Archive for February, 2018

திருப்பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -திவ்யார்த்த தீபிகை சாரம் —

February 27, 2018

திவ்ய பிரபந்தம் –மூலம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஷயம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் -மூல கர்த்தாக்கள்
பழைய செழிய தெய்வத் தமிழ் -பாஷை
ஞானம் கனிந்து நலம் கொண்டு நாடொறும் நையும் ஞானம் அனுட்டானம் இவை நன்றாக உடைய நம் நல் குரவர்-ஆதரித்தவர்கள்-

ஸ்ரீ வத்ஸ ஸ்ரீ கௌஸ்துப வைஜயந்தி வனமாலைகளையும் ஸ்ரீ பூமி நீளை களையும் ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களும்
ஸ்ரீ அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகளையும் பார்த்து -நீங்கள் போய் லீலா விபூதியிலே நாநா வர்ணங்களிலும் திருவவதரித்து
அகிலாத்ம உத்தாரணம் பண்ணுங்கோள் என்று நியமித்து அருள —த்ரமிட பூ பூக்கத்திலே நிமக்நரை உயர்த்த நாநா வர்ணங்களில் வந்து திருவவதரிக்க –
சர்வேஸ்வரனும் அவர்களுக்கு மயர்வற மதி நலம் அருளி அவர்கள் முகேந ஸர்வாதிகாரமான திராவிட வேத ரூப திவ்ய பிரபந்தங்களை
பிரகாசிப்பித்து அருளினான் – ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் -ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் பிரவேசித்து இறுதி ஸ்ரீ ஸூக்திகள்
ஸ்ரீ கருட வாகன பண்டிதரும் இதே போலே அருளிச் செய்துள்ளார் –
ஆழ்வார்கள் சம்சாரிகளில் ஒருவரால் இத்தனை -ஈட்டு ஸ்ரீ ஸூக்தி –

சாற்றிய காப்புத் தால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானை போற்றரிய அம்புலியே யாய்நத சிறு பறையே
சிற்றிலே பாம்பு சிறு தேரோடும் பத்து -பிள்ளைக் கவிகள் பாடும் வகை முறைகளைப் பற்றி வச்சணந்தி மாலை சொல்லும்

——————————————————————————

அஞ்ச உரப்பாள் யசோதை -ஆணாட விட்டிட்டு இருக்கும் —
இதல் -சீற மாட்டாள் என்கிற அர்த்தத்தில் உரப்பாள் -என்பதே சரியான பாடம் –
உரைப்பாள் தப்பான பாடம்
——————————————————————————

இராமானுச நூற்றந்தாதி -95
மண்ணின் தலத்து உதித்து மறை நாலும் வளர்த்தனனே -தப்பான பாடம்
மண்ணின் தலத் துதித் துய மறை நாளும் வளர்த்தனனே -சரியான பாடம்
மா முனிகள் வியாக்யானம்
ஸ்ரீ வைகுண்டத்தில் -இருந்து பூ தலத்திலே திருவவதரித்து சர்வ உஜ்ஜீவன சாஸ்திரமான ருகாதி சதுர் வேதத்தையும்
அசங்குசிதமாக நடத்தி அருளினார் –
உய் மறை நாலும்-சர்வ உஜ்ஜீவன சாஸ்திரமான ருகாதி சதுர் வேதத்தையும்-

———————————————————————————

பல கோடி நூறாயிரம் -விட
பல் கோடி நூறாயிரமே சிறந்த பாடம்

————————————————————————-

சேவடி செவ்வி திருக் காப்பு விட –
செவ்வடி செவ்வி திருக் காப்பு -சிறந்த பாடம்

—————————————————————————

பெரியாழ்வார் மங்களா சாசனம் செய்து அருளிய 19 திவ்ய தேசங்கள்
திருவரங்கம் /திருவெள்ளறை /திருப்பேர் நகர் /திருக் குடந்தை திருக் கண்ணபுரம் /திருமால் இரும் சோலை –
திருக் கோட்டியூர் /ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருக் குறுங்குடி /திருக் கோட்டியூர் /
திருவேங்கடம் /திரு அயோதியை /திரு சாளக்ராமம்
திரு வதரியாச்ரமம் /திருக் கண்டங்குடி நகர்
திரு த்வாரகை /திரு வடமதுரை -திரு கோவர்த்தனம் –
திருவாய்ப்பாடி -திரு கோகுலம்
திருப்பாற் கடல் /திரு பரம பதம் –
திரு தில்லைச் சித்ர கூடம் -சேர்த்தும் சிலர் 20 -என்பர் -இவர் அருளிய திரு சித்ர கூட பாசுரங்கள் கொண்டு –

இவர் மட்டுமே மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசம்
திரு கண்டங்குடி நகர்

—————————————————————————–
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி பத்தொன்பதையும் -நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாதம் என் தலை மேல் பூ
———————————————————————————

திருவரங்கம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கருவுடை மேகங்கள் –2-7-2-
சீமாலிகனவ னோடு -2-7-8-
வண்டு களித்து இறைக்கும் -2-9-11-
கன்னி நன் மா மதிள் சூழ் தரு -3-3-2-
மாதவத்தோன் -4-8-பதிகம் முழுவதும்
மரவடியைத் தம்பிக்கு -4-9-பதிகம் முழுவதும்
துப்புடையாரை அடைவது -4-10-முழுவதும்

திரு வெள்ளறை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
இந்திரனோடு பிரமன் -2-8-பதிகம் முழுவதும்

திருப் பேர் நகர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கொங்கும் குடந்தையும் -2-9-2-
கொண்டல் வண்ணா இங்கே -2-9-4-

திருக் குடந்தை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கொங்கும் குடந்தையும் -2-9-2-
குடங்கள் எடுத்து ஏற விட்டு –2-7-7-

திருக் கண்ணபுரம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-

திரு மாலிருஞ்சோலை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
சுற்றி நின்று ஆயர் –1-4-5-
அலம்பா வெருட்டா -4-2-பதிகம் முழுவதும்
உருப்பணி நான்கை தன்னை -4-3-பதிகம் முழுவதும்

திருக் கோட்டியூர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வண்ண மாடங்கள் சூழ் -1-1-1-
கொங்கும் குடந்தையும் -2-3-2-
நாவ காரியம் -4-4-பதிகம் முழுவதும்

ஸ்ரீ வில்லி புத்தூர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
மின்னனைய நுண்ணிடையார் -2-2-3-

திருக் குறுங்குடி -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-

திரு வேங்கடம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
சுற்றும் ஒளி வட்டம் -1-4-3-
என்னிது மாயம் -1-8-8-
தென்னிலங்கை மன்னன் -2-3-3-
மச்சோடு மாளிகை ஏறி -2-7-3-
போதர் கண்டாய் இங்கே -2-7-7-
கடியார் பொழில் அணி -3-3-4-
சென்னி யோங்கு –5-4-1-

திரு அயோத்தி -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வாரணிந்த முலை மடவாய் -3-10-4-
மைத்தகு மா மலர் -3-10-8-
வடதிசை மதுரை -4-7-3-

திரு சாளக்கிராமம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-

திரு வதரியாஸ்ரமம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-

திருக் கண்டம் கடி நகர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
தங்கையை மூக்கும் 4-7–பதிகம் முழுவதும்

திருத் துவாரகா -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-

திருக் கோவர்த்தனம்-திரு வட மதுரை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வானிள வரசு -3-4-3-
வடதிசை மதுரை -4-7-3-

திரு ஆய்ப்பாடி -திருக் கோகுலம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
தீய புந்திக் கஞ்சன் – -2-2-5-
முலை ஏதும் வேண்டேன் -2-3-7-
விண்ணின் மீது அமரர்கள் -3-4-10-
புவியுள் நான் கண்டது –3-9-7-

திருப் பாற் கடல் –மங்களா சாசனம் -பாசுரங்கள் –
ஆலத்து இலையான் -2-9-9-
பை யரவின் இணைப் பாற் கடலுள் -4-10-5-

திருப் பரம பதம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வான் இள வரசு வைகுந்தக் குட்டன் –3-4-9-
வட திசை மதுரை -4-7-9-
தட வரை வாய் -5-4-10-

தில்லைத் திரு சித்ர கூடம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
மானமரும் மென்னோக்கி -3 -10 -5-
சித்தர கூடத்து இருப்ப -3-10-9-

——————————————

மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -முதலிலும்
பருப்பதத்து கயல் பொறித்த-என்ற பாட்டிலும் மல்லடர்த்தாய் -இறுதியிலும் அருளி –

———————————————————————-

நம் ஆழ்வாருக்கு
பூதத் ஆழ்வார் -திருமுடி
பொய்கை ஆழ்வார் பேய்ஆழ்வார் -திருக் கண்கள் –
பெரியாழ்வார் -திரு முகம்
திரு மழிசை ஆழ்வார் -திருக் கழுத்து
குலசேகர ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் -திருக்கைகள்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மார்பு
திருமங்கை ஆழ்வார் -திருக் கொப்பூழ்
மதுரகவி ஆழ்வார் -திருவடி

————————————————————————————-

இரண்டடி வெண்பா -குறள் வெண்பா
மூன்றடி -சிந்தியல் வெண்பா
5-12 -அடி -பற்றொடை வெண்பா
12 அடிக்கு மேல் கலி வெண்பா
கலி வெண்பா -திரு மடல்கள் இரண்டும்
பன்னிரு பாட்டியல் இலக்கண நூல்
பாட்டுடைத் தலைமகன் இயற் பெயர்க்கு எதிகை
நாட்டிய வெண் கலிப்பாவதாகி–காமம் கவற்றக்
கரும் பனை மட மா இருவர் ஆடவர் என்றனர் புலவர் –
——————————————————————————————-

முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்-நன்னூல்

தனியன் இயற்றும் அதிகாரி நன்னூல்
தன்னாசிரியன் தன்னோடு கற்றான் தன மாணாக்கன் தகும் உரைகாரர்
என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே –

————————————————————————————-

கீழ்மை இனிச் சேரும்
கீழ்மையினில் சேரும்
கீழ் மேனி சேரும்

சங்கம் எடுத்தூத -எடுத்து ஓத
சங்கம் அடுத்தூத
சங்கம் மடுத்தூத
பாட பேதங்கள்
எடுத்தூத பாடமே மோனைக்கு சேரும்-

——————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் பிரவணராய் -கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -திருவவதாரம் முதலாக
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்-என்று அதி மானுஷ சேஷ்டிதமான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை
ஸ்ரீ கோப ஜென்மம் ஆஸ்தானம் பண்ணி -அநுகரித்து -அனுபவித்து -அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தையராய்க் கொண்டு பெரியாழ்வார் திருமொழி திவ்ய பிரபந்தத்தை
சாயை போலே பாட வல்ல சஜ் ஜனங்களுக்கு உபகரித்து அருளி உலகத்தை வாழ்வித்து அருளுகிறார்

——————————————————————————-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தமா என்னில்
ஜ்ஞான தசையில் ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்கும்
அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் அவனை கடகாக்கிக் கொண்டு தன்னை நோக்கும்
சௌகுமார்யத்தை அனுசந்தித்தால் தன்னைக் கடகாக்கிக் கொண்டு அவனை நோக்கும் –
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது
ஆழ்வார்கள் எல்லாரையும் போல் அல்லல் பெரியாழ்வார்
அவர்களுக்கு இது காதா சித்கம்
இவருக்கு இது நிச்சயம்

——————————————————————————-

திருப் பல்லாண்டு
முதல் பாட்டில் திருவடிக்கு மங்களாசாசனம்
மேலில் பாட்டு ஒரு பாட்டாக அனுசந்திப்பது சம்ப்ரதாயம் –
இரண்டாம் பாட்டில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களாசாசனம்

படை போர் புக்கு முழங்கும் பாஞ்ச சைன்யம் -சேனைகளை யுடைய யுத்தங்களில் புகுந்து கோஷிக்கும் என்றும்
போர் படை புக்கு முழங்கும் பாஞ்ச சைன்யம் -யுத்தங்களில் ஆயுதமாக போய் முழங்கும் என்றுமாம்

மூன்றாம் பாட்டில் பகவத் ப்ராப்தி காமர்களை கூட்டு சேர அழைக்கிறார்
மண்ணும் மனமும் கொண்மின் –
திரு முளை திரு நாளுக்கு புழுதி மண் சுமக்கையும்
இக் கல்யாணத்துக்கு அபிமாநிகளாய் இருக்கையும்
இரண்டும் கைங்கர்யங்கள் அனைத்துக்கும் உப லஷணம்
ஏழ் காலம் -முன் -நடு -பின் ஏழ் காலம் -ஆக 21 தலைமுறை
நான்காம் பாட்டில் கைவல்ய காமுகர்களை அழைக்கிறார்
ஏடு -சூஷ்ம சரீரம்
ஐந்தாம் பாட்டில் ஐஸ்வர் யாதிகளை அழைக்கிறார்
ஆறாம் பாட்டில் அநந்ய பிரயோஜனர்கள் தங்கள் ஸ்வரூபாதிகளை சொல்லிக் கொண்டு வந்து புகுகிறார்கள்
ஏழாம் பாட்டில் கைவல்ய நிஷ்டர்கள் தங்கள் ஸ்வ பாவம் சொல்லிக் கொண்டு புகுகிறார்கள்
சுழற்றிய –திரு ஆழி ஸ்வ ஆஸ்ரயத்தில் இருந்தே கார்யம் நிர்வஹிக்க வல்லவன் என்கிறது
பெருமான் -பெருமை உள்ளவன் -பெரு மஹான் -விகாரம் என்றுமாம் /குடில் -புத்ராதி சந்தானம் எல்லாம்
அடுத்து ஐஸ்வர் யாதிகள் இசைந்து வந்து கூடுகிறார்கள்
நெய் யெடை நெய்யிடை-இரண்டு பாட பேதம்-
நெய்யோடு ஒத்த எடையை யுடைத்தாய் / நெய்யின் நடுவே சில சோறும் என்றவாறு
அடைக்காய் -அடை இலை வெற்றிலை காய் பாக்கு
கை அடைக்காய் -கை நிறைந்த அடைக்காய்
அடுத்து கூடிய அநந்ய பிரயோஜனர்கள் இவர் உடன் கூடி பல்லாண்டு பாடுகிறார்கள்
அடுத்து கைவல்யர்கள் சேர்ந்து பாடுகிறார்கள்
அடுத்து ஐஸ்வர் யாதிகள் சேர்ந்து பாட
நிகமத்தில் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-

———————————————————————————–

பெரியாழ்வார் திருமொழி-

ஸ்ரீ கிருஷ்ணன் உடைய விரோதி பாஹூள்யத்தால் ஆழ்வார்கள் மிகவும் பரிவார்கள்
பெரியாழ்வார் விசேஷத ப்ரவணராய் இருப்பார்
விட்டு சித்தன் மனத்திலே கோயில் கொண்ட கோவலன் –
ரிஷிகளை போலே கரையிலே நின்று திரு வவதார குண செஷ்டிதன்களை சொல்லிப் போகாமல்
பாவன பிரகர்ஷத்தாலே கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை அவர்களாக பேசி அனுபவித்து தலைக்கட்டுகிறார்-

இப்பிரபந்தத்திலே
முதல் திருமொழியில்
கிருஷ்ண அவதார உத்தர ஷணத்தில் திருவாய்ப் பாடியில் உள்ளார் பண்ணின
உபலாள நாதிகளை திருக் கோட்டியூரிலே நடந்ததாக அனுசந்தித்து இனியர் ஆகிறார்-

வண்ண மாடங்கள்
திருவவதரித்த உடனே கண்ணன் முற்றம் ஆனதே-ஸ்ரீ நந்த கோபர் அபிப்ராயத்தாலே
எள் + நெய் =எண்ணெய்/சுண்ணம் -மஞ்சள் பொடி

ஓடுவார்
ஆய்ப்பாடியில் விகாரம் அடையாதவர்கள் இல்லையே
ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்றே
பிரான் -பிரபு -விராட் –
எங்குத்தான் – -எங்குற்றான் -பாட பேதம்

பேணிச் சீருடை -கம்சாதிகள் கண் படாத படி காத்து வந்து -ஸ்ரீ மானான ஸ்ரீ கிருஷ்ணன்
வடமதுரையில் பிறந்த பிள்ளையை திருவாய்ப்பாடியில் பிறந்ததாக கம்சன் பிரமிப்பிக்க
புகுவார்களும் புக்குப் போவார்களும்
உறியை முற்றத்து
கொண்ட தாள்
அண்டர் இடையர்
மிண்டி நெருக்கி கூட்டத்தின் மிகுதி
கையும் காலும்
பைய நீராட்டி திரு மேனிக்கு பாங்காக
ஐய நா -மெல்லிதான நா
வையம் வைக்கப்படும் இடம் வசூந்தர வசூமதி
ஏழும் -உப லஷணம் எல்லாம் என்றபடி

வாயுள் வையம் கண்ட
கீழே யசோதை கண்டதை மற்ற ஆய்சிகளுக்கும் சொல்ல
அனைவருக்கும்
திவ்ய சஷூஸ் கொடுத்து காட்டி அருளினான்
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
நாம கரண தினம்
மத்த மா மலை தாங்கிய மைந்தனை -மத்தம் -யானைகள் -நிறைந்த கோவர்த்தனம் -என்றும்
மைத்த -சோலைகள் நிறைந்து அவற்றின் நிழலீட்டாலே கருத்த மா மலை என்றுமாம்
உத்தானம் செய்து உகந்தனர் ஆயர் -கைத் தலத்தில் வைத்துக் கொண்டு -உத்தானம் -நிமிர்ந்து கிடத்தல் என்றபடி
கிடக்கில் தொட்டில்
மிடுக்கு இலாமையினால் நான் மெலிந்தேன் -மிகவும் இளைத்தேன்
செம் நெலார்-இப்பாடல் வல்லார்க்கு பாவம் இல்லையே

——————————————————————————

1-2-
திருவடி தொடங்கி திரு முடி ஈறாக யசோதை பிராட்டி பாவ உக்தராய் கொண்டு அனுபவிக்கிறார்
சீதக் கடலுள் அமுது -அமுதினில் வரும் பெண்ணமுது
முத்தும் மணியும் வயிரமும் –
தத்திப் பதித்து மாறி மாறி பதித்து
பணைத்தோள்
வெள்ளித் தளை நின்று இலங்கும் கணைக்கால்
உழந்தாள்-உழவு ஆயாசம்
ஒரு தடா உண்ண பிள்ளைக்கு சாத்மியாது என்று வருந்தி -இழந்தாள்
தாம்பை ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
பிறங்கிய பேய்ச்சி
மறம் கொள் த்வேஷம் கொண்ட
மத்தக் களிற்று
அதத்த்தின் பத்தா நாள் -ஹஸ்த நஷத்ரம் பத்தாவது திரு நாள் தோன்றிய அச்சுதன்
கீழ் முறை ரோகிணியும் மேல் முறை திருவோணமும்
இருகை மத களிறு-பெரிய துதிக்கை உடைய
செய்த் தலை நீல நிறத்து சிறு பிள்ளை -தலை செய் -உயர்ந்த ஷேத்ரத்திலே அலர்ந்த கரு நெய்தல் பூவின் நிறம் போன்ற பால கிருஷ்ணன்
பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய -சக்ரவர்த்தி திருமகனில் வ்யாவ்ருத்தி

—————————————————–

1-3-
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி – செந்நிறமுடைய மாணிக்கத்தை இரண்டு அருகிலும் கட்டி –
நடுவில் வயிரத்தைக் கட்டி – கருமாணிக்கம் என்பது -இல் பொருள் உவமை
வயிச்சிரவணன்–சரியான பாடம் –குபேரன் என்றவாறு -வயிச்சிராவணன்-நீட்டுதல் பிழை
வாசிகை-திரு நெற்றி மாலை
வெய்ய காலை பாகி -வெவ்விய ஆண் மானை வாகனமாக யுடைய துர்க்கை
————————————-

1-4-
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி-கண்ணபிரான் சந்திரனைக் கையில் கொள்ள வேண்டும் என்று ஆடுகிற கூத்து
ஆடலாட யுறுதியேல்-முன்னிலை ஒருமை வினை முற்று -கருத்துறுயாகில்-என்றவாறு
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -நோவாமே -எதிர்மறை வினை எச்சம் -கை நோவு வீணாகப் போகாதபடி என்று
சக்கரக் கையன் –நீ இவன் அருகே வராவிடில் உன்னை சிஷித்து அல்லது விடான் -ஆழி கொண்டு உன்னை எறியும் -என்பார் மேலும்
பேழை வயிறு -பேழை என்று பெட்டிக்கும் பேர் -வெண்ணெய்க்கு பேட்டி போன்ற திரு வயிறு
தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே-எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே

————————————-

1-5-
செங்கீரை -தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்து ஆடுவிப்பதொரு நர்த்தன விசேஷம்-பெரிய ஜீயர்
பிள்ளைகள் இரு கையும் முழந்தாள்களும் உஊன்றித் தலை நிமிர்த்தி ஆடுதல் -என்பான் தமிழன்
கீர் -என்று ஒரு பாட்டாய் -அதுக்கு நிறம் சிவப்பாகி -அதுக்குத் தகுதியாக ஆடு என்று நியமிக்கிறார்கள் என்று-திருவாய் மொழிப் பிள்ளை
போர் ஏறு -முற்று உவமை
தப்பின பிள்ளைகளை- தாயொடு கூட்டிய என் அப்ப -என்று இயைந்து பொருள்
தனி மிகு சோதி புகத்-என்ற அத்யாபக பாடம் பிழை
தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும்–தழுவி முழுசிஉச்சி மோந்து முத்தம் இடுகை முதலியன செய்வதே தங்கள் கருத்தாயின செய்தல்

——————————————

1-6-
சப்பாணி –ஸஹ பாணி -ஒரு கையுடன் கூட மற்றொரு கையைச் சேர்த்துக் கொட்டுதல்
சப்பாணி கொட்டி அருள வேணும் -வினை தருவித்துக் கொள்ள வேண்டும் –
தன் மடியில் இருந்தும் சப்பாணி கொட்டுவதைக் காட்டிலும் தமப்பனார் மடியில் இருந்து கொட்டுவதை பார்த்தால் தானே
அவனது சர்வாங்க ஸுந்தர்யங்களையும் கண்ணாரக் கண்டு யூகிக்கலாம்
உங்கள் ஆயர் தம் மன் -ஒருமையில் பன்மை -மன் -பெருமையுடையவனுக்கு ஆகு பெயர்
அம்மை தன் அம்மணி மேல் -தன்மையில் படர்க்கையாக கொண்டு யசோதைக்கு தன் மடியில்-அம்மணி -இடை – இருந்து
சப்பாணி கொட்டுவது அபிமதம் என்றும்
ஆழ்வாருக்கு யசோதை மடியில் இருந்து அவன் சப்பாணி கொட்டுகை அபிமதம் என்றும் கொள்ளலாம்
தூ நிலா முற்றம் -பெயர்ச் சொல் /
வானிலா அம்புலி வினைத் தொகை /
நீ நிலா -இறந்த கால வினை எச்சம் -நிலாவுதல் -விளங்குதல் /
கோ நிலாவா -தலைவராகிய நந்தகோபர் மனம் மகிழும் படி –
பட்டிக் கன்றே -பட்டி மேய்த்து தின்று திரியும் கன்று போலே நெய் பால் தயிர்களைக் களவினால்
தின்று திரிகையே பொழுது போக்காக யுடையவன் -இதுவே அன்றோ கால ஷேபம்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையால் சொல்லுவார் வினை போமே–வேட்கையினால் -என்பதே தளை தட்டாமல் பொருந்தும்

——————————–

1-7-
படு மும்மதப் புனல் சோர -நின்று –உண்டான மூன்று வகையான மத நீர் பெருக்கவும் இருந்து கொண்டு –
கன்னம் இரண்டிலும் -குறி ஒன்றிலும் -மூன்று மத ஸ்தானம்
சிறு பிறை முளை -மூன்றாம் பிறை -என்பர் –
சூழ் பரி வேடமுமாய்ப்-அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டு இருக்கும் பரி வேஷத்தைப் போலே
சந்திரனைச் சுற்றி சில காலங்களில் காணப் படும் ரேகைக்கு பரி வேஷம் -இத்தை ஊர் கோள்-என்றும் சொல்வர்
காம தேவனுக்கு பிதாவுமான இப்பிள்ளை -மன்மதன் அம்சமான ப்ரத்யுமனுக்கு ஜனகன் –காமர் தாதை ஆயினான் -காமன் தாதை என்றும் பாடம்
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை-தாய்மார்கள் மனம் உகக்கவும் சத்ருக்கள்
வருத்தம் அடையவும் தளர் நடை நடந்து அருளியதை
பாராட்டுத்தாய் -ஊட்டுத் தாய் -முலைத் தாய் -கைத்தாய் -செவிலித்தாய் –சிறு தாய் -போன்றவர்கள் உண்டே
ஒன்னார் -ஒன்றார் -திரு உள்ளபடி நடக்காத சத்ருக்கள் –

———————————————
1-8-
கிண் கிணி-சேவடிக் கிண் கிணி -அரை கிண் கிணி -இரண்டையும் காட்டும்
அச்சோ -அதிசயத்தைக் குறிப்பதோர் இடைச் சொல் -அணைத்துக் கொண்டதை நினைதொறும்
பரம ஆனந்தத்தில் மூழ்கி நெஞ்சு உருகிச் சொல் இடிந்து வாய் விட்டு சொல்ல முடியாமல்
அவ் வாச்யர்த்தை ஒரு தரத்துக்கு இரு தரம் அச்சோ அச்சோ என்கிறாள்
ஓட்டந்து -ஓடி வந்து
எழல உற்று மீண்டே இருந்து-திருப் பாடகம் –பாடு -இடம் பெருமை ஓசை நிகண்டு-பெருமை தோற்ற எழுந்து அருளி சேவை
அரவு நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டம்
ஊடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –
கழல் -வீர ஆபரணம் -கழல் கழங்கோடு செருப்புக் காலணி காலின் நாற்பேர் -நிகண்டு
சுழலை-சூழலை-என்பதன் குறுக்கல் -ஆலோசனை
செழுந்தார் விசயன் -பகைவர்களோடு போர் புரியும் போது தும்பைப் பூ மாலையையும் -வெற்றி கொண்ட போது வாகைப் பூ மாலையையும்
சூடும் தமிழர் வழக்கம் படி அர்ஜுனன் சூடுவதால் -விசயன் -விஜயன் -வட சொல்
துரும்பால் கிளறிய சக்கரம் -கருதும் இடம் பொருது–கை நின்ற சக்கரத்தன்-திருமால் விரும்பிய இடங்களிலே
விரும்பிய வடிவம் கொண்டு செல்லும் தன்மையால் திருச் சக்கரமே திருப் பவித்ரத்தின் வடிவுடன் கிளறினமை சொல்லிற்று
நான்மறை முற்றும் மறைந்திடப் பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே-
ஹம்ஸாவதாரம் -சோமுகன் என்னும் அசுரன் கல்ப அந்தத்திலே நான்முகன் உறங்கும் பொழுது கவர்ந்து பிரளய நீருக்குள் செல்ல
ஸ்ரீ மத்ஸ்யாவதாரமாய் திருவவதரித்து மீட்டுக் கொண்டு வந்து சார அசார விவேகம் அறியும் திரு ஹம்ஸாவதாரமாய்
திருவவதரித்து நான்முகனுக்கு உபதேசித்து அருளினான் –
இங்கு நான் மறை என்றது -முன்பு இருந்த தைத்ரியம் -பவ்டியம்-தளவாகராம்-சாமம் -ஆகிய நான்கும்
வேத வியாசரால் பிரிக்கப் பட்ட பின்பே ருக்கு யஜுஸ் அதர்வணம் சாமம் ஆயின

————————————————-

1-9-
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு-என்றது கண்ணபிரானுடைய குறியை சொன்னவாறு
சிறு நீர் துளிகள் இற்று இற்று மீண்டும் வருவதால் சொட்டு சொட்டு என்னத் துளிக்க துளிக்க -என்கிறார்-
ஆயர்கள் ஏறு -ஆகு பெயரால் -செருக்கு நடை காம்பீர்யம் முதலிய குணங்களால் காலை போன்ற வீரன் என்றவாறு –
தனஞ்சயன் -தர்மபுத்ரன் ராஜ ஸூயா யாகம் செய்யக் கோலின போது பல ராஜாக்களை கொன்று மிக்க பொருள்களைக் கொண்டு
வந்தமையாலும்-வெற்றியையே செல்வமாக யுடையவன் என்பதாலும் அர்ஜுனனுக்கு வந்த பெயர்
வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்–பாத்திரம் -இலை-வெண்கல இலை வடிவில் குழந்தை இடுப்பில் கட்டுவது முற்கால வழக்கம் போலும்
அப்படியே ஸ்ரீ வாமணனுக்கும் கட்டினார்கள் என்றவாறு
உத்தரவேதியில் நின்ற -ஆஹவநீய அக்னிக்கு உத்தர திக்கிலே யாக பசுவைக் கட்டுகிற
யூப ஸ்தம்பத்தை நாட்டிய வேதிகை -இங்கு மகா பாலி யாக பூமியைக் காட்டும்
இந்திரன் காவு -நந்தவனத்தில் -மந்தாரம் -பாரி ஜாதம் -சந்தானம் -கல்ப வருஷம் -ஹரி சந்தானம் -என்ற ஐந்து வகை தேவ வ்ருக்ஷங்கள்
இங்கு பாரி ஜாதத்தையே கற்பகக் காவு என்கிறார் -ஒவ் ஒன்றுமே பெரும் சோலையாக இருக்குமே
நிற்பன செய்து பன்மை -ஐந்தையும் கொணர்ந்தான் என்பாரும் உண்டு -நிற்பது செய்து -ஒருமை பாட பேதம் –

———————————————-

2-1-
இதுவும் கோபிமார் பாசுரங்கள் என்பதை மேலே -புரட்டி அந்நாள் எங்கள் பூம் படு கொண்ட அரட்டன் – 2-1 4-என்பதில் இருந்து அறியலாம்
தூதனாய் ஸுலப்யத்தை வெளியிட்டு நம்மில் ஒருவன் என்று உலகோர் கொள்ளும் படி இருப்பவன்
அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் சர்வேஸ்வரத்துவ சிஹ்னங்களைக் காட்டி அருளுகிறார் -அப்பூச்சி காட்டுகிறான் –
அதிரதர் -மஹா ரதர் -சம ரதர் -அர்த்த ரதர் -நான்கு வகை ரதர்கள்
அலவலை-அர்த்தத்தின் உத்கர்ஷத்தையும் ஸ்ரோத்தாவின் நிகர்ஷத்தையும் பாராமல் ரஹஸ்யார்த்தம் அருளுபவர் –
வரம்பு கடந்து பேசுபவன் -அனைத்துக்கும் திரௌபதியினுடைய விரித்த குழல் பார்க்க சஹியாமை ஒன்றே ஹேது –
காளியன் தீய பணம் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி –விஷம் இருப்பதற்கு உரிய இடம் -கோபம் தெரிவிப்பதால் உண்டான தீமை –
திருவடியில் அணிந்த சிலம்பு ஸப்திக்கும்படி குதித்து -இத்தை கண்டு என்ன தீங்கு வருமோ என்று கலங்கினவர் மகிழும் படி நர்த்தன பண்ணி அருளி
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் -ஹதசன்-ஆஸ்ரித விரோதியை ஹதம் பண்ணுபவன்

————————————-

2-2-
வனமுலைகள் சோர்ந்து பாயத்-எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் தெறித்து பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
வனமே-நீரும் வனப்பும் -ஈமமும்-துழாயும் -மிகுதியும் -காடும் -சோலையும் -புற்றும் -எனவே புகழும் என்பர் -நிகண்டு -இங்கு அழகைக் குறிக்கும்
வாசுதேவா-பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து -திரு வாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே -பொருந்தி வந்து
உனக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்தால் இத் திரு வாய்ப்பாடி அடங்கலும் இருள் மூடி விடும் காண்
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7-
முதல் இரண்டு அடியாலே பதி விரதைகளான ஸ்த்ரீகள் மநோ விருத்தி –
பின் ஒன்றரை அடிகளால் செல்வச் சிறுமியர்களான கோபிகளின் மநோ விருத்தி –
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா –வாயிலே முலை இருக்க -பெருமாள் திரு மொழி
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்-ஆடிக் கொண்டு வருகின்ற உன்னை வேறொரு ஆபரணம் வேண்டாத படி
பத்மத்தை திரு நாபியில் யுடையவன் என்று எண்ணினேன்-2-2-10- -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -அன்றோ –
இவன் அழிந்து கிடந்த உலகத்தை திரு நாபி கமலத்தில் யுண்டாக்கி அருளினவன் அன்றோ
ஆகையால் நம்முடைய சத்தையும் தருகைக்காக வருகிறான் என்று இருந்தேன் -என்றுமாம்

————————————

2-3-
எம்பெருமானுடைய துவாதச திரு நாமங்களை அருளிச் செய்த -ரத்நா வலி அலங்காரம் -பால் அமைந்த பதிகம் –
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான்-போய் -மிகுதிக்கு வாசகம் -கூர் வேல் கொடும் தொழிலன் –
புத்திர  ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் மிகவும் நோக்கு யுடையவன் என்றவாறு –
ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -ஸஉ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
சுரி குழலார் -அராள குந்தள-வடமொழி /
குரவைக் கூத்து -ஒவ் ஒரு ஆய்ச்சியர் பக்கத்திலும் ஒவ் ஒரு கண்ணனாக தோன்றி ஆடும் ராஸ க்ரீடை
குரவை என்பது கூறுங்காலைச் செய்வதோர் செய்த காமமும் விறலும் எய்த உரைக்கும் இயல்பிற்று என்ப –
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை –
குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கை கோத்து அந்நிலைக்கு ஒட்ப நின்றாடாலாகும்-
குரவை -கை கோத்து ஆடல் -சாமான்யமாக தமிழன்
குற்றமே அன்றே -2-3-7–பாட பேதம் அந்தாதித் தொடைக்குப் பொருந்தாது -குற்றமே என்னே -சரியான பாடம்
கண்ணைக் குளிரக் கலந்து 2-3-11-சஷூஸ் ப்ரீதி-வகை -கடி கமழ் பூங்குழலார்கள் கண் குளிர்ச்சி யடைய
உன் திருமேனி முழுதும் பொருத்தப் பார்த்து -என்றபடி -அவர்களுக்கு முற்றூட்டாக்க போக்யமானவனே
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய்-2-3-12–இவை ஆணாய்-அத்யாபக பாடம் –
பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –
செய்யுள் அந்தாதி சொல் தொடர் நிலை -இந்த பதிகம் –

——————————-

2-4-
விளையாடு புழுதி -வினைத் தொகை -விளையாடின புழுதி -என்று விரிக்க -உண்ட இளைப்பு போலே
புளிப் பழம்-எண்ணெயைப் போக்குவதாக புளிப்புச் சுவையுடையதாய் இருக்கும் ஒரு வகைப் பழம் -சீயக்காயைக் காட்டும் என்றும் சொல்வர்
எண்ணெய் -எள் + நெய்
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்-என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடையாது என்பதைக் காட்டும் எதிர் மறை இலக்கணை
கஞ்சன் புணர்ப்பினில் வந்த -புணர்ப்பு -இணைப்பு -உடல் -கூடல் தந்திரம் -மாயம் -நிகண்டு
அப்பம் -அபூவம்-என்ற வடமொழி சிதைவு –
பூணித் தொழுவினில் –பூணி -பசு -பூணி பேணும் ஆயனாகி -என்பரே-

———————————–

2-5-
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட-பொதுக்கோ-2-5-4- -விரைவாக சடக்கென -பிதுக்கென்று புறப்பட்டான் சொல் வழக்கு போலே
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன்-முள்ளை முள்ளால் களைவது போலே
ஒரு அசுரனை அசுரனைக் கொண்டே களைந்தான் -கன்று குணிலாக கனி உதிர்த்த மாயவன் -என்பரே மேலும் –

——————————-

2-6-
வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி–வேலிக் கால்களில் கோலை வெட்டி வில்லாகச் செய்து நாண் ஏற்றி என்றவாறு –
வில் ஏந்தி அத்யாபகர் பாடம் -அத்தை விளையாட்டு வில்லாக கையிலே என்திக் கொண்டு என்று கொள்ளலாம்
வேலை அடைத்தார்க்கு கோல் கொண்டு வா -வேலா -என்கிற வடசொல் -வேலை -கடல் கரை -லக்ஷணையால் இங்கு கடலை சொல்லும்
வையம் -பொருள்கள் வைக்கப்படும் இடம் -என்று காரணப் பெயர்

———————————–
2-7-
உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்-உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே –பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி –
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி கச்சு -கஞ்சுகம் வடசொல்லின் சிதைவு
காம்பு துகில்-கரை கட்டின பட்டு சேலை –
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே–மேக கன்று -இல் பொருள் உவமை
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்-2-7-5-எப்பொழுது குழந்தை பிறந்து
வெண்ணெய் விழுங்கப் போகிறது என்று இருந்த அடியேன் –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸுந்தர்யத்தில் ஈடுபட்டு அடியேன் —
அடித்த பின்பு அனுதாபம் கொண்டு அடியேன் என்கிறாள் ஆகவுமாம்
குடக்கூத்து-11-ஆடல் வகைகளில் ஓன்று என்றும் -6 -ஆடல் வகைகளில் ஓன்று என்றும் சொல்வர் –
குடத்தாடல் குன்று எடுத்ததோனாடல் அதனுக் கடைகுப வைந்துறப் பாய்ந்து -அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும்  வல்லாய்-உம்மைத் தொகை -எதிர்த்து தழுவியதாய் தலை கொள்ளவும் வல்லாய் என்றபடி –
அண்டத்து அமரர்கள் சூழ-2-7-9–அண்டம் -பரம பதம் -இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொள்மின் -என்பரே –
கரு முகை -சிறு செண்பகப்பூ
உரை செய்த இம்மாலை-2-7-10–பாலாவின் பால் இறந்த கால வினையால் அணையும் பெயர்-
இரண்டாம் வேற்றுமைத் தொகை -உரை செய்தவற்றை -பட்டர் பிரான் அருளிச் செய்த இம்மாலை –

————————————————
2-8-
முப்போதும் வானவர் ஏத்தும்-2-8-3-இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப் போதும் –
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்-நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே-2-8-5-
திவ்யாத்மா ஸ்வரூபம் ஸ்வயம் பிரகாசமாய் ஞான மாயமாய் இருப்பதால் -ஞானச் சுடரே -என்கிறார்
எல்லாம் போகாது -ஒருமை பன்மை மயக்கம்
கஞ்சன் கறுக்கொண்டு-2-8-6-கறுப்புக் கொண்டு -கருப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள் -கோபம் கொண்டு -என்றபடி
பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்-2-8-7-பேய்ச்சி முலை யுண்ட பின்னை
இப்பிள்ளையை பேசுவது அஞ்சுவனே போலே
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 8- துர்க்கை -ருத்ரன் -சாம்பல் பூசி
எலுமிச்சை மாலை அணிந்து -கபாலம் கொண்டு இராப்பிச்சைக்காரர் என்றுமாம்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9-இன்றும் குழந்தைகளுக்கு
விளக்கு ஏற்று த்ருஷ்ட்டி சுத்திப் போடும் வழக்கம் உண்டே
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2 8-10 –ஓர் அடிக்கே இத்துணை மஹிமை -என்றால்
இப்பதிகம் முழுவதுக்கும் உள்ள பலன் வாசா மகோசரமாகுமே
ஒவ் ஒரு பாட்டிலும் கடை பாதத்தில் உள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ –
பக்தர்களுடைய பாபங்கள் எல்லாம் தீரும் என்றுமாம் –

———————————–
2-9-
அண்ணற்கு அண்ணான்  மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 -தன் நம்பி நம்பியும்
இங்கு வளர்ந்தது அவன் இவை செய்வது அறியான் போலே
வருக வருக வருக -2-9-2–விரைவுப் பொருளில் மும்முறை வந்த அடுக்கு
காகுத்தன் -காகுஸ்தன் -ககுத்-முசுப்பு – -இந்திரனுடைய முசுப்பு மேல் ஏறி யுத்தம் -ஸ்தன்-அதில் இருப்பவன்
ஒரு பொருள் மேல் பல பேர் வரில் இறுதி ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி-நன்னூலின் படியே
இப்பாட்டில்-2-9-4- -கொண்டல் வண்ணன் -கோயில் பிள்ளை -திரு நாரணன் -கண்ணன் ஒரு பொருளே
என்று தெளிய நின்றதனால் பெயர் தோறும் போதராய் என்ற வினை சேரும் –
போதரு -போதர்-2-9-6–என்று குறைந்து உள்ளது -போ -என்னும் வினைப் பகுதி -தா -என்னும் துணை வினையைக்
கொள்ளும் போது வருதல் என்ற பொருளைக் காட்டும் என்பர் –
போதந்து -என்கிற இது- போந்து -என்று மருவி -வந்து என்னும் பொருளைத் தரும் –
கோது குலம் -கௌ தூஹலம் -வடசொல்லின் விகாரம் -எல்லாருடைய கௌதூஹலத்தையும் தன் மேல் உடைய –
எல்லாராலும் விரும்பத் தக்க கல்யாண குணங்களை யுடையவன் -என்ற படி
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்-2-9-7- -ஒவ் ஒரு திருவோணத்துக்கும் செய்ய சக்தி இல்லாமையால்
ஒரு திரு வோனத்துக்கு ஸம்வத்ஸத்ரம் முழுவதுக்கும் சேர்த்து -நோன்புக்கு உறுப்பாக /அக்காரம்-கருப்புக்கட்டி -திரட்டுப் பால் என்னவுமாம்
இதுவும் ஒன்றே என்று சொல்லாமல் இவையும் சிலவே பன்மை -நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் -அவன் தீமை செய்யும் திறமும் –
நான் வந்து முறைப்படும் முறைமையும் எல்லாம் சால அழகியவாய் இருக்கின்றன -என்ற கருத்தைக் காட்டுமே –
தொழுத்தைமார்-2-9-8- -அடிமைப் பெண்கள் -இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாய் இருக்கும்
ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையும் உயிரையும் எழுதிக் கொடுத்து விட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளை பொறுக்க ஒண்ணாது என்று கருத்து
இணை அடி என் தலை மேலனவே-2-9-11–மேலவே-பாட பேதம் சிறக்காது –
விஷ்ணு சித்தர் -பனிக் கடலைப் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ -என்றும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்றும் அருளிச் செய்வார் மேலும்
குனிக்க வல்லார் -மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை-படியே கூத்தாட வல்லவர்கள் –

———————————

2-10-
இன்று முற்றும்-2-10-1- -முற்றுதும் -என்பதன் குறைச் சொல் -தன்மைப் பன்மை வினை முற்று –
உயிரை இழந்து கொண்டே இருக்கிறோம் -என்றவாறு
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த-2-10-2–உய்ய உலகு படைத்துண்ட மணி வயிற்றானாய் -பராத்பரனாய் இருந்து வைத்தே
கர்ம வஸ்யரைப் போலே பிறந்தது மட்டும் அல்லாமல் இப்படி இடைப்பெண்களுடன் இட்டீடு கொண்டு
விளையாடவும் பெறுவதே -இது என்ன ஸுசீல்யம் என்று பலரும் புகழா நிற்பதைக் காட்டும்
பைந்தலை மேல் எழப் பாய்ந்திட -2-10-3- -பைம்பொன் -பசுமை +பொன் போலே பிரிக்கக் கூடாது –
பய் -மெத்தெனவு -அழகு -பாம்பின் படம் -பல பொருள்களைக் குறிக்கும் தனிச் சொல்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7—தனது திருவடியின் மென்மையைப் பாராமல் காடு மோடுகளை அளந்து அருளின
ஆயாசம் தீர நாங்கள் அவற்றை பிடிக்கிறோம் என்றால் அதற்கு இசைந்து திருவடிகளைத் தந்து அருளுதல் ஆகாதோ
தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை -2-10-8—சாப விமோசனம் பெற்று -நற்கதியை
எதிர்பார்த்து இருப்பதால் வாழும் -சிறப்பித்து அருளிச் செய்கிறார்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீ வராஹ திரு வவதாரம் எடுத்து அருளியமை பற்றியே இந்த கல்பத்துக்கு இந்த பெயர் ஆயிற்று –
மங்கை நல்லார்கள்-2-10-10-நல் மங்கைமார்கள் -கண்ணன் மேல் உள்ள ப்ரேமத்தால்

—————————————–
3-1-
வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே–3-1-1-துஞ்ச-தூங்க -பொருளில் இருந்தாலும்
இங்கே -மாண்டு போம் படி -தீர்க்க நித்திரை அன்றோ
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம்
செய்து வைத்த-3-1-2-ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த ஏழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே –பாசுரத்தோடு ஒப்புமை
வேற்று உருவம் செய்து வைப்பதாவது -கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய்
வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்ற வா நான்காய் என் செய்கேன் என் செய்கேனோ -என்றபடி பண்ணுகை –
பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்-3-1-3-இவன் என் பிள்ளை அன்று என்று நான் ஆணை இட்டுச் சொன்னாலும்
மத்தியஸ்தர் கேளார் -என்று கருத்துத் தோன்றும் -மகனே -ஏவகாரம்-பிரிநிலை
கொய்யார் பூந்துகில்-3-1-4- -கொய்தல் நிறைந்த அழகிய புடவைகள் -கொய்சகம் – கொசுவம் உலக வழக்கு
பற்பல பேசுவ -3-1-4—பலவின்பால் படர்க்கை வினை முற்று -பெயர் எச்சப் பொருள் தந்து நிற்றல் -பிறர் பேசுகின்ற என்ற பொருள் –
வினை முற்றே வினை எச்சம் ஆகிலும் குறிப்பும் உற்றீர் எச்சம் ஆகலும் உளவே -என்ற சூத்திரத்தின் படியே –
ஆகலும் -எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச உம்மையே நோக்குக –
கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்-3-1-6-கண் என்று உபமேயத்தை சொல்லாமல் உபமானச் சொல்லால்
லக்ஷணையால்-உருவக உயர்வு நவிற்சி அணி-வடமொழி -ரூபக அதிசய யுக்தி அலங்காரம் –
ஒருத்திக்கு -உருபு மயக்கும் -ஒருத்தியின் மேல் என்றபடி –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3 1-8 -நந்தனுக்கு காளாய் என்றும் ஆளாய் என்றும்-
விபரீத லக்ஷணை –அவரால் நியமிக்கப் படாமல் அன்றோ நீ இத்தீமைகளை செய்து என்னை பழிக்கும் படி-என்றவாறு
கேளார் ஆயர் குலத்தவர் -3-1-8—மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -பெரிய திருமொழி -10-7-1-அலர் தூற்றுதலை கேட்டால்
சஹியார்கள் -அவர்கள் கண் வட்டத்தில் வாழ்ந்து இருப்பது அரிது காண் என்கிறாள்
உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்-2-1-10-உரப்ப-சிஷிக்க -ஊனமுடையன செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்ப கில்லேன் -என்பர் திருமங்கை ஆழ்வாரும்
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்-3-1-11-இதுவரை தந்த நான் இனி அஞ்சுவேன் –
தருவ-எதிர் கால வினை முற்று -வழுவு அமைதி இலக்கணப்படி தந்தேன் என்ற இறந்த காலப் பொருளில் வந்தது
மட்டும் இல்லாமல் -தந்த நாம் அம்மம் தாரேன் -என்று பெயர் எச்சப் பொருளையும் காட்டும் –
ஆகவே இவ் வினை முற்று -முற்று எச்சம் என்றற்பாற்று-

———————————

3-2-
கன் மணி நின்றதிர் கானத ரிடைக் கன்றின் பின்னே-3-2-3-கல் -லக்ஷணையால் மலையை குறிக்கும் –
பிரதி த்வனி -அதிர்தலை சொன்னவாறு-
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 – எத்தனை தீம்புகள் செய்து பழி வர விட்டான் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்குமே போலே –
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -என்றவள் தானே இப்பொழுது பிரிவாற்றாமையால்
இவ்வாறு அருளிச் செய்கிறாள் பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்-3-2-8-உன்னை என் மகனே என்பர் நின்றோர் –
என்பதையே கொண்டு இவ்வாறு அருளிச் செய்கிறாள்
குடையும் செருப்பும் கொடாதே-3-2-9-மேல் திரு மொழியில் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே
போனாய் மாலே -3-3-4—என்பதாலே -இங்கு கொடாதே-என்பதற்கு -அவன் வேண்டா என்று வெறுக்கச் செய்தேயும்
பலாத்காரமாக கட்டாயப்படுத்தி கொடாமல் என்று விரித்து பொருள் கொள்ள வேண்டும்
என்றும் எனக்கு இனியானை-3-2-10–ஆணாட விட்டிட்டு இருக்குமே –

————————————-

3-3-
சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ-3-3-1-திரியை ஏரியாமே காதுக்கு இடுவன்-என்றபடி
இரண்டு காதுகளிலும் அவள் அத்திரியை இட்டு அனுப்ப அவன் காட்டிலே ஒரு காதில் திரியை களைந்து
செங்காந்தள் பூவை அணிந்து கொண்டு வந்தமை அறிகை –
கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்-3-3-2-கன்னி ஸ்திரம் என்றபடி
கன்னி -பெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே-என்றான் மண்டல புருஷன்
வாழ்வு உகந்து உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்-3-3-2-ஸ்வ ப்ரயோஜனத்தை கணிசித்தேனே ஒழிய
உன் பிரயோஜனத்தை விரும்பிற்றிலேனே-என்று உள் வெதும்பி அருளிச் செய்கிறாள் –
உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 -சிவக்கப் பெற்றாய் என்றபடி –
சினை வினை சினை யொடும் முதலொடும் செறியும் -சூத்ரம்
சிறுப் பத்திரமும்-3-3-5-சிறிய கத்தி -பத்திரம் இலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம் -நிகண்டு –
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த அசுரர் தம்மை-3-3-7-ஒருவனை -பால் வழுவமைதி -அசுரன் தன்னை -பாட பேதம் சிறந்ததே –
உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூலார்
ஐயர் இவர் அல்லால் நீராம் இது செய்தார் -ஐயர் நீராம் ஒருமைப்பால் பன்மைப் பாலாக –
தீரா வெகுளியளாய்-இதற்க்கு ஆதி கோபம் -என்றும் உண்டே
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்-3-3-9-முளையட்டுதல் -திருக் கல்யாண
அங்கமாக நவ தானியங்களைக் கொண்டு பாலிகையை சொன்னவாறு –

——————————

3-4
முதல் பாட்டு தாமான தன்மையில் ஆழ்வார் அருளிச் செய்கிறார் -கலாபம் தழையே தொங்கல் என்று இவை
கலாபப் பீலியில் கட்டிய கவிகை -நிகண்டு -இங்கு அவாந்தர பேதம் -தட்டும் தாம்பாளமும் போலே
பீலி -விசிறிக்கும் திருச் சின்னத்துக்கு பேர்
அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 4-3 -கொண்டு -என்றும் பாட பேதம் –
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி -திருவாய் மொழி போலே
இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 -என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் என்றபடி –
அடி உடைமை சொல்லும் போது –ஒரு கோத்ர சம்பந்தம் சொல்ல வேணும் இறே-மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்-3-4-5-
கோத்ர சம்பந்தம் பர்வத சம்பந்தம் சிலேடை
வளை கோல் வீசா -3-4-6- வீச -பாட பேதம் பொருந்தாது
சாலப் பல் நிரைப் பின்னே-3-4-7-சால உறு தவ நனி கூர் கழி மிகல்-நன்னூல் -மிகுதியைச் சொல்லும்
உரிச் சொல்லுடன் அணைந்த பல் -பசுக்கூட்டங்களின் எண்ணிறந்தமை காட்டும் –
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்-3-4-8-இல் -என்று உள்ளாய் -அயம் என்ப நீர் தடாகம் -நிகண்டுவின் படி ஜலமாய் –
திருப் பவளத்துக்கு உட்பட்ட ரசம் -சிந்தூரப்பொடியை அம்ருத ரசத்தினால் நனைத்து குழைத்து திரு நாமம் சாத்தி -என்றபடி
அன்றிக்கே இலயம் தன்னால் வரு மாயப்பிள்ளை -என்று கொண்டு –
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இரு பேர் என்ப -நிகண்டு -கூத்தாடிக் கொண்டு வரும் என்றபொருளில் –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை-3-4-9-வனம் -அழகு -என்றும் வன மல்லிகை -காட்டு மல்லிகை –
மௌவல் -மல்லிகைக்கும் முல்லைக்கும் மாலதிக்கும் பெயர் –

——————————–

3-5-
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை -என்பதால் சோற்றுப் பருப்பதம் -3-5-1-சோறாகிய பர்வதம்
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 – ஸ்வாபதேசம் –வட்டம் -தனது வர்ணாஸ்ரம
விருத்தியில் விசாலமான ஞானத்தையும் -அதனை உபதேசித்து அருளின ஆச்சார்யர் பக்கல் க்ருதஞ்ஞதையும்
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையான் ஒருவனை ஆச்சார்யரானவர் வாசுதேவன் வலையுளே-என்றபடி
எம்பெருமான் வலையுள்ளே அகப்படுத்தி அவனுக்கு சகல வேத ஸாஸ்த்ர தாத்பர்யமான பாலோடு அமுதன்ன
திருவாயமொழியை உரைத்து வளர்க்கும் தன்மையைச் சொல்லிற்று –
இப்படிப்பட்ட மஹானுபவர்கள் உறையும் இடம் அம்மலையின் சிறப்பு என்றவாறு
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன்-3-5-2-விபரீத லக்ஷணை -அவன் நினைவாலே யாகவுமாம்
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து  பொரும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே -3 -5 2- ஸ்வாபதேசம் -தன்னைப் பற்றிக் கிடக்கும்
சிஷ்யனுடைய விரஹத்தைப் பொறுக்க மாட்டாத ஆச்சார்யனானவன் -அச் சிஷ்யனை தொடர்ந்து முடிப்பதாக வருகின்ற
வாசனா ரூப கர்மங்களுக்கு அஞ்சி அவனைத் தன் திருவடிகளுக்கு அந்தரங்கன் ஆக்கிக் கொண்டு
அக்கர்ம வாசனையை நீக்கி முடிக்கும் தன்மையைச் சொல்லிற்று ஆகிறது
தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே – 3-5 3- ஸ்வாபதேசம் -பெரும் கொடையாளனாய் இருக்கும் ஒரு ஆச்சார்யர்
தன்னை சரணமாகப் பற்றி இருக்கும் சிஷ்யர்கள் விஷயாந்தர பரர்களாக அதிசங்கித்து
அத்தை விலக்க அவர்களுக்கு பிரணவத்தின் பொருளை பறக்க உபதேசித்து அருளுகிற படியைச் சொல்லுகிறது
பிரணவத்தை சிலையாக உருவகம் -சேஷ பூத ஞானம் பிறக்கவே விஷயாந்தர பிரவணம் ஒழியுமே
கானக்களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-5 – ஸ்வாபதேசம்-சம்சாரம் ஆகிற மருகாந்த்ரத்திலே களித்துத் திரிகிற ஆத்மா –
தனது மமகாராம் அழியப் பெற்று -மத மாத்சர்யங்களும் மழுங்கப் பெற்று -சத்வம் தலை எடுத்து அஞ்சலி பண்ணிக் கொண்டு ப்ரக்ருதி ஆத்ம
விவேகம் முதலிய ஞானங்களை எல்லாம் பெற விரும்பி அஞ்சலி ஹஸ்தனாய் இருக்கும் படியை குறிக்கும் -இது மகாரார்த்தம்
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6- -குப்பாயம் -சட்டை –
மெய்ப்பை-சஞ்சளி -கஞ்சுகம் -வாரணம் -குப்பாயம் அங்கி சட்டை யாகும் -நிகண்டு -இங்கு சந்தர்ப்பம் நோக்கி முத்துச் சட்டை
அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும்
கொற்றக் குடையே -3 5-7 – குழந்தைகளை ஓக்கலையில் வைத்து கதை சொல்லி தூங்கப் பண்ணும் மாதாவை போலே -இங்கு ஸ்வாப தேசம் –
கபடச் செயல்களுக்கு ஆகரமான இந்திரியங்களின் திறலை வென்ற பாகவதர்கள் ஞான அனுஷ்டானங்களை தமது கைக்கு அடங்கின
சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு ஞானம் வளரச் செய்யும் மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாகும்
தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலை வாய்ச்சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே -3 5-8 – ஸ்வாப தேசம்-காம க்ரோதம் மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்
சம்சாரிகள் நாத முனிகள் போல்வாருடைய திரு ஓலக்கத்திலே புகுந்து வருத்தம் தோற்ற நிற்க -அவர்கள் பரம காருண்யத்தால் உஜ்ஜீவன
உபாயம் தெளிவாக உபதேசித்து அருள அதனால் திருந்து உலக உணர்வுகளில் உறக்கமுற்று பேரின்பம் நுகருமாற்றை பெறுவித்தவாறாகும்
தம்முடைக் குட்டங்களைக் கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- -ஸ்வாப தேசம்-
சதாச்சார்யர்கள் தங்கள் அபிமானித்த சிஷ்யர்களை அன்புடன் அணைத்துக் கொண்டு நல் வழி காட்டுகைக்காக வேத சாகைகளை
ஓதுவித்து அவற்றிலே புத்தி சஞ்சாரம் பண்ணிக் கொண்டு இருக்கும் படி ஞான உபதேசம் பண்ணும் படியை சொல்லிற்றாம்
முசு -குரங்குகளின் ஒரு வகைச்சாத்தி -காருகம் யூகம் கருங்குரங்காகும்–ஓரியும் கலையும் கடுவனும் முசுவே -நிகண்டு
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல-3-5-10-ஸ்வாப தேசம்-வேதாந்த நிஷ்டர்களான
ஆச்சார்யர்கள் தம் அடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரசமான அர்த்தங்களை உபதேசித்து தங்கள் சுத்த ஸ்வரூபர்களாய் இருக்கும் படி சொல்லிற்று

———————————————

3-6-
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள்-3-6-1-
உப்புக் கடல் -கருப்புக் கடல் -கள்ளுக் கடல் -நெய்க் கடல் -தயிர்க் கடல் -பாற் கடல் -நீர் கடல் –
ஜம்பூ த்வீபம் -ப்லஷ த்வீபம் – சால்மல த்வீபம் -குச த்வீபம் -கிரௌஞ்ச த்வீபம் -சாக த்வீபம் -புஷ்கர த்வீபம்
ஜம்பூ த்வீபம் நடுவில் உள்ளது -அதன் நடுவில் மேரு பொன் மலை உள்ளது -அதை சுற்றி உள்ள இளாவ்ருத வருஷத்தில்
ஸ்ருஷ்டிக்கப்பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு மரங்கள் –
அவற்றில் ஓன்று நாவல் மரம் -ஜம்பூ – நாவல் – அதனாலே இதற்க்கு பெயர் -இத்தீவில் நவம கண்டம் பாரத வர்ஷத்தில் தான்
தான் கர்ம அனுஷ்டானம் -மற்ற தீவுகள் பலம் அனுபவிக்க தான் -அதனால் சிறப்பு
இட அணரை இடத்தோளோடு சாய்த்து-3-6-2-அணர் -தாடி -ஆகு பெயரால் மோவாயைக் குறிக்கும்
சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3 6-3-இங்கு சென்னி -நெற்றியை சொன்னவாறு –
மத்தகம் இலாடம் -முண்டகம் -நுதல் -குலம் -நெற்றி -பாலம் -நிகண்டு
கானகம் படி-3-6-4- -காட்டுக்குள்ளே இயற்கையாக-பிருந்தாவனத்தில் –காடு நிலத்திலே என்றுமாம்
வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து -3-6-7-குழலூதுவது ப்ருந்தாவனமாய் இருக்க திருவாய்ப்பாடியில் புகுந்தது –
கீழ்க் கச்சியில் பேர் அருளாளன் கருட சேவை திருநாள் கூட்டத்து திரளால் மேல் கச்சி அளவும் நிற்குமா போலே –
பஞ்ச லக்ஷம் கோபிமார்கள் அணுக்கர்கள் சூழ்ந்த இடம் அன்றோ
கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே -3 6-8 -கவிழ்ந்து இறங்கி-ஒரு பொருள் பன் மொழி -நன்றாகத் தொங்க விட்டுக் கொண்டு என்றபடி
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி  கோவிந்தனுடைய-3-6-1-மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ போலே

————————————–

3-7-
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கம்பர்
வராஹ வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக வாதரம் செய்வன் -திருவரங்கத்து மாலை
பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுரு முலையினாள்-சீவக சிந்தாமணி
கண்ணனுக்கே ஆமது காமம் -அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் ராமானுஜன் இந்த மண் மிசையே -அமுதனார்
சம்பந்த ஞான பிரஞ்ஞா அவஸ்தை -தோழி-பிராணவார்த்தம் / உபாய அத்யாவசிய பிரஞ்ஞா அவஸ்தை தாயார் -நமஸார்த்தம் /
பேற்றுக்கு த்வரை உந்த தாய் -நாராயணார்த்தம்
சம்பந்த உபாய பலன்களில்-உணர்த்து துணிவு பதற்றம் -ஆகிற பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் -என்று பெயர் -நாயனார்
ஸ்வாபதேசம் -சரீரம் பிரகிருதி சம்பந்தத்தால் சுத்த சத்வமாக பெறவில்லை -அவனுடைய ஸ்வரூபாதிகளை அடைவு படச் சொல்ல வல்லமை இல்லை –
மடிதற்றுத் தான் முந்துறும் -என்ற திருக்குறள் படி ஆடையை அரையில் இறுக உடுத்துக் கொண்டு முந்துற்றுக் கிளம்பும் முயற்சி இல்லை
ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானுக்கு அல்லாது செல்லாமை இப்பாட்டில் வெளியாம் –
3-7-2-
எம்பெருமானை வசப்படுத்த ஸ்தோத்ரங்களையும் பிரணாமாதிகளும் பூர்ணமாக பெறாது இருக்கும் இளைமையாய் இருக்கச் செய்தேயும்
எம்பெருமானை ஸம்ஸ்லேஷிக்கப் பெற்றுக் கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் -என்றால் போலே ஸ்ரீ ஸூக் திகளால்
பகவத் விஷயத்தில் உள்ள அபி நிவேசத்தை வெளிப்படுத்திய ஆழ்வார்படியை அன்பர் கூறுதல் –
3-7-3-
சிற்றில் -ஹேயமான தேகத்தையும் வாஸஸ் ஸ்தானமான வீடு முதலியவற்றையும் சொல்லும்
ஆழ்வார் ப்ராக்ருதத்தில் இருந்தும் விஷயாந்தரங்களில் நெஞ்சை செலுத்தாமல் எம்பெருமான் திவ்யாயுத அம்சமான பாகவதர்களையே
தியானித்து இருப்பர் என்கிறது
முலை -பக்தி -முற்றும் போந்தில -பரம பக்தி யாக பரிணமித்தது இல்லை என்றாலும் பகவத் விஷயத்தில்
இவ்வளவு அவகாஹம் வாய்ந்தது எங்கனே என்ற அதி சங்கையை சொன்னவாறு
பாலிகை -3-7-4–என்னாமல் பாலகன் என்றது -உகப்பினாலான பால் வழுவமைதி –
உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல்
3-7-5-
ஸ்வா பதேசம் -பகவத் விஷயத்தில் பேரவாக் கொண்ட இவ்வாழ்வாரை பகவத் சந்நிதியில் சேர்த்தமையை அன்பார் கூறுவது இதன் ஸ்வா பதேசம்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து -இருந்தாலும் த்வரை மிக்கு பதறி நேராக எம்பெருமானைப் பற்ற
ஆழ்வார் பிரவ்ருத்தி சைலிகளைக் கண்ட அன்பார் இது பிரபன்ன சந்தானத்துக்கு ஸ்வரூப விருத்தம் என்று அறுதியிட்டு
பாகவத புருஷகார புரஸ் ஸரமாக இவரை அங்கு சேர்க்கலுற்ற படியை சொல்லிற்று
மங்கைமீர் –இப்படி தாய் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெறாத பூர்த்தி உள்ளவர்களே
பாடகம் பட்டம் -3-7-5-ஸ்வா பதேசம்-சேஷத்வ ஞானாதிகளாகிய ஆத்ம பாஷாணங்கள் -ஆச்சார்ய நிஷ்டை மாத்திரத்திலே
பர்யாப்தி பிறவாமல் உகந்து அருளின தேசங்களுக்கு சென்று ஆழ்ந்தமை சொல்லிற்று
3-7-7-ஸ்வாபதேசம் க்ரம பிராப்தி பற்றி பதறி பகவத் சந்நிதி போய்ப் புகுந்து அவன் திரு நாமங்களை அனுசந்தித்து பிச்சேறின படியை அன்பார் கூறுதல்
3-7-8-காறை பூணும் -பகவத் பிரணாமம் ஆகிற ஆத்ம அலங்காரம் / கண்ணாடி காணும் -ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பண்ணும் படி
வளை குலுக்கும் -கலை வளை அஹம் மமக்ருதிகள் -சாத்விக அஹங்காரம் உடைமை /கூறை யுடுக்கும் -பகவத் விஷயத்தில் பிரவ்ருத்தி
அயர்க்கும் -இவை சாதனா அனுஷ்டானமாக தலைக் கட்டிவிடுமோ என்ற கலக்கம் /கொவ்வைச் செவ்வாய் திருத்தும் -வாசிக கைங்கர்யங்கள் திருந்தின படி
ஓவாதே நமோ நாரணா என்பவள்
3-7-9-அந்தணர் மாடு -வேதம் ஓதுவித்து ஆழ்வாரை நம் பக்கல் இருத்துவோம் என்றால் இவர் பர்யாப்தர் ஆகாமல் பகவத் விஷயம்
அளவும் போய் அந்வயிக்க வேணும் என்று பதறுவதனால் இவரை அங்கெ சேர்த்து விட வேணும் என்று அறுதியிட்ட அன்பர்கள் பாசுரம்

—————————————

3-8-
காவியங் கண்ணி என்னில் கடி மலர்ப் பாவை ஒப்பாள் -புகழால் வளர்த்தேன்-3-8-4- -புகழ் உண்டாம்படி வளர்த்தேன் என்றவாறு
மாமியார் சீராட்டுதலை நான்காம் பாட்டில் சங்கித்து -மாமனார் சீராட்டுதலை ஐந்தாம் பாட்டில் சங்கிக்கிறார் –
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம் அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய மறையார் மன்றல்
எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப் புலமையோர் புணர்ப்புப் பொருண்மை என்மனார் புலமையோரே -விவாஹம் எட்டு வகை
யாழோர் கூட்டம் -காந்தர்வ விவாஹம் -தனி இடத்தில் இருவரும் கூடுகை -ஸாஸ்த்ர மரியாதை இல்லாமல் தனக்கு வேண்டியபடி செய்தல்-3-8-6-
பண்டப் பழிப்புகள் சொல்லி-3-8-7–பண்டம் பதார்த்தங்களில் குறை சொல்லி -உபமேய அர்த்தம் தொக்கி நிற்கிறது –
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ-3-8-8-அந்தோ -மகிழ்ச்சி -இரக்கம் -துன்பம்-நிகண்டு – -இங்கு இரக்கத்தால்

————————————

3-9-
பாடிப் பற-பாசுரங்கள் தோறும் /-உந்தி பற இறுதிப் பாட்டில் / உந்தி பேதையார் விரும்பியாடல் -உந்தியே மகளிர் கூடி விளையாடல் -நிகண்டு
உந்தி பற என்பது பல்வரிக் கூத்துள் ஓன்று -சினத்துப் பிழூக்கை -வெண்பா சிலப்பதிகாரத்தில் உண்டு
கொங்கை குலுங்க நின்று உந்தி பற -மாணிக்கவாசகர் -திருவாசகம் –
சோபனம் அடித்தல் கும்மி அடித்தல் போன்ற லீலா ரஸ விளையாட்டு -பறவைகளைப் போலே ஆகாயத்தில் குதித்து பறந்து விளையாடுவது –
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட-என் நாதன் வன்மையை பாடிப் பற-3-9-1-வேத மயன்-பெயர் யஜுர் சாமமுமாம் பறந்தே தமது
அடியார்களுக்குள்ள பாவங்கள் பாற்றி யருள் சுரந்தே அளிக்கும் அரங்கன் தம் ஊர்திச் சுவணனுக்கே -திருவரங்கத்து மாலை -88-
தாடகை -ஸூ கேது யக்ஷன் மகள் -ஸூந்தன் என்பவன் மனைவி -அகஸ்திய முனி சாபத்தால் இராக்கதத் தன்மை அடைந்தாள்
முது பெண்-3-9-2- -தீமை செய்வதில் பழையவள்
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு-3-9-3- விதர்ப்ப தேசம் -குண்டின பட்டணம் -பீஷ்மகன் அரசனுக்கு-ருக்மன் முதலிய -ஐந்து பிள்ளைகள் –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி – உருப்பணி நங்கை தன்னை மீட்ப்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உறுப்பினை –மேலே -4- 3-திருமொழியில் அருளிச் செய்கிறார்
நாலூர் பிள்ளை நிர்வாகம் -மாற்றுத் தாய் ஸூ மித்ரா தேவி-மற்றைத்தாய்-மாறு ஒப்பாய் பெற்ற தாயும் போலி/
கூற்றுத் தாய் கைகேயி-கொடுமையில் எமனை ஒப்பாள்
திருவாய்மொழிப் பிள்ளை நிர்வாகம் -மாற்றுத் தாய் கைகேயி–பெருமாள் கௌசல்யார் தேவி நினைவாலே –
பரதன் நினைவுக்கு மேல் பொருந்தாமையாலும் மாற்றாம் தாய் —
கூற்றுத் தாய் ஸூ மித்ரா தேவி -கூறு பட்ட ஹவிஸ் ஸ்வீ கரித்ததால் –
ஒரு தாய் இருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில் ஒரு தாய் சொலச் சென்ற தென்னரங்கா -திருவரங்கத்து மாலை
காளியன் ஸ்தாவர ஜங்கமங்களையும் அழிக்கப் புகுந்தவனாகையாலே மீண்டும் மீண்டும்-6/7-பாசுரங்களில் அந்த விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்
பிரம்மா புத்திரர் -புலஸ்திய முனிவர் குமாரர் விச்வரஸ் -இரண்டாம் மனைவி கேகேசி வயிற்றில் ராவண கும்ப கர்ணன் சூர்ப்பனகை விபீஷணன்
இவளை காலகை என்பவள் மக்கள் காலகேயர் -ஒருவன் வித்யுஜ்ஜிஹ்வன் என்பவனுக்கு கல்யாணம்
அவனை ராவணனே கொல்ல-சூர்பனகைக்கு ஜன ஸ்தானம் இடத்தில் தன் சித்தி பிள்ளை கரனையும் வைத்தான் –
தபோ வலிமையால் வேண்டிய வடிவு எடுக்கும் சக்தி கொண்டவள் –

——————————–

4-1-
தொல்லை வடிவு கொண்ட  மாயக் குழவி-4-1-4-சுருக்கிக் கொண்ட -என்றபடி -மேல் குழவி என்பதால் –
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1 8- படைக்கு கள்ளத் துணையாகி –
உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம்–என்று இருந்த அர்ஜுனனை போரில் மூட்டி –
குரக்கு வெல் கொடி -4-1-7—பெருமாளுக்கு பெரிய திருவடி த்வஜமானது போலே அர்ஜுனனுக்கு சிறிய திருவடி த்வஜமாயினான்-  
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை -4-1-8-மாயிரு ஞாயிறு பாரதப் போரில் மறைய
அங்கண் பாயிருள் நீ தந்தது என்ன கண் மாயம் -திருவரங்கத்து மலை-
ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –
இந்த சம்ச்லேஷத்தால் நரகாசுரன் பிறந்தான் —
அசமயத்தில் புணர்ந்து பிறந்த படியால் அஸூரத தன்மை பூண்டவன் ஆயினான் என்பர் –
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை-4-1-10-நுனியில் கதிர் வாங்கித் தழைத்து இருக்கும் படிக்கு குதிரை முகம் ஒப்புமை –
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணங்கும்

—————————————–

4-2-
தத் விஷயத்தைக் காட்டிலும் ததீய விஷயமே ப்ராப்யத்துக்கு எல்லை நிலம் என்று திருமலையை பஹு விதமாக அனுபவிக்கிறார் -இதில் –
கிளர் ஒளி இளமையில் நம்மாழ்வார் -முந்துற உரைக்கேன் -திருமொழியில் திருமங்கள் ஆழ்வார்களைப் போலே –
சிலம்பாறு -திரிவிக்ரமன் திருவடி சிலம்பில் இருந்து தோன்றியது -மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஓ என்று கேட்டு
குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையாலும் சிலம்பாறு -சிலம்பு -குன்றுக்கும் பெயர் –
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 2-2 –
புனத்தினை கிள்ளி புதுவவி காட்டுகிற குறவரும்-உன் பொன்னடி வாழ்க -துக்கச் சுழலை திருமொழி -என்று
மங்களா சாசனம் பண்ணும் படி இறே நிலத்தின் மிதி தான் இருப்பது
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் அஞ்ச அன்று ஒரு வாரணம் உயிர் உண்டவன்-4-2-5-ஆனை காத்து ஓர் ஆனை கொன்றவன் –
ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றவன் -அர்ஜுனன் -சிஸூ பாலன் /
ஒரு ராக்ஷஸனைக் காத்து ஒரு ராக்ஷஸனைக் கொன்றவன் -விபீஷணன் -ராவணன் /
ஒரு குரங்கைக் காத்து ஒரு குரங்கைக் கொன்றவன் -சுக்ரீவன் -வாலி /
ஒரு பெண்ணைக் காத்து ஒரு பெண்ணைக் கொன்றவன் -அஹல்யை தாடகை /
ஒரு அம்மானைக் காத்து ஒரு அம்மானைக் கொன்றவன் -கும்பர் கம்சன் /
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்ல சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8- திருப்பாண் ஆழ்வார் தம்பிரான்
போல்வாரை வண்டு -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை – பகவத் விஷயம் தவிர வேறே ஒன்றை விரும்பாத
ஷட் பத த்வய நிஷ்டர்கள் சிற்றம் சிறு காலையில் திரு நாமங்களை அனுசந்தித்திக் கொண்டு திருவடி பணிவதைச் சொல்லிற்று –
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 9-
சிந்தூரச் செம்பொடி போல் திரு மால் இரும் சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டன -என்றார் இறே இவர் திரு மகளாரும்
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-
திருப்பல்லாண்டு -மங்களா சாசனம் இவர் விரதம் -நாமும் அனுசந்திந்ததா கண்ணன் கழல் இணை பெறுவது திண்ணம் அன்றோ –

—————————–
4-3
தனிக் காளை -4-3-4– காளையே எருது பாலைக்கு அதிபன் நல் விளையோன் பெறலாம் -நிகண்டு
பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை-4-3-5-
நாழ்-குற்றம் -நான் என்று அகங்கரிக்கையும்-பொல்லாங்குக்கும் -நறு வட்டாணித் தனத்துக்கும் -பேர்
நாமா மிகவுடையோம் நாழ் -என்றும் -நாழால் அமர முயன்ற வல்லரக்கன் -என்றும் -அஃதே கொண்டு அன்னை நாழ் இவளோ என்னும் -என்றும் உண்டே –
தொல்லை மால் இரும் சோலை அதுவே -4-3-6-திரு அனந்த் ஆழ்வான்  திருமலை ஆழ்வாராய் வந்து நிற்கையாலே -அநாதியாய் கொண்டு -பழையதாய்
வாய்க் கோட்டம் -4-3-8—வாய்க் கோணல் -ந நமேயம் -என்றத்தைச் சொல்லுகிறது
அடி இறை என்று ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே -4 3-9 –
ஸ்ரீ பாத காணிக்கை -அடி யிறை -பாட பேதம் / ஓட்டரும் ஓட்டம் தரும் விகாரம்
நாலிரு மூர்த்தி தன்னை -4-3-10–அஷ்டாக்ஷர ஸ்வரூபி – நால் வேதக் கடல் அமுது -திரு மந்த்ரத்தை சொல்லி அவனைச் சொல்லும்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

—————————

4-4-
திருமங்கை ஆழ்வாரும் முந்துற உரைக்கேன் -மூவரில் முன் முதல்வன் -இரண்டு திருமொழிகளால் திருமாலிரும் சோலையை அனுபவித்து
எங்கள் எம்மிறை திருமொழியால் திருக் கோஷ்டியூரை அனுபவித்தால் போலே இவரும் இங்கு இதில் திருக் கோஷ்டியூரை அனுபவிக்கிறார் –
வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும் திண்ணை சூழ் திருக் கோட்டியூர்-4-4-3-மகர விரித்தல் செய்யுள் ஓசை நோக்கியது –
இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9- இரட்டிப்பு -பாகவதர்களைத் தனித் தனியே அனுசந்திக்கை –
காண்பது கிட்டே இருப்பது கூட போத யந்த பரஸ்பம் -ஆசைகள் பலவும் உண்டே –

———————–

4-5-
துணையும் சார்வுமாகுவார் போலே சுற்றத்தவர் பிறரும் அணையவந்த ஆக்கம் யுண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
அரவ தண்டத்தில்-4-5-3- -ஐந்தாம் வேற்றுமை உருபு -ஏழாம் வேற்றுமை உறுப்பு அல்ல -எம படர்களால் வரும் துன்பத்தின் நின்றும் என்றவாறு
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளே வாங்கி  வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆம் – 4-5-4-
பிரணவத்தை -முறை வழுவாமல் இறைஞ்சினால் களிப்பும் கவர்வும் அற்று பிறப்பி பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியாய் அடியார் குழாங்கள் உடன்  கூட பெறலாமே -ஓன்று இரண்டு மாத்திரை உச்சாரண பலம் அல்பம் அஸ்திரம் –
மூன்று மாத்திரை உச்சாரணமே மோக்ஷ பலம் -ஈஷதி கர்ம அதிகரணம் மேவுதீர்-சர்வாதிகாரம் -ஸ்த்ரீ ஸூத்ரர்களுக்கும் அதிகாரம் உண்டு
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி-4-5-6-அகன்று வினை எச்சம் பிரயோகிக்காமல் -அகற்றி -என்றது -தன் வினையில் வந்த பிறவினை –
சேவதக்குவார் போலப் புகுந்து-4-5-7-சே -அதக்குவார் போலே /
வானகத்து மன்றாடிகள் தாமே -4-5-7–வானகம் மன்றத்து ஆடிகள் -நித்ய ஸூரி சபையில் சஞ்சரிக்கப் பெறுவார்கள்
குறிப்பிடம்  கடந்து உய்யலுமாமே-4 4-8 -பாப பலன்களை அனுபவிப்பதற்கு என்று குறிக்கப் பட்ட -யமலோகம் -கடத்தல் -அங்குச் செல்லாது ஒழிகை –

——————————–

4-6-
நீங்கள் தேனித் திருமினோ -4-6-1-தேறித் திரிமினோ-அத்யாபக பாட பேதம் -மகிழ்ந்து இருங்கோள்-என்றவாறு –
நானுடை நாரணன்-4-6-4-என்னுடை என்ன வேண்டும் இடத்து -ஊனுடைச் சுவர் வைத்து —-நானுடைத் தவத்தால் -திருமங்கை ஆழ்வாரும் –
குழியில் வீழ்ந்து வழுக்காதே-4-6-7-குழி -நரகக் குழி –
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்-4-6-8-உப்பும் இல்லை பப்பும் இல்லை என்பாரைப் போலே-
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ-4-6-9-ஆனந்தம் தலை மண்டி தலைகீழாக ஆடுவது -மொய்ம் மா பூம் பொழில் பொய்கையில் போலே

——————————

4-7-
திருக் கண்டங்கடி நகர் -திருக் கண்டம் -திவ்ய தேசப் பெயர் -மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுதம் அளித்த அத்தா
எனக்கு உன் அடிப் போதில் புத்தமுதைக் கங்கை நரை சேரும் கண்டத்தாய் புண்டரீக மங்கைக்கு அரசே வழங்கு -ஐயங்கார் –
கமை உடை பெருமை கங்கையின் கரைமேல் -4-7-4-கமை -க்ஷமை-வடமொழி மருவி -கமை
பெருமை யுடை என்று கொண்டு ஷமிக்கையாகிற பெருமை
படைக்கலமுடைய-4-7-5- -படை கலம் யுடைய -திரு ஆபரணங்களையும் திரு ஆயுதங்களையும் யுடைய –

—————————–

4-8-
மைத்துனன் மார்  உரு மகத்து வீழாமே-4-8-3-மகம் யாகம் -நரமேத யாகம் -மநுஷ்யர்களை பலி-
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவன் -அன்றோ —
குருமுகமாய் காத்தான் -ஸ்ரீ கீதா உபநிஷத் உபதேச முகமாக –
பொரு முகமாய்-குவளையும் கமலமும் எம்பெருமான் திரு நிறத்தோடும் திரு முகத்தோடும் போர் செய்யப் புகுவது போலே அலரா நிற்கும்
கண்டகரைக் களைந்தானூர்–4-8-4–ரிஷிகளுக்கு முன்பு குடி இருந்த முள் போன்ற ஜனஸ்தான வாசிகள் -ராக்ஷஸர்கள்
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6- யாழ் இன் இசை என்றும் யாழின் இசை என்றும் –
ஆளம் வைக்கும் -ஆளத்தி வைக்கும் -அநஷர ரசம் -ஆலாபனை –
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு -4-8-7-
தழுவ முடியாத ஸ்தூல சந்தன மரங்கள்-சாத்துப் பிடி சமர்ப்பிக்கிறாள் திருக் காவேரி தாயார்-
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு  இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 8-10 –
தீதிலா ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்தில் இப் பத்தும் ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே -நம்மாழ்வார்

—————————

4-9-
திருமங்கை மலர் கண்ணும் -4-9-1-மலர்க் கண் பாடம் மறுக்கப்படும் -மலர் போன்ற கண் இல்லை -மலர்ந்த கண் என்றபடி
மலர் கண் வைத்த என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே   – 4-9 2-
இங்கும் பெரிய பெருமாளாது விகசிதமான திருக் கண்கள்
கருளுடைய பொழில் மருது-4-9-3- -கருள் -கருப்பு -கறுப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள் –
நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புந்த்ரர் சாபத்தால் மருத மரங்கள்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி-தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல் /
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்றாரை -பெரிய திரு மடல் /
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து-4-9-6-
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிட்ரும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -ஸ்ரீ வசன பூஷணம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் -கலியன்
தருமம் தவிர்ந்து பொறை கெட்டுச் சத்தியம் சாய்ந்து தயை தெருமந்து தன் பூசனை முழுதும் சிதையக் கலியே
பொருமந்த காலக் கடையினில் எம் பொன்னரங்கன் அல்லால் அருமந்த கல்கி என்றாரே அவை நிலையாக்குவரே -திருவரங்கத்து மாலை-
மெய்ந்நாவன்-4-9-11-பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்மையாளன் -கலியன்

————————

4-10
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10- 1- ஸ்ரீ வைகுண்டத்தையும் திருப் பாற் கடலையும்
விட்டு கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளினது இதற்காக அன்றோ

———————

5-1-
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1 1- அது கத்தினாலும் உறவானவர்கள் வருவதை ஸூசிப்பிக்குமே –
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் –5-1-2-புள்ளி மான் ஸ்தானத்தில் எம்பெருமான் -ஆழ்வாரையும் கொள்ளலாம் –
நெடுமையால் அளந்தாய் -சமத்கார அருளிச் செயல் /
அக்கோயின்மை -5-1-4—கைங்கர்யத்துக்கு உள்ளே கூறை உடுக்கையும் சோறு உண்கையும் -உண்ணும் சோறு இத்யாதி –
தாரக பதார்த்தம் -இதில் -போஷாக்கை பாக்ய பதார்த்தங்களும் அதுவும் மேலே பாசுரத்தில் –
தத்துறுதல் -5-1-7—தட்டுப்படுத்தல் -கிட்டுதல் -மாறுபாட்டைச் சொல்லிற்றாய் கிட்டுதல் தாத்பர்யம் என்றுமாம்
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இந்த மாறுபாடுகள் இருந்தாலே கிட்டுவோமே

———————–

5-2-
உலகமுண்ட பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் எப்பொழுதும் என்னை நீங்காது இடர் செய்யும் தீ வினைகாள் இனி நின்று நின்று தேங்காது
நீரும் அக்கானிடத்தே சென்று சேர்மின்களே -திருவரங்கத்து மாலை -102-இப்பதிகம் ஒட்டியே –
பட்டணம் -ராஜ தானி -பத்தனம் -வைத்த மா நிதி
தரணியின் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான் கருணை எனும் கடலாடித் திரு வினைக் கண்டதன் பின் திறணகர் எண்ணிய
சித்ரகுப்தன் தெரித்து வைத்த சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -தேசிக பிரபந்தமும் இத்தை ஒட்டியே
வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2 1- நித்ய வாசம் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -என்றும்
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயர்க்கு ஆள் பட்டார் பேர் -என்பதும் போலே –
காலிடைப் பாசம் கழற்றி -5-2-3—நான்கு வித பொருள்கள் -யமதூதர் பாசக்கயிறு காலிலே இழுக்க ஒண்ணாதபடி பண்ணி
கால் -காற்று -பிராண வாயும் -பாசம் ஆத்மாவை கட்டிக் கொண்டுள்ள ஸூஷ்ம சரீரத்தில் -நசை அறுத்த படி –
கீழே கயிறும் அக்காணி கழித்து-என்றது ஸூதூல சரீரத்தை கழித்தத்தை சொல்லி
கால்கட்டான புத்ர தாராதிகள் பற்றைப் போக்கினை படி
இரண்டு காலிடை உள்ள ஹேய ஸ்நாநத்தின் ஆசையை அறுத்த படி -காம -மோகத்தால் கட்டுண்ட பாசம் ஒழித்து
குறும்பர்கள்-5-2-5-உண்ணிலாய ஐவரால் -கோவாய் ஐவர் என் மெய் குடி இருந்து -உயர்திணை பிரயோகங்கள் போலே –
உற்ற நோய்காள் உறு பிணிகாள்-5-2-6-கொடுமையின் மிகுதியைப் பற்ற கள்ளப் பயலே திருட்டுப் பயலே போலே -ஆழ் வினைகாள் -இவற்றுக்கு காரணம்
என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5 2-8 – தோளுக்கு திரு ஆழி இலச்சினை -தலைக்கு திருவடி இலச்சினை
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-5-2-9-
பைக் கொண்ட பாம்பணையோடும் -மெய்க் கொண்டு வந்து புகுந்து கிடந்தார் உபக்ரமம் படியே நிகழித்து அருளுகிறார் –

————————————

5-3-
வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 2-வலம் செய்தல் -மற்றுள்ள வழிபாடுகளுக்கும் உப லக்ஷணம் –
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மறுவுதல் வழக்கே –
உன் பொன்னடி வாழ்க வென்று -இனக் குறவர்  -5-3-3-கீழே -எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்
சீர் திரு மாலிருஞ்சோலை -4-2-2-என்றத்தை விவரித்து அருளிச் செய்கிறார் இங்கு
அங்கோர்  நிழலில்லை நீரும் இல்லை உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்-5-3-4-
இலங்கதி மற்று ஓன்று –நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே -திருவாய்மொழி
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா-5-3-6-/ மருந்தும் பொருளும் அமுதமும் தானே-/அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -/
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் /அரு மருந்து ஆவது அறியாய்
கோயில் கடைப் புகப் பெய்-5-3-6–திருக் கண்ண மங்கை ஆண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனைத் தானும்
குத்திக் கொண்ட படியைக் கண்டு ஒரு தேஹாத்ம அபிமானியானவன் அளவு இது ஆனால் -பரம சேதனனான ஈஸ்வரன்
நம்மை யமாதிகளில் கையிலே காட்டிக் கோடான என்று விஸ்வஸித்து திரு வாசலைப் பற்றிக் கிடந்தார் இறே
அநர்த்தக் கடல்-5-3-7- -அனத்தம்-பாட பேதம் -அபாயம் பொருளில் / அஞ்சேல் என்று கை கவியாய் -அபய ஹஸ்த முத்திரை காட்டி அருள்வாய் –
கிறிப் பட்டேன்–5-3-8-கிறி -விரகு-அதாவது யந்த்ரம் -சர்வ பூதங்களும் பிரமிக்கும்படி ரூடமாய் இருப்பதொரு யந்த்ரம்
அஞ்ஞானா வர்த்தமாய் இருப்பது ஓன்று – / மாயம் என்றுமாம் -சம்சார மாயையில் அகப்பட்டேன் –

————————————-

5-4-
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5 4-2 – அறிவை என்று பரம பக்தியைச் சொன்னபடி –
தலைப் பற்றி வாய்க் கொண்டதே-மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்
தூறுகள் பாய்ந்தனவே –5-4-3-தூறு -என்று செடியாய் -கிளை விட்டுக் கிடக்கிற சம்சாரம் –
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய்த் தூற்றில் புக்கு -திருவாய்மொழி
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்-5-4-5- -பொன் அழியும் படி -நைச்ய அனுசந்தானம் -அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே -போலே
அன்றிக்கே ஒன்றும் தப்பாத படி சொன்னேன் -உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் என்றபடி
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 5- –
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை -போலே
ஐது நொய்தாக வைத்து-5-4-8- -ஐது நொய்து அல்பம் -மிக அல்பம் என்றபடி
அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –
அந்தணர் -அந்தத்தை அணவுபவர் –வேதாந்தத்தை சார்பவர் –
அம் தண் அர்-என்று பிரித்தும் பொருள் சொல்வர்
அந்தணர் என்போர் அறவோர் மற்று எப்பொருட்க்கும் செத்தண்மை பூண்டு ஒழுகலால்-திருக்குறள்
நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்கால் அந்தணர்க்கு உரிய -தொல்காப்பியம் -யதிகளைக் குறிக்கும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரியாழ்வார் திருமொழி-3-10- -திவ்யார்த்த தீபிகை –

February 23, 2018

அவதாரிகை
பஞ்சவடியில் தனித்து இருந்த பிராட்டியை இராவணன் மாய வகையினால் இலங்கைக்குக் கொண்டு போய்
அசோகா வநிகை யில் சிறை வைத்திட-பின்பு ஸ்ரீ ராம பிரானால் தூது விடப் பட்ட சிறிய திருவடி அவ்விடத்தே வந்து
பிராட்டியின் முன் நின்று பல அடையாளங்களைச் சொல்லித் தான் ஸ்ரீ ராம தூதன் என்பதை அவள் நம்புமாறு தெரிவித்துப்
பின்பு திருவாழி மோதிரத்தையும் கொடுத்து அவள் திரு உள்ளத்தை மிகவும் மகிழ்வித்த படியை ஆழ்வார் அனுசந்தித்து
அதில் தமக்கு உண்டான ஆதாரதிசயத்தாலே-அவன் அப்போது விண்ணப்பம் செய்த அடையாளங்களையும்
திருவாழி மோதிரம் கொடுத்த படியையும்
அது கண்டு அவள் மகிழ்ந்த படியை எல்லாம்
அடைவே பேசி இனியராகிறார் இத் திரு மொழியிலே –

—————————————-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-

பதவுரை

நெறிந்த கருங்குழல்–நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்–மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
நின் அடியேன்–உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்–விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த–நெருங்கின
மணி–ரத்நங்களை யுடைய
முடி–கிரீடத்தை அணிந்த
சனகன்–ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை–ருத்ர தநுஸ்ஸை
இறுத்து–முறித்து
நினை–உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது–மணம் புரிந்து கொண்டதை
அறிந்து–தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட–(துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்–அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை–விலங்க
நடு வழியில் தடுக்க–செறிந்த சிலை கொடு
(தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை–(அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்–அழித்ததும்
ஓர் அடையாளம்–ஒரு அடையாளமாகும்–

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் -நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ உமது அடியவனான என்னுடைய விஞ்ஞாபனம் ஒன்றைக் கேட்டருள வேண்டும்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த -நெருங்கின ரத்தினங்களை யுடைய கிரீடத்தை அணிந்த ஜனக மகா ராஜன்
கன்யா சுல்கமாக ஏற்படுத்தின ருத்ர தனுசுவை முறித்து -உம்மை -பிராட்டியை -திரு மனம் புரிந்து கொண்டதை
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச் -தெரிந்து கொண்டு துஷ்ட ராஜாக்களை பயிருக்குக் களை களைவது போலே
அழித்து- 21-தலைமுறை கார்த்த வீர்யார்ஜுனன் போல்வாரை -அழித்து அரிய தவத்தை யுடைய பரசுராமன் நடுவழியில் தடுக்க –
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்-தனக்குத் தகுந்த அப்பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசுவை –
இதனாலே செறிந்த சிலை -வாங்கிக் கொண்டு அப்பரசுராமனுடைய தபஸை அழித்ததுவும் ஒரு அடையாளமாகும்

—————————–

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-

பதவுரை

அல்லி–அகவிதழ்களை யுடைய
அம் பூ–அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய் பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்–(உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்–விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்–(உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்–ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்–மடப்பத்தையு முடைய
மானே–மான் போன்றவளே!
கேட்டருளாய்–(அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது–அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்–இனிமையான இருப்பாக
இருந்தது–இருந்ததான
ஒர் இடம் வகையில்–ஓரிடத்தில்
மல்லிகை–மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு–சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்–(நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்–

அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன்-அக இதழ்களை யுடைய பூக்களாலே தொடுக்கப்பட்ட பூ மாலை
போன்றவளே -இழைத்த தன்மை -மென்மை-துவட்சி-இவற்றால் உவமை – உமது திருவடிகளில்
வணங்கிய நான் விஞ்ஞாபனம் ஒன்றை உம்மிடத்தில் சொல்லுவேன் –
துணை மலர்க் கண் மடமானே – கேட்டருளாய்-ஒன்றோடு ஓன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற திருக் கண்களையும்
மடப்பத்தையும் யுடைய மான் போன்றவளே -அத்தைத் திருச் செவி சாத்தி அருள வேணும்
எல்லியம்போது-அம் எல்லிப் போது – இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில் -அழகிய-ஸூக அனுபவத்துக்கு ஏகாந்தமான
காலம் என்பதால் அம் காலம்- இராத்திரி வேளையிலே- – இனிமையான இருப்பாக இருந்ததான ஓர் இடத்திலே
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு பார்த்ததும் ஓர் அடையாளம் — மல்லிகைப் பூவினால் தொடுக்கப் பட்ட சிறந்த மாலையினால்
நீர் ஸ்ரீ ராமபிரானைக் கட்டியதும் ஓர் அடையாளம் -வனவாசம் பற்றி இன்னும் அருளிச் செய்யவில்லை என்பதால்
இது திரு அயோத்யையில் நிகழ்ந்ததாகக் கொள்வதே பொருத்தம் –

——————————-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

பதவுரை

கைகேசி–கைகேயியானவள்
கலக்கிய மா மனத்தனன் ஆய்–(மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய்
வரம் வேண்ட–(தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய–(அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த
மா மனத்தனன் ஆய்–சிறந்த மனத்தை யுடையவனாய்
மன்னவனும் – தசரத சக்ரவர்த்தியும்
மறாது–மறுத்துச் சொல்ல முடியாமல்
ஒழிய–வெறுமனே கிடக்க,
(அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,)
குலம் குமரா–“உயர் குலத்திற்பிறந்த குமாரனே)
காடு உறைய–காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி
போ என்று–போய் வா” என்று சொல்லி
விடை கொடுப்ப–விடை கொடுத்தனுப்ப
அங்கு–அக் காட்டிலே
இலக்குமணன் தன்னொடும்–லக்ஷ்மணனோடு கூட
ஏகியது–(இராமபிரான்) சென்றடைந்ததும்
ஓர் அடையாளம்–

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட–கைகேயியானவள்-கைகேசி-யகர சகரப் போலி -மந்தரையினால் கலக்கப் பட்ட
சிறந்த மனத்தை யுடையவளாய் தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த வரங்களின் பயனைக் கேட்க
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக் -அக்கைகேயின் வார்த்தையினால் கலக்கமடைந்த
சிறந்த மனத்தை யுடையவனாய்
தசரத சக்கரவர்த்தியும் மறுத்துச் சொல்ல முடியாமல் வெறுமனே கிடக்க
அந்த சந்தர்ப்பத்தில் கைகேயியானவள்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப -உயர் குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமனே -காட்டிலே பதினாலு வருஷங்கள்
வசிக்கும் படி போவாய் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்ப –
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் -அக்காட்டிலே லஷ்மணனோடு கூட -ஸ்ரீ சீதையாகிய உம்மோடும் -என்பதற்கும்
உப லக்ஷணம் -ஸ்ரீ ராமபிரான் சென்று அடைந்ததும் ஓர் அடையாளம் –

——————————–

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்த
முலை–முலையையும்
மடவாய்–மடப்பத்தையுமுடைய பிராட்டீ!
வைதேவீ–விதேஹ வம்சத்திற் பிறந்தவனே!
விண்ணப்பம்–ஒரு விஜ்ஞாபகம்;
தேர் அணிந்த–தேர்களாலே அலங்காரமான
அயோத்தியர் கோன்–அயோத்தியிலுள்ளார்க்கு அரசனாதற்கு உரிய இராமபிரானது
பெருந்தேவீ–பெருமைக்குத் தகுந்த தேவியே!
கேட்டருளாய்–அவ் விண்ணப்பத்தைக் கேட்டருளவேணும்;
கூர் அணிந்த–கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
குகனோடும்–குஹப் பெருமாளோடு கூட
கங்கை தன்னில்–கங்கை கரையிலே
சீர் அணிந்த தோழமை–சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தை
கொண்டதும்–பெற்றதும்
ஓர் அடையாளம்–

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் -கச்சை அணிந்த முலையையும் மடப்பத்தையும்
யுடைய பிராட்டீ -விதேக வம்சத்தில் பிறந்தவளே ஒரு விஞ்ஞாபனம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்-தேர்களாலே அலங்காரமான திரு அயோத்தியில் யுள்ளார்க்கு
அரசனாவதற்கு உரிய-ஏக தார வ்ரதனான – ஸ்ரீ ராமபிரானது பெருமைக்குத் தகுந்த தேவியே அவ்விண்ணப்பத்தைக் கேட்டருள வேணும் –
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் -கூர்மை பொருந்திய வேலாயுதத்தில் வல்லவனாகிய
ஸ்ரீ குஹப் பெருமாளோடே கூட கங்கைக் கரையிலே
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் -சிறப்புப் பொருந்திய ஸ்நேஹத்தைப் பெற்றதும் ஓர் அடையாளம்
தோழமையைக் கொண்டதும் -பாட பேதம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவர்க்கு இன்னருள் சுரந்து -மாழை மான் மட நோக்கி யுன் தோழி யும்பி எம்பி என்று
ஒழிந்திலை யுகந்து -தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் -பெரிய திருமொழி –

—————————-

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பதவுரை

மான் அமரும்–மானை யொத்த
மென் நோக்கி–மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்–பால் போல் இனியபேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;
கான் அமரும்–காட்டில் பொருந்திய
கல் அதர் போய்–கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து–காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்–வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்–தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து–சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப–நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி–பரதாழ்வான்
பணிந்ததும்–வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்.

மானமரும் மென்னோக்கி வைதேவீ -மானை ஒத்த மென்மையை யுடைய திருக் கண்களை யுடைய பிராட்டியே –
அனுகூல ஜனங்களைப் பிரிந்து மனம் கலங்கி இருக்கும் பிராட்டிக்கு மலங்க மலங்க விழிக்கும் மான் பேடை ஏற்ற உவமை யாகுமே
பால் மொழியாய்-விண்ணப்பம்-பால் போலே இனிய பேச்சை யுடையவளே -விண்ணப்பம் –
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத் –காட்டில் பொருந்திய கல் நிறைந்த வழியிலே போய் காட்டில் வசித்த போது
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப் -வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
தாழ்வரையோடே கூடின சித்ரா கூட பர்வதத்தில் நீங்கள் இருக்கையிலே
பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் -ஸ்ரீ பரதாழ்வான் வந்து வாங்கியதும் ஓர் அடையாளம்

———————————-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-

பதவுரை

சித்திரக்கூடத்து சித்திரகூட பர்வதத்தில்
இருப்ப–நீங்களிருவரும் ரஸாநுபவம் பண்ணிக் கொண்டிருக்கையில்
சிறு காக்கை–சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜயந்தன்
முலை தீண்ட–(உமது) திரு முலைத் தடத்தைத் தீண்ட
(அதனாற் சீற்றமுற்ற ஸ்ரீராமன்)
அத்திரமே கொண்டு–ப்ரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்து
எறிய–பிரயோகிக்க,
(அக் காகம் அதற்குத் தப்புவதற்காக)
அனைத்து உலகும்–உலகங்களிலெல்லாம்
திரிந்து ஓடி–திரிந்து ஓடிப் போய்
(தப்ப முடியாமையால் மீண்டு இராமபிரானையே அடைந்து)
வித்தகனே–“ஆச்சரியமான குணங்களை யுடையவனே!
இராமா–ஸ்ரீ ராமனே!
ஓ–ஓ !!
நின் அபயம்–(யான்) உன்னுடைய அடைக்கலம்”
என்று அழைப்ப என்று கூப்பிட
அத்திரமே–(உயிரைக் கவர வேணுமென்று விட்ட அந்த) அஸ்த்ரமே
அதன் கண்ணை–அந்தக் காகத்தின் ஒரு கண்ணை மாத்திரம்
அறுத்ததும்–அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்-

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட -சித்ர கூட பர்வதத்திலே நீங்கள் இருவரும் ரசானுபவம் பண்ணிக் கொண்டு
இருக்கையில் -சிறிய காக்கையின் வடிவு கொண்டு வந்த ஜெயந்தன் உமது திரு முலைத் தடத்தைத் தீண்ட -அதனால் சீற்றமுற்ற ஸ்ரீ ராமபிரான்
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி -ப்ரஹ்மாஸ்திரத்தை தொடுத்து பிரயோகிக்க -அக்காகம் அதற்க்குத் தப்புவதற்காக –
உலகங்கள் எல்லாம் திரிந்து ஓடிப் போய் -தப்ப முடியாமல் ஸ்ரீ ராமபிரானையே அடைந்து
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப-ஆச்சர்யமான கல்யாண குணங்களை யுடையவனே -ஸ்ரீ ராமபிரானே ஓ -யான்
உம்முடைய அடைக்கலம்-யான் அநந்ய கதி – என்று கூப்பிட
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் -உயிரைக் கவர வேணும் என்று விட்ட அந்த அஸ்திரமே அந்த காகத்தின்
ஒரு கண்ணை மாத்திரம் அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் –
ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி திருவடிக்கு அருளிச் செய்ததாக இருக்கும் இவ்விருத்தாந்தம் இங்கு
திருவடி அருளிச் செய்வதாக சொல்வது கல்பாந்தரத்தில் புராணாந்தரங்களில் உண்டு என்று கொள்ள வேண்டும் –

———————————-

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7-

பதவுரை

மின் ஒத்த–மின்னலைப் போன்ற
நுண் இடையாய்–மெல்லிய இடையை யுடையவளே!
மெய் அடியேன்–உண்மையான பக்தனாகிய எனது
விண்ணப்பம்–விண்ணப்பத்தை (க் கேட்டருள வேணும்;)
பொன் ஒத்த00பொன் நிறத்தை ஒத்த (நிறமுடைய)
மான் ஒன்று–(மாரீசனாகிய) ஒருமான்
புகுந்து–(பஞ்சவடியில் நீரிருக்கும் ஆச்ரமத்தருகில் வந்து
இனிது விளையாட–அழகாக விளையாடா நிற்க,
(அதை மாயமான் என்று இளையபெருமாள் விலக்கவும்)
நின் அன்பின் வழி நின்று–உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று
சிலை பிடித்து–வில்லை யெடுத்துக் கொண்டு
எம்பிரான்–இராமபிரான்
ஏக–அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து) எழுந்தருள,
பின்னே–பிறகு
அங்கு–அவ் விடத்தில்
இலக்குமணன்–இளைய பெருமாளும்
பிரிந்ததும்–பிரிந்ததுவும் ஓர் அடையாளம்–

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம் -மின்னலை ஒன்ற மெல்லிய இடையை யுடையவளே -உண்மையான
பக்தனாகிய எனது விண்ணப்பத்தை கேட்டருள வேணும் –
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட -பொன் நிறத்தை ஒத்த நிறமுடைய மாரீசனாகிய ஒரு மான் பஞ்சவடியிலே
நீர் எழுந்து அருளி இருக்கும் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து அழகாக விளையாடா நிற்க –
அத்தை மாயமான் -என்று இளைய பெருமாள் விலக்கவும்
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப் -உம்முடைய ஆசைக்குக் கட்டுப்பட்டு நின்று வில்லை எடுத்துக் கொண்டு
ஸ்ரீ ராமபிரான் -அம்மானைப் பிடித்துக் கொணர்வதாக அதன் பின்னே தொடர்ந்து எழுந்து அருள
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -பிறகு அவ்விடத்திலே இளைய பெருமாளும் பிரிந்ததுவும் ஓர் அடையாளம் –

————————————

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-

பதவுரை

மை தகு–மைபோல் விளங்குகிற
மா மலர்–சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய
குழலாய்–கூந்தலை யுடையவளே!
வைதேவி–வைதேஹியே!
ஒத்த புகழ்–“பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியை யுடைய
வானரர் கோன் (இராமபிரானோடு) கூட இருந்து
நினை தேட–உம்மை தேடும்படி (ஆள் விடுகையில் என்னிடத்து விசேக்ஷமாக அபிமானிக்க)
அத் தகு சீர்–(பிரிந்த) அந்த நிலைக்குத் தகுதியான குணமுள்ள
அயோத்தியர் கோன்–அயோத்தியிலுள்ளார்க்குத் தலைவைரான பெருமாள்
அடையாளம் இவை–இவ் வடையாளங்களை
மொழிந்தான்–(என்னிடத்திற்) சொல்லி யருளினான்;
(ஆதலால்)
அடையாளம்–(யான் சொன்ன) அடையாளங்கள்
இத் தகையால்–இவ்வழியால் (வந்தன); (அன்றியும்)
ஈது–இதுவானது
அவன்– அவ்விராம பிரானுடைய
கை மோதிரம்–திருக்கையிலணிந்து கொள்ளும் மோதிரமாகும்–

மைத்தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்-மை போலே விளங்குகிற சிறந்த புஷ்ப்பங்களை அணிவதற்கு உரிய
கூந்தலை யுடையவளே -ஸ்ரீ வைதேஹீயே விண்ணப்பம் -உடம்பை உபேக்ஷிப்பவள் என்பது தோற்ற ஸ்ரீ வைதேஹீ –
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட -பெருமாளோடு இன்ப துன்பங்கள் ஒத்து இருக்கப் பெற்றவன் என்ற கீர்த்தியை யுடைய
வானரங்களுக்கு எல்லாம் தலைவரான ஸூக்ரீவ மஹா ராஜர் ஸ்ரீ ராமபிரானோடே கூட இருந்து
உம்மைத் தேடும்படி ஆள் விடுகையில் என்னிடத்து விசேஷமாக அபிமானிக்க
அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான் -பிரிந்த அந்த நிலைக்குத் தகுதியான–ஊணும் உறக்கமும் அற்று
கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே ஏதேனும் போக்கிய பதார்த்தத்தைக் கண்டால் உம்மையே நினைத்து வருந்தா நின்றுள்ள
அந்த நிலைக்குத் தக்க அன்பு என்னும் குணமுள்ள திரு அயோத்யையில் உள்ளவர்க்கு தலைவரான பெருமாள் இவ்வடையாளங்களை
என்னிடத்தில் சொல்லி அருளினான் -ஆதலாலே-நான் சொன்ன அடையாளங்கள்
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே-இவ்வழியால் வந்தன –
அன்றியும் இதுவானது அந்த ஸ்ரீ ராமபிரானுடைய திருக் கையில் அணிந்து கொள்ளும் திரு மோதிரமாகும்-

————————————–

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக் கொண்டு உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே–3-10-9-

திக்கு–திக்குகளிலே
நிறை–நிறைந்த
புகழ் ஆனன்–கீர்த்தியை யுடையவனான ஜநக ராஜனுடைய
தீ வேள்வி-அக்நிகளைக் கொண்டு செய்யும் யாகததில்
சென்ற–(விஸ்வாமித்திரருடன்) போன
மிக்க பெருசபை நடுவே–மிகவும் பெரிய ஸபையின் நடுவில்
வில்லிறுத்தான்–ருத்ர தநுஸ்ஸை முறித்த இராமபிரானுடைய
மோதிரம்–மோதிரத்தை
கண்டு–பார்த்து
மலர் குழலாள்–பூச்சூடிய கூந்தலை யுடையவளான
சீதையும்–ஸுதாப் பிராட்டியும்,
அனுமான்–‘வாராய் ஹனுமானே!
அடையாளம் ?–(நீ சொன்ன) அடையாளங்களெல்லாம்
ஒக்கும்–ஒத்திரா நின்றுள்ளவையே
என்று–என்று (திருவடியை நோக்கிச்) சொல்லி (அந்தத் திருவாழியை)
உச்சி மேல் வைத்துக் கொண்டு–தன் தலையின் மீது வைத்துக் கொண்டு
உகந்தான்–மகிழ்ந்தான்

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் -திக்குகளில் நிறைந்த கீர்த்தியை யுடையனான ஸ்ரீ ஜனக ராஜனுடைய
அக்னிகளைக் கொண்டு செய்யும் யாகத்தில் விச்வாமித்ரருடன் போன காலத்திலே
மிக்க பெரும் சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு -மிகவும் பெரிய சபையின் நடுவிலே ருத்ர தனுசை முறித்த
ஸ்ரீ ராமபிரானுடைய திரு மோதிரத்தை பார்த்து -சபை நடுவே -பாட பேதம்
மலர்க் குழலாள் சீதையுமே-அனுமான் அடையாளம்
ஒக்குமால் என்று-பூச் சூடிய திருக் கூந்தலை யுடையலான ஸ்ரீ சீதா பிராட்டியாரும் –
வாராய் ஹனுமான் -நீ சொன்ன அடையாளங்கள் எல்லாம் ஒத்திரா நின்றுள்ளவையே என்று திருவடியைச் சொல்லி –
ஆல்-அசைச் சொல் –அந்தத் திருவாழியை
உச்சி மேல் வைத்துக் கொண்டு உகந்தனளால் -தன் தலையின் மீது வைத்துக் கொண்டு மகிழ்ந்தாள் –
ஆல் – மகிழ்ச்சிக் குறிப்பு –

————————————–

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-

பதவுரை

வார் ஆரும்–கச்சு அணிந்திருக்கைக்கு உரிய
முலை–முலையையும்
மடலாள்–மடப்பத்தை யுமுடையவளான
வைதேவிதனை–ஸீதா பிராட்டியை
கண்டு–பார்த்து
சீர் ஆரும்–சக்தியை யுடையவனான
திறல்–சிறிய திருவடி
தெரிந்து–(பெருமாளிடத்தில் தான்) அறிந்து கொண்டு.
உரைந்து–(பின்பு பிராட்டியிடத்திற்) சொன்ன
அடையாளம்–அடையாளங்களை (க் கூறுவதான)
பார் ஆளும் புகழ்–பூமி யெங்கும் பரவின கீர்த்தியை யுடையராய்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான
பட்டர்பிரான் பாடல்–பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை
வல்லார்–ஓத வல்லார்கள்
ஏர் ஆரும் வைகுந்தத்து–வல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீவைகுண்டததில்
இமையவரோடு–நித்ய ஸூரிகளோடு
இருப்பார்–கோவையா யிருக்கப் பெறுவார்கள்.

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு-கச்சு அணிந்து இருக்கைக்கு உரிய முலையையும்
மடப்பத்தையும் யுடையளான ஸ்ரீ சீதா பிராட்டியைப் பார்த்து
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் -சீர்மை பொருந்திய சக்தியை யுடையனான சிறிய திருவடி –
பெருமாள் இடத்திலே தான் அறிந்து கொண்டு -பின்பு பிராட்டி இடத்தில் சொன்ன அடையாளங்களை
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார் -பூமி எங்கும் பரவி கீர்த்தியை யுடையரான
ஸ்ரீ வில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த இப்பாடல்களை ஓத வல்லவர்கள்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –எல்லா நன்மைகளும் நிறைந்த ஸ்ரீ வைகுண்டத்தில்
நித்ய ஸூரி களோடு ஒரு கோவையாக இருக்கப் பெறுவார்கள்

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரியாழ்வார் திருமொழி-2-2- -திவ்யார்த்த தீபிகை –

February 16, 2018

அவதாரிகை –
கண்ணபிரான் பகல் முழுதும் விளையாடி -இளைத்துப் -பொழுது போனதையும் -முலை யுண்பதையும் மறந்து –
உறங்கிப் போய் பொழுது விடிந்து நெடும் போதாயும் கண் விழியாது இருக்கவே -யசோதைப் பிராட்டி அப்பிரானைத் துயில் எழுப்பி –
முலை யுண்ணாமையை அவனுக்கு அறிவித்துத் தன முலையை யுண்ண வேணும் என்று நிபந்த்தித்து விரும்பி ஊட்டின படியை
ஆழ்வார் தாமும் அனுபவிக்க விரும்பி -தம்மை யசோதை பிராட்டியாகவே பாவித்துக் கொண்டு அவனை
அம்மம் உண்ண எழுப்புதல் முதலியவற்றைப் பேசி இனியராகிறார் -இத் திரு மொழியிலே –

—————————-

அரவணையாய் ஆயரேறே யம்ம முண்ணத் துயில் எழாயே
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாயத்
திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப்  பருகிடாயே –2-2-1-

பதவுரை

அரவு அணையாய்–சேஷசாயி யானவனே!
ஆயர் ஏறே–இடையர்களுக்குத் தலைவனே!
நீ இரவும் உண்ணாத–நீ (நேற்று) இரவும் முலை உண்ணாமல்
உறங்கிப் போனாய்–உறங்கிப் போய் விட
இன்றும்–இப் போதும்
உச்சி கொண்டது–(பொழுது விடிந்து) உச்சிப் போதாய் விட்டது;
ஆல்–ஆதலால்
அம்மம் உண்ண–முலை யுண்பதற்கு
துயில் எழாய்–(தூக்கந்தெளிந்து) படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்;
வரவும் காணேன்–(நீயே எழுந்திருந்து அம்மமுண்ண வேணுமென்று சொல்லி) வருவதையுங் கண்டிலேன்!
(உனக்குப் பசியில்லை யென்போமென்றா)
வயிறு அசைத்தாய்–வயிறுந்தளர்ந்து நின்றாய்;
வன முலைகள்–(எனது) அழகிய முலைகள் (உன் மேல் அன்பினால் நெறித்து)
சோர்ந்து பாய–பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
திரு உடைய–அழகை உடைய
வாய் மடுத்து–(உன்) வாயை வைத்து
திளைத்து–செருக்கி
உதைத்து–கால்களாலே உதைத்துக் கொண்டு
பருகிடாய்-முலையுண்பாய்.

விளக்க உரை

(அரவணையாய்) எம்பெருமான் திருவனந்தாழ்வானாகிற படுக்கையைவிட்டு க்ருஷ்ணனாகத் தோன்றினாலும்
சென்றாற் குடையாம் என்கிறபடியே அவ்வக்காலத்துக்கு ஏற்ற கோலங்கொண்டு அடிமை செய்பவனான
திருவனந்தாழ்வான் கண்ணபிரானுக்குத் திருப்பள்ளி மெத்தையாய் இனிது தூங்குவதற்கு உதவுகின்றானென்க.
அம்ம முண்ண என்றது – கண்ணனுடைய குழந்தைப் பருவத்திற்குத் தக்கபடியாக யசோதை சொல்லியதாகும்.
சிங்கம் முதலியவற்றின் ஆணை யுணர்த்துகின்ற ஏறு என்ற பெயர் இலக்கணையால் ப்ரதாநன என்ற பொருளைத் தரும்.
இரண்டாமடியின் ஈற்றிலுள்ள ஆல் – ஆதலால் என்பதன் சிதைவு;
இனி ஆல் ஓ – இரண்டும் இரக்கப் பொருளைக் குறிப்பன வென்றுமாம்.
வயிறசைந்தாய் = நன்னூலார் சினை வினை சினையொடும் முதலொடுஞ் செறியும் என்றாராதலின் சினைவினை முதலோடு செறிந்ததென்க.
வனப்புமுலை என்கிறவிது – வனமுலை என்று விகாரப்பட்டதென்பர்;
வனமே நீரும் வனப்பு மீமமுந் துழாயும் மிகுதியுங் காடுஞ் சோலையும் புற்றுமனவே புகலுமெண் பேரே என்ற
நிகண்டின்படி வனம் என்ற சொல்லோ அழகைக் குறிக்குமென்பதும் பொருந்தும்.

அரவணையாய் ஆயரேறே -சேஷ சாயி யானவனே -இடையர்களுக்குத் தலைவனே
இரவும் யுண்ணாது உறங்கி நீ போய் -நீ நேற்று இரவும் முலை யுண்ணாமல் யுறங்கிப் போய்விட
சென்றால் குடையாம்-இத்யாதிப்படியே அழகிய திருப் பள்ளி மெத்தையாய் இனிது கண் வளர உதவுகிறான்
இன்றும் உச்சி கொண்டதாலோ-இப்போதும் பொழுது விடிந்து உச்சிப் போதாய் விட்டது ஆதலால்
யம்ம முண்ணத் துயில் எழாயே-முலை யுண்பதற்கு தூக்கம் தெளிந்து படுக்கையில் இருந்து எழுந்து இருக்க வேணும்
வரவும் காணேன் -நீயே எழுந்திருந்து அம்மம் யுண்ண வேணும் என்று சொல்லி வருவதையும் கண்டிலேன்
உனக்கு பசியில்லை என்போம் என்றால்
வயிறு அசைந்தாய் -திரு வயிறு தளர்ந்து நின்றாய்
வனமுலைகள் சோர்ந்து பாயத்-எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் தெறித்து பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
வனமே-நீரும் வனப்பும் -ஈமமும்-துழாயும் -மிகுதியும் -காடும் -சோலையும் -புற்றும் -எனவே புகழும் என்பர் -நிகண்டு -இங்கு அழகைக் குறிக்கும்
திருவுடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப்  பருகிடாயே –அழகை யுடைய யுன் திரு வாயை வைத்து –
செருக்கி -திருக் கால்களால் உதைத்துக் கொண்டு முலை யுண்பாய் –

————————–

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே –2-2-2-

பதவுரை

எம் பிரான்–எமது உபகாரகனே!
வைத்த நெய்யும்–உருக்கி வைத்த நெய்யும்
காய்ந்த பாலும்–(ஏடு மிகுதியாகப் படியும்படி) காய்ந்த பாலும்
வடி தயிரும்–(உள்ள நீரை) வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
நறு வெண்ணெயும்–மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும்–(ஆகிய) இவை யெல்லாவற்றையும்
நீ பிறந்த பின்னை–நீ பிறந்த பிறகு
பெற்று அறியேன்–கண்டதில்லை;
எத்தனையும்–(நீ) வேண்டினபடி யெல்லாம்
செய்யப் பெற்றாய்–நீ செய்யலாம்;
ஏதும் செய்யேன்–(அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை) ஒன்றும் செய்ய மாட்டேன்;
கதம் படாதே–நீ கோபியாதே கொள்;
முத்து அனைய முறுவல் செய்து–முத்தைப் போல் வெண்ணிறமாக மந்தஸ்மிதம் பண்ணி
மூக்கு உறிஞ்சி–மூக்கை உறிஞ்சிக் கொண்டு
முலை உணாய்–முலை உண்பாயாக.

விளக்க உரை

இத்தனையும் பெற்றறியேன் – (நொய் பால் முதலியவற்றில்) சிறிதும் சேத்திருக்கக் கண்டிலேன் என்றுமாம்.
கதம் – கோபம். குழந்தைகள் மூக்குறிஞ்சி முலை யுண்ணுதல் – இயல்பு.

எம்பிரான்-எமது உபகாரகனே –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் உருக்கி வைத்த நெய்யும் -ஏடு மிகுதியாகப் படும்படி காய்ந்த பாலும்
வடி தயிரும் நறு வெண்ணெயும்-உள்ள நீரை வடித்துக் கட்டியாய் இருக்கிற தயிரும் -மணம் மிக்க வெண்ணெயும்
இத்தனையும் பெற்று அறியேன் -ஆகிய இவற்றை எல்லா வற்றையும் நீ பிறந்த பிறகு கண்டதில்லை –
நீ பிறந்த பின்னை-நீ திருவவதரித்த பிறகு
எத்தனையும் செய்யப் பெற்றாய் -நீ வேண்டியபடி எல்லாம் நீ செய்யலாம்
ஏதும் செய்யேன் -அப்படிச் செய்வதற்காக நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
கதம் படாதே-நீ கோபியாதே கொள்
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை யுணாயே –முத்தைப் போலே வெண்ணிறமான மந்த ஸ்மிதம் செய்து அருளி
திரு மூக்கை உறிஞ்சிக் கொண்டு முலை யுண்பாயாக -குழந்தைகள் மூக்குறிஞ்சி முலை உண்ணுதல் இயல்பு –

——————————————

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார்
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன் திறத்தரல்லர்  உன்னை நான் ஓன்று இரப்ப மாட்டேன்
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே –2-2-3-

பதவுரை

தம் தம் மக்கள்–தங்கள் தங்கள் பிள்ளைகள்
அழுது–அழுது கொண்டு
சென்றால்–(தம் தம் வீட்டுக்குப்) போனால்
தாய்மார் ஆவார்–(அக்குழந்தைகளின்) தாய்மார்கள்
தரிக்க கில்லார்–பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து–(தம் குழந்தைகளை அழைத்துக்) கொண்டு வந்து
நன் மேல் பூசல் செய்ய–உன் மேல் பிணங்க
வாழ வல்ல–(அதைக் கண்டு) மகிழ வல்ல
வாசு தேவா–கண்ண பிரானே!
உந்தையார்–உன் தகப்பனார்.
உன் திறத்தர் அல்லர்–உன் விஷயத்தைக் கவனிப்பவரல்லர்;
நான்–(அபலையான) நானும்
உன்னை–(தீம்பில் ..) உன்னை
ஒன்று உரப்ப மாட்டேன்–சிறிதும அதட்ட வல்லமை யற்றிரா நின்றேன்;
(இவையெல்லாங் கிடக்க)
நந்த கோபன்–நந்த கோபருடைய
அணி சிறுவா–அழகிய சிறு பிள்ளாய்!
நான் சுரந்த முலை–எனது பால் சுரந்திருக்கிற முலையை
உணாய்–உண்பாயாக

விளக்க உரை

கண்ணபிரான் தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட போனால் எல்லாப் பிள்ளைகளையும் போல விராமல்
அப்பிள்ளைகளை அடித்துக் குத்தி விளையாடுவனாதலால் அழுதுகொண்ட வீட்டுக்குச் செல்லும் அப்பிள்ளைகளைக் கண்ட
தாய்மார்கள் மனம் பொறாமல் நொந்து அப்பிள்ளைகளைக் கண்ணுங் கண்ணீரும் அழைத்துக் கொண்டுவந்து காட்டி
இவன்மேலே பழி சொல்லிப் பிணங்கினால் இவன் அதனால் சற்றும் இளைப்புக் கொள்ளாமல்
அதையே த்ருப்தியாகக் கொண்டு ஸந்தோஷிப்பனென்பதைக் காட்டுகிறார் – முதலிரண்டடியால்
(வாசுதேவா) பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ! யென்கிறார். உன் + தந்தையார் = உந்தையார்; மரூஉ மொழி.

தம்தம் மக்கள் அழுது சென்றால் -தங்கள் தங்களுடைய பிள்ளைகள் அழுது கொண்டு தம் தம் வீட்டுக்குப் போனால்
தாய்மாராவார் தரிக்க கில்லார்-அக் குழந்தைகளின் தாய்மார்கள் பொறுக்க மாட்டாதவர்களாய்
வந்து -தம் பிள்ளைகளை கண்ணும் கண்ண நீருமாக அழைத்துக் கொண்டு வந்து காட்டி
நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல -உன் மேல் பிணங்க -அத்தைக் கண்டு-சற்றும் உழைப்பும் இல்லாமல் –
அத்தையே ஹேது வாகக் கொண்டு மகிழ வல்ல
வாசுதேவா-பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ
உந்தையார் உன் திறத்தரல்லர்  உன்னை -உன் தமப்பனார் உன் விஷயத்தை கவனிப்பர் அல்லர்
நான் ஓன்று இரப்ப மாட்டேன்-அபலையான நானும் தீம்பில் கை வளர்ந்த உன்னை சிறிதும் அதட்ட வல்லமை அற்று இரா நின்றேன் –
இவை எல்லாம் கிடக்க
நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை யுணாயே -நந்தகோபருடைய அழகிய சிறு பிள்ளாய்
எனது பால் சுரந்து இருக்கிற முலையை உண்பாயாக –

——————————————–

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழியப்
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே யாயர் கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை யுணாயே –2-2-4-

பதவுரை

அமரர் கோவே–தேவர்களுக்குத் தலைவனே! (நீ)
கஞ்சன் தன்னால்–கம்ஸனாலே
புணர்க்கப்பட்ட–(உன்னைக் கொல்வதற்காக) ஏற்படுத்தப் பட்ட
கள்ளச் சகடு–க்ருத்ரிம சகடமானது
கலக்கு அழிய–கட்டு (க்குலைந்து உருமாறி) அழிந்து போம்படி
பஞ்சி அன்ன மெல் அடியால்–பஞ்சைப் போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால்
பாய்ந்த போது–உதைத்த போது
நொந்திடும் என்று–(உன் திருவடிகளுக்கு) நோவுண்டாகுமே யென்று
அஞ்சினேன் காண்–பயப்பட்டேன் காண்;
(என்னுடைய அச்சம்)
ஆயர் கூட்டத்து அளவு அன்று ஆல்–இடையர் திரளினுடைய (அச்சத்தின்) அள்வல்ல காண்;
கஞ்சனை–(உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த) கம்ஸனை
உன் வஞ்சனையால்–உன்னுடைய வஞ்சனையினாலே
வலைப்படுத்தாய்–(உன் கையிற்) சிக்கும்படி செய்து கொன்றவனே!
முலை உணாய்.

விளக்க உரை

(அஞ்சினேன் இத்யாதி) “பெற்றவளுக்கன்றோ தெரியும் பிள்ளையினருமை” என்றபடி உன்னைப் பெற்ற தாயான
எனக்குத் தான் உன் அருமை தெரியுமாதலால் மற்றை இடையர் திரளின் அச்சமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் நான்
‘உனக்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ!’ என்று கொண்டுள்ள அச்சத்திற்கு ஒப்பாகாது என்றபடி.
காண் – முன்னிலையசை; தேற்றப் பொருள் தரும். ஆல் – தேற்றம்; ஓ – இரக்கம். பஞ்சி – பஞ்சு; கடைப்போலி.

அமரர் கோவே-தேவர்களுக்குத் தலைவனே -நீ –
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழியப்-கம்சனால் உன்னைக் கொல்வதற்காக ஏற்படுத்தப் பட்ட
க்ருத்ரிம சகடமானது கட்டுக் குலைந்து உரு மாறி அழிந்து போம்படி
பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது -பஞ்சு போன்ற ஸூகுமாரமான உன் திருவடிகளினால் உதைத்த போது
நொந்திடும் என்று அஞ்சினேன் காண்- உன் திருவடிகளுக்கு நோவு யுண்டாகுமே என்று பயப்பட்டேன் காண்-
என்னுடைய அச்சம் –
யாயர் கூட்டத்தளவன்றாலோ-இடையருடைய அச்சத்தின் அளவல்ல காண்
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் –உன்னைக் கொல்வதற்காக மிக்க வஞ்சனைகளைச் செய்த கம்சனை –
உன்னுடைய வஞ்சனையாலே -உன் கையில் சிக்கும் படி செய்து கொன்றவனே
முலை யுணாயே –

————————————-

தீய புந்திக் கஞ்சனுன்மேல் சினமுடையன் சோர்வு பார்த்து
மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து என் முலை யுணாயே –2-2-5-

பதவுரை

வாசுதேவா–கண்ணபிரானே!
தீய புந்தி–துஷ்ட புத்தியை யுடைய
கஞ்சன்–கம்ஸனானவன்
உன் மேல்–உன் பக்கலிலே
சினம் உடையவன்–கோபங்கொண்டவனாயிரா நின்றான்;
சோர்வு பார்த்து–(நீ) தனியாயிருக்கும் ஸமயம் பார்த்து
மாயம் தன்னால்–வஞ்சனையால்
வலைப் படுக்கில்–(உன்னை) அகப்படுத்திக் கொண்டால்
வாழகில்லேன்–(நான்) பிழைத்திருக்க சக்தை யல்லேன்;
தாயர்–தாய்மார்களுடைய
வாய் சொல்–வாயினாற் சொல்லுவது
கருமம் கண்டாய்–அவச்ய கர்த்தவ்ய கார்யமாகும்;
சாற்றி சொன்னேன்–வற்புறுத்திச் சொல்லுகிறேன்;
போக வேண்டா–(நீ ஓரிடத்திற்கும்) போக வேண்டா;
ஆயர் பாடிக்கு–திருவாய்ப்பாடிக்கு
அணி விளக்கே–மங்களதீபமானவனே!
அமர்ந்து வந்து–பொருந்தி வந்து
என் முலை உணாய்

விளக்க உரை

தேவகியின் மக்களறுவரைக் கல்லிடை மோதி சிசுஹத்திசெய்த கொடிய கம்ஸன் ‘தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்குப் பகை’
என்ற ஆகாயவாணியினாலும் பின்பு துர்க்கை சொல்லிப் போனதனாலும் ‘நம் பகைவன் கை தப்பிப்போய் நமக்கு
அணுக வொண்ணாத இடத்திலே வளரா நின்றான்; அவனை எப்படியாவது கண்டு பிடித்துக் கொன்று விட வேணும்’ என்று
உன்மேல் மிகவும் கறுக்கொண்டு ஆஸுர ப்ரக்ருதிகளை ஸ்தாவர ஜங்கமங்களான வடிவுகளைக் கொண்டு
நீ திரியுமிடங்களில் நிற்கும்படி ஏவியிருக்கிறான்! அவன் அவர்களைக் கொண்டு நீ துணை யற்றுத் திரியும் போது பார்த்து
உனக்குத் தெரியாமலே தப்ப முடியாதபடி வஞ்சனையால் உன்னைப் பிடித்துக் கொண்டால் பின்னை என்னால் உயிர் தரித்திருக்க முடியாது;
என் பேச்சைப் பேணி இங்கேயே இருக்கக் கடவாய் என்று வற்புறுத்துகின்றாள்.
(அணிவிளக்கே) உனக்கு ஏதேனும் தீங்குவந்தால் இத் திருவாய்ப்பாடி யடங்கலும் இருள் மூடிவிடுங்காணென்கிறாள்.
சோர்வு – தளர்ச்சி; இலக்கணையால் தனிப்பட்டிருத்தலைக் காட்டும். கருமம் -அமர்ந்து உவந்து என்றும் பிரிக்கலாம்.

வாசுதேவா-கண்ண பிரானே-
தீய புந்திக் கஞ்சனுன்மேல் சினமுடையன் -துஷ்ட புத்தியை யுடைய கம்சனானவன் உன் பக்கலிலே கோபம் கொண்டவனாய் இரா நின்றான்
சோர்வு பார்த்து-நீ தனியாய்ப் இருக்கும் சமயம் பார்த்து -சோர்வு -தளர்ச்சி -லக்ஷணையால்-தனிமை
மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன்-வஞ்சனையால் உன்னை அகப்படுத்திக் கொண்டால் நான் பிழைத்து இருக்க சக்தை அல்லேன்
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய் –தாய்மார்களுடைய வாயினால் சொல்வது அவசிய கர்த்தவ்ய காரியமாகும்
சாற்றிச் சொன்னேன் -வற்புறுத்திச் சொல்கிறேன்
போக வேண்டா-நீ ஓர் இடத்துக்கும் போக வேண்டா
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து -திரு வாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே -பொருந்தி வந்து
உனக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்தால் இத் திரு வாய்ப்பாடி அடங்கலும் இருள் மூடி விடும் காண்
என் முலை யுணாயே —

—————————————

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் யுன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா முலை யுணாயே–2-2-6-

பதவுரை

மின் அனைய–மின்னலை யொத்த
நுண்–ஸூக்ஷ்மமான
இடையார்–இடையை யுடைய பெண்களின்
விரி குழல் மேல்–விரிந்த (பரந்த) கூந்தலின் மேல்
நுழைந்த–(தேனை உண்ணப்) புகுந்த
வண்டு–வண்டுகள்
(தேனை யுண்டு களித்து)
இன் இசைக்கும்–இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
இனிது–போக்யமாக
அமர்ந்தாய்–எழுந்தருளி யிருப்பவனே!
உன்னை கண்டார்–உன்னைப் பார்த்தவர்
இவனை பெற்ற வயிறு உடையாள்–இவனைப் (பிள்ளையாகப்) பெற்ற வயிற்றை யுடையவள்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ–என்ன தபஸ்ஸு பண்ணினாளோ!
என்னும்–என்று கொண்டாடிச் சொல்லுகிற
வார்த்தை–வார்த்தையை
எய்துவித்த–(எனக்கு) உண்டாக்கின
இருடீகேசா–ஹ்ருஷீகேசனே!
முலை உணாய்.

விளக்க உரை

(என்ன நோன்பித்யாதி) ரூபணசேஷ்டி தாதிகளாலே இப்படி லோக விலக்ஷ்ணனாயுள்ள இப் பிள்ளையைப் பெற்றாளும் ஒருத்தியே!
அவள் தான் பூர்வ ஜந்மத்தில் நோற்ற நோன்பு என்னோ! என்று என்னைப் பலரும் கொண்டாடும்படி பிறந்தவனே! என்று
யசோதை கண்ணனை தன்வசப் படுத்தமைக்காகப் புகழ்ந்து கூறுகிறபடி.
ஹ்ருஷீகேசன் – (ரூப குணாதிகளாலே) ஸர்வேந்த்ரியங்களையும் கவருமவள்.

மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு-மின்னலை ஒத்த ஸூஷ்மமான இடையை யுடைய பெண்களின்
விரித்த -பரந்த -கூந்தலின் மேலே -தேனை உண்ணப் புகுந்த வண்டுகள்
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் யுன்னைக் கண்டார்-தேனை யுண்டு களித்து-இனிதாக ஆளத்தி வைத்துப் பாடா நின்ற
ஸ்ரீ வில்லி புத்தூரிலே போக்யமாக நித்ய வாசம் செய்து அருளும் உன்னைப் பார்த்தவர்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு யுடையாள்-இவனைப் பிள்ளையாகப் பெற்ற திரு வயிறு யுடையவள்
என்ன தபஸ் ஸூ பண்ணினாளோ- இவனை தன் வசப்படுத்துகைக்காக புகழ்ந்து பேசுகிற படி –
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீ கேசா -என்று கொண்டாடிச் சொல்லுகிற வார்த்தையை எனக்கு யுண்டாக்கின ஹ்ருஷீ கேசனே
ரூப குணாதிகளாலே சர்வ இந்திரியங்களும் கவருமவன் –
முலை யுணாயே–

————————————————

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே -2-2-7-

பதவுரை

கண்டவர்கள்–(உன்னைப்) பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார்–(தமது கணவர்க்கு) மனைவியாக யிருக்கின்ற ஸ்த்ரீகள்
நன் ஒப்பாரை–உன்னைப் போன்ற குழந்தைகளை
பெறுதும்–பெறுவோம் (பெற வேணும்)
என்னும்–என்கிற
ஆசையாலே–ஆசையினாலே
போக்கு ஒழிந்தார்–(உன்னை விட்டுப்) போதலைத் தவிர்ந்தார்கள்;
வண்டு உலாம்–வண்டுகள் ஸஞ்சரிக்கிற
பூ–புஷ்பங்களை யணிந்த
குழலினார்–கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால்–(தமது) இரண்டு கண்களினாலும்
கலக்க நோக்கி–(உனது) திருமேனி முழுவதும் பார்த்து
உன்–உன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
உண்ண வேண்டி–பாநம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான்–(உன்னை) எடுத்துக் கொண்டு போவதற்கு
வந்து நன்றார்–வந்து நிற்கிறார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ முலை உணாய்.

விளக்க உரை

முதலிரண்டடியால் – பதிவிரதைகளான பெண்களின் மநோரதமும்
பின் ஒன்றரையடியால் – யுவதிகளாய் போகமநுபவிக்க விரும்பின பெண்களுடய மநோரதமும் சொல்லுகிறதென்க.
அவற்றில் வேண்டினபடி ஆகிறது. இப்போது நீ முலையுண்ண வரவேணுமென்கிறாள்.
பெண்டிர் = இர் – பலர்பல் விகுதி. பெறுதும் – தன்மைப் பன்மை வினை முற்று. ஆஸா – வடசொல்.
கலக்க நோக்குதல் – ஒவ்வொரு அங்கத்தினுடையவும் ஸௌந்தர்யத்தை நோக்குதல்.

கண்டவர்கள்-உன்னைப் பார்த்தவர்களான
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே-தமது கணவருக்கு மனைவியராய் இருக்கின்ற ஸ்த்ரீகள்
உன்னைப் போன்ற குழந்தையைப் பெற வேணும் என்கிற ஆசையினாலே
போக்கு ஒழிந்தார் -உன்னை விட்டுப் போதலைத் தவிர்ந்தார்கள்
வண்டுலாம் பூம் குழலினார் -வண்டுகள் சஞ்சரிக்கிற புஷ்பங்களை அணிந்த கூந்தலை யுடையவர்கள்
கண் இணையால் கலக்க நோக்கி-தமது இரண்டு கண்களினாலும் உனது திரு மேனி முழுதும் பார்த்து
உன் வாய் அமுது உண்ண வேண்டிக்-உன்னுடைய அதர அம்ருதத்தை பானம் பண்ண ஆசை கொண்டவர்களாய்
கொண்டு போவான் வந்து நின்றார் -உன்னை எடுத்துக் கொண்டு போவதற்கு வந்து நிற்கிறார்கள் –
கோவிந்தா நீ – கோவிந்தனே முலை யுணாயே –
முதல் இரண்டு அடியாலே பதி விரதைகளான ஸ்த்ரீகள் மநோ விருத்தி –
பின் ஒன்றரை அடிகளால் செல்வச் சிறுமியர்களான கோபிகளின் மநோ விருத்தி –

——————————————————

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய் யுன்
திரு மலிந்து திகழ் மார்வு தேக்க வந்து என்னல்குல் ஏறி
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-

பதவுரை

இரு மலை போல்–இரண்டு மலை போலே (வந்து)
எதிர்ந்த–எதிர்த்து நின்ற
மல்லர் இருவர்–(சாணூர முஷ்டிகரென்னும்) இரண்டு மல்லர்களுடைய
அங்கம்–உடம்பை
எரி செய்தாய்–(பயத்தாலே) எரியும்படி செய்தவனே!
வந்து–(நீ) வந்து
என் அல்குல் ஏறி–என் மடிமீது ஏறிக் கொண்டு
உன்–உன்னுடைய
திரு மலிந்து திகழும் மார்வு–அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது
தேக்க–(முலைப் பாலால்) நிறையும்படி
ஒரு முலையை–ஒரு முலையை
வாய் மடுத்து–வாயிலே வைத்துக் கொண்டு
ஒரு முலையை–மற்றொரு முலையை
நெருடிக் கொண்டு–(கையினாலே) நெருடிக் கொண்டிருந்து
(மிகுதியாயிருப்பது பற்றிப் பால் வாயிலடங்காமையினால்)
ஏங்கி ஏங்கி–இளைத்திளைத்து
(இப்படி)
இரு முலையும்–இரண்டு முலையையும்
முறை முறை ஆய்
மாறி மாறி
இருந்து–பொருந்தியிருந்து
உணாய்–உண்பாயாக.

விளக்க உரை

திருமலிந்து திகழுமார்வு = திரு – பிராட்டி என்றுமாம். தேக்க – தேங்க என்பதன் விகாரம்.
ஒரு முலையை வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு முலையின் காம்பைக் கையால் நெருடிக் கொண்டு பால் மிகுதியினால்
மூச்சுத் தணக்க மாறிமாறி முலை யுண்ணுதல் – குழந்தைகளினியல்பு;
“ஒரு கையாலொரு முலை முகம் நெருடா – வாயிலே முலை யிருக்க” என்ற பெருமாள் திருமொழியுங் காண்க.
இது – தன்மை நவிற்சி (ஸ்வபாவோக்தி).

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அரங்கம் எரி செய்தாய் -இரண்டு மலை போலே வந்து எதிர்த்து நின்ற சாணூர முஷ்டிகர்
என்னும் இரண்டு மல்லர்களுடைய உடம்பை பயத்தாலே எரியும் படி செய்தவனே
வந்து என் அல்குல் ஏறி -நீ வந்து -என் மடி மீது ஏறிக் கொண்டு
யுன் திரு மலிந்து திகழ் மார்வு தேக்க -யுன்னுடைய அழகு நிரம்பி விளங்குகின்ற மார்பானது-முலைபின் பால் நிறையும் படி
திரு -பிராட்டி என்றுமாம்
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு-ஒரு முலையை வாயிலே வைத்துக் கொண்டு
மற்றொரு முலையை கையிலே நெருடிக் கொண்டு இருந்து
மிகுதியாய் இருப்பது பற்றிப் பால் வாயில் அடங்காமையினால்
ஏங்கி ஏங்கி-இளைத்து இளைத்து –
இப்படி
இரு முலையும் முறை முறையா இருந்து உணாயே -இரண்டு முலையையும் மாறி மாறிப் பொருந்தி இருந்து உண்பாயாக
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா –வாயிலே முலை இருக்க -பெருமாள் திரு மொழி

————————————

அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா வம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை யுணாயே -2-2-9-

பதவுரை

அம்ம–தலைவனே!
(அஸுரர்கள் கையிலகப்பட்டு இறவாமலிருக்கும்படி தேவர்கள் அம்ருதத்தைப் பெறுதற்கு உன்னை யடைந்த)
அங்கு–அக் காலத்திலே
விம்ம–(அவர்கள் வயிறு) நிரம்பும்படி
அமரர்க்கு–(அந்த) தேவர்களுக்கு
அமுது அளித்த–(க்ஷீராப்தியைக் கடைந்து) அம்ருதத்தை (எடுத்துக்) கொடுத்த
அமரர் கோவே–தேவாதிராஜனே!
அம் கமலம் போது அகத்தில்–அழகிய தாமரைப் பூவினுள்ளே
அணி கொள் முத்தம் சிந்தினால் போல்–அழகிய முத்துகள் சிந்தியதை ஒத்திருக்கும்படி
செம் கமலம் முகம்–செந்தாமரை மலர் போன்ற (உனது) முகமானது
வியர்ப்ப–வியர்த்துப் போக
இ முற்றத்தூடே–இந்த முற்றத்திலேயே
தீமை செய்து–தீம்பைச் செய்து கொண்டு
அங்கம் எல்லாம் புழுதி ஆக–உடம்பெல்லாம் புழுதி படியும்படி
அளைய வேண்டா–புழுதி யளையாதே;
முலை உணாய்–முலை யுண்ண வாராய்.

விளக்க உரை

புழுதி யளையாமல் முலை யுண்ண வாராய் என்கிறாள். செந்தாமரை போன்ற திரு முகத்திலே வியர்வைத் துளிகள்
அரும்புதற்கு ஒரு அபூதோபமை கூறுகின்றார். முதலடியில் – தாமரைமலரில் முத்துக்கள் சிந்தியிருந்தாலொக்குமென்கிறார்.

அம்ம–தலைவனே -வியப்பைக் குறிக்கும் இடைச் சொல் -என்றுமாம் -கேள் -என்றுமாம்
இறவாமல் இருக்க தேவர்கள்- அஸூரர்கள் கையிலும் அகப்பட்டு -அம்ருதத்துக்காக உன்னை அடைய –
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே -அக்காலத்திலே அவர்கள் வயிறு நிரம்பும் படி அந்த தேவர்களுக்கு –
ஷீராப்தியைக் கடைந்து அம்ருதத்தை எடுத்துக் கொடுத்த தேவாதி ராஜனே
அங்கமலப் போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல்-அழகிய தாமரைப் பூவினுள்ளே அழகிய முத்துக்கள் சிந்தியதை ஒத்து இருக்கும் படி
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம் முற்றத்தூடே-செந்தாமரை மலர் போன்ற உனது திரு முகமானது வியர்த்துப் போக இந்த முற்றத்திலே
அங்கமெல்லாம் புழுதியாக வளைய வேண்டா விம்ம–தீமையைச் செய்து கொண்டே உடம்பு எல்லாம் புழுதி படியும் படி புழுதி அளையாதே
முலை யுணாயே –

—————————————-

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடியாடி யசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய் விடாதே யுத்தமா நீ முலை யுணாயே –2-2-10-

பதவுரை

ஓடஓட–(குழந்தைப் பருவத்துக்குத் தக்கபடி) பதறி ஓடுவதனால்
ஒலிக்கும்–சப்திக்கின்ற
கிண் கிணிகள்–பாதச் சதங்கைகளினுடைய
ஓசைப் பாணியாலே–ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–இடைவிடாது பாடிக் கொண்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை–அப் பாட்டிற்குத் தகுந்த ஆட்டத்தை
அசைந்து அசைந்திட்டு–வலப் புறமாகவும் இடப் புறமாகவும் அசைந்து
ஆடி ஆடி–ஆடிக் கொண்டு
வருகின்றாயை–வருகின்ற உன்னை
பற்பநாபன் என்று இருந்தேன்–(வேறோபரணம் வேண்டாதபடி) பத்மத்தை நாபியிலுடையவனென்று எண்ணி யிருந்தேன்;
நீ–நீ
ஆடி–ஆடிக்கொண்டே
ஓடிஓடிபோய் விடாதே–(என் கைக்கு எட்டாதபடி) ஓடிப் போய் விடாதே
முலை உணாய்.

விளக்க உரை

கண்ணபிரான் நிடந்து வரும்போது திருவடிச் சதங்கைகளின் ஓசை தானே பாட்டாயிருக்குமென்க.
(பற்பநாபனென்றிருந்தேன்) “கொப்பூழிலெழு கமலப்பூவழகர்” என்றபடி வேறொரு ஆபரணமும் வேண்டாமல்
திருநாபீ கமலமே ஆபரணமாம்படி யிருப்பானொருவனன்றோ இவன்! இவனுக்கு வேறொரு பாட்டும் கூத்தும் வேணுமோ?
சதங்கையோசையும் நடையழகுமே பாட்டும் ஆட்டமுமாய் அமைந்த ஆச்சரியம் என்னே! என்று வியப்புக் கொண்டிருந்தேன் என்க.

இனி – இவன் அழிந்து கிடந்த வுலகத்தை நாபீகமலத்தில் உண்டாக்கின வனன்றோ ஆகையால் நம்முடைய
ஸத்தையையுந் தருகைக்காக வருகிறானென்றிருந்தேன் என்றும் விசேஷார்த்தம் கூறுவர்.

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே–குழந்தை பருவத்துக்குத் தக்க பதறி ஓடுவதனால் சப்திக்கின்ற
பாதச் சதங்கைகளினுடைய ஓசையாகிற சப்தத்தால்
பாடிப் பாடி–அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து – இடைவிடாது பாடிக் கொண்டு அப்பாட்டுக்கு தகுந்த
ஆட்டத்தை வலப்புறமாகவும் இடப்புறமாகவும் அசைந்து
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்-ஆடிக் கொண்டு வருகின்ற உன்னை வேறொரு ஆபரணம் வேண்டாத படி
பத்மத்தை திரு நாபியில் யுடையவன் என்று எண்ணினேன் -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -அன்றோ –
யுத்தமா ஆடி ஓடியோடிப் போய் விடாதே நீ -உத்தமனே ஆடிக் கொண்டே என் கைக்கு எட்டாத படி ஓடிப் போய் விடாதே
இவன் அழிந்து கிடந்த உலகத்தை திரு நாபி கமலத்தில் யுண்டாக்கி அருளினவன் அன்றோ
ஆகையால் நம்முடைய சத்தையும் தருகைக்காக வருகிறான் என்று இருந்தேன் -என்றுமாம்
முலை யுணாயே

———————————

வாரணிந்த கொங்கை யாச்சி மாதவா யுண் என்ற மாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே –2-2-11-

பதவுரை

வார் அணிந்த–கச்சை அணிந்து கொண்டிருக்கிற
கொங்கை–ஸ்தநங்களையுடைய
ஆய்ச்சி–யசோதை
மாதவா–மாதவனே!
உண்–முலையை (உண்பாயாக)
என்ற–என்று (வேண்டிச்) சொன்ன
மாற்றம்–வார்த்தையைக் குறித்தனவான
நீர் அணிந்த குவளை–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழுநீரின்
வாசம்–நல்ல வாசனை
நிகழ நாறும்–ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்தவரும்
பார் அணிந்த–பூமி முழுவதும் அழகாகப் பரவிய
தொல் புகழான்–பழமையான கீர்த்தியை யுடையவருமான
பட்டர்பிரான்–பெரியாழ்வார் அருளிச் செய்த
பாடல்–பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்
சீர் அணிந்த–குணங்களாலழகிய
செம் கண் மால் மேல்–சிவந்த திருக் கண்களை யுடைய திருமாலிடத்தில்
சென்ற–பதிந்த
சிந்தை–மநஸ்ஸை
பெறுவர்–அடைவார்கள்

விளக்க உரை

வாரணிந்த கொங்கை யாய்ச்சி – ராஜாக்களுக்கு போக்யமான பொருளை வேலைக்காரர் ­மூடிக் கொண்டு போவது போல
கண்ணனுக்கு விருப்பமான ஸ்தநங்களை யசோதை பிறர் கண்படாதபடி கச்சினால் மறைத்து வைப்பாளென்க.
மாற்றம் (ஆகிய) பாடல் எனத் தொடரும். குவளை – ‘குவலம்’ என்ற வடசொல் விகாரம்; ‘குவலயம்’ என்பது மதுவே;
“குவாலயம் குவலயம் குவாலம் குவலம் குவம்” என்பது – வடமொழி நிகண்டு.
வாசம் – ‘வாஸநா’ என்ற வடசொற் சிதைவு. ‘நிகழ்நறும்’ என்ற பாடம் பொருந்தாது.

வாரணிந்த கொங்கை யாச்சி மாதவா யுண் என்ற மாற்றம்-கச்சை அணிந்து கொண்டு இருந்த ஸ்தநங்களை யுடைய யசோதை –
மாதவன் முலை யுண்பாயாக என்று வேண்டிச் சொன்ன வார்த்தையைக் குறித்தனவான
ராஜாக்களுக்கு போக்கிய வஸ்துக்களை வேலைக்காரர் மூடிக் கொண்டு போவது போலே இவளும் பிறர் கண் படாத படி
முலையை மூடி வார் அணிந்து இருப்பாள்
நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லி புத்தூர்–நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற செங்கழு நீரின்
நல்ல வாசனை ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவரும்
குவளை -குவலம்-என்னும் வடசொல்லின் விகாரம் -குவலயம் என்னும் அதுவே
குவாலயம்-குலவயம்-குவாலம்-குவலம் -குவம்-வடமொழி நிகண்டு
பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார்-பூமி முழுதும் அழகாக பரவிய பழமையான கீர்த்தியையும் யுடையவரான
பெரியாழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை ஓத வல்லவர்
சீரணிந்த செங்கண் மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே -குணங்களால் அழகிய சிவந்த திருக் கண்களையுடைய
திருமாலினிடத்தே பதிந்த மனசை அடைவார்கள் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரியாழ்வார் திருமொழி-1-7- -திவ்யார்த்த தீபிகை –

February 15, 2018

அவதாரிகை –
கண்ண பிரான் தளர்நடை நடந்ததைத் தத் காலத்திலே ஸ்ரீ யசோதா பிராட்டி கண்டு அனுபவித்தாப் போலே
ஆழ்வார் தாமும் தம்முடைய ப்ரேம பாரம்யத்தாலே தம்மை அவளாகவே பாவித்து கண்ணனுடைய
அந்த சேஷ்டிதத்தை ப்ரத்யக்ஷம் போலேவே கண்டு அனுபவிக்கிறார் இத் திரு மொழியிலே

————————

தொடர் சங்கிலி கை சலார் பிலார் என்னத் தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல்
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப வுடை மணி பறை கறங்கத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-1-

பதவுரை

சங்கிலி கை தொடர்–இரும்புச் சங்கிலியின் தொடர்பு
சலார் பிலார் என்ன–’சலார்பிலார்’ என்று சப்திக்கவும்
தூங்கு–தொங்குகின்றனவும்
பொன்–பொன் கயிற்றிற்கட்டி யிருப்பனவுமான-
மணி–மணிகள்
ஒலிப்ப–ஒலிக்கவும்
படு–உண்டான
மும்மதம் புனல்–மூன்று வகையான மதநீர்
சோர–பெருகவும்
நின்று–இருந்து கொண்டு
வாரணம்–யானை
பைய–மெல்ல
ஊர்வது போல்–நடந்து போவது போல
கிண் கிணி–காற் சதங்கைகள்
உடன் கூடி–தம்மிலே தாம் கூட்டி
ஆரவாரிப்ப–சப்திக்கவும்
உடை–திரு வரையில் கட்டிய
மணி–சிறு மணிகள்
பறை கறங்க–பறை போல் சப்திக்கவும்
சார்ங்கம்–சார்ங்கமென்னும் வில்லை
பாணி–கையிலேந்திய பிள்ளையாகிய இவன்
தட தாள் இணை கொண்டு–(தன்னுடைய) பெரிய பாதங்களிரண்டினால்
தளர் நடை–இளநடையை
நடவானோ–நடக்கமாட்டானோ?
[நடக்கவேணும். ]

விளக்க உரை

கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கை கிண்கிணென்று சப்திக்கவும்,
இடையிற் கட்டிய சிறு மணிகள் பறை போலொலிக்கவும், நடக்கின்ற ஆயாஸத்தினால் உடலில் வேர்வைநீர் பெருகவும்
நேருமாதலால் இதற்கு ஓர் ஏற்ற உபமாநம் கூறுகின்றார் முன்னடிகளில்;
யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு
நடக்கையாலே அந்தச் சங்கிலித் தொடர் சலார்பிலாரென்று சத்திக்கவும்,
பொன் கயிற்றினால் கட்டித் தனது இருபுறத்திலும் தொங்கவிட்ட மணிகள் ஒலிக்கவும்,
மதநீர்பெருகவும் மெல்ல நடக்கும் யானை ஏற்ற உவமையாம். சலார்பிலார்-ஒலிக்குறிப்பு.
மூன்று+மதம்=மும்மதம்: “மூன்றனுறுப்பழிவும் வந்ததுமாகும்” என்னும் சூத்திரவிதி அறிக;
கன்னமிரண்டும் குறியொன்றுமாகிய மூவிடங்களிலும் தோன்றும் மதம். வாரணம்- வடசொல்.
உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப-அரைச் சதங்கை (நழுவிவிழுந்து திருவடிகளிலே சேர்ந்து இழுப்புண்டு
வருகையாலே அதிலுண்டான சதங்கைகள்) தம்மிலெகூடிச் சப்திக்க என்றுமாம்.
இணைதாள்-தமக்குத்தாமே ஒப்பான திருவடிகள் என்றலுமொன்று. சார்ங்கபாணி-வடசொற்றொடர்.
தளர்நடை-(திருவடிகளை நன்றாகப் பதியவைத்து நடக்கும் பருவமன்றாகையாலே) தட்டித் தடுமாறி நடக்கும் நடை.

தொடர் சங்கிலிகை -இரும்புச் சங்கிலியின் தொடர் –
சலார் பிலார் என்னத் –சலார்-பிலார்-என்று சப்திக்கவும்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்–தொங்குகின்றனவும் -பொன் கயிற்றில் கட்டி இருப்பனவுமான மணிகள் ஒலிக்கவும்
படு மும்மதப் புனல் சோர -நின்று –உண்டான மூன்று வகையான மத நீர் பெருக்கவும் இருந்து கொண்டு –
கன்னம் இரண்டிலும் -குறி ஒன்றிலும் -மூன்று மத ஸ்தானம்
வாரணம் பைய ஊர்வது போல்-யானை மெல்ல நடந்து போவது போலே
உடன் கூடி கிண்கிணி யாரவாரிப்ப -கால் சதங்கைகள் தம்மிலே தாம் கூடி சப்திக்கவும்
வுடை மணி பறை கறங்கத்–திருவரையிலே கட்டிய சிறு மணிகள் பறை போலே சப்திக்கவும்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –சார்ங்கம் என்னும் வில்லைக் கையிலே ஏந்திய
பிள்ளையாகிய இவன் தன்னுடைய பெரிய பாதங்கள் இரண்டினால்-இள நடையை நடக்க மாட்டானோ -நடக்க வேணும் –
திருவடிகளை நன்றாகப் பதித்து வைத்து நடக்கும் பருவம் அன்று ஆகையாலே-தட்டுத் தடுமாறி நடக்கும் நடை –

——————————-

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும் சிறு பிறை முளைப் போலே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட வனந்த சயனன்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ -1-7-2-

பதவுரை

செக்கரிடை–செவ் வானத்திலே
நுனி கொம்பில்-கொம்பின் நுனியிலே
தோன்றும்–காணப்படுகிற
சிறுபிறை முளை போல–சிறிய பிறைச் சந்திரனாகிய முளையைப்போல,
நக்க–சிரித்த
செம் அவர் வாய்–மிகவுஞ் சிவந்த வாயாகிய
தி்ண்ணை மீது–மேட்டிடத்தில்
நளிர் வெண் பல் முளை–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள்
இலக–விளங்க
அஃகுவடம்–சங்கு மணி வடத்தை
உடுத்து–(திரு வரையில்) தரித்த
ஆமைத் தாலி–ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
பூண்ட–கழுத்திலணி்ந்து கொண்டவனும்
அனந்த சயனன்–திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
தக்க மா மணிவண்ணன்–தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்–வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .

விளக்க உரை

புன்முறுவல் செய்துகொண்டே தளர்நடை நடக்கவேணுமென்று இதனால் பிரார்த்திக்கிறபடி, கண்ணபிரானது மிகவுஞ் சிவந்த
வாயாகிய மேட்டிடத்தில் வெளுத்த பல்லின் முளைகள் பிரகாசிப்பதானது –
செவ்வானத்தில் தோன்றுகின்ற குளிர்ந்த வெள்ளிய சிறு பிறைபோல இருக்குமென்க.
‘நக்க‘ என்றது வாய்க்கு விசேஷணம். “வெண்பல் முளையிலகத் தளர்நடை நடவானோ” என்று அந்வயம்.
‘சந்திரன் எங்கே இருக்கிறான்‘ என்றால், ‘அந்த மரக்கிளைக்கு மேலிருக்கிறான்‘ என்று உலகவழக்கிற் காட்ட
வேண்டி யிருப்பதனால், ‘நுனிக் கொம்பில் தோன்றுஞ் சிறு பிறை முளை‘ என்றார்.
சிறுபிறை முளை யென்றது மூன்றாம் பிறையை யென்பர்.
மா மணி – நீலாத்நம், மா – கறுப்புக்கும் பெயர்.

செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும்-செவ்வானத்திலே கொம்பின் நுனியில் காணப் படுகிற
சிறு பிறை முளைப் போலே-சிறிய பிறைச் சந்த்ரனாகிய முளையைப் போலே -சிறு பிறை முளை -மூன்றாம் பிறை -என்பர் –
சந்திரன் எங்கே -அந்த மரக் கிளையின் மேல் இருக்கிறான் -என்று உலக வழக்கு பாலர்களுக்கு சொல்வது உண்டே
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே -சிரித்த மிகச் சிவந்த வாயாகிய மேட்டிடத்திலே
நளிர் வெண் பல் முளை இலக–குளிர்ந்த வெண்மையாகிய பல்லின் முளைகள் விளங்க
அக்கு வடமுடைத் தாமைத் தாலி பூண்ட -சங்கு மணி வடத்தை திருவரையிலே தரித்து -ஆமையின் வடிவமாகச்
செய்யப் பட்ட தாலியை திருக் கழுத்தில் அணிந்து கொண்டவனும்
வனந்த சயனன்-திருவனந்த வாழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுபவனும்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் –தகுதியான நீல மணி போலே நிறத்தை யுடையவனுமான -வஸூ தேவ புத்திரனான இவன்
மா மணி நீல ரத்னம் -கறுப்புக்கும் பெயர் –
தளர்நடை நடவானோ –

————————————————–

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்ப்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன் தளர்நடை நடவானோ –1-7-3-

பதவுரை

மின் கொடியும்–கொடி மின்னலும்
ஓர் வெண் திங்களும்–அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ்-(அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய்–பரி வேஷத்தையும் போல
பின்னல்–(திருவரையில் சாத்தின) பொற் பின்னலும்
துலங்கும் அரசிலையும்–விளங்குகின்ற அரசிலை போல வேலை செய்த ஒரு திருவாபரணமும்
பீதகம் சிறு ஆடையோடும்–(இவ்விரண்டையுஞ் சூழ்ந்த) பொன்னாலாகிய சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்,
மி்ன்னில்–மின்னலினால்
பொலிந்தது–விளங்குவதாகிய
ஓர்–ஒப்பற்ற
கார் முகில் போல–காளமேகம் போல
கழுத்தினில் காறையோடும்–கழுத்திலணிந்த காறையென்னும் ஆபரணத்தோடும் (கூடிய)
தன்னில் பொலிந்த–(இவ்வாபரணங்கள் திருமேனிச்சுமை என்னும்படி இயற்கையான) தனது அழகினால் விளங்குகின்ற
இருடீகேசன்–‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன்
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

மின் + கொடி மின்னுக்கொடி. “மின் பின் பன் கன் தொழிற்பெயரனைய” எனச் சிறப்புவிதிகாண்க.
பரிவேடம் – ‘பரிவேஷம்‘ என்ற வடசொற்றிரிபு. சந்த்ரனைச் சுற்றிச் சில காலங்களிற் காணப்படும் ரேகை.
இது ஊர்கோள் எனவும் படும்.
பொற் பின்னலும் அதைச்சேர்ந்து விளங்குகின்ற அரசிலைப்பணியும் இவ்விரண்டையுஞ் சூழ்ந்துகொண்டு விளங்குகின்ற
பீதகச் சிற்றாடையும் முறையே, மின்னற் கொடியையும் அதைச் சார்ந்து விளங்கும் களங்கமற்ற சந்திரனையும்
இவ்விரண்டையுஞ் சூழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கோளையும் போலுமென்க. இல்பொருளுவமை:
அரசிலைப் பணிக்கு வெண் திங்களை உவமையாகச் சொன்னதனால், அவ் வாபரணம் வெள்ளியினாற் செய்யப்பட்டதென விளங்கும்.
கருநிறக் கழுத்திற் பொற்காறை விளங்குவது – காள மேகத்திற் செந்நிற மின்னற் கொடி விளங்குவது போலும்.

மின்னுக் கொடியுமோர் வெண் திங்களும் -கொடி மின்னலும் -அதனோடே சேர்ந்து இருப்பதும்
களங்கம் இல்லாத முழுவதும் வெண்மையாயுள்ள ஒரு சந்திரனும்
சூழ் பரி வேடமுமாய்ப்-அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டு இருக்கும் பரி வேஷத்தைப் போலே
சந்திரனைச் சுற்றி சில காலங்களில் காணப் படும் ரேகைக்கு பரி வேஷம் -இத்தை ஊர் கோள்-என்றும் சொல்வர்
பின்னல் துலங்கும் அரசிலையும் -திருவரையில் சாத்தின பொன் பின்னலும் -விளங்குகின்ற அரசிலை போலே
வேலை செய்த தொரு திரு ஆபரணமும் வெண் திங்கள் -உவமை என்பதால் இது வெள்ளியால் செய்த திரு ஆபரணமாக
பீதகச் சிற்றாடையொடும்-இவ்விரண்டையும் சூழ்ந்த பொன்னாலாகிய சிறிய திரு வஸ்திரமும் –
ஆகிய இவற்றோடும்
மின்னல் பொலிந்ததோர் கார் முகில் போலக் -மின்னலினால் விளங்குவதாகிய ஒப்பற்ற காள மேகம் போலே
கழுத்தினில் காறையொடும்-திருக் கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் திரு ஆபரணத்தோடும் கூடிய
தன்னில் பொலிந்த -இவ்வாபரணங்கள் திரு மேனிச் சுமை என்னும் படி இயற்கையான தனது அழகினால் விளங்குகின்ற
இவ்வாபரணங்கள் தங்களோடும் சிற்றாடையோடும் ஒன்றி பொருந்தி என்றுமாம்
விருடீகேசன் –ஹ்ருஷீகேசன் என்னும் திரு நாமம் யுடைய இவன் –
தளர்நடை நடவானோ

———————————–

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் கணகண சிரித்து  உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திரு மார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிகின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ –1-7-4-

பதவுரை

கன்னல் குடம்–கருப்பஞ்சாறு நிறைந்த குடம்
திறந்தால்–பொள்ளல் வி்ட்டால் (அப் பொள்ளல் வழியாகச் சாறு பொசிவதை)
ஒத்து–போன்று
ஊறி–(வாயில் நின்றும் நீர்) சுரந்து வடிய
கண கண–கண கண வென்று சப்தமுண்டாகும்படி சிரித்து
உவந்து–ஸந்தோஷித்து
முன் வந்து நின்று–என் முன்னே வந்து நின்று
முத்தம் தரும்–(எனக்கு) முத்தங்கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன்–எனது முகில் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
திரு–பெரியபிராட்டியார்
மார்வன்–மார்பிற் கொண்டுள்ளவனுமான இவன்
தன்னை பெற்றேற்கு–தன்னைப் பெற்ற எனக்கு
தன்–தன்னுடைய
வாய் அமுதம்–அதராம்ருதத்தை
தந்து–கொடுத்து
என்னை–(தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய) என்னை
தளிர்ப்பிக்கின்றான்–தழைக்கச் செய்கிறான்,
(இவன்)–
தன் ஏற்றும்–தன்னோடு எதிர்க்கிற
மாற்றலர்–சத்ருக்களுடைய
தலைகள் மீதே–தலைகளின் மேலே (அடியிட்டு)
தளர்நடை நடவானோ.

விளக்க உரை

தன் வாயில் நின்றும் கரும்பு ரஸம்போல் இனிமையான நீர் வெளிப்பட்டு வடியும்படி சிரித்துக்கொண்டு வந்து
எனக்கு முத்தங் கொடுக்கும் தன்மையுள்ளவன் கண்ணனென்பது – முன்னிரண்டடிகளின் கருத்து.
கண கண – வாய்விட்டுச் சிரிக்கும்போது உண்டாகின்ற ஒலிக்குறிப்பு.
இவன் நடக்கிற நடை யழகு கண்டே சத்ருக்கள் சாக வேணுமென்பது ஈற்றடியி்ன் கருத்து.

கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறிக் -கருப்பஞ்சாறு நிறைந்த குடம் பொள்ளல் விட்டால் அது வழியே
சாறு பொசிவதை போன்று திரு வாயில் நின்றும் நீர் சுரந்து வடிய
கணகண சிரித்து  உவந்து–கண கண என்று சப்தம் உண்டாகும் படி சிரித்து -சந்தோஷித்து
முன் வந்து நின்று முத்தம் தரும் -என் முன்னே வந்து நின்று எனக்கு முத்தம் கொடுக்கும் தன்மை யுள்ளவனும்
என் முகில் வண்ணன் -எனது முகில் போன்ற நிறத்தை யுடையவனும்
திரு மார்வன்-பெரிய பிராட்டியாரை திரு மார்பிலே கொண்டவனுமான
தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து -தன்னைப் பெற்ற எனக்கு தன்னுடைய அதர அம்ருதத்தைக் கொடுத்து
என்னைத் தளிர்ப்பிகின்றான்-தன்னைப் பிள்ளையாகப் பெற்ற பாக்யத்தை யுடைய என்னை தழைக்கச் செய்கிறான் இவன்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே -தன்னோடு எதிர்க்கிற சத்ருக்களின் தலைகள் மேலே திருவடியிட்டு
தளர்நடை நடவானோ –

——————————————–

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி யுலகம் பரவிவோவாப் புகழ்ப் பலதேவன் என்னும்
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை  நடவானோ –1-7-5-

பதவுரை

முன்–முன்னே
நல்–அழகிய
ஓர்–ஒப்பற்ற
வெள்ளி பெருமலை–பெரிய வெள்ளிமலை பெற்ற
குட்டன்–குட்டி
மொடுமொடு–திடுதிடென்று
விரைந்து–வேகங்கொண்டு
ஓட–ஓடிக்கொண்டிருக்க,
பின்னை–(அந்தப் பிள்ளையின்) பின்னே
(தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக)
தொடர்ந்தது-தொடர்ந்ததுமாகிய
ஓர்-ஒப்பற்ற
கரு மலை–கரு நிறமான மலை பெற்ற
குட்டன்–குட்டி
பெயர்ந்து–தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு
அடி இடுவது போல்–அடி யிட்டுப் போவது போல, –
உலகம்–லோகமெல்லாங்கூடி
பன்னி–(தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து
பரவி-ஸ்தோத்ரஞ்செய்தும்
ஓவா–முடிவு காண முடியாத
புகழ்–கீர்த்தியை யுடைய
பலதேவன் என்னும்–பலராமன் என்கிற
தன் நம்பி ஓட–தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க
பின் கூட செல்வான்-(அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர்நடை நடவானோ -.

விளக்க உரை

பலராமன் வெண்மை நிறமுள்ளவனாதலால், அவன் ஓடுதற்கு வெள்ளிமலை யீன்ற குட்டியோடுவதையும்,
கண்ணன் கருநிறம் உள்ளவனாதலால் அவன் பின்னே தொடர்ந்தோடுதற்குக் கருமலையீன்ற குட்டி தொடர்ந்தோடுவதையும் உவமை குறித்தார்.
காரியம் காரணத்தை ஒத்திருக்கும் என்ற கொள்கையை அநுஸரித்து இங்ஙனருளிச் செய்தனரென்க.
நம்பி – ஆண்பாற் சிறப்புப்பெயர். இங்கு, தமையனென்ற பொருளைக் காட்டிற்று.
அன்றி, பலராமனுக்கு ‘தம்பி மூத்தபிரான்‘ என்று ஒரு பெயர் ஸம்ப்ரதாயத்தில் வழங்குதலால்,
அதன் ஏகதேசமாகிய ‘நம்பி‘ என்கிற வித்தால் அப்பெயர் முழுவதையும் குறித்தாருமாம்.
மொடுமொடு – நடக்கும்போது தோன்றும் ஒலிக்குறிப்பு; விரைவுக்குறிப்புமாம்

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் -முன்னே அழகிய ஒப்பற்ற பெரிய வெள்ளி மலை பெற்ற குட்டி –
காரணம் காரியத்தை ஒத்து இருக்குமே -பலராமன் வெண்மை நிறம் அன்றோ
மொடு மொடு விரைந்தோட-திடு திடு வென்று வேகம் கொண்டு ஓடிக் கொண்டு இருக்க –
மொடு மொடு -நடக்கும் ஒலி குறிப்பு -விரைவு குறிப்பு என்றுமாம் –
பின்னைத் தொடர்ந்ததோர் கரு மலைக் குட்டன் -அப்பிள்ளையின் பின்னே செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக
தொடர்ந்ததாகிய ஒப்பற்ற கரு நிறமான மலை பெற்ற குட்டி – கண்ணன் என்னும் கரும் தெய்வம் அன்றோ
பெயர்ந்து அடியிடுவது போல்-தான் இருக்கும் இடத்தை விட்டுப் புறப்பட்டு அடியிட்டுப் போவது போலே
பன்னி யுலகம் பரவிவோவாப் -லோகம் எல்லாம் கூடி -தங்களாலான அளவும் ஆராய்ந்து ஸ்தோத்ரம் செய்தும் முடிவு காண முடியாத
புகழ்ப் பலதேவன் என்னும்-கீர்த்தியை யுடைய பலராமன் என்கிற தன்னுடைய தமையன் முன்னே ஓடிக் கொண்டு இருக்க
தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் -அவனைப் பிடிக்க வேணும் என்கிற எண்ணத்தால் அவன் பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான்
தளர் நடை  நடவானோ –

———————————

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த
இரு காலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து
கரு கார்க்கடல் வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ –1-7-6-

பதவுரை

கரு கார் கடல் வண்ணன்–மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
காமர் தாதை–காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை,-
ஒரு காலில்-ஒரு பாதத்திலே
சங்கு–சங்கமும்
ஒரு காலில்–மற்றொரு பாதத்தில்
சக்கரம்–சக்கரமும்
உள் அடி–பாதங்களின் உட் புறத்திலே
பொறித்து-ரேகையின் வடிவத்தோடு கூடி
அமைந்த–பொருந்தி யிருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு–இரண்டு திருவடிகளினாலும்
அங்கு அங்கு–அடி வைத்த அவ்வவ் விடங்களிலே
எழுதினால் போல்–சித்திரித்ததுபோல
இலச்சினை பட–அடையாளமுண்டாம்படி
நடந்து-அடி வைத்து
(தனது வடிவழகைக் கண்டு)
பெருகா நின்ற–பொங்குகிற
இன்பம் வெள்ளத்தின் மேல்–ஆநந்தமாகிற ஸமுத்ரத்துக்கு மேலே
பி்ன்னையும்–பின்னும்
பெய்து பெய்து–(ஆநந்தத்தை) மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ -.

விளக்க உரை

கண்ணபிரானாகிய பிள்ளைக்குப் புருஷோத்தம சிஹ்நமாகிய சங்கசக்ரரேகைகள் உள்ளங்காலிலிருத்தலால்
அத்தாள்களை வைத்து நடக்குமிடமெல்லாம் சங்கசக்ரத்தி துருவங்களை யெழுதினாற் போலாகின்றனவென்பது – முன்னிரண்டடியின் கருத்து.
“கரு கார் கடல்” என்பதற்கு – கரிய பெரிய கடலென்றும், கறுத்துக் குளிர்ந்த கடலென்றும்,
காளமேகம் போலவும் கடல் போலவுமென்றும் பொருள் கொள்ளலாம். இலச்சினை – லஷணம்.
கண்ணன் மந்மதனுடைய அம்சமாகிய ப்ரத்யும்நனுக்கு ஜநகனாகையால், காமர்தாதையாயினான்.
இவ்வடைமொழியால், கண்ணபிரானது அழகின் மேன்மை தொனிக்கும். தாதை – ‘தாதா‘ என்னும் வடசொல் விகாரம்.

கரு கார்க்கடல் வண்ணன் காமர் தாதை -மிகவும் கரு நிறமுள்ள சமுத்திரம் போன்ற நிறமுடையவனும் –
காம தேவனுக்கு பிதாவுமான இப்பிள்ளை -மன்மதன் அம்சமான ப்ரத்யுமனுக்கு ஜனகன் –காமர் தாதை ஆயினான் -காமன் தாதை என்றும் பாடம்
கரு கார் கடல் -என்றது கரிய பெரிய கடல் -கருத்து குளிர்ந்த கடல் -காள மேகம் போலவும் கடல் போலவும் -என்றுமாம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த–ஒரு திருப் பாதத்தில் சங்கமும் -மற்றொரு
திருப் பாதத்தில் சக்கரமும்–திருப் பாதங்களின் உட்புறத்திலே ரேகையின் வடிவத்தோடு கூடி பொருந்தி இருக்கப் பெற்ற
இரு காலும் கொண்டு அங்கு எழுதினால் போலே இல்ச்சினை பட நடந்து–இரண்டு திருவடிகளினாலும்
அடி வைத்த அவ்வவ இடங்களிலே சித்திரித்தது போலே அடையாளம் யுண்டாம்படி அடி வைத்து -புருஷோத்தம சிஹ்னங்கள் அன்றோ –
தனது வடிவு அழகைக் கண்டு
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து-பொங்குகிற ஆனந்தமாகிற சமுத்ரத்துக்கு மேலே
பின்னும் ஆனந்தத்தை மிகுதியாக யுண்டாக்கிக் கொண்டு
தளர்நடை நடவானோ —

——————————————

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனி படு சிறு துளி போல்
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி யிற்றிற்று வீழ நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலுடை மணி கண கண எனத்
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –1-7-7-

பதவுரை

படர்–படர்ந்திருக்கிற (பெருத்திருந்துள்ள
பங்கயம் மலர்–தாமரைப்பூ
வாய் நெகிழ–(மொட்டாயிராமல்) வாய் திறந்து மலர
(அதில் நின்றும் பெருகுகி்ன்ற)
பனிபடு–குளிர்ச்சி பொருந்திய
சிறு துளி போல–(தேனினுடைய) சிறுத்த துளியைப்போலே
இடம் கொண்ட–பெருமை கொண்டுள்ள
செவ்வாய்–தனது சிவந்த வாயினின்றும்
ஊறிஊறி–(ஜலமானது) இடைவிடாமற் சுரந்து
இற்று இற்று வீழநின்று–(நடுவே) முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று -,
கடும் சே–கொடிய ரிஷபத்தின்
கழுத்தில்–கழுத்திலே கட்டப்பட்டுள்ள
மணி–மணியினுடைய
குரல் போல்–ஒலிபோலே
உடை மணி–(தனது) திருவரையிற் கட்டிய மணி
கண கண என–கண கண வென்றொலிக்க

விளக்க உரை

(தடந்தாளித்யாதி முதற்பாட்டிற்போல் பொருள் காண்க.)
மலர்ந்த தாமரைப்பூவில் நின்றும் தேன் சிறுசிறு துளியாய்ப் பெருகி வடிவதுபோலத் தனது வாயில் நின்றும்
இடைவிடாமல் ஜலம் பெருகவும், எருது நடந்து போம்போது அதன் கழுத்திற்கட்டிய மணி கணகணவென்று சப்திப்பது போலத்
திருவரையில் சாத்திய மணி சப்திக்கவும் தளர்நடை நடந்து வரவேணுமென்கை.

படர் பங்கய மலர் வாய் நெகிழப் -பெருத்து இருந்துள்ள தாமரைப் பூ மொட்டாய் இராமல் வாய் திறந்து மலர
அதில் நின்றும் பெருகுகிற
பனி படு சிறு துளி போல்-குளிர்ச்சி பொருந்திய தேனினுடைய சிறுத்த துளியைப் போலே
இடம் கொண்ட செவ்வாயூறி யூறி -பெருமை கொண்டுள்ள சிவந்த வாயினின்றும் ஜலமானது இடைவிடாமல் சுரந்து
யிற்றிற்று வீழ நின்று-நடுவே முறிந்து முறிந்து கீழே விழும்படி நின்று
கடும் சேக்கழுத்தின் மணிக்குரல் போலே – கொடிய ரிஷபத்தின் கழுத்திலே கட்டப் பட்டுள்ள மணியினுடைய ஒலி போலே
உடை மணி கண கண எனத்-தனது திருவரையில் கட்டிய மணி கண கண என்று ஒலிக்க
தடம் தாளிணை கொண்டு சார்ங்க பாணி தளர் நடை நடவானோ –சார்ங்கம் என்னும் வில்லைக் கையிலே ஏந்திய
பிள்ளையாகிய இவன் தன்னுடைய பெரிய பாதங்கள் இரண்டினால்-இள நடையை நடக்க மாட்டானோ -நடக்க வேணும் –

——————————————–

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே யருவிகள் பகிர்ந்து அனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ –1-7-8-

பதவுரை

கரு–கருநிறமான
சிறு–சிறிய
பாறை–மலையினுடைய
பக்கம் மீது–பக்கத்திலே
(மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற)
அருவிகள்–நீரருவிகள்
பகர்ந்து அனைய–ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
(திருவரையிற் சாத்திய)
அக்கு வடம்–சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ–உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி–அழகிய
அல்குல்–நிதம்பம்
புடை–பக்கங்களிலே
பெயர–அசையவும்
உலகினில்–உலகத்திலுள்ள
மக்கள்–மனிதர்
பெய்து அறியா–பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்–அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
(தக்க இத்யாதி இரண்டாம் பாட்டிற் போலப் பொருள் காண்க. )

விளக்க உரை

கரு நிறத்தையுடைய திருவரையிற் சாத்திய வெண்ணிறமான சங்குமணி வடமானது, தளர்நடை நடக்கும் போது
முன் பின்னாக மாறிமாறி ப்ரகாசிப்பதானது – கரிய சிறுமலையின் பக்கத்திலே வெள்ளருவி மேடும் பள்ளமுமான
இடங்களில் ப்ரகாசிப்பதை ஒத்திருக்கும்படி. அல்குல் – தொடையிடுக்குக்கும் அரைக்கும் இடையிலுள்ள இடம்.
பாறை – இலக்கணையால் மலையை உணர்த்திற்று.
பகர்ந்தனைய – ‘பகர்ந்ததனைய‘ என்பதன் விகாரம். அன்றி வினையெச்சத் திரிபாகக் கொண்டு –
பகர்ந்தால் (அதை) அனைய என்று கொள்ளினுமாம். பக்கம் – ‘பஷம்‘ என்ற வடசொல் திரிபு.
குழ – இளமை: உரிச்சொல்; அதனை உடையது குழவியெனக் காரணக் குறி; இ-பெயர் விகுதி.

பக்கம் கரும் சிறுப் பாறை மீதே-கரு நிறமான சிறிய மலையினுடைய பக்கத்திலே -மேடும் பள்ளமுமான இடங்களில் பாய்கிற
பாறை -லக்ஷனை குறிப்பினால் மலையைச் சொன்னபடி
யருவிகள் பகிர்ந்து அனைய-நீர் அருவிகள் பிரகாசிப்பத்தை ஓத்திருக்கிற –
திருவரையில் சாத்தி அருளிய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ -திருச் சங்கு மணி வடமானது உயர்ந்தும் தாழ்ந்தும் தொங்கிப் பிரகாசிக்கவும்
அணி யல்குல் புடை பெயர-அழகிய நிதம்பம் பக்கங்களில் அசையவும்
மக்கள் உலகினில் பெய்தறியா மணிக் குழவி யுருவின்-உலகத்திலுள்ள மனுசர் பெற்று அறியாத அழகிய குழந்தை வடிவை யுடையவனும்
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ -தகுதியான நீல மணி போலே நிறத்தை யுடையவனுமான -வஸூ தேவ புத்திரனான இவன்
மா மணி நீல ரத்னம் -கறுப்புக்கும் பெயர் –
தளர்நடை நடவானோ –

—————————————————–

வெண் புழுதி மேல் பெய்து கொண்டு அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்
தெண் புழுதி யாடித் திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ  –1-7-9-

பதவுரை

திரிவிக்கிரமன்–(தனது) மூவடியால் (உலகங்களை) அளந்தவனாகிய இவன்
வெள் புழுதி–வெளுத்த புழுதியை
மேல் பெய்து கொண்டு–மேலே போகட்டுக் கொண்டு
அளைந்தது–அளைந்ததாகிய
ஓர் வேழத்தின் கரு கன்று போல்–ஒரு கரிய குட்டியானை போல,
தெள் புழுதி–தெளிவான புழுதியிலே
ஆடி–விளையாடி
சிறு புகர் பட–சிறிது காந்தி உண்டாக வேர்த்துப் போய்,
வியர்த்து–வேர்த்துப் போய்,
போது–உரிய காலத்திலே
அலர்–மலர்ந்த
ஒள்–அழகிய
கமலம்–தாமரைப் பூவை ஒத்த
சிறு கால்–சிறிய பாதங்கள்
உறைத்து–(ஏதெனும் ஒன்று) உறுத்த (அதனால்)
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
தண் போது கொண்ட–குளிர்ந்த புஷ்பங்களுடைய
தவிசின் மீது–மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

பரந்த திருவடிகளைக் கொண்டு உலக மூன்றையுமளந்த இவன் தனது சிறிய அடிகளைக் கொண்டு
புஷ்ப மெத்தையின் மேல் காலுறுத்தாமல் மெல்ல நடக்கவேணும் என்கிறார்.
கருநிறமான கண்ணன் திருமேனியிற்படிந்த புழுதியில் வேர்வைநீர் அழகியதாய்க் காணப்படுதலால்,
‘புழுதியாடிச் சிறு புகர்பட வியர்த்து’ எனப் பாராட்டிக் கூறினார்.
உரைத்து-உறைக்க; எச்சத்திரிபு. வெண்புழுதி, தெண்புழுதி, ஒண்போது, தண்போது-பண்புத்தொகை.

திரிவிக்ரமன்-தனது மூவடியால் உலகளந்த இவன்
வெண் புழுதி மேல் பெய்து கொண்டு -வெளுத்த புழுதியை மேலே பொகட்டுக் கொண்டு
அளைந்த தோர் வேழத்தின் கரும் கன்று போல்-அலைந்ததாகிய ஒரு கரிய குட்டி யானையைப் போலே
தெண் புழுதி யாடித் சிறு புகர் பட வியர்த்து-தெளிவான புழுதியில் விளையாடி -சிறிது காந்தி யுண்டாக வேர்த்துப் போய்
ஒண் போதலர் கமலச் சிறுகாலுறைத்து -உரிய காலத்தில் மலர்ந்த அழகிய தாமரைப் பூவை ஒத்த
சிறிய பாதங்கள் ஏதேனும் ஓன்று உறுத்த -அதனால்
ஒன்றும் நோவாமே-சிறிதும் நோவாத படி
தண் போது கொண்ட தவிசின் மீதே -குளிர்ந்த புஷ்பங்களினுடைய மெத்தையின் மேலே
தளர்நடை நடவானோ  –

———————————————–

திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் செங்கண் மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடை பெயரப்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ –1-7-10-

பதவுரை

செம் கண் மால்–சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய
கேசவன்–கேசவனென்னுந் திருநாமமுடைய இவன்,
திரை நீர்–அலைகின்ற நீரையுடைய ஸமுத்திரத்தின் நடுவில்
(அசைந்து தோன்றுகிற)
சந்திரன் மண்டலம் போல்–ப்ரதிபிம்ப சந்த்ர மண்டலத்தைப் போல
தன் –தன்னுடைய
திரு நீர்–அழகிய ஒளியை யுடைய
முகத்து–திருமுகத்திலே
துலங்கு–விளங்குகின்ற
சுட்டி–சுட்டியானது
எங்கும்–எல்லா விடத்திலும்
திழ்ந்து–ப்ரகாசித்துக் கொண்டு
புடை பெயர்–இடமாகவும் வலமாகவும் அசையவும்
பெரு நீர்–சிறந்த தீர்த்தமாகிய
திரை எழு கங்கையிலும்–அலை யெறிகிற கங்கையிற் காட்டிலும்
பெரியது-அதிகமான
ஓர்–ஒப்பற்ற
தீர்த்த பலம்–தீர்த்த பலத்தை
தரும்–கொடுக்கின்ற
நீர்–ஜலத்தை உடைத்தான
சிறு சண்ணம்–சிறிய சண்ணமானது
துள்ளம் சோர்–துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவானோ-.

விளக்க உரை

நெற்றியில் தொங்குகின்ற சுட்டி அசையவும், குறியில் நின்றும் மூத்திரநீர் துளிதுளியாகச் சிந்தவும்
தளர்நடை நடந்து வரவேணு மென்கை. கருநிறத்தனான கண்ணனது திருநெற்றியி லசைந்துகொண்டு விளங்குஞ் சுட்டிக்கு,
கருநிறமான கடலின் நடுவில் அசைந்துகொண்டு தோன்றும் சந்த்ர ப்ரதிபிம்பம் ஏற்ற உவமையாம்.
சண்ணம்-ஆண்குறி–

செங்கண் மால் கேசவன் தன்-சிவந்த கண்களையும் கரு நிறத்தையுமுடைய கேசவன் என்னும் திரு நாமமுடைய இவன்
திரை நீர்ச் சந்திர மண்டலம் போல் -அலைகின்ற நீரையுடைய சமுத்திரத்தின் நடுவில் அசைந்து தோன்றுகிற பிரதிபிம்ப சந்திரன் போலே
திரு நீர் முகத்துலங்கு சுட்டி திகழ்ந்து -தன்னுடைய அழகிய ஒளியையுடைய திரு முகத்திலே விளங்குகிற சுட்டியானது
எங்கும் புடை பெயரப்-எல்லா இடத்திலும் பிரகாசித்துக் கொண்டு இடம் வலமாக அசையவும்
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும் -சிறந்த தீர்த்தமாகிய அலை எறிகிற கங்கையில் காட்டிலும்
பெரியதோர் தீர்த்த பலம்-அதிகமான ஒப்பற்ற தீர்த்த பலத்தை கொடுக்கின்ற
தரு நீர்ச் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத் -ஜலத்தை யுடைத்தான சிறிய சுண்ணமானது துளி துளியாகச் சொட்டவும்
தளர்நடை நடவானோ —

——————————————

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –1-7-11-

பதவுரை

ஆயர் குலத்தினில் வந்து–இடையர் குலத்திலே வந்து
தோன்றிய-அவதரித்த
அஞ்சனம் வண்ணன்–மை போன்ற கருநிறமுடையனான கண்ணன்
தன்னை–தன்னை (க்கண்டு)
தாயர்–தாய்மார்கள்
மகிழ–மனமுகக்கவும்
ஒன்னார்–சத்ருக்கள்
தளர–வருத்தமடையவும்
தளர்நடை நடந்தனை–தளர்நடை நடந்ததை
வேயர்–வேயர் குடியிலிருப்பவரெல்லாராலும்
புகழ்–புகழப் பெற்ற
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சீரால்–சிறப்பாக
விரித்தன–விவரித்துச் சொன்ன பாசுரங்களை
உரைக்க வல்லார்–சொல்ல வல்லவர்கள்
மாயன்–ஆச்சர்யமான குணங்கள யுடையவனும்
மணி–நீல மணி போன்ற
வண்ணன்–நிறமுடையனுமான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
பணியும்–வணங்க வல்ல
மக்களை–பிள்ளைகளை
பெறுவார்கள்–அடைவார்கள்.

விளக்க உரை

‘தாயர்’ எனப் பன்மையாகக் கூறியது-பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்
எனத் தாய்மார் ஐவராதலாலும், சிறுதாய் முதலியோரும் தாய்மாரே யாவராதலாலுமாம்.
தொட்டிற் பருவத்திலேயே பூதனை சகடாஸூரன் முதலியோர்களை முடித்ததனால், கண்ணபிரான் மெல்ல அடியிட்டு
நடக்கத் தொடங்கிய போதே ‘இனி, இவனால் நமக்கு என்ன தீங்கு நேரிடுமோ!’ என்று கம்ஸாதிகள் நடுங்கி
ஒடுங்கினராதலால் ‘ஒன்னார் தளர’ என்றாரென்க. ஒன்னார்-ஒன்றார்; (தம்மோடு மனம்) பொருந்தாதவர்; எனவே, பகைவராவர்.
பெரியாழ்வார் பிறந்தகுடி—வேயர்குடி எனப்படும்.

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய வஞ்சன வண்ணன் தன்னை-இடையர் குலத்தில் வந்து அவதரித்த
மை போன்ற கரு நிறமுடைய கண்ணன் தன்னைக் கண்டு
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை-தாய்மார்கள் மனம் உகக்கவும் சத்ருக்கள்
வருத்தம் அடையவும் தளர் நடை நடந்து அருளியதை
பாராட்டுத்தாய் -ஊட்டுத் தாய் -முலைத் தாய் -கைத்தாய் -செவிலித்தாய் –சிறு தாய் -போன்றவர்கள் உண்டே
ஒன்னார் -ஒன்றார் -திரு உள்ளபடி நடக்காத சத்ருக்கள்
வேயர் புகழ் விட்டு சித்தன் சீரால் விரித்தன வுரைக்க வல்லார்-வேயர் குடியில் உள்ளார் எல்லாராலும்
புகழப் பெற்ற பெரியாழ்வார் சிறப்பாக விரித்து அருளிச் செய்த இப்பாசுரங்களை சொல்ல வல்லவர்கள்
சீரா விரித்தன என்றும் பாட பேதம்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே –ஆச்சர்யமான குணங்களை யுடையவனும் –
நீல மணி போன்ற நிறமுடையவனுமான
எம்பெருமானுடைய திருவடிகளை வணங்க வல்ல பிள்ளைகளை அடைவார்கள்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் —

February 13, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

த்விரத சிகாரி சிம்னா சத்மவான் பத்ம யோனே
துரக சவனண் வேத்யாம் ஸ்யாமளா ஹவ்யவாஹா
கலச ஜலதி கன்யா வல்லரி கல்ப சாகி
கலயது குசலாம் நஹா கோபி காருண்ய ராசிஹா -1-

ஹஸ்தகிரியின் மேற்பகுதியில் உறைவிடம் உடையவனாய் ப்ரம்மாவின் அசுவமேத யாகத்தில்
கருமை நிறம் கொண்டவனாய் அக்நியாய் நிற்பவனே!
பாற்கடலில் தோன்றிய பிராட்டியோடு கல்பவிருக்ஷமாய் நிற்பவனே! எங்களுக்கு க்ஷேமத்தை அருள வேண்டும்.

த்விரத சிகாரி சிம்னா சத்மவான்-ஸ்ரீ ஹஸ்திகிரிக்கு மேலே -அத்தியூரான் கேசவனும் இவனே
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற மாயவன் நாராயணனும் இவனே
தொல் அத்திகிரி சுடர் மாதவனும் இவனே
அத்திமலை மேல் நின்ற புண்ணியன் கோவிந்தனும் இவனே
கார்கிரி மேல் நின்ற கற்பகம் விஷ்ணுவும் இவனே
வாரண வெற்பில் மழை முகில் மது சூதனனும் இவனே
கரிகிரி மேல் வரம் தந்திடும் மன்னவன் த்ரிவிக்ரமனும் இவனே
அத்திகிரி மேல் தன்னையே தந்திடும் வள்ளல் வாமனனும் இவனே
அத்தி மா மலை மேல் நின்ற அச்யுதன் ஸ்ரீ தரனும் இவனே
சிந்துராகலா சேவகன் பத்மநாபனும் இவனே
அத்தியூரான் மரகதம் தாமோதரனும் இவனே
கலியுகம் ஆதிசேஷனுக்கு பிரத்யக்ஷம் –
பத்ம யோனே துரக சவனண் வேத்யாம் ஸ்யாமளா ஹவ்யவாஹா –உத்தர வேதியில் புண்ய கோடி விமானத்துடன்
சகல மனுஷய நயன விஷயமாக பூர்ணாஹுதி பொழுது நீல மேக ஸ்யாமள வர்ணனாக உதித்து அருளிய வள்ளல் அன்றோ
கலச ஜலதி கன்யா வல்லரி கல்ப சாகி –கற்பக வ்ருக்ஷம் -மின்னல் கோடி –பெரும் தேவி தாயார் உடன் அன்றோ சேவை –
த்வயார்த்தம் -ஏக சேஷி சம்பந்தி -நித்ய அநபாயினி-ஸஹ தர்ம சாரிணி அன்றோ
கோபி காருண்ய ராசிஹா–சர்வ சேஷி -சர்வ ஆதாரம் -சர்வ நியாந்தா -/ பரம காருண்யம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் -வாத்சல்யம் -க்ருதக்நத்வம் –
சர்வ ஞானத்தவம் -சர்வ சக்தித்வம் -ஸத்யஸங்கல்பம் -சத்யகாமத்வம் -அவாப்த ஸமஸ்த காமத்வம் -பிராப்தி -பரி பூர்ணன் -கோதிலா வள்ளல்
கலயது குசலாம் நஹா-சகல பல பிரதன்-சகல கல்யாண குண
திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் -ஸ்ரீ யபதி-

—————-

யஸ்ய அனுபவம் அதிக அந்துமசாக்னு வந்தோ
முக்யந்தி அபாங்குரா தியோ முனி ஸார்வ பவ்மா
தஸ்யைவ தே ஸ்துதிஷு சாஹசம் ஆஸ்னு வானா
ஷந்தவ்ய ஏஷ பவதா கரி சைல நாத -2-

பராசராதிகளாலும் ஸ்தோத்ரம் பண்ணி முடிக்க முடியாத உன்னை அல்பனான அடியேன் முயல்வது சாஹாஸ செயல் தானே
ஷாமா நிதியே – உனது அபராத ஷாமண குணம் அறிவேன் –

———-

ஞானான் அநாதி விஹிதான் அபராத வர்கான்
ஸ்வாமின் பயத் கிம் அபி வக்தும் அஹம் ந சக்த
அவ்யாஜ வத்ஸல ததா அபி நிரங்குசம் மாம்
வாத்சல்யம் ஏவ பவதோ முகாரி கரோதி -3-

நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி அன்றோ நீ —

———

கிம் வ்யாஹராமி வரத ஸ்துதயே கதம் வா
கத்யோதவத் ப்ரலகு சங்குசதா ப்ரகாசா
தன்மே சமர்ப்பயே மதிம் ச சரஸ்வதிம் ச
த்வம் அஞ்சஸ ஸ்துதி பதைர்யதஹம் திநோமி–4-

சர்வ பல பிரதன் அன்றோ -மதியையும் வாக்கையும் -ஆத்மீக
அங்குச பரிபூர்ண ஞானமும் கவித்துவமும் -நீயே அருள வேண்டும்
அடியேன் ஞானம் மின்மினி பூச்சி ஒளி போலவே -நீயோ ஸ்தவ பிரியன்

———–

மச் சக்தி மாத்ர ஞானேந கிமி ஹஸ்தி சக்யம்
சக்யேன வா தவ கரீச கிம் அஸ்தி ஸாத்யம்
யத் யஸ்தி சாதய மயா தத் அபி த்வயா வா
கிம் வா பவேத் பவதி கிஞ்சித நிஹமநே-5-

ஸ்வஸ்மை ஸ்வயமேவ காரிதவான் -உன் இச்சையே கார்ய கரமாகும் -இரக்கமே உபாயம் –

————

ஸ்தோத்ரம் மயா விரசிதம் த்வத் அதீன வாஸா
த்வத் ப்ரீதவே வரத யத் ததிதம் ந சித்ரம்
ஆவர்ஜயந்தி ஹ்ருதயம் கலு சிக்ஷ கானம்
மஞ்சுநீ பஞ்சர சகுந்த விஜல்பிதானி -6-

கூண்டுக் கிளியின் மழலைப் பேச்சு கற்ப்பித்து வைத்த பிரபுவின் மனத்தையே கவர்வது போலே அடியேனது ஸ்தோத்ரம்
ஸ்வ தத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மின் ந்யஸ்தி மாம் ஸ்வயம் –கர்த்ருத்வ மமதா பல-த்ரிவித தியாகம் –

வரதனான பேரளுளானே! எப்படி கூட்டில் அடைபட்டிருக்கும் கிளியின் மழலை சொற்களை கேட்டு
மடந்தை ஆனந்திப்பாளோ அப்படி உன் குழந்தையாகிய, உன்னாலேயே பேச்சு திறன் அடைந்த என் ஸ்தோத்திரம்
உனக்கு மழலை போல் தோன்றுவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை ?

———————-

இந்த ஸ்துதியில் ஆதிம ஸ்லோகம் -தவி ரத சிகரி ஸீம்நா -என்பது ஸ்வாமி திருக்கோவலூரில் எழுந்து அருளி இருந்து தேஹளீசனை மங்களா ஸாஸனம் செய்து அங்கு நின்றும் காஞ்சிக்கு எழுந்து அருளுகிறார்
வரும் வழியில் தேவராஜன் கல்யாண குண கீர்த்தனம் -பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்தன அம்ருதம் –
தான் உகந்த வூர் எல்லாம் தன் தாள் பாடி -என்னக் கடவது இறே
கோ அபி காருண்ய ராசி ந குசலம் கவயது -என்று பரோக்ஷ நிர்தேசமே இப்படிக் கூறக் காரணம் ஆகிறது
இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி அபரோக்ஷ நிர்த்தேசம் -ஆறாவது ஸ்லோகம் வரை உபோத்காதம்
ஸ்துதிக்க இழிந்த சாஹாசத்தை க்ஷமித்து அருள வேணும் -ஸ்துதிக்கைக்கு ஈடான ஞான சக்திகளைத் தந்து அருள வேணும்
அடியேனுடைய இந்த ஜல்பனத்தை ஸூக பாஷணமாகக் கொண்டு கடாக்ஷிக்கப் பிரார்திக்கிறார்

ஏழாவது ஸ்லோகம் தொடங்கி ஸ்துதி முகேந தத்வ ஹித புருஷார்த்தங்களை வெளியிடுகிறார் –

————–

யம் சஷூசாம் அவிஷயம் ஹயமேத யஜ்வ
த்ராஹி யஸா ஸுகரிதேந ததர்ச பரிணாம தஸ்தே
தம் த்வாம் கரீச காருண்ய பரிணாமாஸ்தே
பூதாநி ஹந்த நிகிலானி நிசாம்யந்தி -7-

ஸத்ய வ்ரத ஷேத்ரத்தில் சகல மனுஷ நயன விஷயமாக்கிக் கொண்டு -தன்னுடைய ஆராதனத்திலே ஸந்துஷ்டானாய்
ஆவிர் பூத ஸ்வரூபியாய் -ஹிதார்த்தமாக -சர்வ பிராணி சம்பூஜிதனாய்-சர்வ அபீஷ்ட பிரதனாய் –
சர்வ யஞ்ஞந சமாராதனாய் -நித்ய வாசம் பண்ணி அருளுகிறார்

அத்தகிரி பெருமாளே! புறக்கண்களுக்கு புலனாகாத உன்னை ப்ரம்மன் அசுவமேத யாகம் செய்து,
பெரிய புண்யத்திலால் கண்டானோ அத்தகைய உன்னை உன்னுடைய கருணையிலால்
ஸகல பிராணிகளும் காண்கின்றன! என்ன ஆச்சர்யம்.

கேவல கருணாதி ரேகத்தாலே- ஸகல மனுஷ நயன விஷயதாம் கதன் அன்றோ இவன் -பேர் அருளாளன் தானே –

————

ததத் பதைருபஹிதே அபி துரங்க மேதே
சக்ரதயோ வரத பூர்வம் அலாப்த பாகக
அத்யாக்க்ஷிதே மகபதவ் த்வயி சக்க்ஷு ஷைவ
ஹிரண்ய கர்ப்ப ஹவிஷாம் ரசம் அந்வ புவன் -8-

அஸ்வமேத யாக ஹவிஸை நீயே ஏற்றுக் கொண்டு யுனது திவ்ய மங்கள விக்ரஹ சௌந்தர்யத்தை முற்றூட்டாக
அன்றோ அனைத்து தேவர்களும் ஸாஷாத்தாக கண்டு அனுபவிக்கும் படி ஆவிர்பவித்து அருளினாய்

———

சர்க்க ஸ்திதி பிரளய விப்ரம நாதிகாயம்
சைலூஷவத் விவித வேஷ பரிக்ரஹம் த்வாம்
சம்பா வயந்தி ஹ்ருதயேந கரீச தன்யா
சம்சார வாரி நிதி சந்தரநைக போதம் -9-

லீலா விபூதியை உனது நாடக அரங்கம் -விவித வேஷ பரிக்ரஹமே ப்ரஹ்ம ருத்ராதிகள் –
விஷ்ணு போதம் ஒன்றே சம்சாரம் தாண்டுவிக்கும் –
பாக்ய சாலிகள் மட்டுமே இதற்காகவே நீ ஹ்ருதய கமல வாசியாக இருப்பதை அறிந்து உஜ்ஜீவிக்கிறார்கள் –

—————-

ப்ராப்தோ தயேஷு வரத த்வத் அநு பிரவேசாத்
பத்மாஸனாதிஷூ சிவதிஷூ கணசுகேஷூ
தன் மாத்ர தரஸன விலோபித சேமுஷிகா
ததாத்ம்ய மூடா மதயோ நிபந்தன் யதீரா –10-

உனது அநு பிரவேசத்தாலே ப்ரஹ்மாதி தேவ கணங்கள் தங்கள் தங்களுக்கு இட்ட கார்யங்களை செய்யும் ஆற்றல் பெறுகிறார்கள்-
இத்தை அறியாத மூடர்கள் தானே த்ரிவித ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரத்துக்கு மூவர் என்று தப்பாக அறிந்து சம்சாரத்திலே உழன்று போகிறார்கள்
இவர்களும் கர்ம வஸ்யர்கள் -மோக்ஷ பிரதன் நீ ஒருவனே என்று உணர்ந்த பரமை காந்திகளே –
நின்னையே தான் வேண்டி நிற்பனே அடியேனே-என்று இருப்பர்
ஆர்த்தி ஜிஜ்ஜாசூ அர்த்தார்த்தி மோக்ஷ ப்ராப்தர் -நான்கு வகை அதிகாரிகள் உண்டே –
ஞானா து ஆத்மைவ மே மதம் -என்பானே

—————–

மத்யே விரிஞ்சி சிவயோர் விஹித அவதாரா
க்யாதோ அஸி தத் சமதய ததிதம் ந சித்ரம்
மாயா வாசநே மகராதி சரீரினம் த்வம்
தேநேவ பஸ்யதி கரீச யதேஷ லோகா –11-

மத்ஸ்யாதி சரீரீ போலே அன்றோ ப்ரஹ்மா ருத்ராதிகளுக்குள்ளும் அந்தராத்மதயா இருந்தும்
ஸ்வயமேவ விஷ்ணுவாயும் திரு அவதாரங்கள்
உனது ஸுசீல்ய சீமா பூமியை அறியாத சம்சாரிகள் இழந்தே போகிறார்களே –

தேவாதிராஜனே! பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவில் அவதாரம் செய்த நீ அவர்களுக்கும் மேலாக அழைக்கப்படுகிறாய்.
இது ஒரு ஆச்சர்யம் இல்லை. உன் சங்கல்பத்தால் நீ பல அவதாரம் செய்ததை பக்தர்கள்
அந்த அவதாரமாகவே கொண்டாடுகிறார்கள்-உதாரணம்-மச்ச, கூர்மம்.

————-

ப்ரஹ்மேதி சங்கர இதீந்த்ர இதி ஸவாராதிதி
ஆத்மேதி ஸர்வமிதி சர்வ சர அசராத்மன்
ஹஸ்தீஸ சர்வ வச சாம வசனா சீமாம்
த்வாம் சர்வ காரணம் உசந்தி அநபாய வாகா –12-

சர்வ அந்தராத்மத்வம் -சர்வ காரணத்வம் -சர்வ சப்த வாச்யத்வம் -வாக்யத்வம் –
அனைத்தும் அநபாய வாக்கான வேதங்கள் கோஷிக்குமே

ஆஸாதி பேஷு கிரி ஸேஷு சதுர் முகேஷ் வபி
அவ்யாஹதா விதி நிஷேத மயி தவ ஜனா
ஹஸ்தீஸ நித்ய மனு பாலான லங்காநாப்யாம்
பும்ஸாம் சுப அசுப மயாநி பலானி ஸூதே –13-

விதி நிஷேத சாஸ்த்ர ஆஜ்ஜைப் படியே ப்ரஹ்மாதி களுடைய -க்ருத்ய கரணங்களும் அக்ருத்ய அகரணங்களும் –
நிக்ரஹத்துக்கு இலக்காகாமல் அனுக்ரஹத்துக்கு பாத்ரமாவதற்காகவே

த்ராதா ஆபாதி ஸ்திதி பதம் பரணம் பிரரோஹா
சாயா கரீச சரசாநி பலாநி ச த்வம்
சாகாகத த்ரிதச பிருந்தா சாகுந்த கானம்
கிம் நாம நாசி மஹதாம் நிகம துருமாநாம் –14-

பாந்தவன்- அநாத ரக்ஷகன் -ஆதாரங -நியாந்தா -பலமும் நீயே சர்வருக்கு சர்வத்துக்கும் –
பறவைகளுக்கு வ்ருக்ஷம் போலே அன்றோ -வேத வ்ருஷத்துக்கும் சர்வமும் நீயே
ஜகதாதாரனாக இருந்து வேதங்களையும் ரஷித்து ஸ்வரம் தப்பாமல் ஆச்சார்யர் சிஷ்யர் க்ரமங்களையும்-
அங்கங்களையும் உப அங்கங்களையும் உண்டாக்கி அருளுபவர் அன்றோ

சாமான்ய புத்தி ஜனகாஸ் ச ஸதாதி சப்தாத்
தத்வாந்தர ப்ரஹ்ம க்ருதாஸ் ச ஸிவாதி வாகா
நாராயணே த்வயி கரீச வஹந்தி அநந்யம்
அன்வர்த்த வ்ருத்தி பரி கல்பிதம் ஐக காந்தியம் -15-

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா -சிவா -ஜிரண்ய கர்ப்ப -இந்திரா -அனைத்து சப்தங்களும் நாராயணன் இடமே பர்யவசிக்கும்
மங்கள பரம் -ஐஸ்வர்ய பரம் -உபய விபூதி நாதத்வம் -ஆதி –
வேத ப்ரதிபாத்யன் இவனே -ஐக காந்தியம் -சர்வ சப்த வாச்யன் -சர்வ லோக சரண்யன்

சஞ்சிந்தயந்தி அகில ஹேய விபக்க்ஷ பூதம்
சந்தோதிதம் ஸமவதா ஹ்ருதயேந தன்யா
நித்யம் பரம் வரத சர்வகதம் ஸூ ஷூம்மம்
நிஷ் பந்த நந்தது மயம் பவதா ஸ்வரூபம் –16-

1-அகில ஹேய ப்ரத்ய நீகன்–கல்யாண யாக குண ஆகாரத்வம் –
2- சாந்தோதிகன் -சங்கல்பத்தாலே விபூதி நிர்வாஹகன்–நித்யோதிதன் பர வா ஸூ தேவன் -சாந்தோதிதன் -வ்யூஹ வாஸூ தேவன் –
3-நித்யன் 4–சர்வகதன் –5-பராத்பரன் ஸ்ரீ யபதி -ஒப்பார் மிக்கார் இலையாய தனி அப்பன் -மிதுனம் உத்தேச்யம் -6-சர்வ ஸூஷ்மம் —
7-நிஷ் பந்த நந்தது மயம்-நிரவதிக ஆனந்த மயன்-கொள்ளக் குறைவில்லா ஆராவமுதம் – –
இப்படிப்பட்ட ஏழு வித திவ்யாத்மா ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து அன்றோ சாத்விக அக்ரேஸர்கள் உபாசிக்கிறார்கள்
அகாரமும் -ஸ்ரீமத் -சப்தமும் -மாம் -ஏகம் -அஹம் –சர்வ ஆதாரத்வம் – -சத்யத்வம் -ஞானத்தவம் -அனந்தத்வம் –
நந்தா விளக்கே -அளத்தற்கு அரியாய்-உணர் முழு நலம் -சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பம் -அமலன் –

விஸ்வ அதிஸாயி ஸூக ரூப யத் ஆத்மகஸ் த்வம்
வ்யக்திம் கரீச கதயந்தி தத் ஆத்மிகாம் தே
யேநா திரோஹதி மதித் த்வத் உபாஸகாநாம்
ச கிம் த்வமேவ தவ வேதி விதாகர டோலாம் -17-

திவ்ய மங்கள விக்ரஹமும்-திவ்யாத்மா ஸ்வரூபம் போலே அன்றோ –
விஸ்வ அதிஸாயி ஸூக ரூப-நிரதிசய ஆராவமுதம் அன்றோ
தே வ்யக்திம் த்வ யத் ஆத்மகஸ் தத் ஆத்மிகாம் கதயந்தி -ஸ்ருதி வாக்கியம் –

மோஹ அந்தகார விநிவர்த்தன ஜாகரூகே
தோஷா திவா அபி நிர்வக்ரஹ மேத மநே
த்வ தேஜஸ் ஸி த்வி ரத சைலபதே விம்ர்ஷ்தே
ஸ்லாக்யேத சந்தமச பர்வ சஹஸ்ர பாநோவ் -18-

ஆதி அம் ஜோதி அனுபவம் -ஹஸ்திகிரி மேல் உள்ள தேஜஸ் அன்றோ -பகலோன் பகல் விளக்கு படும் படி அன்றோ உனது தேஜஸ்

ரூதஸ்ய சின் மயத்ய ஹ்ருதயே கரீச
ஸ்தம்ப அநு காரி பரிணாம விசேஷ பாஜா
ஸ்தாநேஷூ ஜக்ராதி சதுர்ஷ்வபி ஸாத்வந்த
சாக விபாக சதுரே சதுராத்மய-19-

விசாக யூபம்-வ்யூஹ மூர்த்தி – -உப வ்யூஹ மூர்த்திகள் –
கிழக்கு வ்யூஹ வாஸூ தேவன் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -கேசவ நாராயண மாதவன் –
தெற்கே சங்கர்ஷணன்-ஞானம் பலம் -சம்ஹார உபயுக்த குணங்கள் -சாஸ்த்ர ப்ரவசன உபயுக்த குணங்களும் ஆகும் -கோவிந்த விஷ்ணு மது ஸூதனன் –
மேற்கே ப்ரத்யும்னன்-ஐஸ்வர்யம் வீர்யம் -ஸ்ருஷ்டிக்கு உபயுக்த குணங்கள் -தத்வ உபதேசமும் -த்ரிவிக்ரமன் வாமனன் ஸ்ரீ தரன்
வடக்கே -அநிருத்தன் -சக்தி தேஜஸ் -பாலனத்துக்கு உபயுக்த குணங்கள் -ஹ்ருஷீகேசன் பத்ம நாபன் தாமோதரன்
ஜாக்ரத -ஸ்வப்னம் – ஸூ ஷூப்தி -அத்யாலசம் –துரியம் -நான்கும் உபாசன அவஸ்தைகள் போலே

நாகாகலேச நிகில உபநிஷான் மனிஷா
மஞ்சுஷிகா மரகதம் பரிசின்வதாம் த்வாம்
தன்வி ஹ்ருதி ஸ்புரதி கா அபி சிகா முனி நாம்
ஸுதா மனிவா நிப்ருதா நவ மேஹ கர்பா -20-

அந்தர்யாமி அனுபவம் இதுவும் அடுத்த ஸ்லோகமும் –
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே-
தஹராகாச புண்டரீகத்தில் ஸ்வ இதர விலக்ஷணன்-அநந்த -ஞான ஆனந்த -ஏக ஸ்வரூபன் –

——————

ஓவ்தன்வதே மதி சத்மநி பாசமாநே
ஸ்லாக்யே ச திவ்ய சதநே தமஸா பரஸ்மின்
அந்த காலே பரம் இதம் ஸூஷிரம் ஸூஷூஷ்மம்
ஜாதம் கரீச கதம் ஆதாரண ஆஸ்பதம் தே -21-

அப்ராக்ருத நித்ய விபூதி திரு மா மணி மண்டபம் -திருப் பாற் கடல் -ஸ்ரீ தாயார் திருவவதார ஸ்தானங்களை எல்லாம் விட்டு
கல்லும் கனை கடலும் வைகுண்ட மா நாடும் புல் என்று ஒழியும் படி அன்றோ வாத்சல்யம் அடியாக மனத்துள்ளான்

பேராளபெருமானே! உனக்கு உறைவிடங்கள் பல உள்ளன. பாற்கடல் உள்ளது,
ஸ்ரீவைகுண்டத்தில் திருமாமணி மண்டபம் உள்ளது. இவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை உனக்கு.
நீயோ மனித இதயமே மிக உயர்ந்ததாய் அதனுள் உறைகின்றாய்.
மிக இழிவான இந்த மனித உடலில் இதயத்தில் உறைந்து அவனை கடை தேற எவ்வளவு பாடு படுகிறாய்.
அதற்கு ஒரே காரணம் அவனிடம் நீ காட்டும் இரக்கம், அன்பு.

————

பாலாக்ரே தேர் வட பலாசா மிதஸ்ய யஸ்ய
ப்ரஹ்மாண்ட மண்டலம் அப்ஹுது த்ரைக தேசே
தஸ்யைவ தத் வரத ஹந்த கதம் ப்ரபூதம்
வராஹம் ஆஸ்தி தவதோ வபுர் அத்புதம் தே -22-

ஆலிலை பாலகன் அத்புதம் -கோலா வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்டது அதி அத்புதம் –
ப்ரஹ்மாண்டம் அதி அல்பம் என்று காட்டி அருளிய அவதாரங்களை சேர்த்து அனுபவிக்கிறார் –

அருளாள பெருமானே! நீ சிறு குழந்தையாக ஆலிலை மேல் சயனித்து உன் வயிற்றில் சிறு பகுதியில்
ப்ரமாண்டம் அனைத்தையும் அடக்கிக்கொண்டாய். இது ஒரு பெரிய அற்புதம்.
நீ வராஹ அவதாரம் எடுத்த போது அந்த திருமேனி ப்ரஹ்மாண்டத்தில் அடங்கி இருந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று?
இது உன்னால் மட்டும் தான் முடியும். உன்னுடைய அற்புத திருவிளையாடல்களை என்னவென்று வர்ணிப்பது?

————

பக்தஸ்ய தானவ சிசோவ் பரிபாலனாய
பத்ராம் நரஸிம்ஹ குஹனாம் அதி ஜக்முஷா தே
ஸ்தம்பைக வர்ஜமதுநா அபி கரீச நூனம்
தரை லோக்யம் ஏதத் அகிலம் நரஸிம்ஹ கர்ப்பம் -23-

சகலத்திலும் அந்தராத்மா ஆனதே பக்த பிரகாலனது பரிபாலனத்துக்காகவே -என்கிறார் –

க்ராமன் ஜகத் கபட வாமனாதாம் உபேத்
த்ரேதா கரீச ச பவான் நிததே பதானி
அத்யபி ஜந்தவ இமே விமலேன யஸ்ய
பாதோத கேந விதர்த்தேன சிவ பவந்தி -24-

ஸ்ரீ பாத தீர்த்த மகிமையால் அன்றோ குரு பாதக ருத்ரன் சிவன் ஆனான் –

ஏனா கால ப்ரக்ருதிந ரிபு சம்ஷயார்த்தி
வாராம் நிதிம் வரத பூர்வம் அலங்காயஸ் த்வம்
தம் விஷய ஸேதும் அதுனா அபி சரீரவந்தா
சர்வே ஷடூரமி பஹுளாம் ஜலதிம் தரந்தி-25-

சேது தரிசன மாத்திரத்தாலே சம்சாரிக ஆர்ணவம் தாண்டி -ஷடூரமி -பசி தாகம் மனச்சோர்வு ஆசை மூப்பு மரணம் -இல்லாமல்
பெருமாள் இலங்கேஸ்வரனை நிரசித்தால் போலே -இந்திரியங்களை வென்று-பரம புருஷார்த்தம் அடைவோமே –

இதிஹம் கரீச துரபஹ்நவ திவ்ய பாவ்ய
ரூபான் விதஸ்ய விபுதாதி விபூதி சாம்யாத்
கேசித் விசித்ர சரிதான் பவத அவதாரான்
சத்யான் தயா பரவசாஸ்ய விதந்தி சந்த -26-

அவதார ரஹஸ்யம் அறிந்து அதே சரீராவசனத்தாலே பரம புருஷார்த்தம் பெறலாமே –
சுத்த சத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்தவன் அன்றோ –

ஸுசீல்ய பாவித திவ்ய பாவித கதநாசித்
சஞ்சதிதான் அபி குணான் வரத த்வதியான்
ப்ரத்யக்ஷ யந்தி அவிகலம் தவ சந்நிக்ருஷ்டா
பத்யு த்விஷம் இவ பயோத வ்ரதான் மயூகான்–27-

அருணனுக்கு தானே ஆதித்யனின் மஹிமை தெரியும் -உன் பரத்வம் அறிபவர் மஹ ரிஷிகள் –
ஸுசீல்யம் அன்றோ நீசரான நம் போல்வார் பற்றும் படி –
அம்மான் ஆழிப் பிரான் எவ்விடத்தான் -யான் யார் -ஆழ்வார் விலக யத்தனிக்க
இப்படி கூடாதவரையும் வென்று சேர்க்க -ஸுசீல்யம் காட்டி அன்றோ –

நித்யம் கரீச திமிராவில த்ரஷ்டய அபி
சித்தாஞ்சநேந பவதைவ விபூஷிதாக்க்ஷ
பஸ்யந்தி உபரி உபரி சஞ்சரதாமத்ர ஸ்யம்
மாயா நிகுத்தம் அநபாய மஹா நிதிம் த்வாம் -28-

அர்ச்சா மூர்த்தி யுடைய -திவ்ய மங்கள விக்ரஹம்-தானே சித்தாஞ்சனம் -உன்னுடைய திவ்யாத்மா ஸ்வரூபம் முழுவதும் அறிந்து கொள்ள –
மாயா பிரகிருதி திரோதானமாக இருந்தாலும் உன் புறப்பாடு அலகால் மஹா நீதியான உன்னையே நீயே காட்டி கொடுத்து அருளுகிறாய் –

சத்யா த்யஜந்தி வரத த்வயி பத்த பாவ
பைதாமகாதிஷு பதேஷ்வபி பாவா பந்தம்
கஸ்மை ஸ்வேதேத ஸூக்த சஞ்சாரன உத்ஸுகாய
காரா க்ருஹே கனக ஸ்ருங்கலயா அபி பந்தா -29-

திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் பெற்றவர்கள் ப்ரஹ்ம லோகாதிகளையும் புல்லை போலே துச்சமாக அன்றோ தள்ளுவார்கள் –
பரமாத்மனி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மனி -என்று இருப்பவர் இங்கேயே முக்த பிராயர்-
புண்யமான கனக விலங்காலும் சம்சார சுழலில் கட்டுப் படாமல் ஸூக மயமாகவே உத்ஸாகமாக சஞ்சாரம் செய்வர் –

ஹஸ்தீஸ துக்க விஷ திக்த பல அநு பந்தினி
அப்ரஹ்ம கிதம பராஹதா ஸம்ப்ரயோகே
துஷ் கர்ம சஞ்சய வஸாத் துரதிக்ரமே நா
பிரதி அஸ்ரம் அஞ்சலி அசவ் தவ நிக்ரஹ அஸ்த்ரே–30-

அஞ்சலி பரமாம் முத்திரை அன்றோ -நிக்ரஹ சங்கல்பம் மாற்றி மோக்ஷ பர்யந்தம் அளிக்கச் செய்யுமே –

த்வத் பக்தி போதம் அவலம்பிதம் அக்ஷமாநாம்
பாரம் பரம் வரத கந்துமணீஸ் வரானாம்
ஸ்வைரம் லிலாங்கயிஷாதாம் பவ வாரி ராஸீம்
த்வாமேவ கந்தும் அஸி சேது அபாங்குரா த்வம் –31-

நீயே உன்னை பெற உபாயமாகிறாய் அபாங்குர-சேதுவை போலே சம்சார ஆர்ணவம் கடக்க –

ஆஸ்ராந்த சம்சரண கர்ம நிபீதிதஸ்ய
ப்ராந்த்ஸ்ய மே வரத போக மரீசிகாசு
ஜீவாது அஸ்து நிரவக்ரஹ மேதா மான
தேவ த்வதீய கருணாம்ருத த்ரஷ்ட்டி பாதா-32-

லோக ஸூகங்களான கானல் நீரிலே அல்லாடி திரியும் அடியேனுடைய தாப த்ரயங்கள் தீர
தேவரீருடைய கடாக்ஷ கருணாம்ருதமே ஒரே மருந்து -ஜீவாது –

அந்த ப்ரவிஷ்ய பகவான் அகிலஸ்ய ஐந்தோ
ஆ ஸேதுஷ தவ கரீச ப்ர்ஸாம் தவியான்
சத்யம் பவேயம் அதுனா அபி ச ஏவ பூயக
ஸ்வாபாவிக தவ தயா யதி ந அந்தராயா -33-

ஸ்வாபாவிக தயை அடியாகவே தானே மனத்துள்ளானை அறியலாம் –
அத்தை கொண்டாடுகிறார் இதில் –

அஞ்ஞானதா நிர்கமம் அநாகம வேதினாம் மாம்
அந்தம் ந கிஞ்சித் அவலம்பனம் ஆஸ்னு வானம்
எதாவாதிம் கமயிது பதாவிம் தயாளு
சேஷாத்வ லேசா நயனே க இவ அதி பார -34-

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்–இது வரை சதாசார்யர் மூலம் அஞ்ஞானம் போக்கி
யாதாத்ம்ய ஞானம் உண்டாக்கி பர ந்யாஸம் பண்ணுவித்து அருளினாய்
அழியாத அருள் ஆழிப் பெருமான் செய்யும் அந்தமிலா உதவி எல்லாம் அளப்பார் யாரே –
இன்னும் சேஷமாக உள்ள சரீர சம்பந்தத்தையும் ஒழித்து பரம புருஷார்த்தமாகிய
ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் கொடுத்து அருளுவது உனக்கு பரமோ –

பூயா அபி ஹந்த வசதி யதி மே பவித்ரி
யாமயாசு துர் விஷக வ்ரத்திஷூ யாதனாஸு
சம்யக் பவிஷ்யதி ததா சரணாகதானாம்
சம்ரஷிதேதி பிருதம் வரத த்வதீயம் –35-

-சரணாகத ரக்ஷகனை அண்டி –ஆத்ம சமர்ப்பணம் செய்த பின் -சரணாகதன்-நிர்பயம் -நிர்பரம்–
அனுஷ்டான பூர்த்தி அடைந்து க்ருதக்ருத்யன் -ஆகிறான்
இனி அர்ச்சிராதி கதி வழிய பரம புருஷார்த்தம் -நித்ய -நிரவதிக ப்ரீதி காரித கைங்கர்யம் –
நமன் தமர்களுக்கு அஞ்ச வேண்டாமே –

பரே ஆகுலம் மஹதி துக்க பயோநிதவ் மாம்
பஸ்யன் கரீச யதி ஜோஷம் அவஸ்தித த்வம்
ஸ்பார ஈஷணே அபி மிஷதி த்வயி நிர் நிமேஷம்
பரே கரிஷ்யதி தயா தவ துர் நிவார -36-

தயா தேவி -காருண்யமே வடிவாக கொண்டவள் அன்றோ –
வாதார்ஹம் அபி காகுஸ்த கிருபயா பரிபாலயத் -மதியைவ தயையா -ஸ்ரீ கத்யத்தில் –
ஆகவே பாபிஷ்டனான அடியேனும் உன் நிக்ரஹத்துக்கு ஆளாகாமல் ரக்ஷிக்கப் பண்ணுவாள் என்ற மஹா விசுவாசம் உண்டே

கிம் வா கரீச க்ருபணே மயி ரக்ஷணீயே
தர்மாதி பாஹ்ய சஹகாரி கவேஷநேந
நான்வஸ்தி விஸ்வ பரிபாலன ஜாகரூக
சங்கல்ப ஏவ பவதோ நிபுநக ஸஹாய–37-

பக்தியில் அசக்தனான அடியேன் சரணாகதன் –உன் சங்கல்பம் அடியாகவே ரக்ஷணம் பண்ணி அருள இருக்க
தர்ம அனுஷ்டானம் – -நித்ய நைமித்திக வர்ணாஸ்ரம அனுஷ்டானங்களை உன் ஆஞ்ஞா ரூபமான சாஸ்திரம் படி
அனுஷ்ட்டித்து இருப்பதை பார்க்கவும் வேண்டுமோ
ஆகிஞ்சன்யன் -அநந்யகதியான பின்பு வேத சாஸ்திரம் படி உள்ளதை பார்த்து தான் அனுக்ரஹிக்க வேண்டுமோ என்றவாறு

நிர்யந்த்ரனாம் பரிணாமந்தி ந யாவதேதே
நிரந்தர துஷ்க்ருத பாவ துரித பிரரோஹா
தாவன்ன சேத் த்வம் உபகச்சசி சார்ங்க தன்வா
சக்யம் த்வயாபி ந ஹி வாரயிதும் கரீச -38-

நைச்யஅனுசந்தானம் -பல விளம்ப அஸஹிஷ்ணுத்வம் -காலஷேப அஷமத்வம்-நமக்காக த்வரித்து பல அபேக்ஷை –
உன் சார்ங்கம் ஒன்றையே விசுவாசித்து உள்ளேன் -என்கிறார் சீதா பிராட்டியைப் போலே –

யாவத் ந பஸ்யதி நிகாமம் அமர்ஷா மாம்
ப்ரூ பங்க பீஷண கரால முக க்ர்தாந்த
தாவத் பதந்து மயி தே பகவான் தயாளு
உந் நித்ர பத்ம கலிகா மதுரா கடாஷா-39-

பாபிஷ்டனான அடியேனுக்கு யம தர்ம ராஜன் பார்வைக்கு முன்னே உன் கருணா கடாக்ஷம் ரஷித்து அருள வேணும் –

பேரருளாளனே! நீயோ கருணை கடல். மற்ற எல்லா குணங்களும் அதற்கு துணை நிற்கின்றன.
ஆகையால் நீ நிச்சியம் என் வேண்டுகோளை நிறை செய்வாய். மரண காலத்தில் என் உயிரை கவர யமன் வருவான்.
அவனை பார்க்க எனக்கு பயம். அதை நினைத்தால் எப்போதே என் உடம்பு நடுங்குகிறது.
அவன் பார்வை என் மீது விழுவதற்கு முன்பே-உன் பார்வை என் மீது விழுந்து என்னை கண் குளிர கடாக்ஷிக்க வேண்டும்.
அப்போது என் பயம் நீங்கிவிடும், அவனும் என்பக்கம் வரமாட்டான்.

—————–

ச த்வம் ச ஏவ ரபஸோ பவ தவ்ப வாஹ்ய
சக்ரம் ததேவ சிததாரம் அஹம் ச பாலயா
சாதாரணே த்வயி கரீச ஸமஸ்த ஐந்தோ
மதங்க மாநுஷாபீத ந விசேஷ ஹேது -40-

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு த்வரித்து வந்து ரஷித்து அருளினாயே-உன் கருணைக்கு குறையும் இன்றிக்கே இருக்க
உன் வாகனமான ஸ்ரீ கருடாழ்வான் உன்னை வேகமாக கூட்டி வரும் சக்தியும் குறைவற்று இருக்க
ஸ்ரீ ஸூதர்சன ஆழ்வானும் அப்படியே சித்தமாக இருக்க
அடியேனும் சம்சாரத்தில் உழன்று இருக்க -சர்வ ஐந்து ரக்ஷகனான நீ த்வரித்து வந்து ரஷிக்காததன் காரணம் என்னவோ –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டனை தேனமர் சோலை மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே
திரு வைகாசி ப்ரஹ்மோத்சவம் மூன்றாம் திரு நாள் இன்றும் ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் ஸ்ரீ வரதன் காட்டி அருளுகிறார் –

அத்தகிரி அருளாளனே! அன்று கஜேந்திரனை காக்க கருடன் மேல் பறந்து வந்தாய்.
உன் கூரிய சக்ராயுதத்தால் முதலையின் வாயை பிளந்தாய்.
அதே பெருமாள் இன்று அருளாளனாக என் முன் நிற்கின்றாய்.
ஏன் இன்னும் என் சம்சார பந்தத்தில் உழலும் என்னை காக்க வரவில்லை.
ஒரு வேளை அது யானை, நான் மனுஷன் என்று பார்கிறாயோ! உனக்கு அந்த பேதமே கிடையாதே.
யானையை காத்த வரதனே என்னையும் காத்து அருளவேண்டும் –

—————

நிர்வா பயிஷ்யதி கத கரி சைல தாமன்
துர்வார கர்ம பரிபாக மஹாதவாக்னிம்
ப்ராசீன துக்கம் அபி மே சுக யன்னைவ த்வத்
பாதாரவிந்த பரிசார ரஸா ப்ரவாஹ -41-

பாப ஸமூஹம் அடியேனை கொளுத்துவதில் இருந்து தப்ப உன் திருவடிகளில் வழு இல்லா அடிமை செய்ய வேண்டுமே –
என்றே என்னை உன் ஏரார் கோலத் திருவடிக்கீழ் நின்று ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் –
திருவரங்கப் பெரு நகரில் தென்னீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்
கரு மணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே –

முக்த ஸ்வயம் ஸூக்ருத துஷ்க்ருதா ஸ்ருங்கலாப்யாம்
அர்ச்சிர் முகை அதிக்ரதை ஆதி வாஹிக அத்வா
ஸ்வ சந்த கிங்கரதயா பவத கரீச
ஸ்வாபாவிகம் பிரதி லபேய மஹாதிகாரம் -42-

இரு விலங்கு விடுத்து -இருந்த சிறை விடுத்து -ஓர் நாடியினால் கரு நிலங்கள் கடக்கும் —-
தம் திரு மாதுடனே தாம் தனி அரசாய் உறைகின்ற அந்தமில் பேரின்பத்தில் அடியவரோடு எமைச் சேர்த்து
முந்தி இழந்தன எல்லாம் முகிழ்க்கத் தந்து ஆட் கொள்ளும் அந்தமிலா அருளாழி அத்திகிரித் திரு மாலே

த்வம் சேத் ப்ரஸீதசி தவாம்ஸி சமீபதஸ் சேத்
த்வயாஸ்தி பக்தி அநக கரீசைல நாத
சம்ஸ்ர்ஜயதே யதி ச தாஸ ஜன த்வதீய
சம்சார ஏஷ பகவான் அபவர்க ஏவ –43-

பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே
இச்சுவை தவிர யான் போய் இந்திரா லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே
ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
த்வம் சேத் ப்ரஸீதசி-உனது அனுக்ரஹ சங்கல்பமும் –தவாம்ஸி சமீபதஸ் சேத் -உன்னை விட்டு பிரியாத நித்ய வாசமும் –
த்வயாஸ்தி பக்தி அநக -வழு விலா அடிமை செய்யும் படி நீ கடாக்ஷித்து அருளின பின்பும்
சம்ஸ்ர்ஜயதே யதி ச தாஸ ஜன த்வதீய -உன் அடியார் குளங்கள் உடன் கொடியே இறுக்கப் பெற்ற பின்பும்
சம்சார ஏஷ பகவான் அபவர்க ஏவ —சம்சாரமே பரமபதம் ஆகுமே நாமங்களுடைய நம்பி –
அத்திகிரி பேர் அருளாளன் கிருபையால் இங்கேயே அடியார்கள் உடன் கூடி
கைங்கர்ய அனுபவம் பெறலாய் இருக்க மற்று ஓன்று வேண்டுவனோ -முக்த அனுபவம் இஹ தாஸ்யதி மே முகுந்தா –

—————

ஆஹுயமானம் அநபாய விபூதி காமை
ஆலோக லுப்தா ஜெகதாந்த்யம் அநுஸ்மரேயம்
ஆலோஹித அம்ஸூகம் அநாகுல ஹேதி ஜாலம்
ஹிரண்ய கர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம்-44-

விஷ்ணு சிந்தனம் மனசா ஸ்நானம் -ஆஹுயமானம் அநபாய விபூதி காமை –மோக்ஷ பிரதன் என்றும் –
ஆலோக லுப்தா ஜெகதாந்த்யம் அநுஸ்மரேயம் –அஞ்ஞானாதிகளை போக்கி அருளுபவர் என்றும்
ஆலோஹித அம்ஸூகம் –திருப் பீதாம்பரம் தரித்தவன் என்றும்
அநாகுல ஹேதி ஜாலம் –திவ்யாயுதங்களை சதா தரித்து ரஷிப்பவன் என்றும்
ஹிரண்ய கர்ப்ப ஹயமேத ஹவிர்புஜம் த்வாம் -அஸ்வமேத யாகத்தில் தேவரீர் பரிமள வாசிதா வதன அரவிந்த வனம் போலே
திருப் பீதாம்பரம் திவ்ய ஆயுதங்கள் உடன் ஆவிர்பவித்ததை -நித்தியமாக நினைந்தே கால ஷேபம்-

அருளாள பெருமானே! பிரமன் கெய்த அசுவமேத யாகத்தில் அவன் தந்த ஹவிஸ்ஸை அமுது செய்தாய்-
அப்படி செய்து யாக குண்டத்தில் அக்னி போல் காட்சி தந்தாய்.
எந்நாளும் அழியாத மோட்சத்தை விரும்புபவர்கள் உன்னிடம் சரணாகதி அடைந்து ஆத்மாவை சமர்ப்பிவிப்பார்கள்.
நீ உன் கடாக்ஷத்தால் உலகில் இருளை போக்குகின்றாய்.அக்னிபோல் செம்மை நிறமாக காணுகின்றாய்.
உன் திருவாயுதங்களோ மிக சாந்தமாக இருக்கின்றது.
இப்படி அக்னி போல் உன்னை நான் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.

——————–

பூயோ பூய புலக நிசிதை அங்ககை ஏத மான
ஸ்தூல ஸ்தூலான் நயன முகுலை பிப்ரதோ பாஷ்ப பிந்தூன்
தன்யா கேசித் வரத பாவத சமஸ்தானம் பூஷயந்தா
ஸ்வாந்தை அந்த வினய நிபர்த்தை ஸ்வாதயந்தே பதம் தே –45-

தொண்டர் குழாம் -அருளிச் செயல் கோஷ்டியும் வேத கோஷ்டியும் -ஸ்வர -நேத்ர -அங்க -விகாரங்களுடன் —
பாகவத சரணாரவிந்த போக்யதா அதிசயத்துக்கு மங்களா சாசனம் -இவை தான் எனக்கு தேனே கன்னலே அமுதே நெய்யே –
ஆறு சுவை உண்டி -பெற்ற பின்பு கதம் அந்யத் இச்சதி –

————-

வரத தவ விலோகயந்தி தன்யா
மரகத பூதர மாத்திரகாயமானம்
வியாபகத பரிகர்ம வாரவானம்
ம்ர்கமத பங்க விசேஷ நீல மஞ்சம் –46-

அந்தரங்க அணுக்கர்கள் என்ன பாக்ய சாலிகள் -உனது ஏகாந்த திருமஞ்சன சேவையிலும் –
ஜ்யேஷ்டா அபிஷேகமும் சேவையிலும் முற்றூட்டாக அவர்களுக்கு காட்டி அருளுகிறாயே –
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே –
மின்னும் நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே –

வரம் தரும் வரதனே! திருவாபரணங்கள், கவசம் இவற்றை கழற்றிய நிலையிலும்,
மரகத மலைக்கு ஒப்பாக மூலவடிவம் போன்றதாய் கஸ்தூரி குழம்பினால் மிக நீல நிறம் உள்ளதான
உனது திருமேனியை காண்பவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்.

வரம்தரும் பேரருளாளப்பெருமானே! உன்னை சேவிக்க ஏகாந்த சமயங்கள் உண்டு.
அப்போது திருவாபரணம், மாலைகள் எல்லாம் கழற்றி வைக்க நேரிடும்.
அப்போது உன் இயற்கை அழகை சேவிக்க- அநுபவிக்க இயலும்.
அப்போது இதை பார்த்த்துதான் மரகத் மலை படைக்கப்பட்டதோ என்று தோன்றும்.
கஸ்தூரியை குழம்பாக்கி அதை உன் நீல திருமேனியில் சாத்துவதால் அந்த நீல நிறம் மேலும் சிறப்பாகி ஜ்வலிக்கும்.
இதை எல்லோராலும் காணமுடியாது. சிலபேர்-உன் அந்தரங்க கைங்கர்யம் சில புண்யசாலிகள் மட்டும் தான் காணமுடிகிறது.

—————-

அநிப்ர்த பரிரம்பை ஆஹிதம் இந்திராயா
கனக வலய முத்ராம் கண்டதேச ததான
பணிபதி சயனியாத் உத்தித த்வம் ப்ரபாதே
வரத சததம் அந்தர் மானஸம் சந்நிதேய–47-

சயன பேர மணவாள பெருமாள் உடன் நித்ய சேர்த்தி சேவை பெரும் தேவி தாயார் –
பங்குனி உத்தரம் மட்டும் பேர் அருளாள உத்சவர் உடன் சேர்த்தி சேவை –
உபய நாச்சியார் -ஆண்டாள் -மலையாள நாச்சியார்களுடனும் அன்று சேவை உண்டு
நவராத்ரி உத்சவத்தில் கண்ணாடி அறையிலே சுப்ரபாத சேவை உண்டே
சயன பேரர் ஸ்ரீ ஹஸ்திகிரி படி ஏரி மணவாளன் முற்றம் திரு மஞ்சனம் சேவை நித்யம் உண்டே
காலை விஸ்வரூப சேவையில் தானே பெரிய பிராட்டியாருடைய கனக திரு வளைகளுடைய தழும்பை சேவிக்க முடியும் –

துரக விஹகராஜா ஸ்யந்தனா ஆந்தோலிகா ஆதிஷு
அதிகம் அதிகம் அந்யாம் ஆத்ம சோபாம் ததானம்
அநவதிக விபூதிம் ஹஸ்தி சைலேசேஸ்வரம் த்வாம்
அநு தினம் அநிமேஷை லோஷனை நிர்விஸேயம் -48-

திருக்குடை -திரு சின்னம் -திருச் சாமரங்களுடன் -ராஜ வீதியில் திருக் கருட உத்சவம் -ஒய்யாளி –
திருத் தேர் -உத்சவங்கள் கண்டு அருளுவதை
அநிமேஷை லோஷனை நிர்விஸேயம் -கண் இமைக்காமல் அநு தினம் சேவிக்கப் பெரும் பாக்யசாலிக்குக்கு
உன்னுடைய சௌந்தர்யத்தை முற்றூட்டாக காட்டி -கோடாலி முடிச்சு -தொப்ப ஹாரா கிரீடம் -நவரத்ன மாலைகள்
மகர கொண்டை சிகப்பு சிக்கு கொண்டைகள் -பல சாத்தி சேவை அருளுவதை அனுபவிக்கிறார்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே –

நிரந்தரம் நிர்விசாதா த்வதீயம்
அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம்
சத்யம் சபே வாரண சைல நாத
வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா-49-

த்வதீயம் அஸ்ப்ரஷ்ட சிந்த பதம் ஆபி ரூப்யம் -மனசுக்கும் எட்டாத உன்னுடைய ஸுந்தர்ய திவ்ய மங்கள விக்ரஹத்தை
யாதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹா –
அடியேனுடைய ஊனக் கண்-மாம்ச சஷூஸ் – கொண்டே -நிரந்தரம் பருகும்படி அருளிச் செய்த பின்பு
சத்யம் சபே வாரண சைல நாத வைகுண்ட வாஸே அபி ந மே அபி லாஷா –மோக்ஷ அனுபவ ஆசை அற்றதே -இது சத்யம் –
இன்று வந்து உன்னைக் கண்டு கொண்டேன் -உனக்குப் பனி செய்து இருக்கும் தவம் உடையேன் -இனிப் போக விடுவதுண்டே-

வ்யாதன்வன தருண துளசி தாமபி ஸ்வாமபிக்யாம்
மாதங்காத்ரவ் மரகத ருசிம் பூஷணாதி மானஸே நா
போக ஐஸ்வர்ய ப்ரிய ஸஹசரை கா அபி லஷ்மி கடாஷை
பூய ஸ்யாம புவன ஜனனி தேவதா சந்நி தத்தாம்-50-

மரகத மணி குன்றமான பேர் அருளாளனை பெரும் தேவி தாயார் உடன்
மானஸ சாஷாத்கார சேவை தந்து அருள நமக்காக பிரார்த்தித்து அருளுகிறார் –

———————

இதி விகிதம் உதாரம் வேங்கடேசந பக்த்யா
ஸ்ருதி சுபகமிதாம் ய ஸ்தோத்ரம் அங்கீ கரோதி
கரி சிகரி விதாங்க ஸ்தாயின கல்ப வ்ருஷாத்
பவதி பலம் அசேஷம் தஸ்ய ஹஸ்த அபஷேயம் -51-

பல ஸ்ருதியுடன் நிகமித்து அருளுகிறார் –
தமது அனைத்தையும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்க அமையுடைய பேர் அருளாளர் அன்றோ –

இவ்வாறு வேங்கடேசனால் பக்தியோடு இயற்றப்பட்டதாய் கருத்துக்கள் நிறைந்ததாய்
செவிக்கும் இனியதான இந்த ஸ்தோத்திரத்தை எவன் ஏற்று பயிகின்றானோ
அவனுக்கு அத்தகிரியான மாளிகையில் புறாக்கூண்டு போல மேல்பாகத்தில் நிற்கின்ற
கற்பக மரத்திலிருந்து எல்லா பலனும் கையால் பறிக்க ஏற்றதாய் ஆகின்றது.

————————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வேதார்த்த சங்கக்ரஹம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் –

February 12, 2018

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –

திருவேங்கடமுடையான் முன்னிலையிலே திருமலையிலே நம் எம்பெருமானார் அருளிச் செய்தது
248 மஹா வாக்கியங்கள் -10 பிரகரணங்கள்
முதல் பிரகாரணம் -18 வாக்கியங்கள் -2 மங்கள ஸ்லோகங்கள் -விசிஷ்ட ப்ரஹ்மம் சேதன அசேதனங்கள் விட வேறுபட்ட –
முதல்ஸ்லோகம் -ஸூவ சித்தாந்த ஸ்தாபனம் -பகவத் -மங்களா சாசனம் -2 பர மத நிரஸனம் -ஆச்சார்ய வந்தனம் –

ஸ்ரீ மங்கள தொடக்க ஸ்லோகங்கள்

அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே சேஷ சாயினே
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம –

அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே
அனைத்துக்கும் அதிபதி அன்றோ –
அவன் ஒருவனே தன்னிச்சையாய் ஸ்வ தந்த்ரனாய் -இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தி அருளுகிறான்
சேஷ சாயினே
ஞானம் பிறந்து தலை அறுபட்ட சேஷ பூதன் சம்பந்த ஞானம் பெற்றவன்
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே
தூய முடிவற்ற மங்கள ஸ்வரூபி -தன்னிகர் அற்றவன் -திவ்யமானவன் -குற்றமற்ற நற்குண சமுத்ரம்
விஷ்ணு சம்பந்தம் நித்யம் -இன்ப மயம்
பூர்ணத்வமே நமக்கு மோஷம் அளிக்கும்
சூர்யன் கதிர்கள் சேற்றில் விழுந்தாலும் அழுக்கு அடைவது இல்லையே
விஷ்ணவே நம –
அந்த விஷ்ணுவை சரண் அடைகின்றோம் –
சர்வ ஸ்மாத் பரன்-சர்வ வியாபி -விஷ்ணு -வியாபன சீலன் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே திவ்ய ஆத்ம -ஸ்வரூபம் -சரீர சரீரீ பாவம் –
சேஷ சாயினே -ரூபம் – -திவ்ய மங்கள விக்ரஹம்
நிர்மல ஆனந்த கல்யாண நிதயே–ஹேய ப்ரத்ய நீகத்வம் -அநந்த -கல்யாண குணங்கள் நிறைந்த வைத்த மா நிதி அன்றோ
இத்தால் ஸூ வ சம்ப்ரதாயம் சொல்லிற்று ஆயிற்று

——————————————————————————————

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரம் ப்ரஹ்மா -ஏவ -அத்யந்த -சர்வஞ்ஞா சர்வவித் -பிரமம் அஞ்ஞனம் ஆஸ்ரயம் என்று -ஏகத்துவ அத்விதீயம்
நிரதிசய புருஷார்த்தம் -ஸூ க துக்க சம்சாரம் அனுபவிக்கும் -சங்கர மதம்
பரோபாத்ய லீடம் விவசம்
பாஸ்கர மதம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் ஜகத் சத்யம் என்பர் உபாதைக்கு ஆதீனம் என்பர் ஷேத்ரஞ்ஞார் கர்மம் உபாதை
பர உபாதிக்கு -பரஸ்ய உபாதி ஜீவ உபாதி -ஸ்வ தந்த்ர ப்ரஹ்மத்துக்கு பாரதந்தர்யம் -விவசத்வம் தோஷம் இங்கே அஞ்ஞத்வம் அங்கு
அசுபஸ் யாஸ் பதமிதி
யாதவ பிரகாசர் -அசுபங்களுக்கு இருப்பிடம் -ஸ்வரூப பரிணாமம் சிகி அசித் என்பர் -தோஷங்கள் ஸ்வரூபத்திலே என்பர்
சுருதி ந்யாயா பேதம்
ஸ்ருதிகளுக்கும் நியாயங்களும் அபேதம் விலகி உள்ளவை இந்த மூன்றும் -சமுதாயமாக –
ஜகதி வித்தம்
இந்த மூன்றும் ஜகத்தில் பரவி -கலி யுகம் -விஸ்தரித்து உள்ளது
மோஹனமிதம் -மோஹிக்க வைக்கும் –
தமோ யே நா பாஸ்தம் சஹி -தமஸ் யாராலே போக்கடிக்கப் பட்டது -சித்தி த்ரயம் –
விஜயதே யாமுன முனி -ஆளவந்தார் மங்களா சாசனம் பூர்வகமாக –

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி-
அத்வதை வாத நிரசனம் -பர ப்ரஹ்மமே அஜ்ஞ்ஞானத்தில் மூழ்குமாயின்-அத்தை ப்ரஹ்மம் என்று அழைக்க மேன்மை யாது
அனைவரையும் உஜ்ஜீவிப்பிக்கும் அதுவே அதுவே சோகித்தால் அத்தை உஜீவிப்பார் யார்
ப்ரம பரிகதம் -என்று பிரமத்தில் சிக்குண்பதை சொல்கிறது
தத் பரோபாத்ய லீடம் விவசம்
ப்ரஹ்மம் மாற்றம் விளைவிப்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது
பர -என்று இயல்புகள் தனிப்பட்டவை -உண்மையானவை -ப்ரஹ்மத்தில் இருந்து வேறு பட்டவை -இவற்றில் தலை யுண்டு
ப்ரஹ்மம் கால சக்கரத்தில் மாட்டிக் கொள்கிறது
அசுபஸ் யாஸ் பதம் –
மேலும் ப்ரஹ்மம் அசுபங்களின் இருப்பிடம் -யாதவ பிரகாசர் கொள்கை
ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணம்-வேதக் கொள்கையை அறியாமல்
பரம் ப்ரஹ்மைவ-என்றது –
அனைத்துக்கும் மேலான -எல்லா வகையிலும் மேம்பட்ட -ஆனந்த ஸ்வரூப -அகில ஹேய ப்ரத்ய நீக – சமஸ்த கல்யாண குணங்கள்
நிறைந்த பரிசுத்தமான -இவனை
சங்கர பாஸ்கர யாதவ பிரகாசர் அஜ்ஞ்ஞானம் அமலங்கள் துக்கம் இவற்றால் உழல்வதாக சொல்லி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம் தம
ஜகதி வித்தம் -உலகம் எங்கும் பரவி
மோகனம் -மதி மயக்குபவை
யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –இந்த அறியாமை இருளைப் போக்க யாமுன முனி வென்று நிற்பாராக
ஆளவந்தாருக்கு ஜய கோஷம் இட்டு அருளுகிறார்

———————————————————————————————————
சாதனம் – -ஹிதம் விதிக்கும் சாஸ்திரம் -முக்கிய விதேய அம்சம் -புருஷார்த்தம் அவிதேயம் –
அசேஷ ஜகத் ஹித அனுசாசனம் -ஸ்ருதி நிகரம் -சிரஸி – சமுதாயம் -ஓன்று தான் -சர்வருக்கு பொது–பகவத் பிராப்தியே பலமாக கொண்ட
-அத்யர்த்த ப்ரீதி -அளவு கடந்த -பரம புருஷ சரண யுகள த்யானம் -அத்யந்த ப்ரீதி பூர்வகமாக -பக்தி -அர்ச்சனை பிராணாயாமம் அங்கங்கள்
-மாம் நமஸ்குரு மத் தயாஜ்ய்
அதில் இருந்து அறியும் -ஜீவ பர யாதாம்யா ஞான பூர்வகமாக -சர்வ சேதன காரண புதன் -சர்வ சேஷி சர்வ நியாந்தா சர்வ நியாந்தா
-ஜீவன் ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்-வர்ணாஸ்ரம தர்மம் கர்தவ்யம் -த்ரிவித தியாகம் உடன் -சாஷாத்கார ரூபமான ஞானம் ஆகும் –

பவ பய துவம்சம் -புனர் உத்பத்தி இல்லாத படி -வித்வம்சம் -இதற்கே சாஸ்திரம் பிரவர்த்தி -சம்சார பயம் அவர்ஜனீயம்
-அழியாத ஆத்மவஸ்துவை அழியும் தேகமாக பிரமித்து அபிமானிப்பதால் -தேக பிரவேசம் -சதுர்வித –
ப்ரஹ்மாதி சூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான -ஜெனித அவர்ஜனீய பவ பய -விதும்சத்துக்குகே வேதாந்த பிரவ்ருத்தி-
ஆத்ம ஸ்வரூபம் ஸ்வபாவம் அறிவிக்க -தர்ம பூத ஞானம் -அந்தர்யாமியாகவும் உள்ளான் மேலும் என்பதையும் அறிவித்து
-ஆழிப்பிரான் நமக்கே உளான் –
தஸ்மிந் பிரவ்ருத்தம்
7 ஸ்ருதி வாக்கியங்கள் -காட்டி -அருளி –
1-தத்வமஸி-தத் -தவம் அஸி -அப்ருதக் சித்தம் சரீர பூதன் -வர்த்தமானம் மூன்றுக்கும் உப லக்ஷணம் –சதா பஸ்யந்தி ஸூ ரயா -போலே -நித்யம்
2-அயம் ஆத்மா ப்ரஹ்மா -சர்வ ஆத்மா -என்று காட்ட -மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அதிகாரி அனைவரும் உம் உயிர் வீடுடையான் இடம் வீடு செய்மினே
-நித்ய அப்ருதக் பர சித்தம்
3- ஆத்ம திஷ்டன் – உள்ளே இருந்து நியமிக்கிறார் -முழுவதும் வியாபித்து -ஆத்மனோ அந்தர -யா ஆத்ம ந வேத யஸ்த ஆத்மா சரீரம்
-நிருபாதிகம்-நிரபேஷமாக -இருப்பதை அறியாதவன் -யா பிருதிவி ந வேத -பிருத்வி சரீரம் அறிய பிரசக்தி இல்லாத அசேதனம் போலே -ஸ்வரூபம்
4- அபஹத பாப்மா -சஹா நாராயணா -ஸ்வ பாவம் -ஏக திவ்ய -ஏகோ நாராயணா
5-உபாசனம் யஜ்ஜம் தானம் தபஸ் -ஆச்சார்யர் மூலம் உச்சாரணம் அநு உச்சாரணம் -தேவ பூஜா -சரீரத்தயா-
அநாசகேந -பலத்தில் இச்சை இல்லாமல்
ஸ்வரூபம் ஸ்வ பாவம் -ஆத்மாவுக்கு ஞானம் ஆனந்தம் -சரீரம் தேவாதி பிரகிருதி பரிமாணங்கள் கர்மாவால் வந்த -சரீர பேதங்கள்
-நாநா வித பேத ரஹிதம் ஜீவன் -சாங்க்யா-ஜீவன்கள் -அங்கும் -முமுஷு திசையிலும் ஸ்வரூப பேதம் உண்டு
எல்லாரும் ஞானம் ஆனந்தம் முழுவதாக இருந்தாலும் -ஸ்வயம் பிரகாசம் -அஹம் ப்ரத்யக் -பராக் ஜீவர்கள்
-ஸர்வேஷாம் ஆத்மனா -சர்வ அவஸ்தையிலும் ஸ்வரூப பேதம் –
ஏவம் வித -பிரபஞ்சம் -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது -உத்பவம் -ஸ்திதி -பிரளயம் -சம்சார நிவர்த்தகத்வம் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து வி லக்ஷணம்
-ஸ்வரூபம் -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தானம் -ஏக ஆஸ்ரய பூதன் -ஹேய் ரஹீதத்வாத் வி லக்ஷணம் –
ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -அனவதிக அதிசய அஸந்கயேமான கல்யாண குண கணாம் –
பரஞ்சோதி -பர ப்ரஹ்மம் -பரமாத்மா நாராயண -சர்வாத்மா -பர தத்வம் -சப்த பேதங்கள் வேதாந்த வேதியன் அந்தர்யாமி ஸ்வரூபம்
-புருஷோத்தமன் பரமன் –நிகில வேதாந்த வேதியன்
நியமனம் -நிகிலவற்றையும் -சர்வ நியாந்தா –
ஆதாரம் -சேஷி -அபேதம் சாமா நாதி கரண்யம் –
தத் சக்தி -பரஸ்ய ப்ரஹ்மம் சக்தி -தத் ஏக சக்தி அகிலம் ஜகத் –

—————————————————————

சின் மாத்ரம் ப்ரஹ்மம் -மாத்ரம் சப்தம் -சிதேவ-இதர விஷயங்களையும் மாத்ரம் ஞாத்ரு ஜேயம் இவற்றையும் விவர்த்திக்கிறது என்பர்
ஒன்றும் தேவும் -பெயர் எச்சம் -அனைத்தும் அவன் இடம் ஒன்றுமே தவிர ஐக்கியம் இல்லை –
நித்ய முக்த ஸூ பிரகாசவாதப ப்ரஹ்மம் -தத் த்வம் ப்ரஹ்ம ஐக்கியம் -என்பர் சங்கரர் –
அஞ்ஞானம் ஆஸ்ரயம் ஆக ப்ரஹ்மம் தவிர வேறே இல்லை -பத்த திசையிலும் ப்ரஹ்மம் தான்
ப்ரஹ்மம் தான் பந்தம் அடைகிறது த்வம் -உபதேசம் ஏற்று -மோக்ஷம் முக்தி என்பர் -ப்ரஹ்மம் ஏவ முக்தி அடைகிறது
நிர் விசேஷ சின் மாத்திரை ஏவ ப்ரஹ்மம் -அநந்த விகல்ப-ஈஷா ஈஷித்வய -பதார்த்த தாரதம்யம் ஜகாத் -நாநாவிதம் உண்டே –
தோற்றம் மித்யா -சத்தும் இல்லை அசத்தும் இல்லை -கயிறு சர்ப்பம் -ஞானம் வந்தால் போவது போலே -பிரமத்தை கொண்ட ப்ரஹ்மம் என்பர்
ஞான நிவர்த்திய பதார்த்தம் மித்யா –
நம் சித்தாந்தம் ஜகத் நித்யம் -ஞானம் மாத்ரத்தால் போக்க முடியாது –
மோக்ஷம் விடுபடுதல் -எதில் இருந்து -மாயையான சம்சாரத்தில் இருந்து -அதனால் இதுவும் மித்யை என்பர் -பந்தமும் பந்துக்கு ஆஸ்ரயமான பத்தனும் மித்யை
முக்தியும் முக்திக்கு ஆஸ்ரயமான முக்தனும் மித்யை -என்பர்
பிரிவே இல்லை -ஒரே ப்ரஹ்மம் -ஜீவாபாவம் -நாநாஜீவ பாவம் எப்படி -ஒரே ஜீவ பாவம் என்பர் மற்றவை நிர்ஜீவன் உள்ள சரீரம் -வாசனையால் பிரமிக்கிறாய் –
அந்த சரீரம் எது -என்பது -ஒருக்காலும் அறிய முடியாது -ஆச்சார்யரும் மித்யை உபதேசமும் மித்யை
-ஆச்சர்யம் சிஷ்யன் விஷயம் இருந்தால் அத்வைதம் ஹானி வரும் -illusion தான்
-தத் த்வம் அஸி human bomb என்பர் -ஞானம் வந்த பின்பு இந்த வாக்கியமும் மித்யை -என்பர் –

ப்ரஹ்மம் வைபவம் சாஸ்திரம் கழித்து அவயவங்கள் இல்லாமல் ஆக்கி வைக்கிறார்கள்
பாஸ்கர மதம் -தோள் தீண்டி -ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டன் என்பான் இவன் -ஜகத் சத்யம் -இவனும் அத்வைதி –
ப்ரஹ்மத்துக்கு அஞ்ஞானம் சொல்பவர் வாயை பொசுக்கு என்பர் -உபாதி சம்பந்தம் ப்ரஹ்மத்துக்கு -அகண்டமான வஸ்துவை சகண்டமாக ஆக்குவது உபாதி
கர்மா உபாதி -ஷேத்ரஞ்ஞர்-ஸத்யமான உபாதியால்- ஏகத்துவ அத்விதீயம் ப்ரஹ்மம் -ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டத்வத்தால் என்பர்
-உபாதி தர்மம் விருத்தம் உண்டாக்குவது
கண்ணாடி பிரதிபிம்மம் -நூறாக உடைந்து நூறாக தெரியும் -உடைந்த கண்ணாடி தொலைந்தால் ஒன்றாகும்
உபாதியால் பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சங்கல்பம் –
தேனைவ ஐக்கிய அவபோதென-ஒன்றாகும் -பலவாக தோன்றி ஒன்றாக ஆவதே அத்வைதம்
ஒன்றாகவே இருந்து ஒன்றாக இருப்பது செத்த பாம்பை அடிப்பது போலே -சங்கர அத்வைதம் நிந்தை
அவர்களே பரஸ்பர கண்டனம் –
க்ஷேத்ர ஞ்ஞர் புண்ய பாப ரூப கர்ம -உபாதி எப்படி ஆகும் –
பரமார்த்தமான தோஷம் சொல்பவர் -சங்கர் அபரமார்க்கமான தோஷம் அவித்யை -இதனால் தோஷம் சொல்வதில் இவர் விஞ்சி –
அபரே-வாக்யம் இவருக்கு
அந்நிய-அடுத்து யாதவ பிரகாசர்

குண சாகரம் ப்ரஹ்ம -உதார குண சாகரம் ப்ரஹ்மம் -அபரிமித உதார குண சாகரம் ப்ரஹ்மம் நிரதிசய -ஸ்வா பாவிக உதார அபரிமித குண சாகரம் ப்ரஹ்ம
நாரகீ-நரகத்தில் துக்க அனுபவம் -நரகம் ஸ்தான விசேஷம் இல்லை -பாப பல ரூப துக்க அனுபவம் -நரகம் என்னும் அனுபவத்தில் ஆத்மா என்றபடி
இடம் சொன்னால் நாரக –
துக்க அனுபவ விசிஷ்டன் நரன் –ஸூ கீய-
ஸ்வர்க்ய-ஸ்வர்க்கத்து அனுபவம் உள்ள ஆத்மா -ஸ்தான விசேஷம் இல்லை
போக்தா -போகம் பண்ணுபவன் -போக கிரியை பண்ணுபவன் போக்தா –
ஞான யாதாத்மா -அபவத-பரமபத அனுபவம் உள்ள ஆத்மா இங்கும் ஸ்தான விசேஷம் இல்லை
சேதன ஸ்வபாவங்கள்
ப்ரஹ்மத்துக்கு ஸ்வரூபேண சேதன அசேதனமாக பரிணமிக்கிறது -சதுர்வித தேகங்கள்-என்பர் யாதவ பிரகாசர்
மேலே பக்ஷங்களை கண்டித்து –
தோஷங்களை காட்டி -உதாகரித்து -ந கதயந்தி -துஷ் பரிஹரான் தோஷங் உதாகரித்து -ஞான அக்ரேஸர்கள்
ஸ்ருதி அர்த்தம் பரி ஆலோசனை -பண்ணி –

இமா சர்வா பிரஜையாக -தன் மூலாக -ஸ்ருஷ்ட்டி -சத் என்னும் ப்ரஹ்மம் மூலம் ஆயதனம் இருப்பிடம்
தத் பிரதிஷ்டாக -லயம் என்றவாறு –
ப்ரஹ்மமே சகலமாக ஆவேன் சங்கல்பித்து -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லய காரணம் தானே -என்றவாறு
சர்வஞ்ஞத்வம் -சர்வ சங்கல்பத்துவம் -ஸர்வேச்வரத்வம் -இதனால் காட்டி -சர்வ பிரகாரத்வம் -சரீரம் பிரகார பாவம்
சரீரத்தால் பரிணாமம்
ஸ்வரூபத்துக்கு தோஷம் வராதே –
சமாப்யதிக நிவ்ருத்தி ஓத்தார் மிக்காரை இலையாய மா மாயன்
சத்யா ஸங்கல்பன்
சர்வ அவபாசித்வம் -பிரகாசிப்பித்து ஞான விஷயம் ஆக்கி -சூர்யன் சந்திரன் நக்ஷத்திரங்கள் அக்னி வித்யுத் போல்வன -அவனால் –
ஹேயா உபாதேய ஞானம் உண்டாக்கி -ஆத்ம புத்தி பிரகாசம் முமுஷுஹூ உபாசனம் –
நிர்விசேஷத்வம் சொல்ல ஒட்டாது –
ப்ரத்யவசனம்–அதஸ்யாத் -நாம் சொன்னதை விலக்கி-உபக்ரமம் -பிரகாரணம் ஆரம்பம் -உத்தாரகர் -ஸ்வகேதுவிடன்
-கற்றவனை போலே ஸ்தாப்தமாக உள்ளாய் -அறிந்து கொண்டாயா -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் பிரதிஜ்ஜை பிரகரண ஆரம்பம்
நிரூபிக்க திருஷ்டாந்தம் –
ஹேது சொல்லாமல் -விஷயம் அறியாதவனுக்கு த்ருஷ்டாந்தம் காட்ட -அனுப பன்னம்
மூன்று த்ருஷ்டாந்தம் –யதா சோம்யா-மிருத்ய பிண்டம் -ஞானத்தால் மண் பாண்டங்கள் அறிவது போலே -அந்தரகதம்-/
நாம ரூபங்கள் அடங்கவில்லை -மண் என்ற ஒன்றே -வாயும் வயிறும் -அழிந்து அழிந்து தோன்றுவபவை -மண் மட்டும் சத்யம் –
காரணமான ப்ரஹ்மம் மாத்ரம் சத்யம் -மற்றவை அசத்தியம் என்பர் -கார்ய விகார சேதன அசேதனங்கள் அசத்தியம்
சத் என்று பேறு கொடுத்து
இதம் அக்ரே -ஸ்ருஷ்டிக்கு முன்பு சதேவ ஆஸீத் -ஏக மேவ ஆஸீத் -அத்விதீயம் ஆஸீத்
சத்தாகவே இருந்தது -விசஜாதீயம் இல்லை
ஏக மேவ -சஜாதீயம் இல்லை
அத்விதீயம் ஸூ வகத பேதம் இல்லை -குணங்கள் வியக்தி பேதம் வருமே -அதுவும் இல்லை என்பர்
தோப்பு -மா மரங்கள் பலா மரம் -விஷஜாதீயம் -மா மரங்களுள் சஜாதீயம் -பேதம் -கிளை இல்லை பூ பிஞ்சு காய் -ஸூவ கீத பேதங்கள்
ஞான ஸ்வரூபம் -சேதனம் சஜாதீயம் பிரத்யக்காக இருக்குமே –
அசேதனம் ஞான ஸ்வரூபம் இல்லை பராக்காக இருக்கும் -விசஜாதீயம்
கல்யாண குணங்கள் -திவ்ய மேனி இத்யாதி -ஸூ வ கீத பேதம்
நிஷ்கலம் நிரஞ்சனம் -வாக்கியங்கள் பொருந்தும் –
சாமான்ய கரணம் -விசேஷணம் வராதே -சத்யம் ப்ரஹ்ம / ஞானம் ப்ரஹ்மம் -அநந்தம் ப்ரஹ்மம் -மூன்றும்
ஸ்யாம யுவா -தனி தனியாக சப்தம் வருமே பிரத்யக்ஷத்தால் ஒன்றாக காணலாம்
விசிஷ்ட ப்ரஹ்மம் சொன்னால் ஏகத்துவம் குலையும் என்பர் –
தர்மி பரமாகவே அர்த்தம்
சத்யம் -நிர்விகார பதார்த்தம் ப்ரஹ்மம்
ஞானம் -அஜாதம் / அநந்தம் -பரிச்சின்னமாக இல்லாமல் தர்மியாக
ஒரே அர்த்தம் -தன்னை ஒழிந்த அனைத்திலும் வேறு பட்டது -மூன்றுக்கும் வாசியும் உண்டே என்பர்
மேலு இதே பிரகரணத்தில்
நிஷ்கலம் -அவயவங்கள் இல்லாமல் -ரூபம் இல்லை -நிரூபத்வம்
நிஷ்க்ரியம்-கார்யம் செய்யாமல் -கிரியை இல்லை -பிறவிருத்தி
நிர்குணம் -அதுக்கு காரணமான குணம் இல்லை
நிரவத்யம் நிரஞ்சனம் –கர்ம சம்பந்தம்-தோஷம் இல்லை -அதன் -கர்ம பல சம்பந்தம் ரஹிதம்
திர்யக் -கர்ம பல சம்பந்தம் உண்டு கர்ம சம்பந்தம் இல்லை –
பிரளய ஜீவன் கர்ம பல சம்பந்தம் இல்லை கர்ம சம்பந்தம் உண்டே –
-விசேஷணம் ஏற்காது -குண சம்பந்த ப்ரத்ய நீக்கம் -ரஹித்தவம் மட்டும் இல்லை சம்பந்த பிரசக்தியே இல்லை என்பர்
அத்விதீயம் -தன்னைக் காட்டிலும் வேறு பட்ட குணங்களையும் சகிக்காது -சர்வ விசேஷ ப்ரத்ய நீக ஆகாரத்வம் என்பர்
ஏக விஞ்ஞான சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜை –
சர்வமும் உண்டாக இருந்தாதல் தான் விஞ்ஞானம்
நாஸ்தித்வம் விஞ்ஞானம் தான் ப்ரதிஜ்ஜை பண்ண முடியும் -மூன்றாம் வேற்றுமை –
ஒன்றை அறிந்ததால் சர்வ பதார்த்தங்கள் அறிவும் அடங்கி உள்ளது -என்ற அர்த்தம் –
ப்ரஹ்ம பந்து வேதங்கள் அத்யயனம் பண்ணாமல் ஜடம் -12 வயசில் வெளி சென்று -24 வயசில் திரும்பி வர -அறிந்து கொண்டாயா -ஆதேய சப்தம்
ஆதேச — -உபதேச விஷயம் / அதுக்கே மேல் ஒன்றும் இல்லை /ஞானத்துக்கு விஷயமானால் மித்யை ஆகும் -ஞான பின்னம் ஜேயம்
ஞான மாத்ரமாக இருந்தால் தான் சத்யம் அத்வைதிகள் -ப்ரஹ்மம் தவிர எல்லாம் மித்யை என்பதே உபாதிக்கலாம்
ப்ரஹ்ம வியதிர்க்தமான சர்வம் மித்யை அஹம் ப்ரஹ்ம –
த்வம் இல்லை அந்த தத் -போதிக்க முடியாது -வைலக்ஷண்யம் தான் –
அந்த விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டாயா –
நாம் உபதேச விஷய அர்த்தம் இல்லை -ஆதேசா கர்த்தா -அவர்களுக்கு கர்மணி நமக்கு கர்த்தா -நியமனம் என்ற அர்த்தம் -ஏக ஆதேச –
ஓன்று ஆதேசம் இன்னும் ஓன்று உபதேசம்
ஆ உப சர்க்கங்கள் -சொல்லும் கட்டளை படி சிஷ்ய லாபம் உபதேசம்
ஆதேசங்கள் -ஆச்சார்ய பலம் -உபதேசம் அனுஷ்ட்டிக்கும் சிஷ்யர் -ஆதேசம் ஆச்சார்யர் இடம் -கர்த்ரு பிரதானம்
பலம் ஆச்சார்யர் இடம் ஆதேசம் -சர்வ நியந்த்ருத்வம் சர்வ பிரசாகத்தவம் -என்றபடி
ஆதேச பராமாத்மா என்றபடி –
சதேவ –காரணத்வம்-வாக்யம் நிர்விசேஷ வாக்யம் இல்லை -ப்ரஹ்மமே அபின்ன நிமித்த உபாதான காரணத்வம் சொல்கிறது
ஸ்ருஷ்ட்டி இரகரான ஸ்ருதி வாக்யம்
மேலே அநேக ஜீவேன அனுபிரவேசன -எல்லாம் சொல்லும் –
சதேவ யஸீத் -ஸ்ருஷ்டிக்கு முன்னால் சத்தாகவே இருந்தது -void யிலிருந்து வர வில்லை –
நாம ரூப விபாகம் அற்ற-இதனுள் அடங்கி -ஒன்றும் தேவும் –ஒன்றுதல் -லயம் அடைந்து -அது தான் சதேவ ஆஸீத் உபாதான காரணம்
அக்ரே -ஸ்ருஷ்டிக்கு முன்பு -இதம் பிரத்யக்ஷமாக காணும் இவை –
ஏகமேவ –நிமித்த -காரணம் குயவன் -அதே உபாதான காரணமான ப்ரஹ்மமே –வேறு பதார்த்த அந்தரம் இல்லையே -பதார்த்தாந்தர நிஷேதம் –
மண் தானே கடமாக பண்ணிக்க கொள்ளுமோ -அத்விதீயம் -லோகம் போலே இல்லது இல்லையே -விலக்ஷணம் –
பிரகரணம் காரணத்வம் -நாம் சொல்வது -ஸத்யமான சகலத்துக்கும் தானே உபாதான நிமித்த ஸ்ருஷ்ட்டி கார்த்த சகல இதர விலக்ஷணன்
-அவனை அறிந்தால் அனைத்தும் அதிலே அடங்கும் -நம் சம்ப்ரதாயம்
எல்லாம் சத்யம் -சம்ப்ரதாயம் சத்யம் -அவர்கள் எல்லாம் அஸத்யம்–எனவே அவர்களது அசத்திய சம்ப்ரதாயம்
நிகில காரணதயா -உபாதான அபின்ன நிமித்த -காரணத்வம் -சர்வ சரீரீ -சர்வாத்மகத்வம் -உபாதானம் இதனால் –
முமுஷு அறிந்து கொள்ள வேண்டியது இது தான் -சர்வ சரீரீ எனக்கும் சரீரீ -சங்கல்பம் -நிமித்த காரணம் –
தானே -வேறே அபேக்ஷை இல்லாமல் -சர்வஞ்ஞான் சர்வ சக்தித்வம் இத்யாதி எல்லாம் தன்னடையே வரும்
-பிதா புத்திரனுக்கு ஹிதமாக தெரிவித்தது -இது தானே -கோல த்ருஷ்டமான கார்ய காரண பாவங்கள் போலே இல்லாமல் -விலக்ஷண பாவம் –

அக்ரே -பூர்வ காலே -ஸ்ருஷ்டிக்கு முன் தசையில் -ஒரே பதார்த்தம்-த்ரவ்யார்த்தமான காரணம் -ஒன்றே -சத்தாகவே -இருந்தது-குண விஷ்ட ப்ரஹ்மமே உபாதானம் –
காரியமும் காரணமும் சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் ஸூ ஷ்ம திசையிலும் ஸூதூல திசையிலும் –
சங்கல்பத்தால் ஸூஷ்ம தசை ஸூ தூல -ஸ்ருஷ்ட்டி -ஸூ தலமான தசையில் ஸ்திதி -மீண்டும் ஸூ ஷ்ம தசைக்கு போவது லயம்

————————————————–

ஏவம் வித சித் அசிதாத்மக பிரபஞ்சஸ்ய
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்தநைக
ஹேது பூத ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீக தயா
அனந்த கல்யாணை கத தானதாய சே
ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப
அனவதிக அதிசய அஸந்கயேய கல்யாண குண கணான் -அந்தர்யாமி ரூபம் பேசுகிறார் இதில் –

சரீராத்மா பாவம் -ஏவம் யுக்தம் பவது -ப்ரஹ்மாத்மகம் -சரீரம் பிரகாரம் -அப்ருதக் சித்த விசிஷ்டம்
யஸ்ய ஆத்மா சரீரம்–ஜீவாத்மா பிரகாரம் – -தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ஜீவனுக்கு பிரகாரம் –
சேஷ பூதங்கள் ஜீவனுக்கு -ஜீவன் அவனுக்கு சேஷ பூதம் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் –
பிரகிருதி பிரத்யக யோகம் -ராமாக ப்ரீதி -கிருஷ்ண கிருஷி பண்ணுகிறவன் -சேதனனே புருஷார்த்தம் கண்ணனுக்கு –அடைந்து மகிழ்பவன் –
பரமாத்மாவையே அனைத்தும் அபிதானம் பண்ணும் -சேதனத்வாரா அசேதன அந்தர்யாமி -விசாஜீயத்துக்குள் சஜாதீயன் மூலம் –
ஆதேய பதார்த்தங்கள் சேதனங்களும் சேதனனும் -பராமாத்மா பர்யந்தம் அனைத்தும் அபரிவஸ்யம் ஆகுமே –
அபரிவஸ்யான வ்ருத்தி
நிஷ்கர்ஷ வ்ருத்தி -பிரதான பரிதந்த்ரம் -உபபத்தி உடன் அறிந்தவனே பண்டிதன் –
சத் -உபாதானம் நிமித்தம் -ஆதாரம் நியாந்தா சேஷி யாக கொண்டு -இமா சர்வா பிரஜாய -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டவை
தன் மூலாகா -அவனே காரணம் /
சத் ஆயதனம் -அதிகரணம் ஆச்ரயணம் இருப்பிடம் -ஸ்திதி –
சன் நியாம்யம் -சத் பிரதிஷ்டா –லயம் அவன் இடமே –
சத் சத்யம் -விகாரம் ஆற்றாது -அந்த ப்ரஹ்மமே ஆத்மா -நீ சரீர பூதன் என்று ஸ்வ கேதுவுக்கு –
உபாசனம் செய்ய உபதேசிக்கிறார் -த்வம் ஜீவன் உப லக்ஷணம் ஜீவாத்மா ப்ரஹ்மாத்மகம் –
தேககதமான தோஷம் ஆத்மாவுக்கு போகாதே -/சுக துக்கம் ஞான விசேஷங்கள் -அவை தான் ஆத்மாவுக்கு போகும்
சரீரம் ஆத்மாவை நல்ல வழியில் படுத்த கொடுக்கப் பட்ட கரணம் -அத்யந்த ஹேயமாக நினைக்க வேண்டாம் –
த்வம் -மத்யம புருஷ -சரீர விசிஷ்ட ஆகாரம் -புண்ய பாபா ரூப கர்மாவால் சம்பாதிக்கப்பட்ட பிரகிருதி சம்பந்தம் -ஞானம் சுருங்கி இருக்கும்
வாஸ்துவத்தில் நீ பிரகார பூதன் -என்று ஸ்வரூப யோக்யதை -ப்ரஹ்ம பிராப்தி ஸ்வாபாவிக புருஷார்த்தம் காட்ட இந்த வாக்யம் என்றுமாம் –
வேதாந்தம் -சம்பந்தம் அறிவித்து ப்ரஹ்ம பிராப்தியில் பொருந்த விடவே உபதேசம் -என்றவாறு -சாஸ்த்ர பிரவ்ருத்தி ஜனகம் தானே –
வேதாந்தம் ஸ்ரவணம் பண்ணி -கற்றார் நான் மறை வாளர்கள் -ஆசனத்தின் கீழ் இருந்து ஆச்சார்ய முகேன கற்றவர்கள் –
வேத வியாசம் பண்ணும் சாமர்த்தியம் உள்ளவர்களாக கற்றவர்கள் ஆவார்கள்
-ப்ரஹ்ம கார்ய தயா -ப்ரஹ்மாத்மகம் என்று அறிந்து -அஞ்ஞானம் தீர பெற்று -ப்ரஹ்ம பிராப்தி அடைவார்கள் –

-25-வாக்கியங்கள் -காரண வாக்கியங்களை கொண்டு இது வரை -சங்கல்பம் -ஞான விசேஷம் -சர்வ சக்தித்வம் -சர்வ ஆதாரத்வம் –
ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டன் -மேல் சோதக வாக்கியங்களை கொண்டு நிரூபிக்கிறார்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -அப்படிப்பட்டவை -ஸ்வரூபத்தை சாதகம் -பரிசுத்தமாக நிரூபித்தால்
உபாதானம் -விகாரம் வருமே -லோகத்தில் -மண் பானை -ஸ்வரூப விகாரம் உண்டே /
பொன்-ஆபரணம் -லோக மணி -தங்கம் ஸ்ரேஷ்டம் -என்ற அர்த்தம் -/விகாரம் அவர்ஜனீயம்
சங்கை போக்கி -இந்த வாக்கியங்கள் -உபாதான காரண விகாரங்கள் இல்லை –
ஏகார்த்த ப்ரஹ்மம் வராது என்பர் -அத்வைதி -ஸ்வரூப பரம் குண பரம் இல்லை -என்பர் –
சத்யம் ப்ரஹ்ம –
சத்தா யோக்ய பதார்த்தம் -சம்ப்ரதாயம் –நிருபாதிக-தன்னுடைய சத்யைக்கே வேறு ஒன்றும் வேண்டாமே –
ஸமஸ்த இதர பதார்த்தங்கள் சத்தை இவன் அதீனம்-நிர்விகார பதார்த்தம்
ஞானம் ப்ரஹ்ம –
ஸர்வவித-ஸ்ருஷ்டிக்கு சர்வவித் சர்வஞ்ஞன் -நியமனம் சங்கல்ப் ரூபம் -தாரகத்வம் ஸ்வரூபத்தால் -/மோக்ஷ பிரதத்வம் முக்த போக்யத்வத்துக்கும் இதுவே –
பெரியாழ்வார் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இவன் ஒருவனே –ஞானத்தால் -அனைத்தும் –
அநந்தம் ப்ரஹ்ம –
தேச கால வஸ்து த்ரிவித பரிச்சேதம் இல்லாமல் / விபு -தேச பரிச்சேதம் இல்லை -நித்யத்வம் கால பரிச்சேதம் இல்லை /
வஸ்து பரிச்சேதம் ரஹிதம் அசாதாரணம் -சரீராத்மா பாவம் -சர்வத்துக்கும் உண்டே -சர்வ சப்தமும் இவன் இடம் பர்யவசாயம் ஆகுமே
நித்யத்வம்- விபுத்வம்- சர்வ சரீரீத்வம் -மூன்றும் இதனால் சொன்னவாறு -தோஷம் பிரசங்கத்துக்கு வழி இல்லையே
காரண வாக்கியங்கள் மட்டும் இல்லை -இதுவும் தோஷ ரஹிதத்வம் சர்வாதாரத்வம் -ஸமஸ்த கல்யாணைகதைகத்வம் -சோதக வாக்கியம் –
நிர்விசேஷம் சாதிக்காது –
சர்வ ப்ரத்யநீகம் -அத்யந்த வேறுபட்டு -இருக்கும் ஆகாரம் போதிக்கிறது என்று கொண்டாலும் –
அசாதாரண தர்மம் -ச விசேஷ ஆகாரத்தையே காட்டும்
ஞான மாத்திரம் சின் மாத்திரம் –ஞாதா ஜேயம்-இரண்டுமே -இல்லை அறிபவன் அறியப்படும் பொருள்கள் இல்லை -என்பர் -அத்வைதிகள் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -ப்ரஹ்மத்துக்கு சொல்ல வேண்டுமே -ஜெகன் மித்யை சத்தா யோக்யம் இல்லை என்றால் –
ப்ரஹ்ம ஸ்வரூபம் வேறே ஒன்றை கொண்டே நிரூபிக்க வேண்டும் -ஆத்ம ஆஸ்ரயம் இல்லாமல் –
வேறு ஒன்றின் அபேக்ஷை இருக்குமே -சர்வஞ்ஞன் சர்வவித் -எல்லாவற்றையும் அறிந்தவன் -எல்லா பிரகாரங்களை அறிந்தவன் –
அறியப்படும் பதார்த்தங்கள் சித்தமாகுமே -இதனால் –
அறிவின் ஸ்வ பாவம் யுடையவன் -ஆத்மஸ்வரூபம் -தர்ம தர்மி -இரண்டாலும் -ஞான சப்தத்தாலே சொல்லலாம் –
தத் குண சாரத்வாத்-விஞ்ஞானம் என்றே சொல்லலாமே
விஞ்ஞானம் யாகாதி-லௌகாதி கர்மங்கள் செய்யும் -சொல்லுமே ஜீவாத்ம வாஸகத்வம் –
ஸ்வரூபம் ஸ்வரூப நிரூபக தர்மத்தையும் குறிக்கும் -சத்யம் ஞானம் அநந்தம் அமலம் -நான்கும் –
தத் த்வம் அஸி–ஜகத் காரணம் -சதேமேவ –ஏகமேவ அத்விதீயம் -ஆரம்பித்து -தத் சப்தம் -பூர்வ வாக்கியத்தில் சொன்ன -ப்ரஹ்மம் –
பிரகிருத பராமர்ஸித்வம் -த்வம் -கர்ம வஸ்யம் அஞ்ஞன் அல்ப சக்தன் –ப்ரஹ்மம் அகர்ம வஸ்யம் ஆனந்த ஏகம் —
நீயும் கூட பிரகார புதன் -உனக்கும் அவனே ப்ராபகம் -பிராப்யம்-இதுக்கு தானே இந்த உபதேசம் -வேதாந்த வாக்கியம் அறிவிப்பதற்கே –
அஹம் ப்ரஹ்மாஸ்மி –இதே போலே -தத் த்வம் -இரண்டு பதார்த்தம் சித்தித்தால் ஐக்கியம் வராதே –
நீ என்று நினைத்து கொண்டு இருந்த த்வம் -மித்யை -/தத் -நீ இல்லை -பிரமித்து இருந்தாய் –
நான் அல்லாத பதார்த்தத்தை -சர்ப்பம் கயிறு போலே -என்பர் அத்வைதி –
தத்– ந த்வம்- என்றவாறு -சர்ப்பம் இல்லை -என்ற ஞானத்தால் பிரமம் போகும் –
அஹம் -இது வரை நான் என்று பிரமித்து – ந அஹம் -என்பதே ப்ரஹ்ம சப்தம் சொல்லும் இதிலும் –
இதில் தோஷம் -லக்ஷணா அர்த்தம் -ஸ்வார்த்தம் விட்டு வேறே ஒன்றை கொள்ளுவது -அமுக்கிய விருத்தி கொண்டு வாக்யார்த்தம் பொருந்த விடுவது
கங்காயாம் கோசா -கரையில் தானே கோ சாலை -லக்ஷனையால் -பொருந்த விடுவது –
சோ அயம் தேவதத்தன் -அன்று அங்கு பார்த்தவன் இன்று இங்கு பார்க்கும் -ஸ்ம்ருதி விஷயம் பிரத்யக்ஷ விஷயம் –
ஞானம் இரண்டு விதம் -பூர்வ அனுபவ சம்ஸ்காரம் நினைப்பது ஸ்ம்ருதி -இந்திரிய வியாபார சாபேஷம் –
அனுபவம் விஷய இந்த்ரிய ஜன்ய ஞானம் -விஷய சம்யோகத்தால் ஏற்படும் –
வாக்யார்த்த விரோதம் போக்க தானே லக்ஷணை-சோ அயம் தேவதத்தன் -விரோதம் இல்லை -லக்ஷணை வராதே இங்கு
அதே போலே இல்லை தத் த்வம் -அஹம் ப்ரஹ்ம இவைகள்
சப்தம் – வாக்கியம் -தாத்பரியாதீனம் -இப்படி ஒவ் ஒன்றும் -வாக்கியம் பிரகரணம் அதீனம் -பிரகரணம் -சாஸ்திரம் அதீனம் -தாத்பர்ய லிங்கம்
1-உபக்ரம உபஸம்ஹாரம் –2-அப்பியாசம்-3-பலம் -4-அபூர்வவத் –5-அர்த்தவாதம் -6–உபபத்தி -ஏகார்த்தம் -ஆறும் லிங்கங்கள் உண்டே
சரீராத்மா பாவம் தானே உபக்ரம உபஸம்ஹாரம் விரோதம் வராமல் இருக்கும்

-32-வாக்கியம் தொடங்கி –சப்தம் -அனுமானம் -பிரத்யக்ஷம் –சப்தம் -கொண்டு ஆரம்பித்து –
சாஸ்திரம் ஒன்றையே ஒத்து கொள்வான் அத்வைதி -நிர்வேஷ வஸ்து விஷயத்தில் ந பிரமாணம்
ஸ்வரூபம் –ப்ரக்ருதி ப்ரத்யயம் -இரண்டு ஆகாரம் -கொண்டதே சப்தம் -பகுதி விகுதி -இரண்டும் உண்டே
வேறுபடுத்திக் காட்ட சப்தம் -சப்தம் ஸ்வரூபம் பேதம் -பிரகிருதி ப்ரத்யாயம் கொண்டதால் –
பிரமாணம் நிர்விசேஷமாக இல்லையே -ஆகவே பிரமேயம் நிர்விசேஷமாக இருக்காதே –
மட் குடம் -சப்தம் -வாயும் வயிறுமான -மண்ணால் -காட்ட பிரயோகம் -விசேஷ வஸ்துவை பிரதிபாதிக்கவே –
இதுக்கு அத்வைதிகள் பதில் –
சித்த சாதனம் -இருவருக்கும் அபிமதம் -சாதிக்க தேவை இல்லையே -வாதிக்கும் பிரதிவாதிக்கும் -என்பர் அத்வைதி –
ஸ்வயம் பிரகாசகம் -சப்தம் கொண்டு நிரூபிக்க வேண்டாமே –
இருப்பதாக தோன்றும் விசேஷணங்களை காட்டி நிவ்ருத்திக்கவே சப்த பிரமாணங்கள் என்பர் –
ஞான மாத்ர சின் மாத்ர ஸ்வயம் பிரகாச வஸ்துவை இது காட்ட வேண்டாமே –
பிராமண அபேக்ஷை இல்லை -இதுக்கு –
அது அப்படி அன்று -இதுக்கு பதில் -வஸ்துவை நிர்தேசித்த பின்பே தான் விசேஷணங்களை நிவ்ருத்திக்க முடியும் –
ஞான மாத்திரமே என்ற சப்தம் கொண்டு -விஞ்ஞானம் ஏவ -சுருதி சொல்லுமே -இப்படி நீர்த்தேசிக்கும் என்பர் இதுக்கு பதில்
ஞாத்ருத்வம் ஜேயத்வம் இவற்றை நிவ்ருத்திக்கும் –
இப்படி நிர்தேசித்து விவச்சேதித்து சப்தம் காட்டலாமே என்பர்
பிரகிருதி -ஞானம் -மாத்திரம் ப்ரத்யயம் -இரண்டும் உண்டே -இதிலும் என்பதே நம் பதில் —
ஞான அவ போதனை தாது -அறிதல் -அறிவது தாது -எத்தை அறிவது -யாரை எதை யார் கேட்டு பதில் வருமே -ச கர்ம தாது –
இன்னாரை அறிகிறான் இன்ன வஸ்துவை இவன் அறிகிறான் -புருஷனை ஆஸ்ரயமாக கர்த்தாவும் உண்டே -ச கர்மம் ச கர்த்து உண்டே
மாத்ர ப்ரத்யயம் -லிங்கம் -அடையாளம் -விவச்சேதம் பிரக்ருதியில் நிரூபிக்கப்பட்டதை நிவர்த்திக்க முடியாதே –
ஏக மாத்திரம் -சங்கா நிவர்த்தகம் -தாது அர்த்தத்தில் உள்ள ச கர்த்து ச கர்ம இவற்றை நிவர்த்திக்காதே –
அனுபூதி ஞானம் -அந்நயாதீனம் -சுவாதீனம்- ஸ்வயம் பிரகாசம் -இத்தை சாதிக்க ஹேது -தன்னுடைய சம்பந்தத்தால்
வேறே வஸ்துவை -ஜகத்தாதிகளை காட்டும் -அனுமானம் அத்வைதிகள் இப்படி –
வஸ்துவே இல்லை என்றால் -ஸ்வயம் பிரகாசத்வம் நிரூபிக்க முடியாதே -விஷய சம்பந்தம் இல்லா விடில் சாதிக்க முடியாதே
ஞாத்ருத்வம் ஜேயத்வம் இல்லா விட்டால் ஞானம் ஸ்வயம் பிரகாசத்வம் சித்திக்காதே
ஸ்வயம் பிரகாசத்வம் இருந்தால் பிராந்தி -உண்டாக்காதே -ராஜகுமாரன் வேடனாக பிரமித்தான் -நான் பிரமம் இல்லை –
ராஜ குமாரத்வம் தானே பிராந்திக்கு உட்பட்டு வேடத்துவம் ஆனான் –
நான் -ஸ்வயம் பிரகாச பதார்த்தம் -பிராந்திக்கு ஆஸ்ரயம் ஆகவில்லையே –
நான் -அளவு தான் -ஸ்வயம் பிரகாசம் -வேடன் மனுஷ்யன் ராஜ குமரன் ப்ராஹ்மணன் இவற்றில் பிரமம் வரலாம் –
தேக ஆஸ்ரய விஷயம் என்பதால் –
மாத்ர சப்தத்தால் எத்தை நிவர்த்திக்க பார்க்கிறாய் -போக்க ஞானத்தில் எந்த பிராந்தி உண்டு -ஸ்வயம் பிரகாசமான பின்பு –
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் -ஒன்றை -காரணத்தை அறிந்தால் -அனைத்து காரிய பொருள்களை அறியலாம் –
அறிய வேண்டியது ஒன்றும் இல்லை என்றால் -இது எப்படி –
உபாதான பதார்த்த ஞானத்திலே இவை எல்லாம் அடங்கும் -அபேதம் -ஏக விஞ்ஞான அபின்ன சித்தாந்தம் –
நாமதேயம் விகாரம் -விவகார மாத்திரம் -அழிந்து அழிந்து -போகும் –மண் மட்டுமே சத்யம் -போலே –
வாக்கு விவகாரம் மாத்திரம் மற்றவற்றுக்கு
கடம் -மண்ணாக்க கிரியை வேண்டுமே -வியாபார சாத்தியம் சத்யம்–
ஞான மாத்ர சாத்தியம் என்பது வெறும் மித்யை தானே -பாம்பு கயிறு போலே இல்லையே
-40-வாக்கியம் –சத்ஏவ -விஜாதீய பேதங்கள் – ஏவ ஏக மேவ–சஜாதீய பேதம் -அத்விதீயம் -ஸ்வ கத பேதங்களை நிரசிக்கிறது
சேதன அசேதனங்கள் மித்யை என்றால் -இவை காரியம் -காரணம் ப்ரஹ்மம் இதுவும் மித்யை யாகுமே
ஸ்வேதகேது அறியாத ஒன்றை சொல்ல வந்த -காரண வாக்கியம் -இத்தை விட்டு பேத வஸ்துக்கள் இல்லை என்று சொல்ல வர வில்லை –
நிமித்த உபாதான அபின்னம் காட்ட இந்த வாக்கியங்கள் / முதல் அத்யாயம் நான்காம் பாதம் ஏழு அதிகரணங்கள் வரை –
ப்ரஹ்ம காரணத்வம் -ஆக மொத்தம் -31-அதிகரணங்கள் நிரீஸ்வர சாங்க்யர் பக்ஷம் நிராகரிக்கப்பட்டு
மேலே சேஸ்வர சாங்க்ய பக்ஷம் நிராகாரம்–உபாதானம் பிரக்ருதிக்கு வைத்து நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்பர் இவர்கள்
ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் ஆகும் -பிரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் -ஒன்றை அறிந்து -இவைகள் உபபன்னம் ஆகும் என்பர்
இங்கு ப்ரக்ருதி என்றது உபாதானம் என்றபடி -சாஷாத் ஸ்ருதி வாக்கியங்கள் பலவும் உண்டே -தைத்ரியம் உபநிஷத்
சகல ஜகத்தையும் தரிக்கும் ப்ரஹ்மம் -எந்த வ்ருக்ஷத்தை உபாதானமாக கொண்டு ஸ்ருஷ்டித்தது என்று ஞானிகள் கேளுங்கோ –
கேட்டால் பதில் சொல்லுவேன் வேத புருஷன் –
தச்சன் -ரதம் நிர்மாணம் -வ்ருக்ஷம் தேர்ந்து எடுத்து உளி உபகரணங்கள் கொண்டு -ஸ்தானம் தேர்ந்து எடுத்து பண்ணுவான் போலே –
ஞானம் மட்டும் போதாதே இவனுக்கு
ப்ரஹ்மம் நிர்மாண நிபுணன் -இவை வேண்டுமே -புவனம் அனைத்தையும் படைக்க –
ப்ரஹ்ம வனம் ஸ்தானம் — ப்ரஹ்ம ச வ்ருக்ஷம் –தன்னையே கொண்டது –
அத்யாதிஷ்டாதி புவனாதி உபகரணங்களும் தன்னையே -வேறே ஒன்றையும் அபேக்ஷிக்காதே

ப்ரஹ்மத்துக்கும் அவித்யை -ஸ்வரூப திரோதானம் -ஜகத்தாக பிரமம் -அவித்யையும் பிரமம் -தானே-
ப்ரஹ்மம் இதர என்பதால் கல்பிக்க வேண்டும் –
இதுக்கு வேறே அவித்யை தேட வேண்டும் -அநவாஸ்தா தர்சநாத் –அநாதி என்று கொண்டு பரிகரித்தால் –
அவித்யை ஸ்வா பாவிகமாக கொள்ள வேண்டும் –
-56-வாக்கியம் -பிரத்யக்ஷம் -ஆத்மா பஹு சத்யம் -ப்ரஹ்மமே ஆத்மா -என்பான் என் என்னில் –
ஏக மேவ சரீரம் ஜீவன் -மற்றவை நிர்ஜீவன் என்பர்
கர்தவ்யம் உண்டா ஜீவன் இல்லாத சரீரத்துக்கு -ஸுபரி-50-சரீரம் எடுத்தாலும் ஒன்றில் தான் ஜீவன் மற்றவற்றில்
தர்ம பூத ஞானத்தால் ஸூ க துக்கம் அனுபவம் என்றால்
ப்ரஹ்மம் -தர்ம பூத ஞானம் இரண்டையும் கொள்ள வேண்டுமே –
முக்த ஜீவன் அனுபவம் அவர்களுக்கு இல்லை -ப்ரஹ்மமாகவே ஆகிறான் என்பர் அத்வைதிகள் –
ஸ்வப்னம் -நாநா வித மநுஷ்யர்களை பார்த்து -இவர்கள்ஜீவன் இல்லாத சரீரம் தானே –
அவர்கள் தங்கள் ஜீவன் உடன் வேறே இடத்தில் இருப்பார்களே -என்பர் –
ஸ்வப்னம் மித்யை உம் மதத்தில் -அத்தை த்ருஷ்டாந்தமாக காட்ட கூடாதே –
யதா மாயா யதா ஸ்வப்னம்ந் யதா கந்தர்வ நகரம் -தாத்தா ஜகத் மித்யை நிரூபிக்க வேண்டாமே -என்பர் –
வேதாந்த ஞானம் தெளித்தால் இத்தை அறியலாம் என்பர் –
ஒரு வாதத்துக்காக ஒத்துக் கொண்டால் -ஜகத் -பொய்யான தோற்றம் பந்தனம் -மித்யா ரூபம் -அவித்யை நிமித்தம் –
சம்சார நிவர்த்தி மித்யை நிவ்ருத்தி -அவித்யா நிவ்ருத்தி ஏவ மோக்ஷம் –
உன் மதத்தில் அவித்யைக்கு நிவ்ருத்தி எதனால் -என்ன வகையான அவித்யை ஆராய்ந்து பார்த்தால்
ஐக்கிய ஞானம் நிவர்த்தகம்-பேத ஞானம் தான் துக்கத்துக்கு காரணம் –ப்ரஹ்மம் மட்டுமே உள்ளது –
ஏகத்துவ ஞானம் உண்டானால் அவித்யா நிவர்த்தகம் -நிவர்த்தி அநிர்வசன -ப்ரஹ்மம் சத் –
மற்றவை அசத்– முயல் கொம்பு மலடி மகன் -சத்தான ப்ரஹ்மமும் இவையும் துக்கம் கொடுக்காதே —
சத்தும் அசத்துக்கும் இல்லாத அனிர்வசனிய ஜகத் தான் துக்கம் கொடுக்கும் –
ப்ரத்யநீக ஆகாரம் – -இவை இல்லை என்கிற ஞானம் -தான் போக்கும் / இந்த நிவர்த்தய ஞானம் சத்தா அசத்தா கேள்வி வருமே
ப்ரஹ்மமே நிவர்த்தகம் என்றால் -அநாதி -ப்ரஹ்மம் வ்யதிரிக்தமான சர்வமும் அசத் -சர்வ சூன்யம் புத்தவாதம்
ப்ரஹ்மத்தை நிரூபணம் பண்ணும் ஞானமும் சூன்யம் என்றால் எப்படி –
ப்ரஹ்மம் ஒத்து கொண்டு -இருந்தாலும் -நிரூபக பிரமாணமும் மித்யை என்பதால் -புத்த சமானமே -இதுவும் –
வேதம் ஒத்துக் கொண்டாலும் -அதுவும் மித்யை -ப்ரஹ்ம வியதிரிக்தம் அனைத்தும் மித்யை என்கிறான் -பிரசன்ன புத்தர் இதனாலே இவர்கள் –
காட்டுத்தீ -விஷ நிவ்ருத்தி மருந்து -அழித்து தானும் நிவ்ருத்தி போலெ இந்த ஞானம் அவித்யையை நிவ்ருத்தி பண்ணி தானும் அழியும் என்பதால்
ப்ரஹ்மத்தை விட வேறுபட்டதா இல்லையா என்ற கேள்விக்கு இடம் இல்லை -அவித்யா ஞானம் ஒருவருக்கு உண்டாக வேண்டும் -அத்தை கொண்டு சாதிக்க –
யாருக்கு உண்டாகும் என்னில் -ஜீவனுக்கா ப்ரஹ்மத்துக்கா – ப்ரஹ்மம் சர்வஞ்ஞன்-என்பதால் புதிதாக உண்டாகாதே
ஜீவனுக்கு உண்டாகிறது என்றால் -இத்தை கொண்டு தானே அழிய போகிறான் –
நிவர்த்தக ஐக்கிய ஞானம் யாருக்கு சொல்ல முடிய வில்லை-இருந்தாலும் எதனால் உண்டாவது என்னில்
சாஸ்த்ர சுருதி வாக்கியம் -ஜீவன் தனி பதார்த்தம் இல்லை -அபேத சுருதிகள் இதம் சர்வம் –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் ஐக்கியம் போதிக்கும் வாக்கியங்கள் /
ப்ரத்யக்ஷம் பேத வாசனை மூலம் -பலவாக பார்க்கிறோம் -வேதம் அநாதி -புருஷனால் செய்யப்பட வில்லை -நிர்தோஷம்-
க்ஷணம் தோறும் இருப்பதாக தோன்றும் – -அநாதி பேத வாசனை உண்டே -ஜீவன் -அநாதி -கர்மம் அநாதி -சொல்வது போலே -என்னில்
ஸ்வரூபத்தால் நிர்தோஷம் வேதத்துக்கும் என்றாலும் -சொல்லி கேட்பதால் தோஷங்கள் வருமே -பிரத்யக்ஷம் போலே வேதங்களுக்கும் –
ப்ரத்யக்ஷம் மூலம் அனைத்துக்கும் -ஆதித்யம் சூர்யன் யூப ஸ்தம்பம் -யாக சாலை -பேதம் பிரத்யக்ஷம் –
ஆதித்ய சத்ருசம் யூபம் என்று கொள்ள வேண்டும் -சாஸ்திரமும் பிரத்யக்ஷ ஜன்யம் தானே –
வேதம் -ப்ரத்யக்ஷத்தால் நன்கு நிரூபிக்க பட்ட விஷயத்தையும் -பிரத்யஷத்துக்கு விரோதமானவற்றையும் சொல்லாதே
சரீராத்மா கொண்டே பேத அபேத ஸ்ருதியை சமன்வயப்படுத்தி -ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம் இல்லாமல் —
ப்ரஹ்மத்துக்கு அறியப்படும் தன்மை ஏற்பாடக் கூடாதே -ப்ரஹ்மமே சத்யம் -அதனால் வேதத்தால் அறியப்படாத ப்ரஹ்மம் என்பர் அத்வைதி
ப்ரஹ்மம் வியதிரிக்த சகலமும் மித்யை என்று அவற்றை அழிக்கவே வேதம் என்பர் -ப்ரஹ்மம் மட்டுமே இருக்கும்
வேதம் இதுக்கு பிரமாணம் இல்லை என்பர்
வேதாந்த ஞானத்தால் ஸ்பர்சிக்கப் படாத ப்ரஹ்மம் -சாஸ்திரம் சொல்லாது என்று அடாப்பிடியாக சாதிப்பார்
சாஸ்த்ர யோநித்வாத்–விரோதம் வருமே -சாஸ்திரம் மட்டுமே கொண்டு அறிய முடியும் -என்னில் –ப்ரஹ்மத்துக்கு சாஸ்திரம் ஹேது
ப்ரஹ்மம் சாஸ்த்ர யோநித்வாத் -என்பர் -இவர்கள் -சாஸ்திரத்துக்கு ப்ரஹ்மம் கரணம் -ப்ரஹ்மம் வேறு சாஸ்திரம் வேறு சொல்ல மாட்டார்கள்
இரண்டு பதார்த்தம் அத்வைதம் போகுமே -எல்லாம் உண்டாகி -மித்யை போலே -இதுவும் வேதமும் மித்யை என்பர் –
பிராந்தி ரூபமான சாஸ்திரம் பிராந்தி ரூபமான சகலத்தையும் அழிக்கும்-திருடனை வைத்து திருடனை பிடித்தது போலே

பாஸ்கரன் -பேதாபேத வாதி -பேதமும் அபேதமும் உண்டு என்பான் -தர்ம பூதஞானம்-சங்கோச விகாசம் -நாம் சொல்வது போலே –பிரபஞ்சமும் ஈஸ்வரனும் –
ஸ்வா பாவிக அபேதம் -உபாதியால் பேதம் -சேதனன் ஸ்வரூப விகாரம் -அசேதனன் ஸ்வபாவ விகாரம் -ஹேஉங்கள் ப்ரஹ்மத்துக்கும் –
நிர்தோஷ ஸ்ருதிகள் விரோதிக்கும் -அபஹதபாப்மத்வாதிகள் -கூடாதே –அபரிச்சின்ன ஆகாசம் -கடம் வைத்து கடாகாசம் என்று பிரியமா போலே என்பான் –
கடாகாச நிறை குறைகள் மகா ஆகாசத்தில் காண முடியாதே -என்பான் -அகண்ட ஆகாசத்தில் சம்பவிக்காதாதே –
அதே போலே ப்ரஹ்மத்துக்கும் என்று சமாதானம் சொல்வர்
ஆனால் பொருந்தாது -ஸூ ஷ்ம மதார்த்தம் தானே சேதிக்க முடியும் -ஸ்தூல பதார்த்தம் கொண்டு ஆகாசத்தை சேதிக்க முடியாதே –
ஜீவன் ஸூ ஷ்மம்-தர்ம பூத ஞானம் -தானே கர்மத்தால் சுருங்கும் விரியும் -புண்ய பாப கர்மாக்கள் -ஜீவனுக்கு பாதகம் தர்ம பூத ஞானம் மூலம்
ப்ரஹ்மத்துக்கு அப்படி இல்லையே -விகாரம் அநர்ஹம் /பிரதி க்ஷணம் ஜீவர்களுக்கு பந்தமும் மோக்ஷமும் உண்டாகும் இவர்கள் பக்ஷத்தில்
ஆகாசம் -ஏக தேசம் காதில் வந்து சப்த குணகம் -சப்தம் அறிய /சரீரத்தில் ஸ்பர்சிக்கும் ஆகாசத்தில் சப்தம் சரீரம் உணர வில்லை -எப்படி –
அவச்சின்ன தோஷம் மறுக்க முடியாதே -/ தர்க்க பாதம் கண்டிக்கும் –
யாதவ பிரகாசர் –ப்ரஹ்மமே ஜகத்தாக-பரிணாமம் -ஸ்வரூபத்தாலேயே -என்பர் –அவித்யையும் இல்லாமல் உபாதியும் இல்லாமல் –
சங்கரர் -சைதன்யம் மாத்திரம் —-ஸத்யமான-உபாதி-யால் ஜகத் –பாஸ்கரர் -உபாதி போனதும் தோஷம் போகும்
நாம் ப்ரஹ்ம சரீரம் பரிணாமம் என்கிறோம் -ஆத்மாவில் பர்யவசிக்காதே -சரீரகத தோஷங்கள் –
இப்படி மூன்று பக்ஷங்கள்–சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மதங்கள்-
ஈஸ்வரத்வம் குலையாமல் அவதாரம் -திவ்ய மங்கள விக்ரஹத்தை சஜாதீயமாகக் கொண்டே அவதாரம் –
பரிபூர்ணன் அர்ச்சையில்
தேவாதி -ஆத்மாவாகவும் ப்ரஹ்மம் என்றால் -ம்ருத் பிண்டம் -உபாதானம் -கடத்தாலே தானே தீர்த்தம் -மண்ணால் முடியாதே –
பரிணாமம் அடைந்து கார்ய பதார்தத்தில் உள்ளது எல்லாம் காரணத்தில் இருக்க வேண்டாமே என்பதுக்கு இந்த த்ருஷ்டாந்தம் சொல்வர் –
அதே போலே ஸூக துக்கங்கள் ப்ரஹ்மத்துக்கு சொல்ல முடியாது
அங்கு ஆகார பேதம் -ச அவயவமான பதார்த்தங்களை தான் இது -ப்ரஹ்மம் ஸர்வதா நிரவயவ பதார்த்தம் -இதுக்கு ஒவ்வாதே-
ஸத்ய சங்கல்ப குண விசிஷ்டன் காரணத்தில் -ஹேயம் காரியத்தில் என்றால் –இரண்டும் சேராதே -நித்தியமான ப்ரஹ்மத்தில் த்வய அவஸ்தை சேராதே
மேலும் -ஒரே பதார்த்தத்தில் காரணத்தில் அபின்னமாகவும் காரியத்தில் பின்னமாகவும் இருக்க முடியாதே
பர பக்ஷம் நிராகரத்வம் இது வரை -முதல் பாகம் -71-வாக்கியங்கள்

-72-வாக்கியம் தொடங்கி ஸூ மத விஸ்தாரம் -முதல் மூன்று வாக்கியங்களில் அருளிச் செய்தவற்றை -விவரித்து அருளுகிறார்
ஸூ மத ஸ்வீ கார பாகம் -விசிஷ்டாத்வைதம் –அசேஷ சித் அசித் பிரகாரகம் -ப்ரத்ய நீகம் -சங்கர மதம் -ப்ரஹ்மம் ஏகமேவ தத்வம் பொதுவானது
சரீரமாக அப்ருதக் சித்த விசிஷ்டம் -ச விசேஷ அத்வைதம் -நம்மது -நிர்விசேஷ அத்வைதம் அவர்களது –
பத்து ஸ்ருதி வாக்கியங்களை காட்டி -ஸ்தாபிக்கிறார் –
ய ப்ருதிவ்யாம் திஷ்டன் -அசேதன உபலக்ஷணம் —ஆத்ம அந்தரத–சேதன -அனைத்தையும் சொல்லி –
இருந்து-வியாபித்து -அறிய முடியாமல்- சரீரமாக -உள்ளே இருந்து -நியமித்து -அந்தர்யாமி -இவ்வளவும் அனைத்துக்கும் உண்டே
திஷ்டன் -இருந்து / அந்தரக -முழுவதும் வியாபித்து / ந வேத -அறியமுடியாமல் -பிரயோஜக வியாபாரம் /
யஸ்ய சரீரம் -நியமிக்கவும் தரிக்கவும் சேஷ பூதமாக இருக்க -/
ஆதேயம் விதேயம் சேஷம் -உள்ளிருந்து நியமித்து -பாஹ்ய நியமனம் உல்லிங்கனம் பண்ணலாம் இது அதி லங்கனம் பண்ண முடியாதே -/
பிருத்வி -அப்பு -தேஜஸ்- வாயு -ஆகாசம் -அஹங்காரம் அவ்யக்தம்- மஹான் -ஆத்ம-விஞ்ஞானம் -திஷ்டன் இத்யாதி
அந்தர்யாமி -5-லக்ஷணம்–உடல் –வியாபகம் –அறிய முடியாமல் -சரீரமாக -உள்ளே இருந்து நியமனம் –ப்ரஹதாரண்யம் உபநிஷத்
ஸ்வரூபம் ரூபம் குணம் வைபவம் சேஷ்டிதங்கள் சொல்லி –ப்ரீதி உண்டாக்கி -இதர விஷய வைராக்யம் உண்டாக்கி
பரமைகாந்தித்தவம் வர -ஸ்வரூபம் சொன்ன அனந்தரம்
மேலே அந்தர்யாமி இன்னான் -என்று ஸூ பால உபநிஷத் –
பிருத்வி -அக்ஷரம் -மிருத்யு -சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -திவ்ய தேவ -திவு தேவ -திவ்ய மங்கள விக்ரஹம்
ஸ்ருஷ்டியாதி லீலா மாத்திரம் -ஏகக ஒருவனே -நாராயணக -பிராட்டியையும் சேர்ந்தே சொன்னதாகும்–ஸ்ரீ மன் நாராயணன் -வாசக சப்தம் –
-சரீரம்-சஞ்சாரம் -அறிய முடியாமல் இவை அனைத்திலும் -இருந்தாலும் ஸ்வ கத தோஷம் தட்டாமல் -புல்கு பற்று அற்று
ஆஸ்ரயண பிரகாரம் சொல்லி பலத்தை சொல்லி -9-பாசுரங்கள் -வீடு மின் முற்றவும் —
வண் புகழ் நாரணன் தின் கழல் சேரே-கடைசியில் அருளிச் செய்தது போலே
ஆமத்திலே –அஜீரணம் போக்கி பசி உண்டாக்கி -சோறு கொடுப்பாரை போலே –
அதுக்கு மேலே -ஒரு மரம் -இரண்டு பறவை -ஜீவா பர பரஸ்பர பேதம் -முண்டக உபநிஷத்
அந்த ப்ரவிஷ்டா சர்வாத்மா -ஜனா நாம் -சாஸ்தா -ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்திகளுக்கு-ராஜா ஆகாசம் போலே இல்லாமல் –
அந்தப்பிரவேசமும் நியமனமும் இவனுக்கு
சத் அசத்-சகலமும் தானே ஆனான் – நாம ரூபம் வ்யாகரவாணி -ஜீவ சரீரமாக அசேதனங்களுக்குள் புகுந்து -அநேந ஜீவனே ஆத்மனா —
ப்ரேரிதாம்– ஸ்வரூப கத பேதம் -பேதமே தர்சனம் -அஹமேவ பரம் தத்வம் -/ சரீரம் பிராகிருத ஜடம் -ஆத்மா ஸ்வயம் பிரகாசம் அப்ராக்ருதம் –
ஆத்மா பிரேரி தாரஞ்ச-அறிந்து -தன்னையும் -துஷ்ட தேன அம்ருதத்வா -ப்ரீதியுடன் உபாசித்து மோக்ஷம் -கல்பிதம் இல்லை –
பேத ஞான க்ருதமான உபாசனம்
அவித்யா கல்பிதமான ஞானம் இல்லை / போக்தா போக்யம் பிரேரித்தாநஞ்ச -போக்கிய பதார்த்தம் அசேதனம் –
போக்யமும் போக்த்ருத்வமும் உண்டே ஆத்மாவுக்கு /
நியந்த்ருத்வம் இல்லை -பராதீனமாக போக்த்ருத்வம் ஆத்மாவுக்கு –
மத்வா மதீ ஞானம் -அறிந்து -ஞானத்துக்கு விஷயமாக கொண்டு -சர்வம் த்ரிவிதம் ப்ரஹ்மம் –
ஸ்வரூபத்தாலும் -சேதன சரீரம் -ஆசத்தான சரீரம் -மூன்றும் உண்டே
சர்வம் ப்ரஹ்மம் ப்ரோக்தம் -சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -ஆனால் த்ரிவிதம்
நித்யோ நித்யானாம் -இத்யாதி -ஏக -நித்ய சேதனன் -ஞாதா -பஹு நாம் -சேதனர்கள் -காமான் -பத்த தசையில்
முக்தர்களுக்கு கல்யாண குணங்கள் /
பிராந்தி வாத நிரசனம் –
பிரதான ஷேத்ரஞ்ஞ பதி-குணேஸ் -மூன்றையும் சொல்லும் -சேஷி ஸ்வாமி
குணேஸ் -ஸ்வரூபத்தால் தரித்து -நியந்தா -எந்த குணத்தை எப்பொழுது காட்ட வேண்டும் என்று –
த்வவ் -இருவர் -அஜவ் -நித்யர் -ஞாவ் அஞாவ் -சர்வஞ்ஞன் அல்பஞ்ஞன் இருவரும் ஞானாச்ரயர்-
யீச அநீசவ் -ஒருவன் ஈசன் -மற்று ஒருவன் நியமிக்கப் படுகிறான் –
இத்யாதி ஸ்ருதிகள் -சரீராத்மா பாவத்தால் வந்த ஐக்கியம் ஸ்வரூபத்தால் வந்த பேதம் இரண்டையும் ஸ்பஷ்டமாக கோஷிக்கும்
சர்வம் தனுவ் / அஹமாத்மா குடாகேசா -ஸ்ரீ கீதை –ஆசயம்-பிரகாசிக்கும் ஹிருதயம் /ஹிருதய சந்நிதிஷ்டன்/
வால்மீகி பராசர வியாசர் -வசனங்களும் சொல்லும்
ஆத்மாவுக்கு பதார்த்தமாக இருப்பதே சத்தை -பிரகாரம் -ப்ரஹ்ம பதார்த்தம் பிரகாரம் இல்லாத ஒன்றும் இல்லையே –
பரஸ்பர பின்னம் சரீரம் ஆத்மா -ஏக ஸ்வ பாவம் இல்லை -இரண்டும் -வர்ண சங்கரஹம் -விசாஜித கலவை –
குலம் தங்கு சாதிகள் நான்கு -கலப்பு இழி குலம் ஆகுமே –
அபேத வாக்கியம் -சாமானாதி கரண்யம்-இந்த சரீராத்மா பாவம் கொண்டே -ப்ரஹ்ம -வைபவம் ப்ரதிபாதிக்கும் வாக்கியங்கள்
கடக ஸ்ருதி வாக்கியம் கொண்டு சமன்வயப்படுத்தி -நான் வருகிறேன் -சரீர விசிஷ்ட ஆத்மாவுக்கு தானே கிரியை -அஹம் சப்தம் இரண்டையும் குறிக்கும் –
என் உடம்பு சரியில்லை -பிரதி கூலமாக உள்ள பொழுது பேத விவகாரம் செய்கிறோம் -விவஷா பேதம் உண்டே
ஏகார்த்த பிரதிபாதிக்கும் -சாமானாதி கரண்யம் என்பர் சங்கர்
நாம் -விசேஷண விசேஷ்ய சம்பந்தம் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம்
-வேதாந்திகள் -சாமான்யம் பொதுவான சாஸ்திரம்
வியாகரணம் போன்றவை -ஏகார்த்தம் பிரதிபாதிப்பதை யாரும் ஒத்து கொள்ள வில்லை
நியாயம் லக்ஷணம் பொதுவாக கொள்ள வேண்டும் -தர்க்கம் வியாகரணம் நியதிகளை பின் பற்ற வேண்டும் -சாமானாதி கரண லக்ஷணம் -பாணினி -பதாஞ்சலி
பின்ன பிரவ்ருத்தி நிமித்தவம் ஏகாஸ்மின் பார்த்தே பர்யவசாயம் -வேறே வேறே பிரகாரங்களால் ஒன்றை குறிப்பதாக இருக்க வேண்டும் –
ஏகார்த்தம் பர்யாய பதங்கள் மட்டுமே
பிரகாரங்கள் பல -அனைத்தும் முக்கியார்த்தம் பண்ணி பொருந்த விட வேண்டும்
கங்காயாம் கோஷா –வையதிகரணம்-லக்ஷணை கொண்டு அர்த்தம் இதுக்கு மட்டும் தானே
தத் த்வம் அஸி–ப்ரஹ்மம் -ஜகத் காரணத்வம் நிரவத்யம்-ஸமஸ்த கல்யாண குண -/ த்வம் -சேதனன் சரீர விசிஷ்ட ஜீவன் —
கண் முன்னால் நிற்கும் பத்த ஜீவன்
ஏகார்த்த பிரதிபாதம் -த்வம் மித்யை சொல்லி அத்வைதிகள் -/நாம் -ப்ரஹ்மத்துக்கு நீ சரீர பூதன் -முக்கியார்த்தமாக கொண்டு –
அஹம் ப்ரஹ்மாஸ்மி -இதுக்கும் இப்படியே /
த்வைதிகள் அபேத வாக்கியம் வெறும் ஸ்துதி -வாக்கியம் -முக்கியம் இல்லை என்பர் -சங்கரர் பேத ஸ்ருதிகள் பாதித்தார்த்தம்-அவச்சேத நியாயங்கள் சொல்லி –
ஏவ – பவதி- ப்ரஹ்மம் தான் -இப்படி விசித்திர -ஜகத் –மித்யை இல்லை -சரீர பூதம் –வேஷங்கள் பொய் இல்லை –
ஒரே ஆஸ்ரயன் -பிரகார பூதன் வை லக்ஷண்யம் –
இவற்றின் சத் பாவத்துக்கு இந்த ஏவ காரமே நிரூபணம் -பஹுஸ்யாம் பிரஜாயேவா -சங்கல்பித்து –நான் -சொல்லும் பொழுது
ஆத்மாவும் ஸ்வரூபமும் -ஸ்வரூபம் விகாரம் இல்லை -சரீர ஏக தேசமே தானே பிரபஞ்சமாக
பஹு -பல -அர்த்தம் கொண்டால் சில ப்ரஹ்மாத்மகம் இல்லாமல் போகும் -அனைத்தும் என்றவாறு -அனந்தத்வே சதி அசேஷத்வம் -எல்லாம் என்றவாறு
மூல பிரகிருதி சரீரம் கொண்டு அவ்யக்தம் –மஹான் இத்யாதி -ஸமஸ்த பதார்த்தங்கள் -சகலமும் என்று பஹு சப்தார்த்தம்/
ஏகம் விட சதம் பஹு -மீமாம்சிகர் / நையாயிகர் -நிருபாதிகத்வம் அநந்தமாகவும் அசேஷம் மீதி ஒன்றும் இல்லாமல் -அனைத்தும் –
கார்யம் -காரணம் -வஸ்து ஜாதம் -நாநா வஸ்துக்களும் சமஸ்தானம் தனக்கு -பரஸ்பர பின்னமான அனைத்து பதார்த்தங்கள் பஹு என்றவாறு
பிரகார தயா -அப்ருதக் சித்தம் -ஏவ -சப்தம் ஜாதி குணங்களுக்கு தானே / த்ரவ்யம் -சம்யோகம் தானே வரும் –
/ஸ்யாமோ யுவா தண்டீ குண்டலி தேவ தத்தன் –நித்யம் யுவத்வம் ஸ்யாமத்வம் -தண்டித்தவம் குண்டலத்தவம் அப்ருதக் சித்தம் இல்லையே –
தண்டித்தவம் வேறே ஒருவர் இடமும் போகலாமே -/ஏவம் சப்தம் -த்ரவ்ய த்வயத்துக்கு ஏற்படாதே –
ஜீவனும் ஈஸ்வரனும் — அசித் ஈஸ்வரன் –அனைத்தும் த்ரவ்யங்கள் –
பிரகாரமாக கொள்ளாமல் கேவல விசேஷணமாக தண்டீ குண்டலம் -தர்ம பூத ஞானம் ஆத்மாவுக்கு விசேஷணம் போலே
பரமாத்மாவுக்கு சேதன அசேதனங்கள் விசேஷணம்

ஆதாரம் -நியாந்தா -சேஷி – ப்ருதக் சித்தி அநர்ஹத்வம் -நான்கு லக்ஷணங்கள் -ஆத்ம சரீரம் —
சர்வாத்மாநா பாவம் ப்ரஹ்மம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளிலும் வியாபித்து –
ஆப் நோதி ஆப்தி விசேஷ வியாப்தி -என்றவாறு -/ பிரகார பூதம் -/ சர்வ சரீராவதயா -சர்வ சப்த வாச்யத்வம் இவனுக்கு –
பர்யவசாயம் இவன் இடம் -தானே அனைத்தும் -அப்பரியவசாயந வ்ருத்தி -அர்த்த போதான வியாபாரமே விருத்தி என்பது –
பரமாத்மாவாவுக்கு -சர்வே வேதா யத் பதமாயந்தி /
யத் பதம் ஆமனந்தி- ஏகம் பவந்தி–கீதை -8-அத்தியாயமும் இத்தை -கட உபநிஷத் வாக்கியங்கள் உண்டே /
ஏகோ தேவா பஹு சந்நிதிஷ்டா–மனஸ் இந்திரியங்கள் -இருந்தும் அறியவில்லை -தேவ மனுஷ்யாதி ஆத்மத்வேனே உண்டே –
ஸ்ரீ விஷ்ணு புராண வசனம் -பிரதிஷ்டா யஸ்ய -யத்ர சர்வ வச தாம் –சர்வ சப்த வாச்யன் -அர்த்த பூதன் –/
காரியாணாம் பூர்வம் காரணம் -வசதாம் வாஸ்யம் உத்தமம் – ஜிதந்தே –
கடகத்தவம்–உத்தமம் பர்யவசாயம் ப்ரஹ்மத்தின் இடமே என்றவாறு -அநு பிரவேசத்தாலே நாம ரூபம் -சங்கல்பத்தால் மட்டும் இல்லாமல் –
மனு ஸ்ம்ருதி –உபாசன விதி வாக்கியம் -சாசனம் உல்லங்கநம் பண்ண முடியாத -கர்மம் அடியாக பண்ணுவதற்கு -புண்ய பாபங்கள் –
பிரகர்ஷேன சாஸ்தா -அதி ஸூ ஷ்மம் -அத்யந்தம் -ஸ்வரூப விஷயம் -நியமன கல்யாண –
ருக்மாங்கம் திவ்ய மங்கள விக்ரஹம் -உபாஸிக்க கடவன் -அந்தர்யாமித்வம் –
ஸ்வப்னா தீ -தியானம் -மனஸ் மாத்திரம் வியாபாரம் -இந்திரியங்களுக்கு வியாபாரம் இல்லையே இரண்டிலும் -/மனசா ஏவ சர்வம் –
ஸ்வப்ன கல்ப புத்தி தானே த்யானம் /அக்னி -பிரஜாபூதி -வேதங்கள் சர்வ சப்தத்தாலும் சாஸ்வத ப்ரஹ்மத்தை குறிக்கும் –
பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் -சர்வ பூத விஷ்ணுவையே ஆராதனம் -அனைத்தும்
திருமாலையே சேரும் -ஸ்தோத்ரங்களும் ஆராதனைகளும் -சர்வ பூத அந்தராத்மா பூதஸ்ய பூதன் -98-வாக்கியங்கள் வரை இந்த விஷயம்
-99-வாக்கியம் -சர்வ சாஸ்த்ர ஹ்ருதயம் -ஜீவாத்மா பஹு வசனம் –
ஸ்வயம் -அசங்குசித – அபரிச்சின்ன -நிர்மல ஞான ஸ்வரூபன் -சங்கோச -விச்சேத ரஹிதம்
கர்மரூப அவித்யா –கர்மா அபின்ன அவித்யா -/ அஞ்ஞானம் -பகவத் நிக்ரஹ சங்கல்ப ரூபம் சாம்யம் இரண்டுக்கும் உண்டே –
மூடப்பட்டு -திரோதானம் -வேஷ்ட்டி -அமர கோசம் -மூடி -/வேஷ்டனத்தால் சங்கோச ஞானம் –
அதனால் ப்ரஹ்மாதி சரீரங்கள் -மனுஷ்ய திர்யக் ஸ்தாவர / சதுஷ்ட்யா -ஒவ் ஒன்றிலும் நான்கு வகை –
தர்மி ஞானம் விகாரம் இல்லை –தர்ம பூத ஞானம் சங்கோசம் -நிக்ரஹம் அடியாக -ஞான சங்கோசத்தால் சரீர பிரவேசம் என்றவாறு
சரீர பிரவேசத்தால் ஞான சங்கோசம் இல்லை -காலுக்கு தக்க செருப்பு -போலே -/ பாபங்கள் கழிக்கவே துக்கம் -இதுவும் கிருபை அடியாகவே –
சுகத்தால் புண்ணியம் கழியும் -கஷ்டங்களால் பாபங்கள் கழியும் -/
தேகத்தில் நுழைந்த உடனே -சரீரத்துக்கு உசிதமான ஞான வ்யாப்தி -பிரகாசம் உண்டே
ஞானம் சரீரத்தை விட்டு வெளிவராமல் இருக்கவே சரீராத்மா பிரமம் உண்டாகிறது -அஹம் பஸ்யாமி-தர்ம பூத ஞான விசிஷ்டமான தர்மி ஸ்வரூபம் -ஞாதா –
தத் உசித கர்மானி -தேகம் செய்வதை தான் செய்வதாக செய்து சுக துக்கம் அனுபவிக்கிறது -ஆத்மா இதனால்
Aadam ஆத்மா Eve சரீரம் பிரகிருதி / ஜடம் பிரகிருதி சம்பந்தத்தால் –த்ரிவித குண மயம்-/
பகவத் நிக்ரஹ நிவ்ருத்தி – பகவத் ப்ரீதியே சம்சாரம் போக்க ஒரே வழி
தோஷம் -அப்ரீதி/ சரணாகதி -ப்ரீதி /ரோஷம் -கோபம் -வந்து பின்பு ப்ரீதி வந்தால் வ்ருத்தி யாகும் -உணர்த்தல்- ஊடல் -உணர்த்தல் -போலே /
சேஷ தைக ஸ்வரூப ஏக ரசம் –ப்ரீதிகாரமான ஆகாரம் காட்டி -உள்ளது உள்ளது படி -சாங்கமான உபாசனம் -சர்வ சாஸ்திரங்கள் சொல்லுமே –
பல பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் இந்த சாஸ்த்ர ஹ்ருதயம் காட்ட –
அயமாத்மா நிர்வாணமேய ஞான மயம் அமல-ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம் -ஞானம் உள்ளது எல்லாம் –ஸூயம் பிரகாசகம்
நிர்வாணம் ஆனந்தம் -அனுகூலம் -நிரதிசய -/ இரண்டும் உண்டே -இரண்டும் ஏவ காரம் –
ஞான மயம் ஏவ -ஆனந்த மயம் ஏவ -இதுக்கும் மேலே அமலன் -தோஷம் எதுவுமே இல்லாமல் –
பிராகிருதம் ஏவ துக்காதிகள்–எஜமானர்கள் வேலைக்காரர்களுடைய துக்கம் அஞ்ஞானம் அமலம் கொள்வது போலே –
நம்முடைய கஷ்டங்களை பகவான் ஏற்றுக் கொள்வது போலே -/ அனுபவிக்கும் அளவு மட்டும் கொடுத்து மீளும்படி அருளி –
வித்யா வினய சம்பந்தனே –ப்ராஹ்மணே –/ இல்லாமல் தாழ்ந்து -பந்துத்வம் -மாத்திரம் -ஜாதி மாத்திரம் -/
பசு- யானை- நாய்- நாய் உண்ணும் சண்டாளன் -சரீரத்தை காட்டி
பண்டிதர்கள் சமமாக தர்சிப்பார்களே -ஸ்ரீ கீதை -/ சம தரிசித்தார்கள் இல்லாதவர் பண்டிதர் இல்லை என்றவாறு
தேகம் -கர்மாவால் -ஆத்மா சாம்யம் -ஞானி ஏக ஆகாரத்தால் -நிர்தோஷம் -நிர்வாண ரூப ஞான ஏக ரூபத்தால் சாம்யம்
த்விதீய விபக்தி இல்லை -சப்தமி விபக்தி -இவர்களுக்குள் உள்ளே ஆத்மா சாம்யம் என்றபடி

ஏஷா சாம்யம் நிர்தோஷம் சாம்யம் ப்ரஹ்மம் –காம க்ரோதாதிகளையம் -ஆஸ்ரயமான மனஸ் இந்திரியாதிகளை வென்று –
இங்கேயே மோக்ஷ துல்ய அனுபவம் – ஸ்ரீ கீதை
ஏவம் பூதஸ்ய ஆத்மா -பகவத் சேஷ தைக ஏக ரசம் -ஸ்வரூபம் -நியாமியம் ஆதாரம் -சேஷம் மூன்றும் –
சரீர பூதம் -தனு -சாமானாதி கரண்யம் படிக்கும் படி உண்டே
மம மாயா துரத்யாயா –விசித்திர குண மய பிரகிருதி -மாயா -சங்கல்பம் -புண்ய அபுண்ய ரூபமான கர்மா க்ருதம் சம்சாரம் /
பிரபத்தி பண்ணி -மாமேவ –ஏ பிரபத்யந்தே -மேலே சொல்லுமே / அயனாயா -வேறே வழி இல்லை
ந வித்யதே -பக்தி யோகமும் அவன் மூலமே -பலன் -நந்யத் பந்தா ஸ்ருதி –
சர்வ சக்தி யோகாத்–அவ்யக்தம் -இதம் சர்வம் ஜகத் வ்யாப்தம் -மயா சதம் -வியக்த மூர்த்தி -திவ்ய மங்கள விக்ரகம் /
அவ்யக்த மூர்த்தி ஸ்வரூபம் சத்யம் ஞானம் அனந்தம் அமல ஸ்ருதி மூலமே அறிய முடியும் /
அந்தர் வியாப்தியம் பஹிர் வியாப்தியும் உண்டே -மஸ்தானி சர்வ பூதாநி -நான் அவைகளில் இல்லை
அவைகள் என்னில் உள்ளன -ஆஸ்ரயமாக தரிக்கிறேன் –
அவைகளால் தரிக்கப் படவில்லை -என்னுள் இருப்பது போலே நான் அவற்றுள் இல்லை என்றவாறு –
இத்தை சொல்ல வந்தவன் இப்படி அருளிச் செய்கிறான்
சேஷமாக ஆதேயமாக இல்லை என்று சொல்ல வேண்டாமோ என்னில் –
எந்த பூதமும் என்னிடம் இல்லை -லோகத்தில் உள்ள ஆதாரம் போலே இல்லை என்றவாறு
சங்கல்ப ரூபத்தால் அன்றோ தரிக்கிறேன் -ஐஸ்வர்ய பாவம் இது தான் -பார் என்று காட்டுகிறான் ஸ்ரீ கீதையில் –
அஹம் க்ரிஷ்ணம் ஜகத் -முழு ஜகத்தையும் -ஏகாம்சத்தில் சங்கல்ப ஏக தேசத்தில் ஸ்தித-அடுத்து –
கால தத்வம் உள்ளதனையும் சர்வத்தையும் -ஏக தேசத்தில்
எங்கும் பக்க நோக்கம் அறியான் -சங்கல்பித்து -அந்தப்புரம் நுழைய -செருப்பு வைத்து திருவடி தொழக் கூடாதே –
காலதத்வம் அனுபவித்தாலும் ஆராவமுதம் ஆழ்வார் அவனுக்கு -அத்யந்த ஆச்சர்யம் அசிந்த்யம் ஆரே அறிய வல்லார் –
சகஸ்ராஷ இத்யாதி —புண்டரீகாக்ஷ –ஏக ஏவ –ஸ்ருதி சித்தம் –
அங்கே ஒருவன்-பரஸ்பர பேதம் இல்லையே அங்கே -இங்கே நாநா அவனே -விசித்திரம்
ஏகஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண –ரூபாந்த்ராம் கார்ய உபாதேய சக்தாந்தரம் ஸ்வபாந்தரம் –இருப்பதால் -ந வ்ருத்தம் -வஸ்து சாம்யம் –
ஸ்வரூப பேதங்கள் -அனந்தம் ப்ரஹ்மத்துக்கு மட்டும் -தத் தத் அந்தர்யாமி யாக இருந்து -உசித சக்தி பேதங்கள் -நாநா வித ஸ்வ பாவங்கள் -இருந்தும் ஏகக-
அபரிமித குண சாகரம் -சர்வ பாவானாம் -அசிந்த்ய ஞான கோசாராம் -சக்திகள் ஸ்வா பாவிகம்-வந்தேறி இல்லை –அக்னிக்கு உஷ்ணம் போலே –
அக்ரூரர் நேராக கண்டார் -தேன ஆச்சர்ய வரம் ஸ்ரேஷ்டம்-அஹம் சங்கதம் –அநந்த பரிமாணம் -ஸ்ருதிகள் நிர்வகிக்கும்
நிரவத்யம்-கர்மா சம்பந்த தோஷம் அற்றவன் — நிரஞ்சன் கர்மா பல சம்பந்தம் அற்றவன் —
விஞ்ஞானம் -அனந்தம் -நிஷ்கலம் -அவயவம் இல்லாமல் -நிஷ்க்ரியை -சாந்தம் –
சாஸ்திரங்கள் எல்லாம் மனஸ் சாந்தி அடைய தானே போதிக்கும் -சாந்தத்தால் ஹேய குண ரஹிதம் -இத்தையே நிர்குணன் என்று சொல்லும் –
ச குண ஸ்ருதிகளும் உண்டே –
இஹ நாநா நாஸ்தி கிஞ்சன –இங்கு ப்ரஹ்மத்தை தவிர வேறு பட்ட பின்னமான வேறே வஸ்துக்களும் இல்லை ஸ்ருதி சொல்லும் –
ஆபாத ப்ரீதிதியால் தப்பாக அர்த்தம்
யாத எவன் நாநா இவ பச்யதி இஹ-சம்சார சூழலில் சிக்கி உழல்கிறான் -இங்கே உள்ளதாக காண்கிறானோ -ப்ரஹ்ம பின்ன அபாவம் ஸ்பஷ்டம்
க்ருஹீத்வா பர்த்ரு கர விபூஷணம் -கணையாழி பார்த்து கொண்டே இருந்த பிராட்டி காணக் கூடாது என்று திருவடி —
பர்த்தாராம் ஸம்ப்ராப்தா –இவ-சப்தம் –
இல்லாத வசுதுவை இருப்பது போலே காண்பது இவ சப்தம் -இங்கு போலே
மிருத்யுவாலே மிருத்யு அடைகிறான் -அவித்யையால் சம்சாரம் அடைகிறான் -ஓன்று காரணம் -மற்ற ஓன்று கார்யம்
இதர இதரம் பச்யதி -காணப் படுகிறவன் காணப் படும் வஸ்து காட்சியாகிய ஞானம் வேறே வேறே -என்று தப்பாக
எத்தை கொண்டு யாரை பார்க்கிறான் யாரை அறிகிறான் -நாநாவத்வம் நிஷேத ஸ்ருதிகள்
இவை சத்யம் -பரமாத்வாய் ஆதாரமாக கொண்டு -சர்வ நாம ரூப வியாகரணம் –
ஸமஸ்த கல்யாண குணத்வம் -சர்வஞ்ஞன்-சர்வவித் –எல்லாவற்றையும் அறிந்தவன் -எல்லா பிராகாரத்தாலும் அறிந்தவன்
யஸ் ஞான மயம் சங்கல்பம் –சர்வானி ரூபாணி –மனசில் கொண்டு -நாமானி க்ருத்வா -வியவஹாரம் உண்டு பண்ணி
இமேஷம்-கால உபாதிகள் –உண்டாயின -மின்னல் போலே திவ்ய மங்கள விக்ரக விசிஷ்டன் இடம் இருந்து –
அபஹத பாப்மாதி -கர்மா வஸ்யம் இல்லை ஆறு -மேலே கல்யாண குண பரி பூர்ணன் ஏக வாக்கியம் -சம பிரமண்யம்
ஸத்ய சங்கல்பத்துவம் ஸத்ய காமத்வம்-இதே சுருதியில் –
பேத கடிதமான அபேதத்துவமே -நிரூபணம்
சர்வம் கல் இதம் ப்ரஹ்ம –சர்வாத்மகத்வம் -தத் ஜெலானி –சத் ஜெ சத் ல சத் ஆனி-
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் மூன்றும் ப்ரஹ்மமே -ஜம் லம் அந் –
இதம் சர்வம் ஐததாத்மா–ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டது
நாநாகாரம் பிரதிபாதித்து – -அபேவ ஸாதாத்ம்யம் -சம்பந்தம் -அடியாக என்றவாறு –
போக்தா போக்தம் ப்ரேரிதா–ஸர்வஸ்ய ஈஷிதவ்யம்–ப்ருதக் ஞான விசேஷமாக கொண்டு -பேத கடிதமான ஞானம் கொண்டே மோக்ஷம் –
பதிம் விசுவஸ்ய ஆதமேஸ்வரீம் -ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ்ய ஈசன் -அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா சர்வாத்மா —
யஸ்ய ஆத்மா சரீரம் -சரீராத்மா பாவம் தர்சயந்தி
அஸ்மத் சித்தாந்த பிரதான பரிதந்த்ரம் -இதுவே -சரீரத்தயா பிரகார பூதம் சமஸ்தமும் –
அர்த்த விரோதம் இல்லாமல் -115-வாக்கியம் -சொல்லி நிகமிக்கிறார்

அவிகாராய -ஸ்ருதிகள் -உபாதான காரணம் -நாம ரூபம் விகாரம் உண்டே என்னில் -ஸ்வரூப பரிணாமம் இல்லையே -சரீரத்தாலேயே –
நிர்குண வாத ஸ்ருதிகள் –ஹேய குண நிஷேதம் -தானே தாத்பர்யம்
நாநா வஸ்துக்கள் இல்லை -ப்ரஹ்ம பின்ன -அந்தராத்மாவாக கொள்ளாதவை இல்லை என்று சொல்வதில் தாத்பர்யம்
சர்வ விலக்ஷணத்வம் -ச்ரவ சக்தி- நிரதிசய ஆனந்தம் -சர்வஞ்ஞத்வம் -பரம காருணிக்கத்தவம் -ஆனந்தோ ப்ரஹ்ம -சர்வவித் ஸ்ருதிகள் –
பதிம் விசுவஸ்ய ஈச்வரஸ்த்ய ஸ்ருதிகள் -சர்வ சேஷி சர்வ தாரகன் -பரஸ்ய ப்ராஹ்மணம் –
ஞான ஆனந்த மாத்திரம் -மற்றவை நிஷேதிக்க படவில்லை -ஞான ஆனந்தம் அல்லாதவை அல்ல என்பதிலேயே தாத்பர்யம்–
ரூபவான் என்பதிலே ரூபம் தவிர வேறே ஓன்று இல்லை என்பது இல்லை -விசேஷித்து சொல்வது அனைத்திலும் இது ஸ்ரேஷ்டம் என்பதால்
ஐக்கிய வாதம் -உபாஸ்யம் சொல்லி –வேறே வேறே காட்டி –ஜீவனுக்கு அந்தராத்மா -சாமானாதி கரண்யம் சொல்லப் பட்டது
பேதம் அபேதம் -ஸர்வஸ்ய சர்வம் சமஞ்சிதம் -/ ஸ்வரூபத்தால் பேதம் நியாம்யம் ஆதாரம் சேஷி -ஜீவன் பின்னம் ப்ரஹ்மத்துக்கு /
அபேதம் -சரீராத்மா பாவத்தால் ஓன்று பட்டு -ஏகத்துவம் -essential betham functional abetham –இரண்டும் உண்டே
உத்தாலகர் -ஆரணி என்னும் மஹ ரிஷி ஸ்வேதகேதுவுக்கு -தத் த்வம் அஸி –ஐக்கிய ஞானம் மோக்ஷ ஹேது -என்பர் அத்வைதி –
பேத ஞானமும் பேத ஞான கடிதமான உபாசனமுமே மோக்ஷ சாதனம் -பல ஸ்ருதிகள் உண்டே -இங்கும் இது அர்த்தம் இல்லை –
ப்ருதக் மத்வா ஆத்மாநாம் -ஜுஷ்டக -இணைந்து ஒன்றி -உபாசனம் -ஒன்றிய பக்தி – தேன அம்ருதம் பவதி –
ஆதாரம் நியாந்தா சேஷி -இவ்வழிகளால் வேறு பட்டு
பிராட்டி போலே ஒன்றி -உபாசன பலத்தால் -ஜுஷ்டக அம்ருதத்வம் –சமாநே வ்ருக்ஷ-போன்ற ஸ்ருதிகள் -ஆத்மாவாக உபாசனமே மோக்ஷ சாதனம் –
அவிரோதேன பொருந்த வைத்தே அர்த்தம் -கொள்ள வேண்டும் -த்வம் -அந்தர்யாமி ரூபம் -பிரகாரமாக ஜீவன் -அப்ருதக் சித்தி –
சரீரீ யாக அறிய வேண்டும் -ஐக்கியம் சொல்ல முடியாதே
போக்கிய பூதஸ்த வஸ்து அசேதனம் -பரார்த்தமாக ஸ்வ பாவம் -சேதனனுக்கு -/ பிரகாசம் தனக்கு விஷயமாக்கி சேதனன் –
நான் -என்று சொல்லும் படி -அசேதனம் இது என்று சொல்லும் படி
சேதனத்வம் வந்தால் போக்த்ருத்வம் வரும் -ஸ்வார்த் தத்வம் -/ சகல பரிணாமம் அசேதனத்துக்கு -/ ஜீவன் -போக்தா -வேறுபாடு
அமலம்-சரீரத்தாலே தானே தோஷம் -மணி -கௌஸ்துபம் ஸ்தானீயம் -ஞானானந்த ஸ்வரூபம் -பிராகிருத சம்பந்தம் -போக்க ஞானம் பெற்று உபாசனம்
பக்த தசையில் -போக்த்ருவம்-அசித் பரிணாமங்களை அனுபவிக்கிறான் -வேறே -முக்த தசையில் போக்த்ருத்வம் வேறே -ஈஸ்வரனை அனுபவிக்கிறான்
இரண்டையும் தான் இட்ட வழக்காக்க பிரேரித்தன் -பரஸ்ய ப்ராஹ்மணா –இது தானே தத் த்வம் அஸி-சொல்லும்
-122-வாக்கியம் –ச குண வாக்கியம் -ச குண வித்யை –குண விசிஷ்ட ப்ரஹ்மம் -/
நிர்குண உபாஸ்யம் சொல்ல வில்லை -ஸ்பஷ்டமாக சொல்லாத ஸ்ருதியை நிர்குண ப்ரஹ்ம பிராப்தி என்பர்
வேதாந்த விஷயம் இல்லை -சத் வித்யை நிர்குண வித்யை என்பர் -ச குண ப்ரஹ்மம் தான் உபாஸ்யம் -ச குண ப்ரஹ்ம பிராப்தியே மோக்ஷம்
சர்வாராத்வம்-ஞானம் உள்ளது தானே சங்கல்பிக்கும் பஹுஸ்யாம் என்று –அபியுக்தர் பூர்வர்–
வாக்யகாரர் -ப்ரஹ்ம நந்தி -சாந்தோக்யத்துக்கு வாக்கியம் அருளி
சத் வித்யைக்கு -யுக்தம் சத்குண உபாசனமே யுக்தம் -மோக்ஷ சாதனம் என்பர் –
இந்த ஆப்த வாக்கியம் இருவருக்கும் பொது -த்ரவிட பாஷ்யகாரர் -வாக்யத்துக்கு பாஷ்யம் -அருளி –
யத் அபி -சத் வித்யா உபாசகனும் கூட -பரமாத்மாவுக்கு -சர்வஞ்ஞத்வாதிகள் ஸ்வரூபத்திலே அந்தர் கதம் இவை /
ஆர்த்ரேயர் -என்பவரே த்ரவிட பாஷ்ய காரர் –
அபஹத பாப்மாத்வாதிகள் ஸ்வபாவ குணங்கள் -ஞானாதிகள் ஸ்வரூப குணங்கள் -சதவித்யையில் ஸ்வரூப குண உபாஸ்யம் –
ச குண ப்ரஹ்மமே உபாஸகம்-பலம் -இவனுக்கும்
விதி நிஷேதம் கொண்டு பலம் சொல்ல கூடாது -ஜீவன் பரதந்த்ரன் இஷ்டப்படி செய்ய முடியாதே பரமாத்வா அதீனம் என்றால் -அப்படி இல்லை
நியாந்தாவாக -இருந்தாலும் -சாஸ்திரம் ஈஸ்வர ஆஜ்ஜை -பிரதம பிரவ்ருத்தி காலம் ஈஸ்வரன் உதாசீனம் -வாசனை அடியாக பிரவ்ருத்தி
வாசனை போக்க சம்ஸ்காரம் -எது வெல்லும் அது தானே பலம் கொடுக்கும் -ஆச்சார்ய சம்பந்தம் கடாக்ஷம் உபதேசம் -ஸம்ஸ்கார ரூபங்கள் –
அனுமந்தா -அடுத்து -சஹகாரி -மேலே -உள்ள நிலை -பெரும் காற்றில் தூசி போலே இல்லையே -ஸ்வா தந்தர்யம் கொடுத்து உள்ளான் –
சாது கர்மம் அஸாது கர்மம் -செய்விக்கிறான் -புண்ய பாப விஷயம் -ஷிபாமி ந ஷாமாமி -இரண்டும் உண்டே –
சித் சக்தி ரூப ஞானம் -ப்ரவ்ருத்தி ரூப ஞானம் -எத்தை தேர்ந்து எடுத்தாலும் அதுக்கு தக்க பலன் –
இது தான் இந்த ஸ்ருதிகளுடைய தாத்பர்யம் -தாதாமி புத்தி யோகம் -ப்ரீதி பூர்வகமாக உள்ளோர்க்கு-பஜித்தார்க்கு -சர்வ முக்தி பிரசங்கம் கூடாதே –
வித்யா ரூப ஞானம் ஆசா லேஸம் உள்ளோர்க்கு கொடுத்து அருளி –சத் சங்கம் -ஆச்சார்ய கடாக்ஷம் மூலம் ப்ரீதி உடன் எண்ணினால் -மேலே வளர்ப்பான்
ஞானம் அனுஷ்டானம் மேலே அடுத்த நிலை அவன் அருளால் -பத்தியுடை அடியவர்க்கு எளியவன் -என்றபடி –
ஆபீமுக்கியமும் சரணாகதி பலன் -சதாச்சார்யர் இடம் சேர்ப்பித்து -தத்வ யாதாம்யா ஞானமும் பிரதி தினம் அனுஷ்டானம் -ஆத்ம குணங்கள் சமதமதாதிகள் –
ஆர்ஜவம் தயா -வர்ணாஸ்ரம தர்ம உசித பகவத் ஆராதனை ரூபம் நித்ய நைமித்திக கர்மாக்கள் -பக்திகாரித்த –
அனவரத-ஸ்மரணம் நமஸ்காரம் கீர்த்தனம் -த்யான -அர்ச்சனை-த்யான ரூப பக்தி –
ஆளவந்தார் -ஈஸ்வர சித்தி உபய பரிகமித ஸ்வாந்தம் அந்த கரணம் ஐகாந்திக பக்தி யோகம் -விஷயம் பிரயோஜனம் அவனே
ஆத்யந்திக -சர்வ காலமும் இப்படியே -இருக்க வேண்டுமே -/ஞான உத்பத்தி விரோதிகள் அனுஷ்டானத்தால் போக்கி
வேதாந்த ஞானத்தால் பக்தி வளர்ந்து அவனை அடைய
ஸ்ரீ விஷ்ணு புராணமும் சொல்லும் -ஜனகருக்கு ஹேதித்விஜன் அனுஷ்டானம் உபதேசம் -யாகாதி அனுஷ்டானங்கள் –
பக்தி ஆரம்ப விரோதிகளைப் போக்க –
நாயமாத்மா ஸ்துதி -ஸ்ரவணம் மனனம் த்யானம் பிராப்தி -முன்பு சொல்லி -இங்கு அடைய முடியாது -விசேஷ விதி –
கேவல வெறும் ஸ்ரவணாதிகள் இல்லை
ப்ரீதி யுடன் -செய்தால் -அவனை வரிக்கும் படி செய்ய வேண்டும் -/ வைஷம்யம் நைர்க்ருண்யம் -கூடாதே –
அவன் அத்யந்த பிரியம் உள்ளவன் -நான் கொஞ்சம் ப்ரீதி என்பான் அவனே
பக்தி ஒன்றாலே -அநந்ய -பக்தி -அவனையே விஷயமாக கொண்ட -ஸ்வபாவம் -ப்ரஹ்மத்துக்கு -ஸ்ரீ கீதை -நெருப்பு சுடுவது போலே –
மாம் ஞாத்வா -முதலில் அறிந்து -ஆச்சார்யர் மூலம் -தழும்பு ஏறும்படி -த்யானம் -அடுத்து -லவ் உள்கடந்த ப்ரீதியுடன் அவனை அடைய –
பர பக்தி பரஞானம் பரம பக்தி -பக்தி யோக ஏவ -பூர்வ யுக்தமான வர்ணாஸ்ரம கர்மங்கள் -பாபங்களை ஒழித்து -பக்தி ஆரம்பம் –
சத் லக்ஷணம் -அனுஷ்டானம் -வர்ணாஸ்ரம தர்மம் வழுவாமல் -யதா சக்தி -முடியாதவற்றுக்கு நிர்வேதம் -செய்து -கைங்கர்ய கோடியிலே சேரும் –
கார்ப்பபண்யம் -அங்கம் -அதிகாரம் -ஆகிஞ்சன்யம் -த்வரை வளர யாவாஜ் ஜீவன் அனுசந்திக்க வேண்டும்
பகவத் போதாயனர் – ப்ரஹ்ம நந்தி -பாஷ்ய காரர் -த்ராவிடச்சார்யார் -திரு மழிசை ஆழ்வாரது பூர்வ ஆகாரம் என்றும் சொல்வர் –
புக- தேவர் வாமனர் –குஹ தேவர் -தப்பாக -/ ப்ராப்ருதிகள் -சிஷ்ட பரிஹ்ருதம் -ஸ்ருதி நிரசன வாதிகள் சொன்ன அர்த்தங்கள்
சாருவாகர் -முழு நாஸ்திகர் -லோகாயர் –சாக்யன் புத்த வம்சம் சாக்கிய வம்சம்-கிடையிலே – படுக்கையே தியானம் இவர்களுக்கு /-சாங்க்யன் வேறே /
ஒவ்லோபியன் காணாபர் -சாஸ்திரம் பிரமாணம் இல்லை -ஆஷா பாதர் கௌமதர் -ஷபானகன் ஜைனம் -கபிலர் -சாங்க்யர் இவர் தான் பதஞ்சலி -வேத பாஹ்யர்
குத்ருஷ்டிகள் -அத்வைதிகள் ஏகாயனர்-மத்வருக்கு முன்னால் உள்ள த்வைதிகள் -பாஷ்யகாரர் முன்னால் மத்வர் இல்லையே
ஜர அத்வைதிகள் சங்கரருக்கு முன்னால் போலே -அனைவரும் நிரசிக்கப் பட்டார்கள்

-131-வாக்கியம் -ஒன்றாகசெர்த்து சொல்ல -மனு வாக்கியம்-சாம்யம் யுக்தம் -விபரீத அர்த்தம் சொல்பவர்கள் –
தமோ நிஷ்டர்கள் வேத பாஹ்யர் -குத்ருஷ்டிகள்
கூரத்தாழ்வான் –கானல் நீர் -நம்பி ஓடி -இறந்த மான் -ஏரியில் சென்று தவறான துறையில் இரங்கி முயலால் கொல்லப்பட்டது போலே இருவரும் –
சத்வ குணம் ஓன்று தானே அபிவிருத்தம் ஆக்கும் -வைதிக ருசியும் உள்ளபடி வியவஸ்திதமான அர்த்தமும் தெரியும் –
புராணங்களும் த்ரிவிதம் –
பராவர தத்வ யதார்த்த ஞானம் -சத்வத்தாலே –ராஜஸால் லோபம் ஆசை -விஷயாந்தரங்களில் ஆசை கிடைக்காமல் கோபம் –
பிரமாதம் கவனக்குறைவு தமோ குணத்தால்
தர்ம அதர்மங்கள் -த்யாஜ்ய உபாதேயங்கள்-மாறாட்டம் -தர்ம தர்மி ரூபம் -ரஜஸ் தமஸ் காரணம் /
பிரணவம் -ஏக மாத்திரம் -இஹ லோக ஐஸ்வர்யாதிகள் த்வி மாத்திரம் இந்திரா / த்ரிமாத்ரா -பரம புருஷார்த்தம் -மூன்று உபாசனங்கள்
மூன்றாவது மாத்திரை -நாதம் அந்தத்தில் பரமாத்மா -உள்ளான் -ஈசானம் –மனஸ் இந்திரியங்கள் ப்ராணன் அடக்கி சதாசிவன் –
ருத்ரன் -சம்பு-ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரன் ஸ்ருஷ்டிக்கப்பட்டு –
கார்யம் இல்லை /காரணம் இல்லை -உத்தீர்ண ப்ரஹ்ம வாதம் -காமேஸ்வரன் சதாசிவன் அநித்தியம் –
விஷ்ணு ப்ரஹ்ம சிவன் வேறே என்பர் -சர்வ ஐஸ்வர்யா சம்பண்ணன் சர்வேஸ்வரன் சம்பு ஆகாச மத்யே -த்யேயா -ஹிருதயம் அர்த்தம் ஆகாசத்துக்கு
அரூபம் -அநாமம் -ரூப நாமம் இல்லை -நாராயணன் பர ப்ரஹ்மம் -விருத்தமாக பூர்வ பக்ஷம் -அதி யல்பம் –
ஹரி உபாஸ்யம் –ஜென்மாதி காரணம் ப்ரஹ்மம்
நிரூபித்த பின்பு அந்த ப்ரஹ்மம் நாராயணனே -ஆனந்த வல்லி யாதோ வா இமானி –ப்ரஹ்மம் –
சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -மூன்று வித காரணம் -தைத்ரியம்
சத் சப்த வாச்யன் இந்த ப்ரஹ்மம் –ஆத்மா -சப்தம் சாகாந்தரே நாராயண ஏவ -ந ப்ரஹ்ம ந யீச –
தர்மம் -சத் -ஆத்மா- நாராயண -நான்கும் சப்தங்கள் சாகாந்தரங்கள் -ஸமான பிரகாரங்கள் -நாம பேதங்கள் –
ருத்ரன் போன்றாருக்கு ஏக சப்த கடிதம் ஆஸீத் வாக்கியங்கள் இல்லையே
நாராயண வல்லி –சமுத்ரே அந்த -பரம பதம் -தஹார -ஸ்தான விசேஷம் இட்டு நிர்த்தேசித்து-பரிச்சேதித்து
அறிய முடியாமல் -நியமிப்பவர் யாரும் இல்லை தஸ்ய நாம உயர்வற உயர் நலம் உடையவன் -மஹத் -யஜஸ் /
சுத்த மனசாலே அறியலாம் -அம்ருதா பவந்தி முக்தர்கள் ஆகிறார்கள் /
சம்பு ஹிரண்ய கர்ப்ப -இத்யர்த்தம் -நான்முகனை நாராயணன் படைத்தான் -லஷ்மி பரத்வத்தையும் சொல்லி -ஸ்ரீ யபதித்தவம்
நாராயண அநுவாகம்-சர்வ ப்ரஹ்ம வித்யா உபாஸகத்வம்
சஹஸ்ர புருஷ -விஸ்வம் -நாராயணன் தேவம் -ச ப்ரஹ்ம -ச ஈசன் ஒருவனே பரம ஸ்வராட் -ச விசேஷணம் ஓன்று தான்
அக்ஷரம் -சம்பு சிவன் -பரஞ்சோதி -இவன் ஒருவனே -அந்தராத்மா -சரீராத்மா -நாராயண சப்தத்தில் பர்யவசிக்கும்
நாராயண வித்மகே முடிக்கும் உபக்ரமம் உப சம்ஹாரம் நாராயணனே -நடுவில் அந்தராத்மத்வம் சொல்லி
அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மற்று எல்லாம் -நாராயண அநுவாகம் மறை தமிழ் செய்த மாறன்
இவனை அடைய -இவனே உபாயம் -பிராணன் மனஸ் சர்வஸ் யா ஈசானம் -ரூடி அர்த்தம் இல்லை –
நியமனம் பண்ணிக் கொண்டே -சர்வ காலத்திலும் சர்வ நியாந்தா
கரணங்களை காரண பூதன் இடம் சமர்ப்பித்து உபாசனம் -ஈசானம் லிங்கம் ரூடிக்கு .வராது
சர்வ ஈசானம் பதிம் விசுவஸ்ய -சர்வ சேஷித்வத்தையும் நாராயண அநுவாகம் சொல்லுமே
சர்வ ஐஸ்வர்யா சம்பன்னன் சர்வேஸ்வரன் நாராயணனுக்கு -சம்பு இடம் சேராதே –மங்களங்களை உண்டாக்குபவன் –
சிவ சப்தம் போலே நாராயணனுக்கு சேரும்
உபாஸ்யமாக சொல்லிய அக்ஷர ஹிரண்ய கர்ப்ப சம்பு சிவன் இந்திரன் அனைத்தும் நாராயணன் இடமே பர்யவசிக்கும்
யஸ்மாத் அபரம் -ஒப்பில்லா -பிராகிருத நாம ரூபம் இல்லை -/ திவ்ய மங்கள விக்ரகம் பார்த்தால் ஸ்வரூபம் துச்சம் –
சுகர் சொல்வாரே அழகன் -குணங்கள் நிறைந்தவை -இவை உயர்ந்தது என்று சொல்லும் ஸ்ருதி வேறே பர வஸ்து இருப்பதை சொல்ல வில்லை
சம்பந்தம் அற்ற வேறே இல்லை என்றவாறு -தத் இதர இல்லை -நாராயண சப்தம் விசேஷ்யம் -சம்பு சிவா விசேஷயமாக இருக்காதே -அஷ்டாக்ஷரம் –
பஞ்சாக்ஷரம் -நம சிவாய -சிவா தராய சப்தம் அங்கேயே உண்டே -superlative object இல் வருமா nounukku வருமா -நாராயண தரம் சப்தம் இல்லையே
நிரஸ்த -சாமாப்யதிக ரஹிதன் –அணோர் அணீயான் -அகாரத்தால் சொல்ல பட்டவன் மஹேஸ்வர சப்தமும் இவனுக்கு
அகார வாச்யன் நாராராயணன் விஷ்ணு மாத்த முடியாதே
பிரணவத்துக்கு பிரகிருதி அகாரம் -லுப்தா சதுர்த்தி பிரத்யயம் -தஸ்ய பிரகிருதி லீனஸ்ய யஸ்ய பர மகேஸ்வர சொல்லுமே
-வேத வித்து -தஹர மத்யஸ்ய ஆகாச மத்யே -உபாசிக்கப்படுபவன் இவனே -என்று சொல்லுமே –
அஹம் கிருஷ்ணஸ்ய ஜகத் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் – பர தரம் வேறே இல்லை என்று மட்டும் இல்லாமல் –
அஞ்ஞாத கிஞ்சித் என்னை காட்டிலும் வேறு ஓன்று பர தரம் இல்லை -கீதா பாஷ்யம் -அஹம் ஏவ பரத்வம் -நானே /
அகாரம் -முதல் திரு நாமம் -இதுவே மங்களகரம் -பதஞ்சலி வியாசர் ஜைமினி -அதாதோ -எங்கும் உண்டே /
ந காரம் தடுக்கும் வேறே யாருக்கும் சொல்ல முடியாமல்
ஸ்வரத்துடன் சொல்ல வேண்டுமே -பரத்வம் ஸ்வரமும் சொல்லும்
ஏக ஏவ ருத்ரன் ந அந்நிய -ஆஹுதி கொடுக்க -கர்ம விதி சேஷம் -அந்நிய பரமான வாக்கியம் கொண்டு கொள்ள கூடாதே
அநந்ய பரமான வாக்கியங்களில் ஏக சப்தம் நாராயணனுக்கு மட்டுமே —
கேவல சிவ ருத்ர ப்ரஹ்ம சப்தத்துக்கு -சொல்லி இருந்தால் அந்தர்யாமிதயா-சரீர வாசகம்

ப்ரஹ்ம புரம் தஹரம் புண்டரீகம் வேஸ்மே ஸ்தானம் -அஸ்மின் அந்தர -ஆகாசம் -ரூபி -பரமாத்மா –
தஸ்மிந் அந்தரா -அன்வேஷம்-உபாஸ்ய வஸ்து –
அவன் உடன் அடங்கிய அப்ருதக் சித்த -தஸ்மிந் அந்தர் வர்த்தி -ஸத்ய காமத்வாதி குணங்களை சொல்லும் –
குண விசிஷ்ட பரமாத்மாவை உபாஸிக்கச் சொல்லுமே அபஹத பாப்மாத்வாதி விசிஷ்ட ப்ரஹ்மம் என்றவாறு
அனவதிக மஹத்வம் –தஹாராகாசம் -அஸ்மின் -கல்யாண குணங்கள் உடன் உபாஸ்யம் –
வாக்ய காரர் ப்ரஹ்ம நந்தி ஸ்துதி வாக்கியம் கொண்டே நிர்ணயித்து
காமக -கல்யாண குண விவஸ்திதம் –சேர்த்து உபாசித்து -சர்வான் காமான் -அடைகிறார்கள்
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ர இந்திரா -ஸ்ருஷ்டா -நாராயண புருஷோத்தம சப்தம் இங்கு இல்லை -ரக்ஷணத்துக்காக தானே –
மத்யே விரிஞ்சி -அவதாரம் சொல்லும் –
அரன் அயன் என உளன் –நிருபாதிக சத்தை இவனால் -அநு பிரவேசம் —
உலகு அழித்து அமைத்து உளன் -மயர்வற மதிநலம் அருளி -தானே தன்னை தான் பாடி –
ஈரக் கைகளால் தடவி தானே -நஹி பாலான சாமர்த்தியம் இவனை தவிர இல்லையே -காக்கும் இயல்பினன் கண்ணபிரான் –
சந்த்யா வந்தனத்துக்கு ஆள் விடாதது போலே -சநாதனன் விஷ்ணு ஸ்வ இச்சையாக அவதரித்து -அதர்வ சிரஸ் உபநிஷத் ருத்ரன்
தன்னை சர்வேஸ்வரன் என்றும் உபாசிக்கவும் சொல்லி -அஹம் ஸர்வஸ்ய பிரபு -என்னில்
அதிலே காரணம் சொல்லி -ஸூ அந்தராத்மா தயா -கடல் ஞாலம் படைத்தவனும் நானே என்னும் போலே –
அஹம் அர்த்தத்துக்கு பகவானே கோசாரம் -மாம் உபாஸ்ய இந்திரன் சொன்னது போலே இங்கும் -ஸ்தான லிங்காத்-
அஹம் பிராணன் சப்தத்தால் -பர ப்ரஹ்மத்தையே சொல்லி -விசேஷயம் பர்யந்தம் பர்யவசிக்கும் சாஸ்த்ர த்ருஷ்டியில் உண்டே –
வாமதேவன் ரிஷி–பஷிவா ரிஷிக்கு உபாஸ்யம் உபதேசம் -அஹம் மனு -சூர்யஸ்ய –காலா தேச விப்ரகர்ஷம் இவர்கள் –
பிரதான பரதந்த்ரம் அனுஷ்டானமாக கொண்டு சொல்லி –
சப்தம் தத் தத் சரீரமான பர ப்ரஹ்மத்தையே சொல்லும் -அந்தர்யாமி ஒருவனே –
ப்ரஹ்லாதனும் அஹம் சர்வம் -மத்தஸ் சர்வம் -என்னையே நிமித்தமாக சர்வம் -அந்தராத்மா காரணத்வம் -சநாதனன் சர்வம் ஆதாரமும் நானே -ஸாத்விகன்-
அனந்தன் -நாராயணன் -வஸ்து பரிச்சேத ரஹிதன் -அவன் தானே எனக்கும் அந்தராத்மா -காரணத்தையும் சொல்வான்
தனக்கு ஆத்மாவாக பரமாத்வாவை உபாஸிக்க வேண்டும் -பூர்வே –
ப்ரஹ்ம வித்துக்கள் அனுஷ்டானம் ஏவ நமக்கு பிரமாணம் –அவர்களுக்கு சாஸ்திரம் பிரமாணம் –
பாதராயணர் அழகாக சொல்வாரே -அதிகாரண சாராவளி விளக்கும் -யதிபதி ஹிருதயத்தில் உள்ளதை ஹயக்ரீவர் கருடா ரூடனாக காட்டி அருளினார்
மஹா பாரதம் -ப்ரஹ்ம ருத்ர சம்வாதம் -இவர்களே சொல்லி கொள்கிறார்கள் -அந்தராத்மா -எனக்கும் உனக்கும் அனைவருக்கும் அவனே
திரி புரம் -மேரு பர்வதம் வில் தானே அம்புக்கும் அந்தராத்மா -பவனான சிவனுக்கும் அந்தராத்மா –
தான் எய்த அம்பு தன்னை பாய்ந்து போகாமல் இருக்க அதுக்கும் அந்தராத்மாவாக வேணுமே
விபூதி பதே -தேவ நாதன் -விபூதர் ரூடி தேவர்கள் -ஞானத்தால் மிகுந்த பரமை காந்திகள் -விபூதர் என்றுமாம் /
பிரசாதம் கோபத்தால் உண்டான ப்ரஹ்ம ருத்ரர்கள்
நிமித்த உபாதான – -வேறே வேறே என்பர் —வேத பாஹ்யர் –பிரகிருதி/
பரம அணுக்கள் தான் உபாதானம் என்பர் -ஆறு ஸூத்ரங்கள்-தனியாக அதிகரணம்
வேதாச்சார்யர் நிகமாச்சார்யார் வேத வியாசர் -ஸ்பஷ்டமாக காட்டி -பிரகிருதி ச -உபாதான காரணமும் ஆவான் -பிரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் காட்டி
ப்ரஹ்ம வனம் -ப்ரஹ்மாதி திஷ்டன் -சத் -ஏகஅத்விதீயம் -மூன்று சப்தத்தால் -தஸ்ய நாம மஹத்- உயர்வற உயர் நலம் உடையவன் திரு நாமம் –
ப்ரஹ்மா நாரதருக்கு உபதேசம் மஹா பாரதத்தில் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் நாராயணனே -அபின்ன நிமித்த உபாதான காரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணமும் -நாராயண அநுவாகத்தை பின் சென்று சொல்லுமே -காரணத்வாதிகளை தெளிவாக காட்டும் –
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகம் ஏக ஏவ ஜனார்த்தனம் ஸ்வயம் கரோதி –தன்னையே ஜகத்தாக ஸ்ருஷ்ட்டி -முன்பு இவனைத் தவிர வேறே இல்லையே –
உபசம்ஹரிக்கும் பொழுதே தன்னிடமே லயம் -ரக்ஷணமும் -செய்பவனும் அவனே செய்யப்படும் பொருளும் அவனே -பரஸ்ய ப்ரஹ்மண
மேலே அவதார விஷயங்கள் -பராதிகரண விஷயம்

கர்ம ப்ரஹ்ம உபய பாவனா த்ரயமும் ப்ரஹ்மாதிகளுக்கு -நெடு வாசி உண்டு -பர ப்ரஹ்மா அவதாரம் –
பிராகிருதம் இல்லை -அஜாயமானோ பஹுதா விஜாயதே விசேஷண ஜாயதே -தேவாதி சஜாயீதே -அப்ராக்ருத திரு மேனி -சங்கல்ப மாத்ரத்தால் –
தீரா -அறிந்து -ஞான விஷயம் ஆகிறான் -நம் பிறப்பு அறுக்க அவதாரம் -அக்ரூரர் மாலாகராதிகள்-தீரர்கள் –
பராதிகரணம் –ஜென்ம விஷயம் ஆரம்பித்து கீழ் நிரூபிக்க பட்ட -இவனை -ப்ராபகன் -சேது -ப்ராப்யன் –நான்கு விபதேசம் –
சாமான்யனானே து -சேது அணை- பலம் வேறே பூர்வ பக்ஷம் -நியமனம் அர்த்தமும் உண்டே -பரிச்சின்னம் இல்லை
-உபாசனம் பண்ண விஷயம் ஆக்க -புத்தியில் பத்த ஜீவனுக்காக கிரஹிக்க சொல்லும் –
பேத விபதேசம் -குணங்கள் திவ்ய மங்களம் இவனை விட பரமாக சொல்லி -/ மனு ஸ்ம்ருதி இத்யாதிகளை சொல்லும்
விஷ்ணு புராணம் -இந்த பாவனா த்ரயம் -குணத்தாலும் சரீரத்தாலும் -கர்ம பாவனை ப்ரஹ்ம பாவனை உபய பாவனை
ஸூபாஸ்ரயம் இவன் திவ்ய மங்கள விக்ரஹமே
வேதாந்த வாக்ய விசாரம் செய்து -தத்வ ஹித புருஷார்த்த நிர்ணயம் ப்ரஹ்ம ஸூ த்ரம்-ஸ்ரீ பாஷ்யம்
வியவஹாரம் கொண்டு செயல்பாடு -சித்த வஸ்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -இல்லாமல் வேதாந்த வாக்கியம் –
தாய் இடம் கேட்டு அர்த்தம் நிர்தேசம் செய்யும் குழந்தை –தேவதத்தனுக்கு -தாத்பர்யம் காட்டி -சப்தத்தால் நிர்தேசம் உண்டே
சர்வ ஜகத் காரணத்வம் -ப்ரஹ்மத்தை த்யானம் உபாசனம் -கார்ய அன்வயமும் உண்டே -சர்வம் போதயந்தி -வெறும் அர்த்தவாதம் இல்லை
அர்த்த வாதம் என்று நமக்கு சொல்லி இத்தை வைத்தே தப்பான அர்த்தம் வேத பாஹ்ய குத்ருஷ்டிகள் –
சுவர்க்கம்- காம்யார்த்தம் -இதுக்கு கார்ய பிரவ்ருத்தி இல்லையே —
ஜ்யோதிஷ்ட ஹோமம் பண்ணி சுவர்க்கம் -போலே உபாசனம் பண்ணி ப்ரஹ்மத்தை அடைகிறான் –
விதி மந்த்ரம் அர்த்தவாதம் -பரஸ்பர விரோதம் இல்லை -மூன்றுக்கும் –
ப்ரஹ்மத்துக்கு சொல்லப் பட்ட குணங்கள் -ச குண நிர்குண ஸ்வரூபம் -பூர்வபஷி -உபாசனத்துக்காக சொல்லப்பட்டவை
இல்லாத ஒன்றை சொல்லி உபாசனம் பண்ணுவது பரிகாசம் ஆகுமே -இருப்பதை சொல்லுவதே ஸ்தோத்ரம்
-182-வாக்கியம் -சம்பந்தம் சேஷத்வ லக்ஷணம் சாதித்து -ஜைமினிக்கும் சேஷ பராதத்வாத் –
மீமாம்சகர்களுக்கும் போதனம் -ஸர்வத்ர -இதுவே அர்த்தம்
பரகத அதிசய ஆதேயன இச்சையா உபாதேதயா-சேஷத்வம் -யாகம் -பலார்த்தம்–ஸ்வர்க்கத்துக்கு சேஷம் யாகம் –
உத்தேச்யம் -சேஷி -சர்வ வஸ்துக்களும் ஈஸ்வர அதிசயம் கொடுப்பதே ஸ்வரூபம் -நிரூபணம் பண்ணி அருளுகிறார் –
-186-வாக்கியம் -சாதனம் முடித்து பலத்தில் பிரவேசம் -பலம் -ஞான விசேஷம் இல்லை -பகவானே பல பிரதன் -ப்ரீதி உண்டாக்கி அடைகிறோம்
போகத்துக்கும் மோக்ஷத்துக்கும் அவனே -இது சாஸ்திரமே சொல்லும் -கர்ம ஞான ரூபம் -யாகாதிகளுக்கும் பக்தி பிரபத்திகளுக்கும் –
அவனை ப்ரீதி அடைவித்து பலம் பெறுகிறார்கள் -சர்வ அந்தர்யாமி -இந்த்ராதிகளுக்கும் -ஆதார பூதன் ஜகத்துக்கு எல்லாம்
ஜாயமானம் சர்வ ஜகத் -இஷ்டா பூர்த்தம்–விதி -பகவத் ஸ்துதி -ஆராதனம் இவனுக்கு -தைத்ரியம் –
கீதையும்-7 -அத்யாயம் சொல்லும் -சரீர பூதர்கள் இவர்கள் -போக்தா–ஆராதிக்கப் படுபவன் நானே-பிரபு-பல ப்ரதனும் நான் –
சர்வ சாஸ்த்ர சித்தம் -யஜ்ஜ-கர்மம் / தபஸ் -பக்தி பிரபத்தி -சர்வத்துக்கும் பல பிரதன் நானே -நியத போதனம் -மேலே -19-வாக்கியங்கள்

தாது அர்த்தம் -ரூடி அர்த்தம் -யஜதே விதி -யஜ தேவ பூஜாயாம் -பாணினி -யாகம் என்பதே தேவதா ஆராதனம் –
ஆ ராதனம் ப்ரீதி கரணம் -இது தானே விதிக்கப்படுகிறது –
ஐஸ்வர்ய காமன் வாயுவை குறித்து -யாகம் பண்ணி -/ தத் சரீரம்-போக பலம் – -மோக்ஷ பலம் தானாகவே நின்று அருள்கிறான் –
தத் சங்கல்ப நிபந்தம் -சாஸ்திரம் -த்ரவிட பாஷ்யம் -சர்வ நியந்த்ருத்வம் -வாயு வீசுவதும் நதி பிரவகிப்பதும் –
கடலுக்கு கரை தாண்டி வராமல் இருப்பதுக்கும்-solaar orbit -ஸ்தானம் நழுவாமல் -சாசன அனுவ்ருத்திகள் -இவைகள் –
பரம காருணிகன்- பரம புருஷ யாதாத்ம்ய ஞான பூர்வகமாக -ஆத்ம யாதாத்ம்ய ஞானம் இதுக்கும் பூர்வகமாக —
உபாசனம் பொருட்டு விதிக்கும் கர்ம அனுஷ்டானம் பிரசாதத்தால் பிராப்தி பல பர்யந்தம்
நியதம் குரு கர்மத்வம் –3-அத்யாயம் கீதையில் -கர்மா தான் ஞானத்தை விட ஸ்ரேஷ்டம் என்பான் –
ஞானமே கர்மாவின் பொருட்டே -ஞான பூர்வகம் கர்மா என்றபடி
ஞானம் கொண்டு சமர்ப்பிக்க முடியாதே -கர்த்ருத்வ கர்ம சேஷித்வ போக்த்ருத்வம் சமர்ப்பிக்க -வேண்டுமே -சர்வானி ஸன்யாஸ்ஸய-
இதுவே என் மதம் -அனுஷ்டிப்பவன் -அனுஷ்ட்டிக்கா விடிலும் ஸ்ரத்தை இருந்து -இதுவும் இல்லாமல் அஸூயை இல்லாமல் –
இப்படி மூன்று நிலைகள் -அஸூயை இல்லாமல் இருக்க ஸ்ரத்தை உண்டாகும் அது அனுஷ்டானத்திலே மூட்டும் –
ப்ரீதி விஷயம் ஆகிறான் -அனுஷ்டானம் யதா சாஸ்திரம் இருக்க வேண்டும்
சாஸ்திரம் உல்லங்கநம் பண்ணும் க்ரூரர்கள் -சம்சாரத்திலே உழன்று -நரகாதிகளை அனுபவிக்கிறார்கள்
நித்ய நிர்வத்ய-சஹஸ்ர சாகா -பரஸ்ய ப்ராஹ்மணம் நாராயணனுக்கு -அபரிச்சேதய ஸ்வரூபவத் —
சத்யம் ஞானம் அனந்தம் அமலத்வம் ஆனந்தத்வம் -ஸ்வரூப நிரூபக தர்மம் -ஐந்தும்
ஞான சக்தாதி கல்யாண குணங்கள் -சங்கல்ப ஏக தேசத்தாலே த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்
உசித திவ்ய ரூபம் -திவ்ய பூஷண -அநு ரூப -திவ்யாயுதங்கள் -திவ்ய மஹிஷீ வர்க்கங்கள் -நித்ய ஸூரீ கள்-திவ்ய ஸ்தானம் -விசிஷ்டன் –
இவ்வளவு விசேஷங்கள் ஸ்ருதிகளில் கண்ட உக்தங்கள் உண்டே -பிரசித்த ஸ்ருதிகள் –
வேதாஹா மேதம்-புருஷன் -சர்வ அந்தர்யாமி ஆபஸ்தம்பர் புருஷ வாக்கியம் சொல்லும்
மஹாந்தம் -அபரிச்சேதய குணம் -ஆதித்ய வர்ணம் திவ்ய மங்கள விக்கிரகம் -அந்தர் அதிகரணம் —
புருஷ ஸூ க்தி சொல்லுமே-பரமபதம் ஸ்தான விசேஷம்
கப்யாசம் புண்டரீகாஷ அஷிணி–தஸ்ய -உதித நாமம் –செய்யாதோர் ஞாயிற்றைக் காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி என்னும் —
ஏஷ அந்தர் ஹ்ருதய ஆகாசம் –மநோ மயம் அம்ருதோ ஹிரண்ய மயம் -மின்னல் போலே பிரகாசம் திரு மேனி
காலா உபாதிகள் இவன் திரு மேனியில் இருந்து
நீல தோயத மத்யஸ்த –வித்யுத் லேகா -பிராட்டி நித்ய சம்பந்தம் -ஸ்வரூபமும் விக்கிரகமும் நிரூபணம்
மநோ மயம் ,பிராண சரீரம் -ஸத்ய காமன் ஸத்ய சங்கல்பம் -ஆகாசாத்மா-சர்வ கர்மா -தானே காரணம்
கர்த்தா கார்ய பதார்த்தம் -சர்வ காமா இச்சைகளும் உண்டாக்கி சர்வ கந்த சர்வ ரஸா -சர்வம் இதம் –
அவனுக்கே அபிமதமான குணங்கள் -வாக்ய அ நாதரா -அபேக்ஷை இல்லாமல் -அவாப்த ஸமஸ்த காமன் –
பீதாம்பர வஸ்திர அலங்க்ருதன் –விஷ்ணு பத்னீ -க்ரீஸ்யதே லஷ்மீ -ஸ்தான விசிஷ்டன் தத் விஷ்ணோ பரமம் பதம் –
சதா பஸ்யந்தி -ஸூரயா –ஞானம் சங்கோசம் இல்லாமல் -ஸூ ரிகளாக இருப்பதால் சதா பஸ்யந்தி என்றும்
சதா பஸ்யந்தி பண்ணுவதால் நித்ய சூரிகள் –என்றும் -கொண்டு
ஸ்வரூபம் ரூபம் குணங்கள் பிராட்டிமார் நித்ய சம்பந்தம் நித்ய கைங்கர்யம் செய்யும் நித்யர்கள் நித்ய விபூதி -அனைத்தையும் ஸ்ருதி வாக்கியங்கள்
ஸூரயா-நித்யர்கள் நம் சம்பிரதாயத்தில் மட்டும் -சதா பஸ்யந்தி -முக்தர் விஷயம் இல்லை -சதா சப்தம் ஒவ்வாதே
முக்தர் பிரவாஹா ரூப விஷயம் சொல்லலாமே என்னில் -ஒவ்வாது -ஸூரி கணா-சொல்ல வில்லையே -அநேக கர்த்ருத்வ பதம் இல்லையே
வேதாந்த வாக்ய சித்தம் நம் சம்ப்ரதாயம் -சர்வம் உப பன்னம்-
தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்வரூபம் சொல்லலாமே -விஷ்ணு வாக்கிய பரம பதம் சொல்லுமே -ஆஷேபம் -வந்தால்
திவ்ய லோகம் உள்ளது வேறே ஸ்ருதிகளும் உண்டே -நிவாசமாக நித்ய போக அனுபவம் –
அபஹத பாப்மா -இல்லை என்பதால் ஜரா பசி தாகம் இல்லாமல் -சத்யகாம ஸத்ய சங்கல்பம் -நிரஞ்சன பரமம் சாம்யம் -உபைதி –
வேத உப ப்ராஹ்மணம் இதிஹாச புராணாதிகள் இத்தையே தெளிய வைக்கும் –
வேதாந்த சாரம் -தத் தர்ம உபதேசாத் -அந்தராத்மா -திவ்ய மங்கள விக்ரஹத்துடன் சேவை –
ஆதித்ய மண்டலம் -மத்திய வர்த்தி -திராவிட பாஷ்யகாரர் ப்ரஹ்ம நந்தி காட்டி அருளுவதை
எடுத்துக் காட்டி அருளுகிறார் -திவ்ய ரூப சாம் பன்ன–பீதாம்பரம் கேயூர கடக நூபுர –திவ்ய பூஷண -சங்க சக்ர –இத்யாதி –
அத்யத்புத திவ்ய யவ்வன –கம்பீரா பாவ –
ஹிரண்மய புருஷன் -பர ப்ரஹ்ம நாராயண -ஸூ ஸ்பஷ்டம் -உபாஸ்ய அனுக்ரஹார்த்தம் -ஸ்வரூபம் போலே ரூபமும்
கல்யாண குணங்களும் பரமபதமும் நித்ய ஸூ ரிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
ரூபம் திவ்ய மங்கள விக்ரஹம் -ஞானானந்த மயம் –திவ்யாத்ம ஸ்வரூபம் போலவே –
சப்தத்துக்கு அர்த்த போதகத்வம் ஸ்வாபாவிகம் -வேதம் நித்யம் -பிரளயத்தின் பொழுது அவன் திரு உள்ளத்துக்கு சென்று –
பின்பு நான் முகனுக்கு பிரார்த்தித்து அருளுவான் –
சப்தம் ஆகாசத்துக்கு -லய க்ரமம் நடந்தாலும் வேதம் நித்யம் இதனாலேயே -ஸமான அநு பூயமாகவே பிரவஹிக்கும்
அத்யந்த சேஷத்வ அனுசந்தான ரூபமான ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –

சர்வம் பர வசம் துக்கம் -சர்வமாத்மா வசம் சுகம் -லௌகிக விஷயம்-கடைசி ஆஷேபம் -அபிமத விஷயத்தில் இல்லையே –
சரீராத்மா -ஸ்வ தந்த்ர பிரமம் உள்ளவர்க்கு தான் லௌகிக விஷயம் -ஆத்ம யாதாத்மா ஞானம் வந்தவர்களுக்கு –
வகுத்த ஸ்வாமிக்கு கைங்கர்யம் -புருஷோத்தமன் விஷயம் –ப்ரீதி பூர்வகமான -கைங்கர்யம் -உத்தேச்யமே
ஞானம் -தர்சனம் -பிராப்தி மூன்று தசைகள் –சார -அசார விவேக ஞானம் –உணர்ந்து -அத்யந்த சார தம விசேஷ கிரந்தம் வேதார்த்த ஸங்க்ரஹம் –
பரந்த திருந்த உள்ளத்துடன் -அஸூ யை இல்லாமல் -பிரமாணத்தால் –நிஷ்கர்ஷித்து -அருளிச் செய்யப்பட்டது –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ தேவ நாயக பஞ்சாசத் —

February 10, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

ஸ்ரீ தேவ நாயகன் -ஸ்ரீ திரு வஹீந்த்ர புரம் திவ்ய தேசம் –அடியவர்க்கு மெய்யன் -அச்யுதன்-மூவராகிய ஒருவன்
-53-ஸ்தோத்திரங்கள் –30-ஸ்லோகங்களை மேல் திரு மங்கள விக்ரஹ அனுபவம் -கடைசியில் –8-ஸ்லோகங்களால் சரணாகதி
-40-வருஷங்களாக ஸ்வாமி இங்கே எழுந்து அருளி மங்களா சாசனம் –

ப்ரணத ஸூர கிரீட ப்ராந்த மந்தார மாலா விகலித
மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த
பசுபதி விதி பூஜ்ய பத்ம பத்ராக்க்ஷ
பாணி பதிபுர பாது மாம் தேவ நாதா –1-

தேவர்கள் கிரீடம் -மகரந்த மாலையில் இருந்து வழியும் மது -போல் ஸ்வாமி யுடைய ஹ்ருதய கமலத்தில் இருந்து
ப்ரவஹிக்கும் பிரேம பாவ பக்தி மது
திருவடி தாமரைகளில் விழுந்து ஸ்லோகம் பரிபூர்ணமாக படி-ப்ரஹ்ம ருத்ராதிகள் ஆராதிக்கும்
ஸ்ரீ தேவ நாதன் அருளைப் பிரார்த்திக்கிறார் இத்தால்

தேவாதி நாத கமலா ப்ருதனேசா பூர்வாம்
திபிதந்தரம் வகுளா பூஷணா நாதா முக்யை
ராமானுஜ ப்ரப்ருதிபி பரி பூஷிதாக்ராம்
கோப்த்ரீம் ஜகந்தி குரு பங்க்தி அஹம் ப்ரபத்யே -2-

குரு பரம்பரை -தேவாதி நாதன் தொடங்கி -கமலா -ப்ருதனேசர் -ஸ்ரீ விஷ்வக்சேனர் -வகுளா பூஷணர்-
நாதா முக்யை-ஸ்ரீ நாத முனிகள் தொடக்கமாக -பெரிய நம்பி -ஸ்ரீ ராமானுஜர்-அஸ்மத் ஆச்சார்யர் வரை – –குரு பங்க்தி-

திவ்யே தயா ஜாலா நிதவ் திவிஷத் நியந்து
தீர்த்தம் நிதர்சி தவத த்ரி ஜகன் நிஷேவ்யம்
பிரச்சா கவீன் நிகம சம்மிஹித ஸூருண உக்தின்
பிராச்சேதச ப்ரப்ருத்திகான் பிரணாமாமி அபீக்க்ஷ்ணம்-3-

சரணாகதி மார்க்கம் காட்டி அருளின ஆதி கவிகளான ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ வால்மீகி முனிகளுக்கு வந்தனம் –
ஆராவமுதமான தயா சாகரத்தில் எளிதாக தீர்த்தமாடி பரம புருஷார்த்தம் பெரும் துறையை –
வேத மார்க்கத்தில் இருந்து -காட்டியவர்கள் அன்றோ

மாதா த்வம் அம்புருஹ வாஸினி கிம் சிதேதத்
விஞ்ஞாநப்யதே மயி குருஷ்வ ததா பிரசாதம்
ஆகரணயிஷ்யதி யதா விபுதேஸ் வரஸ்தே
ப்ரீயானசவ் ப்ரு துக ஜல்பிதம் மதுக்திம்–4-

ஸ்ரீ ஹேமாம் புஜ வல்லி தாயார் –தம் யுக்தி -மழலைச் சொல் -புருஷகார சமர்ப்பணம் இங்கு –

நிர்விஷயமான விபவம் நிகம உத்தமாங்கை
ஸ்தோதும் ஷமாம் மம ச தேவாபதே பவந்தம்
காவா பிபந்து கணாச கலசாம்புராசிம்
கிம் தேன தர்னாக கண த்ருணாம் ஆததானா -5-

சத்யஸ்ய சத்யன்-தாச சத்யன் -இவன் திரு நாமம் -நிர்விகார ப்ரஹ்மம் -அச்யுதன்-விபு -சர்வகதன்-ஸர்வேஷாம் பூதானாம் அதிபதி –
பரஞ்சோதி -உபநிஷத்துக்கள் கோஷிக்குமே -யாதோ வாசோ நிவர்த்தந்தே-சொல்லி முடிக்க முடியாதே -தன் முடிவு காணாத தேவ நாயகன்
தேவதானம் பரமம் தேவம் -பாற் கடலில் பாலை பருகும் பசுக்கள் போலே உபநிஷத் -கன்று குட்டி போலே நம் ஸ்வாமி –

அஞ்ஞாத சீமகம் அநந்த கருத்மாத் அத்யை
தம் த்வாம் சமாதி நியதைரபி சாமி த்ருஷ்டம்
துஸ் தூஷதோ மம மனோர தா சித்திதாய்ல்
தாசேஷூ சத்யா இதி தாரய நாம தேயம் -6-

அடியார்க்கு மெய்யன் -தாஸ சத்யன் -யதோத்த காரி -சொன்ன வண்ணம் செய்பவன் அன்றோ –
சத்ய நாமம் -107–ஸமாச்ரிதேஷூ சத்ஸூ சாது இதி சத்யா / சத்யஸ்ய ஸத்ய -873-சாத்விக சாஸ்த்ர பிரதிபடன் –ஆஸ்ரித ஸூலபன் –
மும் வாகேஷூ அநு வாகேஷூ ச நிஷாத்ஸூ உபநிஷஸூ ச குருநந்தி ஸத்ய கர்மாநாம் சத்யம் சத்யேஷு ஸாமசு -ஸ்ரீ பட்டர்

விஸ்ராநயன் மம விசேஷ விதாம் அநிந்த்யாம்
அந்தர வர்த்திம் கிராம் அஹிந்த்ரபுராதிராஜா
ஸ்தவ்ய ஸ்தவ ப்ரிய இதிவ தபோ தனோக்தம்
ஸ்தோ தேதி ச தவத் அபிதானம் அவந்த்யய த்வம்-7-

ஸ்தவ்யன்–ஸ்தவ பிரியன் –ஸ்தோதா –மூன்று திரு நாமங்கள்-684-688–உண்டே -கீர்த்த நீயன் –
ஏந கேனாபி ஐந்துநா ஏந கேனாபி பாஷயா -பிரியாத்மா பவதி
யம் ஸ்துவன் ஸ்தவ்யதாமேதி வந்தமானச்ச வந்த்யதாம் –ஸ்தோத்ரம் பண்ணுபவனை பகவானே ஸ்தோத்ரம் பண்ணுவானே
அடியேனைக் கொண்டு பாடுவித்து -விசேஷ விதாம் அநிந்த்யாம்- – வித்வான்கள் புகழும் படி –
அந்தர வர்த்திம் கிராம்–சாராம்ச தத்துவங்களை உள்ளடக்கி பாடும்படி அருள வேணும் –

சம் ரக்ஷணீயம் அமராதி பதே த்வைவ
தூரம் பிரயாதமபி துஸ் த்யஜ காத பந்தம்
ஆக்ருஷ் தவனாசி பாவான் அநு கம்பமான
ஸூத் ரானுபத்த சகுனி க்ரமதா ஸ்வயம் மாம் -8-

துஸ் த்யஜ காத பந்தம் – ஒழிக்க ஒழியாத உறவு உண்டே /
யூப ஸ்தம்பம் -சம்சார கட்டு – விடுவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
ஸூத் ரானுபத்த சகுனி க்ரமதா-பறவை காலில் கட்டி கூண்டில் வைத்தால் போலே சம்சார பந்தம் –

வ்யாமோஹித விவித போக மரீச்சிகாபி
விஸ்ராந்திம் அத்ய லபதே விபூதை காந்த
கம்பீர பூர்ண மதுரம் மம தீர் பவந்தாம்
கிரீஷ்மே தாடகாமிவ சீதனம் அநு ப்ரவிஷ்டா -9-

அடியேனுடைய புத்தி விஸ்ராந்தி அடையும் படி உன் ஆனந்த ரசமயன் –காம்பீர்யம் -மாதுர்யம் -பரி பூர்ணத்வம் –
அனைத்தையும் காட்டி அருளி -கானல் நீரை தேடி அலைந்து பட்ட தாபங்கள் தீர்க்கும்படி அருளினாய் –

திவ்ய பதே ஜல நிதவ் நிக்காம உத்தம அங்கே
ஸ்வாந்தே சதாம் ஸவித்ரு மண்டல மத்திய பாகே
ப்ரஹ்ம சலே ச பஹுமான பதே முனீம்
வ்யாக்திம் தவ த்ரித சநாத வதந்தி நித்யம் –10-

ப்ரஹ்மாச்சலம் -திரு வஹிந்த்ர புரம்-ஒளஷத கிரி -ஸுகந்திய வனம் /
திவ்யபதம்-தெளி விசும்பு திரு நாடு -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் ஜோதி -வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே –
ஜல நிதவ்- -கடல் மகள் நாச்சியார் சமேத ஷீராப்தி நாதன் -நாக மூர்த்தி சயனமாய் நலம் கடல் கிடந்து
அம்பஸ்ய பாரே -புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே -மஹதோ மஹீயான் –
சுக்ரேன ஜோதிகும்ஷி சாமானு ப்ரவிஷ்டா பிரஜாபதிஸ் சாரதி கர்ப்பே அந்தே

தீரத்தைர் வ்ருதம் வ்ருஜின துர்கதி நாசநார்ஹை
சேஷ ஷமா விஹகராஜா விரிஞ்ச ஜுஷ்டை
நா தா த்வயா நாத ஜனஸ்ய பாவவ் ஷதேன
ப்ரக்யாதம் ஒளஷத கிரிம் பிரணமந்தி தேவா -11-

பரம ஒளஷதம் -சேஷ தீர்த்தம் -பூமி-ஷமா தீர்த்தம் -கருட -நதி -தீர்த்தம்-விஹகராஜா -ப்ரஹ்ம-விரிஞ்ச- தீர்த்தம் -/
ப்ரக்யாதம்-பிரசித்தமான ஒளஷத கிரிம் -என்றவாறு
த்ரிஸாம சாமக சாம நிர்வாணம் பேஷஜம் பிஜக் –

ஸ்வாதீந விஸ்வ விபவம் பகவான் விசேஷாத்
த்வாம் தேவ நாயகம் உசந்தி பரவர ஞான
ப்ராய பிரதர்ஸயிதும் ஏதத் இதி ப்ரதீம
த்வத் பக்தி பூஷித தியாம் இஹ தேவ பாவம் -12-

உபய விபூதி நாதனாக இருக்கச் செய்தே தேவ நாதன் என்று சுருங்க சொல்வது தேவத்வம் -தேவ பாவத்துக்கு மேலே
ஆஸ்ரித தொண்டர்களை பிரசாதித்து அருளுவதாலேயே
பராவர தெளிந்த ஞானம் அருளி -/ ஸ்ரீ கீதை -தேவ அஸூர விபாகம் -பிரகிருதி புருஷயோ -பகவத் விபூதித்வம் –
விபூதிமதோ பகவதோ விபூதி பூதாத்-அசித் வஸ்துனா சித்த வஸ்துனா ச பத்த முக்தோ உபய ரூபாத்
அவ்ய யத்வ வ்யாபன பரணாஸ் ஸ்வாம்யை அர்த்தாந்தரதயா புருஷோத் மத்வேன யாதாத்ம்யம் ச வர்ணிதாம்-ஸ்ரீ கீதா பாஷ்யம்
தைவீ சம்பத் விமோஷாயா -ஸ்ரீ கீதா -16-5-

தத்வானி யானி சித் அசித் பிரவிபாகவந்தி
த்ரயந்த வ்ருத்த கணிதானி சித் அசிதானி
தீவ்யந்தி தானி அஹி புரந்தர தாம நா தா
திவ்யாஸ்திர பூஷண தயா தவ விக்ரஹேஸ்மின்-13-

பஞ்ச பூதங்களும் தன்மாத்திரைகளும் வனமாலை / காரமா ஞான இந்திரியங்கள் அம்புகள் / அஞ்ஞானம் உறை /
மனஸ்-திரு ஸூதர்சனம் /அஹங்காரம் -ஸ்ரீ சார்ங்கம் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் / ஸ்ரீ நந்தகம் -ஞானம் /
ஸ்ரீ கௌமோதகம் -கதை -மஹான் /பிரகிருதி -ஸ்ரீ வத்ஸம் / ஜீவன் -ஸ்ரீ கௌஸ்துபம் –

புருடன் மணிவரமாகப் பொன்றா மூல பிரகிருதி மறுவாக மான் தண்டாகத்
தெருள் மருள் வாள் மறைவாக ஆங்காரங்கள் சார்ங்கம் சங்காக மனம் திகிரியாக
இருடீகங்கள் ஈரைந்தும் சரங்களாக இரு பூத மாலை வனமாலை யாகக்
கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் கரிகிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்றானே

பூஷாயுதை அதிகதம் நிஜ காந்தி ஹேதோ
புக்தம் பிரியாபி அனிமேஷா விலோசநாபி
ப்ரத்யங்க பூர்ண சுஷமா ஸுபகம் வபுஸ்தே
த்ருஷ்த்வா த்ருசவ் விபுதாந்த ந த்ருப்யதோ மே -14-

நிஜ காந்தி உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ சம்பந்தத்தால் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள் –
-14-தொடங்கி-45-வரை திருக் கேசாதி திருப் பாதாந்த்ர -திவ்ய மங்கள விக்ரஹ ஸுந்தர்ய அனுபவம் –

வேதேஷூ நிர்ஜர பதே நிகிலேஷூ அதீதம்
வ்யாஸாதிபிர் பஹுமதம் தவ ஸூக்தம் அக்ரயம்
அங்காந் யமுனி பவத ஸூபகாநி அதிஹே
விஸ்வம் விபோ ஜெனிதவந்தி விரிஞ்ச பூர்வம் -15-

நிர்ஜர பதே-தேவ நாதன் / தவ ஸூக்தம்-புருஷ ஸூக்தம் —
பூத யோனி தேவாதாத்ம சக்தி-நாம ரூப பிரபஞ்சம் ஸ்ருஷ்ட்டி யாதி கோஷிக்குமே

தேவேஸ்வரத்வம் இஹ தர்சயிதும் ஷமஸ்தே
நாத த்வய அபி வித்ருத கிரீட
ஏகி க்ருத த்யுமணி பிம்ப சஹஸ்ர தீப்தி
நிர்மூலயன் மனசி மே நிபிடம் தமிஸ்ரம் -16-

ஆதி ராஜ்யம்-அதிகம் புவனானாம் அதிபதி ஸூசகம்-திரு அபிஷேகம் -அஞ்ஞானங்கள் அனைத்தையும் போக்கி அருளும் –
திருக் கேசாதி திருப் பாதாந்த அனுபவம் செய்து ஆத்ம நிவேதனம் –

முக்த ஸ்மிதாம்ருத ஸூபேந முகேந்துநா தே
சங்கம்ய சம்சரண சம்ஜ்வர சாந்தயே ந
சம்பத்யதே விபுதந்தா சமாதி யோக்ய
ஸர்வாரி அசவ் குடில குந்தள காந்தி ரூபா -17-

சம்சார தாபம் தீர்க்கும் -திருக் குழல் காற்றை தேஜஸ் -முக்த -ஸ்மித திரு முக மண்டலம் —
யோகத்துக்கு ஏற்றவாறு -சம்சார சம்ஜவரத்தை போக்கி அருளும்
சந்த்ர காந்த திருமுக மண்டலம் -ஆயிரம் இரவி போன்ற திரு அபிஷேகம் -சேராச் சேர்க்கை -அகடி கடிநா சமர்த்தன் அன்றோ

பிம்பாதரம் விகாச பங்கஜ லோசனம் தே
லம்பாலகம் லலித குண்டல தர்ச நீயம்
காந்தம் முகம் கனக கைதக கர்ண பூரம்
ஸ்வாந்தம் விபூஷயதி தேவ பதே மதீயம்-18-

பிம்பாதரம்- கோவை செவ்வாய் திருவதாரம் – / விகாச பங்கஜ லோசனம்-கரியவாகி புடை பரந்து
செவ்வரியோடி மிளிர்ந்த நீண்ட திருத் தாமரைக் கண்கள்
லம்பாலகம்-மை வண்ண நறும் குஞ்சி குழல் / லலித மகர குண்டலங்கள் / கனக கைதக கர்ண பூரம்-தாழம்பூ செவிப்பூக்கள் –
ஸ்வாந்தம் விபூஷயதி தேவ பதே மதீயம்- இந்த ஐந்தும் பொருந்திய அசாதாரண ஸுந்தர்யம் – அடியேன் மனசுக்கு அன்றோ பூஷணம்
அத்புதம் மஹத் அஸீம பூமகம் நிஸ்துலம் கிஞ்சித் வஸ்து -அவன் சம்பந்தத்தால் அனைத்தும் அழகு பெறுமே –

லப்தா திதவ் க்வச்சித்யம் ரஜநீ கரேண
லஷ்மீ ஸ்திர ஸூர பதே பவதோ லலாடே
யத் ஸ்வேத பிந்து கணிகோத்கத புத்புதாந்த
த்ரயக்ஷ புரா ச புருஷோ அஜனி ஸூலபாநி -19-

சுக்ல அஷ்டமி சந்திரனுக்கு அழகூட்டும் திரு நெற்றி-ஸ்திரமான ஸுந்தர்ய லஷ்மீ அன்றோ –
இதன் வியர்வை திவலையில் இருந்தே திரிசூல பாணி உத்பத்தி –

லாவண்யா வர்ஷினி லலாட தடே கனாபே
பிப்ரத் தடித்குண விசேஷ மிவோர்த்வ புண்ட்ரம்
விஸ்வஸ்ய நிர்ஜபதே தமஸா ஆவ்ருத்தஸ்ய
மன்யே விபவயசி மங்களீக ப்ரதீபம் –20-

மேகக் கூட்டத்தில் மின்னல் வெட்டினால் போலே நீல மேக ஸ்யாமளானுடைய திரு மண் காப்பு -அஞ்ஞானம் போக்கி
பக்த ஜனான் உபரி உத்தாரத்தி இதி ஊர்த்வாஸ்ரயணா ஸூசிதா ஸக்திம்–ஊர்த்தவ கதி அர்ச்சிராதி மார்க்கம்

ஆஹு ஸ்ருதிம் விபூதி நாயக தாவகீனாம்
ஆசா கண பிரசவ ஹேதும் அதீத வேத
ஆகர்ணிதே ததீய மார்த்தாரேவ ப்ரஜாநாம்
ஆசா பிரசாத்தாயிதும் ஆதிசதி ஸ்வயம் த்வாம் -21-

திசா ஸ்ரோத்ராத் -வேதங்கள் பத்து திசைகளும் உன் திருக் காதுகளில் இருந்து வந்ததாக சொல்லும் –
சேதனருடைய ஆர்த்தி கூக்குரலை கேட்டு ரஷித்து அருள அன்றோ –
ஆசா –திசை என்றும் ஆசைகள் என்றும் -/ சுருதி -வேதம் -திருக் காதுகள் என்றும் /ஆதிசதி-தூண்டும் என்றவாறு –

கந்தர்ப்ப லாஞ்சன தனு த்ரிதஸ ஏக நாத
காந்தி ப்ரவாஹ ருசிரே தவ கரணபாஸே
புஷ்யத்யசவ் பிரதி முக்த ச திதி தர்ச நீய
பூஷாமயீ மகரிகா விவிதான் விஹாரான் -22-

த்ரிதஸ ஏக நாத -தேவ நாதனுடைய திரு மகர குண்டல காந்தி பிரவாஹ அபரிமித ஆனந்த அனுபவம் /
கந்தர்ப்ப லாஞ்சன தனு-மன்மதனுடைய கொடியில் மகரம் உண்டே /
திருக் கரண பூஷணமா -உத்த அம்ச விபுஷ -மேல் திருத் தோள்களுக்கு பூஷணமா -அம்ச லம்பி அலக -சுருண்ட திருக் பூஷணமா –
இவை அனைத்தும் இல்லை -அடியேன் மனஸஸ்யா பரிகர்ம விஷயமே-அடியேனை ஆள் கொண்டு அருளவே -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நேதும் ஸரோஜ வசதி நிஜ மாதி ராஜ்யம்
நித்யம் நிஸாமயதி தேவ பதே ப்ருவவ் தே
ஏவம் ந சேத் அகில ஐந்து விமோஹனார்ஹா
கிம் மாத்ருகா பவதி காம சரசானஸ்ய –23-

கிம் மாத்ருகா பவதி காம சரசானஸ்ய -மன்மதனுடைய கரும்பு வில் உன் திருப் புருவம் கண்டு அன்றோ நான்முகன் படைத்தான் –

ஆ லஷ்ய சத்வம் அதி வேலா தயோத்தரங்கம்
அப்யார்த்தினாம் அபிமத ப்ரதிபாதந அர்ஹம்
ஸ்நிக் ஆயதம் ப்ரதிம சாலி ஸூபர்வ நாத
துக்தாம்புதே அநு கரோதி விலோசனம் தே -24-

சத்வம் -ஸ்நிக்தம் -இரண்டும் கண் வளர்ந்து அருளும் திருப் பாற் கடலுக்கும் -திருக் கண்களுக்கும் –
துக்தாம்புதே அநு கரோதி விலோசனம் தே
அதி வேலா தயோத்தரங்கம்–ஓயாத அலைகள் உண்டே இரண்டுக்கும்
அப்யார்த்தினாம் அபிமத ப்ரதிபாதந அர்ஹம் -வேண்டிற்று எல்லாம் அளிக்கும் கற்பகம் போலே
ஸ்நிக் ஆயதம் ப்ரதிம சாலி விலோசனம்—திருக் காதுகள் வரை நீண்டு மிளிர்ந்து பெரியவாய -வாத்சல்யம் -மிக்கு இருக்குமே-

விச்வாபிரக்ஷணா விஹார க்ருத க்ஷணைஸ் தே
வைமாநிகாதிப விதாம்பித முக்த பத்மை
ஆமோத வாஹிபி அனாமய வாக்ய கர்பை
ஆர்த்ரி பவாமி அம்ருத வர்ஷ நிபை அபாங்கை–25-

வைமாநிகாதிப-கால்கள் கீழே பாவாத தேவர்களுக்கு அதிபதி என்றவாறு –
உனது கடாக்ஷ அம்ருத மழையில் நனைந்து தாபங்கள் நீங்கப் பெறுவோம்

நித்யோ திதைர் நிகம நிஸ்வஸிஹைஸ் தவஷா
நாசா நாபச் சரபதே நயனாப்தி சேது
அம்ரேதித ப்ரியதமா முக பத்ம கந்தை
ஆஸ்வாஸிநீ பவதி சம்ப்ரதி முக்யதோ மே –26

நீண்டு பரந்த திருக்கண்கள் -இரண்டு சமுத்திரம் போலே -திரு மூக்கு -சேது அவற்றுக்கு /
யஸ்ய நிகம நிஸ்வஸிஹைஸ் -உன் உஸ்வாச நிஸ்வாசமே வேதம் /
அம்ரேதித ப்ரியதமா முக பத்ம கந்தை -திரு நாச்சியார் திரு முக
மண்டல காந்தி சேர்த்தி இந்த வேத வாசனையை அபிவிருத்தி பண்ணுமே
ஆஸ்வாஸிநீ பவதி சம்ப்ரதி முக்யதோ மே -இந்த வேத ஸ்வாசம் அடியேனது அஞ்ஞானங்களை போக்கி அருளும்

ஆருண்ய பல்லவித யவ்வன பாரிஜாதம்
ஆபீர யோஷித அநு பூதம் அமர்தி அநாத
வம்ஸேந சங்கல்பதிநா ச நிஷேவிதம் தே
பிம்பாதரம் ஸ்ப்ரு சதி ராகவதி மதிர் மே -27-

திருக் கோபிமார்கள்- திருப் புல்லாங்குழல் -திருப் பாஞ்ச ஜன்யம் அனுபவிக்கும் கோவைச் செவ்வாய் -பிம்பாதரம்- திருப் பவள அனுபவம் –
திருப் பவள செவ்வாய் தான் தித்தித்தது இருக்குமோ -செங்கண் மால் தன்னுடைய வாய் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாயே வலம் புரியே
வாயிலூரிய நீர் தான் கொணர்ந்து -இளைப்பை நீக்க பிராத்திக்கிறாள் நாச்சியார்
கோவிந்தனுடைய கோமள வாயில் குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழுத்து இழிந்த அமுதப் புனல் அன்றோ

பத்மாலயா வலய தத்த சுஜாத ரேகே
தவத் காந்தி மே ஸஹித ஸங்காநிபே மதிர்மே
வீஸ்மேர பாவ ருசிரா வனமாலி கேவ
கண்டே குணீ பவதி தேவபதே தவ தீயே –28-

பத்மாலயா வலய தத்த சுஜாத ரேகே- ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி தாயார் திருக் கை வளையல் முத்திரை
நீல மேக நிப ஷ்யாம வர்ணம் -திருமேனி திருக் கண்டத்தில் இருந்து வெண்மையான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தில் தெளிக்கக் கண்டு அனுபவம்

ஆஜானு லம்பிபி அலங்க்ருத ஹேதி ஜாலை
ஜ்யாகாத ராஜி ருசிரை ஜித பாரிஜாதை
சித்ராங்கதை த்ரிதச புங்கவ ஜாதாசங்கா
த்வத் பஹுபி மம த்ருதம் பரி ரப்யதே தீ -29-

திருக் கரங்கள் அனுபவம் -சித்ராங்கதை-தோள் வளைகள்/ஜ்யாகாத ராஜி ருசிரை-தழும்பு தெரியுமே -/
அலங்க்ருத ஹேதி ஜாலை-திவ்யாயுதங்கள் அலங்காரத்துக்காகவே
திவ்ய உதாரன்-வீர ஸூர பராக்ரமம் -ஸுந்தர்யம் -மோக்ஷ தாயக முகுந்தத்வம் –

நீலா சலோதித நிசாகர பாஸ்கராபே
சாந்தாஹிதே ஸூர பதே தவ சங்க சக்ர
பாணே ரமுஷ்ய பஜதாம் அபய ப்ரதஸ்ய
ப்ரத்யாயனம் ஜகதி பாவயாத ஸ்வ பூம்னா–30

இந்திரா நீல மலையில் ஸூர்ய சந்த்ர உதயம் போலே அன்றோ திரு ஆழி-திருச் சங்கு ஆழ்வார்கள் –
அபய ஹஸ்த முத்திரை –மஹா விசுவாசம் அருள அன்றோ இவை –
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி அன்றோ தேவ நாதன்

அஷோபநீய கருணாம்புதி வித்ருமாபம்
பக்தானு ரஞ்சனம் அமர்த்தயா பதே த்வதீயம்
நித்யாபராத சகிதே ஹ்ருதயே மதியே
தத் அபயம் ஸ்புரதி தக்ஷிணா பாணி பத்மம் -31-

அஷோபநீய-கருணாம்புதி–வித்ருமாபம்—வலது திருக் கரம் -அபய ஹஸ்தம்-
தயா சாகரத்தில் இருந்து எடுத்த முத்து போலே -சிவந்து இருக்குமே –
வ்ரஜ -சாதன – அங்கனேஷு -கோபிகள் குடில்களில்
தவழ்ந்த காரணத்தால் சிவந்ததோ -ஆநிரை கோல் கையில் கொண்டதாலோ –
கொல்லா மா கோல் கையில் கொண்டதாலோ -ஸ்ரீ கூரத்தாழ்வான் -கண்டதுமே சம்சார தாபம் தீருமே

துரத்தாந்த தைத்ய விசிக சக்த பத்ர பங்கம்
வீரஸ்ய தே விபூத நாயக பஹுமத்யம்
ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப ரம வனமாலிகாங்கம்
சிந்த அநு பூய லபதே சரிதார்த்த தாம் ந -32-

துரத்தாந்த தைத்ய விசிக சக்த பத்ர பங்கம் –அம்பு தழும்புகள் வர்ண கோலம் -திரு மார்பில் –இவையும் மற்றும் -இங்கு உள்ள
ஸ்ரீ வஸ்தம் -ஸ்ரீ கௌஸ்துபம் ஸ்ரீ வனமாலை -ஸ்ரீ மஹா லஷ்மீ -இவை அனைத்தும் ஸர்வேஸ்வரத்வத்தை பறை சாற்றும்
சிந்த அநு பூய லபதே சரிதார்த்த தாம் ந-இவற்றைக் கண்ட நாம் பரம ஸுபாக்யத்வம் பெறுவோமே –

வர்ண க்ரமேண விபுதேச விசித்ரிதாங்கீ
ஸ்மேர ப்ரஸூந சுபக வனமாலி கேயம்
ஹ்ருத்யா சுகந்திர் அஜஹத் கமலா மணீந்த்ரா
நித்யா தவ ஸ்புரதி மூர்த்திரிவ த்விதீயா –33-

வர்ண க்ரமேண-நிறங்கள் என்றும் ப்ராஹ்மணாதி வர்ணாஸ்ரமங்கள் என்றும் –
விசித்ரிதாங்கீ-விசித்திர தேக அங்கங்கள் -வேறு வேறு மாலையின் பாகங்கள் –
ஸ்மேர ப்ரஸூந சுபக-நன்றாக மலர்ந்த திருமேனி போலே
ஹ்ருத்யா சுகந்தி-திருமார்புக்கு -மனதுக்கு இனியான் போலே ஸ்ரீ வனமாலையும் –சர்வ கந்தனுக்கு அநு ரூபமானதன்றோ
அஜஹத் கமலா மணீந்த்ரா நித்யா – ஸ்ரீ மஹா லஷ்மி -ஸ்ரீ கௌஸ்துபம் போலே நித்யம் –
ஆகவே வனமாலை திரு மேனிக்கு முழுவதுமே ஒப்புமை உண்டே –

ஆர்த்ரம் தமோன தனம் ஆஸ்ரித தாயகம் தே
சுத்தம் மனஸூ மனஸாம் அம்ருதம் துஹாநம்
ததாஹ்த்ருசம் விபுதா நாத சம்ருத்த காமம்
சர்கேஷ்விதம் பவதி சந்த்ர மாசம் ப்ரஸூதி –34-

சந்த்ரமா மனசோ ஜாதா -ஆதி காரணன் அன்றோ நீ -திரு உள்ள அனுபவம் –
கண்ணா நான் முகனைப் படைத்தாயே காரணா -இச்சாத ஏவ விஸ்வ பதார்த்த சத்தா –
முக்தித முக்த போக்யம் -உன் ஸ்வரூபம் ரூபம் குணங்கள் விபூதி ஐஸ்வர்யம் -சேஷ்டிதங்கள்

விஸ்வம் நிகீர்ய விபூதி ஈஸ்வர ஜாதகார்ஸ்யம்
மத்யம் வலி த்ரய விபவ்ய ஜகத் விபாகம்
ஆமோதி நாபி நளினஸ் தா விரிஞ்ச ப்ருங்கம்
ஆகால பயத் உதார பந்த இவாசயோ மே —35-

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் ஏழு மால் வரை முற்றும் உண்டவன் அன்றோ /
தாமோதரத்வம் வலி த்ரய சிஹ்னம்/

நாகவ் கஸாம் ப்ரா தாமதாம் அதி குர்வதே தே
நாபி ஸரோஜ ரஜசாம் பரிணாம பேத
ஆராத்யத் பிரிஹ தைர் பவத சமீசீ
வீரோ உசித விபூதி நாயகா இதி அபிக்ய-36-

வீரோ உசித விபூதி நாயகா இதி அபிக்ய –இது தேவ நாயகனான உனக்கு உசிதமான திரு நாமம் அன்றோ –
தேவர்களுக்காக வீரச் சேஷ்டிதங்களை செய்தாயே
உன் நாபி கமல ரஜஸ் தானே பரிணாமம் அடைந்து 33-கோடி தேவர்கள் ஆனார்கள் -விபூதி நாயகன் அன்றோ நீ

பீதாம்பரேன பரிவாரவதீ சுஜாதா
தாஸ்யே நிவேசயதி தேவ பதே த்ருஸவ் மே
விநயஸ்த சவ்ய கர சங்கம ஜாயமான
ரோமாஞ்ச ரம்ய க்ராணா ரசனா த்வதீயா –37-

மேகலை அனுபவம் –உன் திருக் கர ஸ்பரிசத்தால் ரோமாஞ்சலி -மயிர் கூச்செறிந்து வெட்க்கி அன்றோ ஒளி விடுகிறாள்
கண்ட அடியேன் மனமும் கண்ணும் வழங்கி தாஸ்ய பூதன் ஆனேன்

ஸ்த்ரீ ரத்ன காரணம் உபாத த்ருதீய வர்ணாம்
தைத்யேந்திர வீர சயனம் தைத்யோபதானம்
தேவேச யவ்வந கஜேந்திர கராபிராமம்
உரீ கரோதி பவத் உருயுகம் மநோ மே -38-

ஸ்த்ரீ ரத்ன காரணம் உபாத த்ருதீய வர்ணாம் – ஊர்வசியும் – காரணம்
உபாத த்ருதீய வர்ணாம் வைஸ்யரும்–உன் திருத் தொடைகளில் இருந்து வந்ததாக சொல்லுமே
தைத்யேந்திர வீர சயனம் மது கைடபர்களை நிரசித்ததும் இவற்றால் –
காரப மரகத ஸ்தம்பம் இவற்றுக்கு ஒப்பு இல்லை -என்பர் ஸ்ரீ கூரத்தாழ்வான்
தைத்யோபதானம்—பிராட்டி மகிழ்ந்து சயனிப்பதும் இவற்றிலே
நித்ய யுவா குமாரன் –யானை துதிக்கை போன்ற திருத் தொடைகளின் அழகில் ஈடுபட்ட அடியேன் மனஸ் உருகுகிறதே

லாவண்ய பூர லலித ஊர்த்வ பரிப்ரமாபம்
லஷ்மி விஹார மணி தர்பண பத்த சக்யம்
கோபங்கனேஷு க்ருத சங்கரமானாம் தவைதாத்
ஜானு த்வயம் ஸூர பதே ந ஜஹாதி சித்தம் -39-

இரண்டு திரு முட்டுக்களும் லாவண்யம் மிக்கு -பிராட்டி திரு முகம் பார்க்கும் திருக் கண்ணாடி போலே —
கோபிகள் குடில்களில் தவழ்ந்தவை அன்றோ –
இவை அடியேன் மனசை விட்டு அகலாவே
லாவண்ய அருவி திரு நாபியில் சுழித்து இவை வழியாக திருவடியில் சேரும் -ஐஸ்வர்ய கொண்டை போன்றவை அன்றோ –

துத்யே துகோலா ஹரணே வ்ரஜ ஸூந்தரிணாம்
தைத்யா நுதாவான விதவ் அபி லப்த ஸஹ்யம்
கந்தர்ப்ப காஹல நிஷங்க காலாஞ்சி காபம்
ஜங்கா யுகம் ஜயதி தேவ பதே த்வதீயம்–40-

இன்னார் தூதன் என நடந்த திருக் கணுக்கால்கள் அன்றோ /
குருக்கத்தி மரம் கோபிகள் வஸ்திரங்களை கொண்டு ஏறியவை தானே –
அஸூரர்களை விராட்டி ஒட்டியவை தானே -கஹால வாத்யம் மன்மதன் இவற்றைப் பார்த்தே கொண்டான்-
காலாஞ்சிக பாவம் -மன்மதன் காமம் தூண்ட -அவன் பானம் வைத்து உள்ள பாத்திரம்- இத்தை பார்த்தே செய்தான் –

பாஷாந நிர்மித தபோதான தர்மாதாரம்
பஸ்மனி உபாஹித நரேந்திர குமார பாவம்
ஸம்வாஹிதம் த்ரிதச நாத ராமா மஹீப் யாம்
சாமான்ய தைவதம் உசந்தி பதம் த்வதீயம் -41-

பாஷாந நிர்மித தபோதான தர்மாதாரம்- அஹல்யை சாபம் விமோசனம் அருளிய திருவடிகள் —
பஸ்மனி உபாஹித நரேந்திர குமார பாவம்- உத்தரை கர்ப்பம் -பரீக்ஷித்- ரஷித்து அருளிய திருவடிகள் –
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மார்த்வம் உள்ள திருவடிகள் கொண்டு அன்றோ கானகம் நடந்தும்
காளியன் மேல் நடமாடியும் உலகெல்லாம் அளந்தும் செய்து அருளினாய் –
சாமான்ய தைவதம் உசந்தி பதம் த்வதீயம்–அவன் விட்டாலும் -சாம்யா பத்தி அருளும் திண்ணிய திருவடிகள்-

ஆவர் ஜிதாபி அநுஷஜ்ய நிஜாம்சு ஜாலை
தேவேச திவ்ய பத பத்ம தளாயிதா அபி
அந்நிய அபிலாஷ பரிலோலாமிதம் மதீயம்
அங்க்லிக்ருதம் ஹ்ருதயம் அங்குலிபி ஸ்வயம் தே -42-

திருவடி திரு விரல்களை தரிசிக்கும் முன்னால் அந்நிய அபிலாஷைகளால் பரிலோலமாக திரிந்து அன்றோ அடியேன் இருந்தேன்
திருவடி தாமரைகளும் அதன் இதழ்களான திரு விரல்களும் இவையே பரம புருஷார்த்தம் என்று காட்டி அருளினவே –

பங்கா ந்யாசவ் மம நிஹந்தி மஹ தரங்கி
கங்காதிகம் விதததீ கருட ஸ்ரவந்தீம்
நகவ் கஸாம் மணி கிரலடா கணைர் உபாஸ்ய
நா தா த்வதீய பதயோ நாகா ரத்ன பங்க்தி -43-

கெடிலம்–கருட நதி -கங்கா நதியை விட பெருமை திரு நகங்களின் ஸ்பர்ச ஸம்பந்தத்தால்- –
இன்றும் பெருமாள் திருமஞ்சனம் இந்த தீர்த்தம் கொண்டே –
தேவர்கள் தங்கள் திருமுடிகளை வைத்து வணங்க இவையும் இவற்றின் ஸ்பர்ச ஸம்பந்தத்தால் அன்றோ ஒளி பெற்றன –
அவை அடியேனுடைய அஞ்ஞானம் போக்கி அருளின –

வஜ்ரா த்வஜம் அங்குச சுத கலச தாபத்ர கல்ப
த்ரு மாம்ப்ருஹா தோரண சங்க சக்ரை
மத்சயஸ் யாதிபிஸ்ச்சா விபூதி ஈஸ்வர மந்திதம் தே
மான்யம் பதம் பவது மௌலி விபூஷணம் ந -44-

திருவடிகளில் உள்ள திரு லாஞ்சனங்களை அனுபவிக்கிறார் –வஜ்ராயுதம் -த்வஜம் -அங்குசம் –
அம்ருத கலசம் -தாபத்ரம் -திருக் குடை – கற்பக வ்ருக்ஷம்-
தாமரை -தோரணம் -திருச் சங்கு ஆழ்வான் -திரு சக்கரத்தாழ்வான் -திரு மத்ஸ்யம் –
தேவர்கள் திருமுடி வைத்து வணங்கும் திருவடிகளே நமக்கு சிரஸுக்கு பூஷணம் -திண்ணிய திருக் கழல் அன்றோ –

சித்ரம் த்வதீய பத பத்ம பராக யோகாத்
யோகம் விநா அபி யுகபத் விலயம் ப்ரயாந்தி
விஷ்வஞ்சி நிர்ஜர பதே சிரஸி ப்ரஜாநாம்
வேதா ஸ்வ ஹஸ்த லிகிதானி துரக்ஷராணி -45-

சதுர்முகன் எழுதிய தலை எழுத்துக்களை உனது திருவடி துகள்களின் மஹிமையை அறிந்து-
பத பத்ம பராக யோகாத் – அவற்றை தரித்து வேறே உபாயாந்தரங்களை பற்றாமல் அன்றோ –
யுகபத் விலயம் ப்ரயாந்தி-தலை எழுத்தை மாற்றி -பரம புருஷார்த்தம் பெறுகிறார்கள் சரணாகதர்கள் –
என்ன விசித்திரம் –

ஏ ஜன்மா கோதிபி உபார்ஜித ஸூத தர்மா
தேஷாம் பவச் சரணா பக்தி அதீவ போக்யா
த்வத் ஜீவிதை த்ரிதச நாயக துர்லபை தை
ஆத்மாநம் அபி அகதாய ஸ்வயம் ஆத்மவந்தம் -46-

ஞானி த்வாதமைவ மே மதம் -பக்தானாம் யத் வபுஸி தகரம் பண்டிதம் புண்டரீகம் –
பக்தி யோக பாக்யர்களை இங்கும் கொண்டாடுகிறார்

நிஷ் கிம் சனத்தவ தனிநா விபூதேஸ யேந
ந்யஸ்த ஸ்வ ரக்ஷண பரஸ்த்வ பாத பத்மே
நாநா வித ப்ரதிஹ யோக விசேஷ தன்யா
ந அர்ஹந்தி தஸ்ய சதா கோடி தம அம்ச கக்ஷியாம் -47-

சத் தஹர வித்யாதிகள் உபாசகர்களுக்கு -இதில் அசக்தர்களுக்கு அவர்களது ஆகிஞ்சன்யமே
பச்சையாகக் கொண்டு ப்ரபன்னராக்கி மஹா விசுவாசமும் அருளி இவர்களில்
கோடியில் ஒரு அம்சத்துக்கும் அன்றோ பக்தி யோக நிஷ்டர்களை ஆகும் படி உயர்த்தி அருளிச் செய்கிறாய்

ஆத்மபஹார ரஸிகேன மயைவ தத்தம்
அந்யைர் ஆதார்யம் அதுனா விபுதைக நாத
ஸ்வீ க்ருத்ய தாரயிதும் அர்ஹஸி மாம் த்வதீயம்
சோரோப நீத நிஜ நூபுரவத் ஸ்வபதே -48-

ஆத்ம நிவேதனம் செய்து -அகிஞ்சனன் அநந்ய கதி-பாதார விந்தத்தில் சரண் அடைந்து –
அசித்வத் பாரதந்தர்ய ஸ்வரூபம் உணர்ந்து
திரு நூபுரம் திருடி -பின்பு உணர்ந்து அத்தை சமர்ப்பித்தால் நீ அணிந்து கொள்வதைப் போலே
அடியேனையும் ஸ்வீ கரித்து அருள வேண்டும் என்கிறார் —

அஞ்ஞான வாரிதும் அபாய துரந்தராம் மாம்
ஆஞ்ஞா விபஞ்ஞானம் அகிஞ்சன ஸார்வ பவ்மம்
விந்தன் பாவான் விபூதி நாத ஸமஸ்த வேதி
கிம் நாம பாத்ரம் அபரம் மனுதே க்ருபாயா –49-

அஞ்ஞான சமுத்திரம் / நீசர்களுக்குள் முதல்வன் , சாஸ்த்ர விரோதமே அனுஷ்டிப்பவன் -/ உன்னை சரண் அடைகிறேன்
சர்வஞ்ஞனான நீ உனது கிருபா பாத்திரத்துக்கு அடியேனை விட தகுந்த அதிகாரி இல்லை என்பதை அறியாயோ –

பிரகலாத கோகுல கஜேந்திர பரிஷிதாத்யா
த்ராதஸ் -த்வயா நனு விபத்திஷு தாத்ருசீஷூ
சர்வம் ததேகம் அபரம் மம ரக்ஷணம் தே
சந்தோலியதாம் த்ரிதச நாயக கிம் கர்லயே-50-

பிரகலாதன் -கோப கோபிகள் ஆநிரை -கஜேந்திரன் -பரீக்ஷித் -இவர்கள் அனைவரையும் த்வரித்து வந்து
ரஷித்து அருளியதை விட அடியேனை ரஷிப்பதே உனக்கு மஹா வைபவம் விளைவிக்கும் –

வாத்யா சதை விஷய ராக தயா விவ்ருத்தை
வியாகூர் நமான மனஸாம் விபூதிர் ராஜா
நித்ய உப்தப்தாம் அபி மாம் நிஜ கர்ம கர்மை
நிர்வேசய ஸ்வ பத பத்ம மது ப்ரவாஹம்—51-

திருவடித் தாமரைகளில் இருந்து பெருகும் மது அருவியில் என்னை மூழ்கப் பண்ணி –
விஷய ஸூக ராக பிரம்மத்தில் ஆழ்ந்து இருந்து உள்ள அடியேன் மனசை மீட்டு
நித்தியமாக துஷ் கர்மாக்களை செய்து- தாப த்ரயங்களில் ஆழ்ந்து உள்ள அடியேனை
தேனே பெருகும் திருவடிகளில் சேர்த்து உஜ்ஜீவிக்க பிரார்த்திக்கிறார் –

ஜய விபூதி பதே த்வம் தர்சித அபீஷ்ட தான
ஸஹ ஸரஸி ஜவாசா மேதிநீப்யாம் வாஸாப்யாம்
நல்ல வனமிவ ம்ருதனன் பாப ராஸிம் நாதானாம்
கரு தசரிதனுபே கந்த ஹஸ்தீவ த்வீயன் -52-

பிருகு மகரிஷி போலே நித்ய வாசம் செய்து அருள பிரார்த்திக்கிறார் -உபய நாச்சியார் உடன் சஞ்சாரம் செய்து
யானை வன புதர்களை அழிப்பது போலே தமர்கள் கூட்டும் வல்வினைகளை நாசம் செய்து நடை அழகைக் காட்டி அருள வேண்டும்

நிரவதிக குண ஜாதம் நித்ய நிர்தோஷம் ஆத்யம்
நரக மதன தக்ஷம் நாகினாம் ஏக நாதம்
விநத விஷய சத்யம் வேங்கடேச கவிஸ்த்வாம்
ஸ்துதி பதம் அபி கச்சன் சோபதே ஸத்ய வாதீ-53-

ஆறு சுவை விருந்துடன் நியமிக்கிறார்
1 -நிரவதிக குண ஜாதம்
2-நித்ய நிர்தோஷம்
3–ஆத்யம் -த்ரிவித காரணன்
4–நரக மதன தக்ஷம்-ஆஸ்ரிதர் சம்சாரம் நிவ்ருத்தன்
5–நாகினாம் ஏக நாதம் -தன் ஒப்பார் ஒல்லில்லா அப்பன்
6–விநத விஷய சத்யம்-அடியவர்க்கு மெய்யன் அன்றோ
சத்யம் ஞானம் அனந்தம் அமலம் ப்ரஹ்மம்–சத்யஸ்ய சத்யம் – –
தன்னைப் போலே -ஸ்தோத்திரம் பண்ணுவாரையும் சத்யவாதீ ஆக்கி அருளுவான்

ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி சமேத ஸ்ரீ தேவ நாயக பர ப்ரஹ்மணே நம

————————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹேமாம்புஜ வல்லி சமேத ஸ்ரீ தேவ நாயக பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்வ பூஷணம் –

February 6, 2018

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் -ஸ்ரீ சுந்தரத் தோளுடையான்-என்னும் ஸ்ரீ பெரியாண்டான் –
அவர் திருக் குமாரர் -இளையாழ்வார் -என்று எம்பெருமானார் திருநாமம் சாத்த –
இவர் உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்-

இவர்-
ஸ்ரீ ப்ரமேய ரத்னம் –
ஸ்ரீ தத்வ பூஷணம் –
ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் (இது தற்போது கிடைக்க வில்லை ) -மூன்று நூல்களை இயற்றி அருளி உள்ளார் –

——————

ஸ்ரீ மங்கள ஸ்லோகம்
பிரமேய ரத்னம் ரமணீய பஹோ புரோதசா யாமுநே தேசிகேந
உத்த்ருத்ய வேதாம்பு நிதேரபாராத் ப்ரோக்தும் மநோ லங்க்ருதயே முமுஷோ –

ரமணீய பாஹு ப்ரோஹிதர் -யமுனா தேசிகன் -யாமுனாச்சார்யார்
ஸூந்தர தோளுடையானுக்கு -கைங்கர்யம்
கூரத்தாழ்வான் அரங்கனுக்கு போல் இவர் அழகருக்கு கைங்கர்யம்
திருமாலை ஆண்டான் மூலம் இவருக்கு வந்த கைங்கர்யம் இது
உத்த்ருத்ய அபாரமான வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்
ப்ரமேய ரத்னம் முமுஷுக்களுக்கு அலங்காரமாக எழுதுகிறேன்

பாற் கடலைக் கடைந்து அமுதம் பெண் அமுதம்
மறைப்பால் கடலைக் கடைந்து நா பர்வதம் போல் திருவாய் மொழி
இவர் வேதாம்பு வேதக்கடலில் இருந்து உத்தரித்து அருளினார்

ஸூந்தர தோளுடையான் உடைய புரோஹிதரான யாமுனாசார்யராலே
வேதக் கடலிலே இருந்து முமுஷூவுக்கு
மனஸ்ஸூக்கு அலங்க்ருதமாக அருளிச் செய்யப் பட்டது -என்றவாறே –

யாமுன கவிவா தீந்திர ஸூந்தரஸ்ய புரோஹித
பிரமேய ரத்ன மகரோத் சர்வேஷாம் ஜ்ஞான சம்பதே –

இவர் மூன்றாவது யமுனாச்சார்யர்
ஸ்ரீ ஆளவந்தார் முதலிலும்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உடைய திருத்தகப்பனார் இரண்டாவது யமுனாச்சார்யர் –

——-

நெஞ்சினால் நினைந்தும்
வாயினால் மொழிந்தும்
நீதி யல்லாதன செய்தும் -என்று சொல்லுகிறபடியே
த்ரிவித கரணங்களாலும் பாபார்ஜனம் பண்ணி

ஓடி ஓடிப் பல பிறப்பும் -என்கிறபடியே –
பிறப்பது இறப்பதாய்-
வேத நூல் பிராயம் நூறு மனுசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிக் கழிப்பது –
நின்றதில் பதினை ஆண்டிலே பேதை பாலகனாய்க் கழிப்பது

நடுவில் உள்ள காலத்திலே-
சூதனாய்க் கள்வனாய் தூர்த்தரோடு சேர்ந்து
அல்ப சாரங்களை அனுபவிக்கைக்காக அஸேவ்ய சேவை பண்ணுவது

அதில் ஆராமையாலே
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணுவது –
அதுக்கு மேலே பர ஹிம்ஸையிலே ஒருப்படுவது

பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டி -மனிசரில் துரிசனாயும்
பின்புள்ள காலத்தில் –
பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுது யுண்டவாறும் வாழ்ந்தவாறும்
ஓக்க உரைத்து இருமித் தண்டு காலா யூன்றி யூன்றித் தள்ளி நடப்பதாய்க் கொண்டு –

பால்யத்தில் அறிவில்லாதனாயும் –
யவ்வனத்தில் விஷய பரனாயும் –
வார்த்தக்யத்திலே அசக்த கரணனாயும் -இப்படி

பழுதே பல பகலும் கழித்துப் –
புறம் சுவர் கோலம் செய்து –
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்கும்படி முடிவிலே முள் கவ்வக் கிடப்பது –

ஈங்கி தன் பால் வெந்நரகம் என்று அனந்தரம்
நரகானுபவம் பண்ணுவது

அனுபவிக்கும் இடத்து
வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வனவுள-என்கிறபடியே
பயங்கரரான எம கிங்கரருடைய வெவ்விதான சொற்களாலும் ஈடுபடுவது

அதுக்கு மேலே
ரௌரவம் மஹா ரௌரவம் என்று தொடங்கி
உண்டான நரக விசேஷங்களை அனுபவிப்பது

பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினால்
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைத் தழுவுவதாய்
இப்படி அறுப்புண்பது சூடுண்பது தள்ளுண்பதாய் –
நாநா விதமான நரக அனுபவம் பண்ணுவது
மீண்டு கர்ப்ப வேதனையை அனுபவிப்பதாய் –

மாதாவினுடைய கர்ப்ப கோளகத்தோடு எம தண்டமோடு வாசியறப் போக்குவரத்து செய்து
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பிலே பிறப்பதாய் படுகிற கண் கலக்கத்தைக் கண்டு

ஏவம் சம்ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி —
ஜீவே து காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபாஜாயதே-என்றும்

நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே
ராஜாவானவன் தண்டயனாய் இருப்பான் ஒருவனை
ஒவ்வொரு பகுதியாகக் கட்டினால் ஒரு பகுதியிலே இவன் படும் ஈடுபாட்டைக் கண்டு
மற்றைப் பகுதிகளைக் கழித்துப் பொகடுமா போலே

ஈஸ்வரனும் ஒரு கர்மத்தில் இவன் படும் ஈடுபாட்டைக் கண்டு
ஒரு கர்மத்தினுடைய முடிவிலே ஒரு கர்மம் ஆரம்பிப்பதற்கு முன்னே
நடுவே நிர்ஹேதுக கடாக்ஷத்தைப் பண்ணா நிற்கும்

இது அடியாக
இவன் பக்கலிலே யாதிருச்சிக்க ஸூஹ்ருதம் பிறக்கும்

இத்தாலே சத்வம் பிரகாசிக்கும் –

சத்வம் விஷ்ணு பிரகாசகம் -என்கிறபடியே
சத்வ குணத்தால் பகவத் பிரபாவம் நெஞ்சிலே படும்

இது நெஞ்சிலே படப் பட த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறக்கும்

இது அறிகைக்காக சாஸ்த்ர அபேக்ஷை பிறக்கும் –

இந்த சாஸ்த்ர ஸ்ரவணம் பண்ணுகைக்காக ஆச்சார்ய அபேக்ஷை பிறக்கும்

அவ் வபேஷை பிறந்தவாறே –
தத் வித்தி ப்ரணி பாதேன பரி ப்ரஸ்நேந சேவயா -உபதேஷ்யந்தி
தே ஜ்ஞானம் ஜ்ஞானி நா தத்வ தர்சிந -என்கிறபடியே
ஆச்சார்ய அநு வர்த்தகம் பண்ணும்

அவ்வநுவர்த்தனத்தாலே இவன் அளவிலே பிரசாதம் பிறக்கும்

ஆச்சார்யவான் புருஷ வேத -என்கிறபடியே
ஆச்சார்யரானவர் இவன் பக்கலிலே தனக்குப் பிறந்த
பிரசாதம் அடியாக அர்த்த உபதேசத்தை பண்ணா நிற்கும்

இவ் வர்த்த உபதேசத்தால் –
பாணனார் திண்ணம் இருக்க -என்கிறபடியே இவனுக்கு அத்யவசாயம் பிறக்கும்

இவ் வத்யவசாயத்தாலே பகவத் அங்கீ காரம் பிறக்கும்

பகவத் அங்கீ காரத்தாலே சத் கர்ம ப்ரவ்ருத்தி யுண்டாகும்

இக் கர்ம பரிபாகத்தாலே ஞானம் பிறக்கும்

அந்த ஞான பரிபாகத்தாலே பிரேம ரூபையான பக்தி பிறக்கும்

பக்தி யநந்தரம் பகவத் கடாக்ஷம் பிறக்கும்

பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸாத்ய உபாய நிவ்ருத்தியும் சித்த உபாய நிஷ்டையும் பிறக்கும்

சித்த உபாய நிஷ்டையாலே ப்ரபந்ந அதிகாரம் பிறக்கும்

இப்படிக்கு ஒத்த பிரபன்ன அதிகாரிக்கு ஸ்வரூப சித்தி பிறப்பது தத்வ தர்சனத்தாலே

இங்கு தத்வம் என்னப் பார்க்கிறது
உபாய
உபேய தத்வங்களை

உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணவ் -என்கையாலே
இவ்வதிகாரிக்கு உபாய உபேய ரூபமான தத்வ தர்சித்தவம் யுண்டாம் போது
ஞாதவ்யமாய் இருப்பது மூன்றாய் இருக்கும் –

1-தத்வ த்ரய விஷய ஞானமும் —
2-தத்வ த்வய வைராக்கியமும் –
3-தத்வ ஏக விஷய பக்தியும்

இதிலே தத்வ த்ரய விஷய ஞானமாவது –
1-அசித் விஷய ஞானமும் –
2-சித் விஷய ஞானமும் –
3-ஈஸ்வர விஷய ஞானமுமே –

1-அசித்து த்யாஜ்யதயா ஞாதவ்யம் –
2-சித்து த்யாஜ்ய உபாதேய தயா ஞாதவ்யம் –
3-ஈஸ்வரன் உபாதேய தயா ஞாதவ்யன் –

இதில் அசித்து மூன்று படியாய் இருக்கும் –
1-அவ்யக்தம் –
2-வியக்தம் –
3-காலம் –

இதில் அவ்யக்தத்தின் நின்றும் மஹான் பிறக்கும்

மஹானின் நின்றும் அஹங்காரம் பிறக்கும் –

அஹங்காரத்தின் நின்றும்
1-சாத்விக
2-ராஜஸ
3-தாமச ரூபங்களான குண த்ரயங்கள் பிறக்கும்

அதில் சாத்விக அஹங்காரத்தின் நின்றும்
1-ஸ்ரோத்ர
2-த்வக்
3-சஷூர்
4-ஜிஹ்வா
5-க்ராணங்கள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்

1-வாக்
2-பாத
3-பாணி
4-பாயு
5-உபஸ்தங்கள் ஆகிற கர்ம இந்திரியங்கள் ஐந்தும்

இந்திரிய கூடஸ்தமான மனஸ்ஸூம் –
ஆக இந்திரியங்கள் -11-பிறக்கும்

தாமச அஹங்காரத்தின் நின்றும்
1-சப்த
2-ஸ்பர்ச
3-ரூப
4-ரஸ
5-கந்தங்களும்

தத் குண ரூபமான
1-பிருத்வி
2-அப்பு
3-தேஜோ
4-வாயு
5-ஆகாசங்கள் என்கிற பஞ்ச பூதங்களும் பிறக்கும்

ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் ஸஹ காரியாய் இருக்கும்

ஆக இப்படி வியக்தமாகிறது -23- தத்வமாய் இருக்கும்

அவ்யக்தமானது
இவ் வ்யக்தத்துக்கும் காரணமாய் –
குண த்ரயங்களினுடையவ் சாம்யா அவஸ்தையை யுடைத்தாய்
மூல ப்ரக்ருதி சப்த வாஸ்யமாய் –
முடிவில் பெரும் பாழ்-என்று சொல்லும்படியாய் இருக்கும்

இனி காலமும்
அசித் விசேஷமுமாய் –
நித்தியமாய்
ஜடமாய்
நிமிஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய்
எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய் இருக்கும் –

இவ்வசித்தை -24-தத்துவமாக பிரதமாச்சார்யரும்
மங்கவொட்டு-என்கிற பாட்டிலே அனுசந்தித்து அருளினார்

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே. யானே நீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம் பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

ஆக இவ் வசித் தத்வம் –
நித்தியமாய் –
ஜடமாய் –
விபூவாய் –
குண த்ரயாத்மகமாய் –
சதத பரிணாமியாய் –
சந்தத க்ஷண க்ஷரண ஸ்வ பாவமாய் –
சர்வேஸ்வரனுக்கு லீலா உபகாரணமாய் இருக்கும் –

—————–

அநந்தரம் சித் ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
அப்ராக்ருதமாய் –
ஞான ஸ்வரூபமாய் –
ஞான குணகமுமாய்-
அஹம் புத்தி கோசாரமுமாய் –
ஆனந்த ரூபமாய் –
உத்க்ரந்திகத்யாதிகள் உண்டாகவே அநு பூதமாகையாலே தீபமும் ப்ரபையும் போலே ஸ்வரூப ஸ்வ பாவத்தை யுடையதாய் –
அநேகமாய் –
அகார வாச்யனான எம்பெருமானுக்கு அப்ருதக் சித்த விசேஷணமாய் இருக்கும்

திருமாலை யாண்டான் பெரிய முதலியாரைப் பார்த்து
ஆத்மாவினுடைய வேஷம் இருக்கும்படி என் என்று விண்ணப்பம் செய்ய
சேஷத்வமும் பாரதந்தர்யமும் காண் வேஷமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –

கூரத் தாழ்வான்-இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் எம்பெருமானுடைய கிருபை என்று பணிக்கும் –

முதலியாண்டான் -ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் உஜ்ஜீவனம் என்று நிர்வஹிப்பர் –

நம்பிள்ளையை ஆத்ம ஸ்வரூபம் இருக்கும் படி என் என்று கேட்க
உன் இணைத் தாமரை கட்கு அன்புருகி நிற்குமது என்று அருளிச் செய்தார்

இப்படிக்கொத்த ஆத்மாக்களும் மூன்று படியாய் இருக்கும் –
1-நித்யர் –
2-முக்தர்
3-பத்தர் -என்று –

நித்யராவார்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் –
பகவத் இச்சையாலே அவனுடைய திவ்ய குணங்களோபாதி நித்ய பூதராய்
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்திதேவ -என்றும் –
விண்ணாட்டவர் மூத்தவர் -என்றும் –
சொல்லலாம்படியான
அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகளான ஸூரிகள்-

முக்தராவார் –
சந்த்ரைகத்வம் ஸ்ருதமானாலும் சாஷூஷமான திமிர தோஷம் நிவ்ருத்தம் ஆகாமையாலே
சந்த்ர த்வித்வ புத்தி அநு வர்த்திக்குமோபாதி
பிரக்ருதே பரம் -என்கிற ஸ்ரவண ஞானம் யுண்டேயாகிலும்
ஆத்ம சாஷாத்காரம் இல்லாமையால்
பின்னையும் தேகாத்ம அபிமானம் அநு வர்த்திக்க

சதாச்சார்ய பிரசாதத்தாலே ஆத்ம சாஷாத்காரமும் பிறந்து
அதடியாக தேகாத்ம அபிமானம் நிவ்ருத்தமாயும்
பகவத் ஏக போக்யதா விஷய சாஷாத் காரத்தாலே -விஷயாந்தர ருசி நிவ்ருத்தமாயும் –
அந்த ஞான விசேஷத்தாலே –
அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே

சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த* முடிவில் பெரும் பாழேயோ*
சூழ்ந்ததனில் பெரிய* பரநல் மலர்ச்சோதீயோ*
சூழ்ந்ததனில் பெரிய* சுடர்ஞான இன்பமேயோ!*
சூழ்ந்ததனில் பெரிய* என் அவாஅறச் சூழ்ந்தாயே!

கங்கு கரையுமற பெருகுகிற காவேரி போலே நடக்கிற பகவத் ப்ரேமம் என்ன
ப்ரேம அநு ரூபமாக நடக்கிற பகவத் நிரந்தர அனுபவ ஆத்ம கதை என்ன
அந்த அனுபவ விரோதியான தேக பரித்யாகம் என்ன –
அர்ச்சிராதி மார்க்க கமனம் என்ன –
அவ்வர்ச்சிராதி மார்க்க கமனத்தோடே போம்போது
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின -என்கிறபடியே

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ கடல் அலை திரை கை எடுத்து ஆடின
எழ பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1

ஆகாசமானது மேக முகத்தால் திரைகளாகிற
கைகளை எடுத்து ச சம்பிரம ந்ருத்தம் பண்ண –
ஓங்காரம் ரதம் ஆருஹ்ய -என்கிறபடியே
பிரணவம் ஆகிற தேரிலே ஏறி மநோ ரதத்தோடே கூடிக் கொண்டு

மனஸ்ஸானது ஸுமநஸ்யம் தோன்றும்படி சாரத்யம் பண்ணி
வாயு லோகத்தில் சென்ற அளவிலே அவனும்
தன்னுடைய பாவனத்வம் தோன்றும்படி சத்கரிக்க –
அநந்தரம்

தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு புக்கு –
அவ்வருகே சந்த்ர லோகத்தைக் கிட்டி –
அநந்தரம்

வித்யுத் புருஷன் எதிர் கொள்ள –
அவ்வருகே வருண லோகத்தில் சென்று –
இந்த்ர லோகத்தில் சென்று –
பிரஜாபதி லோகத்தில் சென்று –

அங்குள்ளார் அடைய பூர்ண கும்பம் வைப்பார் –
தோரணம் நாட்டுவார் —
மங்கள தீபம் வைப்பார் –
மாலைகள் கொண்டு நிற்பார் –
ஏத்துவார் சிறிது பேர்
வாழ்த்துவர் வணங்குவாராய்
வழி இது வைகுந்ததற்கு -என்று
இப்படித் தந்தான் எல்லை அளவும் வந்து தர்சிக்க அவ்வருகே போய்

அண்ட கபாலத்தைக் கீண்டு தச குணோத்தரமான ஏழு ஆவாரணத்தையும் கடந்து –
அநந்தரம் –
மூல ப்ரக்ருதியையும் கடந்து –
சம்சாரம் அற

பரம பதத்துக்கு எல்லையான விரஜையிலே வாசனா தோஷம் கழித்து
அதிலே குளித்து அழுக்கு அறுப்புண்டு
ஸூஷ்ம சரீரத்தைக் கழித்து
அப்ராக்ருத திவ்ய விக்ரஹத்தை பரிக்ரஹம் பண்ணி
யுவராஜ உன்முகனான ராஜ குமாரன் பட்டத்துக்கு உரிய ஆனையை மேல் கொண்டு வருமா போலே
நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே புக்கு –

ஐரம் மதீயம் -என்கிற சரஸைக் கிட்டின அளவிலே
பார்த்திரு சகாசத்துக்கு போகும் பெண் பிள்ளையை ஒப்பித்துக் கொண்டு போமா போலே –
நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் -என்கிறபடியே

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –10-9-10-

ப்ரஹ்ம அனுபவத்துக்கு அநு ரூபமாக அலங்கரித்திக் கொண்டு
கலங்கா பெரு நகரான பரம பதத்திலே சென்ற அளவிலே

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவுவார் –தொடர்ந்து எங்கும் தோத்திரம் பண்ணுவார் –
கொடி யணி நெடு மதிள் கோபுரத்து வாசலிலே சென்று புக்கு
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளத்
திரு மா மணி மண்டபத்திலே சென்ற அளவிலே –
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுப்பார்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டுவாராய்க் கொண்டு
பார்த்த இடம் எங்கும் அஞ்சலி பந்தமாம் படி மங்களா சாசனம் பண்ணுவாராய்

இவனுடைய சம்சார தாபமடைய போம்படி அம்ருத தாரைகளை வர்ஷித்தால் போலே
அழகிய கடாக்ஷங்களாலே எளியப் பார்ப்பாராய்
இப்படி இவர்கள் ஆதரிக்க திவ்ய பர்யங்கத்தைக் கிட்டி –
முத்தினை மணியை -என்கிறபடியே

பத்தர் ஆவியை* பால்மதியை,* அணித்-
தொத்தை* மாலிருஞ் சோலைத் தொழுது போய்*
முத்தினை மணியை* மணி மாணிக்க-
வித்தினைச்,* சென்று விண்ணகர்க் காண்டுமே

முக்தா வலிக்கு எல்லாம் நாயக ரத்னமான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு
வேரற்ற மரம் போலே விழுந்து எழுந்திருப்பதாக
அவனும் அங்கே –
பரதம் ஆரோப்ய-என்னுமா போலே அரவணைத்து அடியிலே வைக்க

அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் என்ன –
தத் குண அனுபவம் என்ன –
தத் கைங்கர்ய அனுபவம் என்ன –
இப்படி ச விபூதிக ப்ரஹ்ம அனுபவம் பண்ணும் பாக்யாதிகாரிகள்

பத்தராவார் –
சேற்றிலே இருக்கிற மாணிக்கம் போலவும் –
ராஹு க்ரஸ்தனான சந்திரனைப் போலவும் –
பகவத் சேஷ பூதரான ஆத்ம ஸ்வரூபராய் இருக்கச் செய்தேயும்
அநாத்ய வித்யையாலே திரோஹித ஸ்வரூபராய் –
இருட்டறையில் புக்கு வெளிநாடு காண மாட்டாதாப் போலே இருப்பாராய் –
சார்ந்த இரு வல்வினைகள் ஆகிற இரட்டை விலங்காலே கட்டுண்டு திரியக் கடவராய்
சப்தாதி விஷய பிரவணராய்
ப்ரஹ்மா தலையாக எறும்பு கடையாக நடுவுள்ள ஆத்ம ஜாதிகள்

—————-

அநந்தரம்
ஈஸ்வரனுடைய ஸ்வரூபம் மூன்று படியாய் இருக்கும் –
1-நியந்த்ருத்வம் –
2-வியாபகத்வம் –
3-உபய லிங்க விசிஷ்டத்வம்-என்று –

இதில் நியந்த்ருத்வமாவது –
உபய விபூதியும் தான் இட்ட வழக்காம் படி –
அவற்றுக்கு அந்தராத்மதயா நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை –

வியாபகத்வமாவது
தன் ஸ்வரூப ஏக தேசத்திலே உபய விபூதியும் தரிக்கும் படி விபுவாய் இருக்கை-

உபய லிங்க விசிஷ்டத்வம் ஆவது –
1-ஹேய ப்ரதிபடத்வமும்-
2-கல்யாணை கதாநத்வமும் –

ஹேய ப்ரதிபடத்வம்-ஆவது –
உலகு உன்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி -என்கிறபடியே
தத் கத தோஷம் தட்டாது இருக்கை –

உலகு தன்னை நீ படைத்து உள் ஒடுக்கி வைத்து மீண்டு
உலகு தன்னுளே பிறந்து ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே-திருச்சந்த விருத்தம்-

கல்யாணை கதாநத்வமும் –
ஸூபாஸ்ரயத்வம் –

ஆக இவ்விரண்டாலும்
1-அநிஷ்ட நிவ்ருத்தியும்
2-இஷ்ட பிராப்தியும் சொல்லுகிறது –

அதாகிறது
1-உபாய
2-உபேயத்வங்கள் இறே ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம்

————–

ஆக –
அசித்து ஜ்ஜேயத ஏக ஸ்வரூபத்தாலே போக்யமாய் இருக்கும்

சித்து ஜ்ஞாத்ருத ஏக ஸ்வரூபத்தாலே போக்தாவாய் இருக்கும்

பரமாத்மா நியந்த்ருத ஏக ஸ்வாபாவத்தாலே ஈஸ்வரனாய் இருக்கும்

இப்படி மூவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்த பின்பு
உபய விபூதிக்கும் ஈஸ்வரியான பிராட்டி ஸ்வரூபம்
அசித் கோடியிலேயோ
ஆத்ம கோடியிலேயோ
ஈஸ்வர கோடியிலேயோ என்று நிரூபித்தால்

அறிவுண்டாகையாலே அசித் கோடியில் அன்று –
ஐஸ்வர்யத்தாலே ஆத்ம கோடியில் அன்று –
நித்ய பாரதந்தர்யத்தாலே ஈஸ்வர கோடியில் அன்று

ஆனால் தத்வம் நாலாகிறதோ என்னில்
அதுக்கு பிராமண உபபத்திகள் இல்லை

ஆனால் இவளுடைய ஸ்வரூபம் அறுதியிடும்படி என் என்னில் –
1-நிரூபக விசேஷணம் –
2-நிரூபித விசேஷணம் என்று இரண்டாய்

சேதனன் நிரூபித விசேஷணமாய்
இவள் நிரூபக விசேஷணமாய் இருக்கும்

ஆனால்
அஸ்ய ஈஸாநா ஜகத -என்றும் –
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்றும் –
ஸ்ருதிகளிலே ஈஸ்வரியாக ஓதிப் போருகையாலே
ஈஸ்வர கோடியிலேயாகக் குறையில்லையே என்னில்

1-அப்போது நாட்டுக்கு இரண்டு ஈஸ்வரர்கள் கூடாமையாலும்
2-பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் —
ஷராத்மாநா வீசதே தேவ ஏக –என்றும் தொடங்கி உண்டான பிராமண பரம்பரைகளுக்கு
விரோதம் பிறக்கையாலும்
3-யுக்தி இல்லாமையாலும்
ஈஸ்வரத்வம் கூடாது –

அங்கு ஓதிப் போருகிற ஈஸ்வரத்வம் பத்னீத்வ நிபந்தனமாகக் கடவது —
ராஜ மஹிஷியை சோபசாரமாகச் சொல்லாத போது
அவனுடைய ரோஷத்துக்கு இலக்காம் அத்தனை இறே

பும்பிரதான ஈஸ்வர ஈஸ்வரீம் -என்று தொடங்கி
இவளுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்கிற பிரதேசங்களில் அவளுடைய
போக்யதா அதிசயத்தை சொல்லுகிறது அத்தனை

ஆனால் ஈஸ்வரனோ பாதி இவளுக்கும்
ஜகத் காரணத்வம் உண்டாகத் தடை என் என்னில் –

ஒருவனுக்கு காரணத்வம் உண்டாம் போது
1-க்ராஹக ஸாமர்த்யத்தாலும்-
2-அன்வய வ்யதிரேகத்தாலும் –
3-அர்த்தாபத்தியாலும்-
4-ஸ்ருதியாதி பிரமாணங்களாலும் இறே உண்டாகக் கடவது

இவளுக்கு காரணத்வ சக்தி யுண்டாகையாலே தர்மி க்ராஹத்வம் யுண்டு

பிரபஞ்சம் இவள் பார்த்த போது யுண்டாய்
தத் அபாவத்திலே இல்லாமையால் அன்வய வ்யதிரேகம் யுண்டு –

இது தன்னாலே அர்த்தா பத்தி யுண்டு

பகவச் சாஸ்திரங்களில் காரணத்வ ஸூசகங்களான பிரமாணங்கள் உண்டு –

ஆகையால் காரணத்வம் உண்டாகக் குறை
என் என்னில்

சக்திமத்வம் குணத்தால் அல்ல
பத்நீத்வ நிபந்தம் –

வீக்ஷணாதீந வ்ருத்திமத்வமாகக் கடவது அன்வய வ்யதிரேகம் –

இத்தாலே
ஜகத் ஸித்தியிலே இவளை ஒழிய உபபத்தி யுண்டு –

ஸ்ருதியாதி பிரமாணங்களும்
ப்ரஹ்மாத்மகமான ஜகத்தினுடைய விலோகந பரங்களாய் இருக்கும்

ஆகையால் இவளுக்கு காரண பாவத்தில் அந்வயம் இல்லை –

ஈஸ்வரன் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டனாய் அன்றோ
காரண பூதனாகிறது –
ஆகையால் இவளுக்கும் காரணத்வத்தில் அந்வயம் யுண்டாகக் குறை
என் என்னில்

அவன் லீலா விபூதியை ஸ்ருஷ்டிக்கும் போது நித்ய விபூதி விசிஷ்டனாய் அன்றோ இருப்பது –
அப்போது நித்ய விபூதிக்கும் காரணத்வம் யுண்டாகிறதோ –
அவ்வோபாதி அவளுக்கும் காரணத்வம் இல்லை

ஆனால் இவளுக்கு ஜகத் ஸ்ருஷ்ட்யாதி காரணத்வத்தில் ஓர் அந்வயம் இல்லையோ
என்னில்
அநு மோதனத்தால் வரும் அந்வயம் யுண்டு –

காரண வஸ்துவே உபாஸ்யமுமாய்
சரண்யமுமாய் ஆகையால்
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் இல்லை

இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் யுண்டாக பிரமாணங்கள் யுண்டே
என்னில்
அது சரண்யனுடைய இச்சா அநு விதாயித்தவமாகக் கடவது –

யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம –என்று தொடங்கி
இவளுடைய வியாப்தி சொல்லா நின்றது இறே என்ன

ரிஷி தானே விபாகம் பண்ணுகையாலே
ஸ்வ விபூதி சரீரங்களில் யுண்டான வியாப்தி ஒழிய
ஸர்வத்ர வியாப்தி இல்லை
இந்த வியாப்தி தான் குணத்தால் வருவது ஓன்று இறே

ஸுபரியைப் போலே -ஆனால் இவளுக்கு சேதன சாமானையோ
என்னில் –
அப்படி அன்று –

பத்தரைக் காட்டில் முக்தர் வ்யாவ்ருத்தர் –
முக்தரைக் காட்டில் நித்யர் வ்யாவ்ருத்தர்
நித்யரைக் காட்டில் அனந்த கருடாதிகள் வ்யாவ்ருத்தர் –
அவர்களில் காட்டில் தேவீ ஜனங்கள் வ்யாவ்ருத்தர்
தேவீ ஜனங்களில் காட்டில் பூ நீளைகள் வ்யாவ்ருத்தர்
பூ நீளைகள் காட்டில் இவள் வ்யாவ்ருத்தை —
ஆகையால் இறே உபய விபூதிக்கும் ஈஸ்வரியாய் போருகிறது

இவளுக்கு
ஸ்வரூபத்தாலே சேதன சாம்யம் யுண்டு –
ஸ்வ பாவத்தால் ஈஸ்வர சாம்யம் யுண்டு

இது நித்யருக்கும் முக்தருக்கும் யுண்டோ என்னில் –
இவர்களுக்கும் இன்றியிலே –
தேவீ ஜனங்களுக்கும் இன்றியிலே –
ஈஸ்வரன் தனக்கும் இன்றியிலே இருப்பன சில குண விசேஷங்கள் யுண்டு

அவை எவையென்னில்
1-நிரூபகத்வம் —
2-அநு ரூப்யம்–
3-போக்யத்வம் —
4-அபிமதத்வம் —
5-அசேஷ சேஷித்வ சம்பந்த த்வராபாவம் –
6-ஆஸ்ரயண சித்தி —
7-ப்ராப்ய பூரகத்வம் –
இவ்வர்த்தத்தை அபியுக்தரும் வெளியிட்டார்கள்-

திருவினுக்கு அரசே -திருமாலே -என்று
நிரூபகத்தையும்

உனக்கேற்கும் கோல மலர்ப்பாவை -என்று
அநு ரூபத்தையும்

அல்லி மலர் மகள் போக மயக்குகள்-என்று
போக்யதையும் –

பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்று
அபிமதத்வத்தையும் –

திரு மா மகளால் அருள் மாரி -என்றும் –
திருமாலால் அருளப் பட்ட சடகோபன் -என்றும் –
அசேஷ சேஷித்வ சம்பந்த த்வார பாவத்தையும் –

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்று
ஆஸ்ரயண ஸித்தியையும்

திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்று
ததீய பர்யந்தமான ப்ராப்ய பூரகத்தையும் வெளியிட்டு அருளினார்கள்

ஆக
இந்த குணங்களாலே இறே இவள் சர்வ அதிசய காரியாய் இருப்பது

———-

திரு மா மகள் கேள்வா தேவா -என்றும்
பெருமை யுடைய பிரானார் -என்றும்
எம்பெருமானுக்கு சேஷித்வ பூர்த்தி பிறப்பது இவளாலே-

இவளுடைய சத்தை எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும் –
எம்பெருமானுடைய ஐஸ்வர்யம் இவள் இட்ட வழக்காய் இருக்கும்

இருவருடைய ஸ்வரூபமும் பூவும் மணமும் போலே இறே –
பூவை ஒழிய மணத்துக்கு சத்தை இல்லை –
மணத்தை ஒழிய பூவுக்கு ஏற்றம் இல்லை

ஆதித்யனும் பிரபையும் போலே
இருவருடைய சம்பந்தமும் அவிநா பூதமாய் இருக்கும்

இருவரையும் பிரித்துக் காண்பார் யுண்டாகில்
சூர்பணகையும் ராவணனும் பட்டது படுவார்கள்

ஆகையிறே-
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்று
சேஷத்வ பிரதி சம்பந்தி ஒரு மிதுனமாய்

நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்று
ஆஸ்ரயண பிரதிசம்பந்தி ஒரு மிதுனமாய்

அடிமை செய்வார் திருமாலுக்கே என்று –
கைங்கர்ய பிரதிசம்பந்தியும் ஒரு மிதுனமாய் இறே இருப்பது

இத்தாலே இறே ஸ்ரீ பாஷ்யகாரரும் –
மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை -என்று அறுதியிட்டது –

மத்ஸயத்தினுடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்குமோ பாதி
ஸ்ரீ மானுடைய வடிவெல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் என்று
பெரிய முதலியாரும் நஞ்சீயரும் அருளிச் செய்து போருவார்கள் –

ஏவம் பூதமான மிதுன வஸ்துவுக்கு பரதந்தர்யம் ஆத்ம வஸ்து
ஆத்ம வஸ்துவுக்கு பரதந்தர்யம் அசித் வஸ்து
இப்படி வஸ்து த்ரய யாதாம்ய ஞானம் பிறக்கை-தத்வ த்ரய ஞானமாவது

—————

அநந்தரம்
தத்வ த்வய விஷய வைராக்யமாவது என் என்னில்

சேதனனாய் இருப்பான் ஒருவனுக்கு புருஷார்த்தம் மூன்று படியாய் இருக்கும்
1-ஐஸ்வர்யம் –
2-கைவல்யம் –
3-பகவத் பிராப்தி -என்று

இதில் ஐஸ்வர்யம் மூன்று படியாய் இருக்கும் –
1-ராஜபதம் –
2-இந்த்ர பதம் –
3-ப்ரஹ்ம பதம் -என்று

கைவல்யமாவது –
சிறுக நினைவதோர் பாசமுண்டாம் பின்னும் வீடில்லை -என்றும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்றும் சொல்லுகிறபடியே
ஐஸ்வர்யத்தைக் காட்டில் வியாவருத்தி யுண்டாய் இருக்கச் செய்தேயும்
பகவத் அனுபவம் இல்லாமையால் விதவை அலங்கார சத்ருசமாம் படி
ஸ்வ அனுபவம் பண்ணி இருக்கை

ஆக –
1-ஜட ரூபமான ஐஸ்வர்யத்தையும் –
2-சிற்றின்பமான கைவல்யத்தையும் விடுகை தத்வ த்வய விஷய வைராக்யமாவது –

—————-

இனி தத்வ ஏக விஷய பக்தியாவது
தத்வம் ஏகோ மஹா யோகீ-என்று சொல்லுகிறபடியே
எம்பெருமான் பக்கலிலே அநவரத பாவனையாகச் செல்லக் கடவதான ப்ரேமம் –

பக்தி தான் மூன்று படியாய் இருக்கும் –
பக்தி –
பர பக்தி –
பரம பக்தி -என்று

பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
பக்தி க்ரீதோ ஜனார்த்தன -என்றும் சொல்லுகிறபடியே
இந்த பக்தியால் ஏவிக் கொள்ளலான அகார வாச்யனுடைய
ஆகாரமும் மூன்று படியாய் இருக்கும் –

1-நீர்ப் பூ
2-நிலப் பூ
3-மரத்தில் ஒண் பூ -என்று பிரதமாச்சார்யாரும் அருளிச் செய்தார்

(வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–-திரு-விருத்தம்-55-

நிலப்பூவும் கொடிப்பூவும் என்று -நிலத்திலே இரண்டாக்கி –
மற்றை இரண்டையும் கூட்டி நாலாக-சொல்லுவாரும் உண்டு
இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து
திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி
நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று தம்மை அனுபவிக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்ய பாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்ய ப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம்
புவனஸ்ய -விபவம் அர்ச்சை
நாகஸ்ய -பரம்
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –)

மரத்தில் ஒண் பூ என்கையாலே பரத்வம் சொல்லுகிறதாய் –
நீர்ப் பூ என்கையாலே வ்யூஹம் சொல்லுகிறதாய் –
நிலப் பூ என்கையாலே அவதாரம் சொல்லுகிறது

ஆனால்
அந்தர்யாமித்வமும்
அர்ச்சாவதாரமும் சொல்ல வேண்டாவோ என்னில் –

பரத்வ அந்தர்பூதம் -அந்தராமித்வம் –
அவதார விசேஷம்- அர்ச்சாவதாரம்-
ஆகையால்
ஈஸ்வரனுடைய ஆகாரமும் மூன்று என்னத் தட்டில்லை-

இப்படி ஆகார த்ரய விசிஷ்டனான எம்பெருமானை பிராபிக்கக் கடவனான
சேதனனுடைய ஸ்வரூபம் மூன்று படியாய் இருக்கும்
1-அநந்யார்ஹத்வம் –
2-அநந்ய சாதனத்வம் –
3-அநந்ய ப்ரயோஜனத்வம் –

இருவரையும் சேர விடக் கடவளான பிராட்டி ஸ்வரூபம் –
1-சேஷத்வ பூர்த்தி –
2-புருஷகாரத்வம் –
3-கைங்கர்ய வர்த்தகம் -என்றும் மூன்று படியாய் இருக்கும்

இவனை பிரதமத்திலே அங்கீ கரித்த ஆச்சார்யருடைய ஸ்வரூபம் –
1-அஞ்ஞான நிவர்த்தகம் –
2-ஞான ப்ரவர்த்தகம்-
3-ருசி ஜனகத்வம் – என்றும் மூன்று படியாய் இருக்கும்

இவனுக்கு வரக் கடவதான விரோதி ஸ்வரூபம் –
1-ஸ்வரூப விரோதி –
2-உபாய விரோதி –
3-ப்ராப்ய விரோதி -என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த விரோதிக்கு இரட்டை வித்தாய்ப் போருகிற அஹங்கார மமகாரங்களும் –
1-அஞ்ஞான –
2-ஞான –
3-போக -தசைகளில் என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த அஹங்கார மமகார ஹேதுவான அஞ்ஞானம் –
1-ஞான அனுதயம் –
2-விபரீத ஞானம் –
3-அந்யதா ஞானம் என்று மூன்று படியாய் இருக்கும்

ஞான அநுதயம் -தேகாத்ம அபிமானம்
விபரீத ஞானம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம்
அந்யதா ஞானம் -தேவதாந்த்ர சேஷத்வம் –

இந்த அஞ்ஞானத்தைப் பற்றி வரும் அபசாரமும் –
1-பகவத்
2-பாகவத
3-அஸஹ்ய அபசாரம் என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த அபசாரத்தைப் பற்றி வரும் அகமும் –
1-பூர்வாகம்
2-உத்தராகம்
3-ப்ராரப்தம் என்று மூன்று படியாய் இருக்குc

இதன் அடியாக வரக் கடவதான தாப த்ரயமும் –
1-ஆத்யாத்மீகம்
2-ஆதி பவ்திகம்
3-ஆதி தைவிகம் என்று மூன்று படியாய் இருக்கும்

இப்படிக்கு ஒத்த பாபத்தை குட நீர் வழியும் போது விவேக ஞானம் –
1-ஆத்ம அநாத்ம விவேக ஞானம் –
2-புருஷார்த்த அபுருஷார்த்த விவேக ஞானம் –
3-உபாய அநுபாய விவேக ஞானம் -என்று மூன்று படியாய் இருக்கும்

இந்த விவேகத்துக்கு ஸ்தானமாய் –
தத்வம் –
அபிமதம் –
விதானம் என்றும் மூன்று படியாய் இருக்கும்

ஸ்வரூப ப்ரதிபாதிகமான திருமந்திரம் தத்வமாவது –
புருஷார்த்த ப்ரதிபாதிதமான மந்த்ர ரத்னம் அபிமதமாவது –
ஹித விதாயமாய் சரண்யா அபிமதயாலே ப்ரவ்ருத்தமான சரம ஸ்லோகம் விதானமாகிறது

இதில் தத்வ ரூபமான திருமந்திரமும் பத ரூபத்தாலே
மூன்று படியாய் இருக்கும்-

இதிலே பிரதம பதத்தாலே சேதனனுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது –
மத்யம பதத்தாலே ஸ்திதி சொல்லுகிறது –
த்ருதீய பதத்தாலே வ்ருத்தி சொல்கிறது

இந்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் மூன்றும்
எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்

பிரதம பதத்தாலே இவனுடைய அநந்யார்ஹத்வம் சொல்கிறது –
மத்யம பதத்தாலே அநந்ய சரண்யத்வம் சொல்கிறது –
த்ருதீய பதத்தாலே அநந்ய போக்யத்வம் சொல்கிறது

இவனுக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கிறவனுடைய சேஷித்வம் சொல்கிறது பிரதம பதத்தாலே –
அவனுடைய சரண்யத்வம் சொல்கிறது மத்யம பதத்தாலே –
அவனுடைய போக்யத்வம் சொல்கிறது த்ருதீய பதத்தாலே –

இந்த ஞானம் அடியாக அஹங்கார ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது பிரதம பதம்
அர்த்த ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது மத்யம பதம்
கர்ம ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது த்ருதீய பதம்

பிரதம பதத்தில் சொல்லுகிற ஞாத்ருத்வமும் –
மத்யம பதத்தில் சொல்லுகிற கர்த்ருத்வமும்
த்ருதீய பதத்தில் சொல்லுகிற போக்த்ருத்வமும் எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்

திருமந்திரம் சாமாந்யேன ஸ்வரூப பரமாய் இருக்கும் –
சிலர் வாக்ய த்ரயம் என்று நிர்வஹிப்பர்கள்-
சிலர் வாக்ய ஏக வாக்யத்தாலே ஏக வாக்கியம் என்று நிர்வஹிப்பார்கள் –
சிலர் ஸ்வரூப புருஷார்த்தம் என்று நிர்வஹிப்பர்கள்
சிலர் அர்த்த பஞ்சக பரம் என்று நிர்வஹிப்பார்கள்
சிலர் பிரபத்தியையும் கூட்டி ஷடர்த்த பரம் என்று நிர்வஹிப்பர்கள்
சிலர் ஆத்ம சமர்ப்பணம் என்று நிர்வஹிப்பர்கள்

திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை -என்று
பத க்ரமத்துக்கும் தாத்பர்யமான அர்த்தம்
ததீய சேஷத்வம் என்று அருளிச் செய்தார் திரு மங்கை ஆழ்வார்

பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வாரும்
பயிலும் சுடர் ஒளியிலே –
எம்மை ஆளும் பரமர் -என்றும் –
எம்மை ஆளுடையார்கள் -என்றும் –
எமக்கு எம் பெரு மக்களே -என்றும்
ததீயர்களை சேஷிகளாக ப்ரதிபாதிக்கையாலும்

வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே-என்றும் –
சன்ம சன்மாந்தரம் காப்பரே -என்றும் –
நாளுய்யக் கொள்கின்ற நம்பரே -என்றும் –
ததீயரையே சரண்யராக பிரதிபாதிக்கையாலும் –

ஆக பிரதம பத ஸித்தமான சேஷிகளும் ததீயரேயாய் –
மத்யம பத ஸித்தமான சரண்யரும் ததீயரேயாய் –
த்ருதீய பத ஸித்தமான ப்ராப்யரும் ததீயரே யானபடியாலே-
திருமந்த்ரத்துக்குத் தாத்பர்யமான அர்த்தம் ததீய சேஷத்வம் என்று அறிகை

நிருபாதிக தேவதா -பரமாத்மா
நிருபாதி கோயாக-ஆத்ம சமர்ப்பணம் –
நிருபாதிகோ மந்த்ர -பிரணவம்
நிருபாதிக பலம் – மோக்ஷம் -என்று ஓதுகையாலே
ப்ரணவத்துக்குக் கர்மாத்மாகத்வம் யுண்டு

ஏதத் ஞானம் ச ஜ்ஜேயம் ச சேஷ அந்யோ க்ரந்த விஸ்தர-என்கையாலே
ஞானமும் இதுவாகக் கடவது

ஓமித் யாத்மாநம் த்யாயீதா -என்கையாலே
பக்தியும் இதுவாகக் கடவது

ப்ரஹ்மணே த்வாமஹச ஓமித் யாத்மாநம் யூஞ்ஜீத – என்கையாலே
பிரபத்தியும் இதுவேயாகக் கடவது –

பிரணவம் ஸ்வரூப யாதாம்யத்தைச் சொல்லுகையாலே –
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று சொல்லுகிற
பலமும் இதுவேயாய் இருக்கும் –

பிரணவம் தான் அக்ஷர ஸ்வ பாவத்தால் –
அகாரம்
உகாரம்
மகாரம் என்று மூன்று படியாய் இருக்கும் –

அதில் அகாரம்
காரணத்வத்தையும் –
ரக்ஷகத்வத்தையும் –
சேஷித்வத்தையும் –
ஸ்ரீ யபதித்வத்தையும்-சொல்லக் கடவதாய் இருக்கும் –

இதில் காரணத்வத்தாலும் ரக்ஷகத்வத்தாலும் உபாய பாவத்தை வெளியிடுகிறது

சேஷித்தவத்தாலும் ஸ்ரீ யபதித்வத்தாலும் உபேய பாவத்தை வெளியிடுகிறது

வாஸ்ய பூதனான எம்பெருமானுடைய ஸ்வரூபமும் உபாய உபேயத்வங்ககள் ஆகையால்
வாசகமான இவ் வகாரமும் உபாய உபேயத்வங்களைச் சொல்லுகிறது

இவ் வகாரத்தில் ஏறிக் கழிந்த சதுர்த்தி
எம்பெருமானுக்கு அதிசய கரத்வமான சேஷத்வத்தைச் சொல்லுகிறது

இச் சேஷத்வத்தினுடைய ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறது வ்யஞ்ஜன ரூப மகாரம்

அகாரத்தாலே சேஷித்வத்தைச் சொல்லி –
மகாரத்தாலே சேஷத்வ ஆஸ்ரயமான சேதனனைச் சொல்லி –
அவதாரண வாசியான உகாரத்தாலே இவர்களுடைய சம்பந்தம் அவிநா பூதம் என்கிறது –
இக்கிரமத்தை அபியுக்தரும் வெளியிட்டு அருளினார்கள்

கண்ணபுரம் ஓன்று யுடையானுக்கு -என்று –
சதுர்த் யந்தமான அகாரார்த்தத்தை வெளியிட்டு –
அடியேன் -என்று
மகாரார்த்தத்தை வெளியிட்டு –
ஒருவருக்கு உரியேனோ -என்று
உகாரார்த்தத்தை வெளியிட்டு அருளினார் –

மூன்று எழுத்ததனை மூன்று எழுத்ததனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார் என்கிறபடியே
நித்ய அனுசந்தானமாய் இருப்பது பிரணவம் இறே

இப்படி சேஷத்வத்துக்கு ஓம் என்று இசைந்தவர்களுக்கு வரக் கடவதான ஸ்வார்த்த ஹானியைச் சொல்லுகிறது –
அத்யந்த பாரதந்தர்ய ப்ரகாசகமான மத்யம பதத்தாலே –

மத்யம பதம் தான் இரண்டு எழுத்தாய் இருக்கும் -நம -என்று
அஹம் அபி மம ந பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே இதன் அர்த்தம் இருக்கும் படி –

சம்பந்த சாமான்ய வாசியான ஷஷ்டியாலே ஸ்வர்த்ததையைச் சொல்லுகிறது –

ஸ்வார்த்தத்வமானது
1-ஸ்வா தந்தர்யமும்
2-ஸ்வத் முமம் –

ஸ்வா தந்தர்யமாவது -அஹங்காரம் –

ஸ்வத்மாவது மமகாராம் –

அவ் வஹங்காரம் தான் இரண்டு படியாய் இருக்கும் –
1-தேகாத்ம அபிமான ரூபம் என்றும்
2-தேகாத் பரனான ஆத்மாவினுடைய ஸ்வா தந்தர்ய அபிமான ரூபம்

மமதையும் இரண்டுபடியாய் இருக்கும் –
3-தேக அநு பந்தி போக்ய போக உபகரணாதிகளை விஷயீ கரித்து இருக்கையும்
4-பார லௌகிகமான பல தத் சாதனங்களை விஷயீ கரித்து இருக்கையும்
ஆக நாலு வகைப் பட்டு இருக்கிற
ஸ்வார்த் தத்துவமும் காட்டப் படுகிறது –

உகாரத்தாலே பிறர்க்கு உரியன் அன்று என்றவிடம் சொல்லி
நமஸ் ஸாலே தனக்கு உரியன் அன்று என்றவிடம் சொல்லுகிறது

ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களாலே பூர்ணமாகையாலே
பிரார்த்தனா ரூப சரணாகதியாகவுமாம்

நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்று
ஸ்தான ப்ரமாணத்தாலே பிரபத்தி யாகவுமாம்

ந்யாஸ வாசகமான நமஸ் சப்தமானது
சாஷாத் உபாய பூதனான பரமாத்மாவைச் சொல்லுகையாலே
முக்ய ப்ரபத்தியாகக் குறையில்லை

இப்படி இங்கு பிரபத்தி வாசகமான நமஸ்ஸிலே
மத் யாஜீ மாம் நமஸ் குரு -என்று பக்தியும் ஸூஸிதையாகப் போருகிறது

இப்படி பிரதம பதத்தாலே இவனுடைய ஸ்வரூபம் சொல்லி –
மத்யம பதத்தாலே ஸ்வரூப அநு ரூபமான உபாயம் சொல்லி –
உபாய அநு ரூபமான புருஷார்த்தம் சொல்லுகிறது த்ருதீய பதத்தாலே

இது தான் –
1-நார -என்றும் –
2-அயன -என்றும் –
3-ஆய -என்றும் மூன்றாய் இருக்கும் –

மகார விவரணமான நார சப்தம் ஸமூஹ வாசியாய் –
இதிலே பஹு வசனமும் பஹுத்வ வாசியாகையாலே
பஞ்ச உபநிஷண் மயமான திவ்ய மங்கள விக்ரஹமும் –
ஞான சக்த்யாதி குணங்களும் –
திவ்ய ஆபரணங்களும் -திவ்ய ஆயுதங்களும் –
ஸ்ரீ லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கமும் –
நித்ய விபூதியும் –
ப்ரவாஹ ரூபேண நடக்கிற லீலா விபூதியுமாக
உபய விபூதியும் நார சப்தத்தாலே சொல்லப் படுகிறது

அதில் யுண்டான பஹு வரீஹீ சமாசத்தாலும்
தத் புருஷ சமாசத்தாலும்
அந்தர்யாமித்வமும்
ஆதாரத்வமும் சொல்லுகிறது

அந்தர்யாமித்வத்தாலே எம்பெருமானுடைய சரீரத்வம் சொல்லுகிறது –
ஆதாரத்வத்தாலே அதிசயம் சொல்லுகிறது –

அகார விவரணமான அயன பதத்திலே
கர்மணி வ்யுத்பத்தியாலும்
கரணே வ்யுத்பத்தியாலும் ப்ராப்ய ப்ராபகங்கள் சொல்லப்படுகிறது –
அதாவது
உபாய உபேயத்வங்கள் இறே

ஆக இப்படி பிரணவத்தாலே –
தன் ஸ்வரூபம் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவர்த்தகமான மத்யம பதத்தாலே அத்யந்த பாரதந்தர்யம் என்று உபபாதித்து
கீழ் ப்ரஸ்துதமான சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று நிகமிக்கிறது

சதுர்த்தியாலே
சேஷ சேஷிகளுடைய போகம் சொல்லுகிறது –

அஹம் அன்னம் -என்ற பலம் –
ந மம -என்றும் –
படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -என்றும் சொல்லுகிறபடியே –
இதில் சாஷாத் போகம் எம்பெருமானதாய்
சைதன்ய ப்ரயுக்தமான போகமாய் இருக்கும் இவனுக்குள்ள அளவு

இந்த போகம் தான்
சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசிதமாய் சர்வாதிகாரமாய் இருக்கும்

ஆக
பிரதம பதத்தாலே
ப்ரக்ருதே பரத்வ பூர்வகமாக ஸ்வ ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –

மத்யம பதத்தாலே
ஸாத்ய உபாய நிவ்ருத்தி பூர்வகமாக சித்த உபாய நிஷ்டையைச் சொல்லுகிறது –

த்ருதீய பதத்தாலே
ஸ்வ போக நிவ்ருத்தி பூர்வகமாக பர போக நிஷ்டையைச் சொல்லுகிறது –

இடைஞ்சல் வராதபடி களை அறுத்துக் கொடுக்கிறது மத்யம பதம் –

விளைந்து ஸ்வாமிக்கு போகம் கொடுக்கிறது த்ருதீய பதம்

பிரதம பதத்தாலே பாணி கிரஹணம் பண்ணுகிறது –
மத்யம பதத்தாலே உடை மணி நீராட்டுகிறது –
த்ருதீய பதத்தாலே சதுர்த்தி படுக்கையாய் இருக்கிறது –
என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் நிர்வஹிப்பர்-

சேஷத்வம் பிறந்தது இல்லையாகில் பிரதம பதத்தில் அந்வயம் இல்லை –
ஞானம் பிறந்து இல்லையாகில் மத்யம பதத்தில் அந்வயம் இல்லை –
ப்ரேமம் பிறந்து இல்லையாகில் த்ருதீய பதத்தில் அந்வயம் இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்

ஸ்வரூப சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் பிரதம பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது –
உபாய சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் மத்யம பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது –
போக சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் த்ருதீய பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது -என்று
நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர்

இப்படி சகல நிகமாந்தங்களும் பத த்ரயமான மூல மந்திரத்துக்கு
விவரணமாய் இருக்கும் –

————-

இந்த மூல மந்திரத்துக்கு த்வயம் விவரணமாய் இருக்கும் –
இது விவரணமான படி என் என்னில்

ஈஸ்வர உபாய மாத்ரமேயாய் –
புருஷகாரத்தையும்
அதனுடைய நித்ய யோகத்தையும் –
உபாய பாவத்துக்கு உறுப்பான குண விசேஷங்களையும்-
அக் குணங்களோபாதியான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
உபாய விஷயமாக இந்த அதிகாரிக்கு யுண்டாம் வியவாசத்தையும்
அங்குச் சொல்லாமையாலும்
இங்கே சாப்தமாகப் ப்ரதிபாதிக்கையாலும்
மத்யம பதத்துக்கு பூர்வ வாக்கியம் விவரணமாகக் கடவது –

இங்கு சர்வேஸ்வரனுக்குக் கிஞ்சித்கார பிரார்த்தனா மாத்ரமேயாய்
கிஞ்சித்க்காரம் கொள்ளுமவன் ஸ்ரீ மானாக வேணும் என்றும்
கிஞ்சித்க்காரம் பண்ணுமவன் நிரஹங்கார நிர்மமனாக வேணும் என்றும் சொல்லாமையாலும்
இங்கு சாப்தமாகச் சொல்லுகையாலும்
த்ருதீய பதத்துக்கு உத்தர வாக்கியம் விவரணமாகக் கடவது –

ஆகையால் இப்படி வாக்ய த்வயமாகக் கடவது

ஸ்ரீ யபதி உபேயங்களுக்கு அவதியாய் இருக்குமோபாதி
இது உபாயங்களுக்கு அவதியாய் இருக்கும்

அவன் ஞான சக்த்யாதி ஷட் குணங்களையும் உடையவனாய் இருக்குமோபாதி
இதுவும் கார்ப்பண்யாதி ஷட் அங்கத்தையும் யுடைத்தாய் இருக்கும்

அவன் தேவகீ புத்ர ரத்னமாய் இருக்குமோபாதி
இதுவும் மந்த்ர ரத்னமாய் இருக்கும்

இம் மந்திரம் தான்
ஸ்ரீ மன் நாத முனிகள் –
உய்யக் கொண்டார் –
மணக்கால் நம்பி –
ஆளவந்தார் -என்று சொல்லுகிற
பரமாச்சார்யர்களுடைய நெஞ்சாகிற செப்பிலே வைத்துச் சேமிக்கப் பட்டு இருக்கும் –

அர்த்தோ விஷ்ணு -என்று சொல்லப் படுகிற அர்த்தவான்களுக்குக் காட்டக் கடவதாய்
அறப் பெரு விலையதாய் இருக்கும்

சர்வ உபாய தரித்தற்கு
சர்வ ஸ்வம்மாய் இருக்கும்

இந்த உபாயம்
அஞ்ஞருக்கும்
அசக்தருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தலாய் இருக்கும் –

ஆச்சார்யன் பிரமாதா என்றும் –
அர்ச்சாவதாரம் ப்ரமேயம் என்றும் –
த்வயம் பிரமாணம் என்றும் அருளிச் செய்வார்
உய்யக் கொண்டார்

இது சம்சார விஷ தஷ்டனுக்கு ரசாயனமாய் இருக்கும் என்று அருளிச் செய்வார்
மணக்கால் நம்பி

அந்தகனுக்கு மஹா நிதி போலே இருக்கும் என்று அருளிச் செய்வர்
பெரிய முதலியார்

ஷூத்தார்த்தனுக்கு அம்ருத பானம் போலே இருக்கும் என்று அருளிச் செய்வர்
திருமாலை ஆண்டான்

ஸ்தந்தய பிரஜைக்கு ஸ்தந்யம் போலே இருக்கும் என்று அருளிச் செய்வர்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி

ராஜகுமாரனுக்கு முடியும் மாலையும் போலே பிரபன்னனுக்கு த்வய உச்சாரணம் என்று
அருளிச் செய்வர் ஸ்ரீ பாஷ்ய காரர்

சம்சாரத்தில் இந்த உபாய விசேஷம் விலங்கு இடப்பட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே
என்று அருளிச் செய்வர் எம்பார் –

வாஸ்யங்களில் எம்பெருமானுக்கு அவ்வருகு அல்லாதாப் போலே
வாசகங்களில் பிரபத்தியில் காட்டில் அவ்வருகு இல்லை என்று
அருளிச் செய்வர் நஞ்சீயர்

ராஜகுமாரனுக்கு கர்ப்பூர நிகரம் போலே இவனுக்கு பிரபத்தியை விடில் நாக்கு வற்றும் –
என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை

எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவாரோபாதி என்று பணிக்கும்
திருக் குருகைப் பிரான் பிள்ளான்

குரு பரம்பரையை ஒழிந்த பிரபத்தியும் சாதனாந்தரங்களோடு ஒக்கும் என்று
நிர்வஹிப்பர் முதலியாண்டான்

த்வயம் பிறவி மிடியன் கையில் சிந்தாமணி புகுந்தால் போலே என்று
நிர்வஹிப்பர் பிள்ளை உறங்கா வல்லி தாசர்

இப்படி ஆச்சார்ய அபிமதமாய்ப் போருகிற பிரபதனம் –
தென்னன் திரு மாலிரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் -என்கிறபடியே
அல்லாத உபாயங்கள் போல் அன்றியே
இதுவே கை கூடின உபாயம் இறே

இதில்
கோப்த்ருத்வ வரணத்தையும்-
ஆத்ம நிக்ஷேபத்தையும் சொல்லுகையாலும் -த்வயம் என்று திரு நாமமாய்

25- திரு அக்ஷரமாய் –
ஆறு பதமாய் –
ஸமஸ்த பதத்தாலே பத்து அர்த்தமாய் இருக்கும் –

இதில்
பூர்வ கண்டத்திலும்
உத்தர கண்டத்திலும்
மா மலர் மங்கையாகிற ஸ்ரீ ரத்னத்தோடே கூடுகையாலே இரு தலை மாணிக்கமாய் இருக்கும்

இப்படிக்கொத்த த்வயமும் அர்த்த ப்ராதான்யத்தாலே மூன்று படியாய் இருக்கும் –
1-விசேஷண பிரதானம் –
2-விசேஷ்ய பிரதானம் –
3-விசிஷ்ட பிரதானம் -என்று

ஆஸ்ரயண தசையில் -விசேஷண பிரதானமாய் இருக்கும் —
உபாய தசையில் விசேஷ்ய பிரதான்யமாய் இருக்கும் –
போக தசையில் விஸிஷ்ட பிரதானமாய் இருக்கும்

இதில்
பிரதம பதத்திலே -ஸ்ரீ சப்தத்தால் –
ஸ்ரயந்தீ வைஷ்ணவம் பாவம் ஸ்ரீயமாணா அகிலைர் ஜன –என்றும்
ஸ்ருணோதி தத் அபேக்ஷ உக்திம் -ஸ்ராவயந்தி ச தா பரம் -என்றும்
ஸ்ருணுதி நிகிலான் தோஷான் ஸ்ருணுதி ச குணைர் ஜகத் -என்றும் சொல்லுகிறபடியே

1-சகல ஜனனியான பிராட்டி சர்வேஸ்வரனை ஆஸ்ரயணம் பண்ணி இருக்கையும் –
2-ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த சேதனராலும் தான் ஸமாஸ்ரிக்கப் பட்டு இருக்கையும்
3-இவர்கள் அபேஷா ஸூக்திகளைக் கேட்க்கையும் –
4-கேட்ட ஸூக்திகளை ஈஸ்வரனை கேட்ப்பிக்கையும்
5-அஞ்ஞநாதி தோஷங்களை போக்குகையும்
6-ஞான குண அத்யாவசாயத்தை யுண்டாக்குகையும்
ஆக
1-ஷட் பிரகார விசிஷ்டமான புருஷகாரத்தையும்

2-மதுப்பாலே அதனுடைய நித்ய யோகத்தையும் –
ஆக
ஸ்ரீ மத் சப்தத்தாலே புருஷகார பூர்த்தியைச் சொல்லுகிறது

அநந்தரம் -நாராயண பதத்தாலே
வாத்சல்யமும்
ஸ்வாமித்வமும்
ஸுசீல்யமும்
ஸுலப்யமும்
ஞானமும்
சக்தியும்
பிராப்தியும்
பூர்த்தியும்
கிருபையும்
காரணத்வமும்

ஆக
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக-
ஆஸ்ரிய கார்ய ஆபாதக குணங்களைப் பிரதிபாதிக்கிறது

இதில்
1-வாத்சல்யம் -தோஷம் போகமாய் இருக்கை
2-ஸ்வாமித்வம் -சொத்தின் பக்கல் உண்டான அபிமானம்
3-ஸுசீல்யம் -தன்னில் தாழ்ந்தவனோடு தன் மேன்மை தோன்றாதபடி புரை யறச் சேர்ந்து இருக்கை –
4-ஸுலப்யம் -அர்ச்சாவதார பர்யந்தமாக எளியனாம் படி சந்நிதி பண்ணி இருக்கை

ஆக இந்த நாலு குணங்களாலும் –
ஸ்வ அபராதங்களாலும் –
பந்துத்வ ஹானியாலும் –
தண்மையாலும் –
கிட்ட ஒண்ணாமையாலும் உண்டான பயம் நிவர்த்தமாகிறது

1-ஞானம் -ஆஸ்ரிதருடைய நினைவை அறிகை
2-சக்தி -அந்த நினைவை தலைக் கட்டிக் கொடுக்கை
3-பூர்த்தி -ஐஸ்வர்யம் தான் இட்ட வழக்காய் இருக்கை
4-பிராப்தி -சேஷி சேஷ பாவத்தால் உண்டான உறவு

ஆக இந்த நாலு குணங்களாலும்
அஞ்ஞன்
அசக்தன்
அபூர்ணன்
அப்ராப்தன் என்கிற சங்கா களங்க நிவ்விருத்தியும் ஆகிறது

கிருபை -கீழ்ச் சொன்ன நாலு குணங்களும்
இவனுடைய கர்மத்தை கணக்கிட்டே பலம் கொடுக்க உறுப்பாகையாலே –
அது வராதபடி ஈடுபாடு கண்டு இவன் அளவிலே பண்ணுகிற இரக்கம் –

காரணத்வம்
அபீஷ்ட அர்த்தங்களை நிதானமாய் இருக்கை

ஆக சரணாகதிக்கு உறுப்பான ஆஸ்ரய குணங்களைச் சொல்லுகையாலே
புருஷகாரமும் மிகை என்னும்படியான குண பூர்த்தியைச் சொல்லுகிறது

சரணவ்-என்கிற பதத்தில்
தாதுவில் யுண்டான அர்த்த விசேஷத்தாலே
ப்ராப்ய
ப்ராபகங்கள் இரண்டும்
திருவடிகளே என்று சொல்கிறது –

இந்த பதம் விக்ரஹத்துக்கு உப லக்ஷணமாய் இருக்கும்

சரணம் ப்ரபத்யே -என்கிற பதங்களால்-
ஈஸ்வரன் அறிவும் ஆசையும் யுடையாருக்கு அபிமதத்தை கொடா நிற்கும் –
அவன் அடியும் அறிவும் ஆசையும் யுண்டாக்கி அபிமதங்களைக் கொடா நிற்கும்

இது சிந்தையந்தி பக்கலிலும்
ஸ்ரீ மாலா காரர் பக்கலிலும் காணலாம்

ஆக
கீழ்ச் சொன்ன குணங்கள் இத்தனையும் தொடைக் கொள்ளலாம்படியான
விக்ரஹ பூர்த்தியைச் சொல்லுகிறது

உத்தர வாக்கியத்தில்
ஸ்ரீ சப்தத்தால்
தாதார்த்ய பல கிஞ்சித்க்கார பிரதி சம்பந்த பூர்த்தியைச் சொல்லுகிறது

மதுப்பாலே
புருஷார்த்தினுடைய சர்வ பிரகார நித்ய பூர்த்தியைச் சொல்கிறது

இந்த பதத்திலே
கைங்கர்ய பிரதி சம்பந்தி யுண்டாகில் அனந்த பதத்தாலே சொல்லுகிறது
என் என்னில்
கைங்கர்யம் ப்ரீதி ஜன்யமாகையாலும் –
ப்ரீதி அனுபவ ஜன்யமாகையாலும் –
அனுபவம் அனுபாவ்ய சாபேஷம் ஆகையால் –
அனுபாவ்யங்களான ஸ்வரூப ரூப குண விபூதியாதிகளைச் சொல்லுகிறது

ஆக -நாராயண பதத்தாலே
ஸ்வரூப ரூப குண விபூதியாதி அபரிச்சின்னத்வ பூர்த்தியைச் சொல்கிறது

சதுர்த்தியாலே
கிஞ்சித்க்கார பிரார்த்தனா பூர்த்தியைச் சொல்லுகிறது

நமஸ்ஸாலே
அதுக்குண்டான விரோதி நிவ்ருத்தி பூர்த்தியைச் சொல்கிறது

1-புருஷகார பூதையான சாஷாத் லஷ்மியையும்
2-தத் சம்பந்தத்தையும் –
3-சம்பந்தம் அடியாக பிரகாசிக்கும் ஸுலப்யாதி குணங்களையும்
4-குணவானுடைய சரண கமலத்தையும்
5-சரண கமலங்களினுடைய உபாய பாவத்தையும்
6-உபாய விஷயமான வ்யவசாயத்தையும்
7-வ்யவசிதனுடைய கைங்கர்ய பிரதிசம்பந்தியையும்
8-பிரதிசம்பந்தி பூர்ணமாகையும்
9-பூர்ண விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய பிரார்த்தனையும்
10-கைங்கர்ய விரோதியான அஹங்கார மமகார நிவர்த்தியையும்
ஆக -பத்து அர்த்தத்தையும் –
எட்டுப் பதமும்-மதுப்பும்-சதுர்த்தியுமாகச் சொல்லுகிறது -என்று
நிர்வஹிப்பர் ஆச்சான் பிள்ளை

1-ஆஸ்ரயண த்வாரத்தையும்
2-ஆஸ்ரயண வஸ்துவையும்
3-தத் உபாய பாவத்தையும்
4-தத் வரணத்தையும்
5-ஆஸ்ரயண வஸ்துவினுடைய அதிசயத்தையும்
6-தத் பூர்த்தியையும்
7-தத் தாஸ்ய பிரார்த்தனையையும்
8-தத் விரோதி நிவ்ருத்தியையும் -ப்ரதிபாதிக்கிறது என்று
நிர்வஹிப்பர் நஞ்சீயர்

1-பிரதம பதத்தில் விசேஷண பதத்தாலே பிராயச்சித்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
2-பிரதம பதத்தாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
3-த்விதீய பதத்தாலே உபேய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
4-க்ரியா பதத்தாலே அதிகாரி வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
5-உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ப்ராப்யாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
6-த்விதீய பதத்தாலே தேவதாந்த்ர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
7-இதில் சதுர்த்தியாலே பிரயோஜனாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
8-த்ருதீய பதத்தாலே ஸ்வபாவ வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –என்று
நிர்வஹிப்பர் பெரிய பிள்ளை

1-பிரதம பதத்தில் விசேஷணத்தில் பிரதம அஷரத்தாலே புருஷகாரத்யபாவ வாதிகளை நிரசிக்கிறது
2-அனந்தர பதத்தாலே நிர்குண ப்ரஹ்ம வாதிகளை நிரசிக்கிறது
3-பிரதம பதாந்தமான த்வி வசனத்தாலே நிர்விக்ரஹ வாதிகளை நிரசிக்கிறது
4-அனந்தர பதத்தாலே உபாய த்வித்வ வாதிகளை நிரசிக்கிறது
5-க்ரியா பதத்தாலே அத்யவசாயாபாவ வாதிகளை நிரசிக்கிறது
6-மதுப்பாலே அநித்யயோக வாதிகளை நிரசிக்கிறது
7-உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ஆத்ம சாம்யா வாதிகளை நிரசிக்கிறது
8-அனந்தர பதத்தாலே ஈஸ்வர ஸாம்ய வாதிகளை நிரசிக்கிறது
9-இதில் சதுர்த்தியாலே கிஞ்சித்கார புருஷார்த்த பிரதிபட வாதிகளை நிரசிக்கிறது
10-அனந்தர பதத்தாலே ஸ்வ ப்ரயோஜன வாதிகளை நிரசிக்கிறது -என்று
நிர்வஹிப்பர் நடுவில் திரு வீதிப் பிள்ளை

1-ஸ்ரீ மச் சப்தத்தாலே ஆனு கூல்ய சங்கல்பத்தையும் –
2-பிரதிகூல்ய வர்ஜனத்தையும் ப்ரதிபாதிக்கிறது
3-நாராயண சப்தத்தாலே ரஷிக்கும் என்கிற விசுவாசத்தை பிரதிபாதிக்கிறது
4-உத்தர வாக்கியத்தில் ஸ்ரீமச் சப்தத்தால் கோப்த்ருத்வ வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
5-நாராயண பதத்தாலே ஆத்ம நிக்ஷேபத்தை பிரதிபாதிக்கிறது
6-விரோதி நிவர்த்தக பதத்தாலே கார்ப்பண்யத்தைப் பிரதிபாதிக்கிறது
ஆக
ஷடங்க சம்பூர்ணமாய்
மந்த்ர ரத்னம் என்னும் திரு நாமத்தை யுடைத்தாய் இருக்கும்

இதில்
சரண சப்தத்தால் சரணாகதி என்று திருநாமம்
க்ரியா பதத்தாலே பிரபத்தி என்று திருநாமம்
வாக்ய த்வயத்தாலே த்வயம் என்று திரு நாமம்
சதுர்த்யந்தமான இரண்டுக்கும் நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் திருநாமம்
விரோதி நிவர்த்தக பதத்தாலே தியாகம் என்ற திருநாமம்

இதில் க்ரியா பதத்தாலே உபாய பிரார்த்தனை
சதுர்த்தியாலே உபேய பிரார்த்தனை
இவை இரண்டும் அதிகாரி க்ருத்யம்

ஏவம் பூதமான த்வயத்தில் நிஷ்டையாவது –
ஸ்வாச்சார்ய புரஸ் சரமாக –
கோவலர் பொற்கொடியான பிராட்டி இருக்க –
சரணம் புக்கு
கொடி வழியாகச் சென்று ப்ரஹ்ம தருவாய் ஆஸ்ரயித்து
இளைப்பாறி இருக்கை

ரகு ராக்ஷஸ சம்வாதத்திலும்
வ்யாக்ர வானர சம்வாதத்திலும் –
கபோத உபாக்யானத்திலும் –
கண்டூப உபாக்யானத்திலும்
சரணாகதியினுடைய ஏற்றத்தைக் கண்டு கொள்வது –

——————————

அநந்தரம்
ஏவம் பூதமான நியாசத்துக்கு விவரணமாய் இருக்கும்
சர்வ தர்ம பரி த்யாக பூர்வகமாக இத்தை விதிக்கிற சரம ஸ்லோகம்
இது விவரணமான படி என் என்னில்

அங்கு
உபாயாந்தர தியாகத்தையும்
உபாய நைரபேஷ்யத்தையும் சொல்லாமையாலே பூர்வ வாக்யத்துக்கு பூர்வார்த்தம் விவரணமாகிறது

இங்கு
பிராப்தி பிரதிபந்தகங்கள் அடையப் போகக் கடவது –
போக்குவான் உபய பூதனானவன் என்று சொல்லாமையாலே
உத்தர வாக்யத்துக்கு உத்தரார்த்தம் விவரணமாகக் கடவது

இப்படிக்கொத்த சரம ஸ்லோகம் மூன்று படியாய் இருக்கும் –
1-பரித்யாகம் என்றும் –
2-ஸ்வீ காரம் என்றும் –
3-சோக நிவ்ருத்தி -என்றும் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று தியாகம் சொல்லுகிறதாய் –
மாமேகம் சரணம் வ்ரஜ என்று ஸ்வீ காரம் சொல்லுகிறதாய் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே சோக நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –

இதில் பிரதம பதத்திலே
சோதனா லக்ஷணமான தர்ம சப்தத்தாலே -உபசன்னனான அர்ஜுனனைக் குறித்து
மோக்ஷ உபாயமாக அருளிச் செய்த உபாஸனாத்மிகையான பக்தியைச் சொல்லுகிறது

இதில் பஹு வசனத்தாலே
கர்ம ஞானங்களைச் சொல்லுகிறது –

இது தன்னாலே
யஜ்ஞம்
தானம்
தபஸ்ஸூ
தீர்த்த கமனம்
நித்யம் நைமித்திகம் காம்யம் தொடங்கி யுண்டான கர்ம பேதங்களையும்
சத் வித்யை
தகர வித்யை
அந்தராதித்ய வித்யை
அஷி வித்யை என்று தொடங்கி யுண்டான ஞான பேதங்களையும்
த்யானம்
அர்ச்சனம் தொடங்கி யுண்டான பக்தி பேதங்களையும்
அவதார ரஹஸ்ய ஞானம்
புருஷோத்தம வித்யை
திரு நாம சங்கீர்த்தனம் என்று தொடங்கி யுண்டானவற்றையும் சொல்லுகிறது

வஷ்யமான தியாகத்தினுடைய கர்ம பாவத்தைச் சொல்கிறது த்விதீயா விபக்தியாலே

விசேஷணமான சர்வ சப்தத்தாலே
கர்ம ஞான பக்திகளுக்கும்
யோக்யதாபாதகங்களான வர்ணாஸ்ரம ஆசாரங்களைச் சொல்லுகிறது –

அநந்தரம்
பரித்யஜ்ய என்கிற பதத்தாலே அவற்றினுடைய தியாக பிரகாரத்தைச் சொல்லுகிறது –

இங்கு தியாகம் என்னப் பார்க்கிறது
கர்ம ஞான பக்திகளினுடைய சாதனத்வ புத்தி விடுகை –

இந்த பிரகாரத்தை லயப்பாலே -சொல்லி –
பரி என்கிற உப சர்க்கத்தாலே
கர்மாதிகளுடைய சாதனத்வ புத்தியை ச வாசனமாக விடச் சொல்கிறது –

இப்படி சகல தர்மங்களும் த்யாஜ்யமாய் யுள்ள இடத்தில்
நயத்தை தர்ம தியாகம் இல்லை –
எங்கனே என்னில்

கர்ம ராசி மூன்று படியாய் இருக்கும் –
1-அநர்த்த சாதனம் -என்றும் –
2-அர்த்த சாதனம் என்றும்
3-அநர்த்த பரிஹாரம் என்றும்

இதில்
அநர்த்த சாதனம் என்கிறது ஹிம்ஸாஸ் தேயாதிகமான கர்ம ராசி –

அர்த்த சாதனம் என்கிறது கர்ம ஞானாதிகமான கர்ம ராசி
சரணார்த்திக்குப் பூர்வம் அநிஷ்டாவஹமாகையாலே த்யாஜ்யம் –
உத்தரம் உபாய வரணத்துக்கு அங்கமாகையாலே த்யாஜ்யம்

அநர்த்த பரிஹாரமான கர்ம ராசி இரண்டு வகையாய் இருக்கும் –
இதில் ஒரு வகை பூர்வார்ஜிதமான பாபத்தைப் போக்குகைக்கு ப்ராயச்சித்தமாய் இருக்கும் –
இதுவும் த்யாஜ்யமாகக் கடவது –
மற்றவை ஆகாமியான அநர்த்தத்தை பரிஹரிக்கையாலே இது அநுஷ்டேயமாகக் கடவது –
இது இறே நியதி தர்மம் ஆகையாவது

க்ரியமாணம் ந கஸ்மைசித் யதார்த்தாய பிரகல்பதே அக்ரியாவதநர்த்தாய கர்ம தத்து சமாசரேத் -என்கிறபடியே
நியதி தர்மம் கர்த்தவ்யமாகக் கடவது –

அவிப் லவாய தர்மாணம் பாவநாய குலஸ்ய ச–ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாப நாய ச –
ப்ரியாய மம விஷ்ணோச் ச தேவ தேவஸ்ய சார்ங்கிண -மநீஷீ வைதிகாசாரான் மனஸாபி ந லங்கயத் -என்கிறபடியே
தர்மங்களுக்கு நழுவுதல் வாராமைக்காகவும்-
குலா பாலான அர்த்தமாகவும் –
லோக ஸங்க்ரஹார்த்தமாகவும் –
மர்யாதா ஸ்தாபநார்த்தமாகவும் அனுஷ்டிப்பான் –

இது வேண்டா என்று இருந்தானாகில் பகவத் ப்ரீணாரத்தமாக அனுஷ்ட்டிக்க வேணும் –

ப்ராப்த ஹேதுத்வ புத்தி விட்டு ப்ரீதி ஹேது என்று அனுஷ்ட்டிப்பார் –என்று
நம்பிள்ளை அருளிச் செய்வர் –

அநந்தரம் -மாம் -என்கிற பதத்தாலே –
சாத்யங்களாய் –
அசேதனங்களாய் –
அநேகங்களாய் –
த்யாஜ்யங்களான -உபாயங்களைக் காட்டில்

ஸித்தமாய் –
பரம சேதனமாய் –
ஏகமாய் -விசிஷ்டமான –
உபாயத்தினுடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –

பதர்க் கூட்டத்தை விட்டு பர்வதத்தை அண்டை கொள்ளுமாப் போலே -என்று
நம்பிள்ளை அருளிச் செய்வர் –

இந்த சித்த உபாயத்தை விட்டு ஸாத்ய உபாயங்களில் அந்வயித்தான் ஆகில்
மரக்கலத்தை விட்டு தெப்பத்தைப் பற்றுமோபாதி -என்று
நிர்வஹிப்பர் சோமாசி ஆண்டான்

அதர்மத்திலே தர்ம புத்தி பண்ணி இருக்கிற அர்ஜுனனுடைய தோஷம் பாராமல்
தத்வ உபதேசம் பண்ணுகையாலே வாத்சல்யமும்

ஒரு மரகத மலையை உரு வகுத்தால் போலே மேசகமான திவ்ய மங்கள விக்ரஹமும்
ஸேநா தூளி தூசரிதமான மை வண்ண நறுங்குஞ்சிக் குழலும்
மையல் ஏற்றி மயக்கும் திரு முகத்திலே அரும்பின குரு வேர் முறுவலும் கடுக்கின மசிலையும்
கையில் பிடித்த உழவு கோலும்
சிறு வாய்க் கயிறுமாய்
ஒரு தட்டுத் தாழ நிற்கையாலே ஸுசீல்யமும்

விஸ்வரூப தர்சனத்தாலே பீதனான அர்ஜுனனுக்கு தர்ச நீயமான
வடிவைக் காட்டுகையாலே ஸுலப்யமும்

வேதாஹம் சமதீதாநி-என்கையாலே ஞானமும்

ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைக்கையாலே சக்தியும்

நாநவாப்தம் அவாப் தவ்யம்-என்கையாலே பூர்த்தியும்

சர்வாத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே பிராப்தியும்

ஆக இந்த குணங்கள் அத்தனையும்
விச்வாஸ அர்த்தமாக இந்தப் பதத்திலே அநு சந்தேயம்

அநந்தரம்
ஏவம் குண விசிஷ்டனான சரண்யனுடைய நைர பேஷ்யத்தைச் சொல்லுகிறது –
அவதாரண ரூபமான ஏக சப்தத்தால்

சாதன சாத்யங்களினுடைய ப்ருதுக் பாவ ஜன்யமான த்வித்வத்தையும்-
ஸ்வீ கர்த்தாவினுடைய அன்வயத்தாலே வருகிற த்வித்வத்தையும்
வ்யாவர்த்திகையாலே சரண்யனுடைய சுணை யுடைமையைச் சொல்லுகிறது –

அநந்தரம் -சரண -சப்தத்தால்
ஸ்வீ காரத்துக்கு உபாயத்வம் கொள்ளில் ஸ்வீ கர்த்தா அகலும் –
ஸ்வீ காரத் த்வாரா ஸ்வீ கர்த்தா அகலில் தத் அந்வயம் யுண்டாம் –
ஆகையால் இரண்டையும் வ்யாவர்த்தித்து
ஸ்வீ காரனான எம்பெருமானை உபாய பூதன் என்று சொல்லுகிறது

அநந்தரம் -வ்ரஜ -என்கிற பதத்தாலே
இவ் வுபாயத்தினுடைய வரணத்தைச் சொல்லுகிறதாய் –
இத்தாலே
பிரபத்தி மாத்ரத்தில் யுண்டான ஸுகர்யம் சொல்லுகிறது

அநந்தரம் –
அஹம் -சப்தத்தால் –
அநிஷ்ட நிவர்த்தகனுடைய
சர்வஞ்ஞத்வம்–
சர்வ சக்தித்வம் —
அவாப்த ஸமஸ்த காமத்வம் –
பரம காருணிகத்வம்-என்று தொடங்கி யுண்டானவை அநு சந்தேயம்

அநந்தரம்-
த்வா-என்கிற பதத்தாலே-
நான் சரண்யன் -நீ சரணாகதன்-
நான் பிரபத்தவ்யன் -நீ பிரபத்தா –
நான் பூர்ணன் -நீ அகிஞ்சன்யன் –
ஆகையால் என் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணியிருக்கிற யுன்னை -என்கிறது –

அநந்தரம் –
சர்வ பாபேப்யோ என்கிற பதத்தாலே
புண்ய பாபங்களைச் சொல்லுகிறது –
புண்ணியமும் பாபமோ என்னில்
அபிமத விரோதி பாபமாகையாலே மோக்ஷத்தைப் பற்ற புண்ணியமும் விரோதி யாகையாலே பாபம் என்கிறது –

இதில் பஹு வசனத்தாலே –
அவித்யா கர்மா –
வாசனா -ருசி –
ப்ரக்ருதி சம்பந்தங்களையும்
பூர்வாக உத்தராகங்களையும் சொல்லுகிறது

சர்வ சப்தத்தால் –
க்ருதம் –
க்ரியமாணம்-
கரிஷ்யமாணம் –
அபுத்தி பூர்வகம் –
ஆரப்தம் -என்று தொடங்கி உண்டானவற்றைச் சொல்கிறது

அநந்தரம் –
மோக்ஷயிஷ்யாமி -என்கிற பதத்தாலே –
தாத்வர்த்தத்தாலே பூர்வாக உத்தராகங்களுடைய அஸ்லேஷ விநாசத்தைப்
புத்ர மித்ர களத்ரங்களில் அசல் பிளந்து ஏறிட்ட புண்ய பாபங்களையும்
அதிகாரி விசேஷஸ்தமான ஆரப்த நிரசனத்தையும் –
ஆக இந்த விமோசனத்தைச் சொல்லி-

இதில் ணி ச்சாலே
உபாய பூதனுடைய பிரயோஜக கர்த்ருத்வத்தைச் சொல்லி –

இத்தாலே-
ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் போலே
சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடி
முன்பு யாவை யாவை சில பாபத்துக்கு பீதனாய்ப் போந்தாய்-
அவை தான் உனக்கு அஞ்சிப் போம்படி பண்ணுவேன் என்றபடி

அநந்தரம் –
மாஸூச -என்கிற பதத்தாலே –
வ்ரஜ -என்கிற விதியோ பாதி மாஸூச என்கிற இதுவும் விதியாகையாலே
ஸ்வீ காரத்தோ பாதி சோக நிவ்ருத்தியும் கர்த்தவ்யம் என்கை

பலியானவனுக்கு பல அபாவத்தில் சோகம் உத் பன்னமாம்
உபாய கர்த்தாவுக்கு உபாய பாவத்தில் சோகம் உத் பன்னமாம்

இந்த உபாயத்தில்
பல
கர்த்ருத்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாமையாலும்
இவை இரண்டும் நாமே யாகையாலும் நீ சோகிக்க வேண்டா என்கை

உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
அதாவது
உன்னைப் பார்த்து நிர்ப்பரனாய் இரு –
என்னைப் பார்த்து நிர்ப்பரனாய் இரு -என்கை –

இனி சோகித்தாயாகில்-
உன் ஸ்வரூபத்தையும் அழித்து
என் வைபவத்தையும் அழித்தாயாம் அத்தனை –

முன்பு சோகித்திலை யாகில் அதிகாரி சித்தி இல்லை –
பின்பு சோகித்தாயாகில் பல சித்தி இல்லை –

1-துஷ்கரத்வ ஆபன்னமாய்-ஸ்வரூப விரோதியான -சாதனா பரித்யாகத்தாலே சோகிக்க வேண்டா
2-ஸ்வீ கார உபாயம் ஸூலபமாகையாலே சோகிக்க வேண்டா
3-அது சா பேஷம் அல்லாமையாலே சோகிக்க வேண்டா
4-அவ்யஹித உபாயம் ஆகையால் சோகிக்க வேண்டா
5-மானஸ மாத்திரம் ஆகையால் சோகிக்க வேண்டா –
6-உபாயம் அபாய ரஹிதமாக பல விதரண நிபுணமாகையாலே சோகிக்க வேண்டா
7-விரோதி போமா போகாதோ என்று சோகிக்க வேண்டா

வ்ரஜ -என்கிற பதம்
ஸ்வீ கார நிபந்தனமாய் இருக்குமோபாதி
இந்தப் பதமே நிர்ப்பரத்வ நிபந்தனமாய் இருக்கும்
கமுகு உண்ணில் வாழையும் யுண்ணும் என்று இருக்கை –

ஆக பல பிராப்தி அவிளம்பேந கை புகுருகையாலே
ஒரு பிரகாரத்தாலும் உனக்கு சோக ஹேது வில்லை -என்று தலைக் கட்டுகிறது –

ஆக —
1-த்யாஜ்யத்தையும்
2-த்யாஜ்ய பாஹுள்யத்தையும்
3-த்யாஜ்ய சாகல்யத்தையும்
4-தியாக விஸிஷ்ட வரணத்தையும்
5-தந் நைர பேஷ்யத்தையும்
6-தத் யுபாய பாவத்தையும்
7-தத் வரணத்தையும்
8-தத் அநிஷ்ட நிவர்த்தக குண யோகத்தையும்
9-தந் ந்யஸ்த பரத்வத்தையும்
10-தத் பாபத்தையும்
11-தத் பாஹுள் யத்தையும்
12-தத் சர்வவிதத்தையும்
13-தந் மோசன பிரகாரத்தையும்
14-தந் மோசன சங்கல்பத்தையும்
15-தந் ந்யஸ்த பர சோக நிவ்ருத்தியையும் –பிரதிபாதிக்கிறது –

ஸ்ரீ பாஷ்யகாரர் ஆழ்வானுக்கு -சரம ஸ்லோகத்தை உபதேசித்து –
இருந்தபடி என் -என்று கேட்டருள
ஒரு ஜென்மத்தில் இருந்தும் ஒரு ஜென்மத்தில் போந்தால் போலே இருந்தது -என்று பணித்தார்

நஞ்சீயர் சரம ஸ்லோகத்தைக் கேட்டுத்
தலைச் சுமை போட்டால் போலே இருந்தது என்றார்

ஸ்வரூப பிரகாச வாக்கியம் திரு மந்த்ரம் –
அனுஷ்டான பிரகாச வாக்கியம் த்வயம் –
விதான பிரகாச வாக்கியம் சரம ஸ்லோகம்

சாஸ்த்ர அபிமதம் திரு மந்த்ரம் –
ஆச்சார்ய அபிமதம் த்வயம் –
சரண்ய அபிமதம் சரம ஸ்லோகம் -என்று ஆச்சான் பிள்ளை நிர்வஹிப்பர்

பிராமண ஹ்ருதயம் திருமந்திரம் –
ப்ரமாத்ரூ ஹிருதயம் த்வயம் –
ப்ரமேய ஹிருதயம் சரம ஸ்லோகம் -என்று ஜீயர் நிர்வஹிப்பர்

திரு மந்த்ரம் திரு முகப் பாசுரமாய் இருக்கும் –
த்வயம் படி எடுப்பாய் இருக்கும் –
சரம ஸ்லோகம் வெட்டாய் இருக்கும் –

இந்த சரம ஸ்லோகத்துக்கு ஸங்க்ரஹம் த்வயம் –
த்வயத்துக்கு ஸங்க்ரஹம் திரு மந்த்ரம்

திருமந்திரத்தில் பிரதம பதத்தில்
பிரதம அக்ஷரமான அகாரம்
ப்ரக்ருதி என்றும்
ப்ரத்யயம் என்றும் இரண்டாய்

இதில் பிரக்ருதியான அகாரம் உபாயத்தைச் சொல்கிறது –
ப்ரத்யயமான சதுர்த்தி உபேயத்தைச் சொல்லுகிறது –

அகார விவரணம் உகாரம் –
உகார விவரணம் மத்யம பதம் –
மகார விவரணம் த்ருதீய பதம்

மத்யம பத விவரணம் த்வயத்தில் பூர்வ கண்டம் –
த்ருதீய பத விவரணம் உத்தர கண்டம்

பூர்வ கண்ட விவரணம் சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தம் –
உத்தர கண்ட விவரணம் உத்தரார்த்தம்

பிரதம பதத்தில் மத்யம அக்ஷரமும் -மத்யம பதமும் -த்வயத்தில் பூர்வ கண்டமும் –

சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தமும் உபாய வாசகமாய் இருக்கும் –

பிரதம பதத்தில் த்ருதீய அக்ஷரமும் -த்ருதீய பதமும் -த்வயத்தில் உத்தர கண்டமும் –

சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தமும் உபேய வாசகமாய் இருக்கும்

சரம ஸ்லோகத்தில் உத்தார்த்த ஸங்க்ரஹம் த்வயத்தில் உத்தர கண்டம் –

உத்தர கண்ட ஸங்க்ரஹம் திருமந்திரத்தில் த்ருதீய பதம் –

த்ருதீய பத ஸங்க்ரஹம் மகாரம்

சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்த ஸங்க்ரஹம் த்வயத்தில் பூர்வ கண்டம் –

பூர்வ கண்டம் ஸங்க்ரஹம் மத்யம பதம் –

மத்யம பத ஸங்க்ரஹம் உகாரம்

மகார ஸங்க்ரஹம் சதுர்த்தி –

உகார ஸங்க்ரஹம் அகாரம்

ஆக –
சரம ஸ்லோக ஸங்க்ரஹம் த்வயமாய் –

த்வய ஸங்க்ரஹம் திரு மந்திரமாய் –

திரு மந்த்ர ஸங்க்ரஹம் பிரணவமாய் –

பிரணவ ஸங்க்ரஹம் பிரதம அக்ஷரமான அகாரமாய் இருக்கும்

இந்த அகாரம் –
அ இதி ப்ரஹ்ம-ஹாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே
பகவத் வாசகமாய் இருக்கும் –

பகவத் வாசகமாய் இருக்கிற அகாரம்
உபாய உபேயங்களைச் சொல்லுகையாலே வாஸ்ய பூதனுடைய
ஸ்வரூபமும்
உபாய உபேயத்வமுமாம்

உபாய உபேயத்வம் ஸ்வரூபமான படி என் என்னில் –
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானாநந்தம் என்று ஸூ பிரசித்தம் ஆகையால்
ஞானம் உபாயம் –
ஆனந்தம் உபேயம் -‘

இவ்வுபாய உபேயங்கள் எம்பெருமானுக்குத் தத்வம் என்று
தத்வ ரூபமான திரு மந்திரத்தாலும்
ஹித ரூபமான த்வயத்தாலும் –
விதான ரூபமான சரம ஸ்லோகத்தாலும் -அறிகை இவ்வதிகாரிக்கு தத்வ தர்சித்வமானது-

இந்த தத்வ தர்சனத்தாலே இறே இவனுக்கு ஸ்வரூப சித்தி பிறப்பது
ஆனால்
ஜனகாதிகள் கர்ம நிஷ்டராயும்
பரதாதிகள் ஞான நிஷ்டராயும்
ப்ரஹ்லாதமுகரானார் பக்தி நிஷ்டராயும்
மோக்ஷம் பெறுகையாலே இவை உபாயமாகக் குறை என் -என்னில்

பாண்டு ரோகியானவன் மாணிக்கத்தைக் கொடுத்து மண்ணாங்கட்டியைக் கொள்ளுகை போலே
அத்ருஷ்ட ரூபமான கர்மமும் சேதன அபிப்பிராயத்தாலே த்ருஷ்டத்தில் நோக்குகிறதாய் இருக்கும் –

செத்து கிடந்த புலியை ம்ருத சஞ்சீவினியை இட்டு எழுப்பினால்
பின்பு அது தானே பாதகமாய் இருக்குமா போலே
ப்ரக்ருதி வஸ்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேகத்தை பண்ணா நிற்கச் செய்தேயும் –
ஸ்வதந்த்ரோஹம் -என்று இருக்கையாலே பாதகமாய் இருக்கும் –

முக்தி ஹேதுவாகா நிற்கச் செய்தேயும்
ஏவம் விதமான ஞானமும் அநர்த்த ஹேதுவாய் இருக்கும்

பிச்சானையை மேற்கொண்டு வீர பதம் பெறுவாரைப் போலே இருக்கும் பக்தி யோகம்

இப்படி தோஷ பூயிஷ்டங்கள் ஆகையால்
சிர தர ஜென்ம சாத்தியங்கள் ஆகையால் –
அதுக்கும் மேலே
எம்பெருமானுடைய சரணமுடைமையை அழிக்கையாலும் இவையும் யுபாயம் அன்று

இனி உபாயம் ஏது என்று பார்த்தால்
பிரபத்தியே உபாயமாக வேணும் –
பக்தி ப்ரபத்திகள் இரண்டும் தம்மில் ஒவ்வாதோ என்னில்

பக்திக்கு க்ருஷ்யாதி த்ருஷ்டாந்தம் –
ப்ரபத்திக்கு ரத்ன வாணிஜ்யம் த்ருஷ்டாந்தம் –

க்ருஷ்யாதி அர்த்த சாதனமாம் போது-
அநேக யத்னங்களை யுடைத்தாய்
ஓன்று விகலமானாலும் பல வை கல்யம் பிறக்கும்

ரத்ன வாணிஜ்யம்
அல்ப யத்னமும்
அநேக அர்த்தங்களுக்கு சாதனமாய் இருக்கும்

ஆகையால் அஸக்ருத் கார்யையான பக்தியில் காட்டில்
ஸக்ருத் கார்யையான ப்ரபத்திக்கு உத்கர்ஷம் யுண்டு

அதுக்கும் மேலே
பக்தியில் காட்டில் பிரபத்திக்கு பிராரப்த பங்க ரூபமான பலாதிக்யம் யுண்டு –
ஆகையால் பிரபத்தி உத்க்ருஷ்டமாகக் கடவது

பிரபத்தி தான் உபாயமாம் அளவிலே
சப்த உச்சாரண மாத்ரமும் உபாயம் அன்று –

இது உபாயமாகில் சாதனாந்தர விசேஷமாய் இருக்கும் –

இனி உபாயம் ஏது நின்று நிஷ்கர்ஷித்தால்
பிரபத்தவ்யனே உபாயமாகக் கடவது

உபாய உபேயங்கள் ஸ்வரூபம் ஆகையால்
உபேய பூதனானவனே உபாயமாகும் அளவில்
இவ் வதிகாரிக்குச் செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லை-

இவன் ஆர்த்த ப்ரபன்னன் ஆகில்
அப்போதே ப்ராப்ய சித்தி பிறக்கும்

திருப்த ப்ரபன்னனாகில்
சரீர அவசான சமனந்தரம் ப்ராப்ய சித்தி பிறக்கும் –

இப்படி உபாய உபேயங்கள் ஈஸ்வரனுக்கு தத்வம் என்று –
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் நது குணவ் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ரஹஸ்ய த்ரய பர்யந்தமாக இத்தை உபபாதித்து
கர்ம ஞான சக க்ருதையான பக்தியில் காட்டில் பிரபத்தி வ்யாவ்ருத்தி சொல்லுகிற முகத்தாலே
உபாய உபேயத்வங்கள் தத்வம் என்று நிகமிக்கிறது –

இப்படிக்கொத்த தத்வம் அறியும் போது –
உபதேஷ்யந்தி தி ஞானம் ஞானி ந தத்வ தர்சின -என்கிறபடியே
தத்வ தர்சியான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து
தன் முகத்தாலே உபதேசிக்க அறிய வேணும் என்று

ஜீயர் 12-சம்வத்சரம் ஆஸ்ரயித்த பின் இறே பட்டரும் தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

வேதாந்தச்சார்யரான உடையவர் -18-பர்யாயம் சென்று ஆஸ்ரயித்த பின்பு இறே
திருக் கோஷ்டியூர் நம்பி இந்த தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

சர்வஞ்ஞரான உய்யக் கொண்டார் ஸர்வத்ர அனுவர்த்தனம் பண்ணின பின்பு இறே
ஸ்ரீ மன் நாதமுனிகள் தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

ஆச்சார்யன் இந்த அர்த்தத்தை –
கசடர்க்கும் –
கர்ம பரவசர்க்கும் –
கில்பிஜ ஜீவிகளுக்கும் –
அபிமான க்ரஸ்தருக்கும் –
குத்ஸித ஜனங்களுக்கும் –
க்ருதக்னருக்கும் –
கேவலாத்ம பரர்க்கும் –
கைதவ வாதிகளுக்கும் –
(காமம் கோபம் கொண்ட )கோபிகளுக்கு –
கௌத்ஸகுதற்கும் –
அமரியாதர்க்கும் –
அஸூயா பரர்க்கும் –
வஞ்சன பரர்க்கும் –
சஞ்சல மதிகளுக்கும் –
டாம்பீகருக்கும் –
சாதனாந்தர நிஷ்டர்க்கும் – உபதேசிப்பான் அல்லன் –

கீர்த்தியைப் பற்றவும் ஸத்காரத்துக்காகவும் உபதேசிப்பான் அல்லன் –

கார்ப்பண்ய நிஷ்டரான அதிகாரியினுடைய ஆர்த்தியைக் கண்டு இரங்கி
உபதேசிக்கிறவன் ஆச்சார்யன் ஆகிறான் –

சிஷ்யனாகில் தான் ஸத்ய ப்ரக்ருதியாய்
சதாசார்யர் பரிசாரத்திலே சர்வ காலமும் வர்த்திக்கக் கடவனாய்
சந்ததம் சத்வ குதூஹலியாய்
சம்சாரத்தில் உண்டான ஸூக அனுபவத்தை சப்தார்ச்சிஸ்ஸினுடைய ஜ்வாலையை விழுங்கி ஸந்தாபத்தைப் போக்குமாபாதியும்
விஷ வ்ருஷ பலாஸ்வாதனத்தோ பாதியும் நிர்வேதம் பண்ணி இருக்கக் கடவனாய் –

சஹி வித்யா தஸ்தம் ஜனயதி -என்கிறபடியே
ஆச்சார்யனாகிற பிதாவுக்குத் திருமந்திரம் ஆகிற மாதாவின் பக்கலிலே அபிஜாதனாய் –
ஆஸ்திக்யாதி குண விசிஷ்டனாய் –
ஆச்சார்யருடைய சாயையை அனுவர்த்திக்கக் கடவனாய் –
ஆத்ம யாத்திரையும் தேக யாத்திரையும்
ஆச்சார்யன் இட்ட வழக்காம் படி அவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருக்குமவன் சிஷ்யன்

தேவு மற்று அறியேன் -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும்
ஆச்சார்ய பர ந்யாஸம் பண்ணினார் –

விட்டு சித்தர் தங்கள் தேவர் -என்று நாச்சியாரும் பர ந்யாஸம் பண்ணினார்

இந்த அர்த்தத்தை இன்னார் சொல்லி இன்னார் கேட்க வேணும் என்கிற நியதி இல்லை

பிதா புத்ர சம்வாதத்திலே பிதாவுக்கு புத்ரன் உபதேசம் பண்ணினான்
அகஸ்தியருக்கு லோபாமுத்திரை உபதேசம் பண்ணினாள்
கௌரிக்கு ருத்ரன் உபதேசித்தான்
ஆச்சார்ய புத்திரனான சுக்ரனுக்கு ஜனகன் உபதேசித்தான்
பரம ரிஷிகளுக்கு தர்ம வ்யாதன் உபதேசித்தான்
ஆண்டாள் பட்டர் பக்கலிலே ஸ்ரவணம் பண்ணி இருந்தாள்
பரதாய அப்ரமேயாய குஹோ கஹந கோசார -என்கிறபடியே
ஸ்ரீ குஹப் பெருமாள் ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் சொன்னான்
விருப்புற்று கிடக்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே -என்று நாச்சியார் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்

ஆகையால் –
பகவத் வைபவம் சொல்லுமவன் ஆச்சார்யன் –
கேட்க்குமவன் சிஷ்யன்

இவ் வதிகாரி ஆச்சார்யன் பக்கலிலே கேட்க்கும் போது
ஜனகன் வாசலிலே சுக்ரன் பட்டது பட்டாகிலும் கேட்க வேண்டும்

ஊஷர ஷேத்ரத்திலே நல்ல விரையிட்டாலும் பிரயோஜனம் இல்லை –
ஸூ ஷேத்ரத்திலே பொட்டை விரையிட்டாலும் பிரயோஜனம் இல்லை

நல்ல தரையிலே நல்ல விரையை இட்டால் இறே கார்யகரமாவது

ஆகையால் அவன் சத்வ ப்ரக்ருதியுமாய்
நல்ல கேள்வியில் ச்ருதமாக வேண்டும் –

இப்படிக்கொத்த தத்துவத்தை உபதேசித்த ஆச்சார்யனுக்கு
சிஷ்யன் செய்யும் உபகாரம் என் என்று பார்த்தால்
சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிறபடியே –
ஆச்சார்ய சமர்ப்பணம் பண்ணுகிற சரீரமும் அர்த்தமும் பிராணனும்
இதுக்கு சத்ருசம் அல்லாமையாலே
அதுக்கு ஈடாக இவன் செய்யலாவது ஒன்றும் இல்லை

இனி ஆச்சார்யன் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணி இருக்கை இறே
நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்று போருகிறது –

ஆச்சார்யர்களுக்கு எல்லை நிலம் ஸ்ரீ கூரத்தாழ்வான்

ஆச்சார்ய விசுவாசத்துக்கு எல்லை நிலம் சபரியும் பொன்னாச்சியாரும்

ஆச்சார்ய குணங்களுக்கு எல்லை நிலம் இரக்கம்

சிஷ்ய குணங்களுக்கு எல்லை நிலம் உபகார ஸ்ம்ருதி

ஆச்சார்யர் உபதேசிக்கும் திரு மந்திரத்துக்கு எல்லை நிலம் மந்த்ர ரத்னம்

மந்த்ர ரத்னத்தின் சொல்லுகிற ஆஸ்ரய குணங்களுக்கு எல்லை நிலம் ஸுலப்யம்

இந்த குண விசிஷ்டனுக்கு விக்ரஹங்களுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்

இவனைப் பெறுகைக்கு உண்டான உபாயங்களுக்கு எல்லை நிலம் இவன் தான்

இவ்வுபாய விசுவாசத்துக்கு எல்லை நிலம் திரௌபதியும் திருக் கண்ண மங்கை ஆண்டானும்

உபாய பூதனான அவன் தானே உபேயத்துக்கும் எல்லை நிலம்

இவ் வுபேய விசுவாசத்துக்கு எல்லை நிலம் சிந்தையந்தியும் பெரிய யுடையாரும்

இம் மந்திரத்துக்கு எல்லை நிலமான அதிகாரி பிரபன்னன்

பிரபன்னனுடைய கால ஷேபத்துக்கு எல்லை நிலம் பகவத் கைங்கர்யம்

பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் அனந்தாழ்வான்

பாகவத கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் எண்ணாயிரத்து எச்சான்

பிரபன்னனுடைய கால ஷேபம் கைங்கர்ய அன்விதம் –

ஞானம் பிறக்கை ஸ்வரூபம் —
ஆச்சார்யனுக்கு மிதுன க்ருதஞ்ஞாபநம் ஸ்வரூபம் —
இத்தை அறிந்த அதிகாரிக்கு வியவசாயம் ஸ்வரூபம்

ஆக -இந்த பூர்ண அதிகாரியானவன் -இப்படி தத்வ உபதேசம் பண்ணின ஆச்சார்யன் பக்கலிலே
பர ஸ்வரூபத்தையும்
ஸ்வ ஸ்வரூபத்தையும்
உபாய ஸ்வரூபத்தையும்
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
அறிந்து –

அவன் பக்கலிலே க்ருதஞ்ஞனுமாய் —
ஸ்ரீயப்பதியான எம்பெருமானே சேஷியாகவும் -தன்னை சேஷ பூதனாகவும்
அவனை ஸ்வாமியாகவும் தன்னை தாச பூதனாகவும்
அவனை ஆத்மாவாகவும் தன்னை சரீர பூதனாகவும்
அவனைப் புருஷனாகவும் தன்னை ஸ்த்ரீத்வ குண யுக்தனாகவும் -அனுசந்தித்து

நம்முடைய த்ருஷ்டத்தை கர்மாதீனமாகவும் நிர்வஹிக்கும்
அத்ருஷ்டத்தை க்ருபாதீனமாகவும் நிர்வஹிக்கும் -என்று
அவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருக்குமவனுக்கு ஸ்வரூப சித்தி பிறக்கும் –

தத்வ பூஷணம் முற்றிற்று

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ யாமுனாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய விளக்கம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

February 2, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

ய உபநிஷதாம் அந்தே யஸ்மாத் அநந்த தயாம்புதே
த்ருடித ஜநதா சோக ஸ்லோக ஸமஜாயதே
தமிஹ விதிநா கிருஷ்ணம் தர்மம் பிரபத்ய சநாதாநம்
சமித துரித சங்கா தங்க த்யஜ ஸூக மாஸ்மகே

துர் விஞ்ஞாநைர் நியமகஹநை தூர விஸ்ராந்தி தேசை
பால அநர்ஹை பஹூபி அயநை சோசதாம் ந ஸூ பந்தா
நிஷ் ப்ரத்யூகம் நிஜ பதமசவ் நேது காம ஸ்வபூம்நா
சத் பாதேயம் கமபி விததே சாரதி சர்வ நேதா

ஒண் டொடியாள் திருமகளும் தானுமாகி
ஒரு நினைவால் ஈன்ற உயிர் எல்லாம் உய்ய
வண் துவரை நகர் வாழ வசு தேவற்காய்
மன்னவர்க்குத் தேர் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன
தனித் தருமம் தானே எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்து அடி சூட விலக்காய் நின்ற
கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே

————————

அவதாரிகை –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-
என்கிறபடியே ஸ்ரீ யபபதியான சர்வேஸ்வரன் -சாது பரித்ராண துஷ்க்ருத விநாச தர்ம சம்ஸ்தானங்களுக்காக
வண்டுவராபதி மன்னனாய் -வந்து திருவவதரித்து அருளி சர்வ ஸூலபனாய் –
த்ரௌபத்யா சஹிதா சர்வே நமஸ் ஸக்ரூர் ஜனார்த்தனம் -என்கிறபடியே
சரணாகதரான பாண்டவர்களுக்காக இன்னார் தூதன் என நின்று
அர்ஜுனனை ரதியாக்கித் தான் சாரதியாய் அவனுக்கு விதேயனாய் நின்ற அளவிலே

இவ்வர்ஜுனன் தன்னை நிமித்த மாத்ரமாகக் கொண்டு சர்வேஸ்வரன் தன் பிரதிபக்ஷங்களை நிரசிக்க நின்ற நிலையைக் கண்டு
பந்து விநாசம் சித்தம் என்று நிச்சயித்து அஸ்தாந ஸ்நேஹத்தாலே பிறந்த சோகத்தால் அஸ்தாந கிருபையாலும்
ஆச்சார்யாதிகள் யுத்த யுன்முகரே யாகிலும் அவர்கள் வாதத்தாலே பாபம் வருகிறது என்கிற பயத்தாலும் கலங்கி
எது ஹிதம் என்று தெளிய வேண்டும் என்று பார்த்து
யச் ஸ்ரேயா ஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தே
அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் –ஸ்ரீ கீதை -2-7–என்று விண்ணப்பம் செய்ய
அவனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கைக்காக தேகாதி வியதிரிக்தமாய் பர சேஷ தைக ரசமான நித்யாத்ம ஸ்வரூபத்தையும்
இஸ் ஸ்வரூபம் தெளிந்தவனுக்குப் பரம புருஷார்த்த லாபத்துக்குப் பரம்பரயா காரணங்களாக கர்மயோக ஞான யோகங்களையும்
சாஷாத் உபாயமாகச் சோதிதமான பக்தியோகத்தையும் ச பரிகரமாக உபதேசிக்க

இப்பரம புருஷார்த்தத்தைக் கடுகப் பெற வேணும் என்கிற த்வரை யுண்டே யாகிலும் ச பரிகரமான இவ்வுபாயத்தினுடைய துஷ்கரதையாலும்
இவ்வுபாய அனுஷ்டானத்துக்கு அபேக்ஷித ஞான சக்திகள் யுண்டேயாகிலும் அநேக அவதானத்தோடே கூடச் சிரகால சாத்தியமான உபாய
ஸ்வபாவத்தாலே அபிமதம் கடுகத் தலைக் கட்டாதபடி இருக்கையாலும்-நிரதிசய சோகாவிஷ்டனான அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
பரம காருணிகனான ஸ்ரீ கீதா உபநிஷதாச்சார்யன் –

பக்த்யா பரமயாவாபி பிரபத்த்யா வா மஹா மதே ப்ராப்யோஹம் நாந்யதா பிராப்யோ மம கைங்கர்யம் லிப்ஸூபி –
என்று தான் விகல்பித்து விதித்த உபாயங்களில் –
தாவ தார்த்திஸ் ததா வாஞ்ச தாவந் மோஹஸ் ததா அஸூகம் -என்கிறபடியே
தன் திருவடிகளைப் பெறுகைக்கும் மற்றும் அபிமதமானவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஸாதனமாய்
ஆநு கூல்ய சங்கல்பாதி வ்யதிரிக்த பரிகார நிரபேஷமாய் லகு தரமாய் க்ஷணம் மாத்ர சாத்தியமான ரஹஸ்ய தம உபாயத்தை
ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாத படி உபதேச பர்யவசனமான சரம ஸ்லோகத்தால் சர்வ லோக ரஷார்த்தமாக அருளிச் செய்கிறான்

ஸ்ருதி ஸித்தமான இவ்வர்த்தத்தை சரண்யனான சர்வேஸ்வரன் தானே உபதேசிக்க இது தானே
சந்த்யஜ்ய விதிநா நித்யம் ஷட்விதம் சரணாகதிம் ஆச்சார்ய அநுஜ் ஞாயா குர்யாத் சாஸ்திர த்ருஷ்டேன வர்த்மநா -என்று
ஸ்ரீ விஷ்ணு தத்வாதிகளிலே சொன்ன ஆச்சாரய அநுஜ்ஜையுமாயிற்று-

——————-

சர்வ தர்மான் -விளக்கம் –

சர்வ தர்மான்-
இந்த ஸ்லோகத்துக்கு-சங்கராதி குத்ருஷ்டிகள் சொல்லும் பொருள்களை எல்லாம் தாத்பர்ய சந்திரிகையிலும்
நிஷேபரக்ஷையிலும் பரக்க தூஷித்தோம் –
இங்கு சாரமான அர்த்தங்களை சத் சம்பிரதாய ஸித்தமான படியே சொல்லுகிறோம் –

இதில் பூர்வார்த்தம் உபாய விதாயகம்
உத்தரார்த்தம் பல நிர்த்தேசாதி முகத்தால் விதி சேஷம்
ஆகையால் இஸ் ஸ்லோகம் உபாய விதி பிரதானம் –

தர்மமாவது சாஸ்திரமே கொண்டு அறிய வேண்டியிருக்கும் புருஷார்த்த சாதனம்
தர்மான் -என்கிற பஹு வசனத்தாலே
அபிமத சாதனமாக சாஸ்திர சோதிதங்களான தர்மங்களினுடைய பாஹூல்யத்தைச் சொல்கிறது
சர்வ சப்தத்தாலே ச பரிகரமான நிலையை விவஷிக்கிறது
தர்ம பரிகரங்களையும் தர்மம் என்று சொல்லக் குறையில்லை இறே-
இஸ் சர்வ சப் தத்தை ஏக சப்த பிரதி சம்பந்தியாக யோஜிக்கும் போது இது அங்கிகளான
நாநா தர்மங்களினுடைய கார்த்ஸ் ந்யத்தைச் சொல்லுகிறது
இப்படி பொதுவிலே சொன்னாலும் இங்குப் பிரகரண வசத்தாலே மோஷார்த்தமாக சாஸ்திர விஹிதங்களுமாய்
ச பரிகரங்களாய் நாநா பிரகாரங்களான உபாசனங்களை எல்லாம் சொல்லுகையிலே தாத்பர்யம் –

புருஷோத்த மத்வ ஞானம் சர்வ வித்யைகளுக்கும் உபகாரமான தத்வ ஞான மாத்ரமாகவும் –
அவதார ரஹஸ்யம் சிந்தனம் அனுஷ்டிக்கிற உபாசனாதிகளுடைய சீக்ர நிஷ்பந்தி ஹேதுவாகவும்
தேச வாசாதிகள் உபாய விரோதி பாப க்ஷய ஹேதுக்களாய்க் கொண்டு உபாய நிஷ்பாதங்களாகவும்
ஸ்ரீ கீதா பாஷ்யாதிகளிலே சமர்த்திக்கையாலே
இவற்றை சாஷான் மோக்ஷ உபாயங்களாக்கி அங்கி பஹுத்வ விஷயமான பஹூ வசனத்தாலே விவஷிக்கிறது என்கை உசிதம் அன்று
நாநா சப்தாதி பேதாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-3-56–என்கிறபடியே இவை ஒழியவும் சத் வித்யா தஹர வித்யாதி பேதத்தாலே அங்கு
பஹூத்த்வம் கிடைக்கையாலே இப் பஹு வசனம் சார்த்தம் –
அங்கி பஹூ த்வத்தையும் பரிகர பஹூ த்வத்தையும் கூட விவஷித்தாலும் விரோதம் இல்லை –

பரித்யஜ்ய-
பரித்யஜ்ய என்கிற இடத்தில்
தியாகமாவது -அநயா ச ப்ரபத்யா மாம் ஆகிஞ்சனந்யை க பூர்வகம் -இத்யாதிகளில் படியே அகிஞ்சனனான தன்
நிலையைக் கண்டு உபாயாந்தரங்களிலே பிறந்த நைராச்யம் -ஆசையாலே பற்றானால் ஆசையை விடுகை தியாகம் என்ன உசிதம் இறே
அதில் பரி-என்கிற உபசர்க்கத்தாலே –
அநாகத அநந்த கால சமீஷயா அபி அத்ருஷ்ட சாந்தார உபாய -ஸ்ரீ ரெங்க கத்யம் 2–என்றும்
த்வத் பாத கமலாத் அந்யத் ந மே ஜன்மாந்தரேஷ்வபி -ஜிதந்தே -1–10-இத்யாதிகளில் படியே அத்யந்த அகிஞ்சனனுக்கு
சர்வ காலத்திலும் சர்வ பிரகாரத்திலும் யோக்யதை இல்லாமை தெளிகையாலே பிறந்த நைராஸ்ய அதிசயம் சொல்லப்படுகிறது
சர்வ பிரகாரத்தாலும் தியாகமாவது பூரண அனுஷ்டான சக்தி இல்லாத போது யதா சக்தி அனுஷ்டானம் பண்ணுகிறோம் என்றும்
அதுக்கு யோக்யதை இல்லாத தசையில் வேறே சில அநு கல்பங்களை யாதல் உபாய உபாயங்களை யாதல் அனுஷ்டிக்கிறோம் என்றும்
தனக்கு துஷ்கரங்களைக் கனிசிக்கும் துராசை யற்று இருக்கை-

இவ் வனுவாதத்துக்கு அதிகார விசேஷத்தை காட்டுகை பிரயோஜனம் –
அதில் பரி என்கிற உப சர்க்கம் அதிகார புஷ்கல்யத்தை விவஷிக்கிறது
அநித்யம் அஸூகம் லோகம் இமாம் ப்ராப்ய பஜஸ்வ மாம் -ஸ்ரீ கீதை -9–33-என்கிற இடத்தில் பிராப்ய என்கிறது -விதி அன்றிக்கே
ப்ராப்ய வர்த்தமான த்வம்-என்று வியாக்யாதம் ஆனால் போலே
இங்கும் பரித்யஜ்ய ஸ்தித த்வம் -அனைத்து வழி முறைகளையும் கை விட்ட நீ –என்று விவஷிதமாகக் கடவது
இப்படி அர்த்தாந்தரங்களிலும் பிரயோகம் யுண்டாகையாலே –
கத்வா -ஸ்ருதி மாத்ரத்தைக் கொண்டு தியாகம்-கை விடுதல் -ப்ரபத்தியுடைய – அங்கம் என்ன ஒண்ணாது

பரித்யஜ்ய -என்கிறது விதியான போது
ப்ரபாத்யாயாதிகளில் விதிக்கிறபடியே ஆகிஞ்சன்ய பிரதி சந்தனாதி ரூபமான கார்ப்பண்யம் ஆகிற –
வேறு கதி அற்றவன் -என்கிற பிரபத்யங்கத்தை விதிக்கிறது என்றால் அர்த்தத்தில் விரோதம் இல்லை —
அப்போது சர்வ தர்மான் பரித்யஜ்ய என்கிற இது
அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலய–அகிஞ்சன அகதி -ந தர்மே நிஷ்டே அஸ்மி -இத்யாதிகளில் படியே
சர்வ தர்மங்களும் தன்னை யோக்யதா பர்யந்தமாக கழித்த படியை முன்னிட்டுக் கொண்டு என்றபடி
இப்படி விளம்பித ப்ரதீதிகமான அர்த்தமும் பஹு பிராமண அநு குணமாகையாலே அவற்றுக்கு விருத்தமாக
சங்கராத் யுக்தங்களான சர்வ தர்ம ஸ்வரூப தியாக அர்த்தங்களில் காட்டிலும் உபாதேயம்

ப்ராப்திக்காக ஒரு தர்மமும் அனுஷ்ட்டிக்க வேண்டா என்று ப்ரபத்தியினுடைய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
என்கை விதி பஷத்துக்கு உசிதம்
அப்போது பரி என்கிற உப சர்க்கம் –
ஆஸாந்தேந கர்தவ்யம் சுசிநா கர்தவ்யம் -இத்யாதிகளில் சொல்லுகிற சர்வ சாதாரண
யோக்யதா ஆபாதகங்களும் இதுக்கு அங்கமாக ஸ்வீ கார்யங்கள் ஆகா என்று விவஷிக்கிறது

இங்கன் அன்றிக்கே கர்ம யோகம் ஞானயோகம் பக்தியோகம் என்கிற தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகம்
ப்ரபத்திக்கு அங்கம் என்னும் பக்ஷத்தில் பிரபத்தி சர்வாதிகாரம் இன்றிக்கே ஒழியும்-
தர்ம நிஷ்டான சக்தனுக்கு இறே அவற்றினுடைய தியாகத்தை விதிக்க வேண்டுவது
இது பஹு பிராமண சித்தமான கார்ப்பண்யம் ஆகிற அங்கத்துக்கும் –
புகல் ஒன்றில்லா அடியேன் – குலங்களாய -குளித்து மூன்று –
ந தர்ம நிஷ்டா அஸ்மி-இத்யாதிகளிலே பிரசித்தமான அகிஞ்சன அதிகாரம் என்கிற சம்பிரதாயத்துக்கு விருத்தமாம்
ஈஸ்வரனைப் பற்ற அத்யந்த பாரதந்த்ரையாலே உபாயாந்தரங்களுக்கு ஷேத்ரஞ்ஞன் நித்ய அசக்தன் என்று காட்டி இவனுக்கு
அவற்றினுடைய தியாகத்தை விதிக்கும் என்னுமது
சர்வ சாஸ்த்ர ஸ்வ வசன ஸ்வ ப்ரவ்ருத்தியாதி விரோதத்தாலே அத்யந்த பரிஹாஸ்யம் –
அப்போது துல்ய நியாயதையாலே -வ்ரஜ-என்பது தானும் கடியாது
உபாயாந்தரங்களுக்கு ஜீவாத்மா நித்ய அசக்தன் என்கை தங்களுக்கு அநிஷ்டமான அநுவாத பஷத்துக்கு ஸ்த்ரீ கரணம்
பண்ணினபடியாம் அத்தனை
ஏக பிரயோகம் தானே அசக்தனைப் பற்ற தியாக அநுவாதமாய் இதரனைப் பற்ற தியாக விதியாகை ஏக வாக்கியத்தில் கடியாது

பலத்தில் வைஷம்யம் இன்றிக்கே அதிகாரியும் ஏகனாய் இருக்க -குரு-லகு -விகல்பமும் சொல்ல ஒண்ணாது
குரு உபாயத்திலே சக்தனானவனுக்கே அதன் தியாக விசிஷ்டமான லகு உபாயத்தை விதித்தால்
குரு உபாயத்தில் ஒருத்தரும் பிரவர்த்திப்பார் இல்லாமையாலும்
வேறு ஒரு முகத்தால் அதிகாரி பேதம் சொல்ல ஒண்ணாமையாலும் குரு உபாயத்தை விதிக்கிற சாஸ்திரங்கள்
எல்லாம் பிரமாணம் இன்றிக்கே ஒழியும்
லகு உபாய ப்ரோசன அர்த்தமாக குரு உபாயத்தை விதித்து அது தன்னையே நிஷேதிக்கிறது என்கையும் அத்யந்த அனுசிதம்
அநு பாயங்களை உபாயங்களாக விதிக்கிறது என்றால் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் மோஹன சாஸ்த்ரங்களாக
பிரசங்கிக்கையாலே சரண்ய ஸ்வரூபாதிகளும் சித்தியாத படியாம்
குருக்களான க்ருஷ்யாதி வியாபாரங்களும் லகுக்களான ரத்னவாணி ஜ்யாதிகளும் அர்த்தார்த்திகள் பக்கல் விகல்ப்பிக்கறதும்
அதிகாரி விசேஷ வியவஸ்தையாலே என்னும் இடம் லோக பிரசித்தம் –
ஆழ்வானுடைய சரம ஸ்லோக வியாக்யானத்திலும்
இவ்வளவே விவஷிதம் ஆகையால் ஒரு விரோதமும் இல்லை
சமாவர்த்த நாதிகளில்-ப்ரஹ்மசர்யம் முடித்து க்ருஹஸ்தனாகும் பொழுது செய்யும் ஸ்நநாதிகள் – குரு லகு விகல்பமும்
அவஸ்தா விசேஷங்களாலே நியதம் என்று கொள்ளாத போது குரு விதாந வையர்த்தமும் வரும் –

ஞான பூர்த்தியாதல் -விசுவாச பூர்த்தி யாதல் -யுடையவன் ப்ரபத்திக்கு அதிகாரி –
ஞான மாந்த்யமாதல்-விசுவாச மாந்த்யமாதல் யுடையவன் உபாச நாதிகளுக்கு அதிகாரி என்றால்
இச் சரம ஸ்லோகாதிகளுக்கு உப தேஷ்டாக்களுமாய் பரம ஆஸ்திகரும் ஆகையால்
பூர்ண ஞான விசுவாசரான வ்யாஸாதிகளுக்கு உபாஸனாதிகளில் அதிகாரம் இல்லையாம்
அவர்கள் உபதேச காலத்தில் ஞான விசுவாசங்கள் யுடையராகப் பின்பு கலங்கி உபாசகர் ஆனார்கள்
என்கைக்கு ஒரு பிரமாணம் இல்லை –

பிரபன்னராய் வைத்து லோக ஸங்க்ரஹார்த்தமாக உபாஸனாதிகளை அனுஷ்ட்டித்தார்கள் என்கைக்கும்
அவ்வோ பிரபந்தங்களில் ஒரு வசனம் இல்லை –
அப்படி கல்பிக்கப் புக்காலும் தன் அதிகாரத்துக்கு நிஷித்தமானவற்றை லோக ஸங்க்ரஹமாக அனுஷ்ட்டிக்கப் புக்கால் அவை
இவன் தனக்கும் பாபமாய் அதிகாரத்துக்கு விருத்த அனுஷ்டானம் பண்ணுகையாலே தன் அனுஷ்டானத்தையிட்டு லோக ஸங்க்ரஹம்
பண்ணவும் கடப்படாது ஒழியும்
தனக்கு இரண்டு வழிகள் சாஸ்த்ர அநு மதங்கள் ஆனால் அவற்றில் லோகத்தாருக்கு ஸக்யமாய்
அவர்களுக்கு இதமாய் இருப்பது ஒன்றைத் தான் அனுஷ்டித்துக் காட்டி லோகத்தாரை அதிலே நிலை நிறுத்துகையே
லோக ஸங்க்ரஹம் என்று ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே அருளிச் செய்தார் –
அல்லது சந்நியாசிக்கு நிஷித்தமான க்ருஹஸ்த ஏகாந்த தர்மத்தை
சந்நியாசி அனுஷ்ட்டித்துக் காட்டுமது லோக ஸங்க்ரஹார்த்தம் ஆகாது
இது ஆஞ்ஞாநா அதி லங்கனாம் அத்தனை –
இப்படியே பிரபத்தி அதிகாரிக்கு நிஷித்ததை அவன் தானே கைங்கர்ய புத்தியாலே அனுஷ்டிக்கையும் ஸ்வ அதிகார விருத்தம்
பிரபத்திக்கு அந பேஷிதங்களான சாஸ்த்ரீயங்களை கைங்கர்ய புத்தியாலே அனுஷ்ட்டிப்பார்க்கு விரோதம் இல்லை

தம் தாம் ஜாதியாதிகளுக்கு அநு ரூபங்களுமாய்த் தம் தமக்கு ஸக்யங்களுமான சர்வ தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகம் அங்கமாக
விதேயம் என்னும் பாசத்திலும் பிரபத்தி உத்தர காலம் தன் வர்ணாஸ்ரம அதிகாரங்களுக்கு அநு ரூபமாக அடைத்த கைங்கர்யத்தையும் இழந்து
அஹிம்சா சத்ய வசனாதி சாமான்ய தர்மங்களையும் ஆச்சார்ய வந்தனாதிகளையும் தவிர்ந்து பசு மிருக பக்ஷியாதிகளைப் போலே திரியும்படியாகும்

நிஷேத வாக்ய சித்தங்களான நிவ்ருத்தி ரூப தர்மங்கள் ஸ்வ ரக்ஷணார்த்த ஸ்வ வியாபாரம் அல்லாமையாலே சரணாகதியோடு
விரோதம் இல்லாமையால் இங்குப் ப்ரவ்ருத்தி ரூப தர்மங்களினுடைய தியாகமே விவஷிதம் என்னும் நிர்வாகமும் மந்தம் –
நிவ்ருத்தியும் வியாபார விசேஷம் என்னும் இடமும் அதுவும் ஸ்வ ரக்ஷணார்த்த மாம் என்னும் இடமும் லோக வேத சித்தம் இறே

இவ்விதி பலத்தாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான சர்வ தர்மங்களையும் தவிர்ந்து திரிகை தானே
பிரபன்னனுக்கு சாஸ்த்ரார்த்தம் ஆனாலோ என்னில்
பிரபன்னரான பூர்வர்களும் இப்போது உள்ளாறும் சாவதானமாகப் பண்ணிப் போகிற கைங்கர்யங்களும்
அபசார பரிகாரங்களும் விருத்த அனுஷ்டானமாம்
யதா பிரமாணம் பிரபத்தி சம்பிரதாய ப்ரவர்த்தகராய்ப் பரம காருணிகருமாய் இருக்கிறவர்களுக்கு
ப்ரம விப்ர லம்ப சம்பாவனையும் இல்லை

யாவஜ் ஜீவம் சர்வ தர்ம தியாகம் விதேயமாகில் அன்றோ இவ்விரோதம் உள்ளது –
பிரபத்ய அனுஷ்டான க்ஷணத்தில் சர்வ தர்மங்களினுடைய
ஸ்வரூப தியாகம் அங்கமானால் விரோதம் இல்லையே என்னில் –
அப்போது சம்பாவிதம் அல்லாதவற்றினுடைய ஸ்வரூப தியாகம் விதிக்க வேண்டா –
சம்பாவிதம் ஆனவற்றினுடைய ஸ்வரூப தியாகம் விதேயமாகில் அப்போது உண்டான பகவத் க்ஷேத்ர வாச சிகா யஜ்ஜோபவீத
ஊர்த்வ புண்டர தாரணாதிகளைத் தவிர்ந்து கொண்டு பிரபத்தி பண்ணப் பிரசங்கிக்கும் –

ஆகையால் உபாசனத்தில் வரும் கர்மாதி யங்கங்களாலே நிரபேஷையாய் இருக்கிற பிரபத்திக்கு அங்கமாக
ஒரு தர்மத்தையும் பற்ற வேண்டா
என்கையை தியாக விதி பஷத்துக்கு உசிதம் –
இந்தத் தியாக விதியான பக்ஷம் தன்னிலும் உபாயாந்தர சாமர்த்தியம் இல்லாதார்க்கும் –
அது உண்டாகிலும் விளம்ப ஷமர் அல்லாதார்க்கும் இப்பிரபத்தியில் அதிகாரம் –
அப்படியானால் ஒரு பிரமாணத்துக்கும் விரோதம் இல்லை

பூர்வாச்சார்யர்களும் இவ்விடத்தில் சர்வ தர்ம ஸ்வரூப தியாகம் பிரபத்யங்கம் என்றும் இப்படி அன்று என்றும்
விவாதமும் பண்ணினார்கள் அல்லர் –
பிரபத்திக்கு அதிகாரமான ஆகிஞ்சன்யமும் ப்ரபத்தியினுடைய நைரபேஷ்யமும் இச் சரம ஸ்லோகத்தில்
எந்தப் பதங்களிலே விவஷிக்கை விமர்சித்தார்கள் அத்தனை

அதிகாரம் புரஸ் க்ருத்ய உபாயஸ்ய நிரபேஷதாம் ஏக சப்தேந வக்தீதி கேசித் வாக்ய விதோ விது –என்று
பிரபத்திக்கு அதிகாரம் ஆகிஞ்சன்யம் என்று சொல்லி
மேலே -ஏகம்-மூலம் நைரபேஷ்யம் -வேறே அங்கங்கள் வேண்டாம் -என்பதாகவே பொருள் உரைத்தார்கள்

நைரபேஷ்யம் புரஸ் க்ருத்ய விஹிதஸ்ய லகீயஸ உபாயஸ்ய அதிகாரம் து சோக த்யோத்யம் விது பரே-என்று
நைரபேஷயம் சொன்ன பின்பு
இந்த லுகுவான உபாயத்தை கைக் கொள்ளும் தகுதி உள்ள அதிகாரி மாஸூச -என்று
உபாயாந்தரங்களை கைக் கொள்ள இயலாத நிலை என்பதே

இத்தம் அர்த்த அவிசேஷ அபி யோஜநா பேத மாத்ரத ப்ராஸாம் விவாத சம்விருத்தோ பாஷ்ய காரை அவாரித–என்று
கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை –
எந்தப் பதம் எத்தைக் காட்டும் என்பதிலேயே யோஜனா பேதம் –
ஆகவே ஸ்ரீ பாஷ்யகாரர் தடுக்கவில்லை

அஞ்ஞாத பூர்வ வ்ருத்தாந்தை யத் தத்ர ஆரோபிதம் பரை தத் து ஸ்ரீ விஷ்ணு சித்தாத்யை நிர்மூலம் இதி தர்சிதம் –என்று
முன்பு உள்ளவற்றைக் குறித்து அறியாதவர்களாக –
சரம ஸ்லோகத்தில் தர்மங்களைத் துறக்க வேண்டும் என்று ஒரு இல்லாத அம்சம் கூறப்பட்டதோ-
அதுவே வேறில்லாத கருத்து என்று ஸ்ரீ எங்கள் ஆழ்வான் போன்றார் அருளிச் செய்தது –

ஆனால் இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம்-இதம் திதீரஷதாம் பாரம் இதம் ஆனந்த்யம்
இச்சதாம் -ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17- 101-என்றும்
அவித்யாதோதேவே பரிப்ருட தயா வா விதி தயா -ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதம்
அந்யாம் அவிதுஷாம் –ஸ்ரீ பட்டர் முக்த ஸ்லோகம் -என்றும்
சொல்லுகிற அதிகார பேதம் இருக்கும்படி என் என்னில்-
இவ்விடத்தில் சொன்ன அஞ்ஞானம் உபாஸ நாதிகளில் தெளிவில்லாமை யாதல்
பிரபத்தி தன்னிலும் ஸூஷ்ம விசேஷங்கள் அறியாமை யாதலாம் அத்தனை
இவற்றில் -விஜாநதாம் -என்றும் –
தேவே பரி வ்ருடதயா வா விதி தயா -என்றும் சொன்ன ஞான விசேஷமும் உபாஸனாதிகளில் தெளிவாதல்
பிரபத்திக்கு உபயுக்தமான சரண்ய குணாதி விஷயத்தில் தெளிவாதலாம் அத்தனை அல்லது
இதுக்கு அந பேஷிதமான சர்வ விஷய ஞானம் அன்று
பரி வ்ருடத்வ ரூபமான சரண்ய குண விசேஷ ஞானம் இறே இங்கு சொல்லப் படுகிறது
இவ்வுபயுக்த ஞானம் யுண்டானாலும் உபாயாந்தரத்தில் சக்தி இல்லாத போது அகிஞ்சனனாய் ப்ரபத்திக்கு அதிகாரியாம்-
சக்தி யுண்டேயாகிலும் -சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந –மாம் நயத்யேதி காகுத்ஸ்த-
தத்தஸ்ய சத்ருசம் பவேத் -ஸ்ரீ ஸூந்தர -39–30- என்கிறபடியே
ரக்ஷகன் கை பார்த்து தான் கை வாங்கி இருக்கை அன்றோ உசிதம் என்னில்
இதி பிரபன்னனுடைய உத்தர க்ருத்ய விசேஷத்துக்கு உதாஹரணமாம்
அல்லாத போது உபாய விதாயக சாஸ்திரங்கள் நிரார்த்தங்கள் ஆகும் –

உபாயாந்தரத்தில் தனக்கு ஞானமுண்டாய் -அதில் அனுஷ்டான சக்தியும் யுண்டானாலும் விளம்ப ஷமன் அன்றிக்கே இருக்குமாகில்
கடுக பலம் தர வல்ல ப்ரபத்தியே நமக்கு உசிதை என்று இருக்குமவனும் இப்பிரபத்திக்கு அதிகாரியாம்
இத்தை -இதம் திதீர்ஷ்தாம் பாரம் -இத்யாதிகளில் சொல்லுகிறது -எங்கனே எனில் –
திதீர்ஷ்தாம் பாரம்-என்றது
கடுக அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும் த்வரை யுடையார்க்கு என்றபடி –
ஆனந்த்யம் இச்சதாம் என்றது
ஸ்வரூப ப்ராப்ய பரிபூர்ண பகவத் அனுபவத்தைப் பெற்று அல்லது தரிக்க மாட்டார்க்கு -என்றபடி –

இவ்விரண்டையும் நினைத்து -ஸ்வ பக்தே பூம்நா வா -என்கிறார் –
இங்கு பக்தி என்றது ப்ரேம பரவஸ்யத்தைச் சொன்னபடி
அல்லது பக்தி யோகத்தைச் சொன்னபடி அன்று –
இப்படி பக்தியினுடைய பூமாவாகிறது கடுகப் பிராப்தி கிடையாத போது அழியும்படியான அவஸ்தா விசேஷம்
இது சிலருக்கு கட்டளைப் பட்ட பக்தியோகம் இல்லையாகிலும் ஸூக்ருத விசேஷ மூலமான பகவத் பிரசாதத்தாலே வரும்
இவ்வவஸ்தை யுடையவனும் ப்ரபத்திக்கு அதிகாரி

இப்படியாகையால் உபாயாந்தரத்தில் அஞ்ஞராய் –
இவ்வுபாயத்தில் சமுதாய ஞான மாத்ரமாய் யுடையராய் இருப்பார்க்கும்
இதிலும் உபாயாந்தரத்திலும் தெளிவு யுண்டானாலும் உபாயாந்தரத்தில் அனுஷ்டான சக்தி இல்லாதார்க்கும்
இவை இரண்டும் யுண்டானாலும் விளம்பம் பொறாத ஆர்த்தி யதிசயம் யுடையார்க்கும்
பிரபத்தியிலே இழியலாம்
இவ்விளம்ப ஷமனும் தான் நினைத்த காலத்தில் பலம் பெறுகைக்கு உபாயாந்தர ரஹிதன்
இப்பிரகாரத்தை நினைத்து -ஜகதி கதிம் அந்யாம் அவிதுஷாம் -என்கிறது –

வியாசாதிகள் அதிகாரி புருஷர்கள் ஆகையால் விளம்ப ஷமருமாய் இருப்பார்கள் -ஆகையால் உபாசனத்திலே இழிந்தார்கள்
அல்லது ஞான மாந்த்யமாதல்-விசுவாச மாந்த்யமாதல் -உண்டாகி இழிந்தார்கள் அல்லர் –
அசக்தஸ்யாதி க்ருச்சேஷூ துராசா தார்டடய சாலிந -கஸ்ய சித் புத்தி தவ்ர்பல்யம் லகு த்யாகஸ்ய காரணம் -என்றும்
தத்ர பிரபத்ய நர்ஹாணாம் அந்யாதித்யபி யுஜ்யதே வியாஸாதிஷூ து நைவஷா நீதி சம்சய காதிஷூ -என்றும்
இப்படி உபாசனை பிரபதங்களுக்கு அதிகாரம் வியவஸ்திதம் ஆகையால் இரண்டு சாஸ்திரமும் ச பிரயோஜனம் –
இரண்டு அதிகாரிகளுக்கும் ஸ்வ தர்மத்தில் பிரதிபத்தி வைஷம்யமே உள்ளது –
பிரபன்னனுக்கு கோரின பலத்தைப் பற்ற
வேறு ஒன்றை அனுஷ்டிக்கில் ப்ரஹ்மாஸ்த்ர பந்த நியாயத்தாலே விரோதம் யுண்டானாலும்
ஸ்வயம் பிரயோஜனமாக வாதல் பகவத் பாகவத ஸம்ருத்தி யாதி பலாந்தரத்தைப் பற்ற வாதல்
வேறு ஒன்றை அனுஷ்ட்டித்தால் விரோதம் இல்லை –

இப்படி ஸ்வரூப தியாகம் கூடாது ஒழிந்தாலும் உபாயத்வ புத்தி தியாகம் பண்ணுகை -பரித்யஜ்யவுக்குப் பொருளானாலோ என்னில்
பிரபன்னனுக்கு உத்தர க்ருத்ய கோசாரங்களான வாக்கியங்களில் உபாயத்வ புத்தி தியாகம் விதிக்கிற இடம் உசிதம் –
இங்கு உத்தர க்ருத்ய பரம் அன்றிக்கே உபாய விதாயகமாய் இருக்கிற இவ்வாக்கியத்தில் சொல்லுகையாலே
இப்புத்தி தியாக பூர்வகமான தர்ம ஸ்வரூபம் ப்ரபத்திக்கு அங்கமாக அநுஷ்டேயம் என்று பலிக்கையாலே
ஸ்வயம் பிரயோஜனமாக கேவல கைங்கர்யம் உத்தர க்ருத்யம் என்கிற பதம் சித்தியாது –

இவ்வுபாயத்துக்குச் சொல்லுகிற தர்மாந்திர நைரபேஷ்யமும் கிடையாது -இவ்வுபாயம் அகிஞ்சனாதிகாரம் அன்றிக்கே ஒழியும்-
எங்கனே என்னில் -உபாயம் அல்லாதவற்றில்
உபாயத்வ புத்தி தியாகம் இங்கே விதிக்க வேண்டா -உபாயமானவற்றில் உபாயத்வ புத்தி தியாகம் பண்ணி அனுஷ்டிக்கை யாவது
பழைய உபாஸ நாதிகளில் நிலையாம் –
இங்கு உபாயத்வ புத்தி தியாகம் பொருளாகச் சொல்லுகிற பக்ஷத்தில் தியாக விதிக்கும் அனுஷ்டான விதிக்கும் அதிகாரி பேதத்தாலே
விரோதம் பரிஹரித்த இடம் அநபேஷித வசனம் –
இங்கு ஸ்வரூப தியாகம் சொல்லும் போது இறே இவ்விரோத பிரசங்கம் உள்ளது -இப்படி புத்தி விசேஷ தியாக பூர்வக
கர்ம ஞான பக்திகளைப் பிரபத்திக்கு அங்கமாக இசையும் பக்ஷத்தில் உபாசன பிரபதனங்களுக்கு
அங்காங்கி வியபதேசத்தில் மாறாட்டமே யுள்ளது
அங்க பாவத்தில் யதா கதஞ்சித் அனுஷ்டானம் அமையும் என்கிற வைஷம்யமும் பந்தம் –
சகல அங்கோப சம்ஹாரே காம்ய கர்ம ப்ரஸித்யதி -என்று சொல்லப் பட்டது இறே

அத ஸ்வரூப தியாக உக்தவ் கைங்கர்யஸ்ய அபசாரதா உபாயத்வம் இதி தியாகோ தத் ஸ்வரூப அங்கதா பவேத் -என்றும்
சாத்விக தியாக யுக்தாநாம் தர்மாணம் ஏகத் அங்கதா நூநம் விஸ்ம்ருத காகாதி வ்ருத்தாந்தை உபவர்ணிதா -என்றும்
ஸக்ருத் ப்ரபத நேந ஏவ தர்மாந்தர தவீயஸா தத் ஷணே அபிமதம் பூர்வே சாம்ப்ராபு இதி சுச்ருமே -என்றும்
ப்ரஸக்த அங்கத்வ பாதே து ப்ரஹ்மாஸ்த்ர சம தேஜஸே உபாயஸ்ய ப்ரபாவச்ச கைங்கர்யாதி ச ஸூஸ் திரம் -என்றும்
சொல்லக் கடவது இறே

ஆகையால் –
இங்கு சர்வ தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகத்தை அங்கமாக விதிக்கிறது -என்றும் –
அவை அங்கமாம் படி இங்கு புத்தி விசேஷ தியாக மாத்திரம் விதிக்கிறது -என்றும்
சொல்லுகிற பக்ஷங்கள்
ஆஞ்ஞா அநு பாலனாதி சாஸ்த்ரங்களுக்கும் -ப்ரபத்திக்கு நைரபேஷ்யம் சொல்லுகிற சாஸ்த்ரங்களுக்கும்-
பூர்வாச்சார்ய சம்பிரதாயங்களுக்கும் ப்ரபன்னராய்ப் போந்த பூர்வ சிஷ்டர்களுடைய ஆசாரத்துக்கும் விருத்தங்களாம்

இப்படி யுக்த தோஷங்களாலே தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகமும் ப்ரபத்திக்கு அங்கமன்று –
யுக்த நைரபேஷ்யத்தாலே அந்த தர்மங்களினுடைய ஸ்வரூபமும் இதுக்கு அங்கம் அன்று
ஆகையால் இங்கு மற்றொரு தர்மத்தாலும் இப்பிரபத்திக்கு அபேக்ஷை இல்லை என்கையில் இத் தியாக விதிக்கு தாத்பர்யம்

இப்படி ப்ரதிஷேதிக்கைக்குப் பிரசங்கம் வேணும் -இங்கு என்ன தர்மங்கள் ப்ரஸக்தங்களாகப் ப்ரதிஷேதிக்கப் படுகின்றன என்னில்
வேதாந்த சோதிதைகளான வித்யைகளில் ஒரு வித்யையில் ஓதி அங்கங்களாகத் தோற்றின வர்ணாஸ்ரம தர்மங்களும் கதி சிந்த நாதிகளும்
வித்யாந்தரத்திலும் வருமா போலே ந்யாஸ வித்யையிலும் இவை துல்ய நியாதயையாலே அங்கங்களாய் வரப் புக
இப்படி அங்கத்வ பிரசங்கம் உடைய சர்வ தர்மங்களாலும் இதுக்கு அபேக்ஷை இல்லை என்கை இவ்விடத்துக்கு உசிதம்

இத் தர்மங்களுக்கு -ஸஹ காரித்வேந –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3–4-33-என்பதில் சொன்ன வித்யா ஸஹ காரித்வ வேஷம் தவிர்த்தாலும்
விஹிதத் வாச்சாச்ரம கர்மாபி -3-4-32-என்பதில் சொன்ன விநியோகாந்தரத்துக்கு ப்ரபன்னன் பக்கல் நிவாரகர் இல்லை –
ஆகையால் இத் தர்மங்களினுடைய அனுஷ்டானமும் -தர்மங்களைத் த்யஜிக்கையும் ப்ரபத்திக்கு அங்கம் இல்லாமையால்
அசக்யங்களில் நைரஷ்யம் அதிகாரத்தில் சொருகும் -ஸக்யமான நித்ய நைமித்திகங்களினுடைய
அனுஷ்டானம் ஆஞ்ஞா அநு பாலனமான கைங்கர்ய மாத்ரமாம்

சங்கல்ப மாத்ரமேவ அங்கம் ஸ்ருதம் ஆசரணம் புந அநங்கம் ஆஞ்ஞயா பிராப்தம் சங்கல்ப நிபந்தநம்–

இப்படியாகில் இவனுக்கு நித்ய நைமித்திகங்களில் அடைக்க ஒண்ணாத ப்ரபூத கைங்கர்யங்களுக்கு ப்ரயோஜகர் -ஆர் என்னில் –
இவை இவனுக்கு உபாயாந்தரத்தில் புகா –
அங்காந்தர நிரபேஷையான ப்ரபத்திக்கு பரிகரங்களும் ஆகா -அகரணத்தில் ஈஸ்வரன் வெறுக்கும் என்று செய்கிறானும் அல்லன்-
தனியே இவை தமக்கு ஒரு பாப க்ஷய ஸ்வர்க்க பசு புத்ராதி பலாந்தரத்தை ஆசைப்பட்டுச் செய்கிறானும் அல்லன் –
லௌகிகரானவர்கள் த்யூயாதிகள் பண்ணுமாப் போலே கேவலம் தன உகப்பாலே ப்ரவர்த்திக்கிறானும் அல்லன் –
முக்தரைப் போலே பகவத் அபிப்ராயத்தைப் பிரத்யக்ஷமாகக் கண்டு அவனை உகப்பிக்கைக்காக ப்ரவர்த்திக்கிறானும் அல்லன் –
மற்று எங்கனே என்னில்
இக்கைங்கர்யங்களுக்கும் பலாந்தரங்கள் போலே பகவத் ப்ரீதியும் பலமாக சாஸ்த்ர சித்தமாகையாலே அவன் உகப்பிலே
சத்வோத்தரனான தன் ப்ரக்ருதி ஸ்வ பாவத்தாலே ருசி பிறக்கையாலே
ஸூஹ்ருத் புத்ராதி உபாலாலனங்களில் போலே சர்வவித பந்துவான அவனுடைய ப்ரீணநங்களிலே சாஸ்திரம் கை விளக்காகப் பிரவர்த்திக்கிறான்

இவ்விடத்தில் சிலர் சர்வேஸ்வரன் பக்கலிலே சர்வ பர ந்யாஸம் பண்ணின விவேகிக்குத் த்யாஜ்ய உபாதேய விபாக நிர்ணயகம் ஸ்வரூப அஞ்ஞானம் அன்றோ –
இப்படி இவன் ஸ்வரூப வச்யனாம் அத்தனை போக்கி சாஸ்த்ர வச்யனாம் படி என் என்று சொல்லுவார்கள் –
இதுவும் அநு பந்நம் -எங்கனே என்னில்
ஸ்வரூபம் இன்னபடி இருக்கும் என்று சாஸ்திரத்தைக் கொண்டு அறுதியிட்டால் -இஸ் ஸ்வரூபத்துக்கு இன்ன புருஷார்த்தமும் தத் உபாயமும் த்யாஜ்யம்
இன்ன புருஷார்த்தமும் தத் உபாயமும் உபாதேயம் -என்று பிரித்துத் தெளிகைக்கு முக்தனாம் அளவும் சாஸ்திரம் ஒழிய வழியில்லை –
ஸ்வரூபத்தில் சேக்ஷத்வாதிகளைக் கொண்டு சில ஓவ்சித்திய மாத்திரம் அறியலாம் அத்தனை அல்லது -சேஷி உகந்த கைங்கர்யத்தின் பிரகாரம் இது –
இக்கைங்கர்யத்துக்கு உபாயங்கள் இவை -என்று ஸ்வரூப ஞானம் நியமித்துக் காட்டாது –
ஆனபின்பு சாஸ்திரத்தை அநாதரித்து நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டதால் -விஹிதங்கள் தம்மிலும் நியாய ஆர்ஜிதம் அல்லாத த்ரவ்யங்களைக் கொண்டதால் –
தனக்கு ருசித்த படியே சாஸ்த்ர விருத்தமாய் இருக்கும் கட்டளையிலே கைங்கர்யத்தை நடத்தப் பார்த்தால் உபசார அபசாரங்களுக்குப் பிரிவில்லையாம்
அப்போது தன் ருசி ஒழிய வேறு நியாமகம் இல்லாமையால் முமுஷுக்கள் தவிர்ந்து போருகிற சர்வ நிஷித்தங்களையும்
தன் ருசி மாத்திரத்தாலே கைங்கர்யமாக அனுஷ்ட்டிக்கப் பிரசங்கிக்கும்
ஹவிர் நிவேதனத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் -சாஸ்த்ர விருத்தாநி சம்ப்ருத்ய-ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் -என்று அருளிச் செய்தார்
ஆகையால் சாஸ்த்ர வஸ்யனாய் தன் அதிகாரத்துக்கு சாஸ்திரம் அடைத்த கைங்கர்யங்களையே பண்ணப் பிராப்தம் –

தஸ்மாத் சாஸ்திரம் பிரமாணம் தே கார்ய அகார்ய வியஸ்திதவ் ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்த்தும்
இஹ அர்ஹஸி -ஸ்ரீ கீதை -16-24-என்ற உபதேசம் -சர்வாதிகாரிகளுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆளவந்தார் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹத்திலே -ஜ்ஞாநீ து பரமை காந்தி ததாயத்தாத்ம ஜீவந –
தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ்ததேகதீ-29- -என்றும்
பகவத் த்யான யோகோக்தி வந்தன ஸ்துதி கீர்த்தனை லப்தாத்மா தத் கத பிராண மநோ புத்தி இந்திரிய க்ரிய-30–என்றும்
விஜ கர்மாதி பக்தயந்தம் குர்யாத் ப்ரீத் யைவ காரித உபாயதாம் பரித்யஜ்ய நியஸ்யேத்தேவே து தமபி -31–என்றும் அருளிச் செய்தவிடத்தில் –
ப்ரீத் யைவ காரித-என்றதுவும் சாஸ்திரம் வேண்டா என்றபடி அன்று –
இங்கு சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டுகிற கைங்கர்யம் தன்னில்
ஸ்வாமி சந்தோஷ ஜனகத்வம் அடியாக சேஷபூதனான தனக்குப் பிறக்கிற ப்ரீதியினுடைய ப்ரேகத்வ அதிசயம் சொல்லுகையிலே தாத்பர்யம் –

இஸ் ஸ்லோகங்களை உபாசன அதிகாரி பக்கலிலே யோஜிக்கும் போது உபாஸ நாதிகளுடைய ஸ்வாதுதமத்வத்தையும்
பல உபாயமான சரண்யனுக்குப் ப்ரசாதனமாய்க் கொண்டு பலத்துக்கு சாஷாத் உபாயம் அன்றிக்கே நிற்கிற நிலையையும்
இவ்வுபாச நத்தாலே ப்ரசன்னமான சர்வேஸ்வரன் தானே பலத்துக்கு சாஷாத் உபாயமாய் நிற்கிற நிலையையும் சொல்லுகையிலே நோக்காகக் கடவது –

ஸ்வதந்த்ர பிரபத்தி நிஷ்டன் திறத்தில் -இஸ் ஸ்லோகங்களை யோஜிக்கும் போது-
இவை ஆஞ்ஞா அநுஜ்ஜைகளாலே பண்ணும் கைங்கர்யங்கள் எல்லாம்
பக்தி யோகாதிகளின் கட்டளை குலையாது இருந்தாலும் ஸ்வாமி ஸந்தோஷம் ஒழிய வேறொரு ஸ்வர்க்க மோஷாதி பிரயோஜனத்துக்கு
உபாயமாக அனுஷ்டிக்கிறான் இல்லாமையாலே-
இவனுக்கு அநந்ய உபாயதையும் அநந்ய ப்ரயோஜனதையும் குலையாதே இருக்கிற படியையும்
அகிஞ்சனான இவனுக்கு ஈஸ்வரன் தானே உபாயாந்தர ஸ்தானத்தில் நின்று பலம் கொடுக்கிறபடியையும் சொல்லுகையிலே தாத்பர்யம் –

இரண்டு அதிகாரிகளும்
பிரதிபுத்தா ந சேவந்தே-என்றும் –
அநந்ய தேவதா பக்தா -என்றும்
நான்யம் தேவம் நமஸ்குர்யாத்-என்றும் -இத்யாதிகளில் படியே
பரமைகாந்திகளாய் இருக்க –
இங்கு நிஜ கர்மாதி பக்தயந்தம் –ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -31-என்று அருளிச் செய்தபடியே
வர்ணாஸ்ரமாதி தர்மங்களை இவர்கள் அனுஷ்ட்டிக்கப் புக்கால்
அக்னீ இந்திராதி தேவதா வ்யாமிஸ்ரதையாலே பரமை காந்தித்தவம் குலையாதோ-என்று வேதாந்த வ்யுத்புத்தி பண்ணாதார் சோத்யம் பண்ணுவார்கள்
இவ்விடத்தில் சாஷாதப்ய விரோதம் ஜைமினி -1 –2–29-என்கிற ஸூத்ரத்தின் படியே அக்நயாநாதி வ்யுத்புத்தி வசத்தால் அக்நயாதி சப்தங்களை
சர்வேஸ்வரனுக்கு சாஷாத் வாசகங்களாக நிர்வஹிக்கலாம் இடத்தில் இவை ஸ்ரீ சஹஸ்ர நாமத்தின் திருநாமங்கள் படியே
நிற்கையாலே இவற்றில் தேவதாந்ந்த்ர ஸ்பர்சம் இல்லை –

தேவான் ருஷீன் பித்ரூன் பகவாதத்மகாந் த்யாத்வா சந்தர்ப்யம்-என்று நித்ய ப்ரப்ருதிகளிலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த படியே
தத் தத் தேவதா சரீரிகனாய்ப் பரமாத்வை அனுசந்தித்திக் கொண்டு தத் தத் கர்மங்களை அனுஷ்டிக்கை சாஸ்த்ர பல ஸித்தமான இடத்தில்
உபாஸாத் தரைவித்யாத் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1–1–32–என்கிறபடியே ப்ரதர்தன வித்யாதிகளிலே விதேஷ்யமான திவ்யாத்ம ஸ்வரூபத்தாலும்
சேதன அசேதன விசிஷ்டனாகவும் பரமாத்மாவை உபாசியா நின்றாலும் விசேஷணமான சேதன அசேதனங்களில் ஆராதயத்வம் இல்லாதாப் போலே
இவ்விடத்தில் விசேஷணமான தேவ ரிஷி பித்ராதிகளை இவன் ஆராதிக்கிறான் அல்லன்

அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா ச பிரபு ரேவச -ஸ்ரீ கீதை -9–24-என்றும்
ஹவ்ய கவ்யம் புகேகஸ் த்வம் பித்ரு தேவ ஸ்வரூபத்ருத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1- 19-73-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹுதாச நாந் சர்வ பூதாந்த்ர ஆத்மாநம்
விஷ்ணுமேவ யஜந்தி தே -சாந்தி பர்வம் -355-41-என்றும்
சர்வ அந்தர்யாமியானவனே பிரதிபுத்தனான இவனுக்கு ஆராத்யன் ஆகையால் இப்படி தெளிந்து அனுஷ்டிக்குமவனுக்கு
யதா சாஸ்திரம் அனுஷ்டிக்கிற கைங்கர்யங்களால் உபாயாந்தர ஸ்பர்சம் வராதாப் போலேயும்
ஆராத்ய விசேஷணமாக விதி பல ப்ராப்தங்களான சேதன அசேதனங்களால் தேவதாந்த்ர ஸ்பர்ச தோஷம் வாராது

நாராயணம் பரித்யஜ்ய ஹ்ருதிஸ்தம் பிரபுமீஸ்வரம் -யோ அந்நியம் அர்ச்சயதே தேவம் பரபுத்தயா ச பாப பாக் -ப்ரஜாபத்தியா ஸ்ம்ருதி
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யேநாபி மந்யதே மந்யதே -ச யாதி நரகம் கோரம் யாவச் சந்த்ர திவாகரம் -என்றும்
புத்த ருத்ராதி வசதீம் மசாநம் சவமேவ ச அடதீம் ராஜதாநீம் ச தூரத பரிவர்ஜயேத்-சாண்டில்ய ஸ்ம்ருதி -என்றும் இத்யாதிகளில் படியே
தேவதாந்த்ரங்களிலே பரத்வ புத்தி பண்ணுதல் -சமத்துவ புத்தி பண்ணுதல் –
நித்ய நைமித்திகங்களிலே துவக்கற்ற தேவதாந்த்ரங்களிலே செல்லுதல் செய்யில் பரமைகாந்திக்கு தோஷமாம் அல்லது
நித்ய நைமித்திகங்களில் ஆராத்யனான சர்வ அந்தர்யாமிக்குச் சரீரமாய் நிலையில் இத்தேவதைகள் பக்கல்
பரத்வ புத்தியும்- சாம்ய புத்தியும் -ஸ்வ நிஷ்ட புத்தியும் -ஆராத்யத்வ புத்தியும் -பல பிரதான புத்தியும் -இல்லாமையாலே
உபாஸ்ய விசேஷணங்களான பிராண வைஸ்வாநர த்ரைலோக்யாதிகளால் இவனுக்கு வியபிசாரம் வராதாப் போலே
சாஸ்த்ர சித்தங்களான அக்னீ இந்திராதி விசேஷணங்களால் இவனுக்கு ஏகாந்த்ய விரோதம் வாராது –

வங்கிபுரத்து நம்பியும் ப்ரபன்னனுக்கு அஹோராத்ர க்ருத்யமான பகவத் சமாராதனத்தை சொல்ல இழிந்து
காயத்ரீ ஜெப பர்யந்தம் மந்த்ர ஆசமன பூர்வகம் -சாந்த்யம் கர்மாகிலம் சாது ஸமாப்ய ச யதா விதி –
ஸமிதாஜ் யாதிபிர் த்ரவ்யை மந்தரைரபி யதோதிதை-ஹூத்வா அக்னீந் அக்னி ஹோத்ராதவ் யுக்தம் காலமபி ஷிபன் -என்றும்
ததோ மாத்யந்தினம் கர்ம ஸ்வோதிதம் ஸ்ருதி சோதிதம்-ஸ்நாநாதி ப்ரஹ்ம யஞ்ஞாந்தம் க்ருத்வா அகில மதந்த்ரித-என்றும்
ஹோமம் பித்ரு க்ரியாம் பச்சாத் அநு யாகாதிகம் ச யத் -என்றும் இப்பிரகாரங்களிலே
தத் தந்மந்த்ர பூர்வகங்களான வர்ணாஸ்ரம தர்மங்களை அருளிச் செய்தார்

பட்டரும் ஆழ்வானும் தாம் தாங்கள் அருளிச் செய்த நித்யங்களிலே –
ஸ்ருதி ஸ்ம்ருதி யுதிதம் கர்ம யாவச் சக்தி பாராத்மந –
ஆராதநத்வே நாபாத்ய ச ஊர்த்வ புண்டரச்ச தர்ப்பயேத் -இத்யாதிகளை அருளிச் செய்தார்

பெரிய ஜீயரும் -நம் ஜீயரும் -ஸ்ரீ பராசர்ய பட்டார்ய சரணவ் ஸம்ஸ்ரேயமஹி -இத்யாதியாலே
சம்பிரதாய விசேஷ ஞாபந அர்த்தமாக குரு நமஸ்காராதிகளைப் பண்ணி
பகவச் சரணாம் போஜ பரிசார்ய விதிக்ரமம் -ஏகாந்திபிர் அநுஷ்டேயம் நித்யம் சமபிதத்யமஹே -என்று தொடங்கி
ஆபோ ஹித்யாதிபிர் மந்த்ரை வாசகை பரமாத்மன சம் ப்ரேஷிய மந்த்ர ஆசமனம் மந்த்ரைஸ் தத் ப்ரதிபாதிகை–
ஆதித்யாந்த ஸ்தி தஸ்ய அர்க்க்யம் விதீர்ய பரமாத்மன -ப்ரதிபாதி கயா விஷ்ணோ சவித்ரயா தம் ஜபேத்விரம்-த்யாயன் ஜப்த்வோ
பதிஷ்டேத தமேவ புருஷோத்தமம்-நாராயணாத் மகான் தேவான் ருஷீன் சந்தர்ப்பயேத் பித்ரூன் -என்று அருளிச் செய்தார்

பாஷ்யகார சம்பிரதாயத்தில் உள்ள குலங்கள் எல்லாம் இன்று அறுதியாக ஸ்வ ஸூத்ர உக்தத்தின் படியே தத் தத் தேவதா
மந்த்ரங்களைக் கொண்டு விவாஹ உப நயனாதிகள் அனுஷ்ட்டிக்கவும் காணா நின்றோம்
பெரிய நம்பி முதலான பரமாச்சார்யர்களும் தம் தம் ஸூத்ரங்களின் படியே யஞ்ஞாதிகள் பண்ணினார்கள்
என்னும் இடம் சர்வருக்கும் பிரசித்தம்

ஆன பின்பு பாஷ்யகாரருடையவும் தத் சிஷ்ய ப்ரவிஷ்யர்களுடையவும் உபதேச அனுஷ்டானங்களில் நிஷ்டை யுடையாருக்கு
ஆகம சித்தாந்த அநு வர்த்திகளான சம்ஹிதா விசேஷங்களில் பிரதிநியதமாகச் சொல்லும் மந்த்ர விசேஷங்களைக் கொண்டு
க்ரியா விசேஷங்கள் அனுஷ்ட்டிக்க ஒண்ணாது
அதிகாராதிகளுக்கு அநு ரூபமாகச் சதுர்வித பஞ்சராத்ரமும் விபக்தமாய் நிற்கும் நிலையம் வசன விரோதம் இல்லாவிடத்தில்
அநுக்தம் அந்யதோ க்ராஹ்யம் -என்கிற நியாயம் நடக்கிறபடியும்
நாலு ஆஸ்ரமத்திலும் ப்ரஹ்ம வித்யையும் மோக்ஷ பலமும் யுண்டு என்று
சாரீரகாதிகளிலே சமர்த்தித்தால் போலே ஆகம சித்தாந்திகள் நாலிலும் சாஷான் மோக்ஷ உபாயமும் மோக்ஷ பிராப்தியும் யுண்டு என்றும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ரக்ஷையிலே உபபாதித்தோம்
இச் சாஸ்திரங்களில் வியவஸ்திதமாக விதித்தபடி ஒழியத் தம் தமக்கு ருசித்த மந்த்ரங்களைக் கொண்டு சர்வ கர்மங்களையும்
அனுஷ்ட்டித்தால் ப்ராயச்சித்தாதிகளும் பரக்கச் சொல்லப் பட்டன –
ஆனபின்பு முக்தனாம் அளவும் ஸ்வ அதிகார அநு குணமாகச் சாஸ்திரம் சொன்ன கட்டளை அன்றிக்கே கைங்கர்யம் பண்ண விரகில்லை

இப்படி பிரபன்னனுக்கும் சாஸ்த்ர வஸ்யனாய் சாஸ்த்ர யுக்த கைங்கர்யமே பண்ண வேண்டுகையாலே
விதி நிஷேத லங்கந பேஷமும் விஹித நிஷித்த தியாக பக்ஷமும்
வர்ணாஸ்ரம தர்மங்கள் உபாதி நிமித்தங்கள் ஆகையால் ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு த்யாஜ்யங்கள் என்கிற பக்ஷமும்
இவை செய்யவுமாம் தவிரவுமாம் -என்கிற பக்ஷமும் இவை தவிர்ந்தாலும் உகப்பிக்குமத்தனை ஒழிய
வேறொரு ப்ரத்யவாயாம் இல்லை என்கிற பக்ஷமும்
இவை அனுஷ்டியாத போது லோக விரோத மாத்திரமே ப்ரத்யவாயம் என்கிற பக்ஷமும் மற்றும் இப்புடைகளில் உள்ள பக்ஷங்களும் எல்லாம்
சம்மயங்நியாய அநு க்ருஹீத சாஸ்த்ர சம்பிரதாய விருத்தங்களான படியால் சத்வஸ்தர்க்கு அநு பாதேயங்கள்

சந்யாச ஆஸ்ரமஸ்தர்க்குப் பண்டுள்ளவை சிலவற்றை நிஷேதித்துப் புதியனவற்றை சிலவற்றை விதிக்குமா போலே
பாகவத தத்வம் அடியாகச் சிலவற்றை நிஷேதித்துச் சிலவற்றை அபூர்வமாக விதித்தாலும் –
சந்த்யா ஹீந அசுசிர் நித்யம் அநர்ஹ சர்வ கர்மஸூ -இத்யாதிகளிலே
அவசிய கர்தவ்யங்களாகச் சொல்லப்பட்ட கர்மங்களை விட ஒண்ணாது –
தர்ம சாஸ்த்ர ஸூத்ர பேதங்களில் போலே
பகவத் சாஸ்த்ர சம்ஹிதா பேதங்களிலும்
இதிஹாச புராணங்களிலும் சொல்லும் சந்த்யா உபாசன பேதங்களை அவ்வோ சாஸ்திரங்களில் இழிந்தவர்கள் அனுஷ்ட்டிக்கக் கடவர்கள்

தைவதான்யபி கச்சேது -என்றும் –
தேவ ஸ்தான ப்ரணாமனம் -என்றும் இப்புடைகளிலே தர்ம சாஸ்த்ர இதிஹாசாதிகளில் சொன்ன ஆசாரமும்
பரமை காந்திக்கு சாஸ்த்ர பலத்தால் பகவத் விஷயத்திலே நியதம் -ஆகையால் ஒரு சாஸ்திரத்துக்கும் விரோதம் இல்லை –
தஸ்மாத் அஷ்டாக்ஷரம் மந்த்ரம் மதபக்தைர் வீதிகல்மஷை -சந்த்யா காலேஷூ ஜப்தவ்யம் சததம் சாத்மசுத்தயே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ சாஸ்திரங்களில் சொன்னதுவும்
த்வயம் அர்த்தானுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா -என்று கத்யத்தில் அருளிச் செய்ததுவும்
மற்றும் இப்புடைகளில் உள்ளவையும் எல்லாம்
அவசிய கர்தவ்யங்களான நித்ய நைமித்திகங்களுக்கு விரோதம் வராதபடி அவற்றுக்குப் போக்கி மிக்க காலத்திலே யாகக் கடவன்
ஸ்ரவ்த ஸ்மார்த்தா விருத்தேஷூ காலேஷூ ஜபம் ஆசரேத் -என்று நாரதாதிகளும் சொன்னார்கள்
ஹூத்வா அக்னீந் அக்னி ஹோத்ராதவ் யுக்தம் காலமபி ஷிபன் -என்று வங்கிபுரத்து நம்பியும் அருளிச் செய்தார்
பாஷ்யகாரர் அந்திம திசையிலும் வருந்தி யெழுந்திருந்து சந்த்யா காலத்திலே ஜலாஞ்சலி ப்ரஷேபம் பண்ணி அருளினார்

ஆகையால் வர்ணாஸ்ரம தர்மங்கள் உபாதி நிமித்தங்கள் என்று த்யஜிக்கை பூர்வ அனுஷ்டானாதி விருத்தம் –
இப்படி த்யஜிக்கில் தேக இந்திரியாதி உபாதிகளை ஒழிய
மாலா கரண தீபா ரோபணாதி விசேஷ கைங்கர்யங்களும் அனுஷ்ட்டிக்க ஒண்ணாமையாலே அவையும் எல்லாம்
உபாதி நிமித்தங்களாகத் த்யாஜ்யங்களாம்
அவை அனுஷ்ட்டிக்க ஆசைப்படில் அவற்றுக்கு யோக்யதா ஆபாதங்களான ஆசார ஸம்ஸ்காராதிகளையும் விட ஒண்ணாதே -ஆனபின்பு
1–ஆஹார க்ரஹ மந்த்ராதி ஜாத்யாதி நியமைர் யுத-குர்யாத் லஷ்மீ ச கைங்கர்யம் சக்த்யா அநந்ய ப்ரயோஜன –
2–மங்கல்ய ஸூத்ர வஸ்த்ரா தீந் சம்ரக்ஷதீ யதா வதூ -ததா ப்ரபந்ந சாஸ்த்ரீயா பதி கைங்கர்ய பத்ததிதம்
3–யத்வத் மங்கல்ய ஸூத்ராதே த்யாகே சம் ரஷணேபி அபி வா -ரஷேத் நிரோதை போகைர் வா பதி தத்வத் இஹ அபி
4—அவஜ் ஞார்யம் அநர்த்தாயா பக்த ஜென்மாதி சிந்தனம் சாஸ்த்ர வியவஸ்தா மாத்ரார்த்தம் ந து தத் தூஷ்யதி க்வசித்
5–அத ஏவ ஹி சாஸ்த்ரேஷூ தத் தத் ஜாத்யைவ தர்சிதா–தர்மவ்யாத துலாதார சபரீ விதுராய
6–ஸ்வ ஜாதி அநு குண ஏவ ஏஷாம் வ்ருத்தி அபி இதிஹாஸிகீ விசேஷ விதி சித்தம் து தத்வலாத் தத்ர யுஜ்யதே –
7—தேச காலாதி கார்யாதி விசேஷ ஷூ வியவஸ்திதா ந தர்மா ப்ராப்திம் அர்ஹந்தி தேச காலாந்தராதிஷூ
8–கேசித் தத் தத் உபாக்யாந தாத்பர்ய க்ரஹணாஷமா-கலி கோலா ஹல க்ரீடாம் வர்த்தயந்தி ரமாபதே
9–மாத்ருபி பித்ருபிச் சா ஏதா பதிபிர் தேவரை ததா -பூஜ்யா பூஷயிதா வ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸூபி
10–ஜாமயோ யாநி கேஹாநி சா பந்தி அப்ரதி பூஜிதா -தாநி க்ருத்யா ஹதா நீவ விநச்யந்தி சமந்தத
11–ஏவ மாதி ஷூ பூஜோக்தி யதா ஓவ்சித் யாத் நியமதே -பக்த ம்லேச்சாதி பூஜோக்தி ஏவம் ஏவ நியம்யதாம்
இந்நியமங்கள் எல்லாம் சம் பிரதிபன்ன சிஷ்ட அனுஷ்டான பரம்பரையாலும் சித்தங்கள்
ஆகையால் தன் வர்ணாஸ்ரமாதிகளுக்கு அடைத்த நியமங்களோடே பகவத் கைங்கர்யம் பண்ணுகை பரமை காந்தித்தவ விருத்தம் அன்று –

1-சாஷாத் லஷ்மீ பதவ் ஏவ க்ருதம் கைங்கர்யம் அஜ்ஞசா -சார கல்க விபாகேந த்விதா சாத்பி உதீர்யதே
2-க்ருதக்ருத்யஸ்ய கைங்கர்யம் யத் அநந்ய பிரயோஜனம் குர்வாதி ரக்ஷனார்த்தம் வா தத் சாரம் சம் ப்ரசக்ஷதே
3-டம்பார்த்தம் பர பீடார்த்தம் தந் நிரோதார்த்தம் ஏவ வா ப்ரயோஜநா அந்தரார்த்தம் வா கைங்கர்யம் கல்க இஷ்யதே
பரமை காந்திகள் அல்லாதார் பண்ணும் கைங்கர்யத்தை சர்வேஸ்வரன் திருவடிகளால் கைக் கொள்ளும் என்னும் இடத்தையும்
பரமை காந்திகள் பண்ணும் கைங்கர்யத்தைத் திரு முடியாலே கைக் கொள்ளும் என்னும் இடத்தையும்
தத் சர்வம் தேவ தேவஸ்ய சரணா யுபதிஷ்டதே -என்றும்
யா க்ரியா சம் ப்ரயுக்தா ஸ்யு ஏகாந்த கத புத்திபி தா சர்வா சிரஸா தேவ பிரதி க்ருஹணந்தி வை ஸ்வயம் -என்றும்
ஸ்ரீ வேத வியாச பகவான் அருளிச் செய்தான்

இப்படி இவன் பகவத் ஆஞ்ஜையாலே அனுஷ்டிக்கிற நித்ய நைமித்திகங்களும் –
பகவத் அநுஜ்ஜையாலே இவன் உகப்பே பிரயோஜனமாக
அனுஷ்டிக்கிற ஏற்றமான கைங்கர்யங்களும் இப் பிரபத்தியோடே துவக்கற்று நின்ற நிலை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற விதானத்தாலே ஸித்தமாயிற்று

அத சக்யானி ஸர்வாணி ந பிரபத்யர்த்தம் ஆசரேத் -அசக்யேஷூ ச சாமர்த்யம் ந ததர்த்தம் சமார்ஜயேத் –
இந்த யோஜனையில்-அதிகாரமான ஆகிஞ்சன்யமும் -சோகியாதே கொள்-என்று தேற்றுகிற வாக்யத்தாலே ஸூசிதம்
அநு வாத பக்ஷத்தில் தன் அசக்தியால் கழிந்தவை ஒழிய ஸக்யமாகச் செய்கிற ஆஞ்ஞா அநு பாலநாதிகளும்
ப்ரபத்தியில் துவக்கு ஒண்ணா என்னும் இடம் ஏக -சப்தத்தில் விவஷிதமாகக் கடவது
இப் பஷத்தில் மாஸூச என்கிற வாக்கியம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று யுக்தமான அதிகாரத்தை வ்யக்தமாக்கிக் கொண்டு
மேல் உள்ள நிர்ப்பரத் வாதிகளை முன்னிட்டு உத்தர காலத்தில் இருக்கக் கடவ படியை எல்லாம் உப லஷிக்கிறது

தியாக விதி பஷத்துக்கு பிரமாணம் விரோதம் வராதபடி சில கதிகள் உண்டு –
ஆத்ம அசக்ய வ்ருதா ஆயாச நிவாரணம் இஹ அபி வா –லஜ்ஜா புரஸ்சர தியாக வாத அபி அத்ர நியம்யதாம் –
ஸ்வ துஷ் கரேஷூ தர்மேஷூ குசகாச அவலம்பத–ஆசா லேச அநு வ்ருத்தி வா தியாக உக்த்வா விநி வார்யதே-
அவி சிஷ்ட பலத்வேந விகல்போ யச்ச ஸூத்ரிதா –தந் முகேந அபி ப்ரஹ்மாஸ்த்ர நியாய ஸூசநம் –
அஸக்யத்திலே ப்ரவ்ருத்தனை தவிர் என்கையும்-
தனக்கு துஷ் கரங்களாய் கழிந்து நிற்கிறவற்றிலே அபி நிவேசம் யுடையவனை இது வேண்டா என்கையும் –
விகல்ப்பித்த உபாயாந்தரங்களிலே ஒன்றை இங்கே கூட்டில் ப்ரஹ்மாஸ்த்ர நியாயத்தாலே விரோதிக்கும் என்று கழிக்கையும் விதி பிரகாரங்கள்

சர்வ தர்மான் பரித்யஜ்ய -ஆறு பொருள்களின் சுருக்கம் –
அதோ அசக்த அதிகாரத்வம் ஆகிஞ்சன்ய ப்ரஸ் க்ரியா –அநங்க பாவோ தர்மாணாம் அசக்ய ஆரம்ப வாரணம் –
தத் ப்ரத்யாசா பிரசமனம் ப்ரஹ்மாஸ்த்ர நியாய ஸூசநம் -சர்வ தர்ம பரித்யாக சப்தார்த்தா –சாது சம்மதா-
தேவதாந்த்ர தர்மாதி தியாக யுக்தி -அவிரோதி நீ -உபாசகே அபி துல்யவாத் இஹ சா ந விசேஷிகா -உபாய உபாய ஸந்த்யாகீ-
இத்யாதிகளில் சொன்ன உபாய தியாகமும் இப்பிரகாரங்களிலே நிர்வாஹ்யம்

மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னமதில் ஆசை தன்னை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயனத்திரம் போல் வெள்கி நிற்கும்

நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின் தனிமை துணையாக என்தன் பாதம்
பூண்டால் உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழ்வோமே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –