திவ்ய பிரபந்தம் –மூலம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஷயம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் -மூல கர்த்தாக்கள்
பழைய செழிய தெய்வத் தமிழ் -பாஷை
ஞானம் கனிந்து நலம் கொண்டு நாடொறும் நையும் ஞானம் அனுட்டானம் இவை நன்றாக உடைய நம் நல் குரவர்-ஆதரித்தவர்கள்-
ஸ்ரீ வத்ஸ ஸ்ரீ கௌஸ்துப வைஜயந்தி வனமாலைகளையும் ஸ்ரீ பூமி நீளை களையும் ஸ்ரீ பஞ்சாயுத ஆழ்வார்களும்
ஸ்ரீ அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகளையும் பார்த்து -நீங்கள் போய் லீலா விபூதியிலே நாநா வர்ணங்களிலும் திருவவதரித்து
அகிலாத்ம உத்தாரணம் பண்ணுங்கோள் என்று நியமித்து அருள —த்ரமிட பூ பூக்கத்திலே நிமக்நரை உயர்த்த நாநா வர்ணங்களில் வந்து திருவவதரிக்க –
சர்வேஸ்வரனும் அவர்களுக்கு மயர்வற மதி நலம் அருளி அவர்கள் முகேந ஸர்வாதிகாரமான திராவிட வேத ரூப திவ்ய பிரபந்தங்களை
பிரகாசிப்பித்து அருளினான் – ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் -ஆறாயிரப்படி குரு பரம்பரா பிரபாவம் பிரவேசித்து இறுதி ஸ்ரீ ஸூக்திகள்
ஸ்ரீ கருட வாகன பண்டிதரும் இதே போலே அருளிச் செய்துள்ளார் –
ஆழ்வார்கள் சம்சாரிகளில் ஒருவரால் இத்தனை -ஈட்டு ஸ்ரீ ஸூக்தி –
சாற்றிய காப்புத் தால் செங்கீரை சப்பாணி மாற்றரிய முத்தமே வாரானை போற்றரிய அம்புலியே யாய்நத சிறு பறையே
சிற்றிலே பாம்பு சிறு தேரோடும் பத்து -பிள்ளைக் கவிகள் பாடும் வகை முறைகளைப் பற்றி வச்சணந்தி மாலை சொல்லும்
——————————————————————————
அஞ்ச உரப்பாள் யசோதை -ஆணாட விட்டிட்டு இருக்கும் —
இதல் -சீற மாட்டாள் என்கிற அர்த்தத்தில் உரப்பாள் -என்பதே சரியான பாடம் –
உரைப்பாள் தப்பான பாடம்
——————————————————————————
இராமானுச நூற்றந்தாதி -95
மண்ணின் தலத்து உதித்து மறை நாலும் வளர்த்தனனே -தப்பான பாடம்
மண்ணின் தலத் துதித் துய மறை நாளும் வளர்த்தனனே -சரியான பாடம்
மா முனிகள் வியாக்யானம்
ஸ்ரீ வைகுண்டத்தில் -இருந்து பூ தலத்திலே திருவவதரித்து சர்வ உஜ்ஜீவன சாஸ்திரமான ருகாதி சதுர் வேதத்தையும்
அசங்குசிதமாக நடத்தி அருளினார் –
உய் மறை நாலும்-சர்வ உஜ்ஜீவன சாஸ்திரமான ருகாதி சதுர் வேதத்தையும்-
———————————————————————————
பல கோடி நூறாயிரம் -விட
பல் கோடி நூறாயிரமே சிறந்த பாடம்
————————————————————————-
சேவடி செவ்வி திருக் காப்பு விட –
செவ்வடி செவ்வி திருக் காப்பு -சிறந்த பாடம்
—————————————————————————
பெரியாழ்வார் மங்களா சாசனம் செய்து அருளிய 19 திவ்ய தேசங்கள்
திருவரங்கம் /திருவெள்ளறை /திருப்பேர் நகர் /திருக் குடந்தை திருக் கண்ணபுரம் /திருமால் இரும் சோலை –
திருக் கோட்டியூர் /ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருக் குறுங்குடி /திருக் கோட்டியூர் /
திருவேங்கடம் /திரு அயோதியை /திரு சாளக்ராமம்
திரு வதரியாச்ரமம் /திருக் கண்டங்குடி நகர்
திரு த்வாரகை /திரு வடமதுரை -திரு கோவர்த்தனம் –
திருவாய்ப்பாடி -திரு கோகுலம்
திருப்பாற் கடல் /திரு பரம பதம் –
திரு தில்லைச் சித்ர கூடம் -சேர்த்தும் சிலர் 20 -என்பர் -இவர் அருளிய திரு சித்ர கூட பாசுரங்கள் கொண்டு –
இவர் மட்டுமே மங்களா சாசனம் செய்து அருளிய திவ்ய தேசம்
திரு கண்டங்குடி நகர்
—————————————————————————–
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்
எண்ணு திருப்பதி பத்தொன்பதையும் -நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற்பாதம் என் தலை மேல் பூ
———————————————————————————
திருவரங்கம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கருவுடை மேகங்கள் –2-7-2-
சீமாலிகனவ னோடு -2-7-8-
வண்டு களித்து இறைக்கும் -2-9-11-
கன்னி நன் மா மதிள் சூழ் தரு -3-3-2-
மாதவத்தோன் -4-8-பதிகம் முழுவதும்
மரவடியைத் தம்பிக்கு -4-9-பதிகம் முழுவதும்
துப்புடையாரை அடைவது -4-10-முழுவதும்
திரு வெள்ளறை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
இந்திரனோடு பிரமன் -2-8-பதிகம் முழுவதும்
திருப் பேர் நகர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கொங்கும் குடந்தையும் -2-9-2-
கொண்டல் வண்ணா இங்கே -2-9-4-
திருக் குடந்தை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
கொங்கும் குடந்தையும் -2-9-2-
குடங்கள் எடுத்து ஏற விட்டு –2-7-7-
திருக் கண்ணபுரம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
திரு மாலிருஞ்சோலை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
சுற்றி நின்று ஆயர் –1-4-5-
அலம்பா வெருட்டா -4-2-பதிகம் முழுவதும்
உருப்பணி நான்கை தன்னை -4-3-பதிகம் முழுவதும்
திருக் கோட்டியூர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வண்ண மாடங்கள் சூழ் -1-1-1-
கொங்கும் குடந்தையும் -2-3-2-
நாவ காரியம் -4-4-பதிகம் முழுவதும்
ஸ்ரீ வில்லி புத்தூர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
மின்னனைய நுண்ணிடையார் -2-2-3-
திருக் குறுங்குடி -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
உன்னையும் ஓக்கலையில் -1-5-8-
திரு வேங்கடம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
சுற்றும் ஒளி வட்டம் -1-4-3-
என்னிது மாயம் -1-8-8-
தென்னிலங்கை மன்னன் -2-3-3-
மச்சோடு மாளிகை ஏறி -2-7-3-
போதர் கண்டாய் இங்கே -2-7-7-
கடியார் பொழில் அணி -3-3-4-
சென்னி யோங்கு –5-4-1-
திரு அயோத்தி -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வாரணிந்த முலை மடவாய் -3-10-4-
மைத்தகு மா மலர் -3-10-8-
வடதிசை மதுரை -4-7-3-
திரு சாளக்கிராமம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-
திரு வதரியாஸ்ரமம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-
திருக் கண்டம் கடி நகர் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
தங்கையை மூக்கும் 4-7–பதிகம் முழுவதும்
திருத் துவாரகா -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வடதிசை மதுரை -4-7-3-
திருக் கோவர்த்தனம்-திரு வட மதுரை -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வானிள வரசு -3-4-3-
வடதிசை மதுரை -4-7-3-
திரு ஆய்ப்பாடி -திருக் கோகுலம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
தீய புந்திக் கஞ்சன் – -2-2-5-
முலை ஏதும் வேண்டேன் -2-3-7-
விண்ணின் மீது அமரர்கள் -3-4-10-
புவியுள் நான் கண்டது –3-9-7-
திருப் பாற் கடல் –மங்களா சாசனம் -பாசுரங்கள் –
ஆலத்து இலையான் -2-9-9-
பை யரவின் இணைப் பாற் கடலுள் -4-10-5-
திருப் பரம பதம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
வான் இள வரசு வைகுந்தக் குட்டன் –3-4-9-
வட திசை மதுரை -4-7-9-
தட வரை வாய் -5-4-10-
தில்லைத் திரு சித்ர கூடம் -மங்களா சாசனம் -பாசுரங்கள் –
மானமரும் மென்னோக்கி -3 -10 -5-
சித்தர கூடத்து இருப்ப -3-10-9-
——————————————
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -முதலிலும்
பருப்பதத்து கயல் பொறித்த-என்ற பாட்டிலும் மல்லடர்த்தாய் -இறுதியிலும் அருளி –
———————————————————————-
நம் ஆழ்வாருக்கு
பூதத் ஆழ்வார் -திருமுடி
பொய்கை ஆழ்வார் பேய்ஆழ்வார் -திருக் கண்கள் –
பெரியாழ்வார் -திரு முகம்
திரு மழிசை ஆழ்வார் -திருக் கழுத்து
குலசேகர ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் -திருக்கைகள்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மார்பு
திருமங்கை ஆழ்வார் -திருக் கொப்பூழ்
மதுரகவி ஆழ்வார் -திருவடி
————————————————————————————-
இரண்டடி வெண்பா -குறள் வெண்பா
மூன்றடி -சிந்தியல் வெண்பா
5-12 -அடி -பற்றொடை வெண்பா
12 அடிக்கு மேல் கலி வெண்பா
கலி வெண்பா -திரு மடல்கள் இரண்டும்
பன்னிரு பாட்டியல் இலக்கண நூல்
பாட்டுடைத் தலைமகன் இயற் பெயர்க்கு எதிகை
நாட்டிய வெண் கலிப்பாவதாகி–காமம் கவற்றக்
கரும் பனை மட மா இருவர் ஆடவர் என்றனர் புலவர் –
——————————————————————————————-
முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்-நன்னூல்
தனியன் இயற்றும் அதிகாரி நன்னூல்
தன்னாசிரியன் தன்னோடு கற்றான் தன மாணாக்கன் தகும் உரைகாரர்
என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே –
————————————————————————————-
கீழ்மை இனிச் சேரும்
கீழ்மையினில் சேரும்
கீழ் மேனி சேரும்
சங்கம் எடுத்தூத -எடுத்து ஓத
சங்கம் அடுத்தூத
சங்கம் மடுத்தூத
பாட பேதங்கள்
எடுத்தூத பாடமே மோனைக்கு சேரும்-
——————————–
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் பிரவணராய் -கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் -திருவவதாரம் முதலாக
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்-என்று அதி மானுஷ சேஷ்டிதமான ஸ்ரீ கிருஷ்ண விருத்தாந்தத்தை
ஸ்ரீ கோப ஜென்மம் ஆஸ்தானம் பண்ணி -அநுகரித்து -அனுபவித்து -அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல் சென்ற சிந்தையராய்க் கொண்டு பெரியாழ்வார் திருமொழி திவ்ய பிரபந்தத்தை
சாயை போலே பாட வல்ல சஜ் ஜனங்களுக்கு உபகரித்து அருளி உலகத்தை வாழ்வித்து அருளுகிறார்
——————————————————————————-
மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தமா என்னில்
ஜ்ஞான தசையில் ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்கும்
அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்தால் அவனை கடகாக்கிக் கொண்டு தன்னை நோக்கும்
சௌகுமார்யத்தை அனுசந்தித்தால் தன்னைக் கடகாக்கிக் கொண்டு அவனை நோக்கும் –
ஒரு நாள் முகத்திலே விழித்தவர்களை வடிவு அழகு படுத்தும் பாடாயிற்று இது
ஆழ்வார்கள் எல்லாரையும் போல் அல்லல் பெரியாழ்வார்
அவர்களுக்கு இது காதா சித்கம்
இவருக்கு இது நிச்சயம்
——————————————————————————-
திருப் பல்லாண்டு
முதல் பாட்டில் திருவடிக்கு மங்களாசாசனம்
மேலில் பாட்டு ஒரு பாட்டாக அனுசந்திப்பது சம்ப்ரதாயம் –
இரண்டாம் பாட்டில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களாசாசனம்
படை போர் புக்கு முழங்கும் பாஞ்ச சைன்யம் -சேனைகளை யுடைய யுத்தங்களில் புகுந்து கோஷிக்கும் என்றும்
போர் படை புக்கு முழங்கும் பாஞ்ச சைன்யம் -யுத்தங்களில் ஆயுதமாக போய் முழங்கும் என்றுமாம்
மூன்றாம் பாட்டில் பகவத் ப்ராப்தி காமர்களை கூட்டு சேர அழைக்கிறார்
மண்ணும் மனமும் கொண்மின் –
திரு முளை திரு நாளுக்கு புழுதி மண் சுமக்கையும்
இக் கல்யாணத்துக்கு அபிமாநிகளாய் இருக்கையும்
இரண்டும் கைங்கர்யங்கள் அனைத்துக்கும் உப லஷணம்
ஏழ் காலம் -முன் -நடு -பின் ஏழ் காலம் -ஆக 21 தலைமுறை
நான்காம் பாட்டில் கைவல்ய காமுகர்களை அழைக்கிறார்
ஏடு -சூஷ்ம சரீரம்
ஐந்தாம் பாட்டில் ஐஸ்வர் யாதிகளை அழைக்கிறார்
ஆறாம் பாட்டில் அநந்ய பிரயோஜனர்கள் தங்கள் ஸ்வரூபாதிகளை சொல்லிக் கொண்டு வந்து புகுகிறார்கள்
ஏழாம் பாட்டில் கைவல்ய நிஷ்டர்கள் தங்கள் ஸ்வ பாவம் சொல்லிக் கொண்டு புகுகிறார்கள்
சுழற்றிய –திரு ஆழி ஸ்வ ஆஸ்ரயத்தில் இருந்தே கார்யம் நிர்வஹிக்க வல்லவன் என்கிறது
பெருமான் -பெருமை உள்ளவன் -பெரு மஹான் -விகாரம் என்றுமாம் /குடில் -புத்ராதி சந்தானம் எல்லாம்
அடுத்து ஐஸ்வர் யாதிகள் இசைந்து வந்து கூடுகிறார்கள்
நெய் யெடை நெய்யிடை-இரண்டு பாட பேதம்-
நெய்யோடு ஒத்த எடையை யுடைத்தாய் / நெய்யின் நடுவே சில சோறும் என்றவாறு
அடைக்காய் -அடை இலை வெற்றிலை காய் பாக்கு
கை அடைக்காய் -கை நிறைந்த அடைக்காய்
அடுத்து கூடிய அநந்ய பிரயோஜனர்கள் இவர் உடன் கூடி பல்லாண்டு பாடுகிறார்கள்
அடுத்து கைவல்யர்கள் சேர்ந்து பாடுகிறார்கள்
அடுத்து ஐஸ்வர் யாதிகள் சேர்ந்து பாட
நிகமத்தில் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்-
———————————————————————————–
பெரியாழ்வார் திருமொழி-
ஸ்ரீ கிருஷ்ணன் உடைய விரோதி பாஹூள்யத்தால் ஆழ்வார்கள் மிகவும் பரிவார்கள்
பெரியாழ்வார் விசேஷத ப்ரவணராய் இருப்பார்
விட்டு சித்தன் மனத்திலே கோயில் கொண்ட கோவலன் –
ரிஷிகளை போலே கரையிலே நின்று திரு வவதார குண செஷ்டிதன்களை சொல்லிப் போகாமல்
பாவன பிரகர்ஷத்தாலே கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணி
யசோதாதிகள் சொல்லும் பாசுரத்தை அவர்களாக பேசி அனுபவித்து தலைக்கட்டுகிறார்-
இப்பிரபந்தத்திலே
முதல் திருமொழியில்
கிருஷ்ண அவதார உத்தர ஷணத்தில் திருவாய்ப் பாடியில் உள்ளார் பண்ணின
உபலாள நாதிகளை திருக் கோட்டியூரிலே நடந்ததாக அனுசந்தித்து இனியர் ஆகிறார்-
வண்ண மாடங்கள்
திருவவதரித்த உடனே கண்ணன் முற்றம் ஆனதே-ஸ்ரீ நந்த கோபர் அபிப்ராயத்தாலே
எள் + நெய் =எண்ணெய்/சுண்ணம் -மஞ்சள் பொடி
ஓடுவார்
ஆய்ப்பாடியில் விகாரம் அடையாதவர்கள் இல்லையே
ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்றே
பிரான் -பிரபு -விராட் –
எங்குத்தான் – -எங்குற்றான் -பாட பேதம்
பேணிச் சீருடை -கம்சாதிகள் கண் படாத படி காத்து வந்து -ஸ்ரீ மானான ஸ்ரீ கிருஷ்ணன்
வடமதுரையில் பிறந்த பிள்ளையை திருவாய்ப்பாடியில் பிறந்ததாக கம்சன் பிரமிப்பிக்க
புகுவார்களும் புக்குப் போவார்களும்
உறியை முற்றத்து
கொண்ட தாள்
அண்டர் இடையர்
மிண்டி நெருக்கி கூட்டத்தின் மிகுதி
கையும் காலும்
பைய நீராட்டி திரு மேனிக்கு பாங்காக
ஐய நா -மெல்லிதான நா
வையம் வைக்கப்படும் இடம் வசூந்தர வசூமதி
ஏழும் -உப லஷணம் எல்லாம் என்றபடி
வாயுள் வையம் கண்ட
கீழே யசோதை கண்டதை மற்ற ஆய்சிகளுக்கும் சொல்ல
அனைவருக்கும்
திவ்ய சஷூஸ் கொடுத்து காட்டி அருளினான்
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
நாம கரண தினம்
மத்த மா மலை தாங்கிய மைந்தனை -மத்தம் -யானைகள் -நிறைந்த கோவர்த்தனம் -என்றும்
மைத்த -சோலைகள் நிறைந்து அவற்றின் நிழலீட்டாலே கருத்த மா மலை என்றுமாம்
உத்தானம் செய்து உகந்தனர் ஆயர் -கைத் தலத்தில் வைத்துக் கொண்டு -உத்தானம் -நிமிர்ந்து கிடத்தல் என்றபடி
கிடக்கில் தொட்டில்
மிடுக்கு இலாமையினால் நான் மெலிந்தேன் -மிகவும் இளைத்தேன்
செம் நெலார்-இப்பாடல் வல்லார்க்கு பாவம் இல்லையே
——————————————————————————
1-2-
திருவடி தொடங்கி திரு முடி ஈறாக யசோதை பிராட்டி பாவ உக்தராய் கொண்டு அனுபவிக்கிறார்
சீதக் கடலுள் அமுது -அமுதினில் வரும் பெண்ணமுது
முத்தும் மணியும் வயிரமும் –
தத்திப் பதித்து மாறி மாறி பதித்து
பணைத்தோள்
வெள்ளித் தளை நின்று இலங்கும் கணைக்கால்
உழந்தாள்-உழவு ஆயாசம்
ஒரு தடா உண்ண பிள்ளைக்கு சாத்மியாது என்று வருந்தி -இழந்தாள்
தாம்பை ஒச்ச பயத்தால் தவழ்ந்தான்
பிறங்கிய பேய்ச்சி
மறம் கொள் த்வேஷம் கொண்ட
மத்தக் களிற்று
அதத்த்தின் பத்தா நாள் -ஹஸ்த நஷத்ரம் பத்தாவது திரு நாள் தோன்றிய அச்சுதன்
கீழ் முறை ரோகிணியும் மேல் முறை திருவோணமும்
இருகை மத களிறு-பெரிய துதிக்கை உடைய
செய்த் தலை நீல நிறத்து சிறு பிள்ளை -தலை செய் -உயர்ந்த ஷேத்ரத்திலே அலர்ந்த கரு நெய்தல் பூவின் நிறம் போன்ற பால கிருஷ்ணன்
பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய -சக்ரவர்த்தி திருமகனில் வ்யாவ்ருத்தி
—————————————————–
1-3-
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி – செந்நிறமுடைய மாணிக்கத்தை இரண்டு அருகிலும் கட்டி –
நடுவில் வயிரத்தைக் கட்டி – கருமாணிக்கம் என்பது -இல் பொருள் உவமை
வயிச்சிரவணன்–சரியான பாடம் –குபேரன் என்றவாறு -வயிச்சிராவணன்-நீட்டுதல் பிழை
வாசிகை-திரு நெற்றி மாலை
வெய்ய காலை பாகி -வெவ்விய ஆண் மானை வாகனமாக யுடைய துர்க்கை
————————————-
1-4-
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி-கண்ணபிரான் சந்திரனைக் கையில் கொள்ள வேண்டும் என்று ஆடுகிற கூத்து
ஆடலாட யுறுதியேல்-முன்னிலை ஒருமை வினை முற்று -கருத்துறுயாகில்-என்றவாறு
கைத் தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா -நோவாமே -எதிர்மறை வினை எச்சம் -கை நோவு வீணாகப் போகாதபடி என்று
சக்கரக் கையன் –நீ இவன் அருகே வராவிடில் உன்னை சிஷித்து அல்லது விடான் -ஆழி கொண்டு உன்னை எறியும் -என்பார் மேலும்
பேழை வயிறு -பேழை என்று பெட்டிக்கும் பேர் -வெண்ணெய்க்கு பேட்டி போன்ற திரு வயிறு
தமிழ் இவை எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடரில்லையே-எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே
————————————-
1-5-
செங்கீரை -தாய்மார் முதலானோர் பிள்ளைகளைத் தாங்களே அசைத்து ஆடுவிப்பதொரு நர்த்தன விசேஷம்-பெரிய ஜீயர்
பிள்ளைகள் இரு கையும் முழந்தாள்களும் உஊன்றித் தலை நிமிர்த்தி ஆடுதல் -என்பான் தமிழன்
கீர் -என்று ஒரு பாட்டாய் -அதுக்கு நிறம் சிவப்பாகி -அதுக்குத் தகுதியாக ஆடு என்று நியமிக்கிறார்கள் என்று-திருவாய் மொழிப் பிள்ளை
போர் ஏறு -முற்று உவமை
தப்பின பிள்ளைகளை- தாயொடு கூட்டிய என் அப்ப -என்று இயைந்து பொருள்
தனி மிகு சோதி புகத்-என்ற அத்யாபக பாடம் பிழை
தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும்–தழுவி முழுசிஉச்சி மோந்து முத்தம் இடுகை முதலியன செய்வதே தங்கள் கருத்தாயின செய்தல்
——————————————
1-6-
சப்பாணி –ஸஹ பாணி -ஒரு கையுடன் கூட மற்றொரு கையைச் சேர்த்துக் கொட்டுதல்
சப்பாணி கொட்டி அருள வேணும் -வினை தருவித்துக் கொள்ள வேண்டும் –
தன் மடியில் இருந்தும் சப்பாணி கொட்டுவதைக் காட்டிலும் தமப்பனார் மடியில் இருந்து கொட்டுவதை பார்த்தால் தானே
அவனது சர்வாங்க ஸுந்தர்யங்களையும் கண்ணாரக் கண்டு யூகிக்கலாம்
உங்கள் ஆயர் தம் மன் -ஒருமையில் பன்மை -மன் -பெருமையுடையவனுக்கு ஆகு பெயர்
அம்மை தன் அம்மணி மேல் -தன்மையில் படர்க்கையாக கொண்டு யசோதைக்கு தன் மடியில்-அம்மணி -இடை – இருந்து
சப்பாணி கொட்டுவது அபிமதம் என்றும்
ஆழ்வாருக்கு யசோதை மடியில் இருந்து அவன் சப்பாணி கொட்டுகை அபிமதம் என்றும் கொள்ளலாம்
தூ நிலா முற்றம் -பெயர்ச் சொல் /
வானிலா அம்புலி வினைத் தொகை /
நீ நிலா -இறந்த கால வினை எச்சம் -நிலாவுதல் -விளங்குதல் /
கோ நிலாவா -தலைவராகிய நந்தகோபர் மனம் மகிழும் படி –
பட்டிக் கன்றே -பட்டி மேய்த்து தின்று திரியும் கன்று போலே நெய் பால் தயிர்களைக் களவினால்
தின்று திரிகையே பொழுது போக்காக யுடையவன் -இதுவே அன்றோ கால ஷேபம்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் வேட்கையால் சொல்லுவார் வினை போமே–வேட்கையினால் -என்பதே தளை தட்டாமல் பொருந்தும்
——————————–
1-7-
படு மும்மதப் புனல் சோர -நின்று –உண்டான மூன்று வகையான மத நீர் பெருக்கவும் இருந்து கொண்டு –
கன்னம் இரண்டிலும் -குறி ஒன்றிலும் -மூன்று மத ஸ்தானம்
சிறு பிறை முளை -மூன்றாம் பிறை -என்பர் –
சூழ் பரி வேடமுமாய்ப்-அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டு இருக்கும் பரி வேஷத்தைப் போலே
சந்திரனைச் சுற்றி சில காலங்களில் காணப் படும் ரேகைக்கு பரி வேஷம் -இத்தை ஊர் கோள்-என்றும் சொல்வர்
காம தேவனுக்கு பிதாவுமான இப்பிள்ளை -மன்மதன் அம்சமான ப்ரத்யுமனுக்கு ஜனகன் –காமர் தாதை ஆயினான் -காமன் தாதை என்றும் பாடம்
தாயர் மகிழ வொன்னார் தளரத் தளர் நடை நடந்ததனை-தாய்மார்கள் மனம் உகக்கவும் சத்ருக்கள்
வருத்தம் அடையவும் தளர் நடை நடந்து அருளியதை
பாராட்டுத்தாய் -ஊட்டுத் தாய் -முலைத் தாய் -கைத்தாய் -செவிலித்தாய் –சிறு தாய் -போன்றவர்கள் உண்டே
ஒன்னார் -ஒன்றார் -திரு உள்ளபடி நடக்காத சத்ருக்கள் –
———————————————
1-8-
கிண் கிணி-சேவடிக் கிண் கிணி -அரை கிண் கிணி -இரண்டையும் காட்டும்
அச்சோ -அதிசயத்தைக் குறிப்பதோர் இடைச் சொல் -அணைத்துக் கொண்டதை நினைதொறும்
பரம ஆனந்தத்தில் மூழ்கி நெஞ்சு உருகிச் சொல் இடிந்து வாய் விட்டு சொல்ல முடியாமல்
அவ் வாச்யர்த்தை ஒரு தரத்துக்கு இரு தரம் அச்சோ அச்சோ என்கிறாள்
ஓட்டந்து -ஓடி வந்து
எழல உற்று மீண்டே இருந்து-திருப் பாடகம் –பாடு -இடம் பெருமை ஓசை நிகண்டு-பெருமை தோற்ற எழுந்து அருளி சேவை
அரவு நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி அண்டம்
ஊடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –
கழல் -வீர ஆபரணம் -கழல் கழங்கோடு செருப்புக் காலணி காலின் நாற்பேர் -நிகண்டு
சுழலை-சூழலை-என்பதன் குறுக்கல் -ஆலோசனை
செழுந்தார் விசயன் -பகைவர்களோடு போர் புரியும் போது தும்பைப் பூ மாலையையும் -வெற்றி கொண்ட போது வாகைப் பூ மாலையையும்
சூடும் தமிழர் வழக்கம் படி அர்ஜுனன் சூடுவதால் -விசயன் -விஜயன் -வட சொல்
துரும்பால் கிளறிய சக்கரம் -கருதும் இடம் பொருது–கை நின்ற சக்கரத்தன்-திருமால் விரும்பிய இடங்களிலே
விரும்பிய வடிவம் கொண்டு செல்லும் தன்மையால் திருச் சக்கரமே திருப் பவித்ரத்தின் வடிவுடன் கிளறினமை சொல்லிற்று
நான்மறை முற்றும் மறைந்திடப் பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே-
ஹம்ஸாவதாரம் -சோமுகன் என்னும் அசுரன் கல்ப அந்தத்திலே நான்முகன் உறங்கும் பொழுது கவர்ந்து பிரளய நீருக்குள் செல்ல
ஸ்ரீ மத்ஸ்யாவதாரமாய் திருவவதரித்து மீட்டுக் கொண்டு வந்து சார அசார விவேகம் அறியும் திரு ஹம்ஸாவதாரமாய்
திருவவதரித்து நான்முகனுக்கு உபதேசித்து அருளினான் –
இங்கு நான் மறை என்றது -முன்பு இருந்த தைத்ரியம் -பவ்டியம்-தளவாகராம்-சாமம் -ஆகிய நான்கும்
வேத வியாசரால் பிரிக்கப் பட்ட பின்பே ருக்கு யஜுஸ் அதர்வணம் சாமம் ஆயின
————————————————-
1-9-
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு-என்றது கண்ணபிரானுடைய குறியை சொன்னவாறு
சிறு நீர் துளிகள் இற்று இற்று மீண்டும் வருவதால் சொட்டு சொட்டு என்னத் துளிக்க துளிக்க -என்கிறார்-
ஆயர்கள் ஏறு -ஆகு பெயரால் -செருக்கு நடை காம்பீர்யம் முதலிய குணங்களால் காலை போன்ற வீரன் என்றவாறு –
தனஞ்சயன் -தர்மபுத்ரன் ராஜ ஸூயா யாகம் செய்யக் கோலின போது பல ராஜாக்களை கொன்று மிக்க பொருள்களைக் கொண்டு
வந்தமையாலும்-வெற்றியையே செல்வமாக யுடையவன் என்பதாலும் அர்ஜுனனுக்கு வந்த பெயர்
வெண்கல பத்திரம் கட்டி விளையாடிக்–பாத்திரம் -இலை-வெண்கல இலை வடிவில் குழந்தை இடுப்பில் கட்டுவது முற்கால வழக்கம் போலும்
அப்படியே ஸ்ரீ வாமணனுக்கும் கட்டினார்கள் என்றவாறு
உத்தரவேதியில் நின்ற -ஆஹவநீய அக்னிக்கு உத்தர திக்கிலே யாக பசுவைக் கட்டுகிற
யூப ஸ்தம்பத்தை நாட்டிய வேதிகை -இங்கு மகா பாலி யாக பூமியைக் காட்டும்
இந்திரன் காவு -நந்தவனத்தில் -மந்தாரம் -பாரி ஜாதம் -சந்தானம் -கல்ப வருஷம் -ஹரி சந்தானம் -என்ற ஐந்து வகை தேவ வ்ருக்ஷங்கள்
இங்கு பாரி ஜாதத்தையே கற்பகக் காவு என்கிறார் -ஒவ் ஒன்றுமே பெரும் சோலையாக இருக்குமே
நிற்பன செய்து பன்மை -ஐந்தையும் கொணர்ந்தான் என்பாரும் உண்டு -நிற்பது செய்து -ஒருமை பாட பேதம் –
———————————————-
2-1-
இதுவும் கோபிமார் பாசுரங்கள் என்பதை மேலே -புரட்டி அந்நாள் எங்கள் பூம் படு கொண்ட அரட்டன் – 2-1 4-என்பதில் இருந்து அறியலாம்
தூதனாய் ஸுலப்யத்தை வெளியிட்டு நம்மில் ஒருவன் என்று உலகோர் கொள்ளும் படி இருப்பவன்
அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் சர்வேஸ்வரத்துவ சிஹ்னங்களைக் காட்டி அருளுகிறார் -அப்பூச்சி காட்டுகிறான் –
அதிரதர் -மஹா ரதர் -சம ரதர் -அர்த்த ரதர் -நான்கு வகை ரதர்கள்
அலவலை-அர்த்தத்தின் உத்கர்ஷத்தையும் ஸ்ரோத்தாவின் நிகர்ஷத்தையும் பாராமல் ரஹஸ்யார்த்தம் அருளுபவர் –
வரம்பு கடந்து பேசுபவன் -அனைத்துக்கும் திரௌபதியினுடைய விரித்த குழல் பார்க்க சஹியாமை ஒன்றே ஹேது –
காளியன் தீய பணம் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி –விஷம் இருப்பதற்கு உரிய இடம் -கோபம் தெரிவிப்பதால் உண்டான தீமை –
திருவடியில் அணிந்த சிலம்பு ஸப்திக்கும்படி குதித்து -இத்தை கண்டு என்ன தீங்கு வருமோ என்று கலங்கினவர் மகிழும் படி நர்த்தன பண்ணி அருளி
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் -ஹதசன்-ஆஸ்ரித விரோதியை ஹதம் பண்ணுபவன்
————————————-
2-2-
வனமுலைகள் சோர்ந்து பாயத்-எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் தெறித்து பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
வனமே-நீரும் வனப்பும் -ஈமமும்-துழாயும் -மிகுதியும் -காடும் -சோலையும் -புற்றும் -எனவே புகழும் என்பர் -நிகண்டு -இங்கு அழகைக் குறிக்கும்
வாசுதேவா-பசுவின் வயிற்றிலே புலி பிறந்ததீ
ஆயர்பாடிக்கு அணி விளக்கே யமர்ந்து -திரு வாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே -பொருந்தி வந்து
உனக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்தால் இத் திரு வாய்ப்பாடி அடங்கலும் இருள் மூடி விடும் காண்
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுது உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை யுணாயே–2-2-7-
முதல் இரண்டு அடியாலே பதி விரதைகளான ஸ்த்ரீகள் மநோ விருத்தி –
பின் ஒன்றரை அடிகளால் செல்வச் சிறுமியர்களான கோபிகளின் மநோ விருத்தி –
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே –2-2-8-
ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா –வாயிலே முலை இருக்க -பெருமாள் திரு மொழி
ஆடியாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்று இருந்தேன்-ஆடிக் கொண்டு வருகின்ற உன்னை வேறொரு ஆபரணம் வேண்டாத படி
பத்மத்தை திரு நாபியில் யுடையவன் என்று எண்ணினேன்-2-2-10- -கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -அன்றோ –
இவன் அழிந்து கிடந்த உலகத்தை திரு நாபி கமலத்தில் யுண்டாக்கி அருளினவன் அன்றோ
ஆகையால் நம்முடைய சத்தையும் தருகைக்காக வருகிறான் என்று இருந்தேன் -என்றுமாம்
————————————
2-3-
எம்பெருமானுடைய துவாதச திரு நாமங்களை அருளிச் செய்த -ரத்நா வலி அலங்காரம் -பால் அமைந்த பதிகம் –
போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான்-போய் -மிகுதிக்கு வாசகம் -கூர் வேல் கொடும் தொழிலன் –
புத்திர ரஷணத்திலும் ஸுவ ஜன ரஷணத்திலும் மிகவும் நோக்கு யுடையவன் என்றவாறு –
ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -ஸஉ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
சுரி குழலார் -அராள குந்தள-வடமொழி /
குரவைக் கூத்து -ஒவ் ஒரு ஆய்ச்சியர் பக்கத்திலும் ஒவ் ஒரு கண்ணனாக தோன்றி ஆடும் ராஸ க்ரீடை
குரவை என்பது கூறுங்காலைச் செய்வதோர் செய்த காமமும் விறலும் எய்த உரைக்கும் இயல்பிற்று என்ப –
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை –
குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கை கோத்து அந்நிலைக்கு ஒட்ப நின்றாடாலாகும்-
குரவை -கை கோத்து ஆடல் -சாமான்யமாக தமிழன்
குற்றமே அன்றே -2-3-7–பாட பேதம் அந்தாதித் தொடைக்குப் பொருந்தாது -குற்றமே என்னே -சரியான பாடம்
கண்ணைக் குளிரக் கலந்து 2-3-11-சஷூஸ் ப்ரீதி-வகை -கடி கமழ் பூங்குழலார்கள் கண் குளிர்ச்சி யடைய
உன் திருமேனி முழுதும் பொருத்தப் பார்த்து -என்றபடி -அவர்களுக்கு முற்றூட்டாக்க போக்யமானவனே
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய்-2-3-12–இவை ஆணாய்-அத்யாபக பாடம் –
பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –
செய்யுள் அந்தாதி சொல் தொடர் நிலை -இந்த பதிகம் –
——————————-
2-4-
விளையாடு புழுதி -வினைத் தொகை -விளையாடின புழுதி -என்று விரிக்க -உண்ட இளைப்பு போலே
புளிப் பழம்-எண்ணெயைப் போக்குவதாக புளிப்புச் சுவையுடையதாய் இருக்கும் ஒரு வகைப் பழம் -சீயக்காயைக் காட்டும் என்றும் சொல்வர்
எண்ணெய் -எள் + நெய்
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்-என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடையாது என்பதைக் காட்டும் எதிர் மறை இலக்கணை
கஞ்சன் புணர்ப்பினில் வந்த -புணர்ப்பு -இணைப்பு -உடல் -கூடல் தந்திரம் -மாயம் -நிகண்டு
அப்பம் -அபூவம்-என்ற வடமொழி சிதைவு –
பூணித் தொழுவினில் –பூணி -பசு -பூணி பேணும் ஆயனாகி -என்பரே-
———————————–
2-5-
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட-பொதுக்கோ-2-5-4- -விரைவாக சடக்கென -பிதுக்கென்று புறப்பட்டான் சொல் வழக்கு போலே
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன்-முள்ளை முள்ளால் களைவது போலே
ஒரு அசுரனை அசுரனைக் கொண்டே களைந்தான் -கன்று குணிலாக கனி உதிர்த்த மாயவன் -என்பரே மேலும் –
——————————-
2-6-
வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி–வேலிக் கால்களில் கோலை வெட்டி வில்லாகச் செய்து நாண் ஏற்றி என்றவாறு –
வில் ஏந்தி அத்யாபகர் பாடம் -அத்தை விளையாட்டு வில்லாக கையிலே என்திக் கொண்டு என்று கொள்ளலாம்
வேலை அடைத்தார்க்கு கோல் கொண்டு வா -வேலா -என்கிற வடசொல் -வேலை -கடல் கரை -லக்ஷணையால் இங்கு கடலை சொல்லும்
வையம் -பொருள்கள் வைக்கப்படும் இடம் -என்று காரணப் பெயர்
———————————–
2-7-
உலகு எழும் உண்டாக வந்து பிறந்தாய்-உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே –பரித்ராணாய ஸாதூநாம் -இத்யாதி –
கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி கச்சு -கஞ்சுகம் வடசொல்லின் சிதைவு
காம்பு துகில்-கரை கட்டின பட்டு சேலை –
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே–மேக கன்று -இல் பொருள் உவமை
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்-2-7-5-எப்பொழுது குழந்தை பிறந்து
வெண்ணெய் விழுங்கப் போகிறது என்று இருந்த அடியேன் –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸுந்தர்யத்தில் ஈடுபட்டு அடியேன் —
அடித்த பின்பு அனுதாபம் கொண்டு அடியேன் என்கிறாள் ஆகவுமாம்
குடக்கூத்து-11-ஆடல் வகைகளில் ஓன்று என்றும் -6 -ஆடல் வகைகளில் ஓன்று என்றும் சொல்வர் –
குடத்தாடல் குன்று எடுத்ததோனாடல் அதனுக் கடைகுப வைந்துறப் பாய்ந்து -அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்-உம்மைத் தொகை -எதிர்த்து தழுவியதாய் தலை கொள்ளவும் வல்லாய் என்றபடி –
அண்டத்து அமரர்கள் சூழ-2-7-9–அண்டம் -பரம பதம் -இறந்தால் தங்குமூர் அண்டமே கண்டு கொள்மின் -என்பரே –
கரு முகை -சிறு செண்பகப்பூ
உரை செய்த இம்மாலை-2-7-10–பாலாவின் பால் இறந்த கால வினையால் அணையும் பெயர்-
இரண்டாம் வேற்றுமைத் தொகை -உரை செய்தவற்றை -பட்டர் பிரான் அருளிச் செய்த இம்மாலை –
————————————————
2-8-
முப்போதும் வானவர் ஏத்தும்-2-8-3-இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப் போதும் –
எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்-நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே-2-8-5-
திவ்யாத்மா ஸ்வரூபம் ஸ்வயம் பிரகாசமாய் ஞான மாயமாய் இருப்பதால் -ஞானச் சுடரே -என்கிறார்
எல்லாம் போகாது -ஒருமை பன்மை மயக்கம்
கஞ்சன் கறுக்கொண்டு-2-8-6-கறுப்புக் கொண்டு -கருப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள் -கோபம் கொண்டு -என்றபடி
பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன்-2-8-7-பேய்ச்சி முலை யுண்ட பின்னை
இப்பிள்ளையை பேசுவது அஞ்சுவனே போலே
கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 8- துர்க்கை -ருத்ரன் -சாம்பல் பூசி
எலுமிச்சை மாலை அணிந்து -கபாலம் கொண்டு இராப்பிச்சைக்காரர் என்றுமாம்
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் – 2-8 9-இன்றும் குழந்தைகளுக்கு
விளக்கு ஏற்று த்ருஷ்ட்டி சுத்திப் போடும் வழக்கம் உண்டே
பாதப்பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2 8-10 –ஓர் அடிக்கே இத்துணை மஹிமை -என்றால்
இப்பதிகம் முழுவதுக்கும் உள்ள பலன் வாசா மகோசரமாகுமே
ஒவ் ஒரு பாட்டிலும் கடை பாதத்தில் உள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ –
பக்தர்களுடைய பாபங்கள் எல்லாம் தீரும் என்றுமாம் –
———————————–
2-9-
அண்ணற்கு அண்ணான் மகனைப் பெற்ற வசோதை நங்காய் உன் மகனைக் கூவாய் -2 9-1 -தன் நம்பி நம்பியும்
இங்கு வளர்ந்தது அவன் இவை செய்வது அறியான் போலே
வருக வருக வருக -2-9-2–விரைவுப் பொருளில் மும்முறை வந்த அடுக்கு
காகுத்தன் -காகுஸ்தன் -ககுத்-முசுப்பு – -இந்திரனுடைய முசுப்பு மேல் ஏறி யுத்தம் -ஸ்தன்-அதில் இருப்பவன்
ஒரு பொருள் மேல் பல பேர் வரில் இறுதி ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி-நன்னூலின் படியே
இப்பாட்டில்-2-9-4- -கொண்டல் வண்ணன் -கோயில் பிள்ளை -திரு நாரணன் -கண்ணன் ஒரு பொருளே
என்று தெளிய நின்றதனால் பெயர் தோறும் போதராய் என்ற வினை சேரும் –
போதரு -போதர்-2-9-6–என்று குறைந்து உள்ளது -போ -என்னும் வினைப் பகுதி -தா -என்னும் துணை வினையைக்
கொள்ளும் போது வருதல் என்ற பொருளைக் காட்டும் என்பர் –
போதந்து -என்கிற இது- போந்து -என்று மருவி -வந்து என்னும் பொருளைத் தரும் –
கோது குலம் -கௌ தூஹலம் -வடசொல்லின் விகாரம் -எல்லாருடைய கௌதூஹலத்தையும் தன் மேல் உடைய –
எல்லாராலும் விரும்பத் தக்க கல்யாண குணங்களை யுடையவன் -என்ற படி
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்-2-9-7- -ஒவ் ஒரு திருவோணத்துக்கும் செய்ய சக்தி இல்லாமையால்
ஒரு திரு வோனத்துக்கு ஸம்வத்ஸத்ரம் முழுவதுக்கும் சேர்த்து -நோன்புக்கு உறுப்பாக /அக்காரம்-கருப்புக்கட்டி -திரட்டுப் பால் என்னவுமாம்
இதுவும் ஒன்றே என்று சொல்லாமல் இவையும் சிலவே பன்மை -நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் -அவன் தீமை செய்யும் திறமும் –
நான் வந்து முறைப்படும் முறைமையும் எல்லாம் சால அழகியவாய் இருக்கின்றன -என்ற கருத்தைக் காட்டுமே –
தொழுத்தைமார்-2-9-8- -அடிமைப் பெண்கள் -இடைச்சிகளாகிலும் இடையர்களாகிலும் தங்கள் நேராகப் பழிக்கில் வருந்திப் பொறுக்கலாய் இருக்கும்
ஒரு நாழி நெல்லுக்குத் தம் உடலையும் உயிரையும் எழுதிக் கொடுத்து விட்டு உழைக்கின்ற குக்கர் பேசும் பழிகளை பொறுக்க ஒண்ணாது என்று கருத்து
இணை அடி என் தலை மேலனவே-2-9-11–மேலவே-பாட பேதம் சிறக்காது –
விஷ்ணு சித்தர் -பனிக் கடலைப் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ -என்றும்
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை -என்றும் அருளிச் செய்வார் மேலும்
குனிக்க வல்லார் -மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை-படியே கூத்தாட வல்லவர்கள் –
———————————
2-10-
இன்று முற்றும்-2-10-1- -முற்றுதும் -என்பதன் குறைச் சொல் -தன்மைப் பன்மை வினை முற்று –
உயிரை இழந்து கொண்டே இருக்கிறோம் -என்றவாறு
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த-2-10-2–உய்ய உலகு படைத்துண்ட மணி வயிற்றானாய் -பராத்பரனாய் இருந்து வைத்தே
கர்ம வஸ்யரைப் போலே பிறந்தது மட்டும் அல்லாமல் இப்படி இடைப்பெண்களுடன் இட்டீடு கொண்டு
விளையாடவும் பெறுவதே -இது என்ன ஸுசீல்யம் என்று பலரும் புகழா நிற்பதைக் காட்டும்
பைந்தலை மேல் எழப் பாய்ந்திட -2-10-3- -பைம்பொன் -பசுமை +பொன் போலே பிரிக்கக் கூடாது –
பய் -மெத்தெனவு -அழகு -பாம்பின் படம் -பல பொருள்களைக் குறிக்கும் தனிச் சொல்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7—தனது திருவடியின் மென்மையைப் பாராமல் காடு மோடுகளை அளந்து அருளின
ஆயாசம் தீர நாங்கள் அவற்றை பிடிக்கிறோம் என்றால் அதற்கு இசைந்து திருவடிகளைத் தந்து அருளுதல் ஆகாதோ
தடம் பெரும் பொய்கை வாய் வாழு முதலை -2-10-8—சாப விமோசனம் பெற்று -நற்கதியை
எதிர்பார்த்து இருப்பதால் வாழும் -சிறப்பித்து அருளிச் செய்கிறார்
இப்பொழுது நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முந்தின பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீ வராஹ திரு வவதாரம் எடுத்து அருளியமை பற்றியே இந்த கல்பத்துக்கு இந்த பெயர் ஆயிற்று –
மங்கை நல்லார்கள்-2-10-10-நல் மங்கைமார்கள் -கண்ணன் மேல் உள்ள ப்ரேமத்தால்
—————————————–
3-1-
வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே–3-1-1-துஞ்ச-தூங்க -பொருளில் இருந்தாலும்
இங்கே -மாண்டு போம் படி -தீர்க்க நித்திரை அன்றோ
வல் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம்
செய்து வைத்த-3-1-2-ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த ஏழு திங்களில் ஏடலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே –பாசுரத்தோடு ஒப்புமை
வேற்று உருவம் செய்து வைப்பதாவது -கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக் கமலச் செவ்வாய்
வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்ற வா நான்காய் என் செய்கேன் என் செய்கேனோ -என்றபடி பண்ணுகை –
பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்-3-1-3-இவன் என் பிள்ளை அன்று என்று நான் ஆணை இட்டுச் சொன்னாலும்
மத்தியஸ்தர் கேளார் -என்று கருத்துத் தோன்றும் -மகனே -ஏவகாரம்-பிரிநிலை
கொய்யார் பூந்துகில்-3-1-4- -கொய்தல் நிறைந்த அழகிய புடவைகள் -கொய்சகம் – கொசுவம் உலக வழக்கு
பற்பல பேசுவ -3-1-4—பலவின்பால் படர்க்கை வினை முற்று -பெயர் எச்சப் பொருள் தந்து நிற்றல் -பிறர் பேசுகின்ற என்ற பொருள் –
வினை முற்றே வினை எச்சம் ஆகிலும் குறிப்பும் உற்றீர் எச்சம் ஆகலும் உளவே -என்ற சூத்திரத்தின் படியே –
ஆகலும் -எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச உம்மையே நோக்குக –
கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்-3-1-6-கண் என்று உபமேயத்தை சொல்லாமல் உபமானச் சொல்லால்
லக்ஷணையால்-உருவக உயர்வு நவிற்சி அணி-வடமொழி -ரூபக அதிசய யுக்தி அலங்காரம் –
ஒருத்திக்கு -உருபு மயக்கும் -ஒருத்தியின் மேல் என்றபடி –
நந்தன் காளாய் உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே-3 1-8 -நந்தனுக்கு காளாய் என்றும் ஆளாய் என்றும்-
விபரீத லக்ஷணை –அவரால் நியமிக்கப் படாமல் அன்றோ நீ இத்தீமைகளை செய்து என்னை பழிக்கும் படி-என்றவாறு
கேளார் ஆயர் குலத்தவர் -3-1-8—மானமுடைத்து உங்கள் ஆயர் குலம் -பெரிய திருமொழி -10-7-1-அலர் தூற்றுதலை கேட்டால்
சஹியார்கள் -அவர்கள் கண் வட்டத்தில் வாழ்ந்து இருப்பது அரிது காண் என்கிறாள்
உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்-2-1-10-உரப்ப-சிஷிக்க -ஊனமுடையன செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்ப கில்லேன் -என்பர் திருமங்கை ஆழ்வாரும்
ஆரா இன்னமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம்-3-1-11-இதுவரை தந்த நான் இனி அஞ்சுவேன் –
தருவ-எதிர் கால வினை முற்று -வழுவு அமைதி இலக்கணப்படி தந்தேன் என்ற இறந்த காலப் பொருளில் வந்தது
மட்டும் இல்லாமல் -தந்த நாம் அம்மம் தாரேன் -என்று பெயர் எச்சப் பொருளையும் காட்டும் –
ஆகவே இவ் வினை முற்று -முற்று எச்சம் என்றற்பாற்று-
———————————
3-2-
கன் மணி நின்றதிர் கானத ரிடைக் கன்றின் பின்னே-3-2-3-கல் -லக்ஷணையால் மலையை குறிக்கும் –
பிரதி த்வனி -அதிர்தலை சொன்னவாறு-
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே -3 2-4 – எத்தனை தீம்புகள் செய்து பழி வர விட்டான் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடைக்குமே போலே –
கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி கெட்டேன் வாழ்வில்லை -என்றவள் தானே இப்பொழுது பிரிவாற்றாமையால்
இவ்வாறு அருளிச் செய்கிறாள் பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பாங்கினால்-3-2-8-உன்னை என் மகனே என்பர் நின்றோர் –
என்பதையே கொண்டு இவ்வாறு அருளிச் செய்கிறாள்
குடையும் செருப்பும் கொடாதே-3-2-9-மேல் திரு மொழியில் குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே
போனாய் மாலே -3-3-4—என்பதாலே -இங்கு கொடாதே-என்பதற்கு -அவன் வேண்டா என்று வெறுக்கச் செய்தேயும்
பலாத்காரமாக கட்டாயப்படுத்தி கொடாமல் என்று விரித்து பொருள் கொள்ள வேண்டும்
என்றும் எனக்கு இனியானை-3-2-10–ஆணாட விட்டிட்டு இருக்குமே –
————————————-
3-3-
சீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ-3-3-1-திரியை ஏரியாமே காதுக்கு இடுவன்-என்றபடி
இரண்டு காதுகளிலும் அவள் அத்திரியை இட்டு அனுப்ப அவன் காட்டிலே ஒரு காதில் திரியை களைந்து
செங்காந்தள் பூவை அணிந்து கொண்டு வந்தமை அறிகை –
கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம்-3-3-2-கன்னி ஸ்திரம் என்றபடி
கன்னி -பெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே-என்றான் மண்டல புருஷன்
வாழ்வு உகந்து உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன்-3-3-2-ஸ்வ ப்ரயோஜனத்தை கணிசித்தேனே ஒழிய
உன் பிரயோஜனத்தை விரும்பிற்றிலேனே-என்று உள் வெதும்பி அருளிச் செய்கிறாள் –
உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 -சிவக்கப் பெற்றாய் என்றபடி –
சினை வினை சினை யொடும் முதலொடும் செறியும் -சூத்ரம்
சிறுப் பத்திரமும்-3-3-5-சிறிய கத்தி -பத்திரம் இலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம் -நிகண்டு –
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த அசுரர் தம்மை-3-3-7-ஒருவனை -பால் வழுவமைதி -அசுரன் தன்னை -பாட பேதம் சிறந்ததே –
உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூலார்
ஐயர் இவர் அல்லால் நீராம் இது செய்தார் -ஐயர் நீராம் ஒருமைப்பால் பன்மைப் பாலாக –
தீரா வெகுளியளாய்-இதற்க்கு ஆதி கோபம் -என்றும் உண்டே
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறுவித்தேன்-3-3-9-முளையட்டுதல் -திருக் கல்யாண
அங்கமாக நவ தானியங்களைக் கொண்டு பாலிகையை சொன்னவாறு –
——————————
3-4
முதல் பாட்டு தாமான தன்மையில் ஆழ்வார் அருளிச் செய்கிறார் -கலாபம் தழையே தொங்கல் என்று இவை
கலாபப் பீலியில் கட்டிய கவிகை -நிகண்டு -இங்கு அவாந்தர பேதம் -தட்டும் தாம்பாளமும் போலே
பீலி -விசிறிக்கும் திருச் சின்னத்துக்கு பேர்
அது கண்டு இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே-3 4-3 -கொண்டு -என்றும் பாட பேதம் –
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி -திருவாய் மொழி போலே
இள மூளையும் என் வசம் அல்லவே -3-4-4 -என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் என்றபடி –
அடி உடைமை சொல்லும் போது –ஒரு கோத்ர சம்பந்தம் சொல்ல வேணும் இறே-மாலிரும் சோலை எம் மாயற்கு அல்லால்-3-4-5-
கோத்ர சம்பந்தம் பர்வத சம்பந்தம் சிலேடை
வளை கோல் வீசா -3-4-6- வீச -பாட பேதம் பொருந்தாது
சாலப் பல் நிரைப் பின்னே-3-4-7-சால உறு தவ நனி கூர் கழி மிகல்-நன்னூல் -மிகுதியைச் சொல்லும்
உரிச் சொல்லுடன் அணைந்த பல் -பசுக்கூட்டங்களின் எண்ணிறந்தமை காட்டும் –
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலை அம் தன்னால்-3-4-8-இல் -என்று உள்ளாய் -அயம் என்ப நீர் தடாகம் -நிகண்டுவின் படி ஜலமாய் –
திருப் பவளத்துக்கு உட்பட்ட ரசம் -சிந்தூரப்பொடியை அம்ருத ரசத்தினால் நனைத்து குழைத்து திரு நாமம் சாத்தி -என்றபடி
அன்றிக்கே இலயம் தன்னால் வரு மாயப்பிள்ளை -என்று கொண்டு –
இலயமே கூத்தும் கூத்தின் விகற்பமும் இரு பேர் என்ப -நிகண்டு -கூத்தாடிக் கொண்டு வரும் என்றபொருளில் –
மல்லிகை வனமாலை மௌவல் மாலை-3-4-9-வனம் -அழகு -என்றும் வன மல்லிகை -காட்டு மல்லிகை –
மௌவல் -மல்லிகைக்கும் முல்லைக்கும் மாலதிக்கும் பெயர் –
——————————–
3-5-
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை -என்பதால் சோற்றுப் பருப்பதம் -3-5-1-சோறாகிய பர்வதம்
வட்டத் தடம் கண் மடமான் கன்றினை வலை வாய் பற்றிக் கொண்டு குற மகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-1 – ஸ்வாபதேசம் –வட்டம் -தனது வர்ணாஸ்ரம
விருத்தியில் விசாலமான ஞானத்தையும் -அதனை உபதேசித்து அருளின ஆச்சார்யர் பக்கல் க்ருதஞ்ஞதையும்
ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையான் ஒருவனை ஆச்சார்யரானவர் வாசுதேவன் வலையுளே-என்றபடி
எம்பெருமான் வலையுள்ளே அகப்படுத்தி அவனுக்கு சகல வேத ஸாஸ்த்ர தாத்பர்யமான பாலோடு அமுதன்ன
திருவாயமொழியை உரைத்து வளர்க்கும் தன்மையைச் சொல்லிற்று –
இப்படிப்பட்ட மஹானுபவர்கள் உறையும் இடம் அம்மலையின் சிறப்பு என்றவாறு
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன்-3-5-2-விபரீத லக்ஷணை -அவன் நினைவாலே யாகவுமாம்
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே -3 -5 2- ஸ்வாபதேசம் -தன்னைப் பற்றிக் கிடக்கும்
சிஷ்யனுடைய விரஹத்தைப் பொறுக்க மாட்டாத ஆச்சார்யனானவன் -அச் சிஷ்யனை தொடர்ந்து முடிப்பதாக வருகின்ற
வாசனா ரூப கர்மங்களுக்கு அஞ்சி அவனைத் தன் திருவடிகளுக்கு அந்தரங்கன் ஆக்கிக் கொண்டு
அக்கர்ம வாசனையை நீக்கி முடிக்கும் தன்மையைச் சொல்லிற்று ஆகிறது
தம் பாவையரை புன மேய்கின்ற மான் இனம் காண்மின் என்று கொம்மை புயம் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே – 3-5 3- ஸ்வாபதேசம் -பெரும் கொடையாளனாய் இருக்கும் ஒரு ஆச்சார்யர்
தன்னை சரணமாகப் பற்றி இருக்கும் சிஷ்யர்கள் விஷயாந்தர பரர்களாக அதிசங்கித்து
அத்தை விலக்க அவர்களுக்கு பிரணவத்தின் பொருளை பறக்க உபதேசித்து அருளுகிற படியைச் சொல்லுகிறது
பிரணவத்தை சிலையாக உருவகம் -சேஷ பூத ஞானம் பிறக்கவே விஷயாந்தர பிரவணம் ஒழியுமே
கானக்களியானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து கூனர் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -3 5-5 – ஸ்வாபதேசம்-சம்சாரம் ஆகிற மருகாந்த்ரத்திலே களித்துத் திரிகிற ஆத்மா –
தனது மமகாராம் அழியப் பெற்று -மத மாத்சர்யங்களும் மழுங்கப் பெற்று -சத்வம் தலை எடுத்து அஞ்சலி பண்ணிக் கொண்டு ப்ரக்ருதி ஆத்ம
விவேகம் முதலிய ஞானங்களை எல்லாம் பெற விரும்பி அஞ்சலி ஹஸ்தனாய் இருக்கும் படியை குறிக்கும் -இது மகாரார்த்தம்
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6- -குப்பாயம் -சட்டை –
மெய்ப்பை-சஞ்சளி -கஞ்சுகம் -வாரணம் -குப்பாயம் அங்கி சட்டை யாகும் -நிகண்டு -இங்கு சந்தர்ப்பம் நோக்கி முத்துச் சட்டை
அனுமன் புகழ் பாடி தம் குட்டங்களை குடம் கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் என்னும்
கொற்றக் குடையே -3 5-7 – குழந்தைகளை ஓக்கலையில் வைத்து கதை சொல்லி தூங்கப் பண்ணும் மாதாவை போலே -இங்கு ஸ்வாப தேசம் –
கபடச் செயல்களுக்கு ஆகரமான இந்திரியங்களின் திறலை வென்ற பாகவதர்கள் ஞான அனுஷ்டானங்களை தமது கைக்கு அடங்கின
சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு ஞானம் வளரச் செய்யும் மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாகும்
தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய கொலை வாய்ச்சின வேங்கை கண் நின்று உறங்கும் கோவர்த்தனம்
என்னும் கொற்றக் குடையே -3 5-8 – ஸ்வாப தேசம்-காம க்ரோதம் மதம் மாச்சரியம் போன்ற தீய குணங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்
சம்சாரிகள் நாத முனிகள் போல்வாருடைய திரு ஓலக்கத்திலே புகுந்து வருத்தம் தோற்ற நிற்க -அவர்கள் பரம காருண்யத்தால் உஜ்ஜீவன
உபாயம் தெளிவாக உபதேசித்து அருள அதனால் திருந்து உலக உணர்வுகளில் உறக்கமுற்று பேரின்பம் நுகருமாற்றை பெறுவித்தவாறாகும்
தம்முடைக் குட்டங்களைக் கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9- -ஸ்வாப தேசம்-
சதாச்சார்யர்கள் தங்கள் அபிமானித்த சிஷ்யர்களை அன்புடன் அணைத்துக் கொண்டு நல் வழி காட்டுகைக்காக வேத சாகைகளை
ஓதுவித்து அவற்றிலே புத்தி சஞ்சாரம் பண்ணிக் கொண்டு இருக்கும் படி ஞான உபதேசம் பண்ணும் படியை சொல்லிற்றாம்
முசு -குரங்குகளின் ஒரு வகைச்சாத்தி -காருகம் யூகம் கருங்குரங்காகும்–ஓரியும் கலையும் கடுவனும் முசுவே -நிகண்டு
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல-3-5-10-ஸ்வாப தேசம்-வேதாந்த நிஷ்டர்களான
ஆச்சார்யர்கள் தம் அடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரசமான அர்த்தங்களை உபதேசித்து தங்கள் சுத்த ஸ்வரூபர்களாய் இருக்கும் படி சொல்லிற்று
———————————————
3-6-
நாவலம் பெரிய தீவினில் வாழு நங்கைமீர்கள்-3-6-1-
உப்புக் கடல் -கருப்புக் கடல் -கள்ளுக் கடல் -நெய்க் கடல் -தயிர்க் கடல் -பாற் கடல் -நீர் கடல் –
ஜம்பூ த்வீபம் -ப்லஷ த்வீபம் – சால்மல த்வீபம் -குச த்வீபம் -கிரௌஞ்ச த்வீபம் -சாக த்வீபம் -புஷ்கர த்வீபம்
ஜம்பூ த்வீபம் நடுவில் உள்ளது -அதன் நடுவில் மேரு பொன் மலை உள்ளது -அதை சுற்றி உள்ள இளாவ்ருத வருஷத்தில்
ஸ்ருஷ்டிக்கப்பட்டுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு மரங்கள் –
அவற்றில் ஓன்று நாவல் மரம் -ஜம்பூ – நாவல் – அதனாலே இதற்க்கு பெயர் -இத்தீவில் நவம கண்டம் பாரத வர்ஷத்தில் தான்
தான் கர்ம அனுஷ்டானம் -மற்ற தீவுகள் பலம் அனுபவிக்க தான் -அதனால் சிறப்பு
இட அணரை இடத்தோளோடு சாய்த்து-3-6-2-அணர் -தாடி -ஆகு பெயரால் மோவாயைக் குறிக்கும்
சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே – 3 6-3-இங்கு சென்னி -நெற்றியை சொன்னவாறு –
மத்தகம் இலாடம் -முண்டகம் -நுதல் -குலம் -நெற்றி -பாலம் -நிகண்டு
கானகம் படி-3-6-4- -காட்டுக்குள்ளே இயற்கையாக-பிருந்தாவனத்தில் –காடு நிலத்திலே என்றுமாம்
வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறைய புகுந்து -3-6-7-குழலூதுவது ப்ருந்தாவனமாய் இருக்க திருவாய்ப்பாடியில் புகுந்தது –
கீழ்க் கச்சியில் பேர் அருளாளன் கருட சேவை திருநாள் கூட்டத்து திரளால் மேல் கச்சி அளவும் நிற்குமா போலே –
பஞ்ச லக்ஷம் கோபிமார்கள் அணுக்கர்கள் சூழ்ந்த இடம் அன்றோ
கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே -3 6-8 -கவிழ்ந்து இறங்கி-ஒரு பொருள் பன் மொழி -நன்றாகத் தொங்க விட்டுக் கொண்டு என்றபடி
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய-3-6-1-மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ போலே
————————————–
3-7-
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கம்பர்
வராஹ வாமனனே அரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக வாதரம் செய்வன் -திருவரங்கத்து மாலை
பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுரு முலையினாள்-சீவக சிந்தாமணி
கண்ணனுக்கே ஆமது காமம் -அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் வாமனன் சீலன் ராமானுஜன் இந்த மண் மிசையே -அமுதனார்
சம்பந்த ஞான பிரஞ்ஞா அவஸ்தை -தோழி-பிராணவார்த்தம் / உபாய அத்யாவசிய பிரஞ்ஞா அவஸ்தை தாயார் -நமஸார்த்தம் /
பேற்றுக்கு த்வரை உந்த தாய் -நாராயணார்த்தம்
சம்பந்த உபாய பலன்களில்-உணர்த்து துணிவு பதற்றம் -ஆகிற பிரஞ்ஞா அவஸ்தைகளுக்கு தோழி தாயார் மகள் -என்று பெயர் -நாயனார்
ஸ்வாபதேசம் -சரீரம் பிரகிருதி சம்பந்தத்தால் சுத்த சத்வமாக பெறவில்லை -அவனுடைய ஸ்வரூபாதிகளை அடைவு படச் சொல்ல வல்லமை இல்லை –
மடிதற்றுத் தான் முந்துறும் -என்ற திருக்குறள் படி ஆடையை அரையில் இறுக உடுத்துக் கொண்டு முந்துற்றுக் கிளம்பும் முயற்சி இல்லை
ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி எம்பெருமானுக்கு அல்லாது செல்லாமை இப்பாட்டில் வெளியாம் –
3-7-2-
எம்பெருமானை வசப்படுத்த ஸ்தோத்ரங்களையும் பிரணாமாதிகளும் பூர்ணமாக பெறாது இருக்கும் இளைமையாய் இருக்கச் செய்தேயும்
எம்பெருமானை ஸம்ஸ்லேஷிக்கப் பெற்றுக் கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் -என்றால் போலே ஸ்ரீ ஸூக் திகளால்
பகவத் விஷயத்தில் உள்ள அபி நிவேசத்தை வெளிப்படுத்திய ஆழ்வார்படியை அன்பர் கூறுதல் –
3-7-3-
சிற்றில் -ஹேயமான தேகத்தையும் வாஸஸ் ஸ்தானமான வீடு முதலியவற்றையும் சொல்லும்
ஆழ்வார் ப்ராக்ருதத்தில் இருந்தும் விஷயாந்தரங்களில் நெஞ்சை செலுத்தாமல் எம்பெருமான் திவ்யாயுத அம்சமான பாகவதர்களையே
தியானித்து இருப்பர் என்கிறது
முலை -பக்தி -முற்றும் போந்தில -பரம பக்தி யாக பரிணமித்தது இல்லை என்றாலும் பகவத் விஷயத்தில்
இவ்வளவு அவகாஹம் வாய்ந்தது எங்கனே என்ற அதி சங்கையை சொன்னவாறு
பாலிகை -3-7-4–என்னாமல் பாலகன் என்றது -உகப்பினாலான பால் வழுவமைதி –
உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே -நன்னூல்
3-7-5-
ஸ்வா பதேசம் -பகவத் விஷயத்தில் பேரவாக் கொண்ட இவ்வாழ்வாரை பகவத் சந்நிதியில் சேர்த்தமையை அன்பார் கூறுவது இதன் ஸ்வா பதேசம்
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து -இருந்தாலும் த்வரை மிக்கு பதறி நேராக எம்பெருமானைப் பற்ற
ஆழ்வார் பிரவ்ருத்தி சைலிகளைக் கண்ட அன்பார் இது பிரபன்ன சந்தானத்துக்கு ஸ்வரூப விருத்தம் என்று அறுதியிட்டு
பாகவத புருஷகார புரஸ் ஸரமாக இவரை அங்கு சேர்க்கலுற்ற படியை சொல்லிற்று
மங்கைமீர் –இப்படி தாய் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெறாத பூர்த்தி உள்ளவர்களே
பாடகம் பட்டம் -3-7-5-ஸ்வா பதேசம்-சேஷத்வ ஞானாதிகளாகிய ஆத்ம பாஷாணங்கள் -ஆச்சார்ய நிஷ்டை மாத்திரத்திலே
பர்யாப்தி பிறவாமல் உகந்து அருளின தேசங்களுக்கு சென்று ஆழ்ந்தமை சொல்லிற்று
3-7-7-ஸ்வாபதேசம் க்ரம பிராப்தி பற்றி பதறி பகவத் சந்நிதி போய்ப் புகுந்து அவன் திரு நாமங்களை அனுசந்தித்து பிச்சேறின படியை அன்பார் கூறுதல்
3-7-8-காறை பூணும் -பகவத் பிரணாமம் ஆகிற ஆத்ம அலங்காரம் / கண்ணாடி காணும் -ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பண்ணும் படி
வளை குலுக்கும் -கலை வளை அஹம் மமக்ருதிகள் -சாத்விக அஹங்காரம் உடைமை /கூறை யுடுக்கும் -பகவத் விஷயத்தில் பிரவ்ருத்தி
அயர்க்கும் -இவை சாதனா அனுஷ்டானமாக தலைக் கட்டிவிடுமோ என்ற கலக்கம் /கொவ்வைச் செவ்வாய் திருத்தும் -வாசிக கைங்கர்யங்கள் திருந்தின படி
ஓவாதே நமோ நாரணா என்பவள்
3-7-9-அந்தணர் மாடு -வேதம் ஓதுவித்து ஆழ்வாரை நம் பக்கல் இருத்துவோம் என்றால் இவர் பர்யாப்தர் ஆகாமல் பகவத் விஷயம்
அளவும் போய் அந்வயிக்க வேணும் என்று பதறுவதனால் இவரை அங்கெ சேர்த்து விட வேணும் என்று அறுதியிட்ட அன்பர்கள் பாசுரம்
—————————————
3-8-
காவியங் கண்ணி என்னில் கடி மலர்ப் பாவை ஒப்பாள் -புகழால் வளர்த்தேன்-3-8-4- -புகழ் உண்டாம்படி வளர்த்தேன் என்றவாறு
மாமியார் சீராட்டுதலை நான்காம் பாட்டில் சங்கித்து -மாமனார் சீராட்டுதலை ஐந்தாம் பாட்டில் சங்கிக்கிறார் –
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம் அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய மறையார் மன்றல்
எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப் புலமையோர் புணர்ப்புப் பொருண்மை என்மனார் புலமையோரே -விவாஹம் எட்டு வகை
யாழோர் கூட்டம் -காந்தர்வ விவாஹம் -தனி இடத்தில் இருவரும் கூடுகை -ஸாஸ்த்ர மரியாதை இல்லாமல் தனக்கு வேண்டியபடி செய்தல்-3-8-6-
பண்டப் பழிப்புகள் சொல்லி-3-8-7–பண்டம் பதார்த்தங்களில் குறை சொல்லி -உபமேய அர்த்தம் தொக்கி நிற்கிறது –
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ-3-8-8-அந்தோ -மகிழ்ச்சி -இரக்கம் -துன்பம்-நிகண்டு – -இங்கு இரக்கத்தால்
————————————
3-9-
பாடிப் பற-பாசுரங்கள் தோறும் /-உந்தி பற இறுதிப் பாட்டில் / உந்தி பேதையார் விரும்பியாடல் -உந்தியே மகளிர் கூடி விளையாடல் -நிகண்டு
உந்தி பற என்பது பல்வரிக் கூத்துள் ஓன்று -சினத்துப் பிழூக்கை -வெண்பா சிலப்பதிகாரத்தில் உண்டு
கொங்கை குலுங்க நின்று உந்தி பற -மாணிக்கவாசகர் -திருவாசகம் –
சோபனம் அடித்தல் கும்மி அடித்தல் போன்ற லீலா ரஸ விளையாட்டு -பறவைகளைப் போலே ஆகாயத்தில் குதித்து பறந்து விளையாடுவது –
வன்னாத புள்ளால் வலியப் பறித்திட்ட-என் நாதன் வன்மையை பாடிப் பற-3-9-1-வேத மயன்-பெயர் யஜுர் சாமமுமாம் பறந்தே தமது
அடியார்களுக்குள்ள பாவங்கள் பாற்றி யருள் சுரந்தே அளிக்கும் அரங்கன் தம் ஊர்திச் சுவணனுக்கே -திருவரங்கத்து மாலை -88-
தாடகை -ஸூ கேது யக்ஷன் மகள் -ஸூந்தன் என்பவன் மனைவி -அகஸ்திய முனி சாபத்தால் இராக்கதத் தன்மை அடைந்தாள்
முது பெண்-3-9-2- -தீமை செய்வதில் பழையவள்
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு-3-9-3- விதர்ப்ப தேசம் -குண்டின பட்டணம் -பீஷ்மகன் அரசனுக்கு-ருக்மன் முதலிய -ஐந்து பிள்ளைகள் –
ஸ்ரீ ருக்மிணி பிராட்டி – உருப்பணி நங்கை தன்னை மீட்ப்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உறுப்பினை –மேலே -4- 3-திருமொழியில் அருளிச் செய்கிறார்
நாலூர் பிள்ளை நிர்வாகம் -மாற்றுத் தாய் ஸூ மித்ரா தேவி-மற்றைத்தாய்-மாறு ஒப்பாய் பெற்ற தாயும் போலி/
கூற்றுத் தாய் கைகேயி-கொடுமையில் எமனை ஒப்பாள்
திருவாய்மொழிப் பிள்ளை நிர்வாகம் -மாற்றுத் தாய் கைகேயி–பெருமாள் கௌசல்யார் தேவி நினைவாலே –
பரதன் நினைவுக்கு மேல் பொருந்தாமையாலும் மாற்றாம் தாய் —
கூற்றுத் தாய் ஸூ மித்ரா தேவி -கூறு பட்ட ஹவிஸ் ஸ்வீ கரித்ததால் –
ஒரு தாய் இருந்து வருந்த வைதேகியுடன் சுரத்தில் ஒரு தாய் சொலச் சென்ற தென்னரங்கா -திருவரங்கத்து மாலை
காளியன் ஸ்தாவர ஜங்கமங்களையும் அழிக்கப் புகுந்தவனாகையாலே மீண்டும் மீண்டும்-6/7-பாசுரங்களில் அந்த விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்
பிரம்மா புத்திரர் -புலஸ்திய முனிவர் குமாரர் விச்வரஸ் -இரண்டாம் மனைவி கேகேசி வயிற்றில் ராவண கும்ப கர்ணன் சூர்ப்பனகை விபீஷணன்
இவளை காலகை என்பவள் மக்கள் காலகேயர் -ஒருவன் வித்யுஜ்ஜிஹ்வன் என்பவனுக்கு கல்யாணம்
அவனை ராவணனே கொல்ல-சூர்பனகைக்கு ஜன ஸ்தானம் இடத்தில் தன் சித்தி பிள்ளை கரனையும் வைத்தான் –
தபோ வலிமையால் வேண்டிய வடிவு எடுக்கும் சக்தி கொண்டவள் –
——————————–
4-1-
தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவி-4-1-4-சுருக்கிக் கொண்ட -என்றபடி -மேல் குழவி என்பதால் –
கள்ளப் படை துணையாகி பாரதம் கை செய்யக் கண்டார் உளர் – 4-1 8- படைக்கு கள்ளத் துணையாகி –
உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம்–என்று இருந்த அர்ஜுனனை போரில் மூட்டி –
குரக்கு வெல் கொடி -4-1-7—பெருமாளுக்கு பெரிய திருவடி த்வஜமானது போலே அர்ஜுனனுக்கு சிறிய திருவடி த்வஜமாயினான்-
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயந்திரன் தலையை -4-1-8-மாயிரு ஞாயிறு பாரதப் போரில் மறைய
அங்கண் பாயிருள் நீ தந்தது என்ன கண் மாயம் -திருவரங்கத்து மலை-
ஏனமாகி இரு நிலம் புக்கு இடந்து வண்ணக் கரும் குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் -4 1-9 –
இந்த சம்ச்லேஷத்தால் நரகாசுரன் பிறந்தான் —
அசமயத்தில் புணர்ந்து பிறந்த படியால் அஸூரத தன்மை பூண்டவன் ஆயினான் என்பர் –
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை-4-1-10-நுனியில் கதிர் வாங்கித் தழைத்து இருக்கும் படிக்கு குதிரை முகம் ஒப்புமை –
வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணங்கும்
—————————————–
4-2-
தத் விஷயத்தைக் காட்டிலும் ததீய விஷயமே ப்ராப்யத்துக்கு எல்லை நிலம் என்று திருமலையை பஹு விதமாக அனுபவிக்கிறார் -இதில் –
கிளர் ஒளி இளமையில் நம்மாழ்வார் -முந்துற உரைக்கேன் -திருமொழியில் திருமங்கள் ஆழ்வார்களைப் போலே –
சிலம்பாறு -திரிவிக்ரமன் திருவடி சிலம்பில் இருந்து தோன்றியது -மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஓ என்று கேட்டு
குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையாலும் சிலம்பாறு -சிலம்பு -குன்றுக்கும் பெயர் –
எல்லாவிடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும் சீர் தென் திரு மால் இரும் சோலை மலையே -4 2-2 –
புனத்தினை கிள்ளி புதுவவி காட்டுகிற குறவரும்-உன் பொன்னடி வாழ்க -துக்கச் சுழலை திருமொழி -என்று
மங்களா சாசனம் பண்ணும் படி இறே நிலத்தின் மிதி தான் இருப்பது
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் அஞ்ச அன்று ஒரு வாரணம் உயிர் உண்டவன்-4-2-5-ஆனை காத்து ஓர் ஆனை கொன்றவன் –
ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றவன் -அர்ஜுனன் -சிஸூ பாலன் /
ஒரு ராக்ஷஸனைக் காத்து ஒரு ராக்ஷஸனைக் கொன்றவன் -விபீஷணன் -ராவணன் /
ஒரு குரங்கைக் காத்து ஒரு குரங்கைக் கொன்றவன் -சுக்ரீவன் -வாலி /
ஒரு பெண்ணைக் காத்து ஒரு பெண்ணைக் கொன்றவன் -அஹல்யை தாடகை /
ஒரு அம்மானைக் காத்து ஒரு அம்மானைக் கொன்றவன் -கும்பர் கம்சன் /
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்ல சிறுகாலை பாடும் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 8- திருப்பாண் ஆழ்வார் தம்பிரான்
போல்வாரை வண்டு -உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை – பகவத் விஷயம் தவிர வேறே ஒன்றை விரும்பாத
ஷட் பத த்வய நிஷ்டர்கள் சிற்றம் சிறு காலையில் திரு நாமங்களை அனுசந்தித்திக் கொண்டு திருவடி பணிவதைச் சொல்லிற்று –
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் சிந்தும் புறவின் தென் திரு மால் இரும் சோலையே – 4-2 9-
சிந்தூரச் செம்பொடி போல் திரு மால் இரும் சோலை எங்கும் இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டன -என்றார் இறே இவர் திரு மகளாரும்
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டு சித்தன் சொல் கருதி உரைப்பவர் கண்ணன் கழலினை காண்பரே – 4-2 11-
திருப்பல்லாண்டு -மங்களா சாசனம் இவர் விரதம் -நாமும் அனுசந்திந்ததா கண்ணன் கழல் இணை பெறுவது திண்ணம் அன்றோ –
—————————–
4-3
தனிக் காளை -4-3-4– காளையே எருது பாலைக்கு அதிபன் நல் விளையோன் பெறலாம் -நிகண்டு
பல பல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை-4-3-5-
நாழ்-குற்றம் -நான் என்று அகங்கரிக்கையும்-பொல்லாங்குக்கும் -நறு வட்டாணித் தனத்துக்கும் -பேர்
நாமா மிகவுடையோம் நாழ் -என்றும் -நாழால் அமர முயன்ற வல்லரக்கன் -என்றும் -அஃதே கொண்டு அன்னை நாழ் இவளோ என்னும் -என்றும் உண்டே –
தொல்லை மால் இரும் சோலை அதுவே -4-3-6-திரு அனந்த் ஆழ்வான் திருமலை ஆழ்வாராய் வந்து நிற்கையாலே -அநாதியாய் கொண்டு -பழையதாய்
வாய்க் கோட்டம் -4-3-8—வாய்க் கோணல் -ந நமேயம் -என்றத்தைச் சொல்லுகிறது
அடி இறை என்று ஒட்டரும் தண் சிலம்பாறுடை மால் இரும் சோலை யதே -4 3-9 –
ஸ்ரீ பாத காணிக்கை -அடி யிறை -பாட பேதம் / ஓட்டரும் ஓட்டம் தரும் விகாரம்
நாலிரு மூர்த்தி தன்னை -4-3-10–அஷ்டாக்ஷர ஸ்வரூபி – நால் வேதக் கடல் அமுது -திரு மந்த்ரத்தை சொல்லி அவனைச் சொல்லும்
மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
—————————
4-4-
திருமங்கை ஆழ்வாரும் முந்துற உரைக்கேன் -மூவரில் முன் முதல்வன் -இரண்டு திருமொழிகளால் திருமாலிரும் சோலையை அனுபவித்து
எங்கள் எம்மிறை திருமொழியால் திருக் கோஷ்டியூரை அனுபவித்தால் போலே இவரும் இங்கு இதில் திருக் கோஷ்டியூரை அனுபவிக்கிறார் –
வண்ண நன் மணியும் மரகதமும் மழுத்தி நிழல் எழும் திண்ணை சூழ் திருக் கோட்டியூர்-4-4-3-மகர விரித்தல் செய்யுள் ஓசை நோக்கியது –
இவர் இவர் என்று ஆசைகள் தீர்வேனே – 4-4 9- இரட்டிப்பு -பாகவதர்களைத் தனித் தனியே அனுசந்திக்கை –
காண்பது கிட்டே இருப்பது கூட போத யந்த பரஸ்பம் -ஆசைகள் பலவும் உண்டே –
———————–
4-5-
துணையும் சார்வுமாகுவார் போலே சுற்றத்தவர் பிறரும் அணையவந்த ஆக்கம் யுண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
அரவ தண்டத்தில்-4-5-3- -ஐந்தாம் வேற்றுமை உருபு -ஏழாம் வேற்றுமை உறுப்பு அல்ல -எம படர்களால் வரும் துன்பத்தின் நின்றும் என்றவாறு
மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளே வாங்கி வேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தினில் மேவலும் ஆம் – 4-5-4-
பிரணவத்தை -முறை வழுவாமல் இறைஞ்சினால் களிப்பும் கவர்வும் அற்று பிறப்பி பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியாய் அடியார் குழாங்கள் உடன் கூட பெறலாமே -ஓன்று இரண்டு மாத்திரை உச்சாரண பலம் அல்பம் அஸ்திரம் –
மூன்று மாத்திரை உச்சாரணமே மோக்ஷ பலம் -ஈஷதி கர்ம அதிகரணம் மேவுதீர்-சர்வாதிகாரம் -ஸ்த்ரீ ஸூத்ரர்களுக்கும் அதிகாரம் உண்டு
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி-4-5-6-அகன்று வினை எச்சம் பிரயோகிக்காமல் -அகற்றி -என்றது -தன் வினையில் வந்த பிறவினை –
சேவதக்குவார் போலப் புகுந்து-4-5-7-சே -அதக்குவார் போலே /
வானகத்து மன்றாடிகள் தாமே -4-5-7–வானகம் மன்றத்து ஆடிகள் -நித்ய ஸூரி சபையில் சஞ்சரிக்கப் பெறுவார்கள்
குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4 4-8 -பாப பலன்களை அனுபவிப்பதற்கு என்று குறிக்கப் பட்ட -யமலோகம் -கடத்தல் -அங்குச் செல்லாது ஒழிகை –
——————————–
4-6-
நீங்கள் தேனித் திருமினோ -4-6-1-தேறித் திரிமினோ-அத்யாபக பாட பேதம் -மகிழ்ந்து இருங்கோள்-என்றவாறு –
நானுடை நாரணன்-4-6-4-என்னுடை என்ன வேண்டும் இடத்து -ஊனுடைச் சுவர் வைத்து —-நானுடைத் தவத்தால் -திருமங்கை ஆழ்வாரும் –
குழியில் வீழ்ந்து வழுக்காதே-4-6-7-குழி -நரகக் குழி –
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்-4-6-8-உப்பும் இல்லை பப்பும் இல்லை என்பாரைப் போலே-
கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ-4-6-9-ஆனந்தம் தலை மண்டி தலைகீழாக ஆடுவது -மொய்ம் மா பூம் பொழில் பொய்கையில் போலே
——————————
4-7-
திருக் கண்டங்கடி நகர் -திருக் கண்டம் -திவ்ய தேசப் பெயர் -மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுதம் அளித்த அத்தா
எனக்கு உன் அடிப் போதில் புத்தமுதைக் கங்கை நரை சேரும் கண்டத்தாய் புண்டரீக மங்கைக்கு அரசே வழங்கு -ஐயங்கார் –
கமை உடை பெருமை கங்கையின் கரைமேல் -4-7-4-கமை -க்ஷமை-வடமொழி மருவி -கமை
பெருமை யுடை என்று கொண்டு ஷமிக்கையாகிற பெருமை
படைக்கலமுடைய-4-7-5- -படை கலம் யுடைய -திரு ஆபரணங்களையும் திரு ஆயுதங்களையும் யுடைய –
—————————–
4-8-
மைத்துனன் மார் உரு மகத்து வீழாமே-4-8-3-மகம் யாகம் -நரமேத யாகம் -மநுஷ்யர்களை பலி-
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்து -மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவன் -அன்றோ —
குருமுகமாய் காத்தான் -ஸ்ரீ கீதா உபநிஷத் உபதேச முகமாக –
பொரு முகமாய்-குவளையும் கமலமும் எம்பெருமான் திரு நிறத்தோடும் திரு முகத்தோடும் போர் செய்யப் புகுவது போலே அலரா நிற்கும்
கண்டகரைக் களைந்தானூர்–4-8-4–ரிஷிகளுக்கு முன்பு குடி இருந்த முள் போன்ற ஜனஸ்தான வாசிகள் -ராக்ஷஸர்கள்
யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – 4-8 6- யாழ் இன் இசை என்றும் யாழின் இசை என்றும் –
ஆளம் வைக்கும் -ஆளத்தி வைக்கும் -அநஷர ரசம் -ஆலாபனை –
தழுப் பரிய சந்தனங்கள் தடவரை வா ஈர்த்து கொண்டு -4-8-7-
தழுவ முடியாத ஸ்தூல சந்தன மரங்கள்-சாத்துப் பிடி சமர்ப்பிக்கிறாள் திருக் காவேரி தாயார்-
திருவரங்க தமிழ்மாலை விட்டு சித்தன் விரித்தன கொண்டு இருவரங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே -4 8-10 –
தீதிலா ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்தில் இப் பத்தும் ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே -நம்மாழ்வார்
—————————
4-9-
திருமங்கை மலர் கண்ணும் -4-9-1-மலர்க் கண் பாடம் மறுக்கப்படும் -மலர் போன்ற கண் இல்லை -மலர்ந்த கண் என்றபடி
மலர் கண் வைத்த என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 2-
இங்கும் பெரிய பெருமாளாது விகசிதமான திருக் கண்கள்
கருளுடைய பொழில் மருது-4-9-3- -கருள் -கருப்பு -கறுப்பும் சிகப்பும் வெகுளிப் பொருள் –
நள கூபரன் மணிக்ரீவன் -குபேர புந்த்ரர் சாபத்தால் மருத மரங்கள்
இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி-தேரார் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல் /
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய் வீடு என்னும் தொன்னெறிக் கண் சென்றாரை -பெரிய திரு மடல் /
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து-4-9-6-
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிட்ரும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -ஸ்ரீ வசன பூஷணம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் -கலியன்
தருமம் தவிர்ந்து பொறை கெட்டுச் சத்தியம் சாய்ந்து தயை தெருமந்து தன் பூசனை முழுதும் சிதையக் கலியே
பொருமந்த காலக் கடையினில் எம் பொன்னரங்கன் அல்லால் அருமந்த கல்கி என்றாரே அவை நிலையாக்குவரே -திருவரங்கத்து மாலை-
மெய்ந்நாவன்-4-9-11-பொய்ம் மொழி ஓன்று இல்லாத மெய்மையாளன் -கலியன்
————————
4-10
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே- 4-10- 1- ஸ்ரீ வைகுண்டத்தையும் திருப் பாற் கடலையும்
விட்டு கோயிலிலே வந்து பள்ளி கொண்டு அருளினது இதற்காக அன்றோ
———————
5-1-
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே -5-1 1- அது கத்தினாலும் உறவானவர்கள் வருவதை ஸூசிப்பிக்குமே –
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் –5-1-2-புள்ளி மான் ஸ்தானத்தில் எம்பெருமான் -ஆழ்வாரையும் கொள்ளலாம் –
நெடுமையால் அளந்தாய் -சமத்கார அருளிச் செயல் /
அக்கோயின்மை -5-1-4—கைங்கர்யத்துக்கு உள்ளே கூறை உடுக்கையும் சோறு உண்கையும் -உண்ணும் சோறு இத்யாதி –
தாரக பதார்த்தம் -இதில் -போஷாக்கை பாக்ய பதார்த்தங்களும் அதுவும் மேலே பாசுரத்தில் –
தத்துறுதல் -5-1-7—தட்டுப்படுத்தல் -கிட்டுதல் -மாறுபாட்டைச் சொல்லிற்றாய் கிட்டுதல் தாத்பர்யம் என்றுமாம்
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -இந்த மாறுபாடுகள் இருந்தாலே கிட்டுவோமே
———————–
5-2-
உலகமுண்ட பூங்கார் விழிக்குப் புலப்பட்டதால் எப்பொழுதும் என்னை நீங்காது இடர் செய்யும் தீ வினைகாள் இனி நின்று நின்று தேங்காது
நீரும் அக்கானிடத்தே சென்று சேர்மின்களே -திருவரங்கத்து மாலை -102-இப்பதிகம் ஒட்டியே –
பட்டணம் -ராஜ தானி -பத்தனம் -வைத்த மா நிதி
தரணியின் மன்னி யயனார் தனித் தவம் காத்த பிரான் கருணை எனும் கடலாடித் திரு வினைக் கண்டதன் பின் திறணகர் எண்ணிய
சித்ரகுப்தன் தெரித்து வைத்த சுருணையில் ஏறிய சூழ் வினை முற்றும் துறந்தனமே -தேசிக பிரபந்தமும் இத்தை ஒட்டியே
வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – 5-2 1- நித்ய வாசம் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -என்றும்
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல் பேராயர்க்கு ஆள் பட்டார் பேர் -என்பதும் போலே –
காலிடைப் பாசம் கழற்றி -5-2-3—நான்கு வித பொருள்கள் -யமதூதர் பாசக்கயிறு காலிலே இழுக்க ஒண்ணாதபடி பண்ணி
கால் -காற்று -பிராண வாயும் -பாசம் ஆத்மாவை கட்டிக் கொண்டுள்ள ஸூஷ்ம சரீரத்தில் -நசை அறுத்த படி –
கீழே கயிறும் அக்காணி கழித்து-என்றது ஸூதூல சரீரத்தை கழித்தத்தை சொல்லி
கால்கட்டான புத்ர தாராதிகள் பற்றைப் போக்கினை படி
இரண்டு காலிடை உள்ள ஹேய ஸ்நாநத்தின் ஆசையை அறுத்த படி -காம -மோகத்தால் கட்டுண்ட பாசம் ஒழித்து
குறும்பர்கள்-5-2-5-உண்ணிலாய ஐவரால் -கோவாய் ஐவர் என் மெய் குடி இருந்து -உயர்திணை பிரயோகங்கள் போலே –
உற்ற நோய்காள் உறு பிணிகாள்-5-2-6-கொடுமையின் மிகுதியைப் பற்ற கள்ளப் பயலே திருட்டுப் பயலே போலே -ஆழ் வினைகாள் -இவற்றுக்கு காரணம்
என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5 2-8 – தோளுக்கு திரு ஆழி இலச்சினை -தலைக்கு திருவடி இலச்சினை
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-5-2-9-
பைக் கொண்ட பாம்பணையோடும் -மெய்க் கொண்டு வந்து புகுந்து கிடந்தார் உபக்ரமம் படியே நிகழித்து அருளுகிறார் –
————————————
5-3-
வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3 2-வலம் செய்தல் -மற்றுள்ள வழிபாடுகளுக்கும் உப லக்ஷணம் –
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை வலம் செய்து நாளும் மறுவுதல் வழக்கே –
உன் பொன்னடி வாழ்க வென்று -இனக் குறவர் -5-3-3-கீழே -எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி செல்லா நிற்கும்
சீர் திரு மாலிருஞ்சோலை -4-2-2-என்றத்தை விவரித்து அருளிச் செய்கிறார் இங்கு
அங்கோர் நிழலில்லை நீரும் இல்லை உன் பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்-5-3-4-
இலங்கதி மற்று ஓன்று –நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே -திருவாய்மொழி
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா-5-3-6-/ மருந்தும் பொருளும் அமுதமும் தானே-/அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -/
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் /அரு மருந்து ஆவது அறியாய்
கோயில் கடைப் புகப் பெய்-5-3-6–திருக் கண்ண மங்கை ஆண்டான் -ஒரு சம்சாரி தன் வாசலைப் பற்றிக் கிடந்ததொரு நாயை நலிந்தவனைத் தானும்
குத்திக் கொண்ட படியைக் கண்டு ஒரு தேஹாத்ம அபிமானியானவன் அளவு இது ஆனால் -பரம சேதனனான ஈஸ்வரன்
நம்மை யமாதிகளில் கையிலே காட்டிக் கோடான என்று விஸ்வஸித்து திரு வாசலைப் பற்றிக் கிடந்தார் இறே
அநர்த்தக் கடல்-5-3-7- -அனத்தம்-பாட பேதம் -அபாயம் பொருளில் / அஞ்சேல் என்று கை கவியாய் -அபய ஹஸ்த முத்திரை காட்டி அருள்வாய் –
கிறிப் பட்டேன்–5-3-8-கிறி -விரகு-அதாவது யந்த்ரம் -சர்வ பூதங்களும் பிரமிக்கும்படி ரூடமாய் இருப்பதொரு யந்த்ரம்
அஞ்ஞானா வர்த்தமாய் இருப்பது ஓன்று – / மாயம் என்றுமாம் -சம்சார மாயையில் அகப்பட்டேன் –
————————————-
5-4-
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5 4-2 – அறிவை என்று பரம பக்தியைச் சொன்னபடி –
தலைப் பற்றி வாய்க் கொண்டதே-மேல் மேல் வளர்ந்து பெருகிச் செல்லுதல்
தூறுகள் பாய்ந்தனவே –5-4-3-தூறு -என்று செடியாய் -கிளை விட்டுக் கிடக்கிற சம்சாரம் –
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய்த் தூற்றில் புக்கு -திருவாய்மொழி
மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்-5-4-5- -பொன் அழியும் படி -நைச்ய அனுசந்தானம் -அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே -போலே
அன்றிக்கே ஒன்றும் தப்பாத படி சொன்னேன் -உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் என்றபடி
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் என்னப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – 5-4 5- –
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை -போலே
ஐது நொய்தாக வைத்து-5-4-8- -ஐது நொய்து அல்பம் -மிக அல்பம் என்றபடி
அந்தணர் தம் அமுதத்தினை சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –
அந்தணர் -அந்தத்தை அணவுபவர் –வேதாந்தத்தை சார்பவர் –
அம் தண் அர்-என்று பிரித்தும் பொருள் சொல்வர்
அந்தணர் என்போர் அறவோர் மற்று எப்பொருட்க்கும் செத்தண்மை பூண்டு ஒழுகலால்-திருக்குறள்
நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்கால் அந்தணர்க்கு உரிய -தொல்காப்பியம் -யதிகளைக் குறிக்கும் –
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.