Archive for March, 2024

ஸ்ரீ ஓங்கி உலகு அளந்த உத்தமன் -ஸ்ரீ அருளிச் செயல்களில் அனுபவம்

March 31, 2024

சிறியன் என்று என்னிளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலிடைச் சென்று கேள்–சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்-1-4-8-

இவனுடைய பால்யத்தினுடைய விசேஷத்தை –
வாமனனாய் சென்று –
தன்னை வசீகரித்து –
மூவடி -என்று இரந்து-
இரண்டு அடியாலே ஜகத்தை அடைய வளந்து –
ஓரடிக்கு தன்னை சிறையிலே வைக்கப் பட்ட மஹா பலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் –

சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்-இப்படி இருக்கிறவன் விஷயத்தில் சிறுமையை நினைத்த இது –
நமக்கு அபராதம் என்று புத்தி பண்ணுவுதியாகில்-
அப்போது நீயும் அவன் திறத்தில் -அடிமைக்கு ப்ராப்தன் காண் –

—-

தரணி தலைமுழுதும் தாரகையின் உலகும் தடவியதன் புறமும் விம்ம வளர்ந்தவனே--1-5-3-

பூதலம் அடங்கலும் நஷத்திர லோகமும் நிலா தென்றல் போலே திரு வடிகளால் ஸ்பர்சித்து-
அதுக்கு புறம்புள்ள தேசம் எங்கும் ஒக்க பரி பூரணனாம் படி வளர்ந்தவனே –
இத்தால் ஆஸ்ரிதனான இந்த்ரன் உடைய அபேஷித சம்விதானம் தலைக் கட்டுகைகாக செய்த வியாபாரம் சொல்லிற்று –

———–

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்ச வச்சோ–1-8-7-

ஒவ்தார்யத்தாலே மிகவும் பெரிய புகழை உடையனான மகாபலி
யக்ஜவாடத்திலே இந்திரனுக்காக வாமன வேஷத்தைக் கொண்டு –
சென்று –

கொள்வன் நான்  மாவலி மூவடி தா -(திருவாய் -3-8-)-என்ன –
புலன் கொள் மாணாய்-என்கிறபடியே
சர்வேந்த்ரிய அபஹார ஷமமான இவனுடைய வடிவு அழகாலும்
அனந்விதமாக சொன்ன -முக்தோக்தியாலும்
மகாபலி அபஹ்ருத சித்தனாய்
இவன் அபேஷித்து கொடுப்பதாக  உத்யோக்கிற அளவில் –

குருவான சுக்ரன் –
இவன் வடிவும் வரத்தும் -சொன்ன வார்த்தையும் -அதி மானுஷமாய் இருக்கையாலே நிரூபித்து –
இவன் சர்வேஸ்வரன் -தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வ ஸ்வத்தையும் அபஹரிக்க வந்தான் –
ஆன பின்பு நீ தானம் பண்ணுகிற இது  தகுதி அன்று -என்று
தானத்தை நிரோதிக்க-

அவன் அது கேளாதே
உதகம் பண்ணப் புகுந்த அளவில் –
உதக பாத்திர த்வாரத்திலே சுக்ரன் ப்ரேவேசித்து உதகம் விழாதபடி தகைய –
அந்த த்வார சோதனம் பண்ணுவாரைப் போலே –
திருக் கையில் திருப் பவித்ரத்தின் உடைய அக்ரத்தாலே
அவன் கண்ணைக் கலக்கின திரு ஆழியைக் கையில் உடையவனே –

துரும்பால் கிளறிய சக்கரக் கையன் -என்கையாலே
அந்த பவித்ராக்ரமாய் புகுந்து அவன் கண்ணை கலக்கிற்று –
கருதும் இடம் பொரும் திரு ஆழி -என்று தோற்றுகிறது-

சங்கம் இடத்தானே
ஒரு காலும் திரு ஆழிக்கும் ஸ்ரீ பாஞ்ச சந்யத்துக்கும் பிரிவு இல்லை இறே –
ஆகையால் அவன் வலம் கையிலே தோன்றும் போது-
இவன் இடம் கையிலே தோன்றும் படியாய் இறே இருப்பது –

————

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே அச்ச வச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

திருக் கையில் உதகம் விழுந்த அநந்தரம்-திருவடிகளை வளர்த்து அளக்கப் புக்கவாறே –
இத்தைக் கண்ட மகாபலி புத்ரனான -நமுசி ஓடி வந்து –
இது என் -என்று வளருகிற திருவடிகளை தகைய –

நீ தகைகிறது என் -நான் உதகம் ஏற்றது அளந்து கொள்ள வேண்டாவோ -என்ன –
நீ க்ரித்ரிமம் என்பான் என் -என்னுடைய பிரமச்சரிய வேஷத்தையும் -அர்த்திவத்தையும் -கண்டு
உன்னுடைய பிதா -உதக தானம் பண்ணிப் போந்தது பொய்யோ -என்ன –

என்னுடைய பிதாவானவன் உன்னுடைய வஞ்சகத்தில் அகப்பட்டு உன்னுடையபடி ஒன்றும் அறிந்திலேன் -என்ன –
நான் செய்தது வஞ்சனம் என்று நீ சொல்கிறது என் கொண்டு -என்ன –

வஞ்சனம் அன்றாகில் நீ முற்பட்ட வடிவை கொண்டு அளவாய் -என்ன –
முன்னைய வண்ணம் கூடுமோ -விகாரியான சரீரம் அன்றோ -என்ற அளவிலும் –
தான் பிடித்த நிலை விடாதே நின்ற நமுசியை ஆகாயத்திலே சுழற்றி எறிந்து விட்ட
உஜ்ஜ்வலமான திரு அபிஷேகத்தை உடையவனே –

திரு உலகு அளந்த வ்ருத்தாந்த்தாலே சேதனருடைய
அந்ய சேஷத்வ
ஸ்வ ஸ்வாதந்த்ர்யங்களை அறுத்த பின்பு ஆய்த்து
சேஷித்வ பிரகாசமான திரு அபிஷேகம் ஒளி பெற்றது –

வேம்கடம் இத்யாதி –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திரு வேம்கட மா மலை -(திருவாய் -3-3-)-என்னும்படி –
அந்த வாமன அவதார சேஷ்டிதம் அடைய தோன்ற
திருமலைக்கு நிர்வாகனாய் நிற்கிறவனே-அச்சோ அச்சோ –

————

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த முன்னிவ்வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினை–2-5-9-

புலன் கொள் மாணய்-(திருவாய் -1-8-)-என்கிறபடியே –
சர்வேந்திரிய அபஹார ஷமமானவாமன ரூபமும் –
பொங்கு இலங்கு புரி நூலும் -இத்யாதிப் படியே
அவ் அழகுக்கு மேலே கிளர்ந்து விளங்கா நின்றுள்ள யக்ஜோபவீதமும்
க்ருஷ்ணாஜினமும் மூஞ்சியுமான விநீத வேஷமும் கொண்டு –
மகா பலி யக்ஜா வாடத்திலே-
வல்லார் ஆடினாப் போலே பதறி நடந்து சென்று நின்ற நிலையும்

கொள்வான் நான் -இத்யாதிப் படியே சொன்ன –
முக்த ஜல்பத்தையும் கண்டு
அசுர ராஜனான மகா பலி யினுடைய ஸ்திரீகள் ஆனவர்கள் ப்ரீதைகள் ஆம்படி
முந்துற நின்று அர்த்தித்து
கையிலே நீர் விழுந்த சமந்தரம்-
முன்பே தன்னதாய் இருக்கிற  இந்த லோகத்தை எல்லாம்
இப்போது அபூர்வமாக பெற்றால் போலே அளந்து கொண்டவனுடைய

பொன்னின் முடியினை -அழகிய திரு முடியை–திருவிக்ரமன் -சொல்லி முடி -இவனே சர்வேஸ்வரன் –நிவந்த நீள் முடியன் -திருப்பாண் ஆழ்வார்

———-

வருக வருக வருக விங்கே வாமன நம்பீ வருக விங்கே கரிய குழல் செய்யவே முகத்துக் காகுத்த நம்பீ வருக விங்கே-2-9-2

குறள் பிரமச்சாரியாய் கொண்டு -அபிமதம் பெற்று பூரணன் ஆனவனே–அவன் கடுக வருகைக்காக பல காலும் சொல்லுகிறாள் –
இப்படி அழைத்த இடத்திலும் வாராமையாலே –

வாமன நம்பீ வருக இங்கே –
நீ வாமன நம்பீ அன்றோ –
ஆஸ்ரித ரஷணம் செய்யும் குண பூர்த்தியை உடைய நீ இங்கே வாராய் -என்கிறாள் –
அவ்வளவிலும் வாராமையாலே –

கரிய இத்யாதி –
கறுத்த திருக் குழலையும் –
சிவந்த திருப் பவளத்தையும் –
உபமான ரஹிதமாய் கொண்டு இரண்டுக்கும் நடுவே விளங்கா நின்ற திரு முகத்தை உடையவனாய் –
மாதா பிதாக்கள் சொல்லிற்று செய்யும் குண பூர்த்தியை உடைய காகுத்தன் அன்றோ நீ –

——————-

மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த விம் மண்ணினை ஓரடியிட்டு
இரண்டாமடி தன்னிலே தாவடியிட்டானால் இன்று முற்றம் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7-

மாவலி வேள்வியில்
இந்திரனுடைய ஐஸ்வர்யத்தை பலத்தாலே அபகரித்து கொண்டு –
கோவாகிய மாவலி -(9-8-)என்கிறபடியே
தன்னரசாய் -அழிக்க ஒண்ணாதபடி -ஒவ்தார்யம் என்பதொரு குணத்தை
உடையனாய் இருந்த மகா பலியினுடைய யாகத்திலே

மாண் உருவாய் சென்று –
கள்ளக் குறளாய்-(திருமொழி) -என்றபடியே
அவனை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணுகைக்காக வாமன வேஷத்தை கொண்டு
வடிவு அழகாலும் -நடை அழகாலும் -(உருவாய் சென்று-இரண்டுக்கும் வியாக்யானம்)
அவனை அபர்ஹசித்தனாய் தான் சொன்னது மாறாமல் செய்யும்படி சென்று

மூவடி தா என்று இறந்த இம் மண்ணினை
அவன் சடக்கென இசைந்து தருகைக்காகவும் –
பின்பு ஓரடிக்கு அவனை சிறை வைக்காகவும் –
என் காலாலே மூவடி தா – என்று இரந்து பெற்ற இப்பூமியை

மண் என்கிற இது
மற்ற லோகங்களுக்கு எல்லாம் உப லஷணம்

ஓரடி இத்யாதி –
அளக்கிற அளவிலே பூமிப் பரப்பு அடங்கலும் தனக்குள்ளே ஆம்படி
ஓரடி இட்டு இரண்டாம் படி தன்னிலே

தாவடி இத்யாதி –
ஊர்த்த லோகங்கள் அடங்கலும் தனக்கு உள்ளே ஆம்படி
தாவி -அடி -இட்டவனாலே இன்று முடிவுதோம்
(தாவி அன்று உலகம் எல்லாம் -திருமாலை )

தாரணி இத்யாதி
திருவடிகளின் மார்த்தவம் பாராதே ஓர் ஆஸ்ரிதனுக்காக
இப்படி லோகத்தை அளந்தவனாலே இன்று முடிவுதோம்

இத்தால் –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரித ரஷணம் செய்யும் அவன்
எங்கள் அபேஷிதம் செய்யாதே  ஈடுபடுத்தா நின்றான் –
ஆன பின்பு அவனாலே நாங்கள் முடிவுதோம் -என்கை

————-

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை 
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான் 
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

மூன்றடி நிமிர்த்து
இப் ப்ரணவம் தான் –
ஒமித் யக்ரே வ்யாஹரேத்-என்கிறபடியே –
பதத் த்ரயாத்மகமான திருமந்த்ரத்தில் பிரதம பதம் ஆகையாலே –
இத்தோடு கூட –
மேல் இரண்டு பதத்தையும் கூட்டி
மூன்று பதமாக வளர்த்து

மூன்றினில் தோன்றி –
அம் மூன்று பதத்திலும் ஆத்மாவினுடைய
அனந்யார்ஹ சேஷத்வம்
அநந்ய சரணத்வம்
அநந்ய போக்யத்வம் –
ஆகிய ஆகார த்ரயத்தையும் தோன்றுவித்து –

தோன்றி -என்றது
தோன்றுவித்து -என்றபடி

மூன்றினில் மூன்று உரு ஆனான்
பத த்ரய ப்ரதிபாத்யனான சேதனனுடைய ஆகார த்ரயத்தையும் விஷயமாக –
தத் பிரதி சம்பந்தி தயா
தானும்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் ஆகிற  ஆகார த்ரயத்தையும் உடையவன் ஆனான்

இம் மந்த்ரத்தை -பத த்ரயாத்மகமாய்
சேதனனுடைய ஆகார த்ரயத்தையும் –
தன்னுடைய ஆகார த்ரயத்தையும் –
பிரதிபாதிக்கும் படி –
அவன் அடியிலே உண்டாக்கி வைத்தான்
ஈஸ்வரன் ஆகையாலே
இவை எல்லாவற்றையும் அவன் செயலாக அருளிச் செய்கிறார்

———

குறள் பிரமசாரியாய்  மாவலியை குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த வெம்மான் கோயில்
எறிப்புடைய மணி வரைமேல் இள நாயிறு எழுந்தால் போல் அரவணையின் வாய்ச்
சிறப்புடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே -4 9-7 –

ஸ்ரீ வாமனனாய் மாவலியை குறும்பதக்கி-ராஜ்யத்தை வாங்கி -அவனை
பாதாளத்திலே வைத்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் —

குறள் பிரமசாரியாய்-
வாமன பிரமசாரியாய்

குறள்-
கோடியை காணி ஆக்கினால் போலே –
பெரிய வடிவை கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சுருக்கினபடி –

சேர்ப்பால் சுருங்கினதனையும் ரசிக்குமா போலே –
வடிவும் சுருங்கினதனைத்தும் ரசவாஹமாய் இருக்கும் ஆய்த்து –
புலம் கொள் மாணாய் -என்றார் இறே ஆழ்வார்
இவ் வடிவு அழகாலே இறே -மகா பலியை வசீகரித்தது –

பிரமசாரியாய் –
அதுக்கு மேலே ஒரு வசீகர சாதனம் இறே இது –
பொங்கு இலங்கு புரி நூலும் தோளும் தாழ -என்கிறபடியே
யக்ஜோபவீதமும் க்ர்ஷ்ணாஜினமும் மூஞ்சியுமான விநீத வேஷம்

இந்த்ரன்  -என்னுடைய ராஜ்யத்தை இழந்தேன் -அத்தை மீட்டு தர வேணும் என்று
கண்ணும் கண்ணீருமாய் வந்து சரணம் புகுந்து நின்றான்

பிரபலனாய் இருப்பான் ஒருவன் ராஜ்யத்தை பறித்து கொண்டான் –
ராவணாதிகளை போலே அழிய செய்யப் போகாதது ஆய்த்து –
ஒவ்தார்யம் என்ற ஒரு குண லேசத்தை ஏறிட்டுக் கொண்டு இருக்கையாலே –
இனி இரண்டுக்கும் அவிருத்தமாக  செய்வது என் – என்று பார்த்து –

அவன் கொடுக்க உகந்து இருக்குமாகில் –
நாம் சென்று இரக்கக் கடவோம் -என்று இறே
இரப்பில் தகண் ஏறின பிரமசாரியாய்   ஆய்த்து –

மாவலியை –
கோவாகிய மாவலியை ( 9-8 ) -என்றபடி
சர்வேஸ்வரன் இந்தரனுக்கு கொடுத்த திரை லோக்ய
ஐஸ்வர்யத்தை பலத்தாலே பறித்துக் கொண்டு –
ஒருத்தர் கீழ் அடங்காமல் தன்னரசாய் இருந்த மகாபலியை

குறும்பதக்கி
கள்ளர் பள்ளிகள் சாதுக்களுடைய ஸ்வத்தை அடித்து தங்களது ஆக்கிக் கொண்டு
ஒருத்தர் கீழ் அடங்காமல்  -இருக்குமா போலே பரஸ்வாப அபஹாரத்தை பண்ணி அதில்
ஒரு பயம் அற்று -தன் உடைமையை தான் ஜீவிக்குமா போலே ஜீவித்து இருந்த
குறும்பை அடக்கி செருக்கை வாட்டி –

அரசு வாங்கி –
கீழ் சொன்ன வடிவு அழகையும் –
விநீத வேஷத்தையும் முன்னிட்டுக் கொடு சென்று அவனை சித்த அபஹாரம் பண்ணி –

கொள்வன் –நான் –மாவலி –மூவடி –தா –என்று சில அனந்வித பாஷனங்களைப் பண்ணி –
இந்த மௌக்யத்தாலும் அவன் நெஞ்சை இளகப் பண்ணி –
சுக்ராதிகள் -இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் –
உன் சர்வச்வத்தையும் அபஹரிக்க வந்தான் – என்று சொல்லுகிற வார்த்தையும்
அவன் செவியில்  படாமல் -உதகம் பண்ணி தரும்படி யாக்கி –

பொற்கையில் நீர் ஏற்று -என்கிறபடியே
கொடுத்து வளர்ந்த பொலிவை உடைத்தான கையிலே உதகத்தை ஏற்று –
இந்த்ரன் தன் ராஜ்யத்தை அவன் பக்கல்  நின்றும் வாங்கி

இறைப் பொழுதில் –
இதுதான் செய்கிற அளவில் காலதைர்க்யம் அன்றிக்கே அல்ப காலத்திலேயே செய்து

பாதாளம் கலவிருக்கை கொடுத்து –
மூன்றடி என்று வாங்கி இரண்டடியாலே சர்வ லோகத்தையும் அளந்து கொண்டு
ஒன்றும் தருக என மாவலியை சிறையில் வைத்த (பெரிய திருமொழி -3-4 )-என்கிறபடியே
மற்ற ஓரடியும் தரும் அளவும்
சிறை வைப்பாரைப் போலே பாதாளத்தை அவனுக்கு இருப்பிடம் ஆக்கி –
பாதாளத்தே தள்ளி –

கலவிருக்கை கொடுத்து -என்றது
அவ்விருப்பு சிறை இருப்பாக அன்றிக்கே –
போக பூமியாக கொடுத்த இடம் பற்ற –

கலவிருக்கை யாவது –
நெஞ்சு கலந்திருக்கும் இருப்பு இறே
கலவிருக்கையாக கொடுத்தது -என்றபடி

உகந்த
இவனுக்கு இவ் விருப்பை கொடுத்து –
இந்தரனுக்கு அவன் இழந்த ராஜ்யத்தை கொடுத்து –
சரணாகதன்  அவன் இழவு தீரப் பெற்றோம் -என்று ப்ரீதன் ஆனான்

——————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்–3-

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

அஷ்டாக்ஷரம் -மார்கழி
த்வயம் வையத்து –
சரம ஸ்லோகம் ஓங்கி
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –

மகாபலி அதமன்–
இந்த்ரன் மத்யமன்–
இவன் அழிய மாறி உத்தமன்

அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –

ஜகத் ரஷண அர்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஆர்த்த ரஷணம் பண்ணப் பெறாமையாலே-
பனிப்பட்டு சாய்ந்த மூங்கில் போலேயாய் அது ஆதித்ய கிரணம் பட்டு கிளம்புமா போலே-
மகா பலியாலே நோவு பட்ட தேவர்கள் ஆர்த்த த்வனி கேட்ட பின்பு பேர்ந்து வளர்ந்தபடி –
பிறர் கார்யம் செய்யப் பெருகையால் வளர்ந்தபடி -என்னவுமாம் –
உவந்த உள்ளத்தனாய் –என்னக் கடவது இறே

உலகு அளந்த-
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி –
வ்யாப்தியில் வரைதல் இல்லாதாப் போல் ஆய்த்து இதுவும்-

வ்யாப்திக்கு கருத்து
இவற்றின் உடைய சத்தையை உண்டாக்குகைகாக –
இங்கு இவற்றோட்டை ஸ்பர்சம் தனக்கு தாரகமாக இறே நினைத்து இருப்பது
இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்-
உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-

ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்-
உத் -உத்தர –உத்தமன் –இத்தால் பர வ்யூஹங்களை கழித்து விபவம் –
அதிலும் -திருவிக்ரம -ராம -அவதாரங்களைக் கழித்து -வட மதுரை யில் -ஒருத்தி மகனாய் பிறந்த கோவிந்தன்

உலகளந்த உத்தமன் -பாற் கடல் துயின்ற பரமன் உத்தரன்-நாராயணன் -உத்-தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்டம்
உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –
உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்

நாராயணனே- பரம் தத்வம் -பரம் ஜோதி -பரம் ஆத்மா -பரம் ப்ரஹ்மம் –
இத்தையே நாராயணன் -பையத்துயின்ற பரமன் -உத்தமன் –
உத்க்ருஷ்ட -உத் -விவரணம் திருவாய்மொழி -தாரதம்யம் -தர தமம்

உயர்வற உயர்நலம் உடையவன் -குணங்களில் முதலில் இழிந்தார் நம்மாழ்வார் –
திவ்ய மங்கள விக்ரஹ அழகில் இழிந்தார் திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ வால்மீகியும் கோன் வஸ்மி குணவான் என்று உபக்ரமித்து
ஆண்டாளுக்கு ஸ்வரூப ரூப குணம் சேஷ்டிதங்கள் அனைத்தும் வேண்டுமே –

அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்-என்று ஆசைப்பட்டு மடல் எடுக்க வேண்டும் படியான
அத் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் மோடையும் அளந்தது –

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று -என்றும் –
நீ அணியாய் -என்றும்
இரந்து பெற வேண்டும் கையைக் கொண்டு கிடீர் இரந்தது –

மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி
அனந்தரத்தில் —அதில் உக்தமான வ்யாப்த்திக்கு பிஜ்ஞ்ஞாகரமான
த்ரைவிக்ரம அபதானத்தை–அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே

இப் பாட்டில் தங்கள் நோன்புக்கு அனுமதி தானம் பண்ணினாருக்கு வரக்கடவ-
த்ருஷ்ட பலத்தை சொல்லுகிறார்கள்-

மார்கழி வையத்து ஓங்கி –
பக்தி யோக பிரபத்தி –
ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபத்திக்கு ஐந்து அங்கங்கள் –பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –

அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை
மகா பலி அபிமானத்தின் நின்றும் பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக
ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –
இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே
ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –

உலகளந்த
உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும்
ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே
திருவடிகளை குளிர வைத்தபடி –

உம்பர் கோமானே –
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு
காடும் ஓடையும் அளப்பதே

திருக் கையில் நீர் விழுந்தவாறே ஆகாசம் அவகாசம் அடைய விம்ம வளர்ந்து வரையாதே எல்லார் தலைகளிலும்
திருவடியை வைத்து பூமியை அளந்து கொண்டு தேவ ஜாதிக்கு குடியிருப்பைக் கொடுத்து
இந்த்ராதிகளை எழுதிக் கொண்டவனே –
இரு விசும்பினூடு போய் இத்யாதி -(திரு நெடும் தாண்டகம் )

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த-உம்பர் கோமானே
இத்தால் நிருபாதிக ரக்ஷகன் ஆகையால் ரக்ஷகமே விளைநிராக வளர்ந்த படி

இரண்டு விஷம் போக்க -அஹங்காரம் மமகாராம் போக்கினதே உலகு அளந்து காட்டி –
நீர் நுமது -என்று இவை வேர் முதல் மாயத்தால் இறை சேர்மினே -அடி பணிந்தே போக்க வேண்டும் –
உலகம் அளந்த பொன்னடி அடைந்து -லோக விக்ராந்த சரணம்

உலகு அளவாமல் இருந்து இருந்தால் வேதம் உன் திருவடி-சம்பந்தம் பெற்று இருக்க முடியாதே கூரத் ஆழ்வான்-

———————————–

தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்–1-7-

வரையாதே எல்லாரையும் அடியிலே விஷயீ கரித்தவன் திருக்கையாலே என்னை ஸ்பர்சிக்கும் படி பண்ணி –
லோகத்திலே சால நிற்பது ஒரு புகழ் இறே-அத்தை நாம் பெரும் படி தர வல்லையே
அவன் திருக்கையாலே தீண்டுகையே நிலை நின்ற புகழ் –

———–

கோவிந்தா முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்–2-9-

ஒன்றை வாங்கப் புக்கால் கொடுத்தவர்களை குழியிலே தள்ளுமவன் அன்றோ ஷணத்திலே –
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுக்குமவன்-பெரியாழ்வார் திருமொழி -4-9-7- இறே –

—————

கொண்ட கோலக் குறளுருவாய்ச் சென்று பண்டு மாவலி தன் பெரு வேள்வியில் அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
யஜ்ஞ்ஞோபவீதமும் -க்ருஷ்ணாஜினமும் -முஞ்சியும் -பவித்ரமும் -தண்டும்
பரமபதத்தில் ஒப்பனையிலும் அழகியதா இருந்தபடி –

பண்டு மா வலி தன் –பெரு வேள்வியில்-
கூடல் தலைக் கட்டியும் பெறாது இருக்க
வேள்வியின் நடுவே இவனைக் காணப் பெற்ற வேள்வி –

அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே-
அண்டமும் ஓரடியும்
நிலம் ஓரடியும் –
அவன் தன்னுடைமையை விடான் -நீ கூடுகையே குறை –(ஒவ்வோர் அடியால் என்று பிரித்து வியாக்யானம்  )

த்ரீணி பதா விசக்ரமே –என்றும்
மூன்றடி நிமிர்த்து -பெரியாழ்வார் -4-7-10-என்றும் உண்டாய் இரா நின்றது –

இது-இரண்டு அடிகளாலே அளந்தான் என்ற இது – இருக்கிறபடி ஏன் -என்று நஞ்சீயர் -பட்டரைக் கேட்க –
பரோ மாதரயா தனுவா வருதான ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபே தே வித்ம ரஜசீ ப்ருதிவ்யா -விஷ்ணு தேவ தவம் பரமச்ய வித்சே —என்றும்

த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர்த்த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யாதி
த்ருதீயமஸ்தி நகிரா ததர்ஷதி வயஸ்சன பதயந்த பதத்ரிண-என்றும்
வேத புருஷன் தானே -இரண்டடியால் அளந்த இடம் எல்லாரும் அறியும் –
நீ மூன்று அடியால் அளந்த இடம் உனக்கே தெரியும் அத்தனை -என்று காணாமல் விட்டான்-
அவன் அளந்தமை யுண்டு –அவனுக்கே தெரியும் அத்தனை -என்று
அருளிச் செய்தார் என்று ஜீயர் அருளிச் செய்வர் –

(அத்ய த்ருஷ்ட தசாங்குலம் -புருஷ ஸூக்தம் –ஸ்ரீ வைகுண்டத்திலும் மூன்றாவது அடியால் அளந்து கொண்டான்
ரஷ்யத்தின் அளவு அல்லவே ரக்ஷகனின் பாரிப்பு –
அபகரிக்க முடியாத நித்ய விபூதியையும் அளந்தான்
இவர்களும் அவன் குழந்தைகள் தானே -)

————

குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

உலகளந்தான் வரக் கூவாய்
இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு –
பேறு எனக்குக் கைப்படும் –
எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் —
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய்
 –

———-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியு முறைமை யறியேன்--5-10-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
வசிஷ்ட சண்டாள விவாகம் அற வரையாதே –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்குமவனை ஆசைப் பட்டு
உறங்குகிற பிரஜைக்கு முலை கொடுக்கும் தாயைப் போலே
இவை அறியாது இருக்கச் செய்தே –
அவற்றின் தலைகளிலே தனது திருவடிகளை வைத்தவனை உகந்து –

அடிமைக் கண் அவன் வலி செய்ய-
பெறவுமாய் இழக்க்கவுமானத்தையோ நான் ஆசைப் பட்டது –
பெற்று அல்லது சத்தை இல்லாத ப்ராப்திபலமான கைங்கர்யத்தை நான் ஆசைப்பட
அவ்வடிமை இடையாட்டத்திலே அவன் மிறுக்கடிக்க-

———

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை-5-11-

ஒருவர் பக்கலிலே ஒன்றைக் கொள்ள நினைத்தால்
அவர்களுக்கு பின்னை ஒன்றும் சேஷியாதபடி கொள்ளுகிறவனை-

வேல் கண் மடந்தை விரும்பி-
அவனை இப்பாடு படுத்தும் இப் பரிகரம் உடையவள் தான் ஆதரித்து –
வேல்கள் ஒரு முகம் -ஓன்று கூடி -ஒரு முகத்திலே அமைந்து –செய்து நிற்கச் செய்தே கிடீர்
தான் ஈடுபட்டது அவனுக்கு –

———–

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று எல்லா வுலகும் அளந்து கொண்ட எம்பெருமான்–11-5-

கண் எச்சில் வாராமைக்காக கரி பூசுகிறார் ஆதல் –
அழகிலே விஜாதீயது ஆகையாலே -அழகிது -என்னில் –
நாட்டில் அழகோடு ஒக்க நினைக்கக் கூடும் என்று –பொல்லா -என்கிறார் ஆதல் –
உலகிலே நடையாடாத அழகு என்பதால் –

குறளுருவாய் –
கோடியைக் காணி யாக்கினால் போலே
பெரிய வடிவு அழகை எல்லாம் இவ் வடிவிலே அமைத்து அனுபவிக்கலாம் படி அடக்கின படி –
கோடி த்ரவ்யத்தால் ஒரு மாணிக்கம் வாங்கி மார்பில் இட்டு அனுபவிக்கலாம்படி அன்றோ இந்த மாணி உருவம்

பொற் கையால் நீர் ஏற்று
அழகிய கையில் நீர் ஏற்று
அவனுக்கு பொற் கலத்திலே பிஷை யாய்த்தே –
மகா பலி பெற்ற பாக்யமே -பொற் கலத்தில் பிஷை இடப் பெறுவது என்றவாறு –

எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்-
பர ஸ்வா பஹாரத்துக்கு -அடி இடுகிறபடி –
தொடங்குகிற படி -அடியால் அளந்த படி -சாடு
கைப் பொருளும் எய்துவான் ஒத்தும் உளன் -என்றபடி
ஒன்றைக் கொள்ளப் புக்கான் ஆகில் கொடுத்தவர்களுக்கு பாதாளமே கதியாம் படி இறே கொள்ளுவது
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்தவன் -பெரியாழ்வார் -4-9-7-இறே
தனக்கு இரப்பிட்டவர்களை குழியிலே தள்ளி ஹ்ருஷ்டனாமவன் இறே
இவன் இல்லாதோம் கைப் பொருளும் எய்துவான் போல் இருப்பது வியப்பு அல்லவே

எம்பெருமான் –
அச் செயலாலே என்னை அனந்யார்ஹை ஆக்கினவன்
மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் –பெருமாள் திரு -9-4-2-
என்கிற படியே அச் செயலிலே காணும் இவள் ஈடுபட்டது –

————-

ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று யறக் கூவும்-12-9-

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இறே இப்படிச் சொல்லுகிறது –
அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இறே அவள் நினைவு –

விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில்
அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

————————————————

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி -2-3-

மண் அளந்ததும்-
ஸ்ரீ பிராட்டியோட்டை சம்ச்லேஷ விரோதியை போக்கினாப் போலே
இந்த்ரனோடு விரோதித்த மஹா பலியைக் கைக் கொண்ட பூமியை மீட்டு

———–

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே–27-

இரந்து சென்ற மாணியாய் –
இரப்பிலே தகண் ஏறினவன் என்று தோற்ற வாமன வேஷத்தைக் கொண்டு அர்த்தியாய்ச் சென்று –

மண் கடந்த வண்ணம் –
பூமியை அளந்து கொண்ட பிரகாரத்தை –
அதாகிறது -இந்தரனுக்கு மகாபலியாலே அபஹ்ர்தமான ராஜ்யத்தை வாங்கிக் கொடுக்க -என்கிற
வ்யாஜத்தாலே வசிஷ்ட சண்டாள விபாகம் அற சதுர்தச புவன அந்தர்கதமான சேதனர்
தலைகளிலும் திருவடிகளை வைக்க –

நின்னை –
சேதன அசேதன விலஷணமாய் -வேதத்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத ஸ்வரூப வைலஷண்ய
வைபவத்தை உடையையாய் -அதுக்கு மேலே குண ப்ரேரிதனாய்க் கொண்டு பூமியை
அளந்து கொண்ட உன்னை –

ஆர் மதிக்க வல்லரே –
பரிச்சேதிக்க வல்லார் ஆர்

வேதங்களாலே பரிச்சேதிக்கலாமோ –
ஜ்ஞாநாதிகரான வைதிகரால் தான் -பரிச்சேதிக்கலாமோ-
அம்மேன்மையை பரிச்சேதிக்கவோ –
அந் நீர்மையை பரிச்சேதிக்கவோ —
எத்தை யார் பரிச்சேதிக்க வல்லார் –

அதவா
விண் கடந்த சோதியாய் –
பரம பதத்துக்கு அவ்வருகாய் ஸ்வயம் பிரகாசமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை உடையையாய்
இத்தால் த்ரிபாத் விபூதியும் தனக்குள்ளே யாம்படியான ஸ்வரூபவைபவத்தை சொல்லுகிறது

———-

படைத்த பாரிடந்து பாரளந்து அதுண்டுமிழ்ந்து பௌவநீர் படைத்தடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்–28-

மகாபலியாலே அபஹ்ர்தமான பூமியை -ஸ்ரீ வாமனனாய் எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –
இதுவும் தன்னுடைமை பெறுகைக்கு தானே அர்த்தியாய் வருமவன் என்று ஆஸ்ரிதர்
விஸ்வசிக்கைகாக

———–

மண்ணளந்து கொண்ட காலனே–43-

மண்ணளந்து கொண்ட காலனே –
பூ பாரமான கம்ச நிரசனம் அன்றிக்கே தன் சேஷித்வத்தை பிரகாசிப்பிக்கைகாக
ப்ரஹ்மாதி சகலஜந்துக்கள்  தலைகள் வாய்த்த திருவடிகளை உடையவனே

காலனே -என்று பிரதிகூலர்க்கு மர்த்யு யானவனே என்றுமாம் –

———-

மண்ணளந்த பாத–58-

ஸ்ரீ வாமனனாய் எல்லார் தலையிலும் வைத்த திருவடிகளை உடையவனே
த்ரிவிக்ரம அபதாநம் -கேசி வத சமநந்தரத்திலே கிருஷ்ணனுடைய சேஷ்டிதமாக பேசலாம்படி
இறே இரண்டு அவதாரத்துக்கும் உண்டான சௌப்ராத்ரம் -அதாகிறது
எல்லாரையும் வரையாது தீண்டுகையும்
எதிரிகளை அழகாலே அழிக்கையும்

———–

அன்று பாரளந்த பாதபோதை ஒன்றி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே–66-

அன்று –
பூமி மஹாபலியாலே அபஹ்ர்தமாய் -அத்தாலே தன்னுடைய
சேஷித்வமும் சேதனருடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று –

பாரளந்த பாத போதை –
குணாகுண நிரூபணம் பண்ணாதே பூமி முதலான சகல லோகங்களிலும் உண்டான
சகல சேதனர் தலையிலும் வைத்து முறையை உணர்த்தின சர்வ ஸூலபமான
திருவடித் தாமரைகளை –

பார் –என்று -ஊர்த்தவ லோகங்களுக்கும் உப லஷணம்

தாமரை -என்றது -துர்லபமானாலும் விட ஒண்ணாத போக்யதையாலே –

யொன்றி –
ஆஸ்ரயணம் அநாயாசம் -என்கிறது
சிந்திப்பே அமையும் -என்னக் கடவது இறே

ஆஸ்ரயணத்தில் ஆயாசம் இன்றிக்கே ஒழிந்தால் -பலமும் ஷூத்ர மாய் இருக்குமோ என்னில்
வானின் மேல் சென்று சென்று –
அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் அபுநா வ்ர்த்தி லஷணமான பரமபதத்திலே சென்று

அதவா
சென்று சென்று –
தேசப் ப்ராப்தியில் காட்டில் வழிப் போக்குக்கு தானே இனிதாய் இருக்கிறபடியை சொல்லிற்று ஆகவுமாம் –
தேவராய் இருக்கிலாத வண்ணமே –என் கொலோ –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாய் இராதே ஒழிகிற ஹேது என்னோ –
நித்ய ஸூரிகளாய் இருக்கை யாவது -சர்வ தாஸ த்ர்சராய் இருக்கை
அதாகிறது
அசங்கோசத்தாலும் -ரூபத்தாலும் -பேதத்தாலும் -அவர்களோடு சமராய் இருக்கை

என் கொலோ
1-ப்ரத்யஷ சித்தமான சம்சார தோஷத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
2-சாஸ்திர சித்தமான பகவத் ப்ராப்தியில் நன்மைக்கு கண் அழிவு உண்டாயோ –
3-ஆஸ்ரயணீய வஸ்துவினுடைய சௌலப்யத்துக்கு கண் அழிவு உண்டாயோ –
4-ஆஸ்ரயணீ யத்தில் ஆயாசம் உண்டாயோ –
5-வழிப் போக்கில் அருமை உண்டாயோ –

 ப்ரகர்தி ப்ராக்ர்தங்களில் ப்ராவண்ய ஹேதுவான பாபமும்
பகவத் வைமுக்ய ஹேதுவான பாபமும்
ஒழிய இப் புருஷார்த்தத்தை இழைக்கைக்கு ஒரு ஹேதுவும் கண்டிலோம் -என்கை

—————–

மண்ணை யுண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து--105-

பின்னிரந்து கொண்டு அளந்து  –
ஸ்ர்ஷ்டமான பின்பு -அஜ் ஜகத்தை மஹாபலி அபஹரிக்க -அவன் பக்கலிலே
அர்த்தியாய் சென்று –இரந்து -இந்தரனுக்கு த்ரை லோக்ய சாம்ராஜ்யத்தை கொடுத்து
அவ்வளவுக்கு மேலே சதுர்தச புவநத்தில் உண்டான சகல சேதனர் தலையிலும்
உன் திருவடிகளை வைத்து

இத்தால் –
விமுகரான அளவிலும் -சீலவானுமாய் சுலபனுமாய் இருக்குமவன் -என்கை –
தன்னை அழிய மாறி தாழ நிற்கை இறே –சீலம்
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கை இ றே –சௌலப்யம் –

மண் கண்ணுள் அல்லது இல்லை என்று –
விமுகரான சம்சாரிகளைக் குறித்து இப்படி செய்து அருளுகைக்கு அடி என் -என்னில் –
இஜ் ஜகத்துக்கு நம் கடாஷம் ஒழிய வேறு ஸ்திதி இல்லை என்று –

——————————-

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய் சேவியேன் உன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே–35-

தாவி –
உங்கள் தலையில் நான் கால் வைக்க புகா நின்றோம் என்னில் –
வாசனையாலே சம்வதியாதே ஆணை இடுவர்கள் இறே –

திரு வாணை-நின் ஆணை -என்று சாத்விகர் திருவடிகளை லபிக்கைக்கு
மறுக்க ஒண்ணாத படி இடும் ஆணையை –
திருவடிகளைக் கிட்டாமைக்கு இடுவர்கள் ஆய்த்து –
இவர்கள் அறியாதபடி அநாயாசேன திருவடிகள் எல்லார் தலையிலும் படும்படி நடந்தான் –

தாவுதல்-
கடத்தல்

அன்று –
மகாபலியால் அபஹ்ருத்யமாய்
தம்முடைய சேஷித்வமும்-
சம்சாரிகள் உடைய சேஷத்வமும்
அழிந்து கிடந்த அன்று –

உலகம் எல்லாம் –
மகா பலியாலே அபஹ்ருத்யமான அளவு அன்றிக்கே
ப்ரஹ்ம லோக பர்யந்தமாக
சகல லோகங்களையும்
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும்
திருவடிகள் வளர்ந்த படி

தலை விளாக் கொண்ட-
ரஷ்யத்தின் உடைய அளவு அல்ல வாய்த்து ரஷ்கனுடைய பாரிப்பு
அத்ய திஷ்டத்த சாங்குலம் -என்னக் கடவது இறே –

வெந்தாய் –
அமரர் சென்னிப் பூவினை -என்று
நித்ய ஸூரிகள் சிரஸா வஹிக்கும் திருவடிகளை
விமுகரான சம்சாரிகள் தலையில் வைகைக்கு ஹேது என் என்னில்
அவர்ஜநீய சம்பந்தம் -என்கிறார் –

தம் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே –
எந்தாய் -என்கிறார் –

உறங்குகிற பிரஜையைக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
அன்று தம் பேறாக விறே ரஷித்தது –

அன்று அறியாத குறை தீர
அறிந்த இன்று -உபகார ஸ்ம்ருதியாலே
எந்தாய் -என்கிறார்

சம்சாரிகள் அன்றும் அறிந்திலர்
இன்றும் அறிந்திலர்
அவர்களுக்குமாக தாம் உகக்கிறார் இறே –

சேவியேன் உன்னை அல்லால்-
‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன
உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –
உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –

உன்னை இழந்தால் நானும் பிறரும் இறே உள்ளது –
இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்

அவை இரண்டும் இறே
பிரணவத்திலும்
மத்திய பதத்திலும் சொல்லுகிறது –

சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும்
சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –

இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –
சிக்கென –
இது எல்லா குளிக்கும் நிற்கும்
யாவதாத்மாபவி
சர்வேஸ்வரனைக் குறித்து -மாஸூச -என்கிறார் இவர்

செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று
தாத் காலின விசேஷணம்-
இவர் சிக்கென -என்றவாறே
திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்
இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே
கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –

செங்கண் மாலே –
வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –
வத்யதாம் -என்ற போது
பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-

பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று
பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –

திருவடி –
அவதாரத்தில் -மாஸூச -என்றான்
இவர் –
அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –

செங்கண் மாலே –
என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான
தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –

அவ்வளவேயோ –
ஆவியே –
என் பிராணனை விட்டு புறம்பே போகவோ –

இவருக்கு ஒரு வாயு விசேஷம் அன்று பிராணன் –
என் திருமேகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -என்கிறபடியே
ஒரு மிதுனம் காணும் இவருக்கு பிராணன் –

அமுதே –
தாரகம் மாத்ரமேயாய் இருக்கை அன்றிக்கே
நிரதிசய போக்யமுமாய்
சாகாமல் காக்கும் மருந்தாய் இருக்குமவன் அல்லையோ –

அவ்வளவேயோ
என் தன் ஆர் உயிர் அனைய –
என் ஆத்மா அன்றோ –
ஆத்மாவை விட்டு சரீரத்துக்கு புறம்பு ஒரு போக்கு உண்டோ –

எந்தாய் –
அயோக்யன் என்று அகலப் புக்க
என்னை நசியாதபடி மீட்ட என் ஸ்வாமி அல்லையோ –

1-வத்சலனை விட்டு புறம்பே போகவோ –
2-பிராணனை விட்டு புறம்பே போகவோ –
3-போக்ய வஸ்துவை விட்டு புறம்பே போகவோ –
4-என்னை நல் வழி போக்கு வித்த என் ஸ்வாமியை விட்டு புறம்பே போகவோ –
என்கிறார் –

த்ரிவிக்ரம அபதானம் கேட்டு அறியீரோ –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
எல்லார் தலையிலும் நம் கால் பொருந்தின படி அறியீரோ -வென்று –
சீல ஆதிக்யத்தையும்
தன் செல்லாமையையும்
காட்டி –
சமாதானம் பண்ண
சமாஹிதர் ஆகிறார் –

—————————————-

உவந்த வுள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்–2-

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த ப்ரீதி -சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் –
அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிறவன் -அர்த்தியாய் வந்து -தன் திருவடிகளை
தலையிலே வையா நின்றால் -மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்று உகக்க வேண்டி இருக்க –
அவை அறியாது ஒழிய –
பிரஜை பால் குடிக்கக் கண்டு உகக்கும் மாதாவைப் போலே உகந்த திரு உள்ளதை உடையவனாய் –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி -என்கிறபடியே-

உலகம் அளந்து –
வகுத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தானும் விடாதே அளந்தது –
உகக்க அறியாமைக்கு -வன் மா வையம் இறே
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி

அண்டமுற –
அண்டம் மோழை எழ

நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே

நீண் முடியன் –
உபய விபூதிக்கும் நிர்வாஹகன் என்று தோற்றும்படி இருக்கிற திரு வபிஷேகத்தை யுடையவன் –
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி தரிப்பது-

உவந்த உள்ளத்தனாய் –
ஆழ்வாரை அகப்படுதுகையால் வந்த ப்ரீதி –
சர்வேஸ்வரனாய் -ஸ்ரீ ய பதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் -அவாக்ய அநாதர -என்கிறபடியே
பரிபூர்ணனான தான் –
கதாபுநச் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாங்குச வஜ்ர லாஞ்சநம்
த்ரி விக்ரம தவச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி -என்றும் –
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய் -என்றும் சிலர் அபேஷியாது இருக்க –

பாதா ருந்துத மேவ பங்கஜா ஜ -என்னும் சௌகுமார்யத்தை யுடைத்தாய் –
பெரிய பிராட்டியார் திருக் கைகளால் வருடவும் பொறாத அந்த திருவடிகளை
காடு மேடுகள் என்று பாராதே -சேதன அசேதன விபாகம் பாராதே பரப்பினால்
இப்படி உபகரிப்பதே -என்று இவர்கள் உகக்க ப்ராப்தமாய் இருக்க
இவர்கள் அறிவு கேடே ஹேதுவாக விலக்காது ஒழியப் பெற்றோமே என்று
இரட்டிக்க புகுந்த திரு உள்ளத்தை உடையனாய் –

க்ருதக்ருத்யஸ் ததா ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ -என்று
தம்மோடும் தம்பியாரோடும் உண்டான வாசனையாலே முடியை விலக்குகிறான் என்று
வெறுத்து இருந்த பெருமாள் -இவன் இசைந்து முடியை வைத்த பின்பு உகந்தாப் போலே
இத்தலையில் அத்வேஷமே ஹேதுவாக திருவடிகளை வைக்கப் பெறுகையாலே
மிகவும் ப்ரீதனாய் –
எதிர்த்தலை அறியாது இருக்க தானே உகக்கிற இது வாத்சல்யம் இறே
உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொண்டு கிடக்கிறது வாத்சல்யம் அன்றோ –
இவற்றை பிரிந்தால் வ்யசனமும் தன்னதே இறே
வ்யசநேஷூ மனுஷ்யாணாம்

உலகம் அளந்து –
வசிஷ்ட சண்டாள விபாகம் -ஸ்த்ரி பும்ஸ விபாகம் -ஜ்ஞான அஜ்ஞ்ஞான விபாகம் –
என்றவற்றைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த படி –

உலகம் அளந்து –
வைத்த திருவடிகள் தலையிலே வந்து இருந்தாலும் உகக்க அறியாத லோகத்தை
கிடீர் தான் விடாதே யளந்தது
உகக்க அறியாமைக்கு வன்  மா வையம் இறே

வன்மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல்nபிறவியில் படிகின்ற யான்,
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து,
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ் ஞான்று கொலோ?-3-2-2-

குணாகுணம் நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த
படியாலே பக்திமான்களும் பாதகிகளும் ஒக்க வாழ்ந்து போய்த்து-

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
அண்ட கடாஹத்திலே சென்று சேர்ந்த திரு வபிஷேகத்தை யுடையவன்
அண்ட கடாஹம் வெடித்து அடி பிடிக்க வேண்டும் படி இறே அபேஷிதம் பெற்று வளர்ந்த படி

அண்டமுற –
அண்டம் மோழை எழ

நிவர்ந்த –
நிமிர்ந்த பூ அலர்ந்தாப் போலே

நீண் முடியன் –
முடிக்கு நீட்சி யாவது -உபய விபூதிக்கும் தரித்த முடி என்று தோற்றும்படி யாய் இருக்கை
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநா மீசதே பி ஸூ நயந் கில மௌளி -என்னுமா போலே
ரஷ்ய வர்க்கத்தை நோக்கினால் இறே ரஷகன் முடி நல் தரிப்பது-

ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -என்று திருவடிகளுக்கு வளர்த்தி
சொல்லப் ப்ராப்தமாய் இருக்க திருமுடிக்கு வளர்த்தி சொல்லுகிறது -இத் திருவடிகள்
அப்ராப்தமான திருவடிகள் அன்று -ப்ராப்தமான திருவடிகள் என்று தோற்றுகைகாக –
தான் அர்த்தியாய் சென்று -அர்த்தித்வத்தை மாறாதே அவன் கொடுத்த படியாலே உவந்த
உள்ளத்தனாய் –
அவன் தான் அறிய உகக்க ஒண்ணாதே
உலகம் இத்யாதி –
திருக்கையில் நீர் விழுந்த அளவிலே அந் நீரே பற்றாசாகக் கொண்டு வளர்ந்து அளந்து கொண்டான்-

உவந்த உள்ளத்தனாய் –
மஹா பலியால் அபஹ்ருதமான ராஜ்யத்தை மீட்டுத் தர வேண்டும் என்று இந்த்ராதிகள் இரக்க –
உதாரா சர்வ எவைதே -என்கிறபடி -இவர்கள் பக்கலிலே ப்ரீதமான திரு உள்ளத்தை உடையனாய்
அசுரனே யாகிலும் ப்ரஹ்லாதனோடு உண்டான குடல் துவக்கும் பாவித்து
ஆநுகூல்ய மிஸ்ரனான மஹா பலியை அழியச் செய்ய நினையாதே அவனுடைய ஔதார்யத்துக்கு
அநுகூலமாக தான் இரப்பாளானாக சென்று -அவன் கொடுக்க வாங்கு கையாலே
அவன் அளவிலும் அனுக்ரஹ உக்தனாய் அபேஷா நிரபேஷமாக எல்லார் தலையிலும்
தன் திருவடிகளை வைக்க விலக்காத அளவாலும் சர்வ விஷயத்திலும் உவந்த உள்ளத்தனாய்

உலகம் அளந்து –
அளவு பட்டுக் கொடுத்தோம் என்று இருக்கிற அசுரன் முன்னே எல்லா லோகங்களையும்
தன் திருவடிகளாலே அளவு படுத்தி –

அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் –
மேலே கவித்த கநக சத்ரம் போலே இருக்கிற ப்ரஹ்மாண்டத்திலே கிட்டும்படி
விஜ்ரும்பித்த பெரிய திரு அபிஷேகத்தை உடையவன் -அவன் தன்னைப் போலே
திரு அபிஷேகத்துக்கும் அவனோடு ஒக்க வளருகைக்கு ஈடான மஹிமாவும் உண்டு
கர்ம வஸ்யதை தோற்றும்படி பிறவி தொடக்கமாக சடையும் குண்டிகையும் சுமந்து திரிகிற
பரிச்சின்நேஸ்வரர் பார்த்து நிற்க இப்படி முடி சூடி நிற்கையாலே உபய விபூதி நிர்வாஹகத்வமும் அபிவ்யக்தமாய் ஆகிறது

இத் த்ரி விக்ரம அபதானம் சொன்ன இத்தாலே ஈஸ்வர சங்கா விஷயமான
இந்த்ராதிகள் இரப்பாளரான படியும் -குறை கொண்டு நான்முகன் -இத்யாதிகளில் படியே ப்ரஹ்மா
திருவடி விளக்கி ஆராதனானபடியும் -ருத்ரன் தீர்த்த பிரசாதம் பெற்றுப் பூதனான படியும் சொல்லிற்று ஆயிற்று

இத்தால் முன் பாட்டில் சொன்ன இஷ்ட ப்ராபகத்வத்தையும் உதாஹரித்ததாய் -இனி –
அநிஷ்ட நிவர்த்தகத்வத்தையும் உதாஹரிக்கிறார் –

———————-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை –
பூமி அந்தரிஷ்யாதிகள் போராதபடி யாக வளர்ந்து
லோகத்தை அளந்து கொண்டவனை –

எம்மானைக்-
எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த
நீர்மையாலே என்னை எழுதிக் கொண்டவனை –

கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –
அவன் தானே திருவடிகளை கொண்டு வந்த வைத்த அன்று தப்பின நான்
இன்று
இங்கே
காணப் பெற்றேன்
என்கிறார் –

———

தொண்டையார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை –2-5-9-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -என்று இருப்பாரைச் சொன்னபடி –
ஆயார் என்றது ஆனார் என்றபடி –
அவர்கள் ஜாமதக் ந்யஸ்ய ஜல்பத-என்கிறபடி
அடைவு கெட்டு ஏத்தும்படியான திருவடிகளை உடையவனை –
(ஜமதக்கினி-பரசுராமர் -நாரதர்- கிருஷ்ண த்வைபாயனர்-இத்யாதிகள் சொல்லக் கேட்டுள்ளோமே )

படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல்-
நம்முடைமை ஒன்றும் தவர ஒண்ணாது என்று
தான் கொடு வந்து திருவடிகளை தலையிலே
வைத்த ஸ்வபாவத்தை உடைய நீர்மையில் தோற்று –
இனி நாமும் அவன் உகந்த அடிமை செய்து உளோம் ஆவோம் –
என்கிற இவ்வர்த்தத்தில் விண்டவன் உண்டு –
விண்டானை -தென்னிலங்கை யரக்கர் வேந்தை-
ந நமேயம் -என்று இருக்கிறவனை –

—————-

வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-

மகா பலி யஜ்ஞ வாடத்திலே வாமன வேஷத்தைக் கொண்டு வந்து
திருக் கையிலே நீர் விழுந்தவாறே வளர்ந்து பூமியை அளந்து கொண்ட இந்த வேஷத்தை உடைய –
ஸ்ரீ வாமனை போலேயும் இரா நின்றீர்
சுக்ராதிகள் ஈஸ்வரன் கிடாய் உன்னை வஞ்சிக்கிறான்
என்னச் செய்தேயும் விநீத வேஷத்தை
கண்டு வைத்து எங்கனே விடாது ஒழியும் படி என்றான் இறே –

இவர் ஆர் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றான் இறே –
கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன்
உன்னை இரந்து வந்தவன் நான் என்கிறார்
பிறர்க்காக இரந்தவன் அல்லேன்
எனக்காக இரந்தவன் என்கிறார்-

விநீத வேஷத்துடன் இருந்தால் சித்திக்கும் என்று சேவை சாதிக்கிறார் இங்கும் –

—————-

இலகிய நீள் முடி மாவலி தன பெரு வேள்வியில் மாணுருவாய் முன்நாள் சலமொடு நிலம் கொண்டவனுக்கு
இடம் தான் –பரமேச்சுவர விண்ணகரமதுவே–2-9-7-

உஜ்ஜ்வலமாய் ஆதி ராஜ்ய ஸூசகமான முடியை உடைய
மகாபலி உடைய யஞ்ஞ வாடத்திலே
இரப்பிலே தகண் ஏறிய வடிவை உடையவனாய்
முன்பு ஒரு நாளிலே கையிலே நீர் விழுந்த போதே
பரப்பை உடைத்தான பூமியைக் கைக் கொண்டு
அளந்தவனுக்கு

————–

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து –திருவயிந்திரபுரமே–3-1-5-

மகா பலி தானம் பண்ணா நின்றான் என்று கேட்டவாறே அவனுடைய யஞ்ஞவாடத்திலே
தன்னை அர்த்தியாக்கிச் சென்று அவன் கையில் நீர் தன் கையில் விழுந்த அநந்தரம்
அவ்விடம் தன்னிலே நின்றே பூமிப் பரப்பு அடைய அளந்து கொண்டு

————–

மூவராகிய ஒருவனை மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே–3-1-10-

மூவராகிய மூர்த்தி -முதல்வன் தன்னை -நம்மாழ்வார் –

ப்ரஹ்ம ருத்ராதிகள் உடைய சரீரத்துக்கும்
ஆத்மாவுக்கும் அந்தராத்மதயா நின்று
சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகையாலும் –
ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தைப் பண்ணுகையாலும்
மூவராகிய ஒருவனை
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம் ஏக ஏவ ஜனார்த்தனன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஆக
சர்வ நியந்தாவாய் ஆயிற்று –

மூ வுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை-
ஆபத் சகனும் ஆயிற்று

தேவர் தானவர்-சென்று சென்று இறைஞ்சத் தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை
தேவானாம் தனவாநாஞ்ச–ஜிதந்தா ஸ்லோகம் -என்கிறபடியே
தன்னாலே ஸ்ருஜ்யரான இவர்கள் இரண்டு திறத்தாருக்கும்
ஒத்து இருக்கையாலே
தம்தாமுடைய அபேஷித சித்திக்காக
தேவர்களும் அசுரர்களும் அடைய சென்று ஆஸ்ரயிக்கலாம் படி
திருவயிந்திரபுரத்தில் நித்ய வாசம் பண்ணி
அத்தாலே
மேவு சோதியை
பரம பதத்தில் காட்டிலும் உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை
எல்லாம் இல்லை இறே பரமபதத்தில்
இவர்களுக்கு அபேஷிதம் விதானம் பண்ணுகையால் வந்த
ஏற்றம் உண்டு இறே இங்கு

——

அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்க–3-2-4-

அளக்க அரிதான மகா பிருதிவியை
அளைக்கைக்காக வாமனனாய் அசுரனுடைய
மகா யாகத்திலே சென்று அர்த்தித்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை
அடைவு கெட பேசி உங்களுடைய
ஜன்ம துக்கத்தை போக்குவோம் என்று சொல்லி இருப்பீர்
இரண்டு நா உடைய திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து
கண் வளர்ந்து அருளின
ஸ்ரீயபதி பெரிய பிராட்டியாரோடே
கூட விடாதே சஞ்சரிக்கிற தில்லை –

————

ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வெனா மாவலியைச்
சிறையில் வைத்த தாடாளன் தாளணைவீர்–3-4-1-

ஒரு குறளாய் –
வடிவைக் கண்ட போதே
சொல்லிற்று அடையக் கொடுக்க வேண்டும்படியான
அத்விதீய வாமனனாய்

இரு நிலம் –
பரப்பை உடைத்தான பூமியை

மூவடி மண் வேண்டி-
தனக்கு என கால் பாவுக்கைக்கு
ஓர் இடம் இல்லாதாரைப் போலே
இத்தை அவனுக்காகி -அவன் பக்கலிலே இரந்து

உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வென –
இந்த லோகங்கள் அடைய இரண்டு அடியாலே அடக்கி
மூன்றடி தருகிறோம் என்றாய்
மற்றை ஓரடியும் தாராயோ -என்று
(இதே திருக்கோலம் இன்றும் நாம் அங்கே சேவிக்கிறோம் )

மாவலியைச் சிறையில் வைத்த-
அநந்தரம் இந்திர பதம் அவன் பெறக் கடவனாக
அவனைப் பாதாளத்தில் வைத்த

தாடாளன் தாள் அணைவீர் –
ஆஸ்ரித அர்த்தமாக தான் இரந்தான்-என்னும்
மேன்மையை உடையவன் திருவடிகளை
கிட்ட வேண்டி இருப்பீர் –

தக்க கீர்த்தி -இத்யாதி
(புருஷோத்தமனுக்குத் தக்க கீர்த்தி )
அபௌருஷேயத்வ நிபந்தனமான
கீர்த்தியை உடைய வேதங்கள் உடைய
திரள்கள் நாலும்
பஞ்ச மகா யஞ்ஞங்களும்-( ப்ரஹ்ம மனுஷ்ய தேவ பித்ரு பூத )
ஆறு அங்கங்களும்
ஏழு இசைகளும்
தெருவிலே மிக்கு இருந்துள்ள உத்சவத்தால் வந்த அழகும்
இவை எல்லாம் அடைய சிறக்கும்படியான
காழியிலே
சீராம விண்ணகரை ஆஸ்ரயிங்கோள்

———–

ஒ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணை யாளன் ஆகாயே–3-6-5-

ஒ மண்ணளந்த தாளாளா !
அபேஷை இல்லாதார் தலை மேலே வைத்த திருவடிகள்
இப் பொன் பூத்த முலைகளுக்கு அறிதாவதே –

ஒ மண்ணளந்த தாளாளா ! –
ஆர் அபேஷிக்கத்தான் நீ அன்று எல்லார் தலை மேலும் திருவடிகளை வைத்தது –
ஆர் கண்ணில் கண்ணநீரும்
ஆர் உடம்பில் வைவர்ண்யமும் கண்டு தான்
திருவடிகளை கொண்டு வந்து வைத்தது –
உன்னைப் பெறாத விகிர்தமாய்-விவர்ணமாய் – இருக்கிற இம்முலை மேலே
திருவடிகளை வைத்தால் ஆகாதோ —

திருவடியையும் திருத்தோள்களையும் காட்டினால் போதும்
தோடு இட்ட சுவடு இருக்குமே
இவற்றைக் காட்டி அருள்

——–

கண்டவர் தம் மனம் மகிழ மா வலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ்வலை கடலும்
அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் –நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே-3-10-5-

கண்டவர் தம் மனம் மகிழ-
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றிக்கே
கண்டவர்கள் நெஞ்சானது மகிழும் படியாக
மகா பலியினுடைய யஞ்ஞ வாடத்திலே
இவன் -தேவ கார்யம் செய்கிறான் -என்று தோற்றாத படியாக
நாட்டில் வாமனர்கள் திரு உலகு அளந்து அருளின இடம் –
என்னும் படியான வாமன வேஷத்தை பரிகரித்து
எனக்கு மூன்றடி வேணும் -என்று அர்த்தித்து
ஆகாசத்தையும் அலை எறியா நின்றுள்ள கடலையும் த்வீபங்களையும் எல்லாம்
அனாயாசேன அளந்து கொண்ட உபகாரகன்
நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

—————-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்துறை கோயில் — வண் புருடோத்தமமே–4-2-6-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கோ சகஸ்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்கிறபடியே
கொடுத்து வளர்ந்த அழகிய கையைக் கொண்டு
மூவடியை நீர் ஏற்று
திருக் கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது
ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க
அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்

கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின
சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

————-

வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணளந்து விட்டவன் தன்னை அசைவறும் அமரர் அடியினை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை
—-நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே —-கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-4-

வாமன வேஷத்தை
பரிக்கிரஹிக்கிற இடத்தில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படியான
குறள் வடிவை உடையனாய்
மகா பலியின் உடைய யஞ்ஞ வாடத்திலே
பூமிப் பரப்படைய அளந்தவன் தன்னை –
(ஸ்ரீ யபதியாக இருந்தும் -பிச்சை எடுக்க -அழகிய மாண் உருவாக-
அழகைக் கண்டவர் குறை சொல்ல முடியாதபடி அன்றோ கோலம் )

————

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி
யதனுள்புக்கு மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர் –நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே–4-4-7-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் –
மிக்கு இலங்கா நின்றுள்ள
ஒளி விடா நின்ற திரு யஞ்ஞோ  பவீதமும்
கிருஷ்ணா ஜிநமும் தாழ

பொல்லாத குறள் உருவாய் –
அழகிது என்றால் நாட்டார் கண் எச்சில் படுவர்  என்று
விபரீத லஷணையால் சொல்லிற்று  ஆகவுமாம்

பொருந்தா வாணன்-
ஆஸூரம் பாவம் ஆஸ்ரித என்று
ஹிருதயம் தண்ணியதாகை அன்றிக்கே
ஜன்மமே தண்ணிதானவன்

மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு
சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே
மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே

மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
மகா பலி உடையனாய்
தான் குறைவாளனாய் இரந்த
என்ன பிள்ளை தான்

———–

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே  –4-5-6-

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
மத்ஸ்யமும்
ஸ்ரீ வாமனனும்
அன்னமும்
ஸ்ரீ வராஹமும்
ஸ்ரீ நரசிம்ஹமும்
ஸ்ரீ ஹயக்ரீவரும்

அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
விபூதியும்
அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்
யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும்
எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி  உடைத்தாய்
நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-

————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
இது தன்னையும் ஆனை தனக்கே யாக்கி
ஓர் இடத்தில் ஒரு பூ மலர் காணாமையாலே
பூமிப் பரப்பு அடங்கலும் தாவித் திரிந்தது -என்னவுமாம்
அன்றிக்கே
திரு உலகளந்து அருளின படியை யாக்கி
பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்து கொண்டான் -என்னுதல்

நீ பூமி அளந்து கொள்ளுகைக்கு
அந்த பூமியில் உள்ளார் தாங்கள் ஏதேனும் யத்நிதித்தது உண்டோ
ஒரு பூ மலர் காணலாமோ என்னும் ஆசையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தட்டித் திரிந்து
பின்பு ஒரு பிரதேசத்திலே பெரிய மலரை உடைத்தாய் இருப்பதொரு
பொய்கைகைக் கண்டு -அதிலே
முதலை உண்டு என்று அறியாதே போய்ப் புக்கு அதின் வாயிலே அகப்பட்டு
ஒரு போக்கடி அறியாதே தடுமாறி

———-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

மாவலி வலி தொலைப்பான் –
மகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் கிடைக்கையாலே
ராவணாதிகளைப் போலே தலையை அறுக்க வேண்டிற்று இல்லை
ஆனாலும் தேவர்களை நெருக்குகையாலே
ராவணன் செயல் உண்டாய் இருந்தது
நிரசிக்க வேண்டி இருக்கச் செய்தே மாட்டிற்று இலன்
அவனை அழிக்க மாட்டாதே தன்னை  அழித்தான் ஆய்த்து-
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து
மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக

விண்ணவர் வேண்டச் சென்று –
அவனாலே நோவு பட்ட தேவர்கள் அர்த்திக்க

சென்று –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று

சென்று வேள்வியில் குறை இரந்தாய்-
தனி இருப்பில் அன்றிக்கே
அவாப்த சமஸ்த காமனான தான் குறைப் பட்டு இரந்தான் ஆய்த்து
தேவர்கள் குறை கண்டவாறே
தான் குறைவாளனாய் இரந்தான் ஆய்த்து

துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
அவ் ஊரில்  உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து-
அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து-
மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்-
அத ஹாரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம் நிசி சர பதி மாஜௌ யோஜ யித்வா ஸ்ரமேன
அவன் கண்டு அறியாத பயத்தோடே துணுக்கு  என்னும்படி பண்ணி

கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய்
புகுந்து இருக்கிற நீயே
எனக்கு ரஷகனாக வேணும்

———-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்து மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும் ஆசை என்னும்
கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் ஏதுகின் றது இதுவே காணும் இந்தளூரிரே-4-9-3-

பேசுகின்றது இதுவே –
உமக்கு வரும் அவத்யத்தை
பரிஹரிக்க வேணும் என்னும் இதுவே நாங்கள் சொல்லுகிறது

வையம் ஈரடியால் அளந்த மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்-
நீர் குணார்ஜ்ஜனம் பண்ணுகைக்கு பட்ட பாடு எல்லாம் அறிவீரே
இப்போது ஒரு வ்யக்தியிலே அல்பம் நெகிழ நின்று
அப் பெரிய குணம் எல்லாம் இழக்க அன்றோ புகுகிறீர்-
(நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் -நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
கௌசல்யா லோக பார்த்தாராம் -லோக பார்த்தாவாக இருக்கவே பெற்றாள் -)

வரையாதே நோக்கின உமக்கு
இப்போது ஒருவனை நெகிழ நின்றீர் என்றால்
குண ஹானி விளையாதோ

——————-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்து மா வலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற
வளர்ந்தவன் கோயில் –திரு வெள்ளி யங்குடி யதுவே–4-10-7-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
யாகம் என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு
என்னுடைய சர்வ தனத்தையும் பரார்தமாக்க கடவேன்
என்று அனுசந்தித்த மகா பலி உடைய வேள்வியில் புக்கு -என்னுதல்

உணர்ந்து -என்ற பாடமாகில்
என்னை இரந்த இந்த்ரனுக்காக
நான் என்னை இரப்பாளன் ஆக்குவேன் -என்று
மகா பலி யஞ்ஞ வாடத்திலே போய்ப் புக்கு  –

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
சுக்ரன் மற்றை யார் -இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் இத்தனை –
அகப்படாதே கிடாய் -என்று உபதேசித்தால்
நான் கொண்டு அல்லது போகேன்
புக்க கார்யம் தலைக் கட்டாதே மீளுவேனோ -என்னும்
தெண்மையை உடைய வாமனனாய்
அவன் நிரோதித்தாலும்-இவன் கொடேன் -என்றாலும்
நான் கொண்டு அல்லது போகேன் -என்று போய் புக்கான் ஆய்த்து

மூன்று அடி தர வேணும் என்று அபேஷித்து
அநந்தரம்
திக்குகளை அடைய
தன் வடிவாலே பாரித்தான் ஆய்த்து –  –

————–

அறிவதரியான் அனைத்துலகுடையான் என்னையாளுடையான் குறிய மாணியுருவாய் கூத்தன் மன்னி யமரும் இடம் புள்ளம் பூதம் குடி தானே–5-1-1-

அறிவது அரியான் –
ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்
என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே
அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் –

மன்னி யமரும்-
மன்னி உறையும் -அமர்ந்து வர்த்திக்கும்

அனைத்து உலகும் உடையான் –
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க
சர்வ லோகேஸ்வரனாக
சர்வருக்கும் சம்பிரதி பன்னன்

என்னை யாளுடையான் –
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்
அஸ்மத் ஸ்வாமின் –
(தத் தவம் அஸி -அனைத்து உலகும் உடையான் தத் -என்னை ஆளுடையான் -த்வம்
அறிய முடியா விடில் விடலாகாதோ
இங்கும் தொடர்வான் என் என்ன அருளிச் செய்கிறார்
அனைத்து உலகில் தானும் இருந்தாலும் அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் )

குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
இப்படி சர்வாதிகன் ஆனவன்
வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
இரப்பிலே தகண் ஏறின வடிவோடே கூட
மகா பலி யஞ்ஞ வாடத்திலே புக்கு
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடையவன்
மன்னி–நித்ய வாஸம் பண்ணி
யமரும்-விடேன் -என்று வர்த்திக்கிற தேசம் –
யஞ்ஞ வாடத்திலே நடந்த போது
கூத்தன்-வல்லார் ஆடினால் போலே யாய்த்து இருந்தது –

—————-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம் புள்ளம் பூதம் குடி தானே–5-1-2-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
இவன் சர்வேஸ்வரன்
தேவர்கள் ஹிதம் செய்ய வந்தான்
அகப்படாதே கிடாய் -என்று சுக்ராதிகள் சொன்ன வார்த்தை
அவன் நெஞ்சில் படாத படியான
வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
தன்னது அல்லாததை தன்னது என்று இருந்தவன் பக்கல் நின்றும்
தன்னதாக்கிக் கொண்டான் ஆய்த்து -( இதனாலே புனிதன் )

———-

கூற்றேருவின் குறளாய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –கூடலூரே-5-2-4-

கூறு ஏர் உருவில் குறளாய் –
மமேதம் என்னும் அபேஷை உடைய வாமன வேஷத்தை பரிகிரஹித்து என்னுதல்-
(மாவலி மூவடி மண் கொடு -கேட்க்கைக்குத் தகுதியான உருவம் )
அன்றிக்கே –
கண்டார் அடங்கலும் -இது ஓர் குறள் வடிவு இருக்கும் படியே
என்று கூறப் பட்ட வடிவை உடையவன் -என்னுதல் –

நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற
பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே
என்னை எழுதிக் கொண்ட
என் குல நாதன் ஆனவன்
வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –

———-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம–5-3-9-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
மகாபலியினுடைய யஞ்ஞ வாடமான அவ்விடத்தில்
தன்னை இரப்பாளனாக்கிக் கொண்டு சென்று
பூமிப் பரப்பை அடங்கலும்

பாங்கினில் கொண்ட பரம
அவனது ஆக்கிக் கொண்ட சர்வாதிகனே
ராவணாதிகளைப் போலே தலையை அறுத்துப் பொகட்டு
வாங்கிக் கொள்ளலாய்   இருக்கச் செய்தே
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால்
தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –

(அவனதாகவே நம்பிக் கொண்டான் -கொடுப்பவனாக இருந்தால் கொள்வானாக –
ஸ்வாமியாக கொண்டால் தாசனாக துவம் மே அஹம் மே போல் )

நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே  –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி
போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –

————-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை
மீட்டுக் கொள்ளுகைக்காக
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று
திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே
நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் என்னா நிற்பார்கள் –

———–

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

கலந்து அன்னவர் -ஏக ரசம் -பஞ்சாம்ருதம் பக்த ஜனங்கள்
அவதாரங்கள் ஐந்தைச் சொல்லி தானுமாய் போல் இங்கும்

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு  ஏறுகைக்காக
வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்

அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்

மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்

இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்

நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம்
என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் -என்னக் கடவது இறே –

அல்லாத இடங்கள் சக்தி  ஏக தேசம்
அவன் தானே வந்தான் என்னக் கடவது இறே ராமாவதாரத்தை
(பூர்ணனாய் சகல கல்யாண பூர்ணன்
சக்தி அவதாரம் என்றது கல்யாண குணங்கள் எல்லாம் ஸ்பஷ்டம் இங்கேயே என்றவாறு )

——-

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொட அகலிடம்   அளந்தவனே–6-1-1-

சங்கைஸ் ஸூ ராணாம்-(ஸ்ரீ விஷ்ணு தர்மம் -மங்களங்களை வளர்க்க )-என்கிறபடியே
தேவர்களும்
மற்றும்
திருவடிகளுக்கு நல்லாராய் இருப்பாரும்
ஆஸ்ரயிக்க
நின்று –
அர்த்தித்து நின்று
பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே
அண்டங்கள் உடன்  கூட   பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே –

———–

அன்றுள மூன்றினையும் அளந்து வேறோர் அரியுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல வுய்த்தாற்கு விருந்தாவீர்–6-6-5-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய்  இரணியனதாகம் கீண்டு வென்றவனை –
த்ரை லோக்யத்தையும் தன் கால் கீழே இட்டுக் கொண்டு
நாட்டிலே நடை யாடாத  ஒரு  நரசிம்ஹமாய்
ஹிரண்யன் உடைய சரீரத்தைக் கிழித்து வென்று –

———-

இரந்தான் மாவலி மண்–6-7-3-

இரந்தான் மாவலி மண்-
அவ் வம்பு கையிலே இருக்கச் செய்தே
ஓர் இயற்றி இல்லாதாரைப் போலே
மகா பலி பக்கலிலே சென்று மண்ணை இரந்தான்-

சாமத்துக்குச் செல்லாத இடத்தில்  யாய்த்து
பேதத்தில் இழிவது –
(சாம தான பேத தண்டங்களில் )

———-

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே–6-8-1-

தாளால் அளந்த பெருமானை- திரி விக்ரமன் -சொன்ன உடனே திரு வேங்கடம் –
மான் கொண்ட தோல் மார்வில்-வக்ஷஸ்தல மஹா லஷ்மி மறைக்க கிருஷ்ணாஜினம் யவனிகா திரை
அளந்த பெருமானை-சர்வ சேஷி –

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் –
மானுடைத்தான தோலை மார்விலே யுடைய மாணியாய் –
தன்னுடைய விநீத வேஷத்தைக் காட்டி
அவன் நெஞ்சை நெகிழ்த்து
பின்னை யாய்த்து பூமியை வாங்கிற்று –

மாணியாய் –
பூர்வ ஜன்மமும் இரந்தேயோ ஜீவித்தது -என்று தோற்ற இரக்கை –
கொண்டு அல்லது போகேன் -என்று இரப்பிலே
தகண் ஏறின படி  –

மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத் –
கிடந்த ஆனை கண்டு  ஏறின மகா பலியதான பூமியைத்
தான் அவன் பக்கலிலே இரந்து பெற்றானாய் இருக்கை-
அவன் அல்லாததை அவனதாக்கி
உடைய தான்
தன்னது அல்லாதது ஓன்று அவன் பக்கலிலே பெற்றானாய் இருக்கை –
நமக்கு  ஏதேனுமாக –
பெறும் இத்தனை யன்றோ வேண்டுவது -என்று இருந்தான் –

தாளால் அளந்த பெருமானை- –
கையிலே நீர் விழுந்த அநந்தரம்-
அவன் மறு மனஸ்ஸூ படுவதற்கு முன்பே எல்லை நடந்து கொண்டான் ஆய்த்து –

தாளால்-
பிராட்டி திரு முலைத் தடத்திலும் கண்ணிலும் வைத்துக் கொள்ளுகைக்கு அர்த்திக்கும் படி
ஸூகுமாரமான திருவடிகளாலே யாய்த்து
காடையும் மேடையும் அளந்து கொண்டது –

பெருமானை –
சர்வ சேஷியாய்-
சர்வாதிகனாய் –
இருக்கிறவன் இப்படி  தன்னை தாழ விட்ட இடத்திலும்
தாழ்ந்து தோற்றாமை இறே
தாழ விட வல்லான் ஆய்த்து –

தேன் கொண்ட சாரல்  திரு வேங்கடத்தானை –
தேன் மிக்க பர்யந்தத்தை உடைத்தான
திரு மலையிலே வந்து நிற்கிறவனை –
தாளால் அளந்த போது தப்பினார்க்கும் இழக்க
வேண்டாத  படி திருமலையிலே வந்து நின்றான் ஆய்த்து-

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –
அவன் நாடித் திரிகிற போது
வைமுக்யம் பண்ணி இறாய்த்து திரிந்த  நான்
தேடிச் சென்று –

நறையூரில் –
அறுகாத பயணம் போய்
பரம பதத்தில் காண்கை அன்றிக்கே
விடாய்த்த இடத்தில் தண்ணீர் குடிக்கப் பெறுவாரைப் போலே
திரு நறையூரிலே காணப் பெற்றேன் –

———

யுலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-1-

பரப்பை உடைத்தான பூமியை அடைய இரண்டு அடியாலே அளந்த
அத்புத கர்மத்தால் குறைவற்றவன் –

நாமம் சொல்லில் நமோ நாராயணமே –
அவனுடைய பேர் சொல்லில் -நமோ நாராயணமே –

——-

யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே  –6-10-2-

லோகத்தை இரண்டு அடியாலே அளந்து கொண்டவன் உடைய நாமம் –

——–

மிக்க தாடாளன் இடந்தான் வையம் கேளளாகி உலகை ஈரடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே

———

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பரிதால் ஆண்டே என்று ஆதரிக்கப் படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் –நறையூர் நின்ற நம்பீயோ-7-2-5-

நீண்டாயை-இடம் காலம் வடிவம் -மூன்றாலும் நீண்டு

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பது அரிதால் –
உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை சிலர் பேச என்று புக்கால்
எல்லாம் பேசி தலை கட்ட ஒண்ணாத படி
அபரிச்சேத்யனாய் உள்ள உன்னை
ப்ரஹ்மாதிகள் நெஞ்சால் கூட அனுசந்தித்து ஸ்தோத்ராதிகளைப் பண்ணி
கண்ணாலே காண வேணும் என்று ஆசைப் பட்டால்
காண அரியையாய் –

——–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மானுருவாய் மூவடி மாவலியை வேண்டி தானமர ஏழுலகும் அளந்த வென்றித் தனி
முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்–7-8-6-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித் தானமர வேழலகு மளந்த
அவன் பக்கலிலே பெறா விடில் ஜீவிக்க அரிது -என்று
தோற்றும் இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையனாய் –
தனக்கு இல்லாதது மூவடியாய் –
அது உடையான் மகா பலியாய் –
அவன் கையில் தான் நீர் ஏற்றுப் பெற்று-
அந்த திருவடிகளின் கீழே ஏழு வகைப் பட்ட லோகங்களும்
அடங்கும்படிக்கு ஈடாக வளர்ந்து –

——–

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த    வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி  யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —8-7-5-

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளும்
சனகாதிகளும்
தொழுது உஜ்ஜீவிக்கும் படியாக –

அண்டமொட கலிடமளந்த    வரமர் செய்து –
அண்டமொடு அகலிடம் அளந்தவர்  அமர் செய்து –
அந்தரிஷத்தோடு
பூமிப் பரப்பை அளந்தவர் –

————–

படிபுல்கும் அடியிணை பலர் தொழ மலர் வைகு கோடி புல்கு தடவரை யகலமதுடையவர்–8-7-8-

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகுகொடி புல்கு  தட வரை யகலமது டையவர் –
படி என்று பூமி
அத்தை புல்கும் அடி இணை உண்டு -பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
மலர் வைகு கொடி உண்டு -பெரிய பிராட்டியார்
அவள்  விரும்பி அணையா நின்றுள்ள
பெரிய  வரை போன்று இருந்த மார்வை உடையவர் –

——

தொழு நீர் வடிவின் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை –கண்ணபுரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-5-

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட-
அவசா பிரதி பேதிரே-(உத்யோக பர்வம் )என்கிறபடியே-
(எழலுற்று மீண்டும் இருந்தானே துரியோதனனும்
தங்கள் வசம் இழந்து தொழப் பண்ணுமே
ஊராக தீண்டியது அது உலகமாகத் தீண்டியது இது )
கண்டார்க்கு தொழுது அல்லாது நிற்க ஒண்ணாத
வடிவை உடைய வாமன வேஷத்தை உடையவனாய்
வந்து அவதரித்து
கடல் சூழ்ந்த ராஜ்ஜியம் மகா பலியதாய்
அவன் பக்கலிலே தான்  இரந்து
பெற்றானாம் படி பெற்ற –

மூவா வுருவின் அம்மானை –
சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு
நிலை நின்ற வடிவு -என்கிறார் –

———-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி
ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –

(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

———

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே—8-10-8-

உண்டு என்று இட்ட போதோடு
இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதோடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே
தகண் ஏறின வடிவை உடையனாய்
பூமிப் பரப்பை யடைய அளந்து கொண்டதுவும்
சிறுக்கனுக்காக சாயுதனான ஹிரண்யன் உடைய
ஆபரணங்களால் அலங்க்ருதமான மார்வைக் கிழித்ததுவும் –

ஈண்டு நினைந்து இருந்தேன் –
நீ முற்காலத்திலே செய்த செயலை நான் இப்போது நினைத்து இருந்தேன் –

————-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரோடும் கொண்டு பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட
நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியுள் நின்றானே–9-1-5-

மகா பலி உடைய
அர்த்தித்தார் அர்த்தித்து எல்லாம் கொடுக்கிற யாகத்திலே
வாமன வேஷத்தை பரிஹரித்துக் கொண்டு போய் புக்கு
அவன் வார்த்த நீரோடு
மூன்றடியும் கொண்டு ஸ்வீகரித்து

(த்ரய சம்ப்ரதாயம் ஆகவே இங்கும் மூன்றடி
மாவலி மூவடி மண்தா -இதுவும் த்ரயம்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள்
மான் தோல் போட்டு மூடி -அந்தப்புரத்திரை -கடாக்ஷம் லேசம் இருந்தால் கார்யகரம் ஆகாதே )

பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –
அநந்தரம்
பூமிப் பரப்பை அடைய
இரண்டடியாலே  அளப்பதாக
பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –

—————

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்-9-4-2-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
ஸூலபன் அல்லாதவனை  ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ
அது தான் (அந்த வாமன அவதாரமே ) பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே
என் தசையை அறிவியுங்கள் -என்கிறாள் –
(முன்னம் ரொம்ப முன்னே -சற்று முன்னே -இரண்டும் சொல்லலாமே )

கால விப்ரகர்ஷம் போக்கி
தேச விப்ரகர்ஷம் அல்ல கிடீர் இழைக்கைக்கு –
பாவியேன் -இன்று அன்றே அவ்வடிவு கொள்ள அடுப்பது –
ஒரு நீர்ச் சாவி கிடக்க கடலிலே வர்ஷிப்பதே
ஆறு புகா விட்டாலும்
வர்ஷியா  விட்டாலும்
கடலுக்கு குறை இல்லை இறே-
கால பிரத்யா சத்தியாலே பல்லிலே பட்டுத் தெரித்தது -என்கிறாள்  –

குறளுருவாய்-
அப்ராக்ருத சமஸ்தானத்தை
கண்ணாலே முகக்கலாம் படி யாக்கின படி –

மூவடி மண் கொண்டளந்த
த்ரை லோக்யத்துக்கு அவ்வருகும் நித்ய விபூதியும்
தன்னதாய் இருக்கிறவன்
கிடீர் மூவடியை இரந்தான் –
இரந்ததுவும் -மண் அளந்ததுவும் மிகை காணும் –
அவ்வடிவைக் கண்ட போதே ஆத்மாத்மீயங்களை
இவனதாக்கினான் ஆயிற்று -அவன்
தத்த மச்யாபயம் மயா-என்னுமா போலே –
ராகவம் சரணம் கத -என்றதுக்கு உள்ளே பெருமாள் அங்கீகாரமும் உண்டு –
நடுவு கால ஷேபம் மகா ராஜர் அனுமதி பெறுகைக்காக ஆயிற்று –

(அந்த அபதானம் -நினைவு உள்ளத்தில் நெருக்கமாக -அனுசந்தான வை லக்ஷண்யத்தால் –
தெளிவாக இருப்பதால் பக்கத்தில் நடந்தது போல் தெரிகிறதே
மஹாபலி போல் கண்டதும் அனைத்தையும் கொடுத்த வ்ருத்தாந்தம்
விபீஷண ஆழ்வானுக்கு அனைத்தும் கொடுத்து விட்டேன் என்றால் போல் )

மூவடி மண் கொண்டளந்த மன்னன்-
அவன் பக்கல் இரந்து பெற்று வளர்ந்து அளந்து கொண்டான் ஆயிற்று
அவனுடைய அபிமானத்தோடு சேர்க்கைக் கொள்ளுகைக்காக இரந்தான் ஆயிற்று

மன்னன் –
ராஜாதி ராஜ சர்வேஷாம்
விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மகான்  -ஈஸ்வரம்  தம் விஜா நீமஸ் ச விபு ப்ரஜாபதி -என்னுமா போலே –

மன்னன்-சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்-
அன்யார்தமான செயலிலே நிறம் இழந்தேன் –
இந்த்ரனுக்காக செய்த செயல் என்று தோற்றிற்று இல்லை காணும் இவர்க்கு
அன்று கரு மாணி யாய் இரந்த கள்வனே உன்னைப் பிரமாணித்தார் பெற்றே பேறு-(பூதத்தாழ்வார்-61- )
ஆஸ்ரிதர் எல்லாருக்குமாக செய்த செயல் என்று இருக்கிறார் –
தன் உருக் கெடுத்து  -வேற்று உருக் கொள்ளுவது
இரப்பது
அளப்பதான –
செயலிலே யாய்த்து விவரணை யாயிற்று –

—-

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-3-

நிலா பரந்தாப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடையை
யுடையனான மகா பலியுடைய யாகத்திலே சென்று
தன் அல்லாத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை  யுடையவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

——–

அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த எம் அடிகள் தம் கோயில் –மாலிரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-3-

அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து
அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன்
பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம் –
(பின்னானார் வணங்கும் சோதி -காலத்தாலும் ஞானத்தாலும் பின்னானார் )

———

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் –திருமால் இரும் சோலை நின்ற வானவர் கோன்-9-9-5-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து  –
மகா பலியினுடைய யாகத்திலே
ஆசூர பிரக்ருதிகள் நடுவே தனியே
வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –

வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன் –
பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி
அளந்தவன் –

———-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம் செல வைத்த பிரான்–10-6-5-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் –
வாமன வேஷத்தோடு வந்து தோற்றி
பரப்புடைத்தான ஆகாசம் எங்கும்
இடம் அடையும் படி வளர்ந்தான் –

அடியார் படும் ஆழ்  துயராய வெல்லாம் –
தன் திருவடிகளை ஆஸ்ரயித்து இருக்கும் சேஷ பூதருக்கு
அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள் எல்லாம்

தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன் –
அவர்களை ஸ்பர்சியாத படி யாக மநோ ரதித்து
(ஸங்கல்பித்து என்னாமல் மநோ ரதித்து -என்றது ஆசைப்பட்டு தனது பேறாகச் செய்தமை )
விரோதியைப் போக்கிக் கொடுத்து
அவ்வளவே அன்றிக்கே
நித்ய ஸூரிகள் அளவும் செல்லும்படியாக வைத்த உபகாரகன் –

——–

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண்
என்று இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே–11-3-6-

ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்த்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி –
அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே
பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்
ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது
பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று
இதிலே வித்தராய் –
ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து –

———

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறளாகி மெய்ம்மை உணர செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து
பெறினும் மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் அரசே–11-4-5-

வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர –
உதாரன் யென்று பிரசித்தமாய் இருக்கச் செய்தேயும்
தேவர்கள் குடி இருப்பை அழிக்கும் படியான பலம் –
இத்தை உடைய மஹாபலி யஞ்ஞ பூமியிலே சென்று –
கண்டார்க்கு அடைய ஆகர்ஷகமான வாமன வேஷத்தைக் கொண்டு
யதார்த்த ஜ்ஞானத்தை உடையனாய் –

செந் தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
அனபிசம்ஹித பலமான
அனுஷ்டானத்துக்கு சேஷமாய்
நாட்டார்க்கு ஹிதானுசாசனம் பண்ணும் வேதத்தை
வாயாலே உச்சரியா நின்றுள்ள ருஷியாய்-
ஓரடிக்கு சிறை இட்டு வைப்பானாக
மூன்றடியை வேண்டிப் பெற்றவாறே –

மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் –
மந்தரத்துக்கு மேல் போய்
சந்த்ராதித்யர்கள் ஸ்தானத்து அளவிலே நின்று ஆதரிக்க
ப்ரஹ்மா-நம் இருப்பில் திருவடிகள்   வந்தது  -யென்று
புறப்பட்டு ஆஸ்ரயிக்கும் படி –
வளரா நிற்பதாய் –

(மேலைத் தண் மதியும் கதிரவனும் தாண்டி -மதி மேல் -ஆதித்யன் கீழ் –
திருவடிக்கு குளிர்ச்சிக்கு தண்மை தர இத்தை முதலில் சொன்னது போல் இங்கும் சந்த்ர ஆதித்யர்கள் –
மேலைத் தண் மதியும் என்றாலே கீழைக் கதிரவனும் என்பது ஸித்தமாமே )

அந்தரம் ஏழினூடு  செல வுய்த்த  பாதமது நம்மை யாளும் அரசே
சேரக் குடி ஏறி இருக்கிற உபரிதன லோகங்கள் ஏழும்
நடுவே போம்படி நடத்தின
திருவடிகள் நமக்கு ரஷகம் –

———–

கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும் விண்டேழுலகுக்கும் மிக்கான் காண் சாழலே–11-5-9-

(விண்டு-விரிந்து விபூவாய் -விஷ்ணு )

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
1-வடிவு அழகாலும்
2-வரையாதே தீண்டும்படி யாலும்
3-ஆஸ்ரிதர்க்கு தாழ்வு செய்யும்படி யாலும் –
கிருஷணாவதாரத்தோடு போலியாய் இறே ஸ்ரீ வாமன அவதாரம் இருப்பது –

சுக்ராதிகள் வார்த்தைக்கும் கேளாதே இரங்கும்  படியாக
நாட்டில் வாமனர்கள் வளர்ந்த இடத்தோபாதி-என்னும்படி
அறக் குறளாய்-

வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ    –
ராஜாவாய் மாலை இட்டு
உதாரனாய் இருக்கிற மஹா பலி யஞ்ஞ பூமியிலே
அவன் கண் வட்டத்துக்கு உள்ளே நின்று
மூன்றடி மண் இரந்தான் காண் –

வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு  ஏழ்   உலகுக்கும் மிக்கான் காண் சாழலே –
அவன் கண் வட்டத்தே நின்ற இவனை
நாட்டில் கண்டவர் இல்லை கிடாய் –

————–

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பாரேல் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஆனலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே–11-5-10-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
கிரித்ரிம வேஷத்தைக் கொண்டு
சிலருக்குச் சென்று கிட்ட ஒண்ணாத படி

வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
திருப் பாற் கடலிலே காண் அவன் கிடப்பது –
சடக்கெனெ சென்று காண ஒண்ணாத படி
திருமலையிலே காண் அவன் நிற்பது -என்பார்கள் காண்

வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி-உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே
அப்படி இருக்கிறவன் காண்
ஆழ்வார் ஹிருதயத்தில் நின்றும்
புறப்படத் தள்ளினாலும்
புறப்படாதே கிடக்கிறான் –

(ப்ரீதி பிரகர்ஷத்தால்
உந்மத்தகம்
பலம் சொல்வதை மறந்து
அன்யாப தேசத்தில் அருளிச் செய்கிறார் –
திருப்பாற் காதல் -அவதார கந்தம்
பலம் -திருமலையில் நிற்க
இங்கு இருந்து தபஸ்ஸூ
ஆழ்வார் திரு உள்ளமான கலங்கா பெரு நகரம் பெறுவதற்காகவே
இக்குண ஆதிக்யத்திலே ஈடு படுகிறார் -)

—————

உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே —-11-6-5-

சைதன்யம் உண்டாகில்
வரையாதே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
அத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கு நிர்வாஹகனாய் –

பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே   –
அளவுடையவனாய் இருந்துள்ளவனுடைய
பெயரான திரு நாமங்களையே
பேசீர்களே –

———-

நீள் வான் குறளுருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கும் மிக்கானை
தோளாத மணியைத் தொண்டர்க்கு இனியானை கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே--11-7-2-

(தக்கணைக்கு மிக்கானை-தக்ஷிணை -எவ்வளவு கொடுத்தாலும் உயர்ந்த )

நீள் வான் –
நீளுக்கைக்கு நரிப் பூண் இட்டாப் போலே -நின்றபடி
(நரிப் பூண் கள்ளப் பூணல் )
அன்று செய்த கீர்த்தி கொண்டாட -நீள -என்னுமாம் –

குறளுருவாய் –
சுருங்க நின்றதனையும்
பெருக்க வளருகைக்கு உறுப்பாக –

நின்றிரந்து-
வடிவே அமைந்து இருக்கச் செய்தே
அதுக்கு மேலே
அவனை இரந்த –

மாவலி மண் –
அவன் என்னது என்று அபிமானித்த பூமி

தாளால் அளவிட்ட –
திருவடிகளுக்கு ஈடாக
கீழே இட்டுக் கொண்டு நின்றபடி –

தக்கணைக்கு மிக்கானை –
தஷிணையாக மஹா பலி கொடுத்த கொடை
இன்னம் போராது
என்னும் படி இருந்தவன்-
(கொடை போராமல் மூன்றாவது அடிக்கு இடம் இல்லாதபடி )

தோளாத மா மணியைத் –
துளை பட்டு சிலர் விநியோகம் கொண்டு அன்றிக்கே
அனுபபுக்த்தமாய்
ஒளி மழுங்காதே
ஜாதியான ரத்னத்தை –

தொண்டர்க்கு இனியானை –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –இரண்டாம் திருவந்தாதி -என்று
ஆஸ்ரிதர் ஈடுபட்டு
நெஞ்சிலே எப்போதும் அனுபவித்து இருக்குமவன் –

கேளாச் செவிகள் –
அவனுடைய கீர்த்தி கேட்க வென்றால்
கேளோம் என்னுமவர் செவி -செவி அல்ல –

கேட்டோமே –
ஷேபம் –

———————————————————————————–

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தட வரை திரித்து வானோர்க்கு
ஈயுமால் எம்பிரானார்க்கு என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே -16-

மாயமான் மாயச் செற்று“ என்றதனால் ஸ்ரீராமாவதாரம்;
மருதிறநடந்து“ என்றதனால் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்.
வையம்தாய்“ என்றதனால் ஸ்ரீ திரிவிக்ரமாவதாரம்.
அம்மா பரவைபொங்கத் தடவரை திரித்து வானோர்க்கீயும்“ என்றதனால் ஸ்ரீ கூர்மாவதாரம்.)

வையம் தாய –
முன்புத்தை அது வளர்ந்த பின்பு பண்ணின வியாபாரம் –
நடுவு தவழுகிற போது வியாபாரம்
இது பிறந்த அன்றே பண்ணின வியாபாரம் -இறே –
பூமியை அநாயாசேன அளந்து கொண்டு –

(வையம் தாய் = ‘தாய்‘ என்றது தாவி யென்றபடி.
“பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ –6-9-6- என்றதும் காண்க.)

———-

ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத் தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடி9எ வணங்கினேனே–5-

ஒண் மிதியில் –
சர்வ ஆதாரமான வஸ்து -சேதனர் தலையில் திருவடிகளை வைத்தால் லோகம் தரிக்க வற்றோ –
கம்சன் திருவடிகள் படும் காட்டில் நக்கரைந்து கிடந்தது இலனோ வென்னில் –
அவை தானே யாய்த்து தரிக்கைக்கு ஹேதுவும்-
தாரகமான பதார்த்தம் தார்யமானாலும் தாரகத்வம் நழுவாது இறே –
திருவடிகளுக்கு தான் தாரகன் ஆனவோபாதி
இவர்கள் தலைக்கும் தாரகன் தானே இறே –

(அவன் ஸ்வரூபமே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் குணங்களுக்கும் ஆஸ்ரயம் தாரகம்)

தார்யம் ஆனது தாரகம் ஆக மாட்டாது –
தாரகம் ஆனது தார்யம் ஆக மாட்டாது –
சரீரம் ஆத்மாவுக்கு அதிஷ்டானமாய் இருந்தாலும் சரீரம் தாரகம் ஆகிறது அன்று –
ஆத்மா தார்யம் ஆகிறது அன்று இறே –
ஆத்மா தாரகம் சரீரம் தார்யம் என்னும் இடம் சரீர ஆத்மா லஷணம்
சொல்லுகிற இடத்தே சொல்லிற்று இறே –

சரீர ஆத்ம லஷணம் ஆவது
யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே –
நியந்தும் தாரயிதும் சக்யம்-தத் சேஷை தைக ஸ்வரூப
பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

புனலுருவி –
பூமி அளவாதல்
சப்த சமுத்ரங்கள் அளவாதல்
சப்த த்வீபங்கள் அளவாதல் –
சக்ரவாள கிரி அளவாதல் -(இங்கு தான் ஜாம்பவான் பறை கொட்டி ஆர்ப்பரித்தான் )
மகா ஜலத்து அளவதால் –
அண்டகடாஹத்து அளவாதல் -நிமுருகை அன்றியே –
ஆவரண ஜலத்து அளவும் செல்ல திருவடிகளை நிமிர்த்தபடி –

அண்ட கடாஹத்துக்கு உள்ளே அன்றோ ரஷ்ய வர்க்கம் –
அவ்வருகு போக வேண்டுவான் -என் என்னில்
ரஷ்யத்தின் அளவு அல்ல ரஷகன் உடைய பாரிப்பு -என்கை

அதனில் பெரிய அவா -என்று
இவருடைய அவாவைப் போலே காணும் அவனுடைய அவாவும்
இவருடைய ப்ரேமம் செய்தது செய்ய மாட்டாதோ அவனுடைய வாத்சல்யம் –

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-)

திருவடிகள் அண்ட கடாஹத்தையும் ஊடுருவி ஆவரண ஜலத்து அளவும் சென்றால்
அண்டகடாஹம் போகாதோ என்னில் -அது வேண்டுவது இல்லை இறே –

ஸூஷ்ம ஸ்தூலத்தை வியாபிக்கும் போது -ஆகாசம் அண்ட கடாஹத்தை வியாபியா நின்றது –
அதில் காட்டில் ஸூஷ்ம ரூபமான மூலப் பிரக்ருதியிலும்
ஸூஷ்மமாய் இறே திவ்ய மங்கள விக்ரகம் இருப்பது –

மிதியில் –
மதிய மூர்த்த்நாம் அலங்க்ரிஷ்யதே -என்றும்
படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும் –
திருவடிகளை சிரோ பூஷணமாகச் சொல்லுவது
திருவடிகளின் வைலஷண்யத்தையும் அறிந்து
தங்களுக்கும் அதிலே ஆதரம் உண்டானால் இறே –

தேகாத்ம அபிமானிகள் ஆகையாலே வெற்றுக் கால் தங்கள் தலையைத் துகைத்ததாக நினைத்து இருக்கும் இத்தனை இறே –
ஆகையால் அவர்கள் அபிப்ராயத்தால் அருளிச் செய்கிறார் –

(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 31 –

த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்.)

(குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-)

(ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய
”கோல மாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே” என்றாற் போலே-
அலங்க்ருதமாகவும் அணியாகவும் உகந்து கொண்டார்களில்லையே;
அன்னவரது கருத்தாலே கால் என்றது.)

ஒண் மிதியில் –
நிலா தென்றல் சஞ்சரித்தால் போலே அனுகூலமாக திருவடிகளை வைத்த படி –
அல்லாத போது –திரு வாணை -என்று ஆணை இடுவர்கள் இறே –

அதவா
மேல் ஒரு காலத்தில் ஆபி முக்கியம் பிறந்தால்
தங்கள் பூர்வ வ்ருத்தத்தையும்
ஈஸ்வர வைலஷண்யத்தையும் பார்த்து இறாயாதே
வழக்கு பேசிப் பற்றலாம்படி மிதித்த மிதி யாகையாலே –
ஒண் மிதி -என்கிறது -என்னவுமாம் –
நான் விமுகன் ஆனவன்று என் தலையிலே இருந்த திருவடிகளை
ஆபிமுக்யம் பண்ணின இன்று பற்றக் குறை என் என்னலாம் இறே
லோக விக்ராந்த சரணவ் -என்றால்
ஈஸ்வரனுக்கு மறு மற்றம் இல்லை போல் காணும்-

(“பிதரம் மாதரம் தா³ராந் * புத்ராந் ப³ந்தூ⁴ந் ஸகீ²ந் கு³ரூந் ।
ரத்நாநி த⁴நதா⁴ந்யாநி * க்ஷேத்ராணி ச க்³ருʼஹாணி ச” ॥

“ஸர்வத⁴ர்மாம்ஶ்ச ஸந்த்யஜ்ய * ஸர்வகாமாம்ஶ்ச ஸாக்ஷராந் ।
லோகவிக்ராந்த சரணௌ * ஶரணம் தேঽவ்ரஜம் விபோ⁴!” ॥)

ஒரு கால் நிற்ப –
ஒரு திருவடிகள் நிற்ப
திருவடியே வணங்கினேனே -என்னா நின்றார் மேல்
கீழ் –திருவடி என் தலை மேலேவே -என்றார்-
ஆயிருக்க திருவடிகள் என்னாதே கால் என்கிறது –
சம்சாரிகள் அபிப்ராயத்தாலே
ஒருவன் கால் தம் தலையில் இருந்தது என்று நினைத்ததற்கும் அது ஒழிய
வகுத்ததுமாய் ஸூரி போக்யமுமான திருவடிகள் இறே
நம் தலையில் இருந்தது என்ற முறை அறியார்கள் இறே –

நிற்ப –
திருவடிகள் பூமியை அளக்க என்று உத்யோகித்த உத்யோகத்தே
குசை தாங்கின அருமை எல்லாம் தோற்றுகிறது ஆய்த்து –
இதனுடைய உத்யோகத்தே குசை தாங்கினான் என்று இறே அவன் தனக்கு ஏற்றம்

குசை தாங்குகை -வேகத்தில் ஓடுகிற குதிரையை கடிவாளம் கொண்டு வெட்டி நிறுத்துமா போலே நிறுத்துகை –

ஒரு காலும் –
பூமியை அளந்த திருவடிகளை அனுபவித்தார் கீழ் –
இத்தால் ஊர்த்த்வ லோகங்களை அளந்த திருவடிகளை அனுபவிக்கிறார் —

ஒரு காலும் –
மற்றத் திருவடிகளும்
மற்றக் காலும் என்னாதே –ஒரு காலும் -என்கையாலே
இது ஓன்று இருந்தபடி என் என்கிறார் –
அந்தத் திருவடிகளை அனுபவிக்கிற போது இதுக்கு மேற்பட்ட போக்ய வஸ்து இல்லை யாகாதே என்று இருந்தார் –
இந்தத் திருவடிகளைக் கண்ட வாறே இதுக்கு மேற்பட்ட போகய வஸ்து இல்லை -என்கிறார்-

காமருசீர் அவுணன் உள்ளத்து
மகா பலி யினுடைய மநோரத ரூபமான ஜ்ஞானத்தை அதிக்ரமித்து —
காமரு சீர் அவுணன் –
ஸ்ப்ரஹணீய ஸ்வபாவனான -மகா பலி –
ஜ்ஞாதாக்கள் அடைய இவனை அஹங்கார க்ரஸ்தன் -பகவத் விபூதி அபஹாரி -என்று –
நிந்தியா நிற்க இவர் மகா பாக்யவான் -என்கிறார் –
அதற்கு ஹேது என் என்னில்

பிற்பாடரான நம்மைப் போல் அன்றியே –
ஸ்ரீ வாமனனுடைய வடிவு அழகையையும் சீலத்தையும் கண்ணால் காணப் பெற்றவன் அன்றோ
 –
இவனோபாதி பாக்யவான்கள் உண்டோ -என்கிறார் –
நானும் -அடியேன் -என்று இருக்கிறதை விட்டு –
பகவத் விபூதியை அபஹரித்து
ஔதார்யத்தை ஏறிட்டுக் கொண்டு
யஞ்ஞத்தில் இழியப் பெற்றிலேனே -என்கிறார் –
காமருதல் -விரும்புதல்-

(“ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய
திருவடியைச் சென்னி மேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.)

எண் மதியும் கடந்து –
மூவடி என்றதும் (கொள்வன் நான் மாவலி மூவடி தா )-அத்தை ஒழிந்த இடம் நம்மதன்றோ -என்று இருந்தான் -(எண் மதியும்-நினைவு )
பூமியை அடங்க அளந்தவாறே -ஊர்த்வ லோகங்கள் உண்டு இறே என்று இருந்தான் –
அந்தரிஷத்தை அளந்தவாறே மேல் உள்ளத்து எல்லாம் இழந்தோம் என்று நிவர்தன் ஆனான் –
ஆகையாலே –கடந்து -என்கிறார் –

அண்ட மீது போகி –
ஒரு திருவடிகளே அண்ட பித்திக்கும் அவ் வருகே போய்-
அளந்த க்ரமத்திலெ சொல்லாதே -பிரதமத்திலே –அண்ட மீது போகி -என்பான் என் என்னில் –
ஸ்ரீ வாமனன் உடைய விசயத்திலே தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே
அளக்கும் பிரதேசத்துக்கு கொண்டைக் கால் நாட்டுகிறார் –
ஜிதம் பகவதா ஜகத் -(ஹரி வம்சம் )என்று ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர் அவனுடைய விசயத்திலே
தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலே சக்ரவாள கிரியைச் சூழ பறை அடித்துக் கொண்டு திரிந்தால் போலே -(32 தடவை சுற்றி பறை சாற்றினாரே )

மீது போகி
என்றது மீது போகைகாக என்று கொண்டு
அர்த்தத்தோடு சேர சப்தத்தை நியமித்துச் சொல்லப் போக கடவது –
திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றத்தை
வணங்க -என்று அர்த்தத்தை நியமித்துச் சொல்லக் கடவது இறே –
அப் பஷத்திலும் முற்பட சொல்லுகைக்கு ஹேது கொண்டைக்கால் நாட்டுகிறார் -என்கிற இதுவாம் இத்தனை –

(நாளும் நின்று அடும் நம் பழைமை அங்கொடு வினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வளமே –1-3-8-)

(காவலில் புலனை வைத்து -திருநாம சங்கீர்தன மஹிமை ன்சொல்ல காவலில் இல்லாமல் புலனை வைத்து
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய் -உறங்கேல் என்று பிரித்தே பிரகரணத்துக்குச் சேரும்
அதே போல் இங்கும் மேல் போகும் இடங்களை சொல்வதால் இங்கும் போவதற்காக என்றே கொள்ள வேண்டும்)

எழுந்து இரு விசும்பினூடு போய் -என்று அந்வயம் –
எழுந்து
கையில் நீர் விழுந்த சமனந்தரம்
மகா பலியினுடைய யஞ்ஞவாடத்தில் நின்றும் கிளம்பி -(உவந்த உள்ளத்தனாய் -மகிழ்ச்சி சிலிர்க்க வைக்க -அத்தாலே உயர்ந்தான் அன்றோ )
இரு விசும்பு -பெரிய ஆகாசம் –

பூமியைப் பற்ற பெரிதாய் இருக்கையாலும்
அவனுடைய வளர்த்தியில் தமக்கு உண்டான ஆதர அதிசயத்தாலும்
அந்தரிஷத்தை –இரு விசும்பு -என்கிறார் –

ஊடு போய் –
பூமிக்கு மேலே -ஸ்வர்க்கத்து கீழே நூறாயிரக் காதமாறு ஒக்கத்தை உடைத்தான –
அந்தரிஷம் இத்தனையும் விம்மும்படியாக திருவடிகளை நிமிர்த்த படி –
அந்தரிஷ ஸ்ருஷ்டி சபலமாய்த்து -என்கிறார் –
திருவடிகள் வ்யாபியாத போது பாழ் போலே காணும் -(குட திசை முடியை வைத்து -திசைகள் ஸ்ருஷ்டித்த பயன் பெற்றதே )

மேலைத் –
அந்தரிஷத்துக்கு மேல் எல்லையாய்
ஸ்வர்க்கத்து கீழ் எல்லையாய்
யாய்த்து ஆதித்ய பதம் இருப்பது –
அதற்கு மேலே நூறு ஆயிர  காதமாறு சந்திர பதம்

ஆனால் ஆதித்ய பதத்தைச் சொல்லி சந்திர பதத்தை சொல்லாது ஒழிவான் என் என்னில் –
அஹங்கார க்ர்ஸ்தராய் -பகவத் விமுகராய் இருப்பவர்கள் தலையிலே
அத்யந்த ஸூகுமாரமான திருவடிகளை வைக்கையாலே
இவர் சிசுரோபசாரம் பண்ணுகிறார் –
அது தோற்ற விறே –தண் மதி- என்கிறார் –
வெங்கதிரோன் -என்றிலரே –
வெறும் கதிரவன் – இறே அங்கு –
மேலைக் கதிரவனும் கீழைத் தண் மதியும் –
மேல் -என்றது –கீழையும் காட்டும் இறே –

தவிர வோடித்
அதுக்கும் மேலே போய் –
ஓடி என்று –
திருவடிகளை அமைக்க வேண்டும்படியான த்வரை இருக்கிறபடி –
தாய் நாடு கன்றே போலே -என்று
சேஷ பூதன் சேஷியை கிட்டுகைக்கு உண்டான த்வரையோ பாதி போரும் இறே –
சேஷிக்கும் சேஷ பூதனை லபிக்கைக்கு உண்டான த்வரையும் –
எல்லார்க்கும் தம் தாம் அபிமத சித்தியிலே த்வரை உண்டாய் இருக்கும் இறே –

(தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாகத்
தாய் நாடு கன்றே போல் தண்  துழாயான் அடிக்கே
போய் நாடிக் கொள்ளும் புரிந்து—முதல் திருவந்தாதி -30-)

தாரகையின் புறம் தடவி –
நஷத்ர பதத்தையும் வியாபித்து -அதுக்கும் மேலே போய்
சந்திர பதத்துக்கு மேலே நூறாயிரக் காதமாறு உண்டு இறே -நஷத்ர பதம் –
நஷத்ர பதத்துக்கு மேல் எல்லை -சிம்சுமார பிரஜாபதி- இறே –
க்ரஹங்களோபாதி நஷத்ரங்களிலே ஒருவன் இறே அவனும் –
பன்னிரண்டு நூறாயிரக் காதமாறு உண்டு இறே –

தடவி –
கெடுத்துத் தேடுவாரைப் போலே -ரஷகனுக்கு ரஷ்ய வர்க்கம் தேட்டமாய் இருக்கிறபடி –
இப்படித் தடவி திரிகிற இடத்திலும் அகப்படாதே –
கடந்து -என்கிறார் –
புடை தான் பெரிதே புவி -என்கிறபடியே
திரிவிக்கிரம அபதானத்திலும் அகப்படாதே கிடப்பதொரு புடை உண்டாவதே –

(என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-பெரிய திருவந்தாதி -74-)

தடவி –
அனுகூலமாக திருவடிகளை வைக்கையாலே ஸூக ஸ்பரசமாய் இருந்தபடி -என்னவுமாம்-

அப்பால் மிக்கு –
ப்ரஹ்ம லோகம் அவதியாக வியாபித்து –
மகா பலி அபஹரித்தது த்ரை லோக்யம் அன்றோ –
மேல் உள்ள லோகங்களை அளக்க வேண்டுவான் என் என்னில் –

அந்ய சேஷத்வத்தால் த்ரை லோக்யமும் நசித்தவோபாதி
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலே மேல் உள்ள லோகங்களும் நசித்துக் கிடந்ததாய் ஆய்த்து –
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அந்ய சேஷத்வத்தால் வரும் அநர்த்தம் போல் அன்றே
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் அநர்த்தம் –
சேஷத்வத்தை இசைந்தான் இறே இவன் –

மண் முழுதும் அகப்படுத்து –
சதுர்தச புவனத்தையும் அளந்து கொண்டு –
மண் -என்று பூமியைச் சொல்லி
முழுதும் -என்கையாலே ஊர்த்வ லோகங்களையும் நினைக்கிறார் –

அங்கன் இன்றிக்கே
மண் -என்று ஸ்தலமாய்
மேல் உண்டான ஸ்தலங்களைச் சொல்லுகிறது –
அளந்து -என்னாதே –அகப்படுத்து -என்கையாலே –
இவன் மேல் விழுக்காடும் அவர்கள் இறாய்ப்பும் -தோற்றுகிறது –

நின்ற –
க்ர்தக்ருத்யனாய் நின்ற
சேஷ பூதன் சேஷியை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் போலே காணும்
சேஷியும் சேஷ பூதனை லபித்தது க்ர்த்க்ருத்யனாய் ஆனபடி -(க்ருத க்ருத்யா ததோ ராம விஜ்வர பிரமுமோத ஹா )

வெந்தை –
ஸ்ரீ வாமனன் உடைய வடிவழகையும் சீலத்தையும் கண்டால்
ராஜ்யத்தை கால் கடைக் கொண்டு மார்பை பிளக்க எழுத்து வாங்கிக் கொடுக்க பிராப்தமாக இருக்க
1-ராஜ்யத்தை கொண்டு போனான் இந்த்ரன் –
2-மகாபலி தன்னை வைத்து ராஜ்யத்தைக் கொடுத்தான் –
3-நான் என்னைக் கொடுத்தேன் -என்கிறார் –

மலர் புரையும் திருவடியே வணங்கினேனே –
நிரதிசய திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் –
கீழே –தளிர் புரையும் திருவடி -என்றார் –
இங்கே –மலர் புரையும் திருவடி -என்கிறார் –

இதுக்கு ஹேது என் என்னில்
ஆழ்வார் உடைய விஸ்லேஷத்தால் வாடினவன் அவருடைய தலையிலே திருவடிகளை வைக்கையாலே
தளிறும் முறியும் ஆன படியைச் சொல்லிற்று -அங்கு
இங்கு -போக்தாக்களாய் அனுபவிக்க இழிந்த வாறே – போக்யமாய் இருக்கிற படியைச் சொல்கிறது –

(தளிர் புரையும் திருவடி-மலர் புரையும் திருவடி-ஒப்பற்ற இனிய உபாய உபேய -இரண்டுக்கும் இணை அடிகள்

திருக்கமல -பாதம் -பொன் தாமரை அடி போற்றும் பொருள் -பேசிற்றே பேசும் ஏக கண்டர்
ஸூர்யன் கண்டு தாமரை மலரும் -அடியார்களைப் பெற்று தாமரை அடிகள் மலரும் அன்றோ )

மலர் புரையும் –
ஆஸ்ரிதர் சந்நிதியிலே அலரும் தாமரை இறே இது –

திருவடி –
அனுபவிக்க இழியும் துறையும் திருவடிகள் இறே

திருவடியே
என்கிற அவதாரணத்தாலே
அவயவாந்தரங்களை வ்யாவர்த்திக்கிறது –
மேன்மையும் நீர்மையும் வடிவழகும் குறைவற்ற விஷயம் இறே –

1-ஈஸ்வரோஹம் -என்று இருப்பார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலே –
மேன்மையில் குறை இல்லை –

2-தன் உடைமையை லபிக்கைக்கு தான் அர்த்தியாய் செல்லுகையாலே
நீர்மைக்கு குறை இல்லை –

3-துஷ்ப்ரக்ருதியான மகா பலியையும் அகப்பட எழுதிக் கொள்ளுகையாலே
வடிவழகில் குறை இல்லை
 –
ஆகையால் புறம்பு போக வேண்டா விறே –

வணங்கினேன் –
அனுபவிக்கப் பெற்றேன் –
நித்ய பத்தாஞ்சலி -ஸ்புட ஸித்தாந்த -நம இத்யேவ வாதின–ஹ்ருஷ்டா சாந்தி பர்வம் –
ஸ்வேத தீப வாசிகள் முக்கரணங்களால் அனுபவம் -என்று முக்த போக்யத்தை சொல்லக் கடவது இறே –

இவருக்கு ஆஸ்ரயணீயமும் திருவடிகளே
அனுபாவ்யமும் -திருவடிகளே –

உலகம் அளந்த பொன்னடியை அடைந்து உய்ந்தேன் -என்று இறே ஆஸ்ரயண வேளையிலும் அருளிச் செய்தது –

(துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-அடைந்து உய்ந்தேன் -உபாய உபேயம் )

விமுகனான மகா பலிக்கும் ருசியைப் பிறப்பிக்கும் சௌந்தர்யத்தை
உடையவனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
தன் உடைமையை லபிக்கைக்காக தான் அர்த்தியாக செல்லும் சீலவானை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
அதீந்த்ரியமான விக்ரகத்தை துஷ் பிரக்ருதிகள் கண்ணுக்கும் அகப்பட விஷயமாக்கும் ஸூலபனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –
சதுர்தச புவனத்தையும் அளந்த சர்வ ஸ்மாத் பரனை ஒழிய ஆஸ்ரயணீயர் உண்டோ –

1-சர்வ ஸ்மாத் பரனாய் –
2-ஸீலவானய்
3-ஸூலபனாய்
4-ருசி ஜனகனாய் -இருக்குமவன் இறே -ஆஸ்ரயணீயவானும் போக்யவானும் ஆவான் –

த்ரை விக்கிரம த்வ சரணாம் புஜ த்வயம் மதிய மூர்த்தானம் அலங்க்ரிஷ்யதி –என்றார் ஆளவந்தார் –
லோக விக்ராந்த சரணவ் சரணம் தேவ்ராஜம் விபோ -என்றார் உடையவர்

கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 31

பிதரம் மாதரம் தாரான் புத்ரான் பந்தூன் சகீன் குரூன்
ரத் நாதி தந தான்யாநி ஷேத்ராணி ச க்ருஹாணி ச
சர்வ தர்மாமச்ச சந்த்யஜ்ய சர்வ காமாம்ச்ச சாஷரான்
லோக விக்ராந்த சரணு சரணம் தேவராஜம் விபோ -விஹா கேஸ்வர சம்ஹிதை

(ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாத குணங்கள் -பரத்வ- ஸுலப்ய ஸுசீல்ய -ஸுந்தர்ய -வாத்சல்ய –
பச்சை மா மலை போல் மேனி — –அச்யுதா -அமரர் ஏறே -ஆயர் தம் கொழுந்தே
மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்)

—————–

மிக்க பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்ட பேராளன்–20-

பாரளந்து –
அபேஷை இல்லாத அளவன்றிக்கே -இவர்கள் விமுகராய் இருக்க
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தலும்
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வரூபம் நசித்த படியைக் கண்டு
ஸ்வ சம்பந்தமே ஹேதுவாக எல்லார் தலையிலும்
திருவடிகளை வைத்து முறையை உணர்த்தி –

(உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியை வைத்து ஸத்தை பெறுவித்தருளினவன்,
விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப் பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே!
என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி.)

————

தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச்
சென்றுலகம் மூன்றினையும் திரிந்தோர்–28-

உலகம் மூன்றினையும் திரிந்து –
சதுர தச புவனத்தையும் அளந்து –
ஒரு மத ஹஸ்தி ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
எல்லார் தலைகளிலும் ஸ்வரைமாக திருவடிகளை வைத்த படியாலே –
திரிந்து -என்கிறது –

பிரணயிநிக்கு முகம் கொடுக்கை அன்றிக்கே
அந்ய சேஷத்வத்தாலும்
ஸ்வ ஸ்வாதந்த்ர்யத்தாலும்
விமுகராய் இருப்பார் தலைகளிலும் அகப்படத் திருவடிகளை வைக்கும் ஸ்வபாவன் அன்றோ -என்ன –

அவன் விசேஷஞ்ஞன் காண்
விமுகர் தலையில் திருவடிகளை வைக்குமது ஒழிய
எம்பெருமான் திருவடிக் கீழ் அணைய-என்று
இருப்பார்க்கு முகம் கொடுப்பவன் அன்று காண் -என்கிறாள்-

(“அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணா வுன் கோலப் பாதம்“ என்று
பல் பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர் காண் என்று சொல்லிக் காட்டுகிறபடி.)

———————————-

பாரளவும் ஓரடிவைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி-3-

அப்பூமியை அடைய அளந்தான் என்று -இவனுக்கு ஈஸ்வரத்வம் சொல்ல அளக்கைக்கு விஷயம் யுண்டாகில் அன்றோ -என்கிறார் —
எவ்வுலகம் நீர் ஏற்றது -என்று சொன்ன திரு உலகு அளந்து அருளின திவ்ய சேஷ்டிதத்திலே திரு உள்ளம் சென்று
அத்தை அனுபவிக்கப் புக்க இடத்திலே நிலை கொள்ள மாட்டாமல் அதிலே கிடந்தது அலைகிறார்

மகாபலியாலே பூமியை அளந்து
உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –
பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீ கரித்த படி அறிகிறிலேன்-

பேயளவு கண்ட-என்ற இத்தால் ஸ்வ யத்தனத்தாலே அவனை அறியப் புகில் பூதனை பட்டது படுவர் என்று கருத்து –
அறிகிலேன்-நீயளவு கண்ட நெறி-என்கிறது நீ என் திறத்தில் நினைக்கிற மார்க்கம் என்ன வென்று அறிகிறிலேன் -என்றுமாம் –

———-

பொரு கோட்டோர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை
நடுங்க விண் துளங்க மாவடிவில் நீ யளந்த மண்–9-

ஆபத்து வந்தால் ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அறத் தன்னை அழிய மாறியும் காரியம் செய்யும்
ஸ்வபாவங்கள் கிடீர் என்கிறார் –

தலையாலே சுமந்து நோக்கிலும் நோக்கும்
தலையிலே காலை வைத்து நோக்கிலும் நோக்கும் –
ஆஸ்ரிதர் கார்யம் பெரிய வடிவைக் கொண்டு புக்குச் செய்யிலும் செய்யும் –
சிறிய வடிவைக் கொண்டு பெரியனாய்ச் செய்யிலும் செய்யும் –

————-

உலகளந்த மூர்த்தி உருவே முதல்--14-

ஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –
சமஸ்ரயிப்பார் தலையிலும்-சமாஸ்ரயணீயர் தலையிலும் ஒக்கத் துகைத்தவன் –ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –என்கிறார்

————-

அடியும் படி கடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் –உலகளந்த நான்று–17-

இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டன –
திருத் தோள்கள் ஆனவை திக்குகளின் மேல் செல்ல
பிராட்டியைத் தழுவக் கடவ தோள் கிடீர் திக்குகளை தழுவுகின்றன
பூமியை அளந்து கொள்ளுகிற வன்று ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி
ஓர் இடத்திலே முகம் காட்டும் அளவன்றியே-ஜகத்துக்கு எல்லாம் ஒரு காலத்திலே உதவின அன்று –
திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –
தானே வந்து தலையிலே இருந்த அன்று இழந்து -இன்று -கேட்டார் வாய் கேட்பதே நான் -என்று வெறுக்கிறார்

————

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

துர் மாநிகளான தேவர்களுக்குத் தன்னைக் கொடா நிற்க -நிதி எடுக்கப் பெற்றார் -என்னுமா போலே —
என் பிள்ளை என்று அபிமாநித்தார் தளை கழன்றால்
அடியோம் என்றார் தளை கழலச் சொல்ல வேணுமோ-

———–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும் படை யாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம் அடையாழி நெஞ்சே அறி–21-

பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத்
தன்னை அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர் என்கிறார்

திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும்
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்–சர்வேஸ்வரன் -ஆகிறான்-
இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே
உன்னைக் கொடு

——–

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

நீ மண் இரந்து கொண்ட வகை–தன்னது என்று தர உகக்குமாகில் –நாம் இன்று பெற்றோமானால் ஆகாதோ என்று –
அநபாயினியான பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் தரக் கொள்ளுமா போலே –
இரப்புத் தோற்ற நின்ற
ஸுலப்யத்தையும் வடிவு அழகையும் காட்டி நான் எனக்கு என்று இருக்கும் மிறுகுதலை மீட்டு
உனக்கே ஆளாம் படி சேர்த்துக் கொள்ளுகைக்காக வன்றோ என்றபடி –

————

அரிய புலன் ஐந்தடக்கி ஆய்மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது ——50-

புறம்புள்ள அந்ய பரதை போய் அவன் பக்கலிலே சிநேக யுக்தராய்க் கொண்டு
அவனைக் காண்கை சால எளிது என்கிறார்

ஏதேனுமாக ஒன்றைக் கொடுக்கக் கடவோம் என்று இருக்குமவன்
பக்கலிலே தான் அர்த்தியாய்க் கொண்டு சென்று நிற்குமவன் ஆய்த்து –
ஆகையாலே அவனை ஆஸ்ரயிக்கும் இடத்திலே ஒரு அருமை தட்டாது என்கிறார் –

ஸ்நேஹ உத்தரமான பிரகாரத்தாலே -அபிமத விஷயத்தை அணைக்குமா போலே போக ரூபமாக ஆஸ்ரயிக்கில்-

அப்ரதி ஷேதம் யுடையார்க்கு அர்த்தியாய் வரும் என்றவாறு

———

கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழரவப் பொங்கணையான் தோள்-62-

திரு வநந்த வாழ்வான் மேலே திருக் கண் வளர்ந்து அருளக் கடவ சர்வேஸ்வரன் உடைய
திருத் தோள் கிடீர்-அவன் மேலே சாய்ந்தாலும் பொறாத படியான  சுகுமார்யத்தை யுடையவன் கிடீர்
இச் செயல்களைச் செய்தான்-படுக்கையில் கண் வளரப் பெறாதே அலமந்து திரிவதே

——–

மண் தா வென விரந்து மாவலியை ஒண் தாமரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் அங்கை தோய வடுத்து–79-

ஆஸ்ரிதர் ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக் கார்யம் செய்திலனோ என்கிறார் –நீ செய்த செயலை அனுசந்தித்து நாட்டார்   உன்னைக் கொண்டாடும்படி தான் செய்தாயோ –
குணமே குற்றமாய்க் குற்றமும் குணமாம் கிடீர் சம்சாரம் –
கொடுத்த பின்பும் -தன்னத்தையே கொடுத்ததாக நினைத்து இருந்தான்
கொண்டாரை என்று பாடமான போது-பிரயோஜனத்தைச் சொல்லிற்று ஆகிறது –
ஸ்வரூப ஜ்ஞானம் வேண்டா கிடீர்-இந்தச் செயலைக் காண வமையும் கிடீர் -நமக்கு ஸ்ரோத்ராதிகள் உண்டாகைக்கு –

———

பிரான் உன் பெருமை பிரறார் அறிவார் உராய் உலகளந்த ஞான்று வராகத் தெயிற்று அளவு போதாவாறு என்கொலோ எந்தை அடிக்களவு போந்தபடி–84-

ரஷ்யத்தின் அளவேயோ ரஷகனான உன்னுடைய பாரிப்பு-

உரோஸிக் கொண்டு எல்லார் தலையிலும் பொருந்தும்படி யாக்கிக் கொண்டு-அநாயாசேன அளந்த வன்று –
உன்னுடைய திருவடிகளுக்கு அளவு போந்த பூமியானது இப்போது திரு எயிற்றுக்கு
ஏக தேசத்துக்குப் போராதாய் இருக்கிற இது எங்கனே இருக்கிறதோ

———-

செற்று எழுந்து தீ விளித்துச் சென்ற விந்த வேழுலகும் மற்றிவை ஆ வென்று வாயங்காந்து முற்றும் மறையவர்க்கு
காட்டிய மாயவனை யல்லால் இறையேனும் ஏத்தாது என் நா–94-

தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –
இறையேனும் -பர வ்யூஹாதிகளில் போகாது –எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –

———–

பொன் திகழு மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்று உலகந்தாய நெடுமாலும் என்றும் இரு வரங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒருவனங்கத்து என்றும் உளன்–98-

அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே  வந்தது-அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –-ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –

————

ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியின் தாயவனைக் கேசவனைத்
தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை–100-

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்
பெறுவதும் அவனையே-பெறுகைக்கு சாதனமும்-அவனே என்று -அத்யவசித்துப்   போவாய் -என்கிறார் –

எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட ஒரு திருவடிகளும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும் ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் -திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் அவனே –
இப்படி அத்யவசிக்க-அனந்தரம் பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம் பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி வாழும் அத்தனை என்கிறார்  –

——————————————————————————————

அடி மூன்று இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படி நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அறிந்து--5-

அவனுடைய உத்கர்ஷம் சிறிது அறியும் அத்தனை அல்லது-சௌலப்யம் ஒருவரும் அறிவார் இல்லை-அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது-

———–

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து-9-

பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –-பூமியை அளந்தது இந் நீர்மைக்கு ஒக்குமோ -அவளுடைய நீர்மைக்கு பூமி சத்ருசமோ –
உன்னுடைய அளந்த வியாபாரம் தான் ஒக்குமோ-

——-

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே ஏத்திய நா வுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் கா அடியேன் பட்ட கடை–10-

யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண வி றே எடுப்பது –
அந்த ச்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை இனி ஒரு காலமும் வாராத படி
தேவர் நோக்கி யருள வேணும்

ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
அடியேன் பட்ட கடை – உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான் அநாதி காலம்
அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

———–

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த வேழுலகே தாமரைக் கண் மால் ஒரு நாள் வான் கடந்தான் செய்த வழக்கு–18-

தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீ யனாய் இருந்தானே யாகிலும்
ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் –அபரிச்சேத்யனானவன்- நித்ய சூரிகளுக்கு அவ்வருகு ஆனவன்–ஸ்வாமி யான முறையாலே செய்தான் –
உடையவன் உடைமையை ரஷிக்கை பிராப்தம் இறே –
பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –

———-

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி
ஸூ லபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும்

வத்சாரூரனும் விளவாசூரனும் பட்டது படும் இத்தனை விரோதிகள்-
ஸ்ரீ ய பதியானவன் அர்த்தியாய் நின்றது- உறங்குகிற பிரஜையை தாய் கட்டிக் கொடு கிடக்குமா போலே
ஞாலம் அளந்து அடிக் கீழ் கொண்டவன் வாழ்விக்கும் –
அவ்வவ அதிகாரிகளையும் -அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

————–

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –மேலே எல்லாரோடும் வரையாதே கை தொட்டுப் பரிமாறின அவதாரம் ப்ரஸ்துதம் ஆகையாலே
வரையாதே எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்த அவதாரத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ யபதியான நீ பிச்சை மாணி யாவதே –
கடைகிற போதும் அடைக்கிற போதும் ஒரு கடல் ஒரு கடலை நின்று அலைத்தால் போலே இருக்கை
பேரோத மேனி-கடைந்த கடல் இவ்வடிவைப் பார்க்க குளப்படியாய் இருந்தபடி
பிரான் –கடல் கடைந்து ஆக்க வேண்டாதபடி இவருக்கு கொடுத்த அம்ருதம் இருக்கிறபடி
கடைந்து ஆராவமுதத்தை இவருக்குக் கொடுத்தான்

—-

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் புகையால் நறு மலரால் முன்னே மிகவாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு என்பாக்கியத்தால் இனி-34-

இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் –
உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது-ஔதார்யம் குணம் கிடைக்கையாலே-அவனும் தன்னதாக்கி தருவனாவான் -நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-
ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை
மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் இஸ் ஸூ க்ருதத்துக்கு அடியாக
முன்பே பூமியை அளந்து கிருஷி பண்ணி வைத்தாய்-
தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால் அடிமை செய்யுமவனாய் விட்டேன்
என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல்

—————

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

அனவரதம் அனுசந்தித்து ஸ்வீகார மாத்ரத்தையே பற்றி – மாஸூச -என்ற அனந்தரம் இருக்குமா போலே
நிர்ப்பரமாய்க் கொண்டு இருக்கப் பார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த விருத்தம் -115-
நம் சக்தியைக் கொண்டு போயிருத்தல் -அவன் சக்தியை அறியாதே இருத்தல் -செய்யில் அன்றோ அஞ்ச வேண்டுவது –

—-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து–47-

அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் –-ஆஸ்ரிதர்க்காக கொண்ட வடிவே தனக்கு வடிவாக நினைத்து இருக்குமவன் திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –
நினைத்த வகைகளிலே ஆஸ்ரயிக்கலாம் படி தொழுகைக்கும் அணிகைக்கும் பல முகங்கள் உண்டாக்கி வைத்தான் ஆய்த்து-
அண்ணலை –இவ்வோ செயல்களாலே தானே ஸ்வாமி என்று தோற்றி இருக்கிறவனை -சேதனர்க்கு அனுபாவ்யமான
குணங்களை உடைய சேஷியை-கீழ்ச் சொன்ன வற்றுக்கு அடியான சம்பந்தம் -அரஷகனாலும் விட ஒண்ணாத ப்ராப்தி இருக்கும் படி –

———-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று கரு மானியை இரந்த கள்வனே
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு–61-

ஆஸ்ரித பாரதந்த்ர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –
வடிவே அன்று அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் -என்கிறது –ஒரு நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே ஒரு திருவடிகளானது நின்றாப் போலே நின்று –
பூமிப் பரப்பை அடங்க மறைத்துக் கொண்டது –
கையிலே நீர் விழுந்தவாறே அலாப்ய லாபம் போலே வளர்ந்த தோளானது திக்குகள் எல்லாம் அளந்தன –
இன்று இத்தைக் கேட்கைக்கு அன்று எங்கே போனேனோ –-
உன் திருவடிகளிலே ந்யஸ்த பரர் ஆனவர்கள் இச் செயலை அனுசந்தித்து -இனி நமக்கு ஒரு கர்த்தவ்யம் இல்லை என்று
கொண்டு நிர்ப்பரராய் -மார்பிலே கை வைத்துக் கொடு கிடந்தது உறங்குகைக்காக செய்த செயல் இறே-
ஒரு சர்வ சக்தி பக்கலிலே தங்கள் பரத்தை ஏறிட்டுத் தாங்கள் நிர்ப்பரராய் இருப்பர்கள்-
அநந்தரம் அவன் தூது போயும் -சாரத்தியம் பண்ணியும் -தான் அர்த்தியாயும் -இப்படி இவர்கள் கார்யம் நிர்வஹியா நிற்கும்
ஆனபின்பு அவர்களுக்கு ஒரு குறை இல்லை-

————–

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி விடங்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல்
திசை யளப்பான் பூவாரடி நிமித்த போது–71-

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாய்ப் போந்து அவதரித்துப் பண்ணும் வியாபாரங்களை அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கி களாய்க் கொண்டு அவர்கள் படும்பாடு சொல்லுகிறது –
ஆக இப்படிப் பரிவர் இல்லாத இடங்களிலே வந்து சந்நிஹிதனானவன் –அங்கு அப்படிப் பரிவரோடே இருக்குமவன் கிடீர் என்கிறார் –
கீழ் இவன் தான் உகந்தபடி சொல்லிற்று -இதில் இவனையே உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது –
அவன் இங்கு வந்தாலும் அங்கு உள்ளாரே பரியும் அத்தனை -இங்குப் பரிவார் இல்லை -அது யார் அறியப் படுகிறார் என்கிறார் –
சர்வ காலத்திலும் ஸூலபமான படியை அனுசந்தித்தார் கீழ்-சர்வ தேசத்திலும் ஸூலபனான படியை அனுசந்திக்கிறார் இதில்-புஷ்பஹாச ஸூ குமாரமான திருவடிகளைப் பரப்பின போது இடங்கை வலம்புரி நின்றார்ப்ப இப்படிப் பட்டார்கள் என்கிறது –
பூவாரடி – வெருமனிருக்கிலும் வயிறு எரிய வேண்டி இருக்கிற படியாலே பிராட்டிமார் பரியும் திருவடிகள் –
பூவைப் பரப்பினால் போலே இருக்கை

—————

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற்பாதம் சிவந்த தன கை யனைத்தும் ஆரக் கழுவினான்
கங்கை நீர் பெய்தனைத்துப் பேர் மொழிந்து பின்–78-

இப்படிப்பட்ட தபஸ்சை அனுசந்தித்து சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தம் அற லபிக்கப் பெற்றான்
சதுர்முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார்-பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்கியமான திருவடிகள் -எட்டாதபடி பரணிட்டு இருக்கக் கிடீர் பலித்தது என்கை-
தன்னுடைய சிவந்த கைகள் அனைத்தும் ஆரும்படி விளக்கினான் –
அநேகம் கை படைத்ததால் உள்ள லாபம் பெற்றான் –அவனுடைய எல்லா திரு நாமங்களையும் சொல்லி –
வாய் படைத்த பிரயோஜனம் பெற்றான் –
சர்வேஸ்வரன் அந்ய அர்த்தமாகச் செய்த செயல் அவனுடைய தபஸ் ஸூ க்குப் பிரயோஜன ரூபமாகக் கொண்டு தலைக் கட்டப் பெற்றது –
யாரேனுக்கும் கார்யம் செய்ய யாரேனுக்கும் பலித்துப் போவதே

————

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று கருக் கோட்டியுள் கிடந்து கை
தொழுதேன் கண்டேன் திருக் கோட்டிஎந்தை திறம்–87-

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் -நான் கர்ப்ப காலமே தொடங்கி அடிமைச் சுவடோடு கூட
அவன் படியை அனுபவித்துப் போருகிறேன் -என்கிறார் –இப்பேறு இன்று பெற்றேன் அல்லேன் என்கிறார்-இம் மஹா ப்ருதிவியை ஒருவர் இரக்க அன்றியே தானே சென்று அளந்த திருவடியை –
அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ -பூமி கிடந்த இடம் எல்லாம் தான் சென்று அளந்தான் அத்தனை அன்றோ –
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே நின்று என்னுடைய கர்ப்ப ஸ்தானத்தில் தய நீயதை கண்டு விஷயீ கரித்தது -என்கை-
திருக் கோட்டி எந்தை –ஸ்ரீ வைகுண்டத்தில் மேன்மை மாத்திரம் கண்டேனோ -முதல் காட்ஷியிலே பூரணமாகக் கண்டேன் –

—————

பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு கால் மாவலியை மாணியாய்க் கொண்டிலையே மண்–89-

நீர் இப்படிச் சொல்ல நம்மையே பற்றினாருக்கு உதவினோமோ என்ன -செய்திலையோ -என்கிறார் –
இசைந்தாருக்குச் கர்மம் செய்யும்படி சொல்லுகிறார் –
பிரதிகூல நிரசனம் பண்ணும் படியையும் ஆஸ்ரித கார்யம் செய்யும் படியையும் சொல்லுகிறார் —ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ -அர்த்தித்வம் தோற்ற -மாணியாய் அன்றோ கொண்டது –
மாணியாய் – இரப்பிலே தகண் ஏறின படி -ஸ்ரீ வைகுண்டமே தொடங்கி இரப்பிலே மநோ ரதித்தான் –

———

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயன்மினோ பல்நூல் அளந்தானைக் கார்க்கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன் சேவடி–91-

பிரகிருதி வச்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒருவகை தப்பாது-
ஆன பின்பு அவ்விஷயத்தை வணங்கப் பாருங்கள் என்கிறார் –ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
திருவடிகளிலே தலையைச் சாய்த்து யமன் தலையிலே காலை வைத்துத் திரியுங்கள் –பன்னூல் அளந்தான்-எல்லா பிரமாணங்களாலும் அளக்கப் படுபவனை –அஷர ராசியாலே ஜிஜ்ஞாசிக்கப் பட்டவனை –
சாஸ்திரம் தேட வேண்டா -ஆட்சி கொண்டு அறியலாம் –
அளந்தான் –முயல்மினோ என்றவாறே தேவை யுண்டோ என்று இராதே அப்ரதிஷேதமே வேண்டுவது –
சேவடி –பிரஜை ஸ்தனத்திலே வாய் வைக்குமா போலே –முலைப் பாலுக்குக் கூலி கொடுக்க வேணுமோ –
கூலியாவது உண்கை இறே -அல்லாவிடில் சம்பந்தம் பொயயாகாதோ-

————

கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி
என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை–98-

தம்மை விஷயீ கரித்தவனுடைய அபதா நங்களை அனுபவிக்கிறார் –
தன் சங்கல்ப்பத்தாலே ஜகத்தை நியமிக்கிறவன் சம்சாரியான என்னோடு கலந்து நின்றபடி –
அகடிதகடனத்தோடே ஒக்கும் -என்கிறார்
ஜகத்துக்கு தன்னால் அல்லது செல்லாதாப் போலே என்னால் அல்லது செல்லாதபடி ஆனான் –இடையனாய் ஜாத்யுசிதமான கூத்தை யாடி என் நெஞ்சிலே பொருந்தி இளகப் பண்ணி
நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட ஈஸ்வரன்-அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப்
பொருந்திக் கொண்டு என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமி

————

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய்ம்மலர்கள் தூவ அறை கழல சேவடியான் செங்கண் நெடியான்
குறள் உருவாய் மாவடிவில் மண் கொண்டான் மால்–99-மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்-

பிரயோஜனாந்தர பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும்படியைச் சொல்லுகிறார் –ஆஸ்ரித அர்த்தமாக சுருங்கின வடிவை யுடையவனாய் -வடிவு கண்ட போதே பிச்சேறும் படியாய் இருக்கை –
இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -திருவாய் -7-5-6-இறே –
மா வடிவு –பூமி அத்யல்பமாம் படி வளர்ந்தான் –

———————————————————————————————–

மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் அங்கே நீர் ஏற்றும் மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி–4-

மருந்தும் பொருளும் அமுதமும் தானே-
அம்ருதம் சாதனம் சாத்தியம் யம் பஸ்யந்தி மநீஷின
ஜஞ்யாக்யம்   பரமாத்மானம் விஷ்ணும் த்யாயன் ந சீததி -என்றும்
சரண்யம் சரணஞ்ச த்வாமாகூர் திவ்யா மகார்ஷய -யுத்த -111-17-
நமுசி பிரக்ருதிகளை பொடிப் படுத்தின படியாலே -மருந்து

அர்தியாய் வருகையாலே பொருளானான்

திருவடிகளைத் தலையிலே வைக்கையாலே அம்ருதமானான்

திரு வுலகு  அளந்து  அருளின எம்பெருமான் திருவடிகளே
சமிதை பாதி சாவித்திரி பாதி யல்ல –

திருந்திய செங்கண் மால் –
இவன் ஈஸ்வரன் என்று அறியலாம்படி
திருந்திச் சிவந்த கண்ணை யுடையனான சர்வேஸ்வரன்

அன்றிக்கே
திருந்திய –
ப்ராப்ய பிராபகங்கள் ஆகை-
ஸ்வரூப பிரயுக்தமாகை -என்றுமாம்

அன்றிக்கே
இவ்வாத்மா திருந்தா விட்டால் -இவற்றைத் திருத்தப் பாராதே
இவற்றுக்கு ஈடாக தன்னைத் திருத்திக் கொண்டு இருக்கும் -என்றுமாம்

இவை திருந்தாதே இருக்குமா போலே
அவன் என்றும் திருத்தி இருக்கும் -என்றுமாம் –

செங்கண்
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே சிவந்த கண்

மால் –
வ்யாமுக்தன் -என்றுமாம் –
ஆங்கே பொருந்தியும் நின்று –
ஸ்ரீ யபதி வந்து நீர் ஏற்கிறான் என்று
கூச வேண்டாதபடி இரப்பிலே பொருந்தி நின்று  –

பொருந்தியும்
ரஷணத்திலே  பொருந்தப்பட்டு –

நின்று –
அதிலே திரு உள்ளம் மண்டி நின்று

உலகம் உண்டு உமிழ்ந்தும்
லோகத்தை வயிற்றிலே வைத்து காத்தும்
வெளி நாடு காண உமிழ்ந்தும்
நீரேற்றும்
தன்னது அல்லாதது கொள்வாரைப் போலே

நீர்  ஏற்றும்
அலாப்ய லாபம் போலே

மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி
நீர் ஏற்ற லோகத்தை மூவடியாலே அளந்தவனுடைய திருவடிகள் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
உண்டு -மருந்தான படி
உமிழ்ந்து -பொருளான படி
செங்கண் மால் -அமுதமான படி
என்றுமாம் –

——————

அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பாற்கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் ஓராழி
வெய்யோன் ஒளியும் அக்தன்றே ஆராழி கொண்டாற்கு அழகு–5-

திரு வுலகு அளந்து அருளின படி பிரஸ்துதமானவாறே
அதுக்குத் தோற்று அவன் அழகை அனுபவிக்கிறார் –

அவனே மருந்தும் -பொருளும் -அமுதமுமானவாறே
இனி அழகை அனுபவிப்போம் என்கை-

அப்ராக்ருதமான அழகுக்கு வஸ்துக்களை சத்ருசமாக சொல்லுகிறது –
அலமாப்பாலே இறே-

அழகை அனுசந்தித்தாருக்குப் பேசாது இருக்க ஒண்ணாது
பேச ஒண்ணாது –

அடி வண்ணம் தாமரை –
திருவடிகள் உடைய படி தாமரை –

அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணன் –
இஜ் ஜகத்தை அளந்து கொண்டவனுடைய திருமேனி யுடைய நிறம் பார் சூழ்ந்த கடலிலே நிறம் போலே
வெளுப்புப் பேசுகிற விடமாகில்
திருப்பாற் கடலினிடைய நிறம் என்னலாம் –

முடி வண்ணம் ஓராழி வெய்யோன் –
திரு அபிஷேகத்தின் உடைய நிறம் ஆதித்யன் –

ஓராழி வெய்யோன் –
ஒரு சக்ரமான ரதத்தை யுடைய ஆதித்யன் -என்னுதல்
ஆதித்ய மண்டலத்தை சொல்லுதல்  –

ஒளியும் அக்தே அன்றே –
அவனுடைய தேஜஸ்ஸூ
ஆதித்யனுடைய தேஜஸ்சைப் போலே என்றபடி –

ஆராழி கொண்டார்க்கு அழகு –
கையிலே திருவாழி பிடித்தால் வேறோர் ஆபரணம் சாத்த வேண்டாமல்
இருக்கறவனுக்கு
கையிலே ஆர்ந்த திருவாழியைப் பிடித்தவனுக்கு அழகு
இப்படியே அடி வண்ணம் தாமரை -என்றபடி –

———————

அழகன்றே யாழியார்க்கு ஆழி நீர் வண்ணம் அழகன்றே யண்டம் கடத்தல் அழகன்றே அங்கை நீர் ஏற்றாற்கு
அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்-6-

கீழ்ச் சொன்ன அழகையும்
அத்தோடு ஒத்த  சேஷ்டிதங்களையும்
சேர்த்து அனுபவிக்கிறார் –

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம் –
சர்வேஸ்வரனுக்கு கடலின் நீர் உடைய நிறம்  வெறும் நிறம் மாத்ரமேயோ
அழகன்றோ
திருவாழியை உடையவனுக்கு என்றுமாம் –
அப்போது
திருவாழிக்கு பரபாகமான திரு நிறம் என்றபடி

இத்தால்
திருவாழி யோபாதி  நிறமும் சிறந்து இருக்கும் என்றபடி
இந் நிறம் உடையவனுக்கு வேறொரு ஆபரணம் வேணுமோ  –

அழகன்றே அண்டம் கடத்தல் –
செயலோ வழக்கு அன்றியே இருக்கிறது
அதுவும் அரியது செய்தானாய் வருந்திச் செய்ததோ

அழகன்றே –
ஏத்த ஏழு உலகம் கொண்ட கோலக் கூத்தன்-திருவாய் மொழி -2-3-11-

அழகன்றே அங்கை நீர் ஏற்றாற்கு-
நீர் ஏற்று நின்ற நிலை சாலப் பொல்லாததாய் இருந்ததோ –

அங்கை நீர் ஏற்றாற்கு-
கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே நீர் ஏற்றவர்க்கு
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று   -நாச்சியார் திரு மொழி -11-5-

அலர் மேலோன் கால் கழுவ –
ப்ரஹ்மா திருவடிகளை விளக்க –

கங்கை நீர் கான்ற கழல்  அழகன்றே –
திருவடிகள் கங்கைக்கு  காரணம் என்று
பாவனமான மாத்ரமேயோ
அழகன்றோ

திருவடிகள் பாவனமானது மாத்ரம் அல்ல
போக்யமும் என்றபடி

அதுவும் ஆச்சர்யம் ஆதல் மேன்மைக்காதல் செய்ததோ
அழகுக்கு அன்றோ -என்கை –

—————–

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில் கரு மா முகில் வண்ணன்
கார்க்கடல் நீர் வண்ணன் திருமா மணி வண்ணன் தேசு-9-

காண்க நம் கண் என்று
இவர் சொன்னவாறே
அவன் தன்னைக் காட்டக் கண்டு
அவனுடைய அழகை
அனுபவிக்கிறார் –

கண்ணும் கமலம் –
உடம்பு வவ்வலிடும்படி நோக்கி –
ஜிதந்தே  புண்டரீகாஷா -என்னப் பண்ணும் கண் –
முதலுறவு பண்ணும் திருக் கண்கள் –

கமலமே கைத் தலமும்-
அநந்தரம்-
ஸ்பர்சிக்கும் திருக் கைகள் –
கண்ணுக்குத் தோற்று விழா நிற்க அணைக்கும் கை இறே –

மண்ணளந்த பாதமும் –
கண்ணிலும் ஸ்பர்சத்திலும் தோற்று
விழும் திருவடிகள் –

மண்ணளந்த பாதமும் -மற்றவையே –
காடும் ஓடையுமான பூமியை யளந்ததுவும்
பூவைக் கொண்டே –
எண்ணில்-
ஆராய அரிது -என்கை-
எண்ண ஒட்டாதே கலக்குமே அழகு –

வருந்தி இத்தனையும் செய்யில் –
கருமா முகில் வண்ணன்-
கறுத்து-
ஸ்லாக்கியமான-
மேகம் போன்ற வடிவை உடையவன் –

கார்க்கடல் நீர் வண்ணன்-
கறுத்த கடலிலே
நீர் போன்ற நிறத்தை உடையவன் –

திரு மா மணி வண்ணன் –
காந்தி மிகுத்ததான
பெரு விலையனான
ரத்னத்தை உடைய நிறத்தை உடையவன்

ஸ்ரீ மத்தாய் ஸ்லாக்கியமான -ஸ்ரீ மன் நாராயண அர்க்கமான மணி
சர்வதா சாம்யம் காணாமல் கதிர் பொறுக்குகிறார்  இறே

புறம்பு உபமேயம் பொய்யாய் இருக்கும்
இங்கு உபமானம் பொய்யாய் இருக்கும் –

கருமா முகில் வண்ணன்-
ஸ்ரமஹரமாய் இருக்கை –

கார்க்கடல் நீர் வண்ணன்-
கண்ணுக்கு அடங்காதாய் இருக்கை –

திரு மா மணி வண்ணன் –
திரண்டு குளிர்ந்து இருக்கை –

தேசு –
சமுதாயமான எழில்

கரு மா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு –
எண்ணில் –
தனித் தனி ஆராயும் அன்று
கண்ணும் கமலம் கமலமே கைத் தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே-

———–

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடிவட்டம் ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே மாகாயமாய் நின்ற மாற்கு-13-

இதில்
அவன் தானே வந்து அவதரித்துத் தன்னைக் காட்டில் காணும் அத்தனை
என்கிறார்

படிவட்டத் தாமரை –
பூ வலயம் -என்னக் கடவது இறே –
பத்மாகார சமுத்பூதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-37-என்னக் கடவது இறே –
சர்வேஸ்வரன் சேஷ்டிதத்தைத் தாம் கண்டு அனுபவிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

படிவட்டத் தாமரை –
திருவடிகள் பிரவேசிக்கப் பெறுகையாலே வந்த ஸ்லாக்யதை-

பண்டுலகம் நீரேற்று –
படிவட்டத் தாமரை யாகிற லோகத்தை முன்பு நீரேற்று –

அடிவட்டத்தால் அளப்ப –
திருவடிகளாலே அளப்ப
அடி வட்டத்தாலே அளப்ப –

நீண்ட -முடிவட்டம் –
ஓங்கின திரு அபிஷேகமானது
முடி வட்டம் என்று திரு அபிஷேகத்தில் ஜ்யோதிர் மண்டலம் –

நீண்ட முடி வட்டம்
வளர்ந்த திரு அபிஷேகம் –

ஆகாயமூடறுத்து –
ஆகாசத்தை ஊடுருவி –

அண்டம் போய் நீண்டதே –
அண்டபித்தி யளவும் வளர்ந்ததே –

இது ஆருக்குத் தான் என்னில் –
மாகாயமாய் நின்ற மாற்கு –
வ்யாமோஹத்தை யுடையனானவனுக்கு

இத்தால்
இவன் வளரக் கோலித்தது இவ்வளவு அன்று
இடம் போராமை நின்றான் இத்தனை என்று தோற்ற நின்றது ஆய்த்து-
வடிவில் பெருமை –

பண்டு உலகம் நீரேற்று
படி வட்டத் தாமரை அடி வட்டத்தால் அளப்ப
மாகாயமாய் நின்ற மாற்கு
நீண்ட முடிவட்டம் ஆகாயமூடறுத்து
அண்டம் போய் நீண்டது
என்று அந்வயம்-

————-

வாய் மொழிந்து மா வாலிபால் மூவடி மண் நீ யளந்த கொண்ட நெடுமாலே தாவிய நின் எஞ்சா விணை யடிக்கே
யேழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள்–18-

கால த்ரயத்திலும் இழவு வாராமல் அனுபவிக்கப் பெற்ற
எனக்கு
உன் திருவடிகளிலே அடிமை செய்யுமஅதுவே யாத்ரையாய்
இதுக்கு விரோதமான சம்சார அனுசந்தானத்தாலே வரும் பயம் வாராதபடி
பண்ணி யருள வேணும் -என்கிறார் –

உன் உடைமை யொன்றும் சோர விடாத நீ
என்னைக் கைக் கொண்டு அருள வேணும் –
என்கிறார் –

மறவாது என்றும் நான் நினைத்தால்
லாபம் உண்டோ  –

நீ அஞ்சாது இருக்க அருள்
என்கிறார் –

வாய் மொழிந்து வாமனனாய்-
ஸ்ரீ வாமனனாய்
மூவடி மண் தா வென்று அருளிச் செய்து –
ஸ்ரீ வாமனனாய்க் கொண்டு
ஆசூர பிரக்ருதியானவன் இரங்கும்படி
முக்த ஜல்பிதங்களைப் பண்ணி
மறுக்க மாட்டாத படி பண்ணுகை –

வாய் மொழிந்து
கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே -திருவாய்மொழி -3-8-9-
அவாக்ய அநாதர-என்னுமவன் கிடீர்

வாமனனாய் –
வடிவும் அப்படியே பண்ண வேணுமோ –

மாவலி பால் மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே –
மகாபலி பக்கலிலே சென்று மூவடி மண்ணை அபேஷித்து
அவன் தரப் பின்னை அளந்து கொண்ட
சர்வேஸ்வரனே
உன்னது அல்லாததை அளந்து கொண்டாயோ

தாவிய-
அனாயாசேன அளந்து கொண்ட –
நின் எஞ்சா இணை யடிக்கே –
திரு வுலகு அளந்து   அருளின உன்னுடைய கல்யாணமான திருவடிகளிலே –

எஞ்சா இணையடி –
எல்லா சங்கோசங்களும் நீக்கும் திருவடிகள்
அன்றிக்கே
விஸ்த்ருதமான திருவடிகள் -என்றுமாம் –

ஏழ் பிறப்பும் ஆளாகி –
காலம் எல்லாம் அடிமை செய்து

அஞ்சாது இருக்க வருள் –
இவ்வடிமைக்கு இழவு வரில் செய்வது என் என்று நான் அஞ்சாதே இருக்கும் படி
பண்ணி யருள வேணும்

நிர்ப்பயனாம் படி –
என்னுடைமையை நான் விடுவேனோ
மீட்டுக் கொண்ட பின்பு நீ அஞ்ச வேண்டா -என்று
அருளிச் செய்ய வேணும்

இனி
உன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடேன் -என்கை-

இந்த்ரன் அபேஷிதம் செய்து தலைக் கட்டினாப் போலே
நானும் இதொன்றும் பெறும்படி பண்ணி யருள வேணும்

ஒரு ஔஷதத்தை சேவித்தான் ஒருத்தன் பயம் இன்றிக்கே
சர்ப்பத்தின் வாயிலே கையைக் கொடா நின்றான் இறே

அவனுடைய அருள் பெற்றவன்று
சம்சாரத்திலே இருந்து பயம் கெட்டு இருக்கத் தட்டில்லை இறே –

———

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே என்னே திருமாலே
செங்கண் நெடியானே எங்கள் பெருமானே நீ இதனைப் பேசு--20-

அவன் தன்னை அபேஷித்தார்க்குத்
தன்னை அழிய மாறாதேயோ கார்யம் செய்வது
என்கிறார் –

சம்சார பயம் கெட்டார்க்கு யாத்ரை இதுவே இறே –

உன் படியை நீயே சொல்ல வேணும் என்று
எம்பெருமானைக் கேட்கிறார் –

அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே –
இப்படி உனக்கு இஷ்ட சேஷ்டா விஷயமாய்ப்
பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வந்த லோகம்
தன்னையே பின்பொரு நாளிலே
மூன்றடியை இரந்து அளந்து கொண்ட விது
பெரியதொரு செயலாகச் செய்தாயோ
அவனுக்கு மறுக்க மாட்டாத வ்யாமோஹம் இறே –

என்னே  –
இது என்ன ஆச்சர்யம் –
எத்திறம் -என்கிறார்
அன்நீர்மை தம்மை வருத்தின படி

உன்னுடைய மேன்மைக்கும் இத் தாழ்ச்சிக்கும்
எங்கே சேர்த்தி யுண்டு –

திருமாலே செங்கண் நெடியானே-
உன்னை நீ யுணர்ந்து கொண்டு தான் கார்யம் செய்யப் பெற்றாயோ –
ஸ்ரீயபதியாய் -அவளோட்டைச் சேர்த்தியாலே
சிவந்த கண்ணை யுடையவனே
ஸ்ரீயபதியாய் இருப்பதே –

செங்கண் –
புண்டரீ காஷனான சர்வேஸ்வரன்
ஸ்ருதி சித்தமான கண்ணை யுடையவனே –

நெடியானே –
அபரிச்சேத்ய மகிமையை யுடையவனே –
இத்தால்
உனக்கு ஒரு குறை யுன்டாய்ச் செய்தாயோ -என்கை –

எங்கள் பெருமானே நீ யிதனைப் பேசு –
ஸ்வாமி யான நீ
அனந்யார்ஹரான எங்கள் அபேஷிதமும்
உனக்குச் செய்ய வேண்டும் இறே
ஆன பின்பு நீ இத்தை அருளிச் செய்து அருள வேணும் –

நீ இதனைப் பேசு –
இச் செயல்களைச் செய்யும் இத்தனையோ
சொன்னால் ஆகாதோ
இவர் பேச்சுக் கேட்டு இனியனாய் இருந்தான் அவன்
அவன் பேச்சுக் கேட்டு வாழ நினைக்கிறார் இவர்  –

——-

விரும்பி விண் மண் அளந்த அஞ்சிறை வண்டார் சுரும்புதொளையில் சென்றூத அரும்பும் புனம் துழாய் மாலையான்
பொன்னம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும்--23-

விரும்பி விண் மண்ணளந்த –
தன்னது அல்லாத ஓன்று பெற்றாப் போலே
ஆதரித்துக் கொண்டு
ஆகாசத்தையும் பூமியையும் அளந்து கொண்டான்
என்கிறார் –

விரும்பி அளந்தான் என்கையாலே காடும் ஓடையும் அளந்தது
தேவைக்கு அன்று என்கை –

அஞ்சிறைய வண்டு-
அழகிய சிறகை யுடைத்தான வண்டு –

ஆர் சுரும்பு –
முகத்துச் சேர்ந்து வர்த்திக்க  கடவ சுரும்பு –

துளையில்  சென்றூத  –
இவை ரசிசிரைகள் அறிந்து
சென்று வாயை வைத்தூத –

அரும்பும் புனந்துழாய் மாலையான் –
அத்தாலே
அரும்பி அலரா நின்றுள்ள
செவ்வித் திருத் துழாய் மாலையை உடையனானவனுடைய –

புனந்துழாய் மாலையான் —
திரு மார்வில் ஸ்பர்சத்தாலே
தன்னிலத்தில் நின்றாப் போலே இருக்கிற
திருத் துழாய் மாலையை யுடையவன்

பொன்னங்கழற்கே –
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளிலே –

மனந்துழாய் மாலாய் வரும் –
மனம் விரும்பித் துழாய் மாலாய் வரும் என்று
மேலே மனஸ்ஸோடே கூட்டவுமாம்
மனஸ்ஸானது ஹ்ருதயமான துழாய் கலங்கிக் கொண்டு மாலாய் வரும்
பிச்சேறா  நிற்கும்
வ்யாமோஹத்தைப் பண்ணித் துழாவி வாரா நின்றது –
வண்டுகள் பட்டது படா நின்றது –

———-

அன்று இவ்வுலகம் அளந்த வசைவே கொல் நின்று இருந்து வேளுக்கை நீள் நகர் வாய் அன்று கிடந்தானைக் கேடில் சீரானை
முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-

காஞ்சி புரத்திலே பல திருப்பதிகளிலே
நிற்பது
இருப்பது
கிடப்பதான
இவனுடைய வியாபாரங்களை அனுசந்தித்து
இதுக்கடி
பண்டு திரு உலகு அளந்து அருளின ஸ்ரமத்தாலே வந்தது ஓன்று அன்றோ
என்று கொண்டு அஞ்சுகிறார் –

அவனுடைய சத்தை பரார்த்தமான பின்பு
அவனைக் காண ஆசைப்படாய் என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்கிறார் –

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்-
இந்த லோகத்துக்கு ஒரு நினைவு இன்றிக்கே இருக்கிற அன்று
நின்றாப் போலே நின்று
இஜ் ஜகத்தை அடங்கத் தாவி நின்று
அளந்து கொண்ட அந்த ஆயாசமோ

இருந்து வேளுக்கை-
திரு  வேளுக்கையிலே எழுந்து அருளி இருந்து –

நீணகர்வாய் -அன்று கிடந்தானைக் –
என்று கூட்டவுமாம் –
மகா நகரமான திரு வெக்காவிலே சாய்ந்து அருளினவனை –

திரு உலகு அளந்து அருளி நின்றான்
திருவடிகள் நொந்த வாறே இருந்தான்
அது நொந்தவாறே சாய்ந்தான் –

கேடில் சீரானை –
நித்ய சித்தமான கல்யாண குணங்களை யுடையவனை-

முன் கஞ்சைக் கடந்தானை –
முன் கம்சனால் வந்த விரோதத்தைப் போக்கினவனை –
கம்சன் நினைத்த வஞ்சனையைத் தப்பி
அவன் தன்னோடு முடித்தவனை –

நெஞ்சமே காண்-
நெஞ்சமே நீ அனுசந்தியாயோ
உனக்கு இது ஒழிய வேறு அந்ய பரதை என்
நமக்காகத் தன்னை அழிய மாறினவனை அனுசந்தியாது இருக்க வேணுமோ

பூமியை அடங்கலும் அளந்த வருத்தத் தாலேயோ
திரு வேளுக்கையில் இருக்கிறதுவும்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளுகிறதுவும்
என்று அனுசந்தி
என்றபடி –

———–

கைய கனலாழி கார்க்கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் செஞ்சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு–36-

கையனலாழி –
பிரதிபஷத்தின் மேலே
கனலா நின்றுள்ள அக்னியை உமிழா நின்றுள்ள
திரு வாழி-

கார்க் கடல் வாய் வெண் சங்கம் –
மேகத்தின் உடைய முழக்கத்தை யுடைத்தாய்
கடலைப் பிறப்பாக யுடைத்தாய்
வெளுத்த நிறத்தை யுடைய
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்

அன்றிக்கே
கார் போலேயும்
கடல் போலேயும்
சப்திக்கும் த்வனியை உடைய சங்கம் -என்றுமாம் –

அன்றிக்கே
கருத்த நிறத்தை யுடைத்தான கடலைப் பிறப்பிடமாக உடையவன் -என்றுமாம் –

வெய்யகதை -சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்
வெவ்விதான   கதை
வெவ்விதான ஸ்ரீ சார்ங்கம் –
வெவ்விதான சுடரை உடைய வாள்
இவை ஆகிற –

செய்ய படை-
செய்ய படை என்கிறது
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது  –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்
சுடர் ஆழியும் அப் பாஞ்ச சன்னியமும் -என்னக் கடவது இறே –

கைய –
கையிலே யுள்ள –

பரவை பாழி-
திருப் பாற் கடல் படுக்கை –

பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு  –
குளிர்ந்த திரையை உடைத்தான
கடல் சூழ்ந்த பூமியைத்
திருவடிகளாலே அளந்து கொண்ட
ஆச்சர்ய பூதன் ஆனவனுக்கு
அழகிய திவ்யாயுதங்கள் இவை
படுக்கை அது –

———–

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்ன உடையாகக் கொண்டு
அன்று உலகு அளந்தான் குன்றம் குடையா ஆ காத்த கோ--41-

திரு வுலகு அளந்து அருளின இடம்
ப்ராப்தமாய்த் திரியட்டும்
அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி
அனுபவிக்கிறார் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய்-
அழகிய ரத்னங்களாலே சமயப் பட்டு இருப்பதாய்
அங்குத்தைக்குத் தகுதியான
திரு வபிஷேகமானது
அண்ட பித்தி அளவும் சென்று கிட்டி –

எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
எட்டுத் திக்கும்
அங்கு உண்டான த்வீபங்களும்
பரப்பின திருவடிகளே யாம்படி வியாபித்து –

அண்டம் போய்-எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
அண்டத்தையும்
எட்டுத் திக்குகளையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகம் வ்யாபிக்கவும் –

துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
சேதனராலே செறியப் பட்ட பூமி அடங்கலும்
திருவடிகளே யாகவும் –

துன்னு பொழில் –
ஜந்து ஜால நிபடமான பூமி என்றபடி –

மின்னை உடையாகக் கொண்டு –
மேக பதத்துக்கும் அவ்வருகே போக வளர்கையாலே
அவ் விடத்தில் உண்டான
மின்னைப் பீதாம்பரமாகக் கொண்டு –

அன்று உலகு அளந்தான்-
மகாபலி தத்தம் கொடுத்த அன்று ஜகத்தை அடங்க அளந்து கொண்டவன் –

குன்றம் குடையாக ஆ காத்த கோ —–
மலையைக் குடையாகத் தரித்துக் கொண்டு நின்று
பசுக்களை நோக்கின நிர்வாஹகன் –

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –
ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும்
ஏழு பிராயத்தே செய்த காரியமும்
லோகத்தையும்
ஒரு ஊரையும்
நோக்கின படி –-

————–

நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா–47-

தேவர்கள் உடைய அபேஷிதம் செய்யுமவன் கிடீர்
நம்முடைய விரோதிகளைப் போக்கி
நம்மை அடிமை கொள்ளுவான்
என்கிறார் –

நின்ற பெருமானே நீரேற்று –
அவாப்த சமஸ்த காமன் ஆனவன் தான்
மகா பலி பக்கலிலே சென்று –
உதக ஜலத்துக்கு கை ஏற்று கொண்டு
நின்றான் -ஆய்த்து-

நின்ற பெருமானே –
சேஷித்வம் தோன்றும்படி நின்றவனே –

உலகெல்லாம் சென்ற பெருமானே –
அவன் நீர் வார்த்த அநந்தரம்
ஜகத் அடங்கலும் தானே யாம்படி அளந்து கொண்டான் ஆய்த்து
உடையவன் என்று தோன்றும்படி நின்றவனே –

செங்கண்ணா –
இந்த்ரன் கார்யம் செய்து தலைக் கட்டுகையாலே
உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தாலே
சிவந்த திருக் கண்களை யுடையவனே –

————

நீ யன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்–48-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் –
உன்னுடைமை பெருகைக்கு
மகா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
நீரேற்று ஜகத்தை யடைய
உன் திருவடிகளாலே அளந்து கொண்டே நீ அன்றோ

நானோ இது செய்தேன்
அன்றியே இந்தரனோ –

———–

சென்று குறள் உருவாய்–52-

சென்று குறளுருவாய்  முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
முன்பு குறளுருவாய் சென்று
முயன்று
பூமியைக் கையிலே கொண்டான் –

முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   –
லோகத்தை யடங்கக் கைக் கொண்டான் –

முயன்று –
கொள்வன் நான் -திருவாய் -3-8-9-
இத்யாதிகள் செய்தவை

இத்தால்
ப்ராப்தி பண்ணா நின்று கொண்ட படி –ருசி இல்லாதாருக்கு ருசியைப் பிறப்பிக்கும் போதும்
ருசி யுடையாருக்குச் செய்யுமா போலே
செய்யும் -என்றபடி –

———

இனியவன் மாயன் என வுரைப்பரேலும் இனியவன் காண்பரியனேலும்இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தான்
பைங்கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்--83-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு-
சர்வேஸ்வரனான தான் செய்தான் என்று
தோன்றாதபடி
பூமியை அபஹரித்து
நெஞ்சுக்கு இனியனாய்
தன்னுடைமையை மகா பலி பக்கலிலே அளந்து கொண்டவன் –

விண் கடந்த பைங்கழலான் –
ஆகாசத்துக்கு அவ்வருகாம்படி வளர்ந்து
சகல லோகங்களையும்
தன் கீழே இட்டுக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையவன் –
அன்றிக்கே
அழகிய திருவடிகளை யுடையவன் -என்னவுமாம் –

————

சிலம்பும் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணாறு அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் எண் திசையும்
சூழ இடம் போதாது என் கொலோ வன் துழாய் மால் அளந்த மண்–90-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப –
திருச் சிலம்பும் –
செறிந்த வீரக் கழலும்
ஒக்கப் போய் த்வனிக்கும் படி –

விண்ணார் அலம்பிய சேவடி போய் –
ஆகாச கங்கையிலே விளக்கப் பட்ட
திருவடிகளானது போய் –
ஆகாச கங்கையிலே ஸ்பர்சிக்கப் பட்ட –
என்றுமாம் –

சேவடி போய் அண்டம் – சென்றிசைப்ப –
அண்ட பித்தி யளவும்
சென்று கிட்டி –

புலம்பிய தோள் எண்டிசையும் சூழ –
சகல லோகங்களும்
இத்தோள் இருக்கிறபடியே என்று
கூப்பிடும்படியான
அழகிய திருத் தோள்கள் ஆனவை
எட்டு திக்கிலும் வியாபிக்க –

சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் தைஸ் ததா மனுஷ்யர்
கக நே ச கே சரை சத்துத க்ரமான்  ய பிரசகார  சர்வதா
மமாஸ்து மாங்கள்ய வ்ருத்தயே ஹரி -ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரம் மாங்கள்ய ஸ்தோத்ரம் –
என்று தேவர்களாலே திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட
என்றபடி –

வண்டுழாய் மாலளந்த  மண் -இடம் போதாது என் கொலோ –
திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடையவன்

அளந்த பூமி –
இப்படி அளக்கைக்கு இடம் போராத படியாய் இருக்க
இவன் அளந்து கொண்டானபடி எங்கனயோ
என்று
ஆச்சர்யப் படுகிறார் –

நின்று அளக்கைக்கு இடம் போராது-என்ன ஆச்சர்யமோ –
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு
அன்றோ அளப்பது –

———-

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் அனைத்துலகும் உள் ஒடுக்கியால் மேல் கனைத்துலவு வெள்ளத்தோர்
பிள்ளையாய் மெல்லத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே உய்த்து–93-

நீண்ட திருமால் –
அபரிச் சேத்யனான ஸ்ரீ யபதியாய் வைத்து
ஸ்வ விசஜாதியர் அடங்கலும்
சேஷ பூதர்களாக உடையவனான சர்வேஸ்வரன்
என்றபடி –

அவனுடைய அபரிச் சேத்யதையைச் சொல்ல  என்று இழிந்து
அதுக்கு உறுப்பாக இங்கே அவனுக்குச் சொல்லக் கடவ
உயர்த்தி அடங்கலும்  சொல்லி
ஏவம் பிரகாரம் -என்கிறது-

—————————————————————————–

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த–15-

ப்ரஹ்மாதிகள் ஏத்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய திருவடிகளை
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு வணங்கி ஸ்துதிக்க வல்லராகில்
நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு
மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
என்கையாலே ஆஸ்ரயணீய வஸ்து இவன் என்று அறுதியிட்டு

(சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ்தைஸ் ததா மனுஷ்யைர் ககநே ச கேஸரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி —
ஸ்ரீ விஷ்ணு தர்மம் மங்கள்ய ஸ்தவம் கோஷிக்குமே
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
என்னும் போது பல தேவர் ஏத்தச் சொல்ல வேணுமோ
ஈஸ்வரோஹம் என்பவர்களும் ஸ்வரூபத்தை உணர்ந்து ஸ்துதிக்கிறார்கள் திருவடி ஸ்பர்சத்தாலே
அன்று இவ்வுலகு அளந்தான் அடி போற்றி )

மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
என்கையாலே தாங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்தவர்கள் செய்கிற செயலைத்

————–

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் -ஞாலம் அளந்தானை
ஆழிக் கிடந்தானை ஆல்மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு-17-

அவதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து-கண் வளர்ந்து
சிறியார் பெரியார் என்ற வாசி வையாதே
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வரையாதே வைத்து
வரையாதே எல்லாரையும் தன் வயிற்றிலே வைத்து-
பவனாய்  இருப்பதொரு ஆலிலையிலே கண் வளர்ந்து
ரஷிக்குமவனை-
தான் வணங்கும் பிரகாரத்தைச் சொன்னான்-

——–

தாளால் உலகம் அளந்த அசைவே கொல் வாளா கிடந்தது அருளும் வாய் திறவான் நீளோதம் வந்தலைக்கும்
மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-35-

திரு வல்லிக்கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாய்
கண் வளரக் கண்டு
திரு உலகு அளந்த ஆயாசமோ என்று அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறார் –

வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-

மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

——————————————————————————————————————————————–

உலகளந்த மால் பால் துழாய்க்கு மனமுடையார்க்கு–திருவிருத்தம் -35-

சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க
வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ
திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து
அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று
இருவருக்குமாகத் திருத் தாயார் துக்கப்பட்டாள் –

————

கமலத் தடம் போல் பொலிந்தன -மண்ணும் விண்ணும் என் காலக்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்துவான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்பால் எம்பிரான் தடம் கண்களே-42-

திருவிக்ரமனின் திருக்கண்கள்
மண்ணும் விண்ணும் எனது காலுக்குள்ளே லேசம் அடங்கி உள்ளதை நீங்களே பாருங்கோள்
என்று சொல்வதை போல்
வான் நிமிர்ந்த -தற் குறிப்பு ஏற்று அணி –

மண்ணும் விண்ணும் இத்யாதி –
பூமந்தரிஷாதி களடைய என்னுடைய காலுக்கு அளவு போராதே இருக்கிற படி பாருங்கோள்
என்பாரைப் போலே ஆயிற்று
ஆகாச அவகாசத்தை அடைய தன் திரு மேனியாலே நிரப்பிற்று-
(ஒண் மிதியில் இத்யாதி )

பரப்பை உடைத்தான பூமியும் ,
எல்லோருக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்
என் காலுக்கு அளவு போராது இருக்கிற படியை பாருங்கோள்
என்பாரை போலே யாற்று அளந்து கொண்டது
ஒண் மிதியில் இத்யாதி

நான் அளக்க புகா நின்றேன் –
உங்கள் தலையிலே என் காலை வைக்க புகா நின்றேன் -என்னில்
ந நமேயம்-என்று ஒட்டோம்-என்று
ஆணை இடுவார்கள் இறே –
அதுக்காக
இது ஓர் ஆஸ்ர்யம் பாருங்கோள் -என்பாரைப் போலே ஆயிற்று அளந்தது –

இப்போ தத் அபதானத்தை சொல்ல வேண்டுவான் என் என்னில் –
இத் தலையில் அபிமுக்யம்  இன்றிக்கே இருக்க –
தானே அவதரித்து வந்து மேல் விழுந்து எல்லார் தலையிலும் திரு அடிகளை வைக்கும் அவன் இறே
இவர்கள் பேற்றுக்கு தான் கிருஷி பண்ணுமவன் ஆயிற்று –

(நான் ஒட்டுவேன் என்னுள் இருத்துவன் என்று இல்லாமல் வெட்டிக் கொண்டு)வான் நிமிர்ந்த தன் பால் பணிந்த என் பால் –
இத்தால் இந்த அனுகூல்யத்துக்கு அடியான மூல ஸூஹ்ருதமும் தானே என்கிறது
தான் முற்பட வணங்கி
பின்னை இத் தலையை வணங்குவித்தான் –
முற் தீமை (முயற்சி)செய்தான் தானே என்கை–இத்தால்
பேறு தன்னது என்று தோற்றும் படி ஆயிற்று
திரு கண்களில் விகாசம்-

——–

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த திருத் தாளினை நிலத்தேவர் வணங்குவர்–64-

உலகு அளந்த திருத் தாளிணை –
இவை அறியுமாம் -அறியாது ஒழியுமாம்  –
என் உடம்பை நான் விடேன் -என்று
ஸ்வீ கரிக்கும் ஸ்வா பாவனாய்  உள்ளவனை –

இவை அறியாது இருக்கச் செய்தே –
தானே எல்லை நடந்து-மீட்டுக் கொண்டான் இறே –

நிலத் தேவர் வணங்கும் –
சம்சாரத்தில் வர்த்தியா நிற்கச் செய்தே –
விண்ணுளாரிலும் சீரியர் -என்னும்படியான
பூஸூரர்  ஆனவர்கள் –
உலகு அளந்த திருத் தாளினை நெறி இழுக்காமை வணங்குவர் –

————–

பொரு கடல் சூழ் நிலம் தாவிய எம்பெருமான்–68-

அவனுடைய அழியாத நித்ய விபூதியோடு ஒத்து உள்ளவள் அல்லையோ நீ –
அவன் உன்னை அழிய விட்டு இருக்குமோ –
ஆவது அழிவது ஒரு விபூதியும் –
அழியக் கூடாததொரு விபூதியுமாய் இறே இருப்பது –

அழிய விட்டு மீட்டிக் கொள்ளும் லீலா விபூதியை –
முதலிலே அழிகைக்கு சம்பாவனை இல்லாதபடி நோக்கும் நித்ய விபூதியை —

பொரா நின்றுள்ள கடலாலே சூழப்பட்ட பூமியை தாவி அளந்து கொண்டு –
அச் செயலாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு அடங்க நாதனானவன் –

புவனி எல்லாம் பீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே-69-

புவனி இத்யாதி –
1-அவன் படியை அறிந்தால் வரும் என்று இருக்க வேண்டாவோ –
2-இந்த்ரன் வ்யாஜ்யமாக எல்லார்-தலையிலும் -நிர்ஹேதுகமாக –
அமரர் சென்னிப் பூவாய் இருக்கிற திருவடித் தாமரைகளை வைக்குமவன் அன்றோ —

3-இப்படி எல்லாருக்கும் உபகாரகனாய் இருக்குமவன் -உன்னை விடுமோ –

4-தாமஸ பிரகிருதிகள்  ஆனவர் மேலிடப் புக்கால் வந்து உதவுமவன் –
தமஸ்ஸூ தான் வந்து அனுபவிக்கப் புக்கால் விட்டு இருக்குமோ –
தன்னுடைமையை பிறர் -என்னது -என்று இருந்தால் –
தன்னை அரத்தி யாக்கி -அவர்கள் பக்கலிலும் வந்து இரந்து கொள்ளுமவன் –
இரக்க வேண்டாதே -தன் உடைமையான உன்னை -விட்டு இருக்குமோ –
(தமோ குணம் இரவு -தமஸ் குணவான் மஹா பலி )

4-காடும் மேடுமான பூமியில் ஒன்றும் விடாதவன்-
உன்னை இங்கனே அறிவு அழிய விடுமோ –

5-மண்ணுக்குப் பதறி இரந்தவன்
பெண் ஒரு தலை யானால் ஆறி- இருக்குமோ –

——–

ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79-

புழுக் குறித்தது எழுத் தாமா  போலே –
ஒருகால் ரஷித்து விடுகை அன்றிக்கே –
ஜகத்தை அடைய வளைந்து கொண்ட திருவடிகளை உடையவனை –

எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்யப் பெற்றிலோம் என்று
இவற்றின் உடைய ரக்ஷண சிந்தனை செய்து கிடக்கிற படி
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி
இந்திரனுக்கு இழந்தத்தைக் கொடுத்து -(மஹா பலி -அம்ருத மதனம் இரண்டிலும் -)
தான் பேர்ந்து கிடக்கிறபடி யாதல்
தனது படுக்கையாக பாற்கடலையே கடைந்தான் அன்றோ

———

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்த வஞ்சித்து ஒரரசே அருளாய்--80-

பார் அளந்த பேர் அரசே –
இருளின் கையில் அகப்பட்ட ஆதித்யனை மீட்கும் போது –
மகா பலி-கையிலே அகப்பட்ட பூமியை மீட்டவனே வேணும் போலே காணும் –

அளந்த –
பூமிப் பரப்படைய அளந்த திருவடிகளைக் கொண்டு இவ்விருளையும் அளந்தால் ஆகாதோ –
இருளார் வினை கெட இறே-(39 ) செங்கோல் நடத்துகிறது –
(அளப்பது ஸ்வ அதீனமாக்குவது )

பேரரசே –
எளிய செயல்கள் செய்யுமவன் அல்லனே –
செய்யுமவை அடங்க பெருத்தாயிற்று இருப்பது –

———-

ஆணிப் பொன்னன்ன சுடுர் படு மாலை -உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரி இல்லா ஆணிப் பொன்னே அடியேனாவி அடைக்கலமே-85-

உலகு அளந்த மாணிக்கமே –
ரஷகரான இந்த்ராதிகளும் (இந்திரன் கிழக்கு திக்பலர் தானே )தங்களால் முடியாமை கை வாங்கின-வன்றும் –
தான் வந்து கைக் கொண்டு -தாமச பிரக்ருதிகளை( மஹா பலியை -நமுசி பிரக்ருதிகளை )தள்ளி நோக்குமவன் இறே –காடும் மலையுமான ஒரு விபூதியை அளந்து கொண்டது ஒரு மாணிக்கத்தை இட்டு காணும் –
மாணிக்கமே –பெரு விலையனாய் இருக்கை -தன்னைப் பாராதே அழிய மாறின படி –

——-

அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே--89-

அன்று உலகு இத்யாதி-
ஒரூரை ரஷித்தால் போலே இப் பூமியாக ரஷிக்குமவனை –

ஏற்றை –
லோகத்தை அடைய தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ள பெற்ற  படியால்
மேணானித்து இருக்கிறவனை –
இத்தால் வந்த பலமும் தன்னதாய் இருக்கும் படி

எம்மானை –
அவன் வெற்றியாலே மேணானித்து இருக்க வல்லன் ஆனால் போல் ஆயிற்று-
இவர் அவன் செயலுக்கு தோற்க வல்லபடி –

எஞ்ஞான்று தலைப் பெய்வனே –
அவன் படிகள் இவை யான பின்பு-நான்  இழவல்லது பொருள் இழவு இல்லை இறே –
அப் பேறு பெரும் நாள் என்றோ என்கிறார் -(வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே )

அபீதா நீம் சகாலஸ் ஸ்யாத்-பதினாலு ஆண்டு கழித்தால் வரக் கடவது இறே –

அந்நாள் இன்றாகப் பெறுவது -காண் -என்றாப் போலே –

————-

மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே--91-

மாவலி இத்யாதி –
தான் காவலாக இட்டு வைத்த கடல் -இவ் விபூதியை களவு காணும் அன்று-
தன் வயிற்றிலே இட்டு வைத்துக் கொண்டு நோக்கும் –

நான் என்னது -என்று இருப்பன் ஒருத்தன் இத்தை-அபஹரித்த அன்று
அவனோடு இசைய இருந்து சென்று கொள்ளும் –

மாவலி மாட்டு –
ஆசூர பிரக்ருதி யானவன் பக்கலிலே சென்று கிட்டிற்று –
தன்னை ஒழிய வேறு ஒன்றைப் பேணாத-நெஞ்சு உடைய என் பக்கலிலே அன்றோ கிட்ட அடுப்பது –

இரும் குறளாகி –
பெரிய குறளாகி –
அதாவது
லோகத்திலே வாமனர்கள் அடைய வளர்ந்து அருளின இடத்துக்கு ஒப்பாம்படி ஆயிற்று -இவனுடைய சிறுமை –

இசைய –
இசைவிக்க கிருஷி பண்ணினவன் தானேயாய் –
அவன் இசைவும் தன்னதீனமாம் படியாக-உடையனாய் –

ஆரேனும் வேண்டா என்னிலும்
அவனும் இசைந்து கொடுக்கும் படியும்

ஓர் மூவடி வேண்டிச் சென்ற -இரண்டு அடியை இரந்து –
இரண்டு அடியும் அளந்து விடாதே-
ஓர் அடிக்கு சிறை இடும்படி மூன்று அடியை இரந்தவனை –

வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் –
தான் சர்வ நிரபேஷன் என்று தோற்றாதபடி சென்றவன் –
நாம் கொடுக்கிற வித்தால் அல்லது தரியான் – என்று தோற்றும்படியாக யாயிற்று சென்றது –

தன் ஈஸ்வரத்வத்தைக்  களவு கண்ட படி –
அவாப்த சமஸ்த காமன் ஓர் அபேஷை தோற்ற வந்தான் -என்று இத்தனை தோற்றாமை –
இரப்பாளனாய் சென்றபடி –
அவன் தயை பிறந்து கொடுக்கும் படியான வடிவைக் கொண்டு –

பெரும் கிறியான் –
பெரு விரகன் –

அடியேன் –
மகா பலியைப் போலே ஓன்று கொடுக்க இருக்கிறார் அல்லர் –
இந்த்ரனைப் போலே ஓன்று பெற இருக்கிறார் அல்லர் –
அச் செயலுக்குத் தோற்று எழுதிக் கொடுக்குமவர் இறே இவர் –

நெஞ்சம் பேணலதே –
பரத்வதையும் கொள்ளாது –
பாவோ நான் யத்ர கச்சதி –

ஒருங்கற –
பிறிகதிர் படாமே -ஒரு காலே என்றாய் -நிச்சேஷமாக -என்றபடி –
யானே என் தனதே என்று இருந்த என் நெஞ்சையும் நான் அறியாதபடி அபஹரித்தான் –

——————————————-

தாமரை யுந்தித் தனிப் பெரு நாயக மூவுலகளந்த சேவடியோயே -திருவாசிரியம் -1-

மூ வுலகு அளந்த
தன் பக்கல் வந்து அனுபவிக்க மாட்டாதாருக்கு அவர்கள் இருந்த இடத்திலே சென்று அனுபவிப்பிக்கும்

சேவடியோயே –
இழந்த இழவை மீட்டு ரஷியாதே காதுகனனே யானாலும் விட ஒண்ணாதபடியே யாயிற்று
திருவடிகளின் போக்யதை இருக்கிறபடி-

கண்ணழிவற்ற அழகையும் குணங்களையும் அனுபவித்தார் –

——

மா முதலடி போதொன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒன சுடர் அடிப் போது ஓன்று விண் செலீஇ
நான்முகப்புத்த் தேழ் நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை வழி பட நெறிஇ–5-

மா முதல் -பரம காரணனான உன்னுடைய
அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-திருப் பாதம் ஆகிற ஒரு சிவந்த தாமரைப் பூவை கவிழ்த்துப் பரப்பி
மண் முழுதும் அகப்படுத்து -பூமிப் பரப்பு எல்லாம் கைப் பற்றியும்
ஒண் சுடர் அடி போது ஓன்று-அழகிய தேஜஸ்ஸை யுடைய புஷ்பம் போன்றதான மற்றொரு திருவடியை
நான் முகப் புத்தேள் -பிரமனாகிற தேவதையின்
நாடு வியந்து உவப்ப –லோகமானது அதிசயப்பட்டு மகிழ்ச்சி யுறவும்
வானவர் நெறீ இ முறை -அவ்வுலகத்தில் உள்ள தேவதைகள் -சரியான வழியில் செல்லுகையை முறையிடுகிற
முறை வழி பட -ஸாஸ்த்ர வழிப்பட வணங்கும் படியும்
விண் செலீ இ-ஆகாசத்தில் செலுத்தியும்
தாமரை காடு மலர்க் கண்ணொடு-தாமரைப் பூக்கள் நிறைந்த காடு புஷ்பித்தால் போலே இருக்கிற திருக் கண்களோடே கூட
கனி வாய் உடையதுமாய் -பழம் போன்ற சிவந்த திருப் பவளத்தை யுடையதாய்
இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன-அநேகமான கிரணங்களை உடையதாய் -ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தால் போலே இருக்கிற
முடி பற்பல-பல க்ரீடங்களையும்
கற்பகக காவு வன்ன-கற்பக வனம் போல் இருக்கிற
தழைத்த ஆயிரம் தோள்-ஓங்கி வளர்ந்துள்ள ஆயிரம் திருத் தோள்களையும் உடையனாய்
நெடியோய்க்கு அல்லதும் -எல்லாருக்கும் மேலானவனாய் விளங்குகிற எம்பெருமானை ஒழிந்த மற்று எவர்க்கும்
அடியதோ வுலகே –இவ் வுலகமானது அடிமைப் பட்டதோ –

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி-
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு–இரண்டாம் திருவந்தாதி -61-என்கிறபடியே

திரு உலகு அளந்து அருளுவதாக நின்ற போது நின்ற திருவடி அந் நிலையில்
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப–திரு நெடும் தாண்டகம் -5- என்கிறபடியே
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டத்தை அடைய தன் கீழே இட்டுக் கொண்டது –

வளர்ந்த திருத் தோள்கள்
வியாபித்து திக்குகளை அளந்து கொண்டன

அன்று கரு மாணியாய்
ஸ்ரீ யபதியான நீ –
உண்டு -என்று இட்ட போதொடு -இல்லை என்று மறுத்த போதொடு வாசியற
ப்ரீதியோடே போம்படியான
இரப்பிலே தகண் ஏறின வடிவை உடையையாய்க் கொண்டு இரந்து
உன் படி ஒருவருக்கும் தெரியாதபடி மறைத்து வர்த்திக்கிறவனே
நீ இச் செயல் செய்தது இந்திரன் ஒருவனுடைய அபேக்ஷிதம் செய்கைக்கு அன்று இறே
ஆரேனுமாகத் தன் திருவடிகளில் தலை சாய்த்தார்க்குமாக தன்னை அழிய மாறியும் கார்யம் செய்வான் ஒருவன் என்று
உன் படியை அனுசந்தித்து ஆஸ்ரிதர் மார்விலே கை வைத்து உறங்குகைக்காகச் செய்த செயல் இறே இது
கீழ்ச் சொன்ன படியே –

மா முதல் அடிப் போது -என்று
பரம காரணமானவனுடைய திருவடி என்னுதல் –

அன்றிக்கே
மா முதல் அடிப்போது -என்றது
திருவடி தனக்கேயாய்
சேஷ பூதர் அடைய வந்து சேருவது திருவடிகளில் ஆகையால்
அவர்களுக்குப் பரம ப்ராப்யமான திருவடி என்னுதல்

அடிப்போது -என்றது
அடி யாகிற செவ்விப் பூ -என்றபடி –
அடியாகிய அன்று அலர்ந்த செவ்விப்பூ -என்றபடி
அடி -திருவடி -திருவடி யாகிற செவ்விப் பூவை

கவிழ்த்து அலர்த்தி
திருவடியைப் பரப்பி எல்லாவற்றையும் அளந்து கொள்ளுகிற இடத்தில் சிறியதின் தலையில் பெரியது இருந்தால்
சிறியது நெருக்குண்ணக் கடவது –
அப்படியே திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் நெருங்குண்டது இல்லையோ என்னில் –
ஒரு செவ்வித் தாமரைப் பூவை கவிழ்த்து அலர்த்தினால் அதினுள் அல்லிக்கு உள்ள நெருக்கு இறே
திருவடியின் கீழ்ப் பட்ட பதார்த்தங்கள் உள்ளது
ஒண் மிதி என்னக் கடவது இறே

மண் முழுதும் அகப்படுத்து
புனலுருவி என்கிறபடி –
ஆவரண ஜலத்துக்கு உட்பட்டது அடையத் தன் கீழே இட்டுக் கொண்டு –

இது வாகில் இத் திருவடி செய்தது –
மற்றைத் திருவடி செய்தது என் என்னில்

ஒண் சுடர் அடி போது
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து அண்டமீது போகி இரு விசும்பினூடு போய்
எழுந்து என்று தொடங்கி –மண் முழுதும் அகப்படுத்து –என்கிறபடியே
மேல் உள்ள லோகங்கள் அடைய அளந்து கொண்டது –

ஒண் சுடர் அடி போது ஓன்று
மநுஷ்யர்களுக்கு எல்லாருக்கும் உள்ள துர்மானம்-இந்த்ராதிகளில் ஓர் ஒருவருக்கும் உண்டாய் இருக்கும் –
அப்படிப்பட்டவர்களை அடைய பக்ந அபிமானர் ஆக்கிக் கொள்ளுகையாலே வந்த புகரை உடைத்தாய் இருக்கை –
அழகிய சுடரை உடைய செவ்விப் பூவாகிய ஒரு திருவடி –

விண் செலீ இ
விண்ணை அடைய வியாபித்தது –
எவ்வளவில் சென்றது என் என்னில்

நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
சதுர்முகன் ஆகிற தேவதையினுடைய லோகமானது இத்தைக் கண்டு வியப்பதும் செய்தது –
அந் நீர்மை ஏறிப் பாயாததொரு மேடு தேடித் போந்தோம் ஆனோம் –
நீர்மை இங்கே வந்து ஏறுவதே –
இஃதோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்று விஸ்மயப்படுவதும் செய்தது
திருவடிகளுக்கு ஆகாதார் இல்லை யாகாதே

அவன் உளனாக்க நாம் அல்லோம் என்று அகலப் பார்த்தாலும் அகல விரகு இன்றிக்கே இருந்ததீ –
இது ஒரு அலாப்ய லாபம் இருந்தபடியே என்று உகப்பதும் செய்து
அவ்வளவில் ப்ரஹ்மா செய்தது என் என்னில் –

குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை அங்கு –ஸ்ரீ நான்முகன் -9-என்கிறபடியே

நினைவு இன்றிக்கே இருக்க திருவடி கையிலே வந்து இருந்தவாறே
அலாப்ய லாபத்தால் தடுமாறிச் சுற்றிலே பார்த்தான் –
அவ்வளவில் தர்ம தத்வம் நீராய்க் குண்டிகையிலே புக்கு இருந்தது –
அத்தைக் கொண்டு திருவடியை விளக்கினான் –
அவ்வளவில் இது நமக்கு நல்ல இடம் -என்று சிவன் தன் தலையை மடுத்தான்-

த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹாமுநே
க்ருஹீத்வா தர்மபாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்யார்க்க்யாதி ரர்ச்சிதம்
ததம்பு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீதிய வதாரணார்த்
வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–ஈஸ்வர சம்ஹிதை —

(மா முனிவரே திரு உலகு அளந்து அருளின அச்சமயம் ஹரியின் இடம் பக்தியால் தர்மம் ஜலம் ஆயிற்று
ஜெகந்நாதானான அவன் சந்தோஷத்துக்காக அந்த ஜலத்தைக் கொண்டு அவன் திருவடிகள்
என்னால் மேலான பக்தியுடன் விளக்கப் பட்டது
பாத்யம் அர்க்யம் முதலானவைகளால் பூஜிக்கப் பட்டது
விழுந்த ஜலத்தைப் பார்த்து நான் பரிசுத்தப்படுத்த தகுந்தவனாய் இருக்கிறேன் என்று நிச்சயத்தில்
சிவன் ஜடையில் நடுவில் தாங்கினான்
பல வருஷங்கள் ருத்ரன் அத்தைத் தாங்கிக் கொண்டே விடாமல் இருந்தான் )–என்று
பாவநார்த்தம் ஜடா மத்யே–சிரஸா ஹர–தன்னுடைய ஸூத்யர்த்தமாக ஜடையில் தரித்தான் –

யோக்யோஸ் மீதிய வதாரணார்த்–
திருவடிகளுக்கு யோக்யர் அல்லாதார் இல்லை என்று பார்த்தான்

வர்ஷாயுதாந்யத பஹுந் ந முமோச ததா ஹர–என்கிறபடியே
நற் சரக்கு வந்தால் விடுவார் இல்லை இறே
கிடையாதது கிடைத்தவாறே விடேன் என்று தலையில் வைத்துத்
திருவடியைக் கட்டிக் கொண்டு நெடுங்காலம் நின்றான்

சது முகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி –ஸ்ரீ பெரியாழ்வார் -4-7-3-என்று இறே
கங்கைக்கு வரலாறு (வரவாறு ) சொல்லுகிறது

முந்துற ப்ரஹ்மாவின் கையிலே இருந்து
பின்னர் சர்வேஸ்வரன் திருவடிகளில் தங்கி –
அநந்தரம் ருத்ரன் தலையிலே வந்து விழுந்தது –

இத்தால் ப்ரஹ்மா தான் பெற்றது என் என்னில்

தவம் செய்து நான்முகன் பெற்றான் தாரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் -கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி -78-என்றபடி

அநேகம் கைகளை படைத்ததால் உள்ள பிரயோஜனம் பெறும்படி திருவடியை விளக்கப் பெற்றான்

குறை கொண்டு –
தன்னுடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு

குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி –
வேதத்தில் அநந்ய பரமான வாக்யங்களைக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி

கறை கொண்ட –
இவன் ஆவி விவேகத்தால் விளைவது அறியாமே அநர்த்த ரூபங்களாய் இருக்குமவற்றைச் செய்யா நின்றான் –

இனி இங்கன் ஒத்த அமங்களங்கள் வாராது ஒழிய வேணும் -என்று
விஷம பிரஜைகள் மேலே தீர்த்தைக் கொண்டு விநீதனாக வேணும்-என்று தெளிக்குமா போலே
ருத்ரன் ஜடையில் விழும்படி கழுவினான் –

இதுவாகில் அவன் செயல் –
அவ்வவ லோகத்தில் உள்ள தேவதைகள் செய்தது என் என்னில்

வானவர் முறை முறை வழி பட நெறீ இ
தேவர்கள் நெறி பட்டு
வானவர் நெறீ இ-முறை முறை வழிபட -என்று அந்வயம் –

தேவர்கள் நெறி பட்டு பகவத் சமாஸ்ரயணம் பண்ணும்படியைச் சொல்லுகிற
சாஸ்திரங்களின் வழியே திரளாக ஆஸ்ரயிக்க-
திரு அணுக்கன் திரு வாசலில் திரள் திரளாகப் புக்கு திருவடி தொழுமா போலே
ஸமாராதன விதியின் படி வழிபட்டு ஆஸ்ரயிக்க

அவ்வளவில் அவன் செய்தது என் என்னில்

தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று-
தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
நாம் இங்கு காண்கிற ஆதித்யனைப் போல் அன்றிக்கே
அநேக ஆயிரம் கிரணங்களையும் கீழ்ச் சொன்ன விசேஷங்களையும் உடையராய் இருப்பார்
ஆயிரம் ஆதித்யர்கள் -சேர உதித்தால் போலேயாய்

கற்பகக காவு பற்பல வன்ன –
பலவான கற்பகச் சோலை -போலே –
இப்படி இருக்கிறது எது என்னில்

முடி தோள் ஆயிரம் தழைத்த
ஞாயிறு ஆயிரம் மலர்ந்தால் போலே இருக்கிறது திரு அபிஷேகம்
பலவகைப்பட்ட கற்பகச்சோலை போலே இருக்கிறது –
அநேகம் ஆயிரம் பணைத்த திருத் தோள்கள் –

நெடியோய்
இப்படி தன்னை அழிய மாறி இரந்து-அவன் கார்யம் செய்து -தலைக் கட்டச் செய்தேயும் –
தன்னை விஸ்வசித்து –
உடனே கிடந்தவன் முடி அவிழ்த்தனைப் போலே அநு தபித்து –
மஹா பலி போல்வார் நலிவதற்கு முன்னே
முற்கோலி நோக்கப் பெற்றிலோம் -பறி கொடுத்தோம் -பிற்பாடாரானோம் -என்று நோக்கி
லஜ்ஜித்து ஒன்றும் செய்யாதானாய்த்
தன் குறையை நினைத்து இருக்குமவன் ஆயிற்று –
செய்ய வேண்டிவற்றை நீள நினைப்பவன் -நெடியோன் -என்றபடி

நெடியோய்க் கல்லது அடியதோ வுலகே
இப்படி சர்வ ரக்ஷகனான தன்னை ஒழிய ஜகத்து மற்றும் சிலர் கால் கீழே கிடந்ததோ
மங்களா சாசனம் பண்ண

எல்லாரையும் ஆஸ்ரயிப்பித்துக் கொள்ளுகிறவர்கள் தலை மேலே காலை வைத்த
உனக்கு மங்களா சாணம் பண்ண அடுக்குமோ –
சிலர் கால் கீழே கிடந்தவர்களிலே சிலருக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
உன் காலின் கீழே துகை உண்டவர்களுக்கு மங்களா சாசனம் பண்ண அடுக்குமோ –
சொல்லிக் காண்

நீ அன்றோ நெடியோன் –
அனைவரிலும் சாலப் பெரியவனான திரிவிக்ரமன்
நீ அன்றோ என்றவாறு

——-

படைத்து உண்டு உமிழ்ந்து அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் கடவுள் நிற்ப–6-

எல்லை நடந்து மீட்டு –
இப்படி சர்வ வித ரக்ஷணங்களையும் பண்ணச் செய்தே

பின்னையும் தன்னை விஸ்வசித்து அருகே கிடந்தவனை –
மடி தடவினவனைப் போலே அநு தபித்து-
ஒன்றும் செய்யாதானாய் மேன்மேல் என ரக்ஷண உபாயங்களை சிந்தித்து –

ஒருவரை இருவரை அன்றிக்கே வரையாதே எல்லாரையும் ஓக்க ரக்ஷிக்கிற அத்விதீய பரதேவதை யானவன் –
ஆரோ வருவார் -என்று

குஹேநே சார்த்தம் தத்ரைவ ஸ்திதோ அஸ்மி திவசாந் பஹுந்
ஆசயா யதிவா ராம புநஸ் சப்தா பயேதி தி -அயோத்யா -59-3-
பெருமாள் மீண்டும் கூப்பிடுவாரோ என்னும் நப்பாசையாலே குஹனுடன் கூட அங்கேயே பல தினங்கள் தங்கினேன் )
என்கிறபடியே அவசர பிரதீஷனாய் நிற்க

இவ்வோ உபகாரங்களை பண்ணிற்றிலனே யாகிலும் ஆஸ்ரயிக்கைக்கு முட்டுப் பொறுக்கும்
அத்விதீய பரதேவதை இவன் அல்லது இல்லை என்கை

——————————–

பருகலாம் பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் காண்பரிய நுண்புடையீர்–8-

பருகலாம் பண்புடையீர்
பருகலாம் என்று ஒரு த்ரவ்ய த்ரவ்யத்தைச் சொல்லுமா போலே சொன்னபடி என்
பருகலாம் நீர்மையை யுடையீர் (ஸுலப்யம் நீர் தன்மை உருகும் தன்மை )

பாரளந்தீர்
சொன்ன நீர்மைக்கு உதாஹரணம்

———-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா -மார்பாரப்
புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து –16-

அவஸர ப்ரதீஷனாய் இருக்கிற அளவேயோ
இத்தைப் பெறுகைக்கு அர்த்தியாய் அன்றோ நிற்கிறது என்கிறார் –
(நீல நிறத்தோடு நெடும் தகை வந்து அங்கு ஓர் ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் -கம்பர்
அதிதி கஸ்யபர் –இந்திரனுக்காகவே பெற்றார்கள் -விஜய முஹூர்த்தம் திருவோண நக்ஷத்ரம்
இந்திரனுக்காக -ராஜ்யம் மீட்டுக் கொடுக்கவே பயோ விரதம் பண்ணி பெற்றாள் )

சீரால் பிறந்து
மஹதா தபஸா ராம மஹதா ஸாபி கர்மணா -(ஆரண்ய -66)
சக்கரவர்த்தி தான் தேடின அர்த்தமும் பண்ணின தபஸ்ஸூம் அழிய மாறிப் பெற்றால் போலே யாதல்
ஸ்ரீ வஸூ தேவர் அநந்த வ்ரதம் அனுஷ்ட்டித்துப் பெற்றால் போலே யாதல் பிறந்தாலாகாதோ

(அநந்த வ்ரதம் -சாடு-பல விரதங்கள் என்றும் அநந்த விரதம் என்று ஒன்றின் பெயர்
ராம ரத்னம் கோபால ரத்னம் வாமன ரத்னம் )

சிறப்பால் வளராது
ஸ்ரீ ஸூ மித்ரையாரும் வசிஷ்டாதிகளும் பேணி வளர்க்க வளர்ந்தால் போலே யாதல்
அனுகூலர் தேடின வெண்ணெயும் பிரதிகூலருடைய உயிரும் மாள வளர்ந்தால் போலே யாதல் வளர்ந்தால் ஆகாதோ

பேர் வாமன் ஆக்காக்கால்
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளினவோ பாதியாக வாமனனாக வேணுமோ
ஸ்ரீ யபதி என்ற ஒரு பேர் ஆனால் ஆகாதோ
ஒரு ருஷி பத்னி பக்கலிலே பிறந்து (அதிதி ஆஸ்ரமம் தானே )
பேணுவார் இன்றிக்கே வளர்ந்து
பேரும் வாமனனாகா விட்டால் உன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்டு
அணைவது உண்பது உமிழ்வதான இந்த பூமி நீர் ஏற்பதாய் பட்டாயோ

பேராளா –
கார்யம் செய்வதற்கு முன்னே எத் திறம் என்கிறார்
உன்னுடைமையில் உனக்கு கிடக்கிற ஓரத்துக்கு -பக்ஷ பாதத்துக்கு -எல்லை காண்கிறீலோமீ

(உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் சொல்லாமல்
முன்னமே எத்திறம் சொல்லி ஏங்கி இருந்து எளிவே என்றாரே
அதே போல் இங்கும் பேராளா என்று முன்னம் அருளிச் செய்கிறார் )

மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து
நீ இப்படி எளியையாய்
அது இருக்கைக்கு அடி சூழ்ந்து சொல்லு -புத்தி பண்ணி அருளிச் செய்ய வேணும்

ஸர்வேஸ்வரனும் தன்னுடைய அவதாரத்தைப் போய் புக்கால்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் –என்னும் அத்தனை

வேதமும் பேசப் புக்கால்
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்னும் –
சூழ்ந்து -விசாரித்து

(த்வந் நிர்மிதா ஜடரகா சா தவ த்ரி லோகீ கிம் பிஷனாத் இயம் ருதே பவதோ துராபா
மத்யே கதா து ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 16-)

(ஹே தேவ
த்வந் நிர்மிதா –தேவரீரால் படைக்கப் பட்டதும்
ஜடரகா சா தவ –ஒரு கால் தேவரீருடைய திரு வயிற்றிலே கிடந்து ரக்ஷை பெற்றதுமான
இயம் த்ரி லோகீ –இந்த மூ உலகும்
பிஷனாத் ருதே –மகா பலி இடத்தில் யாசிப்பது தவிர மற்ற உபாயத்தினால்
பவதோ துராபா கிம் –தேவரீருக்கு கிடைக்க அரிதோ
யாசித்துப் பெறாமல் ஸ்வா தந்த்ரியத்தினாலேயே பெற முடியாததோ
மத்யே கதா து -இடையில் ஒரு காலத்தில்
ந விசக்ரமிஷே ஜகச்சேத் த்வத் –இந்த உலகத்தை பிஷா வ்யாஜத்தினால் மூவடி கொண்டு அளந்து அருளா விடில்
விக்ரமை கதம் இவ ஸ்ருதிர் அஞ்சிதா ஸ்யாத்—வேதமானது தேவரீருடைய விக்ரமங்களினால்
எங்கனம் மேன்மை பெற்றதாகும் )

————-

மாணி யுருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்–20-

காணப் புகில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில் –
நாம் அறியாதே காணப் புகுதல்
அர்த்த தத்வம் இருந்த படியே பேசப் புகுதல் செய்தால்
அறிவுக்கு வாய்த் தலையான நெஞ்சுக்கு நாண வேண்டாவோ

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்
இத்தைத் தீண்டுகைக்கு அவன் ப்ரவர்த்தித்த படி
அவன் செய்த வியாபாரம் ஆகையால்
இதுவும் கூசாமல் தீண்டிற்று என்னவுமாம்

(சர்வ விஷயமாக அவன் ப்ரவர்த்தித்த படி-
ஒருவரைப் பிடிக்க ஊரையே வளைத்த படி )

திருவாகம் தீண்டிற்றுச் சென்று
தன்னை அறிந்தால்
விலக்ஷணமான வடிவைச் சென்று தீண்டக் கடவதோ –

(தன்னை -என்று
தாழ்ந்து இருக்கும் தன்னை என்றும்
பர கத ஸ்வீ காரம் பண்ணும் அவனை என்றுமாம்)

———

அடியால் படி கடந்த முத்தோ அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் செறி கழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று
உலகம் எல்லாம் அறிகிலமால் நீ யளந்த வன்று–27-

அடியால் படி கடந்த முத்தோ –
முத்து என்று மவ்க்த்யமாய் -(பிள்ளைத்தனமாய் )
அத்தாலே -லக்ஷணையாலே -அழகாய்
அடியாலே பூமியை அளந்த அழகோ

அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ –
திரு முடியாலே ஆகாசத்தை அளந்த அழகோ -என்னவுமாம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – திரு விருத்தம்-50-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ———மூன்றாம் திருவந்தாதி —90-

செறி கழல் -என்கையாலே
திருவடிகளிலே முத்து உண்டாகையாலும்

நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய் —என்கையாலே
திரு முடியிலே முத்து உண்டாகையாலும்

அடியிலே படியை அளந்தன முத்துக்களோ
முடியாலே விசும்பை அளந்தன முத்துக்களோ

சிலம்பும் செறி கழலும் (மூன்றாம் திரு –90)-என்று
இதுக்கு உள்ளீடான முத்து ப்ரகாசமாதல் –
சாத்தின முத்தாதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று
அறிகிறி லோம்
ஆல் ஆச்சர்யம்

இப்போது உனக்கு ஓடுகிற ஹர்ஷம்-முத் -வடசொல் -ஹர்ஷமே –
திருவடிகளில் கீழே பூமியை இட்டுக் கொண்ட ஹர்ஷமோ
திரு முடியாலே ஆகாச அவகாசத்தை எல்லாம் வியாபித்த ஹர்ஷமோ -என்றுமாம்

அடியாலும் முடியாலுமோ என்னுதல்
அவற்றில் உண்டான முத்தாலேயே என்னுதல்

முத்து என்றது
அழகாதல்
முத்துத் தான் ஆதல்

நெடியாய் நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
நீ யளந்த யன்று
அடியால் படி கடந்த முத்தோ –
அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ
அறிகிலமால்
என்று அந்வயம்

———-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும் ஒன்றும் ஓவா ஆற்றான் என் நெஞ்சு அகலான்–35-

நின்றும் இருந்தும் கிடந்தும் திரி தந்தும்
உகந்து அருளினை தேசங்களிலே
நிற்கிறதும்
இருக்கிறதும்
கண் வளர்ந்து அருளுகிறதும்
உலாவுகிறதும்
எல்லாம் என்னைப் பெருகைக்காகவே

ஒன்றுமோ வாற்றான்
எல்லாம் செய்தும்
ஒன்றுமே செய்யாதானாய் இருக்கும்

ஓ -என்று
ஆச்சர்யத்திலே
அசைச் சொல்லாய்க் கிடக்கவுமாம்

———–

பாரிடந்தான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்–42-

பாருண்டான்
பிரளயம் வருகிறது என்று தன் திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும்

பாருமிழ்ந்தான்
வெளி நாடு காண உமிழ்ந்தும்

பாரிடந்தான்
அண்ட பித்தியில் நின்றும் பூமியை ஸ்ரீ வராஹ ரூபமாய் ஒட்டு விடுத்தும்

பாரளந்தான்
மஹா பலி அபஹரிக்க எல்லை நடந்தும்

பாரிடம் முன் படைத்தான்
கரண களே பர விதுரமாய்
போக மோக்ஷ ஸூன்யமான இவற்றை ஸ்ருஷ்ட்டித்தும்

என்பரால் –
இப்படி ஆனைத் தொழில்கள் செய்வான் என்று
நிர்த்தோஷ பிரமாணமும்
பிரமாணத்தை அங்கீ கரித்த ருஷிகளும் (பிரமாதாக்கள் )
சொல்லுகையாலே

பாரிடம் ஆவானும் தானானால்
ஜகத்தாகிறான் ஈஸ்வரன்
ரஷ்ய ரக்ஷக பாவாதி ஸம்பந்தங்களாலே ஐக்யம்
ஸ்வரூபத -அன்று

ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம (சாந்தோக்யம் )-என்று (ப்ரதிஜ்ஜை சொன்னால் போலே )
பிரபஞ்சத்துக்கு ப்ரஹ்மத்துக்கும் ஐக்யத்தைச் சொல்லி
தஜ்ஜலாநிதி (தஜ்ஜ -தல்ல -தத்தனு இதி )-என்று ஹேது சொன்னால் போலே –

(கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் -ஆவேனும் யானே என்னும் )

ஆனால் ஆரிடமே
இப்படி யானால் இஜ் ஜகத்துக்கு ஆஸ்ரயம் ஆவாரார்

மற்று ஒருவர்க்கு ஆவான் புகவாலவை
ஜகத்தில் இச் சேதனர் வேறே ஒருவனுக்கு சேஷம் ஆவான்

புநா (புகா)
உண்டு உமிழ்ந்த தொழில்கள் வேறே ஒரு வியக்திக்கு ஆகா என்றுமாம் –

அவை -சேதனர் ஆதல்
கீழ்ச் சொன்ன வியாபாரம் ஆதல்

————

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் –காண்பான் நம் கண்ணவா மற்று ஓன்று கண்ணுறா சீர் பரவாது உண்ண வாய் தான் உறுமோ வொன்று–52-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான்
மஹா பலி நான் தருவேனானால் இன்னும் அகல இரக்க மாட்டாயோ என்ன
இரந்ததுக்கு மேலே வேண்டா -என்று இருக்கிற
பால்யம் பாவித்து
அத்தைப் பொய் -என்கிறது அன்று –
அத்தையும் மெய்யாக்குகை-

சீர் பரவாது உண்ண வாய் தானும் உறுமோ ஓன்று
அவனுடைய கல்யாண குணங்களைச் சொல்லாதே வாக்கு
வேறே ஒன்றை உண்ண உறாது –

————

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வினிதால் எல்லே ஒருவாறு ஒருவன் புகாவாறு — அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி--56-

சேயவர் தாம்
அர்ஜுனனுக்குக் கையாளாய் இருக்கச் செய்தேயும்
துர்யோத நாதிகளை அம்புக்கு இரையாக்கி அவர்களுக்குத் தூரியராய் இருக்குமவர்

அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி
நினைத்த போது தாமே வந்து கிட்டுமவர்

இப்படி ஆச்சர்ய பூதரானவர் காட்டும் உபாயம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால்

——–

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள் மறை முறையால் வானாடர் கூடி முறைமுறையின் தாதிலகு பூத் தெளித்தால்
ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித்தான் கிடக்கும் மீன்–61-

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
ஈஸ்வரனான முறையாலே திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளிலே

மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தேவர்கள் வேதம் சொன்ன முறையாலே திரு உலகு அளந்து அருளின திருவடிகளிலே

முறை முறையின் –
முறை முறையாக -வரிசை யடைவே

தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீதிலகித் தான் கிடக்கும் மீன்
உஜ்ஜ்வலமான புஷ்பங்கள் தெளித்தால் போலே யன்றோ
ஒத்த விசும்பின் மேல் கிடக்கிற நக்ஷத்திரங்கள் இருக்கிறது
(விசும்பு -விஷ்ணு பதம் ஆகாயம் இடம் திருவடி மூன்றுமே பதார்த்தம் )

இறை முறையான் சேவடி மேல்
வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி
முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்
என்று அந்வயம் –

———–

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான் குடைக்கு தானோர் மணிக்காம்பு போல் நிமிர்ந்து
மண்ணளந்தான் நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்--62-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடிலா வான்குடைக்கு
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான்
நக்ஷத்திரங்கள் ஆகிற கம்புகளையும்
உடு பதி என்னுமா போலே
நக்ஷத்ரங்களுக்கு ராஜாவான சந்த்ர சுக்ரர்களைக் குழலாக யுடைத்தான
நித்யமாய்ப் பெருத்த ஆகாசமாகிற குடைக்கு
நீல மணியாலே சமைந்த தொரு காம்பு போலே வளர்ந்து
பூமியை அளந்தான்
(நக்ஷத்ராணாம் அஹம் சசி -கீதை )

நங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின்-
திரு வுலகு அளந்து தேவர்களுடைய துக்கத்தைப் போக்கினால் போலே
நம்முடைய ஸம்ஸாரத்துக்கு பரமான ஒவ்ஷதம்

மண் அளந்த அபதானத்துக்குக் குடையும் காம்புமாக்கி நிரூபிக்கிறார்
வெறி -சந்திரன் -தாராபதி
வெள்ளி -சுக்ரன்
வேய் என்று குடையில் அடியிலே இருக்கிற மூங்கில் குழல்

————–

எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண்ணளந்த பாதமே ஏத்தாப் பகல்–80-

மண்ணளந்தான் –பாதமே ஏத்தாப் பகல்–மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே
திரு உலகு அளந்து அருளின நீர்மையை யுடையவன் திருவடிகளை ஏத்தாத
பகலில் மறப்பெல்லாம்
துக்கமே என்று அல்லது மநோ ரதிப்பானோ

—————————————-

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப்பொரு மாணாகி ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-திரு வெழு கூற்று இருக்கை

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன்
இரு பிறப் பொரு மாணாகி-ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-

வியாக்யானம் -1-
அம்பாலே சாதிக்க ஒண்ணாத இடம் அழகாலே சாதித்த படி சொல்கிறது –

மூவடி நானிலம் வேண்டி -நாலுவகைப் பட்ட பூமியிலே -மலை காடு நிலம் கடல் -என்கிற -மூவடியை வேண்டி –

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் –
ஒரு காளமேகத்தில் மின்னலை ஏறிட்டால் போலே-
திரு யஜ்ஞோபவீதமும் -அத்தோடு கூடின க்ருஷ்ணாஜிநமும் விளங்கா நின்ற திரு மார்பை யுடையையாய் –

இரு பிறப் பொரு மாணாகி-த்வ்ஜனுமாய் -ஒப்பில்லாத ஸ்ரீ வாமனனுமாய்
தானே இன்னும் ஒரு கால் இவ்வடிவு கொள்ள வேணும் என்னிலும் இப்படி வாயாத வடிவுடையையாய்

ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-ஒருகால் இரண்டு அடியாலே மூன்று லோகத்தையும் அளந்து கொண்டாய்-

இத்தால்-
இந்தரனுக்கு ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தால் போலே
என்னுடைய சேஷத்வத்தையும் மீட்டுத் தந்து அருள வேணும்-என்கிறார் –

தேவர்கள் சென்று இரந்தார்கட்கு இடர் நீக்கிய -கோட்டங்கை வாமனனாய் -திருவாய்மொழி -7-5-6–என்று
உன்னை இரந்தார்கட்கு நீயும் இரந்து அவர்கள் அபேஷிதம் பார்க்கும் அவன் அல்லையோ –

இசையாதார் தலைகளிலே வைத்த திருவடிகளை இசைந்த என் தலையிலே வைக்கல் ஆகாதோ-

பிரயோஜனாந்தர பரனுடைய இழவு தீர்த்த உனக்கு அநந்ய பிரயோஜனான என்னுடைய இழவு தீர்க்கலாகாதோ

இந்த்ரன் கழஞ்சு மண் அன்றோ இழந்தது -நான் என்னையும் உன்னையும் அன்றோ இழந்தது –

————————————————————————–

வியாக்யானம் -2-
அம்பாலே அழிக்க ஒண்ணாத இடத்தை -அழகாலும் இரப்பாலும் அழியச் செய்த படி –

பிரயோஜனாந்தர பரர்களான இந்த்ராதிகளுடைய கார்யம் செய்த நீ
உன்னையே பிரயோஜனமாக நினைத்து இருக்கிற என் கார்யம் செய்யலாகாதோ –

மூவடி நானிலம் வேண்டி-ஈரடியாலே பூமியை அளந்து
ஓரடிக்கு அவனை சிறையிட்டு வைக்க நினைத்து மூன்றடியை இரந்தான் ஆயிற்று –

நெய்தல் மருதம் முல்லை குறிஞ்சி என்றால் போலே சொல்லுகிற
அன்னலும் துன்னலுமான பூமியை அர்த்தித்தது –
இந்நாலிலும் ருஷீஷாம்சமாக கழித்தது பாலை நிலம் என்றும் சொல்லுவார்கள் –
இவருக்கு அபிமதம் நாலு என்னும் இடம் தோற்றி இருந்தது இறே

முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி-
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை-
மேகத்திலே-மின்னினால் போலே சாத்தின யஜ்ஞோபவீதமும்
கிருஷ்ணாஜிநமும் விளங்கா நின்றுள்ள திரு மார்பை யுடையையாய்
உப நயனம் பண்ணின புதுமை தோற்றும் படி இருப்பாயுமாய் –

இந்த்ரனுடைய அர்த்தித்வம் தலைக் கட்டுகைக்காக இட்ட போதோடு இடாத போதோடு வாசி அற-
முகம் மலர்ந்து போம்படி இறபபிலே தகண் ஏறின வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து-
ஒரு கால் த்ரை லோகத்தையும் ஈரடியால் அளந்து கொண்டாய்

ஆசையில்லாதார் தலை மேலேயும் வைக்கும் திருவடிகளை ஆசையுடைய என் தலை மேலேயும் வைக்கலாகாதோ-

இந்த்ரனைப் போலே கழஞ்சு மண் பெறுதல் –
மகா பலியைப் போலே ஔதார்யம் கொண்டாடுதல் செய்ய இருக்கிறேனோ நான் –
உன்னைப் பெற வேணும் என்று அன்றோ நான் அர்த்தித்திக்கிறது-

உன்னை வைத்து வேறு ஒன்றை இரந்தார்க்கோ நீ இரப்பாளனாகக் கார்யம் செய்வது –
உன்னையே இரந்தார் கார்யம் செய்யலாகாதோ –

மதீய மூர்த்தா நமலங்கரிஷ்யதி கதா –ஸ்தோத்ர ரத்னம் -31-என்று இறே நான் இருக்கிறது-

—————————————-
ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்–சிறிய திருமடல் 

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –
பூமிப் பரப்பைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவர் ஆர் –
ஆரால் -என்கையாலே
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றாள்
அவன் -என்ன வேண்டும் பிரசித்தியை உபஜீவித்து நின்று சொல்லுகிறாள்

இவ்வையம் –
மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும் –
பூமிப் பரப்பை அடைய துழாவி யிருந்து அவன் அடிச் சுவடு மோந்தவரைப் போலே சொல்லும் –
விச்வாமித்ர மகரிஷி யாகம் காக்க பெருமாள் எழுந்து அருளுகிற போது –
ருஷியே இங்கே தோற்றுகிற ஆஸ்ரமம் ஏது-என்று கேட்டு அருள
ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருந்து தபஸ் ஸூ பண்ணின சித்தாஸ்ரமம்
அவன் எழுந்து அருளி இருந்து போன இடம் -என்று நான் இம் மண்ணை மோந்து கொண்டு கிடப்பன் -என்றான் இ றே
அப்படியே இவ்வையம் என்று அடிச் சுவடு தோன்றுகிறபடி –

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது தான்
இத்தால் -புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே -என்னுமா போலே
தன்னுடைமையை இரந்து பெறுமவன் அன்றோ –
இவளை விட்டு வைக்குமோ -என்றபடி –
மண்ணை இரந்து அளந்து கொள்ளுமவன்
பெண்ணை நோவுபட விட்டு வைக்குமோ –என்றபடி

————

பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை ஆராத போரில்

அன்றியும் -இத்யாதி –
இப்படி அழியச் செய்ய வேண்டும் பராதி கூல்யமே அன்றியே –
ஆனுகூல்ய லவம் உடையவனாய் இருக்கும் இ றே மஹா பலி
அதாவது -ஔதார்ய குணம் எனபது ஓன்று உடையவன் ஆகையால் அவனைச் சடக்கென அழியச் செய்ய ஒண்ணாமை யாலும்
தேவர்களுக்காக அவனை அழியச் செய்ய வேண்டுகையாலும் –
அவன் கொடுக்க உகப்பன் -என்னுமத்தை நினைத்துத்
தன்னை இரபபாளன் ஆக்கி அவன் பக்கலிலே சென்று நீர் ஏற்று பூமியை வாங்கி இந்த்ரனுக்குக் கொடுத்தபடி சொல்லுகிறது –

அன்றியும் பேர் வாமனாகிய காலத்து –
நாட்டில் வாமனர்கள் எல்லாம் வளர்ந்து அருளின இடம் என்னலாம் படி
சிறுத்து இருக்கும் என்னுதல் –
வடிவே யன்றியே பெரும் வாமனனாகிய காலம் –

மூவடி மண் தாராய் –
மஹா பலி எனக்கு மூவடி மண் தர வேணும் -என்றான்
அவனும் -தருகிறோம் -என்றான் –
அங்ஙகனாக ஒண்ணாது தாராய் -என்றான் –
வளைப்பாரைப் போலே

எனக்கு என்று
ஒன்றையும் எனக்கு எண்ணாதவன் காணும் -எனக்கு -என்றான் –பரார்த்தம் ஆகையாலே
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகுஎல்லாம் நின்றளந்தான் மாவலியை –
வேண்டிக் கையிலே நீர் விழுந்தவாறே சிறுகாலைக் காட்டிப்
பெரிய காலாலே லோகம் அடைய அளந்து கொண்டான் –

மாவலியை மூவடி மண் தாராய் எனக்கென்று
வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் -என்று அந்வயம்

———————————

நில மங்கை தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப்பிணை யலேய்ந்த–பெரிய திருமடல்

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –
நெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள
ஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-
ஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்
ஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி
ஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –

இரு  சுடரை மன்னும் விளக்காக வேற்றி –
இவன் போன இடம்  எங்கும்  கூடப் போமவர்கள் இ  றே ஆழ்வார்கள் –
ஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி
அங்கன் அன்றிக்கே
சந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-
ஏகார்ணததிலே  சிருஷ்டி உன்முகனாய்க் கண்  வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில்
அதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று
அன்றியே
கவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இ றே –

மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச-
சர்வேஸ்வரன் திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகைக் கண்ட ஹர்ஷத்தாலே
கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலானது –
தன்னுடைய பரம்பின திரைகள் ஆகிற கவரியை வீச
பெரும் திரையாய் வந்து முறிந்த குறும் திவலையானது
திருவடிகளிலே வந்து உதைத்து அது துடை குத்த உறங்குவாரைப் போலே யாயிற்று கண் வளர்ந்து அருளும் படி –
பன்னு  திரைக் கவரி வீச — என்கிற விடம் –மன்னிய சேவடியை -என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது –
நில மங்கை தன்னை முன நாள்  அளவிட்ட –
முன்னொரு நாள் பூமிப் பிராட்டியை அளந்த

தாமரை போல் மன்னிய சேவடியை –
திருவடித் தாமரையை நோக்கி –மறி கடலும் பன்னு திரை கவரி வீச –
அலை எறிகிற சமுத்திர ராஜன்
பரம்பின அலைகள் ஆகிற சாமரங்களை வீசப் பெற்றும்

வானியங்கு தாரகை மீன் என்னும் –
ஆகாசத்தில் திரியும் நஷத்ரங்கள் ஆகிறது –
பூர்வ ஷணத்திலே போல் தோன்றா நின்றது யாயிற்று இவர்க்கு பாவனா பிரகர்ஷத்தாலே –

அளவிட்ட –தாமரை போல்-
பண்டு திரு வுலகு அளந்து அருளின திருவடிகள் என்று மூதலிக்கலாம்   படி செவ்வித் தாமரைப் பூ போலே இரா நின்றது –

மன்னிய சேவடியை —
சௌகுமார்யத்துக்கு ஒரு போலியாகச் சொன்ன வித்தனை இ றே தாமரையை –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறிப் போகையாலே
மாறாச் செவ்வியை  உடைத்தான திருவடிகளை மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் –

வானியங்கு தாரகை மீன் என்னும் -மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல் –
ஆகாசத்தில் சஞ்சரியா நின்றுள்ள நஷாத்ரா தாரா கணங்கள் ஆகிற
கலம்பகன் மாலையாலே அலங்க்ருதமாய்-
அத்தை உள்ளே அடக்கும்படி ஸ்ரமஹரமாய் இருந்துள்ள மேகமாகிற அளக பாரத்தை  உடைத்தாய் இருக்கை-
நாயகனாகிற சர்வேஸ்வரன் இவன் ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழுந்த அக்காலத்திலே சர்வ வித போக்யங்களையும் பெற்றானாய் இருக்கை

————-

மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் பொன்னுலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப

மட்டிடித்து மாதிரங்கள் மின்னி யெரி வீச மேல் எடுத்த சூழ கழற்கால்-
திக்குகளிலே செல்ல

பொன்னுலகம் எழும் கடந்து உம்பர் மேல் –
திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –

————

தன்னுருவம் ஆரும் அறியாமல் தானங்கு ஓர் மன்னும் குறள் உருவின் மாணியாய் மாவலி தன பொன்னியலும்
வேள்விக்கண் புக்கிருந்து போர் வேந்தர் மன்னை –மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப
மூவடி மண் மன்னா தருக வென்று வாய் திறப்ப மற்றவனும் என்னால் தரப் பட்டது என்றலுமே அத்துணைக் கண் மின்னார் மணி முடி
போய் விண் தடவ மேலேடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னு இவ்வகலிடத்தை மாவலியை வஞ்சித்து தன்னுலகம் ஆக்குவித்த தாளானை -தாமரை மேல் மின்னிடையாள் நாயகனை –

தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் –
பெரிய பிராட்டியாரும் நித்ய சூரிகளும் –

மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்-
வைத்த கண் வாங்க ஒண்ணாத அழகு –

பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து –
மகா பலியைப் போலே நானும் யாகம் பண்ணினேன் ஆகில் தானே வரும் இ றே-என்று கருத்து –

போர் வேந்தர் —மன்னை-
மகா ராஜனை-

மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்-
ஸூ க்ர பகவான் உள்ளிட்டார் –
நெஞ்சுருக்கி -புலன் கொள் மாணாய் -திருவாய் மொழி -1-8-6-
ராஜாவே -என்ன
திரியப் பார்க்க
மூவடி -என்ன
என்னன்புது -என்ன
மண் -என்ன
ஆர் காலாலே -என்ன
என் காலாலே -என்ன
பெரியதொரு காலாலே கொண்டாலோ -என்ன
என் அபேஷை அன்றோ நீ செய்யக் கடவது -என்ன
பேசாது இருந்தான்
இவன் பேச்சை கேட்க்கைக்காக
இவனும் ஈண்டென தாராய் -என்று வாய் விட
அவ்வாய் விட்டத்தைக் கண்ட மகா பலியும் இட்டு மாறினால் போலே
வேறு ஒருவன் ஆனபடியாலே -மற்றவனும் -என்கிறது –

என்னால் தரப்பட்ட தென்றலுமே  –
தத்த மச்யாபயம் மா -யுத்த -18-34-என்ற பெருமாளைப் போலே –

அத்துணைக் கண் —
அந்த ஷணத்திலே –

மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்தபொன்னார் கனை கழற்கால் ஏழ்   உலகும் போய்க்  கடந்தங்கு  –
ஸ்ப்ருஹா விஷயமாய் –
ஆஸ்ரித ரஷணத்துக்குப் பின்னை ஒன்றை வேண்டாதபடி
சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகள் –

ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி-
உகவாத நமுசி பிரப்ருதிகள் –

மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் –
அவனுக்கு அடி பட்டிருக்கை –

தன்னுலக மாக்குவித்த –
ஆஸ்ரிதரோடு தன்னோடு வாசி இல்லாமையாலே
இந்தரனுக்கு என்னாது ஒழிகிறது-

தாளானை –
தாள் என்று திருவடிகள் –

————————————————–

பெரு நிலம் கடந்த நல்லடிப் போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே–1-3-10-

பரப்பையுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான். இவர்கள் நன்மை தீமைபாராமல் தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும்படி செய்தான் என்றபடி. 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின், ‘நல்லடிப்போது’ என்கிறார்.2‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும். செவ்விப்பூச்சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.-அயர்ப்பிலன்-மறவேன். அலற்றுவன்-முறை இன்றிப் பேசுவேன். தழுவுவன்-3‘மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்பது போன்று, தழுவுவேன். வணங்குவன் – செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன். அமர்ந்து – வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

———-

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி மதி எலாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள். ‘உண்டு’ என்று இட்டபோதொடு

‘இல்லை’ என்று தள்ளிக்கதவு அடைத்தபோதோடு வேற்றுமை அறமுகமலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின வடிவையுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள். உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் 1‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர்திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல், 2‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும்,3‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ என்றும்,4‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று, ஒன்று ஒருகால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், 5‘முன்னங்குறளுருவாய் மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார். ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.

———

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தான் ஒருவனே–1-5-3-

அடியளந்தான், தாஅயது எல்லாம் ஒருங்கு’ (குறள். 610.), ‘மூவுலகும் ஈரடியால் முறைநிறம்பா வகைமுடியத், தாவிய சேவடி’ (சிலப். ஆய்ச்.)

நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப்போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும் சீலகுணத்தையும் ஒருகால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீலகுணத்தை காட்டிக்கொடுக்க, அதனை நினைந்து அகலமாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,1அணாவாய்த்துக்காலம் கழிக்கிறார். ‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 2சீர்கலந்த சொல் நினைந்து போக்கும்போது போக்க வல்லரே; சீலகுண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் – திக்குகளோடேகூடப் பூமிப்பரப்பு முழுவதையும் தாவி அளந்து கொண்டவன். இதனால், எத்துணை வியக்கத்தக்க ஞானத்தையுடையவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருந்தும், தானே தன்னைக் கொடுவந்து காட்டுமன்று வருத்தம் அறக் கொடு வந்து காட்டுவான் என்பதனைத் தெரிவித்தபடி. ‘நாய்ச்சிமார் தொடும் போதும் பூத்தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே காடும் ஓடையும் அளந்துகொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘நன்மை தீமை பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளைக் கொடு வந்து வைக்கைக்குக் காரணம் என்?’ என்னில், எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் – எல்லா உயிர்கட்கும் 2தாயினைப் போன்று அன்புடையனாகை ஈண்டு, ‘எல்லா எவ்வுயிர்’ என்றது, உயர்வு தாழ்வுகள் பொருந்திய பிறவிகளையுடைய எல்லா உயிர்களையும். தான் ஓர் உருவனே – ஒருவர்க்கும் நிலம் அல்லாத மேன்மையினையும் நினைந்தார்; அப்படிப்பட்டவனுடைய நீர்மையினையும் நினைந்தார்; ‘இவனும் ஒரு படியையுடையவனாய் இருக்கிறானே!’ என்று ஈடுபாடு உடையவர் ஆகிறார். 3கடுநடையிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்.

—————

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே–1-8-6-

கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய இனிமையைக் கொண்டான். நாதன்-அவ்வளவேயோ? 2‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான். ‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான். ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; 3கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை. புலன்கொள் மாணாய் நிலம் கொண்டான் – இந்திரியங்கள் அனைத்தையும் கொள்ளை கொள்ளும் வடிவத்தை மேற்கொண்டு, அவன் ‘என்னது’ என்று அபிமானித்து இருக்கிற பூமியைக் கவர்ந்துகொண்டான்.

————-

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான் ஓதம் போல் கிளர் வேத நீரனே–1-8-10-

——

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தோடு திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே–1-10-1-

இப்பாசுரத்தில், மகாபலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று, நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று அவன் தன்மையை நினைந்து இனியர் ஆகிறார்.

பொரு – இத்தால், திரு உலகு அளந்தருளுகிற போது, திவ்விய ஆயுதங்கள் நமுசி முதலாயினார்கள் மேலே பொருதபடியைச் சொல்லுகிறார். இனி, திவ்விய ஆயுதங்கள் தாம் ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறபடியைச் சொல்லுகிறார் என்று கோடலுமாம். ஆயின், நமுசி முதலாயினார்களோடே பொரும் என்ற பொருள் பொருந்துவதாம்;1‘இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரிகான்று, அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-விடங்காலும், தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான், பூவார் அடிநிமிர்த்த போது’ என்றார் பூதத்தாழ்வாரும். திவ்விய ஆயுதங்கள் தம்மில் தாம் பொருதல்என்ற போது – 1அஸ்தான பயசங்கையாலே ஒருவரை ஒருவர் ஐயங்கொண்டு பொருகிறார்கள் என்றபடி. 2‘ஸ்ரீராகவனைச் சரணமாக அடைந்தேன்’ என்ற விபீஷணனை அன்றே ‘கொல்லுங்கள்’ என்றார்கள்? 3‘ஸ்ரீபரதனைக் கொல்லுவதில் பாவத்தை நான் பார்க்கின்றேன் இல்லை’ என்றார் இளைய பெருமாள். மா – அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லுகிறது. அன்றி, அடியார்கள் திறத்தில் இறைவனைக்காட்டிலும் அவர்களுக்கு உண்டான பக்ஷபாதத்தைச் சொல்லுகிறது என்று கோடலுமாம். ஆக, இதனால், 4‘விஷ்ணுவை வழிபட்டு வணங்குகிற உயிர்களை, ஒன்றாலும் தடுக்கப்படாதவைகளான சக்கரம் முதலிய ஆயுதங்கள் எல்லா ஆபத்துகளினின்றும் காப்பாற்றுகின்றன’ என்கிறபடியே,5சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக்கொடாமல் நோக்கும் பெருமையைச் சொல்லுகிறது.

நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார். திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ – செல்வத்திற்கு அறிகுறியானவையும், சிரமேற்கொள்ளத் தக்கவையும், ஆசை சிறிது உடையார் இருந்த இடம் எல்லையாக வளர்வனவும் ஆன திருவடிகளை ஒரு சாதந அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழும்படியாக. 6‘நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட்டுக் கிடக்கும் திருவடியையன்றே ஆசைஇல்லாதார் தலைகளிலும் வைத்தான் என்பார், ‘ஏழ்உலகும் தொழ’ என்கிறார். ஒரு – இவன் தானே இவ்வடிவை இன்னம் ஒருகால் கொள்ள வேண்டும் என்னிலும் வாயாதபடி இரண்டாவது இல்லாத தாய் இருக்கை மாணி-திருமகள் கேள்வன் என்று தோன்றாதபடி இரப்பிலே தழும்பு ஏறுகை. குறளாகி-கோடியைக் காணியாக்கியது போன்று, பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம்படி சுருக்கின படி. நிமிர்ந்த-அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி. வாசுதேவ தரு ஆதலின் ‘நிமிர்ந்த’ என்கிறார், நிமிர்ந்த அக்கருமாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின்‘அக்கருமாணிக்கம்’ என்று சுட்டுகிறார். என்கண் உளதாகும்-ஏழ் உலகத்துள்ளார் வாசி அறிந்திலர்; அவ்வாசி அறியுமவராகையாலே ‘என் கண் உளதாகும்’ என்கிறார். கண் என்று இடமாம், என்னிடத்தாகும் என்னவுமாம். மாணிக்கம் என்கையாலே, ‘உளதாகும்’ என்கிறார்.

1. இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இடத்திருக்கையில் ஸ்ரீபாஞ்சஜன்யமானது
அப்போது அப்போது பிறந்த வெற்றியை நினைத்து ஆரவாரித்தது; எரி
கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி – அங்ஙனம் ஆர்ப்பதற்கு
அவசரமின்றிக்கே, திருவாழி, நெருப்பை உமிழ்ந்து பகைவர்களை ‘வாய், வாய்’
என்று ஒடுங்கப்பண்ணியது; விடங்காலுந் தீவாய் அரவணை-
திருவனந்தாழ்வான் பகைவர்கள் மேலே கிடந்த இடத்தே கிடந்து
நெருப்பை உமிழ்ந்தான்; அவன், ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணை’யாவன் அன்றே? அப்பரமபதத்திலும் இப்படிச்
செய்யுமவன், பகைவர்கள் நிறைந்திருக்கும் இத்தேசத்தில் இப்படிச்
செய்யச்சொல்ல வேண்டுமோ? ஆங்கு ஆரவாரமாவது, “அஹமந்நம்
அஹமந்நம் அஹமந்நம் அஹமந்நாத: அஹமந்நாத: அஹமந்நாத:” என்னும்
ஆரவாரம். அஹமந்நம்-நான் பகவானுக்கு இனியன்; அஹமந்நாத: – நான்
பகவானாகிற இன்பத்தை அனுபவிக்கிறவன். (தைத்திரீய உபநிடதம், பிரு. 10.)
‘அங்கே அது கேட்டு அப்படிப் படுகின்றவர்கள் இத்தேசத்தில் இது
கண்டால் சொல்ல வேண்டுமோ?’ என்றபடி. ‘இவர்கள் இப்படி
அலமருகைக்கு அடி என்?’ என்னில், அரவணைமேல் தோன்றல்
திசையளப்பான் பூவார் அடி நிமிர்த்த போது-திருவனந்தாழ்வானைப்
படுக்கையாகவுடைய சர்வேஸ்வரன் காடும் ஓடையும் அளக்கைக்காகப்
புஷ்பஹாஸ சுகுமாரமான திருவடிகளை நிமிர்த்த போது, எல்லாம்
படவேண்டாவோ அவன் இப்படி வியாபாரியாநின்றால்?’
(இரண்டாந்திருவந். 71.)

——————–

கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானை கண்டு கொண்டனை நீயுமே-1-10-5-

பிரளயம் கொண்ட உலகத்துக்கு ‘இறைவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்குவான்’ என்னும் நினைவு உண்டோ? உலகு ஏழும் ஓர் மூன்று அடி கொண்டானை – இறைவன் உலகத்தை முழுதும் அளக்கிற போது ‘நம் தலையிலே திருவடியை வைக்கப்புகாநின்றான்’ என்னும் நினைவு உண்டோ? இதற்கு உதாரணம் தேடிப் போக வேண்டுமோ ஒன்று?கண்டுகொண்டனை நீயும் – விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டுகொண்டாய்? பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத் தடுப்பதற்கு வழி இல்லை; உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை; அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? 1அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள் இத்தனை, அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.

———–

மண்ணளந்த மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே–2-1-10-

மஹாபலி கவர்ந்துகொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உதவிகளைச்செய்து, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க் குறைப்பட்டு, இவற்றின் இரக்ஷணத்திலே முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே! இனி, 1‘மூவா முதல்வா’ என்பதற்கு, ‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல் முதலியவற்றைச் செய்தவனே!’ என்று பொருள் கூறலும் ஒன்று.

—-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து மேல் தன்னை மீதிட நிமிர்ந்து
மண் கொண்ட மால் தனில் மிக்கும் ஓர் தேவும் உளதே–2-2-3-

மேலே உள்ள உலகங்களை 5‘அப்பால் மிக்கு’ என்கிறபடியே, விஞ்ச வளர்ந்து,

பூமிப் பரப்பெல்லாம் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்ட. மால் தனில் – இவ்வதிமா நுஷச் செயல்களையுடைய சர்வேஸ்வரனைக் காட்டிலும் மிக்கும். ஓர் தேவும் உளதே – ஒக்கப் பரிமாறாநிற்க, 1‘கட்டக்குடி’ என்று கழிக்கலாம் தெய்வந்தான் உண்டோ?

    2‘எல்லார் தலைகளிலும் காலை வைத்தவனை ‘ஈஸ்வரன்’ என்னவோ, இவன் காலிலே துகையுண்டவர்களை ‘ஈஸ்வரர்கள்’ என்னவோ?’ என்கிறார்.

————

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி வைக்கும் வைகல் தோறும் அமுதாய வானேறே–2-6-1-

என் பொல்லாத் திருக்குறளா – என்னுடைய அழகிய வாமனனே! ‘அழகிது’ என்னில், நாட்டுக்கு ஒப்பாம் என்று கருதி அழகில் 4விஸஜாதீயதையைச் சொல்லுகிறார் ‘பொல்லா’ என்று. இனி, ‘கண்ணெச்சில் வாராமைக்குக் கரி பூசுகிறார்’ எனலுமாம். இதனால், 5மஹாபலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றது போன்று தம்மைப் பெறுகைக்குச் சிறாம்பி இரப்பாளானாய் நின்ற நிலையைத் தெரிவித்தபடி.  ‘வைகுந்தா’ என்று மேன்மை சொல்லிற்று; ‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று; ‘என் பொல்லாத் திருக்குறளா’ என்று சௌலப்யம் சொல்லிற்று; இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.6  என்னுள் மன்னி – என்னுடைய மனத்திலே வந்து நித்திய வாசம் செய்து. இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப் போனான்; மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்; அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே ஆதலின்,‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார். வைகும் வைகல்தோறும் அமுதாய – 1கழிகிற காலந்தோறும் எனக்கு முன்பு 2இல்லாத அமிர்தத்தைப் போன்று இனியன் ஆனான். வான் ஏறே-நித்தியசூரிகளோடே கலந்து அவர்களைத் தோற்பித்து மேனாணித்து இருக்குமாறு போலே ஆயிற்று, இவரோடே கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு. பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருத்தலின், ‘ஏறு’ என்கிறார் எனலுமாம்.

————

ஊழிஊழி தொறும்
எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
திரிவிக் கிரமனையே.-
2-7-6-

சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து, மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு, எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது. 4‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.

———–

திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்
எம்மான்என் செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு
நிறத்தனன் என்றுஎன்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல்ஊழி
ஊழி நின்பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய்
வல்லை காண்என் வாமனனே!–
2-7-7-

திரிவிக்கிரமன் – மூன்று அடிகளாலே எல்லா உலகங்களையும் தன் காற்கீழே இட்டிக்கொண்டவன். செந்தாமரைக்கண் எம்மான் – நோக்காலே என்னைத் தன் காற்கீழே இட்டுக் கொண்டவன். என் செங்கனி வாய் உருவின் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் -என்னைத் தனக்கே உரியவன் ஆக்குகையாலே சிவந்து கனிந்த திரு அதரத்தின் 2உருவிலே பொலிந்த, பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திருமுத்து நிரையினுடைய நிறத்தையுடையவன். இதனால்,

இவர் 1‘ஜிதம்’ என்ற பின்பு, அவன் புன்முறுவல் பூத்தமையைத் தெரிவித்தபடி. என்று என்று உள்ளி – இதர விஷயங்களினுடைய புன்முறுவலில் உண்டான நினைவு 2அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாதாய் இருக்கும்; ‘என்றுஎன்று உள்ளி’ என்று அடுக்குத் தொடராற் கூறுகின்றார்.

பரவிப் பணிந்து – முறை கேடாகக் கூப்பிட்டுச் செருக்கு அற்றவனாய்த் திருவடிகளிலே விழுந்து. இப்பேறுதான், ஒருநாள் உண்டாய் மற்றை நாள் 3மறுக்கை அன்றியே, பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் – கல்பந்தோறும் கல்பந்தோறும் பரம போக்யமான உனது திருவடிகளையே 4அநந்யப் பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனத்தினைத் தந்தாய். இனி, மற்றைய விஷயங்கள் நிலையற்றவை ஆகையாலும், இனியன அல்லாதவை ஆகையாலும், ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை ஆகையாலே, மனம் 5‘சஞ்சலம் அடைந்துகொண்டே இருக்கும் மனம்’ என்கிறபடியே, சஞ்சலம் அடைந்துகொண்டே அன்றோ இருப்பது? அப்படி இன்றியே நித்தியமுமாய் எல்லை இல்லாத போக்கியமுமாய் இருக்கையாலே ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்கிறார் எனலுமாம். இனி, ‘பழைய மனத்தினைத் திருத்தினஅளவே அன்றி, 1கருவூலத்திலே ஒரு நெஞ்சைத் தந்தாய்’ எனலுமாம்; 2‘உனக்கு ஞானக் கண்ணைக் கொடுத்தேன்’ என்பது போன்று. ‘பழைய மனம் இது’ என்று 3பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாதபடி இராநின்றது என்றபடி. என் வாமனனே வல்லைகாண் – வாமன வேடத்தைக் காட்டி என் மனத்தினைத் திருத்தித் தந்தாய்; அவ்வடிவழகாலே, மஹாபலி ‘என்னது’ என்று இருந்த பூமியை அபகரித்தாய்; ஆதலால், கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்குப் பரிகரம் ஒன்றேயோ?’ என்கிறார். வல்லைகாண் – உகப்பின் மிகுதி.

———-

வாமனன்,என் மரகத வண்ணன்,
தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்றுஎன்று
உன்கழல் பாடியே பணிந்து
தூமனத் தனனாய்ப் பிறவித்
துழதி நீங்க, என்னை–
2-7-8-

வாமனன் – வடிவழகைச் சொல்லுகிறது என்னுதல்; அன்றிக்கே, சுகங்களைத் தருமவன் என்னுதல். என் மரகத வண்ணன் – சிரமத்தைப் போக்கக் கூடிய வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன். தாமரைக் கண்ணினன் – வடிவழகே அன்றி, அகவாயில் தண்ணளிக்குப் பிரகாசமான திருக்கண்களை உடையவன். காமனைப் பயந்தாய்-வடிவழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனைப் பெற்றவனே! 1அநுசந்தானத்திலே ஒரு தெளிவு பிறந்தவாறே முன்னிலை போலே தோன்றும், அப்படியும் சொல்லிக் கூப்பிடுவர்; அதற்கு மேல் சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அவை கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவர். இவை இரண்டற்கும் அடி அபிநிவேசம்.

என்று என்று பாடியே உன் கழல் பணிந்து – இத்திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லாநிற்கத் திருவடிகளிலே விழுந்து. தூ மனத்தனனாய் – பந்த மோக்ஷங்கள் இரண்டற்கும் பொதுவான நெஞ்சாதல் இன்றி, மோக்ஷத்திற்கே ஏகாந்தமான மனத்தினை உடையனாய். பரிசுத்தமான மனத்தினை உடையேனாய் என்றபடி.

————

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான்
பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே-2-8-6-

தீர்த்தன் –1‘தன் தலையிலே தரிக்கப்பட்டிருக்கிற எவருடைய ஸ்ரீபாத தீர்த்தமான கங்கையினால் அச்சிவன் பரிசுத்தன் ஆனான்?’ என்றும், 2‘நான் தக்கோன் ஆனேன்’ என்னும் நிச்சயக் கருத்தால் பரிசுத்தத்திற்காகத் தன் சடைமுடியில் கங்கையைத் தரித்தான் என்றும் சொல்லுகிறபடியே, தன் திருவடிகள் தீண்டுதலாலே அசுத்தரையும் சுத்தர் ஆக்க வல்ல சுத்தியை உடையவன். ‘இது எப்பொழுது செய்தது?’ என்னும் அபேக்ஷையிலே, ‘உலகு அளந்த காலத்திலே’ என்று அதனை நிரூபிக்கிறார் மேல். 3‘குறைகொண்டு’ என்றார் திருமழிசை மன்னனும். உலகு அளந்த சேவடிமேல்பூந்தாமம் சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு –1அருச்சுனனுக்கு ஒரு தேவதை பக்கலிலே ஒரு பாணம் பெற வேண்டுவதாய் அவன் அதற்கு முயலுகின்ற காலத்திலே, இவன் சிரமத்தை ஆற்றுகைக்காகப் ‘புஷ்பங்களை நம் காலிலே இட்டு ஜீவி’ என்று அருளிச்செய்ய, அவனும் திருவடிகளிலே இட, அந்தத் தெய்வம் இராத்திரியிலே கனாவிலே அந்த மலர்களைத் தன் தலையிலே தரித்துக்கொண்டு வந்து தோன்றிப் பாணத்தைக் கொடுத்தாகச் சொல்லப்பட்டுள்ளது. அன்றே? அதனை அருளிச்செய்கிறார். பூந் தாமம் -அழகிய மாலை என்னுதல்; பூமாலை என்னுதல். அவற்றோடு ஒத்த மலர்கள் அன்றி அம்மலர்களையே கண்டான் ஆதலின், ‘அவையே’ என்றும், பாடே பார்ஸ்வத்திலே அன்றி அவன் தலை மேலே கண்டானாதலின், ‘சிவன் முடிமேல்’ என்றும், ஆப்தர் சொல்லக் கேட்கை அன்றியே, சுருதி ஸ்மிருதிகளால் ஆதல் அன்றியே, தானே கண்டானாதலின், ‘தான் கண்டு’ என்றும் அருளிச்செய்கிறார். காணுதல் – 2பிரத்யபிஜ்ஞார்ஹமாம்படிகாண்டல். ‘ஆயின், இவ்விடத்தில் கிருஷ்ணனுடைய சரிதை ஆயிற்றுச் சொல்லுகிறது; ஸ்ரீவாமன அவதாரம் என்?’ என்னில், 1கிருஷ்ணாவதாரத்துக்கும், வாமன அவதாரத்துக்கும் வரையாதே எல்லாரோடும் பொருந்துமது உண்டு ஆகையாலே சொல்லுகிறார். பார்த்தன் தெளிந்து ஒழிந்த – இறைவன் சாரதியாய்த் தாழ நிற்கச் செய்தேயும், அவனுடைய இறைமைத்தன்மையில் கலங்காமல், ‘அந்தப் பார்த்தன் பெரிய ஞானத்தையுடையவன்’ என்கிறபடியே பேரறிஞனான அருச்சுனன் நிரூபித்து நிர்ணயித்து, 2‘தேவரீருக்கு முன் பக்கத்திலும் வணக்கம், பின் பக்கத்திலும் வணக்கம்,’ என்று கூறிப் பின் பற்றிய. பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே – அறப்பெரிய முதன்மைக்கு அறிகுறியான திருத்துழாய் மாலையையுடைய சர்வேஸ்வரனுடைய பரத்துவம், இன்று அறிவு கேடர் சிலரால் 3செல்லவிட்டு ஆராயுமளவாய் இருந்ததோ?

———

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப்புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்
பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே-2-8-7-

அளந்து – தன்னதான பூமியை மஹாபலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள, அதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு.-ஸ்ரீ பூமிபிராட்டியை; பூமியைப் பிரகாரமாகவுடையள் ஆகையாலே அதற்குரிய ‘பார்’ என்ற சொல்லால்சொல்லுகிறார். 1தன் விபூதியினுடைய ரக்ஷணம் ஒருதலையானால் அவன் படும் பாட்டை அநுசந்தித்து மகிழ்ந்தவளாய் அதற்கு உரியவளான ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்கும், அதனாலே தானும் மகிழ்ந்தவனாய் அணையாநிற்கும் என்றபடி. மால் – எல்லாரைக்காட்டிலும் உயர்ந்தவனான சர்வேஸ்வரன். செய்கின்ற மால் -அவன் ஏற்றுகிற பிச்சை. ஆர் காண்பாரே – ஒருவராலே இவ்வளவு என்று அளவிடலாய் இருந்ததோ?

——–

முறையால் இவ்வுலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-3-1-10-

மஹாபலி போல்வார் பருந்து 2இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு, இப்படி எல்லா விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘முறையால்’ என்றதற்குப் பொருள், ‘உடையவன் உடைமை என்ற சம்பந்தத்தால்’ என்னுதல்; ‘மாறி மாறி’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ பல படியாகப் படைத்தல் இருப்பது?’ எனில், படைத்தல் கர்மங்களைக் கடாக்ஷித்தேயாகிலும் ஒரே காலத்தில் ஒரு சேரப்படைத்தல் அநுக்கிரகத்தின் காரியம்.

    பிறை யேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – சடை கழற்றாமல் சாதக வேஷத்தோடேயிருந்தும், கலா மாத்திரமான சந்திரனைத் தரித்துக்கொண்டு சுகத்தையே பிரதானமாகக் கொண்டுள்ள முதன்மை பெற்றவனாயிருக்கிற சிவனும், அவனுக்குங்கூடத் தந்தையான பிரமனும், இவர்களோடு ஒக்க எண்ணலாம்படியிருக்கிற இந்திரனும், நீ ஸ்வாமியான முறையறிந்துஏத்த, அதனாலே உன்னுடைய வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ! அதாவது, ஒருவன் ஒரு 1குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று, 2’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும், அவனாலே உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த, அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ! நகையாய் முடியுமத்தனையன்றோ!’ என்றபடி

————–

வன்மா வையம் அளந்த எம் வாமனா-3-2-2-

வன் மா வையம் அளந்த – 2வன்மையையுடைத்தான பெரிய பூமியை அளந்த. 3‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார். வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை. இனி, வையத்தை ஆகுபெயராக்கி, வன்மையை ஆகுபெயர்ப்பொருளுக்கு அடைமொழியாக்கி, அவன் தானே தன்னைக் கொடுவந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல். இப்பொருளில் ‘அசுரத் தன்மையையுடைய மஹாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லையே! சுக்கிரன் முதலானோர் விலக்கவும் அவர்கள் வழி போயிற்றிலனே அவன்!’ என்று இவர்கள் மனநெகிழ்ச்சியின்மைக்கு இரங்குகின்றமை தோன்றும். இனி, மஹாபலி

தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின், ‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல். எம் வாமனா – பிறரால் கவர்ந்துகொள்ளப்பட்ட ராஜ்யத்தையுடையவனான இந்திரனுக்காக அன்று, 1வாமனாவதாரமும் தம்பொருட்டு என்றிருக்கிறார். நின் – 2‘எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் – பல விதமான பெரிய மூலப்பகுதி. 3தேவர்கள் முதலான பல்வகைப் பொருள்களாகிய காரியத்தின் பன்மையைக் காரணத்தின்மேலிட்டு உபசார வழக்கால் ‘பன்மாயம்’ என்கிறார். இனி, ‘மூலப்பகுதி முக்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கையாலே குணபேதங்களை இட்டுப் ‘பன்மாயம்’ என்கிறார்,’ எனலுமாம்.

    சுக்கிரன் தடுத்தமையையும், மஹாபலி அவன் வார்த்தைகளைக் கேளாமையையும் கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலத்தில் 25 முதல் 34 முடிய உள்ள செய்யுள்களிற் காண்க. அவற்றுள்,

‘கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்;
அண்டமு முற்றும் அகண்டமும் மேனாள்
உண்டவ னாம்இது உணர்ந்துகொள் என்றான்.’

‘வெள்ளியை யாதல் விளம்பினை; மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என் சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.

—————-

உலகம் எல்லாம் தாவிய வம்மானை எங்கன் இனித் தலைப் பெய்வனே–3-2-9-

உலகமெல்லாம் தாவிய அம்மானை – ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தனை. எங்கு இனித் தலைப்பெய்வன் – எங்ஙனம் கிட்டப் போகிறேன்? ‘அந்தத் 1தூளி தானத்துக்கும் தப்பின நான், 2பரீட்சை சொல்லிப் பெறப் போகின்றேனோ?’ என்கிறார் என்றபடி. இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான், ஒரு சாதன விசேடத்தைப்பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்

———

அன்று ஞாலம் அளந்த பிரான்-3-3-8-

அன்று ஞாலம் அளந்த பிரான் – ஓர் ஊருக்கு உதவினபடி சொல்லிற்று மேல்; இங்கு நாட்டுக்குஉதவினபடி சொல்லுகிறது; விரோதியான மஹாபலியாலே பூமி கவரப்பட்ட அன்று, எல்லை நடந்து மீட்டுக்கொண்ட உபகாரகன். பரன் – எல்லாப் பொருள்கட்கும் உயர்ந்தவன்.

———-

தாள் பரப்பி மண் தாவிய வீசனை–3-3-11-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை – கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற்போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்துகொண்ட சர்வேசுவரனை.

ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின், 2’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும், 3’மண் அளந்த இணைத்

தாமரைகள்’ என்றும், 1‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும் 2ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்; அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்

———-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! – மஹாபலியாலே கொள்ளப்பட்ட பூமியை மீட்கும் விரகு அறியுமவனே! இராவணன் தலையை அறுத்தது போன்று அறுக்காமல் விட்டது, கொடை என்பது ஒரு குணம் சிறிது உண்டாகையாலே. வஞ்சனை-விரகு. விரகாவது, ‘இவன் கையிலே தர்மம் ஒரு சிறிது உண்டாய் இருந்தது’ என்று ‘இவனை அழிக்காமல், அறப்பெரியவனான தன்னை இரப்பாளன் ஆக்கி இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக்கொடுத்தது. இனி, ‘வஞ்சனையையுடையவனே! என்னலுமாம். ஈண்டு வஞ்சனையாவது, கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து, சிறுகாலைக் காட்டி ‘மூவடி’ என்று வேண்டிப் பெரிய காலாலே அளந்து, இரண்டு அடியிலே அடக்கி, ஓரடிக்குச் சிறையிலே இட்டு வைத்தது. இந்திரன் பேறு தன் பேறு ஆகையாலே, 1கொள்வான்’ என்கிறது. என்னும் என் வாசகமே – என் வாக்கானது இவ்வஞ்சனத்தையே சொல்லா நின்றது. ‘இவ்வஞ்சனத்தை அநுசந்தித்த பின்பு 2இராமாவதாரத்தின் செவ்வையிலும் போகிறது இல்லை,’ என்பார், ‘வஞ்சனே என்னும்’ எனப்பிரிநிலை ஏகாரங்கொடுத்து ஓதுகிறார். ‘இராமாவதாரத்திலும் இதற்குப் பெருமை என்?’ எனின், தன் பெருமை அழியாமற்செய்த இடம் அன்றோ இராமாவதாரம்? தன் பெருமை அழிய மாறின இடம் அன்றோ இது? எப்போதும் – 3கலியர் ‘சோறு சோறு’ என்னுமாறு போன்று.

—————

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே –உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–3-8-9-

கொள்வாள் – 2மலையாளர் வளைப்புப் போலே கொண்டு அல்லது போகேன் என்றானாயிற்று. அன்றிக்கே, இவனுடைய வாமன வேஷத்தைக் கண்டு ‘இவன் நம் பக்கல் ஒன்று கொள்வதுகாண்’ என்று நினைந்தமை தோன்ற இருந்தான் ஆயிற்று மகாபலி; நினைத்ததை அறிந்து, ‘நான் கொள்வேன் என்கிறான்’ என்னுதல். அன்றிக்கே, இவன் ஒன்றிலும் பற்று இல்லாதவனாய் இருத்தலை வடிவில் கண்டு, ‘இவன் நம் கையில் ஒன்று கொள்ளுமோ?’ என்று இருந்தான் மஹாபலி; ‘நீ அங்ஙன் நினைக்க வேண்டா; நான் விருப்புடையேன்,’ என்கிறான் என்னுதல். நான் – 3உன்பக்கல் பெற்றால் அன்றி ஓர் அடி இடாத நான். மாவலி – 4பிறந்த அன்றே பிக்ஷையிலேஇறங்கினான் ஆகையாலே பிரபுக்களை உபசரித்து வார்த்தை சொல்லி அறியானே! முன்பு சிலர்க்குத் தாழ்வு சொல்லியறியான்; பிறந்த பின்பு வாசனை பண்ணுகைக்கு நாள் இல்லை; அதனாலே, ‘மாவலி’ என்கிறான்.

எல்லோரும் தன்னை உயர்த்திச் சொல்லுமது ஒழிய இப்படிச் சொல்லக் கேட்டு அறியாமையாலே ‘இவன் ஒரு பாலன் தன் முன்பே நின்று சிறு பேரைச் சொல்லி அழைக்கிறான்,’ என்று நினைத்து இனியனாய் முகத்தைப் பார்த்து, ‘உனக்கு வேண்டுவது என்?’ என்றான். ‘மூவடி’ என்கிறான். தன் பக்கல் கொள்ளுமவர்களில் இப்படிச் சிறுக விரும்புகின்றவர்கள் இல்லாமையாலே விருப்பு இன்றியே இருந்தான்; ‘பராமுகம் பண்ணாதே ‘தா’ என்கிறான். என்ற கள்வனே – இந்திரன் சரணம் புக்கு நின்றான்; கொடையாளியாய் இருப்பான் ஒருவன் அவனுடைய இராச்சியத்தைப் பறித்துக்கொண்டான்; ‘இராவணன் முதலியோர்களைப் போன்று அழியச்செய்யப் போயிற்று இல்லை, சிறிது தர்மத்தை ஏறிட்டுக்கொண்டு நிற்கையாலே; இந்திரனோ, சரணம் புக்கு நின்றான்; இனிப் போம் வழி என்?’ என்று பார்த்துத் தன்னை இரப்பாளன் ஆக்கி, சுக்கிரன் முதலியோர், ‘இவன் தேவ காரியம் செய்ய வந்தான்,’ எனச்செய்தேயும், அவ்வார்த்தைகள் அவன் நெஞ்சில் படாதபடி அவனை வடிவழகாலும் பேச்சழகாலும் வாய்மாளப் பண்ணின வஞ்சனங்கள் எல்லாவற்றையும் நினைத்துக் ‘கள்வனே’ என்கிறார்.

—–

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே விரை கொள்
பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேநேலும் உன் உரை கொள் சோதித் திரு உருவம் என்னதாவி மேலதே–4-3-7-

குரை கழல்கள் நீட்டி – 2‘மண் முழுதும் அகப்படுத்து நின்ற’ என்கிறபடியே, பூமிப்பரப்பு அடையத் திருவடிக்குள்ளேயாம்படி திருவடியை நிமிர்த்து. குரை – பரப்பு என்னுதல்; ஓசை என்னுதல். மண் கொண்ட கோலவாமனா – 3மண் கொண்ட பின்பும் வாமன வேஷம் இவர் திருவுள்ளத்திலே ஊற்றிருந்தபடி. இந்திரனுக்கு இராச்சியம் கொடுக்கை அன்றிக்கே, தம்மை அனுபவிப்பிக்கைக்காக அவ்வடிவு கொண்டான் என்று இருக்கிறார். இதனால்,பிராப்தியைச் சொல்லிற்று

———-

மண்ணை இருந்து துழாவி,
‘வாமனன் மண்இது’ என்னும்;-
4-4-1-

ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே பேராசையுள்ள ஒருவன் கிழிச்சீரையைக் கெடுத்தால் அதனோடு போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு ஒத்த பொருள்களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக்கொண்டும், சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து

அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. 1‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

மண்ணை இருந்து துழாவி – 2‘மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை’ என்கிறபடியே, அவன் திருவடிகளுக்குஉட்பட்ட பூமிப்பரப்பு அடைய இருந்து துழாவா நிற்கும். அவன் சம்பந்தங்கொண்டே இதனை விரும்புகிறது; 1‘அது ஓரிடத்தில் இருப்பது அன்றே?’ என்றது, ‘எங்கும் இருப்பது’ என்றபடி. ‘முன்பு தோற்றுகின்ற சோலை என் என்பது?’ என்று பெருமாள் கேட்டருள. 2‘பண்டு ‘சித்தாஸ்ரமம்’ என்று ஸ்ரீ வாமனன் எழுந்தருளியிருந்த தேசமாயிற்று; அவன் எழுந்தருளின பின்பு அவன் பக்கல் பத்தியாலே விடமாட்டாமே அம்மண்ணை மோந்துகொண்டு கிடப்பேன்,’ என்றான் அன்றோ விசுவாமித்திரன்? 3‘விஷ்ணு பகவான் மனித உருவத்தோடு சக்கரவர்த்தி திருமகனாய் இராமன் என்ற பெயரோடு இப்பூமியில் சஞ்சரித்தார்,’ என்றான் திருவடி. ஆகையாலே, அவன் பக்கல் ருசியுடையார் விடமாட்டார்கள் அன்றோ? இருந்து – 4இவ்விருப்புக்கு முன் கணத்தில் நிற்றல் நடத்தல்

கிடத்தல் முதலியவற்றில் ஒரு நியதி இன்றிக்கே நோவுபட்டமை தோன்றுகிறது.

    துழாவி – இதனால், பித்தத்தால் பீடிக்கப்பட்டவன் சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று இம்மண்ணை 1விடமாட்டாமையும் தோன்றுகிறது. விட்டுக் கைவாங்கினால் விரஹ அக்நியினாலே வேம். 2தாங்கள் தெளிந்திருந்தார்களாய் ‘இவள் மயங்கினாரைப் போன்று செய்கின்றது என் என்பது?’ என்பர்களே, அவர்களை ‘நீங்கள் மயங்கினீர்களோ?’ என்னுமாயிற்று இவள் என்கிறாள் மேல் : வாமனன் மண் இது என்னும் – ‘வாமனன் மண் அன்றோ இது?’ என்னாநின்றாள். 3‘திருவடியிலே பிறந்ததனால் உண்டான வாசனையையுடைய பூமி அன்றோ?’ என்னாநின்றாள் என்றபடி, 4‘பூமியானது வாசனையையுடையது’ என்றே அன்றோ நாட்டில்

பிரசித்தி? ‘ஸர்வகந்த:’ என்கிற விஷயத்தினுடைய சம்பந்தமே ஆயிற்று இவள் அறிவது. 1‘அவன் இரந்து தனக்கு ஆக்கிக்கொண்டது அன்றோ?’ என்னாநின்றாள்; 2அவனதானால் இந்திரனுக்குக் கொடுத்தது போன்று கொடுக்க வேண்டாகாணும் இவளுக்கு; அவனது ஆனபோதே இவளது ஆயே இருக்கும். 3‘அவனது அன்று காண்’ என்று இவளை மீட்க ஒண்ணாதே? ‘கண்கூடாகப் பார்க்கும்போதும் உங்களுக்குச் சந்தேகம் தொடராநின்றதோ?’ என்கிறாள் என்பாள், ‘இது என்னும்’ என்கிறாள். ‘ஆயின், நேரே காண்கின்றாளாயின், அனுபவிக்கத்தடை என்?’ எனின், இறந்த காலத்தில் உள்ளதும் நிகழ்காலத்தில் உள்ளதைப் போன்று தோன்றுகின்றதித்தனை போக்கி, மண் அளந்தவனை இப்போது காண ஒண்ணாதே?

——

உண்டும்உமிழ்ந் தும்கடந்தும் இடந்தும்கிடந் தும்நின்றும்
-4-5-10-

கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.

———-

என் வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று நள்ளிரவும் நன்பகலும் நானிருந்து ஓலமிட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்தீயாயே–4-7-2-

கடந்தும் – மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற் போலே பறித்துக்கொண்டால் எல்லை நடந்து மீட்டும்.

————-

தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே–4-7-3-

தாவி வையம் கொண்ட எந்தாய் – அரிய செயல்களையும் வருத்தம் அறச் செய்ய வல்லவன் அன்றோ? அது செய்யுமிடத்தில் வரையாதே எல்லாரையும் காக்குமவன் அன்றோ? அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்; அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார்.

———–

குறிய மாணுருவாகிக் கொடும் கோளால் நிலம் கொண்ட கிரி யம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவிலமே–4-8-6-

குறிய – கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே, வளர்ந்த போதையிற்காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. மாண் உருவாகி – 3பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று, 4‘உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைத்த போதோடு வாசி அற முகமலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி. ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை 5வடுக விடுநகம் இட்டு வடிவழகாலே

தனக்கு ஆக்கிக்கொள்ளுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    கொடுங்கோளால் – 1வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு, ‘கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு, ‘செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது; ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது, தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே, அவன் செவ்வைக்கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி. கிறி அம்மான் – அவன் தரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெருவிரகனான சர்வேசுவரன். 2‘பெருங்கிறியான்’ –திருவிருத்தம், 91.-என்னக் கடவதன்றோ? கவராத கிளர் ஒளியால் குறை இலமே – செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன், முன்னரே இசைந்து தன்னைப் பெறவேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ? கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.

———–

உறுவதாவது –திருக் குருகூர் அதனுள் குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே –4-10-10-

குறிய – கோடியைக் காணியாக்கினாற்போலே, கண்களால் முகக்கலாய் இருக்கும்படி வடிவை அமைத்தபடி. மாண் உருவாகிய – இட்டபோதொடு இடாத போதொடு வாசியற முகமலர்ந்து போகும்படியாக இரப்பிலே தழும்பு ஏறினபடி.

——-

மீனாய் ஆமையு மாய் நர சிங்கமு மாய்க்குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கி யாம்இன்னம் கார்வண்ணனே.-
5-1-10-

குறள் ஆய் – கொடுத்து வளர்ந்த கையைக்கொண்டு இரப்பாளன் ஆனான். -நான் தப்புகைக்குப் பிறந்த பிறவிகளைப் போலவே போரும் அவன் என்னைக் காப்பாற்றுவதற்காகப் பிறந்த பிறவிகளும். 4நான் கர்மத்தாலே பிறந்த பிறவிகள் அடையத்தானும் அநுக்கிரஹத்தாலே பிறந்தான். கார் வண்ணனே-நீர்கொண்ட மேகம் போலே இருக்கின்றானத்தனை. மழை பெய்தானாய் இருக்கின்றிலன். வண்ணம் – ஸ்வபாவம். மீ்னாய் என்று தொடங்கி, என்னை முற்றவும் தான் ஆனான் என முடிக்க.

———-

மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் எண்ணும் தோறும் என்நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே-5-10-5-

ஆபத்துக்கள் வர இவை நோவுபடாதபடி வயிற்றிலே வைத்து நோக்கி, ‘உள்ளே கிடந்து மறைந்து போக ஒண்ணாது’ என்று பார்த்து வெளிநாடு காணப் புறப்பட விட்டு, பின்பு மஹாபலி போல்வார் கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக்கொடுத்து, பின்பு 1அவாந்தர பிரளயங்கொண்ட பூமியை மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டு ஏறி, இவையெல்லாம் பிராட்டிப் படுக்கைப் பற்றாகையாலே அவளுக்குப் பிரயமாகச் செய்து அவளோடே கலந்த ஆச்சரியமான செயல்களை. மணத்தல்-கலத்தல்.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே 2அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு. 3எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி. 4இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார். நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார். அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யு

————

அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும் தோறும் என்நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உருகும் கொடிய வல் வினையேன் உன்னை என்று கொல் கூடுவதே–5-10-9-

அடியை மூன்றை இரந்தவாறும் – 2இவை அபேக்ஷிக்க மாட்டாத அன்றும் இவற்றின் ஹிதத்தைச் சிந்தனை செய்யுமளவேயோ, இவை உண்டானாலும் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்குவான் அவன் என்கிறது. 3நேராய்ப் போகாமே மூன்று அடியை இரந்தானாதலின் ‘அடியை மூன்றை’ என்கிறார். 4இரண்டு அடி இரந்தானாகில் அவனைச் சிறை செய்ய விரகு இல்லையே. அங்கே நின்று – கடக்க நான்கு அடி போனானாகில், ‘வஞ்சனை செய்தான்’ என்று அவன் வழக்குப் பேசலாமன்றோ. ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடிய முடித்துக்கொண்ட முக்கியமும் – 5இவருடைய நெஞ்சினைக் கரைக்க அடி இட்டபடி. பூமி ஆகாசம் முதலியவைகள் அடங்கலும் இரண்டு அடிகளிலே அடங்கும்படிக்குத் தகுதியாக அளந்து தலைக்கட்டிக்கொண்டபடியும். முக்கியம் – வேண்டற்பாடு. அதாவது, அடியார்கட்காகச் செய்த வஞ்சனையால் வந்த வேண்டற்பாடு இருக்கிறபடி. அன்றிக்கே, தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தன் திருவடிகளின் கீழே அகப்படுகையாலே வந்த வேண்டற்பாடு என்னலுமாம். நொடியுமாறு அவை கேட்குந்தோறும் – திருவுலகு அளந்தருளின சரிதையை வியாசர் முதலானார் சொல்லாநிற்பர்கள், அவர்கள் சொல்லும் பிரகாரங்களைக் கேட்குந்தோறும். இதனால்,தாம் சொல்லவேண்டா என்றபடி. நொடிதல்-சொல்லுதல். என்நெஞ்சம் நின்தனக்கே கரைந்துஉகும் – 1மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடுகிறேன் அல்லேன், இந்திரனைப் போலே இராஜ்யம் ஆளுகிறேன் அல்லேன், என்னுடைய மனமானது உன் பக்கலிலே உருக்குலைந்து மங்கா நின்றது.

———-

மின்கொள் சேர்புரி நூல் குறளாய் அகல்ஞாலம்கொண்ட
வன்கள்வ னடிமேல் குருகூர்ச்சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள்இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர்; மின்னிடையவர்க்கே.–6-1-11-

மின்கொள் சேர் புரிநூல் குறளாய்-மின்னைவென்று, நீலநிறம் பொருந்திய திருமேனிக்குப் 2பரபாகமான சேர்த்தியையுடைய பூணுநூலைத் தரித்த ஸ்ரீவாமனனாய். 3இப்போது இது சொல்லுகிறது, மஹாபலி எல்லாச் செல்வத்தையும் கொடுக்கும்படி பணிவுள்ள வேஷத்தோடே போய்ப் புக்க படியைத் தெரிவிப்பதற்கு. 4“பகற்கண்டேன்” என்கிற தோற்றரவுக்குக் கிழக்கு வெளுக்கிறபடி. தூது விடுகைக்குக்கூடச் சக்தன் அல்லாமை தோற்ற இரப்பாளனாய்,இத்தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதல் எல்லாம் வடிவிலே தோற்ற நின்றபடி. அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் அடிமேல்-பூமிப் பரப்பு அடங்கலும் அவனுக்கு ஒன்றும் தொங்காதபடி அபஹரித்த மஹாவஞ்சகன் திருவடிகளிலே. 1மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. 2அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி. 3எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம். 4அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே. 5விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனையன்றோ. அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றேயன்றோ இது.

—————-

தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் –திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை யாளுடை என்னப்பனே–6-3-8-

தன்சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும் – தன்னுடைய பாதங்களின் நிழலிலே, அநுகூலரான அருச்சுனன் முதலாயினோர்களை இட்டுக்கொண்டும். சம்பந்தம் ஒத்திருக்கச்செய்தே, பிரதிகூலரான துரியோதனன் முதலாயினோர்களைப் புறம்பே இட்டும்.

———–

காண்மின்கள் உலகீர் என்று கண் முகப்பே நிமிர்ந்தே தாளிணையன்–6-3-11-

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை – 4‘உங்கள் தலைகளிலே நான் காலைவைக்கக்

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை. காண்மின்கள் – 1இது ஓர் ஆச்சரியம் என்னவேண்டிற்றுக்காணும் ‘தலைகளிலே அடிபடப் புக்கவாறே இறாய்ப்பர்கள்’ என்று.

——–

அகல் கொள் வையம் அளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே–6-4-6-

அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – பரப்பையுடைத்தான பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான உபகாரகனுடைய ஆச்சரியமான செயல்களையே. பகல் இராப்பரவப் பெற்றேன் – 1நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப் ‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும் இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு, இரவு பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ? பரிவு – துக்கம். அதிலே ஒரு ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.

————–

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே–6-4-8-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் – பெறில் ஜீவிப்பானாய்ப் பெறாவிடில் முடிவானாய், இரப்பிலே தழும்பு ஏறின வடிவைக்கொண்டு. 1இவர் அந்த அவதாரத்திலே கால்வாங்குகிறார் அல்லர்; கண்ணழிவற்ற அழகாலும், வரையாதே எல்லாரையும் தீண்டுகையாலும், அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும், செய்யும் ஆனைத்தொழில்களாலும் கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார். நிலம் கொண்ட மாயன் என் அப்பன் – ‘திருஉலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்துகொண்டது தம்மை என்று இருக்கிறார். அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.

கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து”-(பெரிய திருவந். 28.)– என்பது, ஈண்டு அநுசந்தேயம்–

எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – ‘இந்த விஷயத்தைக் காணப்பெற்றிலோம்’ என்கிற கலக்கம் எனக்கு உண்டோ? அன்றிக்கே, 3வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று இருக்கிற கலக்கமும், ஈசுவரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும், ‘தானே தனக்குக் கடவன்’ என்னும் கலக்கமும் இல்லை என்னலுமாம்.

———

திசை ஞாலம் தாவி யளந்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே-6-5-3-

இவர்கள் துன்பம் கேட்டபின்பு இந்திரன் முதலானோர்கட்குக் குடியிருப்புப் பண்ணிக்கொடுக்க அடியிட்டபடியும். திசை ஞாலம் தாவி அளந்ததும் – திக்குக்களோடே கூடின பூமியை இரப்பாளனாயிருந்து வருத்தமின்றி வளர்ந்து அளந்தபடியும். திசைஞாலம் தாவி அளந்ததும் – 3‘இந்திரன் முதலானோர்களை ரக்ஷிக்கவேணும்’ என்ற ஆசையோடே காணும் பூமியை அளந்தது. ஆசை – திக்கு. ‘இவன் திருவடிகளாலே நம்மைத் தீண்டவேணும்’ என்று ஆசைப்பட்டுக் காணும் கிடக்கிறது பூமி. படுகை – உடைத்தாகை. பூமியினுடைய ஆசையாவது, திக்குப்பட்டு அன்றோ இருப்பது.

——–

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு நீலக் கருநிற மேக நியாயற்கு கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர் ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

வையம் அளந்த மணாளற்கு – 3உகவாதாரையும் கூட விடமாட்டாத வியாமோகம். “அழித்தாய் உன் திருவடியால்” என்று இவளையும் தன் காற் கீழே இட்டுக்கொண்டான் அன்றோ. 4அச்செயலுக்கு எழுதிக்கொடுத்தாள் இவள் ஒருத்தியுமே அன்றோ; 5“மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்கிறாள். பெரிய திருமொழி, 9. 4 : 2. இத் திருப்பாசுரத்துக்கு ரசோக்தியாக, பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவன் இரந்து’ என்று தொடங்கி. உரை என்று
மாற்றாய், மாற்று ஏறியிருக்கும் என்னுதல்; உரை என்று
கொண்டாட்டத்தைக் கூறுவதாய், உலகத்தாருடைய
கொண்டாட்டத்தையுடைத்தாயிருக்கும் என்னுதல்.

அவன் இரந்து மண் பெற்றான், இவள் உகந்து பொன் பெற்றாள். உகப்பாலே பெறுமது உரைப்பெற்றிருக்குமே. மணாளன் – அநுபவிக்கிறவன்.

————

நிறம் கரியானுக்கு நீடுலகுண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வர்க்கு கறங்கிய சக்கரக் கையவனுக்கு என் பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே–6-6-3-

சிறுக் கள்வனவர்க்கு – 5சிறுவயிற்றிலே பெரிய உலகங்களை வைத்து, அளவிட முடியாத செயலையுடையவனுக்கு. நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் – 1வேறு ஒருவர்வாயாலே கேட்கவேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி. சிறுக்கள்வனவர்க்கு – 2வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி. தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

———

மாடுடை வையம் அளந்த மணாளற்கு –என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே-6-6-4-

மாடுடை – செல்வம் பொருந்திய என்னுதல்; ‘மாடு’ என்று இடமுடைமையாய், பரப்பையுடைய என்னுதல். நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு – நாடுடைய இராஜாக்களான பாண்டவர்களுக்குத் தூதுபோய் அதனாலே பூர்ணனானவனுக்கு. 1பகவத் அபிப்பிராயத்தாலே, அவர்களை ‘நாடுடை மன்னர்’ என்கிறார் காணும். 2“இருக்கைக்கு ஒரு குறிச்சியும் கொடோம்” என்று இராச்சியம் செய்கிறவர்கள் துரியோதனா தியர்களாக இருக்க. “ஈ இருக்குமிடமெனினும் இப்புவியில் யானவர்க்கு அரசினிக்கொடேன்”
என்பது, வில்லிபாரதம். (கிருஷ்ணன் தூது.) குறிச்சி – குப்பம்; சிறிய ஊர்.

3“ஸ்ரீராமபிரான், விபீடணனை இராக்கதர்களுக்கு அரசனாக இலங்கையில் முடிசூட்டிச் செய்யத்தக்க செயலைச் செய்து முடித்தவரானார்” அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீஷணம்
க்ருதக்ருதயஸ்ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”-என்பது, சங்க்ஷேப ராமாயணம். 85.

என்றது போன்று. ‘இன்னார் தூதன்’ என நின்ற செயலாலே, இட்ட சட்டை பீறும்படி இருத்தலின் ‘நம்பிக்கு’ என்கிறாள். 4அடியிலே உலகத்தை உண்டாக்கி, அபஹரித்தார் உளராகில் எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, அதனைத் தன்னை அடைந்தவர்க்கு ஆக்குகைக்கு இழிதொழில் செய்த இந் நீர்மையையுங் காட்டி இவள் நீர்மையைக் கவர்ந்தான்.

———

மாண்பமை கோலத்து எம்மாயக் குறளற்கு சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே-6-6-9-

மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு – 2அழகு சமைந்த ஒப்பனையையுடையனாய், ஆச்சரியமான வேடத்தையுடைய ஸ்ரீ வாமனனுக்கு. மாண்பு – அழகு. மாயம் வஞ்சனையாகவுமாம். சேண் சுடர் குன்று அன்ன செம்சுடர் மூர்த்திக்கு – 3அடியிலே நீர்வார்த்துக் கொடுத்தவாறே வளர்ந்தபடி. ஓங்கிய புகரையுடைய மலைபோலே அழகிய ஒளியையுடைய வடிவினையுடையவனுக்கு. காண் பெரும் 4தோற்றத்து – கண்களுக்கு இனியதாய் அளவிடற்கரியதான இனிமையையுடைய தோற்றத்தையுடைய என்னுதல்; தோற்றம் – அழகு.

———-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே
நண்ணி யுனை நான் கண்டு உகந்து கூத்தாட நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே--6-9-2-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் – 1இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே. ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே. அன்றிக்கே, உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல். வலம் காட்டி – 2கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே அழிக்கப்போகாதே; அழகாகிற பலத்தைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடி. 3சுக்கிரன் முதலானோருடைய தடை உண்டாயிருக்கச்செய்தே அன்றோ, அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக்கொண்டு நின்றபடி. குறளாய் –

கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்
அண்டமு முற்றும் அகண்டமு மேனாள்
உண்டவ னாமிது ணர்ந்துகொள் என்றான்.- என்பது, கம்பராமாயணம், வேள்விப் பட. 26.

4கோடியைக் காணி ஆக்கினாற்போலே முகந்து கொள்ளலாயிருக்கை. மண்ணும் விண்ணும் கொண்ட – பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக்கொண்ட. இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது, அவன் அசுரத்தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்டபடியும், தன்னையடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும் என்க.

மாய அம்மானே – 1திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும், வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும், “கொள்வன் நான் மாவலி” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது. 2“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” –“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதிதைவதம்”

என்பது, ஜிதந்தா. -என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்யவேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார். நான் உனை நண்ணி உகந்து கூத்தாட இந்திரன் 3முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்; நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன். நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வரவேணும். வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது; வந்தால் உகக்கைதான் இவரது செயல். நான் கண்டு உகந்து கூத்தாட – 4மஹாபலியைப்போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்; இந்திரனைப்போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்; ‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக்கொண்டு பரிமாறுவது? உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ? 5“கிருஷ்ணா!எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இதுதான் எங்களுக்குப் பெரிய செல்வம்” என்கிற இதிலே அன்றோ இவர்க்குச் சம்பந்தம். நண்ணி-நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி. ஒருநாள் – பின்பு ஒருநாள் 1அச் செயல் செய்யலாகாதோ? மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ? வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ? ஞாலத்தூடே நடவாய்-நடை அழகில் வாசிகண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும் அவன் முன்னேயோ நடக்கலாவது? 2நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என்முன்னே நடக்கலாகாதோ?

————-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ–6-9-3-

“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லாவகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக்காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக்கூட’ என்கையாலே, திருமகள்கேள்வனே பிராப்யம் என்றது. அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது; 3“கோலத் திருமாமகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்மசொரூபம் சொல்லிற்று; “அடியேன்” என்கையாலே, ஜீவாத்மசொரூபம் சொல்லிற்று; ‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘உன்னைக்கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று, ‘உன்னைக்கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி சொரூபம் சொல்லிற்று.

————

பாயோரடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓரடியால் எல்லா வுலகும் தடவந்த மாயோன்
உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் தீயோடுடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ–6-9-6-

ஓர் அடி பாய் வைத்து – 2சேதனர்தலைகளிலே திருவடியை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? 3வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன்கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ. ஓர் அடியைப் பரப்பிவைத்து. அதன் கீழ் – அத் திருவடியின் கீழே. பரவை நிலம் எல்லாம் தாய் – கடல் சூழ்ந்த பூமிப்பரப்படங்கலும் அளந்து. 4சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்துகொண்டது. 5பரக்கவைத்து அளந்துகொண்ட பற்பபாதன் அன்றோ-திருச்சந்தவிருத். 32.-. ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – மற்றைத் திருவடியால் பிரமலோகத்தளவும் சென்று தீண்டிய. ‘எல்லா உலகும்’ என்றது, நடுவே உள்ள உலகங்களை. தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார். மாயோன் – தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான்வியாமோகம் செய்யுமவன். உன்னைக் காண்பான் வருந்தி – 1என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? எனைநாளும் – அநேக காலம். 2மயர்வற மதிநலம் அருளியபின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர்சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி.

———

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ--6-9-9-

தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ – 5வேறு ஒன்றைக் குறிக்கும் வாக்கியத்திலே வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார். ‘தாவி வையம் கொண்ட தடம் தாமரை’ என்றதனால், நினைத்தது தலைக்கட்டவல்லன்என்னும் சத்தியோகம் கூறியபடி. பூமிப் பரப்பு அடங்கலும் வருத்தம் இன்றி அளந்து கொண்டபடி. இனிமை அளவிறந்த திருவடிகளாதலின் ‘தடம் தாமரை’ என்கிறது. இதனால் பிராப்யம் சொல்லுகிறது. ‘கூவிக்கொள்ளும் காலம்’ என்கையாலே பிராபகத்தின் தன்மை சொல்லுகிறது. ‘இன்னம் குறுகாதோ’ என்கையாலே, ருசியின் தன்மை சொல்லுகிறது. 1இதர விஷயங்களின் கான்சி முடியும்படியாய், உன் திருவடிகளின் இனிமை அறிந்து விடமாட்டாத அளவு பிறந்து பின்பு இன்னம் தாழ்க்குமத்தனையோ? 2பிள்ளானுடைய அந்திம தசையில் நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, ‘கூவிக்கொள்ளும்காலம் இன்னம் குறுகாதோ?’ என்று பலகால் சொல்ல, இதனைக்கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

——

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனயினமாய்
மெய்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே மெய்நான் எய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே–6-10-6-

எந்நாள்” என்று ஐயுறுகிறது என்? அது ஒரு தேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்றோ? என்ன, அங்குள்ளாரும் இங்கே வந்து அன்றோ உன்னைப் பெற்று அநுபவிக்கிறது என்கிறார். அங்ஙன் அன்றிக்கே, வேறு பிரயோஜனங்களைக் கருதுகின்ற தேவர்களும்கூட வேறு பிரயோஜனங்களைக் கருதாதவரைப் போன்று வந்து அடையும்படி நிற்கிற இடத்தே நான் இழந்து போவதே! என்கிறாராகவுமாம்.

மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு நாம் எந்நாளேம் என்று – 2“எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே” திருவாய். 3. 2 : 1.– என்று இங்குள்ளார் அங்கே சென்று அடிமைசெய்ய ஆசைப்படுமாறு போலேகாணும், அங்குள்ளாரும் இவனுடைய சௌலப்யத்தைக் கண்டு அநுபவிக்கவேணும் என்று ஆசைப்பட்டு வரும்படி. 3எல்லாருக்கும் சுலபமான திருவடிகளை நாம் காணப்பெறுவது என்றோ? பூமியை யடங்கலும் வருத்தம் இன்றி அளந்துகொள்ளக் கண்ட காட்சியிலே தலைமேலே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் படியான இனிமையையுடைய திருவடிகளை. மற்றொருபோது வேறுஒன்றனைப்பற்றிப் போகிறவர்கள் அல்லராதலின் ‘எந்நாளும்’ என்கிறார்

—————–

ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே--7-4-1-

திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயலை அருளிச்செய்கிறார்.

2‘தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்; அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,‘தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர்  பறையறைந்தபடியாம்.

தனக்கு ஆக்கிக்கொண்ட செயல் அன்றோ?இராவணனைப்போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி. 2நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்? ஆழி எழ – 3‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ? அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி. 4‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளையபெருமாள் முற்பட்டாற்போலே.  ‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’-  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

‘புண்ணியசீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளையபெருமாள், தமையனாருக்குப் பின்னே செல்லும்பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார்’ என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக்கொண்டு நின்றார் அன்றோ?ஆழி எழ – 5தோற்றத்திலே அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே; 3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?

4‘அத ஹரிவர நாத:-அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’-  என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

 5தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ? ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – 6இவர்களோடு கூடிநின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது, தூசித் தலையில் ஓர் ஏற்றம்செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார். பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம்தலையிலே ஏறிட்டுக்கொண்டார். நிசிசர பதிம் – 1அத்தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ? 2‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி. ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி. யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார். ககந மதிவிசாலம் லங்கயித்வா – பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார். அர்க்கஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார். 3பிறப்புக்கு ஈடாகச்செய்தார். 4தன்நிலம் அன்றோ? 6சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப்போம் போது தெரியாது அன்றோ? ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார். ராம பார்ஸ்வம் ஜகாம – 6‘தூசித்தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப்பெறுவர்?’ என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.

ஆழி எழ – 7‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி. சிறகடிக்கொள்ளுகையாவது, பின்பு தூரப்பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.8அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத்தக்கஇடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ? 1பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ? 2துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, ‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’-  என்பது, பாரதம், உத்யோக.

கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழி எழ – 1இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.

சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள். மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள். அன்றிக்கே, 3‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல். 4‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.-இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப. எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி. விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை உமிழுமத்தனை அன்றொ திருவனந்தாழ்வானாலாவது? அரவணைமேல் தோன்றல் -திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன். திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்தபோது-ஒரு பூவினைக்கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது? 1பூவை இட்டுப் பூவை கொண்டான்காணும். 2அப்படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தையுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப்புக்கால், இவர்களுக்கு இப்படிப்படவேண்டாவோ? அவன் இப்படி அளவாநின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’ 3‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கணநேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.
‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’- என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17
திசை வாழி எழ – 4‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன! ‘அவைதமக்கு என் வருகிறதோ?’ என்று ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னாநிற்பார்கள் அன்றோ? ‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரியவேண்டி இருக்குமன்றோ? அன்றிக்கே, 5திக்குகள்தோறும் அநுகூலருடைய’ வாழிவாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல். 1திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார், திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே. ஏத்த ஏழ் உலகும் பொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.-தண்டும் வாளும் எழ- ‘தூசித்தலையில் அவர்களே 2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி; ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலேகாணும் இவர்கள் படுகிற பாடு. 3அநுகூலன் வந்து புகுர, ‘கொல்லத்தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’ 4‘என்இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.- என்று நமுசிவந்து, ‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்கவேணும்’ என்று திருவடிகளைக் கட்டிக்கொண்டு கிடந்தான் அன்றோ? 5அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய? ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி. 6‘சீராற்பிறந்து’ என்கிறபடியே, ‘உன்கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் படவேணுமோ?’ என்கிறார்.பெரிய  திருவந். 16. ‘மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்
‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘

அண்டம் மோழை எழ – 1இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது? கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடி சென்று, ‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்டகடாஹத்தை உருவி நிற்க, கீழேயுள்ள ஆவரணஜலம் மேலே எழ. 2ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல்போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்? 3‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி. முடி பாதம் எழ-திருமுடியளவும் திருவடிகள் கிளர. ‘முடிமேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக. அப்பன் ஊழி எழ – 4மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று; நல்லடிக்காலம் கிளரும்படி.யாகவும். அப்பன் உலகம் 1கொண்டவாறே – ‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்: அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல். அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம். அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு2ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.

————

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமன னாய்ச்செய்த கூத்துகள் கண்டுமே.7-5-6

இரந்தார்க்கு இடர் நீக்கிய கோட்டங்கை வாமனன் -மேலே  கூறிய குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ, அலம் புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6. -கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியைக் காப்பாற்றிய மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப்பட்ட கை.6இராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் போகட ஒண்ணாமைக்குக் காரணம் உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு. ஈட்டம் கொள் தேவர்கள் – 1கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே, தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ? 2இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் போகட்டு. எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் – திரள். சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – 3கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே, ‘எல்லாரும் நம்பக்கல் வரவேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி. (‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டிவிட விஷ்ணு ஜயித்ததனால் ) 4‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’  என்கிறபடியே, ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.

ஒரு சொத்தை வில்லை முரித்தபோதாக எம்பெருமான் அறப்பெரியன் என்பது; அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவசாதி பற்களைக் காட்ட, அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் – நீர் ஏற்கக் குவித்த அழகிய கையையுடையவனாய்; 5‘பொல்லாக் குறள்  உருவாய்ப் பொன்கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே, 1தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேடத்தாலே அழியச்செய்யமாட்டான்; இனி, இரண்டற்கும் தக்கதாக ஒரு வழி இரட்சகனான தான் பார்க்குமித்தனை அன்றோ? பொற்கை – பொலிவு எய்தின கை; ‘அழகிய கை’ என்றபடி. கொடுத்து வளர்ந்த கை; 2‘ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும், ‘சத்திய பராக்கிரமத்தையுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்கமாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.

கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.

‘தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.

செய்த கூத்துகள் கண்டுமே – 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு, மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப்பேச்சுக்களும் சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச்செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

4‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

————

பாமரு மூவுலகு அளந்த பற்ப பாதாவோ –உன்னை என்று கொல் சேர்வதுவே–7-6-1-

பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ – 5இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில்தான் ஆறி இரேனோ? பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்குமவன் அல்லையோ? மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற்போலேஇதனைக் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து மீட்டுக்கொள்ளுமவன் அன்றோ நீ? 1‘படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ திருவாய். 9. 2 : 2.-என்று ஆசையுடைய நான் இருக்க, இச்சை இல்லாதார் தலைகளிலே திருவடியை வைப்பதே!’

———

மாயா! வாமன னே!-7-8-1-

மாயா – ‘மாயா!’ என்கிற இது, இத்திருவாய்மொழிக்காகச் சுருக்கமாய் இருக்கிறது. வாமனனே – 2‘மாயன் என்கிற பதத்திற் சொல்லுகிற ஆச்சரியத்தினை அறிகிற இடமாய் இருக்கிறது. என்றது, 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து –பெரியதிருவந்தாதி.-மஹாபலி பக்கலிலே சென்று. அவன் முன்னே நின்று, தான் சொன்னவை எல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை அருளிச்செய்து, சிற்றடியைக் காட்டிப் பெரிய அடியாலே அளந்துகொண்டு, இப்படிச் செய்த செயல்கள் அனைத்தையும் முன்னோட்டுக்கொண்ட வாமனனே!’ என்கிறார் என்றபடி.

———-

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்–7-8-6-

மயக்கா-இன்னார் என்று இன்றிக்கே, யாரேனுமாகக் கிட்டினாரை மயங்கச் செய்யுமவனே! ‘அது எங்கே கண்டோம்?’ என்னில், வாமனனே – காரியம் செய்யப்போந்த நீ, அந்தத் தேவர்களை நெருக்கின மஹாபலி தானே நெஞ்சு நெகிழ்ந்து உன் கையிலே நீரை வார்த்துத் தானே இசைந்து தரும்படி மயங்கச் செய்தவனே! 3‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’ பெரிய திருமடல், 109.-என்கிறபடியே. மதியாம் வண்ணம் ஒன்று அருளாய் – அநுகூலர் பிரதிகூலர் என்ற வேற்றுமை இல்லாமல் மயங்கச் செய்யாதே, நான் தெளிவையுடையேனாம்படி செய்தருளவேணும்.

———

ஆகும் கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியால் ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறள் அப்பன் அமர்ந்து உறையும்
–திருவாறன் விளை –வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ–7-10-2-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி – 2இது அநுபாஷணம் ஆகாநிற்கச் செய்தே, ஆதரத்தின் மிகுதிக்குச் சூசகமாயிருக்கிறது. ஒரு சந்தேகம் இன்றிக்கே நமக்கு இது கூடவற்றோ? 3‘அன்றிக்கே, ஆகுங்கொல் என்ற ஐயமுங்கூட இன்றிக்கே ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்தான்’ என்று மேலே கூட்டவுமாம். 4எல்லாம் செய்தாலும் ‘நமக்கு இது கூடுமோ, கூடாதோ!’ என்று இருந்தானாயிற்றுஇளமைப்பருவத்தாலே. அகல் இடம் முற்றவும் – பரப்பையுடைத்தான பூமியும், புவர்லோகம் முதலானவைகளும் எல்லாம். ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த –  இரண்டு அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த; என்றது, 1‘இரண்டு அடிகளாலே பூமியையும் மேல் உலகங்களையும் அளந்தானாயிற்று, ஓர் அடிக்கு இவளைச் சிறையிட்டுவைக்க நினைத்து’ என்றதனைத் தெரிவத்தபடி. திருக்குறள் அப்பன் – ஸ்ரீ வாமனனான மஹோபகாரகன். அமர்ந்து உறையும் – இந்திரனுக்கு இராச்சியத்தை வாங்கிக் கொடுத்துத் திருப்பாற்கடலிலே போய்ச் சாய்கை அன்றிக்கே, அவன் வந்து நித்தியவாசம் செய்கிற. மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – அவன் திருவடியால் அளந்த ஆகாசப்பரப்பு அடங்கலும் பரந்துள்ள கொடிகளையுடைத்தான மாடங்களை, ஓங்கியிருந்துள்ள மதிள்களையுமுடைத்தான திருவாறன்விளையை. மா கந்தம் நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் – 2‘பூமியை அடங்கலும் பனி போன்ற குளிர் நீரால் நனைக்கட்டும்’ என்று ஸ்ரீ நந்திக்கிராமம் தொடங்கி ஸ்ரீ பரத்துவாச பகவான் ஆஸ்ரமத்தளவும் வர, பனி

நீராலே விடுவித்தான் ஸ்ரீசத்துருக்நாழ்வான் என்றது அன்றோ?

ஸிஞ்சந்து வஸூதாம் க்ருத்ஸ்நாம் ஹிமஸீதே நவாரிணா’-என்பது, ஸ்ரீராமா. யுத். 130. 6.

அப்படியே, மா கந்த நீர் கொண்டு தூவி அநுகூலமான காரியங்களைச் செய்து கைதொழக் கூடவற்றேயோ?

———–

பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா–8-1-2-

———-

ஆருயிரேயோ அகலிடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த பேர் உயிரேயோ –உன்னை நான் எங்கு வந்து உறுகோ–8-1-5-

அகல் இடம் முழுதும் படைத்து-இடந்து -உண்டு -உமிழ்ந்து -அளந்த பெரியரேயோ –
பஹுச்யாம் -தைத்ரியம் –பல பொருள்களாகக் கடவேன் –
என்று பூமிப் பரப்பு அடங்கலும் உண்டாக்கி
பிரளயத்தில் நோவு பட மகா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி –
மீண்டும் பிரளயம் வர வயிற்றில் வைத்து நோக்கிக் கொண்டு –
உள்ளே கிடந்தது தளராதபடி வெளி நாடு காண உமிழ்ந்து
மகா பலியாலே கவரப்பட்ட நிலையிலே எல்லை கடந்து நடந்து மீட்டு
இப்படி அந்த துர்தசையிலே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புவார் இல்லாது இருந்தும்
உணர்ந்து நோக்கும் நீயே இது கிட்டும் விரகு பார்க்க வேண்டாமா
பெரியோனே பேரியர் -பெரியோன்

—–

மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்–8-2-9-

மாயம் தன்னால் கை செய் அப்பாலது ஓர் கோலம் மாண் குறள் வடிவு காட்டி –
மாயத்தால் -கை செய்கைக்கு அப்பாலதான வடிவழகை உடைய வாமன வடிவைக் காட்டி
மாயமாவது -உபய விபூதிகளையும் உடையனான தான் ஒன்றும் இல்லாதவனாய் வருகையும்
திருமகள் கேள்வனான தன்னை இரப்பாளானாக ஆக்கியும்
சிறுகாலைக் காட்டி பெரும் காலால் அளந்து கொள்ளுகையுமாம்
மாயம் -வஞ்சனை
கை செய்கை -எனபது கை செய் -என்று கடை குறைந்து நிற்கிறது
அளவிடற்கு அரிய பெருமை உடைய தான் இரப்பிலே
தகண் ஏறின வாமன வேடத்தைக் கொண்டான்
ஆதலின் மாண் குறள் வடிவு என்கிறார்
இப்படி அழிவுக்கு இட்ட வடிவுக்கு ஆலத்தி வழிக்க வேண்டி
இருத்தலின் -கோல வடிவு -என்கிறார்
மகாபலியை வஞ்சிக்கைக்காக இயற்கையான அழகை உடைய மாண் குறளான வடிவைக் காட்டினான் –
ஆதலின் -காட்டி -என்கிறார் –
இனி மாயம் தன்னால் -என்பதனை -கோலம் -என்பதற்கு அடை மொழி ஆக்குதலுமாம்

இனி கை செயற்பாலது ஒரு கோல வடிவு -என்பதற்கு
சித்திரம் உயிர் பெற எழுதினாப் போலே இருந்துள்ள கோல வடிவு
என்றும் பொருள் கூறலுமாம் –
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த –
கையிலே நீர் விழுந்த உடனே எல்லா உலகங்களும் விம்ம வளர்ந்த
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த –
நீண்டு ஒளியை உடைத்தாய் –
கற்பகத் தரு பணைத்தாப் போலே பல தோள்களை உடையவன் –
தேவ பிராற்கு –
இந்த்ரன் இழந்த ராஜ்யத்தைக் கொடுத்து தேவர்களுக்கு உபகாரத்தை செய்தவனுக்கு
என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
நாண் இரண்டு ராஜ்ஜியம் இழந்தேன் –
இந்த்ரன் ராஜ்ஜியம் பெற்றுப் போந்தான்
மகாபலி ஔதார்யம் பண்ணிப் போந்தான்
நாண் எனக்கு எல்லா செல்வமான அடக்கத்தையும் நாணத்தையும் இழந்தேன்
இனி என் கொடுக்கேன் –
இனி எதனைக் கொடுப்பேன்

—-

என்றே என்னை உன்னேரார் கோலத் திருவடிக் கீழ் நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழுவேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே–8-3-8-

ஏழு குல மலைகள் என்ன
ஏழு தீவுகள் என்ன
அவற்றைச் சூழ்ந்து இருந்துள்ள ஏழு கடல்கள் என்ன
இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொண்டு அருளும்படி
நீண்ட திருவடிகளை உடையையாய்
கையும் திருவாழியுமான திருமகள் கேள்வனே -என்றது –
சங்கு சக்கரம் முதலிய திவ்ய ஆயுதங்கள் உடைய திருமகள் கேள்வனாய் வைத்து
காடும் ஓடையுமான பூமியை முழுதும் நின்ற நிலையிலே
மெல்லிய திருவடிகளைக் கொண்டு
அளந்த சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரம் செய்யப் பெறும் நாள் என்று -என்றபடி
அன்றிக்கே
அரியன செய்ய வல்ல நீ
நான் உன் திருவடிகளை கிட்டி நின்று அடிமை செய்யும்படி

நினைத்து அருள வேண்டும் -என்கிறார் –

என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-

குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-
ஏழு குல மலைகள் என்ன – ஏழு தீவுகள் என்ன – அவற்றைச் சூழ்ந்து இருந்துள்ள ஏழு கடல்கள் என்ன-
இப்படி ஏழு வகைப் பட்ட பூமியை அடைய நின்ற நிலையிலே நின்று அளந்து கொண்டு அருளும்படி–
நீண்ட திருவடிகளை உடையையாய்-கையும் திருவாழியுமான திருமகள் கேள்வனே -என்றது –
சங்கு சக்கரம் முதலிய திவ்ய ஆயுதங்கள் உடைய திருமகள் கேள்வனாய் வைத்து-காடும் ஓடையுமான பூமியை முழுதும் நின்ற நிலையிலே–
மெல்லிய திருவடிகளைக் கொண்டு–அளந்த சிரமம் தீரக் குளிர்ந்த உபசாரம் செய்யப் பெறும் நாள் என்று -என்றபடி-
மேலைத் தண் மதியும் -கதிரவனும் தடவவோடு -அங்கும் சிசிரோபசாரம் -கீழே கதிரவன் தோற்றும் மேலைத் தண் மதி என்பதால் –

——–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண எம்மான்
குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான் —திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்ம்மையே நின்ற
எம்பெருமான் அடியிணை அல்லாதோர் அரணே–8-4-4-

பிறிதில்லை எனக்குப் –
எனக்கு பிறிது இல்லை –
அவனை ஒழிய வேறு ரட்ஷகர் எனக்கு வேறு இல்லை –

பெரிய மூ வுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த –
பிரமலோகம் முடிய ஆகாசத்தில் இடம் முழுதும் விம்ம வளர்ந்து -என்றது
தொடங்கின கார்யம் வென்ற பிரீதியால் வளர்ந்த படி

குறிய மாண் எம்மான் –
வளருகுகைக்கு உடலாகக் கொண்ட வாமன வேடத்தையும் -இரப்புத் தன்மையும் காட்டி -என்னை அடிமை கொண்டான்
மகா பலியைக் வெல்லுக்கைக்கு கொண்ட வடிவைக் காட்டி
அச்சத்தைக் கெடுத்தபடி –

—-

வந்து தோன்றாய் யன்றேல் உன் வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்–8-5-7-

உன் வையம் தாய மலரடிக் –
வசிஷ்ட சண்டாள வேறுபாடு பாராத திருவடிகள் –
தாய் மலரடி –
ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று காட்டையும் ஓடையும் அளந்தது –

மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப –
தனக்கு மேல் ஒன்றில்லாத இனிய பொருளான
திருவடிக் கீழே
முற்பாடனாய் வந்து நிற்கும்படியாக

முகப்பே –
கண் வட்டத்திலே

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்
அன்றிக்கே
பணி செய்வாய் என்று என்னை சொல்வீராக -என்னும் படி
கண் முகப்பே அடிமை கொள்ள வேண்டும் -என்னவுமாம்
குணஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் –
தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்
தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –
பணி கொள்ளாய் -என்கிறார் –
நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1–என்றும்
நின்னலால் இல்லை -2-3-7- என்றும்
இட்டு வைத்த இடத்தில் கிடக்க மாட்டேன்
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் –8-1-9-என்னுமவர் அன்றோ –

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8-5-7-
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்–8-5-7-

உன் வையம் தாய மலரடிக் –
வசிஷ்ட சண்டாள வேறுபாடு பாராத திருவடிகள் –சைதன்யம் முக்கியம் இல்லை என்பதால் வையம் -என்கிறார் –
தாய மலரடி –ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று காட்டையும் ஓடையும் அளந்தது –

மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப –
தனக்கு மேல் ஒன்றில்லாத இனிய பொருளான-திருவடிக் கீழே-முற்பாடனாய் வந்து நிற்கும்படியாக

முகப்பே –
கண் வட்டத்திலே-

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்-
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்-

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8-5-7-
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று–பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

————————-

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன் மண் வின் முழுதும் அளந்த ஒண் தாமரை மன்னவர் தாம் தொழ
வானவர் தாம் வந்து நண்ணு திருக் கடித்தான நகரே–8-6-7-

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று
பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

மண்ணவர் தாம் தொழ –
இடக்கை வலக்கை அறியாத பூமியில் உள்ளார் தொழ
பரமபதம் நித்ய சூரிகளுக்கே யாக இருக்குமா போலே
உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கு ஆகவேயாய் இருக்கை

———

இருந்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித்து எனத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் கண்டு கொண்டே--8-7-1-

பொருத்தமுடை –
இப்படிப் பொருத்தமுடையவனையே-இதுவோ பொருத்தம் -திருவாய்மொழி -8-5-8- என்றது –

வாமனன் –
தன் உடைமை பெருகைக்காக
தான் இரப்பாளன் ஆனவனை
நான் விரும்பிய இடம் என் செய்தேன் ஆனேன் –

தான் புகுந்து –
என்னைத் தான் புகுகைக்கு இரப்பாளனாக வந்து புகுந்து –

என்தன்கருத்தை யுற –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்னும்
என் நினைவைத் தான் கைக் கொண்டான் –

வீற்றிருந்தான் –
இவரைப் பெற்றதால் உண்டான வேறுபாடு வடிவிலே தோற்ற
கிருதக்ருத்தியனாய் இரா நின்றான் –

கண்டு கொண்டே –
பெரிய நோய்க்கு தப்பின புத்திரனை
தாய் தந்தையர்கள் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
மாயக் கூத்தா -என்ற திருவாய்மொழி யிலே
விடாய்க்கு தப்பினவர் என்று பார்த்துக் கொண்டே இருந்தான் –

——-

உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம்   செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே–8-10-3-

சிறுமா மேனி நிமிர்ந்த –
கண்களாலே முகந்து அனுபவிக்கா லாம்படி சிறுத்து
அழகுக்கு எல்லை இன்றிக்கே இருக்கிற
திரு மேனியை நிமிர்த்த –

எம் –
உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு -இரண்டாம் திருவந்தாதி -61- என்றபடியே
அடியார்கட்காக செய்த செயல் அன்றோ –

செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் –
மலர்த்து -செவ்வி -குளிர்த்திகளுக்கு
தாமரையை ஒப்பாக சொல்லலாம் படி இருக்கிற
கண் அழகை உடைய ஸ்ரீ வாமனனுடைய
அழகிய மிக்க வாசனையை உடைத்தான
நாட்ப்பூ போலே இருக்கிற திருவடிகளின் கீழே புகுதல் –
நறு மா விரை –
நன்றாய் மிக்க வாசனை –
நறு மா விரை நாண் மலரடி காணும்
இவருக்கு வேப்பங்குடி நீராய்
உறுமோ என்று கழிக்கிறது-என்றது
பகவத் விஷயத்திலே -வெளிறு கழிந்த பாகமான இது ஆயிற்று –
பரத்வம் முதலானவைகளை விட அதி சுலபமானது என்பதால் –
இவருக்கு பாகவத புருஷார்தத்தைப் பற்றிக் கழிக்க
வேண்டியது ஆகிறது –

———

குடிக் கிடந்தது ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்னடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்கு அருளி நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் கொடிக் கொள்
பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே –
அங்கனம் திருவருள் புரியும் தன்மை ஒரு நாளிலேயாய்
பின்பு வற்றுமதோ –என்கிறார்
தடை இல்லாமல் இருப்பதற்கு மேற்பட ருசி வேண்டற் பாலதோ -என்பார் -படிக்கு -என்கிறார்

பூமியை விளாக்குலை கொள்ள -பரந்து –விஞ்ச வளரும் அதிலும் அரிது போலே காணும்
பூமிக்கு அளவாக திருவடிகளை -குசை தாங்கின அருமையும் -என்பார் -கடிவாளத்தை இழுத்துப் பிடித்து -என்பார் -படிக்கு அளவாக நிமிர்த்த -என்கிறார்
அன்றிக்கே
உனக்கு அரியது ஒன்றாய் நான் வருந்துகிறேனோ -என்னுதல் –

இத்தனை அன்றோ செய்ய வேண்டுவது என்கிறார் மேல் –
நின் பாத பங்கயம் –
ஒரு செவ்விப் பூவினைக் கொண்டு காணும் காடும் ஓடையும் அளந்து கொண்டது
ஏதேனுமாக கொள்ள நினைத்த கார்யத்துக்கு அளவாக்கும் இத்தனையாய் இருந்ததே அன்றோ
பூமிக்கு அளவாக்கின திருவடிகளை
என் தலைக்கு அளவாக்க லாகாதோ –
கோலமாம் என் சென்னிக்கு -4-3-6-என்று இருப்பார் தலைக்கு வைக்கலாகாதோ -என்றது
தேவரீருடைய -அப்போது அலர்ந்த -செவ்வித் தாமரை போன்ற
இரண்டு திருவடிகளும் என் தலையை எப்போது அலங்காரம் செய்யப் போகின்றன -என்கிறார் –
ஆக
குணா குணம் நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலைகளிலும் வைத்த திருவடிகளை
ஆசை உடைய என் தலையிலும் வைக்கலாகாதோ –
என்கிறார் என்றபடி –
கதா புன சங்க ராதாங்க கல்பக
த்விஜார விந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம்
மதிய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -ஸ்தோத்ர ரத்னம் -31-

—————-

அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே யக்துண்டு உமிழ்ந்தான் அளந்தான்-9-3-2-

அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான் அவனே –
பிரளயம் கொள்ளாதபடி பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து
வெளிநாடு காண உமிழ்ந்து
மகாபலியாலே கவர்ந்து கொள்ளப்பட
எல்லை நடந்து மீட்டுக் கொண்டான் -அவனே
அவனே -என்ற ஏ காரத்தால் ஆபத்துக்கு துணையாதல் முதலான
காப்பாற்றுதல் தொழிலும் வேறு துணை இன்மையை
தெரிவித்தவாறு –

——-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவாசுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற நாரண நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே-9-8-7-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் –
சர்வேஸ்வரன் இந்த்ரனை மூன்று உலகங்கட்கும்
அதிபதி யாக்கி வைத்தான் –
அவனைத் தள்ளி அந்த பதத்தைத் தானே ஏறிட்டுக் கொண்டு
நானே அரசு -என்று இருந்தான் ஆயிற்று
நீ கொடுக்க கொள்கை அன்றிக்கே
அவற்றை எல்லாம் தானே நியமிக்கிறவன்
என்று செருக்கு கொண்டு இருந்தான் ஆயிற்று
வெறும் புறத்திலே தன்னது அல்லாதத்தை தன்னது என்று
ஏறிட்டுக் கொண்டு இருக்கக் கூடிய
அவன் கையில் இவ் விஷயமும் கிடக்குமாகில்
நாடு குடி கிடவாது -என்று பார்த்தருளி
இந்த்ரனுடைய உலகத்தை அவன் பக்கலில் நின்றும் வாங்கினான் –

——–

அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–9-9-2-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற –
பரப்புடைத்தான பூமி உருமாய்ந்து கிடக்க உண்டாக்கி
பிரளயம் கொண்டதனை இடந்து எடுத்து
திரியவும் பிரளயம் வர வயிற்றிலே வைத்து நோக்கி
உள்ளே கிடந்தது தளராதபடி வெளிநாடு காண புறப்பட விட்டு
மிடுக்கராய் இருப்பார் இறாஞ்சிக் கொள்ள
எல்லை நடந்து மீட்டுக் கொண்டு
இப்படி வரையாதே நோக்கும் தன்மையன் கண்டீர்
இப்போது வாராது ஒழிகிறான் – என்றது
பொதுவான ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குமவன் கண்டீர்
தன் தேவியானவள் இப்படி துன்புறுத்தும் பொருள்களின்
கையிலே நோவு படா நிற்க இப்போது வாராது ஒழிகிறான்
என்றபடி –

————

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்டம் மூவுலகளந்தவன் அணி திரு மோகூர் –கோயிலை வலம் செய்து இங்காடுதும் கூத்தே–10-1-5-

அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்
மகா பலியால் கவரப் பட்ட
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற
மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி
படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்
அளந்து -என்கிறார் –

—–

அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்–10-1-5-

அண்ட மூ வுலகளந்தவன் –
அண்டத்துக்கு புறம்பே இருக்கிறவன்
மகா பலியால் கவரப் பட்ட
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற
மூன்று வகைப் பட்ட உலகங்களையும் அளந்து கொண்டவன் –
படைத்தது விடுதலே அன்றி
படைக்கப் பட்ட உலகத்தை வலி உள்ளவர்கள் கவர்ந்து கொண்டால்
எல்லை நடந்து கொண்டு காப்பாற்றுகின்றவன்-என்பார்
அளந்து -என்கிறார் –

—————-

சேண் சுடர் தோள்கள் பல தழைத்த –
நீண்டு ஒளியை உடைத்தாய் –கற்பகத் தரு பணைத்தாப் போலே பல தோள்களை உடையவன் –

சகஸ்ர சீர்ஷ புருஷ -சகஸ்ராஷா சகஸ்ர பாத் –

——————————-

மடியிலா மன்னவன் எய்தும் -ஒரு குறள் பாடும் குறள் -கலியன் வேல் பெற்ற விருத்தாந்தம்
அணைத்த வேலும் தொழுத கையும்

மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த –8-2-9-
கையிலே நீர் விழுந்த உடனே எல்லா உலகங்களும் விம்ம வளர்ந்த-

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

(அதிகாரம்:மடியின்மை குறள் எண்:610)

பொழிப்பு (மு வரதராசன்): அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

மணக்குடவர் உரை: மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே.
இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: அடி அளந்தான் தா அயது எல்லாம் – தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் – மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
(‘அடியளந்தான்’ என்றது வாளா பெயராய் நின்றது. ‘தாவியது’ என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
அடியளந்தான் தாஅயது எல்லாம் மடியிலா மன்னவன் ஒருங்கு எய்தும்.பதவுரை:
மடி-சோம்பல்; இலா-இல்லாத; மன்னவன்-வேந்தன்; எய்தும்-அடைவான்; அடி-தாள்; அளந்தான்-அளந்தவன் (விண், மண், பாதாளம் என்ற மூவுலகையும் அளந்தவன்); தாஅயது-கடந்த பரப்பு; எல்லாம்-அனைத்தும்; ஒருங்கு-ஒருசேர.
மடியிலா மன்னவன் எய்தும்:இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியில்லாத மன்னவன் எய்துவன்;
பரிப்பெருமாள்: மடியில்லாத மன்னவன் எய்துவன்;
பரிதி: மடித்த புத்தியில்லாத அரசன் பெறுவன்;
காலிங்கர்: தனது நெஞ்சு ஊக்கத்துக்குத் தக்க முயற்சி உடையனாய்த் தனதிடத்து ஒருநாளும் மடிப்பது ஓர் மடி இல்லாத மன்னவன் யாவன்; அவன் எய்தும்; யாதினை எனின்;
பரிமேலழகர்: மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.’மடியில்லாத மன்னவன் எய்துவன்’ என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.இன்றைய ஆசிரியர்கள் ‘சோம்பல் இல்லா மன்னவன் அடைவான்’, ‘சோம்பலில்லாத அரசன் ஒருசேர அடைவான்’, ‘சோம்பல் இல்லாமல் அரசாட்சி செய்கிற மன்னவன் அடைவான்’, ‘சோம்பல் இல்லாத அரசன் அடைவான்’, என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே.
மணக்குடவர் குறிப்புரை: இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் கூட.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
பரிதி: மகாவிட்டுணுவின் பாதத்திலே அடங்கின உலகம் என்றவாறு.
காலிங்கர்: முன் ஒரு நாள் அசுரேசனிடத்துச் சென்று மூவடி வேண்டி அளந்தவனாகிய திருமால் அடியில் தாவிக்கொண்ட அனைத்து உலகினையும் ஒருவழிப்படப்பெறும் என்றவாறு. [அசுரேசன் – மாவலி]
பரிமேலழகர்: தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்;
பரிமேலழகர் குறிப்புரை: ‘அடியளந்தான்’ என்றது வாளா பெயராய் நின்றது. ‘தாவியது’ என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.

‘அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே’ என்றபடி பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிதியும் காலிங்கரும் அடியளந்தான் என்றது ‘திருமால்’ என்று குறிப்பிட்டுக் கூறப் பரிமேலழகர் ‘இறைவன்’ என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் ‘திருமால் தாண்டிய உலகம் முழுதும்’, ‘தன் திருவடியாலே உலகை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு முழுவதையும்’, ‘திருமால் அளந்த பூலோகத்தையும் தேவலோகத்தையும் ஏககாலத்தில்’, ‘அடியளந்த திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே’ என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அடியளந்தான் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது பாடலின் பொருள்.
‘அடியளந்தான்’ யார்?
சோம்பலில்லாத ஆட்சித்தலைவன் நன் முயற்சிகளால் உலக முழுவதையும் ஒருங்கே அடைந்து ஓங்கி நிற்பான்.
இடையீடில்லாத முயற்சியின் கண்ணே இருக்கும் ஆட்சியாளன், திருவிக்ரமனாகத் தன் ஈரடியால் அளந்த முன்று உலகங்களையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும் வல்லமை பெறுவான்.
உலக முழுவதையும் ஒருங்கே அடைவான் என்று சொல்லப்பட்டதால் இது நாடாள்வோருக்கான அறிவுரை என்பது எளிதில் பெறப்பட்டது.
மடியினையுடையான் இடித்துரையும் எள்ளல் சொல்லும் கேட்டு, குடியினை யிழந்து குற்றங்களையடைந்து, அடிமையாகிப் பின் அழிந்தே போவான் என்று சோம்பலால் உண்டாகும் கேடுகளை விளக்கியபின், மடியின்மையால் எய்தும் பெரும் பயன் இக்குறளில் உணர்த்தப்படுகிறது. சோம்பல் இல்லாமல், ஊக்கமுடைமை கொண்டு, உலகையே வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது. மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள் (ஆள்வினை உடைமை 617 பொருள்;…..சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) என்று பின்னரும் மற்றொரு பாடலில் சொல்லப்படும்.’தாஅயது’ என்பது தாவியது என்பதன் இடைக்குறை என்பர். தாவியது ‘வி’ கெட்டுத் தாயது என்று வந்ததைத் தொகுத்தல் விகாரம் எனக் குறிப்பிடுவர் இலக்கண ஆசிரியர்கள். ஞால மூன்றடித் தாய முதல்வற்கு… (கலித். 124 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு.. ) என்ற கலித்தொகைப் பாடல் வரியிலும் தாய என்ற சொல் தாவிஅளந்த என்ற பொருளில் வருகிறது.
தாஅயது என்ற சொல்லுக்கு கடக்கப்பட்ட, கடந்த, அடங்கின, தாவிக்கொண்ட, தாவியளந்த, காட்டிய, தாண்டிய, தாவிய, தாவிப் பற்றிய எனப் பொருள் கூறப்பட்டது. இவற்றுள் தாவியளந்த என்பது பொருத்தம்.
‘அடியளந்தான்’ யார்?தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள திருமால்-மாவலி வரலாற்றை இக்குறள் சுட்டுகிறது என்பது பலரது கருத்து. தேவர்கள், மாவலி என்னும் மன்னனை வீழ்த்த திருமாலிடம் (மகாவிஷ்ணு) சென்று வேண்டினர். மாவலி ஈகையறம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கு வாமன அவதாரம் எடுத்து வந்த திருமால் தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என இரந்தார். மாவலி மன்னன், மூன்றடி நிலத்தைக் கொடுக்க ஒப்புக்கொள்கிறான். குள்ளமாக வாமன வடிவத்தில் வந்த திருமால் முப்பேருருவனாகி, (திரிவிக்கிரமன்) எடுத்து, ஒரு அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் வானத்தையும் தாவி அளந்து நின்றபின் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மூன்றாவது அடியைத் தனது தலை மேல் வைக்குமாறு மாவலி கூறினான். இதற்காகவே காத்திருந்த திருமால் மாவலியின் தலையில் கால் வைத்து அழுத்தி, அவனைப் பாதாளத்திற்குள் தள்ளினார். இதுதான் திருமால் நெடுமாலாய் உலகளந்த கதை.
இதில் சொல்லப்பட்ட மண்ணுலகம், விண்ணுலகம், பாதாளம் என்ற மூன்று உலகங்களையும் சோம்பலை ஒழித்து முயற்சி செய்யும் மன்னன் ஒரு சேர எய்துவான் என்று மடியின்மையின் சிறப்பு உயர்வு கூறப்பட்டது.

இப்பாடலில் ‘திருமால்’ எனக் குறித்துச் சொல்லப்படவில்லை. இதனால் அடியளந்தான் வாளாபெயராய் (காரணம் குறியாது) இறைவனை உணர்த்திற்று என்பார் பரிமேலழகர். அடியளந்தான் என்பது உலகளந்த வரலாறு குறியாது வறிதே திருமால் என்னும் பெயரளவில் நின்றது என்றார்.
நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல… (பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு, 1:3 பொருள்: அகலத்தை இடத்தேயுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்தோடே வலம்புரியைத்தாங்கும் பெரிய கைகளையுடைய மால், திருமார்பிடத்தே திருமகளைவைத்த மாலை, மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமாலைப்போல…) எனவும் …கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை… (பரிபாடல் 3:20 பொருள்: கீழேழுலகமும் ஒருங்கே அளந்த திருவடியினை உடையை, ) எனவும் ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு… (கலித்தொகை 124:1 பொருள்: உலகமூன்றையும் தன்திருவடியாலே அளந்த எப்பொருட்கும் அடியாயிருக்கின்றவனுக்கு….) எனவும் திருமால் உலகளந்த செய்தியைச் சங்க இலக்கியக்கள் குறிக்கின்றன. இரண்டடியான் மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி…. (மதுரைக் காண்டம், ஆய்ச்சியர் குரவை, படர்க்கைப் பரவல், காதை 17:35 பொருள்: முறைப்பட்ட மூன்றுலகங்களும் இரண்டு அடிகட்கு நிரம்புந் தன்மையின்றி முற்றும் வண்ணம் தாவி அளந்த அச்சிவந்த அடிகள்) என சிலப்பதிகாரமும் கூறிற்று.

‘அடியளந்தான்’ என்றது தொன்மங்களில் கூறப்பட்டுள்ள திருமால் ஆகும்.

அடியால் திருமால் கடந்த உலகப்பரப்பு முழுவதையும் ஒருங்கே சோம்பல் இல்லா மன்னவன் அடைவான் என்பது இக்குறட்கருத்து.————–
தாடாளன் கோவில் – திருக்காழிச்சீராம விண்ணகரம்

சிறப்புக்கள்

  1. மஹாபலிச் சக்ரவர்த்தி யாகம் செய்த இடத்தில் தானும் யாகம்
    செய்யவிரும்பி விசுவாமித்திரன் ஒரு இடத்தை தெரிவு
    செய்ததாகவும், யாகம் முடியும் வரை இடையூறுகளைக் களைய
    இராம இலக்குவர்களைத் துணைக் கழைத்ததாகவும் வால்மீகி
    கூறுவார். அவ்விடத்திற்கு சித்தாஸ்ரமம் என்று பெயர். அந்த
    சித்தாஸ்ரமம் என்பது     இவ்விடம்தான் என்றும் சில
    ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். இவர்களின் ஆதாரத்திற்குத் துணை
    நிற்பது சித்தாஸ்ரமம் பாடலிகவனத்தில் அமைந்திருந்தது
    என்பதேயாகும். இருப்பினும் இது ஆய்வுக்குரிய விஷயமேயன்றி
    முடிவான உண்மையாக ஏற்றுக் கொள்ளுமாறில்லை.
  2. 108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை
    ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம்
    என்றால் விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம்
    என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

    1. பரமேச்சுர விண்ணகரம
    2. காழிச்சீ ராம விண்ணகரம்
    3. அரிமேய விண்ணகரம்
    4. வைகுந்த விண்ணகரம்
    5. நந்திபுர விண்ணகரம்

    ஆனால் விண்ணகர் என்னும் சொல்லை நம்மாழ்வார்தான் முதன்
    முதலாகக் கையாண்டுள்ளார். உப்பிலியப்பன் கோவிலை
    திருவிண்ணகர்     என்றே நம்மாழ்வார்     மங்களாசாசனம்
    செய்துள்ளார். ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் மேகவிடு
    தூது பாசுரத்தில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.

    எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக பொருளைக்கொள்ளையடிக்க
    முயன்ற திருமங்கையாழ்வார், பெருமாளை மங்களாசாசனம்
    செய்வதற்காக இச்சொல்லையும் “இலக்கிய கொள்ளை”
    கொண்டுவிட்டார்.

  3. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்
    செய்யப்பட்ட ஸ்தலம், மணவாள மாமுனிகளும் இரண்டுமுறை
    இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார்.
  4. ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை
    மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து
    தினமும் திருவாராதனம் முடித்து மீண்டும் தவிட்டுப்
    பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள். திருமங்கை
    யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில்
    வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு
    கூற அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே
    பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு
    “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற பெயரும் உண்டு.திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர்
    வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட
    ஆராதன விக்ரக வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க
    அவரது சீடர்கள் மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள்
    இருப்பதை அறிந்து அதனைப் பெற்று வந்து கொடுத்ததாகவும்
    கூறுவர்.
  5. ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி
    வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று
    நவாபின் மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும்,
    உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர
    படையாச்சி கனவிலும், அர்ச்சகரின் கனவிலும் வந்து தாம்
    இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக்
    கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
    அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப்
    பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன்
    என்று கூறினார். அவ்விதமே அவ்விருவரும் வரும்போது
    காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை
    அடைந்து.தாடாளா வா தாடாளா வா
    வெண்ணெய் உண்ட தாடாளா வா
    தாடாளா வா தாடாளா வா
    தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று கூற
    உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
    விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப்
    பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக்
    கொண்டுவந்து அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின்
    வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.
  6. திருக்குறளின் 610ஆம் பாடல் இப்பெருமானையே குறிக்கின்றது
    .மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தா(அ)யது எல்லாம் ஒருங்கு – குறள் 610
    தா அயது – தாவிய பரப்பு முழுவதும்
    அடி அளந்தான் – அடியால் உலகளந்த திருமால்
    திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற
    மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
    உலகளக்கத் திருமால் கொண்ட அவதாரம் த்ரிவிக்ரம
    அவதாரமாகும். இத்தலத்து எம்பெருமானின் திருநாமமும்
    திருவிக்ரமனாகும்.
  7. திருமங்கையாழ்வாரின் மேன்மைக்கும் புகழுக்கும் இத்தலம் ஒரு
    உந்துகோலாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
    ஞானசம்பந்தரை வாதில் வென்று     அவரது வேலை
    மங்கையாழ்வார் பரிசாகப் பெற்றது இந்த தலத்தில்தான்.
    திருமங்கையாழ்வார் வடதேச யாத்திரை சென்று இவ்வூரின்
    வழியாகத் திரும்பும் சமயம், அவரின் சீடர்கள் திருமங்கையின்
    பட்டப்பெயர்களை உரக்க கூவிக் கொண்டு வர அங்கு
    நின்றிருந்த சிவனடியார்கள் இப்போது ஞான சம்பந்தர் இங்கு
    எழுந்தருளியிருப்பதால் நீங்கள் யாரும் உங்கள் தலைவரின்
    விருதுப் பெயர்களை இங்கே கூவிக்கொண்டு செல்லலாகாது
    என்று கூற, இவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டு
    செல்வோம் என்று கூற வாதம் வளர்ந்து, இறுதியில்
    ஞானசம்பந்தரும், மங்கையாழ்வாரும் வாதுக்குத் தயாரானார்கள்திருமங்கையை நோக்கிய ஞான சம்பந்தன் உம்மைப் பெரிய
    வரகவியென்று விருதோதிச் செல்கிறார்களே, உம்மால் ஒரு குறள்
    சொல்ல முடியுமா என்று கேட்க, உடனே மங்கை மன்னன்,
  8. ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
    உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி – ஒன்றும்
    தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
    தாடாளன் தாளனைவீர் தக்க கீர்த்தி
    அருமறையின் திறன் நான்கும் வேள்வியைந்தும்
    அங்கங்கங்கள வைகளாறும் இசைகளேழும்
    தெருவில் மலிவிழா வளம் சிறக்கும் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மினீரே
    -என்று அவர் கூறிய குறள்
    என்னும் வார்த்தையையே கவியின் முதலடியாகக் கொண்டு,
    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எண்வரிசையிலும் பாடி
    தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பத்து
    அவதாரங்களை விளக்கி நிற்க, இத்திறன் கண்டு வியந்த
    ஞானசம்பந்தர் நாலுகவிப்பெருமாள் என்பது உமக்கே செல்லும்,
    விருதோதிச் செல்லும், விருதோதிச் செல்லும் என்று கூறி
    கையிலிருந்த வேலினையும் பரிசாகக் கொடுத்து திருமங்கையின்
    கால்களுக்கு தண்டை அணிவித்து மகிழ்ந்தார்.இதனால்தான் திருமங்கையாழ்வாரும் தாம் பிற ஸ்தலங்களைப்
    பாடிய பாக்களில் தமது ஒன்றிரண்டு பெயர்களை மட்டும்
    இணைத்துப் பாடி, இங்கே தம்மைத் தடுத்து தாம் வெற்றி
    கொண்டமையால் தனது 8 விருதுப் பெயர்களையும் கீழ்வரும்
    பாடலில் ஒருங்கே சொல்கிறார்செங்கமலத்து அயனனைய மறையோர் காழிச்
    சீராம விண்ணகர் என் செங்கண் மாலை
    அங்கமலத் தடவயல் சூழ் ஆலி நாடன்
    அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்
    கொற்றவேற் பரகலான் கலியன் சொன்ன
    சங்கமுகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்
    தடங்கடல் சூழலுகுக்குத் தலைவர் தாமே
    – என்றார்.

    திருமங்கை இப்பாடலில் குறித்துள்ள தமது பட்டப் பெயர்கள்
    1. ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார்சீயம்
    5. கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான்
    8. கலியன்.

  9. திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள்
    என்பது வரலாறிந்தார் கூற்று. மதத்தால் இருவரும் வேறு
    பட்டவராயினும் மனத்தால் “கற்றானைக் கற்றோனே காமுறுவான்”
    என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்கப் பேராவல்
    பூண்டவராயிருந்தனர் என்பதும்     ஒருவருடன்     ஒருவர்
    கன்னித்தமிழில் கலந்துரையாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர்
    என்பதும் கீழ்க்கண்ட இரண்டு பாக்களால் விளங்கும்.
  10. கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
    கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
    அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
    அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
    படியுண்ட பெருமானைப் பறித்து பாடி
    பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
    கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
    கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே
    என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு அதாவது தன்னைத்
    தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.
    உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள்
    உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர். இதுமுறையோ, எனது ஒரே
    மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று
    கூறும் வகையில் திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும்
    திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர்
    கூறினார்.இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக்
    கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப்
    பேச்சுப் பேசுகிறார்.திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
    உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக்
    கொண்டு தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.

    ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை
    என்பர் பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து
    காணாக் காதலுற்று பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட
    அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன். தாங்கள்
    மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை பிழைக்கச்
    செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட
    இதனைச் செய்ய முடியுமன்றோ, ஆனால் தங்களைக் காண
    விரும்பி நிலவில் வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி
    உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை நிலைக்கும் என்றார்.
    இதோ அப்பாடல்

    வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
    மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
    பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
    பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
    அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
    அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
    இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
    இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே
    – என்றார்.

    பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு
    வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில்
    (தாய்ப்பேச்சு, தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத்
    தமிழன்னைக்குச் சொருகி விட்டுச்சென்று விட்டனர்.


    ——————————————————–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வராஹ ஷேத்ரமும் ஸ்ரீ திவ்ய தேசங்களும்

March 28, 2024

ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவ -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8-8-

தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-

———-

ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

———

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-

————-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

————–

ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவரங்கன் -ஸ்ரீ வராஹன்- சேர்த்தி அனுபவம்-

‘என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

——-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ———45-

பண்டு ஒரு நாள் பூமியை ஸ்ரீ வராஹ ரூபியாய் எயிற்றிலே கொண்டவனுடைய மலை –

வேங்கடமே முன்னொரு நாளிலே-ஸ்ரீ வராஹ ரூபியாய்க் கொண்டு பூமியைத் தன் திரு எயிற்றிலே எடுத்து வைத்துக் கொண்டவனுடைய திருமலை –

பரன் சென்று சேர் வேங்கடம் -ஸ்ரீ வராஹ க்ஷேத்ரம் அன்றோ -வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை-என்கிறார்-மஹா வராஹா ஸ்புட பத்ர லோசனன்

———

ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க —
என் தலைவன் –வதரியாஸ்சிராமத்துள்ளானே –ஸ்ரீ பெரிய திருமொழி–1-4-1-

————-

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறு கீற
விடந்தானை வளை மருப்பின் ஏனமாகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-6-

————–

இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பினில் அகத்தொடுக்கி
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் திரு வயிந்திர புரமே-3-1-1-

————

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

————

வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண்ணெல்லாம் இடந்து எடுத்து —
தாள் அணைகிற்பீர் காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே -3-4-3-

———–

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக்குளம்பில் கண கணப்பத் திருவாகாரம் குலுங்க
நில மடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எங்கோமான் கண்டீர் —
நாங்கூர்த் திருத் தெற்றி யம்பலத்து என் செங்கண் மாலே — –4-4-8-

———-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை—நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-6-

———-

மண்ணிடந்து ஏனமாகி –நாங்கை மேய கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -–4-6-2-

——–

வாராகமதாகி இம்மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆராவமுதே அடியேற்கு அருளாயே –4-7-8–

———-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை —
தவமுடையார்கள் ஆள்வர் இக்குரை கடலுலகே –4-10-10-

———–

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே–
திரு வெள்ளறை நின்றானே —5-3-5–

———–

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர் தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளி யக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ –7-2-1-

————-

நரனே நாரணனே திரு நறையூர் நம்பி எம்பெருமான் உம்பராளும்
அரனே ஆதி வராகம் முனனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே -7-7-4-

——

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

———-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

———–

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி யொளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

————

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

—————-

கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர் –குறுங்குடியே –9-6-3-

————

ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னை யாளுடை
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே
தேன மாம் பொழில் தண் சிரீவர மங்கலத் தவர் கை தொழ வுறை
வானமா மலையே அடியேன் தொழ வந்தருளே –5-7-6-

———

என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே–8-4-3-

—————-

ஆழ்வார் திருநகரிக்கு தாந்தன் க்ஷேத்ரம் -வராஹ க்ஷேத்ரம் -சேஷ க்ஷேத்ரம் தீர்த்த க்ஷேத்ரம் ஆதி க்ஷேத்ரம் போன்ற பல பெயர்கள் உண்டு
வராஹ ஷேத்திரம்-வராஹ அவதாரத்தை காண விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் வந்து கடுந்தவம் புரியவே அவர்கட்கு வராஹ நாராயணன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சிகொடுத்த திருத்தலமாதலால் வராஹ ஷேத்திரம் என்ற பெயர் பெற்றது.
ஆதியில் தோன்றியதால் “ஆதி ஷேத்திரம்” என்றும், வராஹ ரூபத்தை காட்டியருளியதால் “வராஹ ஷேத்திரம் என்றும் ஆயிரம் தலை
கொண்ட ஆதிசேடன் உறங்காப் புளியாக அவதரித்தமையால் சேஷ சேஷத்திரமெனவும், தாமிரபரணியாலும், சங்கணித்துறையாலும் வளம்கெழுமிய
ஊராகையால் “தீர்த்த சேஷத்திரம்” எனவும், தாந்தன் என்னும் கீழ்குலத்தானுக்கு மோட்சம் நல்கியதால் தாந்த ஷேத்திரம் எனவும், இந்த
குருகூரை “பஞ்சமஹா ஷேத்திரம்” என்றும் பெரியோர் போற்றிப் புகழ்வார்.

————-———————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தசாவதார பரமான அருளிச் செயல்கள்/ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்

March 27, 2024
ஸ்ரீ தசாவதார பதிகங்கள்
பெரிய திருமொழி -8-8-/9-1/11-4/
————–
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  -பெரியாழ்வார்-1–5-10-
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3- 3-7 –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கூதும் மதிள் அரங்கம் என்பதுவே – 4-8- 8-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய் குறளாய்
மூவுருவில் ராமனாய் கண்ணனாய் கல்கியாய் முடிப்பான் கோயில்
சேவலோடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி யூசலாடி
பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி விளையாடும் புனல் அரங்கமே -4-9 9-
———–
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-
——-
அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே –திருச்சந்த விருத்தம் -35-
——————-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க்கு இன்னருள் புரியும் இடவெந்தை யெந்தை பிரானை
மன்னு மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே—2-7-10-
கெண்டையும் குறளும் புள்ளும்*  கேழலும் அரியும் மாவும்* 
அண்டமும் சுடரும் அல்லா*  ஆற்றலும் ஆய எந்தை* 
ஒண் திறல் தென்னன் ஓட*  வட அரசு ஓட்டம் கண்ட* 
திண் திறலாளர் நாங்கூர்த்*  திருமணிக்கூடத்தானே.  –4-5-6-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே –5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல்  வலவன் ஆலி நாடன் கலி கன்றி ஒலி செய்த இன்பப் பாடல்
ஒன்றினோடு நான்கும் ஓர்  ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகாளும் உம்பர் தாமே –7-8-10-

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலமான பாகவத கைங்கர்யத்துக்கு உறுப்பான ஐஸ்வர்யம் பெறப் பெறுவார்கள்
ஒன்றினோடு -வ்யூஹ மூர்த்தி
நான்கும் -2-4-5-10- விலங்கான ரூபமாகிய விபவ மூர்த்திகள் பாசுரங்கள்
ஓர் ஐந்தும் -கஜேந்திர ரக்ஷண /வாமன /ராம /கிருஷ்ண திரு வவதாரங்கள் பாசுரங்கள்-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே–8-6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே  –9-2-10-
குப்ஜா குள்ள மா மரமாகவும்
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10-நம்மாழ்வார்
எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——மூன்றாம் திருவந்தாதி -52-
மீனாமை கோலநெடு நரசிங்கமாகி நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு நாராயணாய நமவே (மகாபாரதம், சல்லிய பருவம். 1)
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
———-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம

——————————————————————————-

மீனோடாமை கேழல் கோளரியாய் வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில் துன்னிய பரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும் மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர் வானாரின்ப மிங்குற வருதி.” (மும்மணிக்கோவை. 4)

[கேழல் – வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி – பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்க வுற்றனை.– (நவமணிமாலை. 2)

(மகரம் – மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் – இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் – இரணியகசிபு, மதலை – பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் – அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் – இராவணன் ; வரை – கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)
——————

ஸ்ரீ ரெங்கம் தசாவதார சந்நிதி —
திருமங்கை -பாடியவாளன் படித்துறை -வாள் வீசும் பரகாலன் அன்றோ –
28 ஸ்தோத்ர நூல்களில் தசாவதார ஸ்தோத்ரம் ஓன்று
வர்ஷா பிந்து சத்தை பெற பெய்து கடலில் சேருவது போலே அன்றோ ஸ்தோத்ரங்களுக்கு பெருமை –
கொடி சுற்றி மரத்துக்கு சத்தை இல்லை -வாக்கு சுத்திக்கும் நம் சத்தையும் தானே ஸ்துதி
ஸ்ரீ ரெங்கநாதன் தானே இந்த தசாவதாரம் செய்து அருளினான் முதல் ஸ்லோகம்
10 ஸ்லோகம் 10 அவதாரங்களும்
ஒரே ஸ்லோகம் பத்துக்கும் சேர்த்து 12 வது ஸ்லோகம்
13 -பல சுருதி சொல்லி தலைக் கட்டுகிறார்

——————————————————————————————————-

தேவோ ந ஸூபமாத நோது தசதா நிர்வர்த்தயன் பூமிகாம்
ரங்கே தாமனி லப்த நிர்பர ரஸைர் அத்யஷிதோ பாவுகை
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ் வநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா -1-

யாருடைய அவதாரங்களில் ஸ்ரீ ரெங்க நாச்சியார் வெவ்வேறான பொருத்தமான அவதாரங்களை தானே எடுத்துக் கொண்டு
பல வடிவங்களை அவனது தர்மங்களோடு ஒத்த தர்மங்களுடன் இவ்வுலகில் விளையாடுகிறாளோ
அந்த அரங்கன் பத்து வித அவதாரங்களின் வேஷத்தை எடுத்துக் கொண்டு முழுமையான மகிழ்ச்சி அடைந்த பக்தர்களால்
திருவரங்கம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் காணப்படுபவனான திருவரங்கன் நம் எல்லாருக்கும் மங்களத்தை அருள வேண்டும் –

தேவோ-விளையாட்டுடை -திவு காந்தி தேஜஸ் –
ந ஸூபமாத நோது -ஸூபம் ஆத நோது -விஸ்தாரமாக ஸூபம் கொடுக்கட்டும் –
தசதா நிர்வர்த்தயன் பூமிகாம் -பத்து விதமாக வேஷம் எடுத்து கொண்டு -பூமிகா -அவதாரம் -மூர்த்தி பேதம் —
ரங்கே தாமனி -நாடக மேடை ஸ்ரீரங்கம்
லப்த நிர்பர-கிடைக்கப் பெற்ற பூரணமான
ரஸைர் அத்யஷிதோ பாவுகை-ரசிகர்கள் -ஸ்ரீ ரெங்க வாசிகளால் – -சேவிக்கப் பெற்றவர் யாரோ
யத் பாவேஷூ ப்ருதக் விதேஷ்வ-வேவேறே விதங்களில் அவனுக்கு தக்க
அநுகுணான் பாவான் ஸ்வயம் பிப்ரதீ -அனுகுண மாக தானும் எடுத்துக் கொண்டு
யத் தர்மை மிக தர்மிணி விஹரதே நாநா க்ருதிர் நாயிகா-பஹு வித ரூபங்களை கொண்டு ஆனந்த ரசம் அனுபவிக்கும்

சகல மனுஷ நயன விஷயம் ஆவதற்கு -அவதாரணம் -இறங்கி -இடமும் -நிலையம் – -அவதார கந்தம் பாற் கடல் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராபதி நிகேதன–இத்யாதி –
பெருமைகளில் ஒன்றும் குறையாமல் -அவதரிக்கிறார் -அஜோபிசன்-இத்யாதி – -ஆமையான கேசனே –
முதல் அவதாரம் பிரதமஜ விஷ்ணு -இணைவனாம் இருவர் அவர் முதல்வர் தாம் –
புராணம் வராஹர் முதல் அவதாரம் -ஸ்ரீ பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வது
கிணற்றில் விழுந்தாரை தூக்கி எடுக்க அன்றோ அவதாரம் -கிருபையா கேவலம் -கோரம் அனந்தர சம்சார சாகரம் –
நாடக மேடை -அரங்கம் -ஸுசீல்ய குணம் வெளியிட்டு அருள
ஸ்ரீ ரங்கம் பிராட்டி க்காக அவன் இருக்கும் திவ்ய தேசம் -காவேரி தாயார் -சீர் கொடுக்க பாரித்து வந்து –
மணல் மேட்டில் பெண்ணையும் மாப்பிள்ளையும் வைத்து –
அவதாரமே வேஷம் தானே -மறைத்துக் கொண்டு அவதரிக்கிறார் –
வில்லால் அன்றோ ஆணை கட்டினான் -குரங்குகளை கொண்டு -வேஷம் இருந்தாலும் பரத்வம் பீறிடுமே
அவன் திரு மேனியே ஸூ பாஸ்ரயம் -ஞானம் தானே ஸூ பம் -ஆனந்தம் ஸூ பம் –
அவன் ஒளியால் அவனே சேவை சாதிக்கிறான் அவள் உடன் சேர்ந்து -நாம் ரசிக்க -மேகம் மின்னல் –
பரிபூரணமான ரசம் -அனுபவிக்க தெரிந்த -அவனே பிரதானம் இவர்களுக்கு –
180 நாள் புறப்பாடு உள்ள திவ்ய தேசம் அன்றோ -சதா பஸ்யந்தி பண்ணுபவர்கள் -மால் கொள்ளும் சிந்தையர்கள் –
கண்ண நீர் சேறு -அவனுக்கே பித்தராவார்கள் –
பதின்மர் பாடும் பெருமாள்
ராக்வத் சீதை – கிருஷ்ணன் நப்பின்னை –வராகன் பூமி பிராட்டி –தேவ்தவே தேவி -யத் பாவேஷூ-மனசுக்கும் அணு குணமாக
-அதே தர்மம் உதவ -கிருபை ஆன்ரு சம்சயம் -புருவ நெருப்பே பிரமாணம் –

ஸூபம் சொல்லி அருளும் ஸ்லோகங்கள் என்பதால் அரக்கர் அசுரர் வார்த்தைகளே இல்லையே –

———————————————————————————–

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா தத்த ஷணைர் வீக்ஷணை
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் யவ்தன்வா தீ நா மபாம்
நிஷ் ப்ரத்யூக தரங்க ரிங்கண மித ப்ரத்யூட பாதஸ் சடா
டோலாரோஹ சதோ களம் பகவதோ மாத்ஸ்யம் வபு பாதுந–2-

கடலுக்குள் மூழ்கிய வேதத் தொகுதிகளைத் தேடும் வேளையிலே கறுத்துப் பொதிந்த -திருக் கண்களின் கடாக்ஷங்களால் –
கடலின் நீருக்கு உள்ள தாமரைக் கூட்டங்களைப் படைப்பது போலே தடை இல்லாத அலை வீசுதலால்
ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்ட நீர்த் தொகுதி என்னும் ஊஞ்சலிலே ஏறுவதில்லை உத்ஸாகம் கொண்ட
எம்பெருமான் மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் –

நிர்மக்ந ஸ்ருதி ஜால மார்க்கண தசா -ஆழ்ந்த -அமிழ்ந்த வேதக் கூட்டங்கள் -தேடும் அவதாரம்
ஹயக்ரீவன் அசுரன் கடலிலே மறைக்க -மத்ஸ்ய மூர்த்தி அவதாரம் அன்றோ
தசா -நான்கு திசைகளிலும் -மீனுக்கு கண்கள் சுழலும்
தசா தத்த ஷணைர் வீக்ஷணை -தேடும் கண்கள் -கவனத்துடன் -பார்வைகளால் -தேட
அந்தஸ் தன்வ திவாரவிந்த கஹா நான் -உள்ளே -அரவிந்த கஹானான் தாமரைக்கு காடு ஆனதே -உருவாக்கும் படி –
கப்யாசம் புண்டரீகாக்ஷணம்
யவ்தன்வா தீ நா மபாம்-சமுத்திரம் -ஆப தண்ணீர் உடைய
நிஷ் ப்ரத்யூக தரங்க-தடங்கல் இல்லாத அலைகள் -கரையே இல்லையே பிரளயத்தில்
ரிங்கண மித ப்ரத்யூட -ஒன்றுக்கு ஓன்று மோதிக் கொண்டு -மேலே எழும்பி
பாதஸ் சடா -பய சமூகம் தண்ணீர் கூட்டம்
டோலாரோஹ சதோ களம் பகவதோ -டோலோஸ்த்வம் -பிரளயம் அன்றோ –தானே ஏற்பாடு -செய்து கொண்டு அருளி –
ஊஞ்சல்-ஆரோஹனம்-சதோ கதம் -பாட பேதம் -ஆசை உடைய -ஸ்ரீ ரெங்கநாதனுடைய
வால் பகுதி கொண்ட அசைந்து செதில்கள் அசைந்து -பெரிய திரு மேனி
மாத்ஸ்யம் வபு-திருமேனி -மத்ஸ்ய அவதாரம்
பாதுந-நம்மை ரக்ஷிக்கட்டும் –

சாளக்கிராமம் திரு மேனி -மத்ஸ்யம் -கண்களால் ரக்ஷணம் -நைமித்திக பிரளயம் மூன்று உலகம் -ப்ரஹ்மா தூக்கம் –
வேதம் கண்கள் போலே ப்ரஹ்மாவுக்கு -மூச்சுக்காற்று -அந்தணர் மாடு -ஹயக்ரீவன் அசுரன் திருடி போக
உச்சாரண அநு உச்சாரண -சப்த ரூபம் -பிரளயத்தில் மறைக்க -மீனாக தானே அவதரிக்க வேண்டும் –
நேராக பெரிய திரு மேனி கொள்ளாமல் -சத்யவ்ரதன் ராஜ ரிஷி உதவ -க்ருதமாலா நதி –
காவேரி பயஸ்வினி கொசித்-கொசித் -திராவிடேஷூ -பிரமாதாக்கள் அவதாரம் இங்கே
க்ருதமாலா நதி கரையில் நித்யப்படி ஜல தர்ப்பணம் பண்ண -சிறு குட்டி மீன் கையிலே வர –
விடும் பொழுது பேசி -தீன வத்சலா -என்று கூப்பிட்டு –
வியப்பாயா வியப்பு தத்ர ஏக ராத்திரியில் வர்த்தமான கமண்டலம் -அளவு வளர்ந்து -ஒரே முஹூர்த்தம் ஹஸ்த த்ரயம் அளவு வளர்ந்து –
சரோவரில் விட -அது போகாத படி வளர்ந்து -பெரிய ஏரி கடல் -சமுத்திரம் அளவு வளர -யோஜனம் சத்தம் 800 மைல் -அளவு
-ஹரி நாராயணன் புரிந்து கொண்டார் –
7 நாள் உனக்கு கர்தவ்யம் உண்டு -பிரளயக் கடலில் மூழ்கும் ரக்ஷிக்க வேண்டும் -என்னால் தூண்டப்படும் படகு-ஒற்றைக் கொண்புடன் வர
வாசுகி பெரும் பாம்பை கொண்டு என்னை கட்டி -ஒன்றைக் கொம்பால் -மத்ஸ்ய புராணம் –கட்டுவிக்க
இந்த முடிச்சு சம்சார முடிச்சு அவிழ்க்க -மாயா மத்ஸ்யம் உபதேசிக்க -சத்யாவிரதர் –
திரு நறையூர் பதிகம் –கொழும் கயலாய் –விளையாடும் ஈசன் -எழுந்து இனிது விளையாடும் –
வானோர் அளவும் -முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவில் -மீனாய் வந்து உய்யக் கொண்ட -தண் தாமரைக் கண்ணன்
-இத்தையே தேசிகன் -பார்த்த இடம் எல்லாம் தாமரை ஆனதே
அலை கடல் -நீர் குழம்ப –அக்கடாத ஓடி -வரு மீனை -மறவாது நினை இறைஞ்சு என் நெஞ்சே –
வேத அபஹார -குரு பாதக –தைத்ய பீடா -ஆபத் விமோசன -பிரஜா பதி உமா பதி இந்திரா பதி -ரமாபதி அனுக்ரஹித்து
வேதம் பரம சஷூஸ் -கண்ணைத் தொலைத்தார் -மீனாக
கடல் நிசப்தம் என்பதால் மறைத்து வைத்தான் ஸ்ருதி ஸ்ம்ருதி என்பதால்
கண்ணை சிமிட்டாமல் -மீன் -கவனம் -இமையவர் இப்படியே -ஸ்வா பாவிக-
ஆமை நினைவால் ரக்ஷிக்கும் / சம்ஸ்பர்சம் -பறவை ரக்ஷிக்கும் /சங்கல்ப சூரியோதயம்

———————————————————————————————–

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம நிப்ருதம் கண்டூயா நைரத்ரிணா
நித்ரா ணஸ்யா பரஸ்ய கூர்ம வபுஷோ நிஸ் வாஸ வாதோர் மய
யத் விஷே பண சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள பர்யங்கிகா
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே தேவ சஹவை ஸ்ரியா -3-

மலையோடு அழுந்த சொரிந்து கொண்டதால் உறங்குகின்ற ஆமை வடிவமான பரம புருஷனுடைய
எந்த மூச்சுக் காற்றின் அவைகளின் எழுச்சியால் அசைக்கப் பெற்ற கடல் நீர் ஆகிய அசையும் கட்டிலில்
எப்பொழுதும் ஏறி இருப்பதால் இன்பம் உற்று பிராட்டியுடனேயே விளையாடுகிறானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –

அவ்யா ஸூ ர் புவந த்ரயீ ம-மூன்று உலகத்தையும் ரக்ஷிக்கட்டும் -வேதமே மூச்சு காற்று –
பிராண வாயுவாக பெருமாள் ரக்ஷிக்கட்டும்
நிப்ருதம் -எப்போதும் மலையாலே
கண்டூயா நைரத்ரிணா -சொரிதல் –
நித்ரா ணஸ்யா -நன்கு தூங்க
பரஸ்ய கூர்ம வபுஷோ -பெரிய பெருமாள் -ஆமையான கேசனே -லக்ஷம் யோஜனை
நிஸ் வாஸ வாதோர் மய-நிஸ் வாசம் உஸ் வாசம் –
யத் விஷே பண-காற்று வெளி வர -அலைகள் கிளம்பி
சம்ஸ் க்ருதோ ததிபய ப் ரேங்கோள-அசைகின்ற
பர்யங்கிகா -படுக்கையில் -கடல் அரசன் கைங்கர்யம் -வேதப்படுக்கை என்றுமாம்
நித்ய ஆரோஹண நிர் வ்ருதோ விஹரதே -ஸ்திரமான
ஆரோஹண –அங்கு உஊஞ்சல் -நித்யம் சொல்ல வில்லை -இங்கு ஆமை என்பதால் -நித்யம் –
ஸூ கப்பட்டு -பிராட்டி ஈன்று எடுத்த தாயார் தானே திருப் பாற் கடல்
தேவ சஹவை ஸ்ரியா-நித்ய கச்சபை – ஆமையான ஸ்ரீ யபதி –
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக்க அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து திரிந்த வித்தகன் கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -ஆமையாய் –முந்நீர் –
வேதம் ரக்ஷிக்க மத்ஸ்யம்
அதுவே தனமாக கொண்ட தேவர்களுக்கு ஆமை
பர்வதம் பாக்யம் பெற்றதே ஸ்பர்சத்தாலே –
நன்கு தூங்கி மூச்சு விட –

மீனுக்கு உடம்பு எங்கும் தண்ணீர் போலே எங்கு தொட்டாலும் மஹா லஷ்மி –
உத்ஸாஹமாக விளையாடி -இதுவே வாழ்க்கை கை கொள்ள வேண்டும் –
ஸ்ரீ கூர்மம் -கை கால் மறைத்து -இந்திரியங்கள் பாடு போக்க -விஷய ஸூ கம் தேடித் போகாமல் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –
ஊஞ்சல் உத்சவம் -பர்யன்காசனம் அடுத்து -புறம் சூழ்ந்து காப்ப-ஆதி சேஷன் மட்டுமா கைங்கர்யம் செய்ய வேண்டுமோ –
திருப் பாற் கடல் -காட்டில் -அம்ருத மதனம் காலம் -இதிலும் வாசுகி கைங்கர்யம் உண்டே -கயிறாக –
பல தலை பாம்புகளில் ஆதி சேஷன் சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன் என்பான் கீதையில் –
மந்தர பர்வம் -தங்கி கொள்ள -ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி–அப்பன் சாறு கொண்ட நான்றே
தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி -தோள்கள் ஆயிரத்தாய் —
கொசித் –நிறைய நடக்க -வைகுண்ட கபடம் குதிரை யானை அமிருதம் சந்திரன் -கவலை படாமல் தூங்க
-பிராட்டி வந்ததும் முழித்து அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த பெம்மான் -சங்கல்ப சூரியோதயம்
பச்யதாம்-பெண்களுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கம் இல்லையே -பட்டர் புருஷோத்தமன் அவன் மட்டும் தானே
கட்டில்-இருந்தால் மிதுனமாக இருக்க வேண்டுமே –

————————————————————————————————————

கோபா யேதநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட பிரளய யோர்மி கோஷ குருபீர் கோணா ரவைர்க்குர்குரை
யுத்தம் ஷ் ட் ராங்குர கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ் திதி
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -4-

யாருடைய கோரைப்பல் ஆகிய முளையின் நுனிப்பகுதியை இறுகப் பற்றியதால் எப்பொழுதும் அசையாது
நிலையாய் நிற்கும் பெருமை உள்ள இந்த பூமி தேவி கோரைக் கிழங்கு போல் நின்று
பிரமன் முதல் பீபிலி வரை எல்லாவற்றையும் படைத்தாளோ
யார் பிரளய காலத்தில் கடல் அலைகளின் ஒலியைப் போலே பெரிய குர் குர் என்ற மூக்கின் ஒலியால்
ப்ரஹ்மாண்டங்களைப் பரிசுத்தம் ஆக்கினானோ போலியான மஹா வராஹ வடிவம் கொண்டவனுமான
அந்த எம்பெருமான் உலகங்களை எப்போதும் ரக்ஷித்து அருள வேணும் –

கோபா யேதநிசம் ஜகந்தி-அனைத்து உலகத்தையும் ரக்ஷிக்க வேண்டும்
குஹநா போத்ரீ -வேஷம்
பவித்ரீ க்ருத -ப்ரஹ்மாண்ட- பவித்ரம் அடைந்தது
பிரளய யோர்மி கோஷ குருபீர்-பிரளய கடல் அலையில் பேர் இரைச்சலை ஒன்றும் இல்லாத படி
கோணா ரவைர்க்குர்குரை-குரு குரு சப்தம் -மூச்சு காற்று -இதுவே நம்மை ரக்ஷிக்கட்டும் –
யுத்தம் ஷ்ட்ராங்குர -கோரை பல்லின்
கோடி காட கடநா நிஷ் கம்ப நித்ய ஸ்திதி -நுனியில் -நன்கு சேர்ந்து -ஸ்திரமாக -அசையாமல் -நடுக்கம் இல்லாமல்
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸுதஸு -கோரிக் கிழங்கு இன்றும் ஸ்ரீ முஷ்ணம் -முஸ்தா-முளை தான் ப்ரஹ்மா –
ஜகத் காரணம் ஸ்ரீ வராஹம் என்றவாறு
பகவதீ முஸ் தேவ விஸ்வம்பரா -கல்யாண குணங்கள் படைத்தவள் -பூமி பிராட்டி

ஸ்ரீ வராஹ அவதார அனுபவம் -சனகன் சனத்குமாரர் நால்வரும் -ஜய விஜயர்கள் -சாபம் –
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் -சேர்த்தி அனுபவம் –
கோலா வராகம் -ஏனமாய்-க்ரோட – வராஹ –
கேழலாய் உலகம் கீண்ட பூ கெழு வண்ணனாரை -போதரக் கனவில் கண்டு —
வாக்கினால் மனத்தினால் கருமம் தன்னாலே
வேட்க்கை மீதூர வாங்கி-ஆண்டாள் போலே கலியன் திருக் குறும் தாண்டகம் –
ரகஸ்ய சிகாமணி -ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம் விளக்க தேசிகன் அருளிச் செய்து –
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -வையம் முற்றும் ஏனத்து உருவாய் இடந்த பிரான் –
-வானத்தவர்க்கும் -எல்லா எவர்க்கும் ஞானப் பிரான் அல்லல் இல்லை நான் கண்ட நல்லதுவே
பட்டர் -தசாவதாரம் பற்றி அருளிச் செய்த வார்த்தை -ஸ்மரிப்பது
ஸ்ரீ கூர்மம் -ஸ்ரீ தேவி அடைய -ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பூமி பிராட்டியை பெற -எங்கும் தம் கார்யம் –
பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் ஒருங்கே -சிலம்பினை சிறு பரல் போலே -மேரு கண கணப்ப —
கோமான் -மஹா வராஹ ஸ்புட பத்ம லோசனன்
யஜ்ஜை வராகன் -ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் -இடந்தமை குலுங்கவோ -குடந்தையுள்-கிடந்தவாறு –
ஆயாசம் தீர -பேசு வாழி கேசனே
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே –
பாசி தூர்த்து கிடந்த -மாசு உடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாய் -பேசி இருப்பதுவும்
ரஷ்யத்தில் உள்ள பாரிப்பு -அடியார்க்கு என் செய்வான் என்று இருத்தி
கோலா வராகம் ஒன்றாய் -திருவாய் மொழி இறுதியிலும் ஆழ்வார் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
பொழில் எழும் ஏனம் ஒன்றாய் கோட்டின் நுனியில் வைத்தாய் –நுன பாதம் சேர்ந்தேன் –
ஏரார் உருவில் எடுத்த ஆற்றல் அம்மானே –ஸ்வேத வராஹம் கல்பம் -திரு வெள்ளறை ஸ்வேத கிரி சிபி சக்கரவர்த்தி
ஆதி முன் ஏனமாகி –நம்மை ஆளும் அரசே
ஜகத் சர்வம் சரீரம் -பூமி கோரைப் பல்லின் நுனியில் ஒட்டிக் கொண்டு -சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம்
உச்சாரணம் -குரு குரு சப்தம் ஆச்சார்ய க்ருத்யம் -சப்தம் மூ உலகும் வியாபித்து -நித்ய ஸூ ரிகள்-வந்து சேவிக்கும் படி
ப்ரஹ்மாண்டம் பவித்ரம் ஆக்கியது நிர் ஹே துகமாக தம்முடைய பேறாக -நிர் வியாஜ கிருபை
தாய் -குழந்தை -எவ்வுயிர்க்கும் தாய் அன்றோ –
விஸ்வம் பரா -ஸ்ரீ பாதுகா சகஸ்ரம் -விஸ்வம் பரா பரா -அவன் -ஆழ்வார் விஸ்வம் பரா பரா பரஸ்ய —

—————————————————————————————————————–

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம க்ஷணம் பாணி ஜை
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய குண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவா
யத் ப்ராதுர் பவநாத வந்த்ய ஜடரா யாதிருச்சிகாத் வேத சாம்
யா காசித் ஸஹஸா மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத் –5-

எதிர்பாராது உண்டான எவனுடைய அவதாரத்தால் ஏதோ ஒரு பெரிய அசுரனுடைய வீட்டின் தூண்
மலட்டுத் தன்மை நீங்கி உடனே பிரமனைப் பெற்ற பாட்டியாக ஆயிற்றோ
க்ஷண நேரத்தில் -யார் தனது திருக் கை திரு நகங்களால் மறுக்கப் பட்ட பழைமையான திவ்ய ஆயுதத்தின்
கூட்டத்தை உடையவனாயும் வீணாகாதே சக்தி உடையவனாகவும் ஸ்ரீ நரஸிம்ஹ திவ்ய வடிவு கொண்டவனாயும் உள்ளானோ
அந்த எம்பெருமான் மூன்று லோகங்களையும் ரக்ஷித்து அருள வேண்டும் –

ப்ரத்யா திஷ்ட புரா தன ப்ரஹரண க்ராம-தள்ளப் பட்ட பழம் காலத்து திவ்ய ஆயுதங்கள் ஒதுங்கப் பட்டன –
க்ஷணம் பாணி ஜை-கையில் இருந்து பிறந்த நகங்கள் இருப்பதால் மற்ற திவ்ய ஆயுதங்களை
ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்க சொன்னானாம் –
அவ்யாத் த்ரீணி ஜகந்த்ய -மூ வகை லோகங்களையும் க்ருத அக்ருத க்ருதாக்ருத -ரக்ஷிக்கட்டும்
அகுண்ட மஹிமா -தடை யற்ற மஹிமை
வைகுண்ட கண்டீரவா -ஸ்ரீ வைகுண்ட ஸிம்ஹன்-பாலும் சக்கரையும் கலந்தால் போலே –
யத் ப்ராதுர் பவநாத-வெளித்தோற்றம்
அவந்த்ய ஜடரா-மலடி இல்லாத வயிறு
யாதிருச்சிகாத் வேத சாம் -யதேச்சை பெருமாள் -ப்ரஹ்மாக்களுக்கு பாட்டியாக -இச்சை -அதிதி திதி பார்க்காமல் வருவார்
யா காசித் ஸஹஸா -த்வரையால்-அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான்
மஹா ஸூர க்ருஹ ஸ்தூணா பிதா மஹ்யா பூத்-தூண் பாட்டி ஆனதே உலகத் -தாத்தாவுக்கு பாட்டி இது தானே -அபூத்-ஆனதே
பிதாமகன் ப்ரஹ்மா -பெற்றவர் நாராயணன் -அவனை பெற்றதால் –
பேரன் பிறந்த பின்பு பாட்டி பிறக்கும் அக்கடிதகடனா சாமர்த்தியம் -ஸ்தம்பம் சொல்லாமல் –ஸ்தூணா ஸ்த்ரீ லிங்க சப்தம்

நார சிம்ஹ வபு ஸ்ரீ மான் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மன் -அழகியான தானே அரி உருவம் தானே –
வரத்தினில் சிரத்தை வைத்து —
கயாது-கர்ப்பத்தில் பிரகலாதன் -நாரதர் மூலம் -கர்ப்ப ஸ்ரீ மான் ஆனான் -கருவிலே திருவிலாதீர் காலத்தை கழிக்கின்றீரே-
கருவரங்கத்தில் இருந்து கை தொழுதேன் -சரவணம் கீர்த்தனம் –நவ வித பக்தன் –
நானும் சொன்னேன் நமரும் சொல்மீன் -நாராயணா என்னும் நாமம் –
எங்கும் உளன் கண்ணன் –அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே வாள் உகிர் சிம்ஹ உருவாய் உளம் தொட்டு –
ஹிரண்ய வைத்த -புறப்பட்டது செங்கண் சீயம் -அங்கோள் ஆளரியாய் –சிங்க வேழ் குன்றமே –
ஆழ் துயர் செய்து -பிளந்து வளைந்த உகிர் -பரியனாகி -பள்ளியில் ஓதி –தெள்ளிய சிங்கம் -உளம் தொட்டு
தீய புஞ்சிக் கஞ்சன் -நினைத்த கருத்தை பிழைப்பித்த -சிந்தையினால் இகழ்ந்த இரணியன் -வரம் கெடுக்காத வரம் கேட்டான்
குலத்து உதித்தோரை கொல்லேன் -விரோசனன் பிள்ளை மஹா பாலி பிரகலாதன் பேரின்
நாதனை நரசிங்கனை –ஏத்தும் பாத தூளி படுத்தலால் பாக்கியம் செய்தது –

—————————————————————————————————————

வ்ரீடா வித்த வதான்ய தாநவ யசோ நா சீர தாடீ பட
த்ரை யக்ஷம் மகுடம் புநன் நவது நஸ் த்ரை விக்ரமோ விக்ரம
யத் பிரஸ்தாவ சமுச்சரித த்வஜ படீ வ்ருத்தாந்த சித்தாந்திபி
ஸ்ரோதோபி ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே –6-

எதன் ஆரம்பத்திலேயே உயர ஏற்றப்பட்ட கொடி வஸ்த்ரத்தின் செய்தி பரப்பும் செயலை வெள்ளங்களாலே தேவ கங்கை
(திருவடி உயர ஏற்றிய கொடி ஸ்தானம் -தேவ வெண் கங்கை வஸ்திரம் ஸ்தானம் -)
ஆறு எட்டு திசைகள் ஆகிய மேல் மாடங்களிலே விரைவாக ஆடுகிறதோ
வெட்கத்தால் மனம் வருந்திய பெரிய கொடையாளியான மஹா பலி என்னும் அசுரனுடைய புகழ் ஆகிய சேனையின்
முன் செல்லும் சேவகன் போலே மூன்று கண்களுடைய சிவனின் முடியைத் தூய்மை ஆக்கிய
த்ரிவிக்ரமனுடைய திருவடிகள் நம்மை ரக்ஷித்து அளிக்கட்டும்

வ்ரீடா வித்த வதான்ய தாநவ-மஹா பலி புகழை பரப்ப
லஜ்ஜை வேட்க்கை -யால் பீடிக்கப் பட்ட பெரும் கொடை வள்ளல் -மஹா பலி -கொஞ்சமாக கொடுத்தோம் என்று
அன்றோ வெட்க்கினான் -இத்தாலேயே மூவடி கேட்ப்பாய் என்று நினைத்தான் -காமரு சீர் அவுணன்
யசோ நா சீர தாடீ பட -ஓடுகிற வேகம் -கட்டியம் சொல்லி பின்னே வரும் புகழை சொல்லிக் கொண்டே போனதே திருவடி –
அக்ர பாகம் -நுனிக்கு முன்னே போகும் -எச்சரிக்கை சொல்லிக் கொண்டே -புகழை சொல்லவே திருவவதாரம்
-அளக்கவே தானே புகழ் பரவிற்று -பறை சாற்றி போனதே
வதா அந்நிய வேறு கேளு என்றுமாம் –
தீர்த்தங்கள் இரண்டுக்கும் போட்டி என்றுமாம்-
த்ரை யக்ஷம் -முக்கணான்
மகுடம் புநன் நவது நஸ் -முடியை புனிதம் ஆகிற்றோ -ச சிவ சிவ பூத் -ஆளவந்தார்
த்ரை விக்ரமோ விக்ரம -மூன்று அடிகள் -ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியம் -அப்பன் –உலகம் கொண்ட வாறே –
ஆழி எழ –ஸ்வஸ்தி -வாழி சொல்ல
முன்பு சொன்னவை மூன்று அடிக்கு விசேஷணங்கள்-
விக்ரம-வைத்த அடி -திருவடி பதித்த
யத் பிரஸ்தாவ சமுச்சரித -பிரஸ்தாவம் தொடங்கி-உயர்ந்து எடுத்துக் கட்டப்படட
த்வஜ படீ-கொடிகள் எட்டு திக்குகளிலும் கங்கை நீர் இந்த புகழுக்கு -ஆகாசத்தில் ஓடும் கங்கை நீரை கொடி போலே
ஒல்லை வா என்று கூப்பிடுவது போலே மிதிலை கொடிகள் இருந்தனவே –
கோவலன் -இங்கே வராதே என்று சிலப்பதிகாரம் -தார் குறிப்பு ஏற்று அணி -அலங்கார சாஸ்திரம் –
வ்ருத்தாந்த சித்தாந்திபி -சரித்திரம் -போன்ற -உயர்ந்த கோடி போன்ற ஒப்பானவை –
ஸ்ரோதோபி-ப்ரவாஹங்களினால்
ஸூர சிந்துரஷ்ட ஸூ திஸா ஸுதேஷூ தோ தூயதே
தேவ கங்கை -அஷ்ட ஸூ எட்டு திசைகள் அசையும் -திஸா ஸுதேஷூ மொட்டை மாடிகள்
அவது- இப்படி பண்ணிய திருவடிகள் எங்களை ரக்ஷிக்கட்டும் –
மூன்று லோகம் காக்க நரசிம்மர் இடம் அபேக்ஷித்தத்தை திரிவிக்ரமன் நிறைவேற்றினான் -என்றுமாம்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் அபேக்ஷிதத்தை திருப் பாண் ஆழ்வார் இடம் கொடுத்தால் போலே –

கவி தார்க்கிக ஸிம்ஹம் அன்றோ -மஹா பலி உதார குணம் புகழ் பரவ -திருவடி தாவி விரைந்து அளக்க –
உபேந்த்ரன் — வாமனன் — அதீந்த்ரன் -தேவ யோனி எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் –
சுருக்குவார் இன்றியே சுருங்கி -பெருக்குவாறும் இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய் – ஓங்கிஉலகு அளந்த உத்தமன்
நித்ய ஸ்ரீ இருக்கவே ப்ரஹ்மச்சாரியாய் போவதே
அலம் புரிந்த நெடும் கை கொண்டு இரப்பதே-வாங்கிப் போவார்களா உதாரர் என்றவன் தானே இரப்பதே –
புலன்களை வாமனன் போலே சுருக்கினால் பக்தி ஞானம் ஓங்கி வளரும் –
வாமானி சுகானி நியதி -ஸூ கங்களை கொடுப்பவன் தன் திருவடிகளை சேவிப்பார்களை
கோட்டங்கை வாமனன் செய்த கூத்துக்கள் -கை நீட்டி பழகி கொண்டே போனானாம் –திரட்டுப்பால் -போலே அன்றி –
சுக்ல பக்ஷ த்வதசி விஜயா முகூர்த்தம் -காயத்ரி மந்த்ரம் சூரியன் உபதேசிக்க -பிரஜாபதி -தானே வந்து பிரஹஸ்பதி பூணல் கொடுக்க
-பூமி மான் தோல் கொடுக்க -தண்டம் சந்திரன் -அதிதி குடை -கமண்டலம் ப்ரஹ்ம -தர்ப்பங்கள் சப்த ரிஷிகள் குபேரன் பிக்ஷை பாத்திரம்
உமா பிக்ஷை ஐடா -பிறந்தார் அன்றே உபநயனம் -அன்றே 7 வயசு -ஆல மரத்தின் விதை–
அரும் குறள் ஆனான் -நீல நிறத்து நெடும் தொகை அன்றோ –
நர்மதா நதிக் கரையில் யஜ்ஜை வாடம்-இருந்ததாம்
கொள்வன் நான் –மாவலி -மூவடி –
சுக்கிரன் அன்னை துரும்பால் கிளறின சக்கரக் கையன் -ஒண் மிதியில் –அப்பால் மிக்கு -தாவி -உலகம் -கொண்டான்
-சலம் பொதி உடம்பு சந்திரன் வெங்கதிர் அஞ்ச –மால் புருடோத்தமன் வாழ்வு –
நாரணம் பாத துழாய் கொன்றை மலர் கலந்து இழி புனல்
சது முகன் கையில் –சதுர் புஜன் தாளில் சங்கரன் சடையில் தங்கி ஜடா தரன் கங்கா தரன்
அந்தரம் –பாதம் நம்மை ஆளும் அரசே -மதியினால் குறள் மாணாய-நிமிர்ந்த நீல் முடியின்
ஓ மண் அளந்த தாளாளா-நின் முகம் கண் உளவாகில் நீ இங்கே நோக்கிப் போ
சிறுவன் வார்த்தையை தன்னை மாவலி இடம் சென்று கேள் –
திருவோணத்தான் உலகு ஆளும் -வருக நம்பி வாமன நம்பி -வாமணாஸ்ரமம் -பக்ஸர் சித்தாஸ்ரமம் –
ஆகாச கங்கை நாலாக பிரிந்து ஓன்று துருவன் மேலே தங்க
மூன்று ஆகாசம் பூமி அந்தரிக்ஷம்
ஆகாச கங்கை சிவன் பெற்று சிவன் ஆக –
பின்பு ஏழாக பிரிந்து -இவ்வளவுக்கும் பேர் உண்டே
ஒன்றை பகீதரன் பிரார்த்தித்து -சாப விமோசனம் பெற பாகீரதி அலக்நந்தா ஜங்கவி
கங்கை -வாசகத்தால் கடுவினை கடுவிக்கும்

————————————————————————————————————–

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத்
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் த்ரி சப்த க்ருதவ ஷிதிம்
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் ஆஸ்கந்தய சிந்தும் வசந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி –7-

எந்த முனிவர் தனது தந்தையான ஜமதக்னி முனிவரைக் கொன்றதால் உண்டான கோபக்கனலை திருப்தி செய்வதற்காக
இந்த பூமியை இவ்வுலகில் மன்னர் குலமே இல்லாதபடி 21-தலை முறைகள் வரிசையாக வெட்டி எறிந்தாரோ
ஒரு வேள்வியில் அந்த பூமியை கஸ்யப முனிவருக்கு தக்ஷிணையாகக் கொடுத்து
-தஷிணை கொடுத்த இடத்தில் வாசம் பண்ணைக் கூடாது என்று மேற்கு திக்கில் கடலில் கோடரியால் வீசி எறிந்து-
அந்த அளவு கடல் இவருக்கு இடம் அளிக்க – அவ்விடத்தை தன் வசமாகக் கொண்டு வசித்தாரோ-இதுவே கேரளா இப்பொழுது –
பெருமை உள்ள அந்த பரசுராம முனிவர் பிரமன் முதல் புழு வரையில் எல்லாருடைய தீங்கையும் ஒழித்து அருள வேண்டும் –

க்ரோதாக்நிம் ஜமதக்னி பீடந பவம் -ஜாமதக்னீ -பரசு ராமன் -ஜமதக்கினி குமாரர் -க்ரோதம் அக்னியால் -பீடிக்கப் பட்டு –
சந்தர்ப்ப யிஷ்யன் க்ரமாத் -அக்னியை -திருப்தி செய்யப் பெற்று -அலம் புத்தி இல்லாத அக்னி கோபம் –
அக்ஷத்ராமிஹ சந்தஷய இமாம் -ஷத்ரியர்கள் இல்லாத படி
த்ரி சப்த க்ருதவ ஷிதிம்-21 தலை முறை இல்லாமல் பண்ணி
தத்வா க்ரமணி தக்ஷிணாம் க்வசன தாம் -கஸ்யபர் இடம் தக்ஷிணையாக கொடுத்து ஏதோ ஒரு யாகத்தில்
ஆஸ்கந்தய சிந்தும் வசந்-சமுத்திரம் வசமாக கொண்டு இருந்து
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவான் ஆ ப்ரஹ்ம கீடம் முனி -மங்களம் போக்க வேண்டும் –
முனிவரான பரசுராமன் ப்ரஹ்மா தொடங்கி புல் வரை

அப்ரதான அவதாரங்கள் -பரசு ராம-பல ரா அவதாரங்கள் -ஸ்வரூப ஆவேச அவதாரங்கள் –
உபாசனம் அர்ஹம்
முழு சக்தி -ஸ்வரூப ஆவேசம் -சொல்ப -சக்தி ஆவேசம் ஒரு காரியத்துக்காக மட்டும் –
கார்த்த வீர்யார்ஜுனன் -பரசுராமன் -ராமர் -முக்கிய அவதாரம்
கண்ணன் பலராமன் -சந்திக்கலாம் -முக்கிய அவதாரங்கள் சந்தித்து கொள்ளாதே
-ரிசிகர் பாயாசம் -மாற்றி கொண்டு -ப்ராஹ்மணர் க்ஷத்ரியர் தேஜஸ் –
சத்யவதி க்கு அதீத கோபம் கொண்ட பிள்ளை சாபம் -இந்த பிள்ளை சாந்தம் அவன் பிள்ளை கோபிஷ்டர் –
ரேணுகா தேவி ஜமதக்கினி –தாய் தந்தை பரசுராமனுக்கு பிறப்பால் ப்ராஹ்மணர் வளர்ந்தது
விசுவாமித்திரர் –பிறப்பால் க்ஷத்ரியர் -ப்ரஹ்ம ரிஷி ஆனார்
இரு நில மன்னர் இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் -உடனே –
கோகுல மன்னரை மூ ஏழு கால் -மழு ஏந்தி –
விசித்ரன் கந்தர்வன் -ரேணுகா தேவி -தலை வெட்டி –
கர்வ பங்கம் ராமர் சந்தித்ததால் -தவத்தின் வலிமையில் பானம் விட்டு -கேரளா பரசுராம ஷேத்ரங்கள் –
கங்கை தீர்த்தமாடி 21 தலை முறை புண்ணியம் ஆகுமே –

—————————————————————————————————————-

பராவாரா பயோ விசோஷண கலா பாரீண காலா நல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வியாபார கோர க்ரம
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
தர்மோ விக்ரஹ வான தர்ம விரதிம் தன்வீ ச தன்வீ த ந–8-

கடலின் நீரை வற்றைச் செய்யும் கலையில் வல்லமை யுடையவனும்
பிரளய காலத்தின் அக்னியின் ஜ்வாலைக் கூட்டத்தின் விளையாட்டை வெல்பவனும்
அம்புகள் செயல்களின் கொடிய முறைகளை உடையவனும்
எல்லா நிலையிலும் உள்ள ஒரு முறை சரணம் அடைந்த மக்களை ரஷிப்பதையே முக்கிய வ்ரதமாகக் கொண்டவனும்
தர்மமே உரு எடுத் து வந்தது போலே -தர்ம ஸ்வரூபமாய் -உள்ளவனும் ஒப்பற்ற வில்லாள ரான அந்த
ஸ்ரீ ராம பிரான் நமக்கு அதர்மங்களை ஒழித்தலைச் செய்து அருள வேணும் –

பராவாரா-சமுத்திரம்
பயோ விசோஷண -தண்ணீரை வற்ற அடிக்க
கலா பாரீண-வித்யையில் கை தேர்ந்த
காலா நல-நெருப்பு -ஜாடராகினி வயிற்றில் போலே இது ஊழி தீ
ஜ்வாலா ஜால -தீ பிழம்பு கூட்டம் -சுடர்கள் ஸமூஹம்
விஹார ஹாரி-பெரும் விளையாட்டையும் அபஹரிக்கும்
விசிக வியாபார-பாணங்கள் உடைய செயல்கள்
கோர க்ரம-உக்ரமான விளையாட்டுகள் –
ஸ்ரீ ராம பணம் இப்படி சொல்லி -சாந்த ஸ்வரூபன் அன்றோ
சர்வாவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணை ஏக வ்ரதீ
எந்த திசையிலும் -ஒரு தடவை சரணம் புகும் ஜானகி கூட்டங்கள் -ரக்ஷணத்தில் ஒரே விரதம் கொண்டவன்
தர்மோ விக்ரஹ வான-தர்மம் உரு எடுத்த பிரசித்தர்
அதர்ம விரதிம்-அதர்ம விரதி-வெறுப்பு கொள்பவராக ஆக்கட்டும் -தீய செயல்களில் இருந்து ஒய்வு ஏற்படுத்தட்டும் –
தன்வீ ச தன்வீ த ந–சாரங்க பாணி -கோதண்ட பாணி –

வில்லாண்டான் தன்னை -நாண் தழும்பு -சீதா பிராட்டி விரும்பும் -வீர பத்னி -அடியார்களை ரசிப்பவன் –
ஆலிங்கனம் செய்து -ரிஷிகளை ரஷித்ததும் –
நெருப்பில் இருந்து தானே தண்ணீர் -ஸ்ருஷ்டியில் —
பாடபாகனி குதிரை வடிவத்தில் கடலுக்கு உள்ளே -ஏரி மலை -போன்றவை நேருமே
தண்ணீர் நெருப்பில் சேரும் லயத்தின் பொழுது -இது ஊழி தீ
அனல -அலம் புத்தி இல்லாத நெருப்பு
சமுத்திர ராஜன் -விருத்தாந்தம் ராம பானம் மஹிமை அறிவோம் -குணக்கடல் ஜலக் கடலில் கிடந்ததே மூன்று நாள்கள்
ஜிதக்ரோதன் கோபம் வச்யமானானே -ஜாபா மானய –சாகரம் சோக்ஷயிஷ்யாமி -சாராம்ச -ஆசீர் விஷம் –
ஒரு வில்லால் -ஓங்கு முந்நீர் அடைத்து –
ரகாரம் கேட்டே பயந்து மாரீசன் பேசினான் –
அக்னியை வெல்லும் பானம் -விபீஷணன் ராவணன் இடம் -வாயு தாண்டி போகும் -அக்னியை பெற்ற வாயுவையும் வெல்லும் என்றானே
ராமோ விராம -ஒய்வு -அம்பும் கையுமாக வந்தால் வரமும் வரம் கொடுத்தவர் வரம் வாங்கினவர் மூவரும் -ஒய்வு கொள்ளும் படியாகும்
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி -அவன் தவத்தை முற்றும் செற்றாய் –
வடிவாய் மழு ஏந்தி உலகம் ஆண்டு -திருக் கோவலூர் ஆயன் –
சார்ங்கம் உதைத்த சர மழை-சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்றானே –
பொன்னார் சார்ங்கம்கி உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
கிள்ளிக் களைந்தான் –
கல்விச்சிலையால் -தாடகை -அழித்து–ராமன் சஸ்திர வ்ருத்தர் கண்ணன் கீதையில்
சாரங்க பாணி தளர் நடை நடவாய் -அலங்காரம் -ஆபரணம் ஆயுதம் -சவுரி ராஜர் -உத்சவர் நெற்றியில் வடு –
அரையர் தாளம் எறிந்த வ்ருத்தாந்தம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றும் யாரும் இல்லை –
ஏழு வேலையும் -உலகங்கள் எழும் ஏழு குன்றமும் புரவியும் சப்த கன்னிகைகள் ரிஷிகள் நடுங்க
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு -வில் கை வீரன் பெருமாள் -நாம்
வெறும் கை வீரன் -கோயம் குண -இன்று போய் நாளை வா –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் —தர்மஞ்ஞன் -தர்மம் அறியா குறும்பன் -அவன்
மனத்துக்கு இனியான் பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் -கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –
சத்ருக்களும் கொண்டாடும் மஹிமை -ராமோ விக்ரகவான் தர்மம் -சர்வ பூத தயை -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –

—————————————————————————————————————-

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய ப்ராஸ்த ப்ரலம்பாதய
தாலங்கஸ்ய தாதாவிதா விஹ்ருதயஸ் தன்வந்து பத்ராணி ந
ஷீரம் சர்க்கர ஏவ யாபிர ப்ருதக் பூதா ப்ரபூதைர்க் குணை
ஆ கௌமார கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய–9-

எந்த பலராமனுடைய லீலைகளால் சர்க்கரை கலந்த பால் போலே இளம் பருவம் முதல் பிரியாமல் கலந்த
கண்ணனுடைய அந்த லீலைகள் மிக அதிகமான குணங்களால் உலகுக்கு சுவையாக இருந்ததோ
அந்த கௌரவர்களின் நகரம் முதலியவற்றை கவிழ்தல்-ப்ரலம்பன் முதலியவர்களை ஒழித்தல் –
இன்னும் இது போன்ற பல ராமனுடைய லீலைகள் நமக்கு நன்மைகளை செய்ய வேண்டும் –
கலப்பை ஆயுதம் -பனை மரம் கொடி

பக்கத் கௌரவ பட்டண ப்ரப்ருத்ய -இந்திர பிரஸ்தம் தொடக்கமான பட்டணங்கள் -ஆச்சார்யம் படும் படி -பக்கத்
யமுனை ஆற்றை இழுத்து போக்கை மாற்றி -கலப்பையால் பட்டணம் யமுனையில் தள்ளி
ப்ராஸ்த ப்ரலம்பாதய-ப்ரலம்பன் போன்ற அசுரர்கள் கொல்லப் பட்டவர் –
தாலங்கஸ்ய -பனை மரம் தேர் கொடி
தாதாவிதா விஹ்ருதயஸ் -விளையாட்டுகள்
தன்வந்து பத்ராணி ந -மங்களங்கள் செய்யட்டும்
ஷீரம் சர்க்கர ஏவ -பாலும் சக்கரையும் போலே சேஷ்டிதங்கள் கொண்டவர்கள் அன்றோ
யாபிர ப்ருதக் பூதா-விட்டுப் பிரியாமல் -ஒன்றாகவே செய்யப் பட்டவை
ப்ரபூதைர்க் குணை-கல்யாண குணங்கள்
ஆ கௌமார -சைஸவம் பால்யம் -6 வயசில் வரை 9 வயசு வரை கௌமாரம் –
ஆ தொடக்கமான -ஆ பாத சூடம் போலே ஆ மௌலி பாதாந்தம் போலே
கமஸ் வதந்த ஜெகதே க்ருஷ்ணஸ்ய தா கேலய-லீலைகள் -உலகம் ரசிக்கும் –
அஸ்வதந்த நன்கு ரஸ்யமாக இருக்கின்றன –

ஷேம கிருஷி பலன் -பக்தி உழவன் –அஹம் அன்னம் –அஹம் அந்நாத-நெஞ்சம் பெரும் செய்யுள் –
பேரமர் காதல் விளைவித்த –
ஈர நெல் வித்து விளைத்து -கண்ணன் கடியனே –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -கலப்பை கொண்டே -கிருஷிகன் –
ஹிரண்ய கசிபு தம்பி – கால நேமி பிள்ளைகள் -ஆறு பேர் -உக்ரசேனர் பிள்ளை கம்சன் –
கால நேமியே கம்சனாக பிறந்தான் -சாபம்-மக்கள் அருவரை கல்லிடை மோத-
சூட்டு நன் மாலைகள் -அவதார பிரயஜன ஸூ ஷ்மம் ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
கர்ஷணம் இழுத்தல் – சங்கர்ஷணன் -சம்ஹாரம் –
யோக மாயா -தங்கை -நவமி இவள் கண்ணன் அஷ்டமியில் –
செற்ற கொற்றத் தொழிலான்- கங்கையிலும் யமுனையில் நகரங்களை இழுத்து தள்ளிய வ்ருத்தாந்தம் உண்டே
ஒற்றை குழையும் நாஞ்சிலும் -ஒரு பால் தோன்ற தான் தோன்றி
ராஜாக்கள் -ஒரு காதில் தனித்த தோடு குண்டலம் -இடுப்பில் சாதிக் கொத்து இருக்குமே -மேல் காத்து குத்தி –
சேஷ சேஷிகள் உடைய சக்கரை பால் போலே பிரியாத -இருவர்
லக்ஷ்மணன் –ஆதி சேஷனே -பல ராமன் -ஆதி சேஷன் அம்சத்துடன் அவதரித்தவர்
சேஷி ராமானுஜன் -கண்ணன் -சேஷ ராமானுஜர் உடையவர் -சங்கராதி-எதிராஜ விம்சதியில் தேசிகன் காட்டி
சங்கரர் கௌரவம் அடக்கி -யாதவ பிரகாசர் மதம் -யது குலம் பிரகாசம் கண்ணன் –
பர கத அதிசய –ஆதேநாய இச்சையா -சேஷத்வம் –
பால் பிரதானம் -கண்ணன் -சேஷி ராமானுஜன் -அப்ருதக் சித்த விசேஷணம் நாம் அனைவரும் சார்ந்தே
விட்டுப் பிரியாமல் -அவனை தாரகன் –
பிரகாரம் -வேற சரீரம் வேற -உடல் மீசை உயிர் என கறந்து எங்கும் பரந்துளன்
உடல் தேகம் -பெருக்கும்–சரீரம் -இளைக்கும் தாது அர்த்தம் -சீரியதே இது சரீரம் தாது
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரவ்யம் எப்போதும் தாங்கப் பட்டு தன் பொருட்டு நியமிக்கப் பட்டு
ஸர்வதா நியாந்தா தாராயிதும் அதன் பொருட்டேயாக இருப்பதே
இதே போலே ஆத்மாக்கள் ஈஸ்வரனுக்கு சரீரம் என்றவாறு -பிரகாரம் இன்றியமையாமல் சார்ந்து இருப்பது –
மணம் புஷபம் /மாணிக்கம் ஒளி போலே
பலராமன் – கூட போகாத நாள் தான் காளியன் உச்சியில் நட்டம் ஆடி
அகாசுர வதம் அன்றும் -கூட போக வில்லை -மலைப்பாம்பு -வடிவம் -பிள்ளைகள் அண்ணாந்து வாய்க்குள் போக –
திருமேனி வளர்ந்து வெளியில் வர –
தன்னேராயிரம் பிள்ளைகளும் சுற்றி உட்க்கார்ந்து -மஸ்ரன கவளம் -தத்யோன்னம் -ப்ரஹ்மாவுக்கு பாடம் புகட்டிய வ்ருத்தாந்தம் –
வெள்ளி மலை போலே முன்னே போக -பைய ஊர்வது போலே கரு மலை குட்டன் பெயர்ந்து நடப்பான் -கண்ணன்
நம்பி மூத்த பிரான் -சம்ப்ரதாயம் -செம் பொன் கழல் அடி செல்வன் பல தேவன் –

——————————————————————————————————————

நாதா யைவ நம பதம் பவது நஸ் சித்ரைஸ் சரித்திர க்ரமை
பூயோ பிர்புவ நான்ய மூநி குஹனா கோபாய கோபாயதே
காளிந்தீ ரசிகாய காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா பர்யாய சர்யா யதே–10-

ஆச்சர்யமான சேஷ்டிதங்களால் இந்த உலகங்களை ரக்ஷிப்பவனும் -யமுனை நதியில் சுவை உள்ளவனும் –
காளியன் என்றும் சர்ப்பத்தின் அகன்ற படம் ஆகிய நாட்டிய மண்டபத்தின் நடுவில் அச்சம் இன்றி
நடனம் புரிதல் ஆகிய பெரும் செயல் போன்ற செயல்களை செய்பவனும்
போலியான இடைய வேஷம் கொண்ட நாதனான கண்ணனுக்கே நமது நம என்னும் சொல் ஆகக் கடவது –

நாதா யைவ நம பதம் பவது நஸ்-
-நாதன் ரக்ஷகன் -அவன் ஒருவனுக்கே நமஸ்காரம் –
சர்வ தேவதா நமஸ்காரம் கேசவன் பிரதி கச்சதி
சித்ரைஸ் சரித்திர க்ரமை -விளையாட்டு வரிசை -பூதனை நிரசனம் தொடக்கமாக கேசி ஹந்த ஈறாக பல சேஷ்டிதங்கள் அன்றோ
பூயோ பிர்புவ நான்ய -மூநி குஹனா கோபாய கோபாயதே-கோக்களை ரக்ஷிக்கும் -மூ உலகையும் ரக்ஷிக்கும் -கோப வேஷம் கொண்டு
-ஷத்ரியனாக பிறந்து இடைப்பிள்ளையாகி -ஏறிட்டுக் கொண்டு -இரண்டு தாய் தந்தைகள் குலம் -மஹிஷிகள் -வார்த்தை உட்பட இரண்டு
மாலாய் பிறந்த -ஏலாப் பொய்கள் சொல்லுமவன் -பச்சைப் பசும் பொய் -கூட்டு வெளிப்படும் -நேர் எதிர் பெருமாள் –
காளிந்தீ ரசிகாய -யமுனை ஆற்றங்கரையில் விளையாடிய
காளிய பணி ஸ்பார ஸ்படா வாடிகா -காளியன் தலை -விரிய -வீதிகளில்
ரங்கோத் சங்க வி சங்க ஸங்க்ரம துரா-துரந்தரன் தலைவன் -நாட்டியம் கற்பார் களுக்கு முன்னோடி -அச்சம் அற்றவராக விசங்க நர்த்தனம்
பர்யாய சர்யா யதே-ஒப்பான நடத்தைகள் -பெரும் கூத்தாடி ஜல க்ரீடை ராசிக் க்ரீடை குரவை கூத்து –
மாயக் கூத்தன் -குடமாடு கூத்து -ஆரார் என்று ஆடுமது கண்டு –

கருடன் வரமுடியாத சாபம் ஸுபரி கொடுக்க காளியன் பொய்கையில் இருக்க -அத்தை ஒழிக்க வில்லை கடலை நோக்கி துரத்தி விட்டு
சூர்யா தனயன் -யமுனை காளிந்தி யமுனை சூரியன் தங்கை -கிருஷ்ணன் ஆனந்தம் கொடுப்பவன் பூமிக்கு –
பூத் தடம் கடம்பு ஏறி காளியன் தலையில் நர்த்தனம் ஆடி –
அம்ருத கலசம் பட்டு பூத்தது திருவடி ஸ் பர்சத்தால் பூத்தது
கோகுலம் போர்க்களம் ஆகும் படி ஆனதே –
காளிங்கன் பண்ணும் பாக்யம் என்னே -திருவடி ஸ்பர்சம் -எண்ணிக்கை நாட்டியம் –
கிருஷ்ணாஸ்ராயா க்ருஷ்ண பலாயா க்ருஷ்ண நாதாஸ்ய -சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் -அவனே நாதன்
-நம அவனுக்கே -ஏவ -நாராயணனே நமக்கே பறை தருவான் போலே -மாம் ஏகம் சரணம் வ்ரஜ –
நாகணை மீசை நம்பிரான் சரணே சரண் -உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -உனக்கே நாம் ஆட் செய்வோம் –
அம்பரமே தன்னாரே சோறே -கண்ணனைக் கொடுத்தால் ஏவ காரம் உம்மை யாகுமே -உண்ணும் சோறு -வா ஸூ தேவம் சர்வம் அன்றோ
அவதார ரகஸ்யம் -ஜென்ம கர்ம மே திவ்யம் -பிறந்தவாறும் வளர்ந்த வாறும்–

—————————————————————————————-

பாவிந்யா தசயா பவன் நிஹ பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா கலி கதா காலுஷ்ய கூலங்கஷ
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே தாரா ஐலவ் கைர்த்ருத்வம்
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி யன் நிஸ்த்ரிம்ச தராதர –11-

எவனுடைய கத்தி ஆகும் மேகம் -துஷ்டர்களாகிய முட்களை மீதி இல்லாமல் ஒழிக்க பூமியில்
தன் முனை ஆகிய நீர் வெள்ளத்தால் க்ருத யுகத்தின் தர்மத்தை நிச்சயமாக முளைக்கச் செய்கின்றவோ –
சம்பளம் என்னும் ஊரில் அந்த விஷ்ணு யஸஸ் என்னும் அந்தணனுக்கு பிள்ளையாய் அவதரிக்கப் போகின்றவனும்
கலி யுகத்தினால் வரும் குழப்பத்தை வெண் குதிரையினில் மேல் ஏறி முழுவதும் அழிக்கப் போகிறவனுமான
கல்கி பகவான் வர போகின்ற நிலைமையோடு இவ்வுலகில் அர்ச்சையாய் நிற்பவனும்
நம்முடைய சம்சார பந்தங்களை அழிப்பதற்கு முற்படட்டும்

பாவிந்யா-அனந்தர பாவி
தசயா-அவதார தசை
பவன் நிஹ -இந்த ஸ்ரீ ரங்கத்தில் அர்ச்சா மூர்த்தியாக உள்ளவனே –
போன யுகம் கல்கி கொண்டே விக்கிரகம்
மிதிலை செல்வி -தன் சரிதை கேட்டான் -தாய் தந்தை கூப்பிட்டு வர சொல்லி –
11000 வருஷம் அப்புறம் தன்னுடைச் சோதி போவதையும் சொல்லி –
அது போலே ஸ்லோகமும் விக்கிரகமும் முன்னே இங்கே
பவ த்வம்சாய ந கல்பதாம்
கல்கீ விஷ்ணோ யசஸ் ஸூ தா -விஷ்ணோ யசஸ்-பிள்ளை
கலி கதா காலுஷ்ய கூலங்கஷ-கலக்கமாக உள்ள நிகழ்வுகள் அக்கிரமத்தை -கரை புரண்டு ஓடும் -கல்கம் குதிரை –
நிசேஷ ஷத கண்டகே ஷிதி தலே-ஒன்றும் மிச்சம் இல்லாமல் முள்ளை நாசம் ஆக்கி
தாரா ஐலவ் கைர்த்ருத்வம் -ஜல பிரவாஹத்தால் –
தர்மம் கார்த்தயுகம் பிரரோஹயதி -கிருத யுக வர்ணாஸ்ரம தர்மத்தை உறுதியாக வ்ருத்தி பண்ணும் வாள் ரக்ஷிக்கட்டும்
யன் நிஸ்த்ரிம்ச தராதர-இரண்டும் கத்தியையே சொல்லும்
கத்தி வைத்து தீயவரை போக்கி -கிருதயுகம் உண்டாக்கி -இரண்டுக்கும் ஒரே திவ்ய ஆயுதம்
மலையை தன்னுள் தாங்கிய மேகம் போலே தாராதக –

சம்பள கிராமம் -விஷ்ணு யசஸ் ப்ராஹ்மணர் திருக் குமாரராக அவதாரம் -கல்கி -வெள்ளை குதிரை
கல்கம்-பெயரில் -வாஹனம் நீண்ட வாள் கையில் கொண்டு -கடும் பரி மேல் கல்கியை நான் கண்டு கொண்டேன்
தீயவர்களை கழித்து கலி யுகம் கிருத யுகம் பற்றி
1000 சதுர் யுகம் முடிந்தால்–ப்ரஹ்மாவின் பகல் காலம் தான் பிரளயம் வரும் -மூன்று லோகங்கள் அழியும்
ப்ரஹ்மா ஆயுள் காலம் முடிந்தால் தான் 14 லோகங்கள்
த்வீத பரார்த்தே -நாம் இருக்கும் -இரண்டாவது ஐம்பதில் -உள்ளோம் -ஸ்வேதா வராஹ கல்பம் –
விவஸ்வான் மனு 77 மனுக்கள் ஒரு கல்பத்தில் –
71 சதுர் யுகம் ஒரு மனுவின் காலம் -28 சதுர் யுகத்தில் உள்ளோம் -அப்புறம் வேறு மனு வருவார்
ஒவ் ஒரு சதுர் யுகத்திலும் தசாவதாரங்கள் உண்டே -5117 வருஷம் தான் ஆகி உள்ளது
இந்த கலி யுகத்தில் -கல்கியும் ஆனான் தன்னை –

———————————————————————————————

இச்சா மீன விஹார கச்சப மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே
ரஷா வாமன ரோஷ ராம கருணா காகுத்ஸ்த ஹேலா ஹலின்
க்ரீடா வல்லவ கல்க வாஹன தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த புருஷா புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா –12-

தன் விருப்பத்தால் மீனாகத் தோன்றியவன் –
மந்த்ர மலையை மத்தாக்கி கடலைக் கடைந்து விளையாடல் புரிந்த ஆமையாய்த் தோன்றினவனே –
மிகப்பெரிய பன்றி உருவாயத் தோன்றினவனே -எதிர் பாராது தோன்றிய சடக்கென தோன்றிய நரஸிம்ஹப் பெருமானே
மூ உலகும் ரக்ஷிக்க கங்கையை பெருக்கிக் காத்த வாமனனாய் தோன்றி த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே -கோபம் கொண்ட பரசுராமனே
கருணா மூர்த்தியான ராம பிரானே -கலப்பை யுடன் விளையாடிய பலராமன்
ஆயர் குலத்தில் கோபாலனாய் -அத்புதமான பல சேஷ்டிதங்கள் விளையாடிய கண்ணனே –
வெண்மையான குதிரையில் வந்து தர்மம் நிலை நிறுத்தப் போகும் கல்கி பகவானே
என்று தினம் தோறும் ஸ்துதிக்கும் புண்ய கூட்டத்தையே அளிக்கும் -விலைப்பொருளாக கொண்டுள்ள கடை போன்ற –
மனிதர்கள் உலகத்தை புனிதம் -தூய்மை ஆக்குகின்றனர் –
இப்படி தகுந்த விசேஷங்களுடன் தச அவதாரங்களையும் அருளிச் செய்கிறார்

இச்சா மீன விஹார கச்சப-ஆசைப்பட்டு கொண்ட மத்ஸ்ய மூர்த்தி -விளையாட்டாக கொண்ட விஹாரம் கூர்மம் –
மஹா போத்ரின் யத்ருச்சா ஹரே -பூமா தேவி கிடந்த பெரும் கேழலார் –
நரத்வம் ஹரி -ஆளரி-தலை பிரதானம் என்பதால் ஹரே என்கிறார் -யாதிருச்சாயாக தோன்றினார் –
அங்கே அவன் வீயத் தோன்றிய சிங்க பிரான்
விளிச் சொற்கள் இவை எல்லாம் -ஹே ஹே -என்று கூப்பிட்டு புண்ய கடைகள் நிறைந்தது என்றவாறு
திரு நாம சங்கீர்த்தனம் -முளைக் கதிரை போலே
ரஷா வாமன -ரக்ஷிப்பதற்காக ஸ்ரீ வாமனன்
ரோஷ ராம -ரோஷம் உருவாக்க கொண்ட
கருணா காகுத்ஸ்த-கருணையே -ராம சொல்லி -வாசி புரியாமல் இருக்க காகுத்ஸதா –
ஹேலா ஹலின் -ஹலம் கலப்பை
க்ரீடா வல்லவ -கோபி ஜன வல்லபன் -விளையாட்டுக்காக நாதன்
கல்க வாஹன தசா -கல்கிந்நிதி ப்ரத்யஹம் -கல்கம் வாகனமாக கொண்ட கல்கி தினப்படி
ஜல்பந்த புருஷா-ஜல்பம் உளறிக் கொண்டே சந்நிபதரைப் போலே சொல்ல சொல்ல
புநந்தி புவனம் புண் யவ்க பண்யா பணா-
புண்யங்கள் கிடைக்கும் -மேலே மேலே கிட்டும் -புவனங்களை புனிதம் ஆக்கி
அலையாக வரும் புண்ணியங்கள் வியாபார பொருள் -விற்கும் கடையாக திரு நாமம் சொல்பவர்கள் –
இச்சா மீனா -வேதம் திரும்பி மீட்டி -வேதம் கற்பதும் அதன் படி நடப்பதும் விலை போலே ஒவ் ஒன்றுக்கும்
பாகவத அபசாரம் செய்யாமல் -திருவடி தீண்ட ஆசைப் பட்டு
விலக்காமை ஒன்றே வேண்டும் அத்வேஷம் -கருணை மழை பொழிய சேர்த்து கொள்ள வேணும்
விளையாட்டு நினைத்து கால ஷேபம் செய்வதே வேண்டும்
வெள்ளை உருண்டை கங்கையில் மீனுக்கு சமர்ப்பித்து
ஸ்ரீ கூர்மம் –
முசுதேவ கோரிக் கிழங்கு
நரசிம்மம் பானகம்
வாமனன் -கேளா செவி அல்ல –

இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சா
ஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://

இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.”
– (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் -பெரியாழ்வார்
மூ உருவில் ராமனாய் பெரியாழ்வார் 4 பத்து
மீனாய் –கல்கியும் -இன்னம் கார் வண்ணனே நம்மாழ்வார்
அன்னமும் -2-7 திருமங்கை
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும்
குப்ஜா குள்ள மா மரமாகவும்
கேழலும் அரியும் 5-4-
நாகை -9-2-அன்னமும் –கேழலும் மீனுமாகிய ஆதி

————————————————————————————————-

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ் ஜாதம் ஜகன் மங்களம்
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவஷேத ய
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ பக்தி பரா மனசே
ஸூ த்தி காபி தநவ் திஸாஸூ தச ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே -13-

கலைகள் உறையும் கடலான வேங்கடேசன் என்னும் கவியிடத்தில் தோன்றிய உலகுக்கு நன்மை பயக்கும்
தேவாதி தேவனான திரு அரங்கனுடைய பத்து அவதாரங்களைப் பற்றின இந்த ஸ்தோத்ரத்தை
எவன் சொல்ல விரும்புகிறானோ அவனுடைய வாயில் சரஸ்வதி தேவி பலவகையாக ஓங்கி நிற்பாள் –
மனசில் உயர்ந்த பக்தி மலரும் -சரீரத்தில் அத்புதமான தூய்மை வளரும்
இப்படி முக்கரணங்களுக்கும் சிறப்பு வருவது மட்டும் இல்லாமல்
பத்து திக்குகளிலும் சிறந்த புகழ் வளரும்

வித்யோதன்வதி வேங்கடேஸ்வர கவவ்-வித்யை -கல்வி கடலாக -ஸ்ரீ வேங்கட நாதன் –
ஜாதம் ஜகன் மங்களம் -உண்டான -பண்ண வில்லை -கர்த்ருத்வ புத்தி இல்லை -ஷேமங்கரமாக
தேவே ஸஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம்-ஸ்ரீ ரெங்க நாதன் அருளிச் செய்த தசாவதாரங்கள் பற்றிய ஸ்தோத்ரம்
விவஷேத ய -சொல்ல விரும்பினால் போதும் -பாடவும் மனனனம் பண்ணவும்
வக்த்ரே தஸ்ய சரஸ்வதீ பஹு முகீ -அவர்கள் உடைய வாயில் வாள் வைபவம் –கங்கா -பிரவாஹம் போலே
பக்தி பரா மனசே -மனசில் பக்தி குடி கொண்டு இருக்கும்
ஸூ த்தி காபி தநவ் -காய ஸூ த்தி வரும் -முக்கரணங்களும் சொல்லி –
திஸாஸூ தச -ஸூ க்யாதி ஸூ பா ஜ்ரும்பதே-பத்து திக்குகளிலும் -கொண்டாடப்படும் யசஸ் பெறுகிறான்

திருவவதாரம் பண்ணவே பக்தி வளர்க்கவும் வாயினால் பாடி தூ மலர் தூவி தொழவும்
முக்கிய பிரயோஜனம் என்றவாறு

—————————————————————————————————-

பரமபத ஸோபாநம்.

“பரமபத ஸோபாநம்” என்ற ரஹஸ்ய கிரந்தத்தில் ஶ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பரமபதமென்னும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்கியிருக்கிறார்.
அவற்றின் வரிசை இவர் தாமே
 “விவேக நிர்வேத விரக்தி பீதய: ப்ரஸாதஹேதூத் க்ரமணார்ச்சிராதய: ப்ரக்ருத்ய திக்ராந்த பதாதிரோஹணம் பராப்திரித்யத்ரது பர்வணாக்ரம: ” . என அருளிச்செய்துள்ளார்.
அதாவது :- இக்கிரந்தத்திலே பகுத்தறிவு, வெறுப்பு, வைராக்கியம், பயம், பகவானுடைய அநுக்ரஹத்திற்குக் காரணமான பக்தி, ப்ரபத்தி, சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறுதல், அர்ச்சிராதிமார்க்கம், ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டதான பரமபதத்தையடைதல், அங்கு பரமாத்மாவை அநுபவித்தல் என்பன படிகளுடைய வரிசை.
எனவே இதிலுள்ள ஒன்பது பர்வங்களாவன —
 (1) விவேகபர்வம் (தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்); (2) நிர்வேத பர்வம் (ஸம்ஸாரத்தில் வெறுப்பு); (3) விரக்திபர்வம் (உலக சுகங்களில் ஆசையறுதல்) ; (4) பீதி பர்வம் (தன் பாபங்களின் மிகுதியால் இனி வரக்கிடக்கும் நரகாநுபவம் முதலிய துன்பங்கட்கு அஞ்சுதல்); (5) ப்ரஸாதநபர்வம் (எம்பெருமான் மோக்ஷத்தை அருள் வதற்குக் காரணமான உபாயங்களை அநுஷ்டித்தல்); (6) உத்க்ரமண பர்வம் (இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறு தல்); (7) அர்ச்சிராதிபர்வம் (அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்); (8) திவ்ய தேச ப்ராப்திபர்வம் (ஸ்ரீ வைகுண்ட மென்னும் திவ்யலோகத்தைச் சேர்தல்); (9) ப்ராப்திபர்வம் (அங்கு பகவானைக் கண்ணாரக்கண்டு, களித்து, அநுபவித்து, அந்த அநுபவத்திலேயே மூழ்கிக்கிடத்தல்)
 “தேனேறு தாமரையாள் திருமார்பன்றன்
     திண்ணருளால வனடியில் விவேகம் பெற்றிங்கு
 ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின்
     ஊர் விரத்தியுடன் வினையின் திரளுக்கஞ்சிக்
 கூனேறு பிறை யிறையோன் சாபந் தீர்த்தான்
     குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு
 வானேறும் வழிப் படிகளடைவே கண்ட 
 வண்புகழ்த் தூப்புல் வள்ளலருள் பெற்றோமே.”
 என்ற தனியனும் காண்க. இங்கு ஸோபாந அடைவு அமைக்கப்பெற்றுள்ளது குறிக்கொள்க.
இக்கிரந்தத்தின் இருபதாவது பாசுரமான ,
” மண்ணுலகில் மயல் தீர்த்து மனந்தளும்பி 
     மன்னாத பயனிகந்து மாலேயன்றிக் 
 கண்ணில தென்றஞ்சி யவன் கழலே பூண்டு 
     கடுஞ்சிறை போய்க்கரையேறுங் கதியே சென்று 
 விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு 
     விண்ணவர்தங் குழாக்களுடன் வேதம் பாடிப் 
 பண்ணுலகிற்படியாத விசையாற் பாடும் 
     பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே.” 
 [(1) மண் உலகில் மயல் தீர்ந்து (விவேகம்); (2) மனந் தளும்பி (நிர்வேதம்); (3) மன்னாத பயன் இகந்து (விரக்தி); (4) மாலே யன்றிக் கண் இலதென்று அஞ்சி (பீதி); (5) அவன் கழலே பூண்டு (ப்ரஸாதநம்); (6) கடும் சிறைபோய் (உத்க்ரமணம்); (7) கரையேறும் கதியே சென்று (அர்ச்சிராதி); (8) விண் உலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு (திவ்யதேச ப்ராப்தி) ; (9) விண்ணவர்தம் குழாங்களுடன் வேதம் பாடி (ப்ராப்திபர்வம்).)
என்பதில் இக்கிரந்த பர்வங்களின் அர்த்தத்தை அடைவாக அமைத்துள்ள அழகு அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவல்லது.
————————-
ஸ்ரீ தசாவதார-ஸ்தோத்ரம் (கீதா-கோவிந்தத்திலிருந்து) ஜெயதேவ கோஸ்வாமி–இது ஒவ்வொன்றும் எட்டு வரிகள் கொண்ட வசனங்களில் எழுதப்பட்டிருப்பதால், இது அஷ்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது.(1)
பிரளய-பயோதி-ஜலே த்ரிதவான் அசி
வேதம் விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ரித-மின-சரீர ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! மீனாக உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! பேரழிவின் கொந்தளிப்பான கடலில் மூழ்கிய
வேதங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே ராட்சத மீன் வடிவில் படகாக எளிதாகச் செயல்பட்டாய் .(2)
தவிபுல் க்ஷித்ரீவத்ர
இத்ஹ தாரன-கின-சக்ர-கரிஷ்டே
கேசவ த்ரித-கூர்ம-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஆமை வடிவில் வீற்றிருக்கும் ஹரியே! எல்லா புகழும் உனக்கே! இந்த அவதாரத்தில் ஒரு தெய்வீக ஆமையாக பெரிய மந்தார மலை உங்கள் பிரம்மாண்டமான முதுகில் பாற்கடலைக் கலக்க ஒரு மையமாக உள்ளது. மிகப் பெரிய மலையை உயர்த்திப் பிடித்ததிலிருந்து, உங்கள் முதுகில் ஒரு பெரிய வடு போன்ற தாழ்வு நிலை உண்டாகிறது , அது மிகவும் புகழ்பெற்றதாக மாறிவிட்டது.(3)
வஸதி தஸன-சிகரே தரணி
தவ லக்ன சசினி
கலங்க-கலேவ நிமக்ன கேசவ த்ரித- ஸுகர-ரூப ஜய ஜகதீஸ தவ
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஓ ஹரி, பன்றியின் வடிவம் கொண்டவனே! எல்லா புகழும் உனக்கே! பிரபஞ்சத்தின் அடியில் கர்ப்போடகப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமி, சந்திரனில் ஒரு புள்ளியைப் போல உனது தந்தத்தின் நுனியில் நிலையாக அமர்ந்திருக்கிறது.(4)ஹரே-
அத்பூத-ஸ்ரீங்கம்
தலித-ஹிரண்யகசிபு-தனு-பிருங்கம்
கேசவ த்ரித-நரஹரி-ரூப ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் உருவெடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! ஒருவரது விரல் நகங்களுக்கு இடையே குளவியை எளிதில் நசுக்குவது போல, குளவி போன்ற அரக்கன் ஹிரண்யகசிபுவின் உடலையும் உங்கள் அழகான தாமரை கைகளில் உள்ள அற்புதமான கூர்மையான நகங்களால் பிளவுபடுத்தியது(5)
சலயஸி விக்ரமணே பலிம் அத்பூத-வாமன
பாத-நக-நிர-ஜனித-ஜன-பவனா
கேசவ ஹரிதா-ஜவமன் த்ரித
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ஓ ஹரி, வாமன-பிராமண வடிவத்தை எடுத்தவனே! எல்லா புகழும் உனக்கே! ஓ அற்புதமான குள்ளே, உன்னுடைய பாரிய அடிகளால் பாலி மன்னனை ஏமாற்றுகிறாய், உன் தாமரை பாதங்களின் நகங்களிலிருந்து வெளிப்பட்ட கங்கை நீரால் , இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நீ விடுவிக்கிறாய்.(6 )
க்ஷத்ரிய-ருத்திர-மயே ஜகத்-அபகத-பாபம்
ஸ்நபயஸி பயஸி ஸமித-பவ-தபம் கேசவ
த்ரித-பிரிகுபதி-ரூப ஜெய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! பிருகுபதியின் [பரசுராமன்] அவதாரம் எடுத்த ஹரியே! எல்லா புகழும் உனக்கே! குருக்ஷேத்திரத்தில் நீ கொன்ற அசுர க்ஷத்திரியர்களின் உடலில் இருந்து இரத்த ஆறுகளில் பூமியை நீராடுகிறீர்கள் . உலகின் பாவங்கள் உன்னால் கழுவப்படுகின்றன, மேலும் உன்னால் மக்கள் பொருள் இருப்பு என்ற எரியும் நெருப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.(7)
விதராசி திக்ஷு ரனே திக்-பதி-கமணியம் தாஸ-முகாவ
-மௌலித்-மௌலித்-முகா
-மௌலித். -சரீர ஜய ஜகதீஸ ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! ராமச்சந்திர ரூபம் எடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! இலங்கைப் போரில், பத்துத் தலை அரக்கன் ராவணனை அழித்து, அவனது தலைகளை இந்திரனின் தலைமையில் உள்ள பத்துத் திசைகளின் அதிபதிகளுக்குப் பிரியமான காணிக்கையாகப் பகிர்ந்தளிக்கிறீர்கள். இந்த அசுரனால் மிகவும் துன்புறுத்தப்பட்ட அவர்கள் அனைவராலும் இந்த நடவடிக்கை நீண்ட காலமாக விரும்பப்பட்டது(8)
வஹஸி வபுஷி விஸதே வசனம் ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித
-யமுனாபம் கேசவ த்ரித-ஹலதர-ரூப ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! கலப்பையை அமுக்கி பலராமனாக உருவெடுத்த ஹரி பகவானே ! எல்லா புகழும் உனக்கே! உங்கள் புத்திசாலித்தனமான வெள்ளை உடலில் நீங்கள் புதிய நீல மழையின் நிற ஆடைகளை அணிந்திருக்கிறீர்கள்-மேகம். இந்த ஆடைகள் யமுனை நதியின் அழகான இருண்ட சாயல் போன்ற நிறத்தில் உள்ளன, அவர்
உனது கலப்பையின் தாக்கத்தால் பெரும் பயத்தை உணர்கிறார்.(9)
நிந்தஸி யஜ்ஞ-விதேர் அஹஹ-
ஸுதிஹ்ரத்யஜாதம் ஸ்ருதி-ஹதிதாயதம்
கேசவ த்ரித-புத்த-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! புத்தரின் வடிவம் கொண்ட ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! கருணையுள்ள இதயத்தின் புத்தரே, வேத யாகத்தின்
விதிகளின்படி செய்யப்படும் ஏழை விலங்குகளை அறுப்பதை நீங்கள் கண்டிக்கிறீர்கள் .(10)
ம்லேச்ச-நிவாஹ-நிதாநே கலயஸி ​​கரவலம்
தூமகேதும் இவ கிம் அபி கரலாம்
கேசவ த்ரித-கல்கி-சரீர ஜய ஜகதீச ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! கல்கி அவதாரம் எடுத்த ஹரி பகவானே! எல்லா புகழும் உனக்கே! நீங்கள் ஒரு வால் நட்சத்திரத்தைப் போல தோன்றி, கலியுகத்தின் இறுதியில் தீய காட்டுமிராண்டிகளை அழித்தொழிப்பதற்காக பயங்கரமான வாளை ஏந்துகிறீர்கள் .(11)
கதம்ஸ்ரீ-ஜயதேவ-கதாம்ஸ்ரீ
-ஜயதேவா- தம் பவ-சரம்
கேசவ த்ரித-தாஸ-வித-ரூப ஜய ஜகதீஸ ஹரே
கேசவா! பிரபஞ்சத்தின் அதிபதியே! இந்த பத்து விதமான அவதாரங்களை எடுத்த ஹரி பகவானே ! எல்லா புகழும் உனக்கே! ஓ வாசகர்களே, கவிஞர் ஜெயதேவாவின் இந்தப் பாடலைக் கேளுங்கள், இது மிகச் சிறந்த, மகிழ்ச்சியை வழங்குபவர், ஐஸ்வர்யத்தை அளிப்பவர், இந்த இருண்ட உலகில் சிறந்தது.(12)
வேதாந் உத்தாரதே ஜகந்தி வஹதே பூ-கோலம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே க்ஷத்ர-க்ஷயம்
குர்வதே பௌலஸ்த்யம் ஜாயதே ஹலம் அத்ஸயந்துர்வதேக் உப்யம் நமঃ
ஓ பகவான் கிருஷ்ணரே, இந்தப் பத்து அவதாரங்களின் வடிவங்களில் தோன்றிய உமக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். மத்ஸ்ய வடிவில் நீ வேதங்களைக் காப்பாற்றுகிறாய், கூர்மமாக மந்தார மலையை உன் முதுகில் தாங்குகிறாய். வராஹாவாக நீ உன் தந்தத்தால் பூமியை உயர்த்துகிறாய், நரசிம்ம வடிவில் தைத்ய ஹிரண்யகசிபுவின் மார்பைக் கிழிக்கிறீர்கள். வாமன வடிவில் தைத்ய மன்னன் பாலியிடம் மூன்றடி நிலம் மட்டும் கேட்டு ஏமாற்றி, உனது படிகளை விரிவுபடுத்தி முழு பிரபஞ்சத்தையும் அவனிடமிருந்து பறித்து விடுகிறாய். பரசுராமராக நீங்கள் தீய சத்திரியர்கள் அனைவரையும் கொன்று, ராமச்சந்திரனாக ராக்ஷச மன்னன் ராவணனை வெல்கிறீர்கள். பலராமன் வடிவில் நீங்கள் கலப்பையை ஏந்தி, துன்மார்க்கரை அடக்கி, யமுனை நதியை உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். பகவான் புத்தராகிய நீங்கள் இவ்வுலகில் துன்புறும் அனைத்து ஜீவராசிகள் மீதும் கருணை காட்டுகிறீர்கள், கலியுகத்தின் முடிவில் நீங்கள் கல்கியாக தோன்றி மிலேச்சர்களை [தாழ்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மனிதர்களை] திகைக்க வைக்கிறீர்கள். ஜெயதேவ கோஸ்வாமி அல்லது அனைத்து வைஷ்ணவ ஆச்சார்யர்களின் பஜனைகளுக்குத் திரும்பு .

——————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவல்லிக்கேணி அனுபவம் —

March 26, 2024

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பறந்தான் -பஞ்ச அம்ருத சேவை
அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரங்கள் ஐந்தையும் காட்டி அருளும் திவ்ய தேசம்

மன்னு தண் பொழிலும்-பரத்வம் பொழில் ஏழும்
வாவியும் –திருப்பாற் கடல் வ்யூஹம்
மதிளும்–அந்தர்யாமி
மாட மாளிகையும் மண்டபமும் –விபவம்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை-அர்ச்சாவதாரம்

யானைக்குளம் கஜேந்திர ஸரஸ் அருகில் திருமழிசை வரதனை மங்களா சாசனம்
பரத்வம் அந்தர்யாமித்வம் இரண்டிலும் ஆழ்ந்த ஆழ்வார் என்பதாலேயே இருவருக்கும் அருகில் இன்றும் நித்ய சந்நிதி
இவர் சாத்து முறைக்கு மட்டும் வரதரே எழுந்து அருளுகிறார்
இன்றும் யானைக்குளத் தெருக்கள் உண்டே
கஜேந்திர வரதர் பிரபையில் திருக்கச்சி நம்பியும் எம்பெருமானாரும் சேவை உண்டே

துவாதச ஆராதனம் அனைவரையும் ஒரு சேர சேவை ப்ரஹ்ம உத்சவம் -பார்த்த சாரதிக்கும் -தெள்ளிய சிங்கருக்கும் நடக்கும்
எம்பெருமானாராக பார்த்தசாரதியை அவதாரம்

அருளிச் செயல் மண்டபம் என்றே பிரசித்தி இதற்கு
புஷ்ப -போக -தியாக -ஞான மண்டபங்கள் போல்

எம்பெருமானார் திருவவதார ஆறாம் நாள் வெள்ளைச்சாத்து உத்சவத்தில் எதிராஜ மடம் எழுந்து அருளுகிறார்
அங்கு காவி வஸ்திரம் திருமண் காப்பு ஜீயர் சமர்ப்பிக்கிறார்
கோஷ்டியார்களுக்கும் திருமண் காப்பு விநியோகம் உண்டே

ப்ருந்தாரண்யம் -பிருந்தாவனம் போல் இங்கும் -ப்ரஹ்மாண்ட புராணம் விவரிக்கும்

————–

அவதாரிகை –

திருப்பாற் கடலிலே நின்றும் தம் திரு வுள்ளத்துக்கு வருகிற போது
நடுவு வழி வந்த படியை அருளிச் செய்கிறார் –

மனந்தன் அணைக் கிடக்கும் -என்றாரே
இப்படி வந்து கிடைக்கைக்கு அடி பிராட்டியோட்டை சம்பந்தம் என்கிறார் –

திருப்பாற்கடலிலே நின்றும் தம் திரு உள்ளத்துக்கு வருகிற போது திருவல்லிக் கேணியிலே
வந்து தங்கினான் -என்கிறார் –

—————————————————————————————–

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்
அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக் கேணியான் சென்று   —-16–

பதவுரை

ஒரு அல்லி தாமரையாள்–அழகிய இதழ்களையுடைய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய பிராட்டி
சென்று ஒன்றிய சீர் மார்பன்–வந்து பொருந்திய அழகிய திருமார்பை யுடையவனும்
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவளம் வெண் முத்தம்–வந்து வீசுகின்ற வெளுத்த
அலைகளிலுண்டான சிவந்த பவழங்களும் வெளுத்த முத்துக்களும்
அந்தி விளக்கும் அணி விளக்கும் ஆம்–ஸ்ந்தியா காலத்தை விளக்குகின்ற மங்கள தீபங்களாகப் பெற்ற
திருவல்லிக்கேணியான்–திருவல்லிக்கேணியில் எழுந்தருளியிருப்பவனுமான பெருமான்
எந்தை–எனக்கு ஸ்வாமி

—————————————————————————————–

வியாக்யானம் –

வந்துதித்த வெண் திரைகள் –
வந்து உதையா நின்றுள்ள
வெள்ளத் திரைகளாலே தள்ளப் படுகிற –

செம்பவள வெண் முத்தம் –
சிவந்த பவளங்களும்
நீர்மையை உடைத்தான முத்துக்களும் –

அந்தி விளக்காம் மணி விளக்காம் –
சந்த்யைக்கு பிரகாசஹமான
மங்கள தீபத்தை யுடைத்தான –

எந்தை –
எனக்கு ஸ்வாமி-

ஒரு வல்லித் தாமரையாள் –
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரானவள்

ஒரின்னிள  வஞ்சிக் கொடி-பெரிய திருமடல் -என்னுமா போலே
கொள் கொம்போடு சேர்ந்தால் அல்லது தரிக்க மாட்டாமை

அவன் புருஷோத்தமன்
ஆனாப் போலே
இவள் நாரீணாம்   உத்தமை –

தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
மலர்மகள் விரும்புகையாலே
சர்வாதிகத்வம் ஆகை-

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்-
பஸ்யதாம் வரவா தேவா நாம் யயௌ வஷ ஸ்தலம் ஹரே  -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-105-
அநாதரே சஷ்டி –
பிரஜைகள் பார்த்து இருக்க
பர்த்தாவின் படுக்கையைக் கணிசித்து ஏறும் தாயைப் போலே
தேவர்கள் பார்த்து கிடக்கத் திரு மார்விலே ஏறினாள்

தயா அவலோகிதா தேவா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-106-
பின்னை சர்வேஸ்வரன் இவர்கள் உடைய அலமாப்பைப் பாராய் என்று
திரு உள்ளத்தாலே நினைத்த படி தோற்ற
பின்னை அவளாலே பார்க்கப் பட்டார்கள்

முன்பு கடாஷியா விட்டது என் என்னில் –
தன் ஸ்வரூபத்தை பெற்று பிறரை ரஷிக்க வேணுமே –

பிரதேஹி ஸூ பகே ஹாரம் -யுத்த -131-80-என்று
அவன் நினைவும் சொலவும் அறிந்து  இறே
ஒருவரைக் கடாஷிப்பதும்
ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதும்

இவள் பிரிந்து இருக்கையாலே
பெருமாள் கடாஷம் பெற்றுப் பின்பு
பிராட்டி கடாஷம் பெற்றான் திருவடி

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் முந்துற பிராட்டி கடாஷம் பெற்றுப் பின்னைப் பெருமாள் கடாஷம் பெற்றான்

ஸ்ரீ குஹப் பெருமாள் இரண்டும் ஒருக்காலே பெற்றார்

நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு -திருவாய்மொழி -9-2-1-

திருவல்லிக் கேணியான் எந்தை -சென்று
திரு வல்லிக் கேணியிலே  எழுந்து அருளி இருந்து எனக்கு நாதனானவன் –

எந்தை
பெறாப் பேறு பெற்றாப் போலே

ஒரு வல்லித் தாமரையாள் சென்று
ஒன்றிய சீர் மார்வனுமாய்
திருவல்லிக் கேணி யானுமானவன்
எந்தை –
அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்-

வந்துதித்த வெண் திரைகள் செம்பவள வெண் முத்தம்-அந்தி விளக்காம் மணி விளக்காம் -எந்தை–திருவல்லிக் கேணியான்–
வந்து உதையா நின்றுள்ள வெண் திரைகளாலே உண்டான சிவந்த பவளமும்
ஒளியை யுடைத்தான முத்தும் -அந்திக்கு பிரகாசகமாக நின்ற மங்கள தீபத்தை யுடைத்தான
திரு வல்லிக் கேணியிலே நின்றவன்(கிடந்த திருக்கோலம் மன்னாதன் -அடியேனை கைக்கொள்ள அவகாசம் பார்த்து நிற்கிறான் என்றபடி )

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் சென்று   —-
பஸ்யதாம் சர்வ -பார்த்துக் கிடக்க -திரு மார்பிலே ஏறினாள் –

(பெண்ணுக்கு பெண்கள் கோஷ்ட்டியில் வெட்கப்பட வேண்டாமே ஸ்த்ரீ பிராயர் அனைவருமே )
தயா வ லோகிதா தேவா –
பின்னை சர்வேஸ்வரன் இவர்களுடைய அலமாப்பைப் பாராய் என்று திரு உள்ளத்தால் நினைத்த படி -தோற்றப்
பின்னை அவளாலே பார்க்கப் பட்டவர்கள் –
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் -அவன் நினைவும் சொல்லும் அறிந்து இறே
சிலரைக் கடாக்ஷிப்பதும் -(சிலருக்கு )சிலரைக் கொண்டு கொடுப்பதும் –
பெரிய பிராட்டியார் தானே சென்று அடையும் திரு மார்பை யுடையனாய் திரு-

——————————————

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு

இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

(பேய்காள் (31)-என்றார்
மேல் யுக்தி பிரதி யுக்திகள்
வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –

ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
மா நகர பெருமை மயிலைக்கு
மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை

வாயும் பேசவில்லை அசையும் இல்லை
இங்கு ஒரே கேள்வி
திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படி யிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்

நீளோதம்-பெரிய ஓதம் –

தாளால் உலகம் அளந்த அசைவே  கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )

இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-

வாளா கிடந்தருளும்  வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-

(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )

(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )

நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும்
ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-

(பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )

(வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
அஸ்தானே பய சங்கை
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )

பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளாம் உடைய
இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
இதுக்கு அடி
மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ

———–

(சிங்க வேள் குன்றம் இருந்தவாறும் -திருவேங்கடத்திலும் நின்றவாறும் -திரு எவ்வுள்ளில் கிடந்தவாறும் அனுபவித்து
அனைத்து திருக்கோலங்களும் சேவித்து
கரி ரக்ஷணம் அனுபவித்து -திரு நறையூர் திருவாலி குடந்தை -கோவல் நகர் -முதலான தோற்றி
அவை எல்லாவற்றிலும் உள்ள
அபிநிவேசத்துடன் இங்கே வந்து அனுபவிக்கிறார் )

பிராட்டிமாரோடே கூட வந்து
விரோதி நிரசன சீலனாய்
பிரபல விரோதியான பாபங்களை
அநாயேசேந போக்க வல்லவனாய்
சர்வ ஸ்வாமியான
சர்வேஸ்வரன்
உகந்து அருளின நிலங்கள் எங்கும்
பண்ணும் விருப்பத்தை
திரு நீர் மலையிலே பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனானான் –
அநவஹிதராய் இருப்பார் வார்த்தையைக் கேட்டு
அநர்த்தப் பட்டுப் போகாதே
அவனை ஆஸ்ரயித்து க்ருதார்த்தராய்
போங்கோள் என்று பரோபதேச பிரவ்ருத்தர் ஆகிறார்-

———————————————————————-

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-

நடந்தது -எல்லை நடந்து -அளந்த என்றவாறு

———————————————————————————

வியாக்யானம் –

அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி –
முன்பு பண்டு ஒரு நாள்
நப்பின்னை பிராட்டியாரோடும்
அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியாரோடும்-( ஸ்ரீ ருக்மிணித் தாயாரோடும் )
விரும்பிக் -கலந்து

அவுணர்க்கு என்றானுமிரக்க மிலாதவனுக்கு –
அவர்கள் உடன் கூட இருந்த போதும்
அசுர வர்க்கத்துக்கு ஒரு காலும் இரக்கம் இல்லாத வனுக்கு –

உறையுமிடமாவது
நித்ய வாஸம் பன்னுகைக்கு ஸ்தானம் ஆவது –

இரும் பொழில் சூழ் —
பரந்த பொழிலாலே சூழப் பட்ட –

நன்றாய புனல்-
நல்ல ஜல சம்ருத்தியை உடைத்தான –

நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் –
திரு நறையூர் –
இப்படிப்பட்ட நன்மைகளை உடைய திருவாலி -திருக் குடந்தை –
தடாகங்கள் திகழா நின்றுள்ள திருக் கோவலூர் –
இவை துடக்கமானவற்றில் –

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
திரு நறையூரிலே நின்றான்
திருவாலியிலே இருந்தான்
திருக் குடந்தையிலே சாய்ந்தான்
திருக் கோவலூரிலே நடந்தான் –

இடம் மா மலையாவது நீர் மலையே –
மலையாய் இருக்கச் செய்தே அல்லாதவை
வாஸஸ் ஸ்தானம் ஆகிறது இல்லை இறே –
(மா விசேஷணம் மற்ற மலைகளுக்கு வியாவ்ருத்தம் )

உகந்து அருளின நிலங்களில் எங்கும் பண்ணக் கடவ
விருப்பத்தைப் பண்ணிக் கொடு வந்து
சந்நிஹிதனான தேசம் திரு நீர் மலை-

————-

நெறி எல்லாம் எடுத்து உரைத்த ஸ்ரீ கீதாச்சார்யன் இன்றும் நாம் சேவிக்கும்படி-
ஸ்ரீ பார்த்த சாரதி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
நின்றும் நடந்தும் கிடந்தும் இருந்தும் பரந்தும் ஐவர் சேவை –
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் பலராமன் சாத்விகி அநிருத்தன் பிரத்யும்னன் இப்படியும் ஐவர்
நம்மாழ்வார் -தேர் கடவிய பெருமான் கனை கழல் சேவிக்கப் பெறுவேன் -நம்மாழ்வார் மங்களாசாசனம்
பெற்றே புறப்பாடு இன்றும் -திருத்தேர் புறப்பாடும் நம்மாழ்வார் சந்நிதிக்கு அருகிலே –

கீழே இவரை வசீகரித்த ராம கிருஷ்ண அவதாரமும்
கிடை அழகையும்
சிங்க வேழ் குன்றம் ஸ்ரீ நரசிம்மம்
திரு வேங்கடத்தில் கஜேந்திர வ்ருத்தாந்தம் கஜேந்திர வரணும் இங்கே சேவை
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் -ஐவரும்
மன்னாதன் -சயனம் தகிரு எவ்வுள் போலே
இப்படி இரண்டு வித சங்கதி )

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய் –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபவனாய் –
ஆஸ்ரித சுலபனாய் –
இதர விஸாஜதீயனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன்
இக் குணங்கள் தான் தர்மி அனுவர்த்திறவோபாதி
எங்கும் அனுவர்த்திக்குமவை இறே –

இப்படி இருக்கிறவன் மனுஷ்யராய் இருப்பார்
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி-( இண்டை கொண்டு பாசுரம் கீழே பார்த்தோம் )
வந்து கிடந்த மாத்ரம் அன்றிக்கே-

ஒரு திர்யக்குக்கு இப் பூவில் செவ்வி அழியாதபடி திருவடிகளில் பரிமாற வேணும்
என்று இடர் பட -(மீனமர் பொய்கை பாசுரம்)
அவ்விடர் தீர்க்கைக்காக-
அது இடர் பட்ட மடுவின் கரையிலே-
அரை குலையத் தலை குலைய வந்து விழுந்து-
அத்தை ஆற்றி-

இன்னமும் இப்படி இடர் படுவார் உண்டோ என்று
சாய்ந்து அருளினான் கண்டேனே -என்கிறார் –
(மன்னாதன் தானே இங்கே முன்னம் )

——————————————

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன்னின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-1-

சிற்றவை-நடுவில் ஆய்ச்சி -மாற்றுத் தாய்-
தேவை–ஸ்வாமியை –

——————

வியாக்யானம் –

விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் –
விற் பெரு விழா வாயிற்று
சத்ரு நிரசனம் பண்ண நினைக்கிறான் ஆகையாலே -பெருக்கக் கோலினான் -ஆயிற்று –
அத்தைக் கோலின கம்சனும்

அவனுக்கு பலமாய் மலை துள்ளினாற் போலே
பெரிய கிளர்த்தியோடே கூடின மல்ல வர்க்கமும் –

அவர்கள் பார்க்கிலும் கண் பாராதே இடையற வீசும்படி
மதிப்பித்து ( மதமூட்டி ) வழியிலே நிறுத்தின ஆனையும்

அத்தை தள்ளினாலும் அது தன்னை உயிர்ப்புள்ளது போலே
நடத்த வல்ல -பாகனும் –

வீழ செற்றவன் தன்னை-
ஏகோத் யோகத்திலே நிரசித்தாற் போலே
வினை செய்த சடக்கு-
(வார் கெடா -கஞ்சனை குஞ்சி பிடித்து -வரிசையாக நம்மாழ்வார் -இங்கு அக்ரமம் )

புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை –
திரிபுர தஹந அபதாநத்தாலே சஞ்சாத அபிமாநனான -ருத்ரன்
பிதாவுமாய் -லோக குருவுமாய் -இருக்கிறவன் தலையை அறுத்து -பாதகியாய் இருக்கும் –
மதிப்பனாய் இருக்கிறவன் எளி வரவு பட ஒண்ணாதே -என்று அத்தைப் போக்கி
அத்தாலே லோகத்துக்கு எல்லாம் தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை- வெளி -இட்டவன் –

தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷதாம் ப்ரயா சித விஷ்ணு பிரஸாதாத் –
சர்வேஸ்வரன் பிரஸாதத்தாலே
ஸூஸ்ரோணி
அவனைக் கிட்டுகையாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது இறே-என்கிறான்-

(மாத்ஸ்ய புராணம் -வாம அங்குஷ்ட நகத்தால் கிள்ளப்பட்டது -கபாலித்தவம் பவிஷ்யதி சாபம் –
பூ தல புண்ய க்ஷேத்ரம் போனேன் ஹிமாசலம் சென்றேன் -பதரி விசால் பெருமானைப் பிரார்த்தித்தேன்
ரத்தம் வியர்வை கபாலம் பட்டு வெடிக்க ஸ்வப்ன தனம் போல் கபாலம் தொலைந்தது
இதனாலே உன் வடிவு அழகு சுலபமாக பெற்றது என்று பார்வதி இடம் சொன்னானே )

பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு –
பற்றலர் -உண்டு -சத்ருக்கள்
அவர்கள் முடிந்து போம் படி
ஆயுதம் எடுக்க ஓட்டோம் என்றவாறே
குதிரைகளை நடத்தும் கோலைக் கையிலே கொண்டு –

பார்த்தன் தன் தேர் முன்னின்றானை –
ரதியைச் சீறினால்
சாரதியை இறே அழியச் செய்வது
அவனை பின்னே இட்டு -தன்னை அம்புக்கு இலக்காக்கி –
நின்றவனை

சிற்றவை பணியால் முடி துறந்தானை-
மாற்றுத் தாய் சொன்ன வார்த்தைக்காக
ப்ராப்தமாய் வருகிற முடியை சந்யசித்தவனை

ந நூநம் மம கைகேயி
சக்கரவர்த்தி வார்த்தை சொல்ல மாட்டாமையாய் இருக்கிறான் அத்தனை-
உம்முடைய தம்பிக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்-
உம்மைக் காடேறப் போகக் காணும் அவன் நினைத்து இருப்பது –
என்று சக்கரவர்த்தி கருத்தைச் சொல்ல

அத்தைக் கேட்டு நடுவில் ஆய்ச்சி –
திருவடிகளிலே அழகியதாய் ஸூஸ் ரூஷித்தோம் என்று இருந்தோம்
நம் பக்கல் ஒரு குணம் உண்டாக நினைத்து இராமை இறே
தாம் போகச் சொல்லாமே அய்யர் கருத்தாக அருளிச் செய்தது -என்று
ஐயரோ பாதியாகவோ உம்மை நினைத்து இருப்பது –
அவரை ஈஸ்வரராகவும்
உம்மை ஈஸ்வர தரையாகவும் இறே நினைத்து இருப்பது -என்றார் இறே-

(ஒவ் ஒரு பாசுரத்துக்கும் ஸ்வா பதேசமும் அருளிச் செய்கிறார் )
விரோதி வர்க்கத்தை கிழங்கு எடுக்குமவனாய் –
ஈஸ்வர அபிமாநிகளுக்கு இடர் வந்தால் போக்குமவனாய் –
தனக்கு ஸ்நேஹிதர் ஆனார்க்காகத் தன்னை அழிய மாறுமவனாய் –
போலியான ஸ்நேஹிகளுக்கும் ஏவிற்றுச் செய்யுமவனானவனை –

திருவல்லிக்கேணிக் கண்டேனே
திருவல்லிக்கேணியிலே காணப் பெற்றேன்
என்கிறார்

———————————————

வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே–2-3-2-

மயிலாப்பூர் படைவீடு
திரு வல்லிக்கேணி ஆரண்யம்

கனி-நிரதிசய போக்யம்
நந்தனார் களிற்றை-வேழ போதகம் -யானைக்குட்டி
யாளுடை யப்பனை-அடிமை கொண்ட உபகாரகன்
மா-செல்வம் நிறைந்த மாதவன் கேசவன் பார்த்தசாரதி உள்ளடக்கிய செல்வம்

———————————————————–

வியாக்யானம் –

வேதத்தை –
த்ரை குண்ய விஷயா வேதா –
என்கிறபடியே எல்லார்க்கும் ஹிதம் சொல்லப் போந்த
வேதத்தை தனக்கு விபூதியாக உடையவன்

வேதத்தின் சுவைப் பயனை –
வேதோக்தமான கர்மங்களை அநுஷ்டித்து
ராஜசராயும் தாமசராயும் சாத்விகராயும் உள்ளாருக்கு
அவ்வவருடைய ருசி அநு கூலமாக பல பிரதானம் -பனண்ணுமவன் –
(அ சாஸ்திரம் படி செய்பவர் அசுரர்
சாஸ்திரம் முக் குணம் உள்ளோருக்கும் )

விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை-
கர்ம பாவனை யாதல் உபய பாவனை யாதல் அன்றிக்கே
கேவலம் ப்ரஹ்ம பாவனையாயே இருக்கும்
சநகாதிகளுக்கு நிரதிசய போக்யனாய் உள்ளவனை –

நந்தனார் களிற்றை-
ஸ்ரீ நந்த கோபர்க்கு தன்னுடைய
அதி மானுஷ சேஷ்டிதங்களாலே
எப்போதும் ஒக்க இனியனானவனை –

குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை-
பூமியில் உள்ளார் -காரணந்து த்யேய -என்கிறபடியே
தன்னையே ஆஸ்ரயிக்கும் படி
ஜகத் காரண பூதனாய்  உள்ளவனை –

யமுதை-
அவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனை –

யென்னை யாளுடை யப்பனை-
அவர்களுக்கு எல்லாம் புறம்பாய் இருக்கிற என்னை
அடிமை கொண்ட உபகாரகனை –

ஒப்பவரில்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலை-
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன்
என்று பிராட்டி ப்ராதான்யமேயான ஊராகையாலே
பிராட்டி பரிகரமே யாயிற்று –

நா நயோர் வித்யதே பரம் -என்று
அவள் விபூதியும் ஈஸ்வர விபூதியுமாய்
இரண்டு கூறாய் இறே இருப்பது –
(தேவர் திர்யக் மனுஷ -புருஷன் ஹரி -ஸ்த்ரீ தன்மை ஸ்ரீ லஷ்மீ -மைத்ரேயருக்கு )

மயிலாப்பூர் என்று படை வீட்டுக்கு பேர் –
திரு வல்லிக்கேணிக் கண்டேனே –

—————————————

நந்தனார் களிறு என்றவர் மற்ற பிள்ளைச் சேவகங்களையும் அனுபவிக்கிறார் –

வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேயலறி மண் சேர
நஞ்சமர் முலை யூடுயிர் செக வுண்டநாதனைத் தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்யப் பெண்ணுருவாகி
அஞ்சுவை யமுத மன்றளித்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே-2-3-3-

விஞ்சை வானவர் -வித்யாதரர்
வியந்துதி-வியந்து துதி – கடைக்குறை

————————————————————–

வியாக்யானம் –

வஞ்சனை இத்யாதி –
தாய் வடிவு  கொண்டு வஞ்சிக்க வந்த
பூதனை கதறிக் கொண்டு போய்
பூமியிலே விழும்படியாக
விஷம் நிரம்பின முலை வழியே
அவளுடைய பிராணன்கள் போம் படி அமுது செய்த –

நாதனை –
தனக்கு சேராத வடிவு கொண்டு
உலகத்துக்கு பிராணனான தன்னை நலிய வந்தவளை
முடித்து தன்னைத் தந்தவன்
ஸ்தந் யம்தத் -(விடமும் அமுதமும் சமம் -பிராணன் உடன் சேர்ந்து குடித்தார் -ரசமாக இருந்ததாம்
ஜகத் குருவுக்கு -விஷ்ணு புராணம்
பன்னிரண்டு மைல் நீளமாக உடல் விழுந்ததாம் வில் கடை தூரம் அன்று –
கொழு மோர் கொடுத்தாள் தாய் பரிந்து இவன் அச்சம் தீர்க்க )

தானவர் கூற்றை –
ஆசூர வர்க்கத்துக்கு ம்ருத்யு வானவனை

வித்யாதரர் சாரணர் ஸித்தர் உள்ளிட்ட
தேவ வர்க்கம் அடைய விஸ்மிதராய்
ஸ்தோத்ரம் பண்ணும்படி –

புருஷோத்தமனான தனக்கு சேராத வடிவைக் கொண்டு
அம்ருதத்தை அனுகூலரை புஜிக்கும் படி பண்ணினவனை –

————————

(பூதனை நிரசனத்து அளவு இன்றிக்கே த்ரை லோக இந்திரன் கல் மழை பொழிய –
கடுங்கால் மாரி கல்லே பொழிய -கோவர்த்தன விருத்தாந்தம் அனுபவம் இதில் )

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

———————————————————————

வியாக்யானம் –

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் –
திரு ஆய்ப்பாடியில் உள்ளார் த்ரை லோக்ய ஈஸ்வரனான
இந்த்ரனுக்காக வருஷார்த்தமாக ஆண்டுக்கு ஒரு
விருந்திடக் கடவர்களாய் –

நாம் பிறந்து வளருகிற ஊரிலே
புரோடாசத்தை நாய் தின்றாற் போலே
ஒரு தேவதை வந்து புஜிக்க யாவது என் -என்று
நீங்கள் செய்யப் புகுகிறது தான் என்ன -என்று கேட்டான் –

நாங்கள் இந்தரனுக்கு வருஷார்த்தமாக விருந்திடப் புகுகிறோம் என்றார்கள்

இந்த மலை யன்றோ நமக்கும் பசுக்களுக்கும்
ஒதுங்க இடமும் தந்து -புல்லும் தருகிறது
ஆரேனுக்குமோ பிரத்யுபகாரம் பண்ணுவது இம் மலைக்கு இடுங்கோள் -என்றான் –

முகத்தைப் பார்த்து ஓன்று சொன்னால் மறுக்கலாம் படி அன்றே இருப்பது –
ஒன்றாகக் கொடு வந்து குவித்தார்கள் –
(வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று -அழகைக் கண்டவள் ஏது என்று அறிய மாட்டாளே )

இந்த்ரன் இத்யாதி –
இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த
எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே
மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

அவன்
பசி க்ராஹத்தாலே கோபித்து மஹா வர்ஷமாக வர்ஷிப்பிக்க –
அத்தாலே இடையரானவர்கள் தளர்ந்து

ரஷகரான எங்களோடே
எங்கள் உடைய ரஷ்யமான பசுக்களும் தளராதபடி
நோக்கி அருள வேணும் -என்ன –

இத்தால்
புறம்புண்டான ரஷ்ய ரஷக பாவமும்
அப்ரயோஜகம் என்றபடி –

அந்தமில் –
அந்த மழையின் அளவு அல்லாத
பெரிய மலையாலே
மழையைத் தடுத்து –

(தேவதாந்த்ர பிரசாதம் தனது அநந்யார்ஹ பக்தர்களுக்கு கூடாதே -தானே உண்டான் -அவனுக்கு எல்லாம் ஆகுமே )

அப்படியே
பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -என்கிற
என்னுடைய சம்சாரம் ஆகிற வருஷத்தை
பரிகரிக்க வந்தவன்..

——————

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுபவித்து -ஸ்ரீ பூமா நீளா தேவி நாயகனாய் இருந்து
வைத்தும் தூது சென்றான் என்று ஈடுபடுகிறார்

இன் துணைப் பதுமத் தலர்மகள் தனக்குமின்பன் நற் புவி தனக்கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றை யோர்க்கெல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே–2-3-5-

நற் புவி-ஷமை பிருத்வி சமாயா –
தன் துணை யாயர் பாவை-தன்னையே துணை இவளுக்கு மட்டும் தந்தை சுல்கம் வைத்து பற்றினான்

———————————————————-

வியாக்யானம் –

இன் துணைப் பதுமத் தலர்மகள் –
நெஞ்சுக்கு இனிய துணையாய் இருக்கிற
பதுமத்தலர் மகள் உண்டு –
தாமரைப் பூவை உத்பத்தி ஸ்தானமாக உடைய பெரிய பிராட்டியார்
அவளுக்கு இன்பனானவன் –

தனக்குமின்பன் —
எல்லார்க்கும் ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற
பெரிய பிராட்டியார் தான் -அகலகில்லேன் -என்று
விரும்பி வர்த்திக்கும்படி அவளுக்கு ஸ்ப்ருஹணீயனானவன் –

நற் புவி தனக்கிறைவன் –
சர்வேஸ்வரனான தனக்கும் கூட
பொறைக்கு உவத்தாய் இருக்கிற
பூமிப் பிராட்டியாருக்கு வல்லபனானவன் –
(புவிக்கு இல்லாமல் புவி தனக்கும் என்பதால் -பொறுமைக்கு இவள் சம்பந்தமே காரணம் )

தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கிறை-
தன்னையே துணையாக உடையாளான
ஆயர் பாவை உண்டு -நப்பின்னை பிராட்டி –
அவளுக்கு ஸ்வாமி யானவன் –
(சர்வேஸ்வரன் -நீர் வார்த்து கொடுத்துப் பெற்றான் -இவளையே -ஆகவே தன் துணை இவளுக்கு விசேஷணம் )

மற்றை யோர்க்கெல்லாம் வன் துணை –
இப்படி இருக்கையாலே
அல்லாதார் எல்லார்க்கும் வலிய துணை யானவன் –

பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும் என் துணை-
ஆஸ்ரிதரான பாண்டவர்களுக்காக
அவர்கள் வாயில் சொல்லி விட்ட வார்த்தையை அங்கே சென்று சொல்லுவது –
இங்கே வந்து அறிவிப்பதாய் –
இப்படி ஆஸ்ரித விஷயத்தில்
தாழ நின்ற நிலையாலே தானே துணை என்னும் இடத்தை
(தூது இயங்கும் என் துணை -என்பதால் )
எனக்கு அறிவித்தவன் –

எந்தை –
எனக்கு ஸ்வாமியாய் –

தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
என் குலத்துக்கு நாதன் ஆனவன் -.

———————————

தூது சாரத்யங்கள் பண்ணிற்றும் திரௌபதி உடைய மங்கள ஸூத்ரத் தக்காகவே -பிரதான ஹேது –

அந்தகன் சிறுவன் அரசர் தமரசற் கிளையவன் அணி யிழையைச் சென்று
எந்தமக்குரிமை செய்யெனத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமில் குழலாள் அலக் கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே -2-3-6-

அரசர் தம் அரசன் ராஜ ராஜன் -துரியோதனன் அவன் நினைவால்
அணி யிழை-அப்படிப்பட்டவள் இப்படி மூன்று நாள்கள் இருக்கும் பொழுதும்
அலக்கண் -துக்கத்தை
இந்திர புத்ரன் -அர்ஜுனன் -வாலி -அங்கு
சூர்ய புத்ரன் -கர்ணன் -சுக்ரீவன் -அங்கு

——————————————————-

வியாக்யானம் –

அந்தகன் சிறுவன்
குருடன் பெற்ற பிள்ளை யாயிற்று
இத்தால் அறிவு  கேடு வழி வழி வருகிறது என்கை –
பிதாவானவன் கண் அஞ்ச வளர்க்க வளருகை அன்றிக்கே
தான் கண்டபடி மூலையடையே திரிந்தவன் –

அரசர் தமரசற் கிளையவன்
ராஷச ராஜாவான துரி யோதனனுக்கு பின் பிறந்தவன் –
துச்சாதனன் -என்றபடி –
அவன் கொண்டாடி வளர்க்க -செருக்காலே வளர்ந்தவன் என்று
தீம்புக்கு உறுப்பாக சொல்லுகிறது –
(யவ்வனம் -தன சம்பத்- பிரபுத்வம் – அவி விவேகம் நான்கும் இருந்தால் கேட்க வேண்டுமோ )

அணி யிழையைச் சென்று —
மஹோ உத்சவம் ஆகையாலே
ஆபரணங்களாலே அலங்க்ருதையாய் நின்றவள்
பக்கலிலே கிட்டி –

எந்தமக்குரிமை செய்யென-
சூதிலே உன்னையும் தோற்றார்கள்
நீ போந்து எங்களுக்கு இழி தொழில் செய் -என்ன –

தரியாது –
அவள் அந்ய சேஷத்வத்தை பொறுத்து இலள் ஆயிற்று –
இவ்வளவில் ஸ்வாமி யான நீ என் பக்கல் கிருபை பண்ண -வேணும் என்ன

ஆண் பிள்ளைகளான பர்த்தாக்கள் சந்நிதிஹிராய் இருக்க
தூரஸ்தனான கிருஷ்ணன் பேரைச் சொல்லுவான் என் என்று
எம்பாரைக் கேட்க
அறிந்தோமே -முன்பே சில ஸூரு ஸூரூ கேட்டு வைத்தாள் -போலும்
மஹத்யாபதி யம்ப்ராப்தே ஸ்மர்தவ்யோ பகவான் ஹரி –என்று
(வசிஷ்டர் சொல்ல கேட்டு இருக்கிறாளே )

இது தன்னைப் பட்டரைக் கேட்க
பர்த்தாவின் கையைப் பிடித்துப் போகா நின்றாலும்
இடறினால் அம்மே -என்னக் கடவது காண் -என்று அருளிச் -செய்தார்
அர்த்தம் அதாய் இருக்கச் செய்தே
விசைப்பு கிடந்தபடி காணும் -விசைப்பு -ஸ்நேஹாதிக்யம்
(எவ்வுயிர்க்கும் தாயாய் இருக்கும் வண்ணமே )

சந்தமல் குழலாள் –
சந்தம் என்று நிறம்
அல் -என்கிற இத்தால் இருளை லஷித்து ( அல்லும் பகலும் இருளும் பகலும் )
நிறம் இருண்ட குழலை உடையவள் என்னுதல் –
அன்றிக்கே
சந்தமல் குழலாள் –
சந்தனப் பூ மாறாத குழலை உடையவள் என்னுதல்

அவள் பட்ட அல்லல் உண்டு –துக்கம் அத்தை
துர் யோதாநாதிகள் உடைய ஸ்திரீகள் பட்டு –
அதில் தன்னேற்றமாக நூலும் இழந்தார்கள் ஆயிற்று –
அவர்களுக்கு துக்கம் நிலை நிற்கும்படி பண்ணினான் ஆயிற்று –

இந்திரன் -இத்யாதி -(ஸ்வாபதேசம் )
வலியார் சிலரை அபாஸ்ரயமாக பற்றினாலும்
தானே தாழ நின்று ரஷகனாக வல்லன் என்னும் இடத்தை சொல்லுகிறது–
த்ரௌபதிக்கு பர்த்தாகள் உதவிற்று இலர்-
அர்ஜுனனுக்கு இந்த்ரன் உதவிற்று இலன் –

———————

(ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தில் ஆசை கொண்டு தேர் தட்டிலும் குரு பரம்பரையில் இடம் பிடித்தான்
சிற்றவை பணியால் முடி துரந்தானே -கீழே பெருமாள் மங்களாசானம் இதில் விரித்து ச குடும்பமாக

ப்ருந்தாரண்ய துளசிக் காடு -நிவாஸாய –
கைரவணி புஷ்கரணி –மீன்கள் இல்லாதது
துர்வாசர் சாபத்தால் விஸ்வகர்மா-உடல் அற்று கீழே விழ சபித்து -அ ரஜ நதிக்கரையில் –
சாபம் போக இங்கு தபஸ் அங்கங்கள் பெற்றார்
ஆர்த்ரேயர் வியாசர் இருவரும் -வியாசர் எழுந்து அருளப்பண்ணிய வேங்கட கிருஷ்ணம்
வலது திருக்கையில் பாஞ்ச ஜன்யம்
இடது திருக்கையில் தான ஹஸ்தம் வைகுண்டம் ஹஸ்தம் ஞான முத்திரை
ஒரு திருவடி முன் வைத்து பார்த்தனை கடாக்ஷித்து -சாட்டை வைத்து பார்த்தசாரதி சேவை
சேஷ பீடத்தில் ஒட்டியாணம் நாகாபரணம் தரித்து ஹிரண்ய மீசை
சுமதி அரசன் -இரண்டு தோள் அமுது
அத்ரி முனிவர் தபஸ் -அத்ரி குமாரர் ஆர்த்ரேயர் நரசிம்மர் )

ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் நடுவில் வழி பரிப்பாரைப் போல் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -சிற்றவை –
நெஞ்சுக்குள் புகுந்து பாடல் பெறுகிறார் இங்கு –

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

காட்டுக்கு கூட சென்றவர்களும் செல்லாதவர்களும் பிரித்து-

————————-

வியாக்யானம் –

பரதனும் தம்பி சத்ருக்கனனும்-
ஸ்ரீ பரதாழ்வானும்
அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )

இலக்குமனோடு மைதிலியும் –
இதுவும் இங்கனே  ஒரு சேர்த்தி –
ஸீதே ஸ லஷ்மணாம் -என்கிறபடியே தாயும் பிள்ளையுமாய் இருக்கிற சேர்த்தி –
பெருமாளைப் பிரியில் தரியாமையால் உண்டான சேர்த்தியுமாம் -( அக்குளத்தில் மீன் முஹுர்த்தம் அபி ஜீவிதம் )
ராவண வதத்தின் அன்று விஜய கோஷத்தின் சடக்கு கேட்டு இருக்கையில் உண்டான சேர்த்தியுமாம் –

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று –
தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை-
தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –
கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள்
ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )

இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற-
நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு
உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )

இராவணாந்தகனை –
இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின
அபதானம் ஒன்றுமே ஆயிற்று –

யெம்மானை –
அவர்களோபாதி நானும் தோற்று
ஏத்தும்படி -பண்ணினவனை

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
குரவம் கமழா நிற்பதாய்
ஸ்ரமஹரமான
பொழிலின் ஊடே
குயில்களோடே கூட
மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று –
பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று-
(ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ-
பகதர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

——————————

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—-2-3-8-

ஒள்ளியவாகி-அழகாக
ஆஹ்வாத ஹஸ்தம்-பூரிப்புடன் திரு முகம்

—————————————————————

வியாக்யானம் –

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –
பள்ளி ஓதும் பருவத்தில் சொன்னவை அடங்கலும்
சிரஸா வஹிக்க வேண்டும்படி இருக்கும் –
இதாயிற்று பருவம் -இருந்தபடி –
அதுக்கு மேலே தன் வயிற்றில் பிறந்த பிரஜை
சொன்னவை அடையப் பொறுக்க வேணும் –

வாயில் ஓர் ஆயிர நாமம் –
அவன் அப்போது சொல்லிற்று
நால் இரண்டாகிலும்
பருவத்துக்கு தக்க அளவல்லாதபடி
இருக்கையாலே குவாலாகச் -சொல்லுகிறார் –

நால் இரண்டு -திரு அஷ்டாஷரம் ஆகவுமாம்
நாராயண -ஹரி என்றுமாம்
விஷ்ணு ஷட் அஷரி-யாகவும் –

ஒள்ளியவாகிப் போத –
வயிற்றில் பிறந்தவன் சொல்லுகையாலே
இனிதாய் இருக்குமே –

வாங்கு –
அவ்விடத்தில் –

அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி –
பள்ளியில் ஓதும் பருவத்தில் சொல்லுவது எல்லாம் பிரியமாய் இருக்கும் –
தன் வயிற்றில் பிறந்தவன் சொல்லிற்று எல்லாம் இனிதாய் இருக்கும் –
சத்ருவே சொன்னாலும் சிரசா வஹிக்க வேண்டுமத்தை சொல்லிற்று –
அசஹ்ய அபசார ப்ராசுர்யத்தாலே
திரு நாமம் கேட்டுப் பொறுக்க மாட்டாமையாலே
முனிந்தான் ஆயிற்று –

பிள்ளையை-
திரு நாமம் சொன்னதுவே ஹேதுவாக வயிற்றில் பிறந்தவனை
கை விட்டான் அவன் –
திரு நாமம் சொன்னாரோடே தமக்கு சம்பந்தமாக நினைத்து
இருக்கிறபடியாலே -பிள்ளையை –என்கிறார்

சீறி வெகுண்டு தூண் புடைப்ப-
கோபத்தாலே செய்வது அறியாதே
தூணைத் தட்ட –

பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் –
பிறை போலே இருந்த எயிற்றையும்
அக்நி போலே இருந்த கண்களையும்
புறப்பட விடா நின்றுள்ள பெரிய வாயையும்- உடைய -( இவையாய் பிலவாய் )

தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணிக் கண்டேனே –
ஹிரண்யன் உடைய முரட்டு வடிவைக் கண்டு பிற் காலியாதே
நரசிம்ஹமாய்
அவ்வழியாலே தானே ஆஸ்ரயணீயன்
என்னும் இடத்தை வெளி இட்டான் –

——————————

ஆண் பிள்ளை ஐவருக்கும் பெண் பிள்ளைக்கும் சிறுக்கனுக்கும் உதவியது அன்றிக்கே
திர்யக்குக்கும் ஒரு திரியக்கால் வந்த நோவுக்கு அரை குலையத் தலை குலைய வந்த
மஹா குணத்தில் கட்டுண்டு அனுபவிக்கிறார்

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே-2-3-9-

———————————————

வியாக்யானம் –

மீனமர் பொய்கை நாண் மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த –
நெடுநாள் பூத் தேடி பெறாமையாலே
இடர் பட்டுத் திரிந்த விது –
பூத்த தடாகத்தைக் கண்டு –
ஷூத்ர மத்ஸ்யத்துக்கு மேற்பட துஷ்ட தத்வம் உண்டு என்று மதியாதே
வந்து செவ்விப் பூவைப் பறிக்கைகாக பெரிய அபிநிவேசத்தோடே
வந்து இழிந்த –

கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா வதன் காலினைக் கதுவ  –
காட்டிலே ஸ்வ சஞ்சாரம் பண்ணக் கடவ யானையானது
கை எடுத்துக் கூப்பிடும்படியாக
முதலை யானது இதின் காலைக் கதுவ –
முதலைக்கு தன்னிலமாய்
இதுக்கு வேற்று நிலமாயிற்று –

ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை –
ஆனை நெடு நாள் பட்ட இடர் எல்லாம்
போம்படியாக
பெரிய திருவடியை மேற் கொண்டு வந்து
ஆனைக்கு இடர் இன்றிக்கே
முதலைக்கே இடர் ஆம்படியாக
திரு வாழியை ஏவினான் ஆயிற்று –

தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே –
வண்டுகள் அமர்ந்த சோலையையும்
மாடங்களையும் உடைத்தான
மயிலாப்பூரில் திருவல்லிக்கேணிக் கண்டேனே –

——————

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர் கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நன் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார் சுகமினி தாள்வர் வானுலகே—2-3-10-

பாண்டிய தேச அரசர் வம்சம் -தென்னன்
நின்றானை-ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனை –
இவர் பாடலே இவனுக்கு அரண் -ஆகவே மதிள் மங்கை நாட்டில் இருக்க வேண்டுமே
சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
சொல் மாலை -ஸப்த சந்தர்பமான

——————————-

வியாக்யானம் –

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
நித்யமாய்
குளிர்ந்து இருந்துள்ள பொழிலும்
நீர் நிலங்களும்
அரணாகப் போரும்படியான மதிள்களும்
மாடங்களும்
மாளிகைகளும்
மண்டபங்களும்-

தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை –
இன்னமும் சொல்லிச் சொல்லாத நன்மைகளும் எல்லாம்-( நன் மயிலை-சொல்லாத நல்லவைகளும் )
உண்டாம்படி யாயிற்று
தொண்டமான் சக்கரவர்த்தி ஏற்றிற்று –

கன்னி நன் மாட மங்கையர் தலைவன் –
அரணாகப் போரும்படியாய்
நன்றாய் இருக்கிற மாடங்களை உடைய
திருமங்கைக்கு ப்ரதானர் –

காமரு சீர்க் கலிகன்றி -சொன்ன சொல் மாலை பத்துடன் வல்லார்-
ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த பத்தையும்
அப்யசிக்க வல்லார்கள் –

சுகமினி தாள்வர் வானுலகே –
நித்ய அனுபவம் பண்ணலாம் படியான
நித்ய விபூதியைப் ப்ராபிக்க பெறுவர் .

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வில் நுதல் அண்டர் கரிக்கு சார்வு பற்றாய் நீக்கியவர்
அல்லல் கிடந்தது இருந்து நின்று புள்ளூர் -செல்வனாம்
ஓர் அஞ்சுவை அமுதைக் கண்டான் கலிகன்றி
சீர் அல்லிக் கேணியுள் அன்று–13-

சார்வு -ரக்ஷகத்வம் /பற்று -சரண்யத்வம்/ஓர் -அத்விதீயம் -ஓர்தல் -என்றுமாம் -/
புள்ளூர் செல்வன் -கஜேந்திர வரத்தான் நித்ய சேவை /
கோயில் திருமலை பெருமாள் கோயில் -ஒரே திவ்யதேச சேவையால் வந்த சீர்மை –
எம்பெருமானாராக அவதரித்த சீர்மையும் உண்டே –
கண்ணனும் ராமனும் குடும்ப ஸஹித சேவையால் வந்த சீர்மையும் உண்டே
அஞ்சுவை அமுதம் -மன்னாதன் கிடந்து-தெள்ளிய சிங்கர் இருந்தும் -பார்த்த சாரதி நின்றும் –
புள்ளூர் செல்வன் வரதன் -மனத்துக்கு இணையான நின்றும் –
கலிகன்றி கண்ட அஞ்சுவை அமுதம் அன்றோ இவர்கள் –
வில் நுதல் -திரௌபதி /அண்டர் தேவர் இடையர் -இருவர் இடர் தீர்த்தமை பாசுரங்களில் உண்டே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ பரமபதம் -ஸ்ரீ திரு நாடு

March 24, 2024

மூலவர் -பரமபத நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரிய பிராட்டியார்
தீர்த்தம் -ஜரம்மத புஷ்கரிணி -விராஜா நதி
மங்களா சாசனம் -பொய்கையார் -பேயார் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ வைகுண்டம் –நித்ய விபூதி –பரமாகாசம் -பரம வ்யோமம் -தெளி விசும்பு திரு நாடு -நலமந்தம் இல்லாத நாடு
விராஜா நதி நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கு நடுவில்
ஞானம்பக்தி குறை இல்லாமல் -கர்மம் தீண்டாமல் -ஆனந்தமே மிக்கு இருக்கும்
ஸ்வரூப விகாசம் அடைந்த ஆத்மாக்கள் ஸ்ரீ யபதியை அனுபவித்து -அபஹத பாப்மாதி குணங்களில் சாம்யம்
நசப்புனராவர்த்ததே-திக்குகள் இல்லாத தேசம் -வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே –

பரத அக்ரூர மாருதியை ஆலிங்கனம் செய்த திருமார்பால் ஆலிங்கனம் செய்யப் பட்டு திரு மடியில்
-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–அம்ருத சாகர ஆனந்த சாகரத்தில் ஆழ்வோம்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் –பூத புரீசன் -ஆதி கேசவ பெருமாள் -குடி கொண்ட கோயில் -ஸ்வாமி சேவிக்க அனைவரையும் சேவிப்போமே –
நல் தாதை தம் புதல்வன் -சொத்து நமக்காக சரணாகதி –
மணவாள மா முனி ஜீயர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் வாழி –செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்
நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்-

ஸ்ரீ திருப் பரமபதம்
மூலவர் ஸ்ரீ பரமபத நாதன், ஸ்ரீ வைகுந்த நாதன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் தெற்கு
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ நீளாதேவி
தீர்த்தம் ஸ்ரீ விரஜா நதி, ஸ்ரீ ஐரம்மதீய புஷ்கரணி
விமானம் ஸ்ரீ அனந்தாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ விண்ணுலகம்
மாநிலம் ஸ்ரீ விண்ணுலகம்
அடிப்படை இடம் ஸ்ரீ விண்ணுலகம்
நாமாவளி ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பரம பத நாதாய நமஹ

———-

ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –
ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்
ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள்
ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள்

——————————————

ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்
வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன்
வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்தமனிருக்கை
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே

———–

ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்

மா மாயன் மாதவன் வைகுந்த னென்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

———-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்

மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்?
வைகுந்தச் செல்வனார் சேவடி மேற் பாட்டு
தம் மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம் வைகுந்தம் காண்பார் விரைந்து
ஆன்றேன் கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை இடநாடு காணவினி.

———-

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்

அமலனாதி பிரான் அடியார்க் கென்னை யாட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்

————

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்

அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்! நீதியான பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே

————

ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள்

தனது வைகுந்த மன்னாள் கண்ணாய் வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்! கலந்தார் வர
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும் நிலையிடமே
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் மீதியன் எம்பெருமான்
இணைவனா மெப்பொருட்கும், வீடு முதலாம் புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே.

துயரில்லா வீடு முதலாம் — என் தனி நாயகன் புணர்ப்பே
புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி நலமந்த மில்லது ஓர் நாடு புகுவீர்
சேண் பால வீடோ உயிரோ மற்றெப்பொருட்கும் எண் பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே
சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகீறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்றெப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய்
இப்பத்தும் வல்லார் விண் தலையில் வீற்றிருந்தாள்வர் எம்மா வீடே

எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் இறப்பி லெய்துக வெய்தற்க
இவை பத்தும் கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்த
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும்

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ்
வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக மெண்ணும் இராப் பகலின்றியே
தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும் ஒளி முகில்காள்! திருமூழிக்களத் துறையு மொண் சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்துறையும்

திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
திருப் பேரான் தெளிதாகிய சேண் விசும்பு தருவானே
சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
உயர் விண்ணில் நீரணி கடல்கள் நின்றார்த்தன
முனிவர்கள் வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
மாதவன் தமரென்று
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமரென்று வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந் தெங்கும் தோத்திரஞ் சொல்லினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
விதி வகை புகுந்தனரென்று நல் வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
வந்த வரெதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோ டிருந்தமை

————-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள் –

விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால் வேதப் பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங் கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும்

————–

ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள் –

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூற் கடலும்
பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம் கொண்டங்குறைவார்க்குக் கோயில்

———————————————————–

ஸ்ரீ பெரியாழ்வார் –4-பாசுரங்கள் –

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங் கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சிலுறைவாய். தூ மலராள் மணவாளா!
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில் கொண்டாய்!
கண்டு நான்உன்னை யுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்–பெரியாழ்வார் திருமொழி-2-7-9 –

வானிள வரசு வைகுந்தக் குட்டன் வாசு தேவன் மதுரை மன்னன் நந்த
கோனிள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின போது
வானிளம் படியர் வந்து வந்தீண்டி மனமுருகி மலர்க் கண்கள் பனிப்ப
தேனளவு செறி கூந்தலவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே. பெரியாழ்வார் திருமொழி -3-6-3–

வடதிசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோ த்தமனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரஞ்சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே. பெரியாழ்வார் திருமொழி -4-7-9-

தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி!
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே –பெரியாழ்வார் திருமொழி -5-4-9–

——–

ஸ்ரீ ஆண்டாள் –1–பாசுரம்

தூ மணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்த னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை – 9–

————-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –4-பாசுரங்கள்

மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணுமெண் ணகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழா யலங்கலம் புனிதனே!–திருச்சந்தவிருத்தம் – 45-

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேற் பாட்டு. –நான்முகன் திருவந்தாதி – 75

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் – ஏய்ந்த தம்
மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து–நான்முகன் திருவந்தாதி – 79

ஏன்றேனடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேனமரர்க் கமராமை – ஆன்றேன்
கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை
இடநாடு காணவினி. –நான்முகன் திருவந்தாதி – 95-

———

ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –1–பாசுரம்

அமலனாதி பிரான் அடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிளரங்கத் தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. –அமலனாதிபிரான் – 1–

—————–

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் –1–பாசுரம்

தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே? பணியாய் எந்தாய்!
அண்டமாய் எண் திசைக்கும் ஆதியாய்! நீதியான
பண்டமாம் பரம சோதி! நின்னையே பரவுவேனே. –திருக்குறுந்தாண்டகம் – 11-

————

ஸ்ரீ நம்மாழ்வார் –33-பாசுரங்கள் –

உண்ணா துறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிருமியல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே. –திருவிருத்தம் – 66

மலர்ந்தே யொழிந்தில மாலையும் மாலை பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்!
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே.–திருவிருத்தம் – 68

உலாகின்ற கெண்டை யொளி யம்பு எம் மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர்! குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ? வையமோ? நும் நிலையிடமே. –திருவிருத்தம் – 75

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்றொழிந்தன கொல்? ஏ பாவம்! – வெல்ல
நெடியான் நிறங் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேன துள்ளத் தகம். –பெரிய திருவந்தாதி – 68

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணுமெல்லாம் உடனுண்ட நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே.–திருவாய்மொழி -2-2-1–

அணைவ தரவணை மேல் பூம் பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனா மெப்பொருட்கும், வீடு முதலாம்
புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கே. –திருவாய்மொழி -2-8-1-

நீந்தும் துயர்ப் பிறவி உட் பட மற்றெவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந் தண் புனற் பொய்கை யானை யிடர்க் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே–திருவாய்மொழி -2-8-2-

புலனைந்து மேயும் பொறியைந்து நீக்கி
நலமந்த மில்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமினோவாதே–திருவாய்மொழி -2-8-4-

காண்பாரார்? எம் மீசன் கண்ணனை யென் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்றெப்பொருட்கும்
எண் பாலும் சோரான் பரந்துளனா மெங்குமே–திருவாய்மொழி -2-8-8-

சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகீறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்றெப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே–திருவாய்மொழி -2-8-10-

கண் தலங்கள் செய்ய கரு மேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண் தலையிற் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண் தலையில் வீற்றிருந்தாள்வர் எம்மா வீடே.–திருவாய்மொழி -2-8-11-

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம் மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா! அடியேன் வேண்டுவதீதே. –திருவாய்மொழி -2-9-1-

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பி லெய்துக வெய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப் பொன்றின்றி என்னும் மகிழ்வேனே–திருவாய்மொழி –2-9-5-

விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலி லாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே. –திருவாய்மொழி -2-9-11-

இடரின்றியே யொரு நாளொரு போழ்தில் எல்லா வுலகும் கழிய
படர்ப் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண் தேர்க் கடவி
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே–திருவாய்மொழி -3-10-5-

மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணிது வென்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு வைகுந்த மென்று கை காட்டும்
கண்ணை யுண்ணீர் மல்க நின்று கடல்வண்ண னென்னும் அன்னே! *என்
பெண்ணைப் பெரு மயல் செய்தார்க்கு என் செய்கேன்? பெய் வளையீரே! –திருவாய்மொழி -4-4-1-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தற
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்தார்வனோ?–திருவாய்மொழி -7-9-7-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள் காள்! குயில் காள்! மயில் காள்!
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்று மொழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–திருவாய்மொழி -8-2-8-

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தானுறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏக மெண்ணும் இராப் பகலின்றியே–திருவாய்மொழி -9-3-7-

தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும்
ஒளி முகில்காள்! திருமூழிக்களத் துறையு மொண் சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீ வினையேன் மனத்துறையும்
துளிவார்கட் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–திருவாய்மொழி -9-7-5-

திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வ னொருவனே—திருவாய்மொழி -10-7-8-

எளிதாயினவா றென்று எங்கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேண் விசும்பு தருவானே–திருவாய்மொழி -10-8-4-

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடலலை திரை கை யெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே.–திருவாய்மொழி -10-9-1-

நாரணன் தமரைக் கண்டுகந்து நல் நீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதன ருலகே—திருவாய்மொழி -10-9-2–

தொழுதன ருலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூழி யன்றளந்தவன் தமர் முன்னே
எழுமினென்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே–திருவாய்மொழி -10-9-3-

எதிரெதி ரிமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர வரவர் கைந் நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–திருவாய்மொழி -10-9-4-

மாதவன் தமரென்று வாசலில் வானவர்
போதுமி னெமதிடம் புகுதுக வென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–திருவாய்மொழி -10-9-5-

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்தெங்கு மிசைத்தனர்
ஆண்மிங்கள் வானகம் ஆழியான் தமரென்று
வாளொண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–திருவாய்மொழி -10-9-6-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந் தெங்கும் தோத்திரஞ் சொல்லினர் தொடு கடல்
கிடந்த வென் கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை யென் கோவலன் குடி யடியார்க்கே–திருவாய்மொழி -10-9-7-

குடி யடியா ரிவர் கோவிந்தன் தனக்கென்று
முடி யுடை வானவர் முறை முறை யெதிர் கொள்ள
கொடி யணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடி வுடை மாதவன் வைகுந்தம் புகவே–திருவாய்மொழி -10-9-8-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–திருவாய்மொழி -10-9-9-

விதி வகை புகுந்தனரென்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியு நற் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–திருவாய்மொழி -10-9-10-

வந்த வரெதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோ டிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்க ளாயிரத்து இவை வல்லார் முனிவரே—திருவாய்மொழி -10-9-11-

—————-

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் –2-பாசுரங்கள் –

உணர்வாரார் உன் பெருமை? ஊழி தோறூழி
உணர்வாரார் உன்னுருவந் தன்னை? உணர்வாரார்?
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால் வேதப்
பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்–முதல் திருவந்தாதி – 68

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் – நான் கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் –முதல்-திருவந்தாதி – 77

————

ஸ்ரீ பேய் ஆழ்வார் –3-பாசுரங்கள்

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பு – வாய்ந்த
மறை பாடக மனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறை பாடியாய விவை–மூன்றாம் திருவந்தாதி – 30-

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் – பாற் பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன்–மூன்றாம் திருவந்தாதி – 32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்–மூன்றாம் திருவந்தாதி – 61-

விஷ்ணுவின் அடியவர்கட்கு முக்தியில் நாட்டம்கொண்ட முக்தர்கட்கு திவ்யதேசங்களில் ஊறித்திளைத்துப் போன பக்தர்கட்கு திருநாடு மிகவும்
சமீபம். அவனது சாயுஜ்யம் அவர்கட்கு மிகவும் சாமீப்யம். ஆம் இதிலெல்லாம் திளைத்தவர்களை அவனே வந்து தன் திருநாடுக்கு இட்டுச் செல்கிறான்
என்பது ஐதீஹம்.

வைணவ அடியார்கட்கு, அவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே
வைணவர்களின் கடைசி இலக்காகும்.

பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று
எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான்.

மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றென்னும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும்.

திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல்
திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான
வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாக இருக்கும், இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம்
பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

“திருவனந்தாழ்வானின் மேல் – தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற திருக்கண்களை
உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய்,
கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை, ஹாரம் முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவன முடையவனாய், எப்போதும் ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய் (ஈஸ்வரர்களுக்கெல்லாம் மேலான) பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும்
முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் (அனைவரினும்) பெரியவனாய் ஸர்வவ்வியாபியான பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.
(ப்ரப்பந்நாம்ருத தர்ப்பணம் (23-26)

மூலவர்–  பரமபதநாதன், வைகுண்டபதி, தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்-    பெரியபிராட்டியார்

தீர்த்தம்-  விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி
காட்சி கண்டவர்கள்-     ஆதிசேடன், கருடன், நித்யசூரிகளும், முக்தர்களும்.

இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம்
என்பது பொருள்

இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும்
இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பெயர் சூட்டியுள்ளார். அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை என்று தனக்கு
வைகுந்தம் அளிப்பதாக பாடுகிறார். திருப்புளியாழ்வார் அடியிலே இருந்துகொண்டு மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்ததுபோல்
வைகுந்தம் சென்றதாகவும் பாடுகிறார்.
வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்றும் பெயருண்டு.

எம்பெருமானின் சகல ரூபங்களுக்கும் ஆதியானதாக, மூலமானதாக, உற்பத்தி ஸ்தானமாய் பரமாய் இருப்பதால் பரமபதம் என்று பெயர்.

திரு நாட்டுத் திருப்பதி -108-

இடருடையேன் சொல்ல எளிதோ பிரமன்
அடரும் விடையோற்கும் அரிதே -தொடரும்
கருவைகும் தம் பிறவிக் கட்டு அறுத்து மீளாத்
திருவைகுந்தம் பெறுவார் சீர் –108-

(இ – ள்.) தொடரும் – (இருவினைப்பயன்காரணமாகத்) தொடர்ந்து வருவதும்,
கரு வைகும் – கர்ப்பத்தினிடத்திற் பிரவேசிப்பதற்குக் காரணமானதுமான,
தம் பிறவி கட்டு – தமது ஜந்மபந்தத்தை,
அறுத்து – (எம்பெரு மானது திருவருளால் அடியோடு) ஒழித்து,
மீளா – (தன்னிடத்துச்சேர்ந்த வர்கள்) திரும்பிவருதலில்லாததாகிய,
திரு வைகுந்தம் – ஸ்ரீவைகுண்ட லோகத்தை,
பெறுவார் – அடையப்பெறுபவர்களது,
சீர் – சிறப்பானது, –
பிரமன் – பிரமதேவனுக்கும்,
அடரும் விடையோற்கும் – போர்செய்யுந்தன்மையுள்ள ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபெருமானுக்கும்,
அரிது – சொல்லமுடியாதது; (என்றால்), –
இடர் உடையேன் – ஸம்ஸாரத்தில் மிகவும் உழலுகின்ற யான்,
சொல்ல – புகழ்ந்து கூறுதற்கு, எளிதோ – எளியதாகுமோ? (எ – று.)

“முதலாவார் மூவர்” என்றபடி திருமாலோடு சேர்த்து எண்ணப்படு கின்ற பிரமருத்திரராகிற மற்றை
யிருமூர்த்தியராலுமே ஸ்ரீவைகுண்டலோகத்தை யடைந்த முக்தர்களின் பெருமை சொல்லமுடியா தென்றால்,
கேவலம் ஸம்ஸாரத்தில் உழலுகின்ற ஜ்ஞாநஹீநனான என்னால் எவ்வாறு சொல்லப் போகு மென்பதாம்;
இங்குக் கைமுதிகநியாயத்தினால் (கைமுதிகநியாய மாவது – ஓர்எலி தண்டத்தை விழுங்கியதென்றால்
அதிற்கட்டப்பட்டிருந்த அபூபமும் – (பக்ஷணமும்) விழுங்கியமை பெறப்படுவதுபோல்வது.)
பிரமருத்திரர்க்கே திருவைகுந்தம் பெறுவார் சீர் சொல்ல அரிதாயின் என்னால் எவ்வாறு சொல்ல முடியு மெனக் கூறியது –
தொடர்நிலைச் செய்யுட்பொருட் பேறணியாம்.

இது – திருமாலினது ஐவகைநிலையகளுள் பரத்வம் விளங்குந் தானம்.
“பரத்வமாவது – அகால கால்யமான நலமந்தமில்லதோர்நாட்டிலே நித்ய முக்தர்க்குப் போக்யனாய்க்
கொண்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு.” இதுவே – பரமபதமெனவும், நித்தியவிபூதி யெனவும்படும்.

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் பாற் கடல்

March 24, 2024

மூலவர் -ஷீராப்தி நாதன் -ஆதி சேஷ சயனம் –தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -கடல் மகள் நாச்சியார் -ஸ்ரீ பூமா தேவி
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -பொய்கையார் -பூதத்தார் -பேயார் -திரு மழிசையாழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
-பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடிகள் -திருமங்கை ஆழ்வார் –

ஸ்ரீ வைகுண்ட நாதன் இறங்கி வந்து வா ஸூ தேவ சங்கர்ஷண -ப்ரத்யும்ன – அநிருத்தர்கள் -நான்காக வ்யூஹித்து
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனம் –சங்கர்ஷணன் சம்ஹாரத்தையும் ப்ரத்யும்னன் ஸ்ருஷ்ட்டியையும் -அநிருத்தன் -ரக்ஷணத்தையும் –
கேசவாதி பன்னிரு திரு நாமங்களை இந்த நால்வருக்கும் –
கூப்பீடு கேட்க்கும் இடம் -விபவங்கள்- இங்கே இருந்து தான் நடக்கும்

ஸ்ரீ திருப் பாற் கடல்
மூலவர் ஸ்ரீ ஷீராப்தி நாதன், ஸ்ரீ பாற் கடல் வண்ணன்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் தெற்கு
தாயார் ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், ஸ்ரீ பூமா தேவித் தாயார்
தீர்த்தம் ஸ்ரீ அம்ருத தீர்த்தம், ஸ்ரீ திருப் பாற்கடல்
விமானம் ஸ்ரீ அஷ்டாங்க விமானம்
மண்டலம் ஸ்ரீ விண்ணுலகம்
மாநிலம் விண்ணுலகம்
அடிப்படை இடம் ஸ்ரீ விண்ணுலகம்
நாமாவளி ஸ்ரீ ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஷீராப்தி நாதாய நமஹ

———-

மங்களா சாசன –52-பாசுரங்கள் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில்-6- பாசுரங்கள் –
ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –
ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –
ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில்-6- பாசுரங்கள் –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா!
பையரவினணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும்
பனிக் கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே

——

ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –

பாற் கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி
தெண்டிரைக் கடற் பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோ ராசையினால்

—————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன்
ஒண் பவள வேலை யுலவு தண் பாற் கடலுள் கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு

————

ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –

நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல் ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல்? ஆதி தேவனே!
பௌவநீரராவணை படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொல்? வேலை வண்ணானே.
நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த பற்பநாபனல்லையே?
பௌவநீர் படைத்தடைத்ததிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
பௌவநீரணைக் கிடந்து உரத்திலும் மொருத்தி தன்னை வைத்துகந்து
கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
வேலை நீர் படைத்தடைத்ததிற் கிடந்து முன் கடைந்து,
கடற்கிடந்த நின்னலால் ஒர் கண்ணிலேன் எம்மண்ணலே.
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!
நாகத் தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு வல்லவாறு ஏத்த

—————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்த பின்னை

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

பரமனே! பாற்கடல்கிடந்தாய்! நாடி நான் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!
திருவினுக்கரசே! திரை கொள் மா நெடுங்கடல் கிடந்தாய்! நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்
பள்ளியாவது பாற் கடலரங்கம்
பறவை முன்னுயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கருமணியை
வங்க மலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரி யரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து பூவுலருந்தி தன்னுள் புவனம் படைத்துண்டுமிழ்ந்த தேவர்கள் நாயகனை
பங்கத்தாய்! பாற் கடலாய்! பாரின் மேலாய்! பனிவரையினுச்சியாய்! பவள வண்ணா!
கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு! என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்

—————–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –

எப்போதும் வரை மேல் மரதகமே போல திரமேல் கிடந்தானை

————-

ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –

பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம் புரிவார் புகழ் பெறுவர்
மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான்

—————

ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

சங்கோதப் பாற் கடலான் பாம்பணையின் மேலான்
செவிதெரியா நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான் பாகத்தான் பாற் கடலுளான்.
பாற்கடலும்வேங்கடமும் பாம்பும்பனிவிசும்பும்- –பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவார்க்குக் கோயில்

————

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

பாற் கடல் பாம்பணை மேற் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே.
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்-
இரைக்குங் கடற் கிடந்த வெந்தாய்! – உரைப்பெல்லாம் நின்னன்றி மற்றிலேன் கண்டாய்
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்–போரேறே.
விடுவேனோ ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை சிந்தை செய்த வெந்தாய்
நம் பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலுந்திருவுடையார் யவரேலுமவர் கண்டீர் பயிலும் பிறப்பிடைதோறு எம்மையாளும் பரமரே
பணங்களாயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய்! பாற் கடற் சேர்ப்பா! வணங்குமா றறியேன்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை
திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே

——————————————-

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழியில் ஆறு பாசுரங்கள் –

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பாற் கடல் வண்ணா! உன்மேல்
கன்றினுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய் போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவர்களே.–3-3-7-

பையரவினணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி!
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய்யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய! இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்தரவணைப் பள்ளியானே.–4-10-5-

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே.–5-1-7-

அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற்பொருட்டே.–5-2-10-

பனிக் கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக் கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ!
தனிக் கடலே! தனிச் சுடரே! தனி யுலகே! என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே. –5-4-9-

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பி!
வட தடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே. –5-4-10-

———–

ஸ்ரீ ஆண்டாள் –3-பாசுரங்கள் –

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட் காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக் குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.–திருப்பாவை –2-

குண்டு நீருறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய்! உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.–நாச்சியார் திருமொழி–4-2-3-

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோராசையினால் என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித் தாவியையாகுலஞ்செய்யும்
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ? ஆழியும்சங்குமொண்தண்டும்
தங்கியகையவனைவரக்கூவில் நீ சாலத்தருமம்பெறுதி.–4-5-7-

————-

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -2-பாசுரங்கள் –

மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை யுற்றவரைப் பெருந்திரு மார்வனை மலர்க் கண்ணனை
மாலை யுற்றெழுந் தாடிப் பாடித் திரிந்தரங்க னெம்மானுக்கே
மாலை யுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்ற தென் நெஞ்சமே.–பெருமாள் திருமொழி –2-8–

ஒண் பவள வேலை யுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு வுடையேனாவேனே–4-4-

——————

ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -12–பாசுரங்கள் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து மேல்
ஆக மூர்த்தியாய வண்ணம் என் கொல்? ஆதி தேவனே! –திருச்சந்தவிருத்தம் – 17

விடத்த வாயொராயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடத்து வீள்விலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர ராவணை
படுத்த பாயல் பள்ளி கொள்வது என் கொல்? வேலை வண்ணானே.–திருச்சந்தவிருத்தம் – 18

வானிறத்தொர் சீயமாய் வளைந்த வாளெயிற்றவன்
ஊன் நிறத் துகிர்த் தலம் அழுத்தினாய்! உலாய சீர்
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக் கடல் கிடந்த பற்ப நாபனல்லையே?–திருச்சந்தவிருத்தம் – 23

படைத்த பாரிடந்தளந்து அதுண்டுமிழ்ந்து பௌவ நீர்
படைத்தடைத் ததிற்கிடந்து முன் கடைந்த பெற்றியோய்!
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புக
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே! –திருச்சந்தவிருத்தம் – 28

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீரணைக் கிடந்து
உரத்திலும் மொருத்தி தன்னை வைத்துகந்து அதன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தியாயினாய்!
ஒருத்தரும் நினாது தன்மை இன்ன தென்ன வல்லரே.–திருச்சந்தவிருத்தம் – 29

கடைந்து பாற் கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளுமுய்ம்மினோ.–திருச்சந்தவிருத்தம் – 81

விடைக்குலங்களேழடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை நீர்
படைத்தடைத்ததிற்கிடந்து முன் கடைந்து, நின்றனக்கு
அடைக்கலம் புகுந்த வென்னை யஞ்சலென்ன வேண்டுமே. –திருச்சந்தவிருத்தம் – 92

அடக்கரும் புலன்கள் ஐந்தடக்கி ஆசையாமவை
தொடக்கறுத்து வந்து நின் தொழிற்கணின்ற என்னை நீ
விடக்கருதி மெய் செயாது மிக்கொராசை யாக்கிலும்
கடற்கிடந்த நின்னலால் ஒர் கண்ணிலேன் எம்மண்ணலே.–திருச்சந்தவிருத்தம் – 95

தூயனாயுமன்றியும் சுரும்புலாவு தண் துழாய்
மாய! நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு, வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!–திருச்சந்தவிருத்தம் – 110

நாகத்தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான்–நான்முகன் திருவந்தாதி – 36-

நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் – பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேற் பாட்டு. –நான்முகன் திருவந்தாதி – 75-

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் – ஏய்ந்த தம்
மெய், குந்தமாக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.–நான்முகன் திருவந்தாதி – 79

————-

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-பாசுரம்

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான்
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே–திருமாலை – 15

—————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –11–பாசுரங்கள் –

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடுந் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேனாதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற் கடல் கிடந்தாய்!
நாடி நான் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள்எந்தாய்!–1-6-6-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பைப் பிரியும் போது உன் தன் சரணமே சரணமென்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள்எந்தாய்!–1-6-9-

பள்ளியாவது பாற் கடலரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணனென்றெண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே! –1-8-2-

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன்னுயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக் கொடி கதிரணவும் திரு வெள்ளியங்குடி யதுவே.–4-10-4-

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாயொலிகள்
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வர் இக் குரை கடலுலகே–4-10-10-

கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரதகத்தை மறை யுரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே–4-6-1-

செங்கமலத் திரு மகளும் புவியும் செம் பொன் திருவடியினிணை வருட முனிவரேத்த
வங்க மலி தடங்கடலுள் அநந்தனென்னும் வரி யரவினணைத் துயின்ற மாயோன் காண்மின்
எங்கு மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்து அணி யழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே–7-8-1-

வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே!
வள்ளலே! உன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே!–8-10-7-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவுலருந்தி தன்னுள் புவனம் படைத்துண்டுமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய்! மதிள் கச்சி யூராய்! பேராய்!
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குல வரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய்! பாற்கடலாய்! பாரின் மேலாய்!
பனிவரையினுச்சியாய்! பவள வண்ணா!
எங்குற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி
ஏழையேன் இங்ஙனமே உழி தருகேனே.–திருநெடுந்தாண்டகம் – 9-

கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு! என்றும் கடல் கிடந்த கனியே! என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி யழுந்தூர் நின்றுகந்தஅம்மான்! என்றும்
சொல்லுயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித்
தூ முறுவல் நகை இறையே தோன்றநக்கு
மெல் விரல்கள் சிவப்பெய்தத் தடவிஆங்கே
மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே. –திருநெடுந்தாண்டகம் – 15–

———————

ஸ்ரீ நம்மாழ்வார் -9-பாசுரங்கள் –

வேதனை வெண்புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்குமநாதனை ஞாலம் தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேற் பள்ளி கொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே. –திருவிருத்தம் – 79

பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் – நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல் வினை யெம்பால் கடியும்
நீதியாய்! நிற் சார்ந்து நின்று.–பெரிய திருவந்தாதி – 34

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென்று ஆரே?
இரைக்குங் கடற்கிடந்த வெந்தாய்! – உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனதுயிர்க்கு ஓர்
சொல் நன்றி யாகும் துணை. –பெரிய திருவந்தாதி – 77

பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்கா எறுடனேழ் செற்றதுவும்
தேம்பணைய சோலை மராமரமே ழெய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய்ப் பொன் முடியம் போரேறே. திருவாய்மொழி–2-5-7- –

உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந் தீவினைகளை நாசஞ்செய்து உன்து
அந்தமிலடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய்? உன்னைச் சிந்தை செய்து செய்தே.–2-6-5-

பயிலுஞ் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை
பயிலவினிய நம் பாற் கடல் சேர்ந்த பரமனை
பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை யாளும் பரமரே. –3-7-1-

மணந்த பேராயா! மாயத்தால் முழுதும் வல் வினையேனை யீர்கின்ற
குணங்களை யுடையாய்! அசுரர் வன்கையர் கூற்றமே! கொடிய புள்ளுயர்த்தாய்
பணங்களாயிரமுடைய பைந்நாகப் பள்ளியாய்! பாற் கடற் சேர்ப்பா!
வணங்குமாறறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே.—8-1-8-

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்!
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்று மொழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே.–8-2-8-

திருமாலிருஞ்சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே
அரு மா மாயத்தென துயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வனொருவனே.–10-7-8-

———–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் 1-பாசுரம் –

உரை மேற் கொண்டு என்னுள்ளமோவாது எப்போதும்
வரை மேல் மரதகமே போல – திரை மேல்
கிடந்தானைக் கீண்டானை கேழலாய்ப்பூமி
யிடந்தானை யேத்தி யெழும். —முதல்திருவந்தாதி – 25

————–

ஸ்ரீ பூதத்தாழ்வார் –2-பாசுரங்கள் –

பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம்
புரிவார் புகழ் பெறுவர் போலாம் – புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்—இரண்டாம் திருவந்தாதி – 3

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் – எனைப் பலரும்
தேவாதி தேவ னெனப் படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன். –28-

—————–

ஸ்ரீ பேயாழ்வார் -5-பாசுரங்கள் –

நன்கோதும் நால் வேதத்துள்ளான் நறவிரியும்
பொங்கோதருவிப் புனல் வண்ணன் – சங்கோதப்
பாற் கடலான் பாம்பணையின் மேலான் பயின்றுரைப்பார்
நூற் கடலான் நுண்ணறிவினான். –மூன்றாம் திருவந்தாதி – 11

இவையவன் கோயில் இரணியனதாகம்
அவை செய்தரி யுருவமானான் – செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்துள்ளான் நற வேற்றான்
பாகத்தான் பாற் கடலுளான்.–மூன்றாம் திருவந்தாதி – 31

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற்கடலும் நுண்ணூல தாமரைமேல் – பாற் பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்தொசித்த கோபாலகன். -32-

பண்டெல்லாம் வேங்கடம் பாற் கடல் வைகுந்தம்
கொண்டங்குறைவார்க்குக் கோயில் போல் – வண்டு
வளங்கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர்.–61

ஆங்கு மலரும் குவியுமாலுந்திவாய்
ஓங்கு கமலத்தின தொண் போது – ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி யென்றும் பார்த்து –மூன்றாம் திருவந்தாதி – 67-

இதற்கு வெள்ளையந் தீவு என்ற பெயருமுண்டு. சஷீராப்தி என்னும் இந்த பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக தன்னை வ்யூகப்படுத்தி
அதாவது பல பிரிவாகப் பிரித்து வியூக வாசுதேவன் என்ற திருநாமத்தோடு யோக நித்திரையில் தம்மைச் சங்கர்ஷணன், ப்ரத்யுமனன், அநிருத்தன்
என்னும் 3 உருவங்களாகப் பிரித்து ஆதிசேடனின் படுக்கையில் நிலமகளும் திருமகளும் திருவடி வருட பள்ளி கொண்ட நிலையாகும் திருப்பாற்கடல்
வடிவம்.

கிழக்குப் பக்கம் சிரிப்புடன் கூடின – வாசுதேவனாகவும்
தெற்கு நோக்கி சிங்கமுகமாக – சங்கர்ஷணனும்
வடக்கு – பிர்த்யுமனனாகவும்
மேற்கு – அநிருத்தனாகவும் திகழ்கிறார்.

பக்தர்களின் அபயக் குரல், குறிப்பாக தேவர்களின் அபயக் குரல் கேட்டு பகவான் அபயமளிப்பது இவ்விடத்தில்தான் அதனால் இவ்வுலகுக்கு
கூப்பாடு கேட்கும் உலகு என்று பெயர் பாட்டுக்கேட்டும் உலகான பரமபதத்திற்கு தேவர்களும் செல்ல முடியாது. அது சித்திப்பது நித்ய சூரிகள்
எனப்படும் முக்தர்கட்கு மட்டும்தான். எனவேதான் தேவர்கள் தங்கட்கு பிரச்சினை வரும்போதெல்லாம் அல்லது பிரச்சினைகளை உண்டாக்கிக்
கொண்டு அல்லற்படும்போதெல்லாம் திருப்பாற்கடல் கரையருகில் நின்று எம்பெருமானை பள்ளியெழுப்பித் தமது முறையீட்டைத் தெரிவிப்பது
வழக்கமாம்.

ப்ரளய காலம் வரைதான் திருப்பற்கடல் வாசம். ப்ரளய காலம் முடிந்ததும் மீண்டும் பரமபதம். எனவே ப்ரளய காலத்தில் திவ்யதேசங்கள்
மீண்டும் அவனுள் ஐக்கியமாகிவிடுகின்றன. திவய்தேசங்களுக்குத் தொடக்க திவ்யதேசமாகவும் இதனைக் கொள்ளலாம்.

சங்கர்ஷணன் அநிருத்தன், ப்ரத்யுமனன் என்னும் 3 உருவங்களும் ப்ரளயகாலத்தில் வ்யூக வாசுதேவனோடு ஐக்கியமாகி விடுகின்றன.

மூலவர்–பாற்கடல் வண்ணன் (சஷீராப்திநாதன்) ஆதிசேடன் மேல் தெற்கு நோக்கிய சயனம்
தாயார் —  கடல்மகள் நாச்சியார், ஸ்ரீபூமாதேவி
தீர்த்தம் -அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல்
விமானம்–   அஷ்டாங்க விமானம்
காட்சி கண்டவர்கள்–   பிரம்மனும் சிவனும்

இங்கு பெருமாள் வெண்மை நிறத்தில் இருக்கிறார். இங்கு எல்லாமே
வெண்மை, எங்கு நோக்கிலும் வெண்மை, அதனால்தான் வெள்ளை வெள்ளத்தின் மேலொரு நாகத்தை மெத்தையாக விரித்து அதன்மேல் கள்ள
நித்திரை கொள்கின்ற கள்வன் என்கிறார் ஆழ்வார். இப்பெருமானின் வண்ணம் வெண்மை என்பதை திருமங்கை யாழ்வார் முன்னை வண்ணம்
பாலின் வண்ணம் என்கிறார். அதாவது விபவ அவதாரங்கட்கு முன் (உலகைப்படைத்து இங்கு அவதாரங்களை நிகழ்த்துவதற்கு முன்) பாற்கடலில்
எழுந்தருளியதை பாலின் வண்ணம் என்கிறார். பிறகுதான் விபவ அவதாரத்தில் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் என்றார்.

இங்குதான் பிரம்மதேவன் படைக்கப்பட்டான். இது வொன்றே இதன் தனிச்சிறப்பம்சமாகும்.

திருப்பாற்கடலுக்கு சஷ்ராப்தி நாதனாக (பாற்கடல் வண்ணனாக) வந்துற்றது முதல் வாசுவேதன் அநிருத்தன். ப்ரத்யுமணன், சங்கர் ஷ்ணன்
என்றும் 4 வியூகங்களாகப் பிரிந்த நிலைகளும் சேர்ந்து பஞ்ச வ்யூகங்கள் ஆகும். இந்த வ்யூக மூர்த்திகட்கும் சில திவ்யதேசங்கட்கும் தொடர்புண்டு.

1. சஷ்ஷிராப்தி நாதன் என்னும் பாற்கடல் வண்ணன்-திருக்கோட்டியூர் உரக மெல்லனையாளனாக ஸ்ரீதேவி பூமிதேவியுடன் எழுந்தருளியது.
2. வாசுதேவன்-   திருநறையூரில் திருமகளை மணந்த திருக்கல்யாணக் கோலம்
3. அநிருத்தன்-    திருஅன்பில் அழகிய வல்லிநாச்சியாருடன் அருளல்
4. ப்ரத்யுமனன்-    திருவெள்ளறை இங்கு ஸ்ரீதேவி மனித உருவில் நின்று கைங்கர்யம்
5. ஸங்கர்ஷ்ணன்–     உறையூர் கமலவல்லி என்ற பெயரில் சோழன் மகளாக வளர்ந்த திருமகளை மணத்தல் அதாவது பாற்கடலில் முதல்நிலையில் தேவிமாரோடு எழுந்தருள்கிறான். இதர வ்யூகங்கட்கு பிராட்டிகள் திவ்யதேசங்களில் 4 நிலைகளில் நின்ற பெருமாளைச் சேர்ந்து எழுந்தருள்கின்றனர் என்பதும் ஐதீஹம்.

தொழும் பாய நான் நல்ல சூது அறிந்து கொண்டேன்
செழும் பாய் அலை முத்தம் சிந்தி முழங்கும்
திருப்பாற் கடலான் தாள் சேர்ந்தார் அடி சேர்ந்து
இருப்பாற்கு அடலாம் இடர் –107-

(இ – ள்.) தொழும்பு ஆய – (எம்பெருமானுக்கு) அடியவனாகிய, நான் –
நல்ல சூது – நல்ல உளவை,
அறிந்து கொண்டேன் -; (அதாவது), – செழும்பாய் அலை – செழித்த பாய்கின்ற அலைகளினால்,
முத்தம் சிந்தி – முத்துக்களைக் கொழித்து,
முழங்கும் – ஒலிக்கின்ற,
திருப்பாற்கடலான் – திருப்பாற்கடலென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய க்ஷீராப்திநாதனது,
தாள் – திருவடிகளை,
சேர்ந்தார் – உபாயமாக அடைந்த பாகவதர்களது,
அடி – திருவடிகளை,
சேர்ந்து இருப்பாற்கு – தஞ்சமாகப்பற்றிக் கவலையற்று இருப்பவனுக்கு,
இடர் – பிறவித்துன்பங்களையெல்லாம்,
அடல் ஆம் – ஒழித்தல் எளிதிற்கூடும் (என்பதே) ; (எ – று.)

பாகவதர்களின் திருவடிகளை யாச்சிரயித்தலே பிறவித்துன்பங்கள் யாவும் ஒழிந்து எளிதில் ஈடேறுதற்கு உரிய
உபாயமென்பதனை யான்அறிந்து கொண்டு கடைப்பிடிக்கலானே னென்பதாம்.
அற்பச்செயலாற் பெரும்பேறு சித்திக்கும் உபாய மாதலால், “நல்லசூது’ என்றார்.

எம்பெருமானது ஐவகை நிலைகளுள், திருப்பாற்கடலி லெழுந்தருளியிருப்பவன் வியூகமூர்த்தியாவன்;
“வ்யூஹமாவது – ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரிஸம்ரக்ஷணார்த்தமாகவும்,
உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும் ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த ரூபணே நிற்கும் நிலை”.

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருவேங்கடம்

March 24, 2024

மூலவர் -திருவேங்கடமுடையான் -ஸ்ரீ நிவாஸன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முகமண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை -பத்மாவதித் தாயார்
விமானம் –ஆனந்த நிலய விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி -ஸ்வாமி புஷ்கரிணி -கோனேரி தீர்த்தம் –பாப விநாசினி –ஆகாச கங்கை –
மங்களா சாசனம் -பொய்கையாழ்வார் –பூதத்தார் –பேயார் –திரு மழிசையாழ்வார் –நம்மாழ்வார் –குலசேகராழ்வார்
–பெரியாழ்வார் –ஆண்டாள் –திருப் பாண் ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷனை முடித்து இங்கு ஒய்வு எடுத்த படியால் -இது ஆதி வராஹ க்ஷேத்ரம் –
ப்ருகு முனிவர் பெருமானைத் திரு மார்பில் உதைக்க லஷ்மி கோபப்பட்டு கோல்ஹா பூரில் த்வம் செய்யச் சென்றாள்-
திருமால் லஷ்மியை அடைய இங்கு வந்து த்வம் புரிந்தார் –
ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வ்ருஷாத்ரி –முதல் யுகம் /அஞ்சனாத்ரி / சேஷாத்ரி –வாயு -ஆதி சேஷன் / க்ரீடாத்ரி -விளையாட்டு
-நாராயணாத்ரி -கருடாத்ரி -/ வேங்கடாத்ரி -கலி யுகம்
ஆகாச ராஜன் சகோதரர் தொண்டைமான் சக்கரவர்த்தி
தாரிணி தேவி -ஆகாச ராஜன் மனைவி -பெயர் –
வகுள மாலிகை – இன்றும் மடப்பள்ளி நாச்சியார்
சுகாச்சார்யார் -திருச் சுகவனூர் –
10 புராணங்களில் ஸ்ரீ நிவாஸன் மஹாத்ம்யம் உண்டே-

மூலவர் ஸ்ரீ திருவேங்கடமுடையான், ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள்
கோலம் நின்ற, சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ மலையப்பஸ்வாமி, ஸ்ரீ கல்யாண வேங்கடவர், ஸ்ரீ போக ஸ்ரீநிவாசர்
தாயார் ஸ்ரீ அலர்மேல் மங்கை
தீர்த்தம் ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி, ஸ்ரீ சேஷாச்சல ஸ்வாமி புஷ்கரணி
விமானம் ஸ்ரீ ஆனந்த நிலைய விமானம்
மண்டலம் வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஆந்திரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ திருப்பதி
நாமாவளி ஸ்ரீ அலர் மேல் மங்கைத் தாயார் ஸமேத ஸ்ரீ திருவேங்கட ஸ்வாமிநே நமஹ

————————-

ரிக்வேதம் போற்றும் திருவேங்கடம்

“அராயி காணே விகடே கிரிம் கச்ச ஸதான்வே, சிரிம்பிடஸ்ய ஸத்த்வபி:
தேபிஷ்ட்வா சாதயாமஸி” என்ற ரிக் வேத மந்திரம்
திருமலையைப் புகழ்கிறது. ஏழைகள், எதிர்காலம் பற்றிய அறிவில்லாதவர்கள், துன்பப்படுபவர்கள்,
சுற்றதாரின் ஆதரவு அற்றவர்கள் ஆகிய அனைவரும் பக்தர்களோடு இணைந்து
ஸ்ரீநிவாசன் திகழும் திருமலைக்குச் சென்று, அப்பெருமாளின் திரு வடிகளில் அடைக்கலம் புகுந்தால்
அவன் காத்தருள்வான் என்பது இம்மந்திரத்தின் பொருள்.

———————————

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -202-பாசுரங்கள் மங்களாசாசனம்

———

ஸ்ரீ பெரியாழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்-
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேம்கடம் வாணன் உன்னை விளிக்கின்ற
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -1 4-3 –

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியானே அச்சோ அச்சோ வேம்கட வாணனே அச்சோ அச்சோ -1-8-8- –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-9 –

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்
பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் 2-7 3- –

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல் அகத்தார் ஏதேனும் பேச நான் கேட்க மாட்டேன்
கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

கடியார் பொழில் வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –

———–

ஸ்ரீ ஆண்டாள் -16-பாசுரங்கள் மங்களாசாசனம்

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

————

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-

பின் இட்ட சடையானும் பிரமனும் இந்த்ரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுண்ட நீள் வாசல்
மின் வட்ட சுடர் ஆழி வேம்கட கோன் தான் உமிழும்
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் என ஆவேனே– 4-3-

ஒண் பவள வேலை வுலவு தண் பாற் கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேம்கடத்து
செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-

கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்ப மரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே –4-5-

மின் அனைய நுண்ணி இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்னவென வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-

வான் ஆளும் மா மதி போல் வெண் குடை கீழ் மன்னவர் தம்
கோனாகி வீற்று இருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே– 4-7-

பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை யானான்
வெறியார் தண்சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே– 4-8-

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

உம்பர் உலகாண்டு ஒரு குடை கீழ் உருப்பசி தன்
அம் பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள வாயான் திரு வேம்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–

மன்னிய தண் சாரல் வட வேம்கடத்தான் தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொன் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே 4-11-

————–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -15-பாசுரங்கள் மங்களாசாசனம்

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -திருச்சந்தவிருத்தம்–48-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம்60-

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –-திருச்சந்தவிருத்தம்-81-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்–நான்முகன் திருவந்தாதி 34-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி –39-

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்–நான்முகன் திருவந்தாதி 40-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -நான்முகன் திருவந்தாதி -41-

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு–நான்முகன் திருவந்தாதி 42–

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு–நான்முகன் திருவந்தாதி -43-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு–நான்முகன் திருவந்தாதி -45-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -நான்முகன் திருவந்தாதி -46-

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் –நான்முகன் திருவந்தாதி -47-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-நான்முகன் திருவந்தாதி -48-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-நான்முகன் திருவந்தாதி -90-

———————

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3–

————–

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -61-பாசுரங்கள் மங்களாசாசனம் –

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே—–1-8-1-

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான்
திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான்
பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர
சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-7-

அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன்
வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன்
கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும்
செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே—1-8-8-

பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-9-

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே-1-8-10-

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே—1-9-1-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-3-

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-4-

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5-

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-6-

தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-

கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே—1-9-10-

கண்ணார் கடல் சூழ் இலங்கைக் கிறைவன் தன்
திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா வடியேன் இடரைக் களையாயே–1-10-1–

இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

தூணாய தனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா வவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கட மா மலை மேய
கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த
ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண்டரளங்கள்
வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல்லார் திரடோள் மணி வண்ணன் அம்மானை
கல்லார் திரடோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் வர் வானவர் ஆகுவர் தாமே–1-10-10-

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடாவருவேன் வினையாயின பாற்றே –4-7-5-

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

ஆங்கு வென்னரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தங்கு தாமரை யன்ன பொன்னாரடி எம்பிரானை யும்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்தரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை யன்றி என் மனம் சிந்தை செய்யாதே —7-3-5-

எங்களுக்கு அருள் செய்கின்ற வீசனை வாசவார் குழலாள் மலி மங்கை தன்னை
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான் தன்னைப் பான்மையைப் பனிமா மதி யந்தவள்
மங்குலைச் சுடரை வடமா மலை யுச்சியைநச்சி நாம் வணங்கப் படும்
கங்குலைப் பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -7-10-3-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9-

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை யாம் சென்று காண்டும் தண் காவிலே—10-1-2-

சொல்லாய் பைங்கிளியே
சுடராழி வலனுயர்த்த
மல்லார் தோள் வட வேங்கடவனை வரச்
சொல்லாய் பைங்கிளியே —10-10-5-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –

வங்கத்தால் மா மணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிட்கச்சி யூராய் பேராய்
கொங்குத்தார் வளம் கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்
பங்கயத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவளவண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இனி இங்கனே உழி தருகிறேனே–9-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேண்கடமே திருக்கோவலூரே –சிறிய திருமடல் – 69

என்னும் மலர்ப் பிறையாலேய்ந்த – மழைக் கூந்தல் தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் –பெரிய திருமடல் – 6

தெந்தில்லைச் சித்திர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை –பெரிய திருமடல் – 124

——————-

ஸ்ரீ நம்மாழ்வார் -52-பாசுரங்கள் மங்களாசாசனம்

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —திருவிருத்தம் -8-

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67- –

உறுகின்ற கன்மங்கள் மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந்நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலிவாளகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –

கண்ணாவான் என்றும், மண்ணோர் விண்ணோர்க்குத்
தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே–-திருவாய்மொழி – -1-8-3-

எந்தாய்!தண் திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா!
கொந்து ஆர் தண் அம் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைந்த எம்
மைந்தா! வான்ஏறே! இனி எங்குப் போகின்றதே?–2-6-9-

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர்
ஆகின்றாய்! உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே! பரமா! தண் வேங்கடம்
மேகின்றாய்! தண் துழாய் விரை நாறு கண்ணியனே!–2-6-10-

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய ஒருவர்க் கென்றெ தொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே.–2-7-12-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே–3-3-1-

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே–3-3-2-

அண்ணல் மாயன் அணி கொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே–3-3-3-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–3-3-4-

சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-

வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே–3-3-6-

சுமந்து மாமலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–3-3-7-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள் மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மமனத்துள்ளும் வைப்பார்கட்கே–3-3-9-

வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாள்வரை–3-3-10-

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப் படுவாரே–3-5-8-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங் கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே–6-6-2-

நிறங் கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங் கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கை யவனுக்கு என்
பிறங் கிருங் கூந்தல் இழந்தது பீடே–6-6-3-

பீடுடை நான் முகனைப் படைத்தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே–6-6-4-

பண் புடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே–6-6-5-

கற்பகக் காவன நற் பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத் தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புருவக் கொடி தோற்றது மெய்யே–6-6-6-

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையரவின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே–6-6-8-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே–6-6-9-

பொற்பமை நீண் முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே–6-6-10-

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே–6-10-1-

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் லசுரர் குல மெல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திரு வேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே–6-10-2-

வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திரு வேங்கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே–6-10-3-

ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்து மாறு புணராயே–6-10-4-

புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மர மிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந் நாளே–6-10-5-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7-

நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங் கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-

வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந் தாமரைக் கட் செங்கனி வாய் நாற் றோளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே-6-10-9-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–6-10-10-

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-

நங்கள் வரி வளை யாயங்களோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

இன்றிப் போக இரு வினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8-

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

—————–

ஸ்ரீ பொய்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

வகையறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசை திசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் -37–

ஊரும் வரியரவ மொண் குறவர் மால் யானை
பேர வெறிந்த பெரு மணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
எம்மென்னு மால திடம் –38-

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–

பெருவில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனந்துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன் வீழக் கண்டுகந்தான் குன்று -40—

உணர்வாரார் உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வாரார் உன் உருவம் தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் ——-68-

வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம் –76-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

படையாரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே லோரு நாள்
மானமாய வெய்தான் வரை -82-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-

———————

ஸ்ரீ பூதத்தாழ்வார் பாசுரம் -9-பாசுரங்கள் மங்களாசாசனம் –

சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து –25-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை—33–

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

—————————-

ஸ்ரீ பேயாழ்வார் -19-பாசுரங்கள் மங்களாசாசனம் –

மாற்பால் மனம் கழிப்ப மங்கையர் தோள் கை விட்டு
நூற்பால் மனம் வைக்க நொய்விதாம் -நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து ——-14-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——–26–

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —-30–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் —–39-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

புரிந்து மத வேழம் மாப் பிடியோடூடித்
திரிந்து சினத்தால் பொருது -விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேலொரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை ——–45-

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோருநாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63-

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
கள்ங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் திங்கழை போய் -வென்று
விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம் —–72-

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள நலம் ——73-

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிர்ம்மாண்ட புராணம், வராக புராணம்
ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய பல குறிப்புகள்
கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு எழுதப்பட்டுள்ளது.
எழுத்து வடிவம் பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும் இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு முன்னால் இப்பெருமானைக்
குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள் இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.

இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.

இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால் ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.
கிரேதாயுகத்தில்-கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி

திரேதாயுகத்தில்-வ்ருஷபாத்ரி

துவாபர யுகத்தில்-  அஞ்சனாத்ரி

கலியுகத்தில்-வேங்கடாத்ரி (வேங்கடாசலம்)

இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்

7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம், கருடாசலம் வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும் பெயர்களுடன்
ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7 மலைகட்கு மத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி தந்தருளினார்.
வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதிவராகரைச்
சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டுமென்பது நியதி.

பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின் ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன் என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.

பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார். தான்
வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச நின்றார். அப்போதும்
பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால் கோபத்தின் எல்லையை அடைந்த பிருகு ஏ
பிரம்மனே நீ வந்தோரை வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.

கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில் இருக்கும்
வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட பிருகு இவன்
கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி என்போன்ற ரிஷிகள்
எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும் வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில்
பூவுலகில் நீங்கள் இருவரும் (சிவன், உமை) சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக் கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை கூட இங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை என்று
எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர் திரும்பிப் பார்க்கவுமில்லை.
எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)

திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில் உதைத்த தங்கள் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை  தமது இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.

தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ வினில் உரைக்க திரும்பலுற்றார்.

என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர் ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு
விலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர். திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது. திருமாலுக்கு திருமகளின் பிரிவு
தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம் புகுந்து தம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில் ஒரு
புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.

இஃதிவ்வாறிருக்க திரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத் தக்க
பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.

திரேதாயுகத்தில் இராமவதாரத்தின்போது இராவணன் பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது வேதவதியுடன் சென்ற அக்னி
தேவன் ராவணனை நிறுத்தி ஏ, இராவணா நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை இதோ என்னிடம் ஒளித்து
வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக் கூறுகிறேன். இந்த உண்மைச்
சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை அக்னியிடம் சேர்ந்தாள்.

இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையை ஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின் தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில்
நான் ஏகபத்தினி விரதன். எனவே கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.

அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர காமேஷ்டி
யாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும் பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை. தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.

இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். திருமலயில்
புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும் சிவனும் தாங்களே முறையே
பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் சோழ மன்னனிடம் விற்க, அவனதை
மந்தையில் சேர்க்க தினந்தோறும் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப்பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன்
எழுந்தருளியுள்ள புற்றுக்கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல் இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக்
கண்டுபிடிக்குமாறு பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால் சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த
கோடாலியால் பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க பசுமேய்ப்பவன்
மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன் பசுவினைப் பின்
தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக்கொல்லவந்தவனைத் தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும், ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக அலையக்கடவது
என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன் மன்னிப்புக்கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும் அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம் வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு இவளே
திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம் தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.

ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும் மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம் நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம் பற்றாக்குறையாக இருக்க
குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாகவரலாறு.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று யசோதையான வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம் உள்ளவர் போலவே
தோற்றமளிக்க எம்பெருமானின் உளக்கிடைக்கையை அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய் மகாலெட்சுமியை அழைத்து வாரும்
என்று அனுப்பிவைக்க திருமகள் லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு
எழுந்தருள லட்சுமி தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.

பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி ஓடுகிறது. அதன்
அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம் இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான் வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர உத்தரவிட
வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.

அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள் பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க தாயே
தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில் யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும் தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின் குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம் வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகைகொண்டு ஏற்றுக்கொண்டார்.

பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து மன்னிப்புக்கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி, குழந்தாய்
பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம் பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு
திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும் எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்தோடு லட்சமி பத்மாவதி
சமேதராக திருமலையில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.

ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3 பிரிவுகள் கொண்டது.

முதல் பிரிவு-திருப்பதி, இதனைக் கீழ்திருப்பதி எனவும் பகர்வர். இங்கு பெருமாள் சயன திருக்கோலம்.
மூலவர்-கோவிந்தராஜப்பெருமாள், கிழக்கு நோக்கிய புஜங்க சயனம்.

தாயார்- புண்டரீக வல்லி. இங்கு ஆண்டாள் உடையவருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.

இந்தக் கீழ்த்திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜப்பெருமாள் சன்னதி மிகவும் சக்திவாய்ந்ததாகும். முக்கியத்துவம் நிறைந்ததாகும். தில்லை
திருச்சித்ரகூட கோவிந்தராஜப் பெருமாள் சில காலம் இங்குவந்து இருந்த பின்னால் தில்லைக்கு சென்றுவிட அவர் நினைவாக இத்தலம்
தோற்றுவிக்கப்பட்டது.

2ம் பிரிவு திருமலை- இது மலைமேல் உள்ள கோவில்

மூலவர்-திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கிடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் வேங்கடத்தான் என்று பல திருநாமங்கள். கிழக்குநோக்கி
நின்ற திருக்கோலம்.

உற்சவர்-  கல்யாண வெங்கடேஸ்வரர்.

தீர்த்தங்கள்- மொத்தம் 14 தீர்த்தங்கள்.

 1. சுவாமி புஷ்கரிணி     2. பாபவிநாசம்
3. ஆகாசகங்கை        4. கோனேரி
5. வைகுண்ட தீர்த்தம்   6. சக்ரதீர்த்தம்
7. ஜபாலி தீர்த்தம்      8. வகுள தீர்த்தம்
9. பாண்டவ தீர்த்தம்    10. இராமகிருஷ்ண தீர்த்தம்
11. தும்புரு தீர்த்தம்     12. சேஷ தீர்த்தம்
13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.

இதில் மிகவும் முக்கியமான தீர்த்தங்கள் பற்றிய சிறப்பியல்புகள் தனியே தரப்பட்டுள்ளது.

விமானம்- ஆனந்த நிலைய விமானம்

காட்சி கண்டவர்கள்-  எண்ணற்ற ரிஷிகள், பிரம்மா, சிவன், ஆறுமுகன், தொண்டைமன்னன்.

3ம் பிரிவு-  திருச்சானூர். இதை அலமேலு மங்காபுரம் என்றும் கூறுவர்.
மூலவர்-    தாயார் தான் மூலவர். அலர்மேல்மங்கை பத்மாவதி என்னும்-திருநாமங்கள். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தீர்த்தம்-    பத்ம ஸரோவரம்.
சிறப்புகள்     1. வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த என்பதற்கு 7 என்பது
பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக் குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும் இந்த மலை குறிக்கப்படுகிறது.

அந்த 7 மலைகள் எவையெனில்

1. வேங்கடாத்ரி-வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல். எனவே பாவங்கள்
எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே
பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.
2. சேஷாத்ரி-ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை
உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.
3. வேதாத்ரி-   வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால்
வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.
4. கருடாத்ரிதிருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின்
அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.

5. விருஷபாத்தரிவிருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில் திருமால் மோட்சம்
அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே
விருஷபாத்ரி என மொழியப்படுவதாக ஐதீஹம்.
6. அஞ்சனாத்ரி     அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள்.
மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹ மூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு
அஞ்சனாத்ரி ஆயிற்று.
7. ஆனந்தாத்ரி     ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக்
காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக்கொண்டு இப்பெருமாள்
முன்னிலையில் வீழ்த்த, பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின் திருவாக்கும் திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.

திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபமாகும்சிந்துபூமகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.

தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்–பாரதம் பாடிய பெருந்தேவனார்

குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்பாண்டம் செய்யும்போது கையில் ஒட்டிக் கொண்டுள்ள
மண்ணினால் சிறுபுஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த
தொண்டை மன்னனும் வேங்கடவன் பால் மிக்க பக்தி பூண்டொழுகினான். இம்மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து
வந்தான். ஒரு நாள் காலையில் இம்மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும்போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் யாவும்
சிதறுண்டு பூமியில் கிடப்பதையும் மண்புஷ்பங்கள் வேங்கடவனின் திருமேனியை அலங் கரிப்பதையும் கண்டு என்னவென்று விசாரிக்க குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து குறும்பறுத்த நம்பியின் பக்தி மேன்மையைக் கண்டு நம்பியைத் தொழுதுசென்றான் தொண்டை மன்னன்.

இவ்விதம் தன் மீது உண்மையான பக்தி கொண்டோரின் மேன்மையை வேங்கடவன் உலகறியச் செய்தான். பொய்யான பக்தியுடனும், ஆடம்பரமான
பக்தி வேஷத்தையும், சரணாகதித்துவம் இல்லாத நேரத்திற்கேற்றவாறு போடக் கூடிய பக்திவேஷத்தையும் உதாசீனப்படுத்தி தூயபக்தியில் நிறைந்த உள்ளம் கொண்ட பக்தர்களின் மேன்மையை உலகறியச் செய்துகொண்டே இருக்கிறான் வேங்கடவன்.

அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப தீந்தரமகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை
முதன் முதலில் அமைத்தவர்.

மகாஞானிகளும், கள்ளங்கபடமற்ற பக்தர்களும் வந்து குவிந்து கொண்டே இருக்கும் இந்ததிருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து
கொண்டிருந்த திருமலை நம்பிகள் இராமானுஜருக்கு ராமாயண பாடம் கற்றுத் தந்தவர் ஆவார். மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை
எழுந்தருளியுள்ளார்.

இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச் சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் பூண,

வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமலையானின் வலமார்பில் மகாலெட்சுமியும், இடமார்பில் பத்மாவதியும் உறைகின்றனர். பத்மாவதி தாயார்தான் திருச்சானூர் என்னும்
அலமேலுமங்கா புரத்திலிருந்து அருள்பாலிக்கிறார். திருமலைவந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால்தான் திருமலைப் பயணம்
பூர்த்தியடைவதாக ஐதீஹம். கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் இங்கு பிரம்மோத்சவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச்
சேலை, ஆபரணங்கள் மலர்மாலைகள் ஆகியவற்றுடன் யானைமேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை
பிராட்டி அணிந்துதான் கடைசி நாள் உற்சவன் நடைபெறுகிறது.
தொண்டைமான் கனவில் வந்து எம்பெருமான் கூறியதைப் போன்றே இக்கோவில் கட்டப்பட்டதென்பர். இங்குள்ள பத்ம ஸரோவரத்ர்த்தம் மிகவும்
பிரசித்தி வாய்ந்ததாகும். உலக நன்மைக்காக பிரம்மா இங்கு இரண்டு தீபங்களை ஏற்றிவைத்ததாகவும் அவைகள் இன்றும் பிரகாசிப்பதாயும் வரலாறு.

இங்கு செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல். லட்சலட்சமாக இங்குகொண்டு
வந்து குவிப்பர். இவருக்குத் தினசரி வருமானமே லட்சங்களைத் தாண்டும். அதேபோல் முடிக்காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும்
நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் ஏராளம். தற்போது இலவச ததியாரதனமும் நடைபெறுகிறது.
நினைத்தாலே இனிக்கும் திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவை ததும்ப அமைந்ததில்லை.

திருமலை வேங்கடவன் கோவில் திருச்சானூர் அலர்மேல் மங்கை கோவில் இரண்டினையும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றன தொண்டைமான் கட்டியதாகும். இங்கு
காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இத்தலத்தின் உட்புறச் சுவர்களில் மூல
ஸ்தானத்தைச் சுற்றிவரும் நடைபாதையிலும், மண்டபங்களைத் தாங்கி நிற்கும் தூண்களிலும் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. பண்டைய நாகரி
எழுத்துக்களினாலான கல்வெட்டுகளும், தமிழின் தற்போதைய எழுத்து முறை உருவாவதற்கு சமீப காலத்திற்கு முன் இருந்த தமிழ் எழுத்துக்களைக்
கொண்ட கல்வெட்டுக்களும் உள்ளன.

தொண்டைமான் இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். இவனைப் பகைவர்கள் சூழநின்று பொருதபோது
போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில் வேங்கடவனை வேண்ட வேங்கடவன் தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளிக்க
போர்வென்ற தொண்டைமான் அதை பெருமாளுக்கு மீளச் சமர்ப்பித்து எனக்களித்த இவைகள் எனது கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்று
வேண்ட அவ்வண்ணமே பெருமாள் அருள்புரிந்ததாகவும் கூறுவர்.
இதேபோல் தொண்டைமானின் வாழ்க்கையில் பலமுறைகள் அதிசயத்தக்க நிகழ்வுகளை வேங்கடவன் நிகழ்த்திக் காட்டினார். நூல்கள் பலவற்றிலும்
தொண்டைமான் எனவும், தொண்டை மன்னன் எனவும் கூறப்பட்டுள்ளதேயன்றி மன்னனின் பெயர் குறிப்பிடப்பட வில்லை.

இராமானுஜர் தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது மலையடிவாரத்திலேயே நின்று கொண்டு மலையின் மேல் வேங்கடவன்
இருப்பதால் தான் மிதித்து நடந்துவர விருப்பமில்லை என்று தெரிவித்ததாகவும்,
இவருக்காகவே இவரது தாய் மாமனாரான திருமலை நம்பிகள் மலைமேலிருந்து தினமும் இறங்கி வந்து இராமாயணம் கற்பித்ததாகவும் கூறுவர். பிற்காலத்தே வேங்கடவன் இராமானுஜரைத் திருமலைக்கு வருமாறு தெரிவித்ததின் அடிப்படையிலே இராமானுஜர் மலைமீது ஏறினார் என்றும் கூறுவர்.

இராமானுஜர் ஆதிசேடனாகையால் எம்பெருமான் திருவாசல் முன்பு நடந்து செல்வதற்கே மனம் ஒவ்வாதவராக இருந்தார் என்னும் கூற்று பல
இடங்களில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இளம்வயதில் இராமானுஜர் இக்கொள்கையின்றும் மாறுபடாதவராய் இருந்தார். இராமானுஜர்
திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திரம் பயில வந்த காலை திருக்கோட்டியூரில் நம்பிகளின் திருமாளிகைக்கு வரும்பொழுது
திருக்கோட்டியூர் தலத்தின் மதிலருகே வந்தவுடன் மண்டி யிட்டு ஊர்ந்து சென்றே நம்பிகளின் வீட்டை அடைவார் என்றும் கூறப்படுவது. இங்கு ஓர்ந்து
நோக்கத் தக்கதாகும்.

இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததால் இத்தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து
மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வமென்றும் பலவாறு கூறி நிற்க இதையறிந்த ராமானுஜர் தொண்டைமானின் வேண்டுகோளுக்கிணங்க மற்றவர்கட்கு
தெரியாமல் இருந்த சங்கு சக்கரங்களை யாவருங் காண அருள் வேண்டுமென்று வேங்கடவனை வேண்ட அவ்விதமே ஆயிற்றென்பர்.

இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். திருக்கோட்டியூரில் திருமந்திரம் உலகுக்குத் தோன்றக்
காரணமாயிருந்தார். திருவரங்கத்தில் கைங்கர்யம் உலகப் பிரசித்திபெறக் காரணமாயிருந்தார். மேலக்கோட்டை திருநாராயண புரத்தில் செல்லப்பிள்ளை
தோன்றக் காரணமாயிருந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் வைணவம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்

திருமலையில் இருந்து ஒரு சமயம் இராமானுஜர் இறங்கி வரும்போது எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டி இராமானுஜரைத் தடுத்து எனக்கு மோட்சம் கொடு
என்று கேட்க அது என்னால் முடியாதே என்று இராமானுஜர் கூற, உம்மால் முடியாதென்றால் பரவாயில்லை. இந்த மூதாட்டிக்கு மோட்சம் கொடுக்க கடவது
என்று ஒரு முறியில் எழுதியாவது கொடுமெனக் கேட்க. ராமானுஜர் ஒரு சிறிய ஓலையில் அவ்விதமே எழுதிக்கொடுக்க அதைப்பெற்ற மூதாட்டி, ராமானுஜரை வழிபட்டு சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று திருமலையில் மழை கொட்டி வெள்ளப் பெருக்கெடுக்க கைகளில் இராமானுஜர் எழுதிக்கொடுத்த ஓலையை இறுகப் பிடித்தவாறு சென்ற மூதாட்டி வெள்ளச் சூழலில் சிக்கி கைகளில் ஓலை பிடித்தவாறே திருநாடு புக்காள்.

அகத்தியர், வாயு, கபிலர் (இவர் சங்ககாலப் புலவர் அல்ல) சுகமுனிவர் என்னும் பல முனிவர்கள் தவமியற்றிய மலையாகும். இது.

தீர்த்த மகிமை மிக்க திருவேங்கடம்

திருமலை ஒரு பக்தி சேத்ரம். ஒரு முக்தி சேத்ரம், இதையெல்லாம் விட இதுஒரு மிகப்பெரிய தீர்த்த சேத்ரம் இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என
புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயட்ச மாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்குவந்து கூடுகின்றன.
சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.

1. குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம்

மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு
உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.

2. தும்புரு தீர்த்தம்

பகவானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர் வேங்கடத்தவனைக் குறித்து தவமியற்றிய இடத்திற்கருகில் இருப்பதால் தும்புரு
தீர்த்தம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

3. இராமகிருஷ்ண தீர்த்தம்

     தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இகபரசுகம் இரண்டும் சித்திக்கும்.

4. ஆகாச கங்கை

     தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில்
வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம்.
கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும்
இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமியன்று நீராடுவது மிக விசேடம்.

5. பாண்டு தீர்த்தம்

     வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அதுபோழ்து இதில் நீராடுவோர் சகல
பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.

6. பாபவிநாசன தீர்த்தம்

இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம்
வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய
தினத்தில் இதில் நீராடுவோர் பெறற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

ஸ்வாமி புஷ்கரிணி

 தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும் சரஸ்வதி தேவி தவமியற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில்தான்
ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது.
மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.

வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலயத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால் வெண்சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்–   என்கிறார் இளங்கோவடிகள்.

இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் பதின்மருள் ஒன்பதின்மரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்தது திருவேங்கடம். ஏதமில் ஆயிரம்’, ‘கெடலில் ஆயிரம்’, ‘பொய்யில் பாடல் ஆயிரம்’, ‘ஆணை ஆயிரம்’, ‘வழுவிலாத ஒண்தமிழ்கள் ஆயிரம்’, ‘அழிவில்லா ஆயிரம்’, ‘பொய்ம்மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்’, ‘மெய்ந்நாவன் மெய்யடியான்’ என்பன போன்றவைகளால் ஆழ்வார்களுடைய ஸ்ரீ சூக்திகள் ‘வாய்மொழி’ என்பது பெறுதும்.

    ‘சித்த சித்தொ டீச னென்று செற்று கின்ற மூவகைத்
    தத்து வத்தின் முடிவு கண்ட சதுர்ம றைப்பு ரோகிதன்’–என்றார் வில்லிபுத்தூராழ்வார்.

    ‘நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்
    ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே’

    ‘செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’

    ‘இன்பப் பாவினை’

    ‘மன்னு மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
    தென்னன் தமிழை வடமொழியை’

    ‘அமரர்கள்தம் தலைவனை அந்தமிழ் இன்பப்
     பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்
     பயிலரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
     கோவினை’

என்பன போன்ற வாய்மொழியின் பொருளை ஓலைப்புறத்தே கேட்டுப் போகாதே எல்லாரும் கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி அவ்விறைவன் வந்து நிற்கின்ற இடம் இத்திருமலை என்பதனை நாம் நினைவிற்கோடல் வேண்டும். பாஷைகளுக்கு எல்லை நிலம் அன்றோ திருவேங்கடம்?

திலகம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!’
    குன்ற மேந்திக் குளிர்மழை காத்தவன்
    அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
    சென்று சேர்திரு வேங்கட மாமலை
    ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.’

    ‘சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு
    அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
    நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
    சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.’

    ‘எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.’

என்பன போன்ற திருவாய்மொழிகள் திருமலையின் சிறப்பினைக் கூறுவனவாம்.

பிற தமிழ் நூல்களும் உரைகளும் :

I

‘வடவேங்கடம் தென்குமரி
     ஆயிடைத்
     தமிழ்கூறும் நல்லுலகத்து’–என்பது தொல்காப்பியம்.

    ‘நீணிலம்கடந்தநெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும், வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,’ என்பது அச்சூத்திரப்பகுதிக்கு 1நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரை.

    ‘இனி, அவர், ‘தமிழ் நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,

வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
    ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
    இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கொடி உடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப்
    பகைஅணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’–என இளங்கோவடிகள் -காடுகாண் காதை

‘வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்று
இந்நான் கெல்லை தமிழது வழக்கே.’–என்றார் சிகண்டியாசிரியர்.

    ‘வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம்என்று
இந்நான் கெல்லை அகவயிற் கிடந்த
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின்’–என்றார் காக்கை பாடினியார்.

    ‘பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்.’–அகநானூறு, செய். 211.

    ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு’–என்றார் இளங்கோவடிகள்.–சிலப். வேனிற்காதை)

    ‘வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி
நான்மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக்கு ஈறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோற் பூத்து நின்ற
உடைசுற்றும் தண்சாரல் ஓங்கியவேங்
கடத்திற்சென்று உறுதிர் மாதோ.’–என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.–(நாடவிட்ட படலம். 29)

    அரவணைச்செல்வன் வாழும் அந்தமிழ் நிலத்தின் எல்லைத்
திருமலை 
கண்டு உணர்ந்தோர் செறிவினைத் தொடர்அ றுக்கும்
பெருமலை கண்டு இறைஞ்சிப் பிறங்குவெள் ளருவி தாழும்
பொருவறும் ஏம கூடப் பொருப்பினை இனிது கண்டான்.’–என்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர்.–(சீகாளத்திப் புராணம்)

    நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவம்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் 
இவற்றிடை யேபுகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.’–என்றார் பாரதியார்.

புடையது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்’ என்றார் ஆசிரியமாலையுடையார்.

    ‘வெறிகொள் அறைஅருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.’–என்றார் ஐயனாரிதனார்.–(புறப்பொருள் வெண்பா மாலை)

    ‘தேனோங்கு நீழல் திருவேங் கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் – தானோங்கு
தென்னரங்கம் என்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’–என்றார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.-(பெருந்தேவனார் பாரதம்)

    வலங்கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அம்மலை
விலங்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட் கனையது பொய்க்குமோ?’-என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாழ்வார்.

    மற்றும், கம்பராமாயணம் நாட விட்ட படலத்தில், 27, 28, 29 ஆகிய மூன்று செய்யுள்களும், ஆறு செல் படலத்தில் 33,.34, 35, 37 ஆகிய நான்கு செய்யுள்களும் இத்திருமலையின் சிறப்பினையே கூறுவனவாம்.

    ‘உபசாந்த சித்த குருகுல பவபாண் டவர்க்கு வரதன்மை
யுருவோன் ப்ரசித்த நெடியவன் ருஷிகேசன்
உலகீன்ற பச்சை உமைஅணன் வடவேங் கடத்தி லுறைபவன்
உயர்ந்த சக்ர கரதலன் மருகோனே!’–என்றார் அருணகிரிநாதர்.-(திருப்புகழ். ‘இபமாந்தர் சக்ரபதி’ என்ற செய்யுள்.)

    தென்னாதெ னாஎன்று வண்டுமுரல் திருவேங்கடத்து
    என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே’

    ‘திணரார்மேகமெனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே!’-என்ற திருவாய் மொழியினையும்,

‘லக்ஷணோபேதமாய் இருப்பது ஒரு யானை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின் ‘மழகளிற்றினம் சேர் 1என்கிறார். அங்கு நிற்கிறதும் ‘சோலை மழகளிறே ‘யன்றோ? இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி,’ என்ற வியாக்கியானத்தையும் படிக்கும்போது,

     ‘புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்’     -(புறம். 389)

    ‘வடவயின்
வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை’        (அகம். 27)

    ‘கறையடி மடப்பிடி கானத் தலறக்
களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து
கருங்கால் மராத்துக் கொழுங்கொம்பு பிளந்து
நெடும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுகொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நன்னாட்டு வேங்கடம்’–(அகம். 83)என்னும் பாடற்பகுதிகள் நினைவிற்கு வாராதிரா.

கோயில் திருமலை பெருமாள் கோயில் என்றும், போகமண்டபம் புஷ்பமண்டபம் தியானமண்டபம் என்றும், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாகத் திருவேங்கடத்தை வைத்து நம் வைணவப் பெருமக்கள் வழங்கி வருகின்றதனை நாம் பார்க்கின்றோம்.

    ‘விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசைச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண்காட் டென்றென் னுள்ளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்.’

என்று திவ்வியதேச யாத்திரை செய்யப் போந்த ஓர் அந்தணன் கூறுவதாக அவன் கூற்றில் வைத்து, மேலே கூறிய முறை பிறழாமல் தம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதால், கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று வழங்கும் வழக்கு நம் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழங்கி வருகின்ற பெரு வழக்காகும் என்று தெளிதல் தகும்.

    ‘ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்றுபசி களைஇய பைங்கண் யானை
மூற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.’(அகம். 85)

    ‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்.’-(அகம். 213)

என்ற செய்யுட்பகுதிகளால் திருவேங்கடத்தைத் தொண்டைமான் சக்கரவர்த்தி ஆண்டு வந்தமை புலனாகின்றது. அவ்வரசர் பெருமான் திருவேங்கடமுடையானிடத்தில் ஈடுபட்டுப் பரமவைஷ்ணவனாய் ஒழுகி வந்தான் என்றும், அவனுக்குப் பகைவர்களால் துன்பம் நேர்ந்த காலத்துப் பக்தவத்சலனும் அடியார்க்கு எளியனுமான அப்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளை விடுத்து அவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினான் என்றும், அது காரணமாகவே சில காலம் திருவாழி திருச்சங்குகள் இல்லாமலே இருந்தான் என்றும் வரலாறு கூறுகின்றது.

திவ்வியகவி பிள்ளைப் பெருமாளய்யங்காரும் தாம் பாடிய திருவேங்கடத்தந்தாதியில் இவ்வரலாற்றினையே அகப்பொருள் துறையில் அமைத்துத்

    ‘தனித்தொண்டை மானிலத் தேபுரி
வார்க்கருள் தாளுடையாய்!
தொனித்தொண்டை மான்நெடு வாய்பிளந்
தாய்!துங்க வேங்கடவா!
முனித்தொண்டை மான்கையில் சங்காழி
நல்கிஎன் மூரற்செவ்வாய்க்
கனித்தொண்டை மான்கையில் சங்காழி
கோடல் கருமம்அன்றே.’–என்று நயம்படப் பாடியிருத்தல் காணலாகும்.

தானே சரணமுமாய் தானே பலமுமாய்
தானே குறை முடிக்கும் தன்மையான் தேன் ஏய்
திருவேங்கடம் தொழுதேம் தீய விபூதிக்குள்
மருவேம் கடந்தனெம் இவ்வாழ்வு –96–

(இ – ள்.) தானே -, சரணமும் ஆய் – உபாயமாகியும்,
தானே -, பலமும் ஆய் – உபேயமாகியும்,
தானே குறை முடிக்கும் தன்மையான் – தானே (அடியார்களது) மனக்குறையைப் போக்கி
அவரெண்ணத்தை ஈடேற்றுந் தன்மையுடையவனாகியு மிருக்கின்ற திருவேங்கடமுடையானது,
தேன்ஏய் திருவேங்கடம் – தேன்நிறைந்த (பொழில்கள்சூழ்ந்த) திருவேங்கடமென்னுந் திவ்வியதலத்தை,
தொழுதேம் – வணங்கினோம்; (அதன்பயனாக),
தீய விபூதிக்குள் – கொடிய இந்தலீலாவிபூதியில்,
மருவேம் – இனிப் பொருந்த மாட்டோம்;
இ வாழ்வு – இந்த ஸாம்ஸாரிகவாழ்க்கையை,
கடந்தனெம் – இனிக் கடந்துவிட்டோம்; (எ – று.)

எம்பெருமான் தன்னைச் சேர்தற்குத் தானே உபாயமாகியும், அவ்வாறு சேர்ந்தால் பயனாகியும்,
அவ்வாறு சேரவொட்டாமல் குறுக்கேவருகின்ற விரோதிகளைப் போக்கிப் பயனளிப்பவனாகியும் நிற்பனென்று
அந்த எம்பெருமானது ஸ்வரூபத்தை முன்னிரண்டடிகளினால் விளக்கினார்.
இவ்வாறான எம்பெருமானைத் தாம் அடைக்கலமாகச் சேர்ந்ததனால், இனி, இந்தஸம்ஸார வாழ்க்கை யொழிந்து
இந்த லீலாவிபூதியைவிட்டு நித்யவிபூதியாகிய மோட்சத்தைச் சேர்தல் திண்ண மென்பதாம்.
த்ரிபாத்விபூதியைப்போலல்லாது பலவகைத்துன்பங்கட்கும் இடமாயிருத்தல்பற்றி, லீலாவிபூதியை ‘தீயவிபூதி’என்றார்.
கடந்தனெம் – தெளிவுபற்றி எதிர்காலத்தை இறந்தகாலத்தாற் கூறிய காலவழுவமைதி.

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

—————————————————-——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ சிங்க வேள் குன்றம் -ஸ்ரீ அஹோபிலம்

March 24, 2024

மூலவர் -ப்ரஹ்லாத வரதன் -லஷ்மி நரசிம்மன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -காபில நரஸிம்ஹர்
தாயார் -அம்ருத வல்லி -செஞ்சு வல்லி
விமானம் -குகை விமானம்
தீர்த்தம் -பாப விநாசினி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

நவ நரசிம்ஹ க்ஷேத்ரம் –ஆஹா பலம் -என்று பகவானின் பலத்தையும் -அஹோ பிலம் -என்று மலையின் திடத் தன்மையையும் –
கருடன் பிரார்த்திக்க நரசிம்ஹப் பெருமாள் ஹிரண்ய கசிபுவை அழித்த தோற்றத்துடன் உக்ர ஸ்தம்பம் என்ற இடத்தில் சேவை
இவ்விடத்தில் தான் தூணைப் பிளந்து கொண்டு நரசிம்ஹப் பெருமாள் தோன்றினார் -மாலோலனாய்ப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
மேல் இருந்து ஸேவித்தாள் கருட வடிவில் திருமலையை சேவிக்கலாம் -கருடனை தார்ஷ்யன் -என்று சொல்லுவார் -ஆகவே இது தாரஷ்யாத்ரி –
அஹோபில — வராஹ –பாவனா –கராஞ்ச –சத்ரவட –பார்கவ –ஜ்வாலா –மாலோல –யோகானந்த -நரசிம்ஹர்கள் சேவை சாதிக்கிறார்கள் –
ஜ்வாலா பாவனா நரஸிம்ஹர் மேலே சேவிக்க கொஞ்சம் சிரமம் -அஹோபில ஜீயர் நன்றாக சேவிக்க ஏற்பாடு –
அல்லி மாதர் புல்க நின்ற –சிங்க வேழ் குன்றம்

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ அஹோபிலம்
மூலவர் ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன், ஸ்ரீ லஷ்மி நரசிம்மன்
கோலம் வீற்றிருந்த
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ 8 நரஸிம்மர்கள்
தாயார் ஸ்ரீ அம்ருதவல்லி,ஸ்ரீ செஞ்சுலட்சுமி
தீர்த்தம் ஸ்ரீ இந்திர,ஸ்ரீ பாபவிநாச தீர்த்தங்கள்
விமானம் ஸ்ரீ குகை விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஆந்திரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ அஹோபிலம்
நாமாவளி ஸ்ரீ லக்ஷ்மீ நாச்சியார் ஸமேத ஸ்ரீ நரசிம்ஹாய நமஹ

————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே–1-7-1-

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப
சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே—1-7-2-

ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே–1-7-3-

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை
வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம்
கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—1-7-4-

மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய
சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே–1-7-5-

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று
இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம்
நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை
திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–1-7-6–

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே—-1-7-7-

நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம்
காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே–1-7-8-

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே—-1-7-10-

இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோவிலும், மலையின் மேல் ஒரு கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலையடிவாரத்திலிருந்து

பிலம் என்றால் குகை அஹோ என்னும் சொல் சிம்மத்தை குறிப்பது. ஆதலின் வடமொழியில் அஹோபிலமாயிற்று. சிங்கவேள் என்று தூயதமிழால் சுட்டப்பட்டு குன்றத்தையும் சேர்த்து சிங்கவேள் குன்றமாயிற்று. மலைமேல் உள்ள கோவில் சுமார் 10 கி.மீ. தூரமாகும்.

கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என்ற பேராவல் உண்டாக அவ்வவதாரத்தை தரிசிக்க இந்த மலைகளடங்கிய
காட்டுப்பகுதியில் வந்து கடுந்தவமியற்றி வர, கருடனின் தவத்தை மெச்சிய எம்பெருமான் இந்த அஹோபிலம் மலையில் மீளவும் நரசிம்ம அவதாரம்
செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல்
கர்ஜித்தது. பிரகலாதனின் வேண்டுகோளுக் கிசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது போன்ற நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை அர்ச்சா ரூபமாக
9 திருக்கோலங்களில் இங்கு காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவமிருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும்
பெயருண்டு. சேஷாத்திரியாக உயர்ந்திருப்பது வேங்கடமென்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபிலமாகும்.

மலையடிவாரக் கோவில்- இதனைக் கீழ் அஹோபிலம் என்றும் சொல்வர்.

மூலவர்- பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- அமிர்தவல்லி, செஞ்சுலெட்சுமி
உற்சவர்-நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான 9 மூர்த்திகள். 8 உற்சவ மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான
உற்சவமூர்த்தி மட்டும்தனியாக உள்ளார். இங்குள்ள உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக சேவை சாதிக்கிறார். இவர் சுயம்பு.
மாலோல உற்சவர் அஹோபில மடத்தில் அழகிய ஜீயர் சுவாமிகளின் நித்திய திருவாராதன விக்ரகமாக உள்ளார்.

தீர்த்தம்- இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜதீர்த்தம், பார்க்கவ தீர்த்தம்.
விமானம்-    குகை விமானம்
காட்சி கண்டவர்கள்-    கருடன், அஹோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான அழகிய சிங்கர்.

மலையின் மேல் உள்ள கோவில்

மூலவர்-  அஹோபில நரசிம்மர்
தாயார்-   லட்சுமி
தீர்த்தம்-    பாவநாசினி
விமானம்-    குகை விமானம்
காட்சி கண்டவர்கள்=    பிரகலாதன். கருடன், இங்குதான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.

இங்கு மொத்தம் 9 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம சேத்திரங்கள் என்றும் வழங்குவர். மலையடிவாரத்திலும், மலையின்
மேலுமாக மொத்தம் 9 நரசிம்மர்கள்.

1. அஹோபில நரசிம்மன்
2. வராக நரசிம்மன்
3. பாவந நரசிம்மன்
4. காரஞ்ச நரசிம்மன்
5. சக்ரவட நரசிம்மன்
6. பார்க்கவ நரசிம்மன்
7. ஜ்வாலா நரசிம்மன்
8. மாலோலா நரசிம்மன்
9. யோகாநந்த நரசிம்மன்

இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். (அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்கப் பெருமாள் வைகுண்டத்தை
விட்டதும் பிராட்டியும் இவ்விடம் புக்கு வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தனரென்பர்) லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில்
வளர்ந்துவர பெருமாள் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டம் விடுத்து இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும்வரை இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம். பெருமாள் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டார் என்றும்
சொல்வர். பெருமாளுக்கு இவ்விடத்து வேடவர் சம்பந்தமிருந்ததை “களைந்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கை படம்
பிடித்திருக்கிறார்.

இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச்
சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் 1 1/2 மைல் தூரம் சென்றால் மாலோல நரசிம்ம சேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் 2 மைல் தொலைவு சென்றால்
ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்த தூண். நரசிம்மன் தூணிலிருந்து வெளிப்பட்ட இடம் உள்ளது. இங்கு தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். அல்லது
பிரம்மோத்ஸவம் நடைபெறும் சமயமான மாசி மாதம் சென்றால் கூட்டமாகச் செல்லும் பக்தர் குழாத்துடன் செல்லலாம். பொதுவாகவே இங்கு மலைமேல்
உள்ள எல்லா நரசிம்மர்களையும் சேவிப்பது கடுமையான செயலாகும். கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறவேண்டிய
இடங்கள் மட்டுமின்றி காட்டுமிருகங்கள் நடமாடக்கூடிய பகுதிகளும் உண்டு.

மலையடிவாரக் கோவிலுக்கு முன்பு சுமார் 85 அடி உயரமுள்ள ஒரே கல்லாலான தூண் ஒன்று உள்ளது. இதற்கு ஜெயஸ்தம்பம், வெற்றித்தூண்
என்பது பெயர். இது பூமிக்கடியில் சுமார் 30 அடிவரை தோண்டி நிலை நிறுத்தப்பட்டுள்ள தென்ற விபரத்தை அறியும்போது பேராச்சர்யமாக உள்ளது.
மிகுந்த பக்திசிரத்தையோடு இந்த தூணின் முன்புறம் எடுத்துக்கொள்ளும் பிரதிக்ஞைகள் (வேண்டுகோள்கள்) வெற்றிபெற்று விடுவதாக ஐதீஹம்.

சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து
வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ராமபிரான் எண்ணிச் சென்றார்.

அஹோபிலமடம் வைணவசமய வளர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இடம்வகிக்கிறது. வானமாமலைபோல் திருவரங்கம் போல் திருமலைபோல் வைணவ
சம்பிரதாய வளர்ச்சியில் அஹோபிலமடம் முதன்மையும் முக்கியத் துவமும் வகிக்கிறது. அஹோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழ் எண்ணற்ற
கோவில்களும், நூலகங்களும், கல்விக் கூடங்களும் மத சம்பந்தமான ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அஹோபில மடங்களுக்கு தலைமைப் பீடம்
இதுதான். இங்கு தற்போது பெரிய மடங்களும் விசாலமான மண்டபங்களும், உயர்ந்த கட்டிடங்களும் நிறைந்து அஹோபிலம் களைகட்டி நிற்கிறது.
வடகலை சம்பிரதாயப்படி இயங்கிவரும் இந்த அஹோபில மடத்தின் ஒவ்வொரு ஜீயர் சுவாமிகளும் ஒரு குறிப்பிடத்தக்கப் பெரும் பணியைச்
செய்திருக்கின்றனர். இந்த மடத்தின் அழகிய சிங்க ஜீயர் சுவாமிகள்தான் ஸ்ரீரங்கம் தெற்கு ராய கோபுரத்தின் நின்றுபோன பணியைத் துவக்கி அதனை ஆசியாவிலேயே பெரிய கோபுரமாக்கி அரங்கனுக்குச் சமர்ப்பித்து அழியாப் புகழ்படைத்து
பெருஞ்சாதனை புரிந்துவிட்டார்.

அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு இளைஞர் வந்தார். அப்போது பெருமாளே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து
அவருக்கு காட்சி கொடுத்து மந்திர உபதேசம் செய்து அவரைத் துறவறத்தில் சேர்த்து இங்குள்ள ராமானுஜர் சன்னதியிலிருந்து துறவாடையினையும் திரி
தண்டத்தையும் கொடுத்து ஸ்ரீசடகோபஜீயர் என்ற திருநாமத்தையிட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். அப்போது இந்த
ஜீயருக்கு வயது 17. பெருமாளால் ஜீயர் சுவாமிகட்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை
வைத்துக்கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவதென்று ஜீயர் பெருமானிடம் வேண்ட பெருமாள் இங்குள்ள உற்சவமூர்த்தியான மாலோல நரசிம்மனை
ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார் அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத்தான் தாம் செல்லும் இடங்களுக்கு
எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்தபோது
இந்த பெருமாளும் திருவரங்கம் வந்துவிட்டார்.

அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகாதேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலைமேல் உள்ள
நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்திலிருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை சிமிண்டினால்
மூடப்பட்டுள்ளது. அங்கு ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது இங்குள்ள பெரியவர்களின் சொல்.

ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சில காபாலிகள் அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக்
காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.

வாழ் குமரன் மேல் கனக வஞ்சகன் மேல் ஓர் முகத்தே
சூழ் கருணையும் முனிவும் தோன்றினவால் கேழ் கிளரும்
அங்கவேள் குன்ற அழல் சாபத்தைப் பிளந்த
சிங்கவேள் குன்றத்தினார்க்கு –97-

(இ – ள்.) கேழ் கிளரும் – நிறம்விளங்குகின்ற,
அங்கம்வேள் – அழகிய தேகத்தையுடைய மன்மதன்,
குன்ற – சாம்பலாயழியும்படி,
அழல் – (தனது நெற்றிக்கண்ணைத்திறந்து) கோபித்த,
சரபத்தை – (சிவபிரானது அவதாரமாகிய) சரபமென்னும் விலங்கை,
பிளந்த – பிளந்துஅழித்த,
சிங்கவேள்குன்றத்தினார்க்கு – சிங்கவேள்குன்றமென்னுந் திவ்வியதலத்தி லெழுந்தருளிய நரசிங்கப்பிரானுக்கு,
வாழ் குமரன்மேல் – கடவுளினருள்பெற்ற பிரகலாதனென்னும் சிறுவனிடத்து,
ஓர் முகத்து – ஒருபால்,
சூழ் கருணையும் – நிறைந்த பேரருளும், –
கனகம் வஞ்சகன்மேல் – (அவனதுதந்தையான) வஞ்சனைக்குணமுடைய இரணியன்மீது,
(ஓர்முகத்து – ஒருபால்),
முனிவும் – கடுங்கோபமும்,
தோன்றிய – உண்டாயின; (எ – று.) ஏ, ஆல் – ஈற்றசைகள்.

தனதுமெய்யடியானான பிரகலாதனை இரணியன் வருத்தியதுபற்றி அன்னான்மீது பெருஞ்சினமும்,
பெற்றதந்தை தன்னைப் பலவாறாக நலியவும் அந்நிலையிலும் தனது மெய்யன்பு மாறாமலிருந்ததுபற்றிப்
பிரகலாதாழ்வான்மீது திருவருளும் நரசிங்காவதாரமூர்த்திக்கு ஒருங்கே தோன்றின வென்க;
இவ்வாறு ஒன்றற்குஒன்று மாறான குணங்களை ஒருங்கே எம்பெருமான்கொண்டது, அப்பிரானது ஆஸ்சர்யகுணயோகத்தை விளக்கும்.

சரபம் – இரண்டுதலைகளையும் சிறகுகளையும் கூரியநகமுள்ள எட்டுக்கால்களையும் மேல்நோக்கிய
கண்களையு முடைய தொரு மிருகவிசேடம்; இதனைப் பறவையென்றலு முண்டு.
இது, சிங்கத்தை எளிதிற்கொல்லுந் திறமுடையது. வெறுஞ்சிங்கமன்றி நரசிங்க மாதலாலும்,
ஸாமாந்யஸிம்ஹமன்றி வரம்பிலாற்றலுடையபுருஷோத்தமனது அவதாரமான திவ்யஸிம்ஹ மாதலாலும், இது சரபத்தைக் கொன்றிட்டது.
இரணியனென்ற பெயர் பொன்னிறமானவ னென்று பொருள்படுதலால், அதன்பரியாயநாமமாக ‘கனகன்’ என்றார்;
இரணியம் கனகம் என்பன – பொன்னின் பெயர்கள். முதலடியில் முறைநிரனிறைப்பொருள்கோள் காண்க.

சிங்கமாகிய யாவரும் விரும்பப்படுகின்ற கட்டழகுடைய பெருமான் எழுந்தருளிய திருமலையாதலால்,
சிங்கவேள்குன்றம் என்று இத்தலத்திற்குப் பெயர்; ‘சிங்கவேழ்குன்றம்’ என்று வழங்குதலு முண்டு;
அப்போதைக்கு நரசிங்கமூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்ற ஏழுகுன்றங்களையுடையது எனப்பொருள் காண்க;
இதுவே அஹோபில மெனப்படும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருத் துவாரகை

March 24, 2024

மூலவர் -கல்யாண நாராயணன் -துவாரகா தீசன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம் –
தாயார் -கல்யாண நாச்சியார்
விமானம் -ஹேம கூட விமானம்
மங்களா சாசனம் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திருமங்கை ஆழ்வார் –

மேற்கு கடல் கரை ஓரம் -மோக்ஷம் அடைய வழி -துவாரத்தை காட்டும் இடம் -முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –
மதுரையார் மன்னன் -துவாரகா தீசன் -ஆசை யுடன் கொள்ளும் திரு நாமம் –
கோமதி நதி மேற்கு நோக்கி ஓடி கடலுக்குள் சங்கமிக்கும் இடம் -கோமதி துவாரகா –
ரைவதர் என்னும் ராஜா குஷங்களை-தர்ப்பங்களை -பரப்பி த்வம் செய்த படியால் இவ்விடம் குதஸ்தாலி -என்றும் அழைக்கப்படும்
இந்த ஷேத்ரத்தில் டாகூர் –கோமதி –பேட்–மூல –ஸ்ரீ நாத துவாரகா என்ற ஐந்து த்வாரகைகள் உள்ளன –

5 மைல் கோமதி அங்கேயே உருவாக்கி அங்கே கடலில் கலக்கும்
காங்க்ரோலி த்வாராக சேர்த்து ஆறாவது துவாரகை
போடானா ஸ்வாமி இங்கு உள்ள மூர்த்தியை டாகூர்த்வாரகையில் எழுந்து அருள
வஜ்ரநாபன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி இங்கு –
ருக்மிணி கோயில் தனி -ருக்மிணி பிராட்டி ஆராதித்த திரு மூர்த்தி இன்று இங்கே
த்ரி விக்ரமன் -தனி சந்நிதி -சனகாதிகளுக்கு -தனி சந்நிதி
56 படிக்கட்டுக்கள் 56 கோடி யாதவர்கள்
சார் தாம் -நான்கு
7 நிலைகள்
52 -கஜம் கொடி மாற்றும் உத்சவம்
பேட் துவாரகா பிராட்டிமார்க்கு தனி சந்நிதி -குசேலர் சந்தித்த இடம் -12 மைல் தூரம் படகில் போக வேண்டும்
ராணா சோடராய் யுத்த பூமியில் இருந்து ஓடியவன் தாகூர் துவாரகை –
முசுகுந்தன் –காலயவனன்–சாம்பலானவன் –
ஸ்ரீ நாத -துவாரகா – மீரா பிரதிஷ்டை -ராஜஸ்தான் -உதய்பூர் வடக்கே

மூலவர் ஸ்ரீ கல்யாண நாராயணன், ஸ்ரீ துவாரகா தீசன், ஸ்ரீ துவாரகா நாத்ஜி
கோலம் நின்ற
திருமுக மண்டலம் மேற்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீகல்யாண நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ கோமதி ஆறு, ஸ்ரீ சமுத்ர சங்கமம்
விமானம் ஸ்ரீ ஹேம கூட விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஸ்ரீ குஜராத்
அடிப்படை இடம் ஸ்ரீ ஜாம் நகர்
நாமாவளி ஸ்ரீ கல்யாண நாச்சியார் ஸமேத ஸ்ரீ கல்யாண நாராயணாய நமஹ-

——————–

ஸ்ரீ பெரியாழ்வார் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்

மொத்தம் -13-பாசுரங்கள் மங்களாசாசனம்

————-

ஸ்ரீ பெரியாழ்வார் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

————–

ஸ்ரீ ஆண்டாள் -4-பாசுரங்கள் மங்களாசாசனம்

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–4-8-

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

—————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -2-பாசுரங்கள் மங்களாசாசனம்

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர்
இனவளை கொண்டானடிக் கீழ் எய்த கிற்பீர்!
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளங்கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே. –6-6-7-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.–6-8-7-

—————–

ஸ்ரீ நம்மாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம்

அன்னையென் செய்யிலென்? ஊரென் சொல்லிலென்? தோழிமீர்!
என்னை யினியுமக் காசையில்லை அகப்பட்டேன்
முன்னை யமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே- மூன்றாம் திருவாய்மொழி – மாசறுசோதி

———–

ஸ்ரீ திருமழிசைப் பிரான் -1-பாசுரம் மங்களாசாசனம்

சேயனணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக்கோனாய் நின்ற – மாயன் அன்று
ஓதிய வாக்கதனைக் கல்லார் * உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ் ஞானமில். –நான்முகன் திருவந்தாதி – 71-

தற்போதுள்ள ஆலயம் 1500 ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டதாகும். உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இந்தக்கோவிலை இங்குள்ள
மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். கடந்த 5000
ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற  இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அமைப்பு சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட அமைப்பாகும்.

கண்ணபிரானின் சரித்திரத்தோடும், பாரதப் போரினோடும் பின்னிப் பிணைந்து கிடக்கும் இந்த துவாரகாபுரி அமைந்துள்ள மாநிலம் தான்
இன்றைய இந்தியா சுதந்திரம் பெறக் காரணமான மகானையும் ஈன்று அன்று போல் இன்றும் தன் ஒல்காப் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

மூலவர்- துவாரகா நாத்ஜி. கல்யாண நாராயணன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- கல்யாண நாச்சியார் (ஸ்ரீலட்சுமிதேவி) ருக்மணி, அஷ்டமஹிஷிகள்.
தீர்த்தம்- கோமதி நதி
விமானம்- ஹேம கூட விமானம்
காட்சிகண்டவர்கள்-  கண்ணன் வாழ்ந்த போதிருந்த துவாரகா வாசிகள் மற்றும் திரௌபதி

இங்கு செங்கோல் செலுத்தி மன்னாதி மன்னனாக வாழ்ந்த கண்ணபிரானை துவாரகா நாத்ஜி என்றே இங்குள்ள மக்கள் அழைப்பர்.
எவ்வளவு அரசியல்மாற்றங்கள் வந்தாலும் இங்குள்ள மக்கள் கண்ணனே தங்கள் மன்னன் என்று எண்ணி வாழ்கின்றனர். தங்களை துவாரகா நாத்ஜியின்
பிரஜைகளாக இன்றும் எண்ணி இறுமாப்பெய்துகின்றனர்.

இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவனது அஷ்ட மகிஷிகட்கும் அண்ணன்
பலராமனுக்கும் குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.

இங்கே கண்ணனுக்கு உணவும் உடையும் ஓயாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து
மணிக்கொருதரம் உடைமாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை
உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல்விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். 71/2 மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும்
படைக்கப்படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சக்கரை, பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு
அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு கனி வர்க்கங்கள் இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறான்.
இதனால் பயந்து போய் உணவு செரிமானம் ஆயிற்றோ என்னவோ என்று கருதி செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம்
கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் இந்த முறைக்கு (திருவாராதனத்திற்கு) போக் என்று பெயர்.

பக்த மீரா அன்ன ஆகாரமின்றி கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நடந்துவந்து கண்ணனை ஆரத்தழுவி அவனோடு இரண்டறக்
கலந்தது இந்த தலத்தில் தான். இவளின் கானம் தூணுக்குத் தூண் எதிரொலித்து கண்ணனை புளகாங்கிதம் அடையச் செய்ததும் இங்குதான்.
மீராவுக்கு மேவார் நகரில் விஷம் தர ஏற்பாடு செய்யப்பட்டதும் இச்சன்னதியின் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. மேவாரிலிருந்து பித்துப்
பிடித்தவள் போல் ஓடி வந்த மீரா, எங்கே துவாரகை எங்கே என் நாதன்என்று கூவிக் கொண்டே இச்சன்னதியின் வாசலை அடைந்தவுடன்
கோவிற்கதவுகள் தானாகத் திறந்து கொண்டன.

அரண்மனை எவ்வாறு கலகலப்பாக இருக்குமோ அதேபோல் இங்கு யாத்ரீகர்கள் (பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும்) கூட்டம் கூட்டமாக
வருவதால் எந்நேரமும் கலகலப்பு களைகட்டியிருக்கின்றது. இங்கு பெண்கள்கூட்டங்களையும் அவர்களின் உடைகளையும் பார்க்கும்போது ஆயர்ப்பாடி
கோபிகைகளின் நினைவே நமக்கு வருகிறது. கண்ணன் இருக்கிறான்
கோபியர்கள் இருக்கிறார்கள். ஆநிரைகள் மட்டும் எங்கே சென்றுவிடும். இங்கே ஊருக்குள் திரியும் ஆநிரைகளை மக்கள் கண்ணனின்
ஆநிரைகளாகவே அவைகளைத் தொடுவதில் மகிழ்ச்சி கொள்வதும், அவைகட்கும் பூச்சூட்டி மகிழ்வதும் அவைகள் பொலிவு தோன்ற இறுமாந்து நின்று செம்மாந்து திரிவதும் சிந்தனையைத் தூண்டுவது மட்டுமன்றி காண கிடைக்காத ஒரு தெய்வீகம் கலந்த காட்சியாகும்.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி
சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். பட்ட மகிஷி அல்லவா ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜகளை
ஜொலிக்க வீற்றிருக்கிறாள்.

ஒருநாள் ராதை துவாரகை வந்தாள். ருக்மணி வரவேற்று பாலும், தேனும் கொடுத்தாள். இருவரும் மிக்க அன்போடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
அன்றிரவு கண்ணன் படுக்கையறைக்கு வந்ததும் ருக்மணி கண்ணனுக்குப் பாத பூஜை செய்தாள். கண்ணனின் பாதங்களில் சிறு கொப்புளங்கள்
உண்டாயிருந்தன. இதைக் கண்டு திடுக்கிட்ட ருக்மணி பெருமானே, இந்தக் கொப்புளங்கள் எப்படி வந்தன என்று கேட்டாள். ருக்மணி நீ இன்று
ராதைக்குப் பால் கொடுத்தாயல்லவா அது சூடாக இருந்தது. அதை அவள் பருகியபோது எப்போதும் அவள் தனது இதய கமலங்களில் வைத்திருக்கும்
எனது பாதங்களில் சூடுபட்டு இந்தக் கொப்புளங்கள் வந்துவிட்டதென்றான். ஆனால் பால் சூடாக இருந்தது என்று ராதை கூறவில்லையே என்றாள்
ருக்மணி. நீ பிரியமாக கொடுத்ததால் சூடு உள்ளது என்று உன்னிடம் சொல்லாமலேயே குடித்துவிட்டாள். ஆகா, உம் பாதங்கள் கோமளமானவை
அதைவிடக் கோமளமானதன்றோ ராதையின் இதயம் என்றாள் ருக்மணி. என்னே அன்பு கலந்து நிகழ்ச்சியைக் கூட்டி விட்டான் இந்த துவாரகையில்.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்கட்கு
இங்கிருந்துகொண்டு மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப்படுகிறது. இதனாலும் துவாரகை என்று பெயர் வந்தது என்பர்.

இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை
பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். நாம் முன்னே சொன்ன துவாரகா சன்னதியிலிருந்து ஒகா துறைமுகம் வரை பேருந்தில் சென்று அங்கிருந்து
விசைப்படகு மூலம் இத்தலத்தை அடையலாம். இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர்.
இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும்
நடைபெறும் அலங்காரங்களை நாம் எதிரில் நின்று கொண்டே கண்குளிரக் காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி ஸேவை தருகிறாள்.
இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி நாராயணன் என மொத்தம் ஐந்து சன்னதிகளும், சங்க தீர்த்தம் என்னும் மிகப்
பிரசித்தமான தீர்த்தமும் உண்டு.

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 3 மைல் தூரத்தில் உள்ள ருக்மணி தேவியின் சன்னதியில் தான்
ஸ்ரீகிருஷ்ணபகவான் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீஹம்.

இங்கிருந்து திரும்பும்போது (அதாவது பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு) விராவல் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கினால் பிரசித்தி
பெற்ற சோமநாதர் ஆலயம் செல்லலாம். இதற்கு அருகாமையில் அமைந்துள்ள பாலகா என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் போவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் கிருஷ்ணரின் அரசரடி சயன திருக்கோலத்தைக் காணலாம். கிருஷ்ணன் சயனத் திருக்கோலத்தில் இருப்பது அநேகமாக 108 திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் என்று மட்டுமே கூறலாம். துவாரகா புரியை மட்டுமே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருப்பினும் நிகழ்ச்சிகளால் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து
கிடக்கும் இங்குள்ள ஸ்தலங்கள் யாவற்றையும் மங்களாசாசனம் செய்வதாக கொள்ளலாம்.

ஜராசந்தன் என்னும் அரக்கன் மக்களுக்கு பல துன்பங்கள்விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு
உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டுமென கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை யழைக்க அவனால்
வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி. இதனால் மிக்க சந்தோஷமடைந்த சமுத்திர ராஜன் இந்நகரைக் காத்து வந்ததாகவும் ஐதீஹம். இந்த துவாரகாபுரி
கடல் கோள்களால் விழுங்கப்பட்டு விட்டது.

இங்கு செல்பவர்கள் தனி பிரயாணத்திட்டம் வகுத்து சுமார் 6 நாட்கள் வரை தங்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கையோடு
தொடர்புடைய இடங்கள், பேட்துவாரகை, விராவல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஸ்தலங்கள் மற்றும் இங்குள்ள ப்ராபஸ தீர்த்தம், ஜீனகட்
எனப்படும் ரயில்நிலையத்திலிருந்து 100மைல் தொலைவிலுள்ள கிரிதார் என்னும் ரைவதமலை மற்றும் இங்கு வாழும் பெரியவர்களாலும்,
பக்தர்களாலும் சொல்லப்படும் முக்கியமான புனித ஸ்தலங்களைத் தரிசித்து, தீர்த்தாடனம் செய்து வருவது மிக்க விசேஷம்.

கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள கிருஷ்ண சாம்ராஜ்யமான இந்த துவாரகாபதி சென்று வந்தவர்கட்கு இங்கு
கண்ட காட்சிகள் வாழ்நாள் முடிய மறக்கவொன்னாதவைகளாகும்.

திறம் திறமாத் தாம் துய்க்கும் தீம் சுவையை நாடி
அறம் திறம்பி பாதகர் ஓர் ஐவர் நறுந்துளவ
மாதுவரை யோனே மனம் துணையாகக் கொண்டு என்னைக்
காதுவர் ஐயோ மெய் கலந்து –105-

(இ – ள்.) நறுந் துளவம் – நறுமணமுடைய திருத்துழாய்மாலையைத் தரித்த,
மா துவரையோனே – பெருமைபெற்ற துவாரகையென்னுந் திவ்வியதலத்தை வாழுமிடமாகக்கொண்டவனே! –
பாதகர் ஓர் ஐவர் – மிகக்கொடிய பாதகங்களைச் செய்வதற்குக் காரணமாய்நிற்கின்ற பஞ்சேந்திரியங்கள்,
திறம்திறம் ஆ – விதம்விதமாக,
தாம் துய்க்கும் – தாம் அனுபவித்தற்கு உரிய.
தீஞ்சுவையை – இன்சுவையுள்ளபொருள்களை,
நாடி – தேடிக்கொண்டு,
அறம் திறம்பி – தருமமார்க்கத்தினின்று தவறி,
மனம் துணை ஆ கொண்டு – (எனது) மனத்தை(த் தமக்கு) உற்றதுணையாகக்கைக்கொண்டு,
மெய் கலந்து – எனது உடலிற் பொருந்தி,
என்னை -, காதுவர் – இடைவிடாது வருத்துவார்கள்; ஐயோ -! (எ – று.)

“மனமாளு மோரைவர்” என்றபடி கொடிய பஞ்சேந்திரியங்கள் மனத்தைத் தமக்கு உற்ற துணையாகக்கொண்டு
சரீரத்திற்கு உள்ளாகவே இருந்து தம்தமக்குஉரிய விஷயங்களில் விரும்பி என்னுயிரை வருத்திக் கொல்கின்றன;
இவற்றை உனது அருளென்னுந் தண்டா லடித்து வலியொடுக்கி நற்கதி யளிக்கவேண்டுமென்பதாம்.
எம்பெருமான் சேதநர்கள் தன்னையுணர்ந்து வழிபட்டு ஈடேறுதற்பொருட்டே கரணகளேபரங்களை அவர்கட்கு அளித்திருக்க,
இந்திரியங்கள் அவ்வெம்பெருமானை வழிபடுதற்கு இசையாது மனத்தைத் துணைக்கொண்டு வேறுவழியிற் செல்லுதலால்
“பாதகர்ஓரைவர் அறந்திறம்பிக் காதுவர்’ என்றார். பஞ்சேந்திரியங்கள் புறம்பே விலகிநின்றால் ஒருவாறு உய்தல்கூடும்;
உள்ளேபுகுந்து உற்றதுணைவர் போன்று உயிரை வருத்துதலால், உய்யும் வகை யில்லை யென்பது, ‘
காதுவ ரையோ மெய்கலந்து’ என்பதன் கருத்து;
“புறப்பகைகோடியின் மிக்குறினு மஞ்சார், அகப்பகையொன்றஞ்சிக் காப்ப” என்றது காண்க.
‘திறந்திறமாத் தாம்துய்க்குந் தீஞ்சுவை’ என்றது – மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும் பஞ்சேந்திரியங்களும்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகைப் புலன்களைத் தமக்கு விஷயமாகக் கொண்டிருத்தலால் என்க.
செறலினால் ‘ஐவர்’ என அஃறிணையை உயர்திணையாக் கூறினார்.

துவரை – த்வாரகா என்ற வடசொல்லின் சிதைவு; அகன்ற துவாரத்தையுடையது எனக் காரணப்பொருள்படும்.
இதுவும் முத்திதரும் நகரமேழனுள் ஒன்று. இந்நகரம் – காலயவனன் பெருஞ்சேனையோடு வடமதுரையை
முற்றுகைசெய்தபோது அவனால் யாதவர்க்கு எங்குத் தீங்குவருமோ? என்ற கருத்தினால்
ஸ்ரீகிருஷ்ணபகவான் சமுத்திரத்தினிடையே அவ்யாதவரைப் பாதுகாக்குமாறு ஏற்படுத்தி அரசாண்ட நகரம்.
“பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்யத் துவரையென்னு, மதில் நாயகராகிவீற்றிருந்த மணவாளர்” என்பது, பெரியார்பாசுரம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ-திரு ஆய்ப்பாடி –ஸ்ரீ கோகுலம்

March 24, 2024

மூலவர் -நவ மோஹன கிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் -ருக்மிணீ -சத்யபாமா தாயார்
விமானம் -ஹேம கூட விமானம்
தீர்த்தம் -யமுனா நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திருமங்கையாழ்வார்

யமுனையின் மறு கரையில் இருக்கும் கோகுலம் -கண்ணன் 10 ஆண்டுகள் வளர்ந்த ஸ்தலம் –
-இங்கு ஒவ்வொரு அடி பொழியும் கண்ணன் தொடர்பு கொண்டது –
நந்தகிராமம் -கோவர்த்தனம் -பிருந்தாவனம் –ஆகிய அனைத்தும் கோகுலத்தில் அடங்கும் –

ப்ரஹ்மாண்ட காட் -மண் பிரசாதம் / உள் பந்தன் குரலையும் சேவிக்கலாம் / நந்தன் பவன் தொட்டில் நாமும் ஆட்டலாம் /
உருண்டு மண் சம்பந்தம் / ரமன் ரேடி/ கூசும் சரோவர் நாரதர் வனம் / மான்சீ கங்கா /
கோவிந்தன் -உதவ ஷீலா -ஜிஹ்வா ஷீலா / ரெங்கோஜி மந்திர் -/ காம்யவனம் ராஜஸ்தான் -/ சரண் பகடி/ லுகாலுக்க குண்டம் /கயா குண்டம் /

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ கோகுலம்
மூலவர் ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன், ஸ்ரீ மன மோகன கிருஷ்ணன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்ய பாமா
தீர்த்தம் ஸ்ரீ யமுனை நதி
விமானம் ஸ்ரீ ஹேம கூட விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் ஸ்ரீ உத்தரபிரதேசம்
அடிப்படை இடம் ஸ்ரீ தில்லி
நாமாவளி ஸ்ரீ ருக்மணீ ஸத்ய பாமா நாயிகா ஸமேத ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணாய நமஹ

————————–

ஸ்ரீ பெரியாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ ஆண்டாள் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

மொத்தம் -22-பாசுரங்கள் மங்களாசாசனம்

————

ஸ்ரீ பெரியாழ்வார் -10-பாசுரங்கள் மங்களாசாசனம் –

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்
றாடுவார்களுமாய ஆயிற்று ஆய்ப்பாடியே -1-1-2-

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனராய் ஆய்ப்பாடி ஆயரே –1-1-4-

தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப் படுக்கில் வாழ கில்லேன் வாசு தேவா
தாயர் வாய் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர் பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே -2-2-5 –

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார்
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3 1-9 –

பற்று மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – 3-2 2-

வண்ணக் கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கானதரிடைக் கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 –

மிடறு மெழு மெழுத் தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்திப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே -3 2-6 –

விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ண வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே -3 4-10 –

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்தணையான் குழலூத அமர லோகத்தளவும் சென்று இசைப்ப
அவி உணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து ஈண்டி
செவி உணா இன் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – 3-6 7- –

———————–

ஸ்ரீ ஆண்டாள் -5-பாசுரங்கள் மங்களாசாசனம்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்த கோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். –திருப்பாவை – 1-

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–13-4-

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின்மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

———————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -7-பாசுரங்கள் மங்களாசாசனம்

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-4-

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –5-5-5-

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே–5-9-8-

தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-

ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிற்று இவ்
வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் சாழலே –11-5-3-

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்தான் காணேடீ
உறியார் நறு வெண்ணெய் யுண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
ஏறி நீர் உலகனைத்தும் எய்தாதால் சாழலே —11-5-4-

ஆராத தன்மையனாய் ஆங்கொரு நாளாய்ப் பாடி சீரார்கலயல்குல் சீரடிச் செந்துவர் வாய்—சிறிய திருமடல் – 28-

இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8
மைல் தூரத்தில் உள்ளது.

கண்ணனின் பாலபருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம்
எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த
கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. சுருக்கமாக இதன்
வரலாற்றை ஒரே வரியில் சொன்னால் கண்ணனின் பால பருவ வளர்ச்சிதான் கோகுலம்.

மூலவர்-  நவமோகன கிருஷ்ணன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- ருக்மணி தேவியார், சத்திய பாமா
விமானம்-    ஹேம கூட விமானம்
காட்சி கண்டவர்கள்–   கோகுல வாசிகள்

இங்கு யமுனையை அடைந்ததும் கண்ணன் வாசனை வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் (துவாபரயுகத்தில்) இங்கு கண்ணன் பாலகுமாரனாக ஓடியாடி
விளையாடி லீலை செய்த காட்சிகளை நினைவு கூறும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1
கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. அதாவது எல்லாமே கோகுலம் என்று சொன்னாலும்
இந்த இடம் மட்டுமே கண்ணனின் ஸாநித்தியம் நிரம்பி வழிந்த இடமாகும்.
புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை,
பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள விக்கிரகங்கள் யாவும் மரத்தினால் செய்யப்பட்டவையாகும். மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் பொருந்தியனவாகும்.

ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும் மதுராவில் இப்போதுள்ள தொன்மைமிக்க கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

அயோத்தியைப் போலவும், துவாரகை போன்றும் பரபரப்பாகக் காணப்படாவிடினும் அமைதி தவழும் ஆரண்யம் போல் திகழ்கிறது கோகுலம்.

எம்பெருமான் “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன்
இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது.
இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே சாலவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு.

ரஸோ வை ரஸ, என்று வேதமும் உன்னைச் சிறந்த ரஸம் என்கிறது. நீ இருக்கும் இடம் ரஸம் நிறைந்ததாகவே இருக்கிறது. கிருஷ்ண ரஸாயணம் பிப
என்றார் குலசேகரர். அவர் சொன்னபடி கிருஷ்ணரஸாயணத்தை (கிருஷ்ண சரித்திரங்களை) உண்டு சுவைப்பதிலேயே உயிரினங்களும்
காலங்கடத்துகின்றன.  என்னே அருமையான ரஸபாவனையில் மூழ்கியுள்ளனர் பெரியோர்கள்.

கலந்து அமரரோடும் கரை கண்டாரோடும்
பொலிந்து திரு நாட்டு இருக்கப் போவீர் மலிந்த புகழ்
அண்டராய்ப் பாடி அமலர் அடியார் அடியார்
தொண்டராய்ப் பாடித் தொழும்–106-

(இ – ள்.) (உலகத்தவர்களே!) –
மலிந்த புகழ் – நிறைந்த கீர்த்தியையுடைய,
அண்டர் – இடையர்கள்வாழ்கின்ற,
ஆய்ப்பாடி – திருவாய்ப்பாடி யென்னுந் திவ்வியதேசத்தி லெழுந்தருளியிருக்கின்ற,
அமலர் – குற்றமற்ற கண்ணபிரானது,
அடியார் அடியார் தொண்டர் ஆய் – தாஸஅநுதாஸர்க்கு அடிமைப்பட்டவராய்,
பாடி – (அவரது குணங்களைப்) பாடி,
தொழும் – (அவரை) வணங்குங்கள்; (அவ்வாறு வணங்கினால்), –
அமரரோடும் – நித்ய ஸூரிகளோடும்,
கரைகண்டாரோடும் – (இவ்வுலகத்தினின்று) அக்கரை சேர்ந்தவரான முக்தர்களோடும்,
கலந்து – ஒருசேரக்கலந்து,
பொலிந்து – சிறப்புப்பெற்று,
திருநாடு – பரமபதத்தில்,
இருக்க – அழிவின்றி இருக்கும்படி,
போவீர் – செல்வீர்கள்; (எ – று.)

திருமால் ஸ்ரீகிருஷ்ணனாகத் திருவவதரித்து விளையாடின இடமாகிய திருவாய்ப்பாடியி லுள்ள அடியாரின்
அடியார்கட்கு அடியவராகி அவரது குணங்களைப் பாடித் துதித்தால், அதன்பயனாக, நீங்கள் ஸ்ரீவைகுண்டலோகத்தில்
அநாதியாய் வாழ்கின்ற நித்யஸூரிகளோடும் ஸம்ஸாரத்தினின்று வீடுபெற்றுச்சென்ற முக்தரோடும்
ஒருகோவையாகக்கலந்து பேராநந்தமநுபவிக்கப்பெறுவீ ரென்று உலகத்தோர்க்கு உபதேசித்தவாறு:
இச்செய்யுளால், பாகவதசேஷத்தின் சிறப்பைக் கூறின ரென்க.

அமரர் – என்றும் மரணமில்லாதவர்; நித்யஸூரிகள் எனப்படுவர்; அவராவார் – அநந்த கருட விஷ்வக்ஸேநர் முதலியோர்.
கரைகண்டோர் – எம்பெருமானது நிர்ஹேதுககிருபையினால் தத்துவஞானம் தோன்றப்பெற்று ஸாம்ஸாரிக
ஸகலபாபங்களையும் ஒழித்து முக்தியிற் சேர்ந்தவர்கள்;
“கரைகண்டோர், துளக்கமில்லாவானவர்” என்றார் நம்மாழ்வாரும்.
இங்கு கலை கண்டார், என்ற பாடம் சாஸ்திரங்களில்வல்லவரெனப் பொருள்படுமாயினும, இனிதுபொருந்தாமை உணர்க.
அண்டர் ஆய்ப்பாடி அமலர் என்பதற்கு – இடையர்களது ஆய்ப்பாடியில் தோன்றிய குற்றமற்ற பாகவதர் என்றும்,
அண்டராகிய ஆய்ப்பாடியமல ரென்றும் பொருள் கூறினுமாம்.

ஆய்ப்பாடி – இடையர்கள்வசிக்கின்ற சேரி யெனப் பொருள்படும்; ‘கோகுலம்’ என்று வடமொழியில் வழங்கப்பெறும்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்