Archive for the ‘ஆர்த்தி பிரபந்தம்’ Category

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை உரை-

December 3, 2024

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே
பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை
வெளியிட்டுக் கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில்
பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

———–

வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள்
யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால்,
நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை
விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.

———–

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–1-

எம்பெருமானாருக்கு மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்களுக்கும் மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்களுக்கும் மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்கள் நித்ய ஸூரிகளால் கொண்டாடப்படுபவர்கள் என்கை

———

இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு–2-

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்று அநவரதம் சிந்தித்து இருக்கை ப்ராப்தம்
அங்கனம் சிந்தித்து இருக்க இயலா விடிலும் அங்கனம் சிந்தித்து இருக்ப்பாருடைய ஸஹ வாஸமாவது செய்யப் பெறுவது ப்ராப்தம்
அப்படிப்பட்ட அத்யவசாயம் யுடையவர்கள் விண்ணோரிலும் மேம்பட்டவர் என்றதாயிற்று
இரா இராமல் -மாறு சிந்திப்பார் எனவுமாம்-

———

தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்–3-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நலமக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே யினி யாவாரே -என்று நம்மாழ்வார் எம்பெருமானையே எல்லாமுமாகக் கொண்டவர்
மாதா பிதா யுவதஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ -என்று நம்மாழ்வாரையே எல்லாமுமாகக் கொண்டவர் ஆளவந்தார்
அப்படி அன்றிக்கே எம்பெருமானாரையே எல்லாமுமாகக் கொள்ள வேண்டும் என்பதே மா முனிகளின் அத்யவசாயம்
ஆனாலும் இந்த அத்யவசாயத்திற்கு இந்த ப்ராக்ருத தேஹத்தோடு இருப்பு பிரதிபந்தகமாய் இருத்தலால் இதனை உடனே தவிர்த்து அருள வேணும் என்று இரக்கிறார்

———

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்–4-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமான நிலைமை சிறைக்கூடத்திலே இருந்து துவழ்வது ஒக்கும்
இப்படிப்பட்ட சிறையில் நின்றும் விடுபட்டு -அந்தமில் பேர் இன்பத்து அடியரோடு இருந்தமை -என்னும்படியான பேற்றை அடியேன் எப்போது பெற்றவனாவேன்
எதிராசர் தேவரீர் திரு உள்ளம் இரங்கா விடில் இப்பேறு அடியேனுக்குக் கிட்டுமோ
அடியேனுடைய உஜ்ஜீவனம் உன் அதீனம் அன்றோ என்கிறார் ஆயிற்று
இரங்காய்-இரங்கி அருள வேணும் என்றுமாம்-

————-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-

தேசாந்த கதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமா போலே -என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியைத் திரு உள்ளம் பற்றி முன்னடிகள் அருளிச் செய்த படி –
ஸம்பன்னனான பிதாவானவன் புத்ரனோடு கூடி அன்றோ போகங்களைப் புசித்து மகிழ்வன் –புத்ரனை விட்டுப் பிரிந்து தான் தனியே ஒரு போகம் புசித்து மகிழ மாட்டான் அன்றோ
அது போல் ஸ்வாமிந் உனக்குப் புத்ரனாகிய அடியேனை விட்டுத் தேவரீர் தனியே -கட்டெழில் வானவர் போகம் உண்பாரே -என்னுபடியான போகத்தை அனுபவித்துக் களித்து இருக்கப் ப்ராப்தி உண்டோ -என்னையும் கூட்டிக்கொண்டு குண அனுபவம் செய்வது அன்றோ பாங்கு என்றார் ஆயிற்று –

———–

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ் வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்–6-

ஸ்வாமிந் வேம்பு முற்ற முற்றக் கசப்பு முற்றுவது போல் அடியேனது தேஹமும் முற்ற முற்றப் பாபங்களே முற்றி வாரா நின்றன –
இது அஸஹ்யமாய் இருத்தலால் இவ்வுடல் தீர்க்கும் உபாயம் தேவரீரே செய்து அருளத் தக்கது

——–

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகத்தில்-பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –உத்தர சதகம்-45-

ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது-அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே

த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதி வச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும் சாஸ்திரத்துக்கு வசப் பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருந்துகின்றீர்-ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்ம வசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —-தாய்ப் பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள் கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-பர துக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க – அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் – ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே-ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்

இவற்றை அடி ஒற்றி முன்னடிகள் அருளிச் செய்தபடி
தனது குழந்தையின் நோய் தீருவதற்காகத் தாய் தானே காஷாயம் முதலியன குடித்தலாகிற ஒவ்ஷதை சேவை பண்ணுவது என்கிற முறை உண்டாம்
அதே போல் இப்பிறவி என்னும் நோயாலே அகப்பட்டு துடிக்கின்ற எனக்கு இந்நோய் தீரத்தக்க உபாயங்களைத் தேவரீர் அனுஷ்ட்டித்து அடியேனை நோய் தீர்த்தவனாகச் செய்தால் இது முறையாகாதோ
என்னைக் குழந்தையாகக் கொண்டு இருக்கிற உமக்கு இதுவன்றோ உற்றது என்றார் ஆயிற்று
குடிநீர் -கஷாயம்

———-

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்–8-

பிரஜையை கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் – தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –சூரணை -371-அடி ஒற்றி முன்னடிகள்
கிணற்றின் கரையிலே குணந்தை இருக்கின்றதைக் கண்ட தாயானவள் அப்போதே ஓடிச்சென்று கிணற்றின் கரையில் நின்றும் அக்குழந்தையை அப்பால் படுத்திற்றிலள் ஆகில் குழந்தை கிணற்றிலே விழுந்த அளவிலே தாய் அப்போதே சென்று எடுத்து இருந்தால் குழந்தை விழுந்து இருக்குமோ -கிணற்றின் கரஒயில் இருப்பை இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது ஆனபின்பு இவளே அன்றோ தள்ளினாள் என்று லோகம் பழி சொல்லும் அந்தத்தாய் தானும் தானே அன்றோ தள்ளினேன் என்று சொல்லிக் கதறுவாள்
ஆகவே ஸ்வாமிந் என்னுடைய நாஸத்தை நானே விளைத்துக் கொண்டேன் எனினும் உமக்கும் நமக்கும் உண்டான உறவை ஆராய்ந்து பார்க்கும் இடத்து எனது நாசத்திற்குத் தேவரீரே காரணம் என்னும்படி பழி உமது தலையிலே ஆகும் அன்றோ –
அங்கனம் ஆகாதபடி பார்த்துக் கொள்ளீர் என்றார் ஆயிற்று –

———–

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா–9-

இந்த ஸம்ஸாரக்கடலில் கிடந்தது துவள்கின்ற யும்மைக் கரையேற்ற வேணுமாகில் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்த ஒருவர் அதற்கு ஸக்தராக வேணுமே யல்லது உம்மைப்போலவே ஸம்ஸாரக்கடலிலே ஒருகால் விழுந்து துவண்டரான ஸ்ரீ ராமானுஜர் உம்மைக் கரையேற்ற எங்கனம் ஸக்தராவார் என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு இதில் விடை அளிக்கிறார்
கிணற்றில் விழுந்த குழந்தையை எடுத்துக் பிழைப்பித்தற்காக தாயும் உடன் குதித்தால் அந்தக்குதிப்பு எதற்க்காக என்று நோக்க வேண்டாமோ
குழந்தையும் கிணற்றில் விழுந்தது தாயும் விழுந்தாள் என்ன வாசி என்று சொல்லுவார் உண்டோ -அதே போல் பாபத்தினால் இப்பிறவிக்கடலில் விழுந்த விழுகின்ற விழப்போகும் என்போல்வாரை உத்தரிப்பிக்கை காக வன்றோ எதிராசர் தாமும் ஒக்கக் குதித்தது என்கிறார்-நமது பிறவி கர்மத்தால் அவரது பிறவி கருணையினால் -என்றவாறு-

—————

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்–10-

எம்பெருமானுடைய திருவடி நிலையான நம்மாழ்வாருக்குத் திருவடி நிலையான எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு நெஞ்சு போல்வாரான தொண்டரை விளித்து அருளிச் செய்தாராயிற்று-

——

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-

வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் -ஆழ்வார் திருவடிகளில் மதுரகவிகள் போல் வடுக நம்பிகள் பிராப்ய ப்ராபகங்கள் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்று இருப்பர் என்பது ப்ரஸித்தம் -கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எம்பெருமானார் திறத்தில் மிகவும் பிரவணராய் இருந்தார்களே யாகிலும் அவர்களும் சில சமயம் பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவதும் ப்ரவணராய் போருமதுவையே கொண்டு அவர்களையும் வடுக நம்பி குறைகூறுவாராம் -ஆகவே வடகநம்பியின் சரம பர்வ நிஷ்டை அத்விதீயம் என்பது நாடு அறிந்தது – அவருடைய நிஷ்டா விசேஷம் தமக்கும் உண்டாகும்படி விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளப் பிரார்திக்கிறார் இதில் –

—–

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்–12-

ஸ்ரீ மத் யதீந்த்ர தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம் ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம தந்தரம் -ஸ்ரீ எதிராஜ விம்சதி ஸ்லோகமும் இத்துடன் சேர அனுசந்தேயம்
தேவரீருடைய திருவடிகளை அடியேன் நேராகக் கண்டிலேன் -அடியேன் ஆச்சார்யர் காட்டிக்கொடுக்கக் கண்டேன் அத்தனை -காட்டிக் கொடுத்தவருடைய திரு உள்ளம் தேவரீர் அறியாதது அன்று -அது நிறைவேறுமாறு தேவரீர் கடாக்ஷித்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்-
தேசம் -தேஜஸ் -தேஜஸ்வியான திருவாய் மொழிப்பிள்ளை-

——–

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்–13-

எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றாருக்கு அல்லது ஆழ்வார்களின் திருவருள் பலியாது என்கை-

———

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவருக்கு வானம் கொடுப்பது மாதவன் என்று எம்பெருமான் யோக்யருக்கு அருள் செய்பவன் என்று சொல்லி இராமானுசன் தன்னை எய்தினாருக்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்து -என்று எம்பெருமானாருடைய கிருபா மாத்ரா ப்ரஸன்னாச்சார்யத்வம் அழகாகப் பேசப்பட்டது –
அதைத் திரு உள்ளம் பற்றி இப்பாசுரம் அருளிச் செய்துள்ளார் -அடியேன் போன்ற அநதிகாரிகளுக்கும் தேவரீர் அருள் செய்தால் அன்று எம்பெருமானில் காட்டில் தேவரீருக்கு ப்ரஸித்தமாயுள்ள வை லக்ஷண்யம் தேறுவது என்றார் ஆயிற்று –
என் செய்வோம் யாம் -இனிமேல் அதிகாரம் சம்பாதித்துக் கொள்ள என்னாலாகுமோ -என்றபடி – தேவரீரை விட்டு வேறு ஒருவரை ஆஸ்ரயிக்கத் தான் ஆகுமோ -என்றபடியுமாம்-

————-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர் பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?--15

கீழ்ப்பாட்டில் அதிகாரம் இல்லாதவராகத் தம்மைச் சொல்லிக் கொண்டாரே அத்தை நிலை நாட்டுகிறார் இதில் -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று ஓய்வின்றி சொல்லிக் கொண்டே இருக்கின்றீரே -இத்தை விட வேறே அதிகார ஸம்பத்து வேணுமோ -நீர் அதிகாரியே யாவீர் -அநதிகாரி அல்லீர் –என்று சிலர் சொல்ல அதற்கு விடை அருளுகிறார் இதில் –
பொரி புறம் தடவின யுக்தி மாத்ரமே என் பக்கல் உள்ளது -ப்ரேமம் கனிந்து சொல்லுகின்றேன் அல்லேன் – அப்படிச் சொன்னால் அன்றோ அதிகார ஸம்பத்து உள்ளது – இதுகாறும் ப்ரேமம் உண்டானதாகத் தெரியவில்லை இனி மேலா அது உண்டாகப்போகிறது -இல்லை ஆகவே அநதிகாரிகள் இடத்தே செல்லக்கூடிய தேவரீருடைய கருணையைச் செலுத்தி அருளுவதே நன்று என்கிறார் இதில் –

————

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?–16-

இன்னது செய்யத் தகுந்தது இன்னது செய்யத் தகாதது என்று அடியேன் விவேகித்து அறிந்து -அத்தை பிறருக்கும் உபதேஸித்தப் போகின்றேன் ஆகிலும் ஸ்வ அநுஷ்டானத்தில் வந்தவாறே பிசகிப் போகின்றேன் -ஆகையால் இவன் மோஹாந்தன் என்று தேவரீர் கைவிடப் போதுமான நிலைமை என் பக்கலிலே உளதாயினும் அங்கனம் கைவிடலாகாது என்றவாறே-கைவிடுவேன் அல்லேன் என்று எம்பெருமானார் பணிக்க -எப்போது அடியேனைத் திருவடி சேர்த்துக் கொல்வதாக திரு உள்ளம் பற்றி இருப்பது என்று அருளிச் செய்கிறாராயிற்று
மோகாந்தன் –விஷயாந்தர மோகத்தால் கண் தெரியாதவன்-

————

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?–17-

எனக்கும் திரு நாட்டை நான் தருவேன் என்ற நீ -என்று இப்பாசுரத்தில் அருளிச் செய்து இருப்பதால் எம்பெருமானார் மணவாள மா முனிகளை நோக்கி ப்ரதிஜ்ஜை செய்து அருளினதாகத் தெரிய வருகின்றது -எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றாருக்கு எல்லாம் முக்திக் செல்வம் குறையற்றது என்று ஸரணாகதி அநுஸந்தானத்தின் அன்று தொடங்கி ஒரு ப்ரஸித்தி இருப்பதால் அது கொண்டே இங்கனம் பணிக்கிறார் என்றும் கொள்ளலாம்-

—————-

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–18-

இந்த ஸம்ஸாரம் என்னும் காளராத்ரியானது அகவிருளை வளர்வித்துக் கொண்டு ஒய்வின்றிச் செல்கின்றதே -ஒரு நாளும் பொழுது விடியும் நாள் இல்லையா -அது எந்நாள் என்று அறிகின்றிலேன் -இன்ன நாள் என்று தேவரீரே குறிப்பிட்டால் ஆறி இருப்பேன் என்கை பவம் -ஸம்ஸாரம் -வடசொல்-

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை–19-

பெரியாழ்வார் -உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் இனிப்போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் -என்று அருளிச் செய்த புடையில் இப்பாசுரம் அருளிச் செய்தபடி –ஸ்வாமிந் தேவரீருக்குத் தொண்டு செய்து திரியக் கடமைப்பட்டு இருக்கும் அடியேன் இப்பொல்லா வாக்கைக்கு அடிமை செய்து திரிவேனாயின் இது எனக்குத் தகும் எனினும் தேவரீருடைய தேஜஸ்ஸுக்கு அவித்யகரமாய் முடியும் அன்றோ -ராஜபுத்ரன் நீசருக்கு ஆட்ச்செய்து இருக்கும் இருப்பை மஹா ராஜன் பொறுத்து இருக்க வல்லவனோ -இத்தை ஆராய்ந்து அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் யாயிற்று –

—————-

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே–20-

ஒழிவு ஓன்று இல்லாத –போம் வழியைத் தரும் நாங்கள் வானவர் ஈசனை —3-9-3- என்று பரமபதத்தைத் தரும் என்னாமல் போம் வழியைத் தரும் என்கையாலே பரமபத ப்ராப்தியில் காட்டிலும் அர்ச்சிராதி கதியே பரம பிரயோஜனம் என்றும் அந்த ஆனந்தமே மிகப்பெரியது என்றும் காட்டி அருளினார் ஆயிற்று –அப்படிப்பட்ட இன்பம் எல்லாம் புசித்துக் கொண்டே அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் குடைந்தாடி பிராகிருத தோஷங்கள் எல்லாவற்றையும் கழித்து திருநாட்டைக் கிட்டி திவ்ய தேஹத்தைப் பெற்று அவ்விடத்து ஸத்காரங்களை எல்லாம் லபித்து எம்பெருமான் மடி மீது ஏறி வாழப்பெறுவதே ஸ்ரீ வைகுந்தப் பெரும் செல்வமாகும் – இச்செல்வம் எம்பெருமானார் திருவருள் அடியாகவே கிடைப்பது ஒன்றாயிற்று என்றார் ஆயிற்று – ஸ்வாமிந் இச் செல்வத்தை தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கை –

———————–

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21-

நெஞ்சே நமக்கு என்று வகுத்த ஆச்சார்யர் திருவாய் மொழிப்பிள்ளை ஆவார் -அவரது திருவருளால் பெற்ற ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசாயம் கொண்டு இரு – அவருக்காக எம்பெருமானார் பேறு தந்து அருளுவர் என்று நாம் கவலையற்று ம் இருக்கப் ப்ராப்தம் என்கிறார் ஆயிற்று –

———-

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே–22-

அஸ்மதாச்சார்யருடைய நிர்ஹேதுக கிருபையாலே எம்பெருமானாருடைய அபிமானத்திற்கு இலக்காகி எம்பெருமான் அடி சேரப் பெறுவது திண்ணம் என்றதாயிற்று

———

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!–23

ஆழ்வார் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று பாரித்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்று அடியார் குழாங்களிடையே இருக்கப் பெற்றதையே பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தததால் இங்கு அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க-என்று முந்துற அருளிச் செய்கிறார் -திரு நாட்டில் திவ்யாஸ்தான மண்டபத்தில் திவ்ய ஸிம்ஹாஸனத்திலே திவ்ய மஹீஷீ பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுந்தநாதனை கடுக அடியேன் அநுபவிக்கும் படி செய்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

————–

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!--24-

சரீரத்தை விட்டு ஆத்மா உத்க்ரமித்த காலம் தொடங்கிப் பரமபுருஷார்த்த பர்யந்தமான பேற்றின் வரிசைகள் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்பட்டன -இத்தகைய பேறுகளை விரைவில் அடியேன் பெறுமாறு அருள் புரியு வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று-

———

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!–25-

ஸ்வாமிந் அடியேனைத் தேவரீர் அங்கீ கரித்து அருளின அன்று தொடங்கி இன்று அளவும் நான் பிழை செய்வதும் -அநு தபித்து க்ஷமை வேண்டுவதும் -மீண்டும் பிழை செய்வதும் -அநு தபித்து க்ஷமை வேண்டுவதுமாய் இருந்து வருகின்றேன் -இப்படி இருந்தும் என்னைக் கொண்டு பல கைங்கர்யங்களைச் செய்வித்துத் கொண்டு அருளினீர் -இவ்விபூதியில் கைங்கர்யமே அன்றி அவ்விபூதியிலும் நித்ய கைங்கர்யமம் கொண்டு அருளத் திரு உள்ளம் பற்றி இருக்கின்றீர் என்பதையும் அறிவேன் -அதில் கால விளம்பம் வேண்டாம் என்று பிரார்த்திக்கிறேன் அத்தனை என்கிறார் இதில் –

———–

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே–26-

மஹா கிருபாக்களாகப் புகழ் பெற்ற வர்களான எம்பெருமான் பிராட்டிமார்கள் நித்ய ஸூரிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆகிய இவர்களில் ஒருவருக்கும் பொறுக்க ஒண்ணாத படி அபராதங்களை அளவறச் செய்து இருக்கும் அடியேனை ஸ்வாமிந் தேவரீரே உமது க்ஷமா திருக்கல்யாண குணத்துக்கு இலக்காக்கிப் பர பக்தி பர ஞான பரம பக்தியாதிகளையும் விளைத்து கால தாமதம் இன்றி த் திருநாடு சேர்த்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

———–

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே–27-

நோ பஜநம் ஸ்மரத் இதம் ஸரீரம் -என்று உபநிஷத்தில் ஓதினபடியே இவ்வுலகில் சரீர அநு பந்தியான ஒன்றையும் சிந்தை செய்யாமல் பரமபத அனுபவங்களையே சிந்திக்குமாறு தமது திரு உள்ளத்துக்கு உரைத்தார் ஆயிற்று –

————-

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே–28–

தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்று திருமழிசைப்பிரான் அருளிச் செய்தபடியே பூர்வாச்சார்யர்களுடைய கிரந்தங்களைக் கொண்டே பலபடியாலும் போது போக்கி இருந்தேனாதலால் -இச்சுவை தவிர யான் போய் இந்த்ர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றே இதுகாறும் இருந்தேன் -இப்போது திருநாட்டில் அனுபவங்களுக்கு ஆசைப்படுமாறு எம்பெருமானாரது அருளைப் பெற்றேன் என்றார் ஆயிற்று –

———

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகிய மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே–29-

அநேக துர் மதங்களை ஒழித்து துர்வாதிகளை வென்றவரான எம்பெருமானார் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக விளங்க வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணினார் யாயிற்று –
குருமதம் என்பது ப்ரபாகரர் மதம்
குமரிலன் மதம் பாட்ட மதம்-

——-

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே–30-

ஆச்சார்யன் சிச்சன் ஆர் உயிரைப் பேணுமவன் -தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் –என்று உபதேச ரத்னமாலையில் அருளிச் செய்த படியே ஆச்சார்யனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே அஸ்மதாதிகளுக்கு பரம உத்தேச்யமாதலால் நமக்கு நித்ய அநுசந்தேயமாக எம்பெருமானாருடைய திவ்ய அவயவங்களுக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளினார் ஆயிற்று –

———–

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

எம்பெருமானாருடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளுகிறபடி -சாக்ய உலூக்ய அக்ஷபாத ஷபண கபில பதஞ்சலி மதங்கள் ஆறும் அறு சமயங்கள் எனப்படும் -வேறு வகையாகவும் சொல்லுவதும் உண்டு -வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டே அவற்றில் அபார்த்தம் செய்கிறவர்கள் குத்ருஷ்டிகள் ஆவார் -மறையதினில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தது வேதார்த்த ஸங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம் முதலிய திவ்ய கிரந்தங்களாலும் உபதேஸ முகத்தாலும்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேலான்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்றதை அடி ஒற்றி மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் என்றது –

———

சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே–32-

சங்கராதி மதாந்தஸ்தர்களின் அபார்த்தங்களைக் கண்டித்து வேதாந்த ஸ தர்த்த ஸ்தாபனம் பண்ணுகைக்காகவும் கலி புருஷ ஸாம்ராஜ்யத்தை சிதைப்பதற்காகவும் பூ பாரமாய் இருக்கின்ற துஷ்டர்களை எல்லாம் ஸஜ்ஜனமாக்கிப் பூ தேவியை மகிழ்விப்பதாகவும் -பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்களின் அருளிச் செயல்களை மிக வளர்த்து அவர்களை உகப்பிக்கைக்காகவும் திவ்ய தேசம் உத்தாரத்திற்காகவும் எம்பெருமானார் திருவவதரித்தார் என்றதாயிற்று-

——–

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!–33-

இவ்விபூதியில் அடியேன் இன்னமும் இருக்கக் கூடிய நாள் இவ்வளவு என்றும் இன்னபோதிலே இன்னவிடத்திலே இன்னபடியாக அடியேனுக்கு தேஹ அவசானம் ஆகும் எண்டும் எல்லாம் தேவரீர் அறிய வல்லீர் – அடியேனுக்கு இவை ஒன்றுமே தெரியாது -இவ்வழக்கு உடம்பைப் போக்கித் திருவடி சேர்த்துக் கொள்ள திரு உள்ளம் உண்டாகில் உபேக்ஷித்துக் கால தாமதம் செய்வது என்னோ என்றார் ஆயிற்று-

——-

முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே–34-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற சரம ஸ்லோகத்தில் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றதில் விவஷிதமானதை ஒன்றரை அடிகளில் அருளிச் செய்கிறார் -முன்னை வினையாவது பூர்வாகம் – முன்னே அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் -பின்னை வினையாவது உத்தராகம் – ஆஸ்ரயித்த பிறகு ப்ராக்ருத வாஸனையால் ப்ராமாதிகமாக நேரும் பாவங்கள் -ஆர்த்தமாவது ப்ராரப்த கர்மம் -பலன் கொடுக்க ஆரம்பித்த கருமங்கள் என்றபடி –என்று இப்படி மூவகைப்பட்ட தீ வினைகளையும் என்னடியாருக்கு நானே தவிர்ப்பேன் என்று சரம ஸ்லோக முகத்தாலே அருளிச் செய்தவர் திருவரங்க நாதர் – அவர் தேவரீருக்கு ஸர்வாத்மநா விதேயர் என்பது ப்ரஸித்தம் -அப்படி இருக்க தேவரீரே புகல் என்று பற்றின அடியேன் இன்னமும் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்க தேவரீர் பார்த்துக் கொண்டு இருப்பது தகுதியோ – ப்ராப்ய பூமியில் அடியேனைக் கொண்டு சேர்த்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (
17)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்தி நாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.-

—————

அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!–35–

கூரத்தாழ்வான் பட்டர் முதலானோர் தங்களுடைய ஸ்தவங்களிலே அபரிதமாக நைச்ய அநுஸந்தானம் செய்து கொண்டு இருக்கிறார்கள் – ஆனால் அந்த நைச்யம் அவர்களிடத்தில் சிறிதுமே கிடையாது -அவர்கள் தாம் ஏறிட்டு அனுசந்தித்திக் கொண்ட அந்த நைச்யம் எல்லாம் வடிவு எடுத்தவன் அடியேனே -இப்படிப்பட்ட அடியேனை தேவரீர் ஏற்கனவே அபிமானித்து அருளி அத்தாணிச் சேவகம் கொள்ளத் திரு உள்ளம் பற்றி இருந்தும் அடியேன் பிராகிருத போகங்களிலேயே ஈடுபட்டு இருக்கும் படியான பாவியாய் இரா நின்றேன் இந்நிலையை மாற்றி அருள வேணும் என்று பிரார்த்தித்து அருளுகிறார் ஆயிற்று – பின்னடிகளுக்குச் சேட்டை யதிராஜ விம்சதி ஸ்லோகம் அனுசந்தேயம்

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே
 || (14)

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில்,  (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.

கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.-

—————

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து–36–

இந்திரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரதிஸபம் மன -என்கிற கீதா ஸ்லோகம் -சார்பாகப் பின்னடிகள் முதலடியில் வாதனை பாடபேதம்-

———

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?–37-

அடியேனை திரு நாட்டிலே ஏற்றுகைக்கு ஈடான அதிகார ஸம்பத்து இதிகாறும் இல்லாதது இனி ஒருகால் விளையைப் போகிறது என்று நினைக்கப் ப்ரஸக்தி தானும் இல்லை -ஆகவே விரோதி பாப வர்க்கங்களைத் தேவரீர் தாமே நிர்ஹேதுக கிருபையினாலே வெட்டிக்களைந்து வீடு பெறுவிப்பது நலம் என்றார் ஆயிற்று-

———

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்–38-

அஞ்சிலே அறியாதார் ஐம்பதிலும் அறியாதாரே -என்ற ஒரு பழ மொழி உண்டு – அதற்குத் தாமே இலக்கு என்று நைச்ய அநுசந்தானமாக அருளிச் செய்கிறபடி – அடியேனுக்கு இத்தனை வயதாகியும் செய்த குற்றங்களுக்கு அநுதாபமும் தோன்ற வில்லையே என்கிறார் –

————-

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்–39-

வேம்பையே கறியாகச் சமைத்து உண்ணுமவர்கள் அதன் கைப்பையே பரம போக்யமாகக் கொள்பவர்களே யன்றி ஐயோ கைக்கின்றதே என்று வெறுக்குமவர்களே அல்லரே -அதே போல் அடியேனுடைய தோஷங்களையே பரம போக்யமாகக் கொண்டு அங்கீ கரித்து அருளின தேவரீர் இந்து தீம்பு கண்டு இகழ்வது தகுதி என்றே என்றார் ஆயிற்று –

——–

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு–40-

சீர்மை பொருந்திய எம்பெருமானாரே -தேவரீருடைய குண அனுபவங்களுக்கு இட்டுப் பிறந்த அடியேன் பொழுதைப் பாழாகிப் போக்கி இந்த ஸம்ஸாரத்திலேயே கிடப்பது தகுதியோ – அடியேன் திருநாடு சேரும்படி அருள் புரிய வேணும்இதுவரை ஸம்ஸாரத்தில் சிறை இருந்தது போதுமே -இனி இவ்வழக்கு உடம்பைத் தவிர்த்து அருள வேணும் –

———–

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி–41-

உலகம் எல்லாம் உஜ்ஜீவிப்பதற்கு என்றே திருவாவதரித்த எம்பெருமானாரே இந்நில உலகில் அடியேனைப் போலெ தீர அபசாரப்பட்டவர்கள் யாரேனும் உளரோ -தேவரீரைப் போலே அந்த அபராதங்களை ஷமிக்க வல்லவர் வேறே யாரேனும் உளரோ -இனி ஏழையான அடியேன் மீது இரங்கி அருள வேணும்-

———-

ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?–42-

எம்பெருமானாரே பஞ்ச இந்திரியங்கள் அடியேனை ஆக்ரமித்துக் கொள்ளும் போது அவற்றுக்கு ஆற்றாத அடியேன் தேவரீருடைய திருவடிகளைச் சிந்தித்து கூப்பிட்டால் அதன் பிறகும் அந்த இந்த்ரியங்களானவை அடியேனை மேலிடாதபடி கிருபை செய்து அருள்கின்றீர் இல்லையே -எனக்குத் தேவரீரை ஒழிய வேறே ரக்ஷகர் உளரோ-

————–

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து–43–

த்யாஜ்ய பூமியில் ஜிஹாஸையும் ப்ராப்ய பூமியில் பிராவண்யமும் இல்லாத அடியேனுக்கு எம்பெருமானார் தான் என் செய்வர் என்று ஒருவாறு ஸமாஹிதர் ஆகிறார் –

———-

மாகாந்த நாரணனார் வைகும் வகை யறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்–44-

இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திரு நாமம் ஸ்பஷ்டமாக இல்லை யாயினும் முன்னடிகட்க்கு எம்பெருமானாரும் அவருடைய திருவடி பணிந்தவர்களுமே விஷய பூதராவார்கள் -எம்பெருமான் எங்கும் உளனாய்க் கொண்டு எதையும் எளிதில் உணர்கிறான் என்கிற தெளிவுடையவர்கள் -இது ஏகாந்தமான இடம் இது இருள் செறிந்த இடம் என்று ஓர் இடத்திலும் ஒரு பாபச் செயலும் செய்யத் துணியார்கள் -அப்படிப்பட்ட தெளிவில்லாத அவிகேகிகள் தாம் ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ வியாபகத்தை அறிய மாட்டாதே அவனையும் வஞ்சித்து விடலாம் என்று எண்ணி ஏகாந்த ஸ்தலங்களிலும் இருள் மிக்க இடங்களிலும் பாவங்களை செய்து போருவர்கள் என்ற இது -எம்பெருமானாருடைய திருவருளால் எம்பெருமானுடைய ஸர்வ வ்யாப்தியை அறிந்தவர்களே -நீங்கள் ஏகாந்தத்தில் பாவச் செயலை செய்யாது இருக்க வேணும் என்று ஹித உபதேசம் செய்து அருளிய படி-

——–

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு–45-

திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்றும்
நன்றாக நான் உனை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இலை என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கும் சேதனர்களுக்கும் உண்டான உறவு அநாதியே யாயினும் இந்த உறவை அறிவித்து மஹா உபகாரம் செய்தவர் ஆச்சார்யரே யாதலால் அந்த ஆச்சார்யர் பக்கலிலே நாம் செய்நன்றி குன்றாது இருக்க வேணும் என்றார் ஆயிற்று –

—————

திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-

பகவானோடு உண்டான உறவை அறிவதில் காட்டிலும் ஆச்சார்ய சம்பந்தத்தை அறிவதே சிறந்தது -ஆச்சார்யர் என்கிற சொல்லுக்கு எம்பெருமானார் தான் இலக்கு – அப்பரமாச்சார்யாரோடு நமக்கு உண்டான யுறவை அறிவித்த மஹா உபகாரகர் திருவாய் மொழிப்பிள்ளை என்று ஸ்வ ஆச்சார்யர் பக்கலிலே பெரு நன்றி பாராட்டினார் ஆயிற்று-

———–

இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?–47-

எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க வேண்டியது கடைமை -அப்படிஇருக்க கில்லாதவர்கள் எங்கு வர்த்திக்கின்றார்களோ அங்கு நொடிப்பொழுதும் தங்கலாகாது -அப்படி தங்காமல் இருப்பவர்களுக்கே நாம் ஸகல வித கைங்கர்யங்களையும் செய்யத்தகும் அங்கனம் செய்யாதவர்கள் மானிடரே அல்லர் என்றே கொள்ளத்தக்கவர் என்கிறார் யாயிற்று-

——-

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

ஸ்ரீ ரெங்கநாதர் நமக்கு ஒரு பெரு நன்மை செய்து அருளி இருக்கின்றார் -அஃது என்ன வென்னில் எம்பெருமானார் பக்கலிலே விமுகராய் உள்ளவர்களை நெஞ்சால் நினையாமல் வாயால் சொல்லாமலும் தலையால் வணங்காமலும் கண்ணால் காணாமலும் இருக்கின்றோமே -இது தான் -கலியார் என்றது கோபத்தினாலகிய சொல் வடிவம் –

————

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே–49–

ஸம்ஸார பந்தம் அடியோடு வேர் அறுவதற்கு மூன்று உபாயங்கள் அருளிச் செய்கிறார் இதில் -எம்பெருமானாரைப் பணிதல் அவர் விஷயமான ப்ரபந்ந காயத்ரி என்ற ப்ரஸித்தமான நூற்றந்தாதியை சிந்தனை செய்தல் ஸ்ரீ ராமானுஜ பக்தர்களுடன் ஸஹ வாஸம் செய்தல் –

—-

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே–50-

தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்று திரு மழிசைப் பிரானும் -முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்று மேலே தாமும் பணித்த படியே காலத்தைப் போக்க வேண்டி இருக்க அநர்க்கமான காலத்தைப் பழுதே போக்கி அறிவு கெட்டு இந்த ஸம்ஸாரக் கடலிலே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து திரிகின்ற பாவிகளே ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்வாருக்கும் பெறுதற்கு அறியதான பரமபதத்தை எம்பெருமானார் ஒருவரே அளித்து அருள வல்லவர் என்பதை அறிந்து அவரது திருநாமத்தையே சிந்தித்து வாழ்ந்து போங்கோள் என்று அருளிச் செய்கிறார் –

————-

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே–51-

எம்பெருமானாரே -எம்பெருமான் என்று முதலாக உள்ளானோ அன்று முதலாகவே ஜீவாத்மாவும் உண்டு -இவ்வநாதி காலம் எல்லாம் இப்போது அளவும் பிரபல கருமத்தினால் வீணாகவே கழிந்து போயிற்று என்கிற அனுதாபமும் கூட இல்லாமல் இருக்கின்ற என் மனமானது தேவரீர் கிருபை செய்து அருளினது முதலாக இரவும் பகலும் இடைவிடாது அனுதாபம் கொள்ளா நின்றது –

———

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

சரம ஸமயத்தில் வாய்க்கக் கூடிய பரம லாபத்தை மநோ ரதிக்கிறார் இப்பாடத்தில் -காய்ச்சின பறவை யூர்நது பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் என்ற திருவாய் மொழியை அடி ஒற்றியவை முன்னடிகள் -நநு -வடச்சொல் -வாரா செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்த கால வினை எச்சம்-

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே crவல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே–53-

ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை -என்றும்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -என்றும் சொல்லுகிறபடியே மருத்துவர்கள் செய்யும் ஹிம்சைகள் போல் எம்பெருமான் செய்யும் ஹிம்சைகளும் ஹித புத்தியினாலேயே செய்யுமவை என்று சாஸ்த்ரார்த்தம் தெளிந்த இருந்தாலும் இந்த ஸம்ஸார மண்டலத்தில் படும் துக்கம் பொறுக்க ஒண்ணாமையாலே தாம் பதறுகிறபடியே விண்ணப்பம் செய்தார் யாயிற்று-

———–

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!–54-

மாதா பிதாக்களாயும் மற்றும் உண்டான உறவுகளாயும் இருந்து கொண்டு என்னை ரக்ஷித்து அருளா நின்ற ஸ்வாமியே -இரவு பகல் என்ற வாசி இல்லாமல் எப்போதும் என்னுடைய ஹிதம் ஒன்றையே சிந்திக்கிற மஹா உதாரரான எம்பெருமானாரே தேவரீருக்கு ஆட் பட்ட பின்பும் எவ்வளவு காலம் இந்தப் பொல்லாத தேஹத்தோடே இருந்து துன்பப்படுவேன் அந்தோ பரம காருணிகரான தேவரீர் இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் என்னை முக்தனாம்படி பண்ணி என்றைக்கு பரமபதத்தில் சேரச் செய்து அருள்வீர்-

————

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே
–55-

மா முனிகள் தம்முடைய பெருமைகளைத் தாமே வெளியிட்டு அருளும் பாசுரம் இது -ஆச்சார்யர் திருவருளால் பெற்ற பேற்றுகளை வாய் விட்டுப் பேசி வெளியிடுவது க்ருதஜ்ஜையின் பரிவாஹமே யாதலால் தற்புகழ்ச்சி அன்று -பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்புண்டரீகம் தம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் வரும் கேழ்பவர் உளரே -போன்று நம்மாழ்வாரும் அனுசந்தித்த கட்டளையே இதுவும்
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெறுகை யாவது -தம்மை அவ் வெம்பெருமான் ஆச்சார்யர் பதவியில் அமர்த்தித்த தான் ஸிஷ்யனாக இருந்தது -தேவனுறை திருப்பதியே -பாட பேதம் -மதுரகவி சொல் படியே நிலையாக பெற்றோம் என்கிற இதில் -உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் -என்று தொடங்கி அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் -தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசைப் பாடித் திரிவேனே போன்ற திட அத்யவசாயம் உடைமை சொல்லிற்று ஆயிற்று
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே-என்னும் இப்பேறு மிகவும் சாரமானது -முமுஷுப்படியில் இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –என்கிற இடத்தில் வியாக்யானத்தில் கீழ்ச் சொன்னவை எல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாய் இருபத்தொரு ஓன்று இறே இது -என்று மா முனிகள் தாமே அருளிச் செய்தது கொண்டு இப்பேற்றின் அருமை பெருமைகளை யுணரலாமே –

———-

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா–56-

ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம பர்வா நிஷ்டா நிரூபண ப்ரகரணத்தில் -ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – என்று அருளிச் செய்தபடியே தம்முடைய அத்யவசாயம் வாய்ந்து இருக்கிறபடியை முன்னடிகளாலே அருளிச் செய்தாராயிற்று-

———

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து–57-

பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்று அருளிச் செய்தது போல உள்ளது இப்பாசுரம்-

———

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?–58-

எமக்கு பரம உபகாரகரான திருமலை யாழ்வார் தேவரீருக்கும் அடியேனுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத உறவைத் தெளிவித்து அருளின நாள் முதலாக -மாதா பிதா யுவதயா இத்யாதி ஸ்லோகத்தின் படியே அடியேனுக்கு எல்லாவகையான உறவுமுறையும் தேவரீரே என்று திடமாகக் கொண்டேன் என்று அருளிச் செய்கிறார் யாயிற்று –

——

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து–59-

எம்பெருமான் பெரிய திருவடியின் மீது எழுந்து அருளி ஸேவை சாதித்தலும் இவ்வழக்கு உடம்பை விட்டு நீங்கப் பெறுவதும் என்றைக்கோ -என்று அருளிச் செய்கிறார்

———–

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-

இந்த ஆர்த்திப் ப்ரபந்தம் மா முனிகள் தமது சரம தசையில் அருளிச் செய்தது என்றும் திருமேனியில் நோவு சாத்தியிருந்தது தத் அஸஹிஷ்ணுதையாலே அருளிச் செய்தது என்றும் சிலர் சொல்லிப் போருவது தத்வம் அன்று –
நம்மாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை யாமுறைமை என்றும்
எண்ணாராத் துயர் விளைக்குமிவை என்ன உலகியற்கை –பணி கண்டாய் சாமாறே -என்றும்
இருள் தரும் மா ஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன் -என்றும்
இங்கனே பல பாசுரங்கள் அருளிச் செய்தது எப்படி ப்ரக்ருதி மண்டலத்திலே ஜிஹாஸையினாலோ அப்படியே தான் மணவாள மா முனிகளும் இப்பிரபந்தம் அருளிச் செய்தது -திருநாட்டுக்கு எழுந்து அருளுவதற்கு பல ஆண்டுகள் முன்னமே இத்தை அருளிச் செய்தார் இப்படி இவர் திரு நாடு செல்லப் பதறினாலும் எம்பெருமான் இவர் தம்மை இன்னமும் சிலகாலம் இவ்விபூதியிலே இருத்தி இவரைக் கொண்டு விலக்ஷண லோக உபகாரகங்கள் செய்விக்க வேணும் என்று கருதி முன்பு எம்பெருமானார்க்கு அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ என்று திவ்ய நியமனம் செய்து இவருக்கும் அங்கனமே திருவாணை இட அதனை ஒருமுகமாக அனுசந்தித்து உள்ளம் தேறி இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டி அருளினார் யாயிற்று

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி ப்ரபந்தம்–பாசுரங்களின் அவதாரிகை

July 12, 2023

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–

வம்பவிழ் தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம் புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்–பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்–அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே-வம்பவிழும் தாரான் -என்றும் –தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று

——–

முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-

———–

அடியிலே–தொழுது எழு மனனே -என்று அனுசந்தித்த ஸ்ரீ ஆழ்வார்
பஜன ஆலம்பனமான திரு நாமத்தை
இரண்டாம் திருவாய் மொழியிலே – வண் புகழ் நாரணன் -என்று வெளியிட்டால் போலே

இவரும்-இப் பாட்டில் அத்தோடு விகல்பிக்கலாம் படியான
ஸ்ரீ இராமானுசன் -என்கிற திரு நாமத்தை வெளி இடா நின்று கொண்டு

கீழில் பாட்டில்-
அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை
இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்
ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை
எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

இராமானுசாய நம வென்று சிந்தித்து
இரா மானுசரோடு இறைப் போழ்து -இரா மாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு—2-

—————

கீழ் இரண்டு பாட்டாலும்
வாழி -என்றும்
நம -என்றும்
அத்தலையில் அதிசயங்களை உப பாதித்துக் கொண்டு

இனி
இப் பாட்டு தொடங்கி –
மேல் எல்லாம் ஸ்வ அபேஷிதங்களை விண்ணப்பம் செய்கிறார் –

இதில்
அடியேனுக்கு சர்வவித பந்துவும்–தேவரீராய் இருக்க
ஏதன் நிஷ்டைக்கு விரோதியான இத் தேஹத்தை சேதித்து அருளாததற்கு ஹேது ஏது-என்கிறார்-

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம்
என் தனக்கு நீயே எதிராசா -இந்த நிலைக்கு
ஏராத இவ் வுடலை இன்றே அறுத்தருள
பாராதது என்னோ பகர்—-3-

——–

கீழே விரோதியாக அருளிச் செய்த தேஹம் தன்னையே
ஆத்மாவுக்கு சிறைக் கூடமாக அனுசந்தித்து –
தத் விமோசகரும் அவரே என்று அவர் பக்கலிலே அத்தை பிரார்த்தித்து அருளுகிறார் –

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யான் ஏகி
அந்தமில் பேரின்பத்துக்கு ஆளாகுவேன்-அந்தோ
இரங்காய் எதிராசா என்னை இனி உய்க்கை
பரம் காண் உனக்கு உணர்ந்து பார் –4-

————

கீழ்
உணர்ந்து பார் -என்கிற சம்பந்தம் தான் ஏது
நீர் அவர்ஜநீயர் ஆகைக்கு ஹேது ஏது என்று அவருக்குக் கருத்தாக
அத்தை நிதர்சன முகத்தாலே வெளியிடா நின்று கொண்டு
தேவர்க்கு அவர்ஜநீயன் – என்கிறார்-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு எதிராசா -உன் புதல்வன்
அன்றோ யான் உரையாய் யாதலால் உன் போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் —-5-

———-

உன் போகம் நன்றோ எனை ஒழிந்த நாள் என்று நம் பேரிலே பழி இடா நின்றீர் –
கால க்ரமத்திலே அதுக்கீடான பாகம் விளைந்தவாறே
அப்படியே செய்கிறோம் என்று திரு உள்ளக் கருத்தாக

அது அனுகூலர்க்கு அன்றோ அப்படியாம்
பிரதிகூலனான எனக்கு
அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை
தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் –ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா விவ் வுடலைத்
தீர்க்கவே யான வழி செய்—6-

———–

உம்முடைய தோஷத்தை ஏற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு பிராப்தி ஏது –
நீர் தான் ஸ்வ கார்யத்தில் அஜ்ஞராய் அசக்தராய் இருந்தீரோ என்ன

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்
ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

அன்னை குடி நீர் அருந்தி முலை யுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ–என்னே
எனக்கா எதிராசா வெல்லா நீ செய்தால்
உனக்கு அது தாழ்வோ வுரை—7-

———

கீழ்
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமம் அன்றிக்கே இருக்கிற ஸ்த நந்த்ய பிரஜையை
மாதா ரஷிக்குமா போலே
உம்மையும் ரஷிக்க வேணும் என்று -பிராப்தி சொல்லா நின்றீர் –

பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமராய்
சத் கர்மங்களின் உடைய நிவ்ருத்தியிலும்
அசத் கர்மங்களின் உடைய பிரவ்ருத்தியிலும் நிரதராய்
ஸ்வ -விநாசத்தை-விளைத்துக் கொள்ளுகிற உம்மை நம்மால் ரஷிக்கப் போமோ -என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு திரு உள்ளமாக கருதி

அப்படியானாலும் அடியேனைக் காத்து ரஷியாது போது தேவர்க்கே அவத்யமாம் -என்னுமத்தை
ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் கண்டு இருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் -நன்கு உணரில்
என்னாலே என்னாகும் எதிராசா
உன்னாலே யாம் உறவை யோர் —–8-

————

நோற்றேன் பல் பிறவி -என்கிறபடியே
நீர் நும்முடைய துஷ் கர்மத்தாலே
இஜ் ஜன்மமே அன்றிக்கே இன்னம் பல ஜன்மமும் எடுக்க வேண்டும்படியாய்
இப்படி கை கழிந்து இருக்கிற யுமக்கு
ஸ்ரீ எம்பெருமானாராலே செய்து தலைக் கட்டலாவதே -என்று பார்ஸ்வஸ்தருக்கு கருத்தாக

அப்படி யானாலும்
அடியேனுக்காக இன்னமும் அவதரித்து ரஷித்து அருளுவர் என்கிறார் –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —9-

————-

எம்பெருமானார் திருவடிகளை அகன்று அந்ய மனஸ்தராய் இருக்கையாலே
அன்றோ ஜென்மத்துக்கு அடியான கர்மம் புகுகிறது
இனி அந்தப் பிரசங்கம் இல்லாதபடி அவர் திருவடிகளை பொருந்தி வாழ்
என்று திரு உள்ளத்தை குறித்து அருளுகிறார்-

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் -தே மலர்தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் ——10-

————–

நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் வாழும் அவர்கள்
பேற்றைப் பெற வேணும் என்று அபேஷியா நின்றீர் –
அது நமக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ வடுக நம்பி போல்வாருக்கு அன்றோ சித்திப்பது
என்று திரு உள்ளக் கருத்தாக

அப்படியே த்வத்தந்ய தேவரான ஸ்ரீ வடுக நம்பி நிஷ்டையை அடியேனுக்கும் உண்டாக்கி
யாவதாத்மபாவி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி –தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந் நாளும்
உன் தனக்கே ஆட் கொள்ளு உகந்து—-11-

————-

நீர் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் நாம் செய்கைக்கு அடியான உறவு உண்டோ
என்று அவருக்குக் கருத்தாக உண்டு என்று
ஸ்ரீ பிள்ளை திருவடிகளிலே சம்பந்தம் பெற்ற பிரகாரத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார்-

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் ——12-

————–

தாம் நிர்பந்தித்த படிகள் எல்லாம் கொண்டருளும்படி ஸூலபரான ஸ்ரீ எம்பெருமானார் யுடைய
சௌந்தர்யாதிகளிலே தோற்றுத்
தாம் மங்களா சாசனம் பண்ணி

அவ்வளவில் நில்லாதே
சம்பந்த சம்பந்திகள் அளவும் சென்று அத்தாலே பெற்ற பேற்றை
அந்ய பரோக்தியாலே அருளிச் செய்கிறார் –

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று என்று ஏத்திச் -சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்—13-

———

தேசம் திகழும் -என்கிற பாட்டோடு இதுக்கு சங்கதி
நடுவில் பாட்டு -பிராசங்கிகம் –

உம்முடைய ஆச்சார்யர் நம் பக்கல் ஆஸ்ரயிப்பித்த அந்த ஆஸ்ரயணமே
உம்முடைய பேற்றுக்கு சாதனமாக சொல்லா நின்றீர்
அந்த ஆஸ்ரயண பலம் போருமோ –
ஏதேனும் பேற்றுக்கு உடலான அதிகார சம்பத்து உம் பக்கலிலே வேண்டாவோ என்று
மீளவும் ஸ்ரீ எம்பெருமானார்க்குத் திரு உள்ளக் கருத்தாக

அதுக்கு ஈடான அதிகாரம் யுண்டாகில் தேவரை அபேஷிக்க வேணுமோ –
அப்படிப் பட்ட யோக்யதை இல்லார்க்கு அன்றோ தேவரை அபேஷிக்க வேண்டுவது
ஆகையால் அதிகார ஸூந்யரான அகதிகளை தேவரீர் ரஷியா விடில்
வேறு புகல் உண்டோ என்கிறார் –

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-

————

ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்னும்படி பரம தார்மிகராய் இருக்கிற அவரை
அடுத்து அடுத்து பழி இடா நின்றோம்
நாம் அவர் திருவடிகளை ஸ ஸ்நேஹமாக அனுசந்தித்தால்
அவர் தாமே எல்லாம் செய்து அருளுவார் ஆகையாலே
தத் விஷய ஸ்நேஹம் தான் யுண்டோ என்று ஆனவளவும் பார்த்து
அது தமக்கு அத்யாபி இல்லை என்று விஷண்ணர் ஆகிறார்-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா யுரைக்கும் இத்தால் என் -அன்பு அவர் பால்
இப்போது அளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது யுன்டாவது இனி—–15-

————-

நம் பக்கல் ஆனுகூல்யமான பிரேம லேசமும் இல்லாவிடில்
பிராதிகூல்ய நிவ்ருத்தி தான் யுண்டோ -என்ன

அதுவும் இல்லை
அப்படிப்பட்ட அஜஞனான அடியேனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு
அருளுகிற தேவரீர் திருவடிகளை என்று தான் பிராபிப்பேன் – என்கிறார் –

ஆகாதது ஈது என்று அறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வனாதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
என்று உன்னடி சேர்வன் யான் —16-

————

கீழ்
நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் -என்று அபேஷித்த இவருக்கு
அப்படியே–மரணமானால் -என்று சரீர வியோக சமயத்திலே
பரம் தாமம் என்கிற திவம் தருகிறோம் -என்று
ஸ்ரீ எம்பெருமனார்க்கு கருத்தாக எண்ணி இப்படித் தருகிறோம் என்கிற தேவரீர்
கடுகச் செய்து அருளாமல் தாழ்க்கைக்கு ஹேது எது என்கிறார் –

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஓன்று
இல்லா எனக்கும் எதிராசா -நல்லார்கள்
நண்ணும் திரு நாட்டை நான் தருவன் என்று நீ
தண் என்று இருக்கிறது என் தான் –17-

———-

இவருடைய அபேஷிதத்தை அவரும் செய்வாராக-அனுமதி பண்ணி இருக்க
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது -என்கிறபடியே
க்ராம ப்ராப்தி பற்றாமல் ஊரெல்லாம் துஞ்சியில் அவஸ்தையை பிராப்தராய்
என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் -குன்றாமல்
இப்படியே இந்த வுயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு –18-

————

கீழ்
சம்சாரம் ஆகிற காள ராத்ரிக்கு அவதி கண்டு அருளிச் செய்ய வேணும் -என்றார் –
இதில் தத் கார்யமான தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்
தேவர்க்கு அவத்யாஹமம் அன்றோ என்கிறார் –

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது என் தேசுக்கு தீங்கு அன்றோ -நல்லார்கள்
தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ
எந்தை எதிராசா இசை —19-

——–

இவர் இப்படி
நல்லார்கள் தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ -என்றவாறே
நல்லார் பரவும் ராமானுசனான -ஸ்ரீ எம்பெருமானார் இவர் இங்கனே சொல்லப் பெறுமோ என்று
அத்தை சஹியாமல்
நல்லார்கள் நண்ணும் திரு நாட்டிலே நல்ல அமரரோடே ஒரு கோவையாக்கி
அவர்கள் அனுபவ கைங்கர்யத்தை இவருக்கு உண்டாக்க வேணும் என்கிற
அபிசந்தியை (திரு உள்ளத்தை ) யுடையராய் இருக்கிற ஆகாரத்தைக் கண்டு

இனி
பேறு தப்பாது -என்று அத்யவசித்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்திலே ஏறப் போய்
பரமாத்ம சத்கார பர்யந்த்மான பல பரம்பரைகளை எண்ணி
அத்தை தாம் பெற்றதாக ஹ்ருஷ்டர் ஆகிறார் –
(ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார் )

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே—-20-

————-

எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அப்ராப்யமாய் இருக்கும் பேற்றை
நீர் பெற்றதாக பேசா நின்றீர்
அது நமக்கு ஸூலபமாய் இருந்ததோ என்று தம் திரு உள்ளக் கருத்தாக

நம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை
நிர்ஹேதுகமாக வுபகரித்து அருளின ஜ்ஞானத்தைக் கொண்டு
அவனுடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசித்து இரு –

பெறுதற்கு அரிய பேற்றை ஸ்ரீ எம்பெருமானாரே பண்ணி அருளுவர் –
ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டு அவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி
யிரு மனமே அவர்க்காய் எதிராசர் எம்மைக் கடுகப்
பரம பதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே —21-

———–

என்ன பயம் நமக்கே -என்று நிர்பயரான இவர்
இதில்
அஸ்மத் குரு தாயாய தயதீந்தி ராங்கி க்ரியான்வய -என்கிறபடியே
ஸ்ரீ பிள்ளை யுடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸ்ரீ எம்பெருமானாருடைய அபிமான நாவா ரூடனாய்
சம்சார சாகரத்தைக் கடந்து ஸ்ரீ யபதியுடைய ஸ்ரீ பாத கூலத்தை பிராபிப்பேன் -என்று நிச்சயிக்கிறார் –

தீதற்ற ஞான திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தமபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே –22-

———–

கீழே இரண்டு பாட்டாலும்
ஸ்வ ஆச்சார்யகளான–பரம ஆச்சார்யகளான ஸ்ரீ பிள்ளை யுடையவும் ஸ்ரீ எம்பெருமானார் யுடையவும்
அபிமானத்தாலே பேறு தப்பாது என்று நிச்சயித்து
இப்படி நிச்சிதமான பின்பு
வடிவுடை மாதவன் -என்னும்படி
புதுக் கணிப்போடு சபரிகரனாய் -திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே திவ்ய மகிஷி பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான
ஸ்ரீ வைகுண்ட நாதனை கடுக அனுபவிக்கும்படி – எனக்கு நாதரான தேவர் பண்ணி யருள வேணும் – என்கிறார் –

அடியார்கள் குழாங்கள் அழகு ஓலக்கம் இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து
படி யாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒலி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வல வருகும் மற்றை
மண் மகளும் ஆய் மகளும் இட வருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை நல்கு எனக்கு எதிராசா —23-

———–

இதில் –
தேக விமோசகம் தொடங்கி-பலத்தின் எல்லையான
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற
பேற்றை அபேஷித்து அருளுகிறார் –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ் வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–24–

———-

நீரோ உம்முடைய அபராதம் பாராமல் கனத்த அப் பேற்றை அபேஷியா நின்றீர் –
அதுக்கு நாம் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அடியேனை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் வர அடியேனுடைய அபராதங்களையும் பொறுத்து
உபேஷியாதே மோஷத்தையும் கொடுப்பாராக எண்ணி இருக்கிற தேவர் கால விளம்பம் பண்ணாமல்
அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிர்ஹேதுகமாக வென்னை யபிமாநித்து
யானும் அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்று அளவும் அநவரதம் பிழையே
அடுத்து அடுத்துச் செய்து அனுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திரு நாடும் எனக்கு அருள வெண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் எதிராசா –25–

———-

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப் படுத்து விரைந்தே—-26-

———–

இவர்
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -என்ற அநந்தரம் -அவரும்
வானே தருவான் எனக்காய் –என்னும்படி
மோஷ பிரதானத்திலே சத்வராய் இருக்கிற படியை சாஷாத் கரித்து
இனி த்யாஜ்யமான இவ் விபூதியில் உண்டானது அடங்கலும்-அனுபாதேயமாய்
பிராப்யமான அவ் விவிபூதியில் உண்டானது அடங்கலும் உபாதேயமாய் அற்ற பின்பு
அவற்றின் விஸ்மரண அனுஸ்மரணங்களான க்ருத்ய அக்ருத்யங்களை
தமக்கு விதேயமான திரு உள்ளத்தைக் குறித்து விதித்து அருளுகிறார் –

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே
இரவு பகல் எதிராசர் எமக்கு இனி மேல் அருளும்
அவ் வுலகை யலர் மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் அதனை அவர்கள் அனுபவத்தை
இவ் வுயிரும் அதுக்கு இட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னுமத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ் வினையால் வந்த வுடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே—27-

————

செய்தது எல்லாம் செய்தும் இது நெடும் காலம் இல்லாத பிராப்ய ருசி இப்போது
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே உண்டாயிற்று என்று
அந்த லாபத்தைப் பேசி அனுபவிக்கிறார்

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவோன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28-

———–

இனி
தம்முடைய பிராப்தி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ பாஷ்யாதிகளான ஸ்ரீ ஸூக்திகளாலே பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளின
விஜய பரம்பரைகளைச் சொல்லி அத்தால் யுண்டான வீர ஸ்ரீக்கு மங்களா சாசனம்
பண்ணி அருளுகிறார் –

சாறுவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியர் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து அறமிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே—-29–

————

இனி
இதர நிரசனம் பண்ணி அருளின ஸ்ரமம் தீர ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ திருவாய் மொழி
முதலான பகவத் விஷயங்களை வ்யாக்யாநித்துக் கொண்டு எழுந்து அருளிய இருப்பு தமக்கு
ஆகர்ஷகமாய் இருக்கையாலே ஸ்ரீ பாதாதி கேசமாக அனுபவித்து இவை எல்லாம் தனித் தனியே
நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

சீராரும் எதிராசர் திரு வடிகள் வாழி
திரு வரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே–30-

———

அசக்ருதாவ்ருத்தி அபேஷா கார்யம் ஆகையாலே மீளவும் ஆதர அதிசயத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளினமைக்கும்
மற்றும் லோக உபகாரகங்களாக செய்து அருளினவை எல்லாவற்றுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார்

கீழ் பாட்டு விக்ரஹ பரம்
இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை யதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே —31-

———

கீழ்
நற் பெரும் பூதூர் அவதரித்தார் என்று பிரஸ்துதமான திரு வவதார திரு நஷத்ர வைபவத்தை
ப்ரீதியாலே பேசி அனுபவித்து அருளுகிறார்-

சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சது மறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கில்லை என்று மிகத் தளர் நாள்
மேதினி நஞ்சுமை யாறு மெனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மானிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும் பூதூர்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –32-

—————–

கீழே
ப்ராசங்கிகமாய் வந்த மங்களா சாசனத்திலே -மண்டி அனுபவித்து
ப்ரா சாங்கிகம் பரி சமாப்ய பிரகிருதம் அனுசரதி -என்கிறபடியே
மீளவும் பிரக்ருதத்திலே இறங்கி

சர்வ லோகத்தில் உண்டான சர்வ துரிதங்களும் போம்படி திரு வவதரித்து ரஷித்து அருளினால் போலே
அடியேனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி அடிமை கொண்ட ஸ்வாமி யானவரே

அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் யுண்டான தேக ஸ்திதி
தத் விமோசன காலாதி நியமங்களை எல்லாம் அறிந்து அருளும் சர்வஜ்ஞ்ஞரான தேவர்
அஜ்ஞ்ஞனான அடியேனை விலஷணமான தேசத்தில் ஆரோஹிப்பித்து அருள
திரு உள்ளமாகில் விஸ்மரித்து இருக்கிறதுக்கு ஹேது ஏது-என்று
அவர் தம்மையே கேட்கிறார்-

இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் யான் இருப்பேன்
இன்ன பொழுது உடம்பு விடும் இன்னபடி யது தான்
இன்ன விடத்தே எதுவும் என்னும் இவை எல்லாம்
எதிராசா நீ யறிதி யான் இவை யொன்று அறியேன்
என்னை இனி இவ் உடம்பை விடுவித்து உன் னருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினை வுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறது என் பேசாய்
பேதைமை தீர்த்து எனை யடிமை கொண்ட பெருமானே –33-

———

நமக்கு கிருபை யுண்டானாலும்-எத்தனை தயவான்களையும் நிர்க்ருணராம் படி பண்ணுவதான
உம்முடைய பிரபல பிரதி பந்தகங்கள் கிடந்தே என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு நினைவாக

சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் தேவர்க்கு விதேயன் அன்றோ –
ஆகையாலே த்வத் அனந்யனான நான் பாப பலன்களை புஜியாமல் முக்தனாம் படி பண்ண வேணும் -என்கிறார் –

முன்னை வினை பின்னை வினை பிராரத்தம் என்று
மூன்று வகையான வினைத் தொகை யனைத்தும் யானே
என்னை யடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா நீ இட்ட வழக்கன்றோ சொல்லாய்
உன்னை யல்லது அறியாத யான் இந்த வுடம்போடு
உழன்று வினைப்பயன் புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ
என்னுடைய விரு வினையை இறைப் பொழுதின் மாற்றி
ஏராரும் வைகுந்தத்து ஏற்றி விடாய் நீயே —–34-

————–

அடியேனுடைய சகல பிரதிபந்தகங்களைப் போக்கி ரஷித்து அருளுகையில் யத்னம் பண்ணி அருளுகிற தேவர்
கிருபையாலே நித்ய கைங்கர்யம் கொண்டு அருள சங்கல்ப்பித்து இருக்க
அத்தையும் அதிகரித்துப் -அதிகிரமித்து -போவதான என்னுடைய
ருசி விரோதியாய் இருக்கிற இந்த்ரிய வியாபார வஸ்யதைக்கு அடியான பாபங்களைப் போக்கி
த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை யபிமாநித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீ இருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன்
வல் வினையை மாற்றி யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத் தாழ்வானும் அவர் செல்வத்
திரு மகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளானது இத்தனையும் சேரவுள வென்னைத்
திருத்தி யுயக் கொள்ளும் வகை தேரும் எதிராசா—-35-

———-

மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன் வல் வினையை மாற்றி -என்ற பின்பு
அவை நடை யாடக் காண்கையாலே
அத்யந்த ஹேயமாய் இருக்கிற விஷய அனுபவ சுக வாஞ்சையானது
அடியேனுடைய மனசை பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது
அதுக்கு ஹேது வாசன கர்மங்கள் இன்னது என்று அறியேன் -என்கிறார்

வாசனையில் ஊற்றோமோ மாளாத வல்வினையோ
ஏது என்று அறியேன் எதிராசா -தீதாகும்
ஐம் புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து—36-

———–

நீர் இந்த்ரியங்கள் உடைய தோஷத்தை அனுசந்தித்து பதறுகிறீர்
நாம் தாமும் அவற்றின் கையில் காட்டிக் கொடோம் காணும்
இப்படி அஞ்சுகிற யும்மை சம்சாரத்திலே வைக்கிறது
ஆர்த்தி -அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்கியம் -என்கிறபடி

இத்தாலே நிறம் பெறுவதான ஆர்த்தி அதிகாரம் பிறக்கும் தனையும் காணும் ஆகையால்
அது பிறந்த பின்பு உம்முடைய அபேஷீதத்தை செய்து தலைக் கட்டுகிறோம் காணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு கருத்தாக

இவ்வளவாக இல்லாத அதிகாரம் இனி மேல் என்ன உண்டாகப் போகிறது
இந்த அதிகார சம்பத்தியும் உண்டாக்கி அபேஷித சம்விதானத்துக்கு விரோதியான பாப சமூஹத்தை சேதித்து
பிராப்ய தேசத்தை பிராப்பியாததுக்கு ஹேது ஏது என்கிறது-

இன்றளவும் இல்லாத வதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம் சொல்லாய் எதிராசா -குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்
தெனைக் கடுக வேற்றாதது என் —37-

————–

இன்று அளவும் இல்லாத அதிகாரம் -என்றத்தை
தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு
தத்தேது பூர்வமாக அத்தை அருளிச் செய்கிறார் –

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன்ன தாள் ஒழிந்த வற்றியே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —38-

————

நீர் –
உன் தாள் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று அவர்க்கு அந்யமாய்
அப்ராப்தங்களாய் இருக்குமவற்றையே பற்றினால்
விரசமாய் இருக்கிற யும்மை அவர் எப்படி அங்கீ கரிக்கப் புகுகிறார் என்று
பார்ஸ்வச்தர்க்கு அபிப்பிராயமாக ஆஸ்ரயண தசையில் குண ஹீநனாய்
அத்தாலே விரசனாய் இருக்கிற என்னுடைய தோஷத்தை போக்யமாக விரும்பி
அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார்
என்னை உபேஷித்து அருளார் என்றுமத்தை ஸ நிதர்சனமாக –அருளிச் செய்கிறார் —

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் பொகடாதே புசிக்கும் தன்மை போல் -தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழாரே எதிராசர்
அன்று அறிந்து அங்கீ கரிக்கையால்—-39-

————-

உம்முடைய தோஷம் பாராதே அங்கீ கரித்தோம் ஆகில்
மேல் உள்ளதும் நாமே க்ரமத்திலே செய்கிறோம் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
த்வத் அனுபவ யோக்யமான காலத்தை எல்லாம் வ்யர்த்தமே போக்கி அதுக்கு அசலான சம்சாரத்தில் இல்லாமல்
அனுபவத்துக்கு பாங்கான தேசத்தில் சேர்த்து அதுக்கு இடைச் சுவர் தள்ளிப் பொகட வேணும் என்கிறார்-

அவத்தே பொழுதை யடியேன் கழித்து இப்
பவத்தே இருக்குமது பண்போ -திவத்தே யான்
சேரும் வகை யருளாய் சீரார் எதிராசா
போரும் இனி இவ் வுடம்பைப் போக்கு–40-

———-

ஆனாலும் உம்முடைய தோஷ பூயஸ்வத்தைப் பாராதே அரும் தேவைகளைச் செய்யும்படி
சொல்லக் கூடும் இத்தனையோ-என்னில் –
அசத்ருச அபராதனான அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாக வரும்
அபராதங்கள் எல்லாம் பொறுத்து ரஷிக்குமவரான பின்பு
சகல ஜீவ லோக உஜ்ஜீவன அர்த்தமாக திரு வவதரித்த தேவர்
அதி சபலனான எனக்கு தயை பண்ணி ரஷிக்க வேணும் என்கிறார் –

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி –41-

———

இப்படி
ஆகிஞ்சன்ய-அநந்ய கதித்வங்களை ஆவிஷ் கரிக்கும் அதிகாரிகளைப் பெற்றோமே
என்று உகந்து எதிராச மா முனியான ஸ்ரீ எம்பெருமானார்
இவருக்கு-இனிப் பெற வேண்டும் பேறுகளை மனனம் பண்ணுவது
இவருடைய பிரேம ஸ்வபாவத்தைக் கடாஷித்துக் கொண்டு இருப்பதாக நிற்க –
அது பற்றாமல்
அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேலிட்டு அரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலமிட்டால்-பின்பவை தாம்
என்னை யடராமல் இரங்காய் எதிராசா
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ—42-

———

இரங்காய் எதிராசா -என்று அவரை வெறுக்கிறது என் –
பிராப்ய பூமியில் பிராவண்யமும்-த்யாஜ்ய பூமியில் ஜூஹுப்ஸ்யையும்
அதிகாரிக்கு அவசியம் அபேஷையாய் இருந்தது –
அவை இரண்டும் இல்லாத நமக்கு
அசத்ருசமமான தேசத்தை அவர் எப்படி தந்து அருளுவர் என்று அதில் நின்றும் நிரசராகிறார்

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசை இல்லை -இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திரு நாடு உகந்து —43-

———-

இந்த வுலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த வுலகில் போகை ஆசை இல்லை -என்று அனுசந்தித்தவர்
நம் அளவில் இதுவே இருந்தது –
இனி லௌகிகர் அளவு என் என்றவர்கள் இடத்திலே கண் வைக்க
அவர்கள் படி சாலத் தண்ணியதாய் இருந்தவாறே
இப்படி இருப்பது
இவர்கள் பாபங்களைச் செய்யும் பிரகாரம் என்றதுக்கு நொந்து அருளிச் செய்கிறார் –

மா காந்த நாரணர் வைகும் வகை அறிந்தோருக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயமற்று இருந்து
செய்வர் கடாம் பாவத்திறம்—44-

————-

கீழ்
மா காந்த நாரணர் வைகும் வகை -என்று வ்யாப்தியை பிரஸ்தாபித்து
இப்படி சர்வ வ்யாபகனான அவனோடு அநாதியாய் வருகிற சம்பந்தம் யுண்டாய் இருக்க
அத்தை அறியாதே
கீழ் சொன்ன மோஹாந்தரிலே-அந்ய தமராய் இருந்த நான்
ஆச்சார்ய சம்பந்தத்தால் அன்றோ உஜ்ஜீவித்தது என்று
ஸூவ லாபத்தை எப்போதும் அனுசந்தித்துப் போரு என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—45-

———-

கீழ் ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது –என்கிற
இத்தை விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் –

திருவாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மைக்
குருவாகி வந்து உய்யக் கொண்டு -பொருவில்
மதி தான் அளித்து அருளும் வாழ்வு அன்றோ நெஞ்சே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்—46-

———

ஸ்ரீ எதிராசர்க்கு ஆளானோம் யாம் -என்ற ப்ரீதி யுத்ததியாலே
கீழே
மா கந்த நாரணானார் -என்றும்
நாராயணன் திருமால் -என்றும் ப்ரஸ்துதமான ஸ்ரீ நாராயண சப்தத்தோடு விகல்பிக்கும் படியாக
அதில்
சதுரையாய் இருப்பதான ஸ்ரீ ராமானுஜ -என்கிற திரு நாம வைபவத்தை வெளி இட வேண்டி அத்தை
வ்யதிரேக முகத்தாலே வெளி இட்டு அருளுகிறார் –

இராமானுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்து
இரா மானுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதும்
இரா மானுசர் அவர்க்கு எல்லா வடிமையும் செய்ய வெண்ணி
இரா மானுசர் தம்மை மானுசராக என் கொல் எண்ணுவதே—–47-

———-

கீழ்
எல்லா அடிமையும் செய்ய எண்ணி
ஸ்ரீ இராமானுசாயா -என்கிற பிரசங்கத்திலே
தம்முடைய வாகாதி கரணங்களை இப்படியே அவர்கள் விஷயத்தில் அனந்யார்ஹமாம்படி
ஸ்ரீ பெரிய பெருமாள் பண்ணி யருளின படியை ப்ரீதியாலே பேசி அருளுகிறார் –

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை யொன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகு அளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை யரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

———–

எதிராசன் அடி நண்ணாதவரை எண்ணாது -இத்யாதியாலே
தமக்கு சம்சாரிகள் இடத்தில் யுண்டான வைமுக்யத்தை தர்சிப்பித்து மீள
அவர்கள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்ற மாட்டாதே
அவர்களுக்கு மோஷ உபாயமாக
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஆஸ்ரயணாதிகளை விதிக்கிறார் –

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நா நிலத்தீர்
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றுமவன்
அந்தாதி தன்னை யனுசந்திக்குமவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு முத்தி பின் சித்திக்குமே–49-

———-

அவர்கள் ஆஸ்ரயிக்கிறோம் என்று ஆறி இருக்க மீளவும் அவர்களைக் குறித்து
ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறீர்கள்
அவர் திரு நாமத்தை ஸ்மரிக்க அதி துர்பலமான பலம் சித்திக்கும் என்கிறார் –

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி யறி வின்மையால் இப்
பவத்தே யுழல்கின்ற பாவியர்கள் பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத வந்தத்
திவத்தே யும்மை வைக்கும் சிந்தியும் நீ எதிராசர் என்றே—50-

———-

இனி
சம்சாரிகள் இழவைத் தான் சொல்ல வேணுமோ –
உம்முடைய நிலை இருந்தபடி என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அவர்களோபாதி அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போய் இருக்க
அதன் இழவு இன்றிக்கே இருக்கிற எனக்கு தேவர் உடைய கிருபை யுண்டான பின்பு
தத் அலாபக் க்லேசம் யுன்டாய்த்து என்று ஸ்வ லாபத்தைப் பேசி அருளுகிறார்–இழவு -அலாப க்லேசம் –

என்றும் உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக் காலம் எல்லாம்
அன்று அளவாகப் பழுதே கழிந்தது இரு வினையால்
என்று இழவு இன்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தபிக்கும் எதிராசா நீ அருள் செய்த பின்னே –51-

———-

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற் கொண்டு -தனு விடும் போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

———–

இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு வந்து திரு முக பிரதானம்
பண்ணும்படியை அனுசந்தித்து
அதுக்கு இடைச் சுவராய் பாபஸ்பத தேகத்துடன் துஸ் சஹமான துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது
ஆகையால் ஹித பிரவர்த்தகரான தேவர் சகல துக்காஸ்பதமான சம்சாரத்தில் நின்றும்
அடியேனை சீக்கிரமாக உத்தரிப்பித்து அருள வேணும் -என்கிறார்

இதத்தாலே தென்னரங்கர் செய்கிறது என்று அறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆவோ வென்னும் இந்தப் பாவ வுடம்புடனே
பல நோவும் அனுபவித்து இப் பவத்து இருக்கப் போமோ
மதத்தாலே வல் வினையின் வழி யுழன்று திரிந்த
வல் வினையேன் தன்னை யுனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா என்னை
இனிக் கடுக இப் பவத்தின் நின்றும் எடுத்தருளே –53-

———-

இப்படி இவர் அபேஷித்த படியே
ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் அபேஷிதம் எல்லாம் செய்வாராக எண்ணி இருக்க
இவருக்கு அது பற்றாமல்-ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் மீளவும் அவர் தம்மைப் பார்த்து
சர்வவித பந்துவாய் இருக்கிற தேவர்
நான் இந்த தேஹத்தோடே இருந்து துக்கப் படாமல்
என்று தான் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே சேரும்படி ஏற்றி அருளுவது என்கிறார் –

இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே
இருந்து நோவு படக் கடவேனையோ
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே
என் னிதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே—–54-

———–

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

———-

ஸ்ரீ மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -என்று
தம்முடைய நிலையை வெளி இடா நின்று கொண்டு
அதுக்கு அனுரூபமாக அவர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அபேஷிககிறார்-

உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -அந்தோ
எதிராசா நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத் தாள் தா –56-

————

இப்படி நீர் சொல்லுகிற நிர்பந்தங்கள் எல்லாம் கேட்டு நாம் உம கார்யம் செய்கைக்கு
எந்த சம்பந்த பிராபல்யம் கொண்டு தொடருகிறீர்-என்ன
ஸ்ரீ பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே ஒரு வஸ்து என்று அபிமானித்து
அடியேனுடைய அபராதம் பாராத தேவர்
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீ மன் கிருபயா பரயா தவ -என்கிறபடியே
அடியேனுடைய முக்த ஜல்பிதத்தை செவி தாழ்த்து கேட்டு அருள வேணும் என்கிறார் –

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன் பகர்வைக் கேளும் பொறுத்து—57-

————–

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த்தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவராலே லப்த ஞானனான எனக்கு-த்வத் சம்பந்த ஞானம் இல்லையோ -என்கிறார்-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன் னருளால்
உன் தன உறவை உணர்த்திய பின் -இந்த யுயிர்க்கு
எல்லா வுறவும் நீ என்றே எதிராசா
நில்லாதது வுண்டோ என் நெஞ்சு —-58-

——–

இப்படி தேவர் திருவடிகளிலே சம்பந்த ஞானத்தை உடைய எனக்கு
ஹித பரரான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ பெரிய திருவடியை மேற்கொண்டு வந்து
முக தர்சனம் யுண்டாக்கி
தாமே மார்க்க சிந்தை பண்ணி
தேக விமோசனம் பண்ணும் கால அவதியை
அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த -சிந்தை செய்து இப்
பொல்லா வுடம்பு தனைப் போக்குவது எந் நாள் கொலோ
சொல்லாய் எதிராசா சூழ்ந்து —–59-

———

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்ம தன்றோ நெஞ்சமே நற் றாதை சொம் புதல்வர்
தம்ம தன்றோ தாய முறை தான் —60-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி ப்ரபந்தம்–

July 12, 2023

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–

மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே
பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை
வெளியிட்டுக் கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில்
பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

———–

வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள்
யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால்,
நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை
விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.

———–

ஆர்த்தி தான் சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும்–
பிராப்த விஷய அனுபவ அலாபத்தாலும்–பிறக்குமதாய் இறே இருப்பது –

அவை இரண்டும் ஆயத்து –
முந்நீர் ஞாலத்திலும்–அறுக்கும் வினையிலும்–ஆழ்வார் அருளிச் செய்தது –

அத்தைப் பற்றி இறே-வம்பவிழும் தாரான் -என்றும் –தேன் பயிலும் தாரான் -என்றும்–தனியன்களும் உண்டாயிற்று
——————

மெய் கொள் காண வேணும் -என்கிற அபி நிவேச அதிசயத்தால் மெய் வெளுத்து-தத் கார்யமான பிராப்தி தசையை பிராப்தராய்
இப்படி கரை புரண்ட ஆற்றாமையை யுடையராய் இருக்கிற தாம்-ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தாலே
தமக்குப் பிறந்த பரம பக்தி தசையைப் பேசி அனுபவித்து அருளுகிற முகத்தாலே-சரம பர்வ நிஷ்டராய் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே
பிராவண்யத்தை யுடையராய் இருக்கும் சரம அதிகாரிகள் எல்லாருக்கும் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி
இப் பிரபந்த முகேன அவற்றை வெளி இட்டு அருளுகிறார்

முடிந்த அவா -என்னும்படியும்-சொல்லும் படியான பரம பக்தியை பிராப்தராய்
அந்த தசையைப் பேசின பாசுரம் ஆகையாலே ஆர்த்தி -என்று இதுக்கு நிரூபக திரு நாமமே இருப்பது

தம் அபி நிவேசம் எல்லாம் தோற்ற –பராங்குச பாத பத்தாம் -என்றும்
சடகோபன் தேன் மலர் தாட்கே ஏய்ந்து இனிய பாதகமாம் எந்தை இராமானுசன் -என்றும்
முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சரம பர்வமே சரமாவதி என்று
இச் சரம அர்த்தத்தை =சரம காலத்தில் -சரம பிரபந்த ரூபேண இதிலே யாய்த்து வெளி இட்டு அருளிற்று –

அதில்
ஸ்ரீ யதிராஜ விம்சதி-ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்னா -என்று தொடங்கி
தஸ்மாத் அநந்ய சரணோ பவ தீதிமத்வா -என்று தலைக் கட்டுகையாலே-பிராபக பரமாய் இருக்கும்

இங்கு -வாழி எதிராசா -என்று தொடங்கி -இந்த அரங்கத்து இனிது இரு நீ -என்று தலைக் கட்டுகையாலே
இது பிராப்ய பரமாய் இருக்கும்

இவருக்கு இப்பிரபந்தத்தில் ஓடுகிற தசை தான் அநேக பாவ வ்ருத்திகளை யுடைத்தாய்
இது தான் ஒரு சந்தஸ்சில் அடங்காமல்-பல சந்தஸ் ஸூக்களிலும்-அவற்றை அருளிச் செய்கிறார் –

—————-

எப்படிப் பெரியாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே எம்பெருமான் விஷயத்திலும்
அவன் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடினாரோ,
அப்படி மணவாள மாமுனிகளும், எம்பெருமானார் விஷயத்திலும்
அவர் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடுகிறார்

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–1-

யார் எப்பொழுதும் “வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!” என்று
எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட எம்பெருமானார் அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுக்கு யார் மங்களாசாஸனம் பண்ணுகிறார்களோ,
அப்படிப்பட்ட (முன் சொன்ன) அடியார்களுடைய திருவடிகளில் யார் வணங்கி இருக்கிறார்களோ,
அவர்கள், நித்ய ஸூரிகளுக்குத் தலைவர்களாக விளங்குவார்கள்.

விண்ணோர் தலை –நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –அன்றிக்கே -அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

————-

நம்மாழ்வார் எப்படி திருவாய்மொழியின் முதல் பதிகத்தில் “தொழுதெழு என் மனனே” என்று சொல்லி,
தொழுகைக்கு விஷயமான எம்பெருமானைக் காட்டும் மந்த்ரத்தை அடுத்த பதிகத்தில்
“வண் புகழ் நாரணன்” என்று காட்டினாரோ, அதே போல,
மணவாள மாமுனிகளும், இப் பாட்டில் எம்பெருமானார் விஷயமான மந்த்ரத்தை வெளியிடுகிறார்.

இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு–2-

யாரெல்லாம் “ராமாநுஜாய நம:” என்று சிந்திக்காமல் உளரோ அவர்களோடு
ஒரு க்ஷணப் பொழுதும் பழகாமல் இருக்கப் பார்ப்பவர்களுடைய இரண்டு திருவடிகளில்
சேர்ந்திருப்பவர்களுடைய இரண்டு திருவடிகளை வணங்குபவர்கள்
நித்ய ஸூரிகளுக்கு எப்பொழுதும் இருக்கும் செல்வமாக இருப்பார்கள்.

கீழில் பாட்டில்–அந்வய முகத்தாலே சாதித்த அர்த்தத்தை-இதில் வ்யதிரேக முகத்தாலே வெளியிட்டு அருளி
இம் முகத்தாலும்-ஸ்ரீ எம்பெருமானார் வைபவத்தை-எல்லை நிலத்து அளவும் பேசி அனுபவித்து அருளுகிறார் —

——-

எம்பெருமானாரைப் பார்த்து “அடியேனுக்கு எல்லா உறவும் தேவரீராக இருக்க,
அந்த நிலைக்கு தடையாக இருக்கும் என் உடம்பை ஏன் இன்னம் அறுத்து அருள வில்லை?” என்கிறார்.

தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்–3-

எதிராசரே! தேவரீரே அடியேனைப் போன்றவர்களுக்குத்
தந்தை, அன்புடைய தாய், மனைவி, பிள்ளைகள் மற்றும் பெரிய செல்வம்.
இந்த நிலைக்குப் பொருந்தாத என்னுடைய இந்த உடம்பை இப்போதே அறுத்து அருளாதது
என்ன காரணத்தினாலேயோ? அதைச் சொல்லி அருள வேண்டும்.

சர்வஞ்ஞரான தேவரே அருளிச் செய்ய வேணும்
அது வருத்தமாய் இருந்ததோ –அதுக்கும் ஒரு கால் சிந்தனை செய்யும் அத்தனை அன்றோ உள்ளது –

நல் -என்கிற இத்தை எல்லாத்திலும் கூட்டிக் கொள்ளவுமாம்

—————–

கீழ்ப் பாசுரத்தில் விரோதியாகச் சொன்ன உடம்பையே தனக்கு (ஆத்மாவுக்கு) சிறைக் கூடமாக நினைத்து,
எம்பெருமானாரே தன்னை இந்தச் சிறையிலிருந்து விடுவிக்கக் கூடியவர் என்று கொண்டு
அதை அவரிடத்தில் ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்–4-

இந்த உடல் என்னும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எப்பொழுது அடியேன்
அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று முடிவு இல்லாத பேரின்பத்தை உடைய பரம பதத்துக்குள் இருக்கப் பெறுவேன்?
யதிகட்கு இறைவரே! கருணையைப் பொழிய வேண்டும்.
அடியேனை ரக்ஷிப்பது தேவரீருடைய பொறுப்பன்றோ? ஆலோசித்துப் பார்த்தருளவும்.

ஸ்ரீ ஈஸ்வரனும் கூட -ஷிபாமி -என்று கை விட்டவரை-சிறையான அடியேனை-இனி உஜ்ஜீவிப்பித்து ரஷிக்கை
பல்லுயிர்க்கும் வீடளிப்பான் அவதரித்த தேவர்க்கே பரம் காணும்-இவ்வர்த்தத்தை திரு உள்ளம் பற்றிப் பார்த்து அருளீர் –

————

எம்பெருமானாராலே தன்னைக் கை விட முடியாது என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு உணர்த்துகிறார்.

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-

தன்னுடைய பிள்ளை அருகில் இல்லாத போது தான் அனுபவிக்கும் செல்வம் முதலியவை தந்தைக்கு இன்பத்தைக் கொடுக்குமோ?
யதிகட்குத் தலைவரே! அடியேன் தேவரீரின் புத்ரன் அல்லவோ?
தேவரீரே இதைச் சொல்லி அருள வேண்டும்.
ஆகையாலே, அடியேனைப் பிரிந்து இருக்கும் நிலையில் தேவரீருடைய இன்பம் நன்றாக இருக்குமோ?
“அது இன்பமாக இருக்காது என்பதால் அடியேனையும் தேவரீரிடத்தில் அழைத்துக் கொள்ள வேண்டும்” என்று கருத்து

அடியேனும் தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –-இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்

——————-

தேவரீர் விஷயத்தில் அனுகூலமாய் இருப்பவர்களுக்கு தேவரீர் தக்க ஸமயத்தில் நன்மையைச் செய்யலாம்.
அடியேன் ப்ரதிகூலனாக இருப்பதால் மேலும் மேலும் தவறுகளே செய்வேன்.
ஆகையால் அதற்கு முன்பு என்னுடைய தேஹத்தைப் போக்கி யருள வேண்டும் என்கிறார்.

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ் வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்–6-

எப்படி வேப்ப மரம் முற்ற முற்ற, அதின் கசப்பு அதிகம் ஆகுமோ, அதே போல
க்ரூரமான கர்மங்களை உடைய நான், உடம்பு முற்ற முற்ற, மேலும் மேலும் தவறுகளையே செய்வேன்.
ஆகையால், யதிகளுக்கு நாதரானவரே! அடியேனுடைய ஸ்வரூபம் நிலைத்து இருப்பதற்காக,
தேவரீர் முற்பட்டுச் சிந்தித்து அடியேனுடைய இந்த உடலை முடிப்பதற்கான வழியைச் செய்தருள வேண்டும்.

ஆம் பரிசால் -ஸ்வரூப சத்தை  யுண்டாம் பிரகாரத்திலே-முற்கோலிச் சிந்தித்து –எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் –

பிரதிகூலனான எனக்கு அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

——————

உம்முடைய கார்யம் நாம் ஏன் பண்ண வேண்டும் என்று எம்பெருமானார் கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “பால் குடிக்கும் குழந்தை என்று தன் கார்யத்தைத் தானே செய்து கொள்ளுமோ
அன்று தான் தேவரீரையே நம்பி இருக்கும் அடியேனும் அடியேன் கார்யத்தைச் செய்து கொள்வேன்” என்கிறார்.

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-

தன் குழந்தையிடத்திலே மிகவும் அன்பு கொண்ட தாயானவள் அக்குழந்தைக்கு ஏதேனும் நோய் வந்தால்
தான் நீர் முதலியவற்றை அந்த நோயை வளர்க்காத விதத்தில் பருகி, தன்னால் ஊட்டப்படும் குழந்தையின் நோயைப் போக்காளோ?
என்ன ஆச்சர்யம்! அடியேனிடத்தில் தாயன்பு கொண்டிருக்கும் எதிராசரே!
அடியேன் பண்ண வேண்டிய அனுஷ்டானங்களை அடியேனுக்குப் பதிலாக தேவரீர் அனுஷ்டித்தால்
அடியேனுக்கு நன்மையை ஏற்படுத்தினால், அது தேவரீருக்குக் கெடுதலோ?-இதைத் தேவரீரே அருளிச் செய்யலாமே.

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்-ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

ஆச்சார்ய அபிமானம் ஆவது-இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்-இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான் ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

——————

எம்பெருமானார் “நாம் தாயைப் போலே உம்மை ரக்ஷிக்க வேண்டும் என்று சொன்னீர்.
ஆனால் நீரே நல்ல மற்று தீய செயல்களைச் செய்கிறீரே. நாம் எப்படி உம்மை ரக்ஷிப்பது?”
என்று கேட்பதாகக் கொண்டு, மணவாள மாமுனிகள் “அடியேனை தேவரீர் ரக்ஷிக்கவில்லை என்றால்
அது தேவரீருக்கே அவப் பெயரைக் கொடுக்கும்” என்கிறார்.

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்–8-

தாயானவள், தன்னுடைய குழந்தை பெரிய கிணற்றுக்கு அருகில் சேர்ந்து இருக்க,
அதைத் தடுக்காமல் இருந்தாள் என்பதையே தனக்கு அவப்பெயராகப் பெறுகின்றாள்.
எதிராசரே! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் பாபாமாகிற படுகுழியைக் கிட்டின என்னாலே
என்னுடைய நாசத்தை விளைத்துக் கொள்ளப்பட்டது என்றாலும் தேவரீரிடத்தில்
அடியேனுக்கு இருக்கும் ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்க்கவும்.

பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே-ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி-எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –

இத்தால்-சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –
இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால்
தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆயத்து இதுக்காகும் –

——————

அருகில் இருப்பவர்களுக்கு “நீர் பாபங்களே செய்து இன்னம் பல பிறவிகள் எடுக்கவேண்டும்படி இருந்தால்
எம்பெருமானாராலே என்ன செய்ய முடியும்” என்பது கருத்தாகக் கொண்டு
“அப்படியானாலும், அடியேனுக்காக அவரும் அவதாரம் செய்து அடியேனை ரக்ஷித்து அருளுவார்” என்கிறார்.

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா–9-

கிணற்றில் விழும் குழந்தையோடே குதித்து அவ்வாபத்தை நீக்கும் தாயைப்போலே
அடியேன் பண்ணிய பாபத்தாலே அடியேன் இன்னும் சில பிறவிகளை எடுத்தாலும் அடியேனுக்குத் தந்தையாகிய எதிராசர்,
அடியேனைக் கை தூக்கி விடுவதற்காக தாமும் அவதரித்து அருளுவார்.

நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக-எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –

உடைமைக்கு ஒரு முழுக்கு-உடையவனுக்கு உடமை பெறும் தனையும் -முழுக்க வேண்டி இறே இருப்பது –

—————

எம்பெருமானார் திருவடிகளை விட்டு விலகி, மனது வேறு விஷயங்களில் ஈடுபடுவதனாலேயே
கர்மமும் அதன் மூலம் ஜன்மமும் கிடைக்கிறது.
இனி அப்பேச்சுக்கே இடம் இல்லாதபடி அவர் திருவடிகளைப் பொருந்தி வாழ்
என்று தன் திருவுள்ளத்தைக் குறித்து அருளுகிறார்.

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்–10-

எனக்கு பவ்யமான நெஞ்சே!
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே–மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான
பெரிய பெருமாளுடைய-பூவார் கழல்களுக்கு –திருவடித் தாமரைகளுக்குப் பாதுகைகளாய்–
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்- அத்தாலே தாம் ஆனந்தப்படும் செல்வமான நம்மாழ்வாருடைய-

தேன் பெருகும் மலர் போன்ற திருவடிகளுக்குப் பொருந்திய, ப்ரியமான திருவடி நிலைகளாய்,
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி-அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்-
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி அடியேனுக்குத் தந்தையாய் இருக்கும்
ராமானுஜர் என்னும் எம்பெருமானாரைச் சரணடைந்து வாழ்.

இத்தால்-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும்-ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-

———–

எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர்
பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல,
மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி,
அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார்.

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-

எம்பெருமானாரே! தேவரீரைத் தவிர எம்பெருமானைக் கூட தெய்வமாக அறியாத,
பொருந்திய புகழை உடைய வடுகநம்பி யுடைய சரம பர்வ நிஷ்டையை தேவரீர் தந்தருளி
எக் காலத்திலும் தேவரீருக்கே அடியேனை அடிமையாகக் கொள்ள வேண்டும்.

எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே -தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து –

மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது-நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும் பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் -பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை வேணும் என்று கருத்து –

————————

எம்பெருமானார் “இப்படி நீர் சொல்வதைச் செய்வதற்கு நமக்குள் என்ன உறவு உள்ளது” என்று
கேட்பதாகக் கொண்டு தனக்குத் திருவாய்மொழிப் பிள்ளையுடன் உள்ள உறவை
எடுத்துரைக்கிறார் மணவாள மாமுனிகள்.

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்–12-

எம்பெருமானாரே!
எல்லா இடங்களிலும் ப்ரகாசிக்கும் வைபவத்தை உடையராய் திருவாய்மொழியில் உள்ள ஈடுபாட்டாலே
திருவாய்மொழிப் பிள்ளை என்றே அழைக்கப் படுபவரான, தன்னிடத்தில் தானே ஆசார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்கை
முதலான குற்றங்கள் இல்லாத திருமலை ஆழ்வார், தம்முடைய தயைக்குப் பாத்ரமான அடியேனை
“இவன் எப்படி மாறினால் உஜ்ஜீவனத்தை அடைவான்?” என்று ஆராய்ந்து
தேவரீர் திருவடிகளிலே சேர்த்தருளினாரோ, அவ்வழியிலேயே
தேவரீர் அடியேனை உஜ்ஜீவனம் அடையச் செய்ய வேண்டும்.

ஸ்ரீ சைல நாதன்-தம்முடைய தயா பாத்ரமான அடியேனை -கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து-பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்

அப்படியே தேவரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –

—————

தாம் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கக் கூடிய எம்பெருமானாருக்கு மங்களாசாஸனம் பண்ணி
அவர் திருவடிகளில் பரம்பரையாக ஸம்பந்தம் பெற்றவர்கள் பெறும் பேற்றை அருளிச் செய்கிறார்.

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்–13-

“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”, “யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக”,
“யதிராஜருக்கு மங்களம் உண்டாகுக” என்று பல முறை சொல்லி, ஸ்தோத்ரம் பண்ணி,
ஸாமர்த்யமாக வாழ்பவர்களுடைய திருவடிகளின் கீழே வாழ்பவர்கள்
ஆழ்வார்களுடைய அருளை முழுவதுமாகப் பெறுவர்கள்.

இத்தால்–இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி

முதல் பாட்டிலே-மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை-அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்

இதில்-அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை-அருளிச் செய்கிறார் –

—————————–

“தேசம் திகழும்” என்னும் பாசுரத்தோடு இப்பாசுரத்துக்குத் தொடர்பு.
நடுவில் வந்த பாசுரம், எம்பெருமானார் வைபவத்தை நினைத்து சொல்லப்பட்டது.
எம்பெருமானார் “திருவாய்மொழிப் பிள்ளை உம்மை நம்மிடத்திலே சேர்த்ததைச் சொன்னீர்.
நீர் அதற்கு மேலே எதுவும் அதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “அதிகாரம் இருந்தால் தேவரீரிடத்தில் வரவேண்டிய அவச்யம் இல்லையே என்கிறார்”.

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

எம்பெருமானாரே! ஞானம் மற்றும் அநுஷ்டானங்களில் பூர்த்தியோடு இருக்கும் அதிகாரம் இருந்தால்
பெரிய பெருமாளே தன் அருளைக் கொடுக்க மாட்டாரோ?
அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்காகத் தானே தேவரீர் அருள் புரிந்து ரக்ஷிக்க வேண்டுவது?
தேவரீரும் அதிகாரிகளுக்கே அருள் புரிவேன் என்று சொன்னால் அடியேனைப் போன்ற
அதிகாரமில்லாதவர்கள் என் செய்து உஜ்ஜீவனத்தை அடையப் போகிறோம்?

அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும் அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள் எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-

——————-

பரம தார்மிகரான எம்பெருமானாரை மீண்டும் மீண்டும் குற்றம் சொல்கிறோம்.
அவர் திருவடிகளை அன்போடு நினைத்தால் அவரே நமக்கு எல்லா நன்மைகளையும் செய்வார்.
இப்படியிருக்க, அவரிடத்திலே நமக்கு உண்மையான அன்பு இல்லையே என்று வருந்துகிறார்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர் பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?--15

“எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று சொல்லப்படும் இந்த வாசகத்தையே
அடியேனுடைய நாக்கு அன்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும்.
இதனால் என்ன பயன்?
இந்த க்ஷணம் வரை அவர் விஷயத்தில் ஒரு அன்பையும் என்னிடத்தில் பார்க்கவில்லை.
இது வரை வாராத அது இனி எப்பொழுது வர போகிறது?

ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –

அடியிலே-ஸ்ரீ இராமானுசாய நம -என்று உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்-வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )

————————

எம்பெருமானார் “நம்மிடத்தில் உமக்குச் சிறிதளவும் அன்பில்லை என்றாலும்,
விரோதமாகவாவது செய்யாமல் இருக்கிறீரோ?” என்று கேட்பதாகக் கொண்டு,
மணவாள மாமுனிகள் “அதுவும் இல்லை. அறிவிலியான அடியேனுடைய குற்றத்தை
போகமாகக் கொள்ளும் தேவரீர் திருவடிகளை என்று நான் அடைவேன்?” என்கிறார்.

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?–16-

யதிராஜரே! நல்லோர்களால் கைவிடப்படுபவன எது என்று நன்கறிந்தும்,
அதை மற்றவர்களுக்கு உபதேசித்தும்
அப்படிப்பட்ட செயல்களையே எப்பொழுதும் செய்வேன்.
இப்படி இருப்பதால், -மோகாந்தன் – மோஹத்தால் அந்தகன்-மயக்கத்தால் குருடன்-என்று
திருவுள்ளத்திலே கொண்டு, அடியேனைத் தள்ளி விட வேண்டாம்.
எப்போது அடியேன் தேவரீர் திருவடிகளை அடையக் கடவேன்?

இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர் ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-

—————————

கீழே “எப்பொழுது தேவரீரை அடைவேன்?” என்று கேட்ட இவருக்கு எம்பெருமானார்
“சரீர வியோகத்தில் கொடுக்கிறோம்” என்று சொன்னதாகக் கொண்டு
“உடனே கொடுக்காமல் காலம் தாழ்த்துவதன் காரணம் ஏதோ?” என்கிறார்.

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?–17-

யதிராஜரே! தீய செயல்கள் எல்லாவற்றையும் பதித்துக் கொண்டு,
நல்ல செயல்கள் ஒன்றும் இல்லாத அடியேனுக்கு,
ஸத் புருஷர்கள் அடையத் தகுந்த பரமபதத்தை நாமே தருகிறோம் என்று அருளிச்செய்த தேவரீர்
கால் தாமதம் செய்வதன் காரணம் என்ன?–உடனே தந்தருள வேண்டும் என்று கருத்து-

வேறு சிலர் ரஷகர் யுண்டோ–தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –-எத்தாலே தான் தாழ்க்கிறது-

அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு–சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-

———————

எம்பெருமானார் இவர் ஆசைப்பட்டதைச் செய்து தருவதாக இருக்க,
அது கிடைக்கும் வரை பொறுக்க முடியாமல், இந்த ஸம்ஸாரமாகிற இருட்டு
அடியேனுக்கு எப்போது முடியும் என்று அவரையே கேட்கிறார்.

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–18-

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே!
குறையாமல் இப்படியே இந்த ஆத்மாவுக்கு அறியாமை என்னும் இருட்டை விளைக்கும் இந்த ஸம்ஸாரமாகிற
காள ராத்ரியில் (கருப்பு இரவு) அகப்பட்டு வழி தெரியாமல் திகைக்கும் அடியேனுக்கு
எப்போது தேவரீரை அடைவதான நல் விடிவு ஏற்படும்?
இவ்விஷயத்தில் அடியேன் ஒன்றும் அறியாமல் இருக்கிறேன்.
எல்லாம் அறிந்த தேவரீர் இதற்கு ஒரு நல்ல விடிவை அருள வேண்டும்.

என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

—————–

எம்பெருமானாரின் கை பார்த்திருக்கும் தான் இப்படி உடம்புக்கு வசப்பட்டிருப்பது
அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்குகிறார்

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை–19-

அடியேனுக்குத் தந்தையான யதிராஜரே! இரவும் பகலும் அடியேன் இந்த உடம்பின் வழி
சென்று ஈடுபட்டிருப்பது தேவரீருடைய பெருமைக்கு ஒரு கேடன்றோ?
ப்ரஹ்ம ஞானத்தை உடைய நல்லார்கள் தங்கள் புதல்வர்கள் தாழ்ந்தவர்களுக்கு
தாழ்ந்த தொண்டுகளைச் செய்து கொண்டிருப்பதைப் பொறுப்பார்களோ?
இதைத் தேவரீரே அருளிச் செய்ய வேண்டும்

அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ

ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –

——————-

எம்பெருமானார் தனக்கு அர்ச்சிராதி கதியில் சென்று பரமபதத்தை அடையும் பேற்றைச்
செய்து கொடுக்க இருக்கிறார் என்பதை உணர்ந்து இனி நமக்குப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி,
அர்ச்சிராதி கதியில் போவது தொடங்கி பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வது முடிய
எல்லாவற்றையும் தாம் பெற்றதாக நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார்

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே–20-

கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-அவன் முன்னே வழி நடத்த பின்னே
பரம பதத்தை அடைவதை விடப் போகும் வழியே சிறந்தது என்று சொல்லும்படியான
அர்ச்சிராதி கதியில் போகும் இன்பம் எல்லாம் அனுபவித்து,
அம்ருத மயமான விரஜா நதியிலே நாம் நம்முடைய வருத்தம் எல்லாம் தீரும்படித் தீர்த்தமாடி,
எல்லா தோஷங்களும் நீங்கப் பெற்று, பரிசுத்தமான பரமபதத்தை அடைந்து,
குணங்களெல்லாம் திகழும், சுத்த ஸத்வ மயமான திவ்ய உடம்பைப் பெற்று,
நித்யஸூரிகள் எதிர் கொண்டு அழைத்து, ப்ரஹ்மாலங்காரத்தைப் பண்ணி
ஸத் காரங்கள் செய்து, அவர்களுடன் திரு மா மணி மண்டபத்திலே சென்று
ஸ்ரீ ய:பதியான ஸ்ரீமந்நாராயணன் தன் மடியிலே நம்மை வைத்து மகிழும் செல்வம்,
யதிராஜர் இதில் ஆசையுடைய நமக்கு அருளும் செல்வமே.

இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-

———————–

மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து
“நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு
அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு.
எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21-

மனமே! ஸ்ரீசைலேசர் என்னும் திருநாமத்தையுடைய திருவாய்மொழிப் பிள்ளை
தம்முடைய இயற்கையான கருணையாலே அருளும் ஞானத்தைக் கொண்டு,
இவரையே நம்மை ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பவராகக் கொண்டு, உறுதியோடு இரு!
நம் ஆசார்யருக்காக யதிராஜர் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்றிருக்கிற நம்மை
விரைவில் பரமபதத்தில் ஏற்றி அருளுவார்.-மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி
ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து

—————-

திருவாய் மொழிப் பிள்ளை யுடைய இயற்கையான கருணையால்,
எம்பெருமானாருடைய அபிமானத்தால் ஸம்ஸாரத்தைக் கடந்து
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவேன் என்கிறார்.

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே–22-

குற்றமற்ற ஆத்ம ஜ்ஞான குணங்களை யுடைய திருவாய் மொழிப் பிள்ளை யுடைய இயற்கையான கருணையாலே,
காமம் முதலிய தோஷங்களைப் போக்கும் யதிராஜருடைய அபிமானம் (கருணை) என்கிற கப்பலில் ஏறி
ஸம்ஸாரமாகிற பெருங்கடலைக் கடந்து குற்றங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கும்
ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகள் என்னும் கரையை அடைவேன்.

வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –

கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் – ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –

—————-

கீழ் இரண்டு பாசுரங்களில்
தம்முடைய ஆசார்யரான பிள்ளை, பரமாசார்யரான எம்பெருமானார் ஆகியோருடைய அபிமானத்தாலே
தமக்கு பேறு உறுதியாகக் கிட்டும் என்றவர், இப்படி-வடிவுடை மாதவன் -என்னும்படி புதுக் கணிப்போடு சபரிகரனாய் –
ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிமார்களோடு எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் நிலையை
விரைவில் அனுபவிக்கும்படி தேவரீர் பண்ணி யருள வேண்டும் என்று
எம்பெருமானாரிடம் ப்ரார்த்திக்கிறார்.

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!–23

அடியேனுக்கு நாதரான யதிராஜரே!
நித்யர்கள் முக்தர்கள் என்கிற –அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த-ஸ்ரீ கருட-ஸ்ரீ விஷ்வக்சேன-பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச-ஸ்ரீ பரகால-ஸ்ரீ யதிவராதிகள் தொடக்கமான முக்த வர்க்கமும்
மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே
சேவித்து இருக்கிற உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுக்கும் திரு மா மணி மண்டபத்திலே,
ஒப்பற்ற திவ்யமான படுக்கையாயிருக்கும் ஆதி சேஷனுடைய பணா மணிகளின் ஒளி வட்டத்துக்குள்ளே
மிக்க அழகையும் மென்மைத் தன்மையும் உடைய பெரிய பிராட்டியார் வலது பக்கத்திலும்,
அவளைப் போன்ற பூமிப் பிராட்டியும் நீளா தேவியும் இடது பக்கத்திலும் ஸேவித்திருக்க,
இவர்களுக்கு நடுவே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந் நாராயணனை, –
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற
வாழ் புகழ் நாரணனான ஸ்ரீ வைகுண்ட நாதனை கால விளம்பம் இன்றிக்கே
கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம் -வகையை அருள வேண்டும்.

———————-

இதில் தேஹத்தில் இருந்து விடுதலை பெறுவது தொடங்கி
பரமபதத்தில் அடியார் குழாங்களை அடைந்து
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற பேற்றைப் ப்ரார்த்திக்கிறார்.

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!--24-

அடியேனுக்கு நாதரான யதிராஜரே!
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற
இந்த ஸ்தூல சரீரத்தை உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –,
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய் -என்கிறபடியே
ஸூர்ய மண்டலத்தைக் கீண்டு அதற்கும் மேலே போய்,
இந்த ப்ரஹ்மாண்டத்தையும் கடந்து, நடுவிலுள்ள ஏழு ஆவரணங்களையும் கடந்து,
முடிவில்லாத மூல ப்ரக்ருதியைக் கடந்து, மிகவும் அழகாக இருக்கிற விரஜா நதியில் குளித்து,
அங்கே அமாநவனுடைய கர ஸ்பர்சத்தைப் பெற்று, ஒளிபடைத்த திவ்யமான தேஹத்தையும் பெற்று,
நித்ய ஸூரிகள் எதிர் கொண்டு வரவேற்று, பகவானை அலங்கரிப்பதைப் போலே அலங்கரித்து,
ஸ்தோத்ரம் பண்ணி, நல்ல வழியிலே சென்று, வைகுந்த மாநகரத்தை அடைந்து, உள்ளே சென்று,
திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி, நமக்கு ஸ்வாமிகளாகவும்
ஸ்ரீமந் நாராயணனுக்கு அடியார்களுமான குழாங்களுடன் கூடும் நாளானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ -என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற
அடியேனுக்கு அருகே ஏற்படும் வழியை நன்றாக ப்ரகாசிக்கும்படிச் செய்ய வேண்டும்.

————————

எம்பெருமானார் “நீரோ உம்முடைய அபராதத்தைப் பார்க்காமல் பெரிய பேற்றை ஆசைப்படுகிறீர்.
அதற்கு நாம் செய்வது என்?” என்று நினைப்பதாகக் கொண்டு, முதலில் இருந்து
அடியேனுடைய அபராதங்களைப் பொறுத்து, மோக்ஷத்தையும் கொடுக்கிறேன் என்று
எண்ணி யிருக்கும் தேவரீர், கால விளம்பம் பண்ணாமல்அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!–25-

யதிராஜரே! என்று ஒரு காரணமும் இல்லாமல் அடியேனை “இவன் நம்முடையவன்” என்று அபிமானித்து அருளி,
என்று அடியேனும் அந்தக் கருணையை அறிந்து தேவரீருக்கே அடிமையாய் இருக்கும்படி செய்தருளினீரோ,
அன்று முதல் இன்று வரை தவறுகளையே செய்து விட்டு, அத் தவறுகளுக்கு அனுதாபப்படுவது,
இனி மேல் செய்ய மாட்டேன் என்று தேவரீரிடத்தில் ப்ரார்த்திப்பது ஆகிற அடியேனுடைய
கொடும் செயல்களைக் கண்டும், அடியேனை இகழாமல், தேவரீர் திருவடிகளில் எப்போதும் கைங்கர்யம் கொண்டு அருளினீர்.
இவ்வளவோடு நிறுத்தாமல் இன்று அடியேனுக்கு சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான
ஸ்ரீ திரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு பிரசாதிப்பதாக இச்சித்து திருவுள்ளத்தில் நினைக்கிறீர்.
காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-

———————–

தம்மை ஒழிய வேறு யாரும் இவரை ரக்ஷிக்க முடியாது என்கிற எம்பெருமானாரின் திருவுள்ளக் கருத்தை
“தேவரீரே அடியேனை ரக்ஷித்து, அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் உண்டாக்கி,
ப்ராப்ய தேசத்தை அடையும்படிச் செய்ய வேண்டும்” என்கிறார்.

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே–26-

எம்பெருமானாரே! அடியேனுடைய அபராதங்களை மன்னிக்க, பெரிய பெருமாளுக்கு முடியுமோ?
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –
பெரிய பிராட்டியார் தொடக்கமான எம்பெருமானின் தேவிமார்களுக்கு முடியுமோ?
ஸேனை முதலியார் முதலான நித்யஸூரிகளுக்கு முடியுமோ?
நித்யமாயிருக்கும் திருக் கல்யாண குணங்களை உடைய நம்மாழ்வார்,
அடியார்கள் விஷயத்தில் அருள் புரியும் திருமங்கை ஆழ்வார் முதலானவர்களுக்கு முடியுமோ?
மற்றுமுண்டான நம் ஆசார்யர்களுக்கு முடியுமோ?
ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ
என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ள யாருக்கு முடியும்?
தேவரீரைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லாத அடியேனுக்கு,
தேவரீர் க்ருபையால் ருசியையும் உண்டாக்கி, மிகவும் ஒளி படைத்த பரமபதத்தில்
அடியேனை விரைவில் சேர்த்து அருள வேண்டும்.

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே-பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்-தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி-ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே–39- என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

——————

எம்பெருமானார் தனக்கு மோக்ஷத்தைக் கொடுப்பதில் ஆர்வத்துடன் இருப்பதைக் கண்ட மணவாள மாமுனிகள்
ஸம்ஸாரத்தில் எல்லாம் கைவிட வேண்டியதாகவும், பரமபதத்தில் எல்லாம் கைக்கொள்ள வேண்டியதாகவும்
ஆன பின்பு அவ்வவற்றை மறப்பது மற்றும் நினைப்பது ஆகியவற்றை தனக்கு அடங்கிய
மனதுக்கு அருளிச் செய்கிறார்.

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே–27-

நெஞ்சே! இந்த உலகத்தில் இனி ஒன்றையும் சிந்தியாதே, இரவும் பகலும் எம்பெருமானார்
நமக்கு அருளும் பரம பதத்தையும், மலர் மகளான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனான எம்பெருமான்
அங்கே திவ்ய ஸிம்ஹாஸனத்தில் இருக்கும் இருப்பையும், நித்யர்கள் மற்றும் முக்தர்கள் குழாங்களையும்,
அவர்கள் அனுபவத்தை அதற்காக இட்டுப் பிறந்தும் இந்த ஆத்மா இழந்து கிடந்தது என்பதையும்,
எக் காலமும் அந்த அனுபவத்துக்குத் தடையாய் இருக்கும் நம்முடைய க்ரூர கர்மங்களால் வந்த இந்த உடலில் இருந்து
விடுதலை பெறும் காலத்தையும், இந்த தேஹத்தை விட்ட பிறகு கிடைக்கும் பேரின்பத்தையும்,
இவை எல்லாவற்றையும் இடை விடாமல் சிந்தித்திரு.

இப்படி உக்தங்களாய்-ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-

அன்றிக்கே-உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –

இவ்வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு-மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற
அந்திம தசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-

——————

அநாதி காலமில்லாத ப்ராப்ய ருசி (பகவானை அடைவதில் உள்ள ருசி) இப்போது
எம்பெருமானார் க்ருபையால் உண்டானது என்று அந்த லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே–28–

முற்காலத்தில் ஆத்மாவை உஜ்ஜீவனம் அடையச் செய்வதிலே நோக்காக இருக்கும்
நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் இந்த உலகத்தில் இருப்போர் அனைவரும் உஜ்ஜீவனம்
அடைய வேண்டும் என்பதற்காக இவர்களிடத்தில் உள்ள அன்பினாலே அருளிச் செய்த
பல ப்ரபந்தங்களைப் பார்த்ததெல்லாம் எழுதி, அவற்றை ஆசார்யன் மூலமாகக் கற்று,
மற்றவர்களுக்கு அன்புடனே கற்பித்தும் காலத்தைப் போக்கினேன்;
மலர்மகளான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற
பரம பதத்துக்குப் போகவேண்டும் என்கிற நினைவு சிறிதும் இல்லாமல் இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி வாழ்ந்தேன்;
திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே–எட்டுத் திக்கில் உள்ளோரும்
ஸ்தோத்ரம் பண்ணும்படியான பெருமையை உடைய யதிராஜரின் க்ருபையாலே
சிறந்ததான பரம பதத்தைத் தவிர என் மனமானது வேறொன்றை இப்போது எண்ணாது.

தெரித்து எழுதி -வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63– இத்யாதிப் படியே–

இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –இவ்விடத்தில் ஏகாரம் தேற்றத்தில்

———————

தம்முடைய தடைகளைப் போக்கி எம்பெருமானை அடையும்படிச் செய்யும் எம்பெருமானார்,
ஸ்ரீபாஷ்யம் முதலான் க்ரந்தங்கள் மூலம் பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதத்தவர்களை ஜயித்து அருளினவற்றைச் சொல்லி,
அவருடைய வீரஸ்ரீக்கு மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகிய மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே–29-

கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்று சொல்லக்கூடிய சாருவாக மதத்தை பஸ்மமாகும்படிச் செய்து,
சமண மதம் என்கிற செடியை எரித்து,
சாக்கிய (பௌத்த) மதம் என்கிற கடலை வற்றிப்போகும்படிச் செய்து,
பெருத்திருந்த ஸாங்க்ய மதம் என்கிற மலையைத் தகர்த்து,
எதிர் வாதம் செய்யும் கணாத மதத்தவர்கள் [கணபதியை வழிபடுபவர்கள்] வாக்கை உடைத்தெறிந்து,
மிகவும் எதிரிட்டு வந்த பாசுபத மதத்தைச் சேர்ந்தவர்கள் சிதறி ஓடும்படி வாது செய்தார் யதிராஜர்;
பின்பு அவரே பெரிய பிதற்றலான ப்ரபாகர மதத்தோடு
பாட்ட மதத்தின் மேல் தன்னுடைய வெல்வதற்கரிய தர்க்க பாணங்களை விட்டார்;
பின்பு மாயா வாதியரை வென்று அதற்கு மேலே மிகவும் வாதித்து வரும் பாஸ்கர மதம்
என்கிற வேர்க் கொடிகள் நெருக்க அவற்றை வெட்டி வீழ்த்தினார்;
பின்பு மிகுத்திருந்த யாதவ ப்ரகாச மதத்தை அழித்த பெரிய வீரரான யதிராஜர்
எப்பொழுதும் வளர்ந்து வரும் மங்களத்தை உடையவராக வேண்டும்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம் நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

————-

இனி, இப்படி அனைத்து பாஹ்ய மற்றும் குத்ருஷ்டி மதங்களை ஜயித்த பிறகு,
எம்பெருமானார் பகவத் விஷயமான திருவாய்மொழிக்கு விளக்கங்கள் அளித்துக் கொண்டு இருப்பது
தம்மை மிகவும் ஈர்க்க, அவருடைய திருவடிகள் முதல் திருமுடிவரை அனுபவித்து
அவை நித்யமாகச் செல்ல வேண்டும் என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்.

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே–30-

திருக் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கும் யதிராஜருடைய திருவடித் தாமரைகள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
இடுப்பிலே சாற்றியிருக்கும் காஷாய வஸ்த்ரமானது எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
அழகு மிக்கிருக்கும் சிவந்த திருமேனி எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
திரு மார்பில் விளங்கிக் கொண்டிருக்கும் யஜ்ஞோபவீதம் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
பொருத்தமான மாலைகளாலே அலங்கரிக்கப்பட்ட இரண்டு திருத்தோள்கள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
எப்பொழுதும் சுருங்காத, தூய்மையான, சிறந்ததான முகத்தின் ஒளி
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்; அடியார்களை ரக்ஷிப்பதால் வரும் ஆனந்தத்தை
வெளியிடும் புன்முறுவல் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
அடியார்களின் அமலங்களைப் போக்கும் இரண்டு தாமரை போன்ற கண்கள்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
சிவந்த திருமேனியில் அணிந்திருக்கும் பன்னிரு திருநாமங்கள் அணிந்திருக்கும் அழகு
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்;
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத  ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே   நித்ய மங்களமாய்- சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்

——————

ஆசையின் மிகுதியாலே எம்பெருமானார் பண்ணிய உபகாரங்களுக்கு மீண்டும் மங்களாசாஸனம் செய்து அருளுகிறார்.

கீழ் பாட்டு விக்ரஹ பரம்-இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

பௌத்த, நையாயிக, வைசேஷிக, ஜைன, ஸாங்க்ய, யோக மதங்களாகிற ஆறு பாஹ்ய மதங்களான
செடிகளை அறுத்துத் தள்ளியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
கூட்டமாய் கூடி வருகிற வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லும் குத்ருஷ்டி மதத்தவர்கள்
முழுவதுமாகத் துறத்தியவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
இவற்றுக்குக் காரணமாய், நிறைந்து வருகிற கலியைச் சிறிதும் இல்லாதபடி போக்கடித்தவர்
எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
வேதத்தில் காட்டப்படும் எல்லா அர்த்தங்களையும் தன்னுடைய க்ரந்தங்களான
ஸ்ரீபாஷ்யம் முதலியவை மூலமாக அருளிச்செய்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ் வேதங்களை நன்கு வளர்த்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
அந்தத் தமிழ் ப்ரபந்தங்களுடைய தாத்பர்யமான சரணாகதி தர்மம் இவ்வுலகில் நன்கு பரவ-வளர்த்த இதத் தாய் -என்னும்படி
சிறந்ததான ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்தவர் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.
அழகு முதலியவைகளால் பூர்த்தியை யுடைய எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் எப்பொழுதும் மங்களத்துடன் இருக்க வேண்டும்.

அற மிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்

—————-

எம்பெருமானாரின் திருநக்ஷத்ர தினமான திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுகிறார்.

சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே–32-

சங்கரனின் மதம் (அத்வைதம்), பாஸ்கரனின் மதம் (பேதாபேதம்),
யாதவ ப்ரகாசனின் மதம் (பேதாபேதம்), குமாரில பட்டன் மற்றும் ப்ரபாகரனின் மதங்கள் (மீமாம்ஸா)
நாசம் அடைவதால், வாதம் செய்யும் அவ்வவ மதஸ்தர்கள் ஐயமின்றி நாசம் அடைவார்கள் என்று
நான்கு வேதங்களும் நன்றாக வளரும் நாள்.-கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று
க்ரூரமான கலியும் “இனி நம்மால் இங்கு ஆட்சி செய்ய முடியாது” என்று மிகவும் தளர்ந்து போகும் நாள்.
தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே-பூமியும் “நம் தலைச் சுமை கழியும்” என்று துக்கத்தை விட்டு நன்றாக ப்ரகாசிக்கும் நாள்.
திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் மற்றும் பூர்வாசார்யர்களுடைய் வாழ்வு நன்றாக முளைக்கும் நாள்.
பொருந்தி இருக்கும் அழகிய திருவரங்கம், திருமலை மற்றும் ஏனைய திவ்யதேசங்களும் ஆனந்தம் அடையும் நாள்.
இதெல்லாம் நடக்கும் நாள் எந்நாள் என்றால் சிவந்து அழகாய் இருக்கும் மீன்களையுடைய தடாகங்களால் சூழப்பட்டுள்ள
சிறந்ததாய் இருக்கும் ஸ்ரீபெரும்பூதூரை திருவவதார ஸ்தலமாக உடைய கைங்கர்ய ஸ்ரீயை உடைய
இளையாழ்வார் என்ற திருநாமத்தை உடைய எம்பெருமானார் வந்தருளிய நாளான திருவாதிரைத் திருநாளே.

இதுவும் ஒரு நாளே-ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே

ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

—————–

எம்பெருமானாருக்குச் சில பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்த பிறகு மீண்டும்
முன்பு சொன்ன விஷயத்தையே சொல்ல நினைத்து
“அடியேனுடைய நிலையை நன்கறிந்திருந்தும்
அடியேனைப் பரமபதத்தில் சேர்க்கத் திருவுள்ளம் பற்றியும்,
ஏன் காலம் தாமதம் செய்கிறீர்?” என்கிறார்.

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!–33-

யதிராஜரே! இன்னமும் எவ்வளவு காலம் கைவிட வேண்டிய இந்த தேஹத்தோடே
இதில் பொருத்தமற்றிருக்கிற அடியேன் இருப்பேன்?
எப்பொழுது இந்த தேஹம் கீழே விழும்?
அதுதான் எந்த விதத்திலே எந்த இடத்திலே நடக்கும்?
இவ்வாறு சொல்லப்படும் விஷயங்களையெல்லாம் தேவரீர் அறிவீர்.
அஜ்ஞனான அடியேன் இவை ஒன்றும் அறியேன்.
ஆன பின்பு, இப்படி அடியேனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி அடியேனை அடிமை கொண்ட பெருமானே!
இனி, இவ் வுலகில் பொருத்தமற்றிருக்கிற அடியேனை தேவரீர் க்ருபையாலே விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -என்கிறபடியே
இவ் வுடம்பிலிருந்து விடுவித்து அழகு மிகுந்த பரமபதத்திலே ஏற்றத் திருவுள்ளமாகில்,
பின் விரைந்து செய்யாமல் மறந்திருப்பதற்குக் காரணம் என்ன?
அதை அருளிச் செய்ய வேண்டும்.

——————-

எம்பெருமானார் “நாம் உமக்கு உதவ நினைத்தாலும் உம்முடைய பாபங்கள் கிடக்க நாம் எப்படிச் செய்வது”
என்று நினைப்பதாகக் கொண்டு, “எல்லாப் பாபங்களையும் போக்கக் கூடிய எம்பெருமானே
தேவரீருக்கு அடங்கி இருப்பதால், தேவரீரையே எல்லாமாகக் கொண்டிருக்கும் அடியேனை
முக்தனாக ஆக்க வேண்டும்” என்கிறார்.

முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே–34-

யதிராஜரே!
பூர்வாகம் (சரணாகதிக்கு முன்பு பண்ணிய கர்மங்கள்),
உத்தராகம் (சரணாகதிக்குப் பின்பு பண்ணும் கர்மங்கள்),
ப்ராரப்தம் (பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மங்கள்) என்று சொல்லப்படும்
மூன்று வகையான கர்மங்களின் கூட்டங்கள் எல்லாவற்றையும்
ஸர்வஜ்ஞத்வம், ஸர்வசக்தித்வம் போன்ற குணங்களை உடைய நானே
வாத்ஸல்யம் போன்ற குணங்கள் நிறைந்த என்னையே தஞ்சம் என்று பற்றியவர்களுக்கு கழிப்பேன்
என்று அருளிச் செய்த ஸ்ரீரங்கநாதனான பெரிய பெருமாள் தேவரீர் இட்ட வழக்கன்றோ?
இப்படிப்பட்ட தேவரீரை அல்லது வேறொரு ரக்ஷகரை அறியாத அடியேன் இந்த உடம்போடு பொருந்தி இருந்து
இவ்வுடம்பின் பலனான கர்ம பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று கட்டாயமோ?
தேவரீரே அடியேனுடைய கர்ம பலன்களை –கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -என்கிறபடியே-
க்ஷண காலத்தில் போக்கி அழகு நிறைந்துள்ள ஸ்ரீ வைகுந்தத்தில் ஏற்றி விட்டு அருள வேண்டும்.

——————

அடியேனை ரக்ஷிக்க முயலும் தேவரீர் அடியேனுக்கு நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்க நினைக்க,
அதையும் மீறி அடியேன் செய்யும் பாபங்களைப் போக்கி தேவரீரையே-த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி 
நினைக்கும்படிப் பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!–35–

யதிராஜரே! அருளாலே அடியேன் விஷயத்தில் கருணையைக் காட்டி, நிரந்தரமாக
நித்ய கைங்கர்யம் கொண்டருளுவதாக தேவரீர் இருக்க,
அதை அறிய விடாத அஜ்ஞானத்தாலே புலன்களுடைய விஷயமான இன்பங்களை ஆசைப்படுகிற
அடியேனுடைய வலிமை பொருந்திய கர்மங்களை மாற்றி தேவரீர் விஷயத்தில் மனதை வைக்கும்படிப் பண்ணி யருள வேண்டும்.
ஞானம் நிறைந்திருக்கும் ஸ்ரீ கூரத்தாழ்வானும், அவர் திருக் குமாரராக இருக்கும் செல்வத்தை யுடைய பராசர பட்டரும்
தங்கள் விஷயத்தில் தாழ்வுகளாகச் சொல்லிக் கொண்ட பாபக் கூட்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர
உண்டான அடியேனை நன்றாகத் திருத்தி உஜ்ஜீவனம் அடைவிக்கும் வழியை தேவரீரே சிந்தித்தருளும்.

இந்தரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வநிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியானதேவர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்

———————-

உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார்.

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து–36–

யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி-ஐம்புலன்களுக்கு விஷயமான
உலக இன்பங்களில் ஆசையானது பலாத்காரத்தோடே என் மனதின் மேலே வந்து விழுந்து மூடுகிறது.
என்னை அந்த இன்பங்களில் தள்ளுகிறது.
இதற்குக் காரணம் அநாதி பாப வாஸனையில் இருக்கும் உறுதியான பிடிப்போ அல்லது
அனுபவித்தோ அல்லது  ப்ராயச்சித்தம் பண்ணியோ தீராத
வலிமையான என்னுடைய பாபங்களோ அறியேன்.

அருளாலே–வாசனை–என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –

——————

எம்பெருமானார் “உம்முடைய கஷ்டம் எமக்குப் புரிகிறது; உம்முடைய பக்தியை வளர்த்து-உமக்கு அதிகாரத்தை ஏற்படுத்தி-
ஆர்த்தி -அதிகார பூர்த்தி உண்டாக்கி உமக்கு பேற்றைக் கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு
“இப்பொழுதில்லாத அதிகாரம் எப்பொழுது ஏற்படப் போகிறது.
ஆகையால் அந்த அதிகாரம் ஏற்படுவதுற்குத் தடையானவற்றை அழித்து
அடியேனுக்கு பேற்றைக் கொடுக்காமல் இருப்பது ஏன்?” என்கிறார்.

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?–37-

யதிராஜரே! இதுவரை இல்லாத அதிகாரம் இனிமேல் அடியேனுக்கு எப்பொழுது உண்டாகும்?
இதை தேவரீரே அருளிச்செய்ய வேண்டும்.-தொன் மா வல்வினைத் தொடர் -என்னும்படியான
எத்தாலும் அழியாமல் இருக்கும் பாபக் கூட்டங்களின் தொடர்ச்சியை வெட்டி விட்டு,-மேலை வைகுந்தத்து இருத்தும் -என்கிறபடி
மிக உயர்ந்ததான பரம பதத்தில் அடியேனை உடனே ஏற்றாமல் இருப்பதற்கு என்ன காரணமோ?

——————

தர்க்க ரீதியாக தனக்கு அதிகாரம் ஏற்படாது என்பதை தார்கிக லௌகிக சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு  உரைக்கிறார்.

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்–38-

யதிராஜரே! தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருக்கும் அடியேனது மனதானது அடியேனுக்குத் தகுந்த
தலைவரான தேவரீருடைய மிக இனிமையான திருவடித் தாமரைகளுக்கு வெளிப்பட்டிருக்கும் விஷயங்களையே
மகிழ்ந்து அனுபவிக்க, அதற்கு மேலே “இப்பொழுதும் இப்படித் தகாத விஷயங்களை விரும்புகிறதே” என்கிற
பச்சாதாபமும் இல்லாமல் இருப்பதினாலே, உலகில் சொல்லப்படும்
“ஞானம் துளிர்க்கும் ஐந்து வயதில் அறியாதவர்கள் ஐம்பது வயதிலும் அறியமாட்டார்கள்” என்கிற
வார்த்தை என் விஷயமாகவே சொல்லப்பட்டதோ?–

நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ -எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்-இப்படி யோஜிக்கக் கடவது –

—————-

அருகிலிருப்பவர்களுக்கு “நீர் எம்பெருமானார் திருவடிகளுக்கு வெளிப்பட்ட விஷயத்தையே விரும்பினீர் என்றால்
அவர் எப்படி உம்மைக் கைக் கொள்வார்?” என்று கருத்தாக
“அவரைத் தஞ்சம் என்று பற்றும் போது தோஷங்களோடு இருந்த அடியேனை விரும்பி ஏற்றுக் கொண்டவர்
அடியேனைக் கை விட மாட்டார்” என்று  ஸ நிதர்சனமாக -மணவாள மாமுனிகள் அருளுகிறார்.

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்–39-

வேப்பிலையைக் கறியமுதாக விரும்புமவர்கள் அது கசக்கிறது என்று தள்ளாமல் உண்கிற ஸ்வபாவம் போலே,
எம்பெருமானார் அடியேனை ஏற்றுக் கொண்ட ஸமயத்தில் “இவன் துஷ்டன்” என்று ஆராய்ந்து
அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அடியேனை ஏற்றுக் கொண்டார்.
ஆகையாலே அவர் அடியேனைக் கை விடார்.

நத்யஜேயம் -என்னும்படி இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-

——————

எம்பெருமானார் “உம்மை தோஷத்துடனே ஏற்றுக் கொண்ட நாம், தக்க காலத்தில் உமக்குப் பேற்றைச் செய்து
கொடுக்கிறோம்” என்பதாகக் கொண்டு, “அக்காலம் வரை அடியேனுடைய பொழுதை வீணாகக் கழிப்பேன்,
ஆகையால் உடனே அடியேனைப் பரம பதத்தில் சேர்த்தருள வேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறார்.

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு–40-

திருக் கல்யாண குணங்களால் நிறைந்த யதிராஜரே!
தேவரீருக்கு அடியவனான நான் தேவரீர் அனுபவ கைங்கர்யங்களுக்கு ஏற்பட்ட பொழுதை வீணாகப் போக்கி
இந்த ஸம்ஸாரத்தில் பொருந்தி இருப்பது தேவரீரின் கருணைத் தன்மைக்குப் பொருத்தமானதோ?
அடியேன் பரம பதத்தை அடையும் வகைய க்ருபை செய்தருள வேண்டும்!
ஸம்ஸாரத்தில் கஷ்டப்பட்டது போதும். இனி, இவ்வுடம்பைப் போக்கி யருள வேண்டும்.

பகவத் ஸ்வரூப திரோதா நகரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –

பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப் பவத்தோடே இருக்குமது பண்போ -என்று கீழோடு கூட்டவுமாம் –

—————-

எம்பெருமானார் “உம்முடைய தோஷத்தைப் பார்க்காமல் நாம் எப்படி ரக்ஷிப்பது” என்பதாகக் கொண்டு,
“உலகம் எல்லாம் வாழப் பிறந்தவறான தேவரீர் அடியேனைக் கருணையோடே ரக்ஷிக்க வேண்டும்” என்கிறார்.

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி–41-

யதிராஜரே! நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-அடியேனைப் போலே தவறு செய்பவர்கள் இந்த உலகம் எங்கும் தேடினால் கிடைப்பார்களோ?
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே-தேவரீரைப்போலே மற்றவர் தவறுகளைப் பொறுத்துக்கொள்பவர் உபய விபூதியிலும் உண்டோ?
எல்லா உலகங்களும் உஜ்ஜீவித்து வாழ்வதற்கு அவதரித்தருளின வணங்கத் தகுந்த மஹா முனிவரே!
சபலானாயிருக்கும் அடியேனுக்குக் கருணையைக் காட்ட வேண்டும்.

——————

எம்பெருமானார் இவருடைய தன்மைகளைக் கண்டு இவருக்குப் பேற்றை அளிப்பதாக நினைத்து
இவரை ஆசையோடே கடாக்ஷிக்க அதைக் கண்டு இவ்வுலகில் தான் படும்
துன்பங்களை அறிவித்துத் தனக்கு விரைவில் பேறு வேண்டும் என்கிறார்.

அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பயக்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?–42-

யதிராஜரே! கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே=ஐம்புலன்கள் என்னை ஆக்ரமித்துத் துன்புறுத்தும் போது தேவரீரின் அடியவனான நான்
தேவரீருடைய திருவடிகளை நினைத்து “ராமானுசரே!” என்று ஓலமிட்டால் அதற்குப் பிறகு
அவை என்னைத் துன்புறுத்தாமல் க்ருபை செய்து அருள வேண்டும்!
தேவரீரைத் தவிர அடியேனுக்கு வேறு ரக்ஷகர் உண்டோ?

உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –

—————–

எம்பெருமானார் கருணை காட்டவில்லை என்று நினைத்து என்ன பயன்,
பரமபதத்தில் ஆசையும் இவ்வுலகில் வெறுப்பும் இருந்தால் தானே அவர் அதைத் தந்தருள்வார்.
நமக்கு அவை இல்லா விடுகிறார்.

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து–43–

கொடு வுலகம் காட்டேல் -என்னும்படியான இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படிப்பட்ட நமக்குத் தந்தையான யதிராஜர் ஒப்பில்லாத வைபவத்தையுடைய பரம பதத்தை எப்படி மகிழ்ந்து அளிப்பார்?

—————-

தன்னிலையை யோஜித்த பிறகு, உலகத்தவர்களைப் பார்க்க, அவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாக இருக்க,
இவர்கள் பாபத்தினாலேயே இப்படி இருக்கிறார்கள் என்று நொந் கொள்கிறார்

மாகாந்த நாரணனார் வைகும் வகை யறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்–44-

நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே

செல்வ நாரணன் -என்கிறபடியே-ஸ்ரீ லக்ஷ்மீ வல்லபனான ஸர்வேஸ்வரன் ஸ்ரீமந் நாராயணன் எல்லா உலகங்களையும் வ்யாபித்திருக்கும்
என்பதை அறிந்தோர்க்குத் தனிமையும் இல்லை இருட்டும் இல்லை;
மோஹத்துக்கு வசப்பட்டிருப்பவர்கள் இவ்விடம் தனிமையாக உள்ளது,
இவ்விடம் இருட்டாக இருக்கிறது என்று கொண்டு, அறிவிலிகளாக இருந்து கொண்டு,
பயம் இல்லாமல் பாபக் கூட்டங்களைச் செய்வார்கள்..

வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப் பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-

—————–

தம் நெஞ்சைக் குறித்து “அஜ்ஞரான நாமும் ஆசார்ய ஸம்பந்தத்தினாலே அன்றோ நம் உஜ்ஜீவனத்தைப் பெற்றது;
ஆகையால் எப்பொழுதும் அதையே சிந்தித்திரு” என்று அருளிச் செய்கிறார்.

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு–45-

நெஞ்சே! “ஸ்ரீ ய:பதியான நாராயணன் ஆத்மாக்களை உடையவன்; நாம் நார சப்தத்துக்குள் அடக்கம்” என்கிற
இந்த ஸம்பந்தத்தை ஆராய்ந்து பார்த்தால் இது அநாதி யன்றோ?-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே-
(ஆரம்பம் அற்றது – எப்பொழுதும் இருப்பது). “இந்த ஸம்பந்தத்தை நமக்கு உணர்த்திய ஆசார்யனாலே
யன்றோ நாம் உஜ்ஜீவனத்தைப் பெறுகிறோம்?” என்று –பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே-எப்பொழுதும் வெட்கம், கர்வம் இவற்றை விட்டு நன்றாக நினைத்துக் கொண்டு இரு.

—————–

கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-

நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே திருவாய்மொழிப் பிள்ளை
என்ற திருநாமத்தைப் பெற்றவர் ஆசார்யராக எழுந்தருளியிருந்து கொடுவினைகளை உடைய
நம்மைத் தேடி வந்து நாம் உஜ்ஜீவனத்தைப் பெறும்படி நம்மை ஏற்றுக்கொண்டு ஒப்பற்றதான ஞானத்தைத்
தாம் அளித்தருளிய செல்வத்தாலன்றோ நம் யதிராஜருக்கு அடிமை யானோம்?

சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ

பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –

(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )

————————–

“நாராயண” என்ற திருநாமத்துக்கு ஸமமான வைபவம் கொண்ட “ராமானுஜ” என்ற
திரு நாமத்தின் வைபவத்தை எதிர் மறையான பொருள் கொண்டு விளக்குகிறார்.

இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?–47-

ராமானுஜர் விஷயத்தில் “நம:” என்று இரவும் பகலும் நினைத்து இராத மனுஷ்யர்களுடைய இருப்பிடத்தில்
க்ஷண காலமும் வாழாத ஆழ்வான் போன்ற பெரியோர்களுக்கு எல்லா விதமான கைங்கர்யங்களையும்
செய்ய எண்ணி அவற்றைச் செய்யாமல் இருக்கிற அறிவற்ற மனுஷ்யர்களை எப்படி மனுஷ்யர்களாக எண்ணுவது?

சாஸ்திர வச்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு-எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் -என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை-மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் -என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது-பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –

—————–

தம்முடைய வாக்கு, மனம், காயம் ஆகிய மூன்று கரணங்களையும் இப்படி இராமானுசனடியார்கள்
விஷயத்தில் பெரிய பெருமாள் ஆக்கியருளினபடியை நினைத்து மகிழ்கிறார்.

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே-கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் துன்பப்படாதபடி உலகத்தை ரக்ஷித்தவரான் எம்பெருமானாருடைய
திருவடிகளை அடையாதவர்களை அடியேனுடைய நெஞ்சானது நினைக்காது; நாக்கானது கொண்டாடாது;
தலையானது வணங்காது; கண்களானவை இவை எதையும் காணாது;
இப்படி இருக்கும்படி இக்கரணங்களை நமக்களித்த ஸ்ரீரங்கராஜனான பெரிய பெருமாள் நமக்குச் செய்த நன்மையே.

கலியார் -என்கிறது–ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –

காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு-காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-

காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க-வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

———————-

ஸம்ஸாரிகளுடைய துன்பத்தைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு
மோக்ஷத்துக்கு உபாயமாக எம்பெருமானாரைச் சரணடைவதைக் காட்டுகிறார்.

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே–49–

நான்கு விதமான நிலங்களை உடைய பூமியில் உள்ளவர்களே!
அனுபவித்துத் தீர்க்க அழியாத ஸம்ஸாரம் என்கிற நரகத்திலே அழுந்த வேண்டாம் என்று இருப்பீர்களாகில்
அடியேனுக்குத் தந்தையான யதிராஜரைச் சரணடையுங்கோள்!
எல்லாக் காலத்திலும் அவர் விஷயமான இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தானம் பண்ணுங்கோள்;
அவர் திருவடிகளில் அன்புடன் இருப்பவர்களுடன் மனோ துக்கங்களெல்லாம் தீரும்படி பொருந்தி யிருங்கோள்;
இப்படிச் செய்தால் மோக்ஷமானது உறுதியாகக் கிடைக்கும்,

இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –

—————-

அவர்கள் அப்படியே செய்கிறோம் என்று ஆறி யிருக்க மீண்டும் அவர்களைக் குறித்து
“இப்படி ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள்;
அவர் திருநாமத்தை நினைக்க மிக அரிதான பலம் ஸித்திக்கும்” என்கிறார்.

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே–50-

திருநாமத்தை சொல்லுவதற்குப் பொருத்தமான காலத்தை வீணாகப் போக்கி, அஜ்ஞானத்தால் இந்த ஸம்ஸாரத்தில்
உழல்கின்ற பாபத்தை உடையவர்களே! எல்லாக் காலத்திலும் ஒரு நிலையில் நின்று தவம் செய்தவர்களுக்கும்
அடைய முடியாத பரமபதத்திலே நித்ய ஸம்ஸாரிகளான் உங்களைக் கொண்டு வைப்பார் எம்பெருமானார்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது “யதிராஜரே” என்று சிந்திப்பது மட்டுமே.-நேர்த்தி-யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –

—————–

ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான
பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே–51-

யதிராஜரே! எல்லாரையும் ஆளும் எம்பெருமான் எப்படி எப்பொழுதும் இருக்கிறானோ அதே போல
அவனாலே ஆளப்படும் ஆத்மாக்களும் எப்பொழுதும் இருக்கிறார்கள்.
இப்படி அநாதி காலம் தொடங்கி இன்று வரை, புண்ய பாப ரூபமான கர்மங்களால் வீணாகவே கழிந்தது என்று
இந்த இழவையும் நினைக்காமல் இருந்த அடியேனுடைய மனது தேவரீர் அருளிய பின்பு
இதிலே இரவும் பகலும் நின்று பரிதபிக்கும் (மிகவும் அனுதாபப்படும்)..-இழவு -அலாப க்லேசம் –

இருவினை –பெரிய வினைகள் என்றும் – புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-

——————-

தன்னுடைய நிலையை நினைத்து அனுதாபப்படவே எம்பெருமானாருக்காகப் பெரிய பெருமாள்
கருட வாஹனத்தில் எழுந்தருளி வந்து கொடுக்கும் பேற்றின் பெருமையை நினைக்கிறார்.

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

பொன்மயமான மேரு மலையின் மேலே படிந்திருக்கிற கார் மேகம் போலே வினதையின் பிள்ளையான பெரிய திருவடியை
வாஹநமாகக் கொண்டு அழகு நிறைந்தவரான பெரிய பெருமாள் யதிராஜருக்காக
அடியேனுடைய சரீரம் கீழே விழும்போது அடியேன் இருந்த இடத்தே வந்து மகிழ்ச்சியோடே அடியேன் முன்னே நிற்பார்.

விநதை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு-தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் – என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————-

இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தில் துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது என்பதால்
விரைவில் தேவரீர் அடியேனை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிறார்.

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே crவல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே–53-

அடியேனுக்கு நன்மை வேண்டும் என்கிற ஹித புத்தியாலே பெரிய பெருமாள் அடியேனைத் துன்பப்படும்படி
செய்கிறான் என்பதை அறிந்திருந்தும், அவ்வவ காலங்களில் ஏற்படும் வேதனையின் மிகுதியால் துடித்து,
அதை வெளிப்படுத்தும் வகையில் “ஆ! ஓ!” என்ற ஓசைகளை எழுப்பும் இந்தப் பாவ உடம்போடே
பல துன்பங்களை அனுபவித்து இந்த ஸம்ஸாரத்தில் இருக்க முடியுமோ?
தேஹத்தின் மதத்தாலே, வலிமை பொருந்திய கர்மத்தின் வழியே திரிந்த மஹாபாபியான அடியேனை
தேவரீருக்கு அடிமையாக்கிக் கொண்டு அருளின நன்மையைச் செய்யும் தாயாகவும் தந்தையாகவும்
இருக்கிற யதிராஜரே! இனி, விரைவில் அடியேனை இந்த ஸம்ஸாரத்திலிருந்து எடுத்து
பரம பதத்தில் சேர்த்தருள வேண்டும்,

மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாந்தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –

—————–

இப்படிக் கேட்டவுடன் எம்பெருமானார் அதை செய்து தருவதாக நினைத்திருக்க,
“கால தாமதம் பண்ணாமல் உடனே அடியேனைப் பரமபதத்தில் ஏற்றியருள வேண்டும்” என்கிறார்.

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!–54-

அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே-
நமக்குப் பிடித்ததைச் செய்யும் தாயும், நன்மையைச் செய்யும் தந்தையும், மற்றும் உள்ள உறவினர்களும் ஆகி
அடியேனை ரக்ஷித்தருளுகிற ஸ்வாமீ! அடியேனுடைய விருப்பத்தை இரவு பகல் என்றில்லாமல்
என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -என்கிறபடியே-
ஒரே நிலையில் சிந்திக்கிற யதிராஜராகிய வள்ளலே!
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே-
தேவரீருக்கு அடிமைப் பட்டும்  இன்னம் எத்தனை காலம் இந்த உடம்பில் இருந்து துன்பப்படுவேன்!
ஐயோ! அடியேனை இந்த உடம்பிலிருந்து விடுவித்து தேவரீர் எப்பொழுது
பரம பதத்திலே ஏற்றி யருளப் போகிறீர்?-அந்நாளும் ஒரு நாள் ஆமோ

—————–

எம்பெருமானார் க்ருபையால் தனக்குக் கிடைத்த நன்மைகளை நன்றி யுணர்வுடன் உரைக்கிறார்.

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

திருவரங்கம் பெரிய கோயிலில் பள்ளிகொண்டருளும் பெரிய பெருமாளின் நிர்ஹேதுக க்ருபைக்கு (காரணமில்லாத அருளுக்கு) விஷயமானோம்.
நம் ஸம்ப்ரதாயத்துக்கு வேர் பற்றான திருவரங்கம் திருப்பதியே நம் வசிக்கும் இடமாகப் பெற்றோம்.
நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங்களே நமக்கு எப்பொழுதும் அனுபவிக்கும் உணவாகப் பெற்றோம்.
மதுரகவி ஆழ்வாரின் “தேவு மற்றறியேன்” வார்த்தைகளின் படியே–வடுக நம்பியைப் போலே எம்பெருமானாரே எல்லாம் என்கிற நிலையைப் பெற்றோம்.-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை-என்று
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –
நம்முடைய பூர்வாசார்யர்களின் திவ்ய ஸூக்திகளான வ்யாக்யானங்கள், ஸ்தோத்ரங்கள்,
ரஹஸ்ய க்ரந்தங்கள் ஆகியவற்றையே எப்பொழுதும் நினைக்கப் பெற்றோம்.
அவையே நமக்கு எப்பொழுதும் பொழுது போக்காக அமையப் பெற்றோம்.
இதற்குப் பிறகு மனது வேறெதிலும் புகாமல் இருக்கப் பெற்றோம்.
இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்-இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான பர உச்சாராயம் கண்டால்
அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —இதென்ன ஆச்சர்யம்!

————————

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்ன பிறகு,
அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார்.

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா–56-

யதிராஜரே! தேவரீருடைய அபிமானமே (கருணையே) இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் (ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது).
அடியேன் மனத் தெளிவோடே இருக்கும்படிச் செய்த தேவரீர், ஐயோ! வேதனைகளால்
அடியேனைத் துன்புறுத்தாமல் ஸாமர்த்யமாக-உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –

——————

எம்பெருமானார் “எந்த உறவைக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்” என்பதாகக் கொண்டு
“திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஆஸ்ரயித்த காரணத்தால் ராஜ குல மகாத்ம்யத்தாலே
ஒரு வஸ்து என்று அபிமானித்து-அடியேனுடைய அபராதங்களைப் பாராமல்
ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய புன் சொற்களையும் கேட்டருள வேண்டும்” என்கிறார்.

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து–57-

யதிராஜரே! -செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்துச் சரணடைந்த அடியவன் என்கிற அன்பினாலே
அடியேனை ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

—————-

“திருவாய்மொழிப் பிள்ளையுடைய வாச மலர் தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவரிடத்திலே ஞானத்தைப் பெற்ற அடியேனுக்கு தேவரீரிடத்தில் ஒரு ஸம்பந்தம் இல்லையோ?” என்கிறார்.

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?–58-

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையுடைய நிர்ஹேதுக க்ருபையாலே
தேவரீர் திருவடிகளில் அடியேனுக்கு இருக்கும் எல்லாவிதமான உறவுகளையும் உணர்த்தியபின்
இப்படிப்பட்ட இந்த ஆத்மாவுக்கு திருமந்த்ரத்தில் காட்டப்படும் ஒன்பது விதமான உறவுகளும்
தேவரீரென்றே அடியேனுடைய மனது நிலை நில்லாமல் இருக்குமோ?
தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-

—————-

“இப்படி தேவரீரிடத்திலே அன்பு பூண்ட அடியேனை திருவரங்க நாதனான பெரிய பெருமாள்
பரம பதத்துக்கு அழைத்துச் செல்லப் போவது எந் நாளோ?” என்கிறார்.

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து–59-

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையும் தாயுமான திருவரங்கநாதனான பெரிய பெருமாள்
அழகு நிறைந்த பெரிய திருவடியின் மேல் எழுந்தருளி
சரீர வியோக சமயத்திலே-எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் -என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-என்னும்படியே
நயாமி -யில் படியே -அர்ச்சிராதி கதியிலே வழி நடத்த மனனம் பண்ணி –
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்

சூழ்ந்து -என்கிறது-ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –என்னும் இடத்துக்கு –விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-

—————–

இனி நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ –
ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே
சம்பந்தம் உடைய நமக்கு தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-

நெஞ்சே! பெரிய பெருமாள் “இந்தக் கோயிலிலே (திருவரங்கம்) நீர் ஸுகமாக இரும்” என்று
அடியேனுடைய தந்தையான யதிராஜருக்கு கொடுத்தருளின வரத்தை ஆராய்ந்து பார்த்தால்
அது நம்மதன்றோ? அது எப்படி என்றால் நல்ல தந்தையின் இயற்கையான சொத்துக்கள் தந்தை வழி உறவு என்ற வழியாலே
புத்ரனுக்காகத் தானே இருப்பது? ஆகையால் நம் ப்ராப்திக்கு நாம் முயல வேண்டாம்,
எம்பெருமானார் க்ருபையால் தானே கிடைக்கும் என்று கருத்து.

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின பிராப்ய பிரார்த்தனை
அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள் என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது-எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

March 28, 2022

இதில்
முதல் பாட்டில் –
ஸ்ரீ தண்டகாரண்ய வாசிகளான ஸ்ரீ ரிஷிகளும் -ஸ்ரீ பெரிய யுடையாரும் ஸ்ரீ பெருமாளைக் கண்ட அநந்தரம்
ஏஹீ பஸ்ய சரீராணி -என்று
ராஷசர்களாலும் ராவணனாலும் நலிவு பட்ட
ஸ்வ ஸ்வ தேஹங்களைக் காட்டி தங்கள் குறை தீர்த்துக் கொள்ளுவதற்கு முன்னே
அத் தலையில் சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
மங்களாநி ப்ரபுயுஜ்ஞாநா -என்றும்
ஆயுஷ்மன் -என்றும்
மங்களா சாசனம் பண்ணினாப் போலே –

(“ஜயத்யதிபலோ ராம: லக்ஷ்மணச்ச மஹாபல:
ராஜாஜயதி ஸுக்ரீவோ, ராகவேணா பிபாலித:”

ராமன் வன வாசத்தின் போது தண்டகாரண்ய மகரிஷிகளின் இருப்பிடம் சென்றான்.
அவனின் வரவை அறிந்த ரிஷிகள், அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தம் சரீரங்களை காண்பித்து,
எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்க விரும்பினார்கள்.
ஆனால் இராமனை கண்டதும், அவனுடைய அழகில் ஈடுபட்டு, அவனின் க்ஷேமத்தை கருதி,
அவனுக்கு மங்களாசாசனம் செய்ய தொடங்கி விட்டார்கள்.
இராமனுக்கு மங்களாசாசனம் செய்யத் தொடங்கியவர்கள், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் மங்களாசாசனம் செய்கிறார்கள் )

இவரும் தம்மை விஷயீ கரிக்க
விண்ணின் தலை நின்று எழுந்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய
அப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி சௌகுமார்யாதிகளைக் கண்டு கலங்கி
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டி ஸ்வ அபேஷிதங்களை அறிவிப்பதற்கு முன்னே
அத்தலையில் குறை தீரவே -இத்தலையில் குறை தீரலாம் என்று அறுதி இட்ட படியே
மங்களா சாசனம் பண்ணுகிறார் –

இப்படி தாம் மங்களா சாசனம் பண்ண -அத்தாலே நித்ய ஸூரிகளுக்கு உண்டான ஆதர அதிசயத்தை கண்டு
அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசன் -என்கிறபடியே
அங்குத்தைக்கு அந்யராய் பிரேம பாரவச்யத்தாலே மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய
பரம்பரையில் சம்பந்தம் உடையவர்களை நித்ய ஸூரிகள் ஆதரிக்கும் படி இதுவே என்று
சூழ் விசும்பில் படியே வித்தராய்ப் பேசி அருளுகிறார் —

பல்லாண்டு பல்லாண்டு -என்று தொடங்கி
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே -என்றும்

ஜெயத்யதி பலோராமோ லஷ்மணச்ச மகா பல
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலித-என்றும்
சம்பந்த சம்பந்திகளின் அளவும் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1

வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார்-
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு -என்றும்
பொலிக பொலிக பொலிக -என்றும்-பரம வைதிகராய் இருக்குமவர்கள்
பகவத் பாகவத விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுமா போல
இவ் விஷயத்திலும்
அன்பராய் அந்த வைதிக நிர்தேசத்தின் படியே
வாழி எதிராசன் என்று த்ரி பிரகாரமாக மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களை –

வாழி என வாழ்த்துவார் –
அப்படியே வாழி -என்று மங்களா சாசனம் பண்ணுமவர்களுடைய –

தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை –
பரஸ்பரம் சத்ருசங்களான திருவடிகளிலே –

தாழ்த்துவார் –
பக்ன அபிமானராய் வணங்கி வழிபட்டு இருப்பார் –

விண்ணோர் தலை –
நித்ய ஸூரிகளுக்கு சிரஸா வாஹ்யர் –
அன்றிக்கே
அவர்களுக்கு ஸ்ரேஷ்டர் ஆவார்கள் என்றுமாம்–

வாழி -இடைச் சொல்லும்
வாழ்க -எனச் சொல்லும்
வாழி என்கையாலே
பிரபந்த ஆரம்பத்தில் மங்களா சாசனம் யுண்டாய் இறே இருப்பது –

—————————————————————————————————————

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை
ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை சமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்ன யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்ய பித்ஸ் யஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –

அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி –என்றும்
கிமேதந நிர் தோஷ க இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –

இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ

இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ

மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபாமாத்ரா பிரசன்னாச்சார்யர் களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ்வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ

அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ

அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் கருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

———————————————————————–

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற்கொண்டு -தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித்தோ யதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

—————————————

இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —60-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீரபாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூ கம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி காரயமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் தமக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

——————————————————————

ஸ்ரீ மா முனிகளின் ஆர்த்தி-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவணம் காட்டி அருளும் – தனி பாசுரங்கள் —

எம்பெருமானார் தம் பிரான் என்னுமவரை
நம்பெருமாள் தாம் உகந்து நாள் தோறும் -தம் பரமாய்
ஏறிட்டுக் கொண்டு அளிப்பர் என்னுமவர் தம்மை
வேறிட்டுத் தாம் கைவிடார் -1-

பொல்லான் இவன் என்று போதிடென்று நம் குரவர்
எல்லாரும் என்னை இகழ்ந்தாரோ -நல்லார்கள்
வாழ்வான வைகுண்ட வான் சபையில் வண் கூரத்
தாழ்வான் இருந்திலனோ அங்கு –2-

ஆரியர்காள் ஆழ்வீர் காள் அங்குள்ள முக்தர்காள்
ஸூரியர் காள் தேவியர் காள் சொல்லீரோ நாரணற்கு
எங்கள் அடியான இவனும் ஈடேற வேணும் என்று
உங்கள் அடியாரும் உளர் –3-

தென்னரங்கர் தேவியே ஸ்ரீ ரேங்கர் நாயகியே
மன்னுயிர்கட்க்கு எல்லாம் மாதாவே -என்னை யினி
இவ் வுலகம் தன்னில் இருந்து நலுங்காமல்
அவ்வுலகில் வாங்கி அருள் –4-

ஸ்ரீ ரெங்க நாயகியே தென்னரங்கன் தேவியே
நாரங்கட்க்கு எல்லாம் நல் தாயே -மாருதிக்கு
வந்த விடாய் தன்னை ஒரு வாசகத்தால் போக்கின நீ
எண்ணிட தீராதது என் –5-

இந்த உடம்போடு இனி இறுக்கப் போகாதது தான்
செங்கமலத் தாள்கள் தன்னைத் தந்து அருள் நீ அந்தோ
மையார் கண்ணி மணவாளா தென்னரங்கா
வையாமல் இருப்பாயே இங்கு –6-

இந்த உடம்போடு இரு வினையால் இவ்வளவும்
உந்தனடி சேராது உழன்றேனே -அந்தோ
அரங்கா இரங்காய் எதிராசர்க்காக
இரங்காய் பிரானே இனி –7-

——————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -45-60–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 21, 2014

கீழ்
மா காந்த நாரணர் வைகும் வகை -என்று வ்யாப்தியை பிரஸ்தாபித்து
இப்படி சர்வ வ்யாபகனான அவனோடு அநாதியாய் வருகிற சம்பந்தம் யுண்டாய் இருக்க
அத்தை அறியாதே
கீழ் சொன்ன மோஹாந்தரிலே-அந்ய தமராய் இருந்த நான்
ஆச்சார்ய சம்பந்தத்தால் அன்றோ உஜ்ஜீவித்தது என்று
ஸூவ லாபத்தை எப்போதும் அனுசந்தித்துப் போரு என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

(அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடை காட்டி -உம்பர்
திவம் என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறி காட்டும்
அவன் அன்றோ வாசாரியன்–1-)

(அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சி யிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-)

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னுமுறை
யாராயில் நெஞ்சே யநாதி யன்றோ -சீராரும்
ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது என்றோ
கூசாமல் எப்பொழுதும் கூறு—45-

நாராயணன் திருமால் –திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்கிறபடியே ஸ்ரீ யபதியானவன் நார ஸப்த வாஸ்யங்களான வாத்மாக்களை யுடையவன்
நாரம் நாம் -நித்யமான அந்த நாரங்கள் நாம்
என்னுமுறை-என்கிற அந்த நார அயன ஸம்பந்தம்
யாராயில் நெஞ்சே -நிரூபிக்கில் மனஸ்ஸே
யநாதி யன்றோ -இன்றாக உண்டானதன்றே -அநாதியாய் வருகிறது அன்றோ
சீராரும்-அந்த சம்பந்தத்தை உணர்த்தின ஞானாதி குண பரிபூர்ணரான
ஆச்சார்யனாலே அன்றோ -ஆச்சார்யராலேயே அல்லவோ
நாம் உய்ந்தது என்றோ–நாம் உஜ்ஜீவித்தது என்று
கூசாமல் -லஜ்ஜை அபிமானங்களை விட்டு
எப்பொழுதும் கூறு -ஸர்வ காலமும் ப்ரஸித்தமாக அனுசந்தித்திக் கொண்டு இரு

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -என்கிறபடியே
அவன் ஸ்ரீ யபதி நாராயணன்
நாம் -நாரம் -என்கிற-இந்த அநாதய அயன சம்பந்தம் நிரூபிக்கில்
மனசே-இன்றாக யுண்டானது அன்றே-அநாதியாக வருகிறது அன்றோ –இப்படியாய் இருக்க
நெடும் காலம் சம்பந்த ஞானம் அன்றிக்கே அசித் பிராயமாய் இழந்து அன்றோ கிடந்தது

இப்போது
தத் சம்பந்தத்தை யுணர்த்தின-ஜ்ஞாநாதி குண பரி பூரணராய் இருக்கிற
ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உஜ்ஜீவித்தது என்று –
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் -என்கிறபடியே
லஜ்ஜை அபிமானங்களை விட்டு சர்வ காலமும் பிரசித்தமாக அனுசந்தித்துக் கொண்டு போரு –

இறையும் உயிரும் -இத்யாதி
ஆத்ம நோஹ்யதி நீசச்ய-

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

(இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –-பிரமேய சாரம்     –10-)

—————————————–

கீழ் ஸ்ரீ ஆச்சார்யனாலே அன்றோ நாம் உய்ந்தது -என்கிற
இத்தை விசேஷ நிஷ்டமாக்கி அருளிச் செய்கிறார் –

திருவாய் மொழிப் பிள்ளை தீ வினையோம் தம்மைக்
குருவாகி வந்து உய்யக் கொண்டு -பொருவில்
மதி தான் அளித்து அருளும் வாழ்வு அன்றோ நெஞ்சே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்—46-

திருவாய் மொழிப் பிள்ளை –தொண்டருக்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பூ ஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் போக்யமாக அவதரித்த திருவாய் மொழியிலே அவகாஹித்து
அதில் ஸப்த ரஸம் அர்த்த ரஸம் பாவ ரஸம் என்கிற இவற்றை அனுபவித்து ததேக நிஷ்டராய் தத் வ்யதிரிக்த ஸாஸ்த்ரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே திருவாய் மொழி யோட்டை ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாய் யுடையராய்
ஆழ்வார் திருவடிகளிலே ஸர்வ வித கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய் மொழிப் பிள்ளை
தீ வினையோம் தம்மைக்-க்ரூர கர்மாக்களோமாய் இருக்கிற நம்மை
குருவாகி –ஆச்சார்யராக அவதரித்து
வந்து -நாம் இருந்த இடம் தேடி வந்து
உய்யக் கொண்டு -உஜ்ஜீவிக்கும் படி யங்கீ கரித்து
பொருவில்-ஸாஸ்த்ர ஞானாதிகள் போல் அன்றிக்கே உபமான ரஹிதமான
மதி –திருமந்த்ரத்தால் பிறக்குமதான ஞானத்தை
தான் அளித்து அருளும் –தாம் உபகரித்து அருளும்
வாழ்வு அன்றோ –ஸம்பத்தினால் அன்றோ
நெஞ்சே-மனஸ்ஸே
எதிராசர்க்கு ஆளானோம் யாம்-நாம் எம்பெருமானாருக்கு அடியோம் ஆயினோம்

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்ன மாலையான ஸ்ரீ திருவாய் மொழி -என்றபடி
பூஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாக திரு வவதரித்த ஸ்ரீ திருவாய்மொழியில்
அவகாஹித்து -அதில்
சப்த ரசம்
அர்த்த ரசம்
பாவ ரசம்
என்கிற இவற்றை அனுபவித்து-தத் ஏக நிஷ்டராய்
தத் வ்யதிரிக்த சாஸ்த்ரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி

ஸ்ரீ திரு வாய் மொழி யோட்டை சம்பந்தத்தையே நிரூபகமாய் யுடைய ராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே சர்வ வித கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரா நிற்கிற
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
(சடகோபர் தாசர் என்றே இன்றும் அருளப்பாடு உண்டே இவர் வம்சத்தாருக்கு )

ஒப்பிலா தீ வினையேனை உய்யக் கொண்டு -என்கிறபடியே
க்ரூர கர்மாக்களாய் இருக்கிற நம்மை
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி -என்றபடி
ஸ்ரீ ஆச்சார்யராய் திரு வவதரித்து-
நாம் இருந்த இடம் தேடி வந்து உஜ்ஜீவிக்கும்படி அங்கீ கரித்து

சாஸ்திர ஜ்ஞாநாதிகள் போல் அன்றிக்கே
உபமான ரஹிதமான ஸ்ரீ திரு மந்தரத்தால் பிறக்குமதான ஜ்ஞானத்தை யுபகரித்து அருளும் சம்பத் அன்றோ
மனசே-பிராப்த சேஷியான ஸ்ரீ எம்பெருமானார்க்கு அடிமையானோம் -நாம் –

பத த்ரய அர்த்த நிஷ்டை தான்-ததீய பர்யந்தமாய் அல்லாது இராது-என்று கருத்து –

(அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக் கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே.–7-9-4-)

(ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-)

————————————————

ஸ்ரீ எதிராசர்க்கு ஆளானோம் யாம் -என்ற ப்ரீதி யுத்ததியாலே
கீழே
மா கந்த நாரணானார் -என்றும்
நாராயணன் திருமால் -என்றும் ப்ரஸ்துதமான ஸ்ரீ நாராயண சப்தத்தோடு விகல்பிக்கும் படியாக
அதில்
சதுரையாய் இருப்பதான ஸ்ரீ ராமானுஜ -என்கிற திரு நாம வைபவத்தை வெளி இட வேண்டி அத்தை
வ்யதிரேக முகத்தாலே வெளி இட்டு அருளுகிறார் –

(ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –)

(ராமாநுஜேதி –ராமானுஜர் என்கிற
ஏஷா –இந்த
சதுரா –வேண்டும் பலன்களைத் தருவதில் ஸாமர்த்யமான
சதுர் அக்ஷரீ -நான்கு எழுத்துக்கள் கொண்ட மந்த்ரமானது
ந சேத் -இல்லாமல் போயிற்று ஆனால்
மாத்ருஸா–என்னைப் போன்ற
ஜந்தவோ-உயிர்கள்
காம் -எவ்வகையான
அவஸ்யாம் –கொடிய தசையை
பிரபத்யந்தே –அடைவார்களோ அறியேன்
ஹந்த –ஆச்சார்யம் –)

இராமானுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்து
இரா மானுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதும்
இரா மானுசர் அவர்க்கு எல்லா வடிமையும் செய்ய வெண்ணி
இரா மானுசர் தம்மை மானுசராக என் கொல் எண்ணுவதே—–47-

இராமானுசாய நம என்று -இராமானுசர் பொருட்டு நமஸ்
என்று இரவும் பகலும் சிந்தித்து–திவாராத்ரமும் அநு சந்தித்து
இரா மானுசர்கள் –இராத மனிதருடைய
இருப்பிடம் தன்னில் –வஸிக்கிற ஸ்தலம் தன்னில்
இறைப் பொழுதும்–க்ஷண காலமும்
இரா –வர்த்தியா நிற்கிற
ஆழ்வான் போல்வரான
மானுசர் அவர்க்கு –மனுஷ்யருக்கு
எல்லா வடிமையும் செய்ய வெண்ணி–ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்யக் கருதி
இரா -அத்தைச் செய்யாமல் இருக்கிற
மானுசர் தம்மை –அறிவற்ற மனுஷ்யர் தங்களை
மானுசராக -பசு ஸமானவர்களை மநுஷ்யராக
என் கொல் எண்ணுவதே—-எப்படித் தான் எண்ணுவது
ஞானநேந ஹீந பஸூபிஸ் ஸமாந –என்னும் அத்தனை

நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் -என்கிறபடியே
ஸ்ரீ ராமானுஜாய நம -என்று திவா ராத்திரி விபாகம் அற அனுசந்திக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாது இருக்கிற
பசு சமரான மனுஷ்யர்கள் வர்த்திக்கிற ஸ்தலம் தன்னிலே ஷண காலமும் துஸ் சஹமாய் வர்த்தியாது இருக்கிற
ஸ்ரீ ஆழ்வான் போல்வாராய்

(கள்வனேன் ஆனேன் படிறு செய்திருப்பேன் கண்டவா திரி தந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா வென்னும் நாமம் —1-1-5-)

சாஸ்திர வஸ்யரான மனுஷ்ய ஜன்மாக்களுக்கு
எத் தொழும்பும் சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் (80)-என்கிறபடியும்
சர்வ வித கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி இருக்க பிராப்தமாய் இருக்க
அத்தைச் செய்யாதே இருக்கிற க்ருதக்ன மனுஷ்யர்தங்களை
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேன் (11-7-9)-என்கிறபடியே
பசு சமரான அவர்களை மனுஷ்யராக எப்படி எண்ணுவது
பஸூபிஸ் சமான -என்னும் இத்தனை –

(நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர்,அவர்க்கே
எல்லா விடத்திலும் என்று மெப் போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.–80-)

(தேனோடு வண்டாலும் திருமால் இருஞ்சோலை
தானிடமாக்கிக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ்  அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாத
மானிடவர் அல்லர்  என்று    என் மனத்தே வைத்தேனே –11-7-9-)

——————————————————————-

கீழ்
எல்லா அடிமையும் செய்ய எண்ணி
ஸ்ரீ இராமானுசாயா -என்கிற பிரசங்கத்திலே
தம்முடைய வாகாதி கரணங்களை இப்படியே அவர்கள் விஷயத்தில் அனந்யார்ஹமாம்படி
ஸ்ரீ பெரிய பெருமாள் பண்ணி யருளின படியை
ப்ரீதியாலே பேசி அருளுகிறார் –

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை யொன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகு அளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை யரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

கலியார்-கலியுகத்தில் உள்ள சேதனர்
நலிய ஒண்ணாத வண்ணம் -அக் கலியினுடைய க்ரூரத்தினாலே பீடிக்கப் படாதபடி
உலகு அளித்தோன்-லோகத்தை ரஷித்தவரான
எதிராசன் அடி நண்ணாதவரை-எம்பெருமானாருடைய திருவடிகளை கிட்டி ஆஸ்ரயிக்காதவர்களை
எண்ணாது என் நெஞ்சம் -என்னுடைய மனஸ்ஸானது ஸ்மரியாது
இசையாது என் நா -என்னுடைய வாக்கானது ஸ்துதியாது
இறைஞ்சாது சென்னி-என்சிரஸ்ஸானது வணங்காது
கண்ணானவை யொன்றும் காணலுறா -என் கண்களானவை ஒன்றையும் கண்ணுறாது
யரங்கேசர் -சிந்தையினோடு கரணங்களைத் தந்த ஸ்ரீ ரெங்கராஜரான பெரிய பெருமாள்
செய்த நலம் நமக்கே–அக் கரணங்கள் அந்நிய சேஷமாகாமல் நமக்குச் செய்த நன்மை இவையாயிற்று

கலியார் நலிய ஒண்ணாத வண்ணம் -கலியில் உள்ளார் நலியாத படியும் –
கலி புருஷன் நலியாத படியும்
நலம் -சம்பத்து
இங்கே தேக சம்பத்தி இறே-

தாழ்வு ஓன்று இல்லா மறை தாழ்ந்து தல முழுதும் கலியே யாள்கின்ற நாள் வந்து அளித்தவன் -என்கிறபடியே
கலியானது-தன்னுடைய க்ரௌர்யத்தினாலே பாதியாதபடி லோகத்தை ரஷித்தவராய்
பேறு ஒன்றும் மற்று இல்லை -என்கிறபடியே
பிராப்ய பிராபகங்களான எம்பெருமானார் திருவடிகளைக் கிட்டி ஆஸ்ரியாதவர்களை

(தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்து தல முழுதுங் கலியே
ஆள்கின்ற நாள் வந்தளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமானுச னென்னும் மா முனியே.–16-)

(பேறொன்று மற்றில்லை நின் சரண் அன்றி,அப்பேறளித்தற்
காறொன்று மில்லை மற்றச் சரண் அன்றி,என்றிப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே–45-)

நையும் மனம் உன் குணங்களை எண்ணி -இத்யாதியாலும்
நித்யம் யதீந்திர -இத்யாதியாலும் சொல்லுகிறபடியே
தத் விஷயத்திலே பிரவணமான என்னுடைய மனஸ்ஸூ தொடக்கமான கரணங்கள் ஆனவைகள்
ஸ்மரித்தல்
ஸ்துதித்தல்
பஜித்தல்
தர்சித்தல்
ஆகிற ஸ்வ ஸ்வ கார்யங்களை செய்யாது –

(நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-)

(நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணம் து கர  த்வயஸ்ய வ்ருத் யந்தரேSஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச ||-4-)

சிந்தையினோடு கரணங்களைத் தந்த ஸ்ரீ ரெங்க ராஜரான ஸ்ரீ பெரிய பெருமாள்
அவை அந்ய சேஷம் ஆகாமல் நமக்குச் செய்த நன்மை இவை யாய்த்து –

(சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்
அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந் தெடுத்தனன் இன்றென்னையே–69-.)

இசையாது நா –மன பூர்வோ வாகுத்தர -என்கிறபடியே
அதுக்கு அனந்தர பாவிதான நாவுடைய வாயானது
நாவியிலா லிசை மாலைகள் ஏத்தி (4-5-4)-என்கிறபடியே
ஸ்துதி ரூபமான சப்த சந்தர்ப்பங்களைப் பண்ண மாட்டாது –

(மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-)

இறைஞ்சாது சென்னி –
ப்ரணமாமி மூர்த்த்னா -என்னுமவருடைய -சென்னி இறே

கண்ணானவை ஒன்றும் காணலுறா –
கண் கருதிடும் காண-(102)
ஸ்ரீ மாதவாங்கரி -என்னும்படியான திருஷ்டிகள்-ஏக தேசமும் தர்சிக்க ஆசைப் படாது –

(மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி
சர்வம் யதேவ நியமேன மதநவ்யாநாம்
ஆத்யஸ்ய ந குலபதேர் வகுளாபி ராமம்
ஸ்ரீ மத ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –5-)

(நையும் மனமும் குணங்களை உன்னி,என் நாவிருந் தெம்
ஐயன் இராமா னுசனென் றழைக்கும் அரு வினையேன்
கையும் தொழும் கண் கருதிடுங் காணக் கடல் புடை சூழ்
வையம் இதனில், உன் வண்மை யென் பாலென் வளர்ந்ததுவே?–102-)

காணல் உறுகின்றேன் -(நான்முகன்-41 )-என்கிற இடத்துக்கு
காண ஆசைப் படுகிறேன் என்று இறே அருளிச் செய்தது –

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -(நான்முகன் -41)-

காணல் உறுகின்றேன் – – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க
வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

கலியார் -என்கிறது
ஏவினார் கலியார் -என்கிறபடியே-பாதகத்வித்தின் உறைப்பை பற்ற வாய்த்து –

—————————————————–

எதிராசன் அடி நண்ணாதவரை எண்ணாது -(48)இத்யாதியாலே
தமக்கு சம்சாரிகள் இடத்தில் யுண்டான வைமுக்யத்தை தர்சிப்பித்து மீள
அவர்கள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்ற மாட்டாதே
அவர்களுக்கு மோஷ உபாயமாக
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஆஸ்ரயணாதிகளை விதிக்கிறார் –

(1-ஆஸ்ரயணம் -2-அனுசந்தானம் 3-அடியார்களை சேர்தல்)

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நா நிலத்தீர்
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றுமவன்
அந்தாதி தன்னை யனுசந்திக்குமவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு முத்தி பின் சித்திக்குமே–49-

நந்தா நரகத்து -ஒருக்காலும் அனுபவித்து முடிக்க மாட்டாமல் -நந்தும் நரகம் அது சம்சாரம் இது
அழுந்தாமை வேண்டிடில் -மக்நராகாமல் இருக்க ஆசைப்பட்டு இருந்தீர்களாகில் -அபேக்ஷிதமாகில்
நா நிலத்தீர்-முந்நீர் -நா நிலம் -இரு நிலம் பெரிய நிலம் -நான்கு வகை நிலங்களில் உள்ளவர்களே
எந்தாதையான எதிராசனை -அடியேனுடைய பிதாவான ராமானுஜரை
நண்ணும் என்றும் -எப்பொழுதும் நண்ண வேண்டும்
என்றும் அவன் அந்தாதி தன்னை -பிரபன்ன ஜன காயத்ரி அவர் விஷயமான நூற்றந்தாதியை
யனுசந்திக்கும் -நித்தியமாக அனுசந்திக்க வேண்டும்
அவன் தொண்டருடன்-ப்ரபன்னராய் தொண்டு பட்டு உள்ளவர்களுடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்திரு -இதர சகவாசத்தால் உண்டான மனோ ஆகுலம் போக இவர்களுடன் சகவாசம் செய்ய வேண்டும்
முத்தி பின் சித்திக்குமே-ஆனபின்பு மோக்ஷம் -தானே வைகுந்தம் தரும்

நந்தா நரகத்து அழுந்தா வகை -என்றும்
நரகத்திடை நணுகா வகை (7-9-5)-என்றும் சொல்லுகிறபடியே
ஒரு கால் அனுபவித்து முடியாததாய்
மற்றை நரகம் -(8 )என்னும்படி
சம்சாரம் ஆகிற நரகத்தில் மக்னர் ஆகாமை அபேஷிதம் ஆகில்

(நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் யுன்னருளே –11-8-9-)

(நந்தா நெடு நரகத்திடை நணுகா வகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறிநீர்ச்
செந்தாமரை மலரும் சிறு புலியூர்ச் சலசயனத்து
அந்தாமரை யடியாய் உனதடியேற்கு அருள் புரியே -7-9-5–அது நந்தும் குறு நகரம்)

(யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே8-1-9-)

நாலு வகைப் பட்ட பூமியில் உண்டான வர்களே –
எனக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயிங்கோள்-
சர்வ காலத்திலும் மோஷைக ஹேதுவாய் இருக்கிற அவர் திரு நாமத்தை
பாட்டுக்கள் தோறும் பிரதிபாதிப்பதாய்-
அதேவ பிரபன்ன ஜன காயத்ரியாய்-
இருக்கிற -அவர் விஷயமான -ஸ்ரீ நூற்றந்தாதி தன்னை அனுசந்தியுங்கோள்-

உன் தொண்டர்களுக்கே -என்னும்படி
அவர் திருவடிகளிலே சபலராய் தொண்டு பட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடன்
தத் இதர சஹவாசத்தால் யுண்டான மநோ துக்கம் எல்லாம் கெட
ஒரு நீராகப் பொருந்தி இருங்கோள்
ஆன பின்பு முக்தி யானது சம்சயம் அற்று சித்திக்கும் –

(இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டுன் தொண்டர்கட்கே
அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.–107-)

இத்தால்
இவருடைய ஆஸ்ரயணாதிகளுக்கு தானே
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியைப் பண்ணும்-என்று கருத்து –

—————————————————————-

அவர்கள் ஆஸ்ரயிக்கிறோம் என்று ஆறி இருக்க மீளவும் அவர்களைக் குறித்து
ஏன் காலத்தை வ்யர்த்தமே போக்குகிறீர்கள்
அவர் திரு நாமத்தை ஸ்மரிக்க அதி துர்பலமான பலம் சித்திக்கும் என்கிறார் –

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி யறி வின்மையால் இப்
பவத்தே யுழல்கின்ற பாவியர்கள் பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத வந்தத்
திவத்தே யும்மை வைக்கும் சிந்தியும் நீ எதிராசர் என்றே—50-

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி -திருநாமம் அநுஸந்திக்கும் யோக்யமான காலத்தை வியர்தாமே போக்கி
யறி வின்மையால் -அஞ்ஞானத்தாலே
இப் பவத்தே யுழல்கின்ற பாவியர்கள்
பல காலம் நின்று-நித்தியமாக நெடும் காலம் நிலையாக நின்றும்
தவத்தே முயல்பவர் தங்களுக்கும் எய்த ஒண்ணாத -பிராபிக்கப் போகாமல் இருப்பதாய்
வந்தத் திவத்தே -அந்தப்பிரம காத்தில் வேதத்தை கொண்டாடப்படும் அந்தமில் பேரின்ப தேசத்திலே
யும்மை வைக்கும் -நித்ய ஸூரிகளுடன் ஒரு கோவையாக்கி அருளும்
சிந்தியும் நீ எதிராசர் என்றே-மனமே சிந்தி

யத்னம் -அல்பம் -பலம் -அதிகம் –

திரு நாமம் அனுசந்திக்கைக்கு யோக்யமாய் இருப்பதான
ஸ்லாக்கியமான காலத்தை வ்யரத்தமே போக்கி
அஜ்ஞ்ஞானத்தாலே சம்சாரத்திலே பரிப்ரமிக்கிற பாபிகளாய் உள்ளவர்களே

சர்வ காலத்திலும் ஒருபடிப் பட நின்று தபஸ்சிலே உத்சாஹிக்குமவர்களாய் இருக்கும் அவர்களுக்கும்
பிராபிக்கப் போகாமல் இருப்பதாய்

தத்ஷரே பரமேவ்யோமான் -என்று சொல்லுகிற ஸ்ருதி பிரசித்தியை உடைத்தாய் இருப்பதான
அந்த ஸ்ரீ பரம பதத்திலே
நித்ய சம்சாரிகளான உங்களை ஏற்றி நித்யர் உடன் ஒரு கோவை யாக்கி வைக்கும்
அதுக்கு உடலாக கீழ்ச் சொன்னவைகள் தான் நேர்த்தி என்னலாம் படி
அதிலும் எளிதாய் இருப்பதான ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தை
ஸ்ரீ எதிராசன் என்று நீங்கள் மனசிலே சிந்தியுங்கோள்

(யத்னம் கரோதி -யதி ராஜர்–பிராமண ரக்ஷணம்
பிரமாத ரக்ஷணம்-விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-ரஞ்சனாத் ராஜா-ஆனந்தம் கொடுப்பவர்)

நேர்த்தி அல்பமாய்-பலம் அதிகமாய்-இருக்கும்
நேர்த்தி -யத்னம் –

——————————————–

இனி
சம்சாரிகள் இழவைத் தான் சொல்ல வேணுமோ –
உம்முடைய நிலை இருந்தபடி என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அவர்களோபாதி அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போய் இருக்க
அதன் இழவு இன்றிக்கே இருக்கிற எனக்கு தேவரீர் உடைய கிருபை யுண்டான பின்பு
தத் அலாபக் க்லேசம் யுன்டாய்த்து என்று ஸ்வ லாபத்தைப் பேசி அருளுகிறார்
இழவு -அலாப க்லேசம் –

என்றும் உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
அன்று அளவாகப் பழுதே கழிந்தது இரு வினையால்
என்று இழவு இன்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தபிக்கும் எதிராசா நீ அருள் செய்த பின்னே –51-

என்றும் உளன் ஈசன் –நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலேன் –என்கிறபடியே ஒழிக்க ஒழியாத அவிநா பாவ ஸம்பந்தம் நித்யமாக யுண்டாகையாலே நியந்தாவான ஈஸ்வரன் எப்படி எப்போதும் நித்ய சித்தனாய் இருக்கிறானோ
அப்படியே
உயிரும் -ஈஸி தவ்யனான ஆத்மாவும்
அன்றே உண்டு –அப்போதே யுண்டாய் இருக்கிறான்
இக் காலம் எல்லாம் இன்று அளவாகப் -இவ்வனாதி காலம் தொடங்கி இப்போது அளவாக
இரு வினையால்-புண்ய பாப ரூபமான ப்ரபல கர்மத்தாலே
பழுதே கழிந்தது என்று -வியர்த்தமாகவே போயிற்று என்று
இழவு இன்றி இருக்கும் -இப்படி இழந்த நாளுக்கு அநு தபியாமல் இருக்கிற
என் நெஞ்சம் -அடியேனுடைய மனஸ்ஸு
எதிராசா-எம்பெருமானாரே
நீ அருள் செய்த பின்னே —தேவரீர் விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளின பின்பு
இரவு பகல்-அல்லும் பகலும்
நின்று தபிக்கும் -இதிலே ஒருப்பட்டு நின்று பரிதபியா நிற்கும் –

தவிக்கும் -தபிக்கும் -பாட பேதங்கள் –

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இலை-என்கிறபடியே
ஒழிக்க ஒழியாத-அவிநாபாவ -நித்தியமான சம்பந்தம் உண்டாகையாலே
நியந்தாவான ஈஸ்வரன் என்று தொடங்கி சித்தனாய் இருக்கும் –
அப்படியே ஈசிதவ்யனான ஆத்மாவும்-
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே அன்றே உண்டாய் இருக்கும்

(இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -நான்முகன் திருவந்தாதி-7-

அகதியான எனக்கு நீ போக்கி கதி இல்லை
அப்படியே சர்வ பிரகார பரி பூர்ணனான உன்னுடைய க்ருபைக்கு வேறு சிலரை விஷயமாக உடையை எல்லை –
என்றும் ஒக்க இவ் வாத்மா உன் அருளுக்கே விஷயமாய் உன் கடாஷம் ஒழியில்
என் சத்தை இல்லையானபடி-மெய்யாய் இருக்கிறபடி கண்டாயே
அப்படியே-நீயும் என்னாலே உளையாய் என்னை ஒழிய இல்லை யாகிறாய்

இப்படி அன்று தொடங்கி
தேவர் விஷயீ காரம் பெற்ற இன்றளவாக யுண்டான என்னுடைய பிரபல கர்மத்தாலே-
சேஷி சேஷ சம்பந்த ஜ்ஞான கார்யமான கைங்கர்யத்துக்கு
அடைத்த இந்த அநாதி காலம் எல்லாம் வ்யர்த்தமே போயிற்று என்று
இழந்த காலத்துக்கு அனுதபியாமல் இருந்த என்னுடைய மனசானது
தேவர் விசேஷ கடாஷம் அருளிய பின்பு
திவா ராத்ர விபாகம் அற இதிலே ஒருப்பட்டு நின்று பரிதபியா நிற்கும் –

இது என்ன ஸ்வபாவம்
ஒரு கிருபா பிரபால்யம் இருந்தபடியே-

இரு வினை –
பெரிய வினைகள் என்றும் –
புண்ய பாபங்கள் என்றும் ஆகவுமாம்-

———————————————————

அனுதாபாதிகள் யுண்டாகவே
ஸ்ரீ எம்பெருமானாருக்காக ஸ்ரீ பெரிய பெருமாள் –
ஸ்ரீ மான் சமாரூட பதங்க ராஜ -என்கிறபடி எழுந்து அருளி அபிமானித்து அருளும்
பேற்றின் கௌரவத்தை அனுசந்தித்து அருளுகிறார் –

கனக கிரி மேல் கரிய முகில் போல்
வினதை சிறுவன் மேற் கொண்டு -தனு விடும் போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என் பால்
வாரா முன்னிற்பர் மகிழ்ந்து —52-

கனக கிரி மேல் –ஸ்வர்ண மயமான மஹா மேரு மலையின் மேலே
கரிய முகில் போல்–படிந்து இருக்கிற நீல மேகம் போலே
வினதை சிறுவன் –வினதை என்னும் ஸ்திரீயினுடைய புத்ரனான வைநதேயரை –பெரிய திருவடியை
மேற் கொண்டு -வாஹனமாய்க் கொண்டு -கருடா வாஹன ரூடராய்
தனு விடும் போது-சரீரம் விடுகிற ஸமயத்தில்-தாய் முகம் காட்டுமா போலே
ஏரார் அரங்கர் -ஸுந்தரியாதிகளால் பூர்ணரான பெரிய பெருமாள்
எதிராசர்க்காக –எம்பெருமானாருக்காக
என் பால் வாரா -அடியேன் இருந்த இடத்தே வந்து
மகிழ்ந்து-ஹர்ஷ யுக்தராய்
முன்னிற்பர் –முன்னே நிற்பர்

தனு -சரீரம்

காஞ்சனஸ்ய கிரேஸ் ஸ்ருங்கே ஸ கடித் தோயதோ யதா -என்றும்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் (9-2)-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வர்ண மயமான மகா மேருவின் மேலே
பெரும் பவ்யம் மண்டி யுண்ட பெரு வயிற்ற கரு முகிலானது கினியப் படிந்து இருக்குமா போலே
பரபாக ரசா வஹமாம் படி-

(மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-8-)

(இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே.-24)

(காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம்மிடர் கடிவானே–9-2-6-)

விந்தை சிறுவன் என்னும்படியான ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு
தேக பாத சமயத்தில் தாய் முகம் காட்டுமா போல்
சௌந்தர் யாதிகளால் பூரணரான பெரிய பெருமாள்-ஸ்ரீ எம்பெருமானார்க்காக
நான் இருந்த இடத்தே வந்து ஹர்ஷ யுக்தராய் முன்னிற்பர் –
(தேவ பிரான் கரிய கோலத் திரு உருக் காண்பன் என்றார் போல் )

இத்தால்-
எனக்கு அபேஷிதமான முகமும் முறுவலும் காட்டி அனுபவிப்பித்து அருளுவர் –
என்பது நிச்சயம் -என்று கருத்து –

திருக்கையிலே பிடித்த திவ்வியாயுதங்களும்: வைத்தஞ்சல் என்ற கையும், கவித்த முடியும், முகமும் முறுவலும், ஆசன பதுமத்தில் அழுந்தின திருவடிகளுமாய் நிற்கின்ற நிலையே நமக்குத் தஞ்சம்” (மு.முட்சு-142)

—————————————

இப்படி ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ பெரிய திருவடி மேல் கொண்டு வந்து திரு முக பிரதானம்
பண்ணும்படியை அனுசந்தித்து
அதுக்கு இடைச் சுவராய் பாபஸ்பத தேகத்துடன் துஸ் சஹமான துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது
ஆகையால் ஹித பிரவர்த்தகரான தேவர் சகல துக்காஸ்பதமான சம்சாரத்தில் நின்றும்
அடியேனை சீக்கிரமாக உத்தரிப்பித்து அருள வேணும் -என்கிறார்

இதத்தாலே தென்னரங்கர் செய்கிறது என்று அறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆவோ வென்னும் இந்தப் பாவ வுடம்புடனே
பல நோவும் அனுபவித்து இப் பவத்து இருக்கப் போமோ
மதத்தாலே வல்வினையின் வழி யுழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை யுனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா என்னை
இனிக் கடுக இப் பவத்தின் நின்றும் எடுத்தருளே –53-

இதத்தாலே –ஹித புத்தியாலே
தென்னரங்கர் –பெரிய பெருமாள்
செய்கிறது என்று அறிந்தே இருந்தாலும் –கிருபா பலமாக துக்கங்களை அனுபவிப்பித்து அருளுகிறார் என்று அறிந்தே இருந்தாகிலும்
தற்கால வேதனையின் கனத்தால்-அந்த அந்தக் காலத்தில் உண்டான வேதனையின் மிகுதியாலே
பதைத்து –துடித்து
ஆவோ வென்னும் –அந்த துஸ்ஸஹதையால் உண்டான விஷாதத்தாலே துக்க ஸூசகமான ஹா ஓ என்கிற ஸப்தங்களைச் செய்யா நின்ற
இந்தப் பாவ வுடம்புடனே-இந்தப் பாப ஸரீரத்தோடே
பல நோவும் அனுபவித்து -வெகு துக்கங்களையும் அனுபவித்து
இப் பவத்து இருக்கப் போமோ-இந்த ஸம்ஸாரத்தில் இருக்க ஸக்யமோ
மதத்தாலே -தேஹ மதத்தினாலே
வல் வினையின் வழி யுழன்று திரிந்த-பிரபல கர்மத்தின் மார்க்கத்திலே அதுவே யாத்ரையாக வர்த்தித்த
வல் வினையேன் தன்னை -மஹா பாபியான அடியேனை
யுனக்கு –ஸத்துக்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிற தேவரீருக்கு
ஆளாக்கிக் கொண்ட-அடிமையாக்கிக் கொண்டு அருளின
இதத் தாயும் -ஹிதத்தை நடத்தும் மாதாவும்
தந்தையுமாம் -பிதாவுமுமாய் இருக்கிற
எதிராசா -எம்பெருமானார்-‘ஹிதத்தையே பிரியமாகக் கொடுத்து அருளும் ஸ்வாமி அன்றோ
இனி -தேவரீர் ஸம்பந்தத்தை அறிந்த பின்பு
என்னை கடுக இப் பவத்தின் நின்றும் -அடியேனை இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் ஸீக்ரமாக
எடுத்தருளே-எடுத்துக் கரையேற்றி அருள வேண்டும்
அவர்ஜனீய ஸம்பந்தம் அடியாக விறே உத்தரிப்பித்து அருளுவர் என்று கருத்து –

ஆரப் பெரும் துயரே செய்திடினும் -இத்யாதிப்படியே
ஹித புத்யா பெரிய பெருமாள் க்ருபா பலமாக
துக்கங்களை அனுபவிப்பித்து அருளுகிறார் என்று அறிந்தே இருந்தாலும்
அந்த அந்த காலத்தில் யுண்டான வேதனையின் மிகுதியாலே துடித்து
அந்த துஸ் சஹதையால் யுண்டான விஷாதத்தாலே துக்க ஸூசகமான சப்தங்களை சொல்லும்
இந்த பாப சரீரத்தோடு பஹூ துக்கங்களை அனுபவித்து
துக்கா வஹமான இந்த சம்சாரத்தில் இருக்க சக்யமோ –

(ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –ஞான சாரம்–21-)

பாவியேன் செய்து பாவியேன் -என்கிறபடியே தேக மதத்தாலே பிரபல கர்மத்தின் மார்கத்தாலே
அதுவே யாத்ரையாய் வர்த்தித்த மகா பாபியான என்னை
சத்துக்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிற தேவர்க்கு
அடிமை யாக்கிக் கொண்டு அருளின ஹிதத்தை நடத்தவும்
மாதாவும் பிதாவுமாய் இருக்கிற தேவர் சம்பந்தத்தை அறிந்த பின்பு
அடியேனை சீக்கிரமாக இந்த சம்சாரத்தில் நின்றும்
மாம் தாரய -என்னும்படி எடுத்துக் கரை ஏற்றி அருள வேணும் –

அவர்ஜ நீய சம்பந்தம் அடியாக இறே உத்தரிப்பித்து அருளுவர்-என்று கருத்து –

(பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-)

(தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய ।)

———————————————————

இப்படி இவர் அபேஷித்த படியே
ஸ்ரீ எம்பெருமானாரும் இவர் அபேஷிதம் எல்லாம் செய்வாராக எண்ணி இருக்க
இவருக்கு அது பற்றாமல்-ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் மீளவும் அவர் தம்மைப் பார்த்து
சர்வ வித பந்துவாய் இருக்கிற தேவரீர்
நான் இந்த தேஹத்தோடே இருந்து துக்கப் படாமல்
என்று தான் நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே சேரும்படி ஏற்றி அருளுவது என்கிறார் –

இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே
இருந்து நோவு படக் கடவேனையோ
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே
என்னிதத்தை இராப்பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே—–54-

அன்னையும் –பிரியத்தைப் பண்ணுகிற மாதாவும்
அத்தனும் -ஹிதத்தைப் பண்ணுகிற பிதாவும்
அல்லாத சுற்றமும்-மற்றும் அனுக்தமான அசேஷ பந்துக்கள் எல்லாம்
ஆகி என்னை அளித்து அருள் நாதனே-ஆகி அடியேனை ரக்ஷித்து அருளுகிற ஸ்வாமீ
என்னிதத்தை இராப் பகல் இன்றியே-அடியேனுடைய இஷ்டத்தை இரவு பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே-ஒருபடி சிந்திக்கிற பரம உதாரராய் யதிகளுக்கு நாதரான எம்பெருமானாரே
தேவரீருக்கு ஆட் பட்ட பின்பும்
இன்னும் எத்தனை நாள் இவ் வுடம்புடனே இருந்து -இன்னமும் எத்தனை காலம் இந்த தேஹத்தில் இருந்து
நோவு படக் கடவேனையோ-வேதனை படக் கடவேன்
ஐயோ -அந்தோ
என்னை இதினின்றும் விடுவித்து -அடியேனை பந்தகமான இந்த தேஹத்தில் நின்றும் முக்தனாம்படி பண்ணி
நீர் என்று தான் திரு நாட்டில் ஏற்றுவீர்-தேவரீர் எப்போது தான் பரம பதித்தில் ஏற்றி அருளுவுதீர்
இத்தை அருளிச் செய்து அருள வேணும்

வள்ளல் -பிரத்யுபகார ரஹிதமாக யுபகரிக்கும் உதாரர்-

அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் -என்கிறபடியே
பிரிய ஹிதங்களைப் பண்ணுகிற மாதா பிதாக்களும்
மற்றும் அனுக்தமான அசேஷ பந்துக்களும் எல்லாமுமாய்-என்னை ரஷித்து அருளுகிற நாதனே –
என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -என்கிறபடியே
என்னுடைய ஹிதத்தை திவா ராத்திரி விபாகம் அற ஒருபடி சிந்திக்கிற பரம உதாரராய்
எதிகளுக்கு நாதர் ஆனவரே

(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதாலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே-4-)

உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்கிறபடியே
தேவரீர்க்கு சேஷ பூதன் ஆன பின்பு
இன்னம் எத்தனை காலம் இந்த தேஹத்திலே இருந்து வேதனை படக் கடவேன்
ஐயோ-அடியேனை பந்தமான இந்த தேகத்தில் நின்றும் முக்தனாம்படி பண்ணி
என்று தான் திரு நாட்டின் உள்ளே ஏற்றி அருளுவுதீர் –
அந் நாளும் ஒரு நாள் ஆமோ

——————————————

செய்த அம்சத்தில் ‘க்ருதஞ்ஞதையும் செய்ய வேண்டிய அம்சத்தில் அபேஷிதையும்
அதிகாரிக்கு வேண்டுவது ஒன்றாகையாலே
அந்த கிருதஞ்ஞதா ஸூசகமாக ஸ்ரீ எம்பெருமானார் யுடைய பிரசாதத்தாலே
தாம் பெற்ற பேறுகளை அனுசந்தித்து -வித்தராய் – அருளுகிறார் –

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை யுணவாகப் பெற்றோம்
மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு போராமை பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-

தென்னரங்கர் -தர்ச நீயமான கோயிலிலே -அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட் கொள்வாராய் -அன்பொடு தென் திசை இலங்கை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிற பெரிய பெருமாளுடைய
சீர் அருளுக்கு -நிர்ஹேதுகக் கிருபைக்கு
இலக்காகப் பெற்றோம்-லஷ்யமாகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே –தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதி -என்றும்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
தலை யரங்கம் -என்றும் சொல்லுகிறபடியே அகில திவ்ய தேச ப்ரதானமான திருவரங்கம் திருப்பதியை
இருப்பாகப் பெற்றோம்-நித்ய வாசஸ் ஸ்தானமாகப் பெற்றோம்
மன்னிய சீர் –பர பக்த்யாதி கல்யாண குணங்கள் பொருந்தி இருக்கிற
மாறன் -நம்மாழ்வாருடைய
கலை -தொண்டருக்கு அழுத்தமான வகுள பூஷண வாக் அம்ருதத்தை
யுணவாகப் பெற்றோம்-அஸனமாகப் புசிக்கப் பெற்றோம்
மதுரகவி -தேவு மற்று அறியேன் என்று அருளிச் செய்த மதுரகவி ஆழ்வாருடைய
சொல் படியே -திவ்ய ஸூக்திப்படியே
நிலையாகப் பெற்றோம்-யதீந்த்ர மேவ நீரந்தரம் சிஷேவே தைவதம் பரம் என்றும்
உன்னை ஒழிய தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை என்றும்
நாமும் நம்முடையாரும் பேசும்படியான சரம பர்வ நிஷ்டையை நிஷ்டையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்-தத் ப்ரதிபாதகங்களான நம்முடைய பூர்வாச்சார்யர்களுடைய திவ்ய ஸூக்திகளான ரஹஸ்யங்களை ஆந்தரமாக அநுஸந்திக்கப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுதுபோக்காகப் பெற்றோம்-அதில் ஆதர அதிசயத்தை யுடைய நமக்கு மற்ற ஒன்றில் பொழுது போக்கு ஆகாமல் முழுதும் அவற்றையே கால க்ஷேபமாகப் பெற்றோம்
பின்னை -இப்படியான அநந்தரம்
ஓன்று தனில் -தத் இதர கிரந்தங்கள் ஒன்றிலும்
நெஞ்சு போராமை பெற்றோம்-மனஸ்ஸு சலியாமல் இதிலே பிரதிஷ்டமாக இருக்கப் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் -இது எல்லாம் ஒரு தட்டும் தானொரு தட்டுமாய் இருக்குமதாய்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான
பர உச்சாரயம் கண்டால் அஸஹிஷ்ணுதை இல்லாத
பெருமையும் பெற்றோமே–மஹத்தையும் லபித்தோமே
இது ஒரு மஹா லாபம் இருந்தபடியே என்று வியந்து அருளுகிறார்
உள்ளுதல் -விசாரித்தல்

தர்சநீயமான ஸ்ரீ கோயிலிலே –
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள் கொள்வாராய்-
அன்போடு தென் திசை நோக்கிப் பள்ளி கொண்டு அருளுகிற
ஸ்ரீ பெரிய பெருமாள் நிர்ஹேதுக கிருபைக்கு லஷ்யமாகப் பெற்றோம் –

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கத் திருப்பதி (4-9-11)-என்றும் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -என்றும்
தலையரங்கம் (2-70)-என்றும்
சொல்லுகிறபடியே -அகில திவ்ய தேச பிரதானமான
ஸ்ரீ திருவரங்கத் திருப்பதியே நித்ய வாசஸ் ஸ்தானமாகப் பெற்றோம் –

பரபக்தியாதி கல்யாண குணங்கள் பொருந்தி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய
தொண்டர்க்கு அமுதான வகுள பூஷண வாக் அம்ருதத்தையே அன்னமாகப் புஜிக்கப் பெற்றோம்-

தேவு மற்று அறியேன் -என்கையாலே அவர்களை சிரித்து இருப்பார் -என்னும்படியான
ஸ்ரீ மதுர கவிகளுடைய திவ்ய ஸூக்திப்படியே
யதீந்திர மேவ நிரந்தரம் சிஷேவே தைவதம் பரம் -என்றும்
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலைமை -என்றும்
நாமும் நம்முடையாரும் பேசும் படியான சரம பர்வ நிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம் –

தத் பிரதிபாதகங்களான நம்முடைய பூர்வாச்சார்யர்கள் உடைய திவ்ய ஸூக்திகளான
ரஹஸ்யங்களை-நெஞ்சு தன்னால் தேறலுமாம் –என்னும்படி
மேல் எழ அன்றிக்கே ஆந்தரமாக அனுசந்திக்கப் பெற்றோம்

அதில் ஆதர அதிசயத்தை உடைய நமக்கு மற்று ஒன்றில் பொழுது போக்காமல்
முழுதும் அவற்றையே கால ஷேபமாகப் பெற்றோம் –
இப்படியான அநந்தரம் தத் இதர கிரந்தங்களில் ஒன்றிலும்-மனஸ்ஸூ சலியாமல்
இதிலியே பிரதிஷ்டிதமாம் படி இருக்கப் பெற்றோம்

இது எல்லாம் ஒரு தட்டும் -தான் ஒரு தட்டுமாய் இருக்குமதாய்
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து இருக்கையும் -என்னும்படி அரிதாய் இருப்பதான
பர உச்சாராயம் கண்டால் அசஹிஷ்ணுதை இல்லாத மஹாத்மத்தையும் லபிததோமே-

இது ஒரு மகா லாபம் இருந்தபடியே —

புறம்புண்டான பற்றுக்களை அடைய வாசனையோடு விடுகையும் –
எம்பெருமானே தஞ்சம் என்று பற்றுகையும் –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் –
பேற்றுக்கு த்வரிக்கையும் –
இருக்கும் நாள் உகந்து அருளின நிலங்களிலே ப்ரவணனாய்-குண அனுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்காயும் –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –
திரு மந்த்ரத்திலும் த்வயத்திலும் நியதனாகையும் –
ஆசார்ய ப்ரேமம் கனத்து இருக்கையும் –
ஆச்சார்யன் பக்கலிலும் -எம்பெருமான் பக்கலிலும் க்ருதஜ்ஞனாய் போருகையும் –
ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையவனாய் இருக்கும் பரம சாத்விகனோடே
சஹ வாசஹம் பண்ணுகையும்-
வைஷ்ணவ அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதம்-சூரணை-116-

இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை யாவது –
கீழ்ச் சொன்ன இவ் ஆகாரங்கள் எல்லாம் உடையராய் இருக்கும் வைஷ்ணவர்களை கண்டால் –
இந்தளத்திலே தாமரை பூத்தால் போலே -இந்த விபூதியிலே இங்கனேயும் சிலர் உண்டாவதே என்று
அவர்கள் வைபவத்தை அறிந்து -அவர்கள் அளவில் ப்ரீதி உக்தனாய் இருக்கை –
கீழ்  சொன்னவை எல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாய் இருப்பது ஓன்று இறே இது

—————————————-

ஸ்ரீ மதுரகவி சொல் படியே நிலையாகப் பெற்றோம் -என்று
தம்முடைய நிலையை வெளி இடா நின்று கொண்டு
அதுக்கு அனுரூபமாக அவர் திருவடிகளிலே கைங்கர்யத்தை அபேஷிககிறார்-

உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -அந்தோ
எதிராசா நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத் தாள் தா –56-

எதிராசா-யதிகளுக்கு நாதரானவரே
உன் தன் அபிமானமே உத்தாரகம் என்று-ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்கிறபடியே தேவரீருடைய அபிமானமே இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்து இருக்கச் செய்த நீ -தெளிவுற்ற சிந்தையா என்கிறபடியே மனஸ்ஸு நிர்மலமாய் தன் நிஷ்டனாய் இருக்கும்படி -பண்ணி இருக்கும்படி -உபகரித்து அருளின தேவரீர்
அந்தோ-ஐயோ
நோய்களால் -வேதனைகளால்
என்னை நலக்காமல்-அடியேனை பாதியாமல்
சதிராக –ஸாமர்த்யமாக
நின் திருத் தாள் தா–தேவரீர் திருவடிகளைப் ப்ரஸாதித்து அருள வேணும் –

எதிகளுக்கு நாதர் ஆனவரே -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்னும்படி
தேவரீருடைய அபிமானமே இவ் வாத்மாவுக்கு உத்தாரகம் என்று
தெளிவுற்ற சிந்தையர் (7-5-11)-என்னும்படி-மன பிரசாதம் யுண்டாய்
தன் நிஷ்டராய் இருக்கும்படி பண்ணி -உபகரித்து அருளின தேவரீர்

ஐயோ
வேதனைகளால் அடியேனை நலக் கேடு பண்ணாமல்
நே மாம் பிரக்ருதிம் ஸ்தூல சூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய -(கத்ய த்ரயம்)என்றபடி சாமர்த்தியமாக
உன் பாத யுகமாமேர் கொண்ட வீடு -என்கிறபடியே தேவரீர் திருவடிகளையே பிரசாதித்து அருள வேணும் –

(தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11)

(சீர் கொண்டு பேரறம் செய்து,நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன்,உன் பத யுகமாம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமானுச! இது கண்டு கொள்ளே.–83-)

—————————————————

இப்படி நீர் சொல்லுகிற நிர்பந்தங்கள் எல்லாம் கேட்டு- நாம் உம் கார்யம் செய்கைக்கு
எந்த சம்பந்த பிராபல்யம் கொண்டு தொடருகிறீர்-என்ன
ஸ்ரீ பிள்ளை திருவடிகளை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே ஒரு வஸ்து என்று அபிமானித்து-
அடியேனுடைய அபராதம் பாராத தேவரீர்-
யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீ மன் கிருபயா பரயா தவ -என்கிறபடியே
அடியேனுடைய முக்த ஜல்பிதத்தை செவி தாழ்த்து கேட்டு அருள வேணும் என்கிறார் –

(மண்டல ஆகாரமான குரு பரம்பரை நம்முடையது-ஆ முதல்வனாம் இவன் -என்று பெருமாள் நம்மாழ்வாரையும் ஆழ்வாரும் ஆளவந்தார் உடையவரையும் -பெரிய பெருமாள் மா முனிகளையும் அபிமானித்து அருளின சம்பிரதாயம்)

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை
வாச மலர்த்தாள் அடைந்த வத்து வென்று -நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசா அடியேன்
புன் பகர்வைக் கேளும் பொறுத்து—57-

தேசிகர்கள் போற்றும் திருவாய் மொழிப் பிள்ளை-தேசிக குல கூடஸ்தரான ஆழ்வாருடைய அசேஷ விருத்தியிலும் அந்விதராய் -அதுவே யாத்ரையாய்ச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேதத் திருமலை ஆழ்வார் வாழி -என்று ஆச்சார்யர்களால் மங்களா ஸாஸனம் பண்ணும்படியான மஹாத்ம்யத்தை யுடையரான பிள்ளையுடைய
வாச மலர்த் தாள் அடைந்த -ஸுகந்த்ய ஸுகுமார்ய யுக்தமான திருவடிகளை யாஸ்ரயித்ததால்
வத்து வென்று -சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற
நேசத்தால்–ஸ்நேஹத்தாலே
என் பிழைகள் காணா –அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே
அதில் அவிஞ்ஞாதவாய் இருக்கிற
எதிராசா –எம்பெருமானாரே
அடியேன்-அடியேனுடைய
புன் பகர்வைக் -அல்ப வார்த்தைகளை
கேளும் பொறுத்து-சீறாமல் ஸஹித்து ஸாதாரமாகத் திருச் செவி சாத்தி அருள வேணும் –

தேசிக குல கூடஸ்தரான ஸ்ரீ ஆழ்வார் உடைய அசேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
அதுவே யாத்ரையாகச் செய்து கொண்டு போருகையாலே
செந்தமிழ் வேத திருமலை ஆழ்வார் வாழி-என்று ஸ்ரீ ஆச்சார்யர்களாலே மங்களா சாசனம் பண்ணும் படியான
மகாத்ம்யத்தை உடையரான ஸ்ரீ பிள்ளை யுடைய சௌகந்த்ய சௌகுமார்ய யுக்தமான
திருவடிகளை ஆஸ்ரயித்து

சேஷத்வ ஆஸ்ரயமான வஸ்து என்கிற ஸ்நேஹத்தால்-அடியேனுடைய அபராதங்களை தர்சியாதே
அதில் அவிஞ்ஞாதா வாய் இருக்கிற தேவர் அடியேனுடைய தோஷ யுக்தமான
முக்த ஜல்பிதத்தை சீறாமல் சஹித்து நின்று சாதாரமாக திருச் செவி சாத்தி அருள வேணும் –

நம ஸ்ரீஶைல நாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஶாலிநே

(வையகமெண் சடகோபன் மறை வளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்ய வுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வ நகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே)

———————————————————–

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை வாச மலர்த்தாள் அடைந்தது – என்கிற மாத்ரமேயோ
அவராலே லப்த ஞானனான எனக்கு-த்வத் சம்பந்த ஞானம் இல்லையோ -என்கிறார்-

எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
உன் தன் உறவை உணர்த்திய பின் -இந்த யுயிர்க்கு
எல்லா வுறவும் நீ என்றே எதிராசா
நில்லாதது வுண்டோ என் நெஞ்சு —-58-

எந்தை -திரு மந்த்ரம் மாதாவும் பிதா ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வர்கள் -என்கிறபடியே எனக்குப் பிதாவான
திருவாய் மொழிப்பிள்ளை -திருவாய் மொழிப் பிள்ளை தம்முடைய
இன்னருளால்–நிர்ஹேதுக கிருபையாலே
உன் தன் உறவை –தேவரீருடைய திருவடிகளில் ஸர்வ வித பந்துத்வத்தையும்
உணர்த்திய பின் -அஞ்ஞாத ஞாபனம் பண்ணி ரக்ஷித்து அருளின அநந்தரம்
இந்த யுயிர்க்கு-இப்படி யுண்டான சம்பந்தத்தை அறிந்த இந்த வாத்மாவுக்கு
எல்லா வுறவும் -மந்த்ர ப்ரதிபாத்யமான நவவித ஸம்பந்தமும்
நீ என்றே –தேவரீர் என்று அத்யவசித்து
எதிராசா-எம்பெருமானாரே
என் நெஞ்சு-அடியேனுடைய மனஸ்ஸு
நில்லாதது வுண்டோ –நிலை நில்லாதே இருக்குமது உண்டோ
தந்தை நல் தாய் தாரக தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே -என்றும்
அல்லாத சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது –

ஸ்ரீ திரு மந்தரம் மாதாவும் பிதா ஸ்ரீ ஆச்சார்யனும் என்று அருளிச் செய்வார்கள் -என்கிறபடியே
எனக்கு ஜனகரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே
தேவரீர் திருவடிகளிலே சர்வ வித பந்துத்வத்தையும்-அஜ்ஞ்ஞாத ஞாபனம் பண்ணி ரஷித்து அருளின
அநந்ரம்
இப்படி யுண்டான சம்பத்தத்தை அறிந்த இவ் வாத்மாவுக்கு மந்த்ர பிரதி பாத்யமான நவ வித சம்பந்தமும்
தேவரீர் என்று அத்யவசித்து அதில் நிலை நில்லாதே இருக்குமது உண்டோ -என்னுடைய மனஸ்ஸூ –

தந்தை நல் தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என் தனக்கு நீயே (3)-என்றும்
அல்லாச் சுற்றமுமாகி -என்றும் அன்றோ இருப்பது-

————————————–

இப்படி தேவரீர் திருவடிகளிலே சம்பந்த ஞானத்தை உடைய எனக்கு
ஹித பரரான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
முக்த அசனம் யுண்டாக்கி
தாமே மார்க்க சிந்தை பண்ணி
தேக விமோசனம் பண்ணும் கால அவதியை
அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த -சிந்தை செய்து இப்
பொல்லா வுடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ
சொல்லாய் எதிராசா சூழ்ந்து —–59-

எந்தை -அடியேனுக்குத் தந்தையும் தாயுமான
திருவரங்கர் -கோயிலை இட்டு நிரூபிக்கும் படியான பெரிய பெருமாள்
ஏரார் கருடன் மேல்-அழகு நிறைந்த பெரிய திருவடியின் மேலே
வந்து –எழுந்தருளி
முகம் காட்டி –ஸரீரம் விடுகிற ஸமயத்திலே அடியேனுக்கு அபேக்ஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும் முறுவலை யுடைத்தான திருமுக மண்டலத்தையும் காட்டி
வழி நடத்த -அர்ச்சிராதி மார்க்கத்தாலே நடத்திக் கொண்டு போக
சிந்தை செய்து –மனநம் பண்ணி
இப் பொல்லா வுடம்பு தனைப் –இந்த ஹேயமான தேஹம் தன்னை
போக்குவது எந்நாள் கொலோ–தேவரீருக்காகப் போக்கி அருளுவது எந்நாளோ
எதிராசா–எம்பெருமானாரே
சூழ்ந்து-அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து
சொல்லாய் -அருளிச் செய்து அருளீர்

எனக்குத் தந்தையும் தாயும் ஆவாராய் ஸ்ரீ கோயிலை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பெருமாள்
அஞ்சிறைப் புள் பாகரான ஆகாரம் தோன்ற
சௌந்தர் யாதிகளால் மிக்கு இருக்கிற ஸ்ரீ பெரிய திருவடி மேல்
கொண்டு எழுந்து அருளி

(ஸர்வேஷாம் பிதா மாதா ச மாதவ -சரணவ் சரணம் புருஷ ரிஷப -மார்க்கண்டேயர் -தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திரு வரங்கத்துள் ஓங்கும்
ஒளி யுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார்
எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளிய நம் பையல் என்னார் அம்மாவோ கொடியவாறே–37)

(அலம் புரிந்த நெடும் தடக்கை யமரர் வேந்தன்
அஞ்சிறைப் புள் தனிப்பாகன் அவுணர்க்கு என்றும்
சலம் புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை யீர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த வுந்திப்
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –6-)

சரீர வியோக சமயத்திலே
எனக்கு அபேஷிதமான கஸ்தூரி திரு நாமத்தையும்
நல் கதிர் முத்தம் வெண்ணகை செவ்வாய் (2-7)-என்று முறுவலை யுடைத்தான
ஒளி மதி சேர் திரு முகத்தையும் காட்டி அனுபவிப்பித்து

(கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே –2-7-)

அரங்கத்து உறையும் இன் துணைவனான தான் (3-7)அர்ச்சிராதி மார்க்கத்திலே கொண்டு போய்-
நயாமி -யில் படியே வழி நடத்த மனனம் பண்ணி –
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே-(5-8)என்னும்படியே
அதுக்கு அந்தர பாவியாக வந்த ஹேயமான தேஹம் தன்னை தேவர்க்காகப் போக்கி அருளுவது எந்நாள்
அத்தை நான் தேறி இருக்கும்படி விசாரித்து அருளிச் செய்து அருளுவீர்

(என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணையாய் என் தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனோடும் போய் எழில் ஆலி புகுவர் கொலோ ?–3-7-6-)

(அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7-

பூர்ணே சதுர்தசே வர்ஷே -என்று நாள் அவதி இட்டு
பின்பு
ஆருரோ ஹரதம் ஹ்ருஷ்ட -என்று ஹ்ருஷ்ட யுக்தராய் இருந்தால் போலே
அது கொண்டு நான் ஹ்ருஷ்டனாக இருக்கலாய்த்து

அன்றிக்கே
சூழ்ந்து -என்கிறது-
ஸ்ரீ பெரிய பெருமாள் அவா அறச் சூழ்ந்தபடி யாகவுமாம்–

சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து -என்னும் இடத்துக்கு
விசாரித்து -என்று இறே வியாக்யானம் பண்ணி அருளினார்கள்-

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-)

(சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-)

—————


இனி
நம் பேற்றுக்கு நாம் தவரிக்க வேணுமோ – ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ எம்பெருமானார்க்கு பண்ணி அருளிய பேறுகள் எல்லாம் அவர் திருவடிகளிலே சம்பந்தம் உடைய நமக்கு
தாயப் பிராப்தமாய் இருப்பது ஓன்று அன்றோ
என்று அத்தைத் தாம் பெற்றதாக திரு உள்ளத்தோடு கூடி ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்ம தன்றோ நெஞ்சமே நற் றாதை சொம் புதல்வர்
தம்ம தன்றோ தாய முறை தான் —60-

அரங்கர்–பெரிய பெருமாள்
இந்த வரங்கத்து -இந்தக் கோயிலிலே
இனிது இரு நீ என்ற –ஸ்ரீ ரெங்கே ஸூக மாஸ்வ -என்கிறபடியே நீர் ஸூகமாக இரும் என்று
எந்தை எதிராசர்க்கு -அடியேனுக்குப் பிதாவான எம்பெருமானாருக்கு
ஈந்த வரம் -ப்ரஸாதித்து அருளின வரத்தை
சிந்தை செய்யில்–விசாரிக்கும் அளவில்
நெஞ்சமே–மனஸ்ஸே
நம்ம தன்றோ -நம்முடைய தன்றோ
அது எப்படி என்னில்
நற் றாதை -நிருபாதிக பிதாவினுடைய
சொம் -சொத்துக்கள்
தாய முறை தான்-தாயப் பிராப்தியாலே
புதல்வர் தம்ம தன்றோ -புத்ரருக்காகவே யன்றோ இருப்பது

ஆகையாலே நம் பிராப்திக்கு நாமே யத்னிக்க வேண்டாம் -எல்லாம் சித்தமாக அன்றோ இருப்பது -இனி அவர் இடத்திலே ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனை-

த்வயம் அர்த்த அனுசந்தாநேன சஹாசதைவம் வக்தா யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீ ரெங்கே ஸூகம் அஸ்வ -என்று
அருளிச் செய்து -அநந்தரம் –
நித்ய கிங்கரோ பவிஷ்யசி மாதே பூதத்ர சம்சய
இதி மயை வஹ் யுக்தம்
அத ஸ்தவம் தத்வதோமத் ஜ்ஞான தர்சன பிராப்தி ஷூ நிஸ் சம்யச் ஸூ க மாஸ்வ-என்னும் அளவாக

தேக பாதம் தொடங்கி
கைங்கர்ய பர்யந்தம் உண்டான பேறுகள் எல்லாம்
நாமே தலைக் கட்டித் தருகிறோம் என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் நமக்கு ஜனகரான ஸ்ரீ எம்பெருமானாருக்கு வழங்கி அருளின வரத்தை நிரூபிக்கில்
அவர்க்கு அவர்ஜ நீயரான நம்மது அன்றோ –

அது எப்படி என்னில்
நிருபாதிக பிதாவானவன் ஸ்வம்-தாய பிராப்தியாலே புத்திரன் தனக்கேயாய் அன்றோ இருப்பது
ஆகையால் நம் பிராப்திக்கு நாமே யத்தனிக்க வேண்டா -எல்லாம் சித்தமாய் அன்றோ இருக்கிறது-
இனி அவர் இடத்தில் ந்யஸ்த பரராய் இருக்கும் அத்தனையே வேண்டுவது-

ஆக
இத்தால் உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் ஸ்ரீ பெரிய பெருமாளாலே பெற்று ஸ்ரீ உடையவராய்
அத்தாலே ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயியாய்-பிரபன்ன ஜன கூடஸ்தராய்
இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே-
ருசி கார்யமாக ஸ்ரீ யதீந்திர பிரவணரான ஸ்ரீ ஜீயர் பண்ணி அருளின
பிராப்ய பிரார்த்தனை

(பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—தாடீ பஞ்சகம்-5-)

அவர் அபிமான அந்தர்பூதர் எல்லாருக்குமாய் -அத்தாலே ஸ்ரீ எம்பெருமானார் பிரசாதத்தைப் பெற்று-
நித்ய விபூதியிலே நிரந்தர பகவத் அனுபவ கைங்கர்ய நிரதராய் -வாழப் பெறுவார்கள்
என்ற அர்த்தம் சொல்லித் தலைக் கட்டிற்று ஆயிற்று –

ஸ்ரீ எதிராசா ஸ்ரீ எதிராசா என்று சம்போதிக்கிறது
எல்லாம் -தமக்கும் அவர்களோடு-எதிகளோடு- ஒத்த பிராப்தி யுன்டாகையாலும்-
யதஸ் ஸூத்த சத்வா -என்கிறபடி
ஸ்ரீ எதிகளுக்கு நாதர் ஆகையாலும் -அத்தை அடிக்கடி ஆதரித்து அருளிச் செய்கிறார் —

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -33-44-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

அவதாரிகை –

கீழே
ப்ராசங்கிகமாய் வந்த மங்களா சாசனத்திலே -மண்டி அனுபவித்து
ப்ரா சாங்கிகம் பரி சமாப்ய பிரகிருதம் அனுசரதி -என்கிறபடியே
மீளவும் பிரக்ருதத்திலே இறங்கி

சர்வ லோகத்தில் உண்டான சர்வ துரிதங்களும் போம்படி திரு வவதரித்து ரஷித்து அருளினால் போலே
அடியேனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி அடிமை கொண்ட ஸ்வாமி யானவரே

அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாய் யுண்டான தேக ஸ்திதி
தத் விமோசன காலாதி நியமங்களை எல்லாம் அறிந்து அருளும் சர்வஜ்ஞ்ஞரான தேவரீர்
அஜ்ஞ்ஞனான அடியேனை விலஷணமான தேசத்தில் ஆரோஹிப்பித்து அருள
திரு உள்ளமாகில் விஸ்மரித்து இருக்கிறதுக்கு ஹேது ஏது-என்று
அவர் தம்மையே கேட்கிறார்-

இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் யான் இருப்பேன்
இன்ன பொழுது உடம்பு விடும் இன்னபடி யது தான்
இன்ன விடத்தே அதுவும் என்னும் இவை எல்லாம்
எதிராசா நீ யறிதி யான் இவை யொன்று அறியேன்
என்னை இனி இவ் உடம்பை விடுவித்து உன்னருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறது என் பேசாய்
பேதைமை தீர்த்து என்னை யடிமை கொண்ட பெருமானே –33-

இன்னம் எத்தனை காலம் இந்த வுடம்புடன் -இன்னமும் எவ்வளவு காலம் ஹேயமான இந்த தேஹத்தோடே
யான் இருப்பேன்–இதில் பொருத்தம் அற்று இருக்கிற அடியேன் இருப்பேன்
இன்னபொழுது உடம்பு விடும் -இன்ன காலத்திலே தேஹம் விடும்
இன்னபடி -இன்ன பிரகாரத்திலே
யது தான்-அந்த தேஹ வியோஹம் தான்
இன்ன விடத்தே இன்ன ஸ்தலத்திலே
அதுவும் -அந்த தேஹ விமோசநமாம்
என்னும் இவை எல்லாம்-என்று சொல்லப் படுகிற இவை எல்லாம்
எதிராசா -எம்பெருமானாரே
நீ யறிதி -ஸர்வஞ்ஞரான தேவரீர் அறிந்து அருள்வீர்
யான் இவை யொன்று அறியேன்- அஞ்ஞனான அடியேன் இவற்றில் ஏக தேசமும் அறியேன்-
ஆன பின்பு பேதைமை தீர்த்து-அஞ்ஞனானத்தைப் போக்கி
என்னை -அடியேனை
யடிமை கொண்ட பெருமானே என்னை-ஆட் கொண்ட ஸ்வாமீ
என்னை–இத் தேஹத்தோடே பொருத்தம் அற்று இருக்கிற அடியேனை
இனி உன்னருளால்-இனி தேவரீர் கிருபையாலே
இவ் உடம்பை விடுவித்து-இச் சரீரத்தை விடுவித்து
ஏராரும் -திவ்ய அலங்கார பரி பூர்ணமான
வைகுந்தத்து ஏற்ற -பரம பதத்தில் ஏற்ற
நினைவுண்டேல்–திரு உள்ளம் உண்டாகில்
பின்னை விரையாமல் -அநந்தரம் த்வரியாமல்
மறந்து இருக்கிறது என் -ந்ருத்யோகராய் விஸ்மரித்து எழுந்து அருளி இருக்கிறதுக்கு ஹேது ஏது
பேசாய்-அத்தை அருளிச் செய்து அருளீர்

பேதைமை தீர்த்து-த்வத் சம்பந்த ஜ்ஞான சூன்யத்தை யாகிற மௌக்ர்யத்தைப் போக்கி

சேஷ பூதனான அடியேனை-வினையேனை உனக்கு அடிமை அறக் கொண்டாய் -என்கிறபடியே
சேஷத்வ அனுகுணமான தாஸ்யத்தை கொண்டு அருளின ஸ்வாமி யானவரே

(மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-)
இன்னம் எத்தனை காலாவதி இந்த ஹேயமான தேஹத்தோடே-இதில் பொருத்தம் அற்று இருக்கிற நான் இருப்பேன்
இன்ன காலத்தில் தேஹம் முக்தமாம்-இன்ன பிரகாரத்தில் இந்த தேக விமோசனம் இந்த ஸ்தலத்திலே
என்று சொல்லப் படுகிற இவை எல்லாம்-எதிகளுக்கு நாதரானவரே சர்வஜ்ஞ்ஞரான தேவர் அறிந்து அருள்வீர்
அஜ்ஞ்ஞனான நான் இவற்றில் ஏக தேசமும் அறியேன்-

ஆன பின்பு இத் தேகத்தோடு பொருத்தம் அற்று இருக்கிற என்னை
இனி தேவர் கிருபையாலே-இச் சரீரத்தை விடுவித்து
திவ்ய அலங்கார பரிபூரணமான பரம பதத்தில் ஏற்றத் திரு உள்ளம் உண்டாகில்
அநந்தரம்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -என்கிறபடியே
த்வரியாமல்-நிருத்யோகராய்-விஸ்மரித்து எழுந்து அருளி இருக்கிறதற்கு ஹேது ஏது
அத்தை அருளிச் செய்து அருளீர் –

தேவர்க்கு கிருபை யுண்டாய் இருக்க-விளம்ப ஹேதுவான சாதனம் இத்தலையில் இல்லையே இருக்க
கால விளம்பம் கார்யம் என் என்று கருத்து –

அமர்ந்து இருக்கிறது என் பேசாய் -என்றும் பாட பேதம்

நினைவுண்டேல் என்று
சித்தவத் கரிக்கறதாகவுமாம்-

—————————————————————

நமக்கு கிருபை யுண்டானாலும்-எத்தனை தயாவான்களையும் நிர் க்ருணராம் படி பண்ணுவதான
உம்முடைய பிரபல பிரதி பந்தகங்கள் கிடந்ததே என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு நினைவாக

சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி -என்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரன் தேவர்க்கு விதேயன் அன்றோ –
ஆகையாலே த்வத் அனந்யனான நான் பாப பலன்களை புஜியாமல் முக்தனாம் படி பண்ண வேணும் -என்கிறார் –

முன்னை வினை பின்னை வினை யாரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை யனைத்தும் யானே
என்னை யடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா நீ இட்ட வழக்கன்றோ சொல்லாய்
உன்னை யல்லது அறியாத யான் இந்த வுடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ
என்னுடைய விரு வினையை இறைப் பொழுதின் மாற்றி
ஏராரும் வைகுந்தத்து ஏற்றி விடாய் நீயே —–34-

முன்னை வினை -பூர்வாகம்
பின்னை வினை -உத்தராகம்
யாரத்தம்– பிராரத்தம்
என்னும் -என்று சொல்லப்படுகிற
மூன்று வகையான வினைத் தொகை -மூன்று பிரகாரங்களான பாப ஸமூஹங்களை
யனைத்தும் –அகிலத்தையும்
யானே-ஸர்வஞ்ஞத்வ ஸர்வ சக்தித்வ விஸிஷ்டனான நானே
என்னை –வாத்சல்யாதி குண விஸிஷ்டனான என்னை
யடைந்தோர் தமக்குக் –அநந்ய சரண்யராய்- சரண வரணம் பண்ணின ப்ரபன்னரானவர்கள் தங்களுக்கு
கழிப்பன் என்னும் –அப்படிப்பட்ட அகில பாபத்தையும் ஸ வாஸனமாகப் போக்குவன் என்று அருளிச் செய்த
அரங்கர்–திருவரங்கரான பெரிய பெருமாள்
எதிராசா -யதிகளுக்கு நாதரானவரே
நீ இட்ட வழக்கன்றோ -தேவரீருக்கு விதேயர் அன்றோ
சொல்லாய்-அருளிச் செய்ய வேண்டும்
இவ் வர்த்தம் யதார்த்தம் என்னுமது தேவரீர் தாமே அருளிச் செய்யலாகாதோ
உன்னை யல்லது –இப்படி ஈஸ்வர வஸீகாரத்தை யுடைய தேவரீரை ஒழிய
அறியாத -வேறே ஒரு ரக்ஷகனையும் அறியாத
யான் -அடியேன்
இந்த வுடம்போடு-இச் சரீரத்தோடு
உழன்று -பொருந்தி அதுவே யாத்ரையாக
வினைப் பயன் -தத் கார்யமான பாப பலங்களை
புசிக்க வேண்டுவது ஓன்று உண்டோ-அனுபவிக்க வேணும் என்ற ஒரு நிர்பந்தம் உண்டோ
என்னுடைய விரு வினையை -அடியேனுடைய ப்ரபல பாபத்தை
இறைப் பொழுதின் மாற்றி-க்ஷண காலத்தில் ஸ வாஸனமாகப் போக்கி
ஏராரும் –அழகு நிறைந்துள்ள
வைகுந்தத்து ஏற்றி விடாய் –வைகுந்த மா நகரத்தில் ஏற்றி விட்டு அருளீர்
நீயே –தேவரீரே –என்கிறார்

பூர்வாகம் உத்தராகஞ்ச சமாரப்த மகம் ததா -என்கிறபடியே
பூர்வாகம் உத்தராகம் ஆரப்தம் -என்று சொல்லப் படுகிற வர்க்கத் த்ரயமான பாப சமூஹங்கள்
ஆன எல்லாவற்றையும்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ -சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று
சஹாயாந்தர நிரபேஷனாய்க் கொண்டு –

சர்வஜ்ஞத்வ சர்வ சக்த்வ விசிஷ்டனான நானே
வாத்சல்யாதி குண விசிஷ்டனான என்னை-அநந்ய சரணராய் சரண வரணம் பண்ணின பிரபன்னர் ஆனவர்கள்
தங்களுக்கு அப்படிப் பட்ட அகில பாபங்களையும் சவாசனமாக போக்குவன் என்று அருளிச் செய்த
செம்மை யுடைய திருவரங்கரான ஸ்ரீபெரிய பெருமாள் –

எதிகளுக்கு நாதர் ஆனவரே -வச்யஸ் சதா பவதி தே !(17)-என்கிறபடியே த்வத் அதீனர் அன்றோ –
இவ் வர்த்தம் யதார்த்தம் என்னுமது தேவர் தாம் அருளிச் செய்யல் ஆகாதோ
இப்படி ஈஸ்வர வசீகாரத்தை உடைய தேவரை ஒழிய
வேறு ஒரு ரஷகாந்தரம் அறியாதே-அநந்ய கதியாய் இருக்கிற நான்
இந்த தேஹத்தோடே பொருந்தி அதுவே யாத்ரையாக இருந்து
தத் கார்யமான பாப பலங்களை புஜிக்க வேணும் என்ற ஒரு நிர்பந்தம் உண்டோ

பாபங்களுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு-
இப்படியான பின்பு என்னாலே அனுபாவ்யமாய் இருக்கிற பிரபல கர்மங்களை
கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் (1-6)-என்கிறபடியே
ஷண காலத்திலே சவாசனமாகப் போக்கி நான் தரைக்கிடை கிடவாமல் ஏர் கொள் ஸ்ரீ வைகுந்த மா நகரத்திலே
த்வத் ஏக பரமாய் அற்ற பின்பு ஏற்றிவிட்டு அருளீர் –

ஏர் -அழகு
ஆர்தல் -மிகுதி-

——————————————-

அடியேனுடைய சகல பிரதிபந்தகங்களைப் போக்கி ரஷித்து அருளுகையில் யத்னம் பண்ணி அருளுகிற தேவரீர்
கிருபையாலே நித்ய கைங்கர்யம் கொண்டு அருள சங்கல்ப்பித்து இருக்க
அத்தையும் அதிகரித்துப் -அதிகிரமித்து -போவதான என்னுடைய
ருசி விரோதியாய் இருக்கிற இந்த்ரிய (வியா) பாரவஸ்யதைக்கு அடியான பாபங்களைப் போக்கி
த்வத் ஏகம் அநாவாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

அருளாலே அடியேனை யபிமாநித்து அருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீ இருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன்
வல் வினையை மாற்றி யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத் தாழ்வானும் அவர் செல்வத்
திரு மகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளானது இத்தனையும் சேர வுள வென்னைத்
திருத்தி யுய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா—-35-

அருளாலே –கிருபையாலே
அடியேனை யபிமாநித்து அருளி-அடியேனை அங்குற்றைக்கு அநந்யார்ஹனாம் படி அபிமானித்து அருளி
அநவரதம் -நிரந்தரம்
அடிமை கொள்ள -நித்ய கைங்கர்யம் கொண்டு அருள
நினைத்து நீ இருக்க-தேவரீர் திரு உள்ளம் பற்றி இருக்க
மருளாலே –அத்தை அறிய ஒட்டாத அஞ்ஞானத்தாலே
புலன் போக –இந்த்ரியங்களுடைய விஷய போகங்களை
வாஞ்சை செயும் என் தன்-அபேக்ஷிக்கின்ற அடியேனுடைய
வல் வினையை மாற்றி -பிரபலமான கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
யுன் பால் மனம் வைக்கப் பண்ணாய்–தேவரீர் விஷயத்தில் மனஸ்ஸு வைக்கும்படி பண்ணி அருள வேணும்
தெருளாரும் கூரத் தாழ்வானும் –ஞான பரிபூர்ணரான ஸ்ரீ கூரேசரும்
அவர் செல்வத் திரு மகனார் தாமும் -அவர் திரு வயிற்றிலே அவதரிக்கும் படியான ஸ்ரீ யை யுடையரான பெரிய பட்டரும்
அருளிச் செய்த தீமைத் திரளானது -தம் தம் நைச்யங்களை அருளிச் செய்த பாப ஸமூஹங்களான
இத்தனையும் சேர வுள வென்னைத்-எல்லா வற்றையும் சேர யுண்டான அடியேனை
திருத்தி -செயல் நன்றாகத் திருத்தி
யுய்யக் கொள்ளும் -உஜ்ஜீவிக்கப் பண்ணி அருளும்
வகை தேரும் எதிராசா-பிரகாரத்தை எம்பெருமானாரே சிந்தித்து அருளும்

கூர நாத பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம் அத்யாப் யசங்குசிதமேவ -என்கிறபடியே
ஜ்ஞான பரி பூர்ணரான ஸ்ரீ கூரத் ஆழ்வானும்
அவர் திரு வயிற்றிலே அவதரிக்கும் படியான ஸ்ரீயை உடையராய் அது அடியாக ஸ்ரீ ரெங்கராஜ கமலா பத லாளி தத்வம் -(1-17)
என்னும்படி ஸ்ரீ மத் குமாரரான ஸ்ரீ பெரிய பட்டர் தாமும்
ஸ்வ ஸ்வ நைச்யங்களை – புத்வாச நோச (79)-என்றும் -அதிகிராமன் நாஜ்ஞ்ஞம்-(91)என்றும்
இத்யாதியாலே அருளிச் செய்த பாப சமூஹங்கள் ஆனவை ஓன்று ஒழியாமல் எல்லாம் சேர யுண்டான என்னை7

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -என்னும்படி
திருத்தி உஜ்ஜீவிக்கப் பண்ணி கொண்டு அருளும் பிரகாரம் சிந்தித்து அருளுமவரே –
தேவருடைய கேவல கிருபையாலே
அடியேனை அங்குற்றைக்கு அனன்யார்ஹனாய் ஆகும்படி அபிமானித்து அருளி
நிரந்தரம் நித்ய கைங்கர்யம் கொண்டு அருள தேவர் திரு உள்ளம் பற்றி இருக்க
அத்தை அறிய ஒட்டாத அஜ்ஞ்ஞானத்தாலே-சப்தாதி போக ருசிர் அந்வஹமே ததேஹா(6) -என்கிறபடியே

இந்த்ரிய பரிச்சின்னங்களான விஷய போகங்களில் வாஞ்சையைப் பண்ணும்
என்னுடைய வ நிவர்த்யமான பிரபல கர்மங்களை அதில் நின்றும் முகம் மாறப் பண்ணி
தன் பால் மனம் வைக்கத் திருத்தி -என்கிறபடியே
பிராப்த சேஷியான தேவரீர் விஷயத்தில் மனசை வைக்கும்படி பண்ணி அருள வேணும்
யதான்வயமாக யோஜிக்கவுமாம் –

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின் –17-

புத்த்வா ச நோ ச விஹித அகரணை நிஷித்த சம் சேவனைஸ் த்வத் அபசார சதைர் அஸஹ்யை
பக்தாகசாம் அபி சதைர் பவதாபி அகண்யை ஹஸ்தீஸ வாக் தநு மனோ ஜெனிதை ஹதோஸ்மி -79-

கரண த்ரயத்தாலும் அடியேன் செய்து போரும் அபசாரங்களுக்குத் தான் ஒரு வரம்பு உண்டோ –
புத்தி பூர்வகம் ப்ரமாதிகம் அகதிகம்–த்ரிவிதமாய் இருக்குமே
இடகிலேன் ஓன்று அட்ட கில்லேன் ஐம்புலன்கள் வெல்ல கில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
அக்ருத்ய கரணத்தில் காட்டில் பகவத் அபசாரம் க்ரூரதரமாய்
அதிலும் பாகவத அபசாரம் க்ரூர தரமாய்
அது தன்னிலும் அஸஹ்ய அபசாரம் அதிமாத்ர க்ரூர தரமாய் –பகவத் நிக்ரஹம் அதிசயித்து இருக்கும்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –இருப்பினும் உனது கல்யாண குண கணங்களை எண்ணி முடித்தாலும்
என்னுடைய அபராத கணங்கள் அஸங்க்யேயங்கள்
இப்படிப்பட்ட அபராத சஹஸ்ரங்களாலே ஸ்வரூபத்தை இழந்தேன் -கெட்டேன் என்கிறார்

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர–91-

சமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் –
தேவர் ஆஜ்ஜா ரூபமான
ஸ்ருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து
சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-
மத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய்
சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே
சதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும்
கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் காதாசித்கமாகவும் இன்றிக்கே
ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து
சர்வ ஸஹிஷ்ணுத்வமான ஸ்ரீ தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்

இப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்
ஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் ஸ்ரீ பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க
ச தோஷ ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: ஸப்தாதி போகருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ
 || (6)

———————————————————–

மருளாலே புலன் போக வாஞ்சை செயும் என் தன் வல் வினையை மாற்றி -என்ற பின்பு
அவை நடை யாடக் காண்கையாலே
அத்யந்த ஹேயமாய் இருக்கிற விஷய அனுபவ சுக வாஞ்சையானது
அடியேனுடைய மனசை பலாத்காரத்தோடே தான் மேலிடா நின்றது
அதுக்கு ஹேது வாசன கர்மங்கள் இன்னது என்று அறியேன் -என்கிறார்

வாசனையில் ஊற்றோமோ மாளாத வல்வினையோ
ஏது என்று அறியேன் எதிராசா -தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து—36-

எதிராசா –எம்பெருமானாரே
தீதாகும்–இவ்வாத்மாவுக்கு அத்யந்தம் பொல்லாங்காய் இருக்கிற
ஐம்புலனில் -பஞ்சேந்த்ரிய பரிச்சின்னமான விஷய ஸூ கங்களிலே
ஆசை –அபேக்ஷையானது
அடியேன் மனம் தன்னை யன்புடனே -அடியேனுடைய மனஸ்ஸை பலாத்காரத்தோடே
தான் வந்து -தானே மேல் விழுந்து வந்து
அடரும்-மேலிடா நின்றது
விஷயங்களில் மூட்டுவதாகத் தான் மேலிடா நின்றது
இந்த ருசிக்கு ஹேது
வாசனையில் -அநாதி பாப வாசனையில் பற்றி இருக்கிற
ஊற்றோமோ –தார்ட்யமோ
மாளாத –ப்ராயச்சித்த விநாஸ்யமாதல் அநுபவ விநாஸ்யமாதல் யன்றிக்கே இருப்பதான
வல்வினையோ-அடியேனுடைய ப்ரபல கர்மமோ
ஏது என்று அறியேன் -எதுவென்று அறிகிறிலேன்
இதுக்குக் காரணம் இன்னது என்று அறிந்து அத்தை தேவரீரே நிவர்ப்பித்து அருள வேணும் என்று கருத்து

இவ் வாத்மாவுக்கு அத்யந்தம் பொல்லாங்கு தானாய் இருக்கிற ஐங்கருவி கண்ட இன்பம் -என்னும்படி
இந்த்ரிய பரிச்சின்னமான விஷய ஸூகங்களில் அபேஷை–ஹரந்தி பிரசபம் மன -என்கிறபடியே
தேவரீர் திருவடிகளைப் பற்றி இருக்கிற அடியேனுடைய மனசை மேல் விழுந்து வந்து பலாத்காரத்தோடே
விஷயங்களில் மூட்டுவதாக தான் மேலிடா நின்றது –

இந்த ருசிக்கு ஹேது
துர்வாசநாத் ரடிமதஸ் ஸூ க மிந்த்ரியோத்தமம் ஹாதும் நமே மதிறலாம் வரதாதிராஜா(78) -என்கிறபடி
அநாதி பாப வாசனையிலே பற்றி இருக்கிற தார்ட்ய்யமோ –

சம்பாசலம் பஹுல துக்கம் அநர்த்த ஹேது அல்பீய இத்யபி விம்ருஷ்டிஷு த்ருஷ்ட தோஷம்
துர் வாசநா த்ரடிமதஸ் ஸூகம் இந்த்ரியோத்தம் ஹாதும் ந மே மதிரலம் வரதாதி ராஜ –78-

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –சரீரம் அஸ்திரமானாலும்
இந்திரிய ஸூகம் க்ஷணிகமே யானாலும் -துக்க அம்சமே பிரசுரமாய் இருக்கும் -அநர்த்த ஹேதுவாயும் இருக்கும்
தோஷங்கள் ஸூ வியக்தமாய் இருந்தாலும் துர் வாசனா விபவம் இந்த ஸூக ஆபாசங்களிலே
மேலும் மேலும் அபி நிவேசத்தை பெருக்குமே ஒழிய விரக்திக்கு ஹேதுவாகிறது இல்லையே என்கிறார்

அன்றிக்கே
மதியிலேன் வல் வினையே மாளாதோ (4-3)-என்னும்படி
அதுக்கும் அடியாக அனுபவ விநாச்யம் ஆதல் பிராயச் சித்த விநாச்யம் ஆதல்

அன்றிக்கே
இருப்பதான என்னுடைய பிரபல கர்மமோ-இது ஏது என்று அறிகிறிலேன்-

இதுக்கு நிதானம் ஏது என்று அறிந்து-அத்தை தேவரே நிவர்ப்பித்து அருள வேணும் என்று கருத்து –
அடருகை -மேலிடுகை-

அருளாலே-(35)
வாசனை-(36)
என்கிற இரண்டு பாட்டாலும் ஐம்புலன் என்று விஷயங்களைச் சொல்லுகிறது –

—————————————————————–

நீர் இந்த்ரியங்கள் உடைய தோஷத்தை அனுசந்தித்து பதறுகிறீர்
நாம் தாமும் அவற்றின் கையில் காட்டிக் கொடோம் காணும்
இப்படி அஞ்சுகிற யும்மை சம்சாரத்திலே வைக்கிறது
ஆர்த்தி -அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்கியம் -என்கிறபடி

இத்தாலே நிறம் பெறுவதான ஆர்த்தி அதிகாரம் பிறக்கும் தனையும் காணும் ஆகையால்
அது பிறந்த பின்பு உம்முடைய அபேஷிதத்தை செய்து தலைக் கட்டுகிறோம் காணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார்க்கு கருத்தாக

இவ்வளவாக இல்லாத அதிகாரம் இனி மேல் என்ன உண்டாகப் போகிறது
இந்த அதிகார சம்பத்தியும் உண்டாக்கி -அபேஷித சம்விதானத்துக்கு விரோதியான பாப சமூஹத்தை சேதித்து-
பிராப்ய தேசத்தை பிராப்பியாததுக்கு ஹேது ஏது என்கிறது-

இன்றளவும் இல்லாத வதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம் சொல்லாய் எதிராசா -குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்
தெனைக் கடுக வேற்றாதது என் —37-

இன்றளவும் இல்லாத வதிகாரம் -இப்போது அளவும் இல்லாத அதிகாரம்
மேலும் எனக்கு-இனி மேல் அடியேனுக்கு
என்று உளதாம் -எப்போது உண்டாகும்
இப்போது உண்டாகாததோ இனி மேல் உண்டாகப் போகிறது
சொல்லாய் -இத்தை தேவரீரே அருளிச் செய்ய வேணும்
எதிராசா -எம்பெருமானாரே
குன்றா-ஒன்றாலும் நசியாமல் இருப்பதான
வினைத் தொடரை -பாப அநு பந்தத்தை
வெட்டி விட்டு -சேதித்துப் பொகட்டு
மேலை வைகுந்தத்து-ஸர்வ உத்தரமான பரம பதத்தில்
எனைக் கடுக வேற்றாதது என் -அடியேனை ஸீக்ரமாக ஆரோபியாததற்கு என்ன காரணம்

இன்று திரு நாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய் (25)-என்னும்படியான இன்றளவும் இல்லாத அதிகாரம்
இனி மேல் என்று உண்டாவதாம் – இப்போது உண்டாகாததோ இனி மேல் உண்டாகிறது
இத்தை தேவர் அருளிச் செய்ய வேணும்
இப்படி ருசி விரோதியாய்-ஒன்றாலும் நசியாமை இருப்பதான
தொன் மா வல் வினைத் தொடர் (3-2-2)-என்னும்படியான
பாப அனுபந்தத்தை சேதித்துப் பொகட்டு-
மேலை வைகுந்தத்து இருத்தும் (8-6-11)-என்கிறபடி

சர்வோத்தரமான தேசத்திலே-அதிலே அபேஷை உடைய அடியேனை
அஜ்ஞ்ஞாநாவஹமான சம்சாரத்திலே நின்றும்-சீக்ரமாக ஆரோபியாததற்கு ஹேது ஏது –
என்னாலே எல்லாம் அசக்யமாய்-தேவராலே எல்லாம் சக்யமாய் இருந்த பின்பு
தாழ்கைக்கு ஒரு ஹேதவாந்தரம் இல்லை என்று கருத்து-

(வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–)

(சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-)

——————————————————-

இன்று அளவும் இல்லாத அதிகாரம் -என்றத்தை
தார்கிக (லௌகிக) சப்த நியாயத்தாலே-தர்சிப்பியா நின்று கொண்டு
தத் தேது பூர்வமாக அத்தை அருளிச் செய்கிறார் –

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ எதிராசா -நெஞ்சம்
உன தாள் ஒழிந்த வற்றையே யுகக்க இன்றும்
அனுதாபம் அற்று இருக்கையால் —38-

எதிராசா–எம்பெருமானாரே
நெஞ்சம்-சூத்ர விஷயங்களிலே மண்டி இருக்கிற மனஸ்ஸானது
உன–ப்ராப்த சேஷியான தேவரீருடைய
தாள்-நிரதிசய போக்யமான திருவடிகளுக்கு
ஒழிந்த வற்றையே–பாஹ்யமாய அப்ராப்த விஷயங்களானவற்றையே
யுகக்க-அநு மோதிக்க
இன்றும்-இப்போதும்
அனுதாபம் -இப்படி அப்ராப்தமான விஷயங்களை விரும்புவதே என்கிற பச்சாதாபமும்
அற்று இருக்கையால்-இல்லாமல் இருப்பதினாலே
அஞ்சில் –விவேக அங்குர யோக்யமான பஞ்ச வர்ஷத்தில்
அறியாதார் -அறியாதவர்கள்
ஐம்பதிலும் தாம் அறியார்-ஐம்பது வயஸ்ஸிலும் அவர்கள் அறியார்கள்
என் சொல் -என்று சொல்லுகிற இந்த லௌகிக வார்த்தை
எனக்கோ -அடியேன் பொருட்டோ

எதிகளுக்கு நாதர் ஆனவரே
தீ மனம் -என்னும்படி சூத்திர விஷயங்களிலே மண்டி இருக்கிற மனசானது
யாதானும் பற்றி நீங்கும் -என்கிறபடியே

(யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே 95)

பிராப்த சேஷியான தேவருடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஒழிந்த
அப்ராப்த விஷயங்களையே பற்றி அனுமோதிக்க
இப்படி அப்ராப்த மான விஷயத்தை விரும்புவதே என்று அனுதபிவிக்க வேண்டும்படியான
தசையை பிராப்தமாய் இருக்கிற இன்றும்-அனுதாப சூன்யமாய் இருக்கையாலே
தஸ்மாத் பால்யே விவேகாத்மா( 1-17-75/76)-என்கிறபடியே

(தஸ்மாத் பால்யே விவேக ஆத்மா யதேதே ஸ்ரேயசே சதா
பால்ய யௌவன வ்ருத்தாத்யைர் தேஹ பாவரைஸம்யுத –1-17-76-)

(ததே தத்வோ மயாக்யாதம் யதி ஜாநீத நாந்ருதம்
ததஸ் மதபரீதயே விஷ்ணு ஸ்மர்யதாம் பந்த முக்தித –1-17-77-)

விவேக அங்குர யோக்யமான பஞ்ச வர்ஷத்தில் அஜ்ஞ்ஞரானவர்கள்
தத் பரிணாம தசையான ஐம்பது வயசிலும் விவேக சூன்யதையாலே
அஜ்ஞ்ஞர் ஆவார்கள் என்று சொல்லுகிற இந்த லௌகிக சப்தம் எனக்கே அம்சமாயிற்றோ-

ஆகையால்
ஸ்வ ஹிதத்தில் அஜ்ஞ்ஞனான எனக்கு சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஒரு போக்கடி கண்டு அருள வேணும் என்று கருத்து –

நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று பாடமான போது
அஞ்சில் அறியாதாரை ஐம்பதிலும் அறியாதார் என் சொல் எனக்கோ
எதிராசா
இன்று அனுதாபம் அற்று இருக்கையாலே நெஞ்சமும் தான் ஒழிந்தவற்றையே யுகக்கும் -என்றும்
இப்படி யோஜிக்கக் கடவது –

————————————

நீர் –
உன் தாள் ஒழிந்தவற்றையே உகக்கும் -என்று அவர்க்கு அந்யமாய்
அப்ராப்தங்களாய் இருக்குமவற்றையே பற்றினால்
விரசமாய் இருக்கிற யும்மை அவர் எப்படி அங்கீ கரிக்கப் புகுகிறார் என்று
பார்ஸ்வஸ்தர்க்கு அபிப்பிராயமாக ஆஸ்ரயண தசையில் குண ஹீநனாய்
அத்தாலே விரசனாய் இருக்கிற என்னுடைய தோஷத்தை போக்யமாக விரும்பி
அங்கீ கரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார்
என்னை உபேஷித்து அருளார்
என்றுமத்தை ஸ நிதர்சனமாக -அருளிச் செய்கிறார் —

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் பொகடாதே புசிக்கும் தன்மை போல் -தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழாரே எதிராசர்
அன்று அறிந்து அங்கீ கரிக்கையால்—-39-

வேம்பு கறியாக -வேப்பிலையும் கறி யமுதாக
விரும்பினார் தாம் -அபேக்ஷித்த தாங்கள்
கைத்தது என்று-கைப்பாக இருக்கிறது என்று
பொகடாதே புசிக்கும் -உபேக்ஷியாதே புஜிக்கிற
தன்மை போல் -ஸ்வ பாவம் போலே
தீம்பன் இவன் என்று -இவன் துஷ்டன் என்று
நினைத்து என்னை –விசாரித்து அடியேனை
எதிராசர்-எம்பெருமானார்
அன்று -அக்காலத்தில் -அங்கீகார ஸமயத்தில்
அறிந்து –தோஷ யுக்தன் என்று அறிந்து
அங்கீ கரிக்கையால்—அந்த தோஷத்தையே போக்யமாகக் கொண்டு அங்கீ கரித்து அருளுகையாலே
இகழாரே -உபேக்ஷித்து அருளார்

வேம்பும் கறியாகும் என்று–என்கிறபடியே
சரசமாம் அவற்றை உபேஷித்து அத்யந்தம் கைப்பை யுடைத்தாய்
விரசமாய் இருப்பதான வேப்பிலை தொடக்கமாய் உள்ள தத் சம்பந்த பதார்த்தங்களை
சோற்றுக்கு உபதம்சமாக ஆதரித்து புஜிக்குமவர்கள்
அது விரசமாய் கைத்தது என்று அத்தை விரும்பிப் புஜிக்கும் தாங்கள் உபேஷியாதே புஜிக்கும் ஸ்வ பாவம் போலே
அங்கீ கார சமயத்திலே தோஷ யுக்தன் என்று அறிந்து அத்தைப் போக்யமாகக் கொண்டு
அங்கீ கரித்து அருளுகையாலே
ஸ்ரீ எம்பெருமானார்
இப்போது அவன் இவன் தோஷ யுக்தன் என்று உபேஷித்து அருளார் –

நத்யஜேயம் -என்னும்படி
இது ஓர் அங்கீகார த்ராட்யம் இருந்த படி என் என்று கருத்து-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று--நான்முகன் திருவந்தாதி-94-

மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதா மேதத கர்ஹிதம் ।।6.18.3।।

————————————————————

உம்முடைய தோஷம் பாராதே அங்கீ கரித்தோம் ஆகில்
மேல் உள்ளதும் நாமே க்ரமத்திலே செய்கிறோம் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
த்வத் அனுபவ யோக்யமான காலத்தை எல்லாம் வ்யர்த்தமே போக்கி அதுக்கு அசலான சம்சாரத்தில் இல்லாமல்
அனுபவத்துக்கு பாங்கான தேசத்தில் சேர்த்து அதுக்கு இடைச் சுவர் தள்ளிப் பொகட வேணும் என்கிறார்-

அவத்தே பொழுதை யடியேன் கழித்து இப்
பவத்தே இருக்குமது பண்போ -திவத்தே யான்
சேரும் வகை யருளாய் சீரார் எதிராசா
போரும் இனி இவ் வுடம்பைப் போக்கு–40-

யடியேன்–தாஸ பூதனான நான்
பொழுதை–தேவரீருடைய அனுபவ கைங்கர்யங்களுக்கு அடைத்த விலக்ஷணமான காலம் எல்லாம்
அவத்தே கழித்து -வியர்த்தமாகப் போக்கி
இப் பவத்தே -விரோதியாய் இருக்கிற இந்த ஸம்ஸாரத்திலே
இருக்குமது –பொருந்தி இருக்கிறது
பண்போ -தேவரீருடைய க்ருபா ஸ்வ பாவத்துக்குச் சேருமோ
திவத்தே யான்-பரம பதத்தை அடியேன்
சேரும் வகை -அடையும் பிரகாரத்தை
யருளாய் -கிருபை செய்து அருளீர்
சீரார் எதிராசா-ஸமஸ்த திருக்கல்யாண குணங்களாலே பூர்ணரான எம்பெருமானாரே
போரும் -ஸம்ஸாரத்தில் சிறை இருப்பு போரும்
இனி இவ் வுடம்பைப் போக்கு–இனி இந்த ஸரீரத்தைப் போக்கி அருள வேணும்

தேவர் உடைய அனுபவ கைங்கர்யங்களுக்கு அடைத்த விலஷணமான காலம் எல்லாம்
அதுக்கு இட்டுப் பிறந்த அடியேன்
அப்படிப் பட்ட அந்த பொழுதைப் பழுதே போக்கி-விரோதியாய் இருக்கிற சம்சாரத்திலே பொருந்தி இருக்கிறது
தேவர் கிருபா ஸ்வ பாவத்துக்குப் போருமோ
ஆகையால்-கைங்கர்ய வர்த்தகமாய் பரம் தாமம் என்னும் திவம் -என்னும்படியான
தேசத்திலே அபேஷை யுடைய நான்
நெடு மரக்கலங்கரை சேர்ந்தால் போல் சேரும் பிரகாரம் இரங்கி அருள வேணும்
சமஸ்த கல்யாண குண பரி பூரணராய் எதிகளுக்கு நாதர் ஆனவரே
சம்சாரத்தில் சிறை யிருப்பு போரும் –
இனி பகவத் ஸ்வரூப திரோதாந கரியாய் விபரீத ஜ்ஞ்ஞாந ஜனனியாய்
ஆத்மாவோடு பொருந்தி இருக்கிற இந்த தேஹத்தை போக்கி அருள வேணும்-இதுவே புருஷார்த்தம் –

பண்பு -ஸ்வ பாவம்
அடியேன் இப் பவத்தோடே இருக்குமது பண்போ -என்று
கீழோடு கூட்டவுமாம் –

(தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்
திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்
குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.)

——————————————–

ஆனாலும் உம்முடைய தோஷ பூயஸ்வத்தைப் பாராதே அரும் தேவைகளைச் செய்யும்படி
சொல்லக் கூடும் இத்தனையோ-என்னில் –
அசத்ருச அபராதனான அடியேனுடைய பிரகிருதி சம்பந்த நிபந்தமாக வரும்
அபராதங்கள் எல்லாம் பொறுத்து ரஷிக்குமவரான பின்பு
சகல ஜீவ லோக உஜ்ஜீவன அர்த்தமாக திரு வவதரித்த தேவர்
அதி சபலனான எனக்கு தயை பண்ணி ரஷிக்க வேணும் என்கிறார் –

எனைப் போல் பிழை செய்வார் இவ் வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி –41-

எனைப் போல் –அடியேனைப் போலே
பிழை செய்வார் -அபராதத்தைச் செய்யுமவர்கள்
இவ் வுலகில் வுண்டோ-இந்த லோகம் எல்லாம் தேடிப் பார்த்தாலும் கிடைப்பரோ
உனைப் போல் -தேவரீரைப் போலே
பொறுக்க வல்லார் -ஸஹிக்க வல்லார்
யுண்டோ -உபய விபூதியிலும் உண்டோ
அனைத்துலகும்-ஸமஸ்த லோகங்களும்
வாழப் பிறந்த -உஜ்ஜீவித்து வாழும் படியாக திரு வவதரித்து அருளின
எதிராச மா முனிவா-எதிராசர் என்கிற திரு நாமத்தை யுடைய பூஜ்யரான யோகி ஜன அக்ர கண்யரே
ஏழைக்கு -சபலனாய் இருக்கிற அடியேனுக்கு
இரங்காய் இனி-இனி தயை பண்ணி அருள வேணும் –

நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு -என்கிறபடியே-
அபராதம் பண்ணுமவர்களில் வைத்துக் கொண்டு
மாத்ருச அபராத க்ருத்துக்களாய் இருக்குமவர்கள் இந்த லோகம் எல்லாம் தேடித் பார்த்தாலும் கிட்டுமோ
அருளுக்கும் அக்தே புகல் -என்கிறபடியே
அபராத சஹரில் வைத்துக் கொண்டு தேவரீரைப் போலே சஹிக்க வல்லார்-உபய விபூதியிலுமுண்டோ –
சகல ஜீவ லோகமும் உஜ்ஜீவித்து வாழும்படியாக திரு வவதரித்து அருளி
அவர்கள் ரஷணத்தில் மனனம் பண்ணி அருளுகிற ஸ்ரீ எம்பெருமானாரே இப்படிக் கை கழிந்த பின்பு
பற்றினத்தை விடாதே சபலனாய் இருக்கிற எனக்கு தயை பண்ணி அருள வேணும் –
ததஹம் த்வத்ருதேன நாதவான் இத்யாதி –

(நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்கு மஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம் பழுதே
அகலும் பொருளென், பயனிருவோமுக்கு மான பின்னே?–48-)

ததஹம் த்வத்ருதே ந நாதவாந்
மத்ருதே த்வம் தயநீயவாந் ந ச |
விதி நிர்மிதம் ஏததந்வயம்
பகவந்! பாலய மா ஸ்ம ஜீஹப: ||ஶ்லோகம் 51 –

ஞானம் நிறைந்த ஸ்வாமியே! ஆதலால் உன்னைத் தவிர எனக்கு வேறு ஒரு ஸ்வாமி கிடையாது;
அதே போல உன்னுடைய கருணைக்கும் என்னைத் தவிர வேறு யாரும் சரியான பாத்திரம் கிடையாது.
உன்னுடைய கருணையால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஸம்பந்தம் காக்கப்பட வேண்டும்; அதை நழுவ விடாதே.

———————————————–

இப்படி
ஆகிஞ்சன்ய-அநந்ய கதித்வங்களை ஆவிஷ் கரிக்கும் அதிகாரிகளைப் பெற்றோமே
என்று உகந்து எதிராச மா முனியான ஸ்ரீ எம்பெருமானார்
இவருக்கு-இனிப் பெற வேண்டும் பேறுகளை மனனம் பண்ணுவது
இவருடைய பிரேம ஸ்வபாவத்தைக் கடாஷித்துக் கொண்டு இருப்பதாக நிற்க –
அது பற்றாமல்
அவருக்கும் ரஷித்து அல்லாது நிற்க ஒண்ணாத படி –
உண்ணிலாவியில்-என்றபடி இந்த்ரிய பய க்ரோசமான பாசுரத்தாலே
தம்முடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கூப்பிடுகிறார் –

ஐம் புலன்கள் மேலிட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலமிட்டால்-பின்பவை தாம்
என்னை யடராமல் இரங்காய் எதிராசா
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ—42-

 

ஐம்புலன்கள் மேலிட்டு -பஞ்சேந்திரியங்கள் ஆக்ரமித்து
அடரும் பொழுது -ஸ்வ கிங்கரனாம் படி ஸ்வ ஸ்வ விஷயங்களைக் காட்டு காட்டு என்று தொடர்ந்து பாதிக்கும் தசையில்
அடியேன்-தேவரீருக்கே சேஷபூதனான அடியேன்
உன் பதங்கள் தம்மை -தேவரீருடைய திருவடித் தாமரைகளை நினைந்து -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் தேவ ஸம்வத்சரத்திலே ஆயிரம் ஸம்வத்ஸத்ரம் முதலை நீருக்கு இழுக்க தான் கரைக்கு இழுக்க அலைச்சல் பட்டு அதுக்குத் தன் நிலமாகையாலும் அபிமத ஸித்தியாலும் பலம் வர்த்திக்கை யாகையாலும் தனக்குத் தன் நிலம் அல்லாமையாலும் அபிமத அலாபத்தாலும் பலம் க்ஷயிக்கை யாலும் துதிக்கை முழுத்தும் படியான தசை விளைகையாலே இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்து இத் தசையில் விரோதி நிரசன சீலனான ஸர்வேஸ்வரனே நமக்கு ரக்ஷகன் என்று அநுஸந்தித்து நாராயணா ஓ என்று ஓலமிட்டால் போல் ஸகல ஆபந நிவாரணமான தேவரீருடைய திருவடிகளை ஸ்மரித்து
ஓலமிட்டால்-ராமானுஜா ஓ என்று கூப்பிட்டால்
பின்பவை தாம்-அநந்தரம் அப்படி பாதிக்குமவை யான அவ்விந்திரியங்கள் தான்
என்னை யடராமல் -அடியேனை மேலிடாமல்
இரங்காய் -கிருபை செய்து அருளீர்
எதிராசா-யதிகளுக்கு நாதரானவரே
உன்னை யல்லாதார் எனக்கு உண்டோ-தேவரீரை ஒழிய அடியேனுக்கு ரக்ஷகர் இனி வேறு உண்டோ

ரக்ஷகாந்தரம் இல்லை யாகையாலே தேவரீரே ரக்ஷித்து அருள வேணும் என்று கருத்து

நாராயணா ஒ மணி வண்ணா என்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஓலமிட்டால் போலே
உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி -இத்யாதிப் படியே
பஞ்ச இந்த்ரியங்களும் ஆக்கிரமித்து ஸ்வ கிங்கரனாம்படி ஸ்வ ஸ்வ விஷயங்களை காட்டு காட்டு என்று
தொடர்ந்து பாதிக்கும் தசையிலே
தேவர்க்கு சேஷ பூதனான அடியேன் ஸ்ரீ கஜேந்த்ர ஆழ்வான் மடுவின் கரையிலே
க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்று
முழு வலி முதலை நீருக்கு உள்ளே இழுத்துக் கொண்டு நலியும் போது
சிந்தயத்தரிம் என்று சிந்தித்து-நாராயணா ஒ -என்று ஓலமிட்டால் போலே
சகல ஆபன் நிவாரணமான தேவர் திருவடிகளை ஸ்மரித்து -ராமானுஜா ஒ என்று கூப்பிட்டால்

அநந்தரம்
அப்படி பாதகங்கள் ஆனவை அடியேனை மேவிவிடாமல் தயை பண்ணி அருள வேண்டும்
எதிகளுக்கு நாதரானவரே தேவரை ஒழிய எனக்கு ரஷகர் ஆவார் யார்
இனி வேறுண்டோ
வேறு ரஷகாந்தகர் இல்லை யாகையாலே தேவரே ரஷித்து அருள வேணும் என்று கருத்து –

உன் பதங்கள் –நினைத்து ஓலமிட்டால்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்-என்று மனசாலே ஸ்மரித்து
வாக்காலே பெரு மிடறு செய்து கூப்பிட்டால்-என்னவுமாம் –

———————————————

இரங்காய் எதிராசா -என்று அவரை வெறுக்கிறது என் –
பிராப்ய பூமியில் பிராவண்யமும்-த்யாஜ்ய பூமியில் ஜூஹுப்ஸ்யையும்
அதிகாரிக்கு அவசியம் அபேஷையாய் இருந்தது –
அவை இரண்டும் இல்லாத நமக்கு
அசத்ருசமமான தேசத்தை அவர் எப்படி தந்து அருளுவர் என்று அதில் நின்றும் நிரசராகிறார் –

(அபேக்ஷிதங்களாகிய இருக்கிற இரண்டிலும்-ஆகிஞ்சயமும் அநந்ய கதித்வமும் வேண்டும்
அப்ரதி க்ஷேதமும் விலக்காமையும் புருஷகாரமும் வேண்டும்)

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசை இல்லை -இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திரு நாடு உகந்து —43-

இந்த உலகில் -கொடு உலகமான இந்த த்யாஜ்ய பூமியில்
பொருந்தாமை -அடிக் கொதிப்பது அருசி
ஏதும் இல்லை-அத் யல்பமும் இல்லை
அந்த உலகில் –அந்த ப்ராப்யமான பரம பதத்தில்
போக ஆசை இல்லை -செல்ல ப்ராவண்யமும் இல்லை
இந்த நமக்கு–இப்படி அபேக்ஷிதங்களாகிய இருக்கிற இரண்டிலும் அந்வயம் அற்று இருக்கிற நமக்கு
எந்தை எதிராசர்-தந்தையாகிய எம்பெருமானார்
ஒப்பில் திரு நாடு -உபமானம் இல்லாத வைபவத்தை யுடைய பரமபதத்தை
எப்படியே தான் -எந்த ப்ரகாரமாகத் தான்
உகந்து-ஸந்தோஷித்து
தருவர் –உபகரித்து அருளுவர்

கொடு வுலகம் காட்டேல் (4-9-7)-என்னும்படியான
இந்த த்யாஜ்ய பூமியில் அடிக் கொதிப்பு அல்பமும் இல்லை –
வான் உலகம் தெளிந்தே என்று எய்வது -என்னும்படியான
அந்த பிராப்ய பூமியை பிராபிக்க வேணும் என்கிற பிராவண்யமும் இல்லை –
இப்படி அபேஷிதங்களாய் இருக்கிற இரண்டிலும் அந்வயம் அற்று இருக்கிற நமக்கு
ஜனகரான ஸ்ரீ எம்பெருமானார் அசத்ருச வைபவத்தை யுதைத்தான
தெளி விசும்பு திரு நாடு -என்கிற திரு நாட்டை உகப்புடன் எப்படித் தான் உபகரித்து அருளுவர் –

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால்
விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே

————————————————————–

இந்த வுலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த வுலகில் போகை ஆசை இல்லை -என்று அனுசந்தித்தவர்
நம் அளவில் இதுவாய் இருந்தது –
இனி லௌகிகர் அளவு என் என்று அவர்கள் இடத்திலே கண் வைக்க
அவர்கள் படி சாலத் தண்ணியதாய் இருந்தவாறே
இப்படி இருப்பது
இவர்கள் பாபங்களைச் செய்யும் பிரகாரம் என்றதுக்கு நொந்து அருளிச் செய்கிறார் –

(அனைத்து உலகும் வாழப் பிறந்த எதிராசர் என்ற உண்மை அறியாமல் உள்ளாரே என்று திரு உள்ளம்)

மா காந்த நாரணர் வைகும் வகை அறிந்தோருக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –மோகாந்தர்
இவ் விடம் ஏகாந்தம் இருள் என்று பயமற்று இருந்து
செய்வர் கடாம் பாவத் திறம்—44-

மா காந்த நாரணர் –லஷ்மீ காந்தனான ஸர்வேஸ்வரன்
வைகும் வகை –நாராயணத்வ ப்ரயுக்த ஸம்பந்தம் அடியாக ஸமஸ்த சேதன அசேதனங்களிலும் உள்ளும் புறமும் வியாபித்து இருக்கிற ப்ரகாரத்தை
அறிந்தோருக்கு–அறிந்த ஞாதாக்களுக்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை –தனிமை இல்லை -அந்தகாரம் இல்லை
ஸ்ருதி -நாராயண பரம் ஜ்யோதி -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்
அவனே என் உள்ளிருள் தானற வீற்று இருந்தான் (8-7)-என்றும் சொல்லுகிறபடியே
எங்கும் உள்ளனாய் எங்கும் வெளிச் செறிப்பாய் இருக்கையாலே நிஷித்த ப்ரவ்ருத்திகளுக்குத் தேட்ட மான இருளும் ஏகாந்தமும் அற்று இருக்கை
ஆகையாலே அவர்களுக்கு ஒருமைத்து இருக்கிற ஏகாந்தமும் இல்லை
தர்சன யோக்யமும் இன்றிக்கே ஆவரண ஆகரமாய் வியாபித்து இருக்கிற அந்தகாரமும் இல்லை என்று கருத்து
மோகாந்தர்–மோஹாந்த தமஸா விருத்தா – என்னும்படி மோஹந்தராய் முன்னடி தோற்றாதே இருக்கு மவர்கள்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று -இவ் விடம் ஒருவரும் இல்லாத ஏகாந்தம் –இவ் விடம் தேஜஸ் ப்ரசாரம் இல்லாத இருள் என்று
பயமற்று இருந்து-நிர் பயராய் இருந்து
செய்வர் கடாம் பாவத் திறம்-பாப ஸமூஹங்களை அஞ்ஞாரன தாங்கள் செய்யா நிற்பர்கள்

இதில்
செல்வ நாரணன் -என்கிறபடியே
ஸ்ரீயகாந்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் நாராயணத்வ பிரயுக்த சம்பந்தம் அடியாக
சமஸ்த சேதன அசேதனங்களிலும் அந்தர் பஹிர் வியாபித்து இருக்கிற பிரகாரத்தை அறிந்த
ஜ்ஞாதாக்களுக்கு

நாராயண பரோஜ்யோதி என்றும்
அவன் என் இருள் தான் அற வீற்று இருந்தான் -என்றும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்றும்-சொல்லுகிறபடியே
எங்கும் உளனாய்-எங்கும் வெளிச் செறிப்பாய் இருக்கையாலே
நிஷித்த பிரவ்ருதிகளுக்கு தேட்டமான இருளும் ஏகாந்தமும் அற்று இருக்கையாலே
அவர்களுக்கு ஒருமை பட்டு வருத்தம் உற்று இருக்கிற ஏகாந்தமும் இல்லை –
தர்சன யோக்யமும் அன்றிக்கே-ஆவரணாகரமாய் ஆவரித்து இருக்கிற அந்தகாரமும் இல்லை
ஹ்ருதி நாராயணம் பஸ்யன் நாப்ய கச்சத் ரஹஸ் சதா
யஸ் ஸ்வ தார ரதௌ சாபி கோவிந்தம் தா முபாஸ்மஹே –

(செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8-)

(அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-)

(பகல் கண்டேன்* நாரணனைக் கண்டேன்,* – கனவில்-
மிகக் கண்டேன்* மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்*
ஊன் திகழும் நேமி* ஒளி திகழும் சேவடியான்,*
வான் திகழும் சோதி வடிவு.)

இவர்கள் படி அன்றிக்கே
மோஹாந்த தமஸா வ்ருதா -என்னும்படி மோஹாந்தராய்
முன்னாடி தோற்றாதே இருக்குமவர்கள்
அந்தர் பஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீச மந்த புரஸ் ஸ்தித மிவாஹா மவீ ஷமாண -என்கிறபடியே

நிரவதிக தேஜோ மயனான ஸ்ரீ சர்வேஸ்வரன் எங்கும் வியாபித்து இருக்கும் பிரகாரத்தை
நெஞ்சு என்னும் உட் கண்ணாலே காண மாட்டாதே
இவ் விடம் ஒருவரும் இல்லாத ஏகாந்தம்
இவ் விடம் தேஜ பிரகாரம் இல்லாத இருள்-என்று நிர் பயராய் இருந்து –
தச்யர்ந்திகேதவம் வ்ரஜினம் கரோஷி -என்கிறபடியே
பாப சமூஹங்களை அஜ்ஞ்ஞரான தாங்கள் செய்யா நிற்பார்கள் –

இவர்கள் படி இது வாவதே -என்று கருத்து –

வைகல் -சொல்லலும் -இருத்தலும்
திறம் -சமூஹம்
இப் பாட்டுக்கு அடி உக்த்ய அனுஷ்டங்களாய் இருக்கும்-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -29-32-பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

இனி
தம்முடைய பிராப்தி விரோதி நிரசன சீலரான ஸ்ரீ எம்பெருமானார்
ஸ்ரீ பாஷ்யாதிகளான ஸ்ரீ ஸூக்திகளாலே பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளின
விஜய பரம்பரைகளைச் சொல்லி அத்தால் யுண்டான வீர ஸ்ரீக்கு மங்களா சாசனம்
பண்ணி அருளுகிறார் –

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக் கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியர் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்து அற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகி மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே—-29–

சாரு வாக மதம் நீறு செய்து -ப்ரத்யக்ஷம் ஏகம் சார்வாக என்கிற சார்வாக மதத்தை ஸ்வ ஸூக்திகளாகிற அக்னி ஜ்வாலையாலே பஸ்மாமாம் படி பண்ணி
சமணச் செடிக் கனல் கொளுத்தியே–சமணராகிய செடிக்கு அப்படியே அக்னி ப்ரஷேபத்தைப் பண்ணி
சாக்கியக் கடலை வற்றுவித்து –சாக்கியராகிற சமுத்திரத்தை ஸ்வ ஸூக்தி கிரணங்களாலே சோஷிப்பித்து
மிகு சாங்கியர் கிரி முறித்திட-அதிகமாய் இருக்கிற சாணக்யா மலையை வாக் வஜ்ரத்தாலே சேதித்து
மாறு செய்திடு கணாத வாதியர்கள் –பிரதிகோடி களாய் வாதம் பண்ணுகிற காணாத வாதிகளுடைய
வாய் தகர்த்து -வாக்கை தம் வாக்காலே பக்னமாம் படி பண்ணி
அறமிகுத்து மேல்-அதிக்ரமித்து மென்மேலும் வந்த
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை -பாணாஸூர யுத்தத்திலே ருத்ரன் தன் பரிவாரத்தோடே ஓடினால் போலே தன் பக்தர்களான சிவ ஸமயத்தோர்களும் சீறு பாறாகச் சிதறி ஓடும்படி
வாது செய்த எதிராசனார்–வாதம் பண்ணி அருளின யதிராசர்
கூறுமா –பிதற்றா நிற்பதாய் பெருத்து இருப்பதான
குரு மதத்தோடு -பிரபாகர மதத்தோடு
ஓங்கிய –உயர்ந்து இருப்பதான
குமாரிலன் மதமவற்றின் மேல்-பாட்ட மதம் என்கிற வவற்றின் மேலே
கொடிய தர்க்க சரம் விட்ட பின் -க்ரூரமாய் இருப்பதான தர்க்க சரத்தை- பாணத்தை -பிரயோகித்த பின்பு
குறுகி மாயவாதியரை வென்றிட–மாயாவாதிகள் இருந்த இடத்திலே சென்று கிட்டியவர்களை ஜெயித்தட்டு
மீறி வாதில் வரு –மிகுத்து காவித்து வாதத்தில் வருகிற
பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்–பாஸ்கரன் மதம் என்கிற வேர் கொடிகள் குறுக்கிட அவற்றைச் சேதித்து எறிந்து விட்டு அப்பால் சென்று
மிக்க யாதவ மதத்தை மாய்த்த -அதிகமான யாதவ பிரகாசன் மதத்தை மாண்டு போம்படி பண்ணின
பெரு வீரர் -மிக பராக்ரமத்தை யுடைய எம்பெருமானார்
நாளும் மிக வாழியே-நித்ய அபி விருத்தமாம்படி மங்களத்தை யுடையராக வேணும்

பிரத்யஷம் ஏகம் சார்வாக
குருமதம் -பிரபாக மதம்
குமாரிலன் மதம்-பாட்டமதம்

ப்ரத்யஷம் ஏகம் சார்வாக -என்கிற சார்வாக மதத்தை ஸ்வ ஸூ க்திகளாகிற அக்னி ஜ்வாலையாலே
பச்ம சாத்தாம் படி பண்ணி –
சமணர் ஆகிற செடிக்கு அப்படியே அக்னி ப்ரேஷேபத்தை பண்ணி
சாக்யர் ஆகிற சமுத்திரத்தை ஸ்வ ஸூக்தி கிரணங்களாலே சோஷிப்பித்து

அதிகமாய் இருப்பதான சாங்க்ய கிரியை வாக் வஜ்ரத்தாலே சேதித்திட்டு
பிரதிகோடிகளாய் வாதம் பண்ணுகிற காணாத வாதிகளுடைய வாக்கை ஸ்வ வாக்காலே பக்நமாம் படி பண்ணி –

மிகவும் உத்ததரராய் மேல் வந்த பாசுபதர் பாணாசுர யுத்தத்திலே ருத்ரன் சபரிகரமாய் ஓடினால் போலே
தத் பக்தர்களான இவர்களும் சீறு பாறாக சிதறி யோடும் பிரகாரமாக வாதம் பண்ணி அருளினவராய்
ஏதேனும் ஒன்றை ஜல்ப்பியா நிற்பதாய் பெருத்து இருப்பதான
பிரபாகர மதத்தோடு-யுச்சாரமாய் இருப்பதான பாட்டமதம் என்கிற அவற்றின் மேலே
க்ரூரமாய் இருப்பதான தர்க்க சரத்தை பிரயோகித்த பின்பு

எங்கும் பரந்து இருக்கையாலே
மயிகள் இருந்த இடத்தில் சென்று கிட்டி-வாதில் வென்றான் நம் இராமானுசன் என்கிறபடியே அவர்களை ஜெயித்திட்டு
மிகைத்து வாதத்திலே வருகிற பாஸ்கரன் உடைய மதமாகிற அம் மதத்தை ஒருவரும் நடவாதபடி நிரோதித்து
கழிய மிக்கு இருந்த யாதவ மதத்தை மாண்டு போம்படி பண்ணின
ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இதர தர்சன நிரசனத்தாலே வந்த மகா வீரம் நாள் தோறும் அபி விருத்தமாய் வாழ வேணும் –

கொடி எறிந்து போய் -என்று
அவ் வளவிலே நில்லாதே கை கழிந்து இருக்கிற பாரிப்பே யாகவுமாம்-

வந்த வாதியர் -என்றும் பாட பேதம் சொல்வர் –

(பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம் நன்றென்
றோதி மற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள் மெய் விட்
டாதிப் பரனொடொன்றா மென்று சொல்லுமவ் வல்ல லெல்லாம்
வாதில் வென்றான், எம் இராமா னுசன் மெய்ம் மதிக் கடலே.–58-)

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————–

இனி
இதர நிரசனம் பண்ணி அருளின ஸ்ரமம் தீர — ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ திருவாய் மொழி
முதலான பகவத் விஷயங்களை வ்யாக்யாநித்துக் கொண்டு எழுந்து அருளிய இருப்பு தமக்கு
ஆகர்ஷகமாய் இருக்கையாலே ஸ்ரீ பாதாதி கேசமாக அனுபவித்து — இவை எல்லாம் தனித் தனியே(பத்தும் பத்துமாக)
நித்யமாகச் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி
தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே–30-

சீராரும் –கல்யாண குணங்களாலே பரிபூர்ணமான
எதிராசர் –எம்பெருமானாருடைய
திருவடிகள் -பரம போக்யமாய் நமக்கு ஸிரோ பூஷணமாய் இருக்கிற திருவடித் தாமரைகள்
வாழி–நித்ய மங்களமாய் இருக்க வேணும்
திருவரையில் சாத்திய -கடிப்பிரதேசத்தில் தரித்த
செந்துவராடை வாழி–ஆதித்யனைப் பரிவேஷிப்பித்தால் போலே மிக்க சிவப்பை யுடைத்தான காஷாய வஸ்திரம் நித்ய மங்களமாய் இருக்க வேணும்
ஏராரும் –அழகால் நிறைந்த
செய்ய வடிவு -சிவப்பு நிறமான திவ்ய மங்கள விக்ரஹம்
எப்பொழுதும் வாழி–ஸர்வ காலத்திலும் நித்ய மங்களமாய் இருக்க வேணும்
இலங்கிய முந்நூல் வாழி –வைதிக உத்தமர் என்னுமத்தை நிறம் பெறுத்துமதாய் ஸந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படர்ந்தால் போலே திரு மார்பிலே பிரகாசிக்கிற ப்ரஹ்ம ஸூத்ரம் நித்ய மங்களமாகச் செல்ல வேணும்
இணைத் தோள்கள் வாழி–பொற் கற்பகத்தின் சாகைகளாய் -அதற்கு மேலே மோக்ஷ ப்ரதான தீஷிதங்களாய் -ஸம்ஸார சாகரத்தில் மூழ்கி நோவு படுபவர்களை உத்தரிக்கிற சக்தியை யுடைத்தாய் -இப்படி கொடுக்கவும் எடுக்கவுமாம் படியான குணத்தாலே பணைத்து நெடிதாய் இருப்பவனவாய் அதுக்கு மேலே வகுள துளஸீ நளின அக்ஷமால அலங்க்ருதமாய் இருக்கிற பாஹு யுகளங்கள் ஆனவை நித்ய மங்களமாய் இருக்க வேணும்
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி–அநு பாவ்யமாய் பகவத் சாஷாத்காரத்தாலும் ஆஸ்ரித தர்சன ஹர்ஷத்தாலும் அநாஸ்ரித  நிரஸனத்தில் அநாயாசத்தாலும் அசங்குசிதமாய் நிர்மலமாய் சோப அவஹமாய் இருக்கிற முகச் ஜோதிஸ்ஸானது நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும்
தூ முறுவல் வாழி –ஆஸ்ரித ரஷணத்தால் உண்டான ஆனந்தத்தாலும் -பகவத் அனுபவ ப்ரகரஷத்தால் உண்டான ஆனந்தத்தால் பூ அலர்ந்தால் போலே ப்ரீதியைத் ப்ரகாசிப்பிக்கிற பரி ஸுத்தமான சிறு நகையும் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும்
துணை மலர்க் கண்கள் வாழி–ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும் தாம் திருந்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும் எப்போதும் கண்டு களிக்குமதாய்
காருண்ய அம்ருத பிரசரண சீலமாய் ஆஸ்ரிதரை அமங்களமாக விழிக்கும் (1-9)என்னும்படி கடாக்ஷிக்கிற த்வந்த்வ அரவிந்த ஸூந்தரமான திருக் கண்கள் அழகு மாறாமல் நித்ய மங்களமாய் இருக்க வேணும்
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி–கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் நிறம் பெறுத்துபவனாய் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு வர்த்தகமாய் இருப்பதாய் பொன் மலையின் பரிசரம் எங்கும் வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் சிவந்த திருமேனியில் வெள்ளியதான போலே துவாதச ஊர்த்வ புண்டரத்தால் உண்டான ஸுந்தர்யம் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும்
இனி திருப் போடு –பத்மாஸனத்தராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு
எழில் -உபய வேதார்த்த பிரகாசமாய் இருக்கிற
ஞான முத்தரை வாழியே-பரதத்வ போத முத்ரையானது நித்ய மங்களமாய் இருக்க வேணும்

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
கல்யாண குணங்களாலே பரிபூரணமான ஸ்ரீ எம்பெருமானார் உடைய பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடித் தாமரைகள் நித்ய மங்களமாய் இருக்க வேணும்

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
கடிப் பிரதேசத்திலே தரித்த ஆதித்யனை பரிவேஷித்தால் போலே மிக்க சிவப்பை யுடைத்தான
காஷாய வஸ்திரம் நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அழகால் நிறைந்த சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹம் சர்வ காலத்திலும்
நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
வைதிகோத்தமர் என்னுமத்தை நிறம் பெறுதுமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படார்ந்தால் போலே
திரு மார்பிலே பிரகாசிக்கிற ப்ரஹ்ம சூத்ரம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இணைத் தோள்கள் வாழி –
பொற் கற்பகத்தின் சாகைகளாய் அதற்கு மேலே மோஷ பிரதான தீஷிதங்களாய்
சம்சார சாகரத்திலே மூழ்கி நோவு படுகிறவர்களை உத்தரிக்கிற சக்தியை யுடைத்தாய்
இப்படிக் கொடுக்கவும் எடுக்கவும் மாம் படியான குணத்தாலே பணைத்து நெடிதாய் இருப்பனவாய்
அதுக்கு மேலே வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற
பாஹு யுகங்கள் ஆனவை நித்ய மங்களமாய் இருக்க வேணும்

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அனுபாவ்யமாய்-பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்
அநாஸ்ரிதர் நிரசனத்தில் அநாயசத்தாலும்-அசங்குசிதமாய் -நிர்மலமாய்- சோபாவஹமாய்
இருக்கிற திரு முக ஜ்யோதிஸ் ஆனது நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும் –

தூ முறுவல் வாழி
ஆஸ்ரித ரஷணத்தால் உண்டான ஆனந்தத்தாலும்-பகவத் அனுபவ பிரகர்ஷத்தால் உண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிக்கிற
பரிசுத்தமான சிறு நகையும் நித்ய மங்களமாகச் செல்ல வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும் தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும் எப்போதும் கண்டு களிக்குமதாய்
காருண்ய அம்ருத பிரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற
த்வந்த்வ அரவிந்த சுந்தரமான திருக் கண்கள் அழகு மாறாமல் நித்யமாக இருக்க வேணும்

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி
கீழ்ச் சொன்ன எல்லா வற்றையும் நிறம் பெருத்துவனவாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீக்கு வர்த்தகமாய் இருப்பதாய்
பொன் மலையின் பரிசரம் எங்கும் வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே
சிவந்த திருமேனியில் வெள்ளியதான த்வாதச ஊர்த்த்வ புண்ட்ரத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்ய மங்களமாக செல்ல வேணும் –

இனி திருப்போடு எழில் ஞான முத்தரை வாழியே
பத்மாஸ்தனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதார்த்த பிரகாசகமாய் இருக்கிற
பரதத்வ போத முத்தரை யானது நித்ய மங்களமாய் இருக்க வேணும் –

—–

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி-வாழியே-
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யமான ஸ்வரூப ரூப குணங்களோடு வாசி அற எல்லாவற்றாலும் பரி பூரணராய்
எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானாருடைய
அமரர் சென்னிப் பூ -என்னுமா போலே

இராமானுசன் அடிப் பூ என்று சொல்லப் படுமதாய்-அத ஏவ பரம போக்யமாய்
நமக்கு சிரோ பூஷணமாய் இருக்கிற திருவடிப் போதுகள்
போது செய்யாமல் ஏவம் வித ஆகாரத்தோடு நித்தியமாய் செல்ல வேணும் —

திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி –
அதுக்கு மேலே ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் யுண்டாகையாலே –
சீதா காஷாய வாசிநீ-என்னும்படி -பாரதந்த்ர்ய அனந்யார்ஹத்வ ஸூசகமாய்
திருவரை பூத்தால் போலே திரு வரைக்கு அலங்காராவஹமாய்
ஆதித்யனைப் பரிவேஷித்தால் போலே திருவரையில் சூழச் சாற்றி
மிக்க சிவப்பை உடைத்தான திருப் பரி வட்டமும் நித்யமாய்ச் செல்ல வேணும்

(ராகம் -நிறம் சிகப்பு-பராங்குச மநோ நிவாஸ –வைராக்யம் -காஷாயம் -இதுவும் சிகப்பு
ஆறு பிரகாரம் கடி மா மலர்ப் பாவையுடன் ஷட் விதம் -அநந்யார்ஹ சேஷத்வம்-அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம்-ஸம்ஸ்லேஷத்தில் ஆனந்தம் தரிக்கை- விஸ்லேஷத்தில் துக்கம்-தரியாமை- ததேக நிர்வாகத்வம்)

ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி –
அதுக்கு மேலே ஆஸ்ரிதர்க்கு ஸூ பாஸ்ரயமாய் சௌந்தர் யாதிகளாலே மிக்கு
புஷ்பஹாச ஸூ குமாரமாய்
ரூபமே வாஸ்யை தன மஹிமான மா சஷ்டே-என்கிறபடியே
பரமாத்ம ராகம் புறம்பு ஒசிந்தால் போலே சிவந்து இருப்பதான திவ்ய மங்கள விக்ரஹமும்
சர்வ காலத்திலும் -நித்யம் நித்யா க்ருதி தரம் -என்னும்படி நித்ய மங்கள மாகச் செல்ல வேணும் –

இலங்கிய முந்நூல் வாழி –
அதுக்கு மேலே வைதிக உத்தமர் என்னுமத்தை நிறம் பெறுத்துமதாய்
சந்த்யா ராக ரஞ்சிதமான மேகத்திலே மின் கொடி படர்ந்தால் போலே
திரு மார்பிலே பிரகாசிக்குமதாய்
ப்ரஹ்ம ஸூத்ர வ்யாக்ருத்வத் யோதகமாய் இருப்பதான
ப்ரஹ்ம ஸூத்ரப் புகரோடே நித்தியமாய் இருக்க வேணும் –

(த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

இணைத் தோள்கள் வாழி –
அதுக்கு அநந்தரம்-இரண்டு இடத்திலும் அளவாய்
பாஹூக் சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மகாத்மான -என்கிறபடியே
சர்வருக்கும் விஸ்ராந்த சாகியான-பொற் கற்பகத்தின் யுடைய சாகைகளாய்

அத ஏவ
மோஷ பிரதான தீஷிதங்களாய்-விசேஷித்து நிமக்ன உத்தரண சக்தியை யுடைத்தாய்
இப்படி கொடுக்கவும் எடுக்கவும் மாம்படியான குணத்தாலே-பணைத்து-நெடிதாய் இருப்பவனவைகளாய்
தோளார் சுடர்த் திகிரி சங்குடைச் சுந்தரன் -ஞான சாரம் -என்னும்படி
தோர்மூலோல்லாஸி சக்ராம்பு ஜங்களை யுடைத்தாய்
ஆகர்ஷகமான ஆழ்வார்களாலே அங்கிதமாய் இருப்பவனவைகளாய்

அதுக்கு மேலே
வகுள துளசீ நளி நாஷ மாலா அலங்க்ருதமாய் இருக்கிற யுகள பாஹூக்கள் ஆனவை
உக்தமான குணங்களோடு நித்யமாக செல்ல வேணும்-

சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி –
அதுக்கு மேலே ப்ரஹ்ம வித சௌம்ய தே முகம்பாதி -என்றும்
முகச் சோதி மலர்ந்ததுவோ -என்றும் சொல்லுகிறபடி அனுபாவ்யமாய்
பகவத் சாஷாத் காரத்தாலும்-ஆஸ்ரித தர்சனத்தில் ஹர்ஷத்தாலும்-அநாஸ்ரித நிதர்சனத்தில், அநாயசத்தாலும்
அசங்குசிதமாய்-நிர்மலமாய்-சோபாவஹமாய் இருக்கிற முக ஜ்யோதிஸ்ஸூம் நித்தியமாய் செல்ல வேணும்-

தூ முறுவல் வாழி –
அதுக்கு மேலே-ஸ விலாச ஸ்மிதாதாரம் பிப்ராணம் முக பங்கஜம் (5-17-20) -என்னும்படி ஒரு திரு முகமாய் சேர்ந்து
அந்த முக பத்மத்தினுடைய விகாசம் என்னும்படியாய்-
நின் பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து (9-2)-என்கிறபடியே
ஆஸ்ரித ரஷணத்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பகவத் அனுபவ பிரகர்ஷத்தால் யுண்டான ஆனந்தத்தாலும்
பூ அலர்ந்தால் போலே பரிதியைப் பிரகாசிப்பிக்கிற
சாருஹாசத்தால் யுண்டான சந்த்ரிகையைப் பிரவஹிக்கிற ஸூஸ்மிதமும் இப்படியே
என்றும் உளதாய் இருக்க வேணும் –

துணை மலர்க் கண்கள் வாழி –
அதுக்கு மேலே ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யையும்-தாம் திருத்த திருத்தின ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யையும்
எப்போதும் கண்டு களிக்குமதாய்-கருணாம்ருத ப்ரசரண சீலமாய்
ஆஸ்ரிதரை அமலங்களாக விழிக்கும் என்னும்படி கடாஷிக்கிற த்வந்த அரவிந்த சுந்தரமான திருக் கண்கள்
செவ்வி மாறாமல் நித்யமாகச் செல்ல வேணும் —

ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி –
கீழே உக்தங்களான இவை எல்லா வற்றையும் நிறம் பெறுத்துமவையாய்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்கு வர்த்தகமாய் இருப்பதாய்-பொன் மலையின் பரிசரம் எங்கும்
வெண் தாமரை பரப்பு மாறப் பூத்தால் போலே சிவந்த திரு மேனியில் வெள்ளியதாய்
ஊர்த்த்வ தாஸ்ரயண ஸூசித சக்தியை யுடைத்தான -த்வாதச ஊர்த்த்வ புண்டர தாரணத்தால் யுண்டான
சௌந்தர்யம் நித்யமாக செல்ல வேணும்-

இனி திருப் போடு எழில் ஞான முத்தரை –
கீழே உக்தமான எல்லாவற்றுக்கும் அதிஷ்டையாய் இருந்த அந்த அதிஷ்டான சக்தியாலே
குத்ருஷ்டிகளாகிற குறும்பர் அறும் படியாகவும்
ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாயும்-கேவல பகவத் இச்சையாலே
வையம் மன்னி வீற்று இருந்து (4-3-11)-என்னும்படி வ்யாவ்ருத்தி தோற்ற
ஹம்ச சமூஹ மத்யே ராஜ ஹம்சமானது சரசமாக இருக்குமா போலே
பரம ஹம்சரான தாமும்-சம் சேவிதா -இத்யாதிப் படியே ஸ்ரீ ராமாநுஜார்ய வசகராய்
ஸ்ரீ இராமானுஜனைத் தொழும் பெரியோராய் இருக்கிற முதலிகள் எல்லாரும் சேவித்து இருக்க
இவர்கள் நடுவே

பத்மாசன உபவிஷ்டம் பர தத்வ போத முத்ரம் -என்னும்படி
பத்மாசனராய் எழுந்து அருளி இருக்கிற இருப்போடு உபய வேதாந்தார்த்த பிரகாசகமாய்
உன்நித்ர பத்ம ஸூபகமாய் இருக்கிற ஜ்ஞான முத்தரை யானது காதாசித்கம் அன்றிக்கே
சதா தர்சன யோக்யதாம் படி வாழக் கடவதாக வேணும்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -என்னக் கடவது இறே –

தேராருதுய்ய செய்ய முகச் சோதி -என்றும் பாடம் சொல்லுவர்
தோராத –

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் -என்னுமா போலே
சீராரும் -என்கிறத்தை திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்

ஸ்ரீ எதிராசர் உடைய திருவடிகள் ஆகையாலே
பார்த்திவ வயஜ்ஞாஞான் விதமாய் இறே இருப்பது-

(காஷாய சோபி கமநீய சிகா நிவேசம்-
தண்டத்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லசத் ஊர்த்வம் புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –.)

(பற்பமெனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராட பதிந்த மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
எப்போதும் கற்பகமே விழி கருணை பொருந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கணணச் சிகைமுடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே)

துளஸீ மாலை பெருமாள் ப்ரஸாதம் -தாமரை மாலை -பிராட்டியார் ப்ரஸாதம் -வகுள மாலை -ஆழ்வார் ப்ரஸாதம்-மோக்ஷ ஏக உபாயம் -புருஷகாரம் கைங்கர்ய ஸ்ரீ மூன்றையும் பெற்ற எம்பெருமானார்

————————————————————————-

அசக்ருத ஆவ்ருத்தி அபேஷா கார்யம் ஆகையாலே மீளவும் ஆதர அதிசயத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டி நிரசனம் பண்ணி அருளினமைக்கும்
மற்றும் லோக உபகாரகங்களாக செய்து அருளினவை எல்லாவற்றுக்கும்
மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார்

கீழ் பாட்டு விக்ரஹ பரம்
இப் பாட்டு ஸ்வரூப பரம் –

அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே —31-

அறு சமயச் செடி யதனை –பாஹ்யங்களான ஷண் மதங்களாகிற வ்ருக்ஷங்களை
யடி யறுத்தான் வாழியே–மூலச் சேதனம் பண்ணினவர் நித்யமாக வாழ்ந்து அருள வேணும்
அடர்ந்து வரும் –கூட்டமாய்க் கூடி மேலிட்டு வருகிற
குதிட்டிகளை –நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டன –என்கிறபடியே வேதத்தில் குறும்பு செய்கிற இவர்களை
யறத் துரந்தான் வாழியே-ஸ வசனமாகத் துறத்தி அருளியவர் நித்தியமாக வாழ்ந்து அருள வேணும்
செறு கலியை –அறு ஸமயம் போனது பொன்றி இறந்தது வெங்கலி -என்கிறபடியே இவற்றுக்கு எல்லாம் ஹேதுவாய் -லோகம் எங்கும் காடமாய் மூடி வருகிற கொடிய கலியை
சிறிதும் –லேசமும்
அறத் தீர்த்து விட்டான் வாழியே-இல்லாதபடி போக்கடித்தவர் நித்ய மங்களமாக வாழ்ந்து அருள வேணும் –
தென்னரங்கர் -ஸுந்தர்ய பூர்ணரான பெரிய பெருமாளுடைய
செல்வம் முற்றும் –திருச்செல்வம் எல்லாவற்றையும்
திருத்தி வைத்தான் வாழியே–கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் நித்ய மங்களமாக வாழ்ந்து அருள வேணும்
மறையதனில் -வேதத்தில் ப்ரதிபாதிக்கப் படுகிற
பொருள் அனைத்தும் –ஸகல அர்த்தங்களையும்
வாய் மொழிந்தான் வாழியே–ஸ்ரீ பாஷ்ய ரூபேண அருளிச் செய்தவர் நித்ய மங்களமாக வாழ்ந்து அருள வேணும்
மாறனுரை செய்த தமிழ் மறை -நம்மாழ்வார் அருளிச் செய்த திராவிட வேதத்தை
வளர்த்தோன் வாழியே-வர்த்திப்பித்து அருளினவர் நித்ய மங்களமாக வாழ்ந்து அருள வேணும்
அறம் மிகு –அதில் தாத்பர்யமான ஸரணாகதி தர்மம் ஜகத்திலே விருத்தியடைய
நற் பெறும் பூதூர் –விலக்ஷணமான ஸ்ரீ பெரும் பூதூரிலே
அவதரித்தான் வாழியே–திருவவதரித்தவர் நித்ய மங்களமாக வாழ்ந்து அருள வேணும்
அழகாரும் –ஸுந்தரியாதிகளாலே பூர்ணராய் இருக்கிற
எதிராசர் –எம்பெருமானாருடைய
அடி இணைகள் வாழியே -ஸர்வ சரண்யமான சரண யுகங்கள் நித்ய மங்களமாய்ச் செல்ல வேணும்

சாக்யோ லூக்யா ஷபாத ஷபணக் கபில பதஞ்சலி மத் அனுசாரிண-என்கிறபடியே
பாஹ்ய ஷண் மாதங்கள் ஆகிற மூடிக் கிடக்கிற செடிகளை மூலச் சேதனம்
பண்ணி அருளினவர் நித்யமாக எழுந்து அருள வேணும் –

மேலிட்டு வரும் குத்ருஷ்டிகளை –
நான்மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் -என்கிறபடியே –
சவாசனமாகத் துரத்தி அருளினவர் நித்யமாக வாழ்ந்து அருள வேணும் –

அறு சமயம் போந்தது போன்றி இறந்தது வெங்கலி -என்கிறபடியே
இவை எல்லாத்துக்கும் ஹேதுவாய் லோகம் எங்கும் காடமாய் மூடி வருகிற கலியை
அல்பாவ சேஷமும் இல்லாதபடி முடித்து விட்டவர் வாழ்ந்து அருள வேணும்

அநந்தரம்
ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீயம் அனுபத்ரவா அனுதினம் சம்வர்த்தயா-என்கிறபடியே
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திருச் செல்வம் எல்லாம் கட்டளைப் படும்படி பண்ணி அருளினவர் வாழ்ந்து அருள வேணும்

அதுக்கு மேலே
பிரமாணத்தில் வந்தால்
வேதத்தில் விப்ரபத்தி போக்கின அளவன்றிக்கே
வேதாந்த அர்த்தம் எல்லாம் ஸ்ரீ பாஷ்ய ரூபேண அருளிச் செய்தவர் வாழ்ந்து அருள வேணும்

அதுக்கு மேலே
ஸ்ரீ ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்ட ஸ்ரீ திருவாய் மொழியை வளர்த்த இதத் தாய் -என்னும்படி
வர்ப்பித்து அருளினவர் வாழ்ந்து அருள வேணும்
அதன் தாத்பர்ய மான சரணாகதி தர்மம் ஜகத்திலே வர்த்திக்க
விலஷணமான ஸ்ரீ பெரும் பூதிரிலே திரு வவதரிதவர் வாழ்ந்து அருள வேணும்
சௌந்தர் யாதிகளாலே பூரணமாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய
சர்வ சரண்யமான சரண யுகங்கள் நித்யமாக வாழ வேணும்

அழகாருகை -அடி இணைகளுக்கு விசேஷணம் ஆன போது
இரண்டு தாமரைப் பூவை நிறைத்து வைத்தால் போல் இருக்கிற சேர்த்தி அழகையும்
ஸ்வத உண்டான சௌந்தர்யத்தையும் சொல்லுகிறது ஆகவுமாம் –

அற மிகு நல் பெரும் பூதூர் -என்றும் பாடம் சொல்வார்
அப்போது -ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்கிற
தர்மத்தை அதிகமாக உடைத்து என்னவுமாம்
வாழி -என்பது மங்கள சொல்

(ஆனது செம்மை அற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி யிறந்தது வெங் கலி பூங்கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசனித் தலத் துதித்தே.–49-

(நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது,தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் டமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமா னுசன்றன் இயல்வு கண்டே.–54-)

——————————————————

கீழ்
நற் பெரும் பூதூர் அவதரித்தார் என்று பிரஸ்துதமான திரு வவதார திரு நஷத்ர வைபவத்தை
ப்ரீதியாலே பேசி அனுபவித்து அருளுகிறார்-

சங்கர பாஸ்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்
வெங்கலி யிங்கினி வீறு நமக்கில்லை என்று மிகத் தளர் நாள்
மேதினி நஞ்சுமை யாறு மெனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும் பூதூர்
சீமான் இளையாழ்வார் வந்து அருளிய நாள் திருவாதிரை நாளே –32-

சங்கர -சங்கரன் மதம்
பாஸ்கர –பாஸ்கரன் மதம்
யாதவ -யாதவ ப்ரகாசன் மதம்
பாட்டப் –பாட்ட மதம்
பிரபாகரர் தங்கள் மதம்-பிரபாகரர் மதம் இவை எல்லாம்
சாய்வுற –நாசத்தை அடையா நிற்கையில்
வாதியர் –வாதியர்களான சங்கராதிகளும்
மாய்குவர் என்று -ஐயமின்றி நசிப்பர்கள் என்று
சதுமறை -நான்கு வேதங்களும்
வாழ்ந்திடு நாள்–அர்த்த பவ்கல்ஷ்யத்தை யுடைத்தாய் அபி விருத்தமாம் திவஸம்
வெங்கலி –குரூரமான கலியும்
யிங்கினி வீறு நமக்கில்லை என்று -இவ்விடத்தில் இனி நமக்கு ஸாம்ராஜ்யம் பண்ண ஸக்யம் அன்று என்று
மிகத் தளர் நாள்-மிகவும் நிலை குலைந்து இருக்கப் பண்ணுவதான திரு நக்ஷத்ரம்
மேதினி –பூமியும்
நஞ்சுமை –நம் தலைச்சுமை
யாறு மெனத் –கழியும் என்று
துயர் விட்டு –துக்கத்தை விட்டு
விளங்கிய நாள்-பிரகாஸியா நிற்கும் திரு நக்ஷத்ரம்
இனி பூமியில் உண்டான அர்ச்சா ஸ்தலங்களை ஆதரிக்கும் அவர்களாகையாலே
மங்கையராளி –திருமங்கை ஆழ்வாருடையவும்
பராங்குச –நம்மாழ்வாருடையவும்
முன்னவர் –மற்ற பூர்வாச்சார்யர்களுடையவும் வாழ்வு
முளைத்திடு நாள்-ஸம்பத்து அங்குரிக்கும் திரு நக்ஷத்ரம்
மன்னிய –பெரிய பெருமாள் நித்ய வாஸம் பண்ணுகிற
தென்னரங்கா புரி –அழகிய அரங்கா மா நகரும்
மா மலை –பெரிய திருமலையும்
மற்றும் உவந்திடு நாள்-மற்றும் உண்டான திவ்ய தேசங்களும் ஆனந்திக்கும் திரு நக்ஷத்ரம்
செங்கயல் வாவிகள் –சிவந்து அழகிய மத்ஸ்யங்களை யுடைய தடாகங்களினால்
சூழ் வயல் -சூழப்பட்ட விளை வயல்களினாலே
நாளும் -நித்தியமாக யுண்டான
சிறந்த -நகர அலங்காரங்களை யுடைத்தாய் இருக்கிற
பெரும் பூதூர்–ஸ்ரீ பெரும் பூதூரை அவதார ஸ்தலமாக யுடைய
சீமான் இளையாழ்வார் -சீமானாய் இளையாழ்வார் என்று நிரூபகத்தை யுடையவரான எம்பெருமானார்
வந்து அருளிய நாள் -வந்து திருவவதரித்து அருளின திநம்
திருவாதிரை நாளே –திருவாதிரைத் திரு நக்ஷத்ரம்
இதுவும் ஒரு நாளே -ஸ்ரீ மான் ஆவிர பூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மன் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர —

விசேஷணத்தை இல்லை செய்வாரும்-விசேஷ்யத்தை இல்லை செய்வாருமாய்
இப்படி விபாகத் த்வய குத்ருஷ்டிகளாய்க் கொண்டு
வேதார்த்தா பலாபம் பண்ணுகிறவர்கள் ஆகையாலே
வைதிக தர்மம் தலை சாயும்படி வந்து கிட்டி இருக்கிற வாதியர்களான
சங்கராதிகள் உடைய மதம் நாசத்தை அடையும் என்று
நாலுவகைப் பட்ட வேதமானது அர்த்த பௌஷ்கல்யத்தை யுடைத்தாய் அபிவிருத்தமாம் திவசம் –

கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று சொல்லுகிறபடியே
குரூரமான கலியானது இவ் விடத்திலே
இனி நமக்கு சம்சார ராஜ்ஜியம் பண்ண சகயம் அன்று என்று
மிகவும் நிலை குலைந்து இருக்கப் பண்ண வற்றான திரு நஷத்ரம் –
கலியும் கலி கார்யமான குத்ருஷ்டிகளும் போகையாலே-
விஸ்வம் பரா புண்ய வதீ -என்றும்

தவம் தாரணி பெற்றது -என்றும் சொல்லுகிறபடியே
பூமியானது தம் தலை சுமை கழியும் என்று துக்கத்தை விட்டு பிரகாசியா நிற்கிற திரு நஷத்ரம்
இனி பூமியில் உண்டான அர்ச்சா ஸ்தலங்களை ஆதரிக்குமவர்கள் ஆகையாலே
ஸ்ரீ திருமங்கைக்கு நிர்வாஹகரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்
பராங்குச அபிதேயரான ஸ்ரீ நம் ஆழ்வார்
முதலானவர்களுடைய சம்ருத்தி அங்குரிக்கும் திரு நஷத்ரம்-

அதுக்கு மேலே ஸ்ரீ பெருமாள் நித்ய வாசம் பண்ணுகிற கோயில்
அருவி செய்யா நிற்கும் மா மலை -என்று சொல்லப் படுவதான ஸ்ரீ பெரிய திருமலை
மற்றும் உண்டான திவ்ய தேசங்களும்
ஸ்வ ஸ்வ சம்ருதியை அடைவுதோம் என்று ஹர்ஷிக்கும் திரு நஷத்ரம் –

இதுக்கு எல்லாம் அடியாக -அங்கயல் பாய் வயல் -என்னுமா போலே
சிவந்து அழகிய கயல்களை உடைத்தான வாவிகளாலே சூழப் பட்டு இருக்கிற
விளை வயல்களினாலே நித்யமாக யுண்டான நகர் அலங்காரங்களை யுடைத்தான
ஸ்ரீ பெரும் பூதூரை திரு வவதார ஸ்தலமாக யுடைய ஸ்ரீ மானாய்
ஸ்ரீ இளைய ஆழ்வார் என்கிற நிரூபகத்தை உடையரான
எம்பெருமானார் திரு வவதரித்து அருளின திவசம் திருவாதிரை திரு நஷத்ரம் –

இதுவும் ஒரு நாளே
ஸ்ரீ மான் ஆவிர் பூத் பூதௌ ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே

தென்னரங்கா புரி மா மலை மற்றும் உவந்திடு நாள் -என்கிறதுக்கு
தத்ரஸ்தரான ஜீவேஸ்வரர்கள் ஹர்ஷிப்பார்கள் என்றபடி
மன்றல் -பொருந்துதலும்-நிலைப்பாடும்
ஆறுதல் -சமித்தல்
உன் நாமம் எல்லாம் எந்தன் நாவின் உள்ளே அல்லும் பகலும் அமரும்படி நல்க என்கிறபடியே
இவருக்கு தத் வாசகமான திரு நாமங்கள் தான் அனுபாவ்யமாய் இருக்கையாலே

ஸ்ரீ எதிராசன் என்றும்
ஸ்ரீ இராமானுசன் என்றும்
ஸ்ரீ எம்பெருமானார் என்றும்
ஸ்ரீ இளையாழ்வார் என்றும்–அனுசந்தித்து அருளினார்-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -20-28–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 20, 2014

இவர் இப்படி
நல்லார்கள் தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ -என்றவாறே
நல்லார் பரவும் ராமானுசனான -ஸ்ரீ எம்பெருமானார் இவர் இங்கனே சொல்லப் பெறுமோ என்று
அத்தை சஹியாமல்
நல்லார்கள் நண்ணும் திரு நாட்டிலே நல்ல அமரரோடே ஒரு கோவையாக்கி
அவர்கள் அனுபவ கைங்கர்யத்தை இவருக்கு உண்டாக்க வேணும் என்கிற
அபிசந்தியை (திரு உள்ளத்தை ) யுடையராய் இருக்கிற ஆகாரத்தைக் கண்டு

இனி
பேறு தப்பாது -என்று அத்யவசித்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே தேச விசேஷத்திலே ஏறப் போய்
பரமாத்ம சத்கார பர்யந்த்மான பல பரம்பரைகளை எண்ணி
அத்தை தாம் பெற்றதாக ஹ்ருஷ்டர் ஆகிறார் –
(ஆழ்வாரது சூழ் விசும்பு திருவாய் மொழி போல் பர ஞான தசையில் அருளிச் செய்கிறார் )

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை யாற்றில்
நாம் மூழ்கி மலமற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சத் கரிப்ப மா மணி மண்டபத்துச் சென்று
மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே-—20-

போம் வழியை–பரமபதத்துக்குப் போய் அனுபவிக்கும் ஆனந்தம் பரிச்சின்னம் என்னும் படி நிரவதிக போக்யமான அர்ச்சிராதி மார்க்கத்தை
தரும் என்னும் –கொடுக்கும் என்கிற
இன்பம் எல்லாம்-அவ்வழியில் உண்டான இன்பம் எல்லாம்
புசித்து –அனுபவித்து
வழி போய் –அர்ச்சிராதி மார்க்கத்திலே சென்று
அமுத விரசை யாற்றில்-அம்ருத மயமான விரஜை நதியிலே
நாம் மூழ்கி –தாப த்ரய துக்கங்கள் எல்லாம் தீர நாம் தீர்த்தமாடி
மலமற்று–ப்ராக்ருதங்களான மலங்கள் எல்லாம் கழிந்து
தெளி விசும்பை–பரிசுத்தமான பரமபதத்தை
நண்ணி –கிட்டி
நலம் திகழ் மேனி தன்னைப் பெற்று–ஸ்வரூப குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும் படி ஸூத்த ஸத்வ மயமான அப்ராக்ருத திவ்ய தேஹத்தைப் பெற்று
அமரர் தாம் –நித்ய ஸூரிகள்–
வந்து -எழுந்து அருளி –
எதிர் கொண்டு -ப்ரத்யுத்கரராய்
அலங்கரித்து–ப்ரஹ்ம அலங்காராதிகளாலே அலங்கரித்து
சத் கரிப்ப –ஸத் கரிக்க
அவர்கள் உடனே கூட
மா மணி மண்டபத்துச் சென்று–திரு மா மணி மண்டபத்திலே சென்று
மா மலராள் கோன் —ஸ்ரீ யப்பதியான ஸ்ரீ வைகுண்ட நாதன்
மடியில் வைத்து உகக்கும்–மடியிலே வைத்து உச்சி மோந்து உகந்து அணைக்கும்
வாழ்வு -ஸம்பத்து
எதிராசன்-எம்பெருமானார்
நமக்கு அருளும் வாழ்வே- இதில் அபேக்ஷையுடைய நமக்கு அருள் கொடையாகப் ப்ரஸாதித்து அருளும் ஸம்பத்தே –

இதில் அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே –
போம் வழியைத் தரும் -என்கிற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திப்படியே
போய் புகுகிற தேச விசேஷத்தில்-

சத்காரம் எல்லாம் ஒரு சிறாங்காய் என்னும்படி
அபரிச்சேத்யமான மார்க்க சத்கார ஸூகத்தை எல்லாம் அனுபவித்து

கள்வன் கொல் ஸ்ரீ பிராட்டியைப் போலே-
அவன் முன்னே வழி நடத்த பின்னே போய்
விரஜ அம்ருதாகாரம் மாம் பிராப்ய மகா நதீம் -என்கிறபடியே
அம்ருத வாஹினியாய்-விரஜை என்னும் பேரை யுடைய சன்னதியிலே
தாப த்ரய துக்கங்கள் எல்லாம் தீர-நாம் அவஹாகித்து

அநந்தரம்
ஸ்வரூபத்துக்கு திரோதாயகமான பிராக்ருதங்களான மலங்கள் எல்லாம் கழிந்து
தெளி விசும்பு திரு நாடு என்கிற பிராப்ய தேசத்தைக் கிட்டி
ஸ்வரூப ரூப குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படி
ஸூத்த சத்வமான அப்ராக்ருத விக்ரஹத்தை லபித்து

பஹூ மந்தவ்யரான நித்ய ஸூரிகள் தாங்கள் பிரத்புக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து சத்கரிக்க-அவர்கள் உடனே கூட
திவ்ய மா மணி மண்டபத்திலே சென்று ஸ்ரீ யபதியான ஸ்ரீ வைகுண்ட நாதன்

அங்கே பரதம் ஆரோப்யம் உதித பரிஷஸ்வஜே -என்கிறபடியே
மடியிலே வைத்து-உச்சி முகர்ந்து உகந்து அணைக்கும் சம்பத்தை
எதிராசரான ஸ்ரீ எம்பெருமானார்

இதிலே அபேஷை யுடைய நமக்கு அருள் கொடையாக பிரசாதித்து அருளும் சம்பத்தே
இது ஒரு பேறு இருந்தபடியே-

(ஒழிவென்றில்லாத பல் ஊழிதோறூழி நிலாவ,போம் வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய், கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள், இழியக் கருதியோர் மானிடம் பாடலென் னாவதே.)

————————————————–

எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அப்ராப்யமாய் இருக்கும் பேற்றை
நீர் பெற்றதாக பேசா நின்றீர்
அது நமக்கு ஸூலபமாய் இருந்ததோ என்று தம் திரு உள்ளக் கருத்தாக

நம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை
நிர்ஹேதுகமாக வுபகரித்து அருளின ஜ்ஞானத்தைக் கொண்டு
அவனுடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசித்து இரு –

பெறுதற்கு அரிய பேற்றை ஸ்ரீ எம்பெருமானாரே பண்ணி அருளுவர் –
ஆகையால் இது விஷயமாக –
நிர்ப் பயோ நிர்ப் பரோஸ்மி -என்று இருக்கும் நமக்கு என்ன பயம் என்கிறார் –

(சம்சார பயம் இல்லை-ஈஸ்வர ஸ்வா தந்தர்ய பயமும் இல்லை)

திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டு அவர் தம்மை யுத்தாரகராக வெண்ணி
யிரு மனமே அவர்க்காய் எதிராசர் எம்மைக் கடுகப்
பரம பதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே ––21-

திருமலை ஆழ்வார் -ஸ்ரீ சைல நாதர் என்னும் திரு நாமத்தை யுடைய
திருவாய் மொழிப் பிள்ளை -திருவாய் மொழிப்பிள்ளை தம்முடைய
சீர் அருளால்–நிர்ஹேதுக கிருபையாலே
தரு -ப்ரஸாதித்து அருளும்
மதி கொண்டு –ஞானத்தை ஸாதனமாகக் கொண்டு
அவர் தம்மை -இப்படி மஹா உபகாரகராய் இருக்கிற அந்தப் பிள்ளையை
யுத்தாரகராக –ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தரிப்பவராக
வெண்ணி யிரு மனமே –மனஸ்ஸே அத்யவசித்து இரு
அவர்க்காய் -இப்படி நம் ஆச்சார்யரான பிள்ளைக்காக
எதிராசர் –எம்பெருமானார்
எம்மை -ஸ்வ ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்று இருக்கிற நம்மை
கடுக–ஸீக்ரமாக
பரம பதம் தன்னில் –பரமபதத்தில்
ஏற்றுவர் –ஏற்றி அருளுவர்
என்ன பயம் நமக்கே –ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம்
ஒரு பயமும் வேண்டாம் –
மார்பிலே கை வைத்து நிர்ப் பயமாய் உறங்கும் அத்தனை
அன்றோ என்று கருத்து

ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்று நிரூபகத்தை யுடையவராய்
பின்பு ஸ்ரீ திருவாய்மொழியில் அவகாஹநத்தாலே
ததேக நிரூபணீயராய் இருக்கிற ஸ்ரீ பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே பிரசாதித்து அருளும்

(அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத: கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:)

பொருவில் மதி -என்னும்படியான தத் விஷய ஞானத்தை சாதனமாகக் கொண்டு
அந்த ஜ்ஞான பலமாக இப்படி மகோ உபகாரகராய் இருக்கிற
அந்த ஸ்ரீ பிள்ளையை-
உத்தாரயதி சம்சாராத் ததுபாய ப்லேவே நது-என்கிறபடியே
சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமவராக-மனசே அத்யவசித்து இரு

இப்படி-நம் ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளைக்காக எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
தாமே
ஸ்வ ஆச்சார்ய (ஸதாச்சார்ய)அபிமானமே உத்தாரகம் -என்று இருக்கிற நம்மை ஏன்று கொண்டு
சீக்ரமாக ஏற்ற அரும் ஸ்ரீ வைகுந்தம் -(7-6-10)ஏன்று
துஷ் பிராபகமாய் சொல்லப்படுகிற பரம பதத்திலே ஏற்றி அருளுவர்
மனமே நையல் மேவுதற்கே -என்கிறபடி
ஏதத் விஷயமாக நமக்கு என்ன பயம் ஒரு பயமும் வேண்டா –

(ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-அங்கு பலராமானுஜன் -இங்கு ராமானுஜர்)

மார்பிலே கை வைத்து உறங்கும் அத்தனை அன்றோ -என்ற கருத்து
அசிந்த்யஸ்த்வா பூமௌ-இத்யாதி
ப்ரபத்ய த்வாமத்ய -இத்யாதி-

(அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115)

நிஷ் கல்மஷைர் நிஹத ஜென்ம ஜரா விகாரைர் பூயிஷ்ட பக்தி விபவை அபவை அவாப்யம் அந்யைர் அதந்ய புருஷைர் மநசாபி அநாப்யம் வைகுண்ட நாம தவ தாம தத் ஆம நந்தி –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-45-

கல்மஷம் அற்றவர்களாயும் -பிறப்பு மூப்பு முதலிய விகாரங்களைத் தொலைத்தவர்களாயும் பக்திச் செல்வம் மிகுந்தவர்களாயும் உள்ள முமுஷுக்களாலே அடையத் தகுந்ததாய் மற்றையோர்களான தரித்ரர்களாலே நெஞ்சினாலும் அணுகத் தகாததாய் உள்ள -அப்படிப்பட்ட ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஸ்தானத்தை -எம்பெருமானே -தேவரீருடைய இருப்பிடமாகச் சொல்லுகின்றார்கள் –

—————————————————————-

என்ன பயம் நமக்கே -என்று நிர்பயரான இவர்
இதில்
அஸ்மத் குரு தாயாயத யதீந்தி ராங்கி க்ரியான்வய -என்கிறபடியே
ஸ்ரீ பிள்ளை யுடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸ்ரீ எம்பெருமானாருடைய அபிமான நாவா ரூடனாய்
சம்சார சாகரத்தைக் கடந்து ஸ்ரீ யபதியுடைய ஸ்ரீ பாத கூலத்தை பிராபிப்பேன் -என்று நிச்சயிக்கிறார் –

தீதற்ற ஞான திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தமபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே –22-

தீ தற்ற –குற்றம் அற்ற
ஞான –ஆத்ம ஞான குணங்களுடைய
திருவாய்மொழிப் பிள்ளை –திருமாலவன் கவியான திருவாய் மொழியிலே அவஹாகநத்தை யுடைய வராகையாலே அத்தையிட்டு நிரூபிக்கும் படியான ஆதிக்யத்தை யுடையரான பிள்ளையுடைய
சீர் அருளால்–நிர்ஹேதுக கிருபையாலே
ஏதத்தை –காமாதி தோஷங்களை
மாற்றும் -போக்கடிக்கிற
எதிராசர் தம் –எதிகளுக்கு நாதராய் இருக்கிற எம்பெருமானாருடைய
அபிமானம் என்னும்–அபிமானம் என்கிற
போதத்தை ஏறி-நிர் அபாயமான விஷ்ணு போதம் போன்ற வைஷ்ணவ கப்பலை ஏறி
பவமாம் புணரி தனைக் கடந்து–ஸம்ஸாரமாகிற பெரும் கடலைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையை–விண்ணோர் பிரான் மாசில் மலரடிக்கீழ் -என்றும் -துயரறு சுடரடி -என்றும் சொல்லுகிறபடியே
அகில ஹேய ப்ரத்ய நீகமாய் –நிரவதிக தேஜோ ரூபமாய் -பரம ப்ராப்யமுமாய் இருக்கிற ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளாகிற தீரத்தை
குறுகுவன் –கிட்டப் பெறுவேன்
ஏ -பூரணம்

ஸ்ரீ விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ கப்பல் ஏறி – விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் –
துயர் அறு சுடர் அடி -அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்-பரம பிராப்யம் –
தத் ஞானம் அஞ்ஞானம் அதோன்ய துக்கம் -என்றும்
வித்யான்ய அசிலபநை புணம்-என்றும் சொல்லுகிறபடியே-
பகவத் அந்ய பரமாம் குற்றம் அன்றிக்கே

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்கிறபடியே
ஸ்ரீ யபதி விஷயமாக யுடைத்தாய்
அது தான் ததீய பர்யந்தமாக இருக்கிற ஞானத்தை யுடையராய்
அதுக்கு மேலே
வறை முருகலான ஆர்ஷ வசனங்களை த்ருணவக்கரித்து-
ஸ்ரீ திருமால் அவன் கவியான ஸ்ரீ திருவாய் மொழியில்
அவகஹா நத்தை யுடையவர் ஆகையாலே அத்தை இட்டு நிரூபிக்கும்படியான ஆதிக்யத்தை யுடையரான
ஸ்ரீ பிள்ளையினுடைய நிர்ஹேதுக கிருபையினாலே

காமாதி தோஷ ஹரராய்-எதிகளுக்கு நாதராய் இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய அபிமான ரூபமாய் இருப்பதாய்
இதம் ஹி வைஷ்ணவம் போதம் சம்ய தாஸ்தே பவார்ணவே-என்கிறபடியே
நிர் அபாயமான விஷ்ணு போதம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ போதத்தை ஆரோஹித்து
சம்சார சாகரம் கோரம் -என்று சொல்லப்படுமதான சம்சாரம் ஆகிற சமுத்ரத்தைக் கடந்து –

(பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆந்ரு சம்ச்யம் நாவாயிலே நிழல் எழும் ..சூரணை -180-
( கிருபை -சாமான்யம் -ஆந்ரு சம்சயம் ஆஸ்ரிதர்களுக்கு விசேஷ கிருபை
மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென்னகரிலே நித்யம்-165 )

விண்ணோர் பிரானார் மாசற்ற மலரடிக் கீழ் – துயர் அறு சுடர் அடி –
அகில ஹேய பரத்ய நீக-நிரவதிக தேஜோ ரூபமாய்
வேறு ஒரு பிரப்யாந்தரத்தை அபேஷிக்கும்படியான கோது இன்றிக்கே
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகள் ஆகிற தீரத்தை கிட்டப் பெறுவன்-இது நிச்சயம் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54

ஸ்ரீ பிராட்டி கடாஷத்துக்கு விஷயமான பின்பு ஸ்ரீ திருவடி
ராமஸ்ய லோக த்ரய நாயகஸ்ய ஸ்ரீ பாத கூலம் மனஸா ஜகாம-என்று அடைந்ததாக அத்யவசித்தான் இறே-
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா -என்று தொடங்கி
உன் தேனே மலரும் திருப் பாதம் வினையேன் சேருமாறு நீ அருளாய் -என்று அர்த்திக்க வேண்டிற்று இறே

கோதற்ற மாதவன் -என்று கோது அறுகையாவது அவனுக்கு விசேஷணம் ஆன போது
ஸ்ரீ பிராட்டியோடு கூடி இருக்கையாலே-திருவில்லாத கோது அற்றவன் என்னவுமாம்
ஸ்ரீ யபதி இறே நித்ய பிராப்யன் ஆவான் –

———————————————————-

கீழே இரண்டு பாட்டாலும்
ஸ்வ ஆச்சார்யகளான–பரம ஆச்சார்யகளான ஸ்ரீ பிள்ளை யுடையவும் ஸ்ரீ எம்பெருமானார் யுடையவும்
அபிமானத்தாலே பேறு தப்பாது என்று நிச்சயித்து
இப்படி நிச்சிதமான பின்பு
வடிவுடை மாதவன் -என்னும்படி
புதுக் கணிப்போடு சபரிகரனாய் -திவ்ய ஆஸ்தான மண்டபத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே திவ்ய மகிஷி பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மன் நாராயணான
ஸ்ரீ வைகுண்ட நாதனை கடுக அனுபவிக்கும்படி – எனக்கு நாதரான தேவர் பண்ணி யருள வேணும் – என்கிறார் –

(குடி  அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-)

அடியார்கள் குழாங்கள் அழகு ஓலக்கம் இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை
மண் மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் நாரணனைக் கடுக
நான் அனுபவிக்கும் வகை நல்கு என் எதிராசா —-23-

என் எதிராசா-அடியேனுக்கு ஸ்வாமியாய் –யதிகளுக்கு நாதரானவரே
அடியார்கள் குழாங்கள் -நித்ய முக்த ப்ருந்தங்கள் -அநந்த கருட விஷ்வக் ஸேந ப்ரமுகரான நித்ய வர்க்கமும் –பராங்குச பரகால யதிவராதிகள் தொடக்கமான முக்த வர்க்கமும்
மணிகளையும் முத்துக்களையும் நிறைத்தாப் போலே
அழகு ஓலக்கம் இருக்க-அழகு ஓலக்கமாக வரிசை அடைவே ஸேவித்து இருக்க
ஆனந்த மயமான மா மணி மண்டபத்து–நிரதிசய ஆனந்த ஜனகமான திரு மா மணி மண்டபத்திலே
படியாதுமில் -உபமானம் ஒன்றும் இல்லாமல் இருப்பதான
படுக்கையாய் இருக்கும் -திவ்ய பர்யங்கமாய் இருக்கும்
அனந்தன்–திரு வனந்தாழ்வானுடைய
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்–பணா ரத்னங்களின் ஜ்யோதிர் மண்டலத்தின் நடுவே
வடிவாரும் மா மலராள் –வடிவாய் உன் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்கிறபடியே
சவுந்தர்யத்தால் மிக்கு ஸுகுமார்யத்தை யிட்டு நிரூபிக்கும் படியான பெரிய பிராட்டியார்
வலவருகும் –வலது பக்கத்திலும்
மற்றை மண் மகளும் ஆய்மகளும் -தத் அந்யரான பூமிப்பிராட்டியும் நீளாதேவியும
இடவருகும் இருக்க-இடது பக்கத்திலும் ஸேவித்து இருக்க –
நடுவாக வீற்று இருக்கும் –இவர்களுக்கு நடுவே மூன்று மின் கொடிகளோடே கூடி தாமரை பூத்ததொரு காளமேகம் போலே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற
நாரணனை —ஸ்ரீ வைகுண்ட நாதனை
கடுக–சீக்கிரமாக
நான் -அடியேன்
அனுபவிக்கும் வகை –அனுபவிக்கும் பிரகாரத்தை
நல்கு –ப்ரஸாதித்து அருள வேண்டும்
என் எதிராசா நல்கு என்று இவ்விடத்திலே ஸம்போதிக்கவுமாம்

அடியேனுக்கு ஸ்வாமியாய்-எதிகளுக்கு நாதர் ஆனவரே
அடியார்கள் குழாங்கள் -என்றும்
மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியவர் -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அனந்த
ஸ்ரீ கருட
ஸ்ரீ விஷ்வக்சேன
பிரமுகரான நித்ய வர்க்கமும்
ஸ்ரீ பராங்குச
ஸ்ரீ பரகால
ஸ்ரீ யதிவராதிகள்
தொடக்கமான முக்த வர்க்கமும்

மணி முத்தாதிகளை நிறைத்தால் போலே அழகு ஓலக்கமாக வரிசை அடைவே சேவித்து இருக்கிற
ஆனந்த மயாய மண்டபாத் நாயநம-என்கிறபடியே நிரஸ்த அதிசய ஆனந்த ஜனகமான
திரு மா மணி மண்டபத்திலே-அசேஷ சேஷ வ்ருத்திகளுக்கும்
சைத்ய மார்த்வாதிகளுக்கும் உபமானம் அன்றியிலே இருப்பதான திவ்ய பர்யங்கம் ஆகிற

ஆயிரம் பைந்தலைய அனந்தன் -என்றும்
சிறப்புடைய பணங்கள் மிசைச் செழும் மணிகள் விட்டு எரிக்கும் -என்றும்
தெய்வச் சுடர் நடுவுள் -என்றும் சொல்லுபடியான பணா மண்டலங்களின் ஜோதிர் மண்டலத்தின் நடுவே-

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை -என்றும்
வடிக் கோல வாள் நெடும் கண் மா மலராள் -என்றும் சொல்லுகிறபடியே
சௌந்தர்யத்தாலே மிக்கு சௌகுமார்யத்தை இட்டு நிரூபிக்கும் படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் வலவட்டத்திலும்-
ஏவம் பூதைகளாய்
அவளுக்கு நிழல் போல்வனரான மற்றை ஸ்ரீ நாய்ச்சிமார் இடவட்டத்திலும் சேவித்து இருக்க

இவர்களுக்கு நடுவே
மூன்று மின் கொடிகளோடு கூடி தாமரைப் பூத்த தொரு காளமேகம்
வெள்ளி மலைக்கு இனியப் படிந்து இருக்குமா போலே
வீற்று இருந்து ஏழ் உலகம் தனிக் கோல் செல்ல எழுந்து அருளி இருக்கிற வாழ் புகழ் நாரணனான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கால விளம்பம் இன்றிக்கே கடுக நான் அனுபவிக்கும் பிரகாரம்
இவன் இத்தைப் பெற்றிடுவான் என்று ஸ ஸ்நேஹமாக உபகரித்து அருள வேணும் –

என் எதிராச நல்கு -என்று
இவ்விடத்தில் சம்போதிக்கவுமாம் –
அடியிலே ஆகவுமாம்-

————————————————————————

இதில் –
தேக விமோசகம் தொடங்கி-பலத்தின் எல்லையான
தேசிகரோடு ஒரு கோவையாய் இருக்கும் அளவாய் இருக்கிற
பேற்றை அபேஷித்து அருளுகிறார் –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா--24-

என் எதிராசா–அடியேனுக்கு ஸ்வாமியுமாய் யதிகளுக்கு நாதரான எம்பெருமானாரே
இந்த வுடல் –ஹேயமான இந்த ஸ்தூல ஸரீரத்தை
விட்டு -த்யஜித்து
இரவி மண்டலத்தூடு ஏகி–ஸூர்ய மண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய்
இவ்வண்டம் –இந்த ப்ரஹ்மாண்டத்தை
கழித்து -கடந்து
இடையில் -நடுவில் உள்ள
ஆவரணம் ஏழ் போய்–ஸப்த ஆவரணங்களையும் கடந்து
அந்தமில் –முடிவில்லாத
பாழ் கடந்து –மூலப் பிரக்ருதியைத் தாண்டி
அழகார் -அத்யந்த ரமணீயமாய் இருக்கிற
விரசை தனில் குளித்து -விரஜா நதியில் ஸ்நானம் பண்ணி
அங்கு-அவ்விடத்தில்
அமானவனால் -அமானவனுடைய கர ஸ்பர்சத்தாலே
ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய தேஹத்தையும் பெற்று
அமரர் வந்து எதிர் கொண்டு –நித்ய ஸூரிகள் எதிர் கொண்டு எழுந்து அருளி
அலங்கரித்து -பர ப்ரஹ்மத்தை அலங்கரிக்குமா போலே அலங்கரித்து
வாழ்த்தி -ஸ்தோத்ரம் பண்ணி
வழி நடத்த–மார்க்கத்தில் நடப்பிக்க
வைகுந்தம் புக்கு -வைகுண்ட மா நகரத்தைப் பிரவேசித்து
மணி மண்டபத்துச் சென்று–திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி அடியார்களுமாகிற நித்ய ஸூரிகளுடைய
நம் திருமால் அடியார்கள் -நமக்கு ஸ்வாமிகளும் ஸ்ரீ யபதிக்கு
குழாங்களுடன் -ப்ருந்தங்களோடு
கூடும் நாள் –கூடுகிற அந்த தினமானது
எனக்குக் குறுகும் வகை -அடியேனுக்கு ஸமீபமாகிற பிரகாரத்தை
நல்கு -ப்ரஸாதித்து அருள வேணும்

அடியேனுக்கு ஸ்வாமியாய் -எதிகளுக்கு நாதரானவரே –
இம் மாய வாக்கை -என்னுமா போலே அத்யந்தம் ஹேய சமுதமாய் இருக்கிற இந்த ஸ்தூல சரீரத்தை
உபேஷையோடே மங்க ஒட்டு -என்று த்யஜித்து –

(என்னை  முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-)

(மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே10-7-10-)

மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன் நடுவுள் அன்ன தோர் இல்லியினூடு போய்(பெரிய திருமடல்) -என்கிறபடியே
அவன் மண்டலத்தைக் கீண்டு அவ்வருகே போய்
மற்றும் ஆதிவாஹிக புருஷர்களாய் யுண்டானவர்கள் லோகங்கள் எல்லாம் கடந்து

இமையோர் வாழ் தனி முட்டை கோட்டையாய்
கோடி யோஜனமான வளப்பத்தை யுதைத்தான அண்ட கபாலத்தை பேதித்து-அத்தை ஒரு படி கழித்து
மத்யே யுண்டான தசோத்தரமான ஆவரண சப்தத்தையும் கடந்து
அவ் வருகே போய்

காட்டி நீ கரந்துஉமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் பொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?

முடிவில் பெரும் பாழான மூல பிரக்ருதியையும் கடந்து அத்யந்த ரமணீயமாய் இருப்பதொரு விரஜை என்று
பிரசித்தமான அந் நதியிலே ஸ்நானம் பண்ணி-அவ் விடத்தில் அவமானவன் கர ஸ்பர்சத்தாலே
ஒளிக் கொண்ட சோதியுமாய்-என்கிறபடியே
பஞ்ச உபநிஷண் மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹத்தை பெற்று
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள -என்கிறபடியே ஸ்ரீ நித்ய ஸூரிகள் பிரத்யுக்தராய்
ப்ரஹ்ம அலங்காராதி களாலே அலங்கரித்து ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு வழி நடத்திப் போய்

(களிப்பும் கவர்வுமற்றுப் பிறப்புப் பிணி மூப்பிறப்பற்று,
ஒளிக் கொண்ட சோதியுமா யுடன் கூடுவதென்று கொலோ,
துளிக்கின்ற வானிந்நிலம் சுடராழி சங்கேந்தி,
அளிக்கின்ற மாயப் பிரானடியார்கள் குழாங்களையே.)

ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திவ்ய நகரத்தை பிரவேசித்து பெரும் தெருவாலே உள்ளே போய்
ஆனந்த மயமான திரு மா மணி மண்டபத்தைக் கிட்டி சென்று
அடியார்கள் குழாங்கள் உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
மத் தேவதை பரிஜனைஸ் தவ சங்கிஷீய-என்கிறபடியே நமக்கு ஸ்வாமிகளாய் ஸ்ரீயபதியுடைய திருவடிகளிலே
ந்யஸ்த பரராய் அதுவே நிரூபகமாய் இருக்கிற ஸூரி சங்கங்கள் உடன் கூடுகிற அந்த திவசமானது
குறுக்கும் வகை யுண்டு கொலோ (9-8)-என்கிறபடியே அத்தை அபேஷிக்கிற எனக்கு
அது சமீபமாம் பிரகாரம் உபகரித்து அருள வேணும்

இவ் விடத்தில் நல்கல் -கொடுத்தல் –

(ப்ரஹ்மம் ஜகத் காரணமே -சமன்வய அத்யாயம்
ப்ரஹ்மமே ஜகத் காரணம் -அவிரோத அத்யாயம்
சாதன அத்யாயம்
பல அத்யாயம் -சூழ் புனல் -அர்ச்சிராதி மார்க்கம் -நச புனர் ஆவர்த்தி-ஸ்வரூப ஆவிர்பாவம்
அப்ராக்ருத திருமேனி-ஸாம்யாபத்தி-அநுபவ ஜெனித ப்ரீதி காரித வழு விலா நித்ய கைங்கர்யம்)

———————————————————-

நீரோ உம்முடைய அபராதம் பாராமல் கனத்த அப் பேற்றை அபேஷியா நின்றீர் –
அதுக்கு நாம் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக
அடியேனை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் வர அடியேனுடைய அபராதங்களையும் பொறுத்து
உபேஷியாதே மோஷத்தையும் கொடுப்பாராக எண்ணி இருக்கிற தேவரீர் கால விளம்பம் பண்ணாமல்
அத்தைச் செய்து அருள வேணும் என்கிறார்-

என்று நிர்ஹேதுகமாக வென்னை யபிமாநித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்று அளவும் அநவரதம் பிழையே
அடுத்து அடுத்துச் செய்து அனுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திரு நாடும் எனக்கு அருள வெண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் எதிராசா –25–

எதிராசா–யதிகளுக்கு நாதரான எம்பெருமானாரே
என்று -எந்த தினத்தில்
நிர்ஹேதுகமாக –காரணமின்றி
வென்னை யபிமாநித்து-அடியேனை இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளி
யானும் அது அறிந்து –அடியேனும் அந்த அபிமான விசேஷத்தை அறிந்து
உனக்கேயாய் இருக்கும் –தேவரீருக்கே அநந்யார்ஹ சேஷமாய் இருக்கத் தக்க
வகை செய்தாய்-பிரகாரத்தை செய்து அருளினீரோ
அன்று முதல் இன்று அளவும் -அந்தத் தினம் தொடங்கி இந்நாள் வரையிலும்
பூர்வ வாஸனை விடாமல்
அநவரதம் பிழையே-நிரந்தரம் அபராதமே
அடுத்து அடுத்துச் செய்து -இடைவிடாமல் செய்து விட்டு
அனுதவிப்பது -இப்படிச் செய்தோமே என்று அநு தவிப்பது
இனிச் செய்யேன் என்று -இனி மேல் செய்ய மாட்டேன்
உன்னை வந்து இரப்பதாம் -தேவரீரை அர்த்திப்பதாகிய
என் கொடுமை கண்டும்-அடியேனுடைய க்ரூர க்ருத்யங்களைக் கடாக்ஷித்தும்
இகழாதே –உபேஷியாமல்
இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்-திவா ராத்ரமும் தேவரீர் திருவடிகளிலே கைங்கர்யம் கொண்டு அருளினீர்
இம் மாத்ரமும் அல்லாமல்
இன்று திருநாடும் -இன்றைய தினம் பரம பதத்தையும்
எனக்கு அருள வெண்ணுகின்றாய்-அடியேனுக்கு கிருபை செய்ய திரு உள்ளம் பற்றி அருளுகிறீர்
இப்படி அபார கருணா ஸம்ருத்தியை யுடையவராகையாலே
இனிக் கடுகச் செய்து அருள வேண்டும் -இனி ஸீக்ரமாக அதை கிருபை செய்து அருள வேணும்

எதிகளுக்கு நாதரான தேவரீர் இவ் வாத்மாவை என்று நிர்ஹேதுகமாக இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருளி –
அடியேனும் அந்த அபிமான விசேஷத்தை அறிந்து தேவரீருக்கே அனன்யார்ஹமாம் படி செய்து அருளிற்று
அப்படியே அபிமானித்து அருளின அன்று தொடங்கி தேவரீர் திருவடிகளை பிராபிக்க இருக்கிற இன்றளவும்
நிரந்தரம் அபராதமே இடைவிடாமல் செய்து
இப்படி அக்ருதயமானவற்றைச் செய்தோம் என்று அனுதவிப்பது –

இனி இப்படிப் பட்ட அபராதங்களைச் செய்யேன் என்று தேவரீரை அர்த்திப்பதாகிய
என்னுடைய க்ரூர கர்மம் கண்டு உபேஷியாமல்
இங்கும் திவா ராத்திரி விபாகம் அற தேவரீர் திருவடிகளில் கைங்கர்யம் கொண்டு அருளினீர்
அவ்வளவும் அன்றிக்கே
இன்று சத்துக்களுக்கு கந்தவ்ய பூமியான ஸ்ரீ திரு நாட்டையும் யோக்யதை இல்லாத எனக்கு
பிரசாதிப்பதாக இச்சித்து அருளா நிற்கிறீர்
இப்படி செய்ய வேண்டியற்ற பின்பு காலக் கழிவு செய்யாமல் கடுக செய்து அருள வேணும்-

(புண்ணிய நோன்பு புரிந்துமிலேன் அடி போற்றி செய்யும்
நுண்ணரும் கேள்வி நுவன்றுமிலேன் செம்மை நூற் புலவர்க்
கெண்ணரும் கீர்த்தி இராமானுச ! இன்று நீ புகுந்ததென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற விக் காரணம் கட்டுரையே – – 92–)

(தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- )

————————————————–

இவர் தம்மை அங்கீ கரித்த அன்று தொடங்கி இன்றளவும் உண்டான அபராத சஹத்வாதிகளை ஆவிஷ்கரித்த வாறே
நம்மை ஒழிய வேறு ஒருவர் இவர் குற்றங்களைப் பொறுத்து ரஷிக்க வல்லார் உண்டோ –
இனி இவருக்கு மேல் உண்டான காரியமும் நாமே செய்து அருளி தலைக் கட்ட வேணும்
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு நினைவாக

பாவஞ்ஞர் ஆகையாலே அவர் கருத்து அறிந்து இப்படி அகதிகளுக்கே கதியாக இருக்கிற தேவரை ஒழிய
என்னுடைய அபராதங்களைப் பொறுத்து ரஷிக்க எத்தனை குணவான்களான
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார்க்குத் தான் முடியுமோ –

(உண்ணின்று உயிர் களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலனாம் படி பல்லுயிர்க்கும்
விண்ணின் தலை நின்று வீடளிப்பன் எம்மிராமானுசன்
மண்ணின் தலத் துதித்துய் மறை நாலும் வளர்த்தனனே – – -95-)

இனி
பிராப்ய ருசியையும் யுண்டாக்கி-பிராப்ய தேசத்தில் சேரும்படி பண்ணி அருள வேணும் என்கிறார்
அன்றிக்கே
அநவரதம் செய்கிற அபராதங்களை க்ஷமித்து ரஷிக்கும் போது
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலானார் ஆக வேண்டாவோ என்ன
அது நமக்கு அன்றி யாவர்க்கு முடியும் என்கிறார் ஆகவுமாம் –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான ஸூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் தங்களுக்காமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் யுண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை யொருப்படுத்து விரைந்தே—-26-

எதிராசா –எம்பெருமானாரே
அடியேனுடைய அபராதங்களை க்ஷமிக்க
தென்னரங்கர் தமக்காமோ –பெரிய பெருமாளுக்குத் தான் ஸக்யமோ
தேவியர் கட்காமோ–பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களுக்குத் தான் ஸக்யமோ
சேனையர் கோன் முதலான –சேனாதிபதியாழ்வான் தொடக்கமான
ஸூரியர்கட்காமோ-நித்ய ஸூரிகளுக்குத் தான் ஸக்யமோ
மன்னிய –நித்யமாய் இருக்கிற
சீர் –ஆஸ்ரித விஷயத்தில் வாத்சல்யாதி திருக்கல்யாண குணங்களை யுடையவரான
மாறன் -இன்ப மாரியான-நம்மாழ்வார்
அருள் மாரி –சேதனர் விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற திருமங்கை யாழ்வார்
தமக்காமோ–இவர்களுக்குத் தான் ஸக்யமோ
மற்றுமுள்ள தேசிகர்கள் -மற்றும் உண்டான நாத யாமுனாதிகளான ஆச்சார்யர்கள்
தங்களுக்காமோ-அவர்களுக்குத் தான் ஸக்யமோ
என்னுடைய பிழை பொறுக்க -அடியேனுடைய அபராதங்களை ஸஹிக்க
யாவருக்கு முடியும்–எவர்களுக்குத் தான் ஸக்யமாகும்
உனக்கன்றி –தேவரீருக்கு அன்றி
யான் ஒருவர்க்கும் ஆகேன்-அடியேன் மற்ற ஒருவருக்கு சேஷபூதன் ஆகேன்
உன்னருளால் –தேவரீருடைய கிருபையாலே
எனக்கு ருசி தன்னையும் யுண்டாக்கி-அடியேனுக்கு ப்ராப்ய ருசியையும் விளைத்து
ஒளி விசும்பில் –நிரவதிக தேஜோ ரூபமான பரமபதத்தில்
அடியேனை யொருப்படுத்து விரைந்தே-தாஸனை அதி ஸீக்ரமாக சேர்த்து அருள வேணும்
ஏ பாத பூர்ணம்

எதிகளுக்கு நாதரானவரே-ஸ்வதஸ் சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் பரிகணித்து முடியாத
அடியேனுடைய அபராதங்களை ஷமிக்க-
தோஷா யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்றும்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் -என்றும்
பேசும்படியான ஸ்ரீ பெரிய பெருமாளுக்குத் தான் சக்யமோ –

(மித்ர பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதாஞ்சனா |
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம் ||6-18-3

“எந்த வகையிலும், நட்பான தோற்றத்துடன் வரும் எவரையும், குறையிருந்தாலும் நான் கைவிடுவதில்லை. நல்ல மனிதர்களின் பார்வையில் அவர் ஏற்றுக்கொள்வது குறைபாடற்றது”)

(தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா ளாகிலும் சிதகு ரைக்குமேல்
என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர் போலும்
மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளா வாரே.)

அவருக்கும் பொறைக்கு உவாத்தாய் –
ந கச்சின் ந அபராத்யதி -(யுத்த -146-44-)-என்றும்
கிமேதந நிர் தோஷக இஹ ஜகதி -என்றும் பேசும்படியான ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடக்கமான
ஸ்ரீ நாய்ச்சிமார்களுக்குத் தான் சக்யமோ –

(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு,
ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம்,
“என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.)

இப்படியான இருவர்களுடையவும் சேர்த்தியில் அடிமையை ஆசைப் பட்டவர்களுக்கு அந்த கைங்கர்ய போகிபாகிகளாம்படி-
அஸ்மாத்பிஸ் துல்யோ பவதி -என்று கூட்டிக் கொள்ளும்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமான ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்குத் தான் சக்யமோ

இவர்கள் தான்-
ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதை-ஸ்ரீ விஹகேந்திர சம்ஹிதைகளிலே பிரபத்தி மார்க்க பிரதர்சகர் இறே-
நித்தியமாய் பொருந்தி இருப்பதான ஆஸ்ரித விஷய வாத்சல்யாதி குண உக்தராய்
அத்தை அனுஷ்டான சேஷமாம் படி
பயன் நன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளும் ஸ்ரீ நம் ஆழ்வார்
இவரோபாதி சேதன விஷயத்தில் கிருபையை வர்ஷிக்கிற ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் இவர்களுக்கு தான் சக்யமோ

மற்றும் ஆழ்வார்கள் கிருபைக்கு விஷயமாய் க்ருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர்களாய் இருக்கிற
ஸ்ரீ நாத ஸ்ரீ யாமுனாதிகள் ஆகிற அவர்கள் தொடக்கமாக இவ் வருகு உள்ள ஸ்ரீ ஆச்சார்யர்களுக்குத் தான் சக்யமோ

அபராத சஹாரான தேவர்க்கு ஒழிய
கீழ் உக்தரான எத்தனை அதிசய தயாவான்கள் ஆனாருக்குத் தான் இத்தைச் செய்து தலைக் கட்டப் போமோ

அது ஒருவருக்கும் அசக்யம் ஆகையாலே
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை -என்கிறபடியே
தயைக சிந்துவாய்-சர்வ அபராத சஹராய் இருக்கிற தேவரீர்க்கு ஒழிய
அபராதநாமாலயனான நான் காகத்தைப் போலே வேறு ஒரு கோஷ்டிக்கு ஆள் ஆகேன் –

உபாய தசையில் ரஷித்தவோபாதி–உபேய தசையிலும் தேவர் கிருபையாலே
பிராப்ய ருசியையும் விளைத்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
தெளி விசும்பு -என்றும்–சொல்லப் படுகிற பிராப்ய தேசத்தில் அடியேனை
அங்குற்றேன் அல்லேன் -என்னும்படி
ஆந்தராளிகன் ஆக விட்டு வைக்காமல் சீக்கிரமாக ஒருதலைப்பித்து அருள வேணும்
ஒரு கோடியிலே சேர்க்க வேணும் என்றபடி –

உனக்கு அன்றி என்ற இத்தை–கீழும் மேலும் கூட்டி நிர்வஹிப்பது –

ஒரு வேளையில் -ஷிபாமி – ந ஷமாமி -என்னும் நிரங்குச ஸ்வ தந்த்ரனுக்கும்
ஷமா லஷ்மீ பிருங்கீ சகல கரணோன்மாத நமது -என்றும்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -என்றும் பேசும்படி உன்மஸ்தகமான போகத்தாலே
மதித்து ஸ்தப்தைகளாய் இருக்கும் அவர்களுக்கும்
அச் சேர்த்தியிலே கைங்கர்ய நித்ய நிரதராய் அஸ்தான சிநேக ரஷா வ்யசநிகளாய்
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழுமவர்களாய் இருக்குமவர்களுக்கும்
அச் சேர்த்தியை அனுபவிக்க ஆசைப்பட்டு

சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து -(5-7-2)என்றும்
உன்னைக் காண்டும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து-(4-9-3) -என்றும்
பக்தி பாரவச்யத்தால் ஆழம் கால் பட்டு இருக்குமவர்களுக்கும்
மற்றும் க்ருதக்ருதயராய் ஆக்கை விடும் பொழுதையும்
மாக வைகுந்தம் காண்கையையும்
மநோ ரதிக்கிற முமுஷூக்களுக்கும்
சர்வ அபராத அனர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகை கூடாது இறே –

தம்மை அழிய மாறியும்-சம்சாரிகள் துர்க்கதி கண்டு அவர் பின் படரும் குணனாய்
அவர்கள் அவியதையைப் பாராமல் சர்வதா பரோபதேசம் பண்ணியும்
அத்தாலே
ஆளுமாளார் -என்கிறவனுடைய தனிமை தீரும்படி மங்களா சாசன பரரை யுண்டாக்கி
பர சம்ருத்தியே பேறாம்படி நடத்திக் கொண்டு போருவர் ஒருவர் ஆகையாலே
இவர்க்கே யாய்த்து இது கூடுவது –
அது திருத்தலாவதே -என்று கை விட்டத்தை இறே கைக் கொண்டு திருத்தி
ஸ்ரீ திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அருளிற்று –

ஆகை இறே இவரும் இப்படி அருளிச் செய்தது –

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே இராமானுசன் செய்யும் சேமங்கள் மற்று உள்ளார் தரமோ
என்று இறே ஸ்ரீ அமுதனாரும் அருளிச் செய்தது –

பரம்ந்தத் கரீயாம்சம் -இத்யாதி –

(பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறிலபெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –)

மற்றுளார் தரமோ –
கழுத்தில் ஓலை கட்டிக்-கொண்டு திரிந்தும் -சாரத்தியம் பண்ணியும் -பதினெட்டு அத்யாயம் உபதேசித்தும் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – என்றும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்யே தத்வ்ரதம் மம-என்றும்
அநேக பிரகாரமாக -படாதன பட்டும் –ஒருவனை ஆகிலும் சர்வேஸ்வரன் ரஷித்தான் அல்லன் –
நாராயண் மஹே திலோககுராவதந்தே கோமா-நுஷச் ரியமவாப சனாதனம் தாம் –
ராமானுஜே புவிமிதே சாகலோபி ஜந்துஸ் சம்சார திவ்ய பதயோர் நஹி வேத்தி பேதம் –-என்கிறபடியே
நெஞ்சே கண்டாயே எம்பெருமானார் நமக்கு பண்ணின உபகார பரம்பரை வாசா மகோசரம் ஆய்த்து –

———————————————————————–

இவர்
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -என்ற அநந்தரம் -அவரும்
வானே தருவான் எனக்காய் –என்னும்படி
மோஷ பிரதானத்திலே சத்வராய் இருக்கிற படியை சாஷாத் கரித்து
இனி த்யாஜ்யமான இவ் விபூதியில் உண்டானது அடங்கலும்-அனுபாதேயமாய்
பிராப்யமான அவ் விபூதியில் உண்டானது அடங்கலும் உபாதேயமாய் அற்ற பின்பு
அவற்றின் விஸ்மரண அனு ஸ்மரணங்களான க்ருத்ய அக்ருத்யங்களை
தமக்கு விதேயமான திரு உள்ளத்தைக் குறித்து விதித்து அருளுகிறார் –

இவ் வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே
இரவு பகல் எதிராசர் எமக்கு இனி மேல் அருளும்
அவ் வுலகை யலர் மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அனுபவத்தை
இவ் வுயிரும் அதுக்கு இட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னுமத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ் வினையால் வந்த வுடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே—27-

நெஞ்சே–மனசே
இவ் வுலகில் இனி ஒன்றும் -இந்த லோகத்தில் இனி ஒன்றையும்
எண்ணாதே-சிந்தியாதே
இரவு பகல் -இராப் பகலும்
எதிராசர் –எம்பெருமானார்
எமக்கு இனி மேல் அருளும்-நமக்கு இனிமேல் ப்ரஸாதிக்கும்
அவ் வுலகை -வானுலகான அந்த லோகத்தையும்
யலர் மகள் கோன் –புஷ்ப வாஸிநியான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான ஸர்வேஸ்வரன்
அங்கு இருக்கும் இருப்பை-அந்தப் பரம பதத்தில் திவ்ய ஸிம்ஹாஸனத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பையும்
அடியார்கள் குழாங்கள் தமை –நித்ய ஸூரிகளுடைய சமூகங்களையும்
அவர்கள் அனுபவத்தை-அவர்களுடைய ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு அனுபவிக்கும் அனுபவத்தையும்
இவ் வுயிரும் –இந்த ஆத்ம வஸ்துவும்
அதுக்கு -அந்த போகத்துக்கு
இட்டுப் பிறந்து –ப்ராப்தனாய் நின்று
இழந்து கிடந்தது-அத்தைப் போக்கடித்துக் கொண்டு கிடந்தது
என்னுமத்தை -என்று சொல்லுமத்தையும்
என்றும் –எக் காலமும்
அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்-அந்த அனுபவத்துக்கு பிரதிபந்தகமாய்க் கிடக்கும்
வெவ் வினையால் –க்ரூர கர்மங்களால்
வந்த வுடல் விடும் பொழுதை -உண்டான தேஹ விமோசனமாகும் காலத்தையும்
விட்டால்-அந்த தேஹத்தை விட்ட பிறகு
விளையும் -பலிக்கும்
இன்பம் தன்னை –நிரதிசய ஆனந்தத்தையும்
முற்றும் -இந்த ஸமஸ்த விஷயங்களையும்
விடாமல் இருந்து எண்ணே—இடைவிடாமல் இருந்து சிந்தித்துப் போரு

பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான மனசே –
அத தேக அவதாநே ச த்யக்த சர்வ இதர ஸ்ப்ருஹ-என்கிறபடியே இந்த கொடு வுலகில் ஹேயமாய் இருப்பதான
பிரகிருதி பிராக்ருதங்கள் எல்லாம் த்யாஜ்யம் என்று நேரே அறிந்த பின்பு
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான அவற்றில் ஏக தேசமும் அங்கீகார யோக்யமாக விசாரியாதே

ஸ்ரீ எம்பெருமானார்
நமக்கு பிராப்ய ருசியையும் உண்டாக்கி அருளி
இனி மேல் அருள் கொடையாக அருளும் வானுலகமான அந்த லோகத்தையும்
அந்த லோகம் எல்லாம் நிறம் பெறும் படி

எழில் மலர் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து -என்கிறபடியே
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
வல்லபனான வ்யாவ்ருத்தி தோற்ற அங்கே
திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பையும் –

அச் சேர்த்தியில் அடிமை செய்கிற அடியார்கள் குழாங்கள் -என்கிற பிராப்யமானவவர்கள் சமூஹம் தன்னையும்
அவர்கள் ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு அனுபவிக்கும் அனுபவத்தையும்
இவ் வாத்மாவும் அதுக்கு பிராப்யனாய் வைத்து அத்தை இழந்து கிடந்தது என்கிறவற்றையும்
அத்யாபி அந்த அனுபவத்துக்கு பிரதிபந்தகமாய் கிடக்கும்-பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்கிறபடியே
க்ரூர கர்மத்தால் யுண்டான தேக விமோசனமாம் காலத்தையும்
தேக விமோசன அநந்தரம் பலிக்கும் நிரதிசய ஆனந்தத்தையும்-இப்படி உக்தங்களாய்
ஸ்வரூப அனுரூபங்களாய் உள்ளவை எல்லாவற்றையும் -திவா ராத்திரி விபாகம் அற
இடைவிடாமல் ஒருப்பட்டு இருந்து சிந்தித்துப் போரு-

அன்றிக்கே
உக்தங்களான அவற்றில் ஒன்றும் விடாமல் ஒருப் பட்டு இருந்து சிந்தித்து – என்னவுமாம் –

இவ் வுலகினில் இனி ஒன்றும் எண்ணாதே -என்ற இதுக்கு
மருள் ஒழி நீ -என்று சொல்லுகிற
அந்திம தசா விரோதியான அர்ச்சாவதார பிராவண்யம் ஆகவுமாம்-

(திருவாறன் விளையே வேண்டும் என்றாரே முன்னம் -அந்த மருள் ஒழிக்க வேண்டுமே)

————————————————

செய்தது எல்லாம் செய்தும் இது நெடும் காலம் இல்லாத பிராப்ய ருசி இப்போது
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே உண்டாயிற்று என்று
அந்த லாபத்தைப் பேசி அனுபவிக்கிறார் –

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி யவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினை வொன்றும் இன்றிப் பொருந்தி யிங்கே யிருந்தேன்
எண்டிசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பை அன்றி இப்போது என் மனம் எண்ணாதே—-28-

பண்டு –பூர்வ காலத்தில்
பல வாரியரும் –ஆத்ம உஜ்ஜீவன தத் பரராய் இருக்கிற பூர்வாச்சார்யர்கள் அனைவரும்
ஏக கண்டராக
பாருலகோர் உய்யப்-இந்தப் பூ லோகத்திலுள்ள ஸமஸ்த சேதனர்களும் உஜ்ஜீவிக்க
பரிவுடனே -இவர்கள் இடத்தில் உண்டான ப்ரேமையினாலே
செய்தருளும் பல் கலைகள் தம்மை-அருளிச் செய்த பல பிரபந்தங்களை
கண்டது எல்லாம் -பார்த்தது எல்லாம்
எழுதி -லிகித்து
யவை -அவற்றை
கற்று இருந்தும் –ஆச்சார்ய முகத்தால் அப்யஸித்து இருந்தும்
பிறர்க்குக் காதலுடன் கற்பித்தும் -அந்நியருக்கு ப்ரேமையுடன் போதித்தும்
காலத்தைக் கழித்தேன்–காலத்தைப் போக்கினேன்
புண்டரிகை கேள்வன் –நளின வாஸி நியான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன்
உறை பொன்னுலகு தன்னில்–நித்ய வாஸம் பண்ணுகிற நித்ய விபூதியாக பரம பதத்துக்கு
போக நினை வொன்றும் இன்றிப் –போக வேணும் என்று இருக்கிற ஸ்மரண லேசமும் இல்லாமல்
பொருந்தி யிங்கே யிருந்தேன்-இவ் விபூதியிலே ஆசை யுள்ளவனாய் வஸித்தேன்
எண்டிசையும் -அஷ்ட திக்கில் யுண்டானவர்களும்
ஏத்தும் –தன் வைபவத்தைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான
எதிராசன் அருளாலே-எம்பெருமானாருடைய கிருபையாலே
எழில் விசும்பை அன்றி -விலக்ஷணமான பரம ஆகாசத்தை ஒழிய
இப்போது என் மனம் எண்ணாதே-இப்போது என் மனஸ்ஸானது ஸ்மரியாது –

நல்லடிக் காலமான பூர்வ காலத்திலே ஆத்ம உஜ்ஜீவன தத் பரராய் இருக்கிற ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் அனைவரும்
ஏக கண்டமாய் இந்த பூ லோகத்தில் உண்டான சமஸ்த சேதனரும் உஜ்ஜீவிக்க
இவர்கள் இடத்தில் ஸ ஸ்நேஹமாக செய்து அருளும் பல பிரபந்தங்கள் தன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -ஸ்ரீ நான் முகன் -63–
இத்யாதிப் படியே–ஆதார அதிசயத்தாலே

தேடி-கண்டவைகள் எல்லா வற்றையும் லிகித்து-அத்தை ஆச்சார்ய முகத்தாலே அப்யசித்து
தன் நிஷ்டனாய் இருந்தும்
இன் நிஷ்டை இல்லாத அந்யரும்-தன் நிஷ்டராய் உஜ்ஜீவிக்கும்படி அவர்களுக்கு ஆதாரத்தோடு அப்யசித்தும்
கால ஷேபம் பண்ணினேன்-

ஸ்ரீ தாமரையாள் கேள்வன் -என்னும்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைகுண்டத்திலே போக வேணும் என்கிற ஸ்மரண லேசமும் இன்றிக்கே
இவ் விபூதியிலே சக்தனாய் வசித்தேன் –

திசை அனைத்தும் ஏறும் குணன் ஆகையாலே அஷ்ட திக்குகளில் உண்டானவர்களும்
தன் வைபவத்தை சொல்லி ஸ்தோத்ரம் பண்ணும்படியான ஸ்ரீ எம்பெருமானார் உடைய கிருபையாலே
விலஷணமான பரம ஆகாசத்தையே ஒழிய இப்போது என்னுடைய மனசானது ஸ்மரியாது –

இது ஒரு கிருபா விசேஷம் இருந்தபடி என் –என்று கருத்து –
இவ் விடத்தில் ஏகாரம் தேற்றத்தில் –

(கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம் புதுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே.–46-)

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் -13-19–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 19, 2014

தாம் நிர்பந்தித்த படிகள் எல்லாம் கொண்டருளும்படி ஸூலபரான ஸ்ரீஎம்பெருமானாருடைய சௌந்தர்யாதிகளிலே தோற்றுத்
 தாம் மங்களா சாசனம் பண்ணி

அவ்வளவில் நில்லாதே
சம்பந்த சம்பந்திகள் அளவும் சென்று அத்தாலே பெற்ற பேற்றை
அந்ய பரோக்தியாலே அருளிச் செய்கிறார் –

(ப்ராசங்கிக திருவாய் மொழி -5-1- போல் இந்த ஸ்லோகமும் ப்ராசங்கிகம்)

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று என்று ஏத்திச் -சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்—13-

எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி -எதிராசருக்கு மங்களம் உண்டாகுக -எதிராசருக்கு மங்களம் உண்டாகுக-எதிராசருக்கு மங்களம் உண்டாகுக
என்று என்று -இப்படி பல காலும் சொல்லி
ஏத்தி -ஸ்துதித்து
சதிராக–ஸாமர்த்யமாக
வாழ்வார்கள் –வாழுமவர்களுடைய
தாளிணைக் கீழ் –திருவடிகளின் கீழே
வாழ்வார்கள் –வாழுமவர்கள்
ஆழ்வார்கள் தங்கள் அருள்-ஆழ்வார்கள் பதின்மருடைய அருளையும்
பெற்றிடுவர்–பத்தும் பத்துமாகப் பெற்றிடுவார்கள்

அவர் தாம் திருப் பல்லாண்டு முகேன
பஹூ பிரகாரமாக பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுவது எல்லாம்
தாம் இவ் விஷயத்திலே
எதிராசன் வாழி -என்று தொடங்கி
அத்தையே பல காலும் சொல்லி-ஸ்துதித்து

அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்னும்படி சரம பர்வத்தில் நிஷ்டராய்
அத்தாலே
சாமர்த்தியமாக வாழுமவர்களுடைய திருவடிகளின் கீழே
தாய் நிழலிலே ஒதுங்குமா போலே ஒதுங்கி
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னும்படி
அதுவே வாழ்வாக வாழுமவர்கள்

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களாய்-
அத்தாலே
அருள் கொண்டாடும் அடியவராய்-
அதிலும்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தராய்-
இருக்கிற ஆழ்வார்கள் பதின்மருடைய அருளையும் பத்தும் பத்தாக பெற்று விடுவார்கள்-
தசமாம் தயோன-(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -ஸ்ரீ பட்டர் பிரார்த்தித்த படி ) -என்னக் கடவது இறே

இத்தால்
இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி

முதல் பாட்டிலே
மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை
அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-

இதில்
அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

—————————————

தேசம் திகழும் -(12)-என்கிற பாட்டோடு இதுக்கு சங்கதி
நடுவில் பாட்டு -பிராசங்கிகம் –

உம்முடைய ஆச்சார்யர் நம் பக்கல் ஆஸ்ரயிப்பித்த அந்த ஆஸ்ரயணமே
உம்முடைய பேற்றுக்கு சாதனமாக சொல்லா நின்றீர்
அந்த ஆஸ்ரயண பலம் போருமோ –
ஏதேனும் பேற்றுக்கு உடலான அதிகார சம்பத்து உம் பக்கலிலே வேண்டாவோ என்று
மீளவும் ஸ்ரீ எம்பெருமானார்க்குத் திரு உள்ளக் கருத்தாக

அதுக்கு ஈடான அதிகாரம் யுண்டாகில் தேவரை அபேஷிக்க வேணுமோ –
அப்படிப் பட்ட யோக்யதை இல்லார்க்கு அன்றோ தேவரை அபேஷிக்க வேண்டுவது
ஆகையால் அதிகார ஸூந்யரான அகதிகளை தேவரீர் ரஷியா விடில்
வேறு புகல் உண்டோ என்கிறார் –

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் ––14-

அதிகாரம் உண்டேல் –ஞானம் அனுஷ்டானம் பூர்த்தி யாகிற அதிகாரம் உண்டானால்
அரங்கர் இரங்காரோ–பெரிய பெருமாள் இரங்கி அருளாரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ
எதிராசா–எம்பெருமானாரே
நீ இரங்க வேண்டுவது -தேவரீர் இரங்கி ரக்ஷித்து அருள வேண்டுவது
நீயும் அதிகாரிகளுக்கே இரங்கில் -கதி அற்றவர்களுக்கே கதியாய் இருக்கும் தேவரீரே அதிகார ஸம்பத்தை யுடையவர்களுக்கே கிருபை பண்ணி ரக்ஷிக்கில்
என் செய்வோம் யாம்-அநதிகரிகளாய் இருக்கிற அஸ்மா தாதிகள் என்ன யோக்யதையை உபபாதித்திக் கொண்டு உஜ்ஜீவிக்கப் போகிறோம் –
அநாதி காலத்தோ பாதி இழந்தே போம் அத்தனை அன்றோ

தண் அம் துழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் -(திரு விருத்தம் )-என்றத்தை
அர்த்தித்தவர்களுக்கு-
அருள் சூடி உய்ந்தவன் -(7-2-11 )-என்னும்படி
தாத்ருச அதிகாரம் உண்டானவர்களுக்கு அன்றோ
ஸ்ரீ பெரிய பெருமாள் இரங்கி அருளுவது

அப்படிப் பட்ட அதிகாரம் இல்லாத மாத்ருசர்க்கு அன்றோ எதிகளுக்கு நாதரானவரே
தேவரீர் இரங்கி ரஷித்து அருள வேண்டுவது

அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும்
அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள்
எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-

உபாயாந்தரங்கள் தவிர்ப்பதும் ப்ராப்யாந்தரங்கள் தவிர்ப்பதும் -நாம் பற்றும் பிரதிபத்தியும் உபாயம் அன்று என்று உணர்ந்து கொள்வதும் -நம் ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் என்னும் புத்தியைத் தவிர்ப்பதுவும் -நம்மால் செய்ய வேண்டியவை –பெருமாள் த்ரவ்யம் ரக்ஷிக்கக் கூட ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்யக் கூடாது என்றார் பட்டர்
அடிப்படையான ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் இல்லாத அன்றும் இவற்றை ஏற்படுத்து பேற்றை அளிப்பவர் ராமானுஜர்-இந்த அதிகாரங்களை எம் பெருமானாரே ஏற்படுத்து அருள வேண்டும் என்கிறார்-அன்று வைத்த கரணங்கள் உமக்கு என்று உணர்த்தி அருளுவார் அன்றோ –

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69-

சம்சார துக்க நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தமான தம்முடைய ஸ்ரீ சரணார விந்தத்தை தந்திலன் -சேர்த்து கொண்டது இல்லை –என்னுடைய அதி கர்ம பாஹூள்யத்தைப் பார்த்து -பிரதம சங்கல்ப-ரூபமாய் சம்சார ப்ரவர்த்தகமான தம்முடைய நிஹ்ரக சக்தியை பிரவர்த்திப்பித்தான் சம்சார சாகரத்தில் நிமக்நனாய் இருக்க –எந்தை இராமானுசன் –சஹி வித்யா தஸ்தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும் -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்-மறந்திலேன் -என்றும் அஸ்தி ப்ரக்மேதி சேத்வேத சந்தேமேனம் ததோவிது -என்கிறபடியே -அது தானெது என்ன –

நாராயண சரணவ் -என்றதை கொடுத்த பிதாவான எம்பெருமானார் -இன்று வந்து –இந்த தசையிலே ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து -காஞ்சி நகரிலே தேவப் பெருமாளுடைய அனுக்ரகம் பெற்று இருந்து -என்னை உத்தரிக்க வேணும் என்று நான் இருந்த தேசத்தை தேடி வந்து -பரகத ச்வீகாரத்தாலே அநேக க்ர்ஷிகளை பண்ணி என்னை பரிக்கிரகித்து – தானது தந்து -யச் ஸ்ரேயஸ் யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யச்தேகம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று

உபசன்னனாய் அர்த்தியாதே இருக்கச் செய்தே -தானே நிர்ஹேதுக மாக -ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் கொடுக்க அசக்யமான அந்த நாராயண சரண த்வத்வங்களை உபாய உபேயமாக கொடுத்து –என்னை எடுத்தனன் – அமுதனார் திரு உள்ளத்திலே ஓடுகிறது தம்மையே உத்தரித்தார் என்று காணும் —என்னையே -பிரபல பாபிஷ்டனான என்னையே -சர்வ சக்தி யுக்தனான சர்வேஸ்வரனாலும் எடுக்க அசக்யனான என்னையே உத்தரித்தார் -ஸ்ருதா ஸ்ருதமான அர்த்தத்தைக் கொண்டு சொன்னேனோ -இதுக்கு உதாஹரணம் அடியேனே – சம்சார சாகரத்தில் நின்றும் உத்தரித்தார் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யா சாஸ்திர பாணினா -என்ற அர்த்த த்தை பிரத்யஷமாக கண்டேன் -ஸ்வ அனுபவத்தாலே தெளிந்தேன் என்றது ஆய்த்து –

—————————————————–

(அடுத்த இரண்டு பாசுரங்களும் நன்மை ஒன்றும் இல்லை என்றும் தீமைகள் பூர்ணமாக உள்ளன என்றும்-தொண்டரடிப் பொடி ஆழ்வார் பத்து பாசுரங்களால் அருளிச் செய்தது போல் அருளிச் செய்கிறார்)

ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்னும்படி பரம தார்மிகராய் இருக்கிற அவரை
அடுத்து அடுத்து பழி இடா நின்றோம்
நாம் அவர் திருவடிகளை ஸ ஸ்நேஹமாக அனுசந்தித்தால்
அவர் தாமே எல்லாம் செய்து அருளுவார் ஆகையாலே
தத் விஷய ஸ்நேஹம் தான் யுண்டோ என்று ஆனவளவும் பார்த்து
அது தமக்கு அத்யாபி இல்லை என்று விஷண்ணர் ஆகிறார்-

மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா யுரைக்கும் இத்தால் என் -அன்பு அவர் பால்
இப்போது அளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது யுன்டாவது இனி-—-15-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்–எமக்கு ஸ்வாமியான எதிராஜருடைய திருவடிகளே ரக்ஷகம்
என்பதுவே –என்று சொல்லப்படுகிற இந்த வாசகத்தையே
நா யுரைக்கும் –என் நாவானது ப்ரேமம் இன்றிச் சொல்லா நிற்கும்
இத்தால் என் -இத்தால் என்ன பிரயோஜனம்
அன்பு -ப்ரேம புரஸ் ஸரமான றுக்தி
அவர் பால்–அவர் விஷயத்தில்
இப்போது அளவும் -இந்த க்ஷண பர்யந்தமும்
யான் ஒன்றும் காண்கின்றிலேன்-ப்ரேம லேஸமும் அற்று இருக்கிற அடியேன் ஒன்றும் காண் கிறிலேன்
எப்போது யுன்டாவது இனி -இப்போது இல்லாதது இனி எப்போது உண்டாகப் போகிறது

ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –

இப்படி நிஸ் ஸ்நேஹியாக திருநாமம் சொல்லுகிற இத்தால்
சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது -என்கிறபடியே
விஷய அனுகுணமாக என்னுடைய ஸ்நேஹமானது
அவர் விஷயத்திலே சரம தசா பன்னமான இக்காலத்து அளவும்
பிரேம லேசமும் அற்று இருக்கிற நான் காண்கின்றிலேன் –
இனி இப்போது இல்லாது எப்போது யுண்டாகப் போகிறது –

(இந்த ப்ரபந்தமே மா முனிகள் சரம தசையில் சரம ப்ரபந்தமாக அருளிச் செய்தார் என்பர் )

சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-

அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்

இத்தால் என் என்று –
நிஸ் ஸ்நேஹியாய்த் திரு நாமம் சொல்லுகிற இத்தால்
என்ன பிரயோஜனம் -என்னவுமாம்

அடியிலே
ஸ்ரீ இராமானுசாய நம -என்று
உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று
பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்
வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )

———————————————————-

நம் பக்கல் ஆனுகூல்யமான பிரேம லேசமும் இல்லாவிடில்
பிராதிகூல்ய நிவ்ருத்தி தான் யுண்டோ -என்ன

அதுவும் இல்லை
அப்படிப்பட்ட அஜஞனான அடியேனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு
அருளுகிற தேவரீர் திருவடிகளை என்று தான் பிராபிப்பேன் – என்கிறார் –

ஆகாதது ஈது என்று அறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வனாதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
என்று உன்னடி சேர்வன் யான் —16-

ஆகாதது –ஸத்துக்களால் பரி த்யஜிக்கப் படுவதான த்யாஜ்யம்
ஈது என்று -இன்னது என்று
அறிந்தும் –தெளிய அறிந்தும்
பிறர்க்கு உரைத்தும்-இப்படி அறிந்த அளவன்றிக்கே பர உபதேஸம் பண்ணியும்
ஆகாததே செய்வன் -அந்த நிஷித்த க்ருத்யர்த்தத்தையே நித்ய அநுஷ்டானமாக நடத்தா நிற்பன்-மா ஸாஹஸம் குரு –உபதேசம் செய்யும் பறவை போல்
ஆதலால் –இப்படிச் சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று ஆகையாலே
மோகாந்தன் என்று –மோஹத்தாலே அந்தகன் -மயக்கத்தால் குருடன்-என்று
நினைத்து –திரு உள்ளம் பற்றி–
என்னை –அடியேனை
இகழேல் –உபேஷிக்க வேண்டாம்
எதிராசா–எம்பெருமானாரே
என்று -எப்போது
உன்னடி சேர்வன் யான் –அடியேன் தேவரீருடைய திருவடிகளை அடையக் கடவேன்

(நன்மை இல்லை தீமைகள் நிறைந்து இருப்பதால் உன்னிடம் இருந்து விலகுகிறேன் -ஆழ்வார்
இங்கு எப்போது கூடுவேன் –பேறு நிச்சயம் -கால நிர்ணயமே வேண்டும்
இதுவே சரம பர்வ நிஷ்டருடைய ஏற்றம்)

ஸத்துக்களால் பரி த்யஜிக்கப் படுவதான த்யாஜ்யம் இன்னது என்று தெளிய அறிந்தும்-பிறர்க்கு உரைத்தும் ஆகாததே செய்வனாதலால்
இப்படி அறிந்த அளவு அன்றிக்கே பரோபதேசம் பண்ணியும்
அந்த நிஷித்த கர்மம் தன்னையே நித்ய அனுஷ்டானமாக நடத்தா நிற்பன் –
இப்படி சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று ஆகையாலே

மோகாந்தன் என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
மோஹாந்தகன் என்று திரு உள்ளம் பற்றி
உபேஷியாமல் ரஷித்து அருளுகிறவரே

(களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன் –கர்ம யோகாதிகள் இல்லை என்றாலும் இருந்தவன் போல் கதறுகின்றேன் -இதுவே கர்ம யோகாதிகள் இல்லாதவற்றுக்கு உதாரணம்
இருப்பவருக்கு பரிசு -அடியேனுக்கு பிச்சை இரக்கத்தால் -அங்கு யோக்யதையைப் பார்த்தும் இங்கு அயோக்யதையைப் பார்த்தும் அளிக்கிறான்)

இனி இஸ் சாதன அனுஷ்டானம் பண்ணின நான்
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -என்கிறபடியே
என்று தான் தேவர் திருவடிகளை அடையக் கடவேன்
இனி இழந்தே போம் அத்தனை அன்றோ

(நிகரின்றி நின்ற என் நீசதைக்கு –பயன் இருவருக்கும் ஆன பின்பே)

அன்றிக்கே
இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற
அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர்
ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-

——————————————–

கீழ்
நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் -என்று அபேஷித்த இவருக்கு
அப்படியே–மரணமானால் -என்று சரீர வியோக சமயத்திலே
பரம் தாமம் என்கிற திவம் தருகிறோம் -என்று
ஸ்ரீ எம்பெருமனார்க்கு கருத்தாக எண்ணி இப்படித் தருகிறோம் என்கிற தேவரீர்
கடுகச் செய்து அருளாமல் தாழ்க்கைக்கு ஹேது எது என்கிறார் –

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஓன்று
இல்லா எனக்கும் எதிராசா -நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவன் என்று நீ
தண் என்று இருக்கிறது என் தான் –-17-

பொல்லாங்கு –துஷ் க்ருத்யங்கள்
அனைத்தும் –எல்லாவற்றையும்
பொதிந்து கொண்டு –தகட்டில் பதித்தால் போலே பதித்துக் கொண்டு
நன்மையில் –ஸத் க்ருத்யங்களில்
ஓன்று இல்லா எனக்கும் –லவ லேசமும் இல்லாத அடியேனுக்கும்
எதிராசா -எம்பெருமானாரே
நல்லார்கள்–ஸத் புருஷாள்
நண்ணும் –அடையத் தக்க
திரு நாட்டை –பரம பதத்தை
நான் தருவன் என்று நீ–நம்மோடு உண்டான ஸம்பந்தம் அடியாக நாமே தருகின்றோம் என்று அருளிச் செய்த தேவரீர்
தண் என்று இருக்கிறது என் தான் -விளம்பம் செய்து கொண்டு இருக்கிறது என்ன காரணம்
அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கிற அடியேனுக்குப் பரம பதத்தை ஸீக்ரத்தில் பிராபித்து அருள வேண்டும் என்று கருத்து

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றும்
அக்ருத ஸூக்ருதக–( வரதராஜ ஸ்தவம்-83- ) இத்யாதிப் படியே அநாத்ம குண பரி பூர்ணனாய்
ஆத்ம குண லேச கந்த ரஹிதனாய்
அத்யந்த நிக்ருஷ்டனாய் இருக்கும் எனக்கும்

பிராப்யம் அர்ச்சி பதா சத்பிஸ் தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
சத்துக்களால் பிராபிக்குமதாய் இருக்கும் திருநாட்டை
நம்மோடு யுண்டான சம்பந்தம் அடியாக
நாமே தருகிறோம் என்று அருளிச் செய்த தேவரீர்

இப்போது தாழ்த்து இருக்கைக்கு ஹேது தான் என்ன –
வேறு சிலர் ரஷகர் யுண்டோ-
தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –
எத்தாலே தான் தாழ்க்கிறது-

அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு
சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-

(களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் என் நான் செய்கேன்-இதில் மூன்றும் உண்டே -அஞ்ஞானம் ஞான ஆதிக்யம் பக்தி பாரவஸ்யம்)

அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-

அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –

—————————————————————-

இவருடைய அபேஷிதத்தை அவரும் செய்வாராக-அனுமதி பண்ணி இருக்க
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது -என்கிறபடியே
க்ராம ப்ராப்தி பற்றாமல் ஊரெல்லாம் துஞ்சியில் அவஸ்தையை பிராப்தராய்(5-4)
என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் -குன்றாமல்
இப்படியே இந்த வுயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு –18-

எந்தாய் –அடியேனுக்குப் பிதாவாகிய
எதிராசா –யதிகளுக்கு நாதரானவரே
குன்றாமல்-குறையாமல்
இப்படியே –இந்தப் பிராகாரமே
இந்த வுயிர்க்கு –இந்த ஆத்ம வஸ்துவுக்கு
என்றும் இருளே விளைக்கும்-எக் காலமும் அஞ்ஞான அந்தகாரத்தையே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–இந்த ஸம்ஸாரமாகிற பெரிய
நீள் இரவு -காள ராத்ரி
என்று விடிவது எனக்கு –அஞ்ஞான அந்தகாரத்தில் அகப்பட்டுக் கொண்டு வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிற அடியேனுக்கு
ராமானுஜ திவாகராகிய தேவரீருடைய தர்சன யோக்யமான ஸூ ப்ரபாதமாக எப்போது ஆகும்
ஒன்றும் அறிகின்றிலேன் –ஏதத் விஷயமான ப்ரதிகிரியை ஒன்றுமே அறிகின்றிலேன்
உரையாய் -ஸர்வஞ்ஞரான தேவரீர் இதற்கு ஒரு நல் விடிவு
கண்டு அருளிச் செய்ய வேண்டும்

(பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -கைங்கர்யமே யாத்ரை யாக பகல் -இராம திவாகரன்-அச்யுத பாநு-வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரன் -ராமானுஜ திவாகரர்)

(கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59 –)

எனக்கு ஜனகராய்-எதிகளுக்கு நாதரானவரே
தன்னுடைய ஆகாரத்தில் சற்றும் குறைதல் இன்றிக்கே
ஏவம் வித ரூபேண இந்த ஆத்மாவுக்கு
சர்வ காலத்திலும் ஞானோதய லேசமும் இன்றிக்கே
அஜ்ஞ்ஞான அந்தகாரத்தையே விளைப்பதான
பவ துர்தினம் -என்னும்படி-சம்சாரம் ஆகிற பெரிய நீள் இரவானது
அவிவிவேகக அநந்த திக்முகே (ஸ்தோத்ர ரத்னம் )-இத்யாதிப் படியே
பதச் கலிதனாய்-வழி திகைத்து-அலமருகின்ற எனக்கு
எந்த காலம் ஸ்வ தர்சன யோக்யமான ஸூ ப்ரபாதம் யுண்டாகுவது

அஜ்ஞ்ஞான திமிராந்தனான நான் –
ஏதத் விஷயமான பிரதிகிரியை ஒன்றும் அறிகிறிலேன்-

நிகில குமதி மாயா ஸர்வரீ பால ஸூர்ய–(யதிராஜ சப்ததி )என்னும்படி சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஸூ ப்ரபாதாத்ய ரஜநீ -என்னும்படி-
இதுக்கு ஒரு விடிவு கண்டு அருளிச் செய்ய வேணும் –

குன்றுதல் -குறைதல்
பவம் -சம்சாரம் –

அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஶ்லோகம் 49 –

ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர

அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்

——————————————————————-

கீழ்
சம்சாரம் ஆகிற காள ராத்ரிக்கு அவதி கண்டு அருளிச் செய்ய வேணும் -என்றார் –
இதில் தத் கார்யமான தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்
தேவர்க்கு அவத்யாஹமம் அன்றோ என்கிறார் –

(வீடு அகங்கார மமகார த்யாஜ்யம்-சொன்னால் விரோதம் -அஸேவ ஸேவ்யை-தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்)

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்கு தீங்கு அன்றோ -நல்லார்கள்
தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ
எந்தை எதிராசா இசை —19-

அல்லும் பகலும் –இரவும் பகலும்
யான் –அடியேன்
ஆக்கை வழி உழன்று–சரீர மார்க்கத்தில் ஸஞ்சரித்து தேஹ கிங்கரனாய்
செல்லுமது –ப்ரவர்த்திப்பது
உன் தேசுக்கு –தேவரீருடைய ப்ரபாவாதிக்யத்துக்கு
தீங்கு அன்றோ -ஹானி அன்றோ
அது எப்படி என்னில்
நல்லார்கள்–ப்ரஹ்ம வித் அக்ரேஸரராய் இருக்கிற ஸத் புருஷர்கள்
தம் தனயர் -தம் புதல்வர்
நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ–அத்யந்த நிஹீனரான நீசருக்கு நிஹீன விருத்திகள் செய்யப் பொறுப்பரோ
எந்தை எதிராசா –அடியேனுக்குத் தந்தையாய் -யதிகளுக்கு நாதரானவரே
இசை -இத்தைத் தேவரீர் தாமே அருளிச் செய்ய வேண்டும்

உன் நாமம் எல்லாம் என் தன நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு -என்கிறபடியே
தேவரீர் உடைய திருநாம சங்கீர்த்த நாதி அனுபவ கைங்கர்யங்களுக்கு யோக்யமான காலம் எல்லாம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே
தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ

அது எப்படி எனில்
ப்ரஹ்ம வித அக்ரேசராய் இருக்கிற சத்துக்கள் தங்கள் புத்ராதிகளை
அத்யந்த நிஹீநரான நீசருக்கு நிஹீன வ்ருத்திகள் செய்ய ஷமிப்பரோ –

இசை –
எனக்கு ஜனகராய் எதிகளுக்கு நாதரானவரே
இத்தை தேவரீர் தாமே சம்மதித்து அருளீர் –

ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே
அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –

தேசு -பெரும் மதிப்பு

(சொல்லின் தொகை கொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம; இராமானுஜ! இது என் விண்ணப்பமே!)

(முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-)

(உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்கவென்று இனக்குறவர் புதியது உண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்.-5-3-3-)

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் 5-12–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 19, 2014

கீழ்
உணர்ந்து பார் -என்கிற சம்பந்தம் தான் ஏது
நீர் அவர்ஜநீயர் ஆகைக்கு ஹேது ஏது என்று அவருக்குக் கருத்தாக
அத்தை நிதர்சன முகத்தாலே வெளியிடா நின்று கொண்டு
தேவர்க்கு அவர்ஜநீயன் – என்கிறார்-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு எதிராசா -உன் புதல்வன்
அன்றோ யான் உரையாய் யாதலால் உன் போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் —-5-

தன் புதல்வன் -தன்னுடைய புத்ரன்
கூடாமல் -கூடாதபோது
தான் புசிக்கும் -தாம் அனுபவிக்கும்
போகத்தால்-ஐஸ்வர்யாதி போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு -தந்தைக்கு ஆனந்தம் உண்டாகுமோ-உறுதல் -கிட்டுதல்-
ஆதலால்
எதிராசா -எம்பெருமானாரே
உன் புதல்வன் யான் -தந்தையாகிய தேவரீருடைய புத்ரன் அடியேன்
அன்றோ -அல்லவோ
உரையாய் -பகர்ந்து அருளீர்
யாதலால் உன் போகம்-ஆகையாலே தேவரீருடைய போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் -அடியேனை ஒழிந்த திவஸம் நல்லதாமோ ஸ -ரஸமாய் இருக்குமோ

அப்படி இராததாகையால் அடியேனையும் அருளிப் பாடிட்டு
அழைத்துக் கொண்டு அருள வேணும் -என்கிறார்

தன் பிரிய புத்ரனானவன் சங்கதன் ஆகாமல் தேசாந்தரஸ்தனாய் இருக்க
அவனை ஒழிய தானே ஏகனாய் புஜிக்கும் ஐஸ்வர்யாதி போகத்தாலே
அந்த பிதாவானவன் அப்படி புஜிக்கும் அந்த போகத்தாலே ஸூகத்தை அடையுமோ

எதிகளுக்கு நாதரானவரே
அப்படியே அடியேனும் –
கரீயான் ப்ரஹ்மதா பிதா -என்னும்படியான
தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –
இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்

(சரீர புத்ரன் – சக்ரவர்த்தி பரதாழ்வானை புத்ரன் அல்ல என்று கைவிட நேர்ந்ததே -இங்கு அப்படி அல்லவே)

இப்படி சம்பந்தம் அவர்ஜநீயம் ஆகையாலே
கட்டெழில் வானவர் போகம் -என்கிற தேவரீர் உடைய போகம்
அடியேனை ஒழிந்த திவசம் ச ரசமாய் இருந்ததோ –

அப்படி இராது ஆகையாலே
அடியேனையும் அருளப் பாடிட்டு அழைத்துக் கொண்டு அருள வேணும் –
யத் விநா பாரதம் த்வாஞ்ச சௌமித்ரே புஜ்யதே ஸூகம் -என்னக் கடவது இறே

———————————————–

உன் போகம் நன்றோ எனை ஒழிந்த நாள் என்று நம் பேரிலே பழி இடா நின்றீர் –
கால க்ரமத்திலே அதுக்கீடான பாகம் விளைந்தவாறே
அப்படியே செய்கிறோம் என்று திரு உள்ளக் கருத்தாக-அது அனுகூலர்க்கு அன்றோ அப்படியாம்(பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதோர் காதல் -ஆழ்வாருக்கு காதல் மிக்கு வளர்ந்தது அன்றோ)
பிரதிகூலனான எனக்கு அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை
தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

(ஆயர் அஞ்சா முன் -அப்போது உள்ள கல்லை எடுத்துக் கல் மாரி காத்து அருளினானே)

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் –ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா விவ் வுடலைத்
தீர்க்கவே யான வழி செய்-–6-

வேம்பு முற்றக் –வேப்ப மரம் முற்ற முற்ற
கைப்பு மிகுவது போல் -கைப்பே விஞ்சி வருமா போலே
வெவ் வினையேன் -க்ரூர கர்மாவாய் இருக்கிற அடியேனுடைய
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் — சரீரம் முற்றி விருத்தி அடையா நிற்கையில் துஷ் கர்மங்களே அதிகமாகும்
ஆகையாலே
ஆம் பரிசால்-ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்திலே
ஏற்கவே சிந்தித்து -முற் கோலித்து சிந்தித்து
எதிராசா -யதிகளுக்கு நாதரானவரே
விவ் வுடலைத்-இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை
தீர்க்கவே யான வழி செய்-முடிக்கைக்கான உபாயம் செய்து அருள வேண்டும் –
எதிராச என்று அடியிலே சம்போதிக்கவுமாம்

ச ரசமான கரும்பாகில் இறே-நாள் தோறும் முற்ற முற்ற ரசம் ஏறி வருவது
வி ரசமான வேம்பு முற்ற முற்ற நாள் தோறும்
அந்த விரசமான கைப்பே விஞ்சி வருமா போலே
என்னுடைய தேஹமானது கால க்ரமத்திலே பக்வம் ஆகும் காட்டில்
க்ரூர கர்மாவாய் இருக்கிற என்னுடைய ஹேய குணமே அதிகமாம்

(அஹங்கார மமகாரங்கள் வளர்ந்து தேகத்தையே பார்க்கும் உணர்வு விஞ்சும் -)

ஆகையால்
இது ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்தில் முற்கோலிச் சிந்தித்து –
எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் வழி -உபாயம்
எதிராசா -என்று அடியிலே சம்போதிக்கவுமாம் –

——————————————————-

உம்முடைய தோஷத்தை ஏற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு பிராப்தி ஏது –
நீர் தான் ஸ்வ கார்யத்தில் அஜ்ஞராய் அசக்தராய் இருந்தீரோ என்ன

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்
ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

(நற் செல்வன் தங்காய் -இளையபெருமாள் கைங்கர்யம் செய்யாமல் ஸாமான்ய தர்மம் -நித்ய அனுஷ்டானம் ஊர்மிளையுடன் செய்யாமல் போலே)

(ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38- உமக்கு இரக்கம் இல்லாமல் எதனால் -கேள்வி அல்ல இங்கு -மோக்ஷ ஏக ஹேது அன்றோ இவர் -கீழ் புறத்திட்டத்துக்கு ஸூஷ்ம அர்த்தம் இருக்க வேண்டும் –அத்தை அருளிச் செய்ய வேண்டும்)

அன்னை குடி நீர் அருந்தி முலை யுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ–என்னே
எனக்கா எதிராசா வெல்லா நீ செய்தால்
உனக்கு அது தாழ்வோ வுரை—7-

அன்னை -பிரஜையின் இடத்திலே அத்யந்த வாத்சல்ய யுக்தை யான மாதாவானவள்
குடி நீர் அருந்தி -பிரஜைக்கு ஏதேனும் ஒரு பிணி யுண்டானால் இது நம் குறையாலே வந்தது என்று தான் தாக தீர்த்த முதலான வற்றை ஒவ்ஷதத்துக்கு விரோதியாமல் பருகி-அருந்துதல் -உண்டல் –
முலை யுண் குழவி தன்னுடைய -ஸ்வ போஷ்யமாய் இருக்கிற ஸ்தனந்த்ய பிரஜையினுடைய
நோயைத் தவிராளோ-வியாதியைப் போக்காளோ
என்னே-இது என்ன ஆச்சர்யம்
எனக்கா -அடியேனுக்காக
மாத்ருவத் வத்சலரான தேவரீருக்கு நித்ய ஸ்தனந்த்யனாய் இருக்கிற அடியேனுக்காக
எதிராசா -எதிபதியே
வெல்லா நீ செய்தால்-அடியேனால் அநுஷ்டேய அம்ஸமாய் இருப்பனவைகள் எல்லாவற்றையும் நீரே  அனுஷ்ட்டித்து ரக்ஷித்தால்
உனக்கு அது தாழ்வோ -தேவரீருக்கு அது அவத்யமோ -தேஜஸ்கரமாய் இருப்பது ஓன்று அன்றோ
வுரை—பகர்
இவ் வர்த்தத்தை அஞ்ஞானன என்னைக் கொண்டு பேசுவிக்க வேணுமோ
ஸர்வஞ்ஞரான தேவரீர் தாமே அருளிச் செய்தலாகாதோ

பிரஜையினிடத்தில் அத்யந்த வாத்சல்ய யுக்தையான மாதாவானவள்
ஔஷத சேவைக்கும் ஷமம் அன்றிக்கே
அத்யந்தம் சைசவ யுக்தமாய்-ஸ்வ போஷ்யமாய்
இருக்கிற ஸ்தநந்த்ய பிரஜைக்கும் ஏதேனும் ஒரு அனுக்கம் உண்டானால்
இது நம் குறையாலே வந்தது என்று தான் குடி நீர் முதலான
ஔஷத சேவை பண்ணி அதனுடைய அனுக்கத்தைத் தவிர்க்குமே –

(பந்தனை தீரப் பல்லாண்டு -பிறந்த குழந்தை அன்றோ அப்போதே அவன் வீயத்தோன்றிய சிங்கப்பிரான் -குழந்தைக்கு ஏற்படும் களைப்பு சிரமம் அனுக்கம் -)

அப்படியே மாத்ரு வத்சலரான தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யனாய் இருக்கும் அடியேனுக்காக
எதிகளுக்கு நாதரானவரே
அடியேனால் அனுஷ்டேய அம்ஸமாய் இருப்பனவைகள்
எல்லாத்தையும் அனுஷ்டித்து ரஷித்தால் தேவர்க்கு அவத்யம் அன்றே –
தேஜஸ் கரமாய் இருப்பது ஓன்று அன்றோ –

(பல பிறப்பாய் ஒளி வரும் தேஜஸ்ஸு அவனுக்கு)

(ஸாஸ்த்ர ஜன்ய ஞாநத்தை விட ஆச்சார்ய உபதேஸ ஜன்ய ஞானம் ஸ்ரேஷ்டம் -புள்ளு பிள்ளைக்கு இரை தேடித்தருமாபோலே
அபிவிருத்தி செய்து பெறுவதை விட கிருபா மாத்ர ப்ரஸன்னாச்சார்யார் ஸ்ரேஷ்டம்
அதிலும் பரகத -பொறுப்பு அவர் இடம்
நம்மை விட்டாலும் நாம் உன்னை விடோம் என்று இருந்தார் அன்றோ –
ப்ராப்யம் ஒன்றிலே கண் வைத்து இருக்க வேண்டும் -என்றும் உபதேஸம்)

இவ் வர்த்தத்தை அஜ்ஞனான என்னைக் கொண்டு பேசுவிக்க வேணுமோ
சர்வஞ்ஞரான தேவர் அருளிச் செய்யல் ஆகாதோ
இது என்ன ஆச்சர்யம்

ஆச்சார்ய அபிமானம் ஆவது
இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்
இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான்
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து
இவர் இப்படி அருளிச் செய்தது-

நாகணை மிசை நம்பரர், செல்வர் பெரியர் என்று எம்பெருமானை விட்டு விட்டு பெரியாழ்வாரையே தஞ்சமாகப் பற்றி, ”வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று சரமபர்வ நிஷ்டையை – அதாவது ஆசார்யனே எல்லாம் – (அடியவர்க்கு ஆட்படுதல்) என்று நடத்திக் காட்டியவள் ஆண்டாள்-குருவால் அபிமானம் பெற்றவர் முதலில் பேறு -குருவை நாம் அபிமானித்தாலும் பேறு-

பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –உத்தர சதகம்-45-

ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது-அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே

த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதி வச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும் சாஸ்திரத்துக்கு வசப் பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருந்துகின்றீர்-ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்ம வசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —-தாய்ப் பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள் கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-பர துக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க – அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் – ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே-ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்

—————————————————–

கீழ் பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமம் அன்றிக்கே இருக்கிற ஸ்த நந்த்ய பிரஜையை மாதா ரஷிக்குமா போலே உம்மையும் ரஷிக்க வேணும் என்று -பிராப்தி சொல்லா நின்றீர் –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமராய்
சத் கர்மங்களின் உடைய நிவ்ருத்தியிலும்
அசத் கர்மங்களின் உடைய பிரவ்ருத்தியிலும்
நிரதராய் ஸ்வ விநாசத்தை-விளைத்துக் கொள்ளுகிற உம்மை நம்மால் ரஷிக்கப் போமோ -என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு திரு உள்ளமாக கருதி
அப்படியானாலும் அடியேனைக் காத்து ரஷியாது போது தேவர்க்கே அவத்யமாம் என்னுமத்தை-ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் கண்டு இருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் -நன்கு
உணரில் என்னாலே என் நாஸமேலும் எதிராசா
உன்னாலே யாம் உறவையோர் —–8-

ன் குழவி -தன்னுடைய சிசு
வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் -பெருமை பொருந்திய கிணற்றின் அருகில் சேர்ந்து இருக்கக்
கண்டு இருந்தாள்–பார்த்துத் தகையாது இருந்தாள்
என்பதன்றோ –என்று அல்லவோ
அன்னை பழி ஏற்கின்றாள் -தாய் அபவாதத்தை அடைகின்றாள்
நன்கு உணரில்-நன்றாக விசாரிக்கும் அளவில்
என்னாலே –பாபமாகிற படு குழியைக் கிட்டின என்னாலே
என் நாஸமேலும்–என்னுடைய நாஸத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனாகிலும்
எதிராசா–யதிகட்க்கு நாதரானவரே
உன்னாலே யாம் உறவை ஓர் –தேவரீராலே ஆகிற ஸம்பந்தத்தை விசாரித்து அருளீர்
கீழே ஸ்நந்தய பிரஜை -இதில் கொஞ்சம் வளர்ந்த குழவி
கிணறு -கர்மங்களாகிய படு குழி –ஸம் ஸாரம் கிலேச பாஜனம்

அஞ்சு வயசுக்கு உட்பட்ட பிரஜையினுடைய துர் மரணம் எல்லாம் மாதாவினுடைய அந்தவநத்தாலே வந்ததாக
அவளுக்கு சாஸ்திரம் விதிக்கையாலே அப்படி வாராமல் கண்ணில் வெண்ணெய் இட்டு நோக்க வேணும் இறே மாதாவுக்கு –
ஆகையாலே தன்னுடைய முக்த பிரஜையானது தனக்கு நாச கரம் என்று அறியாமல் தன் அளவன்றிக்கே
ஆழத்தாலும் அகத்தாலும் பெருத்து இருப்பதான கிணற்றை ஆசன்னமாக இருக்கக் கண்டு
அத்தை பிரதிஷேதியாமல் உபேஷித்து இருந்தாள் என்கிற மாத்ரம் கொண்டு அன்றோ அந்த மாதாவானவள் அபவாதம் பிராப்தை யாகா நின்றாள் –
அப்படியே -நன்றாக நிரூபிக்கில்
பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –
இத்தால் சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –

இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆய்த்து இதுக்காகும் –

(எனக்கு நானே தீங்கு விளைத்துக் கொள்ளும் நிலையிலும் தேவரீரே ரக்ஷித்து அருள வேண்டும் –விலைப்பால் இல்லாமல் முலைப்பால் குழந்தைக்குப் போல்)

ஸ்ரீ வசன பூஷணம் -8-பிரகரணம்-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது – பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –சூரணை -366
பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞதையே சித்திக்கும் –சூரணை-367-
ஆனால் நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் – ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – என்கிற பாசுரங்களுக்கு அடி என் -என்னில் –சூரணை -368-
பந்த அனுசந்தானம் –சூரணை -369-
பிரஜை தெருவிலே இடறி –தாய் முதுகிலே குத்துமா போலே –நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –விலக்காது ஒழிந்தால் – அப்படிச் சொல்லாம் -இறே –சூரணை -370-
பிரஜையை கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் – தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –சூரணை -371-
இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அப்ரதிஷித்தம் அநுமதம்-என்கிற ந்யாயத்தாலே -விலக்காமையாவது-அனுமதியாய் யற்ற பின்பு –
அனுமதியோ பின்னை இழவுக்கு ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –-சூரணை -373-
இழவுக்கு அடி கர்மம் – பேற்றுக்கு அடி கிருபை –சூரணை -374-
மற்றைப்படி சொல்லில் இழவுக்கு உறுப்பாம் –சூரணை -375-
எடுக்க நினைக்கிறவனை தள்ளினாய் என்கை – எடாமைக்கு உறுப்பு-இறே –சூரணை -376-
சீற்றம் உள என்ற அனந்தரத்திலே- இவ் வர்த்தத்தை – தாமே அருளி செய்தார் -இறே-சூரணை -377-
சீற்றம் உண்டு என்று -அறிந்தால் சொல்லும்படி என் -என்னில் –அருளும் – அர்த்தியும் –
அநந்ய கதித்வமும் சொல்லப் பண்ணும் –சூரணை -378-
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-சூரணை -379-
க்ருபயா பர்யபாலயத் – அரி சினத்தால் –சூரணை -380-சீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும் படிக்கு பிரமாணம்
ஆக இவ்வளவும் பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் – என்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –

——————-

நோற்றேன் பல் பிறவி -என்கிறபடியே
நீர் நும்முடைய துஷ் கர்மத்தாலே இஜ் ஜன்மமே அன்றிக்கே இன்னம் பல ஜன்மமும் எடுக்க வேண்டும்படியாய்
இப்படி கை கழிந்து இருக்கிற யுமக்கு ஸ்ரீ எம்பெருமானாராலே செய்து தலைக் கட்டலாவதே -என்று பார்ஸ்வஸ்தருக்கு கருத்தாக
அப்படி யானாலும் அடியேனுக்காக இன்னமும் அவதரித்து ரஷித்து அருளுவர் என்கிறார் –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —9-

கூபத்தில் -கிணற்றில்
வீழும் –விழுகின்ற
குழவியுடன் குதித்து –சிசுவோடே கூடக் குதித்து
அவ் வாபத்தை நீக்கும் –அவ்விடரைப் போக்குகின்ற
அந்த வன்னை போல் -அந்த மாதாவைப் போலே
பாபத்தால்-அடியேன் பண்ணின பாபத்தாலே
யான் பிறப்பனேலும் –அடியேன் இன்னும் சில ஜென்மம் எடுக்கும்படி யானேனாகிலும்
எந்தை எதிராசன்-அடியேனுக்குப் பிதாவாகிய யதிகளுக்கு நாதரான எம்பெருமானார்
இனி தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா–அடியேனை உஜ்ஜீவிப்பிக்கைக்காக தாம் திரு வவதரித்து அருளுகிறார்

வந்து தோன்றிய அப்பொழுதே ஞானம் பிறந்து நாரணருக்கு ஆளாகிறோமே

உடமைக்கு ஒரு முழுக்கு -உடையவருக்கு உடைமைகள் அனைத்தும் கிடைக்கும் வரை முழுக்கு உண்டே

கிணற்றில் விழுந்த பின்பு அன்றிக்கே சற்றும் தாழாமல் நின்று
பேதைக் குழவி -என்னும்படியான முக்த பிரஜை யுடனே கூடக் குதித்து எடுத்து
அதின் அநவதாநத்தாலே வந்த ஆபத்தைப் போக்கி ரஷிக்கும் ஸ்நேஹ புக்தையான அந்த மாதாவைப் போலே
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்கிறபடியே
ஏதச் சரீர அவசா நத்திலே மோஷமாம் படியான பிரபத்தி வைபவத்தையும் அழித்து நான் பண்ணின பாபத்தாலே
இன்னமும் சில ஜன்மங்களை எடுக்கும் படி ஆனேனே ஆகிலும்
இனி இப்படி கை கழிந்த பின்பு எனக்கு ஜனகராய் எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –
ஆகையால் அதில் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை —

உடைமைக்கு ஒரு முழுக்கு உடையவனுக்கு உடமை பெறும் தனையும் முழுக்க வேண்டி இறே இருப்பது – –

———————————–

எம்பெருமானார் திருவடிகளை அகன்று அந்ய மனஸ்தராய் இருக்கையாலே அன்றோ ஜென்மத்துக்கு அடியான கர்மம் புகுகிறது
இனி அந்தப் பிரசங்கம் இல்லாதபடி அவர் திருவடிகளை பொருந்தி வாழ் என்று திரு உள்ளத்தை குறித்து அருளுகிறார்-

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழற்குப்
பாதுகமாய் தாம் மகிழும் செல்வச் சடகோபர் -தே மலர்தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் ——10-

பூ மகள் -புஷ்பத்திலே பரிமளம் ஒரு வடிவம் கொண்டால் போலே இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு
கோன் –வல்லபரான
தென்னரங்கர் –பெரிய பெருமாளுடைய
பூம் கழற்குப் –நிரதிசய போக்யமான திருவடித் தாமரைகளுக்கு பாதுகமாய்-பாதுகைகளாய்
அத்தாலே
தாம் மகிழும் –தாம் ஆனந்திக்கும்
செல்வச் –ஸாத்விக ஜன சம்பத்தான-பெருமாளை உள் கொண்ட செல்வர்-யான் பெரியன் – என்றுமாம்
சடகோபர் -நம்மாழ்வாருடைய
தே மலர்-மதுஸ் யந்தியான புஷ்பம் என்னலாம் படியான
தாட்கு-நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு
ஏய்ந்து -பொருந்தி
இனிய பாதுகமாம் -பிரியமான திருவடி நிலைகளாய்
எந்தை -அடியேனுக்குத் தந்தையாய் -அடியேனுடைய ஸ்வரூப ஸத்தைக்கு காரண பூதரான
இராமானுசனை -இராமாசன் என்று நிரூபக நாமத்தை யுடையரான எம்பெருமானாரை–
வாய்ந்து -ஆஸ்ரயித்து
எனது நெஞ்சமே -எனது பவ்யமான மனஸ்ஸே
வாழ் —-இந்த ஸம்பந்தத்தைப் பெற்று வாழ்

கோன் -அரசன் -பிரஜைகளுக்கு ஸ்வாமி குற்றம் பார்த்து தண்டனையும் அளிக்க வேண்டும்
எந்தை -மோக்ஷ ஏக ஹேது
பூம் கழல் -காரணம்
தேன் மலர் -காரியம்
பூம் கழல் பாதுகை -எடுப்பும் சாய்ப்பும் அனுபவத்தில் இழிந்து உபதேசமும் செய்தார்
ஏய்ந்த இனிய பாதுகமாய் -இரண்டு விசேஷணங்கள் இங்கு

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே புஷ்பத்திலே பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான
பூவார் கழல்களுக்கு – அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்-
இப்படி முகில் வண்ணன் அடியை அடைந்து –
அத்தாலே உற்றேன் உகந்து பணி செய்து -என்னும்படி
தாம் ஹர்ஷிக்கும் (ஹர்ஷத்தாலே வந்த காரணப் பெயர் -மகிழ் மார்பன்-மகிழம்பூ ஸாத்திக் கொண்டு -வகுள அபிராமம் -)சாத்விக ஜன சம்பத்தான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய வகுளாபிராமமாய்
மனுஸ்பந்தியான புஷ்பம் என்றலாம் படி நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு
(பாகவத சேஷத்வ பாரதந்தர்ய)ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி
அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்(

நம்மாழ்வாருக்கு இனிய -ஆச்சார்யராலே அபிமானிக்கப்பட்டு

) என்னுடைய ஸ்வரூப சத்திக்கு காரண பூதராய்
ஸ்ரீ இராமானுஜன் என்று நிரூபகத்தை யுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி
எனக்கு பவ்யமான மனசே
அநந்ய பிரயோஜனதையாலே பாத ரேகை போலே கிட்டி இந்த சம்பத்தை பெற்று வாழ் -(

பாதச் சாயைக்கும் மேல் பாதரேகை)

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும் ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-

செல்வச் சடகோபர் -என்கிறதுக்கு
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிற செல்வத்தை பெற்றவர் ஆகவுமாம் –

(உண்ணும் நீர் –திருக்கோளூர் -வைத்த மா நிதிப்பெருமாள் -எங்கும் பக்க நோக்கு அறியா பைந் தாமரைக் கண்ணன் -இதுவே செல்வம்)

ஏய்கை-பொருந்துகை(பராங்குசருக்கும் அடியேனுக்கும் பொருத்தமாக)
வாய்கை -கிட்டுகை-

பூ மகள் -புருஷ காரம்
கோன் -ஸ்வாமித்வமும் உபாயத்வமும்
தென்னரங்கர் -ஸுலப்யம்
பூம் கழற்குப்-போக்யம் -ப்ராப்யத்வம்
பாதுகமாய் -அவனுக்கும் ரஷகமும்
தாம் மகிழும் -ஸ்வ கத ஆனந்தம்
செல்வச் -தமது ஆச்சார்யர் -விஷ்வக்சேனர் அவருக்கு ஆச்சார்யரான மிதுன திருவடிகளைப் பெற்ற செல்வம்
சடகோபர் -இந்திரியங்களை வென்றவர்
இவற்றால் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லப்பட்டன
தே மலர்தாட்கு
ஏய்ந்து
இனிய
பாதுகமாம்
எந்தை
இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்-ஆச்சார்யர் திருவடி நிலைகளே வாழ்வு

 —————————————-

நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும்
பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் வாழும் அவர்கள் பேற்றைப் பெற வேணும் என்று அபேஷியா நின்றீர் –
அது நமக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ வடுக நம்பி போல்வாருக்கு அன்றோ சித்திப்பது என்று திரு உள்ளக் கருத்தாக-
அப்படியே த்வத்தந்ய தேவரான ஸ்ரீ வடுக நம்பி நிஷ்டையை அடியேனுக்கும் உண்டாக்கி-
யாவதாத்மபாவி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

(வடுக நம்பி –
திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்
கிரந்தங்கள்: யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே-தனியன்:-)

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி –தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன் தனக்கே ஆட்கொள்ளு உகந்து—-11-

எதிராசா–எம்பெருமானாரே
உன்னை ஒழிய –தேவரீரை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா-தேவரீருக்கு உத்தேஸ்யரான பெருமாளையும் த்வத் அநுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்ய ஸத்ருவாகக் கருதி தேவரீரை ஒழிய -வேறு ஒரு பர தேவதையையும் அறியாத
மன்னு –ஸ்திரமான
புகழ் சேர் –கீர்த்தியை அடைந்த
வடுக நம்பி தன் –வடுக நம்பி தன்னுடைய நிலையை–சரம பர்வ நிஷ்டையை
என் தனக்கு –அதில் அபேக்ஷையுடைய அடியேனுக்கு
நீ தந்து –தேவரீர் ப்ரஸாதித்து அருளி
எந்நாளும்–ஸர்வ காலத்திலும்
உன் தனக்கே –தேவரீருக்கே ரஸாவஹமாம் படி
ஆட்கொள்ளு உகந்து–உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும் 

எதிகளுக்கு நாதர் ஆனவரே –
தேவரை ஒழிய-தேவர்க்கு தேஸ்யரான ஸ்ரீ பெரிய பெருமாளையும்
த்வத் அனுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்ய சத்ருவாகக் கருதி
தேவரை ஒழிய வேறு ஒரு பர தேவதையும் அறியாது இருப்பாராய்
அத்தாலே ஸ்வரூப அனுரூபமான யசஸ்சை பிராப்தராய்-இரு கரையர் அன்றிக்கே
பெரு மதிப்பராய் இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி
தம்முடைய சரம பர்வ நிஷ்டையை அதிலே அபேஷை யுடைய அடியேனுக்கு பிரசாதித்து அருளி
எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே
தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து – –

மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது
பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை ஆகவுமாம் –

எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி. இவர் எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது. எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார். அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.
வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.
எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையேகூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.
வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.
ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.
நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு, முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார். ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.
எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுளம் பற்றினார். ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில் திருக்குறுங்குடி சேர்ப்பித்துவிட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க இன்னும் திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க, திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார். பின்னர் எம்பெருமானார் திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.
எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து எம்பெருமானார் க்ரந்தங்களைக் காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும், எப்பொழுதும் எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல் ஆசார்ய நிஷ்டையோடே எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம். ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை
பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தியருளினாராம்.
பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார்.
வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை. ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும். ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை. இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

 ——

நீர் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் நாம் செய்கைக்கு அடியான உறவு உண்டோ
என்று அவருக்குக் கருத்தாக உண்டு என்று
ஸ்ரீ பிள்ளை திருவடிகளிலே சம்பந்தம் பெற்ற பிரகாரத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார்-

(நம ஸ்ரீஶைலநாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஶாலிநே)

(வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே)

(எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து —–1-
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-)

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் ——12-

தேசம் –திக் தேசங்கள் எல்லாம்
திகழும் –பிரகாஸிக்கும் படியான ப்ரபாவத்தை யுடையராய்
திருவாய் மொழிப் பிள்ளை–திருவாய் மொழி யோட்டை ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாய் யுடையராய்
மாசில் –தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்ளுகை முதலான க்ரூர நிஷித்தமான மாசு இல்லாமல் இருக்கிற
திருமலை ஆழ்வார் —ஸ்ரீ சைல நாதர் என்னை -தம்முடைய தயா பாத்ரமான அடியேனை
நேசத்தால்-கருணா பரிணாம ரூபமான ஸ்நேஹத்தாலே- என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்
எப்படியே எண்ணி –இவன் எப்படியானால் உஜ்ஜீவிப்பன் என்று விசாரித்து
நின் பால் -ப்ராப்த சேஷியான தேவரீர் திருவடிகளிலே
சேர்த்தார் –சேர்த்து அருளினாரோ
எதிராசர்–எம்பெருமானாரே –
அப்படியே நீ செய்து அருள் –அப்படியே தேவரீரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேண்டும்

(தன்னையே தனக்கு ஆச்சார்யருடைய சிஷ்யர் என்றும் தன்னுடைய சிஷ்யரை அவருக்கே கோ சிஷ்யராக எண்ணிக் கொள்ள வேண்டும்
உடையவரே உத்தாரகர் என்று சொல்ல வந்த பிரபந்தம் என்பதால் தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்ளுகை குரூரம் என்கிறார்)

(ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (ஸ்ரீ யதிராஜ விம்சதி-19)
(ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே, த்வம் – தேவரீர், மே – அடியேனுக்கு, ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட, தாம் – மிகச்சிறந்த, தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அந்வஹம் – நாடோறும், விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி) நாத – ஸ்வாமியான யதிராஜரே, தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு, விருத்தம் – தடையாகிய, அகிலம் – எல்லாவற்றையும், காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.)

(கருணை அசாதாரணம் -ராவணன் இடமும் உண்டே -ஸ்நேஹமாக -பரிணாமம் அடைய ஒட்டவில்லையே)

(திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் அன்றோ -அடியேனையும் விருத்தி செய்து அருள வேண்டும்)

ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
அவர் அடி பணிந்து உய்ந்த தேவருடையவும்
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
ஜ்ஞான பக்தி விரக்தியாதி களாலும் பூரணராய்
அத்தாலே
திருவுடை மன்னரில் தேசுடையார் -என்று பேசும்படியான பெருமையை யுடையவர் ஆகையாலே
திக் தேசங்களில் எல்லாம் பிரகாசிக்கும் படியான பிரபாவத்தை யுடையராய்
ஸ்ரீ திருவாய் மொழியோட்டை சம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக யுடையராய்
தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டு கொள்ளுகை முதலான க்ரூர நிஷிதமான மாசு இன்றிக்கே இருப்பராய் இருக்கிற ஸ்ரீ சைல நாதன்
தம்முடைய தயா பாத்ரமான என்னை
கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து
பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்
அப்படியே தேவரீரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்