Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ பர்த்ருஹரி அருளிச் செய்த நீதி சதகம்‌-

June 11, 2026

கி. பி. 7ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்தவராகக்‌ கருதப் பெறும்‌ பர்த்ரு ஹரி இந்நூல்‌ வாயிலாக மனித குலம்‌ மேன்மையுற நூறு நீதிக் கருத்துக்களைக்‌ கூறி யுள்ளார்‌. மிக உயர்ந்த கருத்துக்கள்‌ செறிந்த நீதிகளை
உணர்த்தும்‌ இந் நூலின்‌ சமஸ்கிருதப் பாக்களை அமரர்‌ ஓஒ.என்‌. அப்பா ஸ்வாமி அய்யரவர்கள்‌ மூல ஸ்லோகங்‌களுக்கு எந்த மாறுபாடுமின்றி சுவை மிகு தமிழ்ப்‌ பாக்களால்‌ மொழி பெயர்ப்பு செய்துள்ளார்‌.-இதே போல் ஸ்ருங்கார சதகமும் வைராக்ய சதகமும் உண்டு

அறிவும்‌ மகிழ்ச்சியும்‌ உருவமாய்‌ அமைந்து
திசையாற்‌ பொழுதால்‌ தீர்வு பெறலில்லாச்‌
சுயவனு பவமே சிறந்த அளவையாம்‌
சாந்தமாம்‌ ஒளியைச்‌ சிறப்புற வணங்குவாம்‌.

அழுக்கறுத்‌ துகவார்‌ அறிவு நிறைந்தவர்‌ விழுப்பமார்‌ விரகர்‌ நகுதலோ டிகழ்வர்‌
கற்றறி யாதவர்‌ கருத்துணர்ந்‌ தாய்வரோ உற்றநம்‌ உணர்மொழி உடலினுட்‌ புதைந்தது.–மூர்க்க பத்ததி-

அறிவில்‌ லாதவர்‌ எளிதினில்‌ மகிழ்வர்‌;
அறிவிற்‌ சிறந்தவர்‌ அதனி னின்புறுவர்‌;
நன்றுணர்ந்‌ தகங்கொளா நயனில்‌ கலைஞரை
பொன்புரை கலைமகள்‌ கொழுநனும்‌ பூரியான்‌.

சுறாப்பல்‌ வரிசையிற்‌ கவரலாம்‌ முத்தம்‌;
இராப்பகல்‌ கதறும்‌ இமிழ்கடற்‌ றிரைமேல்‌
உராய்நடந்‌ தேகிக்‌ கடக்கலாங்‌ கடலை;
அஞ்சுற்‌ றெனத்தலை புனையலாம்‌ சனவரா;
பிடித்ததே பிடியாய்ப்‌ புகல்செயும்‌ மூர்க்கரை
இடித்துக்‌ காட்டிமெய்‌ யுணர்த்துதல்‌ எளிதல்‌.

மணலைப்‌ பிசைந்துநெய்‌ யெடுக்கவும்‌ முயலலாம்‌
அனலென உடற்றும்‌ அருநீர்‌ வேட்கையைக்‌
கானல்நீர்க்‌ காட்சியால்‌ தணித்தலு மாகும்‌;
ஆனமட்டொருவன்‌ அலைந்து திரிந்துபின்‌
கானுறு முயற்கொம்‌ படையினு மடையலாம்‌;
தான்பிடித்‌ ததுபிடி யென்பவர்‌ துரிசற
நாமெடுத்‌ தோதல்‌ நவிலவும்‌ படுமோ

அமுதெனப்‌ பாயும்‌ அறியவின்‌ மொழிகளால்‌
அறிவிலா னொருவன்‌ அகம்‌8ர்‌ திருந்திடல்‌
தாமரைத்‌ தண்டின்‌ துன்னு நன்னூலால்‌
தாம்புலி தன்னைத்‌ தளைத்தலே யாகும்‌;

அனிச்சப்‌ பூவின்‌ அரியமெல்‌ லருகால்‌
மணிசெதுக்‌ கமைத்தல்‌ மற்றுவே றென்சொல்‌ 9
ஒருதுளித்‌ தேனால்‌ ஓதமார்‌ உவரியை
உறுசுவைத்‌ தாக்குதற்‌ குவமை யாக்கிடுமே.

அறிவிலார்‌ தமக்கே யழகிய போர்வையாம்‌
விதியினா லமைந்ததாம்‌ விரகுறு மெளனம்‌;
சான்றோர்‌ குழுவிற்‌ சார்ந்திடும்‌ போதில்‌
ஆன்ற வோரணியா மறிவிலார்க்‌ கமைவே.

சிற்றறி வினனாய்ச்‌ சிதறுறும்‌ சமயம்‌ |
உற்ற மதத்தால்‌ உணர்ந்தமென்‌ றுகந்தேன்‌;
நற்றிற வறிஞர்பால்‌ நவின்றபின்‌ சிற்சில
கற்றில னெனக்கண்‌ டற்றது மதஜுரம்‌.

இழிஞ நிழிய பொருள்தனை வெளவுவர்‌
இழிவுள உயிர்ப்பொறை யறிகிலர்‌ ஈனம்‌
கழிமுடை நாற்றத்‌ தழுக்குறும்‌ எலும்பை
பழிப்புறும்‌ தெருநாய்‌ பாய்ந்துணும்‌ போழ்தில்‌
விழுப்பமார்‌ இந்திரன்‌ விரும்பி யணுகினும்‌
கெழுத்கை யிலதாய்க்‌ கேடுறும்‌ பாவம்‌.

வானினின்‌ நிழிந்துறும்‌ வரநதி கங்கை
தான்வந்‌ தடைந்தது தகைமைசால்‌ சிவன்றலை;
பசுபதி முடியினின்‌ றகன்றுபர்‌ வதமுற
உயர்மலை முடியினின்‌ றிறங்கியூர்ந்‌ ததுதரை

தரையினின்‌ றோடி யணைந்தது கடலை
வரைவொளன்‌ நின்றிப்‌ பலநெறிச்சென்று
உரைசால்‌ கங்கையு முயர்வை யிழந்தது
பகுத்தறி வின்றிப்‌ புன்னெறிப்‌ பட்டு
தகுந்ததம்‌ பதவியிற்‌ றாழ்ந்தவர்‌ பலரே.

ஒவ்வொரு நோய்க்கும்‌ மருந்துள துலகில்‌;
செவ்விதாம்‌ அறிவிலார்‌ சிறக்க ஏதுளதோ 2
நெருப்பை அணைக்கலாம்‌ நீரி னுதவியால்‌;
எறிக்கும்‌ வெயிலைத்‌ தணிக்கலாம்‌ குடையால்‌; ,
தெறுக்குந்‌ தோட்டியால்‌ தாண்டலாம்‌ யானையை;
காளை கழுதையைக்‌ கழித்தலாம்‌ கழியால்‌;
ஆளைத்‌ தெறிநோ யகற்றலாம்‌ மருந்தால்‌;
மந்திர தந்திரத்தால்‌ மாற்றலாம்‌ நஞ்சை
தந்திர மொன்றிலைத்‌ தணிக்க மடமையை.

வித்வத்‌ பத்ததி

நூல்பல உணர்ந்து நுவல்வல அறிஞர்‌
நேர்படும்‌ இன்சொலால்‌ நிகழ்த்துவர்‌ தெளிவு
அத்தகை யறிஞர்‌ மிடியினும்‌ அரசரே;
வித்தக வன்மையின்‌ விளங்குவர்‌ மதியால்‌;
நேர்படா வரசால்‌ நிபுணர்‌ வறிஞராம்‌
இரத்தினச்‌ சோதகன்‌ இனமில னாயின்‌
சிறப்புள ஒளிக்கலும்‌ சீர்பெற விலையே.
சிறப்பிலா திருப்பினும்‌ சிறக்குநா ளுறுமே.

கல்வியென்‌ றோதும்‌ கரந்த உட்பொருள்‌
கள்வன்‌ றனக்குக்‌ கையுற விலையே;
எப்போதும்‌ அது அளித்திடும்‌ தென்பை
எப்போதும்‌ அதால்‌ இயம்பொணா வின்புறும்‌
அற்போ டோதுவோர்க்‌ கலித்தார்‌ பெருகிடும்‌
கற்ப முடிவிலும்‌ குறைவுறல்‌ இலையே.
இத்தகை யோரை யிறைவரே போற்றுமின்‌
வித்தக வறிஞரை விரக நிகழ்வரோ 9
அவர்தம்‌ மிடத்தில்‌ அழுக்கா றெவர்க்குரும்‌
எவர்க்கு மவரிட மன்பே வளர்க.

உயர்வுள வுண்மைகள்‌ உற்றுணர்‌ புலவரை
உயர்வுற்‌ றிணங்குறும்‌ ஆடென மதியேல்‌;
புல்லினிற்‌ புல்லிதாய்க்‌ கருதும்‌ பொருளால்‌
புல்லிப்‌ பிணைத்திடல்‌ பலித்திடும்‌ செயலை;
புதுமதப்‌ பொழிவால்‌ கவுளலைப்‌ புறுங்கயம்‌
சிதைமரை நாளநூற்‌ சிடுக்கினிற்‌ றளையா.

பால்நீர்க்‌ கலப்பிற்‌ பால்பிரித்‌ திடுந்திறம்‌
பால்நிற அன்னப்‌ புள்விட்‌ டகலுமோ 2
அனந்தா னனத்துடன்‌ ஆரச்‌ சினக்கினும்‌
அனத்தான்‌ பொய்கையை வற்றிடச்‌ செயலால்‌
வனச மலர்த்திரள்‌ விளையாட்‌ டயர்வுறும்‌;
இதற்குமே லிடரும்‌ பிரமனா லியலுமோ
எதற்கும்‌ மேலோர்‌ செறினு மிளையவர்‌
தமக்குறு திறமையிற்‌ பின்வாங்‌ குவரோ

ஆண்மகன்‌ றனக்கு அழகைத்‌ தருவன
தோள்வளை மதியொளித்‌ தொங்க லலவே
குளிப்பு முழுக்கல கும்மெனும்‌ பூச்சல;
அளிப்பன சிறப்பை அழகிய மலரல
கல்விசேர்‌ சொற்றிறம்‌ ஒன்றே கவினணி
பல்வகைப்‌ பிறவணி பழுதுறு மலவோ ?

கற்றோ னுக்கே கல்வியா லழகுறும்‌
கற்ற தாங்கல்வி காத்துள மறைபொருள்‌
கற்ற தனாலே க$தித்தஇிடு மின்பிசை;
உற்ற வாசாற்கு முயர்ந்ததோ ரொளியே;
மற்றோர்‌ நாட்டிலு முற்றதோ ர௬ுறவாம்‌;
பற்றுறுந்‌ தெய்வம்‌ பலவினும்‌ சிறந்ததே;
வெற்றிவேல்‌ மன்னரும்‌ பற்றொரு வணங்குவர்‌
நற்றுங்‌ கல்வி நண்ணா தாற்கு
உற்ற வுயர்தனம்‌ உறுவது மிலையே;
இத்திறத்‌ தாலே கற்றிலா ராடே.

பொறுமை யிருந்தால்‌ போர்க்கவசம்‌ ஏன்‌?
தெறுஞ்சினம்‌ இருந்தால்‌ தெவ்வர்‌ எதற்கோ 2
பங்காளி யனைய புல்லோர்‌ இருந்தால்‌
வெங்கன லென்னும்‌ வெம்பகை யெதற்கு ?
நண்பரி ருந்தால்‌ நன்மருந்‌ தெதற்கு ?
பண்பிலா ருண்டெனில்‌ பரம்புவே றெதற்கு 9
புரையிலாக்‌ கல்வி பொருந்தி யவற்கு
நிறைபொருட்‌ செல்வம்‌ நீங்கிலென்‌ குறையே.

ஒன்பது வகைத்தாம்‌ உலகுிய லோர்வு
அன்புடன்‌ நடத்தல்‌ உற்றார்‌ உறவை
பணிவிடை யாளர்பால்‌ பரவிய கிருபை
பணிபோற்‌ பகையிடம்‌ பதுங்கி வஞ்சித்தல்‌
நல்லோ நிடத்தில்‌ நயமார்‌ அன்பு
வல்லர சிடத்தில்‌ வணங்கு விசுவாசம்‌
கற்றசான்‌ றோர்பால்‌ கரவிலாத்‌ தன்மை
உற்றப கைவர்பால்‌ உளந்தள ராமை
முதியோர்‌ தம்மிடம்‌ முற்றிய பொறுமை
நிதிபோல்‌ மனையால்‌ நிகரிலா மதிப்பே.

நல்லோர்‌ பழக்கம்‌ நல்காப்‌ பயனெது 9
ஒல்லும்‌ வகையால்‌ ஒழித்திடும்‌ மதிநோய்‌
பேசும்‌ மொழிகளில்‌ புகுத்திடும்‌ மெய்ம்மை
நேசமார்‌ மதிப்பைத்‌ தந்திடும்‌ நன்கு
பகுத்தறி வதனைப்‌ பல்கிடச்‌ செய்யும்‌
வகுக்கும்‌ திசையெல்லாம்‌ வழங்கிடும்‌ நல்லிசை.

பொருட்சுவைச்‌ சித்தராம்‌ புலவோர்‌ தமக்கு
அருட்டிற வெற்றி யமைந்திட என்றும்‌
நல்லிசை யுருவாய்‌ நிறைந்தவர்‌ உடற்கு
இல்லையே மூப்புச்‌ சாக்காட்‌ டச்சம்‌.

மானசெளர்ய பத்ததி

மதங்கொள்‌ யானையின்‌ மண்டையை யுடைத்து
ASC செய்‌ ததனின்‌ செந்நீர்‌ சதையிவை
உண்பதே நோக்கமாய்‌ உறுதிகொள்‌ வயமா
நண்ணும்‌ ஊக்கம்‌ முழுதும்‌ நலிந்தும்‌
உண்ணா தளைத்தும்‌ மூப்பால்‌ ஒடுங்கியும்‌
விண்ணுறு வரைநாள்‌ கிட்டினு மஃது
புல்லுண்டு வாழும்‌ புன்மை யுறாது
வல்லாண்‌ மையாக வயத்துடன்‌ வீயும்‌2

உணவிடு வோனை எதிர்நோக்‌ கிடிலோ
தனதுடல்‌ தரைபட மல்லாந்‌ திடும்‌ நாய்‌
வயிற்றையும்‌ முகத்தையும்‌ வயங்கக்‌ காட்டி
கயற்றிய வாலை யாட்டுங்‌ கரைந்து
கால்கள்‌ தரையில்‌ மோதுறக்‌ குதித்து
சால்புள நன்றியைக்‌ சிறக்கக்‌ காட்டும்‌;
யானையிர்‌ சிறந்ததோ எஜமானனைப்போல்‌
தான்தன்‌ போஷகன்‌ தன்னைக்‌ கண்ணுறும்‌
செல்வ மாகப்‌ பலமுறை சொன்னபின்‌
மெல்ல மெல்ல மடுக்கும்‌ கவளம்‌.

பிறப்பிறப்‌ பமைந்த பீழையாம்‌ சுழலில்‌
இறந்தவன்‌ யாரோ பிறவா திருப்பவன்‌ 9
எவனது பிறப்பால்‌ குடிமே லுறுமோ
அவனே பிறப்பவன்‌, மற்றவர்‌ பிறப்பெவன்‌ –

நசையால்‌ மெலிந்த பரதையாம்‌ தெருநாய்‌
வசையுறும்‌ அழுக்கும்‌ கொழுப்புஞ்‌ செறிந்த
தசையிலா எலும்பையும்‌ தாவிக்‌ கடிக்கும்‌;
பசிதணி உணவுப்‌ பற்றின்‌ றேனும்‌
நசையால்‌ மென்றிடும்‌ நரம்படர்‌எலும்பை;
ஒள்ளிதாம்‌ சிங்கம்‌ ஒறும்‌ பசியுற்றும்‌
குள்ளை நறியது கைக்குற்‌ றதேனும்‌
பிள்ளா ததனைப்‌ பிடித்திடும்‌ கயமே;
பசிநோய்‌ வருத்தினும்‌ பசியுறும்‌ பிராணிகள்‌
உச௫ிதமாம்‌ தந்தமக்‌ குரியதே நாடும்‌.

பூங்கொத்‌ தவைபோற்‌ பூதலந்‌ தன்னுள்‌
ஒங்கிய நிலையுள விரண்டே வறிஞர்க்கு நல்லோர்‌
தலைமிசை நிலைபெறச்‌ சிறத்தலும்‌
கல்லார்‌ கானற்‌ கன்றி வீழ்தலுமே.

பகலிராத்‌ துலக்கும்‌ பகலவன்‌ மதியை
இகலுள ராகுவாம்‌ இறுந்தலை விழுங்குவன்‌
பருவநா ளிரண்டிலும்‌ பண்ணுவன்‌ புசிப்பு
உருவமார்‌ வியாழ னாதியாங்‌ கோளொரூஉம்‌
வீரியம்‌ விரும்பு விறலோ ஸிராகு
சீரிய சிந்தையிற்‌ பகையா னிவற்றை.

ஆதி சேடனாமை வராகம்‌;
பாது காக்குமிறை பகவன்‌ அம்சமாம்‌;
அகன்ற பணாமுடி அகிலம்‌ சுமந்தது
புகன்ற வவ்வரவைப்‌ புறம்பெற்‌ றதாமை;
தகவுள விவற்றைச்‌ சுமந்தது வராகம்‌
வைத்த பாரந்‌ தாங்கிய வயவரை
எய்த்த விவ்வுலகில்‌ ஏற்றுவர்‌ பலரும்‌;
வீரர்கள்‌ செயல்கள்‌ வியந்தக்‌ கனவே.

இந்திரன்‌ குலிசம்‌ தந்தையை எறிக்கையில்‌
வந்துறு துயரால்‌ பனிவரை வருந்துறத்‌
தன்னுயிர்‌ தக்கக்‌ கடலொளி மைநகம்‌
மன்னுங்‌ கடலில்‌ மாய்ந்ததேல்‌ மானமாம்‌
மான செளரியம்‌ மன்னுமோர்‌ மன்மகன்‌
தானவர்க்‌ குதவுறா துயிர்பெறல்‌ தகவோ 9

சூரியகாந்த மென்னுஞ்‌ சிலைப்பொருள்‌
வீரியன்‌ வெயிலவன்‌ கதிருறிற்‌ கதழ்ந்திடும்‌;
ஊக்கமும்‌ மானமும்‌ உற்றவோ ராண்மகன்‌,
தூக்குறல்‌ தகுமோ பிறர்செயும்‌ பழிப்பை.

இளஞ்சிங்‌ கமாயினு மிபந்தனைக்‌ கண்ணுறில்‌
மதம்வடி மண்டையிற்‌ பாய்ந்தடித்‌ தொறுக்கும்‌;
சவுரிய முடையார்‌ செய்வர்‌ துணிசெயல்‌
கவுரவமதுவே கரந்தொடுங்‌ குவதல்‌
ஆண்டுக்‌ குறைவினால்‌ ஆண்மை குறையுமோ 9
பூண்டிடும்‌ பெருஞ்செயல்‌ பிறப்புறு மிடலே.

அர்த்த பத்ததி

பணமொன்‌ நறின்றேல்‌ புல்லாம்‌ எல்லாம்‌
கனமாம்‌ குடிமை நரகுற விடுவர்‌;
நற்குணம்‌ பலவும்‌ நீடுமே அதன்‌$ழ்‌;
நன்னெரி யதுவே நெடுங்குன்‌ நிழிவுறும்‌;
நற்குடி யோமெனும்‌ நலஞ்செய்‌ மானம்‌
ஏற்குறு பஞ்சென எரியுற்‌ றிடுமே
முரண்சேர்‌ வலிமை முவங்இடிக்‌ கிரையுறும்‌
அருணாம்‌ பலவும்‌ அகன்றிட நேரினும்‌
பணமாம்‌ ஒன்றையே பரவுவர்‌ கயவர்‌.

பொன்னுடை யானே பெருங்குடிப்‌ புகல்‌ பெறும்‌
மன்னிய செல்வம்‌ மிகுந்திடில்‌ மாண்குடி
உன்னுங்‌ கல்விமான்‌ உயர்நிதி யுடையோன்‌
பன்னும்‌ மறைவலான்‌ உயர்நிதி யுடையோன்‌
பன்னும்‌ மறைவலான்‌ பணம்நிறைந்‌ தவனே;
நல்லியல்‌ பறியும்‌ நுட்பமும்‌ அவனதே
ஒல்லும்‌ வகையா லோதுவோ னவனே
பார்வைக்‌ கழகன்‌ பணமுள்‌ ளவனே
ஏர்மட்‌ டுமுறில்‌ எளியவள்‌ அலவோ 9
பல்வகைப்‌ பண்பும்‌ பணத்தை நாடிடுமே.

பன்னிரு விதங்களில்‌ கேடுறும்‌ புவியில்‌;
கசடுறுமமைச்சால்‌ கெடுவன்‌ வேந்தன்‌;
அசடுகள்‌ சேர்க்கையால்‌ அழிவன்‌ துறவி;
செல்லங்‌ கொடுத்தால்‌ சீர்கெடும்‌ சந்ததி;
நல்லநூற்‌ பயிற்சிக்‌ குறைவால்‌ மறையவன்‌
கெட்ட சந்ததியால்‌ கேடுறும்‌ தலைமுறை;
கெட்டவர்க்‌ குழைத்தால்‌ கேடுறும்‌ நடத்தை
நாணமும்‌ ஒழுக்கமும்‌ நகுகுடி யாற்கெடும்‌;
காணுறுங்‌ கவலை குறைவுறிற்‌ க்ருஷிகெடும்‌;
தூரதேசஞ்‌ செலிற்‌ றொலைந்திடு மன்பு;
நல்லுணர்‌ வற்றால்‌ நட்புக்‌ குறைவுறும்‌;
நடுநோக்‌ கற்றிடில்‌ நலிந்திடும்‌ வாழ்வு.

செல்வஞ்‌ செலற்கு மூன்றே வழியுள
நல்வழி யளித்தல்‌ நுகர லளித்தலே;
கொடையும்‌ நுகர்வும்‌ கைகூ டாவிடில்‌
அடுதலாங்‌ கடைவழி யதையே யடையும்‌.

கட்டளைக்‌ கல்லில்‌ தேய்த்தா மரதனம்‌,
முட்டிய முரணி லூறுபெறு வெற்றியன்‌,
மும்மதம்‌ பொழிதலால்‌ முரண்‌ குறை யானை,
அம்பொழி லிலையுறு அழகிய காலம்‌
அம்பு வடிந்துறும்‌ அறல்படி யாறுகள்‌,
எண்ணிரண்‌ டவைகளில்‌ ஒரு பிறைத்‌ தேய்பிறை,
பண்புறு மிளம்பெண்‌ பதிசேர்ந்‌ திளைத்தமை
எளியவர்க்‌ களித்தலால்‌ அளிதரும்‌ ஏழமை
ஒளியுறும்‌ இளைப்புகள்‌ இவைபல அழகே.

மிக்க பசியால்‌ வருந்திடும்‌ மிடியன்‌
தக்கதோர்‌ கைபிடித்‌ தானியம்‌ விரும்புவான்‌
அநீத வறிஞனே அளவிலாப்‌ பொருள்பெறில்‌
இந்தப்‌ புவியையு மிகழ்வன்‌ புல்லென;
ஆகவே பொருட்பால்‌ அற்பும்‌ வெறுப்பும்‌
ஆகும்‌ நிலைமைக்‌ கேற்கவே மாறிடும்‌;
செல்வரின்‌ பதவி சிறப்பதற்‌ கேற்ப
அல்கும்‌ அகலும்‌ பொருட்பால்‌ மதிப்பே

மன்னா முறைகேள்‌ நிலப்பசுப்‌ பால்பெற
கன்றாப்‌ போற்றல்போல்‌ காத்திடிவ்‌ வவனியை;
ஓயா விழிப்புடன்‌ உலகினைப்‌ புரந்தால்‌
ஓவாப்‌ பயன்தரு முயர்ந்தகற்‌ பகமென.

அரசவைத்‌ தந்திர மதிசய வெதிரிடை
விரவுறும்‌ விலைமகள்‌ போலத்‌ திரிவுறும்‌
உண்மை பொய்மை கடுமை மென்மை
கொடுமை கருணை கடுஞ்செட்‌ டுதாரம்‌
ஓயாச்‌ செலவு ஓயா வரும்படி.

பின்வரு மறுபயன்‌ போற்றா தார்க்கு
மன்னரை மன்னி யுறுவதென்‌ மகிழ்வு 2
சொன்னசொல்‌ நிறைவுறல்‌ மன்னு மிசைபெறல்‌
உன்னுமொண்‌ மறையவர்க்‌ குருபொரு ளுதவுதல்‌
தன்னிடஞ்‌ சார்ந்தவர்க்‌ காத்துமிக்‌ களிதரல்‌
இன்பம்‌ நுகர்ந்தடல்‌ நண்பரைப்‌ புரத்தலே

இணற்றினிற்‌ கொண்டிடு மவ்வள வேநீர்‌
கடற்றிரை தனிலுங்‌ கொண்டிடுங்‌ குடமே;
படைத்தவன்‌ தலையில்‌ பொறித்த நஞ்செல்வம்‌
கிடைத்திடல்‌ திண்ணம்‌ கொஞ்சமோ வதிகமோ
கிடைப்பது கிடைக்கும்‌ களர்மணற்‌ பரப்பிலும்‌;
இடைப்பிற மேருவின்‌ உயர்முக டேறினும்‌
படைப்பவன்‌ விதிக்குமேல்‌ பலிப்பதே இலையே.

துர்ச்சன பத்ததி

இரக்க மிலாமை இனமிலாச்‌ சண்டை
பிறன்பொருள்‌ மனைவியைப்‌ பேதையாய்‌ வெஃல்‌
அன்புள வுறவிடயம்‌ அழுக்கா றுறுதல்‌
புன்புரைக்‌ கயவர்க்‌ இயற்கை யிவ்வைந்தும்‌.

ஒளிக்கல்‌ புனையினு மொழித்திடு நச்சரா;
கல்வி சேர்ந்திடினும்‌ கழிந்திடு கயவனை

எவ்வித உயர்வை யவ்விய ரிகழார்‌ 9 வணக்க முள்ளமையை வெள்ளறி வென்பர்‌; நோன்பு தூய்மைகள்‌ வெளிப்பகட்‌ டென்பர்‌;
மாசிலா வொழுக்கை மோசடி யென்பர்‌;
தறுகணாண்மை தண்ணளிக்‌ குறைவாம்‌;
அறம்பியல்‌ துரவியை அறிவில னென்பர்‌;
மென்மையா மின்மொழி கையுறை யாகும்‌
ஒள்ளிய தன்மையைச்‌ செருக்கென உரைப்பர்‌
நாவலர்‌ நம்மைப்‌ பேச்சுவா யென்பர்‌;
எவ்வித உயர்வையு மவ்விய நிகழ்வரே

சினமுளதென்னில்‌ செந்தீ எதற்கு ?
இனம்பார்த்‌ தஇடாமையின்‌ இழிசெயல்‌ ஏது 2
உண்மை யுளதெனிற்‌ தவம்வே றெதற்கு 9
நன்மை யிதனிற்‌ நாம்கா ணலாமே;
உளத்தூய்‌ மையுண்டெனில்‌ குளம்நதி எதற்கு 9
அளவளாய்‌ நயத்தலில்‌ அருந்திற லேது 2
நல்லிசை தன்னிலும்‌ நயந்தரு மணியெது?
நல்லினக்‌ கல்வியின்‌ நலந்தரும்‌ பொருளெது 9
பொல்லா னெனப்பெயர்‌ புனைதலின்‌ விளிவெது 9
நல்லானெ னப்பெயர்‌ புனைதலே நல்லுயிர்‌.

என்னுளம்‌ ஊறுசெய்‌ அயில்வேல்‌ ஏழுள;
மன்னொளி நீங்கப்‌ பகற்றோன்‌ நிடும்‌ மதி;
தன்னிள நலங்கழிந்த தன்பினும்‌ காதலாள்‌;
நன்னிறத்‌ தாமரை நீங்கிய பொய்கை;
அறிவெழுத்‌ தில்லான்‌ அந்தமார்‌ வதனம்‌;
செறிபொரு ளாளன்‌ சேர்பொரு Mame;
ஓவா வறுமை யாலுழலு முத்தமர்கள்‌;
கோவா ரரண்மனைக்‌ கொடியவர்‌ புகலே.

சவிமிகுஞ்‌ செந்தீ சோர்வுடன்‌ தீண்டிடில்‌
அவிசொரி யந்தணர்‌ கரத்தையுஞ்‌ சுடுமே;
காய்சின வேந்தன்‌ கதமிகு போழ்தினில்‌
ஆய்பொரு எமைச்சரும்‌ அகல்க சற்றமைவுற.

மெத்த கடினம்‌ மிக்கவர்‌ பணிசெயல்‌;
மிக்கவர்‌ தமக்குப்‌ பணிவிடை எளிதல்‌;
வாய்திற வாவிடில்‌ மூகைய னென்பர்‌;
வாய்வல னாகில்‌ வாயாடி யென்பர்‌;
அணுகிப்‌ பழகி லகந்தைய னென்பர்‌;
அணுகா தகலின்‌ அ௮ச்சமிக்‌ குடையனாம்‌;
பொறுமையுள்‌ ளானெனில்‌ பயங்கொளி யென்பர்‌;
பொறுமையில்‌ லானெனில்‌ பிறப்பினை யிகழ்வர்‌.

கீழ்மகன்‌ பழக்கம்‌ கூட்டுமே துயரை;
கீழ்மக்‌ களுக்கே கிழியை ஈவன்
நீதித்‌ தளைகளை நீங்குறத்‌ தெறிப்பன்‌;
தீதாம்‌ பதவித்‌ தீச்செயல்‌ மறந்தவன்‌;
கணக்கிலாச்‌ செல்வம்‌ கணந்தரச்‌ சேர்ந்தவன்‌;
பிணக்குடன்‌ நற்குணம்‌ பலவும்‌ பகைப்பவன்‌.

புல்லார்‌ நட்பு முற்பகல்‌ நிழலே;
நல்லோர்‌ நட்பு பிற்பகல்‌ நிழலே;
நீண்டுபின்‌ குறுகும்‌ நிலையிலார்‌ நட்பு;
பூண்டுசிற்‌ றுருவம்‌ பெருகு நன்னட்பே.

புல்லுண்‌ மானைப்‌ பகைப்பன்‌ வேடன்‌;
தண்ணுண்‌ மீனைத்‌ திருகுவன்‌ வலையன்‌;
தன்னுள்‌ எமைதியுண்‌ தவசியைக்‌ கோட்சொல்லி;
எண்ணுள்‌ மூவரும்‌ இகல்கொளல்‌ எவனோ 9

ஸுஜன பத்ததி

இந்தநற்‌ றன்மையர்க்‌ காக்குவேன்‌ பணிவை;
நைந்து நெஞ்சுருகி நல்லினம்‌ பழகுவோர்‌,
மற்றவர்‌ நன்மையில்‌ மகஒழ்வுறும்‌ நல்லோர்‌,
உற்றமூப்‌ பாளருக்‌ குரியதொண்‌ டியற்றுவோர்‌,
ஆவலாய்க்‌ கல்வியை யகமுறப்‌ பயில்வோர்‌
காதலாய்த்‌ தன்மனை யாளையே கருதுவோர்‌,
நல்லோர்‌ வசைதமை நணுகுறா தஞ்சுவோர்‌,
வல்லோ னாமரன்‌ வன்சரண்‌ புகுவோர்‌
தம்புலன்‌ பொறிகளைத்‌ தகைபெற அடக்குவோர்‌,
வன்கணர்‌ இனத்தை வகைபெறத்‌ துறந்தோர்‌.

சான்றோர்க்‌ கியற்கையாம்‌ சால்புகள்‌ கேண்மோ,
தோன்றிய துயரால்‌ திறல்தள ராமை,
ஆன்றநல்‌ வாழ்வினில்‌ அரும்புரை பொறுத்தல்‌,
ஆன்றோ ரவையில்‌ அழகிய சொற்றிரம்‌,
நேர்ந்திடும்‌ போர்களில்‌ நிலைதள ராமை,
தேர்ந்துநல்‌ விசையினைத்‌ திகழ்வுறச்‌ சேர்த்தல்‌,
ஓர்ந்துணர்‌ மறைகளை யுவந்தே பயில்தல்‌
நேர்மையா மாறும்‌ நிலைபெறல்‌ நன்றே.

இயற்கையிற்‌ பெரியராய்‌ இருப்பவர்‌ தமக்கு
பெயர்த்தகும்‌ பணங்கா சில்லையென்‌ நாலும்‌
உடலின்‌ கூறாம்‌ உறுப்புகள்‌ தம்மில்‌
இடப்பட்‌ டழகுசெய்‌ யணிகள்‌ இவையுள;
புகழத்‌ தகுகொடை பொருந்துறுங்‌ கரத்தில்‌;
திகழுங்‌ குருவடிக்‌ கன்புறுந்‌ தலையில்‌;
மெய்மையாம்‌ பேச்சுறும்‌ மென்மைசால்‌ முகத்தில்‌
மொய்ம்படர்ப்‌ புயங்களில்‌ மிகுந்துள வெற்றி;
கள்ளம்‌ கவடிலா நெஞ்சகம்‌ தன்னில்‌
ஒள்ளி தாகிய தூய்மை உறைந்திடும்‌;
கல்விகேள்‌ விகளால்‌ கனமுறுங்‌ காதில்‌
செல்வமார்‌ வேதச்‌ சுருதிகள்‌ சொரிவன.

நல்லிசை தரும்வழி நவில்வேன்‌ பத்துள;
உயிர்க்கொலை நீத்தல்‌ ஊர்ப்பொரு எிகத்தல்‌,
உள்ளதை யேசொலல்‌ உற்றபோ தளித்தல்‌,
அயற்பெண்டிர்ப்‌ பேச்சறல்‌, ஆசைவெள்‌ எளந்தெறல்‌
பெறியோர்க்‌ கிணங்கல்‌, பல்லுயிர்க்‌ இரங்கல்‌,
பலநூல்‌ மதித்தல்‌, கடமை கடைப்பிடி.

தீரர்தம்‌ நெஞ்சம்‌ திரிவுறும்‌ முறைகேள்‌;
வாழ்வுறும்‌ போது வளமா ராம்பல்போல்‌
தாழ்வுறா திரங்கும்‌ தருமஞ்‌ செயற்கு;
தாழ்வுறும்‌ போது தன்சுகம்‌ மறுத்து
மகிழ்வுறாக்‌ கருங்கல்‌ மானும்‌ துயர்வதில்‌.

நீதி நெறிநேயம்‌ நெறியிலா ததனை
ஒது யிர்தந்தும்‌ இகந்திடும்‌ தன்மை
கெட்டவர்‌ தம்மிடம்‌ கெழுமெவ்‌ வுதவியும்‌
பெட்டவர்‌ தம்மைப்‌ பரவா திருத்தல்‌
நட்டவ ராயினும்‌ நீங்கியர்‌ பொருளெனின்‌
மூட்டுற்‌ றபோதும்‌ முயன்று கெஞ்சாமை
துயருற்‌ றபோதும்‌ துணிவாய்‌ முயலல்‌
சான்றோர்‌ பற்றிய சால்புறு நெறியை
தான்தவ றாமற்‌ றுன்னி நடந்திடல்‌
இவ்வறு நுட்பமும்‌ எளிதல லிவற்றை
செவ்விய வாள்வாய்ச்‌ சேர்நடை பழகல்போல்‌
எவ்விடம்‌ உணர்வரோ யாமறி யோமே.

புகலுறா தளித்தல்‌ புகும்விருந்‌ தெதிர்கொளல்‌
நகுங்கொடை நயந்து நாவ சையாமை
மற்றோர்‌ நற்செயல்‌ மகிமையால்‌ விளம்பிடல்‌
உற்ற செல்வத்தில்‌ உயர்வு பேசாமை
மற்றவர்‌ தம்மை மருப்படா துரைத்தல்‌
இவ்வறு நுட்பமும்‌ எளிதல இவற்றை
செவ்விய வாள்வாய்ச்‌ சேர்நடை பழகல்போல்‌
எவ்விடம்‌ உணர்வரோ யாமறி யோமே.

சிவப்பக்‌ காய்ந்த சிறப்புள இரும்புபோல்‌
உவப்பதாம்‌ நீர்த்துளி உற்றிடில்‌ உறிஞ்சிடும்‌
துளியதன்‌ பேரும்‌ துன்னுவோர்‌ கேட்பதில்‌
இளிவுறு மீனர்‌ இத்தன்‌ மையரே,
அதேவித நீர்த்துளி யந்தா மரையுறில்‌,
சுவேத முத்தெனச்‌ சுகமாய்‌ ஜொலிக்கும்‌;
தாமரை நீங்கில்‌ தரள மொழியும்‌,
ஆமித்‌ தன்மையர்‌ அடைவர்‌ மத்திமநிலை,
ஆழ்கடற்‌ சிப்பியில்‌ அழகிய சுவாதியில்‌,
வீழ்ந்திடில்‌ நிர்த்துளி விரும்புரும்‌ முத்தாம்‌,
விழுந்த இடத்தில்‌ வேருற நிலைத்து,
எழுந்தோங்‌ குவதே உத்தமர்‌ இயல்பு.

தாய்தந்தையர்க்குத்‌ தன்னன்‌ னடையால்‌
ஆய்ந்த உத்தமனாம்‌ அவனே மகனாம்‌
எப்போ துந்தன்‌ கணவ ஸினிப்புற
தப்பா நலம்நினை தருமியே மனைவி;
உயர்விலும்‌ தாழ்விலும்‌ உற்றவோர்‌ தன்மையாய்‌
துயரணு காமற்‌ றணைந்தவன்‌ நண்பன்‌.

வியப்புறத்‌ தகுந்த பெருந்தகை விரகரை;
நயந்தநன்‌ மதிப்புடன்‌ நல்லோர்‌ புகழ்வர்‌;
வணங்குதல்‌ கொண்டே வளம்பெற்‌ றுயர்வர்‌;
இணங்குமற்‌ றவரியல்‌ புகழ்தலா லிசையுறும்‌;
மற்றவர்‌ கருத்தை முற்றுறச்‌ செயலால்‌;
உற்றதங்‌ கருத்தையும்‌ வெற்றியாய்ச்‌ செய்வர்‌,
தீயோர்‌ தமக்குந்‌ தயையுட ஸிரங்குவர்‌;
வீயா நரகல்‌ வீழ்வதை யுன்னி;
கொடும்வசை வாயரைப்‌ பொறையற்‌ கடியும்‌;
நடுவுள நல்லரை வணங்கா ௬ளரோ 9

பரோபகார பத்ததி

பழச்சுமை மிகுந்திடில்‌ படிந்திடும்‌ மரமே;
மழைநீர்‌ சுரந்திடில்‌ மேகம்‌ பரவும்‌;
நல்லோர்‌ செல்வம்‌ நயனுறப்‌ பெருகில்‌;
அல்லோர்‌ போல அகந்தை பெறாரே;
மற்றோர்‌ தமக்கு மாண்புசெய்‌ பெரியோர்க்‌
கிற்றே இயற்கை இனிதுசெய்‌ வாரோ.

இரக்கச்‌ செயல்களால்‌ இரங்கிடும்‌ நல்லுடல்‌
மணப்பூச்‌ சாலல மற்றவர்க்‌ குதவியால்‌;
கல்விகேள்‌ விகளால்‌ கிளர்ந்திடுங்‌ காது;
பல்விதக்‌ காதணி பொலிவு செய்யாவே
பொன்வளை புனைதலால்‌ புகழ்பெறு மோகை ?
நன்கொடை தன்னால்‌ நலம்‌ பெறும்‌ கரமே.

கஞ்சம்‌ விரிக்கும்‌ கதிரவன்‌ வைகறை;
விஞ்சுப அல்லிகள்‌ விரிவன மதியால்‌;
கொண்டல்கள்‌ மழையைக்‌ கொட்டுவ தாமாய்‌;
தொண்டர்‌ பிறர்நலம்‌ போற்றுவர்‌ துணிந்தே.

தன்னலங்‌ கருதாப்‌ பிறர்நலம்‌ புரப்போன்‌
நன்னிலப்‌ பரப்பில்‌ நல்லாண்‌ மகனே;
தன்னலங்‌ கேடுறாத்‌ தந்திரஞ்‌ செய்து
மன்னிப்‌ பிறர்பணி முடிப்பவன்‌ மத்திமன்‌;
தன்பணி முடிக்கப்‌ பிறர்பணி கெடுப்பவன்‌
அன்னவனே இவண்‌ மானுட வரக்கன்‌;
எக்கா ரணமும்‌ இன்றிப்‌ பிறர்பணி
தக்கா தழிப்பவன்‌ யாரோ துணிந்திலேன்‌.

நண்பன்‌ தன்மையை நல்லோர்‌ நவிலல்கேள்‌;
பண்பிலாப்‌ பழியைப்‌ பற்றா தகற்றுவன்‌;
நன்னெறி யிற்செல நவில்வ னுபாயம்‌;
மன்னும்‌ மந்தணம்‌ மறைவுறப்‌ போற்றுவன்‌;
நம்மின்‌ நற்செயல்‌ நயனுறப்‌ பரப்புவன்‌;
நமக்குறும்‌ இடரில்‌ நம்மைக்‌ கைவிடான்‌.

நல்லோர்‌ நட்பின்‌ இயல்புகேள்‌ நவில்வேன்‌;
நன்னீர்‌ பாலிவை நட்பிற்‌ கலந்தன;
தன்னோடு கலந்த தூநீ ரதற்கு மன்னும்‌ பால்தான்‌ தன்னியல்‌ பலித்தது;
நெருப்புறு பாலது நிலைகுலைந்‌ தெழவே
விருப்புறு நீரும்‌ வீழ்ந்தது தீயினில்‌: துன்புறு தோழனுக்‌ குறுதுயர்‌ கண்டு இன்புறு பாலும்‌ எழுந்தது தீயுற;
பின்னுநீர்‌ நண்பன்‌ புனைந்து கலப்புற
இன்னுயிர்‌ திரும்பி அடைந்த தோரமைதி.

இங்ஙனே கேசவன்‌ இன்துயி லமர்ந்துளன்‌;
இங்ஙனே அவன்பகைக்‌ குழுவினர்‌ உளரே;
இங்ஙனே அடைக்கலம்‌ புக்கவாம்‌ வரைநுனி;
இங்ஙனே ஊழிக்‌ கொண்டல்கள்‌ உளவே;
இங்ஙனே அமர்ந்தது வடவைப்‌ பெருந்தீ;
தங்கும்‌ பொருட்குழமூஉக்‌ களிவிலை திரைக்‌்£ழ்‌
வித்தார மிக்கது விரிநீர்ப்‌ பெளவம்‌;
எத்தகை வல்லமை யடைந்துள திங்ஙனே.

வைத்த பாரம்‌ தாங்கும்‌ விழுப்பம்‌
எத்தகை யார்க்கும்‌ எய்துமோ வெளிதில்‌?
அவனிப்‌ பெருஞ்சுமை அ௮மைப்பாய்த்‌ தாங்க
தவறா தளித்தது தன்முது காமை;
வான்சோ இத்திரள்‌ வகையாய்ச்‌ சுழல
தான்மை யமாக வமைந்தனன்‌ துருவன்‌;
இவ்விரு தொண்டர்‌ எய்தினர்‌ பெரும்புகழ்‌
உயர்விலும்‌ தாழ்விலு மூுளபல பறவைகள்‌
செயவுள தென்னதொண்‌ டவைகளின்‌ சிறகால்‌?
அத்திப்‌ பழத்தின்‌ உள்ளுறும்‌ கிருமிபோல்‌
இத்தரை தன்னில்‌ இழிந்துமாய்ந்‌ துறும்பல.

நல்லோர்‌ இயற்கைகள்‌ நான்மூன்‌ றனவே;
ஆசையை யறுத்தல்‌; அரும்பொறை வளர்த்தல்‌;
உளச்செருக்‌ கொருத்தல்‌; தீமைசெய்‌ துடிப்பை
தீரத்‌ தொலைத்தல்‌; உண்மை யுரைத்தலே;
நல்லோர்‌ வழிபடல்‌; கற்றோர்க்‌ குதவுதல்‌
கல்வி மான்களைத்‌ தழுவி நடந்திடல்‌;
பிறர்புகழ்‌ பெருக்கல்‌, நல்லிசை காத்தல்‌
துயருளோர்க்‌ கிரங்கல்‌; துன்னுவாய்‌ துரிசற.

உளஞ்சொல்‌ உடலம்‌ மூன்ரும்‌ நன்மையாம்‌
உயிர்மருந்‌ ததனால்‌ நிறைந்தவராக
உலகமூன்‌ றுக்கும்‌ ஒருதெருப்‌ போல
அலகில்‌ லுதவிகள்‌ இயற்றிப்‌ போற்றி
மற்றவர்‌ மேங்குணம்‌ அணுவே யாகிலும்‌
உற்றவை தம்மை மலைபோல்‌ உயர்த்தும்‌
மெய்யுடை நெஞ்சம்‌ மலரென்‌ விரியும்‌
நையுமன்‌ புடையராம்‌ நல்லோர்‌ பலரே.

தைர்ய பத்ததி

கடைந்தனர்‌ கடலைக்‌ கடவுளர்‌ அமுதுற;
இடையிற்‌ கிடைத்தன உயிரொளிக்‌ கற்கள்‌;
அடைந்த அரதனம்‌ கொண்டோய்வில்லை;
அடலுறு கொடிய கடல்‌ நஞ்‌ செழுந்தது;
திட மிழஞ்தஞ்சி விடவிலை முயற்சியை;
அமுதம்‌ அகப்படும்‌ அதுவரை முயன்றனர்‌
விழுமிய முயற்சியிற்‌ றளர்விலர்‌ விரகர்‌.

அதமர்‌ மத்திமர்‌ உத்தமர்‌ இயல்கேள்‌;
அதமர்‌ முயலார்‌ இடர்தனக்‌ கஞ்சி;
இடருற்‌ றபோதே ஓய்வர்‌ மத்திமர்‌
இடர்பல உறினும்‌ உத்தமர்‌ ஓயார்‌.

கொண்ட முயற்சியிற்‌ கருத்துறு மறிஞர்‌
அண்டுமின்‌ பத்தையும்‌ துன்பையு மதியார்‌;
தளர்ந்து சில்போழ்து தரைமேல்‌ துயில்வர்‌
கிளர்ந்து சல்வேளை கட்டிலி லுறங்குவர்‌;
பச்சைக்‌ கறிகாய்‌ புசிப்பர்‌ பல்சமயம்‌
இச்சையாஞ்‌ சோற்றையும்‌ உண்பர்‌ சில்போழ்து?
பன்னும்‌ கந்தைகள்‌ புனைவர்‌ பல்நேரம்‌
பொன்னூ லாடையும்‌ புனைவர்‌ வாய்த்திடிலே.

நீதிநெறி நூலார்‌ புகழினு மிகழினும்‌
மீதுறும்‌ சம்பவம்‌ மிகுக்கினும்‌ தாழ்க்கினும்‌
உடனே சாகினும்‌ உறும்யுகம்‌ உய்யினும்‌
அடலுறு முளத்தவர்‌ அகலார்‌ நல்வழி.

அழகியர்‌ கட்கணைப்‌ போழ்விலா வகத்தன்‌;
கொழுவிய சினத்தீ கொளுந்துறா நெஞ்சன்‌;
ஆவல்‌ புலன்பொறித்‌ தூண்டலுக்‌ கிணங்கான்‌;
மூவுல கும்வெலும்‌ முரணவன்‌ அவனே.

திண்ணிய நெஞ்சர்‌ துயர்மிகப்‌ பெறினும்‌
திண்மை யதறுமோ ௦ திகழும்‌ மேன்மேல்‌
பந்தம்‌ தன்னைக்‌ &ழுறப்‌ பிடிக்கினும்‌
அந்தமாய்‌ மேலுறும்‌ அத்தீச்‌ சுடரே.

நன்னெறி விலகி நலமிழப்‌ பதிலும்‌
உன்னத வரைபாய்ந்‌ தொழிவுறல்‌ நன்றே
கூரெயிற்‌ றரசராக்‌ கொடியவாய்‌ தனிலே
நேறினிற்‌ கையை நுழைத்திடல்‌ நலமே;
நெறிவிட்‌ டிழிதலின்‌ எரியுறல்‌ நேரென
செறிபுகழ்ச்‌ சீரியர்‌ சாற்றினர்‌ சிறக்க.

எல்லோ ருளங்களுங்‌ கவர்ந்திடுந்‌ தூாய்மையோர்‌
சில்லெனும்‌ நீராய்‌ நெருப்பையுஞ்‌ செய்வர்‌;
கடலையுஞ்‌ சிறியதாம்‌ காலக மாக்குவர்‌;
வடமலை மேருவும்‌ இடந்தரு பாறையாம்‌;
விலங்க ரசாகிய வீரகே சநியும்‌
உளங்கொள்‌ மாத்திரத்தில்‌ உறுநல மானாம்‌;
களர்ந்திடுங்‌ கோளரா குளிர்ந்ததோர்‌ மாலையாம்‌;
நஞ்சு மமிர்‌ தமாம்‌; நல்லோர்‌ திறல்பால்‌.

வெட்டிக்‌ கழிக்கினும்‌ வளர்ந்திடும்‌ மரமே;
ஒட்டி வளர்ந்திடும்‌ கட்டதாம்‌ பிறையே;
இத்தகைக்‌ காட்சியை உற்றுநோக்‌ கறிஞர்‌
இத்தரைப்‌ பொருட்டே வடைந்திலர்‌ துயரே.

அன்புடன்‌ பழகுதல்‌ இறைமைக்‌ கணியாம்‌;
வன்கணாண்‌ மைக்கணி வணங்கிய சொல்லே;
பேரறி வாண்மைக்‌ கணியது பொறையே;
சேரரு மறைக்கணி செருக்கற்‌ நிருத்தல்‌;
செல்வத்‌ திற்கணி சறப்பறிந்‌ தீதல்‌;
மல்கருள்‌ தவத்திற்‌ கணியது மகிழ்வே;
தலைமைக்‌ கணியது தண்பொறை யுடைமை;
நிலையறத்‌ திற்கணி நினைபய னின்மை;
என்னோக்‌ குடையரும்‌ எவ்வினத்‌ தவரும்‌
தன்னுளங்‌ கொளுமணி தகைமைசால்‌ தூய்மையே.

தைவபத்ததி

வலனைத்‌ தொலைத்தவன்‌ வலியனாம்‌ இந்திரன்‌;
நலனைச்‌ சொலற்கு நேர்ந்தவன்‌ பிருகஸ்பதி;
வச்சிரா யுதமே வாய்ந்த படைக்கலம்‌;
உச்சித மான உம்பரே படைத்திறள்‌;
சுவர்க்கமே யவன்தன்‌ சிறப்புறு கோட்டை
எவர்க்கு முயர்ந்தவன்‌ விட்டுணு வாழ்த்தினன்‌,
அவனின்‌ நற்கரி ஐரா வதமே;
பவனி வருங்கால்‌ பாங்கா யமைந்தது,
மதிக்கத்தக்கவை மாண்புறு சேர்க்கை
அதிசய மான வலிமை யமைநீதவன்‌;
விதிவலி மிகுதியால்‌ எதுவுங்‌ காப்பிலை.
இத்தனை யுயர்வுள னாகிய இறைவனும்‌
இற்றனன்‌ போரில்‌ இசைகெடப்‌ பகைவரால்‌
ஆதலால்‌ நாமும்‌ அறிவது யாதெனில்‌
பேதையாய்ப்‌ பெருமையைச்‌ சொலிக்கொளல்‌ தவறே

முடங்கிய பாம்புள மூங்கிற்‌ பெட்டியை
மடங்கொளும்‌ எலியொன்றறுத்துளே முகர்ந்தது;
துயில்கலைந்‌ தெழுந்தது துட்டப்‌ பாம்பு;
அயில்நிகர்‌ பற்களால்‌ அலைத்ததை யுண்டது;
உண்டபின்‌ னரவம்‌ உற்ற வத்துளையால்‌
கண்டு வெளிப்புறங்‌ கழன்றோ டியதே
ஆதலால்‌ நண்ப அகற்றிடுன்‌ கவலை
போதுறும்‌ துயர்க்கும்‌ பெற்றிடுங்‌ களிக்கும்‌
ஓதுறும்‌ விதியே உற்ற காரணமாம்‌
போதுறும்‌ துயர்க்கும்‌ பெற்றிடுங்‌ களிக்கும்‌
ஓதுறும்‌ விதியே உற்ற காரணமாம்‌.

பெரியோர்‌ வீழினும்‌ பந்தென வீழ்வர்‌
சிறியார்‌ சிறுமையாம்‌ மண்ணுண்டை வீழ்ச்சிபோல்‌ பந்து வீழ்ந்திடில்‌ பறந்து மேற்களம்பும்‌;
உந்தி மேலெழுகுமோ உறுமண்‌ ணுண்டை

வெயில்பொறுக்‌ காதவோர்‌ வழுக்கைத்‌ தலையன்‌
நிழல்பெற விரும்பி நின்றனன்‌ பனைக்&ழ்‌;
பருத்தவோர்‌ பனங்காய்‌ பட்டென வீழ்ந்து
இரத்தந்‌ தோன்ற உடைத்தது மண்டையை;
விதிவசத்‌ தாலே வதங்குறும்‌ வறியனை
மதிக்கவ லைப்புண்‌ மதிக்குமே மேன்மேல்‌.

தலைவிதி யதற்கே தலைமையாம்‌ வலிமை
அலைகட லுலகில்‌ அதற்குமேல்‌ ஏது ?
கந்தடு கரியும்‌ கொடிய நச்சரவும்‌
வந்தகப்‌ படுமே வானுறு பறவையபோல்‌);
கதிர்மதி ஞாயிறும்‌ கோள்களால்‌ பற்றுறும்‌
எதிர்வுறும்‌ பொறியால்‌ அறிஞரும்‌ வறிஞரே.

குறைவில்‌ லாத குணம்நிறை கடலாய்‌
உறைவிட மான உலகினுக்‌ கணியாம்‌
அரதனம்‌ நிகர்த்த ஆண்மகன்‌ தன்னை
இரத மான இனியனை இயற்றியான்‌
அவனையும்‌ நொடியினில்‌ அக்கினி சேர்த்திடில்‌
இவனையு மந்தோ இருந்தை யென்போமே.

விதியின்‌ பயனை விலக்குதல்‌ எவர்க்காம்‌
நிதியாம்‌ அமுதம்‌ நிறைந்துள தவன்கண்‌,
சஞ்சீ வினிபோல்‌ சிறந்தவோ டதிக்கிறை;
அஞ்சிரு பதின்மராம்‌ மருத்துவ ரவனிடம்‌;
சம்புவாம்‌ பரமன்‌ சடைமுடி வதிபவன்‌;
அம்புவி இறைவர்க்‌ குறுபிணி கயமது
இம்மதிப்‌ பெரியனை இகவா தாகும்‌.

நண்பகேள்‌ நவில்வதை கலனாம்‌ பிரமன்‌
திண்ணிய குயவன்‌ மண்திரட்டு டுதல்போல்‌
உருட்டி உருவாக்குவன்‌ உளமாம்‌ பொருளை
புரட்டிப்‌ பெருந்துயர்‌ என்னுந்‌ தடியால்‌
ஓயா தொழியா துறுதியா யடிப்பன்‌;
ஓவாத்‌ தொடுகையால்‌ உலர்ந்ததை மறுபடி
கவலையாம்‌ சக்கர மீதினில்‌ சுழற்றுவன்‌;
கவலை யிறைப்பிற்‌ சுழலல்போல்‌ கலங்குறும்‌,
இவ்வகை விஷமம்‌ இயற்றலால்‌ பிரமன்‌
எவ்வகைப்‌ பயனுறும்‌ உணரோம்‌ யாமே.

முட்டாள்‌ விதியே ! முயலா தேநீ !
முட்டுற்ற போது முரணவர்‌ முரணற !
பெருமலைக்‌ கூட்டமோ பெருங்கடற்‌ றொகுதியோ
உறுநீ்தம்‌ வலிமை உகுந்திடும்‌ முடிவிலும்‌
அறுமோ அவைதம்‌ அழகிய பெருமை
உறுமோ தீரர்‌ உரமும்‌ இறுதியை
கற்பாந்‌ தத்திலும்‌ கரையா தவர்திறல்‌
விற்பனர்‌ மேன்மை அற்றிடல்‌ இலையே.

மண்ணுல கத்திற்‌ பிறந்தமா னிடத்திற்கு
கண்ணும்‌ பிரமன்‌ கதித்ததே கையுறும்‌;
வல்லவர்‌ சேர்க்கையால்‌ மேன்மேல்‌ வருதல்‌
ஒல்லுஞ்‌ செயலல உற்றுநோக்‌ கஇிடிலே,
எல்லா விருப்பும்‌ நிறைவுற எழிலிகள்‌
செல்லார்‌ வானின்‌ சொரிபொழு தெல்லாம்‌
விண்வீழ்‌ துளிக்கு விரும்பி யலைபுள்‌
நண்ணும்‌ நன்னீர்‌ சிற்சில துளிகளே.

கர்மபத்ததி

கடவுளர்‌ தமக்குநாம்‌ கருதுவோம்‌ வணக்கம்‌;
அடலுளார்‌ அவரும்‌ அமர்ந்தவர்‌ விதிக்‌£ழ்‌;
தலைவிதிக்‌ கும்நாம்‌ தலைவணங்்‌ கல்முறை;
தலைவிதி தானும்‌ தந்திடும்‌ வினைப்பயன்‌
வினைப்பயன்‌ கிடைப்பது விளையினா லேயெனின்‌
வினையன்றி மற்றவை யாலே பயனென்‌ 9
விதியுங்‌ கூட வினைக்கப்‌ புறத்தான்‌,
விதிவினை நீக்கி வினைசெயல்‌ இலையெனில்‌
வினைக்குத்‌ தானே விழுப்பஞ்‌ செய்வோம்‌
வினையினும்‌ வல்லது விண்ணிலு மிலையே.

அண்டமாம்‌ பிண்டத்து உட்புறத்‌ திருந்து
ஒண்டிறற்‌ பிரமன்‌ குயவனாய்‌ உழைத்துளன்‌;
காக்குங்‌ கடவுளும்‌ கடலினுட்‌ டங்குவோன்‌;
நோக்கிப்‌ பத்தவ தாரம்‌ நிகழ்த்துவோன்‌;
மண்டையோட்‌ டுடனே மகிமைசேர்‌ சிவனும்‌
அண்டமெ லாமுழன்‌ றலைவன்‌ பிச்சையாய்‌
பானுவாம்‌ வெங்கதிர்‌ பகர்விதிக்‌ கொடுமையால்‌
வானெலாந்‌ தினந்தோறும்‌ வருவன்‌ சுழன்று
வினையின்‌ வலிமையே விளைத்ததிக்‌ கதிகளை;
வினைவல்‌ லமைக்கே விழுப்பஞ்‌ செலுத்துவோம்

‌நல்லோ னேகேள்‌ நற்பய னடைய
பொல்லோர்‌ தமையும்‌ புண்ணிய ராக்கும்‌,
நல்லதாம்‌ விழுச்செயல்‌ வணங்குவாய்‌ நலம்பெற
கல்லார்‌ தமையும்‌ கற்றவ ராக்கும்‌;
பொல்லாப்‌ பகைவரும்‌ பொருந்துவர்‌ நண்பராய்‌
புலப்படா வற்றைப்‌ புலப்படச்‌ செய்யும்‌
கடல்படு நஞ்சைக்‌ கிளரமு தாக்கும்‌;
இடர்தமை விளைக்கும்‌ இயல்புகள்‌ கடிக.

நற்செயற்‌ பயன்கள்‌ நணுகுறுங்‌ காரும்‌
விற்செறி யரண்மனை, விழைவுரும கிறுமிகள்‌,
ஒள்ளிய வெண்குடை யுயர்நிழ லரசு
தெள்ளிய இன்பெலாம்‌ தானாய்‌ வந்துறும்‌;
நல்வினைத்‌ தொடர்கள்‌ நைந்திட்ட னவேல்‌
புல்லும்‌ இன்பச்‌ சரடது புரைபடும்‌.
அன்புறு காதலார்‌ அணுகாப்‌ பகைவராய்‌
இன்ப முத்தாரம்‌ இற்றுச்‌ சிதறல்போல்‌
பற்பல நற்பொருள்‌ பலவழி அகலும்‌
இற்பொருள்‌ சுற்றம்‌ இவையெலாம்‌ மறையும்‌.

எச்செயல்‌ செயினும்‌ எண்ணிச்‌ செயல்நலம்‌
அச்செயற்‌ பயன்களை ஆய்ந்தறிந்‌ தியற்றுக,
அவசர அடியாய்‌ அமைந்திடும்‌ அலுவல்‌
சிவப்பாம்‌ தணலெனச்‌ செதுக்குறும்‌ நெஞ்சை.

செயல்நிறை வாகச்‌ செறிந்த இவ்வுலகில்‌
செயல்செயும்‌ சுழலில்‌ சேர்ந்துழல்‌ ஒருவன்‌
உய்யும்‌ வழியாம்‌ உயர்தவ மிகந்தால்‌
பெய்யம்‌ எள்ளை நெல்லெனச்‌ சமைப்பவன்‌
தாழ்வாம்‌ விளைபொருள்‌ தழைத்தற்‌ பொருட்டு
மேலாம்‌ பண்டம்‌ மிகஅழிப்‌ பவனாம்‌.

உருவத்‌ தெழில்நலம்‌ உயர்குடிப்‌ பிறப்பு
திருத்தமாம்‌ நன்னடை தீர்புரைக்‌ கல்வி
ஆய்ந்துணர்ந்‌ தியற்றும்‌ அறிஞர்‌ பாற்றொண்டு
வாய்ந்த இவ்வியாவையும்‌ வளந்தரல்‌ சிறிதே;
நட்ட நன்மரம்‌ நாட்செல்‌ வதனால்‌
உற்ற நற்கனியை உகந்தே தரல்போல்‌
முற்பிறப்‌ பவைகளில்‌ முயன்றுசேர்‌ நற்பயன்‌
இப்பிறப்‌ பதனில்‌ ஈந்திடும்‌ நலமே.

ஆர்கலி ஓடினும்‌ மேருமுக டேறினும்‌
போர்க்‌ களந்தனிற்‌ பகைவரை வெல்லினும்‌
வாணிபம்‌ பயிர்த்தொழில்‌ வளமாய்க்‌ கற்கினும்‌
பன்னும்‌ பல்கலை பயின்று பறவையபோல்‌
அகல்வா னத்தில்‌ ஆரப்ப றக்கினும்‌
புகல்முற்‌ செயலால்‌ பூதலந்‌ தன்னில்‌
நிகழ விதித்தது நீங்குத விலையே
வகுத்தான்‌ வகுத்த வகைமா றுறுமோ

காடு போர்க்களம்‌ கதழெரி பகைக்‌ குழு
ஆடுநீர்‌ நடுக்கடல்‌ ஒங்குதலை மலையே
தூக்கம்‌ களிமயல்‌ துன்புறும்‌ இறுநிலை
ஊக்கிய முன்னறம்‌ உயிர்காத்‌ இடுமே.

முற்செய்‌ நன்மை முதிரறி வோர்க்கு
முற்றுல கெங்கனும்‌ நிதிமணி நிறைந்ததாம்‌,
அஞ்சத்‌ தகுங்காண்‌ அம்பே ரூராம்‌
எம்மா னிடரும்‌ தம்மவர்‌ ஆவரே.
நீதிசதகம்‌ முற்றிற்று

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

    ஸ்ரீ உ .வே .வேளுக்குடி ஸ்வாமிகள் -அருளிச் செய்த -எண்ணிலும் வரும்-எண் தானும் இன்றியே வந்தியலுமாறு ஸ்ரீ கண்ணன்–

    June 9, 2026

    கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
    எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
    மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
    விண்ணுமாய் விரியும் எம் பிரானையே
    –1-10-2-–

    சர்வ ஜெகதீஸ்வரனான எம்பெருமான் தன்னுடைய அபி நிவேசத்தாலே என்னுடைய மநோ ரதத்தை விஞ்சும்படி என்னுடைய கண்கள் தொடக்கமாக யுள்ள சர்வ கரணங்களுக்கும் போக்யமாக இனி நமக்கு வேண்டுவது உண்டோ -என்கிறார் –அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத-என்று ஸத்பாவ சிந்தா மாத்ரத்திலும் அவன் வசத்திலே வரும்படியாய் இருக்கும் –எண்-சிந்திப்பு-சிந்திப்பே அமையும் -9–1–7-என்கிற ப்ரபதன ஸுகர்யம்-எண்ணிலும் வரும் -என்று நினைவில் காட்டில் மிகவும் கைவரும்–பரி கணனையோடு பரம பக்தியோடு வாசி அற முகம் கொடுக்கும் என்று அக்குணத்திலே ஈடுபடுகிறார் –நம்முடைய உண்மையை இசைந்தான் இறே என்று அப்போதே வந்து முகம் காட்டும்-இவன் எண்ணின் அளவுக்கு அவ்வருகே வரும்-சர்வேஸ்வரன் ஸ்வ பாவம் இதுவான பின்பு ஹித அம்சத்தில் நமக்கு ஒரு குறை இல்லை –இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா,
    இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன் என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப் போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான்–இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான்-நம்முடைய எண்ணை மிஞ்சி வரும்-‘வரும்
    வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’

    109-எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமிலீலை.
    ஆனால்‌ பரமபக்திக்கு முகம்‌ காட்டுமாப் போலே பரிகணனைக்கும்‌ முகம் காட்டும்‌ என்றாரிறே இவர் தாமே-ஆகையாலே அந்த பரிகணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில்‌, அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார்‌ மேல்‌. (எண்ணிலும்‌ வரும்‌ கணனைக்கு எண்டானுமில்லை) “எண்ணிலும்‌ வரும்‌ என்னினி வேண்டுவம்‌”” (திருவா, 1 – 10 – 2) என்று பரமபத்தி யுக்தர்க்கு முகம் காட்டுமாப் போலே பரிகணனைக்கு முகம்‌ காட்டும்‌ என்னுமிடம்‌ ஈஸ்வரனுடைய குணாதிக்யம்‌ சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிகணனையும்‌ தமக்கில்லை என்னுமிடத்தை “கருமங்கள்‌ வாய்க்கின்று ஒரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே” (திருவா. 1 – 10- 5) என்று – கார்யங்கள்‌ ஸித்‌திக்குமிடத்தில்‌ ”எண்ணிலும்‌ வரும்‌” என்றது தானும்‌ மிகையாம்படி  ‘“ஓரெண்டானுமின்றியே”” \என்று அந்த எண் தானுமின்றியே பலித்துக் கொடு நின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே

    கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
    எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
    உண்டானை உலகேழுமோர் மூவடி
    கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே
    –1-10-5-எண்ணிலும் வரும் -என்கிறது தானும் மிகை யானபடி கண்டாயே -என்று அவன் படியை மூதலிக்கிறார் –

    தன் திறத்தில் எண்ணுகை தானும் இன்றியே இருக்கச் செய்தே எம்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்த படியைச் சொல்லுகிறார் –எண் தானும் இன்றியே வந்தியலுமாறு–நினைவு தானும் இன்றியிலே நமக்கு கைவந்து நடக்கிற பிரகாரம் கண்டாயே –-எங்கனே என்னில் அபேஷா நிரபேஷமாக –-உண்டானை உலகேழுமோர் மூவடி–கொண்டானை–உலகம் எல்லாவற்றையும் பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்து அத்விதீயமான த்ரிவிக்ரம அபதா நத்தாலே அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்டவனை –கண்டு கொண்டனை நீயுமே –ஆபி முக்கிய பிரசங்கம் இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாய் இறே –பழம் கிணறு கண் வருகிறது என் –-நீ அவனைக் காண எங்கே எண்ணினாய்-பிரளய ஆபத்தில் பிரதி கூலிகைக்கு பரிகரம் இல்லை-(விலக்குகைக்கு பரிகரமாவது – விஷய ப்ராவண்யம்-ஸ்வரூப யோக்யதை யாதல் என்றுமாம் –)பிரதி கூலிகைக்கும் பரிகரம் உடைய நீ யன்றோ பெற்றாய் –பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை;-உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;-அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை,-அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார்,  ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.


    ப்ரஹ்மம் -கடவுள் -இறைவன் -பரத்வம் அறிந்து வணங்கி -எம்பிரான் எந்தை என்னுயிர் எளிமை நினைத்து நெருங்குவோம் -கண்ணன் -அஹம் மாம் -இரண்டையும் காட்டுமே

    1-உள்ளத்தால் எண்ணினால் நினைத்தால் வரும்
    2- எண்ணம் இல்லாவிட்டாலும் வரும்
    3-ஓன்று இரண்டு மூன்று இவ்வாறு எண்ணிக் கொண்டு வந்தாலும் வரும்-

    பரம புருஷார்த்தம் -ஸ்ரீ வைகுண்டம் -எம்பெருமான் பதம் -அத்விதீயம் -ஓன்று
    கண்ணன் கோபாலனாக கோயிலே கொண்டுள்ள ஸ்தலங்கள் -இரண்டு –
    ஸ்ரீ தேவி பூ தேவி நீளா தேவி பிரதான திவ்ய தேசங்கள் –மூன்று
    பிரசித்த போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் -நான்கு
    பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -ஐந்து
    விண்ணகர் என்று கொண்டாடப்படும் திவ்ய ஸ்தலங்கள் -ஆறு
    முக்தி அளிக்கும் ஷேத்ரங்கள் -ஏழு
    ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
    பகவத் ராமானுஜரின் வாழ்க்கையோடு பிணைந்து இருக்கும் ஷேத்ரங்கள் -ஒன்பது
    ஆழ்வார்களின் திருவவதார ஸ்தலங்கள் -பத்து

    ஸ்வயம் பாதம் ப்ரசார்ய ஸ்ரித்து ரிதஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா
    ஜானுன்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாக போக நிதாய

    பஸ்ஸாத் பாஹுத் வயேந ப்ரதிப டஸமநே தாரயன் சங்க சக்ரே
    தேவீ விபூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜகதாம் சர்ம வைகுண்ட நாத

    ஆத்ம பரமாத்ம ஞானம் பக்தி தொண்டு ஆகியவற்றுக்கு குறைவற்ற ஸ்தலம் -ப்ரளயத்திலும் அழியாதது -கர்மங்களைத் தொலைத்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்ற ஆத்மா திரும்பி வருவதில்லை -பரமபத நாதனை ஆதிசேஷனில் அமர்ந்துள்ளார் –

    வீர நாராயணப் பெருமாள் -மாடு கன்றோடு சேவை -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஸ்ரீ ஆளவந்தார் திருவவதார ஸ்தவம் -ஸ்ரீ நாதமுனிகளுக்கு -அருளிச் செயல்களைக் காட்டிக் கொடுத்த ராஜகோபாலன் –பெரியவாச்சான் பிள்ளை -தென்னானாய் வடவானாய் -இத்யாதி பாசுரம் சமர்ப்பித்து அபிமானித்த ஸ்தலம்
    லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
    அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

    மன்னார்குடி -ராஜகோபாலன் -ருக்மிணி ஸத்யபாமையோடு ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன் -32-திருக்கோல தர்சனம் ரிஷிகளுக்கு காட்டிக் கொடுத்து அருளினவன் –தக்ஷிண துவாரகை
    உன்னுத்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால்
    நும்மிச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
    மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி
    மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே -4-6-10-மா முனிகள் ஸமர்ப்பித்து அபிமானித்து ஸ்தலம்

    ஸ்ரீ தேவிக்கு பிரதான ஸ்தவம் -ஸ்ரீ ஸ்வேத கிரி என்னும் ஆதி திருவெள்ளறை -புண்டரீகாக்ஷப் பெருமாளுடன் சேவை -கிருத யுகத்திலே சிபி சக்ரவர்த்திக்காக ஸ்ரீ வராஹ ரூபத்தை காட்சி கொடுத்தருளிய ஸ்தலம்

    நாச்சியார் ஆண்டாள் பிரதான ஸ்தவம் ஸ்ரீ வில்லிபுத்தூர் -பூதேவி நமக்காக குன்றாத வாழ்வான் வைகுந்தம் வான் போகந் தன்னை இகழ்ந்து ஆண்டாளாக திருத்துழாய்த் தோட்டத்தில் எடுத்து பெரியாழ்வார் திருமகளானார் –

    நாச்சியார் கோயில் -நீளா தேவிக்குப் ப்ரதானம் -வஞ்சுளவல்லித்தாயார் -திருநம்பிக்கை நாச்சியார் -நறையூர் நம்பி சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தன் அனைவருடன் சாளக்கிராம திருமேனியுடன் சேவை ஸாதிக்கிறார் -திருமங்கை யாழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளிய பெருமாள்

    1-போக மண்டபம் -ஸ்ரீ ரெங்கம் -பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள் –
    2-புஷ்ப மண்டபம் –சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -திருமலை -தோ மாலை பிரஸித்தம் -குறும்பறுத்த நம்பி வைபவம் -அநந்தான் பிள்ளை வைபவம் –
    3-தியாக மண்டபம் -அத்தியூரான் புள்ளை யூர்வான் –திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தைகள் -ஆலவட்டம் கைங்கர்யம்
    4-ஞான மண்டபம் -திரு நாராயண புரம் -கிருதயுகத்தில் தத்தாத்ரேயராக அவதரித்து வேதங்களை உபதேசித்து அருளிய ஸ்தலம் -த்ரேதா யுகத்தில் ராமனாலும் த்வாபர யுகத்தில் கண்ணனாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாள் -யதிராஜர் எழுந்தருளி ஞான பக்தி வளர்த்தருளிய ஸ்தலம் -யதிராஜ சம்பத்குமார் ப்ரஸித்தம்

    பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
    1-திருக்கண்ணங்குடி
    -கண்ணனூர் கண்ணபுரம் -64 சதுர்யுக ங்களாக சேவை -சவுரி ராஜர் ஐதிக்யம் -அமாவாசை தோறும் திருக் கைத்தல சேவை -விபீஷணனுக்காக -திருமங்கை ஆழ்வாருக்கு திருவெட்டு எழுத்து அர்த்தம்- கற்ப்பித்தார்
    2-திருக்கண்ணங்குடி -வசிஷ்டர் ஆராதனப் பெருமாள் –தாமோதர நாராயணன் -லோக நாயகித் தாயார் -திருமங்கை ஆழ்வாருக்கு உதவின நான்கு -தீரா வழக்கு-உறங்காப்புளி -ஊராக்கிணரூ -காயா மகிழ் -இங்கு பிரசித்தம்
    3-திருக்கோவலூர் -த்ரிவிக்ரமப் பெருமாள் ஆயனாக சேவை ஸாதிக்கும் ஸ்தலம் -மிருகண்டு மகரிஷி முதல் ஆழ்வார்கள் ப்ரத்யக்ஷம் –
    4-திருக்கண்ண மங்கை–பெரும் புறக் கடல்-அபிஷேக வல்லித் தாயாராய் திருமணம் செய்தருளிய ஸ்தலம் -அடியார்களை உயிராகக்கொண்ட பத்தராவிப் பெருமாள் -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் –
    5-திருக் கபிஸ்தலம் -ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் –
    கஜேந்திர மோக்ஷம் திருவடிக்குக் காட்டி-ரமாமணித் தாயார் ஸமேத கஜேந்திர வரதன்

    மண்ணகத்திலேயே ஆறு விண்ணகர் திவ்ய ஸ்தலங்கள்
    1-திருவிண்ணகர்
    -ஒப்பிலி அப்பன் -உப்பிலி அப்பன் -பொன்னப்பன் மணியப்பன் -முத்தப்பன் -என்னப்பன் –
    2-திருக் காழிச் சீராம விண்ணகரம் -தாடாளன் -சீர் பெருகி பாபம் கழிகிற படியாக இந்தத் திருநாமம் – ஸித்தாஸ்ரமம் போல் இருப்பதால் ராம விண்ணகரம் என்றும் வழங்கப்படுகிறது –
    3-திரு நந்திபுர விண்ணகரம் —ஸ்ரீ நாதன் கோயில் –செண்பக வல்லித் தாயார் ஸமேத ஜெகந்நாதப் பெருமாள்
    4-திரு அரிமேய விண்ணகரம் -பொருள் வெண்ணெய் நம்முள்ளம் கோபிகள் ஸ்பர்சம் பட்ட த்ரவ்யங்கள் -நம் பாபங்கள் அனைத்தையுமே அபகரிப்பதால் அரி -மூலவர் குடமாடு கூத்தன் -கோவர்த்தன கிரிநாதனே இங்கு எழுந்தருளி உள்ளார் –
    5-திரு வைகுந்த விண்ணகரம் -வீற்று இருந்த திருக்கோலம் -ஸ்வேதகேது இங்கு கைங்கர்யம் செய்து முக்தி பெற்றான் –
    6-திரு பரமேஸ்வர விண்ணகரம் -முகுந்தவல்லித்தாயார் ஸமேதரராய் வீற்று இருந்த திருக்கோலம்-நடு தளத்தில் சயனத் திருக்கோலம் -மேல் தளத்தில் நின்ற திருக்கோலம் –

    முக்தி தரும் ஷேத்ரங்கள் -ஏழு
    1-அயோத்யா
    -சரயு நதிக்கரை -அபராஜிதா
    2-மதுரா -யமுனைக்கரையில் மதுரமான ஸ்தலம் -பாபங்களை மதனம் பண்ணி -கடைந் தெடுத்துப் போக்கி -புண்ணியங்களை அளித்து முக்தி தரும் -கீதையில் தான் பிராணத்தையும் வளர்ந்ததையும் த்யானித்தாலே அந்தப் பிறவியலே மறு பிறவியில்லா மோக்ஷம் அடைவான் -என்று அருளிச் செய்துள்ளான் அன்றோ –
    3-மாயா -ஹரித்வாரம் -தேவ பிரயாக் கர்ண ப்ரயாக் -ருத்ர ப்ரயாக் -விஷ்ணு ப்ரயாக் -திருப்பிரிதி -பத்ரிநாத் அனைத்து ஸ்தலங்களுக்கும் தலைவாசல் -கங்கை கங்கையை என்னும் வாசகத்தினாலேயே கடு வினைகள் களையலாமே –
    கங்கா த்வாரே குசா வர்தே பில்வகே நீல பர்வதே
    ஸ்நாத்வா கநக லே தீர்தே புநர் ஜென்ம ந வித்யதே

    வியத்தகு ஆற்றல் உள்ள படியாக இது மாயா என்றும் பெயர் பெற்றது -12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நடைபெறும் இடம் –
    4-காசி -வாரணாஸீ –
    அன்யாநி முக்திக் ஷேத்ராணி காசீ ப்ராப்தி கராணி ச
    காசீம் ப்ராப்ய விமுச்யதே நான்யதா தீர்த கோடிபி
    காசீ காசீதி ஜபதோ யஸ்ய ஸம்ஸ்தி திஸ்
    அந்யத்ராபி ஸதஸ்தஸ்ய புரோ முக்தி ப்ரகாஸதே —

    வர்ணா மற்றும் அஸீ நதிகளுக்கு இடையில் -வாராணஸீ -ஆத்ம விஷயங்களை எல்லாம் –காசயதி ப்ரகாசயதி– விளங்கு வைக்கும் ஸ்தலம்-பிந்து மாதவனாக சேவை
    5-காஞ்சீ -திருக்கச்சி -க -ப்ரஹ்மா யாகம் செய்து அஞ்சித்த-தொழுத ஸ்தலம் -ஸத்ய விரத க்ஷேத்ரம் -புண்யகோடி விமானம் -ஒரு புண்ணியம் கோடி புண்ணியமாக வளர்ந்து முக்தியை அளிக்கும் –
    6-அவந்திகா -உஜ்ஜைன் -ஸூதாமா என்னும் குசேலருடன் ஸாந்தீபனி மகரிஷியிடம் 64 கலைகளையும் கற்ற ஸ்தலம் -ஷிப்ரா நதிக்கரையில் உள்ளது -12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும் -இவ்வூரின் வாழியே கடக ரேகை ஓடுகிற படியாக விக்ரமாதித்ய மன்னர் காலத்தில் வானவியல் வல்லுநர்கள் இங்கு கூடிய கால க்ரஹ நிர்ணயம் செய்தனர் –
    7-துவாரகா -முக்திக்கு வாசல் -கோமதி நதிக்கரையில் உள்ளது த்வாரகாதீசனாக சேவை ஸாதித்து அருளுகிறான் —

    ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -எட்டு
    1-ஸ்ரீ ரெங்கம்
    காவேரீ விரஜா சேயம் வைகுண்டம் ரெங்க மந்திரம்
    ஸ வாசூ தேவோ ரெங்கேச ப்ரத்யக்ஷம் பரமம் பதம்
    விமானம் ப்ரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மஹாத்புதம்
    ஸ்ரீ ரெங்க ஸாயீ பகவத் ப்ரணவார்த்ஹ ப்ரகாசக

    பூ லோக வைகுண்டம் –
    ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்கிறான் –
    2- ஸ்ரீ முஷ்ணம் –ஸ்ரீ தேவி பூ தேவி யுடன் ஒரே கல்லில் கரப்ப க்ருஹத்தில் -சங்கு சக்கரம் ஏந்தி சேவை -முத்தக்காசு கோரைக்கிழங்கு பிரஸாதம் ஸமர்பிக்கப் படுகிறது –
    ஸ்வேதம் ஸூ தர்சந தராங்கித பாஹு யுக்மம்
    தம்ஷ்ட்ராகரால வதனம் தரயா ஸமேதம்
    ப்ரஹ்மாதி பிர் ஸூர கணை பரி ஸேவ்யமானம்
    த்யாயேத் வராஹ வபுஷம் நிக மைக வேத்யாம்

    3-திருவேங்கடம் –
    ஸ்ரீ ஸேஷாசல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
    ஆக்யாம் த்வதீய வஸதே ரநிசம் வதந்தி ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸூ ப்ரபாதம்

    பத்து புராணங்களும் பேசும் பெருமை -கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் –
    4-சாளக்கிராமம்
    மம தத் ரோஸதே ஸ்தாநம் கிரி கூட ஸி லோச்சய சாளக்ராம இதி க்யாதம் பக்த ஸம்ஸார மோக்ஷணம்
    சாளக்ராம ஸிலாரூபீ தவ கர்ப கத ஸதா திஷ்டாமி தவ புத்ரத்வே பக்தா நுக்ரஹ காரணாத்

    கண்டகி நதியின் பிரார்த்தனைக்கு ஏற்ப மடியில் தோன்றியருலி -இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் முக்திநாதனாக தர்சனம் அருளுகிறார்
    5-நைமிசாரண்யம்
    ததோ கச்சேத ராஜேந்திர மிஸ் ரகம் தீர்த முத்தமம்
    தத்ர தீர்தா நி ராஜேந்த்ர மிஸ்ரிதாநி மஹாத்மநா
    வ்யாஸேன ந்ருப சார்தூலத் விஜார்த மிதி நஸ் ஸ்ருதம்
    ஸர்வ தீர்தே ஷு ஸ ஸ்நாதி மிஸ்ரகே ஸ்நாதி யோ நர

    இங்கு காடாகவே தர்சனர் -ஒரு நிமிஷ நேரத்திலே அசுரர்களை அழித்தவன்
    ஸூத மகரிஷி புராணங்கள் ஸுநகர் போன்ற முனிவர்களுக்கு அமர்ந்து உபதேசித்து அருளினார் -அயோத்யா மன்னர்களுக்கு யாக பூமியாக விளங்கிய ஸ்தலம்-

    6-வானமா மலை -ஸ்ரீ வைகுண்டம் போல் வீற்று இருந்த திருக்கோலம் -சிரீவர மங்கை ஸமேதனாய் தெய்வநாயகன் -ரோமச முனிவருக்கு ப்ரத்யக்ஷம் -நித்ய எண்ணெய் தைலக்காப்பு –
    7–புஷ்கரம் –
    யதா ஸூராணாம் ஸர்வேஷாம் ஆதிஸ்து புருஷோத்தம
    ததைவ புஷ் கரம் ராஜன் தீர்தா நாம் ஆதி ருச்யதே –

    தீர்த்த வடிவமாகவே சேவை -நான்முகனுக்கும் கோயில் உண்டு -அவர் ஒரு அரக்கனை தமது கையிலே உள்ள தாமரையை வீசி அழிக்க -அது 52 பகுதிகளாகி இணைந்து புஷ்கரம் எனப்படுகிறது
    8-பதரிகாச்ரமம்
    யோவதீர்ய ஆத்ம நோம் ஸேந தாஷாயண்யாம் து தர்மத
    லோகா நாம் ஸ்வஸ்தயே அத்யாஸ்தே தபோ பதரிகாஸ்ரமே

    அலகானந்தா நதிக்கரையில் இலந்தை மரத்தடியில் தவம் செய்யும் திருக்கோலம் -நர நாராயணனாக -சிஷ்ய ஆச்சார்யனாக அஷ்டாக்ஷரம் உபதேஸித்து அருளிய திவ்ய க்ஷேத்ரம் -அக்ஷய திருதீயை முதல் தீபாவளி வரையே திறந்திருக்கும் -பின்னர் பனி மூடி விடும்

    ஸ்ரீ ஸ்வாமி ராமானுஜ சரித்திர ஷேத்ரங்கள் ஒன்பது –
    1-ஸ்ரீ பெரும்பூதூர்
    -பிங்கள வர்ஷம் -1017-சித்திரை வளர்பிறை பஞ்சமி திதி வியாழக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் திரவவதாரம் -சிவனின் பூத கணங்களால் கட்டப்பட்டதால் பூத புரீ -திருவவதார மண்டலத்தில் 74 ஆச்சார்யர்களின் திருவுருவங்களும் சேவை உண்டு
    2-திருப்புட்குழி -வறுத்த பயறு முளைக்க வைக்கும் -மரகத வல்லித் தாயார் ஸமேத விஜய ராகவப் பெருமாள் -யாதவப்பிரகாசரிடம் கல்வி கற்ற ஸ்தலம் -பெரிய திருவுடையாருக்கு ஸம்ஸ்காரங்களைச் செய்த க்ஷேத்ரம்
    3-மதுராந்தகம் –பெரிய நம்பிகளால் சமாஸ்ரயணம் பெற்றார் -ஏரி காத்த பெருமாள் மந்த்ர உபதேசம் பெற்ற ஆத்மாவைத் திருக்கல்யாணம் செய்தருளிய ஸ்தலம் –

    4-தொண்டனூர் -நம்பி நாராயணப்பெருமாள் நின்ற திருக்கோலம் -ஆதிசேஷனாக ஆயிரம் புரவாதிகளை வாதத்தில் வென்றார்
    5-ஸிம்ஹாசலம் -பக்த பிரகலாதனை ரக்ஷிக்க ஸிம்ஹ முகம் –ஸ்ரீ வராஹ நரஸிம்ஹர் -இங்கு ஸ்ரீ பாஷ்யம் உபதேசித்து அருளினார்
    6- ஸ்ரீ கூர்மம்
    நாரதரிடம் கூர்ம மந்த்ர உபதேசம் பெற்ற ஸ்வேத மஹாராஜாவுக்கு ப்ரத்யக்ஷம்
    7-புரீ -புருஷோத்தமன் க்ஷேத்ரம்
    8-ப்ரயாக் ராஜ் -திரிவேணி சங்கமம் -வேணி மாதவப் பெருமாள் சேவை –

    த்ரிதண்டம் -தத்வத்ரயம் விளக்கி உபதேசம்
    9-கயா -கயன் என்னும் அசுரனை அடக்கி கதாதரப் பெருமாளாக தர்சனம் -பால்குனி நதி தீர்த்தம் பிண்ட பிரதானம் –

    ஆழ்வார்கள் திருவவதார ஸ்தலங்கள் பத்து
    1-பொய்கையாழ்வார்
    துலாயாம் ஸ்ரவணே ஜாதம் காஞ்சியாம் காஞ்சனா வாரிஜாத்
    த்வாபரே பஞ்ச ஜன்யாம்சம் சரோ யோகிநாம் ஆஸ்ரயே

    திருவெஃகா -சொன்ன வண்ணம் பொற்றாமரைக் குளத்தில் ஐப்பசி திருவோணம் அவதாரம் -பாஞ்சஜன்ய அம்சம் –

    2-பூதத்தாழ்வார் -திருக்கடல் மல்லை –
    துலாத நிஷ்டா ஸம் பூதம் பூதம் கல்லோல மாலிந
    தீரே புல்லோத் பலே மல்லா புர்யாமீடே கதாம்சகம்
    ஸ்தல சயனப் பெருமாள்
    ஐப்பசி அவிட்டம் கதையின் அம்சம்
    3-பேயாழ்வார் –
    துலாஸ தனி ஷக்ஜாதம் மயூர பிரிகைரவாத்
    மஹாந்தம் மஹாதாக்யாதாம் வந்தே ஸ்ரீ நந்தகாம்சகம்
    ஐப்பசி சதயம் –மயூரவல்லித் தாயார் சமேத கேசவப் பெருமாள் சேவை சாதித்தருளும் மைலாப்பூரில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில்

    4-திருமழிசை ஆழ்வார்
    மகாயாம் மகர மாஸே சக்ராம்சம் பார்க்கவோத்பவம்
    மஹீசார புராதீசம் பக்திசாரம் அஹம் பஜே
    திருச்சக்கர அம்சம் -தை மகம்
    5-நம்மாழ்வார்
    வருஷயே து விசாகாயாம் குருகாபுரி காரிஜம்
    பாண்டிய தேசே கலே ராதவ் சடாரிம் ஸைன்யபம் பஜே
    கலிபிறந்து 42 நாள் வைகாசி விசாகம்
    மதுரகவியாழ்வார்
    மேஷே சித்ரா ஸமுத்பூதம் பாண்டியதே சே கணாம்சகம்
    ஸ்ரீ பராங்குச ஸத் பக்தம் மதுரம் கவிம் ஆஸ்ரயே
    திருக்கோளூரில் கணாம்சம் -சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்ரம்
    6-குலசேகரப்பெருமாள்
    கும்பே புனர்வசவ் ஜாதம் கேரளே சோள பட்டணே
    கௌஸ்துப அம்சம் தராதீசம் குலசேகரம் ஆச்ரயே
    திருவஞ்சிக்களம் –

    7-பெரியாழ்வார்
    மிதுநீ ஸ்வாதி ஜம் விஷ்ணோரதாம்சம் தன்வின புரே
    ப்ரபத்யே ஸ்வ ஸூரம் விஷ்ணோர் விஷ்ணு சித்தம் புரஸ் ஸிகம்
    ஆனி ஸ்வாதி -பெரிய திருவடி -அம்சம்
    ஆண்டாள்
    கற்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீ காந நோத் பவாம்
    பாண்டிய விஸ்வம்பராம் கோதாம் வந்தேறி ஸ்ரீ ரெங்க நாயகீம்
    பூமா தேவி அம்சம் -திருவாடிப்பூரம் –
    8-தொண்டரடிப் பொடி ஆழ்வார்
    கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவாம்
    சோளோர்வ்யாம் வானமால அம்சம் பக்த பத்ரேணும் ஆஸ்ரயே
    திருமண்டங்குடியில் மார்கழி கேட்டை
    9-திருப்பாணாழ்வார்
    விருஸ்சிகே ரோஹிணி ஜாதம் ஸ்ரீ பாணம் நிசுளாபுரே
    ஸ்ரீ வத்ஸ அம்சம் காயகேந்த்ரம் முனிவாஹனம் ஆஸ்ரயே
    திரு உறையூரில் கார்த்திகை ரோஹிணி
    10-திருமங்கையாழ்வார்
    விருஸ்சிகே கிருத்திகா ஜாதம் சதுஷ்கவி சிகாமணிம்
    ஷட் பிரபந்த க்ருதம் சார்ங்க மூர்த்திம் கலிஹம் ஆஸ்ரயே
    சார்ங்கம் அம்சம் -திருக் கார்த்திகை -திருக் கார்த்திகையில் அவதாரமே -இவர் மட்டுமே 47 திவ்யதேசங்களை மங்களாசாசனம் பண்ணி அருளி உள்ளார் -குமுதவல்லி நாச்சியாருடன் சேவை –


    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஜ்யோதிஷம்-

    June 8, 2026

    ASTRANAMY -planet movement -ASTRALOGY -effect on us -கால விசேஷ பிரதர்சனம்

    வேதத்துக்கு அங்கங்கள்
    நிருக்தம் காதாகவும்- வியாகரணம் வாயாகவும் -கல்பம் -கையாகவும் -ஸந்தஸ்ஸு காலாகவும் -சிஷா மூச்சுக் காற்று –ஜ்யோதிஷம் கண்ணாகவும் இருக்கும்-ஸூர்யன் சந்தர்களையும் பார்க்கும் கண் -மற்ற புலன்களைப் போல் அல்லவே-vision unlimited -முக்காலத்திலும் உள்ளவற்றை அறியவே ஜ்யோதிஷம்-EYE OF WISDOM-vision of planet on us -நாள் பார்க்க ஜ்யோதிஷம் கண்ணைக் கண்டு பார்க்க வேண்டும்

    தேவர்கள் ஸூர்யன் சித்தாந்தம்- மயனுக்கு உபதேசம்
    ரிஷிகள்- கர்க்கர் நாரத பராசர சம்ஹிதைகள் உண்டு
    மனுஷ்யர் -வராஹ மிஸ்ரர் -ஆர்யபட்டார் -பாஸ்கராச்சார்யர்

    சித்தாந்த ஸ்கந்தம் -கணக்கை அடிப்படை
    ஹோரா ஸ்கந்தம் -ஜாதகம் induvidual
    சம்ஹிதா ஸ்கந்தம் -pothuvaanavai

    வ்யக்த கணிதம் arithmatic-அவ்யக்த கணிதம் algebra-க்ஷேத்ர கணிதம் gaametry-சமீகரணம் equalitry-திரிகோண மிதி tridnametry –பாஸ்கராச்சார்யர் பெண்-லீலாவதி maths-கடிகை=water clock

    ஐந்தில் ஒரு பகுதி ரோஸ் மூன்றில்-x/5+x/3+3(x/3-x/5)+1=x

    maltiply both sides by lcm-15—3x+5x+3(5x-3x)+15-15x–so x=15

    ஆர்யபட்டார் 0 கண்டுபிடித்தார் பாஸ்கராச்சார்யர் infinity கண்டுபிடித்தார்

    மனஸ் சந்திரன் -ஸூர்யன் கண் -அண்டத்தில் உள்ளது எல்லாமே பிண்டத்தில் உள்ளனவே -26 தத்துவங்களும் நம்முள்ளும் உள்ளன

    கணிதப் புதிர்களைக் கவிதைபோல படைத்தவர் பாஸ்கராச்சாரியா. இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள விஜலவிடாவில் 1114-ல் பிறந்தார் பாஸ்கராச்சாரியா. இரண்டாம் பாஸ்கரா என்று அழைக்கப்பட்ட இவர் ‘சித்தாந்த சிரோன்மணி’ என்னும் அற்புதமான கணிதப் புத்தகத்தை தனது 36-வது வயதில் எழுதினார். படைப்புகளின் மகுடம் என்கிற அர்த்தம் கொண்ட இந்நூலில் 1443 செய்யுள்கள் காணப்படுகின்றன. ‘லீலாவதி’, ‘பிஜ கணிதம்’, ‘கிரஹ கணிதம்’, ‘கோளத்யாயம்’ என நான்கு பாகங்களாக இந்நூல் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.-லீலாவதி எண் கணிதத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட புத்தகம். இதில் 278 செய்யுள்கள் கணிதப் புதிர் வடிவில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. இந்தியாவில் கணிதப் புதிர் புத்தகங்களில் முன்னோடி இதுவே.

    லீலாவதி புத்தகத்தைப் போலவே அது உருவான கதையும் சுவாரஸ்யமானது. பாஸ்கராசாரியாவுக்கு லீலாவதி என்ற மகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஜோதிடம் பார்த்தபோது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை எனப் பாஸ்கரா கணித்தார். அதனை மற்ற ஜோதிட நிபுணர்கள் மூலம் உறதி செய்த பிறகு, எப்படியாவது மகளுக்குத் திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவசரமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் திருமணத்துக்குக் குறித்த முகூர்த்த நேரம் கடந்துவிட்டதால் லீலாவதிக்கு திருமணம் நிகழ்த்த முடியவில்லை.இதனால் துயரம் அடைந்த லீலாவதியை உற்சாகப்படுத்தவே பாஸ்கரா தனது கணிதப் புதிர்கள் அடங்கிய நூலை மகள் பெயரிலேயே எழுதியதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் உண்மையிலேயே நடந்ததா அல்லது கற்பனையா? எனச் சரிவரக் கூற முடியவில்லை. ஆனால் ஆங்காங்கே லீலாவதி பெயரைப் பயன்படுத்தி அப்புதிருக்கான விடையைக் காணும் படி லீலாவதி புத்தகத்தை நயம்பட பாஸ்கரா எழுதியிருக்கிறார்.

    மான்விழி கொண்ட லீலாவதியே இப்புதிருக்கான விடையைக் கூறுவாயாக’, ‘புத்திக் கூர்மையுள்ள லீலாவதியே இந்தப் புதிருக்கான விடையை வழங்கு பார்ப்போம்’ போன்ற வரிகள் லீலாவதி புத்தகத்தில் காணப்படுகின்றன. கவிதை புனைதலிலும், கணித ஞானத்திலும் பாஸ்கரா திறம்பெற்று விளங்கினார் என்பது இதுபோன்ற வரிகள் மூலமாகத் தெரியவருகிறது.மேலும் கணிதப் புதிர்களை இயற்கை காட்சிகளுடனும், பறவைகள், விலங்குகளின் எண்ணிக்கையுடனும் தொடர்புபடுத்தி அவர் எழுதியுள்ளார். கணிதத்துக்கும் அன்றாட வாழ்வியல் செய்திகளுக்கும் உள்ள தொடர்பைக் கிட்டத்தட்ட 850 ஆண்டுகளுக்கு முன்பே காட்டிய லீலாவதி புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் இந்தியாவில் பல்கலைக்கழகங்களை நிறுவி ஐரோப்பிய சிந்தனையைப் புகுத்தும் வரை பாஸ்கராவின் இப்புத்தகமே கணிதம், வானியல் சார்ந்த படிப்புகளுக்கு இந்தியாவில் ஆதார நூலாக விளங்கியது. கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் இந்தியாவில் வேறு எந்த நூலுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் இருந்ததில்லை. இன்றும் லீலாவதி புத்தகத்தைப் பலர் பல மொழிகளில் மொழி பெயர்த்துப் பயன் பெறுகிறார்கள். ‘சித்தாந்த சிரோன்மணி’ என்னும் அறிவு பெட்டகத்தை வழங்கியதால் இவரை இந்தியாவின் தலைசிறந்த கணித அறிஞர்களில் ஒருவராக உலகம் போற்றுகிறது.செய்யுள் வடிவில் 34 அத்தியாயங்களில் 278 கணிதக் குறிப்புகளையும், புதிர்களையும் லீலாவதியில் வழங்கியிருக்கிறார் பாஸ்கராசாரியா. ஸ்ரீதராசர்யா எழுதிய ‘த்ரிசதிகா’, மகாவீராச்சர்யா எழுதிய ‘கணித சார சங்க்ரஹா’ஆகிய நூல்களில் இருந்து முக்கியக் கருத்துகளையும், தானே கண்டறிந்த உண்மைகளும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

    சிரோன் மணியின் நான்காம் பாகமான கோள்களை விளக்கும் புத்தகத்துக்குத் தேவையான வானியல் செய்திகளும் இதில் காணப்படுகின்றன. ‘சித்தாந்த சிரோன்மணி’யின் நான்கு பாகங்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது இந்தப் புத்தகம்தான் எனப் பாஸ்கராசாரியாவேத் தெரிவித்திருக்கிறார். இவ்வளவு வியப்புக்குரிய லீலாவதி புத்தகத்திலிருந்து ஒரு கணிதப் புதிரைக் காண்போம்.“வர்க்க எண்ணிக்கையில் அமைந்த அன்னப் பறவைகள் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. அவ்விடத்தில் மேகங்கள் சூழவே, மொத்த எண்ணிக்கையின் மூல வர்க்க மதிப்பின் பத்து மடங்கு அன்னப்பறவைகள் மானசா ஏரிக்குச் சென்றன. மொத்த எண்ணிக்கையில் எட்டில் ஒர் மடங்குள்ள அன்னப்பறவைகள் அருகில் அமைந்த ரோஜாத் தோட்டத்திற்குச் சென்றன. மீதமுள்ள மூன்று ஜோடி அன்னப் பறவைகள் நீரில் துள்ளி, கொஞ்சி விளையாடின. அழகு பொருந்திய இளம் பெண்ணே, தாமரை மலர்கள் நிரம்பிய அந்த நீர்த்தடத்தில் மொத்தம் எத்தனை அன்னப்பறவைகள் இருந்தன எனக் கூறுவாயாக?”

    மொத்த அன்னப்பறவைகளின் எண்ணிக்கையை xsq

    எனவே மொத்த அன்னப் பறவைகளின் எண்ணிக்கை 144 ஆகும்.

    வரையறை மற்றும் அட்டவணை, அளவீட்டு முறைகள், கூட்டல், கழித்தல் முறைகள், வெவ்வேறு பெருக்கல் முறைகள், வகுத்தல் முறைகள், எண்களில் இலக்கங்களின் இடமதிப்பு தன்மை, வர்க்கம், முப்படி, மூலவர்க்கம், முப்படி மூலம், பின்னங்களின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முறைகளின் விளக்கம், பூஜ்ஜியத்துக்கான எட்டு விதிகள், இருபடி சமன்பாடுகள், தகவுகளின் தன்மைகள், வட்டி கணக்கீடு, அடுக்கு குறி தொடர், பெருக்கு குறி தொடர், அளவீட்டு கருத்துகள், ஜியோமிதி, திரிகோண மிதி போன்ற மிக முக்கிய கணித அடிப்படைகள் சார்ந்த செய்திகள் லீலாவதியில் உள்ளன.

    கர்மா-புண்ய பாபங்கள் பற்றி -ஜாதகம் -காட்டும் –signal -மட்டுமே -புடலங்காய் வியாபாரி கதை-துரியோதனன் -ஸஹதேவனிடம் அம்மாவாசை -கேட்டு -போர் தொடங்கிய வ்ருத்தாந்தம்-

    sun-star -moon satalate-நவக்ரஹங்கள் -ஸூர்ய சந்திரர்கள் சேர்க்கலாமா=kraahyam is not planet -gravity உள்ள க்ரஹம்-நவ கோள் பூ கோளம்-x shaped–ஆகர்ஷண சக்தி -வைசேஷிக -கணாதர் –சையோகாபாவாத்-gravity-எடைக்குத் தக்க வேகத்துடன் விழும் என்றும் சொல்லியுள்ளார்-நக்ஷத்ரம் -ஸ்வயம் பிரகாசம் -ஒளி வாங்கி பிரதிபலிப்பது கிரஹம்-satalite-movement -twinkle twinkle little star-பூமிக்கும் புவியீர்ப்பு சக்தி -ஸவித்ர மத்ய வர்த்தி -ஸூர்ய நாராயணன் சுற்றி நவ கிரஹங்கள் – -லாகவ கௌரவ நியாயம் -குரு -ஆச்சார்யரை சுற்றி வர வேண்டும் –ஏழு குதிரைகள் -அஸ்வம் -ஒளிக்கற்றைகள் என்றும் குதிரைகள் என்றும் பெயர்-ஏக -ஏழாக பிரிந்து-vibgyor–ஜகத் -தன்னைத் தானே சுற்றி வருவதையும் வேதம் சொல்லும் -25000 மைல் சுற்றளவு -ஒரு நிமிஷ பின்பு காக்காய் பறந்து கீழே வற 17 மைல் போகுமே -சுற்றுச்சூழலும் சேர்ந்து சுற்றி வரும் sumeru-மேரு ஸூமேரியா-

    சூர்யன் -19885000 times 10 power 23 kgs—149600000 kms–total force-592923

    moom -0.7432 times 10 power 23 kgs—384400 kms–total force-1292600

    mercury-3-3010 times 10 power 23 kgs—149600000 kms–total force -0.0925

    venus –48676 times 10 power 23 kgs—261000000 kms-total force-1-438

    mars -64171 times 10 power 23 kgs-228500000 kms-total force–0-.0537

    jupitar -18983 times 10 power 23 kgs—778300000 kms–total force-4.0264

    saturn-5683 times 10 power 23 kgs—1427000000 kms-total force–0.1955

    uranus–868.16 times 10 power 23 kgs-2869600000 kms–total force–0.0036

    neptune-1024.2 times 10 power 23 kgs—44966 00000 kms-total force–0.0011

    plito –0.13 times 10 power 23 kgs—5906350 00000 kms -total force 0,000000064

    tidal force -maas divided by distance cube-சந்த்ரனுக்குத்தான் அதிகம் இது-

    அஹோராத்ரா =ஹோரா -ஏழு கிரகங்களுக்கு -ஸூர்ய உதயத்தில் angular velocity dominat-அது பொறுத்து கிழமைகளில் பெயர்-

    sunday -sooryan -0deg-59–08/Monday -moon -13-10-34/Tuesday mars-0-31-26-/wednesday-mercury-4-5-32./thursday-kuru=0-4-59/friday-venus -1-36-7/saturday-saturn-0-2-0

    சந்திரன் சுற்றி வர 30 நாள்கள் திங்கள் -மாசம் -எந்த நக்ஷத்ரம் பெவ்ரணமி அந்தப் பெயரே மாதத்துக்கு –

    lunaar nodes-raaku kethu–6 kattam thalli –180 -krahanam -imaginaty points

    மங்கள்நாத் மந்திர் – உஜிஜேனில் செவ்வாய் பிறந்ததாம் -பூமியில் இருந்து -பவ்ம -maars -ஒரே வேகத்தில் சுழன்று -ஒரே மாதிரி சாய்ந்து இருக்கும் –மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மங்கள்நாத் மந்திர் –மத்ஸ்ய புராணத்தின்படி, இது பூமியின் மையமாகக் கருதப்படுகிறது.–மத்ஸ்ய புராணத்தின்படி செவ்வாய் கிரகத்தின் (மங்கள்) பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் மற்றும் பூமிக்கடியில் இருந்து செவ்வாய் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த இடம் செவ்வாய் தோஷ நிவர்த்தி மற்றும் பாத் பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளுக்கு மிகவும் பிரபலமானது

    செவ்வாய் தன்னைத் தானே 24 மணி 37 நிமிடம் 23 விநாடிகளில் சுற்றி வரும்

    ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத் ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

    ஓம் அங்காரகாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தந்நோ குஜப் பிரசோதயாத்’ – செவ்வாய் காயத்ரி மந்திரம்

    தாசாரதி வாசுதேவ ஆஞ்சநேய போல் பாவமாம் பூமியில் இருந்து பிறந்த
    mercury-ஸவ்ம்யம்-ராமன் பாதுகா கீழே நவ கிரஹங்கள் ப்ரதிஷ்டை பாதுகா சஹஸ்ரம் ஸ்லோகம் —

    ஹோரா-என்பது ஜோதிடத்தில் ஒரு நாளை 24 மணிநேரங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு கிரகத்தின் ஆளுமையை (நேரத்தை) குறிக்கும் முறையாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களும் இந்த ஹோரைச் சுழற்சியில் பங்கு வகிக்கின்றன, இதில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்–ஒரு ஹோரை என்பது சரியாக ஒரு மணி நேரம் ஆகும்.-தினமும் சூரிய உதயத்திற்குப் பிறகு முதல் ஹோரை, அந்தந்த கிழமைக்கு உரிய கிரகத்தினுடையதாக இருக்கும் (உதாரணமாக: ஞாயிறு காலை சூரிய ஹோரை).-சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்ற வரிசையில் இந்த ஹோரைகள் சுழன்று கொண்டே இருக்கும்.–சுப காரியங்களைத் தொடங்கவும், சுப ஹோரை (சந்திரன், புதன், குரு, சுக்கிரன்) மற்றும் அசுப ஹோரை (சூரியன், செவ்வாய், சனி) அறிந்து செயல்படவும் இது பயன்படுகிறது.–ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கேற்ப வேலைகளைத் திட்டமிடுவதன் மூலம் வெற்றியை அதிகரிக்க முடியும். –சந்திர ஹோரை: திருமணம், பயணம், புதிய முயற்சிகள் செய்ய உகந்தது.-புதன்/குரு/சுக்கிரன் ஹோரை: கல்வி, வியாபாரம், ஒப்பந்தங்கள் மற்றும் சுப காரியங்களுக்கு மிகவும் சிறந்தது.-சூரியன்/செவ்வாய்/சனி ஹோரை: அரசாங்க வேலை, வழக்கு, அறுவை சிகிச்சை போன்ற ஆக்ரோஷமான பணிகளுக்கு ஏற்றது

    ——————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    சங்கத் தமிழும் சநாதன தர்மமும்-

    June 7, 2026

    உலகம் உண்ட பெருவாயன்; [திருவாய் 6 – 10 – 1] பாலனாய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி ஆல் இலையில் அன்னவசம் செய்யும் அண்ணல் அவன் [திருவாய் 4 – 2 – 1]–“பிறப்பில் பல்பிறவிப் பெருமான்” [திருவாய் 2 – 9 – 5]–பேசநின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
    நாயகன் அவனே; கபாலநல் மோக்கத்துக் கண்டுகொண்மின்” [திருவாய் 4 – 10 – 4]

    உலகம் யாவையும்” என்னும் முதல்பாடலில் “யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி, யத்ப்ரயந்த்யபி, ஸம்விசந்தி தத்3 விஜிஜ்ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி” [எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் (ஸ்ருஷ்டிகாலத்தில்) தோன்றுகின்றனவோ, எதனால் தோன்றியவை உயிர் வாழ்கின்றனவோ, (ப்ரளய காலத்தில்) எதனிடம் சென்றடைகின்றனவோ அதை ப்ரஹ்மமென்றறிவாயாக] என்னும் உபநிஷத்தைப் பின்பற்றி ஜகத் காரணப்பொருளை சரணம் பற்றினான். இந்த ஜகத்காரணப்பொருள் எது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக,
    “சிற்குணத்தர் தெரிவரு நன்னிலை
    எற்(கு) உணர்த்தரிது எண்ணிய மூன்றனுள்
    முற்குணத்தவரே முதலோர்; அவர்
    நற்குணக் கடலாடுதல் நன்றரோ”
    [புல்லறிவாளர்களால் அறியமுடியாத பரம்பொருள் நிலையை என்னால் உரைக்க இயலாது; ஸத்வம், ரஜஸ், தமம் என்று மூன்றாக எண்ணப்படும் குணங்களுள் முதலாவதான ஸத்வகுணத்தை உடைய திருமாலே (முறையே) ரஜோகுணத்தையும், தமோகுணத்தையும் உடைய பிரமனையும், சிவனையுங்காட்டிலும் முதல்வர். அவரது கல்யாணகுணக்கடலில் குடைந்தாடுவதே நன்று ] என்னும் பாடலை அமைத்திருக்கிறான் கல்வியிற்பெரிய கம்பன். ஸத்வகுணத்தையுடையவர் திருமாலே என்பதும், பிரமன் ரஜோகுணத்தையுடையவன் என்பதும், சிவன் தமோகுணத்தையுடையவன் என்பதும் ஸகல சாஸ்திரங்களிலும் பிரசித்தம். 

    ஒருபகல் உலகெலாம் உதரத் துட்பொதிந்(து)
    அருமறைக்கு உணர்வரும் அவனை அஞ்சனக்
    கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
    திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை” (கம்ப-பால-திருவ 2 – 10 – 3)

    எழுதரிய திருமேனிக் கருங்கடலைச்
    செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள்” [பால – குலமுறை 20]

    கராம்மலை யத்தளர் கைக்கரி எய்த்தே
    அராவணை யில்துயில் வோயென அந்நாள்
    விராவி அளித்தருள் மெய்ப்பொரு ளுக்கே
    ‘இராமன்’ எனப்பெயர் ஈந்தனன் அன்றே” [பால – திருவ 119]-[கராம் – முதலை; கைக்கரி – யானை; அராவணை – பாம்புப் படுக்கை]

    “கடுத்துநிமிர் கராம்கவ்வக் கையெடுத்து மெய்கலங்கி
    உடுத்ததிசை அனைத்தினும்சென்(று) ஒளிகொள்ள உறுதுயரால்
    அடுத்தபெருந் தனிமூலத்து அரும்பரமே பரமேஎன்று
    எடுத்தொருவா ரணம் அழைப்ப நீயோவந் தேன் என்றாய்” [ஆரணி, விராதன் வதை 49]-[கராம் – முதலை]-

    “கொல்லாழி நீத்தங்கோர் குனிவயிரச்
    சிலைதடக்கைக் கொண்ட கொண்டல்” [பால – மிதிலை 154][ஆழி – சக்கரப்படை]

    பஞ்சணை பாம்பணை யாகப் பள்ளிசேர்
    அஞ்சன வண்ணனே இராமன்” [ஆரணி சடாயுவுயிர் நீத்த 142]

    சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில்
    எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
    செங்கண் வில்கரத்து இராமன அத் திருநெடுமாலே” [கிட்கிந் – நட்புகொள் 79]

    “தோற்றம் என்பதொன்று உனக்கில்லை” [யுத்த – மீட்சி 107]

    “மெய்யே பிறந்தேயும் பிறந்தி லாதான்” [யுத்த – நாகபாசப் 222]

    மறைகளின் தலைகள் மன்பெ ரும்பர மார்த்தமென்(று)
    உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னையல் லாம்மற்றிங்(கு)
    யாரையும் அறையா” [யுத்தமீட்சி 101]-[மறைகளின் தலைகள் – உபநிடதங்கள்]-

    முன்னை ஆதியாம் மூர்த்திநீ மூவகை உலகின்
    அன்னை சீதையாம் மாதுநின் மார்பின்வந் தமைந்தா:” [யுத்தமீட்சி 113]

    “நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கெல்லாம்
    வேராய்முழு முதற்காரணப் பொருளாய்” [யுத்த – நிகும்பலை 141]

    உற்றொடு தனியே தானே தன்கணே
    உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கான்” [யுத்த வருணனை வழி 63]

    “நவையறும் உலகிற் கெல்லாம் நாயக நீயே” [யுத்த வருணனை வழி 67]

    எள்ளலா காதமூலத்(து) யாதுக்கும் முதலாய் உள்ள வள்ளலே” [யுத்த வருணனை வழி 71]

    மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக்
    கால்தரை தோய நின்று கட்புலக் குற்றதம்மா” [கிட்கிந் – வாலிவதை 148]

    மும்மையாம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன்
    தூதாய்ச் செம்மையால் உயிர்தந் தாய்க்கு” [சுந்தர – உருக்காட்டு 71]

    மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
    காலமும் கணக்கும் நீத்த காரணன்” [சுந்தர – பிணிவீட்டு 80]

    மூவர்க்கும் தலைவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும்
    காவற்குப் புகுந்து நின்றார் காகுத்த வேடங் காட்டி” [யுத்த – கும்பகருணன் வதை 150]

    மூலமே இல்லா முதல்வனே நீஎடுத்த
    கோலமே யார்க்கும் தெரிவரிய கொள்கைத்தால்
    ஆலமோ? ஆலின் அடையோ? அடைக்கிடந்த
    பாலனோ? ஆதிப் பரமனோ? பகராயே” [ஆரணி – கவந்த 44]

    “மெய்யைத்தான் சிறிதுணர்ந்து நீவிதித்த மன்னுயிர்கள்
    உய்யத்தான் ஆகாதோ? உனக்கென்ன குறையுண்டோ?
    வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்றளித்த
    ஐயத்தால் சிறிதுஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா” [ஆரணி – விராதன் வதை 59]மெய் – நீயே பரதத்துவம் என்னும் உண்மை; மழுவாளி – பரமசிவன்; ஐயம் – பிச்சை, சந்தேகம்.]

    அன்னமாய் அருமறைகள் அறைந்தாய்நீ அவையுன்னை
    முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ?” [ஆரணி-விராதன் வதை 60]

    மூவகை உலகம் ஏத்தும் முதல்வன்;
    எவர்க்கும் மூத்த தேவர்தம் தேவன்” [யுத்த நிகும்பலை யாகப் 175]

    “மூவ ராய்முத லாகி மூலம தாகி ஞாலமும் ஆகியத்
    தேவ தேவர் பிடித்த போர்வில் ஒடிந்த சேவகர்” [அயோத். கைகேசி சூழ்வினை 62][தேவ தேவர் – சிவன்; சேவகர் – இராமன்]

    முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை” [பால. கடிமணப் 69]

    “காலம் ஆகணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற
    மூலமாய் முடிவிலாத மூர்த்தி இம்முனிவன் என்பார்” [அயோத். கைகேயி சூழ்வினை 91]

    “வான்நின்றிழிந்து வரமிகந்த மாபூதத்தின் வைப்பெங்கும்
    ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளனென்ப;
    கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை யிழைப்பக் கோல்துறந்து
    கானும் கடலும் கடந்திமையோர் இடுக்கண்காத்த கழல்வேந்தே”
    அயோத்தியாகாண்டம் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடல்

    சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறவந்த தொல்காப்பியர்,-“நூலே கரகம் முக்கோல் மனையே
    ஆயுங்காலை அந்தணர்க்குரிய
    “[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]-மற்ற சங்க இலக்கியங்களிலும் ‘முக்கோற் பகவர்’ என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத் தேறுகிறது.

    சங்கநூலான பரிபாடலோ “முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே” [பரிபாடல் 3 – 71,72] என்று திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று.

    மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே” [பரிபாடல் 3 – 2,3][மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] என்றும், “நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” [பரிபாடல் 15 – 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது.–மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர” [பரிபாடல் 3 – 9,10,11] [மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.] “நின் சேவடி தொழாரும் உளரோ” [பரிபாடல் 3 – 19] என்று சங்ககாலச் சான்றோர்கள் பாடியிருக்கும்போது திருமாலை முல்லைநிலத்திற்கு மாத்திரம் உரியவன் என்றோ, அந்நிலத்தினரால் மாத்திரம் தொழப்படுபவன் என்றோ எவர் கூறமுடியும்? ஆகையால் பரிபாடல் முதலானவற்றில் திருமால் ஒருவனே வேதத்தால் பரம்பொருளாக முழங்கப்படுபவன் என்று கூறியதை இத்தொல்காப்பியப்பாடல் வலியுறுத்துகின்றதேயொழிய, அதற்கு முரணாகப் பேசவில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது.

    “மாயோன் மேய காடு உறை உலகமும்,
    சேயோன் மேய மை வரை உலகமும்,
    வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
    வருணன் மேய பெரு மணல் உலகமும்,
    முல்லை, குறிஞ்சி, மருதல், நெய்தல் எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”–தொல்காப்பியத்தில் முதலாவதான அகத்திணை இயலில் ஐந்தாவது பாடலாக உள்ளது-சங்ககாலத்திலேயே) முல்லைநிலத்தில் மாத்திரமல்லாமல் மற்ற நிலங்களிலும் திருமால் கோவில்கள் இருந்தன என்பதைக் காண்கிறோம்.-

    அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
    கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
    தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல்பாணி
    நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்
    குன்று பின் ஒழியப் போகி”–அகநானூற்றின் ஒன்பதாவது பாடலில்,-நெடுமால் வரைய – குன்று ஒழியப் போகி’ என்னும் தொடரால் நெடுமாலாகிற திருமால் எழுந்தருளியிருக்கும் வேங்கடக் குன்றையும் கடந்து தான் சென்றதாகக் குறிப்பிட்டான். தலைவன் வேங்கடமலைக்கும் அதைக்கடந்து அப்பாலும் சென்று பொருளீட்டி வருவது என்னும் மரபு அகநானூற்றின் பல பாடல்களில் காணப்படுவதால் இங்கு வேங்கடமலையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தம். அகநானூற்றில் அறுபத்தோராம் பாடலில் ‘விழவுமலி வேங்கடம்’ என்று வருவதும் இதை வலியுறுத்துகிறது. எப்படியும் ‘நெடுமால் வரைய – குன்று ஒழியப்போகி’ என்னும் தொடர் சங்க காலத்திலேயே திருமால் மலையாகிற குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியிருந்ததைக் காட்டுகிறது.

    வென்று எறிமுரசின் விறல் போர்ச் சோழர்
    இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
    வரு புனல் நெரிதரும் இரு கரைப் பேரியாற்று
    உருவ வெண் மணல் முருகு நாறு தண்பொழில்
    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
    வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
    தீ இல் அடுப்பின் அரங்கம் போல
    பெரும் பாழ் கொண்டன்று நுதலே”–அகநானூறு நூற்றிமுப்பத்தேழாம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும் புலவர்-தலைமகன் பிரியப்போகிறான்’ என நினைத்து வேறுபட்ட தலைமகளின் நிலையைக் கூறும்போது, “திருவரங்கத்தில் பங்குனி உத்தரத் திருநாளின் போது, மக்கள் மிகுதியாகத் திரண்டு காவிரியின் இருகரைகளிலும் உள்ள சோலைகளில் தங்கியிருந்தபோது பொலிவுடையதாகத் தோன்றிய அச்சோலைகள், அவ்விழாவின் முடிவில் அனைவரும் அரங்கத்தைவிட்டுப் போனபின் பொலிவிழந்து தோன்றுவதுபோல், தலைமகன் பிரிவை எண்ணிய தலைமகளின் நெற்றியும் பொலிவிழந்து தோன்றுகிறது” என்கிறார். இன்றும் திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவம் நடைபெறுவது அனைவரும் அறிந்தது. அந்த உத்ஸவம் சங்க காலத்திலேயே நடந்துவந்தது என்று இப்பாடலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. திருமாலைப் பற்றிய நான்காவது பரிபாடலில், “நல்யாற்று நடுவும் கால்வழக்கு அறுநிலை குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்’ (67 – 69) என்னும் பகுதி நல்யாற்று நடுவாகிற திருவரங்கமும், காலவழக்கை அறுத்து முக்தி அளிக்கும் குன்றமாகிற வேங்கடமும் திருமால் வெவ்வேறு பெயர்களுடன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் என்று பாடியிருப்பதிலிருந்து முற்கூறிய அகநானூற்றுப் பாடல்களில் வேங்கடத்திலும், திருவரங்கத்திலுமிருந்தது திருமால் கோவில்களே என்று தெளிவாகிறது. இதிலிருந்து சங்ககாலத்திலேயே மருதநிலத்திலும் திருமால் கோவில் கொண்டிருந்தான் என விளங்குகிறது. சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகளால் இவ்விஷயம் விரித்துரைக்கப்பட்டது. பதினைந்தாவது பரிபாடலில் திருமாலிருங்குன்றமாகிய குறிஞ்சிநிலத்திலும் திருமால் எழுந்தருளியிருந்தது விரிவாக வருணிக்கப்படுகிறது. பரிபாடல் திரட்டின் முதல்பாடலில் கூடல்மாநகரில் இருந்தையூர் என்னும் பகுதியில் திருமால் கோயில்கொண்டிருந்தது சிறப்பாக வருணிக்கப்படுகிறது. இதிலிருந்து மருதநிலத்திலும் சங்ககாலத்தில் திருமால்கோயில் உண்டென்று தெரிகிறது.

    “வண்டு ஊது பொலிதார், திரு ஞெமர் அகலத்து
    கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
    அலங்கல், செல்வன் சேவடி பரவி,
    நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர
    மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
    கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு”–பதிற்றுப்பத்து என்னும் சேரவேந்தர்களைப் பற்றிய சங்க நூலில் நான்காம்பத்தின் தொடக்கத்தில்,-திருஞெமர் அகலம் – ஸ்ரீதேவி வாழும் மார்பு. திகிரி – சக்கரம். துழாஅய் அலங்கல் செல்வன் – துழாய் மாலையணிந்த உயபவிபூதி செல்வத்தையுடைய திருமால். கோடு – திருவிதாங்கோடு என்று வழங்கப்படும் திருவனந்தபுரம். ]என்னும் பாடற்பகுதியில் குறிஞ்சிநிலமான திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலைப் பாடியிருப்பதிலிருந்து சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்திலும் திருமால் கோயில்கொண்டிருந்தார் எனத் தெரிகிறது.

    நீடுகுலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
    பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
    வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்,
    குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடி … …
    அருந்திறற் கடவுள் வாழ்த்தி”–பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில்,-மலையில் யானை படுத்திருப்பது போலே காஞ்சியில் (திருவெஃகாவில்) பாம்பணைப்பள்ளியில் திருமால் கிடக்குமழகு பாடப்படுகிறது. இதிலிருந்தும் சங்ககாலத்தில் மருதநிலத்தில் திருமால் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்தது காட்டப்படுகிறது.

    உலகைப் படைத்தளித்து அழிக்கும் பெருமை. (2) எல்லாம் அறியும் பெருமை. (3) எல்லாம் வல்லவனாய் இருக்கை. (4) எங்கும் வியாபித்திருக்கை. (5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை. (6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை. (7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை. (8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை. (9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை – என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன-அக்காலத்தில் சான்றோர்கள் அனைவரும் திருமால் ஒருவனையே முற்கூறிய பத்து பெருமைகளையுமுடைய பரம்பொருளாகக் கொண்டிருந்தார்கள்; வேறு எந்த தெய்வத்தையும் அப்படிக் கொள்ளவில்லை” என்பதை நிலைநாட்டித்தரும் ‘கொள்கை விளக்கப் பாடல்கள்–

    இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலேயே திருமாலானவர் முல்லை நிலத்து மக்களின் வழிபடு தெய்வமாகச் சொல்லப்படுகிறார். ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்பது தொல்காப்பியச்சூத்திரம். தொல்காப்பியத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய இலக்கியங்களிலேயும் திருமாலானவர் ‘காடும் காடு சேர்ந்த நிலமும்’ என்று தொல்காப்பியத்தால் வரையறுத்துச் சொல்லப்படும் முல்லை நிலத்து மக்களின் தெய்வமாக வருணிக்கப்படுகிறார். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரத்திலேயும் காடும் காடு சேர்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திலே வாழும் மக்கள் திருமாலை வழிபடுவதை இளங்கோவடிகள் ‘ஆய்ச்சியர் குரவையிலே’ காட்சிபடுத்துகின்றார்

    அகிலபுவனங்களையும் தன் மூவடிகளின் கீழ் ஒடுக்கியவன் எவனோ அப்பெருமான் கிரியில் நிலைபெற்றருள்கின்றான் என்ற கருத்தில் ‘ம்ருகோ3 ந பீ4ம; குசரோ கி3ரிஷ்டா2: – யஸ்யோருக்ஷு த்ரிக்ஷு விக்ரமனேஷு அதி4க்ஷயந்தி பு4வநாநி விச்வா’ என்று வேதமும் திரிவிக்ரமனாகிய திருவேங்கடமுடையான் திருமலையில் நித்யவாசம் செய்தருளுகிற சிறப்பை எடுத்துக்கூறுமென்பர். இவ்வேதப்பொருளையே ‘இழைத்தார் ஒருவரை இல்லா மறைகளை இன் தமிழால் – குழைத்தார் ஆகிய குருகைப்பிரானும்’ ‘குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் – அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் – சென்று சேர் திருவேங்கடமாமலை’ என்றருளிச்செய்தார். ‘வேதவெற்பு’ என்று திருமலையை ஸ்ரீமத் வேதாந்ததேசிகன் சிறப்பித்தருளியதும் இக்கருத்தை உட்கொண்டே–

    ——————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ஸித்த உபாய விஜயம் -கிருபா ஜன்யமா- கிருபா ஜனகமா–

    June 7, 2026

    ஸித்தோபாய விஜயம் : ஸித்தோபாயமாகிற எம்பெருமானுக்கே மோக்ஷோபாயத்வம் உண்டு என்னும் தென்னாசார்ய ஸம்ப்ரதாய ப்ரதாந ப்ரதிதந்த்ரார்த்தத்தின்மீது ஸ்ரீரங்கத்தில் வாழும் ஸ்ரீ உ. வே. மதுராந்தகம் வீரராகவாசார்ய ஸ்வாமியும் திருவரங்கம் திருமலை தாதாசார்ய ஸ்வாமியும் சில ஆக்ஷேபங்களா எழுப்ப அவற்றுக்குத் தக்க ஸமாதானங்களைக் கூறி ஸித்தோபாயத்தின் நிரபேக்ஷோபாயபாவத்தை நிலைநாட்டும் நூல் / ஆசிரியர்கள், ஸ்ரீ உ. வே. வாகம்ருதவர்ஷீ வேளுக்குடி வரதாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ உ. வே. ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் ஸ்வாமி-

    உள்ளபடி யுணரில் ஒனறு நமக்குணடென்று
    விள்ள விரகிலதாய விட்டதே — கொள்ளக்‌
    குறையேது மில்லாற்குக்‌ கூறுவதென்‌ சொல்லீர்
    இறையேது மில்லாத யாம் ”
    [பரமேயஸாரம் – 6]

    உபாத,ததே ஸததா ஸதி,தி நியமநாத்‌யை : சித,சிதெள
    ஸ்வமுத்‌, திஸய ஸ்ரீமாநிதி வத,தி வாக ஒளபநிஷ தீ ; |
    உபாயோபேயத்வே ததிஹ தவ தத்தவம நது கு;ணெள
    அதஸதவாம ஸ்ரீரங்கே,மய ஸரணமவயா ஜமபஜம |!
    ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்2-87-ஸ்ரீரஙக, நாதனே! உபநிஷத்‌; வாக்கானது (என்ன சொல்லு கிறதெனறால்‌) திருமால்‌ பயனடைபவனாகக தனனையே எண்ணி, சேதநா சேதனங்கள்‌ -ஸருஷ்டி, ஸ்திதி, நியமனம்‌ முதலியவறறைச்‌ செய்து ஸ்வீகரிககிறான் எனறு ஒதுகின்றது. ஆகையாlm, உபாயத் வமும்‌ உபேயத் வமும் தேவரீர்க் கு ஸ்வரூபமாகும் (முக்யமாகும்‌), ( உபாய உபேய சப்தத்தால் சொல்லப்படும மற்றவற்றுக்குப்போலே)கெளணம( அமுக்கி யம் ) அலல. ஆகையால் தேவரீரை நிருபாதிகமான உபாய மாகப்‌ பற்றினேன்‌-

    ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

    ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
    அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

    அதாவது
    ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
    அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
    இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

    —————————————————–

    ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

    அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

    அதாவது –
    கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
    கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
    எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
    அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
    பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

    (மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
    துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
    எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
    விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

    ————————————————————

    அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

    இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

    அதாவது
    உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
    என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
    நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
    அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
    என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
    என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
    ஆழ்வார் அருளிச் செய்கையாலே
    ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

    (உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
    உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
    உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
    உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

    ———————————————————-

    இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

    இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

    அதாவது
    இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
    நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
    இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை

    ——————————————————————

    அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

    இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
    அதாவது
    இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
    என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

    —————————————————-

    இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
    புத்தி சமாதாநார்த்தம்
    சைதன்ய கார்யம்
    ராக ப்ராப்தம்
    ஸ்வரூபநிஷ்டம்
    அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

    ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

    அதாவது
    இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
    ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
    சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

    இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
    நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
    இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
    இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
    ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
    அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
    அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

    அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

    இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

    அதாவது
    நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
    உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
    பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

    —————————————————–

    அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

    ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

    அதாவது
    இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
    அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

    ———————————

    “ அஸாரம் அல்பஸாரம ச ஸாரம் ஸாரதரம் த்யஜேத் | பஜேத ஸார தமம் ஸாஸ்தரே ரத்நாகர இவாமருதம ||?” எனற வைகுணட ட தீ,க்ஷிதீயோ பாதத வசநம் பிரமாண பாவத்தை வஹிக்கும் . இவ் வசநத்தில் , ரதனாகாரம் த்ருஷ்டாந் தமாகவும் ஸாஸ்த்ரம் தார்ஷ்டாந்தகமாகவும காட்டப்பட்டுளள து உற்று நோககததககது. ஸமுத்ரத்தில் அடங்கி யுளள அஸரராதி;சதுஷடயம் தயாஜ்யம் , ஸார தமம பஞசமம் அம் ருதம் உபாதேயம் . இவ் வோபாதி ஸாஸ்த்ரத்தில் அடங்கியுளள அஸாராதி,களைத் துரநது ஸாரதமத்தைக் கைக் கொள்ளவேணும் எனறு ஸ்லோகார்த்தம் தேறுகிறது

    தேசிகன் செய்தருளின வ்யாக்யாநத்தின் படி, பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அஸாரமென்றும் , வேதத்தில பூர்வ பாகத்தில் ஐஹிக பல தத் ஸாத,ந பிரதிபாதகம் அல்பஸாரம் என்றும் , ஆமுஷ்மிக பல தத் ஸாதந ப்ரதிபாதக பர தேசம் ஸாரம் எனறும, ஆத்மபராப்தி ததஸாதந ப்ரதிபாதக பாகம ஸார தரம் எனறும் , பரமாத்ம ப்ராப்தி ததஸாதந பிரதேசம் ஸார தமம் என்றும் , இதுவே வீவேகிக்கு உபாதேயம என்றும் இஸ் ஸ்லோகாரத்தம் தெரிய வருகிறது

    யா வேத; பாஹ்யா: ஸ்ம்ருதய: யாம்ச காம்ச குக ருஷடய:! ஸாவாஸதர : நிஷ்படிலா: பரேதய தமோ நிஷடதா ஹி தாஸ ஸமருதா: |!” என்றிறே மநு ப,க;வான அருளிச்செய்த து. மேலும, *’ வேதாத்‌ ஸாஸ்த்ரம் பரம்‌ நாஸதி ‘” எனறு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த் ரஙகளுககு சாஸ்த்ரத்வம் நிஷிதம் – இவ் விடததில ‘“ அந்யவாசியெனக் கொளள வேணும் .-பரா-ததத கைங்கர்ய ததஸாத,ந ஸிதத்தோபாய பிரதிபாத,கமே ஸாரதமம ஆக ஸார தமமுமான ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸார தமம் எனத் தேறியது

    ——————————————————————-

    அருள் கொண்டாடும் அடியவர் –
    இவ் வாழ்வார் தம்மைப் போலே இருக்குமவர்கள் –
    அதுவும் அவனது இன்னருள் -என்றும் –
    அருள் பெறுவார் அடியார் தம் அடியன் -என்று இருக்கும் இவர் தம்மைப் போலே –
    ஆனைக்கு அன்று அருளை ஈந்த -என்றும் –
    நின்னோடும் ஒக்க வழி பட வருளினாய் -என்றும் –
    அருள் புரிந்த சிந்தை -என்றும் –
    நின் அருளே புரிந்து இருந்தேன் -என்றும்
    அருளாது ஒழியுமே -என்றும் –
    சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உளது –என்றும்
    இப்படிகளால் அவன் அருளைக் கொண்டாடும் அடியவர் –
    இப்படியே பகவத் பிரசாதத்தையே கொண்டாடி போருமவர்கள் –
    பகவத் பிரசாத ஹேதுவாக -ஸ்வகதமான கர்ம ஜ்ஞான பக்திகளை உபாயமாக
    ஆதரிக்கும் அவர்கள் அன்றிக்கே –
    கேவல பகவத் ப்ரசாதமே உஜ்ஜீவன ஹேது -என்று இருக்கும் அவர்கள் –
    தம் தாம் பக்கல் உள்ள ஆனுகூல்யங்களை பிரசாத பலமாக நினைத்து இருக்கும்
    அது ஒழிய -பிரசாதமாக நினைத்து இராதவர்கள் –
    கிருபையாலே பக்தி பெற்றோம் -பக்தியால் கிருபை பெற வில்லை -கிருபா ஜன்யம் -கிருபா ஜனகம் இல்லை
    -பக்தி கிருபையின் பலம் என்றவாறு
    -பக்தி ப்ரபத்திகளும் ஈஸ்வர கிருபா பலமே எனத் தேறியது-
    பிரசாதத்தால் சரணம் என்கிறோம்
    சரணம் அடையாதவர் பிரசாதம் பெற வில்லையா -அவன் அனைவருக்கும் பொழிபவன் அன்றோ
    வரவாறு ஒன்றும் இல்லையே -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு உகந்து
    நிர்ஹேதுக கிருபை -உபாயம் எதிர்பார்க்காமல் -அதிகாரி எதிர்பார்ப்பார் -ஆசை யுடையோர்க்கு எல்லாம் -தகுதி வேண்டும் –
    இச்சை உபாயம் இல்லை அதிகாரி விசேஷம்
    –போஜனத்துக்கு ஷூத்து போலே -பல அனுபவ யோக்யதா — ஆண்கள் பள்ளிக்கு ஆணை எதிர்பார்ப்பார்கள் -புருஷ சாபேஷமும் புருஷகார சாபேஷமுமாய் இருக்கும்-இவர் இப்படி நினைத்து இருப்பது மற்றைய ஆழ்வார்களை இ றே –
    ஆழியான் அருளே -என்றும் – நின் அருளே புரிந்திருந்தேன் -என்றும் இ றே அவர்கள் பாசுரங்கள் –

    (1) ஸ்ரீதேவி உபாயமாகிறாள்‌,
    (2) ஸ்ரீதே,வி விபு,ஸ்வ ரூபமுடையவள்‌;
    (3) சரண வரண வாக்குக்கு உபாயத்வ முணடு என்பதற்கு பிரமாணம்‌ உள்ளது,
    (4) கைவல்யம் மோக்ஷமாகாது
    (9) கைவல்யத்தை ௮நுபவித்த பின்‌ பரமாத்மாவை அநுபவிககலாம்‌ எனறு கூறப்படுகிறது;
    (6) கைவலயம்‌ ௮ண்டத்தினுள்ளேயே இருக்கிறது எனறு பிரமாணங்களால் கூறப்படுகிறது,
    (7) பிரபததி துர் பல மானது.
    (8) சக்தி யுள்ளவர்களுககு பக்தி யோகத்திலேயே அதிகாரம்
    (9) பக்தி யற்றவர்களுக்கே ப்ரபத்தியில்‌ அதிகாரம்
    (10) பக்திக்கு ௮ங்க மாகவேயிருககும் கர்ம யோகம்‌ முதலானவற்றுக்கு ஸ்வதந்தரோபாயத்வம் கூடாது.
    (11) ஸாத்யோபாயததினால்‌ ஸித்த,வஸ்து ஸாதிக்கப்படுகிறது
    (12) ஸாத்‌ய ஸாதநங்களுக்கு வேறு பாடு உண்டு.
    (13) வேறான ஸாதரநத்தாலேயே வேறான ஸாதயம் ஸாதிக்கப் படுகிறது.
    (14):பரித்யஜய என்கிற உபா யாந்தர தியாக,வசநம் அதிகாரத்தினால் ஏற்கனவே யுள்ளதை அநுவாத,மே செய்கிறது.
    (15) திருமந்திரத்தில்‌ பரணவம்‌ இல்லாமலே எட்டு அக்ஷரமாகிறது
    (16) மிகப்‌ பெரியவர்‌களான நித்யர்ககும்‌ முக்தர்க் கும்‌ ஸருஷ்டி முதலானவற்றில சக்தி கிடையாது
    (17) தேஷத்தைக் காணாதிருக்கையே வாத்ஸல்யம்‌
    (18) பிறர்‌ துன்பத்தைக்‌ களைவதில் விருப்பமே தயை என்று
    சில பூர்வபக்ஷிகள்‌

    1-ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளிலிருந்து. பகவத கிருபை ஒரு ஹேது வில்லாமல்‌ உண்டாகிறது என விளங்குகிறது –
    2-உபாயங்களில்‌ ஏற்றத் தாழ்விருக்கையால் அதிகாரிகளுக்குத்‌ தக்கபடி பல பேதம் உணடு
    3-மற்ற ஜீவரைப் போலே அணுத்வமே ஸ்ரீதேவிக்கு இயலவானது.-அகடி தகடநா சக்தியாலே அவள்‌ எங்குமிருக்கவும் செய்கிறாள்
    4-இல சமயங்களில்‌ கர்மயோகமும் , ஜ்ஞாந யோகமும் மோக்ஷத்திற்கு ஸ்வதந்த்ர காரணமாகவும்‌ ஆவதுண்டு –
    5-ஸ்ரீதேவிககு எப் போதும்‌ மோக்ஷோபாயத்வம்‌ கிடையாது, எப்போதுமுள்ளது புருஷகாரத்வமே
    6-அடியார்களின் குறறங்களைக் குணமாகக்‌ கொளளுகை வாத்ஸல்யமாகும்
    7-பிறர்‌ துனபங்‌களைக் கண்டு துன்புறுவதே காருண்யமென ப்ரமாணம் கூறுகிறது-
    8-ஈஸ் வரனுடைய நிரபேஷ உபாயத் தன்மைக்கு ஓட்டாதாகையால, பிரபத்தி அதிகாரி விஸேஷணமே
    9-ஸவரூபத்தைப் பற்றிய உண்மை யறிவுடைய அனைவருமே அதற்கு அதிகாரிகள்‌-
    10-உபாயாந் தரங்களைக் கை விடுவதை பிரபத்திககு அவஸ்யமான அங்கமாகவே கீதை விதிக்கிறது-
    11-ஸ்ரீ ய பதிக்குக்‌ கைங்கர்யமாயிருககும கர்மம் (உயிரகளிடதது) இரக்கம முதலான பல காரணங்களால உண்டாவது.
    12-அத் யந்த பரந்தர ஸ்வரூபததை அறிந்தவர்களுக்கு ஸாதராந்தரஙகள்‌ ஸவரூப விருத்தமே யாகும்
    13-நெல் குத்தி னால் வியர்வை ஏற்படுவது போலே ஸரணாகதனுக்கு இயல்‌ வாகவே ஏற்படும்‌ தன்மைகள் ஆநுகூல்ய ஸங்கலபம் முதலானவை-
    14-பகவத் ப்ராப்தி விஷயத்தில்‌ பிரபத்தி பலத்தைக் கொடுத்தே தீரும் என்கிற இந்த நியமம்‌ இல்லை -பகவத் இச்சையே ஹேது என்பதை பரத ப்ரபத்தியிலே காணலாம் –

    15-ப்ரபந்ந னுக்கு அக்ருத்ய கரண கருத்யாகரண ரூப பாப சம்பந்தமும் உபாயாந்தர சம்பந்தமும் உண்டானால் அவன்‌ முன் பிரபத்தியை நினைவிற் கொள்வதே பிராயச் சித்தமாகும்
    16-குல தைவதம் போலே எல்லா பரபந்நர்களும் பூஜிக்கத் தக்கவர்களே
    17-ஒவ்வொரு வயக்தியிலும ஜாதி பரி ஸமாப்ய வ்யாபித்திருப்பது போலவே, ஓவ்வோ ரணுவிலும் ஈஸ் வரன் உள் நுழைந்து பரி ஸமாப்ய வ்யாபித்‌திருக்கிறான்‌
    18-கைவல்யம் நியாமாகவே கொள்ளத் தக்கது –

    நம்பிள்ளை ஈடு -ஈமபிளளை ஈடு.1-1-1 (அருளினன்‌ ) நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்டவித்தனை. இத்தலை அர்த்திக்க வன்‌ றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிறகக் கண்டவித்தனை

    8-7-9 மதி–௮நுமதி என்றாக்கி அநுமதி மாத்ரத்‌ தாலே” என்பர்‌ பட்டர்‌. அதாவது அவன் புகுருகிற விடத்தில் விலக்கிற்றிலன் என்கை

    8-8-3-எனனுணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும்‌ அவனதின் னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன்‌ ப்ரஸாதத்‌ தாலே. நின்ற நின்ற அளவுகள் தோறும்‌ இவ்வளவும அவனாலே பிறந்தது எனனும்படி யாயிற்று இருப்பது அவனுடைய சவ் ஹார்த்தம்

    10-8-10 அவன் தானே செய்தான்‌’ என்னுமன்று அவனுககு வைஷமயமும, நைர்க்ருண்யமும, ஸர்வ முக்தியும் பிரஸங்கியாதோ? என்னில்‌; இத் தலையில் ருசியை அபேக்ஷித்துச்‌ செய்கையாலே, ௮வனுககு அவை தட்டாது. அது ஹேது வெனறு ஈஸ்வரனுககு உத்தரமானாலோ வென்னில, அது உபாயமாக மாட்டாது. பல வ்யாப்தமான திறே உபாயமாவது. இநத ருசி ௮திகாரி ஸ்வரூபமாகையாலே தத,விஸேஷணமாமித்தனை. உபாயம ஸஹகாரி நிரபேஷமாகையாலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது –

    மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
    இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

    சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
    தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
    விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

    அதாவது
    சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
    ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
    தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
    அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
    தோஷமாய் இருக்கும் -என்கை –

    ———————————————————

    சிற்ற வேண்டா–சூரணை -233

    சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

    அதாவது
    சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
    சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
    என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
    என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

    (மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
    சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
    குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
    குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

    ————————————————————-

    இது தன்னைப் பார்த்தால்- – (பிரபத்தி தன்னைப் பார்த்தால் – பிரபத்தி ஸ்வரூபத்தை –உபாயமாக கொள்ளும் அன்றும் ) பிதாவுக்கு புத்ரன் எழுத்து வாங்குமாப் போலே இருப்பது ஓன்று –சூரணை -54-

    சத்தா காரண பூதனாய்-சர்வ தசையிலும் ரஷகனாய் கொண்டு போருகிற -அகார வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கும்-மகார வாஸ்யனான இவனுக்கும் -உண்டான சம்பந்தத்துக்கு அவத்ய கரம் -என்ற படி-

    இது தனக்கு ஸ்வரூபம் தன்னை பொறாது ஒழிகை –சூரணை -55-

    சரம ஸ்லோகத்தில் எல்லா தர்மங்களையும் விட்டு இருந்தாய் ஆனால் என்னைப் பற்று-என்பதே இது- அனுவாதம் இல்லை–யத் யத் சாங்கம் தத் தத் சாதனம் -என்கிற நியாயம் இதுக்கும் வாராதோ என்ன – அங்க ஸ்வரூபத்தை தர்சிப்பிகவே அந்த நியாயம் இங்கு வாராது என்று பார்த்து  – இது தன்னை அருளிச்  செய்கிறார் –

    அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை – சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –சூரணை -56-

    உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-இவ் உபாய விசேஷம் ஸ்வ வ்யதிரிக்தமாய் இருப்பதொன்றை சஹியாமை யாலே இறே அனுகூல்ய சங்கல்பாதிகளுக்கு உபாயங்கத்வம் அன்றிக்கே-அவகாத  ஸ்வேதம் போலே சம்பாவித ஸ்வபாவத்வம் -உண்டாகிறது -என்ற இவ் அர்த்தத்தை பரந்த படியிலே இவர் தாமே அருளி செய்தார் இறே

    உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –சூரணை-58- (இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் – அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –

    இது (பிரபத்தி உபாய வர்ணம் )இரண்டையும் பொறாது-சூரணை-59-ஆகவே அத்யந்த பாரதந்தர்யம் உள்ளவனுக்கு இவை தானே ஏற்படும்-ஆறு வகைகள் இவை ஆறு அங்கங்கள் அல்ல –

    பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது –சூரணை -60-

    அல்லாத போது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம் –சூரணை-61-

    ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று – பிரமித்து – அத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே வேண்டுவது –சூரணை -62-

    ரஷணத்துக்கு அபேஷிதம் ரஷ்யத்வ அனுமதியே –சூரணை -63-

    எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

    பிரபத்தி உபாயத்துக்கு இக் குற்றங்கள் ஒன்றுமே இல்லைசூர்ணிகை – 134–

    இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –(உம்மைத் தொகை உபாயாந்தரங்களைப் போல் உபாயம் அன்று )-சூரணை -142-

    அவன் இவனைப் பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —சூரணை-143-

    இவை இரண்டும் ஸ்ரீ பரத ஆழ்வான் பக்கலிலும் ஸ்ரீ குகப் பெருமாள் பக்கலிலும் காணலாம் –சூரணை -144-

    ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நன்மை தானே தீமை ஆயிற்று – ஸ்ரீ குகப் பெருமாளுக்கு தீமை தானே நன்மை ஆயிற்று –சூரணை -145-

    பிரதி கூலராகிறார் –
    1-தேக ஆத்ம அபிமானிகளும் –
    2-ஸ்வ தந்த்ரரும் –
    3-அந்ய சேஷ பூதரும் –
    4-உபாயாந்தர நிஷ்டரும் –
    5-ஸ்வ பிரயோஜன பரரும் –சூரணை -263-

    முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்குமற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..சூரணை-266-

    ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –சூரணை -269-

    இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–சூரணை-270-

    ஆகையாலே தோஷம் இல்லை –சூரணை -271-

    இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும்
    இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அதாவது – ரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்கு ஹேது அல்லாதவோ பாதி – ரஷகனான அவனுடைய  சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை ஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற இருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –

    சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் – நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –சூரணை -396-

    மாதவன் மலை நீர் நிழல் என்று ஏறிடுமது வ்யாவ்ருத்த் யுக்தி அன்யார்த்தம் அ புத்தி பூர்வகம்
    அ வி ஹிதம் பல வி சத்ருசம் பலாந்தர ஹேது
    —ஆசார்ய ஹ்ருதயம்-111-

    நாலயலார்-அயல் சேரியார்-உபாய சதுஷ்ட 0அந்தர்யாமித்வ பரர்-சூரணை -140-

    கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள் அசல் .–சூரணை-141-

    ஸம்பந்த ஐஞாநமாத்ரம் , ஸித்த உபாய ப்ரதிபத்தி மாத்ரம் , அநிவாரண மாத்ரம் , ௮நுமதி மாத்ரம்‌, ௮சித் வ்யாவ்ருத்தி மாத்ரம் , சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விசேஷணம– என்று இப் புடைகளிலே அதிவாதம் பண்ணினார்கள்

    உபாய ப்ரபத்தி ஷட் அங்க யோகம் – வேதாந்த ஸார ஸித்தமான அநுபாய ப்ரபத்தி அதிகாரி விஸேஷணம்‌-இவ் வாசியை அறிய வேணுமநீயே எனககு உபாயமாவாயாக–எனறு பிரார்த்திக்கும் அறிவே சரணாகதி எனப்‌ படுகிறது-மஹா விஸ்வாஸத்தோடு கூட பகவான் ஒருவனையே உபாயமாயிருக்கும்படி யாசிப்பதே ப்ரபத்தி என்றும்‌ சரணாக,தி என்றம கூறப்படுகிறது

    உபாய வர்ணததுககு உபாயத்வமிலலாமையாலே “சரணம்‌ வ்ரஜ” எனகிற விதியால சரண வர்ணததுககு இஷ்ட ஸாதநத்வம ஏறபட மாட்டாது.-இதை அநுஸரித்தே தேசிகனும பிரபத்தியை வ்யாஜோபாய மெனறு ௮ருளிச் செய்திருக்கிறார்‌. இப்படியுளள பிரபததி அநுபாயம்‌ என்பதும தேஸிகன் நியாய ஸித்தா ஞஜனத்தில அருளிச்செய்துள்ளார்-

    பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி, ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி
    லக்ஷ்மீ நா தனையேஉபாயமாகக் கொளளும் எண்ணமாயிருககும்‌ இந்த பிரபத்தி தன்னை உபாயமாக எண்ணும நினைவைத்‌ தடுக்கிறது -ஸஹ காரிகளை உபாயமாகக்‌ கருதும்‌ நினைவைத் தடுக்கிறது என்பதைக்‌ கூறவும் வேண்டுமோ -பகவானைக்‌ காட்டிலும வேறுபட்டது உபாயமாகாது ‘ எனனும்‌ அறிவு -பிரபத்தி உபாயம” என்னும் அறிவுக்குத் தடையாயிருக்கத் தட்டில்லை என்று கருத்து-
    ஸர்வேஸ்வரன் ஸர்வஜ்ஞனா யிருந்த போதிலும் எப்போதும்‌ கருண யுடையவனா யிருந்த போதிலும ஸமஸாரச்‌ சுழலை நிர்வஹிப்பவனாகையால் ரஷ்யனான ஜீவனின அபேஷயை எதிர் பார்க்கிறான் – என்று பகவத ஏவ அபேஷா ப்ரதீஷையைச் சொல்லுகை யாலேயும்‌ இதுக்கு அநுபாயத்வம் ஸித்தம்‌

    ஆளவந்தாரின ஆகம ப்ராமாண்ய ஸ்லோகத்தின் கருத்து பின வருமாறு — சேதனர்களுடைய முயறசியால் ஸாதிக்கப் படும்‌ உபாயாந் தரங்களுடைய ௮திகாரமும் அவர்களுடைய முயற்சியால் ஸாதிக்கப் படுவதாகவே யிருந்தால் , இவ் வதிகாரத்தை ஸாதிப்பதறகு மற்றோரதிகாரம்‌ வேணும் ; அதுவும் ஸாத்யமாகில் அதை ஸாதிகக ஒரதிகாரம் வேணும்‌ எனனும்‌ ரீதியில் ௮நவஸதா தோஷம் ஏற்படும் ஆகையால் சேதநர்களின முயறசியால்‌ ஸாதிக்கப்படும் உபாயாந்தர ஸ்தலங்களில் ௮திகாரத்தை முன்பே ஸித்தமாயிருப்பதாகக் கொள்ளப் பட வேண்டும்‌. இவ் வண்ணமாகவே, ஸித்த உபாய ஸ்தலத்தில் அதிகாரத்தை ஸாத்யமாகவே கொண்டால் , எப்போதுமே பலம்‌ ஏறபட வேண்டி வருமாகையாலே எப்போதுமே மோக்ஷம்‌ ஏற்படுகை யாகிற நித்ய முக்தி ப்ரஸங்க,ம்‌ ஏற்படுமாகையால் ஸித்‌தோபாய ஸ்தலததில்‌ அதிகாரத்தை ஸாத்‌யமாகவே கொள்ள வேணடும்‌–என்று கருத்து. இவ்வளவால் சரணாகதி ஸாத்யரூபமாகையால் ஸித்‌தோபாய நிஷ்டனுக்கு இது ௮திகாரி விசேஷணமாகாது என்று சிலர்‌ மயங்குவது தள்ளப்பட்டது-

    ப்ரபத்தியாவது -சேதனனுடைய பிரார்த்தநா ரூப ஞானமே -, நமஸ் சப்தத்துக்கு ஸ்தூல யோஜனை, ஸுஷ்ம யோஜனை, பர யோஜனை என்று மூன்று யோஜனைகள்‌ சொல்லப் பட்டிருக்கின்‌றன. அந்த மூன்று யோஜனைகளிலும்‌ பரபத்திக்கு உபாயத்வமில்லை என்று ஏற்படுகிறது –
    முதல் யோஜனையில் நமஸ் -வணக்கத்தைச் சொல்லி –ஸ்வரூப அந்தர் கதமாய் -ஸ்வயம் ப்ரயோஜனமான சேஷ வ்ருத்தியைச் சொல்கிறது -இது மானஸ வாசிக காயிக ரூபமாய் த்ரிவிதமாய் இருக்கும் -மூன்றில் ஓன்று குறைந்தாலும் அபூர்ணமாகும் –
    ஸ்தூல யோஜனையில் ந மம –தேவோஹம் மனுஷ்யோஹம் -தவிர்ந்து யானும் என்னுடைமையும் நீயே என்னும் நினைவு -ஸ்வரூப உபாய பல அம்சங்களிலும் -பகவத் விஷயத்தில் சேஷ விருத்தியைப் பண்ணி தனக்கும் போகத்தை ஸம்பாதிக்க யோக்யனாகை–ஸ்வ சேஷத்வ ஸ்வ ரக்ஷகத்வ -ஸ்வ போக்யத்வ ரூப ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி நமஸ் ஸப்தத்தாலே சொல்லப்படுகிறது -ஸர்வேஸ்வரனுக்கே ஸ்வம்மாய் இருக்கையும் -அவனுக்கே ரஷ்யமாய் இருக்கையும் -அவனுக்கே போக்யமாய் இருக்கையும் -சொல்லிற்று -தன்னால் வரும்‌ நன்மை விலைப் பால் போலே-என்னுடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ -பரயோஜனையில் -௮வனை யடையும்‌ பொருட்டு உபாயமும்‌ அவனே. பல ப்ரதனும் அவனே ”என்னும் நினைவு –

    ஸரணாகதி தீபிகையில தேசிகன் ப்ரபத்தியை ஈஸ்வர யத்ந பலமாகவும்‌ ஈஸ்வர கிருபா பல மாகவும்‌ உபபாதித்துள்ளார்யாஜ்ஞா பிரபத்தி -பிரார்த்தனா மதி பிரபத்தி -அவ ரக்ஷணே ” “மந ஜ்ஞாநே ‘ என்கையாலே ரக்ஷண தர்மாஸ்ரய வஸ்துவுக்கு ரக்ஷய விஷயம் அபேக்ஷிதமானாப்‌ போலே, ஜஞாநாஸ்ரய வஸ்துவுககு ஜ்ஜேய விஷயம்‌ அபேக்ஷிதமாகையாலே, இருவர்க்கும் இரணடும்‌ அபேக்ஷத விஷயமா யிருக்கையாலும் , இரண்டும்‌ தர்மிக,ராஹகமாந ஸித்‌தமாகையாலும இருவர்க்கும்‌ இரண்டும் ஸ்வரூபமாய் இருக்கும்‌.புண்ணியம் யாமுடையோம் -நாங்கள் செய்தது அல்ல ஸ்வீ கரித்ததும் அல்ல புறப்பகையும் கழிக்க வேண்டாம் உள் பகையும் அழிக்க வேண்டாம்

    பண்டே உனக்கு ஸேஷமாயிருககிற இவ்‌ வாத்மாவை நீ கொண்டருளினா யித்தனை யிறே என்று ஆறாயிரப்படி – ஸ்வரூப ஸமர்ப்பணமாவது ஸ்வதஸ ஸித்‌தமான ஸேஷத்வத்தினுடைய ௮நுஸந்தான மாத்ரமே யொழிய தன்னதான ஆத்ம வஸ்துவை அவனுக்கு ஸமர்ப்பிக்கை யன்று —
    ஆசார்யாபிமாநமாவது–இவை யொனறுக்கும்‌ சக்தனன்றிக்கே யிருப்பா னொருவனைக குறித்து –ஸநந்தய பிரஜைககு வியாதி யுண்டானால் அது தனது குறையாக நினைதது ஓளஷத ஸேவையைப பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான் உபாயாநுஷ்ட்டாநம் பண்ணி ரக்ஷிக்க வலல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமாநததிலே யொதுஙகி –வல்ல பரிசு வருவிப்‌ பரேல் அது காணடுமே–என்கிறபடியே ஸகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி களையும அவனிட்ட வழக்காக்குகை -கைங்கர்யம் தான் நித்யம் -, நித்யமாக பிரார்தித்தே பெற வேணும — பேற்றுக்கு வேண்டுவது, விலக்காமையும இரபபும் —

    நியாஸத்தில்‌ என் சுமையை நீ ஏற்றுக் கொள்ள வேணும்‌’ எனறு பிரார்த்திக்கப் படுகிறது. சரணாகதியில் ‘நீ எனக்குப்‌ பலனை யளிப்பாயாகா எனறு பிரார்த்திக்கப் படுகிறது. மேலும் , உன்னிடத்தில் என பரம்‌ வைக்கப்பட்டது ‘ எனனும பரந்யாஸம் ஸ்வாதந்தர்யததை உள்ளடக்கியது, “என் சுமையை நீயே மேல் விழுந்து ஏற்றுக் கொள்ள வேணும” என்னும் ப்ரார்த்தனையா யிருப்பதால் சரணாகதி பாரதந்தர்யத்தை உள்ளடக்கியது. நியாஸத்தில்‌ பர ஸமர்ப்பணம்‌ முக்கியம்‌, சரணாகதியில் உபாயமாக வரிப்பது முக்கியம்‌; சுமையை இறக்குவதாகிற ந்யாஸத்திற்குப்‌ பிராட்டியோடு கூடிய பெருமாள்‌ உத்தேஸ்யம்‌. சரணாகதியில்‌ பிராட்டிக்கு உப லக்ஷணத்வ மாத்ரமே; (உபாய ப்ரார்த்தனையில் நேரே அந்வயமிலலை. ) ந்யாஸம்‌ பிரணவத்தை ௮ங்கமாகக் கொணட தாகையால் ( பிரணவத்திற்குப்‌ பொருளான ஐகத்‌ காரணத்வம்‌ முதலான ) பரத்வ குணங்கள்‌ அதற்கு விஷயம்‌, சரணாகதியில் கரண மநதிரம த்வயமாகையாலே , அதில் சொல்லப்படும் ஸெளலப்யம்‌, ளெளஸீல்யம் முதலான நீர்மைக் குணங்கள்‌ விஷயம் – சரணாகதியில் -— ஜீவாத்மா தனக்குப்‌ புண்ணிய மில்லை யென்றும்‌, பாபம்‌ உண்டென்றும்‌ அநுஸந்திக்க வேணும்‌. நியாஸத்தில்‌ ப்ராதி கூல்ய வர்‌ஜனமும்‌. ஆநு கூல்ய ஸங்கல்பமும் அங்க மாகையால் , பாபத்தை விடுகையும் , புண்ணிய முடைமையும் அநுஸந்திக்கத் தககது–தன் அறிவாலே தேவனுடைய திருவடிகளிலே தன்னை ஸமர்ப்பிப்ப தென்பதே பிரபத்தியாகும் . இது எல்லாப்‌ பாபங்களையும போக்கும.” என்பது ந்யாஸத்தின் லக்ஷணம்‌. “நான்‌ அபராதங்களுக் கெல்லாம் ஆலயமாயும்‌. கைம்‌ முதலற்ற வனாயும. வேறு புகலற்றவனாயும்‌ இருக்கிறேன்‌. நீயே எனக்கு உபாயமாவாயாக என்று பிரார்த்திக்கும்‌ அறிவே ஸரணாகதி யெனப்படும்‌. அது இந்த தேவனிடத்‌தில் பிரயோகிக்கப்படட்டும, ” என்பது சரணாகதியின்‌ லக்ஷணம்‌–ஜிதந்தா ஸ்தோத்ரத்தில் :: ஜிதம்‌ தே” என்‌னும்‌ முதல் ஸ்லோகத்தாலே ந்யாஸமும்‌, “ தேவாநாம்‌ ” என்னும்‌ இரண்டாவது ஸ்லோகத்தாலே சரணாகதியும்‌ தனியாகச்‌ சொல்லப்பட்டது.

    ஸ்தோத்ரத்திலும்‌ – நமோ நம ” [21] என்னும்‌ ஸ்லோகத்தாலே நியாஸமும, “ந தர்ம: [22] என்னும்‌ ஸ்லோகத்தாலே சரண வர்ணமும்‌ தனிப் படுத்திச்‌ சொல்லப்பட்டது. கத்யத்திலும்‌ “த்வத பாதார விந்தயுக,ளம்‌ ॥சரண மஹம பரபத்‌யே” என்று சரணாகதியும்‌, நமோ அஸ்து தே’ என்று பர ஸமர்ப்பணமும்‌ வேறாகக் கூறப்பட்டது. ஸ்ருதிகளிலும்‌ அவற்றுக்கு வேறாக விதி, காணப்படுகிறது. தைத்திரீய உடநிஷததில ஓம்‌ என்னும்‌ மந்திரத்தாலே ஆத்மாவைப் (பரமாத்மாவிடம்‌) ஸமர்ப்பிக்க வேண்டியது ” என்று ந்யாஸம்‌ விதிக்கப்‌ பட்டது. ஸ்வேதாஸ்வதர உபனிஷத்தில் “முமுஷு வான நான்‌ சரணமடைகிறேன்‌” என்று சரணாகதி விதிக்கப்‌ பட்டது. அவ் வண்ணமே புருஷ ஸூக்தத்தில் , *“அப,தந ந புருஷம்‌ பஸூம” என்று நியாஸமும்‌, **: அத பய: ஸமபூ,த. ” என்னுமிடததில் சரணாகதியும்‌ விதிக்கப் பட்டது “தஸ்ய தீரா.” எனறல் விடத்தில தீர( தீ மதா மக,ரேஸர) சப்‌த்தத்தாலே. உபாயாந்தர நிஷ்டர் களுக்குள்ள ‘ஸம் பந்த ஐஞாநத்‌தில்‌ அறி வின்மை’ இவனுக்கில்லை என்று கூறுவதன்‌ மூலம்‌ ஸமபந்த ஜ்ஞாந பூர்த்தியே இவனுக்குள்ள அதி,காரம்‌ (தகுதி) என்று காட்டி *யோநிம பரிஜாநநதி” – அவதார ரஹஸ்யத்தை நன்கு அறிகிறார்கள்‌ ] என்னும்‌ பகுதியாலே அவதார விஷயமாகவும் . ஸெளலப்யாதி குண விஷயமாகவு மிருககும் சரணாகதி தெரிவிக்கப்பட் து. அதற்கு வேணடிய புருஷகாரமும்‌ ஹ்ரீஸ் ச-லக்ஷமீம்‌ ச ” என்று காட்டப்படட து. பகவத கீதையிலும்‌–மந்மநா பவ” [18-65]என்‌னும் ஸ்லோகத்தாலே பர நியாஸமும, அடுத்த ஸ்லோகத்திலயே “ஸர்வ தர்மாந்‌ ? எனறு சரணாகதியும் சொல்லப்பட்டது; லக்ஷ்மீ தந்த்ரத்திலும ““ உபாயாந்தரங்களையும்‌, அபாயங்களாகிற பாபங்களையும கை விட்டவனாய்‌, நடு நிலையை ஏற்றவனாய்‌,என்னையே சரணமடைந்து, இறுதியில என்னையே அடைகிறான் ” [12-50] என்று சரணாகதியைக் கூறி, “அதுவே ஆறு அங்கமுடையதாய்‌ உபாயமாவதை என்னிடமிருநது கேட்பாயாக” [12-59] எனறு தொடங்கி பர ஸமர்பபணம் வேறுபடுத்திக் கூறப்பட்டது. அஹிர்‌ புத்ய ஸம்ஹிதையிலும் அவற்றை வேறு படுததிக் கூறி யுள்ளது ஸதூல பாரதந்தர்ய ரூபமாகையாலே ஷடங்க ந்யாஸத்தை ஸ்தூலமாகவும, ஸூ்ஷ்ம பாரதந்த்ர்ய ரூப மாகையாலே சரணாகதி ஸபக்ஷ்ட மாகவும் சொல்லப்பட்டது. எல்லா உபாயாந் தரங்களையும்‌ கை விடுகை அங்கமா யிருக்கை யால் அப்ரதாந மாகவும்‌, அதை அங்கமாக வுடையதாய் யிருக்கையால்‌ ஸித்தோபாய ஸ்வரூபம்‌ ப்ரதாநமாகவும்‌ கூறப் பட்டது ] என்று ஸ்ரீவசந பூஷண மீமாம்ஸா பாஷ்‌யத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளதே –

    நியாஸ சரணாகதி களுக்கும் ‘ஸம்யோகம்‌ ரூபம்‌, சோதநா (விதி,), ஆகயா(பெயர் ) ஆகிய நான்கும் வேறுபடுகின்றன. எப்படி யெனில.–
    “ஓம்‌ என்று ஆத்மாவைத் தியானிக்கக் கடவன் ” என்பது ந்யாஸத்தைப்‌ பறறிய விதி. “என்னை ஒருவனையே” உபாயமாக அடைவாய் ,! “லக்ஷ்மீ நாதனையே உபாயமாக வரிப்பாய்‌” முதலானவை சரணாகதியைப்‌ பற்றிய விதி, , இவ்விரு விதிகளும்‌ ஒன்றாக முடியாது –
    ‘யுஞ்ஜீத’ என்று சொல்லப் பட்ட யோகமும்‌, “சரணம்‌ வ்ரஜ’ * உபாயம் வ்ருணு’ என்று சொல்லப்பட்ட சரண வரணமும்‌ வெவ் வேறாகும் – யோக,மாவது தியானம்‌.–“ஓம் என்று ஆத்மாவை தியானியுங்கள்‌ ” என்று மற்றொரு வாக்கியம்‌ ஓதுகின்றதன்றோ. :யுஜிர்‌ யோகே,’ :யுஐஸமாதெள? என்னும் தாது பாடமும்‌ “யோகஸ் ஸநநஹந– உபாய– தியாந–ஸங்கதி — யுக்திஜு ” என்னும்‌ நிகண்டுவும் யோக ஸப்த்தம் தியானத்தையே குறிக்கும்‌ என்று காட்டுகின்றன. உபாய வரணமோ வெனில் உபாயமாகப்‌ பிரார்த்திக்கும் செயலாயிருப்பது. ஆகையால்‌ சோதநா(விதி) பேதத்தாலே ந்யாஸ வரணங்கள்‌ வெவ்‌ வேறுபட்டவை என்பது மறைக்க வொண்ணாதவையே

    ஒரு முறையே அனுஷ்டிக்கப் படும் தியான ருபமாயிருடபது ந்யாஸம் என்றும்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, ஜீவனை ப்‌ரஹ்மத்திடம்‌ ந்யஸிக்க வேண்டும்‌” என்னும் வசனததில் நி எனனும்‌ உப சர்க்கத்தோடு கூடிய “அஸ்‌ தாது ஸமர்ப்பித்தல் , என்னும்‌ பொருளையே குறிக்குமாகையால, உபாய வரணம என்னும் பொருள்‌ அதிலிருந்து ஸித்திக்காதாகையால, ந்யாஸ சரணாகதிகளுக்கு வேறுபாடு மறைக்க முடியாததே யாகும் . ஆக, சோதநா பேதம் ஸாதிக்கப் பட்டதாயிற்று-

    ந்யாஸ சரணாகதிகளின ரூபமும வேறு படுகிறது. எப்படி யெனில் : “ஆத்மாவை தியானிக்கக் கடவன்‌” என்று ந்யாஸ வித்யை ஜீவாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகை யாலும்‌. என்னையே உபாயமாக அடைவாய்‌ ” என்று சரணாகதி பரமாத்மாவை முக்கியமாகக் குறித்ததாகையாலும்‌ இரண்டுக்கும்‌ ரூபமும் வேறுபட்டதே.

    தலை சிறந்த பெரிதாயிருக்கும் தன்மை முதலாக மஹஸ்த்வமீறாக வுள்ள பரத்வ குணங்கள்‌ விசேஷணமாக அநுஸந்திக்கத் தக்கவை –சரணாகதியிலோ வெனில (த்வயத்தில் கூறப்படும்‌) வாத்ஸல்யம்‌ முதலான எட்டு குணங்‌களோடு கூடியவனாகப் பரமாத்மா நேரே ௮நுஸந்திக்கத் தக்கவன்‌ “வஸூ ரண்யோ விபூ,ரஸி”என்று ஓதப்பட்ட ஸாவாதாரமான விபு ஸ்வரூபம் நியாஸத்திற்கு விஷயம் * ஸர்வம்‌ பூர்ணம்‌ ஸஹோம ‘ என்று த்‌வயோபனிஷத்தில் ஓதப் பட்ட குண பூர்த்தி யுடைய அாச்சாவதாரம் சரணாகதிக்கு விஷயம்‌. “பிரஹ்மாத்மா” எனறு ஓதப்பட்ட தே,வதாந்தர்‌யாமித்வமும்‌ ந்யாஸத்தில் அநுஸந்திக்கத்தக்கது. சரணா கதியில் ‘சரணெள என்னும் த்வய பூர்வ கண்ட, பதத்தில் ஸ்ரீபராங்குஸ பரகால யதிவராதிகளான ஆசார்யர்களோடு கூடி யிருக்கை அநுஸந்திக்கத் தக்கது–ந்யாஸத்தில :ப்ரஹ் மணே தவா மஹஸே‘ என்ற விடத்தில்‌ நாலாம் வேற்றுமைப்‌ பதங்களாலே ப்‌ரஹ்மத்திற்கு ஸேஷித்வமும அவற்றோடு ஓரே வேற்றுமையில்‌” படிக்கப் படும் -ஓமிதி ” என்னும் ப்ரணவத்திலுளள ௮காரததினால்‌ ரக்ஷகத்வமும் ௮நுஸந்திக்கத் தக்கது-சரணாகதியிலோ வெனில் , “ஸரண? சப்த்த்தினால் மோக்ஷ பஃல கரணத்வம் ௮நுஸந்திக்கத் தக்கது, ஆக, ரூப பேதமும் மறைக்க வொண்ணாதது -.

    அவ் வண்ணமே ந்யாஸ சரணாகதிகளின்‌ ஸம்யோகமும் வேறு படுகிறது. நியாஸ வித்யை உபாயாந் தரங்களான முப்பத்திரண்டு வித்‌யைகளில ஒன்றாகையால் , அதில்‌ ஈடு படுபவர்களுக்கு ௮தின் பலத்தின்‌ ஸ்வாமியா யிருக்கை யாகிற அதிகாரம் பற்றிய ஜ்ஞானம ஏற் படுகையால் , “ ஸாஸ்த்ர பலம் பரயோக்தரி” [சாஸ்திரத்தின பலம்‌ அதைப்‌ பிரயோகப்பவனுக்கு ஏற்படுகிறது. ] என்கிற ந்யாயத்தாலே ந்யாஸ வித்யைக்கு ஸ்வார்த்த, மோக்ஷமே பலமாகிறது, சரணாகதி உபாயமாகாதாகையால் ஸித்‌தமான பகவானுககே அதில் உபாயத்வமாகையால. சேதனன் உபாயாநுஷ்டதாவாக ஆகாமை யாலும் , “’ பரம புருஷனால் ரக்ஷிக்கப் படும் இவனுக்குப்‌ பலத்தில் ஸவாமித்வமற்றிருக்கை” [ லஷ்மீதந்தரம்‌ 17-74] என்கிறபடியேயே பலஸவாமயமாகிற உபாயாதிகாரம இவனால் கைவிடப்படுகையாலும் , த்வயத்தில் உத்தர கண்டத்தில் நம சப்தத்தாலே பலனில் பார தந்த்ர்யமே பிரார்‌த்திக்கப் படுகையாலும, கேவல பரார்‌த்த மோக்ஷமே சரணாகதிக்குப்‌ பலமாகையால் , நியாஸ ஸரணா கதிகளுக்குப்‌ பலனில் இவ்வாறு. வாசி உள்ளதை யிட்டு ஸம யோக,பேதமும் ஸித்திக்கிறது.

    ‘ந்யாஸ வித்யை’ என்று நியாஸத்திற்கும்‌, சரணா கதி வித்யை’ என்று சரணாகதிக்கும்‌ பெயரில்‌ பேதமுள்ளதாகையால ஆகயோ பேதமும் அவற்றினிடையே உள்ளது. :: அதற்கே நியாஸம் என்னும்‌ பெயர் அறியப்‌படுகிறது. அது முதலில் உபாயமாகிறது ” எனறு ந்யாஸத்தைப்‌ பறறியும்‌, (நீயே உபாயமாவாயாக எனறு பிரார்ததிக்கும் அறிவே) சரணாகதியாகிறது; அது இந்த தேவனிடம்‌ பிரயோகிககப்படட்டும்‌ ” என்று சரணாகதி யைப்‌ பறறியும்‌ வசனங்களில இநத நாம பேதமம் மிகத் தெளிவு-

    ஸாதநாந்தர நிஷ்டரர்ககும்‌, ஸித்‌தோபாய நிஷ்டரர்க் கும் அவர்களுக்குக் கிடைக்கும்‌ பலன்களுக்குமிடையே இவ்வாறு வேறுபாடு எளிதில் விளக்கத் தக்கதே யாகும்‌. இக் கருத்தினாலேயே ஸ்ருத ப்ரகாஸிகாசார்யா்‌ “தானே வந்தடைந்தவனை ஏறறுக்‌ கொள்வது ப்ரீதி விஷயத்வம் ” எனறு அருளிச் செய்தார் –

    இவாகள அனைவரும உதாரர்களே, ஞானீயோ வெனில எனக்கே ஆத்மாவா யிருப்பவன என்பது எனது ஸித்தாந்தம் கீதை7-19] எனறு கீதையில் ஐஸ்வர்ய கைவல்யார்திகள் விஷயததில் எமபெருமாரான தனது வண்மையை மாத்திரம் காட்டி, பகவத் உபாசனத்தை இயல்வாகக் கொண்ட ஞானிகளைத் தனது ஆத்மாவைப் போலே இனியவர்களாகக் கூறினான் ”’ என்று கூறுவதும் பொருந்தாது. தனககுப் பெருமையை விளைக்கும மோக்ஷத்தை விரும்பி ஸாதநாநுஷ்டாநம்‌ செய்யும் தாழ்வை யுடையவர்களே ஸாதநாந்தர நிஷ்டர்‌ களாகையால, அவர்களையும் கைவல்யார்த்திகளோடு சேர்த்துத் :தமப’பிரத்யயத் தினால் வேறுபடுத்துவதாகக்‌ கொள்வதே உசிதமாகும் –ஞானியோ வெனில,– எப்போதும் என்னிடம சேர்ந் திருப்பதையே விருமபுகிறவாகள்‌’ [கீதை 10-10] :என்னோடு கூடியிருப்பதையே விருமபு கிறவனனறோ அவன் ‘ [கீதை7-18] – (உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும்‌) எல்லாம் கணணன”” முதலான விடங்களில சொன்னபடி பரம புருஷனிடமே ஓப்பற்ற பிரீதியை உடையவனாகையால்‌ வரிக்கத்தக்க ஆத்ம பூதனாகிறானாகையால ‘ உதாரர் , ‘ எனப்பட்ட மற்றவர்க ளோடு சேர மாட்டான்‌-ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் மேலான பலனை ௮டைகிறான் ‘ .’ப்ரஹ்மத்தை உபாஸிபபவன கல்யாண குணங்களை ௮னுபவிக்கிறான் ” முதலான உபாஸந விதிகளில் ஸவாரார்தத அநுப,வமும, சரணாகதி விதிககு த்வயத்தின உத்தர வாக்யத்தில் பரார்த்த கைங்கர்யமும் பலமாகக் கூறப் படுவதை ஆராய்ந்து பல பேதத்தை ௮றியலா மாயினும, மிகத் தெளிவான நிஷேத வாக்யத்தாலேயே அதை அறியலா யிருககும் போது பல வாக்யங்களில உள்ள விதியை ஆராய வேண்டா

    நாட்டினான தெய்வமெங்கும்‌ நல்லதோர் அருள்‌ தன்‌னாலே காட்டினான திருவரஙகம் உய்பவர்க்கு உய்யும்‌ வணணம்‌–[திருமாலை 10]
    இதுவே நிர்ஹேதுக கிருபையாகும்
    . ஒன்றி யொனறி உலகம படைக்கை, மறை யருளுகை, எந் நினற யோனியுமாய்ப் பிறக்கை, திருவரங்கம்‌ ( முதலிய அர்ச்சாவதாரஙகளைக் ) காட்டுகை, ஆழ்வாராதிகளையும்‌, ஆசார்யர்களையும்‌ அவதரிப்பிக்கை முதலான சேதந உஜ்ஜீவநார்த்தமான எண்ணிறந்த செயல்கள்‌ இந்த நிர்ஹேதுக கிருபையினால்‌ செய்யப் படுமவையே யாகும்‌. இதை நலல தோர்‌ அருள்‌ ‘ என்கையாலே, இதற்குக கீழ்ப் பட்ட அருளும் -ஓரருளும்‌ எம்பெருமானுக்கு உண்டு என்று உணர்த்தப் படுகிறது. இவை ஸஹேதுக கிருபைகளாகும்‌. அதில், “அருள்‌ ‘ என்பது மற்ற தெய்வங்களுக்கு அந்தர்‌யாமியா யிருந்த எம்பெருமான் செய்வது, :ஓரருள்‌ ‘ என்பது தானே சேதனர்‌ அனுஷ்டிக்கும்‌ உபாயாந்தரங்களுக்குப்‌ பலனளிப்பது. சேதனரின பக்குவத்திற்குத் தக்கபடி தேவதாந்தர ஸமாஸ்யரயணமும உபாயாந்தராநுஷ்டானமும திருவரங்கம் தொழுகைக்குப்‌ படிப் படியாகக் காரணங்களாக ஆகின்றபடியால் தெய்வஙகளை நாடடுகைக்குக் காரணமான அருளும் உபாயாந்தரங்களைக் காட்டுகைக்குக்‌ காரணமான ஓரருளும்‌ திருவரங்கம்‌ காட்டுகைக்குக் காரணமான நல்லதோரருளை அடையும்‌ படிக் கட்டுகளாய்‌ அமைகின்றன.

    ஸார தமமான ரஹஸ்ய த்ரயத்தால் விவேக முண்டாகப் பெற்றவர்களுக்குள் ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர் தாழ்ந்தவர் . இவருக்கு ஸ்வார்த்த கைங்கர்யமே பலம் – பரகத ஸ்வீகார நிஷ்டர் என்கிற ஸித்தோபாய நிஷ்டர் உயர்நதவர்‌ இவருககு பரார்த்த கைங்காயம பலம் என்று பூரணம் பண்ணிக்‌ கொள்ளலாம்ஸித்‌தோபாய நிஷ்டர்‌-ஸ்வகத ஸ்வீகார நிஷ்டர்‌, உபாயாந்தர நிஷ்டர்‌ ஆகிய மூவருக்கும்‌ பலத்தின்‌ ஆகாரத்தில்‌ பேதமிருந்தாலும்‌ ஆநந்தத்தி ன்‌ அளவில்‌ பேதமில்லை என்பது தென்னாசார்யர்களின்‌ திருவுள்ளம்‌-

    (இல்லை கண்டீர்‌ துணையே (9.1-1)—ஆபத்துக்கு வேறொரு ௮பாஸ்ரயம் உண்டாயிருக்க, இவனைப் பற்றச்‌ சொல்லுகிறதல்ல இது. ௮வனைப் பற்றி ஸவரூபம்‌ பெறுதல்‌ இல்லையாகில் இல்லையா மித்தனை ” என்று நம்பிள்ளை அருளிச் செய்துள்ளார் இறே –அஹம் மத் பராப்தயுபாயோ வை ஸாஷாத் லஷ்மீபதி. ஸ்வயம் ‘-லஷ்மீ நாதனான நான் தானே என்னை யடைய உபாயமாவேன் ] என்றிறே பகவத் வாகயம்‌. மத் ப்ராபத் யுபாய அஹம் –மத் ப்ராபத் யுபாய ஸாக்ஷாத் அஹம்‌” “மத் பராப்த யுபாய ஸாக்ஷாத்‌ ஸ்வயம்‌ அஹம் -என்று பகவான் தன் உபாயத்வத்தையும் மற்றவற்றின அநுபாயத்வத்தையும ஸ்பஷ்டமாக அருளிச் செய்தானிறே –ஸாஷாத் – என்று உபாயாந்தர வ்யாவ்ருததியும்‌,ஸ்வயம் ‘ என்று லஷ்மீ வ்யாவ்ருததியும் ஸித்‌தம்‌-

    ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202அதாவது – பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கேஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் – என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
    த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

    ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-அதாவதுஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது – அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை – இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

    எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் – சைதன்ய கார்யம் ஆகையாலும் – பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் – ஸ்வரூப அதிரேகி யல்லாமையாலும்- அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாக்க ஒண்ணாது —சூரணை -64-

    எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் -நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே – சகல உபாய சாதாரணமாய் இருக்கை–இத்தால் ஓர் இடத்திலும் இவ் வனுமதிக்கு இவ் வதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பல சாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –

    சைதன்ய கார்யம் ஆகை யாவது –ரஷ்யத்வம் சேதன அசேதன சாதாரணமாய் இருக்கச்  செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே -அவ் வாகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே – அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் பக்கல் உண்டான அனுமதி – இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை – இத்தால் இவ் வனுமதி இச் சேதனனுடைய வாசியைப் பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

    பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் -அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி  கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

    ஸ்வரூப அதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே -இவ் வனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —

    அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் -இவ்விடத்தில் அவ் வாகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி -இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது –இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்–அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –

    பொரு மா நீள் படை -திருவாய் மொழி பிரமேயத்தை தேசிகன்‌ –அவ்யாஜோதார பாவாத் ” என்றும் மா முனிகள்‌ -தருமாறு ஓர் ஏது வற” என்றும்‌ அருளிச் செய்தார்களிறே. இது கொணடு பகவானுடைய விஷயீகாரம்‌ நிர்ஹேதுகம் என்ற விஷயததில் இரு மஹாசாரயர்களும ஏகாபியராயர்களே என்னலாமே என்றாலும் இருவரும பின்ன அபிப்ராயர்கள்‌ என்பதே உண்மை; இது ஸித்‌தோ பாய ஸாத்‌யோபாய போதநாதிகார சரம ஸ்லோகாதிகாரங்களிலே வியக்தம்


    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸ்ரீ பரிணய உத்சவம்

    June 4, 2026

    ஸ்ரீ பரிணய உற்சவம் என்பது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்மாவதி தேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் (மலையப்ப சுவாமி) திருக்கல்யாணம் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த உற்சவம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும். 

    பரிணய உற்சவம் என்பது திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மலையப்ப சுவாமிக்கும் (ஸ்ரீனிவாச பெருமாள்) பத்மாவதி தாயாருக்கும் இடையே நடைபெறும் மூன்று நாள் தெய்வீகத் திருமணத் திருவிழாவைக் குறிக்கிறது. இது ஆண்டுதோறும் வைகாசி மாதம் (வைசாக சுத்த நவமி, தசமி மற்றும் ஏகாதசி நாட்களில்) திருமலை நாராயணகிரி தோட்டத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

    வாகன சேவை: தினமும் மாலை மலையப்ப சுவாமி முறையே கஜ (யானை), அஸ்வ (குதிரை), மற்றும் தங்கக் கருட வாகனங்களில் எழுந்தருள்வார். ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் தனித்தனிப் பல்லக்குகளில் மண்டபத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். [1, 2, 3]

    பரிணய உற்சவத்தின் சிறப்பம்சங்கள்:

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்மாவதி தேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்:இந்த விழாவில், மலையப்ப சுவாமி (ஸ்ரீனிவாச பெருமாள்) பத்மாவதி தேவியுடன் திருக்கல்யாணம் செய்துகொள்ளும் வைபவம் பிரதிபலிக்கப்படுகிறது. 
    • மூன்று நாள் திருவிழா:இது ஒரு மூன்று நாள் திருவிழாவாகும், இதில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 
    • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள்:திருவிழாவின் ஒரு பகுதியாக திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 
    • பல்லக்கில் ஊர்வலம்:ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருவார்கள். 
    • வாகனங்களில் ஊர்வலம்:மலையப்ப சுவாமி தங்க யானை, குதிரை போன்ற வாகனங்களில் ஊர்வலம் வருவார். 
    • பூந்தோட்ட பூஜைகள்:நாராயணகிரி பூங்காவில் பூஜைகள் நடைபெறும். 
    • மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும்:புராணக் கதையின்படி, மகாலட்சுமி கோலாப்பூருக்குச் சென்றபோது, ஸ்ரீனிவாச பகவான் பத்மாவதி தேவியை மணந்தார், என்பதை இந்த விழாவில் நினைவுகூர்கிறார்கள். 
    • பத்மாவதி பரிணயோத்சவம் திருமலையில் வண்ணமயமாகத் தொடங்குகிறது
    • “பூங்கொத்து மற்றும் பழ பஞ்ச் பரிணயோத்சவ மண்டபத்தின் சிறப்பம்சங்கள்”
    • திருமலை, ஏப்ரல் 27: பத்மாவதி பரிணயோத்சவத்தின் மூன்று நாள் வருடாந்திர தெய்வீக விழா, மலை நகரமான திருமலையில் திங்கள்கிழமை வண்ணமயமாகத் தொடங்கியது – மத விழாவிற்காக பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்களால் ஆன “பல-புஷ்ப ஷோபித வேதிகா” என்ற கருத்தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்பு மேடையில்.
    • முன்னதாக, சிறிய கஜ வாகனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ மலையப்ப சுவாமி வாருவின் ஊர்வலத்துடன் தொடங்கிய இந்த மத விழா, ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி ஆகியோர் மற்ற திருச்சிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பரிணய மண்டபத்தை அடைந்தனர்.
    • பாரம்பரிய இந்து திருமண முறைப்படி இந்த தெய்வீக திருமணம் நடைபெற்றது. எடுருகொலு (மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரிணய வேதிகாவிற்கு மணமகனையும் அவரது பரிவாரங்களையும் அழைப்பது), பூமால மார்பு – (மலர் மாலைகள் பரிமாற்றம்), வஸ்திரால சாதிவிம்பு (மணமகனுக்கு புதிய வஸ்திரங்களை வழங்குவது), பூ பந்தாட – (மலர் பந்துகளின் விளையாட்டு) மற்றும் வெஞ்சேபு (மணமகள் மற்றும் மணமகன் திருமண விழாவிற்காக மேடையில் அமர்ந்திருப்பது) போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன.
    • தெய்வீக திருமணத்தைக் காண கூடியிருந்த யாத்ரீகர்கள் விழாவின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தனர். தெய்வீக திருமணம் ஆகம ஆலோசகர் ஸ்ரீ என்.ஏ.கே. சுந்தரவதானாச்சாரியாரின் மேற்பார்வையில் நடந்தது.
    • புராணக்கதை: கோயில் புராணத்தின் படி, மகாலட்சுமி தேவி மகா விஷ்ணுவை விட்டு கோலாப்பூருக்குச் சென்றபோது, ​​தனது அன்பைத் தேடிப் புறப்பட்ட ஸ்ரீனிவாசர் முதலில் திருமலையில் உள்ள நாராயணகிரியில் இந்த தோட்டங்கள் அமைந்துள்ள இடத்தில் தரையிறங்கி, வெங்கடேஸ்வரராகக் குடியேறி, பத்மாவதி தேவியை மணந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு வனவாசத்திலிருந்து திரும்பிய மகாலட்சுமி தேவியுடன் கடவுள் கந்தர்வ விவாகம் செய்ததாக நம்பப்படுகிறது. இந்த விழாவைக் குறிக்கும் வகையில், நவமி, தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் மூன்று நாட்கள் திருமலையில் பத்மாவதி பரிணயோத்சவமாக தெய்வீக திருமணம் கொண்டாடப்படுகிறது.
    • பரிணாய வேதிகா: ஒவ்வொரு ஆண்டும் தேவலோக திருமணத்திற்காக TTD-யின் தோட்டக்கலைத் துறை தனித்துவமான கருத்தாக்கத்தைத் திட்டமிடுகிறது. முன்னதாக பசுபு-கும்கும மண்டபம், படிக மண்டபம், கஜுலா மண்டபம் யாத்ரீகர்களின் பாராட்டைப் பெற்றது, இந்த ஆண்டு “பல-புஷ்ப ஷோபித மண்டபம்” என்ற மற்றொரு கருத்தை வெளியிட்டுள்ளது. இதில் ஆப்பிள், மாதுளை, பைன் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், சோளம், கரும்புகள் மற்றும் மாம்பழங்கள் சுவையாக அலங்கரிக்கப்பட்டன. ஊஞ்சல் மற்றும் பரிணாய வேதிகா அஸ்பாரகஸ், சாமந்தி, ஆர்க்கிட்ஸ், ரோஜாக்கள் மற்றும் பிற வகையான பாரம்பரிய மற்றும் அலங்கார மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமான “மட்டி உட்லு” வெவ்வேறு இடங்களில் கூரை முழுவதும் தொங்கவிடப்பட்டுள்ளது. கருத்தியல் திருமண நிலைக்கு நன்கொடை அளிக்க புனேவைச் சேர்ந்த ஒரு நன்கொடையாளர் முன்வந்துள்ளார்.
    • கலாச்சார நிகழ்ச்சிகள்: பின்னர் அன்னமாச்சார்யா திட்டத்தின் கலைஞர்கள் இந்த தெய்வீக விழாவின் போது சங்கீர்த்தனங்களை நிகழ்த்தினர்.
    • TTD EO Dr D சாம்பசிவ ராவ், திருமலை JEO ஸ்ரீ KS ஸ்ரீனிவாச ராஜு, கோவில் DEO ஸ்ரீ C ரமணா, VGO ஸ்ரீமதி விமலா குமாரி, கார்டன் துணை இயக்குனர் ஸ்ரீ ஸ்ரீநிவாசுலு மற்றும் பிற மூத்த அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ நாரத பக்தி சூத்திரம்

    May 23, 2026

    வியாசரை பாகவதம் எழுதத் தூண்டுவதற்காக பக்தியின் பெருமையை இந்த சூத்ரங்கள் மூலமாகக் கூறுகிறார்.

    அத்தியாயம் 1: பக்தியின் மதிப்பு

    சூத்ரம் 1
    அத அதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம:
    அத (अथ) – இப்பொழுது
    அத:-(अत: )- ஆகையால்
    பக்திம்- (भक्तिं )- பக்தி என்பது என்ன என்று
    வ்யாக்யாயாம:-(व्याख्यास्याम:)-விளக்குவோமாக

    ஆகவே, கடவுள் மீதான தூய அன்பை (பக்தியை) நான் இங்கு விளக்குகிறேன்

    அத (अथ) என்ற சொல் ஒரு செயலுக்கோ எண்ணத்துக்கோ பிறகு தொடர்வதைக் குறிக்கிறது. இங்கு வியாசரின் பக்தியைப் பற்றி அறியும் ஆர்வத்தை தூண்டிய பிறகு அத:-(अत: )-பக்தி என்பது மிகவும் முக்கியம் ஆகையால் பக்தியைப் பற்றி விளக்குகிறேன் என்று சொல்கிறார் நாரதர்.

    சூத்ரம் 2
    ஸா து அஸ்மின் பரமப்ரேம ரூபா

    ஸா து- அந்த பக்தியோவேன்றால்
    அஸ்மின்- இறைவனிடத்தில் 
    பரமப்ரேமரூபா- எல்லை அற்ற அன்பு என்பது.

    பக்திப்பூர்வமான சேவையானது, கடவுள் மீதான மிகவும் மேன்மையான, தூய்மையான அன்பாக வெளிப்படுகிறது

    ராமானுஜர் பக்தி என்றால் என்ன என்பதை கீழ்க்கண்டவாறு கூறுகிறார் . த்ருவச்ம்ருதி , அதாவது தைல தாரையைப் போல் இடையறாத பகவத்யானம். கோபாலபூர்வதாபினி உபநிஷத்தில் அது பின்வருமாறு சொல்லப்படுகிறது. ‘பக்தி: அஸ்ய பஜனம்;ஏதத் இஹா ஆமுத்ர உபாதி நைராச்யேன அமுஷ்மின் மன:கல்பனம்.’இதன் பொருள்,
    இம்மையிலோ மறுமையிலோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவன் மேல் ஈடுபாட்டுடன் பக்தி செய்வது. இதத்தான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே .’ என்றார்.-பாகவதத்தில் கிருஷ்ணர் கோபியரின் அன்பைப் பற்றி உத்தவரிடம் கூறுகிறார் ,
    தா ந அவிதன் மயி அனுஷங்கபத்த திய: 
    ஸ்வாத்மானம் அதை: ததா இதம் 
    யதா சமாதௌ முனைய: அப்திதோயே 
    நத்ய: பிரவிஷ்டா இவ நாமரூபே (பாக.11.12)

    “எண்ணங்கள் என்னிடம் லயிக்க அவர்கள் தங்கள் உடலையோ காலதேசத்தையோ உணர்ந்தாரில்லை. அவர் நிலை யோகிகள் ஸமாதி நிலையை ஒத்தது. எவ்வாறு நதிகள் கடலை அடைந்த பின் தங்கள் நாமரூபத்தை இழக்கின்றனவோ அதுபோல.”ஹனுமான் கூறுகிறார், 
    தேஹ புத்த்யா து தாஸோ அஹம் ஜீவபுத்த்யாது த்வதம்சக:
    ஆத்மபுத்த்யா த்வமேவ அஹம் இதி மே நிச்சிதா மதி:

    நான் தேஹம் என்ற பாவனையில் உன்னுடைய தாசன்., நான் ஜீவன் நீ என் அந்தராத்மா என்ற நிலையில் நான் உன் அம்சம். நாதான் ஆத்மா என்ற பாவனையில் நீயே நான். 
    இதைவிட த்வைதம் , விசிஷ்டத்வைதம், அத்வைதம் இவைகளை தெளிவாக விளக்க முடியாது. 
    இதுவே பரபக்தி.,

    அமிர்தஸ்வருப சா

    இந்த தெய்வீக அன்பு அதன் உள்ளார்ந்த இயல்பிலேயே அழியாத பேரின்பமாகும்.கடவுள் மீதான இந்தத் தூய அன்பு நித்தியமானது-தெய்வீக பக்தி எனப்படும் இறைவனின் மீதான உன்னத அன்பு, அழியாத தன்மையையும் உடையது.

    யல்லப்த்வா புமான் சித்தோ பவதி , அமிர்தோ பவதி த்ரிப்தோ பவதி

    கடவுள் மீதான இந்தத் தூய அன்பு நித்தியமானது.அதை அடைவதன் மூலம், ஒருவர் பரிபூரணமானவராகவும், அழியாதவராகவும், என்றென்றும் திருப்தி அடைந்தவராகவும் ஆகிறார்.கடவுள் மீதான தூய அன்பில், தெய்வீக பக்தித் தொண்டின் அந்த நிலையை அடையும்போது, ​​ஒருவர் பரிபூரணமானவராகவும், அழியாதவராகவும், அமைதி உடையவராகவும் ஆகிறார்.இந்த உன்னத பக்தியைப் பெறுவதன் மூலம், பக்தன் பரிபூரணத்தையும் அழியாமையையும் அடைந்து, மிகுந்த மனநிறைவு அடைகிறான்

    கடவுள் மீதான தூய அன்பில், தெய்வீக பக்தித் தொண்டின் அந்த நிலையை அடையும்போது, ​​ஒரு நபர் பரிபூரணமானவராகவும், அழியாதவராகவும், அமைதி உடையவராகவும் ஆகிறார்.

    சூத்ரம் 5
    யத் ப்ராப்ய ந கிஞ்சித் வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே ந உத்ஸாஹீ பவதி 
    இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.

    அத்தகைய தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர், புலனின்பத்திற்காக எதையும் விரும்புவதில்லை; எந்த இழப்பிற்காகவும் வருந்துவதில்லை; எதையும் வெறுப்பதில்லை; தன் சொந்த நலனுக்காக எதையும் அனுபவிப்பதில்லை; உலகியல் செயல்களில் மிகுந்த ஆர்வம் கொள்வதில்லை.

    யஜிநத்வா மத்தோ ভவதி ஸ்தব்தோ ভவத்யாத்மராமோ ভவதி-பக்தன் முதலில் ஆனந்தப் பரவசத்தில் மூழ்கலாம். பின்னர், அதை உணர்ந்தபின், அவன் செயலற்று மௌனமாகி, ஆத்மாவில் இன்பம் காண்கிறான்-பகவான் மீதான அன்பினால் செய்யப்படும் பக்தித் தொண்டின் செயல்முறையை முழுமையாகப் புரிந்துகொள்பவர், அதன் வெளிப்பாட்டில் பரவசமடைகிறார். சில சமயங்களில், அவர் பரவசத்தில் திகைத்து, பரமாத்மாவின் சேவையில் ஈடுபட்டு, தன் முழு ஆன்மாவையும் அனுபவிக்கிறார்.-எந்த பக்தியை அறிந்தவனோ, அதில் ஒருவன் பரவசமடைந்து, மௌனமாகி, ஆத்மாவில் இன்பம் காண்கிறான்.

    இறை அன்பில் செய்யப்படும் பக்தித் தொண்டின் செயல்முறையை முழுமையாகப் புரிந்துகொள்பவர், அதன் பிரவாகத்தில் திளைக்கிறார். சில சமயங்களில் அவர் பரவசத்தில் மதிமயங்கி, பரமாத்மாவின் சேவையில் ஈடுபட்டு, தன் முழு ஆன்மாவையும் அனுபவிக்கிறார்-

    ச ந கமயமாநா நிரோதரூபத்வாத்–பக்தியே எல்லா ஆசைகளுக்கும் தடையாக இருப்பதால், அதைக் கொண்டு எந்த ஆசையையும் நிறைவேற்ற முடியாது.-தூய பக்தித் தொண்டில் காமத்திற்கு இடமில்லை, ஏனெனில் அதில் எல்லா உலகியல் செயல்களும் துறக்கப்படுகின்றன-அது துறவு இயல்புடையதாக இருப்பதால், அந்த தெய்வீக அன்பில் ஆசையின் அம்சம் ஏதுமில்லை.

    தூய பக்தித் தொண்டில் காமத்திற்கு இடமில்லை, ஏனெனில் அதில் எல்லா உலகியல் செயல்களும் துறக்கப்படுகின்றன.

    நிரோধஸ்து லோகவேদவ்யாபரந்யாஸঃ ।–துறவு என்பது உலகியல் மற்றும் புனிதமான அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதாகும்.-பக்தித் தொண்டில் அத்தகைய துறவு என்பது, வேதக் கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் எல்லாவிதமான சமூகப் பழக்கவழக்கங்களையும் மதச் சடங்குகளையும் கைவிடுவதாகும்.-உண்மையில், துறவு என்பது அனைத்து உலகியல் மற்றும் மதச் செயல்பாடுகளையும் முற்றிலுமாகத் துறப்பதாகும்.

    பக்தித் தொண்டில் அத்தகைய துறவு என்பது, வேதக் கட்டளைகளால் நிர்வகிக்கப்படும் அனைத்து வகையான சமூகப் பழக்கவழக்கங்களையும் மதச் சடங்குகளையும் கைவிடுவதாகும்.

    தஸ்மிந்நநந்யதா தদ்விரோধிஷுদாசிநாதாச்ச–9-ஒரு பக்தரின் துறவு என்பது, அவருடைய முழு ஆன்மாவும் இறைவனை நோக்கிச் செல்வதும், இறை அன்பிற்குத் தடையாக இருப்பவை அனைத்தையும் நிராகரிப்பதுமாகும்.-துறவு என்பது, இறைவனுக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதையும், அவருடைய சேவைக்குத் தடையாக இருப்பவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் குறிக்கும்.இறைவனிடம் முழு மனதுடன், ஒரே குறிக்கோளுடன் கூடிய பக்தியும், அதற்கு முரணான மற்ற எல்லாவற்றிலும் முழுமையான பற்றின்மையும் கொள்வதே துறவறத்தின் இயல்பாகும்.

    துறத்தல் என்பது, ஆண்டவருக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிப்பதையும், அவருடைய சேவைக்குத் தடையாக இருப்பவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பதையும் குறிக்கும்-

    அந்யாஸ்ரயணம் த்யாகோ அந்யதா-10-முழுமனதுடனான பக்தி என்பது மற்ற எல்லாப் புகலிடங்களையும் துறந்து, இறைவனிடம் தஞ்சம் அடைவதாகும்.-இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணிப்பது என்பது மற்ற எல்லா புகலிடங்களையும் துறப்பதாகும்.-மற்ற எல்லா ஆதரவுகளையும் துறப்பதே முழு மனதுடன் கூடிய பக்தியாகும்.-

    கர்த்தருக்கு மட்டுமே நம்மை அர்ப்பணிப்பது என்பது, அவரைத் தவிர மற்ற எல்லா புகலிடங்களையும் துறப்பதாகும்.

    லோகவேதேஷு தদநுகூலாசரணம்தদ்விரோধிஶுদாசிநாதா-11-இறை அன்புக்கு எதிராகச் செயல்படுவனவற்றை நிராகரிப்பது என்பது, இறை பக்திக்கு உகந்த உலகியல் மற்றும் புனிதமான செயல்களைச் செய்வதாகும்-பக்தித் தொண்டிற்குத் தடையாக இருப்பவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பது என்பது, பக்தித் தொண்டிற்கு உகந்த சமூக வழக்கம் மற்றும் வேதக் கட்டளைகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாகும்.-கடவுளுக்கு உகந்த அனைத்து உலகியல் மற்றும் சமயப் பணிகளையும் செய்வதும், கடவுளுக்கு விரோதமான செயல்கள் அனைத்தின் மீதும் முழு அலட்சியம் கொண்டிருப்பதும்… (அதுவே “அலட்சியம்”).-

    பக்தித் தொண்டிற்குத் தடையாக இருப்பவற்றைப் புறக்கணிக்குதல் என்பது, பக்தித் தொண்டிற்கு உகந்த சமூக வழக்கங்கள் மற்றும் வேதப் பரிந்துரைகளின் செயல்களை மட்டும் ஏற்றுக்கொள்வதாகும்.

    ভவது நிஶ்சயদாদ்யாদூர்ধ்வம்ஶாஸ்த்ரரக்ஷணம் ।-12-ஒருவரின் ஆன்மீக வாழ்க்கை கடவுளில் உறுதியாக நிலைபெறாத வரை, வேதவாக்கியங்கள் பின்பற்றப்படலாம்.-வாழ்க்கையில் பரிபூரணத்துவத்தை அடைவதற்கு பக்தித் தொண்டே ஒரே வழி என்ற உறுதியான நம்பிக்கையில் ஒருவர் நிலைபெற்ற பிறகும், சாஸ்திரங்களின் கட்டளைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.இவ்வாறு முழு மனதுடன் கூடிய பக்தி வாழ்க்கை வாழத் தீர்மானித்த பின்பு, வேத போதனைகளின் பாதுகாப்பு உண்டாகட்டும்.

    வாழ்க்கையின் பரிபூரணத்தை அடைவதற்கு பக்தித் தொண்டே ஒரே வழி என்ற உறுதியான நம்பிக்கையில் ஒருவர் நிலைபெற்ற பிறகும், சாஸ்திரங்களின் பரிந்துரைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    அன்யதா பதித்ய சங்கய--13-ஏனெனில், இல்லையெனில் கீழே விழும் அபாயம் உள்ளது.-இல்லையெனில் கீழே விழுவதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன.-அல்லது, (ஆன்மீகப் பாதையிலிருந்து) வீழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

    இல்லையென்றால் கீழே விழுவது மிகவும் எளிது.

    லோகோபி தவதேவ கிந்து ভோஜநாদிவ்யபரஸ்த்வஶரீரধரணவধீ–14-ஒருவரின் இறை அன்பு தீவிரமடையும் வரை மட்டுமே சமூகப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றலாம்; ஆனால், உடலைப் பாதுகாப்பதற்கு அவசியமான உண்ணுதல், பருகுதல் போன்ற செயல்களைக் கைவிடக்கூடாது.-உடல் இருக்கும் வரை, சமூக, அரசியல் நடவடிக்கைகளிலும், உணவு போன்ற விஷயங்களிலும் மிகக் குறைவாகவே ஈடுபட வேண்டும்.பல்வேறு சமூகத் தொடர்புகளில் உள்ள உலகியல் கடமைகளும், (புற உலகத்தைப் பற்றிய உணர்வு நம்மிடம் இருக்கும் வரை) அந்த அளவிற்கு மட்டுமே செய்யப்பட வேண்டும்; ஆனால், உண்ணுதல் போன்ற செயல்கள், உடல் இருக்கும் வரை நிச்சயமாகத் தொடரும்.

    உடல் இருக்கும் வரை, சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும், உணவு உண்ணுதல் போன்ற விஷயங்களிலும் மிகக் குறைவாகவே ஈடுபட வேண்டும்.

    அத்தியாயம் 2: பக்தியை வரையறுத்தல்-

    தல்லக்ஷணாநி வச்யந்தேநாநாமதபேதாத்–15-முனிவர்களின் கண்ணோட்டங்களில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக, தெய்வீக அன்பின் பண்புகள் அவர்களால் பலவிதமாக விவரிக்கப்பட்டுள்ளன-இப்போது, ​​பக்தி சேவையின் பண்புகள் பல்வேறு அதிகாரப்பூர்வமான கருத்துக்களின்படி விவரிக்கப்படும்.மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால், அதன் (பக்தியின்) பண்புகள் இப்போது விவரிக்கப்படுகின்றன.

    இப்போது, ​​பக்தி சேவையின் பண்புகள் பல்வேறு அதிகாரப்பூர்வ கருத்துக்களின்படி விவரிக்கப்படும்.

    பூஜாদிஷ்வாநுரகே இதி பராசார்யঃ–16-பராசரரின் வம்சாவளியைச் சேர்ந்த வியாசர், பக்தி என்பதை வழிபாடு மற்றும் அது போன்ற செயல்களில் ஈடுபடுதல் என வரையறுக்கிறார்.-பராசர முனியின் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீல வியாசதேவர், பக்தி என்பது பகவானைப் பல்வேறு வழிகளில் வழிபடுவதில் உள்ள பேரன்பு என்று கூறுகிறார்.-ஆழ்ந்த அன்போடும் உறுதியான பற்றோடும் இறைவனை வழிபடுவதில்” என பராசரரின் வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ வேத வியாசர் கூறுகிறார்.

    பராசர முனியின் மகனான ஸ்ரீ வியாசர், பக்தி என்பது இறைவனைப் பல்வேறு வழிகளில் வழிபடுவதில் உள்ள பேரன்பு என்று கூறுகிறார்.

    கதாதிஷ்விதி கர்கா–17-கடவுளின் நாமத்தைக் கேட்பதிலும் அதைப் புகழ்வதிலும் உள்ள பக்தியே பக்தி என கார்கே முனிவர் வரையறுக்கிறார்.பகவானைப் பற்றிய, பகவானால் கூறப்படும் கதைகள் போன்றவற்றின் மீது கொள்ளும் பிரியமே பக்தி என்று கர்க முனிவர் கூறுகிறார்.-இறைவனின் மகிமைகள் முதலிய கதைகளைக் கேட்பதில் மிகுந்த பற்றுதல் கொள்வதே பக்தி” என்கிறார் மகரிஷி கர்கர்.

    பகவானைப் பற்றிய, பகவானால் சொல்லப்படும் கதைகள் போன்றவற்றின் மீது கொள்ளும் பிரியமே பக்தி என்று கர்க முனிவர் கூறுகிறார்-

    ஆத்மராத்யவிரோதேநேதி சாண்டில்யঃ–18-சந்திலிய முனிவர், பக்தி என்பதை, கவனத்தை சிதறடிக்கும் எண்ணங்கள் அனைத்தையும் தவிர்த்து, ஆத்மாவில் மட்டுமே இன்பம் காண்பது என்று வரையறுக்கிறார்-பரமாத்மாவில் இன்பம் காண்பதற்கு உள்ள எல்லாத் தடைகளையும் ஒருவன் அகற்றுவதாலேயே பக்தி உண்டாகிறது என்று சந்தில்யர் கூறுகிறார்.-உள்மனப் பற்றுக்கு முரண்படாத இறை பக்தியே உண்மையான பக்தி” என்கிறார் சாண்டில்ய முனிவர்.

    பரமாத்மாவில் இன்பம் காண்பதற்கு உள்ள எல்லாத் தடைகளையும் ஒருவன் அகற்றுவதாலேயே பக்தி உண்டாகிறது என்று சாண்டில்யர் கூறுகிறார்.-

    நாரদஸ்து தদர்பிடখிலாச்சரதদ்விஸ்மரணே பரமவ்யகுலதேதி–19-நாரதர் பக்தியின் அறிகுறிகளாக இவற்றைத் தருகிறார்: எல்லா எண்ணங்களும், எல்லா வார்த்தைகளும், எல்லா செயல்களும் இறைவனிடம் ஒப்படைக்கப்பட்டு, இறைவனைப் பற்றிய மிகச்சிறிய மறதிகூட ஒருவரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தும்போது, ​​அப்போது அன்பு தொடங்கிவிட்டது.-இருப்பினும், நாரதர், ஒருவன் தன் ஒவ்வொரு செயலையும் பரம இறைவனுக்கு அர்ப்பணிப்பதும், அதை மறப்பதில் மிகுந்த துயரத்தை அடைவதுமே பக்தி என்று கூறுகிறார்-தேவர்ஷி நாரதரின் கூற்றுப்படி, “எல்லா செயல்களையும் இறைவனின் பீடத்தில் முழுமையாக அர்ப்பணிப்பதும், இறைவனை மறக்கும் எல்லாத் தருணங்களிலும் தாங்க முடியாத வேதனைகளை அனுபவிப்பதும்” உன்னதமான தெய்வீக அன்பு (பக்தி) ஆகும்

    எனினும், நாரதர், ஒருவன் தன் ஒவ்வொரு செயலையும் பரம இறைவனுக்கு அர்ப்பணிப்பதும், அவரை மறப்பதில் மிகுந்த துயரம் கொள்வதுமே பக்தி என்று கூறுகிறார்.-

    அஸ்த்யேவமேவம்–20-அன்பின் அத்தகைய பரிபூரண வெளிப்பாடுகளுக்கு உதாரணங்கள் உள்ளன.-உண்மையில், பக்தி என்பது இந்த ஒவ்வொரு விதத்திலும் சரியாகவே விவரிக்கப்பட்டுள்ளது.-அது மேலே விவரிக்கப்பட்டபடியே இருக்கட்டும்.

    பக்தி என்பது, உண்மையில், இந்த ஒவ்வொரு வழிகளிலும் சரியாகவே விவரிக்கப்பட்டுள்ளது.-

    யதா விரஜகோபிகானம்–21-விரஜ கோபியர்கள் கொண்டிருந்தபடி.-விரஜ கோபியர்கள் தூய பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.-விரஜ கோபியர்களின் அன்பைப் போலவே.-

    விரஜத்தின் இடையர் பெண்கள் தூய பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.-

    தத்ராபி நாமஹாத்ம்யஜ்ஞாநவிஸ்மৃத்யபவদঃ-22-கிருஷ்ணரைத் தங்கள் காதலராக வழிபட்டபோதிலும், கோபிகள் கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மையை ஒருபோதும் மறக்கவில்லை.-கோபியர்களின் விஷயத்தில்கூட, அவர்கள் இறைவனின் மகத்துவத்தை மறந்ததற்காக அவர்களைக் குறை கூற முடியாது.-அங்கும், இந்த பரிபூரண அன்பு நிலையில், இறைவனின் மகிமையை மறக்கும் அபாயம் இல்லை

    கோபியர்களின் விஷயத்தில்கூட, அவர்கள் இறைவனின் மகத்துவத்தை மறந்ததற்காக அவர்களைக் குறை கூற முடியாது.-

    தத்விஹினம் ஜரநாமிவ–23-கிருஷ்ணரே கடவுள் என்ற ஞானம் அவர்களிடம் இல்லாதிருந்தால், அவர்களுடைய காதல், உலகியல் காதலன் ஒருவன் தன் காதலி மீது கொள்ளும் கீழ்த்தரமான காமத்தைப் போல இருந்திருக்கும்.-மறுபுறம், இறைவனின் மகத்துவத்தை அறியாமல் காட்டப்படும் பக்தி வெளிப்பாடுகள், முறையற்ற உறவுகளில் ஈடுபடுவோரின் விவகாரங்களை விடச் சிறந்தவை அல்ல.-கர்த்தருடைய மெய்யான சுபாவத்தை அறியாத அன்பு, முறையற்ற காதலின் மீதுள்ள முறையற்ற அன்பைப் போன்றது.-

    மறுபுறம், கடவுளின் மகத்துவத்தைப் பற்றிய அறிவு இல்லாமல் காட்டப்படும் பக்தி, முறையற்ற உறவுகளில் ஈடுபடுவோரின் விவகாரங்களை விடச் சிறந்ததல்ல.-

    நாஸ்த்யேவ தஸ்மிந்ஸ்தத்ஸுখஸுখித்வம்–24-காமத்தில் தன் சொந்த இன்பத்திற்கான ஆசை மட்டுமே உள்ளது; ஒருவரின் மகிழ்ச்சி, நேசிக்கப்படுபவரை மகிழ்விப்பதில் அடங்கியிருக்கவில்லை–அத்தகைய போலி பக்தியில், ஒருவன் இறைவனின் திருப்தியில் மட்டுமே பிரத்தியேகமான இன்பத்தைக் காண்பதில்லை.-கள்ளக் காதலன்-காதலி மீதான உலகியல் காதலில், மற்றவருக்கு அளிக்கப்படும் மகிழ்ச்சியில் கிடைக்கும் இன்பம் என்ற உணர்வு நிச்சயமாகச் சிறிதும் இருப்பதில்லை.

    அத்தகைய போலி பக்தியில், ஒருவர் ஆண்டவரின் சித்தத்தில் மட்டுமே பிரத்தியேகமான இன்பத்தைக் காண்பதில்லை.-

    ஸா து கர்மஜ்ஞாநயோகேভ்யாধிகாதரா–25-பக்தி என்பது கர்மத்தை விடவும், ஞானத்தை விடவும், யோகத்தை (ராஜ யோகத்தை) விடவும் மேலானது.–மறுபுறம், தூய பக்தித் தொண்டானது, பலன் தரும் செயல்கள், தத்துவார்த்த ஊகங்கள் மற்றும் ஆன்மிகத் தியானம் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் மேலானதாகும்.–உன்னதமான பக்தி என்னும் உத்தியானது, உண்மையில் கர்ம மார்க்கம், ஞான மார்க்கம் மற்றும் யோக மார்க்கம் ஆகியவற்றை விடவும் மேலானதாகும்.-

    மறுபுறம், தூய பக்தித் தொண்டானது, பலன் தரும் காரியங்கள், தத்துவார்த்த ஊகங்கள் மற்றும் ஆழ்நிலை தியானம் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் மேலானது.

    பலருபத்வத்–26-ஏனெனில், பக்தி என்பதே ஆன்மீக வாழ்வின் இறுதி இலக்கு அல்லது குறிக்கோள் ஆகும். மற்ற எல்லா வழிகளும் அதன் உணர்தலுக்கே இட்டுச் செல்கின்றன–எல்லாவற்றிற்கும் மேலாக, பக்தி என்பது எல்லா முயற்சிகளின் பலனாகும்.–ஏனெனில் அது எல்லா யோகங்களின் பலன்களின் இயல்பைச் சார்ந்தது.-

    எல்லாவற்றிற்கும் மேலாக, பக்தி என்பது எல்லா முயற்சிகளின் பலனாகும்.


    ஈஶ்வரஸ்யாப்யভிமாநদ்வேஷித்வாத் দிந்யா ப்ரியத்வாச்ச–27-பக்தி மிகச் சிறந்தது, ஏனென்றால் கடவுள் அகங்காரத்தை வெறுத்து, பணிவை விரும்புகிறார்.-மேலும், ஆண்டவர் பெருமைக்காரர்களை விரும்புவதில்லை, ஆனால் தாழ்மையானவர்கள் மீது பிரியப்படுகிறார்.-மேலும், கடவுளுக்கு அகங்காரம் பிடிக்காததாலும், சாந்த குணத்தின் மீதுள்ள அன்பினாலும் (பக்தி மட்டுமே மேலானது).-

    கர்த்தர் பெருமைக்காரர்களை விரும்புவதில்லை, ஆனால் தாழ்மையானவர்கள் மீது பிரியப்படுகிறார்.

    தஸ்ய ஜ்ஞாநமேவ ஸாধநமித்யேகே–28-பக்தியை அடைவதற்கு அறிவே வழி என்று சிலர் கருதுகின்றனர்.-பக்தியை வளர்ப்பதற்கு அறிவே வழி என்று சிலர் கூறுகிறார்கள்.–“தெய்வீக அன்பிற்கு, ஞானம் மட்டுமே வழி” என்று சில ஆச்சார்யர்கள் கூறுகின்றனர்.-

    பக்தியை வளர்ப்பதற்கு அறிவே வழி என்று சிலர் கூறுகிறார்கள்.


    அந்யோந்ய ஆஸ்ரயத்வம் இத் அந்யே–29-அறிவும் பக்தியும் ஒன்றையொன்று சார்ந்தவை என மற்றவர்கள் கருதுகின்றனர்.-மற்றவர்கள் பக்தியையும் ஞானத்தையும் ஒன்றையொன்று சார்ந்தவை எனக் கருதுகின்றனர்.–ஒன்றையொன்று சார்ந்தது” என மற்றவை அறிவிக்கின்றன.-

    மற்றவர்கள் பக்தியையும் அறிவையும் ஒன்றையொன்று சார்ந்தவை எனக் கருதுகின்றனர்.

    ஸ்வயம் ফலரூபதேதி ব்ரஹ்மகுமாரঃ–30-ஆன்மீக உணர்தலே அதன் ஒரே பலன் என்று நாரதர் கூறுகிறார்.-ஆனால் பிரம்மாவின் சந்ததி, பக்தியே அதன் பலன் என்கிறது.–அது (பக்தி) தனக்குத் தானே பலன்” என்று படைப்பாளனாகிய பிரம்மாவின் சந்ததியினர் கூறுகின்றனர்.-

    ஆனால் பிரம்மாவின் மகன், பக்தியே அதன் பலன் என்கிறார்.-

    ராஜগৃஹபோஜநாদிஷு ததைவாদৃஷ்டத்வாத்
    ந தேந ராஜபரிதோஷா க்ஷுধஸந்திர்வா ॥–31-32
    -ஒரு ஆட்சியாளரைப் பற்றி அறிந்துகொள்வதாலும், அவரது அரண்மனையைப் பார்ப்பதாலும் மட்டும் அவரை மகிழ்விக்க முடியாது; அதுபோலவே, உணவைப் பற்றிய அறிவாலும் அதைக் காண்பதாலும் மட்டும் பசியைத் தணித்துக்கொள்ள முடியாது; அதுபோலவே, அன்பு வரும் வரை இறைவனைப் பற்றிய அறிவாலோ அல்லது உணர்வாலோ ஒருவன் திருப்தியடைய முடியாது-அரச மாளிகை, உணவு போன்ற உதாரணங்கள் இதை விளக்குகின்றன. ஓர் ஆட்சியாளர் ஒரு மாளிகையைப் பார்ப்பதால் மட்டும் முழுமையாகத் திருப்தி அடைவதில்லை, அதுபோலவே ஒருவர் உணவைப் பார்ப்பதால் மட்டும் தன் பசியைத் தணித்துக்கொள்ள முடியாது.-ஏனெனில், இடங்கள், இரவு உணவு போன்ற உதாரணங்களில் அது அவ்வாறே நிரூபிக்கப்பட்டுக் காணப்படுகிறது. அதன் காரணமாக (வெறும் அறிவால் மட்டுமே), ஆட்சியாளரின் தயவோ, பசி தணிவதோ ஒருபோதும் நிகழாது.-

    அரச மாளிகை, உணவு போன்ற உதாரணங்கள் மூலம் இது விளக்கப்பட்டுள்ளது. ஒரு அரசன் ஒரு மாளிகையைப் பார்ப்பதால் மட்டும் முழுமையாகத் திருப்தி அடைவதில்லை, அதுபோலவே ஒருவரால் உணவைப் பார்ப்பதால் மட்டும் தன் பசியைத் தணித்துக்கொள்ளவும் முடியாது.

    தஸ்மாத்ஸைவ গ்ராஹ்ய முமுக்ஷுபிஹி–33-எனவே, (பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, இவ்வுலகில் உள்ள அனைத்து எதிர்நிலை ஜோடிகள் போன்ற) எல்லா வரம்புகளையும் பந்தங்களையும் கடக்க விரும்புவோர், பரம அன்பை மிக உயர்ந்த இலக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்.-எனவே, முக்தியை நாடுபவர்கள் பக்தித் தொண்டில் மட்டுமே ஈடுபட வேண்டும்.-எனவே, முழுமையான முக்தியை நாடுபவர்கள், கடவுள் மீதான அந்தப் பரம அன்பை மட்டுமே நாட வேண்டும்.-

    ஆகையால், முக்தியை நாடுபவர்கள் பக்தித் தொண்டில் மட்டுமே ஈடுபட வேண்டும்.

    அத்தியாயம் 3: சாதனையின் வழிமுறைகள்-

    தஸ்ய ஸধாநாநி গயந்தி ஆசார்யாஹா ॥–34-மாபெரும் ஆசிரியர்கள், உன்னதமான அன்பை அடைவதற்கான வழிமுறைகளாகப் பின்வருவனவற்றைத் துதிப்பாடல்களில் விவரிக்கிறார்கள்-பக்தித் தொண்டை அடைவதற்கான வழிமுறைகளைத் தரமான அறிஞர்கள் விவரித்துள்ளனர்.-உள்ளத்தில் இந்தப் பக்தியை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பண்டைய ஆசிரியர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுகிறார்கள்-

    பக்தி சேவையை அடைவதற்கான வழிமுறைகளைத் தரமான நூல்கள் விவரித்துள்ளன.

    தத்து விஷய த்யாகத் ஸங்கத்யகச்ச–35-உன்னதமான அன்பை அடைவதற்கு, ஒருவர் புலன் இன்பப் பொருட்களையும் அவற்றின் மீதான பற்றையும் துறக்க வேண்டும்.-புலனின்பங்களையும் உலகப் பற்றுகளையும் துறப்பதன் மூலம் ஒருவன் பக்தியை அடைகிறான்.-உண்மையில் பக்தியின் ஆதாரங்கள் (1) புலன்-பொருட்களைத் துறப்பதன் மூலமும், (2) சுற்றியுள்ள உயிரினங்கள் மீதான பற்றுகளைத் துறப்பதன் மூலமும் முழுமையாக ஆராயப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

    புலனின்பங்களையும் உலகப் பற்றுகளையும் துறப்பதன் மூலம் ஒருவன் பக்தியை அடைகிறான்.

    அவ்யவ்ரிதா பஜனத்–36-கடவுளைத் தடையின்றி, இடைவிடாமல் வழிபடுவதன் மூலம் (உன்னத அன்பு) அடையப்படுகிறது.–இறைவனை இடைவிடாமல் வழிபடுவதால் பக்தி அடைகிறார்.-கர்த்தருக்கு இடைவிடாத மேன்மையான மற்றும் அன்பான சேவையின் மூலம்.-

    இறைவனை இடைவிடாமல் வழிபடுவதன் மூலம் ஒருவன் பக்தியை அடைகிறான்.

    லோகேபி ভগவத் গுணா ஶ்ரவண கீர்தநாத் ॥–37-வாழ்க்கையின் சாதாரண செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே, கர்த்தரின் மகிமையைக் கேட்பதாலும் பாடுவதாலும்.-இவ்வுலகில் வாழ்க்கையின் சாதாரணச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே, பரம இறைவனின் சிறப்புக் குணங்களைக் கேட்பதாலும் உச்சரிப்பதாலும் ஒருவன் பக்தியை அடைகிறான்.-உலகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதும், கர்த்தருடைய மகிமைகளைக் கேட்பதாலும் பாடுவதாலும்.-

    இவ்வுலகில் வாழ்க்கையின் சாதாரணச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்போதே, பரம இறைவனின் சிறப்புக் குணங்களைக் கேட்பதாலும் உச்சரிப்பதாலும் ஒருவன் பக்தியை அடைகிறான்.

    முখ்யாதஸ்து மஹாகৃபாயைவ ভগவத்கৃபாலேஶத்வா–38-பக்தியை அடைவதற்கான பிரதான வழி, ஒரு மகாத்மாவின் அருளே ஆகும்.-ஆயினும், முதன்மையாக, மகான்களின் கருணையாலோ அல்லது பகவானின் கருணையின் ஒரு சிறு துளியாலோ ஒருவர் பக்தியை வளர்த்துக் கொள்கிறார்.
    -முதன்மையாக அது (தூய பக்தி) (மகான்களின் அருளால், அல்லது சிறிதளவு தெய்வீக அருளால் பெறப்படுகிறது.

    ஆயினும், முதன்மையாக, மகான்களின் கருணையாலோ அல்லது பகவானின் கருணையின் ஒரு சிறு துளியாலோ ஒருவர் பக்தியை வளர்த்துக் கொள்கிறார்.

    மஹத்ஸங்গஸ்து দுர்லபோ அகம்யாமோঘஶ்ச–39-ஒரு மகான் அருளைப் பெறுவது கடினம், ஏனெனில் அத்தகையவரை அடையாளம் காண்பது கடினம்; ஆனால் ஒருவர் அருளைப் பெற்றால், அதன் விளைவு பிழையற்றது-மகான்களின் சங்கமம் என்பது அரிதாகக் கிடைக்கக்கூடியது, புரிந்துகொள்வதற்குக் கடினமானது, மற்றும் தவறற்றது.-ஒரு மகான் உடன் தொடர்பு கொள்வது உண்மையிலேயே மிகவும் கடினமானது. அவர்களை முழுமையாக அறிந்துகொள்வது இயலாத காரியம். ஆயினும், அதன் தாக்கம் பிழையற்றது.

    மகான்களின் சகவாசம் கிடைப்பது அரிது, புரிந்துகொள்வது கடினம், மற்றும் அது தவறாதது.

    லப்யதேபி தத் கிருபை யேவ–40-இறைவனின் அருளால் மட்டுமே ஒரு சாதகர் ஒரு மகான் மகாத்மாவின் அருளைப் பெறுகிறார்.-மகான்களின் சங்கமத்தை அடைய முடியும் — ஆனால் அது இறைவனின் கருணையால் மட்டுமே.-ஆயினும், இறைவனின் அருளால் மட்டுமே மகத்தான ஆன்மாக்கள் அடையப்படுகின்றன.-

    மகான்களின் சகவாசத்தை அடைய முடியும் — ஆனால் அது இறைவனின் கருணையால் மட்டுமே.

    தஸ்மிந் தஜ் ஜனே பேத அபவாத்–41-கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.-(பகவானின் தூய பக்தர்களின் சங்கத்தாலோ அல்லது நேரடியாக பகவானின் கருணையாலோ ஒருவர் பக்தியை அடையலாம், ஏனெனில்) பகவானும் தூய பக்தர்களும் வெவ்வேறானவர்கள் அல்ல.-ஏனெனில் கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் வேறுபாடு என்ற உணர்வே இல்லை.-

    [பகவானின் தூய பக்தர்களின் சகவாசத்தாலோ அல்லது நேரடியாக பகவானின் கருணையாலோ ஒருவர் பக்தியை அடையலாம், ஏனெனில்] பகவானும் அவருடைய தூய பக்தர்களும் பிரிக்கப்பட்டவர்கள் அல்ல-

    ததேவ ஸாத்யதம் ததேவ ஸாத்யதாம்--42-எனவே, ஒரு மகான் அருளை நாடுங்கள்.-தூய பக்தர்களின் சங்கத்திற்காக மட்டுமே பாடுபடுங்கள்.-அது ஒன்று மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும்; அது ஒன்று மட்டுமே நிறைவேற்றப்படட்டும்.-

    தூய பக்தர்களின் சகவாசத்திற்காக மட்டுமே பாடுபடுங்கள்.-

    துஸ் சங்கா சர்வதைவே த்யாஜ–43-தீய [அறியாமை] சகவாசத்தை எந்த வகையிலும் தவிர்க்கவும்.-ஒருவர் எல்லா விதமான இழிவான தொடர்புகளையும் துறக்க வேண்டும்.-தீய [அறியாமை] சகவாசத்தை எல்லா வகையிலும் துறப்பதே உகந்தது.-

    ஒருவர் எல்லா விதமான இழிவான சகவாசத்தையும் துறக்க வேண்டும்.

    காமக்ரோধமோஹ ஸ்மৃதிভ்ராம்ஶ்ச বுদ்ধிநாஸா ஸர்வநாசகாரணத்வாத் ॥–44-தீய [அறியாமை] சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது காமம், கோபம், மயக்கம், இலக்கை மறத்தல் மற்றும் இறுதி அழிவுக்கு வழிவகுக்கிறது.-பௌதிகப் பற்றுதல் காமம், கோபம், குழப்பம், மறதி, அறிவுக் குறைவு மற்றும் முழுமையான பேரழிவு ஆகியவற்றிற்குக் காரணமாக அமைகிறது.-ஏனெனில் அதுவே காமம், கோபம், மயக்கம், ஞாபக மறதி, பகுத்தறியும் திறன் இழப்பு ஆகியவற்றை உண்டாக்கி, இறுதியில் நமது முழு அழிவுக்கும் காரணமாக அமைகிறது.

    பௌதிகப் பற்றுதல் காமம், கோபம், குழப்பம், மறதி, அறிவுக் குறைவு மற்றும் முழுமையான பேரழிவு ஆகியவற்றிற்குக் காரணமாகும்.

    தரங்গயிதா அபிமே ஸங்கத்ஸமுদ்ரயந்தி ॥–45-இந்த உணர்ச்சிகள் ஆரம்பத்தில் சிற்றலைகளாக இருக்கலாம், ஆனால் தீய [அறியாமை] சகவாசம் அவற்றை மாபெரும் கடல் அலைகளாக எழச் செய்கிறது.-பொருள்சார் தொடர்புகளிலிருந்து அலைகளைப் போல எழும் இந்தத் தீய விளைவுகள், துயரம் எனும் ஒரு மாபெரும் சமுத்திரமாகத் திரண்டு வருகின்றன.-ஆரம்பத்தில் சிற்றலையாகத் தோன்றினாலும், (கோபம், காமம் போன்றவை) தீய (அறியாமை) சகவாசத்தால் பெருங்கடலாக மாறிவிடும்.-

    பொருள்சார் தொடர்புகளிலிருந்து அலைகளைப் போல எழும் இந்தத் தீய விளைவுகள், துயரம் எனும் ஒரு மாபெரும் சமுத்திரமாகத் திரண்டு வருகின்றன.

    கஸ்தராதி கஸ்தராதி மாயம் ? யா சங்கம்த்யஜதி யோ மஹானுபவம் ஸேவதே , நிர்மமோ பவதி-46-மாயையை வெல்பவர் யார்? யார் எல்லாப் பற்றுகளையும் துறந்து, பெரியோர்களுக்குச் சேவை செய்து, ‘நான், என்னுடையது’ என்ற உணர்விலிருந்து விடுபட்டவரோ அவரே.-மாயையைக் கடந்து செல்பவர் யார்? உலகப் பற்றுகளைத் துறந்து, முனிவர்களுக்குச் சேவை செய்து, தன்னலமற்றவராக மாறுபவரே-மாயையை (பிரமை) கடப்பவர் யார்? உண்மையில் மாயையை கடப்பவர் யார்? (1) புலன் பொருட்களின் மீதான எல்லா பற்றுகளையும் துறப்பவர்; (2) சிறந்த பக்தர்களுக்கு சேவை செய்பவர் மற்றும் (3) உடைமை உணர்வை துறப்பவர் —-

    மாயையைக் கடந்து செல்லக்கூடியவர் யார்? உலகப் பற்றுகளைத் துறந்து, ஞானிகளுக்குச் சேவை செய்து, தன்னலமற்றவராக மாறுபவரே.

    யோ விவிக்தஸ்தானம் , ஸேவதே , யோலோகபந்தமுன்மூலயாதி நிஸ்த்ரகுண்யோ பவதி , யோகக்ஷேமம் த்யஜதி–47-தனிமையில் வாழ்பவர், இவ்வுலகப் பந்தங்களைக் களைந்து, முக்குணங்களையும் கடந்து, தன் வாழ்வாதாரத்திற்கும் இறைவனையே சார்ந்திருப்பவர்.–மாயையைக் கடந்து செல்பவர் யார்?) யார் ஒரு தனிமையான இடத்தில் தங்கி, உலகியல் சமூகப் பற்றை வேரோடு துண்டித்து, இயற்கையின் மும்மடங்கு குணங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, பொருள் ஆதாயம் மற்றும் பாதுகாப்பு மீதான ஆசையைத் துறக்கிறாரோ அவரே.-அமைதியான தனிமையான இடத்தில் தன்னை வைத்துக் கொள்பவர், (5) உலகப் பற்றை வேரோடு பிடுங்குபவர், (6) குணங்களின் தாக்கங்களைக் கடந்து செல்பவர், (7) பொருட்களைப் பெறுவதற்கும் தக்கவைப்பதற்கும் உள்ள எல்லாக் கவலைகளையும் துறப்பவர்;-

    [மாயையைக் கடந்து செல்பவர் யார்?] யார் ஒரு தனிமையான இடத்தில் தங்கி, உலகியல் சமூகத்தின் மீதான தனது பற்றை வேரோடு துண்டித்து, இயற்கையின் மூன்று குணங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, பொருள் ஆதாயம் மற்றும் பாதுகாப்பு மீதான ஆசையைத் துறக்கிறாரோ அவரே.

    யঃ கர்மফலம் த்யஜபி , கர்மணிஸந்நியாஸ்யதி ததோ மৃদ்வந்த்வோ ভவதி–48-செயல்களின் பலன்களைத் துறந்து, எல்லா சுயநலச் செயல்களையும் துறந்து, முரண்பாடுகளின் ஜோடிகளைக் கடந்து செல்பவர்.-(மாயையைக் கடந்து செல்பவர் யார்?) பௌதிகக் கடமைகளையும் அவற்றின் இலாபங்களையும் துறந்து, அதன் மூலம் இருமையைக் கடந்து செல்பவர்.-செயல்களின் பலன்களைத் துறப்பவன், (9) எல்லா அகங்காரச் செயல்களையும் துறப்பவன், அதன் மூலம் (10) முரண்பாடுகளின் ஜோடிகளின் விளையாட்டிலிருந்து விடுபடுபவன் .-

    [மாயையைக் கடந்து செல்பவர் யார்?] உலகப்பிரகாரமான கடமைகளையும் அவற்றின் இலாபங்களையும் துறந்து, அதன்மூலம் இருமையைக் கடந்து செல்பவரே.-

    யோ வேதாநாபி ஸந்நியாஸ்யதி , கேவலமவிச்ছிந்நாநுராகம் லভதே–49-சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கூடத் துறந்து, கடவுள் மீது அசைக்க முடியாத அன்பை அடைபவர்.-வேதங்களையும் துறக்கும் நபர், கடவுள் மீது பிரத்தியேகமான மற்றும் தடையற்ற ஈர்ப்பைப் பெறுகிறார்.-வேதங்களையும் துறப்பவன்; மற்றும் (12) தூய்மையான, தடையற்ற பக்தி ஓட்டத்தைப் பெறுபவன் .-

    வேதங்களையும் துறக்கும் நபர், கடவுள் மீது பிரத்தியேகமான மற்றும் தடையற்ற ஈர்ப்பைப் பெறுகிறார்-

    ச தாராதி , ச தாராதி ச லோகமாஸ்தராயதி .–50-அத்தகைய நபர், உண்மையில், இந்த மாயையைக் கடப்பதுடன், மற்றவர்கள் அதைக் கடக்கவும் உதவுகிறார்.-அப்படிப்பட்ட ஒருவர் மெய்யாகவே விடுவிக்கப்படுகிறார், மேலும் அவர் உலகின் மற்றவர்களையும் விடுவிக்கிறார்.-ஒருவர் கடக்கிறார், ஆம், ஒருவர் கடக்கிறார். மற்றவர்களும் கடந்து செல்ல ஒருவர் உதவுகிறார்.-

    அப்படிப்பட்ட ஒருவர் மெய்யாகவே விடுவிக்கப்படுகிறார், மேலும் அவர் உலகின் மற்றவர்களையும் விடுவிக்கிறார்.-

    அத்தியாயம் 4: தூய மற்றும் கலப்பு பக்தி-

    அநிர்வச்சனியம் பிரேமஸ்வரூபம் .–51-இந்த உன்னதமான அன்பின் உண்மையான இயல்பை விவரிக்க இயலாது-கடவுள் மீதான தூய அன்பின் உண்மையான இயல்பு வர்ணிக்க முடியாதது.-பக்தியின் இயல்பு விவரிக்க முடியாதது, வரையறுக்க முடியாதது.

    கடவுள் மீதான தூய அன்பின் உண்மையான இயல்பு வர்ணிக்க முடியாதது.

    முகாஸ்வதானவத்.–52-அது, ஒரு ஊமையன் தனக்கு ஏற்பட்ட இன்பமான சுவையை அனுபவிக்க முயற்சிப்பதைப் போன்றது.-(இறைவனின் தூய அன்பு எனும் அனுபவத்தை விவரிக்க முயல்வது) என்பது, ஒரு ஊமை தான் சுவைப்பதை விவரிக்க முயற்சிப்பதைப் போன்றது.-ஊமைகள் அனுபவிக்கும் சுவையைப் போல.-

     [இறைவனின் தூய அன்பின் அனுபவத்தை விவரிக்க முயற்சிப்பது] ஒரு ஊமை தான் சுவைப்பதை விவரிக்க முயற்சிப்பதைப் போன்றது.

    ப்ரகாஸதே க்வாபி பத்ரே –53-(அது விவரிக்க முடியாததாக இருந்தாலும்), அதை அடைந்த மகான்களிடம் அது வெளிப்படுகிறது.-ஆயினும், தகுதியுள்ளவர்களுக்கு அவ்வப்போது இறைபக்தியின் தூய அன்பு வெளிப்படுகிறது.-இதற்குத் தகுதியானவர்களாக இருக்கும் சில அரிதான நபர்களிடம், இந்த (அத்தகைய தூய அன்பு) வெளிப்படுவதாகக் காணப்படுகிறது.-

    ஆயினும், தகுதியுள்ளவர்களுக்கு அவ்வப்போது தேவனுடைய பரிபூரண அன்பு வெளிப்படுத்தப்படுகிறது.

    গுணராஹிதம் கமநாரஹிதம் ப்ரதிக்ஷணவர்ধமாநமவிச்சிந்நம்ஸுக்ஷ்மாதரமநுভவரூபம் ॥–54-இந்த உன்னதமான அன்பு பண்புகளற்றது; அது எல்லா சுயநல ஆசைகளிலிருந்தும் விடுபட்டது; அது ஒவ்வொரு கணமும் தீவிரத்தில் வளர்கிறது; அது ஒரு தடையற்ற அக அனுபவமாகும், நுட்பமானவற்றிலும் நுட்பமானது.-கடவுள் மீதான தூய அன்பு என்பது, பௌதிக குணங்கள் மற்றும் பௌதிக ஆசைகள் அற்ற, ஒவ்வொரு கணமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும், ஒருபோதும் தடைபடாத மிகவும் நுட்பமான உணர்வாக வெளிப்படுகிறது-(இந்தத் தூய அன்பு) பண்புகளற்றது, ஆசைகள் எனும் நஞ்சற்றது, ஒவ்வொரு கணமும் பெருகிக்கொண்டே இருப்பது, தடையற்றது, மிகவும் நுட்பமானது, முற்றிலும் உடனடியான அனுபவத்தின் தன்மையுடையது…

    கடவுள் மீதான தூய அன்பு என்பது, பௌதிக குணங்கள் மற்றும் பௌதிக ஆசைகள் அற்ற, மிகவும் நுட்பமான உணர்வாக வெளிப்படுகிறது; அது ஒவ்வொரு கணமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும், ஒருபோதும் தடைபடாது.

    தத்ப்ராப்ய ததேவாவலோகயதி ததேவ ஶ்ரீணோதிததேவ பஷ்ட்யதி ததேவ சிந்தயதி ॥–55-ஒருவன் இந்த உன்னதமான அன்பை அடையும்போது, ​​அவன் பிரியமானவரை எங்கும் காண்கிறான், பிரியமானவரை எங்கும் கேட்கிறான், பிரியமானவரைப் பற்றி மட்டுமே பேசுகிறான், பிரியமானவரைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான்.-இறைவனின் மீது தூய அன்பைப் பெற்ற ஒருவர், இறைவனை மட்டுமே நோக்குகிறார், இறைவனைப் பற்றி மட்டுமே கேட்கிறார், இறைவனைப் பற்றி மட்டுமே பேசுகிறார், இறைவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.-பரம அன்பை அடைந்த பின்பு, பக்தன் அதையே காண்கிறான் (உணர்கிறான், புரிந்துகொள்கிறான்), அதையே கேட்கிறான், அதையே பேசுகிறான், அதையே சிந்திக்கிறான் (தியானிப்பான்).-

    கடவுள் மீது தூய அன்பைப் பெற்ற ஒருவர், ஆண்டவரை மட்டுமே நோக்குகிறார், அவரைப் பற்றி மட்டுமே கேட்கிறார், அவரைப் பற்றி மட்டுமே பேசுகிறார், அவரைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்.

    கௌநீ த்ரிதா গுணভேদதார்தாদிভேদদ்வா–56–சாதகர்களுடைய மனதில் சத்துவம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஏதேனும் ஒன்று மேலோங்கி இருப்பதன் அடிப்படையிலும், அவர்கள் தங்களை இறைவனிடம் அர்ப்பணிப்பதற்கான காரணங்களின் அடிப்படையிலும் — அதாவது, உலகியல் சோர்வு, ஞானத் தேடல், அல்லது சில பௌதிக ஆசைகள் நிறைவேற வேண்டும் என்ற விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையிலும் — ஆயத்த பக்தி மூன்று வகைப்படும்-இரண்டாம் நிலை பக்தித் தொண்டானதென்பது, அந்த மூன்று பௌதிக குணங்களில் எது மேலோங்கி இருக்கிறதோ அதைப் பொறுத்தோ, அல்லது துன்பம் முதலிய பௌதிக உந்துதல்களில் எது ஒருவரை பக்திக்கு இட்டுச் செல்கிறதோ அதைப் பொறுத்தோ அமைகிறது.-இரண்டாம் நிலை பக்தி மூன்று வகைப்படும் — அது (பக்தரின்) மனநிலையின் வேறுபாட்டைப் பொறுத்தோ அல்லது (பக்தர்களிடம் உள்ள) மனக்குறையின் வகையைப் பொறுத்தோ அமையும்.-

    இரண்டாம் நிலை பக்தித் தொண்டானதென்பது, அந்த மூன்று பௌதிக குணங்களில் எது மேலோங்கி இருக்கிறதோ அதைப் பொறுத்தோ, அல்லது துன்பம் முதலிய பௌதிக உந்துதல்களில் எது ஒருவரை பக்திக்கு இட்டுச் செல்கிறதோ அதைப் பொறுத்தோ அமைகிறது.

    உத்தரஸ்மாদுத்தரஸ்மாத் பூர்வபூர்வஶ்ரேயாய ভவதி–57-இந்த பக்தப் பிரிவுகளில், முதலாவது பிரிவினர் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்; இவர்களுக்குப் பிறகு, குறைந்த உயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள் மற்றும் கீழ்மட்டத்தினர் வருகிறார்கள்.-ஒவ்வொரு முந்தைய கட்டமும், அதனைத் தொடரும் கட்டத்தை விடச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும்.-பின்வருபவை ஒவ்வொன்றையும் விட, அதற்கு முந்தையவை மேன்மையானவையாக (பெரியவையாக) ஆகின்றன.-

    ஒவ்வொரு முந்தைய கட்டமும், அதனைத் தொடரும் கட்டத்தை விடச் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும்.

    அந்யஸ்மாத் ஸுலப்யம் பக்தவ்–58-பக்தி மார்க்கமே இறைவனை அடைவதற்கான மிக எளிய வழியாகும்.-மற்ற எந்த முறையைக் காட்டிலும் பக்தித் தொண்டின் மூலம் வெற்றியை எளிதாக அடையலாம்.-மற்ற எல்லா யோகங்களையும் விட பக்தி எளிதில் கிடைக்கக்கூடியது — சுலபமாக அடையக்கூடியது…

    மற்ற எந்த வழிமுறையைக் காட்டிலும் பக்தித் தொண்டின் மூலம் வெற்றியை எளிதாக அடையலாம்.

    ப்ரமாணாந்தரஸ்யாநபேக்ஷத்வாத் ஸ்வயம் ப்ரமாணத்வாத்–59-அன்பே தனக்குத் தானே சான்று, அதற்கு வேறு எதுவும் தேவையில்லை.-எல்லா ஆன்மீகச் செயல்முறைகளிலும் பக்தித் தொண்டாலானது மிகவும் எளிமையானதாக இருப்பதற்குக் காரணம், அதன் செல்லுபடித்தன்மைக்காக அது வேறு எந்த அதிகாரத்தையும் சார்ந்திருக்காமல், அதுவே அதிகாரத்தின் அளவுகோலாக விளங்குவதே ஆகும்.-ஏனெனில் அன்பு வேறு எந்த ஆதாரத்தையும் சார்ந்திருக்கவில்லை, அதுவே ஒரு ஆதாரத்தின் தன்மையைக் கொண்டிருப்பதால், அன்பு சுய-தெளிவானது.-

    எல்லா ஆன்மீகச் செயல்முறைகளிலும் பக்தி ஆராதனை மிகவும் எளிதானதாக இருப்பதற்குக் காரணம், அதன் செல்லுபடித்தன்மைக்கு அது வேறு எந்த அதிகாரத்தையும் சார்ந்திருக்கவில்லை, அதுவே அதிகாரத்தின் தரமாக விளங்குகிறது.

    ஸந்திரூபத் பரமானந்தரூபச்ச–60-அதன் இயல்பு சாந்தியும் பரம ஆனந்தமும் ஆகும்.மேலும், பக்தி என்பது சாந்தி மற்றும் பரம ஆனந்தத்தின் வடிவமாகும்.-மேலும், அன்பு என்பது அமைதியின் இயல்புடையது மற்றும் அது பரம ஆனந்தத்தின் இயல்புடையது என்பதாலும் ஆகும்.

    மேலும், பக்தி என்பது அமைதி மற்றும் பரம ஆனந்தத்தின் வடிவமாகும்-

    லோகஹநௌ சிந்தா ந கார்யநிவேদிதாத்மாலோகவேদத்வாத்–61-பக்தன் எந்தவொரு தனிப்பட்ட இழப்பிற்காகவும் வருந்துவதில்லை, ஏனெனில் ஒருவன் தன்னையும், தன்னிடம் உள்ள அனைத்தையும், சாஸ்திரங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களையும் கூட சரணடைந்திருக்கிறான்.-ஒருவருடைய உலகியல் மற்றும் வேதக் கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்த பிறகு, உலக இழப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.-உலகியல் இழப்புகளைக் குறித்து எந்தக் கவலையோ கலக்கமோ கொள்ளக்கூடாது. ஏனெனில், தனது எல்லையற்ற ஆன்மாவையும், அதன் உலகியல் மற்றும் புனிதமான செயல்கள் அனைத்தையும் தன் இதயத்து இறைவனிடம் தொடர்ந்து ஒப்படைப்பதே ஒரு உண்மையான பக்தனின் இயல்பாகும்.

    ஒருவன் தனது உலகியல் மற்றும் வேதக் கடமைகள் அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்த பிறகு, உலக இழப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

    ந தத் ஸிদ்ধௌ லோகவ்யவஹாரோ ஹேயஹ்கிந்து ফலத்யগஸ்தத் ஸாதநாஞ்ச கார்யமேவ ॥–62-ஒரு பக்தன் தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்திருந்தாலும், அவன் இவ்வுலகக் செயல்களைத் துறக்காமல், அச்செயல்களின் பலன்களை இறைவனுக்குச் சமர்ப்பித்து, அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.-ஒருவர் பக்தித் தொண்டில் நிலைபெற்ற பிறகும், இவ்வுலகில் உள்ள தனது பொறுப்புகளைக் கைவிடாமல், மாறாகத் தனது செயல்களின் பலன்களை இறைவனிடம் தொடர்ந்து ஒப்படைக்க வேண்டும். மேலும், தூய பக்தி நிலையை அடைய முயற்சிக்கும் அதே வேளையில், விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவர் நிச்சயமாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.-அத்தகைய பரிபூரண அன்பு கிடைக்கும் வரை அல்லது, அந்தப் பரிபூரண அன்பை அடைந்த பிறகும், உலகச் செயல்களைக் கைவிடக் கூடாது. ஆனால், நமது செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக, நாம் நிச்சயமாக அன்பை விடாமுயற்சியுடன் தேடி, நமது கவலையைத் துறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.-

    ஒருவர் பக்தித் தொண்டில் நிலைபெற்ற பிறகும், இவ்வுலகில் உள்ள தனது பொறுப்புகளைக் கைவிடக்கூடாது; மாறாக, தனது செயல்களின் பலன்களை இறைவனிடம் தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டும். மேலும், தூய பக்தி நிலையை அடைய முயற்சிக்கும் அதே வேளையில், விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவர் நிச்சயமாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

    ஸ்த்ரீ தான நாஸ்திக வைரி சரித்திரம் நாஸ்ரவணியம்–63-காமம், பேராசை மற்றும் நாத்திகம் பற்றிய உரையாடல்களைக் கேட்கக் கூடாது.-பாலியல், பணம் மற்றும் நாத்திகர்கள் பற்றிய செய்திகளில் பொழுதுபோக்கைக் காணக்கூடாது.-தேடுபவர், பாலியல், செல்வம், நாத்திகர்கள் மற்றும் எதிரிகள் பற்றிய வர்ணனைகளைக் கேட்கக் கூடாது.-

    பெண்கள், பணம், நாத்திகர்கள் பற்றிய செய்திகளில் பொழுதுபோக்கைக் காணக்கூடாது.

    அபிமானதம்படிகம் த்யஜ்யம்–64-கர்வம், தற்பெருமை மற்றும் அது போன்ற பிற தீய குணங்கள் களையப்பட வேண்டும்.-ஒருவர் பொய் கர்வம், பாசாங்குத்தனம் மற்றும் பிற தீய குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.-கர்வம், தற்பெருமை மற்றும் மனதின் இதுபோன்ற மற்ற எதிர்மறை உந்துதல்களைக் கைவிட வேண்டும்.-

    ஒருவர் பொய்யான பெருமை, பாசாங்குத்தனம் மற்றும் பிற தீய குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும்.

    தদர்பிடখிலாச்சரঃ ஸங்கமக்ரோধভிமாநாদி தஸ்மிந்நேவ கரணீயம் ॥–65-உங்கள் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணியுங்கள்; காமம், கோபம், கர்வம் போன்ற உங்கள் உணர்ச்சிகள் அனைத்தையும் இறைவனை நோக்கிச் செலுத்துங்கள்.-ஒருவன் தன் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து, ஆசை, கோபம், கர்வம் ஆகியவற்றை இறைவனிடம் மட்டுமே கொள்ள வேண்டும்.-தனது செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்த பின்பு, ஆசை, கோபம், கர்வம் முதலிய அனைத்தையும் இறைவனை நோக்கியே திருப்ப வேண்டும்.

    ஒருவன் தன் செயல்கள் அனைத்தையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, ஆசை, கோபம், பெருமை ஆகியவற்றை அவரிடத்தில் மட்டுமே உணர வேண்டும்.

    த்ரிரூபபங்கபூர்வகம்நித்யதஸ்யாநித்யகாந்தபாஜநாத்மகம் ப்ரேமகார்யம் ப்ரேமைவ கார்யம் ॥–66-அன்பின் மூன்று வடிவங்களையும் கடந்து, கர்த்தரை நேசியுங்கள்; அவரை ஒரு நித்திய ஊழியராகவும், கர்த்தரின் நித்திய மணவாட்டியாகவும் நேசியுங்கள்.-இயற்கையின் முக்கூட்டு குணங்கள் எனும் மேற்கூறிய திரைகளைக் கடந்து சென்ற பிறகு, எஜமானனுக்குச் சேவை செய்யும் சேவகனின் மனநிலையிலோ அல்லது காதலிக்குச் சேவை செய்யும் காதலனின் மனநிலையிலோ நிரந்தரமாக நிலைத்திருந்து, கடவுள் மீதான தூய அன்பில் மட்டுமே செயல்பட வேண்டும்.-அனுபவங்கள் எனும் மூன்று காரணிகளையும் கடந்து, ஒரு அர்ப்பணிப்புள்ள பணியாளர் அல்லது வாழ்க்கைத் துணையைப் போன்று, நிலையான சேவையைக் கொண்ட அன்பு மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.-

    இயற்கையின் முக்கூட்டு குணங்கள் எனும் மேற்கூறிய திரைகளைக் கடந்து சென்ற பிறகு, ஒருவன் தன் எஜமானனுக்குச் சேவை செய்யும் பணியாள் அல்லது தன் காதலனுக்குச் சேவை செய்யும் காதலியின் மனநிலையில் நிரந்தரமாக நிலைத்திருந்து, கடவுள் மீதான தூய அன்பில் மட்டுமே செயல்பட வேண்டும்

    பக்த ஏகந்தினோ முக்யஹ்–67-கடவுள் மீது ஒருமுகப்பட்ட அன்பையும், அந்த அன்பின் பொருட்டே அன்பையும் கொண்டிருப்பவர்களே மிக உயர்ந்த வகுப்பினரான பக்தர்கள்.-பகவானின் பக்தர்களில், பகவானுக்கு மட்டுமே தங்களை நெருங்கிய சேவகர்களாக அர்ப்பணிப்பவர்களே மிகச் சிறந்தவர்கள்.-எவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனாக இருப்பதோடு, இறைவனின் பொருட்டே அவனிடம் ஒருமுகப்பட்ட பக்தியைக் கொண்டிருப்பவர்களோ, அவர்களே முதன்மையானவர்கள் (சிறந்தவர்கள்).-

    பகவானின் பக்தர்களில், அவருக்கு முற்றிலும் நெருங்கிய சேவகர்களாகத் தங்களை அர்ப்பணிப்பவர்களே மிகச் சிறந்தவர்கள்.

    காந்தவரோধரோமஞ்சஸ்ருபிঃ பரஸ்பரம் லபமாநঃ பவயந்தி குலாநி ப்ரீதிவிம்ச ॥-68-பக்தர்கள் இறைவனைப் பற்றிப் பேசும்போது, ​​அவர்களின் குரல் தழுதழுக்கிறது, கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகிறது, பரவசத்தில் அவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்து நிற்கின்றன. இத்தகையோர் தங்கள் குடும்பங்களை மட்டுமல்ல, தாங்கள் பிறந்த இந்த முழுப் பூமியையும் தூய்மைப்படுத்துகிறார்கள்.-தொண்டை அடைத்தவாறும், மயிர் சிலிர்த்தவாறும், கண்ணீர் மல்கவும் ஒருவரோடொருவர் உரையாடுகையில், ஆண்டவரின் நெருங்கிய ஊழியர்கள் தங்களைப் பின்பற்றுவோரையும் முழு உலகத்தையும் தூய்மைப்படுத்துகிறார்கள்.-உணர்ச்சியால் தொண்டை அடைத்து, உடல் திகிலால் மூடப்பட்டு, கண்ணீர் வழிந்தோட, அவர்கள் தழுதழுத்த வார்த்தைகளில் ஒருவருக்கொருவர் உரையாடும்போது, ​​அவர்கள் தங்கள் குடும்பத்தையும் குலத்தையும் புனிதப்படுத்துகிறார்கள்; ஏன், அவர்கள் மகிமைப்படுத்த வரும் அந்த பூமியையே புனிதப்படுத்துகிறார்கள்.-

    தொண்டை அடைத்தபடியும், மயிர் சிலிர்த்தபடியும், கண்ணீர் பெருகும்படியும் ஒருவரோடொருவர் உரையாடுகையில், ஆண்டவரின் நெருங்கிய ஊழியர்கள் தங்களைப் பின்பற்றுவோரையும் முழு உலகத்தையும் தூய்மைப்படுத்துகிறார்கள்

    தீர்থிகுர்வந்தி தீர்থாநி ஸுகர்மி-குர்வந்திகர்மாணி ஸச்சஸ்த்ரிகுர்வந்தி சாஸ்த்ராணி ॥–69-இறைப் பிரியர்களான இந்த மகத்தான ஞானிகள், புனித யாத்திரைத் தலங்களைப் புனிதப்படுத்துகின்றனர். அவர்கள் செய்யும் செயல்கள் நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகின்றன. அவர்கள் சமய நூல்களுக்கு ஆன்மீக அதிகாரத்தை அளிக்கின்றனர்.-அவர்களுடைய சங்கம் புனித இடங்களைப் புனிதமாக்குகிறது, செயல்களை மங்களகரமானதாக்குகிறது, மேலும் வேதங்களை அதிகாரப்பூர்வமானதாக ஆக்குகிறது.-அவைகள் புனித யாத்திரைத் தலங்களைப் புனிதப்படுத்துகின்றன, செயல்களுக்கு மகிமையைச் சேர்க்கின்றன, மற்றும் வேதங்களுக்கு அதிகாரத்தை அளிக்கின்றன.-

    அவர்களுடைய சங்கம் புனித இடங்களைப் புனிதமாக்குகிறது, செயல்களை மங்களகரமானதாக்குகிறது, மற்றும் வேதங்களை அதிகாரப்பூர்வமானதாக ஆக்குகிறது.

    தன்மயா–70-அந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.-பரம இறைவனின் நெருங்கிய அடியார்களெல்லாம் அன்பில் முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள்.-ஏனெனில், அவர்கள் கர்த்தருக்குள் மூழ்கி வாழ்கிறார்கள்.

    பரம இறைவனின் நெருங்கிய அடியார்களெல்லாம் அவரை நேசிப்பதில் முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள்.

    மோদந்தே பிதரோ நৃத்யந்தி தேவதாঃஸநாதঃ சேயம் ভூர்ভவாத் ॥–71-அத்தகைய இறைப் பிரியர்கள் பூமியில் குடிகொள்ளும்போது, ​​அவர்களின் முன்னோர்கள் மகிழ்கிறார்கள், தேவர்கள் ஆனந்த நடனம் ஆடுகிறார்கள், இந்தப் பூமி புனிதமடைகிறது.-இவ்வாறு தூய பக்தர்களின் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், தேவர்கள் நடனமாடுகிறார்கள், மேலும் உலகம் நல்ல தலைவர்களால் பாதுகாக்கப்படுவதாக உணர்கிறது-கடந்த தலைமுறையினர் தங்கள் நிறைவில் மகிழ்கின்றனர், விண்ணுலகில் உள்ள தெய்வங்கள் ஆனந்த நடனம் ஆடுகின்றன, மேலும் இந்தப் பூமியே ஒரு ஆன்மீக மீட்பரால் ஆசீர்வதிக்கப்படுகிறது.-

    இவ்வாறு தூய பக்தர்களின் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், தேவர்கள் நடனமாடுகிறார்கள், மேலும் உலகம் நல்ல குருக்களால் பாதுகாக்கப்படுவதாக உணர்கிறது.

    நாஸ்தி தேஷு ஜாதிவிদ்யாரூபகுலধநக்ரியாদி বேদঃ–72-அவர்களிடையே சாதி, கல்வி, உருவ அழகு, உயர் அல்லது தாழ்ந்த குடும்பத்தில் பிறப்பு, செல்வம், உடைமைகள் மற்றும் அது போன்றவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.–அத்தகைய தூய பக்தர்களிடையே சமூக அந்தஸ்து, கல்வி, உடல் அழகு, குடும்ப அந்தஸ்து, செல்வம், தொழில் போன்றவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.-அவர்களிடையே (பரிபூரணமான மகான்களிடையே) சாதி, கலாச்சாரம், அழகு, குடும்பம், செல்வம் அல்லது தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

    அத்தகைய தூய பக்தர்களிடையே சமூக அந்தஸ்து, கல்வி, உடல் அழகு, குடும்ப அந்தஸ்து, செல்வம், தொழில் போன்றவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளும் இல்லை.

    யடாஸ்டாடியா–73-ஏனெனில் அவர்கள் கர்த்தருக்கு உரியவர்கள்.-தூய பக்தர்கள் சமூக அந்தஸ்து போன்ற புறத்தோற்றங்களால் வேறுபடுத்தப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் இறைவனுக்கு உரியவர்கள்.ஏனெனில், அவை கர்த்தருடைய தெய்வீக இயல்பைச் சார்ந்தவை.-

    தூய பக்தர்கள் சமூக அந்தஸ்து போன்ற புறத்தோற்றங்களால் வேறுபடுத்தப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் இறைவனுக்கு உரியவர்கள்.

    அத்தியாயம் 5: பரிபூரணத்தை அடைதல்

    வாடோ நவையாம்ப்யா–74-வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.-வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.-பயனற்ற வாக்குவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபடக் கூடாது=

    வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

    বஹுல்யவகஸத்வদநீயதத்வச்ச–75-ஏனெனில் அவற்றுக்கு முடிவே இல்லை, மேலும் அவை திருப்திகரமான பலனையும் அளிப்பதில்லை.-இத்தகைய விவாதங்கள் அதீத சிக்கல்களுக்கு வழிவகுப்பதுடன், ஒருபோதும் தீர்க்கமானதாகவும் அமைவதில்லை.-(வீணான விவாதங்கள் கைவிடப்பட வேண்டும்) ஏனெனில் முடிவற்ற, பலதரப்பட்ட கருத்துக்கள் உருவாகக்கூடும், மேலும் அனைத்து வெறும் வாதங்களும் இறுதியில் முடிவற்றவையாகவே முடிந்துவிடும்.-

    இத்தகைய வாதம் அதீத சிக்கல்களுக்கு வழிவகுப்பதுடன், ஒருபோதும் தீர்க்கமானதாக அமைவதில்லை.

    ভக்திஶாஸ்த்ராணி மநநநியாநிதாদ்போধககர்மாணி கரணியாணி–76-நீங்கள் பக்தி நூல்களைப் படிக்கும்போது, ​​அவற்றின் போதனைகளைத் தியானித்து, அவற்றைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் இதயத்தில் இறை பக்தி தீவிரமடையும்.-பக்தித் தொண்டின் அருளப்பட்ட சாஸ்திரங்களை மதித்து, அவை விதிக்கும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.-பக்தி குறித்த நூல்களைச் ஆழ்ந்து சிந்தித்து, அவற்றின் போதனைகளைக் விடாமுயற்சியுடன் பின்பற்ற வேண்டும்.-

    பக்தித் தொண்டின் அருளப்பட்ட சாஸ்திரங்களை ஒருவர் மதித்து, அவை விதிக்கும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

    ஸுখদிঃখேச்சலভாদித்யக்தே காலே ப்ரதிக்ஷாமாணே க்ஷணார்ধமபி வ்யர்থம் நாநேயம் ॥–77-ஒரு பக்தன், ஒரு கணத்தையும் வீணாக்காமலும், இன்ப துன்பங்களிலிருந்தும், பற்றுகள் மற்றும் பேராசையிலிருந்தும் விடுபடும் வரை இறைவனை வழிபடுவதைத் தாமதிக்காமலும் இருப்பது அவனது கடமையாகும்.-பொருள் இன்பம், துன்பம், ஆசை, பொய் ஆதாயம் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் காலம் வரும் வரை பொறுமையுடன் சகித்துக்கொள்ளும்போது, ​​ஒரு நொடியின் சிறு பகுதியைக் கூட வீணாக்கக் கூடாது.-இன்பம், துன்பம், ஆசை, லாபம் போன்றவை உங்களைத் தொந்தரவு செய்யாத ஒரு உகந்த நேரத்திற்காகக் காத்திருக்கும்போது, ​​அரை நொடியைக் கூட வீணாக்கக் கூடாது.-

    ஒருவன் பொருள் இன்பம், துன்பம், ஆசை, பொய் ஆதாயம் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் காலம் வரை பொறுமையுடன் சகித்துக்கொள்ளும்போது, ​​ஒரு நொடியின் ஒரு சிறு பகுதியைக் கூட வீணாக்கக் கூடாது.

    அஹிம்ஸாஸத்யஸௌச்ছদயாஸ்திக்யாদிசரித்ரியாணி பரிபாலநீயாநி–78-பக்தன் அகிம்சை, வாய்மை, தூய்மை, கருணை, நம்பிக்கை மற்றும் அது போன்ற பிற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.-அகிம்சை, வாய்மை, தூய்மை, கருணை, நம்பிக்கை போன்ற நற்குணங்களை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.-பிறருக்குத் தீங்கு செய்யாமை, வாய்மை, தூய்மை, கருணை, இறை நம்பிக்கை முதலிய நற்பண்புகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.-

    அகிம்சை, வாய்மை, தூய்மை, இரக்கம், நம்பிக்கை போன்ற நற்குணங்களை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஸர்வদா ஸர்வভாவேந நிஶ்சிந்தைঃ ভগவாநேந ভஜநியாঃ–79-வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும், இரவும் பகலும், வேறு எந்தச் சிந்தனையும் இன்றி, ஆசீர்வதிக்கப்பட்ட இறைவனை மட்டுமே வழிபட வேண்டும்.-சந்தேகங்கள் இல்லாதவர்கள் முழு மனதுடன் பரம இறைவனை இடைவிடாமல் வழிபட வேண்டும்.-எப்போதும், எல்லா மனக் கவலைகளிலிருந்தும் விடுபட்டு, நமது ஆளுமையின் அனைத்து அம்சங்களுடனும் இறைவன் ஒருவனையே மன்றாடித் தேட வேண்டும்.-

    சந்தேகங்களற்றவர்கள் பரம இறைவனை முழு மனதுடன் இடைவிடாமல் வழிபட வேண்டும்.

    ஸ கீர்த்யமாநঃஸிঘ்ரமேவாভிர்ভவத்யாநுভவயதி ভக்தாந்–80-இவ்வாறு இறைவன் வழிபடப்படும் இடத்தில், இறைவன் விரைவில் பக்தர்களின் அகக்கண்ணுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.-இறைவன் மகிமைப்படுத்தப்படும்போது, ​​அவர் தன்னை பக்தர்களுக்கு விரைவாக வெளிப்படுத்தி, உள்ளபடியே தன்னை அறியச் செய்கிறார்.-வேண்டப்படும்போது, ​​இறைவன் தன்னை வெளிப்படுத்தி, பக்தனுக்குத் தனது முழுமையான தெய்வீக இயல்பை உணரச் செய்கிறார்.-

    அவர் மகிமைப்படுத்தப்படும்போது, ​​பகவான் தம் பக்தர்களுக்குத் தம்மை விரைவாக வெளிப்படுத்தி, அவர் உள்ளபடியே அவரை அறிந்துகொள்ள அனுமதிக்கிறார்.

    த்ரிஸத்யஸ்ய ভগிரேவ গரீயஸி ভக்திரேভগரீயஸி–81-நித்திய சத்தியத்தை நேசிப்பதே மெய்யாகவே மிகப்பெரிய அன்பு.–மனம், உடல் மற்றும் வார்த்தைகளை நேர்மையாகப் பயன்படுத்தும் ஒருவருக்கு, பக்தித் தொண்டே மிகவும் விலைமதிப்பற்ற உடைமையாகும்.-மூன்று ‘உண்மைகளில்’ (காலம் அல்லது பாதைகள்) பக்தி மட்டுமே மிகச் சிறந்தது; உண்மையில், பக்தி மட்டுமே மிகச் சிறந்தது.-

    தன் மனம், உடல் மற்றும் வார்த்தைகளை நேர்மையாகப் பயன்படுத்தும் ஒருவருக்கு, பக்தி சேவையே மிகவும் விலைமதிப்பற்ற உடைமையாகும்.

    গுணமாஹாத்ம்யஶக்திரூபஶக்தி பூஜாஶக்திஸ்மரணஶக்தி দஸ்யாஶக்தி ஸாখ்யஶக்தி வாத்சல்யஶக்திகாந்தாஶக்தி ஆத்மநிவேদநஶக்தி தந்மயாஶக்தி பரமவிரஹாஶக்தி ரூபாগধப்யேகாদஶதா ভவதி ॥–82-இந்த தெய்வீக அன்பு 11 விதமான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது :1-ஒரு பக்தர் கடவுளின் புகழையும் மகிமையையும் பாடுவதை விரும்புகிறார்.-2-கடவுளின் மயக்கும் அழகை நேசிக்கிறார்-3-இதயத்தின் வழிபாட்டை இறைவனுக்குச் செலுத்த விரும்புகிறார்.-4-இறைவனின் பிரசன்னத்தை இடைவிடாமல் தியானிக்க விரும்புகிறார்.-5-தன்னை இறைவனின் ஊழியராக நினைத்துக் கொள்ள விரும்புகிறார்-6-கடவுளை நண்பராக நேசிக்கிறார்-7-கடவுளைத் தன் பிள்ளையாக நேசிக்கிறார்-8-கடவுளைப் பிரியமானவராக நேசிக்கிறார்-9-தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.-10-கடவுளில் முழுமையாக மூழ்கி இருக்க விரும்புகிறார்.-11-கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் வேதனையை உணர்வதை விரும்புகிறார்.

    பக்தி சேவை என்பது ஒன்றாக இருந்தாலும், அது 11 வகையான பற்றுதல்களில் வெளிப்படுகிறது:-1-கடவுளின் மகிமையான குணங்களின் மீதான பற்று-2-கடவுளின் அழகின் மீதான பற்று-3-கடவுளை வழிபடுவதில் பற்று-4-கடவுளை நினைப்பதில் உள்ள பற்று-5-கடவுளுக்கு சேவை செய்வதில் பற்று-6-கடவுளை ஒரு நண்பராகக் கருதி, பதிலுக்குச் செய்வதில் உள்ள பற்று-7-ஒரு பெற்றோராகக் கடவுளைப் பராமரிப்பதில் உள்ள பற்று-8-கடவுளை ஒரு காதலராகக் கருதி அவருடன் பழகுவதில் உள்ள பற்று-9-தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதில் உள்ள பற்று-10-கடவுளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருப்பதில் பற்று-11-கடவுளிடமிருந்து பிரிந்திருப்பதை உணர்வதில் உள்ள பற்று.
    இதுவே உன்னதமான பற்று ஆகும்.-

    இவ்வாறு, அன்பு ஒன்றே என்றாலும், அது 11 விதமான முறைகளில் வெளிப்படுகிறது:1-கடவுளின் குணங்களை மகிமைப்படுத்துவதில் உள்ள அன்பு-2-கடவுளின் தெய்வீக வடிவத்தின் மீதான அன்பு-3-கடவுளை வழிபடுவதில் உள்ள அன்பு-4-கடவுளை நினைப்பதில் உள்ள அன்பு-5-கடவுளுக்கு சேவை செய்வதில் அன்பு செலுத்துங்கள்-6-கடவுளிடம் நட்பின் மீதான அன்பு-7-கடவுளைத் தன் சொந்தக் குழந்தையாக நேசிப்பது-8-கடவுள் மீதான அன்பு என்பது அன்புக்குரியவர் மீதான அன்பைப் போன்றது.-9-இறைவனின் பாதங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதற்கான அன்பு-10-கடவுளிடம் முழுமையாக மூழ்கும் அன்பு-11-இறைவனிடமிருந்து பிரிந்த வேதனையில் வெளிப்படும் அன்பு.-

    பக்தி சேவை என்பது ஒன்றாக இருந்தாலும், அது பதினோரு விதமான பற்றுதல்களில் வெளிப்படுகிறது: ஆண்டவரின் மகிமையான குணங்கள் மீதான பற்றுதல், அவருடைய அழகு மீதான பற்றுதல், அவரை வழிபடுதல், அவரை நினைவுகூருதல், அவருக்குச் சேவை செய்தல், ஒரு நண்பரைப் போல அவருடன் உறவாடுதல், ஒரு பெற்றோரைப் போல அவரைப் பராமரித்தல், ஒரு காதலரைப் போல அவருடன் உறவாடுதல், தன்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தல், அவரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருத்தல், மற்றும் அவரிடமிருந்து பிரிவை அனுபவித்தல். இந்தக் கடைசிப் பற்றே மிக உயர்ந்த பற்றுதலாகும்.

    இத்யேவம் வদந்தி ஜநஜல்பநிர்ভா ஏகமாதঃகுமாரவ்யாஸஸுகஸண்டில்யগர்গவிஷ்ணுகௌண்டில்யஶேஷோদ்ধா வருணிবலிஹநுமদ்விভீஷணদயோ ভக்தாசார்யாঃ ॥–83-பக்தி நெறியாளர்கள் இந்த உண்மைகளை, பொது விமர்சனத்திற்குச் சிறிதும் அஞ்சாமல், ஒருமனதாகப் பிரகடனம் செய்கிறார்கள்-பின்வருபவர்கள் பக்தியின் சிறந்த ஆசிரியர்களாக அறியப்படுகிறார்கள்:-குமார , வியாசர் , சுகா , சாண்டில்யா , கர்கா , விஷ்ணு , கவுண்டினியா , சேஷா , உத்தவர் , அருணி , பலி , அனுமன் , விபீஷணன் மற்றும் பலர் .-

    பக்தி சேவையின் ஸ்தாபகர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:-குமாரர்கள், வியாசர், சுகன், சாண்டில்யர், கர்கா, விஷ்ணு, கவுண்டில்யர், சேஷ, உத்தவர், அருணி, பலி, அனுமன், விபீஷணன் மற்றும் பிறர் – உலகப் பேச்சுக்களுக்கு அஞ்சாமல் பேசி, தங்களுக்குள் ஒரே கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு, பிறரையும் அவர்களின் வீண் பேச்சுகளையும் கண்டு அஞ்சாதவர்களும், சனத்குமாரர், வியாசர், சுகர், சாண்டில்யர், கர்கர், விஷ்ணு, கௌண்டின்யர், சேஷன், உத்தவர், அருணி, பலி, அனுமன், விபீஷணன் போன்ற பக்தி மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றவர்களும், தங்கள் ஒருமித்த கருத்தை அறிவிக்கிறார்கள்

    பக்தித் தொண்டின் ஸ்தாபக அதிகாரிகளான குமாரர்கள், வியாசர், சுகர், சாண்டில்யர், கர்கர், விஷ்ணு, கௌண்டில்யர், சேஷன், உத்தவர், அருணி, பலி, அனுமன், விபீஷணர் மற்றும் பிறர் — உலகப் புறங்கூறுதலுக்கு அஞ்சாமல் பேசி, தங்களுக்குள் ஒரே கருத்தைப் பகிர்ந்துகொண்டு இவ்வாறு கூறுகின்றனர்.

    ய இடம் நாரதப்ரோக்தம் ஶிவாநுசாஸநம்விஸ்வஸதி ஸ்ரத்ததே ச பக்திமாந் பவதி ச ப்ரேஷ்டம் லபத ச ப்ரேஷ்டம் லபதே இதி.-84-நாரதரின் தெய்வீக அன்பைப் பற்றிய இந்த மங்களகரமான வர்ணனையை நம்பி, இந்தப் போதனைகளில் நம்பிக்கை கொள்பவர் எவரோ, அவர் இறை அன்பு கொண்டவராக ஆகிறார், மிக உயர்ந்த பேரின்பத்தை அடைகிறார், மேலும் வாழ்வின் உன்னத இலக்கை எட்டுகிறார்.-நாரதர் கூறிய இந்த அறிவுரைகளை நம்பி, அவற்றால் உறுதியடைபவர் எவரும் பக்தியால் ஆசீர்வதிக்கப்பட்டு, மிகவும் பிரியமான இறைவனை அடைவார். ஆம், ஒருவர் மிகவும் பிரியமான இறைவனை அடைவார்.-சிவபெருமானால் போதிக்கப்பட்டதாக (கட்டளையிடப்பட்டதாக) நாரதரால் அருளப்பட்ட இந்த விளக்கத்தை நம்பி, அதில் நம்பிக்கை கொள்பவர், இறைவனின் அன்பைப் பெற்று, தனது நோக்கத்தை, ஆம், தான் விரும்பும் குறிக்கோளை அடைகிறார்

    நாரதர் கூறிய இந்த அறிவுரைகளை நம்பி, அவற்றால் உறுதியடைபவர், பக்தி என்னும் ஆசீர்வாதத்தைப் பெற்று, மிகவும் பிரியமான இறைவனை அடைவார். ஆம், அவர் பிரியமான இறைவனை அடைவார்


    ————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –ஸ்ரீ திவ்ய தேச ஸ்ரீ கருட சேவைகள்-

    May 1, 2026

    தை மாதம் – திருநாங்கூர் 11 கருட சேவை: தை அமாவாசைக்கு மறுநாள் (ஜனவரி/பிப்ரவரி) திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசப் பெருமாள்களும் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்கு காட்சியளிக்கின்றனர்.திருநாங்கூர் 11 கருட சேவை: இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் மிக முக்கியமான விழா. தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி திருமங்கையாழ்வாருக்குக் காட்சி அளிப்பார்கள்.-இடம்: மணிமாடக் கோயில் (திருமணிமாடம்), திருநாங்கூர்.

    கும்பகோணம் 12 கருட சேவை: சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை அன்று கும்பகோணத்தில் உள்ள 12 வைணவக் கோயில்களின் பெருமாள்களும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளுவார்கள்.-இடம்: பெரிய தெரு, கும்பகோணம்.

    திருவல்லிக்கேணி (சென்னை): சித்திரை பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார்.

    வைகாசி – காஞ்சிபுரம் கருட சேவை: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.-பெரியாழ்வார் திருநக்ஷத்ர ஆனி ஸ்வாதிக்கும் ஆடி கஜேந்திர மோக்ஷத்துக்கும் கருட சேவை இங்கு உண்டு

    ஆழ்வார்திருநகரி 9 கருட சேவை: வைகாசி விசாகத் திருவிழாவின் போது, நவதிருப்பதி எனப்படும் 9 திவ்ய தேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்குக் காட்சி கொடுப்பார்கள்.

    ஆடி– ஸ்ரீவில்லிபுத்தூர்: பெரியாழ்வார் அவதரித்த இடத்தில், திரு ஆடிப் பூரத்தை முன்னிட்டு கருட சேவை நடைபெறும்.-திரு ஆடிப் பூரம் திருவிழாவின் போது பெரியாழ்வாருடன் ஐந்து திவ்ய தேசப் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவை நடைபெறும்.

    பெரும்பாலான திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவத்தின் 3வது அல்லது 5வது நாளில் கருட சேவை நடத்தப்படுகிறது.

    ப்ரஹ்மோத்ஸவம்
    கோயிலின் ப்ரதானப் பெருமாளுக்கு நடப்பது ப்ரஹ்மோத்ஸவம். பொதுவாக இது கோயிலில் முதலில் நடந்த உத்ஸவம் பிரம்மனால் நடத்தப்பட்டதைக் குறிக்கும். கோயிலின் மூலவர் ப்ரதிஷ்டையையும் குறிக்கும். பொதுவாக இவ்வுத்ஸவத்தில் காலை மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகள் இருக்கும்.
    அங்குரார்ப்பணம் – உத்ஸவம் தொடங்குவதைக் குறிக்க , புனிதப்படுத்திய மண்ணில் விதைகளை ஊன்றி முளைக்கவிட்டு அங்குரார்ப்பணம் செய்தல். சேனை முதலியார் புறப்பாடு உத்ஸவம் தொடங்கும்முன் விஷ்வக்ஸேநர் பெருமாள் திருவீதி புறப்பாட்டுக்கு முன் சென்று தெருக்கள் சரியாக தூய்மையாக உள்ளனவா என்று பார்த்தல்.
    த்வஜாரோஹணம் – கொடி ஏற்றம்: – முதல் நாள் கருடக் கொடி கொடிக்க கம்பத்தில் ஏற்றி, உத்ஸவம் முடியும்வரை பறக்க விடப்படுகிறது.
    கருட வாஹனம் – மூன்றாம் அல்லது நான்காம் அல்லது ஐந்தாம் நாள் தேச ஆசாரப்படி கருடவாஹனம் புறப்பாடு நடக்கிறது. கருடன்மீது ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளுவதால் , வேத ஸ்வரூபியாகிய கருட வாஹனம் முக்கியமான திருவிழா.
    ரதோத்ஸவம் – திருத்தேர். இது ஏழு அல்லது எட்டு அல்லது ஒன்பதாம் நாள் தேச ஆசாரப்படி நடக்கிறது. எல்லா இலக்கியங்களிலும் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. எம்பெருமானின் திருத்தேர் புறப்பாடு கண்டவர்கள் பிறவிப்பாவங்களிலிருந்து விடுபடுவதாக நம்பப்படுகிறது. முழுச் சமுதாயமும் தேர்த் திருவிழாவில் ஈடுபடுகிறது.

    குதிரை வாஹனம் – வேடுபறி உத்ஸவம்
    வேடு – வேட்டை ஆடுவது, துணி எனப் பொருள்படும். பறி – கொள்ளை/பறித்தல். பொதுவாக இது திருமங்கை ஆழ்வார் தொடர்பான விழா. அவர், பணக்கார ப்ராமணத் திருமணமகனாக வந்த பெருமாளை அடியார்க்கு உணவளிக்கும் பொருட்டு வழிப்பறி செய்தது வேடுபறி என்று கொண்டாடப் படுகிறது.
    கலியன் (திருமங்கை ஆழ்வார்) ததீயாராதனம் (அடியார்க்கு உணவளிப்பதைச்) சிறப்பாகச் செய்து வந்தார். ஏற்கெனவே ஸ்ரீவைஷ்ணவ கைங்கர்யத்திலிருந்த அவர்க்குப் பொருள் இல்லாதபோது,வழிப்பறிகள் செய்தார். அவர்க்கு மெய்ஞ்ஞானமும் தரத் திருவுளம் பற்றிய எம்பெருமான் செல்வமிக்க அந்தணப் புதுமணமகனாக வந்து தன் பொருளைக் கொள்ளை அடிக்க விட்டார். இறுதியில், ஒரு சிறிய வளையம் எம்பெருமானின் காலில் இருந்து நீக்க முடியாமல் போக, கலியன் கீழே வளைந்து பற்களால் அதை வெட்டி அதை கட்டாயமாக நீக்கினார். கலியனின் துணிச்சலை வியந்த எம்பெருமான், அவரை “நம் கலியனோ” என்று அழைத்தார். (கலியன் பொதுவாக பெரிய போர்வீரன் என்று பொருள்படும், மரணத்தின் தலைவன், நேரத்தின் கட்டுப்படுத்துபவரை குறிக்கும் – அனைவரையும் பயத்தில் ஆழ்த்துபவர்- எம்பெருமான் கூட கலியனின் வீரத்தையும் தைரியத்தையும் கண்டு பயந்தான். நகை மூட்டையை எடுத்துத் தூக்க முடியாமல் தவித்த கலியன் “ப்ராமணரே மூட்டைக்கு மந்திரம் போட்டீரோ” என வினவ. எம்பெருமானும் ஆம் என்று கலியன் காதில் திருமந்த்ரம் ஓதி ஆட்கொண்டான். எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்ட கலியன், “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று திருமந்த்ர ப்ரபாவத்தைப் பாடியருளினார்.(இந்த சம்சாரத்தில் நான் நித்தியமாக துன்புற்று இருந்தேன் … திருமந்திரத்தை எம்பெருமானிடமிருந்து கேட்க்கும் வரை-பெரிய திருமொழி முதல் பாசுரம்). ப்ரமோத்ஸவத்தில் பகுதியாக இருக்கும் குதிரை வாஹனம் நாளில், இந்த முழு நிகழ்வும் பொதுவாக திவ்யதேசங்களில் நடத்தப்படுகிறது.

    மட்டையடி – ப்ரணய ரோஷம். காதலர் இடையிலான அன்புச் சண்டை. பெருமாள்/தாயார் இருவரையும் வைத்துப் பல கோயில்களில் நடக்கிறது.இது ஸ்ரீரங்கத்தில் மிக உத்ஸாகத்தோடு பங்குனி உத்தரத்தில் கொண்டாடப்படுகிறது. வேட்டையாடச் சென்ற எம்பெருமான் வேட்டைப்புண்களோடு திருமேனியை மூடி வர, பிராட்டி திவ்ய மங்கள விக்ரஹத்தில் குருதி அடையாளங்கண்டு ஸந்தேஹம் கொண்டு பெருமாள் பிற நாச்சியார்களோடு இருந்ததாக ஊடி திருக்கதவை அடைத்து அவரை உள்ளே விடாமல் தடுக்க சேதன ரக்ஷணர்த்தமாக நாம் சென்று வந்தோம் என்று அவர் சொல்வது ஏற்காததால் நம்மாழ்வார் கடகராகிப் பிராட்டியம் பெருமாளும் சமாதானமாகும் நிகழ்ச்சி பூப்பந்து எறிதலோடு அழகாக முடிகிறது.
    தீர்த்தவாரி – அவப்ருத ஸ்நாநம்: சக்கரத்தாழ்வாருக்குத் திருக்குளத்தில் அல்லது சில திவ்ய தேசங்களில் எம்பெருமானுக்கே, திருமஞ்சனம் ஆகிறது.
    துவஜ அவரோஹணம் – கொடி இறக்கம்:உத்ஸவம் முடிந்ததற்கு அறிகுறியாக ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி.
    த்வாதச ஆராதனம் – தொண்டை நாட்டு திவ்ய தேசங்களில் பல ஸந்நிதிகளில் இறுதி நாளன்று எம்பெருமானுக்குப் பன்னிரண்டு திருவாராதனங்கள் ஸமர்பிக்கப்பட்டு, திருவாய்மொழி ஆயிரமும் ஒரே தொடர்ச்சியாக ஸேவிக்கப்படுகிறது.திருவாய்மொழி தொடங்குமுன் திருமஞ்சனமும் உண்டு.
    சப்தாவரணம் – அன்றுமாலை எம்பெருமான் பிராட்டிமாரோடு சிறிய தேரில் அல்லது புண்யகோடி விமானத்தில் இராமானுச நூற்றந்தாதி கோஷ்டியோடு புறப்பாடாகி ஸந்நிதி திரும்பியதும் அர்ச்சக ஸ்வாமிகள் எல்லா தேவர்கள், ரிஷிகள், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வஸ்தி வாசகம் சொல்லி வழியனுப்புதல்.
    விடாயாற்றி பத்துநாள் உத்ஸவங்கண்ட களைப்புத் தீர எம்பெருமான் சில நாள்கள் திருமஞ்சனம்/திவ்யப்ரபந்த கோஷ்டி/இன்னிசைக் கச்சேரி என எழுந்தருளியிருப்பர்.

    தெப்போத்ஸவம் – கோயில் புஷ்கரிணி அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் பிராட்டிமாரொடு எம்பெருமானுக்குத் தெப்ப உத்ஸவம் நடக்கும். குளத்து நீராழி மண்டபத்தைச் சுற்றித் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வருவது அழகிய காட்சி.
    பல்லவ உத்ஸவம் – இளவேனில் காலத்தில் எம்பெருமான் புதிதாய்த் துளிர்க்கும் தளிர்கள் தழைகளை அணிந்து ஸ்தல புராணம் கேட்பது.
    வசந்தோத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று உள் புறப்பாடாகி சிறிது நேரம் எழுந்தருளியிருந்து திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல். அருள்வார்.பிறகு திருமஞ்சனமும் திருவராதனமும் உண்டு.
    கோடை உத்ஸவம் – எம்பெருமான் ஸந்நிதிக்கு அருகிலுள்ள மண்டபத்திற்கு சென்று திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளுதல்.
    ஸ்ரீராம நவமி – ஸ்ரீராமன் அவதார உத்ஸவம் ஒன்பதுநாள்கள் புறப்பாடு, நவமியோடு முடிவுறுவது
    பவித்ரோத்ஸவம் – கோயில் வழிபாடுகள் யாவும் பாஞ்சராத்ர/வைகாநஸ ஆகம விதிகளின்படி நடக்கின்றன. இவற்றில் ஏதாகிலும் குறை/பிழை ஏற்படக்கூடும் என்பதால் அதை நிவ்ருத்தி செய்ய மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாள்கள் குண்டங்கள் நிர்மாணித்து எம்பெருமானையும் தாயாரையும் தினமும் யாகசாலைக்கு எழுந்தருளச் செய்து, திவ்ய ப்ரபந்தம், வேத இதிஹாஸ புராண பாராயணங்களுடன் ஈடு/ஸ்ரீபாஷ்ய பாராயணங்களும் நடத்தப்படும். எம்பெருமானுக்குத் திருமஞ்சனமும் உண்டு.
    ஆனி (ஜ்யேஷ்ட மாச) கருடோத்ஸவம் – ஆனி ஸ்வாதியில் பெரியாழ்வார் திருநக்ஷத்ரத்தன்று அவர் பரத்வ நிர்ணயம் செய்தது ஒட்டி எம்பெருமான் கருட வாஹனனாகப் பெரியாழ்வார்க்கு ஸேவை சாதிப்பார்.

    ஜ்யேஷ்டாபிஷேகம்: எல்லா எம்பெருமான்களும் கவசத்தோடேயே ஸேவை சாதிப்பர். இந்த நாளன்று கவசங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் ஆகி அழகிய திருமேனியை யாவரும் ஸேவித்தபின் திருவாராதனமாகி ஸேவை ஆகும். இதன்பின், பவித்ரோத்ஸவம் கண்டருளும்வரை எம்பெருமானுக்குப் புறப்பாட்டுடன் உத்ஸவாதிகள் இராது.
    ஆடிப் பௌர்ணமி கருடோத்ஸவம் – கஜேந்திர மோக்ஷம் – பொதுவாக இது யஜுர் உபாகர்மத்தன்று வரும்.
    ஸ்ரீஜயந்தி – ஆகம விதிப்படியும், ஆவணி மாதம்/அஷ்டமி திதி அல்லது ரோஹிணி நக்ஷத்ரப்படியும் இது கொண்டாடப்படும். மாலை தொடங்கி நள்ளிரவு வரை இது நீடிக்கும்.
    .நவராத்ரி – 9 நாள்கள் தாயார் புறப்பாடு, ஊஞ்சல்.
    விஜயதசமி – பரிவேட்டை – எம்பெருமான் வேட்டையாட வெளியே எழுந்தருள்வது
    தீபாவளி – பெருமாள்/தாயார் புறப்பாடு இது பெரும்பாலும் மாமுனிகள் அவதார உத்ஸவதோடு வரும்
    கார்த்திகை தீபம் + அநத்யயந காலத் தொடக்கம் – திருவிளக்குகள் பல ஸந்நிதிகளில் ஏற்றப்படும். பெருமாள் புறப்பாட்டின்போது சொக்கப்பனை கொளுத்தப்படும்.
    அத்யயந உத்ஸவம் 20+ நாள்கள் நம்மாழ்வார்க்கும் திருவாய்மொழிக்கும் என்றே ஏற்பட்ட மஹோத்ஸவம்

     

    ஸ்ரீ பெரிய திருவடி மஹாத்ம்யம் –

    ஸ்ரீ கருடன் மேல் ஸ்ரீ சுவாமி தேசிகர் இரு ஸ்தோத்திரங்கள் இயற்றியுள்ளார். அவையாவன ஸ்ரீ கருட தாண்டகம், ஸ்ரீ கருட பஞசாசத்

    ———

    வைநதேயன் – விந்தையின் குமாரன்.
    பக்ஷிராஜன் – வேத ஸ்வரூபன்.
    கருத்மான் – அழகிய இறகுகளை உடையவன்.
    தார்விகாரி – நாகப்பகையோன்
    பத்ரிநாடா – பறவைகளின் யஜமானன்.
    ஆசிவிகாரி – நாகங்களின்(விஷ) பகைவன். காகேந்திரன் – பறவைகளின் அரசன்.
    அருண அனந்தரன்- அருணனின் இளையோன்.
    பக்ஷிஇந்திரன் – பறவைகளின் அரசன்.
    தெய்வப்புள்ளான கருட பகவான் ஒப்பற்ற மேன்மை யுடையவர்.
    மஹாவிஷ்ணுவுடைய இரண்டாவது வியுகமான ஸ்ரீ சங்கர்ஷண மூர்த்தியின் அம்சமாக விளங்குபவர்.
    மனித உடலிலுள்ள ஐந்து வாயுக்களான ப்ராணன், அபாநன், வ்யானன்,உதானன், ஸமானன் என்பவற்றுக்கு
    ஸத்யர், ஸுபர்ணர், கருடர், தார்க்ஷ்யர். விஹகேஸ்வரர் என்னும் ஐந்து மூர்த்திகளாய் விளங்குகின்றார்.
    இவர் ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் ஆறு குணங்கள் நிரம்பப்பெற்றவர்.
    ஏழு சுரங்களையுடைய சாம வேதத்தின் வடிவமானவர்.
    அணிமா, மஹிமா, லகிமா,கரிமா,வசித்வம்,ஐச்வர்யம், ப்ராப்தி, ப்ராகாம்யம் என்னும் அட்டமஹா சித்திகள் பெற்றவர்.
     
    கருடனுக்கு ருத்ரை, ஸுகீர்த்தி என்று இரு மனைவியர்கள்.
    இவரது நட்சத்திரம் சுவாதி.
    சில தலங்களில் கருட சேவையின் போது ஒரு வெள்ளைத் துணியை கருட வாகனத்தின் அலகால் கிழித்து நான்கு
    திசைகளிலும் திசைக்கு ஒன்றாக தூக்கி எறிவார்கள்.
    இது மனிதனின் மும்மலங்கள் அவனிடமிருந்து கிழிக்கப்பட்டு திசைக்கு ஒன்றாக வீசப்பட்டு
    அவன் தூயமையாவதைக் குறிக்கின்றது.
    எனவே கருட சேவையை காணும் போது நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கும்(
    நீக்க நாம் முயற்சி செய்தால்) இவ்வாறு மலங்கள் நீங்கும் போது மனிதன் நிர்மலன் ஆகின்றான்.
    இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும் போது
    சீவன் சிவன் ஆகிறான். அவன் தன்னை உணர்கிறான்.
    இறை தரிசனம் கிட்டும்.முக்திக்கு வழி பிறக்கும்
    எனவே தான் பெருமாளின் கருட சேவையைக் காண்பதால் மோக்ஷம் கிட்டும் என்பது ஐதீகம்.
     
    ————-
    கருடன் வேதமயமானவன், அதாவது “வேத சொரூபன்”.
     
    ஸூபர்ணோஸி கருத்மாந் த்ரிவ் ருத்தே சிரோ
    காயத்ரம் சஷீஸ்ஸ்தோம ஆத்மா ஸாம தே
    தநுர் ப்ரஹத்ரதந்தரே யஜ்ஞாயஜ்ஞியம்
    புச்சம் – என்பது யஜுர் வேத வ்யாக்யானம்.
     
    விநதையின் புதல்வனான கருடனின் ஒவ்வொரு அவயமமும் வேதத்தின் பகுதி.
    “ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
    “காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
    “த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
    யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
    சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
    “திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
    “வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
    “ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
    “யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
    இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
    கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
     
    பெருமாள் அவ்தாரம் செய்த உக்ர ஸ்தம்பத்திலிருந்து கருடாத்ரியைப் பார்த்தால் அப்படியே
    கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து மத்தியில் உயர்ந்த அலகுடனும் மூன்று பகுதிகளாகவும்
    அஞ்சலி ஹஸ்தத்துடன் ( கை கூப்பிய நிலையில்) நிற்பதை இன்றும் காணலாம்.
    அஹோபிலத்தில் இன்று கருடாத்ரிக்கும் வேதாத்ரிக்கும் இடையே பிறவிப் பிணியை நீக்கும் பவ நாசினி ஆறு ஓடுகின்றது.
    கருடாத்ரியில் தான் நவநரசிம்மரில் இன்னொரு நரசிம்மரான பாவன நரசிம்மரும்
    தாயார் செஞ்சு லக்ஷ்மித் தாயாருடன் லக்ஷ்மி நரசிம்மராக சேவை சாதிக்கின்றார்.
     
    அஹோபிலே கருடசைல மத்யே க்ருபா வசாத் கல்பித ஸந்நிதாநம்
    லக்ஷ்ம்யா ஸமாலிங்கித வாம பாகம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே
     

    ஆடி கருடன் – கஜேந்திர மோக்ஷம்

    ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி யன்று கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது

    கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
    பூணூல் : வாசுகி
    வலது கை கங்கணம்: குளிகன்
    இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
    அரையில் அணி: தட்சகன்
    மாலை: கார்கோடகன்.
    வலது காது குண்டலம்: பத்மன்
    இடது காது குண்டலம் : மஹா பத்மன்
    திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

    விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
    அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
    ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

    விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
    மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
    இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
    கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

    எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
    ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
    ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

    நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
    அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். “
    ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
    ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

    பரிஷ்கார வர்ணக–

    வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
    ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
    பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
    சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

    ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
    கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
    சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
    இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

    ———-

    திருமலையின் ஏழு மலைகள் சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், ஸ்ரீ வேங்கடாசலம், ரிஷபாசலம், அனந்தாசலம் ஆகியவை ஆகும்.

    ஆதி சேஷன் ரூபத்தில் இருப்பதால் – சேஷாசலம்.
    வேதங்களால் நிறைந்திருப்பதால் – வேதாசலம்.
    கருடனால் வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டதால் – கருடாசலம்.
    விருஷாபாசுரனை சம்ஹரித்து அவனுக்கு மோக்ஷம் கொடுத்ததால் – விருஷபாத்ரி.
    திரேதா யுகத்தில் அஞ்சனா தேவி தவம் இருந்து அனுமனைப் பெற்றதால் -அஞ்சனாத்ரி.
    துவாபர யுகத்தில் ஆதிசேஷனையும் வாயு பகவானையும் தூண்டி அனந்த பர்வதத்திஅயும் கொண்டு வந்ததினால் – அனந்தாத்ரி.
    சர்வ பாவங்களும் தஹிக்கப்பட்ட புண்ணிய ஷேத்திரமானதால் – வேங்கடாத்ரி
     
    இத்தலத்தில் கருடனுக்கு இன்னுமொரு சிறப்புமுண்டு.
    கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! .
     
    திருமலையில் பிரம்மோற்சவத்தின் சில சிறப்புகள்
    1) முதல் நாள் கொடியேற்றம் மாலையில் நடைபெறுவது,
    2)இரண்டு தடவை சேஷ வாகன சேவை,
    3) தங்கத்தேர்.
    4) கருட சேவையன்று மூலவராக உற்சவர் சேவைசாதிப்பது.
     
    பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் மாலை கருட சேவையின் ஒரு தனி சிறப்பு கருட சேவையன்று மூலவர் வேங்கடேசருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டியும், லக்ஷ்மி ஹாரமும் கருட சேவையன்று மட்டும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருமாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கின்றார் பெருமாள் . கருடசேவைக்காகவே ஒரு மாலையை அணிந்து அனுப்புகின்றாள், கூடவே தான் தாங்கியிருந்த கிளியையும் அனுப்புகிறாள் கோதை நாச்சியார்.
     
    தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.
    இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்
    சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறும் நாள் என்பாரும் உண்டு.  இரத சப்தமி என்னும் இந்நாளில் சூரியனுக்கு விசேஷ ஓளி பிறப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
    திருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி!’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். திருமலையில் அதிகாலையில் மலையப்பசுவாமி சூரியப் பிரபையில் சேவை சாதிக்கின்றார், பின் சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம், நிறைவாக சூரிய அஸ்தமன காலத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சேவை சாதித்து வைர வைடுரிய நகைகள் மின்ன சர்வ அலங்காரத்தில் சேவை சாதிக்கும் நாள்.
     
    பிரம்மோற்சவம் தவிர பெருமாள் கருட சேவை தந்தருளும் நாள் தை மாத இரத சப்தமி நாள். அன்று அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கும் பெருமாள் மாலை சந்திரப்பிரபை வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். மேலும் பெரிய திருவடியாம் கருடன், சிறிய திருவடியாம் அனுமனிலும் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
    ————-

    இத்திவ்ய தேசத்தில் நெடியானாய் நின்ற கோலத்தில், சாரதிக்கு உரிய முறுக்கு மீசையுடன் வலக்கையில் சங்கமேந்தி சக்கரம் இல்லாமல் வேங்கட கிருஷ்ணன் என்று மூலவராயும், திருமுக மண்டலத்தில் பீஷ்மரின் அம்பு காயங்களுடன் பார்த்தசாரதி என்று உற்சவராயும், வால்மிகி முனிவர் வணங்கும் இராமனாய், மைதிலி மற்றும் தம்பி இலக்குவனோடும் சக்கரவர்த்தி திருமகனும், பள்ளி கொண்ட ஸ்ரீமந்நாதராய் அரங்கனாகவும், பிரகலாதனுக்கு அருள் புரிந்து யோக நிலையில் அமர்ந்த தெள்ளிய சிங்கராகவும், நித்ய கருட சேவை வழங்கும் கஜேந்திர வரதராகவும் பெருமாள் ஐந்து கோலங்களில் சேவை சாதிக்கின்றார்.

    கஜேந்திர வரதர் சன்னதி உள் பிரகாரத்தில் தென் கிழக்கு மூலையில் தனி சன்னதியாக அமைந்துள்ளது. இவருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் வைகாசி திருவோணத்தை ஒட்டி பத்து நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. வைகானச ஆகமப்படி உற்சவங்கள் நடைபெறுவதால் மூன்றாம் நாள் அதிகாலை கோபுர வாசல் தரிசனத்துடன் கருட சேவை எல்லா பெருமாள்களின் பிரம்மோற்சவத்தின் போதும் நடைபெறுகின்றது. கஜேந்திர வரதர் ஹஸ்த நட்சத்திரத்தன்று் மாலை புறப்பாடு கண்டருளுகிறார். கஜேந்திர மோக்ஷ உற்சவம் ஆடி கருடன் என்று ஆடிப் பௌர்ணமியன்று நடைபெறுகின்றது. பங்குனி உற்சவ திருக்கல்யாண உற்சவத்தின் போது மாலை ஸ்ரீரங்கநாத சுவாமி கண்ணாடி கருட சேவை தந்தருளுகின்றார்

    ———-

    சோள சிம்ம புரம் என்னும் திருக்கடிகையில் காஞ்சி வரதர் தனது அன்பரான தொட்டாச்சாரியாருக்கு வைகாசி கருட சேவை காட்சியை தக்கான் குளக்கரையை அளித்ததை அனைவரும் அறிவோம்

    இவ்வாறு கச்சி வரதன் அளித்த அற்புத கருட சேவையை எப்போதும் அனைவரும் சேவிக்கும் பொருட்டு தக்கான் குளக்கரையில் வரதர் ஆலயம் உள்ளது. அங்கும் நாம் தினமும் மோட்சமளிக்கும் கருடசேவையை தரிசிக்கலாம்.

    ——–

    புராணங்களில் மேல் கோட்டை
    1. பத்மகூடா,
    2. புஷ்கரா,
    3. புத்மசேகரா ,
    4.அனந்தமாயா ,
    5. யாதவகிரி,
    6. நாராயணாத்ரி,
    7. வேதாத்ரி ,
    8. வித்யா (ஞான) மண்டல்,
    9. தக்ஷிணபத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

    மூலவர் :- திருநாராயணன் / திருநாரணன் சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி.

    உத்ஸவர் :- ஸம்பத்குமாரர், இதரபெயர்கள் – ராம ப்ரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.

    தாயார் :- யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.

    தீர்த்தம் :- கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரிணி, தனுஷ் கோடி தீர்த்தம், முதலிய 8 தீர்த்தங்கள்.

    விமானம் :- ஆனந்தமய விமானம்

    ப்ரத்யக்ஷம் :- கருட பகவான்

    இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள் :

    வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்ஜனம் கண்டருளிகிறார்.

    வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை ஸந்நிதியில் ஸேவை ஸாதிக்கிறார்.

    ———

    தேவேந்திரன் ஒரு சமயம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் அளித்து இவற்றை எந்தெந்த பெருமாளுக்கு உகந்ததோ அங்கு சம்ர்பித்து விடு என்று பணித்தான். கருடனும் வைர முடியை கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் உள்ள திருநாராயண புரத்தில் செல்லபிள்ளை சம்பத்குமாரரருக்கும் விமானத்தை தேரழுந்தூரில் ஆமருவியப்பனுக்கும் சமர்பித்தான். எனவே இத்தலத்தின் விமானம் கருட விமானம் ஆகும். விமானம் சாம்ர்பித்த கருடனுக்கு “ என்ன வரம் வேண்டும்? என்று வினவ , கருடனும் அர்ச்சை நிலையில் தேவரீர் இருக்க அடியேன் எதிரே நின்று எல்லா இடங்களிலும் சேவிக்கிறேன். ஆனால் அருகிலே நின்று அடியேன் தேவரீரின் பொன்னடிகளைச் சேவிக்க வேண்டும் என்று வரம் வேண்ட பெருமாளும் கருடனை அருகில் இருத்தி கொண்டதாக ஐதீகம்.

    ————–

    மருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்
    உணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்
    படுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்
    திருமண காலத்தில் பிரஜாபதி என்றும்
    யுத்த களத்தில் சக்ரதாரி என்றும்
    இறுதி காலத்தில் நாராயணா என்றும்
    நண்பர்களிடம் ஸ்ரீதரா என்றும்
    கெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்
    சங்கட காலங்களில் மதுசூதனா என்றும்
    தனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்
    நெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்
    தண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்
    மலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்
    வீதியில் நடக்கும் போது வாமனா என்றும்
    எங்கும் எப்போதும் மாதவா என்றும்
     

    ஒரே மாலையில் 18 ஸ்ரீ கருட சேவைகளின் அரிய காட்சி

    சமத கும்பம் 2025 என்று அழைக்கப்படும் 3வது வருடாந்திர பிரம்மோத்சவம், 
    108 திவ்ய தேசங்களால் சூழப்பட்ட பிரமாண்டமான சமத்துவ சிலையில் ( 
    சுவாமி ராமானுஜாச்சாரியாரின் 216 அடி உயர சிலை )  நடைபெற்று வருகிறது . இந்த நிகழ்வு பக்தர்களுக்கு  ஒரே மாலையில் 18 கருட சேவைகளைக் காணும் அரிய வாய்ப்பை வழங்குகிறது -இது ஆன்மீக மற்றும் மன எழுச்சியின் சூழலை உருவாக்குகிறது.காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
    காலை பூஜை மற்றும் ஆராதனைக்காக பக்தர்கள் யாகசாலையில் குவிந்தனர். புனித தீர்த்த கோஷ்டி நடத்தப்பட்டு, 18 திவ்ய தேச பெருமாள்கள் திருமஞ்சனம், சம்பிரதாய ஸ்நானம் ஆகியவற்றுக்கு தயார்படுத்தப்பட்டனர்-18 பெருமாள்களுடன் திவ்ய சாகேதம் ராமச்சந்திர பகவானும் திருமஞ்சனம் பெற்றார்.இந்த சடங்கில் மூலிகை கலந்த நீர், பால், தயிர், தேன் மற்றும் பழச்சாறுகள் பயன்படுத்தப்பட்டன.தொடர்ந்து சஹஸ்ரதாரா அபிஷேகம் , ஷங்கதாரா, சக்ரதார ஸ்நானம் உள்ளிட்டவை நடந்தன. பகவத் ராமானுஜரும் புனித சேவையைப் பெற்றார்.அபிஷேக தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றது.
    கருடன் தான் விஷ்ணுவின் வாகனன் என்று எல்லோர்க்கும் தெரியும்-விஷ்ணு கோவில்களில் துவஜஸ்தம்பம் உண்டு. அதில் கருடனின் கொடியே கட்டி இருக்கும்.-10 நாள் உற்சவத்தின் போது கொடியை ஏற்றுவது துவஜாரோஹணம்-என்பர்.-கடைசி நாள் துவஜாஅவரோகணம் நடக்கும். 3 ஆம் நாள்கருடோத்சவம் நடக்கும். இது எல்லா கோவில்களுக்கும் பொது-

    -கருடனை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல சாலச்சிறந்தது.

    -குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து&நஃபிஸ்தவளாய ச!விஷ்ணு வாஹந ! நமஸ்துப்யம் பஷிராஜாய தேநம:!!

    ———————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

    அரிய 100 தகவல்கள்–

    1-ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

    2. ஸ்ரீகருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை (தமனகம்), சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

    3-‘யுவதிஜனப்பிரியா நம’ என ஸ்ரீகருடனை துதித்து பெண்களும் மாலையில் குங்கும அர்ச்சனை செய்யலாம்.

    4-கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

    5. கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதைப் பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள்.

    6. ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் காணப்படுகிறது.

    7-ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

    8. திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி – பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சம்பத்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவற்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

    9. கருடனுக்கு சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

    10. கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

    11. கேரள மன்னரான சுவாதி திருநாள் இசை வித்தகராக மட்டுமின்றி பல கலைகளிலும் வல்லவராக இருந்ததற்குக் கருடோபாசனையே காரணம்.

    12. கொலம்பஸ் கடலில் திக்குதிசை தெரியாமல் தவித்த போது கருடன் வானத்தில் வட்டமிட்டு திசை காட்டியதாக சரித்திரம் சொல்கிறது.

    13. கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

    14-வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

    15. சிவகங்கை மாவட்டத்தில் -காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.-இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

    16. மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.

    17. குப்தர் காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

    18-சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.

    19-உலக வல்லரசாக அமெரிக்கா திகழக் காரணமாக இருப்பது அந்த நாட்டின் சின்னமான கருடனால்தான்.

    20. பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர் கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

    21. நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.

    22. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன் தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது.-இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    23. வானத்தில் கருடனைப் பார்க்கும் போது கைகூப்பி வணங்கக் கூடாது. கன்னத்தில் போட்டுக் கொள்ளவும் கூடாது. மங்களானி பவந்து என மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.

    24. பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.

    25. ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு. இப்படி இங்கு கருடனுக்கு தனிமரியாதை கொடுப்பதன் காரணம் கருடன் பெரியாழ்வாராக அவதரித்ததால் மாமனார் –

    26. எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ் வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

    27. கும்பகோணத்திலிருந்து அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரங்களும் கொண்டதாகக் காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார்.

    28. ஆழ்வார் திருநகரியில் நவ கருட சேவை மிக சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமான்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் கொண்டு இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருடாரூடர்களாக ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார்கள்.இங்கு கருடன் சம்ஸரூபியாக இருக்கிறார்.

    29. பாண்டி நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோவிலில் கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அம்ருத கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

    30. நம்பாடுவான் என்ற ஹரிஜன வைணவ பக்தனுக்காக கருடாழ்வாரும், கொடி மரமும் சற்று விலகி உள்ள தலம் திருக்குறுங்கடி

    31-கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும்.

    32. நமது காரியம் வெற்றி பெறும் என்று இருந்தால் தான் மகா விஷ்ணுவாகிய ஸ்ரீ நாராயணன் கருடன் தரிசனம் கிடைக்கச் செய்வார் இல்லையெனில் கருட தரிசனம் கிட்டாது.

    33-ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்!

    34-கெட்ட சகுணங்கள் துர்சேட்டைகள், துர் குறிகள் போன்ற அசுபங்கள் அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும்!

    35-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

    36. அழகிய கருட பகவானின் தரிசனத்தைக் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

    37-கருடனில் இருந்து கிடைக்கப்பெறும் தெய்வீக ஒளிக்கதிர் வீச்சானது மனிதர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒருவித நேர்மறை சக்திகளை உண்டாக்குகிறது என்று அறிவியல் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

    38-எதிரிகளை முறியடிக்கின்ற நேர்மறையான அதிர்வலைகளை கருட தரிசனம் தருகிறது.

    39-கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது.

    40-நல்ல தெய்வீக சக்திகள் சூழ்ந்த சூழ்நிலைகளில் கருட வாசம் நிச்சயம் இருக்கும்.

    41-எதுவும் சரியாக இல்லாத போது என்ன தான் நாம் கருட தரிசனம் காண முற்பட்டாலும், கருட தரிசனம் கிட்டாது என்பது பலரது அனுபவமாகும்.

    42-நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகதத்திற்கு கருடோத்காரம் அல்லது காருடமணி என்று பெயர்.-கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே மரகதமாக மாறின. இதை அணிவதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் துன்பம் ஏற்படாது.

    43. அமிர்தக் குடத்தை எடுத்துவர தேவலோகம் சென்ற கருடன், அங்குள்ள தர்பைப் புல்லையும் பூலோகத்திற்குக் கொண்டு வந்தார். அமிர்தத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்ததால் அதனை அமிர்தவீர்யம் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

    44. ஒரு காலத்தில் சுவேதத் தீவில் இருந்த பாற்கடலின் பால் கட்டிகளை தன்னுடைய சிறகு முழுவதும் அப்பிக்கொண்டு வந்து எங்கும் உதறினார் கருட பகவான். அவற்றையே ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமண் என்று அணிந்து கொள்கின்றனர்.

    45. கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் ஆகியவற்றை வாழைச்சாற்றில் கலந்து அவரது திருமேனியில் சாற்றி வேண்டிக் கொண்டால் அனைத்து இஷ்ட சித்திகளையும் எளிதில் அடையலாம்.

    46. ஸ்ரீமந் நாராயணனின் அவசர காரியத்திற்காக, கருட பகவான் அவரைத் தாங்கிக்கொண்டு விரைந்து சென்று கொண்டிருப்பார். எனவே அவர் பறக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டால், அவரது வேகம் குறைந்து எம்பெருமானின் செயலுக்கு ஊறு நேரிடலாம் என்பதால் அப்படி சொல்லி உள்ளனர்.

    47. கருடன் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி உடையவர். எனவே உயர பறக்கும் போது இறக்கைகளை அசைக்காமல் இருந்தால் அது கருடன் என்று முடிவு செய்யலாம்.

    48. ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.

    49. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். காரணம், வேத ஒலிகளுக்கு தாவரங்களை நன்கு வளர வைக்கும் சக்தி உண்டு.

    50-சப்த மாதர்களில் ஸ்ரீவைஷ்ணவி கருட வாகனத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் ஸ்ரீவிஷ்ணுவின் பிரிக்க முடியாத சக்தி என்பதால் அவரையும் ஸ்ரீவிஷ்ணுவாகவே கொள்ள வேண்டும்.

    51-ஸ்ரீகருட பகவானை உபாசனை செய்வதே அவர் சுட்டிக்காட்டும் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளைப்ம் பற்றிக் கொள்வதற்காகத்தான்.

    52-வெளியூர் பயணங்கள், சுபச்செயல்கள் துவங்குகையில் கருட ஸ்லோகம் படித்தால் இடையூறு நேராது.

    53. கார்க்கோடகன் பெயரைச் சொன்னால் ஏழரைச் சனியினால் ஏற்படும் கஷ்டம் விலகும் என்கிறது நளசரித்திரம். அந்தக் கார்க்கோடகனை ஹாரமாக அணிந்திருப்பவர் கருடன்.

    54. ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.

    55-கருடன் தகர்த்த மேருமலையின் சிகரத்துண்டே சமுத்திரத்தில் விழுந்த இலங்கைத்தீவு என்று பேசப்படுகிறது.

    56-திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலுள்ள ஸ்ரீகருட பகவான் ஆறேழு அடி உயரத்தில் நின்ற நிலையில் நாகங்களைப் பூண்டு சேவை தருகிறார்.

    57-கருடனது பீசாட்சாரம் கம். சக்தி பீஜம் டம். கருடனுடைய பெயரிலேயே இரண்டும் இருக்கிறது. பெருமாள் சோதனை செய்து வரம் தருவார். கருடனோடு சேர்த்துத், திருமாலை பிரார்த்தித்தால் உடனே அமோகமான பலன்கள் கிடைக்கும் என்கிறது பரிவதிலீசனைப் பதிகம்

    கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
    கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே
     –1-6-10–

    மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
    ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே 
    –1-6-11-

    58-கோவில் கும்பாபிஷேக நேரத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டால் நாடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.

    59=ராம ராவண யுத்தத்தில் பெருமாளையும், இளைய பெருமாளையும் நாகபாசத்தில் இருந்து விடுவித்தவர் ஸ்ரீ கருடன் தான்.

    60-பாற்கடலைக் கடையும்போது திருமாலின் கட்டளைப்படி மந்திர மலையைத் தன் முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன் தான்.

    61-கண்ணபிரான் துவார கைக்கு வெளியே இருந்த போதெல்லாம் துவாரகையைக் காத்தவர் கருடன்.

    62-கருடனுக்கு பிரகஸ்பதி குலதேவதை, கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வர குருபார்வை வேண்டும். ஆகையால் கருட பகவான் அருள் கிட்டினால் பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமையும்.

    63. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.

    64. பொதுவாக வானத்தில் பறக்கும் சாதாரண கருடனும், தெய்வீகத் தன்மை வாய்ந்ததுதான். காரணம் அதுவும் கருடனின் பரம்பரை வாரிசு.

    65. கருடனின் நிறம், பழுப்பு, கழுத்து வெள்ளை, இந்த வகை கருடன் மணிக்கு 105 கி.மீ. வரை பறப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

    66. வைணவர்கள் பழுப்புநிற கருடப்பறவையைத்தான் கருட தரிசனத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். வீர வைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள்.

    67. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். அதிகாலையில் நமக்குக் கருட ‘ தரிசனம் கிடைத்தால் நினைத்த காரியம் கை கூடும்.

    68. அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

    69. கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.

    70-ரத்தின பரீட்சை என்னும் நூல் மரகதப் பச்சை கல்லுக்கு ‘காருடமணி’ என்றும், ‘கருடோத்காரம்’ என்றும் பெயர்கள் உண்டு.

    71-கருடனுக்கு கோபம் வந்தால் சிறகுகள் உதறிப் பறக்கும்.

    72-வீட்டில் கருடன் படம், பொம்மைகள் வைப்பதால் வாஸ்து குறைகள் நீங்கும்.

    73. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். “காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ” என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

    74-கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

    75. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

    76-தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

    77-ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்ய ஸூரிகள் எனப்படுவர்.-அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

    78. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

    79. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

    80-கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

    81. கழுத்து வெள்ளை பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

    82-பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

    83. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

    84. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

    85-அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

    86. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

    87. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

    88. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

    89. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது.

    90. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா! ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

    91. பெருமாள் கோவில்களில் கருடனிடம் அனுமதி பெற்ற பின்பே பெருமாளை தரிசிக்க வேண்டும்.

    92. கருடன் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்

    93. கருடனுக்கு வைனதேயன் என்று ஒரு பெயரும் உள்ளது.

    94. திருவரங்கத்தில் கருடனுக்கு பெரிய சன்னிதி உள்ளது.

    95. கருடனை பக்ஷிகளுக்கு ஒரு ராஜா என்று வேதம் கூறுகிறது.-குங்குமோங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹன நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நமஹ)

    96. பெருமாள் திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்பு நமது தலையில் சுவாமியின் திருவடி பதித்த சடாரி வைப்பார்கள். சடாரி வைத்த பின்பு, கருடனுக்கு பின்பு உள்ள கொடிமரத்தின் கீழே விழுந்து சுவாமிக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது.

    97. கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கன் என்னும் பாம்பின் மீது கிருஷ்ணன் ஆடிய நர்த்தனம்,-காளிங்க நர்த்தனம் எனப்படும் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய போது அவரது பாதங்கள் காளிங்கனின் தலையில் பதிந்திருந்ததால் கருடனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

    98. கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன் என்னும் விக்ரஹம் சிறப்பு வாய்ந்தது.

    99. கருட புராணம் என்னும் புஸ்தகத்தில் மனிதர்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் இறந்த பின் அனுபவிக்கும் கஷ்டங்களை பற்றி விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    100-பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார்.

    பக்ஷி ராஜாயதே நமஹ-

    ————————————————————————————–

    ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ வைஷ்ணவ திருவாராதனம் –ஸ்ரீ ப்ரமாணத் திரட்டு-

    April 30, 2026

    ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் ப்ரமாணத் திரட்டு என்பது திருவாராதனத்தின் போது ஓதப்படும் முக்கியமான ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களின் தொகுப்பாகும். இது ஆறு நிலைகளாகப் (ஆஸனங்கள்) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலைக்கும் உரிய வேத மந்திரங்கள் மற்றும் திவ்யப்

    திருவாராதனத்தின் முக்கியப் பகுதிகள்:

    • மந்த்ராஸநம்: முந்தைய நாள் சாற்றப்பட்ட மலர்களைக் களைந்துவிட்டு (நிர்மால்யம்), பகவானை எழுந்தருளப் பண்ணுதல். இதற்கு “உடுத்துக் களைந்த நின் பீதக வாடை” போன்ற பாசுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • ஸ்நாநாஸநம்: பகவானுக்குத் திருமஞ்சனம் (நீராடல்) செய்வித்தல். இதன்போது புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம் போன்ற வேத மந்திரங்களும், பெரியாழ்வார் திருமொழியின் வெண்ணெயளைந்த குணுங்கு பதிகமும் அநுஸந்திக்கப்படுகின்றன.
    • அலங்காராஸநம்: பகவானுக்கு ஆடை, ஆபரணங்கள் மற்றும் சந்தனம், மலர்களைச் சமர்ப்பித்தல். “கந்தத்வாராம் துராதர்ஷாம்” போன்ற ஸ்ரீ ஸூக்த ச்லோகங்கள் இங்கு ஓதப்படும்.
    • போஜ்யாஸநம் (தளிகை): எம்பெருமானுக்கு அமுது (உணவு) சமர்ப்பித்தல். “கூடாரை வெல்லும் சீர்”, “நாறு நறும்பொழில்” போன்ற பாசுரங்களுடன் உணவு நிவேதனம் செய்யப்படுகிறது.
    • புனர்-மந்த்ராஸநம்: தளிகைக்குப் பின் தீர்த்தம், தாம்பூலம் சமர்ப்பித்து மீண்டும் மந்த்ராஸனம் செய்தல்.
    • பர்யங்காஸநம்: பகவானை ஓய்வெடுக்கச் செய்யும் முறை

    எண் – உடம்பின் பாகம் – ஸ்ரீ விஷ்ணு மந்திரம் (திருமண்) – ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம் (ஸ்ரீசூர்ணம்)

    1. நெற்றி – ஓம் கேசவாய நம: – ஓம் ச்ரியை நம:
    2. வயிறு (நடு) – ஓம் நாராயணாய நம: – ஓம் அம்ருதோத்பவாயை நம:
    3. நெஞ்சு (நடு) – ஓம் மாதவாய நம: – ஓம் கமலாயை நம:
    4. கழுத்து (நடு) – ஓம் கோவிந்தாய நம: – ஓம் சந்த்ரஸோபிந்யை நம:
    5. வயிறு (வலது) – ஓம் விஷ்ணவே நம: – ஓம் விஷ்ணுபத்ந்யை நம:
    6. தோள் (வலது) – ஓம் மதுஸூதநாய நம: – ஓம் வைஷ்ணவ்யை நம:
    7. கழுத்து வலது) – ஓம் த்ரிவிக்ரமாய நம: – ஓம் வராரோஹாயை நம:
    8. வயிறு (இடது) – ஓம் வாமநாய நம: – ஓம் ஹரிவல்லபாயை நம:
    9. தோள் (இடது) – ஓம் ஸ்ரீதராய நம: – ஓம் ஸார்ங்கிண்யை நம:
    10. கழுத்து (இடது) – ஓம் ஹ்ருஷீகேஸாய நம: – ஓம் தேவ தேவ்யை நம:
    11. கீழ் முதுகு (பின்புறம்) – ஓம் பத்மநாபாய நம: – ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
    12. கழுத்து (பின்புறம்) – ஓம் தாமோதராய நம: – ஓம் லோகஸுந்தர்யை நம:

    வாக்ய குருபரம்பரை

    அஸ்மத் குருப்யோ நம:
    அஸ்மத் பரம குருப்யோ நம:
    அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
    ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
    ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
    ஸ்ரீமத் யாமுநமுநயே நம:
    ஸ்ரீ ராம மிஸ்ராய நம:
    ஸ்ரீ புண்டரிகாக்ஷாய நம:
    ஸ்ரீமந் நாதமுநயே நம:
    ஸ்ரீமதே சடகோபாய நம:
    ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
    ச்ரியை நம:
    ஸ்ரீதராய நம:

    அஸ்மத் தேசிகம் அஸ்மதீய பரமாசார்யான் அசேஷாந் குரூந்
    ஸ்ரீமல்லக்ஷ்மண யோகி புங்கவ மஹாபூர்ணௌ முநிம்யாமுநம்
    ராமம் பத்மவிலோசநம் முநிவரம் நாதம் சடத்வேஷிணம்
    ஸேனேசம் ச்ரியம் இந்திரா ஸஹசரம் நாராயணம் ஸம்ச்ரயே

    குரு பரம்பரையை அநுஸந்தித்தபின், ஸ்ரீஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயமாச்ரயே
    சிந்தாமணிமிவோத்வாந்தம் உத்ஸங்கேநந்தபோகிந
    :–பெரியபெருமாள் (ஆவணி – ரோஹிணி)

    நம: ஸ்ரீரங்கநாயக்யை யத்ப்ரூவிப்ரமபேதத:
    ஈசேசிதவ்யவைஷம்ய நிம்நோந்நதமிதம் ஜகத் ||
    -பெரியபிராட்டியார் (பங்குனி – உத்திரம்)

    ஸ்ரீரங்கசந்த்ரமஸமிந்திரயா விஹர்த்தும் விந்யஸ்ய விச்வசிதசிந்நயநாதிகாரம் |
    யோ நிர்வஹத்ய நிசமங்குலிமுத்ரயைவ ஸேநாந்யமந்யவிமுகாஸ் தமசிச்ரியாம ||
    -ஸேனை முதலியார் (ஐப்பசி – பூராடம்)

    மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
    ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
    -நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்)

    நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
    நாதாய முநயேகாதபகவத்பக்திஸிந்தவே ||
    -ஸ்ரீமந்நாதமுநிகள் (ஆனி – அனுஷம்)

    நம: பங்கஜநேத்ராய நாதஸ்ரீபாதபங்கஜே |
    ந்யஸ்த ஸர்வபராயாஸ்மத்குலநாதாய தீமதே ||
    -உய்யக்கொண்டார் (சித்திரை – கார்த்திகை)

    அயத்நதோ யாமுநமாத்மதாஸம் அலர்க்கபத்ரார்பண நிஷ்க்ரயேண |
    ய:க்ரீதவாநாஸ்தித யௌவராஜ்யம் நமாமி தம் ராமமமேய ஸத்த்வம் ||
    -மணக்கால்நம்பி (மாசி – மகம்)

    யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷ:
    வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||
    -ஆளவந்தார் (ஆடி – உத்திராடம்)

    கமலாபதிகல்யாணகுணாம்ருதநிஷேவயா |
    பூர்ணகாமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||
    -பெரியநம்பி (மார்கழி – கேட்டை)

    யோ நித்யமச்யுத பதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
    அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||
    எம்பெருமானார் (சித்திரை – திருவாதிரை)

    ராமாநுஜபதச்சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
    ததாயத்தஸ்வரூபா ஸா ஜீயாந் மத்விச்ரமஸ்தலீ ||
    -எம்பார் (தை – புனர்பூசம்)

    ஸ்ரீபராசரபட்டார்ய: ஸ்ரீரங்கேசபுரோஹித: |
    ஸ்ரீவத்ஸாங்கஸூத: ஸ்ரீமாந் ச்ரேயஸே மேஸ்து பூயஸே |
    |-பட்டர் (வைகாசி – அனுஷம்)

    நமோ வேதாந்தவேத்யாய ஜகந்மங்களஹேதவே |
    யஸ்ய வாகம்ருத ஸாரபூரிதம் புவநத்ரயம் ||
    -நஞ்சீயர் (பங்குனி – உத்திரம்)

    வேதாந்த வேத்யாம்ருதவாரிராசே: வேதார்த்தஸாராம்ருத பூரமக்ர்யம் |
    ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் ||
    நம்பிள்ளை (கார்த்திகை – கார்த்திகை)

    ஸ்ரீக்ருஷ்ணபாதபாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
    யத்ப்ரஸாத ப்ரபாவேந ஸர்வஸித்திரபூந்மம ||
    -வடக்குத்திருவீதிப்பிள்ளை (ஆனி – ஸ்வாதி)

    லோகாச்சார்ய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
    ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||
    -பிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி – திருவோணம்)

    நம: ஸ்ரீசைலநாதாய குந்தீநகர ஜந்மநே |
    ப்ரஸாதலப்த பரமப்ராப்ய கைங்கர்யசாலிநே
    ||-திருவாய்மொழிப்பிள்ளை (வைகாசி – விசாகம்)

    ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
    யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் |
    |-மணவாளமாமுனிகள் (ஐப்பசி – திருமூலம்)

    ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
    ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமாநுஜ முநிம் பஜே
    -பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி – புனர்பூசம்) 

    தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளச் செய்ய வேண்டிய மந்திர ஸ்நாநமும் அதன் ஸ்லோகமும்

    புவி மூர்த்நி ததாகாசே மூர்த்ந்யாகாசே ததா புவி |
    ஆகாசே புவி மூர்த்நிஸ்யாத் ஆபோஹிஷ்டேதி மந்த்ரத: ||

    துலஸ்யம்ருத ஜந்மாஸி ஸதா த்வம் கேசவப்ரியே |
    கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ சோபநே |
    |திருத்துழாய் சேகரிக்கும் மந்திரம்

    நாம் ரஹஸ்ய த்ரயம் என்கிற மூன்று ரஹஸ்ய மந்திரங்களை அநுஸந்திக்க வேண்டும்.-திருமந்திரம் – ஓம் நமோ நாராயணாய–த்வயம்-ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே | ஸ்ரீமதே நாராயணாய நம: ||-ஸ்ரீ க்ருஷ்ண சரம ச்லோகம்)ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச: ||

    ஸ்ரீ வராஹ சரம ச்லோகம்
    ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதியோ நர:
    தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வரூபஞ்ச மாமஜம்
    ததஸ்தம் ம்ரியமாணந்து காஷ்டபாஷாண ஸந்நிபம்
    அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமாம் கதிம்

    ஸ்ரீராம சரம ச்லோகம்
    ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |
    அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி யேதத் வ்ரதம் மம ||

    ஸ்ரீசைலேசதயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் |
    யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம் ||

    லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |
    அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம் |

    யோ நித்யமச்யுதபதாம்புஜ யுக்மருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
    அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

    மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
    ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

    பூதம் ஸரஸ்ய மஹதாஹ்வய பட்டநாத ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
    பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ராந் ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

    கோயிலாழ்வார் திருக்காப்பு நீக்கும்(கதவு திறக்கும்)பொழுது அநுஸந்திக்க வேண்டிய ஸ்லோகங்கள்அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீம பவர்ணவோ தரே|
    அகதிம் சரணாகதம் ஹரே க்ருபயா கேவலமாத்மஸாத் குரு
    || (ஸ்தோத்ர ரத்நம் 48)ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்மாவேதீ ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே |
    அகிஞ்சநோநந்யகதிச் சரண்ய த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே |
    | (ஸ்தோத்ர ரத்நம் 22) ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விச்வபாவன |
    நமஸ்தே ஸ்து ஹ்ருஷீகேச மஹாபுருஷ பூர்வஜ ||
    (ஜிதந்தே ஸ்தோத்ரம் 1)தேவானாம் தானவாநாம் ச ஸாமாந்யம் அதிதைவதம் | ஸர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ || (ஜிதந்தே ஸ்தோத்ரம் 2)கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
    உத்திஷ்ட்ட நரஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் |உத்திஷ்ட்டோத்திஷ்ட்ட கோவிந்த உத்திஷ்ட்ட கருடத்வஜஉத்திஷ்ட்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்கலம் குரும் ||

    கூர்மாதீந் திவ்யலோகாந் ததநு மணிமயம் மண்டபம் தத்ர சேஷம்
    தஸ்மிந் தர்மாதிபீடம் ததுபரி கமலஞ் சாமரக்ராஹிணீச் ச |
    விஷ்ணும் தேவீர் விபூஷாயுதகண முரகம் பாதுகே வைநதேயம்
    ஸேநேசம் த்வாரபாலாந் குமுதமுககணாந் விஷ்ணுபக்தாந் ப்ரபத்யே ||
     (புராண ஸ்லோகம்)

    ஸவ்யம் பாதம் ப்ரஸார்ய ச்ரிததுரிதஹரம் தக்ஷிணங் குஞ்சயித்வா
    ஜாநுந்யாதாய ஸவ்யேதர மிதரபுஜம் நாகபோகே நிதாய |
    பச்சாத் பாஹுத்வயேந ப்ரதிபடசமநே தாரயந் சங்கசக்ரே
    தேவிபூஷாதி ஜுஷ்டோ விதரது பகவாந் சர்ம வைகுண்டநாத: ||
    (புராண ஸ்லோகம்)

    கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிநீம் |
    ஈஸ்வரீகும் ஸர்வபூதானாம் த்வாமிஹோபஹ்வயே ஸ்ரியம் ||
    (ஸ்ரீ ஸூக்தம்)

    பூசுஞ்சாந் தென்னெஞ்சமே புனையுங்கண்ணி எனதுடைய
    வாசகஞ் செய்மாலையே வான்பட்டாடையுமஃதே
    தேசமான வணிகலனும் என்கைகூப்புச் செய்கையே
    ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தையேக மூர்த்திக்கே
    (திருவாய்மொழி 4.3.2)

    ஓம் தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோஸ்மான்
    தூர்வதி தம் தூர்வயம் வயம் தூர்வாமஸ் த்வம் தேவாநாம் அஸி
    தூபம் ஆக்ராபயாமி
    (ர்க் வேதம்)

    பரிவதில் ஈசனைப்பாடி விரிவது மேவலுறுவீர்
    பிரிவகை இன்றி நன்னீர் தூய் புரிவதுவும் புகை பூவே
    (திருவாய்மொழி 1.6.1)

    உத்தீப்யஸ்வ ஜாதவேதோபக்நந் நிர்ருதிம் மம |
    பஸூகும்ஸ்ச மஹ்யமாவஹ ஜீவநம்ச திசோ திச ||
    (மஹா நாராயண உபநிஷத்)தீபம் சமர்ப்பிக்கும்பொழுது சேவிக்க வேண்டிய ஸ்லோகம்

    மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

    ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
    ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம்.
    (ரிக் வேதம்)

    ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

    ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
    நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம்
    . (ஸாம வேதம்)

    ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
    சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம்.
      (அதர்வண வேதம்)

    ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
    நம இதி பஸ்சாத் |
    நாராயணாயேதி உபரிஷ்டாத் |
    ஓமித்யேகாக்ஷரம் |
    நம இதி த்வே அக்ஷரே |
    நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |
    ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
    யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |
    அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
    விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
    ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |
    ய யேவம் வேத |
    இத்யுபநிஷத் | (
    உபநிஷத்)

    அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
    பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி|
    யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

    இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
    கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் ||
    (ஸ்ரீ ராமாயணம்)

    தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
    பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே ||
    (ஸ்ரீ ராமாயணம்)

    தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
    பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: |
    | (ஸ்ரீ பாகவதம்)

    ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
    நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் ||
    (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

    வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
    ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ ||
    (லிங்க புராணம்)

    கதா புந: ஸங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சனம் |
    த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி |
    | (ஸ்தோத்ர ரத்நம் 31)

    ஸ்ரீ மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்ய ஸேவா ப்ரேமா விலாஸய: பராங்குச பாத பத்மம் ||
    காமாதி தோஷ ஹரமாத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா ||
    (யதிராஜ விம்சதி 1)

    யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
    யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
    பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
    யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு
    (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)போஜ்யாஸனம்

    தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
    திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
    ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம்
    (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

    பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
    மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
    தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

    ஓம் கேசவாய நம:
    ஓம் நாராயணாய நம:
    ஓம் மாதவாய நம:
    ஓம் கோவிந்தாய நம:
    ஓம் விஷ்ணவே நம:
    ஓம் மதுஸூதநாய நம:
    ஓம் த்ரிவிக்ரமாய நம:
    ஓம் வாமநாய நம:
    ஓம் ஸ்ரீதராய நம:
    ஓம் ஹ்ருஷீகேசாய நம:
    ஓம் பத்மநாபாய நம:
    ஓம் தாமோதராய நம:

    ஓம் ச்ரியை நம:
    ஓம் அம்ருதோத்பவாயை நம:
    ஓம் கமலாயை நம:
    ஓம் சந்த்ரஸோதர்யை நம:
    ஓம் விஷ்ணு பத்ந்யை நம:
    ஓம் வைஷ்ணவ்யை நம:
    ஓம் வராரோஹாயை நம:
    ஓம் ஹரி வல்லபாயை நம:
    ஓம் ஸார்ங்கிண்யை நம:
    ஓம் தேவ தேவ்யை நம:
    ஓம் லோகஸுந்தர்யை நம:
    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

    போகம் கண்டருளப்பண்ணும் பொழுது இந்த ச்லோகங்கள் மற்றும் பாசுரங்களை அநுஸந்திக்கவும்.

    கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ! உன்தன்னை
    பாடிப் பறை கொண்டு யாம் பெறும்  சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
    ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
    மூட நெய் பெய்து முழங்கை வழிவார
    கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (திருப்பாவை 27)

    நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
    நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
    நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
    ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங் கொலோ (நாச்சியார் திருமொழி 9.6)

    உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
    நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
    திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
    குலதோல் அடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (திருவாய்மொழி 6.10.10)

    யா ப்ரீதிர் விதுரார்பிதே முராரிபோ குந்த்யர்பிதே யா த்ருஸி
    யா கோவர்தன மூர்த்நி ய ச ப்ருதுகே ஸ்தந்யே யசோதர்பிதே
    பாரத்வாஜ ஸமர்பிதே சபரிக தத்தே ஆதரே யோ ஸ்திதம்
    யா ப்ரீதிர் முநிபத்னி பக்தி ரசிதே ப்ரீத்யர்பிதே தம் குரு (க்ருஷ்ண கர்ணாம்ருதம்)

    முடிவில், “அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! ஆராவமுதே அமுது செய்தருள வேண்டும்” என்று நான்கு முறை கூறி கண்டருளப்பண்ணவும்.

    ஆரத்தி ஸமர்ப்பிக்கவும்:

    தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய:
    திவீவ சக்ஷுராததம், தத்விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாகும்
    ஸஸ்யமிந்ததே, விஷ்ணோர்ய: பரமம் பதம் (ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம்)

    பர்யாப்த்யா அநந்தராயாய ஸர்வஸ்தோமோதி ராத்ரமுத்தம
    மஹர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய ஜித்யை ஸர்வமேவ
    தேநாப்நோதி ஸர்வம் ஜயதி

    பர்யங்காஸனம் ச்லோகங்கள்

    பந்நகாதீச பர்யங்கே ரமா ஹஸ்தோப தாநகே |
    ஸுகம் சேஷ்வ கஜாத்ரீச ஸர்வா ஜாக்ரத ஜாக்ரத ||

    க்ஷீரஸாகர தரங்க ஸீகரா சார தாரகித சாரு மூர்த்தயே |
    போகி போகி சயநீய ஸாயிநே மாதவாய மதுவிஷ்வஸே நம: ||
    (முகுந்த மாலா)

    உபசாராந் அபதேஸேந க்ருதாந் அஹரஹர் மயா |
    அபசாராந் இமாந் ஸர்வாந் க்ஷமஸ்வ புருஷோத்தம |
    |-ஸாஷ்டாங்க ப்ரணாமத்துடன் அநுஸந்திக்கவும்:

    ——————————————————————————————————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ ரத சப்தமி –

    January 30, 2026

    ரத சப்தமி இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இது குறிப்பாக ஸூரிய தேவன் ஏழு குதிரைகள் (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன) பூட்டிய தனது ரதத்தை வடக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் ஸூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஸூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமி யன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், ஸூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ அறியாமலோ  பாவ காரியங்கள்  செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதம் என்பதாகும்.

    தை முதல் நாள்  தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகிறோம். தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள்  திதி ரத சப்தமியாகக்  கொண்டாடுகிறோம்.

    இந்த  நாளை  சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகிறோம்

    காஷ்யப ரிஷியின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தபோது, வெளியிலிருந்து ஒரு அந்தணன் பசிக்கு  உணவு கேட்க, அதிதி தான கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த அந்தணனுக்கு கொடுத்தாள். இதை தன்  மேல் செய்த உதாசீனம் என்று கோபித்த அந்தணன் ‘உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து பிறப்பான்’ என்று சாபமிட்டான். அதிதி முதலில் வருந்தினாலும், அவர்கள் நல்லுள்ளதின்படி ஒளி மாயமான சூரியன் அவர்களுக்கு மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் வரும் ஏழாவது நாள் சப்தமி விரதம் அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது

    ஸூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில்லைக் குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது ஸூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா ஸூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது

    ஏக தினம் ப்ரஹ்மோத்சவம்
    ஏழு வாஹனங்கள் திருமலை கோவிந்த ராஜர் திருச்சானூர் மூன்று இடங்களிலும் உண்டு -தீர்த்த வாரி மட்டுமே திருச்சானூரில் இல்லை –
    ஸூர்ய சந்திர இரண்டு வாஹனங்கள் திருக்காஞ்சி திருக்குடந்தை போன்ற இடங்களிலே உண்டு

    காலை 6:30 மணிக்கு வரதராஜ பெருமாள் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளி, மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 6:00 மணியளவில் சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் மீண்டும் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.

    ஸூர்ய பிரபையில் ஸூர்ய நாராயணன் திருக்கோலம் முதலில்-சின்ன சேஷ வாஹனம் -அடுத்து -பெருமாள் மட்டுமே புறப்பாடு -ரத சப்தமி அன்று திருமலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். அதனால் அன்றைய தினம் “சிறிய ப்ரஹ்மோத்சவம் ” என்று அழைக்கப்படுகிறது.

    ரத சப்தமியன்று விடியற்காலை 5.30 மணியளவில், ஸூரிய பிரபை வாகனத்திலும், அதைத் தொடர்ந்து சின்ன ஆதி சேஷன் வாகனம் காலை 9 மணி யளவிலும், கருட வாகனம் 11 மணி யளவிலும், அனுமன் வாகனம் பிற்பகல் 1 மணி யளவிலும், சக்கர ஸ்நானம் பிற்பகல் 2 மணியளவிலும், கற்பகம் (மரம்) வாகனம் மாலை 4 மணி யளவிலும், சர்வ பூபால வாகனம் மாலை 6 மணி யளவிலும் திரு மாட வீதிகளில் ஊர்வலம் நடை பெறுகின்றன. அன்று இரவு 8 மணி யளவில் சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவதுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. திருப்பதி வேங்கடேஸ்வர ஸ்வாமி ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    அன்றைய தினம் காலையில் ஸூரியனை பார்த்து ‘ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று மூன்று முறை கூறி ஸூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    மகா பாரத்தின் ஒரு வலிமை வாய்ந்த நாயகன் பீஷ்மர். வீதி வசத்தால் கௌரவர்கள் அணியில் போர் புரிய நேர்ந்தது. பீஷ்மருக்கு அவர் விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே. அப்போது அங்கே வந்த வேத வியாசரிடம் ஏன் இப்படி என்று கேட்க, அவர் கூறியது: ‘துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. நீங்களும் அங்கு இருந்தீர். அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் உடல் அளவில் மட்டும் அல்லாது, உள்ளமும் படாத பட்டு. அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும்’

    வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார். எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று வியாசர்  சொல்ல , மெதுவாக பீஷ்மர் ரத சப்தமி அடுத்த நாளன்று சிறிது சிறிதாக தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

    எனவேதான் ரத சப்தமி அன்று எருக்க இலை ஸ்நானமும், ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

    ரத ஸப்தமி ஸ்னான அர்க்ய மந்த்ரம்.

    ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே
    ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

    யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
    தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

    நெளமி ஸப்தமி  தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்
    ஸப்த  அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

    மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு  இட்டுகொண்டு  ஸங்கல்பம் செய்துகொண்டு  ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி  கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும்.

    ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக
    திவாகர  க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

    திவாகராய நம: இதமர்க்கியம்  இதமர்க்கியம், இதமர்க்கியம்.

    ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே

    ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி

    ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

    தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி

    தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்

    ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன

    மம பாபம் வ்யபோஹய!

    ——————————————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –