி —

25-வைதிகா ஏவ சர்வ ஸப்தா ஆதவ் வேதாதேவோத்ருத் யோத்ருத்ய பரேண ஏவ ப்ரஹ்மணா சர்வபதாதீந் பூர்வவத்
ஸ்ருஷ்ட்வா தேஷு பரமாத்ம பர்யந்தேஷு பூர்வவத் நாம தயா ப்ரயுக்தா ததாஹ மனு -1-21-
ஸர்வேஷாம் நாமாநி கர்மாணி ச ப்ருதக் ப்ருதக் வேத சப்தேப்ய ஏவாதவ் ப்ருதக் ஸம்ஸ்தாஸ் ச நிர்மமே இதி
சமஸ்தா சமஸ்தாநாநி ரூபாணீதி யாவது ஆஹ ச–பகவான் பராசர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-63-
நாம ரூபஞ்ச பூதாநாம் க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சனம் வேத சப்தேப்ய ஏவாதவ் தேவதீநாம் சகாரச -இதி ஸ்ருதிஸ் ச
ஸூர்ய சந்த்ர மசவ் ததா யதா பூர்வகமகல்பயத்-இதி
ஸூர்யாதீந் பூர்வவத் பரிகல்ப்ய நாமாநி ச பூர்வச் சகரேத் யர்த்த —

ஏவம் ஜகத் ப்ராஹ்மண ஓர் அநந்யத்வம் பிரபஞ்சிதம் -தேந ஏகேந ஞாநேந ஸர்வஸ்ய ஞாததா உபபாதிதா பவதி –
ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரியதா ப்ரதிபாதநேந ததாத் மகத்யைவ் சத்யத்வம் நான்யதேதி தத் சத்யம் –
இத் யுக்தம் யதா த்ருஷ்டாந்தே ஸர்வஸ்ய ம்ருத் விகாரஸ்ய ம்ருதாத்மநைவ சத்யத்வம் –

(தேவதாதிகரணம் இத்தையே விளக்கும்)

26–சோதக வாக்ய அந்யபி (பரிசுத்தமாக ஸ்வரூபத்தை நிரூபிக்கும் வாக்கியங்கள் )நிரவத்யம் சர்வ கல்யாண குணாகரம் பரம் ப்ரஹ்ம சோதயந்தி

27–சர்வப் ப்ரத்யநீக ஆகாரதா போதநேபி தத் ப்ரத்யநீக ஆகாரதாயாம் பேதஸ்ய அவர்ஜனீயத்வாந்ந நிர்விசேஷத்வ ஸித்தி–

28–நநு-
ஞான மாத்திரம் ப்ரஹமேதி ப்ரதிபாதிதே நிர் விசேஷ ஞான மாத்திரம் ப்ரஹமேதி நிஸ் ஸீயதே —
நைவம் ஸ்வரூப நிரூபண தர்ம ஸப்தா ஹி தர்ம முகேந ஸ்வரூபம் அபி ப்ரதிபாத யந்தி கவாதி சப்தவத்-ததாஹ ஸூத்ரகார
தத் குண சாரத்வாத் வ்யபதேச -ப்ராஞ்ஞவது -இதி
( ஞான குண சாரத்வாத் ஆத்மநோ ஞானம் இதி வியபதேச-யதா ப்ராஞ்ஜேந ப்ரஹ்மணா விபஸ்சிதா–யஸ் சர்வஞ்ஞ சர்வவித் –
இதி சர்வஞ்ஞ ஏவ ஞான குண சாரத்வாத் சத்யம் ஞானம் இதி வியபதிஸ்யதே )
யாவதாத்ம பாவித்வாச்ச ந தோஷ இதி ஞாநேந தர்மேன ஸ்வரூபம் அபி நிரூபிதம் நது ஞான மாத்ரம் ப்ரஹமேதி கதம்
இதமவகம்யத இதி சேத்-யஸ் சர்வஞ்ஞ ஸர்வவிது-இதி ஞாத்ருவத்வஸ்ருதே
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச
விஞாதாரம் அரே கேந விஜாநீயாத் –இத்யாதி ஸ்ருதி சதா சமதிகதமிதம்-ஞானஸ்ய தர்ம மாத்ரவாத் தர்ம மாத்ரஸ்ய
ஏகஸ்ய வஸ்துத்வ ப்ரதிபாதாந நுப பத்தேஸ் ச
அத ஸத்ய ஞாநாதி பதாநிஸ் வார்த்த பூத ஞானாதி விசிஷ்டமேவ ப்ரஹ்ம ப்ரதிபாத யந்தி —

29–தத் தவம் இதி த்வயயோர் அபி பதயோ -ஸ்வார்த்த ப்ரஹாணேந நிர்விசேஷ வஸ்து ஸ்வரூப உபஸ்தான
பரத்வே முக்கியார்த்த பரித்யாகச்ச-
நநு
ஐக்ய தாத்பர்ய நிஸ்ஸயாத் ந லக்ஷணா தோஷா ஸோயம் தேவ தத்த இதிவத் –
யதா ஸோ அயம் -இத்யத்ர ச இதி சப்தேன தேசாந்தர காலாந்தர சம்மந்தீ புருஷ பிரதீயதே
அயம் இதி ச சந்நிகித தேச வர்த்தமான கால சம்மந்தீ தயோ சாமாநாதி கரணேந ஐக்யம் பிரதீயதே
தத்ர ஏகஸ்ய யுகபாத் விருத்த தேச கால சம்பந்திதயா பிரதீதீர்ந கடத இதி த்வயோர் அபி பதயோ
ஸ்வரூப மாத்ரோப ஸ்தாபந பரத்வம் ஸ்வரூபஸ்ய ச ஐக்யம் ப்ரதிபாத்யதே இதி சேத் –

(தத் தவம் அஸி -அஹம் ப்ரஹ்மாஸ்மி -இது வரை நான் என்று பிரமித்தது இல்லை -இதுவே அத்வைதி வாதம்
கங்கா கோ சாலை லக்ஷணையால் கங்கைக்கரையில் –
இரண்டு பதங்களுக்கும் லக்ஷணையால் அமுக்கிய வாதம் கொள்ளக்கூடாதே)

(ஞானம் த்வி விதம்-முதலில் இந்திரியங்கள் மூலம் அறிந்த ஞானம் ஓன்று
ஸ்ம்ருதி -இந்திரிய ஸஹ காரம் வேண்டாம் இதுக்கு -ஸம்ஸ்காரம் -மனப்பதிவு ஒன்றுமே வேண்டும்
அனுபவம் பற்றிய நினைவு -ப்ரத்யக்ஷம் -விஷய சம்யோகத்தால் வந்தது
தேவ தத்தன் ஸகா தேவ தத்தா அயம் தேவ தத்தா -)

30–நைத வேதம்
சோயம் தேவதத்த-இத்யத்ராபி லக்ஷணா கந்தோ ந வித்யதே விரோத பாவாத் –
ஏகஸ்ய பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தோ ந விருத்த தேசாந்தர ஸ்திதி பூதா சந்நிஹித தேச ஸ்திதி வர்த்ததே
அத பூத வர்த்தமான க்ரியா த்வய சம்பந்தி தயா ஐக்ய ப்ரதிபாதனம விருத்தம் தேச த்வய விரோதஸ் ச கால பேதேந பரிஹ்ருத
லக்ஷணாயாம் அபி ந த்வயோர் அபி பதயோர் லக்ஷணா ஸமாச்ரயணம் ஏகேநைவ லஷிதேந விரோதி பரிஹாராத் –
லக்ஷணாபாவ ஏவ உத்த தேசாந்தர சம்பந்தி தயா பூதஸ்யைவ அந்ய தேச சம்பந்தி தயா வர்த்தமானத்வா விரோதாத்
ஏவ மாத்ராபி ஜகத் காரண பூதஸ்யைவ பரஸ்ய ப்ரஹ்மண
ஜீவ அந்தர்யாமி தயா ஜீவாத்ம த்வம விருத்தமிதி ப்ரதிபாதிதம் -யதா பூதயோர் அபி ஹி த்வயோர் ஐக்யம்
சாமாநாதி கரண்யேந பிரதீயதே -தத் பரிந்யாகேந ஸ்வரூப மாத்ர ஐக்யம் ந சாமநாதி கரண்யஸ்யார்த்தா
பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகஸ்மிந் நர்த்தே வ்ருத்திஸ் சாமாநாதி கரண்யம் (பதாஞ்சலி அருளிய லக்ஷணம் )-இதி ஹி
தத்வித ததா பூதயோர் ஏவ ஐக்யம் உபபாதிதம் அஸ்மாபி –

31–உபக்ரம விரோத உப சம்ஹாரே வாக்ய தாத்பர்ய நிஸ்ஸயஸ் ச ந கடதே உபக்ரமே ஹி
தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய -இத்யாதிநா
ஸத்ய ஸங்கல்பத்வம் ஜகத் ஏக காரணத்வம் அப்யுக்தம் தத் விரோதி ச அவித்யாஸ்ரயத்வாதி ப்ரஹ்மண

(ஸப்தம் -வாக்ய சேஷம் -அது பிரகரண சேஷம் – -அது ஸாஸ்த்ர சேஷம் –
லிங்கம் அடையாளங்கள் -1-உபக்ரமம் உபஸம்ஹாரம்-இதுவே பிரதானம் -2-அப்பியாசம் -3-அபூர்வ வத் -4-பலம் -5-அர்த்தவாதம் -6-உபபத்தி ஆறும் உண்டே
சரீராத்மா பாவத்துக்கு உபக்ரமம் உப சம்ஹாரம் ஏகார்த்தம்)

32–அபி ச அர்த்த பேத தத் சம்சர்க்க விசேஷ போதந க்ருத பத வாக்ய ஸ்வரூப லப்த பிராமண பாவஸ்ய சப்தஸ்ய
நிர் விசேஷ வஸ்து போதநா சாமர்த்யாத்ந நிர்விசேஷ வஸ்து நி சப்த பிரமாணம்
நிர் விசேஷ இத்யாதி சப்தாஸ்து கேந சித் விசேஷேண விஸிஷ்டதயா அபஹதஸ்ய வஸ்துநோ வஸ்த்வந்தராவகத விசேஷ
நிர்சேஷதக தயா போதகா இதரதா தேஷாமப்யநவ போதகத்வமேவ ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண பதஸ்யை அநேக விசேஷ
கர்பிதத்வாத் அநேக பதார்த்த சம்சர்க்க போதகதவாச்ச வாக்யஸ்ய-

(சப்தம் ப்ரக்ருதி ப்ரத்யாத்மகம் பகுதி விகுதி சேர்ந்தே இருக்கும் -பேத ப்ரதிபாத்யம் ஆகவே இருக்குமே -கடம் -வேறே ஒன்றை வியாவர்த்திக்கைக்காக சொல்கிறது-ஆத்மா ப்ரஹ்மம் -ஞான மாத்திரம் -ஞாத்ருத்வாதி விசேஷணங்கள் இல்லாமல் –
ஞானம் சப்தத்தால் வஸ்து நிர்த்தேசம் என்பர்)

33–அத ஸ்யாத் -நாஸ்மாபி நிர்விசேஷ ஸ்வயம் பிரகாசேசே வஸ்துநி சப்த பிரமாண மித்யுச்யதே
ஸ்வதஸ் சித்தஸ்ய பிராமணன – பேக்ஷத்வாத் சர்வை சப்தை தது பராக விஷேஷா ஞாத்ருத்வாதய சர்வே நிவர்த்தயந்தே
சர்வேஷு விஷே சேஷு வஸ்து மாத்ரம் அநவச் சிந்நம் ஸ்வயம் பிரகாசம் ஸ்வத ஏவாவதிஷ்டதே -இதி –

34–நைததேவம்
கேந சப்தேந தத் வஸ்து நிர்திஸ்ய தத் கதா விசேஷா நிரஸ்யந்தே –
ஞாப்தி மாத்ர சப்தேந -இதி சேத் –
ஸோபி ச விசேஷ மேவ வஸ்து அவலம்பதே ப்ரக்ருதி ப்ரத்யய ரூபேண விசேஷ கர்ப்பித தத்வாத தஸ்ய –
ஞா -அவ போதநே இதி ச கர்மக-ச கர்த்ருதுக கிரியா விசேஷ க்ரியாந்தர வ்யாவர்த்தக-ஸ்வபாவ விசேஷஸ் ச
ப்ரக்ருதயா அவகம்யதே ப்ரத்யயேந லிங்க சங்க்யாதயா-
ஸ்வத ஸித்தாவபி ஏதத் ஸ்வபாவ விசேஷ விரஹே ஸித்திரே வநஸ்யாத் –
அந்ய சாதந ஸ்வ பாவதயா ஹி ஞப்தே ஸ்வதஸ் சித்தருஸ்யதே–

(ஞா -அவ போதநே-அறிதல் -ஏதாவது ஒன்றைப் பற்றியே இருக்க வேண்டும் -யார் அறிகிறான் -யாரை அறிகிறான் எதை அறிகிறான் கேள்வி வருமே
மாத்திரம் சப்தம் இவற்றை விவரிக்காதே -லிங்கம் அடையாளம் –)

35–ப்ரஹ்ம ஸ்வரூபம் க்ருத்ஸ்னம் ஸர்வதா ஸ்வயமேவ ப்ரகாஸதே சேத் ந தஸ்மிந் அந்ய தர்மாத் யாச சம்பவதி –
ந ஹிரஜ்ஜூ ஸ்வரூபே அவபா சமாநே சர்ப்பத்வாதி அத்யஸ்யதே அத ஏவ ஹி பவத்பி
ஆச்சாதிகா அவித்யா -(ஆச்சாதிகா அவித்யா – பொருளை மட்டும் மறைத்தல் -விசேஷகா அவித்யா -பண்புகளை மறைத்தல் –
என்று இரண்டு வகை அவித்யா உண்டே – ) அப்யுபகம்யதே ததஸ் ச ஸாஸ்த்ரீய நிவர்த்தக ஞானஸ்ய ப்ரஹ்மணி திரோஹிதாம்ஸோ
விஷய அந்யதா தஸ்ய நிவர்த்திகத்வம் ச ந ஸ்யாத் -அதிஷ்டாநாதிரேகி ரஜ்ஜூத்வ ப்ரகாஸதேந ஹி சர்ப்பத்வம் பாத்யதே –
ஏகஸ்சேத் விசேஷோ ஞான மாத்ரே வஸ்துநி சப்தேந அபிதீயதே ச ச ப்ரஹ்ம விசேஷணம் பவதி இதி சர்வ ஸ்ருதி ப்ரதிபாதித
சர்வ விசேஷண விசிஷ்டம் ப்ரஹ்ம பவதி அத பிரமாணிகாநாம் ந கேநாபி ப்ரமாணே ந நிர்விசேஷ வஸ்து ஸித்தி —

(ஞானம் அந்நயாதீன ஸ்வயம் பிரகாசம்-ஸ்வ தர்மம் – -தன்னுடைய சம்பந்தத்தால் பிரகாசம் அற்ற சேதனப் பொருள்களை பிரகாசிக்கும்
ஒரு பொருளை விஷயீகரித்தால் தானே ஸ்வயம் பிரகாசம் ஆகும் –
நிர்விசேஷ வஸ்துவுக்கு ஸ்வயம் ப்ரகாஸத்வம் சாதிக்க முடியாதே
ஸ்வயம் பிரகாச வஸ்து மேல் பிரமம் உண்டாகவே முடியாதே)

(நான் வேடுவன் -நான் ப்ரம்மத்துக்கு விஷயம் அல்லவே -வேடுவன் தப்பாக அறிவதில் தானே பிரமம் ஆகலாம்
ஸ்வயம் பிரகாச வஸ்து பிரமத்துக்கு விஷயம் ஆகவே முடியாதே)

36 —நிர்விகல்பக ப்ரத்யஷேபி ச விசேஷமேவ வஸ்து பிரதீயதே -அந்ய தா ச விகல்பகே ஸோயமிதி–
பூர்வாவகத பிரகார விஸிஷ்ட ப்ரத்யயா நுபபத்தே-
வஸ்து ஸமஸ்த்தாந விஷய ரூபத்வாத் கோத்வாதே -நிர்விகல்பக தசாயாமபி ச சமஸ்தானமேவ வஸ்து இத்தம்-இதி பிரதீயதே
த்விதீயாதி ப்ரத்யயேஷு தஸ்யைவ சமஸ்தாந விசேஷஸ்ய அநேக வஸ்து நிஷ்டதா மாத்ரம் பிரதீயதே சமஸ்தாந ரூப
பிரகாரக்யஸ்ய பதார்த்தஸ்ய அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து நிஷ்டதயா அநேக வஸ்து விசேஷணத்வம்
த்விதீயாதி ப்ரத்யயாவகம்ய மிதி த்விதீயாதி ப்ரத்யயா ச விகல்பகா இதயுச்யந்தே –

37–அத ஏவ ஏகஸ்ய பதார்த்தஸ்ய பின்னா பின்ன ரூபேண விருத்தம் வ்யத்யாத்மகத்வம் ப்ரத்யுக்தம் சமஸ்தானஸ்ய ஸம்ஸ்தானீன
பிரகாரதயா பதார்த்தாந்தரத்வம் பிரகாரத்வா -தேவ ப்ருதக் சித்யநர் ஹத்வம் -ப்ருதக் அநு பலம்பஸ் சேதிநத்வயாத் மகத்வ ஸித்தி –

38–அபி ச நிர்விசேஷ வஸ்து வாதிநா ஸ்வயம் பிரகாச வஸ்துநி ததுபராக விசேஷா சர்வைஸ் சப்தை நிஷித்யந்தே
இதிவததா கே தே ஸப்தா நிஷேதகா -இதி வக்தவ்யம்-
வசாரம்பணம் விகாரோ நாமதேயம் ம்ருத்திகேத்யேவ சத்யம் -இதி விகார நாம தேயயோ வாசாரம் பண மாத்ரத்வாத்
யத் தத்ர காரண தயா உப லஷ்யதே வஸ்து மாத்ரம் ததேவ சத்யம் அந்யத சத்யமிதி இயம் ஸ்ருதிர் வததி இதி சேத்
நைததுப பத்யதே ஏகஸ்மின் விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதீதி ப்ரதிஞ்ஞாதே அந்ய ஞாநேந அந்ய ஞாநா சம்பவம்
மந்வாநஸ்ய ஏகமேவ வஸ்து விகாரத்ய வஸ்தா விசேஷண பாரமார்த்திகே நைவ நாநா ரூபமவஸ்திதம் சேத்
தத்ர ஏகஸ்மின் விஞ்ஞாதே தஸ்மாத் விலக்ஷண சமஸ்தானாந்தர மபி ததேவ வஸ்து இதி தத்ர த்ருஷ்டாந்தோயம் நிதர்சித–
நாத்ர கஸ்யசித் விசேஷஸ்ய நிஷேதக கோபி சப்த த்ருச்யதே வாசாரம்பண மிதி வாசா வ்யவஹாரேண-ஆரப்யதே இதி ஆரம்பணம் —
பிண்ட ரூபேண ஸம்ஸ்திதாயா ம்ருத்தி காயா நாமச அந்யத் வியவஹாரஸ் ச அந்ய கட சராவாதி ரூபேண அவஸ்தி தாயா
தஸ்யா ஏவ ம்ருத்திகாயா அந்யாநி நாமாநி வியவஹாரஸ் ஸ அந்யாத்ருசா தாதாபி ஸர்வத்ர ம்ருத்தி காத்ர வ்யமேகமேவ
நாநா சமஸ்தான நாநா நாமதேயாப்யாம் நாநா வ்யவஹாரேண ச ஆரப்யத இதி ஏததேவ சத்யம் -இத்யநேந
அந்ய ஞாநேந அந்ய ஞான சம்பவோ நிதர்சித நாத்ர கிஞ்சித் வஸ்து நிஷித் யத–இதி பூர்வமேவ அயமர்த்த பிரபஞ்சித —

(ஏக பதார்த்த விஞ்ஞானம் காரண கார்ய பாவத்தால் சர்வ விஞ்ஞானம் என்பது அல்ல
ஏக விஞ்ஞானத்தில் அடங்கிய சர்வ விஞ்ஞானம் என்கிறார்
ஏக விஞ்ஞான பின்ன சர்வ விஞ்ஞானம் -அபி –
ஏகம் ம்ருத் பிண்டம் -ஸர்வ குடம் மடக்கு போல்வன-இவையும் ம்ருத் பண்டம் போல் ஸத்யம் தானே )

39–அபி ச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இத்யாதிநா ப்ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய ஸர்வஸ்ய மித்யாத்வம் ப்ரதிஞ்ஞாதம் சேத்
யதா சோம்ய ஏகேந ம்ருத் பிண்டேந –இத்யாதி த்ருஷ்டாந்த -ஸாத்யவிகலஸ்யாத் -ரஜ்ஜூ சர்ப்பாதிவத் ம்ருத்திகா விகாரஸ்ய
கட சராவத இதர சத்யத்வம் ஸ்வேத கேதோ ஸூஸ்ரூஷோ பிரமானாந்தரேண யுக்தயா ச அசித்தமிதி ஏததபிசிஷாத இஷிதமிதிசேத்
யதா இதி த்ருஷ்டாந்த தயா உபாதானம் ந கடதே-

40–சதேவ சோம்யா இதமக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இத்யத்ர
சதேவ -ஏகமேவ -இதி அவதாரண த்வயேந-அத்விதீயம் -இத்யநேந-சந் மாத்ராதிரேகி -சஜாதீய -விஜாதீயா —
சர்வே விசேஷா நிஷித்யந்த இதி பிரதீயதே இதி சேத்
நைவ தேவம் -கார்ய காரண பாவா வஸ்தாத் வயாவஸ்தி தஸ்ய ஏகஸ்ய வஸ்துந ஏகா வஸ்தஸ்ய ஞாநேந அவசித்தாந்தர
அவஸ்தி தஸ்யாபி வஸ்த்வ ஐக்யேந ஞாததாம் த்ருஷ்டாந்தேந தர்சாயித்வா
ஸ்வேத கேதோரா பிரஞ்ஞாதம் ஸர்வஸ்ய ப்ரஹ்ம காரணத்வம் வக்தும்
சதேவ சோம்யேதம்–இத்யாரப்தம்-இதமக்ர சதேவா ஸீத் -இதி அக்ர இதி கால விசேஷ இதம் சப்த வாச்யச்ய பிரபஞ்சஸ்ய
சதா பத்தி ரூபம் க்ரியாம் சத்த்ரவ்யதாம் ச வததி
ஏகமேவ இதிச அஸ்ய நாநா நாம ரூப விகார ப்ரஹாணம்-ஏதஸ்மிந் ப்ரதிபாதிதே அஸ்ய ஜகத-சதுபாதநதா பிரதி பாதிதா பவதி-
அந் யாத்ரா உபாதான காரணஸ்ய ஸ்வ வ்யாதிரிக்தா திஷ்டாத்ரா பேஷா தர்சநேபி சர்வ விலக்ஷணத்வா தஸ்ய
சர்வஞ்ஞஸ்ய ப்ரஹ்மண சர்வசக்தி யோகோ ந விருத்த இதி
அத்விதீய-பதம் அதிஷ்டாத்ரந்தரம் நிவாரயதி சர்வ சக்தி யுக்தத் வாதேவ ப்ரஹ்மண-காஸ்சந ஸ்ருதய ப்ரஹ்மம் உபாதான காரணத்வம்
ப்ரதிபாத்ய நிமித்த காரணம் அபி ததேவேதி ப்ரதிபாத யந்தி யதேயம் ஸ்ருதி —

(ஜகத் காரணம் ப்ரஹ்மமே அறியாத ஸ்வேத கேதுவுக்கு அறிவிக்கும் வாக்யமே இந்த சுருதி வாக்கியம்)

41-அந்யாஸ் ச ஸ்ருதய ப்ரஹ்மணோ நிமித்த காரணதாம நுக்ஞாய–தஸ்யைவ உபாதானதா தி கதமிதி பரிச்சோத்ய
சர்வசக்தி யுக்தத்வாத் உபாதான காரணம் ததிதரா சேஷோபகரணம் ச ப்ரஹ்மைவ இதி பரி ஹரந்தி
கிம் ஸ்வித்தனம்-க உ சவ்ருஷ ஆஸீத் –யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு-மனிஷினோ
மனசா ப்ருச்சேதேது தது யதத்ய திஷ்டத் புவநாநி தாரயந்
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்மம் ச வ்ருஷ ஆஸீத் யாதோ த்யாவா ப்ருதிவீ நிஷ்ட தஷு மணீஷிநோ மனசாவிப்ரவீமி
வ ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயந் இதி சாமான்யதோ த்ருஷ்டேந விரோத மா சங்க்ய ப்ரஹ்மண
சர்வ விலக்ஷணத்வேந பரிகார யுக்த

42–அத சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் இத்யத்ராபி அக்ரே இத்யாத்யநேக விசேஷ ப்ரஹ்மண ப்ரதிபாதிதா-
பவதமிமத விசேஷ நிஷேத வாஸீ கோபி சப்த ந த்ருச்யதே ப்ரத்யுத ஜகத் ப்ரஹ்மணோ கார்ய காரண பாவ ஞாபநாய
அக்ர இதி கால விசேஷ சப்தாவ ஆஸீத் இதி கிரியா விசேஷ ஜகத் உபாதானதா ஜகந் நிமித்ததா
ச நிமித்த உபாதானயோர் பேத நிரசநேந தஸ்யைவ ப்ரஹ்மண சர்வ சக்தி யோகஸ்சேதி
அப்ரஞ்ஞாதா சஹஸ்ரஸோ விசேஷா ஏவ ப்ரதிபாதிதா

43–யாதோ வாஸ்தக கார்ய காரண பாவாதி ஞாபநே ப்ரவ்ருத்தம் -அத ஏவ
அசத் ஏவ இதம் அக்ர ஆஸீத் -இதயாரப்ய அசத் கார்ய வாத நிஷேதஸ் ச க்ரியதே குதஸ்து கலுஸோம் யைவம் ஸியாத்
இதி பிராகஸத உத்பத்தி அஹேதுகா இத்யர்த்த ததேவ உபபாதயதி கதம்ம் சதஸ் சஜ்ஜாயதே
இதி அசத உப பந்நம் அசதாத்மகமேவ பவதி இத்யர்த்த யதாம்ருத உத் பந்நம் கடாதிகம் ம்ருதாத் மகம் –
சத உத்பத்திர் நாம வ்யவஹார விசேஷ ஹேது பூத அவஸ்தா விசேஷ யோக —

44–ஏதத் யுக்தம் பவதி -ஏகமேவ காரண பூத த்ரவ்யம் அவஸ்தாந்தர யோகேந கார்யமித்யுச்யத இதி
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் ப்ரதிபாதயிஷிதம் தது அஸத்கார்யவாதே ந சேத்ஸ்யதி -ததாஹி நிமித்த சமாவாய்ய
சமாவாயி ப்ரப்ருதிபிஸ் காரணை அவயவ்யாக்யம் கார்யம் த்ரவ்யாந்தரமேவ ஆரப்யத இதி காரண பூதாத் வஸ்துந கார்யஸ்ய
வஸ்த்வந்த்ரத்வாத் ந தத் ஞாநேன அஸ்ய ஞாததா கதமபி சம்பவநீதி–கதம் அவயவி த்ரவ்யாந்தரம் நிரஸ்யதே
இதி சேத் காரணகதா வஸ்தாந்தர யோகஸ்ய த்ரயாந்தரோத்பத்திவாதிந சம்பிரதி பந்நஸ்யைவ ஏகத்துவ நாமாந்தர
வ்யவஹாராதே ரூப பாதகத்வாத் த்ரவ்யாந்தரா தர்சினாஸ் ச –
இதி காரணமேவ அவஸ்தாந்தரா பந்நம் கார்யம் இத்யுச்ய தே இத்யுக்தம் –

அசத் கார்ய வைசேஷிக வாத நிரசனம் –
45–நநு -நிரதிஷ்டானப்ரமா சம்பவ ஞாபநாய அஸத்கார்ய வாத நிராச க்ரியதே -ததாஹி -ஏகம் சித்ரூபம் சத்யமேவ
அவித்யாச்சாதிதம் ஜகாத் ரூபேண விவர்த்ததே இதி அவித்யாஸ்ரயத்வாய மூல காரணம் சத்யமித்யப் யுபகந்தவ்யம்
இதி அஸத்கார்யவாத நிராச
நை ததேவம் -ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த முகேந சத்காரியவாதஸ்யைவ ப்ரஸக்தத்வாத்
இத்யுக்தம் பவத் பக்ஷே நிரதிஷ்டான ப்ரமா சம்பவஸ்ய துரூப பாதத்வாச் சா யஸ்ய ஹி சேதநகதோ தோஷ
பாரமார்த்திக தோஷாஸ் ரயத்வம் ச பாரமார்த்திகம் தஸ்ய பாரமார்த்திக தோஷேண யுக்தஸ்ய
அபாரமார்த்திக கந்தர்வ நகராதி தர்சனம் உபபந்நம்
யஸ்யது தோஷஸ் ச அபாரமார்த்திக்க தோஷாஸ்ரயத்வம் ச அபாரமார்த்திகம் தஸ்ய அபாரமார்த்திகே
நாப்யாஸ்ரயேண தத் உப பந்நம் இதி பவத்பஷே நநிரதிஷ்டான ப்ரமா சம்பவ —

46–சோத கேஷ்வபி -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம —
ஆனந்தோ ப்ரஹ்ம -இத்யாதி ஷு சாமாநாதி காரண்ய வ்யுத்பத்தி ஸித்தாநேக குண விசிஷ்டை கர்தாபிதாநம்
அவிருத்தமிதி சர்வ குண விசிஷ்டம் ப்ரஹ்ம அபிதீயத இதி பூர்வமேவோக்தம் –

47–அதாத ஆதேஸோ நேதி நேதி இதி பஹுதா நிஷேதோ த்ருஸ்யத இதி சேத் கிமத்ர நிஷித்யத இதி வக்தவ்யம்
த்வேவாவ ப்ரஹ்மணோ ரூபே மூர்த்தம் சா மூர்த்த மேவச இதி மூர்த்தா மூர்த்தாத்மக பிரபஞ்ச ஸர்வோபி நிஷித்யத
இதி சேத் ப்ரஹ்மணோ ரூபதயா அப்ரஞ்ஞாதம் சர்வம் ரூபதயா உபதிஸ்ய புநஸ்ததேவ நிஷேத்தும யுக்தம் –
ப்ரஷால நாத்தி பங்கஸ்ய தூரதஸ்பர்சனம் வரம் இதி நியாயாத் கஸ்தர்ஹி நிஷேதக வாக்யார்த்த
ஸூத்ரகார ஸ்வயமேவ வததி -ப்ருகிருதை தாவத்வம் ஹி பிரதிஷே ததிததோ பரவீதி ச பூய –
இதி உத்தரத்ர அத நாமதேயம் சத்யஸ்ய சத்யமிதி பிராணாவை சத்யம் தேஷா மேஷ சத்யம்
இத்யாதிநா குண கணஸ்ய ப்ரதிபாதிதத்வாத் பூர்வ பிரகிருதை தாவந் மாத்ரம் ந பவதி ப்ரஹ்மேதி ப்ரஹ்மணா
ஏதாவாந் மாத்ரதா ப்ரதிஷித்யதே இதி ஸூத்ரஸ் யார்த்த–

48–நேஹா நா நாஸ்தி கிஞ்சன -இத்யாதிநா நாநாத்வ பிரதிஷேத ஏவ த்ருச்யதே இதி சேத்
அத்ராபி உத்ரத்ர ஸர்வஸ்ய வஸி ச்ரவஸ்யேசாந -இதி ஸத்யஸங்கல்பத்வ சர்வேஸ்வரத்வ ப்ரதிபாதநாத்
சேதன அசேதன வஸ்து சரீர ஈஸ்வர இதி ஸர்வப்ரகார ஸம்ஸ்தித சர்வேஸ்வர ச ஏக ஏவேதி தத் ப்ரத்யநீக
ப்ரஹ்மாத்மக நாநாத்வம் பிரதி ஷித்தம்–ந பவதபி மதம் சர்வாஸூ ஏவம் பிரகாராஸூ ஸ்ருதிஷு இயமேவஸ்திதி —
இதி நக்வசிதபி ப்ராஹ்மண ச விசேஷத்வ நிஷேத வாஸி கோபி சப்தோ த்ருச்யதே –

49–அபிச நிர்விசேஷ ஞான மாத்ரம் ப்ரஹ்மம் தச்ச ஆச்சாதிகா அவித்யா திரோஹித ஸ்வ ஸ்வரூபம்
ஸ்வகத நாநாத்வம் பச்யதி -இத்யயமர்த்தோம -ந கடதே-
திரேதாநம் நாம பிரகாச நிவாரணம் -ஸ்வ ஸ்வ ஸ்வரூபாதிரேகி பிரகாச தர்மா நப்யுபகமேந பிரகாசஸ்யைவ
ஸ்வரூபத்வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச பர்யாயம் ஞானம் நித்யம் ச ச பிரகாச -அவித்யா திரோஹித –
இதி பாலிச பாஷிதமிதம்-அவித்யா பிரகாச திரோஹித்த இதி பிரகாச உத்பத்தி பிரதிபந்தோவா வித்யமாநஸ்ய விநாஸோவா ?
பிரகாசஸ்யா நுத்பாத்யத் வாத் ஸ்வரூப நாச ஏவஸ்யாத் பிரகாச நித்யோ நிர்விகாரஸ் திஷ்டதி -இதி சேத்
சத்யாயாமப்ய வித்யாயாம் ப்ரஹ்மணி ந கிஞ்சித திரோஹிதம் இதி நாநாத்வம் பாஸ்யதி
இதி பவதாமயம் வ்யவஹார சத்ஸூ அநிர்வசநீய ஏவ —

இதுக்கு அத்வைதி வாதம்
50–நநு ச பவதாபி விஞ்ஞான ஆத்மா அப்யுப கந்தவ்ய -ச ச ஸ்வயம் பிரகாச –
தஸ்ய தேவாதி ஸ்வரூபாத்மாபிமாநே ஸ்வரூப பிரகாச திரேதாந மவஸ்யாஸ் ரயணீயம்-ஸ்வரூப ப்ரகாசே சதி
ஸ்வாத்மநி ஆகாராந்தராத்யசா யோகாதி அதோ பவதஸ்ச சமாநோ யம் தோஷ மிஞ்ச அஸ்மாக மேகஸ்மிந்நேவ ஆத்மநி
பவதுதீரிதும் துர்கடத்வம் வாதம் ஆத்மானந்த் யாப்யுபகமாத் சர்வேஷ்வயம் தோஷ பரிஹரணீய–

இதுக்கு உத்தரம்
51—அதிர உச்யதே -ஸ்வ பாவத-மல ப்ரத்யநீக அநந்த ஞானாந்த ஏகம் ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக -அதிசய அபரிமித உதார குண சாகரம்
நிமிஷ காஷ்டா கலா முஹுர்த்தாதி பரார்த்த பர்யந்த -அபரிமித வியவச்சேத ஸ்வரூப சர்வ உத்பத்தி ஸ்திதி விநாசாதி
சர்வ பரிணாம நிமித்த பூத கால க்ருத பரிணாமாஸ்ப்ருஷ்ட அநந்த மஹா விபூதி -ஸ்வ லீலா பரிகர ஸ்வ அம்ச பூத
அநந்த பத்த முக்த நாநாவித சேதன தத் போக்கிய பூத அநந்த விசித்ர விதித்த பரிணாமாஸ்பத சேதநே தர வஸ்து ஜாத
அந்தர்யாமித்வ க்ருத சர்வ சரீரத்வ சர்வ பிரகார வஸ்தாநாவஸ்திதம் பரம் ப்ரஹ்ம ச வேத்யம் தத் சாஷாத்கார ஷம
பகவத் த்வைபாயன -பராசர -வாலமீகி -மநு -யாஜ்ஞவால்க்ய -கௌதம–ஆபஸ்தம்ப -பரப்ருதி முனி கண பிரணீத-
வித்யர்த்தவாத மந்தரூப -வேத மூல -இதிஹாச புராண தர்ம சாஸ்த்ரோ உப ப்ரும்ஹண பரமார்த்த பூத அநாதி நிதந –
அவிச்சின்ன ஸம்ப்ரதாய -ருக் யஜுஸ் -சாம -அதர்வண ரூப அநந்த சாகம் வேதம்ச அப்யுகச்சதாமஸ்மாகம் கிம் நசேத்ஸ்யதி –

52-யதோக்தம் -பாகவதர் த்வைபாயநேந -மஹா பாராதே
யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்
த்வாவிமவ் புருஷவ் லோகே ஷரஸ் ச அஷர ஏவச-ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த -அஷர உச்யதே -உத்தம புருஷஸ் த்வ அந்ய
காலம் ச பசதே தத்ர ந காலஸ் தத்ர வை பிரபு -ஏதேவை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந
அவ்யக்தாதி விசேஷாந்தம் பரிணாமர்த்தி சம்யுதம்-கிரீடா ஹரேரிதம் சர்வம் சாரம் இத்யாவதார்யதாம்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் உத்பத்திர் அபி சாவ்யய–கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் –
இதி கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே இதி கிருஷ்ணஸ்ய சேஷ பூதம் இத்யர்த்த –

பகவதா பராசரேண-அப்யேவம் யுக்தம்
ஸூத்தே மஹா விபூத்யாக்யே பரே ப்ரஹ்மணி ஸ வ்த்யதே –
மைத்ரேய -பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம்ஸ் ய சேஷத-
பகவத் சப்த வாஸ்யாநி விநா ஹேயைர் குணாதிபி -ஏவமேஷ மஹா சப்தோ-மைத்ரேய பகவான் இதி பரம ப்ரஹ்ம பூதஸ்ய
வாஸூ தேவஸ்ய நாந்யக -தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமந்வித -சப்தோயம் நோநசாரேண -த்வந் யத்ரஹ்யுபசாரத-
ஏவம் பிரகாரம் அமலம் நித்யம் வியாபகம் அஷயம்-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்யம் பரமபதம்

கலா முஹுர்த்தாதி மயஸ் ச காலோ நயத்வியூதே-பரிணாம ஹேது -கிரீடதோபாலகஸ் ஏவ சேஷ்டா -தஸ்ய நிசாமய -இத்யாதி மநூநாபி
பிரசாசி தாரம் ஸர்வேஷாம் அணீ யாம்சம் அணீயசாம் -இத்யாதி யுக்தம் யாஜ்ஞ வால்க்யேந அபி
ஷேத்ரஞ்ஞஸ் யேஸ்வர ஞாநாத் வி ஸூத்தி -பரமா மதா-இத்யாதி
ஆபஸ்தம்பேநாபி பூ பிராணிநஸ் சர்வ குஹாசயஸ்ய இதி சர்வே பிராணிந குஹாசயஸ் ச பரமாத்மந
பூ புரம் சரீரம் இத்யர்த்த பிராணிந இதி ஜீவாத்மக பூத ஸங்காத —

53–நநு ச கிம் அநேந ஆடம்பரேண-சோத்யம் து ந பரிஹ்ருதம்
உச்யதே -ஏவம் அப்யுகச்சதாம் அஸ்மாகம் ஆத்ம தர்ம பூதஸ்ய சைதன்யஸ்ய ஸ்பாவிகஸ்யாபி கர்மணா
பாரமார்த்திகம் சங்கோசம் விகாசம் ச ப்ருபதாம்-ஸர்வமிதம் பரிஹ்ருதம்
பவதஸ்து பிரகாச ஏவ ஸ்வரூபமிதி பிரகாசோ ந தர்ம பூத தஸ்ய சங்கோஸோ -விகாசோ வா ந அப்யுகம்யதே
பிரகாச பிரஸ்ர அநுத் பத்திமேவ திரோதாந பூதா கர்மதயா குர்வந்தி-அவித்யா சேத் திரோதாநம் திரோதாந பூதயா தயா
ஸ்வரூப பிரகாச பூத நாச பூர்வமேவ யுக்த அஸ்மாகம் து அவித்யா ரூபேண கர்மணா ஸ்வரூப
நித்ய தர்ம பூத ஞான பிரகாச சங்குசித தேந தேவாதி ஸ்வரூப ஆத்ம அபிமாநோ பவதீதி விசேஷ —

54–யதோக்தம் -அவித்யா கர்ம சமஞாந்யா-த்ருதீய சக்திரிஷ்யதே–
யயாக்ஷேத்ர சக்திஸ் சா வேஷ்டித அந்ரூப சர்வகா -சம்சார தாபந் அகிலாந் அவாப்நோத்யதி சந்ததாத்தயா திரோஹித
த்வாச் சா சக்தி ஷேத்ரஞ்ஞ சம்ஜிதா சர்வ பூதே ஷுபூ பாலா தாரதம்யே நவர்த்ததே –
இதிநா ஷேத்ரஞ்ஞாம் ஸ்வ தர்ம பூத ஞாநஸ்ய கர்ம சம்ஞயா அவித்யயா சங்கோசம் விகாசம் ச தர்சயதி-

55–அபி ச -ஆச்சாதிகா அவித்யா ஸ்ருதிபிஸ் ச ஐக்ய உபதேச பலாச் ச ப்ரஹ்ம ஸ்வரூப திரோதாந ஹேது தோஷ ரூபா
ஆஸ்ரீயதே தஸ்யாஸ் ச மித்யா ரூபத்வேந பிரபஞ்ச வத்-ஸ்வ தர்சன மூல தோஷாபேஷத் வாத் ந சா மித்யா தர்சன மூல
தோஷஸ்யாதிதி ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத்

தஸ்யாஸ் ச அநாதித்வேபி மித்யா ரூபத்வாதேவ-ப்ரஹ்ம த்ருஸ்யத்வேந ஏவ அநாதத்வாத் தத் தர்சன மூல
பரமார்த்த தோஷா நப்யுபகமாச் ச ப்ரஹ்ம ஏவ தத் தர்சன மூலம் ஸ்யாத் தஸ்ய நித்யத்வாத் நிர்மோஷ ஏவ ப்ரஸஜ்யதே

56–அத ஏவ -இதம் அபி நிரஸ்தம் –
ஏக மேவ சரீரம் ஜீவவத் -நிரஜீவாநி இதராணி சரீராணி -யதா ஸ்வப்ந த்ருஷ்ட-நாநாவித சரீராணாம் நிர்ஜீவத்வம்-
தத்ர ஸ்வப்நே த்ருஷ்டு சரீரம் ஏவ ஜீவவத் -தஸ்ய ஸ்வப்ந வேலாயாம் த்ருஸ்ய பூத நாநாவித அநந்த சரீராணாம் நிர்ஜீவத்வமேவ –
அநேந கேநைவ அந்யேஷாம் ஜீவாநாம் சரீராணாம் ச பரிகல்பிதத்வாத் ஜீவா மித்யா பூதா இதி ப்ரஹ்மண-
ஸ்வ ஸ்வரூப வ்யதிரிக்தஸ்ய ஜீவ பாவஸ்ய சர்வ சரீராணாம் ச கல்பிதத்வாத் ஏகஸ்மிந்நபி சரீரே சரீராவத்
ஜீவ பாவஸ்ய ச மித்யா ரூபத்வாத் ஸர்வாணி சரீராணி மித்யா ரூபாணி தத்ர ஜீவ பாவஸ்ய மித்யா ரூப
இதி ஏகஸ்ய சரீரஸ்ய தத்ர ஜீவ ஸத்பாவஸ்ய ச ந கஸ்சித் விசேஷ அஸ்மாகம் து ஸ்வப்நேரு த்ருஷ்ருஸ் சரீரஸ்ய
தஸ்மிந் ஆத்ம ஸத்பாஸ்ய ச ப்ரபோத வேலாயாமபாதி தத்வாத் அந்யேஷாம் சரீராணாம் தத் கத ஜீவாநாம்
ச பாதி தத்வாத் தே சர்வே மித்யா பூதா ஸ்வ சரீர மேகம் தஸ்மிந் ஜீவ பாவஸ்ய பரமாத்த இதி விசேஷ —

(சரீரத்தில் ஒரே ஜீவன் -மற்றவை நிர்ஜீவ -அவற்றுக்கும் ப்ரவ்ருத்தி உண்டே -ஸுபரி 50 சரீரம் எடுத்தாலும் ஒரே ஜீவன் தானே –
சுக துக்க அனுபவம் எவ்வாறு –
தர்ம பூத ஞானம் இரண்டாவது ஒத்துக் கொள்ள மாட்டார்களே அத்வைதி –
ஸ்வப்னம் நித்யம் -ஒரே ஜீவன் -மற்றவை நிர் ஜீவன் உள்ள சரீரம் –
தர்ம பூத ஞானம் கொண்டே இவற்றை நிர்வஹிக்க முடியும்)

57–அபி ச கேநவா அவித்யா நிவ்ருத்தி ? சா ச கீத்ருஸீ-இதி விவேச நீயம்-
ஐக்ய ஞானம் நிவர்த்தகம் -நிவ்ருத்திஸ் ச அநிர் வசநீய ப்ரத்யநீக ஆகாரா இதி சேத் அநிர் வசநீய ப்ரத்ய நீகம் நிர்வசநீயம்-
தச்ச சத்வா ? அசத்வா ? த்வி ரூபம் வா ? கோட்யந்தரம் ந வித்யதே –

ப்ரஹ்ம வ்யதிரேகேண ஏததத்ப்யுகபமே புநரப்ய வித்யா ந நிவ்ருத்தா ஸ்யாத் ப்ரஹ்ம ஏவ சேந் நிவ்ருத்தி
ததுப்ராகப்ய விசிஷ்டமிதி வேதாந்த ஞாநாத் பூர்வ மேவ நிவ்ருத்திஸ்யாத் ஐக்ய ஞானம் நிவர்த்தகம்
ததபாவாத் சம்சார இதி வாத தர்சனம் விஹந்யேத –

(சத்தான ப்ரஹ்மமோ அசத்தான முயல் கொம்பு-ஆகாசத்தாமரை -மலடி மகன் – போல்வன துக்கம் தராதே
அநிர் வசன நீயமான மற்றவையே துக்கம் தருமவை
ப்ரஹ்மத்தை நிரூபிக்கும் பிரமாணங்களும் மித்யை என்றால் -ஸர்வ சூன்ய வாதிகளுக்கு ஒப்பர் ஆவாரே

அனைத்தும் அந்த அந்த தேச காலத்தில் சத்தியமே -அலைகள் இப்பொழுது இல்லை என்றாலும் முன்பு இருந்தது மீதியை அல்லவே )

58–கிஞ்ச நிவர்த்தக ஞாநஸ்யாப்ய வித்யா ரூபாத்வாத் -தந் நிவர்த்தக ஞானம் ஸ்வேத ஸமஸ்த பேதம் நிவர்த்ய
க்ஷணிகத்வாதேவ ஸ்வயமேவ விநஸ்யதி -தாவாநல விஷ நாசந விஷாந்தரவத் இதி சேத் ந –
நிவர்த்தக ஞாநஸ்ய ப்ரஹ்ம வ்யாதிரிக்தத்வேந தத் ஸ்வரூப தத் உத்பத்தி விநாசாநாம் மித்யா ரூபத்வாத்
தத் விநாச ரூபா அவித்யா திஷ்டத்யேவேதி தத் விநாச தர்சனஸ்ய நிவர்த்தகம் மந்தவ்யமேவ –
தாவாக்ந்யா தீநாமபி பூர்வா வஸ்தா விரோதி பரிணாம பரம்பரையா அவ்ரஜ நீயைவ —

59–அபி ச சிந் மாத்ர ப்ரஹ்ம வ்யதிரிக்த க்ருத்ஸ்ந நிஷேத விஷய ஞாநஸ்ய கோயம் ஞாதா ?
அத்யாச ரூப இதி சேத் -ந தஸ்ய நிஷேத்யதாயா நிவர்த்தக ஞாந கரமத்வாத் தத் கர்த்ருத்வ அநுப பத்தே
ப்ரஹ்ம ஸ்வரூபமேவ இதி சேத் ந ப்ரஹ்மண-நிவர்த்தக ஞானம் பிரதி ஞாத்ருத்வம் கிம் ஸ்வரூபம் உத அத்யஸ்தம் ?
அத்யஸ்தம் சேத் அத்யத்யாச தந் மூல அவித்யாந்தரம் ச நிவர்த்தக

60–அபி ச நிகில பேத நிவர்த்தகம் இதம் ஐக்ய ஞானம் கேந ஜாதம் இதி விவேசநீயம் ஸ்ருத்யைவ இதி சேத்
ந தஸ்யா ப்ரஹ்ம வ்யதிரக்த்தாயா அவித்ய பரிகல்பிதத்வாத் பிரபஞ்ச பாதக ஞான உத்பாதகத்வம் ந சம்பவதி –
ததாஹி துஷ்ட காரண ஜன்யமபி ரஜ்ஜூ சர்ப்ப ஞானம் துஷ்ட காரண ஜன்யேந -ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப –
இதி ஞாநேன நபாத்யதே ரஜ்ஜூ சர்ப்பயே வர்த்தமநே -கேநசித் ப்ராந்தேந புருஷேண ரஜ்ஜூர் இயம் ந சர்ப்ப
இதி யுக்தேபி அயம் பிராந்த இதி ஞானதே சதி தத் வசனம் ரஜ்ஜூ சர்ப்ப ஞானஸ்ய பாதகம் ந பவதி –
பயம்ச ந நவர்த்ததே-ப்ரயோஜனவத் ஸ்ரவண வேலாயாமே வஹி ப்ரஹ்ம வ்யதிரிக்தத்வேந
ஸ்ருதே ரபி பிராந்தி மூலத்தவம் ஞாதம் இதி

(ஞானம் ஒருவருக்கு உண்டாக வேணுமே
ஞானம் போல் ஞானம் பெற்ற ஜீவனும் அழியும் -நிவர்த்தகம் யாருக்கு -நிவர்த்தக ஞானத்துக்கு ஆஸ்ரயம் இல்லையே)

கிஞ்ச -நிவர்த்தக ஞானஸ்ய ஞாது தத் சாமக்ரீ பூத சாஸ்த்ரஸ்ய ச ப்ரஹ்ம வ்யதிரிக்த தயா யதி பாத்யத்வமுச்யதே
ஹந்த ஹந்த தர்ஹி பிரபஞ்ச நிவ்ருத்தே மித்யாத்வ மாபததீதி பிரபஞ்சஸ்ய ஸத்ய தாஸ்யாத்-
ஸ்வப்னந த்ருஷ்ட புருஷ வாக்யாவகத பித்ராதி மரணஸ்ய மித்யாத்வே ந பித்ராதி சத்யதாவத் –

ந நுச ஸ்வப்நே கஸ்மின் சித்பயே வருத்தமாநே ஸ்வப்நசாயாமேவ் -அயம் ஸ்வப்ந –
இதி ஞாதேஸ்தி பூர்வ பய நிவ்ருத்தி த்ருஷ்ட்வா தத்வ தத்ராபி சம்பவதி இதி நைவம் ஸ்வப்ந வேலாயாமேவ
ஸோ பி ஸ்வப்ந -இதி ஞாதே சாதி புனர் பய நிவ்ருத்திரேவ த்ருஷ்டேதி ந கஸ்சித் விசேஷ ஸ்ரவண
வேலாயாமேவ ஸோ அபி ஸ்வப்ந இதி ஞாத மேவேத் யுக்தம் —

61–யதபி சேத முக்தம் -ப்ராந்தி பரிகல்பிதத்வேந மித்யா ரூபமபி சாஸ்திரம் – சத் அத்விதீயம் ப்ரஹ்ம –
இதி போதாயதி-தஸ்ய சதோ ப்ரஹ்மணோ விஷயஸ்ய பஸ்ஸாத் ந பாத ந தர்சந நாத் ப்ரஹ்ம ஸூஸ்திதமேவ
இதி ததயுக்தம் -ஸூந்ய மேவ தத்வம் -இதி வாக்யேந தஸ்யாபி பாதிதத்வாத் இதம் ப்ராந்தி மூலம் வாக்யம்
இதி சேத் -சத் அத்விதீயம் ப்ரஹ்ம -இதி வாக்யமபி ப்ராந்தி மூலமிதி த்வயைவ யுக்தம் பஸ்ஸாத்த
ந பாத்தா தர்சனம் து சர்வ ஸூந்ய வாக்ய ஸ்யைவவேதி விசேஷ –
கிஞ்ச தத்வ மஸ்யாதி வாக்யம் ந பிரபஞ்சஸ்ய பாதகம் பிராந்தி மூலத்வாத் ப்ராந்தப்ர யுக்த ரஜ்ஜூ சர்ப்ப பாதக வாக்யவத்

62–சர்வ ஸூந்ய வாதிந ப்ரஹ்ம வ்யதிரிக்த வஸ்து மித்யாத்வ வாதிநஸ் ச ஸ்வ பஷ சாதனா பிரமாண பாரமார்த்யா
நப்யுபகமேந அபியுக்தை பாதாநதிகார ஏவ ப்ரதிபாதித –ஸர்வதாசது பாயாநாம் பாதமார்க்க ப்ரவர்த்ததே
அதி காரோ அநுபாயத்வாத் ந பாதே ஸூந்ய வாதிந இதி –

(ந சத் ந அஸத் ந ஸத்அஸத் -மாத்மிகன்-ஸர்வ சூன்ய வாதம் கண்டிக்க விரும்பாமல் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் -பிரசன்ன பவுத்தர் )

(விஷ நிவ்ருத்தி மருந்து விஷத்தை நிவர்த்தித்து தானும் நிவர்த்தியாவது போல்
ஞானம் அவித்யயை நிவர்த்தத்த பின்பு தானும் அழிந்து -ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் என்பர்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறு பட்டதா கேள்வி வராதே -)

63–அபி ச ப்ரத்யக்ஷ த்ருஷ்டஸ்ய பிரபஞ்சஸ்ய மித்யாத்வம் கேந ப்ரமாணேந சாத்யதே-
ப்ரத்யக்ஷஸ்ய தோஷ மூலத்வேந அந்யதா ஸித்தி சம்பவாத் -நிர்தோஷம் சாஸ்திரம் அநந்யதா சித்தம் ப்ரத்யக்ஷஸ்ய பாதகம்
இதி சேத் கேந தோஷேண ஜாதம் ப்ரத்யக்ஷம் அநந்த பேத விஷயம் இதி வக்தவ்யம் –
அநாதி பேத வாசநாக்ய தோஷ ஜாதம் ப்ரத்யக்ஷம் இதி சேத் -ஹந்த-தர்ஹி அநேந ஏவ தோஷேண ஜாதம் ஸாஸ்த்ரம பீதி
ஏக தோஷ மூலத்வாத் ஸாஸ்த்ர ப்ரத்யக்ஷயோ -ந பாத்ய பாதக பாவ ஸித்தி
ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம்
சாஸ்திரம் து பிரத்யஷாத் யபரிச்சேத்ய சர்வாந்தராத்மத்வ சத்யத்வாத் அநந்த விசேஷேண விஸிஷ்ட ப்ரஹ்ம ஸ்வரூப
தத் உபாஸநாத் யாராதன பிரகார -தத் பிராப்தி பூர்வக தத் பிரசாத லப்ய பல விசேஷ ததநிஷ் கரண மூல நிக்ரஹ விசேஷ விஷயம் –
இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத
அநதி நிதன -அவிச்சின்ன பாட ஸம்ப்ரதாயதாத் யநேக குண விஸிஷ்டஸ்ய சாஸ்த்ரஸ்ய பலீயஸ்த்வம் வததா ப்ரத்யக்ஷ
பாரமார்த்ய மவஸ்யம் அப்யுப கந்தவ்யம் இதி அலமநேந ஸ்ருதி சத விததிவாத வேக பராஹத
குத்ருஷ்ட்டி துஷ்ட யுக்தி ஜால தூல நிரசநேன இதயுபகம்யதே —

(யாருக்கு உண்டாகிறது என்று கொண்டால் கூட நிவர்த்தக ஞானம் எதனால் உண்டாகிறது -அடுத்த கேள்வி
ப்ரத்யக்ஷத்தாலயா ஸ்ருதியாலாயா கேள்வி வருமே-ஸ்வயம் பிரகாசம் இல்லையே –
ஆகவே ப்ரமாணத்தால் தானே உண்டாகி இருக்க வேண்டும்
இதுக்கு ஸ்ருதி பிரமாணம் சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐக்யம் போதக வாக்கியங்கள் என்பர்

ப்ரத்யக்ஷத்தால் பலவாக காண்கிறோமே என்னில்-தேக வாசனை -இந்திரியங்கள் குறையே காரணம் என்பர்-ஸ்ருதி ஒருவர் சொல்ல காதால் நாம் கேட்க்கிறோமே அதுவும் மித்யை -துஷ்ட இந்திரிய பலம் அர்த்த பிரதிபத்தி புத்தி மாறலாம் -ஸாஸ்த்ரம் நிர்தோஷமாக இருந்தாலும்- ஸ்வ பாவ தோஷங்கள் உண்டாகும் அன்றோ-ப்ரத்யக்ஷத்துக்கும் தோஷம் சொல்லக் கூடாது என்பதே நம் சம்ப்ரதாயம்  -ஆகாசவாயவ் வாதி பூத தாதாரப்த சப் ஸ்பர்சாதி யுக்த மனுஷ்யத் வாதி சமஸ்தான ஸம்ஸ்தித பதார்த்த க்ராஹி ப்ரத்யக்ஷம் -இதி ஸாஸ்த்ர பிரத்யஷயோ ந விரோத-)

(பேதம் ப்ரத்யக்ஷம் நிரூபிக்கும் அபேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம்
சரீராத்மா பாவம் ஒன்றே சுருதி விஷயம் ஆகும் -பிரதிதந்தரம் நம் சம்பிரதாயத்துக்கு)

பாஸ்கர மத கண்டனம்
64–த்விதீயே து பக்ஷே உபாதை ப்ரஹ்ம வ்யதிரிக்த -வஸ்த்வாந்தராந் ப்யுபகமாத் ப்ரஹ்மண்யேவா உபாததி
சமசர்க்காத் ஓவ்பாதிகாஸ் சர்வே தோஷா ப்ரஹ்மண்யேவாபவேயு
ததஸ் ச அபஹதபா ப் மத்வாதி நிர்தோஷ ஸ்ருத யஸ் சர்வா விஹந்யந்தே -யதா கடாகாசதே
பரிச்சின்னதயா மஹா ஆகாசாத் வை லக்ஷண்யம் பரஸ்பர பேதஸ் ச த்ருச்யதே -தத்ரஸ்தா தோஷாவா குணா வா
அநவச் சிந்நே மஹா ஆகாஸே ந சம்பந்யந்தே -ஏவம் உபாதை க்ருத பேத வ்யவஸ்தித ஜீவ கதா தோஷா
அநு பஹிதே பரே ப்ரஹ்மணி ந சம்பந் யந்தே இதி சேத் நைததுபத்யதே நிரவயவஸ்ய ஆகாசஸ்ய அநவச் சேத் யஸ்ய கடாதிபி –
சேதா சம்பவாத் -தேநை வாகாசேந கடாதயஸ் ஸம்யுக்தா இதி ப்ராஹ்மண உபாயச்சேத் யத்வாத் ப்ரஹ்ம ஏவ உபாதி ஸம்யுக்தம் ஸ்யாத் –
கட ஸம்யுக்தாகா ச பிரதேச அந்யஸ் மாதாகாச ப்ரதேசாத் பித்யதே-இதி சேத் ஆகாசஸ்யை கஸ்யைவ பிரதேச பேதேநே
கடாதி ஸம்யோகாத்-கடாதவ் கச்சதி தஸ்ய ச பிரதேசஸ்ய அநியம இதி ப்ரஹ்மண்யேவ
உபாதி ஸம்சர்க்க ஷணே ஷணே பந்தோ மேஷஸ் ச பவதீதி சந்த பரிஹஸந்தி–

(உபாதி சம்சர்க்கம் -ப்ரஹ்மத்துக்கு அபஹத பாப்மத்வாதிகள் சுருதி விருத்தம்
அபரிச்சின்ன ஆகாசம் -நடுவில் கடம் வைத்தால் கடாகாசம் -தோற்ற -இதன் குறைகள் மஹா ஆகாசத்தில் காணப்பட வில்லை
ஜீவர்கள் கடாகாசம் போல் -சேதிக்க முடியாதே -ஆகாசம் ஸூஷ்மம் -கடம் ஸ்தூலம் சேதிக்க முடியாதே -அதே போல் ப்ரஹ்மம் ஸூசமம் -உபாதி – ஸ்தூலம்

கர்மாக்கள் தர்ம பூத ஞான த்வாரா ஆத்மாவில் -ப்ரஹ்மத்துக்கு சங்குசித ஞானம் இல்லையே-விகார அநர்ஹம் -)

65–நிரவயவஸ் யாகாசஸ் யைவ ஸ்ரோத்ர இந்த்ரியத்வேபி இந்திரிய வ்யவஸ்தாவத்
ப்ரஹ்மண்யபி வ்யவஸ்தா உபபத்யதே இதி சேத்
ந வாயு விசேஷ ஸம்ஸ் க்ருத கர்ண பிரதேச ஸம்யுக்தஸ்யைவ ஆகாச பிரதேசஸ்ய ஸஸ்ய இந்த்ரியத்வாத்
தஸ்ய ச பிரதேசாந்த்ராத் பேதா நியமே பி இந்திரிய வ்யவஸ்தா உபபத்யதே-
ஆகாசஸ்யது ஸர்வேஷாம் சரீரேஷு கச்சத்ஸூ அநியமேந சர்வ பிரதேச ஸம்யோக இதி
ப்ரஹ்மண்யாபி உபாதி ஸம்யோக பிரதேசா நியம ஏவ —

(ஆகாசம் -சப்த குணகம் -காதில் நுழைந்து -ஸ்தோத்திரிய இந்திரியம் உணரும் -ஸம்யுக்த-ஸம்யோக)

66–ஆகாசஸ்ய ஸ்வரூபேண ஏவ ஸ்ரோத்ரிந்த் ரியத்வம் அப்யுபகம்யாமபி இந்திரிய வ்யவஸ்தா யுக்தா பரமார்த்த
தஸ்து ஆகாச நஸ்ர இந்திரியம் –
வைகாரிகாத் அஹங்காராத் ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஹி வைதிகா யதோக்தம் பகவதா பராசரரேண-
தைஜசாநி இந்த்ரியாண்யாஹு -தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் ஸாத்ர தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி அயமர்த்த வைகாரிக தேஜச பூதாதி இதி த்ரிவிதோ அகங்கார -ச ச க்ரமாத் சாத்விக ராஜஸ தமசஸ் ச
தத்ர தாமஸாத் பூதாதே ஆகாசாதீநி பூதாநி ஜாயந்தே இதி ஸ்ருஷ்ட்டி க்ரம முக்த்வா -தைஜஸாத் ராஜஸ அஹங்காராத்
ஏகாதச இந்திரியாணி ஜாயந்தே இதி ஸ்வ மத முச்யதே -தேவா வைகாரிகா ஸ்ம்ருதா
இதி தேவா இந்திரியாணி ஏவம் ஆஹங்காரி காணாம்

இந்திரியாணாம் பூதைஸ் சாப்யாயநம் மஹா பாராதே உச்யதே
பவ்தீகத்வேபி இந்திரியாணாம் ஆகாசாதி பூத விகாரத்வதேவ ஆகாசாதி பூத பரிணாம விசேஷா –
வ்யவஸ்திதா ஏவ சரீரவத் புருஷானாம் இந்திரியாணி பவந்தி இதி -ப்ரஹ்மணி அச்சேத்யே நிரவயவே-
நிர்விகாரேது அநியமேந அநந்த ஹேயோபாதி ஸம் சேர்க்க தோஷா துஷ் பரிஹர ஏவ இதி –
ஸ்ரத்ருதாநாநாமேவ அயம் பஷ இதி ஸாஸ்த்ர விதோ ந பஹுமந்யந்தே –
ஸ்வரூப பரிணாம அப்யுகமாத் அதிகார ஸ்ருதி பாத்யதே நிரவத்யதா ச ப்ரஹ்மண-சக்தி பரிணாம –
இதி சேத் கேயம் சக்திரித் யுச்யதே ? கிம் ப்ரஹ்ம பரிணாம ரூபா ? உத ப்ரஹ்மணோ அநந்யா கா அபி ?
இதி உபய பக்ஷே அபி ஸ்வரூப பரிணாம அவர்ஜனீய ஏவ —

யாதவ பிரகாச பக்ஷம் மறுப்பு
67–த்ருதீயே அபி பக்ஷே ஜீவ ப்ரஹ்மணோ பேதவதபேதஸ்ய சாப்யுபகமாத்-தஸ்ய ச தத் பாவாத்
ஸுவ்பரி பேதவத் ஸ்வ அவதார பேதவச் ச ஸர்வஸ்ய ஈஸ்வர பேதத்வாத் சர்வே ஜீவ கதா தோஷா தஸ்யைவ ஸ்யு —

(இவரும் பரிணாம வாதி -கீழ் உபாதியால் பரிணாமம் -இவர்கள் ஸ்வரூபத்தால் பரிணாமம் என்கிறார்கள்
நாமோ ஸ்வ பாவ -சரீரம் மாத்திரம் பரிணாமம்)

68–ஏகத் யுக்தம் பவதி –
ஈஸ்வர ஸ்வரூபேண ஏவ ஸூர நர திர்யக் ஸ்தாவராதி பேதேந அவஸ்தித இதி ஹி ததாத்மகத்வ வர்ணனம் க்ரியதே ?
ததா சதி ஏக ம்ருத் பிண்டாரப்த கட சராவாதி கதாந் யுதகாஹரணாதீதி சர்வ கார்யாணி யதா தஸ்ய ஏவ பவந்தி
ஏவம் சர்வ ஜீவ கத ஸூக துக்காதி சர்வம் ஈஸ்வர கதமேவ ஸ்யாத் இதி கட கரகாதி சமஸ்தாநா நுப யுக்த
ம்ருத்ரவ்யம் யதா கார்யாந்தராநந் விதம் ஏவ மேவ ஸூர பஸூ மனுஜாதி-ஜீவத்வ அநுப யுக்தேஸ்வர
சர்வஞ்ஞ ஸத்ய ஸங்கல்பத்வாதி குணாகர இதி சேத் சத்யம் -ச ஏவ ஈஸ்வர ஏகாநாம் சேந கல்யாண குணாகரக
ச ஏவ ச அந்யே நாம் சேந ஹேய குணாகர இத்யுக்தம் த்வயோரம் சயோ ஈஸ்வரத்வா விசேஷாத் —

(கடத்தால் தீர்த்தம் கொண்டு வரலாம்
ம்ருத் பண்டத்தால் முடியாதே
காரிய பதார்த்த குணங்கள் எல்லாம் காரணத்தில் இருக்க வேண்டியது இல்லையே
ஜீவ இன்ப துன்பங்கள் ஈஸ்வரனுக்கு இருக்க வேண்டியது இல்லை
ஆகார பேதம் -பிண்ட ஆகாரம் குட அகாரம்
ப்ரஹ்மம் நிர் அவயவம் -ஸ்வரூபமே பரிமாணம் என்பர் -ஆகவே இந்த த்ருஷ்டாந்தம் இதுக்கு சரி இல்லை என்பர்)

த்வாவம் ஸவ்யவஸ்திதவ் இதி சேத் கஸ்தேந லாப ? ஏகஸ்யைவ ஏகாநாம்சேந நித்ய துக்கித்வாத் அம்சாந்தரேண
ஸூகித்வமபி ந ஈஸ்வரத்வாய கல்பதே-யதா தேவதத்தஸ்ய ஏகஸ்மிந் ஹஸ்தே சந்தந பங்காநுலேப-
கேயூர கடக அங்குலீயக அலங்கார ஏதஸ்யை வாந் யஸ்மிந் ஹஸ்தே முத்கராபிகாத காலாநலஜ் வாலாநு பிரவே சஸ்ஸ
தத்வதேவ ஈஸ்வரஸ்ய ஸ்யாத் இதி ப்ரஹ்ம ஞான பஷாதபி பாபீயாநயம் பேதாபேத பஷ அபரிமித துக்கஸ்ய
பாரமார்த்திகத்வாத் ஸம்ஸாரிணாம் அநந்தத்வேந துஸ்தரத்வாச் ச தஸ்மாத் விலக்ஷனோயம் ஜீவாம் ச-
இதி சேத் ஆகதோ சி தர்ஹி மதீயம் பந்தாநம்
ஈஸ்வரஸ்ய ஸ்வரூபேண தாதாம்ய வர்ணநே ஸ்யாத் அயம் தோஷ ஆத்ம சரீர பாவேந து தாதாம்ய ப்ரதிபாதநே
நகஸ்சித் தோஷ -ப்ரத்யுத நிகில புவந நியமநாதி மஹாந் குண கண ப்ரதிபாதிதோபவதி சாமநாதி கரண்யம் ச முக்ய வ்ருத்தம்

69–அபிச ஏகஸ்ய வஸ்துநோஹி பிந்நாபிந்நத்வம் விருத்தத்வாத் ந சம்பவதீதி யுக்தம்
கடஸ்ய படாதி பிந்நத்வே சதி தஸ்ய தஸ்மிந் ந பவா -அபிந்நத்வே சதி தஸ்ய ச பாவ -இதி ஏகஸ்மிந்தேசே ச ஏகஸ்ய ஹி
பதார்த்தஸ்ய யுகபத ஸத்பாவ-அ சத் பாவச் ச விருத்த ஜாதயாத்மநா பாவ வயக்தாத்மநா ச அபாவ இதி சேத்
ஜாதே முண்டேந வ்யக்தயா சா பேத சதி கண்டே முண்டஸ் யாபி ஸத்பாவ பிரசங்க கண்டேந சஜாதேஸ்ய பிந்நத்வே
ஸத்பாவ பிந்நத்வே அசத் பாவ அஸ்வே மஹிஷதஸ்யேவேதி விராதோ துஷ் பரிகார ஏவ

70–ஜாத்யாதே வஸ்து சமஸ்தாந தயா வஸ்துந பிரகாரத்வாத் -பிரகாரப் பிரகாரினோச் ச பதார்த்தாந்தரத்வம்
பிரகாரஸ்ய ப்ருதக் சித்ய நர்ஹத்வம்-ப்ருதக் கநு பலம் பஸ் ச தஸ்ய ச சமஸ்தாநஸ்ய ச
அநேக வஸ்துஷு பிரகார தயா அவஸ்திதிஸ் ச இத்யாதி பூர்வமேவ யுக்தம் –

71–சோயம் இதி புத்தி பிரகார ஐக்யாத் அயமபி தண்டீ இதி புத்தி வத் -அயமேவ சஜாத்யாதி பிரகாரோ வஸ்துநோ பேத
இத் யுச்யதே தத் யோக ஏவ வஸ்துந பிந்நம் இதி வ்யவஹார ஹேது ரித்யர்த்த ச ச வஸ்து நோ பேத வ்யவஹார ஹேது
ஸ்வஸ்ய சம்வேதந வத் யதா சம்வேதநம் வஸ்துநோ வ்யவஹார ஹேது -ஸ்வஸ்ய வ்யவஹார ஹேதுஸ் ச பவதி –
அத ஏவ சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் பேத க்ராஹி இத்யாதிவாதா நிரஸ்தா ஜாத்யாதி சம்ஸ்தி ததஸ்யைவ
சமஸ்தாந ரூப ஜாத்யாதே பிரதியோக்ய பேஷயா பேத வ்யவஹார ஹேதுத்வாச் ச ஸ்வரூப பரிணாம தோஷஸ் ச
பூர்வமே வோக்த இதி மதாந்தரக் கண்டநாக்ய பூர்வ பாக ஸமாப்த —

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் ஸங்க்ரஹ பாசுரமும் ஸ்லோகமும் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி—

February 20, 2020

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

————————————————————————–

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — –

ரகஸ்ய த்ரய சாரம் -32-அத்தியாயங்கள்
குரு பரம்பரா சாரம்

முதல் பாகம்-அர்த்த அனுசார பாதம் -22-அத்தியாயங்கள் –
உபோத்காதம் -தொடங்கி-அதிகாரம் – பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் வரை –

இரண்டாம் பாகம்-ஸ்த்ரீகரண பாதம் –நான்கு அத்தியாயங்கள் –23/24/25/26 -அத்தியாயங்கள்

பத வாக்ய யோஜனா பாதம் -திருமந்திரம் த்வயம் சரம ஸ்லோகம் அடுத்த மூன்றும் –
அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் –
அதிகாரம் -28–ஸ்ரீ த்வயதிகாரம் –
அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் –

நான்காவது பாதம் – சாம்ப்ரதாய அர்த்தங்கள் –
அடுத்த மூன்றும் -ஆச்சார்ய -சிஷ்ய -சரம அத்யாயம் தொகுத்து அருளுகிறார் –
சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் -ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் -அதிகாரம் -30 –
சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –அதிகாரம் -31-
அதிகாரம்- 32–நிகமன அதிகாரம்-

—————

அதிகாரம் – 1–உபோத்காத அதிகாரம் —
அதிகாரம் – 2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –
அதிகாரம் – 3-பிரதான ப்ரதி தந்திர அதிகாரம் –
அதிகாரம் – 4-அர்த்த பஞ்சக அதிகாரம் –
அதிகாரம் – 5-தத்வ த்ரய சிந்தன அதிகாரம் —

அதிகாரம் – 6-பரதேவதா பாரமார்த்த்ய அதிகாரம் –
அதிகாரம் – 7-முமுஷூத்வ அதிகாரம் –
அதிகாரம் – 8-அதிகாரி விபாக அதிகாரம் –
அதிகாரம் – 9-உபாய விபாக அதிகாரம்-
அதிகாரம் – 10-பிரபத்தி யோக்ய அதிகாரம்-

அதிகாரம் – 11-பரிகர விபாக அதிகாரம்-
அதிகாரம் – 12-சாங்க ப்ரபதன அதிகாரம்-
அதிகாரம் – 13-க்ருதக்ருத்ய அதிகாரம்-
அதிகாரம் – 14-ஸ்வ நிஷ்ட்டாபிஜ்ஞஅதிகாரம்
அதிகாரம் – 15-உத்தர க்ருத்ய அதிகாரம்-

அதிகாரம் – 16-புருஷார்த்த காஷ்ட்ட அதிகாரம் –
அதிகாரம் – 17-சாஸ்த்ரீய நியமன அதிகாரம் –
அதிகாரம் – 18-அபராத பரிஹார அதிகாரம் –
அதிகாரம் – 19–ஸ்தான விசேஷ அதிகாரம் –
அதிகாரம் – 20-நிர்ணய அதிகாரம்-

அதிகாரம் – 21-கதி விசேஷ அதிகாரம் –
அதிகாரம் – 22-பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம் –
அதிகாரம் – 23-சித்த உபாய சோதன அதிகாரம் –
அதிகாரம் – 24-சாத்ய உபாய சோதன அதிகாரம்-
அதிகாரம் – 25-பிரபாவ வ்யவஸ்த அதிகாரம் –

அதிகாரம் – 26-பிரபாவ ரஷ அதிகாரம் –
அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் –
அதிகாரம் -28–ஸ்ரீ த்வயதிகாரம் –
அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் –
சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் -ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் -அதிகாரம் -30 –

சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –அதிகாரம் -31-
அதிகாரம்- 32–நிகமன அதிகாரம்-

—————

சந்த்ருஷ்ட சாரவாக்வித் ஸ்வ பர நிசித நீ சங்கஜித் நைக சமஸ்த
ஸ்பஷ்ட உபாய அதிகிந்ன சபரிகர பரந்யாச நிஷ்பன்ன க்ருத்ய
ஸ்வ அவஸ்தா அர்ஹம் சபர்யாவிதம் இஹ நியதம் வ்யாகசம் க்வாபி பிப்ரத்
நிர்முக்த ஸ்தூல ஸூ ஷ்ம பிரகிருதி அநுபவதி அச்யுதம் நித்யம் ஏக —

சந்த்ருஷ்ட -முதல் அதிகாரம் -ஒரு அதிகாரியானவன் எம்பெருமானால் கடாஷிக்கப்பட்டு
சாரவாக்வித்-இரண்டாம் அதிகாரம் -சாரமான ரகஸ்ய த்ரயத்தார்த்தத்தை அறிந்தவனாக
ஸ்வ பர நிசித நீ சங்கஜித் நைக சமஸ்த -3/4/5/6 /7அதிகாரங்கள் -தத்வத்ரய ஞானம் தெளிந்து
உலகியல் இன்ப பற்றுதல்களை வென்றவனாக
ஸ்பஷ்ட உபாய அதிகிந்ன சபரிகர பரந்யாச நிஷ்பன்ன க்ருத்ய-9/10/11/12/13 -அத்யாயங்கள் —
பக்தி பிரபத்தி இவற்றைக் கைக் கொண்டு -உபாயங்கள் பற்றிய தெளிந்த ஞானம் கொண்டு –
மற்ற உபாயங்களைக் கைக் கொள்ள வலிமை அற்று வருந்தி அங்கங்களுடன் கூடிய பரந்யாசத்தால்
தன கார்யம் நிறைவேற்றப் பட்டவனாக
ஸ்வ அவஸ்தா அர்ஹம் -14-அத்யாயம் -தன நிஷ்டைக்கு ஏற்றதான கைங்கர்ய விதி முறைகளை –
சபர்யாவிதம் இஹ நியதம் வ்யாகசம் க்வாபி பிப்ரத் -15/16/17/18–இந்த சம்சார நிலையில் உள்ள போது
சாஸ்த்ரங்களில் விதிக்கப் பட்ட படியும் -அபராதம் ஏதும் இல்லாமலும் -ஒரு திவ்ய தேசத்தில் இயற்றுபவனாக
நிர்முக்த ஸ்தூல ஸூஷ்ம பிரகிருதி அநுபவதி அச்யுதம் நித்யம் ஏக –19/20/21/22–ஸ்தூலம் மற்றும் ஸூ ஷ்ம சரீரம் விட்டவனாக
எம்பெருமானை எப்போதுமே அனுபவித்த படி உள்ளான் -என்றதாயிற்று –

———————-

குரு பரம்பரா சார விஸ்தாரம்

குருப்யஸ் தத் குருப்யச்ச நமோவாக மதீமகே
வ்ருணீமகே ச தத்ரா ஆத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ-

பொய்கை முனி பூதத்தார் பேயாழ்வார்
தண் பொருநல் வரும் குருகேசன் விட்டு சித்தன்
துய்ய குலசேகரன் நம் பாண நாதன்
தொண்டர் அடிப்பொடி மழிசை வந்த சோதி
வையம் எல்லாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும்
மங்கையர் கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே –1-

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில்
இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில்
தன் பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தில் உணர்த்துதலில் தன்மை யாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும்
தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே—2-

1–இன்பத்தில் -அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு -ஆழ்வார் பெற்ற இன்பம் இவருக்கு நம்பி என்றக்கால்
2–இறைஞ்சுதல்- இல் -அவரையே இறைஞ்சி -ரக்ஷகன் உபாய உபேயம் தேவி மற்று அறியேன் -மேவினேன் அவர் பொன்னடி மெய்மையே
மால் தனில் வேறு தெய்வம் உளதோ என்றார் அவர்
3–இசையும் பேற்றில் –விரும்பி அடையும் புருஷார்த்தம் -தேவ பிரானுடை கரிய கோல திரு உருக் காண்பன் நான் -அவர் காண வாராய் என்று கதற
-பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியவனாய் -அடியேன் பெற்ற நன்மையே இது –
4–இகழாத பல் உறவு இல் பழித்தல் -நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -புன்மையாக் கருதுவர் ஆதலால் —
இகழ்வதே பற்றாசாக -பல் உருவு -அன்னையாய் அத்தனையாய் –என்னை ஆளுடைய நம்பி
5—இராகம் மாற்றில் –பற்று -தன் பக்கம் திருப்பி -மற்றை நம் காமங்கள் மாற்று –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னர்
-மாதரார் வலையில் பட்டு அழுந்துவேனை –தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அவன் –
6–தன் பற்றில் –ப்ரீதி கார்ய கைங்கர்யம் -கைவல்யம் குழியில் பற்று அற்று விழக் கூடாதே –
இறை பற்றி அற்றதில் பற்று அறுத்து – இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் பாட அருளி –
7–வினை விலக்கில்-காரி மாறப் பிரான் –கண்டு கொண்டு–
கண்டார் பின்பு கொண்டார் -கொண்ட வாறே -பண்டை வல்வினை -பாற்றி அருளினான் –
8–தகவோக்கத்தில் -ஓங்குதல் ஒக்கம்- வீங்குதல் வீக்கம் போலே- தகவினால் –
அரு மறை பொருளை அருளினான் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் –
9–தத்துவத்தில் உணர்த்துதலில் –மிக்க வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடினான் -நெஞ்சினுள் நிறுத்தினான் –
10–தன்மை யாக்கில் –மரங்களும் இரங்கும் வகை -ஊரும் நாடும் பேரும் பாடும் படி -ஆக்கி அருளினான் –
ஆக பத்து உபகாரங்கள் –

அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க -அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு –
துன்பற்ற மதுர கவி தோன்றக் காட்டும் -துன்பு அற்ற -சம்சய விபர்யயம் இல்லாமல் –
நீக்கமில் அடியார் -அக்குளத்தில் மீன் -அடிமை தலை நின்ற –
கோதில் அடியார் -அநல சத்ருக்நன் -தொல் வழியே நல் வழிகள் துணிவார்கட்கே–

என்னுயிர் தந்து அளித்தவரை சரணம் புக்கி யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின் அருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுததத் திரு மகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே —

ஏதே மக்யம் அபோட மன்மத சார உன்மாதாய நாதா தய
த்ரயந்த ப்ரதி நந்த நீய விவித உதந்தா கதந்த்ரம் இக
ஸ்ரத்தா தவ்ய சரண்ய தம்பதி தயா திவ்யாபகா வ்யாபகா
ஸ்பர்த்தா விப்லவ விப்ரலம்ப பதவே வைதேசிகா தேசிகா —

நீள வந்து இன்று விதி வகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னம் வினைவுடம்பொன்றி விழுந்து உழலாது
ஆளவந்தார் என என்று அருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தார் அடியோம் படியோம் இனியல் வழக்கே

காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவ நெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே —

——————-

அதிகாரம் 1–உபோத்காத அதிகாரம்

திருவுடன் வந்த செழு மணி போல் திருமால் இதயம்
மருவு இடம் என்ன மலரடி சூடும் வகை பெறும் நாம்
கருவுடன் வந்த கடுவினை யாற்றில் விழுந்து ஒழுகாது
அருவுடன் ஐந்து அறிவார் அருள் செய்ய அமைந்தனரே –

கர்ம அவித்யாதி சக்ரே பிரதிபுருஷ மிஹா நாதி சித்ர ப்ரவாஹ
தத் தத் காலே விபக்திர் பவதி ஹி விவிதா சர்வ சித்தாந்த சித்தா
தல் லப்த ஸ்வாவாகாச ப்ரதபகுரு க்ருபா ம்ருஹ்ய மாண கதாசித்
முக்தைச்வர்ய அந்த சம்பத் நிதிரபி பவிதா கச்சிதித்தம் விபச்சித் –

அதிகாரம் 2-சார நிஷ்கர்ஷ அதிகாரம்

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

———–

அதிகாரம் -3-பிரதான ப்ரதி தந்திர அதிகாரம் –

நிலை தந்த தாரகனாய் நியமிக்கும் இறைவனுமாய்
இலது ஓன்று எனா வகை எல்லாம் தனது எனும் எந்தையுமாய்
துலை ஓன்று இல்லை என நின்ற துழாய் முடியன் உடம்பாய்
விலை இன்றி நாம் அடியோம் என்று வேதியர் மெய்ப் பொருளே

யதி ஏதம் யதி சார்வ பௌம கதிதம் வித்யாத் அவித்யாதம
பிரத்யூஷம் பிரதிதந்த்ரம் அந்திமயுகே கச்சித் விபச்சித்தம
தத்ர ஏகத்ர ஞாடிதி உபைதம் விலயம் தத்தன்மத ஸ்தாபனா
ஹேவாக பிரதமான ஹைதுககதா கல்லோல கோலாஹல-

————–

அதிகாரம் 4- அர்த்த பஞ்சக அதிகாரம் —

பொருள் ஓன்று என நின்ற பூ மகள் நாதன் அவனடி சேர்ந்து
அருள் ஒன்றும் அன்பன் அவன் கொள் உபாயம் அமைந்த பயன்
மருள் ஒன்றிய வினை வல் விலங்கு என்று இவை ஐந்து அறிவார்
இருள் ஓன்று இலா வகை என் மனம் தேற இயம்பினரே —

ப்ராப்யம் ப்ரஹ்ம சமஸ்த சேஷி பரமம் ப்ராப்தா அஹம் அஸ்ய உசித
ப்ராப்தி தாய தன க்ரமாத் இஹ மம ப்ராப்தா ச்வத ஸூ ரிவத்
ஹந்த ஏநாம் அதிவ்ருத்தவான் அஹம் அஹமத்யா விபத்யாஸ்ரய
சேது சம்ப்ரதி சேஷி தம்பதி பரந்யாசஸ்து மே சிஷ்யதே —

—————-

அதிகாரம் -5 -தத்வ த்ரய சிந்தன அதிகாரம்

தேற இயம்பினர் சித்தும் அசித்தும் இறையும் என
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் வினை உடம்பில்
கூறுபடும் கொடு மோகமும் தான் இறையாம் குறிப்பும்
மாற நினைந்து அருளால் மறை நூல் தந்த வாதியரே–

ஆவாப உத்வா பதஸ்ஸ் யு கதி கவிதீ சித்ரவத்தத் ததர்தேஷூ
ஆனந்த்யா தஸ்தி நாஸ்த்யோர நவதி குஹ நா யுக்தி காந்தா க்ருதாந்தா
தத்த்வா லோ கஸ்து லோப்தும் பிரபவதி சஹஸா நிஸ் சமஸ்தான் சமஸ்தான்
பும்ஸ்த்வே தத்வேந த்ருஷ்டே புனரபி ந கலு பிராணிதா ஸ்தாணு தாதி —

————–

அதிகாரம் -6-பர தேவதா பாரமார்த்த்ய அதிகாரம்

வாதியர் மன்னும் தருக்கச் செருக்கின் மறை குலையச்
சாது சனங்கள் அடங்க நடுங்கத் தனித் தனியே
ஆதி எனா வகை ஆரண தேசிகர் சாற்றினார் -நம்
போதமரும் திரு மாதுடன் நின்ற புராணனையே-

ஜனபத புவ நானி ஸ்தான் ஜைத்ராச நஸ்தேஷு
அநு கத நிஜவார்த்தம் நச்சரேஷூ ஈச்வரேஷூ
பரிசித் நிகமாந்த பஸ்யதி ஸ்ரீ சஹாயம்
ஜகதி கதிம் அவித்யா தந்துரே ஜந்து ரேக-

————

அதிகாரம் -7- முமுஷூத்வ அதிகாரம்

நின்ற புராணன் அடி இணை ஏந்தும் நெடும் பயனும்
பொன்றுதலே நிலை என்றிடப் பொங்கும் பவக் கடலும்
நன்று இது தீயது இது என்று நவீன்ற்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும் பயனே –

விஷமது பஹிஷ் குர்வன் தீரோ பஹிர் விஷயாத்மகம்
பரிமிதரச ஸ்வாத்ம ப்ராப்தி ப்ரயாச பராங்முக
நிரவதி மஹா நந்த ப்ரஹ்மாநுபூதி குதூஹலீ
ஜகதி பவிதா தைவாத் கச்சித் ஜிஹாசித சம்ஸ்ருதி —

———

அதிகாரம் -8- அதிகாரி விபாக அதிகாரம் –

வேண்டும் பெரும் பயன் வீடு என்று அறிந்து விதி வகையால்
நீண்டும் குறுகியும் நிற்கும் நிலைகளுக்கு ஏற்கும் என்பர்
மூண்டு ஒன்றில் மூல வினை மாற்றுதலில் முகுந்தன் அடி
பூண்டு அன்றி மற்றோர் புகல் ஓன்று இலை என நின்றனரே –

பிரபன்னாத் அன்யேஷாம் ந திசதி முகுந்தோ நிஜ பதம்
பிரபன்னாச்ச த்வேதா ஸூ சரித பரீபாக பிதாய விளம்பே ந
ப்ராப்திர் பஜ ந ஸூ கமே கஸ்ய விபுலம்
ப்ரச்யாஸூ ப்ராப்தி பரிமித ரஸா ஜீவிததசா —

————–

அதிகாரம் -9-உபாய விபாக அதிகாரம்

நின்ற நிலைக்கு உற நிற்கும் கருமமும் நேர் மதியால்
நன்று என நாடிய ஞானமும் நல்கும் உள் கண் உடையார்
ஒன்றிய பத்தியும் ஒன்றும் இலா விரைவார்க்கு அருளால்
அன்று பயன் தரும் ஆறும் அறிந்தனர் அந்தணரே —

கர்ம ஞானம் உபாசனம் சரண வ்ரஜ்யா இதி ஸ அவஸ்தி தான்
சன்மார்க்கான் அபவர்க்க சாதன வித்யௌ சத்வாரக அத்வாரகான்
ஏகத்வி ஆக்ருதி யோக சம்ப்ருத ப்ருதக்பாவ அநு பாவான் இமான்
சமயக் ப்ரேஷ்ய சரண்ய சரதி கிராமந்தி ரமந்தி புதா —

————

அதிகாரம் -10- பிரபத்தி யோக்ய அதிகாரம்

அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்து உலகும்
நொந்தவரே முதலாக நுடங்கி அனன்னியராய்
வந்து அடையும் வகை வன் தகவு ஏந்தி வருந்திய நம்
அந்தமில் ஆதியை அன்பர் அறிந்து அறிவித்தனரே –

பக்த்யாதௌ சக்தி அபாவ பிரமிதி ரஹிததா சாஸ்த்ரத பர்யுதாச
காலஷேப அஷபத்வம் த்விதி நியதிவசாத் ஆபதப்தி சதுர்பி
ஏக த்வி த்ரி ஆதியோக வ்யதிபிதுர நிஜ அதிக்ரியா சம்ஸ்ரயந்தே
சந்த ஸ்ரீ சம் ஸ்வதந்திர பிரபதன விதி நா முக்த்யே நிர்விசங்கா–

—————

அதிகாரம் -11-பரிகர விபாக அதிகாரம் —

அறிவித்தனர் அன்பர் ஐயம் பறையும் உபாயம் இல்லாத்
துறவித் துனியில் துணையாம் பரனை வரிக்கும் வகை
உறவு இத்தனை இன்றி ஒத்தார் என நின்ற உம்பரை நாம்
பிறவித் துயர் செகுப்பீர் என்று இரக்கும் பிழை அறவே —

பிரக்யாத பஞ்சஷ அங்க சக்ருத் இதி பகவச் சாசநை ஏஷ யோக
தத்ர த்வாப்யாம் அபாயாத் விரதி அநிதர உபாயதா ஏகேந போத்யா
ஏகேந ஸ்வாந்ததார்ட்யம் நிஜ பர விஷயே அன்யேன தத் சாத்யதா இச்சா
தத்வஜ்ஞான பிரயுக்தா து இஹ ச பரிகரே தாததீன்ய ஆதி புத்தி —

————

அதிகாரம் -12- சாங்க ப்ரபதன அதிகாரம்

அறவே பரம் என்று அடைக்கலம் வைத்தனர் அன்று நம்மைப்
பெறவே கருதிப் பெரும் தகவுற்ற பிரான் அடிக் கீழ்
உறவே இவனுயிர் காக்கின்ற ஓர் உயிர் உண்மையை நீ
மறவேல் என நம் மறை முடி சூடிய மன்னரே —

யுக்ய ஸ்யந்தன சாரதி க்ரமவதி த்ரயந்த சந்தர்சிதே
தத்த்வா நாம் த்ரிதயே யதார்ஹ விவித வியாபார சந்தா நிதி
ஹேதுத்வம் த்ரிஷூ கர்த்து பாவ உபயோ ஸ்வாதீ நதை கத்ர தத்
ஸ்வாமி ச்வீக்ருத யத் பர அயம் அலச தத்ர ஸ்வயம் நிர்பர–

————

அதிகாரம் -13-க்ருதக்ருத்ய அதிகாரம்

மன்னவர் விண்ணவர் வானோர் இறை ஒன்றும் வான் கருத்தோர்
அன்னவர் வேள்வி அனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்ன வரம் தர என்ற நம் அத்திகிரி திருமால்
முன்னம் வருந்தி அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே —

பகவதி ஹரௌ பாரம் கந்தும் பரந்யசநம் க்ருதம்
பரிமித ஸூ க ப்ராப்த்யை க்ருத்யம் ப்ரஹீணம் அக்ருத்யவத்
பவதி ச வபுவ்ருத்தி பூர்வம் க்ருதை நியதக்ரமா
பரம் இஹ விபோ ஆஜ்ஞா சேது புதை அனுபால்யதே —

—————

அதிகாரம் -14 ஸ்வ நிஷ்ட்டாபிஜ்ஞ அதிகாரம்

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை எல்லாம்
மண்ணுலகத்தில் மகிழ்ந்து அடைகின்றனர் வண் துவரைக்
கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண்ணமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே–

பிரணயி நமிவ ப்ராப்தம் பச்சாத் ப்ரியா ஸ்வ சமந்திதம்
மஹதி முஹூராம் ருஷ்டே த்ருஷ்ட்வா மனௌ மணி தர்ப்பணே
ப்ரபத நத நா சந்த சுத்தை ப்ரபும் பரி புஞ்ஜதே
பரஸ் ருமர மஹா மோத ஸ்மேர பிர ஸூ நசமை க்ரமை –

——————

அதிகாரம் -15 உத்தர க்ருத்ய அதிகாரம்

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றின் நிலையுடையார்
தக்கவை யன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார்
இக் கருமங்கள் எமக்கு உள வென்னும் இலக்கணத்தால்
மிக்க உணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே –

ஸ்வாப உத்வோத வ்யதிகர போக மோஷாந்தராலே
காலம் கஞ்சித் ஜகாதி விதிநா கேநசித் ஸ்தாப்யமானா
தத்வ உபாய ப்ரப்ருதி ஸ்வாமி ததாம் ஸ்வ நிஷ்டாம்
சேஷாம் க்ருத்வா சிரஸி க்ருதிந சேஷமாயுர் நயந்தி

—————

அதிகாரம் -16-புருஷார்த்த காஷ்ட்ட அதிகாரம்

வேதம் அறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன் வகுத்த வகை பெறு நாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறை நூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே –

நாதே ந த்ருணம் அந்யத் அந்யத் அபி வா தந்நாபி நாலீகி நீ
நாலீக ஸ்ப்ருஹணீய சௌரபமுசா வாசா ந யாசா மஹே
சுத்தா நாம் து லபே மஹி ஸ்திரதியாம் சுத்தாந்த சித்தாந்தி நாம்
முக்தைச்வர்ய திந ப்ரபாத சமயாசித்தம் ப்ரசத்திம் முஹூ —

————-

அதிகாரம் -17 -சாஸ்த்ரீய நியமன அதிகாரம்

நின்ற நம் அன்புடை வானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயது இது என்று நடத்திய நான் மறையால்
இன்று நமக்கு இரவாதலில் இம் மதியின் நிலவே
அன்றி அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடி யுளதே –

சுருதி ஸ்ம்ருதி ஆஸாரை ஸ்வ மதி பதிபி சுத்த மனசாம்
ஸூ சங்கல்பை தர்ம்யை குல சரண தேசாதி சமயை
நியோகை யோக்யாநாம் நியமயிது ஆதே அபிமதம்
நிமித்த ச்வப்னாத்யை நிபுணம் அந்திச்சதி புத —

——–

அதிகாரம் -15 உத்தர க்ருத்ய அதிகாரம்

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை எல்லாம்
மண்ணுலகத்தில் மகிழ்ந்து அடைகின்றனர் வண் துவரைக்
கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்
பண்ணமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே–

பிரணயி நமிவ ப்ராப்தம் பச்சாத் ப்ரியா ஸ்வ சமந்திதம்
மஹதி முஹூராம் ருஷ்டே த்ருஷ்ட்வா மனௌ மணி தர்ப்பணே
ப்ரபத நத நா சந்த சுத்தை ப்ரபும் பரி புஞ்ஜதே
பரஸ் ருமர மஹா மோத ஸ்மேர பிர ஸூ நசமை க்ரமை –

—————————

அதிகாரம் -16-புருஷார்த்த காஷ்ட்ட அதிகாரம்

வேதம் அறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன் வகுத்த வகை பெறு நாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமை இசைந்து அழியா மறை நூல்
நீதி நிறுத்த நிலை குலையா வகை நின்றனமே –

நாதே ந த்ருணம் அந்யத் அந்யத் அபி வா தந்நாபி நாலீகி நீ
நாலீக ஸ்ப்ருஹணீய சௌரபமுசா வாசா ந யாசா மஹே
சுத்தா நாம் து லபே மஹி ஸ்திரதியாம் சுத்தாந்த சித்தாந்தி நாம்
முக்தைச்வர்ய திந ப்ரபாத சமயாசித்தம் ப்ரசத்திம் முஹூ —

—————

அதிகாரம் -18-அபராத பரிஹார அதிகாரம்

அனுதா பாதுபரமாத் பிராயச்சித்த உன்முகத்வத
தத் பூரணாசாபராதா சர்வம் நச்யந்தி பாரச-

பூர்வஸ்மின் வா பரஸ்மின் வா கல்பே நிர்விண்ண சேதஸாம்
நிவர்த்ய தாரதம்யே அபி ப்ரபத்திர்ந விசிஷ்யதே

ஏவமேவ லகூநாம் வா குருணாமபி வா ஆகசாம்
சக்ருத் பிரபத்திரே கைவ சத்ய பரசம காரணம்

உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர் தாமரையிணை வன்சரணாக வரித்தவர் தம்
களைதான் என எழும் கன்மம் துறப்பர் துறந்திடிலும்
இளைதா நிலை செக எங்கள் பிரான் அருள் தேன் எழுமே –

ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு –

————–

அதிகாரம் -19 – ஸ்தான விசேஷ அதிகாரம்

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னருக்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்கு துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே —

கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்புக்
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்புத்
திண்ணம் இது வீடு எனத் திகழும் வெற்புத்
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறித்த வெற்புப்
புண்ணியத்தின் புகல் இது எனப் புகழும் வெற்புப்
பொன்னுலகில் போகம் எல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கட வெற்பு என விளங்கும் வேத வெற்பே –

உத்தம வமர்த் தலமமைத்ததோர் எழில் தனுவின் உய்த்த கணையால்
அத்தி வரக்கன் முடி பத்தும் ஒரு கோத்தென உதிர்த்த திறலோன்
மத்தறு மிகுத்த தயிர் மொய்த்த வெணெய் வைத்ததுணும் அத்தனிடமாம்
அத்திகிரி பத்தர் வினை தொத்தற வறுக்கும் அணி யத்திகிரியே —

தேனார் கமலத் திருமகள் நாதன் திகழ்ந்து உறையும்
வானாடுகந்தவர் வையத்திருப்பிடம் வன்தருமக்
கானாரிமயமும் கங்கையும் காவிரியும் கடலும்
நானா நகரமும் நாகமும் கூடிய நன்னிலமே –

சா காசீதி ந சாகசீதி புவி ச அயோத்யேதி
ச அவந்தீதி ந கல்மஷாதவதி ச காஞ்சீதீ நோதஞ்சதி
தத்தே சா மதுரேதி நோத்தமதுரம் நான்யாபி மான்யா பூரி
யா வைகுண்ட கதா ஸூ தா ரச புஜாம் ரேசேத நி சேதசே —

—————

அதிகாரம் -20 நிர்ணய அதிகாரம்

நன்னிலமாமது நற்பகலாமது நன்னிமித்தம்
என்னலாமாமது யாதானுமாம் ஆங்கு அடியவர்க்கு
மின்னிலை மேனி விடும் பயணத்து விலக்கிலதோர்
நன்னிலையா நடுநாடி வழிக்கு நடை பெறவே –

தஹர குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்த்வர தீர்க்கிகா
நிபதித நிஜாபத்யாதித் சாவதீர்ண பித்ருக்ரமாத்
தம நிமஹ நச்தஸ்மின் காலே ச ஏவ சதாதிகாம்
அக்ருதக புர ப்ரஸ்தா நாரத்தம் பிரவேசயிதி ப்ரபு

————

அதிகாரம் -21 – கதி விசேஷ அதிகாரம்

நடைபெற வங்கிப் பகல் ஒளி நாள் உத்தராயணம் ஆண்டு
இடைவரு காற்று இரவி இரவின் பதி மின் வருணன்
குடையுடை வானவர் கோன் பிரசாபதி என்று இவரால்
இடையிடை போகங்கள் எய்தி எழில் பதம் ஏறுவரே–

பித்ருபத கடீ யந்த்ர ஆரோஹ அவரோஹ பரின்பமை
நிரயபதவீ யாதாயாத க்ரமைச்ச நிரந்தரை
அதிகத பரிச்ராந்தீன் ஆஜ்ஞா தரை அதிவாஹ்ய ந
ஸூ கயதி நிஜச் சாயா தாயீ ஸ்வயம் ஹரி சந்தன —

——–

அதிகாரம் -22–பரி பூர்ண ப்ரஹ்ம அனுபவ அதிகாரம்

ஏறி எழில் பதம் எல்லா உயிர்க்கும் இதமுகக்கும்
நாறு துழாய் முடி நாதனை நண்ணி அடிமையில் நம்
கூறு கவர்ந்த குருக்கள் குழாங்கள் குரை கழல் கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே —

அவிஸ்ராந்த ஸ்ரத்தசத கலஹ கல்லோல கலுஷா
மம ஆவிர்பூயா ஸூ மனஸி முனி சித்தாத்தி ஸூ லபா
மது ஷீர நியாய ஸ்வ குண விபவ ஆசஜ்ஜன கநத்
மஹாநந்த ப்ரஹ்ம அனுபவ பரிவாஹா பஹூ விதா —

———

அதிகாரம் -23 -சித்த உபாய சோதன அதிகாரம்

சமஸ்த புருஷார்த்தா நாம் சாத கஸ்ய தயா நிதே
ஸ்ரீ மத பூர்வ சித்தத்வாத் சித்தோபாயம் இமாம் விது-

பக்தி பிரபத்தி ப்ரமுகம் தத் வசீகார காரணம்
தத் தத் பலார்த்தி சாத்யத்வாத் சாத்ய உபாயம் விதுர் புதா

சாத்ய உபாய உத்தரங்கேண சித்த உபாயஸ்ய சேஷிண
லீலா ப்ரவாஹ காருண்ய ப்ரவாஹேன நிருத்யதே

தேநைவ சர்வே லீயந்தே சிக்தா சேது பந்தவத்
ஸ்வ தந்த்ரஸ் யாபி சங்கல்பா ஸ்வ கைங்கர்ய நிரோதகா

பிரசாத நச்யோபாயத்வே சாஸ்த்ரீ யேபி பலம் ப்ரதி
கர்த்துத் வாவ்யவதா நாத்யை சித்தோபாய ப்ரதா நதா

ஸ்வ தந்த்ரன்யாச நிஷ்டானாம் சித்தோபாய விபௌ ஸ்திதி
ஷணாத் ஸ்வ யத்ன விரதி வ்யக்த்யை ப்ரோக்த விசேஷத

அதோ யதர்த்தம் ஸ்வ பர சித்தோபாய நிவேசிதே
ததர்தம் சாந்த யத்ன அசௌ சித்தோபாயம் ப்ரதீஷதே

பிரபத்தேர் லஷணே மந்த்ரே விதௌ வாக்யாந்த ரேஷூச
பாஷ்யா தௌ சம்ப்ரதாயே சோபாயத்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்

பூர்வ சித்தச்ய தேசாதே தர்மத்வம் யத்விஷ்யதே
ஏவம் தத்வவித ப்ராஹூ க்ருஷ்ணம் தர்மம் ச நாதனம் —

மன்னு மனைத்துறைவாய் மருண் மாற்றருள் ஆழியுமாய்
தன்னினைவால் அனைத்தும் தரித்து ஓங்கும் தனியிறையாய்
இன்னமுதத்த முதலாலிரங்கும் திரு நாரணனே
மன்னிய வன் சரண் மற்றோர் பற்றின்றி வரிப்பவர்க்கே –

விஸ்ராம்யத்பி உபரி உபரி அபி திவா நக்தம் வஹிர் தர்ச நௌ
அஸ்மத் தேசிக சம்ரதாய ரஹிதை ரத்யாபி நாலஷித
ஸ்வ ப்ராப்தே ஸ்வயமேவ சாதநதயா ஜோ குஷ்யமாண ச்ருதௌ
சத்த்வத் தேஷு பஜேத சந்நிதி மசௌ சாந்தாவதி சேவதி

————

அதிகாரம் -24 -சாத்ய உபாய சோதன அதிகாரம்

வரிக்கின்றனன் பரன் யாவரை என்று மறையதனில்
விரிக்கின்றதும் குறி ஒன்றால் வினையரை யாதலினாம்
உரைக்கின்ற நன்னெறி யோறும் படிகளிலே ஓர்ந்து உலகம்
தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே –

தத் தத் ஹைதுக ஹேதுகே க்ருததீய தர்க்க இந்த்ரஜால க்ரமே
விப்ராணா கதக பிரதான கணேந நிஷ்டாம் க நிஷ்டாஸ்ரயாம்
அத்யாத்ம சுருதி சம்பிரதாய கதைகரத்தா விசுத்தாசய
சித்தோபாய வசீக்ரியாமிதி ஹி ந சாத்யாம் சமத்யா பயன் –

————–

அதிகாரம் -25 -பிரபாவ வ்யவஸ்த அதிகாரம்

ஆஹார க்ரஹ மந்த்ரார்த்த ஜாத்யாதி நியமைர்யுத
குர்யால் லஷ்மீச கைங்கர்யம் சக்தி அநந்ய பிரயோஜன —

ஆசாராத்ம குண உபாய புருஷார்த்த விசேஷத
அதிகாரிணி வைசிஷ்ட்யம் பிரக்ருஷ்யே தோத்த ரோத்தரம்-

இப்பிரபாவ நியமம் ரகஸ்ய த்ரயத்தில் ஈஸ்வரனுடைய பிரசாசித்ருத்வாதி குண அநு பந்தமாக அநு சந்தேயம் —

தகவால் தரிக்கின்ற தன்னடியார்களைத் தன் திறத்தில்
மிகவாதாம் செய்யும் மெய்யருள் வித்தகன் மெய்யுரையின்
அகவாய் அறிந்தவர் ஆரண நீதி நெறி குலைதல்
அகவார் என் எங்கள் தேசிகர் உண்மை உரைத்தனரே —

சாதுர் வர்ண்ய சதுர் விதாச்ரம முகே பேதே யதாவஸ்திதே
வ்ருத்தம் தந் நியதம் குணா குணயா வ்ருத்தயா விசிஷ்டம் ச்ரிதா
த்யாகோ பப்லவா நித்ய தூர சரண வ்ரஜ்யா விதௌ கோவிதா
சிந்தாம் அப்யகுணந்தும் அந்திம யுகே அபி ஏகாந்திந சந்தி ந —

——–

அதிகாரம் -26 -பிரபாவ ரஷ அதிகாரம்

உண்மை உரைக்கும் மறைகளில் ஓங்கிய உத்தமனார்
வண்மை அளப்பரிது ஆதலின் வந்து கழல் பணிவார்
தண்மை கிடக்க தரம் அளவென்ற வியப்பிலதாம்
உண்மை உரைத்தனர் ஓரம் தவிர உயர்ந்தனரே —

ராக த்வேஷ மதாதிகை ரிஹ மஹாரஷோபி ரஷோபித
நிதயே ரஷிதரி ஸ்திதே நிஜ பர நயாசாபிதா நம் தப
யத் கஷீக்ருத மத்யசேத விவிதான் தர்மாநதர் மத்ருஹ
தத் பூ மார்ணவ லேச வர்ண நமபி ப்ராசாம் ந வாசாம் பதம் —

———

அதிகாரம் -27-மூல மந்த்ராதிகாரம் –

எட்டு மா மூர்த்தி என் கண்ணன் எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன் எட்டுஎனும் எண் குண மதியோர்க்கு
எட்டு மா மலர் எண் சித்தி எண் பத்தி எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மா குணம் எட்டு எட்டு எணும் கலை எட்டிரத மேலனவும் எட்டினவே –

சர்வ காரண பூதனுமாய் அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானுமான சர்வேஸ்வரனுக்கு பிரதிபாதகமான திரு அஷ்டாஷரத்தை
அனுசந்திக்கும் மகா மதிகளுக்கு ஆத்மா குணாதிகளிலும் அஷ்ட ஐஸ்வர் யாதிகளிலும்
யதா மநோரதம் துர்லபமாய் இருப்பது ஒன்றும் இல்லை என்கிறது

எட்டு மா மூர்த்தி-
ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் -சந்திர ஆதித்யர்களும் -யஜமானனும் தனக்கு மூர்த்திகளாக
வரம் பெற்று அஷ்ட மூர்த்தி என்று பேர் பெற்ற ருத்ரன் –
என் கண்ணன் –
சதுர்முகன் ஆகையாலே எட்டுக் கண்கள் உடைய ப்ரஹ்மா
எண்டிக்கு எட்டிறை எண் பிரகிருதி
எட்டு திக்குகள் -இந்த்ராதிகளான எட்டு திக் பாலகர்கள் -அவ்யக்த மஹத் அஹங்கா ராதிகளான-எட்டுத் தத்வங்கள்
எட்டு மாவரைகள் ஈன்ற எண் குணத்தோன்
எட்டு குல பர்வதங்கள் -இவை எல்லாவற்றையும் சிருஷ்டித்த குண அஷ்டக விசிஷ்டனான பரமாத்மா
இவனுக்கு எட்டு குணங்கள் என்கிறது –
கர்மவஸ்யத்வ ஜரா மரண சோக ஷூத் பிபாசைகள் அன்றிக்கே ஒழிகையும்-
நித்யங்களான போக்யங்கள் உடையனாகையும் -நினைத்தது முடிக்க வல்லனாகையும் –
எட்டு எனும் எண் குண மதியோர்க்கு
இப்படிப்பட்ட சர்வேஸ்வரனுக்கு பிரதான மந்த்ரமான திரு அஷ்டாஷரத்தை சாரார்தமாக கேட்டு அனுசந்திக்கும்
அஷ்டாங்க புத்தி உடைய அனந்யரான பிரதிபுத்தர்க்கு
புத்திக்கு எட்டு அங்கங்கள் ஆவன –
க்ரஹணம் தாரணம் சைவ ஸ்மரணம் பிரதிபாதனம் ஊஹ அபோஹ அர்த்த விஜ்ஞ்ஞானம்
தத்த்வஜ்ஞானோ ச தீ குணா -என்கிறவை –
எட்டு மா மலர்
அஹிம்சா ப்ரதமம் புஷ்பம் புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ சர்வ பூத தயா புஷ்பம் ஷமா புஷ்பம் வேசிஷத
ஜ்ஞானம் புஷ்பம் தப புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ ப்ரதீதிகரம் பவேத் என்கிற புஷ்பங்கள் –
எண் சித்தி
ஊஹஸ் தர்கோ அத்யயனம் துக்க விதாதாஸ் த்ரய ஸூஹ்ருத் ப்ராப்தி -தானம் ச சித்தயோ அஷ்டௌ-என்கிற எட்டு சித்திகள்
எண் பத்தி
மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாம் சாநு மோதனம்-மத்கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா
ஸ்வயம் ஆராதனே யத்னோ மமார்த்தே டம்ப வர்ஜனம் மமா நுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி –
பக்திர் அஷ்டவிதா ஹி ஏஷா -என்கிற எட்டு விதங்களான பக்திகள் –
எட்டு யோகாங்கம் எண் செல்வம்
யோகாங்கமாகச் சொல்லப்பட்ட யம நியமாதிகள் –
அணிமா மஹிமா ச ததா லதிமா கரிமா வசித்வம் ஐஸ்வர்யம் ப்ராப்தி ப்ராகம்யம் சேத்ய அஷ்ட ஐஸ்வர் யாணி யோக
யுக்தஸ்ய -என்கிற எட்டு விபூதிகள் –
எட்டு மா குணம்
முக்தி தசையில் ஆவிர்பவிக்கும் குண அஷ்டகம் -அஷ்டௌ குணா புருஷம் தீபயந்தி –இத்யாதிகளில் சொன்னவை யாகும் –
எட்டு எட்டு எணும் கலை
சதுஷ்ஷடி கலைகள்
எட்டிரத மேலனவும்
ஸ்ருங்கார வீர கருணா அத்புத ஹாஸ்ய பயானக பீபதச ரௌத்ரௌ ச ராசா என்கிற ரசங்கள் எட்டுக்கும் மேலான சாந்தி ரசம் –
எட்டினவே
இவற்றில் இவனுக்கு இச்சை உள்ள போது எட்டாதவை ஒன்றும் இல்லை –

ஆத்மா குணாதிகள் நிரம்பாது ஒழிகிறது அனுசந்தானத்திலே ஊற்றம் போதாமையாலே –
அஷ்ட ஐஸ்வர் யாதிகள் வாராது ஒழிகிறது உபேஷையாலே
கடுக சம்சாரம் நிவர்த்தியாது ஒழிகிறது இசைவில் குறைவாலே
ஆகையால் இறே நமோ நாராயணா யேதி மந்திர சர்வார்த்த சாதக -என்கிறது –

அவித்யா பூத நோன்முக்தை அனவஜ்ஞாத சத்பதை அசதாச்வாத சவ்ரீடை ஆதிஷ்டமிதி தர்சிதம் –

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு உரிமை துறந்துயிராய்
மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி அடைக்கலமாய்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழவடியார்
நயந்த குற்றேவல் எல்லாம் நாடு நன் மனு வோதினமே –

இத்தம் சங்கடித பதை த்ரிபிரசாவேக தவி பஞ்சாஷரை அர்த்தைஸ்
தத்தவ ஹித பிரயோஜனமயை அத்யாத்ம சாரைஸ் த்ரிபி
ஆத்யஸ் த்ரயஷர வேத ஸூ தி ரஜஹத் ஸ்தூலாதி வ்ருத்தி த்ரய
த்ரை குண்ய பிரசமம் ப்ரயச்சதி சதாம் த்ரயயந்த சாரோ மநு –

—————

அதிகாரம் -28–ஸ்ரீ த்வயதிகாரம் –

இப்படி த்வயத்தில் பதங்களில் அடைவே சப்த அர்த்த ஸ்வ பாவங்களால் –
புருஷகார யோகமும்
அதின் நித்யத்வமும்
உபாய வைசிஷ்ட்யமும்
சரண்ய குண பூர்ணத்வமும்
சம்பந்த விசேஷமும்
திவ்ய மங்கள விக்ரஹ யோகமும்
அதில் சேஷ பூதன் இழியும் துறையும்
அதின் உபாயத்வ பிரகாரமும்
வசீகரண விசேஷமும்
தத் பரிகரங்களும்
அதிகாரி விசேஷமும்
ப்ராப்ய வைசிஷ்ட்யமும்
குண விபூதி விசிஷ்ட ப்ராப்யத்வமும்
கைங்கர்ய பிரதிசம்பதித்வமும்
கைங்கர்ய பிரார்த்தனையும்
சர்வ வித கைங்கர்ய லாபமும்
சர்வ அநிஷ்ட நிவ்ருத்தியும்
அதனுடைய ஆத்யந்த்திக்கத்வமும்
பராதீன பரார்த்த கர்த்ருத்வமும்
தாதாவித போக்த்ருத்வமும் —
என்று இவை பிரதானமாய் இவற்றுக்கு அபேக்ஷிதங்களும் எல்லாம்
சித்த சாத்திய விபாகவத்தான உபாயம் என்றும் உபேயம் என்றும்
இரண்டு பிரதான ப்ரதிபாத்யங்களோடே துவக்குண்டு ப்ரகாசித்தங்கள் ஆயிற்று –

இப்படி சாரீரிக சாஸ்திரத்தில் போலவே
தத்வ விசேஷமும்
உபாய விசேஷமும்
பல விசேஷமும்
இம் மந்த்ரத்திலே ப்ரதிபாதிதம் ஆனாலும் -இது ஸ்வேதாஸ்வர மந்த்ரம் போலே
பல அபேக்ஷ பூர்வகமான உபாய அனுஷ்டான பிரதானம் ஆகையால்
உபாய பலங்களுடைய உத்பத்தி க்ரமத்தோடே சேர்ந்த பாட க்ரமத்தாலே பல ப்ரதிபாதக வாக்கியம் பிற்பட்டாலும்
அர்த்த க்ரமத்தாலே இது முற்பட அனுசந்தேயம் என்று பூர்வர்கள் அருளிச் செய்வார்கள்
புருஷன் புருஷார்த்தத்தை விமர்சித்துக் கொண்டு அன்றி உபாய விமர்சமும் உபாய அனுஷ்டானமும் பண்ணான் இறே
இப்படி திரு மந்த்ரத்திலும் உபாய பல ப்ரதிபாதக அம்சங்களில் க்ரம பிரகாரங்களைக் கண்டு கொள்வது
பலார்த்தியாய் அதிகாரி யானால் இறே இவனுக்கு இவ் உபாய அனுஷ்டானம் வருவது –
த்வயேன சரணம் வ்ரஜேத்–த்வயார்த்த சரணாகதி –என்கிற அபியுக்தர் பாசுரங்களாலும்
த்வயம் உபாய அனுஷ்டானத்தை பிரதானமாக பிரகாசிக்கிறது –

இங்கு பூர்வ கண்டமும் -சதுர்த்யந்த பதங்களும்-நமஸ் ஸூ மாக -மூன்று அவாந்தர வாக்கியங்கள் ஆனாலும்
திரள உபாய பிரதானமான ஒரே வாக்யமாகத் தலைக் கட்டக் கடவது -எங்கனே என்னில் –
சர்வ ஸ்வாமியாய் –
சர்வ பிரகார -நிரதிசய போக்யனாய்
பெரிய பிராட்டியாரோடு பிரிவில்லாத நாராயணன் திருவடிகளில்
ஸ்வரூப பிராப்தமான -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசித சர்வ வித கைங்கர்யத்துக்கும்
விரோதியான சர்வமும் கழிந்து பரிபூர்ண கைங்கர்யம் பெறுகைக்கு
அகிஞ்சனான அடியேன்
ஸ்வ ரக்ஷண பராதிகளில் எனக்கு அந்வயம் யறும் படி
ஸ்ரீ மானான நாராயணன் திருவடிகளிலே
அங்க பஞ்சக சம்பந்தமான ஆத்ம ராஷா பர சமர்ப்பணம் பண்ணுகிறேன் என்று த்வயத்தின் திரண்ட பொருள் –

வைராக்ய விஜித ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேச்வரை
அநுக் ரோசைக விஜிதை இத்யுபாதேசி தேசிகை

இதமஷ்ட பதம் வ்யாஸே சமாஸே ஷட்பதம் விது
வாக்யம் பஞ்ச பதைர் யுக்தம் இத்யாக்யாத பிரதாநகம்

ஏகம் த்வயம் த்ரய வயம் ஸூ க லப்ய துர்யம்
வ்யக்த அர்த்த பஞ்சகம் உபாத்த ஷடங்க யோகம்
சப்தார்ண வீ மஹிமவத் விவ்ருத அஷ்ட வர்ண
ரங்கே சதாமிஹ ரசம் நவமம் ப்ரஸூத –

ஓதும் இரண்டை இசைத்து அருளால் உதவும் திருமால்
பாதம் இரண்டும் சரண் எனப் பற்றி நம் பங்கயத்தாள்
நாதனை நண்ணி நலம் திகழ் நாட்டில் அடிமை எல்லாம்
கோதில் உணர்த்தி யுடன் கொள்ளுமாறு குறித்தனமே –

————

அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் –

ய உபநிஷதாம் அந்தே யஸ்மாத் அநந்த தயாம்புதே
த்ருடித ஜநதா சோக ஸ்லோக ஸமஜாயதே
தமிஹ விதிநா கிருஷ்ணம் தர்மம் பிரபத்ய சநாதநம்
சமித துரித சங்கா தங்க த்யஜ ஸூக மாஸ்மகே

துர் விஞ்ஞாநைர் நியமகஹநை தூர விஸ்ராந்தி தேசை
பால அநர்ஹை பஹூபி அயநை சோசதாம் ந ஸூ பந்தா
நிஷ் ப்ரத்யூகம் நிஜ பதமசவ் நேது காம ஸ்வபூம்நா
சத் பாதேயம் கமபி விததே சாரதி சர்வ நேதா

ஒண் டொடியாள் திருமகளும் தானுமாகி
ஒரு நினைவால் ஈன்ற உயிர் எல்லாம் உய்ய
வண் துவரை நகர் வாழ வசு தேவற்காய்
மன்னவர்க்குத் தேர் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன
தனித் தருமம் தானே எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்து அடி சூட விலக்காய் நின்ற
கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே

சர்வ தர்மான் பரித்யஜ்ய -ஆறு பொருள்களின் சுருக்கம் –
அதோ அசக்த அதிகாரத்வம் ஆகிஞ்சன்ய ப்ரஸ் க்ரியா –அநங்க பாவோ தர்மாணாம் அசக்ய ஆரம்ப வாரணம் –
தத் ப்ரத்யாசா பிரசமனம் ப்ரஹ்மாஸ்த்ர நியாய ஸூசநம் -சர்வ தர்ம பரித்யாக சப்தார்த்தா –சாது சம்மதா-
தேவதாந்த்ர தர்மாதி தியாக யுக்தி -அவிரோதி நீ -உபாசகே அபி துல்யவாத் இஹ சா ந விசேஷிகா -உபாய உபாய ஸந்த்யாகீ-
இத்யாதிகளில் சொன்ன உபாய தியாகமும் இப்பிரகாரங்களிலே நிர்வாஹ்யம்

மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னமதில் ஆசை தன்னை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயனத்திரம் போல் வெள்கி நிற்கும்

நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின் தனிமை துணையாக என்தன் பாதம்
பூண்டால் உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழ்வோமே

ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் ஆழ்பொருள்களின் சுருக்கம்

இஸ் ஸ்லோகத்தில் பதங்களில் அடைவே
1-சர்வ தர்மான் பரித்யஜ்ய
அதிகாரி விசேஷம் -ஆகிஞ்சன்ய புரஸ்காரம் -துஷ்கர பரிகராந்தர நைரபேஷ்யம்-அஸக்ய ப்ரவ்ருத்தி அநைசித்யம் –
துஷ்கர அபிநிவேச வையர்த்யம் -உபாய விசேஷத்தின் கணையுடைமை –
2–மாம்
முமுஷுவுக்கு சரண்ய விசேஷம் -சரண்யனுடைய ஸூலபத்வ ஸூசீலத்வாதி குண பூர்ணத்வம் -ஹித தம உபதேசித்வம்
3–ஏகம்-
ப்ராப்யனே ப்ராபகனானமை -நிரபேஷ சர்வ விஷய நிஷ்ப்ரத்யூக கர்த்ருத்வம் -வ்யாஜ மாத்ர ப்ரதீஷத்வம் –
உபாயாந்தர வ்யவதான நிரபேஷத்வம்-பரிகராந்தர நிரபேஷ ப்ரஸாத்யத்வம் -சர்வ பாலார்தி சரண்யத்வம் –
சரண்யாந்த்ர பரிக்ரஹ அஸஹத்வம் -சரண்ய வைசிஷ்டயம்
4–சரணம் –
உபாயாந்தர ஸ்தாந நிவேஸ்யத்வம் –பர ஸ்வீ கர்த்ருத்வம் –
5–வ்ரஜ -என்பதன் தாதுப்பகுதி
பர ந்யாச ரூப சாத்ய உபாய விசேஷம் -அதின் பரிகரங்கள் -சர்வாதிகாரத்வம் -ஸக்ருத் கர்தவ்யத்வம் –
ஸூகரத்வம் -அவிளம்பித பல பிரதத்வம் -பிராரப்த நிவர்த்தன ஷமத்வம்
6–வ்ரஜ என்பதன் விகுதி
அதிகாரியினுடைய பராதீன கர்த்ருத்வம்-சாஸ்த்ர வஸ்யத்வம்
7–அஹம்
ரக்ஷகனுடைய பரம காருணிகத்தவம் -பரிக்ருஹீத உபாய தத் பலங்களை பற்ற கர்த்தவ்யாந்தரத்தில் ப்ராப்தியில்லாமை –
பகவதத்யர்த்த ப்ரியத்வம்
8–த்வா
சரண்யகதனுடைய க்ருதக்ருத்யத்வம் -பரிக்ருஹீத உபாய தத் பலங்களை பற்றக்
கர்த்தவ்யாந்தரத்தில் பிராப்தி இல்லாமை -பகவதத்யர்த்த ப்ரியத்வம்
9—சர்வ பாபேப்யோ
த்ரைகாலிக விரோதி பூயஸ்த்வம் -விரோதி வர்க்க வைச்சித்ரயம்
10–மோக்ஷயிஷ்யாமி
அவற்றினுடைய ஈஸ்வர சங்கல்ப மாத்ர நிவர்த்யத்வம் -ப்ரபந்ந இச்சா நியதமான
விரோதி நிவ்ருத்தி காலம் -விரோதி நிவ்ருத்தி ஸ்வரூபம் -ஆத்ம கைவல்ய வ்யாவ்ருத்த யதாவஸ்தித ஸ்வரூப ஆவிர்பாவம் –
பரிபூர்ண பகவத் அனுபவம் -சர்வவித கைங்கர்யம் -அபுநராவ்ருத்தி
11–மா ஸூச
முன்பு சோக ஹேது ப்ராசுர்யம்-பின்பு சோகிக்க பிராப்தி இல்லாமை -விமர்ச காலம் எல்லாம் நிஸ் சம்யத்வம்-சோக நிவ்ருத்தி
நிர்பயத்வம் -ஹர்ஷ விசேஷம் -சரீரபாத கால ப்ரதீஷத்வம்-நிர்பராத கைங்கர்ய ரசிகத்வம்-என்று இவை பிரதானமாய்
மற்றும் இவற்றுக்கு அபேக்ஷிதங்கள் எல்லாம் சப்த சக்தியாலும் அர்த்த ஸ்வ பாவத்தாலும் அனுசிஷ்டங்கள்

ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் ஆழ்ந்த திரண்ட பொருள்
1–சர்வ தர்மான் பரித்யஜ்ய
அல்பஞ்ஞனாய்-அல்பசக்தியாய் -பரிமித கால வர்த்தியாய்-விளம்ப ஷமனும் இன்றிக்கே உன்னாலே
அறியவும் அனுஷ்ட்டிக்கவும் அரிதாய் பல விளம்பமும் உண்டாய் இருக்கிற உபாயாந்தரங்களிலே அலையாதே
2–மாம் ஏகம்
சர்வ ஸூலபனாய் -சர்வலோக சரண்யனாய் -சரண்யத்வ உபயுக்த்வ சார்வாகார விசிஷ்டனான என்னை ஒருவனையுமே
3–சரணம் வ்ரஜ
அத்யவசித்திக் கொண்டு அங்க பஞ்சக சம்பன்னமான ஆத்ம ரஷா பர சமர்ப்பணத்தைப் பண்ணு
4– த்வா
இப்படி அனுஷ்டித்த உபாயனாய் -க்ருதக்ருத்யனாய் -எனக்கு அடைக்கலமாய் அத்யந்த பிரியனான உன்னை
5– அஹம்
பரம காருணிகனாய்-ஸூ ப்ரசன்னனாய் -நிராங்குச ஸ்வா தந்திரனாய் -ஸ்வார்த்த ப்ரவ்ருத்தனான நானே
என் சங்கல்ப மாத்திரமே துணையாகக் கொண்டு
6–சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
பஹு பிரகாரமாய் -அநந்தமாய் -துரத்யயமான சர்வ விரோதி வர்க்கத்தோடும் பின் தொடர்ச்சி இல்லாதபடி துவக்கு அறுத்து –
என்னோடு ஓக்க என்னுடைய ஆத்மாத்மீயங்களை எல்லாம் அனுபவிக்கையாலே துல்ய போகனாக்கிப் பரிபூர்ண
அனுபவ பரிவாஹ ரூபமான சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோதித சர்வ வித கைங்கர்யத்தையும் தந்து உகப்பன்
7–மாஸூச
நீ ஒன்றுக்கும் சோகிக்க வேண்டா
என்று ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் திரண்ட பொருள்கள்

ஏகம் சர்வ ப்ரதம் தர்மம் ஸ்ரீயா ஜூஷ்டம் ஸமாஸ்ரிதை
அபேத சோகை ராசார்யை அயம் பந்தா ப்ரதர்ஸித

குறிப்புடன் மேவும் தர்மங்கள் இன்றி அங்கோவலனார்
வெறித் துளவக் கழல் மெய் அரண் என்று விரைந்து அடைந்து
பிரித்த வினைத்திரள் பின் தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருள் அற்றனமே –

வ்யாஸ ஆம்நாய பயோதி கௌஸ்துப நிபம் ஹ்ருத்யம் ஹரே உத்தமம்
ஸ்லோகம் கேசந லோக வேத பதவீ விஸ்வாசித அர்த்தம் விது
யேஷாம் யுக்திஷூ முக்தி ஸுவ்த விசிகா சோபாந பங்க்திஷூ அமீ
வைசம்பாயன ஸுநக ப்ரப்ருதய ஷ்ரேஷ்டா சிர கம்பிந

—————

அதிகாரம் -30-சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் -ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம் –

பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க
வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே

மருளற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம்
இருள் அற்று இறைவன் இணை யடிப் பூண்டு உய எண்ணுதலால்
தெருள் உற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர் பால்
அருள் அற்ற சிந்தையினால் அழியா விளக்கினரே

நிரவதி தயா திவ்ய உதத்வத் தரங்க நிரங்குசை
நியமயதி ய சிஷ்யான் சிஷா க்ரமை குண ஸங்க்ரமை
அசரம் குரோ ராஜ்ஞா பராம் பரீ பரவாநசவ்
ந பரமிஹ தாந் தல்ல ஷேண ஸ்வயம் அபி ரஷதி

—————

சம்பிரதாய ப்ரக்ரியா பாகம் –அதிகாரம் -31

ஆசார்ய வத்தயா மோக்ஷம் ஆமநந்தி ஸ்மரந்தி ச
இஹா முத்ர ச தத் பாதவ் சரணம் தேசிகா விது

ஆச்சார்யரை அடைவதன் மூலம் மோக்ஷம் கிட்டுவதாக உணபிஷத்துக்கள் கூறுகின்றன
இந்த உலகிலும் மோக்ஷம் பெற்ற பின்னரும் ஆச்சார்யருடைய திருவடிகளே தஞ்சம் என்று ஆச்சார்யர்கள் அறிந்தார்கள்

ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் கற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே

நாம் செய்யும் அனைத்தும் அவர் உபகாரத்தைக் காணும் போது அற்பமே

அத்யா சீன துரங்க வக்த்ர விலஸத் ஜிஹ்வா அக்ர ஸிம்ஹாஸனாத்
ஆசார்யாத் இஹ தேவதாம் சமாதிகாம் அந்யாம் ந மந்யாமஹே
யஸ்ய அசவ் பஜேத கதாசித் அஜஹத் பூமா ஸ்வயம் பூமிகாம்
மக்நாநாம் பவிநாம் பவார்ணவ சமுத்தாராய நாராயண

சம்சார கரையைத் தாண்டுவிக்கவே பகவான் தனது மேன்மையைக் கைவிடாமல் ஆச்சார்ய பதம் வகிக்கிறான்
ஆச்சார்யர் நாக்கு நுனி ஸ்ரீ ஹயக்ரீவ பகவானது ஸிம்ஹாஸனமாகும்
அவரைக் காட்டிலும் எந்த தேவதையையும் நாம் உயர்ந்ததாக எண்ண வில்லை –

———-

அதிகாரம்- 32–நிகமன அதிகாரம்-

கீழ் அதிகாரங்களில் உள்ள திரண்ட பொருள்கள்
1–இப்படி இஜ் ஜீவாத்மா நித்ய ஸூரி களோடு ஓக்க ஸ்ரீ பகவத் அனுபவ ரசத்துக்கு ஸ்வரூப யோக்யனாய் இருந்து வைத்து –
அநாதி காலம் இழந்து -ஓர் அளவிலே புரிந்து -சதாச்சார்ய சம்பந்தம் உண்டாய்த் தத்வ ஹிதங்களை அறியத் தொடங்கின படியும்
2–இவற்றை அறிவிக்கும் பிரமாணங்களில் ரஹஸ்ய த்ரயம் சார தமமான படியும்
3–இவற்றைக் கொண்டு அறியும் அர்த்தங்களில் ஈஸ ஈஸித்வயங்களினுடைய சரீர ஆத்ம பாவ சம்பந்தாதிகள்
பிரதான பிரதிதந்தரமாய் ஞாதவ்யங்களான படியும்
4–இஸ் சம்பந்தத்தோடே கூட ஞாதவ்யமாக பூர்வாச்சார்ய சங்க்ருஹீதமான அர்த்த பஞ்சகம் ரஹஸ்ய த்ரயத்தில் கிடக்கிறபடியும்
5– இவ் வர்த்த பஞ்சகத்துக்கு உள்ளே தத்வ த்ரயாதி விபாக சிந்தை பண்ணுவார்க்குத் தாத்பர்யமும்
6–இவ் வர்த்தக பஞ்சகத்தில் ஈஸ்வரனாக சாத்விக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவன் ஸ்ரீ யபதி என்னும் இடமும்
7–இத் தத்வ த்ரயங்கள் எல்லாம் தெளிந்தவன் முமுஷுவாய் மோக்ஷ உபாய உந் முகனாம் படியும்
8–அதிகாரி விபாகமும்
9–இவ் வாதிகாரிகளுக்கு அநு ரூபமான உபாய விபாகமும்
10–இவ் உபாயங்களிலே ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு அதிகார விசேஷம் இருக்கும் கட்டளையும்
11–ஸக்ருத் கர்தவ்யமான இவ் உபாயத்துக்கு அநு ரூபமாக விஹிதமான பரிகர விபாகமும்
12–முமுஷுக்கு பரிகரமான பர ந்யாஸ ரூப பிரதான கர்த்தவ்யத்தினுடைய சந்நிவேசம் இருக்கும் படியும்
13– ஐப்பசி ச அங்க பிரபதன அனுஷ்டானம் பண்ணினவன் சர்வ ரக்ஷண அதி க்ருதன் பக்கலிலே
ந்யஸ்த பரனாகையாலே க்ருதக்ருத்யனாம் படியும்
14–இந் நிஷ்டை தனக்குப் பிறந்தமை கண்டு தான் தேறி இருக்கைக்கு அடையாளங்களும்
15–இவனுக்கு ஆர்த்தியில் மாந்த்யத்தாலே சரீரம் அநு வர்த்ததாகில் இங்கு இருந்த காலத்துக்கு ஸ்வயம் ப்ரயோஜனமாய்
ஸ்வரூப ப்ராப்த சேஷ வ்ருத்தி ரூபமான கைங்கர்யம் இருக்கும் படியும்
16-பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கர்யமான படியும்
17-சாஸிதமான ஸ்வாமிக்கு அபிமதம் அல்லாதது கைங்கர்யம் அல்லாமையாலே யதா சாஸ்திரம் கைங்கர்யம் அனுஷ்ட்டிக்க வேண்டினபடியும்
18-இஸ் சாஸ்திரீய கைங்கர்ய ப்ரவ்ருத்தனுக்கு அபராதங்கள் புகாமைக்கும் -புகுந்தவை கழிகைக்கும் விரகுகளும்
19-இந் நிரபராத கைங்கர்யத்துக்கு ஸ்தாநமாக அநாபத்தில் உசிதமாவது பாகவத ஆஸ்ரிதமான பகவத் க்ஷேத்ரம் என்னும் இடமும்
20-இப்படி இருந்த இவ்வதிகாரிக்கு சரண்யா சங்கல்ப விசேஷத்தாலே ப்ரசஸ்த தேச காலாதி நிரபேஷமாக
ஸ்தூல சரீரத்தின் நின்றும் நிர்யாணம் இருக்கும் படியும்

21-இப்படிப் புறப்பட்டால்-பிதா யவ்வ்ய ராஜ்யத்துக்கு முடி சூட்ட அழைத்து வரவிட்ட ராஜ குமாரன் போமாப் போலே
பெரிய மேன்மையோடே பரமபத பர்யந்தமாக அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம் படியும்
22-இப்படிப் போனால் அங்கு பிறக்கும் ஸ்வச் சந்த கைங்கர்ய பர்யந்தமாக பரிபூர்ண அனுபவ ரூபமான முக்த ஐஸ்வர்யம் இருக்கும் படியும் –
23-இப்படி யுக்தமான ஞாதவ்யங்களில் பிரதானமான சித்த உபாயத்தையும்
24-கர்தவ்யங்களில் பிரதானமான ஸாத்ய உபாயத்தையும்
25-26-இவ் வுபாய நிஷ்டனுடைய ப்ரபாவத்தில் சாஸ்திரங்கள் இசையாத ஏற்றச் சுருக்கங்களையும் பற்றி
ஆஹார தோஷ ஹேதுக சம்சர்க்க யுக ஸ்வ பாதிகளாலே வரும் கலக்கங்களுக்குப் பண்ணும் பரிகார பிரகாரங்களும்
27-28-29-இவை எல்லாம் அனுசந்திக்கைக்கு முகமான ரஹஸ்ய த்ரயத்தில் பாத வாக்ய யோஜனைகளும்
30-இவ்வர்த்தங்களுக்கு எல்லாம் யதா சாஸ்திரம் சம்பிரதாய ப்ரவர்த்தனம் பண்ணும் ஆச்சார்யனுக்கு
உபதேசாதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி விஷயங்கள் இருக்கும் படியும்
31-இப்படி பரம உபகாரகனான ஆச்சார்யன் திறத்தில் தகுதியான பிரதியுபகாரம் இல்லாமையால்
நித்ய ருணியான சிஷ்யனுக்குச் செய்ய அடுக்குமவை எல்லாம்
32-ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ர ஸம்ப்ரதாயங்களாலும் -இவற்றுக்கு அநு கூலங்களான சமீஸீந நியாயங்களாலும் –
அஞ்ஞான சம்சய விபர்யங்கள் ஆகிற யதா ஸ்ருதம் யதா ஹ்ருதயம் உபபாதித்தோம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஸ்தோத்ரம்-

உறு சகடம் உடைய ஒரு காலுற்று உணர்ந்தன
உடன் மருதம் ஓடிய ஒரு போதில் தவழ்ந்தன
உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன
உறு நெறி ஓர் தருமன் விடு தூதுக்கு உகந்தன
மற நெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கை வருட மலர் போதில் சிவந்தன
மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன
மனு முறையில் வருவது ஓர் விமானத்து உறைந்தன
அறமுடைய விசயன் அமர் தேரில் நிகழ்ந்தன
அடல் உரக படம் மடிய ஆடிக் கடிந்தன
அறு சமயம் அறிவு அரிய தானத்து அமர்ந்தன
அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன
வெறியுடைய துவள மலர் வீறுக்கு அணிந்தன
விழு கரி ஓர் குமரன் என மேவிச் சிறந்தன
விறல் அசுரர் படை அடைய வீயத் துரந்தன
விடல் அரிய பெரிய பெருமாள் மென் பதங்களே –

இதி யதிராஜ மஹாநஸ பரிமள பரிவாஹ வாஸிதாம் பிபத
விபுத பரிஷத் நிஷேவ்யாம் வேதாந்த உதயந சம்பிரதாய ஸூதாம்

திரு மடைப்பள்ளி ஆச்சானுடைய சம்ப்ரதாயம் கொண்ட அமிர்தத்தை பருகுவீர்

கல கண்ட குண ஆஸ்வாத்ய காமஸ்ய அஸ்த்ரே நிஜாங்குரே
நிம்ப விருத்திபிஸ் உத்கீர்ணே ந ஸூத பரிதப்யதே

மா மரம் ஓன்று குயில்களால் நன்றாக சுவைத்து உண்ணப்படுவதும் -மன்மதனுடைய செயல்களுக்கு ஏற்றதாக உள்ளதும்
ஆகிய தனது தளிர் இலைகளைக் கொண்டு வாழ்கின்ற விலங்குகளால் அந்தத் தளிர்கள் உமிழப் பட்டாலும்
வருத்தம் அடைவது இல்லை –
அதே போன்று இந்த நூலை அஸூயை அடியாகத் தள்ளினாலும் எந்தக் குறையும் இல்லையே –

முன்பெற்ற ஞானமும் மோகம் துறக்கலும் மூன்று உரையில்
தன்பற்ற தன்மையும் தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித் தகவும்
மன்பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர் பால்
சின்பற்றி என் பயன் சீர் அறிவோர்க்கு இவை செப்பினமே –

நிர்விஷ்டம் யதி ஸார்வ பவ்ம வசஸாம் ஆவிருத்திபிர் யவ்வனம்
நிர்தூத இதர பாரதந்தர்ய நிரயா நிதா ஸூகம் வாசரா
அ ங்கீ க்ருத்ய சதாம் ப்ரசத்திம சதாம் கர்வ அபி நிர்வாபித
சேஷ ஆயுஷி அபி சேஷி தம்பதி தயா தீஷாம் உதீஷா மஹே

யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகளைக் கற்று இளமைக்காலம் நன்றாக இனமாகவே கழிந்தது
சான்றோர்கள் அனுக்ரஹத்தால் மற்ற மதங்களுடைய செருக்கும் ஓடுக்கப்பட்டன-
இனி திவ்ய தம்பதிகளுடைய கருணையால் உண்டாகும் சங்கல்பத்தையே எதிர்நோக்கி நிற்கிறோம் –

செப்பச் செவிக்கு அமுது என்னத் திகழும் செழும் குணத்துத்
தப்பு அற்றவருக்குத் தாமே உகந்து தரும் தகவால்
ஒப்பற்ற நான்மறை உள்ளக் கருத்தில் உறைத்து உரைத்து
முப்பத்து இரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித் திருவே —

வேதாந்த தாத்பர்யம் -அமிர்தம் போன்ற இவை -முப்பத்து இரண்டு -பாசுரங்களும்
முத்தமிழுக்கும் அலங்காரமாக ஆகும்-

ஆஸ்திக்யவாந் நிசித புத்திர் அநப்ய ஸூயுர்
சத் ஸம்ப்ரதாய பரிசுத்த மநா சத் அர்த்தா
சங்கேத பீதி ரஹித ஸத்ருணேஷு அசக்த
சத் வர்த்தநீம் அநு விதாஸ்யதி ஸாஸ்வதீம் ந —

மறை உரைக்கும் பொருள் எல்லாம் மெய் என்று ஓர்வார்
மன்னிய கூர் மதி உடையார் வண் குணத்தில்
குறை உரைக்க நினைவில்லார் குருக்கள் தம் பால்
கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறை வளர்க்கும் சில மாந்தர் சங்கேதத்தால்
சிதையாத திண் மதியோர் தெரிந்தது ஓரார்
பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியில் புகுத்துவாரே —

இது வழி இன்னமுது என்றவர் இன்புலன் வேறு இடுவார்
இது வழியாம் அலவென்று அறிவார் எங்கள் தேசிகரே
இது வழி எய்துக என்று உகப்பால் எம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோர் அருளால் யாம் இசைந்தனமே —

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம் மாதவனார்
முட்ட வினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே —

வானுள் அமர்ந்தவருக்கும் வைகுந்த வரும் நிலைகள்
தான் உளனாய் உகக்கும் தரம் இங்கு நமக்கு உளதே
கூன் உள நெஞ்சுகளால் குற்றம் எண்ணி இகழ்ந்திடினும்
தேனுள பாத மலர்த் திரு மாலுக்குத் தித்திக்குமே —

வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம் யாம் இதற்கென்
கொள்ளத் துணியினும் கோது என்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை உகவாது இகழாது எம் எழில் மதியே —

ரஹஸ்ய த்ரய சாரம் அயம் வேங்கடேச விபச்சிதா
சரண்ய தம்பித விதாம் சம்மத சமக்ருஹ்யத-

நிகமந அதிகாரம் சம்பூர்ணம்

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் சம்பூர்ணம்

ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் சம்பூர்ணம்-

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — 32–நிகமன அதிகாரம் – —ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

February 20, 2020

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

—————————————————————————

கர பதரிவ விஸ்வஸ் கச்சித் ஆச்சார்ய த்ருஷ்டயா
முஷித நிகில மோஹா மூல மந்த்ராதி போகஸ்
ஸ குண விஷய சித்தவ் சம்ப்ரதாயம் ப்ரயச்சந்
ஸூ சரித ஸிலஹாரீ ஸூரி ப்ருந்த அபிநந்த்ய –

ஒரு அதிகாரி தனது ஆச்சார்யனுடைய கடாக்ஷம் காரணமாக அனைத்து விஷயங்களையும் உள்ளங்கை
இலந்தப் பழம் போலே நன்றாக அறிகிறான்
இதனால் அனைத்து விதமான அஞ்ஞானங்களும் நீங்கப் பெறுகிறான் -மூல மந்த்ரம் முதலானவற்றுடைய
ஆழ்ந்த பொருளை எப்பொழுதும் எண்ணியபடியே இருத்தல் என்னும் அனுபவத்தை அடைகிறான் –
சிறந்த குணங்களைக் கொண்ட வேறு ஒருவனைச் சந்தித்தால் தன்னுடைய ஸம்ப்ரதாயத்தைக் குறித்து உபதேசிக்கிறான்-
சான்றோர்களுடைய பழக்கங்கள் என்பதான தானியங்களைப் பொறுக்கி எடுக்கிறான் –
இதனால் நித்ய ஸூரிகளின் கூட்டத்தால் கொண்டாடப்படுகிறான் –

கீழ் அதிகாரங்களில் உள்ள திரண்ட பொருள்கள்
1–இப்படி இஜ் ஜீவாத்மா நித்ய ஸூரி களோடு ஓக்க ஸ்ரீ பகவத் அனுபவ ரசத்துக்கு ஸ்வரூப யோக்யனாய் இருந்து வைத்து –
அநாதி காலம் இழந்து -ஓர் அளவிலே புரிந்து -சதாச்சார்ய சம்பந்தம் உண்டாய்த் தத்வ ஹிதங்களை அறியத் தொடங்கின படியும்
2–இவற்றை அறிவிக்கும் பிரமாணங்களில் ரஹஸ்ய த்ரயம் சார தமமான படியும்
3–இவற்றைக் கொண்டு அறியும் அர்த்தங்களில் ஈஸ ஈஸித்வயங்களினுடைய சரீர ஆத்ம பாவ சம்பந்தாதிகள்
பிரதான பிரதிதந்தரமாய் ஞாதவ்யங்களான படியும்
4–இஸ் சம்பந்தத்தோடே கூட ஞாதவ்யமாக பூர்வாச்சார்ய சங்க்ருஹீதமான அர்த்த பஞ்சகம் ரஹஸ்ய த்ரயத்தில் கிடக்கிறபடியும்
5–இவ் வர்த்த பஞ்சகத்துக்கு உள்ளே தத்வ த்ரயாதி விபாக சிந்தை பண்ணுவார்க்குத் தாத்பர்யமும்

6–இவ் வர்த்தக பஞ்சகத்தில் ஈஸ்வரனாக சாத்விக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவன் ஸ்ரீ யபதி என்னும் இடமும்
7–இத் தத்வ த்ரயங்கள் எல்லாம் தெளிந்தவன் முமுஷுவாய் மோக்ஷ உபாய உந் முகனாம் படியும்
8–அதிகாரி விபாகமும்
9–இவ் வாதிகாரிகளுக்கு அநு ரூபமான உபாய விபாகமும்
10–இவ் உபாயங்களிலே ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு அதிகார விசேஷம் இருக்கும் கட்டளையும்

11–ஸக்ருத் கர்தவ்யமான இவ் உபாயத்துக்கு அநு ரூபமாக விஹிதமான பரிகர விபாகமும்
12–முமுஷுக்கு பரிகரமான பர ந்யாஸ ரூப பிரதான கர்த்தவ்யத்தினுடைய சந்நிவேசம் இருக்கும் படியும்
13–இப்படி ச அங்க பிரபதன அனுஷ்டானம் பண்ணினவன் சர்வ ரக்ஷண அதி க்ருதன் பக்கலிலே
ந்யஸ்த பரனாகையாலே க்ருதக்ருத்யனாம் படியும்
14–இந் நிஷ்டை தனக்குப் பிறந்தமை கண்டு தான் தேறி இருக்கைக்கு அடையாளங்களும்
15–இவனுக்கு ஆர்த்தியில் மாந்த்யத்தாலே சரீரம் அநு வர்த்ததாகில் இங்கு இருந்த காலத்துக்கு ஸ்வயம் ப்ரயோஜனமாய்
ஸ்வரூப ப்ராப்த சேஷ வ்ருத்தி ரூபமான கைங்கர்யம் இருக்கும் படியும்

16-பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கர்யமான படியும்
17-சாஸிதமான ஸ்வாமிக்கு அபிமதம் அல்லாதது கைங்கர்யம் அல்லாமையாலே யதா சாஸ்திரம் கைங்கர்யம் அனுஷ்ட்டிக்க வேண்டினபடியும்
18-இஸ் சாஸ்திரீய கைங்கர்ய ப்ரவ்ருத்தனுக்கு அபராதங்கள் புகாமைக்கும் -புகுந்தவை கழிகைக்கும் விரகுகளும்
19-இந் நிரபராத கைங்கர்யத்துக்கு ஸ்தாநமாக அநாபத்தில் உசிதமாவது பாகவத ஆஸ்ரிதமான பகவத் க்ஷேத்ரம் என்னும் இடமும்
20-இப்படி இருந்த இவ்வதிகாரிக்கு சரண்ய சங்கல்ப விசேஷத்தாலே ப்ரசஸ்த தேச காலாதி நிரபேஷமாக
ஸ்தூல சரீரத்தின் நின்றும் நிர்யாணம் இருக்கும் படியும்

21-இப்படிப் புறப்பட்டால்-பிதா யவ்வ்ய ராஜ்யத்துக்கு முடி சூட்ட அழைத்து வரவிட்ட ராஜ குமாரன் போமாப் போலே
பெரிய மேன்மையோடே பரமபத பர்யந்தமாக அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம் படியும்
22-இப்படிப் போனால் அங்கு பிறக்கும் ஸ்வச் சந்த கைங்கர்ய பர்யந்தமாக பரிபூர்ண அனுபவ ரூபமான முக்த ஐஸ்வர்யம் இருக்கும் படியும் –
23-இப்படி யுக்தமான ஞாதவ்யங்களில் பிரதானமான சித்த உபாயத்தையும்
24-கர்தவ்யங்களில் பிரதானமான ஸாத்ய உபாயத்தையும்
25-26-இவ் வுபாய நிஷ்டனுடைய ப்ரபாவத்தில் சாஸ்திரங்கள் இசையாத ஏற்றச் சுருக்கங்களையும் பற்றி
ஆஹார தோஷ ஹேதுக சம்சர்க்க யுக ஸ்வ பாதிகளாலே வரும் கலக்கங்களுக்குப் பண்ணும் பரிகார பிரகாரங்களும்
27-28-29-இவை எல்லாம் அனுசந்திக்கைக்கு முகமான ரஹஸ்ய த்ரயத்தில் பாத வாக்ய யோஜனைகளும்
30-இவ்வர்த்தங்களுக்கு எல்லாம் யதா சாஸ்திரம் சம்பிரதாய ப்ரவர்த்தனம் பண்ணும் ஆச்சார்யனுக்கு
உபதேசாதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி விஷயங்கள் இருக்கும் படியும்
31-இப்படி பரம உபகாரகனான ஆச்சார்யன் திறத்தில் தகுதியான பிரதியுபகாரம் இல்லாமையால்
நித்ய ருணியான சிஷ்யனுக்குச் செய்ய அடுக்குமவை எல்லாம்
32-ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ர ஸம்ப்ரதாயங்களாலும் -இவற்றுக்கு அநு கூலங்களான சமீஸீந நியாயங்களாலும் –
அஞ்ஞான சம்சய விபர்யங்கள் ஆகிற யதா ஸ்ருதம் யதா ஹ்ருதயம் உபபாதித்தோம்

இவ் வர்த்தங்களை எல்லாம் முற்பட சத் ஸம்ப்ரதாயமுடைய சதாச்சார்யன் பக்கலிலே சம்யக் உப சன்னனாய்
சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—ஸ்ரீ கீதை 2-7-என்று விண்ணப்பம் செய்து-
சாதரனாய் விசதமாக ஸ்ரவணம் பண்ணி இவற்றுக்கு உப யுக்தங்களான நல் வார்த்தைகளையும்
ஸூவ்யா ஹ்ருதாநி மஹதாம் ஸூஹ்ருதாநி ததஸ்ததா-ஸஞ்சின்வன் தீர ஆஸீத சிலஹாரீ சிலம் யதா—உத்யோக பர்வம் 34-34–என்கிறபடி
கீழே சிதறிய தானியங்களைக் கொண்டு உயிர் வாழ்பவன் அவற்றைப் பொருக்கி எடுத்து சேமிப்பது போன்று –
சிறந்த சொற்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைத் திரட்டி எடுத்து கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்பது போன்று –
ஆய்ந்து எடுத்து அப்யாச பூயஸ்தையாலே தெளிந்து கொள்வது –

ஸூஷ்ம பரம துர்ஜ்ஜேய சதாம் தர்ம ப்லவங்கம –கிஷ்கிந்தா -18-15–என்று உயர்ந்தவர்கள் தங்களை அடியவர்களைக் காக்கும்
தர்மம் மிகவும் ஸூஷ்மமானது -என்றும்
தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயம் -வனபர்வம் -268-121–தர்மத்தின் தத்வம் மிகவும் ரஹஸ்யமானது -என்றும்
அணீயான் ஷூரதாராய கோ தர்மம் வக்தும் அர்ஹதி–உத்யோக பர்வம் -35–29-கத்தி நுனியைக் காட்டிலும் ஸூஷ்மாமா தர்மத்தை
யாரால் விளக்கும் தகுதி யாருக்கு உள்ளது என்றும்
ரிஷிகளுக்கும் கூட வருந்தி பத வின்யாசம் பண்ண வேண்டி இருக்கிற நிலங்களில்
மஹா ஜநோ யேந கத ச பந்தா -வனபர்வம் -268-121–சான்றோர்கள் எந்த வழியில் நடக்கிறார்களோ அதுவே
நமக்கும் சிறந்த வழியாகும் என்றும்
தர்ம ஸாஸ்த்ர ரதா ரூடா வேத கட்க தரா த்விஜா -க்ரீடார்த்தமபி யத் வ்ரூயு ச தர்ம பரமோ மத -என்று
தர்ம சாஸ்திரம் என்னும் தேரில் அமர்ந்து வேதங்கள் என்னும் வாளைக் கையில் பிடித்து நிற்கும் அந்தணர்கள்
விளையாட்டாகவே உரைப்பதும் கூட தர்மமே என்றும் சொல்லுகிறபடி
சுருதி ஸ்ம்ருதி சரணரான பூர்வாச்சார்யர்கள் கண்டக சோதனம் பண்ணி நடந்த வழியில் நடக்கையாலே நமக்கு வருவதொரு தப்பில்லை

இவ்வழி நடந்தவர்களுக்கு
அ விஸ்ராத்தம் அநாலம்பம் அபாதேயம் அதேசிகம் -தம காந்தாரம் அத்வானம் கதமேகா கமிஷ்யசி–சாந்தி பர்வம் -337-34-
இளைப்பாற ஏற்ற இடம் இல்லாமல் -பற்றிக் கொள்ள கைப்பிடி இல்லாமல் -பசியைத் தீர்க்க உணவும் இல்லாமல் –
வழி காட்டுபவர்களும் இல்லாமல் -இருளில் செல்ல வேண்டியதாக உள்ள நரக மார்க்கம் என்பதில்
நீ எவ்வாறு தனித்து செல்வாய் – என்றும்
நிஷ்பா நீயே நிராலம்பே நிச்சாயே நிரபாஸ்ரயே -த்ராகீ யஸ்ய சுபே மார்க்கே யமஸ்ய சதனம் ப்ரதி-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி காரிகை –
பருக நீரும் தாங்க கைப்பிடியும் ஒதுங்க நிழலும் தங்க இடமும் இல்லாமல் மிகவும் நீண்ட துக்கம் மட்டுமே அளிக்கும் உள்ள
யமன் இடத்து செல்லும் பாதையே எனக்கு அச்சத்தை உண்டாக்கும் பிறவிகளுடைய வரிசையாக உள்ளன -என்றும்
மஹரிஷிகள் நெஞ்சாறல் படும் வழிகள் காண வேண்டா
பஞ்சாக்னி வித்யையில் சொன்னபடியே -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டுப் பூட்டைக் குண்டிகை போலே-
ஏறுவது இழிவதாக தூமாதி மார்க்கத்தில் பரிப்ரமிக்கவும் வேண்டா

த்வம் நியஞ்சித் பிரு தஞ்சித் பிஸ் கர்ம ஸூத்ரோப பதிதை-ஹரே விஹரசி கிரீடா கந்துகைரிவ ஐந்துபி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
ஸர்வேச்வரனே கர்மங்கள் என்னும் கயிற்றால் கட்டப்பட்ட பந்துகள் போன்று கீழும் மேலும் எழும்படி உள்ள
ஜந்துக்களைக் கொண்டு நீ விளையாடுகிறாய் -என்கிற
பகவத் லீலா உபகரணமான தசை கழிந்து மற்றும் உள்ள அதிசய பலன்கள் பெறப் போகும் அதிகாரிகளுடைய வழிகளில் காட்டில்
புருஷார்த்த பூயஸ்தையாலும் புநர் ஆவ்ருத்தி இல்லாமையாலும்
தேப்யோ விசிஷ்டாம் ஜாநாமி கதிம் ஏகாந்திநாம் ந்ருணாம் –சாந்தி பர்வம் –358-6-அவனைச் சரணம்
புகுந்தவர்கள் வழி மேலானது என்றும்
உத்க்ரமாதி ச மார்கஸ்ய சீதி பூதோ நிராமய –சாந்தி பர்வம் -194-27-மேலே எழும் ஜீவாத்மா அந்த மார்க்கத்தில் சென்று
சம்சார துன்பம் நீங்கப் பெற்று என்றும்
தேவ யாந பர பாந்தா யோகி நாம் கிலேச சம்ஷயே -யோகிகளுக்கு கர்மங்கள் நீங்கிய பின்னர் தேவயானம் என்னும்
உயர்ந்த மார்க்கம் கிட்டுகிறது -இத்யாதிகளில் படியே அத்யந்த விசிஷ்டமாய் மிகவும் உயர்ந்ததாக உள்ளது -என்றபடி

ஆத்மா கேவலதாம் ப்ராப்தோ யத்ர கத்வா ந சோசதி–சாந்தி பர்வம் -196-11- ஜீவாத்மா துன்பம் நீங்கப்பெறும் இடம் இதுவே என்றும்
அத்யர்காநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந -ஸ்வயைவ ப்ரபயா ராஜந் துஷ்ப்ரேஷம் தேவதாநவை -வன பர்வம் -136-18-
தேஜோமயமான அந்த திவ்விய ஸ்தானத்தை தேவர்கள் அசுரர்கள் காண இயலாது என்றும்
தத்ர கத்வா புநர் நேமம் லோகமா யந்தி பாரத -வனபர்வம் -136-23-எங்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவது இல்லையோ என்றும்
ஏதே வை நிரயா ஸ்தாந ஸ்தாநஸ்ய பரமாத்மந -சாந்தி பர்வம் -196-6-இதுவே பரம ஸ்தானம் என்றும்
இத்யாதிகளிலும் சம்சார அத்வாவுக்குப் பாரம் -அக்கரை -என்றும் ஸ்ருதிகளில் ஓதப்படுகிற பரமபதத்தைப் பர்யந்தமாக யுடைத்தாய் –
பகவத் பிரசாத அவலம்பநமாய் பரிபூரணமான பரம புருஷார்த்தத்தைப் பெறப் புகுகிறோம் என்கிற சந்தோஷத்தை பாதேயமாக யுடைத்தாய் –

ததோகஸ் அக்ர ஜ்வலநம் தத் ப்ரகாசி தத்வாரோ வித்யா சாமர்த்யாத் தச்சேஷ கத்யநுஸ்ம்ருதி யோகாச்ச ஹார்த்த
அநு க்ருஹீத சதாதிகயா –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-2-16-
ப்ரஹ்ம வித்யையின் திறனாலும் அந்த வித்யைக்கு அங்கமாக உள்ள அர்ச்சிராதி மார்க்க சிந்தனா ரூபமான யோகத்தால்
ஹ்ருதய தாமரையில் உள்ள பரமாத்மாவால் அருளப்படுகிறான் -அவன் தேஜஸ் மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட
ஸூஷூம்நா நாடி மூலம் கிளம்புகிறான் என்கிறபடியே
ஈசுவரனுடைய ஸுஹார்த்தத்தாலே காட்டப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தாலே
அவ்வோ தேவதைகள் தத்தம் எல்லைகள் தோறும் மங்கள ப்ரதீப பூர்ண கும்பாதிகளை முன்னிட்டு ச பரிகரமாய் எதிர் கொண்டு
ஸார்வ பவ்ம உபசாரங்களைப் பண்ணி வழி நடத்த -கர்மலோகத்தில் இருந்த நாள் இறை கொண்ட தேவதைகள் எல்லாம்
காணிக்கை இட்டுக் கொண்டு அநு வர்த்திக்க -அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத எல்லைகள் எல்லாம் கடந்து
நித்ய ஸூரிகள் திரளில் புக்கால் வாசி தெரியாதபடியான நிரதிசய பூர்த்தியைப் பெற்று

ததோ மஹதி பர்யங்கே மணி காஞ்சன சித்ரிதே–ததர்சி க்ருஷ்ணமாஸீநம் நீலம் மேராவிவாம்புதம்–
ஜாஜ்வல்யமாநம் வபுஷா திவ்ய ஆபரண பூஷிதம் –ப்ரீதி கௌசேய சம்விதம் ஹேம் நீவோபசிதம் மணிம்
கௌஸ்துபேந ஹ்யுரஸ் ஸ்தேந மணிநா அபி விராஜிதம் -உத்ய தேவோதயம் சைலம் ஸூர்யேநாப்தம் க்ரீடிநம்
நவ்பவ்ம்யம் வித்யதே தஸ்ய த்ரீஷூ லோகேஷூ கிஞ்சன –சாந்தி பர்வம் –

மாணிக்கம் பொன்னால் அலங்கரிக்கப் பெற்ற பெரிய கட்டிலிலே மேரு மலையில் மழை மேகம் பொருந்தியது போன்ற
ஸ்ரீ கிருஷ்ணனைக் கண்டார்கள்
அவனது திருமேனி திருப் பீதாம்பரத்துடன் கூடியதாயும் -நேர்த்தியான திவ்ய பூஷணங்கள் பூண்டதாயும்
ஸ்வர்ணத்தில் பதிக்கப்பட்ட நீல ரத்னம் போலே உள்ளது –
திருமார்பில் ஸ்ரீ கௌஸ்துபம் பிரகாசிக்க திருமுடியில் திரு அபிஷேகத்தில் பிரகாசிக்க
மலையில் உதிக்கும் ஸூர்யன் போன்று உள்ளது –
இவ்வித திவ்ய அழகுக்கு ஈடாக மூன்று லோகங்களிலும் யாருமே இல்லையே

தம் வைஸ்ரவண ஸங்காஸம் உபவிஷ்டம் ஸ்வலங்க்ருதம் ததர்ச ஸூத பர்யங்கே ஸுவ்வர்ணே சோத்தரச்சதே-
வராஹ ருதிராபேண சுசிநா ச ஸூகந்திநா -அநு லிப்தம் பரார்த்யேந சந்தநேந பரந்தபம்-
ஸ்திதயா பார்ச்வதச்சாபி வால வ்யஜன ஹஸ்தயா உபேதம் ஸீதயா பூயஸ் சித்ராய சசிநம் யதா –
தம் தபந்தமி வாதித்யம் உப பன்னம் ஸ்வ தேஜஸா –
வவந்தே வரதம் வந்தீ விந யஜ்ஜோ விநீதவத் –அயோத்யா -16-8-/11-

நேர்த்தியான விரிப்புடன் கூடிய ஸ்வர்ண கட்டிலில் அனைத்து திவ்ய ஆபரணங்களுடன் கூடியவனாக –
பன்றியின் குருதி போன்ற சிவந்த நறுமணம் கொண்ட சந்தனம் பூசியவனாக -அருகில் உள்ள
ஸ்ரீ சீதாபிராட்டி சந்திரனுடன் இணைந்த சித்திரை நக்ஷத்ரம் போன்று சாமரத்துடன் நிற்க –
குபேரன் போன்று அமர்ந்து இருந்த ஸ்ரீ ராமபிரானை ஸூமந்த்ரன் கண்டான்
ஸூர்யன் போன்ற தேஜஸ் கொண்டவனாயும் கேட்க்கும் வரங்கள் அளிப்பவனாயும் உள்ள
ஸ்ரீ ராமபிரானை ஸூமந்த்ரன் பணிந்தான்

என்று ஸ்ரீ மஹாபாராத ஸ்ரீ ராமாயணங்களில் சொல்லப்பட்ட அவதார ஆஸீகையாலே வ்யஞ்சிதமான
பரமபத பர்யங்கத்திலே எழுந்து அருளி இருக்கிற ச பத்நீகனான சர்வேஸ்வரன் தாளிணைக் கீழ்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற மநோரதத்தின் படியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த்தை உசித சர்வ வித கைங்கர்யங்களையும் பெற்று வாழ்வார்கள்

இப்படி ஸ்ரீ யபதியான நாராயணன் திருவடிகளே உபாய தசையிலும் பல தசையிலும் உப ஜீவ்யங்கள்

ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகள் ஸ்தோத்ரம் –

உறு சகடம் உடைய ஒரு காலுற்று உணர்ந்தன
உடன் மருதம் ஓடிய ஒரு போதில் தவழ்ந்தன
உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன
உறு நெறி ஓர் தருமன் விடு தூதுக்கு உகந்தன
மற நெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கை வருட மலர் போதில் சிவந்தன
மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன
மனு முறையில் வருவது ஓர் விமானத்து உறைந்தன
அறமுடைய விசயன் அமர் தேரில் நிகழ்ந்தன
அடல் உரக படம் மடிய ஆடிக் கடிந்தன
அறு சமயம் அறிவு அரிய தானத்து அமர்ந்தன
அணி குருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன
வெறியுடைய துவள மலர் வீறுக்கு அணிந்தன
விழு கரி ஓர் குமரன் என மேவிச் சிறந்தன
விறல் அசுரர் படை அடைய வீயத் துரந்தன
விடல் அரிய பெரிய பெருமாள் மென் பதங்களே –

இதி யதிராஜ மஹாநஸ பரிமள பரிவாஹ வாஸிதாம் பிபத
விபுத பரிஷத் நிஷேவ்யாம் வேதாந்த உதயந சம்பிரதாய ஸூதாம்

திரு மடைப்பள்ளி ஆச்சானுடைய சம்ப்ரதாயம் கொண்ட அமிர்தத்தை பருகுவீர்

கல கண்ட குண ஆஸ்வாத்ய காமஸ்ய அஸ்த்ரே நிஜாங்குரே
நிம்ப விருத்திபிஸ் உத்கீர்ணே ந ஸூத பரிதப்யதே

மா மரம் ஓன்று குயில்களால் நன்றாக சுவைத்து உண்ணப்படுவதும் -மன்மதனுடைய செயல்களுக்கு ஏற்றதாக உள்ளதும்
ஆகிய தனது தளிர் இலைகளைக் கொண்டு வாழ்கின்ற விலங்குகளால் அந்தத் தளிர்கள் உமிழப் பட்டாலும்
வருத்தம் அடைவது இல்லை –
அதே போன்று இந்த நூலை அஸூயை அடியாகத் தள்ளினாலும் எந்தக் குறையும் இல்லையே –

முன்பெற்ற ஞானமும் மோகம் துறக்கலும் மூன்று உரையில்
தன்பற்ற தன்மையும் தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித் தகவும்
மன்பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர் பால்
சின்பற்றி என் பயன் சீர் அறிவோர்க்கு இவை செப்பினமே –

நிர்விஷ்டம் யதி ஸார்வ பவ்ம வசஸாம் ஆவிருத்திபிர் யவ்வனம்
நிர்தூத இதர பாரதந்தர்ய நிரயா நிதா ஸூகம் வாசரா
அ ங்கீ க்ருத்ய சதாம் ப்ரசத்திம சதாம் கர்வ அபி நிர்வாபித
சேஷ ஆயுஷி அபி சேஷி தம்பதி தயா தீஷாம் உதீஷா மஹே

யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகளைக் கற்று இளமைக்காலம் நன்றாக இனமாகவே கழிந்தது
சான்றோர்கள் அனுக்ரஹத்தால் மற்ற மதங்களுடைய செருக்கும் ஓடுக்கப்பட்டன-
இனி திவ்ய தம்பதிகளுடைய கருணையால் உண்டாகும் சங்கல்பத்தையே எதிர்நோக்கி நிற்கிறோம் –

செப்பச் செவிக்கு அமுது என்னத் திகழும் செழும் குணத்துத்
தப்பு அற்றவருக்குத் தாமே உகந்து தரும் தகவால்
ஒப்பற்ற நான்மறை உள்ளக் கருத்தில் உறைத்து உரைத்து
முப்பத்து இரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித் திருவே —

வேதாந்த தாத்பர்யம் -அமிர்தம் போன்ற இவை -முப்பத்து இரண்டு -பாசுரங்களும்
முத்தமிழுக்கும் அலங்காரமாக ஆகும்-

ஆஸ்திக்யவாந் நிசித புத்திர் அநப்ய ஸூயுர்
சத் ஸம்ப்ரதாய பரிசுத்த மநா சத் அர்த்தா
சங்கேத பீதி ரஹித ஸத்ருணேஷு அசக்த
சத் வர்த்தநீம் அநு விதாஸ்யதி ஸாஸ்வதீம் ந —

மறை உரைக்கும் பொருள் எல்லாம் மெய் என்று ஓர்வார்
மன்னிய கூர் மதி உடையார் வண் குணத்தில்
குறை உரைக்க நினைவில்லார் குருக்கள் தம் பால்
கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறை வளர்க்கும் சில மாந்தர் சங்கேதத்தால்
சிதையாத திண் மதியோர் தெரிந்தது ஓரார்
பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியில் புகுத்துவாரே —

இது வழி இன்னமுது என்றவர் இன்புலன் வேறு இடுவார்
இது வழியாம் அலவென்று அறிவார் எங்கள் தேசிகரே
இது வழி எய்துக என்று உகப்பால் எம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோர் அருளால் யாம் இசைந்தனமே —

எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து
எட்ட ஒண்ணாத இடம் தரும் எங்கள் அம் மாதவனார்
முட்ட வினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே —

வானுள் அமர்ந்தவருக்கும் வைகுந்த வரும் நிலைகள்
தான் உளனாய் உகக்கும் தரம் இங்கு நமக்கு உளதே
கூன் உள நெஞ்சுகளால் குற்றம் எண்ணி இகழ்ந்திடினும்
தேனுள பாத மலர்த் திரு மாலுக்குத் தித்திக்குமே —

வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் இட்டனம் யாம் இதற்கென்
கொள்ளத் துணியினும் கோது என்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை உகவாது இகழாது எம் எழில் மதியே —

ரஹஸ்ய த்ரய சாரம் அயம் வேங்கடேச விபச்சிதா
சரண்ய தம்பத விதாம் சம்மத சமக்ருஹ்யத-

நிகமந அதிகாரம் சம்பூர்ணம்

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் சம்பூர்ணம்

ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் சம்பூர்ணம்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உபநிஷத் வாக்கியங்கள் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் – -உப ப்ரஹ்மண வாக்கியங்கள் -நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடல் -ஐக கண்டம் —

February 15, 2020

பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:

“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”

(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).

இப்பாடலில், உலகத்திற்குக் காரணப்பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக,
சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண் சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும்,
ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும்
பெருந்தேவனார்.

இவ்வுருவகமானது வேதப் பகுதியாகிய “முண்டக உபநிடதத்தில்” உள்ளதை அடியொற்றியே வருகிறது.
அவ்வுபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதியில், “அனைத்துக்கும் மேலான பரம புருஷனிடமிருந்தே
நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்புவனபோல் எல்லாம் பிறந்து இறுதியில் அவனிடத்தேயே ஒடுங்குகின்றன” என்னும் செய்தி விளக்கப்படுகிறது.
அவனே அனைத்துக்கும் உட்பொருளாக உள்ளுறைந்து ஆள்வதையும்,
அவன் பிரபஞ்சமனைத்தையும் சரீரமாகக் கொண்டமையையும் விளக்கும் வண்ணம் பின்வருமாறு வேதம் உரைக்கிறது:

“அக்3னிர் மூர்தா4 சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யௌ திச’: ச்’ரோத்ரே வாக்3விவ்ருதாச்’ச வேதா3: வாயு: ப்ராணோ ஹ்ருத3யம்
விச்’வம் அஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹி ஏஷ ஸர்வபூ4த-அந்தராத்மா”[முண்டக உபநிடதம், 2.1.4]

இம்மந்திரத்தில் நெருப்பைப் பரமனது முகமாகவும், திங்களையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும்,
வேதத்தை அவன் வாய்மொழியாகவும், ஞாலத்தைச் சூழ்ந்து வீசும் வாயுவை அவன் மூச்சுக்காற்றாகவும்,
பிரபஞ்சத்தை அவன் இதயமாகவும் கூறி, அவன் பாதங்களிடத்தே பூமி பிறந்ததாகவும் உருவகப்படுத்தி இம்மந்திரம் கூறுகிறது.
தொன்றுதொட்டு வடமொழியிலும் தமிழிலும் திருமாலைக் குறித்து வழங்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற உருவகம் இது.
ஆதி சங்கரர் தம் உபநிடத உரையில் இவ்விடத்திற்கு, “இதில் சொல்லப்படுபவர் விஷ்ணுவாகிய அனந்தன்.
சரீரத்தை உடையவர்களில் முதன்மையானவர். மூவுலகையும் தம் உடலாகக் கொண்டிருப்பவர்.
அனைத்து உயிர்களுக்கும் உயிராக — அந்தராத்மாவாகத் திகழ்பவர்”
[“ஏஷ தே3வோ விஷ்ணுர் அனந்த: ப்ரத2ம ச’ரீரீ த்ரைலோக்ய தே3ஹோபாதி4: ஸர்வேஷாம் பூ4தானாம் அந்தராத்மா”] என்று பாஷ்யமிட்டுள்ளார்.

ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்திலும் ஸ்ரீ சங்கரர் இம்மந்திரம் குறித்த விசாரம் செய்துள்ளார் (சாரீரக மீமாம்ச பாஷ்யம், 1.2.25).
“வேதத்தின் முடிவாக, உபநிடதங்களின் கருப்பொருளாக நிற்பது பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாகவும் கர்த்தாவாகவும் விளங்குவதாகிய,
உண்மைப்பொருளாகிய, பரம்பொருளே” என்று சங்கரர் பாஷ்யத்தின் முதலத்தியாயத்தில் நிலைநாட்டியுள்ளார்.
“ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பேசுவது போல் தோன்றும் சுருதி வாக்கியங்களைப் புஷ்பங்களென்று எடுத்துக் கொண்டால்,
ப்ரஹ்ம சூத்திர கர்த்தாவாகிய வியாசர் செய்திருப்பது அவற்றை நூலால் கோர்த்து சீர்ப்படுத்தி,
முரண்பாடு சிறிதும் இல்லாத மாலையாகத் தொடுத்துத் தந்திருப்பது” என்பது சங்கரர் கூறும் விளக்கம்
(‘சூத்திரம்’ என்ற வடமொழிச் சொல் ‘நாண்’ எனும் பொருளை உடையது). இப்படி ப்ரஹ்ம சூத்திரம் விசாரத்திற்குப் பல சுருதி வாக்கியங்களை
எடுத்துக் கொண்டிருப்பதாகவும், ஆங்காங்கு ஸ்ம்ருதிகளாகிய இதிகாச-புராண-ரிஷி வாக்கியங்களிலிருந்தும் உதாகரித்துச் செல்வதாக
பாஷ்யகாரர்கள் பலர் விளக்கி வந்துள்ளனர். அவற்றில் ஒன்று தான் மேலெடுக்கப்பட்ட முண்டகோபநிடத மந்திரம்.

பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும், சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே
இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது என்பது உரை எழுதிய சங்கரர், ராமானுஜர் முதலானோர் கொள்கை.
“சர்வாந்தர்யாமி” என்பதற்கு “அனைத்தையும் உள்ளுறைந்து ஆள்பவன்” என்று பொருள்.
“உபாதான-நிமித்த காரணங்கள்” பற்றி எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
“பானைக்கு மண் உபாதான காரணம்; குயவன் நிமித்த காரணம்” என்ற உதாரணம் போதும்.

மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் தூல நிலை. நாட்டியம் முடிந்தபின் தோகையை
உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை.
தோகையை விரித்து ஆடுவதாலோ, தோகையை உள்வாங்கிக் கொள்வதனாலோ “மயில் மாறுதல் அடைந்துள்ளது” என்றோ,
“மயில் அழிந்து விட்டது” என்றோ எவ்வாறு நாம் கூறுவதில்லையோ, அவ்வாறே பரம்பொருளின் அங்கமாக பிரபஞ்சம்
நாம-ரூபங்களுடன் விரிந்து கிடக்கும் நிலையில் “பரம்பொருள் மாற்றம் அடைந்துவிட்டது” என்றோ,
பிரளயத்தின்போது நாம-ரூபங்கள் அழிந்த நிலையில் “பரம்பொருள் அழிந்துவிட்டது” என்றோ கூறுவதில்லை.

“தன்னுளே திரைத்தெழுந் தரங்கவெண் டடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவுந் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின்க ணின்றதே.”

[திருச்சந்த விருத்தம், 10]

இத்தகைய காரிய-காரண தொடர்ச்சியிலும் பரம்பொருள் விகாரமடையாமல் என்றென்றும் நிலைத்து நிற்கும் தத்துவமாக
விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக பொன்னையும் ஆபரணத்தையும் கூறுவர். பொன் ஆபரணத்திற்குக் காரணப்பொருள்.
ஆபரணம் பொன்னைக் காரணப்பொருளாக உடையதால் அது ’காரியங்கள்’ எனும் குழுவில் அடங்கிவிடுகிறது.
ஆபரணமான பிறகும் பொன் பொன்னாகவே இருக்கிறது, ஈயமாகவோ பித்தளையாகவோ மாற்றம் அடைவதில்லை.
அவ்வாறே பிரபஞ்சமாக விரிந்து நின்றாலும், அதற்குக் காரணப்பொருளும் அந்தராத்மாவ்வுமாகிய பரம்பொருள் விகாரமடைவதில்லை.
இத் தத்துவத்தைக் கம்பர் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் நமக்கு அறிவிக்கிறார்.
அவ்விடத்தில் நரசிங்கப்பிரானைக் குறித்து நான்முகனார் இவ்வண்ணம் கூறுகிறார்:

“நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்.” [கம்பராமாயணம்: இரணியன் வதைப்படலம், 160]

இது பின்வரும் திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை நினைவூட்டுகிறது. இதுவும் நரசிங்கப்பிரானைக் குறித்தே பாடியிருப்பது:

“தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே — உகத்தில்
ஒரு நான்று நீயுயர்த்தி உள்வாங்கி நீயே
அருநான்கு மானா யறி”[நான்முகன் திருவந்தாதி, 5]

இப்பாடலில் “அரு நான்கும் ஆனாய்” என்றவிடத்திற்கான ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் மணிப்பிரவாள வியாக்கியானத்தில்,
“தேவ திர்யங் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே அந்தராத்மதயா ப்ரகாசித்து நின்ற”
(அதாவது, தேவர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் உள்ளுறையும் ஆன்மாவாக நின்ற) என்று காணப்படுகிறது.

முன்பே சங்கப்புலவர்களும் மாயோனை,

“அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” [பரிபாடல், 3]

“ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,” [பரிபாடல், 13]=என்று ஜகத்காரணப் பொருளாகப் பாடியுள்ளனர்.

நிற்க. பிரபஞ்சத்துக்கு உயிராய் உள்ள இறைவனின் நிலையை “சரீர-சரீரி பாவம் (शरीर-शरीरि भावम्)” என்று மற்றொரு விதமாக
வேதாந்திகள் கூறுவர். அதாவது, பிரபஞ்சத்தைச் சரீரமாக உடையவனாதலால் இறைவன் “சரீரி” ஆகிறான்.
நாம் மேற்கண்ட முண்டக உபநிடத பாஷ்யத்தில் சங்கரர் “சரீரத்தை உடையவர்களுள் முதன்மையானவர்” என்று விளக்குகிறார்.

ஆகையால் சூரியனையும் சந்திரனையும் பரம்பொருளுக்குக் கண்களாகவும், தரணியைப் பாதமாகவும், திக்குகளைச் செவியாகவும்,
அண்டவெளியை உடலாகவும் சுருதி வாக்கியம் உருவகப்படுத்துதுவதன் நோக்கம்
“பரம்பொருள் உலகனைத்துக்கும் உட்பொருளாக, அந்தராத்மாவாக, உயிருக்கு உயிராக இருப்பதை உணர்த்தவேயன்றி,
விகாரமடையும் குணத்தை உடையது என்பதைக் கற்பிப்பதற்கல்ல” என்று சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் பின்வரும் இதிகாச-புராண வாக்கியங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
அவற்றில் நமக்குச் சில ஆர்வமூட்டும் செய்திகள் கிடைக்கின்றன:

“யஸ்ய-அக்3னிர்-ஆஸ்யம் த்3யௌர்-மூர்தா4 க2ம் நாபி4ச்’-சரணௌ க்ஷிதி: |
ஸூர்யச்’-சக்ஷு: தி3ச’: ச்’ரோத்ரம் தஸ்மை லோகாத்மனே நம: ||”

[“யாருக்குத் தீ முகமாகவும், சுவர்க்கம் தலையாகவும், ஆகாயம் வயிறாகவும், காலாக பூமியும், கதிரவன் கண்ணாகவும்,
திசை செவியாகவும் விளங்குமோ, உலகத்தைத் தாங்கும் உயிரான அவனுக்கு வணக்கங்கள்.” — மகாபாரதம், 12.47.44]

(ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்தில் 1.2.25). அதாவது, “ஸ்ம்ருதிகளில் உள்ள வாக்கியங்கள் மூல சுருதிகளை ஆதாரமாகக் கொண்டவையாக
இருந்தால், அவை அச் சுருதி வாக்கியங்களைத் தெளிய உரைப்பதாகக் கொள்ளலாம்” என்பது.
இவ்வாறு அமைந்துள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களை “வேத உபப்பிரம்மணம்” என்று கூறுவர்.
ஆகையால், மேற்கண்ட மகாபாரதச் சுலோகம் முண்டகோபநிடத மந்திரத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும்.
இதனை அடிப்படையாக வைத்துத்தான் சங்கப் புலவரும் நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என்பதும் தெரிகிறது.

சங்கரர் எடுக்கும் மற்றொரு மேற்கோள் இன்றைய பிரம்மாண்ட புராண அத்தியாயம் ஒன்றில் உள்ளது:

“த்3யாம் மூர்தா4னம் யஸ்ய விப்ரா வத3ந்தி க2ம் வை நாபி4ம் சந்த்3ர-ஸூர்யௌ ச நேத்ரே |
திச’: ச்’ரோத்ரே வித்3தி4 பாதௌ3 க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூ4தப்ரணேதா ||”

[வேதமறிந்த ஞானிகள் யாருடைய உச்சந்தலையை சுவர்க்கமாகவும், ஆகாயத்தை உதரமாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும்,
திசைகளைச் செவிகளாகவும் பாதங்களை பூமியாகவும் அறிவரோ, அந்த அறிவுக்கெடாத பரமாத்மா
அனைத்து உயிர்களுக்கும் தலைவன் ஆவான். — பிரம்மாண்ட புராணம், 1.5.107]

பிரம்மாண்ட புராணத்தில் இவ்வரிகளைக் கொண்ட பிரகரணமும் சிருஷ்டியை விளக்குவதாகும்.
சங்கரரால் கீதை விளக்கவுரையில் மங்கள சுலோகமாக எடுக்கப்பட்ட “நாராயண: பரோ அவ்யக்தாத்” எனத் தொடங்கும் வரிகளும்
இதே அத்தியாயத்தில் மேலெடுக்கப்பட்ட வரிகளுக்கு மிக அண்மையில் காணப்படுகின்றன.
இது தவிர, மற்றொரு இடத்திலும் (சூத்திர பாஷ்யம், 2.1.1) இப்புராணத்தில் காணப்படும் வேறொரு வரியைச் சங்கரர்
மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து இப்புராணத்தில் உள்ள பகுதிகள் பிரமாணமாகக் கையாளப்பட்டமை தெரிகிறது.

திருமாலை இப்படிப் பாடும் மரபு வேதாந்தத்தை ஒட்டி வருகின்றது என்பதற்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து மேலும்
பல அரிய மேற்கோள்களையும் காணலாம். உதாரணமாக ஆதிகவி வால்மீகி முனிவரின் இராமாயணத்தில் யுத்த காண்டத்தில்
சீதையை மீட்டு வரும் தருணத்தில் நான்முகக் கடவுள் முகமாக தேவர்கள் அனைவரும் இராமனை பக்தியுடன் பாடும் பகுதி வருகிறது.
இப்பகுதியும் பரம்பொருளின் பரத்வ நிலையைப் பாடும் பல ஆழ்ந்த வேத வாக்கியங்களை அடியொற்றியவண்ணம் அமைந்துள்ளது. அதில் நான்முகனார்,

“அச்’விநௌ சாபி தே கரணௌ சந்த்3ர ஸூர்யௌ ச சக்ஷுஷீ”
“ஜக3த் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தை2ர்யம் தே வஸுதா4 தலம்” [— இராமாயணம், யுத்த காண்டம், 6.105.7, 6.105.23]

என்று பெருமாளின் கண்களைச் சூரிய-சந்திரர்களாகவும், திடமான நிலையை பூமியாகவும், அவன் செவிகளை அச்வினி தேவதைகளாகவும்
பாடியபிறகு உலகனைத்தும் அவனுக்கு சரீரமாகவும் பாடியுள்ளார் பிரம்மா.

இம்மரபை ஒட்டியே அமரகோசத்திலும் விஷ்ணு பெயர்களில் ஒன்றாக “விச்’வம்பர” என்ற பதமும் படிக்கப்படுகிறது.
இதற்கு “பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவன்” என்று பொருள்.

நாம் எடுத்துக்கொண்டிருக்கும் நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தை முழுமையாகக் கொண்ட வடமொழிச் சுலோகம்
ஒன்று இன்று அனைவராலும் ஓதப்படுகிறது.
“தோடகாசாரியார்” என்ற ஆதி சங்கரர் வழி வந்த வேதாந்தியரின் “ச்’ருதி ஸார ஸமுத்3த4ரணம்” என்ற நூலில் மங்கள சுலோகமாக வருகிறது–

“பூ4: பாதௌ3 யஸ்ய க2ம் சோத3ரமஸுரநில: சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாசா’: சி’ரோ த்3யௌர்முக2மபி த3ஹனோ யஸ்ய வாஸ்தவ்யமப்3தி4: |
அந்த:ஸ்த2ம் யஸ்ய விச்’வம் ஸுர-நர-க2க3-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம்
ரம்ரம்யதே தம் த்ரிபு4வனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||”

[“பூமியைப் பாதங்களாகவும், ஆகாயத்தை வயிறாகவும், வாயுமண்டலத்தை மூச்சாகவும், சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும்,
திக்குகளைச் செவிகளாகவும், வானுலகை உச்சந்தலையாகவும், அக்னியை வாயாகவும், ஆழ்கடலைக் குடலாகவும், எவன் கொண்டுள்ளானோ,
எவனுள்ளே தேவரும், மானுடரும், புள்ளும், அரவும், கந்தருவரும், அசுரர்களும் இயங்கி விளையாடுகிறார்களோ,
மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட விஷ்ணுவாகிய அந்த சர்வேஸ்வரனை வணங்குகிறேன்.” — ச்ருதிஸாரஸமுத்தரணம், 179]

இச் சுலோகம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தில் தியான சுலோகங்களில் ஒன்றாக இன்று வாசிக்கப்படுகிறது.
நற்றிணையின் பாயிரத்தில் “மாநிலஞ் சேவடியாய்” என்பது மேற்கண்ட தியான சுலோகத்தில் “பூ4: பாதௌ3” என்றும்,
“விசும்பு மெய்யாக” என்பது “க2ம் சோத3ரம்” என்றும், “பசுங்கதிர் மதியொடு சுடர்க்கண் ணாக” என்றது
“சந்த்3ர ஸூர்யௌ ச நேத்ர” என்றும் வருவதைக் காணலாம்.

“இயன்றவெல்லாம் பயின்று அகத்து அடக்கிய” என்ற சரீர-சரீரி அடிப்படையிலான தொடர்பும் விரிவாக
“யஸ்ய விச்’வம் ஸுர-நர-க2க3-கோ3-போ4கி3-க3ந்த4ர்வ-தை3த்யை: சித்ரம் ரம்ரம்யதே” என்றும் வருவதைக் காணலாம்.

இது “ஸர்வம் க2லு இத3ம் ப்3ரஹ்மா” என்ற சாந்தோக்ய உபநிடதத்தில் (மூன்றாம் அத்தியாயம், பதிநான்காவது பகுதியில் உள்ள)
“சாண்டில்ய விதயை” வாக்கியத்தையும் ஒட்டி வருகிறது. அதே அர்த்தத்தைப் புருஷ ஸூக்தமும்
“புருஷ ஏவேத3ம் ஸர்வம்” என்ற மந்திரத்தில் உணர்த்துகிறது. தைத்திரீய நாராயணீய உபநிஷதும்,

“யச் ச கிஞ்சிஜ் ஜக3த் ஸர்வம் த்3ருச்’யதே ச்’ரூயதேபி வா
அந்தர் ப3ஹிச்’ ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:”

[பிரபஞ்சத்தில் காணப்படுவது கேட்கப்படுவது எல்லாவற்றையும் உள்ளிருந்தும் வெளியிலும் சூழ்ந்து நாராயணன் நிலைத்து நிற்கிறான்.]என்று இயம்பிற்று.

இங்ஙனம் பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனுக்குச் சரீரமாகக் கூறுவதால் அனைத்துயிர்களும் அவனுக்கு உடைமையாகின்றன.
இத்தகையதொரு சித்தாந்தத்தில் பரஸ்பர சகோதரத்துவக் கண்ணோட்டத்திற்கே இடமுண்டு. இவ்வர்த்தத்தை நாம் பகவத் கீதை மூலமாக அறியலாம்:

“மற்றோ ரிடத்து மறமற்று மித்திரனா
யுற்றான் கருணை யுறுமமதை — செற்றா
னகங்கார மற்றா னமர்பொறையன றுக்கஞ்
சுகங்காணி லொப்பான் றுணிந்து.” [பகவத் கீதை வெண்பா, 12.13]=இப்படிக் கீதாச்சாரியனாகிய கண்ணன் சொல்லுமிடத்தே,
“இவரை நினைவில் வைத்துக் கொண்டுத் தன் இச் சுலோகத்தைச் செய்துள்ளானோ” என்று வியக்கும் வண்ணம்
வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ பிரகல்லாதாழ்வான். தன்னுடைய விஷ்ணுபக்தியைப் பொறாத தன் தன்தை பலவாறு துன்பப்படுத்தியும்
பிரகல்லாதன் இத்தகைய துவேஷமற்ற தூய சிந்தையுடன் திடமாக இருந்தார். அனைத்து உயிர்களையும் தனக்குச் சினேகிதராக,
மிக விரும்பத்தக்கவர்களாகவே பாவித்தார். “தூய விஷ்ணுபக்திக்கு இது இன்றியமையாத அங்கம்” என்ற கொள்கையை ஸ்திரமாகப் பற்றியிருந்தார்.

உலகனைத்தும் திருமாலுடைய தோற்றமன்றி வேறில்லை. அவனே அனைத்துடனும் ஒன்றி நிற்பவன்.
ஆகையால் ஞானிகள் உலகனைத்தையும் தம்மைக் காட்டிலும் வேறாக நினைக்காமல், அனைத்தையும் தாமாகப் பாவிப்பர்.
ஆகையால், நம்முடைய குலத்தில் வேரூன்றியிருக்கும் குரோத குணத்தை விலக்குவோம்.
இதன் மூலம் நாம் நித்தியமான, சுத்தமான, ஆனந்தமான ஆன்ம ஸித்தியை அடையலாம்.”

“அனைத்துயிர்களையும் சமமாக பாவிப்பீர்கள் அசுரர்களே! இத்தகைய சமத்துவ பாவமே அச்சுதனை ஆராதிக்கும் முறையாகும்” [விஷ்ணு புராணம், 1.17.82-90]
என்னும் பிரகல்லாதன் கூற்றைக் காணலாம். இக்காரணத்தால் கம்பர்,

“தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்” [கம்பராமாயணம்: இரணியன் வதைப் படலம், 82] என்று பிரகல்லாதனை அடைமொழியிட்டுப் பாடியுள்ளார்.
“வைஷ்ணவ ஜனதோ” எனத் தொடங்கும் குஜராத்தி மொழிப் பாடலின் கருத்தும் இத்துடன் உடன்படுவதை உணரலாம்

ஸ்ரீ திருமழிசைப்பிரான் வைபவம் —

February 10, 2020

ஸ்ரீ மகாயாம் மகரே மாஸே சக்ராம்சம் பார்கவோத்பவம்
மஹீ சார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்
தொண்டை நாட்டில் உள்ள திருமழிசையில் தை மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் அவதரித்த
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 216 பாசுரங்களை அருளியவர்.
அவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன.

ஸ்ரீ முதல் ஆழ்வார்களும், ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும் தொண்டை நாட்டினர். நால்வரும் அந்தாதி பாடி அருளியவர்கள்; சமகாலத்தவர்கள்.

தொண்டை நாட்டில் உள்ள ஸ்ரீ திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.
“தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்கிறார் ஒளவையார்.
இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.
தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.
ஸ்ரீ திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும்,
ஸ்ரீ திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் ஸ்ரீ சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் ஸ்ரீ திருமழிசையாழ்வார்.
கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால்
வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது.

இவர் ஸ்ரீ திருமழிசையில் பிறந்ததால் ஸ்ரீ திருமழிசையாழ்வார் என்றும், ஸ்ரீ பக்திசாரர், ஸ்ரீ திரு மழிசைப் பிரான் என்றும் அழைக்கப்பட்டார்.
ஆழ்வார் என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டதாக ஸ்ரீ ஆராவமுதாழ்வார் என்று கூறுவர்.

இவர் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் 17.
1) திரு அரங்கம் 2) திரு அல்லிக்கேணி 3) திரு அன்பில் 4) திரு ஊரகம் (காஞ்சிபுரம் அருகில்) 5) திரு எவ்வுள் (திருவள்ளுர்)
6)திரு கபிஸ்த்தலம் 7) திருக் குடந்தை 8) திருக் குறுங்குடி9) திருக் கோட்டியூர்10) திருத் துவாரபதி 11) திருக் கூடல்
12) திருப் பரமபதம் 13) திருப் பாடகம் 14) திருப் பாற்கடல் 15) திரு வடமதுரை 16) திரு வெக்கா 17) திரு வேங்கடம் ]

————-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் – யான்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின்நீர் தேர்ந்து–(3484)

பிரமனை நாராயணன் படைத்தான்; பிரமன் சங்கரனைப் படைத்தான். எனவே நாராயணனே முதற்பொருள் என்பதை நான்
இவ்வந்தாதியின் மூலம் அறிவிக்கிறேன்; நீங்கள் இதனைக் குறைவற மனத்தில் கொள்ளுங்கள் எனத் தன் நோக்கத்தை விளக்கி,
ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியைத் தொடங்குகின்றார், ஸ்ரீ திருமழிசைப்பிரான்.

அடுத்தே, எப்படி இருப்பினும் எத்தவம் செய்தாருக்கும் ‘அருள் முடிவது ஆழியானிடம்’ என்கின்றார் (3485).

மெய்ப்பொருள்-ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ‘எல்லாப் பொருள்களுக்கும் சொல்லாகி நின்றவனைத் தொகுத்துச் சொல்வேன்’ (3487) என்பர்.
அவனை ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அறிந்தது போல் யாரும் அறியவில்லையாம்.

பாலிற் கிடந்ததுவும் பண் டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதும் ஆரறிவார் – ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளைஅப்பில்
அருபொருளை யானறிந்த வாறு?– (3486)

ஆல்இலை மேல் துயின்றவனை வழிபட,
வாழ்த்துக வாய்;காண்க கண்;கேட்க செவி மகுடம்
தாழ்ந்து வணங்குமின்கள் தண்மலராய் -(3494:1-2)

இருகரம் கூப்பி, வாய் அவன் புகழ்பாட, கண் அவன் திருஉருவைக் காண, செவி (காது)யில் அவன் அவதாரத்தைச் சொல்லும்
பாசுரங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பர்.
ஏனென்றால் ‘நாக்கொண்டு மானிடம் பாடேன்’ (3558) எனச் சொன்னவர் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார்.

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர் – கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் (3552)

(புவி = பூமி, புவி = இடம்) என யாதுமாகி நின்ற மாயனை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கிக் கைகூப்பி வணங்குகின்றார்.

வீடுபேறு அடையும் வழி அறியாது உடலை வருத்தி, எலும்புக்கூடு போலத் தோற்றம் உருவாகும்படி தவம் புரிந்து வாழவேண்டாம்.
வீடுபேற்றைக் கொடுக்க வல்லவன், வேத முதற் பொருளான நாராயணன் தான் (3496) என வீடுபேறு பெறும் வழி காட்டுகின்றார்.

பூதங்களும் புனிதனும்
‘வானும் தீயும் கடலும், மலையும் கதிரும் மதியும் கொண்டலும் உயிரும், திசை எட்டும், இந்த உலகமும்
திருமாலின் வெளிப்பாடுதான்’ (3520) என இயற்கை அனைத்தையும் அவனாகவோ
அல்லது அவன் படைப்பாகவோ காண்கின்றார் ஆழ்வார்.

குலங்களாய ஈரிரண்டி லொன்றிலும் பிறந்திலேன்
கலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன், பொறியிலேன்,புனித! நின்
இலங்குபாத மன்றி மற்றோர் பற்றிலேனெம் ஈசனே!– (841)

மேற்குலங்களில் பிறத்தலும் கலைகளில் சிறத்தலும் ஐம்பொறிகளை வெல்லுதலும் ஆகிய சிறப்புகள் ஏதும் எனக்கு இல்லை.
உன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் அறியேன் என்று தம் இயலாமையையும் அளவில்லாத பக்தியையும்
ஸ்ரீ ஆழ்வார் தம் ஸ்ரீ திருச்சந்த விருத்தத்தில் குறிப்பிடுகிறார்.

பாம்பணையில் துயில் கொண்டிருக்கும் நாதன் தமக்குக் கண்ணாக இருந்து நெறிப்படுத்துபவன் எனச் சொல்லும் திருமழிசை ஆழ்வார்,

ஊனில்மேய ஆவிநீ; உறக்கமோடு உணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீ: அவற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீ; வளங்கடற் பயனும் நீ
யானும்நீ, அதன்றி எம் பிரானும் நீ; இராமனே! (845)

(ஊனில் = உடம்பில், ஆனில் மேய ஐந்தும் = பசுதரும் பயன்கள்-பால், தயிர், நெய், கோமியம், சாணம்,
கடற்பயன் = அமுதம், பவழம் போன்றன) என்று பாடி ‘உன்னை என்னிலிருந்து பிரித்து விடாதே’ என வேண்டுகிறார்.

பேசு, கேசனே!–காட்டில் நடந்து கால்களும், ஏனமாய் உலகைச் சுமந்து உடலும் நொந்ததால்
ஸ்ரீ திருக்குடந்தையில் துயில் கொண்டாயோ என வினாவுகின்றார்.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே! (812)
(ஏனம் = வராக அவதாரம்) எனத் திருமாலின் அருளிச் செயல்களுக்குக் காரணம் கற்பிக்கின்றார் ஆழ்வார்.

எல்லாம் நெஞ்சுள்ளே-
ஸ்ரீ திருமழிசை பிறக்கும் முன்பு ஸ்ரீ திருவூரகத்தில் நின்றும்,ஸ்ரீ திருப்பாற்கடலில் இருந்தும், ஸ்ரீ திருவெஃகாவில் கிடந்தும்
அருளிய ஸ்ரீ திருமால், பிறந்தபின் தம் நெஞ்சிலே எல்லாக் கோலமும் கொண்டருளினார் என்கிறார் அவர். எப்படி?

அன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததுமென் நெஞ்சுளே (815)
என்பர். பிறந்த உயிர் அழிவது தெரிந்திருந்தும் இந்த உலகத்தில் உள்ள மக்கள் ஏன் இறைவனை எண்ணி
வாழ முடியாமல் உள்ளனர் என வினவுகின்றார் (817).

கால் வலையில்படுதல்
வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம்.
வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும்
நாராயணன் தான் (நான்முகன் திருவந்தாதி – 3496) என வழிகாட்டுகின்றார். அந்த வழி மிக எளிது.
பல மலைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது ஸ்ரீ திருவேங்கடமலையைச் சொன்னேன்.
இதனால் வீடுபேறு உறுதி என்னும் நிலையை அடைந்தேன். அதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் – (3523)

அவதாரம்
‘ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதி தேவன்’ எனக் கூர்ம அவதாரத்தைப் (765, 771) போற்றும் ஸ்ரீ ஆழ்வார்
ஒவ்வொரு அவதாரத்திற்கும் உள்ள பெருமையாகக் கூறுவனவற்றுள் சில:

ஸ்ரீ வாமனன் அடியினை வணங்கினால் ‘ஞானமும் செல்வமும் சிறந்திடும்! ஸ்ரீ திருமாலைப் போற்றினால் தீவினைகள் நீங்கும் (825),
அவன் ‘விண் கடந்த சோதி, ஞான மூர்த்தி, பாவநாச நாதன்’ (778), விண்ணின் நாதன் (798), கடல் கிடந்த கண்ணன் (844),
வேதகீதன் (868), சாம வேத கீதன் (765) எனப் போற்றிப் புகழ்கின்றார்.
காளிங்கன் என்னும் பாம்பின்மேல் நடனம் ஆடியவன்; குடக்கூத்தாடிய கொண்டல் வண்ணன்,
கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவன். விளங்கனி வடிவில் வந்த அரக்கனைக் கொன்றவன் (789).

ஆய்ச்சிபாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெயுண்டு,பின்
பேய்ச்சிபாலை யுண்டு பண்டொ ரேனமாய வாமனா! (788:3-4)
என ஸ்ரீ வாமன அவதாரத்தைச் சொல்லும் ஆழ்வார் ஸ்ரீ வராக அவதாரத்தைச் சுட்டி விளிக்கின்றார்.
‘உரத்தில் (மார்பு) கரத்தை (கை) வைத்து நகத்தால் கீறியவன், ஸ்ரீ வாமனன் ஆகி மண் இரந்தவன் (776) என
ஸ்ரீ நரஸிம்ஹ அவதாரத்தையும் ஸ்ரீ வாமன அவதாரத்தையும் ஒரு பாசுரதத்தில் சுட்டுவர்.

ஸ்ரீ திருமால் உள்ளங்கையில் ஆழி (சக்கரம்), சங்கு, தண்டு, வில், வாள் ஏந்தியவன் (775, 848, 857).
கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் ஸ்ரீ திருவரங்கம்.

கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்
உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர் (800)
‘இலங்கை மன்னன் சிரங்கள் பத்தும் அறுத்து உதிர்த்த செல்வர்’ வாழும் இடம் ஸ்ரீ திருவரங்கம் ஆகும்.
அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே(802)
இலங்கையை அழித்த ஆழியானை நான்முகன் வந்து பணிந்த ஊர் அரங்கம் எனப் பாசுரம் செய்கின்றார்
ஸ்ரீ திருமழிசையாழ்வார், ஸ்ரீ திருச்சந்தவிருத்தில்.

திவ்ய தேசங்களின் புகழ்பாடும் அடியார் பழைய புராணக் கதைகளைப் பொதிந்து புதிய விளக்கம் கொடுக்கின்றார்.

கூடல் இழைத்தல்
தலைவனைப் பெற விரும்பும் தலைவி கூடல் இழைத்தல் அகப்பொருள் மரபாகும்.
இங்கு ஸ்ரீ நான்முகன் திருவந்தாதியில் ஸ்ரீ திருமழிசையாழ்வார் நாயகி நிலையில் நின்று,

அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண இழைப்பன் திருக்கூடல் கூட (3522)
எனப் பாடுவது, மானுடக் காதல் இறைவன் மீது கொண்ட காதலாக மாற்றம் செய்யப் பெற்றதைக் காட்டுகின்றது.

நிலையாமை
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளும்நாள்அது ஆதலால் வணங்கிவாழ்த்தென் நெஞ்சமே! (863)

எனப் பிறப்பு இறப்பு நீங்க, உடம்பின் நிலையாமையைச் சொல்லி மனத்தை மாயன்பால் வைக்க வேண்டுகிறார்.
வீடுபேறு தருபவன்; வெற்றி அளிப்பவன்; ஞானம் ஆனவன், அத்தலைவன்.

அத்தனாகி, யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை ஆட்கொள்வான் (866:1-2)
அச்சம், நோய், அல்லல் (துன்பம்), பல்பிறப்பு, மூப்பு (முதுமை) ஆகியவற்றை அகற்றி வான் ஆளும் பேறு கொடுப்பான்.
நாகணையில் (பாம்பணை) கிடந்த நாதன் என்பர்.

பலபிறவிகள் எடுத்த தம் உடம்பை, அவனே உய்யக் கொள்வான்.
‘என் ஆவி தான் இயக்குஎலாம் அறுத்து அறாத இன்பவீடு பெற்றதே’ (871) எனத் திருச்சந்த விருத்தத்தின் இறுதிப் பாசுரம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பற்று அறுத்த நிலையைக் காட்டுகின்றது.

ஒன்று சாதல், நின்றுசாதல், அன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை கண்டுநீச ரென்கொலோ
அன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே? (812)

என்னும் பாசுரம் தம்முயிர் போலவே பிற உயிரும் உய்திபெறும் வழியை நாட வேண்டும் என
ஏங்கும் ஆழ்வாரின் விழைவைக் காட்டுகின்றது.

மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்துநின் கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் (849)

எனப் பாடி மீண்டும் பிறவாமல் இருக்கும் பேறும், உன்னை மறவாதிருக்கும் பேறும் வேண்டும் என்பர்.

——————

சிவவாக்கியம்

இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூல’நாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!–98

நாலொடாறு பத்து மேல் நாலு மூன்றும் இட்டபின்
மேலு பத்து மாறுடன் ஊமேதிரண்ட தொன்றுமே
கோலி அஞ்செழுத்துடே குருவிருந்து கூறிடில்
தோலி மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே–174

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாயமாயம் மாயனே–270

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதி தேவனே
எட்டுமாய் பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே–271

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய்
பத்து நாற்திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்துமாய் கொத்தமோடும் அத்தலம்மிக் காதிமால்
பத்தர்கட்கலாது முத்தி முத்தி முத்தி யாகுமே–272

திருச்சந்த விருத்தம்

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடாசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே -2 (சிவவாக்கியர் 270)-

எட்டும் எட்டும் எட்டுமாய் ஓரேழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்று அவன்பெயர்
எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்ல வானம் ஆளவே –77 (சிவவாக்கியர் 271)

பத்தினோடு பத்துமாய் ஓரேழினோடு ஓர் ஒன்பதாய்
பத்தினால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தினாய தோற்றமோடு ஓராற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கல்லாது முத்தி முற்றலாகுமே? –79 (சிவவாக்கியர் 272)

இதுபோல் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் 4700 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும்,
ஆரம்பத்தில் சிவ வாக்கியராக இருந்தவர் கடைசியில் ஸ்ரீ திருமழிசை யாழ்வாராகினர்

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் இவ்வுலகத்தில் இருந்தது 4700 ஆண்டுகள்.
அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக வாழ்ந்திருக்கிறார்
என்று “பன்னீராயிரப்படி” வியாக்யானம் தெரிவிக்கிறது.
தனது காலத்திலே, ஆழ்வார் சமணம், பௌத்தம், சைவம் என பல்வேறு சமயங்களையும் கற்று,
அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள் ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார்.

“சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச் சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்” என்று உரைத்தார்.

சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப் போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல்,
பின்னர் ஸ்ரீ பேயாழ்வாரால் திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார் .

—————-

ஸ்ரீ திருமழிசையார்வார் பற்றி பல கதைகள் உண்டு; கணி கண்ணனைப் பற்றிய கதை முக்கியமானது.

ஆடவர்கள் எங்கன் அன்று ஒழிவார் வெக்காவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா நீடிய மால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மென்றார் பொழில் கச்சி மாண்பு –ஸ்ரீ கனி கண்ணன் மன்னனிடம் பாடிய பாடல்

இவரது சீடனான ஸ்ரீ கணி கண்ணன் என்பவன் பல்லவ மன்னனின் ஆணைப்படி, ஸ்ரீ கச்சியை விட்டு வெளியேறிய போது,
ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்ப ஸ்ரீ திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமான்,
தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றாராம். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்புக் கோரியவுடன்,
இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பித் தன் பைந்நாகப் பாயை விரித்துப் பள்ளி கொண்டதாகக் கூறுவர்.
இந்தக் கதையின் ஆதாரம் ஸ்ரீ திருமழிசை பாடியதாக சொல்லப்படும் இரண்டு தனிப் பாடல்கள்:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.–என்று முதல் பாட்டுக்கு ஸ்ரீ பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.–என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டாராம்.

அதே போல் பெற்ற தாயின் பாலை இவர் அருந்தாது, வளர்த்த தாயின் பாலையும் மறுத்து,
தன்பால் பரிவுடன் நின்ற உழவர்குல முதியவர் ஒருவர் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார் என்பதை

எந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று,
சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே
அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்–என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.

———–

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், ஸ்ரீ திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதனை ஸேவிக்க விரும்பி, ஸ்ரீ திருக்குடந்தை செல்லும் வழியில்,
பெரும்புலியூர் என்ற இடத்தில் ஓய்வெடுக்க தங்கினார். அங்கு சில அந்தணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.
வேற்று மனிதர் ஒருவர் வந்து அமர்ந்ததைக் கண்ட அந்த அந்தணர்கள் வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர்.
இதனை உணர்ந்து கொண்ட ஆழ்வாரும் அவ்விடத்தை விட்டு கிளம்ப, அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத விழைந்தனர்.

ஆனால் அவர்கள் எந்த இடத்தில் தாங்கள் நிறுத்திய வேத மந்திரத்தை தொடங்குவது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், அவர்கள் தொடங்க வேண்டிய
ஸ்ரீ கிருஷ்ணாநாம் வரீஹீனாம் நக நிர்ப்பின்னம் -மந்திரத்தை
உணர்த்த ஒரு விதையை எடுத்து அதனை உரித்து காண்பித்து,
பூடகமாக எந்த இடத்தில் அவர்கள் வேத மந்திரத்தை தொடங்க வேண்டும் என்று சைகை காட்டினார்.
தங்கள் தவறினை புரிந்து கொண்ட அந்த அந்தணர்கள் , ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு,
அவரையும் வேத கோஷ்டியில் கலந்து கொள்ள வேண்டினர்.

பெரும்புலியூர் வேதியர் யாகம்
ஸ்ரீ திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த ஸ்ரீ திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம்
திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள்.
வேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது.
அவர்கள் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள்.
பெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார்.
யாகசாலையை விட்டுச் சென்று ஸ்ரீ திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.
அவரை யாகசாலை, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது.
வேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை ஸ்ரீ திருமழிசையாருக்குச் செய்தார்.
அப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர், “நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா?”
என்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.

இதைக் கண்ட ஸ்ரீ திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, ஸ்ரீ திருமகள் நாதனை நோக்கி,
“சக்கரத்தைக் கையில் ஏந்திய ஸ்ரீ திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால்,
இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும் வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும்
உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டி பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம் கொலோ?
இக் குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம் கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட் கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே!

இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளை ஸ்ரீ திருமகளும் ஸ்ரீ பூமகளும் வருடிட,
தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் ஸ்ரீ திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார்.
அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள்.
பிறகு ஸ்ரீ திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று
ஸ்ரீ திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

————

உலகத்தின் பார்வையாலும், வேதத்தின் பார்வையாலும், பக்தியின் பார்வையாலும்,
எம்பெருமான் தானே தன்னைக் கொண்டுவந்து காட்ட,
முதலாழ்வார்கள் மூவரும் எம்பெருமானைக் கண்டு அனுபவித்தார்கள்.
அதாவது, இவர்கள் மூவருக்கும் பகவான் நேரே ஞானத்தை வழங்கி,
தானே பரம்பொருள் என்பதையும் உணர்த்த, அவர்களும் அவனை மனமாரத் தரிசித்து, அவன் புகழைப் பாடினார்கள்.

நான்காமவரான திருமழிசை ஆழ்வார் முதலில் நெடுங்காலம் பிற சமயங்களில் இருந்து விட்டு,
பின்னர் எது உண்மையான பரம்பொருள் என்பது பேயாழ்வாரால் காட்டப்பட்டு,
அதன்பின் இவரும் முதலாழ்வார்களைப் போலவே, அந்த நிலையை அடைந்த போது, தானும் அனுபவித்து மகிழ்ந்தார்.

ஆனால், வேதத்தின் அடிப்படையில், நியமிப்பவன் எம்பெருமான்; நியமிக்கப்படுபவர்கள் ஜீவாத்மாக்கள்
என்கின்ற உண்மைத் தன்மை உலகில் வெளிப்படாமல் மறைந்திருப்பதைக் கண்டு,
இப்படி, எது உண்மையான பரம்பொருள் என்று உலகோர்கள் அறியாமல் இருப்பதைக் கண்டு,
அப்படி அஜ்ஞானத்துடன் இருப்பவர்கள் மீது பரிவு (இரக்கம்) கொண்டு,
அனைத்து வேதங்களின் ரகசியங்களையும் உபதேசித்து அருளினார் (அறிவுறுத்தினார்) தனது திவ்யப் பிரபந்தங்களின் மூலம்.

பெருமான் மீது எத்தனையோ பிரபந்தங்களைப் பாடியுள்ளார் திருமழிசைபிரான்.
ஆனால், இன்று நமக்குக் கிடைத்துள்ளது இரண்டே இரண்டு.
அதாவது,
ஆழ்வார் தானும், தான் இயற்றிய அபாரமான ப்ரபந்தங்கள் அத்தனையையும் காவிரி ஆற்றினில் போட,
இரண்டே இரண்டு பிரபந்தங்களை மட்டும் இந்தக் காவிரி ஆறு அவரிடத்திலே மீண்டும் கொண்டுவந்து சேர்த்ததாம்!
உடனே திருமழிசை ஆழ்வார் நினைத்தார் – இந்த ரெண்டு போதும்,
“ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று உலகத்தாருக்கு அறிவிக்க!
இன்னும் அவர் இயற்றிய அத்தனையும் இருந்திருந்தால் மற்ற சமயங்கள் என்ன பாடுபடுமோ தெரியாது!
இந்த ரெண்டை வைத்துக் கொண்டே இவரை “உறையிலிடாதவர்” என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றால்,
அவர் பாடினது அத்தனையும் நம் கைக்கு வந்திருந்தது என்றால், எப்படி இருக்கும் என்பதை நாம் அறியோம்.
நமக்குக் கிடைத்த அந்த இரண்டு பிரபந்தங்கள் :
நான்முகன் திருவந்தாதி மற்றும்
திருச்சந்தவிருத்தம் ஆகியவை ஆகும்.

நான்முகன் திருவந்தாதியின் முதல் பாடலிலேயே “நான்முகனை நாராயணன் படைத்தான்”
(பிரமனைப் படைத்தவன் நாராயணன்) என்று சொல்லி,
அவனே ஜகத்காரணன் – அதாவது,
இந்தப் பிரபஞ்சமானது அவனிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பதால்,
அப்படிப் பட்டவனே முழுமுதற்கடவுள் ஆவான் என்று உணர்த்தி, இதை “சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து” –
நாராயணனே பரம்பொருள் என்பதை நான் உணர்ந்தேன்; அதை உங்களுக்கும் அறிவிக்கிறேன்;
நீங்களும் நன்கு ஆராய்ந்து, கை நழுவவிடாமல் இதைக் கொள்ளுங்கள்” என்றும் உணர்த்தினார்.

அடுத்து, நான்.திரு.2ஆவது பாடலில்,
“தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர், ஆரும் அறியார் அவன் பெருமை,
ஓரும் பொருள் முடிவும் இத்தனையே” என்று உபதேசித்தார்.
இதன் அர்த்தம், “ஆராய்ந்து பார்த்தால் பரதேவதை ஒருவனே என்று ஞானிகள் கூறுவார்;
யாரும் அவன் பெருமையை (வேதத்தில்) உள்ளபடி யாரும் அறியமாட்டார்கள்.
வேதங்களில் ஆராயப்படும் அர்த்தத்தின் முடிவும் இவ்வளவே” என்பதாகும்.
“ஓரும் பொருள்” – வேத வாக்கியங்களின் அர்த்தம்.
“வேதைஸ்ச ஸர்வை: அஹமேவ வேத்ய:” (கீதை, அத்யாயம் 15, ஸ்லோகம் 15) –
“வேதங்கள் எல்லாவற்றாலும் நானே அறியப்படுகிறேன்” – என்று
கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளான்.
ஆழ்வார் இதை நேரே தமிழ்படுத்திக் காட்டினார் “ஓரும் பொருள் முடிவும் இத்தனையே” என்று!

“பரம்பொருள்” (முழுமுதற்கடவுள்) தானே என்பதை கீதை முழுவதும் உபதேசித்துள்ளார் கண்ணன் எம்பெருமான்.
“மாமேகம் சரணம் வ்ரஜ:” – என் ஒருவனையே சரணடை;
அதுமட்டுமே உன் துன்பங்களைத் தீர்க்கும் என்று கீதையின் இறுதியில் வெளியிட்டு,
தன் பரத்வத்தை (தானே பரம்பொருள் என்னும் தத்துவத்தை) உறுதிபடுத்துகிறார்.

மேலும் கண்ணன் எம்பெருமான்,
“யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம், ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாவேந பாரத” (கீதை, அத்.15, ஸ்லோ.19) –
எவன் புருஷோத்தமனான என்னைக் கலக்கமில்லாமல் அறிகிறானோ, அவன் என்னை அடைவதற்குரிய வழி அனைத்தையும்
அறிந்தவனாகிறான்; என்னை எல்லாப் பிரகாரங்களாலும் (வழிகள்) பக்தி செய்தவனாகிறான்” என்று உரைத்துள்ளார்.

இப்படி கண்ணன் எம்பெருமான் கீதையில் உரைத்துள்ளதை நன்கு உணர்ந்து, தேர்ந்தால் நல்லது நடக்கும்;
அப்படி உணராமல் இருப்பவர்களை மிகவும் தாழ்ந்தவர்கள் என்று சாடுகிறார் இவ்வாழ்வார்.
“மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் எதிலராய் மெய்ஞானம் இல்” (நான்.திரு., 71) –
“எம்பெருமான் பாரத யுத்தம் நடந்தபோது அருளிய சரம ச்லோகமாகிய வாக்கைக் கற்காதவர்கள்
எதுவும் இல்லாதவர்களாய் மெய்யான அறிவும் இல்லாதவர்கள் ஆவர்” என்று சாடியுள்ளார்.

இவ்வாழ்வார் அருளியுள்ள ரெண்டு பிரபந்தங்களாலே, தேறின பொருள் எதுவென்று பார்த்தால்,
நாராயணனே பரதெய்வம்! மற்றபேரைப் (மற்ற தெய்வங்கள், தேவதைகள்) பற்றி
நாம் பேசுவதற்குக் கூட யோக்கியதை கிடையாது! என்பது தெளிவாகும்.
இவர் அருளிய “திருச்சந்த விருத்தம்” பிரபந்தத்தில் ஒரு பாடலை ஆராய,
ஆழ்வார் கூற வந்தது என்ன என்பது இன்னும் நன்கு விளங்கும்.

“காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை
ஆணமென்றடைந்து வாழும் ஆதலால் எம்மாதர்காள்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே!” (திருச்.விரு., 69)

மேற் பாசுரத்தின் (பாடல்) சுருக்கமான அர்த்தம்:
மற்ற தேவதைகள் காண்பதற்குச் சகியாதவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் சரித்திரமோ கேட்பதற்குச் சகியாமல் உள்ளது;
அவர்கள் கேட்கும் வரங்களைக் கொடுக்க முடியாதவர்களாய் இருக்கிறார்கள்;
கம்பீரம் அற்றவர்களாய் இருக்கிறார்கள்; இப்படிப் பட்ட பலவீனமான தேவதைகளைத் தேடிப்போய் பற்றி,
ஆதரவாகக் கொள்பவர்கள் “குருடர்கள்” (ஆதர்காள் – குருடர்கள்) ஆவார்கள்.
குருடர்களே! இனியும் அவர்களிடத்தில் சிக்கி உழலாமல், எது பரம்பொருளோ,
எவன் காணக் காண அழகாக இருக்கிறானோ, எவனது சரித்திரம் கேட்கக்கேட்க திகட்டாமல் இருக்கிறதோ,
எவன் கேட்கும் வரம் எதுவாக இருந்தாலும் கொடுக்கக் கூடியவனோ, எல்லாவற்றுக்கும் மேலாக,
எவன் நம் பிறவி என்னும் துயர்க்கடலை வற்றச் செய்து “மோக்ஷம்” என்னும் நற்கதி அளிப்பவனோ,
அவனையே பற்றி உய்யுங்கள் (நல்ல கதியை அடையுங்கள்) என்று அறிவுறுத்துகிறார். இது மேலோட்டமான அர்த்தம்.

இதற்கு “பெரியவாச்சான் பிள்ளை” – இவர் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள்
அத்தனைக்கும் அற்புதமான விளக்க உரை அருளியுள்ளார் (எழுதியுள்ளார்).
கண்ணன் எம்பெருமானே, ஆழ்வார்களின் பாடல்களுக்கு விளக்கம் தருவதற்காக “பெரியவாச்சான் பிள்ளை” என்னும்
மகானாக அவதரித்தார் என்று வைணவப் பெரியோர்கள் இவரைப் போற்றுகின்றனர்.
ஏனென்றால், கண்ணன் எம்பெருமானும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்;
பெரியவாச்சான் பிள்ளையும் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.
இனி, இவ்வாசாரியர் (பெரியவாச்சான் பிள்ளை) மேற்பாசுரத்திற்கு அளித்துள்ள விரிவான உரையைக் கீழே அனுபவிப்போம்.

அதாவது, மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார்.
மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்),
அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன்மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனைபேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க்கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!

எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார்.
சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” -செவிக்கு இனிய கீர்த்தி என்றால்,
பகவானுடைய திரிவிக்கிரம அவதாரமா – வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.

“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன்தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.
ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்; தன் சிஷ்யனிடத்திலேயே அவர்
“பிள்ளைக்கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாகயஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக் கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று பாடி!
அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?
ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப்பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் ,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க,
அவனிடம் தானம் கேட்டாலும் அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்!
ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை;
அவனும் கொடுக்கபோறதில்லை; நமக்கும் கிடைக்கப் போறதில்லை!
ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.
இதனால்தான், ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக்கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்கபோறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்படவேண்டாம் என்று தவிர்க்கிறார் ஆழ்வார்.

ஏதோ, ஆழ்வார்கள் வேதங்களைத் தமிழ்படுத்திப் பாடிவிட்டுச் சென்றுவிட்டார்கள்;
அத்தோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது என்று இல்லாமல், அவர்கள் மனதில் இருந்த ஆதங்கம் என்ன
என்பதை அணு அணுவாக ஆராய்ந்து, ஏன் இப்படி ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்பதை அறிய,
அவர்களுக்கும் மேலே ஒருபடி ஏறி, அவர்கள் பாடிய பாடல்களுக்கு உரை அளித்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை என்னும் பெரியவர்.
இவர் மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால், ஆழ்வார்களின் தேனிலும் இனிய பாடல்களின் அர்த்தம் என்ன என்றே தெரியமாமல் போயிருக்கும்.

வெறுமே ஆழ்வார்கள் பாடலுக்கு உரை அளித்ததோடு நின்றுவிடாமல்,
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் ஆழ்வார்களின் பாடல்களுக்கு ஏற்ப
என்னென்ன மேற்கோள்கள் (உதாரணங்கள்) காட்ட வேண்டுமோ காட்டித்தான்,
உரை நூலை அருளிச் செய்துள்ளார் பெரியவாச்சான் பிள்ளை.
மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.

“திவுக்ரீடாயாந் தாது; ||
திவு விஜிஹீஷாந் தாது; ||
திவு வியவஹாரந்: தாது; ||
திவு த்யுதீந்: தாது; ||
திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; ||
திவு மதாந்: தாது; ||
திவு காந்தீந்:தாது; ||
திவு கதீந்:தாது.”
இந்த வேத வாக்கியங்களின் விரிவான அர்த்தங்களையும், மேலே உள்ள “காணிலும் உருப்பொலார்” பாசுரத்தின்
விரிவான அர்த்தங்களையும் ஒன்றுசேர்த்து அனுபவித்தால்தான் ஒரு பாடலுக்கான உரை
(வியாக்யானம், explanations) எவ்வளவு அழகாக அமைந்துள்ளது என்பது புரியும்.

ஏன் உரைநூல் எழுதுபவர் இவ்வளவு சிரமப்படவேண்டும் என்றால், அது நம் பயனுக்காக என்று புரிந்துகொள்ளவேண்டும்.
ஏனென்றால், ஆழ்வார்கள் எம்பெருமானைப் பற்றிய மெய்ஞானத்தைப் பெற்றபின், இதுபோதும் என்று இருந்திருக்கலாம்;
ஆனால், நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு,
பகவான் அருளிய ஞானத்தைக் கொண்டு, நாமும் அவற்றை அறிந்து, இன்பம் பெறவேண்டும் என்பதாலேயே
பகவானின் திருக்குணங்களைப் போற்றிப்பாடி, அவற்றை நாமும் அறியும்படி பரப்பினார்கள்.

மேலும், ஆழ்வார்கள் பாடிய பாடலின் அர்த்தங்களை நன்கு புரிந்துகொண்டார்கள் முன்பு வாழ்ந்திருந்த வைணவப் பெரியோர்கள்.
சரி; அவர்களுக்குப் புரிந்து அவர்கள் நன்மை பெற்றார்கள் என்று அதை அப்படியே விட்டுவிடாமல்,
அந்த உயர்ந்த, மங்களகரமான பாடல்களின் அர்த்தங்கள் எல்லோரையும் சென்று அடைந்து,
எல்லோரும் நன்மை பெறவேண்டும் என்று அவர்கள் நல்லெண்ணம் கொண்டார்கள்;
அதனால், ஆழ்வார்களின் பாடல்களுக்கு மேலே சொன்னபடி
வேதங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் உதாரணங்களைக் காட்டி,
உரைநூல் (Explanations அண்ட் Commentaries) அருளினார்கள்.
வைணவப் பெரியோர்களால், அவை அனைத்தும் இன்றும் நன்று பாதுகாக்கப்பட்டு,
அனுதினமும் பல இடங்களில் சொற்பொழிவுகளின் மூலமும் பரப்பபடுகின்றன என்றால்,
ஒருபோதும் இவ்வுலகத்தார் உண்மையை அறியாமல் சீரழிந்துவிடக்கூடாது என்ற நன்னோக்கே ஆகும்.

ஏற்கனவே தெரிவித்தபடி, தெய்வம்னு ஒருத்தன் இருக்கிறான் என்றால்,
அவன் “கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) –
அவன் ஒருத்தன்தான் தெய்வமே தவிர, மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” – எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்;
அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் திருமழிசை ஆழ்வார் .

இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

அதன்பின்,திருமழிசைப்பிரான் திருக்குடந்தையிலே பல ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து உலகத்தோர் இனிதுடன் வாழ அருளி,
திருநாட்டுக்கு எழுந்தருளினார் (எம்பெருமான் திருவடியில் முக்தியை அடைந்தார்) திருமழிசை ஆழ்வார்.

திருமழிசைப்பிரான் அவதரித்தது திருமழிசையில்.
பரமபத கதியை (முக்தி) அடைந்தது திருக்குடந்தை என்னும் திவ்யதேசத்தில்.
ஆழ்வாரது “திருவரசு” (முக்தி அடைந்த இடம்)திருக்குடந்தையில் உள்ளது.
ஆழ்வாரை ஸ்தூலமாக திருமழிசையிலும் மற்ற தேசத்துக் கோயில்களிலும் ஸேவிக்கலாம்;
சூஷ்ம ரூபமாகவும் அவரை, திருக்குடந்தையில் உள்ள அவரது திருவரஸில் ஸேவிக்கலாம்.
ஸேவித்து, ஆழ்வார் பெற்றிருந்த ஞான வைராக்யத்தை எளிதில் அடையலாம்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்”

என்று திருமழிசைப்பிரானின் அவதாரத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மணவாள மாமுனிகள் (உபதேச இரத்தினமாலை, பா.12).
ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்ற தூய்மையான அறிவைப் பெற்றிருந்ததனால்,
“துய்யமதி பெற்ற” மழிசைப்பிரான் என்று போற்றியுள்ளார் மாமுனிகள்.
இப்படித் தூய்மையான மதியுடன் திகழ்ந்த திருமழிசைப்பிரானின் திருவடிகளிலேயே தன்னைப் புகுத்திக் கொண்டவர்,
இந்த உலகோர் உய்ய பகவானால் அருளப்பட்ட ஆசார்யரான பகவத் இராமானுசர்.

“ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி” என்றும்,
“ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி” என்றும் – அதாவது,
அவர்கள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கு அற்புதமான உரைகள் (வியாக்யானம் – Explanations)
இட்ட ஆசார்யர்களையும் வணங்குகிறேன் என்று சொல்வதற்குத் துளியும் அருகதை இல்லாதவனாய் அடியேன் இருந்தாலும்,
அவர்கள் அனுக்ரஹத்தைப் பெறும் பாக்கியம் திருமழிசை ஆழ்வார் அருளியுள்ளபடி இன்று இல்லாவிட்டாலும் சரி;
நாளை இல்லாவிட்டாலும் சரி; அல்லது இன்னும் சிறிது நாட்கள் கழிந்தாலும்
அது கிடைக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் இருந்து, ஆன்மீக எழுத்துப் பணியைத் தொடரும்
பாக்கியத்தையாவது அவர்கள் அருளுவார்கள் என்று இருக்கக் கடவேன்.

——————–

மாற்று சமயக் கருத்துகளைவிட திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில்
மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஸ்ரீ ஆழ்வாரை, ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்,
“உறையில் இடாதவர்” என்று அழகிய ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார்.
( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )

மற்றைச் சமயங்கள் பல தெரிந்து, மாயோன்
அல்லால், தெய்வம், மற்று இல்லை என உரைத்த
வேதச் செழும் பொருள்–என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ தேசிக பிரபந்ததில் இதைக் குறிப்பிடுகிறார்.

வேதச் செழும்பொருள் நான்முகன் தொண்ணூற்று ஆறு பாட்டும்
மெய்ம்மிகுந்த திருச்சந்த விருத்தப் பாடல் விளங்கிய நூற்று இருபதும் என்றும்
எழில் மிசைப் பிரான் இருநூற்று ஒரு பத்தாறும் என்று தேசிக பிரபந்ததில் வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.
“ஆழ்பொருளை அறிவித்தேன், சிந்தாமல் கொண்மின் நீர்தேர்ந்து”–என்று தொடங்கி,
“இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன், எம்பொருமான் உன்னை”–என்று ஸ்ரீ திருமாலே பரம்பொருள் என்ற கருத்தினைக் கூறி முடிக்கிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் “துய்மதி பெற்ற மழிசை பிரான்” ( உபதேசரத்தினமாலை 4 ) என்றும்
இவர் அவதரித்த திருநாளை “நல்லவர்கள் கொண்டாடும் நாள்” ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.
இன்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம் நாமும் அதைக் கொண்டாடலாம்.

இப்பூவுலகிலே நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் திருமழிசை ஆழ்வார்.

“தையில் மகம் இன்று தாரணியீர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்திற்குச் சாற்றுகின்றேன் – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்”

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே!
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே!
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே!
எழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே!
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே!
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே!
நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே!
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே!

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-61-80- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 10, 2020

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

பதவுரை

விலங்கு

நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற
மால் வரை

பெருப்பெருத்த மலைகளையும்
கரம்

பாலைநிலம் முதலிய அருவழிகளையும்
கடந்த

(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற
கால் பரந்த

விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய
காவிரி

திருக்காவேரி நதியினுடைய
கூரை

கூரைமீது
குடந்தையும்

திருக்குடந்தையிலே
கிடந்த ஆறு

திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது
நடந்த கால்கள் நொந்தவோ

உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)
ஞாலம்

பூமிப்பிராட்டியானவள்
நடுங்க

(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)
ஏனம் ஆய்

மஹாவராஹமூர்த்தியாகி
இடந்த

அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த
மெய்

திருமேனி
குலுங்கவோ?

ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)
கோனே

கோவனே!
எழுந்திருந்து போ

(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;
வாழி

இக்கிடையழகு என்றும் வாழ்க.

நடந்த கால்கள் நொந்தவோ-உலகு அளந்த திருவடிகள் நொந்ததாலோ
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலா மகள் பிடிக்கும் மெல்லடியாலே அளந்து அருளினாய்

நடுங்க ஞாலம் ஏனமாய்-
பூமிப் பிராட்டி தம்மை எடுக்க வல்லவர் யாரும் இல்லை என்று பாதளத்தில் உரு மாய்ந்து இருந்த காலத்தில்
மகா வராஹ மூர்த்தியாய்

இடந்த மெய் குலுங்கவோ -பூமியை விடுவித்த சிரமம் தீரவோ
திருவடிகளைப் பிடிக்கவும் திருமேனியைப் பிடிக்கவும் பாரிக்கிறார்-

விலங்கு மால் வரைச் -நீர் பெருக தடையாய் இருந்த பெருத்த மலைகளையும்
சுரம்-பாலை நிலம் போன்ற ஆறு வழிகளையும்
கடந்த கால் பரந்த -வேகத்தால் கடந்து கொண்டு வருகிற விஸ்தாரமான வாய்க்கால்களை உடைய
சீதோ உபசாரம் பண்ணவே திருக்காவேரி பாரித்து ஓடி வருகிறாள் –

காவிரி கரைக் குடந்தையுள்- காவேரி கரை மீது
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-

வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலம் மகள் பிடிக்கும் மெல்லடி
உலகளந்த விடாய் தீரவோ -அல்லது என்னமாய் உலகு இடந்த விடாய் தீரவோ -எதனால் வந்த ஆயாசம்-
மலைகளையும் நிலங்களையும் கடந்து காவேரி சீதோ உபசாரம் பண்ண ஓடி வருகிறாள்

எழுந்து இருக்கும் போது உண்டாகும் சேஷ்டிதங்கள் காணவும்
அருளிச் செய்யும் போது ஸ்வரத்தை கேட்கவும் ஆசை

சித்ர கூடத்தில் சீதா பிராட்டி எழுப்பிய பின்பு அனுதாபப் பட்டது போலே இவரும் உணர்ந்து வாழி என்கிறார்

ஆராவமுதன் எழுந்து இருந்து பேச முயலும் போது ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய கூடாது என்று வாழி என்கிறார் –
உத்தான சயனம் –

இப்படி ஆரவாமுதாழ்வார் திருவடிகளிலே அநுபவிக்க இழிந்த இவ்வாழ்வாரை நோக்கி

அப்பெருமான் வாய்திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்யாமலும்

கைகோவி அணைத்தருளாமலும் ஏகாகாரமாகக் கண்வளர்ந்தருளக் காண்மையாலே

‘இது அர்ச்சாவதாரஸமாதி’ என்று இவர் திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற ச்ரமத்தினால் இப்படி

திருக்கண் வளர்ந்தருள்கிறாரென்று அதிசங்கை பண்ணி,

“வடிவினையில்லா மலர்மகன் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்கிறபடியே

பரமஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு உலகங்களை அளந்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ?

அன்றி, பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனை மஹா வராஹமூர்த்தியாய்க் சொன்று

அப்பூமியைக் கொணர்ந்து பழையபடி விரித்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ

இங்ஙனே தேவரீர் ஆடாது அசங்காது திருக்கண்வளர்த்தருள்கிறது?;

இதை எனக்குத் தெரியவருளிச் செய்யவேணும் என்கிறார்.

உலகளந்த ச்ரமமாகில் திருவடிகளைப் பிடிக்கவும் உலகிடந்த ச்ரமமாகில் திருமேனியைப் பிடிக்கவும் பார்க்கிறார்போலும்.

(விலங்குமால் இத்யாதி.) பல மலைகளையும் பல பாலை நிலங்களையும் கடந்துகொண்டு,

பெருமாளுக்கு கீதோபசாரம் பண்ணவேணுமென்னும் அபிநிவேசத்தாலே காவேரி ஓடி வருகின்றானென்க.

எழுந்திருந்து போசு = கண் வளர்ந்த***யின் காரணத்தை சயனித்துக் கொண்டே அருளிச் செய்யலாகாது;

என்னுடைய அச்சம் தீரும்படி எழுந்திருந்து அருளிச்செய்யவேணும் என்கிறார்.

எழுந்திருக்கும்போது உண்டாகக்கூடிய சேஷ்டிதங்களைக் காணவும் அருளிச் செய்யும் போதை ஸ்வரத்தைக்கேட்கவு>ம் விரும்புகிறபடி.

வாழி – ***-***-***- என்று- சித்ரகூடத்திலே திருக்கண்வளர்ந்தருளின இராமபிரானைப் பிராட்டி தட்டி யுணர்த்தி

யெழுப்பினதற்காகப் பின்பு அநுதாபப்பட்டாற்போல், ஆச்சரியமான இந்த சயாத்திருக்கோலத்தைக் குலைத்து

அடுத்த க்ஷணத்திலே நாமும் அநுதாபப்படும்படி நேர்ந்துவிடுமோ வென்றஞ்சின ஆழ்வார் வாழியென்று

அந்த சயனத்திருக்கோலத்துக்கே உகந்து மங்களாசாஸகம் செய்தருள்கிறார்.

ஒரு தீங்கு இல்லாமே கண்வளர்ந்தருளுகிற இவ்வழகு நித்யமாய்ச் செல்லவேணுமென்கிறார்.

திருமழிசைப்பிரான் ஆராவமுதாழ்வாரைநோக்கி “கிடந்தவாறெழுந்திருந்து பேசு” என்று பிரார்த்திக்க,

பெருமாளும் பந்தபாரதீகனாகையாலே அப்படியே எழுந்திருக்கப்புக அது கண்ட ஆழ்வார்

அர்ச்சாவதாரஸமாகி குலைய வொண்ணாதென்று திருவுள்ளம்பற்றி வாழிவாழி என்று மங்களாசாஸநமுகத்தால்

அப்படியே கிடந்தருளும்படியை விரும்ப,

ஆராவமுதாழ் வாரும் அவ்வண்ணமே தன்னுடைய எழுச்சிமுயற்சியை நிறுத்திக்கொண்டாரென்றும்,

இப்போதைய அர்சாவதார நிலைமையில் இவ்வம்சம் விளங்குமாறு உதாந†யியாக ஸேவைஸாதிப்பதும்

இதுபற்றியேயென்றும் பெரியோர் ஐதிஹ்யங்கூறக்கேட்டதுண்டு.

——————————————————

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே –62-

பதவுரை

கரண்டம் ஆடு பொய்கையுள்

நீர்க்காக்கைகள் உலாவுகின்ற பொய்கையிலே
கரு பனை பெரு பழம்

கரிய பெரிய பனம்பழங்களானவை
புரண்டு வீழ

விழுந்துபுரள (அவற்றைக் கண்டு நீர்க்காக்கைகளாக ப்ரமித்து அஞ்சின)
வாளை

மீன்கள்
பாய்

துள்ளியோடி யொனிக்கின்ற
குறுங்குடி

திருக்குறுக்குடியிலே எழுந்தருளியிருக்கிற
நெடுந்தகாய்

மஹாதுபாவனே!
திரண்ட தோள்

திரண்டதோள்களையுடையவனான
இரணியன்

ஹிரண்யனுடைய
சினம்கொள் ஆகம் ஒன்றை

மாத்ஸர்யம் விளங்குகிற கடுமையின் அத்விதீயமான சரீரத்தை
இரண்டு கூறு செய்து

இருபிளவாகப் பிளந்து
உகந்த

மகிழ்ந்த
சிங்கம் என்பது

நரஸிம்ஹ மூர்த்தியென்று சொல்வது
உன்னையே

உன்னையோ? (ஸுகுமாரனானவுன்னை முரட்டுச் சிங்கமென்னத்தகுமோ?.)

கரண்ட மாடு பொய்கையுள்
நீர் காக்கைகள் இருக்கும் பொய்கையுள்
கரும் பனைப் பெரும் பழம் புரண்டு வீழ
கரிய பெரிய பனம் பழங்கள் விழுந்து புரள
அத்தைப் பார்த்து நீர்க் காக்கைகள் என்று என்று பிரமித்து மீன்கள் அஞ்சின
அஸ்தாநே பய சங்கை பண்ணுவதும் உப லக்ஷணம்

வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
மீன்கள் துள்ளி ஓடி ஒளிகின்ற திருக் குருங்குடியில் எழுந்து அருளும் மஹானுபாவனே
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே
ஸூகுமாரமான உன்னை முரட்டு சிம்ஹம் என்னலாமா
கடுமையில் அத்விதீயமான சரீரம்
சினம் விம்முதலுக்கும் வாசகமாய் விம்ம வளர்ந்த சரீரம் என்றுமாம்

இப்போதும் இங்கே பொய்கையின் பெயர் கரண்ட மாடு பொய்கை –
அதன் கரையில் திரு பனை மரம் நம்பியின் கடாஷமே தாரகமாக கொண்டு இன்றும் உண்டே

—————————

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-

பதவுரை

நன்று இருந்து

(யோகப்பயிற்சிக்கு உரிய ஆஸனத்திலே முறைப்படி நிலைத்திருந்து
யோகம் நீதி

யோகமாகியு உபாயத்தை
நண்ணுவார்கள்

ஸாதிக்கின்ற யோகிகளுடைய
சிந்தையுள்

ஹ்ருதயத்தினுள்ளே
சென்று இருந்து

ப்ரவேசித்திருந்து
ஊரகத்தும்

திருவூரகத்திலும்
வெஃகனை

திருவெஃகாவிலும்
தீ வினைகள் தீர்த்த

(அவர்களுடைய) தீ வினைகளைத் தொலைத்தருளின
தேவ தேவனே!

தேவாதி தேவனே!
குன்று இருந்த நீடு மாடம்

மலைகளைக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போன்றிரா நின்ற ஓங்கின மாடங்களையுடைய
பாடகத்தும்

திருப்பாடகத்திலும்
இருந்து நின்று கிடந்தது

(க்ரமேண) வீற்றிருக்க திருக்கோலமாகவும் நின்ற திருக்கோலமாகவும் சயனத்திருக்கோலமாகவும் எழுந்தருளியிருப்பது
என்ன நீர்மை

என்ன ஸௌஹார்த்தமோ!

நன்று இருந்து
யோக பயிற்சிக்கு உரியது போலே ஆசனத்தில் முறைப்படி நன்று இருந்து
யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த

தேவ தேவனே குன்று இருந்து மாட நீடு பாடகத்தும்
மலைகளைக் கொண்டு சேர்த்து வைத்தது போலே மாடங்கள் உடைய திருப் பாடகத்திலும்

ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே
பிரகலாதனுக்கு என்று முரட்டு சிங்கமாக வந்தது பொருந்தலாம்
சர்வ பிரகாரத்தாலும் விமுகரான சம்சாரிகளுடைய விமுகத்தை கூட கணிசியாமல்
ஆபிமுக்யத்தை எதிர்பார்த்து உன்னுடைய மேன்மையைப் பாராதே திருக் கோயில்களில்
சம்சாரிகளை கடைத்தேற
இப்படி நின்றும் இருந்தும் கிடக்கிறாய் என்கிறார்

வெக்கணை-வெக்கா-யதோத்தகாரி சந்நிதி

ஊரகம் -உலகளந்த பெருமாள் சந்நிதி-

தேவரீர் ஸௌகுமார்யத்தைக் கணிசியாமல் பக்த சிகாமணியாகிய ப்ரஹ்லாதன் திறத்திலுள்ள

வாத்ஸல்யமே காரணமாக முரட்டவதாரமெடுத்து இரணியனை அழியச் செய்தது பொருந்தலாம்;

ஸர்வப்காரத்தாலும் விமுகரான ஸம்ஸாரிகளுடைய அபிமுக்யத்தை எதிர்பார்த்து

உம்முடைய மேன்மையைப் பாராதே கோயில்களிலே நிற்பது இருப்பது கிடப்பதாகிற விது

அந்தோ! என்ன நீர்மை! என்று ஈடுபடுகிறார்.

ஊரகம் – ஆதிசேஷனென்னும் பொருளையுடைய ** மென்ற வடசெல் ஊரகமென்று நீண்டு கிடக்கிறது;

பெருமாள்கோயிலில் உலகளந்த பெருமாள் ஸந்நிதி ஊரகமென வழங்கும்.

அங்கே திருவனந்தாழ்வானுடைய ஸரப்ரஸாதித்வம் ப்ரஸித்தம்.

வெஃகணை- வேகவணை’ என்பது வெஃகணையென்று கிடக்கிறது. **  என்று வடசொல் வழக்கம்; ஸ்ரீயதோக்தகாரி ஸந்நிதி

————-

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

பதவுரை

எந்தை

எம்பெருமான்
ஊரகத்து

திருவூரகத்திலே
நின்றது

நின்றருளினதும்
பாடகத்து

திருப்பாடகத்திலே
இருந்தது

வீற்றிருந்ததும்
வெஃகனை

திருவெஃகாவில்
கிடந்தது

திருக்கண்ணை வளர்ந்தருளினதும் (எப்போதென்றால்)
என் இலாத முன் எலாம்

நான் பிறவாதிருந்த முற்காலத்திலேயாய்த்து
அன்று

அப்போது
நான் பிறந்திலேன்

நான் ஜ்ஞானஜன்மம் பெற்றேனில்லை
பிறந்தபின்

அதுபெற்ற பின்பு (அறிவு பிறந்தபின்பு)
மறந்திலேன்

மறக்கவில்லை
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

ஆதலால் அவன் ஊரகம் முதலிய திருப்பதிகளில் பண்ணும் செயல்களையெல்லாம் எனது நெஞ்சினுள்ளே செய்யா நின்றான் காணீர்.

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
நான் பிறவாத முன் காலத்திலே
அன்று நான் பிறந்திலேன்
அப்பொழுது நான் ஜ்ஞான ஜன்மம் பெற வில்லை

பிறந்த பின்பு மறந்திலேன்-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
கைங்கர்ய கடனைப் பெற்றுக் கொள்ள -கடனைத் தீர்த்தால் அல்லது போக மாட்டேன் என்று நின்று இருந்து கிடந்து-எல்லாம்
அவன் மேல் ருசி விளைவிக்க -ருசி பிறப்பது சாத்தியம் -பலன் கிடைத்தவாறே இத்தத் தவிர்த்து
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –
அந்த செயல்கள் எல்லாம் நமது நெஞ்சிலே பண்ணுகிறான்

நான் இலாத முன் எலாம் என்று அருளாமல் என்னிலாத முன்னெலாம்- என்றது
அப்பனை என்று மறப்பேன் என்னாகியே -திருவாய் மொழி போலே பிரயோகம்-

உலகத்திலே ஒருவனுக்கு ஒருவன் கடன் கொடுத்திருந்தால் அந்தக் கடனைத் திருப்பி வாங்கிக் கொள்வதற்காகக்

கடனாளி வீட்டிலே வந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்று கொண்டே கேட்டு விட்டுப் போய்விடுவன்:

அவ்வளவில் காரியம் ஆகாதே; மறுபடியும் வந்து சிலநாள் வரையில் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு கடனை நிர்பந்தித்துப்போவன்;

அவ்வளவிலும் கைபுகாவிடில் ‘கடனைத் தீர்த்தாலொழியப்போல தில்லை’ என்று படுக்கைபடுத்து நிர்ப்பந்திப்பன்;

இப்படியாகவே எம்பெருமானும் அஸ்மதாதிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக

ஓரிடத்தில்    நின்று பார்க்கிறான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கிறான்; இன்னுமோரிடத்தில் சாய்ந்து பார்க்கிறான்-

திருவூரகத்திலே நிற்கிறான், திருப்பாடகத்திலே இருக்கிறான்; திருவெஃகாவிலே கிடக்கிறான்;

இப்படி நிற்பது இருப்பது கிடைப்பதாகிறவிவை எப்போதென்னில்;

நான் ஆபிமுக்யம் பண்ணப்பெறாத காலத்திலே யாய்த்து,

உபயவிபூதிநாதனான தான் ஸம்ஸாரியான வெனக்கு ருசி பிறவாத காலமெல்லாம்

ருசி பிறக்கைக்காக நின்றா னிருந்தான் கிடந்தான்;

எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அளவுக்கு ருசிபிறக்கைக்காக நின்றானிருந்தான் கிடந்தான்;

எனக்கு ருசியைப் பிறப்பிக்கை அவனுக்கு ஸாத்யம் (பலன்):

அதற்கு ஸாதகம்- நிற்றவிருத்தல் கிடத்தல்கள்,

பலன் கைபுகுந்தவாறே திவ்ய தேசங்களிலே நிற்றலிருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து

(“அரவத்தமணியினோடு மழகிய பாற்கடலோடும். அரவிந்தப்பாவையுந்தானு  மகம்படி வந்து புகுந்து” என்னுமாபோலே)

அவ் விருப்புகளை யெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினானென்கிறார்.

இரண்டாமடியில், நானிலாத என்ன வேண்டுமிடத்து என்னிலாத என்றதை

வடமொழியில் ஆர்ஷப்ரயோகங்களைப் போலவும் சாந்தஸப்ரயோகங்களைப்போலவும் கொள்க:

‘அப்பனையென்று மறப்பன் என்னாகியே” என்ற திருவாய்மொழிப் பிரயோகமும் நோக்கத் தக்கது.

—————

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

பதவுரை

அற்புதன்

(ஞானம் சக்தி முதலியவற்றால் ஆச்சரியபூதனும்
அனந்த சயனன்

அரவணைமேற் பள்ளி கொள்பவனும்
ஆதிபூதன்

ஜகத்காரணபூதனும்
மாதவன்

ச்ரியாபதியுமான பெருமான்
ஓர் வெற்பு அகதது நிற்பதும் வீண்

விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நின்றருள்வதும் பரமாகாசமென்னும் திருநாட்டிலே
இரும்பும்

வீற்றிருப்பதும்
நல் பெருதிரை கடலுள் கிடப்பதும்

நல்ல பெரிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சாய்ந்தருள்வதும்,
நான் இலாத முள் எலாம் :

நான் முறையறியாதே அனத்தாய்க் கிடந்த காலத்திலேயாம்; (இப்பொழுதோவென்றால்)

நிற்பதும்  இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சனே.

நிற்பதும் ஓர் வெற்பகத்து
நின்ற சேவை ஒப்பற்ற திருவேங்கடத்தில்

இருப்பும் விண்
வீற்று இருந்த சேவை பரம பதத்தில்

கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள்
கிடப்பது நல்ல பெரிய அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
நான் இலாத முன்னெலாம்
நான் முறை அறியாமல் அசத்தாய்க் கிடந்த காலத்தில்

இப்பொழுதோ என்றால்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே
அந்த பரிமாற்றங்கள் எல்லாமே எனது நெஞ்சுக்குள்ளே அன்றோ –

தம்முடைய திருவுள்ளத்தினின்றும் எம்பெருமான் பேராமல் இங்கேயே ஸ்தாவர ப்ரதிஷ்டை யாயிருக்கிற

இருப்பிலே மிகவும் ஈடுபட்டு,

எம்பெருமான் திருவேங்கட மலையில் நிற்பதும் திருநாட்டிலே இருப்பதும் திருப்பாற்கடலிலே கிடப்பதுமெல்லாம்

தன்னோடுண்டான முறையை அறியாதே நான் அஸத்கல்பனாயிருந்த காலத்திலேயாம்:

நான் முறையறிந்து பரிமாறின பின்பு அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் எனது நெஞ்சினுள்ளே யாய்த்து என்கிறார்.

———————————————

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பதவுரை

பிறந்தானென்கிற க்ஷணத்திலே செத்துப்போவதோ
நின்று சாதல்

சிலகாலமிருந்து செத்துப் போவதோ
அன்றி

இவ்விரண்டத்தொன்று தவிர
யாரும்

மேன்மக்களான ப்ரஹ்மாதிகளும்
வையகத்து

இந்நிலத்திலே
ஒன்றி நின்று

சிரஞ்சீவியாயிருந்து
வாழ்தல் இன்மை கண்டும்

வாழ முடியாதென்பதை ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும்
நீசர்

அறிவில்லாதவர்கள்
அன்று பார் அளந்தபாதபோதை உன்னிசென்று

முன்பு பூமி முழுவதையும் அளந்தருளின பாதாரவிந்தத்தைச் சிந்தித்து
சென்று

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று
வானின்மேல் சென்று

பரமபதத்தேறப் புகுந்து
தேவர் ஆய் இருக்கிலாத வண்ணம் என் கோல்

நித்யஸூரிகளோடொக்க இராதது ஏனோ?

இன்று சாதல் நின்று சாதல்
பிறந்த உடன் சாவது -சிறிது காலம் இருந்த பின் சாவது

அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் –அன்று பாரளந்த பாத போதை யொன்றி
வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே என் கொலோ
இவை இரண்டும் இல்லாமல் அன்று உலகு அளந்த திருவடித் தாமரையை நினைந்து ஆஸ்ரயித்து
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
நித்ய ஸூரிகளுடன் இருக்க முயல்வார் யாரும் இல்லையே என்கிறார்

கருவிலேயே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன;

கருவில் நின்றும் கீழே விழுந்தவாறே சிலவுயிர்கள் மாண்டொழிகின்றன;

சில காலம் ஜீவித்திருந்து சிலர் மாள்வர்;

இப்படியல்லது, என்றைக்கும் அழிவில்லாதவர்களென்று சொல்லும்படியாக இந்நிலத்தில்

சிரஞ்ஜீவிகளாயிருப்பார் ஆருமில்லை என்னுமிடத்தைக் கைவிலங்கு நெல்லிக்கனியாக ப்ரத்யக்ஷ்கரித்துவைத்தும்,

அன்றொருநாள் குணதோஷ நிரூபணம் பண்ணாமல் ஸகலலோகங்களிலுமுண்டான கைல சேதநர் தலையிலும்

பொருந்தி முறையையுணர்ந்ததின ஸர்வ ஸுலுபமான திருவடித்தாமரைகளை ஆச்ரயித்து

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று மீட்சியற்ற வைகுந்த மாநகரைக் கிட்டி நிர்யஸூரிகளோடு

ஒரு கோவையாயிருப்பதற்கு முயல்வார். ஆரூமில்லையே! இஃது என்ன பாவம்!! என்கிறார். “

பாதபோதை யொன்றி” என்றும் பாடமுண்டு.

————

இந்த பாசுரம் முதல் ஏழு பாட்டாலே நமக்கு உபதேசம் பண்ணி அருளுகிறார்-

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ –67-

பதவுரை

சண்டன் மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று

ஸூர்யமண்டல மத்யமார்க்கத்தாலே போய்
வீடு பெற்று

பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத

பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம்

ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு

விருப்பமுடையவர்களே!
எய்துவீர்

(முமுக்ஷுக்களே)
புண்டரீக  பாதன்

தாமரைபோன்ற திருவடிகளையுடைனான பெருமானுடைய
புண்ய கீர்த்தி

பரிசுத்தமான திருப்புகழ்களை
நும் செவி

உங்களுடைய காதுகளிலே
மடுத்து

தேக்கி
உண்டு

அநுபவித்து.
நும் உறு வினை துயரும் நீங்கி உய்ம்மின்

உங்களுடைய ப்ரபல பாபங்களின் பலனை துக்கங்களின் நின்றும் நீக்கி உஜ்ஜிவித்துப்போங்கோள்.

சண்ட மண்டலத்தினூடு சென்று -சூர்ய மண்டல மத்திய மார்கத்திலே போய் வீடு பெற்று
பரம பதம் அடைந்து அங்கே

மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
அழிவில்லா பக்தியின் பலனாக கைங்கர்ய இன்பம் நித்யமாக பெற விருப்பம் உடையவர்களே –

காதல் இன்பம் -காதல் பக்தி -அதன் பலனாக கைங்கர்ய ஸூகம் –

முமுஷூக்களே
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி யுய்மினோ
அவனது திருப் புகழ்களை காதுகளில் தேக்கி அனுபவித்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள் –

இது முதல் மேலேழுபாட்டாலே பரோபதேசம் பண்ணியருளுகிறார்.

ஸம்ஸாரிகள் தங்களுக்கு ஹிதயமானதை அறிந்து கொள்ளாவிடிலும்

நாமாவது அறிவித்து அவர்களை உய்விப்போமென்று திருவுள்ளம்பற்றி,

அவர்களுடைய துர்கதியைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாத க்ருபாவிசேஷத்தாலே உபதேசத்திலே மூளுகிறபடி,

அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று நிலைநின்ற புருஷார்த்தத்தைப்பெற விருப்புமுடையீர்!

ப்ராப்யமும் ப்ராபகமுமான பகவத் விஷயத்தை ஆச்ரயித்து உங்களுடைய விரோதிகளைப் போக்கிக்

கொண்டு உஜ்ஜீவித்துப் போங்கள் என்கிறார் இப்பாட்டில்.

வடமொழியில் ஸூர்யனுக்கு *** என்று பெயர்; அதில்  ஏகதேசத்தைக் கொண்டு சண்டன் என்கிறாரிங்கு.

காதலின்பம்- காதல் என்று பக்திக்குப்  பெயர்: -பக்தியின் பலமான இன்பமாவது கைங்கர்யஸுகம்.

“செவிமடுத்துண்டு” என்றவிடத்து, “செவிக்குணவில்லாதபோது சிறிது, வயிற்றுக்கு மீயப்படும்” என்ற குறள் நினைக்கத்தக்கது.

————————

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-

பதவுரை

மூத்திறந்து

மூன்று வகைப்பட்ட (ஸாத்வீக, ராஜஸ, தாமஸங்களான) பல்களுக்குள்ளே
இரண்டில்

(ஸாத்விகமொழிந்த) மற்றையிரண்டு பலன்களில்
ஒன்றும்

விருப்பமுடையரான
நீசர்கள்

நீசரான மனிசர்கள்
அதில் இட்டு

அந்த லோகத்திலே அந்தக் கரும பலன்களையொழித்து
இறந்து

அவற்றை யநுபவிப்பதற்காகப் பூண்டுகொண்ட சரீரத்தை முடித்து
போந்து

(மறுபடியும் கர்ப்பவான வழியாலே) பூலோகத்தில் வந்து
மத்தர் ஆய்

“தேஹமே ஆத்மா” என்கிற ப்ரமத்தையுடையராய்
மயங்குகின்றது

மோஹித்துப்போவார்கள்; (அப்படிப்பட்டவர்கட்கு)
உய்வது ஓர் உபாயம்

உஜ்ஜீவ்நோபாயம்
எத்திறத்தும் இல்லை

எவ்வழியாலுமில்லை, (மேலேறுவதும் கீழிறங்குவதுமாய்த் திரித்லொழிய நிலைநின்ற புருஷார்த்தம்பெற விரகில்லை)
உய்குறில்

(உங்களுக்கு) உஜ்ஜீவிக்க விருப்பமுண்டாகில்
கொத்து இறுத்த

கொத்துக்கொத்தாகச் செறிந்த
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையனான
நம் மாலை

பரமபுருஷனை
வாழ்த்தி

துகித்து
வாழ்வின்

உஜ்ஜீவித்துப் போங்கோள்.

முத்திறத்து-சாத்விக ராஜச தாமஸ-என்ற மூ வகைப் பட்ட
வாணியத்தில் இரண்டில் ஓன்றும் நீசர்கள்
பலன்களுக்குள் சாத்விகம் ஒழிந்த மற்ற இரண்டின் பலன்களில் விருப்பம் உடையீரான நீசர்களே
மத்தராய் மயக்குகின்றது-தேகமே ஆத்மா என்று மோஹித்து
இட்டு அதில் இறந்து போந்து-அந்த லோகத்தில் அந்த கர்ம பலன்களை ஒழித்து அத்தை அனுபவிக்கும் சரீரம் முடித்து –
மறுபடியும் கர்ப்ப வாசம்-வழியே பூ லோகத்தில் வந்து –எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை-
உஜ்ஜீவன உபாயம் எவ்வழியிலும் இல்லை -பல பல ஜன்மங்கள் தான் எடுப்பார்கள்

யுய்குறில்
உய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்

தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ
புனத் துழாய் மாலையானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவனம் அடைய வேணும் –

ஸம்ஸாரிகள் ஸத்வ குணமொன்றையே மேற்கொள்ளாமல் ரஜஸ் தமோ குணங்களுக்கும் வசப்பட்டிருப்பதால்

அக்குணங்கட்குத் தகுதியான ராஜஸ தேவதைகளையும் அவர்கள் ஆச்ரயிக்கக் கூடுமாதலால்

அப்படி மதிகெட்டுப்போகாதபடி ஸர்வாதிகனான புனத்துழாய் மாலையானையே ஆச்ரயித்து உஜ்ஜீவிக்கச் சொல்லுகிறார்.

உலகததில் அவரவர்கள் பெறும் பலன்கள் மூன்று வகைப்படும்;

ஸாத்வீக தேவதையை ஆச்ரயித்தால் ஸாத்விகபலன் பெறலாகும்;

ராஜஸ தேவதைகளை ஆச்ரயித்தால் ராஜஸபலன்; தாமஸ தேவதைகளை ஆச்ரயித்தால் தாமஸபலன்;

இம்மூவகைப்பட்ட பலன்களினுள் ஸாத்விக பலனைப்பேணாது மற்ற இருவகைப் பயன்களை விரும்பி

அவ்வழியிலே ஊன்றித்திரிகின்ற நீச மனிசர்கள் நியத்ஸுகத்தை அடையமாட்டார்கள்;

அந்தப் பலன்களைச் சில தேசவிசேஷங்களில் அநுபவிப்பதும் மீண்டும் இவ்வுலகத்திலே பிறந்துழல்வதுமாய்

இப்படியே தேஹாத்மாபிமாநிகளாய் நசித்துப்போவர்களேயன்றி எவ்விதத்திலும் உஜ்ஜிவிக்கக் கடமைப்பட்டவர்களல்லர்.

உஜ்ஜீவிக்க வேண்டில், ஸர்வரக்ஷகனென்னுமிடத்துக்கு ப்ரகாசமாகத் திருத்துழாய் மாலையை

யணிந்துள்ள பெருமானைப் பணிந்து வாழ வேண்டும்.

—————————

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

பதவுரை

காணிலும்

கண்டாலும்
உரு போலார்

விகாரமான உருவத்தையுடையராயும்
செவிக்கு இனாத கீர்த்தியார்

காதுக்குக் கடூரமான சரித்திரங்களையுடையராயும்
பேணிலும்

(இப்படிப்பட்ட விகாரமான உருவத்தையும் ஹேமயமான சரிதையையும், கவனியாமல்) ஆச்ரயித்தாலும்
வரம் தர

(ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத

சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை

தேவதைகளை
ஆணம் என்று

சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும்

அவற்றையடைந்து கெட்டுப்போகிற
ஆதர்கள்

குருடர்களே!
என் ஆதிபால்

ஸர்வகாரணபூதனான எம்பெருமானிடத்து
பேணி

வழிபாடுகளைச் செய்து
நும்

உங்களுடைய
பிறப்பு எனும்

ஸம்ஸாரமாகிற
பிணக்கு

பெரும்புதரை
அறுக்க கிற்றிரே

அறுத்தொழிக்க வல்லீர்களே?

காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி –
ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்-

மற்ற தேவர்கள் “பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவர்களே” என்கிறார். மேலும், “காணிலும் உருப்பொலார்” என்கிறார்.
மற்ற தேவர்களை (தெய்வங்களை) அப்படியே போய் ஆஸ்ரயித்தாலும் (பற்றினாலும்), அவர்கள் பார்ப்பதற்கும் அழகாக இல்லை;
பகவான் புண்டரீகாஷன் (தாமரைக் கண்ணன்) – மற்றொருத்தன் (சிவன்) விரூபாக்ஷன்.
பகவான் சந்தனத்தைத் தன் திருமார்பிலே ஈஷிக்கொண்டவன்; சிவனோ சாம்பலை எடுத்து திருமார்பிலே பூசிக்கொண்டவன்.
பகவானுக்கு இருப்பதோ சிறந்த கேஸ வாசம்; சிவனுக்கு இருப்பதோ சடைமுடி!
பகவான் தலையில் இருப்பதோ உயர்ந்த புஷ்பஹாரம்; சிவன் தலையில் இருப்பதோ வெறும் கங்கா தீர்த்தம்!
இவன் ஏறுவது கருடன் மீது; அவன் ஏறுவது ரிஷபமான தாழ்ந்த வலிய பந்தமான ஜந்துவைப் படைத்திருக்கிறான்!
இவனுக்கு அடியார்கள் அத்தனை பேரும் நித்யஸுரிகள்; அவனது அடியார்களோ பேய்க் கணங்களும் பூதகணங்களும்!
இவன் பிடித்திருப்பதோ சிறந்த சங்க சக்கரங்களை; அவன் பிடித்திருப்பதோ ஒண்மழுவான ஆயுதத்தை!
எப்படிப் பார்த்தாலும் இருவருக்கும் ஒருநாளும் ஒத்துவரப்போவது கிடையாது.
ஆகவே “காணிலும் உருப்பொலார்” என்று பாடியுள்ளார் ஆழ்வார். சிவனது காட்சி ஒருநாளும் உருப்பெறுவது முடியாது.

“செவிக்கினாத கீர்த்தியார்” –
செவிக்கு இனிய கீர்த்தி என்றால், பகவானுடைய ஸ்ரீ திரிவிக்கிரம அவதாரமா – ஸ்ரீ வாமன மூர்த்தியாய் உலகளந்தானே –
அந்தப் புகழைக் கேட்பதா அல்லது ஸ்ரீ ந்ருசிம்ஹ மூர்த்திக்காகவா?
ஒவ்வொன்றும் அடியார்க்காக அடியார்க்காக என்று அவன் புகழ் செவிக்கு இனியதான கீர்த்தியாக இருக்கிறது.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம்” என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அத்தியாயத்திலே தெரிவித்ததார்.
“ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய:” – “ஸ்தவ்ய:” என்றால் ஸ்தோத்ரம் என்று பண்ணணும்னா, பகவான் ஒருத்தன் தான்;
அதற்கு அருகதை என்றும், மற்ற யாருக்கும் அதற்கு அருகதையே கிடையாது என்று அர்த்தம்.

ஆக, பகவான் ஸ்தவ்யன்! ஆனால், சிவனை என்னவென்று சொல்லி ஸ்தோத்ரம் செய்வது?
இவர் தானும் சுடுகாட்டிலே பஸ்பதாரியாய் சுற்றித் திரிகிறார்;
தன் தகப்பனார் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளித் தன் கையில் வைத்துக் கொண்டிருந்தவர்;
பத்மாசுரனைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்; வாணாசுரனையும் கண்டு பயந்து ஓடிவிட்டார்;
தன் சிஷ்யனிடத்திலேயே அவர் “பிள்ளைக் கறி கொண்டுவா என்று! தலையை அறுத்து தனக்கு யாக யஞ்ஞம் செய்” என்று கூறினார்.
இவற்றை எல்லாம் பாடினால் அது கீர்த்தி (புகழ், தோத்திரம்) ஆகுமோ?
அப்படியே இவற்றைப் பற்றிப் பாடினாலும், அது செவிக்குத்தான் இனியதாக இருக்குமா?
இத்தனையும் உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மறுபடியும் நீங்கள் அவனைத்தான் விடாமல் பிடித்துக்கொள்வோம் என்று
பிடிவாதம் பிடித்தாலும் பிடிக்கலாம்! அவர்களுக்கும் ஆழ்வார் சமாதானம் சொல்லிவிட்டார் –

“பேணிலும் வரம்தர மிடுக்கிலாத தேவரை” என்று
பாடி! அதாவது, இத்தனையும் தாண்டி நீங்கள் அவனையே ஆஸ்ரயிக்க (பற்ற) நினைத்தாலும்,
நீங்கள் கேட்கப் போவதைக் கொடுக்கிற சக்தி மட்டும் அவனுக்குக் கிடையாது!
அது இருக்குன்னாலும் அவனிடத்தில் போய் நீங்கள் ஆஸ்ரயிப்பதில் அர்த்தமுண்டு.
அதுவும் இல்லாதவனைப் போய் ஆஸ்ரயிப்பதில் ஏதானும் இலாபம் உண்டா?
அவனே லக்னனாகத் திரிய, அவனிடத்தில் போய் வேஷ்டி தானம் வேணும்னு கேட்டா தருவானா?

ஒரு கடையில் நிறைய வேஷ்டிகள் அடுக்கப் பட்டிருக்க, அவனிடத்தில் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டால் கேட்டால்,
அவன் கொடுத்துவிடுவான். ஒருத்தன் இடுப்பில் ஒன்று ஒன்று கொடியில் மாட்டிவைத்திருக்க,
அவனிடம் ஒரு வேஷ்டி தானமாகக் கேட்டாலும் ஒன்றைக் கொடுத்துவிடுவான்;
இன்னொருத்தன் ஒரே ஒரு வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கொண்டிருக்க, அவனிடம் தானம் கேட்டாலும்
அவன் அதையும் கழற்றிக் கொடுத்துவிடுவான்! ஆனால், சிவனோ, லக்னனாக, அவனே வேஷ்டி இல்லாதவனாக இருக்க,
அவனிடம் போய் வஸ்திர தானம் வேணும்னு கேட்டா, கொடுக்கமுடியலை என்றுமட்டுமில்லை; அவனும் கொடுக்கபோறதில்லை;
நமக்கும் கிடைக்கப் போறதில்லை!ஐயோ! என்னிடமே ஒன்றுமில்லை; என்னிடத்தில வந்து கேட்கிறாயே! என்று வருத்தமும் படுவான்.

இதனால்தான், ஸ்ரீ ஆழ்வார் தெரிவித்தார்: “அப்படி உங்கள் சிவனுக்கு வருத்தம் ஏற்படும்படி நீங்கள் இருக்கவேண்டாம்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அவனிடத்தில் போய் கேட்கக் கேட்க, கொடுக்கமுடியாத ஸ்ரமத்தாலே அவர் துடிக்க போறார்!
ஏன் வீணாக அவனையும் சிரமப்படுத்திண்டு, உங்களுக்கும் கிடைக்காமால்….!
ஆகையால், சிரமப்பட வேண்டாம் என்று தவிர்க்கிறார் ஸ்ரீ ஆழ்வார்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை. மேலே உள்ள பாடலுக்கு வேத அர்த்த ரீதியாகவும் இவர் மேற்கோள்கள் காட்டியுள்ளார்.
“திவுக்ரீடாயாந் தாது; || திவு விஜிஹீஷாந் தாது; || திவு வியவஹாரந்: தாது; || திவு த்யுதீந்: தாது; || திவு ஸ்துதிந்:தாது; ||
திவு மோதாந்: தாது; || திவு மதாந்: தாது; || திவு காந்தீந்:தாது; || திவு கதீந்:தாது.”

“கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தனே! (இராமபிரான்) (நான்.திரு.53) – அவன் ஒருத்தன் தான் தெய்வமே தவிர,
மற்ற அனைவரும் பொல்லாத தேவரே” என்றும்,
அதனால் “திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு” –
எவனுக்குத் திருமகள் சம்மந்தம் இருக்கிறதோ அவனே பரதெய்வம்; அப்படிப்பட்ட சம்மந்தம் இல்லாதவர்கள் தெய்வம் அல்லர்;
ஆகையால், அவர்களை வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று அற்புதமாகத் தன் பாசுரத்தில் காட்டினார் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் .

இவருக்கும் பரமசிவனாருக்கும் நடந்த வாக்குவாத யுத்தத்தின் முடிவில்தான் பரமசிவன் இவர் பக்தியை மெச்சி,
இவருக்கு ஸ்ரீ “பக்திஸாரர்” என்ற திருநாமத்தையும் கொடுத்தார் பரமசிவனார்.

தேவதாந்தரங்களினுடைய அயோக்யதைகளை நன்றாகச்சொல்லி, இப்படிப்பட்ட தேவதாந்தரங்களை உதறித்தள்ளிவிட்டு

ஸர்வ ஜகத்காரண பூதனான எம்பெருமானை யடிபணிந்து முந்தர்களாய் போகலாகாதா? என்கிறார்.

காணிலும் உருப்போலார்- அந்தத் தேவதாந்தரங்களைக் காணவே கூடாது;

கண்டால் வடிவாவது கண்ணுக்கு நன்றாயிருக்குமோவென்றால், இராது, மஹாகோரமாயிருக்கும்: ‘

விருபாக்ஷன்’ என்கிற பெயரே போராதோ வடிவின் பொல்லாங்கைக் காட்டுகைக்கு.

அங்குப் புவியினதளுமான கோலம் காணப்பொல்லாதாயிருக்குமே.

வடிவின் பொல்லாங்கு இருக்கட்டும்;  சரித்திரமானது காதுகொடுத்துக்கேட்க இனிதாயிருக்குமோவென்னில்;

செவிக்கு இனாத கீர்த்தியாய்-

தகப்பன் தலையைக் கிள்ளினான்; கபாலதாரியாய் உலகமெங்குந்திரிந்து பிச்சையெடுத்தான்;

யாகத்தைக் கெடுத்தான்; மாமனாரை மாய்த்தான்; என்றிப்படிப்பட்ட சரிதைகள் காதுகொண்டு கேட்கக்கூடாதவையிறே.

‘இவற்றையெல்லாம் ஸஹித்துக்கொண்டு வருந்தி ஆச்ரயித்தாலும் இஷ்டத்தை நிறைவேற்றித்தரவல்ல சக்தியாவது உண்டோவென்னில்;

பேணிலும் ‘வரந்தர மிடுக்கு இலாத தேவர்- கண்டா கர்ணனுடைய சரித்திரத்தை ஆராய்ந்தால் இது தெரியும்.

இப்படிப்பட்ட தேவதைகளைச் சரணமாகப் பற்றிநின்ற அறிவுகேடர்களே!

நமக்கெல்லார்க்கும் காரணபூதனான பரமபுருஷன் பக்கலிலே ஆதரத்தைப்பண்ணி,

ஒருவராலும் அறுக்கப்போகாத உங்களுடைய பிறவியென்னும் துற்றை அறுத்துக்கொள்ள மாட்டீர்களோ?.

‘வரந்தரும் மிடுக்கிலாத” என்றும் பாடமுண்டு.

ஆணம்- சரணம்.

அடைந்து வாழும் = அயோக்ய ஸதவங்களை யடைந்து பாழாய்ப்போகிறீர்களே! என்று க்ஷேபித்தபடி.

ஆகவே, வாழும் என்றது விபரீதலுலக்ஷணை.

ஆதர்- குருடும், அறிவுகேடும்.

————————————

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
ஈட்டி சூலாயுதம் வேலாயுதம் இரும்பு உலக்கை கதை வாள் இவற்றுடன் இருக்கும்

பந்தமான தேவர்கள்-
கூட்டம் கூட்டமாக இருந்த ருத்ராதி தேவர்கள்

பரந்து வானகமுற
பல திசைகளிலும் சிதறிப் போக -தங்கள் இருப்பிடம் சென்று சேர

வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்-அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே
ஆகுலம் — வியாகுலம் பட்டு
ரஷகமாக வேண்டிய ஆயுதங்கள் எல்லாம் கால் கட்டு போலே ஆயின

ராவணன் கையில் வில் போலே -இருந்த வரை அடி பட்டான் -வெறும் கை வீரன்
வரம் தரும் மிடுக்கு இலா யஜவருக்கு திருஷ்டாந்தம் வாண விருத்தாந்தம் –

“வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர்,

‘இப்படிச் சொல்லலாமோ? அவர்களுக்கு சக்தி இல்லையோ?

அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ?” என்ன;

ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும்,

அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார்.

பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி

வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம்.

இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்;

குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது.

ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.

———————————

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

பதவுரை

வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால்

(மகரந்தத்திற்காக) வண்டுகள் உலாவப்பெற்ற பூமாலையை அணிந்திருந்த உஷையின் நிமித்தமாக
வெகுண்டு

கோபங்கொண்டு
இண்ட

செறித்துவந்த
வாணன்

பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணித்தநாள்

கழித்தபோது
முண்டன் நீறன்

மொட்டைத்தலையனாய் நீறு பூசினவனான ருத்திரனும்
மக்கள்

அவனுடைய குமாரர்களும்
வெப்பு

ஜ்வரதேவதையும்
மோடி

பிடாரியும்
அங்கி

அக்நி தேவதையும் (மற்றுமுள்ளவர்களும்)
ஓடிட

(பாணாசுரனை வஞ்சித்துவிட்டு. தங்களுயிரைக் காத்துக் கொள்ள) ஓடிப்போன வளவிலே
கண்டு

பார்த்து
நாணி

(இந்த முதுகுகாட்டிப் பயல்களோடு போர் செய்யவா நாம் வந்தோமென்று) வெட்கப்பட்டு
வாணனுக்கு

பாணாகரன் விஷயத்தில்
இரங்கினான்

கிருபைபண்ணினவன்
எம்மாயனே

ஆச்சரிய சக்தியுக்தனான எம்பெருமானேயாவன். (‘எம் ஆயனே’ என்று பிரிக்கவுமாம். ஆயன் கண்ணபிரான்.)

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
மகரத்துக்காக வண்டுகள் உலாவும் பூ மாலை அணிந்து இருந்த உஷையின் நிமித்தமாகக் கோபம் கொண்டு

இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
செறிந்து வந்த வாணனது ஆயிரம் கரங்களையும் துணித்து

முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்கண்டு நாணி
மொட்டைத் தலையனும் திரு நீறு பூசினவனுமான ருத்ரனும் -அவனுடைய குமாரர்களும் ஜுர தேவதையும் பிடாரியும்-
அக்னி தேவனும் மற்று எல்லாரும் ஓடிட
பாணாசுரனை வஞ்சித்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போன போது
பார்த்து இந்த புற முதுகு காட்டி ஓடும் பயல்களுடனே போர் செய்ய வந்தோம் என்று வெட்கப் பட்டு

வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இவன் தானே ரக்ஷகன் -என்ன ஆச்சர்யம் எம் ஆயனே என்றும் கொள்ளலாம் –

ருத்ரனானவன் பாணனை ரக்ஷிப்பதாகப் பிரதிஜ்ஜை பண்ணிவைத்து,

பரிகாரங்களோடு கூட ரக்ஷிக்க முயற்சியுஞ்செய்து ரக்ஷிக்க முடியாமல்

எதிரி கையிலே அவனைக் காட்டிக் கொடுத்துத் தப்பிப்போனபடியாலும்,

கண்ணபிரான் க்ருபை பண்ணி அவனடைய ஸத்தையை நோக்கினபடியாலும்

அந்தச்சிவன் ரக்ஷகனல்லவென்றும் கண்ணபிரானே ரக்ஷகனென்னும் ப்ரத்யக்ஷஸித்தமாயிற்றென்கிறார்.

தன்னுடைய பெண்ணான உஷையானவள் தன் ஆசை தீர அதிருந்தாழ்வானோடு கலவி செய்திருக்கச்செய்தே

அதனையுணர்ந்து ஸந்தோஷியாமல் கோபங்கொண்டவனாய் யுத்தத்திலே வந்து மேல்விழுந்த வாணனுடைய

ஆயிரத்தோள்களை யறுத்தவக்காலத்தில், மொட்டைத் தலையனும் சம்பலாண்டியுமான சங்கரனும்

அவனது புதல்வரான ஷண்முகாதிகளும், ஜ்வரதேவதை, பிடாரி, நாற்பத்தொன்பது அக்நிகளுக்குக் கூடஸ்தனான அக்நி இவர்களும்

தங்கள் தங்கள் பிராணனைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்றெண்ணி முதுகுகாட்டி ஓடிப்போக,

உயிரிழக்கவேண்டியவனான வாணன் மீது பரமகிருபையைச் செய்தருளி நான்கு தோள்களையும் உயிரையும் கொடுத்தருளினான் எம்பெருமான்;

ஆனபின்பு இவன் ரக்ஷகனோ! மற்றையோர் ரக்ஷகரோ? ஆராய்ந்து காண்மின் என்றவாறு.

————————

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-

பதவுரை

போதில் மங்கை

பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி

பூமிப்பிராட்டியும்
தேவி

தேவிமாராவர்;
அன்றியும்

மேலும்
போது தங்குநான் முகன்

பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன்

பேரனாயிரா நின்றான்;
என்று

இவ்வண்ணமாக
வேதம்நூல்

வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது

உரைப்பதானது
உண்மை

ஸத்யம்
மகன்

புத்திரனாயிரா நின்றான்;
சொலில்

மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன்

ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி

எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று

இங்ஙனன்றிக்கே
அல்லது

இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில்

(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை

அது அஸத்யம்

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
ஸ்ரீ மகா லஷ்மியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தேவிமார் ஆவார் -அன்றியும்

போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
பூவில் பொருந்திய இருக்கன் பிரமன் -புத்திரன் -மேலும் சொல்லப் பார்க்கில்

மாது தங்கு கூறனேற தூர்தி –
ஒரு பக்கம் பார்வதி தேவி தங்கப் பட்டவனாய் -எருமையை வாகனமாக கொண்டவனாய் உடைய சிவன் –
அவனது பேரனாய் இருக்கிறான்
என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே
இது தான் சத்யம் -வேறு பட சொல்வது அசத்தியம் என்கிறார்
இவனது பரத்வத்தையும் ப்ரஹ்மாதிகளுடைய அவரத்வத்தையும் வேதமே ஸ்தாபித்துக் கொடுக்கிறதே –

எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார்.

பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்;

நாபிக் கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்;

ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் –

இது நான் சொல்லும் வார்த்தையல்ல;

வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம்.

இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல.

ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும்

எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக் கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித் தருமென்க.

——————————

மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-

பதவுரை

முன் ஓர் நாள்

முன்னொரு காலத்திலே
மரம் பொத

ஸம்பஸாலவ்ருஹங்கள் துளைபடும்படியாக
சரம் துரந்து

அம்பைப் பிரயோகித்து (அதற்குப் பிறகு)
வாலி வீழ

வாலியானவன் முடியும்படியும்
உரம் பொத

அவனது மார்பிலே பொத்தும் படியும்
சரம் துரந்த

பாணத்தைப் பிரயோகித்த
உம்பர் ஆளி எம் பிரான்

தேவாதி தேவனான எம்பெருமான்
வரம் குறிப்பில்

(தன்னுடைய) சிறந்த திருவுள்ளத்திலே
வைத்தவர்க்கு அலாது

யாரை விஷயீகரிக்கிறானோ அவர்கட்குத் தவிர;
வானம் ஆளினும்

மேலுலகங்கட்கு அதிபதிகளாயிருந்தாலும்
யார்க்கும்

மற்றவர்கட்கும்
நிரம்பு நீடு போகம்

சாச்வதமாய்ப் பர்பூர்ணமான கைங்கர்யஸுகம்
எத்திறத்தும்

எவ்வழியாலும்
இல்லை

கிடைக்கமாட்டாது.

மரம் பொதச் சரம் துரந்து
சப்த சால மரங்கள் துழாய் படும்படி அம்பை பிரயோகித்து

வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
வாலி முடியும் படியும் அவனது பார்பில் பொருந்தும் படியும்

சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்-வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது
தன்னுடைய சிறந்த திரு உள்ளத்தில் யாரை விஷயீ கரிக்கிரானோ அவரைத் தவிர

வானம் ஆளிலும்
மேல் உலகங்களுக்கு அதிபதியாக இருந்தாலும்

நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –
நித்ய சுகானுபவம் அவர்களுக்கு ராமனின் திரு உள்ளத்தில் இல்லாதவர்களுக்கு இல்லை என்கிறார்-

அந்தப் பரமபுருஷனை இராமபிரானாகத் திருவவதரித்தன னென்றுசொல்லி

அந்த மஹாநுபாவனால் திருவுள்ளம் பற்றப்படாதவர்கள் உத்தமாதிகாரிகளாயிருந்தாலும்

யத்ய ஸுகாநுபவத்திற்கு உரியரல்லர் என்கிறார்.

ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்ததுபோலவே வாலியின் மார்பையும் பாணத்தினால் துளைத்து

அவனுயிரை மாய்த்த மஹாநுபாவனது திருவுள்ளத்தாலே விஷயீகரிக்கப்பட்டவர்களுக்கன்றி

மற்றெவர்க்கும் நித்யமான மோக்ஷத்தைப்பெற வழியில்லை.

மூன்றாபடியில், அலாது = ‘அல்லது’ என்பது அலது எனத் தொக்கி நீட்டல் பெற்றது.

வானம் ஆளினும் = சிறந்த ஞானத்தையுடையராய்ப் பதினான்கு லோகங்கட்கும் நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளாயிருந்தாலும் என்றபடி.

——————————————

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

பதவுரை

முதலாயிரம்

திருச்சந்தவிருத்தம்
வாமணன்

உலகளந்த பெருயாமனுடைய
அடி இணை

அடியிணைகளை
அறிந்து அறிந்து

உபாயமென்றும் உபேயமென்றும் தெரிந்து கொண்டு
வணங்கினால்

நமஸ்கரித்தால்
செறிந்து எழுந்த ஞானமொழி

பரம ச்லாக்யமாகக் கிளர்ந்த ஞானமும்
செல்வமும்

பக்தியாகிற செல்வமும்
செறித்திடும்

பரிபூர்ணமாக விளையும்
மறிந்து எழுந்த

பரம்பிக்கிளர்ந்த;
தென் திரையுள்

தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலிலே
மன்னு

நிதய்வாஸம் செய்தருள்கின்ற
மாலை

ஸர்வேச்வரனை
வாழ்தினால்

ஸங்கீரத்தகம் பண்ணினால்
எழுந்த தீவினைகள்

ஆத்மஸ்வரூபத்திலே வளர்ந்து கிடக்கிற கொடு வினைகள்
பற்று அறுதல்

வாஸனையும் மிகாதபடி நசித்துப்போதல்
பன்மையே

இயற்கையேயாம் (அநாயானமாக நசிக்குமென்கை.)

அறிந்து அறிந்து
உபாயமும் உபேயமும் என்று தெரிந்து கொண்டு

வாமனன் அடி இணை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் மறிந்து எழுந்த தெள் திரையுள்
பரம்பி கிளர்ந்த தெளிந்த அலைகளை உடைய திருப் பாற் கடலிலே

மன்னு மாலை வாழ்த்தினால்
நித்ய வாசம் செய்யும் சர்வேஸ்வரனை சங்கீர்த்தனம் பண்ணினால்

பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –
நசிவித்து இயற்க்கை-அவனது திரு உள்ளம் பற்றுதல் தான் மோஷ சாதனம்

திரு நாமங்களைச் சொன்னால் பாபங்கள் தானாகவே ஒழியும்

பரமபுருஷனுடைய திருவுள்ளம்பற்றல்தானே மோக்ஷஸாதநமாகில்

முமுக்ஷுலான அதிகாரி செய்ய வேண்டிய சூது ஒன்றுமில்லையோவெனில்;

அவ்வெம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை வணங்குதலும்

அவனது திருப்புகழ்களை வாயார வாழ்த்துதலும் இவனுக்குக் காலக்ஷேபமாகக் கடவது;

இவற்றால் இவனுடைய பாவங்களை தொலைந்து நல்ல ஞானபக்திகள் தழைக்கும் என்கிறார்.

எம்பெருமான் தன்னுடமையைப் பெறுவதற்குத் தானே யாசகனாய் நிற்பவன் என்பதையும்,

அடியாரை ஆட்கொள்ளுமிடத்தில் வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல்

எல்லார் தலையிலும் ஒரு ஸமமாகத் திருவடிகளை வைத்து ஆட்படுத்திக் கொள்பவன் என்பதையும்

சாஸ்த்ர ச்ரவணைத்தாலும் ஆசார்ய உபதேசத்தாலும் நன்கு தெரிந்துகொண்டு அத்திருவடிகளை வணங்கினால்

ஞான ஸம்பத்தும் பக்தி ஸம்பத்தும் குறைவின்றி உண்டாகும்;

திருப்பாற் கடலிலே துயில்கின்ற அப்பெருமானுடைய திருநாமங்களை வாயாலே சொன்னால்

அவனைப் பெறுதற்கு ப்ரதிபந்தகங்களாயுள்ள பாவங்கள் அவலீலையாக அற்றொழியும் என்கை.

பான்மை- இயற்கை;

பாவங்களை ப்ரயானப்பட்டுப் போக்கினதுபோலாகாமே தன்னடையே போனதாகப் போமென்றபடி.

——————————

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-

பதவுரை

ஒன்றி நின்று

மனம் சலியாமல் நிலைத்து நின்ற
நல் தவம்

விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது  கர்மயோகத்தை)
ஊழி ஊழிதோறு எலாம் செய்து

பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து
அவன் குணங்கள்

அப்பெருமானுடைய திருக்குணங்களை
நின்று நின்று உள்ளி

ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து
உள்ளம் தூயர் ஆய்

கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய்
சென்று சென்று

மேல்மேல் படிகளிலே ஏறி (ச்ரவணம்  மநநம் நிதித்யாஸதம் என்கிற பர்வங்களிற் சென்று)
உம்பர் உம்பர் உம்பர் ஆய் அன்றி தேவதேவர்

பரபக்தி யுக்தராய் பரஜ்ஞாந யுத்தராய் பரம பக்தியுந்தராய் இப்படி யெல்லா மானால்லது
தேவதேவர்

(மற்றபடி) தேவதேவராயிருந்தாலும்
எங்கள் செம் கண் மாலை

செந்தாமரைக் கண்ணாலே எம்மை விஷயீகரித்தருளும் பெருமானை
யாவர் காணவல்லர்

யார் காணக்கூடியவர்கள்.

ஒன்றி நின்று
மனம் சலியாமல் நிலைத்து நின்று

நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி-சாத்மிக்க சாத்மிக்க அனுசந்தித்து

நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம் நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று -ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் போன்ற படிகளில் ஏறி-

உம்பர் உம்பர் உம்பராய் அன்றி-பர பக்தி பர ஞான பரம பக்த உக்தராய் அல்லது
தேவ தேவர் -மற்றபடி தேவதேவராய் இருந்தாலும்

எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே
எங்கள் பெருமான் -எங்கள் ஈசன் என்று சொல்லாமல் எங்கள் செங்கண் மால் என்கிறார்

ருசி பிறந்து பரம பக்தி பர்யந்தமாக -அவனது கடாஷத்தால் தான் சித்தி கிட்டும் –
செந்தாமரைக் கண்ணால் விஷயீ கரித்து அருளினால் தானே சித்தி கிட்டும்-

விசாலமான விஷயாந்தர வழிகளிலே ஓடக்கடவதான நெஞ்சை அவற்றில் நின்றும் வருந்தி மீட்டுப்

பகவத் விஷயத்திலே நிலை நிறுத்தி நெடுங்காலம் கர்மயோகத்தை யநுஷ்டித்து

அவ்வெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை க்ரமேண அநுஸந்தித்து,

ஆகவிப்படி கர்மயோகா துஷ்டாகத்தாலும்

குணாநுஸந்தாகதத்யாலும்

மனம் பரிசுத்தமாகப் பெற்று, க்ரமத்தில் அநவரதபாவகையனவிற்சென்று பரமபக்தி தலையெடுத்துப்

பரமபதத்திற்சென்று சரணாகதவத்ஸலனான புண்டரீகாக்ஷனை ஸேவிக்கப்பெறலா  மத்தனையொழிய

வேறு எவ்வழியாலே அவனை ஸாக்ஷாத்கரிக்க முடியும்? என்கிறார்.

எங்கள் பெருமானை யென்றாவது,

எங்களீசனை யென்றாவது அருளிச்செய்யாது

“எங்கள் செங்கண்மாலை” என்றருளிச் செய்த தன் உட்கருத்தைப் பெரிய வாச்சான் பிள்ளை யருளிச்செய்கிறார். காண்மின்-

ஜிதந்தே புண்டரீகாஷ–என்கிறபடியே ருசியே தொடங்கிப் பரமபக்தி பர்யந்தமாக

அத்தலையில் விசேஷ கடாக்ஷத்தாலே ஸித்தி யென்று தோற்றுகைக்காகச் செங்கண்மால் என்றது என்று.

————————————

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-

பதவுரை

புல்

க்ஷுத்ரங்களான
புலன் வழி

சப்தாதிவிஷயங்களிலே இந்திரியங்கள் ஓடுவதற்குரிய வழியை
அடைத்து

அடைத்து
அரக்கு இலச்சினை செய்து

(விஷயமார்ந்த த்வாரத்திலே) அரக்கு முத்திரையிட்டு
நன் புலன் வழி திறந்து

ஸத்விஷய மார்க்கத்தைத் திறந்து விட்டு
ஞானம்

ஞானமாகிய
நல்சுடர்

விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ

கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல்

எலும்பு வீடாகிய சரீரம்
என்கி

சிதிலமாகி
நெஞ்சு உருகி

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உள் கனிந்து

நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)
உன் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி

பரிபக்குவமாய்க் கிளர்ந்த யிலக்ஷணமானதொரு ப்ரேம முண்டானலல்லது
ஆழியானை

திருவாழியைக் கையிலேந்தின பெருமானை

யாவர் காண வல்லர்  ?.

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
விஷய மார்க்க த்வாரத்தில் அரக்கு முத்தரை இட்டு அடைத்து

நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
ஞானமாகிய விலஷணமான பிரபையைக் கொளுத்தி

என்பில் எள்கி நெஞ்சு உருகி
எலும்பு வீடாகிய சரீரம் சிதிலமாக்கி

யுள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
விஷயாந்தரங்களில் அவகாகிப்பதற்கு அடியான பாபங்களையும் -அவன் பக்கல் வைமுக்யமாக இருக்கைக்கு
அடியான பாபங்களையும் திருக்கையில் உள்ள திருவாழி கொண்டு வெட்டி
திருக்கையும் திருவாழி யான சேர்த்தி அழகைக் காட்டி தன் பக்கல் பக்தி -காதலை வளர்க்குமவன் அன்றோ –

கடல் நிற கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ இங்கும் எள்கி என்கிறார் இதிலும்

க்ஷûத்ர விஷயங்களைப் பற்றியோடுகிற இந்திரியங்களின் ஓட்டத்தைத் தடுத்து

அவ்விஷயமார்க்கமே புல்மூடிப் போம்படி அடைத்து அரக்கு முத்திரையிட்டு வானனையும் மறுவலிடாதபடி பண்ணி,

விலக்ஷண விஷயத்தில் இந்த்ரியங்களைப் பரவவிட்டு விலக்ஷணமான ஜ்ஞாநப்ரபையை நன்றாக விளக்கி

எம்பெருமானுடைய ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வஜ்ஞாநத்துக்கு விஷயமாக்கி,

அஸ்திமயமான சரீரம் சிதிலமாய் ஹ்ருதயம் உருகிக் கனிந்த ப்ரேம முண்டானவல்லது

சக்ரபாணியான எம்பெருமானை யார் ஸாக்ஷாத்கரிக்கவல்லர்?-

“எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறபடியே-

விஷயாந்தரங்களிலே அவகாஹிப்பதற்கு அடியான பாபத்தையும்

எம்பெருமான் திறத்தில் வைமுக்கியத்துடனிருக்கைக்கு ஹேதுவான பாபத்தையும்

கையில் திருவாழியாலே இரு துண்டமாக வெட்டி, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காட்டித்

தன் விஷயமான பக்தியை வளரச்செய்த அப்பெருமானை நான் கண்டாப்போனே வேறுயார் காணவல்லாரென்றவாறு.

புன்புலவழிகளில் அரக்கிலக்கினை (ஸீல்) வைக்க முடியுமோ வென்னில்;

மறுபடியும் அந்த வழி காணவொண்ணாதபடி நன்றாக அதனை மறந்து என்றபடி,

என்பிலென்கி = என்பு- எலும்பு; எலும்புகட்கு, இல்- இருப்பிடம், சரீரம் ;

அது என்குமோ வெனில்

“கடல்நிறக்கடவுளெந்தையரவணைத்துயிலுமா  கண்டு, உடலெனக் குருகுமானோ” என்றாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

—————————

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

பதவுரை

எட்டும் எட்டும் எட்டும் ஆய்

இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும்
ஓர் ஏழும் ஏழும் ஆய்

ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற

த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை

பரமபுருஷனை
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று

ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவள் பெயர் எட்டு எழுத்தும்

அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன வல்லர்

பரமபதத்தை ஆளவல்லவர்களாவர்

எட்டும் எட்டும் எட்டுமாய்
24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய்

ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
7 தீவுகள் 7 மலைகள் 7 கடல்கள் இவற்றுக்கும் நிர்வாஹகனாய்

எட்டு மூன்று ஒன்றுமாகி
12 ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாகவும்

நின்ற வாதி தேவனை எட்டினாய பேதமோடு இறைஞ்சி
இப்படி சர்வ ஜகத் காரண பூதனான சாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி
நின்றவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே

எட்டும் எட்டும் எட்டுமாய் = மூவெட்டு இருபத்தினான்கு;

கருமேந்திரியங்கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து; சப்தாதி விஷயங்கள் ஐந்து; நிலம் நீர் முதலிய பூதங்கள் ஐந்து;

மநஸ் , மஹாந், அஹங்காரம், ப்ரக்ருதி – ஆக இருபத்தினான்கு தத்துவங்களுண்டிறே;

அந்தத் துவங்களுக்கு அந்தராத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது.

(ஓர் ஏழும் இத்யாதி. “ஜம்பூத்வீபம் முதலிய ஏழு தீவுகளென்ன, ஏழு குலபர்வதங்களென்ன, ஏழு கடல்களென்ன

இவற்றுக்கு நிர்வாஹகனென்கிறது.

எட்டும் மூன்றும் ஒன்றும் கூடினால் பன்னிரண்டாம்; த்வாதசாதித்யர்களுக்கு அந்தர்யாமியானவ னென்றபடி,

இப்படிப்பட்ட ஸர்வ ஜகத் காரண பூதனான எம்பெருமானை அஷ்டாங்க ப்ரமணாமபூர்வமாக ஆச்ரயித்துத்

திருவஷ்டாக்ஷரத்தை ஓதுமவர்கள் பரமபதத்தை ஆளப்பெறுவார்களென்கிறார்.

எட்டினாய பேதமோடிறைஞ்சுகையாவது- “*** *** ***” என்றபடி ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணுகை.

பேதம் – *** மென்ற வடசொல் விகாரம். பேதமாவது ப்ரகாரம்.

————————

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

பதவுரை

நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த

கண் வளர்ந்தருள்கிற
நின்மலன்

அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல்

நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு

அன்புடன்
இறைஞ்சி நின்று

அச்ரயித்து
சோர்வு இல்லாத காதலால்

விஷயாந்தரப்பற்றினால் தளராத காதலோடு
துடக்கு அது மனத்தர் ஆய்

விச்சேதமில்லாமல் ஏகாந்ரமான மனமுடையவர்களாய்

அவன் பெயர் எட்டு எழுத்தும்

வாரம் ஆக

இதுவே நமக்குத் தஞ்சம் என்கிற அத்யவஸாயத்தோடு
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன

பரமபதத்தை ஆள்வதற்கு
வல்லர்

ஸமர்த்தராவர்.

சோர்விலாத காதலால்
விஷயாந்தர பற்றினால் தளராத காதலோடு-பகவத் விஷயத்திலே ஏகாக்ர மான காதல்-

தொடக்கறா மனத்தராய்
விச்சேதம் இல்லாமல் ஏகா க்ரமமான மனம் உடையவராய்

நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
இதுவே தஞ்சமாக -பகவத் விஷயம் ஒன்றிலேயே காதல் சோர்வில்லாத காதல் ஆகும் –

ஷீரா சாகர சேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதா புத்தியுடன் ஆஸ்ரயித்து
திரு அஷ்டாக்ஷரத்தை அன்புடன் அதிகரிக்க வல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள் என்றபடி –

ஒருவன் பகவத்விஷயத்தில் மிக்க ப்ராண்யமுடையனாயிருந்தாலும்

அவனுக்கு விஷ்யாந்தரப்பற்றும் சிறிது கிடக்குமாகில் அதுவானது

பகவத் விஷயப்ரவண்யத்தை விரைவில் குலைத்துவிடும்.

அங்ஙனல்லாமல் பகவத்விஷயமொன்றிலேயே ஏகாக்ரமான காலானது சோர்விலாத காதலெனப்படும்.

அப்படிப்பட்ட ப்ரேமத்தினால் பகவதநுஸந்தாநம் மாறாத நெஞ்சையுடையராய்க் கொண்டு,

க்ஷீரஸாகரசேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதாபுத்தியோடே ஆச்ரயித்துத்

திருவஷ்டாக்ஷாரத்தை அன்புடன் அதிகரிக்கவல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள்.

—————————

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-

பதவுரை

பத்தினோடு பத்தும் ஆய்

பத்து திக்குகளுக்கும் பத்து திக்பாலகர்களுக்கும் அந்தர்யா மியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பது ஆய்

ஸப்தஸ்வரங்களென்ன நவநாட்ய ரஸங்களென்ன இவற்றுக்குப் ப்ரவர்த்தகனாய்
பத்து நூல் திசை கண் நின்ற

பதினான்கு வகைப்பட்ட
நாடு

லோகங்களிலுள்ளவர்கள்
பெற்ற

பெறக்கூடிய
நன்மை ஆய்

நன்மைக்காக
பத்தின் ஆய தோற்றமோடு

தசாவதாரங்களோடு (ஆவிர்ப்பவித்து)
ஆற்றல்மிக்க

பொறுமையினாலே பூர்ணனான
ஓர் ஆதி பால்

எம்பெருமான் விஷயத்திலே
பக்தர் ஆமவர்க்கு அலாது

க்தியுடையவராயிருப்பவர்களுக்கன்றி (மற்றையோர்க்கு)
மூர்த்தி

மோக்ஷபுருஷார்த்தம்
முற்றல் ஆகுமே

பரிபக்வமாகுமோ?

பத்தினோடு பத்துமாய்
பத்து திக்குகளுக்கும் பத்து திக் பாலர்களுக்கும் அந்தர்யாமியாய்

ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
சப்த ஸ்வரங்கள் நவ நாட்டிய ரசங்கள் இவற்றுக்கு பிரவர்த்தனாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
14 வகைப் பட்ட லோகங்களில் உள்ளவர்க்களின் நன்மைக்காக

பத்தினாய தோற்றமொடு
தசாதவரங்களோடு ஆவிர்பவித்து

ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே
ஆற்றலாவது பொறுமை -சம்சாரிகள் பலவகைகளில் திரஸ்காரங்கள் பண்ணினாலும் அவற்றைக் கணிசியாது
பொறுமை காட்டுபவன்-

பத்து திக்குகளுக்கும் அவற்றுக்கு அத்யக்ஷர்களான தேவர்கள் பதின்மர்க்கும் நிர்வாஹகனாய்,

ஸப்தஸ்வரங்களுக்கும் ஒன்பது  நாட்டிய ரஸங்களுக்கும் நிர்வாஹகனாய்,

பதினான்கு வகைப்பட்ட உலகங்களி லுள்ளார்க்கு போக்யனாகைக்காக தசாவதாரங்கள் செய்தருளி

அவ்வவதாரங்களில் ஸம்ஸாரிகள் பண்ணும் பரிபவங்களையெல்லாம் பொறுத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமான் திறத்தில் பக்தியுள்ளவர்களாயிருப்பார்க்கல்லது மோக்ஷபலம் பக்குவமாகைக்கு வழியில்லை.

பதினான்றிசைக் கண்நின்ற = பத்தோடு கூடிய நான்கு – பதினான்கு; திசை – ப்ரகாரம்;

பதினான்கு வகையிலேயிருக்கிற நாடுகளாவன – சதுர்த்தச புவனங்கள். ஆகுபெயரால், நாட்டிலுள்ளவர்களெனப் பொருள்படும்.

அவர்கள் பெறும் ப்ரயோஜநமாகைக்காக- (அதாவது) பயன் பெற்றோமென்று களித்து அநுபவிப்பதற்காக;

மீனோடாமை கேழலரி குறளாய் மூன்று பிராமனாய்த் தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்கிறபடியே

தசாவதாரங்கள் செய்தருளின ஸர்வ ஜகத்தாரணபூதனனான எம்பெருமான் திறத்திலே

நன்றியறிவுடையார்க்கன்றி மற்றையோர்க்கு மோக்ஷபலன் பக்குவமாக வழியில்லை.

ஆற்றல் மிக்க – ஆற்றலாவது பொறுமை; ****** என்றபடி ஸம்ஸாரிகள் பலவகைகளிலே திரஸ்காரங்கள் பண்ணினாலும்

அவற்றைக் கணிசியாது பொறுமை பாராட்டுபவனென்கை.

——————————

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே –80-

பதவுரை

வாசி ஆகி

(கோவேறு) கழுதையின் வடிவங்கொண்டு
நேசம் இன்றி வந்து

பக்தியற்றவனாய் வந்து
எதிந்த

எதிரிட்ட
தேனுகன்

தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப

ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின்

உயர்த்தூக்கப்பட்ட தோளாலே
நன்மை சேர் பணங்கனிக்கு வீசி

அழகிய பணம்பழங்களின் மேலே தூக்கியெறிந்து
இல்லை ஆக்கினாய் கழற்கு

(அவ்வசுரனை) ஒழித்தருளின தேவரீருடைய திருவடிகளுக்கு
ஆசை ஆமவர்க்கு அலால்

நேசிக்குவமர்களுக்கன்றி மற்றையோர்க்கு
அமரர் ஆகல்

நித்யஸூரிகளோடு ஒப்படைத்தல்
ஆகுமே

கூடுமோ?

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
கோவேரி கழுதை வடிவம் கொண்டு -பக்தி அற்றவனாய் வந்த தேனுகாசுரனை

நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
ஆயுசு மாண்டு அழிந்து போகும் படி -அழகிய பனம் பழங்களின் மேலே தூக்கி எறிந்து

வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
உயரத் தூக்கப் பட்ட தோள்களாலே அந்த அசுரனை ஒழித்து அருளின திருவடிகளுக்கு

ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே-
ஆஸ்ரித விரோதி நிவர்த்தகனான எம்பெருமான் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அன்றி
மற்றையோர்க்கு நித்ய ஸூரி போக்யத்வம் கிட்டாது என்றவாறு-

கீழ்ப்பாட்டில் “பத்தினாபதோற்றமோடு” என்று ப்ரஸ்தாவிக்கப்பட்ட தசராவதாரங்களுள்

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை அநுஸந்தித்து அவ்வவதார சேஷ்டிதங்களுன் ஒன்றான தேநுகாஸுர நிரஸந விருத்தாந்தத்தைப் பேசி,

இப்படிப்பட்ட ஆச்ரித விரோதி நிவாதகனான எம்பெருமான் திருவடிகளிலே ஆசையுடையார்க்கன்றி

மற்றையோர்க்கு நித்யஸூரிபோகம் கிடைக்கமாட்டாதென்கிறார்.

—————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-101-120- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 10, 2020

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-

பதவுரை

ஏமம் நீர் நிறத்து

மஹாஜலமான கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மா !

ஸ்வாமி!
இரந்து உரைப்பது உண்டு

(தேவரீரை) யாசித்துச் சொல்லும் வார்த்தையொன்றுண்டு
வாழி

பல்லாண்டு பல்லாண்டு;
மன்னு சீர்வரம் தரும் திருக்குறிப்பில்

(சேதநர்க்குச் ) சிறந்த வரங்களையருள்வதே இயல்வான (தேவரீருடைய) திருவுள்ளத்தில்
வைத்தது ஆகில்

அடியேனுக்கு ஏதாவது வரங்கொடுக்க நினைவுண்டாகில் (இந்த வரம் கொடுக்க வேணும்.)
பரந்த

கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை

எனது நெஞ்சானது
ஒன்றி நின்று

(தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன

தேவரீருடைய
பாதபங்கயம்

திருவடித்தாமரைகளை
நிரந்தரம்

இடைவிடாமல்
நினைப்பது ஆக

தியானித்திருக்கும்படியாக
நீ நினைக்க வேண்டும்

தேவரீர் திருவுள்ள மிரங்க வேணும்.

இரந்து உரைப்பது உண்டு
தேவரீரிடம் யாசித்து சொல்லும் வார்த்தை ஓன்று உண்டு

வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
கடல் போன்ற நிறத்தை உடைய ஸ்வாமியே

வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்-
சேதனர்களுக்கு வரம் அருளுவதே இயல்பாக உன்னது திரு உள்ளத்தில் அடியேனுக்கு ஏதாவது வரம் தர வேண்டுமானால்
இத்தை தந்து அருள வேண்டும்

பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
கண்ட இடங்களில் திரியும் எனது நெஞ்சை தேவரீர் விஷயத்திலே ஸ்திரமாக இருந்து நின்ன பாத பங்கயம் நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே-

வாழி-என்றதும் பரவசமாக நோக்கி அருளினான் —ஏமம் நீர் நிறத்தம்மா-என்கிறார்-
இரந்து உரைப்பது ஓன்று உண்டு -என்று பல காலும் விண்ணப்பம் செய்தாலும் முகம் காட்டாமல்
வாழி என்று ஒரு கால் மங்களா சாசனம் செய்ததும் பரவசனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருள
ஏம நிறத்து அம்மா என்று பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்-

கீழ்ப்பாட்டில், பக்தியைத் தந்தருள வேணுமென்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான்,

‘உமக்கு நான் பக்தியைக் கொடுப்பதாவதென்ன?

விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப்பட்ட இந்திரியங்களைக்கொண்டு நம்மை நிரந்தரமாக நினைத்தால்

அதுவே பரமபக்தியாகத் தலைக்கட்டுகிறது; காரியம் உம் கையிலே கிடக்க என்னை நிர்பந்திப்பானேன்?’ என்ன;

பிரானே! அப்படி நிரந்தர சிந்தனை பண்ணுவது என் முயற்சியினாலேயே தலைக்கட்டி விடுமோ?

தேவரீர் ஸங்கல்பியாதவளவில் அதுதானும் நடைபெறுமோ?

ஆகையாலே அடியேன் தேவரீரையே நிந்தரம் நினைப்பேனாம்படி திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்கிறார்.

முதலடியின் முடிவில், அமா என்றது அம்மா! என்றபடி: தொகுத்தல், ஸ்வாமிந்!  என்கை.

‘இரந்துரைப்பதுண்டு” என்றவாறே எம்பெருமான் முகங்காட்டவில்லை; ‘

இவ்வாழ்வார்க்கு காரியமொன்றுமில்லை; திருப்பித்திரும்பி ‘அருளாய், இரங்கு’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்;

இவர்க்கு நாம் முகங்கொடுக்கலாகாது’ என்று நினைத்து பாராமுகனாயிருந்தான்;

அங்ஙனிருந்ததுகண்டு, வாழி என்று கம்பீரமான மிடற்றோசையோடே பேசினார்;

அந்த மங்களசாஸன சப்தம் செவிப்பட்டவாறே எம்பெருமான் பரவசனாய் ஆழ்வாரை நோக்கினான்;

நோக்குதலும் அபரிச்சிந்நமான கடல்போலே ச்ரமஹரமான திவ்ய விக்ரஹத்தை ஸேவித்து

‘ஏமநீர் நிறத்து அம்மா!” என்று பெருமிடறு செய்து கூப்பிடுகிறார் என்று விவரித்துக் கொள்க.

——————

விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-

பதவுரை

தெழிக்கும் நீர்

கொந்தளிக்கின்ற கடலிலே
பள்ளி

சயனங்கொண்டிருக்கிற
மாய

ஸர்வேச்வரனே!
பன்றி ஆய

மஹாவராஹமாகக் திருவவதரித்த
வென்றி வீர

ஜயசீலனான வீரனே!
துள்ளும் நீர்

துள்ளின கடலிலே
குன்றினால்

மலைகளைக் கொண்டு
உள்ளு வேனது

(அத்திருவடிகளையே தஞ்சமாக) அநுஸந்தித்திருக்கிற என்னுடைய
ஊனம் நோய்

சரீர சம்பந்தமான நோய்களை
வரம்பு செய்த

அணைகட்டின
தோன்றல்

ஸ்வாமியே!
யிலவு இலாத காதலால்

நீக்கமில்லாத அன்பினால்
விளங்கு பாத போதில் வைத்து

(உனது) விளங்குகின்ற பாதாரலிங்கத்திலே (நெஞ்சை) வைத்து
ஒழிக்கும் ஆ

ஒழிக்கும் வழிகளில்
ஒன்று

ஒருவழியை
சொல்லிவிடு

அருளிச் செய்க

விள்விலாத காதலால்
நீக்கம் இல்லாத அன்பினால்-அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு பண்ணும் ப்ரேமம் –

விளங்கு பாத போதில் வைத்து
உனது பாதாரவிந்தத்திலே நெஞ்சு செலுத்தி

உள்ளுவேனது ஊன நோய்
அந்த திருவடிகளையே தஞ்சமாக இருக்கும் எனது சரீர சம்பந்தமான நோய்களை

ஒழிக்கும் ஆ
ஒழிக்கும் வழிகள்

தெழிக்கும் நீர்
கொந்தளிக்கும் கடலிலே

பள்ளி மாய பன்றியாய வென்றி வீர துள்ளு நீர் குன்றினால் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே
நிரந்தரம் கைங்கர்யம் பண்ண சரீரம் தொலைத்து அருள பிரார்த்திக்கிறார்-

ஓன்று சொல்லிடே-இன்ன காலத்தில் இதனைப் போக்குகிறேன் என்று அருளிச் செய்தாலும் போதும் என்கிறார் –

‘நின்னபாதபங்கயம் நிரந்தரம் நினைப்பாக நீ நினைக்க வேண்டுமே” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி

எம்பெருமான் “ஆழ்வீர்! இந்த சரீரம் உள்ளவரையில் அப்படிப்பட்ட நிரந்தரசிந்தனை கூடமாட்டாதுகாணும்;

சரீர சம்பந்தம் அற்றொழிந்த பின்புதான் அது வாய்க்கும்” என்ற, ‘

பிரானே! இந்த சரீரம் தொலைய வேணுமென்கிற ருசியோ எனக்குப் பூர்ணமாயிராநின்றது;

இதனைத் தொலைத்தருளத் தட்டுண்டோ; வாய் திறந்தொரு வார்த்தை அருளிச் செய்யவேணும்” என்கிறார்.

விள்விலாத காதல்= விள்வாவது பிரயோஜநந்தரங்களை நச்சி நெகிழ்ந்து போகை;

அஃது இல்லாத காதல்- அநந்யப்ரயோஜகனாய்க்கொண்டு பண்ணும் ப்ரேமம்.

அப்படிப்பட்ட ப்ரேமத்தாலே திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து அவற்றையே சரணமாக

அநவரதம் அநுஸந்தித்துக் கொண்டிருக்கிற அடியேனுக்கு ஊனத்தை விளைக்கும் சரீர ஸம்பந்தமாகிய

நோயைப் போக்கியருளும் வகையில் ஒருவகை அருளிச் செய்யவேணும்.

‘இன்ன காலத்திலே இதனைப் போக்குகிறேன்’ என்று சொன்னாலும் போருமென்று திருவுள்ளம்

——————————

திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –103-

பதவுரை

திரு கலந்து சேரும்

பெரிய பிராட்டியார்  நித்யஸம்ச்லேஷம் பண்ணி வாழப்பெற்ற
மார்பு

திருமார்பையுடையனே!
தேவர் தேவர் தேவனே

ப்ரஹ்மாதிகளிற் காட்டிலும் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் தலைவனே!
இருக்கு கலந்த வேதம் நீதி ஆகி நின்ற

(பலவகைப்பட்ட) ருக்குக்கன் சேர்ந்திருக்கிற வேதங்களால் பிரதி பாதிக்கப்படுகையை ஸ்வபாவமாகவுடையனான
நின் மலா

பரிசுத்தனே
கரு கலந்த

பொன்னோடு  சேர்ந்த
காளமேகம் மேனி

காளமேகம்போன்ற திருமேனியையுடைய
ஆய

கண்ணபிரானே!
நின் பெயர்

உன் திருநாமஙக்ளை
ஒழிவு இலாது

நிரந்தரமாக
உரு கலந்து  உரைக்கும் ஆறு

திவ்யமங்களவிக்ரஹத்தோடு சேர்ந்து அநுஸந்திக்கும் வகையை
உரைசெய்

அருளிச் செய்யவேணும்.

திருக்கலந்து சேரு மார்ப தேவ தேவ தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
பலவகைப் பட்ட ருக்குகள் சேர்ந்து இருக்கும் வேதத்தில் பிரதிபாதிக்கப்படும் பரி சுத்தமானவனே

கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர் உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
பொன்னோடு சேர்ந்த திவ்ய மங்கள விக்ரகத்தோடு சேர்ந்து உனது திரு நாமங்களை நிரந்தரமாக அனுசந்திக்கும்
வகையை அருளிச் செய்ய வேணும்

சரீர சம்பந்தம் தீரும் வரை திரு நாம சங்கீர்த்தனம் பண்ணும் படியை அருளிச் செய்யப் பிரார்த்திக்கிறார் –

வேர் சூடுவார் மண் பற்றை உகக்குமா போலே சரம விமல சரீரத்தை விரும்பி அனுபவிப்பான் அன்றோ

ஆக அந்திம சமயம் வரை உனது திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்துக் கொண்டே
திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே இருக்க அருளுவாய் என்கிறார்-

ஆழ்வார் தம்முடைய சரீரபந்தத்தை அறுத்து தந்தருள வேணுமென்று எம் பெருமானைப் பிரார்த்தித்தாலும்

அவன் இப்போதே அது செய்யமாட்டானே; இந்த சரீரத்தோடே இவரைச் சிறிது காலம் வைத்து

அநுபவிக்க விருப்பமுடையவனாதலால்

‘வேர்சூடுவார் மண்பற்றை உகுக்குமாபோலே’ இந்த ப்ராக்ருத சரீரத்தையே மிகவும் விரும்பியிருப்பவனிறே;

அதனால், ‘ஆழ்வீர்! நீர் பிரார்த்திக்கிறபடி சரீரபந்தத்தை இப்போதே அறுத்துத் தர முடியாது;

அதற்கு ஒரு காலவிசேஷம் உண்டு; பொறுத்திரும்’ என்ன;

அப்படியாகில் தேவரீருடைய மேன்மைக்கும் நீர்மைக்கும் வடிவழகுக்கும் வாசகமான திருநாமங்களையாவது

அடியேன் இடைவிடாது அநுஸந்தித்துக் கொண்டிருக்கும்படி அருள்புரிய வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

இருக்கு+கலந்த = இருக்கலந்த; “

சங்கு – கதை, சங்கதை” போல.

மூன்றாமடியில், ஆய! என்பது ‘ஆயன்’ என்பதன் விளி.

ஹிரண்யவர்ணையான பிராட்டி சேர்ந்த கரிய திருமேனிக்குக் கருக்கலந்த காளமேகத்தை ஒப்புச் சொல்லிற்று ஒக்கும்.

கரு- பொன்; மின்னலைச் சொல்லிற்றாகக் கொள்க.

கரு என்று சர்ப்பத்தைச் சொல்லிற்றாகவுமாய்;

நீர்நிறைந்த காளமேகமென்றபடி.

உருக்கலந்து = திருநாம ஸங்கீர்த்தகம் பண்ணும்போது திவ்யமங்கள விக்ரஹாநுபவம் நடைபெறவேண்டுமென்ற ஆசை விளங்கும்.

———————

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-

பதவுரை

கடு

க்ரூரனான
கவந்தன்

கபந்ததென்ன
வக்கரன்

தந்தவக்த்ரனென்ன
கரன்

கரனென்ன
முரன்  சிறை அவை

முரனென்ன (இவர்களுடைய தலைகளை
இடந்து கூறு செய்த

சிந்நபிந்நமாக்கினவனும்
பல்படை தடகை

பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான
மாயனே

பெருமானே!
கிடந்து இருந்து நின்று இயங்குபோதும்

படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும்
நின்ன

தேவரீருடைய
பொன்கழல்

அழகிய திருவடிகளையே
தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி

இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை
நலக் வேண்டும்

தந்தருளவேணும்.

 

சர்வ அவஸ்தைகளிலும் அவனது சிந்தை தொடர பிரார்த்திக்கிறார் –

ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார்.

(கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது.

படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும்

ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு

அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.

—————–

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-

பதவுரை

மண்ணை உண்டு

பூமியைப் பிரளயகாலத்திலே திருவயிற்றில் வைத்து நோக்கியும்
பின் உமிழ்ந்து

பிரளயம் கழிந்த பிறகு வெளிப்படுத்தியும்
இரந்துகொண்டு

(மஹாபலியிடத்தில்) பிக்ஷையேற்றுப் பெற்று
அளந்து

அளந்துகொண்டும்.
மண் கண்ணுள் அல்லது இல்லை என்று

‘இவ்வுலகமானது நமது கடாக்ஷத்தாலன்றி ஸத்தை பெற்றிருக்கமாட்டாது’ என்று திருவுள்ளம்பற்றி
வென்று

(அவ்வுலக முழுவதையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்டும் போந்த
காலம் ஆயினும்

ஸர்வகால நிர்வாஹகனே!
பண்ணை வென்ற இன்சொல் மங்கை

பண்களைத் திரஸ்கரித்த இனிமையான பேச்சையுடைய பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கு

பிரியாது வாழ்கிற
பங்கயக்கண்ண

புண்டரீகாக்ஷனே!
நின்ன வண்ணம் அல்லது

உன் வடிவழகுதவிர
எண்ணும் வண்ணம் இல்லை

தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை.

 

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண் கண்ணுள் அல்லது இல்லை என்று
இந்த உலகம் நமது கடாஷத்தால் அன்றி சத்தை பெறாது என்று திரு உள்ளம் கொண்டு

வென்ற காலமாயினாய்
உலகம் எல்லாம் ஸ்வ அதீநம் பற்றிக் கொண்டு போந்த சர்வ கால நிர்வாஹகனாய்

பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே
உனது திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் மட்டுமே நெஞ்சால் த்யானித்து இருப்பேன் என்கிறார்-

அடியேன் பிரார்த்தித்தபடி நீ அருள்வாய், அருளாதொழிவாய்;

என்னுடைய அத்யவஸாயம் எப்படிப்பட்டது தெரியுமோ?

உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹகத்தின் அநுபவமல்லது வேறென்றுமில்லை.

நெஞ்சில் நடவாதென்று தமது உறுதியை வெளியிடுகிறார்.

———————

கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

பதவுரை

அன்று

முன்னொரு காலத்து
கறுத்து எதிர்ந்த காலநேமி

கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன்
காலனோடு கூட

யமலோகம் போய்ச்சேரும்படியாக
அறுந்த

அவன் தலையை அறுத்த
ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்

பஞ்சாயுதாழ்வார்களை
ஏந்தினாய்

திருக்கையிலே அணிந்து கொண்டிருக்கும் பெருமானே!
தொறு கலந்த ஊனம் அஃது

பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை
அன்று ஒழிக்க

அப்போதே போக்குவதற்காக
முன்

எல்லாருடையவும் கண்முன்னே
குன்றம் பொருத்த நீ

கோவர்ததனமலையை (குடையாகத்) தூக்கினெயேடுத்த தேவரீருடைய
புகழ்க்கு அலால்

திருக்குணங்களுக்குத் தவிர (மற்றெவ்விஷயத்திலும்)
நெஞ்சம்

எனது நெஞ்சுக்கு
ஓர் கேசம் இல்லை

சிறிதும் ப்ரதியில்லை.

கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூடவன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று
பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை அப்போதே போக்க

குன்றம் முன் பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே-
எல்லோருடைய கண் முன்னே குன்றம் எடுத்து அருளிய சேஷ்டிதங்களை பேசி அனுபவிக்கிறார்-

திவ்ய சேஷ்டிதங்களையே புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுடைய அபிநிவேசம் பெருகுகிறது என்கிறார் –

தேவரீருடைய திவ்யசேஷ்டிதங்களைப் புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுக்கு அபிநிவேசம் பெருகுகின்ற தென்கிறார்.

காலநேமியை முடித்தருளினபடியையும்

கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்துக் கோநிரையைத் காத்தபடியையும்

கூறிப் புகழ்ந்தாராய்ந்து.

———————

காய் சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

பதவுரை

எம் ஈசனே

எம்பெருமானே!
காய் சினந்த காசிமன்னன்

மஹா கோபியான காசிராஜாவும்
வக்கரன்

(ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும்
பவுண்டிரன்

பௌண்ட்ரக வாஸுதேவனும்
மா சினந்த மாலி

அதிகோபிஷ்டனான மாலியும்
மா கமாலி

மஹானான ஸுலிமாலியும்
கேசி

(குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும்
தேனுகன்

தேநுகாஸுரனும்
நாசம் உற்று வீழ

துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக
நாள் கவர்ந்த

(அவர்களுடைய) வாழ்நாளை முடித்த
நின்

தேவரீருடைய
கழற்கு அலால்

திருவடிகளுக்குத் தவிர
எத்திறந்தும்

வேறு எவ்விஷயத்திலும்
நேச பாசம்

ஆசாபாசத்தை
வைத்திடேன்

வைக்கமாட்டேன்

நேச பாசம் -ஆசா பாசம்-

————-

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன்

அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன்

எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட

நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது

எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு

ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும்

அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ

மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
அழிவில்லாத சம்பத்தை உடையவனாம் படி வரம் பெற்ற பிரம்மனும் –
எல்லா வற்றுக்கும் முடிவு உண்டு பண்ணுவதாக வரம் பெற்ற சிவனும்

நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
இவர்களின் நாடுகளின் கூட 1000 கண் கொண்ட இந்தரனின் நாட்டையும் நண்ணினும்

நாட்டம் என்று கண் -நாட்டம் ஆயிரத்தன் -ஆயிரம் கண்ணன் இந்திரன்

வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும் கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே
அவனை அனுபவிப்பதை விட அவனைப் பற்றும் மநோ ரதமே சிறந்தது என்கிறார் –

எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில்

அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்;

அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்;

நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது.

இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று

ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.

———————

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் -109-

பதவுரை

சுருங்குவாரை இன்றியே

சுருங்கச்செய்வதற்கு ஹேதுவான கருமமம் முதலியவை ஒன்றுமில்லாமலே
சுருங்கினாய்

(ஸ்ரீவாமனாகச்) சுருங்கின பெருமானே!
சுருங்கியும் பெருக்கு வாரை இன்றியே

அப்படிக் குறுகினபின்னும் பெருகச் செய்வதற்கு ஹேதுவான கருமம் முதலியவை ஒன்றுமில்லாமல்
பெருக்கம் எய்து

(த்ரிவிக்ரமனாகத்) திருவளர்த்தி
பெற்றியோய்

பெற்ற பெருமானே
செருக்குவார்கள்

அஹங்காரிகளாய்த் திரிந்த மஹாபலி போல்வாருடைய
தீ குணங்கள்

அஹங்கார மமகாரங்களாகிற தீயகுணங்களை
தீர்த்த

தொலைத்தருளின

தேவதேவன்! தேவாதிதேவனே!

என்று

இவ்வாறு பல ஸம்போதகங்களையிட்டு
இருக்குவாய் முனி கணங்கள் ஏந்த

வேதமோதும் வாயையுடையரான  மஹரிஷிகளின் திரள் துதிக்க (அதைக்கண்டு)
யானும் ஏத்தினேன்

அடியேனும் துதித்தனித்தனை.

சுருக்குவாரை இன்றியே
சுருங்க செய்ய ஸ்ரீ வாமனனாய் சுருங்கினாய்

சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
திரிவிக்ரமனனாய் பெருக்கமும் எய்தினாய்

செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
அஹங்காரம் கொண்டு இருந்த மகா பலி போல்வாரின் அஹங்காரம் மமகாரம் போன்ற தீய குணங்களைத் தீர்த்தாய்

இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
வேதம் ஓதும் வாய் உடைய முனிவர்கள் துதிக்க அத்தைக் கண்டு நானும் துதித்தேன் –
நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்-

எப்படி ஊராம் இலைக்கக் குருட்டாம் இலைக்கும் என்னும் அப்படி யானும் சொன்னேன் அடியேன்
மற்றி யாது என்பேனே-திரு விருத்தம்

இரைத்து நல் மேல் மக்கள் ஏத்த நானும் ஏத்தினேன் –திருவாய் மொழி

எம்பெருமானே! உன்னுடைய வடிவழகு, திருக்கல்யாணகுணங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலியவற்றைப்பற்றி

நான் பேசுவதெல்லாம் நானாகவே கண்டறிந்து பேசுவதல்ல, சிற்றறிவினனாகிய எனக்கு ஒன்றும் தெரியாது.

வைதீக புருஷர்கள் ஸ்தோத்ரம் பண்ண ககண்டு காணும், அநுவாதரூபமாக ஏதோ பேசினே னுத்தனை என்று

ஸநச்யானுஸந்தாநம் பணிக்கொள்ளுகிறார்.

“எப்படி ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கு மென்னும் அப்படியானுஞ் சொன்னேன், அடியேன் மாற்றியாதென்பனே” (திருவிருத்தம்)

“இரைத்து நல்ல மேன்மக்களேத்த யானுமேத்தினேன்” (திருவாய்மொழி.) என்ற நம்மாழ்வாரருளிச் செயல்களுங் காண்க.

———————————

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-

பதவுரை

கரும்பு உலாவு

வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய!

ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன்

நீசனான அடியேன்
தூயனாயும்

பரிசுத்தனாகவோ
அன்றியும்

பரிசுத்தனல்லாதவனாகவோ
நின்னை

தேவரீரை
வணங்கி

ஸேவித்து
வேலை நீர்  பாயலோடு

திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட
பக்தர் சித்தர்

பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே
மேய

குடியிருக்கின்ற
வேலைவண்ணனே!

கடல்வண்ணனே!
வாழ்த்தும் இது எலாம்

துதிப்பதாகிற இதனையெல்லாம்
நீயும்

(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும்
நின் குறிப்பினில் பொறுத்து

திருவுள்ளத்திலே க்ஷமித்திருள்
நல்கு

அநுக்ரஹம் செய்ய வேணும்.

தூயனாயும் அன்றியும்
பரிசுத்தனாகவோ அல்லாதானாகவோ

சுரும்பு உலாவு தண் துழாய் மாய –
வண்டுகள் உலாவப் பெற்ற குளிர்ந்த திரு துழாய் மாலையை உடைய பெருமானே

நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம் நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு
திரு உள்ளத்தில் ஷமித்து அருளி அனுக்ரஹம் செய்ய வேணும்

வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே
திருப் பாற் கடல் படுக்கை உடன் கூட பக்தரின் நெஞ்சில் குடி கொண்டு இருக்கும் கடல் நிற வண்ணன்

தூயனாயும் அன்றியும் -அஹங்காரம் மமகாரம் நிறைந்து அசுத்தனாகவும்
தேவரை பரம பரிசுத்தராக அனுசந்திப்பதால் சுத்தனாகவும் இருக்கிறேன்

தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பரிசுத்ததென்னலாம்;

மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;-

தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்;

அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்;

சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.

————————————————

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-

பதவுரை

நின்னை வைது

தேவரீரை நிந்தித்து
வல்லஆ பழித்தவர்க்கும்

சக்தியுள்ளவரைக்கும் அபவாதங்களை சொன்ன சிசுபாலாதிகளுக்கும்
மாறு இல்போர் செய்து

ஒப்பில்லாத யுத்தம்பண்ணி
நின்ன செற்றும்

தேவரீருடைய
தீயில்

கோபாக்நியில்
வெந்தவர்க்கும்

வெந்துபோன வாலி முதலானோர்க்கும்
உனைவந்து எய்தல் ஆகும் என்பர்

தேவரீரைக் கிட்ட உஜ்ஜீவிக்கப்பெறலாகுமென்று (மஹரிஷிகள்) சொல்லாநின்றனர்;
ஆதலால்

ஆகையாலே
எம் மாய!

எம்பெருமானை!
ஞானம் நாதனை

ஸர்வலோக ஸம்ரக்ஷகனே!
நாயினேன்

அடியேன் பண்ணின
செய்த குற்றம்

குற்றங்களை
நற்றம் ஆகவே கொள்

குணமாகவே கொள்ளல் வேண்டும்.

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்
தேவரீரை நிந்தித்து சக்தி உள்ளவரையில் அபவாதங்கள் சொன்ன சிசுபாலர் போல்வாருக்கும்

மாறில் போர் செய்து
ஒப்பில்லா யுத்தம் பண்ணி

நின்ன செற்றத் தீயின்
உனது கோப அக்னியில்

வெந்தவர்க்கும்
வாலி போல்வார்

வந்து உனை எய்தலாகும் என்பர்
உன்னைக் கிட்டி உஜ்ஜீவிக்கலாம் என்று மக ரிஷிகள் சொல்லுவார்கள்

ஆதலால் எம்மாய நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் போலே
அவனது வாத்சல்யத்தால் பொறுத்து நல்கு -என்று பிரார்த்திப்பது அபசாரம் என்று
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-என்கிறார்

கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுகள் சாதியாயும் ஆகப் பெற்றான் பற்றி உரல் இடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
என்று ஆண்டாள் வயிறு எரிந்து பேசும் படி தூஷித்தவர்களும் ப்ராப்தரானார்கள்

அதே போலே பிரதிகூலனான அடியேன் செய்யும் குற்றங்களை போக்யமாக கொண்டு அருள வேணும் என்கிறார்

கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரே அறிந்துமே

வைதல் -இல்லாததை சொல்லி தூஷிப்பது

பழித்தல் -உள்ளதை இழிவாக சொல்லி தூஷிப்பது-

தம்முடைய அபசாரத்தைப் பொறுத்தருளும்படி பிரார்த்தித்தார் கீழ்பாட்டில்;

எம்பெருமானுடைய வாத்ஸல்யமென்னும் குணவிசேஷத்தை ஆராய்ந்து பார்த்தார்;

என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்று குற்றத்தையும் குணமாகக் கொள்ளுகிற

எம்பெருமானுடைய திருவுள்ளம் புண்படும்படி “பொறுத்துநல்கு” என்று பிரார்த்திப்பது மஹாசாரமென்று அநுதபித்து,

அவ்வெம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்துக்குத் தகுதியாயப் பேசுகிறார். –

“காயினேன் செய்த குற்றம் கற்றமாகவே கொள்” என்கிறார்.

“கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்.

பற்றியுரவிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ?” என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக

தேவரீரை விசேஷமாகத் தூஷித்து தேவரீரோடே எதிரம்புகோத்தும் போர்புரிந்து

கடைசியாக தேவரீருடைய கோபத்துக்கு இலக்காகி நீறாயொழிந்த சிசுபால வாலிப்ரப்ருதிகளும்

தேவரீருடைய பரதத்தைப் பராப்தரானார்களென்று மஹர்ஷிகள் சொல்லிவைத்திருக்கிறார்கள்:

மஹா த்ரோஹிகளான அவர்களுடைய அபராதங்களைப் பொறுத்தருளின தேவரீர்.

அவர்களைப்போலே ப்ரதிகூலனல்லாத அடியேனுடைய குற்றங்களையும் பொறுத்தல் விசேஷமென்!

ஆச்ரிதருடைய குற்றங்களை சுற்றமாகக் கொள்வதன்றோ சிறப்பு என்கிறார்.

வைதுவல்லவா பர்த்தவனான சிசுபாலனுக்கு மோக்ஷம் கிடைத்ததென்பதைப் பராசரர் சொல்லிவைத்தார்,  “

***“ என்பது ஸ்ரீவிஷ்ணுபுராணம்.

“கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்,

திருவடி தாட்பாலடைந்த தன்மையறிவாரையறிந்துமே“ என்றார் நம்மாழ்வாரும்.

மாறில் போர் செய்து செற்றத்தீயில் வெந்தவனான வாலிக்கு மோக்ஷ ப்ராப்தியை வால்மீகிமுனிவர் கூறினர், “***“ என்பது ஸ்ரீராமாயணம்.

வைதலாவது என்ன? பழித்தலாவது என்ன? எனில்,

இல்லாத செய்திகளைச் சொல்லி தூஷிப்பது வைதல்,

உள்ள செய்திகளையே இழிவாகச் சொல்லி தூஷிப்பது பழித்தல் என்று கொள்க.

—————————————

வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –112-

பதவுரை

நாள்கள்

தினங்களானவை
வாள்கள் ஆகி செல்ல

(நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய
நோய்மை

பலவகை வியாதிகளாலே
குன்றி

உடல் பலக்குறைபட்டு
மூப்பு எய்தி

கிழத்தனமும் வந்து சேர்ந்து
மாளும் நாள் அது

மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது;
ஆதலால்

ம்ருத்யுகாலம் குறுகிவிட்டபடியால்
என் நெஞ்சமே

எனது மனமே!
ஆனது நன்மை ஆகும் என்று

எம்பெருமானுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று
நன்கு உணர்ந்து

த்ருடமான அத்யவஸாயங்கொண்டு
வணங்கி வாழ்த்து

(அவ்வெம்பெருமானைத்) தொழுது ஏத்துவாயாகா;
அது அன்றியும்

அதற்கு மேலே
மால பாதமே

அப்பெருமானுடைய திருவடிகளே
மீள்வு இலாத போகம்

மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகத்தை
நல்க வேண்டும்

அளிக்கக்கடவது

 

வாள்களாக நாள்கள் செல்ல
நமது ஆயுளை அறுக்கும் வாள்கள் போலே திங்கள் கழிய
நோய்மை குன்றி மூப்பெய்தி மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே-ஆளதாகும் நன்மை
எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது நன்மை என்று
என்று நன்கு உணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம் நல்க வேண்டும்

மால பாதமே மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
நாளைக்கு தொழுவோம் என்று இராமல் இப்பொழுதே வணங்கி வாழ்த்த வேண்டும் –
அடிமை செய்வது தானே புருஷார்த்தம் என்ற நினைவுடன்-

“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”என்றபடி

நமது வாழ்நாள் இன்ன போது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில்

எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று தமது திருவுள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார்.

நாள்களோ கடுங்குதிரைபோல் விரைந்தோடிக்கொண்டேயிருக்கின்றன; ‘

ஆயுஸ்ஸை அறுக்கிற வாள்களோ இவை என்னும்படியாக நாள்கள் பழுதே கழியாநிற்க,

யௌவநப் பருவத்திலுண்டாகக் கூடிய ரோகங்களாலே உடல் குன்றிப்போய் இடிவிழுந்தாற்போல்

திடீரென்று கிழத்தனமும் வந்து சேர்ந்து செத்துப்போகும் நாள் அணுகிவிட்டது;

ஆயுஸ்ஸு அஸ்திரமாகையாலும், உள்ள ஆயுஸ்ஸில் விக்கங்கள் பலவு முண்டாகையாலும்,

‘நாளைக்குத் தொழுவோம்’ என்றிராமல் இப்போதே திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப்பாராய் நெஞ்சே!;

ஆனது நன்மையாகும் என்று நன்கு உணர்ந்து வணங்கி வாழ்த்து என்று அந்வயம்.

போதைப் போக்குவதற்காகவன்றியே ‘அடிமைசெய்வதுதான். புருஷார்த்தம் என்கிற

அத்யாவசாய த்வரையுடனே வணங்கி வாழ்த்து’ என்கிறார்.

——————

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-

பதவுரை

நெஞ்சமே!

என்மனமே
வாழி

உனக்குப் பல்லாண்டு, (நான் சொல்வதைக் குறிக்கோள்
சலம் கலந்த செம்சடை

கங்கை நீரோடு வடின சிவந்த ஜடையையுடைவனும்
கறுத்த கண்டன்

(விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும்
புலன் கலங்க

ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை

வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட

பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த
பாதகத்தான்

கோரமாதகியுள்ள சிவபிரானுடைய
வன்துயர்கெட்

வலிதான துக்கம் தீரும்படி
அலங்கல்

திருத்துழாய் மாலையையணிந்த
மார்வில்

திருமார்பினின்றும்
வாசம் நீர்

திவ்யபரிமளமான தீர்த்தத்தை
கொடுத்தவன்

அவனுக்கு ப்ரஸாதித்தருளி
அடுத்த சீர்

என்றும்விட்டு நீங்காத திருக்கல்யாண குணங்களையுடைய
நலம்கொள் மாலை

ஆநந்தமயனான எம்பெருமானை
கண்ணும் வண்ணம்

அணுகும் வழியாகிற அவனது திருவருளையே
எண்ணு

அநுஸந்தித்து

சலம் கலந்த செஞ்சடை
கங்கை நீரோடு கூடின சிவந்த தலையுடன்

கறுத்த கண்டன் வெண்டலை
வெளுத்த கபாலத்திலே

புலன் கலங்க
சர்வ இந்த்ரியங்களும் கலங்குமாறு

வுண்ட பாதகத்தன்
பிச்சை எடுத்த ஜீவித கோர பாதகத்தன் -சிவன்

வன் துயர் கெட-அலங்கல் மார்பில்
திருத் துழாய் அணிந்த மார்பிலே

வாச நீர் கொடுத்தவன்
திவ்ய பரிமளமான தீர்த்தத்தை கொடுத்தவன்

அடுத்த சீர்
என்றும் விட்டு நீங்காத கல்யாண குணங்கள் உடைய

நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
ஆனந்த மயமான மாலை அணுகும் வழியாகிற அவனது திருவடிகளை அனுசந்தித்து வாழி நெஞ்சமே –

————————

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

பதவுரை

என் நெஞ்சமே

எனது மனமே
ஈனம் ஆய

(அறிவுக்குக்) குறைவை விளைக்கவல்ல
எட்டும்

அவித்யை. கருமம், வாஸகா, ருசி, பிரகிருதி ஸம்பந்தம், தாப த்ரயம் ஆகிய எட்டையும்
நீக்கி

போக்கி
ஏதம் இன்றி

ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய்
மீது போய்

(அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று
வானம்

பரமபதத்தை
ஆளவில்லை நூல்

அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில்
ஞானம் ஆகி

ஆத்மஞானத்தை யளிப்பவனாயும்
ஞாயிறு ஆகி

ஸூரியனைப்போலே இந்திய ஞானத்தை அளிப்பவனாயும்
ஏனம் மூர்த்திஆய்

மஹா வராஹமூர்த்தியாய்
ஞாலம் முற்றும்

பூமி முழுவதையும்
ஓர் எயிறு

ஒரு கோட்டினாலே
இடந்த

அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்தெடுத்து ரக்ஷித்த
எந்தை

எம்பெருமானது
பாதம்

திருவடிகளை
எண்ணி

சிந்தித்து
வணங்கி

நமஸ்கரித்து
வாழ்த்து

துதிக்கக்கடவை

ஈனமாய எட்டும் நீக்கி
அறிவுக்கு பாதகம் விளைக்க வல்ல
அவித்யா கர்மம் வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் தாப த்ரயம் ஆகிய எட்டையும் போக்கி

ஏதமின்றி மீது போய்
சம்சாரிக்க துக்கங்கள் எல்லாம் போக்கி -அர்ச்சிராதி கதியிலே சென்று

வானமாள வல்லையேல்
பரமபதத்தை அனுபவிக்க ஆசை கொண்டு இருந்தால்

வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
நமஸ்கரித்து துதித்து

ஞானமாகி
ஆத்ம ஞானம் அளிப்பவனாயும்

ஞாயிறாகி
சூர்யன் போலே

ஞாலம் முற்றும் –எண்டறிய ஞானம் அளிப்பவனாயும்
ஆக அக இருளையும் புற இருளையும் போக்குபவனாயும்

ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் பூமி முழுவதையும் ஒரு கோட்டினிலே பிரளய கடலில் இருந்த ஸ்ரீ பிராட்டியை
உத்தரித்து அருளினது போலே
நம்மையும் சம்சார கடலில் இருந்தும் உத்தரித்து அருள வேணும் என்கிறார் –

ஞானமாகி ஞாயிறாகி–ஸ்ரீ வராஹ மூர்த்தி தானே ஸ்ரீ ஞானப்பிரான் -சம்சாரக்கடலில் இருந்து
நம்மை உத்தரித்து அருளுவான்-

ஈனமாயவெட்டும் என்று- ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணுவதான

காமம், க்ரோதம்,கோபம், மோஹர், மதம்,மாத்ஸர்யம், அஜ்ஞானம்,அஸூயை என்ற எட்டும் சொல்லிற்றாகவுமாம்.

(இந்த நிர்வாகஹம் ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானத்திலுள்ள.)

காமமாவது- விரும்பின பதார்த்தத்தை அநுபவித்தே தீரவேண்டும்படியான அவஸ்தை

க்ரோதமாவது- அப்படி விரும்பின பதார்த்தம் கிடையாதொழியில் அணுகினவர்கள் மேல் பிறக்கும் சீற்றம்.

லோபமாவது- கண்ட பதார்த்தங்களிலும் அளவற்ற அபேக்ஷை.

மோஹமாவது- கார்யமின்னது அகார்யமின்னது என்று ஆராயமாட்டாமை.

மதமாவது- பொருள் முதலியவை கிடைப்பதனால் உண்டாகும் களிப்பு.

மாத்ஸர்யமாவது- பிறர்மினுக்கம் பொறாமையை அநுஷ்டாநபர்யந்தமாக நடத்துகை.

அஜ்ஞாகமாவது- இவற்றால் மேல்வருங்கெடுதியை நிரூபிக்கமாட்டாமை.

அஸூயையாவது- குணங்களிலே தோஷத்தை ஆவிஷ்கரிக்கை.

இவை யெட்டும் நீங்கினால் ஏதம் கழியுமாதலால் ஏதுமின்றி எனப்பட்டது.

ஞானமாகி ஞாயிறாகி = ஞானத்தையளித்து உள்ளிருளை நீக்குவானும் எம்பெருமானே;

ஸூர்யனை யுண்டாக்கி அவன் மூலமாக புறயிருளை யொழிப்பானும் எம்பெருமானே என்ற கருத்து உணரத்தக்கது.

ஆத்ம ஜ்ஞாநத்துக்கும் இந்த்ரிய ஜ்ஞாநத்துக்கும் நிர்வாஹகனென்றவாறு

ஸ்ரீ வாரஹமூர்த்திக்கு ஞானப்பிரான் என்ற திருநாமம் ப்ரஸித்தமாதலால்

அதனைத் திருவுள்ளம் பற்றியே ஞானமாகி ஞாயிறாகி என்கிறார்போலும்.

பிரளயக் கடலில் அழுந்திக் கிடந்த பூமிப்பிராட்டியை உத்தரித்தருளினதுபோலவே

ஸம்ஸாரக் கடலில் அழுந்திக்கிடக்கிற நம்மையும் உத்தரித்தள்வான் என்று அநுஸந்திக்க வேணுமென்பது தோன்ற “ஞாலமுற்றோமோரெயிற்றேனமாயிடந்தமூர்த்தி என்கிறார்.

———————

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

பதவுரை

முத்தனார்

ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்
முகுந்தனார்

மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்;
ஒத்து ஒவ்வாத  பல் பிறப்பு ஒழித்து

ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி
நம்மை ஆட்கொள்வாள்

நம்மை அடிமை கொள்வதற்காக
அத்தன் ஆகி

பிதாவாயும்
அன்னை ஆகி

மாதாவயும்
ஆளும் எம்பிரானும் ஆய்

அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும்
நம்முன்

நம்மிடத்திலே
புகுந்து மேவினார்

புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு)
ஏழை நெஞ்சமே

மதிகெட்ட மனமே
எத்தினால்

எதுக்காக
இடர் கடல்

துக்கஸாகரத்திலே
கிடத்தி

அழுந்திக் கிடக்கிறாய்.

ஸ்ரீ சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்-

அகில ஹேய ப்ரத்யநீகராகையாலே சம்சார நாற்றமே கண்டு அறியாதவராய் மோக்ஷ பூமியைத் தந்து அருளுமவன்
நமது பலவகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய சம்சாரிகளான நம்மை நித்ய ஸூரிகளைப் போலவே
அடிமை கொண்டு அருள திரு உள்ளம் பற்றி
பிதாவையும் மாதாவாயும் கைங்களர்யம் கொண்டு அருள பிரதி சம்பந்தியான ஸ்வாமியாயும்
இப்படி சர்வ வித பந்துவாயும் -நம்முடைய சிறுமையையும் அவனுடைய பெருமையையும் பாராதே
நம்முடைய சகலவிதமான பாரங்களையும் தம் மேல் ஏறிட்டுக் கொண்டு செய்து முடிப்பதாக
நம்முள்ளே ஒள்று நீராகப் பொருந்தின பின்பு
அறிவு கெட்ட நெஞ்சே -சர்வஞ்ஞனாயும் சர்வசக்தனாயும் ப்ராப்தனாயும் இருந்து தன் மேன்மை பாராதே
தாழ நின்று உபகரிக்குமவனாயும் இருந்த பின்பு எத்தாலே துக்கக் கடலில் கிடக்கிறது -துக்கப் படாதே கொள்

முத்தனார் -சம்சார பந்தம் இருந்து கழிந்தவர்-என்று கொள்ளாமல் ஹேய ப்ரத்யநீகர்-என்றே கொள்ள வேண்டும்

முகுந்தன்–மு-முக்தியாகிய கு பூமியைக் கொடுப்பவர் என்றபடி-

அன்று திருத்தேர்த்தட்டிலே நின்று கண்ணபிரான் அர்ஜுனனை னோக்கி ‘மாசுச:- துக்கப்படாதே” என்று

சரமச்லோக மருளிச் செய்தாப்போல,

இவ்வாழ்வார் தமது திருவுள்ளத்தைநோக்கி “மாசுச.” என்கிறார். இப்பாட்டில்.

முமுக்ஷுப்படியின் முடிவிலே “வார்த்தையறிபவர் என்கிற பாட்டும்!

* அத்தனாகி என்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.” என்று

பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்தமை நோக்கத்தக்கது.

“முத்தனார் முகுந்தனார் – ஒத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை யாட்கொள்வான்.

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்ப் புகுந்து நம்முன் மேவினார்.

ஏழை நெஞ்சமே! எத்தினால் இடர்க் கடல் கிடத்தி?” என்று அந்வயிப்பது,

அகிலஹேய ப்ரத்யநீகராகையாலே ஸம்ஸார நாற்றமே கண்டறியாதவராய் மோக்ஷபூமியைத் தந்தருள்பவரான பெருமான்

பல வகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய ஸம்ஸாரிகளான நம்மை நித்யஸூரிகளைப்போல

அடிமைக்கொள்ளத் திருவுள்ளம்பற்றி, பிதாவாயும் மாதாவயும் நம்முடைய கைங்கர்ய ப்ரதிஸம் பக்தியான ஸ்வாமியாயும்

இப்படி ஸர்வவித பந்துவாயும் நம்முடைய சிறுமையையும் தம்முடைய பெருமையையும் பாராதே

நம்முடைய ஸகலமான பாரங்களையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்து முடிப்பதாக நம்முன்னே புகுந்து ஒருநீராகப் பொருந்தினார்.

அறிவுகெட்ட நெஞ்சே! ஸ்வஜ்ஞனாயும் ஸ்ர்வசந்தநனாயும் ப்ராப்தனாயும்

தன் மேன்மை பாராதே தாழநின்று உபகரிக்குமவனாயும் அவன் நமக்கு வாய்திருக்க,

எத்தாலே  நீ துக்கக்கடலில் கிடக்கிறது? இனி துக்கப்படாதே கொள் என்கிறார்.

“ஒத்தொவ்வாத பல்பிறப்பு” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்;

எல்லாப் பிறவிகளும் ஹேயமாயிருக்கச் செய்தேயும் ஒருவனுக்கு ப்ரியமானது ஜன்மம் மற்றொருவனுக்கு அப்ரியமாகிறது;

ஒருவனுக்கு அப்ரியமான ஜன்மம் வேறொருவனுக்கு ப்ரியமாகிறது.

ஓராத்மாவுக்கு மநுஷ்யஜ்ம்மன் ப்ரியமாயிருந்தால், இன்னுமோராத்மாவுக்கு வராஹஜன்மம் ப்ரியமாகிறது.

இப்படி ஆத்மபேதேந மனஸ்ஸுக்கு ஒத்தும் ஓவ்வாமலுமிருக்கிற பல்வகைப் பிறப்புக்களென்றவாரும்.

முத்தனார் = முக்த.” என்ற வடசொல்லுக்கு “விடுபட்டவன்” என்று பொருள்; அதாவது ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவன் என்கை;

ஸம்ஸாரியாயிருந்த ஜீவாத்மா ஒரு காலத்தில் வீடுபெற்றால் அவன் முத்தனெனப்படுவான்;

அதுபோல எம் பெருமானை முத்தனார் என்னலாமோ எனின்;

ஸம்ஸார ஸம்பந்தம் இருந்து கழிந்தவர் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளாது

ஸம்ஸாரப்ரதியார் என்று மாத்திரமே பொருள்கொள்ள வேணும்.

வேத புருஷன் எம்பெருமானை “*** என்று சொன்னவிடத்திற்குச் சொல்லிக் கொள்ள வேண்டிய  உபபத்திகள் இங்கே அநுஸந்தேயம்;

விரிப்பிற்பெருகும்

முகுந்தனார் = மு. முக்தியாகிய கு.- பூமியை உ- கொடுப்பவர்.

——————

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

பதவுரை

மாறு செய்த

எதிரிட்ட
வாள் அரசர்கள்

ஆயுதபாணியான இராவணனுடைய
நாள் உவப்ப

வாழ்நாள் முடியும்படியாக
அன்று

முற்காலத்து
இலங்கை

லங்காபுரியை
சென்று

அடைந்து
நீறு செய்து

நீறாக்கி
கொன்று

அவனைக் கொன்று
வெற்றி கெணண்ட

ஜயம்பெற்ற
வீரனார்

மஹாவீரரான பெருமாள்
என்னை

அடியேனை
தம்முள் வேறு  செய்து வைத்திடாமையால்

தம்மில் வேறுபடுத்தி வைக்காமையினால் (என்னை அந்தரங்க பூதனாகக் கொண்டருளினபடியால் ) (இனி)
நமன்

யமனானவன்
கூறுசெய்து கொண்டு

(என்னை அம்பெருமானிடத்தினின்றும்) பிரித்து
இறந்த குற்றம்

நான் செய்து கழித்த பாவங்களை
என்ன வல்லனே

நெஞ்சாலும் நினைக்கக் கடவனோ.

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப
எதிரிட்ட ஆயுத பாணியான ராவணின் வாழ் நாள் முடியும் படி

அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால்
என்னை அந்தரங்க பூதனாய்-வேறு படுத்தி வைக்காமல் -கைக் கொண்டு அருளினதனால்

நமன் கூறு செய்து கொண்டு
யமனானவன் அவனிடம் இருந்து பிரித்து

இறந்த குற்றம் எண்ண வல்லனே
நான் செய்து கழித்த பாபங்கள் -நெஞ்சாலும் -தனது இடத்தில் இருந்தே நினைக்க சக்தி அற்றவன் என்கிறார்-

மேல்வரும் பிறவிகட்கு அடியான கருமங்களைக் கழித்துத் தம்மை அடிமைகொள்ள

எம்பெருமான் முற்பட்டமையைக் கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்;

“நாம் நரகவேதனைகளை அநுபவிப்பதற்கு ஹேவாதன பாவங்களைப் பண்ணி கிடக்கிறோமாகையாலே

யமனுக்கு வசப்பட்டுத் துன்பப்படாதொழிய முடியுமோ” என்று கவலையற்ற திருவுள்ளத்தைக் குறித்து

நமக்கு தஞ்சமான சக்ரவர்த்தி திருமகனார் தம்மோடே நம்மைக் கூட்டிக்கொண்ட பின்பு

நாம் செய்த குற்றம் யமனால் ஆராய முடியுமோ என்கிறார்.

“எண்ணவல்லனே என்றது- பாபம் பண்ணிணானென்று தன் க்ருஹத்திலே யிருந்து நினைக்கவும் சக்தனல்லனென்றபடி” என்று

வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

——————

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -117-

பதவுரை

அச்சம்

பயமென்ன
நோயோடு அல்லலி

வியாதியோடு கூடின மகோ வியாதியென்ன
அவாயம் மூப்பு

அபாயங்களுக்கு இடமான கிழத்தனமென்ன
பல் பிறப்பு

பலவகைப் பிறப்புகளென்ன
இவை

ஆகிய இவற்றையும்
வைத்த சிந்தை

இவற்றை யனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும்
வைத்த ஆக்கை

கீழ்சொன்னவற்றுக்கு ஆச்ரமாகக் கண்ட சரீரத்தையும்
மாற்றி

போக்கடித்து
வானில்

(நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்ப்பவன் (ஆரென்னில்)
அச்சுதன்

அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும்
அனந்த கீர்த்தி

எல்லையில்லா கீர்த்திகளையுடையவனும்
ஆதி அந்தம் இல்லவன்

முதலும் முடிவும் மில்லாதவனும்
நஞ்சு நாக அணை கிடந்த நாதனை

(விரோதிகள்மீது) விஷத்தை உமிழ்கின்ற ஆசிதேஷனாகிற சயனத்திலே கிடந்தருளும் ஸ்வாமியும்
வேத கீதம்

வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டதுமான பெருமானாம்

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை

அல்லல் -மநோ வ்யாப்தி

வைத்த சிந்தை வைத்த வாக்கை
இவற்றை அனுபவிக்க நெஞ்சையும் உடலையும்

மாற்றி வானில் ஏற்றுவான்
போக்கடித்து பரம பதம் சேர்ப்பவன்-

மேன்மேலும் தேஹ சம்பந்தத்தைக் கொடுக்கும் பிராரப்த கர்மங்களையும் அவற்றுக்கு ஆஸ்ரயமான தேகத்தையும்
போக்கி பரமபதத்தில் தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானாக இருக்க நமது பேற்றுக்கு என்ன குறை

யமனுக்கு வசப்பட்டு வருந்துகைக்கு ஹேதுவான பாபங்கள் போனாலும்

மேன்மேலும் தேஹஸம்பந்தத்தைக் கொடுக்கவல்ல ப்ராப்தகருமம் கிடக்கவில்லையோவென்ன;

அந்த ப்ராப்த கருமத்தையும் அதற்கு ஆச்ரயமான தேஹத்தையும் போக்கிப் பரமபதத்திலே

நம்மை எம்பெருமான் கொண்டு போவானான பின்பு நம் பேற்றுக்கு ஒரு குறையில்லை என்கிறார்.

——————

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-

பதவுரை

வல்லி நாள் மலர் கிழத்திநாத!

படர்ந்த செவ்வித் தாமரைப்பூவிலே பிறந்த பிராட்டிக்கு நாதனே!
உள்ளம்

எனது நெஞ்சானது
சொல்லினும்

வாக்கிலும்
தொழில் கணும்

காயிகவ்யபாரங்களிலும்
தொடக்கு அறாத அன்பினும்

பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)
அல்லினோடு ஆன மாலையும்

ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்
நல் பகவினோடு ஆன காலையும்

நல்ல அஹஸ்ஸோடு கூடிய ப்ராதஸ் ஸந்த்யையிலும் (ஆக ஸர்வகாலங்களிலும்)
பாதம் பொதினை

உன்னுடைய திருவடித் தாமரையை
புல்லி

அனைத்து
விளைவு இலாது

(ஒரு நொடிப்பொழுதும்) விச்சேதமில்லாமல்
பூண்டு

அத்திருவடிகளையே மேற்கொண்டு
மீண்டதில்லை

நிலைத்து நிற்கின்றது.

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
வாக்கிலும் -காயிக வியாபாரங்களிலும் விச்சேதம் அற்ற அன்பிலும்

அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
சர்வ காலங்களிலும்

அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
படர்ந்த செந்தாமரை பூவில் பிறந்த பிராட்டிக்கு நாதனாய்

புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே
அணைத்து நெஞ்சை ஒரு நொடி பொழுதும் விச்சேதம் இல்லாமல்

அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத–அல்லி மலருக்கும் -மலர்க்கிழத்திக்கும் விசேஷணம்
படர்ந்த செவ்வித் தாமரை என்றும்
கொடி போலே இரா நின்ற மலர்க்கிலத்தில் பெரிய பிராட்டியார் என்றும் –

பூண்டு –அந்த திருவடிகளையே மேல் கொண்டு நிலைத்து இருக்கும்

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ காலமும் அவனுடனே லயித்து இருக்க வேண்டும்

திருவுள்ளத்தை நோக்கி அருளிச்செய்து கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில்

எம்பெருமானையோ நோக்கித் தம் திருவுள்ளத்துக்குண்டான ப்ராப்யருசியை வெளியிடுகிறார்.

பூவார் திருமாமகள் புல்கிய மார்பனான பெருமானே!

என்னுடைய ஹ்ருதயமானது உன்னுடைய திருவடித்தாமரையை ஸர்வகாலங்களிலும் பரிபூர்ணமாக அணைந்து

மறுபடி போக்கும் பகவத் விஷயமொன்றே விஷயமாகப் பெற்றமையைக் கூறுவது முதலடி.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அலகாஹிக்கப் பெற்றமையைக் கூறியவாறு.

வல்லிநாண்மலர்கிழத்திநாத! – வல்லியென்பதை மவர்க்கு விசேஷண மாக்குதலும்

மலர்க்கிழத்திக்கு விசேஷண மாக்குதலும் ஓங்கும்.

முதற்பக்ஷத்தில், படர்ந்த செவ்வித்தாமரைப்பூ என்றாகிறது.

இரண்டாம்பக்ஷத்தில் வல்லிபோல- கொடிபோலே யிராநின்ற நாண்மலர்க்கிழத்தியுண்டு- பெரியபிராட்டியார்;

அவட்குநாதனே! என்றாகிறது

———————

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–

பதவுரை

அரங்கம்

திருவரங்கத்திலே
பொன்னிசூழ்

காவிரிசூழ்ந்த
மேய

நித்யவாஸம் செய்தருள்கிற
பூவை வண்ண

காயம்பூப்போன்ற திருமேனியையுடைய
மாய!

ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே!
கேள்

(இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்;
என்னது

என்னுடையது
ஆவி என்னும்

ஆத்மா என்கிற
வல்வினையினுள்

வலிய பாபராசியிலே
கொழுந்து எழுந்து உள்ள

(தேவரீர் விஷயமான அநுராகமாகிற) கொழுந்து கிளர்ந்து  உள்ள தேவரீருடைய
பாதழ் என்ன நின்று

திருவடியென்கிற
ஒண்சுடர் கொழுமலர்

அழகிய சுடர்மிக்க புஷ்பத்திலே
மன்னவந்து பூண்டு

ஸ்திரமாக வந்து படிந்து
எங்கும்

தேவரீருடைய விபூதிகள் எல்லாவற்றிலும்
வாட்டம் இன்றி நின்றது.

குறையாமல் வியாபியா நின்றது

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
இந்த விண்ணப்பத்தை கேட்டு அருள வேணும்

என்னதாவி என்னும் வல் வினையினுள்
என்னுடைய ஆத்மா என்னும் வலிய பாப ராசியிலே

கொழுந்து எழுந்து உன்ன பாதம் என்ன நின்ற -ஒண் சுடர்க் கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே
தேவரீர் விஷயமாக அனுராகம் அழகிய சுடர் மிக்க புஷ்பத்திலே ஸ்திரமாக வந்து படிந்து-குறையாமல் தேவரீரின் விபூதிகள்
எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தது

வடிவு அழகாலும் சீலத்தாலும் ருசி பிறந்து படர்ந்தது நெருப்பிலே தாமரை பூத்தாப் போலே-
என்னது வல் வினை என்னும் ஆவியில் கொழுந்து போலே பகவத் விஷயம் படர்ந்தது-

வடிவு அழகையும் சீல குணத்தையும் காட்டி அருளி செய்த கிருஷி பலித்தது

ஞானானந்த மையமாக ஆத்மாவை வேதம் சொல்லா நிற்க இவரோ பாபராசிக் கூட்டம் வல்வினை என்று
நைச்யம் பாவிக்கிறார் -நைச்ய அனுசந்தான பரம காஷ்டை

பகவத் விஷய அநுராகத்தை கொழுந்து என்கிறார்
வல்வினையிலே கொழுந்து -நெருப்பிலே தாமரை பூத்தது போலே அன்றோ இது-

‘ஆழ்வீர்! பரமவிவக்ஷணமான இப்படிப்பட்ட அபிநிவேசம் உமக்கு நம்பக்கலில் உண்டானமை

ஆச்சரியமாயிராநின்றதே! இதற்கு அடி என்?’ என்று எம்பெருமான் கேட்டருள;

வடிவழகையும் சீலத்தையும் காட்டி தேவரீர் பண்ணின க்ருஷபலித்த பலமன்றேவிது என்கிறார்போலும்.

காவிரிசூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலிலே நித்யவாஸம் செய்தருள்கிற விலக்ஷணமான திருமேனி படைத்த மாயோனே!

உன்னுடைய அழகாலும் சீலத்தாலும் எனக்குப் பிறந்த ருசிவிசேஷத்தைக் கேட்டருளவேணும்;

உபகாரம் செய்தவளின் தேவரீர் மறந்தொழிந்தாலும் நன்றியறிவுடைய நான் சொல்லக் கேட்க வேணும்;

சொல்லுகிறது தான் என்னன்னச் சொல்லுகிறார்- என்னதாவி யித்யாதியால்.

*** என்று ஜ்ஞாஸ்வரூபாகயும் ஆநநிதஸ்ரூபியாயும் சாஸ்த்ரங்களுள் சொல்லப்பட்டிராநின்ற ஆத்மா

என்னளவில் அப்படிப்பட்டதன்று; கொடிய பாபராசிகளின் பிண்டமே ஆத்ம வஸ்துவாக நிற்கிறதெனலாம்

அப்படிப்படட் என் ஆத்மவஸ்துவில் தேவரீரைப்பற்றிய அநுராகம் கிளர்ந்து

அவ்வஅநுராக மானது தேவரீருடைய பாதாரவிதத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்து

தேவரீருடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் கபளீகரித்து விளங்காநின்றது என்கிறார்

இவ்வாழ்வார்க்கு ஆவியென்றும் வல்லினையென்றும் பர்யாயம் போலும். நைச்யாநுஸக்காக பரமகாஷ்யை  யிருக்கிறபடி

“*** என்ற அநுஸந்தாகம் முதிர்ந்தபடி’

தம்முடைய ஆவிக்கு வல்வினை என்று பெயரிட்டாற்போல பகவத் விஷயாநுரகத்திற்குக் கொழுந்து என்று திருநாமம் சாற்றினர்

என்ன தாவியென்னும் வல்வினையிலே கொழுந்து எழுந்ததானது நெருப்பிலே தாமரை பூத்ததுபோலும் என்ற

திருவுள்ளந்தோற்ற அருளிச் சொல்கிறபடி பாரீர்.

——————

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

பதவுரை

உயக்கொள்

(நம்போல்வாரை) உஜ்ஜீவிக்கச் செய்பவனான
மேகவண்ணன்

காளமேக நிபச்யாமனான பெருமான்
இன்று

இன்றைக்கு (நிர்ஹேதகமாக)
இயக்கு அறாத பல் பிறப்பில்

தொடர்ச்சிமாறாமல் நெடுகச் செல்லும்படியான பலவகைப் பிறப்புகளினின்றும்
என்னை

அடியேனை
மாற்றி

மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி
வந்து நண்ணி

இங்கேயெழுந்தருளி நெருங்கி
தன்னில் ஆய என்னுள்

தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே
தன்

தன்னுடைய
மன்னுசோதி

நித்ய ஜ்யோதிர்மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை
மயக்கினான்

ஸம்ச்லேஷிப்பித்தான்!
ஆதலால்

இப்படி புரையாறக் கலந்தருளுகையாலே
என் ஆவி தான்

எனது ஆத்ம வஸ்துவானது
இயக்கு எல்லாம் அறுத்து

ஒன்றோடொன்று  இணைந்து கிடந்த அவித்யாதிகளை வேரறுத்து
அறாத இன்பம் வீடு:

ஒருநாளும் முடியாத இன்பமாகிய மோக்ஷஸுகத்தை
பெற்றது

பெற்றாதயிற்று

இயக்கறாத பல் பிறப்பில்
தொடர்ந்து வரும் பல பிறவிகளிலும்

என்னை மாற்றி இன்று வந்து
அடியேனை மாற்ற திரு உள்ளம் கொண்டு இங்கேயே எழுந்து அருளி

துயக் கொண் மேக வண்ணன் நண்ணி
உஜ்ஜீவித்து அருளிச் செய்வானாக காள மேக பெருமாள் நெருங்கி

என்னிலாய தன்னுளே
தன்னுள்ளே அவின்னாபூதமான என்னுள்ளே

மயக்கினான் தன் மன்னு சோதி
தனது நித்ய ஜோதிமயமான திவ்ய மங்கள விக்ரகத்தை சம்ஸ்லேஷிப்பித்தான்

யாதலால்-
இப்படி புரை யறக் கலந்தது அருளியதால்

என்னாவி தான் இயக்கொலா மறுத்த
எனது ஆத்ம வஸ்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து கிடைந்த அவித்யாதிகளை வேறு அறுத்து-

ஆராத வின்ப வீடு பெற்றதே
ஒரு நாளும் முடியாத இன்பமாகிய மோஷ சுகத்தை பெற்றது-

அந்தமில் பேரின்ப மான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றத்தை அருளிச் செய்கிறார் –
பரகத ஸ்வீகாரம் பரிமளிக்க அருளுகிறார்

கீழே ஸ்வ கத ஸ்வீ காரம் -இதில் பர கத ஸ்வீ காரம் –
நித்ய ஜ்யோதிர் மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை என்னுள்ளே வைத்து புரையறக் கலந்து
அவித்யாதிகளை வேர் அறுத்து-பிரதிபந்தகங்களை நிஸ் சேஷமாகப் போக்கி அருளி
அந்தமில் பேர் இன்பமான அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் கொண்டு அருளுகிறானே –
என்று உபகார ஸ்ம்ருதியுடன் தலைக் கட்டி அருளுகிறார்

ஸ்வகதஸ்வீகாரம்போல் தோற்றும்படியன்றோ கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்;

அங்ஙனன்றிக்கே, பரகதஸ்வீகாரம் பரிமளிக்கப்பேசுகிறார்.

இதில் நிர்ஹேதுகமாகப் பெரிய பெருமாள் தம்முடைய திவ்யமங்கள விக்ரஹத்தை

என்னுள்ளே பிரியாதபடி வைத்தருளினபடியாலே ப்ரதிபந்தக ஸமூஹங்களை யெல்லாம் நிச்சேஷமாகப் போக்கி

அந்தமில் பேரின்பமான ஸகங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்றோனென்று உபாகர ஸ்மருதியோடே தலைக்கட்டுகிறார்.

எனக்கு அந்தாதியாக நிகழ்ந்துவங்க பலவகைப் பிறவிகளைத் தவிர்த்தருள திருவுள்ளம்பற்றி

இன்று நிர்ஹேதுக க்ருபையினாலே நாளிருந்தவிடத்தே வந்து கிட்டித் தனக்கு ப்ரகாரபூசமான

என்னுடைய ஹ்ருதயத்திலே தனது ஐ“யோதிர்யமான திவ்யமங்கள விக்ரஹத்தைப் பிரிக்கவொண்ணாதபடி

எனக்கு ஒருக்ஷணகாலமும் செல்லாதபடி பண்ணியருளினபடியாலே

இவ்வாத்ம வஸ்துவானது ஒன்றோடொன்று பிணைந்துகிடந்த அவித்யாகர்மவாஸாநாருகி ப்ரக்ருதி

ஸ்ர்பந்தங்களையெல்லாம் முக்தியைப் பெற்றொழிந்ததென்றாயிற்று.

(மயக்கினான்) மயக்குத்ல் – அறிவுகெடுத்தலும் கலத்தலும்,

இங்கே, கலத்தல்

தன்மன்னுசோதி – “***“ (ஸுந்தரபாஹுதவம்) என்னும்படி விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தை

ஜோதி என்றும் சோதி என்றும் சொல்லக்கடவது

“ஆதியஞ்சோதியுரு“ என்றாரே நம்மாழ்வாரும்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-81-100- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-

பதவுரை

கடைந்த

(கூர்மாவதாரத்திலே) கடையப்பட்ட
பால் கடல்

திருப்பாற்கடலிலே
கிடந்து

கண்வளர்ந்தருளியும்
காலநேமியை

காலநேமியென்னுமசுரனை
கடிந்து

ஒழித்தருளியும்
உடைந்த

நடுங்கிக் கிடந்த

வாலி தந்தனுக்கு வாலியின் தம்பியான சுக்ரீவனுக்கு

உதவ

உபகாரம் செய்ய
இராமன் ஆய் வந்து

இராமபிரானாய் வந்து தோன்றி
மிடத்தை

ஒன்றொடொன்றாகப் பிணைந்து கிடந்த
ஏழ் மரங்களும்

ஸப்தஸால வ்ருக்ஷங்களையும்
அடங்க

ஏழேழாகவுள்ள ஸப்தகுலபாவதாதிகளான மற்றவற்றையும்
எய்து

பாணத்தாலே துளைபடுத்தி
வேங்கடம் அடைந்த

திருவேற்கடமலையிலே எழுந்தருளியிருப்பவான
மால

எம்பெருமானுடைய
பாதமே

திருவடிகளையே
நாளும்

நாள்தோறும்
அடைந்து

ஆச்ரயித்து
உய்ம்மின்

உஜ்ஜிவியுங்கள்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து–கூர்ம அவதாரத்தில் கடையப் பெற்ற

உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்–நடுங்கிக் கிடந்த சுக்ரீவனுக்கு

உடைந்த -தளர்ந்த -வாலிக்கும் சுக்ரீவனுக்கும் விசேஷணம் –

(உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம்.

உடைதல்- தளர்வு.

வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்;

எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன்.

ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பினுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.

—————————————————————–

எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82-

பதவுரை

எத்திறத்தும் ஒத்து நின்று

எந்த ஜாதியில் அவதரித்தாலும் ஸஜாதீயன் என்ற காரணத்தால் சேதநா சேதநங்களோடு ஒத்திருக்கச் செய்தேயும்
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்

(குணவிசேஷத்தால்) மேன்மேலுமுயர்ந்த ப்ரபாவத்தையுடையோனே!
மூத்திறத்து மூரி நீர்

திருப்பாற்கடலிலே
அரா அணை துயின்ற

சேஷசயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற
நின்

தேவரீர் விஷயத்திலே
பத்து உறுத்த சிந்தையோடு நின்று

பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம்

விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும்
இங்கும்

இவ்வுலகத்திலும்
அங்கம்

அவ்வுலகத்திலும்

எங்கும் மற்றெவ்வுலகத்திலும்

ஆகும்

எளிதாம்.
பாட்டு

பின்பிறக்கவைத்தனன் கொல்.

எத்திறத்தும் ஒத்து நின்று
எந்த ஜாதியில் பிறந்து இருந்தாலும் -சேதன அசேதனர்களுடன் ஒத்து இருந்து

பத்து உறுத்த சிந்தையோடு நின்று
பக்தி அழுந்தின நெஞ்சத்தோடு கூடி இருந்து

பாசம் விட்டவர்க்கு
விஷயாந்தர பற்றுக்களை விட்டவர்களுக்கு

எத்திறத்தும் -சர்வ பிரகாரங்களிலும்
இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –
இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் எவ்வுலகத்திலும் இன்பம் கிட்டும்

தேவ மனுஷ்ய ஜந்து ஸ்தாவர ஜாதியிலும் அவதார ஜாதியில் ஒத்து இருந்தாலும் குண பெருமையால் உணர்ந்தவன்

மூரிநீர் கடல் ஆற்று ஊற்று– மழை நீர் என்னவுமாம்

மூரி –பழையதாக என்றும் பெருமையாக என்றும் –

தேவஜாதியிலும் மநுஷ்யனாதியிலும் திர்யக்ஜாதியிலும் ஸ்தாவரஜாதியிலும் ஸஜாதீயனாய் அவதரித்து

தஜ்ஜாதியர்களை அந்தந்த ஜாதியாலே ஒருபுடையொத்திருந்தாலும் குணப்பெருமயாலுண்டான மேன்மையையுடையவனே!

திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற உன்பக்கல் பக்திமிகுந்த மநோரதத்தோடே நின்று

விஷயாந்தரங்களில் பற்றை அறுத்துக்கொள்பவர்கட்கு

இம்மண்ணுலகத்திலும் வானுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலும் ஸர்வப்காரங்களாலும் ஆநந்தம்- நிரம்புமென்கிறார்.

முந்நிறத்து மூரிநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மூன்றுவகைப்பட்ட நீரையுடையது கடல்.

“முந்நீர்’ என்னக்கடவதிறே.

மூரி- பழையதான; பெரிதான என்றுமாம்.

——————————————————

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-

பதவுரை

மட்டு உணவு

தேன் நித்யாயிருக்கபெற்ற
தண்

குளிர்ந்த
துழாய்

திருத்துழாயினால் தொடுக்கப்பட்ட
அலங்கலாய்

திருமாலையை அணிந்துள்ளவனே!
புலன் கழல் விட்டு

(உன்னுடைய) விலக்ஷணமான திருவடிகளை (இந்நிலத்திலேயே அநுபவிப்பதை) விட்டு
விண்ணில் ஏறி

பரமபதத்திற் சென்று
வீழ்வு இலாத போகம் கண்ணிலும்

அழிவில்லாதொரு போகத்தை அடையப்பெற்றாலும். (அது கிடக்கட்டும்)

(இந்நிலத்தில் இருந்துகொண்டே)

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால்

பத்து என்கிற பக்தியாகிற பாசத்தினாலே
மனம் தனை

மநஸ்ஸை
கட்டி

கட்டுப்படுத்தி
வீடு இலாது

விச்சேதமில்லாபடி
வைத்த

அமைக்கப்பட்ட
காதல்

ப்ரேமத்தினாலுண்டாகக் கூடிய
இன்பம் ஆகுமே

ஆநந்தத்தை ஒக்குமோ அப்பரமபதாநுபவம்!

மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்

தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு-
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு

வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்-அழிவில்லாத கைங்கர்யம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி

வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை

பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்
வைத்த காதலே இன்பமாகும் -ப்ரேமம் ஒரு ஸூகத்துக்கு சாதனமாக இல்லாமல் ஸ்வதஸ் ஸூகமாகவே இருக்கும்

எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால் – எட்டோடு இரண்டு சேர்ந்தால் பத்து;

இவ்விடத்தில் பத்து என்கிற எண் விலக்ஷிதமல்ல. ‘பத்துடைபடியவர்க்கெளியலன்” என்றபடி

பக்திக்கும் பத்து என்று பேருண்டாதலால் அப்பொருளே இங்கு விவக்ஷிதம்.

வைத்தகாதலின்பமாகுமே- வைத்தகாதலே இன்பமாகும் என்று அந்வயித்து,

உன் திருவடிகளில் வைக்கும் ப்ரேமமானது ஒரு ஸுகத்துக்கு ஸாதகனமாகையன்றிக்கே ஸ்வதன்ஸுகமாயிருக்கமென்றுமாம்.

அநுபவரசிகர்களான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகவே பல இடங்களில் பேசுவார்கள்.
யானைக்கும் எம்பெருமானுக்கும் பல விதங்களில் ஒத்த கருத்து நிலவும்

1.யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரமாநந்தம் பயக்கும்.
எம்பெருமானும் எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு ஊழி யூழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது
என்னாராவமுதம் என்னும்படி யிருப்பான்.
2.யானையின் மீது ஏற வேண்டியவன் யானையின் காலைப் பற்றியே ஏறவேண்டும்.
எம்பெருமானிடம் சென்று சேர வேண்டியவுர்களும் அவனது திருவடியைப் பற்றியே சேர வேண்டும்.
3.யானை தன்னை கட்ட தானே கயிற்றை எடுத்துக் கொடுக்கும். எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் (திருச்சந்த விருத்தம்) என்கிறபடியே,
எம்பெருமானை கட்டுப் படுத்தும் பக்தியாகிற கயிற்றை அவன் தந்தருள்வான்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த ஷணத்திலேயே அழுக்கோடு சேரும் எம்பெருமான் சுத்த ஸத்வ மயனாய் பரம பவித்ரனாய்
இருக்கச் செய்வதாயும் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குமுடைய நம் போல்வாரோடு
சேர திருவுள்ள மாயிருப்பான் வாத்ஸல்யத்தாலே.
5.யானையைப் பிடிக்க வேண்டில் பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும்
அதன் போன்றே பிராட்டியின் புருஷாகாரமின்றி எம்பிரான் வசப்படான் .
6.யானை பாகனுடைய அனுமதியின்றி தன்னிடம் வருபவர்களை தள்ளி விடும்.
எம்பெருமானும் “வேதம் வல்லார் துணைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து” என்கிறபடியே
பாகவதர்களை முன்னிட்டு புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் மொழி யானைப் பாகனுக்குத் தெரியும், எம்பெருமானின் மொழி திருக்கச்சி நம்பிகள் போல்வார்க்கே தெரியும்
(பேரருளானப் பெருமானோடே பேசுபவர் நம்பிகள்).
8. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும்
எம்பெருமான் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தாலே பல கோடி பக்த வர்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம்.
9.யானைக்கு கை நீளம் எம்பெருமானும் அலம் புரிந்த நெடுந்தடக்கையன் இறே
“நீண்ட அந்தக் கருமுகிலை யெம்மான் தன்னை.”(பெரிய திருமொழி 205-2)
10.யானை இறந்த பின்பும் உதவும் எம்பெருமானும் தீர்த்தம் பிரசாதித்துத் தன்னுடைய சோதிக்கு எழுந்தருளின பின்பும்
இதிகாச புராணங்கள் உணர்த்தி உதவுகின்றன.
11. யானை ஒரு கையே உள்ளது எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழிய கொள்ளும் கையில்லை
12. யானை பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும். எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகம் பிரக்குருதிகளுக்கு சம்பாத்யத்திற்கு வழி செய்கிறார்.
13. யானை மெல்ல அசைந்து அசைந்து செல்லும். எம்பெருமானும் உலா வரும் பொழுது அசைந்து அசைந்து வருவார்.
14. யானை சாதுவானது எம்பெருமானும் சாதுவானவரே

————————

பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-

பதவுரை

ஆழியான்

சக்ரஹஸ்தனான எம்பெருமான்
பின் பிறந்த வைத்தனன் கொல்

நான் இன்னும் சில பிறவிகள் பிறக்கும்படியாகத் திருவுளம் பற்றி யிருக்கிறானோ!
அன்றி

அல்லது
தன் கழற்கு

தன் திருவடிகளிலே
நின்று

நிலைத்துநின்று
அன்பு உறைக்க வைத்து

(எனக்கு) அன்பு ஊர்ஜிதமாம்படியாக ஸங்கல்பித்து
அந்நாள் அறிந்தனன் சொல்

பரமபதத்திலே சென்று அநுபவிக்குமொரு நாளைத்திருவுள்ளம் பற்றியிருக்கிறானோ!
தன் திறந்து

தன் விஷயத்திலே
ஓர் அன்பு இலா

சிறிதும் அன்பு இல்லாதவனும்
அறிவு இலாத

விவேகமில்லாதவனும்
நாயினேன்

நீசனுமாகிய
என் திறத்தில்

என் விஷயத்திலே
எம்பிரான்

எம்பெருமான்
குறிப்பில் வைத்தது

திருவுள்ளம்பற்றி விருப்பதானது
என் சொல்

எதுவோ (அறியேன்)

பின் பிறக்க வைத்தனன் கொல்
நான் இன்னும் பல பிறவிகள் எடுவிக்க திரு உள்ளமா

பின்பு இறக்க வைத்தனன் கொல்-இறப்பு -மறப்பு-அவனை மறந்து இருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு
தன் பக்கல் ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும் படி வைக்கிறானோ என்றுமாம்

அன்றி நின்று தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள்-நிலைத்து நின்று-அறிந்தனன் கொல் யாழியான்
பரம பதத்தில் சென்று அனுபவிக்கும் நல்ல திரு உள்ளமா

தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
தன் விஷயத்தில்

என் திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே
அவன் திரு உள்ளம் உகப்பு தான் பரம பதம் அடைய உபாயம்

கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்தாவித்த பக்தியானது தம்மிடத்தில் இல்லாமையாலும்

தாம் ப்ரக்ருதி பரவசராயிருக்கக் காண்கையாலும்,

எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்தரனாகையாலும்-,

அவன் திருவுள்ளமுகந்தாலல்லது பேறு பெற முடியாதாகையாலும்

இக்காரணங்களையெல்லாம் கருதி

‘எம்பெருமான் என்னைத் தன் திருவடிகளிலே பரமபக்தனாம்படி பண்ணியருள நினைத்திருக்கிறானோ!

அன்றி நித்ய ஸம்ஸாரியாக்க நினைத்திருக்கிறானோ?

என் திறத்தில் என் நாதன் திருவுள்ளப்பற்றியிருப்பது என்னோ! என்கிறார்.

இந்த சரீரம் முடிந்தபின்பும் கூட இன்னும் சில சரீரங்களையும் நான்  கொள்ளும்படியாக நினைத்திருக்கிறானோ?

அன்றியே, தனது திருவடிகளில் இடையறாத அன்பை எனக்கு உறைக்க வைத்து

அத்திருவடிகளை  யநுபவிப்பேனாம்படி ஒரு நல்ல காலமுண்டாக நினைத்திருக்கிறானோ?

அவன் விஷயத்திலே அணுமாதரமும் அன்பில்லாத அஜ்ஞனும் நீசனுமாகிய என் விஷயத்திலே

எது செய்வதாகத் திருவுள்ளமோ தெரியவில்லையே! என்று அலமருகின்றார்.

“பின் பிறக்கவைத்தனன் கொல்” என்றவிடத்து, ‘பின்பு இறக்கவைத்தணன்’ கொல் என்றும் பிரிக்கலாம்;

இறப்பானது மறுப்பு; (எம்பெருமானை மறந்திருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு.)

தன் பக்கலிலே எனக்கு ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும்படியாக்கி வைக்கிறானோ? என்றவாறு.

————————————

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-

பதவுரை

நஞ்சு அரா அணை

(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத

ஸ்வேச்வரனே!
பாத போதினில்

(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த

(இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை

மகஸ்ஸை
வாங்குவித்து

அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க

வேறு விஷயங்களில் போக்க
நீ

ஸ்வதந்த்ரனான நீ
இனம்

இன்னமும்
மெய்த்தன்

மெய்யாகவே
வல்லை ஆதல்

ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன்

அறிந்திருக்கிறேன்
மாயனே!

ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை

அடியேனை
நின் மாயமே உய்ந்து

உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில்

ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல்

மயக்கவேண்டா

நச்சராவணைக் கிடந்த நாத
ஆஸ்ரித விரோதிகளின் மேலே விஷத்தை உமிழும் திரு வநந்த வாழ்வான் என்னும் சயனத்தில்
திருக் கண் வளரும் சர்வேஸ்வரனே

பாத போதினில் வைத்த சிந்தை
திருவடி தாமரைகளில் எப்போதும் வைத்து இருக்கும் மனசை
வாங்குவித்து-அதில் நின்றும் திருப்பி

நீங்குவிக்க நீயினம்-வேறு விஷயத்தில் போக்க -ஸ்வ தந்த்ரனான நீ இன்னம்

மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
மெய்யாகவே சமர்த்தன் என்பதை அறிந்தனன்

உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
அடியேனை ப்ராக்ருத பாசங்களில் மாய்க்க வேண்டாம் என்கிறார்

உனது ஸ்வா தந்த்ர்யத்தால் என்னை சம்சார படு குழியில் தள்ளாமல் கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்;

என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல்

கிருபைபண்ணி யருளவேணுமென்று இரக்கிறார். இப்பாட்டில்

——————————

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கை வாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-

பதவுரை

சாடு நாடு பாதனே

சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே!
சலம் கலந்த பொய்கை வாய்

(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே
ஆடு அரவின்

(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய
வன்பிடர்

வலியதான பிடரியிலே
நடம் பயின்ற

நர்த்தனம் செய்த
நாதனே!

ஸ்வாமியே
கோடு நீடு கைய

ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால்  நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே!
கண்ணனே

கண்ணபிரானே!
செய்ய பாதம்

(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும்

நாள்தோறும்
உன்னினால்

அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய்

மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல்

(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!

சாடு சாடு பாதனே
சகடாசுரனை உதைத்து ஒழித்த திருவடிகளை உடையவனே

சலங்கலந்த பொய்கை வாய்
விஷமமாகவே இருந்த அத்துடன் சிறிது தண்ணீரும் கலந்த மடுவில்

ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
செருக்கினால் படம் எடுத்து ஆடும் காளிங்கனின் வலிய பிடரியில் நர்த்தனம் செய்த ஸ்வாமியே

கோடு நீடு கைய
பாஞ்ச ஜன்யம் நீங்காது வைத்து இருக்கும் திருக் கையின் கண்ணபிரான்

செய்ய பாத நாளும் உள்ளினால்
த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தால்

வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே
மெய்யாகவே அடியேனை முக்தன் ஆக்காதது ஏனோ-

விரோதி போக்கி அருளும் சமர்த்தன் நீ எனது விரோதிகளை நிவர்த்தித்து அருள வேண்டாவோ என்கிறார்-

எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு

இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார்.

சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க.

வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.

—————————

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-

பதவுரை

நெற்றிபெற்ற கண்ணன்

நெற்றியிலே கண்ணைப் பெற்றவனான சிவனும்:
விண்ணின் நாதன்

தேவேந்திரனும்
போதின் மேல் நல் தவத்து நாதன்

தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும்
மற்றும் உள்ள வானவர்

மற்றுமுண்டான பல தேவதைகளும்
கற்ற வெற்றியால்

தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க
வணங்குபாத!

வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே!
நாத!

நாயகனே!
வேத!

வேதப்ரதிபாத்யனே!
உரைக்கில்

(என் அத்யவஸாயத்தைச்) சொல்லப்புக்கால் (சொல்லுகிறேன் கேளாய்.)
நின் பற்று அலால்

உன்னையே ஆச்ரயமாகக் கொண்டிருப்பது தவிர
மற்றது ஓர் பற்று

வேறொர் ஆச்ரயத்தை
உற்றிலேன்

நான் நெஞ்சாலும் ஸ்பர்சிக்கவில்லை.

நெற்றி பெற்ற கண்ணன்
நெற்றிக் கண் உள்ள சிவன்

விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு
இந்த்ரன் பிரமன்

மற்றும் உள்ள வானவர் கற்ற பெற்றியால் –
தங்கள் தாங்கள் அப்யசித்த முறைப்படி

வணங்கு பாத நாத-

வேத-வேதத்தில் சொல்லப் பட்டவனே

நின் பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –
எனது அத்யவசாயத்தைச் சொல்லப் புகுந்தால் -உன்னையே பற்றி இருப்பேன் –
வேறு புகலிடம் நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்

களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -போல
தங்களன்பார தமது சொல் வலத்தால் தலைத் தலை சிறந்து பூசிப்ப -திருவாய்-போலே
தேவர்கள் எல்லோரும் இவன் திருக்கை எதிர் பார்த்து இருக்கிறார்கள்-

முக்கண்ணன் முதலிய தேவதைகளுங்கூடத் தங்களுடைய அபீஷ்ட ஸித்திக்கு

தேவரீருடைய கையையே எதிர்பார்த்திருக்கறார்களாகையாலே

அடியேனுக்கும் தேவரீரொழிய வேறு புகலில்லையனென்று தம்முடைய அநந்யயதித்வத்தை விளம்புகிறார்.

நெற்றிக்கண்ணனான சிவனென்ன, ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனான இந்திரனென்ன,

திருநாபிக்கமலத்திலே பிறந்து மஹாபஸ்வியான பிரமனென்ன இவர்களும்

மற்றுமுள்ள பற்பல தேவதைகளும் தங்கள் தங்களறிவுக்குத் தகுதியானத் திருவடி பணியப்பெற்றவனே!

உலகங்கட்கெல்லாம் தனி நாயகனான வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டுள்ளவனே!

“களைவாய் துன்பங் களையாதெழிவாய் களை கண்மற்றிலேன்” என்றாற்போல

உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிவாய்

களை கண் மற்றிலேன்” என்றாற்போல உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிய

வேறொரு சரணமும் அடியேனுடைய நெஞ்சினால் கொள்ளப்படவில்லை யென்கிறார்.

இரண்டாமடியில் ‘நற்றவத்து” என்றும் “நற்றவத்த” என்றும் பாடபேதங்களுண்டு.

“கற்ற பெற்றியால்” என்றவிடத்து

“தங்களன்பாரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்று திருவாய்மொழி நினைக்கத்தக்கது.

—————————

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே –88-

பதவுரை

வெள்ளை வேலை

வெண்கடலாகிய திருப்பாற்கடலிலே
வெற்பு

மந்தரமலையை
நாட்டி

நட்டு
வேள் எயிறு அரர்

வெளுத்த பற்களையுடைய வாஸுகி நாகத்தை
அளாய்

(கடைகயிறாகச்) சுற்றி
அள்ளல் ஆ

அலைகள் செறியும்படி
கடைந்தஅன்று

(கடலைக்) கடைந்தருளின காலத்தில்
அருவரைக்கு

தாங்க முடியாததான அம்மலைக்கு
ஓர் ஆமை நெய்

(தாரகமான) ஒரு ஆமையாகி
வானவர்களுக்கு

தேவதைகளுக்கு
உள்ள நோய்கள் தீர் மருந்து

ஏற்பட்டிருந்த நோய்களைத் தீர்க்கவல்ல மருந்தாகிய அம்ருதத்தை
அளித்த

(கடலிற் கடைந்தெடுத்து) அருளின
எம் வள்ளலாரை

உதாரனான எம்பெருமானை
அன்றி

யன்றி
மற்று ஓர் தெய்வம்

வேறொரு தேவதையை
நான் மதிப்பவனே

நான் (ஒருபொருளாக) மதிப்பனோ!

வெள்ளை வேலை
வெண்மையான கடலான திருப் பாற் கடலில்

வெற்பு நாட்டி
மந்தர மலையை நாட்டி

வெள் எயிற்று அரவு அளாய்
வெளுத்த பற்களை உடைய வாசுகி நாகத்தை கயிறாக சுற்றி

அள்ளலாய்
அலைகள் செறியும்படி

கடைந்த வன்று அருவரைக்கு
தாங்க முடியாத அந்த மலைக்கு–ஓர் ஆமையாய்

உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை யன்றி
மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே-

வெளுத்தகடலிலே மந்தரமலையை மத்தாகநாட்டி வெளுத்த பற்களையுடைய

வாஸுகியென்னும் நாகத்தைக் கடை கயிறாக அதிலேற்றி

அந்த மாகடலை “கடல்மாறு சுழன்றழைக்கின்ற வொலி” என்னும்படியே

திசைகள் எதிரேவந்து செறியும்படியாகக் கடைந்தருளின காலத்து

அம்மலை ஆழந்துபோகாமல் தன் முதுகிலே நின்று சுழலும்படி கூர்மரூபியாய்த் தாங்கிக் கிடந்து,

தேவதைகட்கு ஏற்பட்டிருந்த துன்பங்களெல்லாம் தீரும்படியான மருந்தாகிய அம்ருதத்தை அவர்கட்கு எடுத்தருளி

பரமோதானான பரமபுருஷனையன்றி வேறொரு தெய்வத்தை ஆச்ரயபணீயமாக நினைப்பனோ நான் என்கிறார்.

——————————————

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

பதவுரை

முன்

முற்காலத்தில்
பார் மிகுந்த பரம்

பூமியிலே அதிமாகவுண்டான சுமையாகிய துஷ்டவர்க்கத்தை
ஒழிச்சுவான்

ஒழிப்பதற்காக
அருச்சுனன்  தேர் மிகுத்து

அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி
மாயம்

(பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை
ஆக்கி நின்று

உண்டாக்கி
கொன்று

(எதிரிகளைக்) கொன்று
வெள்ளிசேர் மாரதர்க்கு

ஐயம்பெறுவதாக நினைத்திருந்த மஹாரதர்களான துர்யோதநாதிகளுக்கு
வான் கொடுத்து

வீரஸ்வர்க்கத்தைக் கொடுத்து
வையம்

பூமண்டலத்தை
ஐவர் பாலது ஆம்

பஞ்சபாண்டவர்களுடையதாக அக்குவித்த
சீர் மிகுந்த

புகழ் மிகுந்த
நின் அலால்

உன்னைத்தவிர
ஓர் தெய்வம்

மற்றொரு தெய்வத்தை
நான் மதிப்பனே

நான் ஆதரிப்பேனோ!

பார் மிகுத்த பாரம் முன்
முன் ஒரு காலத்தில் பூமியில் பாரமாக இருந்த துஷ்ட வர்க்கத்தை

ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று
பகலை இரவாக்கியும் போன்ற பல மாயங்களைச் செய்து எதிரிகளைக் கொன்று

வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து
வெற்றி பெறுவதற்காக நினைத்து இருந்த மகா ரதர்களான துரியோதானாதிகளை வீர ஸ்வர்க்கம் அனுப்பி

வையம் ஐவர் பாலதாம்
பூ மண்டலத்தை பஞ்ச பாண்டவர்களுக்கு ஆக்குவித்து அருளி

சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே

அதி ரதர் -1-1000
மகா ரதர் -1- பல 1000
சம ரதர் -1-1-
அர்த்தரர் -1-தோற்று -இப்படி ரதர்கள் -நான்கு வகைகள் உண்டே

(மாரதர்க்கு.) அதிரதர், மஹாரதர் , ஸமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர் நால்வகைப்படுவர்;

அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின் மேலிருந்து தமது ரதகஜ துரகபதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு

பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் அதிரதர் என்றும்,

கீழ்சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் மஹாதரர் என்றும்,

ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்கவல்லவர் ஸமரதர் என்றும்,

அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் அர்த்தரதர் என்றும் சொல்லப்படுவர்.

இப்பாட்டில் மாரதர் என்றது மஹாரதர் என்றபடி,

போர்க்களத்திலே மடிந்த வீரர்கட்கு ஸ்வர்க்கம் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுவது பற்றி “மாரதர்க்கு வான் கொடுத்து” என்றார்.

தோற்றொழிந்த மாரதர்கட்கு வென்றிசேர் என்ற அடைமொழி தருமோவெனின்;

ஐயம் பெறுதற்கு யோக்யதையுடையவர்கள் என்று பொருளேயல்லது வெற்றிபெற்றவர்களென்று பொருளல்ல;

ஆகவே,வென்றிசேர்- ஐயமுண்டாவதாக நினைத்திருந்து- என்றதாயிற்று.

—————————

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-

பதவுரை

புனித

பரிசுத்தமான
எம் ஈசனே

எம்பெருமானே!
குலங்கள் ஆய ஈர் இரண்டில்

(ப்ராஹங்மணாதி) நான்கு வர்ணங்களுக்குள்

ஒன்றிலும்  ஒரு வர்ணத்திலும்

பிறந்திலேன்

நான் பிறக்கவில்லை
கலங்கள் ஆய நல்கலைகள் காலிலும்

(சேதநர்க்கு) நன்மையைக் காட்டுவதான நல்ல நான்கு வேதங்களிலும்
நவின்றிலேன்

பயிற்சி செய்யவில்லை;
புலன்கள் ஐந்தும்

பஞ்சேந்திரியங்களையும்
வென்றிலேன்

ஜயிக்கவில்லை.
பொறியிலேன்

பச்தாகி விஷயங்களில் அகப்பட்டிருக்கிறேன்; (ஆனபின்பு)
நின்

உன்னுடைய
இலங்கு பாதம் அன்றி

ஒளிமிக்க திருவடிகளைத் தவிர
மற்று ஓர் பற்று இலேன்

வேறொரு ஆச்ரயத்தை யுடையேனல்லேன்

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நான்கு வர்ணங்களில் ஒன்றிலும் பிறந்திலேன்

நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் —
நான்கு வேதங்களையும் நவின்றிலேன்
நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே

புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன்
சப்தாதி விஷயங்களிலே அகப்பட்டு இருக்கிறேன்

புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –
இலங்கு ஒளி மிக்க

முன் பாசுரத்தில் அநந்ய கதித்வம் சொல்லி இதில் ஆகிஞ்சன்யம் அருளுகிறார்

உபாயமும் உபேயமும் அவன் திருவடிகள் தான் என்கிறார் –

அநந்ய கதித்வமும் ஆகிஞ்சன்யமும் சொல்லி உபாயாந்தரங்கள் அனுஷ்ட்டிக்க அயோக்யனாய் இருந்து
உன் திருவடிகளே உபாயம் என்கிற அத்யாவசாயம் மாத்திரம் குறைவற்று இரா நின்றேன் என்கிறார் –

கீழ்ப்பாட்டுக்களில், தாம் வேறுகதியற்றவர் என்னுமிடத்தை வெளியிட்டதுபோல

இப்பாட்டில் வேறு உபாயமொன்றுமில்லாகையை வெளியிட்டருள்கிறார்.

ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமுமாக இரண்டு முண்டாக வேணுமே;

அவற்றுள் அநந்யகதித்வ முண்டானமை கீழே சொல்லிற்றாயிற்று.

ஆகிஞ்சந்யஞ் சொல்லுகிறது இதில்.

ஆக இரண்டாலும். உபாயமும் உபேயமும் எம்பெருமானே என்றதாகிறது.

ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரரூபமான நான்கு வருணங்களுள் ஒரு வருணத்திலும் ஜகிக்கப் பெற்றிலேன்;

சேதநர்களுடைய அதிகாரங்கட்கும் குணங்கட்கும் தக்கபடி ப்ரியஹிதங்களை விதிக்கும்

விலக்ஷணமான சாஸ்த்ரங்களையும் அதிகரிக்கப் பெற்றிலேன்;

இந்திரியங்கள் என்னைத் தம் வசமாகப் பிடித்திழுத்துக் கொண்டுபோக

நான் அவையிட்ட வழக்காய்த் திரிந்தொழிந்தேனே யொழிய

அவற்றிலே ஓர் இந்திரியத்தையும் சிக்ஷிக்க ஸமர்த்தனாகப்பெற்றிலேன்;

ஆகவே சப்தாதி விஷயப்ரவணனாய்ப் போந்தேன்;

ஆகையாலே ஒருவித உபாயமும் அநுஷ்டிக்கைக்கு அயோக்யனாயிருந்தேனெனும்

“உன் திருவடிகளே உபாயம்” என்ற அத்யவஸாயம் மாத்திரம் குறைய்றறரா நின்றது என்கிறார்.

————————————

பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-

பதவுரை

பண் உலாவும் மென்மொழி

(குறிஞ்சி காந்தாரம் காமரம் முதலிய) ராகங்கள் விளங்குகின்ற இனிய பேச்சை யுடையவளும்
படை தடம்கணாள் பொருட்டு

வாள் போன்று பெரிய கண்களையுடையவளுமான பிராட்டிக்காக
எண் இலா அரக்கரை

கணக்கிலாத ராக்ஷஸரை
நெருப்பினால்

அம்புகளின் தீயினால்
நெருக்கினாய்

தொலைத்தருளினவனே!
கண் அலால்

(எனக்கு நீ) நிர்வாஹகனேயொழிய
ஓர் கண் இலேன்

வேறொரு நிர்வாஹகனே காணுடையேனல்லேன்;
கலந்த சுற்றும்மற்று இலேன்

நெஞ்சு பொருந்தின உறவும் வேறில்லை;
எண் இலாத மாய!

அநந்தமான ஆச்சரிய சக்தியையுடையவனே!
நின்னை

உன்னை
என்றும்

எக்காலத்திலும்
என்னுள் நீக்கல்

என்னைவிட்டுப் ப்ரிக்கவே கூடாது.

பண்ணுலாவு மென் மொழி
ராகங்கள் -குறிஞ்சி காந்தாரம் காமாரம் விளங்கும் இனிய பேட்சு உடையவள்

படைத்தடம் காணாள் பொருட்டு
வாள் போன்ற பெரிய கண் உடைய பிராட்டியின் பொருட்டு

எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
அம்புகளின் தீயால் தொலைத்து அருளினாய்

கண்ணலாலோர் கண்ணிலேன்
நீயே தான் நிர்வாஹகன் -வேறு நிர்வாஹகன் யாரும் இல்லை

கலந்த சுற்றம் மற்றிலேன்
நெஞ்சு பொருந்தின சுற்றம் வேறு இல்லை

எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
அநந்தமான ஆச்சர்ய சக்தி உடையவனே உன்னை எக்காலத்திலும் என்னை விட்டுப் பிரிக்கக் கூடாது -என்கிறார் –

——————————

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –-92-

பதவுரை

வேலை நீர்

ஜலதத்துவமாகிய கடலை
படைத்து

(முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து

(ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து

(தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன்

முன்னொருகாலத்திலே
கநைடபுது

(தேவதைகளுக்காக அதைக்) கடைந்தும் (இப்படியெல்லாம் செய்தது மல்லாமல்)
ஏழ்விடை குலங்கள்

நாநாவர்ணமான ஏழு ரிஷபங்களையும்
அடர்ந்து

கொழுப்படக்கி
வென்றிவேல் மண்மாதரர்

ஜயசீலமான வேல்போன்ற கண்ககளையுடையளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
கடி கலந்த

பரிமளம் மிக்க திருத்தோளோடே
புணர்ந்த

ஸம்ச்லேஷித்த
காலி ஆய

கோபாலகிருஷ்ணனே!
நின் தனக்கு

உன் பக்கலிலே
அடைக்கலம் புகுந்த என்னை

சரணம் புகுந்த என்னை நோக்கி
அஞ்சல் என்ன வேண்டும்

“பயப்படாதே” என்றொரு வார்த்தை யருளிச்செய்ய வேணும்.

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து
ஏழு ரிஷபங்களையும் கொழுப்பை அடக்கி

வென்றி வேற் கண் மாதரார்
ஜெயசீலமான வேல் போன்ற கண்கள் உடைய நப்பின்னை பிராட்டி உடைய

கடிக் கலந்த தோள் புணர்ந்த
பரிமளம் மிக்க தோள்களுடன் சம்ஸ்லேஷித்த

காலி யாயா
கோபால கிருஷ்ணனாக

வேலை நீர் படைத்து
ஜல தத்வமான கடலை சிருஷ்டித்து

அடைத்து
ஸ்ரீ ராமாவதாரத்திலே அணை கட்டி அடைத்து

அதில் கிடந்து
தங்கள் ஆபத்தை சொல்லி முறை இட ஹேது வாக அதிலே பள்ளி கொண்டு அருளி
முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே

எனக்கும் மாஸுசா என்று அருளிச் செய்ய வேணும்-

ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும்

அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும்

அடியேனை நோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார்.

“முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு.

அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.

—————————

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

பதவுரை

கரும்பு இருந்த கட்டியே

கருப்பங் கட்டிபோலே பரம போக்யனாயிருந்தவனே!
கடல் கிடந்த கண்ணனே

திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளும் ஸுலபனே!
இரும்பு

இரும்புபோல் வலிய ராக்ஷஸசரீரங்கள்
அரங்க

அழியும்படி
வெம்சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

பிரயோகித்த
வில்

ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே

இராமபிரானே!
அரங்கம் வாணனே

கோயிலில் வாழ்பவனே
கரும்பு

வண்டுகளானவை
அரங்கு

படிந்திருக்கபெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய்
துதைத்து

நெருங்கி
அலர்ந்த

விசுஸித்திருக்கப்பெற்ற
பாதமே

(உனது) திருவடிகளையே
விரும்பி நின்று

ஸ்வயம்ப்ரயோஜகமாக ஆசைப்பட்டு
இறைஞ்சு வேற்கு

தொழுகின்ற அடியேன் பக்கல்
இரங்கு

க்ருபைபண்ணியருள்.

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
வண்டுகள் படிந்த குளிர்ந்த திரு துழாய்

துகைத்து அலர்ந்த பாதமாய் –
நெருங்கி விகசிக்க பெற்ற உனது திருவடிகளையே

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே -கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே-
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
இரும்பு போன்ற ராஷச சரீரங்கள் அழியும் படி
அஞ்சேல் என்று மட்டும் அருளினால் போராது-உனது திருவடியில் நித்ய கைங்கர்யம் பண்ணும் அனுபவம்
தந்து அருள வேண்டும் என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும்

அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே;

பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே;

அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில்.

“நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து

இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம்.

அரங்குதல்- (இங்கு) அழிதல்.

———————

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-

பதவுரை

இராமனே

இராமபிரானே!
ஊனில் மேய ஆவி நீ

சரீரத்திலே பொருந்தியிருக்கின்ற பிராணன் நீயிட்ட வழக்கு
உற்றமோடு உணர்ச்சி நீ

ஜ்ஞாநமும் அஜ்ஞானமும் நீ விட்ட வழக்கு.
ஆனில் மேய ஐந்தும் நீ

பசுக்களிடத்து உண்டான பஞ்சகவ்யமும் நீ;
அவற்றுள் நின்ற தூய்மை நீ

அப்பஞ்ச கவ்யங்களுக்குள்ள பரிசுத்தியும் நீ ஸங்கல்பித்தது;
வானினோடு மண்ணும் நீ

நித்ய விபூதி லீலா விபூதியென்ற உபய விபூதியும் நீயிட்ட வழக்கும்
வளம் கடல் பயனும் நீ

அழகிய ஸமுத்திரத்திலுண்டான (அம்ருதம் ரத்னம் முலான) பிரயோஜனங்களும் நீ;
யானும் நீ

அடியேனு“ உன் அதீகன்;
அது அன்றி

இப்படி பலவாறு பிரித்துச் சொல்வதல்லாமல்
எம்பிரானும் நீ

ஸர்வேச்வரனும் நீ காண்.

ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் உள்ள பிராணன் நீ இட்ட வழக்கு

உறக்கமோடு உணர்ச்சி நீ
ஜ்ஞானமும் அஜ்ஞ்ஞானமும் நீ இட்ட வழக்கு

ஆனில் மேய ஐந்தும் நீ
பசுவின் பஞ்ச கவ்யமும் நீ

யவற்றின் நின்ற தூய்மை நீ வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே
அவன் சர்வ பிரகாரி -கடல் அமுதம் தேவர்களுக்கு தந்தது போலே ரத்னம் போன்றவற்றை ஐஸ்வர் யார்த்திகளுக்கும் தருகிறாய்

வானினொடு மண்ணும் நீ -என்றது –
ஆகாசத்தில் பல பல தேவதைகள் ஏங்குவதும் நீரிலே கரையாமல் பூ லோகம் இருப்பதும் உன்னாலே தான்

யானும் நீ என்றது –
எனக்கு உன் பக்கல் ருசி பிறவாத காலத்திலும் எனக்கு நல்ல மதி அளித்து ருசியை பெருக்கினதும் நீ தான் என்கிறார்

எம்பெருமான் ஸர்வப்ரகாரி என்னுமிடத்தை யருளிச்செய்கிறார்.

உறக்கமோடு உணர்ச்சி நீ = தமோகுணத்தின் காரியமான உறக்கமும்

ஸத்வகுணத்தின் காரியமான புத்திய விகாஸமும் நீயிட்ட வழக்கு;

சிலர் விஷயாந்தா ப்ரவணராய் அறிவுகேடராய்க் கிடப்பதும்,

சிலர் உன்பாதமே பரவிப்பணிந்து கிடப்பதுமெல்லாம் நீ. ஸங்கல்பிக்கும் வகைகளேயா மென்றவாறு.

வளங்கடற்பயனும்நீ = சிறந்த கடலிலுள்ள பயன்- அம்ருதம் ரத்னம் முதலியவை; அவையும் உன் ஸங்கல்பாதீநமென்றபடி,

பிரயோஜநாந்தா, பரர்களான தேவர்களுக்குக் கடலினின்றும் அமுதமாகிற பிரயோஜநரந்தரத்தை யெடுத்துக் கொடுத்தருளினதுபோல்

மற்றுள்ள பிரயோஜநாந்தர பரர்கட்கும் நீயே அப்பிரயோஜகங்களை அளிக்கவல்லை என்பது உட்கருத்தாம்.

(ஆனின்மேய இத்யாதி.) சுத்தியை வினைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற பஞ்சகவ்யமும்,

அவற்றிலுண்டான பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது.

ஊனின்மேய ஆலிநீ என்றது – சரீரம் நின்றிருப்பதும் நசித்துப் போவதும் உன்னுடைய இச்சா தீநமென்றபடி.

வானினோடு மண்ணும் நீ என்றது- ஆலம்பநமற்ற ஆகாசத்திலே பலபல தேவதைகள் ஸஞ்சரிக்கிறதும்,

நீரிலேகிடக்கிற பூமியானது கரையாமல் ஸகலத்துக்கும் ஆதாரமாயிருப்பதும் உன்னாலே என்றபடி,

யானும் நீ என்றது- எனக்கு உன்பக்கல் ருசி பிறவாதகாலத்திலும் எனக்கு நல்லமதியை யளித்து ருசியைப் பெருக்கினதும் நீயென்றபடி.

———————

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-

பதவுரை

எம் அண்ணலே!

எம்பெருமானே!
அடக்க அரு

அடக்க முடியாத
ஐந்து புலன்கள்

பஞ்சேந்திரியங்களை
அடக்கி

பட்டிமேயாதபடி நியமித்து
ஆசை அரும் அவை

விஷயந்தரப் பற்றுக்களை
துடக்கு அறுத்து வந்து

ஸவாஸகமாகத் தொல்லைத்து விட்டு வந்து
நின் தொழில் கண்

உன் கைங்கரியத்திலே
நின்ற

நிஷ்டனாயிருக்கிற
என்னை

அடையேனே

நீ

இவ்வளவு ஆளாக்கின நீ

விட கருதி

உபேக்ஷிக்கத் திருவள்ளம்பற்றி
மெய் செயாது

என் உஜ்ஜீவநார்த்தமான க்ருஷியை மெய்யாக நடத்தாமல்
மிக்க ஓர் ஆசை ஆக்கிலும்

விஷயாந்தரப்ராவண்யத்தை அதிகரிப்பித்தாலும்
கடல் கிடந்த நின் அலால்

க்ஷீரஸாகர சாயியான உன்னையல்லது
ஓர் கண் இலேன்

வேறொரு ஸ்வாமியையுடைய னல்லேன்.

என்னை நெகிழ்கிலும் என்னுடைய நல் நெஞ்சம் தன்னை அகல்விக்க தானும் இங்கிலன் போலே
நீ எது செய்தாலும்-ஒரு கால் கை விட்டாலும் – என் மனம் உன்னை விட்டு போகாது

மெய் செயாது -என்னை உஜ்ஜீவிப்பிக்க திரு உள்ளம் பற்றி தொடங்கின கிருஷிகளை
மெய்யாகத் தலைக் காட்டாமல் -என்கை-

புறப்பண்டான விஷயங்களில் விருப்பத்தை விலக்கி உன்னளவில் அபிநிவேசத்தைப் பிறப்பித்து

கைங்கர்யத்தைப் பிரார்த்திக்கும்படி அடியேனை இவ்வளவு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த நீ

தானே என்னை உபேக்ஷித்து விஷயாந்தர ப்ரவணானகக் கெட்டுப்போகும்படி ஒருகால் கைவிட்டபோதிலும்

உன்னையொழிய வேறொரு கதி இல்லை யெனக்கு என்று தம்முடைய அத்யவ ஸாயத்தை அருளிச்செய்கிறார்.

ஆசார்யனுடைய நல்ல உபதேசங்களைக்கொண்டும் சாஸ்த்ர பரிசயத்தைக் கொண்டும்

இந்திரியங்களை அடக்கப்பார்த்தால் அடக்கமுடியாத இவ்விந்திரியங்களை

உன் திவ்யமங்கள விக்ரஹவலக்ஷண்யத்தைக் காட்டி ஈடுபடுத்தி விஷயாந்தாங்களில் போகாதபடி தகைந்து

புருஷார்த்தங்களின் மேலெல்லையாகிய கைங்கர்ய ப்ரார்த்தனையிலேயே நிலைநிற்கும்படி

உன் திருவருளுக்குப் பாத்திரமாøகி நின்ற என்னை நீ உபேக்ஷிப்பதாகத் திருவுள்ளம்பற்றி

எனது உஜ்ஜீவ நக்குஷியை முட்டமுடியா நடத்தாமல் இன்னும் விஷயாந்தரங்களிலேயே ருசியைப் பிறப்பித்து

உன்னைவிட்டு நீங்கும்படி நீ செய்தாயாகிலும் என் மனம் உன்னைவிட்டு நீங்காது என்றவாறு.

“என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்தன்னை அகல்விக்க தானுங் கில்லாணினி” என்ற நம்மாழ்வாரைப்போல அருளிச் செய்கிறபடி.

மெய்செயாது- என்னை உஜ்ஜிவிப்பிக்க வேணுமென்ற திருவுள்ளத்துடன் தொடங்கின க்ருஷிகளை மெய்யாகத் தலைகாட்டாமல் என்கை.

——————

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-

பதவுரை

வரம்பு இலாத மாய

அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!

ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும்

ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே

மெய்யாகவே
வரம்பு இல் ஊழி

பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும்

தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய்

எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே

புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா

முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு

பற்பல ஜன்மங்களை
அறுத்து

இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து

உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ

அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த

நன்றாக
நீ வரம் செய்

அநுக்ரஹித்தருள வேணும்

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும்
பல பல கல்பங்கள் ஸ்தோத்ரம் பண்ணினாலும்

வரம்பிலாத கீர்த்தியாய்
எல்லை காண முடியாத புகழ் உடையோனாய்

வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு
உனது திருவடிகள் கிட்டி அவற்றிலே சக்தனாய் இருக்கும் படி

திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
தம்முடைய பிராப்யத்தை ஸ்பஷ்டமாக பிரார்த்திக்கிறார்-

அஞ்சல் என்ன வேண்டுமே -இரங்கு அரங்க வாணனே-என்று பொதுப்பட அருளிச் செய்ததை
விவரியா நின்று கொண்டு
சம்சாரத்தை வேர் அறுத்து உன் திருவடிகளில் பொருந்தும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேணும் –
என்று ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் –

“அஞ்சலென்னவேண்டுமே” என்றும்

“இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு,

“ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று

தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.

———————

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97-

பதவுரை

வெய்ய ஆழி

(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும்
சங்கு தண்டு வில்லும் வாளும்

திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும்
சேரும் மார்ப

நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே!
நாதனே

ஸர்வஸ்வாமியே!
ஐயில் ஆய ஆக்கை நோய்

சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை
ஏந்து சீர் கைய!

தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது

செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து

தொலைத்து வந்து
நின் அடைந்து

உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம்

நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை
எனக்கு

அடியேனுக்கு
நீ நல்கவேண்டும்

அருள வேணும்.

ஐயிலாய வாக்கை நோய்-ஸ்லேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரம் என்கிற வியாதியை

——————————

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-

பதவுரை

மாய!

ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே!
மறம் துறந்து

கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி

கன்னங்சுவடுகளைத் தவிர்த்து
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து

பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து
நின் கண்

உன் பக்கலில்
ஆசையே தொடர்ந்து நின்ற காயினேன்

பக்தியே மேன்மேலும் பெருகி வரப்பெற்ற அடியேன்
பிறந்து இறந்து

பிறப்பது இறப்பதுமான விகாரங்களையடைந்து கொண்டு
பேர் இடர் கழிக்கண் நின்றும்

மஹாதுக்க மண்டலான ஸம்ஸுரத்தில் நின்றும்
நீக்கும் ஆ

நீங்கும் பிரகாரத்தையும்
மற்று

அதற்கு மேற்பட்டுப் பரமாநந்த மடையும் பிரகாரத்தையும்
எனக்கு

அடியேனுக்கு
மறந்திடாது

மறவாமல்
கல்க வேண்டும்

அருளவேணும்

மறம் துறந்து -கோபத்தை ஒழித்து

நீங்குமா– நீங்குமா ஆ -வழியையும்

நீங்கும் ஆ மற்று–நீங்கும் பிரகாரத்தையும் அதற்கு மேற்பட்ட பரம ஆனந்தம் அடையும் பிரகாரத்தையும்
இரண்டையும் மறந்திடாது எனக்கு மாய நல்க வேண்டுமே-

பிறர்க்கு ஒரு ஏற்றமிருந்தால் அதனை பொறுக்கமாட்டாமையும்

பிறர்க்குத் தீங்கு விளைவிப்பதையே சிந்திக்கையும் மறம் எனப்படும்.

அதனை யொழித்து, வஞ்கமாவது- அநுகூலன் போலத் தோற்றி முடிவில் பிரதிகூலனாய் நிற்றல்;

அதனையும் தொலைத்து, இந்திரியங்களுக்கு விஷயாந்தரங்களிலுண்டான ஆசையையும் அகற்றி

உன்பக்கல் ஆசையே மேன்மேலும் தொடர்ந்து பெரும்படியான நிலைமையிலேயே நின்ற அடியேன்,

பிறப்பதும் இறப்பதுமான மஹா துக்கசக்கரத்தில் நின்றும் நீங்கும் விதத்தையும்

அதற்குப் பிறகு ப்ராப்தமாகக் கூடிய பரமாநந்த ஸாம்ராஜ்யத்தையும் நீயே தந்தருளவேணும்.

மற்று என்பதை அசைச்சொல்லாகக் கொண்டு,

பேரிடர் சுழிக்கணின்று நீங்குதலை மாத்திரமே பிரார்த்திக்கின்றா ரென்னவுமாம்.

—————————————

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-

பதவுரை

பூவை வண்ணனே

காயாம்பூப்போன்ற நிறமுடையவனே!
பின்னைகேள்வ!

!  நப்பின்னைப் பிராட்டிக்கு நாதனே
(யமகிங்கர ரானவர்கள்)

நான் செய் வல்வினை காட்டி

நான் செய்த பிரபலமான பாவங்களை எனக்கு ஞாபகப்படுத்தி
பயன் தனில்

அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை

எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து

துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல

அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார்

செய்ய நினைத்திருக்கிறார்கள்
என கேட்டது அன்றி

என்று நான் கேட்டிருக்கிற படியாகையாமைக்காக
உன்னது ஆவி

என்னுடைய ஆத்மாவை
நின்னொடும் பூட்டிவைத்த என்னை

உன் பக்கலில் ஸமர்ப்பித்து நீர்ப்பரனாயிருக்கி என்னை

காட்டி நான் செய் வல் வினை-
நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி

பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து
அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக
ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று

கேட்டதன்றி
நான் கேட்டு இருக்கிற படி யாமைக்காக

என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-

நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்-

நான் கணக்கு வழக்கில்லாதபடி செய்திருக்கும் பாவங்களுக்குப் பலன் அனுபவித்தே தீரவேண்டியதாகும்;

நான் செய்த பாவங்கள் இவ்வுலகத்தில் அந்தந்த க்ஷணங்களில் அழிந்துபோய்விட்டாலும்

அவற்றை நான் மறந்தொழிந்தாலும் பாபபலன்களை ஊட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள யமகிங்கரர்கள்

என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் எடுத்தெடுத்துக்கூறி

‘இவற்றின் பலனை அநுபவித்தே தீரவேணும்’ என்று வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களென்பதை

நான் பெரியோர் முகமாகவும், சாஸ்திரமுகமாகவும் கேட்டிருக்கிறேன்;

அப்படிப்பட்ட பயங்கராமன யமகிங்கரயாதனைகள் அடியேனுக்கு நேரக்கூடாதென்று ஏற்கனவே

தேவரீர்பக்கல் ஆத்மஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறேன்;

இவ்வடியேனை அந்த ரங்கபூதனாக தேவரீர் திருவுள்ளத்தில் கூட்டிக்கொண்டருளினால்

*** என்றபடி அந்த நரகவேதனைகட்கு ஆளாகதொழியலாம்;

ஆகையாலே தேவரீர் அடியேனை அவிநாபூதனாகக் கொண்டருள வேணும் என்று பிரார்த்திகிறார்.

செய்யவெண்ணினார் என்ற வினைமுற்றுக்கு ஏற்ப “நமன் தீமர்” என்ற எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும்.

என்றைக்கோ செய்து முடிந்துபோன வல்வினைகளைக் காட்டுவதாவது- நினைப்பூட்டுகை;

இன்ன இன்ன பாவங்களைச் செய்தாயென்று தெரிவித்தல்

“பயன்றனால்” என்பதும் சிலருடைய பாடம்.

பயன்றனில் மனந்தனை நாட்டி வைக்கயாவது – பிறரை வஞ்சித்து ஏகாந்தாமகப் பாவங்களைச் செய்து தீர்த்தோம்;

அவற்றின் பலன்களை இப்போது அநுபவித்தே தீர வேண்டும்;

இப்போது யமபடர்களை வஞ்சிக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ளுகை.

யமபடர் செய்யக்கூடிய ஹிம்ஸைகளின் கொடுமையை நினைத்து இன்ன ஹிம்ஸையென்று சொல்ல அஞ்சி

நல்ல அல்ல என்று பொதுவிலே அருளிச் செய்கிறார்: நல்லதாகாத செயல்களையென்கிறார்.

—————————

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

பதவுரை

பெறற்கு அரிய மாயனே

(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே!
பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும்

பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கும் அஃது

நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்
இறப்ப வைத்த

மறந்தொழிந்த
ஞான நீசரை

ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை
கரை கொடு

ஏற்றம் ஆ

கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக

பெறற்கு அரிய

துர்லபமான
சின்ன பாதம் பத்தி ஆன

உன் திருவடிகளில் பக்தியாகிற
பாசனம்

மரக்கல (ஓட) த்தை
எனக்கு நல்க வேண்டும்

அடியேனுக்கு அருளவேணும்.

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது இறப்ப வைத்த -மறந்து ஒழிந்த
ஞான நீசரைக் -சர்வஜ்ஞ்ஞராக நினைந்து கொண்டு இருக்கும் நீசரை

கரைக்கொடு ஏற்றமா-கரையில் கொண்டு சேர்க்கும் படியாக

பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்-மரக் கலம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே-

‘என்னை நின்னுள் நீக்கல்’ என்ற ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான் ‘ஆழ்வீர்! அவிச்சிந்நமான திவ்ய ஸம்ச்லெஷத்தைப் பிரார்த்திக்கின்றீரே;

அது பெறவேணுமானால் நீர் பரமபக்தியோடு கூடியிருக்க வேணுமே’ என்ன;

அப்படிப்பட்ட பரமபக்தியையும் நீயே தந்தருளவேணுமென்று இரக்கிறார்.

தேவரீருடைய பாதாரவிந்தத்திலே பக்தியுண்டாவது ஸாமாந்யமல்ல;

அஃது அனைவர்க்கும் எளிதில் பெறுதற்கு அரிது;

அதனை அடியேனுக்கு நிர்ஹேதுகக்குபையினால் தந்தருளவேணுமென்று பின்னடிகளில் பிரார்த்திக்கிறார்.

அப்படிப்படட் பக்தி அடியேனுக்கு தேவரீர் அருளினால் அஃது என்னொருவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மாத்திரம் உபயுக்தமாகாது;

அதனைக்கொண்டு பல நீசர்களை நான் கரையேற்றப் பார்ப்பேனென்கிறார் முன்னடிகளில்.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-41-60- -ஸ்ரீ உ வே -PBA -ஸ்வாமிகள்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

February 9, 2020

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

பதவுரை

மாய !

ஆச்சரியபூதனே. (நீ)
அயன் ஆகி

இடப்பிள்ளையாய்ப் பிறந்து
ஆயர் மங்கை

இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய
வேய தோள்

வேய்போன்ற தோள்களை

விரும்பினாய் விரும்பிப் புணர்ந்தாய்;

அம்பரத்தோடு இம்பராய்

மேலுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களுமா யுள்ளவர்களில்
யாவர்

யார்தான்
நின்னை ஆயவல்லர்

உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.)
மாயம் மாயை கொல்!

(இப்படி அறியமாட்டாதது) பிரகிருதியைப் பற்றின அஜ்ஞாகத்தலல்ல. (ஸர்வஜ்ஞராயிருந்தாலும் உன் ஸ்வரூபம் அறியமுடியாததே.)
அது அன்றி

அது அப்படியிருக்கட்டும்;
நீ

ஸர்வசக்தனான நீ
வகுத்தலும்

(உன்னை வணங்கி வழிபடுவதற்கு உறுப்பாகக் கரணகளே பராதிகளை) உபகரித்திருக்கச் செய்தேயும்.
மாய

(சேதகர்கள் அவற்றைக்கொண்டு நல்வழியில் புகாமல்) மாய்ந்துபோக

(அந்த விநாசத்தை நீ ஸஹிக்கமாட்டாமல்)

மாயம் ஆக்கினாய்

(இவரக்ளை ஸம்ஹரிப்பதே க்ஷேமமென்று) ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;
உன் மாயம் முற்றும்

உன்னுடைய ஸங்கல்பமெல்லாம்
மாயமே

ஆச்சரியமாயிருக்கின்றன.

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்-
இடையனாகி –இடைப்பெண் நப்பின்னை பிராட்டியின் மூங்கில் போன்ற தோள்களை விரும்பி புணர்ந்தாய்

ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்-
உனது ஸ்வரூபத்தை ஆராய மேல் உலகத்திலும் இவ் உலகத்திலும் வல்லார் யார்

மாய மாய மாயை கொல்-இப்படி அறியாததற்கு பிரகிருதி காரணம் அன்று –
ஆச்சர்ய பூதனாய் -சர்வஜ்ஞ்ஞனாய் இருந்தும் உன்னாலேயும் உனது ஸ்வரூபம் அறிய முடியாதே

அதன்றி நீ வகுத்தலும் மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –
அது அப்படி இருக்கட்டும் –
சர்வ சக்தனான நீ உன்னை வணங்கி வழிபட கரண களேபரங்களை கொடுத்து இருந்தும்
சேதனர்கள்-நல் வழியில் புகாமல் மாய்ந்து போக அந்த விநாசத்தை நீ சகிக்க மாட்டாமல் –
பிரகிருதி அவஸ்தையில் நிறுத்தினாய்

உனது மாயம் -சங்கல்பம் எல்லாம் எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறதே
நல் வழி தவிர்ந்து தீய வழிகளில் செல்லும் சம்சாரிகளை சம்ஹரிப்பதும் –
கர்ம அனுகுணமாக ரஷணம் என்று அருளுகிறார்

எம்பெருமானே! நீ உகந்தாரைத் தத்ஸஜாதீயவான்ய வந்தவதரித்து ஸ்வரூபாநுரூபமாக ரக்ஷித்தருளும்படியையும்,

விமுகரான ஸம்ஸாரிகளை ஸங்கல்பத்தாலே கர்மாநுகூலமாக ரக்ஷித்தருளும்படியையும்

அநுஸந்திக்கப்புகுந்தால் பரிச்சோதிக்க முடியாத ஆச்சர்மாயிருக்கிறதே! என்கிறார்.

(நீ வகுத்தலும் இத்யாதி.) ஸம்ஸாரிகளுடைய இழவைக்கண்டு இரங்குமவனான நீ

அவர்கள் உன்னையடைந்து உய்வதற்காக அவர்கட்கு நீ கரணகளேபரங்களைக் கொடுத்திருக்கச் செய்தேயும்

அவர்கள் அவற்றைக்கொண்டு நன்மை தேடிக்கொள்ளாமல் விஷயாந்தரப்வணராய் அழிந்துபோக,

‘இவர்கட்கு இனி ஸம்ஹாரமே நல்லது’ என்று திருவுள்ளம்பற்றி அவர்களை ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்;

உன்னுடைய மாநஸவயாபாரரூபமான ஸங்கல்பஜ்ஞாநமடங்கலும் ஆச்சர்யகரமாயிருக்கினற்து காணென்கிறார்.

நல்வழி தவிர்ந்து தீயவழியிற்சென்ற ஸம்ஸாரிகளை ஸம்ஹரிப்பதும் கர்மாநுகுணமான ரக்ஷணமென்று திருவுள்ளம்

——————————————————————-

வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –42-

பதவுரை

கூசம் இன்றியே சென்று ஏறு அடர்ந்த ஈச

கூசாமல் சென்று (நப்பின்னைப் பிராட்டிக்காக) எருதுகளை வலியடக்கின பெருமானை!
வேறு

வேறாக
இசைக்க

ஸம்ஹாரத்தொழிலுக்குத் தகுதியான
செக்கர் மேனி

சிவந்த உடலையுடையனாய்
நீறு அணிந்த

பஸ்தாரியாய்
புண் சடை கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த

ஹேயாமன ஜடையிலே சந்திரகலையை வைத்துக் கொண்டிருப்பவனான ருத்திரன்
கை வைத்த

தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை

வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால்

உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை

நிறைந்த காரணத்தை
பேசு

அருளிச் செய்யவேணும்.
பாட்டு

பாலினீர்மை

வேறு இசைந்த செக்கர் மேனி -வேறாக சம்ஹார தொழிலுக்கு தக்க சிவந்த உடலை உடையானாய்
நீறணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் -ருத்ரன் –
கை வைத்தவன் கபால மிசை-தன் கையில் வைத்து இருந்த வழிய கபாலத்தை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை-ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே-
கூசாமல் சென்று நப்பின்னை பிராட்டிக்காக எருதுகளை வலி அடக்கிய பெருமானே அருளிச் செய்ய வேணும்-
கூசம் இன்றியே பேசு என்றும்
கூசம் இன்றியே ஏறு சென்று அடர்த்த யீச-என்றும் அன்வயம்

“அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து-

நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும்

நீ அவனை அநுக்ரஹிக்கவும்  நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்;

இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை.

“கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம்.

“ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்-

நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்;

ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்;

அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்;

இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும்.

வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்

போன்ற அழகிய வடிவம் அமைந்தால்,

சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம்.

கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும்

அக் கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.

——————————————————————

வெஞ்சினத்த வேழ வெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-

பதவுரை

வெம்சினந்த

உக்ரமான கோபத்தையுடைய
வேழம்

குவலயாபீட மென்னும் யானை யினுடைய
வெண் மருப்பு

வெண்ணிறமான தந்தத்தை
ஒசித்து

ஒடித்து (அந்த யானையை முடித்து)
உருத்த

கோபிஷ்டனாயும்
மா

பல்ஷ்டனாயுமிருந்த
கஞ்சனை

கம்ஸனை
கடிந்து

வதைசெய்து
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி

வஞ்சனையால் வந்த பூதனையின் உயிரை
பாலுன் வாங்கினாய்

முலைப்பாலுண்கிற பாவனையினால் ஆகர்ஜித்தவனே!
மண் அளந்து கொண்ட காலனே!

(த்ரிவிக்ரமனாய்) பூமியெல்லாமளந்துகொண்ட திருவடியையுடையவனே! நீ.
அஞ்சனந்த வண்ணன் ஆய

மைபோன்ற காந்தியையுடையனான
ஆதிதேவன் அல்லையே

ஆதிபுருஷனன்றோ?

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து-உக்ரமான கோபத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையின்
வெண்மையான தந்தத்தை ஒடித்து அந்த யானையை முடித்து
உருத்த மா கஞ்சனைக் கடிந்து –கோபிஷ்ட பலிஷ்டன் ஆகிய கம்சனை வதம் செய்து
மண் அளந்து கொண்ட காலனே-திரு விக்ரமனாய் உலகம் எல்லாம் அளந்த திருவடியை உடையவனே-
ப்ரஹ்மாதி புல்லீறாக சர்வ ஜகத்தையும் அளந்து சர்வ சேஷித்வத்தைக் காட்டி அருளிய படியாலும் நீயே ஜகத் காரண பூதன்

ருத்ரனுடைய பாதகத்தைப் போக்கினவளவேயன்றிக்கே க்ருஷ்ணனாய் வந்தவதரித்த மண்ணின் பாரமான

கம்ஸனைக் கூண்டோடு களைத்தருளுகையாலும்,

அந்த ருத்ராதிகளோடு க்ரிமிகீடோதிகளோடு வாசியின்றி

எல்லார் தலைகளிலும் த்ரிவிக்ரமனாய்த் திருவடிகளை வைத்து ஸர்வேஷித்வத்தை விளக்கிக்கொண்டபடியாலும்

ஜதத்காரணபூதன் நீயேயென்கிறார்.

————————————————————————

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாம்
மாலின் நீர்மை வையகம் மறைத்ததென்ன நீர்மையே –44-

பதவுரை

பாலின் நீர்மை

பாலின் நிறம்போன்ற வெண்மையென்ன
செம்பொன் நீர்மை

சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மையென்ன
பாசியின் பசும்புறம் போலும் நீர்மை

பாசியினுடைய பசும்புறம் போன்ற பசுமை நிறமென்ன
பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் நீலம் நீர்மை

அழகையுடைய தடாகத்திலேயுள்ள வண்டுகள் சிறகு விரித்து பரவாநிற்கும் கருநெய்தல் பூவின் நிறம்போன்ற கருநிறமென்ன.
என்று இவை நிறைந்த

என்கிற இந்த நான்கு நிறங்களும் நிறையப்பெற்ற
காலம் நான்கும் ஆம் மாவின் நீர்மை

நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனான எம்பெருமானுடைய ஸௌலப்யகுணத்தை
வையகம்

இவ்வுலகத்திலுள்ளவர்கள்
மறைத்தது

திரஸ்கரித்தது
என்ன நீர்மை

என்ன ஸ்வபாவம்!

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலு நீர்மை-
பால் போலே வெண்மை நிறம் கொண்டும்
சிவந்த பொன்னின் நிறம் போலே செம்மை நிறமும்
பாசியின் வெளி நிறம் பச்சை போலே
பாசி போலும் நீர்மை என்னாதே பாசியின் பசும் புறம் போலும் நீர்மை என்றது
பசுமை நிறத்தின் சிறப்புத் தோற்றவே
பாசியில் பசுமை குறைந்த புறமும் உண்டே

பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை
அழகான தடாகத்தில் உள்ள வண்டுகள் சிறகை விரித்து கரு நெய்தல் பூவின் நிறம் போலே கரு நீலம் என்ன
நீலத்துக்கு இத்தனை அடைமொழி உபமேயத்தின் போக்யதையை காட்டவே

யென்றிவை நிறைந்த கால நான்குமாய் மாலின் நீர்மை
நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனாய் இருக்கும் எம்பெருமானின் சௌலப்ய குணத்தை
வையகம் மறைத்ததென்ன நீர்மையே –இப்படி முகம் காட்டினத்தை அனுசந்தித்து இன்னும் சம்சாரிகள் கடை தேற வில்லை
ஏது என்ன துர்வாசன பலம் என்கிறார்

நான்குமாம் மாலின் -சரியான பாடம் -நான்குமாய் மாலின் பாடம் உபேக்ஷிக்கத் தக்கது

கீழ்ப்பாட்டின் “அஞ்சனத்தவண்ணனாய்” என்று திருமேனி நிறம் ப்ரஸ்துதமாகவே,

க்ருதம் முதலிய யுகங்களில் சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக

ச்வேதம் முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து

முகங்காட்டினபடியை அநுஸந்தித்து, இப்படி முகங்காட்டச் செய்தேயும் ஸம்ஸாரிகள் காற்கடைக் கொள்ளுகிறார்களே!

இதென்ன துர்வாஸநாபலம்!! என்று வருந்துகிறார்.

“பாசிபோலும் நீர்மை” என்னாதே “பாசியின் பசும்புறம்போலு நீர்மை” என்றது- பசுமை நிறத்தின் சிறப்புத்தோற்றலாம்;

பாசியின் பசுமை குறைந்த புறமும் உண்டிறே. “நீலநீர்மை” என்னுமளவே போதுமாயிருக்க

“பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலல்” என்று நீலத்திற்கு அடைமொழி கொடுத்தது-

உபமேயத்தில் போக்யதையைத் தோற்றுவிக்கைகாக வென்க.

மூன்றாமடியின் முடிவில் “நான்குமாய்” என்று பெரும்பாலும் பாடமோதுவார்களேனும் அது உபேக்ஷிக்கத்தக்கதாம்.

“நான்குமாம் மாலின்” என்க.

———————————————————

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

பதவுரை

அனந்தன் மேல் கிடந்த

திருவனந்தாழ்வான்மேலே  சாய்ந்தருள்கின்ற
எம் புண்ணியா

எங்களுடைய  ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே!
புனம் துழாய் அலங்கல்

தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய
அம் புனிதனே

பரமபாவகனே!
மண் உளாய்

லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்;
விண் உளாய்

பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்;
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய்

இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்;
நின் தமர்

உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு
கண்ணுளாய்

சக்ஷுர்விஷயமாகாநின்றாய்;
சேயை

(மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்;
என்ன மாயை

இது என்ன ஆச்சரியம்!

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் –
லீலா விபூதியிலே திருவவதரித்தாய் -பரம பத நாதனாய் இருந்து வைத்தும்
மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய்
சம்சாரிகளின் எண்ணங்களுக்கு விஷயம் ஆகாது இருக்கின்றாய்

கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல்
உனது அநந்ய பிரயோஜன அடியார்களுக்கு எளிதாக விஷயம் ஆகிறாய்

சேயை கொல்
மற்றவர்களுக்கு தூரஸ்தனாய் இருக்கிறாய்

அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
பல பல வகையாக பரந்து நிற்கிற எல்லா ஆற்றல் -இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –

தானும் சம்சாரத்தில் இருந்தும் அவனது சௌலப்யங்களையும் பரத்வங்களையும்
ஏடு படுத்தி அருளுவது அவனாலேயே என்கிறார்

வாய் வெருவுதலே போது போக்காகாப் பெரும் படி அருளுகிறாயே-

“மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே!” என்று ஸம்ஸாரிகளின் கொடுமையை நினைத்து வருந்தினார் கீழ்ப்பாட்டில்.

அப்படிப்பட்ட ஸம்ஸாரிகளிலே தாமும் ஒருவராயிருக்கச் செய்தேயும் தாம் அவர்களைப் போலன்றியே

எம்பெருமானுடைய பரத்வம், ஸௌலப்பம் முதலிய குணங்களிலே ஈடுபட்டு அவற்றை வாய்வெருவுதலே

போதுபோக்காயிருக்கப் பெற்றமை அருளிச் செய்கிறார்.

“மண்ணுவாய்” “விண்ணுளாய்” இத்யாதி பதங்களுக்கு அடுத்தபடியாக உள்ள (சொல்) என்ற இடைச்சொற்களெல்லாம்

வாக்யாலங்காரமாக நினைக்கத் தக்கன.

‘மண்ணுளாய், என்ன மாயைகொல்? விண்ணுளாய், என்ன மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.

அப்ராக்ருதமாய் அதீத்ரியமான திவ்ய மாயைசொல்?” என்றிங்ஙனே யோஜிக்கவுமாம்.

அப்ராக்ருதமாய் அதீந்த்ரியமான திவ்ய விக்ரஹத்தை ப்ராக்குத ஸஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்துக் கண்ணுக்கு விஷயமாக்கா நின்றாய்;

ஸம்ஸார நாற்றமே தெரியாத நித்யஸூரிகட்கும் அபரிச்சேத்யனாக விண்ணிலே உள்ளாய்;

ப்ரக்குரதி ஸம்பந்தத்தாலேவந்த விபரீதஜ்ஞாதத்தையுடையராய் ப்ரயோஜநாந்தபாரான ஸம்ஸாரிகள் மநோரதிக்கும் மகோதங்களுக்கு அவிஷயமாயிராநின்றாய்;

உன் திருவடிகளிலே அநந்யப்ரயோஜநராயிருப்பார்க்கும் உனது  நிஜஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிப்பியா நின்றாய்;

ஆச்ரித விரோதிகள் உன்னை அறியவொண்ணாதே எதிரிட்டு முடிந்துபோம்படி அவர்கட்கு தூரஸ்தனாயிரநின்றாய்;

இப்படி பல்வகையாகப்பரந்து நிற்கவல்ல ஆற்றல் உனக்கே உள்ளது- என்று ஈடுபடுகிறார்

———————————————

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46-

பதவுரை

தோடு பெற்ற

இதழ்களையுடைய
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாயினாலாகிய
அலங்கல்

மாலையானது
ஆடு

விளங்கப்பெற்ற
சென்னியாய்

திருமுடியையுடைவனே!
கோடு

ஸ்ரீபாஞ்சஜக்யாழ்வானை
பற்றி

தரித்து
ஆழி

திருவாழியாழ்வானை
ஏந்தி

ஏந்திக்கொண்டு
அம் சிறைபுள்

அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை
ஊர்தி

வாஹகமாக நடந்தாநின்றார்;
நாடு பெற்ற நன்மை

மற்ற பேர்கள் பெற்ற நன்மையை
கண்ணம் இல்லையேனும்

நான் பெற்றிலேனாகிலும்
காயினேன்

நீசனான அடியேன்
வீடுபெற்று

மோக்ஷத்தைப் பெற்று
இறப்பொடும் பிறப்பு அறுக்கும் ஆ

இறப்பதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தைத் தொலைக்கும் வகையை
சொல்

அருளிச் செய்யவேணும்.

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்-
இதழ்கள் உடைய குளிர்ந்த திருத் துழாய் மாலை சூடிய திரு அபிஷேகத்தை உடையவனாய்

கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்-
சங்கு சக்கரம் ஏந்தி கொண்டு கருட வாகனாகவும் உள்ள உன்னால்

நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும்
மற்ற பேர்கள் பெற்ற நன்மை நான் பெற வில்லை யாயினும்

நாயினேன் வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே
நீசனான அடியேன் மோஷம் பெற்று சம்சாரம் தொலைக்கும் வகையை அருளிச் செய்ய வேண்டும் –

நித்ய ஸூரிகளுடைய ஒலக்கத்திலே புக்குத் திளைக்கும்படியாக அருள வேணும் –
உன்னையே விச்சேதமாக அனுபவிக்கும் அடியார் குழாங்களை உடன் கூட வேண்டுமே-

அநாதிகாலம் இழந்தொழிந்த நான் இனியாகிலும் உய்யுமாறு அருள்செய்ய வேணுமென்கிறார்.

நாடுபெற்ற நன்மையாவது- திருத்துழாய் மாலையும் திருமுடியுமாக விளங்க நின்ற ஸமயத்தையும்

திவ்யாயுதபாணியாய்ப் பெரிய திருவடியின் மீதேறி எழுந்தருளின ஸமயத்தையும் அநபவிக்கப்பெற்ற நன்மை.

அந்த நன்மையை அடியேன் பெறாதிருந்தாலும் இனியாகிலும் இந்த ஸம்ஸாரபந்தம் அறும்படியான பாக்கியம் பெற்று

நித்யஸூரிகளுடைய திருவோலகத்திலே புக்குத் தினைக்கும்படியாக அருள்செய்ய வேணுமென்று வேண்டுகிறார்.

—————————————————————

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே –47-

பதவுரை

காரொடு ஒத்த மேனி

காளமேகத்தோடு ஒத்த திருமேனியையுடையனாய்
நங்கள் கண்ண

எங்களுக்கு அநுபால்யனான கண்ணனே!
விண்ணின் நாதனே

நித்யஸூரிகட்குத் தலைவனே!
நீர் இடத்து

(நீதி) திருப்பாற்கடலிலே
அரா அணை

திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே
கிடத்தி

பள்ளிகொண்டருளா நின்றாய்
என்பர்

என்று (ஞானிகள்) சொல்லுவார்கள்
அன்றியும்

அது தவிரவும் (நீ)
ஓர் இடத்தை அல்லை

ஓரிடத்தை இருப்பிடமாகவுடையையல்லை.
எல்லை இல்லை

(நீ உறையுமிடங்கட்கு) எல்லை இல்லை.
என்பர்

என்றும் சொல்லுவார்கள்
ஆதலால்

இப்படி உன் இருப்பிடம் ஸுல பமல்லாமையாலே
காயினேன்

மிகவும் நீசனாகிய அடியேன்.
சேர்வு இடத்தை தெரிந்து

ஆச்ரயிப்பதற்கு உரியஸ்தலத்தை (இன்னதென்று) தெரிந்துகொண்டு
இறைஞ்சும் ஆ

ஆச்ரயிக்கலாம்படியை
சொல்

அருளிச் செய்யவேணும்.

 

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்-
ஷீராப்தி நாதனாகவும் இருந்து–அதுக்கும் மேலே-

ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார நிலைகளில்
நீர் உகந்து அருளி இருக்கும் இடங்களுக்கு எல்லை இல்லையே

சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே
ஆஸ்ரியர்க்காக உறையும் இடத்தை தெரிந்து கொண்டு ஆஸ்ரயிக்கும் படியை அருளிச் செய்ய வேண்டும் –

சர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தியாய் இருக்கிறான் என்கிறார்-

கீழ்ப்பாட்டில் “வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமா சொல்” என்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி

எம்பெருமான், “ஆழ்வீர்! பரவ்யூஹ விபவங்களென்ற நமது நிலைகள் ஆச்ரயிக்கத்தக்க ஸ்தலங்களன்றோ?

அவற்றில் ஒரு நிலையைப் பற்றி யாச்ரயித்து நன்மை பெற்றுப்போம்” என்றருளிச்செய்ய;

அந்த நிலைகள் அடியேனுக்கு ஆச்ரயனார்ஹமான நிலங்களல்ல;

மிகவும் நிஹீகநனான அடியேன் ப்ரதிபத்திபண்ணி ஆச்ரயிக்கத்தக்கதோரிடத்தை அருளிச் செய்யவேணுமென்கிறார்.

ஓரிடத்தை அல்லை= இன்னஸ்தலமென்று குறிப்பிடக்கூடிய ஓரிடத்தை இருப்பிடமாக வுடைந்தாயிருக்கின்றாயில்லை.

ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதபடி அந்தர்யாமியாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தனாய் இராநின்றாய் என்றபடி.

எல்லையில்லை என்பர் = தஹாவித்யை,சாண்டில்பவிதத்யை, வைச்வாநரவித்யை உபகோஸலவித்யை என்றாப்போலே

சொல்லப்படுகிற வித்யைகளுக்கு எல்லையில்லாமையாலே அவற்றில் சொல்லப்படுகிற ஆச்ரணிய ஸ்தலங்கட்கும் எல்லை என்கை.

ஆகையால் = இப்படி, பரமபதம் தேசத்தால் விப்ரக்ருஷ்டமாய், க்ஷீராப்தி அதிக்ருதாதிகாரமாய்,

அந்தர்யாமித்வம் ப்ரதிக்கே ட்டாததாய் ஆச்ரயணீயஸ்தலம் அபரிச்சேத்யமாயிருக்கையாலே என்றவாறு.

அயோக்யனான அடியேன் “இது நமக்கு ஆச்ரயணார்ஹமான ஸ்தலம்” என்று ஓரிடத்தை நிஷ்கர்ஷித்து ஆச்ரயித்து

உஜ்ஜீவித்துப்போம்படியாக ஓரிடத்தைக் காட்டிக்கொடுக்க வேணுமென்று தலைக்கட்டுகிறார்.

ஓரிடத்தை = ‘ஓரிடத்தன்’ என்பதன் முன்னிலையுருவம்.

———————————————————

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

குன்றில் நின்று

திருவேங்கடமலையில் நின்றும்
வான் இருந்து

பரமபதத்தில் வீற்றிருந்தும்
நீள் கடல் கிடந்து

பெரிதான திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளியும்
மண் ஒன்று சென்று

இப்பூமண்டலத்தை ஒருகால் (த்ரிவிக்ரமனாய்) வியாபித்தும்
ஒன்று அதை உண்டு

மற்றொருகால் அப்பூமியை விழுங்கியும்
ஒன்று அது பன்றி ஆய் இடந்து

மற்றொருகால் அப்பூமியை வராஹருபியாய் இடந்தும்
கன்று சென்ற நாள் அவற்றுள்

கன்றாய் சென்ற நாட்களிலே
நல் உயிர் படைத்து

நல்ல உயிரான மனிதர்களை ஸ்ருஷ்டித்தும்
அன்று

அப்போது
அவர்க்கு

அந்த மனிதர்கட்கு
தேவு

(தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து

ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த

நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே

பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு

மன்னுமாமலர்

குன்றில் நின்று
திருவேங்கட திருமலையிலே நின்று
வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண் ஓன்று சென்று
ஒரு திருவடியால் -ஒரு காலத்தில் — திரிவிக்ரமனாய் எல்லை கடந்து அளந்து –
அது ஒன்றை உண்டு-
மற்று ஒரு கால் அந்த பூமியை விழுங்கியும்
ஓன்று இடந்து பன்றியாய்-
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு-
நன்றாய் சென்ற நாட்களிலே நல்ல உயிரான மனுஷ்யர்களை ஸ்ருஷ்டித்தும்
அளித்த வாதி தேவன் அல்லையே-
தங்கள் குணங்களுக்குத் தக்க தேவாதிகளை ஏற்படுத்தி அருளிய பரம புருஷன் நீயே என்கிறார் –

————————————

இது முதல் ஏழு பாசுரங்களால் திரு அரங்கம் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –

கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

————

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50-

————–

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

———–

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

———–

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –53-

பதவுரை

மோடியோடு

காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான்

வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு

ஸ்வஜனங்களோடு
கூடு

திரண்ட
சேனை

ஸேனையை
கொண்டு

அழைத்துக்கொண்டு
வெம் சமத்து

பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட

வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன்

பாணாஸுரனது
ஆயிரம் கரம்

ஆயிரம் கைகளை
கழித்த

அறித்தொழித்த
ஆதி மால்

பரமபுருஷனுடைய
பீடுகோயில்

பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு

காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது

திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்

 

மோடியோட-காளி உடன் –
இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்-வெட்கத்தை விளைப்பதான சாபம் பெற்ற ருத்ரனும்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட-ஸ்வ ஜனங்களோடு திரண்ட சேனையை அழித்துக் கொண்டு
பயங்கரமான போர் களத்தில் இருந்து வேகமாக ஓடி போக
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்-பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே
இலச்சை -லச்சை என்னும் வேதா சொல்லின் திருப்பு –

இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள்.

லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு.

சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.

—————————————————————-

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

பதவுரை

இலை தலை

இலைபோன்ற நுனியையுடைய
சரம்

அம்புகளை
துரந்து

பிரயோகித்து
இலங்கை

எல்லையினுடைய
கட்டு

அரண்களை
அழித்தவன்

அழியச்செய்த இராமபிரான்;
மலைத்தலை

(ஸஹ்யமென்னும்) மலையிலே
பிறந்து

பிறந்து
இழிந்து

அங்கு நின்றும் ப்ரவஹித்து
வந்து

நெடுக ஓடிவந்து
சந்தனம்

சந்தன மரங்களை
நுந்து

(போர்த்துத்) தள்ளாநின்றதாயும்,
குலைத்து

(குங்குமப்படர்கொடியை சிதிலப்படுத்தி
அலைத்து

அலசி
இறுத்து

முறிக்க
எறிந்த

(அக்கொடிகள் தம்மிலிருந்து) வெளிப்படுத்தின
குங்குமம் குழம்பினோடு

குங்குமத் துகள்களினாலாய குழம்புடனேகூட
அலைத்து ஒழுகு காவிரி

அலைமோதிக்கொண்டு பெருகா நின்றதாயுமுள்ள திருக்காவேரியுடைய
அரங்கம்

கோயிலிலே
மேய

எழுந்தருளியிருக்கிற
அண்ணன்

ஸ்வாமியாவர்.

 

இலைத்தலைச் சரம் துரந்து-
இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-
இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–
சக்யம் என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-
கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்தக் கொடிகளில் இருந்து வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –
அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்-

இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-

(இலங்கை கட்டழித்தவன் அரங்கமேய அண்ணல் என்றவாறு.

ஸ்ரீவைஷ்ணவர்கள் நாடோறும் நீராடும்போது இப்பாட்டை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

———————————————-

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

பதவுரை

மா மலர் மன்னு கிழத்தி

சிறந்த தாமரைப்பூவில் பொருந்திய பிராட்டுக்கும்
வையம் மங்கை

ஸ்ரீபூமிப்பிராட்டிக்கும்
மைந்தன் ஆய்

(விரும்பத்தக்க) யுவாவாய்,
பின்னும்

மேலும்
ஆயர் பின்னை

(கோபாலரான ஸ்ரீகும்பருடைய மகளான நப்பின்னைப் பிராட்டியினுடைய
தோள்

தோளோடே
மணம் புணர்ந்து

ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும்

அதுக்கு மேலும்
உன்ன பாதம்

உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை

என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து

பொருந்தவைத்து
கல்கினாய்

அருள்செய்த பெருமானே!
பொன்னி சூழ் அரங்கம் மேய

(நீ) காவிரி சூழ்ந்த கோயிலிலே எழுந்திருளியிருக்கிற
புண்டரீகன் அல்லையே

தாமரைபோன்ற அவயங்களையுடைய தேவனன்றோ.

மன்னு மா மலர்க் கிழத்தி-
சிறந்த தாமரை பூவில் பொருந்திய பிராட்டிக்கும்

வைய மங்கை மைந்தனாய்ப் பின்னும்-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் விரும்பத் தக்க யுவாவாய்

ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்-
கோபாலரான கும்பனின் மகள் நப்பின்னை பிராட்டி உடைய தோளோடு சம்ச்லேஷித்து இருக்கும்

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் பொன்னி சூழ் அரங்க மேய புண்டரீகன் அல்லையே –
அவர்களுடன் இருக்கும் திவ்ய அனுபவம் அசாதாரணம் என்று நினைத்து எனது ஹிருதயத்திலே நொடிப் பொழுதும் அகலாமல்
உனது திருவடிகளை வைத்து அருளினாய் -என்ன வாத்சல்யம்-

அவர்கள் இடத்திலே அன்பு மட்டம் என்று விளங்கும் படி அன்றோ உனது வாத்சல்ய அதிசயத்தாலே
அடியேனுடைய புன்மையைப் பார்க்காமலும் உன்னுடைய மேன்மையைப் பார்க்காமலும்
என்னை அங்கீ கரித்து அருளுகிறாய் –

எனக்கு மட்டும் இல்லாமல் சர்வ ஜனங்களும் சேவிக்க திருவரங்கத்தில் பள்ளி கொண்டாய்

புண்டரீகன்–தாமரைக் காடு பூத்த தாமரை போன்ற அவயவங்களுடன் இருப்பதாலேயே இந்த விழிச் சொல் –

லக்ஷ்மீபூமிநீளாதேவிகளுக்கு நாயகனாயிருந்துவைத்து உனக்கு அவர்களிடத்திலே அன்பு மட்டம் என்று

விளங்கும்படியாக என்னை அங்கீகரித்தருளின மஹோபகாரம் என்னே! என்கிறார்.

தாமரைப் பூவிலே பிறந்த பெரிய பிராட்டியாரென்ன, பூமிப் பிராட்டியென்ன, நப்பின்னைப் பிராட்டியென்ன

இவர்களுக்கு கொழுநனாய் இவர்களோடு திவ்யாநுபவங்களை இடைவிடாது அநுபவிக்கச் செய்தேயும்

அவ்வநுபவம் அஸாரம் என்றிட்டு, ஸூரிபோக்யான உன் திருவடிகளை நித்ய ஸம்ஸாரியாயிருக்கிற

என்னுடைய ஹ்ருதயத்திலே நொடிப்பொழுதும் விச்லேஷமின்றி வைத்தருளி என் பக்கலுள்ள ப்ரீதி விசேஷத்தைக் காட்டியருளினாய்;

உன்னுடைய வைலக்ஷணியத்தைப் பார்த்தாலும் என்னை விஷீகரிக்க ப்ராப்தியில்லை;

என்னுடைய புன்மையைப் பார்த்தாலும் விஷயீகரிக்க ப்ராப்தியில்லை;

இப்படியிருக்கச் செய்தேயும் வாத்ஸல்யாதிசயமன்றோ இப்படி செய்வித்தது.

என்னொருவனை விஷயீகரித்தது மாத்திரமேயோ?

காவிரி சூழ்ந்ததென் திருவரங்கத்திலே  கிடந்தருளிப் பரமயோக்யமான திவ்யாவயங்களை

ஸர்வஜந ஸேவ்யமாகக் காட்டிக் கொடுக்கும் மஹோபகாரகனமாயிருக்கின்றாயிறே.

புண்டரீகன் = புண்டரீகம்போன்ற அவயங்கள் நிறைந்து கிடக்கின்றமை பற்றிப் புண்டரீகன் என்று எம்பெருமானையே சொல்லுகிறார்.

—————————————————-

இது முதல் ஆறு பாசுரங்களால் திருக் குடந்தை பெருமாளை மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –

இலங்கை மன்னன் ஐந் தொடு ஐந்து பைந்தலை நிலத் துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-

பதவுரை

அன்று

முற்காலத்தில்
இலங்கை மன்னன்

இராவணனுடைய
ஐந்தொடு ஐந்து

பத்தாகிய
பை தலை

வலிய தலைகள்
நீலத்து உலக

பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க

(அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று

இலங்கையிற் புகுந்து
கொன்று

(அவனைக் கூட்டத்தோடு) கொலை செய்து
வென்றி கொண்ட

விஜயம் பெற்ற
வீரனே

மஹாவீரனே!
விலக்கு நூலர்

உடம்பிலே யஜ்ஞோபவீதத்தையுடையவரும்
வேதம் நாவர்

வேதங்களை நாக்கின் நுனியிலோ உடையரும்
நீதி ஆன கேள்வி யார்

(நல்லாசிரியர் பக்கலிலே) ஸாரமான அர்த்தங்களைக் கேட்டுணர்ந்தவர்களுமான வைதிகர்கள்.
வலம் கொள

வழிபாடுகள் செய்யும்படியாக
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருளா நின்ற
மாலும் அல்லையே

ஸர்வேச்வரனும் நீயன்றோ

 

பைந்தலை நிலத்துக-வலிய தலைகள் பூமியில் விழுந்து ஒழியவும்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் –பூணூல் தரித்த
வேத நாவர் -வேதங்களை நாவின் நுனியில் உடையவர் –
நீதியான கேள்வியார்-நல்ல ஆசரியர் பக்கல் சாரமான அர்த்தங்களைக் கேட்டு உணர்ந்த வைதிகர்களும்
வலம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-
வழி பாடுகள் செய்யும் படி குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே

இப்பாட்டுமுதல் மேல் ஆறு பரசுரங்களாலே, திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற படியை அநுபவிக்கிறார்.

—————————————————————-

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –-57-

பதவுரை

சங்கு தங்கு முன் கை நங்கை

(நித்ய ஸம்ச்லேஷத்தாலே) சங்கு வளைகள் பொருந்தியிருக்கப்பெற்ற பிராட்டியினுடைய
கொங்கை

திருமுலைத்தடத்திலே
தங்கல் உற்றவன்

விஹாரத்தை விரும்பின படுபாவியினுடைய (இராவணனுடைய)
அங்கம்

சரீரமானது
மங்க

மாளவேணுமென்று
அன்று சென்று

முன்பு (இலங்கைக்கு) எழுந்தருளி
அடர்ந்து

அவ்வூரை ஆக்ரமித்து
எறிந்த

(அவன் தலைகளை) அறுத்தொழித்தவனாய்.
ஆழியான்

கடல்போன்ற ச்ரமஹராமன திருமேனியையுடையவனான இராமபிரான்
கொஞ்கு தங்குவார் குழல்

நீண்ட கூந்தலையுடையவர்களான
மடந்தையார்

திவ்யஸுந்தரிகள்
குடந்தை

அவகாஹிக்கப்பெற்ற
நீர்

தீர்த்தமானது
பொங்கு

வ்ருத்தியடைந்திருக்கப்பெற்ற
தண் குடந்தையுள்

குளிர்ந்த திருக்குடந்தையிலே
கிடந்த

பள்ளிகொண்டிராநின்ற
புண்டரீகன்

ஸுந்தராங்கன்.

சங்கு தங்கு முன்கை நங்கை-நித்ய சம்ஸ்லேஷத்தாலே-சங்கு வளைகள் பொருந்திய பிராட்டி
கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க-ராவணன் சரீரம் மாள

வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
பரிமளம் பொருந்திய -நீண்ட கூந்தலை உடைய திவ்ய ஸூந்தரிகள் –

மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே என்றது போலே –மடைந்தமார் -திவ்ய ஸ்த்ரீகளை அருளிச் செய்கிறார்-

புண்டரீகன் -ஸூந்தராங்கன் –

“கொங்கைதங்கு வார்குழல் மடந்தைமார்” என்றது லௌகிக ஸ்த்ரீகளையல்ல;

“மதிமுக. மடந்தைய ரேந்தினர்வந்தே” என்று ஆழ்வாரருளிச் செய்தபடி பரமபதத்திலே

எதிர்கொண்டழைக்கு மலர்களான திவ்யஸுந்தரிகளைச் சொல்லுகிறது.

—————————————————————–

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –58-

பதவுரை

மரம் கெட கடந்து

யமனார்ஜுந ஸ்ருக்ஷங்கள் முடியும்படி கடைகற்று.
மத்த யானை அடர்ந்து

(குவலயாபீடமென்னும்) கொழுத்த யானையை மத மொழித்து
மத்தகத்து

(அவ்வானையின்) தலைமேல்
உரம்கெட புடைத்து

(அதன்) வலிமான ப்ரஹாரங்கள் கொடுத்து
ஓர்கொம்பு ஒசித்த உத்தமர்

(அதன்) தந்தத்தை முறித்தெறிந்த பரமபுருஷனே!
துரங்கம்

குதிரை வடிவங்கொண்டு  வந்த கேசியென்னுமசுரனுடைய
வாய்பிளந்து

வாயைப்பிளந்து (அவனையொழித்த பெருமானே)
மண் அளந்த பாத!

உலகங்களை யளந்து கொண்ட திருவடிகளையுடையோனே! (நீ.)
வேதியர் வசம் கொள

வைதியர்கள் தங்கள் தங்களுடைய விருப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு

குடந்தையுள் கிடந்தமால் அல்லையே.

மரம் கெட நடந்து-யமளார்ஜுன மரங்கள் முடியும் படி நடந்த
அடர்த்து மத்த யானை-குவலயாபீடம் என்ற கொழுத்த யானையின் மதம் ஒழித்து
மத்தகத்து-அதன் தலையிலே

உரம் கெடப் புடைத்து-அதன் வலி மாள பிரகாரங்கள் கொடுத்து
ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா-
துரங்கம் வாய் பிளந்து-குதிரை வடிவம் கொண்ட கேசி என்னும் அரக்கனை வாயைப் பிளந்து அவனை ஒழித்தவனை
வேதியர் வரம் கொளக் குடந்தையுள் கிடந்த–வைதிகர்கள் தங்கள் தங்கள் விருப்பங்களைப் பெற்றும் கொள்ளுமாறு
கிடந்தது அருளுகிறான் –

——————————————————————

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-

பதவுரை

சாலிவேலி

செந்நெற் பயிர்களை வேலியாகவுடைய
தண் வயல் தடம் கிடங்கு

குளிர்ந்த கழனிகளென்ன பெரிய அகழிகளென்ன
தண்

குளிர்ந்ததான
குடந்தை

திருக்குடந்தையிலே

மேய எழுந்தருளியிராநின்ற

கோவலா

க்ருஷ்ணனே!
காலநேமி

காலநேமியென்ன
வக்கரன்

தந்தவக்ரனென்ன
பூபொழில் கோலம் நீடு மாடம்

புஷ்பித்த சோலைகளென்ன அழகாக ஓங்கின மாடங்களென்ன இவற்றையுடைத்தாய்
கரன் முரன்

கொடியவனான முரனென்ன இவர்களுடைய
சிரம் அவை

தலைகளானவை
காலனோடு கூட

யமலோகம் போய்ச் சேரும்படியாக
வில்குனித்த

வில்லை வளைத்த
வில் கை

அழகிய திருக்கையையுடைய
வீரனே

தனி வீரனே! (என்று ஏத்துகிறார்)

சாலி வேலி -தண் வயல்–செந்நெல் பயிர்கள் வெளியாக உடைய வயல்கள்
தட கிடங்கு பூம் பொழில்-பெரிய அகழிகள் புஷ்பங்கள் மிக்க சோலைகள்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா-அழகிய ஓங்கிய மாடங்கள்
கால நேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-தலைகளை யம லோகம் சேரும்படி செய்த
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே-வில்லை வளைத்த –

கால நேமி -ராவணனின் மாதுலன் -தாரகாசுர யுத்தத்தில் கொல்லப் பட்டவன்
தந்த வக்ரன் -ருக்மிணி பிராட்டியை சுவீகரிக்கும் பொழுது எதிர்த்த அரக்கன்
முரன் நரகாசுரனின் மந்த்ரி -இவர்கள் மூவரும் கிருஷ்ணனால் வதம் செய்யப் பட்டார்கள்
கரன் -ராம திருவவதாரத்தில் வதம் செய்யப் பட்டவன்-

காலநேமி யென்பவன் இராவணனுடைய மாதுலன்;

இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன்,

வக்கரன் – தந்தவக்ரன்; தத்துவக்த்ரன் என்று சொல்வதுமுண்டு.

கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியை ஸ்வீகரித்தருளினபோது எதிர்த்து வந்து போர்செய்த அரசர்களில் இவனொருவன்,

முரண் = நரகாசுரனுடைய மந்திரி. கரன் என்று ஒரு ராக்ஷணுண்டாகிலும் அவன் இங்கே விவக்ஷிதனல்லன்;

அவன் ராமாவதாரத்தில் கொல்லப்பட்டவன்;

இப்பாட்டில் க்ருஷ்ணாவதார சரிதங்கள் அநுஸந்திக்கப்படுவதால் கரன் என்பது முரனுக்கு அடைமொழியாயிற்று.

*** என்ற வடசொல் க்ரூரனென்ற பொருளையுமுடையது.

“சிரமவை காலனோடுகூட” என்றவிடத்து “அறுத்து” என்றொரு வினையெச்சத்தை வருவித்துக்கொண்டு உரைத்ததுமொன்று.

——————————————————————–

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –60-

பதவுரை

செழும் கொழும் பெரும்பணி

இடைவிடாதே தாரைகளாய் விழுகிற கனத்த மூடுபனியானது.
பொழிந்திட

பொழிந்தவளவிலே
உயர்ந்த வேய் விழுந்து

முன்பு ஓங்கியிருந்த மூங்கிற்பணைகள் (அப்பணியின் கனத்தாலே) தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து

(பிறகு ஸூர்யகிரணங்களாலே அப்பனி) உலர்ந்த பின்பு
எழுந்து

(அம்மூங்கிற்பணைகள்) உயரக் கிளம்பி
விண் புடைக்கும்

விண்ணுலகத்தை முட்டும்படியான உந்நதியை யுடைய
வேங்கடத்துள்

திருவேங்கடமலையிலே
நின்று

நின்றருளி
தேன்

வண்டுகளானவை
எழுந்து இருந்து பொருந்து

மேலே கிளம்புவதும் கீழே படிந்திருப்பதுமான நிலைமைகளோ பொருந்தியிருக்கப் பெற்ற
பூ பொழில்

புஷ்பங்கள் நிறைந்த சோலைகள்
தழை கொழும்

தழைத்தோங்கா நிற்கப்பெற்றதாய்
செழும்கடல்

செழுமை தங்கிய தடாகங்களையுடைத்தான்
குடந்தையுள்

திருக்குடந்தையிலே
கிடந்த

திருக்கண்வளர்ந்தருளா நின்ற
மால் அல்லையே

பெருமாள் நீயிறே.

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட-இடை விடாத தாரைகளாய் விழுகிற கனத்த மூடு பனியானது பொழிந்த அளவிலே
வுயர்ந்த வேய் விழுந்து-முன்பு ஓங்கி இருந்த மூங்கில் பனைகள் அந்த பனியின் கனத்தால் தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து-பின்பு சூர்ய கிரணங்களால் உலர்ந்து -அந்த மூங்கில் பனைகள் உயர கிளம்பி
விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்-வண்டுகள் மேலே கிளம்புவதுவும்
கீழே படிந்தும் இருக்குமாறு -புஷ்பங்கள் மிகுந்த சோலைகள் தழைத்து ஓங்கி
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-செழுமையான தடாகங்கள் உடைய -திருக் குடந்தையுள்
நின்றும் கிடந்தும் சேவை அருளுகிறான்

நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே-
கிடந்ததோர் கிடக்கை கண்டு எங்கனம் மறந்து வாழ்வேன்-
வ்யாமோஹத்தால் நின்றும் கிடந்தும் ஆசைப்பட்டார்க்கு சேவை அருளுகிறாயே –

“நிலையார நின்றான் தன் நீள்கழலே யடைநெஞ்சே” என்று நிலையழகிலே ஈடுபடுவார்க்கும்

“கிடந்ததோர் கிடக்கைகண்டு மெங்ஙனம் மறந்து வாழ்கேன்?” என்று சயகத் திருகோலத்திலே ஈடுபடுவார்க்கும்

போக்யமாகத் திருவேங்கடமலையில் நின்றருளியும் திருக்குடந்தையில் சாய்தருளியும் போருகிறது.

அடியார் பக்கலுள்ள வ்யாமோஹத்தின் காரியமன்றோ வென்கிறார்.

உலர்ந்து= பணி உரை; எச்சத்திரிபு.

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்