Archive for the ‘ஸ்ரீ யதிராஜ விம்சதி’ Category

ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–ஸ்லோகங்களும் விளக்கமும்–

January 26, 2026

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –
————

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

74 ஸ்லோகங்கள் ஸ்வாமி ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்ஹாசனங்களுக்குச் சமம்.

வீராணம் ஏரியில் 74 கடைமடைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் 74 கடைகளும் ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மஸ்னாதிபதிகளை
சித்தரிப்பதாக நமது பூர்வாச்சாரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப் பூலோகத்தில் 74 ஆண்டுகள் வாழ்ந்தார்,
ஸ்வாமி பிறந்தது 1370 ஆம் ஆண்டு ஐப்பசி மூலம்,
அவதார சமாப்தி 1443 ஆம் ஆண்டு மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசியில்.

ஆழ்வார்கள் ஆச்சார்யாக்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் நமக்குத் தரும் ஸ்ரீ மாமுனிகளின் ஒரு படைப்பான ஸ்ரீ உபதேச ரத்தினமாலாவும் 74 ஸ்லோகங்கள் கொண்டது(இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸ்வாமி ராமானுஜருக்கு மரியாதை அளித்து 73 பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளார் என்பதும்,ஆனால் அவரது சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான ஸ்ரீ எறும்பியப்பா 74 வது பாடலை இயற்றினார்

ஸ்வாமி ராமானுஜ @ 74 வயதில் திருக்குறுங்குடி நம்பிக்கு ஆச்சாரியார் ஆனார்-
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ” ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று அறியப்பட்டார்

———–

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.-இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் – ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் என்கிறார்

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு, எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராயண தநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு, ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாய பரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் – முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல் பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார்


1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

வேதங்களை பிரமனுக்கு கற்பித்தவன்
பாஞ்சராத்ர ஆகமத்தை இயற்றியவன்
பெரிய பிராட்டியாருடன் இல்லறத்தில் உள்ளவன்
முதலாச்சார்யன்
இப்படிப்பட்ட பெரிய பெருமாளை அடியேன் வணங்குகிறேன்

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் –
ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும்
ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

கம் அபி ஆத்யம் குரும்-பிரதமம் -ஆதி -குரு-ஓதாதே ஓதுவிக்கும் ஒருவன் தானே
-கம் அபி யாரோ ஒருவன் -பிரசித்த விசேஷணம் -அத்யந்த ஸ்துதி வாக்கியம்
வந்தே-வந்தனம் க்ரியா பதம்– ஞான அநு கூல வியாபாரம் -ஸூ அதிக உத்கர்ஷம் –
கமலா க்ருஹமேதி நம் -சர்வ ரக்ஷகன் -க்ருஹஸ்தன் இவன் -பெரிய பிராட்டியார் -சப்த லோகீ-ஸமஸ்த லோகங்களுக்கும் க்ருஹம் வளப்படுத்துபவன் -க்ருஹமேதி -ஸ்ரீ யபதி-பிராபப்யமும் ப்ராபகமும்
ஆச்சார்ய க்ருத்யம் சொல்கிறது மேல்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரச்ய ஸ்வயம் –
சந்தஸ் -வேதம் –
வக்தா -சொல்கிறவன்
ப்ரவக்தா -பிரகர்ஷம் -பிரவசனம் -கால ஷேபம் -வசனம் ஸ்வ தந்திரமாக பேசுவது
தனது சங்கல்பத்துக்கு பரதந்த்ரனாக உள்ளான் –
வேதம் நித்யம் -அப்வருஷேயம் -என்பதும் அவன் சங்கல்பம் தானே –
வேதம் ஈஸ்வரன் பரஸ்பர நிரூபகம் -அவனால் செய்யப் பட்டது என்று சொல்லக் கூடாதே -சுருதி பிரமாணம் –ஸ்வ அபிப்ராயத்தால் பாஞ்சராத்ர ஆகமம் அருளி -என்றவாறு –இவனே வக்தா -வேதத்துக்கு ப்ரவக்தா -என்றவாறு —

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப் பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ –பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்ய தம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள் எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்கு போல,உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ஸ்லோகத்தில், ஆதி குருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

இந்த உலகிற்கு எந்த வகையில் நன்மை செய்யலாம் என்று பெரிய பெருமாளுடன் எப்போதும் ஆலோசனை செய்பவள்
அருள் என்பதே வடிவம் கொண்டதோ என்னும்படி உள்ளவள்
அன்பின் மிகுதியால் தண்டனை என்பதையே அறியாதவள்
பெரிய பெருமாளுக்கு ஏற்றவளாக இருப்பவள்
இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரை அடியேன் வணங்குகிறேன்-

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

சஹ தர்ம சரிம் சௌரே-விஷ்ணு பத்னீ இவளுக்கு ஏற்றம் -ஸ்ரீ அவனுக்கு ஏற்றம் -சர்வ சேஷிக்கு –சௌரே-ஸ்ரேய பூதன்-பரத்வம் ஸுலப்யம் இரண்டும் சித்தம் –
ஸூரசேனன் -வாஸூ தேவர் உடைய தந்தை -குலத்தையும் காட்டும்
சம்மந்த்ரித ஜகத்திதாம் –மந்த்ரித-ஆலோசனம் -ஜகத் ஹிதம் –சம் யக்-ஏக அபிப்ராயம் ஒரே நினைவு இருவருக்கும் –
அனுக்ரஹ மயீம்
வந்தே -வணங்குவோம்
நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம் -நிக்ரஹ பிரகாரம் அறியாதவள் -அறிந்தும் அறியாதவள் -அவ்விஞ்ஞாதா அவன்
ஆஸ்ரித அபராதங்களை அறியாதவன் -சகஸ்ராம்பூ -அறிந்தவன் -சரணாகத வாத்சல்யன்-போக்யமாக கொள்பவன்
-காணாக் கண் இட்டு இருப்பவன் -இவள் நித்யம் -எல்லார் விஷயத்திலும் எப்பொழுதும் -அவன் கதாசித் இவளுக்கு நித்யம் என்றவாறு –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்

வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ஸ்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்தவர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.
உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.

அதற்கு, பிராட்டி,
நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல
நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.

உடனே பகவான், பிராட்டியிடம்,
“நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.

இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து,
பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

—————————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ரவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே
ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –

யாருடைய கையில் உள்ள பிரம்பின் நுனி அசைவதைக் கண்டு இந்த உலகம் இயங்குகிறதோ
யாரிடம் இந்த உலகம் கட்டுப்பட்டு உள்ளதோ
யார் ஒருவர் ஸூத்ரவதி என்பவளுக்குக் கணவனோ
பெரிய பெருமாளின் சேனைக்குத் தலைவராக உள்ளவர் யாரோ
அப்படிப்பட்ட விஷ்வக் சேனரை அடியேன் வணங்குகிறேன் –

குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூ த்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனை முதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற் கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்று விட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய் விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனை முதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

————

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

யஸ்ய சாரஸ்வதம் -வாக் தேவதா –
ஸ்ரோதோ -பிரவாஹம்
வகுளா மோத வாசிதம் -வகுளம் ஆமோத வாசித்தம்-மகிழம் பூ பரிமளம் நாள் கமழ் -மகிழ் மாலை மார்பினன் –
அஸ்மாத் குல தானம் போக்யம் – வண் குருகூர் நகரான
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் –அலம் போதுமானவை –விஸ்ரமம் ஒய்வு -தத்வ ஹித புருஷார்த்தம் -ஆழ்வார் நன்றாக வெளியிட சுருதிகள் ஒய்வு எடுத்தனவாம் –
சடாரிம் தமுபாஸ்மஹே -ப்ரீதி பூர்வகமாக த்யானம் செய்து அனுதியானம் உபாசனம் –

அவருடைய திருமேனி மட்டும் அல்லாது அவரது வாக்கின் மூலம் வெளிவரும் சொற்களிலும் மகிழம் பூ மணம் சூழ்ந்துள்ளது
அத்தகைய அவரது வாக்கானது வெள்ளம் போன்று ஓடி வர அதில் வேதங்கள் தங்கள் களைப்பை ஆற்றிக் கொள்கின்றன
இப்படிப்பட்ட நம்மாழ்வாரை நாம் உபாஸிப்போம்-

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத் துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ஸ்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.

அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால் பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர். குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து, மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்துகொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபர யுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.

அவரோ,கண் திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.
மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்தத்தின் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது, ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?

ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” அதாவது, சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து, தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது, ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.

பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது . இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .

பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

———————

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப்பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

நாதேந முனிநா தேந -நாத -முனி இரண்டு பதமாக கொண்டு சிஷ்யர் ஸுசீல்யம் -நாத சப்தம் -அத -அப்புறம் சொல்லாமல் -உடனே உபதேசித்து அருளி
முனி மனா சீலன் -திவ்ய சரணார விந்தங்கள் அனைவரது தியானம்
பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம்–நிகமம் வேதாந்தங்கள் –நிகமே பாவம் நைகமிகம் -வேதாந்த சித்தம் -தத்வ த்ரயம்
-போக்தா போக்யம் பிரேரிதா-உபய நியாந்தா -ஈஸ்வரன் –
ஹஸ்தாமலகதாம் கதாம் -ஹஸ்தம் -நெல்லிக்கனி -சம்சயம் விபர்யயம் இல்லாமல் பிரத்யக்ஷமாக காட்டி அருளி –
-ஆத்ம பிரமாணம் மங்களாசாசன ஸ்லோகம் -ஆளவந்தார் -பரமதங்களை கண்டனம் பண்ணி –
ததீயம் மதம் ஸூ ஸ்தாபனம் -சாஸ்வத மதம் -யோக மஹிமை தத்வ த்ரயம் பிரத்யக்ஷம் ஜீயாத்

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,

அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட,

அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,

திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.
அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து,
அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்துபோன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள்
ரஹஸ்யஅர்த்தங்கள்,
ப்ரஹ்ம ஸுத்ரங்கள் எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.

திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .

ஸ்ரீ நம்மாழ்வார் அருள்செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.

தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

நாதமுனிகளின் சிந்தனைகளில் எப்போதும் தனது மனதை நிலை நிறுத்தியவர்
தூய்மையாக உள்ள ஸத்வ குணம் மட்டுமே கொண்டவர்
கிருஷ்ணனின் மற்ற ஒரு அவதாரம் போன்று உள்ளவர்
இப்படிப்பட்ட உய்யக்கொண்டாரை அடியேன் வணங்குகிறேன்

நமஸ்யாம் அரவிந்தாஷம்-புண்டரீகாக்ஷர் -நமாமி –
நாத பாவே வ்யவஸ்த்திதம்-நாதஸ்ய பாவ -மநோ வ்ருத்தி விசேஷம் -ஸ்திரமாக உள்ளவர் –
குருகை காவல் அப்பன் – பிணம் இருக்க மணம் சூடுவாரோ – நம்மை உய்யக் கொண்டார் –
சுத்த சத்த்வ மயம் -ஸ்வ பாவமாக -பிராஸூர்யார்த்தம் மயம் -ஆனந்த மயம் போலே -ரஜஸ் தமஸ் இடம் இல்லாதபடி
-அப்ராக்ருதம் -குண சத்வம் -பரமபதத்தில் த்ரவ்யம் -சுத்த சத்வம்
சௌரே அவதாரம் இவ அபரம்-அவன் கல்யாண குணங்கள் திரு மேனி போலே -சுத்த சத்வம் -ஜென்ம கர்ம மே திவ்யம்

————

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

நான்காவது ராமரை –ஸ்ரீ மணக்கால் நம்பியை -நாம் உபாசிப்போம் –

அனுஜ்ஜித ஷமா யோகம் -ஷமா குணம் ஆஸ்ரயமாக-விடாமல் -அனுஜ்ஜிதம் -பச்சை இட்டு ஆளவந்தார்
-சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளின –உஜ்ஜித ஷாமா யோகம் பரசுராமர் -பரசுராமனின் வியாவருத்தம்
அபுண்ய ஜன பாதகம் –பெருமாளின் இவருக்கு வியாவிருத்தி-புண்ய ஜன -ராக்ஷசர் -பாதகம் செய்தார் பெருமாள் – –
இல்லாத தோஷத்தை சப்தத்தால் ஏறிட்டு அருளுகிறார் -நைகி நிந்தா நியாயம் இந்த ஸ்லோகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் -பலராமனின் வியாவருத்தம்
மதம் ராகம் சுரா பானம் பருகி -யாதவர் -பாபம் இல்லையே -யது குலம் -சந்த்ர வம்சர்-க்ஷத்ரியர் -யாதவர் என்றால் இடையர் இல்லை –
ராகவா யாதவீயம் ஸ்தோத்ரம் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் வேங்கடாத்ரி அருளிச் செய்து உள்ளார்
யாதவர் -இடையர் இரண்டும் கிருஷ்ணன் இரண்டு குலம் –
ராமம் துர்யம் உபாஸ்மஹே -நான்காவது ராமர் –ராம மிஸ்ரர் –

பொறுமை மன அடக்கம் ஆகியவற்றை எப்போதும் கை விடாதவர்
அடியார்களுக்கு எந்தவிதமான தீங்கையும் எண்ணாதவர்
எவ்வித செருக்கும் ஆசையும் அற்றவர்
இப்படிப்பட்ட நன்மையால் நான்காவது இராமர் என்று போற்றப்படும் மணக்கால் நம்பியை நாம் உபாஸிப்போம்
பரசு ராமர் சக்ரவர்த்தி திருமகன் பலராமர் மற்ற மூவர்-

பரசுராமர்- சகிப்புத் தன்மை இல்லாதவர்–பலராமர்–மது அருந்தும் பழக்கமுடையவர்.)

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.

புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால், மணக்கால்நம்பி 4வது ராமர்.

———————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
-விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

-விகாஹே யாமுனம் தீர்த்தம் -யமுனா சம்பந்தி -யமுனாச்சார்யர் ஆகிய பாவனம் மிக்க ஆச்சார்யர் –அவஹாகிப்போம்
-குடைந்து ஆடி பருகி களிப்போமே-தீர்த்தத்திலும் பகவத் குணங்களிலும் –
சதீர்த்தயர் -சமான சிஷ்யர்கள் ஒரே ஆச்சார்யர் இடம் –
தீர்த்தனுக்கு அற்ற பின்னே –தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தராகி -தீர்த்தங்கள் ஆயிரம் –தேவர் வைகலும் தம் தேவியர்க்கு உரைப்பர்
-கேனோ பாயானே ஸ்ரீ ராம ராம ராமேதி போலே –
சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம் -பிருந்தாவனம் -அழகிய -ஸ்திதம் -யமுனா தீர்த்தம் -மற்ற இடங்கள் அசாது-தோஷம் அற்ற தேசம் என்றவாறு –
சாது பிருந்தா அவனே ஸ்திதம்-அவ ரக்ஷனே-தாது -ரக்ஷணத்திலே-
-சாது கோஷ்ட்டியுள் கொள்ளப் படுபவர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய -ரக்ஷணத்திலே ஸ்திதம் -ஆளவந்தார் என்றபடி –
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே--சர்ப்பம் -ஜிஹ்மம் -வக்ரகதியில் போவது குடிலை கதி -ஆர்ஜவம் நேர்மை –
அஹங்காரம் மமகாரங்கள் -போக்கி -அபஹத பாப்மாதிகள் -அளிப்பது போலே –
யமுனா தீர்த்தம் தூயமையாக ஆகி -காளியன் நிரசித்து -அந்த ஸ்பர்சம் இருந்ததே -அத்தை போக்கி என்றுமாம் –
யத்ர கிருஷ்ணா க்ருதாதர — கிருஷ்ணரால் ஆதரிக்கப் பட்ட யஹூய யமுனை -கிருஷ்ண மிஸ்ரரால் –
ஆளவந்தார் கிருஷ்ண க்ருதங்களில் ஆழ்ந்தார் –

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம். மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல அன்றுமுதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி, கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு
விளையாடி, இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும் யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு
உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் , யமுனைக்குக் கருணை செய்ததைப் போல, ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச்சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

——————

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

தயா நிக் நம் -அடிமைப் பட்டு வசப்பட்டு -கருணாவஸ்யன்-மெய்யே பெற்று ஒழிந்தேன்
– விதி வாய்க்கின்றது அவனுக்கு -தயா பிரபாவம் -அவனாலும் மீற முடியாதே –
சர்வ நியாந்தா காருண்யத்துக்கு நியாமகன் ஆவதே -பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன்
நமக்கு விதி பிராரப்ய கர்மா -அவனுக்கு காருண்ய நிக்னம்
தானே சென்று உடையவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளின தயா பிரபாவம்
யதீந்த்ரச்ய தேசிகம் -ஸ்ரீ பாஷ்யகாரருக்கு சாஷாத் ஆச்சார்யர் -பஞ்சாச்சார்யார் –
பூர்ண மாஸ்ரயே-பூர்ணர் -மஹா பூர்ணர் பெரிய நம்பி -ஆஸ்ரயிக்கிறேன்-
யேன விஸ்வ ஸ்ருஜோ –விஷ்ணோ அபூர்யத மநோரத-ஸ்ருஷ்டித்த விஷ்ணுவுடைய -மநோ ரதம் நிறைவேறியது –
சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் என்றவனுடைய மநோ ரதம்
இதனாலே பெரிய நம்பி -இவர் ஆனார் -பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் /பெரிய திரு மண்டபம் /
பெரியாழ்வார் -சாஷாத் மாமனார் -/ பெரிய உடையார் -ஜடாயு மஹா ராஜர் /
பெருமாள் மநோ ரதம் நிறைவேற்றியதால் பெரிய நம்பி –
பூர்ணர் முதல் பகுதியில் அடுத்து மஹா பூர்ணர் ஆகிறார் எம்பெருமானாரை சம்பிரதாயத்தில் கொண்டு வந்ததால் –

இந்த உலகைப்படைத்த பெரிய பெருமாளின் மநோ ரதம் இவரால் நிறைவேறியது
அன்புக்கு வசப்பட்ட ஆச்சார்யரான பெரிய நம்பியை அடியேன் அடைவேனாக
ஸ்ரீ வைஷ்ணவம் தழைக்க இவர் மூலம் அன்றோ அன்றோ பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தான் அரங்கன்

அவர் நமக்கு மகா ராமானுஜரைக் கொடுத்தார், அதன் மூலம் பிரதம படைப்பாளியின் நம்பிக்கையை நனவாக்கினார்.

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

—————

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் –

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

இராமானுஜரின் உயர்ந்த கிரந்த நூல்கள் பெரிய பெருமாளையே தன் வசப்படுத்திக் கொண்டவை யாகும்
அவை உபநிஷத்துக்களுக்கு எழில் சேர்ப்பவை யாகும்
அப்படிப்பட்ட ஸ்ரீ ராமானுஜ முனி அடியேனுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்

ப்ரணமாம் லஷ்மண முனி– ப்ரதிருஹ்ணாது மாமகம் -என்னுடைய பிரணாமத்தை எம்பெருமானார் ஸ்வீ கரித்து அருளட்டும் –
இந்த பிராணாயாமம் அவருக்கே உரியது -சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி –
இவர் சேவா யோக்யர் அன்றோ
எம்பெருமானார் திருவடிகளை அடைகின்றேன் -குரு பரம்பரையா முகமாக பெரிய பிராட்டியார் இன் அமுத திருமகள்
-இரங்கும் திருவாளர் -திரு நாரணன் -அது சரணா கதி -இங்கு பிரமாணம்
ப்ரதிக்ருஹம் -பிரசாதயாதி யத் ஸூ க்தி ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம் –
எவருடைய ஸ்ரீ ஸூ க்திகள் ஸ்ருதியை முழுவதுமாக பிரகாசிக்கப் பண்ணிற்றோ- பிரசாதம் -ஒப்பனை -பிரசாதனம் அலங்கரித்தல் –
ஸ்வாதீந பதிகாம்-நாயகியை தானே அலங்கரிக்க வேண்டும் -பதியை தனக்கு அதீனமாக்கி-கொள்ள -ஸ்ரீ யபதி
-பதி விசுவஸ்ய-ஏறா ளும் இறையோன் -காளை மாட்டை மட்டும் அவன் இவன் உபய விபூதியையும் –
இவனை நிரூபித்து -சாஸ்த்ரா யோநித்வாத் -ஸ்வரூப ரூப குண விபூதியை காட்டும் நாயகி
சுருதி பெருமை ஸ்ரீ பதி பெருமை யதிபதி பெருமை சொல்லிற்று

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .

இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத் தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச் சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ஸ்ருதி “—உபநிஷத் நாயகி .
இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி, பொய் என்றும் சொல்லி ,
அழுக்கை ஏற்றி விட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ”
மீமாம்சம் போன்ற வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,
உண்மையான ரூப கல்யாண குணவிசேஷங்களை உடைய பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

——————

11-உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ர வந்தம்
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே
சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

திரு மார்பில் இலங்கிய முந்நூலினாலும் –
அணிந்த ஈராறு திரு நாமங்களினாலும் –
முக்கோல் ஏந்திய திருக் கையினாலும் —
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானை
ஆவாஹநம் செய்திருக்கும் அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்–
திரு முடியில் திரு குழல் கற்றையினாலும் எழில் யுற்று விளங்குபவராய் –
எல்லா உலகங்களின் நல் தவப் பயனின் உருவோ என்று
அதிசயிக்கக் கூடியவராக யதி ஸார்வ பவ்மரை ஸ்துதிக்கப் புகுகிறேன் -என்கிறார்

உபவீதிநம் -அழகிய பூணூல்
ஊர்த்வ புண் ட்ரவந்தம்-
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம் -மூ லோக ஸமஸ்த சேதன பலமாகவே இவர் அவதாரம்
சரணா கத சார்த்த வாஹம் -கோஷ்ட்டி -பிரபன்ன -தானே செய்து அருளி -நமக்கு -முன் நின்று நடத்தி –
ஈடே -விளங்குகிறார்
சிகாயா சேகரிணம் -திரு முடிக்கு அலங்காரம் -உத்தம அலங்காரம் சிகை –
பதிம் யதீ நாம் – நேராக சேவை சாதிக்க -அனுபவிக்கிறார்-கீழே ஸ்ரீ ஸூ க்திகளை அனுபவித்து -திவ்ய மங்கள விக்ரஹம் -இதில் –
யதிபதிக்கு இவை லிங்கங்கள் – சாஸ்திரம் -சொல்லுமே -கர தூஷிணி-பரம ஹம்ஸ லக்ஷணம் -யதி லிங்க பேதம் 65 -th வாதம் –

யஜ்ஜோ பவீதம் தரித்தவர்
திரு நெற்றியில் அழகான ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவர்
இம் மூன்று லோக புண்ய பலன்களே ஹேதுவாக திரு அவதரித்தவர் என்று காட்டவே த்ரி தண்டம் தரித்தவர்
தன்னிடம் சரண் அடைந்தவர்களை சரியான வழியிலே நடத்தி அருள்பவர்
நேர்த்தியாக சிகை அழகு கொண்டவர்
சந்நியாசிகள் தலைவராக உள்ளவர்
இப்படிப்பட்ட ராமானுஜரை அடியேன் வணங்குகிறேன்

பகவத் அநுபவத்தைப்போல, பூர்வாசார்யர்களை அனுபவிப்பதும், சிஷ்யர்களுக்கு மிகவும் தேவையானது .
இதற்கு உதவுவது ஆசார்யனின் திருமேனி ஸ்வரூபத்தை மனத்தில் க்ரஹிப்பது;
பிறகு, அவர் ஆக்ஜாரூபமான கைங்கர்யங்களைச் செய்வது;ஆகமரீதிப்படி பகவானைத் த்யானித்து, ஆராதிப்பது.
ஸ்ரீ அப்புள்ளார் சொல்ல, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ உடையவரின் திருமேனி சௌந்தர்யத்தை மனத்தில் தரித்தவர்.
அதனால், த்யாநித்ததை, அப்படியே வருணிக்கிறார்.

யதிராஜரின் சிவந்த திருமேனியில், திருமார்பில் பளிச்சென்று வெண்மையாக விளங்கும் யஜ்ஞோபவீதம்;
பிறகு, திருமுகமண்டலத்தில் பளிச்சிடும் ஊர்த்வபுண்டரம் ( திருமண்ணும் ஸ்ரீசூர்ணமும் );
மனசாலும், உடலாலும், வார்த்தைகளாலும் வணங்கும் பகவானைத் தன்னுடைய த்ரிதண்டத்தில் ஆவாஹநம் செய்திருப்பதால்,
அந்தத் த்ரிதண்ட ஹஸ்தம்; அரசர்களுக்கு,சிரஸ்ஸில் க்ரீடத்தைப் போல,
சிகையாலான க்ரீடத்தை அணிந்திருப்பதால், க்ரீடமான சிகை

ஸ்ரீ நம்மாழ்வாரைப் பின்பற்றி , பெரியபெருமாள் -பிராட்டி–-திவ்யதம்பதியரிடம் ,
பங்குனி உத்ர நந்நாளில் ,சரணாகதியை அனுஷ்டித்தவர்;
இவ்வளவு பெருமைபெற்ற ,எதிராஜரைத் துதிப்போம்.

—————

12-பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம்
பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே

பகவானுடைய சங்கு,சக்ரம், கதை,வாள் ,வில் —என்கிற பஞ்சாயுதங்களும்
யதிராஜன் திருவுருவத்தில் அவதரித்துள்ளன.
வேத விருத்தமாகப் பிரசாரம் செய்யும் பாஷாண்டிகளை அழிக்க, பஞ்சாயுதங்களும் இப்படி, யதிராஜராக
அவதரித்துள்ளன .இப்படிப்பட்ட யதிராஜர், நம்மை,முழுவதுமாகக் காப்பாற்ற வல்லவர்.

ஆஸ்ரிதர்கள் ரக்ஷணத்திலும் –ஆஸ்ரித விரோதி நிரசனத்திலும் தீஷித்து இருப்பதில்
பிரகாசமுள்ள எம்பெருமானின் பஞ்ச திவ்ய ஆயுதங்களின்
ஸ்வபாவத்தையே மாறுபடாமல் கொண்ட ஸ்ரீ யதிராஜரானவர்
தம்மைச் சார்ந்த ஜனங்களின் உஜ்ஜீவனத்திலும் –
பாஹ்ய குத்ருஷ்டிகளின் நிரசனத்திலும் சமர்த்தராக விளங்கினார் –

பிரதயன் விமதேஷூ தீஷ்ண-பாவம் –விமத விரோதி வர்க்கம் விபக்ஷம்-ஆஸ்ரித விரோதிகள் தானே நிரதிசய அனுகூல ஸ்வரூபனுக்கு
-மம பிராணா ஹி பாண்டவ —
குரூரமான ஸ்வ பாவம்-பஞ்சாயுதங்களுக்கும் ஸ்வாமிக்கும் -பற்றலர் வீய பாஞ்ச ஜன்யம் வைத்த போர் ஏறு
பிரபு அசமத் பரி ரஷணே-அஸ்மத் பரி ரக்ஷணம் -சர்வ பிரகார ரக்ஷணம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
-பரி உப சர்க்கம் ஆஸ்ரிதர்க்கு ஆபரணம் -இவை –
யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை -வேறு ஸ்வ பாவம் கல்பிக்க முடியாதே –யன் மயத்வம் -எந்த ஸ்வ பாவம் ஸ்வரூபம்
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே -பஞ்சாயுதம் -அம்சம் –வவ்ருதே -சமுதாய ஸ்வரூபம் -பூதலம் காப்பதற்கு ராமானுஜ முனி யாயின -ஏகி பூதம் –

ஸ்ரீ பஞ்சாயுதங்களான சங்கு சக்கரம் கதை வாள் வில் அனைத்துமே ஸ்ரீ ராமானுஜராக உருவம் கொண்டு இங்கே வந்தன
வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை தனது கொடிய தன்மையைக் காண்பித்து வாதம் செய்து வெற்றி கொள்ளும்
ஸ்ரீ ராமானுஜர் நம்மைக் காத்து அருளுவதில் வல்லவர் ஆவார் –

அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-
படையோடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-
இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே -33-பாசுரம் அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் –

—————-

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –

13-சமித உதய சங்கராதி கர்வ
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -13

பாணாசூர யுத்தத்தில் சிவபெருமானைக் கண்ணன் வென்றான்
இதே போல் அத்வைதிகள் வான்தங்களை ராமானுஜர் வென்றார்
யாதவர்களின் பெருமையை கண்ணஅவருக்குப் பெருமை அளித்தார் நம் ஸ்வாமி
அர்ஜுனன் தேர் முன் நின்று அவனது எதிரிகளை கிருஷ்ணன் வென்றான்
வேதத்தின் முன்பாக நின்று வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை நம் ஸ்வாமி வென்றார்
நம்பி மூத்த பிரானின் தம்பியான கிருஷ்ணனே -பார்த்த சாரத்தியே நம் ஸ்வாமியாக திரு அவதரித்து அருளினார்

சமித உதய சங்கராதி கர்வ-
சங்கரர் -ப்ரஹ்மம் இந்திரன் முதலானோர் ஆதி சப்தத்தால் –
கர்வம் உதிக்க அத்தை சமனம் பண்ணி -பாணாசுரன் -வத்சா அபஹரணம் -கோவர்த்தனம் –
சங்கர பாஸ்கர யாதவ -இத்யாதி நம் ராமானுஜர் -பார்ப்பான் ஆறு சமயங்கள் பதைப்ப –
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
குலம் உத்தரிக்க கோபாலன் -சங்க நிதி பத்ம நிதி கொடுத்து -கடலை ஊடறுத்து படை வீடு செய்து அருளி –
எதிரிகள் விட்ட அம்பை தான் ஏற்று -3-5-திருவாய்மொழி –
யாதவ அப்யுதயம் -ஈடு -முனிவின்றி ஏத்தி குனிப்பார் –
கலந்து பரிமாறி -உன்னதி உண்டு பண்ணி ஸூ பலத்தால்
நம் ராமானுஜர் யாதவ பிரகாசன் ஏக தண்டீ -ஸூ பலத்தால் -மாற்றி அருளி -த்வேஷப் பட்டு -மாற்றி -த்ரி தண்டி யாக்கி -சிகை கொடுத்து தன் திருவடி சேர்த்து –
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
பார்த்தன் இல்லாதவன் அபார்த்தன் -கௌரவர்கள் -உன்மதி போக்கி தரை மட்டம் ஆக்கி -கேவல ஸ்ரவணம் மாத்திரம் விஷயம் ஆக்கி
தத்வ ஹித புருஷார்த்தங்கள் -சுருதி -தப்பான அர்த்தங்கள்
அந்தர் ஜுரம் போக்கி -அருளி –
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -உத்ப்ரேஷை -இதுவே அதுவாகும் -நநு-ஊகம்-சாமான்ய சப்தம் -ஸாத்ருஷ்யம் கொண்டு –
ராமஸ்ய அவரஜ -அனுஜா தம்பி அநு ஜாதியே -இவர் தான் அவரோ -பூய திரும்பியும் -பல ராமானுஜர்
கிருஷ்ணன் -இளைய பெருமாள் -ராமானுஜர் –
சமாக்கியம் -சடாரி பாதுகை போலே -ச ஏஷ பூவ- உத்ப்ரேஷம் / நிர்ணயம் இரண்டும் கொள்ளலாம் -ச ஏவ பூய-பாட பேதம் –

தனது சொந்த படைப்புகளால்  -கீதை மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கக் கூறப்பட்ட- தவறான அர்த்தங்களை நீக்கினார்.

கார்த்திகையானும் கரி முகத்தானும் -22-படியே முக்கண்ணனான சங்கரன் செருக்கை அடக்கிய கண்ணன் –
யது குலத்தில் உதித்து தன் வல்லமையால் யாதவர்களை பிரகாசப் படுத்தியவன் –
பார்த்தனின் விரோதிகளை பெருமை யுறாமல் அழித்தவன்-

பலராமனின் தம்பியான அந்த ஸ்ரீ ராமானுஜன்-ஸ்ரீ பார்த்த சாரதியே தானே
இந்த நம் ஸ்ரீ ராமானுஜன் என்று அதிசயிக்கும் படி அன்றோ

சங்கராதி வேத குத்ருஷ்டிகளின் செறுக்கை தம் ஸ்ரீ ஸூக்திகளாலும் தர்க்க வாதங்களாலும் அடக்கி –
தம் புத்தி சாமர்த்யத்தாலும் கிருபா அதிசயத்தாலும் யாதவ பிரகாசரை வாழ்வித்து –
பிறர் -கல்பித்து -கூறும் ஸ்ருதிகளும் அபார்த்தங்களை களைந்து ஒழித்தவர்-

நாம்-நான் என்கிற அஹங்காரத்தை ஏற்படுத்துகிற அத்வைதக் கருத்துக்களைப் போக்கியவர்
யாதவப்ரகாசரை , அத்வைதத்திலிருந்து, ஸ்ரீவைஷ்ணவராக்கி,ஆட்கொண்டவர்.
ஸ்ரீபாஷ்யாதிகள் மூலமாக, கீதையின் பொருளை உணர்த்தியவர்.
யாதவர்களின் கீர்த்தியை ஓங்கச் செய்து, த்ரௌபதியின் மாங்கல்யத்துக்குக் கேடு வரா வண்ணம்
காத்த, கண்ணனே ஸ்ரீபாஷ்யகாரராக அவதரித்தார்.

—————

14- அபஹூஸ்ருத சம்பவம் ஸ்ருதீ நாம்
ஜரதீ நாம் அயதாயத பிரசாரம்
வி நிவர்த்தயிதம் யதி ஈஸ்வர உக்தி
விததே தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-14

அநாதியான உபநிஷத் கருத்துக்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லாமல் நேர்மையற்ற முறையில் உரை செய்தார்கள்
இப்படிப்பட்ட புற வாதங்களை ஒழித்து வலிமையான எதிர்வாதம் என்னும் கூண்டில் உபநிஷத் என்னும்
கிளியானது ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யங்களால் பாதுகாக்கப் பட்டது

ராமானுஜர், வேதங்கள் போன்ற பழைய வேதங்களின் பறவைகளுக்கு நிரந்தர சரணாலயமாக
தனது படைப்புகளுக்கு ஒரு கூடு கொடுத்தார், ஏனெனில்
பறவைகள் வேதப் படைப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் பாஹ்ய வாதிகளால் சித்திரவதைக்கு ஆளாகின்றன.

அபஹூஸ்ருத சம்பவம் -பஹூசுருதர் -பல படி பலவற்றை கேட்க வேண்டும் இல்லாதார் அல்ப ஸ்ருதர்கள் -இவற்றால் சம்பவிக்கப் பட்ட
ஸ்ருதீ நாம்- ஜரதீ நாம் -அநாதியான வேதங்கள் -ஜீரணம் சரீரம் ஆவதால் ஜரா மூப்பு –
சமன்வயதிகாரணம் -நியோக – த்யான யோகம் ஜர அத்வைதிகள் –
ஜுராசிக் age -முன் காலம் -அநாதித்வம் வயோதிகம் இரண்டும் வேதங்களுக்கு –
அயதாயத பிரசாரம் -யதாயத்த அர்த்தம் இல்லாமல் போக
வி நிவர்த்தயிதம்-விசேஷ நிவர்த்தனம் –
யதி ஈஸ்வர உக்தி– விததே -யதீஸ்வர -யுக்தி
தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-பூர்வ உத்தர மீமாம்சம் பஞ்ஜர ஸத்தா-ஆக்கி அருளினார் இவர் ஸ்ரீ ஸூ க்திகளால் -பஞ்ஜர-கூடு-

ஸ்ரீ எம்பெருமானாருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் –
அல்ப ஞானம் படைத்த குத்ருஷ்டிகளால் உண்மைக்கு புறம்பான
அர்த்தங்களை பிரசாரம் பண்ணுவதால்
வேதங்களுக்கு ஏற்பட்ட இளைப்பைப் போக்கி –
அவைகளை மறுக்க ஒண்ணாத நியாயங்களால்
நன்றாக ரக்ஷிக்கப் பட்டவைகளாய் ஆக்கி யுள்ளன
உபநிஷத் ஆகிற கிளியை மீண்டும் ரஷித்து அருளினார் —
வேதாந்த விழுப் பொருளை சித்தாந்தப் படுத்தி அருளினார் என்றபடி –

கிளிகள் —பக்ஷிகள்—இவற்றுக்கு சிறகு முளைத்து தத்தித் தத்திப் பறப்பதைப் பார்க்கும் சிறுவர்கள்,
அவற்றைப் பிடித்து, சிறகுகளை இழுத்தும் துன்புறுத்தியும் மகிழ்வர்.
பெரியவர்கள், அவை துன்புறுவதைப் பார்க்கச் சகிக்காமல் , இரும்புக்கூடு அமைத்து, கிளிகளை உள்ளே
வைத்துப் பழம் முதலியவை கொடுத்துப் பாதுகாத்து, அவற்றின் பேச்சை ரசிப்பர் .
அறிவாளிகள் அவை துன்புறுவதைச் சகிக்காமல், அவற்றின் விருப்பப்படிப் பறக்க விடுவர்.
சிற்றறிவுள்ள மதவாதிகள் , வேதங்களாகிற புராதன காலப் பக்ஷிகளை அலைக்கழித்து,
தவறான அர்த்தங்களைச் சொல்லி, துன்புறுத்துவர்.
ஆனால்,நமது ராமாநுஜரோ இவற்றைக் கண்டித்து, வேத வாக்யங்களுக்கு
உண்மையான அர்த்த விசேஷங்களைச் சொல்லி, வேதங்களைக் காத்தார்.

————

15-அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வாமியின் தேஜஸ்ஸு ஸூர்யனை விட ஒளி மிக்கதாகும்
நன்கு கற்று அறிந்த ஞானிகள் தங்கள் மார்பில் எப்போதும் ஆச்சார்ய பரம்பரை என்னும்
இரத்தின மாலையை மானசீகமாக அணிந்து இருப்பார்கள்
அந்த குருபரம்பரை மாலையின் நடுநாயகமாக நம் ஸ்வாமி உள்ளார்

(ராமானுஜம்) மையமானது மற்றும் அணிபவரின் இதயத்திற்கு மிகவும் பிரியமானது மற்றும் அருகில் உள்ளது.

அமுநா-அ சவ் -அவர் இவர் உவர் -சப்தம் -வந்தாய் போ வாராதாய் வாராதாய் போல் வருவான் -பிரத்யக்ஷம் இல்லை
மானஸ அனுபவம் -ஆழ்வாருக்கு -உரு வெளிப்பாடு பாவனா பிரகர்ஷம் -பிரத்யக்ஷ சாமானாகாரம்-அத்யந்த ப்ரீதியால்
அனவரத சிந்தனை -ஆண்டாளுக்கு பாவனா பிரகார்ஷம் –
தேனை -அநேந-நடுவில் –அமுநா-என்றபடி
தபந அதிசாயி பூம் நா -தபந-அனந்த கோடி -சூர்யன் தேஜஸ் விஞ்சி –
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ -நாயக ரத்னம் -மத்திய மணி – பிரதானம் -அலங்கரிக்க
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி-அத்யந்த பிரபாவம் குரு பரம்பரை ஹாரம்
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி -இருதயத்தில் இருந்து சந்தோஷப்பட வைக்கும்
விபாதி -விளங்கும் யாருக்கு விபுதா நாம் -ஜெயா விபூதி பதே-நிலத்தேவர்கள் -அமரர்கள் -நித்ய ஸூ ரிகளுக்கும்

தேஜோவானான ஸூரியனிலும்-விஞ்சிய தேஜஸை யுடைய நம் ஸ்வாமி
நாயக ரத்னமாக அமைந்துள்ளதால்
மிகவும் பெருமை யுற்ற குரு பரம்பரையான ரத்ன ஹாரமானது மிகவும் பெருமை யுடையதாய்
தத்வ வித்துக்களான வித்வான்களுக்கு சிந்தனைக்கு இனியதாக விளங்குகிறது –

பூர்வாசார்ய பரம்பரையில், யதிராஜர் ஸுர்யனை விடப் ப்ரகாசத்துடன் நடுநாயக ரத்னமாக விளங்குகிறார் .
இதனால், குருபரம்பரைக்கே ஏற்றம் .குருபரம்பரை என்கிற மணிகளால் ஆன ஹாரத்தில் ,
பண்டிதர்களுக்கு , ஹ்ருதய அங்கமாக (மனத்துக்கு உகந்ததாக —மார்பில் பொருந்தியதாக)
இந்த நாயகக் கல்லாக, ஸ்ரீ ராமானுஜர் விளங்குகிறார்

————————

16-அலூந பஷச்ய யதி ஷமாப்ருத
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்
யத் உத்பாவ ஸூ த்த ஸூ வ்ருத்த
சீ தளா பவந்தி முத்தாவளி பூஷணம் புவ –

யதிராஜர் என்று போற்றப்படும் இராமானுஜ சித்தாந்தங்கள் அனைத்தும் அவற்றை எதிர்த்து வீண் வாதம் செய்ய இயலாதபடி உள்ளன
அவர் ஏற்படுத்திய பரம்பரையில் ஸ்ரீ ஹரியின் உண்மையான தன்மை சிறிதும் குறைவின்றி உள்ளது
இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் தூய்மையானவர்களாக -சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாக
தூய எண்ணம் கொண்டவர்களாக -பரமபதம் சென்றாலும் அங்கு உள்ளவர்கள் வரிசையில் முத்துபோன்று ஒளி மிக்கு ஆபரணம் போல் இருப்பார்கள்

அலூந பஷச்ய யதி -பக்ஷம் சிறகு -லூனம் வெட்டப் பட்ட
மைநாகம் பர்வதம் -கிருத யுகம் மலைகள் இறக்கை இருக்க -இந்திரன் வஜ்ராயுதம் கொண்டு ஷேத்திக்க –
வாயு காத்தது சமுத்திரத்தில் தள்ளப் பட்டதால் சிறகுகள் இழக்காமல் -சிரமம் தீர்க்க இளைப்பாற சொல்லிற்றே
ஷமாப்ருத –ஷாமா பூமி –ப்ருத் -பூதரங்கள் மஹீதாரங்கள் குல பர்வதங்கள் -பாஷ்யகாரர் அலூன பக்ஷம் கொண்ட பர்வதம் –
பகவத் அனுபவ கைங்கர்ய உபகார பரம்பரையை யாராலும் ஷேத்திக்க முடியாதே -பாஹ்ய குத்ருஷ்டிகள் -பக்ஷம் கண்டிக்க முடியாதே
விசிஷ்டாத்வைத பக்ஷம் -ஸ்திரம் என்றவாறு
பர்வதத்தில் மூங்கில்கள் -பச்சை பசேல் என்று இருக்குமே
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்ஹரிதம் பச்சை –ஹரி தத்வம் பசுமை நிறம்
வம்சம் மூங்கில் பரம்பரை –வம்சீ புல்லாங்குழல் வம்சீ விபூதி கரன்
அஷதம்--குறைவற்று /விபாதி -விளங்கும் -தீர்க்கமான கரும் பச்சை நிறம்
சிஷ்ய பரம்பரை –வம்சம் –ஹரி தத்வம் ஸ்ரீ யபதி தத்வம் பொதுவானதே எல்லா சம்பிரதாயங்களில் -பசுமை நன்றாக விளங்கும் –
யத் உத்பாவ-யத்தில் இருந்து உண்டான –ஹரி தத்துவத்தில் இருந்து -விளைந்த முத்துக்கள்
ஸூ த்த – பவந்தி–வெண்மை
ஸூ வ்ருத்த பவந்தி–செறிந்த ஆகாரம்
சீ தளா பவந்தி-குளிர்ந்த
முத்தாவளி பூஷணம் புவ –லோகம் -இட ஆகு பெயர் -லோகத்தார்களுக்கு -என்றவாறு –
திருவடி சம்பந்தம் -திரு முடி சம்பந்தம் -ஏற்றம் பெற்ற பூர்வாச்சார்யர்கள் -வம்ச சப்தம் அனைவரையும் குறிக்கும் -ஸ்ரீ யபதியே பரதத்வம் என்பது குறைவற்று இருக்குமே
முத்துக்கள் -பரம பாகவதர்கள் -ஸமாச்ரயணம் பண்ணி -ஆச்சார்ய துல்யர் -வம்சத்தில் உதித்த முத்துக்கள் பிரபன்ன ஜனங்கள்
ஸூ த்த-தேவ்தாந்தாந்தரா உபாயாந்தர இத்யாதி சம்பந்தம் இல்லாத சுத்தி கொண்டவர்கள் மற்று ஓர் தெய்வம் உளது என்று இருப்பார் உடனும் உற்றாமல்
ஆச்சார்ய சம்பந்தம் விடாமல் –
தீபா உத்பன்ன ப்ரதீபங்கள் போலே இருப்பார்களே –
வ்ருத்தம்-அனுஷ்டானம் -துல்ய சீல வாயோ வ்ருத்தம்-சோபனமான வ்ருத்தம் –
சீதளம் -ராக த்வேஷாதிகள் இல்லாமல் குளிர்ந்த கடாக்ஷம்
1-4-ஆச்சார்ய லக்ஷணம் -வாடைக் காற்று -குளிர்ந்த ஸ்வ பாவம் காட்டும் என்று காட்டி அருளி –
சிலேடைகள் நிறைந்த ஸ்லோகம் -பர்வதம் -எம்பெருமானார் -அலூன பக்ஷம் வைதரம்யா த்ருஷ்டாந்தம்
-மூங்கில்கள் பசுமை -வெண்மை ஆகாரம் குளிர்ச்சி -வம்சம் -முத்துக்கள்

ராமானுஜரின் சிறகுகள் இன்னும் வெட்டப்படாத மைனாக மலை!
அவரது குழுவிலும், சீடர்களின் வரிசையில் (மூங்கில் போல) பசுமையான தன்மை நீடிக்கிறது
மற்றும் ஹரியின் கொள்கை உயர்வாக ஆட்சி செய்கிறது!
வரிசையில் உள்ள அனைத்தும் மிக உயர்ந்த தன்மையுடன் தூய்மையாக பிரகாசிக்கின்றன;
குளிர்ந்த மற்றும் இரக்கமுள்ள; பெரிய ஒளிவட்டத்துடன் உலகை முத்து மாலையாக அலங்கரிப்பார்கள்.
(வம்சம் என்றால் பரம்பரை மற்றும் மூங்கில்;
ஹரி என்றால் இறைவன் மற்றும் பச்சை நிறமும் கூட)

புறச் சமயிகளால் கண்டிக்க இயலாத எம்பெருமானார் தர்சனம் -ஆகிய பரதத்வம் —
ஸமஸ்த கல்யாண குணங்களோடும் -திவ்ய மங்கள விக்ரகத்துடன்
வெட்டிக் களையப் படாத இறகுகளை யுடைய பர்வதம் போலே-
(மைனாக பர்வதம் விருத்தாந்தம் -சிறகுகள் உண்டே பர்வதங்களுக்கு )
ஸூ ரஷிதமாக விளங்குகிறது
இந்த சம்பிரதாயஸ் தர்களான மஹான்கள் சத்துக்களையும்
குளிர்ந்த இதயம் படைத்தவர்களாயும்
பூமிக்கே அணிகலன்களாகயும் யுள்ளனர் –

ஸ்ரீ உடையவர், மைநாக மலையை ஒத்தவர்
மைநாக மலையின் சிறகுகள் துண்டிக்கப்படவில்லை.
அதைப் போல, இவருடைய மதமும் ,ஒருவராலும் துண்டிக்கப்படாதது.
இவருடைய சிஷ்ய பரம்பரையில் ( அதாவது ,பச்சை மூங்கிலாக உருவகப்படுத்துகிறார் )
ஹரிதத்வம் —பகவத் தத்வம் –பச்சையாக இருக்கிறது ( செழிப்பாக இருக்கிறது).
இந்த சிஷ்ய பரம்பரையான பச்சை மூங்கிலில் ( கணுக்கள் –மூங்கிலில் இருப்பதைப்போல, சிஷ்ய பரம்பரை ) ,
சிஷ்யர்கள் சுத்தர்கள், நல்ல ஒழுக்க சீலர்கள், ( குளிர்ச்சி–சீதளம் ), கருணை உள்ளவர்கள்–
இப்படி, முத்துவடம்போல, பூமாதேவிக்கு ஆபரணமாக ஆகிறார்கள்

————————

சந்திரன் உடன் ஒப்புமை —

17-அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –

பகவானின் திருவடிகளை எப்போதும் பற்றி உள்ளவர்
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளின் மூலமும் சிறிதும் கைவிடாதபடி உள்ளவர்
எந்தவித தோஷத்தாலும் தீண்டப்படாதபடி உள்ளவர்
மூடர்கள் மனதில் நிலை பெறாமல் உள்ளவர்
உலக விஷய ஆசைகளுக்கு அப்பால் உள்ளவர்
தன்னை அடியவர்களுக்கு சந்திரன் போல் ஆஹ்லாதகரமாக குளிர்ந்து உள்ளவர்
இப்படிப்பட்ட ஸ்வாமியை அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –

அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
சிரஸ் சம்பந்தம் உண்டே அபாய தேவதாந்த்ர சிரஸ்
அநபாய விஷ்ணு பாத ஸம்ஸராயம்
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம் -உஜ்ஜிதம் -விடப்பட்டது –கலா அவயவம் வித்யைகள் –
அகளங்க யோகம் -களங்கமே இல்லையே
அஜடாசய உதிதம் -ஜடம் -அசேதனம் -ஜல சமுத்திரத்தில் இருந்து உதயம் -பரப்ரஹ்மம் சங்கல்பத்தாலே இவர் ஆவிர்பாவம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் -அஸூர கிரஹங்கள் பீடிக்கப் படும் -மீமாம்சகர்கள் சேஷஷ்வர -ராகு -சிரஸ் மட்டும் -கேது சரீரம் மட்டும் –
சுருதி சிரஸ் -கர்ம காண்டம் தனியாக பூர்வ மீமாம்சகர்கள் -பாட்ட பிராக்கள் ராகு மீமாம்சகர்கள்
அத்வைதிகள் கேது -கர்ம விசாரம் வேண்டாம் என்பர்
-உபராகம் -கிரஹணம் –தூரகம் -தத் ஸ்பர்சம் அற்றவர்

பகவான் திருவடிகளையே இடைவிடாமல் பற்றியபடியே -தோஷங்கள் தீண்டாமல் -மூடர்கள் மனசில் நிலை பெறாமல்
உலக விஷய ஆசைக்கு அப்பால் உள்ளவர் -தன்னை அண்டியவர்கள் இடம் சந்தரன் போலே குளிர்ந்து இருப்பவர் –
இப்படிப்பட்ட ராமானுஜரை நான் அடைகிறேன் –
விஷ்ணு பதம் -ஆகாசம் -கர்ப்ப லக்ஷணம் – இடை வெளி -மணி வயிறு வாய்த்தவன் என்பதால்
-அபாயம் இல்லாத அநபாயமான விஷ்ணு திருவடிகளில் அன்றோ இந்த சந்திரன்-
ஷயம் இல்லாத -களங்கம் இல்லாத சந்திரன் அன்றோ இவர் –
அஜாடம் அஜலம் -ஜலாசயம் சமுத்திரம் -முட்டாள் கூட்டம் -அறிவற்றார் அறியார்கள் இந்த சந்த்ர பிரபாவம் –
உபராக தூரகம் மறைக்க முடியாத தேஜஸ் கொண்டவர் –

ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன்.
பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால்.
சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது,
இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல;
எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார்,
அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

சந்திரன் களங்கம் உள்ளவன்
உபராகத்துக்கு க்ரஹணத்துக்கு உட் பட்டவன் –
ஸ்வாமி இடத்திலோ தோஷத்துக்கு பிரசக்தியே இல்லையே
சகல வித்யைகளையும் பூர்ணமாக அதிகரித்து –
தோஷம் அற்று –
மகான்கள் மனசில் சதா பிரகாசித்து –
ராக துவேஷாதிகளுக்கு புறம்பாயும்
உபராகத்துக்கு உட் படாத யதிராஜ சந்திரனை உபாசிக்கிறேன் –

யதிராஜர் சந்த்ரனுக்கும் மேம்பட்டவர் .
சந்த்ரன் ,நிலவினால் குளிர்ச்சியைக் கொடுத்து, மகிழ்விப்பதைப்போல,
யதிராஜரும் தன் அடியார்களுக்கு, பகவானிடத்தில் ப்ரபத்தியை அநுஷ்டிக்கச்செய்து,
பாபங்களைப்போக்கி மகிழ்விக்கிறார்.
சந்த்ரனைவிட கம்பீரமான தோற்றம் உடையவர்.
பகவானின் திருவடிகளையே எப்போதும் த்யானிப்பவர்.
எவ்விதக் களங்கமும் இல்லாதவர்.
ராகு, கேதுவால் சந்த்ரன் பீடிக்கப்படுகிறான்;
ஆனால், எம்பெருமானாரோ ,காம புருஷார்த்தங்களை விரும்புவாரோடு ஒருபோதும் சேராதவர்.
எம்பெருமானாரின் திவ்ய குணநலன்களில் ஈடுபட்டு அவருக்கு அடிமை செய்ய விரும்பி , பூஜிக்கிறேன்

—————

அவதார பிரயோஜனத்தை அருளிச் செய்கிறார் –

18-அபிகம்ய சம்யகநகா ஸூ மேத்ஸ
யதி சக்ரவர்த்தி பத பத்ம பத்த நம்
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹ தசயா சமிந்ததே

ஸ்வாமியின் திருவடிகள் ஒப்பில்லாத நகரம் போன்று உள்ளன
அந்த நகரத்தை அண்டுபவர்கள் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகின்றனர்
தங்கள் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்
அடியார்களுக்குத் தொண்டு செய்வதில் இன்பம் பெரும் நிலை அடைகின்றனர்
உயர்ந்தவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் –உயர்ந்த கல்வி பெறுவதிலும் அளிப்பதிலும் -தேர்ச்சி பெற்று மேன்மை அடைகின்றனர்

அபிகம்ய சம்யக்
-சேர்ந்து அடைந்து -எங்கே என்றால் -திடமான சித்தம் சாமர்த்தியம் –சம்யக் -ராமானுஜ யதிராஜா ஸார்வ பவ்மன்
திருவடி தாமரை ஆகிய பட்டணத்தில் -அபிமதம் பெற -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி பெற -மற்ற எங்கும் வாழ்வு அற்று
நாடு நகரமும் நன்கு உடன் -அறிய -ஒரு நாயகனே இவர் அன்றோ -நாடு கிராமம் அவிசேஷஞ்ஞர் -நகரம் பட்டணம் விசேஷஞ்ஞர்-
-அல்பம் மகா ரத்னம் வரை பெறலாமே -பலர் வாழும் பட்டணம் -மீண்டும் கிராமம் போகாதவர் -திருவடிகளில் வாழ்வு பெற்று இருப்பார்கள்
அநகா ஸூ மேத்ஸ–
அநகா–தோஷம் அற்ற -ஆச்சார்யர்- பகவத் -துல்ய -பக்தர்கள் -தோஷ ரஹித்தவம் -சத்ருக்னவ் நித்ய சத்ருகன்
– அநகா-கோதில் அடியார் –ஸ்வாபாவிக பகவத் பக்தியை அடியார் இடம் வைப்பவன் –
ஸூ மேத்ஸ-சோபனமான மதி -இத்தால் சம்பவிக்கும் -ஆச்சார்ய அபிமானம் மூலம் -புத்தியில் சகலார்த்தங்களும் பிரகாசிக்கப் படுபவர் –
-அநகா -அத ஏவ ஸூ மேத்ஸ-
யதி சக்ரவர்த்தி –
யதிராஜாக்களுக்கு ராஜா -சர்வ பவ்மன்-
பத பத்ம பத்த நம் –
திருவடி தாமரை ஆகிய -பட்டணம் –
பத்ம ரேகை -சங்க ரங்க கல்பக -த்வஜ –சரணாரவிந்தம் –
இலச்சினை பட நடந்து –தளர் நடை நடப்பான் -அசாதாரண -ஆச்சார்யர் திருவடிகளுக்கு பத்ம ரேகை பிரதான்யம் -சக்கரவர்த்தி லக்ஷணம்
உறுதி உடன் வாழ -சாமர்த்தியம் உடன் சென்று அடைந்த –சம்யக் அதிகம்ய –
ஹரி பக்த தாஸ்ய ரசிகா-பவந்தி-ஹரி பக்தர்களாக இருந்து அனகர் ஆகி வளர்ந்து -அடியார் அடியார் -சேஷ பூத -சரம நிலை -அடைந்து
பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா-சமிந்ததே –
நன்கு வளர்கின்றார்கள் -இந்ததே –சம் இந்ததே -பிறர் பார்த்து அதிசயிக்கும் படி -எந்த அளவுக்கு என்றால் –
அடியார் அடியார் –அடியோங்களாக வளர்ந்து -புருஷார்த்த காஷ்டை -அடைகிறார்கள் –
நிரவதிக ப்ரீதி உடன் ராகம் உந்த விதி என்பதால் இல்லாமல் –
ரசிகர் -பூர்ண திருப்தி இத்தால் அடைபவர்கள் -இது மேலும் வளர்ந்து –சமிந்ததே –
பரஸ்பரம் க்ரய விக்ரயார்ஹ தசயா -தசை அடைந்து -ஒருவர் ஒருவரை -விற்கும் படி -பரஸ்பரம் –பரகா பரம் -பரி பூர்ண உரிமை என்றபடி –
எம் தம்மை விற்கவும் பெறுவார்கள் -கேசவா என்னும் கிளர் ஒளி யாகிய மூர்த்தி என்று பேசும் அடியார்கள்
நித்ய விபூதி துல்யம் அன்றோ இவர் திருவடிகள் -பரஸ்பரம் இப்படி இருப்பார்களே -சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் இருப்பார்களே –
பட்டணம் சென்று வேலை பார்க்க படித்து மேலும் மேலும் வளர்வது போலெ எதி சக்ரவர்த்தி திருவடிகளை அடைந்து –
மீட்சி இல்லாமல் இந்த காஷ்டையிலே இருக்கப் பெறுவோம் -ஸ்வரூப ஆவீர் பூதம் – அடைவோம் -மதுரகவி நிலையையை பெறப் பெறுவோம்
ஸ்ரீ ராமாயணம் போலே பகவத் ஸமாச்ரயணம் திருவாய் மொழி போலே ஆச்சார்யர் ஸமாச்ரயணம்

பெரிய மனிதர்களும், களங்கமற்றவர்களும், கற்றறிந்தவர்களும், உண்மையான பெருநகரத்தை நாடுவதன் தகுதியை சரியாகப் பகுத்தறிவார்கள்,
யதி-சக்கரவர்த்தியின் பாதங்கள். அவ்வாறு குடியேறினாலும், அவர்கள் களத்தில் அறிவாளிகள், பக்தர்களுக்கு அடி பணிந்தவர்கள்;
பாகவதங்களால் பொருட்களைப் பண்டம் போல வாங்கவோ அல்லது விற்கவோ,
சரியான மனப்பான்மையுடன், மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

முன்பு மந்த மதிகளாயும் நல் நடத்தை இல்லாதவர்களாயும் இருந்தவர்கள்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக் கொண்டு
நாரணற்கு ஆளாயினரே-என்கிறபடியே
நல்ல புத்தி யுடையவர்களாய் குற்றம் அற்றவர்களாய்
எம்பெருமானார் திருவடிகள் ஆகிற திவ்ய நகரத்தை அடைந்து
பாகவத பண்புகளில் நிலை பெற்று
ஒருவருக்கு ஒருவர் விற்கவும் வாங்கவுமாம் படி விளங்குகின்றனர்

குற்றமில்லாத, வித்வான்களான பாகவத கைங்கர்ய அநுபவம் மிகுந்தவர்கள்
யதிராஜரின் திருவடித் தாமரை என்கிற நகரை அடைந்து, ஒருவரை ஒருவர்
விற்கவும் வாங்கவும் இருக்கும் நிலையிலே தங்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
( ஒரு பாகவதருக்கு பகவத் ஆராதனத்துக்குச் சில பொருட்கள் வேண்டியிருக்க பணம் போதாதபோது,
அப்போது அங்கு வந்த பாகவதர், என்னை விற்றுக் கிடைக்கும் பணத்தை, பகவத் ஆராதனத்து செலவுக்கு ,
உபயோகப்படுத்துங்கள் என்றாராம் இப்படி, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை
இல்லாமல் , ஒருவருக்கொருவர் உதவுவது )

—————

அப்படி உலகோர் திருந்தியமைக்கு தாமே த்ருவ்ஷ்டாந்தம் –

19-புருஷ அதிவாத பரிவாத பைசு ந
ப்ரப்ருதி ப்ரபூத பத நீய பங்கி லா
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா

என்னுடைய வாக்கு என்னும் நீரானது இதுவரை எப்படி இருந்ததது என்னில்
கடுமையான சொற்கள் நிறைந்ததாகவும்
எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதாகவும் மற்றவர்கள் குற்றங்களைப் பழிப்பதாகவும்
அவர்களை பற்றித் தகாதது கூறுவதாகவும் இருந்தது
இது போன்று பலவிதமான தோஷங்கள் கூடியதாகக் கலங்கிக் காணப்பட்டது
ஆனால் அதில் இடைப்பட்ட ராமானுஜர் சம்பந்தம் என்னும் தேத்தாங்கொட்டை மூலம்
எனது வாக்கு என்னும் நீர் தூய்மை பெற்று இப்போது பரி சுத்தமாகவும் இனிப்பாகவும் உள்ளது

இதன் விளைவாக, சாதுக்களுக்குப் பிரியமாக இருக்க வேண்டிய சரியான உச்சரிப்பு இப்போது என்னிடம் உள்ளது.

புருஷ அதிவாத பரிவாத பைசு –
துன்பம் கொடுக்கும் கடுமையான -இல்லை என்று நெடும் சொல்லால் மறுத்த -நீசன் -பாருஷ்யம் கடும் சொல் –
அதிவாத -மிகைப் படுத்தி -யதார்த்த வாதி இல்லாமல் -சத்யா வாதித்தவம் இல்லாமல் –
வாய்மை எனப்படுவது யாதொன்றும் தீமை இல்லாத சொல் -அயோக வியத்தேசேதம் -தீமை இல்லாத சொற்கள் எல்லாம் வாய்மை இல்லை
பரிவாதம் -குணங்களில் செயல்பாடுகளில் தோஷம் சொல்வது -தோஷம் கிரஹிக்கவே கூடாதே
நம் தோஷம் கண்டால் லாபம் -அசலார் குண கிரஹணம் லாபம் உண்டு நாம் மாற்றி பண்ணுகிறோம் ஹானி விளைவித்து கொள்கிறோம்
பைசு – தோஷம் இல்லாத போது சொல்வது கோள் சொல்வது -பரிவாக்கத்துக்கு மேலே உள்ள குற்றம் இது
தீக் குறளை சென்று ஓதோம்
ந ப்ரப்ருதி ப்ரபூத- பத நீய பங்கிலா –
இவை முதலான மகத்தான பாபங்களால்
அஸூயம் -பதநீயம் – பாபத்தால் –அப்ருதகத -கலங்கி –
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ –
-மம சரஸ்வதி -வாக்கு –
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா-
இன்று யதிராஜர் பெரும் கீர்த்தி சொல்லாத தொடங்கி
தேத்தாங் கொட்டை போலே சுத்தப் படுத்தப் பட்டது
கதகம்-தேத்தாங் கொட்டை-
அப்புள்ளார் கிருபையால் கேட்டு சொல்லி விசோதித்தா -நன்கு சுத்தி கரிக்கப் பட்டது
ஸூபகா
அத்யந்த மங்களம் உண்டாக்கப் பட்டதே மேலும் –
ஸ்வததே
சோபனமும் ஆனதே தன்னாலே –
இனி மேல் சேஷி தம்பதி திருவடிகளில் சேரும் காலம் எண்ணி கால ஷேபம் செய்வதுவே க்ருத்யம் –

முன்பு அடியேனுடைய வாக்கு கொடுமை நிறைந்து –
பிறரை பழித்தும் கோள் சொல்லியும்
அதிவாதம் பண்ணியும் –
இதனால் தூய்மை அற்றதாய் சேறு போலே கலக்கம் உற்று இருந்தது –
ஸ்வாமியைப் பற்றியபின் -ஸ்வாமியுடைய பிரபாவம்
ஆகிற தேத்தாம் கொட்டை யால் தெரிவிக்கப்பட்டு
அனைவராலும் ருசிக்கும் படி அழகாய் அமைந்ததே –

குளத்தில் அழுக்காக இருக்கும் நீர் , தேத்தாங்கொட்டையினால் தெளிவைப் பெறுவதைப் போல,
அடியேன் பேச்சுக்கள், குத்தல்,மிகைப்படுத்துதல், வம்பு, கோள் சொல்லல், இதுபோன்ற குற்றங்களால்
குழம்பி இருந்தபோது, எம்பெருமானாரின் புகழ் பரவிய அடியேனின் சொற்களால் தெளிவடைந்து
பெரியோர்கள் கொண்டாடும் நிலையில் உள்ளது.

——————————

இப்படி தமக்கு வாழ்ச்சி அளித்த எம்பெருமானார் திருவடிகளில் –
அத்திருவடிகளின் பிரபாவத்தை வாயாறப் பேசி சரணம் புகுகிறார் –

20-அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
அஜஹத் த்ரிவர்க்கம் அபவர்க்க வைபவம்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔ ஷதம்
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –

ஸ்வாமியின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்னில்
ஞானவான்களுக்கு இவை முன்னாக எம்பெருமானின் திருவடிகளும் முக்யம் அற்றவையாகவே தோன்றும்
ஆறாம் பொருள் இன்பம் இவற்றை எதையும் துறக்காமலேயே மோக்ஷ இன்பத்தை அளிக்க வல்லவை
கலக்கம் நிறைந்த மனநிலையைப் போக்கும் மருந்தாகவே உள்ளன
இப்படிப்பட்ட திருவடிகளை அடியோங்களான நாம் சரணம் என்று நாடுவோம்

இந்த பாதங்கள் சரணடைந்தவர்களுக்கு, (தர்மம், அர்த்தம், காமம்,) மற்றும் மோக்ஷம்
ஆகிய இலக்குகளையும் பாதுகாக்கும்.
அவர்கள் பலவீனமானவர்களின் போக்குகளை சரி செய்வதில் வல்லவர்கள்

அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
சத்துக்களுக்கு-சதாம் -பாகவத ஆச்சார்ய சேஷத்வ ரதி உடன் உள்ளவர்க்கு
முரபித் பதம் -முராரி -விரோதி நிராசன சீலன் திருவடிகள் -யவரை பற்ற அநு கல்பம் -பிரதான கல்பம் -திவ்ய தம்பதிகள்
-பூமி நீளா-தேவி -நித்ய ஸூ ரீகல் -ஆச்சார்யர் அநு கல்பம் –
சத்துக்கள் ஆராதனத்தில் பாஷ்யகாரர் பிரதானம் -முராரி பதம் அநு கல்பம் ஆக்கப் படும்
-வடுக நம்பி நிலை -நம் பெருமாள் நீர் சேவியும் எம்பெருமானுக்கு நான் பால் காச்சி அமுது செய்விக்க வேண்டுமே
அஜஹத் த்ரிவர்க்கம் -அபவர்க்க வைபவம்
இம்மையும் சாதித்து வானவர் நாடு -நீ கண்டு கொள்-என்று வீடும் தரும் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவி அல்லேன் -ஆழி பிரான் எனக்கே உளன் –
இவரும்-அப்படியே அருளுவார் –
அஜஹத் – முக்கிய அர்த்தம் அமுக்கிய அர்த்தம் -காக்கைகள் இருந்து தயிரை காப்பாற்று -பூனை வந்தது -ஒரு காக்காய் வர வில்லை –அஜஹத் -லக்ஷணை
காக்கையும் மற்றவற்றையும் காட்டுவது போலே
அஜஹத் த்ரிவர்க்கம் -அபவர்க்க வைபவம்
இங்கு உள்ள காலம் வரை ராமானுஜர் அடியார் என்ற புகழும் கொடுத்து மேலே அபவர்க்க வைபவம் கொடுக்கும்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔஷதம்
மனஸ் சஞ்சலம் -நிவர்த்திக்கும் -சஞ்சல மநோ வ்ருத்தி -நின்றவா நில்லா நெஞ்சு –
அப்பியாசம் வைராக்யம் கொண்டே வெல்ல வேண்டும் -கீதை -போகாத ஊருக்கு வழி அவன் சொல்ல
-உடையவர் திருவடிகளை வரிக்கவே இது சாத்தியம் ஆகும் -இது ஒன்றே மருந்து –விசேஷ விவிதமான நிவர்த்தனம் –
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –
ஸ்ரீ பாஷ்யகாரர் திருவடியை -புகலாக வரிக்கிறோம் -அவன் திருவடிகள் ஸ்தானத்தில் இவர் ஒரு திருவடியே
உபாயம் க்ருஹம் ரக்ஷகம்-சரணம் சப்தம் –
வ்ருணீ மஹே –லும் – உத்தம புருஷ பஹு வசனம் -வரித்தோம் ஆகிறோம் –

சத்துக்களுக்கு இத்திருவடிகள் பகவத் சரணாரவிந்தமும்
இதற்கு அடுத்த படியே என்னும்படி பரம ப்ராப்யமாய் இருக்கும் —
பெரு நிலம் அளிக்கும் –
எல்லாம் தந்திடும் –
நிலையில்லா என் பாவி நெஞ்சத்தை தன்னிடத்தில் நிலை நிறுத்த மருந்தாயும் இருக்கும் –

இப்படிப் பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை புகலாகப் பெற்றேன் என்று ப்ரீதர் ஆகிறார் –

எம்பெருமானாரின் திருவடிகள் ,பகவானின் திருவடிகளையும்விட மேன்மையானவை.
( பகவானின் திருவடி இரண்டாம் பக்ஷம்)
இம்மை, மறுமை பலனை அளிக்கவல்லவை.
சஞ்சல புத்தியைத் தெளிவித்து, தத்வ அர்த்தங்களை உணர்த்தும் .
இப்படிப்பட்ட ,யதிராஜரின் திருவடிகளில் சரணம் அடைகிறேன்.

சோமாசி ஆண்டான் திருநாராயண பெருமாள் செல்லப் பிள்ளைக்கு பாட –
எம்பெருமான் ஆட –
உடையவர் சேவித்து களிப்பார்-
மோக்ஷ சாம்ராஜ்யம் நம் இராமானுசன் இட்ட வழக்காய் இருக்கும் –
உமது ஸூக்ருத பலம் நீர் பாட நீர் களிப்புறம் படி நான் ஆடிக் காட்டுகிறேன் –
உடையவர் தந்தால் உமக்கு பேறு உண்டு -என்றதும்
அன்று முதல் தேவு மற்று அறியேன் என்று அதி ப்ரவணராய்
கைங்கர்யத்தில் ஈடுபட்டு பாவ பந்தத்துடன் -எம்பெருமானார் -என்பர் –
பட்டர் நம்பெருமாள் என்று சொல்வது போலே –

—————

இப்படி பெருமை வாய்ந்த யதிராஜ சரணாரவிந்தத்தை ஆஸ்ரயித்தவர்களுடைய
பெருமையை அருளிச் செய்கிறார் –

21-ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா
நிகமாந்த நீதி ஜலதே தல ஸ்ப்ருச
பிரதிபாதயந்தி கதிம் ஆபவர்க்கிகீம்
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா –

ஸ்வாமியின் திருவடிகளை தங்கள் மனத்தில் பதித்தவர்களும்
அவரது திருவடிகளில் தங்கள் மனத்தை வைத்தவர்களும் ஆகிய சான்றோர்களின் வலிமை என்ன
தங்கள் மூச்சுக் காற்று மூலமே தங்கள் வாதங்களை எதிர்ப்பவர்களை வீழ்த்தி விடுவர் .
வேதாந்த நீதி என்னும் ஆழ் கடலின் தரையை அடைபவர்
மோக்ஷத்தைப் பற்றிய உபாயத்தைப் போதிப்பதில் வல்லவர் ஆவார்

ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா –
உசுவாச நிசவாதம் மூலமே அவதூதம் ஆக்கி
சத் ஸம்ப்ரதாயிகள் இல்லாத பாஹ்ய குத்ருஷ்டிகள் பர வாதிகள் -பிரகட -ப்ரசன்ன-இரண்டு வகைகள் உண்டே
அநாயாசேனே-நிரசித்து –
பதஞ்சலி -ஆதிசேஷனாக இருந்து -பாணினி அஷ்டாத்யாயி வியாக்யானம் மஹா பாஷ்யம் -சேஷாவதாரம்-வாதாசனம் -வாக்கையே உண்டு –
திரைக்கு உள்ளே இருந்து -ஆதி சேஷன் உரு கொண்டு சங்கைகள் தீர்த்து –ஒருவர் திரை விலக்க பஸ்மம் ஆனார்கள் அனைவரும் –
ஒருவர் வெளியில் சென்று வர -ப்ரஹ்ம ரஜஸ் ஒருவர் உஜ்ஜயினியில் இருந்து 3000 வருஷம் –
பச தாது பஸ்மாம் -பாடம் சொல்லி –கோவிந்த பாதர் தொடையில் எழுதி -ஆடு மேய்க்கும் அலமேலு பிழைக்க வைக்க
எழுதின இலைகள் ஆடு சாப்பிட மீதி உள்ளது தான் மஹா பாஷ்யம் என்பர் –
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் -கிருஷ்ணன் உக்தியால் செய்வான் -பெருமாள் ஆர்ஜவ வியாபாரம் -அது போலே ராமானுஜர் -என்பர் –
கலையினால் பெற்றவன் கிருஷ்ணன் –
தொண்டனூர் -நம்பி பிரதிஷ்டை-
அமுதனார் -ஆதிசேஷன் அவதாரமேயென்று சொல்ல வில்லை -யதிராஜா விம்சதியில் சொல்ல வில்லை –
விஷ்வக் சேனர் -பஞ்சாயுதம் என்பர் தேசிகன் –
தங்கள் மூச்சுக்கு காற்றாலே விரட்டி அடிக்கப் பட்ட -சாமர்த்தியம்
நிகமாந்த நீதி ஜலதே தல ச்ப்ருச-
வேதாந்த நியாயங்கள் ப்ரஹ்ம ஸூத்ர -அதிகரண நியாயம் -சமுத்திரம் -கரை காண இயலாத -மூழ்கி முத்து எடுப்பவர்
-தல ஸ்பர்சி மூக்கி முத்து எடுப்பவர்கள் –
பிரதிபாதயந்தி கதிம் ஆப வர்க்கிகீம்
அபவர்க்கம் மோக்ஷ பிராப்தி -இதுதான் பரம புருஷார்த்தம் என்று ஸ்வரூபம் காட்டி
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா —
ஆசயா சந்தனம் -யதி ராஜ யதி சக்கரவர்த்தி யதி சார்வ பௌம-பூமி முழுவதையும் தனக்கு ஆக்கிக் கொண்ட –
சாத் க்ருதா-ஒன்றிலே சமர்ப்பிக்கப் பட்டு
திருவடிகளில் சமர்ப்பிக்கப் பட்ட ஹிருதயம் உள்ளவர்கள் –
கிருபையா கேவலம் ஆத்ம சாத்க்ரு -ஆளவந்தார் –

ராமானுஜரின் பாதங்களில் அசைக்க முடியாத பக்தியைப் பற்றுபவர்கள், வேதாந்த சாஸ்திரப் பெருங்கடலில் ஆழமாக ஆழ்ந்து
(தேர்ந்த கருத்துகளின் முத்துக்களை எடுக்க), அவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து போட்டியாளர்களை
மிகவும் சிரமமின்றி தோற்கடித்து, முக்தியின் பாதையில் நம்மை வழி நடத்துகிறார்கள்.

அன்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப-என்றபடி
ஸூஷ்ம அர்த்தங்களை தெரிந்து தெளிவாக உபதேசிப்பார்கள் அன்றோ –
இவர்களுடைய ஹூம் என்ற மூச்சுக் காற்றாலே பிரதிவாதிகள் அனைவரையும் அழிக்கக் கூடியவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் நிலை பெற்ற மனசை உடையவர்களாய்
தாங்களே மோக்ஷ சாம்ராஜ்யம் அளிக்க வல்லவர்கள் –

யதிஸார்வ பௌம —யதீச் சக்ரவர்த்தி ,ஸ்ரீ உடையவர்.
இவருடைய திருவடிகளில் மனத்தையே சமர்ப்பித்தவர்கள் பாகவதோத்தமர்கள்;
வேதாந்த ஞானம் மிக்கவர்கள்; பிறமதப் பிரசாரகர்களை நிரஸிப்பவர்கள்

———————

மீண்டும் உடையவர் சரணம் பற்றுகிறார் —

22-மூலே நிவஸ்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந

ஆழ்ந்த வேர்கள் கொண்ட பரந்த வேதம் என்னும் மரத்தின் கீழ் எப்போதும் அமர்ந்துள்ளவர்
வேதங்களை வஞ்சகம் மூலம் வீழ்த்த வல்லவர்கள் இடம் இருந்து அதனைக் காத்து அதன் அச்சம் போக்குபவர்
திருக்கையில் த்ரிதண்டம் ஏந்தியவர்
ஸ்ரீ அரங்கன் திரு முற்றத்து அடியார்களின் மனம் என்னும் தடாகத்தில் வாழும் பரம ஹம்ஸர்
இப்படிப்பட்ட ஸ்வாமி தாமாகவே வந்து தனது பேறாகவே அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும்

மூலே நிவச்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
வேதாந்தம் மஹத் வர்ஷங்கள்-கல்ப விருக்ஷங்கள் -அநந்தம்-மூல -கல்ப சாகி பர ப்ரஹ்மம் -இவரே ரக்ஷகம் –
மூலம் -வேர் நிவஸ்ய அமர்ந்து –
ஸ்ருதிகளையும் சிறுது சிரசில் உள்ள அவனும் இவரால் ரக்ஷிக்கப்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
பிரதாரக -வஞ்சகர் -ஏமாற்றுபவர் –த்ரி தண்டம் வைத்து நிரசித்து -ரக்ஷித்து –நைக தண்ட -அநேக தண்டம் -த்ரி தண்டம்
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
மானஸ சரோவர் -தீர்த்தம் -புனிதம் -அதிலே ராஜ ஹம்சம் -சிரேஷ்ட பஷியில் சிரேஷ்டர்
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந –
சர்வத்தையும் சாஷாத்காரித்து -அநவரதம் மனனம்-மனன சீலர் முனி –
நமக்கு உபாய பூதர் -ரக்ஷகராக ஆகக் கடவர் –
வந்தார் தாமே -அசை-சிந்தாமணி மாலை -வந்தார் தாமே -தம்மை நிர்பந்திப்பார் பிரார்த்திப்பார் யாரும் இல்லாமல் வந்தார் -என்ற கருத்தில் –
ஸ்வயம் -நம் இடம் அபேக்ஷிக்காமல் தானே வந்து –

வேத முறைக்கு எதிராகக் கலகம் செய்யும் மதவெறியர்களை விரட்டியடிப்பவர்;
மற்றும் பக்தர்களின் (ராமானுஜரின்) இதயத்தின்  ” மானசரோவரில் ” அரச அன்னம் போல் நிற்பவர்

பரந்து கிடைக்கும் வேதமாகிய பெரிய மரத்தின் நிழலில்
கையில் முக்கோல் ஏந்தி அமர்ந்து வஞ்சனையுள்ள
குத்ருஷ்டிகளால் உண்டாகும் பயத்தை போக்கி அருளி –
ஸ்ரீ ரெங்கநாதன் அடியார்கள் மணம் ஆகிற தடாகத்தில்
ராஜ ஹம்சம் போலே சஞ்சரிக்கும் எம்பெருமானார் அடியேனுக்கு புகலாக வேண்டும் -என்கிறார் –

ராமாநுஜர் பரமஹம்ஸர். இந்தப் பரமஹம்ஸர்,
ஹம்ஸம் மாநஸரஸ்ஸில், பெரும் பெரும் மரங்களின் அடியே கூடு கட்டி வாழ்வதைப்போல,
திருவரங்கச் செல்வனுக்குத் த்ரிகரண சுத்தியாகத் தொண்டு செய்யும் பக்தர்களின்
மனம் என்கிற மாநஸரஸ்ஸில் சுகமாக வாழ்கிறார்.
அதாவது,
உடையவரை, ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆஸ்ரயித்து, அவரைப் பூஜித்து, இதயத்தில் இருத்தி , த்யாநம் செய்கிறார்கள் .
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன் ,உடையவரை ராஜ ஹம்ஸமாகவும், பரமஹம்ஸராகவும்
நினைத்துச் சரணம் அடைகிறார்.

———————

எம்பெருமானாரைப் புகலாக பற்றி அவர் அனுக்ரஹத்தால் விஷய ப்ராவண்யன் அற்றவன் ஆனேன் –

23-சத் மந்திர வித் ஷிபதி சம்யமி நாம் நரேந்திர –
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
விஷ்வக் ததம் விஷய லோப விஷம்
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவ நாபி –

ஸம்ஸாரம் என்ற பெரிய நாகத்தின் வாய் மூலம் வெளிவந்த உலக விஷயங்களில் பற்று என்னும் கொடிய விஷமானது நான்கு திசைகளிலும் பரவி உள்ளது
அந்த விஷத்தைத் தனது மந்த்ரங்கள் மூலம் போக்க வல்ல பாம்பாட்டி போன்று யதிராஜர் உள்ளார்
எப்படி என்றால் -மிகவும் பெருமை யுடையவனும் கருடனைக் கொடியாக உள்ளவனும் ஆகிய பகவானைத் த்யானிப்பதன் மூலமே ஆகும்

சத் மந்திர வித் ஷிபதி
மந்த்ரங்களை அறிந்தவர் -சத் மத்ரங்கள் -சர்வ லோக க்ஷேமம் மங்களம் -அனுசந்திப்பார்க்கும் கேட்ப்பார்க்கும் –
மந்த்ரமும் அர்த்தமும் -வித் -அறிந்தவர் -ஸ்திர புத்தி கொண்டவர்
சம்யமி நாம் நரேந்திர –
நரர்களுக்கு -ராஜா -சம்யமி அடக்குதல் -யதி ராஜர் என்றபடி
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
ஜிஹ்மகம் -சர்ப்பம் –ஜிஹ்மம் -அகங்கார மமக வக்ர கத்தி முன்னே பார்த்தோம்
சம்சார சர்ப்பங்கள்மூலம் நமக்கு வந்த
விஷ்வக் ததம் விஷய லோப விஷம் –
தொடர்ந்து சூழலில் அகப்பட்டு –விஷய லோப விஷம் -இந்திரியங்கள் சப்த்தாதி சிற்றின்ப விஷயங்கள் –லோபம்
-தாழ்ந்தது என்று அறிந்தாலும் விடாதே லோபி –
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவநாபி –
தனக்கே உரித்தான திட மஹாத்ம்யம்
கருடத்வஜ-கருடக் கொடியாக உடையவன்
பாவநா -த்யானம்
மந்த்ரம் -த்யானம் -சேர்ந்தே -இருப்பவை -பிரணவம் ஷிப ஸ்வாக -கருட மந்த்ரம் -ஆத்மாநாம் கருட இத த்யானம் செய்ய பலம் -கிட்டும் –
ஷிபதி-சப்தம் இதனாலே இங்கே –
சப்தம் அர்த்தம் இரண்டும் முக்கியம் மந்திரத்துக்கு -ஆடி ஆடி -2-4-பிரகலாதன் நரசிம்மன் -தாத்பர்ய ரத்னாவளி –
ஷபீத உஷா வல்லபன் -ஷிப்த லங்கம் -புள் உயர்த்தாய் -2-4-4–
அஷ்டாக்ஷர -ஷடாக்ஷர துவாதச அக்ஷரமந்த்ரம் -வியாபக மந்த்ரம் -சம்சார நிவ்ருத்தி -பக்தி யோகத்துக்கு இவை -அஷ்டாக்ஷரம் ஸ்ரேஷ்டம்
த்வயம் -பரந்யாசம் -பிரபத்தி –
நிஜாபி-ஸ்ரீ பாஷ்யகாரர் பெரிய திருவடி –நிஜ -சப்தம் -சாஸ்திரம் அம்ருதம் -பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் –நிஜம் சப்தம் அங்கும் -மங்கள ஸ்லோகத்தில்
பகவத் சிந்தனை பெரிய திருவடி போலே சிந்தனை பண்ணுபவர் என்றவாறு –

ராமானுஜர், ஆற்றல் மிக்க மந்திரங்களில் வல்லவர், மற்றும் உண்மையான பாம்பைக் கவர்ந்திழுப்பவர் –

விசுவாசிகள் அல்லாத விஷ பாம்புகளால் தனது பக்தர்கள் தாக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறார்.

உடல் முழுவதும் பரவியிருக்கும் (கருடனைப் பற்றித் தியானிப்பதன் மூலம்) உணர்வுப் பூர்வமான மோகம் என்ற விஷத்தையும் நமக்குக் குணப்படுத்துபவர்.

சதாச்சார்ய உபதேச முகமாய் நலம் தரும் சொல்லான திரு மந்த்ரார்த்தங்களை அளித்தும்
யதிகளுக்கு ராஜாவாகவும்-
நிரதிசய ப்ரபாவமும் யுடைய எம்பெருமானார் –
சம்சாரம் ஆகிய விஷ பாம்பு மூலம்
நம்முள் பரவி சூழ்ந்து இருக்கும் விஷய ப்ராவண்யம் என்கிற விஷத்தை
புட் கொடியனான எம்பெருமான் அனுக்ரஹம் கொண்டு போக்கடிக்கிறார் –

மால் பால் மனம் வைக்க மங்கையர் தோள் பற்று விட்டறும் என்றபடி –

நரேந்த்ரன் என்பவன் விஷவைத்யன் (பாம்பாட்டி )
இவன் ,மந்த்ர ஸித்தி உள்ளவர்களிடம் கருடமந்த்ரத்தை உபதேசமாகப் பெற்று,லக்ஷக்கணக்கான தடவை ஜபித்து,
ஸித்தி அடைந்து, எந்த ஸர்ப்பம் கடித்து இருந்தாலும் பல இடங்களில் பலமுறை கடித்து இருந்தாலும்,
கருட மந்த்ரத்தால் , பாம்பின் விஷம் முழுவதையும் இறக்கி, கடிபட்டவனைப் பிழைக்க வைக்கிறார்.

அதைப்போல, ராமானுஜரும், அஷ்டாக்ஷரம், த்வயம் போன்ற மந்த்ரங்களை பெரியநம்பிகளிடம் உபதேசமாகப்
பெற்று, தத்வ,ஹித, புருஷார்த்தங்களை நன்கு அறிந்து, தன் அடியார்கள் ப்ரபத்தியை அனுஷ்டிக்கச் செய்து,
அடியார்களின் ஸம்ஸார வ்ருக்ஷ விஷங்களை நீக்கி,நல்ல வாழ்வை அளிக்கிறார்.

—————

எந்தன் மெய் வினை நோய் களைந்தான் என்றார் கீழ் –
களைந்து நல் ஞானம் அளித்தனன் என்று போற்றுகிறார் இங்கு –

24-நாத ச ஏஷ யமி நாம் நக ரஸ்மி ஜாலை
அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
வ்யாக்யாந கேளி ரசி கே ந கர அம்புஜேந –

ஸ்வாமியின் ஞான முத்திரையில் உள்ள திரு நகங்களில் இருந்து தேஜஸ்ஸூ ப்ரவாஹம்
அடியேன் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞானம் என்ற அந்தகார இருளை நீக்குகிறது
உபதேசம் செய்ய வேண்டிய வகை அறிந்து தனது தாமரைத் திருக்கைகள் மூலம்
எனது உள்ளத்தில் சிறந்த ஞானம் என்னும் சித்ரத்தைத் தீட்டி அருள்கிறார்

நாத ச ஏஷ யமி நாம் –
யமி– யதி வாசக சப்தம் யதி நாதர்
ஏஷ– நம்மில் ஒருவர் -சக நித்ய ஸூரிகள்
நக ரஸ்மி ஜாலை –அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்-
இருளை போக்கி எழுதுகிறார் -நகத்தில் இருந்து புறப்படும் தேஜஸ் கற்றைகளைக் கொண்டு
மதியம் தம -அந்தர் -உள்ளே உள்ள -அப நீயம் -போக்கி
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
எழுதும் முத்திரை போலே -இவ-சப்தம் -4-1-6-அஸீனா அதிகரணம் -ஆஸீனா சம்பவாத் –
அசலத்தவம் -மலை போல த்யானம் -அசைவு இல்லாமல் இருப்பவை எல்லாம் த்யானம் இல்லை -அது போலே லிகதி இவ
எங்கே -சித்தத்தில் எழுதுகிறார்
எத்தை -தோஷம் அற்ற ஆத்மதத்வம் என்கிற சித்திரம்
அனேகம் ஆத்ம சித்திரம் -பகவத் சரீரம் என்ற உணர்வால் குற்றம் இல்லாத –விஜ்ஞான சித்ரம் அநகம்-
வ்யாக்யாந கேளி ரசிகே நகர அம்புஜேந –
வியாக்கியான முத்திரை –செந்தாமரைக் கைகளால்

ராமானுஜர் தனது வலது உள்ளங்கையில் அமர்ந்து, சைகையில், அறிவுரை மற்றும் அறிவுறுத்தல்.
பொலிவுடன் கூடிய நகங்கள், நம் இதயங்களில் உள்ள இருளை (அறிவை) அகற்றி,
இரு விரல்களையும் ஒருங்கிணைத்து, நம் இதயங்களில் ஒரு ஞானத்தை – தகவலறிந்த
ஓவியம் வரைவதற்குத் தயாராகிறது.

யோகீந்த்ரரான எம்பெருமானார்
என்னுள்ளே மறைந்து —
என்னைத் தீ மனம் கெடுத்து –
மருவித் தொழும் மனமே தந்து –
தம் திருக் கை தாமரைகளால் வியாக்கியான சைலிகளை
ரசித்துப் போற்றக் கூடிய என் உள்ளத்திலே
நல் ஞானம் ஆகிற சித்தரத்தை எழுதுகிறார் போலும் –

உடையவர்,யோகீச்வரன் . இவர், ஊனக்கண்ணால் பார்க்க இயலாததையும் பார்க்கும் சக்தி பெற்றவர்.
இவர், தமது உபதேச முத்ரை உள்ள வலது திருக்கர நகங்களின் காந்தியால், மனத்தில் மறைந்திருக்கும்
அறியாமை இருளை அகற்றி, ஞானத்தை உபதேசிக்கும் விதமாக , உபதேச முத்ரையோடு கூடிய திருக்கைகளில்,
இரு விரல்களையும் குவித்து, ஒப்பற்ற ஓவியர் போல ஒளிர்கிறார்

———————

இனி திருப்பொடு எழில் ஞான முத்திரை வாழியே -என்கிறபடியே
ஞான பிரதராய் எழுந்து அருளி யுள்ள யதிராஜரை சாஷாத் கரித்து மேலும் அனுபவித்து மகிழ்கிறார்
பாஷ்யகாரரை, பக்தி மூலமாக சாக்ஷாத்கரித்து,உபதேச முத்ரையோடு கூடிய திருமேனியை
ஸ்வாமி தேசிகன் ஸேவித்து அனுபவிக்கும் ஸ்லோகம்.

25-உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்

நமது உள்ளத்தில் தகாத அறிவு மட்டுமே உள்ளது
இதனைப் போக்குவதற்காகவே யதிராஜர் தனது திருக்கையில் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஞான முத்திரை வைத்துள்ளார்
இதனைக் காணும் போது அவர் தானாகவே வலிய வந்து வேதாந்த உண்மைகளை நம் உள்ளத்தில் வைத்து அருளுவதாகவே தோன்றுகிறது
அத்தகைய ஞான முத்திரையை நாம் அண்டி இருப்போமாக

உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
உபநிஷத் ரகஸ்ய அர்த்தங்களை மேலே எடுத்து –
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
மனசிலே வைத்து -முன்பு எழுதுவது போலே -இங்கே உபநிஷத்துக்கள் ரகஸ்யார்த்தங்களை எடுத்து நம் மனசில் வைத்து அருளுகிறார் –
அல்ப ஞானம் உள்ள நமக்கு –
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
கண்டு -சேவித்து –
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்
குவிந்த தாமரை மொட்டு போலே -உத்போதம் மலர்வது
வியாக்கியான முத்திரை உபதேச முத்திரை பர்யாயம் -திருமலை இன்றும் சேவிக்கிறோம்
ஹயக்ரீவர் -தேசிகன் -நிறைய இடங்களில் சேவிக்கிறோம் –
25 தத்வம் ஜீவாத்மா அறிய வேண்டிய –அஹங்கார மமகாரங்கள் அற்று உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –என்று-
இந்த 25 ஸ்லோகத்தில் அமைத்து அருளினார்-

உபநிடதங்களில் மறைந்திருக்கும் அர்த்தத்தை, மந்தமான புத்திசாலிகளின் இதயங்களில் ஆழமாக பதிய வைக்கும்
முயற்சியில் எழுப்பப்பட்ட, மலர்ந்த தாமரை போன்ற அவரது கையில் உள்ள முத்திரையை நாம் உணர்கிறோம்.

உபநிஷத்துக்குள் மறைந்துள்ள பொருள்களை மந்த மதிகளான நம்முடைய மனசில் பதிய வைப்பதற்காக –
உயர்ந்து இருப்பதும் –
அலர்ந்த தாமரை மலர் போல் மனத்துக்கு இனியதாய்
நமக்கு ப்ராப்தமான உபதேச முத்திரை யுடைய திருக் கைகளை சேவித்து களிக்கிறோம்-

என்ன உபதேசம் செய்கிறாராம் ?
ஸ்ரீமந்நாராயணனே பரதத்வம்; ஜீவர்களும் அசேதனங்களும் அவருக்கு சரீரம்; அந்தர்யாமி ப்ராஹ்மணத்தில்
( உபநிஷத் ) உள்ளதை, உபதேச முத்ரையைக் காட்டி,உபதேசிக்கிறாராம் .
நம்வீட்டில், நமக்குத் தெரியாமல்,இருக்கிற புதையலை , கையை உயரத் தூக்கிக் காட்டுவதைப்
போல, உபதேச முத்ரை இருக்கிறதாம்.
இவர், லக்ஷ்மண முநி
அபாத்ரத்தில் ஞாநோபதேசம் கூடாது என்பதை நன்கு அறிந்து, நம்மை நல்ல சத்பாத்ரம் என்று உணர்ந்து ,
உபதேச முத்ரையோடு ப்ரத்யக்ஷமாகி இருக்கிறார் என்கிறார்

——————

ஞான முத்திரையை கீழ் இரண்டு ஸ்லோகங்களில் அனுபவித்து
இனி ஸ்வாமி திருவாய் மலர்ந்து அருளும் ஸ்ரீ வாக்ய சைலிகளை போற்றுகிறார் –
உபதேசிப்பவர், அவரின் உபதேச முத்ரை,இவற்றை வர்ணித்தவர்
இந்த ஸ்லோகத்தில் உபதேசமொழிகளின் சொற்சுவை, பொருட்சுவையைச் சொல்கிறார்.

26-ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி –

யதிராஜரின் புண்ணிய கிரந்தங்கள் வேதாந்த வரிகளையும் அவற்றுள் உள்ள மறை பொருள்களையும் நம் அருகே அழைத்து வந்து விடுகின்றன
நமது உள்ளும் புறமும் நம்மைப் பெரும் தொந்தர வுகளுக்கு ஸம்ஸாரம் என்ற பயங்கரம் ஆட்படுத்தியபடியே உள்ளது
இத்தகைய நோயால் பீடிக்கப்பட்ட நமக்கு நன்மை செய்வதாக நமது உள்ளத்தில் பதிந்து நிற்பதாக அவை உள்ளன –

ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
வேதாந்த வாக்யார்த்தங்கள் -கொண்டும் -இவர் ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டு ஆகர்ஷிக்கிறார்
அர்த்தங்களை ஆகர்ஷித்து நம் மனசில் பொருந்துகிறார்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
நம்மை பிடித்து ஆட்டும் அநாதி அபராதங்கள் அஞ்ஞானங்கள் கர்மா வாசனை ருசி -இத்யாதி சம்சார பேய்களை
துஸ் சக்திகளை உச்சாடனம் -விரட்டும் மந்த்ரம்
-இவரது ஸ்ரீ ஸூ க்திகள்-வெருட்டி ஓட்டும் -என்றவாறு –
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
கோரமான சம்சார பீதி –பவ-கோர பவ -ஜ்வரம் -சம் ஜ்வரம் -அந்தரஜுரம் சமனப் படுத்தினார் ஸ்ரீ பாஷ்யகாரர்
விஜ்வர கிருதக்ருத்யர் ஆனார் பெருமாள் –ததா ராம –
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி
வசாம்சி – ஸ்ரீ ஸூக்திகள் -ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும்

ஸ்ரீ ராமானுஜரின் இலக்கியப் படைப்புகள், உப நிஷத்துக்களில் இருந்து அதிக அளவு வைராக்கியத்துடன் இருக்க “வழி காட்டுகின்றன”.
மந்திரம் உச்சரிப்பதைப் போலவே, உள்ளும் வெளியிலும் நாம் அனுபவிக்கும் சித்திரவதைகள் மற்றும்
சம்சார உலகில் மக்கள் பாதிக்கப்படும் நாள்பட்ட நோய் மற்றும் குறைபாடுகளுக்கு எதிராக
உறுதியான மற்றும் பாதுகாப்பான ஊட்டச் சத்தை இந்த படைப்புகள் அழிக்கின்றன .

எம்பெருமானாருடைய உபதேச பரம்பரைகள் வேதாந்த வாக்யங்களுக்கு மகிழ்ச்சி யுண்டு பண்ணுபவையாயும் –பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் சம்சார பெரு நோய்க்கு சமனம் பண்ணும் பத்யங்களாய் மனதில் கொண்டு போற்றும்படியான நிதிகளாய் விளங்குகின்றன –

உடையவரின் உபதேசம், அவருக்குத் திருப்தியையும் சிஷ்யர்களுக்குச் சந்தேகமே இல்லாத தெளிவையும் ஏற்படுத்துகிறதாம்.பெரிய பெருமாளுக்கோ,தன்னுடைய சங்கல்பத்தின்படி, உடையவர், வேதாந்த ஸம்ப்ரதாயப் ப்ரவர்த்தகர் ஆனதால், மகிழ்ச்சியாம் -உடையவரின் வாதங்கள், “ஆகர்ஷணானி “–பிறமத வாதிகளைத் தத்வ வாதத்தால், மாற்றி,அவர்களை ஈர்த்து, வசீகரித்து,விசிஷ்டாத்வைதிகளாக மாற்றுகிறதாம் -எந்த ஆதாரமும் இல்லாமல், ப்ரமாணம் இல்லாமல், தர்க்கிக்கும் அத்வைதிகளை, ஸ்ரீஉடையவரின் ஸ்ரீஸுக்திகள் , பேய் பிசாசுகளை விரட்டும் உச்சாடன மந்த்ரங்களைப் போல, விரட்டுகிறதாம். –ஸ்ரீ ஸுக்திகள் —மணி.
இதில் உள்ள மந்த்ர உச்சாடனங்கள் – —மந்த்ரம்இவை ஸம்ஸார தாப ஜ்வரத்துக்குப் பத்தியம்–ஔஷதம்இவ் விதமாக, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,மணி,மந்த்ரம் , ஔஷதம்.

————————

உபதேச வாக்ய ஸ்ரேணியில் ஈடுபட்டவர்
மேலே ஸ்வாமி திங்களும் ஆதித்யனுக்கும் எழுந்தால் போலே விளங்குவதை கொண்டாடுகிறார்
இந்த ஸ்லோகத்தில், அக்நி ,சந்த்ரன் , ஸுர்யன் மூவரையும்
யதிராஜரோடு ஒப்பிட்டு உடையவரின் மேன்மையைப் பாராட்டுகிறார்.–

27-சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா –

அருள் என்னும் குளிர்ந்த காரணமாக சந்த்ரன் போலவும் தன்னை ஆஸ்ரயித்தவர்கள் தோஷங்களைப் போக்குவதால் அக்னி போலவும் இவ் வுலகம் வளம் பெற ஸூர்யன் இன்றியமையாமல் இருப்பது போல் இருந்து நமது தாபத் த்ரய பிரவாஹங்களைப் போக்கி அருளுவதால் ஸூர்யன் போலவும் ஆக மூன்று வித தேஜஸ்ஸுக்களும் கலந்து போல் உள்ளார்

அவர் வெற்றியுடன் பிரகாசிக்கட்டும்-

அவர்- அந்த ராமானுஜர், தனது குளிர்ச்சியான மற்றும் கனிவான தாக்கத்தால், அசாதாரண அக்னியாக நடந்து கொள்கிறார்;

அவர்- நம் இருளை (நம் குறைகளை) நீக்கும் விஷயத்தில் நாவல் சந்திரனாக இருப்பவர்;

அவர்- நமக்கு ஏற்படும் மூன்று வகையான துன்பங்களை நீக்குவதில், இரண்டாம் சூரியனாக இருப்பவர்;

இவ்வாறு, நமக்கு இரட்சிப்பை வழங்குவதற்காக அவர் மூன்று பேரின் கூட்டமாக விவரிக்கப்படலாம்.

சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்-அக்னிக்கும் சிகா வான் -மேல் நோக்கி ஜ்வாலை -பூர்வ சிக ப்ராஹ்மணர்
-அக்னி உடைய உஷ்ணம் இல்லாமல் -உவமானம் திருத்தி சீத ஸ்வ பாவ -கிட்டி அனுபவிக்கும் படி
-வாடை காட்டு -தூது -ஆழ்வார் -குளிர்ந்த ஆச்சார்ய ஹிருதயம் போலே இருக்குமே -ஸூபக அனுபவ-கிட்டி எளிதில் அனுபவிக்கும் படி
-சிகாவான் ஸ்வாமி –
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச -ஒஷாதிகளுக்கு அதிபதி சந்திரன் -சோமாயா கந்தர்ப்பாயா இத நம
-ஜயாதி கர்ம ஒஷாயாமி முடித்து ஹோமம் -முடிப்பார்கள் -ராசாதிபன் -சந்திரன் -ரசம் உடைய ஸ்தாவரங்கள் ஓஷதி -ஒளஷதம் என்றால் மருந்து –
தோஷங்களை நசிக்கும் அவமர்த்தம் -அந்தகாரம் இருளை போக்கும் -சம்சாரிக அஞ்ஞானம் போக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர்
-இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தும் –நியதி உந்நதி இவருக்கு -தேய் பிறை இல்லையே -பிரகாசம் வளர்ச்சி கொண்டே இருக்குமே –
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்-சூர்யன் -பிரஜைகளின் தாபம் -அனுபந்தம் -சம்பந்தி -தொடர்பு அறுக்கும் -சம்சார தாபம் போக்கி -ஸ்வாமி
-சம்சாரம் ஜரா மரணாதி-இவை அனுபந்தங்கள் -சேர்ந்தே தொடர்ந்து வருமே -ஜரா மரணம் -சோகம் மோகம் பசி தாகம் போல்வன -இவற்றை சனம் பண்ணி அருளுவார் –
சூர்யன் தாபம் உண்டாக்குவான் -சமன சாமர்த்தியம் இல்லையே
தாப த்ரயங்களை போக்கி -ஷடூர்மிகள்-போக்கி அருளி –
யதிராஜர் சப்தத்தால் போகுமே –
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா-தாம -ஜ்யோதிஸ் -ஜெயந்தி சம்பவம் தாம -வையயந்தி விபூஷணம் –
சூர்யன் சந்திரன் அக்னி – தேஜஸ் பதார்த்தங்கள் -மூன்றின் தேஜஸூம் சேர்ந்து பிரகாசிக்கிறார்
தனக்கு உள்ளே அடக்கி -அப்ருதக் சித்தமாக கொண்டு விளங்குகிறார்
தாமம் -இருப்பிடம் -பரந்தாமன் போலே –த்ரிதாம -சாஷாத் பகவான் -ஸ்ரீ வைகுண்டம் -ஷீராப்தி -சூர்ய மண்டல மதியவர்த்தி –உபாஸ்யமாக
மூன்று -நிலைகள் -பக்த நிஷ்டர்களுக்கு -அம்பஸிய மத்யே -இத்யாதி -வித்யா சஹா ஸவித்ரு மண்டலா மத்திய வர்த்தி
–ஹிரண்யஸ்ய –கப்யாசம் புண்டரீகம் அஷிணி-காயத்ரி மந்த்ரம் -இவனையே குறிக்கும் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் பிரபன்னர்களுக்கு த்ரிதாமம் –
கருவிலா திருவிலாதார் அணி அரங்கம் என்னா -வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள் -அனந்தாழ்வான் –
வானவர்கள் சந்தி செய்ய நின்றான் –
பகவானையும் தன்னுள் அடக்கிய ஸ்ரீ பாஷ்யகாரர் –இருப்பிடம் வைகுந்தம் -இத்யாதி –

பாபங்களை எரித்து நம்மை தூய்மை படுத்தும் ப்ரபாவத்தால் அக்னியாய் இருப்பாராயும் –
இனிய குளிர்ந்த ஸ்வ பாவத்தால் -அஞ்ஞானமான இருளை போக்கடிப்பதில்
நியதமான மஹிமையுடைய சந்திரனாக இருப்பவரும் –
ஆத்யாத்மிகாதி தாபங்களின் ஸம்பந்தத்தை ஒழிப்பதில் சூர்யன் போன்றவரும்
இப்படி ஒருங்கே சேர்ந்துள்ள மூன்று தேஜஸ்களை யுடைய எம்பெருமானாருக்கு பல்லாண்டு -என்று
மங்களாசாசனம் செய்து அருளுகிறார் –

அக்நியிடம் , அசுத்தம் நெருங்கினால் சுட்டு, எரித்துவிடும்.
அதனிடம், உஷ்ணம் என்கிற தோஷம் இருக்கிறது.
ஆனால், உடையவரோ,
தானும் பவித்ரம், தன்னை அடைபவர்களையும் குளிர நோக்கி அவர்களையும்
பவித்ரமாக்குகிறார். இது அவரின் மேன்மை.

சந்த்ரன் ,இருளைப் போக்கி, எல்லாரையும் குளிர்வித்து மகிழ்விக்கிறார் .
உடையவர்,
மன இருளைப் போக்கி,வேதாந்தக் கருத்துக்கள் என்கிற சந்த்ர குளிர்ச்சியை—சிஷ்யர்களுக்குக் கொடுக்கிறார்.
மேலும்,அவர்களின் தவறுகளை –கேடுகளை , கோபித்துத் திருத்துகிறார்.
இப்படி ,எல்லாரும் கொண்டாடும் திருமேனியின் பேரழகில் (சந்த்ரனைவிடப் பேரழகு )
அனைவரும் வணங்கும்படி,ப்ரகாசிக்கிறார் .

பல்லாயிரம் ஒளிக் கற்றைகளோடு பிரகாசிக்கும்,ஸுர்யனைப் போல யதிராஜர் ப்ரகாசிக்கிறார் .
ஸுர்யனின் கொடூர வெய்யிலால், பூமி உலர்ந்து வறண்டு விடுகிறது.
ஆனால், உடையவரோ,
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம் , ஆதிதைவிகம் என்கிற ஸம்ஸாரத் தாபத்ரயங்களைப் போக்கி, ரக்ஷிக்கிறார் .

இப்படி, யதிராஜர்,அக்நி ,சந்த்ரன் ,ஸுர்யன் —-மூன்று பேரின் ஸ்வரூபமாக இருப்பதால்,
(த்ரிதாமா—மூன்று இடங்களை ,திருப்பாற்கடல், ஸுர்ய மண்டலம், ஸ்ரீ வைகுண்டம் –இருப்பிடமாக உடைய பகவான் )
ஸ்ரீமந்நாராயணன் , அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன்னையே த்யானித்து, துதித்து,அர்ச்சித்து வரும்
உடையவரின் ஹ்ருதயத்தில் ,நித்ய வாஸம் செய்கிறான்.
ஆதலால் , யதிராஜர் , பகவானால் ஆட்கொள்ளப்பட்டார்
இவர்–குளிர்கிற அக்நி . எப்போதும் வளர்பிறைச் சந்த்ரன் -2வது ஸுர்யன்

————

ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் –
மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர –

அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்

ராமானுஜம் கிட்டத்தட்ட இப்படி ஜொலிக்கிறார்:

யதீந்திர –ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல-
நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -சிஷா இத்யாதி -தர்ம சாஸ்திரம் – இதிகாசபுராணம் மீமாம்ஸா நியாய –14 வித்யா ஸ்தானங்கள் சதுர்வித வித்யைகள் –
வாஹி நீ –பிரவஹிக்கும் நதி -மலையில் தோன்றி புவனம் வழியாக சாகரம் சேரும் -ஞானம் பிறந்து லோகம் உஜ்ஜீவித்து பகவான் இடம் சேரும் -ஜென்ம சைல -உத்பத்தி ஸ்தானம் -போலே ஸ்ரீ பாஷ்ய காரர் -உய்ய உடையவர்
-நம்மை மாதவன் அரங்கன் திருவடிகளில் சேர்க்க
யதீந்திர — ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ-
நிழல் கொடுக்கும் பெரும் மரம் –சாகீ-வா ஸூ தேவ தருச்சாயா -நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் -தாரை பெருமாளை -சாகைகள் -வேத பாகங்கள் –
ஸ்ராந்த– சிரமம் கொண்டவர்களுக்கு – விஸ்ராந்தி-கொடுக்கும் சாகீ ஸ்வாமி -ஜனி -சம்சாரம் -சூழல் ஜென்ம வியாதி –
-ஸ்வர்கம் நரகாதிகள் -பதம் -மார்க்கம் -பரிவ்ருத்தி மீண்டும் மீண்டும் -கத்வா கத்வா நிவர்த்தந்தே -சுற்று சூழல் -என்றுமாம் -பரி சேஷணம் -போலே
கர்மா அவித்யாதிகளில் -அதனாலே சிரமம் -ஸ்ராந்தம் களைப்பை போக்கி விஸ்ராந்தம்-அளிப்பவர் –
யதீந்திர -நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூ ர்ய-சோபனா மதி சுமதி –குஸ்திதா மதி குமதி -பிரயோஜனம் இல்லாமல் –
மாயா வர்க்கமான விப்ரலிம்பம் -பாஷாண்டிகள் வேத பாஹ்யர்கள் -குத்ருஷ்டிகள் -அல்லாத அர்த்தம் கொடுப்பவர்கள் -நிகிலா சப்தம் -அதனால் –
சர்வரீ -இரவு ஞான சங்கோசம் –நன்று இது தீயது இது நடத்திய நான்மறை -நின்ற நம் அன்புடை வானோர் நிலம் அளந்தான்
-இன்று நமக்கு இரவு -ஞான சங்கோசம் -கை விளக்காக -கொடுத்த சாஸ்திரம் -உதிக்கும் சூரியனுக்கு தான் அந்தகார நிவர்த்தகம் –
யதீந்திர – நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ -சந்திரன் கடலில் இருந்து உதிக்க -சூர்யன் மலையில் இருந்து உதிக்கும் -உதய கிரி -அஸ்தமன கிரி –
பிள்ளான் -யதிராஜர் சமுத்திரத்தில் உதித்த சந்திரன் -தனியன் –ஜலாதி -சமுத்திரம் –வேலா -கடல் கரை -கடல் என்றுமாம்
-வேலை வண்ணனை மேவுகிறாய் -பெரியாழ்வார் –
பாராசார்ய வாசஸ்-வேதாந்த சமுத்திரத்தில் உதித்த சந்திரன் -ஸ்வாமி என்றவாறு

இமயமலையில் இருந்து அனைத்து ஆறுகளும் (கங்கை போன்ற) அனைத்து புராணங்களும் பாய்கின்றன:

அனைத்தையும் வழங்கும் ” கல்பக ” மரம், அதன் நிழலில், மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் சித்திரவதை செய்யப்பட்ட ஜீவர்கள் ஓய்வெடுக்க முடியும்;

பலதரப்பட்ட பள்ளிகளில் இருந்து தகராறு செய்பவர்களின் மாயையான இயங்கியல் ஆதிக்கம் செலுத்தும் இரவு இருளை அகற்றும் விடியல் சூரியன்;

வேதங்களின் பாற்கடலில் இருந்து தோன்றும் முழு நிலவு.

எல்லா வித்யைகள் ஆகிற நதிகளுக்கு தோற்றுவாயான உயர்ந்த மலை போன்றவரும் –
சம்சாரம் ஆகிற நெடு வழியில் தொடர்ந்து நடந்து வந்த களைப்பை போக்கும் நிழல் தரும் மரம் போன்றவரும் –
எல்லா குத்ருஷ்டிகளின் பிரமமாகிற இருளை போக்கடிக்கும் பால சூர்யன் போன்றவரும் –
வேதமாகிய கடல் நீர் களித்து பொங்குவதற்கு முழு நிலவு போல் இருப்பவராக
யதிராஜருக்கு பல்லாண்டு என்று மங்களா சாசனம் பண்ணி அருளுகிறார் –

உடையவர், எல்லா வித்யைகளும், 64 கலைகளும் உற்பத்தியாகும் இடம் போன்ற அசைக்க முடியாத மலை.
பிறமதவாதிகளால், வாதத்தில் இந்த மலையைப் பிளக்க இயலாது;
மலையில் உள்ள நெடிதுயர்ந்த தேவதாரு போன்ற மரங்களின் அடியில் எல்ல ஜீவராசிகளும்,
வெய்யிலுக்கும்,மழைக்கும் பாதுகாப்பாக இருப்பதைப் போல,
உடையவர் என்கிற மலையில் உள்ள தத்வ உபதேசங்கள் என்கிற மரங்களின் அடியில்,
ஸம்ஸார தாபத்தில் அடிபட்ட ஜீவாத்மாக்கள்,இங்கு புகலடைந்து,சந்தோஷிக்கிறார்கள்.

உடையவர், ஸகல கலா வல்லவர்.
வேதங்கள், உடையவரைப் பார்த்து, பௌர்ணமீ சந்த்ரனைப் பார்த்துப் பொங்கி எழும்
கடல்போலக் குதூகலிக்கிறது
இவர் , ஹிமாலய மலை; இவரின் உபதேசங்கள் ,அதில் உள்ள தேவதாரு போன்ற மரங்கள்;
இவர் பால ஸுர்யன் . இவர் பூர்ண சந்த்ரன் ; ஜய , ஜய ,யதிராஜ —-

——————

எம்பெருமானாரின் சகல வித்யா பாரங்கத்தைப் பேசினவர்-
மேலே ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறார் –

29-முனி பஹூ மத சாரா முக்தி நிஸ்ரேணிகா இயம்
சஹ்ருதய ஹ்ருதயா நாம் சாச்வதீ திஷ்ட ஸித்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ரச்ய ஸூக்தி
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம்

ராமானுஜர் உலகுக்குத் தந்த இலக்கியத் தலைசிறந்த படைப்புகள்,
நமக்குத் திறந்து, உள் அர்த்தத்தையும் உட்பொருளையும் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கட்டும்!
இந்தப் படைப்புகள் , பெரிய முனிவர்களால் பாராட்டப்பட்ட, அத்தியாவசியமானவற்றை வலியுறுத்தும்
மோக்ஷத்தின் படிக்கட்டுகளாக செயல்படும் திறன் கொண்டவை . –
மோக்ஷத்தையே எட்டிப்பிடிக்க உதவும் ஏணி
அவர்கள் மகிழ்ச்சிக்கு ஒரு ஆதாரமாக உள்ளனர்,
நல்ல மனம் படைத்த அனைவருக்கும் அவர்கள் மனத்தில் நிலை பெற்றுள்ள தன்மை உடையவை
பாபங்கள் அனைத்தையும் நீக்க வல்லவை .
அவர்கள் ஆழ்ந்த ஆய்வு, ஆழ்ந்த மற்றும் ஆழமான கருத்துக்கள் சிறந்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்,
இப்படிப்பட்ட அவர் திவ்ய கிரந்தங்கள் நமக்கு அருள் புரியட்டும்

1-முனி பஹூ மத சாரா -ரிஷிகள் கொண்டாடும் சாரதமம் -வியாசர் வைசம்பாயனர் போல்வார்
2-முக்தி நிஸ்ரேணிகா இயம் -படிக்கட்டு -நிஸ்ரேணிகா சோபனம் -பர்யாயம் –
3-சஹ்ருதய ஹ்ருதயா நாம்-பரமை ஏகாந்திகள் –
சாச்வதீ திஷ்ட ஸித்தி -திஷ்டம் புண்ணியம் -ஸூ ஹ்ருத சித்தி -ஸ்திரமான
4-சமித துரித கந்தா-பாபங்கள் -வாசனை உடன் போக்கி –
சம்யமி இந்த்ரச்ய ஸூ க்தி-யதீந்த்ரர் ஸ்ரீ ஸூ க்திகள் -நான்கு விசேஷங்கள் இவற்றுக்கு மேலே -அருளிச் செய்தவை
விமதர்கள் பாஹ்ய குத்ருஷ்டிகள் கலக்கம் போக்கும் –சமித விமத கேதா -பாட பேதம்
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம் -நமக்கு மிகவும் ககனமாவை -அனுக்ரஹத்தால் ஆழ்ந்த கருத்துக்களை
பிரகாசிக்கும் -தெளிய அறிவிக்கும் -அவைகளே நமக்கு –ஸூ கம்பீர –
ஸ்ரீ பாஷ்யம்– ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ மன் நாராயணன் -மூவர் அருளாலே ஸ்ரீ பாஷ்யம் ஆழ்ந்த கருத்துக்களை அறியப் பண்ணும்

பராங்குச பரகால நாத யாமுன முனிவர்களால் அருளப்பட்ட சாரமான அர்த்தங்களை உட் கொண்டவைகளும்-
பரமபதத்துக்கு படிக்கட்டு போன்றதும்
சத்துக்களுடைய மனசில் நித்தியமான ஆனந்தம் பொங்கச் செய்பவைகளும்-
ப்ரதிபஷிகளால் உண்டாகும் துக்கத்தை போக்குபவைகளும் –
அனுபவிக்க பரம கம்பீரமாய் இருப்பவைகளுமான ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள்
அடியேனுக்கு நன்றாக விளங்க வேண்டும் படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

உடையவரின் ,ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்றவைகளில்,
பூர்வாசார்யர்களின் வேதாந்த ரஹஸ்யங்கள் பொதிந்து இருக்கின்றன.
சடகோபமுநி , நாதமுநி, யாமுனமுநி , —முநித்ரய வேதாந்தக் கருத்துக்களும் உள்ளடக்கி இருக்கின்றன.
ஸ்ரீவ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரங்களின் வ்யாக்யானமான ,ஸ்ரீபாஷ்யம் ——இது, உடையவரின் ஸ்ரீஸுக்தியான, மடந்தை. உத்தம ஸ்த்ரீ
இதை ஸேவிக்க ஸேவிக்கஉள்ளார்ந்த அர்த்தங்கள் ,ஊற்றுபோலச் சுரந்துகொண்டே இருக்கும் .
இதைப் படித்துப் படித்து, இந்த ஸ்ரீபாஷ்யம் என்கிற க்ரந்தமே( உத்தம ஸ்த்ரீ )
என்னை அநுக்ரஹிக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்

—————

ஸ்வாமியின் ஸ்ரீ ஸூக்திகளின் பெருமைகளை மேலும் பேசி ப்ரீதர் ஆகிறார் –

30-பவ மரு பரிகிந்த ஸ்ப்பீத பா நீய சிந்து
துரித ரஹித ஜிஹ்வா துக்க குல்யா சகுல்யா
சுருதி நயன சநாபி சோபதே லஷ்மண
உக்தி நரக மதன சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந –

ராமானுஜரின் படைப்புகளின் அனைத்துத் திறனையும் பாருங்கள். அவர்கள்-

வறண்ட பாலைவனத்தில் பயணிக்கும் தாகத்தால் துன்புறுத்தப்பட்ட பயணிக்கு குளிர்ந்த நீரை வழங்கும் நதி போல;

ஆன்மிகப் பணிகளைப் படிக்கும் புனிதர்களுக்குப் பால் ஆறு போல

வேதங்களின் கண்களைப் போல, மிகவும் விலையுயர்ந்த மற்றும் விளக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்

இறைவனுக்குச் செய்யும் சேவையின் பேரின்பத்தை எவரும் அனுபவிக்கும் வகையில், முக்கிய நரம்பு நாண் இயக்கியைப் போல.

நரகத்தை அண்ட விடாமல் தடுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாக்கி அந்தமில் பேரின்பம் கிட்ட வழி செய்யுமே

பவ மரு பரிகிந்த -சம்சார பாலைவனத்தால் மிகவும் துன்பப்பட்டு -தாப த்ரயத்தால் –
ஸ்ப்பீத பா நீய சிந்து -பருகத் தக்க நிறைந்த -பான யோக்யம் பா நீயம் -நதி போலே
துரித ரஹித ஜிஹ்வா -பாபம் அற்றவர்கள் -நாக்குக்கு
துக்க குல்யா சகுல்யா-ஊற்று எடுத்து வரும் பால் ஆற்றை போலே இருக்குமே -புண்ய சீலர் வாயிலே வற்றாத பாலாறு போலே என்றபடி
சுருதி நயன சநாபி -வேதங்களுக்கு ஸ்திரமான கண்கள் போலே -காதுக்கு கண்கள் போலே -தெளிந்த அர்த்தம்
-த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்ய -இரண்டும் என்றுமாம் –சநாபி -ஸ்திரம் என்றவாறு
சோபதே லஷ்மண உக்தி-இளைய பெருமாள் -பிராணாயாமம் லஷ்மண முனி -சொல்கிறோமே –சோபதே -விளங்குகின்றன
நரக மதன-நரகாசுரனை அழித்தவன்-சம்சார நரகம் அழிப்பவன் என்றுமாம் -நாரணன் பேர் வைத்த அன்னை நரகம் புகாள்
சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந-நாடி யை முடிக்கு விட்டு -ஸ்ரீ யபதிக்கு சேவா பண்ணும் படி -பலப்படுத்தும்

வேதாந்தங்களை தெளிவாக பார்த்து அறியும் கண்களாக இருப்பவைகள்-
சம்சாரமாகிற பாலைவனத்தில் அலைந்து மிகவும் களைத்தவர்களுக்கு-தாப ஹரமாக –
பருக இனிதான தீர்த்தமுள்ள நதி போன்றவைகளும்
பாபம் அற்ற மஹான்களுக்கு பால் போலே நாவுக்கு இனியவையாயும் –
நரகாசுரனை முடித்த எம்பெருமானுடைய குண அனுபவத்தை ஆனந்தவாஹமாக செய்வதுமாக விளங்குகின்றன –

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபூதி பூர்த்தியை ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகளிலே பரக்க
அருளிச் செய்கையாலே –
இவை ஆனந்த ஜனகமான நாடி விஷயத்தை தட்டுமைவாய் இருக்குமே –

யதிராஜரின் ஸ்ரீஸுக்தி, பாலைவனமாகிய ஸம்ஸாரத்தில், தாகம் தாகம் என்று, தவிப்பவர்களுக்கு, வற்றாத நதிநீர் .
புண்ய புருஷர்களுக்கு,அவர்களுடைய நாக்குக்கு பாலாற்று நீர்.
ஸ்ருதிகளுக்குக் கண் . இந்த ஸுக்தி ஸேவிப்பவர்களின் ஆனந்த நாடியைத் தொட்டு, இங்கு மாத்ரமல்ல, ஸ்ரீவைகுண்டத்திலும்
பேரானந்தத்தை அனுபவிக்க உதவுகிறது.

——————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம்

31-ஹரிபத மகரந்த ச்யந்தின சம்ஸ்ரிதா நாம்
அனுகத பஹூ சாகா தாபம் உன்மூல யந்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா கல்ப நா கல்ப வ்ருஷா-

ராமானுஜரின் படைப்புகள் நமக்கு எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்கின்றன!
அவற்றைப் படித்தால், இறைவனின் பாதங்களிலிருந்து வரும் அமிர்தம் போன்ற தேன் பெருகிக் கொண்டே இருக்கும்,
மேலும் மோக்ஷ  ஆனந்தத்திற்குச் சமமாக இருக்கும்.
படைப்புகள் பன்முகத்தன்மை கொண்ட வேதங்களின்
பாதையைத் தழுவி நெருக்கமாகச் செல்கின்றன என்பதை நாம் உணர்கிறோம்.
அவர்கள் கற்பவர்களின் பாவங்களின் குமட்டல் வாசனையை கடைசி வரை அகற்ற முடியும்.
அவை நம் இதயங்களில் ஒரு ” கல்பக ” மரமாக-மாற்றாத ஞானத்தை
அளித்த படி நமது கற்பனை எண்ணங்களின் வளமான வரிசையை உருவாக்குகிறது.
மேலும், படைப்புகள், வாசிப்பின் போது, ​​மூன்று வகையான தானங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன.

ஹரிபத மகரந்த ச்யந்தின -மோக்ஷம் -ஹரி பதம் -விஷ்ணு பதம் -தத் விஷ்ணோ பரமம் பதம் -தேனை பிரவஹிக்கும்
-திருவடி என்றுமாம் -இடது திருவடி அங்குஷ்டம் தேன் பெருகுவதாக சுருதி -அம்ருத தாரை -போக்யத்தை -உன் தேனே மலரும் திருப் பாதம் –
சம்ஸ்ரிதா நாம் -தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு -சம்யக்கு ஆஸ்ரயம் -ஆச்சார்யர் மூலம் பகவானை ஆஸ்ரயித்து
அனுகத பஹூ சாகா -சாஸ்திரங்களில் -பிரவேசித்து -சாகைகளில் புகுந்து சர்வ அர்த்தங்களையும் சேர்த்து திரட்டி
தாபம் உன்மூல யந்தி -தாபங்களை வேரோடு போக்கி -அடியோடு உன்மூலம்
சமித துரித கந்தா -பாபங்களை வாசனையோடு போக்கி
சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா -கதகன் பிரமாணம் கொண்டு வாதம் பண்ணுபவன் -கவிதார்க்கிக ஸிம்ஹம் –கவி கதக கண்டீரன சரண நளின –
மநீஷா-புத்தி கூர்மை
கல்ப நா கல்ப வ்ருஷா-உண்டாக்கி –கல்ப நா -ஸ்ருஷ்ட்டி என்றவாறு -கற்பனை கவி ஸ்ருஷ்ட்டி கர்த்தா -கல்ப வருஷம் போலே –
1-நிரதிசய ஆனந்தம் திருவடி தேனை அருளும் -நால் தோள் அமுதே -கற்பக வருஷம் பணைத்தால் போலே -2-அநு கத சாகைகள்
3–சம்சார தாபங்கள் வேரோடு போக்கி -4-மேல் மேலும் புத்தி கூர்மை அருளும் -வாதம் செய்து புற சமயிகளை நிரசிக்க -ஸூ சம்ப்ரதாயம் ஸ்தாபிக்க -உதவுமே –
கற்பக வ்ருஷங்கள் பஹு வசனம் -நவ கிரந்தங்கள் உண்டே என்பதால் –

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் -தன்னை கிட்டினவர்களை பகவத் சரணாரவிந்தங்கள் –
சர்வ பாபங்களையும் போக்கி
தேனே பாலே கன்னலே அமுதே என்று மிகவும் போக்யங்களாயும் இருக்குமா போலே
சகல வேதங்களையும் அனுசரித்து சமன்வயப்படுத்தி அவதரித்த ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீ ஸூக்திகளை அப்யசிப்பவர்களை
சகல பாபங்களையும் போக்குபவையுமான அர்த்தங்களைச் சுரப்பதால்
உபபாதனம் பண்ணுகிறவர்களுக்கு கற்பக வ்ருக்ஷத்தை போலே தாபங்களைப் போக்கடிக்கும் –

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், தேவலோக கல்பவ்ருக்ஷம் போன்றவை. கற்பகம் என்றும் சொல்வர் .
பல அடர்ந்த கிளைகள், இலைகள் , பழங்கள் உள்ள இம்மரம் இளைப்பாறுபவர்களின்,களைப்பைப் போக்கும்.
பசி, தாகத்தைப் போக்கும்; நறுமணக் காற்றைக் கொடுக்கும்;
மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு, மனதில் நினைப்பவை (தர்ம வழியில் நினைப்பவை) நடக்கும்;
யதிராஜரின்ஸ்ரீஸுக்திகள் ,
பச்சைத் தேன் ; பசும்பால்;
ஆசார்ய சிச்ருக்ஷையுடன் ,பக்தியோடு தினமும் ஸ்ரீபாஷ்ய அர்த்தங்களைக் கேட்டால், பாவங்கள் எல்லாம் போகும்.
80 க்ருச்ரங்கள் செய்ததற்குச் சமம். ( ஒரு க்ருச்ரம் என்பது , ரூபாய் 12–50 என்று கணக்கு
ஒரு குறிப்பிட்ட பாவம் கழிய, மந்த்ரத்தைச் சொல்லி, வேதபாராயண ஸ்வாமிக்கு ஒரு க்ருச்ரம் என்பது கொடுப்பது சாஸ்த்ர விதி )
பாஷ்யகாரரின் ஸ்ரீஸுக்திகளைக் கற்றவர், உத்தம புருஷர். கல்பவ்ருக்ஷம்போல் உதாரர். வள்ளல்.
வேத ஸம்பந்நர் . பகவத் கல்யாண குணங்களில் திளைத்து, பிறரையும் அனுபவிக்கும்படி செய்பவர்

———

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் இனியவை -மஹா உபகாரம் செய்பவை என்றார் கீழ் –எம்பெருமானார் சேனையர் கோன் அவதாரமாக வந்து பிறந்து மஹா உபகாரத்தை செய்தார் என்கிறார் –

32-நாநா பூதை ஜகதி சமயை நர்ம லீலாம் விதித்சோ
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ ஆதிம வ்யூஹ பேதே
விச்வம் த்ராதும் விஷய நியதம் வ்யஞ்ஜிதா அனுக்ரஹ
சந் விஷ்வக் சேன யதிபதி அபூத் வேத்ர சார த்ரிதண்ட

இறைவன் பல மத அமைப்புகளை உருவாக்கி யிருக்கிறான் – அவை ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன –
இவை எல்லாம் இன்புறும் இவ்விளையாட்டு உடையானுடைய லீலையே .
அவரது முதல்- தொடக்கமற்ற- வியூஹ வடிவம், வாசுதேவர். இருண்ட சாயல் கொண்ட கிருஷ்ணராக பிந்தைய நாள் அவதாரத்தை எடுத்தார்.
கலி யுகத்தில், மக்கள் இன்பத்தில் குடி கொண்டிருக்கும் போது, ​​இறைவன் விஷ்வக்சேனரை அனுப்பினார்,
அவர் தனது அருளால் (ராமானுஜராக பிறந்தார் ,
(சேனாபதி விஷ்வக்சேனர் யதிபதி ஸ்ரீ ராமானுஜராக மாறும்போது, ​​மந்திரக்கோல் திரிதண்டம் ஆகிறது )

நாநா பூதை ஜகதி சமயை -பல பல சமயங்கள் -கலி யுகத்திலே
நர்ம லீலாம் விதித்சோ-லீலா விஷயம் -கேலிக்கு விஷயம் -மா ஞாலம் வருந்தாதோ -மாட்டாயா –ரக்ஷணத்தில் நோக்கு இல்லாமல் லீலா ரசம் செய்து இருக்க
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ-ஆதிம வ்யூஹ பேதே-திருப் பாற் கடல் வ்யூஹம் -ஆதி -பர வா ஸூ தேவன் -பாலின் வண்ணம் -கிருத -மஞ்சள் த்ரேதா -த்வாபர நீலம்- கலி கறுத்த வண்ணம் –
விச்வம் த்ராதும் விஷய நியதம்–ஜகத்தை ரக்ஷித்து அருள -சப்தாதி விஷயங்களில் மூழ்கிய ஜகத்தை ரக்ஷிக்க-
வ்யஞ்ஜிதா அனுக்ரஹ சந்-பிராட்டி அனுக்ரஹம் பெற்று
விஷ்வக் சேன யதிபதி அபூத்-சேனை முதலியார் பிராட்டி அனுக்ரஹம் பெற்று
வேத்ர சார த்ரிதண்ட -வேத்ரமே- த்ரி தண்டம் -பிரம்பு -கொண்டே ஜகத் நிர்வாஹம் அவர் -த்ரி தண்டம் கொண்டு இவர்
-உபய விபூதி நிர்வாஹம் -ஜ்யேஷ்ட புத்ரனை தாயார் நியமிக்குமா போலே –திருவவதார ரகஸ்யம் –

பல மதங்களை ஸ்ருஷ்டித்து பரிஹாஸமான தொரு விளையாட்டை விளையாடுவதாக வ்யூஹ மூர்த்தியான
வாஸூ தேவன் கள்ள வேடம் கொண்டு ஒருப்பட்ட போது விஷய ப்ரவணராய் இருக்கிற சம்சாரிகள்
இந்த மதங்களைப் பற்றி நாசம் அடையாக கூடாது என்று
கிருபையால் சேனை முதலியாரே எம்பெருமானாராக திருவவதரித்தார் –
அவர் கை பிரம்பு செங்கோல் த்ரிதண்டம் ஆயிற்று –
சாது பரித்ராணத்துக்காகவே ஸ்வாமி அவதாரம் –
திருவனந்த ஆழ்வான் –
எம்பெருமான் –
சேனை முதலியார்
பஞ்ச திவ்ய ஆயுதங்கள் திருவவதாரமாகவே ஸ்வாமி போற்றப்படுகிறார் –

பகவானுக்கு, இவ்வுலகம் லீலாவிபூதி —-அதுவும்,
கலியுகத்தில் இவனே புத்தர் என்று சொல்லி, வேதத்துக்கு எதிராகப் பேசினான்.
பாசுபதமதத்தை வளரச் செய்தான். இப்படி, விளையாடினான்.
விஷ்வக்ஸேநரோ ,ஏன் இப்படி மக்களைப் புத்தி தடுமாறச் செய்கிறீர் என்று பகவானைக் கேட்காமல்,
இவை அவருடைய லீலாவிபூதியின் விளையாட்டு என்று உணர்ந்து ,
எம்பெருமானாராக அவதரித்தார்.
கஜேந்த்ரனைக்காக்க பகவான், அலைகுலைய ஓடிவந்ததைப் போல, போட்டது போட்டபடி வைகுண்டத்தை விட்டு
இவர் , ஓடிவந்தாராம்.
வைகுண்டத்தில், அவரது செங்கோல் பிரம்பு; அதையும் எடுத்துவரவில்லையாம்.
இந்தச்செங்கோல் பிரம்பே தானும் ஓடிவந்து , யதிராஜரின் திருக்கரத்தில், “த்ரிதண்டமா”க அவதரித்ததாம்.

—————

இப்படி திருவவதரித்து அருளிய எம்பெருமானாருடைய உபதேசங்கள் பெருமையை உபபாதிக்கிறார் –

33-லஷ்யம் புத்தே ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
சுத்த ஆஸ்வதம் கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர லஷ்மணர்ய உபதேச –

நல்ல மனங்கள் இந்தப் படைப்புகளைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
ஒரு “ரசிகா” ருசிக்கும் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவனது நாக்கு மிகவும் நல்ல விளையாட்டுடன் இருக்கும்.
பேசுவதற்கும் விவாதத்துக்கும் ஏற்ற பொருள்!
காது மிகவும் அன்புடனும் தூண்டுதலுடனும் அவற்றைக் கேட்கும்,
இது ஒரு தனித்துவமான வகை மெய் நிகர் மருத்துவத்தை நிரூபிக்கிறது, அது எவ்வளவு இனிமையானது;
மேலும் அவை இறைவனின் வடிவத்தையும் இயல்பையும் சரியான முறையில் நமக்கு வெளிப்படுத்தும் படிகக் கண்ணாடி.
ராமானுஜரின் படைப்புகளில் உள்ள மையச் செய்திகள் – சில புரிந்து கொள்ளப்பட்டவை மற்றும் சில இல்லை –
ஞானவான்களுக்குப் புலப்படும் -அல்லாதார்க்கு அதன் அர்த்தம் விளங்காது
ஒரு தெளிவான கடலில் பரந்த மற்றும் அளவிட முடியாத கற்கள் சிதறிக் கிடக்கிறது.

நகா லஷ்யம் புத்தே –
-நம்முடைய –புத்திக்கு ஞானத்துக்கு -கிரஹிக்கும் ஞானத்துக்கு லஷ்யம் –
ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
-ரசிகர்கள் -ஸ்ரீ ஸூ க்திகளையே –ரஸநா-அருளிச் செயல் வேதம் -இவற்றிலே ஊன்றிய நாக்கு
லாஸ்யம் தாண்டவம் -நாட்டிய பேதங்கள் -முக கை பிரதானம் லாஸ்யம் /கால் பிரதானம் தாண்டவம் –
நாவு துடித்து நடமாடும் -நிதானம் காரண பூதம் -நா துடிக்கும் நாம் ருசித்த ஸ்ரீ ஸூ க்திகளை கேட்க்கும் பொழுது எல்லாம்
சுத்த ஆஸ்வதம்
-தூய்மையான -மதுரமான போக்யம்-ரமணீயம்
கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
-ஸ்ரோத்ரத்துக்கு திவ்ய அப்ராக்ருத ஒளஷதம் -நஸ்யம் மூக்கு வழியே -இது காது வழியே
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
-ஆத்மாவுக்கு ஊனமாவது -2-2-11-தேவதாந்த்ர விச்வாஸம் -வியாக்யானம் –
லஷ்யம் அலஷ்யம் அறியப்பட்டதும் அறிய படாததுமான–தாத்பர்ய ரத்னங்களைக் கொண்டு –ஸ்தித ஜலதி -வெண்மை கடல் –பாற் கடல் –
-சில தாத்பர்ய ரத்தினங்கள் அறிவுக்கு எட்டும் -சில எட்டாதே -வேங்கடேசன் -வேங்கட கவி இருவரும் கடைய -அமுதம்
-தாத்பர்ய ரத்னாவளி பிறக்க -மலையை வைத்து அவன் -ஆச்சார்ய பிரஜ்ஜா கொண்டு -சடஜித் உபநிஷத் -அதே போலே பாஷ்யகாரர்
-உபநிஷத் கடைந்து -ஸ்ரீ பாஷ்யம் –சம்ப்ரதாயம் கொண்டு -சஞ்சீவனம் –உபய வேதாந்த ரத்தினங்கள் –
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர
-ஸ்படிகம் -அருகில் உள்ள வஸ்துவை தன்னுள் காட்டுமே -ஸ்ரீ லஷ்மீ காந்தனை தன்னுள்ளே
உள்ளதாக காட்டும் -எங்கும் தேட வேண்டாம் -ஸ்ரீ யபதியை தெளிவாக ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் காட்டுமே
லஷ்மணர்ய உபதேச
-எம்பெருமானார் உபதேசங்கள் -சாரீர சாஸ்திரம் -சரணாகதி விஷயமாக

எம்பெருமானாருடைய உபதேசங்கள்
தெளியச் சொல்லப் பட்டவை –
புத்தியில் எளிதாக படியும்படி யுள்ளவை –
அப்படிப் படிந்தவர்க்கு மேலும் மேலும் வாசிக்கவும் சொல்ல நாவு துடிக்கும் படியும் உள்ளவை –
வாசிப்பவனுக்கு ஆனந்தம் உண்டாக்குபவை –
கேட்பவனுக்கு பரம ஒளஷதமாய் இருப்பவை –
இன்பம் விளைவிப்பவை –
சர்வேஸ்வரனை கண்ணாடி போலே காட்டித் தருமவை –
இத்தன்மைகள் சார்ந்த எம்பெருமானாரது உபதேச கிரந்தங்கள் –
கடலில் எளிதில் கண்டு எடுக்கக் கூடியவைகளும்-இப்படி சில – காணக் கூடாதவை –
ஆழ்ந்து நோக்கியே அறியத் தக்கவை –
இப்படி சில தாத்பர்யங்களான ரத்னங்கள் நிரம்பிய கடல் போல் விளங்குகின்றன –

யதிராஜரின், ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுகத்திகளின் பெருமையைச் சொல்கிறார்.
ஒரு நூல் என்றால்
1.படிக்கத் தொடங்கியதும், புத்தியைக் கவரவேண்டும்.
2. மேலும், மேலும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.
3. அதன் கருத்து, மேலும் மேலும் அனுபவிக்கத் தக்கதாக இருக்கவேண்டும்.
4. அதைவிளக்கிப் பிறருக்கு,அழகாக எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும்
5. இப்படிச் சொல்லும்போது, கேட்போர், இதைத் தொடர்ந்து கேட்கவேண்டும் என்கிற ஆசையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.
6. கேட்பவர்களுக்கு, நன்மை தருவதாக இருக்கவேண்டும்.
7. சொல்லும் கருத்துக்கள், உயர்ந்ததாக இருக்கவேண்டும்.
8. இவை, எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.

இந்த 8 குணங்களும், உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு உண்டு, என்கிறார்.
லக்ஷ்யம் புத்தே—ஸ்ரீஸுக்தியைப் பிரித்ததுமே ,அது நமது புத்தியைக் கவர்கிறது. பார்த்ததும் படிக்கத் தோன்றுகிறதாம்.
கடந்த காலத்தைப் பற்றிய அறிவு–“ஸ்ம்ருதி “. எதிர்காலத்தைப் பற்றிய அறிவு “மதி “. முக்காலத்தையும் அறியும் அறிவு “ப்ரக்ஞா”.
இது, புத்தே லக்ஷ்யம்—பார்த்ததும் படிக்கத் தோன்றும்.
மீதி ஸுக்திகளில் புத்தி இழிவதில்லையாம்.-

”சுத்தாஸ்வாதம்”
”உடையவரின் ஸ்ரீஸுக்தி “ஔஷதம் ”
காதால் கேட்டவுடன், ஸம்ஸாரவ்யாதி போய்விடும். கேட்பதற்கு, சுகமாக இருக்கும்”,

திவ்யதம்பதிகள், திருப்பாற்கடலில், ரத்னங்கள் இழைத்த மண்டபத்தில், தங்கஸிம்ஹாசனத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
தங்கள் சோபையைக் காண விரும்பினால், அவர்கள் கண்ணாடியைத் தேடவேண்டாம்.
சுற்றி இருக்கும் ரத்னங்களும், திருப்பாற்கடலும், அழகைக் காட்டும்.
இவர்களே, தங்கள் கல்யாண குணங்களை அறிய ஆசைப்பட்டால், ஸ்ரீஉடையவரின் ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களைப்
பார்த்தால் போதும். இவருடைய ஸ்ரீஸுக்திகள் தெளிந்த கடல்;
கடலின் அடியில், முத்து, ரத்நம், சங்கு, பவளம் முதலிய விலைமதிக்கமுடியாத பொருட்கள் நன்கு தெரியும்;
மறைந்தும் தெரியும்; அதைப்போலவே,
ஸ்ரீபாஷ்யம். படிப்பவர்கள மதிநுட்பத்திற்கு ஏற்ப, விசேஷ அர்த்தங்கள் புலப்படும்—என்கிறார்.

————————

யதிராஜரை அண்டிய ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் சொல்கிறார்.

34-ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி
மதீம் யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்

” ராமானுஜ சம்பிரதாயம் ” எனப்படும் பெரும் செல்வத்தைப் பெற்ற பின் தொடர்பவர்களின் மகத்துவம் –
உண்மையில் ஒரு செல்வத்தை இழக்கவோ அல்லது திருடவோ முடியாது – சில அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர்ந்த வரிசையின் செழுமைக்காக அவர்கள் ஒரு செப்புப் பையைப் பொருட்படுத்த மாட்டார்கள்,
அது எப்போதும் எதிர்பார்த்ததை விட அதிக செல்வம் கிடைத்தாலும், யானைக் கூட்டங்கள் சேர்ந்தாலும்
அவற்றை மதிக்க மாட்டார்கள் –
அவர்கள் ராமானுஜர் அடியார் சம்பந்தமே பிராப்யமாயும் பெரும் செல்வமாயும் கருதி
மற்ற அனைத்தையும் புல்லைப் போலவே திரஸ்கரிப்பார்கள்

ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி மதீம்-
மநோ ரதம் கடந்த -ஸ்திதிம் -அவதீர யந்தி -த்ருணாய மேனா-தர்மார்த்த காமங்களை மதிக்காமல் -திரஸ்கரித்து –
யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
யதிபதி சம்ப்ரதாயம் -ராமானுஜ தர்சனம் -குரு பரம்பரை மூலம் பெரும் சம்ப்ரதாயம் -வேதார்த்தங்கள் –
அழிவற்ற பெரும் தனம் -நிரபாய தானம் -உபசித்தம் -நல்ல வழியிலே பெற்ற சம்பிரதாய தனம் –மனனம் பண்ணி -ரஷித்து-வாசித்து பிரவர்ப்பித்தும் – –
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
மத தந்துர தந்தி– மத நீர் பெருக்கும் யானைகள் –மதுகரம் -வண்டுகள் -அத்யந்த ஸூ கந்தம் -பெருக்கில் மூழ்கி -உந்து மத களிறு —
கடா கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்
காதுகள் தாடைகள் -வழியே பெருகும் மத நீர் /கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம் –மூழ்கி திளைக்கும் படி -மத நீர் திவலைகள்
-இவற்றையும் திரஸ்கரிப்பார்கள் என்றவாறு -ஐஸ்வர்யார்த்திகள் இல்ல என்றவாறு –
கூரத் ஆழ்வான் போல்வார் ஐஸ்வர்யங்களை துரந்து எம்பெருமான் ஸ்ரீ ஸூக்திகளையே தனமாக கொண்டவர்கள் என்றவாறு

இவர்கள், உடையவரின் உபதேசங்களைக் கேட்டும்,ஸ்ரீஸுக்திகளை க்ரஹித்தும்
பகவத் விஷயத்தைத் தவிர மீதி எதிலும் பற்றற்று இருந்தார்கள்.
பகவானின் திருவடிகள்தான் அகண்ட ஐஸ்வர்யம் என்று எண்ணினார்கள்.
மதங்கொண்ட யானைகள் பெருக்கும் மதஜலத்தில், வண்டுகள் வந்து மூழ்கும். யானைக்கூட்டத்தை
உடைய சக்ரவர்த்தியின், சாம்ராஜ்ய ஐஸ்வர்யத்தையே , யதிராஜரின் ஸம்ப்ரதாய ஐஸ்வர்யத்தைப்
பெற்றவர்கள் அலக்ஷியப்படுத்துவர்.

எம்பெருமானார் தர்சனம் என்ற மாசற்ற தனத்தைப் பற்றி அதனால் பெருமை யுற்றவர்கள் –
யானைகள் கட்டி வாழ்தல் -ஆகிற பெரும் ஐஸ்வர்யத்தை பெற நேர்ந்தாலும்
அந்த ஐஸ்வர்யத்தை சிறிது அளவும் மதிக்க மாட்டார்கள் –
த்ருணீக்ருத விரிஞ்சாதி –முக்தகம் ஸ்லோகம் அனுசந்தேயம் –

—————

ப்ரபாவத்தை சமத்காரமாக அருளிச் செய்கிறார் –

35-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன்
நிகம விமர்ச கேளி ரசிகை நிப்ருதை வித்ருத
குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட
நயா ரடதி திசா முகேஷு யதிராஜ யச படஹ-

ஸ்ரீ ரெங்கவாசிகள் நாட்டியக்காரர்கள் என்னும் உவமையில் அன்றாட வாழ்க்கையே நாட்டியம் போலவே தானே அவர்களுக்கு ஏற்ற பறை ஸ்வாமியின் கீர்த்தி -புகழ் என்பதே வேதங்களில் உள்ள ஆழ்ந்த பொருள்களை ஆராய்பவர்கள் யாரோ அவர்கள் அந்தப் பறையை அடித்தபடியே உள்ளார்கள் அந்தப் பறையானது ஸ்ரீ ரெங்கநாதனின் கல்யாண குணங்கள் என்னும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது இந்தப் பறையில் அடிக்க உதவும் கோல்களாக யதிராஜரின் நூல்கள் உள்ளன ஸ்ரீ ரெங்கத்தில் வாழவைத் தவிர வேறே ஒன்றையும் மனத்தாலும் நினைக்காத அநந்யார்ஹ சேஷ பூதர்கள் மகிழ்ந்து கொண்டே இருக்கும் படி அந்தப் பறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது ராமானுஜரின் படைப்புகளைப் படிப்பதன் மூலம் அறிவுப் பூர்வமாக உற்சாகமடைந்து,மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள்.இந்த மேளம் அடிக்க, நடனம் இசைந்துள்ளது.இது யதிகளின் ராஜாவான யதிராஜாவின் வருகையை உறுதியுடன் பறை சாற்றும்!

1-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன் –
ஸ்ரீ ரெங்கே வர்த்திக்கும் -ஸ்ரீ ரெங்கம் நாட்டிய மேடை என்றுமாம் -நிருபதி -உபாதி இல்லாமல் -இயல்பான
-ரசிகர்கள் -இவர்களுக்கு ஜென்ம சித்தம் -நல்லார் வாழும் நளிர் அரங்கம் -இயல்பாக தாண்டவம் செய்து விக்கும் யதிராஜர் யசஸ் என்றுமாம்
-முரசு மாடம் உயர வைத்து அடிக்க –
2-நிகம விமர்ச கேளி ரசிகை -வேதாந்த விமர்சனம் -ஸ்ரீ பாஷ்ய முகேன-நன்றாக ஆராய்ந்து -சர்ச்சை பண்ணி மகிழ்ந்து -நல்ல பொழுது போக்கு
நிப்ருதை வித்ருத -நன்கு கவனம் உடையவர்களால் –வித்ருத -தாங்கி அடர்த்தி பிடித்துக் கொண்டு
3-குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட நயா –
குணம் -சத்வ குணம் /கயிறு -அநு குண தசார்த்தி தேனை -நூல்களால் செய்யப் பட்ட திரி -ஸமாஹிதா –ஸ்நேஹம் -எண்ணெய் ஸ்நேஹம்
-ஸ்ரீ தர கருணை -தயா சதகம் —த்ரிதாம -பரம பதம் ஷீராப்தி ஆதித்ய மண்டலம் -திவ்ய தாமம் -சிஷ்யர்களை பரீஷை பண்ணி ஸத்பாத்ரம் ஆக்கி
-சம்ப்ரதாயம் ப்ரதீபம் -அனககுணம் -தோஷம் அற்ற திரி -சத்வ குணம் -ஆஹித ஸ்நேஹம் ப்ரீதி கொண்டு -ஆச்சார்யர் க்ருத்யம் –
குணங்களால் நன்கு கட்டப்பட்ட -பொருள் பொதிந்த ஸ்ரீ ஸூக்திகளால் திடமான கோல் கொண்டு முரசை அடிக்க
ரடதி திசா முகேஷு-ரடதி அபிவிருத்தி -திசைகள் எங்கும் ஒலிக்கும்
யதிராஜ யச படஹ-படகம் முரசு பேரி-எம்பெருமானுடைய யசஸ் ஆகிற முரசு

ஸ்ரீரங்கம்–ரங்கம் என்றாலே நாடக மேடை.
இங்கு, உடையவரின், ஸித்தாந்த ப்ரசாரம் அதிகமாக நடந்தது.
இங்கு, உடையவரின் புகழைப் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கேட்டு,
ரஸிகர்கள் ஆனந்தக் கண்ணீருடன் நர்த்தனம் செய்கிறார்கள்.
உடையவரின் கீர்த்தி ஒரு வாத்யம் –.பேரிகை . அதன் பெயர்–படஹம்.
இதில் , உடையவரின் ஸ்ரீஸூக்திகள் என்கிற கோல்களால் (குச்சிகள் ) ரஸிகர்கள் , அடிக்கிறார்கள் .
இந்தக் கோல்கள் , ஸ்ரீஸூக்திகளில் உள்ள இனிமையான அர்த்தமுள்ள சொற்களால் கட்டப்பட்ட கோல்கள்.
இது சப்த சௌடவம் ,அர்த்த சௌடவம் என்பர். இதனால், படஹவாத்யத்தை ரஸிகர்கள் அடிக்கிறார்கள்.
இந்த ஓசையைக் கேட்டு, ஸ்ரீரங்கவாஸிகள் ஆனந்திக்கிறார்கள்.ஆனந்தத்தில் ஆடுகிறார்கள் .—ரங்கம் அல்லவா !
இந்த வாத்ய ஓசை நாடெங்கும் பரவியது. பரமாத்மா ஸத்யமானவன் ;
அவனை வைகுண்டத்தில் அடைவதே மோக்ஷம் ;இதுவே நித்தியமானது. என்கிற ஸித்தாந்தம் பரவியது

யதிராஜர் யசஸ் ஆகிற படஹம்-பறை -போன்ற வாத்ய விசேஷம் –
வேதாந்த விசாரம் ஆகிற விளையாட்டில் ரசிகர்களால் –
பொருள் செறிந்த திவ்ய ஸூ க்திகள் ஆகிற தண்டத்தால் தட்டப்பட்டு
ஸ்ரீ ரெங்க வாசிகளான ரசிகர்களை தாமாகவே களி நடம் புரியச் செய்து ஒலிக்கிறது –
ஸ்ரீ ரெங்க வாசம் விரும்புவர் நாட்டியகாரர் என்று கொண்டு -நாட்டியம் அன்றாட வாழ்வு –
பறை ராமானுஜர் புகழ் –
வேத விற்பன்னர் பறை அடிப்பவர்கள்
ஸ்ரீ ரெங்க நாதனது திருக் கல்யாண குணங்கள் அந்த பறையில் கட்டப் பட்ட கயிறுகள் –
ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் பறையை அடிக்கும் குச்சி –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரெங்க வாழ்வே அநந்ய பிரயோஜனர் மகிழ்ந்து இருக்கும் படி –
அந்த பறை ஓசை திக்கு எட்டும் முழங்கு கின்றதே

————————

ராமானுஜரின் கீர்த்தி நாடெங்கும் பரவியதைப் பேசியவர் , ஸ்ரீஸுக்திகளின் கீர்த்தியைச் சொல்கிறார்.

36-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா
ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ
ஷரந்தி அம்ருதம் அஷரம் யதி புரந்தரச்ய உக்தய
சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சை ரந்த்ரிகா-

இந்தக் கலிகாலத்தில் விதவிதமான பல மதங்கள் தலையெடுத்து விபரீதமாக புத்தி கொண்டதாக உள்ளனர் அந்தக் கூட்டங்கள் அனைத்துமே வேருடன் அறுக்க வல்லது ஸ்வாமியின் கிரந்தங்கள் பொய் என்பதையே மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அந்தத் தீ மூலம் ஜீவர்களை விஷம் போல் அழிக்கும் மதங்களில் இருந்து ஜீவர்களை ரக்ஷித்து அருளும் –வேதம் என்ற அரசியின் உபநிஷத் என்ற கூந்தலை அழகாகச் சீவி அலங்கரிக்கும் பணிப் பெண்கள் போன்றவை ஸ்வாமி யுடைய கிரந்தங்கள் அவை அழிவற்ற மோக்ஷம் பெரும் அருளை நம் மேல் பொழிகின்றன இவை அனைத்தும் ராமானுஜரின் படைப்புகளால் சாதிக்கப்படுகின்றன.

1-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா -இ தம் பிரதமம் சம்பவத் வேதம் -அநாதி -என்றவாறு
குமதி –குத்ருஷ்டா மதி சுமதி ஷோபனா மதி -இவை வேத வ்ருத்தம் -கேவல உக்திகளால் -தர்க்கங்கள் -குமதி ஜாலங்கள்
-அல்ப மதியால் பிரமிக்க -விபரீத புத்தி பண்ண வைக்கும் -கூலங்கஷா-கொழுப்பை அடக்கிய -குருகையில் வந்து கொழுப்பு அடக்கிய
குல பதி தந்ததை குறிப்பினில் வைத்து பரமபத பங்கமும் —
2-ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ -மாயாவதி மதம் -ம்ருஷா மதம் -ஜகத் மித்யா ப்ரஹ்மம் சத்யம் -விஷம் கலந்த அ நலம் -நெருப்பு
-விஷம் போலேயும் நெருப்பு போலேயும் -அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ -அஸ்தானே பய சங்கையால் -அங்கு ஓர் ஆரவாரம் அது கேட்டு
-விஷம் கலந்த அக்னி உமிழ்வானே -அது பிராப்யம் -இது அப்ராப்யம் –ஜீவாது –அமிருதம் பிராணாத்மா சஞ்சீவினி –
-பிள்ளை லோகாச்சார்யார் –சம்சார சர்ப்ப சந்தஷ்ட ஜீவ ஜீவாது -அமிர்தம் -விஷ மாற்று மருந்து இரண்டும் –
3-ஷரந்தி அம்ருதம் அஷரம் -ஒவ் ஒரு ஷரமும் அமிருதம் பெருக்கும்-
யதி புரந்தரச்ய உக்தய -யதீந்த்ரர் -ஸ்ரீ ஸூக்திகள் -நவ கிரந்தங்கள்
4-சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சைரந்த்ரிகா-புராதன நூதன அத்யதன போலே -சிரந்தன
-ஸ்ரீ யதித்வம் மோக்ஷ பிரதத்வம் சன்னியோக சிஷ்ட நியாயம் சேர்ந்தே வரும் –
சிரந்தன சரஸ்வதி -அநாதியான வேத சுருதி -குழல் சிகுரம்-சைரந்திரிகா தலை அலங்காரம் -திரௌபதி வேஷம் -அர்ஜுனன் அலி-வேஷம் ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகள் வேதம் பெண் கலைந்த திருமுடியை சீர் பண்ணி அலங்க்ருதம் செய்தன கொங்கில் பிராட்டி ஐதிக்யம் -வெள்ளை-கறுப்பு பின்னல் யதிகள் க்ரஹஸ்தர்கள் கலந்து சம்ப்ரதாயம் வளர்க்க –

மிகவும் ப்ராசீனமான வைதிக தரிசனத்தை உபபாதிக்கும் யதீந்திரருடைய திவ்ய ஸூக்திகள் –
வேதத்துக்கு புறம்பான -மிகவும் பிற்பட்ட காலத்தில் உண்டான
குமதிகளுடைய மதங்களை நசிக்கப் பண்ணியும் –
மாயாவாதம் ஆகிற விஷ அக்னியால் தபிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவாதுவாய் இருந்து கொண்டும் –
வேத மாதின் அளகபாரமான உபநிஷத்துக்களை சிக்கிவிடுத்து அழகாகப் பண்ணும்
சைரந்திரிகை யாகை யாகப் பணி செய்தும்
நித்தியமான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்கின்றன –

புதிது புதிதாகத் தோன்றுகிற துர்ப்புத்தி உடைய பிற மதத்தினரின் கூட்டத்தைப் பேர்ப்பனவாய்
பொய்யையே கொண்ட மதமாகிய விஷம் கலந்த தீயினால் எரிந்த , ஜீவாத்மாக்களை பிழைப்பிக்கும் மருந்துகளாய்
வேதவாக்காகிற அரசியின் உபநிஷத் பாகமாகிய கூந்தலை வாரி முடித்து அலங்கரிக்கிற பணிப் பெண்களாயுள்ள
ஸ்ரீ பாஷ்யகாரருடைய ஸ்ரீஸுக்திகள் அழிவற்ற மோக்ஷத்தை மொழிகின்றன என்கிறார் .

குதர்க்கவாதிகளின் கொழுப்பை அடக்குவதாயும் ,
மாயாவாதிகளின் மதமாகிய விஷ அக்னியால் , வெந்துபோன ஜீவராசிகளுக்கு உயிர் ஊட்டுபவையாகவும்
அநாதியான ஸ்ருதி ,
யுவதியின் கலைந்துபோன கேசங்களை (வாக்யங்கள் ) சேர்த்து முடிக்கும் தாதி போன்றவையுமான
யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,குறையாத மோக்ஷமாகிற அமுதத்தைப் பெருக்குகின்றன

4 வது வரியான ” சிரந்தந ஸரஸ்வதீ சிகுர பந்த ஸைரந்த்ரிகா : || “
இது, பழமையான ஐதிஹ்யத்தை உணர்த்துவதாகச் சொல்வர்.
ஸ்ரீபாஷ்யகாரரின் அந்திம காலத்தில்,ப்ரஹ்மவித்துக்களான சில சிஷ்யர்கள்,
தம் ஆசார்யன் பிரிவை எண்ணி வருத்தமும் , பிற்பாடு சித்தாந்தத்தை ஸ்தாபிக்கவல்ல
இத்தகைய ஆசார்யன் இல்லாமல் போவதை எண்ணிக் கவலையும் கொண்டனர்.

இவர்களை நோக்கி, எம்பெருமானார் ,
நீங்கள் என் சிஷ்யையான கொங்குப் பிராட்டியைப் போய்ப் பாருங்கள் உங்கள் கவலை நீங்கும் என்றாராம்.

இவர்களும், அப்படியே சென்று பார்த்து , தங்கள் கவலையைச் சொன்னார்களாம்
இவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்ட கொங்குப்பிராட்டி ,வீட்டுக்குள் சென்று, தலைக்குப் பூசும் தைலம் , சீப்பு , சிவப்பு
மற்றும் வெள்ளைப் பட்டுக்கயிறு இவற்றை எடுத்துவந்து, இவர்கள் எதிரே அமர்ந்து , தலைக்கேசத்துக்குத் தைலம் தடவி,
கேசத்திலுள்ள சிக்கல்களை நீக்கி ,நன்கு வாரி, பின்னி அதைச் சிவப்புக் கயிற்றினால் ,நன்றாகக் கட்டினாளாம் .
பிறகு , சிறிது நேரம் சுகமாக இளைப்பாறினாளாம் .
பிறகு, வெள்ளைப் பட்டுக் கயிற்றால் மறுபடியும் இறுகக் கட்டி இவர்களை வணங்கி , விடைகொடுத்து அனுப்பிவிட்டாளாம்

இவர்கள் நேரே உடையவரிடம் வந்தார்கள் ;நடந்ததைச் சொல்லி , எங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார்கள்

எம்பெருமானார் , புன்சிரிப்புடன் விளக்கினாராம்
சிஷ்யர்களே—இந்தப் இந்தப்பெண்ணை ,சாதாரணமாக எண்ணவேண்டாம் ;
வேதங்களே இப்பெண்ணுருவம் பூண்டன
நமது வாக்யார்த்தங்கள் ,உபநிஷத் அர்த்த நிர்ணயம் இவைகளினால் நமக்கு சிஷ்யையாக நடித்தாள் ;
இவளுடைய கூந்தலே உபநிஷத் வாக்யங்கள் ;
இவள் கூந்தலை முதலிலே உதறியது , பிற மதஸ்தர் சொன்ன தவறான அர்த்தங்கள் ;
தைலம் தடவியது ,வேதார்த்த நிர்ணயம் செய்தது;சிக்கலை எடுத்தது , கூந்தலைப் பின்னியது எல்லாம்
விபரீத அர்த்தங்களைக் கண்டித்து உபநிஷத் வாக்யங்களின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியதைக் காட்டும்.
சிவப்பு பட்டுநூலால் கட்டியது, சிவப்பு நிற காஷாயம் அணிந்த நான்,பிற மதஸ்தர்களால் ,
சித்தாந்தத்துக்குக் கேடு வராதபடி ஸ்ரீபாஷ்யாதி நூல்களை இயற்றி,ப்ரசாரம் செய்தது. சிறிது நேரம் சுகமாக இளைப்பாறியது,
வேதவேத்யனான தன்னுடைய நாயகனோடு, சேர்ந்து இன்பமாக இருந்த நிலையைத் தெரிவிக்கிறது.

உடனே அவர்கள், அப்படிஎன்றால், வெள்ளைப் பட்டுநூலால் கட்டியதற்குப் பொருள்—-? என்று கேட்டார்கள்.
அதற்கு,
எம்பெருமானார், நாமே, சிலகாலம் கழித்து, மீண்டும் காஞ்சியில் தூப்புலில் , வேதாந்த தேசிகனாக அவதரிக்கப் போகிறோம்;
ஆயுள் முழுவதும் க்ருஹஸ்தாஸ்ரமத்திலேயே இருந்து,
க்ரந்தங்கள் உபதேசங்கள் மூலமாக நம் சித்தாந்தத்தை மேலும் வளர்ப்போம்;
பிறமதவாதிகளை வாதப்போரில் வெல்வோம்;

இதனால்தான்
வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் சோதவா பவேத் |
யதீந்த்ராம்சோதவேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம் ||
என்று, ஸ்வாமி தேசிகன் ஸ்ரீநிவாசனின் அவதாரமோ,
அவனுடைய திருமணியின் அவதாரமோ, அல்லது யதிராஜரின் அவதாரமோ என்று ஊஹிக்கப்படுபவருக்கு
மங்களம் என்று சொல்வதாக, பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் தனது வ்யாக்யானத்தில் சொல்கிறார்.

————

ஸ்ரீ ஸூக்தி பிரபாவத்தை -மேலும் அனுபவிக்கிறார் –

37-ஸூதா அசன ஸூ துர்க்ரஹ ஸ்ருதி சமஷ்டி முஷ்டிந்த்ய
கதா ஆஹவம் அசௌ கதான் கபட சௌகதான் கண்டயன்
முனி மனஸி லஷ்மண முதம் உதஞ்ஜயதி அஞ்ஜசா
முகுந்த குண மௌக்திக ப்ரகர ஸூக்திபி ஸூக்திபி

உப்புச்சாற்றைப் பருகும் தேவர்களாலும் எளிதில் அறிந்து கொள்ள இயலாத ஆழ்ந்த பொருள்களை
யுடைய வேதங்களை மிகவும் எளிதாக ஒரு பிடியில் பருக வல்லவர் நம் ஸ்வாமி,
புத்தாதி பாஹ்யர் வாதங்களை எளிதாக நிரஸித்து அருளினார்
அவருடைய கிரந்தங்கள் அனைத்துமே எம்பெருமானின் கல்யாண குணங்கள் என்னும் முத்துக் குவியல்களை
உருவாக்கிப் பாதுகாக்கும் முத்துச் சிப்பி போல் உள்ளன
இதன் மூலம் நம்மை பேர் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகின்றார் .
இறைவன் ஒரு கல்யாண குண சாகரம் என்பதை விளக்கி, முத்துக்களை, அதாவது இறைவனின் குணங்களை
வரிசையாகக் கொண்ட சிப்பி ஓடுகளாகச் செயல்பட்டு நம் இதயங்களை மகிழ்விக்கிறார் .

ஸூ தா அசன –தேவர்கள் -ஸூ தா அமிர்தம் —
ஸூ துர்க்ரஹ –அவர்களாலும் கிரகிக்க முடியாத
சுருதி சமஷ்டி முஷ்டிந்த்ய –சர்வ வேதங்களையும் -கையிலே -முஷ்டியிலே-தயந்தி -பருகுவது –தாத்பர்ய சூஷ்ம ஸமஸ்த அர்த்தங்களையும் -கைக் கொண்டு
கதா ஆஹவம் அசௌ–ஆஹவம் யுத்தம் –கதா ஆஹவம் –வாத யுத்தம் –ஆஹவ புங்கவ ஸ்தோத்ரம் -திருப் புட் குழி பெருமாள் சந்நிதியில் -ஸ்ரீ தேசிகன் அருளி
கதான் கபட சௌகதான்–புத்தர்கள் –கபட சந்யாசிகள் பிரசன்ன புத்தர்கள்
கண்டயன்-நிராகரித்து —
முனி மனஸி லஷ்மண –லஷ்மண முனி
முதம் உதஞ்ஜயதி -ஸந்தோஷம் ஏற்படுத்தி -பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசன பூர்வகமாக கல்யாண குணங்களை அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகளாலே –
அஞ்ஜசா —
முகுந்த குண மௌக்திக ப்ரகர–முத்து குவியல்
சுக்திபி ஸூக்திபி–அருளிச் செய்த ஸூ க்திகளாலே –
குணங்களான முத்துக்கள் -முகுந்தனின் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸூக்திகளாலே —

உடையவரின் ஸ்ரீஸுக்திகளுக்கு, பெருமை எப்படி வந்தது ? சொல்கிறார்,ஸ்வாமி தேசிகன்.
ஸ்ரீபாஷ்யம் போன்ற ஸ்ரீஸுக்திகள் ,மேலெழுந்தவாரியாக அர்த்தம் பண்ணினால்,
அத்வைதத்தைக் கண்டிப்பதாகத் தோன்றினாலும்,
பகவானின் கல்யாண குணங்களை,உறுதிப்படுத்திச் சொல்கின்றன என்கிறார் .
2வது வரியில், உடையவரை “அஸௌ ” என்பதற்கு, உடையவரே நேரில் ப்ரத்யக்ஷமாகி,
ஸ்வாமி தேசிகனுக்குப் பிற மத கண்டனங்களை உபதேசிக்கிறார் என்று வியாக்யானம் இடுகிறார்கள்.
உடையவரின் ஸ்ரீஸுக்திகள் ,சிப்பிகளைப்போல ! இவற்றில், பகவானின் கல்யாண குணங்கள் என்கிற முத்துக்கள் உள்ளன.
அதனால், எனது மனத்தில், ஆனந்தம் வெள்ளப் பெருக்கு எடுக்கிறது, என்கிறார் .

ஸமஸ்த கல்யாண குணாத்மகன் பகவான் என்று ஸ்தாபித்து –
பகவத் குணங்களான முத்துக்களுக்கு இவை முத்துச் சிப்பி போல் உள்ளன –
அமுதம் உண்ணும் தேவதைகளுக்கும் நிலம் இல்லாத மறைகளின் உட் பொருளை கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டு
கொண்டுள்ள ஸ்வாமி கபடர்களைத் தம் ஸ்ரீ ஸூக்திகளால் கண்டித்து நம் மனத்தில் ஆனந்தத்தை வளரச் செய்கிறார் –

———————

உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்.

38-கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹ நா முகே நிபதத பரப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி

பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-

கபர்த்தி மத கர்த்தமம் –புதை சேற்றில் -கர்த்தமத்தில் –கபர்த்தி மதம் -சைவ மதம் —கபர்த்தி -ருத்ரன் -ஜடா முடிக்கு கபர்த்தம் /
கபில கல்பநா வாகுராம்-கபிலர் கற்பனை ரூபமான வலை–கர்த்தப பிரஜாபதி குமாரர் கபிலர் —பிரக்ருதிக்கு ஸ்ருஷ்ட்யாதி காரணத்வம் சொல்லி
துரத்யயம் அதீத்ய –கடக்க ஒண்ணாத
தத் த்ருஹிண -சதுர்முக ப்ரஹ்ம -யோக மதம் ஆகிய –
தந்திர யந்திர உதரம் –கபடமாக பிடித்து வைக்கும் யந்த்ரம் / சாஸ்திரம் நமக்கு உபாதேயம் –
மதங்கள் த்யாஜ்யம் –தத்வம் ஹிதம் புருஷார்த்தங்கள் இவர்களுக்கு வேறே -/ தட்டான் வைரம் பதிக்க -மாப்பிள்ளையாக முடியாதே –
குத்ருஷ்டி குஹ நா முகே –பாழும் கிணறு –
நிபதத பரப்ரஹ்மண –பர ப்ரஹ்மம் விழுந்து கொண்டே இருக்க –
கர க்ரஹ விசஷணோ ஜயதி -கை கொடுத்து தூக்கி ரக்ஷித்து -ஜெயந்தி -பல்லாண்டு பல்லாண்டு
லஷ்மண அயம் முனி
கரம் / கஜம் குடுமி -அப்பய்ய தீக்ஷிதர் –மேலே குடுமி இருக்குமே -ஐயோ கை தூக்கி தானே கிணற்றில் விழுவார்கள் –

பரப்ரஹ்மம் —
சைவம் என்கிற சேற்றில் விழாமல் அதைத் தாண்டி,
கபிலரின் சாங்க்யமத வலையில் அகப்படாது தப்பித்து,
சிக்கல் உள்ள சார்வாகமத யந்த்ரதந்த்ரங்களில் புகாமல் பிழைத்து, வந்தது.
சங்கரரின் மாயாவாதத்தில் –அதன் வாயில் அகப்பட இருந்த சமயத்தில்,
பரப்ரஹ்மத்தைக் கைகொடுத்துக் காப்பாற்றியவர் , யதிராஜர் .
அதனால், அவர் மேன்மையாக விளங்குகிறார் என்கிறார்
ஜயகோஷம் செய்கிறார்–ஜய ஜய யதிராஜ

பரம் பொருளான புருஷோத்தமனைப் பல பெரிய ஆபத்துக்களின் நின்றும் ரக்ஷித்து அருளினவர் எம்பெருமானார் –கடக்க அரிதான சைவம் என்ற சேற்றைக் கடந்து சாங்கியருடைய அப்ரமாணிகமான மதமாகிற வலையில் இருந்து தப்பி –த்ருஹிண -மதமாகிற -யோக மதம் -சுழலும் யந்திரத்தின்-மத்யத்தையும் தாண்டி குத்ருஷ்டிகளான குகை வாயிலில் விழுந்து கொண்டு இருந்த பர ப்ரஹ்மம்
எம்பெருமானைக் கை கொடுத்து ஆபத்தின் நின்றும் விடுவிக்கும் சாமர்த்தியம் வாய்ந்த இந்த லஷ்மண முனி விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கிறார் –

—————

39-கணாத பரிபாடிபி கபில கல்பநா நாடகை
குமாரில குபாஷிதை குரு நிபந்தன க்ரந்த்திபி
ததாகத கதா சதை தத் அநுசாரி ஜல்பை அபி
பிரதாரிதம் ஜகத் பிரகுணிதம் யதீந்திர உக்திபி –

ராமானுஜரின் உன்னதமான நூல்கள் களத்தில் இறங்கி மக்களின் மனசாட்சியை சரியான நேரத்தில் உருவாக்கியது.

கணாதாரின் -வைசேஷிகரின் பரம அணுவே காரணம் என்பதையும்
கபிலனின் கற்பனை -சாங்க்ய தத்வம்
ஏமாற்றம் முற்றிலும் நாடகம் மற்றும் புரளி
குமாரிலா பட்டரின் மீமாம்ஸா வாதமும்
பிரபாகரர் போதித்த முடிச்சு போன்ற அவிழ்க்க முடியாத புதர்களாலும்
புத்தரின் பல்வேறு புனைகதைகளாலும் சூன்ய வாதங்களாலும் ,
அவர்களை போன்றே மாயாவாதிகளின் வாதங்களாலும் இந்த உலகம் பெரிதாக குழம்பி நின்றது
இந்த நிலையானது ஸ்வாமிகளின் கிரந்தங்களால் சீராக்கப் பட்டது

கணாத பரிபாடிபி –பரிபாஷைகளால் முதலில் –சப்தம் சொல்லி ஒவ்வாத அர்த்தம் சொல்லி -சாங்கியம் பிரதானம்
-மூல பிரக்ருதிக்கு பரிபாஷை –இவர்களுக்கு –கணாத ரிஷி -வைசேஷிக மதம் -பரமாணுவை —
கபில கல்பநா நாடகை-கற்பனையான நாடகங்கள் –ஈஸ்வரனை ஒத்துக்க கொள்ளாமல் –நிரீஸ்வர –
குமாரில குபாஷிதை–மீமாம்சகர் -குமாரில பட்டர் —குஸ்ஸிதா பாஷ்யம்–நிந்திக்கும் மதம் பிரபாகரன் சிஷ்யர்
-அபிப்ராய பேதம் -குரு மதம் -பரிகாசமாக -குருவுக்கு விஞ்சிய –வேதாந்தம் நிந்தித்து
குரு நிபந்தன க்ரந்த்திபி–முடிச்சுகள் போட்டு -அறிய முடியாத படி —
ததாகத கதா சதை –ததா கதன் -புத்தன் -சூன்யம் இதம் சர்வம் –ததா கதம் நாஸ்திக வாதம் –
-ஜாபாலி -பெருமாள் –வார்த்தை –கதா -வாதங்கள் -பிரமாணங்கள் கொண்டு சொல்லாமல் –சதை -கணக்கற்ற
தத் அநுசாரி ஜல்பை அபி–பிரசன்ன புத்தன் -ஞானம் ஒன்றே -ஜகம் மித்யா ப்ரஹ்மம் ஒன்றே ஜல்பிதம்
பிரதாரிதம் ஜகத்–ஏமாற்றப் படாதே ஜகம் –
பிரகுணிதம் யதீந்திர உக்திபி–தன்னை சுதாரித்து கொண்டதே -வெளி வந்து -ஸ்வாமி களுடைய ஸ்ரீ ஸூ க்திகளாலே
யதார்த்தமான தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளியிட்டு அருளி –

உலகம் ஏமாந்த தருணம்—-
கணாதர் என்பவரின் பரிபாஷைகள்;
கபிலரின் கற்பனைகள்;
குமாரிலரின் குறையுள்ள பேச்சுகள்;
ப்ரபாகர குருவின்,சிக்கலான நூல் முடிச்சுகள்;
புத்தரின் கட்டுக் கதைகள்;
இவற்றாலெல்லாம் ,பிறந்து பரவிய அர்த்தமில்லாப் பேச்சுகள் ;
இப்படி உலகம் ஏமாந்து இருந்த சமயத்தில், எம்பெருமானார் ஸ்ரீஸுக்திகள் பிறந்து பரவி வளர்ந்தன;
உலகம் தன்னை சுதாரித்துக் கொண்டது.
இப்படி, உண்மையை உலகுக்கு, தன்னுடைய ஸ்ரீஸுக்திகளின் மூலமாக உணர்த்தியவர், யதிராஜர்

தாங்கள் கெட்டது போதாது என்று லோகத்தாரையும் தாங்கள் கல்பித்த அபார்த்தங்களாலே
கெடுத்தவர்கள் கணாதர் கபிலர் குமரில பட்டர் பிரபாகர் புத்தர் இவர்களை
தம் ஸ்ரீ ஸூக்திகளால் நிரசித்து லோகத்தார் க்ஷேமத்தை பெருக்கியவர் நம் ஸ்வாமி –

——————

ஸ்வாமியுடைய சிஷ்ய அக்ரேஸர்களுடைய பெருமையை பரக்க உபபாதிக்கிறார் –

40-கதா கலஹ கௌதுக க்ரஹ க்ருஹீத கௌதஸ்குத
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன கும்ப சம்பூதய
ஜெயந்தி ஸூ திய யதி ஷிதிப்ருத் அந்திக உபாசநா
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி பாரதீ சம்பத

ஸ்வாமியின் திருவடி நிழலில் எப்போதும் அண்டி நின்று அதனாலேயே
பெருமை -முழுமையான ஞானம் வாக் வன்மை பெற்றவர்கள்
வாதம் செய்ய வல்ல புற சமயிகள் -உத்ஸாகம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட புற மதவாதிகள் யுடைய
புகழ் என்னும் கடலை அகஸ்தியர் போன்று உறிஞ்சி விடுவதில் வல்லவராக அல்லவா உள்ளனர் –
ராமானுஜரின் காலடியில் அருகாமையில் படிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அறிஞர்களுக்கு முதிர்ந்த ஞானம் இருக்கிறது,
அதுவே அவர்களின் செல்வம். அத்தகைய அறிஞர்கள் உலகை மகிழ்விக்கப் போகிறார்கள்.

கதா கலஹம் -யுத்தம் -வாய் சண்டை கலகம்-வாதப்போர்
கௌதுக க்ரஹ-குதூகலம் இவற்றால் -க்ரஹம் -பிடித்து துன்புறுத்தும் -நவ க்ரஹம் போலே / முதலை -பிசாசங்களும் க்ரஹம்
–நல்லது செய்யும் சாமர்த்தியம் சர்வேஸ்வரன் ஒருவனே –க்ருஹம் -வீடு வேற — —
க்ருஹீத கௌதச்குத-தார்க்கிகள் –ஏன் ஏன் கேட்டுக் கொண்டே -விச்வாஸ ஹீனர்கள் -தர்க்க மாத்ர நிஷ்டர்கள்
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன–சமுத்திரம் -அபரிச்சின்ன தீர்த்தம் -பருகி -க்ரசனம் -வாயில் போட்டுக் கொள்ளுவது –
கும்ப சம்பூதய –ஏக வசனம் -அகஸ்தியர் -இங்கு பல அகஸ்யர்கள் -பஹு வசனம் -கும்பயோனி அகஸ்தியர் —
ஜெயந்தி ஸூ திய –சோபனா மதி தீ -ஞானம் –
கும்ப கரணர்–பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாயில் விழுந்து -தெற்குத் திக்கில் –தோற்றும் உனக்கே பெரும் துயில் –
வேதாந்தத்தில் பகவத் அனுபவம் -ஸூ ஷிப்த்தி தசை –இதுவே துயில் அணை —
கும்ப சம்பூதியையே சொல்கிறாள் ஆண்டாள் -பேயாழ்வார் -பாசுரம் -பெரும் தமிழன் —
வாசல் திறவாதார் -இவரே –
யதி ஷிதிப்ருத்–யதி ராஜர் -பூமியை நிர்வஹிக்கிறவர்-ஷிதி-பூமி / ப்ருத்-நிர்வகித்தால் -பர்த்தா/ பரம் பாரம் பொறுப்பு
–பூ பாலன் -என்றவாறு —பூ ஷிதி பர்யாயம்
அந்திக உபாசநா–அருகில் இருந்து -குருகுல வாசம் –சிசிருஷை பண்ணி -கற்று –
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி –பலபூதமான -பரிபக்குவமான தசை அடைந்து -ஒளி விட –
பாரதீ சம்பத–சாஸ்திர ஞானம் -ஐஸ்வர்யம் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகள் –

“சிஷ்யஸ்தேஹம் ” என்று, பணிவு பக்தியுடன் தன்னைவந்து ஆச்ரயிக்கும் சிஷ்யர்களுக்கு, உடையவர்,
மறுபடியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், கற்பிப்பார்.
இந்த சிஷ்யர்கள்–குட்டி அகஸ்த்யர்கள் பிறமதவாதிகளின் , புகழ் என்கிற சமுத்ரம் பொங்கிய போது,
இந்த சிஷ்யர்கள், குட்டி அகஸ்த்யர்களாக ஆகி, அந்த சமுத்ரத்தையே பானம் செய்துவிட்டார்கள்,
( திருக்குருகைப் பிரான் பிள்ளான், கிடாம்பி ஆச்சான் ,கூரத்தாழ்வான் போன்ற சிஷ்யர்கள் )
இவர்கள் வித்யா ஸம்பன்னர்கள் ;ஸத்ஸம்ப்ரதாய நிஷ்டர்கள் ;ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள் .

இப்படி புறச் சமயிகள் வாதம் பண்ணுபவர்கள் எங்கே எங்கே என்று கடல் போலே பொங்கி வந்தாலும் –
அகஸ்தியருக்கு ஒப்பான சிஷ்யர்கள் -கடல் நீர் வற்றும் படி ஆசமனம் பண்ணினது போலே –
இக்கடலையும் உலர்த்த வல்லவர்கள் –
ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் போல்வார் அவர்களை அடக்க வல்லவர்கள் –
எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்ய ப்ரபாவத்தால் இவர்கள் வித்யா பூர்ணர்களாய் –
தத்வ ஞானிகளாய் –
ஜய சீலர்களாய் -விளங்குகிறார்கள் –

—————

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –

41-யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபித ஆசயா நாம் சதாம்
வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலிநா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம்
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ராமானுஜரின் படைப்புகளின் ஞான நறுமணத்தைப் பெற்ற மஹான்களின் தாமரை பாதங்களை என் தலையில் சுமக்கிறேன்.
ஆனால் அதே சமயம் உலகமும் பார்க்கட்டும் என்று சொல்கிறேன்.
எரியும் பைத்தியக்கார வெறியுடன், ராமானுஜரின் அமைப்பை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின்
தலையில் நான் என் இடது காலை வைக்கத் துணிவேன்.

யதீஸ்வர சரஸ்வதீ--எம்பெருமான் அருளிச் செய்த சாஸ்திர ஞானம் -நவ கிரந்தங்கள்
ஸூ ரபித ஆசயா நாம் சதாம் –ஆசயாம் புத்தி –தேசிகாசாய பிரகாசம் -ஆசை ஹிருதயம் பிரகாசம் —ஸூ ரபி பரிமளம் -எப்பொழுதும் கமழ்ந்து உள்ள
சரணாம் புஜம் -திருவடித் தாமரைகள்
பிரணதி சாலி நா மௌளிநா –தாழ்ந்து வணங்கி சிரஸா
வஹாமி -வகிக்கிறேன் —சதாம் சரணம் புஜம் அந்வயம்
மேலே
ததன்ய மத துர்மத -தத் அந்நிய பாஹ்ய குத்ருஷ்டிகள் மதம் –துர்மதம் -அசூயை -துர் குணங்கள்
ஜ்வலித சேதஸாம் வாதி நாம்–நாம் கல்யாண குணங்கள் பிராப்தி அனுபவிப்பதை சொல்ல -அவர்கள் மனம் அசூயையால் பற்றி எரியுமே–
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் –இடது காலை வைப்பேன் -பீச்சங்கால் –வலது காலை வைக்க கூட மதிக்க மாட்டேன் –தக்ஷிணம் -வலது —
லஷ்யதாம் -லோகம் காணக் கடவது -இத்தை ரகஸ்யமாக செய்ய வில்லை –behold -அனைவரும் பாருங்கோள்-நிஹிதம் -வைக்கப் பட்டது காணீர் —

வேதவிரோதமதங்கள் , உடையவராலும், அவரது ஸ்ரீஸுக்திகளாலும் மீண்டும் தலையெடுக்காதபடி செய்யப்பட்டன.
அவரது பெருமைமிகு சிஷ்யர்கள் பிள்ளான் , ஆச்சான் போன்றவர்கள் திருநாடு அலங்கரித்தார்கள்.
அப்புள்ளாரும் ,ஸுதர்சன ஸுரியும் வயோதிகம் அடைந்து விட்டார்கள்.
இதுதான் தக்க தருணம் என்று, பிற மதஸ்தர்கள் , எதிரிகள் ஒன்று சேர்ந்து,வாதப்போருக்கு ஆயத்தமான சமயத்தில்,
ஸ்ரீவைஷ்ணவர்கள் ,என்செய்வது என்று கலங்கி இருந்தபோது,
எதிரிகளின் மாயாவாதங்களை நிரஸித்த யதிராஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
மறுபடியும் ஸ்தாபித்தவர்,ஸ்வாமி தேசிகன்.
இந்த ஸ்லோகத்தில், ஸ்வாமி தேசிகன்,
அப்புள்ளார் போன்ற பூர்வாசார்யர்களின் திருவடிகளைத் தலையில் தாங்கினேன் .
அந்த பலத்தினால்,தீய மனம் கொண்ட எதிரிகளின் தலையில் ,
என் இடதுகாலை வைத்து,அவர்கள் தலையை இடறுகிறேன் —என்கிறார்

யதிராஜ திவ்ய ஸூக்திகளின் வாசனை கமழும் மனத்தினரான மஹான்களுடைய திருவடித் தாமரைகளை
சென்னிக்கு அணியாகக் கொண்ட அடியேன் எம்பெருமானார் தரிசனத்துக்குப் புறம்பான மதங்களில்
துர்மானத்தால் மனதை வைத்துள்ள புறச் சமயிகள் தலைகளை
என் இடதுகாலால் மிதிக்கிறேன் -யாவரும் காண்க என்று வீர வாதம் பண்ணுகிறார் –

——————

எம்பெருமானார் தரிசனத்தில் நிலையாய் இருந்து பாபம் அற்று ஸூ கமாய் இருப்பாயாக –
என்று தம் திரு உள்ளத்தை நோக்கிச் சொல்கிறார் –

42-பஜஸ்வ யதிபூபதே அநிதமாதி துர்வாச நா கதத்வ
பரி வர்த்தன ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம்
லபஸ்வ ஹ்ருதய ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம்

ஓ என் மனமே! ராமானுஜரின் ஒரு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுங்கள்,
அதில் இழியவே பல்வேறு பாதைகளில் அலைந்து திரிவதில் இருந்து விடுபடும்.
அது சக்ராயுதம் ஏந்தும் எம்பெருமானின் கிருபா மழையை உங்கள் மேல் பொழிவிக்கும்
அது உங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு, உங்கள் மீது வேகமாகப் பெருகும்.
இதன் மூலம் அந்தமில் பேர் இன்பம் உடனே கிட்டி விடும்

பஜஸ்வ ஹ்ருதய–உபாயமாக இதை செய் -பஜநம்-ஏக தேசம் -சிரவணம் கீர்த்தனம் -இத்யாதி நவ வித –
-ப்ரீதி பூர்வக அனுசந்தானமே பஜனம்-இங்கு உபாயம் –இது வரை பெறாத ஒன்றை பெறுவது
லாபம் -பிரவ்ருத்தி செய்து பெறுவது – இங்கு யதிராஜர் ராஜ பாட்டை -உபாயமாக அர்ச்சிராதி மார்க்கம்
யதிபூபதே-பூமியா பதி பூ பதி -யதிராஜர் –
அநிதமாதி துர்வாச நா-கதத்வ பரி வர்த்தன–-கதா கதா சிரமம் -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –
கதத்வம் –தீய மார்க்கம் -தூமாதி -மார்க்கம் சென்று ஸ்வர்க்காதி அனுபவித்து திரும்பி — பரி வர்த்தனம் மீண்டும் மீண்டும் —
காரணம் -துர்வாசனை –க்ருத்ய அகரணம் அக்ருத்ய கரணம் -அநாதி காலமாக -கிற்பன் கில்லேன் –முனை நாள்கள் எல்லாம் –
-கிற்பன் முடியும் என்று இலேன் -கில்லேன் முடியாது என்று இலேன் —
பகவத் ஆஜ்ஜை சித்தம் -என்று உணராமல் ஸ்வரூப ஹானி -முனை நாள்கள் எல்லாம் அல்ப சாரங்கள் அவை சுவைத்து –
-சுவைக்க சுவைக்க உன்னை விட்டு அகன்றேன் –விகிதத்தை செய்யாமை -அவி ஹதம் செய்து -இல்லாத காலமே இல்லை -அநாதி காலம் –
என்னைப் பார்த்தால் பேற்றுக்கு வழி இல்லை -உன்னைப் பார்த்தால் பேறு கொடுக்காமல் இருக்க முடியாதே
-கைக் கொள்ளாமல் இருக்க விரகு இல்லை உன்னைப் பார்த்தால்
முந்நீர் –ஆக்கையின் வழி உழல்வேன் —முன்னாள் எல்லாம் -யதிராஜர் இவற்றை நிவர்த்தித்து -ராஜ மார்க்கம் அடைவாயாக –
ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம் -சிரம நிவர்த்தனீ வர்த்தனீ -மார்க்கம் -அர்ச்சிராதி மார்க்கம் -சன்மார்க்கம் பஜஸ்வ-இத்தால் -அடைவது மேலே
லபஸ்வ ஹ்ருதய -மனமே இதை அடைவாய் -புருஷார்த்தமாக பெறுவாய்
ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ–தேருக்கு பதம் -தேர் சக்கரம் -ரதாங்க பாணி -சக்கரம் –கமன சாதனம் பதம் –
ஆயுதமாக உடையவன் -கையார் சக்கரத்து கரு மேனி அம்மன் -அனுக்ரஹத்தால்
நிக்ரஹ நிவ்ருத்தி பெறுவாய் -ஸ்வாமி ராஜ பேட்டையில்
அதி வேகமான பிரவாகம் -அருள் வெள்ளம் –
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம் -துரிதம் -உரு மாய்ந்து போகும் -சகடாசுரன் பட்டது படும்
நிஸ் த்ருடத்-சும்மெனாதே கை விட்டோடி -தூறுகள் பாய்ந்தனவே –
துரித -சஞ்சித பாபங்கள் –துர்வ்ருத்திம் -துக்கம் உண்டாக்கும் பாபங்கள் -பிராரப்த கர்மங்கள் –
நிர்வ்ருதிம் –நிரவதிக ஆனந்தம் லபஸ்வ -அடைவாய் –
பஜஸ்வ –பக்தி பிரபக்தி -சொல்ல வில்லை -எதிராஜர் சம்ப்ரதாயம் –சாது கோஷ்ட்டி அடைந்து –த்வஜ விட்டு ஒழிக்க வேண்டியது
துர்ஜன சம்சர்க்கம் த்வஜித்து -சாது சமாகம் கைக் கொள்ள வேண்டும் -இத்தையே பஜஸ்வ என்கிறார் –
பத-பாத-சப்தங்கள் -பதயத்தி இதி பதம் ப்ராப்யம் -எதனால் சென்று அடைகிறோம் -பரம பதம் -பரம பிராப்யம்
திவ்யாத்மா ஸ்வரூபம் -ப்ரத்யாத்மக ஸ்வரூபம் ஸ்தான விசேஷம் மூன்றும் -பரமபதம் என்பதால் குறிக்கும் –
ஸ்ரீ பதம் -பெரிய பிராட்டியார் திருவடி —பர தத்வம் இது தான் -சாஸ்திரம் பிரவ்ருத்தி திருவைக் கண்டதும் -நின்றதே –
எல்லை அடைந்தோம் என்றதே —
பாத விபக்தி பரிச்சயம் ரகு வம்சம் -காளிதாசர் காவியங்கள் குமார சம்பவம் வாசித்து அறிய வேண்டும் -பாஷா விசேஷம்
-சம்பாஷணை ரூபம் –நாடகங்கள் வாசித்து சாகுந்தலம் -என்னை பேசு என்னை பேசு என்னப் பண்ணும் -பிரயோகங்கள் அறியலாம் 

இந்த ஸ்லோகத்தில் “மனஸ் “ஸுக்குச் சொல்கிறார்–பாகவதர்களுக்கும் சொல்வதாவது –
பிற மதங்கள்—முள்ளும் கற்களும் நிறைந்த பாதை.
அதில் செல்லாமல் ,
யதிராஜரால் நன்கு அமைக்கப்பட்ட ஸித்தாந்த வழியில் செல்வாயாக !
பகவானின் அனுக்ரஹ வெள்ளத்தால் ,பாபமாகிய தடங்கல் அழிய ,
வைகுந்தம் சென்று பரமானந்தத்தை அனுபவிப்பாய் என்கிறார்

ஓ மனமே அநாதியாக துர்வாசனையால் தடம் கெட்டுத் திரிவதால் உண்டான இன்னல்களைப் போக்கும்படி யுள்ள
செப்பன் இட்ட மார்க்கமாகிற சத் சம்பிரதாயத்தைப் பற்றினால்
கை கழலா நேமியனான எம்பெருமானின் அனுக்ரஹத்தால்
பாபம் அற்ற வாழ்ச்சி பெறுவாய் என்று தம் திரு உள்ளத்துக்கு உபதேசிக்கிறார் –

———————

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சார தமமானவை –
அதனால் மதிக்க முடியாத பெருமை வாய்ந்தவை -என்கிறார் –

43-குமதி விஹித க்ரந்த்த க்ரந்த்தி ப்ரபூத மதாந்திர
க்ரஹிள மனச பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித குலகிரி
துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌஸ்துப-

வீணான இயங்கியல்வாதிகளின் தவறான புத்தகங்களில் உள்ள தவறான எண்ணங்களால் உலகம் நிறைந்துள்ளது.
அவர்கள் மீது சாஃப்ட் கார்னர் உள்ள எவரும், வெறி பிடித்த மனம் கொண்டு வலிய முடிச்சுகளால்
கட்டப்பட்டவர்களாய் இருந்து ராமானுஜரின் படைப்புகளை அளவிலும் மதிப்பிலும் அற்பமாகக் கருதுவார்கள்.
இருப்பினும், அத்தகைய மதிப்பீட்டால் நாங்கள் புண்படுத்தப்படவில்லை, ஏனெனில்
இறைவனின் மார்பில் உள்ள ஸ்ரீ கௌஸ்துப ரத்தினம் ஒரு உயர்ந்த மலைச் சங்கிலியுடன் ஒப்பிடும் போது
அளவில் அற்பமானதாகத் தோன்றும் என்றாலும் எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்பிடும் அன்றோ

குமதி விஹித –குஸ்திதா மதி குமதி -குத்ருஷ்டிகள் –வேதத்தை இசைந்து -பாஹ்யர் இசையாமல் -இருவரும் சேர்ந்து குமதி -அவர்களால் பண்ணப் பட்ட
க்ரந்த்த க்ரந்த்தி– ப்ரபூத -நிறைந்த கிரந்தங்கள் —அதி ப்ரபூதான் -பூரித்து வைத்த –கிரந்தம் -எழுதி -கிரந்தி பேசி வைத்தது –
மதாந்திர -மாதாந்தரங்கள் –
க்ரஹிள மனச-அகப்பட்டு விகாரம் அடைந்த மனசை யுடையவர்கள் –
பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம் -யதீஸ்வரர் வாக் வ்ருத்திகள் ஸ்ரீ ஸூ க்திகளை அல்பம் என்பர் சிலர் –
பிரமாணம் பிரமேயம் -சர்வம் சூன்யம் -என்பர் –
அத்வைதர் -புத்தர் கூடி –கடனை கண்டாகாதி -எல்லா மதமும் தப்பு என்பதே இவர்கள் மதம்
கண்டன கண்ட காவியம் கண்டனத்துக்கு சதா தூஷணி பண்ணினார் -தத்வ முக்த கலாபம் பண்ணினார் -தேசிகன்
ஆல்பமாக கணிசித்தால் தோஷம் ஆகாதோ எண்ணில்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித –போக்யமான -பகவான் உடைய வஷத் ஸ்தலம் -மேடை -கோயில் கட்டணம் அன்றோ அவளுக்கு
-அலங்கரிக்க உசிதமான கௌஸ்துபம்
குலகிரி துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌச்துப–பெரிய பர்வதம் -கூட கௌஸ்துபத்துக்கு ஒவ்வாதே-
நிரவதிக தேஜஸ் அன்றோ இது –
மந்த புத்தி கொண்டு இவர்கள் செய்த புத்தகச் சும்மை– பொருந்தாதே -ராமானுஜர் மெய்ப்பொருள் பொருந்திய பின் நம் மனசிலே
தங்கம் -குந்துமணி -சாம்யம் -என்பதை கண்டு வருந்தும் -உருக்கி அடித்தாலும் வருந்தாமல் -சாம்யம் எடையில் தான் என்றாலும் -வருந்தும்

பிற மதங்களில் தர்க்கவாத நூல்கள் நிறைய இருக்கின்றன.
அந்த மதவாதிகளுக்கு, உடையவரின் ஸித்தாந்த நூல்கள், சிறியதாகவே தோன்றும்.
பகவானின் திருமார்பில் அணிகலனாக இருக்கும் “கௌஸ்துப மணி” மிகவும் சிறந்தது;
ஆனால், சிறியது.
குலாசலம் என்கிற மலை மிகப் பெரியது.
தராசில் எடைபோட்டால் மலை இருக்கும் தட்டு அடியிலேயே இருக்கும்;
எடையைக்கொண்டு சிறப்புகளைக் கூற முடியுமா ?
பிற மத நூல்கள் நிறைய இருந்தாலும் குலாசலம் என்பதற்காக உயர்வைப் பெறாது.
கௌஸ்துப மணியைப் போன்ற ஸ்ரீபாஷ்ய ஸுக்திகள் உயர்ந்தவை.
ஸாரமான நூல்களும் ஸம்பிரதாயமும் உள்ளவை–என்கிறார்,

இதர மதஸ்தர்கள் அநேக விஷயங்களை சம்பந்தா சம்பந்தம் இன்றி முடித்து இருப்பதால்
அவர்களுடைய கிரந்தங்கள் விஸ்தாரமாய் இருக்கும் -பொருள் இராது –
எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சாரமாய் இருப்பதால் சிறியவை என்று சொல்லி அவமதிப்பார் சிலர் –
பெரிய பாராங்கல்லை தராசின் ஒரு தட்டிலும்
பெரிய பெருமாள் திரு மார்பை அலங்கரிக்கும் ஒப்புயர்வற்ற கௌஸ்துபத்தை ஒரு தட்டிலும் வைத்தால்
எது எடை அதிகமாக இருக்கும் —
அதிக எடை இருப்பதால் பாராங்கல் உயர்ந்ததாகி விடாது என்றபடி –

—————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகளின் பெருமை மந்த மதிகளுக்கு நிலம் இல்லை என்கிறார் –

44-ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம் யதீஸ்வர பாரதீம்
குமதி பணிதி ஷோப ஷீபா ஷிபந்து பஜந்து வா
ரச பரிமள ச்லாகா கோஷ ஸ்ப்புடத் புட பேதனம்
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் கிம் இதி அபிமன்வதே

ராமானுஜரின் படைப்புகள் பழங்கால வேத வாசகங்களில் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தீர்க்க நமக்கு உதவுகின்றன.
தர்க்க வல்லுனர்களின் கேடுகெட்ட வாதங்களால் பாதிக்கப்பட்டு, நல்ல புத்தியை இழந்தவர்கள்,
ராமானுஜரின் படைப்புகளை விட்டுவிடலாம், இல்லையென்றால், அந்தப் படைப்புகளைப் படிக்கட்டும். அது என்ன விஷயம்?
பச்சைக் கற்பூரத்தின் சுவையை புகழ்ந்து பேசும் சத்தம் மிக அதிகமாக இருக்கும் ஒரு நகரத்தில்,
சாதாரண உப்பு வியாபாரிகள் பச்சைக் கற்பூரத்தைப் பற்றி எப்படிப் பதிலளிப்பார்கள்? இது வெளிப்படையானது
(அவர்களுக்குத் தெரியாது அல்லது ரசிக்க முடியாது!-இவர்களால் பச்சைக் கற்பூரம் தனது மஹிமையை இழக்காது அன்றோ )

ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம்–ஸ்த்தவிர -நிகம பழைமையான -முதிர்ந்த –ப்ராசீனம் –
-ஸ்தோம -வேதம் – ஸ்த்தேயாம்-கைம்முதல் –தத்வ ஹித புருஷார்த்தங்கள் நிர்ணயம் பண்ண –
யதீஸ்வர பாரதீம்–ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள்
குமதி பணிதி ஷோப ஷீபா-குத்ருஷ்டிகள் -பாஹ்யர்கள் -பணிதி இயற்றப்பட்ட நூல்கள் –ஷோபம்-அஹங்காரம் –
ஷிபந்து பஜந்து வா — ஷேபித்தாலும் பஜித்தாலும் சரி-இதனால் ஏற்றமோ தாழ்வோ -கோது என்று இகழ்வினும்-கொள்-வோம் – என்று உகந்தாலும் –
இதுக்கு த்ருஷ்டாந்தம் மேலே
ரச பரிமள ச்லாகா கோஷரசம் -நாவுக்கு –பரிமளம் -ஸூ கந்தம்-கொண்டாடும் கோஷம் –
ஸ்ப்புடத் புட பேதனம்— நகரம் எல்லாம் எதிர் ஒலிக்கும் படி –
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் -கிம் இதி அபிமன்வதே-பச்சை கற்பூரம் –சாதாரணமாக சொல்லும் இது கற்பூரம் இல்லை -வியாவர்த்திக்க
–பச்சை விசேஷணம் –menthaal synthetik பேர் -oliyam -5th deraivative camphor –
அர்க்கம் -விலை மதிப்பு -புல்லிங்க சப்தம் -உப்பு வியாபாரிக்கு எப்படி தெரியும் –நகரம் எங்கும் நான்கு திக்கிலும்
எதிர் ஒலித்து இருந்தாலும் –இவன் என்னவாக நினைப்பான் –பேதனம் -பிளக்கும் படி -ஒலி என்றவாறு
கிம் இதி அபிமன்வதே-அபிமானிக்கிறார் -அபிமானம் -பிரமம் –அபிமன்யதே -பாட பேதம் –உள்ளத்து உள்ளபடி அறிதல் –
யதார்த்த ஞானம் யதார்த்த ஞானம் இரண்டுக்கும் அபிமானம் உண்டே
அபிமன்யதே பாடம் சரி இல்லை என்பர் –
வேதாந்த ச்சார்யார் கிரந்த மாலை -காஞ்சி ஸ்வாமிகள் நன்றாக சிரமம் எடுத்து -பாட பேதங்கள் -சமன்யவப்படுத்துவார்

வேதங்கள் ,உபநிஷத்துக்கள் —இவைகளின் கருத்துக்களை விளக்கும் ,ஸ்ரீ உடையவரின் ஸ்ரீஸுக்திகளை ,
குயுக்தி வாதங்கள் செய்பவர் இகழ்ந்தாலும் , ஏற்றாலும் —இரண்டும் எமக்கு ஒன்றே.
தனது சுவை, வாஸனை இவை பற்றிக் கொண்டாடிப் பேசப்படுபவர்களால் உயர்வாகக் கருதப்படும்
பச்சைக் கற்பூரத்தை, உப்பு விற்பவர்கள் அறியமாட்டார்கள் என்கிறார்

சிக்கல்களை விடுவித்துத் தெளிவாக உண்மைப் பொருளை உபபாதிக்கும் யதீஸ்வருடைய ஸ்ரீ ஸூக்திகளை
புத்தி கேடர்களான புறச் சமயிகளின் பேச்சுக்களால் மனக் கலக்கம் அடைந்து மதி இழந்தோர்
கொண்டால் என்ன -விட்டால் என்ன- ஒரு குறையும் இல்லை –
மிக உயர்ந்த வஸ்து என்று ஊர் அறிந்த கற்பூரத்தின் பெருமையை -விலையை
உப்பு விற்பவன் எப்படி அறிவான்–மூட்டை என்ன விலை – என்று தான் கேட்ப்பான் –

————

45-வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

மும்மூர்த்திகளில் பிரம்மா வேதம் ஓதும் முகங்களில் தன் மனைவியைத் தன் நாக்கில் சுமந்துள்ளார்.
சிவனின் இடது பாதி முழுவதையும் அவன் மனைவி எடுத்துக் கொள்கிறாள்.
உயர்ந்த பரதத்வமான கண்ணனோ , தனது சொந்த வழியில், கோபியர்களுக்கு அடி பணிந்தார்.
அப்போது, ​​பெண் பால் காதலுக்கு அடி பணியாதவர்கள் ராமானுஜரின் சீடர்கள் மட்டுமே!
யதிராஜ அடியவர்கள் காமாதி தோஷங்களில் சிக்கிக் கொள்வதில்லை என்றவாறு

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை -முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் -வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –
அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வியாவர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆண் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்
வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூக்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் -யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

யதிராஜருடைய விசிஷ்டாத்வைத ஸித்தாந்தம் ,கௌஸ்துபமணி பச்சைக் கற்பூரம் போன்றது –
இதற்குக் காரணம் என்ன ? சொல்கிறார்.
விச்வாமித்ரர் போன்ற ரிஷிகள் ,அப்சரஸ் ஸ்த்ரீகளிடம் மயங்கினார்கள்.
ப்ரஹ்மா , தன் மனைவி சரஸ்வதியை எப்போதும் தன்னுடைய நாவிலேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.
பரமசிவனோ ,தன் சரீரத்தில் பாதியையே பார்வதிக்குக் கொடுத்து, பிரியாமல் இருக்கிறான்.
பகவானோ, மஹாலக்ஷ்மியைத் தன் திருமார்பில் வைத்துக் கொண்டு இருக்கிறான் ;
இது போதாது என்று, ஆயர்பாடியில் இடைச்சிகளுக்கு வசப்பட்டு இருக்கிறான்.
ஆனால், இப்படி காமத்துக்கு வசப்படாதவர் யதிராஜருடைய திருவடியை ஆச்ரயித்தவர்கள்.
மும்மூர்த்திகளையும் ஆட்டிப்படைக்கும் காமம், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் மூழ்கி,
அவருக்கு சிஷ்யர்களாக இருப்பவர்களிடத்தில் ,நெருங்கவே பயப்படுகிறது.
ஆக , காமத்துக்கு வசப்படாதவர்கள், யதிராஜரின் ஸித்தாந்தத்தில் நிஷ்டை உடைய சிஷ்யர்கள் —என்கிறார்

எம்பெருமானார் தரிசனத்தை அவலம்பித்தவர்கள் விஷய வைராக்யம் உள்ளவர்களாகப் பார்க்கக் படுகிறார்கள் -என்கிறார் –
அனாதியான வேதங்களை சதா உருச் சொல்லிக் கொண்டு இருக்கும் நான்முகனும் நாவிலே மனைவியை கொண்டுள்ளான் –
சிவனுடைய இடது புறமே பெண்ணாய் விட்டது -பரதத்வமான எம்பெருமானும் கோபியர்கள் வசமாய் விட்டான்
ஆனால் எம்பெருமானார் திருவடிகளை பற்றினவர்கள் காமனால் பீடிக்கப் படுவதில்லை –பரம விரக்தர்களாய் இருப்பார்களே –

ஹதி மஹிலாமாத்யோ வேதாஸ்த்ரயீமுகரைர்முகை
வரதனுதயா வாமோ பாக: ஶிவஸ்ய விவர்ததே |
ததபி பரமம் தத்த்வம் கோபிஜனஸ்ய வஶம்வதம்
மதன கதனைர்ன க்லிஶ்யந்தே கதம் ந்விதரே ஜனா: ||– சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

வேதம் முழங்கும் தன் திருநாவில்
நான்முகன் தன் மனைவி கலைமகளைத் தாங்கினான்…
சிவனுக்கு ஒரு பாதி உடலே பெண்ணாக ஆனது…
இவர்களை விட கண்ணனென்னும் பெரிய தத்துவமோ
கோபிமார்களின் வசத்தில் ஆட்பட்டு கிடக்கிறான்…
மன்மதனிடம் போரிட்டு இவர்களே தோற்றார்கள் என்றால்
சாமான்ய மக்கள் என்ன ஆவரோ!

வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
ஆத்ய -சிருஷ்டியில் முதல் -வேதா -நான் முகன்–வேதஸாம் பிதாமக –
தூண் பிதாமகி-ஸ்தம்பம் -பிள்ளை -அவர் பிள்ளை கணக்கற்ற நான் முகன் –
அண்டங்கள் பல பல —
த்ரயீ -வேதங்கள் -எண்ணிக்கை இல்லை -ருக் யஜுவ்ர் சாம -மூன்று வகை –
முன்பு யுகங்களில் ஒரே வேதம் -கலிக்காக நான்காக பிரித்து
அதர்வணம் -ருக்கில் சேரும் -என்பர் -வஸிஷ்டர் ராமர்
பட்டாபிஷேகம் அதர்வண வேதம் கொண்டு –
முகரை-இடை விடாமல் -வாசனையே உபாத்தியாயர் -வாய் வெருவுதல் –

வெருவாதாள் வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
வேதங்களை வாய் விடாமல் சொல்லி —வஹதி மஹி ளாம்-வகிக்கிறாள் -சரஸ்வதி
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே –

அழகிய -ஸ்ரேஷ்டமான -பகுதியில் -இடது பாகத்தில் -மாறு பட்டு விளங்கும் -சிவனுக்கு -உமை ஒரு பாகன் –
விவர்த்த வாதம் -பரிணாமம் -வாதிகள் -உபாதான காரியம் இரண்டும் சத்யம் -ப்ரஹ்மம் மட்டும் சத்யம் விவர்த்தம்
ஸ்வரூப பரிணாமம் -உபாதி பரிணாமம் -நாம் சரீர பரிணாம வாதிகள் –
வியாவர்த்தகன் -வி யா வர்த்தகம் -வேறு பட்டது -முரட்டு ஆன் சரீர பாகத்தி இருந்து வேறு பட்ட அழகிய இடப் பாகம்

வர வர முனி -அழகிய மணவாள முனி –
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்-பர தத்வம் -சர்வ நியாந்தா -அவன் கூட கோபி ஜனங்கள் வசப்பட்டு -நியாமகன்
முன்பு சொன்னவர்கள் அபர தத்வங்கள் -நஹீ நிந்தா நியாயம் -எம்பெருமானார் திருவடி சம்பந்தம் இல்லாத பலனைக் காட்டி அருளுகிறார் –
அமர்யாதா -துர்மானி -அநாத ஸ்தோத்ர ரத்னம் -53 -கூரத் ஆழ்வான் சொல்ல மாட்டார் -ஆளவந்தார் எம்பெருமானார் திருவடி
சம்பந்தம் இல்லை சொன்னார் நான் சொல்ல மாட்டேன் என்பாராம் -அழகர் கேட்டு ஆனந்தம் அடைந்தார் –
மதன கதனை ந க்லிச்யந்தே–மன்மதன் -மூலம் கிலேசம் அடைய முடியாதே
யதீஸ்வர சம்ஸ்ரயா–ஸ்ரீ ஸூ க்திகள் -பயின்று -கடாக்ஷ உபதேசங்களால் –
யத்ர யத்ர யதீஸ்வர ஸம்ஸரய–தத்ர தத்ர இது இல்லை என்றவாறு –

மன்மதனிடம் போரிட்டு யதிகளின் அரசனை அண்டியவர்கள் தோற்பதில்லை…

யதி என்பது துறவியைக் குறிக்கும். யதிகளின் அரசனாக ராமானுஜரைக் குறிப்பிடுகிறார்.
ராமானுஜரை அண்டியவர்கள் காமம் என்னும் சிற்றின்பத்துக்கு அடிமையாவதில்லை என்பது கருத்து.

இதில் சில சொல் விளையாட்டுக்களையும் கவி உள்நுழைத்து இருக்கிறார்.
ஆத்யோ வேதா: என்று பிரமன், ஒன்பது பிரஜாபதிகளில் முதன்மையானவன் என்றும்,
முதன்மையானவனே பெண்ணைத் தன் நாவில் தாங்குகிறான் என்றும் குறிப்பிடுகிறார்.
அடுத்து “சிவ”னென்னும் பெயர் தாங்கியவன், இடம் வலமாக மாறி “வசி” என்று வசப்பட்டவனாகி விட்டான் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து கோபிகைகளைக் குறிப்பதற்கு, ஆண்பால் சொல்லான கோபி ஜன: என்று குறிப்பிட்டது,
கோபிகைகள் “இடைப் பேச்சும் முடை நாற்றமுமாக” பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அழகு என்று சொல்ல முடியாமல் இருந்ததை
சூசகமாக சுட்டிக் காட்டி, அவர்கள் பார்வைக்காகவும் கண்ணன் காத்திருந்தான் என்று குறிப்பிடுகிறார்.

—————

46-நிகம பதிக சாயா சாகீ நிராசா மஹா நிதி
மஹித விவித சாஸ்த்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி
திரிபுவன தம ப்ரத்யூஷ அயம் த்ரிவித்ய சிகாமணி
ப்ரதயதி யதி ஷமாப்ருத் பாராவரீம் அபிபர்யயாம்

ராமானுஜர்- வேதங்களின் ஆழ்ந்த பொருளை அறியாமல் வழிப்போக்கர்கள் போல் திரிபவர்களுக்கு
அவற்றை அறிவித்து நிழலை வழங்கும் மரத்தைப் போல் நிற்பவர்,
வேத வழியைப் பின்பற்றுபவர்களால் மகிழ்ந்தவர்;
எல்லா ஆசைகளையும் துறந்த மக்களுக்கான
உத்வேகத்தின் மதிப்பு மிக்க புதையல் -களஞ்சியமாகப் போற்றப் படுபவர்;
அவரது வழியைப் பின்பற்றும் பல்வேறு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுபவர்;
சீடர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் தேர்ப் பாகனாக இருப்பவர்
மூன்று உலகங்களின் அந்தகார அஞ்ஞான இருளுக்கு விடியல் போல் செயல்படுபவர்;
வைதிகர்கள் தலையில் சூடும் இரத்தினக்கல் போன்றவர்
மற்றும் வேத ஞானத்தின் தலை சிறந்த தலைவன் –
பர ப்ரஹ்மனைப் பற்றிய சரியான அறிவை நம்மில் புகுத்துபவர்
அஞ்ஞானம் ஸம்சய ஞானம் விபரீத ஞானம் போன்ற மயர்வுகளை அறுத்து மதி நலம் அருள்பவர்

நிகம பதிக சாயா சாகீ -நிகமம் -வேதங்கள் -பதிகம் -மூன்று யுகங்களிலும் நல்ல வழி காட்டும் -வழிப் போக்கன் —
நிகமமாகிற பதிகம் என்றபடி -களைத்து போன வேதத்துக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போலே ஸ்ரீ பாஷ்யகாரர்
-திருவாய்மொழியும் வேதத்துக்கு களைப்பை போக்கி -என்பர் –
நிராசா மஹா நிதி –நிராசர்களுக்கு -பற்று அற்ற பரமை காந்திகளுக்கு மஹா நிதி போன்றவர் -சாம்சாரிக ஆசை இல்லாமல்
பகவத் விஷயத்தில் ப்ரீதி கொண்ட அநந்ய பிரயோஜனர்களுக்கு –
மஹித விவித சாஸ்த்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி -உயர்ந்த -விவித -சாஸ்த்ரர் -சிஷ்ய வர்க்கர் -ஸமாச்ரயணம் பண்ணி -அமர்ந்து கால ஷேபம் செய்பவர்கள் –
ஸ்ரேஷ்டர்கள் -பலர் -சிஷ்யர் சமுதாயத்துக்கு -மநோ ரதத்துக்கு -சாரதியாக இருந்து வழி நடத்துபவர் -மேலும் மேலும் ஆழ்ந்து கற்க ஆசை கொண்டவர்களுக்கு –திரிபுவன தம ப்ரத்யூஷ -மூன்று உலகுக்கும் தமஸ் இருளை போக்கும் -அருணோதயம் முன்னால்–ப்ரபாதம் -ப்ரத்யூஷம் -விடியல் -உஷா காலத் தொடக்கம் -அயம் த்ரிவித்ய சிகாமணி-மூலமான வேதம் அறிந்தவர்களுக்கு நாயகர்-ஸீரோ பூஷணம்
ப்ரதயதி யதி ஷமாப்ருத் -யதி ராஜர் -பிரகாசப்படுத்தி அருளுகிறார் –
பாராவரீம் அபிபர்யயாம் –சமுத்திரம் -மாறாட்டங்கள் இல்லாமல் -விபரீத புத்தி இல்லாமல் -நிர்குணம் நிர் விபூதி -என்பார்கள் குத்ருஷ்டிகள்
-ஸ்திரமான திடமான -விபர்யயம் சம்சயத்துக்கும் உப லக்ஷணம்-பாராவாரம் -அபரிச்சின்னம் -திடம் -கடல் போன்ற -என்றவாறு –

சரி, இவர்கள், காம வசப்படாதவர்கள்–இவர்களுக்குப் பேரின்பம் கிட்டுமோ ?
இப்படி இருக்கும் முமுக்ஷுக்களுக்கு ( மோக்ஷத்தை விரும்புபவர் ) அழிவற்ற,நித்யமான ,
பகவானின் திருவடிகளைச் சரணம் அடையும் வழியைக் காட்டுகிறார், யதிராஜர் .
இந்த சிஷ்யர்கள், பலவிதம்;
க்ருஹஸ்தர்கள் ; ப்ரஹ்மசாரிகள்; ஸன்யாசிகள் ; பெண்கள்;இப்படிப் பலவிதம்.
இவர்கள், ஆசார்ய பக்தியும், பகவத் பக்தியும் உள்ளவர்கள்.
யதிராஜர், அவரவர் மனநிலைக்கேற்ப உபதேசித்து, மோக்ஷ அனுபவத்தை ஏற்படுத்துகிறார்.
இவர், த்ரிவித்ய சிகாமணி –என்கிறார் -மூன்று வேதங்களே ப்ரமாணம் என்று கர்ஜிக்கும்,
வித்வான்களுக்கு , அலங்காரமான சிரோபூஷணம்

எம்பெருமானார் வேதம் காட்டும் வழியில் சஞ்சரிக்குமவர்களுக்கு குளிர்ந்த நிழல் தரும்
பல கிளைகளையுடைய மரமாய் இருப்பவர்
வைராக்ய சீலர்களுக்கு பெரிய நிதி –
பற்றிலார் பற்ற நின்றானே என்னும் படி –
வர்ணாஸ்ரம ஸ்த்ரீ புருஷ விபாகத்தால் பலவிதமான பூஜிக்கத்தக்க சிஷ்யர்கள் மனம் ஆகிற ரதங்களுக்கு சாரதி
எல்லா உலக இருள் போக்கும் உஷஸ் -வைதிக ஸார்வ பவ்மர் –
நித்தியமான ஜீவாத்மா பரமாத்மா -சம்பந்த -சேஷ சேஷி பாவத்தை விளக்கமுறச் செய்து அருளுகிறார் –

———————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

47-ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔஷத சித்தய
ப்ரமிதி நிதய ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய
சுருதி ஸூரபய சுத்த ஆனந்த அபி வர்ஷூக வாரிதா
யம கதி கத விச்சேதின்ய யதீஸ்வர ஸூக்தய

ராமானுஜரின் படைப்புகள் பிரகாசிக்கின்றன:

முட்டாள்களுடன் தொடர்ந்து வாதிடுவதன் விளைவாக –தந்தா தந்தி வ்யதா-பல்லின் கடி வேதனை போல் புத்தியைக் கலக்கும்
இதற்கு ஏற்ற மருந்தாக ஸ்வாமியுடைய கிரந்தங்கள் –ப்ரமிதி நிதய-ஞானத்தின் பொக்கிஷமாக உள்ளன
நமது ஞானம் என்னும் பயிரைக் காப்பாற்றும் யஷ்டைய-நான்கு கொம்புகள் போல் நான்கு வேதங்களும் உள்ளன
இத்தகைய சுருதி ஸூரபய-வேதங்களின் நறு மணத்தை அவற்றின் சேர்க்கை மூலம் ஸ்வாமியுடைய கிரந்தங்கள் நம் மேல் வீசும்படி உள்ளன
எங்கும் ஞானம் ஆனந்தம் என்னும் மழை பொழியும் மேகம் போன்றவை இவை
நாம் யம லோகம் செல்வதற்கு எதிராக ஒரு உறுதியான உத்தரவாதம்-
யமலோகம் என்ற பேச்சையே முற்றிலும் நீக்க வல்லவை-

ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔ ஷத சித்தய-ஜடம் -ஞானம் இல்லாமல் -அசுயம் பிரகாசம் –முத்தா -வீணாகா பேசி –
அதனால் பல் வலி –வ்யதா-நல்ல மருந்து போல்வனவும் -பரமமான ஒளஷதம் –
தந்தா தந்தி -விதண்டா வாதம் செய்து -அதனால் பல் நோவும் படி –வாய் சண்டை -என்றபடி –
ப்ரமிதி நிதய-பிரமங்கள் தோஷங்கள் இல்லாத நல்ல யதார்த்த ஞானம் -உடையவர்களுக்கு நிதி –
ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய -தத்வ தெளிந்த ஞானம் –ப்ரஜ்ஞ்ஞா -விசுவாசம் -கொண்டவர்களை நன்கு வழி நடத்தி
-யஷ்டி-லீலா யஷ்டி -மாட்டை ஓட்ட –கறையினார் துவர் உடுக்கை –அழுக்கும் கறையுமே வைத்து வஸ்திரம் –
கடை ஆவின் கழி கோல் கை -வழி காட்டி ஓட்ட –பசு பாலனம் -புத்தியை நல்ல வற்றை தோன்ற செய்து –
சுருதி ஸூரபய –செவிகளுக்கு அமிருதம் –சுரக்கும் சுரபிகள் போல் சொல் அமுதே —பசுக்கள் -நறு மணம்-கமழும் ஸ்ரீ ஸூ க்திகள்
காதுகளில் மிருத வர்ஷம் -செவிக்கு இனிய செஞ்சொல் –
சுத்த ஆனந்த பிவர்ஷூக வாரிதா–துக்கம் கலப்பற்ற ஆனந்த மேகம் -இடைவீடு இன்றி வர்ஷிக்கும் முகில் -நிரவதிக ஆனந்த பகவத் விஷய ஞானம்
யம கதி விச்சேதின்ய–நமன் கதி -வார்த்தையே பிரஸ்த்துதம் இல்லாமல் –யம வஸ்த்தையே வார்த்தையே இல்லாமல் –
யதீஸ்வர ஸூக்தய-எம்பெருமானார் உடைய ஸ்ரீ ஸூ க்திகள்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் —–
மூடர்களோடு விவாதித்து விவாதித்து பல்வலி வந்தவர்களுக்கு பரம ஔஷதம் .
இவை சூக்ஷ்மங்களின் புதையல்.
விவேகிகளுக்கு வழிகாட்டும் செங்கோல்கள் ;
வேதமணம் வீசும் ஸ்ரீஸுக்திகள் .
பிறமதங்களை விரட்டித் துரத்தும் தடிகள்.
துன்பத்தையே ஏற்படுத்தாமல், இன்பத்தையே கொடுப்பவை.
நரகத்தைத் தடுக்கும் வல்லமை உள்ளவை–முன்னை வினை அகல-தென் புலத்தார்க்கு என்னுக் கடவுடையேன் யான்  -தனியனில் உண்டே

இராமானுசன் என்னும் கார் தனையே –காரேய் கருணை இராமானுசர் -வேதங்கள் பார் மேல் நிலவிடப்பார்த்து அருளும் கொண்டல் அன்றோ நம் ஸ்வாமி

புத்தி கேடர்களான புறச் சமயிகளுடைய பற்களில் கடியுண்டதனால்
உண்டான வ்ரணத்தை ஆற்றுவதற்கு நல்ல மருந்தாயும் –
உண்மை நல் ஞான நிதிகளாயும் –
அந்த ஞானமான பயிரை நன்றாகக் காக்கக் கூடிய முள் வேலியாயும்-
அந்த ஞானப் பயிரை வ்ருத்தி பண்ண -வேத மணம் கமழ்ந்த பரிசுத்த ஆனந்தமான மழையைப் பெய்யும் மேகங்களாயும்-
எம லோகம் என்ற பேச்சையே அழிப்பதாயும் உள்ள
யதிராஜ திவ்ய ஸூ க்திகள் விஜய ஸ்ரீ யுடன் பிரகாசிக்கின்றன –

—————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் -பிரத்யக் தத்தவ –ஜீவாத்மாவும் -முதல் இரண்டு வரிகள் பரமாத்மாவும்-அடுத்த இரண்டு வரிகள்

48-ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர்த்தசா
பரிணத பல ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா

ப்ரதி கலம் -நிமிஷம் தோறும்
இஹ -இங்கு -சம்சாரத்திலேயே ஞானம் பெற -அங்கும் கேட்டாரார் வானவர் -ரஸம் அனுபவிக்க-அங்கு ஸ்வஸ்மை ப்ரகாசமாகவே இருக்குமே –
பிரத்யக் தத்தவ -ஜீவாத்ம பரமாத்மாவைப் பற்றிய
அவலோகன தீபிகா-பார்க்க உதவும் விளக்கு போன்றவை
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந-நிரந்தரமாக நித்தியமாக அனுபவிக்கும் படி
அகலுஷ பரஞான ஔத் ஸூக்ய ஷுதா ஆதுர துர் த்தசா பரிணத பல-குற்றம் அற்ற பர ஞானம் இல்லாத –ஷுதா-பசியினால் -துர்கதி-அபி நிவேசம் மிக்கு அறிய விரும்புவார்க்கு பக்குவமான பழமான பலத்தைக் காட்டும்
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூக்ரஹா -பக்குவமான அருகிலுள்ள பழம் போல் -கையாலே பறிக்கும் படி-ஸூகமாக க்ரஹிக்கும் படி

ராமானுஜரின் படைப்புகள் எப்போதும் நம் இதயங்களை நிரப்புகின்றன

ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
இருள் தரும் மா ஞாலம் -பிரதி க்ஷணம் -ஆத்மதத்வம் பிரகாசிக்கும் ஞான விளக்கம் -சேஷ பூதம் நியாமாகம் -ஆதேயம் -சரீரம் என்று யாதாம்யா ஞானம் அருளும்
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்தி ந–எதி சிரேஷ்டர் -யதி பதி -கிரந்தங்கள் -மனசில் புகுந்து இடை வெளி இல்லாமல் நிறைந்து பூர்ணமாக இருக்கின்றன
அகலுஷ பரஞான ஔத் ஸூ க்ய -கலக்கம் அசுத்தி இல்லாமல் -பர விஷய ஞானம் -பெற்று அடைய தீவிர இச்சை -அதி மாத்திரை த்வரை-இத்தால் அடைந்த
ஷிதா ஆதுர துர்த்தசா -பரிணத பல -பசி மிக்கு -சிரம தசை
ப்ரத்யா சீதத் பலேக்ரஹி ஸூ க்ரஹா -தவறாமல் பலன் கொடுக்கும் -நல்ல செயல்கள் போலே –விளங்கும் ஸ்ரீ ஸூ க்திகள் –
வேறு ஒன்றும் நுழைய இடம் இல்லாமல் இவற்றையே அனுபவித்திக் கொண்டு கால ஷேபம் நடத்துவோம் -என்றவாறு -பஹு வசனங்கள் எல்லாம் -தீபங்கள் –

ஜீவாத்மாவின் உண்மையான தத்துவத்தைப் பிரகாசிக்கும் விளக்குகள்,
பெரிய இறைவனைப் பற்றிய அறிவிற்காக, மிகுந்த பசியுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு,
அவர்களுடைய சிரமத்தை நீக்கி அவர்களுக்கு ஏற்ற
பழங்களை அளித்து அவர்கள் அருகில் ஆதரவாக உள்ள மரங்கள் போன்றன
மிகவும் எளிதாக அடைய வல்லவை -ஒவ்வொரு நொடியிலும் நமது எண்ணங்களை சரியான பாதையில் நடத்த வல்லவை

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் ,உண்மைத் தத்துவத்தை உபதேசிப்பவை.
ஆசார்ய முகேன , காலக்ஷேபம் செய்தவர்கள் அவற்றிலேயே சிந்தையைச் செலுத்தி, ஆழ்ந்து அனுபவிப்பர்
இப்படி, எளிமை , கம்பீரம், நடையழகு உள்ளவை.

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் ஸூக்ரஹம் –
எளிதில் தெளிய அறியக் கூடியவை –
இவ்விருள் தரும் மா ஞாலத்தில் ஜீவ தத்துவத்தை கண்டு அறிவதற்கு சுடர் விளக்காய் இருப்பவர்களும் –
பரதாத்ம தத்துவத்தை பற்றின உண்மை ஞானம் பெறும் அவா என்ற பசியால் வாடுபவர்களுக்கு
தம் கையாலேயே எட்டிப் பறிக்கும் படி பழுத்த பழங்களை-அடிக் கிளைகளையே -தரும் படியான மரம் போல் உள்ளவைகளும்
எளிதில் கிரஹிக்கக் கூடியவையாயுமாய் யுள்ள எதிராஜருடைய கிரந்தங்கள்
எங்களுக்கு சதா சிந்தனைக்கு விஷயமாய் இருக்கின்றன –

கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்திலனேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

தீபம் இருளைப் போக்கும் -யதீந்த்ர கிரந்தம் அஞ்ஞானம் போக்கி சூஷ்மமான ஆத்ம தத்துவத்தையும் விளக்குமே
ஸத் பாத்திரத்தில் ப்ரேம ரூபம் -நெய் போல் ப்ரகாசப்படுத்தும்-தீபம் ஸ்நேஹத்தால் பிரகாசிக்கும்
சாங்க்யர் -கபிலர் -ஜீவஸ்ய கர்த்ருத்வம் நாஸ்தி -குருடன் நொண்டி சேர்ந்து காட்டைக் கடப்பர் என்பர்
ஆத்மா -ஞானம் -செயல்பாடு பிரதானம் -சரீரத்தில் உள்ள கர்த்ருத்வம் பிரதிபலிக்கும் என்பர்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் -சாஸ்திரம் பொருளாக வேண்டுமே –
வேறே சிலர் ஸ்வ தந்த்ர கர்த்ருத்வம்
பரார்த் து -ப்ரஹ்மத்துக்கு அடங்கின கர்த்ருத்வம்
வேறே சிலர் ஞாத்ருத்வம் இல்லை ஞான மாத்திரமே
விஞ்ஞானம் யஜ்ஜம் பண்ணுகிறது சுருதி -விஞ்ஞாதா -அவனே ஞானமாயும் ஞானம் உடையவனாயும் இருப்பான்
சிலர் ஆத்மா விபு -ஜைனர் எடுத்துக் கொண்ட சரீரம் அளவு என்பர்
அத்வைதி அபின்னம் என்பர்
பாஸ்கரர் பின்னம் அபின்னம் என்பர்
ஆதார ஆதேய நியாம்ய நியமிக்கும் இல்லை என்பர்
இவை எல்லாம் நிரசித்து பாஷ்யத்தில்
பர தந்த்ர கர்த்தா-ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -அணு -அப்ருதக் சித்தம் -சம்சயம் விபர்யம் இல்லாமல் காட்டி அருளுகிறார்
இதே போல் பரமாத்ம ஞானம் சுலபமாக-அகலுஷம் பர தத்வ ஞானம் ஸூ லபமாகக் காட்டி அருளும்
நிர்குணம் நிர்விசேஷ ப்ரஹ்மம்-மூவரில் ஒருவர் -நிமித்த காரணம் மாத்திரம் -குழப்பங்களைப் போக்கி –
குண விக்ரஹ விபூதி விசிஷ்டன் -அபின்ன நிமித்த உபாதான காரணம்
த்ரிவித காரணமும் இவனே-ப்ரக்ருதி விஸிஷ்ட ப்ரஹ்மம் -ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம்-ஞானாதி ஸமஸ்த குண விஸிஷ்ட ப்ரஹ்மம்-மூன்றுமே த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே ஸ்ரீயப்பதி- ஸூலபமாகக் காட்டி அருளி -மோக்ஷத்தில் விருப்பம் -அபி நிவேசம் பெருக்கும்படி ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள்-தத்வ ஞானம் பெற்ற பின்பு மோக்ஷத்தில் இச்சையும் கொடுக்கும் அன்றோ

——————————————

வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம் —சூரணை -162-
ருசி விவசர்க்குப் பாதமே சரணம் ஆக்கும் ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் —சூரணை -163-

அதே போல் கீழ் ஸ்லோகத்துக்கும் இதுக்கும் சம்பந்தம்

49-முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப
நிபா முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி
பரிஷத் திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா –

முகுந்த அங்க்ரி -முகுந்தனுடைய திருவடித் தாமரைகள்
ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா-ஸ்ரத்தை யாகிய ஆம்பல் காடுகள் சந்த்ரனைக் கண்டு மகிழும் மலரும் -அழகு குளிர்ச்சி சோமவத்
ஸ்வ சித்தாந்த -தங்கள் சித்தாந்தம் -தாங்களே கல்பித்து கொண்டது
த்வாந்த ஸ்த்திர குதுக -தப்பான வாதமாகிய இருளில் மகிழ்ந்து
துர்வானி பரிஷத் திவாபீத ப்ரேஷா -கோட்டான் கூட்டங்களுடைய பார்வைக்கு
திநகர சமுத்தான புருஷா -ராமானுஜ திவாகரன் தேஜஸ்ஸு இவர்களுக்கு குரூரமாக தோற்றும்
அஷோப்யாம் முமுஷாம்-கலக்க முடியாத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப நிபா முமுஷாம்-மோக்ஷ பிரதா முகுந்ததோ –மும்-மோக்ஷம் கும் -இஹ லோக பலன் -சிரத்தை –
குமுதம் -சந்த்ர பிரகாசம் -ஆம்பல் மலர் -ஆம்பல் வாய் கூம்பின காண்-காலையில் –
வனம் -சமுதாயம் –நெய்தல் ஏற்றும் ஒரு புஷ்ப்ப வகை -ஆம்பல் சஜாதீயம் —
அற்ற குளத்தில்-அழு நீர் பறவை போல் -உறவு -குட்டியும் ஆம்பலும் நெய்தலும் வற்றி -மூதுரையார் பாசுரம் –
பக்தி மிக்கு இருப்பார்கள் -சந்திரன் ஒளி போஷிக்குமா போலே -திருவடிக்கு அற்று தீர்த்தார்கள் உடைய பக்தி சிரத்தையை வளர்த்து –
நிபா-ஒத்த என்றபடி -நன்கு பிரகாசிக்கும் சந்திரன் -பூர்ண சந்திரன் ஒத்து என்றபடி -முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
மோக்ஷத்தில் தீவிர இச்சை –முமுஷூ –ஷோபமே அடையாத -வற்றாத தீவிர ஆசை என்றபடி -த்வரை மாறாமல் –
வரை இடுதல் படிப்படியாக மாறுதல் -பற்றுதல் -முழுவதுமாக மாறுவது -த்வய மந்த்ரம் அனவ்ரதம் -அனுசந்தானாம் -சொல்லி
பரம புருஷார்த்தம் பற்றுதல் வரை இடாமல் -திருவடி அழகு மனன சீலர்கள் முனி –கிர -வார்த்தை -ஸ்ரீ ஸூ க்திகள் -தததி -அருளும் -ஸூ கம்பீரா –
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி பரிஷத்
தங்கள் -அஞ்ஞானம் இருள் நிறைந்த துர்வானி -அதிலே இருந்து பழகி -அதுவே வெளிச்சமாக கொண்டு –
சூர்யா உதயம் கண் கூசும் இவற்றுக்கு -அதே போலே இவர்களுக்கு -மோஹம் நிறைந்து –
சந்த்ர சூர்யன் போலே யதிபதி கிரந்தங்கள் -என்றவாறு –குமுதா மலர் -அநந்ய ப்ரயோஜனர்களுக்கு சந்திரன் -குத்ருஷ்ட்டி பாஹ்யர்களுக்கு சூர்யன் –
த்வாந்தம் -இருட்டு –அஞ்ஞானம் த்வாந்த ரோதம் –ஸ்திரமாக இருளில் இருந்த தூர்வாதிகள் –
திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா -கோட்டான் பஷி பகலைக் கண்டால் பயம் -இரவில் -ஆந்தை போலே –
ஓடி ஒழியச் செய்யும் தீவிர சூர்யா பிரபை போல என்றவாறு

ராமானுஜரின் வார்த்தைகள் செயல்படுகின்றன-
முகுந்தனின் பாதத்தில் பக்தி கொண்ட -ஆம்பல் -அல்லி மலர்களின் அணி வகுப்புக்கு நிலவொளி போலவும் ,
மத வெறியர்களின் ஆந்தைகளுக்குக் கொடூரமான சூரிய ஒளியைப் போல கூடியதாக உள்ளன
மேலும் கலங்காத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
படிக்கப் படிக்க மோக்ஷத்தில் ருசியை ஏற்படுத்துகின்றன.
பகவானின் திருவடியில் ,பக்தியை வளர்க்கின்றன.
இருளில் இருக்கும் பிறமதப்பிரதிவாதிகளான கோட்டான்களுக்கு, ஸுர்ய உதயம்

ஜீவ பர யாதாத்ம ஞானம் பெற்றவர்க்கு
பகவத் சரணார விந்தங்களில் பக்தியும்
மோக்ஷத்தில் இச்சையும்
ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூ க்திகளே உண்டு பண்ணுகின்றன –

மோக்ஷ பிரதனான எம்பெருமான் திருவடிகளில் பக்தியாகிற குமுத மலர்களுக்கு நில ஒளிக்கு ஒப்பானதும் –
ஆம்பல் சந்திரனை கண்டு வ்ருத்தி யடையுமே –
தங்கள் மதங்கள் ஆகிற நிலையான இருளில் களிக்கும் துர்வாதிகளான ஆந்தைக் கண்களுக்கு சூரியோதயம் போலே வெறுப்புண்டு பண்ணுபவையுமான
ஸ்ரீ யதீந்திரருடைய ஸ்ரீ ஸூக்திகள் மோக்ஷத்தில் நிலையான இச்சையை விளைவிக்கின்றன –

தத்வ ஞானம் -ஸ்ரீ பாஷ்யம் போல்வன
பக்தி வளர்க்க கீதா பாஷ்யம்
உபாயம் -கத்ய த்ரயம்
காலஷேபம் -நித்ய கிரந்தம்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்

வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54-

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58-

——————

50-நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூபகா
விசுத்த உபன்யாச வ்யதி புதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அது போன்றவற்றின் தரத்தை வடி கட்டுகின்றன.(சாரீரக நயா-156 அதிகரணங்கள்)
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை –ப்ரஜ்ஞா ரச தமனி-அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா
குற்றம் அற்ற -யாராலும் விரோதிக்க முடியாத போதாயான வ்ருத்திகளைக் கொண்டு -ஆளவந்தார் மநோ ரதம்-நிறைவேற்றி
-ஆபாத -தோஷம் நிராபாத தோஷம் அற்ற போதாயனர் வ்ருத்தி கிரந்தம் –
விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூ க்திகள் -சாரீரக சாஸ்திர நியாயங்கள் -சாரீரக நியாயம்
அகுண்ட்டை கல்பந்தே –
யதிபதி நிபந்தா நிஜ முகை -ஸ்ரீ பாஷ்யகாரர் -நிபந்த்தித்தல் இயற்றியது –நிபந்த -சிகிச்சை பண்ணும் ஊசிகள் –
நாடி பேதங்கள் -சலாக சிகிச்சை -மந்தமான தன்மை மாற்றி -சீனர்கள் இங்கே உள்ளவற்றை புத்தர்கள் கொண்டு போனது -என்பர்
-போதி தர்மர் -என்பவர் கொண்டு போனார் என்பர் -முனை மழுங்காத ஊசியால்–நிஜ முகை -aqu puncture போலே -பிரபந்தங்கள்
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூ தியாம்
சதாச்சார்யர்களால் சிஷிக்கப் பட்ட ஞானம் உடையவர்களுக்கு சங்கோசம் இல்லாத ரசத்தை -அடைப்பை நீக்கி –தமனி வேதாய -போக்யதை ஊட்டும் படி-
அனுபவிக்கும் படி -யதாவஸ்தித பாகம் கொடுக்கும்

யதிராஜருடைய ஸ்ரீஸுக்திகள் —இவற்றில்,
போதாயனரின் கருத்துக்கள் ப்ரவஹிக்கும் .
வ்யாஸரின் ப்ரஹ்மஸுத்ரத்துக்குத் தெளிவான விளக்கம் ,
பிறமதவாதிகளால் அசைக்கமுடியாத ஸித்தாந்த யுக்திகள் –இவை ப்ரகாசிக்கும் .
அறிஞர்களின் அறிவு நாடியைத் தட்டி, பேரின்பத்துக்கு இழுத்துச் செல்லும்

எம்பெருமானாருடைய ஸ்ரீ ஸூக்திகள் வித்வான்களுக்கு ஆனந்தம் விளைவிப்பவை —
முன்னுக்கு பின் முரண்பாடு ஏதும் இன்றி இருப்பவையாயும்
பகவத் போதாயன க்ருதமான வ்ருத்தி கிரந்தத்தை தழுவியபடியால் தெளிவுற்றதாயும் இருப்பதாயும்
குற்றம் குறை கூற முடியாதபடியான உபபாதனங்களால் விளங்குகின்ற –
அதிகரண நிபந்தங்கள் -விஷயங்களை பாகுபடுத்தி உரைத்தல் -உள்ள ஸ்ரீ ஸூக்திகள்
நன்றாக ஸ்தாபிக்கப் பட்ட பிரதான அர்த்தங்கள் உள்ளவையாய்
வித்வான்களுடைய மலர்ந்த ஞானத்துக்கு ரசம் விளைவிக்க வல்லவையாய் அமைந்துள்ளன –

பாராசர்ய வசஸ் ஸுதாம் (1)
உபநிஷத் துத்தாப்தி மத்யோ திருதாம் (2)
ஸம்சாராக்நி விதீபன வியபகத பிராணாத்ம சஞ்சீவனீம் (3) |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் (4)
பகுமதிம் வியாஸாத தூரஸ்திதாம் (5)
அநீதாந்து நிஜாக்ஷரைஹி மனஸோ பௌமாஸ்து பிபந்வஹம் ||

1-உபநிஷத் ஆகிய சமுத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது
2- ஸம்ஸார அக்னியால் தாக்கப்பட்ட- பிரானாகிய பரமாத்விடம் இருந்து பிரிந்து வசிக்கும் ஜீவாத்மாக்களை உஜ்ஜீவிப்பது
3-பலவிதமான அறிவுத் தடுமாற்றங்களால் அகன்று சென்றது
4-பாதாரயனாரின் ஸ்ரீ ஸூக்திகளால் அருகில் கொண்ட வரப்பட்டன
5- இந்த அம்ருதத்தை அறிவுள்ளவர்கள் அன்றாடம் பருகட்டும்

————

ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் மற்று ஒரு படியால் அருளிச் செய்கிறார் –

51-விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தே விரமதி
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட
ப்ருதநா வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ

தவறான காரணத்தை அடிப்படையாகக் கொண்ட புற மதவாதிகள் தகாத
வழியில் இட்டுச் செல்ல விதண்டா வாதம் செய்தபடியே இருந்தனர்
மிகவும் கர்வம் கொண்ட யானைக் கூட்டங்கள் போல் ஒருவரை ஒருவர் வாதத்தால் வென்று இருந்தார்கள்
இந்த காட்டு யானைகளின் எரிச்சலூட்டும் சத்தம் (விகல்ப ஆடோபேந-படாடோப விகல்பங்கள் -நாநாவித இறைச்சல்கள் )-டம்பப்போர் -ராமானுஜரின் திரு நாம உச்சாரதாலே (யத்ருச்சா நிர்த்திஷ்டே)–அதே ஷணத்தில் அடங்கி விடும்.

விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
இதுவா அதுவா -ஸர்வதா கேள்வி –விகல்பம்/ ஆடோபேன -ஆடம்பரம் -/ கட்டணம் பண்ணுவது சேர்ப்பது வளர்ப்பது / விகடயன் குறைப்பது அழிப்பது
நிர்ணய ஞானம் இல்லாமல் சம்சயம் மோக பூர்வகமாக கேள்வியால் -அசேஷ ஸ்ருதியை அழித்தும்
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட ப்ருத நா
விதண்டா வாதங்களால் -வாதம் ஜல்பம் விதண்டம் -மூன்று வகை -நல்ல வாதம் முதல் -/ பிரமாணம் கொண்டு -மத்யஸ்தரை கொண்டு -தத்வ ஸ்தாபனத்துக்கு –
ஜல்பம் -தான் ஜெயிப்பதே பிரதானம் என்று கொண்டு -அதற்காகவே வாதம் செய்வது ஜல்பம் / பர பக்ஷ தோஷம் சொல்லி
ஸூ பக்ஷ ஸ்தாபனம் இல்லாமை விதண்டா வாதம் -அஹங்காரம் இதனால் கொண்டு -தூர்வாதிகள் –
வேதண்டம்-மாதங்கம் -யானை -11-சப்தங்கள் கஜம் ஹஸ்தி களபம்-ஸ்தம்பேராபம் -அமர கோசம் -பிடித்து பழக்கப் பட்ட யானை மாதங்கம்
-காட்டு யானை வேதண்டம் -காட்டுக்கு அடங்காத காட்டு யானை கூச்சல்
வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ
கட்டுப்பாடு இல்லாத பெரும் கூச்சல் –
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சபதே விரமதி
எம்பெருமானார் பெயரை உச்சரித்தாலே அடங்கும் படி -யதேச்சையாக சொன்னாலும் -அடங்கி போகும் -இருந்த இடமே தெரியாத படி -ஆகுமே -சப்த மாத்திரத்தாலே –

ஒன்றைப் ப்ரணாமாக ஏற்று, அதனால் தெளிவு ஏற்படுபவற்றில் சிலவற்றை அங்கீகரித்தும்
சிலவற்றை நிராகரித்தும் செய்வது, நேர்மையல்ல.
காட்டு யானைகள், மதம் பிடித்து அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து,
பயிர்களை அழித்து, மக்களைத் துன்புறுத்தும் போது ,
அந்த நாட்டு அரசன் ஓடிவந்து வில்லில் நாண் ஏற்றி சப்தத்தை எழுப்பினால்,
யானைகள் பயந்து ,திரும்பவும் காட்டுக்குள் சென்று விடும்.
அதைப் போல,
பிற மதஸ்தர்களின் விதண்டா வாதங்கள் என்கிற பேரிரைச்சல் கேட்டாலும், அங்கு,
எம்பெருமானார் என்கிற திரு நாமத்தைக் கேட்டவுடன் , அவர்கள் நடுங்கி வாய்மூடி மௌனியாவர்

சோபனமான வழியை தம் இஷ்டப்படி சஞ்சரித்து யானைகள் பாழ் படுத்துமா போலே
மனம் போனபடி கூச்சல் இடுவதால் வேத மார்க்கத்தை பாழ் படுத்தும் துர்வாதிகள்
தமது தங்கள் துர்வாதங்களால் பரஸ்பரம் ஜெயிப்பதற்காக விளைவிக்கும் கலகமானது
யதிராஜ ஸ்ரீ ஸூக்திகளின் சப்தங்களை யாதிருச்சிகமாக கேட்டால் கூடத் தானே அடங்கி விடும் —
ஸ்ரீ எதிராஜரின் பெயரைச் சொன்னாலே அடங்கி விடும் என்னவுமாம் –

பிருகு வருணன் -ப்ரஹ்மம் -எதோ வா இமானி –இத்யாதி -எங்கு இருந்து படைத்தார்-அத்தைப் படைத்தவர் யார் -எதற்க்காகப் படைத்தார்-அவாப்த ஸமஸ்த காமத்வம் சேராதே சத்தா அசத்தா –குதர்க்கங்கள்
எது சாதனம் உபாதானம் போன்ற கேள்விகள் -விதண்டா வாதங்கள்
மஞ்சள் வாழைப்பழம் -இரண்டு தன்மை -எது முதலில் -சமவாய சம்பந்தம் -யுகபத் ஒரே சமயத்தில் இரண்டையும் மனதில் கொள்ள முடியாதே
விசேஷயத்துடனும் விசேஷணத்துடன் அடுத்த விசேஷணம் ஏறும்
தத்வமஸி-தத் த்வம் அஸி-வாதங்கள் போல்வன

ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று-அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர்
ரா அக்ஷரம் கேட்டாலே மாரீசன் பயந்ததாக ராவணன் இடம்
அது ப்ரமேயம் பற்றி-இங்கு பிரமாணம் பற்றி
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

——————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமது ஞானத்துக்கு தெளிவை அளிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

52-பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி

பிரதிஷ்டா தர்க்காணாம் -தர்க்கம் யுக்தி நியாய வாதம் -ஸாஸ்த்ர அநு க்ருஹீதம் -ஸ்வாமியுடைய கிரந்தங்களில் இருப்பிடம் -பர்யவசான பூமி-ஆர்ஷம் தர்ம உபதேசம் வேத வாக்யத்துக்கு அவி ரோதினம் -மநு -வேதம் சொல்வதை ஸ்தாபிக்கவே தர்க்கம்
பிரதிபதம் ருசாம் -ருக் வேதங்களுக்கு சமமான பதங்கள் கொண்டவை -பர்யாய ஸப்தங்கள் கொண்டவை
தாம யஜூஷாம்-யஜுர்வேத இருப்பிடம் தாமம் –
நா ருக்வேத -கிஷ்கிந்தா காண்டத்தில் சொல்லின் செல்வனைக் கொண்டாடி
ருக் வேதம் விநயம் -யஜுர் வேதம் தாரண சக்தி -சாம வேதம் பாண்டித்யம் தரும்
பரிஷ்கார சாம்நாம்
-சாமவேதத்துக்கு அலங்கரிக்கும்
பரிபணம் அதர்வாங்க ரசயோ -அதர்வண வேதத்துக்கு மூல தனம்
பிரதீபா தத்த்வாநாம் –24 தத்துவங்களுக்கும் -25-ஆத்மா 26-பரமாத்மா தத்வங்களுக்கும் தீபம் யாதாத்ம்ய ஞானம் அளிக்கும்-ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ கீதா பாஷ்யம் விளக்கிக் காட்டுமே
பிரதிக்ருதி ரசௌ தாபச கிராம்-தபஸ் -வால்மீகி பராசரர் மநு போல்வார் அருளிச் செய்த ஸ்ம்ருதிகளுக்கும் இதிஹாச புராணங்களும் பிரதி ரஸம்-பிம்பம் போல்வன
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி–ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் நமது புத்திக்கு ஆனந்தம் கொடுக்கட்டும் – -சந்தோஷம் தெளிவு –

பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதிபதம் ருசாம் தாம யஜூஷாம்
தர்க்கங்களை -அனுகூலம் -எல்லை நிலம் –பிரதிஷ்டா காஷ்டா -அனுகூல உக்திகளின் பரா காஷடை-
-பிரத்யக்ஷம் அநு மானம் சப்தம் -மூன்று பிரமாணங்கள் அனுகூலமான தர்க்கம் -என்றவாறு –
ருக் வேதம் மொழி பெயர்ப்பை போலே -பிரதிபதம் -இருக்கும் –பிரதிபதம் சப்தங்களை மொழி மாற்றி –
வாக்யார்த்தம் -வாக்கியங்களின் அர்த்தம் -/ தாம இருப்பிடம் யஜுர் வேதங்கள் இருப்பிடம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பரிஷ்காரம் திருத்தங்கள் -திருந்து வேதம் -/ பரிபணம் -சமானம் -அதர்வண வேத சாம்யம் -சமமான மதிப்பு என்றவாறு
-சப்தத்தாலும் அர்த்தத்தாலும் –மூல தனம் என்றுமாம் –
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி அசௌ தாபச கிராம்
தத்வங்கள் ஸ்திரம் நித்யம் -உள்ளது உள்ள படி பிரகாசிக்கும் விளக்கு போல்வன /
தபஸ் நிஷ்டர்கள் முனிவர்கள் வசனங்கள் ப்ரதிக்ருதி -உள்ளபடி சொல்லும் -சாயலாக -பிரதி பிம்பம் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் –
பிரசித்திம் சம்வித்தே பிரதிசதி யதீசான பணிதி
ஈசான நியமனம் -ஈஸ்வர -பணிதி-ஸ்ரீ ஸூ க்திகள்
சம்வித் ஞானம் பிரசித்திம் தெளிவை பிரதிசைதி உண்டாக்கும் -பிரசாதம் -தெளிவு அளிக்கும் -உண்டாக்கட்டும் -வழங்கட்டும்
-பவந்தி பவந்தோ –பாட பேதம் போலே –பிரதி சதி -பிரதி சது–வழங்குகின்றன வழங்கட்டும்
பணிதி –-கத்யம் பத்யம் இரண்டும் -வாக்கில் இருந்து வெளிப்பட்ட காவ்யம் கத்யம் இரண்டும் –

வார்த்தை தர்க்கம் அங்கேயே முடிந்துவிடும், ராமானுஜரின் படைப்புகளில் இடம் இருக்காது.
அவற்றில், ரிக் வேதம் ஏறக்குறைய முற்றிலும் வேறுபட்ட பதிப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;
அவற்றில் யஜுர் வேதம் உறுதியாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது;
அவை சாம வேதத்தை முழுமையாக அலங்கரிக்கும் ஆபரணம்.
அவை தத்துவங்களை விளக்கும் விளக்கு.
வால்மீகி போதாயனர் போன்ற முனிகளின் உயர்ந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு அவை.
ராமானுஜரின் இந்தப் படைப்புகள் நமக்குப் பார்வைத் தெளிவைத் தரட்டும்!-யாதாத்ம்ய ஞானம் அறிவிக்கும்

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,
நான்கு வேதங்களுக்கு விளக்கம் ;
தத்வங்களுக்கு இருப்பிடம்;
ரிஷிகளின் வாக்யங்களுக்குப் ப்ரதிபிம்பம் ;
இப்படிப்பட்ட ஸ்ரீஸுக்திகள் தெளிவான தத்வ ஞானத்தைஅளிக்கின்றன

சகல வேதங்களையும் அனுசரித்துப் பொருள் கண்டவையும் -நாம் அறிய வேண்டிய தத்துவங்களை
பிரகாசிப்பவைகளுமாய் மகரிஷிகளுடைய வாக்கை பிரதிபாலிப்பதுமாயும் உள்ள
ஸ்ரீ ஸூக்திகள் தாம் நமது ஞானத்துக்கு தெளிவை அனுக்ரஹிக்க வேணும் –

ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-புற மதங்கள் அனைத்தையும் எதிர்வாதம் செய்யும் யுக்திகள் நிறைந்தவை –
ருக்வேதப் பொருள் போன்றவை –
யஜூர் வேத இருப்பிடம் –
சாம வேதங்களுக்கு பெருமை சேர்ப்பவை –
அதர்வண வேத மூல தனம்
தத்தவங்களை சரியாக விளக்கிக் காட்டும் தீபம்
வால்மிகியாதி முனிவர்களின் சொற்சாயல்-
ப்ரஹ்ம ஞானம் மலர்ந்து தெளிய வைப்பவை

—————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்
ஐகாந்த்ய பக்தியை உண்டு பண்ணுகின்றன —

என் நான் செய்கேன்-உபாயாந்தரம் இல்லை யாரே களை கண்–வேறே ரக்ஷகர் இல்லை – என்னை என் செய்கின்றாய் என்று பேற்றை அளிப்பாய் பரம ஐகாந்தி -ஸ்தோத்ர ரத்ன ஸ்ரீ ஸூக்திகளைக் கேட்டு எம்பார் சம்பிரதாயத்துக்கு திரும்பினார் அன்றோ

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”-ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷம் பெற்ற பெருமை

53-ஹத அவத்யே ஹ்ருத்யே ஹரி சரண பங்கேருஹ யுகே 
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி பரிஹார பிரதிபுவ

ஹத அவத்யே -ஒழிக்கப்பட்ட தோஷங்களையுடைய ஹ்ருத்யே -மனதுக்கு ஆனந்தம் கொடுக்கும்
ஹரி சரண பங்கேருஹ யுகே -பாபங்களை அபஹரிக்கும் -பரம போக்யமான -பாவானத்வம் போக்யத்வம் -திருவடித்தாமரைகளில்
யதி பூப்ருத் பணிதய-யதி ராஜர் -பூ பூமி தாங்கும்
சுநா சீர-இந்திரன் –ஸ்கந்தத்ருஹிண-நான்முகன் ஹர-ருத்ரன் –ஹேரம்ப -விநாயகர் ஹூதபுக் -ஸூர்யன்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி-போன்ற ஷூத்ர தேவதைகள் -ஏழு ப்ரஸித்தர்களை சொல்லி -அல்ப அஸ்திர பலன்களையே கொடுப்பவர்கள்
அனந்தமாயும் ஸ்திரமாயுமான மோக்ஷம் –மார்க்கண்டேயனும் கரியே -மோக்ஷ பிரதத்வம் நாராயணன் ஒருவனுக்கே
பரிஹார -ப்ரணாமங்களை பரிஹாரம் செய்ய
பிரதிபுவ-எதிர் ஜாமீன் கொடுத்து உத்தரவாதம்
நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி -பரம ஐகாந்திக்கு -அசைக்க முடியாத ப்ரேமங்களை உண்டு படும்
தேவதாந்தங்கள் நிவர்த்தகம் இதில்
ப்ரயோஜனாந்தரங்கள் மேல்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி- ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன் –

ஹத அவத்யே ஹ்ருதயே ஹரி சரண பங்கேருஹ யுகே
அவத்யம் -தோஷம் –ஹத -விலக்கப்பட்ட / ஹ்ருத்யே அளவற்ற ப்ரீதிக்கு விஷயம் -உபய லிங்கம்
ஹரி சரண -ஸ்ரீ பாதார விந்தம் –பங்கம் சேறு –ருஹி மலர்ந்த தாமரை யுகே இணை அடிகள்
நிபத்தந்தி ஐ காந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
பரமை ஐ காந்திகள் -அநந்ய பிரயோஜனர்கள் -நிபத்தந்தி திடமாக உண்டாக்குகின்றன –
தேவதாந்த்ர சம்பந்தம் உள்ளாருக்கு பரிஹாரம் நமக்கு ஸ்திர அநந்ய பிரயோஜனர் ஆக்கும்
பாலே மருந்தும் விருந்துமாகுமா போலே –
பூப்ருத் அரசர் -பூமியை தரிக்கும் யதி ராஜர் –பணிதய அருளிச் செயல்கள் -திவ்ய ஸ்ரீ ஸூ க்திகள்
கிமபி -இன்னது என்று -சொல்ல முடியாது -கண்டவர் விண்டிலர் -ஐ காந்திய போகம் அனுபவிக்கலாம் ஒழிய -விவரிக்க முடியாதே
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
இந்திரன் -சு நா சீரான -சோபனமான சேனை உடையவன் /ஸ்கந்தன் -தேவ சேனாபதி கார்திகையான் /
த்ருஹினன் சதுர்முக ப்ரஹ்மா -38-ஸ்லோகம் த்ருஹின தந்திரம் -யோக சாஸ்திரம் -/ஹரன்/ஹேரம்பன் விநாயகன்
/ஹூதபுக் அக்னி -ஹுதம் ஹவிஸ் -ஹூ தம் புங்கதே அஸ்னாதி சாப்பிடுவான் –
ப்ரபேசாதி ஷூ தர பிரணதி பரிஹார பிரதிபுவ
பிரபா ஒளி -பிரபேசாதி ஸூ ர்யன் /ஸூத்ர அபர தத்வ தேவதைகளை / வணங்குவதை -பிராயாச்சித்தம் பிரதிபுவ -சிகிச்சை /
வியாதிகளுக்கும் பாவங்களுக்கும் அழிக்க பிரத்திபூ–பரிஹரித்துக் கொள்ள -பிராயாச்சித்தத்தால் ஏற்படும் பரிஹாரம் -பலன் பரிஹாரம்
-அமணன் பாழி சிம்மத்தை காட்டி -ஜைனர் கோயில் -வண்டர் தொண்டர் -மூர்ச்சிக்க
-எம்பெருமானார் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் பாதர் தூளி -சேர்த்து -மாய பிரான் தமர் அடி கொண்டு நீர் தூவுமின் -தீர்ப்பாரை யாமினி —
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகள் -இந்த சக்தி உண்டே

ராமானுஜரின் படைப்புகள் குறையற்றவை, இதயத்திற்கு மகிழ்ச்சியானவை,
முன்பு சிவன், இந்திரன், சுப்ரமணியன், விநாயகர், சூரியன், அக்னி முதலிய சிறு தெய்வங்களின் வழிபாட்டுக்குத்
தங்களைக் கொடுத்த மனங்களைக் கூட மாற்றும் திறன் கொண்டவை.
அவர்கள் பிராயச்சித்தத்திற்காகவும், பரமாத்மாவைப் பற்றி ஒரே மனதுடன் பக்தி ஒழுக்கத்திற்காகவும் சேவை செய்கிறார்கள்.
நமது இதயத்திற்கு இனிமையை அளிக்கும் எம்பெருமான் திருவடித்தாமரைகளில் மனம் ஈடுபடும் படி செய்ய வல்லவை

ஸ்கந்தன், இந்த்ரன் , ப்ரஹ்மா , ருத்ரன் , அக்நி , ஸுர்யன் முதலான பரிவார தேவதைகளை வணங்கியவர்களுக்குப்
ப்ராயச்சித்தமாக , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் , தன்னைக் கற்றவர்களை, பரமைகாந்திகளாக ஆக்குகின்றன .
இதற்கு, தானே ஜாமீனாக இருப்பதாக உறுதி அளிக்கிறார்.

குற்றம் அற்றவை -இன்பம் விளைவிப்பவை –
சிவன் அயன் இந்திரன் கந்தன் கரிமுகன் அக்னி சூர்யாதி சகல பகவச் சேஷமான தேவதைகள் இடத்தில்
ஸ்வாமித்வ புத்தி கொண்டு வணக்கம் செலுத்துவதை பரிஹரிப்பதில்
மிக சமர்த்தங்களாய் இருந்து
எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ண வல்லவனாய் யுள்ளன –

வ்ருத்தாசுரன் -இந்திரனிடம் -குவிந்தனையே நமஸ்காரம் பண்ணுவான்
அம்பரீஷன் -பெருமாளே இந்திரனாக வேஷம் போட்டு வந்தாலும் ஒன்றும் கேட்டுப் பெற மாட்டேன் -நீயே நேரில் வந்தாலும் உன்னை வணங்கி ஒன்றும் கேட்க்காமல் இருப்பேன்
நித்ய நைமித்திக்க கர்மங்களில் அக்னி சூர்யன் வருணன் பித்ருக்கள் வணங்குவது இவர்களுக்கும் அவனே -சர்வ பூத -அந்தர்யாமி என்று எண்ணியே செய்கிறோம்
கவ்யம் ஹவ்யம் -பித்ரு தேவ ஸ்வரூபம் ஏற்றுக்கொண்ட விஷ்ணு
அனைவரும் அவன் சரீரம் தானே-

சாஷாத் அவிரோதம் -ஜைமினி -இந்திரன் சப்தமே நாராயணனைக் குறிக்கும்
வ்ருத்தாசுரனைக் கொன்ற இந்திரனே லிங்கம் அடையாளம் சொல்லும் பொழுது அந்தர்யாமி-அவஸ்திதம் உள்ளுறையும் நாராயணனை குறிக்கும்
ஸ்ரத்தையும் வளர்த்து விடுபவனும் நானே -கீதையில்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே -அவஸ்த்திதேரிதி

யயாதி இந்திர ஸம்வாதம் -கீழே தள்ள விரகு பாரத்தான் அன்றோ -இவனோ திருவடியில் விழுந்து அடியேன் என்பவர்க்கு சாம்யா பத்தி அருளுவானே
விகற்ப தேசம் சுவேதன் -ஸத்யலோகம் சென்று பசி தாகம் -கீழே சோறு தண்ணீர் கொடுக்காததால் -இதற்குப் பரிஹாரம் நான்முகன் செய்ய முடியாமல் -உத்தர காண்ட சரித்திரம்
ராமனே விராமன் -வரம் கொடுத்த தேவதை வரம் எல்லாம் ஒய்வு எடுக்கலாமே இவன் இடம் -ருத்ரனை அண்டிய பாணாசுரன் வ்ருத்தாந்தம் அறிவோமே -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதி -தீர்த்து அருளுபவன் இவன் ஒருவனே -நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையம் முன் படைத்தான் -தேவதாந்த்ர தாஸ்யம் நிவர்த்தி செய்து நாராயணனை அண்டியவர்களுக்கு தேவ ரிஷி பித்ரு கடன்கள் ஒன்றுமே இருக்காவே

சர்வ ஸ்மாத் பரனாயும் மோக்ஷ பிரதனனாயும் உள்ள எம்பெருமான் இருக்க
தேவதாந்த்ர பஜனம் பண்ணிக் கெடாதீர்கள் -என்றபடி –

சங்கல்ப ஸூரியோதயம் -24 ஸ்லோகம் ஸ்வாமியே இத்தை விளக்கி அருள்கிறார்

————————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் வைதிகர்களின் ஸூக்ருத பலன் -என்கிறார் –

54-யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ

யதா பூத ஸ்வ அர்த்தா -இயற்கையாக உள்ள எளிய வார்த்தைகள் –ஸத்யமானவை
ஸூதா சந்தோஹ அப்தி -அமுதக்கூட்ட சமுத்திரம்
ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்-வைதிகர் பூர்வ ஸூ ஹ்ருத பரிணாமம் போன்றதும்
யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே

கதா த்ருப்யத் கௌதஸ்குத -வாதத்தால் மதம் கொண்ட தூர்வாதிகளின்
கலஹ கோலாஹல ஹத த்ரிவேதீ நிர்வேத –வாதக் கூட்டங்களால் வருந்திய வேதம் -பேத அபேத கடக சுருதிகள் கொண்ட வேதம்
ப்ரஹ்ம சரீரமாக கொண்டு பேத அபேத ஸ்ருதியை ஸமன்வயப்படுத்தி –உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -இது கொண்டு ஸூ த்திரங்களை ஓருங்க விட்டார்
ப்ரசமன விநோத பிரணயிநீ–
சமனம் பண்ணி -வேத மாதா துன்பம் போக்கி -மகிழ வைத்தார் அன்றோ

ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
யதிராஜர் -நரபதி அரசர் -விஜயதே -பல்லாண்டு –யதா பூதம் உள்ளது உள்ளபடி தாத்பர்யம் -இசைந்ததாக -சுருதி ஸ்ம்ருதி இத்யாதிகளுக்கு
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
அப்தி -கடல் -அம்ருத கடல் -அளவற்ற –சந்தோக-அபரிச்சின்னம் -அம்ருத தன்மை –ஸந்தோஹ சப்தம் ஸூதா உடன் சேர்ந்து
-பிரதாப பந்ததி -நிரவதிக போக்யதை காட்ட –
ஸூ சரித-ஸூ ஹ்ருதம் -சோபனமான சரிதம் –விபக்தி பலன் -விபாகம் தன்மை அடைந்து –ஸ்ருதிமதாம் -வேதம் வல்லவர்கள்
கதா த்ருப்யத் கௌதச்குத கலஹ கோலா ஹல ஹத
வாத கதை -கொழுப்பு ஏறி –வாதம் பண்ணி திமிரு கொண்டு -திருப்த பிரபன்னன் திமிரான பிரபன்னன்
-6–2-திருவாய்மொழி -பிரவேசம் -பெருமாள் விளம்பி வர -பராங்குச நாயகி -த்வரை மிக்கு இருப்பதால் –
ஆர்த்தோவா யதி வா திருப்தா –சப்த வியாக்யானம் -தேக அவசானம் போதும் என்று இருப்பவன்
-வாசி இல்லாமல் அவன் ரஷிப்பான் -சரணாகதன் என்பதே கொண்டு
சரண்யம் ஸ்வபாவம் சொல்ல வந்தது –சரண்ய லக்ஷணம் சொல்ல வந்ததே -இவனுக்கு நாமே உள்ளோம்
-சரணாகதி பண்ணி மோக்ஷம் இப்பொழுதே என்று கேட்க தெரியாத குழந்தை -என்று கொள்ளுபவன்
-பிராணன் அபி -சொல்ல வில்லை -இதை விட பிராணன் பெரிசு இல்லையே அவனுக்கு –
தூது விட்டும் வர வில்லை -பாக்ய ஹானி -முகம் கொடுக்கக் கடவோம் அல்லோம் என்று –
த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத பிரணயிநீ
வேதங்கள் தாத்பர்ய அர்த்தம் -பேத அபேத கடக சுருதி -சமணம் பண்ணி –ப்ரீதிக்கு விஷயம் -சர்வம் சமன்வயதா -பண்ணி அருளியதால் –

அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன; இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;
அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;
வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;
தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும்
செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன.
வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,அமுதக்கடல்;
நாயகியாக இருக்கும் மூன்று வேதங்களின் உயிர்த்தோழி .
சேதநாசேதநங்களை சரீரமாக உடையவன் பகவான் என்கிற ஐக்யத்தைச் சொல்கிறது.
இப்படி, வேதமாதாவுக்கு, ஏற்பட்ட வருத்தத்தை , யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் போக்குகின்றனவாம்

வேதங்களை பரம பிரமாணமாகக் கொண்ட வைதிகர்களின் ஸூ க்ருதமே வடிவாய் யுள்ளவைகளும் –
உண்மைப் பொருளை உணர்விப்பதால் அமுதமயமான கடல் போல் உள்ளவைகளும் –
செறுக்குற்று துர்வாதம் பண்ணும் புறச் சமயிகளுடைய அட்ட ஹாஸங்களாலே
துயர் உற்ற வேதங்களின் துயரத்தை போக்கடிப்பதிலேயே நோக்குடைய ஸ்வாமி யுடைய
ஸ்ரீ ஸூக்திகள் விஜய ஸ்ரீ யுடன் விளங்குகின்றன –

பேத சுருதிகள் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் வேறே வேறே
ஜீவர்களும் ஒருவருக்கு ஒருவர் பேதம்
விஸிஷ்ட ஐக்யம் -சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே -ஏகமேவ அத்விதீயம்
ஸமஸ்த ஜகத் அந்தர்யாமி -நிரீஸன்- ஸ்ரீ லஷ்மி பதி -சரீரீ பிரகாரம் பிரகார பாவம்

———————

எம்பெருமானார் தரிசனத்தில் குறை சொல்லுபவர் தாமே தமக்கு
இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர் -என்கிறார் —

55-ஸ்ருதி ஸ்ரோணி சூடாபத பஹூமதே லஷ்மணமதே
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விததமதி ஆரோபயதிய
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச கலு நிஜகாத்ரேஷூ
பஹூளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட

இராமானுஜ சித்தாந்தம் -விசிஷ்டாத்வைதம்  வேதங்களால் ஆதரிக்கப்படுகிறது
(தத்துவம் என்பது வேதங்களின் “சிரஸ் ”
(தலை) உபநிடதங்களின் துல்லியமான பொருள் மற்றும் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது).
பல்வேறு மதங்களில், சில மனச் சோர்வடைந்த மனங்கள் செயற்கையாக
தவறான மற்றும் ஊகிக்கப்பட்ட குறைபாடுகளைக் கூறுகின்றன. அதனால் என்ன?

கண்ணாடி போன்று அவர்கள் மதங்களில் உள்ள குற்றங்களே பிரதிபலிக்கின்றன
ஒரு சக மனிதர் கைநிறைய சேற்றை வானத்தில் எறிந்துவிட்டு, திரும்பத் திரும்ப அப்படிச் செய்தால்,
நிகர முடிவு மற்றும் ஒரே முடிவு: விஷயம் அவன் தலையில் விழுந்து அசுத்தம் செய்யுமே
இது போன்றே அறிவற்ற புறச்சமயிகள் வாதங்களும் உள்ளன

சுருதி ஸ்ரோணி சூடாபத பஹூ மதே லஷ்மண மதே
ஸ்ரீ பாஷ்ய காரர் -சித்தாந்தம் -வேதம் -கணக்கற்ற -சமுதாயம் -சூடா பதம் சிரஸ்-கொண்டு தரிக்கும் படி -வேதாந்தங்கள் ஆதரத்துடன் தரிக்கும் –
தத்வ ஹிதம் புருஷார்த்தங்கள் –தெளிவாக காட்டி -அத்யந்த பஹு மதி –
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விதத மதி ஆரோபயதி ய
அ ஸூ யை யால் -தன்னுடைய பக்ஷ தோஷங்களை கல்பித்து -குத்ருஷ்டிகள் -பொருந்தாத அர்த்தங்கள் -அபார்த்தங்கள் -ஆரோபித்து -இல்லாததை இருப்பது போலே –
விததம் -உண்மைக்கு புறம்பான -மதி ஞானம் -தங்கள் மத தோஷங்களை தப்பாக ஆரோபித்து
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச க லு நிஜகாத்ரேஷூ -பஹூ ளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட
த்ருஷ்டாந்தம் காட்டி -ஜடத்தன்மை -போன்ற அஞ்ஞன்/ தன் சரீரத்தில் உள்ள -வியர்வை சளி –ஜம்பாலைர் -சேறு -கொண்டு ஆகாசம் மேலே எறிய-
வந்து சரீரத்தில் விழுமே -ஆகாசத்தை அழுக்காக பார்த்து -தன் சரீரத்தில் சேறு விழுமா போலே –
இவர்கள் காட்டும் தோஷங்கள் இவர்கள் மதத்தையே அழிக்கும்-
ஆரோபணம் -கல்பித்தல்- அதிஷ்டானம் கயிறு -பாம்பு என்பது ஆரோபணம் -/ ஸமாரோபணம் -நல்ல விஷயத்தில் -அக்னி ஆத்ம ஸமாரோபணம் –
ஜட பதார்த்தம் போலே அத்யந்த ஞான ஹீனர்கள் இவர்கள் -அயதாத்மா மதி முன்பு இப்பொழுது ஜடம் ஆவான் –

விசிஷ்டாத்வைதம் எல்லோராலும் போற்றப்படுவதைப் பொறுக்காத பிறமதவாதிகள் ,
தங்கள் மதங்களில் இருக்கிற தோஷங்களை (குற்றங்கள்) எல்லாம் யதிராஜரின் மதத்தில் இருப்பதாகச் சொல்லி,
தங்கள் அறிவின்மையைக் காட்டுகிறார்களாம்.
ஒரு முட்டாள் குளக்கரையில் நின்றுகொண்டு, குளிக்க வந்தவர்களைப் பார்த்து, இதோ மேலே ஆகாயத்தைப் பாருங்கள்,
இந்த வெளுப்பான ஆகாயத்தைக் கருப்பாக ஆக்குகிறேன் பாருங்கள் ,என்று சொல்லி,
குளத்துச் சேற்றை இருகைகளாலும் எடுத்து, உயரே ஆகாயத்தில் வீசி,வீசி எறிந்தால்
மேலேசென்ற சேறு பலவகையாகச் சிதறி, இந்த முட்டாளின் தலை, உடல், கை, கால் இவற்றில் விழுந்து, இவனையே கருப்பாக்கியது .
ஆனால், வானம் அப்படியே வெளுப்பாகவே இருந்தது.
பிற மதஸ்தர்கள் கூறும் அபத்த வாதங்கள் , யதிராஜரின் விசிஷ்டாத்வைதத்துக்குப் பொருந்தாமல் அந்த மதஸ்தர்களுக்கே பொருந்தும்

வேதாந்தம் -உபநிஷத்துக்களுக்கு அபிமதமாய் இருக்கும் எம்பெருமானார் தரிசனத்தில்
புத்தி கெட்டவனாக எவன் தோஷங்களை ஏறிட்டுச் சொல்லுகிறானோ –
அந்த ஜடபிராயனானவன்-ஆகாசத்தில் சேற்றை பூசுவதாக எறிய
அது முழுவதும் தன் மேலேயே விழுவதால் தன்னையே சேற்றால் பூசிக் கொள்கிறான் –

————————

எம்பெருமானார் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபமாய் இருக்கிறார் என்கிறார் –

56-நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
யதி ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-
குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம்

இந்த உலகம் அறியாமையின் இருளில் தவிக்கிறது.
(கடவுள் மீதுள்ள அன்பின் எண்ணெயால் எரியும்)
விளக்கு ராமானுஜம் –அவர் இடம் கொண்ட பக்தியே எண்ணெய்
இந்தத் தீபம் மட்டும் இல்லாவிட்டால், மக்கள் எப்படித் தாங்கள் விரும்பினாலும்,
அகங்காரத்தின் இருளையும், அடிப்படையற்ற வாதங்களையும், போக்க முடியும்
போட்டி அமைப்புகளின் கீழ்த்தரமான பேச்சாளர்களால், -பாம்புகளுக்கு ஒப்பிடலாம்.-இவை நிறைந்த
குகையில் அறிவுள்ளவர்கள் தள்ளப்பட்டு கிடப்பார்களே –

நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
பிரயோஜனாந்தர தோஷம் அற்று -பர விஷய பக்தி -சிநேகம் -ப்ரீதி -எண்ணெய் -இரண்டு அர்த்தம் –பக்தியால் நிரம்பிய -எண்ணெய் மிகுந்து
யதி -ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
ஒருக்கால் நன்றாக பிரகாசிக்கப் போனால் -இந்த தீபம் -யதிராஜர் ஏற்றிய சித்தாந்த தீபம் -யதிராஜராகிய தீபம் -என்றுமாம் –
இஹ -நீராலோகம் இருள் தரும் மா ஞாலத்தில்
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம் -தோஷங்கள் -அநகா –அஹங்காரம் ஆத்மாவை தேகமாக –த்வந்த்தம் இருள் –
/அஹங்காரம் உள்ளவனுக்கு ஞானம் கொஞ்சம் வந்தால் அதனால்
குதர்க்கம் -வியாளம் சர்ப்பம் -பாதாளம் ஆகிற குஹரம் துவாரம் –கீழே ஏழு லோகங்கள் ஸூ ர்யன் உதிக்காதே -/குமதி மத குத்ருஷ்ட்டி மதம் —
ஸ்ரீ பாஷ்ய காரர் தீபம் பிரகாசிப்பதால் இவர்கள் மாய்ந்தார்கள் –

கருணை யதிராஜர் அவதரிக்காமல் இருந்தாலோ,
முதலாழ்வார்கள் ஏற்றிய தத்வ ஞான விளக்கு ,எல்லோருடைய இதயத்திலும் ஆத்ம ஞான ஒளியைப்
பிரகாசிக்கும்படி செய்யாதிருந்தாலோ ,
அறிஞர்களும் ,அனுஷ்டானபரர்களும், பிறமத மாயாவாதம் என்கிற படுகுழியில், விழாமல் இருந்திருக்கமுடியாது.
அதாவது,
வித்வான்களும், அனுஷ்டான பரர்களும், கஷ்டப்பட்டு இருப்பர்

இருள் அடைந்த இவ்வுலகில் எம்பெருமான் நிருஹேதுக கிருபை என்ற
எண்ணெயினால் நிரம்பிய எம்பெருமானார் என்ற தீபம்
ஒளிவிட்டு பிரகாசியா விடில்
சத்துக்கள் -குதர்க்கங்களான பாதாள குகையை எப்படி அண்டாமல் விலகுவார்கள் –

——————

57-யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது?

ஒரு பொருள் பழமையானது என்பது பழமையானது என்பதற்கான எந்த தகுதியையும் அளிக்காது.
எதுவானாலும் முதலில் நவீனமானது, அதன் பிறகு பழமையாகுமே காலப்போக்கில்.
மாறாக ஒரு தவறான அமைப்பை இப்போது வரை செழிக்க விடுவது மனிதகுலம் செய்த தவறு.
நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், தங்கர், திராவிடர், குஹதேவர், போதாயனார் மற்றும் பலர்
இந்த அமைப்பை ஆரம்ப காலத்திலிருந்தே வளர்த்து வந்தனர்.
அப்போது எதிர்ப்பு இல்லாததால் மட்டும் விரிவாகவும், அதிகமாகவும் எழுதவில்லை.
அந்த அமைப்பு சமீபத்தியது அல்லது அந்த மதிப்பெண்ணில் அது களங்கத்தை அனுபவிக்கிறது என்று அர்த்தமல்ல.
பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் என்றவாறு

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
நவ நீம் என்பர் -பிராசீன மதம் இல்லை என்பர் -இஹ -லோகத்தில் -யதி ராஜரால் சாஷாத் கரிக்கப் பட்ட இந்த சித்தாந்தம்-வேதத்துக்கு கர்த்தா இல்லை -சாஷாத்கரிக்கப் பட வேணும் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
உரைகல்லில் உரைத்து பார்த்தால் –சாருவாக புத்தர் -சங்கரர் அத்வைதம் விட ப்ராசீனம் –பிராசீனம் என்பதால் கொள்ள வேண்டாமே– தோஷங்கள் நிறைந்து -உள்ளதால் –
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத் -நன்றாக கேள்மின் —
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய -குட தேவர் -வாமன ரூபம் —பாதாயனார் -வியாசர் –போதாயன-டங்கர் -ப்ரஹ்மனந்தி -வாக்கியங்கள் வாதூல கோத்ரம் என்பர்
-த்ரமிடர்–த்ரவிட ஆச்சார்யர் -வியாக்யானம் -சாந்தோக்யத்துக்கும் -ஆர்த்த்ரேயர் -இவர் என்பர்
-திருமழிசை ஆழ்வார் என்றும் சிலர் சொல்வர் -சிவ பாஷ்யர் -63-நாயன்மாருக்குள்ளும் உண்டே –சாக்கியம் கற்றோம் -இத்யாதி –
குஹதேவர்-நம்மாழ்வார் -நாத யமுனா பாஷ்யகாரர் – நிரா தங்கா –ஆபஸ்தம்பர் –ப்ராசீனர் மூவரையும் காட்டி -ஆதங்கம் இல்லாமல் –நிராதங்கம் –
சாஸ்திர தத்துவங்களை நிர்பயமாக அருளி -திரஸ்கரிக்கும் தகுதி இல்லையே –நிஜமத திரஸ்கார விகமாத்-பயம் கவலை அற்று இருக்க காரணம் –
த்ருதர்களாக இருந்தார்கள் -துர்வாத மத பலம் ஒங்க ஸ்ரீ பாஷ்யகாரர் அவற்றை நிரசித்து ஸூ மத ஸ்தாபனம் பண்ணி அருளினார் –
தரிசன ஸ்தாபகர் இல்லை பிரவர்த்தகர் -என்றவாறு –

யதிராஜரின் விசிஷ்டாத்வைதம் பிற்பாடு தோன்றியது.
சங்கரரின் அத்வைதமோ, முன்னமே தோன்றியது. அதனால், அத்வைதமே சிறந்தது என்றனர், பிறமதத்தினர்.
மதங்களின் சிறப்புக்கும், உயர்வுக்கும் ,பழமையோ புதுமையோ காரணமல்ல.
விசிஷ்டாத்வைதம் பின்னாலே தோன்றியது என்பது, அதன் குறையல்ல !
உயர்ந்த அந்த தத்வத்தை,முன்னமேயே தோற்றுவிக்காதது மனிதனின் குறையே !
டங்கர் ,த்ரமிடர் , குஹதேவர் முதலிய பூர்வாசார்யர்கள் ,
சங்கரரைக் காட்டிலும் பழமையானவர்கள் தாங்கள் சொன்ன விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை எல்லோரும்
அப்போது பாராட்டியதால் , கவலை அற்றவர்களாக, கண்டனத்துக்கான நூல்களை அப்போது எழுதாது விடுத்தனர்

எம்பெருமானார் வளர்த்த இந்த தர்சனம் நூதனமே என்பாரேல்
அதனால் குறை ஒன்றும் இல்லை என்கிறார் –
இதை விட சங்கராதி மதங்கள் தொன்மை வாய்ந்தவை என்பதனால் என்ன பெருமை –
உறை கல்லில் உரைத்துப் பார்த்தால் தெரியும் –
இந்த விசிஷ்டாத்வைத மதத்தை ப்ராசீன காலத்திலேயே ப்ரவர்த்திப்பத்தது-
டங்கர் -த்ரமிட பாஷ்ய காரர் -குஹ தேவர் போல்வார் தெளிந்த ஞானம் யுடையவர் அன்றோ –

————

மீண்டும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

58- ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப் பணிதய
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய மஹிம உல்லாசித தியாம்
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம் ஸூ மநசம்

ராமானுஜரின் படைப்புகள், அவற்றின் மதிப்பில், வேதங்களைக் கூட மீறுகின்றன.
கேட்பவர்களின் காதில் அமிர்தத்தைப் பொழிகின்றன-
அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்த அமிர்த இன்பம், அவர்களின் மனதை உயர்ந்த ஞானமாக மலரச் செய்கிறது,
அதனால் இறைவனின் அமிர்தம் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்கிறது.
இவை மோக்ஷம் ஏற்படுத்தி அதன் பின்னர் கிட்டும் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுவிக்கும்-

ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
யதி ராஜர் —ஸூதா -சாரம் -ஆசாரம் -அம்ருத மழை -என்றவாறு –ஸ்ரோத்ரகுஹரே -காது துவாரம் –
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப்பணிதய
பொழிகிறது -நிகமம் வேதம் -அவற்றை விட உயர்ந்த -கரிமா –லகுமா எதிர்தட்டு பணிதய -ஸ்ரீ ஸூ க்திகள்-கேட்ப்பார்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ -காதுக்கு பூட்டு இல்லையே -ஸ்வாபாவிகமாக
கேட்ப்பார்கள் செவி சுடும் -பகவத் நிந்தைக்கு ஜீவனம் கொடுத்து கேட்ப்பார்கள் செவியும் சுடும் படி -சிசுபாலனும் தாள் பால் அடைந்தான் –
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய
போக்யதை அனைவரதும் அப்யஸித்து பெற்ற
மஹிம உல்லாசிததியாம் ஸூ மனசம்
மகிமையால் விகசிக்கப் பெற்ற சுத்த மனஸ் -சாத்விகர்களுக்கு
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம்
ஆராவமுதம் -பர ப்ரஹ்மம் -காலே -அதற்கான உரிய காலத்தில் -மோக்ஷம் அளிக்கும்-சதா ஆசுவாபகவத் அனுபவம்
ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளைக் கொண்டே -என்றவாறு-

யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள் ,வேதங்களைவிட ,மேன்மையாகக் கேட்பவர் காதுகளில் அமுதமாகப் பொழிகின்றன.
அதனால்தான், இந்த ஸ்ரீஸுக்திகளை நன்கு க்ரஹித்தவர்களுக்கு ,
ஆராத அமுதனாகிய எம்பெருமான் போக்யனாக ஆகிறான்.

ஸ்வாமி தேசிகன், பற்பல – முப்பது -வருஷங்கள், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதித்து ,
அந்தப் பரம ஆனந்தத்தை வெளியிடுகிறார்

செல்வச் சீமானான இளையாழ்வார் இடம் அவதரித்து பரவும் வேதாந்த விழுப் பொருள்கள் -ஸ்ரீ ஸூக்திகள் –
தமது காதுகளில் பெருக்கும் அம்ருத தாரையின் அனுபவங்களால் மலரப் பெற்ற ஞானத்தை யுடைய
வித்வான்களுக்கு அவை நித்தியமாக அனுபவிக்கத் தக்கவை –
அளவிட முடியாத ஆனந்தம் விளைவிப்பவை -மோஷம் அடைவிப்பவை –

—————

எம்பெருமானார் திருவடி சம்பந்தமே உத்தாரகம்-

59-யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக ஜனதா
சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்

நான் ஸம்ஸாரம் என்னும் அஞ்ஞான பெரிய காட்டில் ஒரு காட்டு யானையைப் போல் சுற்றித் திரிந்தபோது, ​​
நான் வழிதவறிச் செல்வதைத் தடுக்க, ராமானுஜரின் பாதங்கள் (பரமை காந்திகளால் வணங்கப்படும் பாதங்கள்)
இந்த மதம் கொண்ட எனது மனமான யானையை அடக்க வல்ல
விலங்கு போன்று ஸ்வாமியின் திருவடிகள் உள்ளன –

யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக
பதி பார்த்தா பர்யாயம் -யதிராஜர் -ஷோணீ-பூமி —அநந்ய
ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
பக்தர்கள் -சென்னிக்கு -அது அன்றோ -என் மனசை கட்டிப் படுத்தும் விலங்கு -யத் -தத் -பிரசித்த தமம்-
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
அவித்யை -அஞ்ஞானம் -காடுகளில்–உள்ள பொந்துகளில் -என்னுடைய மனஸ் இஷ்டப்படி திரிந்து
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்
ஞான ஹீனம் -யானை -அடக்க முடியாதே -மதம் கொண்ட யானை போல -எனது மனஸ் -மாமத மனஸ் -விலங்கு
-முதல் அகப்பட்ட விலங்கு -திருவடி தாமரைகள் இரண்டும் –
யதி ஷோணீ பர்த்து–பாத யுகளம் –/யத் இதம்– அநிதம் போக ஜனதா சிர ஸ்ரேணீ ஜூஷ்டம்-/
தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி-அந்த யத் ததிஹ-பூர்வாகாரம் -வர்த்தமான ஆகாரம் -இஹ ப்ரபவது-பாட பேதம் -இந்த லோகத்தில் விளங்கட்டும் என்றபடி
புஷ்ப்பம்-பிரதம நிகளம் ஆனதே – எனக்கு ஆனால் போலே லோகத்தார் அனைவருக்கும் ஆகட்டும் என்றவாறு –

அஞ்ஞானம் என்பது, காடு.
இதில் மதம்பிடித்துத் திரியும் யானை என்பது “மனஸ் “.
இதை முறையாகக் கட்ட, பரமைகாந்திகளும், ஸார்வபௌமர்களும், ஸிரஸ்ஸால் வணங்கும்
எம்பெருமானின் திருவடித் தாமரைகள் தான் தகுந்த இடம். (காலுக்கு விலங்கு ).
இதைப்போல, யதிராஜரின் திருவடி சம்பந்தம் ,
மதம்பிடித்த யானை போன்ற மனஸ் உள்ளவர்களுக்கு, த்ருடமான உறுதியைக் காட்டும்

எந்த யதி ஸார்வ பவ்மருடைய திருவடிகள் ஐஸ்வர்யாதிகளிலே பற்று இல்லாத பெரியோர்களுடைய சிரங்களால்
வணங்கப் பட்டு அநந்ய பிரயோஜனர்கள் சென்னிப் பூவே-
அஞ்ஞானம் ஆகிற பெறும் காட்டில் விளையாடித் திரியும் அடியேன் மனசாகிற மத யானையை
பிடித்துக் கட்டும் சங்கிலியாக ஆகுமோ
அத்திருவடிகள் இவ்வுலகத்தவருக்கு திடமான சம்பந்தம் யுடையதாக விளங்க வேண்டும் –

——————

காரேய் கருணை இராமானுசரின் அருளின் தன்மையைக் கண்டு வியக்கிறார் –
கருணை வெள்ளத்தை சமத்காரமாக வர்ணிக்கிறார் –

60-சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ
கரீயோபி தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ –

முத்துக்களை சுமந்து செல்லும் கங்கை ஓட்டம், யமுனை மற்றும் பிறவற்றில் இருந்து வரும்
நீர் வரத்து காரணமாக அதிகரித்து , சில சமயங்களில் உயர்ந்த நிலங்கள் வழியாகவும் பாய்கிறது.
அதுபோலவே, ராமுனுஜரின் கருணாவின் (தயா) கங்கை, முக்தாக்களை (விமோசனமான ஆன்மாக்களை) உருவாக்கும்,
யமுனாச்சாரியார் மற்றும் பிறரின் கூடுதல் ஆசீர்வாதத்தால் மேம்படுத்தப்பட்டு,
நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி, என்னைப் போன்ற உயர்ந்த கர்வமுள்ள நபரைக் கூட கடந்து,
அதன் தூய்மையான நீரில் என்னையும் மூழ்கடிக்க முடியும்.
நீசர்களில் தலையான அடியேனது பாபங்களையும் போக்கி அருளி முக்தர் ஆக்கியும் அருளும்

சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ கரீயோபி
முத்துக்கள் -முக்தர் –நதி -முத்து அலைக்கும் -திவ்ய தேசத்தில் அனைத்தும் உத்தேச்யம் –
பொன்னி பெண்ணை முத்து குவிப்பதை கலியன் -திரு நறையூர் திருக் கோவலூர் பதிகம் -தன்னிடம் தோன்றுவது பிரசவம் -சவீத்ரி-முத்துக்களை -/பாபங்களை போக்கும் –
சகல ஜகத் என்னும் போக்கும் -/
கங்கையால் போக்கப் படாத பாபங்களும் சேது தீர்க்கும் -கயா சேவைக்கு பின் சேது தீர்த்தம் –அஸ்வமேத யாகம் பண்ணி போக்கும் பாபங்கள் –
அனைத்தையும் போக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் —
திவ்ய தயை பக்தர்களை முக்தர்கள் ஆக்கும் –சாமான்ய ஜனங்களை முக்தர் ஆக்கும்
தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
யமுனை போன்ற நதிகள் கலக்கும் -கங்கை -அபிவிருத்தி பண்ணப் பட்ட ரசம் -யமுனை பூர்ண பகவத் பாகவத சம்பந்தம் கலந்ததால் -தூய பெரு நீர் யமுனை அன்றோ –
திருவடி சம்பந்தம் மட்டும் முதலில் –
ஏனக –பாபங்கள் -சாளக்கிராமம் -கண்டகி விரஜா தீர்த்தம் என்பர் -அதனால் பாவானத்வம் –
தீர்த்தம் -ஆச்சார்ய பரமாகவும் -ஆளவந்தார் -விசேஷ கடாக்ஷம் -ஆ முதல்வன் இவன் -ரசம் ஊட்டுவது ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் என்றவாறு –
பாலும் சக்கரையும் போலே -பூர்வர் ஸ்ரீ ஸூ க்திகளும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளும் என்றவாறு -ரசம் கூடி அன்றோ இருக்கும்

நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
குருச்சேதா -பாட பேதம்

யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ
தயா -குணம் இங்கு -காரேய் கருணை இராமானுச -அப்ராக்ருதமான -நதி பிரவாகம் –

பரம ஆசார்யரான யதிராஜரின் கிருபையை, கங்கைக்கு ஒப்பிடுகிறார்.
இத்தோடு, ஆளவந்தார், நாதமுனிகள், நம்மாழ்வார்களின் கருணையும் சேர்ந்திருப்பதால் ,
யதிராஜரின் கருணைவெள்ளம் –த்ரிவேணி சங்கமமாக ஆகிறதாம்.
இந்தக் கருணையை , மழையாக என்மீது பொழிந்து, என்னை ஆட் கொண்டீர் என்கிறார்.
இவை,எனக்குத் தாரகம், போஷகம் , போக்யம் என்கிறார் .
உன் கருணையே கருணை என்று உருகுகிறார்

மோக்ஷ சாம்ராஜ்யம் இவரிட்ட வழக்கு என்பதால் முக்தர்களுக்கு தோற்றுவாய் –
சகல சேதனர்களின் பாபங்களை போக்கி அருளும் –
ஆளவந்தார் போல்வாரின் விசேஷ கடாக்ஷங்களால் விருத்தி பண்ணப் பட்ட பெருமை யுடையது –
தடங்கல் இல்லாமல் பெருகுவது –
யாருக்கும் தாழாமல் அஹங்கரித்து இருக்கும் என்னையும்-
நிர் வியாஜ்யமாக ஏறிப் பாய்ந்து ஆட் கொண்டு விட்டது –
என்னையும் மூழ்கடித்து தனது திருவடிகளில் இட்டுக் கொண்டதே –

———————

61-சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத கிம்
குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்

ராமானுஜரின் படைப்புகளை ரசிக்கும் பழக்கம் ஒருவருக்கு வந்தபின்பு மற்ற படைப்புகளில் ஆர்வம் காட்ட மாட்டார்; ஏன்?
இந்த (பிந்தைய) படைப்புகள் அற்பங்களை வலியுறுத்துகின்றன;
அவ்வாறு செய்யும் போது, ​​வார்த்தைகள், தர்க்கம் மற்றும் போக்கு அனைத்தும் கடினமானவை
மற்றும் அவை கடினமான பாதைகளில் பயணிக்கின்றன.
முழுப் பயிற்சி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிச்சுப் போடப்பட்ட பல கிழிந்த துணிக் குவியல்கள் போல் அவை காட்சி யளிக்கும்
அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள் கொண்ட கந்தல் துணி போல் இவை உள்ளன –
எல்லாவற்றிற்கும் மேலாக, சிவன் தனது தலையின் மேல் , முத்து நிரம்பிய கங்கை நதியைத் தாங்குகிறார்.
ஆனால், தவளைகள் செழித்து வளரும் ஒரு தெரு சாக்கடையைப் பெற்றுத் தாங்க அவர் எப்போதாவது சம்மதிப்பாரா?

சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
அற்பமான அர்த்தங்கள் -ஸ்ருதிக்கு பொருத்தம் இல்லாமல் -தோஷம் நிறைந்த –கரடுமுரடான வார்த்தைகள் –பிரயோஜனம் இல்லாமல்
-வியர்த்தமான சிந்தனை மாத்திரமே மிஞ்சும் -தாபமே மிக்கு -ஆயாசம் மாத்திரமே பலன் –
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
சங்கராதி சித்தாந்தங்கள் இப்படி –யதிராஜர் நவ ரத்ன கிரந்தங்கள் அனுசந்தித்து -சதா காலம்-இருப்பவர்கக்ள் மத்தியில்
-இவர்கள் சித்தாந்தம் ஒரு காலும் விலை பெறாது -எடுபடாது –
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத
முத்து சிப்பிக்கள் நிறைய -பரி சுத்தமான தெளிந்த தீர்த்தம் கங்கை தரித்துக் கொண்டு இருக்கும்
கிம் குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்
கண்ட பரசுர-சிவன் -கைப்பிடி இல்லாத கோடாலி -ஆயுதம் -ருத்ரனுக்கு -காரண பெயர்
தவளை நிறைந்த அழுக்கான ஜல தாரையை மதிப்பானோ -கண் எடுத்தும் பார்க்க மாட்டானே -ஜலதாரை -சாக்கடை என்றவாறு-

தைப்பதற்கே முடியாத நிலையில், வஸ்த்ரங்கள் கிழிந்தால் அதை அங்கங்கு சேர்த்து முடிச்சுப் போட்டு,
உபயோகிக்க முயற்சித்தாலும், எப்படி அந்தக் கந்தல் துணி எதற்கும் பயன்படாதோ
அதைப்போல அடிப்படைப் ப்ரமாணங்கள் எதுவும் இல்லாமல்
சாஸ்த்ர மரியாதையை மீறிய பிற மதங்கள் ஒருவருக்கும் பயன்படாது.
சிவன், கங்கையைத் தலையில் தாங்குகிறான்;
அவனை, நிறையத் தவளைகள் வசிக்கும் வாய்க்காலைத் தலையில் தாங்கு என்று அவன் பக்தர்கள் வேண்டினால்,
சிவன் சரி என்பானா ? மாட்டான்.
அதைப்போல, ஸ்ரீபாஷ்யாதிகளை ஆழ்ந்து கற்றவர்கள் , விபரீதக் கருத்துக்களைச் சொல்லும் பிற மதங்களின்
கருத்துக்களை ஒப்புக்கொள்ளார். அபார்த்தம் என்று ஒதுக்குவர் என்கிறார்

ஸ்ரீ ஸூக்திகளை அனுபவிக்கப் பெற்றவர்கள் மற்ற கிரந்தங்களைக் கண் எடுத்தும் பாரார் –
ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகளை சதா அனுசந்திப்பார்க்கு
புத்தி கேடு உண்டாக்குவதையே குறிக் கோளாகக் கொண்டு அபார்த்தங்கள் நிறைந்த கந்தல் மூட்டைகளான
இதர மத கிரந்தங்கள் விஷயமாகவே தோன்றாதே
முத்துச் சிப்பிகள் இங்கே நிறைந்து இருப்பதால் –
உயர்ந்த கங்கையை சிரத்தில் அலங்காரமாகக் கொண்ட அரன்-
தவளைகள் நிறைந்த கால்வாயை தலையில் கொள்வானோ –

——————

62-வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம் மான அந்தகார த்ருஹா –
பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய –
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி

வற்றாத கருணைக் கடலான ராமானுஜர், ஹஸ்திகிரி பகவான் வரதராஜருக்கு, சாலைக் கிணற்றில் இருந்து
சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து வழங்கினார்.
இத்தைப் பருகிய – ஒரு கருமேகம்பேர் அருளாளன் நம் மேல் அந்த நீரையே பலனாகப் பொழிகிறான்
இன்றும் அந்த மேகம், அந்த ஸ்ரீ வரதராஜர், நாம் எதிர்பார்த்ததைத் தாண்டி சரியான நேரத்தில் மழையைப் பொழிகிறது.
(இதற்குக் காரணம் ராமானுஜரின் தீர்த்த கைங்கர்யம்  , இப்போது பகவானால் ராமானுஜர்
அடியாக்களான நமக்கு திருப்பிக் கொடுக்கப் பட்டிருக்கிறது,)
அஹங்காராதி அஞ்ஞானங்களை ஸ்வாமி கடாக்ஷ லேசத்தாலே போக்கி அருளுகிறார்
இதனால் மற்ற மதத்தினர் வழிகளால் ஈர்க்கப்படாமல் நம்மைக் காத்து அருளுகிறார்
யதிகளின் தலைவரான இந்த ஸ்வாமியை அடியோங்கள் வணங்குவோம்

வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம்
யமி -அனைத்தையும் கட்டுப்படுத்தி உள்ள -யதிராஜர் -நாயகர்-அஹம் வந்தே –யேன தயா ஸூதா அம்பு நிதிநா–அந்த அம்ருதக் கடலான இவரை வணங்குகிறேன்
மான அந்தகார த்ருஹா–மமகாராம் -அந்தகாரம் -தேஹாத்ம ஸூ தந்த்ர பிரமங்களை விரட்டி
-பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
மேல் மேல் வரும் தன் சிந்தனை ஞானத்தால் -உண்மைக்கு புறம்பான புற சமயங்களை அடக்கி -ருந்தானாம்
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய
எந்த தயையின் -அம்ருதக் கடல் –சமர்ப்பிக்கப் பட்ட தீர்த்தம் -சாலக்கிணறு தீர்த்த கைங்கர்யம் –விசுத்தம் –வந்தவாசி போகும் வழியில் -2-மைல் தூரம் –
அவனே ஆசைப்பட்டு -ஆச்சார்யர் நியமனம் -தீர்த்த கைங்கர்யம் -எம்பெருமானார் கர ஸ்பர்சம் பெற்ற தூய்மை
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி
ஹஸ்தி கிரி -நாதன் -தேவ பெருமாள் -காள மேகம் ஜலத -காலத்திலே-விருப்பத்துக்கு அதிகமான -மனசால் நினைக்க முடியாத பலன்களை வழங்குவான்
தீர்த்தம் பருகி தானே மேகம் பொழியும் -பாஷ்யகாரர் தயை கடல் சமர்ப்பித்த தீர்த்தம் கொண்டே நமக்கு பொழிகிறான்

யதிராஜர் சாலைக் கிணற்றிலிருந்து கொண்டுவந்து சமர்ப்பித்த சுத்த நீரைப் பருகி,
கரிகிரிமேல் நிற்கும் பேரருளாளன் ,எம்பெருமானாருக்கு அருள் மழை பொழிந்தான்.
பிற மதங்களை நிரஸிக்கும் அத்தகைய கீர்த்தி உள்ள எம்பெருமானாரை நமஸ்கரிக்கிறேன்

பரம தயாளுவான எம்பெருமானாரை அடி பணிகிறேன் –
இந்த அருள் கடலான எம்பெருமானாராலே சமர்ப்பிக்கப் பட்ட தூய்மை படைத்த திருமஞ்சன
நீரைப் பருகி அத்திகிரி உச்சியில் உள்ள கரும் கொண்டல் -தேவ பெருமாள்-பேர் அருளாளன் –
நமக்கு உசித காலத்தில் வேண்டுமவை எல்லாவற்றையும் தாராளமாக பொழியுமோ
அஹங்காரமான இருளைப் போக்குபவரும்
சத்ருக்களுடைய மதங்களை தன் கண் பார்வையாலே –
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -என்னும் படி
மண் உண்ணும் படி செய்பவராக அந்த யதிகட்க்கு இறைவனான ஸ்வாமியை அடி பணிகிறேன் -என்றவாறு –

——————

63-காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா –
சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத் குணாத்
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந

முன்பு தத்தாத்ரேயராக வேதங்களை ரஷித்து அருளவே காவி வஸ்திரம் -சந்நியாஸ வேஷம் கொண்டு இருந்தான்
அதே போல் நம் ஸ்வாமியின் திரு அவதாரம் இப்பொழுது மற்றொரு அவதாரம்.
ராமானுஜரின் ஆடையைக் கொடுப்பதற்காக இறைவனின் வெள்ளை வஸ்திரம் பிழிந்து குங்கும நீரில் கழுவப்பட்டது.
மேலும் அவர் துறவி வரிசையின் அடையாளமாக திரி தண்டை எடுத்துக் கொண்டார்.
அவ்வளவு தான். இல்லையெனில், அவர் வெறும் மதுசூதன மூர்த்தி மட்டுமே (வேத தத்துவத்தை விசிஷ்டாத்வைதத்தில் பெற்றதற்காக)
இதற்கும் மேலே அவரது திவ்ய கிரந்தங்கள் மூலம் வேதாந்த சித்தாந்தங்களை வெளியிட்டும் அருளினார்
இவற்றால் நாம் அறிவு ஒங்கப்பெற்று அவரது கருணா குணத்தை புகழ்ந்து கொண்டு உள்ளோம்
இதனால் நமக்கும் மிகுந்த வை லக்ஷண்யம் கிட்டுகிறது
தலை, இதயம் ஆகிய குணங்கள் நம்மீது செலுத்திய வசீகர ஈர்ப்பினால் அவருடைய திவ்ய மங்கள விக்ரஹ
அழகைப் பின் பற்றிக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு நேர்மையான வகைப் புகழ் என்பது தானாக வரும் வழக்கமான வரப் பிரசாதம்!
இந்த ஸ்வாமியுடைய கீர்த்திப் புகழானது கடற்பரப்பு எது வரையிலும் உள்ளதோ அது வரையிலும் பரவி நிலைத்து உள்ளது

காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா
பீதாக வாடைப் பிரானார் -பட்டு வஸ்திரம் -ஸ்வரூப நிரூபணம் -காஷாயம் -பீதாம்பரம் -க்ரஹிக்கப் பட்ட பீதாம்பரம் –
த்ரிதண்டம் ஏந்தி -சோபை மிக்கு -சங்கு சக்கரம் சேர்த்தி அழகு -மிக்கு அன்றோ இது -அஸி தீக்ஷணா போலே அன்றோ ஸ்வாமிக்கும் இது
-மண்டிதா -அலங்கரிக்கப் பட்ட என்றபடி / கண்டனம் சிதைப்பது -எதிர்மறை மண்டதம்
-சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
முரன் நிரஸ்தன -மது ஸூதன–வேத பாஹ்ய நிரசனம் -மூர்த்தி திவ்ய மேனி -ஜெயந்தி பல்லாண்டு மங்களா சாசனம்
-சா -சப்தம் -அந்த -பிரசித்தம் -தொடர்பு -தத்தாத்திரியனாய் முன்பு அவதரித்து –அத்ர மகரிஷிக்கு திருக் குமாரராக
-ததா -நான் என்னை கொடுத்தேன் -ஆறாவது அவதாரம் என்பர் -த்ரிதண்டம் உடன் அவதரித்து -வர்ண கிரமங்கள் நான்கு யுகம்
-அவரே ஸ்ரீ பாஷ்யகாரராக அவதரித்து -நியாய சித்தி கிரந்தத்தில் இத்தை காட்டி அருளி –
வேதாந்தம் சம் ரக்ஷணம் பண்ணவே —த்ரையந்தம்
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத்குணாத்
தீர்த்தம் -ஞானம் –யது- நன்கு வளர்க்கப்பட்ட ஞானத்தால் –வளர்க்கப்பட்ட சித்தாந்தத்தால் -வேதம் எல்லாம் அவனையே பிரதிபாதிக்கும்
-பூர்வ கண்டமும் உத்தர கண்டமும் –
சர்வ அந்தராத்மா -சரீராத்மா பாவம் -ஸமஸ்த சேதன அசேதனங்கள்-தாத்பர்யம் -காட்டிய குணங்கள் -பக்தி ஞானம் வைராக்யம் அனுஷ்டானம் இவைகள்
-லோகத்தில் ஒப்புமை இல்லாத
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந
இந்த குணங்களுக்கு ஒப்பு இல்லையே -ஸ்ரீ வைஷ்ணவர் கீர்த்தியும் உலகு எங்கும் பரவி உள்ளதே –
எம்பெருமானார் திருவடிவாரத்தில் உள்ளதை உணர்ந்த அன்றே கீர்த்தி உண்டே –அளவற்ற கீர்த்தி -கல்யாண குண அப்யாஸத்தால்

பகவான் , பட்டாடையைக் களைந்து சிவந்த காஷாயத்தைத் தரித்து, த்ரிதண்டத்தை ஏந்தி
சிகை, கமண்டலு இவற்றுடன் தத்தாத்ரேயராக வந்து, வேத, வேதாந்த அர்த்தங்களை நிலை நிறுத்தினார்.
யதிராஜரும் அப்படியே அநுசரித்து விசிஷ்டாத்வைதத்தை நிலை நிறுத்தினார்.
அறிவாளிகள் ஒப்புக்கொண்டு பாராட்டுவார்களாம் .
அதனால், பிள்ளான், கிடாம்பி ஆச்சான் போன்ற சிஷ்யர்களின் (அறிவாளிகளின் ) புகழ் நாடு முழுவதும் பரவியது.

” யத்ப்ரக்யாபித தீர்த்த வர்தித தியாம் ” என்பதற்கு,
இதில் “தீர்த்தம்” என்பது , யதிராஜரின் ஸ்ரீபாததீர்த்தம் என்றும் ,
இதை ஸ்வீகரிப்பதால் சிஷ்யர்களுக்கு ,ஞான விருத்தி மிகுதியாகி,
அவர்கள் புகழ் நாடெங்கும் பரவியது என்றும் வ்யாக்யானமிடுவர்

ஸ்ரீ தத்தாத்ரேய மகரிஷியாக திரு அவதரித்து த்ரி தண்டம் ஏந்தி வேதங்களை ரஷித்தான் முன்பு –
அவரைக் காட்டிலும் மேம்பட்ட ஸ்வாமியாக அவரே திருவவதரித்து –
சித்தாங்களை வெளியிட்டு அருளிய கருணையின் புகழ் திக்கெட்டும் என்றும் பரவி உள்ளது –
ஸ்வாமியுடைய கீர்த்தி பிரபாவங்களையும் திவ்ய மங்கள விக்ரக சோபையையும் ஏற்றிப் பேசுகிறார் –

எம்பெருமானாராலே பிரகாசிக்கப் பெற்ற சத் ஸம்ப்ரதாயத்தால்
விளக்கம் உறச் செய்யப் பட்ட புத்தியை யுடையோமான அடியோங்களுக்கு
ஸ்வாமியுடைய குண அனுபவம் பண்ணுவதால் –
அவருடைய சமுத்திர பர்யந்தம் பரவிய கீர்த்தி நெஞ்சுக்கு விஷயம் ஆகிறது –

காஷாயமான பீத வஸ்திரத்தாலும் –
திருக்கையில் ஏந்திய த்ரிதண்டத்தாலும்
எம்பெருமான் யுடைய திவ்ய மங்கள விக்ரஹம் போலே சோபையுடன் விளங்கா நிற்கின்றதே –
பல்லாண்டு பல்லாண்டு –

———

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தாம் எப்போதும் அணுக்கராக வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

64-லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா

ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​
அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது.
அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே
பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்
நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,
அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.
அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
அடைய விரும்புகிறேன் –லிப்சே -/ விப்ரலம்பனம் ஏமாற்றுவது /எம்பெருமானார் திருவடி நிலைகளை காதலிக்கிறேன் என்றபடி -எப்படிப்பட்டவை –
ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி நடந்த தெரு புழுதி மேல் காதல் கொண்டே -ரத வீதியில் உள்ள பூமி –
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
நித்ய ஸூரிகள்–விரும்பி –மருந்தே அவர்கள் போக மகிழ்ச்சிக்கு -அந்த மருந்துகளில் இதுவே சீமா பூமி
இதுவே ரக்ஷை -மாயப்பிரான் தமர் அடி பொடி கொண்டு –
அமணன் பாழி என்று தெரிந்து மூர்ச்சிக்க —பிள்ளை உறங்கா வல்லி தாசர் திரு அடி துகளை கொண்டு –தோஷ பரிஹாரமே ரக்ஷை –
பூமிப் பிராட்டிக்கும் இதுவே ரக்ஷை -சீமந்தம் -தலைக்கு அணிய சீமா அதிகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ் சக்ரே களத் கில்பிஷா –
பிக்ஷைக்கு போகும் பொழுது -மாதுகரம் -பாதுகை இல்லாமல் -ஒரு காலில் சங்கு சக்கரம் -பூமிப் பிராட்டிக்கு ஸமாச்ரயணம்
-நம் போல்வார் செய்யும் அபராதங்களால் புனிதம் அடைய -கிடாம்பி ஆச்சான் ஏகமாக -திருக் கோஷ்ட்டியூர் நம்பி நியமனம்
-சங்கு சக்கர லாஞ்சனம்-நன்றாக பதிந்து -திருவடிகள் உழக்கின பாத தூளிகள் கொண்டு –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா
சமுத்திர அம்பரம் -பூமி பிராட்டி –காரார் –கண்ணார் கடல் உடுக்கை -கடலை வஸ்திரமாக கொண்டு
முத்திரைகள் தரித்து -சங்கு சக்கர லாஞ்சனம் என்றவாறு
பரந்யாசம் சம்சார நிவ்ருத்த மோக்ஷம் -ஸமாச்ரயணம் -நரகம் போக மாட்டான் பிறவி இருக்கும் என்பர் தேசிகன் சம்ப்ரதாயம் –
கொங்கில் பிராட்டி -மேல் நாட்டுக்கு போகும் பொழுது -திருவடி நிலை கொண்டு -கண்டார்கள் –

இப்படி, சிஷ்யர்களின் புகழ் பரவக் காரணமான , உடையவரின் திருவடிகள்
தனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
யதிராஜர் ,பிக்ஷைக்கு எழுந்தருளும் போது பூமியில் அவரது திருவடிகள் ஆழமாகவும், கோலமாகவும் பதிந்து,
இந்தத் திருவடிகள் எழுப்பிய பாத தூளிகளை , நித்ய ஸூரிகளும் நெற்றியில் தரித்து, தந்யராகிறார்கள்;
அந்தத் திருவடிகளே எனக்குச் சரண் என்கிறார்

கடலை துகிலாகக் கொண்ட இந்த பூமி -மாதுகரத்துக்கு எழுந்து அருளுவது போன்ற சமயங்களில்
திருவடி சம்பந்தத்தால் திரு ரேகைகள் முத்தரிக்கப் பெற்று சகல தோஷங்களும் விலக்கப் பெற்று
தூய்மை அடைகிறது –
திருவடிகளுக்கு ரஷையான பாதுகைகளை தங்கள் சிரசில் தாங்குவதால் புண்ணியர்களான மஹான்களுக்கு
ஸ்வாமி திருவடிகள் அணித்தாய் உள்ளன –
அடியேனுக்கும் அப்படியே ஆக வேண்டும் –

——————

65-நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
வியாச ஹாசபதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன

இணை அமைப்புகளை தவறாக இயக்கிய பல ஆதரவாளர்கள் ராமானுஜரால் பரப்பப்பட்ட அமைப்பின்
பரப்பு மற்றும் திசையிலிருந்து வெகு தொலைவில் சென்று விட்டனர்.
பிறகு, அவர்கள் தங்கள் படைப்புகளால், வியாசரை ஏளனப் பொருளாக ஆக்கி விட்டனர் ;
அவர்கள் மனதில் இருந்து வால்மீகியை விரட்டியடித்தனர்
அவர்கள் சுகரை வெறும் கிளியின் நிலைக்குக் கண்டனம் செய்கிறார்கள்;
அவர்கள் போதாயனாரை பயனற்ற விஷயங்களைப் பேசுபவர் என்று கருதுகிறார்கள்.
அதாவது, அடிப்படையாகவும் அதிகாரமாகவும் இருக்க வேண்டிய நமது பண்டைய படைப்புகளை
அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்-என்ன கொடுமை இது

நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
புதிதாக கற்பனையால் நாநா வித -இதிஹாச புராணங்களை விட்டு -புத்த சாருவாக ஜைனர் -/சாங்க்யர் சைவ -வேதார்த்தங்கள்
புத்த மதங்களை கொண்டே -ஸ்தாபித்து -வேத விருத்தமான அர்த்தங்களால் –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
தர்சனம் -மதம் –எம்பெருமானார் உபதேசங்களை மாறாக சொல்லி –குத்ருஷ்டிகளாக –
வியாச ஹாச பதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
வியாசர் -வால்மீகி போல்வார் / தத்வ த்ரய ஞானங்களை விளக்கி உள்ளார்கள் -வேத வேதாந்தர்த்தங்களை-
கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர் -வேதங்களை தொகுத்த காரண பெயர் -புராண தத்வங்கள் / ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் –
ப்ராதேசஸ் -வால்மீகி -பிதாமஹருக்கு பிதாமகர்-திருமலை நம்பி ஸ்ரீ பாஷ்யகாரருடைய உத்தம தேசிகர் -தாதாச்சார்யர் வம்சம் இவர் இடம்
-லஷ்மீ தாதாச்சார்யர் வம்சம் அனந்தாழ்வான் இடம் இருந்து –
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன
சுகர் போதாயனர் /-திரு உள்ளக் கருத்துக்கள் அழிக்கப் பட்டன-கேளி சுகர் –பொழுதுபோக்கு கிளி போலே எண்ணி –
முதா -வியர்த்தமாக -எண்ணி -வியர்த்த ஞான உபதேசங்கள் என்பர் -போதாயனரே இல்லை என்பர் -விதண்டா வாதிகள்-
முதா போதாயன பாதாயனார் -என்றும் பாட பேதம் –

குதர்க்கங்களையே நன்கு கற்று ,அதிலேயே மயங்கி, அதையே பேசி,
வ்யாஸ பகவானையே ஹாஸ்யப் பொருளாக்கி,
வால்மீகி மகரிஷியையே மனத்திலிருந்து விரட்டி,
சுகப் ப்ரம்மத்தை விளையாட்டுக் கிளியாக ஆக்கி,
போதாயநரைப் பாதித்து,
யதிராஜரின் ஸித்தாந்தத்தை ஏற்காமல், மாயாவாதம் செய்கிறார்களே என்று வருந்துகிறார்

பாஹ்ய குத்ருஷ்டிகளை பரிகாசப் பேச்சால் ஏளனம் பண்ணுகிறார் –
வேதாந்தங்களை சரியாக கிரஹிக்க யோக்யதை இல்லாமல் கலக்கமுற்று தெளிவற்ற
புத்தி யுடையவர்களால் நிர்ணயிக்கப் பெற்ற தீதுற்ற நெறியுடைய குத்ருஷ்டிகள்
வியாச மகா ரிஷியை பரிகாசத்துக்கு உள்ளாக்குகிறார்கள்
வால்மீகி முநிவரை மூடராக்கி விட்டனர் –
சுக ப்ரஹ்மத்தை விளையாட்டு கிளியாக்கி விட்டனர் –
யசஸ்வியான பகவத் போதாயனருடைய ஞானத்தையும் வியர்த்தமாக்கி விட்டனர் –
அந்தோ பரிதாபம் –

—————

66-அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ –
பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூதா சித்த ஔஷதா ஸ்வாதி நாம் –
பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–

வாழ்க்கை என்பது இறைவனின் ” மாயா ” என்பதன் கீழ் நாம் வாழ்ந்து துன்பப்படுகிறோம்.
இது மனித குலம் அனுபவித்த ஒரு நீண்ட, மிக நீண்ட, இருள் நிறைந்த இரவு.
ஆனால் உண்மையான நோய் தீர்க்கும் மருந்தான ராமானுஜரின் படைப்புகளின் அமிர்தக் கடலை –
சித்த மருந்தை -ஆழமாக குடித்த மக்களுக்கு,
இந்த மாயா-இரவு அறியாமையின் ஆழ்ந்த தூக்கத்தைக் குறிக்காது.
இந்த உலகில் பிறந்த ராமானுஜரே, அசுபமான மற்றும் தவறான அறிவை ஒழிப்பதற்காகவே,
என் இதயத்தை அவர் வழியில் செல்லச் செய்தார்,
என் எண்ணங்கள் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ
என்னுடைய ஞான விசேஷம் -மாநகா-ஸ்த்ரீ லிங்கம் மாமிகா-இப்பொழுது ஸ்திரமாக உள்ளது -அசவ் -இந்த கால சந்நிதி
-நல்ல அர்த்தங்களை கொண்டதாக விளங்குகிறது
நேர் வழியில் -/ நல்ல பொருள்களை கொண்டதாக -விளங்கி-
ஸ்ரீ பாஷ்யகாரர் திருவதாரத்துக்கு பின் -அன்று நான் பிறந்திலேன் போலே – ஆ ஜென்ம -ஸ்வாமி அவதரித்த பின்பு
-பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
சம்யமி -யதிகள்/ ஸ்ரீ பதி சமஷ்டி பதம் -ஸ்ரீ ய பதி – /யதிராஜாராலே -அத்யந்த அஹிதம் -வியாதி துர்பிக்ஷம் தார்த்ர்யம் இவை -போக்கி -அநேக ஜெகதாம் –
ஆத்மாவுக்கு ஏற்பட்ட வியாதி –பேரமர் காதல் -பக்தி உழவன் —ஈர மனஸ் -பக்தி உண்டாக –ரசிகனாக வேண்டுமே
கண் அழகை ரசித்த பிள்ளை உறங்கா வல்லி தாசர் அதிகாரி -ராஸிக்யத்தை மாற்றினால் போதும்
-ஊரவர் கவ்வை -எருவிட்டு -நீர் படுத்தி –அன்னை சொல்லால் –நீர் நித்யம் வேண்டுமே –
-நெஞ்சப் பெரும் செய்யுள் -உலகம் விஸ்தீரணம் மனஸ் அன்றோ – காரமர் மேனி கொண்டே
-நம் கண்ணன் தோழீ கடியன்- தனக்கா பண்ணினான் சொன்னதும்
பொறுக்காமல் -கடியன் கொடியன் நெடிய மால் உலகம் உண்ட அடியான் அறிவரிய மாயத்தால் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்கும் -அவன் என்பதே முக்கியம்
விசேஷணங்களை தாத்பர்யம் தவிர்த்து விசேஷயம் ஒன்றிலே -மாயாவதி -கிருஷீ பலம் –
ஸ்ரீ பாஷ்யகாரர் -ஸமஸ்த லோக அஹிதங்களை போக்கி அருளி -எப்படிப் பட்டவர் -எப்படி அருளினார்
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூ தா சித்த ஔஷதா ஸ்வாதிநாம்
யத் -சப்தம் -கீழே சொல்லப் பட்டவருடைய -பாற் கடல் -ஸ்ரீ ஸூ க்திகளான -வாக்கால் வெளிப்பட்ட -நாவினில் நின்று மலரும் ஞானக் கலைகள் –
அமிர்தம் -இன்னமுதத்து அமுதம் –சித்த உபாய சோபனம் -பாராசரவ வச ஸூ தாம் -ஸூ த்ரம் கடைந்து எடுத்த அமிர்தம்
–அவற்றை கடைந்த அமிர்தம் –சித்த ஓஷதி வனஸ்பதி சாரங்களின் சாரம் –சகல தாபங்களையும் போக்கும் –
-பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–
பிரகிருதி -மாயை -ஞான சங்கோசம் திரோதானம் –மம மாயா துரத்யாயா –பகவான் மாயா —
சம்சாரமான காள ராத்திரி -நீள் இரவாக நீண்டு -ஊர் எல்லாம் துஞ்சி –பாம்பணையான் வாரானால் –
யாமம் -யாமி நீ -இரவு என்றவாறு -யாமங்களை யுடையது -ஜாமம் -முடிவில்லாதாது அன்றோ
இவர்களை உறக்கத்தில் ஆழ்த்தி -ஞான சங்கோசம் பண்ண முடியாதே –நீண்ட காலம் சம்சாரத்தில் ஆழ்ந்து இருப்பதே பிரஸ்வாபாயம்-

காட்டில் உள்ள ரிஷிகள், வியாதி, பசி, தாகம் —இவை தபஸ் செய்ய இடையூறாக இருப்பதால்,
பல மூலிகைகளால், “ஸித்தௌஷதம் “என்கிற ஔஷதத்தைத் தயாரித்து அருந்துவர் .
இதுபோன்ற ஔஷதத்தை , என்(ஸ்வாமி தேசிகன் ) புத்தியான ஸ்திரீயும் அருந்தி இருக்கிறாள்.
இது–இந்த ஔஷதம் பூமியில் உள்ள பாற்கடலான –யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளைக் கடைந்து எடுக்கப்பட்டது.
ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஏற்படும் அஜ்ஞானம் , என்கிற கெட்ட புத்தியானது ,
யதிராஜரின் உபதேசத்தால் ஏற்படும் தத்வ ஞானத்தால் தானாகவே அகன்று போகும்

எம்பெருமானாருடைய பிரசாதம் அடியாக தமது சித்தம் கட்டுப்பாடுடன் உண்மை பொருள் செறிந்து விளங்குகிறது –
பாற் கடலை கடைந்து பெற்ற அமுதம் போன்ற ஸ்வாமி யுடைய ஸ்ரீ ஸூக்திகள் -ஆகிற
சித்த ஒளஷத்தை யுண்டவர்கள் –
மம மாயா துரத்யயா என்னும் படி பகவானுடைய மாயையான நீண்ட இரவு –
அநாதி மாயயா ஸூப் தா என்கிறபடி தூக்கத்துக்கு காரணம் ஆவது இல்லை
பாரோ உபகாரரான எம்பெருமானாரது அருளாலே பிறப்பு முதலே என் புத்தி கட்டு இன்றி திரியாமல்
ராஜாவை அனுசரித்து நடக்கும் பிரஜை போலே கட்டுப்பாடுடன் ருஜுவாக யுள்ளது
நான் பிறந்தது முதல் எனது புத்தியில் ஸ்வாமியே உள்ளார் –
அதனால் சீரான தெளிந்த புத்தி பெற்று பிரக்ருதியான மாயையால் மயங்காமல் உள்ளேன் –

————————

67-ஸூத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம

திருப்பாற்கடலில் இருந்து வந்த பெண்ணமுதம் திரு மார்பிலேயே நித்ய வாஸம் செய்வதால்
நித்ய ஆனந்த மயமாகவே எம்பெருமான் உள்ளான்
அவனது குளிர்ந்த கடாக்ஷ மழை நம்மை நித்தியமாக நனைக்கிறது இதனாலேயே நமது புத்தி தூய்மை அடைந்துள்ளது
இதன் மூலமும் ஆச்சார்ய உபதேசங்களாலும் ஸ்வாமியின் திவ்ய கிரந்தங்களில் ஆழ்ந்த பொருள்கள் நமக்கு கிட்டியது
தூய வேத விதிகளைக் கடைப்பிடித்து, நூற்றுக்கணக்கான ராமானுஜரின் பதிவு செய்யப்பட்ட வாசகங்களால் ஈர்க்கப்பட்டு,
அனைத்து அன்னிய தொடர்புகளையும் விலக்கி, அன்பான ரசனையையும் வளர்த்துக் கொண்டு,
வற்றாத அருகாமையில் இருக்கும் இறைவனின் அருள் கடாக்ஷம் மூலம் பிராட்டியாரைப் போலவே நம் உள்ளம் மகிழ்கிறது.

சுத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
யதி ராஜர் -ஸ்ரீ ஸூ க்திகள்-சத் சம்பிரதாயத்தில் –திரு மடப்பள்ளி மணம்-கிடாம்பி ஆச்சான் வழி வந்த அப்புள்ளார் -உபதேசம் –அஸ்மத் தேசிகன் -ஆதேசம்
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
பஹிர் மதி -பாட பேதம் -/ இரண்டுமே ஞானத்தை தானே குறிக்கும் -கதி வழி-கத்யர்த்தம் புத்யர்த்தம்
-அடையும் தேசம் -என்ன கதி -என்ன வழி ப்ராப்யம் ஞானம் என்றவாறு /
சுருதி சிரஸ் -உபநிஷத் -துர்மதிகளை வென்று –பாஹ்ய -தகர்த்து எறிந்து-உயர்ந்த மாடத்தில் உப்பரிகையில் விளங்குகிறது -ஸ்திரமாக ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
தாமோதரன் தானே அங்கே-சதா -நித்ய நிரவத்ய ஆனந்த ஸூ லபன்-ஆமோத –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம
என்னுடைய ஞானம் -உபயுக்த ஞானம் -ஷேமுஷீ -பக்தி ரூபா –மனீஷா பஞ்சகம் சங்கரர் அருளி உள்ளார்
-அஹம் அர்த்தமாக ப்ரஹ்மமே நான் -ஞானம் வந்தால் அவனே எனக்கு ஆச்சார்யர்
அந்த மனீஷா இல்லை என்னுடையது -இதுவே உபயுக்த ஞானம் மோக்ஷத்துக்கு

வேத வேதாந்தத்தைச் சொல்லும் யதிராஜரின் ஸ்ரீஸுக்திகளாலே என்னுடைய பெண்ணான புத்தி என்பவள்,
பிறமதவாதிகளையும் அவர்களின் அபத்தக் கருத்துக்களையும் துரத்தி,
எம்பெருமான்
வேதங்கள் என்கிற அரண்மனையில்
உபநிஷத் என்கிற உப்பரிகையில் பேரழகனாய் ,
மிடுக்குடன் வீற்றிருப்பதை அறிந்து,
அவனை அடையப்படிகளில் ஏறி, ஒய்யாரமாக உப்பரிகையை அடைகிறாள்

ஸ்ரீ லஷ்மி சமேத ஷீராப்தி நாதன் குளிர்ந்த கடாஷத்தால் எனது அறிவு மலர்ந்து
சதாச்சார்ய உபதேசத்தினால் பெற்ற யதிராஜர் ஸ்ரீ ஸூக்திகள் ஸ்ரீயபதியின் அருளைப் பெறுவித்து
அடியேன் மனம் அவனையே அனுபவிக்கும் படி பண்ணின -துய்ய மதி பெற்ற சதாச்சார்ய அனுக்ரஹத்தாலே
கையில் கனி என்ன வசப்பட்டவையும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை மாளப் பண்ணுபவையாயும் உள்ள ஸ்ரீ ஸூக்திகள் என் மனசில் நிரம்பி உள்ளன –
சமுத்திர உத்பாவையான பெரிய பிராட்டி
அகலகில்லேன் இறையும் என்று நித்தியமாய் தன்னிடம் இருப்பதால் ஆனந்திக்கும் எம்பெருமானுடைய
குளிர்ந்த கடாக்ஷத்தால் மலர்ந்த என்னுடைய புத்தியானது –
ஸ்ருதி சிரசி வீதீப்தே -என்றபடி வேதாந்த ப்ரதிபாதனான எம்பெருமானை அடைகிறது –

—————————

68-ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான ஸூத்தா மதி –
தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
கோ வா சஷூ உதஞ்சயேத் அபி புர சாடோப தர்க்க சடா –
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந

யதிராஜரின் உயர்ந்த மார்க்கத்தை அடைந்தவர்கள் தாங்கள் பிறந்தது முதலாகவே
ஸஹஜமாகவே யதார்த்த ஞானம் பெற்று விளங்குகிறார்கள்
அவர்களிடம் கம்பீரம் அழகு இனிமை ஆகியவற்றுடன் கூடிய நிலையான கல்வி இயற்கையாகவே அமைந்துள்ளது –
தம்பட்டம் கொண்டு எதிர்வாதம் செய்யும் புற சமயத்தார் வாதப்போருக்கு வந்தால்
அவர்கள் முன்பு நாம் சுவையான ஸ்வாமியின் கிரந்தங்கள் உதவியுடன் வாதம் செய்ய நின்றால்
நமக்கு முன் கண்ணைத்திறந்து பார்க்கும் படி யார் தான் நிற்க வல்லவர்கள்

ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான சுத்தா மதி
ஸ்ரீ பாஷ்ய காரர் -சம்ப்ரதாயம் -உணர்ந்து -ஆழ்வான்- பட்டர் பிள்ளான் –நேராக -ஞானம் பெற்ற -அத்யந்த ப்ரீதியுடன் கேட்டு
–தெளிவான மேதாவிலாசம் பிறப்பு தொடங்கியே-ஆஸ்தாம் -அது இருக்கட்டும்
எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தர் இவரும் என்பர் -பிள்ளான் இடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டு நடாதூர் அம்மாளுக்கு சாதித்தவர்
–திரு வெள்ளறை சோழியன் திணவற்று சொல்லுவார் -நான் செற்று வா -அடியேன் -தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
சாஸ்வதமான சொத்து –வியாஜ்யம் இல்லாமல் -மதுரமாக -ஆஸ்தாம் -இருக்கட்டும் -பத்திரமாக -நிரசிக்க இவை வேண்டாம் –
அபி புர சாடோப தர்க்க சடா –
ஆடம்பம் -தர்க்கங்கள் -வாதங்கள் -பிரதிவாதங்கள் -அசத்தி -தோஷங்கள் காட்டி நிரசித்து -முதலில் -விருத்தங்களை காட்டி
-சாத்தியம் பக்ஷம் ஹேது இவற்றில் தோஷங்களை காட்டி -அதுக்கு மேலே
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந
சஸ்திரம் தடுத்து -பிரத்யர்த்தங்கள் கொண்டு -பயன் அற்று -அக்னி அஸ்திரம் வாயு அஸ்திரம் பிரயோகம் போலே —
பிரயோகங்கள் -வாதி பண்ணின வாதங்களுக்கு பிரதிவாதங்கள் -இவற்றால்
கோ வா சஷூ உதஞ்சயேத்-
வாதப் போரிலே -தலை நிமிர்ந்து -கண்ணாலே பார்க்க முடியாமல் ஒழிந்து போவார்கள் -யாரால் தலை நிமிர்ந்து கண்ணை விழித்து பார்க்க முடியும் –
திருவடி -ராவணன் இடம் நான் தான் துர்பலமானவன் -நானே -அதே போலே இங்கும் -அடியேன் இவர்களை நிரசிப்பேன் -மமதையால் சொல்ல வில்லை –

ஸ்வாமி தேசிகன் பெருமைப்படுகிறார், இந்த ஸ்லோகத்தில். உடையவரின் பரிபூர்ணக் க்ருபைக்குப் பாத்ரமானவன்
ஸ்ரீபாஷ்யம் போன்றவைகளை, சதாசார்யன் மூலமாகக் கேட்டும் ,
பலதடவை காலக்ஷேபம் ஸாதித்தும் ,
பிறமதவாதிகளை வாதம் செய்து தோற்கடிப்பதற்குத் தான் ஒருவரே போதும் என்கிறார்

நல்ல ஆயுத பலம் உள்ளவன் எதிர்த்து போராட முடியாதவனாய் எப்படி இருப்பானோ அப்படி
எம்பெருமானார் சித்தாந்தத்தை அவலம்பித்த நான் தர்க்க பலத்தினால் எதையும் சாதிக்க வல்லேன் –
என் எதிரினில் யார் வாதத்துக்கு நிற்க முடியும் –
ராமானுஜ சித்தாந்தத்தைப் பற்றி ஒழுகுபவற்கு பிறப்பு முதலாக தீதற்ற ஞானம் வாழ்ச்சி பெறுமாக-
பொருள் செறிந்ததாகவும் அழகாகவும் ரஸ கனமாகவும் நித்யமாயும் இருப்பவைகளாயும்
அவர்களுடைய வாக்விந்யாஸங்கள் வாழ்ச்சி பெறுமாக –
படாடோபத்துடன் கூடிய யுக்தி வாதங்கள் ஆகிற ஆயுதங்களைக் கொண்டு வாதப்போர் என்ற விளையாட்டில்
மகிழ்ச்சியுறும் என் முன் எதிர் விழி கொடுத்து நிற்க எவன் வல்லவன் –
ஸ்வாமி சம்பந்தம் அடைந்தவர்கள் பிறந்ததுவே முதலாக ஞானம் படைத்தவர்களாக கம்பீரம் அழகு இனிமை நிறைந்து இருந்து
புற மத வாதிகள் இவர்கள் கண்ணைத் திறந்து பார்த்த ஷணத்திலே மாய்ந்து போவார்கள் –

———

69-பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம் ஆஷபாதம் சிசிஷே –
மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம்
இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-

கணாதரின் வைஷேஷிகாவை திருப்தியாகப் படித்திருக்கிறோம்.
கௌதமருடைய நியாயம் கற்றோம்.
ஜைமினியின் மீமாமாச மதத்தையும் கற்று அதன் மூலம் கனம் கொண்ட நெஞ்சையும் பெற்றோம்  .
நாங்கள் கபிலரின் சாங்கியம் மற்றும் பதாஞ்சலியின் யோகாவிலும் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
இவ்வாறு பொய்யான கருத்துக்களை உணர்த்தவல்ல பல மதங்கள் இந்த உலகில் காடு போன்று நிரம்பி உள்ளன –
அந்தக்காட்டில் அஞ்ஞான அந்தகார இருள் பூர்ணமாக உள்ளது-அதில் குருடராகப் பலர் திரிகிறார்கள்
இந்தக்காடுகள் அனைத்துமே ஸ்வாமியுடைய திருப்பாத ஸ்பர்சத்தாலேயே முடியுடன் அழிக்கப் பட்டன
இந்தக் காலத்தில் அந்தப் புற மதங்களின் வாஸனையால் பீடிக்கப் பட்டு சிலர் இன்னமும் உள்ளனர்
அவர்களிடம் கலந்து சிந்திக்க என்ன உள்ளது –
ராமானுஜரால் (ஸ்ரீ பாஷ்யம் போன்ற அவரது படைப்புகளில்) இந்த அமைப்புகளை முற்றிலுமாக
இடித்துத் தள்ளும் போது, ​​தவறான பாதைகளின் அடர்ந்த காடுகளில், அறிவின் இரவில் கண்மூடித்தனமாக
உரத்த குரலில் கர்ஜிக்கும் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? என்றவாறு –

பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம்
காணாதர் வைசேஷிக மதம் –தர்க்க நியாயம் -நன்கு அறிந்து -பரியஸைஷம் -பர்யாப்த்தம் -சாஸ்திர பரிச்சயம்
-அநவரதம் வாசித்துக் கேட்டும் -மனனம் பண்ணியும் -எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு வரை -பர்யாப்த்தம் –
ஆஷபாதம் சிசிஷே
கௌதமர் நியாய சூத்திரங்கள் அக்ஷபாதர் -நியாய மதம் –பாஷ்யங்கள் விவரணம் –யுக்த அநு யுக்த பரிகாரங்கள் -காணாதர் சூத்ரகாரர் —
-மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம் -இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
இந்த காட்டில் உள்ள எல்லா மரங்களையும் அழித்து
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-
பாஹ்ய மோகங்கள் -அந்தர மோகங்கள் -அனைத்தையும் போக்கி -அருளினார்

கணாதர் இயற்றிய வைசேஷிக மதத்தை விசேஷமாகப் பயின்றேன்.
ந்யாயசாஸ்த்ரம் , மீமாம்ஸம் படித்தேன். ஸாங்க்ய யோகம் கற்றேன்.
இதனால், எம்பெருமானாராலே கண்டிக்கப்பட்ட அந்தப் பொய்ப் ப்ரசாரங்கள் உள்ள மதங்களை ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டது
( ந்யாய பரிஸுத்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், தத்வ முக்தாகலாபம் போன்றவை )

சாக்கியம் கற்றோம் -சமணம் கற்றோம் -சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் -என்கிறபடி
கணாத கௌமத மீமாம்சக சாங்க்ய யோக மதங்களை வேண்டிய அளவு அவ்வவற்றில்
உயர்ந்த பாண்டித்யம் பெறும் அளவுக்கு கற்றுள்ளேன் –
ஆயினும் எம்பெருமானாரால் முறியடிக்கப் பெற்ற பல பல பொய்ச் சமயங்கள் என்கிற காட்டில்
அஞ்ஞான இருளால் குருடர்களாக அலைந்து திரியுமவர்கள் இடம் நமக்கு ஆக்க வேண்டியது ஒன்றும் இல்லை –

கணாதகரின் வைஷிக மதம் –
கௌதமரின் மதம் –
ஜைமினி மீமாம்ச மதம் –
கபிலரின் சாங்க்ய மதம்
பதஞ்சலி யோக மதம் -போன்றவை காடு போலே நிரம்பி உள்ளன
அஜ்ஞானம் இருள் சூழ -பலரும் குருடராக உழல–ஸ்வாமி திருவவதாரத்தால் வேரோடு ஒழிக்கப் பட்டாலும்
மீதி -கொஞ்சம் கொஞ்சம் உள்ளாருடன் தொடர்பு கொண்டு சிந்திக்க என்ன உள்ளது –

————————

70-காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்
உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றிய போது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

தயா சதகம் போலே இந்த யதிராஜ சப்ததியிலும் -ஸ்லோகம் சங்கதி -சூறாவளிக் காற்றில் தாக்கப்பட்டதை எல்லாம் அடைவு கெட அக்ரமமாக அருளுவார்
-பக்தி பிரவாஹம் அன்றோ -74-ஸ்லோகார்த்தங்கள் அறியலாம் –சார தமம் எல்லாமே –
காதா தாதாகதா நாம் களதி
–புத்தர் -தாதாக்கதர்-காதா சகஸ்ரம் -அஞ்ஞானம் மூழ்கடிக்க -500-வருஷம் பின்பு ஹர்ஷர் சமஸ்க்ருதம் புத்தர் வாதம் -முன்பு இல்லை என்பர்
-பிராகிருத பாஷையில் பேசி மக்களை கவர்ந்த -அசோகர் ஹர்ஷர் காலத்தில் தான் சிறப்பு பெற்றது என்பர் -புத்த வாதங்கள் இருந்த இடம் தெரியாமல் நழுவப் பண்ணினார்
-பிரகிருதி ஆத்ம பிரம்மம் -யாதாத்மா ஞானம் வந்தால் நழுவுவது போலே -யதிபதி வீற்று இருந்த ஒன்றாலே இவை நழுவின —
ஜைனரும் ததாகத்தார் சர்வஞ்ஞராக தன்னை சொல்லிக் கொள்வார் -மஹா வீரர் புத்தர் -சம காலத்தவர் என்பர் -புத்தர் ஞான உதயம் ஆன பின்பே இவருக்கு வந்தது என்பர் –
இவர்களும் பிராகிருத பாஷை -சம்ஸ்க்ருதம் வாணி அப்புறம் இவர்களுக்கும் -500-வருஷங்கள் பின்பே வந்தது என்பர் –காதா –அதனால் —
கம நிகா காபிலீ க்வாபி லீநா-
கபிலர் -சாங்க்ய சாஸ்திரம் -தேவ பாதை -திவ்ய மங்கள விக்ரகம் உபாஸ்யம் -என்பர் -வேறே கபிலர் -நிரீஸ்வர சாங்க்யர் இவர்
பிரகிருதி தான் பிரதான ஜகத் காரணம் -புருஷன் உபகாரகன் –சேதன அதிஷ்டானம் இல்லாமல் அசேதனம் செய்வது -ஒவ்வாதே-2–1-பாதம் -சாங்க்யர் நிரசனம்
–சங்கேதங்கள்-இவர்கள் கல்பித்து சொல்வதை -நிரசித்து அருளினார் –சென்று ஒழிந்தது -லீநா-எங்கே தொலைந்தது என்று அறிய முடியாமல் -இன்றும் கூட இல்லையே
ஷீணா காணாத வாணீ –
காணாதர் -அத்யந்த வைராக்ய சீலர் –வைசேஷிகர் -ஷீணா-ஓய்ந்து போனதே -அவர்கள் காதிலும் கேட்க்காத படி ஷீணம் தசை அடைந்தது –
த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ப்ரம்மா -த்ருஹிண/ –வார்த்தைகள் –கிர-சாருவாக மதம் -ப்ருஹஸ்பதி -யோக மதமும் -தள்ளப் பட்டன –
ஹர கிர -பாசுபத சைவ மதம் –வேத விரோதம் -வ்ருத்தம்-இவற்றுக்கு மணம் உண்டாக வில்லை
ஷாமா கௌமாரில உக்தி
குமாரிள பட்டார் -ஸ்கந்தன் அவதாரம் என்பர் -/ சாஸ்திரம் வேற மதம் வேற -வியாகரண மீமாம்சம் நியாய சாஸ்திரங்கள் வேதாந்தத்துக்கு உபகரணங்கள் -/
வைகரண நையாயக மீமாம்ச மாதங்கள் இவற்றால் வந்தவை -/ ஜைமினி வேதாந்த விரோதி இல்லையே -2-இடங்களில் ஸூ த்ரகாரர் -விரோதம் -21-இடங்களில் புகழ்வார் –
பசி பட்டினி ஷாமா -இவர்கள் யுக்தி –குசேலர் -ஷாமா -பெயர் ஆகாரம் வழி இல்லா தசை –
ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம்
பிரபாகர் மதம் குரு மதம் -குமாரிள பட்டார் சிஷ்யர் -பிரபாகர் மிஸ்ரர் –லகுவாக சொல்லாமல் கனக்க சொல்வது கௌரவம் -குருவான மதம் என்றுமாம்
-இதனாலே இது –தள்ளப் பட்டது –
-கா சங்கா சங்கர ஆதே
கொஞ்சம் புத்த மதம் -கொஞ்சம் சாங்க்ய மதம் -கலந்து -ஞான மாத்திரம் -முன்பே -ஞானம் க்ஷணிகம் சொன்னதை இவர் நித்யம் என்றார் –
-ஞாதா ஜீவன் இல்லை ஞானம் மாத்திரம் ஜீவன் -ஞானான் மோக்ஷம் சாருவாக மதம் –
பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –
சப்தமி -பாவ சப்தமி -யதிபதி -த்ரிவேதி ஆகிய கோப்புடைய சீரிய ஸிம்ஹாஸனம் – ருக் யஜுர் சாமம் –அதர்வணம் யஜுர் வேதத்தில் அடங்கினது என்பர் -/
பேத அபேத கடக சுருதிகள் என்றுமாம் -/–129-அடியேன் சப்தம் திருவாய் மொழியில் -அடியேன் உள்ளான் -மட்டுமே -சேஷத்வம் காட்டும் என்று
திருக் கோஷ்டியூர் நம்பி காட்டி அருளி -கிரியா பதம் இல்லாமல் -என்னிடம் உள்ளான் -சரீரம் இல்லாத ஆத்மா -உடல் உள்ளான் அடுத்த பதம் இருப்பதால் –
-பரிசுத்த ஆத்மா என்பதை இந்த ஒரு அடியேன் பதம் மட்டுமே காட்டும் –
சிங்காசனம் -சீரிய சிங்காசனம் -கோப்புடைய –பத்ர வேதீம் த்ரிவேதீம் –பஜ- தாது -வீற்று இருந்து அருளி -நடந்தவை எல்லாம் பட்டியல் இட்டு அருளுகிறார்

உடையவரின் ஸித்தாந்தம் உறுதி அடைந்ததால்,
பௌத்தம் படுத்தது;
ஸாங்க்யமதம் சிதைந்தது;
வைசேஷிக மதம் மாய்ந்தது;
சார்வாகம் சிதைந்தது;
குமாரிலமீமாம்ஸம் குலைந்தது;
சங்கராதிகளின் சமயமும் நலிந்தது என்கிறார்–

எம்பெருமானார் மூன்று வித ஸ்ருதிகளான சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பதைக் கண்ட மாத்திரத்திலேயே
இதர மதங்கள் தாமே நசித்துப் போயின –
புத்தர்கள் பாட்டுக்கள் அடங்கின –
கபிலர் காட்டின வழி எங்கேயோ சென்று மறைந்தது –
கணாதனுடைய குரல் ஓய்ந்து விட்டது –
நான்முகன் அரன் பற்றிய பேச்சின் வாசனை கூட தெரியவில்லை –
குமரில பட்டருடைய பேச்சுக்களும் ஒடுங்கின –
பிரபாகர் மதம் மதிப்புள்ள இடத்தில் இருந்து வெகு தூரம் சென்று விட்டது
மற்ற சங்கராதிகளுடைய மதங்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ -சந்தேகமே வேண்டாம் அதுவும் அழிந்து விட்டது என்றபடி –

அத்வைதிகள் பேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
த்வைதிகள் அபேத ஸ்ருதிகளுக்கு நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
இருவரும் சேர்ந்து அந்தர்யாமி ஸ்ருதிகளுக்கு அதிமாத்ரம் நிர்வேதத்தை உண்டு பண்ணினார்கள்
எம்பெருமானார் தான் மூவகை ஸ்ருதிகளையும் சமன்வயப்படுத்தி நிர்வேதம் உண்டாகாதபடி செய்து அருளி
த்ரிவேதீ நிர்வேதத்தை அறவே ஒழித்து அருளினார்

————————

முன் ஸ்லோகத்துடன் எதிராஜ சப்ததி முற்றுப் பெறும் –
இனி இந்த பிரபந்தம் சத்துக்கள் ஆதரிக்கக் கூடியதாய் இருக்கும் என்கிறார் –

71-விஷ்வக் வியாபிநி அகாதே யதி ந்ருபதி யச சம்பத் ஏக அர்ணவே அஸ்மின் –
ஸ்ரத்தா ஸூத்த அவகாஹை சுப மதிபி அசௌ வேங்கடேச அபிஷிக்த –
ப்ரஜ்ஞா தௌர்ஜன்ய கர்ஜத் ப்ரதிகதக வச தூல வாதூல வ்ருத்த்யா –
சப்தத்யா சாரவத்யா சமதநுத சதாம் ப்ரீதிம் ஏதாம் சமேதாம்

யதிராஜரின் புகழ் என்னும் பெரும் கடல் மிகவும் ஆழம் உள்ளதாகவும் எங்கும் பரவியும் உள்ளது
அதில் ஆழ்ந்து ஸ்நானம் செய்தவர்கள் தூய ஞானம் படைத்தவர்கள் ஆகிறார்கள்
இத்தகைய தூய்மையான எண்ணம் கொண்ட அவர்கள் யதிராஜரின் தொண்டுக்காகவே
வேங்கடேசனான அடியேனை முடி சூட்டி மகிழ்கிறார்கள்
இதன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே இந்த நூல் இயற்றப் பட்டது

இதில் உள்ள ஆழ்ந்த சாரார்த்தம் காரணமாக வீணான ஆடம்பரம் கலந்த வாத கோஷம் எழுப்பும்
புற மதவாதிகள் யுடைய வாதங்கள் அனைத்துமே பெரும் காற்று முன்னாக நிற்க இயலாத பஞ்சு போல் ஆயின
இப்படியாக யதிராஜ சப்ததி என்ற இந்த நூலுடன் யதிராஜரின் அடியார்கள் மகிழ்ச்சி கலக்கும் படி ஆனது

அசவ் வேங்கடேச அபிஷிக்த மூர்த்த -விஷ்வக் -வியாபிநீ -அ காதே -எதி நிருபதி -யசஸ் சம்பத் ஏகார்ணவம்
-திக்குற்ற கீர்த்தி –ஐஸ்வர்யம் வாரி வழங்கி யசஸ் -எதிரிகளை ஒடுக்கி கீர்த்தி -பாதித-யசஸ் விஞ்சி இருக்குமே -வாரி வழங்கிய வள்ளல்
மனஸ் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி -உபாசனம் பலன் -மோக்ஷ பலன் கிடைக்காது -ஏவம் வேத -யசைஸால் விளங்கி கீர்த்தியால் அசலாரை அழித்து-விக்ரமன்
-அதனால் வந்த கீர்த்தி -பரிதபிக்க பண்ணி சத்ருக்களை –
தசரதன் மருமகள் -சத்ரு பரிதபித்தவர் -இருந்தால் -இந்த நிலை வந்து இருக்காதே -அதனால் அவனை முன்னிட்டு -அபராஜிதா -அயோத்யா –
அம்பரமே -யசஸ் -உந்து மத களிற்றன் கீர்த்தி நாயகனாய் இதனால் நின்ற நந்த கோபாலன்
இதனால் அபிஷேகம் –யாரால் -ஸ்ரத்தா சுத்த அவகாகியை -ஸ்ரத்தையால் -தீர்த்தம் – பாவனத்வம் – -சுத்தராலும் –
பெரும் புகழ் -வள்ளல் தன்மை ஏகாரண்வத்தில் மூழ்கி –நீராடி -சுத்த ஸ்வபாவம் உடையவர்கள் ஸூபமதிகள்-
வேத பிரமாண்யம்-மஹா விசுவாசம் கொண்டவர்கள் –வேர்த்த பொழுது குளித்து பசித்த பொழுது உண்டு ராமானுஜர் என்று சொல்லி உஜ்ஜீவனம் —
யதிராஜ சாம்ராஜ்யத்தில் -பட்டாபிஷேகம் – செய்யப்பட்டதும் -பறை சாற்றி -யதிராஜ சப்ததி
பிரஞ்ஞா -உத்க்ருஷ்ட ஞானம் -தெளிந்த ஞானம் –சதாச்சார்யர் இடம் -ஸச் சம்ப்ரதாயம் -குரு பரம்பரை ஸ்ரவணம் -மனனம் -அனவரத பாவனை –
பாஹ்ய குத்ருஷ்டிகள் –இப்படி இல்லையே -இணக்கம் இல்லாதவர்கள் -கர்ஜனை -கூச்சல் இட்டு விலக்குபவர்கள்-பெரும் குரல் மட்டுமே உள்ளது
-பிரதிவாதிகள் -மனம் போன படி பேசி –வசனங்கள் – -பஞ்சு போலே -ஸ்தூலம் –பெரும் காற்று -சூறை காற்றில் பஞ்சு பறப்பது போலே
-ஆக்கி -செயல்பாட்டால் -அத்யந்த சாராம்சம் -சார பூதம் -இந்த சப்ததி -சமேதாம்-இமாம் -70-ஸ்லோக ஸ்துதிகளை –
சதாம் ப்ரீதி -சத்துக்களுக்கு ப்ரீதி விஷய பூதம் ஆகும் -மோதம் பிரமாதம் ஆமோதம் –குண விசேஷங்கள் –ஸ்துதிம்-வேதாந்த தேசிகன் இத்தை நன்கு வழங்கினார் –
பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டார் -பின்பு என்ன பண்ணினார் -இரண்டையும் சொல்லும் ஸ்லோகம் –

இந்த யதிராஜ ஸப்ததியை ,பாகவதோத்தமர்களின் நியமனத்தின் பேரில் எழுதினேன் .
யதிராஜரின் ஸித்தாந்த ஸாம்ராஜ்ய கீர்த்தி என்பது கங்கா நதி. இதில் தீர்த்தமாடினேன் .
ப்ரபல பண்டிதர்களாலே ,எனக்குப் பட்டாபிஷேகம் ஆயிற்று.
எதிரிகள் துர்ப்புத்தியாலே பிதற்றப்படும் வாதப்பேச்சு என்கிற பஞ்சு ,
யதிராஜ ஸப்ததி என்கிற பெரிய காற்றாலே ஒதுக்கித் தள்ளப்பட்டது.
இந்த ஸ்தோத்ரத்தினால் பெரியோர்களின் உகப்பை அடைந்தேன்

எங்கும் பரவியுள்ளதும் ஆழம் காண அரியதாயும் யுள்ள யதிராஜ ஸ்ரீ ஸூக்திகள் ஆகிற பெறும் கடலில்
மூழ்கிப் பாவனம் ஆக்கப் பெற்று நல் ஞானம் அடைந்த சத்துக்களால் கொண்டாடப் பெற்ற
வேங்கடேசன் என்று அழைக்கப்படும் அடியேனால் பணிக்கப் பட்டு ஞான சம்பத் இன்றி
கேவலம் சப்தம் மட்டும் செய்கின்ற ப்ரதிபஷிகளின் வாக்குகள் ஆகிற பஞ்சை அடித்துத் தள்ளும்
பெறும் காற்றின் பணியைச் செய்யுமதாயும்
சாரமான பொருள்களை யுடையதுமான இந்த யதிராஜ சப்ததியானது
பாகவதர்களுக்கு இன்பம் தர வல்லதாய் உள்ளது –
என்ன பாக்யம் இது -என்றபடி –

————————

72-ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான் –
பாதே யதி ஷிதி ப்த ப்ரசபம் நிருத்தன்
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் –
கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

தாங்கள் கூறியதை ஸ்தாபிக்க வேணும் என்னும் பேராசை கொண்ட மற்ற மதத்தினர் அடக்க இயலாத யானை போன்று அடக்க இயலாமல் உள்ளனர்
அவர்களைக் கட்டி இழுத்து வந்து யதிராஜரின் திருவடிகளில் வலியக் கட்டி வைப்பது ஓன்று உண்டு
எது என்றால் கவி தார்க்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை என்னும் அடியேனது முழக்கம்
அவர்களின் செவிகளில் புகுந்து வாதப்போரில் உத்ஸாகம் கொண்ட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விடும்

ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான்
பொறுக்க மாட்டாத மிகுந்த ஆற்றாமையால் –சம்பிரதாயத்துக்கு தோஷங்கள் கல்பித்து
-யானை கூட்டங்கள் -ஆசா மாத்திரம் -சாமர்த்தியம் இல்லாமல் -உள்ளவர்கள்
-பாதே யதி ஷிதிப்த ப்ரசபம் நிருத்தன்
தந்தங்கள் கால்களால் ஸ்ரீ பாஷ்ய காரர் பெரிய மலை யாகிய பாறைகளில் குத்தி -உடையப் பெற்று
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் -கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

மலைகளில் உள்ள காடுகளில், மதம் பிடித்த யானைகள் மரங்களை முட்டிக் கீழே சாய்த்து, காட்டையே சின்னாபின்னமாக்கி,
அட்டகாசம் செய்து, தண்ணீர் குடிக்க ,மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைக்கு வரும்.
யானைகளின் அட்டகாச சப்தத்தினால் கண்விழித்து சோம்பல் முறிக்கும் சிங்கம் கர்ஜிக்கும் .
இந்த கர்ஜனையைக் கேட்கும் யானைகள், மலையில் உள்ள காட்டுக்குள் மறுபடியும் போகாமல்,
சிங்கத்துக்குப் பயந்து, அடிவாரத்திலேயே தங்கிவிடும்.

இதைப்போல, துர்வாதிகள் ரொம்ப வேகத்துடன் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்படாமல் அட்டகாசமாக வாதம் செய்யும்போது,
கவிதார்க்கிக ஸிம்ஹத்தின் யதிராஜ ஸப்ததியை அவர்கள் எதிரில் படித்தால்,
பயந்து, நடுங்கி, விசிஷ்டாத்வைதிகளாக மாறி விடுவர்

கவிதார்க்கிக ஸிம்ஹம் என்ற பட்டப் பெயரை யுடைய வேதாந்த வாரியன் பணித்த யதிராஜ சப்ததி என்ற சிம்ம நாதம் ப்ரதிபஷிகளுடைய காதில் பட்டால்
அவர்களும் எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பர்கள் என்கிறார்
புற மதத்தார் யானை போலே மதம் கொண்டு பேராசையால் திரிய சிம்ஹம் போலே கர்ஜித்து
யதிராஜர் திருவடிகளில் வலியக் கொண்டு வந்து கட்டினேன்
கவிதார்க்கிக சிம்ஹ கர்ஜனை அவர்கள் செவியில் புகுந்து இந் நிலைமை ஏற்படுத்தி விட்டது –

—————————

73-உபசமித குத்ருஷ்டி விபலவா நாம்
உபநிஷதாம் உபசார தீபிகா இயம்
கபளித பகவத் விபூதி யுக்மாம்
திசது மதிம் யதிராஜ சப்ததி ந

மற்ற மதவாதிகள் உபநிஷத் வரிகளுக்கு தங்கள் விருப்பம் போன்ற பொருள்களைக் கூறி அவற்றுக்குப் பெரும் துன்பம் ஏற்படுத்தினார்
இந்தத்துன்பத்தை எதிராஜர் நீக்கி அருளினார்
இப்படிப்பட்ட யதிராஜரின் பெருமைகளை விளக்கும் இந்தக் க்ரந்தம் உபநிஷத்துக்களுக்கு
இரண்டு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் போன்றது
இந்த கிரந்தத்தைக் கற்பதன் மூலம் உபய விபூதியையம் விபூதிமானையும் பற்றிய தெளிந்த ஞானத்தை இந்த நூல் அளிக்க வேண்டும்

உபநிஷத்களுக்கு விபரீத அர்த்தங்கள் சொல்வதால் வந்த விபத்துக்கு யதிராஜ ஸப்ததி ,
அந்த விபத்தைப் போக்குகிற தீபஹாரத்தி போன்றதாகும்.
இதை அனுசந்திப்பவர்களுக்கு பகவானிடம் பரம பக்தி ஏற்படும்

பங்கம் அடைந்த குத்ருஷ்டிகளால் ஏற்படக் கூடிய உபத்ரவங்கள் நீங்கிய வேதங்களுக்கு
கை விளக்காய் அமைந்த இந்த யதிராஜ சப்ததியானது நமக்கு மதி நலத்தை அருள வேணும்

புற மத வாதங்களால் துன்பம் அடைந்த உபநிஷத்துக்களை யதிராஜர் நீக்கி அருளினார் –

ஸ்வாமி பெருமைகளை விளக்கும் இப்பிரபந்தம் இரு பக்கம் ஏற்றி வைக்கப் பட்ட தீபம் போன்றதாகும் –

உபய விபூதி யாதாம்ய ஞானமும் இதனால் பெறலாம் –


இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது
உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும்
அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்
மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட
அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்

இந்த யதிராஜ ஸப்ததியை அனுசந்தித்தால் பகவத் கல்யாண குணங்கள் தெளிவாகத் தெரியும்.
இந்த ஸ்துதியின் பக்தர்கள் , பொறாமை உடைய பிறரை,நக்ஷத்ரங்கள் எப்படிப் பகலில் ப்ரகாசிக்காதோ அந்த மாதிரி, ப்ரகாசத்தை இழக்கச் செய்வர்

இந்த யதிராஜ சப்ததியைக் கற்பதில் விஷயத்தில் ஆதரம் யுடையவர்கள் சத் ஸம்ப்ரதாயத்தைக் கைக் கொண்டவர்களாய்
நல்ல விஷயங்களையே எப்போதும் கேட்பவர்களாய் மாச்சர்ய லேசமும் இல்லாதவர்களாய் விளங்கட்டும் –

நிகமத்தில் –
இந்நூலைக் கற்றார்க்கு மார்க்கம் உள்ளங்கை நெல்லிக் கனி போலே தெளிவாக புலப்படும் இவர்கள் வார்த்தைகள்
வேதங்களின் தலை மேல் வைக்கப்படும்
புற மதத்தினரையும் ஸ்வாமி மேல் பொறாமை கொள்பவர்களையும் பகல் வேளை நஷத்ரம் போலே
ஒளி குன்றும் படி செய்து விடுவார்கள் –

—————————————–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :

ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானைமேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரம் கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய்மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம்புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகரது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக் கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

———–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ விம்சதி -ப்ரமாணத் திரட்டு–

May 31, 2024

ஸ்லோகம் -1-

பாவாம்ஸ்து சக வைதேஹ்யா கிரிஸ அநு ஷு ரம்ஸ்யதே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஸ் ச தே

பாவாம்ஸ்து -தேவரீர்
சக வைதேஹ்யா –பிராட்டியாரோடே கூட
கிரிஸ அநுஷு –மலைகளின் தாழ்வரைகளில்
ரம்ஸ்யதே -க்ரீடிக்கப் பார்க்கிறீர்
அஹம் -அடிமையாகிய நான்
ஜாக்ரத–விழித்துக் கொண்டு இருக்கும் தசையிலும்
ஸ்வ பதஸ் ச –கண் வளர்ந்து கொண்டு இருக்கும் தசையிலும்
தே –தேவரீருக்கு
சர்வம் கரிஷ்யாமி –ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்யக் கடவேன்

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் ஸர்வ வித கைங்கர்யங்களையும் ஸ்ரீ மன் நாராயணனுக்கே மிதுனத்தில் அடிமை செய்கையே சேஷ பூதனுக்குப் பிராப்தம் என்றபடி –

அப்படியே ஸ்ரீ ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாலுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதி சம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

—————

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –

ராமாநுஜேதி –ராமானுஜர் என்கிற
ஏஷா –இந்த
சதுரா –வேண்டும் பலன்களைத் தருவதில் ஸாமர்த்யமான
சதுர் அக்ஷரீ -நான்கு எழுத்துக்கள் கொண்ட மந்த்ரமானது
ந சேத் -இல்லாமல் போயிற்று ஆனால்
மாத்ருஸா–என்னைப் போன்ற
ஜந்தவோ-உயிர்கள்
காம் -எவ்வகையான
அவஸ்யாம் –கொடிய தசையை
பிரபத்யந்தே –அடைவார்களோ அறியேன்
ஹந்த –ஆச்சார்யம் –

————————

ஸ்லோகம் -3 -அவதாரிகை

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா –((பரோஷா மித்ரா பாந்தவ –உறவினரை பின்பும் கார்யாந்தரே)என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –

ப்ரத்யக்ஷ -ப்ரத்யக்ஷத்தில் -கண் முன்னே எழுந்து அருளி இருக்கும்படியான
குரவே –அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை உபகரித்து அருளின ஆச்சார்யர்கள்
ஸ்துத்யா–ஸ்தோத்ரம் பண்ணத் தக்கவர்கள்-

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்-(ஸ்ரீ விஷ்ணு தத்வம் )இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ் விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

விசித்ரா தேக சம்பத்தி ரீஸ்வராய நிவேதிதம்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா

ஹே ப்ரஹ்மன்–ஓ ப்ராஹ்மணரே
ஹஸ்த பாதாதி ஸம்யுதா –கை கால்களோடு கூடினதுமான
விசித்ரா –விசித்ரமாயும்
தேக சம்பத்திர் -சரீர ஸம்பத் தானது
ஈஸ்வராய –ஸர்வேஸ்வரனான ஸ்ரீ யப்பதியின் பொருட்டு
நிவேதிதம்–ஆத்மாக்களை பூஜா த்ரவ்யங்களையும் ஸமர்ப்பிக்கதற்கு
பூர்வமேவ க்ருதா –முன்பே ஸ்ருஷ்டிக்கப் பட்டது –

மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –

பூர்வ–முன்பே
மந –மனத்தினால் சிந்தனை பண்ணி
உத்தர-அதன் பிறகு
வாக் -வாயினால் சொல்ல வேண்டும்

கிருஷ்ண அநு ஸ்மரணம்

கிருஷ்ண –பூ பார நிவ்ருத்தி பண்ணுமவனான கண்ணனை
அநு ஸ்மரணம் –அடிக்கடி த்யானம் பண்ண வேண்டும்

————

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத–ஸ்லோகம்–5-
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
ஸ்ரீ திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –

ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதி த்வே அக்ஷரே-நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –சந்தஸா – காயத்ரி ச –

ஓம் இத்ய ஏக அக்ஷரம் -ஓம் என்று ஒரு அக்ஷரமாய்
நம இதி த்வே அக்ஷரே -நம என்று இரண்டு அக்ஷரமாய்
நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –நாராயணாய என்று அஞ்சு அக்ஷரமாய்
இத் அஷ்டாக்ஷரம் –இப்படி எட்டு எழுத்துக்களாய்
சந்தஸா -சந்தஸ்ஸாய்
காயத்ரி ச -காயத்ரியுமாய் இருக்கும்-

—————

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யா மோஹ தஸ் தத் இதராணி த்ருணாய மேநே அஸ்மத் குரோர் பக்வதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே

யோ –எந்த பாஷ்யகாரர்
நித்யம் –நிரந்தரம்
அச்யுத –ஆஸ்ரிதர்களை நழுவ விடாதவனான ஸ்ரீ யப்பதியினுடைய
பதாம்புஜ யுக்ம –பாதாரவிந்த த்வயமாகிய
ருக்ம -ஸூவர்ணத்தினிடத்தில்
வ்யா மோஹ தஸ் –விசேஷ ஆதாரத்தை யடைந்து இருக்கிறவராய்
தத் இதராணி -அந்தப் பாதாரவிந்த த்வயத்துக்கு வேறான விஷயங்களை
த்ருணாய –த்ருண ப்ராப்யமாய்
மேநே -நினைத்து அருளினாரோ
அஸ்மத் குரோர் –அப்படிப்பட்ட என்னுடைய ஆச்சார்யரும்
பக்வத–பூஜ்யரும்
தயைக ஸிந்தோ–கிருபா ஸமுத்ரமுமாகிய
அஸ்ய ராமாநுஜஸ்ய –இந்த ராமானுஜாசார்யருடைய
சரணவ் சரணம் ப்ரபத்யே –திருவடிகளை ரக்ஷகமாக ஆஸ்ரயிக்கிறேன்

————

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||–ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 62 –

-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)

————————-

புத்த்வா ச நோ ச விஹித அகரணை நிஷித்த சம் சேவனைஸ் த்வத் அபசார சதைர் அஸஹ்யை
பக்தாகசாம் அபி சதைர் பவதாபி அகண்யை ஹஸ்தீஸ வாக் தநு மனோ ஜெனிதை ஹதோஸ்மி
-ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்–79-

ஹே ஹஸ்தீஸ
புத்த்வா ச –தெரிந்தும்
நோ புத்த்வா ச–தெரியாமலும்
வாக் தநு மனோ ஜெனிதை –வாக்கு என்ன சரீரம் என்ன மனஸ்ஸூ என்ன இவைகளால் உண்டாக்கப் பட்ட
பவதாபி அகண்யை –சர்வசக்தனான உன்னாலும் எண்ண முடியாத
ச விஹித அகரணை –விஹிதங்களைச் செய்யாமை யாகிற பாபங்களாலும்
நிஷித்த சம் சேவனைஸ் –ஸாஸ்த்ர நிஷித்தங்களைச் செய்கையாகிற பாபங்களாலும்
த்வத் அபசார சதைர் –உன் திறத்தில் செய்யும் பல பல அபசாரங்களாலும்
அஸஹ்யை -சர்வ ஸஹிஷ்ணுவான உன்னாலும் பொறுக்க ஒண்ணாத
பக்தாகசாம் சதைர் அபி –பல பல பாகவத அபசாரங்களாலும்
ஹதோஸ்மி -கெட்டேன்

கரண த்ரயத்தாலும் அடியேன் செய்து போரும் அபசாரங்களுக்குத் தான் ஒரு வரம்பு உண்டோ –
புத்தி பூர்வகம் ப்ரமாதிகம் அகதிகம்–த்ரிவிதமாய் இருக்குமே
இடகிலேன் ஓன்று அட்ட கில்லேன் ஐம்புலன்கள் வெல்ல கில்லேன் கடவனாகிக் காலம் தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
அக்ருத்ய கரணத்தில் காட்டில் பகவத் அபசாரம் க்ரூரதரமாய்
அதிலும் பாகவத அபசாரம் க்ரூர தரமாய்
அது தன்னிலும் அஸஹ்ய அபசாரம் அதிமாத்ர க்ரூர தரமாய் –பகவத் நிக்ரஹம் அதிசயித்து இருக்கும்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்தி தே –இருப்பினும் உனது கல்யாண குண கணங்களை எண்ணி முடித்தாலும்
என்னுடைய அபராத கணங்கள் அஸங்க்யேயங்கள்
இப்படிப்பட்ட அபராத சஹஸ்ரங்களாலே ஸ்வரூபத்தை இழந்தேன் -கெட்டேன் என்கிறார்

—————-

அதிக்ராமந் ஆஞ்ஞாம் தவ விதி நிஷேதேஷு பவதே அபி
அபித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி அபி பக்தாய சததம்
அஜாநந் ஜாநந் வா பவத் அஸஹநீய ஆகஸீ ரத
ஸஹிஷ்ணு த்வாத் ரங்க ப்ரவண தவ மா பூவம் அபர
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–91-

ரங்க ப்ரவண

சததம் தவ –எப்போதும் ஸ்ரீ தேவரீருடைய

அதிக்ராமந் ஆஞ்ஞாம் விதி நிஷேதேஷு –விதி நிஷேத ரூபமான கட்டளையை மீறி நடப்பவனாயும்

வாக்தீக்ருதிபி அபி–வாக்கினாலும் நெஞ்சினாலும் செய்கையினாலும்

பக்தாய பவதே அபி–தேவர் விஷயத்திலும் ஸ்ரீ தேவரீர் பக்தர்கள் விஷயத்திலும்

அபித்ருஹ்யன் -அபசாரப் படுபவனாயும்

அஜாநந் ஜாநந் வா –தெரிந்தோ தெரியாமலோ

பவத் அஸஹநீய ஆகஸீ—-ஸ்ரீ தேவரேருக்கும் அஸஹ்யமான அபசாரங்களில் ஆஸக்தனமாயும் இருக்கிற அடியேன்

ஸஹிஷ்ணு த்வாத் –ஸ்ரீ தேவரீர் சர்வ ஸஹிஷ்ணுவாதலால்

தவ மா பூவம் அபர–ஸ்ரீ தேவரீருக்கு அனுக்ரஹம் ஆகாது ஒழியக் கடவேன் அல்லேன்

தவ பர ஏவ பவேயம் என்றபடி

சமர்த்தனான பிஷக்கின் பக்கல் ரோகியானவன் தன் அபத்யத்தை வெளியிடுமா போலே
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்
ஸ்ரீ பெரிய பெருமாள் பக்கல் பிரகிருதி நிவ்ருத்த பரமாய் –
தேவர் ஆஜ்ஜா ரூபமான
ஸ்ருதி ஸ்ம்ருதி இத்யாதிகளை லஜ்ஜா பயன்கள் இன்றி பரித்யஜித்து
சர்வ பூத ஸூஹ்ருதான தேவர் பொருட்டும்-
மத் பக்த ஜன வாத்சல்யம் இத்யாதி அஷ்ட வித பக்தி உக்தனாய்
சதா தரிசனத்துக்கு அவரிடம் போக மாட்டாதே
சதா தர்சனாதி போக்யனான பாகவதம் பொருட்டும்
கரண த்ரயத்தாலும் புத்தி பூர்வகமாகவும் அபுத்தி பூர்வகமாகவும் காதாசித்கமாகவும் இன்றிக்கே
ஸம்பந்த சம்பந்திகளில் அளவும் பயம் இல்லாமல் துரோகித்து
சர்வ ஸஹிஷ்ணுத்வமான ஸ்ரீ தேவருக்கும் அஸஹநீயமான அபராதத்திலும் சந்தோஷிக்கிறேன்

இப்படி அக்ருத்ய கரண க்ருத்ய அகரண
பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்ய அபசாரங்களைப் பண்ணிப் போருகிற நானும்
ஸஹிஷ்ணுத்வத்தாலும் நிர்தோஷ ரக்ஷணமாகில் ஸ்ரீ பரமபதத்தில் இருந்து செய்யலாய் இருக்க
ச தோஷ ரக்ஷண அர்த்தமாக ஸ்ரீ கோயில் ப்ராவண்யத்தாலும் தேவர்க்கு துர் பரனாக ஒண்ணாது என்கிறார் –

————

கீழ் சேஷத்வ காஷ்டை யான ததீய சேஷத்வத்தை அனுசந்தித்தார் –
இதில் சேஷத்வத்துக்குப் புறம்பான வற்றில்
அருசியைச் சொல்லி -அவற்றைத் தவிர்த்துத்
தந்து அருள வேணும்-என்கிறார் –

ந தேஹம் ந ப்ராணான்ந ஸ ஸூ க மேசேஷாபி லஷிதம்
ந சாத்மானம் நாந்யத்  கிமபி தவ சேஷத்வ விபவாத்
பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாது ஸததா
விநாஸம் தத் ஸத்யம் மது மதன விஜ்ஞாப நமிதம்—
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்–57-

ந தேஹம் –
அஹமபிமானத்துக்கு அர்ஹமாம்படி
அந்தரங்கமான சரீரத்தையும் –
தேவர் உடைய சேஷத்வத்துக்கு புறம்பாகில் வேண்டேன் –

ந ப்ராணான் –
தேகாதிகளுக்கு தாரகமான பிராணன் களையும்
சேஷத்வ பஹிர்ப்பூதம் ஆகில் வேண்டேன் –

ந ஸ ஸூகம் –
தேஹாதிகளையும்
பிராணன் களையும்
ஆதரிப்பது ஸூகார்த்தமாக இறே –
அந்த ஸூகமும் வேண்டா –
ஸூகம் என்ற மோஷ ஸூகத்தைச் சொல்லவுமாம் –

அ சேஷாபி லஷிதம் ஸூகம் –
எல்லாரும் ஆதரிக்கும் ஸூகம் என்றுமாம் –
ஸூகம் என் என்னில்
தேவாதி சகல ஜந்துக்களும் ஆதரிக்குமது இறே
ஸூகம் என்று பிரியச் சொன்ன போது
அசேஷாபி லஷிதம் நாந்யத் கிமபி -என்று
மேல் கூடக் கடவது –
நாந்யத் கிமபி -என்கிறது புத்திர மித்ர களத்ரங்கள் -என்கிறது

ந சாத்மானம் –
கீழ்ச் சொன்ன சகலத்துக்கும் ஆஸ்ரயமாய்
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை உடைய
ஆத்மாவை –

தவ சேஷத் வவிபவாத் பஹிர்ப் பூதம் –
ப்ராப்த விஷயத்தில் சேஷத்வம் ஆகிற பெருமைக்கு புறம்பு ஆனத்தை
அந்தர்ப் பூதம் ஆனவன்று
எல்லாம் உபாதேயம் -என்கை

நாத –
சேஷத்வத்துக்கு புறம்பானவை
அசஹ்யம் என்கைக்கு அடியான
அவர்ஜனீய  -விட ஒண்ணாத -சம்பந்தத்தை சொல்லுகிறது

ஷணம் அபி சஹே –
ஷண காலமும் சஹிக்க கில்லேன்
காமினிக்கு பர்த்ரு விரஹத்தில் சந்தன குஸூமாதிகள்
அசஹ்யமானாப் போலே
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே -4-8-
ந தேவ லோகா க்ரமணம் –
இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்

யாது ஸததா விநாஸ்ம் –
உரு மாய்ந்து போக வேண்டும்
அடிமைக்குப் புறம்பானவை
அசஹ்யம் ஆனாலும் போக்குகை
ஈஸ்வர கருத்தியம்
அனுகூலங்கள் ஆதரணீயமானாலும்
உண்டாக்குகை ஈஸ்வர கருத்தியம் –

தத் ஸத்யம் –
இது லோகத்திலே கேட்டு அறிவது ஓன்று அன்று
மெய்யாகக் கூடுமோ -என்ன
இது அஹ்ருதயமாக சொன்னது அன்று -மெய்

மது மதன-
திரு முன்பே பொய் சொன்னேன் ஆகில்
உமக்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன்
சேஷத்வத்துக்கு புறம்பானவற்றை மதுவைப் போக்கினால் போலே
போக்கி அருள வேணும் -என்னவுமாம்

விஜ்ஞாப நமிதம்
இதம் விஜ்ஞாபநம் தத் சத்யம்
ப்ராப்ய அபேஷையில் புரை குற்றம் உண்டாகிலும்
விரோதி வர்க்கத்தில் அருசியில் பொய்யில்லை –

(கீழே இஷ்ட பிராப்தியை அபேக்ஷித்து இங்கே அநிஷ்ட நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
ஏறாளும் இறையோனும் -திருவாய்மொழி -4–8-அர்த்த ஸ்லோகம் இது
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எரிந்து
எண் அழலை தீர்வேனே போலே – அழிவில்லா ஆத்மவஸ்துவையும் உருமாய்ந்து போகட்டும் என்றது
சேஷத்வ ஊற்றத்தைப் பற்ற –
விஞ்ஞாபனம் — விஞ்ஞாபிதம் –பாட பேதங்கள் -)

————

நிர்க்குணம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் –கல்யாண ஏக குண ஸ்தானன் –திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு நா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப —17 ஸ்லோகம் -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று-

————-

யதா யஸ்ய பஸ்யதே ருக்ம வர்ணம் கர்த்தாரம் ஈஸம் புருஷன் ப்ரஹ்ம யோநிம் ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி —

யதா யஸ்ய -எந்தக் காலத்தில் ஜீவாத்மாவானவன்
ருக்ம வர்ணம் –ஸ்வர்ண ஸ்வரூபமாய் பிரகாசிக்கிற அப்ராக்ருத திவ்ய மங்கள விகிரஹத்தை யுடையவனாய்
ஈஸம் -ஜகத்துக்கு நியாமகனாய்
கர்த்தாரம் –ஜகத் கர்த்தாவாய்
ப்ரஹ்ம யோநிம் -ப்ரக்ருதிக்கு உபாதானமாயும் இருக்கிற
புருஷன் –பரம புருஷனை
பஸ்யதே–ஸாஷாத் கரிக்கிறானோ
ததா –அந்தக்காலத்தில்
வித்வான் -அந்த ப்ரஹ்ம தர்சீ
நிரஞ்சன-ப்ரக்ருதி சம்பந்தம் இல்லாதவனாய்
புண்ய பாபே விதூய –புண்ய பாபங்களை நிரஸித்து
பரமம் ஸாம்யம் உபைதி — அந்தவந்த ஸாம்யத்தை அடைகிறான் –

———–

யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞான மயம் தப தஸ்மாத் ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே

யஸ் -எந்த அக்ஷர பர ப்ரஹ்மம்
ஸர்வஞ்ஞஸ் -எல்லாவற்றையும் அறிந்ததோ
யஸ் -எந்த பர ப்ரஹ்மம்
ஸர்வ வித் –எல்லா விஸேக்ஷங்களையும் அறியுமோ
யஸ்ய -எந்தப் ப்ரஹ்மத்துக்கு
தப–ஸங்கல்பமானது
ஞான மயம் -ஞானமேயோ
தஸ்மாத் -அந்தப் ப்ப்ரஹ்மத்தில் இருந்து
ஏதத் ப்ரஹ்ம நாம ரூப மன்னஞ்ச ஜாயதே –முன் சொன்னபடியே நாம ரூப ஆத்மகமான பிரபஞ்சம் உண்டாகிறது –

——–

பரதஸ்ய வச குர்வன் யாசமா நஸ்ய ராகவா ஆத்மாநம் நாதி வர்தே தாஸ் ஸத்ய தர்ம பராக்ரம –-அயோத்யா –111-6-

ஹே ஸத்ய தர்ம பராக்ரம–சத்தியத்தையும் தர்மத்தையும் அனுஷ்டிப்பதில் வல்லமை யுடையவனே
ராகவா–ஓ ராகவனே
யாசமா நஸ்ய–யாசிக்கும் படியான
பரதஸ்ய வச குர்வன் -பரதனுடைய வாக்யத்தைப் பூர்த்தி செய்து
ஆத்மாநம் –நீரான தன்மையை -அதாவது ஆஸ்ரித பரதந்த்ரரான தன்மையை
நாதி வர்தே தாஸ் -அதிக்ரமிக்க வேண்டாம் –

—————

அபசாரஙளைப் பொறுக்குமாறு வேண்டுவது:
மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥-10-

மநோவாக்காயைঃ * -மனம் மொழி மெய் -முக் கரணங்களாலும்
அநாதி³கால ப்ரவ்ருʼத்த -அடி தெரியாத நெடுநாள் முன்னாக விளைந்த
அநந்த-அளவிறந்த
அக்ருʼத்ய கரண–செய்யத் தகாதவற்றைச் செய்தும்
க்ருʼத்ய அகரண–செய்யத்தக்கவற்றைச் செய்யாது ஒழிந்தும்
ப⁴க³வத³பசார -எம்பெருமான் இடத்தில் அபசாரப்பட்டும்
பா⁴க³வதாபசார-பகவத் அடியார்கள் டத்தில் அபசாரப்பட்டும்
அஸஹ்யாபசார -பொறுக்க முடியாத படி அபசாரப் படுகையும்
ரூப * -இங்கனே யுள்ள
நாநாவித⁴ * அநந்த அபசாராந் * –பலவகைப்பட்ட -அபரிமிதங்களான குற்றங்களை

இதற்கு -அசேஷத க்ஷமஸ்வ -என்பதில் அந்வயம்-அஶேஷத: க்ஷமஸ்வ
அசேஷத –அணுவளவும் மிச்சம் இல்லாதபடி
க்ஷமஸ்வ–பொறுத்து அருள வேண்டும்

இவ் வபசாரங்கள் எப்படிப்பட்டவை என்னில்
ஆரப்³த⁴கார்யாந், * -இன்னமும் பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தவையாய் இருக்கும் அபசாரங்கள்
அநாரப்³த⁴கார்யாந்,-இன்னம் பலன் கொடுக்க ஆரம்பிக்காதவையாய் இருக்கும் அபசாரங்கள்

  • க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச –இறந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் -த்ரிகால வ்யாபிகளாய் இருக்கும் அபசாரங்கள்
    இவை அனைத்தையும் பொறுத்து அருள வேணும்
    ஸர்வாந் * -மநோ வாக் காய அபசாரங்கள் பிரஸித்தமாய் இருக்க
    இவற்றை இங்கு அருளிச் செய்தது
    எம்பெருமானைச் சிந்திக்கவே அமைந்த மனஸ்ஸையும்
    அவனை ஸ்துதிப்பதற்காகவே அமைந்த வாக்கையும்
    அவனுக்குப் பலவித பணிவிடைகள் செய்வதற்காகவே அமைந்த தலையம் கொண்டு
    அந்தோ வ்யபசரிக்கலாயிற்றே என்று நிர்வேதம் தோன்ற அருளிச் செய்கிறார்
    இக்குற்றங்களும் அநாதிகாலம் செயகாவை அன்றோ
    ஸம்ஸாரம் ஆனாது தானே
    பஹுநி மீ வ்யதீதாநி ஜன்மாநி தவ ச அர்ஜுனா
    அநாதி யாவதாலேயே அனந்தங்களாய் இருக்குமே

மேலே அவற்றை வகையிட்டுப் பிரித்து அருளிச் செய்கிறார்
அக்ருத்ய கரண -ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாந் போன்ற விதிகளை அதிக்ரமித்து பண்ணுகிற பிராணி பீடை
-அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை
பிறர் பொருள் தாரம் இவற்றை அபஹரிக்கை
அஸத்யம் சொல்லுகை
அபஷ்யம் -பஷிக்கத் தகாதவற்றை யதேச்சமாக பஷிக்கை
ஆக இவ்வாறு பலவகைப்பட்டு இருக்கும் அக்ருத்ய கரணங்கள்

க்ருத்ய அகரணமாவது-
ஸாஸ்த்ர விஹிதங்களாகிற வர்ணாஸ்ரம தர்மங்களை சோர்வு சோம்பல்களாலும் நாஸ்திக்யத்தாலும் அனுஷ்டியாது ஒழிகை
பகவத் அபசாரமாவது
தேவதாந்தரங்களோடு ஓக்க எம்பெருமானை நினைக்கையும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் மானுஷ்ய ஸஜாதீய புத்தி பண்ணுகையும்
அர்ச்சவதாரத்தில் உபாதாந நிரூபணம் பண்ணுகையும் -முதலானவை
பாகவத அபசாரமாவது
அஹங்காரத்தாலும்
அர்த்த காமங்கள் அடியாகவும்-ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் விரோதம்
அஸஹ்ய அபசாரமாவது
கீழ்ச் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தநம் இல்லாமல்
ஹிரண்ய கசிபுவைப் போலே
பகவத் விஷயம் பாகவத விஷயம் என்றால்
காணவும் கேட்கவும் பொறாதபடியாய் இருக்கை
ஆச்சார்ய அபராதமும் அஸஹ்ய அபசாரமாய் இருக்கும் -அதாவது
ஆச்சார்யர் அருளிச் செய்த அர்த்தத்தின் படியே அனுஷ்டியாமையும்
அவன் உபதேசித்த அர்த்தங்களையும் மந்திரங்களையும் அல்ப பிரயோஜனங்களுக்காக அநதிகாரிகளுக்கு உபதேசிக்கை முதலானவை
ஆச்சார்ய பக்தரான ஸஹ ப்ரஹ்மசாரிகளுடன் ஐக ரஸமுண்டாய் வர்த்திக்கையாய் இருக்க
அது செய்யாதே அவர்கள் திறத்தில் பண்ணும்
அஸூயையும் அவஜ்ஜையும் முதலானவையும் அஸஹ்ய அபசாரம் எனப்படும்
பாகவதர்களிடத்தில் அபசாரம் பட்டால் அது பகவத் அபசாரமாய் முடியும்
பகவான் இடத்தில் அபசாரம் பட்டால் அது பாகவத அபசாரமாய் முடியும்

எம்பெருமான் இடம் ஸம்வாதமாய் இருக்கும் இக்கிரந்தத்தில்
த்வத் அபசாரம் என்னாதே
பகவத் அபசாரம் என்பது பொருந்துமோ என்னில்
பகவத் அபசாரம் என்றே ப்ரஸித்தி பிராஸுர்யமாக இருப்பதால் குறையில்லை

இங்கு அநந்த பதம் இரண்டு பிரயோகங்கள்
முதல் பிரயோகம் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண சாமான்ய அபசாரங்களிலும்
இரண்டாவது பிரயோகம் பகவத் அபசாராதிகளிலே அந்வயிக்கும்

ஆரப்த கார்யான் -அநா ரப்த கார்யான்
கர்மங்களின் பலன் பரிபாக கிரமத்தால் தான் பலன் கொடுக்கும்
பலன் கொடுக்காத தொடங்கியவை ப்ராரப்த கர்மங்கள் என்றும் -இவையே ஆரப்த கார்யான் என்றும்
பலன் கொடுக்கத் தொடங்காதவை -ஸஞ்சித கர்மங்கள் என்றும் இவையே அநா ரப்த கார்யான் என்றும் சொல்லப்படுகின்றன –

————–———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கூரேச விம்சதி–ஸ்ரீ கூரநாத பஞ்சாஸத்

March 9, 2024

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

ஸ்ரீ சீராமப்பிள்ளை என்னும் வேத வியாஸ பட்டரின் திரு மகனாரான ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ கூரேச விம்சதி

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ கூரேச பஞ்சாஸாத்

——-

ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம் ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் ஸூப குணம் வாஸாம் ஜயி ப்ராதரம்
லோகார்ய ப்ரணவம் ததுக்தி ரஸிகம் ஸர்வஜ்ஞ பட்டாரகம்
வந்தே தம் புவி விம்சதிம் வ்யதநுத ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய ய
–ஸ்வாமி பற்றிய தனியன் இவர் வம்சத்தவர் அருளிச் செய்தது

ய-யாவர் ஒருவர்
புவி -உலகில்
ஸ்ரீ வத்ஸ சிஹ்னஸ்ய–கூரத்தாழ்வானைப் பற்றிய
விம்சதிம்-இருபது ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரத்தை
வ்யதநுத- –அருளிச் செய்தாரோ
தம் -அப்படிப்பட்ட
ஸ்ரீ ரங்க உஜ்ஜ்வல மத்ய வீதி நிலயம்-ஸ்ரீ ரெங்கத்தில் விளங்குகிற நடுவில் திருவீதியை இருப்பிடமாகக் கொண்டவரும்
ஸ்ரீ ராம மிஸ்ராத் மஜம் -வேத வியாஸ பட்டர் என்னும் ஸ்ரீ ராம மிஸ்ரரின் திருக்குமாரரும்
வாஸாம் ஜயி ப்ராதரம் –வாக் விஜயி பட்டரின் ஸஹோதரும்
ஸ்ரீ பட்டார்ய பதாஸ்ரயம் –ஸ்ரீ பராசர பட்டரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்
லோகார்ய ப்ரணவம்-லோகாச்சார்யராகிய நம்பிள்ளையிடம் பக்தியை யுடையவரும்
ததுக்தி ரஸிகம் –அந்த நம்பிள்ளையின் ஸ்ரீ ஸூக்திகளின் சுவை யறிந்தவரும்
ஸூப குணம் –நல்ல குணங்களைக் கொண்டவருமான
ஸர்வஜ்ஞ பட்டாரகம் –ஸர்வஜ்ஞ பட்டரை
வந்தே –வணங்கி ஸ்துதி செய்கிறேன்

கூரத்தாழ்வானின் திருக்குமாரர்கள் இருவருக்கும் ரெங்கநாதன் ராம மிஸ்ரர் இயற் பெயர்கள்
எம்பெருமானார் இவர்களுக்கு பராசர பட்டர் என்றும் வேத வ்யாஸ பட்டர் என்றும் திரு நாமம் சாத்தி அருளினார்-இவரது சகோதரரே வாக் விஜயீ பட்டர்

———

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா
ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே
ஸ்ரீ மச் சட ப்ரமதநே ஸ்திர பாவ பந்தம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரு மந்வஹம் ஆஸ்ரயாமி
–1-

ஸ்ரீ ரங்க ராஜ கருணாமய த்ருஷ்டி வீஷா ஸம் ப்ராப்த ஸர்வ குண ராஜி விராஜமாநே–திருவரங்க நாதனுடைய கருணை பொங்கிய திருக்கண் பார்வையினால் அடையப் பெற்ற ஸகல ஸத் குண ஸமூஹங்களாலே மிகவும் விளங்குகின்ற
ஸ்ரீ மச் சட ப்ரமதநே -ஸ்ரீ கிருஷ்ண பக்தியாகிற செல்வத்தைப் பெற்ற சடகோப முனிவரிடத்தில்
ஸ்திர பாவ பந்தம்–நிலை பெற்ற திரு உள்ளப் பிணைப்பை யுடையவரான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –கூரத்தாழ்வானாகிய ஆசார்யரை-திரு மறு மார்பன் -ஆழ்வானுக்கு தந்தையரால் இந்த திரு நாம கரணம்
அந்வஹம் –தினந்தோறும்
ஆஸ்ரயாமி –ஆஸ்ரயிக்கிறேன் -ஸேவிக்கிறேன்

ஆழ்வார் இடம் பக்தியை ஆழ்வானுக்கு முதல் யோக்யதையாக அருளிச் செய்கிறார்
சடவாயுவை ஹூங்காரத்தாலே ஒறுத்து ஒட்டிய ஆழ்வார்
சட -வஞ்சனை -வேதத்தை இல்லை செய்யும் பாஹ்யர் -விபரீத அர்த்தங்களை சொல்லும் குத்ருஷ்டிகள் -ஆகிய வஞ்சகர்களை நிரஸித்து அருளியவர் என்றுமாம்

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-2-

யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய சிரஸ்ஸுக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
யாதொரு திருவடி இணையே சர்வகாலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமாக இருக்கின்றதோ
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றும் இல்லாதவர்களுக்குத் தஞ்சமாக இருக்கின்றதோ
அப்படிப்பட்ட பரம பாவனமான நம்மாழ்வார் திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம் –

தத் வகுளாபரண அங்க்ரி யுக்மம் –ஸம்ஸ்ரயேம–மகிழ் மாலை மார்பினன் -என்று தாமே
பேசிக் கொள்ளலாம் படி வகுளமாலையை நிரூபகமாக உடையவர்

யத்-த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம்
த்ரை வித்ய வ்ருத்தர் ஆகிறார் மதுரகவிகள் போல்வார்
மேவினேன் பொன்னடி மெய்ம்மையே
குருகூர் நம்பீ முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –

ப்ராவண்யம் உடையார் தம் தலைக்கு பூஷணமாக கொள்வர்
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ண மாட்டேன்
மற்ற அரசு தானே

இங்கு -த்ரை வித்ய வ்ருத்தம் -சப்தம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசனையே கருத்தில் கொண்டதாகும்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்த
ராமானுஜன் போன்ற மஹ நீயர்கள்
என்கை

சாத்விக ஜனஸ்ய-நித்யம் -யதேவ -சம்பத்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்று அன்றோ
சாத்விகர்களது அத்யவசாயம்

லௌகீகர்கள் சம்பத்தாக நினைத்து இருக்கும் வஸ்து வஸ்து ஸ்திதியில் விபத்தமாய் இருக்கும்
உபய விபூதியும் ஆழ்வார் திருவடிகளில் ப்ராவண்யம் உடையவர் இட்ட வழக்காய் இருக்குமே
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் யதேவ நியமேந மத் அந்வயா நாம் -என்று அருளிச் செய்த
ஆளவந்தார் போல்வாரை இங்கே சாத்விக ஜனம் என்கிறது

நித்யம்
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்-என்னுமா போலே
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கைவிடப்பட்டவர்கள்
அசரண்யர்
அவர்களையும் வலியப் பிடித்து இழுத்து –
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்வன் கேண்மினோ –இத்யாதிகளை உபதேசித்து
திருத்திப் பணி கொண்டவர் அன்றோ

புண்யம்
புநா தீதி புண்
பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமாய் நின்ற நிலையைப் போக்கி
சகல ஆத்மாக்களை பரிசுத்தமாக்க வல்லவை
புண்யம் ஸூந்தரம் -பர்யாயம் -அழகிய திருவடிகள் என்றுமாம் -என்றாலும் பாவனத்வத்திலே இங்கு நோக்கு

ஆக இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளை வணங்கின படி சொல்லிற்று ஆயிற்று

ஆழ்வாருக்கு மங்களா சாசனம் -கடலாக உருவகம் -நான்கு விசேஷணங்கள்
பயோநிதிக்கு இருக்கக் கடவ தன்மைகள் ஆழ்வார் இடம் குறைவற இருக்கும் படியை மூதலித்து அருளுகிறார்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர் அஸீம பூமா
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-3-

பக்தியின் கனத்தினால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப்பட்ட சார பூதமான
ப்ரணயமாகிற தீர்த்தத்தினுடைய ப்ரவாஹத்தாலே
நவ ரஸ சமூகத்தால் நிறைந்ததாயும் வேதப்பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
எம்பெருமானுக்கு திவ்யமான ஸ்தானமாயும்
அளவில்லாப் பெருமையையும் உடைத்தாய் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடு நாள் வாழ வேணும்

பக்தி ப்ரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண
கடலானது ரஸவ்க சப்த வாஸ்யமான ஜல பிரவாகத்தாலே பரிபூர்ணமாய் இருக்கும்
ஆழ்வாரோ சிருங்கார வீர கருணை அத்புத ஹாஸ்ய பய அநக ரௌத்ர பீபத்ச பக்தி ரசங்களாலே பரிபூர்ணராய் இரா நின்றார்
இவை விளைந்தமைக்கு நிதானம் விலக்ஷண பக்தி விசேஷத்தாலே ஆச்சர்யமான பாவ பந்தங்கள் உண்டாகி-
அவை பல தலைத்து நாநா ரஸ பரிபாகங்கள் ஆயின

பக்தி ப்ரபாவ
ஆழ்வார் பக்திக்கு ஒப்புச் சொலலாவது இல்லையே
காதல் கடல் புரைய விளைவித்த காரமார் மேனி -என்று முதலிலே கடல் போலதாய்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அநந்தரம்
சூழ்ந்த அதனில் பெரிய என் அவா -என்று தத்வ த்ரயத்தையும் விளாக்குலை கொள்ள வல்லதாய்
ஆக இப்படி மென்மேலும் பெருகிச் செல்லும் பக்தி பிரபாவத்தாலே

பவத் அத்புத பாவ பந்த
உண்டான அத்புதமான பாவ பந்தங்களினாலே -அதாவது
அந்த பக்தி தானே சிருங்கார வ்ருத்தயா பரிணமித்து -தலைமகள் -தாய் -தோழி பாசுரங்களாக பேசும்படிக்கு ஈடான ஆச்சர்யமான பாவ பந்தங்கள்

சந்துஷித ப்ரணய சார ரஸவ்க பூர்ண–
அப்படிப்பட்ட பாவ பந்தங்கள் ப்ரணய ரசத்தை வளரச் செய்யுமாயிற்று
உயர்வற உயர் நலம் உடையவன்
வீடுமின் முற்றவும்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறவித்துயர் அற
பொரு மா நீள் படை
–இத்யாதிகளில் சாதாரண பக்தி ரசம் விளங்கும்
அஞ்சிறைய மட நாராய்
மின்னிடை மடவார்கள்
வேய் மறு தோளிணை
–இவற்றில் அன்றோ அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சாரம் விளங்குவது
அப்படிப்பட்ட ப்ரணய மீதூர்ந்து வெளிவரும் ஸ்ரீ ஸூக்தி களில் நவ ரசமும் பொலிய நிற்கும் அன்றோ –
நவ ரசங்களுள் சிருங்காரம் வீரம் கருணம் அத்புதம் பயாநகம் சாந்தி ஆகிய பக்தி இந்த ரசங்கள்
ஓரோ திருவாய் மொழிகளிலே பிரதானமாகப் பொதிந்து இருக்கும்
மற்ற ஹாஸ்ய பீபீஸ்ய ரௌத்ர ரசங்கள் ஒரோ இடங்களிலே மறைய நின்று சிறிது சிறுது தலைக்கட்டி நிற்கும்
மின்னிடை மடவார்கள் -நங்கள் வரிவளை-வேய் மறு தோளிணை -முதலான திருவாய் மொழிகளில்
சிருங்கார ரசம் தலை எடுக்கும்
மாயா வாமனனே-புகழு நல் ஒருவன் -நல் குறைவும் செல்வமும் –இவற்றில் அத்புத ரசம் தலை எடுக்கும்
உண்ணிலாய ஐவரால் இத்யாதிகளில் பயாநக ரசம்
ஊரெல்லாம் துஞ்சி -வாயும் திரையுகளும் -ஆடியாடி யகம் கரைந்து இத்யாதிகளில் கருணரசம்
குரவை ஆய்ச்சியாரோடும் கோத்ததும் -வீற்று இருந்து ஏழு உலகும் -இத்யாதிகளில் வீர ரசம்
ஆக இங்கனே நாநா ரசங்கள் பொதிந்த ஸ்ரீ ஸூக்தி கள்-ரஸவ்க பரிபூர்ணராய் இருப்பார் ஆய்த்து ஆழ்வார் –

வேதார்த்த ரத்ன நிதிர்
கடல் ரத்நாகாரம் -பராங்குச பயோ நிதியும் -ஓதம் போல் கிளர் வேதம் என்றும் –
சுருதி சாகரம் என்றும் கடல் போன்ற சாஸ்திரங்களில் அல்ப சாரம் சாரம் சாரதமம் –
போக சார தமமாய் உள்ள அர்த்தங்கள் ரத்னமாகும்
த்ரை குண்யா விஷயங் வேதா -போல் இல்லாமல் மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
குருகூர் சடகோபன் சொன்ன சொற்களில் சாரதமமான அர்த்தங்களேயாய் இருக்கும்

அப்படிப்பட்ட ரத்னங்களுக்கு நிதியாய் இருப்பர் ஆழ்வார்

அச்யுத திவ்ய தாம
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப் பெற்று
–என்கிறபடியே
எம்பெருமானுக்கு திவ்ய ஆலயமாய் இருக்கும்
ஆழ்வாரும் அப்படியேயாய் இருப்பர்
கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம்
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேன் உள்ளத்து அகம்
-என்றும்
கொண்டல் வண்ணன் சுடர் முடியின் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே
-என்றும்
ஆழ்வார் எம்பெருமானுக்கு நித்ய நிகேதனமாய் இருப்பவர் அன்றோ
இவையும் அவையும் -திருவாய் மொழியில் இத்தை விசத தமமாக காணலாமே

அஸீம பூமா-
ப்ருஹத்வம் என்கிறபடியே -ஆகாரத்தாலும் குணத்தாலும் த்வி விதமாய் இருக்குமே ப்ருஹத்வம்
பெரிய மலை -பெரிய குளம்-பெரிய மாளிகை –இவை ஆகாரத்தினால் ப்ருஹத்வம்
பெரிய மனுஷர் -குணங்களால் ப்ருஹத்வம்
இருவகையில் ஆகார ப்ரயுக்தம் கடலுக்கும் குண ப்ரயுக்தம் ஆழ்வாருக்கும் உண்டே
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
எல்லை காண ஒண்ணாத கிருபா குணம் ஒன்றின் பெருமையே போதுமே

ஆக நான்கு விசேஷணங்களால்
நம்மாழ்வாருக்கு கடலுக்கும் உள்ள சாதரம்யம் நிர்வஹிக்கப் பட்டதாயிற்று

இப்படிப்பட்ட
பராங்குச பயோதிர் –ஜீயாத் —
நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழ வேணும் -என்றதாயிற்று –

—————–

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே
ஸ்ரீ லஷ்மணே முநிவரே அர்ப்பித ஸர்வ பாரம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அன்வஹம் ஆஸ்ரயாமி
–2-

ஸ்ரீ யாமுநார்ய பத பங்கஜ ஸக்த ஸித்தே –ஆளவந்தாருடைய திருவடித் தாமரைகளில் ஈடுபட்ட திரு உள்ளமுடையவரும்
ஸ்ரீ மத் பராங்குஸ குரூத்தம லப்த வித்யே -பெரிய நம்பிகள் என்னும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டரிடம் இருந்து பெறப்பட்ட மோக்ஷ உபாயம் யுடையவருமான
ஸ்ரீ லஷ்மணே முநிவரே –பகவத் ராமானுஜராகிய முனிவர் இடத்திலே
அர்ப்பித ஸர்வ பாரம் –ஒப்படைக்கப்பட்ட -தம்மைக் காக்கும் -பொறுப்பு அனைத்தையும் யுடைய
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் –ஸ்ரீ வத்ஸ சிஹ்நர் என்னும் ஆச்சார்யரை
அன்வஹம் ஆஸ்ரயாமி –தினந்தோறும் ஸேவிக்கிறேன்

பெரிய நம்பிகளுடைய இயற்பெயர் ஸ்ரீ மத் பராங்குஸர் -பெரிய வண் குருகூர் நம்பி -என்பதனுடைய ஸங்க்ரஹம் என்பர்
யோ நித்யம் அச்சுத -ஸ்லோகத்தில் ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -ப்ரஸித்தம் அன்றோ -பர ஸமர்ப்பணம் சரணாகதனுக்கு ஏற்படும் ஸ்வ பாவம் தானே
லஷ்மீ வாந் லஷ்மண -ஸ்ரீ இவ ஸ்ரீ மான் -இளைய பெருமாள் தானே பெரிய திருமலை இவருக்குச் சாற்றிய திரு நாமம்

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
1-

யாவர் ஒரு எம்பெருமானார் -எப்போதும் எம்பெருமானுடைய திருவடித் தாமரை இணையாகிற ஸூவர்ணத்தில் உள்ள வ்யாமோஹத்தால்
அந்த பாதாரவிந்தங்கள் தவிர மற்ற விஷயங்களை த்ருணமாக எண்ணி தம் திரு உள்ளத்தால் திரஸ்கரித்தாரோ –
இப்படிப்பட்டவரும் கிருபைக்கு முக்கியமான கடலாக உள்ளவரும் -கல்யாண குண சாலியும்-
அஸ்மத் ஆச்சார்யருமான எம்பெருமானார் திருவடிகளை சரணம் புகுகிறேன் -என்கிறார்

விஞ்ஞாபநாம் வநகிரீஸ்வர சத்யரூபாம்
அங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம்
ஸ்ரீ ரெங்க தாமநீ யதாபுர மேகதோஹம்
ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய
–ஸூந்தர பாஹு ஸ்தவம்-129-

ஆச்சார்ய விஸ்லேஷம் அஸஹ்யமாய் இருக்கையாலே இந்த விஸ்லேஷ வியசனம் நீங்கப் பெற பிரார்த்திக்கிறார்
கருணார்ணவ -வநகிரீஸ்வர-
சத்யரூபாம் –மாமகீநாம்-விஞ்ஞாபநாம் -அங்கீ குருஷ்வ –யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தை
திரு உள்ளம் பற்றி அருள வேணும்
அஹம் யதாபுரம் ஸ்ரீ ரெங்க தாமநீ ஏகத-ராமாநுஜார்ய வசகஸ் பரி வர்த்திஷீய–அடியேன் முன்பு போலே
திருவரங்கம் பெரிய கோயிலிலே ஒரு புறத்திலே எம்பெருமானார் திருவடி நிழலிலே வாழ்வேனாக –
எம்பெருமானாரும் கோயில் வந்து சேர –
அடியேன் அவர் திருவடிகளில் சேர்ந்து வாழ்வேனாம் படி அருள் செய்ய வேணும் என்கிறார் –

ஆசார்ய வர்ய விபவஸ்ய ச ஸிஷ்ய வ்ருத்தே
ஸீமேதி தேஸிக வரை பரி துஷ்யமாணம்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் அந்வஹம் ஆஸ்ரயாமி –
-3-

ஆசார்ய வர்ய விபவஸ்ய -மஹா ஆச்சார்யருக்கு உரிய பெருமையும்
ச ஸிஷ்ய வ்ருத்தே –சத் சிஷ்யருக்குத் தக்க நடத்தையும்
ஸீமேதி –இவரே எல்லை நிறமானவர் என்று
தேஸிக வரை –ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களாலே
பரி துஷ்யமாணம் –மிக மகிழ்ச்சியோடு கொண்டாடப் பெற்றவரும்
நித்யாநவத்ய கருணா விலஸத் கடாக்ஷம் –எப்போதும் உள்ளதாய் குற்றம் அற்றதுமான கருணையினால் குளிர்ந்து விளங்குகின்ற கடைக்கண் பார்வையை யுடையவருமான
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந குரும் -கூரத்தாழ்வானை
அந்வஹம் ஆஸ்ரயாமி –தினமும் ஸேவிக்கிறேன்

இவ்விடத்தில்
வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்-
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது-சூர்ணிகை -203-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —சூரணை -333-

ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன்
நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம் —-65-

நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும் -என்று பேர் அருளாளன் இடம் வேண்டிக் கொண்டதால் இவருடைய ஆத்ம குணம் தோன்றும்
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே -என்கிறோம்
எம்பெருமானார் திருமேனி ரக்ஷணம் இவர் சோழ ராஜன் இடம் அவரது காஷாய த்ரி தண்டங்களைத் தாங்கிச் சென்று பரத்வ நிர்ணயம் செய்து நம் தர்சனத்திக்காக தர்சனம் இழந்தார் அன்றோ

வ்யக்தீ குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத ய ஸ்ரயசே சஞ்சநாநாம்
கூரா தீசம் குரு தர தயா துக்த சிந்தும் த மீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச் சாத்ர சீலைக தாமா–வைகுந்த ஸ்தவம்-முடிவு தனியன்

வேதாந்தங்களிலே பொதிந்து கிடக்கிற பொருள்களை விஸதீ கரித்து அருள நினைத்து
சத் புருஷர்களின் ஸ்ரேயஸ்ஸுக்காக
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தை அருளிச் செய்தவராயும்

மிகுந்த கருணைக் கடலாயும்
சாஸ்த்ர ஸித்தமான ஆச்சார்ய லக்ஷண
சிஷ்ய லக்ஷணங்களுக்கு
முக்கிய வாஸஸ் ஸ்தானமாயும்
உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வானை ஸ்துதிக்கிறேன்

ராஜேந்திர சோழனில் ஒரு பிராமணன் மகன்
புத்தரோடு சம்ப்ரதாயம் உண்டாய்
பூண நூலையும் குடுமியையும் அறுத்துப் பொகட்டான்  –
கூரத் தாழ்வான் அங்கே நடந்த அளவிலே
சிகா யஞ்ஞா பவீதங்களைத் தரித்துக் கொண்டு வந்து புகுந்தான் –
பிதாவானவன்
ஸ்ரீ கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ என்று கேட்க
புறம்பு உள்ளார் -நீ அறிந்த படி எங்கனே -என்று கேட்க
ஸ்ரீ ஆழ்வான் சந்நிதியில் தமோபி பூதரும் சத்வஸ்தர் ஆவார்கள்  காண் -என்கின்றான் –பெரிய திருமொழி -8-1- வியாக்யானத்தில் அருளிச் செய்யப்பட ஐதிக்யம்

———-

ராமாநுஜார்ய மத ஸிந்து விதோ குத்ருஷ்டி
பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே தயாளோ
–4-

ராமாநுஜார்ய மத ஸிந்து –எம்பெருமானாருக்கு இஷ்டமான விசிஷ்டாத்வைத மதம் என்கிற கடலுக்குப் பொங்குதலை யுண்டு பண்ணும் சந்த்ரனே
விதோ குத்ருஷ்டி பாஹ்யாந்த கார படலீ ஹரணாப் ஜபந்தோ –வேதத்துக்கு அவப்பொருள் கூறும் சங்கராதிகளாலும் வேதத்துக்குப் புறம்பான ஜைன புத்தாதிகளாலும் உண்டாக்கப்பட்ட அஞ்ஞானமாகிய இருளின் திரட்சியைப் போக்கும் ஸூர்யனே
அஸ்மத் குரோர் ஐநக பட்ட பராஸரஸ்ய –அடியேனுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பராசர பட்டருக்கு தந்தையானவரே
தயாளோ –தயையை யுடையவரே
ஸ்ரீ வத் சிஹ்ந ஸரணம் பவ மே –கூரத்தாழ்வானே தேவரீர் அடியேனுக்கு தஞ்சமாக வேணும்

கீழ் மூன்று ஸ்லோகங்களாலே தாம் ஆஸ்ரயிப்பதாகக் கூறி –
இதில் அவரையே ஸம் போதித்து அடியேனுக்கு உபாயமாக வேணும் என்று பிரார்திக்கிறார்
ஆச்சார்யரை சரண் அடைவது போல் பரமாச்சார்யாரையும் சரணம் அடைய வேண்டும் என்பதை
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1-என்ற அநந்தரம்
த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பச்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் ஸம்ஸ்ரயேம வகுளாபரண அங்க்ரி யுக்மம் –2–என்று மாறன் அடி பணிந்து உயந்த ராமானுஜன் திரு உள்ளம் உகக்க ஆழ்வாரைத் தொழுது இறைஞ்சுகிறார்

——–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணார விந்த
ஸேவாம்ருதைக ரஸிகாந் கருணா ஸூ பூர்ணாந்
பட்டார்ய வர்ய நிகமாந்த முனீந்த்ர லோக
குர்வாதி தேஸிக வராந் சரணம் ப்ரபத்யே
–5-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் –கூரத்தாழ்வான் தேவரீருடைய
சரணார விந்த ஸேவாம்ருதைக ரஸிகாந் –திருவடித் தாமரைகளில் பண்ணும் கைங்கர்யமாகிய அம்ருதம் ஒன்றையே சுவைப்பவர்களும்
கருணா ஸூ பூர்ணாந் –தயையினால் மிகவும் நிறையப் பெற்றவர்களுமான
பட்டார்ய வர்ய –தேவரீர் திருக்குமாரராய் அடியேனுக்கு ஆசார்யரான ஸ்ரீ பராசர பட்டர் என்ன
நிகமாந்த முனீந்த்ர லோக குர்வாதி தேஸிக வராந் -அவரை ஆஸ்ரயித்த நஞ்சீயர் என்ன -அந்த நஞ்சீயர் சிஷ்யரான நம்பிள்ளை என்ன -இவர்கள் முதலான ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்களை
சரணம் ப்ரபத்யே –சரணம் பற்றுகிறேன்

கீழ் ஆழ்வானைச் சரணம் பற்றியவர் அவருடைய உகப்புக்கு இலக்காகிய சிஷ்ய பரம்பரையும் சரணம் புகுகிறார்
லோக குரு –நம்பிள்ளைக்கு -கந்தாடை தோழப்பரால் உகந்து சாற்றப் பெற்ற நாமம்
தேசிக திசதி –உபதிசநீதி தேசிக வ்யுத்பத்தி -ஹித உபதேசம் பண்ணும் ஆச்சார்யனுக்குப் பெயர் ஆயிற்று
புருஷகார சரணாகதியாகவும் ஆழ்வானுக்கு ப்ரீதி கார்யமாகவும் சரணம் புகுகிறார்

மா முனிகளும் ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாநி மூர்த்நா என்றும் ஸ்ரீ வத்ஸ சிஹ்ந சரணம் யதிராஜ மீடே –
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம் பாதாநு சிந்தந பர –என்று அருளிச் செய்துள்ளார் அன்றோ

——————

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய பராஸரஸ்ய
குர்யாம் மதந்வய குரோ குருதாம் கதஸ்ய
கூராதி பஸ்ய குண சிந்த மந்தரங்கை
–6-

ஸ்ரீ ரங்க ராஜ மஹிஷீ கர லாலநேந –ஸ்ரீ ரெங்க நாச்சியாரால் தமது திருக்கைகளாலே எடுத்துச் சீராட்டப் பெற்றதனால்
ஸம் ப்ராப்த ஸர்வ விபவஸ்ய –நன்றாகக் பெற்ற எல்லாப் பெருமைகளையும் யுடையவரும்
மதந்வய குரோ-அடியேனுடைய குலத்திற்குத் தலைவருமான
பராஸரஸ்ய -ஸ்ரீ பராசர பட்டருக்கு
குருதாம் கதஸ்ய –தமப்பனார் உகந்த தன்மையை அடைந்த
கூராதி பஸ்ய –கூரத்தாழ்வானுடைய
குண சிந்தநம் –குண அனுபவத்தை
அந்தரங்கை (ஸஹ )–நெருங்கிய நண்பர்களுடன் கூடி
குர்யாம் -செய்யக் கடவேன்

கீழ் ஆழ்வானுடைய சிஷ்ய பரம்பரைகளைச் சரணம் பற்றி இதில் அவர்களுடன் சேர்ந்து ஆழ்வானுடைய திருக்கல்யாண குணங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறார்
ஸதாச்சார்யனுடைய குண அனுசந்தானம் அன்றோ ஸச் சிஷ்யனுக்கு உத்தாரகம்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உசாத்துணையாக இருந்த ஞானமும்
பகவத் குணங்களில் ஆழங்கால் பட்டதால் ஆழ்வான் என்று உடையவரால் திரு நாமம் சாத்தப் பெற்றவரும்
வெள்ளித் தட்டையும் வீசி எறிந்து வைராக்யத்தையும் காட்டியதால்
நாலூரானுக்கும் பேற்றை பிராரத்த தயை போன்ற குணங்கள்
ஓரிருவர் அனுபவித்தாள் பரியாப்தி பிறவாமல் அந்தரங்கற்களான பலருடன் சேர்ந்து ஆனந்திக்க ஆசைப்படுவது யுக்தம் இறே
தமது ஆச்சார்யரான பராசர பட்டருக்கு பிதாவையும் ஆச்சார்யராகவும் இருக்கும் பெருமையும் அசாதாரணம் அன்றோ

பல தலைகளை யுடைத்தாய் ஸ்வ ஸ்பர்சத்தாலே பணைத்து என்றுமாம்
பிரஜையை மடியில் வைத்து இருக்கும் தாயைப் போலே
பெரிய பெருமாளை மடியிலே வைத்து இருக்கும் தாய் தானாம் –

ஸ்ரீ அனந்தாழ்வான் திருக்கோட்டியூருக்கு நடந்த இடத்தில்-( அகளங்கனோடே உண்டான மனஸ்தாபத்தாலே இவர் அங்கு
இருக்க மடியிலே அமர்த்தி ) ஸ்ரீ பட்டரைக் கண்டு அவர் திருமேனியில் இப்படிச் செய்தானாம் –
ஸ்ரீ ஆண்டாளுக்கு முந்துற ஒரு பிள்ளை உண்டாய் அவனை இழக்க –
அங்கனே செய்ய ஒண்ணாது இவன் ஜீவிக்க வேணும் என்று ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நீராட்டி
அந்த திருமஞ்சநீரைப் பிள்ளைக்குப் புகட்டி -மஞ்ச நீர் கொடுத்த பிள்ளையாய் வளர்க்க வேணும் -என்று

காட்டிக் கொடுத்து அருளினார் ஆயிற்று –
அந்த வாசனையாலேயே ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு மகன் -என்று தான்
ஸ்ரீ பட்டரை ஸ்ரீ அனந்தாழ்வான் சொல்வானாம்
–திருவாசிரியம் முதல் பாசுர வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

கிந்து பிரபத்தி பல தாரித விஷ்ணு மாய மத் வம்சய ராஜ குல துர் லலிதம் கில ஏவம்
ஸ்ரீ ரெங்க ராஜ கமலா பத லாலி தத்வம் யத்வா அபராத்யதி மம ஸ்துதி சாஹசே அஸ்மின்
–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ சதகம்17-

கிந்து பிரபத்தி பல–ஆனாலும் பிரபத்தியின் மிடுக்காலே
தாரித விஷ்ணு மாய-தாண்டுவிக்கப்பட்ட எம்பெருமானுடைய மாயையை யுடையவர்களான
மம மாயா துரத்யயா–மாமேவ யே பிரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –

மத் வம்சய ராஜ குல துர் லலிதம்–எனது முன்னோர்களுடைய சிறந்த குலத்தினில் பிறந்ததனால் உண்டான செருக்கு
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடத்தும் ஸ்ரீ கூரத்தாழ்வான் திரு வம்ச பிறப்பால் வந்த செருக்கு
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ எம்பெருமானார் முதலான முன்னோர்களைக் கடாக்ஷித்துத் தம்மை க்ஷமிக்கக் கூடும்
என்ற தைர்யத்தால் என்றபடி

துர் லலிதம்-துஷ்ட சேஷ்டிதம் என்றவாறு
கில ஏவம்-இப்படி ஸ்தோத்ரத்தில் கை வைக்கும்படி யாயிற்று அன்றோ –

யத்வா-அல்லது
ஸ்ரீ ரெங்க ராஜ –ஸ்ரீ ரெங்க நாதன் என்ன
கமலா -ஸ்ரீ பெரிய பிராட்டியார் என்ன –
இவர்களுடைய
பத லாலி தத்வம்–திருவடிகளில் சீராட்டி வளர்க்கப் பெற்றமை –
புத்ர ஸ்வீகாரம் செய்து கொண்டு சீராட்டி வளர்த்ததால்
எனது மழலைச் சொற்கள் இனிதாக அவர்களுக்கு இருக்குமே -இதனால் உண்டான ப்ரேம அதிசயத்தாலோ

மம -எனக்கு உண்டான
ஸ்துதி சாஹசே அஸ்மின் –-இந்த ஸ்தோத்ரம் ஆகிற துணிந்த ஸாஹஸச் செயலிலே
அபராத்யதி-குற்றவாளி யாகின்றது –

—————

வைராக்ய பக்தி ஜலதே க்ருதி நஸ்ச ஸத்ய
ஸங்கல்பநஸ்ய ம்ருதி தாரிகணஸ்ய நாத
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந புரதஸ்தவ கந்து மேவ
நார்ஹோ அஹமேவமதுநா ப்ரலாபமி ஹந்த –
-7-

நாத ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
வைராக்ய பக்தி ஜலதே -வைராக்யத்துக்கும் பக்திக்கும் கடல் போன்றவரும்
க்ருதி நஸ் ச -பண்டிதரும்
ஸத்ய ஸங்கல்பநஸ்ய -நினைத்த மாத்திரத்திலேயே அனைத்தையும் சாதிக்க வல்லவரும்
ம்ருதித அரிகணஸ்ய –காமம் வெகுளி மயக்கம் போன்ற உட் பகைக்கூட்டத்தை அழித்தவருமாகிய
புரதஸ் தவ –தேவரீருடைய எதிரில்
கந்து மேவ -சென்று நிற்பதற்கும் கூட
ந அர்ஹோ அஹம் -குற்றங்கள் நிறைந்து குண லவ லேசமும் இல்லாத அடியேன் தகுந்தவன் அல்லன் -இப்படி இருக்க
ஏவம் அதுநா ப்ரலாபமி ஹந்த -இப்போது இங்கனம் ஸ்தோத்ரம் என்றிட்டு எதையோ பிதற்றுகிறேன் -கஷடம் அந்தோ -நைச்ய அனுசந்தானம் செய்கிறார்

க்ருதிந் -சப்தத்துக்கு தீ மான் ஸூரி க்ருதீ –க்ருதீ குசல -அமரகோசம் -பண்டிதன் -சமர்த்தன் –பண்டா ஞானம் -ஞானமுடையவன் என்றபடி

————

மயா விதூர மநஸாம் மதுராக்ருதீநாம்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அந்தர் கதோ அஸ்ய மஹோ விபயஸ் சராமி –
-8-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–வாரீர் கூரத்தாழ்வானே
மயா விதூர மநஸாம் –கபடத்திற்கு வெகு தூரத்தில் உள்ள மனதை யுடையவர்களும்
மதுராக்ருதீநாம் –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவர்களும்
மாத்ஸர்ய லோப மத மாந விவர்ஜிதாம் –பொறாமை உலோபித்தனம் விஷய போகக்களிப்பு செருக்கு இவற்றால் அடியோடு விடப்பட்டவர்களுமான
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் –தேவரீர் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினவர்களுக்குள்ளே
அஹம் அபி -அடியேனும்
அந்தர் கத –உட் பட்டவனாய்க் கொண்டு
விபயஸ் சாராமி -பயமற்றவனாய்த் திரிகிறேன்
அஹோ –ஆச்சர்யம்

ரூபமேவ அஸ்ய ஏதத் மஹிமாநம் வ்யாஸஷ்டே –திருமேனி அழகே இவருடைய பெருமையை விளக்கும்
ஆழ்வானுடைய அடியவர்களின் பெருமையைச் சொன்னபடி
அவர்களில் ஒருவனாய்த் திரிகிறேனே

————-

கூராதிப த்ரி வித தாப நிதாந மேதத்
ஸம் ரஷ்ய ஹேயதர மேவ கலே பரம் ஹா
ஆத்ம ஸ்வரூபமதி நிர்மல மத்யுபேஷ்ய
தஸ்யா நுரூப பல ஸூந்ய இஹைவ வர்தே
–9-

ஹே கூராதிப –கூரத்தாழ்வானே
த்ரி வித தாப நிதாநம் அத ஏவ –மூன்று வித தாபங்களுக்கும் மூல காரணமாகையாலே
ஹேயதரம் –அடியோடே விடத்தக்கதான
ஏதத் -இந்த அசுத்தமான
மேவ கலே பரம் –சரீரத்தை மட்டுமே
ஸம் ரஷ்ய –நன்றாகக் காப்பாற்றி
அதி நிர்மலம் -மிகவும் பரி சுத்தமான
ஆத்ம ஸ்வரூபம் -பகவச் சேஷமான எனது ஆத்ம ஸ்வரூபத்தை
அதி யுபேஷ்ய -மிகவும் அலக்ஷியம் செய்து
தஸ்யா நுரூப பல ஸூந்ய -அத்தகைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தக்க மோக்ஷமாகிய பயன் பெறாதவனாய்
இஹைவ வர்தே –இவ்வுலகிலேயே இருக்கிறேனே
ஹா -கஷ்டம் -அந்தோ

மணத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் விரும்புமா போலே சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கிறது –
தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் ஆத்ம யாத்திரையில் அபேக்ஷையும் வேணும்
இவ்விரண்டும் இப்போது இல்லாவிட்டாலும் ஆழ்வான் சிஷ்யர்களோடு சேர்ந்து அவற்றையும் சம்பாதித்திக் கொண்டு ஆச்சார்ய அபிமானத்துக்கு இலக்காகி நிச்சயமாக முக்தி பெறலாம் என்று இந்த ஸ்லோகத்தினால் கருதினார் ஆயிற்று

————

ஜ்ஞாத்வாப் யக்ருத்ய கரணம் விஹிதா ப்ரவ்ருத்திம்
க்ரூர ப்ரமத்த இவ ஜாத்வநுதாபா ஸூந்ய
பாபாக்ருதிஸ் த்வதநு பந்தி ஷுஸஜ் ஐநேஷு
கூராதி பாஹமபி ஹ்ருஷ்ட மநாஸ் சராமி –
-10-

கூராதிப -கூரத்தாழ்வானே
யக்ருத்ய கரணம்-செய்யத் தகாத கார்யங்களை நாம் செய்கிறோமே என்றும்
விஹிதா ப்ரவ்ருத்திம் -ஸாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட நல்ல கார்யங்களை நாம் செய்கிறோம் அல்லன் யென்றும்
ஜ்ஞாத்வா அபி -அடியேன் அறிந்து வைத்தும்
க்ரூர ப்ரமத்த இவ -கொலையாளியாக காம வெறியும் பிடித்தவன் போலே
ஜாது -ஒருக்காலும்
வநுதாபா ஸூந்ய -பச்சாதாபம் அற்றவனாய்
பாபாக்ருதிஸ் -மேலும் பாபாபிகளைச் செய்து -பாபமே வடிவு எடுத்தவனாக
அஹமபி -அடியேனும்
த்வதநு பந்தி ஷு ஸஜ் ஐநேஷு-தேவரீரைச் சேர்ந்த நல்லோர்கள் நடுவில்
ஹ்ருஷ்ட மநாஸ் -மனம் மகிழப்பெற்று
சராமி –ஸஞ்சரிக்கிறேன்
ஹா -கஷ்டம் அந்தோ

————

கூராந் வயஸ்ய தவ தோஷ சயஸ் தவேஹம்
ஸர்வ ஆத்மநாபி மத ஏவ ஹி வத்ஸலஸ்ய
ஸ்வாமிந் ஸ்ததாபி மம தத் கரேண து ஹந்த
தாபோ பவத் யஹரஹ கத முத்ஸஹேய –
-11-

ஸ்வாமிந் –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
தோஷ சயஸ் தவே–சொற் குற்றம் பொருள் குற்றமே வடிவெடுத்த தேவரீரைப் பற்றிய ஸ்தோத்ரம் செய்யும் விஷயத்தில்
கூராந் வயஸ்ய –அடியேன் போல் கூர குலத்தில் உதித்தவரும்
வத்ஸலஸ்ய-தோஷங்களைக் குணமாக நினைப்பவருமாகிய
தவ –தேவரீருக்கு
அஹம் –அடியேன்
ஸர்வ ஆத்மந-எல்லா வகையாலும்
அபி மத ஏவ ஹி –இஷ்டமானவனே அன்றோ
ததாபி -அப்படி இருந்தாலும்
மம து -எனக்கோ என்றால்
தத் கரேண -அத்தகைய ஸ்தோத்ரம் செய்வதில்
யஹரஹ -தினம் தோறும்
தாப பவதி –கஷ்டம் உண்டாகிறது
கத முத்ஸஹேய –எங்கனம் இதில் முயல்வேன்
ஹந்த -கஷ்டம்

நம் குலக்கொழுந்து வாயில் இருந்து ஏதாவது வருமோ -என்று எதிர்பார்த்து உள்ளீர் -குலக்கொழுந்தோ இறாய்க்கிறாரே என்று அன்றோ உள்ளீர்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந தவ பூரி தயாபகாயாம்
ஸ்நாத்வாதி நிர்மல மோபி மிதம்ப சோஹம்
நிந்த்யேஷு கர்ம நிசயேஷு நிரூட புத்தி
மஜ்ஜாம்யத ஸ்தமஸி ஹா தவ நிர் பரோஸ்மி
–12-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –வாரீர் ஆழ்வானே
தவ –தேவரீருடைய
பூரி தயா ஆபகாயாம் –பெரும் கருணை யாகிய ஆற்றில்
ஸ்நாத்வா–நீராடியதனால்
அதி நிர்மல மோபி -மிகப் பரி ஸூத்தனாய் இருந்த போதிலும்
மிதம்ப சோஹம் –நீசனான அடியேன்
நிந்த்யேஷு –இகழத்தக்க
கர்ம நிசயேஷு –பாப காரிய ஸமூஹங்களிலே
நிரூட புத்தி -வேரூன்றிய எண்ணம் யுடையவனாய்
தமஸி-தம குணம் நிறைந்த இந்த ஸம்ஸாரத்திலே
மஜ்ஜாமி -மூழ்கிறேன் -ஆகையால்
தவ -தேவரீருடைய
நிர் பரோஸ்மி -ரக்ஷணப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்
ஹா -ஐயோ

பெரியோர்கள் எதிரில் ஸ்வ தோஷங்களை விண்ணப்பம் செய்வதும் ஸ்தோத்ரங்களிலே அடங்குமே

தேவ த்வதீய சரண ப்ரணய ப்ரவீண ராமாநுஜார்ய விஷயீ க்ருதம் அப்யஹோ மாம்
பூய பிரதர்ஷயதி வைஷயிகோ விமோஹ
மத் கர்மண கதரத் அத்ர சமானசாரம்–
வைகுண்ட ஸ்தவம்-90-

எம்பெருமானே உன் திருவடிகளில் அன்பு பூண்டு இருப்பதில் தலை சிறந்தவரான எம்பெருமானாரால்
ஆட்படுத்திக் கொள்ளப்பட்ட அடியேனையும் விஷய வியாமோஹம் பரிபவிக்கின்றது அந்தோ
என்னுடைய கருமத்தோடு ஒத்த வலிதான கருமம் வேறு ஒருவருக்கு
உண்டோ இவ்வுலகில்
இந்த நிலைமையில் ஆச்சார்ய நாம உச்சாரணம் செய்வது ஸ்ரேயஸ்கரம் என்று திரு உள்ளம் பற்றி
ஒருவாறு அது தன்னைச் செய்கிறார்

————-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் சரணாஸ்ரிதாநாம்
அஸ்மாக மப்யநுசிதேஷு பவேச் சிகீர்ஷா
ஸா ஸர்வதா பவதி துக்கரீ தவைவ
தஸ்மாத் த்வமேவ ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –
-13-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந -ஆழ்வானே
பவதஸ் சரணாஸ்ரிதாநாம் அபி -தேவரீருடைய திருவடிகளை ஆஸ்ரயித்து இருந்த போதிலும்
அஸ்மாகம் –அடியோங்களுக்கு
யநுசிதேஷு –தகாத காரியங்களில்
சிகீர்ஷா -செய்ய வேண்டும் என்னும் ஆசையானது
பவேத் -உண்டாக்க கூடும்
ஸா -அந்த ஆசை
ஸர்வதா –எல்லா வகையிலும்
தவைவ-தவ ஏவ -தேவரீருக்கே
பவதி துக்கரீ –வருத்தத்தை உண்டு பண்ணுவதாக ஆகிறது
தஸ்மாத் –ஆகையால்
த்வமேவ –தேவரீரே
ஹர தாத்ருஸ கர்ம சிந்தாம் –அத் தீய செயகைகளைப் பற்றிய சிந்தனையைப் போக்கி அருள வேணும்

——–

கூராதி பால மதி வேல க்ருதேந கர்ம
மூலேந யத் ஸூகமவாப்த மதாபி துக்கம்
தச் சக்நுமோநு ந நிவாரயிதும் ச சோடும்
தத் சங்க மேவ விநிவர்த்தய தே ப்ரபாவாத்
–14-

கூராதிப-கூரேசரே
அதி வேல க்ருதேந -அடியேனால் எல்லை கடந்து செய்யப்பட
கர்ம மூலேந –தீ வினை என்னும் காரணமானது
அலம் -இனி வேண்டாம் –செய்தன போதும்
யத் அவாப்தம் -அதனால் எது அடையப்பட்டதோ
தத் ஸூகம் அபி -அது ஸூகம் என்று மேல் எழத் தோன்றினாலும்
துக்கம் -ஆராய்ந்து பார்த்தால் துக்கமே யாகும்
தத் -அந்தத் துக்கத்தை
நிவாரயிதும்-வராமல் தடுப்பதற்கும்
ச சோடும் -வந்தால் பொறுத்துக்க கொள்ளுவதற்கும்
சக்நுமோநு ந -அடியோங்கள் வல்லமை யுடையோமோ -அல்லோம் ஆகையால்
தே ப்ரபாவாத் –தேவரீருடைய மஹிமையினாலேயே
தத் சங்க மேவ -அது தீ வினையில் அடியோமுக்கு உண்டாகும் ஆசையை
விநிவர்த்தய -நன்றாகக் போக்கி அருள வேணும்

————-

ஸ்ம்ருத்வா மதீய விபரீத கதீஸ் ததைவ
பக்நாஸயோப் யத ச ஹ்ருஷ்ட மநஸ் சராமி
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவதஸ் த்வதி வேல ஸீல
வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் விம்ருஸ்ய
–15-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந–ஆழ்வானே
மதீய விபரீத கதீஸ்–அடியேனுடைய நியாய விருத்தமான நடத்தைகளை
ஸ்ம்ருத்வா –நினைத்து
பக்நா ஸ யோபி –நமக்கு நன்மை கிடைக்கப் போகிறது இல்லை என்று மனம் உடையப் பெற்றவனாக இருந்த போதிலும்
அஹம் -அடியேன்
அத ச -அதற்கு அடுத்த ஷணத்திலேயே
பவத -தேவரீருடைய
அதி வேல ஸீல வாத்ஸல்ய ஸுஹ்ரு தயாதி குணாந் -எல்லை கடந்த நீர்மை பேர் அன்பு நல்ல மனமுடைமை கருணை முதலிய நற் குணங்களை
விம்ருஸ்ய து -ஆராய்ந்து பார்த்தாலோ என்றால்
ஹ்ருஷ்ட மநஸ் –நமக்கு கிடைப்பது உறுதி என்று மனம் மகிழப் பெற்றவனாய்
சராமி -ஸஞ்சரிக்கிறேன்

———–

கூராதி நாத குண சந்ததி சிந்தநேந
கஸ்யாஸயஸ் தவ ந யாதி பரம் ப்ரமோதம்
நிஸ் ஸம்ஸயத்வமத நிர் பயதாம் ச ஸம்யக்
வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் பரமாம் விரக்திம் –
-16-

கூராதி நாத –வாரீர் கூரேசரே
தவ -தேவரீருடைய
குண சந்ததி சிந்தநேந –குண ஸமூஹத்தை நினைப்பதனால்
கஸ்யாஸயஸ் -எவனுடைய மனம் தான்
பரம் ப்ரமோதம் -உயர்ந்த மகிழ்ச்சியையும்
நிஸ் ஸம்ஸயத்வமதம் -உய்வு பெறுவதில் ஸந்தேஹம் இல்லாமையும்
அத -மேலும்
நிர் பயதாம் -ஸம்ஸார பயம் இல்லாமையும்
ஸம்யக் வ்ருத்தி ப்ரவ்ருத்தயபி ரதிம் -நல்ல பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யத்தில் உண்டாகும் முயற்சியில் விருப்பத்தையும்
பரமாம் –மிக உயர்ந்த
விரக்திம்–இதர விஷயங்களில் பற்று இல்லாமையும்
ந யாதி -அடைய மாட்டாது

————

ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி
ஸ்ருத்வா ப்ர ஹ்ருஷ்ட மநஸா யதி சேகரேண
உக்தாம் ஸூபாக்ஷித ஸூதாம் ச நிஸம்ய நாத
த்வத் பந்து தாஸ்தி மம சேத் யபயஸ் சராமி
–17-

நாத –ஸ்வாமீ ஆச்சார்யனே
ஸ்ரீ ரங்க நாயக பவத் ப்ரதி பாஷணாதி –ஸ்ரீ ரெங்கநாதனால் தேவரீருக்கு அருளிச் செய்யப்பட்ட விடை வார்த்தைகளை
ஸ்ருத்வா –கேட்டு
ப்ர ஹ்ருஷ்ட மநஸா -ஸந்தோஷமுடையவரான
யதி சேகரேண -யதிராஜரான எம்பெருமானாராலே
உக்தாம் –அருளிச் செய்யப் பெற்ற
ஸூபாக்ஷித ஸூதாம் –அமுதம் போல் இனிய நல் வார்த்தையை
நிஸம்ய -கேட்டு
மம ச -அடியேனுக்கும்
த்வத் பந்துதா–தேவரீரோடு உறவானது
அஸ்தி இதி -இருக்கிறது என்று நினைத்து
யபயஸ் சராமி –ஸம்ஸார பயம் அற்றவனாய் அடியேன் திரிகிறேன்

ஆழ்வார் சம்பந்த சம்பந்திகளுக்கு எல்லாம் மோக்ஷம் அளிப்பதாக ஸ்ரீ பெரிய பெருமாள் அருளிச் செய்ததால்
எம்பெருமானாரும் சந்தோஷித்து உடுத்த காஷாயத்தை வாங்கி ஆகாசத்தில் எறிந்து ஏற்றுக் கொண்ட ஐதிக்யம்
இவரும் பயம் கெட்டுத் திரிகிறார் என்கிறார்

————–

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந பவாதாப் யபிமாநி தோஹம்
இத்யா தரேண ஸததம் மயி ரங்க நாத
குர்வந் தயாம் ந விஜஹாதி க்ருதாக ஸம் மாம்
ரக்ஷத்யஹோ த்வயிது கீத்ருக நுக்ர ஹோஸ்ய
–18-

ஸ்ரீ வத்ஸ சிஹ்ந –ஆழ்வானே
பவதா அபி -தேவரீ ராலும்
அஹம் -அடியேன்
யபிமாநித–இவன் நம்முடையவன் என்று அபிமானிக்கப் பட்டவன்
இதி -என்ற காரணத்தினால்
ரங்க நாத-திருவரங்க நாதன்
யா தரேண –அன்புடன்
ஸததம் -எப்போதும்
தயாம் குர் வந்-தயை புரியுமவராய்
க்ருதாக ஸம் -பாபங்களை செய்திருக்கிற
மாம்-அடியேனை
ந விஜஹாதி -அது காரணமாக விடுவது இல்லை
ரக்ஷதி -அதற்கு எதிராக காப்பாற்றுகிறார்
யஹோ -ஆச்சர்யம்
அஸ்ய –இந்தத் திருவரங்க நாதனுக்குத் தான்
த்வயி–தேவரீர் திறத்தில்
கீத்ருக் அநுக்ரஹ–எத்தகைய அநுக்ரஹம்

பெரிய பெருமாளின் ஆழ்வான் மீது உள்ள அனுக்ரஹம் இவ்வாறு தமது அளவும் ஏறிப் பாய்வதே என்று ஆச்சார்யப் படுகிறார்

—————-

ஸ்ரீ வத்ஸ லக்ஷண சரீரவ ஸோபி நித்யம்
நாதாநு தப்த இவ ச ப்ரலபாமி தே அக்ரே
மைத்ர்யா ஸடஸ் ச கல ஏஷ இதீஹ மத்வா
மாமந் வஹம் ஸமபி ஷிஞ்ச க்ருபா கடாஷை
–19-

நாத ஸ்ரீ வத்ஸ லக்ஷண –ஸ்வாமீ கூரத்தாழ்வானே
அஹம் –அடியேன்
நித்யம் -எப்போதும்
சரீரவ ஸோபி -சரீர பரதந்த்ரனாய் அஃது ஒன்றையே பேணுமவனாய் இருந்த போதிலும்
அநு தப்த இவ -பச்சா தாபப்படுகின்ற நல்லவன் போலே
தே அக்ரே–தேவரீர் திரு முன்பே
ச ப்ரலபாமி -வந்து நிற்பதே யன்றிச் சிலவற்றைப் பிதற்றவும் செய்கின்றேன்
ஸடஸ் ச கல ஏஷ-இவன் வஞ்சகனாயும் துஷ்டனாகவும் இருக்கிறான் -இவனுக்குத் தாம் அல்லது வேறு கதியில்லை
இதி மத்வா –என்று திரு உள்ளம் பற்றி
இஹ மாம் -இப்போது அடியேனை
மைத்ர்யா -ஸ்நேஹத்துடன்
க்ருபா கடாஷை –கிருபையிதே கூடிய திருக்கண் பார்வை களாலேயே
அந் வஹம் அபி ஷிஞ்ச –தினம் தோறும் நீராட்டி அருள வேணும் –

————————

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ
விஜ்ஞ்ஞாபநம் த்வி ஹ மயோதித முக்தி மாத்ரம்
ஸார்த விசார்ய ஸஹ ஸாத்ய தவைவ பூர்த்யா
கூராதி போந்ந மய மாமிஹ ஸர்வ தாத்வம் –
-20-

ஆபந்நதீ ந ஜந ரக்ஷண பந்த தீக்ஷ –ஆபத்தை அடைந்து அதனால் இரங்கத் தக்க ஜனங்களை ரக்ஷிப்பதில் விரதம் பூண்டவரே
கூராதிப –கூரத்தாழ்வானே
இஹ -இப்போது
மயோதி தம் -அடியேனால் சொல்லப்பட்ட
உக்தி மாத்ரம் –அர்த்தம் இல்லாமல் வெறும் பேச்சான
விஜ்ஞ்ஞாபநம் து -விண்ணப்ப வார்த்தைகளையே
தவைவ பூர்த்யா -அடியேனுடைய தோஷ பூர்த்தியைப் பாராமல் -தேவரீருடைய குண பூர்த்தியினாலேயே மட்டுமே
ஸார்த்தம் விசார்ய -அர்த்தத்தோடு கூடியதாக எண்ணி
அத்ய இஹ –இப்போது இவ்விடத்தில்
ஸஹஸா–தாமதம் செய்யாமல்
த்வம் -தேவரீர்
மாம் -அடியேனை
உந்ந மய –உத்தரித்து அருள வேணும் -முக்தி நல்க வேணும் –

அடியேனுடைய இந்த விண்ணப்பமும் மனப்பூர்வகமாக செய்தது அன்று
வெறும் வேஷமே தான்
இருந்தாலும் தேவரீருடைய குண பூர்த்தியாலேயே அடியேனை இந்த சம்சாரக் கடலில் இருந்து எடுத்து
பரமபத அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று பிரார்த்தித்து
இந்த கூரேச விம்சதியைத் தலைக்கட்டி அருளினார் ஆய்த்து-

———————————-

ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் அருளிச் செய்த-ஸ்ரீ கூர நாத பஞ்சாஸத்

ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் சரணாப்ஜ யுக்மம்
ஸ்ரேயஸ் கரம் தநு ப்ருதா மகிலாக ஹந்தரு
நத்வா கரோமி விபுதா வலி துஷ்டயே அஹம்
கூராதிப ஸ்துதி மிமாம் குஸல ப்ரதாத்ரீம்
–மங்கள ஸ்லோகம்

தநுப்ருதாம் –உடல் எடுத்த மனிதர்களுக்கு
ஸ்ரேயஸ் கரம்–நன்மைகளை செய்ய வல்லதும்
அகில அக ஹந்தரு–எல்லாப் பாபங்களையும் அழிக்க வல்லதுமான
ஸ்ரீ சைல லஷ்மண முநேஸ் –திருவேங்கட ராமானுஜ முனிவருடைய
சரணாப்ஜ யுக்மம்-திருவடித்தாமரை இணையை
நத்வா –வணங்கி
அஹம்-அடியேன்
விபுத ஆவலி துஷ்டயே –ஸ்ரீ வைஷ்ணவ சமூகத்தின் சந்தோஷத்தின் பொருட்டு
இமாம் -இந்த
குஸல ப்ரதாத் ரீம் -க்ஷேமத்தை அளிக்க வல்லதான
கூராதிப ஸ்துதிம் –கூரத்தாழ்வானைப் பற்றிய ஸ்தோத்ரத்தை
கரோமி -இயற்றுகிறேன்

இந்த கிரந்தத்தில் இறுதியில் -ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா பஞ்சா ஸத் கூர நாத்தஸ்ய ஸ்தோத்ரமீரிதம் உத்தமம் -என்ற ஸ்லோகத்தில் இதன் கர்த்தாவின் திரு நாமமும்
இவர் ஆச்சார்யர் ஸ்ரீ சைல லஷ்மண முனி -என்பவர் ஸ்ரீ பெரும் பூதூரில் எம்பார் ஜீயர் திருமடத்தை ஸ்தாபித்த முதல் ஜீயரான திருவேங்கட ராமானுஜ ஜீயர்
இவர் ஸ்ரீ வான மா மலை மடத்தைச் சேர்ந்தவர்
இவர் திருமாளிகை 2 ஸ்வாமி -திருவாழி அண்ணன் ஸ்வாமிக்குத் திருத் தகப்பனார்

——-

ஜய ஜய யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம
ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க
ஜய ஜய குமதேப வ்ராத ஹர்யஷ வித் வந்
மணி வர நிகமாந்தா கல்ப கூராதி நாத
–1-பல்லாண்டு பாடித் தொடங்குகிறார்

யதிராஜ ஸ்ரீ பதாம் போஜ யுக்ம ப்ரஸ்ருமர மகரந்தாஸ்வாத லுப்தாந்த ரங்க –யதிராஜரான அம்பெருமானாருடைய திருவடித் தாமரை இணையில் இருந்து பெருகுகின்ற தேனைச் சுவைப்பதில் ஆசை கொண்ட திரு உள்ளமுடையவரே
குமதேப வ்ராத ஹர்யஷ–நீசச் சமயிகள் என்கிற யானைகளின் கூட்டங்களுக்கு ஸிம்ஹம் போன்றவரே
வித் வந் மணி வர –பண்டித ஸ்ரேஷ்டர்களிலே தலைவரே
நிகமாந்தா கல்ப –வேதாந்தங்களுக்கு அணி செய்தவரே-மங்கள ஸூத்ரம் போன்ற ஸ்தவங்களை அருளிச் செய்தவர் அன்றோ
கூராதி நாத –கூரத்தாழ்வானே
ஜய ஜய -ஜய ஜய –தேவரீர் எல்லோரினும் மேம்பட்டு விளங்க வேணும்

————

ஜயதி ஜகதி நைஜோத் வேல மேதா விசேஷாத்
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித க்ஷித கூர நாத –
-2-

ஜயதி ஜகதி
நைஜோத் வேல மேதா விசேஷாத் –தமக்கு இயற்கையாக ஏற்பட்டதும் எல்லை கடந்ததுமான அறிவின் மேன்மையினாலே
அதி கத தம போதாவாஸ வ்ருத்யர்த்த ஜால -நன்றாக அறியப்பட்ட போதாயன முனிவர் இயற்றிய வ்யாஸ ஸூத்ர வ்ருத்தியின் அர்த்த ஸமூஹத்தை உடையவரும் –
அது காரணமாக
ஜநி தயதி வரேண்யஸ்வாந்த நிஸ் ஸீம மோத –உண்டாக்கப்பட்ட யதிராஜர் திரு உள்ளத்தில் எல்லையற்ற உகப்பை யுடையவரும்
ஸ்ரித ஐந பரி ரஷாதீக்ஷித -தம்மை அடைந்த ஜனங்களை நன்றாகக் காப்பாற்றுவதில் விரதம் பூண்டவருமான
கூர நாத –ஜயதி -கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

————-

ஜயதி ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத்
உப நிஷது பகூடாந் ந்யாய தோர்த்தாந் விவ்ருண்வந்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ
சமித விமத வாத ஸாந்திமாந் கூர நாத –
-3-

ஜயதி
ஹரி பரத்வ ஸ்தாபநோத் வேல மோதாத் –திருமாலின் பரம் பொருட்டாண்மையை நிலை நாட்டுவதில் எல்லை கடந்த மகிழ்ச்சியினால்
உப நிஷது பகூடாந் –உப நிஷத்துக்களில் மறைந்து கிடக்கிற
அர்த்தாத் -அர்த்தங்களை
ந்யாயத -உபய மீமாம்ஸா யுக்திகளைக் கொண்டு
விவ்ருண்வந் –விளங்கா நின்றவராய்
அத ரித ஸிவ பாரம் யார்த்தி சோலாதி ராஜ –வெல்லப்பட்ட சிவனுடைய பரத்வத்தைத் தம்மிடம் கேட்க விரும்பிய சோழ அரசனை யுடையவரும்
அது காரணமாக
சமித விமத வாத -ஓயச் செய்யப்பட சிவனே பரண் என்று கூறுமவர்களின் எதிர் வாதத்தை யுடையவரும்
ஸாந்திமாந் –பொறுமை யுடையவருமாகிய
கூர நாத –ஜயதி –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

———-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே பத்த தீஷா
கிமு புவமவ தீர்ண ஸ்ரீ பதி கிந்நு ஸைந்யேட்
உத ஸடரிபுரித் யுல்லிக் யமாநோ மஹத்பி
ஜயதி குரு வரேண்ய கூர நாதோ மஹாத்மா –
-4-

பவ ஜலதி நிமக்ந உத்தாரணே –ஸம்ஸாரமாகிய கடலிலே ஆழ அழுந்தியவர்களை உயரத் தூங்குவதில்
பத்த தீஷா –நியமம் பூண்டவராய்
புவமவ தீர்ண –பூ உலகில் அவதரித்த
ஸ்ரீ பதி கிமு –திருவின் மணவாளனோ
கிந்நு ஸைந்ய ஈட–சேனை முதல்வரோ
உத ஸடரிபு -நம்மாழ்வாரோ
இவர்
இதி -என்று
மஹத்பி–பெரியோர்களால்
யுல்லிக் யமாந-ஊகிக்கப் படுமவரும்
குரு வரேண்ய –ஆச்சார்ய ஸ்ரேஷ்டரும்
மஹாத்மா–பரந்த மனமுடையவருமான
கூர நாத ஜயதி – கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குகிறார்

மூவரைச் சொன்னது திரு மகளுக்கும் உப லக்ஷணம் -திருமால் திரு மகள் சேனை முதலியார் நம்மாழ்வார் –உத்தர உத்தர கருணையில் மிக்கு
அனைவருமாகச் சேர்ந்தே கூரத்தாழ்வான் -காரேய் கருணை எதிராஜரை ஆஸ்ரயித்து அவருக்கு பவித்ரம் ஸ்தானீயம் ஆனார்

————

நிரவதிக தயாப்திர் நாயமாவிர்ப வேச் சேத்
இஹ புவி விமலாத்மா கூர நாதோ மஹீ யாந்
விவித விஷய நக்ரக் ராம ஜூடம் கதம் வா
பவ ஜல நிதி பூரம் நிஸ் தரே யுர்ஜ நவ்கா
–5-

நிரவதிக தயாப்திர் -எல்லையற்ற கருணைக்கு கடல் போன்றவரும்
விமலாத்மா-மலம் அற்ற மனம் படைத்தவரும்
மஹீ யாந்-அதனால் மிகப் பெரியவருமான
அயம் கூர நாதோ –இந்தக் கூரத்தாழ்வான்
இஹ புவி-இந்த உலகில்
ந ஆவிர்பவேத் சேத்-அவதரிக்கவில்லை என்றால்
விவித விஷய நக்ரக்ராம ஜூடம்-பலவகைப்பட்ட ஸப்தாதி விஷயங்கள் ஆகிய முதலைகளின் கூட்டங்களால் அடையப்பட்ட
பவ ஜல நிதி பூரம் –ஸம்ஸாரமாகிய கடல் வெள்ளத்தை
ஜந ஓகா–மனிதர்கள் திரள்கள்
கதம் வாநிஸ்தரேயுர்–எப்படித்தான் தாண்ட முடியும் –

கடலில் முதலைகள் இருக்குமே -சம்சாரக் கடல் என்றதால் இங்கு ஸப்தாதி விஷயங்களை முதலைகள் என்கிறார்
ஸ்வரூப நாசத்தை உண்டாக்கும் அன்றோ

————–

ஸூ சரித பரி பாகோஸ் மாத் ருசாம் கிந்நு பத்மா
கமிது ரகில நேது ப்ரேம ஸார க்ருதாத்மா
விலஸதி புவி கூரேசாத்ம நோதீர்ய மாண
ஜயதி விபுத வர்யை கூர நாத க்ருபாலு –
-6-

ய –யாவர் ஒருவர்
கூரேசாத்ம-கூரேசர் என்னும் உருவமுடையவராக
விலஸதி புவி -உலகில் விளங்குகிறாரோ
ஸ க்ருபாலு –கூர நாத -அந்த தயை மிக்க கூரத்தாழ்வான்
அஸ் மாகம் – நம்முடைய
ஸூ சரித பரி பாகஸ் –புண்ணியத்தின் பயனானது
க்ருதாத்மா கிந்நு-வடிவெடுத்து வந்தவரோ –
அல்லது
பத்மா கமிது-திருமகள் மணவாளனாய்
அகில நேது–ஸர்வேஸ்வரனாகிய எம்பெருமானுடைய
ப்ரேம ஸார –சிறந்த ப்ரீதியானது
க்ருதாத்மா கிந்நு -வடிவெடுத்து வந்தவரோ
இதி -என்று
விபுத வர்யை –ப்ராஹ்மண உத்தமர்களால்
உதீர்ய மாண –புகழப் பட்டவராய்க் கொண்டு
ஜயதி -மேம்பட்டுத் திகழ்கிறார்

ஆழ்வான் அவதரிக்க நாம் செய்த புண்ணியம் எல்லாம் சேர்த்தாலும் செய்ய முடியாமையைக் கருதி பகவானுடைய பேர் அன்பே ஆழ்வானாக அவதரித்ததோ என்று பெரியவர்கள் கூறுவதாக அருளிச் செய்கிறார்-

———–

அபஹ்ருத பவதாப (பை )பாவநை ப்ரேம சாந்த்ரை
அம்ருத ரஸ நிதாநை ஆத்ம பாஜாம் கடாஷை
அநு கலமுப குர்வன் ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா
ஜலதி துஹி த்ருஜாநே ப்ராஜதே கூர நாத –
-7-

கூர நாத –கூரத்தாழ்வான்
ப்ரேம சாந்த்ரை -அன்பு செறிந்தவைகளும்
பாவநை –பரிசுத்தியை உண்டாக்குமவைகளும்
அம்ருத ரஸ நிதாநை-மோக்ஷ ஆனந்துக்கு மூல காரணமானவைகளுமான
கடாஷை -தமது கடைக்கண் பார்வைகளாலே
ஆத்ம பாஜாம் –உடல் எடுத்த ஜீவாத்மாக்களுக்கு
ஜலதி துஹித்ரு ஜாநே–கடல் அரசன் பெண்ணான திருமகள் மணவாளனைக் குறித்து
ஸேமுஷீம் ஸேக்ஷ தாயா-நாம் எல்லாருக்கும் அடிமை என்னும் அறிவை
அநு கலமுப குர்வன் –க்ஷணம் தோறும் உண்டாக்கிக் கொண்டு
அதனால்
அபஹ்ருத பவதாப (பை )-அவர்களுடைய ஸம்ஸார தாபத்தைப் போக்குமவராய்
ப்ராஜதே –விளங்குகிறார்-

ஞானக்கை தா என்றார் இறே ஆழ்வாரும்
சேஷத்வ ஞானத்தை உண்டாக்கி ஸம்ஸார தாபத்தைப் போக்கி மோக்ஷம் அடைவிப்பர் ஆழ்வான் என்கிறார் இதில்
ஆழ்வானுடைய கடாக்ஷமே இவற்றைச் செய்யுமே –

—————-

க்ருத குவலய மோத கோச பூத கலாநாம்
த்விஜ பதிரகிலாசா சோபயந் நைஜதாம்நா
ப்ரஸமித பரிதாப ப்ராப்ய விஷ்ணோ பதம்தத்
விலஸதி விபு தேட்ய கூர நாதவ்க்ஷதீ ச
–8-

க்ருத குவலய மோத –1-பூ மண்டலத்துக்கு மகிழ்ச்சியைத் தருமவராய் -2- நெய்தல் மலருக்கு மலர்ச்சியைத் தருமவனாய்
கோச பூத கலாநாம் –1- ஸாஸ்த்ரங்களுக்கு நிதியானவராய் -2-சந்த்ர கலைகளுக்கு நிதியானவனாய்
த்விஜ பதிர் -1- ப்ராஹ்மணர்களுக்குத் தலைவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையால் யாகம் செய்யும் ப்ராஹ்மணர்க்குத் தலைவனாய்
நைஜதாம்நா -1- தனது ஞான ஒளியாலே -2- தனது காந்தியாலே -நிலாவினால் –
அகில ஆசா –1-எல்லாத் திக்குகளில் உள்ளவர்களையும் -எ2-ல்லாத் திக்குகளையும்
சோபயந் -1-2- விளங்கச் செய்து கொண்டு
ப்ரஸமித பரிதாப -1- ஸம்ஸார தாபத்தைத் தணிப்பவராய் -2- வெயிலின் வெப்பத்தைத் தணிப்பவனாய்
விபுதேட்ய-விபூத ஈடய -1- ப்ராஹ்மணர்களாலே ஸ்துதிக்கத் தக்கவராய் -2-யாகத்துக்கு வேண்டிய ஓஷதிகளை வளர்க்கையாலே யாகத்தில் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொள்ளுகிற தேவர்களால் ஸ்துதிக்கத் தக்கவனாய்
தத் -1-2- பிரஸித்தமான
ப்ராப்ய விஷ்ணோ பதம்–1- பரமபதத்தை அடைந்து -2- ஆகாசத்தை அடைந்து
கூர நாத ஓக்ஷதீ ச -1- கூரத்தாழ்வான் ஆகிற 2- சந்திரன்
விலஸதி -விசேஷமாகப் பிரகாசிக்கிறான்
ஆழ்வான் சந்திரன் போன்றவர் என்று கொண்டு உபம அலங்காரம்
ஆழ்வானையே சந்த்ரனாகக் கொண்டு ரூப அலங்காரம் -ரூபகம் -உருவகம்

———–

ஸூ ஜந ஹ்ருதய பத்மோல்லா ஸமாராத் விதந்வந்
குஜந குவலயாநாம் மீலநம் சாபி குர்வன்
உதய மதி கதோ அசவ் கூர நாதாம் ஸூமாலீ
துரித திமிர ஜாலம் தேஹ பாஜாம் ஹி நஸ்தி-
-9-

அசவ் கூர நாதாம் ஸூமாலீ -அந்த கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
உதய மதி கதோ -உதயத்தை அடைந்தவனாய்க் கொண்டு
ஆராத் –தூரத்தில் இருந்தே
ஸூ ஜந ஹ்ருதய -நல்லோர்களுடைய மனமாகிய
பத்மோல்லா ஸம் -தாமரையின் மலர்ச்சியை
விதந்வந்-செய்து கொண்டும்
குஜந குவலயாநாம் –தீயவர்களாகிய ஆம்பல் மலர்களினுடைய
மீலநம் சாபி குர்வன் –கூம்புதலையும் செய்து கொண்டும்
தேஹ பாஜாம்–உடல் எடுத்த மனிதர்களுடைய
துரித திமிர ஜாலம் –பாபங்களாகிய இருளின் திரட்சியை
ஹி நஸ்தி–நாஸம் செய்கின்றான் –

கீழ் சந்தனுக்கு ஒப்புமை சிலேடையில்
இங்கு அடை மொழிகளில் உள்ள பொருள்களை -ஒன்றை மற்ற ஒன்றாக உருவகம் க்ருத குவலய மோத –என்பதன் கண் குவலயம் என்பதற்கு பூ மண்டலம் என்றும் நெய்தல் மலர் என்றும் காட்டி அருளுகிறார்

————–

அம்ருத ஜநந பூமி ஸம்ஸ்ரிதா நந்த தாயீ
ஸகல ஸூகுண ரத்நா வாஸபூ பூர்ண ஸத்த்வ
விமதகத கவர்யைர் நாவிகைரப்ய லங்க்ய
ஸ்புரதி புவி கபீர கூர நாதாம் ருதாப்தி –
-10-

அம்ருத -1- மோக்ஷத்திற்கு -2-அம்ருதத்திற்கு
ஜநந பூமி –பிறப்பிடமாய்
ஸம்ஸ்ரிதா நந்த தாயீ –தன்னை அடைந்த 1- முமுஷுக்களுக்கு -2- இந்த்ராதி தேவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமவராய்
ஸகல ஸூகுண ரத்ந ஆ வாஸபூ -எல்லா 1- நல்ல குணங்களாகிற 2- ரத்னங்களுக்கு இருப்பிடமாய்
பூர்ண ஸத்த்வ –1- சத்துவ குணம் நிறைந்தவராய் -2- முதலை முதலிய பிராணிகளால் நிறைந்ததாய்
விமத கதக வர்யைர் -1- வாதம் செய்யும் புறமதத்தவர்களாகிய 2- படகோட்டிகளாலே
அஸங்க்ய –1- எதிர்க்க முடியாதவராய் -2- தாண்ட முடியாததாய்
கபீர-1- ஆழ்ந்த மனமுடையவருமான -2- ஆழமுடையதுமான
நாவிகைரப்ய ல
கூர நாதாம் ருதாப்தி –1-கூரத்தாழ்வானாகிய -2- அமுதக்கடல் -பாற் கடல்
புவி -பூமியில்
ஸ்புரதி –விளங்குகிறது

——————

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரிதோஷயோ ஜடாஸ யோதயோ
கலங்க பாவ பாஸூரோ நிராக்ருதோக்ர சங்கம
விராஜ மாந விக்ரஹோ திவாபி மித்ர ஸந்நிதவ்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ விபாதி கூர ராட் விது
–11-

ஸதாபி வ்ருத்தி மாஸ்ரித-எப்போதும் வளர்ச்சியை அடைந்ததும்
அஷய –தேய்வில்லாததும்
அஜடாஸயோதயோ –ஜலா சயமான கடலில் தோன்றாததும் புத்திமான்களுடைய மனதில் தோன்றுவதும்
அகலங்க பாவ பாஸூரோ -மறு -குற்றம் -இல்லாமையால் பிரகாசிக்குமதும்
நிராக்ருதோக்ர சங்கம–சிவபெருமானுடைய -தலையோடு சேர்த்தியை மறுத்ததும்
மித்ர ஸந்நிதவ் -ஸூர்யனுடைய சமீபத்தில்
திவாபி-பகலிலும்
விராஜ மாந விக்ரஹோ –பிரகாசிக்கின்ற பிம்பத்தை -திருமேனியை உடையதும்
விநாக்ருதாஸ் தாஸ்த ஸம்ஸ்ரயோ –மேற்கு மலையை அடைந்து அஸ்தமியாததுமான
விபாதி கூர ராட் விது -கூரத்தாழ்வான் ஆகிய மதி சந்திரன் விளங்குகிறது

கீழ் 8 ஸ்லோகத்தில் சந்திரனுக்கு உள்ள தன்மை அனைத்தும் ஆழ்வான் இடம் உள்ளமையைக் காட்டி அருளி
இதில் அதில் உள்ள தீமைகள் ஒன்றுமே ஆழ்வான் இடம் இல்லை என்று கூறப்படுகிறது
ஸதா -என்பதை அனைத்திலும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்
ஜலாசய -என்பதே ஜடாசய என்றதாயிற்று டலயோ அபேத -தகரமும் லகாரமும் ஒன்றே -ஜலாசய -ஜலம் தங்கும் கடல் ஜடாசய -ஜடம் அறிவில்லாதவன்

———-

ப்ரஸாத மேயிவாந் ஸதா ப்ரகாம வீஷ்ய விக்ரஹ
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததி
ஸதோத்தராயணாந் விதோ விமுக்ததாம ஸக்ரஹ
த்ரயீ மயோத்ர கூர ராட் வாகரோ விராஜதே
–12-

ஸதா–எப்போதும்
ப்ரஸாத மேயிவாந் -1-அநுக்ரஹத்தை அடைந்தவராய் -2-உக்ரமாக அல்லாமல் தெளிவை அடைந்தவனாய்
ப்ரகாம வீஷ்ய விக்ரஹ -1- நன்றாக ஸேவிக்கத்தக்க திருமேனியை யுடையவராய் -2-கண் கூசாமல் காணத்தக்க பிம்பத்தை யுடையவனாய்
ப்ராபோத மாவஹந் ந்ருணாம் -மனிதர்களுக்கு நல்ல அறிவை உண்டாக்குமவராய் –2- மனிதர்களுக்கு தூக்கத்தில் இருந்து விழிப்பை உண்டாக்குமவனாய்
ப்ராணா ஸயம்ஸ்தமஸ்ததிம் -1- அறியாமைத் திரட்சியை அழிப்பவராய் -2- இருளின் திரட்சியை அழிப்பவனாய்
ஸதா -எப்போதும்
உத்தராயணாந் விதோ -1- உயர்ந்த வழியில் சேர்ந்தவராய் -2-உத்தராயணத்தில் சேர்ந்தவனாய்
விமுக்ததாம ஸக்ரஹ –1-தமோ குணமுடையவர்களால் பற்றப்படாதவராய் 2- ராகுவினால் பீடிக்கப்பட்டாதவனாய் -கிரஹணம் இல்லாதவனாய்
த்ரயீ மயீ -1- வேத விசாரம் செய்வதனால் வேத மயராய் -2- மொன்று வேதத்தையே உருவமாக யுடையவனாய் இருக்கிற
கூர ராட் வாகரோ –கூரத்தாழ்வான் ஆகிற ஸூர்யன்
அத்ர-இவ்வுலகில்
விராஜதே-மிகவும் விளங்குகிறான்–இதில் தீமை அற்ற ஸூர்யனாக ரூபணம்

—————-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ
பரீத வாக்ஜ ரீபரோ விரக்த முக்ய ஸம்ஸ்ரய
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி விசித்ரதாது பிர்யுத
விபாதி கூரராண் மஹீதர புமர்த்த ஸித்தயே –
-13-

ஸ்வகீய ஹ்ருத் குஹாஸயாலு ஸாரஸாக்ஷ கேஸரீ –தன்னுடையதாக ஹ்ருதயமாகிய குகையில் கிடந்தது உறங்குகிற புண்டரீகாக்ஷனாகிய -ஸ்ரீ யபதியான -ஸிம்ஹத்தை யுடையதும்
பரீத வாக்ஜ ரீபரோ –நிறைந்த ஸ்ரீ ஸூ க்திகள் ஆகிய அருவிகள் மிகப் பெற்றதும்
விரக்த முக்ய ஸம்ஸ்ரய–ஆசை அற்றவர்களுக்கு முக்கியமான புகலிடமானதும்
விஸேக்ஷ ஸாஸ்த்ர யுக்திபி –சிறந்த ஸ்ரீ ஸூக்திகளாகிய
விசித்ரதாது பிர் –பலவகைப்பட்ட தாதுக்களோடு
யுத –கூடியதுமான
கூரராண் மஹீதர-கூரத்தாழ்வான் ஆகிய பர்வதமானது
விபாதி புமர்த்த ஸித்தயே -மோக்ஷ புருஷார்த்தம் ஸித்திப்பதன் பொருட்டு மிகவும் விளங்குகிறது
சந்த்ர ஸூர்யர்கள் குதிப்பதும் அஸ்தமிப்பதும் மலையிலே ஆகையாலே மலையாக ரூபணம் இதில்
மலை முழைஞ்சில் ஸிம்ஹம் -ஆழ்வான் திரு உள்ளத்தில் சீரியஸிம்ஹமான நரஸிம்ஹப் பெருமாள்
ஆழ்வானுக்குத் திருவாராதனப் பெருமாள் அழகிய சிங்கர் என்று பெரிய திருமுடி அடைவில் உள்ளமை காண்க

———-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ
த்ரயீ ஸிரோர்த புங்கிதா ஸூ யுக்தி ஸாய காவலீ
ஸ்ருஜந் குவாதி வித்விஷ ப்ரகாலயந் குரோ பதே
அபி ஷிக்த ஏஷ கூரராட் ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம்
–14-

யதீஸ வாக் ஸூதாஜரீ ஸதாநு பூதி மத்த தீ –யதிராஜருடைய ஸ்ரீ ஸூக்திகளாகிய அம்ருதத்தின் வெல்லத்தை எப்போதும் அனுபவிப்பதனால் செருக்குக் கொண்ட அறிவையுடையவராய்
த்ரயீ ஸிரோர்த புங்கிதா –வேதாந்த அர்த்தங்களை மூலமாகக் கொண்ட தொடுக்கப்பட்ட
ஸூ யுக்தி ஸாய காவலீ –நல்ல யுக்திகளாகிய பாணங்களின் வரிசைகளை
ஸ்ருஜந் -விடுமவராய்க் கொண்டு
குவாதி வித்விஷ –துர் வாதம் செய்யும் புற மத்தவராகிய பகைவர்களை
ப்ரகாலயந் –மிகவும் அழிப்பவராயும் -மறுப்பவராயும் –
குரோ பதே –ஆச்சார்யருடைய ஸ்தானத்திலே
அபி ஷிக்த –பட்டாபிஷேகம் செய்யப் பட்டவராயும் உள்ள
ஏஷ கூரராட் –இந்தக் கூரத்தாழ்வான்
ப்ரஸாஸ்தி வஷ்ணவீம்ஸ்ரியம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் செல்வத்தை ஆளுகிறார்
ஆச்சார்ய ஸ்தானத்தில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைப் பரிபாலனம் செய்யும் வகையை அருளிச் செய்கிறார்

———–

கதாஹவோந் முகாந் பஹுந் கபர்தி துர்மதாஸ் ரயாந்
முதாக்ருதாக மஸ்ரமாந் விதாய வாதி ந பராந்
புதாத ரீக்ருதி க்ஷமை ஸ்வ வாக் ஜரீ பரை ரஸவ்
புதா வலீ ஸமீடி தஸ் சகாஸ்தி கூர பூபதி –
-15-

அஸவ் கூர பூபதி –அந்தக் கூரத்தாழ்வான் –
கதா ஆஹவ உந் முகாந் –வாதம் என்று போர் செய்வதற்காகத் தம்மை எதிர் நோக்கி நின்றவர்களும்
கபர்தி துர்மதாஸ் ரயாந் –சிவனுடைய கெட்ட மதத்தைப் பின்பற்றியவர்களுமாகிய
பஹுந் வாதி ந-பல வாதம் செய்யுமவர்களை
புத அதரீ க்ருதி க்ஷமை –புற மதப் புலவர்களை வெல்வதற்கு உரிய
ஸ்வ வாக் ஜரீ பரைர் -தமது ஸ்ரீ ஸூ க்திகளாகிற அதிகமான வெள்ளப் பெருக்கினால்
முதாக்ருத ஆகம ஸ்ரமாந் -பயன் அற்றதாகச் செய்யப்பட தமது சைவ ஆகமப் பயிற்சியை யுடையவர்களாக
விதாய –செய்து விட்டு
புதா வலீ ஸமீடி தஸ் -மத்யஸ்தரான பண்டிதர்களின் திறலினால் மிகவும் ஸ்துதிக்கப் பட்டவராய்
சகாஸ்தி –விளங்குகிறார்-

————-

விபூதிமைஹி கீப்த்ய ஜந்வி மோஹதாயி நீம் ப்ருசம்
விதாத்ரு முக்ய ஸேவிதாம் அஹந்தயா அதி தூஷிதாம்
ஸ்ருதீடி தாம நிந்தி தாம் ஸ்வரூப ஸேமுஷீ மதாம்
ஸ்ரியம் ஸமாஸ்ரயந் சவ் விபாதி கூர பூ பதி –
-16-

அசவ் கூர பூ பதி —அந்தக் கூரத்தாழ்வான்
விதாத்ரு முக்ய ஸேவிதாம்-பிரமன் முதலியவர்களாலே வஹிக்கப் பெற்றதும் -அதனால்
அஹந்தயா அதி தூஷிதாம் –அஹங்காரத்தால் மிகவும் கெடுக்கப்பட்டதும் -அதனால்
வி மோஹ தாயி நீம் ப்ருசம் –விஷயங்களே அனுபவிக்கத்தக்கவை என்ற அஞ்ஞானத்தை மிகவும் தரக்கூடியதுமான
விபூதிமைஹிகீம் -இந்த உலகத்தை
த்ய ஜந் –விட்டு ஒழிப்பவராய்க் கொண்டு
அநிந்தி தாம் -இகழப்படாததும்
ஸ்ருதீடி தாம –வேதத்தால் புகழப் பட்டதுமான
ஸ்வரூப ஸேமுஷீ மதாம் –ஜீவாத்ம ஸ்வரூப ஞானமுடையவர்களுடைய
ஸ்ரியம் –மோக்ஷமாகிய செல்வத்தை
ஸமாஸ்ரயந் விபாதி –அடைந்தவராய் விளங்குகிறார்

நித்ய ஸூரிகள் போல் இவ்வுலகிலே ஸ்வரூப ஞானம் பெற்று நீதி வானவர் போல் இருக்கும் கூரத்தாழ்வானைப் புகழ்ந்து ஸ்தோத்ரம் பண்ணுகிறார்

——————–

ம்ருஷா மதம் விதாய தந் ம்ருஷா ஸ்வ யுக்திபிர் ஜகந்
ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி ராத்மநாம்
அநேக தாம ஸேக்ஷதாம் ப்ரகாஸயந் வ்யபோஹயந்
ப்ரமாத்ருஸேக ரஸ்துத ப்ரகாஸ தேத்ர கூரராட்
–17-

கூரராட் –கூரத்தாழ்வான்
ஜகந் ம்ருஷாத்வ பாதக ப்ரமாப்ரகாஸிகாபி –உலகம் பொய் என்பதை மறுக்கிற அறிவை வெளிப்படுத்துகின்ற
ஸ்வ யுக்திபிர்-தம்முடைய யுக்திகளாலே
தத் ம்ருஷா மதம் -உலகம் பொய் என்கிற அந்த அத்வைத மதத்தை
விதாய ம்ருஷா –பொய்யாக ஆக்கி மறுத்து
ஆத்மநாம் –ஆத்மாக்களுடைய
அநேக தாம் –பன்மையை
ப்ரகாஸயந்-வெளிப்படுத்துமவராயும்
அஸேக்ஷதாம் -ஆத்மாக்கள் பகவானுக்கு அடிமையல்ல என்பதை
வ்யபோஹயந் –மறுத்து உரைப்பவராயும் ஆகி
ப்ரமாத்ருஸேக ரஸ்துத -உண்மை அறிவுடையவர்களில் தலைவர்களாலே புகழப்பட்டவராய்க் கொண்டு
ப்ரகாஸ தேத்ர -இவ்வுலகில் திகழ்கிறார்

கீழ் சைவ மத நிரசனம் இதில் அத்வைத மத நிரசனம்

————-

ஸ்ருதிம் த்ருட ப்ராமணயந் ஜகத் விதாத ரீஸ்வரே
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வ மப்யதோ நயந்
அணோர் ஜகந் நிதாந தாம போஹயந் விராஜதே
ஸ்வ ஸூ க்திபிர் ஸ்வ யுக்திபிர் ஸூதீவ ரோத்ர கூரராட்
–18-

ஸூதீவ ரோத்ர கூரராட் –புக்திமான்களில் சிறந்தவராகிய
ஜகத் விதாத ரீஸ்வரே–உலகத்தைப் படைத்த ஈஸ்வரனாகிய ஸ்ரீ மன் நாராயணன் விஷயத்தில்
ஸ்ருதிம் –வேதத்தை
த்ருட ப்ராமணயந் -அசைக்க முடியாத திடமான அத்தாட்சி நூலாகக் கொண்டு
ப்ரோக்தமாநுமாநி கேஸ்வரத்வம் –கணாதர் மதம் -வை சேஷிகர்களால் சொல்லப்பட்ட(பரம அணு வாதிகள் ) ஸ்ருஷ்டி கர்த்தாவான சிவன் அனுமான ப்ரமாணத்தினால் ஸித்திக்கிறான் என்ற விஷயத்தை
யதோ நயந் –கீழே தள்ளுகிறவராயும்
அணோர் -பரம அணுவுக்கு
ஜகந் நிதாந தாமபி –உலகத்தைக் குறித்து முதல் காரணமாய் இருத்தலையும்
ஸ்வ ஸூ க்திபிர் –தமது பேச்சுக்களாலும்
ஸ்வ யுக்திபிர் –தம்முடைய யுக்திகளாலும்
அபோஹயந் –மறுப்பவராயும்
விராஜதே –மிகவும் விளங்குகிறார்
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந -போன்ற ஸ்ருதி வாக்யங்களைக் கொண்டு ஸூவ மத ஸ்தாபனம்

———–

ஸிவாத் பரம் நஹீதி வை லிகேதிசோல பூபதே
வசஸ் ஸ்ருதேரநந்தரம் ததுத்தரம் வாஸோ லிகந்
அபாஹஸந் மஹீ ஸூரைர்ய ஈடிதோ மஹீ பதிம்
விபாதி கூரராட் குருஸ் ஸஸர்வ ஸாஸ்த்ர பாரக
–19-

ஸர்வ ஸாஸ்த்ர பாரக –எல்லா ஸாஸ்த்ரங்களையும் கரை கண்டா -நன்றாக அறிந்த
ய -யாவர் ஒருவர்
ஸிவாத் பரம் –சிவனை விட உயர்ந்த தத்வம்
நஹீதி வை –இல்லவே இல்லை என்றே
லிகேதி–நீர் எழுதும் என்று
சோல பூபதே வசஸ் –சோழ ராஜன் கூறிய வார்த்தையை
ஸ்ருதேரநந்தரம் –கேட்ட வுடனே
ததுத்தரம் வாஸோ -அத்தை எழுதாமல் அதன் விடையான வார்த்தையை
லிகந் –எழுதுமவராய்
மஹீ பதிம் –அச் சோழ ராஜன்
அபாஹஸந் –பரி ஹாஸம் -ஏளனம் -செய்தாரோ
மஹீ ஸூரைர்ய ஈடிதோ விபாதி கூரராட் குருஸ் ஸ -அந்த கூரத்தாழ்வான் ஆகிய ஆசார்யர் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்துதிக்கப்பட்டு விளங்குகிறார்
த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுதிக் கையெழுத்திட்ட வ்ருத்தாந்தம் -சிவ சப்தம் எட்டுப்படி அளவு கொண்ட குறுணிக்கும் பெயர்
பதினாறு படியளவு கொண்ட பாதைக்கு குறுணியை விடப் பெரியது
நம் தரிசனத்துக்காக தம் தரிசனத்தை இழந்தார் -தர்சனம் சித்தாந்தம் -கண்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந

————–

யதீஸ்வர க்ரஹாகதாந் படாந் விலோக்ய பூபதே
ஸ்வயம் த்ரி தண்டிதாம் பஜந் ததீய ரக்ஷண இச்சயா
ஸிலீ முகால் பகீடயோர் நயம் ஸதார்ய ஸிஷ்யயோ
ப்ரதர்ஸயந் ஸ்வசர்யயா சகாஸ்தி கூர பூபதி —
20-யதீஸ்வர ஆஸ்ரம ஆகதாந் -பாட பேதம் –

கூர பூபதி –கூறத்துக்கு அரசரான ஆழ்வான்
யதீஸ்வர க்ரஹாகதாந் -யதீஸ்வரரான எம்பெருமானாரைப் பிடித்துப் போவதற்காக வந்த
படாந் விலோக்ய பூபதே –அரசனுடைய வேலையாட்களைப் பார்த்து
ததீய ரக்ஷண இச்சயா –அவருடைய ரக்ஷணத்தில் தாம் கொண்ட ஆசையினால்
ஸ்வயம் –தாமே
த்ரி தண்டிதாம் பஜந் –த்ரி தண்டத்தைக் கைப்பற்றியவராய்
ஸ்வசர்யயா–இத்தகைய தமது நடத்தையினால்
ஸிலீ முக அல்ப கீடயோர் –குளவிக்கும் சிறு புழுவுக்கும் உண்டான நியாயத்தை
ஸதார்ய ஸிஷ்யயோ –நல்ல ஆச்சார்யருக்கும் நல்ல சிஷ்யருக்கும் உள்ளதான
ந்யாயம் -நியாயத்தை
ப்ரதர்ஸயந் சகாஸ்தி –வெளிப்படுத்திக் கொண்டு விளங்குகிறார்
ஒரு குளவி சிறு புழுவைக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து அதை எப்போதும் கொட்டிக்கொண்டு இருந்தால் அப்புழு அக்குழவியின் உருவத்தையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்து அக்குளவியாகவே ஆகி விடும் என்னும் நியாயம்
எம்பெருமானாராலேயே வளர்க்கப் பட்ட கூரத்தாழ்வான் அவரையே தியானித்து தியானித்து அவரைப் போலவே திரிதாண்டா காஷாயங்களைத் தரித்து எம்பெருமானாராகவே ஆகி விட்ட படியால் இந்த நியாத்தைக் காட்டி அருளினார்

———–

நிரா கர்த்தும் மோஹம் நிகில ஐந சித்தாஸ் ரயம் அசவ்
தயா ஸிந்து ஸாந்த்ராத் நிரவதிக விஞ்ஞாந விபவாத்
மஹீ பாகே மாஸே மகர மஹிதாக்யே ஸமஜநி
ப்ரஸஸ்தே ஹஸ்தர்ஷே சுப குண நிதி கூர ந்ருபதி
–21-

சுப குண நிதி–நல்ல குணங்களுக்கு நிதியான
அசவ் கூர ந்ருபதி —-அந்த கூரத்தாழ்வான்
தயா ஸிந்து ஸந்–அக்குணங்களில் முக்கியமான தயைக்குக் கடலாய் இருந்து
ஸாந் த்ராத்-அதிகமான
நிரவதிக–எல்லையில்லாத
விஞ்ஞாந விபவாத் –தமது ஞானத்தின் பெருமையினாலே
நிகில ஐந சித்தாஸ் ரயம் -எல்லா மக்களுடைய மனத்தையும் பற்றி இருக்கிற
நிரா கர்த்தும் மோஹம் –அறியாமையை அகற்றுவதற்காக
மஹீ பாகே -இந்த பூ ப்ரதேசத்திலே
மகர மஹிதாக்யே -மகரம் -தை -எனப்படுகின்ற கௌரவிக்கப்பட்ட
மாஸே –மாதத்தில்
ப்ரஸஸ்தே-கொண்டாடப்பெற்ற
ஹஸ்தர்ஷே -ஹஸ்தம் என்னும் நக்ஷத்திரத்தில்
ஸமஜநி -திரு அவதரித்தார்
மகரம் -மங்களம் கரோதி -உத்பாதயதி இதி மகர
அலங்காரம் ததாதி இதி மகர -சோபையைத் தரும் மாதம்
ஹஸ்த நக்ஷத்ர அதி தேவதை ஸூர்யன்
திருமழிசைப் பிரான் போல் பரதத்வ நிர்ணயம் பண்ணவே இவரும் இந்த மாதத்தில் அவதரித்தார்
பேர் அருளாளன் ஆறு வார்த்தைகள் அருளிச் செய்து உபகரித்தார் போல் இவரும் வ்ருத்தி கிரந்தத்தை நினைவில் கொண்டு விண்ணப்பித்து உபகாரம் புரிந்தார்
ஆகவே இவரும் பேர் அருளாளன் போலவே தயா ஸிந்து

——————-

அநாத் ருஷ்யாம் ப்ரஹ்மாதி பிரபி ஸூரைரத்ம க்ருதிபிர்
ஸதாப் யேகா காராம் அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம்
அஹந்தா மஜ்ஞாநாம் ப்ரக்ருதி மநு ரூபாம் மம க்ருதே
பரா குர்வன் கூர ப்ரபு ரகில நிரூணாம் விஜயதே
–22-

கூர ப்ரபு-கூரத்தாழ்வான்
ப்ரஹ்மாதி பிரபி ஸூரை–பிரமதேவன் முதலிய தேவர்களாலும்
அநாத் ருஷ்யாம் –போக்க முடியாததும்
அநதி கத வ்ருத்தி க்ஷய கதாம் –வளர்வது தேய்வது என்னும் பேச்சைக் கூட அறியாததும்
ஸதாப்யே காகாராம் –ஸதாபி ஏக ஆகாரம் –பூரணமான வளர்ச்சி என்கிற ஒரே விதமான வடிவை யுடையதும்
மம க்ருதே -மமகாரத்துக்கு
ப்ரக்ருதிம் அநு ரூபாம்–ஏற்ற மூல காரணமானதுமான
அஜ்ஞாநாம்–அறிவிலிகளான
அகில நிரூணாம்–எல்லா மனிதர்களுடையவும்
அஹந்தாம் -அஹாங்காரத்தை
பரா குர்வன் ஸந் விஜயதே –போக்கடித்துக் கொண்டே வெற்றி பெறுகிறார்
கீழ் அஞ்ஞானம் போக்கவே ஆழ்வான் அவதாரம் -இதில் அதனால் உண்டாகும் அஹங்கார மமகாரங்களைப் போக்கும்படி கூறப்படுகிறது
ஸ்வரூப ஞானத்தை உண்டாக்குவதன் வாயிலாகப் போக்கி பகைவர்களை வென்று முடி சூடிய அரசர் போல் விளங்குகிறார் என்கிறார்-

அமோகைருத் கூலைரநு பதி ஸமுத்தை ரநுபமை
கடாஷை ப்ரேமார்த்ரை கலி மலம ஸேக்ஷம் வ்யபநயந்
ஜநாநாமா நந்தம் நிரவதிக மத்யாபி ஜநயந்
ஜயத்யேக்ஷ ஸ்ரீ மாந் மம குல குரு கூர ந்ருபதி
–23-

மம குல குரு–அடியேனுடைய குல குரு வானவரும்
ஸ்ரீ மாந்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை யுடையவருமான
யேக்ஷ கூர ந்ருபதி -இந்தக் கூரத்தாழ்வான்
அமோகை–வீணாகாதவையும்
அநுபமை -நிகரில்லாதவையும்
ப்ரேமார்த்ரை-அன்பினால் குளிர்ந்தவையும்
அநு பதி ஸமுத்தைர் –நிர் ஹேதுகமாக உண்டானவையும்
உத் கூலைர–கரை கடந்தவையுமான
கடாஷை –தமது கடைக்கண் பார்வை களாலேயே
கலி மலம் –கலியினால் உண்டாகிற தோஷத்தை
அஸேக்ஷம் வ்யபநயந் –மிச்சம் இல்லாமல் போக்குவராய்க் கொண்டும் -அதனால்
ஜநாநாம் -மக்களுக்கு
ஆநந்தம் நிரவதிகம் -எல்லையில்லா மகிழ்ச்சியை
அத்யாபி ஜநயந் -இன்றும் உண்டாக்குமவராய்க் கொண்டும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்
கீழ் அஹங்கார மமகாரங்களைப் போக்கியமையை அருளிச் செய்து இதில் அவை காரணமாக உண்டாகும் பாபங்கள் -கலியுகக் குற்றங்கள் அனைத்தையும் போக்கி மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறார் என்கிறார்
கடாக்ஷங்களுக்கு அனைத்து விசேஷணங்களையும் அருளிச் செய்து -ஆழ்வானுடைய கடாக்ஷம் தயை அசாதாரணம் என்கிறார்
இவ்வாசிரியர் ஆழ்வான் திருவம்சத்தவர் போலும் -மம குல குரு என்பதால் -மஹாந்த ப்ரமாணம்

—————

அவித்யா மஹாத்ம்யாத விதித நிஜாகார விபவாந்
அசேஷா நுத்தர்த்தும் பவ ஜலதி மக்நாந் ஜநிப்ருத
அசவ் கூராதீஸ ஸ்வயமவதரந் பூரிக்ருபயா
நயந் நாவம் விஷ்ணும் விகததர பண்யாம் விஜயதே –
-24-

அசவ் கூராதீஸ –அந்தக் கூரத்தாழ்வான்
அவித்யா மஹாத்ம்யாத் –தீ வினையின் மஹிமையால்
அவிதித நிஜாகார விபவாந் –அறியப்படாத தமது உண்மை வசிவமாகிய -பகவத் சேஷத்வமாகிய -பெருமையை உடையவர்களாய் –
அதனால்
பவ ஜலதி மக்நாந் –இவ்வுலக வாழ்வாகிய துன்பக்கடலில் மூழ்கி இருக்கிற
அசேஷாந் ஜநிப்ருத –பிறவி எடுத்த அனைவரையும்
உத்தர்த்தும்–உயரத் தூங்குவதற்காக
பூரிக்ருபயா-பெரும் கருணையினாலே
ஸ்வயமவதரந் -தாமே அவதரித்து நின்று
நாவம் விஷ்ணும் –விஷ்ணு என்னும் படகை
விகததர பண்யாம்-ஓடக்கூலி இல்லாமல்
நயந் -ஓட்டுமவராய்
விஜயதே –விளங்குகிறார்

ஸ்வரூப ஞானம் உண்டாக்கப் பெற்ற சம்சாரிகளைத் தானே படகு போல் இருந்து முகுந்தன் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பானே
ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -அன்றோ

———-

பலாயத்வம் வேகாத் க்வசந கதகா காநந தலே
நிலீநா பூயாஸ்த ப்ரதிகதக மத்தேப ம்ருகராட்
ஜயீ நாநா தந்த்ர ப்ரவசந சணை ப்ரவ்ட வசநை
ஸமேத ஸிஷ்யவ்கை ரடதி வஸூதாம் கூர ந்ருபதி
–25-

ப்ரதிகதக மத்தேப ம்ருகராட் –எதிர்வாதம் செய்யுமவர்களாகிய மதம் பிடித்த யானைகளைக் கொள்ளும் ஸிம்ஹமாகிற
கூர ந்ருபதி -கூரத்தாழ்வான்
நாநா தந்த்ர ப்ரவசந சணை-பலவகையான ஸாஸ்த்ர அர்த்தங்களை விளக்குவதில் ஆற்றல் படைத்த
ப்ரவ்ட வசநை -கம்பீரமான தமது ஸ்ரீ ஸூக்திகளாலே
ஜயீ –உங்களை வெல்லுமவராய்க் கொண்டு
ஸமேத ஸிஷ்யவ்கை-தம்மைப் போன்ற சிஷ்ய ஸமூஹங்களோடு கூடியவராய்
அடதி வஸூதாம் –பூமியில் ஸஞ்சரிக்கிறார்
கதகா–வீண் வாதம் செய்யுமவர்களே
வேகாத்-விரைவாக
பலாயத்வம் க்வசந –எங்கேயாவது ஓடிப்போய் விடுங்கள்
காநந தலே –காட்டிடத்திலே
நிலீநா பூயாஸ்த –ஒளிந்து கொள்ளுங்கள்

ஆழ்வானை ஸிம்ஹமாகவும் -புறச் சமயிகளை மத யானைகளாகவும் உருவகம்

————–

ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடாய ஸமுஸல மாதாய ஸடஜித்
வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ ஜ்ரும்பித மத
ப்ரதாவந் நப்யேதி ப்ரதிகதக வாதாஹவ ருசிம்
நிருந்தந் கூரேஸ த்விரத ந்ருபதிர்ப்ரும் ஹிதரவை
–26-

ஹே கதகா –ஓ வாதம் செய்யுமவர்களே
ஸடஜித் வஸஸ் ஸ்ரேணீ நித்ய அநுபவ நிரதோ -திருவாய் மொழி முதலிய ஸ்ரீ ஸூக்தி திரளை எப்போதும் அனுபவிப்பதில் மிகவும் விருப்பமுடையதாயும்
ஜ்ரும்பித மத–வளர்ந்த மதத்தை யுடையதாயும் இருக்கிற
கூரேஸ த்விரத ந்ருபதிர்–கூரத்தாழ்வானாகிய உயர்ந்த யானை
ஸ்ருதி ஸ்ரேணீ ஸூடா ஆயஸ முஸலம் -உபநிஷத்துக்களாகிய இரும்பு உலக்கையை
ஆதாய -எடுத்துக் கொண்டு
ப்ரும் ஹிதரவை –பிளிறல்களின் ஒலிகளாலே
ப்ரதிகதக வாத ஆஹவ ருசிம் –எதிர்வாதம் செய்பவர்களின் -வாதப்போரில் உண்டான ருசியை
நிருந்தந் –தடை செய்து கொண்டு
ப்ரதாவந் அப்யேதி –உங்களை நோக்கி ஓடி வருகிறது
எங்காவது ஓடி விடுங்கள் -காட்டில் ஒழிந்து கொள்ளுங்கள் -என்று முன் ஸ்லோகத்தில் உள்ளதை இங்கும் சேர்த்து கொள்ள வேண்டும்
கதகா -என்பதையும் அத்யாஹாரம்-கூட்டிக் கொள்ள வேண்டும்
கீழ் கலி மிக்க செந்நெல் –வலி மிக்க சீயம் போல் ஸிம்ஹம்
இங்கு பண் தரு மாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய் மாதமாய் விண்டிட எங்கள் ராமானுஜ முனி வெள்ளம் மெய்ம்மை கொண்ட நல் வேதக் கொழுந்தண்டம் ஏந்திக் குவலயத்தே மண்டி வந்தேன்றது வாத்தியார்கள் உங்கள் வாழ்வற்றதே -போல் மதயானையாக உருவகம்

அஸாரம் ஸம்ஸாரம் பஹுலதர துக்கா கரம் இமம்
விஸ்ருஜ்ய ஸ்ரீ மந்தம் பஜத விபுமாநந்தபரிதம்
உதாரஸ் ஸர்வேப்யோ விதரதி ஜநா ஸ்வேந ஸமதாம்
அஸாவித் யத்ரத் யாநுபதிஸதி கூராதிப குரு
–27-

ஹே ஜநா –ஓ மக்களே
கூராதிப குரு –கூரத்தாழ்வானாகிய ஆச்சாரியர்
பஹுலதர துக்கா கரம்–மிகவும் அதிகமான துன்பங்களுக்குப் பிறப்பிடமானதும்
அஸாரம் -ஸாரமான ஆனந்தம் சிறிதும் இல்லாததுமான
ஸம்ஸாரம் இமம் இந்த உலக வாழ்க்கையை
விஸ்ருஜ்ய –அறவே விட்டுத் தொலைத்து
ஆநந்த பரிதம் –ஆனந்தம் நிறைந்தவனாய்
விபும் -எல்லாம் வல்லவனான
ஸ்ரீ மந்தம் –திருவின் மணாளனான திருமாலை
பஜத –அடையுங்கள்
உதாரஸ் அசவ் –கொடையாளியாகிய அத் திருமால் ஸர்வேப்யோ -இன்னார் இனையார் என்று பாராமல் தன்னை அடைந்த அனைவருக்கும்
ஸ்வேந ஸமதாம் –தன்னோடே ஒப்புமையை -சமானமான ஆனந்தத்தை
விதரதி –அளிக்கிறான்
இதி -என்று
அத்ர த்யாம் -இவ்வுலகில் உள்ள மக்களைக் குறித்து
உபதிஸதி–உபதேசிக்கிறார்

தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்குத் தம்மையே ஓக்க அருள் செய்வர் –பெரிய திருமொழி –11-3-5-

——————–

விரக்தா நாமக்ர்யோ விமல சரிதோ வைதிக வர
விநேதா ஆசாராணாம் விகத மத மோஹாதிம குண
அஸூயா நிர்முக்த ஸமதம முகாநந்த ஸூகுண
ஸதாஸ்ரோத்ரா நந்தம் கலயதி பரம் கூர ந்ருபதி
–28-

விரக்தா நாம் –ஆசை யற்றவர்களில்
அக்ர்யோ –முதல்வரும்
விமல சரிதோ –குற்றமற்ற நடத்தை யுடையவரும்
வைதிக வர –வேதத்தைப் ப்ரமாணமாகக் கொள்பவர்களில் சிறந்தவரும்
ஆசாராணாம்-அவ்வேதத்தில் கூறப்பட்ட ஆசாரங்களை
விநேதா –சிஷ்யர்கள் அனுஷ்ட்டிக்கும் படி செய்பவரும்
விகத மத மோஹ ஆதிம குண –செருக்கு அறியாமை முதலான கெட்ட குணங்கள் இல்லாதவரும்
அஸூயா நிர்முக்த –பொறாமையினால் விடப்பட்டவரும்
ஸம தம முகாநந்த ஸூகுண –மனவடக்கம் புலன் அடக்கம் முதலிய எல்லையில்லாத நற் குணங்களை உடையவருமான
கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
ஸதா-எப்போதும்
ஸ்ரோத்ரா நந்தம் -செவிக்கு இனிமையை
கலயதி பரம் –மிகவும் உண்டாக்குகிறார்

ஆசிநோதி ஹி ஸாஸ்த்ரார்தாந் ஆஸாரேஸ்தாப யத்யபி ஸ்வயம் ஆஸரதே ஸோ அபிதீயதே –ஆசார்ய லக்ஷணம்

————

யதீயோஷா பாத்ரம் பஜதி மநுஜ ப்ரேம பததாம்
பரம் பத்மா பர்த்து பதித ஐந ஸூடாமணிரபி
யதீயா ஸ்ரீ ஸூக்தி நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி
ஸ ஜீயாத் கூரேஸ ஸகல ஸூப ஸந்தாந ஸரணி
–29-

யதீயோஷா பாத்ரம் –யாருடையதான பார்வைக்கு இலக்கான
மநுஜ-மனிதன்
பதித ஐந ஸூடாமணிரபி-ஜாதி ஆசாரங்களில் இருந்து நழுவி விழுந்தவர்களில் தலைவனாய் இருந்த போதிலும்
பரம் பத்மா பர்த்து–திருமகள் மணவாளனாகிய திருமாளுடைய
ப்ரேம பததாம் -அன்புக்கு இலக்காகும் தன்மையை
பஜதி -அடைகிறானோ
யதீயா ஸ்ரீ ஸூக்தி -யாருடையதான நல் வார்த்தையானது
நிகில நிகமாந்தார்த்த விவ்ருதி –எல்லா வேதாந்தப் பொருள்களுக்கும் விளக்க வுரை யாகிறதோ
ஸ -அந்த
ஸகல ஸூப ஸந்தாந ஸரணி –ஸகல மங்கள சமூஹத்திற்கும் வழியான -உபாயமான
ஸ ஜீயாத் கூரேஸ –கூரத்தாழ்வான் மேம்பட்டு விளங்குக

—————-

விஸூத்த ஜ்ஞாநாப்தி விகத மமகார ஸ்வ பரயோ
விநேதா ஸர்வேஷா மதி விமல போதஸ்ய விதுஷாப்
விஹர்த்தா ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ
ப்ரஹர்த்தா அசவ்ம்யாநாம் பவதி பவிநாம் கூர ந்ருபதி
–30-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
விஸூத்த ஜ்ஞாநாப்தி –மிகத் தூய்மையான அறிவுக்கு கடலாகவும்
ஸ்வ பரயோ-தன்னிடத்திலும் பிற பொருள்கள் இடத்திலும்
விகத மமகார –யான் என்னுடையவன் இவை எல்லாம் எனது -என்று செருக்குக் கழியப் பெற்றவராகவும்
ஸர்வேஷாம் விதுஷாம் -அறிவுடையார் அனைவருக்கும்
அதி விமல போதஸ்ய –தமது அறிவைப் போன்றே மிகவும் நிர்மலமான -தூய்மையான அறிவை
விநேதா -நன்றாக அடைவிப்பராகவும்
ஸ்ரீ ரங்கி ப்ரிய தமயதீஸாந பதயோ-ஸ்ரீ ரெங்கநாதனுடைய அன்பிற்கு மிகவும் இலக்காகிய யதிராஜருடைய திருவடிகளில்
விஹர்த்தா -விளையாடுமவராகவும்
அசவ்ம்யாநாம்-முரடர்களான
பவிநாம்-ஸம்ஸாரிகளை
ப்ரஹர்த்தா பவதி –துன்புறுத்துமவராகவும் இருக்கிறார் –

————-

புராணா நாம்பும் ஸாம் ஸரணி மநுயந் தத்த்வ விவ்ருதவ்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம் பரமதபாஸ்யந் நந்ருததாம்
பரா குர்வந் தத்த்வ ப்ரமிதபதயோ ஜீவ தமஸோ
ஸமிந்தே கூரேஸ ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம்
–31-

கூரேஸ–கூரத்தாழ்வான்
ப்ரக்ருத் யாத்மேஸாநாம்-மூல ப்ரக்ருதி ஜீவாத்மா பரமாத்மா என்ற மூன்றினுடையவும்
தத்த்வ விவ்ருதவ் -ஸத்யத்வத்தை விளக்குவதில்
புராணா நாம் பும் ஸாம் –பூர்வர்களான புருஷர்களுடைய
ஸரணி மநுயந் -வழியைப் பின் செல்லுமவராயும்
தத்த்வ ப்ரமிதபதயோ–உண்மைப் பொருள்கள் என்று வேதத்தின் மூலமாக அறியப்பட்ட பொருள்களாகிய
ஜீவ தமஸோ -ஜீவாத்மா மூலப்பிரக்ருதி என்ற இவற்றினுடைய
அந்ருததாம் –பொய்ப் பொருளாம் தன்மையை
பரா குர்வந் –மறுப்பவராய் -மறுப்பதில் வாயிலாக
பரமதம் –அத்வைத மதத்தை
அபாஸ்யந்–வெகு தூரத்தில் தள்ளுமவராயும்
ஸ்ருதி ஸிகர ஸந்தாந ஸரணம் — வேதாந்த வாக்ய ஸமூஹங்களை ரக்ஷிப்பவராய்க் கொண்டு
ஸமிந்தே –நன்றாக விளங்குகிறார்

பூர்வர்கள் -பராசர வ்யாஸ போதாய நாதி மஹரிஷிகள் என்ன -நம்மாழ்வார் நுதலிய ஆழ்வார்கள் என்ன -ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் ஆகிய ஆசார்யர்கள் என்ன –தத்வத்ரயமும் நித்யம் ஸத்யம் என்ற வேதாந்த வாக்கியங்கள் அனைத்தையும் காப்பாற்றிக் கொண்டு விளங்குகிறார்
தத்த்வ ப்ரமித பதயோ –என்ற இடத்திலுள்ள பதம் -கால் இடம் வஸ்து
தமஸ் -தமோ குணத்தை அதிகமாகப் பெற்ற மூல பிரக்ருதியைச் சொன்னவாறு –

—————-

ஸ்வரூபாபி வ்யக்திம் ஸ்ருதி ஸிகர ஸித்தாமபித தத்
நிரூப்யாம் வ்ருத்த்யை வாகில தநு ப்ருதாம்தாம் ச கதயன்
ததீ யார்ச்சா ஸீமாம் ஸ்வயமபி விதன்வந் யதி பதே
அசேஷம் கைங்கர்யம் ஜயதி ஸூமதி கூர ந்ருபதி
–32-

ஸூமதி கூர ந்ருபதி –நல்லறிவு படைத்த ஆழ்வான்
அகில தநு ப்ருதாம்–எல்லா ஸம்ஸாரி ஜீவர்களுடையவும்
ஸ்ருதி ஸிகர ஸித்தாம் –வேதாந்த ஸாஸ்த்ரத்தில் இருந்து தேறிய
ஸ்வரூபாபி வ்யக்திம் –இது வரையில் மறைத்து இருந்த ஸ்வரூபத்தை ப்ரகாசமான மோக்ஷத்தை
வ்ருத்த்யைவ –பகவத் கைங்கர்யத்தைக் கொண்டே
நிரூப்யாம்-அறுதியிடத் தக்கதாக
அபித தத் –கூறுமவராயும்
தாம் ச -அந்த வ்ருத்தியாகிய பகவத் கைங்கர்யத்தையும்
ததீ யார்ச்சா ஸீமாம் -பாகவத கைங்கர்யத்தைத் தனது எல்லையாக உடையதாக
கதயன்-சொல்லுமவராயும்
ஸ்வயமபி-தாமும்
யதி பதே -யதிராஜருடையதான
அசேஷம் கைங்கர்யம்-கைங்கர்யங்கள் அனைத்தையும்
விதன்வந் –பரக்கத் செய்பவராயும்
ஜயதி –மேம்ப்பட்டு விளங்குகிறார்

ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய் பரம் ஜ்யோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிபத்யதே
அபஹத பாப்மா விஜர விம்ருத்யு விசோக விஜிகத்ஸ அபிபாஸ ஸத்ய காம ஸத்ய ஸங்கல்ப —
யதிபதே-ஷஷ்ட்டி விபக்தி -யாதிபதிக்கு அபிமதமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் தம் கைங்கர்யம் ஆகிய மூன்றையும் நேராகவே குறிக்கும் என்றுமாம்

———

நிரா லம்பம் கௌதஸ் குதம ஸாரம் நிஜ வச
ப்ரபஞ்சை வேதாந்த ப்ரசுர பணி தார்த்தா நநுக தை
பரா குர்வன் ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர் லஷ்மண முநே
பரிஷ் குர்வன் பாஷ்யம் ப்ரதயதி மதம் கூர ந்ருபதி
–33-

கூர ந்ருபதி –கூரத்தாழ்வான்
வேதாந்த ப்ரசுர பணி தார்த்தாந் –உப நிஷத்துக்களில் ஒரு பொருளைப் பற்றிய பெரும்பாலான வாக்கியங்களின் அர்த்தங்களை
அநு கதை–பின்பற்றியவைகளும் -அதனால்
ப்ரவ்ட ப்ரமிதி ஜநகைர்–பரிபக்குவமான தெளிந்த அறிவை உண்டாக்குமவைகளுமான
நிஜ வச ப்ரபஞ்சை -தம்முடைய வார்த்தைகளின் பரப்பினால் -விளக்கமான பேச்சுக்களினால்
நிரா லம்பம் -ஆதாரம் ஏற்றதும்
அஸாரம்–ஸாரமான பொருள் அற்றதுமான
கௌதஸ் குத மதம் -ஏன் ஏன் என்று கேட்க்கும் -விதண்டா யுக்தி மாத்ர வாதிகளின் மதத்தை
பரா குர்வன் -மறுப்பவராயும்
லஷ்மண முநே -பகவத் ராமானுஜருடைய
பரிஷ் குர்வன் பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யத்தைப் ப்ரகாசப்படுத்துமவராயும்
லஷ்மண முநே மதம் -ஸ்ரீ ராமானுஜ முனிவரின் மதத்தை
ப்ரதயதி -ப்ரஸித்தமாக்குகிறார் –

கிம் சாதன க்வ நிவசந் கிம் உபாதநாந
கஸ்மை பலாய ஸ்ருஜதீச இதம் சமஸ்தம்
இத்யாதி அநிஷ்டித குதர்க்கம் அதர்க்கயந்த
த்வத் வைபவம் சுருதி வித விது அப்ரதர்க்யம்
–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்38-

பகவான் எதை சாதனமாகக் கொண்ட எவ்விடத்தில் இருந்து கொண்டு எப்பொருளை உதானமாகக் கொண்டு
எந்தப் பலனுக்காக இவ்வுலகங்களை எல்லாம் படைக்கிறான் -என்று இப்படி எல்லாம்
அமர்யாதமாகச் சிலர் செய்யும் குதர்க்கங்களைச் சிறிதும் பொருள் படுத்தாத வேதாந்திகள் –
எம்பெருமானே -தேவரீருடைய வைபவத்தை அப்ரமேயமாக அறிந்துள்ளார்கள்

யஸ் ஸர்வஞ்ஞஸ்
பரா அஸ்ய சக்தி விவிதைவ ஸ்ரூயதே
ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஸ்வே மஹிம்நி ப்ரதி டித
க்ரீடதோ பாலகஸ்யேவ சேடாம் தஸ்ய நிசாமய -விஷ்ணு புராணம் -1-2-18-

—————

பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித
ப்ரகாமமது ராக்ஷரைரபி நவை ஸ்வ வாக் கும்பநை
ஸதாவ்ய வஹரந்கலா ஸமிதி ஸாத்த்வி காக்ரேஸராந்
தநோதி பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் கூரப —
34-

கூரப –கூரத்தாழ்வான்
பிரவால ருசிராத ரஸ் புரித சாரு மந்த ஸ்மித –பவழம் போல் அழகிய உதடுகளில் விளங்குகிற அழகான புன் சிரிப்பை உடையவராய்
ப்ரகாமமது ராக்ஷரைர் –மிகவும் இனிமையான எழுத்துக்களைக் கொண்டவர்களும்
அபி நவை –இதற்கு முன்பு கேட்டிராதவைகளுமான
ஸ்வ வாக் கும்பநை –தமது சொற்களின் சேர்க்கைகளால்
ஸமிதி–வாதப்போரில்(ஸமித் -யுத்தம் -இங்கு வாத யுத்தம்)
ஸதா–எப்போதும்
கலா -ஸாஸ்த்ர அர்த்தங்களை
வ்ய வஹரந்–தெரிவித்துக் கொண்டு
ஸாத்த்வி காக்ரேஸராந் -ஸத்வ குணம் படைத்தவர்களின் தலைவர்களை
பஹு விஸ்மயாதி ஸய சித்ரிதாந் –பலவகைப்பட்ட ஆஸ்சர்யங்களின் மிகுதியினால் சித்திரத்தில் எழுதப்பட்டவர் போல்
தநோதி –செய்கிறார்

திரண்டு எழு தழை மழை முகில் வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தால் ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்கா புடை பெயரா வெழுது சித்திரங்கள் போலே நின்றனவே -3-6-9- –

—————-

கதாஹவக்ருதோத் யமாந் கலிமலாநுலிப்தாஸயாந்
ததாக தமதாநுகாந் ததிதராந் த்விஷத்வாதி ந
முதாக்ருத பரிஸ்ரமாந் முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்
விதாய விபுதஸ்துதோ ஜயதி கூர நாதோ குரு –
-35-

கூர நாதோ குரு –கூர நாதர் என்னும் ஆச்சார்யர்
கலி மல அநுலிப்த ஆஸயாந்–காளியின் குற்றத்தினால் கெடுக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாய்
கத ஆஹவ க்ருதோத் யமாந் –வாதமாகிய போரிலே மூண்டவர்களான
ததாக தமதாநுகாந் –புத்தனுடைய மதத்தை பின்பற்றியவர்களையும் (ததாகத -புத்தன் )
ததிதராந் –அவர்களை விட வேறான
த்விஷத்வாதி ந –எதிரிகளாய் வாதம் செய்யுமவர்களையும்
முகுலிதாத்மவாக் ஜ்ரும்பணாந்-மூடப்பட்ட தமது பேச்சின் வளர்ச்சியை யுடையவர்களாயும்
முதாக்ருத பரிஸ்ரமாந் –பயன் அற்றதாகச் செய்யப்பட தமது உழைப்பை யுடையவர்களாகவும்
விதாய –செய்து
விபுத ஸ்துதோ ஜயதி -ஸாத்விக பண்டிதர்களால் ஸ்துதிக்கப்பட்டவராய்க் கொண்டு மேம்பட்டு விளங்குகிறார்-

——————-

நிராக்ருதது ரீஹிதை நிகம ஸார ஸந்தர்ஸிபி
நிரஸ்தது ரிதாலிபி நிகில ஸம்ஸயச் சேதி பிர்
நிதாந்த்தை மதுரைஸ் ஸூபை நிகில சவுக்ய ஸம்பாதகை
நிஜைர் வசந கும்பநை ஜயதி கூர நாதோ குரு –
-36-

கூர நாதோ குரு –ஆழ்வானாகிய ஆச்சார்யர்
நிகம ஸார ஸந்தர்ஸிபி –வேதாந்தங்கள் ஸாரார்த்தங்களை அறிவிப்பனவும்
நிகில ஸம்ஸயச் சேதி பிர் –எல்லா சந்தேகங்களையும் அறுக்க வல்லனவும்
நிதாந்த்தை மதுரைஸ் –மிகவும் இனியனவாகவும்
ஸூபை –நன்மை பயப்பனவாகவும்
நிகில சவுக்ய ஸம்பாதகை –எல்லா விதமான சவுக்யத்தை உண்டாக்குவனவும்
நிராக்ருத துரீஹிதை –போக்கடிக்கப்பட்ட மாறுபட்ட கருத்துக்களை யுடையனவும்
நிரஸ்த துரிதாலிபி –மாறுபட்ட கருத்து உண்டாவதற்குக் காரணமான பாப ஸமூஹத்தைத் தூக்கி எறிவனவாவுமான
நிஜைர் –தம்முடைய
வசந கும்பநை –ஸ்ரீ ஸூக்திகளின் சேர்த்திகளால்
ஜயதி -வெற்றி பெறுகிறார்-

—————

கலிர் ஹதபவோ அபவத் கலுக்ஷ ஜாதமுந் மூலிதம்
தமஸ் ச ரஜஸா ஸமம் விலய மாப ஸத்த்வம் புந
ஸமேத் யுபசிதம் ந்ருணா முதயமேதி தீ வல்லரீ
மஹீதல முபாகதே மஹதி கூர நாதே குரவ்-
-37-

மஹதி கூர நாதே குரவ்–கூரத்தாழ்வானாகிற மஹாச்சார்யார்
மஹீதல முபாகதே –பூமியை அடைந்த அளவிலே
கலிர் ஹதபவோ –கலியுகமானது நாசம் செய்யப்பட உண்மையை யுடையதாக
அபவத்–ஆயிற்று –
எப்படி எனில்
கலுக்ஷ ஜாதம் –பாப ஸமூஹமானது
உந் மூலிதம் –வேரோடு களைந்து எறியப்பட்டது
தமஸ் ச ரஜஸா ஸமம் –தமோ குணம் ரஜோ குணத்தோடு
விலய மாப –அழிவை அடைந்தது
ஸத்த்வம் புந –ஸத்வ குணமோ என்னில்
ஸமேத் யுபசிதம் –வளர்ச்சியை மிகவும் அடைந்து கொண்டே இருக்கிறது
அதனால்
தீ வல்லரீ –அறிவு என்னும் கொடியானது
உதயமேதி –வளர்ச்சியை அடைகிறது

கலியும் கெடும் -கண்டு கொண்மின் –அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே நாயனாருக்கு ஆளாயினரே -க்ருதயுக தர்மமான ஸத்வ குணம் வளர்ந்து ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றனர்-

————-

தயாதி ஸூகுணா வலி தநுஜ வைரிணா ஸ்வாமிநா
நியாந்த்ரித நிஜாக்ருதி நிலயமேத்ய கூராதிபம்
ப்ரதி க்ஷண விஜ்ரும்பிதாக்ருதிரவாப்ய லஷ்யம் பரம்
ப்ரகாஸ மதி கச்சதி ப்ரதி ஹதாத்ம துலயாதிக
–38-

தநுஜ வைரிணா–அஸூர ஸத்ருவான
ஸ்வாமிநா–எம்பெருமானாலே
நியாந்த்ரித நிஜாக்ருதி –குறைக்கப்பட தத் தம் வடிவுகளை யுடைய
தயாதி ஸூகுண ஆவலி –தயை முதலிய நற் குணங்களின் கூட்டமானது
நிலயமேத்ய கூராதிபம் –கூரத்தாழ்வானாகிற ஒளி விடத்தை அடைந்து
ப்ரதி க்ஷண விஜ்ரும்பித ஆக்ருதிர் –க்ஷணம் தோறும் வளர்ந்த தத்தம் வடிவுகளை யுடையதாய்
அவாப்ய லஷ்யம் பரம் –வளர்ச்சியில் உயர்ந்த குறிக்கோளை அடைந்து
ப்ரதி ஹதாத்ம துலயாதிக–தன்னோடு ஓத்ததும் மிக்கதுமான குணத்தொகுதி மற்று ஓன்று இல்லாதாய்க் கொண்டு
ப்ரகாஸ மதி கச்சதி –விளக்கத்தை அடைகிறது
தயாதி –ஆதி சப்தத்தால் வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம் உதாரகுணம் போன்றவற்றையும் சொன்னவாறு-

————–

ஸ்ரீ யபதி உதாரதீ ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம்
விஹாய பரமேஸதாம் புவி யதாத்மநா ஆசார்யதாம்
அவாப்து மவதீர்ய தத் ஸமுப லப்தயே ஸிஷ்ய தாம்
அவாப யதி பூபதே விஜயதாம் ஸ கூராதிப —
39-

ஸ்ரீ யபதி உதாரதீ –உயர்ந்த திரு உள்ளம் கொண்ட ஸ்ரீ மந் நாராயணன்
ஸ்ருதி கணைக கண்ட் யேடிதாம் –வேத வாக்ய ஸமூஹத்தினால் ஒரு மிடறாக ஸ்தோத்ரம் செய்யப்பட
விஹாய பரமேஸதாம் –மிக உயர்ந்த ஸர்வேஸ்வரத் வத்தை விட்டு ஒழித்து
ஆசார்யதாம் அவாப்தும் –ஆச்சார்யத்வத்தை அடைவதற்காக
புவி யதாத்மநா வதீர்ய –பூமியில் யாருடைய வடிவுடையவனாக அவதரித்து
தத் ஸமுப லப்தயே -அவ்வாச்சர்யத்வத்தைப் பூர்ணமாகப் பெறுவதற்காக
யதி பூபதே -யதிராஜரான எம்பெருமானாருக்கு
ஸிஷ்ய தாம் –சிஷ்யராக தன்மையை
அவாப்ய –அடைந்தானோ
விஜயதாம் ஸ கூராதிப –அந்தக் கூரத்தாழ்வான் வெற்றி பெற்றிடுக-

————-

வஸோபிர் அந்ருதேதரை அகில ஜீவ ஜீவாதுபிர்
முமுஷு ஜநதாமுதே முரரிபோர் மஹா வைபவம்
ஸ பாஷப நயநம் ப்ருவந் ஸ புல கோத்கமம் ஸாதரம்
ஸமித்த மதுரஸ்மிதோ ஜயதி கூர ப்ருத்வீ பதி
–40-

கூர ப்ருத்வீ பதி –கூரத்தாழ்வான்
அகில ஜீவ ஜீவாதுபிர் –எல்லா ஜனங்களுக்கும் ஜீவ ஒவ்ஷதமாய்
வஸோபிர் அந்ருதேதரை –பொய்யில்லாத-ஸத்யமான -வேத வாக்யங்களைக் கொண்டு -பொய்யில் பாடலான திருவாய் மொழி முதலியவற்றைக் கொண்டு
முரரிபோர்-முர அசுரனை அழித்த எம்பெருமானுடைய
மஹா வைபவம் –மிக உயர்ந்த பெருமையை
முமுஷு ஜநதாமுதே –முக்தி பெற விரும்பும் மக்களின் மகிழ்ச்சிக்காக
ஸ பாஷப நயநம் –கண்ணீர் பெருகும் கண்களோடும்
ஸ புல கோத்கமம் –மயிர் கூச் செறிதலோடும்
ஸமித்த மதுரஸ்மிதோ -மிக விளங்கிய இனிய புன் சிரிப்பை யுடையவராய்க் கொண்டு
ஸாதரம் –ப்ரீதியோடே
ப்ருவந் –பேசுமவராய்
ஜயதி –மேம்பட்டு விளங்குகிறார்-

————–

பவாக்ய மருமேதி நீவலந ஜாததாபாதுராந்
ஜநாந் ஹரி கதாம்ருதை மதுர ஸீதலைர் ஜீவயன்
ததீய பத ஸேக்ஷ தாதி யமபாரமுத்பாத யந்
விபாதி புவி கூரராட் விபுத சங்க ஸம்ஸேவித
–41-

கூரராட்–கூரத்தாழ்வான்
பவாக்ய மருமேதி நீவலந ஜாத–ஸம்ஸாரம் என்று பெயர் பெற்ற பாலை நிலத்தில் ஸஞ்சரிப்பதனால் உண்டான்
தாப ஆதுராந் –தாபத்தினால் வருந்திய
ஜநாந் –மக்களை
மதுர ஸீதலைர் –இனியவனாய்க் குளிர்ந்தவையுமான
ஹரி கதாம்ருதை –பகவத் கதைகளாகிற அமுதப் பெருக்குகளால்
ஜீவயன் –பிழைப்பிப்பவராயும்
ததீய பத ஸேக்ஷ தாதி யம் –ஜீவாத்மாக்கள் அவ்வெம்பெருமான் அடியார்களுடைய அடியவர்களுடைய திருவடிகளுக்கு அடியவர்கள் என்னும் அறிவை
அபாரம் உத்பாத யந் –அதிகமாக உண்டாக்குமவராயும்
விபுத சங்க ஸம்ஸேவித –வித்வத் கோசடியினால் ஸேவிக்கப் பெற்றவராய்
விபாதி புவி –பூமியில் விளங்குகிறார்

அழகிய மணவாளன் திருவேங்கடமுடையான் பேர் அருளாள பெருமாள் மூவரும் தமது அடியரான திருப்பாண் ஆழ்வார் தொண்டைமான் சக்ரவர்த்தி எம்பெருமானார் ஆகிய மூவரையும் முன்பே தமக்கு அடியவராய் இருக்கிற லோக ஸாரங்க மா முனிகள் -குறும்பறுத்த நம்பிகள் -திருக்கச்சி நம்பிகள் என்னும் மூவருக்கும் அடியவைகளாக ஆக்கி இவ்வர்த்தம் காட்டி அருளினார்கள் அன்றோ-

————

அஸத்பிர் அநுபத்ருதாம் அநிதமாதி வாணீம் ஸதீம்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் ஹரி பதாநு ஷக்தாம் பரம்
ஜநார்தன பரத்வ தீ ஜநித பாவ பத்தாஸயை
வஸோபி ருபலாலயந் ஜயதி கூர நாதோ குரு –
-42-

கூர நாதோ குரு –கூரேசர் என்றும் ஆசாரியர்
அநிதமாதி வாணீம் -இது தான் பிறந்த காலம் என்பது இல்லாத -அநாதியான -வேத வாக்கை
ஜநார்தன பரத்வ தீ ஜநித –எம்பெருமானையே பரம் பொருளாகக் கொண்டது வேதம் என்னும் அறிவினால் உண்டு பண்ணப்பட்ட
பாவ பத்த ஆஸயை –மனதில் ஊன்றிய கருத்தைத் தெரிவிக்கிற
வஸோபி–தமது ஸ்ரீ ஸூக்திகளினால்
ஸதீம் -பதி வ்ரதையாகவும்
அஸத்பிர் –அசத்துக்களான புறச் சமயிகளாலே
அநுபத்ருதாம்–தமக்குத் தோற்றிய படி எல்லாம் பொருள் சொல்லிக் கெடுக்கப் படாததாகவும்
அனன்ய பத ஸம்ஸ்ரிதாம் -மற்ற ஒரு தேவர்களின் காலில் குனியாததாகவும்
பரம்-மிகவும் மேம்பட்ட
ஹரி பதா அநு ஷக்தாம் –எம்பெருமான் திருவடிகளிலே ஆசை கொண்டதாகவும்
உபலாலயந் ஜயதி –உபதேசித்திக் கொண்டாடப்படுமவராய் மேம்பட்டு விளங்குகிறார்-

—————-

அநந்த குண மவ்க்திகை அகில சேதநா மோதகை
அநந்த நய ஸாகராத் ஸ்வயமுபாஹ்ருதைஸ் ஸோபநை
அநந்த பத ஸம்ஸ்ரிதாநபி விபூஷயன் ஸோபதே
ஹ்யநந்த குண ஸேவதிர் ஜயதி கூர நாதோ குரு
–43-

அநந்த குண ஸேவதிர் –எல்லையில்லா நற் குணங்களுக்கு நிதியான
கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
அநந்த நய ஸாகராத் –எல்லையில்லா ஸாஸ்திரங்களாகிய கடலில் இருந்து
ஸ்வயம் –தானாகவே
உபாஹ்ருதைஸ் –எடுக்கப்பட்டவைகளும்
அகில சேதந ஆமோதகை-மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்டுவனவும்
ஸோபநை–நல்லவைகளுமான
அநந்த –நற் குணம் நிறைந்த எம்பெருமானுடைய
குண மவ்க்திகை –நற் குணங்களாகிய முத்துக்களினாலே
அநந்த பத ஸம்ஸ்ரிதாந் –எம்பெருமான் திருவடிகளை பற்றிய பக்தர்களை
அபி விபூஷயன் ஸோபதே ஹ்யஜயதி – –நன்றாக அலங்கரிப்பவராய்க் கொண்டு பிரகாசித்து விளங்குகிறார்-

———————–

அவாங் மநஸ கோசர அமல தயா குணைகாஸ் பதம்
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ ஸ்வயம்
யதீஸ்வர மகா பஹம் நிகில தேஹிநாம் தர்சயந்
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி கூர நாதோ குரு –
-44-

அவாங் மநஸ கோசர அமல தயா குண ஏகாஸ் பதம் –வாக்குக்கும் மனஸ்ஸூக்கும் எட்டாத குற்றமற்ற தயையாகிய குணத்துக்கு ஒரே கொள் காலமாகிய
கூர நாதோ குரு –ஆழ்வான் என்னும் ஆச்சார்யர்
ஸ்வயம்-தாமாகவே -யாரும் வேண்டாமல் –
குலாதி மத தூஷிதோத்த ரண பத்த தீக்ஷ –நற் குலப்பிறப்பு முதலியவற்றால் உண்டான செருக்கினால் கெடுக்கப் பட்டவர்களை ,மோக்ஷம் அடைவிப்பதில் விரதம் பூண்டவராய்
நிகில தேஹிநாம் –எல்லா மக்களுக்கும்
யதீஸ்வரம் –யதிராஜரான எம்பெருமானாரை
அகா பஹம் –பாபம் போக்கி மோக்ஷம் அடைவிப்பராக -உத்தாரக ஆச்சார்யராக
தர்சயந் –காட்டுமவராய்க் கொண்டு
விலக்ஷண ஜநாஸ்ரிதோ ஜயதி –உயர்ந்த ஜனங்களால் அடையப்பட்டு மேம்பட்டு விளங்குகிறார் –
தயா குண ஏக ஆஸ்பதம் என்பதால் ஆழ்வானுடைய தயை எம்பெருமானுடைய தயையைக் காட்டிலும் மேம்பட்டது என்றவாறு-

———

யதீஸிதுரதீ ஸதாம ஸஹதோ அபி ரங்க அம்ருதாத்
ஸ்வகைஸ் ஸம முகை
குண ஸ்வபத ஸிஷ்யதாமே யுஷா
குரோஸ் ஸமுபலப் தயா நிகில யாபி ரங்கஸ்ரியா
யதீஸமபி நந்த யந் ஜயதி கூர நாதோ குரு
–45-

கூர நாதோ குரு –கூரத்தாழ்வானாகிய ஆசார்யர்
யதீஸிதுர் –யதிராஜரான எம்பெருமானுடைய
அதீ ஸதாமபி -மஹா ஆசார்யத்வத்தையும்
அஸஹதோ -பொறுக்காதவராய்
ஸ்வகைஸ் ஸம முகை குண –தம்முடையவையான சாந்தி முதலிய குணங்களினாலே
ஸ்வபத ஸிஷ்யதாம் –தம் திருவடிகளில் சிஷ்யராய் இருத்தலை
ஏயுஷ-அடைந்தவருமான
ராங்க அம்ருதாத் குரோஸ் –திருவரங்கத்து அமுதனார் என்ற ஆசார்யரிடம் இருந்து
ஸமுபலப் தயா -பெறப்பட்ட
நிகில யாபி ரங்கஸ்ரியா –ஸமஸ்த மான ஸ்ரீ ரெங்க ஐஸ்வர்யத்தாலும்
யதீஸம் -எம்பெருமானாரை
அபி நந்த யந் ஜயதி –மிகவும் மகிழ்விப்பவராய் விளங்குகிறார்
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே -ஆர்த்தி பிரபந்தம் -31
குரும் பிரகாசயேத் தீ மான் –அமுத்தனாரைத் திருத்தி எம்பெருமானாருக்கு ஆளாக்கி பிரபன்ன காயத்ரியையும் அருளிச் செய்ய அருளினை பெருமை
ஆக 28 ஸ்லோகம் தொடங்கி இது வரை 18 ஸ்லோகன்களால் ஆழ்வானுடைய பெருமைகளை அருளிச் செய்தார் ஆயிற்று-

————

அநர்க விபுலாம் ஸூவ ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத
கிரீட கடகாதிபிர் விவித பூஷணைர் பூஷித
ஸமா வஹதி கூர ராட் அகில லோக நேத்ரோத்ஸ வம்
–47-

அநர்க விபுல அம் ஸூவ –விலை மதிப்பில்லாத பெரிய திருப்பரிவட்டங்களை அணிந்தவரும்
ஸூலஸ தூரத்வ புண்ட்ரங்கித –பளிச்சு என்று விளங்குகிற திருமண் காப்புக்களால் உண்டான ஸ்ரீ வைஷ்ணவ குறியை யுடையவரும்
ஸரோஜ துளஸீ மணி ப்ரசுர மாலிகா லங்க்ருத –தாமரை மணி துளஸீ மணிகள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப் பட்டவரும்
கிரீட கடகாதிபிர் கிரீடம் காப்பு முதலிய
விவித பூஷணைர் பூஷித –பல வகையான திரு ஆபரணங்களால் பூஷிக்கப் பட்டவருயுமாய்க் கொண்டு
கூர ராட் –கூரத்தாழ்வான்
அகில லோக நேத்ரோத்ஸ வம் –மக்கள் அனைவரின் கண்களுக்கு ஸந்தோஷத்தை
ஸமாவஹதி –உண்டாக்குகிறார்

இது முதல் மேல் ஐந்து ஸ்லோகன்களால் அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹ அனுபவமும் திருத் தை திரு ஹஸ்த அவதார உத்ஸவ மகிமையையும் அருளிச் செய்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டி அருளுகிறார்-

—————-

மஹார்க மகுடோஜ்வல ஸ்புரது தாரீ ஹாராவலி
விலோல மணி குண்ட லோல் லஸித பீந கண்டஸ்தல
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித
விபாத மது ராக்ருதி ஜயதி கூரராட் தேஸிக
–47–

விபாத மது ராக்ருதி -மிக விளங்குகிற –காண்பதற்கு இனிய திரு மேனியை உடையவரான
கூரராட் தேஸிக –கூரத்தாழ்வான் என்னும் ஆச்சார்யர்
மஹார்க மகுடோஜ்வல –பெரு விலையனான திரு அபிஷேகத்தினால் விளங்குமவராகவும்
ஸ்புரத் உ தாரீ ஹார ஆவலி –மின்னுகின்ற பெரிய முத்து மாலைகளின் வரிசைகளை அணிந்தவரும்
விலோல மணி குண்டல உல் லஸித பீந கண்டஸ்தல –அசைகின்ற ரத்ந குண்டலங்களாலே ஒளி வீசப் பெற்ற பருத்த கன்னங்களை யுடையவராகவும்
விசித்ர குஸூமா வலீ கலித திவ்ய மால் யாஞ்சித -பல நிறமுள்ள மலர்த் தொகுதிகளால் தொடுக்கப் பட்ட மாலைகளினால் அலங்கரிக்கப் பற்றவராகவும்
ஜயதி -மேம்பட்டு விளங்குகிறார்-

———————–

உபாருடே பாநாவுதய மதி ருஹ்யாநு திவஸம்
விசித்ரா மாந்தோ லீம் விவித மணிபிர் காஞ்சந மயீம்
அலங்குர்வந் வீதீ அநு பத க்ருதா கல்ப ஸூபகா
ஸமிந்தே கூரேஸோ மகர மஹ காலே அதிருசிர
–48-

கூரேஸோ–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே–தைமாத உத்ஸவ சமயத்தில்
யநு திவஸம் -ஒவ்வொரு நாளும்
உபாருடே பாநாவுதய -ஸூர்யன் உதயத்தை அடைந்த அளவில்
விவித மணிபிர்–பலவகையான ரத்னங்களால்
விசித்ராம் –பல வர்ணங்களை யுடையதான
காஞ்சந மயீம் -ஸ்வர்ண மயமான
ஆந்தோ லீம் –திருப் பல்லக்கை
அதிருஹ்ய –ஏறி வீற்று இருந்து
அதிருசிர –முற் கூறிய இருவகை அழகுகளும் மிகப்பெற்றவராய்
அநு பத க்ருத ஆகல்ப ஸூபகா –அடி தோறும் செய்யப்பட கோலம் வாழை மரம் பாக்குமரம் மாலிலைத் தோரணம் முதலிய அலங்காரங்களால் அழகு பெற்று இருக்கிற
வீதீ-திரு வீதிகளை தமது புறப்பாட்டினால்
அலங்குர்வந் ஸமிந்தே –அலங்கரித்துக் கொண்டு மிகவும் பிரகாசிக்கிறார்

———————–

ஸமாஸ்தாய ஸ்ரீ மாந் நிஸி புஜா போக்ய மதுலம்
மஹாயாநம் ப்ரஹ்ம ப்ரபமகில பூஷாஞ்சிததநு
த்ரயீ காதா ஸக்தைர் நிபிட ஸவிதோ வைஷ்ணவ வரை
சரந் ஸ்ரீ வத்சாங்கே ஜயதி விஸிகாம் கூர நகரே –
-49-ஸ்ரீ மாந் ஸ்ரீ வத்சாங்கே–திருவாளரான கூரத்தாழ்வான்
கூர நகரே –கூரம் என்னும் நகரத்தில்
நிஸி நிஸி–இரவுகள் தோறும்
ஸமாஸ்தாய புஜா போக்ய மதுலம்
அகில பூஷா அஞ்சிததநு –ஸமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்ட திருமேனியை யுடையவராய்
ப்ரஹ்ம ப்ரபம் -ப்ரஹ்ம தேஜஸ்ஸை உடையதும்
அதுலம் -நிகரற்றதும்
புஜா போக்யம் மஹாயாநம் –தோளுக்கு இனியான் என்ற பெரிய வாஹனத்தை
ஸமாஸ்தாய –ஏறி வீற்றிருந்து
த்ரயீ காதா ஸக்தைர் –ருக் யஜுஸ் ஸாம வேதங்களைப் பாடுவதில் ஊற்றமுள்ள
வைஷ்ணவ வரை –ஸ்ரீ வைஷ்ணவ உத்தமர்களாலே
நிபிட ஸவிதோ –நெருக்கமுடைய ஸமீப ப்ரதேசத்தை யுடையராய்க் கொண்டு
சரந் ஜயதி விஸிகாம் –பெரிய தெருவில் எழுந்து அருளுமவராய் விளங்குகிறார் –
மஹா யாநம் -புஜா போக்யம் -இரண்டையும் சேர்த்து பெரிய தோளுக்கு இனியான் –மங்கள கிரி என்றுமாம்-

————

ஸதாம் பூலைந்தை குஸூம ஸஹிதை க்ஷய நிவஹை
குடாந் நாத்யை ரந்நைரபி நிஜ மஹாஸ்வாதா மஹிதை
க்ருதார்த்தா நாதந்வந் நிகில மநுஜாந் கூர ந்ருபதி
ஸ்வ ஜந்மர்ஷே ஹஸ்தே மகர மஹ காலே விஜயதாம்-
-50-

கூர ந்ருபதி–கூரத்தாழ்வான்
மகர மஹ காலே-தைமாத யுத்ஸவ சமயத்தில்
ஸ்வ ஜந்மர்ஷே –தமது திரு அவதார நக்ஷத்திரமான
ஹஸ்தே –ஹஸ்தத்திலே
நிஜ மஹாஸ்வாதா மஹிதை –தாம் அனுபவித்துச் சிறப்பிக்கப் பட்டவைகளான
ஸதாம் பூலை-வெற்றிலை பாக்குக்களோடு கூடியவைகளும்
குஸூம ஸஹிதை–புஷபங்களோடு கூடியவைகளுமான
கந்தை –சந்தனங்களாலும்
குடாந் ந ஆத்யை–சக்கரைப்பொங்கல் முதலான
அந்நைரபி –ப்ரஸாதங்களாலும்
பஷ்ய நிவஹை –பஷண ஸமூஹங்களாலும்
நிகில மநுஜாந் -மக்கள் அனைவரையும்
க்ருதார்த்தாந் ஆதந்வந் –தன்யர்களாக ஆக்குமவராய்க் கொண்டு
விஜயதாம்-வெற்றி பெற்று வாழ்க

ஜய ஜய -என்று முதலில் செய்த மங்களா ஸாஸனத்தை விஜயதாம் என்று நிகமித்து அருளிச் செய்கிறார்

————–

ஸ்ரீ மதா ஸூத்த ஸத்வேந தொட்டார்யேண மஹாத்மநா
பஞ்சாஸத் கூர நாதஸ்ய ஸ்தோத்ர மீரிதம் உத்தமம்

ஸூத்த ஸத்வேந–ஸூத்த ஸத்த்வம் என்று கூறப்படும் வம்சத்தில் தோன்றியவராய்
மஹாத்மநா -பரந்த மனம் படைத்தவராய்
ஸ்ரீ மதா தொட்டார்யேண –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யால் நிறைந்தவருமான தொட்டாச்சார்யராலே
கூர நாதஸ்ய–கூரத்தாழ்வான் விஷயமான
பஞ்சாஸத் ஸ்தோத்ர மீரிதம் உத்தமம் –50 ஸ்லோகங்களைக் கொண்ட மிக உயர்ந்த ஸ்தோத்ரமானது விண்ணப்பிக்கப்பட்டது
கன்னட மொழியில் தொட்ட -என்பது பெரிய என்னும் பொருள் யுடையது


—————————————–

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

  1. அமானித்வம் – பணிவு
  • இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
  • முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
  1. அதம்பித்வம் – செறுக்கின்மை
  • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
  1. அஹிம்ஸா – வன்முறையின்மை
  • ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
  1. க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
  • எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
  • இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
  1. ஆர்ஜவம் – நேர்மை
  • ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
  • பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
  1. ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
  • எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
  1. சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

  • சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
  1. ஸ்தைர்யம் – மன உறுதி
  • “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
  1. ஆத்ம-வினிக்ரஹ: – சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
  • அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
  • எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
  1. இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
  • திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
  1. அனஹங்கார – தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
  • மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான்  அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
  1. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் – எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
  • ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
  1. அஸக்திர் – பற்றின்மை
  • எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
  1. புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க– குழந்தைமனைவி வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
  • அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
  • ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
  • இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
  1. இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம்  ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
  • கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
  1. மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
  • மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
  1. விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
  • ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
  1. அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
  • சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
  1. அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
  • தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
  1. தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
  • அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

முடிவுரை

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

—————–————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வம் தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஸர்வஞ்ஞ பட்டர் என்கிற ஸ்ரீ நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம்

February 13, 2024

மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி
சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்.

பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும் நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது. அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில் ஆசார்ய பூர்த்தியுள்ள  மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால், பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர். நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார். மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.

திருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில் மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.

நாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார்.  அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார். இந்த யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப்பற்றி அண்ணா வரவரமுநிசதகத்தில் அருளிசெய்துள்ளார்.

திராஜ விம்சதியின் அவதாரிகை

இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில் தம்முடைய ஆசார்யராகிய மணவாளமாமுனிகளை அநுபவித்து, நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா, பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும் ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து, புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொறு வகையை இப்போது சொல்ல விரும்பியவராய், மணவாளமாமுனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப எம்பெருமானாரைப்பற்றி அருளிச்செய்த யதிராஜ விம்சதி என்ற க்ரந்தத்தை இங்கே அநுவாதம் செய்கிறார்.

பரமபூஜ்யரான மணவாளமாமுனிகள், ப்ரபந்நஜனகூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) நம்மாழ்வார் முதலான பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும், திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய – முடிந்தபொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம் (மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும், ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும் யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி, தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக, தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.

ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் இதன் உரையாசிரியர் திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து, இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க. விம்சதி = இருபது.

தனியன்

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜவிம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||

பதவுரை:- : – யாவரொருவர், யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான, யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ச்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய, ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை, வ்யாஜஹார – அருளிச்செய்தாரோ, ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான, தம் ஸௌம்யவர யோகிபுங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை), நௌமி – துதிசெய்கிறேன்.

கருத்துரை:- இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது. யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில் யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி. ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர். ப்ரபந்நஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து. யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்|
காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1

பதவுரை:- ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின்மணாளனுடைய தாமரைமலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க, நித்யஸேவா – ப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய, பராங்குஸ பாதபக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும், ஆத்மபத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய, காம ஆதி தோஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும், யதிபதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான, ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை, மூர்த்நா – தலையால், ப்ரணமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:- ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்” (பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார். ‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும். அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன, வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார் வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே, தம்மையடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம்மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும். குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும் ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு, அவர்தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை – பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால் ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது. திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)

—————

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் ஸ்ரீமத் பராங்குஸ பதாம் புஜ ப்ருங்க ராஜம் |
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் யதிராஜ மீடே || 2

பதவுரை:-

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும்,

ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரை மலர்களில் (தேனைப் பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,

ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரை மலர்களை மலரச்செய்கிற ஸூர்யன் போன்றவரும்,

ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் – ஸ்ரீவத்ஸசிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,

யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,

ஈடே – துதிக்கிறேன்.

கருத்துரை:-

துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)

[உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,

அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது]

என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது

அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால்,

பாகவத கைங்கர்யமாகிய யதிராஜவிம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,

அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி

யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் –

ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய்

அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.

அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற

ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது.

இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும்.

பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்

அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய –

ஜீவாத்ம ஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.

காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,

கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம்,

கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர்.

இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.

பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும்

அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.

ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை

இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.

ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய்,

முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும்,

புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல்,

எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.

இத்தகைய மென்மைத்தன்மையை

‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று

தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில்,

சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட

கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை

ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.

தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு

தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான்

எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.

முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.

இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாசிக மங்களம் செய்யப்படுகிறது.

வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின் கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் –

மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிக மங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத்தக்கது.

இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத் தொடங்குகிறார் மாமுனிகள் என்க. (2)

———–

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம்
|| 3

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, மநஸா – மனத்தினாலும், வாசா – நாவினாலும், வபுஷா  – தேஹத்தினாலும், யுஷ்மத் – தேவரீருடைய, பாதாரவிந்தயுகளம் – தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை, பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற, குரூணாம் – ஆசார்யர்களாகிய, கூராதிநாதகுருகேஸமுக ஆத்யபும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய், ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக, பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

கருத்துரை:- மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு, அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். கூராதிநாதர்-கூரத்தாழ்வான். குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான். முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க. குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும். மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும். இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும். பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால் பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும். அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால் கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)

————–

நித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||
-4-

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே, மே – அடியேனுடைய, மந: – மனமானது, தவ – தேவரீருடைய, திவ்யவபுஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில், நித்யம் – எப்போதும், ஸக்தம் – பற்றுடையதாக, பவது – இருந்திடுக. அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது, தவ – தேவரீருடைய, குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில், ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக. மே – அடியேனுடைய, கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும், தவ – தேவரீருக்கு, தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே, க்ருத்யம் – கடமையாக, அஸ்து – இருந்திடுக. மே – அடியேனுடைய, கரணத்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும், வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில், விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

கருத்துரை:- கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது. இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று. பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள். க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி. முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)

—————

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ரநாத |
ஸிஷ்டாக்ரகண்யஜநஸேவ்யபவத்பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

பதவுரை:- நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய, யதீந்த்ர – யதிராஜரே, அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில், அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில், மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு, அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள, பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய அநந்யார்ஹஸேஷத்வம், அநந்யஸரணத்வம், அநந்யபோக்யத்வம் (எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.) என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை, விதர – தந்தருளவேணும். ஸிஷ்ட அக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை, நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,  அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது, ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக, அஸ்து – ஆயிடுக.

கருத்துரை:- இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், ‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. ‘ஸ்ரீமந்யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் யதீந்த்ர தாஸகைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது. ‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில் முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது – ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும். நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன். ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும் நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து, பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப்பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன. ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன். ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று. மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது. இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)

——————

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: ஸப்தாதி போகருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ
|| (6)

பதவுரை:- தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே, ஆர்ய – ஆசார்யரே, யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே, மே – அடியேனுக்கு, பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது, அல்பா அபி – சிறிது கூட,  (அஸ்தி) – இல்லை, ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது, அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும், ஏததே – வளர்ந்து வருகிறது, ஹா – கஷ்டம், அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு, நிதாநம் – மூலகாரணம், மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும். அந்யத் ந – வேறொன்றுமன்று, தத் – அந்த பாபத்தை, வாரய – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ? இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால். தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால், எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும், எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது. ஆர்ய ஸப்தம் (1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது. (2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரமவைதிகர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் = அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது. வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே – தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டுபண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும். ‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் – பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது. ‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ, அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும் தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்; பின்னையோவென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

————-

வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே
|| (7)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, வஞ்சநபர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான, அஹம் – அடியேன், நரவபு: – மனிதவுடல் கொண்ட, பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே) வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே, (ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.) (உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக்கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.) ஈத்ருஸஅபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும், ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்மகுண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன், அயம் – இந்த மணவாளமாமுனிவன்’ இதி – என்றிவ்வாறாக, க்ருதிநஅபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட, ஆதரேண – மனமார்ந்த அன்போடு, மித: – தங்களில் ஒருவர்க்கொருவர், ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக, அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும், அத்ய – இப்போது, வர்த்தே – இருக்கிறேன். தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம் பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும். ‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால் மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து அப்படிச்சொல்லாமல், ‘ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால், ‘அத்தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத் தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க. அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத நாதயாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப்புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே, இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

————

து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|
| (8)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய், ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய், துஷ்டசேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) தவ – தேவரீருக்கு, து: ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற, அஹம் – அடியேன், த்வத் பாத பக்தஇவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல், சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில், மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன், தத: – அக்காரணத்தினால், மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன், தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால் அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால். யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி. ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய, ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி. ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம். து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது – ‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி. அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ, துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம். மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன். இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

—————-

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|
| (9)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும், மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும், தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும், நித்யம் து – எப்போதுமே, பரிபவாமி – அவமதிக்கிறேன். கிஞ்சித் அபி – சிறிதும்,  பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை. அஹோ – இது என்ன ஆஸ்சர்யம். இத்தம் – இவ்விதமாக, ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும், அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும், பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில், ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு, சராமி – ஸஞ்சரிக்கிறேன். தத: – அதனால் அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன். தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குருமந்த்ரதேவதைகளை வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து, இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல், பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம். மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம். மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும். இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில்  காண்க. அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும் தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

————-

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: ||
(10)

பதவுரை:- யதிராஜ – வாரீர் யதிராஜரே, ய: அஹம் – எத்தகைய அடியேன், மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால், த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும், ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ, ஸ:அஹம் – அத்தகைய அடியேன், தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு, அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு, ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே, காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன். ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன், தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும், ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும், ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும், பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி. பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம். பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவர்க்குப்பண்ணும் விரோதம் ஆகும். அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும். இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது. மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க. ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது. தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில் ‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப்பற்றிக் குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

——-

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே |
| (11)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே , பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது, மம – அடியேனுக்கு, பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும், பவந்தி யதி – உண்டாகுமேயானால், அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது, கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ? இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில், பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட, மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே, மே – அடியேனுக்கு, ந பவதி – உண்டாகிறதில்லை. தஸ்மாத் – அதனால், அகம் – பாவத்தை, புந: புந: – மறுபடியும் மறுபடியும், குர்வே – செய்துவருகிறேன்.

கருத்துரை:- ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால் பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம் என்று ஊஹித்து அருளிச்செய்கிறார். அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை. அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை. அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை நீக்கியருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும். அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக்கொள்ள வேணும்.

—————–

அந்தர்பஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ்ஸ்திதமிவாஹமவீக்ஷமாந: |
கந்தர்பவஷ்யஹ்ருதயஸ்ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரகமநஸ்ய யதீந்த்ர! நார்ஹ:
|| (12)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும், அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து, ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை, புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை, அந்த: இவ – குருடன் போல், அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு, (அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக, ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன். (ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு (அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை, ஹந்த – ஐயோ கஷ்டம்.

கருத்துரை:- ‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார். ‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய், உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய் தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி. யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும். காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி, அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும் இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால் அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

—————

தாபத்ரயீஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் |
| (13)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே, தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும், மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் , தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில், ருசி: – ஆசையானது, பவதி – உண்டாகிறது, தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில், ந ருசி: – வெறுப்பு, பவதி – உண்டாகிறது. ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு, காரணம் – காரணமானது, மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும். நாத – ஸ்வாமீ!, த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே, தத் – அப்பாவத்தை, ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே, ஹர – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம், நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும். அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை, நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால். தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள், (1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன, (2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன. (3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன. இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு. உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும் ‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க. ‘தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது. ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும் உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால். இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம், இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.

———————————————————————

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே
|| (14)

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில்,  (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.

கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

——————-

சுத்தாத்மயாமுநகுரூத்தமகூரநாத பட்டாக்யதேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே |
| (15)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில், அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில், ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன, ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன, பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால், உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்), மயி ஏவ – அடியேனிடத்திலேயே, அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன) தஸ்மாத் – ஆகையால், தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது, மத் கதிஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி, குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)

கருத்துரை:- ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள். ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில் ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும். பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர். அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால் அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது. அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல், ‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.

‘ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல், ‘ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம். எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது. அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே. ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு ‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம் அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன. ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம். ‘தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி , ‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும். ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம். நல்லதகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப்பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம் தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன். இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை. அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும் அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை. வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன். மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும் ‘யாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

ஸப்தாதி போகவிஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத்தயயா யதீந்த்ர ! |
த்வத்தாஸதாஸகணநாசரமாவதௌ ய:
தத்தாஸதைகரஸதாSவிரதா மமாஸ்து ||
(16)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே, அஸ்மதீயா – அடியேனுடையதான, ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய ருசி: – ஆசையானது, பவத்தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால், நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக, (மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன், த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய, தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது, சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில், பவதி – இருக்கிறானோ, தத்தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில், ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது, அவிரதா – நித்யமாக , பவத்தயயா – தேவரீருடைய தயையினால், மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

கருத்துரை:- இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது. இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால். இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும், யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று. எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால் அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது. எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும். அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும். எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள் தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது. இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது. பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

————

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (
17)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்தி நாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.

—————

காலத்ரயேSபி கரணத்ரயநிர்மிதாதிபாப்க்ரியஸ்ய ஸரணம் பகவத்க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் ||
(18)

பதவுரை:- யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும், கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட, அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு) மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு, ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது, பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும். அந்தப் பொறுமையோ எனில், த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே, கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில் அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,  ஏவ – அந்த ப்ரார்த்தனையே, பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு, க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

கருத்துரை:- கீழ்ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார். இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம். முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே, ‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’ (முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று. அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே. அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும், ‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும், உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள் நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல் தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும் யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’ (தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும். இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும் பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

—————

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம்
(19)

பதவுரை:- ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே, த்வம் – தேவரீர், மே – அடியேனுக்கு, ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட, தாம் – மிகச்சிறந்த, தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அந்வஹம் – நாடோறும், விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி) நாத – ஸ்வாமியான யதிராஜரே, தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு, விருத்தம் – தடையாகிய, அகிலம் – எல்லாவற்றையும், காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும், ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய – முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்துமுடிக்கிறார். ‘ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் , ‘விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி. இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும், அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று. திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும். யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும், யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.

————–

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீகுருஷ்வ யதிராஜ! தயாம்புராஸே |
அஜ்ஞோSயமாத்மகுணலேஸவிவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா |
| (20)

பதவுரை:- தயா அம்புராஸே – பிறர்துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல்போன்ற, யதிராஜ – யதிராஜரே, அத்ய – இப்போது, மாமகீநம் – அடியேனுடையதான, யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ, இதம் – இந்த விண்ணப்பத்தை, அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன், ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ்  – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன், தஸ்மாத் – ஆகையால், அநந்ய ஸரணபவதி – நம்மைத்தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான், இதி மத்வா – என்று நினைத்தருளி, அங்கீகுருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.

இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார். இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது. ‘தயைகஸிந்தோ’ (6), ‘ராமாநுஜார்ய கருணைவ து’ (14), ‘யதீந்த்ர கருணைவ து’ (15), ‘பவத்தயயா’ (16), ‘கருணாபரிணாம’ (19), ‘தயாம்புராஸே’ (20) என்று தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால், ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.

இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள ‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால், இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள ‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற பகுதி நினைவு படுத்தப் பெற்றதும், இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள ‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில் அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால், இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள ‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது. ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.

————-

இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதி க்ரந்தமானது ஸ்ரீ மணவாள மா முனிகள் வடதிசை யாத்ரை எழுந்து அருளுவதற்கு முன்னே பாண்டிய தேசத்திலே ஆழ்வார் திரு நகரியிலேயே சதுர்வேத மங்கலத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானார் விஷயமாகச் செய்து அருளப்பட்டது என்பர்

திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-திருநக்ஷத்ரம் -ஆனி அவிட்டம் -அவதார ஸ்தலம் -ஸ்ரீ திரு மழிசை -ஆச்சார்யர் –திருத்தகப்பனார் -ஸ்ரீ நரசிம்ஹாச்சார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

  • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
  • வேதவல்லி சதகம்
  • ஹேமலதாஷ்டகம்
  • அபீஷ்ட தண்டகம்
  • சுக சந்தேசம்
  • கமலா கல்யாண நாடகம்
  • மலயஜா பரிணய நாடிகா
  • ந்ருஸிம்ஹாஷ்டகம்
  • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
  • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
  • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
  • மஹாவீரசரித வ்யாக்யா
  • உத்தர ராம சரித வ்யாக்யா
  • சத ச்லோகீ வ்யாக்யா
  • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
  • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
  • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
  • துஷ்க்கர ச்லோக டிப்பணி
  • தினசர்யா
  • ஷண்மத தர்சனி
  • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
  • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
  • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
  • தத்வ ஸுதா
  • தத்வ ஸார வ்யாக்யா
  • ஸச்சரித்ர பரித்ராணம்
  • பழனடை விளக்கம்
  • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
  • லக்ஷ்மீ மங்கள தீபிகா
  • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
  • அநு பிரவேச ச்ருதி விவரணம்
  • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
  • மஹீஸார விஷய சூர்ணிகா
  • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
  • ஸச்சர்யக்ஷகம்
  • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
  • ந்யாய மந்தரம்
  • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
  • வசஸ் சுதா மீமாம்ஸா
  • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
  • ப்ரஹ்மவத்வதங்கம்
  • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
  • வரணபஞ்ச விம்சதி:.

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||
-இவர் தனியன்:

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ ஹயக்ரீவர் விம்சதி –ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் —

August 15, 2023

ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் கார்த்திகையில் கார்த்திகையில் திருவவதரித்தவர்-

கவிதா ஜித கல்லோலி கன்யாகா காந்த வக்ஷஸே
கருணாதி குண் டாட் யாய கமலா நிதயே நம-

பாற் கடல் கொதிக்கின்றது என்று அத்தை விட்டு திருமார்பில் அமர்ந்து
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்பவள்

தம்முடைய கவிதையினால் அலை மகளை மார்பில் கொண்டுள்ள எம்பெருமானானை வென்றவர் என்றபடி

அவனைத் தனது கவிதைகளால் வசப்படுத்தியவர்
கருணாதி குணடாட்யாய –கருணை முதலிய குணங்கள் நிறைந்தவர்
கமலா நிதயே நம-இவர் திரு நாமம் ஸ்ரீ நிதி -அவருக்கு பிரணாமங்கள் என்றவாறு

வைராக்ய -விஜித -ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேஸ்வரை
அநு க்ரோஸ ஏக விஜிதை இத் உபாதேஸி தேசிகை –வைராக்யம் மூலம் மனதை வெற்றி கொண்ட ஆச்சார்யர்கள்

ஆனு மானித அதிகரணத்தில் யமன் நசிகேதஸத்துக்கும் உபதேசம்
தஸ்ய ச வசீகரணம் தச் ஸரணாகதி ரேவ -சரணாகதி மூலம் அவனையும் நம் வசப்படுத்தலாம் என்கிறார்

ப்ரபத்தி விஜி தேஸ்வரை-இப்படி பிரபத்தி செய்து வெற்றி கொண்டவர்கள் நம் ஆச்சார்யர்கள்

அநு க்ரோஸ ஏக விஜிதை-
புகழ் புண்ணியம் பொருளுக்கும் வசப்படாத ஆச்சார்யர்கள் இரக்கத்தின் வசப்பட்டு உபதேசிக்கிறார்கள்

———-

வந்தே வேங்கட சேஷார்யம் வத்ஸ வம்ஸைக மௌக்திகம்
வாத் யஸ்ய ஸ்ரீ வரதார்சார்ய தனயம் வத்ஸல –ஸூவ ஆச்சார்யர்- திருத் தகப்பனார் -ஸ்துதி

ஸ்ரீ வத்ஸ குலம் -வம்சம் குலத்தையும் மூங்கிலையும் குறிக்கும் மூங்கில் இருந்து முத்து பிறக்குமா போல் ஸ்வாமிகள் –
ஸ்ரீ மத் வேங்கட சேஷார்ய ஸ்வாமிகள் -1855-இவர் திருத்தகப்பனார் ஸ்ரீ மத் வரதார்ய ஸ்வாமிகள்

நான்முகனும் தனது திருத் தகப்பனாரான ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரை ஸ்துதிக்கும் காட்சி
லஷ்மீ துரங்கானன பாஹவஸ்தே ஸத்வார ஏவம் ந கதம் நு பாதா
இத்யானத ஸ்ரீ சதுரானநோக்தீச் ஸ்ருண்வன் ஹயாஸ்யஸ் சமிதமாதநோதி –2-

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே தேவரீருக்கு நான்கு திருக்கைகள் போல் நான்கு திருக்கால்கள் இல்லையே
எதனால் -நான்முகன் வினவ
மந்தஹாஸம் செய்கிறான் -என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள்
மழலைக்கேள்வி -குதிரைக்கு நான்கு கால்கள் இருப்பதால் -கேட்க்கிறான்
தாஸனான அடியேனுக்கு நான்கு முகங்கள் -ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவடியைத் தொழ நான்கு வேண்டாமோ என்று எண்ணிக் கேட்க்கிறான் என்றுமாம்
சதுரானனன் நான்முகன் என்றும் சாதுர்யமாகப் பேசும் முகம் உடையவன் என்றும் பொருள் உண்டே

தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் தேனதனை வாய் மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி யினிதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த யமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்றோர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே –26-

அறு கால சிறு வண்டே –
த்விபாத்தாய் இருத்தல்
சதுஷ்பாத்தாய் இருத்தல் -செய்கை அன்றிக்கே –
கமன சாதனமான கால்கள் ஆறு உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பூர்வர்கள் நிர்வாஹம்

வண்டுக்கு கமன சாதனம் சிறகு ஆகையாலே –
மேலே -தொழுதேன் -என்கையாலும் –
என் தலையில் வைக்கைக்கு ஆறு காலாக உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -என்று பட்டர் அருளிச் செய்வர் –

தொழுதேன் உன்னை –என்கிறாள் -தொழுவது என்றால்
தொழுகின்றவர்கள் -தொழப்படுகிறவர்கள் திருவடிகளைத் தம் தலை மேல் வைத்துக் கொள்வது தானே –
திருவடிகள் பல இருப்பின் தலை நிறையத் திருவடிகளை இருத்திக் கொள்ளலாமே –
அத்தைக் கருதியே பரகால நாயகி ஆறு கால்கள் இருப்பத்தைச் சொல்லி வண்டுகளை விளிக்கிறாள்
சேர்ப்பாரைச் பஷிகளாக்கி -நாயனார்
தேசிகாஸ் தத்ர தூத -தேசிகன்

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-அர்ச்சையில் தூது இது (தூது நான்கு உண்டே )
என்ற திருவாய் மொழிப் பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக் கொள்ளத் தக்கது.

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ்  எம்மை சேர்விக்கும் வண்டுகளே –திருவிருத்தம் –54-பாசுரத்தையும் இங்குக் குறிக் கொள்ளத் தக்கது.

பராங்குச பரகால நாயகிகளின் கூற்றுக்களை திரு உள்ளத்திலே வைத்தே மந்த ஹாஸம் செய்து அருளுகிறான் பரிமுக எம்பெருமான் –

அஸ்வமேத வேள்வி செய்யும் மன்னன் தன்னுடைய தேரில் பூட்டப்பட்ட வேண்டிய குதிரைகளை மந்திரப்படுத்தி
பயன்படுத்திட வேண்டும் என்று உபதேசிக்கும் வேதத்தில் குதிரைக் கால்களைக் கூட கைகளாக
வருணித்து இருப்பதை ப்ரம்மா நினைவில் கொண்டு இருந்தால் கைகள் கால்கள் இவற்றின் எண்ணிக்கையைப்
பற்றிய கேள்வியே எழாதே என்ற திரு உள்ளத்தாலும் மந்த ஹாஸம் செய்கிறான் என்னவுமாம்
அந்த மந்த்ரம்
தீவ்ரான் கோஷான் க்ருண்வதே வ்ருஷ பாண யோளுஸ்வா ரதேபிஸ் ஸஹ வாஜயந்த
அவக்ரா மந்த ப்ரபதை ரமித்தான் ஷிணந்தி சத்ரூகும் ரன பவ்ய யந்த

வ்ருஷ பாண யோளுஸ்வா–பொழியும் கைகளை யுடைய குதிரைகள் என்று வேதம் வருணிக்கிறது

குதிரை என்றவுடனே ஹயக்ரீவர் நினைவுக்கு வர வேதம்
அவன் ஞான முத்திரை மூலம் சாஸ்த்ரங்களைப் பொழிவதைப் பேச வேண்டும் என்று
வ்ருஷ பாண யோளுஸ்வா–வர்ணித்திருக்கிறானோ என்ற திரு உள்ளத்தாலும் மந்த ஹாஸம்

மந்த ஹாஸம் செய்து தனது இன்னருளும் தன்மையை வெளிக்காட்டி அருளுகிறார்
ஆனத ஸ்ரீ சதுரனன -என்று ப்ரம்மா நான்கு புறமும் சுற்றிச் சுற்றி வந்தான் என்பதால் அவனுடைய ஆச்சார்ய பக்தியைக் காட்டுகிறான் –

மேல் ஸ்லோகங்களிலே பாதாதி கேசமாக வர்ணனை-

———-

ஸூதாம் சு பிம்பாத் தவ வாஸ பூதாத்
ஸூதாம் சு கண்டா தசதா விலக்னா
நாகாத்மனா த்வச் சரணாக்ர தேசே
ஸூதா மயீம் ந பணிதம் திசந்தி –3-திருவடி நகங்களா -திங்களின் துண்டங்களா

ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி
ஸ்ரேநீஷு பாதாங்குலி நாமிகாஸூ
ந்யக்க்ருத்ய சந்த்ர ச்ரியமாத் மகாந்த்யா
நகா வலீ சும்பதி ஸூந்தரஸ்ய –ஸூந்தர பாஹு ஸ்தவம் –67-

திரு நகங்களை வர்ணிக்கிறார் –திரு விரல்களின் வர்ணமும் அர்த்தாத் சித்திக்கும் –
அழகர் திரு மேனியில் அழகு என்னும் அமுதக்கடல் ஓன்று உண்டாயிற்று -கடல் இருந்தால் அலைகள் இருக்க வேணுமே –
அந்த அலைகள் தானோ என்னலாம் படி திரு விரல்கள் -அத் திரு விரல்களில் திரு நகங்கள்
சந்திரனுடைய ஒளியையும் திரஸ்கரித்து மிக அழகியவாக விளங்குகின்றன -என்கிறார்
ஸூந்தரஸ்ய –அழகருடைய
பாதாங்குலி நாமிகாஸூ ஸுவ்ந்தர்ய சார அம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷு –திருவடி விரல்கள் ஆகிற
ஸுவ்ந்தர்ய அமுத சாகர தரங்க பரம்பரைகளிலே
நகா வலீ மாத்ம காந்த்யா-சந்த்ர ச்ரியம்
ந்யக்க்ருத்ய சும்பதி–திரு நகங்களின் வரிசையானது தன் ஒளியினால் சந்திரன் ஒளியையும் கீழ்ப் படுத்தி விளங்கா நின்றது –

யோ ஜாத க்ரஸிமா மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்புநா
சோயம் யத் சரணாஸ்ரயீ சசதரோ நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் ததா
யாதஸ் தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –68-

திரு நகங்கள் -சந்த்ர சத்ருசமான அளவே அன்று -தேவதாந்த்ர ஸமாச்ரயணத்தால் வந்த குறை தீர
நக வ்யாஜத்தாலே அழகர் திருவடிகளை ஆஸ்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்ணன் ஆனான் என்கிறார்
யோ சசதரோ-சம்புநா -சிரஸா -சம்பாவிதச் -சந் -ஜாத க்ரஸிமா ஜாத க்ரஸிமா மலீ ச -அபூத் –யாவன் ஒரு சந்திரன்
சிவன் சிரஸ்ஸாலே தரிக்கப்பட்டவனாகி ஷயிஷ்ணுவும் களங்கியும் ஆனானோ
சோயம் -நக வ்யாஜத -யத் சரணாஸ்ரயீ சந் பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜவலத்தயா சார்த்தம் பஹுத்வம் யாத–எப்போதும்
பூர்ணனாய் இருக்கை -நிஷ் களங்கனாய் இருக்கை -ஒளி மிக்கு இருக்கை -பல வடிவு பெற்று இருக்கை –
ஆகிய இத்தன்மையை அடைந்தானோ
தம் தருஷண்ட சைல நிலையம் வந்தா மஹே ஸூந்தரம் –அந்த திருமாலிருஞ்சோலைமலை அழகரை வணங்குகிறோம்
ததா நூநம் –இப்படி அருளிச் செய்தது உத்ப்ரேஷ அலங்கார ரீதியில் என்பதைக் காட்டுகிறது -நூநம் -என்பது
பஹுத்வம் அடைந்தான் என்றது பத்து திரு நகங்களும் பத்து சந்திரன் போலே விளங்கி
எப்போதும் புஷ்கலமாய் அ களங்கமாய் ஜாஜ்வல்யமானமாய் இருப்பதும் சொல்லிற்று ஆயிற்று –

மல மறு மதி சேர் மாலிருஞ்சோலை –ஆழ்வார் அருளிச் செயல்களுக்கு விளக்கமே இந்த ஸ்லோகம்
சந்திரன் எம்பெருமான் திருவடியை அடைந்து உந்து பத்தாக வளர்ந்திட்டுள்ளான்
அந்தப் பத்துச் சந்த்ரன்களே எம்பெருமான் திருவடி திரு நகங்கள் என்று
தற் குறிப்பேற்று அணியில் உத்பரேஷை அருளுகிறார் ஆழ்வான்

நம்பிள்ளை யீட்டில்
மலமறு -சந்த்ர பதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம் போது சிகரங்களிலே தேய்ப்புண்டு
சாணையிலே இட்டால் போலே களங்கமற நிற்கும் என்னுதல்
அன்றிக்கே
திருமலை ஆழ்வார் தாம் ஞான லாபத்தை உண்டாக்குவார் -என்று பிள்ளான் வார்த்தை
பிள்ளான்-பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலை
மதி -சந்திரன் -அறிவு -குபேரன் -யானை -போன்ற பல பொருள்கள் –
இதே கருத்தையே ப்ரதி பிம்ப லஹரீ -ஆயிரம் திருவாய் மொழியையும் சமஸ்க்ருதத்தில் அருளிய பிரபந்தத்தில்
மாலின்யான் யபஹாய ஸூத்த மதிதம் ஸ்வாராம பூமி தரம் -என்று இதற்கு அருளிச் செய்துள்ளார்

சம்போர் அம் போருஹ முக சகா சந் ஸஹாங்கச் ச சாங்க
குர்வன் சேவாம் வரத விகலோ வ்ருத்த ஹீநஸ் ஸூ வக்ரஸ்
த்வத் பாதாப்ஜே ப்ரியமக நகச் சத்ம நாச்ரித்ய நித்யம்
சத் வ்ருத்தோ அபூத் ச ச தச குண புஷ்கலோ நிஷ் கலங்க –ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –61-

அம் போருஹ முக–தாமரை போன்ற திரு முகத்தை உடையவனாய்
ப்ரியமக–யஜ்ஜ பிரியனான
ஹே வரத
ஏற்கனவே
ஸஹாங்க–பாபம் உடையவனாக –/-2-களங்கத்தை உடையவனான
ச சசாங்க –அந்தச் சந்த்ரனானவன்
சம்போர் –ருத்ரனுக்கு
சகா –தோழனாய் இருந்து கொண்டு
சேவாம் குர்வன் –சிரோ பூஷணமாய்ச் சேவையைச் செய்தவனாயும்
விகலோ –வித்யா விஹீனனாய் -/-2-மூளியாய்
வ்ருத்த ஹீநஸ் –சதாசார ஹீனனாய் -/-2-உருண்டை வடிவம் இழந்தவனாய்
ஸூ வக்ரஸ்–குடிலை ஹ்ருதயனாய் -/-2-மிகவும் கோணலான ஆகாரம் உடையவனாய்
சந் -ஆகா நின்று கொண்டு
நகச் சத்மந –நகங்கள் என்கிற வ்யாஜத்தாலே
த்வத் பாதாப்ஜே நித்யம் ஆஸ்ரித –உன் திருவடித் தாமரைகளை தினமும் ஆஸ்ரயித்து
நிஷ் கலங்க -களங்கம் அற்றவனாய்
புஷ்கலோ -நித்யம் பூர்ணனாய்
சத் வ்ருத்தோ -சதாச்சார்யம் உடையவனாய் –உருண்டை வடிவம் உடையவனாய்
தச குண –பதின் மடங்கு பெருகினவனாய்
அபூத் –ஆனான்

பத்து திரு விரல்களிலும் பத்து சந்திரனானான்-நகத்வ அவஸ்தையில் பூர்ணனானான்

யோ ஜாத க்ரஸிரமர மலீ ச சிரஸா சம்பாவிதச் சம்பு நா சோயம் யச் சரணாஸ்ரயீ சச தரஸ் நூநம் நக வ்யாஜத
பூர்ணத்வம் விமலத்வம் உஜ்ஜ்வல தயா சார்தம் பஹத்வம் ததா யதாஸ்தம் தருஷண்ட சைல நிலையம்
வந்தாமஹீ ஸூந்தரம் -என்றும் அங்கும் உண்டே –

ஸ்ரீ லஷ்மீ ஹயவதனப் பெருமாள் முழு நிலாவின் மண்டலத்தில் வீற்று இருந்து அருள் பாலிப்பதாக மந்த்ர சாஸ்திரங்கள் காட்டுகின்றன –
ஸ்ரீ ஹயக்ரீவ கவசத்தில்
கல சாம்புதி ஸங்காஸம் கமலாயத லோசனம்
கலா நிதிக் க்ருதா வாஸம் கர்ணி காந்தர வாஸிநம் -என்று
கலா நிதிக் க்ருதா வாஸம்-சந்த்ர மண்டலத்தில் வஸிப்பவன்

தவ வாஸ பூதாத் ஸூதாம்-ஸூதாம் சு பிம்பாத் -என்று இவர் வாசஸ் ஸ்தலமாக -இருப்பிடமாக அமுதைப் பொழியும் நிலவு ஆகிறது
ஸூதாம் சு கண்டா தசதா விலக்னா நாகாத்மனா த்வச் சரணாக்ர தேசே–பத்து விரல்களும் அமுதைப் பொழியும் நிலவுகள் ஆனதே
ஸூதா மயீம் ந பணிதம் திசந்தி-அடியோங்களுக்கு அமுதமே வடிவு எடுத்த சொற்களைத் தொடுக்கும் ஆற்றலை அள்ளித் தருகின்றன –
அவனது உகந்து அருளினை திவ்ய தேசங்களில் ஈடுபட்டு
அவன் அடி பணிந்து
அங்கேயே மண்டி அபி நவ தச அவதாரமாய் அமுதைப் பொழியும் அருளிச் செயல்களை
அருளிச் செய்த ஆழ்வார்கள் பதின்மரையும் நினைப்பூட்டும் திரு நகங்கள்
அவர்களை அடிபணிந்து இருந்த ஆச்சார்யர்கள் அடி பணிந்து இருக்கும் அடியோங்களுக்கும்
அமுதிலும் இனிய சொல் வளம் வருவதில் என்ன வியப்பு –

————

சந்த்ர மண்டலத்துக்கு சந்திரன் என்ற பெயரே அடிப்படை உண்மையினை உணர்த்தும்
கலசாம்புதி ஹங்காசம் கமலாயதா லோசனம்
கலா நிதி க்ருதா வாஸம் கர்ணி காந்தர வாஸினம் –ஸ்ரீ ஹயக்ரீவ கவச ஸ்லோகம்
பாற்கடல் போல் வெளுத்த வண்ணமும் -ஆழமும் -கவர்ச்சியும் -உடையவனும்
தாமரை இதழ் போன்று நீண்ட அகன்ற திருக்கண்கள் உடைய கலாநிதியில் –

அதாவது சந்திரனில் -சந்த்ர மண்டத்தில் -எழுந்து அருளி இருப்பவனுமான ஹயக்ரீவன்
என்று த்யானம் செய்யும் முறை சொல்லப்படுகிறது
கலாநிதி சந்திரனையும் அறிஞர்களையும் காட்டும்
ஹயக்ரீவப்பெருமாளைத் தன்னுள் இடையறாது இருத்தி வழி படுபவன் கலாநிதி ஆகிறான்

பிபர்த்தி யஸ் த்வாம் மனுஜோ நிஜாந்த கலாநிதிஸ் ஸ்யாத் ஸ இஹேதி ஸத்யம்
வஹந்தி ஜாந்தஸ் ஸததம் ஸ ஏஷ கலா நிதிஸ் தத்ர நிதர்சனம் ந –4

இவனை த்யானம் செய்து நுட்பங்களைக் காண வல்ல கலா நிதி ஆவார்கள் –

ஹயா லாபே கலா தானம் –
வித்யை அருளி ஞான பிரதானம் செய்வது குதிரையால் வரும் லாபம் -என்றும்
குதிரையையே நம்மிடம் பெற்றுக் கொடுக்கும் -என்றும் உண்டே

கவிதை வெள்ளத்துக்கு வேகம் தரும் கணைக்கால்
நயநாபி ராமம் -என்று அனுபவிக்கிறார் –

அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே
விலங்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹதோ த்ருஸவ்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய மே –-ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் –61-

அழகருடைய திருக் கணைக் கால்கள் அனுபவிக்கிறார் இதில் –
அழகருடைய திருவடிகளானவை கீழ் முகமாக வைக்கப்பட்ட தாமரை மலர்கள் போன்று இருப்பனவாகவும்
திருக் கணைக் கால்கள் அத்தாமரைகளின் நாள தண்டங்களோ என்னலாம் படி இருப்பனவாகவும் அருளிச் செய்கிறார்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய —அதோ முக ந்யஸ்த பதார விந்தயோ
உதஞ்சி தோ தாத்தஸூ நால சந்நிபே -ஜங்கே-விலங்க்ய —
அதோ முகமாக வைக்கப்பட்ட திருவடித் தாமரைகளினுடைய வ்ருத்தாகரமாய் ஆயுதமாய் இருக்கின்ற
அழகிய நாள தண்டங்களை ஒத்த திருக் கணைக் கால்களைத் தவிர்த்து
மே -த்ருஸவ் -க்வ நு ரம்ஹதோ —
என்னுடைய கண்களானவை வேறு எங்குச் செல்லும் -எங்கும் செல்லாது –
இத்திருக் கணைக் கால்களையும் அனுபவித்து நிற்கும் அத்தனை என்றதாயிற்று –
திருவடித் தாமரைகளை அதோ முகமாக வைக்க வேண்டிய காரணம் ஸ்ரீ வரதராஜ ஸ்தவத்தில் –
ப்ரேம்நா க்ராதும் கரி கிரி சிரோதோ முகீ பாவ பாஜோ அங்க்ரி த்வந்த் வாஹ்வய கமலயோர் தண்ட
காண்டாய மாநே -என்று அருளிச் செய்த படியே
திருமலையின் போக்ய அதிசய ப்ரயுக்தமான ப்ரீதி விசேஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என்று
நினைத்துத் திருவடித் தாமரைகள் கீழ் முகம் ஆக்கப் பட்டன -என்க –

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே
தத் கேளி நளின மாம்சல நால த்வய லலிதம் ஆசரத –ஸ்ரீ ரெங்கராஜ பூர்வ சதகம் -122-

ஸ்ரீ பூமி ஆமர்ச ஹர்ஷ கண்ட கிதே-திரு மகளும் நில மகளும் திருவடி வருடும் போது உண்டான
ஹர்ஷத்தால் மயிர்க் கூச்சு எறியப் பெற்றுள்ள

ஸ்ரீ ரெங்கேசய ஜங்கே–ஸ்ரீ பெரிய பெருமாளது திருக் கணைக் கால்கள்

தத் கேளி நளின மாம்சல-அப்பிராட்டிமாருடைய லீலார்த்தமான இரண்டு தாமரைப் பூக்களினுடைய பெருத்த

நால த்வய லலிதம் ஆசரத –இரண்டு காம்புகளின் விலாசத்தை அடைகின்றன –
ஸ்ரீ பிராட்டிமாரின் திருக் கைகளில் அகப்பட்ட திருவடிகள் அவர்களுடைய லீலா அரவிந்தங்கள்

திருக் கணைக் கால்கள் அவற்றின் நாளங்கள் -அங்கு முள் இருக்க வேண்டுமே –

இதுவே மயிர்க் கூச்சு எறிதலால்-கண்ட கிதமாயிற்று என்றபடி –

ஜங்கா த்வதீய நயநாபிராமா
ஜங்கால தாமேவ தாதி வாஸாம்
ப்ரவாஹ பூம்னீதி விபாதி ஸித்தே
ப்ரவாத ஏவம் மஹதாம் ந மித்யா –4-

அவன் திருக் கணைக் காலைத் த்யானம் செய்யவே -த்யானம் செய்பவரின் சொல் வெள்ளம் ஜங்காலம் ஆகிவிடும்
இந்த வெள்ளம் கங்கா ப்ரவாஹத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்து விடுமே என்கிறார்

————

அடுத்து திருத் தொடை பிராட்டிக்கு இருப்பிடமானது பற்றி வந்த பொருத்தம் கவிநயத்துடன் அருளிச் செய்கிறார்
யானையின் துதிக்கையோ வாழை மரமோ ஒப்பாகாதே –
துதிக்கை போல் கரடுமுரடு அல்ல -வாழை போல் குளிர்ந்து இருக்காது
ரம்பா அப்சரஸுக்கும் வாழைக்கும் பெயர் -வடதிசை என்றும் பெயர்
ஆகவே இவன் இடது துடையில் வீற்று இருக்கச் செய்கிறான்
ஏதோ சமயத்தில் தலையணையாய் கொள்ளுவது போல் இல்லாமல் எப்போதும் பிராட்டியைக் கொண்டுள்ளான் அன்றோ

ரம்பாதி வாஹ்ய ரமணீய தனு ப்ரகாரா
ராமா ரமாஸி ரமணீ மணி ரத்ரஸ் த்வம்
ரம்பாபி ராம ஸூ கோரு கதா பரவேஸ்த்வம்
இத் யங்க காம் விதனுஷே னு ரமாம் ஹயாஸ்ய –5-

எனது திருத்தொடைகள் சம்சார வாழ்வில் உள்ள தாபத்ரயங்களை நீக்கும் வாழை -ரம்பா வாக இருக்கின்றன
அவற்றில் ரம்பாவில் உள்ள -இடது பக்கம் உள்ள -ரம்பாவின் திருத்தொடையில் ரம்பாதிகளான
பெண்மணிகள் தலையால் தாங்கிட வேண்டிய அழகு மிகுந்த பெண்மணியான திருவே
நீ அமர்வது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று கூறி அங்கே அமரச் செய்து அருளி உள்ளனையே பரிமுகப்பெருமானே –
என்று விண்ணப்பம் செய்கிறார் –

————–

இடது மடியில் மனைவி அமரும் ஸ்தானம் -மக்கள் சிஷ்யை வலது மடியில் அமரும் ஸ்தானம்
இட வெந்தை வலவெந்தை இரண்டுமே உண்டே
அஹம் சிஷ்யா ச தாஸீ ச பக்தா ச த்வயி மாதவா
சிஷ்யை ஸ்தானத்தில் தான் த்வய உபதேசம் பெற்று அத்தை விஷ்வக் சேனருக்குப் பிராட்டி உபதேசம்
உபதேசம் பெற்ற பின்பு இடது மடியில் அமர்ந்து அவனை ஆலிங்கனம் செய்து நமக்கு புருஷகார பூதையாகிறாள்

ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமாவளியில்
அங்கேனு தூஹ்ய வாக் தேவீம் ஆச்சார்யகம் உபாஸ்ரித
வாக் தேவியினை மடியிலே அமர்த்தி அவளுக்கு ஆச்சார்யனாகச் செயல்படுபவன்
அவளுக்கு கல்வி கற்ப்பிப்பவன்
நமோ வாஸே என்றும் நமோ வாசஸ் பதயே என்றும் ப்ரஹ்ம எஜ்ஜத்தின் நிறைவில்
லஷ்மீ தேவியையும் ஹயக்ரீவனையும் வணங்கும் மந்த்ரங்கள் மும்முறை அனுசந்திக்கின்றோம்
ஆனால் இங்கு இவள் வலது மடியில் அமர்ந்து தானே உபதேசம் பெறுவது பொருத்தமாய் இருக்கும்
இடது மடியில் இருப்பதற்கு ஹேது காட்டுகிறார்
வலது திருக்கரத்தில் ஞான முத்திரையை ஸதா பார்த்துக் கொண்டு இருக்க இதுவே சரியாய் இருக்கும்
இந்தக் கருத்தை தன்னுள்ளே அடக்கி உள்ள 11 ஸ்லோகம்

அங்கம் விஹாய தவ தக்ஷிணமாய கஸ்மாத்
வாமம் ரமா ஹய முகேதி விம் ருஸ்ய சேத
பாணிம் தவாதி மதுரம் சுப போத முத்ரம்
ஸம் வீஷீதும் விசதமித்யத நிச்சினோதி–11-

இடது துடையில் அமர்ந்து இருந்தால் தானே இதம் தரும் இனிய உபதேச முத்திரை யுடன் கூடிய வலது திருக்கையை நன்கு காண இயலும்

————————-

சந்த்ரமா மனஸோ ஜாத –ஹ்ருதயத்தில் இருந்து தோன்றிய சந்திரன் —
பிள்ளை தகப்பன் ஹ்ருதயத்தில் இருந்து தோன்றியதாக வேதம் சொல்லும்
அங்காத் அங்காத் சம்பவஸி ஹ்ருதயாத் அதி ஹயஸே
ஆத்மா வை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதச்சதம்
ஓ மைந்தனே நீ என்னுடைய அங்கத்தின் நின்றும் உண்டாவனாக உள்ளாய் –
ஆகையால் பிள்ளை என்ற பெயரை யுடைய நான் ஆகவே இருக்கிறாய் -நூறு ஆண்டுகள் வாழ்வாயாக –
அங்காத் அங்காத் சம்பவஸி ஹ்ருதயாத் அதி ஹயஸே
வேதோவை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரதச்சதம் -என்றும் வேறே ஒரு மந்த்ரம் ரிக் வேதத்தில் உள்ளதே –
வேதம் -தர்மம் செல்வம் என்ற பொருள் -உண்டே
ஆகவே பிள்ளையே இதயக்கனி –

வாசஸ்பதே ஹ்ருத்விதே நாமன் விதேம தே நாம
விதேஸ் த்வமஸ் மாகம் நாம வாசஸ்பதிஸ் ஸோமமபாத்
மா தைவ்யஸ் தந்துச் சேதி மா மனுஷ்ய நமோ திவே நம ப்ருதிவ்யை ஸ்வாஹா
ஹயாஸ்யன் என்பதுவும் ஸ்ரீ ஹயக்ரீவரின் திரு நாமம் -அது மருவி அயாஸ்யர் ஸ்துதி யானது இதுவும்
வாசஸ்பதே –தேவீ எனப்படும் லஷ்மீ தேவியான கேள்வனான ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவப் பெருமானே
ஹ்ருத்விதே –ஹ்ருதயத்தை ஏற்பாடு செய்பவனே –
அதாவது ஹ்ருதயத்தில் நல்ல எண்ணங்களை உருவாக்கி எண்களைத் தூண்டுபவனே
நாமன் –உலகில் உள்ள நாமங்கள் அனைத்துக்கும் உரியவன்
விதேம தே நாம -உனக்கு நமஸ்காரங்கள்
விதேஸ் த்வமஸ் மாகம் நாம -நீ எங்களுடைய புகழை பரவச செய்திடுவாயாக
வாசஸ்பதிஸ் ஸோமமபாத் –இப்படி விண்ணப்பம் செய்து வேள்வியில் ஸமர்ப்பித்த சோமரசம் போன்ற பொருள்களை
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவன் ஏற்றுக் கொண்டு அருளினான்
அதனால்
மா தைவ்யஸ் தந்துச் சேதி –எங்கள் இல்லங்களில் நடக்கும் வேள்விகளானால் தேவ சந்ததிகளின் இழை அறுபடாதது ஆகுக
மா மனுஷ்ய தந்துச் சேதி–வேள்வியில் பனி ஆற்றும் ரித்துக்களான மனித சந்ததியின் இழை அறுபடாதது ஆகுக
நமோ திவே –இந்த ஏற்பாட்டினால் வளம் சிதையாது திகழும் வான் உலகுக்கு வணக்கம்
நம ப்ருதிவ்யை -அவ்வாறே நீங்காத செல்வம் நிறைந்த நில உலகுக்கு வணக்கம்
ஸ்வாஹா –இவ்வாறு சொல்லி வேள்வியில் அர்ப்பணம் செய்ய வேண்டும்

நான்முகனும் பெருமாளை ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்துதிக்கும் பொழுதும்
அஹம் தே ஹ்ருதயம் ராம ஜிஹ்வா தேவீ ஸரஸ்வதீ –
நான் உனது மார்பு -ஸரஸ்வதி தேவி உனக்கு நாக்கு
புத்ர பரமான ஹ்ருதய ஸப்தத்தாலே ப்ரஹ்மாவினுடைய கார்யத்வத்தையும் காட்டி அருளுகிறார்
எம்பெருமானார்-அவர் இதயமே சம்பத்குமார் -செல்வப்பிள்ளை –
யதிராஜரும் -யதி பரிப்ருட -ஹ்ருதயமும் -என்பதையே தேசிகன் மேல்கோட்டை மங்களா ஸாஸன ஸ்லோகத்தில்
நவ நவ பஹு போகாம நாத நாராயண த்வம்
விரசாய துரி தவ்கை ஸ்தாமனாக்ரா கந்தாம்
ஸஹஜ ஸூலப தாஸ்யைஸ் ஸத் ப்ரப்யர்த்த னீயாம்
யதி பரிப்ருட ஹ்ருத் யாம் யாதவாத்ரேஸ் ஸம் ருத்திம்

பெற்றோரைத் தாங்கும் பிள்ளையாக இருப்பதால் சந்தனுக்கு ஏற்றம் -கலாநிதி ஆகிறான்

சந்த்ர க்லாயாம் ஹ்ருத் யாத்த வாபூத்
லஷ்மீ துரங்கானா தத் க்ருதஞ்ஞ
அந்தர் விதத்தே ஸததம் பவந்தம்
கலாநிதி ஸ்தேந ஜகத் ப்ரஸித்த –15 ஸ்லோகம்

நான்காவது ஸ்லோகத்திலும் கலாநிதி -சந்திரனுக்கு உள்ள பெயர் அடிப்படையில் சிலேடை நயம் பார்த்து அனுபவித்தோம்
அங்கு பறிமுகனான தேவனை எண்ணி உள்ளத்தே இருத்துவதால் கலாநிதி யானை அருளிச் செய்யப்பட்டது
இங்கு ஈன்ற தந்தையை பக்தியுடன் உள்ளத்தே வைத்து கலாநிதி ஆவது அருளிச் செய்யப்படுகிறது
யஸ்ய தேவா பரா பக்தி யதா தேவே தாத்தா குரவ்
தஸ்யைத ஹ்ய கதிதா பார்த்தா ப்ரகாஸந்தே
மஹாத்மன ப்ரகாஸந்தே மஹாத்மன-ஸ்வேதாஸ்வர உபநிஷத் =வெள்ளைக்குதிரை உப நிஷாத் ரஸிக்கலாம்

உததம் ஆதேசம் அப்ராஷ்ய யேன அஸ்ரு தகும் ஸ்ருதம் பவதி –
எந்த ஆசேதனனைக் -ஜட்டயை இடுபவனைக் -கேட்டால் கேட்க்காதவைகள் கூடக் கேட்டவை ஆகுமோ –
அந்த ஆசேதனைக் கேட்டாயோ என்று சொல்லாமல் தம் -அந்த -என்ற பொருளில் ப்ரஹ்மத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்லுமே உபநிஷத்

அதே போல் தத் ஹயாஸ்யம் மஹ என்பதில் –தத் -ப்ரஸித்தமான ஹயமுகனான ஒளி

தத் -737– ஸஹஸ்ர நாமத்துக்கு பட்டர்
தேஷாம் –தத் தத் -ஸர்வேப்ஸித -புபுத் ஸூநாம் -ஸ்வ ஞான பக்திம் தனோதி இதி தத் -என்பது பாஷ்யம் –
பக்தர்களுடைய ஞானம் பக்தியாக மலர்ந்து அது மேலும் கிளர்ந்து வளரும்படி செய்பவன் –
தத் மந்த்ரம் காயத்ரியிலும் சொல்லுகிறோம் -நாம் பண்ணும் கிஞ்சத்தையும் நிறைவாகக் கொள்ளுமவன்
பட்டர் இத்தையும் மேற்கோளாகக் காட்டி அருளுகிறார் –

737-தத் –தூண்டி அதிகப் படுத்துபவன் –ஞான சக்திகளை விஸ்தரிக்க பண்ணுபவன்
ஓம் -தத் -சத் -ப்ரஹ்ம லஷணம்-தத் சவிதுர் வரேண்யம் –

தத் ஸவிதுர் வரேண்யம்-காயத்ரி மந்த்ரம் -அனைத்துக்கும் காரணமான அவனுடைய ப்ரகாஸம்

ஓம் தத் சத் இதி நிர்தேச–ஓம் தத் சத் ஆகிய மூன்றும் ப்ரஹ்மத்தைக் குறிக்கும்

எந்த எம்பெருமான் நமது எண்ணங்களை எல்லாம் நன்றாகத் தூண்டிவிட்டு நல் வழிப் படுத்துவானோ
அந்த அனைத்து உலகையும் ஈன்ற அலகிலா விளையாட்டுடை எம்பெருமானுடையதானதும்
நேசத்துக்கு உரியதும்
அதனிடம் நேசத்தை வளர்த்தி அருள வல்லதுமான திருமேனியின் சுடரை த்யானம் செய்திடுவோம்
என்பதே காயத்ரி மந்த்ர விளக்கம்

ஸம்வித் –நாநாத்வ –நிஷேதக அனுமான பங்க வாதம் –
நிர்விசேஷ அத்வைதிகள் -ஸம்வித் -என்று குலவப்படும் அறிவு எண்ணம் ஓன்று தான் உண்மையில் உள்ளது –
அதுவே -ஆத்மா -ஸத் -ப்ரஹ்மம் -பல பெயர்களால் குறிப்பிடப்படும் அறிவு ஞானம் ஒரே நிலையில் உள்ளது
காயத்ரி மந்திரமோ தீ  -அறிவுகள் என்று பான்மையாகக் காட்டி இவர்கள் வாதம் நிரஸனம்
ப்ரதி -புருஷ மனேகா ப்ரத்ய வஸ்தம் விசித்ரா
சுப கதிஷு தியோ யஸ் சோதயத் யஞ்ஜஸா ந
அகில சித் அசித் அந்தர்யாமி தத் விஷ்ணு ஸம்ஞம்
ஸ விதுரஹம் உபாஸே தஸ்ய தேவஸ்ய பர்க்க –மாலினீ யாப்பில் அமைந்த ஸ்லோகம் -சத தூஷணீ -23 வாதம்
இந்த ஸ்லோகம் தத் -விஷ்ணு எனப்படும் எம்பெருமான்
தத் -ஹயக்ரீவனுடைய பேர் ஒளியை த்யானம் செய்வதே பொருந்தும்

சஷுர் கோசர தாம் கதம் மம ஸதா தத் ஸ்யாத யாஸ்யம் மஹ
முத்ராம் போத கரீம் கரேண கரயோ சக்ரம் ஸஹஸ்ராககம் பம் சங்கம்
தம் தவலம் ஸஹஸ்ர சசிபம் புஸ்தம் ச ஹஸ்த பரம்
வித்யானாம் நிலயம் ததத் பரதரம் வாக் தேவதா வந்திதம் –16 ஸ்லோகம்

முத்ராம் போத கரீம் கரேண ததத் –வலது கீழ் திருக் கை -அறிவு தரும் போத முத்ரை
ஸஹஸ்ராககம் சக்ரம் தவலம் ஸஹஸ்ர சசிபம் தம் சங்கம் கரயோ ததத்
ஆயிரம் இரவிகளின் ஒளியை விஞ்சும் திருவாழி வலது மேல் திருக்கையில்
ஆயிரம் சந்த்ரன்களை விஞ்சிய பால் அனைய குளிர்ந்த ஒளி தரும் பாஞ்ச ஜன்யம் இடது மேல் திருக்கையில்

தம் சங்கம் -இங்கும் பிரஸித்த அர்த்தத்தில் தம் -தம் ஆதேசம் போல் –
த்ருவனுக்கு ஞானம் அருளியது –
கீதா ஸாஸ்த்ரம் அருளும் முன் பூர்வ அவலோகநாம் பண்ணும் ஆச்சார்யன் போல் ஊதிப் பார்த்துக் கொள்ளும் படி நின்றது
கோதா தேவி அதராமுதம் பற்றி வினவுவது –
ப்ரணவ வடிவமானது -ப்ரணவம் போல் ஒலிப்பது -ஸத்வ குணம் வளர்க்கும் வெண்மை நிறம்
ருக்மிணி பிராட்டிக்கு ஆண்டாள் நாச்சியாரும் பகவான் வரவை முன் கூட்டி அறிவிப்பது
முழங்கி தீய சக்திகளைத் தகர்ப்பது
பொய்கை ஆழ்வாராக அவதரித்து அருளிச் செயல்களுக்கு வித்திட்டது –போன்ற பல ப்ரஸித்திகள் உண்டே –

புஸ்தம் ச ஹஸ்த பரம் வித்யானாம் நிலயம் ததத்
ஐயம் திரிபு அற ஞானம் தக்க வைக்க –
தேவீ ஸரோஜ ஆஸன தர்ம பத்நீ
பரதரம் வாக் தேவதா வந்திதம்
கொண்டைக்கடலைச் சுண்டலும் பச்சைப் பசும் பாலும் சமர்ப்பித்து மஹா நவமி கொண்டாடுகிறோம்

இத்தகைய வெண்மையான ஒளியை அடைக்கலம் புகுகிறார்

ஸ்வேதம் கிஞ்சன வாஜிராஜ வதனம் வாக் தேவதா வந்திதம்
வா மாங்க ஸ்தித வாரிராசி தனயம் வேதாந்த வித்யா நிதிம்
சாந்த்ரம் பிம்பம் உபாஸ்ரிதம் ஸ்ரிதவசம் சக்ரம் ச சங்கம் ததா
முத்ராம் போத கரிஞ்ச புஸ்தக மணிம் பிப்ரத் மஹஸ் ஸம்ஸ்ரயே

இனி அவன் எப்பொழுதும் தனது பார்வைக்கு இலக்காக்கிக் கொண்டு அருள வேண்டும் என்று பிரார்திக்கிறார்

———-

ஸ்வாமின் கிம் ஸ பவான் விதாய வனிதாம் வாராஸி கன்யா மிமாம்
வா மாங்கே பகவன் தரம்ச ஸூபகம் வாமே கரே கோமலே
தாப்யாம் வாச மஹோ ரசவ்க பரிதாம் வ்யாக்யான முத்ராம் வஹன்
ப்ரீத்யா தாம் விவ்ருணோதி தத்ர ச புமான் உச்சைரதஸ் ஸ்த்ரீஸ் ஸ்திதா–18-

பிராட்டியும் தனது ஸ்வ தந்திரம் காட்டி வைதிகம் பிள்ளைகளைக் கூட்டி சென்று கிருஷ்ணனை
அங்கே வரவழைத்து தர்சித்த வ்ருத்தாந்தம்
இவர் திருக்கையில் சங்கம் புள்ளிங்கத்தால் ஆண் பால் சொல்
கீழ்த் திருக்கையில் வ்யாக்யா முத்திரையைச் சொல்லும் அவள் பெண் பாலில் உள்ளது
பிராட்டியும் இவன் திருமடியில் சங்கத்தின் கீழ் இருந்து ஸேவை சாதிக்கிறாள்

—————

இந்தத் திருமேனியை த்யானம் செய்பவர்களுக்கு வித்யைகள் 18 யிலும் தேர்ச்சியை வழங்கும் வள்ளலாக இருப்பதை அனுபவிக்கிறார்
நான்கு அடிகளும் வித்யா என்ற பாதத்தால் ஆரம்பம்
பதினான்கு கலைகள் –புராண நியாய மீ மாம்ஸா தர்ம ஸாஸ்த்ர அங்க மிஸ்ரதா –
வேதாஸ் ஸ்தானானி வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச -என்றும்
அங்கானி வேதாஸ் ஸத்வாரோ மீமாம்ஸா நியாய விஸ்தர
தர்ம ஸாஸ்த்ரம் புராணாஞ்ச வித்யாஸ் ஸ்த் வேதாச் சதுர்தச –என்றும்
அமுஷ்ய வித்யா ரசனாக்ர நர்த்தகீ
த்ரீயவ நீ தாங்க குணேன விஸ்தரம்
அகாஹத அஷ்ட தஸாம் ஜிகீஷ்யா
நவ த்வயத் வீப் ப்ருதக் ஜய ஸ்ரீ யாம் -என்று நலன் 18 வித்யைகளில் வெற்றி கண்டான்

வேத மடந்தைக்கு அங்கங்கள் ஆறு
அவள் திருவாய் இலக்கணம்
திருக்கண்கள் ஜ்யோதிஷம்
வேள்வி செய்யும் முறைகளை விளக்கும் கல்ப ஸூத்ரங்களே அவள் திருக்கைகள்
அவள் திரு மூக்கு ஸ்வர அமைப்பை விளக்கும் சிக்ஷை
அவள் திருவடிகளே மந்திரங்களின் பா வகைகளை உணர்த்திடும் யாப்பு இலக்கணம்
வேத மங்கை இப்படி அங்கங்கள் உப அங்கங்கள் கொண்டு பாவங்களை விவரிக்கும் நடன மங்கை நிலை போல் உள்ளது –
இந்த 18 ஆகப் பரந்து ஸரஸ்வதீ அவன் நாவில் நடனமாடுகிறாளாம்
இந்த 18-ஆறு மூன்று என்று அதிகார ஸங்க்ரஹத்தில்
அமையா இவை என்னும் ஆசையினால் ஆறு மூன்று உலகில்
சுமையான கல்விகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏத்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே

வித்யாம் விக்ரஹ ஸம் யுதாமிவ ராமம் வாமாங்கா பாக ஸ்திதம்
வித்யா ரூப மிமஞ்ச சங்க மதுலம் வாமைகபாணிஸ்திதம்
வித்யா தாரணி மேவ புஸ்தக மணிம் வா மான்ய பாணிஸ்திதம்
வித்யா தான வதான்ய வாஜி வதன த்வம் ராஜஸே லாலயன் –19-

ஆகவே 18 ஸ்லோகங்களுப்பின் வித்யா ப்ரதானன் என்பதை அருளிச் செய்கிறார்
வித்யையே வடிவு எடுத்தது போல் வித்யா லஷ்மீயை இடது திருத் தொடையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டு இருக்கிறான்
வித்யையின் வேறு ஒரு வடிவமான வெள்ளைச் சங்கினை வலது மேல் கரத்தில் வைத்துக் கொண்டு உள்ளான்
வித்யையை தன்னிடத்தில் கொண்டுள்ள சுவடியை இடது கீழ்த் திருக்கரத்தில் தாங்கி உள்ளான்
புல்லிங்கத்தில் –வித்யா தாரிணம் என்றும்  புஸ்தக மணிம் என்று வடிவம் கொண்டு அருளிச் செய்கிறார்
ஆத்ம ஞானம் அளித்து கிரந்த சதுஷ்ட்யங்கள் ஆண் ஸிம்ஹமாக மாற்ற வல்லவை அன்றோ
இவை எல்லாம் இடது பக்கம் -அதாவது வாமங்களாக உள்ளன
ஏஷ உ ஏவ வாமனீ –சாந்தோக்யம் -உபகோசலை வித்யை
வாமனீ –ஏஷ ஹி ஸர்வாணி வாமானி நியதி –வாமங்களை அடியார்கள் இடம் சேர்ப்பிப்பவன் –
இங்கு வாமம் -ஸூபமான -ஸ்வ ஆஸ்ரித தேஷு சோபன தீ ப்ராபகத்வம் –அதாவது
ஸூபமான அறிவை அடியார்களுக்கு அருளுபவர்
இப்படி இவர்களை எல்லாம் லாலானம் செய்து கொண்டு  விளங்குகிறாய் என்கிறார் நான்காம் பாதத்தால்
இப்படி லாலானம் செய்வதே அடியார்களுக்கு செல்வத்தையும் வித்யைகளையும் அருளவே என்கிறார் –

————-

கல்விக் கடவுளான அவன் கடலுடன் கொண்டுள்ள உறவைக் காட்டி மங்களா சாசனம் செய்கிறார் 20 பாசுரத்தில் –

வாரா சேஸ் தனயாம் வஹன்னதி தரா மானந்த பூர்ணாந்தர
வாரா சேஸ் தனயே ஸதா வசந்நபி ததோ சந்த்தோர் வாரிதி
வாக் தேவீ த்ருத பாத பங்கஜ யுகோ வாஸா மயம் நாயக
வாஸாம் காஞ்சன தோரணமபி வஹன் வாஜ்யானனோ வர்த்ததே –20-

வாரா சேஸ் தனயாம் வஹன்னதி தரா மானந்த பூர்ணாந்தர –கடலின் திருமகள்
பாற்கடலில் தோன்றிய ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தனது மடியில் வைத்துத் தாங்குவதால்
திரு உள்ளத்தில் ஆனந்தம் நிறைந்து இருக்கிறான்
வாரா சேஸ் தனயே ஸதா வசந்நபி ததோ சந்த்தோர் வாரிதி -கடலின் மகனான சந்த்ரனுள்
பாற்கடலில் தோன்றிய சந்த்ரனின் மண்டத்தில் குடி இருக்கிறான்
அங்கும் ஆனந்தக் கடலாகவே இருக்கிறான்
மைத்துனன் வீட்டில் குடி இருந்த மாப்பிள்ளையானாலும் நல்ல ஆனந்தக் கடலாகவே இருக்கிறானாம் –
ந ஸ்தான தோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ரஹி -உபய லிங்க பாதம் -3-2-10-325-
எங்கு இருப்பினும் அவனுக்கு குறை வராதே-உபய லிங்க விஸிஷ்டன்
வாக் தேவீ த்ருத பாத பங்கஜ யுகோ வாஸா மயம் நாயக -வாக்தேவியான கலைமகள்
அவனது திருப்பாதங்களை சுமக்கிறாள் -வாக்குக்கு எல்லாம் அவனே நாயகன்
வாஸாம் காஞ்சன தோரணமபி வஹன் வாஜ்யானனோ வர்த்ததே –வாக்குகளின் சொற்கள் தடைபடாத
தனியோர் வெள்ளமே அவனிடம் குடி இருக்கிறது -இத்தகையவனாக ஹயக்ரீவப் பெருமாள் இலங்கிடுகிறார்

அடி தோறும் முகப்பில் வா என்னும் எழுத்து –
வா எழுத்து ஏழு இடங்களிலும் – என்பதையும் சேர்த்து 16 முறை பயில்கின்றது
வாராசி -கடலைக் குறிக்கும் சொல் ஸ்லோகத்தின் முதல் பகுதியில் இரண்டு இடங்களில் வருகிறது
குதிரையை –சைந்தவம் -ஸிந்து ஜம் -என்றும் வடமொழியில் உண்டு
கடலில் இருந்து தோன்றியதால் ஸிந்துஜா அவளுக்கு போல் இவனுக்கும் ஸிந்து ஜம்
ஆகவே வாஜ்யானனோ வர்த்ததே என்பதற்குப் பதில் வாராசி ஜாஸ் யோஸ்தி ந என்று ஒலித்து இருந்தால் மும்முறை வாராசி வந்து இருக்குமே

நாராயணீயத்தில் –த்வம் ஸிந்து ஜாவாப்ய இதீவ மத்வா ஸம் ப்ராப்த வான் ஸிந்துஜ வாஜி ரூப -என்று
குதிரை வடிவத்தினை ஸிந்துஜ ரூப என்று மட்டும் அருளிச் செய்யாமல் ஸிந்துஜ வாஜி ரூப என்று அருளிச் செய்கிறார்
சைந்தவம் என்ற சொல்லை விளக்கும் பாணினி பகவான்
ஸிந்து தக்ஷ சிலாதிப்யோ அணஞவ்-என்ற ஸூத்ரம் அறிந்த நாராயண பட்டாத்ரி-ஸிந்து முதலிய 11 பதங்களால்
குறிப்பிடப்படும் நகரங்களில் பரம்பரையாக பல தலைமுறைகளால வசிப்பவர்கள் என்றபடி
ஸிந்து நாட்டில் வசிக்கும் குதிரைகள் பரம்பரையில் வந்த குதிரை சைந்தவம் -அதுவே ஸிந்துஜம்
ஒரு குறிப்பிட்ட தேசத்தைக் குறிக்கும் சொல் கடலைக் குறிக்கும் சொல் அல்ல
இந்த சிலேடையைப் பயன்படுத்தி ஸிந்த ஜாவப்யன் என்ற தொடர் ஸிந்துஜா வான லஷ்மியால் அடையப்படுபவன் என்றும்
ஸிந்துஜாவான குதிரையால் அடையப்படுபவன் என்ற பொருளையும் ஏற்ப்பதைக் கொண்டு நயமாக ஸ்லோகத்தை அமைத்து அருளி உள்ளார்

யோ வா அஸ்வஸ்ய மேத் யஸ்ய -என்று தொடங்கும் தைத்ரிய சம்ஹிதையில் நிறைவு அனுவாகத்தில்
சமும்ரோ வா அஸ் வஸ்ய யோனிஸ் ஸமுத்ரோ பந்து -என்பதற்கு
விளக்க பாஷ்யம் -சமுத்திரம் -கடல் பிரசித்த அர்த்தம் காட்டாமல் பரமாத்மாவையே சொல்லும்
அஸ்வஸ்ய ஸமுத்ர ஏவ யோநி காரணம்
ஸம் யக் உத் த்ரவதி உத்பத்யதே ஜகத் அஸ்மா திதி ஸமுத்ர பரமாத்மா –உலகுக்கு காரணம் -குதிரைக்கும் அவனே காரணம் -அவனே அன்றோ
அஸ்வமேத வேதக் குதிரையை விராட் ஸ்வரூபமாக த்யானம் செய்யும் முறையை விளக்கும் அனுவாகம்
யோ வா அஸ்வஸ்ய மேத் யஸ்ய சிரோ வேத சீர்ஷன் வான் மேத்யோ பவதி -தலையை சிற்றம் சிறு காளைக்கு உரிய
உஷஸ் என்கிற தேவதை என்று கற்பனை செய்து கொள்ள வேண்டும்
ஸூர்ய சஷுஸ் -கண்ணை ஸூர்யன் என்றும்
வாத ப்ராண -மூச்சை வாயு என்றும்
சந்த்ர மாஸ் ஸ்ரோத்ரம் -காதைச் சந்திரன்
திச பாதா –நான்கு கால்கள் திக்குகள்
அவாந்தர திச பர்ஸ்வ -விலா எலும்புகள் உப திசைகள்
அஹோ ராத்ரே நிமேஷ -கண் அமைப்பதும் திறப்பதும் பகல் இரவு காலங்களுக்கு உரிய தேவதைகள்
அர்த்த மாஸா பர்வாணி -குதிரையின் உடலில் உள்ள மூட்டுக்கள் வளர் பிறை தேய் பிறைக்கு உரிய தேவதைகள்

மாஸாஸ் சந்தானானி -வேதக் குதிரையின் உடலில் உள்ள இணைப்புக்கள் மாதங்களுக்கு உரிய தேவதைகள்
ரிதவோ அங்காநி –மற்ற அங்கங்கள் ருத்துக்களுக்கு உரிய தேவதைகள்
ஸம்வத்ஸர ஆத்மா -மையப்பகுதி வருஷத்துக்கு உரிய தேவதை
சஸ்மய கேஸா -பிடரி மயிர்கள் கதிரவனின் கதிர்கள்
நக்ஷத்ராணி ரூபம் -உடலில் உள்ள மிளிரும் பகுதிகள் 27 நக்ஷத்ரங்களுக்கு உரிய தேவதைகள்
தாரகா அஸ்தாநி -மற்ற உறுப்புக்கள் -விலா எலும்பு நீங்கமாக- த்ருவன் சுக்ரன் போன்ற நஸ்த்ரங்களுக்கு உரிய தேவதைகள்
நபோ மாகும் ஸாநி -உடலில் உள்ள மாம்சம் ஆகாசத்துக்கு உரிய தேவதை
ஓஷத்யோ லோமாநி -உடலில் உள்ள சிறு ரோமங்கள் பயிர்களுக்கு உரிய தேவதை
வனஸ்பதயோ வாலா–வாலில் உள்ள நீண்ட ரோமங்கள் வனஸ்பதிக்கு உரிய தேவதைகள்
அக்னிர் முகம் -முகத்தை அக்னி
வைஸ்வானரோ வ்யாத்தம் -திறந்த வாயை வைஸ்வானர அக்னி
ஸமுத்ர உதரம் -வயிற்றினை சமுத்ரத்துக்கு உரிய தேவதை
அந்தரிக்ஷம் பாயு ஆசனவாய் அந்தரிக்ஷத்துக்கு உரிய தேவதை
த்யாப்ருதிவீ ஆண்டவ் -விரைகளை வானம் பூமி இவற்றுக்கு உரிய தேவதைகள்
க்ராவா சேப -ஆண் உறுப்பை வேள்வில் ஸோம ரசம் பிழிய உதவிடும் அம்மிக்கல்லுக்கு உரிய தேவதை
ஸோமோ ரேதஸ் -ஆண்மை த்ரவ்யம் ஸோம ரஸத்துக்கு உரிய தேவதை
யஜ்ஞம் ஜப்யதே தத் வித்யோ ததே –உடல் அசைவுகளை மின்னலுக்கு உரிய தேவதை

யத் விதூனதே தத் ஸ்தனயதி –கனைப்பு ஒலியுடன் கூடிய உடல் அசைவினை இடி முழக்கத்துக்கு உரிய தேவதை
யன் மேஹதி தத் வர்ஷதி -சிறு நீர்ப் பொழிவை மழைக்கு உரிய தேவதை
வாக் ஏவ அஸ்ய வாக் -கனைப்பு ஒலியே வேத ஒலிக்கு உரிய தேவதை

அனந்தைஸ் த்ரையந்தை ரனு விஹித ஹேஷா ஹலம் ஹலம் -கனைப்புஒலியின் பின் அணியே உபநிஷத்துக்கள் வாக்கியங்கள்

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—-ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்–2-

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -3-

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –

வேதம் மேலே -குதிரைகளில்
ஹய
அர்வா
வாஜீ
அஸ்வா –போன்ற உட்ப்பிரிவுகள் உண்டு
ஹய பிரிவைச் சேர்ந்த குதிரைகள் தேவர்களுக்கு வாஹனம்
அர்வா பிரிவு அஸூரர்களுக்கு –
வாஜி பிரிவு கந்தர்வர்களுக்கு –
அஸ்வ பிரிவு மனிதர்களுக்கு
ஹயோ தேவானவ ஹதர்வாசூரன் வாஜீ கந்தர்வா அஸ்வோ மனுஷ்யான் –என்பது மூலம்
இப்படி விராட் வடிவம் பெற்ற வேள்விக் குதிரைக்குக் காரணம் -சமுத்திரம் -பரமாத்மாவே தான் இருக்க முடியும் –
இத்தையே வேதம் –சமுத்ரோ வா அவஸ்ய யோநி என்றும்
முடிவில் அவனே பாதுகாக்கும் உறவினன் என்று ஸமுத்ரோ பந்து என்கிறது
இவ்வாறு உபாசித்தால் அஸ்வமேத வேள்வி செய்த பலனே கிட்டும்

இந்த விராட் த்யானம் உபாசனங்களின் சக்ரவர்த்தி -இவைகள் மூலம் பூர்ண ஞானம் உண்டாகும் -பிறவிப் பயனைப் பெறலாம்
க்ராதுராட் ஸ்வேமேதோ அயம் விராட் த்யானம் முபாஸ்திராட்
தாப்யாம் உத்பத்யதே ஞானம் க்ருதக்ருத்யோ பவத்யத -முத்தாய்ப்பு ஸ்லோகம்
இத்தையே கிருஷ்ண யஜுர் வேத சாற்றுமுறை ஸ்ருதியாக ஒத்துகிறோம்
இதன் பின்னணி அறிந்து -வேள்வியில் ஆவிர்பவித்த வரதனுடைய புறப்பட்டு சாற்றுமுறை கேட்டு ஆனந்திப்போம்

————

யோஷா பூஷித மஞ்சுளாங்க மதுரா
பாஷா நாதஸ மூடி தாங்க்ரி யுகல
பாஷா வேஷ ஸமஸ்த வேத நிவஹ
தோஷான் ஷிபன் வாதினாம்
சோஷாயாக ஜவா சயஸ்ய நிதராம்
தோஷாய ச ஸ்யாத் ஸந—சார்தூல விக்ரடீதம் -அடி தோறும் 12 எழுத்துக்களுடன் இறுதி -21-வது -ஸ்லோகம்-எதுகையை ப்ராஸம் என்பர்

யோஷா பூஷித மஞ்சுளாங்க மதுரா —
பிராட்டியால் அலங்கரிக்கப்பட்ட இனிய தொடை
இனியவனாக ஸேவை சாதிக்கிறான்
பாஷா நாதஸ மூடி தாங்க்ரி யுகல
சரஸ்வதி தேவியும் அவள் நாயகனும் பக்தியுடன் வணங்கும் திருவடிகள் –
பாஷா வேஷ ஸமஸ்த வேத நிவஹ
கனைப்பில் அனைத்து வேதங்களையும் –
கனைப்பு என்கிற வேஷம் பூண்டு வந்த அனைத்து வேதங்களின் குழுக்களையும் யுடையவன் –
தோஷான் ஷிபன் வாதினாம்
குத்ருஷ்டிகளின் வாதங்களை தொலைவில் தூக்கி எறிபவன்
சோஷாயாக ஜவா சயஸ்ய நிதராம்
நல்ல ஞானம் அளித்து தீ வினை சாகரத்தை வற்றி விடுவான்
சந்த்ரனைக் கண்டால் கடல் பொங்கும்
சந்த்ர மண்டலத்தில் உள்ள ஹயக்ரீவப் பெருமானைக் கண்டால் தீவினை சாகரம் வற்றியே விடும் –
தோஷாய ச ஸ்யாத் ஸந
இவ்வாறு தீ வினைகள் அகற்றி நமக்கு இன்னருள் செய்பவனாக இலங்க வேண்டும் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹயக்ரீவர்  பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

July 23, 2023

ஸ்ரீ லக்ஷ்மி நாதாக்ய சிந்தௌ சடாரிபு ஜலதஹா ப்ராப்ய காருண்ய நீரம்!
நாதா த்ரவப் க்ஷிஞ்சன் ததானு ரகுவரம் போஜ ஷக்சுர் ஜலாப்யம்!!
கத்வதாம் யாமுநாக்யம் சரிதாமத் யதீந்த்ராக்ய பாத்மாகாரேந்திரம்!
ஸம்பூர்ய ப்ராணி சாஸ்யே ப்ரவஹத பஹூதா தேசிகேந்த்ர பிரமேகைஹி.”!!

ஸ்ரீ லட்சுமி நாதன் ஒரு பெரிய கடல்.  நம்மாழ்வார் ஒரு மேகம்.
இந்த கருமேகம் ஆழ்வார் கடலில் இருந்து தண்ணீரை (ஞானம்/அறிவு) எடுத்து மலைகளில் மழையாக (பாசுரங்கள்) பொழிந்தார்.
மலை என்பது ஸ்வாமி நாதமுனிகல் என்று குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நீர்வீழ்ச்சிகளாக நீர் விழுகிறது,
இந்த நீர் வீழ்ச்சி ஸ்வாமி உய்யக்கொண்டார் மற்றும் ஸ்வாமி மணக்கால் நம்பி என்று குறிப்பிடப்படுகிறது,
இந்த நீர் அருவி ஸ்ரீ ஆளவந்தார் என்ற பெரிய ஆற்றை அடைந்தது.
அப்போது ஏரியில் தண்ணீர் தேங்கியது.
இந்த ஏரி ஸ்வாமி ராமானுஜரால் குறிப்பிடப்படுகிறது.
ஏரியில் இருந்து 74 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

74 ஸ்லோகங்கள் ஸ்வாமி ராமானுஜர் உருவாக்கிய 74 சிம்ஹாசனங்களுக்குச் சமம்.

வீராணம் ஏரியில் 74 கடைமடைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரியின் 74 கடைகளும் ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மஸ்னாதிபதிகளை
சித்தரிப்பதாக நமது பூர்வாச்சாரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இப் பூலோகத்தில் 74 ஆண்டுகள் வாழ்ந்தார்,
ஸ்வாமி பிறந்தது 1370 ஆம் ஆண்டு ஐப்பசி மூலம்,
அவதார சமாப்தி 1443 ஆம் ஆண்டு மாசி கிருஷ்ண பக்ஷ துவாதசியில்.

ஆழ்வார்கள் ஆச்சார்யாக்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் நமக்குத் தரும்
ஸ்ரீ மாமுனிகளின் ஒரு படைப்பான ஸ்ரீ உபதேச ரத்தினமாலாவும் 74 ஸ்லோகங்கள் கொண்டது
(இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸ்வாமி ராமானுஜருக்கு
மரியாதை அளித்து 73 பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளார் என்பதும்,ஆனால் அவரது சிஷ்யரும் அஷ்டதிக்கஜங்களில் ஒன்றான
ஸ்ரீ எறும்பியப்பா 74 வது பாடலை இயற்றினார்

ஸ்வாமி ராமானுஜ @ 74 வயதில் திருக்குறுங்குடி நம்பிக்கு ஆச்சாரியார் ஆனார்-
ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பி ” ஸ்ரீ வைஷ்ணவ நம்பி” என்று அறியப்பட்டார்

———–

ஸ்ரீ வரதராஜப் பெருமான், யானை மலையில் (கரி-சைலம் ) அமர்ந்திருக்கும் கருமேகம்,
யதிராஜரின் தயா (62) என்ற அமிர்தப் பெருங்கடலில் இருந்து ஆழமாக குடித்ததால் மட்டுமே
அவரது பக்தர்களுக்கு விரும்பிய நன்மைகளை விட அதிகமாகப் பொழிகிறது.
யதிராஜர் என்பது இறைவனின் ஐந்து ஆயுதங்களின் (12), மற்றும்
ஸ்ரீ வைகுண்டத்தில் இறைவனின் படைத் தளபதியான விஷ்வக்சேனரின் அவதாரம் (32),
அல்லது இறைவனின் அவதாரம் (63).
ஸ்ரீ ராமானுஜ நூற்று அந்தாதியில் உள்ள அமுதனரோ, யதிராஜ சப்ததியில் தேசிகரோ,
ராமானுஜரை சேஷ அவதாரம் (ஆதிசேஷ அவதாரம்) என்று குறிப்பிடவில்லை.

வேதாந்த தேசிகர் முதன் முதலில் யதிராஜரின் படைப்புகளால் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டார் என்பது
இந்த படைப்பில் உள்ள அவரது புகழ்ச்சியில் உள்ள முதல் ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது (10).
ஸ்லோகம் 33 இல் உள்ள படைப்புகளுக்கு தேசிகரின் பாராட்டுக்கள் அவரது பெரும் மதிப்பு மற்றும் போற்றுதலுக்கு பொதுவானதாகக் கொள்ளலாம்.
காரணம், ராமானுஜரின் படைப்புகள் மட்டுமே (கண்ணாடியில் இருப்பது போல), லட்சுமி-காந்தா (ஸ்ரீயின் மனைவி)
அவர் உண்மையில் இருப்பதைப் போலவே பிரதிபலிக்கின்றன,
மற்ற அமைப்புகளில் அவர் காணப்பட்டால், அவர் சிதைந்தவராகக் காணப்படுகிறார்.
ஹரி எனப்படும் தத்துவத்தை யதிராஜரின் சித்தாந்தத்தில் மட்டுமே முழுமையாகவும் (அக்ஷதம்) காண முடியும் என்றும் ஸ்லோகம் 16 கூறுகிறது.

யதிராஜரின் யசஸ் (புகழ்) (71) இல் மூழ்கிய பெரிய ஆச்சார்யர்களால் அவர் மீது பொழிந்த ஆசீர்வாதங்கள்.

——————-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே
எம்பெருமான் –
பிராட்டி –
சேனை முதலியார் –
ஆழ்வார் –
நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

வேதங்களை பிரமனுக்கு கற்பித்தவன்
பாஞ்சராத்ர ஆகமத்தை இயற்றியவன்
பெரிய பிராட்டியாருடன் இல்லறத்தில் உள்ளவன்
முதலாச்சார்யன்
இப்படிப்பட்ட பெரிய பெருமாளை அடியேன் வணங்குகிறேன்

———-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

இந்த உலகிற்கு எந்த வகையில் நன்மை செய்யலாம் என்று பெரிய பெருமாளுடன் எப்போதும் ஆலோசனை செய்பவள்
அருள் என்பதே வடிவம் கொண்டதோ என்னும்படி உள்ளவள்
அன்பின் மிகுதியால் தண்டனை என்பதையே அறியாதவள்
பெரிய பெருமாளுக்கு ஏற்றவளாக இருப்பவள்
இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரை அடியேன் வணங்குகிறேன்-

———–

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விஸ்வம் ஏதத் வ்யவஸ்திதம்

யாருடைய கையில் உள்ள பிரம்பின் நுனி அசைவதைக் கண்டு இந்த உலகம் இயங்குகிறதோ
யாரிடம் இந்த உலகம் கட்டுப்பட்டு உள்ளதோ
யார் ஒருவர் ஸூத்ரவதி என்பவளுக்குக் கணவனோ
பெரிய பெருமாளின் சேனைக்குத் தலைவராக உள்ளவர் யாரோ
அப்படிப்பட்ட விஷ்வக் சேனரை அடியேன் வணங்குகிறேன் –

———–

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

அவருடைய திருமேனி மட்டும் அல்லாது அவரது வாக்கின் மூலம் வெளிவரும் சொற்களிலும் மகிழம் பூ மணம் சூழ்ந்துள்ளது
அத்தகைய அவரது வாக்கானது வெள்ளம் போன்று ஓடி வர அதில் வேதங்கள் தங்கள் களைப்பை ஆற்றிக் கொள்கின்றன
இப்படிப்பட்ட நம்மாழ்வாரை நாம் உபாஸிப்போம்-

———–

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

வேதங்களில் பொதிந்துள்ள உண்மைகள் அனைத்தும் அவரிட்மன் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக நிற்கும் நிலை பெற்றது
அப்படிப்பட்ட நாதமுனிகள் மூலம் நான் உயர்ந்த நல்லவரை அடைவேன் ஆவேன்

நாதமுனியை எனது நாதராக (எஜமானர்) நான் வைத்திருக்கிறேன்,
யாருடைய கைகளில் வேதங்களின் அடிப்படையான கருவானது புரிதலின் தெளிவைப் பெற்றதோ –
இதை ஹஸ்தாஅமலகா என்று அழைக்கலாம்,
இந்த நாதத்தைக் கொண்டு ஒருவர் கூறுவது போல், நான் ” அநாத ” (ஸ்வாமி இல்லாமல் )  இருக்க முடியாது.

—————

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

நாதமுனிகளின் சிந்தனைகளில் எப்போதும் தனது மனதை நிலை நிறுத்தியவர்
தூய்மையாக உள்ள ஸத்வ குணம் மட்டுமே கொண்டவர்
கிருஷ்ணனின் மற்ற ஒரு அவதாரம் போன்று உள்ளவர்
இப்படிப்பட்ட உய்யக்கொண்டாரை அடியேன் வணங்குகிறேன்

————

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமை மன அடக்கம் ஆகியவற்றை எப்போதும் கை விடாதவர்
அடியார்களுக்கு எந்தவிதமான தீங்கையும் எண்ணாதவர்
எவ்வித செருக்கும் ஆசையும் அற்றவர்
இப்படிப்பட்ட நன்மையால் நான்காவது இராமர் என்று போற்றப்படும் மணக்கால் நம்பியை நாம் உபாஸிப்போம்
பரசு ராமர் சக்ரவர்த்தி திருமகன் பலராமர் மற்ற மூவர்-

பரசுராமர்- சகிப்புத் தன்மை இல்லாதவர்–பலராமர்–மது அருந்தும் பழக்கமுடையவர்.)

————-

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

உலகத்தில் மிகவும் உயர்ந்த இடமான பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதியிடம் மிகவும் அன்புடன் கிருஷ்ணன் இருந்தான்
அந்த நீரில் இருந்து காளியனை அவ்விடத்து விட்டு விலக்கினான்
இந்த யமுனை நதி போன்றே அடியார்களைக் காப்பாற்றவும் தீய புத்தியை விலக்கவும் உறுதியுடையவர் ஆளவந்தார் ஆவார்
அப்படிப்பட்ட அவரிடம் நான் ஆழ்ந்து உள்ளேன்
இந்த ஸ்லோகத்தில் யாமுனம் யமுனை ஆற்றையும் ஆளவந்தாரையும் குறிக்கும் –

யமுனையின் புனித நீரில் ( ஆளவந்தார் ) நீராடுவோம்,
அவர் சராசரி மோகம் மற்றும் பற்றுதல் ஆகியவற்றுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர்,
சாதுக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றவர்,
மற்றும் கிருஷ்ணரால் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன .
(இரண்டாவது பொருள்: பிருந்தாவனத்திற்கு அருகில் உள்ள விஷப் பாம்பு அகற்றப்பட்ட யமுனை நதியின்
புனித நீரில் ஸ்நானம் செய்வோம், அதில் கிருஷ்ணர் ஆர்வம் காட்டினார்.)

—————

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

இந்த உலகைப்படைத்த பெரிய பெருமாளின் மநோ ரதம் இவரால் நிறைவேறியது
அன்புக்கு வசப்பட்ட ஆச்சார்யரான பெரிய நம்பியை அடியேன் அடைவேனாக
ஸ்ரீ வைஷ்ணவம் தழைக்க இவர் மூலம் அன்றோ அன்றோ பஞ்ச ஸம்ஸ்காரம் செய்வித்தான் அரங்கன்

அவர் நமக்கு மகா ராமானுஜரைக் கொடுத்தார், அதன் மூலம் பிரதம படைப்பாளியின் நம்பிக்கையை நனவாக்கினார்.

———-

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

இராமானுஜரின் உயர்ந்த கிரந்த நூல்கள் பெரிய பெருமாளையே தன் வசப்படுத்திக் கொண்டவை யாகும்
அவை உபநிஷத்துக்களுக்கு எழில் சேர்ப்பவை யாகும்
அப்படிப்பட்ட ஸ்ரீ ராமானுஜ முனி அடியேனுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்

———–

11-உபவீதிநம் ஊர்த்வ புண்ட்ர வந்தம்
த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே
சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் –

யஜ்ஜோ பவீதம் தரித்தவர்
திரு நெற்றியில் அழகான ஊர்த்வ புண்ட்ரம் தரித்தவர்
இம் மூன்று லோக புண்ய பலன்களே ஹேதுவாக திரு அவதரித்தவர் என்று காட்டவே த்ரி தண்டம் தரித்தவர்
தன்னிடம் சரண் அடைந்தவர்களை சரியான வழியிலே நடத்தி அருள்பவர்
நேர்த்தியாக சிகை அழகு கொண்டவர்
சந்நியாசிகள் தலைவராக உள்ளவர்
இப்படிப்பட்ட ராமானுஜரை அடியேன் வணங்குகிறேன் 

————–

12-பிரதயன் விமதேஷூ தீஷ்ண பாவம்
பிரபு அசமத் பரி ரஷணே யதீந்திர
அப்ருதக் பிரதி பன்ன யன்மயதவை
வவ்ருதே பஞ்சபி ஆயுதை முராரே

ஸ்ரீ பஞ்சாயுதங்களான சங்கு சக்கரம் கதை வாள் வில் அனைத்துமே ஸ்ரீ ராமானுஜராக உருவம் கொண்டு இங்கே வந்தன
வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை தனது கொடிய தன்மையைக் காண்பித்து வாதம் செய்து வெற்றி கொள்ளும்
ஸ்ரீ ராமானுஜர் நம்மைக் காத்து அருளுவதில் வல்லவர் ஆவார் –

————

ஸ்ரீ கண்ணனே ஸ்ரீ எம்பெருமானார் -சிலேடையில் அமைந்த ஸ்லோகம் –

13-சமித உதய சங்கராதி கர்வ
ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான்
நநு ராம அவரஜ ச ஏஷ பூய -13

பாணாசூர யுத்தத்தில் சிவபெருமானைக் கண்ணன் வென்றான்
இதே போல் அத்வைதிகள் வான்தங்களை ராமானுஜர் வென்றார்
யாதவர்களின் பெருமையை கண்ணஅவருக்குப் பெருமை அளித்தார் நம் ஸ்வாமி
அர்ஜுனன் தேர் முன் நின்று அவனது எதிரிகளை கிருஷ்ணன் வென்றான்
வேதத்தின் முன்பாக நின்று வேத பாஹ்ய குத்ருஷ்டிகளை நம் ஸ்வாமி வென்றார்
நம்பி மூத்த பிரானின் தம்பியான கிருஷ்ணனே -பார்த்த சாரத்தியே நம் ஸ்வாமியாக திரு அவதரித்து அருளினார்

தனது சொந்த படைப்புகளால்  -கீதை மற்றும் ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கக் கூறப்பட்ட- தவறான அர்த்தங்களை நீக்கினார்.

———

14- அபஹூஸ்ருத சம்பவம் ஸ்ருதீ நாம்
ஜரதீ நாம் அயதாயத பிரசாரம்
வி நிவர்த்தயிதம் யதி ஈஸ்வர உக்தி
விததே தா ஸ்த்திர நீதி பஞ்ஜர ஸத்தா-14

அநாதியான உபநிஷத் கருத்துக்களுக்கு ஆழ்ந்த அறிவு இல்லாமல் நேர்மையற்ற முறையில் உரை செய்தார்கள்
இப்படிப்பட்ட புற வாதங்களை ஒழித்து வலிமையான எதிர்வாதம் என்னும் கூண்டில் உபநிஷத் என்னும்
கிளியானது ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யங்களால் பாதுகாக்கப் பட்டது

ராமானுஜர், வேதங்கள் போன்ற பழைய வேதங்களின் பறவைகளுக்கு நிரந்தர சரணாலயமாக
தனது படைப்புகளுக்கு ஒரு கூடு கொடுத்தார், ஏனெனில்
பறவைகள் வேதப் படைப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்ளும் பாஹ்ய வாதிகளால் சித்திரவதைக்கு ஆளாகின்றன.

—————

15-அமுநா தபந அதிசாயி பூம் நா
யதி ராஜேந நிபத்த நாயக ஸ்ரீ
மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி
விபுதா நாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வாமியின் தேஜஸ்ஸு ஸூர்யனை விட ஒளி மிக்கதாகும்
நன்கு கற்று அறிந்த ஞானிகள் தங்கள் மார்பில் எப்போதும் ஆச்சார்ய பரம்பரை என்னும்
இரத்தின மாலையை மானசீகமாக அணிந்து இருப்பார்கள்
அந்த குருபரம்பரை மாலையின் நடுநாயகமாக நம் ஸ்வாமி உள்ளார்

(ராமானுஜம்) மையமானது மற்றும் அணிபவரின் இதயத்திற்கு மிகவும் பிரியமானது மற்றும் அருகில் உள்ளது.

————-

16-அலூந பஷச்ய யதி ஷமாப்ருத
விபாதி வம்சே ஹரி தத்த்வம் அஷதம்
யத் உத்பாவ ஸூ த்த ஸூ வ்ருத்த
சீ தளா பவந்தி முத்தாவளி பூஷணம் புவ –

யதிராஜர் என்று போற்றப்படும் இராமானுஜ சித்தாந்தங்கள் அனைத்தும் அவற்றை எதிர்த்து வீண் வாதம் செய்ய இயலாதபடி உள்ளன
அவர் ஏற்படுத்திய பரம்பரையில் ஸ்ரீ ஹரியின் உண்மையான தன்மை சிறிதும் குறைவின்றி உள்ளது
இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் தூய்மையானவர்களாக -சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாக
தூய எண்ணம் கொண்டவர்களாக -பரமபதம் சென்றாலும் அங்கு உள்ளவர்கள் வரிசையில் முத்துபோன்று ஒளி மிக்கு ஆபரணம் போல் இருப்பார்கள்

ராமானுஜரின் சிறகுகள் இன்னும் வெட்டப்படாத மைனாக மலை!
அவரது குழுவிலும், சீடர்களின் வரிசையில் (மூங்கில் போல) பசுமையான தன்மை நீடிக்கிறது
மற்றும் ஹரியின் கொள்கை உயர்வாக ஆட்சி செய்கிறது!
வரிசையில் உள்ள அனைத்தும் மிக உயர்ந்த தன்மையுடன் தூய்மையாக பிரகாசிக்கின்றன;
குளிர்ந்த மற்றும் இரக்கமுள்ள; பெரிய ஒளிவட்டத்துடன் உலகை முத்து மாலையாக அலங்கரிப்பார்கள்.
(வம்சம் என்றால் பரம்பரை மற்றும் மூங்கில்;
ஹரி என்றால் இறைவன் மற்றும் பச்சை நிறமும் கூட)

———-

சந்திரன் உடன் ஒப்புமை —

17-அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –

பகவானின் திருவடிகளை எப்போதும் பற்றி உள்ளவர்
அனைத்து ப்ரஹ்ம வித்யைகளின் மூலமும் சிறிதும் கைவிடாதபடி உள்ளவர்
எந்தவித தோஷத்தாலும் தீண்டப்படாதபடி உள்ளவர்
மூடர்கள் மனதில் நிலை பெறாமல் உள்ளவர்
உலக விஷய ஆசைகளுக்கு அப்பால் உள்ளவர்
தன்னை அடியவர்களுக்கு சந்திரன் போல் ஆஹ்லாதகரமாக குளிர்ந்து உள்ளவர்
இப்படிப்பட்ட ஸ்வாமியை அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –

ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன்.
பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால்.
சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது,
இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல;
எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார்,
அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்

———–

அவதார பிரயோஜனத்தை அருளிச் செய்கிறார் –

18-அபிகம்ய சம்யகநகா ஸூ மேத்ஸ
யதி சக்ரவர்த்தி பத பத்ம பத்த நம்
ஹரி பக்த தாஸ்ய ரசிகா பரஸ்பரம்
க்ரய விக்ரயார்ஹ தசயா சமிந்ததே

ஸ்வாமியின் திருவடிகள் ஒப்பில்லாத நகரம் போன்று உள்ளன
அந்த நகரத்தை அண்டுபவர்கள் சிறந்த ஞானம் கிட்டப் பெறுகின்றனர்
தங்கள் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெறுகின்றனர்
அடியார்களுக்குத் தொண்டு செய்வதில் இன்பம் பெரும் நிலை அடைகின்றனர்
உயர்ந்தவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் –உயர்ந்த கல்வி பெறுவதிலும் அளிப்பதிலும் -தேர்ச்சி பெற்று மேன்மை அடைகின்றனர்

பெரிய மனிதர்களும், களங்கமற்றவர்களும், கற்றறிந்தவர்களும், உண்மையான பெருநகரத்தை நாடுவதன் தகுதியை சரியாகப் பகுத்தறிவார்கள்,
யதி-சக்கரவர்த்தியின் பாதங்கள். அவ்வாறு குடியேறினாலும், அவர்கள் களத்தில் அறிவாளிகள், பக்தர்களுக்கு அடி பணிந்தவர்கள்;
பாகவதங்களால் பொருட்களைப் பண்டம் போல வாங்கவோ அல்லது விற்கவோ,
சரியான மனப்பான்மையுடன், மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

————-

அப்படி உலகோர் திருந்தியமைக்கு தாமே த்ருவ்ஷ்டாந்தம் –

19-புருஷ அதிவாத பரிவாத பைசு ந
ப்ரப்ருதி ப்ரபூத பத நீய பங்கி லா
ஸ்வ ததே மமாத்ய ஸூ பகா சரஸ்வதீ
யதிராஜ கீர்த்தி கதைக விசோதிதா

என்னுடைய வாக்கு என்னும் நீரானது இதுவரை எப்படி இருந்ததது என்னில்
கடுமையான சொற்கள் நிறைந்ததாகவும்
எதனையும் மிகைப்படுத்திக் கூறுவதாகவும் மற்றவர்கள் குற்றங்களைப் பழிப்பதாகவும்
அவர்களை பற்றித் தகாதது கூறுவதாகவும் இருந்தது
இது போன்று பலவிதமான தோஷங்கள் கூடியதாகக் கலங்கிக் காணப்பட்டது
ஆனால் அதில் இடைப்பட்ட ராமானுஜர் சம்பந்தம் என்னும் தேத்தாங்கொட்டை மூலம்
எனது வாக்கு என்னும் நீர் தூய்மை பெற்று இப்போது பரி சுத்தமாகவும் இனிப்பாகவும் உள்ளது

இதன் விளைவாக, சாதுக்களுக்குப் பிரியமாக இருக்க வேண்டிய சரியான உச்சரிப்பு இப்போது என்னிடம் உள்ளது.

——

இப்படி தமக்கு வாழ்ச்சி அளித்த எம்பெருமானார் திருவடிகளில் –
அத்திருவடிகளின் பிரபாவத்தை வாயாறப் பேசி சரணம் புகுகிறார் –

20-அனுகல்ப பூத முரபித் பதம் சதாம்
அஜஹத் த்ரிவர்க்கம் அபவர்க்க வைபவம்
சல சித்த வ்ருத்தி விநிவர்த்தந ஔ ஷதம்
சரணம் யதீந்திர சரணம் வ்ருணீ மஹே –

ஸ்வாமியின் திருவடிகள் எப்படிப்பட்டவை என்னில்
ஞானவான்களுக்கு இவை முன்னாக எம்பெருமானின் திருவடிகளும் முக்யம் அற்றவையாகவே தோன்றும்
ஆறாம் பொருள் இன்பம் இவற்றை எதையும் துறக்காமலேயே மோக்ஷ இன்பத்தை அளிக்க வல்லவை
கலக்கம் நிறைந்த மனநிலையைப் போக்கும் மருந்தாகவே உள்ளன
இப்படிப்பட்ட திருவடிகளை அடியோங்களான நாம் சரணம் என்று நாடுவோம்

இந்த பாதங்கள் சரணடைந்தவர்களுக்கு, (தர்மம், அர்த்தம், காமம்,) மற்றும் மோக்ஷம்
ஆகிய இலக்குகளையும் பாதுகாக்கும்.
அவர்கள் பலவீனமானவர்களின் போக்குகளை சரி செய்வதில் வல்லவர்கள்

————

இப்படி பெருமை வாய்ந்த யதிராஜ சரணாரவிந்தத்தை ஆஸ்ரயித்தவர்களுடைய
பெருமையை அருளிச் செய்கிறார் –

21-ஸ்வ சித அவதூத பரவாதி வைபவா
நிகமாந்த நீதி ஜலதே தல ஸ்ப்ருச
பிரதிபாதயந்தி கதிம் ஆபவர்க்கிகீம்
யதி சார்வ பௌம பதசாத் க்ருதாசயா –

ஸ்வாமியின் திருவடிகளை தங்கள் மனத்தில் பதித்தவர்களும்
அவரது திருவடிகளில் தங்கள் மனத்தை வைத்தவர்களும் ஆகிய சான்றோர்களின் வலிமை என்ன
தங்கள் மூச்சுக் காற்று மூலமே தங்கள் வாதங்களை எதிர்ப்பவர்களை வீழ்த்தி விடுவர் .
வேதாந்த நீதி என்னும் ஆழ் கடலின் தரையை அடைபவர்
மோக்ஷத்தைப் பற்றிய உபாயத்தைப் போதிப்பதில் வல்லவர் ஆவார்

ராமானுஜரின் பாதங்களில் அசைக்க முடியாத பக்தியைப் பற்றுபவர்கள், வேதாந்த சாஸ்திரப் பெருங்கடலில் ஆழமாக ஆழ்ந்து
(தேர்ந்த கருத்துகளின் முத்துக்களை எடுக்க), அவர்கள் மற்ற அமைப்புகளிலிருந்து போட்டியாளர்களை
மிகவும் சிரமமின்றி தோற்கடித்து, முக்தியின் பாதையில் நம்மை வழி நடத்துகிறார்கள்.

————

மீண்டும் உடையவர் சரணம் பற்றுகிறார் —

22-மூலே நிவஸ்ய மஹதாம் நிகம த்ருமாணாம்
முஷ்ணன் பிரதாரக பயம் த்ருத நைக தண்ட
ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ச
ராமானுஜ சரணமஸ்து முனி ஸ்வயம் ந

ஆழ்ந்த வேர்கள் கொண்ட பரந்த வேதம் என்னும் மரத்தின் கீழ் எப்போதும் அமர்ந்துள்ளவர்
வேதங்களை வஞ்சகம் மூலம் வீழ்த்த வல்லவர்கள் இடம் இருந்து அதனைக் காத்து அதன் அச்சம் போக்குபவர்
திருக்கையில் த்ரிதண்டம் ஏந்தியவர்
ஸ்ரீ அரங்கன் திரு முற்றத்து அடியார்களின் மனம் என்னும் தடாகத்தில் வாழும் பரம ஹம்ஸர்
இப்படிப்பட்ட ஸ்வாமி தாமாகவே வந்து தனது பேறாகவே அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும்

வேத முறைக்கு எதிராகக் கலகம் செய்யும் மதவெறியர்களை விரட்டியடிப்பவர்;
மற்றும் பக்தர்களின் (ராமானுஜரின்) இதயத்தின்  ” மானசரோவரில் ” அரச அன்னம் போல் நிற்பவர்

————-

எம்பெருமானாரைப் புகலாகப் பற்றி அவர் அனுக்ரஹத்தால் விஷய ப்ராவண்யன் அற்றவன் ஆனேன் –

23-சத் மந்திர வித் ஷிபதி சம்யமி நாம் நரேந்திர –
சம்சார ஜிஹ்மக முகை சமுபஸ்த்திதம் ந
விஷ்வக் ததம் விஷய லோப விஷம்
நிஜாபி காட அநுபாவ கருடத்வஜ பாவ நாபி –

ஸம்ஸாரம் என்ற பெரிய நாகத்தின் வாய் மூலம் வெளிவந்த உலக விஷயங்களில் பற்று என்னும் கொடிய விஷமானது நான்கு திசைகளிலும் பரவி உள்ளது
அந்த விஷத்தைத் தனது மந்த்ரங்கள் மூலம் போக்க வல்ல பாம்பாட்டி போன்று யதிராஜர் உள்ளார்
எப்படி என்றால் -மிகவும் பெருமை யுடையவனும் கருடனைக் கொடியாக உள்ளவனும் ஆகிய பகவானைத் த்யானிப்பதன் மூலமே ஆகும்

23. ராமானுஜர், ஆற்றல் மிக்க மந்திரங்களில் வல்லவர், மற்றும் உண்மையான பாம்பைக் கவர்ந்திழுப்பவர் –

  • விசுவாசிகள் அல்லாத விஷ பாம்புகளால் தனது பக்தர்கள் தாக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறார்.
  • உடல் முழுவதும் பரவியிருக்கும் (கருடனைப் பற்றித் தியானிப்பதன் மூலம்) உணர்வுப் பூர்வமான மோகம் என்ற விஷத்தையும் நமக்குக் குணப்படுத்துபவர்.

———

எந்தன் மெய் வினை நோய் களைந்தான் என்றார் கீழ் –
களைந்து நல் ஞானம் அளித்தனன் என்று போற்றுகிறார் இங்கு –

24-நாத ச ஏஷ யமி நாம் நக ரஸ்மி ஜாலை
அந்தர நிலீ நம் அப நீய தம மதீயம்
விஜ்ஞான சித்ரம் அநகம் லிகதி இவ சித்தே
வ்யாக்யாந கேளி ரசி கே ந கர அம்புஜேந –

ஸ்வாமியின் ஞான முத்திரையில் உள்ள திரு நகங்களில் இருந்து தேஜஸ்ஸூ ப்ரவாஹம்
அடியேன் உள்ளத்தில் நிறைந்த அஞ்ஞானம் என்ற அந்தகார இருளை நீக்குகிறது
உபதேசம் செய்ய வேண்டிய வகை அறிந்து தனது தாமரைத் திருக்கைகள் மூலம்
எனது உள்ளத்தில் சிறந்த ஞானம் என்னும் சித்ரத்தைத் தீட்டி அருள்கிறார்

ராமானுஜர் தனது வலது உள்ளங்கையில் அமர்ந்து, சைகையில், அறிவுரை மற்றும் அறிவுறுத்தல்.
பொலிவுடன் கூடிய நகங்கள், நம் இதயங்களில் உள்ள இருளை (அறிவை) அகற்றி,
இரு விரல்களையும் ஒருங்கிணைத்து, நம் இதயங்களில் ஒரு ஞானத்தை – தகவலறிந்த
ஓவியம் வரைவதற்குத் தயாராகிறது.

————

இனி திருப்பொடு எழில் ஞான முத்திரை வாழியே -என்கிறபடியே
ஞான பிரதராய் எழுந்து அருளி யுள்ள யதிராஜரை சாஷாத் கரித்து மேலும் அனுபவித்து மகிழ்கிறார்
பாஷ்யகாரரை, பக்தி மூலமாக சாக்ஷாத்கரித்து,உபதேச முத்ரையோடு கூடிய திருமேனியை
ஸ்வாமி தேசிகன் ஸேவித்து அனுபவிக்கும் ஸ்லோகம்.

25-உத்க்ருஹணதீம் உபநிஷத் ஸூ நிகூடமர்த்தம்
சித்தே நிவேசயிதும் அல்ப தியாம் ஸ்வயம் ந
பச்யேம லஷ்மண முனே ப்ரதிபந்த ஹஸ்தாம்
உன்நித்ர பத்ம ஸூ பகாம் உபதேச முத்ராம்

நமது உள்ளத்தில் தகாத அறிவு மட்டுமே உள்ளது
இதனைப் போக்குவதற்காகவே யதிராஜர் தனது திருக்கையில் மலர்ந்த தாமரை மலர் போன்ற ஞான முத்திரை வைத்துள்ளார்
இதனைக் காணும் போது அவர் தானாகவே வலிய வந்து வேதாந்த உண்மைகளை நம் உள்ளத்தில் வைத்து அருளுவதாகவே தோன்றுகிறது
அத்தகைய ஞான முத்திரையை நாம் அண்டி இருப்போமாக

உபநிடதங்களில் மறைந்திருக்கும் அர்த்தத்தை, மந்தமான புத்திசாலிகளின் இதயங்களில் ஆழமாக பதிய வைக்கும்
முயற்சியில் எழுப்பப்பட்ட, மலர்ந்த தாமரை போன்ற அவரது கையில் உள்ள முத்திரையை நாம் உணர்கிறோம்.

————

ஞான முத்திரையை கீழ் இரண்டு ஸ்லோகங்களில் அனுபவித்து
இனி ஸ்வாமி திருவாய் மலர்ந்து அருளும் ஸ்ரீ வாக்ய சைலிகளை போற்றுகிறார் –
உபதேசிப்பவர், அவரின் உபதேச முத்ரை,இவற்றை வர்ணித்தவர்
இந்த ஸ்லோகத்தில் உபதேசமொழிகளின் சொற்சுவை, பொருட்சுவையைச் சொல்கிறார்.

26-ஆகர்ஷணாநி நிகமாந்த சரஸ்வதீ நாம்
உச்சாட நாதி பஹி அந்த உபப்லவா நாம்
பத்த்யாநி கோர பவ சம்ஜ்வா பீடிதா நாம்
ஹ்ருதயாநி பாந்தி யதிராஜ முனே வசாம்சி –

யதிராஜரின் புண்ணிய கிரந்தங்கள் வேதாந்த வரிகளையும் அவற்றுள் உள்ள மறை பொருள்களையும் நம் அருகே அழைத்து வந்து விடுகின்றன
நமது உள்ளும் புறமும் நம்மைப் பெரும் தொந்தர வுகளுக்கு ஸம்ஸாரம் என்ற பயங்கரம் ஆட்படுத்தியபடியே உள்ளது
இத்தகைய நோயால் பீடிக்கப்பட்ட நமக்கு நன்மை செய்வதாக நமது உள்ளத்தில் பதிந்து நிற்பதாக அவை உள்ளன –

ஸ்ரீ ராமானுஜரின் இலக்கியப் படைப்புகள், உப நிஷத்துக்களில் இருந்து அதிக அளவு வைராக்கியத்துடன் இருக்க “வழி காட்டுகின்றன”.
மந்திரம் உச்சரிப்பதைப் போலவே, உள்ளும் வெளியிலும் நாம் அனுபவிக்கும் சித்திரவதைகள் மற்றும்
சம்சார உலகில் மக்கள் பாதிக்கப்படும் நாள்பட்ட நோய் மற்றும் குறைபாடுகளுக்கு எதிராக
உறுதியான மற்றும் பாதுகாப்பான ஊட்டச் சத்தை இந்த படைப்புகள் அழிக்கின்றன .

———–

27-சீத ஸ்வபாவ ஸூபக அனுபவ சிகாவான்
தோஷ அவமர்த்த நியத உந்நதி ஓஷதி ஈச
தாப அனுபந்த சமன தபன பிரஜா நாம்
ராமானுஜோ ஜயதி சம்வலித த்ரிதாமா –

அருள் என்னும் குளிர்ந்த காரணமாக சந்த்ரன் போலவும்
தன்னை அடியவர்களின் தோஷங்களைப் போக்குவதால் அக்னி போலவும்
இவ்வுலகம் வளம் பெற ஸூர்யன் இன்றியமையாமல் இருப்பது போல் இருந்து
நமது தாபத் த்ரய பிரவாஹங்களைப் போக்கி அருளுவதால் ஸூர்யன் போலவும்
ஆக மூன்று வித தேஜஸ்ஸுக்களும் கலந்து போல் உள்ளார்

27. அவர் வெற்றியுடன் பிரகாசிக்கட்டும்-

  • அவர்- அந்த ராமானுஜர், தனது குளிர்ச்சியான மற்றும் கனிவான தாக்கத்தால், அசாதாரண அக்னியாக நடந்து கொள்கிறார்;
  • அவர்- நம் இருளை (நம் குறைகளை) நீக்கும் விஷயத்தில் நாவல் சந்திரனாக இருப்பவர்;
  • அவர்- நமக்கு ஏற்படும் மூன்று வகையான துன்பங்களை நீக்குவதில், இரண்டாம் சூரியனாக இருப்பவர்;
  • இவ்வாறு, நமக்கு இரட்சிப்பை வழங்குவதற்காக அவர் மூன்று பேரின் கூட்டமாக விவரிக்கப்படலாம்.

——–

ஸ்வாமியுடைய தேஜஸை ஸ்துதித்து மகிழ்ந்தார் கீழ் –
மேலே அவருடைய சகல வித்யா வைதுஷ்யத்தையும் –
குத்ருஷ்ட்டி நிரசன சாமர்த்யத்தையும் புகழ்கிறார் –

28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர

அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்

28. ராமானுஜம் கிட்டத்தட்ட இப்படி ஜொலிக்கிறார்:

  • இமயமலையில் இருந்து அனைத்து ஆறுகளும் (கங்கை போன்ற) அனைத்து புராணங்களும் பாய்கின்றன:
  • அனைத்தையும் வழங்கும் ” கல்பக ” மரம், அதன் நிழலில், மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்புகளால் சித்திரவதை செய்யப்பட்ட ஜீவர்கள் ஓய்வெடுக்க முடியும்;
  • பலதரப்பட்ட பள்ளிகளில் இருந்து தகராறு செய்பவர்களின் மாயையான இயங்கியல் ஆதிக்கம் செலுத்தும் இரவு இருளை அகற்றும் விடியல் சூரியன்;
  • வேதங்களின் பாற்கடலில் இருந்து தோன்றும் முழு நிலவு.

———————–

எம்பெருமானாரின் சகல வித்யா பாரங்கத்தைப் பேசினவர்-
மேலே ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று வேண்டுகிறார் –

29-முனி பஹூ மத சாரா முக்தி நிஸ்ரேணிகா இயம்
சஹ்ருதய ஹ்ருதயா நாம் சாச்வதீ திஷ்ட ஸித்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ரச்ய ஸூக்தி
பரிசித கஹ நா ந பிரஸ்நுவீத பிரசாதம்

ராமானுஜர் உலகுக்குத் தந்த இலக்கியத் தலைசிறந்த படைப்புகள்,
நமக்குத் திறந்து, உள் அர்த்தத்தையும் உட்பொருளையும் நமக்குத் தெளிவாகப் புரிய வைக்கட்டும்!
இந்தப் படைப்புகள் , பெரிய முனிவர்களால் பாராட்டப்பட்ட, அத்தியாவசியமானவற்றை வலியுறுத்தும்
மோக்ஷத்தின் படிக்கட்டுகளாக செயல்படும் திறன் கொண்டவை . –
மோக்ஷத்தையே எட்டிப்பிடிக்க உதவும் ஏணி
அவர்கள் மகிழ்ச்சிக்கு ஒரு ஆதாரமாக உள்ளனர்,
நல்ல மனம் படைத்த அனைவருக்கும் அவர்கள் மனத்தில் நிலை பெற்றுள்ள தன்மை உடையவை
பாபங்கள் அனைத்தையும் நீக்க வல்லவை .
அவர்கள் ஆழ்ந்த ஆய்வு, ஆழ்ந்த மற்றும் ஆழமான கருத்துக்கள் சிறந்த இன்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்,
இப்படிப்பட்ட அவர் திவ்ய கிரந்தங்கள் நமக்கு அருள் புரியட்டும்

————

ஸ்வாமியின் ஸ்ரீ ஸூக்திகளின் பெருமைகளை மேலும் பேசி ப்ரீதர் ஆகிறார் –

30-பவ மரு பரிகிந்த ஸ்ப்பீத பா நீய சிந்து
துரித ரஹித ஜிஹ்வா துக்க குல்யா சகுல்யா
சுருதி நயன சநாபி சோபதே லஷ்மண
உக்தி நரக மதன சேவ ஆஸ்வாத நாடிந்தமா ந –

30. ராமானுஜரின் படைப்புகளின் அனைத்துத் திறனையும் பாருங்கள். அவர்கள்-

  • வறண்ட பாலைவனத்தில் பயணிக்கும் தாகத்தால் துன்புறுத்தப்பட்ட பயணிக்கு குளிர்ந்த நீரை வழங்கும் நதி போல;
  • ஆன்மிகப் பணிகளைப் படிக்கும் புனிதர்களுக்குப் பால் ஆறு போல
  • வேதங்களின் கண்களைப் போல, மிகவும் விலையுயர்ந்த மற்றும் விளக்கத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்
  • இறைவனுக்குச் செய்யும் சேவையின் பேரின்பத்தை எவரும் அனுபவிக்கும் வகையில், முக்கிய நரம்பு நாண் இயக்கியைப் போல.
  • நரகத்தை அண்ட விடாமல் தடுக்கும் ப்ரஹ்ம ஞானம் உண்டாக்கி அந்தமில் பேரின்பம் கிட்ட வழி செய்யுமே

——————-

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம்

31-ஹரிபத மகரந்த ச்யந்தின சம்ஸ்ரிதா நாம்
அனுகத பஹூ சாகா தாபம் உன்மூல யந்தி
சமித துரித கந்தா சம்யமி இந்த்ர பிரபன்னா
கதக ஜன மநீஷா கல்ப நா கல்ப வ்ருஷா-

ராமானுஜரின் படைப்புகள் நமக்கு எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்கின்றன!
அவற்றைப் படித்தால், இறைவனின் பாதங்களிலிருந்து வரும் அமிர்தம் போன்ற தேன் பெருகிக் கொண்டே இருக்கும்,
மேலும் மோக்ஷ  ஆனந்தத்திற்குச் சமமாக இருக்கும்.
படைப்புகள் பன்முகத்தன்மை கொண்ட வேதங்களின்
பாதையைத் தழுவி நெருக்கமாகச் செல்கின்றன என்பதை நாம் உணர்கிறோம்.
அவர்கள் கற்பவர்களின் பாவங்களின் குமட்டல் வாசனையை கடைசி வரை அகற்ற முடியும்.
அவை நம் இதயங்களில் ஒரு ” கல்பக ” மரமாக-மாற்றாத ஞானத்தை
அளித்த படி நமது கற்பனை எண்ணங்களின் வளமான வரிசையை உருவாக்குகிறது.
மேலும், படைப்புகள், வாசிப்பின் போது, ​​மூன்று வகையான தானங்களில் இருந்து நம்மை விடுவிக்கின்றன.

—————

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் இனியவை -மஹா உபசாரம் செய்பவை என்றார் கீழ் –
எம்பெருமானார் சேனையர் கோன் அவதாரமாக வந்து பிறந்து
மஹா உபகாரத்தை செய்தார் என்கிறார் –

32-நாநா பூதை ஜகதி சமயை நர்ம லீலாம் விதித்சோ
அந்த்யம் வர்ணம் ப்ரதயதி விபோ ஆதிம வ்யூஹ பேதே
விச்வம் த்ராதும் விஷய நியதம் வ்யஞ்ஜிதா அனுக்ரஹ
சந் விஷ்வக் சேன யதிபதி அபூத் வேத்ர சார த்ரிதண்ட

இறைவன் பல மத அமைப்புகளை உருவாக்கி யிருக்கிறான் – அவை ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன –
இவை எல்லாம் இன்புறும் இவ்விளையாட்டு உடையானுடைய லீலையே .
அவரது முதல்- தொடக்கமற்ற- வியூஹ வடிவம், வாசுதேவர். இருண்ட சாயல் கொண்ட கிருஷ்ணராக பிந்தைய நாள் அவதாரத்தை எடுத்தார்.
கலி யுகத்தில், மக்கள் இன்பத்தில் குடி கொண்டிருக்கும் போது, ​​இறைவன் விஷ்வக்சேனரை அனுப்பினார்,
அவர் தனது அருளால் (ராமானுஜராக பிறந்தார் ,
(சேனாபதி விஷ்வக்சேனர் யதிபதி ஸ்ரீ ராமானுஜராக மாறும்போது, ​​மந்திரக்கோல் திரிதண்டம் ஆகிறது )

————–

இப்படி திருவவதரித்து அருளிய எம்பெருமானாருடைய உபதேசங்கள் பெருமையை உபபாதிக்கிறார் –

33-லஷ்யம் புத்தே ரசிக ரசநா லாஸ்ய லீலா நிதானம்
சுத்த ஆஸ்வதம் கிமபி ஜகதி ச்ரோத்ர திவ்ய ஔஷதம் ந
லஷ்ய அலஷ்யை ஸிதி ஜலதிவத் பாதி தாத்பர்ய ரத்னை
லஷ்மீ காந்த ஸ்படிக முகுர லஷ்மணர்ய உபதேச –

33. நல்ல மனங்கள் இந்தப் படைப்புகளைப் படிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
ஒரு “ரசிகா” ருசிக்கும் மற்றும் அவற்றை எடுத்துக் கொள்ளும் போது அவனது நாக்கு மிகவும் நல்ல விளையாட்டுடன் இருக்கும்.
பேசுவதற்கும் விவாதத்துக்கும் ஏற்ற பொருள்!
காது மிகவும் அன்புடனும் தூண்டுதலுடனும் அவற்றைக் கேட்கும்,
இது ஒரு தனித்துவமான வகை மெய் நிகர் மருத்துவத்தை நிரூபிக்கிறது, அது எவ்வளவு இனிமையானது;
மேலும் அவை இறைவனின் வடிவத்தையும் இயல்பையும் சரியான முறையில் நமக்கு வெளிப்படுத்தும் படிகக் கண்ணாடி.
ராமானுஜரின் படைப்புகளில் உள்ள மையச் செய்திகள் – சில புரிந்து கொள்ளப்பட்டவை மற்றும் சில இல்லை –
ஞானவான்களுக்குப் புலப்படும் -அல்லாதார்க்கு அதன் அர்த்தம் விளங்காது
ஒரு தெளிவான கடலில் பரந்த மற்றும் அளவிட முடியாத கற்கள் சிதறிக் கிடக்கிறது.

—————-

யதிராஜரை அண்டிய ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் சொல்கிறார்.

34-ஸ்திதிம் அவதீர யந்தி அதி மநோ ரத சித்தி
மதீம் யதிபதி சம்ப்ரதாய நிரபாய தநோபசிதா
மதுகர மௌளி தக்ன மத தந்துர தந்தி கடா
கரட கடாஹ வாஹி கந சீகர சீபரிதாம்

34. ” ராமானுஜ சம்பிரதாயம் ” எனப்படும் பெரும் செல்வத்தைப் பெற்ற பின் தொடர்பவர்களின் மகத்துவம் –
உண்மையில் ஒரு செல்வத்தை இழக்கவோ அல்லது திருடவோ முடியாது – சில அம்சங்களைக் கொண்டுள்ளது.
உயர்ந்த வரிசையின் செழுமைக்காக அவர்கள் ஒரு செப்புப் பையைப் பொருட்படுத்த மாட்டார்கள்,
அது எப்போதும் எதிர்பார்த்ததை விட அதிக செல்வம் கிடைத்தாலும், யானைக் கூட்டங்கள் சேர்ந்தாலும்
அவற்றை மதிக்க மாட்டார்கள் –
அவர்கள் ராமானுஜர் அடியார் சம்பந்தமே பிராப்யமாயும் பெரும் செல்வமாயும் கருதி
மற்ற அனைத்தையும் புல்லைப் போலவே திரஸ்கரிப்பார்கள்

————-

ப்ரபாவத்தை சமத்காரமாக அருளிச் செய்கிறார் –

35-நிருபதி ரெங்க வ்ருத்தி ரசிகான் அபி தாண்டவயன்
நிகம விமர்ச கேளி ரசிகை நிப்ருதை வித்ருத
குண பரிணத்த ஸூ க்தி த்ருட கோண விகட்ட
நயா ரடதி திசா முகேஷு யதிராஜ யச படஹ-

ஸ்ரீ ரெங்காவாசிகள் நாட்டியக்காரர்கள் என்னும் உவமையில் அன்றாட வாழ்க்கையே நாட்டியம் போலவே தானே
அவர்களுக்கு ஏற்ற பறை ஸ்வாமியின் கீர்த்தி -புகழ் என்பதே
வேதங்களில் உள்ள ஆழ்ந்த பொருள்களை ஆராய்பவர்கள் யாரோ அவர்கள்
அந்தப் பறையை அடித்தபடியே உள்ளார்கள்
அந்தப் பறையானது ஸ்ரீ ரெங்கநாதனின் கல்யாண குணங்கள் என்னும் கயிற்றால் இழுத்துக் கட்டப்பட்டுள்ளது
இந்தப் பறையில் அடிக்க உதவும் கோல்களாக யதிராஜரின் நூல்கள் உள்ளன
ஸ்ரீ ரெங்கத்தில் வாழவைத்தவிர வேறே ஒன்றையும் மனத்தாலும் நினைக்காத அநந்யார்ஹ சேஷ பூதர்கள்
மகிழ்ந்து கொண்டே இருக்கும் படி அந்தப்பறை ஒலித்துக் கொண்டே இருக்கிறது
ராமானுஜரின் படைப்புகளைப் படிப்பதன் மூலம் அறிவுப்பூர்வமாக உற்சாகமடைந்து,
மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்கள்.
இந்த மேளம் அடிக்க, நடனம் இசைந்துள்ளது.
இது யதிகளின் ராஜாவான யதிராஜாவின் வருகையை உறுதியுடன் பறை சாற்றும்!

————-

ராமானுஜரின் கீர்த்தி நாடெங்கும் பரவியதைப் பேசியவர் , ஸ்ரீஸுக்திகளின் கீர்த்தியைச் சொல்கிறார்.

36-இதம் பிரதம சம்பவத் குமதி ஜால கூலங்கஷா
ம்ருஷா மத விஷா நல ஜ்வலித ஜீவ ஜீவாதவ
ஷரந்தி அம்ருதம் அஷரம் யதி புரந்தரச்ய உக்தய
சிரந்தன சரஸ்வதீ சிகுர பந்த சை ரந்த்ரிகா-

இந்தக் கலிகாலத்தில் விதவிதமான பல மாதங்கள் தலையெடுத்து விபரீதமாக புத்தி கொண்டதாக உள்ளனர்
அந்தக் கூட்டங்கள் அனைத்துயமே வேருடன் அறுக்க வல்லது ஸ்வாமியின் கிரந்தங்கள்
பொய் என்பதையே மட்டும் குறிக்கோளாகக் கொண்டு அந்தத்தீ மூலம் ஜீவர்களை
விஷம் போல் அழிக்கும் மாதங்களில் இருந்து ஜீவர்களை ரக்ஷித்து அருளும் –
வேதம் என்ற அரசியின் உபநிஷத் என்ற கூந்தலை அழகாகச் சீவி அலங்கரிக்கும்
பணிப் பெண்கள் போன்றவை ஸ்வாமியுடைய கிரந்தங்கள்
அவை அழிவற்ற மோக்ஷம் பெரும் அருளை நம் மேல் பொழிகின்றன
இவை அனைத்தும் ராமானுஜரின் படைப்புகளால் சாதிக்கப்படுகின்றன.

————-

ஸ்ரீ ஸூக்தி பிரபாவத்தை -மேலும் அனுபவிக்கிறார் –

37-ஸூதா அசன ஸூ துர்க்ரஹ ஸ்ருதி சமஷ்டி முஷ்டிந்த்ய
கதா ஆஹவம் அசௌ கதான் கபட சௌகதான் கண்டயன்
முனி மனஸி லஷ்மண முதம் உதஞ்ஜயதி அஞ்ஜசா
முகுந்த குண மௌக்திக ப்ரகர ஸூக்திபி ஸூக்திபி

உப்புச்சாற்றைப் பருகும் தேவர்களாலும் எளிதில் அறிந்து கொள்ள இயலாத ஆழ்ந்த பொருள்களை
யுடைய வேதங்களை மிகவும் எளிதாக ஒரு பிடியில் பருக வல்லவர் நம் ஸ்வாமி,
புத்தாதி பாஹ்யர் வாதங்களை எளிதாக நிரஸித்து அருளினார்
அவருடைய கிரந்தங்கள் அனைத்துமே எம்பெருமானின் கல்யாண குணங்கள் என்னும் முத்துக் குவியல்களை
உருவாக்கிப் பாதுகாக்கும் முத்துச் சிப்பி போல் உள்ளன
இதன் மூலம் நம்மை பேர் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துகின்றார் .
இறைவன் ஒரு கல்யாண குண சாகரம் என்பதை விளக்கி, முத்துக்களை, அதாவது இறைவனின் குணங்களை
வரிசையாகக் கொண்ட சிப்பி ஓடுகளாகச் செயல்பட்டு நம் இதயங்களை மகிழ்விக்கிறார் .

———–

உடையவர், ப்ரஹ்மத்தைக் காத்தவர் என்கிறார்.

38-கபர்த்தி மத கர்த்தமம் கபில கல்பநா வாகுராம்
துரத்யயம் அதீத்ய தத் த்ருஹிண தந்திர யந்திர உதரம்
குத்ருஷ்டி குஹ நா முகே நிபதத பரப்ரஹ்மண
கர க்ரஹ விசஷணோ ஜயதி லஷ்மண அயம் முனி

பர ப்ரஹ்மம் சைவம் என்னும் சேற்றிலே சிக்கியது
கபில முனிவரின் சாங்க்ய வலையிலே சிக்குண்டது
நான்முகன் கண்ட யோக ஸாஸ்த்ரம் என்னும் இயந்திரத்தின் நடுப் பகுதியிலே அகப்பட்டது
இவற்றையும் தாண்டி மாயாவாதிகளின் வாதங்களிலே சிக்குண்டது
இவை அனைத்தையும் நீக்கி பர ப்ரஹ்மத்தை மிகவும் எளிதாக உயர்த்த வல்லவராக
உள்ள ஸ்வாமி அனைவரிலும் மேம்பட்டவராக உள்ளார்-

—————

39-கணாத பரிபாடிபி கபில கல்பநா நாடகை
குமாரில குபாஷிதை குரு நிபந்தன க்ரந்த்திபி
ததாகத கதா சதை தத் அநுசாரி ஜல்பை அபி
பிரதாரிதம் ஜகத் பிரகுணிதம் யதீந்திர உக்திபி –

ராமானுஜரின் உன்னதமான நூல்கள் களத்தில் இறங்கி மக்களின் மனசாட்சியை சரியான நேரத்தில் உருவாக்கியது.

கணாதாரின் -வைசேஷிகரின் பரம அணுவே காரணம் என்பதையும்
கபிலனின் கற்பனை -சாங்க்ய தத்வம்
ஏமாற்றம் முற்றிலும் நாடகம் மற்றும் புரளி
குமாரிலா பட்டரின் மீமாம்ஸா வாதமும்
பிரபாகரர் போதித்த முடிச்சு போன்ற அவிழ்க்க முடியாத புதர்களாலும்
புத்தரின் பல்வேறு புனைகதைகளாலும் சூன்ய வாதங்களாலும் ,
அவர்களை போன்றே மாயாவாதிகளின் வாதங்களாலும் இந்த உலகம் பெரிதாக குழம்பி நின்றது
இந்த நிலையானது ஸ்வாமிகளின் கிரந்தங்களால் சீராக்கப் பட்டது

————

ஸ்வாமியுடைய சிஷ்ய அக்ரேஸர்களுடைய பெருமையை பரக்க உபபாதிக்கிறார் –

40-கதா கலஹ கௌதுக க்ரஹ க்ருஹீத கௌதஸ்குத
ப்ரதா ஜலதி சம்ப்லவ க்ரசன கும்ப சம்பூதய
ஜெயந்தி ஸூ திய யதி ஷிதிப்ருத் அந்திக உபாசநா
பிரபாவ பரிபக்த்ரிம ப்ரமிதி பாரதீ சம்பத

ஸ்வாமியின் திருவடி நிழலில் எப்போதும் அண்டி நின்று அதனாலேயே
பெருமை -முழுமையான ஞானம் வாக் வன்மை பெற்றவர்கள்
வாதம் செய்ய வல்ல புற சமயிகள் -உத்ஸாகம் என்னும் பிசாசால் பீடிக்கப்பட்ட புற மதவாதிகள் யுடைய
புகழ் என்னும் கடலை அகஸ்தியர் போன்று உறிஞ்சி விடுவதில் வல்லவராக அல்லவா உள்ளனர் –
ராமானுஜரின் காலடியில் அருகாமையில் படிக்கும் பாக்கியத்தைப் பெற்ற அறிஞர்களுக்கு முதிர்ந்த ஞானம் இருக்கிறது,
அதுவே அவர்களின் செல்வம். அத்தகைய அறிஞர்கள் உலகை மகிழ்விக்கப் போகிறார்கள்.

————

ஸ்வாமியுடைய திருவடி சம்பந்திகளுடைய திருவடி சம்பந்த பலத்தை துணை கொண்டு
தற்காலம் உள்ள பாஹ்ய குத்ருஷ்டிகளின் தலை மேல் கால் வைத்து நிரசனம் பண்ண வல்லேன் -என்கிறார் –

41-யதீஸ்வர சரஸ்வதீ ஸூரபித ஆசயா நாம் சதாம்
வஹாமி சரணாம் புஜம் பிரணதி சாலிநா மௌளிநா
ததன்ய மத துர்மத ஜ்வலித சேதஸாம் வாதி நாம்
சிரஸ்ஸூ நிஹிதம் மயா பதம் அதஷிணம் லஷ்யதாம்

ராமானுஜரின் படைப்புகளின் ஞான நறுமணத்தைப் பெற்ற மஹான்களின் தாமரை பாதங்களை என் தலையில் சுமக்கிறேன்.
ஆனால் அதே சமயம் உலகமும் பார்க்கட்டும் என்று சொல்கிறேன்.
எரியும் பைத்தியக்கார வெறியுடன், ராமானுஜரின் அமைப்பை எதிர்த்துப் போட்டியிடுபவர்களின்
தலையில் நான் என் இடது காலை வைக்கத் துணிவேன்.

———–

எம்பெருமானார் தரிசனத்தில் நிலையாய் இருந்து பாபம் அற்று ஸூ கமாய் இருப்பாயாக –
என்று தம் திரு உள்ளத்தை நோக்கிச் சொல்கிறார் –

42-பஜஸ்வ யதிபூபதே அநிதமாதி துர்வாச நா கதத்வ
பரி வர்த்தன ச்ரம நிவர்த்தநீம் வர்த்தநீம்
லபஸ்வ ஹ்ருதய ஸ்வயம் ரத பத ஆயுத அனுக்ரஹ
த்ருத ப்ரஹ்ருதி நிஸ் த்ருடத் துரித துர்வ்ருதிம் நிர்வ்ருதிம்

ஓ என் மனமே! ராமானுஜரின் ஒரு தெளிவான பாதையைத் தேர்ந்தெடுங்கள்,
அதில் இழியவே பல்வேறு பாதைகளில் அலைந்து திரிவதில் இருந்து விடுபடும்.
அது சக்ராயுதம் ஏந்தும் எம்பெருமானின் கிருபா மழையை உங்கள் மேல் பொழிவிக்கும்
அது உங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு, உங்கள் மீது வேகமாகப் பெருகும்.
இதன் மூலம் அந்தமில் பேர் இன்பம் உடனே கிட்டி விடும்

————–

எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்திகள் சார தமமானவை –
அதனால் மதிக்க முடியாத பெருமை வாய்ந்தவை -என்கிறார் –

43-குமதி விஹித க்ரந்த்த க்ரந்த்தி ப்ரபூத மதாந்திர
க்ரஹிள மனச பஸ்யந்தி அல்பம் யதீஸ்வர பாரதீம்
விகட முரபித் வஷ பீடீ பரிஷ்கரண உசித குலகிரி
துலா ஆரோஹே பாவீ கியான் இவ கௌஸ்துப-

வீணான இயங்கியல்வாதிகளின் தவறான புத்தகங்களில் உள்ள தவறான எண்ணங்களால் உலகம் நிறைந்துள்ளது.
அவர்கள் மீது சாஃப்ட் கார்னர் உள்ள எவரும், வெறி பிடித்த மனம் கொண்டு வலிய முடிச்சுகளால்
கட்டப்பட்டவர்களாய் இருந்து ராமானுஜரின் படைப்புகளை அளவிலும் மதிப்பிலும் அற்பமாகக் கருதுவார்கள்.
இருப்பினும், அத்தகைய மதிப்பீட்டால் நாங்கள் புண்படுத்தப்படவில்லை, ஏனெனில்
இறைவனின் மார்பில் உள்ள ஸ்ரீ கௌஸ்துப ரத்தினம் ஒரு உயர்ந்த மலைச் சங்கிலியுடன் ஒப்பிடும் போது
அளவில் அற்பமானதாகத் தோன்றும் என்றாலும் எல்லாவற்றிற்கும் மேலாக, மதிப்பிடும் அன்றோ

————-

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகளின் பெருமை மந்த மதிகளுக்கு நிலம் இல்லை என்கிறார் –

44-ஸ்த்தவிர நிகம ச்தோம ஸ்த்தேயாம் யதீஸ்வர பாரதீம்
குமதி பணிதி ஷோப ஷீபா ஷிபந்து பஜந்து வா
ரச பரிமள ச்லாகா கோஷ ஸ்ப்புடத் புட பேதனம்
லவண வணிஜ கர்ப்பூர அர்க்கம் கிம் இதி அபிமன்வதே

ராமானுஜரின் படைப்புகள் பழங்கால வேத வாசகங்களில் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் அவற்றைத் தீர்க்க நமக்கு உதவுகின்றன.
தர்க்க வல்லுனர்களின் கேடுகெட்ட வாதங்களால் பாதிக்கப்பட்டு, நல்ல புத்தியை இழந்தவர்கள்,
ராமானுஜரின் படைப்புகளை விட்டுவிடலாம், இல்லையென்றால், அந்தப் படைப்புகளைப் படிக்கட்டும். அது என்ன விஷயம்?
பச்சைக் கற்பூரத்தின் சுவையை புகழ்ந்து பேசும் சத்தம் மிக அதிகமாக இருக்கும் ஒரு நகரத்தில்,
சாதாரண உப்பு வியாபாரிகள் பச்சைக் கற்பூரத்தைப் பற்றி எப்படிப் பதிலளிப்பார்கள்? இது வெளிப்படையானது
(அவர்களுக்குத் தெரியாது அல்லது ரசிக்க முடியாது!-இவர்களால் பச்சைக் கற்பூரம் தனது மஹிமையை இழக்காது அன்றோ )

————

45-வஹதி மஹி ளாம் ஆத்ய வேதா த்ரயீ முகரை முகை
வர தநுதயா வாம பாக சிவஸ்ய விவர்த்ததே
ததபி பரமம் தத்த்வம் கோபீ ஜனச்ய வசம் வதம்
மதன கதனை ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-

மும்மூர்த்திகளில் பிரம்மா வேதம் ஓதும் முகங்களில் தன் மனைவியைத் தன் நாக்கில் சுமந்துள்ளார்.
சிவனின் இடது பாதி முழுவதையும் அவன் மனைவி எடுத்துக் கொள்கிறாள்.
உயர்ந்த பரதத்வமான கண்ணனோ , தனது சொந்த வழியில், கோபியர்களுக்கு அடி பணிந்தார்.
அப்போது, ​​பெண் பால் காதலுக்கு அடி பணியாதவர்கள் ராமானுஜரின் சீடர்கள் மட்டுமே!
யதிராஜ அடியவர்கள் காமாதி தோஷங்களில் சிக்கிக் கொள்வதில்லை என்றவாறு

————-

46-நிகம பதிக சாயா சாகீ நிராசா மஹா நிதி
மஹித விவித சாத்ர ஸ்ரேணீ மநோ ரத சாரதி
திரிபுவன தம ப்ரத்யூஷ அயம் த்ரிவித்ய சிகாமணி
ப்ரதயதி யதி ஷமாப்ருத் பாராவரீம் அபிபர்யயாம்

ராமானுஜர்- வேதங்களின் ஆழ்ந்த பொருளை அறியாமல் வழிப்போக்கர்கள் போல் திரிபவர்களுக்கு
அவற்றை அறிவித்து நிழலை வழங்கும் மரத்தைப் போல் நிற்பவர்,
வேத வழியைப் பின்பற்றுபவர்களால் மகிழ்ந்தவர்;
எல்லா ஆசைகளையும் துறந்த மக்களுக்கான
உத்வேகத்தின் மதிப்பு மிக்க புதையல் -களஞ்சியமாகப் போற்றப் படுபவர்;
அவரது வழியைப் பின்பற்றும் பல்வேறு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவுபவர்;
சீடர்களை நல்ல வழியில் இட்டுச் செல்லும் தேர்ப் பாகனாக இருப்பவர்
மூன்று உலகங்களின் அந்தகார அஞ்ஞான இருளுக்கு விடியல் போல் செயல்படுபவர்;
வைதிகர்கள் தலையில் சூடும் இரத்தினக்கல் போன்றவர்
மற்றும் வேத ஞானத்தின் தலை சிறந்த தலைவன் –
பர ப்ரஹ்மனைப் பற்றிய சரியான அறிவை நம்மில் புகுத்துபவர்
அஞ்ஞானம் ஸம்சய ஞானம் விபரீத ஞானம் போன்ற மயர்வுகளை அறுத்து மதி நலம் அருள்பவர்

————-

மேலும் ஸ்ரீ ஸூ க்திகள் வைபவம் –

47-ஜடமதி முதா தந்தா தந்தி வ்யதா ஔ ஷத சித்தய
ப்ரமிதி நிதய ப்ரஜ்ஞா சாலி ப்ரபாலன யஷ்டைய
சுருதி ஸூரபய சுத்த ஆனந்த பிவர்ஷூக வாரிதா
யம கதி விச்சேதின்ய யதீஸ்வர ஸூ க்தய

ராமானுஜரின் படைப்புகள் பிரகாசிக்கின்றன:

முட்டாள்களுடன் தொடர்ந்து வாதிடுவதன் விளைவாக பல்லின் கடி வேதனை போல் புத்தியைக் கலக்கும்
இதற்கு ஏற்ற மருந்தாக ஸ்வாமியுடைய கிரந்தங்கள் -ஞானத்தின் பொக்கிஷமாக உள்ளன
நமது ஞானம் என்னும் பயிரைக் காப்பாற்றும் நான்கு கொம்புகள் போல் நான்கு வேதங்களும் உள்ளன
இத்தகைய வேதங்களின் நறு மணத்தை அவற்றின் சேர்க்கை மூலம் ஸ்வாமியுடைய கிரந்தங்கள் நம் மேல் வீசும்படி உள்ளன
எங்கும் ஞானம் ஆனந்தம் என்னும் மழை பொழியும் மேகம் போன்றவை இவை
நாம் யமலோகம் செல்வதற்கு எதிராக ஒரு உறுதியான உத்தரவாதம்-
யமலோகம் என்ற பேச்சையே முற்றிலும் நீக்க வல்லவை

——————

மேலும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

48-ப்ரதி கலம் இஹ பிரத்யக் தத்தவ அவலோகன தீபிகா
எதி பரிப்ருட க்ராந்தாச் சிந்தாம் நிரந்தர யந்திந
அகலுஷ பர ஞான ஔத் ஸூக்ய ஷிதா ஆதுர துர்த்தசா
பரிணத பல ப்ரத்யா சீதத் பலே க்ரஹி ஸூக்ரஹா

ராமானுஜரின் படைப்புகள் எப்போதும் நம் இதயங்களை நிரப்புகின்றன

ஜீவாத்மாவின் உண்மையான தத்துவத்தைப் பிரகாசிக்கும் விளக்குகள்,
பெரிய இறைவனைப் பற்றிய அறிவிற்காக, மிகுந்த பசியுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, அவர்களுடைய சிரமத்தை நீக்கி அவர்களுக்கு ஏற்ற
பழங்களை அளித்து அவர்கள் அருகில் ஆதரவாக உள்ள மரங்கள் போன்றன
மிகவும் எளிதாக அடைய வல்லவை -ஒவ்வொரு நொடியிலும் நமது எண்ணங்களை சரியான பாதையில் நடத்த வல்லவை

—————-

49-முகுந்த அங்க்ரி ஸ்ரத்தா குமுத வன சந்திர ஆதப
நிபா முமுஷாம் அஷோப்யாம் தததி முனி ப்ருந்தாரக கிர
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்த்திர குதுக துர்வானி
பரிஷத் திவாபீத ப்ரேஷா திநகர சமுத்தான புருஷா –

ராமானுஜரின் வார்த்தைகள் செயல்படுகின்றன-
முகுந்தனின் பாதத்தில் பக்தி கொண்ட -ஆம்பல் -அல்லி மலர்களின் அணிவகுப்புக்கு நிலவொளி போலவும் ,
மத வெறியர்களின் ஆந்தைகளுக்குக் கொடூரமான சூரிய ஒளியைப் போல கூடியதாக உள்ளன
மேலும் கலங்காத மோக்ஷ விருப்பம் ஏற்படுத்தி முமுஷுவாக்கவும் வல்லவை

————

50-நிராபாத போதாயன பணித நிஷ்யந்த ஸூ பகா
விசுத்த உபன்யாச வ்யதிபுதுர சாரீரக நயா
அகுண்ட்டை கல்பந்தே யதிபதி நிபந்தா நிஜ முகை
அநித்ராண ப்ரஜ்ஞா ரச தமனி வேதாய ஸூதியாம்

ராமானுஜரின் படைப்புகள் வேதாந்த சாஸ்திரத்தின் குறைபாடற்ற ஏற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன,
போதாயனரின் வர்ணனையின் (ப்ரஹ்ம ஸூத்திரம்) மற்றும் அதுபோன்றவற்றின் தரத்தை வடிகட்டுகின்றன.
படைப்புகளில் எந்த முரண்பாடும் இல்லை. அவர்களின் கருத்துக்கள் வலுவானவை, தெளிவானவை
மற்றும் வலியுறுத்தல் தொடர்பாக சுட்டிக் காட்டப்படுகின்றன.
அவை அறிவுசார் நரம்பு நாண்களைத் தாக்குவதில் திறமையானவை.
மேலும் அவை அறிஞர்களின் அறிவுத் திறனை மலரச் செய்ய உதவுகின்றன.
இதன் மூலம் அவர்களுக்கு இன்பம் ஊட்டுகின்றன

————–

ஸ்ரீ ஸூக்திகள் பிரபாவம் மற்று ஒரு படியால் அருளிச் செய்கிறார் –

51-விகல்ப ஆடோபேந சுருதி பதம் அசேஷம் விகடயன்
யத்ருச்சா நிர்த்திஷ்டே யதி ந்ருபதி சப்தே விரமதி
விதண்டா அஹங்குர்வத் பிரதிகதாக வேதண்ட
ப்ருதநா வ்யாத வியாபார வ்யதி மதன சம்ரம்ப கலஹ

தவறான காரணத்தை அடிப்படையாகக் கொண்ட புற மதவாதிகள் தகாத வழியில் இட்டுச் செல்ல விதண்டா வாதம் செய்தபடியே இருந்தனர்-மிகவும் கர்வம் கொண்ட யானைக் கூட்டங்கள் போல் ஒருவரை ஒருவர் வாதத்தால் வென்று இருந்தார்கள்-இந்த காட்டு யானைகளின் எரிச்சலூட்டும் சத்தம் -டம்பப்போர் -ராமானுஜரின் திரு நாம உச்சாரதாலே –யதி ந்ருபதி சப்தே-அதே ஷணத்தில் அடங்கி விடும்.

—————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் தமது ஞானத்துக்கு தெளிவை அளிக்க வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

52-பிரதிஷ்டா தர்க்காணாம் பிரதி பதம் ருசாம் தாம யஜூஷாம்
பரிஷ்கார சாம்நாம் பரிபணம் அதர்வாங்க ரசயோ
பிரதீபா தத்த்வாநாம் பிரதிக்ருதி அசௌ தாபச கிராம்
பிரசித்திம் சம் வித்தே பிரதிசதி யதீசான பணிதி

வார்த்தை தர்க்கம் அங்கேயே முடிந்துவிடும், ராமானுஜரின் படைப்புகளில் இடம் இருக்காது.
அவற்றில், ரிக் வேதம் ஏறக்குறைய முற்றிலும் வேறுபட்ட பதிப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;
அவற்றில் யஜுர் வேதம் உறுதியாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது;
அவை சாம வேதத்தை முழுமையாக அலங்கரிக்கும் ஆபரணம்.
அவை தத்துவங்களை விளக்கும் விளக்கு.
வால்மீகி போதாயனர் போன்ற முனிகளின் உயர்ந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு அவை.
ராமானுஜரின் இந்தப் படைப்புகள் நமக்குப் பார்வைத் தெளிவைத் தரட்டும்!-யாதாத்ம்ய ஞானம் அறிவிக்கும்

————

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்
ஐகாந்த்ய பக்தியை உண்டுபண்ணுகின்றன —

53-ஹத அவத்யே ஹ்ருதயே ஹரி சரண பங்கேருஹ
யுகே நிபத்தந்தி ஐகாந்த்யம் கிமபி யதி பூப்ருத் பணிதய
சுநா சீர ஸ்கந்த த்ருஹிண ஹர ஹேரம்ப ஹூதபுக்
ப்ரபேசாதி ஷூத்ர பிரணதி பரிஹார பிரதிபுவ

ராமானுஜரின் படைப்புகள் குறையற்றவை, இதயத்திற்கு மகிழ்ச்சியானவை,
முன்பு சிவன், இந்திரன், சுப்ரமணியன், விநாயகர், சூரியன், அக்னி முதலிய சிறு தெய்வங்களின் வழிபாட்டுக்குத்
தங்களைக் கொடுத்த மனங்களைக் கூட மாற்றும் திறன் கொண்டவை.
அவர்கள் பிராயச்சித்தத்திற்காகவும், பரமாத்மாவைப் பற்றி ஒரே மனதுடன் பக்தி ஒழுக்கத்திற்காகவும் சேவை செய்கிறார்கள்.
நமது இதயத்திற்கு இனிமையை அளிக்கும் எம்பெருமான் திருவடித்தாமரைகளில் மனம் ஈடுபடும் படி செய்ய வல்லவை

————–

ஸ்வாமியுடைய ஸ்ரீ ஸூக்திகள் வைதிகர்களின் ஸூக்ருத பலன் -என்கிறார் –

54-யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன வி நோத பிரணயிநீ

ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன; இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;
அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;
வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;
தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும்
செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன.
வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!

—————

எம்பெருமானார் தரிசனத்தில் குறை சொல்லுபவர் தாமே தமக்கு
இழுக்கைத் தேடிக் கொள்கின்றனர் -என்கிறார் —

55-ஸ்ருதி ஸ்ரோணி சூடாபத பஹூமதே லஷ்மணமதே
ஸ்வ பஷ ஸ்த்தான் தோஷான் விததமதி ஆரோபயதிய
ஸ்வ ஹஸ்தேன உத்ஷிப்தை ச கலு நிஜகாத்ரேஷூ
பஹூளம் களத்பிர் ஜம்பாலைர் ககன தலம் ஆலிம்பதி ஜட

இராமானுஜ சித்தாந்தம் -விசிஷ்டாத்வைதம்  வேதங்களால் ஆதரிக்கப்படுகிறது
(தத்துவம் என்பது வேதங்களின் “சிரஸ் ”
(தலை) உபநிடதங்களின் துல்லியமான பொருள் மற்றும் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது).
பல்வேறு மதங்களில், சில மனச் சோர்வடைந்த மனங்கள் செயற்கையாக
தவறான மற்றும் ஊகிக்கப்பட்ட குறைபாடுகளைக் கூறுகின்றன. அதனால் என்ன?

கண்ணாடி போன்று அவர்கள் மதங்களில் உள்ள குற்றங்களே பிரதிபலிக்கின்றன
ஒரு சக மனிதர் கைநிறைய சேற்றை வானத்தில் எறிந்துவிட்டு, திரும்பத் திரும்ப அப்படிச் செய்தால்,
நிகர முடிவு மற்றும் ஒரே முடிவு: விஷயம் அவன் தலையில் விழுந்து அசுத்தம் செய்யுமே
இது போன்றே அறிவற்ற புறச்சமயிகள் வாதங்களும் உள்ளன

————-

எம்பெருமானார் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் தீபமாய் இருக்கிறார் என்கிறார் –

56-நிராலோகே லோகே நிருபதி பர ஸ்நேக பரித
யதி ஷமாப்ருத் தீப -யதி ந கலி ஜாஜ்வல்யத இஹ
அஹங்கார த்வாந்தம் விஜஹதி கதங்காரம் அநகா-
குதர்க்க வ்யாள ஓகம் குமதி மத பாதாள குஹரம்

இந்த உலகம் அறியாமையின் இருளில் தவிக்கிறது.
(கடவுள் மீதுள்ள அன்பின் எண்ணெயால் எரியும்)
விளக்கு ராமானுஜம் –அவர் இடம் கொண்ட பக்தியே எண்ணெய்
இந்தத் தீபம் மட்டும் இல்லாவிட்டால், மக்கள் எப்படித் தாங்கள் விரும்பினாலும்,
அகங்காரத்தின் இருளையும், அடிப்படையற்ற வாதங்களையும், போக்க முடியும்
போட்டி அமைப்புகளின் கீழ்த்தரமான பேச்சாளர்களால், -பாம்புகளுக்கு ஒப்பிடலாம்.-இவை நிறைந்த
குகையில் அறிவுள்ளவர்கள் தள்ளப்பட்டு கிடப்பார்களே –

————

57-யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது?

ஒரு பொருள் பழமையானது என்பது பழமையானது என்பதற்கான எந்த தகுதியையும் அளிக்காது.
எதுவானாலும் முதலில் நவீனமானது, அதன் பிறகு பழமையாகுமே காலப்போக்கில்.
மாறாக ஒரு தவறான அமைப்பை இப்போது வரை செழிக்க விடுவது மனிதகுலம் செய்த தவறு.
நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், தங்கர், திராவிடர், குஹதேவர், போதாயனார் மற்றும் பலர்
இந்த அமைப்பை ஆரம்ப காலத்திலிருந்தே வளர்த்து வந்தனர்.
அப்போது எதிர்ப்பு இல்லாததால் மட்டும் விரிவாகவும், அதிகமாகவும் எழுதவில்லை.
அந்த அமைப்பு சமீபத்தியது அல்லது அந்த மதிப்பெண்ணில் அது களங்கத்தை அனுபவிக்கிறது என்று அர்த்தமல்ல.
பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் என்றவாறு

—————

மீண்டும் ஸ்ரீ ஸூக்திகள் வைபவம் –

58- ஸூதா ஆசாரம் ஸ்ரீ மத் யதிவர புவ ஸ்ரோத்ர குஹரே
நிஷிஞ்சந்தி நியஞ்சத் நிகம கரிமாணப் பணிதய
யத் ஆஸ்வாத் அப்யாச ப்ரசய மஹிம உல்லாசித தியாம்
சதா ஆச்வாத்யம் காலே தத் அம்ருதம் அநந்தம் ஸூ மநசம்

5ராமானுஜரின் படைப்புகள், அவற்றின் மதிப்பில், வேதங்களைக் கூட மீறுகின்றன.
கேட்பவர்களின் காதில் அமிர்தத்தைப் பொழிகின்றன-
அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்த அமிர்த இன்பம், அவர்களின் மனதை உயர்ந்த ஞானமாக மலரச் செய்கிறது,
அதனால் இறைவனின் அமிர்தம் அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கச் செய்கிறது.
இவை மோக்ஷம் ஏற்படுத்தி அதன் பின்னர் கிட்டும் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுவிக்கும்-

————

எம்பெருமானார் திருவடி சம்பந்தமே உத்தாரகம்-

59-யதி ஷோணீ பர்த்து யத் இதம் அநிதம் போக ஜனதா
சிர ஸ்ரேணீ ஜூஷ்டம் தத் இஹ த்ருட பந்தம் ப்ரபவதி
அவித்யா அரண்யாநீ குஹர விஹரன் மாமக மன
பிரமாத்யன் மாதங்க பிரதம நிகளம் பாத யுகளம்

நான் ஸம்ஸாரம் என்னும் அஞ்ஞான பெரிய காட்டில் ஒரு காட்டு யானையைப் போல் சுற்றித் திரிந்தபோது, ​​
நான் வழிதவறிச் செல்வதைத் தடுக்க, ராமானுஜரின் பாதங்கள் (பரமை காந்திகளால் வணங்கப்படும் பாதங்கள்)
இந்த மதம் கொண்ட எனது மணமான யானையை அடக்க வல்ல
விலங்கு போன்று ஸ்வாமியின் திருவடிகள் உள்ளன –

————–

காரேய் கருணை இராமானுசரின் அருளின் தன்மையைக் கண்டு வியக்கிறார் –
கருணை வெள்ளத்தை சமத்காரமாக வர்ணிக்கிறார் –

60-சவீத்ரி முக்தா நாம் சகல ஜகதேன பிரசம நீ
கரீயோபி தீர்த்தை உபசித ரசா யாமுன முகை
நிருச்சேதா நிம்ன இதரம் அபி சமாப் லாவயதி மாம்
யத்ருச்சா விஷேபாத் யதிபதி தயா திவ்ய தடி நீ –

முத்துக்களை சுமந்து செல்லும் கங்கை ஓட்டம், யமுனை மற்றும் பிறவற்றில் இருந்து வரும்
நீர் வரத்து காரணமாக அதிகரித்து , சில சமயங்களில் உயர்ந்த நிலங்கள் வழியாகவும் பாய்கிறது.
அதுபோலவே, ராமுஜரின் கருணாவின் (தயா) கங்கை, முக்தாக்களை (விமோசனமான ஆன்மாக்களை) உருவாக்கும்,
யமுனாச்சாரியார் மற்றும் பிறரின் கூடுதல் ஆசீர்வாதத்தால் மேம்படுத்தப்பட்டு,
நம்முடைய எல்லா பாவங்களையும் நீக்கி, என்னைப் போன்ற உயர்ந்த கர்வமுள்ள நபரைக் கூட கடந்து,
அதன் தூய்மையான நீரில் என்னையும் மூழ்கடிக்க முடியும்.
நீசர்களில் தலையான அடியேனது பாபங்களையும் போக்கி அருளி முக்தர் ஆக்கியும் அருளும்

——————-

61-சிந்தா சேஷ துரர்த்த தந்துர வச கந்தநா சதா கரந்த்திலா-
சித்தாந்தா ந சமிந்ததே யதிபதி கிரந்தத அனுசந்தாயினி
முக்தா சுக்தி விசுத்த சுத்த தடி நீ சூடால சூடாபத கிம்
குல்யாம் கலயேத கண்ட பரசுர் மண்டூக மஞ்ஜூஷிகாம்

ராமானுஜரின் படைப்புகளை ரசிக்கும் பழக்கம் ஒருவருக்கு வந்தபின்பு மற்ற படைப்புகளில் ஆர்வம் காட்ட மாட்டார்; ஏன்?
இந்த (பிந்தைய) படைப்புகள் அற்பங்களை வலியுறுத்துகின்றன;
அவ்வாறு செய்யும் போது, ​​வார்த்தைகள், தர்க்கம் மற்றும் போக்கு அனைத்தும் கடினமானவை
மற்றும் அவை கடினமான பாதைகளில் பயணிக்கின்றன.
முழுப் பயிற்சி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிச்சுப் போடப்பட்ட பல கிழிந்த துணிக் குவியல்கள் போல் அவை காட்சி யளிக்கும்
அவிழ்க்க முடியாத பல முடிச்சுகள் கொண்ட கந்தல் துணி போல் இவை உள்ளன –
எல்லாவற்றிற்கும் மேலாக, சிவன் தனது தலையின் மேல் , முத்து நிரம்பிய கங்கை நதியைத் தாங்குகிறார்.
ஆனால், தவளைகள் செழித்து வளரும் ஒரு தெரு சாக்கடையைப் பெற்றுத் தாங்க அவர் எப்போதாவது சம்மதிப்பாரா?

————–

62-வந்தே தம் யமி நாம் துரந்தரம் அஹம் மான அந்தகார த்ருஹா –
பந்த்தா நாம் பரி பந்த்திநாம் நிஜ த்ருசா ருந்தா நாம் இந்தா நயா
தத்தம் யேன தயா ஸூதா அம்பு நிதிநா பீத்வா விசுத்தம் பய –
காலே ந கரிசைல கிருஷ்ண ஜலத காங்ஷாதிகம் வர்ஷதி

வற்றாத கருணைக் கடலான ராமானுஜர், ஹஸ்திகிரி பகவான் வரதராஜருக்கு, சாலைக் கிணற்றில் இருந்து
சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து வழங்கினார்.
இத்தைப் பருகிய – ஒரு கருமேகம்பேர் அருளாளன் நம் மேல் அந்த நீரையே பலனாகப் பொழிகிறான்
இன்றும் அந்த மேகம், அந்த ஸ்ரீ வரதராஜர், நாம் எதிர்பார்த்ததைத் தாண்டி சரியான நேரத்தில் மழையைப் பொழிகிறது.
(இதற்குக் காரணம் ராமானுஜரின் தீர்த்த கைங்கர்யம்  , இப்போது பகவானால் ராமானுஜர்
அடியாக்களான நமக்கு திருப்பிக் கொடுக்கப் பட்டிருக்கிறது,)
அஹங்காராதி அஞ்ஞானங்களை ஸ்வாமி கடாக்ஷ லேசத்தாலே போக்கி அருளுகிறார்
இதனால் மற்ற மதத்தினர் வழிகளால் ஈர்க்கப்படாமல் நம்மைக் காத்து அருளுகிறார்
யதிகளின் தலைவரான இந்த ஸ்வாமியை அடியோங்கள் வணங்குவோம்

————-

63-காஷாயேண க்ருஹீத பீத வசநா தண்டைச் த்ரிபிர் மண்டிதா –
சா மூர்த்தி முரமர்த்த நஸ்ய ஜயதி த்ரயந்த சம்ரஷிணீ
யத் பிரயக்க்யாபித தீர்த்த வர்த்தித தயாம் அப்யச்யதாம் யத் குணாத்
ஆசிந்தோ அநிதம் பிரதேச நியதா கீர்த்தி பிரஜாகர்த்தி ந

முன்பு தத்தாத்ரேயராக வேதங்களை ரஷித்து அருளவே காவி வஸ்திரம் -சந்நியாஸ வேஷம் கொண்டு இருந்தான்
அதே போல் நம் ஸ்வாமியின் திரு அவதாரம் இப்பொழுது மற்றொரு அவதாரம்.
ராமானுஜரின் ஆடையைக் கொடுப்பதற்காக இறைவனின் வெள்ளை வஸ்திரம் பிழிந்து குங்கும நீரில் கழுவப்பட்டது.
மேலும் அவர் துறவி வரிசையின் அடையாளமாக திரி தண்டை எடுத்துக் கொண்டார்.
அவ்வளவு தான். இல்லையெனில், அவர் வெறும் மதுசூதன மூர்த்தி மட்டுமே (வேத தத்துவத்தை விசிஷ்டாத்வைதத்தில் பெற்றதற்காக)
இதற்கும் மேலே அவரது திவ்ய கிரந்தங்கள் மூலம் வேதாந்த சித்தாந்தங்களை வெளியிட்டும் அருளினார்
இவற்றால் நாம் அறிவு ஒங்கப்பெற்று அவரது கருணா குணத்தை புகழ்ந்து கொண்டு உள்ளோம்
இதனால் நமக்கும் மிகுந்த வை லக்ஷண்யம் கிட்டுகிறது
தலை, இதயம் ஆகிய குணங்கள் நம்மீது செலுத்திய வசீகர ஈர்ப்பினால் அவருடைய திவ்ய மங்கள விக்ரஹ
அழகைப் பின் பற்றிக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு நேர்மையான வகைப் புகழ் என்பது தானாக வரும் வழக்கமான வரப் பிரசாதம்!
இந்த ஸ்வாமியுடைய கீர்த்திப் புகழானது கடற்பரப்பு எது வரையிலும் உள்ளதோ அது வரையிலும் பரவி நிலைத்து உள்ளது

————

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தாம் எப்போதும் அணுக்கராக வேண்டும்
என்று பிரார்த்திக்கிறார் –

64-லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா

ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​
அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது.
அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே
பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்
நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,
அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.
அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

—————

65-நாநா தந்திர விலோபிதேன மநஸா நிர்ணீத துர்நீ தபி –
கஷ்டம் குத்சித த்ருஷ்டிபிர் யதி பதே ஆதேச வைதேசிகை
வியாச ஹாசபதீக்ருத பரிஹ்ருத ப்ராசேதச சேதச-
க்லுப்த கேளி சுக சுக ச ச முதா பாதாய போதாயன

இணை அமைப்புகளை தவறாக இயக்கிய பல ஆதரவாளர்கள் ராமானுஜரால் பரப்பப்பட்ட அமைப்பின்
பரப்பு மற்றும் திசையிலிருந்து வெகு தொலைவில் சென்று விட்டனர்.
பிறகு, அவர்கள் தங்கள் படைப்புகளால், வியாசரை ஏளனப் பொருளாக ஆக்கி விட்டனர் ;
அவர்கள் மனதில் இருந்து வால்மீகியை விரட்டியடித்தனர்
அவர்கள் சுகரை வெறும் கிளியின் நிலைக்குக் கண்டனம் செய்கிறார்கள்;
அவர்கள் போதாயனாரை பயனற்ற விஷயங்களைப் பேசுபவர் என்று கருதுகிறார்கள்.
அதாவது, அடிப்படையாகவும் அதிகாரமாகவும் இருக்க வேண்டிய நமது பண்டைய படைப்புகளை
அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்-என்ன கொடுமை இது -.

———–

66-அர்த்த்யா திஷ்டதி மாமிகா மதி அசௌ ஆசனமா ராஜன்வதீ –
பத்யா சம்யமிநாம் அநேன ஜகதாம் அத்யாஹித சேதி நா
யத் சாரஸ்வத துக்க சாகர ஸூதா சித்த ஔஷதா ஸ்வாதி நாம் –
பிரச்வாபாய ந போபவீதி பகவன் மாயா மஹா யாமி நீ–

வாழ்க்கை என்பது இறைவனின் ” மாயா ” என்பதன் கீழ் நாம் வாழ்ந்து துன்பப்படுகிறோம்.
இது மனித குலம் அனுபவித்த ஒரு நீண்ட, மிக நீண்ட, இருள் நிறைந்த இரவு.
ஆனால் உண்மையான நோய் தீர்க்கும் மருந்தான ராமானுஜரின் படைப்புகளின் அமிர்தக் கடலை –
சித்த மருந்தை -ஆழமாக குடித்த மக்களுக்கு,
இந்த மாயா-இரவு அறியாமையின் ஆழ்ந்த தூக்கத்தைக் குறிக்காது.
இந்த உலகில் பிறந்த ராமானுஜரே, அசுபமான மற்றும் தவறான அறிவை ஒழிப்பதற்காகவே,
என் இதயத்தை அவர் வழியில் செல்லச் செய்தார்,
என் எண்ணங்கள் இப்போது அர்த்தமுள்ளதாக இருக்கின்றன.

————-

67-ஸூத்தா தேக வசம் வதீக்ருத யதி ஷோணீச வாணீ சதா –
ப்ரத்யாதிஷ்ட பஹிர்கதி சுருதி சிர பிரசாதம் ஆசீததி
துக்த உதன்வத் அபத்ய சந்நிதி சதா சாமோத தாமோதர –
ச்லஷண ஆலோகன தௌர் லலித்ய லலித உன்மேஷா மனீஷா மம

திருப்பாற்கடலில் இருந்து வந்த பெண்ணமுதம் திரு மாரிப்பிலேயே நித்ய வாஸம் செய்வதால்
நித்ய ஆனந்த மயமாகவே எம்பெருமான் உள்ளான்
அவனது குளிர்ந்த கடாக்ஷ மழை நம்மை நித்தியமாக நனைக்கிறது இதனாலேயே நமது புத்தி தூய்மை அடைந்துள்ளது
இதன் மூலமும் ஆச்சார்ய உபதேசங்களாலும் ஸ்வாமியின் திவ்ய கிரந்தங்களில் ஆழ்ந்த பொருள்கள் நமக்கு கிட்டியது
தூய வேத விதிகளைக் கடைப்பிடித்து, நூற்றுக்கணக்கான ராமானுஜரின் பதிவு செய்யப்பட்ட வாசகங்களால் ஈர்க்கப்பட்டு,
அனைத்து அன்னிய தொடர்புகளையும் விலக்கி, அன்பான ரசனையையும் வளர்த்துக் கொண்டு,
வற்றாத அருகாமையில் இருக்கும் இறைவனின் அருள் கடாக்ஷம் மூலம் பிராட்டியாரைப் போலவே நம் உள்ளம் மகிழ்கிறது.

———-

68-ஆசதாம் நாம யதீந்திர பத்ததி ஜூஷாம் ஆஜான ஸூத்தா மதி –
தத் அவ்யாஜ விதக்த முக்த மதுரம் சாரஸ்வதம் சாஸ்வதம்
கோ வா சஷூ உதஞ்சயேத் அபி புர சாடோப தர்க்க சடா –
சஸ்த்ரா ச சஸ்த்ரி விஹார சம்ப்ருத ரணா ஆஸ்வா தேஷு வா தேஷு ந

யதிராஜரின் உயர்ந்த மார்க்கத்தை அடைந்தவர்கள் தாங்கள் பிறந்தது முதலாகவே
ஸஹஜமாகவே யதார்த்த ஞானம் பெற்று விளங்குகிறார்கள்
அவர்களிடம் கம்பீரம் அழகு இனிமை ஆகியவற்றுடன் கூடிய நிலையான கல்வி இயற்கையாகவே அமைந்துள்ளது –
தம்பட்டம் கொண்டு எதிர்வாதம் செய்யும் புற சமயத்தார் வாதப்போருக்கு வந்தால்
அவர்கள் முன்பு நாம் சுவையான ஸ்வாமியின் கிரந்தங்கள் உதவியுடன் வாதம் செய்ய நின்றால்
நமக்கு முன் கண்ணைத்திறந்து பார்க்கும் படி யார் தான் நிற்க வல்லவர்கள்

———–

69-பர்யாப்தம் பர்யசைஷம் கண சரண கதாம் ஆஷபாதம் சிசிஷே –
மீமாம்ஸா மாம்சல ஆத்மா சமஜநிஷி முஹூ சாங்க்ய யோகௌ சமாக்க்யம்
இத்தம் தை தை யதீந்திர த்ருடித பஹூ ம்ருஷா தந்திர காந்தார பாந்த்தை –
அந்தர் மோஹ ஷப அந்தை அஹஹ கிம் இஹ ந சிந்த நீயம் தநீய-

கணாதரின் வைஷேஷிகாவை திருப்தியாகப் படித்திருக்கிறோம்.
கௌதமருடைய நியாயம் கற்றோம்.
ஜைமினியின் மீமாமாச மதத்தையும் கற்று அதன் மூலம் கனம் கொண்ட நெஞ்சையும் பெற்றோம்  .
நாங்கள் கபிலரின் சாங்கியம் மற்றும் பதாஞ்சலியின் யோகாவிலும் தேர்ச்சி பெற்றுள்ளோம்.
இவ்வாறு பொய்யான கருத்துக்களை உணர்த்தவல்ல பல மதங்கள் இந்த உலகில் காடு போன்று நிரம்பி உள்ளன –
அந்தக்காட்டில் அஞ்ஞான அந்தகார இருள் பூர்ணமாக உள்ளது-அதில் குருடராகப் பலர் திரிகிறார்கள்
இந்தக்காடுகள் அனைத்துமே ஸ்வாமியுடைய திருப்பாத ஸ்பர்சத்தாலேயே முடியுடன் அழிக்கப் பட்டன
இந்தக் காலத்தில் அந்தப் புற மதங்களின் வாஸனையால் பீடிக்கப் பட்டு சிலர் இன்னமும் உள்ளனர்
அவர்களிடம் கலந்து சிந்திக்க என்ன உள்ளது –
ராமானுஜரால் (ஸ்ரீ பாஷ்யம் போன்ற அவரது படைப்புகளில்) இந்த அமைப்புகளை முற்றிலுமாக
இடித்துத் தள்ளும் போது, ​​தவறான பாதைகளின் அடர்ந்த காடுகளில், அறிவின் இரவில் கண்மூடித்தனமாக
உரத்த குரலில் கர்ஜிக்கும் மக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? என்றவாறு –

————-

70-காதா தாதாகதா நாம் களதி கம நிகா காபிலீ க்வாபி லீநா–
ஷீணா காணாத வாணீ த்ருஹிண ஹர கிர சௌரபம் நார பந்தே –
ஷாமா கௌமாரில உக்தி ஜகதி குருமதம் கௌரவாத் தூர வாந்தம் –
கா சங்கா சங்கர ஆதே பஜதி யதி பதௌ பத்ர வேதீம் த்ரிவேதீம் –

மூன்று வேதங்கள் மூலம் அமைக்கப்பட்ட -திரிவேதி பீடத்தில் -ஸிம்ஹாஸனத்தை அடைந்து ஸ்வாமி எழுந்து அருளி உள்ளார்
உடனே நடந்தது என்ன என்னில் –
புத்தரின் அமைப்பு உடனே சாஷ்டாங்கமாக விழுந்தது;
கபிலரின் சாங்கிய தத்துவம் எங்கோ மறைந்தது;
கணாதரின் வைஷேஷிக உபதேசம் மறைந்தது
நான்முகன் சிவன் இவர்கள் மாதங்கள் நறுமணம் இழந்தன
குமாரில பட்டரின் (மீமாம்ஸ வாதம் தோற்றது
பிரபாகரனின் மதம் கற்பனை அதிகமாக உள்ளது என்று விலக்கப் பட்டது .-
இதெல்லாம், ராமானுஜரின் சித்தாந்தத்தை ஏற்றியபோது, ​​நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
அப்படியானால், சங்கரர் போன்றோர் வாதமும் கண்டிக்கப் பட்டதைக் கூறவும் வேண்டுமோ –

———–

முன் ஸ்லோகத்துடன் எதிராஜ சப்ததி முற்றுப் பெறும் –
இனி இந்த பிரபந்தம் சத்துக்கள் ஆதரிக்கக் கூடியதாய் இருக்கும் என்கிறார் –

71-விஷ்வக் வியாபிநி அகாதே யதி ந்ருபதி யச சம்பத் ஏக அர்ணவே அஸ்மின் –
ஸ்ரத்தா ஸூத்த அவகாஹை சுப மதிபி அசௌ வேங்கடேச அபிஷிக்த –
ப்ரஜ்ஞா தௌர்ஜன்ய கர்ஜத் ப்ரதிகதக வச தூல வாதூல வ்ருத்த்யா –
சப்தத்யா சாரவத்யா சமதநுத சதாம் ப்ரீதிம் ஏதாம் சமேதாம்

யதிராஜரின் புகழ் என்னும் பெரும் கடல் மிகவும் ஆழம் உள்ளதாகவும் எங்கும் பரவியும் உள்ளது
அதில் ஆழ்ந்து ஸ்நானம் செய்தவர்கள் தூய ஞானம் படைத்தவர்கள் ஆகிறார்கள்
இத்தகைய தூய்மையான எண்ணம் கொண்ட அவர்கள் யதிராஜரின் தொண்டுக்காகவே
வேங்கடேசனான அடியேனை முடி சூட்டி மகிழ்கிறார்கள்
இதன் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே இந்த நூல் இயற்றப் பட்டது

இதில் உள்ள ஆழ்ந்த சாரார்த்தம் காரணமாக வீணான ஆடம்பரம் கலந்த வாத கோஷம் எழுப்பும்
புற மதவாதிகள் யுடைய வாதங்கள் அனைத்துமே பெரும் காற்று முன்னாக நிற்க இயலாத பஞ்சு போல் ஆயின
இப்படியாக யதிராஜ சப்ததி என்ற இந்த நூலுடன் யதிராஜரின் அடியார்கள் மகிழ்ச்சி கலக்கும் படி ஆனது

————

72-ஆசா மதங்கஜ கணான் அவிஷஹ்ய வேகான் –
பாதே யதி ஷிதி ப்த ப்ரசபம் நிருத்தன்
கார்ய கதா ஆஹவ குதூஹலிபி பரேஷாம் –
கர்ணே ச ஏஷ கவிதார்க்கிக சிம்ஹ நாத –

தாங்கள் கூறியதை ஸ்தாபிக்க வேணும் என்னும் பேராசை கொண்ட மற்ற மதத்தினர் அடக்க இயலாத யானை போன்று அடக்க இயலாமல் உள்ளனர்
அவர்களைக் கட்டி இழுத்து வந்து யதிராஜரின் திருவடிகளில் வலியக் கட்டி வைப்பது ஓன்று உண்டு
எது என்றால் கவி தார்க்கிக ஸிம்ஹத்தின் கர்ஜனை என்னும் அடியேனது முழக்கம்
அவர்களின் செவிகளில் புகுந்து வாதப்போரில் உத்ஸாகம் கொண்ட அவர்களுக்கு இந்த நிலையை ஏற்படுத்தி விடும்

————-

73-உபசமித குத்ருஷ்டி விபலவா நாம்
உபநிஷதாம் உபசார தீபிகா இயம்
கபளித பகவத் விபூதி யுக்மாம்
திசது மதிம் யதிராஜ சப்ததி ந

மற்ற மதவாதிகள் உபநிஷத் வரிகளுக்கு தங்கள் விருப்பம் போன்ற பொருள்களைக் கூறி அவற்றுக்குப் பெரும் துன்பம் ஏற்படுத்தினார்
இந்தத்துன்பத்தை எதிராஜர் நீக்கி அருளினார்
இப்படிப்பட்ட யதிராஜரின் பெருமைகளை விளக்கும் இந்தக் க்ரந்தம் உபநிஷத்துக்களுக்கு
இரண்டு பக்கமும் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் போன்றது
இந்த கிரந்தத்தைக் கற்பதன் மூலம் உபய விபூதியையம் விபூதிமானையும் பற்றிய தெளிந்த ஞானத்தை இந்த நூல் அளிக்க வேண்டும்

————

74-கரதல ஆமல கீக்ருத சத் பதா –
சுருதி வதம்சித ஸூ ந்ருத ஸூ க்தய
திவச தாரக யந்தி சமத்சரான் –
யதி புரந்தர சப்ததி சாதரா –

இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது
உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும்
அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்
மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட
அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்

——————

செல்ல வேண்டிய திசையை சரியாக காட்டுபவனே தேசிகன்.தூப்புல் வேதாந்த மஹாதேசிகன் :

ஆசார்யன் என்பதும் இதை போலவே.
சாரி என்றால் சஞ்சரிப்பவன்.
பாத சாரி காலால் நடந்து செல்பவன்.
கஜாச்சாரி யானைமேல் செல்பவன்.
எனவே சரியான பாதையில் நடந்து சென்று மற்றவர்க்கு வழிகாட்டுபவன் ஆசார்யன்.

இவர் ஒரு மஹா ஆசார்யனாய் இருந்து வைணவ சமயம் காத்த உத்தமர்.

அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு திவ்ய குமாரனாய்
தொண்டைமண்டல
காஞ்சி மாநகரில்
பொய்கையாழ்வார் அவதரித்த விளக்கொளி எம்பெருமான் ஆலய பகுதியான
தூப்புல் எனும்
திருவிடத்தே திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக
கி.பி. 1268ஆம் ஆண்டு,
விபவ வருஷம்,
புரட்டாசி மாஸம்,
சிரவணம் நட்சத்திரம் கூடிய
புதன்கிழமையில்
அவதரித்தார்.

ஒரு வெண்கல மணியை பெருமாள் தனக்கு கொடுத்து அதை தான் விழுங்கியதாக கனவு கண்டாள் அவர் தாய்.

ராமானுஜரைப் போன்று இவரால் கணீரென்று வேத நாதம் எங்கும் ஒலிக்க பிரகாசிப்பார் என்று பெருமாளே அருளினார். அதனால் தான் பெருமாள் சந்நிதியில் மணி கிடையாது. திருவாராதனம் போது வெளியே உள்ள மணி மட்டும்
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம்.

பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’,
‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’,
‘தூப்புல் பிள்ளை’,
‘உபய வேதாந்தாசாரியர்’
‘சர்வ தந்திர சுதந்திரர்’
மற்றும்
‘தூப்புல் வேதாந்த மஹாதேசிகன்’
என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

இராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரும் இவரது தாய்மாமனுமான கிடாம்பி அப்புள்ளாரிடம் வடமறையான வேதங்களும்,
தென் மறையான
திவ்ய பிரபந்தமும்,
புராணங்களும் மற்றும்
சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

ஏழாம் வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப் பட்டதோடு,
கல்வியும் கற்றவர், தன் இருபத்தோராம் வயதில் திருமங்கை என்றழைக்கப்பட்ட கனகவள்ளி எனும் மங்கையை மணம்புரிந்தார்.
தன்னுடைய இருப்பத்தேழாம் வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்த இவர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி
கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்தரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார்.
திருப்பதி,
மேல்கோட்டை,
காஞ்சிபுரம்,
அயோத்தியா,
பிருந்தாவனம்,
பத்ரிநாத்,
திருவரங்கம்
உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஜெகத்குரு இராமனுசரின் தத்துவங்களை பரப்பினார்.
இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருஷங்கள் வாழ்ந்தார்.

இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

அவர் தமிழில் :
அடைக்கலப்பத்து,
மும்மணிக்கோவை,
நவமணிமாலை,
அதிகார சங்கிரகம்,
ஆகார நியமம்,
அம்ருதரஞ்சனி,
அம்ருதஸ்வாதினி,
அர்த்த பஞ்சகம்,
சரமஸ்லோக சுருக்கு,
த்வய சுருக்கு,
கீதார்த்த சங்கிரகம்,
பரமபத சோபனம்,
பிரபந்த சாரம்,
ஸ்ரீவைஷ்ணவ தினசரி,
திருச்சின்னமாலை,
திருமந்திர சுருக்கு,
உபகார் சங்கிரகம்,
விரோத பரிகாரம்,
பன்னிருநாமம்

வடமொழியில் :
பாதுகா சஹஸ்ரம்,
கோதாஸ்துதி,
யதிராஜ சப்ததி,
வைராக்ய பஞ்சகம்,
அபீதிஸ்தவம்,
ஆதிகாரண சாராவளி,
அஷ்டபுஜ அஷ்டகம்,
பகவத் தியான சோபனம்,
பூஸ்துதி,
சதுஸ்லோகி
பாஷ்யம்,
தசாவதார ஸ்தோத்திரம்,
தயாசதகம்,
வரதராஜ
பஞ்சாசத்,
தெய்வநாயக பஞ்சாசத்,
திவயதேச மங்களாசனம்,
கருட பஞ்சாசத்,
ஹயக்ரீவ ஸ்தோத்திரம்,
தேசிக மங்களம்,

மணிப்ரவாளத்தில் :
அம்ருதரஞ்சனி ரஹஸ்யம்,
அஞ்சலி பிரபாவம்,
ஹஸ்திகிரி மஹாத்ம்யம்,
குருபரம்பரா சாரம்,
முனிவாகன போகம்,
ஆராதன காரிகா,
ஊசல்பா

ப்ராக்ருதத்தில் :
அச்யுதசதகம்
என பல நூல்களை எழுதியுள்ளார்.

மாமன் அப்புள்ளார் ஐந்து வயதில் அவரை நடாதூர் அம்மாள் பிரசங்கத்திற்கு அழைத்து சென்றபோது அவர் ஒரு கணம் சிறுவனைப் பார்த்து பிரமித்து
”எங்கே பிரசங்கத்தை நிறுத்தினோம்” என்பதை மறந்து போனார்.
மீண்டு யோசிக்கையில், சரியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து சொன்னார் தேசிகர்.

20 வயதில் சகல சாஸ்திரங்களும் அறிந்தார். அப்புள்ளாரிடம் கருட மந்திர உபதேசம் பெற்றார்.

திருவஹீந்த்ரபுரம் என்ற பெயர் இப்போது சுருங்கி திருவந்திபுரம் ஆகிவிட்டாலும் தேசிகரின் சரித்திரம் கொஞ்சமும் சுருங்கவில்லை.
இங்கு தான் ஒரு சிறு குன்றில் பலநாள் அன்ன ஆகாரமின்றி
கருட மந்த்ரம் ஜபித்தார்.
ஶ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபிக்வே எம்பெருமானும்
திவ்ய தரிசனம் தந்துஅவருக்கு ஹயக்ரீவ மந்திராபதேசம் செய்து
ஶ்ரீ தேசிகன் விருப்பப்படி அவரது நாவில் குடிகொண்டார்.
தனது சிலா ரூபத்தையும் கொடுத்தார்.
அந்த ஹயக்ரீவ விக்ரஹத்தை இன்றும் தேவநாத பெருமாள் சந்நிதியில் காணலாம்.

காஞ்சி விஜயம் செய்து பிறகு பல திவ்ய தேச யாத்ரை சென்ற தேசிகன் ”பிரபத்தி’ எனும் சரணாகதி தத்தவத்தை விளக்கி வைஷ்ணவ சமூகம் பயன்பெற செய்தவர்.
நியாச விம்சதி,
நியாச தசகம்,
நியாச திலகம் என்று வடமொழியிலும்,
அடைக்கலப் பத்து,
அர்த்த பஞ்சகம் என்று தமிழிலும் அளித்த பெரிய ஞானி.
சகல கலைகளும் கைதேர்ந்து சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப் பட்டார்..

திருப்பதி சென்று தயா சதகம் இயற்றினார். பெருமாளால் வேதாந்தாச்சார்யா என்று கௌரவிக்கப் பட்டவர்.

ஸ்ரீ ரங்கம் போகும் வழியில் ஸ்ரீ பெரும்புதூர் சென்று ஸ்ரீ ராமானுஜரை வழிபட அங்கே யதிராஜ சப்ததி என்ற ஸ்லோகம் உருவானது.

ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதர் மகிழ்ந்து அளித்த பெயர் தான் வேதாந்த தேசிகர் என்று நாம் இன்றும் அவரை அறிவது..
ரங்கநாயகி தாயார் அளித்த பெருமை தான் சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

1327ல் அலாவுதினின் தளபதி மாலிக் காப்பூர் தெற்கே பல ஆலயங்களை அழித்தபோது ஸ்ரீரங்க பெருமாள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டும் ஸ்ரீ பாஷ்ய க்ரந்தங்கள் கர்நாடகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த பொறுப்பை தேசிகன் ஏற்றார். ஒரு இரவு செத்த பிணங்களோடு பிணமாக கிடந்து மிலேச்சர்களிடம் இருந்து அரிய வைஷ்ணவ செல்வங்களை காப்பாற்றியவர் ஶ்ரீ மஹா தேசிகன்

”ஸ்ரீ ரங்கம் மீண்டும் பழம் பொலிவை பெற நீ அருள்வாய்” என்று பெருமாளை அவர் பாடியதே அபிதி ஸ்தவம் என்ற ஸ்லோகம்.

தேசிகர்
ஸ்ரீ ரங்கத்தில் தான் பெருமாள் திருவரங்கனை பாதாதி கேசம் வரை வர்ணித்த பகவத் த்யான சோபனம் ஸ்தோத்ரம் இயற்றினார்.
இதை படிக்கும் போது திருப்பாணாழ்வாரின் அமலனாதி பிரான் பாசுரங்கள் படிப்பதுபோல் எண்ணம் தோன்றுகிறது.

”நீரென்ன பெரிய ஞானஸ்தர், பண்டிதர் என்ற நினைப்போ?
ஒரே நாளில் 1000 பாக்களை ரங்கநாதர் மேல் இயற்ற முடியுமா உம்மால்?” என்று சில பெரிய கனத்த தலைக்காரர்கள் சவால் விட ”ரங்கநாதனைப் பாட முடியாமலா போகும் என்று தேசிகர் சவாலை ஏற்றாரே தவிர, அன்று முழுதும் சிஷ்யர்களுக்கு பாடம் கற்பித்ததில் போய்விட்டது.
அடடா நாளை காலையில் 1000 பாக்களை இயற்றியதை காட்ட வேண்டுமே, என்று இரவு யோசித்தார். ”தேசிகா, என் பாதுகையிலிருந்து ஆரம்பியேன் ” என்று ஸ்ரீ ரங்கநாதனே எடுத்துக் கொடுக்க, விடிகாலை 4 மணிக்கு எழுத்தாணியை பிடித்தார்.
மூன்றே மணி நேரத்தில் 1008 பாதுகா ஸ்துதி ஸ்லோகம் உருவானது. அதை உச்சரிக்கவே குறைந்தது 7 மணி நேரம் ஆகும் நமக்கு.
மறுநாள் காலை பண்டிதர்கள் அனைவரும் மூக்கில் மேல் விரலை வைக்க மறந்தாலும் தேசிகரை ”கவிதார்க்கிக சிம்ஹம்” என்ற பட்டத்தை அவருக்கு அளித்து கௌரவிக்க மறக்கவில்லை.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளை வழிபாட்டு கோதா ஸ்துதி உருவானது. ஆண்டாள் உத்சவத்தின் போது திவ்ய பிரபந்தத்துடன் ஆண்டாளின் விருப்பப் படியே,
கோதாஸ்துதி ஸ்லோகங்கள் சொல்லப்பட்டு வருகிறதே.

காசு, தங்கம், நாணயம் இதெல்லாம் தேசிகர் பார்த்ததில்லை, வாங்கிக்கொள்ள மாட்டார். எனவே உஞ்சவ்ரித்தியில் வாழ்ந்த அவருக்கு அரிசியோடு தங்கமணிகளை கலந்து கொடுத்து, அதை அவர் மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்ல, அவளோ இதெல்லாம் என்ன அரிசியோடு என்று கேட்க, ஏதாவது பூச்சி முட்டையாக இருக்கும் என்று கையால் கூட தங்கத்தை தொடாமல் தர்ப்பையால் அவற்றை ஓதுக்கி வெளியே எறிந்து விட்டார்.

தேசிகரின் பால்ய நண்பன் வித்யாரண்யன்
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெரிய பதவியில் இருந்ததால்,

”தேசிகா, நீ எதற்காக ஏழ்மையில் வாடுகிறாய்,
வா என்னிடம், இங்கு உனக்கு நிறைய பரிசு வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்றான் ” வித்யாரண்யனுக்கு அவர் பதிலாக எழுதியதே நமக்கு பொக்கிஷமாக கிடைத்த
”வைராக்ய பஞ்சகம்”.

”வித்யாரண்யர்
நமக்கல்லவோ மிகப்பெரிய பரிசை அளித்துவிட்டார்.”.

ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்கு பொன் மழை பெய்ய வைத்த கனக தாரா ஸ்தோத்ரம் தெரியுமல்லவா. அதே போல் இன்னொன்றும் காஞ்சியில் நடந்திருக்கிறதே.

காஞ்சிபுரத்தில் தேசிகர் வாழ்ந்தபோது, அவரை அவமானப் படுத்த சில விஷமிகள்,

ஒரு ஏழைப்பையன் தனது திருமணத்துக்கு உதவி கேட்டபோது ”தம்பி நீ தேசிகர் என்று ஒருவர் ரெண்டு தெரு தள்ளி வசிக்கிறார். பணக்காரர்.
யார் கேட்டாலும் பணம் தருவாரே, அவரைப் போய் கேள்” என்று அனுப்ப,
அந்த அப்பாவி அவரது எளிய வாழ்க்கை நெறி தெரியாமல் அவரை நிதி உதவி கேட்க, அவனை அழைத்துக்கொண்டு நேராக வரதராஜ பெருமாள் கோவில் சென்று தாயாரின் சந்நிதியில் அவளை உதவி செய் என வேண்டினார் தேசிகர்.

”அவரது மனதைத் தொடும்

”ஸ்ரீ ஸ்துதி” தாயாரை உடனே அங்கே ஒரு பொன்மழை பெய்ய வைக்க காரணமானது..

ஒரு பாம்பாட்டி தேசிகரிடம் ”என்னுடைய விஷ பாம்புகளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று சவால் விட,
அவர் தரையில் ஒரு கோடு போட்டு
” உன் பாம்புகள் இந்த கோட்டைத் தாண்டட்டும்” என்றார்.
சில விஷ பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது தேசிகர் உச்சரித்த கருட மந்திர ஸ்லோகம் கேட்ட கருடன் வந்து அத்தனை பாம்புகளையும் அன்றைய காலை உணவாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

பாம்பாட்டி அவர் காலில் விழுந்து ”என் பிழைப்பே இந்த பாம்புகள் தான் ” தயவு செய்து அவற்றை திரும்ப தரவேண்டும் என்று கெஞ்சினதால், மீண்டும் கருட மந்த்ரம் சொல்லி கருடனை அந்த பாம்புகளை திரும்ப தர வைத்தார் .

”உங்களால் எல்லாமே செய்ய முடியும் என்கிறார்களே, என்னைப்போல் கட்ட முடியாவிட்டாலும் ஒரு சாதாரண கிணறு கட்ட முடியுமா உங்களால்?” என்று ஏளனமாக கேட்டானாம் ஒரு மேஸ்திரி.

”சரியப்பா கட்டுகிறேன்”

‘ நான் கொடுக்கும் கற்களை மட்டுமே கொண்டு அதைக் கட்டவேண்டும்”

”ஆஹா அப்படியே.’ என்ற தேசிகர் அவன் கொடுத்த அளவு சரியில்லாத கோணா மாணா கற்களைக் கொண்டே கட்டிய அந்த வினோத கிணறு இன்றும் திருவஹிந்திர புரத்தில் இருக்கிறது.
எங்கே நீர் வற்றினாலும் அந்த கிணற்றில் நீர் வற்றுவதில்லை. சுவையிலும் குன்றவில்லை.

மற்றொரு சிற்பி தனது பங்குக்கு அவரை சவாலுக்கு இழுக்க, அவன் விரும்பியவாறே, அவன் அமைத்த பீடத்தில் தனது உருவத்தையே தத் ரூபமாக சிலையாக வடித்துக் காட்டியபோது அசந்து போனான். அவனமைத்த பீடம் போதாததால் அங்கங்கே அவர் உருவச்சிலையை உளியால் வெட்டும்போது அவன் வெட்டிய பாகங்கள் அவருடைய உடலிலிருந்து ரத்தத்தை சிந்த வைக்க, பயந்தே போய் அவர் காலடியில் விழுந்து மன்னிக்க வேண்டினான் அந்த சிற்பி.

தனது உருவத்தை தானே தேசிகர் வடித்த சிலாரூபம் இன்றும் தேவநாதர் ஆலயத்தில் இருக்கிறதே.
மேலே சொன்ன அவர்
கட்டிய கிணறையும் பார்க்க தவறவேண்டாம். கோவிலுக்கு அருகாமையில் சற்று தள்ளி
ஒரு மண்டபத்தில் உள்ளது.

நமது தூப்புல் குலமணியும் ஸாக்ஷாத் திருமலைமால் கண்டாவதாரமும் ராமானுஜ முனி அபராவதாரமாவார்.
அவர் ஆழ்வார் மீது வைத்திருக்கும் பற்றை அளவிடமுடியாது, வேறு எந்த ஆசார்யனும் தன்னை “சந்தமிகு தமிழ் மறையோன்” என்று பறைசாற்றி கொண்டதில்லை. அவர்காலத்தில் அத்வைத சித்தாந்தம் தலைஓங்கி நிற்க அதை நிஷ்கர்ஷித்து உண்மைபொருளை நிலை நாட்ட இவர்களுக்கு ஆழ்வார் ஸ்ரீஸூத்திகள் துணைபுரிந்தன. அதையும் நம் ஸ்வாமி “தெரியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்றுசாதித்தார். ஆளவந்தார் இராமானுஜ முனிகாலம் தொடங்கி தேசிகறது காலம் ஏன் இன்றைய அளவிலும் ஆங்காங்கே பூர்வபக்ஷம் தலை ஓங்குகிறது அப்பொழுது அவர்கள் வேத வேதாந்தத்தை கொண்டேவாதம் செய்கிறார்கள்.
நமது ஆசார்யர்களோ ஆழ்வார்களோ திவ்ய பிரபந்தங்களைக்கொண்டு உண்மை பொருளை உணர்த்துகின்றனர். இது நமது சித்தாந்துக்கே உரிய சிறப்பு.

தேசிகர் 101 வருஷம் வாழ்ந்தார். தனது அந்திம நேரம் நெருங்கியதை உணர்ந்த தேசிகர் தனது குமாரர் குமார வரதாசாரியாரை அழைத்து அவர் மடியில் தலை வைத்து, அவரை ”திருவாய் மொழி, உபநிஷத் எல்லாம் சொல்லப்பா. கேட்டுக்கொண்டே செல்கிறேன்” என்றார். பரமபதம் அடைந்தார். தாயார் ரங்கநாயகி தன்னருகே ஒரு சந்நிதியில் தேசிகரை இருத்திக் கொண்டாள்.
வேறு யாருக்கும் இங்கு இடமில்லை என்ற அவள் ஆணை இன்றும் நிலுவையில் இருக்கிறது.

வேதாந்த தேசிகரே !

வேதாந்தாசார்யரே !

சீரார் தூப்புல் பிள்ளையே !

இன்னும் ஒரு நூறாண்டிரும் !

இல்லை இல்லை . . .

அது போதாது !

இன்னும் பல ஆயிரமாண்டிரும் .

———–

ஜயதி யதிராஜ ஸூக்தி ஜெயந்தி முகுந்தஸ்ய பாதுகா யுகளீ
ததுபயதன த்ரிவேதீம் அவத்யயந்த ஜெயந்தி புவி சந்த –

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ விம்சதி வியாக்யானம் -ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் —

May 25, 2022

மன்னுயிர்காளிங்கே மணவாள மாமுனிவன்
பொன்னடியாம் செங்கமல போதுகளை – உன்னி
சிரத்தாலே தீண்டில் அமானுவனும் நம்மை
கரத்தாலே தீண்டல் கடன்.

பல பல மஹாசார்யர்களின் அவதாரத்தினால் புனிதமான இவ்வுலகில் பூர்வாசார்யர்கள் என்று இன்றைக்கும்

நாம் வழங்கி வரும் மஹாசார்யர்களின் பரம்பரையானது மணவாள மாமுனிகளுடன் நிறைவு பெறுகின்றது.

அவருக்கு பின்னும் பல மகான்கள் திரு அவதாரம் செய்திருப்பினும் நம்பெருமாளே அழகிய மணவாளனான திருக்கோலத்தில்

பூர்த்தியுள்ள  மாமுனிகள் பக்கலிலே சிஷ்யனாக இருந்தமையால்,

பூர்வாசார்ய குருபரம்பரையானது மாமுனிகளுடன் பூர்த்தி அடைந்ததாகக் கருதுவர் பெரியோர்.

நல்லார் நவில் குருகூர் என்கிற ஆழ்வார் திருநகரியில் திரு நாவீருடைய பிரான் தாசர் என்கிற மஹாசார்யருக்கு

திருக்குமாரராய் சாதாரண வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்ரத்தில் திரு அவதாரம் செயதார்.

மணவாள மாமுனிகளுடைய ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளை ஆவார்.

திருவாய்மொழிப் பிள்ளை ஒரு நாள் எம்பெருமானாருடைய குணாநுபவம் பண்ணிக்கொண்டு இருக்கையில்

மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுசன் என்றும் உள்ள பல பாசுரங்களை சிந்தை செய்து

ஆழ்வார் திருவடிகளிலும் அருளிச்செயல் திறத்திலும் எம்பெருமானாருக்கு இருந்த பெருத்த ஈடுபாட்டை

மனத்தில் கொண்டு இத்திருநகரியிலே அவருக்கு ஒரு தனிக்கோயில் அமைக்க வேணுமென்று சிஷ்யர்களை நியமித்து அருளினார்.

நாயனாரும் ( மணவாளமாமுனியும் ) அந்த உடையவர் திருவடிகளிலே மிகவும் பக்தியுடன் உரிய கைங்கர்யங்களை செய்து வந்தார்.

அந்த உடையவரின் திருவடிகளிலே ஒரு ஸ்தோத்ரம் விக்ஞாபிக்க வேணுமேன்னு ஆசார்ய நியமனமாக

யதிராஜ விம்சதி என்னும் ஸ்துதியை இயற்றினார்.

இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதியின் மாதுர்யம் முதலிய குண விசேஷங்களைப் பற்றி

ஸ்ரீ அண்ணா வரவர முநி சதகத்தில் அருளிv செய்துள்ளார்.

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –

————-

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –

————-

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருள பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –

————–———-

ஸ்ரீ யதிராஜ விம்சதியின் அவதாரிகை

இங்ஙனம் பூர்வதிநசர்யையில், அபிகமநம், உபாதாநம், இஜ்யை என்னும் மூன்று வகையான நித்யாநுஷ்டாநங்களில்

தம்முடைய ஆசார்யராகிய ஸ்ரீ மணவாளமாமுனிகளை அநுபவித்து,

நான்காம் அநுஷ்டாநமாகிய ஸ்வாத்யாயத்தில் அவரை அநுபவிக்க விரும்பிய எறும்பியப்பா,

பலவகைப்பட்ட ஸ்வாத்யாயத்தில், பூர்வாசார்ய க்ரந்தங்களைச் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபமாகச் சொல்லுதலென்னும்

ஒருவகையை ‘வாக்யாலங்க்ருதி’ வாக்யாநாம் வ்யாக்யாதாரம் (உத்தர திநசர்யை 1) என்று மேலே சொல்ல நினைத்து,

புதிதாக ஒரு க்ரந்தத்தை நிர்மாணித்தல் என்னும் மற்றொறு வகையை இப்போது சொல்ல விரும்பியவராய்,

ஸ்ரீ மணவாளமாமுனிகள் தமது ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்ப ஸ்ரீ எம்பெருமானாரைப் பற்றி அருளிச்செய்த

ஸ்ரீ யதிராஜ விம்சதி என்ற க்ரந்தத்தை இங்கே அநுவாதம் செய்கிறார்.

பரம பூஜ்யரான ஸ்ரீ மணவாளமாமுனிகள், ப்ரபந்ந ஜன கூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே

உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) ஸ்ரீ நம்மாழ்வார் முதலான

பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும்,

திருமந்த்ரம் த்வயம் சரமஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய –

முடிந்த பொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம்

(மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும்,

ஸம்ஸாரத்தில் உழன்றுகொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும்

ஸ்ரீ யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளியவருளிச்செய்ய விரும்பி,

தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக,

தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு ஸ்ரீ யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை

இதன் முதலிரண்டு ஸ்லோகங்களால் செய்தருளுகிறார்.

ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய

இருபதென்ற எண்ணே, ஸ்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் இதன் உரையாசிரியர் திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக

மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து,

இந்த ஸ்ரீ யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ஸ்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க.

விம்சதி = இருபது.

————

தனியன்

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி நீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம் |
தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்யவரயோகி புங்கவம் ||

பதவுரை:-

: – யாவரொருவர்,

யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான,

யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ஸ்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய,

ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை,

வ்யாஜஹார – அருளிச் செய்தாரோ,

ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான,

தம் ஸௌம்ய வர யோகி புங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை),

நௌமி – துதி செய்கிறேன்.

கருத்துரை:-

இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது.

யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில்

யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி.

ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகம் போன்றவர்.

ப்ரபந்நஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர்காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து.

யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹாமுனிகள்.

———————————–

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜ த்வய நித்ய ஸேவா ப்ரமா விலாஸய பராங்குஸ பாத பக்தம்|
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1

பதவுரை:-

ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜ த்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க,

நித்ய ஸேவா – ப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய,

பராங்குஸ பாத பக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும்,

ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய,

காம ஆதி தோஷ ஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும்,

யதி பதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான,

ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை,

மூர்த்நா – தலையால்,

ப்ரணமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:-

ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள்.

ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன,

பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில்

திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரிய பிராட்டியாரை ஒத்தவன்

அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள்.

இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும்

எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான்

திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்”

(பிராட்டியோடு நித்ய ஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1)

என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய

பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க.

கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற் கொண்டு

மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார்.

அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்தி கொண்டவர் எம்பெருமானார்.

‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும்.

அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும்.

பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன,

வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு.

அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க.

‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது

அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப் பெற்றார்.

அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம்

லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார்

வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.

மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே,

தம்மை யடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை

முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார்.

தம் மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின் கண் உண்டாகும் குற்றங்களைக்

களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும்.

மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட

தாமரை மலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக-

மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும்,

பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால்

அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல்

‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி

இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும்.

குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும்

ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு,

அவர் தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை –

பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார்.

“யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால்

ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும்,

காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது.

ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே,

ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது.

திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது.

இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு

வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)

————–

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்ஸம் ஸ்ரீமத் பராங்குஸ பதாம் புஜ ப்ருங்க ராஜம் |
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம் ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் யதிராஜ மீடே || 2

பதவுரை:-

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும்,

ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரை மலர்களில் (தேனைப் பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,

ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரை மலர்களை மலரச்செய்கிற ஸூர்யன் போன்றவரும்,

ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம் – ஸ்ரீவத்ஸசிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய,

யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை,

ஈடே – துதிக்கிறேன்.

கருத்துரை:-

துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29)

[உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது,

அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது]

என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது

அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால்,

பாகவத கைங்கர்யமாகிய யதிராஜவிம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து,

அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்ய நிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி

யதிராஜ-ஸ்தோத்ர ரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார்

ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய்

அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது.

அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற

ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது.

இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும்.

பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும்

அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய –

ஜீவாத்ம ஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும்.

காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி,

கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம்,

கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர்.

இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம்.

பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும்

அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம்.

ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை

இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி.

ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய்,

முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும்,

புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல்,

எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது.

இத்தகைய மென்மைத்தன்மையை

‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று

தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம்.

ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில்,

சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட

கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை

ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம்.

தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு

தமக்குக் கண் போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான்

எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே.

முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது.

இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாசிக மங்களம் செய்யப்படுகிறது.

வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின் கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் –

மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிக மங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத்தக்கது.

இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத் தொடங்குகிறார் மாமுனிகள் என்க. (2)

———————

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாத குருகேஸ முகாத்ய பும்ஸாம் பாதாநுசிந்தந பரஸ் ஸததம் பவேயம் || 3

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

மநஸா – மனத்தினாலும்,

வாசா – நாவினாலும்,

வபுஷா  – தேஹத்தினாலும்,

யுஷ்மத் – தேவரீருடைய,

பாதாரவிந்தயுகளம் – தாமரை மலர் போன்ற திருவடிகளின் இரட்டையை,

பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற,

குரூணாம் – ஆசார்யர்களாகிய,

கூராதி நாத குரு கேஸ முக ஆத்ய பும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய்,

ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக,

பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

கருத்துரை:-

மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு,

அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார்.

கூராதிநாதர்-கூரத்தாழ்வான்.

குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க.

குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும்.

மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப் போக்குமவரையும் குறிப்பிட்டு-

குரு ஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும்.

இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும்.

பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால்

பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும்

அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும்.

அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும்.

பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால்

கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று,

யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)

———————

நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோ பவது வாக் குண கீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்ய கரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரண த்ரயஞ்ச ||–4-

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே,

மே – அடியேனுடைய,

மந: – மனமானது,

தவ – தேவரீருடைய,

திவ்யவபுஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில்,

நித்யம் – எப்போதும்,

ஸக்தம் – பற்றுடையதாக,

பவது – இருந்திடுக.

அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது,

தவ – தேவரீருடைய,

குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில்,

ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும்,

தவ – தேவரீருக்கு,

தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே,

க்ருத்யம் – கடமையாக,

அஸ்து – இருந்திடுக.

மே – அடியேனுடைய,

கரண  த்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும்,

வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில்,

விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

கருத்துரை:-

கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர்,

அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘

க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம்,

மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு,

அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது.

இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும்,

நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று.

பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள்.

க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி.

முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)

——————–

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ர நாத |
ஸிஷ்டாக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

பதவுரை:-

நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய,

யதீந்த்ர – யதிராஜரே,

அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில்,

அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில்,

மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு,

அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள,

பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய

அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய ஸரணத்வம், அநந்ய போக்யத்வம்

(எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,

எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.)

என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை,

விதர – தந்தருளவேணும்.

ஸிஷ்ட அக்ர கண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில்

திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று

நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய

கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க

தேவரீருடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை,

நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,

அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது,

ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக,

அஸ்து – ஆயிடுக.

கருத்துரை:-

இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும்,

நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன.

ஸ்ரீமந்ய’தீந்த்ர என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும்

யதீந்த்ர தாஸ கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உப ஸம்ஹாரமாக அமைந்துள்ளது.

விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோ வென்னில்

முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது –

ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை

ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும்.

நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை,

பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே.

முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன்.

ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும்

நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து,

பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து,

அதற்குப் பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே

தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன.

ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன்.

ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து,

யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை

(உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை,

தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி

க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று.

மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால்

அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார்.

திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது.

இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான

ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான

தேவரீருடைய திருவடித் தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக்

கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)

————–

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜ பக்தி: ஸப்தாதி போக ருசிரந்வஹமேத தேஹா |
மத் பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைக ஸிந்தோ || (6)

பதவுரை:-

தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே,

ஆர்ய – ஆசார்யரே,

யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே,

மே – அடியேனுக்கு,

பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித் தாமரைகளில் ஆசையானது,

அல்பா அபி – சிறிது கூட,

 (அஸ்தி) – இல்லை,

ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது,

அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும்,

ஏததே – வளர்ந்து வருகிறது,

ஹா – கஷ்டம்,

அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு,

நிதாநம் – மூலகாரணம்,

மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும்.

அந்யத் ந – வேறொன்றுமன்று,

தத் – அந்த பாபத்தை,

வாரய – போக்கியருளவேணும்.

கருத்துரை:-

நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில்,

அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்.

வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால்,

இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ?

இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால்.

தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால்,

தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை.

அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல் போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால்,

எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும்,

எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது.

ஆர்ய ஸப்தம்

(1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை

அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது.

(2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும்,

கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரம வைதிகர் என்பதைக் காட்டுகிறது.

ஆராத் = அண்மையும் சேய்மையும்.

(3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு,

எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது.

வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே –

தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும்,

குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டு பண்ணும்

எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும்.

‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் –

பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை

எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு.

அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது.

‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ,

அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும்

தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்;

பின்னையோ வென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

——————–

வ்ருத்த்யா பஷுர் நர வபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதி ஸித்த நிகிலாத்ம குணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சந பரோSத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

வஞ்சந பர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான,

அஹம் – அடியேன்,

நர வபு: – மனிதவுடல் கொண்ட,

பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே)

வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே,

(ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.)

(உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக் கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே

அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.)

ஈத்ருஸஅபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும்,

ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்ம குண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன்,

அயம் – இந்த மணவாளமாமுனிவன்’

இதி – என்றிவ்வாறாக,

க்ருதிநஅபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட,

ஆதரேண – மனமார்ந்த அன்போடு,

மித: – தங்களில் ஒருவர்க்கொருவர்,

ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக,

அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும்,

அத்ய – இப்போது,

வர்த்தே – இருக்கிறேன்.

தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கி யருள வேணும்.

கருத்துரை:-

அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம்

பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும்.

‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால்

மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து

அப்படிச் சொல்லாமல், ‘ஆத்ம குணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால்,

‘அத் தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத்

தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க.

அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத

நாத யாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப் புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே,

இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

—————

து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ் ஸரணாகதாக்ய:|
த்வத் பாத பக்த இவ ஸிஷ்ட ஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|| (8)

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய்,

ஸப்தாதி போக நிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய்,

துஷ்ட சேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (

அதனால்) தவ – தேவரீருக்கு,

து: ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற,

அஹம் – அடியேன்,

த்வத் பாத பக்தஇவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல்,

சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில்,

மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன்,

தத: – அக்காரணத்தினால்,

மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன்,

தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:-

அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால்

அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால்.

யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே

மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி.

ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய,

ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி.

ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல்,

தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல்,

தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல்,

வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய

ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம்.

து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது –

‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி.

அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ,

துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய

துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம்.

மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன்.

இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

——————

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீய ஸங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும்,

மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும்,

தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும்,

நித்யம் து – எப்போதுமே,

பரிபவாமி – அவமதிக்கிறேன்.

கிஞ்சித் அபி – சிறிதும்,

 பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை.

அஹோ – இது என்ன ஆஸ்சர்யம்.

இத்தம் – இவ்விதமாக,

ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும்,

அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும்,

பவதீய ஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில்,

ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு,

சராமி – ஸஞ்சரிக்கிறேன்.

தத: – அதனால்

அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன்.

தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத் தனத்தைப் போக்கி யருள வேணும்.

கருத்துரை:-

கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில்

ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குரு மந்த்ர தேவதைகளை

வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து,

இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத் தனத்தையும்

போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல்,

பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ

தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம்.

மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம்.

மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட

மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும்.

இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில்  காண்க.

அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும்

தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

———————

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)

பதவுரை:-

யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ய: அஹம் – எத்தகைய அடியேன்,

மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால்,

த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும்,

ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ,

ஸ:அஹம் – அத்தகைய அடியேன்,

தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு,

அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு,

ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே,

காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன்.

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ

தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன்,

தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:-

மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார்.

‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால்,

வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும்

மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும்,

ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும்,

ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும்,

பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும்

ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி.

பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும்,

ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும்,

அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம்.

பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும்

ஸ்ரீவைஷ்ணவர்க்குப் பண்ணும் விரோதம் ஆகும்.

அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும்,

ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும்.

இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது.

மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று

மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க.

ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது.

தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில்

‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட

மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப் பற்றிக்

குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

————–

பாபே க்ருதே யதி பவந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கதம் கடேத |
மோஹேந மே ந பவதீய பயாதிலேஸ:
தஸ்மாத் புந: புநரகம் யதிராஜ குர்வே || (11)

பதவுரை:-

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே ,

பாபே க்ருதே ஸதி – பாவம் செய்யப் பட்டப்போது,

மம – அடியேனுக்கு,

பய அநுதாப லஜ்ஜா: – மேல் என்ன கேடு நேரிடுமோ என்னும் பயமும், ஐயோ தவறு செய்துவிட்டோமே என்னும் பச்சாத்தாபமும் (கழிவிரக்கமும்) பெரியோர்கள் முகத்தில் நாம் எப்படி விழிப்பதென்கிற வெட்கமும்,

பவந்தி யதி – உண்டாகுமேயானால்,

அஸ்ய புந: கரணம் – இப்பாபத்தை மறுபடியும் செய்வதென்பது,

கதம் கடேத – எப்படிப்பொருந்தும் ?

இஹ – இப்பாவம் செய்யும் விஷயத்தில்,

பயாதி லேஸ: (அபி) – பயம் முதலிய மூன்றில் சிறிதளவு கூட,

மோஹேந – அநுபவிக்கத்தகாத நீச விஷயத்தில் இது அநுபவிக்கத்தக்கதென்னும் திரிபுணர்ச்சியினாலே,

மே – அடியேனுக்கு,

ந பவதி – உண்டாகிறதில்லை.

தஸ்மாத் – அதனால்,

அகம் – பாவத்தை,

புந: புந: – மறுபடியும் மறுபடியும்,

குர்வே – செய்துவருகிறேன்.

கருத்துரை:-

ஐயா, ஸரணாகதனென்னும் பெயரை மட்டும் சுமந்தாலும் உமக்கு , பாபம் செய்தபிறகு பயமும் வெட்கமும் உண்டானால்

பாபத்தை மேலும் செய்யமாட்டீர். பச்சாதாபமுண்டானால் செய்த பாபமும் தீரும்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது ? என்று யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்கலாம்

என்று ஊஹித்து அருளிச்செய்கிறார்.

அகம் – பாபம். பயம் முதலியவை பூர்ணமாக உண்டானால் மறுபடியும் பாபம் செய்வதற்கே இடமில்லை.

அவை சிறிதே உண்டானால் எப்போதோ ஒரு தடவை செய்வது தவிர மேன்மேலும் செய்யவழியில்லை.

அடியேனுக்கோ அவை சிறிதும் உண்டாகாமையினால் மேன்மேலும் இடையறாது அப்பாபத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆகையால் அவை சிறிதும் உண்டாகாமைக்குக் காரணமாகிற

மோஹத்தை – ஸப்தாதி நீச விஷயங்களில் ‘இவை அநுபவிக்கத்தக்கவை’ என்கிற திரிபுணர்ச்சியை

நீக்கி யருள வேணுமென்று ப்ரார்த்திப்பது இந்த ஸ்லோகத்தின் உட்கருத்தாகும்.

அதனால் முற்கூறிய ‘தத்வாரய’ (அதை நீக்கியருளவேணும்) என்பதை இங்கும் வருவித்துக் கொள்ள வேணும்.

——————–

அந்தர்பஹிஸ் ஸகல வஸ்துஷு ஸந்தமீஸம்
அந்த:புரஸ் ஸ்திதமிவாஹம வீக்ஷமாந: |
கந்தர் பவஷ்ய ஹ்ருதயஸ் ஸததம் பவாமி
ஹந்த த்வதக்ரக மநஸ்ய யதீந்த்ர! நார்ஹ: || (12)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

அஹம் – அடியேன்,

ஸகல வஸ்துஷு – எல்லாப்பொருள்களிலும்,

அந்த: பஹி: ச ஸந்தம் – உள்ளும் புறமும் பரந்திருந்து,

ஈஸம் – எல்லாவற்றையும் அடக்கியாளுகிற ஸ்ரீமந் நாராயணனை,

புர:ஸ்திதம் – முன்னே நிற்கும் மனிதனை,

அந்த: இவ – குருடன் போல்,

அவீக்ஷமாண: ஸந் – பாராதவனாய்க் கொண்டு,

(அதனால்) கந்தர்ப்பவஸ்ய ஹ்ருதய: – மந்மதனுக்கு (ஆசைக்கு)வஸப்பட்ட மனத்தையுடையவனாக,

ஸததம் பவாமி – எப்போதும் இருக்கிறேன்.

(ஆகையால்) த்வத் அக்ர கமநஸ்ய – தேவரீர் திருமுன்பே வருவதற்கு

(அஹம்) ந அர்ஹ: – அடியேன் தகுந்தவனாக இல்லை,

ஹந்த – ஐயோ கஷ்டம்.

கருத்துரை:-

‘ஐயா, அப்படியானால் நீர் நானிருக்குமிடத்திற்கு வாரும். அதற்கு ஆவன செய்கிறேன்’ என்று

யதிராஜருக்குத் திருவுள்ளமாயிருக்குமென்று கருதி

தாம் அவரைக் கிட்டுவதற்கும் தமக்குத் தகுதியில்லாமையை இதனால் கூறுகிறார்.

‘வ்ருத்த்யா பஷு: நர வபு: அஹம்’ தாய்க்கும் மற்றவற்றிற்கும் வாசி தெரியாமல் செய்யும் செயலினால் விலங்காய்,

உடலால் மட்டும் மனிதனாக இருக்கிறேன் அடியேன் – என்ற கீழ் ஏழாம் ஸ்லோகத்தை விவரிப்பவராய்

தாம் காமத்திற்கே வசப்பட்ட மனமுடைமையைக் கூறித் தமது நிலையை யதிராஜரிடம் விண்ணப்பிக்கிறாரென்றபடி.

யதிராஜர் என்று பெயர் படைத்துக் காமம் முதலியவற்றையடக்கிய பெரியோர்கட்கெல்லாம் தலைவராகிய

எம்பெருமானார் எதிரே வந்து நிற்பதற்கு, காமத்திற்கே பரவஸப்பட்ட தமக்குத் தகுதியில்லாமையை

இதனால் விண்ணப்பித்தாரென்பது தேர்ந்த கருத்தாகும்.

காமத்தையே நினைக்கிற மனமுடைய அடியேன் தேவரீர் முன்பு வந்து நிற்பதை யெண்ணாத மனமுடையவனாகி,

அங்ஙனம் முன்பு வந்து நிற்பதற்குத் தகுதியுடையவனல்லேன் என்றும்

இங்ஙனம் நீசனான அடியேன் தேவரீர் முன்பு வந்து நின்றால் தேவரீருக்கு மிகவும் அருவருப்பு உண்டாகுமாகையால்

அப்படிவந்து நிற்பதற்கு அடியேன் தகுதி பெற்றிலேன் என்றும் கருத்துக் கூறுவர் அண்ணாவப்பங்கார் ஸ்வாமி.-12-

—————-

தாபத்ரயீ ஜநிதது:க நிபாதிநோSபி
தேஹஸ்திதௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத! த்வமேவ ஹர தத் யதிராஜ! ஸீக்ரம் || (13)

பதவுரை:-

ஹே யதிராஜ – வாரீர் எதிகட்கிறைவரே,

தாபத்ரயீ ஜநித து:க நிபாதிநோSபி – மூவகைத் தாபங்களினால் உண்டாகப்பட்ட துக்கங்களின் நடுவில் விழுந்து கொண்டேயிருந்த போதிலும்,

மம து – மிக நீசனான அடியேனுக்கோவென்றால் ,

தேஹ ஸ்திதௌ (பருப்பதும் இளைப்பதுமாய் ஒருபடிப்பட்டு இராத) உடல் இப்படியே அழியாமல் நிலைத்து இருக்கும் நிலையில்,

ருசி: – ஆசையானது,

பவதி – உண்டாகிறது,

தத் நிவ்ருத்தௌ – அந்த உடலின் அழிவில்,

ந ருசி: – வெறுப்பு,

பவதி – உண்டாகிறது.

ஏதஸ்ய – உடல் அழியாமையில் விருப்பமும் அஃது அழிவதில் வெறுப்பும் உண்டாகிற இந்நிலைமைக்கு,

காரணம் – காரணமானது,

மம பாபமேவ – அடியேனுடைய பாபமே ஆகும்.

நாத – ஸ்வாமீ!,

த்வம் ஏவ – அடியேனுக்குத் தலைவரும், பாபம் போக்குமாற்றல் படைத்தவருமாகிற தேவரீரே,

தத் – அப்பாவத்தை,

ஸீக்ரம் – அடுத்த க்ஷணத்திலேயே,

ஹர – போக்கியருளவேணும்.

கருத்துரை:-

‘ஐயா, நீர் இதுவரையில் கூறிய குற்றங்களுக்கெல்லாம் காரணம்,

நீர் உம்முடைய உடல் நிலைத்திருப்பதில் வைத்திருக்கும் ஆசையேயாகும்.

அவ்வாசையை அவ்வுடலில் உள்ள நிலையாமை, பற்பல அழுக்குகள் நிறைந்துள்ளமை,

நோய் பலவற்றிற்கும் இடமாக அமைந்திருக்கை முதலிய குற்றங்களை ஆராய்ந்தறிந்து

அவ்வுடலை நீரே விட்டுவிடும்’ என்று எதிராசர் கருதியிருக்கலாமென்று நினைத்து விண்ணப்பிக்கிறார் இதனால்.

தாபத்ரயீ – மூன்று வகையான துக்ககாரணங்கள்,

(1) ஆத்யாத்மிகம் – உடலைப்பற்றிவருகிற கர்பத்தில் வஸித்தல் முதலியன,

(2) ஆதிபௌதிகம் – பூதங்களான நீர் நெருப்பு முதலியவற்றாலுண்டாகும் குளிர்ச்சி வெம்மை முதலியன.

(3) ஆதிதைவிகம் – தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை முதலியன.

இவற்றை வேறுவகையாகவும் கூறுவதுண்டு.

உடல் குற்றம் நிறைந்திருக்கிறதென்னும் விஷயத்தில் ‘இந்த உடலுக்குள் இருக்கிற ரக்தம் மாம்ஸம் முதலியவை

வெளியில் இருக்குமாகில் இவ்வுடல் பெற்றிருக்கும் மனிதன், அவற்றை உண்பதற்கு ஓடி வருகின்ற

நாய் காகம் முதலியவற்றை, தடியை ஓங்கிக் கொண்டு சென்று விரட்டியடிப்பான்’ என்று பொருள்படும்

‘யதி நாமாஸ்ய காயஸ்ய யத் அந்த: தத் பஹிர் பவேத்’ என்னுமிந்த ஸ்லோகத்தை ப்ரமாணமாகக் கொள்க.

தந்நிவ்ருத்தௌ ந ருசி’ என்றவிடத்தில் – பகைமைப் பொருளில் வரும் ந என்பதனை ருசி: என்பதனோடு சேர்த்து

ருசிக்குப் பகையான த்வேஷம் (ஆசைக்கு விரோதியான வெறுப்பு) என்னும் கருத்து கொள்ளப்பட்டது.

ஸப்தாதிகளை அநுபவிப்பதில் உண்டாகும் ஆசையைக் காட்டிலும்

உடல் நிலைத்திருப்பதில் உண்டான ஆசை மிகவும் கொடியதாகையால் அதற்குக் காரணமான பாபத்தை

அடுத்த க்ஷணத்திலேயே போக்கியருளவேணும்மென்றார் இதனால்.

இங்ஙனம் இவர் வேண்டிக்கொண்டபோதிலும், யதிராஜர் இவருடைய உடலைப் போக்காமலிருப்பதற்குக் காரணம்,

இவர் இன்னும் சிலநாள்கள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருந்தால், இவர் வருந்தினாலும் இவரைக் கொண்டு

உலகிலுள்ளவரை உய்யும்படி செய்யலாமென்ற ஆசையேயன்றி வேறில்லை என்று கொள்க.-13-

—————-

வாசா மகோசர மஹா குண தேஸிகாக்ர்ய கூராதி நாதகதிதாகில நைச்ய பாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர் ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே || (14)

பதவுரை:-

ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே,

வாசாம்  அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும்,

ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய,

தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால்,

கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட,

அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன்,

ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன்,

ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில்,

ஜகதி – உலகில்,

 (அஸ்தி) – இல்லவேயில்லை.

தத் – அக்காரணத்தினால்,

தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய,

கருணா ஏவ – கருணையே,

மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக,

பவதி – ஆகிறது.

கருத்துரை:-

இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து,

பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும்

தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார்.

கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது –

‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க.

எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் –

தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார்.

தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி.

ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும்,

வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது.

கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன்,

நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான்

பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன்.

என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று

தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.

ஹா ஹந்த ஹந்த ஹதக அஸ்மி கல அஸ்மி திக் மாம்
முஹ்யந் அஹோ அஹம் இதம் கிம் உவாச வாசா
த்வம் அங்க மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்
ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி மாத்ருக் அம்ஹ -84-

ஹதக அஸ்மி-பிணத்துக்கு சமம்
கல அஸ்மி -துஷ்டன்
திக் மாம் -கைவிடத் தக்கவன்
மங்கள குண ஆஸ்பதம் அஸ்த ஹேயம்-உபய லிங்கத்தவம்

ஆஸ்மர்த்துமேவ கதம் அர்ஹதி -நினைக்கவே அர்ஹன் அல்லன் -வாயாலே வேறே ஸ்துதிக்கவும் செய்தேனே

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார்

தேவர்களுக்கு அர்ஹமான புரோடசத்தை நாய் விரும்புமா போலே அன்றோ

நித்ய சம்சாரியான அடியேன் நித்ய ஸூரீகல் ஓலக்கத்தில் நித்ய கைங்கர்யம் ஆசைப்படுவது ஹா ஹா என்ன சாஹசம்

ஐயோ கெட்டேன் கெட்டேன் வாழ்வில்லை -நான் அதி துஷ்டன் -விஷயாந்தரங்களிலே வ்யாமோஹம் உடையவன் –

பகவத் விஷய ப்ரவணன் போலே வாயினால் என்ன சொன்னேன் அந்தோ –

என்னைப் போன்ற பாப பிண்டம் அகில ஹேயபிரத்ய நீக கல்யாணை கதாநநான உன்னை
நெஞ்சினால் நினைக்கவும் யோக்யதை உடையது அன்றே

மாத்ருக் அம்ஹ -என்னைப் போன்ற பாபி என்னாமல்
பாபம் -என்றது பாப பிராசர்யத்தைப் பற்ற

அங்க -என்றது சம்போதனார்த்த அவ்யயம்

—————–

ஸுத்தாத்ம யாமுந குரூத்தம கூர நாத பட்டாக்ய தேசிகவரோக்த ஸமஸ்த நைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத் யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில்,

அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில்,

ஷுத்தாத்ம யாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான

ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன,

ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன,

பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால்,

உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்),

மயி ஏவ – அடியேனிடத்திலேயே,

அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன)

தஸ்மாத் – ஆகையால்,

தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது,

மத் கதிஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.

(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி,

குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)

கருத்துரை:-

ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள்.

ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில்

ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும்.

பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர்.

அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால்

அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது.

அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல்,

‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.

ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல்,

ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம்.

எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது.

அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே.

ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு

‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம்

அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன.

ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம்.

தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி ,

‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல் தகும்.

ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு

அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம்.

நல்ல தகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப் பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே

கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன்,

ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன்,

துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம்

தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

ஶ்லோகம் 62 –
எம்பெருமான் “உயர்ந்த வம்சத்தில் பிறந்தும் அது ப்ரயோஜனப்படாமல் போகும் அளவிற்கு உம்மிடத்திலே
என்ன பாபங்கள் உள்ளன?” என்று கேட்க,
ஆளவந்தார் சென்ற ஶ்லோகத்தில் பாபாத்மா என்று சொன்னதை விளக்கி அருளுகிறார்.

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து

இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத

பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன்.

இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை.

அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும்

அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.

அத்யாபி நாஸ்த் யுபரதி த்ரிவித அபசாராத் பாப பரே நிபதி தோஸ்மி தமஸ்ய பாரே
ஏதாத்ருஸ அஹம் அகதிர் பவதோ தயாயா பாத்ரம் த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –59-

த்ரிவித அபசாராத் –மூன்று வித அபசாரங்களில் நின்றும்
யுபரதி-அத்யாபி நாஸ்த்–ஒழிந்தமை இன்றைக்கும் இல்லை
பாப பரே அபாரே தமசி –பாபியான அடியேன் மஹத்தாயும் துஸ்தரமுமாயும் இருக்கிற அஞ்ஞானத்தில்
நிபதி தோஸ்மி–விழுந்து கிடக்கிறேன்
ஏதாத்ருஸ –இப்படிப்பட்டவனாய்
அகதிர் –உபாயான்தர ஸூந்யனாய்
பவதோ தயாயா பாத்ரம் –உன் அருளுக்கு பாத்திரமாய் இருக்கிற
அஹம்-அடியேன்
த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே –உன் திருவடிகளை சரணம் புகுகிறேன்

கீழ் ஸ்லோகத்தோடே ஸ்ரீ கிருஷ்ணாவதா அனுபவம் தலைக்கட்டி அருளி –
பகவத் குணங்களுக்கு எதிர்த்தட்டாய் உள்ள ஸ்வ கீய குண அநுஸந்தானம்–தம்முடைய தண்மையினை
விண்ணப்பம் செய்து ஸ்தவத்தை தலைக் கட்டுகிறார்
பகவத் அபசார -பாகவத அபசார -அஸஹ்ய அபசாரங்களை செய்வதில் இருந்தும் இன்றும் ஒழிந்திலேன்
அதோதஸ் பாபாத்மா சரணத நிமஜ் ஜாமி தமஸி–கணக்கு கரையேற்ற தமஸ்ஸிலே விழுந்து
மூதாவியில் தடுமாறுகிறேன்

——————

விஸ்ரம்பணம் த்வயி ந யத்யபி மேஸ்தி நாபி ஸ்ரத்தா யதோக்த வச நார்த்த கதா ததாபி
வாசம் த்விமாம் ஸக்ருத் அதாபி அஸக்ருத் மயா யுக்தாம் சத்யாம் குருஷ்வ தயயைவ தயைக ஸிந்தோ –60-

ஹே தயைக ஸிந்தோ –கருணைக்கடலான பகவானே
விஸ்ரம்பணம் த்வயி –உன் பக்கலில் மஹா விஸ்வாசமானது
மே யத்யபி நாஸ்தி –அடியேனுக்கு இல்லை யாயினும்
யதோக்த வச நார்த்த கதா ததாபி ஸ்ரத்தா –த்வதீய சரணவ் சரணம் ப்ரபத்யே -என்று கீழ்ச் சொன்ன
வாக்கியத்தின் பொருளில் ஸ்ரத்தையும்
மே யத்யபி நாஸ்தி–அடியேனுக்கு இல்லை யாயினும்
ஸக்ருத் மயா யுக்தாம் இமாம் வாசம் –ஒரு கால் நான் சொன்ன இந்த வாக்கியத்தை
அதாபி அஸக்ருத் யுக்தாம்–மேன்மேலும் அடுத்து அடுத்து சொல்லப் பட்டதாகவும்
சத்யாம்–யதார்த்தமாகவும்
தயயைவ குருஷ்வ -நின் அருளாலே செய்து அருள வேணும்

நின் அருளாலே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே
நிர்ஹேதுக பகவத் கிருபையே –யாத்ருச்சிக ப்ராசங்கிக்க ஆனுஷங்காதி ஸூஹ்ருத லவலேசத்தை
ஒன்றைப் பத்தாக்கி கார்யம் செய்ய வல்லது -அன்றோ

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட

ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை.

வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன்.

மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று

வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும்

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன அஹம்
இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
ரெங்கேச பூர்ண வ்ருஜின சரணம் பவேதி
மௌர்க்க்யாத் ப்ரவீமி மனசா விஷய ஆகுலேந —89-

ரெங்கேச

ஞான க்ரியா பஜன சமத் அகிஞ்சன–ஞான யோகம் கர்ம யோகம் பக்தி யோகம் ஆகிய சம்பத் இல்லாதவனும்

இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ–முமுஷுத்வம் என்ன ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் இத்யாதி அதிகாரம் என்ன
சக்தி என்ன அநு தாபம் என்ன -இவற்றை அறியாதவனாயும்

பூர்ண வ்ருஜின –நிரம்பிய பாபங்களையும் யுடையனாய் இருக்கிற

அஹம்–அடியேன்

மௌர்க்க்யாத்–மூர்க்கத்தனத்தால்

மனசா விஷய ஆகுலேந-விஷயங்களில் கலங்கின நெஞ்சோடு

சரணம் பவேதி இதி ப்ரவீமி–சரணமாகு -என்கிறேன்

இச்சா அதிகார சகந அநுசய அந பிஞ்ஞ
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் –
போதுவீர் போதுமினோ –
இச்சைக்கே மேற்பட்ட வேறே ஒன்றுமே வேண்டாமே பிரபத்திக்கு –
அதுக்கும் கூட சக்தன் அல்லன்
சம தமாதிகள் அதிகாரமும் இல்லை –
சகநம் -அத்யவாசாய திருடத்வமும் இல்லை –
இவை இல்லை என்னும் அனுசயம்-அனுதாபமும் இல்லை -இவை என்ன என்ற அறிவும் இல்லை

ஸ்வந்தரராகச் சொன்னீர் ஆகிலும் சாஸ்திரம் சித்திக்க வேண்டும் அன்றோ –
நீரும் இதம் குரு -என்றத்தைச் செய்து –
இதம் ந குரு என்றத்தை தவிர்க்க வேணும் காணும் –
அபுனா விருத்தி லக்ஷண மோக்ஷம் பெரும் போதைக்கு என்று
ஸ்ரீ பெரிய பெருமாள் திரு உள்ளமாக

கர்மா யோகாதிகளில் அன்வயம் இல்லாமை அன்றிக்கே மட்டும் இல்லாமல் மேல் அன்வயம் உண்டாகைக்கு ஹேதுவான
குளித்து மூன்று அனலை ஓம்பும் இத்யாதி ப்ராஹ்மண்யாதிகள்-அனுஷ்டான ஞான சக்த்யாதிகளும் அனுதாமும் இன்றிக்கே –
இவைகள் உண்டு என்கிற வ்யுத்பத்தியும் கூட இல்லாமல் இருக்க –
இப்படி விகிதங்களில் ஒன்றுமே இல்லாதது போலே
நிஷித்தங்களில் என்னிடம் இல்லாதது ஒன்றுமே இல்லை –

இப்படி முமுஷுத்வாதிகளும் இன்றிக்கே இருக்க
அபாய பஹுளனாய் நெஞ்சம் ப்ரவணராய் இருக்க ஸ்வ அதிகாரம் தெரியாதே –
கடல் வண்ணா கதறுகின்றேன்-என்னுமா போலே
சரணம் அஹம் -தேவரே உபாயமாக வேணும் -என்று பிரசித்தமாக விடாதே சொல்லி
இவ்வளவு அநு கூல்யம் உடையானை ரக்ஷித்திலன் என்று ஸ்ரீ தேவருக்கும் அவத்யமாய்
ஸ்ரீ கோயில் நித்ய சந்நிதியையும் அகிஞ்சித் கரம் ஆக்கினேன் என்கிறார்

யாமுந குரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

—————–

ஸப்தாதி போக விஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டா பவத்விஹ பவத் தயயா யதீந்த்ர ! |
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ ய:
தத் தாஸதைக ரஸதாSவிரதா மமாஸ்து || (16)

பதவுரை:-

ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

இஹ – இந்த ஸரீரம் இருக்கும் நிலையிலேயே,

அஸ்மதீயா – அடியேனுடையதான,

ஸப்தாதி போக விஷயா – நீசங்களான ஸப்தம் முதலியவற்றாலுண்டான அநுபவத்தைப்பற்றிய

ருசி: – ஆசையானது,

பவத் தயயா – தேவரீருடையதாய் அதிகமான துக்கத்தையே பற்றுக்கோடாகக்கொண்ட தயையினால்,

நஷ்டா பவது – உருத்தெரியாதபடி காணாமல்போகுக,

(மேலும்) : – எந்த பாக்யஸாலியானவன்,

த்வத்தாஸ – விற்கவும் வாங்கவும் உரியவனாய் தேவரீர் இட்ட வழக்காயிருக்கும் அடியேனுடைய,

தாஸகணநா – அடியவர்களை எண்ணும்போது,

சரமாவதௌ – அவ்வெண்ணிக்கையின் கடைசியான எல்லையில்,

பவதி – இருக்கிறானோ,

தத் தாஸதா – அவனைக் குறித்துச்செய்யும் அடிமையில்,

ஏக ரஸதா – (மற்றவற்றில் ஆசையோடு கலசாமல்) ஒன்றுபட்ட ஆசையானது,

அவிரதா – நித்யமாக ,

பவத் தயயா  – தேவரீருடைய தயையினால்,

மம அஸ்து – அடியேனுக்கு உண்டாயிடுக.

கருத்துரை:-

இதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களாலே யதிராஜருடைய தயைக்குத் தாமொருவரே இலக்கென்பது திடப்படுத்தப்பட்டது.

இனித் தமக்கு அவ்வெதிராஜர் தந்தருளவேண்டிய பயன்களைக் குறிப்பிடுகிறார் இந்த ஸ்லோகத்தினால்.

இதரமான நீச ஸப்தாதி விஷயங்களை அநுபவிக்கவேணுமென்னும் ஆசை மாயவேணுமென்பதும்,

யதிராஜருடைய தொண்டர் தொண்டர் தொண்டரென்று தொண்டர் வரிசையில் யார் கடைசியில் இருக்கிறாரோ

அவருக்குத் தொண்டு செய்யவேணுமென்ற ஒரே ஒரு ஆசை எப்போதும் உண்டாக வேணுமென்பதுமாகிய

இவ்விரண்டு பலன்களையும் முறையே இச்லோகத்தின் இரண்டு பகுதிகளாலும் வேண்டிக்கொண்டாராயிற்று.

எம்பெருமானுடைய க்ருபை – யார் மிக அதிகமாகப் பாபம் செய்து அதனால்

அதிகமான துக்கத்தை அநுபவித்துப் பரிதபிக்கிறார்களோ அவர்களிடம் செல்லாது.

எம்பெருமானாருடைய க்ருபையோவெனில் அவர்களிடமே சென்று அவர்களைக் கரையேற்றும்.

அதனாலன்றோ பகவான் எம்பெருமானானதும் ராமானுஜர் எம்பெருமானாரானதும்.

எம்பெருமானைவிட உயர்ந்தவரென்பதனாலன்றோ மருமமறிந்த மஹாநுபவராகிய திருக்கோட்டியூர்நம்பிகள்

தமது ஸிஷ்யராகிய ராமானுஜரை எம்பெருமானார் என்றழைத்தருளியது.

இவ்விருவகைப்பட்ட க்ருபைகளுக்கும் உள்ள வாசி ‘பவத்தயயா’ (தேவரீருடைய க்ருபையாலே) என்றதனால் கருதப்பட்டது.

பகவானுடைய தயை அடியேனிடம் வேலைசெய்யாது. தேவரீருடைய தயையே அடியேனுக்கு உதவுவது என்பது இங்கு சாரம்.

——–

ஸ்ருத் யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச் சக்த: ஸ்வகீய ஜந பாப விமோசநே த்வம் || (17)

பதவுரை:-

யே யதிராஜ – வாரீர் யதிராஜரே,

ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய,

நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன,

எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும்

தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய்,

இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில்,

ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த,

ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன்,

தே – தேவரீருக்கு,

ஸதா – எப்போதும்,

வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய்,

பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.

(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.)

தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால்,

ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின்,

ஜந – தாஸஜநங்களினுடைய,

பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில்,

த்வம் – தேவரீர்,

ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:-

ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலே

யிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய

தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு,

இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார்.

அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின்

வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார்.

பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்திநாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே

இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார்.

இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்)

இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார்.

அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி

நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான்.

அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து

ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும்.

இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து

அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு

ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது –

புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் –

என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார்.

பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால்

பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.

—————

கால த்ரயேSபி கரண த்ரய நிர்மிதாதி பாப க்ரியஸ்ய ஸரணம் பகவத் க்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலா ரமணேSர்த்திதாயத் க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம் || (18)

பதவுரை:-

யே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே,

காலத்ரயே அபி – கழிந்த காலம், நிகழும் காலம், வருங்காலமாகிய முக்காலங்களிலும்,

கரணத்ரயநிர்மித – மனம்மொழி மெய்களென்கிற மூன்று கருவிகளாலும் செய்யப்பட்ட,

அதிபாபக்ரியஸ்ய – (எல்லாவற்றையும் பொறுக்கும் தன்மையையுடைய பகவானாலும் பொறுக்கமுடியாதவளவுக்கு)

மிகவும் விஞ்சின பாவச்செயல்களைச் செய்யும் ஜீவாத்மாவுக்கு,

ஸரணம் – பாவங்களைப்போக்கும் உபாயமானது,

பகவத்க்ஷமைவ – குற்றம் போக்குமவனாய் குணங்களுக்கு இருப்பிடமான பகவானுடைய பொறுமையே ஆகும்.

அந்தப் பொறுமையோ எனில்,

த்வயா ஏவ – பகவானையும் ஆணையிடும் ஆற்றல்படைத்த தேவரீராலேயே,

கமலா ரமணே – கருணையே வடிவெடுத்தவளாய் பகவானுடைய தயை பொறுமை முதலிய குணங்களை

வெளிக்கிளப்புகிற ஸ்ரீரங்கநாச்சியாருடைய அழகியமணவாளனாகிய ஸ்ரீரங்கநாதனிடத்தில்

அர்த்திதா இதி யத் – (ஸரணாகதி கத்யத்தில்) ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று உண்டோ,

 ஏவ – அந்த ப்ரார்த்தனையே,

பவச்ச்ரிதாநாம் – (தேவரீருடைய அபிமானத்திற்கு இலக்காக) தேவரீரால் கைக்கொள்ளப்பட்ட அடியார்களுக்கு,

க்ஷேம:ஹி – உய்யும் உபாயமல்லவா?

கருத்துரை:-

கீழ் ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதன் யதிராஜருக்கு வஸப்பட்டவனென்றார்.

இந்த ஸ்லோகத்தில் அந்த ஸ்ரீரங்கநாதனை இன்று புதிதாக, அடியேனுடைய பாவத்தைப் போக்கும்படி தேவரீர் ப்ரார்த்திக்கவேண்டாம்.

முன்பே கத்யம் விண்ணப்பிக்கும்போது ‘மநோவாக்காயை:’ என்று தொடங்கும் சூர்ணையாலே,

‘க்ருதாந் க்ரியமாணாந் கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் அஷேஷத: க்ஷமஸ்வ’

(முன்பு செய்யப்பட்டவையும், இப்போது செய்யப்படு மவையும், இனிமேல் செய்யப்போமவையுமான

எல்லாவிதமான அபசாரங்களையும் (பாவங்களையும்) ஒன்றையும் விடாமல் பொறுத்தருளவேணும்) என்று.

அடியோங்களுடைய பாபங்களையும் பொறுத்தருளும்படி ப்ரார்த்தித்தாய்விட்டதே.

அந்த ப்ரார்த்தனையே போதாதோ அடியோங்களுக்கு உஜ்ஜீவநோபாயம் என்கிறார்.

(முன்பு எடுத்த கத்யவாக்யத்தில் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி

ப்ரார்த்தித்தாரென்பது ஸ்பஷ்டமாக இல்லாவிட்டாலும்,

‘இமையோர் தலைவா! இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை, அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று

தாமும் தம்மைச் சேர்ந்தவர்களும், அறியாமையும், தீவினையும் பிறப்புமாய் ஓயாமல் நடந்து செல்கிற

ஸம்ஸார ஸம்பந்தத்தை இனிமேல் அடையாமலிருப்பதற்காக, எல்லாருக்குமாகத் தாமொருவரே

எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்த மாறனாம் நம்மாழ்வாருடைய திருவடிகளைப் பணிந்து உய்ந்தவராகையாலும்,

உண்மையில் – பிறர்துன்பங்கண்டு பொறாமயென்னும் தயையை எம்பெருமானைக் காட்டிலும்

அதிகமாக பெற்றுள்ளவராகையாலே, திருகோட்டியூர் நம்பிகள் தம்மைப் பதினெட்டுத் தடவைகள்

நடக்கவைத்து மிகவும் வருத்தி உபதேஸித்த சரமஸ்லோகார்த்தத்தை எந்த வருத்தத்தையும் கொடாமல்

தம்மிடம் ஆசையோடு கேட்டவர்களுக்கு உபதேஸித்த பெருமையை உடையவராகையாலும்

யதிராஜர் தம்மைச் சேர்ந்தவர்களுடைய பாபத்தையும் பொறுக்கும்படி நிஸ்சயமாக

ப்ரார்த்தித்திருப்பரென்று நம்பியே ‘க்ஷேமஸ்ஸ ஏவஹி யதீந்த்ர! பவச்ச்ரிதாநாம்’

(தேவரீர் ப்ரார்த்தித்த ப்ரார்த்தனையே, தேவரீரை ஆஸ்ரயித்த அடியோங்களுக்கும் உஜ்ஜீவநோபாயமாகும்) என்று

மணவாளமாமுனிகள் அருளிச்செய்தார் என்று கொள்ளல்தகும்.

இக்கத்யவாக்யத்தில் “மம (அபசாராந்)” என்று இல்லாததனாலும், எல்லாருடைய அபசாரங்களையும்

பொறுக்கும்படி ப்ரார்த்தித்ததாகக் கொள்ளுதல் பொருந்தும்.)

————–

ஸ்ரீமந் யதீந்த்ர! தவ திவ்ய பதாப்ஜ ஸேவாம் ஸ்ரீஸைல நாத கருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தய நாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (19)

பதவுரை:-

ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற

என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே,

த்வம் – தேவரீர்,

மே – அடியேனுக்கு,

ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும்

திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட,

தாம் – மிகச்சிறந்த,

தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,

அந்வஹம் – நாடோறும்,

விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும்,

(அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி

அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி)

நாத – ஸ்வாமியான யதிராஜரே,

தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு,

விருத்தம் – தடையாகிய,

அகிலம் – எல்லாவற்றையும்,

காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.

கருத்துரை:-

கீழ் ‘வாசா யதீந்த்ர’ (3) என்ற ஸ்லோகத்திலும்,

நித்யம் யதீந்த்ர’ (4) என்ற ஸ்லோகத்திலும் தொடங்கிய –

முறையே யதிராஜருடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தையும்

யதிராஜருக்குச் செய்யும் கைங்கர்யத்தையும் இதில் ப்ரார்த்தித்து முடிக்கிறார்.

ஸேவாம் வர்த்தய’ – என்றதனால் யதிராஜ ஸேவையின் வளர்ச்சியையும் ,

விவர்த்தய’ என்றவிடத்தில் ‘வி’ என்னும் உபஸர்க்கத்தாலே யதிராஜருடைய அடியார் ஸேவையின் வளர்ச்சியையும் ப்ரார்த்தித்தாரென்றபடி.

இதனால் தாம் செய்யும் கைங்கர்யத்தை ஏற்றுக்கொள்ளுதலால் யதிராஜரே ப்ராப்யர் என்பதும்,

அக்கைங்கர்யத்துக்குத் தடையைப் போக்கி அதனைத் தந்து வளர்த்தலால் அவரே ப்ராபகர் என்றும் பெறப்பட்டதாயிற்று.

திருவாய்மொழிப்பிள்ளைக்கு யதிராஜரோடு ஸம்பந்தத்தை உண்டாக்கிக் கொடுத்த உபகாரத்வமாத்ரமேயாகும்.

யதிராஜ கைங்கர்யத்துக்குத் தடையாவன – இஹலோக பரலோக ஸுகாநுபவமும், ஆத்மாநுபவமாகிய கைவல்யமும்,

யதிராஜருடைய உகப்புக்காக வல்லாமல் தன்னுகப்புக்காகச் செய்யும் பகவத்கைங்கர்யமும் முதலியனவாகும்.

—————–

விஜ்ஞாபநம் யதிதமத்ய து மாமகீநம் அங்கீ குருஷ்வ யதிராஜ! தயாம்பு ராஸே |
அஜ்ஞோSயமாத்ம குண லேஸ விவர்ஜிதஸ்ச தஸ்மாதநந்ய ஸரணோ பவதீதி மத்வா || (20)

பதவுரை:-

தயா அம்புராஸே – பிறர் துன்பம் கண்டு பொறாமையென்னும் தயைக்குக் கடல் போன்ற,

யதிராஜ – யதிராஜரே,

அத்ய – இப்போது,

மாமகீநம் – அடியேனுடையதான,

யத் விஜ்ஞாபநம் – ‘வாசாயதீந்த்ர’ (3) என்று தொடங்கி முன் ஸ்லோகம் வரையில் செய்யப்பட்ட விண்ணப்பம் யாதொன்றுண்டோ,

இதம் – இந்த விண்ணப்பத்தை,

அஜ்ஞ அயம் – நல்லறிவு இல்லாதவன் இவன்,

ஆத்மகுணலேஸ விவர்ஜிதஸ்  – மேலும் மனவடக்கம், பொறியடக்கம் முதலிய ஆத்மகுணங்கள் சிறிதுமில்லாதவன்,

தஸ்மாத் – ஆகையால்,

அநந்ய ஸரணபவதி – நம்மைத் தவிர வேறோரு உபாயமில்லாதவனாக இருக்கிறான்,

இதி மத்வா – என்று நினைத்தருளி,

அங்கீ குருஷ்வ – ஏற்றுக்கொண்டருளவேணும்.

இதுவரையில் தாம் செய்த விண்ணப்பத்தையேற்றுக் கொள்ளுதற்குக் காரணமாகத் தம்மிடமுள்ள

யதிராஜரைத் தவிர வேறொறு உபாயமில்லாமையாகிற அநந்ய ஸரணத்வத்தைச் சொல்லி முடிக்கிறார்.

இதனால் தயாம்புராஸே – தயையாகிற நீர் வற்றாத கடலே என்றபடி. இதனால் யதிராஜருடைய தயை

ஒரு காரணத்தினால் உண்டாகாமல் நிர்ஹேதுகமாய் நித்யமானது என்று கொள்ளத்தக்கது.

தயைகஸிந்தோ’ (6), ‘

ராமாநுஜார்ய கருணைவ து’ (14),

யதீந்த்ர கருணைவ து’ (15),

பவத்தயயா’ (16),

கருணாபரிணாம’ (19),

தயாம்புராஸே’ (20) என்று

தயையை அடுத்தடுத்துப் பலதடவைகள் ப்ரஸ்தாவித்த படியினால்,

ராமாநுஜர் ‘க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யர்’ (பிறகாரணங்களிலனாலன்றி, இயற்கையாகத் தமக்கேற்பட்டுள்ள

தயைமாத்ரத்தாலே மனம் தெளிந்து உபதேஸித்து உய்வு பெறுவிக்கும் ஆசார்யர்) என்பது சொல்லப்பட்டதாயிற்று.

இந்த யதிராஜ விம்ஸதியின் முதல் ஸ்லோகத்திலுள்ள

‘ஸ்ரீமாதவாங்க்ரிஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸபாதபக்தம்’ என்பதனால்,

இராமாநுச நூற்றந்தாதியில் முதற்பாட்டிலுள்ள

‘பூமன்னுமாதுபொருந்தியமார்பன் புகழ்மலிந்த பாமன்னுமாறனடிபணிந்துய்ந்தவன்… இராமாநுசன்’ என்ற

பகுதி நினைவு படுத்தப் பெற்றதும்,

இங்கு இக்கடைசியான ஸ்லோகத்திற்கு முன்புள்ள ஸ்லோகத்தில் உள்ள

‘ஸ்ரீமந் யதீந்த்ர தவ திவ்ய பதாப்ஜஸேவாம் விவர்த்தய’ (ராமாநுஜமுனிவரே! தேவரீர் திருவடித்தாமரைகளில்

அடியேன் செய்யும் கைங்கர்யத்தை தேவரீரடியார்களின் கைங்கர்ய பர்யந்தமாக வளர்த்தருளவேணும்) என்பதனால்,

இராமாநுசநூற்றந்தாதியில் கடைசியான பாசுரத்திற்கு முன் பாசுரத்திலுள்ள

‘இராமாநுச! உன்தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்து’ என்ற

பகுதி நினைவுபடுத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

ஆக, யதிராஜர் இராமாநுச நூற்றந்தாதியை நேரே கேட்டு ஆனந்தமடைந்தாப்போலே

இந்த யதிராஜவிம்ஸதியையும் நாம் சொல்லக்கேட்டு, ஆநந்தப்படுவரென்பதில் ஐயமில்லை என்றதாயிற்று.

——————

இதி யதிகுலதுர்யமேதமாநை: ஸ்ருதிமதுரைருதிதை: ப்ரஹர்ஷயந்தம் |
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாதம் ||-ஸ்ரீ வர வர முனி உத்தர தினசர்யா–ஸ்லோகம் 1-

பதவுரை:

இதி – ஸ்ரீமாதவாங்க்ரி என்று தொடங்கி விஜ்ஞாபநம் என்பதிறுதியாகக் கீழ்க்கூறியபடியே,

ஏதமாநை: – மேல் மேல் வளர்ந்து வருகிற,

ஸ்ருதி மதுரை: – காதுக்கு இன்பமூட்டுமவையான,

உதிதை: – பேச்சுக்களாலே,

யதிகுல துர்யம் – யதிகளின் கோஷ்டிக்குத் தலைவரான எம்பெருமானாரை,

ப்ரஹர்ஷயந்தம் – மிகவும் மகிழச்செய்து கொண்டிருக்கிற,

வரவரமுநிம் ஏவ – மணவாளமாமுனிகளையே,

சிந்தயந்தீ – சிந்தை செய்யாநிற்கிற,

இயம்மதி: – (என்னுடைய) இந்த புத்தியானது,

நிரத்யயம் – நித்யமான,

ப்ரஸாதம் – தெளிவை,

ஏதி – அடைகிறது.

கருத்துரை:

இதுவரையில் தகாத விஷயங்களையே நினைத்து நினைத்து, அது கிடைத்தோ கிடையாமலோ கலங்கிக் கிடந்த

தமது புத்தி யதிராஜ விம்ஸதியை விண்ணபித்து யதிராஜரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்கிற

மணவாளமாமுனிகளொருவரையே நினைத்துக்கொண்டிருக்கும் நிலைமையை அடைந்து,

முன்பிருந்த கலக்கம் நீங்கித் தெளிவு பெறுகிறதென்று கூறி மகிழ்கிறார் இதனால் எறும்பியப்பா.

வரவரமுநிமேவ’ என்றதனால், நேராக யதிராஜரை நினையாமல், அவரைத் தமது துதிநூலால் மகிழ்விக்கும்

மணவாளமாமுநிகளையே நினைக்கும் நினைப்பு தமதறிவின் தெளிவுக்குக் காரணமென்றாராயிற்று.

பகவானையோ பாகவதரையோ ஆசார்யரையோ நினைப்பதனால் உண்டாகும் தெளிவைவிட,

ஆசார்ய பரதந்த்ரரான மாமுநிகளை நினைப்பதனால் உண்டாகும் தெளிவு அதிகமாகி, அது நிலைத்தும் நிற்குமென்றபடி.

இருபது ஸ்லோகங்களையே கொண்டு மிகச் சிறியதாகிய இந்நூலிலுள்ள பேச்சுக்களை ‘ஏத மாநை:’ என்று

மேல் மேல் வளர்ந்து கொண்டே செல்லுகிற பேச்சுக்களாக, மிகவும் மிகைப்படுத்திக் கூறியது

எம்பெருமானார் திருவுள்ளத்தால் என்று கொள்ளவேணும்.

தம்மிடத்தில் ப்ரவணரான மாமுனிகள் விண்ணப்பிக்கிற ஒவ்வொரு ஸ்லோகத்தையும்

ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களாக நினைப்பவரன்றோ எம்பெருமானார்.

கடுகையும் மலையாக நினைப்பவர்களன்றோ மஹா புருஷர்கள்.

ப்ரஹர்ஷயந்தம்’ என்றவிடத்தில் ஹர்ஷத்திற்கு – ஸந்தோஷத்திற்கு, மிகுதியை – சிறப்பைக் குறிக்கும், ‘

ப்ர’ என்று உபஸர்க்கமாகிய விஸேஷணத்தை இட்டது, எம்பெருமானார்க்கு மாமுனிகளிடத்தில் உண்டாகும்

ஸந்தோஷம் ஸ்வயம் ப்ரயோஜனமானதேயன்றி அந்த ஸந்தோஷத்தைக் கொண்டு

மாமுனிகள் வேறொரு பயனை ஸாதித்துக் கொள்ள நினைக்கவில்லையென்பதை அறிவிப்பதற்காகவே என்க.

வரவரமுநியையே நினைக்கும் சிந்தயந்தி’ என்று குறிப்பிட்டதனாலே, கண்ணனையே நினைத்த சிந்தயந்தியான

ஒரு கோபிகையைக் காட்டிலும், கண்ணனையே ஓயாமல் நினைத்த தீர்க்க சிந்தயந்தியாகிய நம்மாழ்வாரைக் காட்டிலும்

எம்பெருமானாரையே நினைக்கிற சிந்தயந்தியாகும் இம்மணவாளமாமுனிகள் விலக்ஷணரென்பது போதரும்.

எம்பெருமானை நினைப்பவரைவிட, எம்பெருமானாரை நினைப்பவரிறே உயர்ந்தவர்.

இங்கு ‘ஸ்ருதி மதுரை: உதிதை:’ என்று பதம் பிரித்துப் பொருள் கூறப்பட்டது.

ஸ்ருதிமதுரை:ருதிதை: என்றும் பதம் பிரித்துப் பொருள் கூறலாம்.

ருதிதை: என்பது அழுகைகளினாலே என்று பொருள்படும்.

இந்த யதிராஜவிம்ஸதியில் ‘அல்பாபிமே’ (6) என்று தொடங்கிப் பெரும்பாலும்

தம்முடைய அறிவின்மை, பக்தியின்மை, பாபகாரியத்தில் ஊன்றியிருத்தல் முதலியவற்றைச் சொல்லி,

ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயையோ என்று தமது துக்காதிஸயத்தையே விண்ணபித்ததனாலும்,

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாஸத்தை உண்டுபண்ணும் அழுகை பெருமையையே விளைக்குமாகையாலும்,

ருதிதை:’ என்ற பாடம் கொண்டு அழுகை என்னும் பொருள் கூறுதலும்  ஏற்குமென்க.

மோக்ஷத்தையே தரும் எம்பெருமானாருக்கு ஸம்ஸார ஸ்ரமத்தைச் சொல்லி

மாமுனிகள் அழும் அழுகை செவியின்பத்தை உண்டாக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா ?

அதனால் ஸ்ருதிமதுரை: என்றாரென்க.

(யதிராஜவிம்ஸதி வடமொழி அழுகை, ஆர்த்திப்ரபந்தம் தென்மொழி அழுகை என்பது அறிதல் தகும்.

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே திருப்பதி க்ருஷ்ணமாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஶ்ரீ யதிராஜ விம்ஶதி: ॥பதவுரை – ஶ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் — கருத்துரை – புத்தூர் ஶ்ரீ.உ.வே.ரகுராமன் ஸ்வாமிகள் —

January 14, 2022

॥ ஶ்ரீ யதிராஜ விம்ஶதி: ॥

ய: ஸ்துதிம் யதிபதி ப்ரஸாதி³நீம் வ்யாஜஹார யதிராஜ விம்ஶதிம் ।
தம் ப்ரபந்ந ஜந சாதகாம்பு³த³ம் நௌமி ஸௌம்ய வர யோகி³ புங்க³வம் ॥

ஶ்ரீ மாத⁴வாங்க்⁴ரி ஜலஜ த்³வய நித்யஸேவா-
ப்ரேமாவிலாஶயபராங்குஶபாத³ப⁴க்தம் ।
காமாதி³தோ³ஷஹரமாத்மபதா³ஶ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்⁴நா ॥ 1॥

ஶ்ரீரங்க³ராஜசரணாம்பு³ஜராஜஹம்ஸம்
ஶ்ரீமத்பராங்குஶபாதா³ம்பு³ஜப்⁴ருʼங்க³ராஜம் ।
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுகா²ப்³ஜமித்ரம்
ஶ்ரீவத்ஸசிஹ்நஶரணம் யதிராஜமீடே³ ॥ 2॥

வாசா யதீந்த்³ர மநஸா வபுஷா ச யுஷ்மத்-
பாதா³ரவிந்த³யுக³ளம் ப⁴ஜதாம் கு³ரூணாம் ।
கூராதி⁴நாத² குருகேஶமுகா²த்³ய பும்ஸாம்
பாதா³நுசிந்தநபர: ஸததம் ப⁴வேயம் ॥ 3॥

நித்யம் யதீந்த்³ர தவ தி³வ்யவபு:ஸ்ம்ருʼதௌ மே
ஸக்தம் மநோ ப⁴வதுவாக்³கு³ணகீர்தநேऽஸௌ ।
க்ருʼத்யஞ்ச தா³ஸ்யகரணம் து கரத்³வயஸ்ய
வ்ருʼத்த்யந்தரேঽஸ்து விமுக²ம் கரணத்ரயஞ்ச ॥ 4॥

அஷ்டாக்ஷராக்²யமநுராஜபத³த்ரயார்த²-
நிஷ்டா²ம் மமாத்ர விதராத்³ய யதீந்த்³ரநாத² ।
ஶிஷ்டாக்³ரக³ண்யஜநஸேவ்யப⁴வத்பதா³ப்³ஜே
ஹ்ருʼஷ்டாঽஸ்து நித்யமநுபூ⁴ய மமாஸ்ய பு³த்³தி:⁴ ॥ 5॥

அல்பாঽபி மே ந ப⁴வதீ³யபதா³ப்³ஜப⁴க்தி:
ஶப்³தா³தி³போ⁴க³ருசிரந்வஹமேத⁴தேஹா ।
மத்பாபமேவ ஹி நிதா³நமமுஷ்ய நாந்யத்-
தத்³வாரயார்ய யதிராஜ த³யைகஸிந்தோ⁴ ॥ 6॥

வ்ருʼத்த்யா பஶுர்நரவபுஸ்த்வஹமீத்³ருஶோঽபி
ஶ்ருʼத்யாதி³ஸித்³த⁴நிகி²லமாத்மகு³ணாஶ்ரயோঽயம் ।
இத்யாத³ரேண க்ருʼதிநோঽபி மித:² ப்ரவக்தும்-
அத்³யாபி வஞ்சநபரோঽத்ர யதீந்த்³ர வர்தே ॥ 7॥

து:³கா²வஹோঽஹமநிஶம் தவ து³ஷ்டசேஷ்ட:
ஶப்³தா³தி³போ⁴க³நிரதஶ்ஶரணாக³தாக்²ய: ।
த்வத்பாத³ப⁴க்த இவ ஶிஷ்டஜநௌக⁴மத்⁴யே
மித்²யா சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்க:² ॥ 8॥

நித்யம் த்வஹம் பரிப⁴வாமி கு³ரும் ச மந்த்ரம்
தத்³தே³வதாமபி ந கிஞ்சித³ஹோ பி³பே⁴மி ।
இத்த²ம் ஶடோ²ঽப்யஶட²வத்³ப⁴வதீ³ய ஸங்கே⁴
ஹ்ருʼஷ்டஶ்சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்க:² ॥ 9॥

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோঽஹஞ்சராமி ஸததம் த்ரிவிதா⁴பசாராந் ।
ஸோঽஹம் தவாঽப்ரியகர: ப்ரியக்ருʼத்³வதே³வம்
காலம் நயாமி யதிராஜ ததோঽஸ்மி மூர்க:² ॥ 10॥

பாபே க்ருʼதே யதி³ ப⁴வந்தி ப⁴யாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கத²ம் க⁴டேத ।
மோஹேந மே ந ப⁴வதீஹ ப⁴யாதி³லேஶ-
ஸ்தஸ்மாத்புந: புநரக⁴ம் யதிராஜ குர்வே ॥ 11॥

அந்தர்ப³ஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஶம்-
அந்த:⁴ புரஸ்ஸ்தி²தமிவாஹமவீக்ஷமாண: ।
கந்த³ர்பவஶ்யஹ்ருʼத³யஸ்ஸததம் ப⁴வாமி
ஹந்த த்வத³க்³ரக³மநஸ்ய யதீந்த்³ர நார்ஹ: ॥ 12॥

தாபத்ரயீஜநிதது:³க²நிபாதிநோঽபி
தே³ஹஸ்தி²தௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருʼத்தௌ ।
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத² த்வமேவ ஹர தத்³யதிராஜ ஶீக்⁴ரம் ॥ 13॥

வாசாமகோ³சர மஹாகு³ண தே³ஶிகாக்³ர்ய
கூராதி⁴நாத² கதி²தாঽகி²லநைச்யபாத்ரம் ।
ஏஷோঽஹமேவ ந புநர்ஜக³தீத்³ருʼஶஸ்தத்³-
ராமாநுஜார்ய கருணைவ து மத்³க³திஸ்தே ॥ 14॥

ஶுத்³தா⁴த்மயாமுநகு³ரூத்தம கூரநாத²
ப⁴ட்டாக்²யதே³ஶிகவரோக்தஸமஸ்தநைச்யம் ।
அத்³யாঽஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத்³யதீந்த்³ர கருணைவ து மத்³க³திஸ்தே ॥ 15॥

ஶப்³தா³தி³போ⁴க³விஷயா ருசிரஸ்மதீ³யா
நஷ்டா ப⁴வத்விஹ ப⁴வத்³த³யயா யதீந்த்³ர ।
த்வத்³தா³ஸதா³ஸக³ணநாசரமாவதௌ⁴ ய-
ஸ்தத்³தா³ஸதைகரஸதாঽவிரதா மமாஸ்து ॥ 16॥

ஶ்ருத்யக்³ரவேத்³யநிஜதி³வ்யகு³ணஸ்வரூப:
ப்ரத்யக்ஷதாமுபக³தஸ்த்விஹ ரங்க³ராஜ: ।
வஶ்யஸ்ஸதா³ ப⁴வதி தே யதிராஜ தஸ்மாத்-
ச²க்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ॥ 17॥

காலத்ரயேঽபி கரணத்ரயநிரமிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ப⁴க³வத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேঽர்தி²தா யத்-
க்ஷேம: ஸ ஏவ ஹி யதீந்த்³ர ப⁴வத்ச்²ரிதாநாம் ॥ 18॥

ஶ்ரீமந் யதீந்த்³ர தவதி³வ்யபதா³ப்³ஜஸேவாம்
ஶ்ரீஶைலநாத²கருணாபரிணாமத³த்தாம் ।
தாமந்வஹம் மம விவர்த⁴ய நாத² தஸ்யா:
காமம் விருத்³த⁴மகி²லம் ச நிவர்தயத்வம் ॥ 19॥

விஜ்ஞாபநம் யதி³த³மத்³ய து மாமகீநம்-
அங்கீ³குருஷ்வ யதிராஜ த³யாம்பு³ராஶே ।
அஜ்ஞோঽயமாத்மகு³ணலேஶவிவர்ஜிதஶ்ச
தஸ்மாத³நந்யஶரணோ ப⁴வதீதி மத்வா ॥ 20॥

இதி யதிகுலது⁴ர்யமேத⁴மாநை: ஶ்ருதிமது⁴ரைருதி³தை ப்ரஹர்ஷயந்தம் ।
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாத³ம் ॥ 21॥

இதி ஶ்ரீயதிராஜவிம்ஶதி: ஸம்பூர்ணம் ।

———————

யঃ ஸ்துதிம் யதிபதிப்ரஸாদிநீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம் ।
தம் ப்ரபந்நஜநசாதகாம்বுদம் நௌமி ஸௌம்யவரயோগிபுங்গவம் ॥

ய: – யாவரொரு மணவாள மா முனிகள்,
யதிபதி ப்ரஸாதி³நீம் – எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை உகப்பிக்குமதான,
யதிராஜ விம்ஶதிம் ஸ்துதிம் – யதிராஜ விம்ஶதி யென்கிற தோத்திரத்தை,
வ்யாஜஹார – அருளிச் செய்தாரோ,
ப்ரபந்நஜந சாதக அம்பு³த³ம் –ப்ரபந்நர்களாகிற சாதக பக்ஷிகளுக்குக் கார்முகில் போன்றவரான,
தம் ஸௌம்ய வர யோகி³ புங்க³வம் – அந்த மணவாளமாமுனிகளை,
நௌமி – துதிக்கிறேன்.

————–

ஶ்ரீமாধவாங்ঘ்ரிஜலஜ দ்வயநித்யஸேவா-
ப்ரேமாவிலாஶயபராங்குஶபாদভக்தம் ।
காமாদி◌ேদাஷஹரமாத்மபদாஶ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்ধ்நா ॥ 1॥

ஶ்ரீமாத⁴வ அங்க்⁴ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ ப⁴க்தம் – அழகு பொலிந்த எம்பெருமானது
திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும்,
ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம் – தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு,
காமாதி³ தோ³ஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும்,
யதிபதிம் – யதிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – எம்பெருமானாரை,
மூர்த்⁴நா ப்ரணமாமி – தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு
ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும்,
இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.

முதல் ஶ்லோகத்தில் திருவின் மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க
நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான
நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும்,
தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும்,
யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

——

ஶ்ரீரங்গராஜ சரணாம்বுஜ ராஜஹம்ஸம்
ஶ்ரீமத்பராங்குஶ பாদாம்বுஜ ভৃங்গராஜம் ।
ஶ்ரீভட்டநாথ பரகால முখாব்ஜமித்ரம்
ஶ்ரீவத்ஸசிஹ்ந ஶரணம் யதிராஜமீ◌ேড ॥ 2॥

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் – ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும்,
ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்⁴ருʼங்க³ராஜம் – நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும்,
ஶ்ரீப⁴ட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம் – பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற
தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும்,
ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் – கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான,
யதிராஜம் – எம்பெருமானாரை,
ஈடே³ – துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப் பறவை போன்றவரும்,
நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும்,
பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச் செய்யும் ஸூர்யன் போன்றவரும்,
ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார்.

மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்ய ப்ரார்த்தனை செய்கிறார்.

————-

வாசா யதீந்দ்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்-
பாদாரவிந்দயுগலம் ভஜதாம் গுரூணாம் ।
கூராধிநாথ குருகேஶமுখாদ்ய பும்ஸாம்
பாদாநுசிந்தநபரঃ ஸததம் ভவேயம் ॥ 3॥

ஹே யதீந்த்³ர! – எம்பெருமானாரே!,
வாசா மநஸா வபுஷா ச – மநோவாக்காயங்க ளாகிற த்ரிகரணங்களாலும்,
யுஷ்மத் பாதா³ரவிந்த³ யுக³ளம் – தேவரீருடைய திருவடித் தாமரையிணையை,
ப⁴ஜதாம் – ஸேவிப்பவர்களும்,
கு³ரூணாம் – ஆசார்யபீடத்தை யலங்கரிப்பவர்களுமான,
கூராதி⁴நாத² குருகேஶ முக² ஆத்³ய பும்ஸாம் – கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான தலைவர்களினுடைய,
பாத³ அநுசிந்தந பர: – திருவடிகளையே சிந்திப்பவனாக,
ஸததம் ப⁴வேயம் – எப்போதும் இருக்கக்கடவேன்.

மூன்றாவது ஶ்லோகத்தில் மனம் மொழி மெய் என்கிற மூன்று கரணங்களாலும் உடையவர் திருவடிகளையே
உபாயமாகக் கொண்டிருக்கும் ஆழ்வான், பிள்ளான் முதலான ஆசார்யர்களை இடைவிடாமல் சிந்திக்கக் கடவேன் என்கிறார்.

———–

நித்யம் யதீந்দ்ர! தவ দிவ்ய வபுঃஸ்மৃதௌ மே
ஸக்தம் மநோ ভவதுவாগ்গுணகீர்தநேঽஸௌ ।
கৃத்யஞ்ச দாஸ்யகரணம் து கரদ்வயஸ்ய
வৃத்த்யந்தரேঽஸ்து விமுখம் கரணத்ரயஞ்ச ॥ 4॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
மே மந: – அடியேனுடைய நெஞ்சானது,
நித்யம் – எப்போதும்,
தவ தி³வ்யவபுஸ் ஸ்ம்ருʼதௌ – தேவரீருடைய திவ்யமங்கள விக்ரஹ த்யானத்திலேயே,
ஸக்தம் ப⁴வது – ஆஸக்தமாகக் கடவது;
அஸௌ மே வாக்³ – எனது இந்த வாக்கானது,
தவ கு³ண கீர்தநே ஸக்தா ப⁴வது – தேவரீருடைய திருக்குணங்களைப் பற்றிப் பேசுவதிலேயே ஊன்றியிருக்கக் கடவது;
கரத்³வயஸ்ய – இரண்டு கைகளினுடைய,
க்ருʼத்யம் – செயலானது,
தவ தா³ஸ்ய கரணம் ப⁴வது – தேவரீருக்கு அடிமை செய்வதுதானேயாகக் கடவது; (இவ்வாறாக)
கரணத்ரயம் ச – மநோவாக்காயங்களாகிற மூன்று கரணங்களும்,
வ்ருʼத்த்யந்தரே விமுக²ம் அஸ்து – இதர வியாபாரங்களை அடியோடு நோக்காதிருக்கக் கடவன.

நான்காவது ஶ்லோகத்தில் தம்முடைய கரணங்கள் மூன்றும் எப்போதும் எம்பெருமானாரிடத்திலேயே ஈடுபட்டிருக்கவேண்டும் என்கிறார்.
அடியேனுடைய மநஸ்ஸானது எப்பொழுதும் தேவரீருடைய திவ்யமங்களவிக்ரஹத்தை த்யானிப்பதிலேயே ஊன்றி யிருக்க வேணும்;
வாக்கானது தேவரீரது குணங்களைப் பேசுவதிலேயே ஈடுபட்டிருக்க வேணும்;
கைகளிரண்டின் செயல்பாடானது தேவரீருக்கு அடிமை செய்வதிலேயேயாக வேணும்.
முக்கரணங்களும் மற்றெதிலும் ஈடுபடாதிருக்கக் கடவன.

———-

அஷ்டாக்ஷராখ்ய மநுராஜ பদத்ரயார்থ-
நிஷ்ঠாம் மமாத்ர விதராদ்ய யதீந்দ்ரநாথ ।
ஶிஷ்டாগ்ரগண்ய ஜநஸேவ்ய ভவத்பদாব்ஜே
ஹৃஷ்டாঽஸ்து நித்யமநுভூய மமாஸ்ய বுদ்ধிঃ ॥ 5॥

நாத² யதீந்த்³ர – எமது குலத்தலைவரான எம்பெருமானாரே!,
அஷ்டாக்ஷராக்²ய – திருவஷ்டாக்ஷரமென்கிற,
மநுராஜ – பெரிய திருமந்த்ரத்திலுள்ள,
பத³த்ரய – ப்ரணவ, நம: பத, நாராயண பதங்களில் தேறின,
அர்த² – அநந்யார்ஹ சேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வ மென்கிற அர்த்தங்களில்,
நிஷ்டா²ம் – திடமான வுறுதியை,
மம – அடியேனுக்கு,
அத்ர – இவ்விருள்தரு மா ஞாலத்திலேயே,
அத்³ய – ருசி பிறந்த விப்போதே,
விதர – ப்ரஸாதித்தருளவேணும்.
அஸ்ய மம பு³த்³தி⁴: – நீசனேன் நிறையொன்றுமிலேனான வென்னுடைய புத்தியானது,
ஶிஷ்டாக்³ரக³ண்ய ஜநஸேவ்ய ப⁴வத்பதா³ப்³ஜே – சிஷ்டர்களில் தலைவரான ஆழ்வான் ஆண்டான் போல்வார்
தொழத் தகுந்த தேவரீருடைய திருவடித் தாமரைகளை,
நித்யம் அநுபூ⁴ய – இடைவீடின்றி யநுபவித்து,
ஹ்ருʼஷ்டா அஸ்து – (அவ்வநுபவத்தின் பலனான கைங்கர் யத்தையும் பெற்று) மகிழ்ந்திருக்கக் கடவது.

ஐந்தாவது ஶ்லோகத்திலே திருவஷ்டாக்ஷரம் என்னும் திருமந்த்ரத்தின் மூன்று பதங்களாலும் தேறின
அநந்யார்ஹஶேஷத்வ அநந்யஶரணத்வ அநந்யபோக்யத்வங்க ளாகிற அர்த்தங்களிலே உறுதியும்,
ஶிஷ்டர்களில் தலைவரான ஆழ்வான் போல்வாரால் தொழத்தகுந்த தேவரீருடைய
திருவடிகளில் இடைவிடாத அநுபவத்தையும் தந்தருளவேணும் என்கிறார்.

இதற்கு மேல் ஏழு ஶ்லோகங்களாலே போக்கப்படவேண்டியதான அநிஷ்டத்தைக் கூறுகிறார்.

————

அல்பாঽபி மே ந ভவদீய பদாব்ஜ ভக்திঃ
ஶব்দாদி ◌ேভাগ ருசி ரந்வஹ மேধதே ஹா ।
மத்பாபமேவ ஹி நிদாநமமுஷ்ய நாந்யத்-
தদ் வாரயார்ய யதிராஜ দயைகஸிந்◌ேধা ॥ 6॥

த³யா ஏக ஸிந்தோ⁴ – அருட்கடலான,
யதிராஜ ஆர்ய – ஆசார்யசிகாமணியே!,
மே – அடியேனுக்கு,
ப⁴வதீ³ய பதா³ப்³ஜ ப⁴க்தி: – தேவரீருடைய திருவடித் தாமரைகளிற் பதிந்த பக்தியானது,
அல்ப அபி ந – சிறிதளவுமில்லை; (அஃது இல்லாததும் தவிர),
ஶப்³தா³தி³ போ⁴க³ ருசி: – ஶப்தாதி விஷய போகங்களில் ஊற்றமானது,
அந்வஹம் ஏத⁴தே – நாடோறும் வளர்ந்து செல்லாநின்றது;
ஹா – அந்தோ! (இதற்கென் செய்வேன்!),
அமுஷ்ய நிதா³நம் – இதற்கு அடிக்காரணம்,
மத்பாபம் ஏவ ஹி – என்னுடைய பாபமேயன்றோ;
அந்யத் ந – வேறொரு காரணமுமில்லை;
தத்³ வாரய – அந்த எனது பாபத்தைப் போக்கியருளவேணும்.

ஆறாவது ஶ்லோகத்திலே தாம் ப்ராப்யத்தில் ருசியில்லாதிருக்கிறபடியையும்,
மற்ற விஷயங்களில் ருசியானது மேன்மேலும் வளருகிறபடியையும் கூறி,
இவ்விரண்டிற்கும் காரணமான தனது பாபத்தைப் போக்கியருளவேண்டும் என்கிறார்.

————-

வৃத்த்யா பஶுர் நரவபுஸ் த்வஹமீদ்ருஶோঽபி
ஶৃத்யாদிஸிদ்ধநிখிலமாத்ம গுணாஶ்ரயோঽயம் ।
இத்யாদரேண கৃதிநோঽபி மிথঃ ப்ரவக்தும்-
அদ்யாபி வஞ்சநபரோঽத்ர யதீந்দ்ர வர்தே ॥ 7॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
அஹம் து – அடியேனோவென்றால்,
நரவபு: – மநுஷ்ய சரீரனாயிருந்தேனாகிலும்,
வ்ருʼத்த்யா பஶு: – செய்கையினால் பசுவோடொத்திரா நின்றேன்;
ஈத்³ருஶ: அபி – இப்படிப்பட்டவனாயிருக்கச் செய்தேயும்,
அயம் ஶ்ருʼதி ஆதி³ ஸித்³த⁴ நிகி²ல ஆத்ம கு³ண ஆஶ்ரய: இதி – “இவன் வேதம் முதலியவற்றில் தேறின
ஸகல ஆத்ம குணங்களுக்கும் கொள்கலமானவன்” என்று,
க்ருʼதிந: அபி ஆத³ரேண மித²: ப்ரவக்தும் – அபிஜ்ஞர்களையும் ஆதரவோடு பரஸ்பரம் பேசுவிக்கும்படி,
அத்ர அத்³யாபி – இவ்வுலகில் இன்னமும்,
வஞ்சநபர: வர்த்தே – வஞ்சிக்குமவனாயிரா நின்றேன்.

ஏழாவது ஶ்லோகத்திலே அடியேன் ஶரீரத்தாலே மனிதனாகவிருந்தாலும், செயலாலே விலங்கைப் போன்றவன்.
இப்படியிருக்கச் செய்தேயும், ‘எல்லா ஆத்ம குணங்களுக்கும் கொள்கலமானவன் இவன்’ என்று
பெரியோர்களும் பேசும்படியான வஞ்சகன் என்கிறார்.

——————

দுঃখாவஹோঽஹ மநிஶம் தவ দுஷ்டசேஷ்டঃ
ஶব்দாদி◌ேভাগநிரதஶ் ஶரணாগதாখ்யঃ ।
த்வத்பாদভக்த இவ ஶிஷ்டஜநௌঘமধ்யே
மிথ்யா சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்খঃ ॥ 8॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
து³ஷ்ட சேஷ்ட: அஹம் – கெட்ட நடத்தைகளையுடை யேனான நான்,
ஶப்³தா³தி³ போ⁴க³நிரத: – ஶப்தாதி விஷய ப்ரவணனாய்,
ஶரணாக³த ஆக்²ய: – ப்ரபந்நனென்று பேர் சுமப்பவனாயிருந்துகொண்டு,
தவ அநிஶம் து:³கா²வஹ – எப்போதும் தேவரீருடைய திருவுள்ளத்தைப் புண்படுத்துமவனாய்,
ஶிஷ்டஜந ஓக⁴ மத்⁴யே – சிஷ்டர்களின் திரளினிடையே,
த்வத்பாத³ப⁴க்த: இவ – தேவரீருடைய திருவடிகளுக்கு அன்பன் போல,
மித்²யா சராமி – க்ருத்ரிமமாகத் திரியா நின்றேன்;
தத: மூர்க:² அஸ்மி – ஆகையினால் மூர்க்கனாயிரா நின்றேன்.

எட்டாவது ஶ்லோகத்திலே அடியேன் கெட்ட செயல்களையே செய்பவனாய், ஶப்தம் முதலிய விஷயங்களின்
அநுபவத்தில் ஈடுபட்ட மனத்தையுடையனாய், ஶரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமப்பவனாயிருந்துகொண்டு,
எப்பொழுதும் தேவரீர் திருவுள்ளம் புண்படும்படி துக்கத்தை உண்டுபண்ணுமவனாய்,
தேவரீர் திருவடிகளில் ஈடுபட்டவன் போல் ஶிஷ்டர்களின் கோஷ்டியில் பொய்யாகத் திரிந்தேனாதலால்
மூர்க்கனாகவிருக்கிறேன் என்கிறார்.

————

நித்யம் த்வஹம் பரிভவாமி গுரும் ச மந்த்ரம்
தদ்◌ேদவதாமபி ந கிஞ்சிদஹோ বি◌ேভமி ।
இத்থம் ஶ◌ேঠাঽப்யஶঠவদ் ভவদீய ஸங்ঘে
ஹৃஷ்டஶ்சராமி யதிராஜ ததோঽஸ்மி மூர்খঃ ॥ 9॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
அஹம் து – அடியேனோவென்றால்,
கு³ரும் மந்த்ரம் தத்³ தே³வதாம் ச – ஆசார்யனையும் மந்த்ரத்தையும் அதற்குள்ளீடான தேவதையையும்,
நித்யம் பரிப⁴வாமி – நித்யமும் பரிபவிக்கின்றேன்,
கிஞ்சித்³ அபி ந பி³பே⁴மி – ஈஷத்தும் அஞ்சுகிறேனில்லை;
அஹோ – அந்தோ!,
இத்த²ம் ஶட² அபி – இங்ஙனம் போட்கனா யிருந்தேனாகிலும்,
அஶட²வத்³ – குருமந்த்ர தேவதா விஶ்வாஸ யுக்தன் போல,
ப⁴வதீ³ய ஸங்கே⁴ – தேவரீரடியார் திரளிலே,
த்ருʼஷ்ட: சராமி – துணிவுடையேனாய்த் திரிகின்றேன்,
தத: மூர்க²: அஸ்மி – ஆதலால் மூர்க்கனாயிரா நின்றேன்.

ஒன்பதாவது ஶ்லோகத்திலே எந்நாளும் கொண்டாடத்தக்க ஆசார்யனையும், அவருபதேஶித்த மந்த்ரத்தையும்,
அம்மந்த்ரத்தின் பொருளான தேவதையையும் நித்யம் அவமதித்து சிறிதளவும் பயமில்லாமல்,
தேவரீர் திருவுள்ளத்திற்கு உகப்பானவற்றையே செய்பவன் போலே தேவரீருடைய அடியார்கள் திரளிலே புகுந்து,
‘இவர்களை வஞ்சித்து விட்டோமே’ என்று மகிழ்ச்சியோடு திரிகிறேன் என்கிறார்.

————–

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோঽஹஞ் சராமி ஸததம் த்ரிவிধாபசாராந் ।
ஸோঽஹம் தவாঽப்ரியகரঃ ப்ரியகৃদ்வ◌ேদவம்
காலம் நயாமி யதிராஜ ததோঽஸ்மி மூர்খঃ ॥ 10॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
ய: அஹம் – யாவனொரு அடியேன்,
ஸததம் – எப்போதும்,
மநஸா வாசா க்ரியயா ச – மனமொழிமெய்களகிற முக்கரணங்களாலும்,
த்ரிவித⁴ அபசாராந் – மூவகைப்பட்ட அபசாரங்களையும்,
சராமி – செய்கின்றேனோ,
ஸ அஹம் – அப்படிப்பட்ட நான்,
தவ அப்ரியகர: – தேவரீருக்கு அப்ரியங்களையே செய்து போருமவனாய்க் கொண்டு,
ப்ரியக்ருʼத்³வத்³ – ப்ரியத்தையே செய்பவன்போல நின்று,
ஏவம் காலம் நயாமி – இப்படியே காலத்தைக் கழிக்கின்றேன்;
தத: மூர்க²: அஸ்மி – ஆதலால் மூர்க்கனாயிரா நின்றேன்,
ஹா ஹந்த ஹந்த – என்ன கொடுமை!

பத்தாவது ஶ்லோகத்திலே மூன்று கரணங்களாலும் மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்துகொண்டு,
தேவரீருக்கும் விருப்பமல்லாதவற்றையே செய்துகொண்டிருந்தாலும் தேவரீர் விரும்பக்கூடிய செயல்களையே
செய்பவன் போல தேவரீருடைய அடியார்களை ஏமாற்றியதோடல்லாமல்,
தேவரீரையும் ஏமாற்றினேன் மூர்க்கனான அடியேன் என்கிறார்.

———–

பாபே கৃதே யদி ভவந்தி ভயாநுதாப-
லஜ்ஜாঃ புநঃ கரணமஸ்ய கথம் ঘடேத ।
மோஹேந மே ந ভவதீஹ ভயாদிலேஶஸ்
தஸ்மாத்புநঃ புநரঘம் யதிராஜ குர்வே ॥ 11॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
பாபே க்ருʼதே ஸதி³ – பாவம் செய்தால்,
ப⁴ய அநுதாப லஜ்ஜா: – அச்சமும் அநுதாபமும் வெட்கமும்,
ப⁴வந்தி யதி³ – உண்டாகுமேயானால்,
அஸ்ய புந: கரணம் கத²ம் க⁴டேத – மறுபடியும் பாவம் செய்கை எப்படி நேரிடும்,
மே – எனக்கோவென்றால்,
இஹ – இந்த பாப கரணத்தில்,
மோஹேந – அஜ்ஞாநத்தினால்,
ப⁴யாதி³லேஶ: ந ப⁴வதி – அச்சமும் அநுதாபமும் வெட்கமுமாகிற விவை சிறிது முண்டாவதில்லை;
தஸ்மாத் – ஆதலால்,
அக⁴ம் புந: புந: குர்வே – பாபத்தை அடுத்தடுத்துச் செய்து போராநின்றேன்.

பதினோராவது ஶ்லோகத்திலே பாபகார்யத்தைச் செய்தால் தண்டனை கிடைக்குமே என்ற பயமும்,
நான் இத்தகைய செயலைச் செய்யலாமோ வென்கிற அநுதாபமும்,
இப்படிப் பாபம்புரிந்த நாம் பெரியோர்களின் திருமுன்பே எப்படிச்செல்வது என்கிற வெட்கமும்
ஏற்பட்டால் மறுபடியும் பாபமிழைக்க நேராது;
ஆனால் அடியேனோவென்றால் அறியாமையால் பயம், அநுதாபம், வெட்கம் ஆகிய இவை சிறிதுமில்லாமல்
மீண்டும் மீண்டும் பாவச்செயல்களையே செய்கிறேன் என்கிறார்.

—————-

அந்தர் বஹிஸ் ஸகலவஸ்துஷு ஸந்தமீஶம்-
அந்ধঃ புரஸ்ஸ்থிதமிவாஹமவீக்ஷமாணঃ ।
கந்দர்பவஶ்யஹৃদயஸ்ஸததம் ভவாமி
ஹந்த த்வদগ்ரগமநஸ்ய யதீந்দ்ர நார்ஹঃ ॥ 12॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
ஸகல வஸ்துஷு – எல்லாப் பொருள்களிலும்,
அந்த: ப³ஹி: – உள்ளோடு புறம்போடு வாசியற எங்கும்,
ஸந்தம் ஈஶம் – வியாபித்து நிற்கிற எம்பெருமானை,
அந்த⁴: புர: ஸ்தி²தம் இவ – பிறவிக்குருடன் முன்னேயிரா நின்ற பொருளைக் காணமாட்டாதவாறுபோல,
அவீக்ஷமாண: அஹம் – காணகில்லாதவனான அடியேன்,
ஸததம் கந்த³ர்ப்ப வஶ்ய ஹ்ருʼத³ய: ப⁴வாமி – எப்போதும் காமபரவச மநஸ்கனாயிரா நின்றேன்;
ஹந்த – அந்தோ! (ஆதலால்),
த்வத்³ அக்³ர க³மநஸ்ய ந அர்ஹ: – தேவரீர் திருமுன்பே வருகைக்கும் அர்ஹதையுடையேனல்லேன்.

பன்னிரண்டாவது ஶ்லோகத்திலே பிறவிக்குருடன் கண்முன்னேயுள்ள பொருளைக் காணாதது போலே
எல்லாப்பொருள்களின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்துள்ள எம்பெருமானைக் காணாதவனாய்,
காமபரவசனாய் (மற்ற பயங்களையே விரும்பும் மனத்தை யுடையவனாய்) இருக்கிறேனாதலால்
தேவரீர் திருமுன்பே வருவதற்கும் தகுதியற்றவனாய் உள்ளேன் என்கிறார்.

—————-

உள்ளும் புறமும் ஸகல பதார்த்தங்களிலுமுறைகின்ற எம்பெருமானைக் காண்கிலீராகிலும்
ஹேய விஷயங்களின் தோஷங்களை ப்ரத்யக்ஷமாகக் காண்கிறீரன்றோ;
காணவே அவற்றில் ஜிஹாஸை பிறந்ததில்லையோ? என்ன;
துன்பங்களையும் இன்பமாக நினைக்கும்படியன்றோ என்னுடைய நிலைமையுள்ளது?
இதுக்கடி என்னுடைய ப்ரபல பாபமேயாயிற்று. அதைத் தேவரீர் தாமே களைந்தருள வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

தாபத்ரயீஜநித দுঃখநிபாதிநோঽபி
◌ேদஹஸ்থிதௌ மம ருசிஸ்து ந தந்நிவৃத்தௌ ।
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாথ த்வமேவ ஹர தদ்யதிராஜ ஶீঘ்ரம் ॥ 13॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
தாபத்ரயீ ஜநித து:³க² நிபாதிந: அபி – தாபத்ரயத்தாலு முண்டு பண்ணப்பட்ட துக்கங்களிலே வீழ்ந்து கிடக்கச் செய்தேயும்,
மம – எனக்கு,
ருசிஸ் து – அபிலாஷமோவென்றால்,
தே³ஹஸ்தி²தௌ – து:க்காஸ்பதமான சரீரத்தைப் பேணுமையிலேயாம்;
தத் நிவ்ருʼத்தௌ ந – அந்த தேஹத்தைத் தவிர்த்துக்கொள்வதில் ருசியுண்டாவதில்லை,
ஏதஸ்ய காரணம் மம பாபமேவ – இப்படிப்பட்ட நிலைமைக்குக் காரணம் எனது பாவமேயாம்,
அஹோ நாத² – அந்தோ!; ஸ்வாமிந்!,
தத்³ த்வமேவ ஶீக்⁴ரம் ஹர – அந்த பாபத்தை தேவரீரே கடுகப் போக்கவேணும்.

பதிமூன்றாவது ஶ்லோகத்திலே மூன்றுவிதமான தாபங்களினால் ஏற்பட்ட துக்கத்திலே அழுந்தியிருந்தபோதிலும்,
அடியேனுக்கு துக்கத்திற்கு இருப்பிடமான ஶரீரத்தைப் பேணுவதிலேயே ஆசையானது வளர்ந்துவருகின்றது;
ஶரீரத்தைப் போக்கிக்கொள்வதில் விருப்பமுண்டாகவில்லை. இதற்கு அடியேனது பாபமே காரணமாகையால்
ஸ்வாமியான தேவரீரே விரைவில் அந்தப் பாபத்தைப் போக்கியருளவேணுமென்கிறார்.

————–

வாசாம◌ேগাசர மஹாগுண ◌ேদஶிகாগ்ர்ய
கூராধிநாথ கথிதாঽখிலநைச்யபாத்ரம் ।
ஏஷோঽஹமேவ ந புநர் ஜগதீদৃஶஸ் தদ்-
ராமாநுஜார்ய கருணைவ து மদ்গதிஸ்தே ॥ 14॥

ஆர்ய ராமாநுஜ – எம்பெருமானாரே!,
வாசாம் அகோ³சர மஹாகு³ண தே³ஶிக அக்³ர்ய கூராதி⁴நாத² கதி²த அகி²ல நைச்ய பாத்ரம் – வாய்க்கு நிலமல்லாத நற்குணங்களை
யுடைய ஆசார்யஶ்ரேஷ்டரான கூரத்தாழ்வான் அநுஸந்தித்த ஸமஸ்த நைச்யங்க ளுக்கும் பாத்ரமாயிருப்பவன்,
ஜக³தி – இவ்வுலகில்,
ஏஷ: அஹம் ஏவ – இந்த அடியேன் ஒருவனேயாவன்;
ஈத்³ருʼஶ: புந: ந – இப்படிப்பட்ட தோஷத்தையுடையான் வேறொருவனில்லை, (ஆதலால்)
தே கருணா து – தேவரீருடைய திருவருளோவென்றால்,
மத்³க³தி: ஏவ – என்னையே கதியாகவுடையது.

பதினான்காவது ஶ்லோகத்திலே வாயால் இவ்வளவென்று அளவிட்டுச் சொல்ல வொண்ணாத நற்குணங்களை உடையவராய்,
ஆசார்யர்களின் தலைவராயுள்ள கூரத்தாழ்வானால் அருளிச்செய்யப்பட்ட எல்லாத்தாழ்வுகளுக்கும்
கொள்கலமாக விருப்பவன் இவ்வுலகில் அடியேன் ஒருவனேயன்றி வேறொருவரில்லையாதலாலே
தேவரீருடைய க்ருபையே அடியேனுக்குப் புகலிடம் என்கிறார்.

—————

ஶுদ்ধாத்மயாமுந গுரூத்தம கூரநாথ
ভட்டாখ்ய ◌ேদஶிகவரோக்த ஸமஸ்தநைச்யம் ।
அদ்யாঽஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாদ ்யதீந்দ்ர கருணைவ து மদ்গதிஸ் தே ॥ 15॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
ஶுத்³தா⁴த்ம யாமுந கு³ரூத்தம கூரநாத² ப⁴ட்டாக்²ய தே³ஶிக வர உக்த ஸமஸ்த நைச்யம் – பரம பவித்திரரான ஆளவந்தார் ஆழ்வான் பட்டர்
என்னுமிந்த ஆசார்ய சிகாமணிகள் அநுஸந்தித்துக் கொண்ட ஸகலவிதமான தாழ்வும்,
இஹ லோகே – இவ்வுலகின்கண்,
அத்³ய – இக்காலத்தில்,
மயி ஏவ – என்னிடத்திலேயே,
அஸங்குசிதம் அஸ்தி – குறையுறாது நிரம்பியிருக்கின்றது,
தஸ்மாத்³ – ஆதலால்,
தே கருணா ஏவ து மத்³க³தி: – தேவரீருடைய திருவருளே எனக்குப் புகல் (அல்லது) தேவரீருடைய திருவருள் என்னையே புகலாகவுடையது.

பதினைந்தாவது ஶ்லோகத்திலே தூய்மையான மனத்தையுடையவர்களான ஆளவந்தாராலேயும்,
ஆசார்யகளில் தலைவரான ஆழ்வானாலேயும், ஆசார்ய ஶ்ரேஷ்டரான பராஶரபட்டராலேயும்
தம்முடைய ஸ்தோத்ரங்களிலே சொல்லப்பட்ட எல்லாவிதமான தாழ்வுகளும் இவ்வுலகிலே இக்காலத்திலே
அடியேனிடத்திலேயே குறைவில்லாமல் இருக்கின்றதாதலாலே அடியேனுக்குப் புகலிடம்
தேவரீருடைய கருணையொழிய மற்றொன்றில்லை என்கிறார்.

————–

ஶব்দாদி◌ேভাগவிஷயா ருசிரஸ்மদீயா
நஷ்டா ভவத்விஹ ভவদ்দயயா யதீந்দ்ர ।
த்வদ்দாஸদாஸগணநா சரமாவ◌ெধள யஸ்
தদ்দாஸதைகரஸதா அவிரதா மமாஸ்து ॥ 16॥

யதீந்த்³ர! – எம்பெருமானாரே!,
அஸ்மதீ³யா – எம்முடையதான,
ஶப்³தா³தி³ போ⁴க³ விஷயா ருசி: – ஶ்ப்தாதி விஷயங்களை யநுபவிக்க வேணுமென்பது பற்றியுண்டான அபிநிவேசமானது,
ப⁴வத்³ த³யயா – தேவரீருடைய திருவருளாலே,
நஷ்டா ப⁴வது – தொலைந்ததாகக் கடவது;
ய: – யாவரொருவர்,
த்வத்³ தா³ஸ தா³ஸ க³ணநா சரம அவதௌ⁴ – தேவரீருடைய பக்த பக்தர்களை எண்ணிக்கொண்டு போமளவில் சரம பர்வத்திலே நிற்கிறாரோ,
தத்³ தா³ஸதைக ரஸதா – அவர்க்கு அடிமைப்பட்டிருப்ப தொன்றிலேயே ப்ராவண்யமானது,
மம அவிரதா அஸ்து – எனக்கு அவிச்சிந்நமாக நடைபெற வேணும்.

பதினாறாவது ஶ்லோகத்திலே ஶப்தாதிவிஷயங்களை அநுபவிக்கவேண்டுமென்கிற அடியேனுடைய ருசியானது
தேவரீருடைய திருவருளாலே அடியோடழியக்கடவது;
யாரொருவர் தேவரீரோடு ஸம்பந்தமுடையவர்களின் எண்ணிக்கையில் எல்லையிலி ருக்கிறரோ,
அவருக்கு அடிமைப்பட்டிருப்பதிலேயே அடியேனுக்கு இடைவிடாத ஈடுபாடு இருக்கவேண்டுமென்கிறார்.

————-

ஶ்ருத்யগ்ர வேদ்ய நிஜদிவ்யগுண ஸ்வரூபঃ
ப்ரத்யக்ஷதாமுபগதஸ் த்விஹ ரங்গராஜঃ ।
வஶ்யஸ் ஸদா ভவதி தே யதிராஜ தஸ்மாத்-
ছக்தஸ் ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ॥ 17॥

யதிராஜ – எம்பெருமானாரே!,
ஶ்ருத்யக்³ர வேத்³ய நிஜ தி³வ்யகு³ண ஸ்வரூப: – வேதாந்தங்களில் கேட்டறிய வேண்டும்படியான தன்னுடைய குணஸ்வரூபாதிகளை யுடையனாய்,
இஹ – தன்வாசியறிந்து ஈடுபடுவாரில்லாத இந்த ஸம்ஸாரமண்டலத் திலே,
ப்ரத்யக்ஷதாம் உபக³த: – எல்லார்க்கும் கண்ணெதிரே காட்சி தந்தருள்கின்ற,
ரங்க³ராஜ: – ஶ்ரீரங்கநாதன்,
தே – தேவரீருக்கு,
ஸதா³ – எப்போதும்,
வஶ்ய: ப⁴வதி – விதேயனாயிரா நின்றான்;
தஸ்மாத் – ஆதலால்,
ஸ்வகீய ஜந பாப விமோசநே – தம்மடியார்களின் பாவங்களைத் தொலைத்தருள்வதில்,
த்வம் ச²க்த: – தேவரீர் சக்தி யுடையராயிரா நின்றீர்.

பதினேழாவது ஶ்லோகத்திலே உபநிஷத்துக்களாலே அறியத்தக்கவைகளான தன் கல்யாணகுணங்களையும்,
திவ்யமங்கள ஸ்வரூபத்தையுமுடையனான எம்பெருமான் அனைவரும் கண்ணாலேயே கண்டுபற்றலாம்படி
திருவரங்கத்திலே பெரியபெருமாளாக எழுந்தருளி, எல்லாக்காலமும் தேவரீருக்கு வசப்பட்டவனாயிருக்கையாலே,
உம்மடியார்களின் பேற்றுக்குத் தடையான பாபங்களைப் போக்குவதில் தேவரீர் ஸமர்த்தரன்றோ வென்கிறார்.

—————

காலத்ரயேঽபி கரணத்ரய நிர்மிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ভগவத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேঽர்থிதா யத்-
க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்দ்ர ভவத்ছ்ரிதாநாம் ॥ 18॥

யதீந்த்³ர – எம்பெருமானாரே!,
காலத்ரயே அபி – வருங்காலம் நிகழ்காலம் கழிகால மென்கிற மூன்று காலங்களிலும்,
கரணத்ரய நிர்மித அதி பாபக்ரியஸ்ய – மன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களினாலும் கோர பாபங்களைச் செய்தவனுக்கு,
ப⁴க³வத் க்ஷமா ஏவ – எம்பெருமானது பொறுமையொன்றே,
ஶரணம் – புகல்,
ஸா ச – அந்த க்ஷமைதானும்,
த்வயா ஏவ – தேவரீராலேயே,
கமலாரமணே – நம்பெருமாள் பக்கலிலே,
அர்தி²தா இதியத் – ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று,
ஸ: ஏவ ஹி – அந்த ப்ரார்த்தனை தானே,
ப⁴வத் ச்²ரிதாநாம் – தேவரீரை யடிபணிந்தவர்களுக்கு,
க்ஷேம: – க்ஷேமமாவது.

பதினெட்டாவது ஶ்லோகத்திலே நிகழ்காலம் வருங்காலம் கழிகாலம் என்கிற மூன்று காலங்களிலும்,
மனம் மொழி மெய் என்கிற மூன்று கரணங்களினாலும், ப்ராயஶ்சித்தத்தாலும் அநுபவத்தாலும்
போக்கவொண்ணாத அளவிறந்த பாபங்களைச் செய்தவனுக்கு எம்பெருமானுடைய பொறுமை மட்டுமே தஞ்சமாகும்.
அந்தப் பொறுமையானது தேவரீரால் பெரியபிராட்டிகு இனியவனான எம்பெருமானிடத்திலே ப்ரார்த்திக்கப்பட்டது
என்பது யாதொன்றென்றுண்டோ அதுவே தேவரீருடைய அடியார்களுக்கு பாதுகாப்பாகும் என்கிறார்.

—————

ஶ்ரீமந் யதீந்দ்ர தவ দிவ்யபদாব்ஜஸேவாம்
ஶ்ரீஶைலநாথகருணாபரிணாமদத்தாம் ।
தாமந்வஹம் மம விவர்ধய நாথ தஸ்யாঃ
காமம் விருদ்ধமখிலஞ்ச நிவர்த்தய த்வம் ॥ 19॥

நாத² – எமக்குத் தலைவரான,
ஶ்ரீமந் யதீந்த்³ர – ஶ்ரீராமாநுஜரே!, ஶ்ரீஶைலநாத² கருணா பரிணாம த³த்தாம் – (அஸ்மதாசார்யரான) திருமலையாழ்வாருடைய
திருவருள் மிகுதியினால் அளிக்கப்பட்ட,
தாம் – அப்படிப்பட்ட,
தவ தி³வ்ய பதா³ப்³ஜ ஸேவாம் – தேவரீருடைய பாதாரவிந்த ஸேவையை,
அந்வஹம் – நாடோறும்,
மம விவர்த⁴ய – அடியேனுக்கு வளரச்செய்தருளவேணும்;
தஸ்யா: விருத்³த⁴ம் – அந்த பவதீய பாதாரவிந்த ஸேவைக்கு எதிரிடையான,
அகி²லம் ச காமம் – எல்லா விருப்பங்களையும்,
த்வம் நிவர்தயத்வம் – தேவரீர் தவிர்த்தருளவேணும்.

பத்தொன்பதாம் ஶ்லோகத்திலே புலன்களை வென்றவர்களுக்குத் தலைவரான ஸ்வாமி எம்பெருமானாரே!
திருமலையாழ்வாரென்கிற திருவாய்மொழிப்பிள்ளை தம்முடைய மிகுந்த கருணையினால் அளித்த
தேவரீருடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யத்தை எல்லாக்காலத்திலும் அடியார்களளவிலும் வளர்ந்தருள வேணும்;
அக்கைங்கர்யத்திற்குப் புறம்பான ஶப்தாதிவிஷயங்களிலுள்ள ஈடுபாட்டை அடியோடு அழித்தருளவேணும் என்கிறார்.

————–

விஜ்ஞாபநம் யদிদமদ்ய து மாமகீநம்-
அங்গீகுருஷ்வ யதிராஜ দயாம்বுராஶே ।
அஜ்ஞோঽயமாத்மগுணலேஶவிவர்ஜிதஶ் ச
தஸ்மாদநந்யஶரணோ ভவதீதி மத்வா ॥ 20॥

த³யா அம்பு³ராஶே! – கருணைக்கடலான,
யதிராஜ! – எம்பெருமானாரே!,
அயம் – (அடியேனாகிற) இவன்,
அஜ்ஞ: – (தத்வஹித புருஷார்த்தங்களில்) அறிவில்லாதவன்,
ஆத்ம கு³ணலேஶ விவர்ஜிதஶ்ச – ஆத்ம குணங்கள் சிறிதுமில்லாதவன்;
தஸ்மாத் – ஆகையினாலே,
அநந்யஶரண: ப⁴வதி – நம்மைத் தவிர்த்து வேறு புகலற்றவன்,
இதி மத்வா – என்று திருவுள்ளம் பற்றி,
அத்³ய மாமகீநம் யத் து விஜ்ஞாபநம் தத் அங்கீ³ குருஷ்வ – இப்போது அடியேனுடையதான விண்ணப்பம் யாதொன்றுண்டோ
அதனைத் தலைக்கட்டியருள்வதாக ஏற்றுக்கொள்ள வேணும்.

இருபதாவது ஶ்லோகத்தில் கருணைக்கடலான எம்பெருமானாரே! ‘இவன் ஶாஸ்த்ர ஜ்ஞாநமும் ஆத்மகுணங்களும்
சிறிதுமில்லாதவனாகையாலே நம்மையொழிய மற்றொரு புகலிடமில்லாதவன்’ என்று திருவுள்ளம் பற்றி
இக்காலத்திலே அடியேனு டையதான இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டருள வேணும்
(அப்படியே செய்கிறோம் என்று திருவுள்ளம் பற்றியருளவேணும்).

———-

இதி யதிகுலধுர்யமேধமாநைঃ ஶ்ருதிமধுரைருদிதை ப்ரஹர்ஷயந்தம் ।
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாদம் ॥ 21॥

இதி ஶ்ரீயதிராஜவிம்ஶதிঃ ஸம்பூர்ணம்

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஶ்ரீ.உ.வே.ரகுராமன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஶ்ரீ காஞ்சீ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

March 25, 2021

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6-

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )
ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம் –அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை; இன்னும் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள்.
இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் .
ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள்.

ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,
தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில்,
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || –1-

சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும்
சேர்ந்த குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் || -2-

ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்)
திருவடித் தாமரைகளில் உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட .
மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.

பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய || –3-

அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால்,
இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தி யோகியும்,
யோகி ஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள்.
மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் ,
என்று மூன்று படிகளுக்கு மேலே –
ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம்,
அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக் கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.

இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,
ஆசார்யனுடன் ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும்போது,
ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,

யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.

குரு பரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் ,
பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார்,
நாதமுனிகள்,
உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி
ஆளவந்தார்,
பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.

——-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை
ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள
பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் -ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும் ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை
அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப்பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ -பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரியபிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்யதம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள்
எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .
இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.
இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்குபோல,
உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,
முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,
பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,
தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ச்லோகத்தில், ஆதிகுருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

———————————-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்
வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ச்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்த வர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.
அதற்கு, பிராட்டி, நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.
உடனே பகவான், பிராட்டியிடம், “நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.
இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து, பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

——————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ராவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே

ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –
குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூத்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனைமுதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற்கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய்விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனைமுதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

—————————-

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத்துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.
அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால்
பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர்.
குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து,
மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்து கொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபரயுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.
அவரோ,கண்திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.

மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்ததன் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது,
ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?
ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”
அதாவது,
சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து,
தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது,
ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.
பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,
ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது .
இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .
பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

————————————-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப் பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
“ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !’
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,
அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட, அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,
திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.

அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்து போன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள் ரஹஸ்யஅர்த்தங்கள்,ப்ரஹ்மஸுத்ரங்கள்
எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
“கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.
திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .
ஸ்ரீ நம்மாழ்வார் அருள் செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.
தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய
மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————————-

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

———————————–

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.
புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு
உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால்,
மணக்கால் நம்பி 4வது ராமர்.

——————————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம்.
மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல
அன்று முதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,
ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி,
கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு விளையாடி,
இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும்
யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் ,
யமுனைக்குக் கருணை செய்ததைப் போல,
ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச் சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

———————————————————–

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

——————————

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் -பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .
இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத்தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச்சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ச்ருதி “—உபநிஷத் நாயகி .இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி,
பொய் என்றும் சொல்லி ,அழுக்கை ஏற்றிவிட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ” மீமாம்சம் போன்ற
வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,உண்மையான ரூப கல்யாண குண விசேஷங்களை உடைய
பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

———————————

யதிராஜ ஸப்ததி

யதிராஜன் —யதிகளுக்கு ராஜன்; யதீச்வரர்களுக்குத் தலைவன்; அது யார் ! அவரே ஸ்ரீ ராமாநுஜன் .
இந்த யதிராஜரைப் போற்றிப் புகழ்ந்து ஸப்ததி –எழுபது ச்லோகங்கள் இதுவே, யதிராஜ ஸப்ததி
ஸப்ததி—-எழுபது என்று சொன்னாலும், 74 ச்லோகங்கள் அருளி இருக்கிறார், ஸ்வாமி தேசிகன்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிச் ச்லோகம் இயற்றத் தொடங்கியதும், ஸ்வாமி தேசிகனுக்கு,
ஸ்ரீ உடையவர் 74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து,
விசிஷ்டாத்வைதத்தை வேரூன்றி வளரச் செய்தது நினைவுக்கு வர, 74 ச்லோகங்கள் இயற்றினாரோ ? ஸ்வாமி தேசிகனே அறிவார் !

ராமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் |

நபஸ்ய மாசி ஸிஸ்ரோணாயாம் அநந்தார்ய குரூத்பவம் |
ஸ்ரீவேங்கடேச கண்டாம்சம் வேதாந்தகுரு மாஸ்ரயே ||

ப்ரணாமம் லக்ஷ்மணமுநி :ப்ரதிக்ருஹ்ணாது மாமகம் |
ப்ரஸாதயதி யத்ஸுக்தி : ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம் ||- ஸ்ரீ ராமாநுஜர் —ஸ்ரீ உடையவர் .

தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே |
யேந விச்வஸ்ருஜோ விஷ்ணோ : அபூர்யத மநோரத : ||–ஸ்ரீ பெரிய நம்பிகள்

விகாஹே யாமுனம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்திதம் |
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்ஸே யத்ர க்ருஷ்ண : க்ருதாதர : ||–ஸ்ரீ ஆளவந்தார் என்கிற யாமுனாசார்யர்

அநுஜ்ஜித க்ஷமா யோகம் அபுண்யஜந பாதகம் |
அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ மணக்கால் நம்பி

நமஸ்யாமி அரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் |
சுத்த ஸத்வமயம் சௌரே : அவதாரமிவாபரம் ||–ஸ்ரீ உய்யக்கொண்டார்

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||– ஸ்ரீமந்நாதமுநிகள்

யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம் |
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ நம்மாழ்வார்

வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸுத்ரவதீ ஸகம் |
யத்வேத்ர சிகரஸ்பந்தே விச்வ மேதத் வ்யவஸ்திதம் ||–ஸ்ரீ விஷ்வக்ஸேநர் .

ஸஹ தர்மசரீம் சௌரே : ஸம்மந்த்ரித ஜகத்திதாம் |
அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத நிக்ரஹாம் ||–10. ஸ்ரீ பெரிய பிராட்டி –ஸ்ரீ மஹாலக்ஷ்மி .

கமபி ஆத்யம் குரும் வந்தே கமலாக்ருஹ மேதிநம் |
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய : ஸ்வயம் || ஸ்ரீ பகவான்-ஸ்ரீமன் நாராயணன்–ஆதிகுரு . .

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ விம்சதி —

November 20, 2020

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாதரம் முநிம்–

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதநீம் வ்யாஜாஹர யதிராஜ விம்சதீம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் நௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –ஸ்ரீ எறும்பு அப்பா அருளிச் செய்த தனியன் —

————

1-ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –

நம்மாழ்வார் உடைய தாமரை போன்ற திருவடிகளில் ஆழ்ந்த அன்பும் பக்தியும் பூண்ட ராமானுஜரை -மாறன் அடி பணிந்து உய்ந்தவரை வணங்குகிறேன் –
தனது திருவடிகளை பணிந்தவர்களுடைய காமம் தோஷம் குரோதம் அனைத்தையும் நீக்க வல்லவர் –

-ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய–திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடி இணைகளில் செய்யத் தக்க
நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய-நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவை யுடைய
பராங்குச பாத பக்தம் -பராங்குசர் -நம்மாழ்வார் -திருவடிகளில் பரம பக்தி பூண்டவரும் –
ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம்–தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுடைய
காமாதி தோஷ ஹரம் -காமம் முதலிய தோஷங்களை போக்கடிப்பவரும்
-ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –துறவிகளுக்கு தலைவருமான எம்பெருமானாரை தலையால் வணங்குகிறேன் –

———————————————

ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குS பதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் |
ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்ந Sரணம் யதிராஜமீடே3 ||

அழகிய தாமரை மலரை அன்னப்பறவை எவ்வாறு தனது இருக்கையாக கொண்டுள்ளதோ,
அது போன்று ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளையே தன்னுடைய நிரந்தரமான இருப்பிடமாகக் கொண்டுள்ள
ஸ்வாமி இராமானுசரைத் தொழுகிறேன். மகரந்ததுகள்களால் சூல் கொண்டு தேன் நிரம்பியுள்ள நறுமணம் வீசும்
தாமரை மலரின்மேல் அத்தேனைக் குடிக்கும் வண்டு எவ்வாறு அமர்ந்திருக்கிறதோ அது போன்று
நம்மாழ்வாரின் திருப்பாத கமலத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.
திருக்கமலமுகத்தை உடைய பெரியாழ்வாருக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ஸ்வாமி இராமானுசர்
சூரியனைப் போன்று விளங்குகிறார். அவர்களது திருமுகம் ஸ்வாமியை கண்ட மாத்திரத்திலே மலர்கின்றது.
அந்த யதிராசனை நமஸ்கரிக்கின்றேன்.
கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலேயே கொண்டுள்ள எம்பெருமானாரைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

எம்பெருமானாரைப் பற்றிய நான்கு கருத்துகளை ஸ்வாமி மணவாள மாமுனிகள்
இப்பாசுரத்திலே அருளிச்செய்கிறார்.

1. ஸ்ரீரங்க3ராஜசரணாம்பு3ஜ ராஜஹம்ஸம் :
பங்குனி உத்திர நன்நாளிலே திருவரங்கத்திலே அரங்கநாதன் தன்னுடைய அர்ச்சை ரூபத்திலிருந்து எழுந்து
ஸ்வாமி இராமானுசருடன் உரையாடினான். ஸ்வாமி இராமானுசரை அவருடைய அந்திமக்காலம் வரை
தன்னுடனேயே இருக்கும்படி விண்ணப்பித்தான் (“யவாத் ஸரீரபாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ”).
மிகுந்த பாசத்துடன் அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசருடைய ப்ரபத்தியை ஏற்றுக்கொண்டான்.
தன்னுடைய திருவடித் தாமரையிலேயே ஸ்வாமி இராமானுசர் இருக்கவேணும் என்ற கருத்தையே
எம்பெருமான் “அத்ரைவ” என்ற பதத்தின் மூலம் சுட்டிக்காட்டுகிறான்.
ராஜஹம்ஸத்தைப் போல ஸ்வாமி இராமானுசரும் அரங்கநாதனின் திருவடித் தாமரையிலேயே
தன்னுடைய அந்திமக்காலம் வரை எழுந்தருளியிருந்தார்.

ராஜ ஹம்ஸத்துடன் ஸ்வாமி இராமானுசரை ஒப்பிடுதல் :
அன்னப்பறவையான ராஜஹம்ஸம் எவ்வாறு பாலைத் தண்ணீரில் இருந்து பிரிக்க வல்லதோ,
அதுபோன்று ஸ்வாமி இராமானுசர் ஸாஸ்திரங்களில் இருந்து அதன் ஸாரத்தைப் பிரிக்க வல்லவர்
என்பதையே இந்த ஒப்பிடுதல் காட்டுகின்றது.
மேலும் இது ஸ்வாமியுடைய பரமஹம்ஸ பரிவ்ராஜக ஆசார்யத்வத்தையும் காட்டுகிறது.
எப்படி சேறு நிரம்பிய நெல் வயல்களிலே நீந்தும் அன்னத்தின் பாதங்கள் அந்த சேற்றிலே அமிழ்வதில்லையோ
அது போன்று ஸ்வாமி இராமானுசரும் களங்கம் நிறைந்த இந்த சம்சார உலகத்திலே இருந்தாலும்,
சம்சார வாசனையினால் களங்கப்படுவதில்லை.
இந்த ஒப்பிடுதலுக்கு ஈடாக ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி, நம்மாழ்வாரின்
திருவிருத்த பிரபந்தத்தின் பலஸ்ருதியை குறிப்பிடுகிறார்.
திருவிருத்தத்தின் நூறு பாசுரங்களின் ஆழ்ந்த பொருளையும் அறிந்தவர்கள் சம்சாரம் என்னும் சேற்றிலே
ஆழங்கால் படமாட்டார்கள் என்பது பலஸ்ருதி.
இதற்க்கு வியாக்கியானம் அளிக்க ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி
“ந பதநாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தமாம்பஸி” என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.

ஸ்வாமி இராமானுசர் தாயார் ரங்கநாயகியைப் போலவே புருஷகார க்ருத்யத்திலே ஈடுபடுபவர்.
எவ்வாறு தாயார் அரங்கநாதனிடம் ஜீவாத்மாக்களின் அபராதங்களைப் பொறுத்துக் கொண்டு
ப்ரபந்நர்களுக்கு மோக்ஷத்தை அளிக்க வேண்டுகிறாளோ, அது போன்று ஸ்வாமி இராமானுசரும் வேண்டுகிறார்.
அன்னத்தின் நடையும் நடத்தையும் தாயாரை ஒத்தனவாக இருக்கின்றன.
அது போன்றே எம்பெருமானாரும் விளங்குகிறார் என்பதே மாமுனிகளின் எண்ணம்.
ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 22வது பாசுரத்திலே
எம்பெருமானாரை ராஜ ஹம்ஸத்துடன் ஒப்பிடுகிறார்.
இங்கு அரங்கநாதனின் பக்தர்களின் மனத்திலே அமர்ந்திருக்கும் ராஜஹம்ஸம் என்று ஸ்வாமி தேசிகன் ஸாதிக்கிறார்.

2. ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம் :
முதல் பாசுரத்திலே மாமுனிகள் ஸ்வாமி இராமானுசரை “பராங்குச பாத பக்தம்” என்று காட்டுகின்றார்.
இரண்டாவது பாசுரத்திலே “ஸ்ரீமத்பராங்குS பாதா3ம்பு3ஜப்4ருங்க3ராஜம்´என்று கொண்டாடுகின்றார்.
முதல் பாசுரத்திலே அருளியது “ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும்.
இரண்டாம் பாசுரத்திலே அருளியது “குண ப்ரயுக்த தாஸ்யம்” என்ற அம்சமாகும்.
தேனுருஞ்சும் வண்டு எங்கனம் மலர்களிலே உள்ள தேனை அறிந்துகொண்டு அம்மலர்களை சுற்றுகின்றதோ,
அங்கனம் ஸ்வாமி இராமானுசரும் திருவாய்மொழி என்னும் அருளிச்செயலில் பொதிந்துள்ள அமுதினும் இனிய
பகவத் விஷயத்தை அனுபவிக்கவேண்டி நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளையே நாடுகின்றார்.
“தொண்டர்க்கு அமுதுன்ன சொல் மாலைகள் சொன்னேன்” என்று நம்மாழ்வாரே ஸாதித்துள்ளார்.
தேனுன்னும் வண்டைப் போலவே இராமானுசன் என்னும் வண்டும் நம்மாழ்வாரின்
ஒரு பாசுரத்தில் இருந்து மற்றொரு பாசுரத்திற்குத் செல்லுகிறது என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஸாதிக்கிறார்.

3. ஸ்ரீப4ட்டநாத2 பரகால முகா2ப்3ஜமித்ரம் :
பெரியாழ்வார் பட்டநாதன் என்று வழங்கப்படுபவர். திருமங்கையாழ்வார் பரகால நாதன் என்று வழங்கப்படுபவர்.
“ஆப்ஜம்” என்பது தாமரை மலரைக் குறிக்கும். “முகாப்ஜம்” என்பது தாமரை போன்ற முகம் என்பதைக் குறிக்கும்.
அத்தாமரை போன்ற முகத்தினை மலரவைக்கும் சூரியனாக ஸ்வாமி இராமானுசர் ஒப்பிடப்படுகிறார்.
பெரியாழ்வாரைப் போல எம்பெருமானுக்குத் துளசி கைங்கர்யத்திலே ஈடுபட்டிருந்ததாலும்,
திருமங்கையாழ்வாரைப்போல பிராகாரங்களையும், கோபுரங்களையும் அமைத்ததாலும்,
இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது ஒரு நிர்வாகம்.
ஆழ்வார்களின் பாசுரங்களின் கருத்தை உணர்ந்து அவர்கள் கூறியபடி அனுஷ்டானங்களைக் கடைபிடித்ததாலும்
இவ்வாழ்வார்களின் திருமுகத்தை ஸ்வாமி மலரச் செய்தார் என்பது மற்றொரு நிர்வாகம்.

4. ஸ்ரீவத்ஸ சிஹ்ந ஸரணம்: கூரத்தாழ்வான் ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்று வழங்கப்படுபவர்.
உடையவருடன் விசேஷமான தொடர்பை உடையவர். எம்பார் போன்ற மற்ற சிஷ்யர்களும் ஸ்வாமியின் அன்புக்கு
பாத்திரமாயிருந்தாலும், கூரத்தாழ்வானிடமே ஸ்ரீபாஷ்யம் எழுதும் பெரும் பொறுப்பை ஸ்வாமி அளித்தார்.
பேர் சொல்ல தகுதியில்லா சோழ மன்னனின் சபைக்குச் சென்று இராமானுச தர்சனத்திற்காக தனது
தர்சனத்தையே இழந்தவர் கூரத்தாழ்வான். எம்பெருமானாரிடம் கூரத்தாழ்வானின் பக்தி ஈடு இணையற்றது.
ஆகையினாலேயே கூரத்தாழ்வான் “பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று
இராமானுச நூற்றந்தாதியிலே திருவரங்கத்து அமுதனாரால் போற்றப்படுகிறார்.
இந்த கூரத்தாழ்வானைத் தன் திருவடிகளிலே கொண்டுள்ளார் ஸ்வாமி இராமானுசர் என்பது ஒரு நிர்வாகம்.
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி இங்கே மற்றொரு விளக்கத்தை ஸாதிக்கிறார்.
“ஸ்ரீவத்ஸசிஹ்ந ஸரணம்” என்பதற்கு மாறாக “ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம்” என்று கொண்டால்,
கூரத்தாழ்வான் ஸ்வாமி இராமானுசருடைய திருவடியாகவே விளங்குகிறார் என்ற பொருள் கொள்ளலாம்.
திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய திருவடியாகவே கருதப்படுவது போலே,
கூரத்தாழ்வானும் எம்பெருமானாருடைய திருவடியாகவே அமைகிறார்.

யதிராஜ மீடே : ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்தை “யதிராஜ மீடே” என்ற வணக்கத்துடன் தலைக்கட்டுகிறார்.
அரங்கநாதனின் திருவடித்தாமரைகளிலே ராஜஹம்ஸத்தைப்போல அமர்ந்திருப்பவரும்,
தேனுருஞ்சும் வண்டைப்போல நம்மாழ்வாரின் பாதங்களை நாடுபவரும்,
பெரியாழ்வார், திருமங்கையாழ்வாடைய தாமரை போன்ற திருமுகத்தை சூரியனாக மலரச்செய்பவருமான
ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்.

————-

நித்யம் யதீந்த்3ர! தவ தி3வ்ய வபுஸ் ஸ்ம்ருதெள மே
ஸக்தம் மநோ ப4வது வாக் கு3ண கீர்தநேऽஸெள |
க்ருத்யஞ்ச தா3ஸ்ய கரணே து கரத்3 வயஸ்ய
வ்ருத்த் யந்தரேऽஸ்து விமுக2ம் கரண த்ரயஞ்ச ||

ஸந்யாஸிகளின் சக்ரவர்த்தியே! உம்முடைய திவ்ய மங்கள விஹ்ரகத்திலேயே என் மனது தியானித்திருக்க வேண்டும்.
உம்முடைய கல்யாண குணங்களைப் பற்றி பேசுவதிலேயே என் வாக்கு ஈடுபட வேண்டும்.
என் இரு கைகளும் உம்முடைய கைங்கர்யத்திலேயே ஈடுபட வேண்டும்.
இம் மூன்று கரணங்களும் (மனது, வாக்கு, காயம்) வேறு எல்லா கார்யங்களிலிருந்தும் திருப்பப்பட வேண்டும்.

திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த இராமானுச நூற்றந்தாதியின் 100-102ம் பாசுரங்களின் சாராமே இந்தப் பாசுரமாகும்.
இம்மூன்று பாசுரங்களில், முதலில் அமுதனார் தம்முடைய மனது எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை
அனுபவிப்பதைப் பற்றி தெரிவிக்கிறார். இங்கே மற்றைய விஷயங்களிலிருந்து விடுபடுவதற்கான வரத்தை வேண்டுகிறார்.
இரண்டாவதாக, அமுதனார் தன்னுடைய வாக்கும் எம்பெருமானாருடைய வைபவத்தைப் பற்றியே பேச வேண்டும்
என்ற வரத்தை வேண்டுகிறார். இது சிஷ்யனுடைய உத்தம கல்பம் ஆகும்.
மூன்றாவதாக, அமுதனார் தன்னுடைய மனது, வாக்கு, மெய் அனைத்துமே எம்பெருமானார் தொடர்புடையது என்று தெரிவிக்கிறார்.
என் மனது உம்முடைய கல்யாண குணங்களை தியானம் செய்வதிலே மகிழ்ந்து இருக்கிறது.
என்னுடைய நாக்கு “இராமானுசா” என்று எம்பெருமானாருடைய நாம ஸங்கீர்த்தனத்திலேயே திளைத்திருக்கிறது.
என் கைகள் எம்பெருமானாரையே தொழுகின்றது.
என் கண்கள் எம்பெருமானாரையே நோக்குகிறது என்று அமுதனார் “நையும் மனமும்” என்ற பாசுரத்திலே அருளிச் செய்கிறார்.
தம்முடைய ஆசாரியன் அளித்த ஞானத்தினாலேயே மனது, வாக்கு, செயல் அனைத்தும்
எம்பெருமானாரிடம் திளைத்துள்ளன என்று தலைக்கட்டுகிறார்.

ஸ்வாமி மணவாள மாமுனிகளும் அமுதனாரது பாங்கிலேயே பிரார்த்திக்கிறார்.
“மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் அருளியது போன்று மாமுனிகள்
மற்ற விஷயங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறார். எம்பெருமானாரின் அங்க செளந்தர்யத்தை
ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய யதிராஜ ஸப்ததியின் 11வது பாசுரத்திலே கொண்டாடுகிறார்.
முப்புரி நூலையும், ஊர்த்வ புண்ட்ரத்தையும் தரித்தவரும், மூன்று லோகங்களிலும் உண்டான புண்ணியங்களை
கையிலே த்ரிதண்டமாக கொண்டிருப்பவரும், ப்ரபந்நர்களை மோக்ஷ சாம்ராஜ்யத்திற்க்கு கொண்டு செல்பவரும்,
மிகப் பிரகாசமான தோற்றத்தை யுடையவருமான சந்நியாசிகளின் சக்ரவர்த்தியாகிய ஸ்வாமி இராமானுசரை வணங்குகிறேன்
என்று ஸ்வாமி தேசிகன் கொண்டாடுகிறார். எம்பெருமானாரின் கம்பீரமான அழகை எம்பார் சொல் ஓவியமாகத் தீட்டுகிறார்.
“எதிராசன் வடிவழகு என்னிதயத்திலுள்ளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை என்க்கு எதிரே”
என்று பரவசப்படுகிறார். ஆழ்ந்த ஆச்சார்ய அனுபவத்தினாலேயே இவ்வாறு இம்மகான்களால் இங்கனம் கொண்டாட முடிகிறது.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆர்த்திப் பிரபந்தத்திலேயும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை
வாழி வாழி என்று கொண்டாடுகிறார்.
“சீராருமெதிராசர் திருவடிகள் வாழி! திருவரையிற் சாத்திய செந்துவராடை வாழி!” என்று அருளிச் செய்கிறார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கு மங்களாஸாசனம் செய்தது போன்றே
எம்பார், ஸ்வாமி தேசிகன், ஸ்வாமி மணவாள மாமுனிகளும் எதிராசரான எம்பெருமானாருக்கு மங்களாஸாசனம் செய்கிறார்கள்.

—————

அஷ்டாக்ஷராக்2ய மநு ராஜ பத3 த்ரயார்த2 நிஷ்டா2ம்
மமாத்ர விதராத்3ய யதீந்த்3ர நாத2!
S¢ஷ்டாக்3ரக3ண்ய ஜந ஸேவ்ய ப4வத் பதா3ப்3ஜே
ஹ்ருஷ்டாऽஸ்து நித்ய மநுபூ4ய மமாஸ்ய பு3த்3தி4:

எம் குலத்தின் அரசே! துன்பமும், வேதனையும் நிறைந்த இந்த சம்சார வாழ்க்கையிலே,
மந்திரங்களிலே அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்தினால் வழங்கப்படுகின்ற மூன்று சித்தாந்தங்களையும்
மன உறுதியோடும் தடுமாற்றமின்றியும் பின்பற்ற வேண்டும் என்ற விருப்பம் வளரவேண்டும் என்ற வரத்தை
இப்பொழுதே அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
குறைந்த அறிவையும், ஆற்றலையும் உடைய எனக்கு, கூரத்தாழ்வான், எம்பார், பட்டர் போன்ற மகான்களால்
போற்றித் தொழத் தகுதியுடைய உம்முடைய திருவடித் தாமரைகளை என்றென்றும் தங்கு தடையில்லாமல்
தியானித்திருக்குமாறு அருளிச் செய்ய வேண்டுகிறேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் “மம ஆத்ர அத்ய விதர” என்று பிரார்த்திக்கிறார்.
சம்சார துன்பங்களிலே இன்னும் உழன்று கொண்டு இருக்கும்போதே அவர் உள்ளத்திலே விருப்பம் துளிர்ந்துவிட்டது.
ஆகையால் அவ்வரத்தை உடனடியாக வழங்க வேண்டுகிறார். ஸ்வாமிகளின் உள்ளத்திலே துளிர்ந்த ஆசைதான் என்ன?
“ப்ரணவம், நம:, நாராயணாய” என்ற மூன்று பதங்களையும் அவற்றின் பொருளாகிய
“அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம்” என்ற மூன்று தத்துவங்களையும் உள்ளடக்கியுள்ள
மந்திரங்களின் அரசனாகிய அஷ்டாக்ஷர மந்திரத்திலே மனது என்றென்றும் ஆழங்கால் பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் அஷ்டாக்ஷர மந்திரமாகிய திருமந்திரத்தை மந்திரங்களின் அரசன் என்று வழங்குகிறார்.
மநு என்ற சொல் மந்திரம் என்பதைக் குறிக்கிறது.
ஆகையால் மநுராஜம் என்பது மந்திரங்களின் அரசன் என்பதைக் குறிக்கிறது.
நம் ஸம்பிரதாயத்திலே திருமந்திரம் மந்திர ராஜனாகவும், த்வயம் மந்திர ரத்தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
முமுக்ஷுப்படி போன்ற கிரந்தங்கள் வழங்குவதைப் போலவே ஸ்வாமி மணவாள மாமுனிகளும்
திருமந்திரத்திலே மூன்று பதங்கள் உள்ளன என்று அங்கீகரிக்கிறார்.
“அநந்யார்ஹ ஸேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வம்” என்ற மாபெரும் சித்தாந்தங்களுக்கு சான்றாக
இம்மூன்று பதங்களின் பொருளும் விளக்கப்பட்டுள்ளன. இம்மூன்று சித்தாந்தங்கள் யாவை?

முதலாவது அநந்யார்ஹ ஸேஷத்வம். இது இரண்டு பதங்களை உடையது.
“ஜீவாத்மா எம்பெருமான் ஒருவனுக்கே உரித்தானது” என்பதே அநந்யார்ஹ என்ற பதத்தின் பொருள்.
“ஸ்ரீமந் நாராயணனைத் தவிர வேறு ஒருவருக்கும் ஜீவாத்மா அடிமையில்லை” என்பதே ஸேஷத்வம் என்ற பதத்தின் பொருள்.
போற்றுதற்க்குரிய பக்த்தியுடனும், வணக்கத்துடனும் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவனே ஸேஷன் என்று வழங்கப்படுகிறான்.
பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே கைங்கர்யம் செய்ய வேண்டியதே ஜீவாத்மாவின் கடமை
என்பதே ஸேஷத்வ ஞானம் ஆகும். எவன் ஒருவன் இக்கைங்கர்யத்தை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு
அனுபவிக்கிறானோ அவன் ஸேஷி எனப்படுவான். எல்லா ஜீவன்களின் ஒப்புயற்வில்லாத தலைவன் பகவான்.
ஆகையால் அவன் ஸர்வ ஸேஷி என்று வணங்கப்படுகிறான்.

இரண்டாவது அநந்ய சரணத்வம். பிரபத்தியிலே ஜீவாத்மா அனுபவிப்பதே இது.
ஜீவாத்மா தான் அந்நந்ய சரண்யன் என்று உணர்ந்து கொள்கிறான்.
இந்த ஜீவனால் கர்ம, ஞான, பக்தி யோகங்களை கடைபிடிக்க இயலாது. ஆகையால் ஆதரவற்று இருக்கிறான்.
இந்த ஆதரவற்ற நிலையிலே எம்பெருமானின் கிருபையைப் பெற பிரபத்தியைத் தவிர வேறொரு உபாயமில்லை.
வேறு உபாயம் எதுவும் இல்லை என்பதே இப்பதத்தின் பொருள்.

மூன்றாவது அநந்ய போக்யத்வம். பரமேகாந்திகளின் நிலையாகும் இது.
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே சிந்தனையைச் செலுத்துவதில் சந்தோஷப்படும் நிலை அது.
ஜீவாத்மாவின் ஒரே சந்தோஷம் அல்லது போக்யம் எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யமேயாகும்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் எம்பெருமானாரிடம்
“மநு ராஜ பத3 த்ரய அர்த்2 நிஷ்டா2ம் ஆத்ர அத்3யா விதர” என்று பிரார்த்திக்கிறார்.
மந்திர ராஜத்தின் பதங்களின் மகிமையை உணர்ந்த ஸ்வாமி, அந்த அர்த்தங்கள் தம் மனதிலே வழுவாமல்
நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அந்த நிஷ்டையைப் பிரார்த்திக்கிறார்.

ஸ்வாமி “அத்ர” மற்றும் “அத்ய” என்ற பதங்களின் மூலம்
அவர் வேண்டும் வரத்தின் இடத்தையும், காலத்தையும் குறிக்கிறார்.
“அத்ர” என்ற பதத்தினால் இவ்வரம் தாபத்ரயம் நிறைந்த இந்த சம்சார உலகிலேயே வழங்கப்பட வேண்டுமென்கிறார்.
“அத்ய” என்ற பதத்தினால் மீதமிருக்கும் தேக யாத்திரை முழுவதும் மனது திருமந்திரம் விளக்கும்
மூன்று தத்துவங்களிலே ஆழ்ந்து இருக்க வேண்டுமென்கிறார்.

சரணாகதி என்பது “ஸ்வ நிஷ்டை”, “உக்தி நிஷ்டை”, “ஆசார்ய நிஷ்டை”, “பாகவத நிஷ்டை” என்ற
நான்கு வகைகளைச் சேர்ந்தது. பாகவத நிஷ்டையின் உயர்வை திருமங்கையாழ்வார் “உனதடியார்க்கடிமை” என்று வழங்குகிறார்.
பாகவத ஸேஷத்வமே மந்திர ராஜமான திருமந்திரத்தின் செம்பொருள் என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்கிறார்.
ஆகையால் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பாகவத நிஷ்டையையே இந்த பாசுரத்தின் இரண்டாவது பாகத்திலே கையாளுகிறார்.
“S¢ஷ்டாக்3ரக3ண்யஜந ஸேவ்யப4வத்பதா3ப்3ஜே ஹ்ருஷ்டாऽஸ்து நித்யமநுபூ4ய மமாஸ்ய பு3த்3தி4”.

ஸ்வாமி தம்முடைய மனதை கீழ்தரமானதென்றும், மங்கள குணங்கள் இல்லததென்றும் (நீசன், நிறைவொன்றுமிலேன்)
என்று விவரிக்கிறார். அத்தகைய தம்முடைய மனது பாகவதோத்தமராகிய ஆசார்ய ஸார்வ பெளமராகிய
ஸ்வாமி இராமானுசருடைய திருவடித் தாமரைகளைப் பற்றிய சிந்தனையினால் உயர்த்தப்பட வேண்டுமென்கிறார்.
அத்திருவடித் தாமரைகளின் மேன்மையை மேலும் விவரிக்கிறார்.
கூரத்தாழ்வான், அனந்தாழ்வான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போன்ற உயர்ந்த மகான்களான் கொண்டாடப்பட்டது
அத்திருவடிகள். பாகவத நிஷ்டையினைச் சார்ந்த சரணாகதியையும் கைங்கர்யத்தையுமே ஸ்வாமி பிரார்த்திக்கிறார்.

———

அல்பாऽபி மே ந ப4வதீ3ய பதா3ப்3ஜ ப4க்தி:
Sப்3தா3தி3 போ4க ருசிரந்வஹமேத4தே ஹா
மத் பாபமேவ ஹி நிதா3நமமுஷ்ய நாந்யத்
தத்3வார யார்ய யதிராஜ! த3யைக ஸிந்தோ4!

கருணைக் கடலே! ஆசார்யர்களின் மகுடமே! உம்முடைய திருவடித் தாமரைகளிடம் எனக்கு ஆழ்ந்த பிணைப்பு இல்லை.
உம்முடைய திருவடித் தாமரைகளிடம் சிறிதளவேணும் பக்தியும் என்னிடம் இல்லை.
சம்சார பெருங்கடளிலேயுள்ள சிற்றின்பங்களிலே என் ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
என்னே பரிதாபம்! என்னுடைய பாபங்களே இதற்குக் காரணம். மற்ற எந்தவொரு காரணத்தையும்
என்னால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. ஆகையினால், என்னுடைய இந்த பாபங்களை
உம்முடைய பெருங்கருணையினாலே நீக்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.

————-

வ்ருத்த்யா பS¦ர்நர வபுஸ் த்வஹமீத்3ருஷோऽபி
SQருத்யாதி3 ஸித்3த4 நிகி2லாத்ம கு3ணாSQர யோऽயம்
இத்யாத3ரேண க்ருதிநோऽபி மித2: ப்ரவக்தும்
அத்3யாபி வஞ்சந பரோऽத்ர யதீந்த்3ர வர்தே–7-

யதிராஜா! நான் மனித உருவிலே உள்ள மிருகம். உடலால் மனிதனாகவும் (நர வபு),
செயலால் மிருகமாகவும் (பS¦ வ்ருத்தி) உள்ளவன் நான். இங்கனம் இருந்தும், நான் வேதங்களாலும்,
வேத அங்கங்களாலும் கொண்டாடப்படுகின்ற ஆத்ம குணங்களால் ஒளி விடும் உதாரணமானவன் என்று
உலகத்தோரை ஏமாற்றுகிறேன். மற்றவர்களுக்கு நான் என்னைப் பற்றி காட்டும் விதத்திலுருந்து முற்றிலும் மாறுபட்டவன் நான்.
நான் ஒரு போலி பாகவதன். இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய, தாழ்ந்த இந்த நிலையில் நான் இருக்கிறேனே, அந்தோ பரிதாபம்!

ஸ்வாமி மணவாள மாமுனிகள் “நைச்யானுசந்தானம்” என்கிற “ஸவனிகர்ஷானுசந்தானம்” என்ற நிலையில் இருக்கிறார்.
தன்னுடைய இயலாமையைச் சிந்தித்து சுய பச்சாதாப நிலையிலே இருக்கிறார்.
ஸ்வாமிகள் “ஞான ஹீந: பS¦பி: ஸமாந:” என்ற மூதுரையை நினைவு கூர்கிறார்.
தனக்கு உண்மையான ஞானம் இல்லையென்றும் (ஞான ஹீந:) அநுஷ்டானங்களிலே மிகுந்த குறையுடயவனென்றும்
(அநுஷ்டான வைகல்யம்) இறைஞ்சுகிறார். உலகத்தோர் என்னை ஸாஸ்திரங்களில் கொண்டாடப்படுகின்ற
ஆத்ம குணங்களின் பொக்கிஷம் என்று வணங்குகின்றனர். என்னே சோகம்!! பாகவதன் என்று
அழைக்கப் படுவதற்க்குக்கூட தகுதியல்லாதவன் நான்.
கருணைக் கடலே! தாயா மூர்த்தியே!! என்னை இப் பேரிடரிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.

——–

து3:கா2வஹோऽஹமநிSம் தவ து3ஷ்டசேஷ்ட:
Sப்3தா3தி3போ4க நிரதSQSரணாக3தாக்2ய:
த்வத்பாத3ப4க்த இவ S¢ஷ்ட ஜநெளக4மத்4யே
மித்2யா சராமி யதிராஜ ததோऽஸ்மி மூர்க2

யதிராஜா! நான் ஒரு வேடதாரி, போக்கிரி. பிரபந்நன் என்று அழைத்துக்கொள்கிறேன்,
ஆனாலும் ஸாஸ்திரங்களிலே தடுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதில் ஈடுபடுகிறேன்.
என்னுடைய நடத்தையினால் தங்களுக்கு மிகுந்த துக்கத்தையே உண்டாக்குகிறேன்.
பக்தியும் நேர்மையும் உள்ள உங்களுடைய சிஷ்யர்களின் கூட்டத்திலே இருப்பதற்க்குத் தகுதியில்லாதவன் நான்.
ஆனாலும் நான் தங்களுடைய ஆத்ம சிஷ்யனாக பாசாங்கு செய்கிறேன்.
இத்தகைய என் மீது தயைசெய்து கருணை கொண்டு என்னை உயர்த்த வேண்டுமென்று இறைஞ்சுகிறேன்.

இப்பாசுரத்திலும் மற்றும் வரும் இரண்டு பாசுரங்களிலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்மை
ஒழுக்கமில்லாத போக்கிரி என்று அழைத்துக்கொள்கிறார். எம்பெருமானாரின் தயையைக் கெஞ்சுகிறார்.
“நைச்யாநுசந்தானம்” என்ற மனநிலையில் ஸ்வாமிகள் இருக்கிறார்.
இந்நிலைக்கு “ஆத்ம கர்ஹணம்” அல்லது சுயபச்சாதாபம் என்றும் பெயர்.
இந்நிலையில் ஒரு பக்தன் தன்னுகைய குறைகளை யெல்லாம் எண்ணி எண்ணி
எம்பெருமானிடமும் தன்னுடைய ஆசாரியனிடமும் கருணையையும், இரக்கத்தையும் (அனுகம்பா, தயா) வேண்டுகிறான்.
ஸ்வாமி மணவாள மாமுனிகளைப் போன்ற உயர்ந்த ஆச்சார்ய புருஷர்களிடம் யாதொரு குறையும் குணக் குறைவும் இல்லை.
ஆனாலும் எம்பெருமானாரை அடைய முடியாத தங்களுடைய நிர்வேதம் என்ற இயலாமையால்
“சந்சாரி பாவம்” என்ற நிலை அவர்களுக்குப் பிறக்கிறது.

உயர்ந்த பல வைணவ ஆசாரியர்கள் நைச்சியத்துடன் தங்களுடைய குற்றங் குறைகளைக் கருத்தில் கொண்டு
எம்பெருமானின் தயையை வேண்டியிருக்கிறார்கள். ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே
“ந நிந்தி3தம் கர்ம தத3ஸ்தி லோகே ஸஹஸ்ரஷோ யந்ந மயா வ்யதா4யி” என்று பாடுகிறார்.
இங்கே முகுந்தனிடம் ஸ்வாமி ஆளவந்தார் “எம்பெருமானே! நான் பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும்
செய்யாத பாபங்கள் எதுவுமே இல்லை. அந்த எல்லா பாபங்களும் இப்பொழுது முதிர்ந்து பலனை அளிக்க தயாராயிருக்கின்றன.
பீதி நிறைந்த இந்த நம்பிக்கையில்லா சமயத்திலே தாங்களே ரக்ஷகன் என்று கதறுகிறேன்” என்று முறையிடுகிறார்.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் “ஜாநாம் அநாதி விஹிதாந் அபராத வர்காந்!
ஸ்வாமிந் பயாத் கிமபி வக்துமஹம் ந ஸக்த:” என்று பாடியுள்ளார்.
“ஸர்வேச்வரனே! அநாதி காலமாக பலப்பல பாபங்களையெல்லாம் செய்து வந்தவனாகிய நான்,
தங்களுடைய பெருமைகளை யெல்லாம் பேச வாயெழாத வண்ணம் பயத்துடன் தங்கள் முன் நிற்கிறேன்.
என்னுடைய பாப ரஸங்களால் அழுந்தப்பட்டு வெறும் ஊமையாக தங்கள் முன் நிற்கிறேன்” என்பதே இதன் பொருள்.
ஸ்வாமி தேசிகன் மற்றொரு இடத்திலே “அதர்ம ப்ரவணாநாம் அக்ரஸ்கந்த ப்ரவ்ருத்தம் அகத்தமாந விப்ரதீஸாரம் மாம்” என்று பாடியுள்ளார்.
இங்கே ஸ்வாமி தேசிகன் தம்மை குண பூர்த்தி யற்றவன் என்றும், சக ஜீவராசிகளிடம் கருணையற்றவன் என்றும் கூறிக் கொள்கிறார்.
இத்தகைய ஆத்ம கர்ஹண, அகிஞ்சந்ய நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் காட்டியுள்ளார்.
———

நித்யம் த்வஹம் பரிப4வாமி கு3ரும் ச மந்த்ரம்
தத்3தே3வதாமபி ந கிஞ்சித3ஹோ பி3பே4மி |
இத்த2ம் Sடோ2ऽப்யSட2வத் ப4வதீ3யஸங்கே4
ஹ்ருஷ்டாSQசராமி யதிராஜ ததோऽஸ்மி மூர்க2: ||

யதிராஜா! என்னுடைய ஆசார்யனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும், அந்த மந்திரத்தின் பொருளான
எம்பெருமானையும் ஒவ்வொரு நாளும் நான் நிந்தனை செய்கிறேன். இவ்வறு செய்வதில் மிகச் சிறிதளவும்
எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. என்னே பரிதாபம்! ஆசாரியனையும், அவர் உபதேசித்த மந்திரத்தையும்,
மந்திரத்தின் பொருளையும் என்றென்றும் மதிக்கும் பக்தியுள்ள உம்முடைய சிஷ்ய குழாமிடையே நான்
ஒரு உயர்ந்தவன் போன்று தைரியமாக உலவுகிறேன். உண்மையிலேயே நான் ஒரு போக்கிரி.

இந்த பாசுரத்திலும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் தன்னுடைய நைச்யாநுசந்தானம் என்கிற நிலையையே தொடர்கிறார்.
ஸ்வாமி இங்கே மூன்று விதமான இழிச்செயல்களை விவரிக்கிறார்.

முதலாவது ஆசார்யனுக்குச் செய்யும் அவமதிப்பு, நிந்தனை (ஆசார்ய பரிபாவம்).
ஆச்சார்யன் செய்த உபதேசத்தை அவமதித்தல், அலட்சியஞ்செய்தல், புறக்கணித்தல் இதில் அடங்கும்.
அதோடு தகுதியற்றவர்களுக்கு (அநாதிகாரிகள்) இந்த உபதேசத்தை வழங்குதலும் இதில் அடங்கும்.

இரண்டாவது மந்திரம் தொடர்பானது (மந்த்ர பரிபாவம்). மந்திரத்தின் பொருளை மறத்தலும்,
தவறாக அதன் பொருளைப் புரிந்துகொள்ளுதலும் இதில் அடங்கும்.

மூன்றாவது மந்திரம் விளக்கும் எம்பெருமானுக்கு இழைக்கும் நிந்தனை (தேவதா பரிபாவம்).
தம்முடைய மனது, வாக்கு, செயல் ஆகியவற்றை எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் செலுத்துதல் இதில் அடங்கும்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் தாம் இந்த மூன்று அபசாரங்களையும் புரிந்தவர் என்றும்
அந்நிலைக்கு சிறிதும் மனக் கலக்கம் அடையாமலிருப்பவர் என்றும் குறை கூறுகிறார்.

———

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச
வாசா யோஹம் சராமி ஸததம் த்ரிவிதா4பசாராந்
ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்3வதே3வ
காலம் நயாமி யதிராஜ! ததோऽஸ்மி மூர்க2:

யதிராஜா! என்னுடைய மனதாலும், வாக்காலும், உடலாலும், மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்கிறேன்.
என்னே சோகம். உங்களுக்கு துக்கத்தை விளைவிக்கக்கூடிய பலப்பல செயல்களைச் செய்கிறேன்.
இருப்பினும், தங்களுடைய திருவுள்ளத்திற்க்கு மாறாக எதையும் செய்யாதவன் போன்று நடிக்கிறேன்.
என் காலத்தை இவ்விதமாகவே செலவிடுகிறேன். உண்மையில் நான் ஒரு வெறுக்கக்கூடிய, இகழக்கூடிய போக்கிரியே.

தம்முடைய நைச்சிய நிலையைத் தொடரும் ஸ்வாமி தான் பாகவத அபசாரம், பகவத் அபசாரம், அஸஹ்யாபசாரம்
ஆகிய மூன்று குற்றங்களையும் உடையவன் என்று கூறுகிறார். எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை
நோக செய்துவிட்டதாகச் சொல்லுகிறார். இருப்பினும் எம்பெருமானார் வழிவகுத்த அத்தனை நெறிகளையும்
முறை தவறாமல் பின்பற்றுவது போல் பாசாங்கு செய்வதாக கூறுகிறார்.
இவ்வுலகிலே தாம் இவ்வறே தன்னுடைய காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்.

———–

பாபே க்ருதே யதி3 ப4வந்தி ப4யாநுதாப
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கத2ம் க4டேத
மோஹேந மே ந ப4வதீஹ ப4யாதி3லேS:
தஸ்மாத்புந: புநரக4ம் யதிராஜ! குர்வே

யதிராஜா! எவனொருவன் தான் செய்யும் பாபங்களை எண்ணித் துக்கமும், பயமும், பச்சாதாபமும் கொள்கிறானோ,
அவன் அதே பாபங்களை மீண்டும் மீண்டும் எங்கனம் செய்வான்? அனால் நானோ, நான் செய்யும் பாபங்களைப் பற்றி
சிறிதளவேணும் வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாதவனா யிருக்கிறேன்.
ஆகையினாலேயே நான் மீண்டும் மீண்டும் அப்பாபங்களைச் செய்துகொண்டே இருக்கிறேன்.

நாம் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடுவது என்பது இவ்வுலகில் இயலாத காரியம். இருந்தாலும்,
எவனொருவன் தான் செய்யும் செய்த பாபங்களை எண்ணி பயமும், வெட்கமும், வெறுப்பும் கொள்கிறானோ
அவனுக்கு பிராயச்சித்தம் உண்டு என்பது மோலோர் வாக்கு. இந்நிலைக்கு வந்தபின் குறந்த பட்சம்
அவன் தெரிந்தே அந்த பாபங்களைச் செய்யமாட்டான். ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த நிலையையே இங்கே குறிப்பிடுகிறார்.
தான் தன்னுடைய பாபங்களை எண்ணி வெட்கப்படுவதில்லை என்று குறைபடுகிறார்.
இந்நிலையிலிருந்து தம்மை மாற்ற எம்பெருமானாரின் கருணையை வேண்டுகிறார்.

தம் பாபங்களை எண்ணி வெட்கப்படவேண்டிய நிலையை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி
தம்முடைய ஸ்ரீவசனபூஷணத்தின் வியாக்கியானத்திலே ஒரு சிறு சம்பவத்தின் மூலம் விவரிக்கிறார்.
ஸ்வாமி கூரத்தாழ்வானுக்கு சேரப் பிள்ளை பிள்ளையாழ்வான் என்றொரு சிஷ்யன் இருந்தார்.
அவர் மிகுந்த அகந்தையும், செருக்கும், இறுமாப்பும் உடையவராய் பல பாகவத அபசாரங்களைச் செய்துவந்தார்.
ஸ்வாமி கூரத்தாழ்வான் அவரை ரக்ஷிக்க திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் அந்த சிஷ்யனிடம் கூரத்தாழ்வான்
தமக்கு ஒரு தானம் அள்ளிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளையாழ்வான் மிக்க ஆனந்தத்துடனும், கிளர்ச்சியுடனும்
தம்முடைய ஆசார்யன் திருவுள்ளத்தை நிறைவேற்ற ஒப்புவித்தார்.
மனத்தாலும், வாக்காலும், உடலாலும் ஒருபோதும் பாகவத அபசாரம் செய்யமாட்டேன் என்ற சத்தியத்தையே
கூரத்தாழ்வான் தன் சிஷ்யனிடம் ஒரு உதக தானமாக பெற்றுக்கொண்டார். பிள்ளையாழ்வானும் அங்கனமே நடந்துவந்தார்.
ஒருசமயம், அவர் தன்னுடைய புத்திக்குறைவால் பாகவத அபசாரத்தை செய்ய நேர்ந்தது.
தாம் செய்த பாபத்தை உணர்ந்த பிள்ளையாழ்வான், மிகுந்த வெட்கத்துடன் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்லாமலேயே இருந்தார்.
சிஷ்யனைக் காணாத கூரத்தாழ்வான், பிள்ளையாழ்வான் இல்லத்திற்குச்சென்று நடந்ததை அறிந்தார்.
தன் திருவடிகளில் விழுந்த பிள்ளையாழ்வானைக் கைக்கொண்டு கூரத்தாழ்வான் பின்வறுமாறு உப்தேசித்தார்:
“நீர் உம்முடைய பாகவதர்களுக்கு மானசீகமாகச் செய்த அபசாரத்தைப் பற்றி மனத்தால் வெட்கமும், வேதனையும்
உடையவராயிருந்தால் சர்வேஸ்வரன் அதை மன்னிப்பான். நீர் உடலால் செய்யும் குற்றங்களுக்கு
அரசன் தகுந்த தண்டனை யளிப்பான். ஆகையால் உம்முடைய சத்தியத்திலே உறுதியாக இரும்”.

————

அந்தர்ப3ஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீSம்
அந்த4: புரஸ்ஸ்தி2தமிவாஹமவீக்ஷமாண:
கந்த3ர்பவஸ்ய ஹ்ருத்3யஸ்ஸத்தம் ப4வாமி
ஹந்த! த்வத3க்3ரக3மநஸ்ய யதீந்த்ர! நார்ஹ:

யதிராஜா! தங்கள் முன் நிற்க்கவும் நான் தகுதியற்றவன். எங்கனம் பிறவிக் குருடனைப் தன் முன்னே
உள்ளவற்றை அறியும் திறன் இல்லாதிருக்கிறனோ, அங்கனம் நானும் அந்தர்யாமியாய் எல்லாவற்றின்
உள்ளும் புறமும் நிறைந்து இருக்கும் எம்பெருமானை அறியத் திறன் அற்றவனாயிருக்கிறேன்.
எப்பொழுதும் மோகத்திற்க்குக் கட்டுப் பட்டவனாய் உள்ளேன். என்னே பரிதாபம்.
தங்கள் முன் இங்கனம் நிற்க யாதொரு தகுதியுமற்று இருக்கிறேனே!

முந்தைய பாசுரத்திலே, ஸ்வாமி மணவாள மாமுனிகள் “புந: புந: அக4ம் யதிராஜ! குர்வே” என்று அருளினார்.
எல்லா கார்யங்களுக்கும் சாக்ஷியாகவும் (ஸர்வ காம சாக்ஷி) ஸ்துலமாகவும், ஸுக்ஷமமாகவும் நிறைந்து விளங்கும்
எம்பெருமானை ஸ்வாமி எங்கனம் ஏமாற்ற இயன்றது என்ற வினாவிற்க்கு மறுமொழியாகவே இந்த பாசுரம் அமைகிறது.
தம்முடைய மறுமொழியிலே ஸ்வாமி, தான் ஒரு பிறவிக் குருடனைப் போன்றவனென்றும், அதனாலேயே எங்கும் நிறை
பரம்பொருளை உணரத் தகுதியுன்றி இருப்பதாகவும் வருந்துகிறார்.
இத்தகைய தம்முடைய நிலையிலே எம்பெருமானாரின் முன் நிற்க தமக்கு என்ன தகுதியுண்டு என்று அஞ்சுகிறார்.

———–

தாபத்ரயீஜநித து3:க2நிபாதிநோऽபி தே3
ஹஸ்தி2தெள மம ருசிஸ்து ந தந்நிவ்ருத்தெள
ஏதஸ்ய காரணமஹோ! மம பாபமேவநாத!
த்வமேவ ஹர தத்3யதிராஜ! ஷீக்4ரம்

சந்யாசிகளின் அரசனே! மூன்று விதமான தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களினால் என் உடம்பு
துன்பமும், வேதனையும், நோய்களையும் அடைகிறது. என்னால் அத்துன்பங்களைத் தாங்க முடியவில்லை.
இருப்பினும், இவ்வுடலை விட்டு நீங்க எனக்கு எனக்கு எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை.
உண்மையில் நான் இந்த உடலை நன்கு பேணிப் பாதுகாக்கிறேனே! நான் குவித்து வைத்திருக்கும்
என்னற்ற பாபங்களே என்னுடைய இந்த மனநிலைக்குக் காரணம். எந்தோ பரிதாபம்! என்னுடைய பரமாசாரியனே!
தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து நான் விடுபட என் பாபங்களையெல்லாம் அகற்ற இறைஞ்சுகிறேன்.

ஆத்யாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்பனவையே தாப த்ரயங்கள்.

முதலாவதான ஆத்யாத்மிகம் என்பது நம் கைகளாலும், கால்களாலும், மற்றைய உடல் உருப்புகளாலும் உண்டாகும் துன்பங்கள்.
இது இரண்டு வகைப்படும். சரீரம் மற்றும் மானஸம். சரீரம் என்பது வியாதி எனவும், மானஸம் என்பது ஆதி எனவும் உணரப்படுகிறது.
இவையிரண்டும் சேர்ந்து ஆத்யாத்மிகம் எனப்படுகிறது.

இரண்டாவதான ஆதிபெளதிகம் என்பது விலங்குகளாலும், மனிதர்களாலும், அசுரர்களாலும் உண்டாகும் துன்பங்களாகும்.

மூன்றாவதான ஆதிதைவிகம் என்பது காற்று, மழை, குளிர் போன்ற இயற்க்கையின் சீற்றத்தினால் உண்டாகும் துன்பங்களாகும்.

இம்மூன்றையும் சேர்த்தே “தாபத்ரயீஜநித து3:க2” என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் சொல்லுகிறார்.
தாப த்ரயங்களினால் உண்டாகும் இத் துன்பங்களை எல்லாம் தாம் இன்பம் என்று எண்ணும் குற்றத்திற்க்குத்
ஆளானதாக மாமுனிகள் கூறுகிறார். இத்தகைய தம்முடைய நிலைக்குத் தன்னுடைய பாபங்களே காரணம் என்கிறார்.
இந்நிலையில், எங்கும் நிறைந்துள்ள எம்பெருமானை முற்றும் உணர்ந்த என்பெருமானாரிடம்
தன்னுடைய பாபங்களையெல்லாம் கருணையுடன் நீக்கும்படி வேண்டுகிறார்.

—————–

வாசாமகோ3சர மாஹாகு3ண தே3S¢காக்3ர்ய
கூராதி4நாத2 கதி2தாகி2ல நைச்யபாத்ரம் |
ஏஷாऽஹமேவ ந புநர்ஜக3தீத்3ருSஸ்தத்
ராமாநுஜார்ய! கருணைவ து மத்3க3திஸ்தே ||

இராமானுசா, ஆசாரியனே! இந்த உலகிலே தண்டனைக்குரிய, குற்றமுடைய, உபயோகமற்ற குணங்களை யெல்லாம்
பொருந்திய ஒருவன் நான் ஒருவனாகவே இருக்கமுடியும். என்னைத்தவிர வேறு எவரும் இதற்க்குப் பொருத்தமாகவே முடியாது.
ஆகையினாலேயே, என்னுடைய இந்த குற்றங்களிலிருந்தும், தடைகளிலிருந்தும் என்னை நீக்க
உம்முடைய கருண ஒன்றே பொருத்தமானது என்று முடிவுற்றேன். அக்கருணையால் என்னை காக்க வேண்டுகிறேன்.

மிகச்சிறந்த ஆசார்யனும், எம்பெருமானார் இராமானுசரின் தலையாய சீடருமாய கூரத்தாழ்வான்
ஸ்ரீவரதராஜஸ்தவம், ஸ்ரீவைகுந்தஸ்வம் என்ற உயர்ந்த பிரபந்தங்களிலே தம்மை இவ்வுலகிலேயே
தாழ்ந்த ஒரு பாபி என்று தாழ்த்திக்கொள்கிறார். ஒரு சுய பச்சாதாபத்தினாலேயே இவ்வாறு ஆழ்வான் கூறுகிறார்.
எம்பெருமானின் முன் உயர்ந்த நம்முடைய ஆச்சார்யர்கள் இங்கனம் சுய கண்டனத்தினால் தங்களைத் தாழ்த்திக் கொள்வது
அவர்களிடம் அத்தகைய குற்றங்கள் உள்ளன என்பதனாலன்று.
அவர்கள் அங்கனம் செய்வது நம்முடைய நன்மையை மனதிலே கொண்டே ஆகும்.
நம்முடைய பாபங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே ஆகும்.
இந்நிலையையே ஸ்வாமி மணவாள மாமுனிகளும் காட்டுகிறார்.

மாமுனிகள் “வாசாமகோசர மாஹாகுண தேS¢காக்ர்ய” என்று கூரத்தாழ்வானைக் கொண்டாடுகிறார்.
கூரத்தாழ்வானின் எண்ணற்ற மங்களகரமான கல்யாண குணங்களை நாவினால் விவரிக்க இயலாதென்று வியக்கிறார்.
மேலே கூறிய பிரபந்தங்களிலே கூரத்தாழ்வான் காட்டியுள்ள நைச்சியாநுசந்தானத்திற்க்குக் காரணம்
நம்மையெல்லாம் பாபங்களிலிருந்து விலக்க எம்பெருமானிடம் வேண்டுவதற்க்கே ஆகும்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் கூரத்தாழ்வான் காட்டியுள்ள அத்தகைய நைச்யாநுசந்தானத்திற்க்கும்
தாமே எல்லா உலகங்களிலும் பொருத்தமானவன் என்கிறார். ஆகையினால் இராமானுசரின் கருணைக்கு இலக்காக
மாமுனிகளை விட வேறு எவரும் இருக்கமுடியாது என்று தலைக்கட்டுகிறார்.
திருவரங்கத்து அமுதனாரும் இக்கருத்தையே “நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின்கண் அன்றிப்
புகல் ஒன்றுமில்லை, அருட்க்கும் அஃதேபுகல்” என்ற இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலே அருளிச் செய்கிறார்.

———-

S¦த்3தா4த்ம யாமுநகு3ரூத்தம கூரநாத2 ப4ட்டாக்2ய
தே3S¢கவரோக்த ஸமஸ்தநைச்யம் |
அத்3யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத்3யதீந்த்3ர கருணைவ து மத்3க3திஸ்தே

இராமானுசா! உயர்ந்த உத்தமமான ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர்
போன்றோர் வெளிப்படுத்திய சுய கண்டன உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக நான்
சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், யதிராசனே! உம்முடைய கருணைக்கு நானே பொருத்தமானவன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் இந்த பாசுரத்திலும் நைச்சிய பாவத்தையே தொடர்கிறார்.
எம்பெருமானாரின் கருணைக்குத் தம்மை விட சிறந்த தகுதியானவன் இருக்கவே முடியாது என்று அறுதியிடுகிறார்.
மாமுனிகள் இங்கே குறிப்பிடும் உயர்ந்த ஆசார்யர்கள் அனைவரையும் சுத்த ஆத்மாக்கள் என்றும்,
குற்றமற்றவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். அர்ச்சா மூர்த்தியாகத் திருவரங்கத்திலும், காஞ்சியிலும்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் கருணையை வேண்டியே தங்களை பாபிகள் என்று கூறியுள்ளனர்.

ஸ்வாமி ஆளவந்தார் தம்முடைய ஸ்தோத்ர ரத்னத்திலே தாம் உபயோகமற்றவன் என்று இரண்டு ஸ்லோகங்களிலே விவரிக்கிறார்.
“ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே (23)” மற்றும் “அமர்யாத: க்ஷூத்ர: (62)” ஆகிய ஸ்லோகங்களில்
ஸ்வாமி ஆளவந்தார் தம்மை சாஸ்திரங்களினால் புறக்கணிக்கப்பட்ட, இகழக்கூடிய, வெறுக்கக்கூடிய
எல்லா பாபங்களையும் செய்தவன் என்றும், அகந்தையுள்ளவனென்றும், தாழ்ந்தவனென்றும் கூறிக் கொள்ளுகிறார்.
அவர் இவ்வாறு கூறுவதற்க்குக் காரணம் நம் போன்றவர்களை யெல்லாம் தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டு
எம்பெருமானிடம் அவன் கருணையைப் பெருவதற்க்காகவேயாம்.

கூரத்தாழ்வான் மேலே கூறியது போலே தாப த்ரயங்களினால் பலப்பல குற்றங்களைச் செய்தவன் தான் என்று கூறுகிறார்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் அதே பாவனையை இங்கே வெளிப்படுத்துகிறார்.
இத்தகைய பாவனையையே பராசர பட்டரும் அரங்கநாதனிடம் வெளிப்படுத்துகிறார்.

ஸ்வாமி தேசிகன் தம்முடைய நைச்யாநுசந்தான நிலையை பலப்பல ஸ்லோகங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
திருவஹீந்திபுரம் தேவநாதப் பெருமாளுடன் நெஞ்சுருக்கும் தம்முடைய சம்பாஷணையிலே ஸ்வாமி தேசிகன்
தன்னுடைய குறைகளினால் பச்சாதாபம் கொண்டு தம்மை தாழ்திக்கொள்கிறார்.
இந்த ஸ்லோகங்கள் அவருடைய மன நிலையைக் குறிக்கின்றனவே யன்றி
அவருக்கு குற்றமேதும் இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தேவநாதனே! சாஸ்திரங்களின் உண்மையான பொருளை அறியாத அங்ஞானக் கடல் உண்மையில் நான் ஒருவனே ஆகும்.
பாபங்களையே செய்வது என்று சபதம் எடுத்துக்கொண்டுள்ளவர்களில் முதன்மையாக நான் நிற்கிறேன்.
உன்னுடைய கட்டளைகளையெல்லாம் வரம்பு மீறுவதிலும் நானே முதன்மையானவன்.
இப்படி உதவியற்ற நிலையில் இருக்கும் நானே உன்னுடைய கருணைக்கு மிகவும் தகுதியுடையவன்.
எல்லாம் அறிந்த ஸர்வ ஞானஸ்தனாகிய நீ உன்னுடைய கருணைக்கு என்னைத் தவிர வேறு ஒருவரை எவ்வாறு கருதலாம்?

மற்றொரு இடத்திலே ஸ்வாமி தேசிகன் தன்னை அபராத சக்ரவர்த்தி என்று கூறிக்கொண்டு
எம்பெருமானின் கருணையை இறஞ்சுகிறார்.
———

Sப்3தா3தி3போ4க3விஷயா ருசிரஸ்மதீ3யா
நஷ்டா ப4வத்விஹ ப4வத்3த3யயா யதீந்த்3ர |
த்வத்3தா3ஸதா3ஸக3ணநா சரமாவதெள4
ய: தத்3தா3ஸதைகரஸதாऽவிரதா மமாஸ்து ||

யதிராசனே! என் சரீர சம்பந்தத்தினால் கிடைக்கும் சிற்றின்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற
ஆசையைத் துறக்க அருள் புரியவேண்டுகிறேன். பிற்காலத்தில் துன்பத்தையே உண்டாக்கும்
அந்த சிற்றின்பங்களின் மேல் உள்ள விருப்பத்தை சுவையை உம்முடைய தயையால் அகற்ற வேண்டுகிறேன்.
உம்முடைய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராய் என்றென்றும் நீடித்து இருக்கக்கூடிய
நிலையை வழங்க வேண்டுகிறேன். உமக்கு சமர்ப்பிக்க என்னிடம் எதுவுமேயில்லை.
உம்முடைய நிர்ஹேதுக கருணையையே என்னை இரட்சிக்க வேண்டும்.

————-

SQருத்யக்3ரவேத்3ய நிஜ தி3வ்ய கு3ண ஸ்வரூப:
ப்ரத்யக்ஷ தாமுபக3தஸ்த்விஹ ரங்க3ராஜ:
வSQயஸ்ஸதா3 ப4வதி தே யதிராஜ!
தஸ்மாத் Sக்த்ஸ்ஸ்வகியஜந பாப விமோசநே தவம் ||

யதிராசனே! ஸ்ரீரங்கநாதன் உலகத்தோர் எல்லோருடைய சந்தோஷத்திற்க்காக ஸ்ரீரங்கத்திலே ஸேவை ஸாதிக்கிறான்.
வேதங்களினால் பிரகடணப்படுத்தப் பட்டுள்ள அர்த்தங்களாலேயே நம்மால் அவனுடைய கல்யாண குணங்களை
புரிந்து கொள்ள முடியும். நிகரில்லாத சக்தியையும், புகழையும் உடைய அந்த அரங்கநாதனே உமக்கு கட்டுப்பட்டு இருக்கிறான்.
ஆகையால், ஆசார்ய ஸார்வபெளமா! நீரே என்னுடைய துன்பங்களைப் போக்க வல்லவர்.

அரங்கநாதன் ஸ்வாமி இரமானுசருடைய செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவன் என்பது உலகறிந்த உண்மை.
இவ்வுண்மையை மாமுனிகள் எம்பெருமானாருக்கு நினைவு கூர்கிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் மேலே
விளக்கிய பல பாசுரங்களில் எம்பெருமானின் கருணையைவிட எம்பெருமானாரின் கருணையையே வேண்டுகிறார்.
இதற்கு மறுபடியாக ஸ்வாமி இராமானுசர் திருவரங்கத்து அரங்கநாதனே மாமுனிகளின் துன்பங்களைப் போக்கி
அவர் வேண்டும் வரங்களை அளிக்க வல்லவன், தான் அல்லன் என்று கூறுவதாகக் கொண்டு,
அதற்கு இப்பாசுரத்திலே விளக்கம் அளிக்கிறார். அரங்கநாதனிடம் வேண்டாமல் ஸ்வாமி இராமானுசரிடம்
வேண்டுவது பொருத்தமற்ற செயல் என்று தோன்றுவார்க்காக இப்பாசுரத்தை மாமுனிகள் வழங்குகிறார்.
ஸ்வாமி இராமானுசருக்கும் அரங்கநாதனுக்கும் இடையே சரணாகதி கத்யத்திலே நடந்த உரையாடலை
இப்பாசுரத்திலே மாமுனிகள் நினைவு கூர்கிறார்.

மேலும், அரங்கநாதன் எம்பெருமானாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் என்பது
ஒரு சிறு சம்பவத்தால் விளக்கப் படுகிறது. ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவ சலவையாளன் ஒருவன்
அரங்கநாதனின் பரிவட்டங்களை மிகச் சுத்தமாகத் தோய்த்து நல்லவண்ணம் மடித்து ஸ்வாமி இராமானுசரிடம் சமர்பித்தான்.
சலவையாளனின் இந்த கைங்கர்யத்தினால் திருவுள்ளத்திலே மிக்க சந்தோஷம் கொண்ட ஸ்வாமி இராமானுசர்
அந்த சலவையாளனை அரங்கநாதனின் சன்னிதிக்கு அழைத்துச் சென்று
அவனுக்கு அனுக்ரகம் செய்தருள அரங்கநாதனிடம் வேண்டினார். அரங்கநாதனும் அவ்வண்ணமே இசைந்து
தம் திருக்கண்கள் மலர்ந்து ஆசார்யன் விண்ணப்பப்படியே அந்த சலவையாளனை அனுக்ரகித்தார்.
அப்பொழுது அரங்கநாதன் எம்பெருமானாரிடம் அந்த சலவையாளன் தாம் கிருஷ்ணாவதாரத்திலே எழுந்தருளியிருந்த
போது தமக்குச் செய்த அபசாரத்தையும் மன்னித்துவிட்டதாகத் திருவாக்கு அருளினார்.
கிருஷ்ணாவதாரத்தின் போது அந்த சலவையாளன் கம்ஸனுடைய சபையிலே பணியாற்றியவன்.
ஒரு சமயம் மதுராவிலே கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் அவர்களுடைய பரிவட்டங்களைக் கொடுக்க மறுத்தவன்.
அத்தகையவனையும் எம்பெருமானனருடைய விண்ணப்பத்தினால் அரங்கநாதன் அனுக்ரகித்தது
ஸ்வாமி இராமானுசரிடம் அரங்கநாதனுக்கு உள்ள மேன்மையான பந்தத்தையே விளக்குகிறது.
இந்த சம்பந்தத்தையே ஸ்வாமி மணவாள மாமுனிகள் இங்கே குறிப்பிடுகிறார்.
இத்தகைய உயர்ந்த சம்பந்தம் உடையவராதலால் ஸ்வாமி இராமானுசரே
மாமுனிகளின் துன்பங்களைப் போக்க வல்லவர் எனத் தலைக் கட்டுகிறார்-

———

காலத்ரயேऽபி கரணத்ரய நிர்மிதாதி
பாபக்ரியஸ்ய Sரணம் ப4க3வத்ஷமைவ |
ஸா ச த்வயைவ கமலாரமணேऽர்தி2தா யத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்3ர! ப4வச்ச்2ரிதாநாம் ||

ஸ்வாமி இராமானுசா! மனத்தாலும், உடலாலும், வாக்காலும் கணக்கற்ற பாபங்களைப் புரிந்த ஒருவனுக்கு
திருவரங்கத்திலே எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன் ஒருவனே முக்காலத்திலும் புகலிடம். உண்மையில்,
அரங்கநாதனிடம் பங்குனி உத்திர நன்நாளிலே சரணாகதி கத்யம் மூலம் தாங்கள் செய்த பிரார்த்தனையே
எங்களுடைய பாதுகாப்பாகும். அதுவே எங்களுடைய ஒரே அரண்.

எம்பெருமானார் சரணாகதி கத்யத்திலே அரங்கநாதனிடம் செய்த பிரார்த்தனையையும்,
அதற்கு அரங்கநாதனின் மறுபடியையும் இங்கே ஸ்வாமி மணவாள மாமுனிகள் நினைவு கூர்கிறார்.
அரங்கநாதன் ஸ்வாமி இராமானுசரின் சரணாகதியை ஏற்று எம்பெருமானார் மட்டுமின்றி
எம்பெருமானாரின் சம்பந்தம் உடைய எல்லோரும் தன்னுடைய கருணைக்குப் பாத்திரமானவர்கள் என்று அறுதியிட்டான்.
இந்த சம்பந்த வரத்தையே மாமுனிகள் இங்கே வேண்டுகிறார்.
ஆசார்ய இராமானுச சம்பந்தம் நம்முடைய பெரும் அதிருஷ்டமே ஆகும்.

———-

ஸ்ரீமந்! யதீந்த்3ர! தவ தி3வ்யபதா3ப்3ஜஸேவாம்
ஸ்ரீஸைலநாத2 கருணாபரிணாமத3த்தாம்
தாமந்வஹம் மம விவர்த4ய நாத2!
தஸ்யா: காமம் விருத்3த4மகி2லம் ச நிவர்தய த்வம்

இராமானுசா! எம்பெருமானாரே! தங்களுடைய திருவடித் தாமரைகளின் தரிசனத்தை நாள் தோறும் பெற அருளவேண்டும்.
அந்த பாக்கியம் எனக்கு என்னுடைய ஆசாரியரான திருவாய்மொழிப் பிள்ளையின் அருளால் எனக்குக் கிட்டியது.
என் ஆசாரியருக்கு என்மேல் உள்ள அபார காருண்யத்தினாலேயே எனக்கு அந்த பாக்கியம் கிட்டியது.
தங்களுடைய திருவடி தரிசன பாக்கியத்திற்க்குத் தடையாக இருக்கும் யாதொறு ஆசையையும் விலக்க வேண்டுகிறேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் தம்முடைய ஆசாரியரான திருவாய் மொழிப் பிள்ளையின் (ஸ்ரீஸைல நாதர்)
விண்ணப்பத்தினாலேயே யதிராஜ விம்ஸதியை அருளிச்செய்தார்.
அந்த காரணத்தினாலேயே ஸ்வாமி இராமானுசரின் திருவடி தரிசனம் கிட்டியதாகவும்,
அந்த பாக்கியும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார்.

——

விஜ்ஞாபநம் யதி3த3மத்3ய து மாமகீநம்
அங்கீ3குருஷ்வ யதிராஜ! த3யாம்பு3ராஷே |
அஜ்ஞோऽயமாத்ம கு3ணலேS விவர்ஜிதSQச
தஸ்மாத3நந்யSரணோ ப4வதீதி மத்வா ||

யதிராசனே! கருணைக் கடலே! நான் தத்வம், ஹிதம், புருஷார்த்தம் போன்ற உயர்ந்த உண்மைகளை அறியாதவன் என்றும்,
எவ்விதமான ஆத்ம குணங்களும் அற்றவன் என்றும் உணர்ந்து கொள்ளுங்கள். தேவரீருடைய கருணையையும்,
இரக்ஷகத்தையும் வேண்டும் என்னுடைய பிரார்த்தனையை ஏற்று அருள் புரிய வேண்டுகிறேன்.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் மூன்றாவது பாசுரமான (வாசா யதீந்த்3ர! மநஸா வபுஷா ச யுஷ்மத்) என்ற
பாசுரத்திலே தொடங்கி இதற்கு முந்தைய பாசுரம் வரை எம்பெருமானாரிடம் பல பிரார்தனைகளையும்,
விண்ணப்பங்களையும் செய்கிறார். இந்தக் கடைசிப் பாசுரத்திலே அந்தப் பிரார்த்தனைகளை யெல்லாம்
ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டுமென்று ஸ்வாமி இராமானுசரிடம் இறைஞ்சி
ஸ்ரீ யதிராஜ விம்ஸதியைத் தலைக் கட்டுகிறார்.

—————————————-

இதி யதி குலதுர்ய மேதமாநை –ஸ்ருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷ யந்தம்
வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம் –

செவிக்கு இனிய செஞ்சொற் களான எம்பெருமானாரைத் ஸ்துதித்து மகிழ்ந்த திரு உள்ளம் யுடையவரான மா முனிகளையே
சிந்தனை செய்யும் என்மனதானது ஒப்பில்லாத தெளிவு பெற்று விளங்குகிறது –

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-