Archive for the ‘நான்முகன் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ பேயாழ்வாரும் ஸ்ரீ திருமழிசைப் பிரானும் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-அன்யாப தேச–திருத்தாயார் பாசுரம் —

April 7, 2023

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -69-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இத் திருவந்தாதிகள் எல்லா வற்றுக்குமாக
இப்பாட்டை அன்யாப தேசமாக
நிர்வஹித்துப் போருவது ஓன்று உண்டு –

அதாகிறது
ஆழ்வாரான அவஸ்தை   போய்
பகவத்  விஷயத்திலே அபி நிவிஷ்டை யானாள் ஒரு  பிராட்டி
அவஸ்தையைப் பஜித்து
அவளுடைய பாசுரத்தையும்
செயல்களையும்
திருத் தாயார் சொல்லுகிறாள்  –

—————————————————————————————

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்லநினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத்துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரிந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

—————————————————————————————

வியாக்யானம் –

வெற்பு என்று வேங்கடம் பாடும் –
பாடுகை
சூடுகை
குளிக்கை
முதலான
லோக  யாத்ரையும்
இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும் –

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்கால் ஆகிலும்
திருமலையைப் பாடா நிற்கும்
திருமலையை ஒழிய
வேறு ஒரு மலை அறியாள் –

வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் –
ஏதேனும் ஒன்றைச் சூட நினைத்தாள் ஆகில் –
திருத் துழாயைத்
தன் குழலிலே வையா நிற்கும் –

வியன் துழாய் –
விஸ்மயமான திருத் துழாயை-

கற்பு என்று சூடும் –
இக்குடிக்கும் மர்யாதையாய்ப் போருவது ஒன்று என்று –
பாதி வ்ரத்ய தர்மம் -என்னவுமாம் –

சூடும் கருங்குழல் மேல் –
நாறு பூச் சூட அறியாள்
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் – திருப்பல்லாண்டு -9-
என்னும்படியே
திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்-

மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் —-
இனி ஓர் இடத்தே   நீராட வென்று   நினைத்தாள் ஆகில்
மல்ல ஜாதியாகப் பொடி படும்படி
வளர்ந்த திருத் தோள்களை யுடைய  சர்வேஸ்வரன்
சாய்ந்து அருளின
பரப்பை உடைத்தான
கடலிலே நீராடுகைக்காக
விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும் –

மற்பொன்ற நீண்ட தோள்-
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோள் –

மால் கிடந்த –
வ்யாமுக்தனானவன் கிடந்த –

நீள் கடல் நீராடுவான் –
திருப்பாற் கடல் ஒழிய
வேறு ஒன்றில் குளித்தால்
விடாய் கெடாது -என்று இரா நின்றாள் –

அன்றிக்கே –
பிரகரணத்தில் கீழும் மேலும்
அந்யாப தேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும் இப்படி கொள்ளுகிறது என் -என்று
பரோபதேசமாக நிர்வஹிப்பார்கள் –

அப்போது
அம்மலை அம்மலை என்று வாயாலே ஒரு மலையை வாயாலே சொல்லப்
பார்த்தி கோளாகில் -திருமலையைப் பாடும் கோள்-

ஒரு பூச்சூட நினைத்தி கோள் ஆகில்
அவன் உகக்கும் திருத் துழாயைச் சூடும் கோள் –

ஒன்றிலே இழிந்து ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்
ப்ராத ஸ்நானம் பண்ணப் பார்த்தி கோள் ஆகில்

அவன் சாய்ந்த கடலிலே நாடோறும்
அவகாஹிக்கப் பாரும் கோள் –

இத்தால்
அவனோடு ஸ்பர்சம் உள்ள தீர்த்தங்கள் எல்லா வற்றுக்கும் உபலஷணம்-

மற்பொன்ற நீண்ட தோள்-
கொன்று வளர்ந்த தோள் –

பூண்ட நாள் எல்லாம்-
விடிந்த விடிவுகள் எல்லாம்

பாடும் –
பாடுங்கோள்-

சூடும் –
சூடுங்கோள்-

புகும் –
புகுங்கோள்-

—————————————————

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

——————————————————

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

—————————————————————

செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்

(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )

அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–

பதவுரை

வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை

மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –

வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்

நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்

கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)

(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)

அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்

—————————————————————

வெற்பென்று வேங்கடம்‌ பாடும்‌ வியன் துழாய்‌
கற்பென்று சூடும்‌ கருங் குழல் மேல்‌ – மற்பொன்ற
நீண்ட தோள்‌ மால் கிடந்த நீள் கடல்‌ நீராடுவான்‌
பூண்ட நாள்‌ எல்லாம்‌ புகும்‌. (ஸ்ரீ பேயாழ்வார்‌ -மூ. தி, 69) வியன் துழாய்‌ – வியக்கத்தக்க துளசி;

மற்பொன்ற – மல்‌ பொன்ற, மல்லர்கள்‌ அழியும்படியான;
மால்‌ – திருமால்‌;
நீள் கடல்‌ -திருப்பாற்கடல்‌.

ஆழ்வார்‌ ஒரு தலைவி நிலையை அடைந்து பாடுவது முதலிய செயல்களை அவளது திருத்தாயார்‌ கூறுவதாக இச்செய்யுள்‌ அமைந்துள்ளது.
இது தாய்ப்பாசுரம்‌ என்பர்‌.
என்‌ மகளானவள்‌ ஏதேனும்‌ ஒரு மலையைப்‌ பற்றிய பேச்சு நேர்ந்தாலும்‌, திருவேங்கட மலையைப்‌ பற்றிப்‌ பாடுகிறாள்‌.
தனது கற்புக்குத்‌ தகுந்ததென்று வியக்கத்தக்க துளசியைத்‌ தனது கருங்கூந்தலில்‌ சூடிக் கொள்கிறாள்‌.
மல்லர்கள்‌ அழியும்படியான நீண்ட தோள்களை யுடைய திருமால்‌ பள்ளி கொண்டுள்ள பரந்த திருப்பாற்கடலிலே
நீராடுவதற்காக விடிந்த விடிவுகள்‌ தோறும்‌ புறப்படுகின்றாள்‌.
இப் பாசரத்தில்‌
‘கற்பென்று” பாதி வ்ரத்யத்தையும்‌,
கருங்குழல்‌” என்று பெண்ணின்‌ கூந்தலையும்‌ கூறுவதால்‌,

‘என்‌ மகள்‌’ என்று ஒரு பெண்ணை எழுவாயாகக்‌ கொள்ள வேண்டும்‌.
மற்பொன்ற: மல்லர்களை யழித்த;
கடலில்‌ புகுந்து மதுகைடபர்‌ என்னும்‌ அசுரர்களைக்‌ கொன்றதையும்‌,
கிருஷ்ணாவதாரத்தில்‌ சாணூரன்‌, முஷ்டிகன்‌ என்கிற மல்லர்களை அழித்ததையும்‌ கூறுகிறார்‌.
பூண்ட நாள்‌ எல்லாம்‌: பூண்ட – பூட்டிய) சூரியனுடைய தேரிலே குதிரையைப்‌ பூட்டிய நாள்‌ எல்லாம்‌’ என்கிறபடியே,
“விடிந்த விடிவுகள்‌ தோறும்‌’ என்று பொருள் பட்டது.
எம்பெருமானை அனுபவித்தல்‌ பல வகைப்பட்டிருக்கும்‌:
அவனுடைய திரு நாமங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திருக் கல்யாண குணங்களைச்‌ சொல்லி அனுபவித்தல்‌,
திவ்ய சேஷ்டிதங்களை (அவதாரச்‌ செயல்களைச்‌) சொல்லி அனுபவித்தல்‌,
வடிவழகை வருணித்து அனுபவித்தல்‌,
அவனுகந்தருளிய திவ்ய தேசங்களின்‌ வளங்களைப்‌ பேசி அனுபவித்தல்‌,
௮ங்கே அபிமானமுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களின்‌ பெருமையைப்‌ பேசி அனுபவித்தல்‌
என்று இப்படிப்‌ பலவகைப்பட்டிருக்கும்‌ பகவதனுபவம்‌.
இவ் வகைகளில்‌ பரம விலக்ஷ்ணமான மற்றொரு வகையுமுண்டு:
அதாவது –
தாமான தன்மையை (ஆண்மையை/ விட்டுப்‌ பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு
வேற்று வாயாலே பேசி அனுபவித்தல்‌ (இது அந்யாபதேசம்‌ எனப்படும்‌).
இப்படி அனுபவிக்கும்‌ இடத்தில்‌ தாய்ப் பாசுரம்‌, தோழிப் பாசுரம்‌, மகள்‌ பாசுரம்‌ என்று மூன்று வகுப்புகளுண்டு.
இவை நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்களது அருளிச்செயல்களில்‌ (பாட்டுகளில்‌) விசேஷமாக வரும்‌.
முதலாழ்வார்களின்‌ திருவந்தாதிகளில்‌ ஸ்திரீ பாவனையினாற்‌ பேசும்‌ பாசுரம்‌ வருவதில்லை.

ஸ்ருங்கார ரஸத்தின்‌ ஸம்பந்தம்‌ சிறிதுமின்றியே கேவலம்‌ சுத்த பக்தி ரஸமாகவே பாசுரங்கள்‌ அருளி செய்தவர்கள்‌ முதலாழ்வார்கள்‌.
ஆயினும்‌ இப் பாசுரம்‌ ஒன்று தாய் வார்த்தையாகச்‌ செல்லுகிறது.
பேயாழ்வாராகிய பெண் பிள்ளையின்‌ நிலைமையை அவளைப்‌ பெற்று வளர்த்த திருத்தாயார்‌ பேசுவதாக அமைக்கப்பட்ட பாசுரம்‌ இது.
“என்னுடைய மகளானவள்‌” என்ற எழுவாய்‌ இதில்‌ இல்லையாதலால்‌ கற்பித்துக் கொள்ள வேண்டும்‌.
இப்பிரபந்தத்தில்‌ அந்யாபதேசப்‌ பாசுரம்‌ வேறொன்றும்‌ இல்லாதிருக்க இஃ்தொன்றை மாத்திரம்‌
இங்ஙனே தாய்ப் பாசுரமாகக்‌ கொள்ளுதல்‌ சிறவாதென்றும்‌,
“என்‌ மகள்‌” என்ற எழுவாய்‌ இல்லாமையாலும்‌
இவ் வர்த்தம்‌ உசிதமன்று என்றும்‌ சிலர்‌ நினைக்கக்‌ கூடுமாதலால்‌
இப் பாசுரத்திற்கு வேறு வகையான நிர்வாஹமும்‌ பூர்வர்கள்‌ அருளிச்‌ செய்துள்ளனர்‌.
எங்ஙனே எனில்‌:
”பாடும்‌, சூடும்‌, புகும்‌! என்ற வினை முற்றுக்களை முன்னிலையில்‌ வந்தனவாகக்‌ கொண்டு,
**உலகத்தவர்களே! நீங்கள்‌ ஏதாவதொரு மலையைப்‌ பாடவேண்டில்‌ திருவேங்கடமலையைப்‌ பாடுங்கள்‌;
ஏதேனும்‌ ஒரு மலரைக்‌ குழலில்‌ சூடவேண்டில்‌ திருத்துழாய்‌ மலரைச்‌ சூடிக்கொள்வதே
சேஷத்வத்திற்கு உரியதென்று கொண்டு அதனைச்‌ சூடுங்கள்‌;
நீராடுவதற்குத்‌ திருப்பாற்கடலிலே சென்று புகுங்கள்‌” என்பதாக.
இங்கே பெரியவாச்சான்‌ பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்தி காண்மின்‌:
‘*இப்பிரகரணத்தில்‌ (பிரபந்தத்தில்‌) கீமும்‌ மேலும்‌ அந்யாபதேசமின்றிக்கே யிருக்க
இப்பாட்டொன்றும்‌ இப்படிக்‌ கொள்ளுகிறதென்னென்று நிர்வஹிப்பர்கள்‌…
திருமலையைப்‌ பாடுங்கோள்‌… திருத்துழாயைச்‌ சூடுங்கோள்‌…
விரோதி நிரஸத சீலனானவன்‌ கிடந்த திருப்பாற்கடலிலே முழுகுங்கோள்‌” என்று.
திருவேங்கடத்தின்‌ புகழைப் பாடியும்‌, துளசியைப்‌ போற்றிச்‌ சூடியும்‌ வந்தால்‌,
நாம்‌ திருப்பாற்கடலிலே நித்யம்‌ நீராடலாம்‌; நிச்சயம்‌ வைகுந்தம்‌ புகுவோம்‌ என்பது குறிப்பு …

——————————–

வெற்பென்று வேங்கடம்‌ பாடினேன்‌ வீடாக்கி
நிற்கின்றேன்‌ நின்று நினைக்கின்றேன்‌ – கற்கின்ற
நூல்வலையில்‌. பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‌
கால்வலையில்‌ பட்டிருந்தேன்‌ காண்‌ (ஸ்ரீ திருமழிசையாழ்வார்‌ -நா. தி, 40),

வீடு – மோட்சம்‌;
நூல் வலை – வேதங்களாகிய வலை;
நூலாட்டி – வேதமாகிய நூலில்‌ போற்றப்படும்‌ லட்சுமி;
கேள்வனார்‌ – கணவர்‌, இங்கே திருமால்‌.

மலைகளின்‌ பெயர்களைச்‌ சொல்லி வருகையில்‌, தற்செயலாக வேங்கடமலை என்றேன்‌;
இதன்‌ பலனாகவே மோட்சம்‌ நிச்சயம்‌ என்றுணர்ந்து நிற்கின்றேன்‌…
“*நாம்‌ சொன்ன சிறிய சொல்லுக்குப்‌ பெரிய பேறு கிடைத்த பாக்கியம்‌ எத்தகையது!” என்று
நினைத்து, வியந்து, மலைத்துப்‌ போனேன்‌!
ஓதப்படுகின்ற வேத சாஸ்திரங்களாகிய வலையில்‌ அகப்பட்டிருக்கும்‌ லக்ஷ்மீநாதனின்‌
திருவடிகளாகிய வலையில்‌ அகப்பட்டு நிலைத்து நிற்கின்றேன்‌.
“மலை’ என்று வருகிற பெயர்களை யெல்லாம்‌ அடுக்காகச்‌ சொல்லுவோம்‌ என்று விநோதமாக முயற்சி செய்து
‘பசு மலை, குருவி மலை’ என்று பலவற்றையும்‌ சொல்லி வருகிற அடைவிலே,
என்னையும்‌ அறியாமல்‌ ‘திருவேங்கடமலை’ என்று என்‌ வாயில்‌ வந்துவிட்டது
இவ் வளவையே கொண்டு எம்பெருமான்‌ என்னைத்‌ திருவேங்கடம்‌ பாடினவனாகக்‌
கணக்கு செய்து கொண்டான்‌ என்பது இதன்‌ கருத்து.
நின்று நினைக்கின்றேன்‌: நாம்‌ புத்தி பூர்வமாக ஒரு நல்ல சொல்லும்‌ சொல்லாது இருக்கவும்‌,
எம்பெருமான்‌ தானே மடிமாங்காயிட்டு
இதனையே அநுஸந்தித்து ஈடுபட்டு நின்றேன்‌ என்கை.
கால்வலையிற்‌ பட்டிருந்தேன்‌? மூன்றாமடியில்‌ சாஸ்திரங்களை எம்பெருமானுக்கு வலையாகவும்‌,
ஈற்றடியில்‌ அவ்வெம்பெருமான்‌ திருவடிகளைத்‌ தமக்கு வலையாகவும்‌ அருளிச்‌ செய்தார்‌.
எம்பெருமானை சாஸ்திரங்களிலிருந்து எப்படிப்‌ பிரிக்க முடியாதோ அப்படியே என்னை
அப்பெருமான்‌ திருவடிகளிலிருந்து பிரிக்கமுடியாது என்றவாறு.

எம்பெருமான்‌ ஒரு வலையில்‌ அகப்பட்டான்‌, –
நானொரு வலையில்‌ அகப்பட்டேன்‌ என்று சமத்காரமாகச்‌ சொல்லுகிறபடி.
வேதங்களையும்‌, ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும்‌ சம்பிரதாயமாக ஓதும்‌ முறையைப்‌ பின்பற்றி
ஆராய்ந்தபோது, எம்பெருமானும்‌, பெரிய பிராட்டியும்‌ (லட்சுமியும்‌) இருவரும்‌ நமக்குத்‌ தெய்வம்‌ என்ற தெளிவு உண்டாயிற்று…
சரணாகதரைக்‌ காப்பதாகக்‌ கூறி ௮வன்‌ அதுபடி நடக்கவில்லையாகில்‌ நூலாட்டி (லட்சுமி)
அந்நூல்களே * எதற்கென்று கேள்வனை (ஸ்ரீநிவாஸனைக்‌) கேட்பாள்‌.
ஏதோ வெற்பொன்றைப்‌ பாட நினைத்த போதும்‌ அவனது வேங்கடத்தைப்‌ பாடும்படியாயிற்று,
அதனால்‌ அதை எனக்கு வீடாக்கினான்‌.
அதே மோட்சத் தானம்‌.
இப்படி எனக்கு வாய்த்ததற்கு யானே வியந்து அசையாது நின்று என்ன வாத்ஸல்யமென விசாரியா நின்றேன்‌ (ஆராய்ந்தேன்‌).
இனி நிலைத்து நின்று இடையூறின்றி வேங்கடத்தையே தியானிக்கவும்‌ வாய்த்தது என்றபடி.
இங்கே பாடுதல்‌, நிற்றல்‌, நினைத்தல்‌ என்று வாக்கு, காயம்‌, மனோ ரூப முக்கரணங்களின்‌
வியாபாரங்கள்‌ (செய்கைகள்‌) மொழியப்‌ பெற்றன.

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள் -நான்முகன் மடியில் குழவியாய் ராவணன் தலைகளை எண்ணிக் காட்டிய வ்ருத்தாந்தம் —

April 7, 2023

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை பாதமத்தால் எண்ணினான் பண்பு-
நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான்-
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —முதல்  திருவந்தாதி–45-

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

——————————

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி-தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

————————————————————

(சாகா வரம் கொடுக்கும் சமயத்தில் இவன் குழந்தை ரூபத்தால் தலைகளைத் தொட்டுக் காட்டி அருளி
மூன்றாம் திருவந்தாதி -நான்முகன் திருவந்தாதி பாசுரங்கள் இதே போல் உண்டே)

இது அவன் காட்டக் கண்ட வருக்கு ஒழிய அல்லாதாருக்கு அறியப் போகாது -என்கிறார் –

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு –45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த(தப ஆலோசனை-ஸ்ருஷ்டிக்குத் தக்க ஞானம் கொண்டவன் )
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;(நாய மாத்ம ஸ்ருதி )
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

ஆமே யமரர்க்கு அறிய –எத்தனையேனும் அதிசயித ஞானரான தேவர்களுக்கும் அறியப் போகாது என்கிறார்
வது நிற்க-நாமே யறிகிற்போம் –அவ் விடையாட்டம் நிற்க -நமக்கு அறிய தட்டு என் –
நன்னெஞ்சே -அவன் காட்டக் கண்ட நெஞ்சே (இதனாலே நல் விசேஷணம் )

பூமேய-மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை-பாதமத்தால் எண்ணினான் பண்பு –
ப்ரஹ்மாவின் மடியில் ஒரு சிறு பிள்ளையாய் கண் வளருவாரைப் போலே கிடந்தது -இவனுக்கு வரம் கொடுக்க வேண்டா
இது அநர்த்தமாம் -என்று ராவணன் தலைகளை தன் திருவடிகளாலே எண்ணினவனுடைய நீர்மையை அமரர்க்கு அறியவாமே -என்கிறது –

(அடிச்சியாம் –உன் கோலப்பாதம் தலை மிசை அணியாய் -10-3–என்றும் கதா புன என்றும் பிரார்த்திக்க பெறாமல் இவன் பெற்றானே)

இத்தால் ப்ரஹ்மாவினுடைய அறிவு கேடு சொல்லுகிறது -ஆமே -அபிமானிகளான ப்ரஹ்மாதிகளுக்கும் எளியனாம் –
தாள் பணிந்த வாளரக்கன்-புதுத் தண்டன் கண்டு இறுமாந்து விளைவது அறியாதே வரம் கொடுத்த படி —

(ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —மூன்றாம் திருவந்தாதி –77-

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் திருவந்தாதி -44-

தப ஆலோசநே
யஸ்ய ஞான மயம் தபஸ் -தபஸ் என்று அறிவையே சொன்னபடி

அடிச்சியாம் தலை மிசை நீ அணியாய் ஆழி யம் கண்ணா நின் கோலப்பாதம் -10-3-6- என்று நாங்கள் ஆசைப்பட்டுப் பிரார்த்திப்பதை
ஓர் அரக்கன் தலையிலே வைப்பதே -)

——————————————————–

இப்படி இருக்கிற அவன் நீர்மை ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் –

என் நினைவிலே நடக்கும் நல்ல நெஞ்சே -திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக யுடையனாய் ஜகத் ஸ்ருஷ்டிக்கு
உபகரணமான தபஸ் சப்த வாசியான ஞானத்தை யுடையனான ப்ரஹ்மாவினுடைய கால் கீழே தலை மடுத்து
எனக்கு வரம் வேணும் என்று ஆஸ்ரயித்த சாயுதனான (ஆயுதம் கொண்ட )ராவணனுடைய ஒக்கத்தை யுடைத்தான தலைகளை
புதுக் கும்பீடு கண்டு இறுமாந்து -மேல் விளைவது அறியாமல் அந்த ப்ரஹ்மா அவனுக்கு வேண்டிய வரங்களை கொடுப்பதாக ஒருப்படுகிற அளவிலே

ஒரு பாலகனாய்க் கொண்டு அவன் மடியிலே வந்து ஆவிர்பவித்து அவைகள் அறுப்புண்ணப் போகும் தலைகள் என்னும் இடத்தை
எனக்கு நிரதிசய போக்யமான அந்த திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டி அந்த ப்ரஹ்மாவின் அனர்த்தத்தை பரிஹரித்த
சர்வேஸ்வரனுடைய குணங்களை -தங்கள் ஹிதம் அறியாமல் அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளக் கடவ
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு அறியப் போமோ –

அது கிடக் கிடாய் -அவன் அருளாலே தெளியக் காண வல்ல நாமே அறிக்கைக்கு சக்தர் ஆகா நின்றோம் –
பேர் அளவுடைய ப்ரஹ்மாதிகள் மதி கெட்டு நிலம் துழவா நிற்க நாமே அவனை அறிய புகா நின்றோம் -என்றுமாம் -(நைச்ய அனுசந்தானம் -அவனுக்கே தெரியாத பொழுது நாம் எங்கனம் அறிவோம் என்றவாறு )

—————————————————–

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித்தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

—————————————————————————————-

வியாக்யானம் –

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன்-
சர்வேஸ்வரனாலே ஒதுவிக்கப் பட்டு
அழகிதாக ஆராய்ந்து
தரித்து
வேத வேதாந்த நிரூபணம் பண்ண வல்ல
சதுர்முகனுடைய –

நன் குறங்கில்-
நன்றான மடியிலே –
வாய்ந்த குழவியாய் –
நேர்பட்ட முக்த சிசூவானவனாய்
அழகிய பிள்ளையாய் –
ராவணன் தன வரம் பெறுகைக்காக
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து தண்டன் இட்டுக் கிடக்க
அவனும் தனக்கு
ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமையாலே
புதுக் கும்பீட்டைக் கண்டு இறுமாந்து
தங்கள் அநர்த்தம் அறியாதே
சொன்னது எல்லாம் கொடுக்கப் போக –
ப்ரஹ்மாவின் பக்கலிலே வந்து இவனாலே நோவு பட்டாலும்
நம்முடைய பாடே  இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து
அப்போது
சர்வேஸ்வரன் இவன் மடியிலே ஒரு பிள்ளையாய் வந்திருந்து
இவனுக்கு வரங்களை கனக்கக் கொடுப்புதியாகில்
நாடு குடி கிடவாது
உனக்கும் குடி இருப்பு அரிதாம்
ஆனபின்பு அவன் வத்யன் கிடாய் -என்னும் இடம் தோற்ற
அவனுடைய தலைகளைத் தன் திருவடிகளாலே கீறி
எண்ணிக் காட்டித் தான் அந்தர்த்தானம் பண்ணினான் –

வாளரக்கன் –
சாயுதனான ராஷசனுடைய –

ஏய்ந்த  முடிப்போது-
அறுக்கைக்குத் தகுதியான தலைகளிலே
மாலைகள் இட்டு வா வென்று –

மூன்று ஏழு என்று எண்ணினான் –
தன் மௌக்த்யம் தோற்ற எண்ணின படி யாய்த்து –

மூன்று ஏழு –
ஏழும் மூன்றும் என்னாதே  –

ஆர்ந்த அடிப்போது நங்கட்கு அரண்  –
அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகள் ஆகிற
செவ்விப் பூ நமக்கு ரஷை-
அவனுடைய அபேஷிதம் செய்ய வற்றான திருவடிப்பூ
ஆகிஞ்சன்யராய்
அநந்ய பிரயோஜனரான
நமக்கும் அரண் –

ஆர்ந்த அடிப் பூ –
போக்யதையால் பரிபூரணமான
திருவடிகள் ஆகிற பூ –

———–

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)

அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )

ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –

எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-

(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ இயற்பா அருளிச் செயல்களில் ததீய சேஷத்வம் —

September 18, 2021

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-

இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-

பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.

நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–

எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –

விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –

ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்

யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து

எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது

ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்

மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே–
பகவத் பிராப்தி விரோதி –ஆத்மபிராப்தி விரோதி -ஐஸ்வர்ய பிராப்தி விரோதி
ஆன பாபங்களை எரிகிற நெருப்பை அவித்தால் போலே நசிப்பிக்கும் வேங்கடமே –

இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –

———-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் ——-55-

அவன் தமர் எவ்வினையராகிலும் –
அவன் தமர் எவ்வினையர் ஆகில் என்
இதுக்கு என்ன ஆராய விட்டவர்கள் அகப்பட ஆராயப் பெறாத பின்பு
வேறே சிலரோ ஆராய்வார்
இது தான் யமபடர் வார்த்தை

இத் தலையிலும் குண தோஷங்கள் ஆராயக் கடவோம் அல்லோமோ என்னில்
அவனுடையார் என்ன செயல்களை உடைத்தார் ஆகிலும்
அவனுக்கு அநு கூலர் ஆனவர்கள் விதித்த வற்றைத் தவிரில் என்
நிஷேதித்த வற்றைச் செய்யில் என் –

எங்கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் –
எங்களுக்கு ஸ்வாமி யானவனுடையார் இவர்கள் என்று கடக்கப் போம் அல்லது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
பரிஹர மது ஸூ தன பிரபன்னான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-
த்யஜ பட தூ ரதரேண தான பாபான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-33-

நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –
இத்தை எல்லாம் ஆராய்வதாகச் சமைந்து இருக்கிற அவனுக்கு
அந்தரங்கர் ஆனாலும் ஆராய ஒண்ணாது கிடீர்
இப்படி ஆராய ஒண்ணாத படி இருக்கிறார் தான் ஆர் –
அரவணை மேல் பேராயர்க்கு ஆட்பட்டார்களோ என்னில்
அங்கன் அன்று
பேர் ஆராயப் பட்டு அறியார் கிடீர்
ஒரு பாகவதன் பேரை ஒரு அபாகவதன் தரிப்பது
அவனுடைய பேரும் கூட யமன் சதச்ஸில் பட்டோலை வாசித்துக் கிழிக்கப் பெறாது –

ஒரு பாகவதனுடைய பேரை
ஒரு அபாகவதன் தரித்தால் அவனுடைய பெரும் எம சதசிலே வாசிக்கப் பெறாது என்கிறது –

அரவணை மேல் பேராயற்கு ஆட்பட்டார் பேர் –
அவன் படுக்கையை ஆராயில் இறே இவர்களை ஆராய்வது
அத்துறை நாம் ஆராயும் துறை அல்ல என்று கை விடும் அத்தனை –

செய்தாரேல் நன்று செய்தார் -என்று பிராட்டிக்கும் நிலம் அல்லாத விடத்தை
யமனோ ஆராயப் புகுகிறான் –

நாரணன் தம்மன்னை நரகம் புகாள்-பெரியாழ்வார் திரு மொழி -4-6-1-என்று ஒரு
மாம்ச பிண்டத்தை நாராயணன் என்று பேரிட்டால்
பின்னை அவனைப் பெற்ற தாயார் சர்வேஸ்வரனுக்குத் தாயாய்ப்
பின்னை நரக பிரவேசம் பண்ணக் கடவள் அல்லள் –

கிருஷ்ணனுக்கு அடிமை புக்கிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை –
தங்கள் அளவன்றிக்கே
தங்கள் பேரும் கூட
நாட்டார் கார்யம் ஆராய்கைக்கு ஆளாய் இருக்கிற யமனுக்கு
அந்தரங்க படராய் இருக்கிறவர்களால் ஆராயப்பட்டு அறியார் கிடீர் –

————-

தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும்
இத்தனை என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி–43–

சக்ரவர்த்தி திருமகன் தாள் இரண்டும் -சரண்ய லஷணம் தான் இருக்கும் படி இதுவாகாதே –
அவன் திருவடிகள் இரண்டையும் –
ஆர் தொழுவார்-
ஏதேனும் ஜன்ம வ்ருத்தங்கள் ஆகவுமாம் –
ஏதேனும் ஞானம் ஆகவுமாம் –
இந்தத் தொழுகை யாகிற ஸ்வ பாவம் உண்டாம் அத்தனையே வேண்டுவது
ஒருவனுக்கு உத்கர்ஷ அபகர்ஷங்கள் ஆகிறன இது யுண்டாகையும்இல்லை யாகுமையும் இறே –

ஆரேனுமாக வமையும் -தொழுகையே பிரயோஜனம் –
பாற் கடல் சேர்ந்த பரமனைப் பயிலும் திரு வுடையார் யாவரேலும் அவர் கண்டீர் -திருவாய் -3-7-1-

ஆர் –
ராஷசனாக அமையும் –
குரங்குகளாக அமையும் –
ஷத்ரியனாக -அர்ஜுனன் -அமையும் –
பிசாசாக -கண்டகர்ணன் -அமையும் –

பாதம் அவை தொழுவது அன்றே –
தொழும் அவர்கள் ஆரேனுமாமாப் போலே அவர்கள் பக்கலிலும் திருவடிகள் உத்தேச்யம் -என்கிறார் –

அவன் தன்னை ஆஸ்ரயிக்கை ஆகிறது –
ஒருவன் கையைப் பிடித்துக் கார்யம் கொண்டவோபாதி –

வைஷ்ணவர்கள் முன்னாகப் பற்றுகை யாகிறது
மறுக்க ஒண்ணாத படி ஒருவன் காலைப் பிடித்துக் கார்யம் கொண்ட மாத்ரம் –

பாதமவை தொழு தென்றே –
அவர்களோடு ஒப்பூண் உண்ண வல்ல –

என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —
புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம் –
அழகு சேர்ந்த தோளானது எனக்குப் பண்ணும் தரமாகிறது –

சீர் கெழு தோள் –
அவர்களில் தமக்கு உள்ள வாசி –
இத் தோளைத் தொழ வமையும் இனி -புருஷார்த்த உபாயமாகத் தோற்றின சரீரம் இறே –

பாதமவை தொழுவதன்றே –
ததீயர் அளவும் வந்து நிற்கப் பெற்ற லாபத்தாலே
சீர் கெழு தோள் -என்கிறார் –

எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்
தாள் இரண்டும்-மற்றும் விழும்படிக்கு ஈடாக சரத்தை துரந்தவன்-ஆஸ்ரித விரோதி யாகையாலே-
நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்-
யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும்
அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள் இரண்டையும் தொழுமவர்களாய்
அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

————

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு
பற்றுகை சீரீயது என்கிறார் –

(இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.)–காஞ்சி ஸ்வாமிகள்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை இரண்டு கூறாக
அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய்
இருக்கும் ஆண்டாள் போல்வார் –
தவம் -ஸூ க்ருதம்-

———-

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் -கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
-மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

கலந்த வினை கெடுத்து–ஆத்மாவுடன் சேர்ந்த தீ வினைகளைத் தீர்த்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –பரமபத வாசலைத் திறந்து சிறப்புடனே எழுந்து அருளி இருக்கப் பெறுவர்
பாற்கடலான் பாதத்தை கண்டு இறைஞ்சுக்கை அன்றிக்கே -பாற் கடலான பாதம் தொழுவாரை
கண்டு இறைஞ்சுமவர் நல் வாழ்வு பெறுவார் என்றதாயிற்று –
ஸ்ரீ வசன பூஷணம் -பழுதாகாது ஓன்று அறிந்தே –என்பதை பூர்வ உபாயத்துக்கு பிரமாணம் என்றும்
நல்ல வென் தோழி/ மாறாய தானவனை -பாட்டுக்களை
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்பதற்கு பிரமாணம் –என்று அருளிச் செய்வது அறிக

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ செஞ்சொல் கவிகாள்–ஸ்ரீ இன் கவி பாடும் பரம கவிகள்-ஸ்ரீ பதியே பரவித் தொழும் தொண்டர்-பேசிற்றே பேசும் ஏக கண்டர்-அருளிச் செயல்களில் ஒற்றுமை —

February 16, 2021

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —முதல் திருவந்தாதி—99-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——மூன்றாம் திருவந்தாதி–40-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி–86-

—————-

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —-இரண்டாம் திருவந்தாதி -24-

(உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)
இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ -அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

———————-

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

———

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் –முதல் திருவந்தாதி–99-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வ ரஷகனான சர்வேஸ்வரன்
திருப்பாற் கடல் தொடக்க மானவற்றிலே வந்து சந்நிஹிதானாய்த்துத் தான்
ஏது என்னில்
விலக்காதார் நெஞ்சு பெருந்தனையும் கிடாய் –

ஆன பின்பு -நெஞ்சே
நீ இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

நாட்டில் பெரியராய் இருக்கிறவர்களும் தங்களுக்கேற ஷேத்ரஞ்ஞர்கள் ஆனவர் இருக்கச் செய்தே
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு
திரு உள்ளம் பயப்பட

நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால் அறுத்து விழ
விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் –என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
நாம் பிரபன்னரான அன்றைக்கு தஞ்சமாக
அவன் ஒருவன் உளன் கண்டாயே –

நெஞ்சே
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தாத்வயி ஜீவத்யபி பிரபோ –
நீயும் உளையாய் இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க் காண் –

பிரபோ –
நீயும் என்னைப் போல் ஒரு ஸ்த்ரீயாதல்
புருஷோத்தமன் அன்றிக்கே ஒழிதல் செய்தாயோ நான் எளிமைப் பட –
இல்லாதவனானவனை உளன் என்கிறதன்று-
அவனுடைய சத்தை நம்முடைய ரஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும்-
நாம் பிரபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்று
நம்மை அஞ்சி இறே
கழுத்திலே சுருக்கி இட்டுக் கொள்ளுமன்று
அறுத்து விடு கிடாய் என்று அறிவுடையவனுக்குச் சொல்லி வைக்குமா போலே –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நமக்கு உளன் என்னப் பாங்காய் இருக்கிற நெஞ்சே
இவ்வர்த்தத்தில் உன்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் –
அவனுடைய வண்மை ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது
பர சம்ருத் ஏக பிரயோஜனனாய் -நம்முடைய ரஷணம் ஸ்வ பிரயோஜனமாய்க் கொண்டு –

என்றும் உளன் கண்டாய்
அசந்நேவ ச பவதி -என்றவனோடு
சந்தமேனம் ததோ விதது -என்றவனோடு
வாசி இல்லை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்
பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன் என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத் தடுக்காதார் நெஞ்சை
வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்
என்றும் உளனானமை காட்டுகிறார் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
திருப்பாற் கடலில் சாய்ந்தவனும்
திருமலையிலே நின்றவனும்
நம்முடைய ஹ்ருதயத்திலே உளனாக புத்தி பண்ணு
அவ்வோ இடங்களிலே இங்குற்றைக்கு வருகைக்காக நின்ற நிலை யாய்த்து
அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம் என்று இரு

அணைப்பார் கருத்தனாவான் -நான்முகன் -திரு -36-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

அணைப்பார் கருத்தானாவான்–அன்புடைய ஆஸ்ரிதர் நெஞ்சில் புகுந்தவன் ஆவதற்காகவே –
அவனுடையவர் அந்தரங்கம் புகுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டே திவ்ய தேசங்களில் சந்நிஹிதன் ஆகிறான்-

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —
இடவகைகள் இகழ்ந்திட்டு -பெரியாழ்வார் திருமொழி -5–4-10-என்னுமா போலே –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –

————–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை

நாட்டில் பெரியவராய் இருக்கிறவர்களும் தங்களுக்கு ஏற ஷேத்ரஞ்ஞராய் இருக்கிற படி அறிந்து இருக்கச் செய்தே-
ஈஸ்வரர்களாகப் பிரமிக்கிற படி கண்டு திரு உள்ளம் பயப்பட –
நாம் கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் என்கிறது –
புறம்புள்ளார் கிடக்கக் கிடீர் –
இப்படி சர்வ ரக்ஷகரான சர்வேஸ்வரன் ஷீராப்தி முதலான இடங்களிலே வந்து சந்நிஹிதன் யாய்த்து –
விலக்காதார் நெஞ்சு பெறும் அளவும் கிடாய் –நெஞ்சே இத்தை புத்தி பண்ணு -என்கிறார் –

உளன் கண்டாய் –
இலனானவனை உளன் என்கிறது அன்று –
அவனுடைய சத்தை நம்முடைய ரக்ஷணத்துக்கும்
நம்முடைய சத்தை நம்முடைய விநாசத்துக்கும் –
நாம் பிரதிபத்தி பண்ணுகிறது பிறரை அஞ்சி அன்றி -நம்மை அஞ்சி
பித்தத்தாலே மோஹித்து கழுத்திலே கயிறு இட்டுக் கொண்டேன் ஆகில் அறுத்து விழ விடு கிடாய் என்று
அறிவுடையார்க்குச் சொல்லி வைக்குமா போலே

நன்னெஞ்சே –
எம்பெருமான் நமக்கு உளன் என்று சொல்லப் பாங்காய் இருக்கிற நெஞ்சே

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
அவனுடைய உண்மை ஸூ ஹ்ருத்தாய்க் கொண்டு
அதாவது பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனனாய் இருக்கை –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
இவன் ஒரு நாள் உளன் என்று இருக்கில் -பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்கும் –
தான் புகுரப் புக்கால் விலக்காதவர்களுடைய ஹிருதயம் விட்டுப் போக அறியான் –

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்-உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் —-
திருப் பாற் கடலில் கிடக்கிறதும்
திருமலையில் நிற்கிறதும்
தம்முடைய ஹ்ருதயத்தில் புகுருகைக்கு அவகாசம் பார்த்து என்று அறி –

உளன் கண்டாய் –
பிறருக்கு உபதேசிக்கிறவர் –எம்பெருமான் உளன் என்று இருக்கிறார் அல்லர்
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –

நன்னெஞ்சே –
இவ்வர்த்தத்தில் என்னிலும் எனக்கு உபதேசிக்க வல்ல நெஞ்சே –

உத்தமன் -தன் பேறாக உபகரிக்கை -என்றும்
அசன்னேவ ச பவதி -ஆனவன்றோடு–சந்தமேனம் ததோ விது–ஆனவன்றோடு வாசி இல்லை –

உள்ளுவார்–
புகுர சம்வத்திப்பார்

உள்ளத்து உளன் –
இடவகைகள் இகழ்ந்திட்டு -வெள்ளம் இத்யாதி -என்றும் உளனானமை காட்டுகிறார் –
அணைப்பார் கருத்தானாவான் —

——————-

திவ்யார்த்த தீபிகை —

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்
எனக்கு பாங்கான நெஞ்சமே
நம்மை ரஷிப்பதனாலேயே
சத்தை பெற்று இருப்பவன்
புருஷோத்தனான எம்பெருமான் காண் –

என்றும் உளன் கண்டாய்
எக்காலத்திலும்
நம்மை ரஷிப்பதில்
தீஷை கொண்டு இருக்கிறான் காண் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
ஆஸ்ரிதர்கள் உடைய
மனத்திலே
நித்ய வாஸம் பண்ணுபவன் காண்

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருள்பவனும்
திருமலையிலே நிற்பவனும்

உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்
இப்போது நம்முடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து
நித்ய வாஸம் பண்ணுகிறான் என்று தெரிந்து கொள்

அங்குத்தை வாஸம் ஆஸ்ரிதர் மனத்தில் இடம் கொள்ளத் தானே
திருமால் இரும் சோலை மலையே -என்கிறபடி உகந்து அருளின நிலங்கள் எல்லா வற்றிலும்
பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும்
அங்குத்தை வாஸம் சாதனம்
இங்குத்தை வாஸம் சாத்தியம்
கல்லும் கனை கடலும் என்கிறபடியே இது சித்தித்தால்
அவற்றில் ஆதரம் மட்டமாய் இருக்கும் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி
இதை அறிந்து நீ உவந்து இரு என்கிறார் –

இதில் நெஞ்சை விளித்து நன்னெஞ்சே -உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் -என்றது
உள்ளமும் நெஞ்சும் ஓன்று தானே
நெஞ்சுக்கும் ஒரு உள்ளம் இருப்பது போலே சொல்லி இருக்கிறதே
தம்மைக் காட்டில் நெஞ்சை வேறு ஒரு வ்யக்தியாக ஆரோபணம் போலே இதுவும் ஒரு ஆரோபணம்
நெஞ்சை விட வேறே உசாத் துணை யாவார் வேறு ஒருவர் இல்லாமையால்
நெஞ்சை விளித்து சொல்லுகிறார் இத்தனை-

———————————————————————————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –
அவதாரிகை –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு
நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய் என்கிறார் –

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
பண்டு உளன் அன்றிக்கே
இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –
அசந்நேவ ஸ பவதி -யாய் இருந்தான் –
நாம் நமக்கு இல்லை என்று அஞ்ச வேண்டாம்
அவன் நமக்கு உண்டு கிடாய் -என்கிறார்

நாம் நம்முடைய விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுகைக்கு உளோம் ஆனாப் போலே யாய்த்து –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி –

அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது -என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
அவனுடைய உண்மையைப் பலமாக்கு –

நன்னெஞ்சே –
அத்வேஷம் உண்டான பின்பு இறே-அவன் உண்டாய்த்து –
அத்வேஷமும் உண்டாய் –
நீயும் உளாயானாய்-
இப்போது இறே சந்தமேனம் ஆய்த்தது –

உத்தமன்-
நம் பேறு தன் பேறாகக் கொண்டு உளன் கிடாய் –
நம்முடைய ரஷணம் பிரயோஜனமாய்க் கிடாய் அவன் இருப்பது –
அல்லாதார்க்கு அழியச் செய்து கொள்ளுகை ஸ்வ பாவம் ஆனால் போலே
அவனுக்கு ஆக்கிக் கொள்ளுகை ஸ்வ பாவம் –

என்றும் உளன் கண்டாய் –
நாம் வேண்டாத காலமும்
நம்மை வேண்டி இருக்குமவன் –
சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
செய்ய வேண்டுவது இவ்வளவே கிடாய் –
ஓர் அனுசந்தானமே கிடாய் வேண்டுவது –
புகுரப் புக்கால் விளக்காதார் ஹிருதயத்திலே உளன் –
அன்றிக்கே
அறிந்த அம்சம் அமையும் -என்னுமாம் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறத்தை யுபபாதிக்கிறது –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
ஆகாசமானது சுருங்கும் படி ஓங்கா நின்றுள்ள
சிகரங்களை யுடைத்தாய் –
உபரிதன லோகங்களும் சில எல்லைகளும் உண்டு என்று இராதே
இவை வேண்டா வென்று கொண்டு –
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படி –
அன்றியே
த்ரிபாத் விபூதி சங்குசிதமாம்படி-என்றுமாம் –

வீங்கருவி வேங்கடத்தான்-
மிக்க ஜலத்தை உடைத்தாய் உள்ள திரு மலையை
இருப்பிடமாக உடையனானவன் –

மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —-
பூமிப் பரப்பு அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும்படி
தான் அளந்து கொண்ட ராஜா –

மண் ஒடுங்க –
திருவடிகளிலே பூமி ஒடுங்க
பரப்பின திருவடிகளே தோற்றி
பூமி தோற்றாதபடி யளந்து கொண்டான் –

மன் –
ஈரரசு தவிர்த்த படி –

மன்-
உடையவன் –
இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்
மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது –

தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்
அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ
எனக்கு ஒருவரும் இல்லை
நீயும் இல்லை
உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பிரபோ –
என்னையும் என் பர்த்தாக்களையும் போலே
கழுத்துக் கட்டியாய்
ஒட்டை ஒடத்தோடு ஒழுகல் ஓடமாய் இருந்தாய் ஆகில்
எனக்கு கண்ண நீர் பாயுமோ –

ந தேரூபம் –பக்தா நாம் -ஜிதந்தே
என்ற அவன்
உதவா விடில் அன்றோ வெறுப்பாவது-

——–

திவ்யார்த்த தீபிகை —

நம்முடைய சத்தையை நோக்குவதற்காகவே தான் சத்தை பெற்று இருக்கிறான்
எம்பெருமான் உளன் என்று நாம் இசைந்தாலும் இசையா விட்டாலும்
நம்முடைய ரஷணத்தில் முயன்று உளனாய் இருக்கிறான்
தன்னை சிந்திப்பவர்கள் நெஞ்சிலே படுகாடு கிடக்கின்றான்
இதற்கு உறுப்பாக திரு வேங்கடமலையில் வந்து தங்குமவன்
இக் குணங்களை எல்லாம் திரி விக்கிரம திருவவதாரத்தில் விளங்கக் காட்டினவன் –

———–

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

இப்படி சர்வாதிகனானவன் எண் பக்கலிலே வந்து புகுந்த பின்பு நெஞ்சே நமக்கு இனி
ஒரு குறைகளும் இல்லை -கிடாய் என்கிறார் –

உளன் கண்டாய்-
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது —
இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா —

நன்னெஞ்சே –
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –

உத்தமன் என்றும்-உளன் கண்டாய் –
நம்முடைய சத்தா ஹேது அவன் என்று நினைத்திரா அன்றும் -என்றும் -அவன் இருக்கும் படி இதுவே –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
புகுரப் புக்கால் விலக்காதாருடைய ஹ்ருதயத்தில் உளன் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான் மண் ஒடுங்கத் தான் அளந்த மன் —
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறதை உபபாதிக்கிறது –
உபரிதன லோகங்களும் சில எல்லை யுண்டு என்று இராதே இவை வேண்டா என்று கொண்டு
உயரா நின்ற ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படிக்கு ஈடாக
உயரா நின்ற சிகரத்தை யுடைத்தாய் இருந்துள்ள திருமலையிலே நின்றவன்
பரப்பின திருவடிகளிலே பூமி தோற்றாத படி அளந்து கொண்ட மன்னன் -உடையவன்
இந்திரன் இழந்தது பெறுகையாலும் –
மஹா பலியைப் பறித்து வாங்கிக் கொடுக்கையாலும்
இவனை உடையவன் என்று தோற்றா நின்றது –

———–

அவனுடைய உண்மைக்கு இசைந்து அத்தை சபலமாக்கின நல்ல நெஞ்சே –
நம் பேறு தன் பேறாக விரும்பி ரஷிக்கும் ஸ்வபாவனான சர்வேஸ்வரன்
நம்மை உஜ்ஜீவிப்பிக்கையிலே உளனாய் இருக்குமவன் கிடாய் –

நாம் அவனுடைய உண்மைக்கு இசைந்த அன்றோடு இசையாத முன்போடு வாசி அற சர்வ காலத்திலும்
நம்முடைய ரக்ஷணத்திலே உத்யுக்தனாய்க் கொண்டு
உளனாய் இருக்குமவன் கிடாய் –

அவன் தானே வந்து புகுரும் இடத்திலே விலக்காமல் பொருந்தி அனுசந்தித்து இருக்குமவர்களுடைய
ஹிருதயத்திலே உளனாய் இருக்குமவன் கிடாய்-

ஆகாசாதிகளான ஊர்த்வ லோகங்கள் அடங்க ஓர் அருகே ஒதுங்கும் படி சிகரங்கள் ஓங்கி இரா நிற்பதாய்-
நாலு பாடும் நிறைந்து துளும்பி வெள்ளம் இடுகிற திரு அருவிகளை யுடைத்தான –
திருமலையை இருப்பிடமாக உடையனானவன்
பூமிப் பரப்பு அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி தான் அளந்து கொண்ட ராஜாவாய் இருக்கும் –

—————————————————————————–

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை–நான்முகன் திருவந்தாதி -86-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-

நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

உளன் இத்யாதி
எம்பெருமான் என்றால் அபி நிவேசித்து இருக்கிற நெஞ்சே
அவன் நமக்கு உளன் கிடாய் –
இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்
தன் ஒப்பான் இத்யாதி
ஈஸ்வரன் சமாதிக தரித்ரனாய்க் கொண்டே உளன் –
அகிஞ்சனான படிக்கு வேறு ஒப்பில்லை
எனக்கும் மற்றும் என்னைப் போலே வெறுவியராய் இருப்பாருக்கும் அவன் நிர்வாஹகன்
இமை –
அனுசந்தி -புத்தி பண்ணு என்றபடி –

————-

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று
திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் –
பரிஹரிக்க ஒண்ணாத ஆபத்து வந்தாலும்-பரிஹரிக்க வல்லவன் உண்டு –
நல் நெஞ்சே-
சர்வேஸ்வரன் உளன் என்று-உபபாதிக்கப் பாங்கான நெஞ்சே –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் –
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு என்னொப்பார்க்கு ஈசன்-
அகிஞ்சனான எனக்கும்-
என்னைப் போலே உபாய சூன்யர் ஆனவர்களுக்கும்
தனக்கு உபமானம் இன்றிக்கே உளனான-ஈஸ்வரன் உளன் –
இமை –
புத்தி பண்ணு -என்றபடி-

————

திவ்யார்த்த தீபிகை

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார்

உத்தமன் உளன் கண்டாய் –
ரக்ஷிப்பதாலேயே சத்தை பெற்று இருக்கும் புருஷோத்தமன்
உள்ளூர் உள்ளத்து உளன் கண்டாய் –
ஆஸ்ரிதர் மனசிலே நித்ய வாசம் பண்ணி அருளுபவர் காண் –
என்றும் உளன் கண்டாய் –
எக்காலத்திலும் ரக்ஷிப்பதற்கு தீக்ஷை கொண்டு இருக்கிறான் காண் –
என்னொப்பார்க்கு தான் ஈசனாய் உளன் காண் இமை–
என்னைப் போல் உபாய ஸூன்யராய் இருப்பாற்கடக்கும் தானே
நிர்வாஹகானாய் இருக்கிறான் என்பதை புத்தி பண்ணு –
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் -என்றபடி கைம்முதல் இல்லாதார்க்கு கைமுதலும் அவனே
என்னொப்பார்க்கு–மற்றுள்ள ஆழ்வார்களைக் கூட்டிக் கொள்ளுகிறபடி –

————

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

ஆஸ்ரித அனுபவ விரோதி நிரசன நிரதிசய போக்யம் -குறுகும் வகை உண்டோ -நாம் கிட்டுவோமோ-
அந்நலம் உடை ஒருவனை நணுகினம் நாமே -பரதன் பரத்வாஜர் ஆஸ்ரமம் -அடையாளம் கண்டு உகந்தால் போலே
அலகாபாத் நதிக்கரையில் திரிவேணி சங்கமம் அருகில் –
நாளேல் அறியேன் என்பார் -14 ஆண்டு பார்த்தனுக்கு – கோபிகளுக்கு பகல் பொழுது குறித்தால் போலே
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை-அனுபவ விரோதிகள் வினை -அநிஷ்ட நிவ்ருத்தி -ஸமஸ்த விரோதிகளை போக்கி
அவித்யாதி விரோதிகள் -ஜென்மம் சரீரம் உட்பட – -நிரதிசய போக்யனான சர்வேஸ்வரன்
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு-ஒருமைப் பட்ட மநோ ரதம் உடையவர்க்கு -விருப்பமே போதும் –
உள்ளத்தில் விட்டுப் பிரியாமல் உள்ளான் -உடன் இருந்து அறிவான் –
உள்ளத்தே உறையும் மால் -ஸர்வஸ்ய -பரம யோகிகள் மட்டும் இல்லை -யார் உள்ளத்தே விசேஷணம் இல்லையே –
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா -இருப்பதை அறியாமல் – வெள்கிப் போய் -விலவறச் சிரித்திட்டேனே –
நினைக்க சிந்தை வேணுமே -உளன் கண்டாய் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் நல் நெஞ்சே –
யந்த்ரா ரூடானே மாயையா -பிரகிருதி கார்யமான சரீரத்தில் -உத்தமன் என்று உளன் கண்டாய் -கர்மாதீனமாக அன்றோ இது
அட்டிகை பண்ண காய்ச்சி வெட்டி பண்ண வேணுமே –
சரணாகதி பண்ண வைத்து -திருவடிக்கு கீழ் அமர்த்திக் கொள்ளுகிறான் –
மூன்று திருவந்தாதி -இங்கும் தொண்டர் அடிப் பொடி -இந்த கருத்தை –
உள்ளத்தே இருப்பதை நினைக்கும் உள்ளம் வேண்டும் என்பதை வற்புறுத்தி அருளிச் செய்கிறார்கள் –
கங்கைக்குள் இருக்கும் மீன் -இருக்கும் ஞானம் வேண்டுமே
மனு -கங்கை -ஸ்ரீ பாத தீர்த்தம் -நம்பிக்கை இல்லாதவர் தீர்த்தம் ஆட வேண்டாம் -நம்பிக்கை உள்ளாறும் தீர்த்தம் ஆட வேண்டாம் -குரு ஷேத்ரமும் இப்படியே
தனக்கு அடிமை பட்டது தான் அறியேனே லும் மனத்தடைய வைப்பதாம் மால் —
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-போக்யம்-இஷ்ட பிராப்தி -சிரமஹரமான சோலைகள் உடைய –
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே–குறுக்கும் -பிறந்த வீட்டு பாஷை மறக்காமல் அருளிச் செய்கிறார்
அமரர் கோன் அர்ச்சிக்கின்று -மலையாள வாசனை –
அனுபவ அபி நிவேசத்துக்கு தக்க பெறாத -குறுகும் வழி உண்டோ –

திரு நாவாயைக் குறுகைக்கு-எனக்கு உபாயம் உண்டோ-என்கிறார்-

அறுக்கும் வினையாயின –
வினையாயின -அறுக்கும் –
வினை என்ற பேர் பெற்றன அனைத்தையும் போக்கும் -என்றது
ஏழை அழிக்க -ஏழு பேர் பெற்றாலே -குல பர்வதங்கள் போல்வன அஞ்சிற்றே –
ருசி விரோதி -பிரயோஜநாந்தரம் -தேவதாந்தரம் போன்றவை-உபாய விரோதி -உபாயாந்தரங்கள்
பேற்றினைப் பெரும் இடத்தில் வரும் விரோதிகள் -அவித்யா கர்ம வாஸநா ருசிகள் -பாகவத அபசாரம் -ஸ்வயம் போக்யத்வ பேறு போல்வன
இந்த சரீரத்தோடு முடியும் அளவு அன்றிக்கே-அனுபவிக்கப் படுமவற்றின் எஞ்சியவைகளாய் நின்று-
அவ்வருகே போம்படி விளம்பிக்க கடவனாய்-இருப்பவன வற்றைத் தெரிவித்த படி –

நின்ற நின்ற நிலைகள் தோறும் உண்டாய் இருக்குமன்றோ விரோதிகள் –
புதுப் புடவை அழுக்கு கழற்றுமா போலே-கிரமத்தாலே போக்க வேண்டுவது தான்-போக்கும் அன்றே அன்றோ –
பகவானுடைய திரு அருளாலே போம் அன்று ஒரு காலே போம் –

மேரு மந்தா மாத்ரோபி ராசி பாபச்ய கர்மண-கேசவம் வைத்திய மாசாத்ய துர்வியாதி இவ நச்யதி – விஷ்ணு தர்மம் -அத் -78-
பாப கர்மங்களின் கூட்டம் மேரு மலை மந்திர மலை இவைகளைப் போன்று-
உயர்ந்து இருந்தாலும் -வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதிகள் நாசம் அடைவது போன்று
கேசவனை கிட்டி அவைகள் நாசத்தை அடைகின்றன -என்றும் –
ஏவம் ஹாஸ்ய சர்வே பாப்மான பிர தூயந்தே -சாந்தோக்யம் -5-24-
எல்லா பாபங்களும் நாசத்தை அடைகின்றன என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி மாசுச -ஸ்ரீ கீதை -18-66-
சர்வ பாபேப்யோ -பிரபன்னனுக்கு -சர்வ -மோக்ஷ விரோதி பாபங்கள் –
பக்தி நிஷ்டனுக்கு அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதி பாபங்கள் –
எல்லா பாபங்களில் நின்றும் உன்னை விடுவிக்கின்றேன்-என்றும்-கூறப் படுகின்றன படியே ஆகக் கடவன அன்றோ –

பிராமணனைக் கொன்ற பாபத்துக்கு பிராயச் சித்தம் செய்தால்-
பசுவைக் கொன்ற பாபத்துக்கு தனித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும் அன்றோ –
அங்கனம் வேண்டா அன்றோ பகவானுடைய திருவருள் கொண்டு கார்யம் கொள்ளும் இடத்தில் –

யாருக்குத் தான் இப்படி செய்வது என் என்னில்
ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு –
மனத்திலே அவனை நிறுத்த வேண்டும் என்னும் உறுதியிலே-ஒருமைப் பட்ட-எண்ணத்தை உடையார்க்கு –
நான்கு விசேஷணங்கள்-
மநோ ரதம் மட்டுமே -தத் அபி சந்தி விரோதமாத்ராத் -ஒருமைப்பாட்டை -அத்யாவசியம் -இருதயத்தில் நிறுத்த –

வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய் –
பாபங்களைப் போக்காமல்-அவற்றை விருத்தி செய்தாலும்-விட ஒண்ணாத படி ஆயிற்று தேசம் இருப்பது –
வாசனையை உடைய தாய்-சிரமத்தை போக்க கூடியதாய்-மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப் பட்ட-திரு நாவாய் –
கஜேந்திரன் பூ பறிக்க -நாச்சியார் முன்பே பறிக்க –
இடது கையால் அபய பிரதானம் -இரண்டு கையால் அனுக்ரஹித்தால் நித்ய விபூதி ஆகுமே -அதனால் வலது திருக்கை
திருவடி காட்ட -கஜேந்த்ரனுக்கு வீட்டுக் கொடுத்த -ஸ்தல புராணம் -பிராட்டி /ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் / நவ யோகிகளுக்கும் பிரத்யக்ஷம் –

குறுக்கும் வகை உண்டு கொலோ –
குறுகச் செய்யும் வகை ஏதோ –
அன்றிக்கே –
குறுகும் விரகு ஏதோ -என்னுதல் –குறுக்கு -எனபது மலையாள நாட்டு வழக்கு –
எம்பெருமானார் திருவடி தொழ எழுந்து அருளா நிற்க –
திரு நாவாய் எத்தனை இடம்போரும் -என்று-எதிரே வருகிறார் சிலரை கேட்டருள-குறுக்கும் -என்றார்களாக-அதனைக் கேட்டு
இத்திசைச் சொல்லாலே அருளிச் செய்வதே ஆழ்வார் -என்று-மிகவும் ஈடுபட்டு அருளினார் –

கொடியேற்கே –
கொடியேனுக்கு –
ஆசை சிறிது உடையாருக்கும் அடையக் கூடிய தேசமாக இருக்க-ஆசையும் கண்ணழிவு அற்று இருக்க-
புகப் பெறாதே நோவு படுகைக்கு அடியான பாபத்தைச் செய்த எனக்கு –

அவனை -ஆகத்து நிறுத்தும் மனத்து ஒன்றிய-சிந்தையினாருக்கு வினையாயின அறுக்கும் –
வெறி தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-கொடியேற்குக் குறுக்கும் வகை உண்டு கொலோ -என்று அந்வயம்-

—————

அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8-

நீ அருளாது இருக்கவுமாம் -அருளுவாயாயாம் -கலக்கம் இல்லாத படி -தேவதாந்தர சம்பந்தம் -பாகவத அபசாரம் -ஞானம் கொடுத்து அருள வேண்டும்
உன்னை என் நெஞ்சில் வைத்து அந்த ஞானம் தந்து அருள வேண்டும் -சாமர்த்தியமான பேச்சு இது வந்தால் எல்லாம் வருமே –
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்-இவன் செய்த படி செய்கிறான் என்று கிருபை பண்ணாமல் -இருக்கவுமாம்
வேறு புகல் அற்ற என்னை -கிருபை பண்ணி
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-சத்தை அடைந்து உன் ஸ்ப்ருஹ ணீயமான திருவடிக் கீழ் வைக்கிலும்-
அருளாது இருந்தால் பலன் சொல்லாமல் -அருள் பெற்றால் -வஸ்து தாம் உபாயாதோஹம் –
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்-மயர்வு மருள் -அஞ்ஞானம் காந்தம் இல்லாத படி –
சர்வ பிரகார பரிபூர்ணன் போக்யன் -உன்னை -நாரண நம்பி -அத்யந்த அபி நிவிஷடனான என் நெஞ்சத்தில் வைத்து அனுபவிக்க -தந்து அருள வேணும் –
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே -தெருள் ஞானம் -கட்டளை பட்ட -அழகிய -தர்சநீயமான -பரம ப்ராப்ய பூதன் –

மேல் பாசுரத்திலே அருளாய் -என்றார்
அப்போதே விரும்பியதை பெறாமையாலே-அருளவுமாம்-தவிரவுமாம்
அறிவின்மை சிறிதும் இல்லாதபடி உன்னை-என் நெஞ்சிலே இருத்தும்படி-தெளிவைத் தர வேண்டும் –என்கிறார் –

அருளாது ஒழிவாய் –
என் பக்கல் திருவருள் செய்யாமல்-இவன் பட்டது படுகிறான் என்று இருக்கிலும் இரு

அருள் செய்து –
அன்றிக்கே-
எனக்கு வேறு கதி இன்மையைக் கண்டு-கிருபை செய்து –

அடியேனைப் பொருளாக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
அறிவில்லாத பொருளைப் போன்று இருக்கிற என்னை
அசந்நேவ ச பவதி அசத் ப்ரஹ்மேதி வேத சேத்-அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோவிது-தைத்ரியம்-என்கிறபடியே
ஒரு பொருள் ஆகும்படி செய்து-எல்லை இல்லாத இனிமையை உடைய-உன் திருவடிகளின் கீழே-வைத்துக் கொள்ளிலும் கொள்
பொருள் ஆனாரை வைத்துக் கொள்ளும் இடம்-உன் பொன்னடிக் கீழ் போலே காணும் –
பொருள் ஆனாரை -பொருளும் செல்வமும் –

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-
அடியில் மயர்வற மதி நலம் அருளின படியே-அறிவின்மை சிறிதும் இல்லாதபடி-
உன்னை என் மனத்தினில் எப்பொழுதும் வைத்துக் கொள்ளும் படி
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -2-9-4-என்கிற தெளிவினைத் தந்து அருள வேண்டும் –
தென் திரு நாவாய் என் தேவே -தெருளே தரு -என்று முடிக்க –

அன்றிக்கே
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு-தென் திரு நாவாய் என் தேவே-
அருளாது ஒழிவாய்-அருள் செய்து-அடியேனைப் பொருள் ஆக்கி -உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
உன் திரு உள்ளம் ஆனபடி செய் -என்று பிள்ளான் பணிப்பர்-

—————————————————————————–—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் இரண்டு ஆழ்வார்களால் அருளிச் செய்யப்பட ஒரே பாசுர வியாக்கியானங்கள் —

February 16, 2021

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர்——ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி—11-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி –55-

————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன
இப்படி செய்வார் உண்டோ என்னில்-
அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார்

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர்———11-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
அவர்களை நாள் தோறும் தொழுது
மத்யம புருஷார்த்தமான சுகத்தைப் பெறுவர் –

புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே நின்னடியை யாரோத வல்லார் அவர் –
எங்கும் புக்க நின்ற நீரை உடைத்தான கடலிலே நிறத்தை உடைய சர்வேஸ்வரனே
ப்ராப்யமான உன்னுடைய திருவடிகளை அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் ஆர்

————————————————————

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர்———11-

அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப் பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து
சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய கால்களை –
துராராதரானவர்கள் இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து-
அங்கே வந்து உன்னை அனுபவித்தல் –
இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல் –
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற
ஸ்வர்க்காதி ஸூகத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –

சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே –
இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை
ஸ்தோத்ராதிகளைப் பண்ணி -ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –

அன்றிக்கே
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே
பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –

———————————————

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் —

இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி
அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் –
தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன –
இப்படிச் செய்வார் உண்டோ என்னில் –
அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

கடை நின்று -இத்யாதி
ஜகத்தடையக் கடையாய் கிடக்கிறபடியை அனுசந்திக்கிறார் –
கா என்ன மாட்டாதார் படும் பாடு –

கடை நின்று –
அவ்வோ தேவதைகளின் வாசல்களைப் பற்றி நின்று –
கடைத்தலை இருக்கை இங்கே யாவதே –

அமரர் கழல் தொழுது நாளும்-
நாள்தோறும் அவ்வோ தேவதைகளின் காலிலே குனிந்து

அமரர் –
தன்னில் காட்டில் நாலு நாள் சாவாதே இருந்ததுவே ஹேதுவாக –

கழல் தொழுது –
ஆருடைய கடல் தொழக் கடவவன் –
யாவந்த சரனௌ பிராது –சிரசா தாரயிஷ்யாமி நமே சாந்திர் பவிஷ்யதி -அயோத்யா -98-8-என்று
வகுத்த கழல் ஒழிய –

நாளும் –
சக்ருதேவ -என்று இருக்க ஒண்ணாதே
அந்ய சேஷத்வம் ப்ராமாதிக மாகவும் பெறாது ஒழிவதே

உபாயங்களால் பெருத்து –
உபேயங்களால் சிறுத்து இருக்கும் இதர விஷயத்தில்
பகவத் விஷயத்தில் உபாயம் வெருமனாய் உபேயம் கனத்து இருக்கும்
அதுக்கடி அங்கு பிச்சைத் தலையணைப் பிச்சைத் தலையர் ஆஸ்ரயிக்கிறார்கள்
இங்கு ஸ்ரீ யபதியை அடிமைக்கு இட்டுப் பிறந்தவர்கள் ஆஸ்ரயிக்கிறார்கள் –
அவர்கள் பக்கலிலே

இடை நின்ற வின்பத்தராவர் –
நிரதிசய ஸூக ரூபமான போக பூமியிலே போய்ப் புகுமத்தையும் இழந்து
அதுக்கு யோக்யதை யுடைத்தான சம்சாரத்திலும், நிலையும் குலைந்து
நடுவே யுண்டாய் –
அவர்கள் கொடுக்க வல்ல ஸ்வல்ப பலத்தை ப்ராபிப்பர்

அதாகிறது
அஸ்த்திரமான ஸூகத்தை ப்ராபியா நிற்பார்
அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த ஜந்து சிற்றின்பத்தை ஆசைப்படுவதே

சம்சாரத்தில் வாசி இழக்கிறோம் என்றும்
போக பூமியில் புகப் பெறுகிறிலோம் என்றும்
அவற்றால் வந்த நெஞ்சாறாலாலே அந்ய பரனானவன்
துஸ் சீல தேவதைகளாலே உன் பசலை அறுத்துத் தா எனபது
ஆட்டை அறுத்துத் தா
இடைவிடாதே ஆஸ்ரயி என்பார்கள்
கரணம் தப்பில் மரணம் இறே-

அங்கன் அன்றிக்கே
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற வின்பத்தராவர் –
தேவதாந்த்ரங்களும் திரு வாசலில் நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பெறுகையே பிரயோஜனமாக ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
ஷூத்ரமான பிரயோஜனங்களைக் கொண்டு போவார் -என்றுமாம் –

புடை நின்ற நீரோத மேனி –
பூமியைச் சூழப் போந்து கிடக்கிற கடல் ஓதம் போலே இருக்கிற வடிவை யுடையையாய் –

நெடுமாலே-
அபரிச்சேத்யனாவனே-
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –

நின்னடியை யாரோத வல்லாரவர்–
தேவர் திருவடிகளில் அழகை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் தான் ஆர் –
ப்ராப்யமானவன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –
உன் நீர்மையை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் –

———————————————————

ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை-வியாக்யானம்-

கடை -மனை வாசல்
தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து என்றுமாம்
அல்ப பலங்களை பெற்று போகிறார்களே சம்சாரிகள்
இடை நின்ற இன்பம் –ஸ்வர்க்காதிகள்
இன்பம் என்றதும் பிரமித்தவர்களின் கருத்தால் –

——————————

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லாரவர் -55-

ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை-வியாக்யானம்-

தேவதாந்தர பஜனம் செய்து
அல்ப அஸ்திர பயன்களை பெற்று போவார் மலிந்து
உன்னை உணர்ந்து
ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்பார் இல்லையே என்று வருந்தி அருளிச் செய்கிறார் –

அமரர் கடை -மனை வாசல் -நின்று கழல் தொழுகிறார்கள் –
கடை நின்ற அமரர் -தாழ்ந்த தெய்வங்கள் என்றுமாம் –
இடை நின்ற இன்பத்தராவார் -அல்ப அஸ்திரத்தவாதி -இன்பம் என்றது பிரமித்தவர்களின் கருத்தால்
இடை -சம்சார ஸூகமும் இன்றி –
நிரதிசய மோக்ஷ ஸூகமும் இன்றிக்கே –
ஸ்வர்க்க ஸூகத்தை யுடையவர் என்றவாறு –

——————————————————————

ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று சர்வேஸ்வரன் பக்கல் பண்ணும் ப்ரணாமாதிகளை
யவர்கள் பக்கலிலே பண்ணும் சம்சார சுகமும் இன்றிக்கே-
நிரதிசயமான மோஷ சுகமும் இன்றிக்கே இருக்க-
ஸ்வர்க்க சுகத்தை உடையர் ஆனவர் –

ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –

—————————

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம்-

இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து –
ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் –
உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

கடை நின்று இத்யாதி –
இதர தேவதைகள் வாசலிலே நின்று அந்த தேவதைகள் காலை நாள் தோறும் தொழுது
பரிமித ஸூகங்களைப் பெறுவர் –

புடை இத்யாதி –
பூமியைச் சூழ்ந்து இருந்துள்ள நீரோதம் போலே இருக்கிற திருமேனியை யுடைய சர்வேஸ்வரனே –
உன்னைப் பேச வல்லார்கள் யார் –

இடை நின்ற இன்பம் –
நடு முறியும் ஸூகத்தை யுடைராவர் –
இடமுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற திரு மேனியையும்
அபரிச்சேத்யமான மஹிமாவையும் யுடைய சர்வேஸ்வரனே

சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை சத்த கீர்த்தனம் பண்ணி ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்றுமாம் –
அவர் என்றது
சர்வ கந்த ரஹிதராய்-ரஜஸ் பிரக்ருதிகளாயும் தமஸ் பிரக்ருதிகளாயும் உள்ளவரை –

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திரு மழிசைப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானத்திலும் -பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானத்திலும் -உள்ள அமுத மொழிகள் —

July 4, 2020

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோக த்ருஷ்டியாலும் -வேத த்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

————

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–தந் நிவ்ருத்திக்கு
ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –
ஆழ் பொருள்-மங்கிப் போகிற பொருள்-நசிக்கிற பொருளை -என்றுமாம் –
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்-
சம்சாரத்தின் உடைய தண்மையையும் நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்-நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

———–

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-
ப்ரஹ்மாதிகளுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
எல்லா சாதனா அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்-அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-

————-

ஞாலத் தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

கார்ய ரூபமான சகல பிரபஞ்சங்களுக்கும்-ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -என்கிறபடியே
அத்விதீய காரணமான பர வஸ்துவாய் உள்ளவனை முட்டக் காண வல்லார் இல்லை –
நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது

—————

எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

தனக்கு பிரகாரமான சகல பதார்த்தங்களையும் வஹிக்கிற வாசக சப்தங்களுக்கும் வாச்யனாம் படி
இருக்கிற படியைக் காட்டி என்னை யடிமை கொண்டவனைத் திரளச் சொன்னேன்
சர்வ சப்த வாச்யன் ஆனவனை எல்லா பொருளுக்கும் சொல்ல வேண்டும்படி நின்றவனை தொகுத்து சொன்னேன் –
அவதரித்து எல்லார்க்கும் ஸ்துதி சீலனாய் நின்றவனை -என்றுமாம்-

————-

யுள் வாங்கி நீயே–5-
சம்ஹரிக்கிறாய் நீயே –ஜகத் அடைய சம்ஹரித்த நீயே-
தன்னுடைச் சோதி ஏற எழுந்து அருளுகிற படி யாகவுமாம்

——-

வெறியாய மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று –6-

நிரதிசய போக்யனான ஆச்சர்ய பூதனாய் வ்யாமுக்தனாய் ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரனை –
ஏத்தாதார் ஈனவரே யாதலால் இன்று – அவர்கள் ஏத்தாமையாலே தண்ணியரே
ஹீநர் என்றும் அஹீநர் என்றும் நான் பிரதிபாதிக்க வேணுமோ என்கிறார்-

————-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே நீ என்னை அன்றி இலை -7-

இப்படி இருப்பது ஓன்று உண்டோ என்று வேணுமாகில் பார்த்துக் கொள்ளாய் என்று
நடுவே பிரமாணத்தைப்-நாரணனே -என்று பேர்த்திடுகிறார்-
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –

———-

இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை–8-

கூரிய அம்பை யுடையவன் துணை யல்லது நம்முடைய குறையில் நமக்கு சாபேஷை இல்லை –
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே- எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தவர்கள்-
அசேதனமான க்ரியாகலாபத்தின் உடைய கூர்மையை-விஸ்வசிதது இருப்பர்கள் –
இவர்கள் சக்கரவர்த்தி திருமகன் உடைய அம்பின் கூர்மையை-தஞ்சமாக நினைத்து இருப்பர்கள் –

—————-

கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

அண்டம் விம்ம வளர்ந்தவனுடைய திரு உலகு அளந்து அருளின சர்வேஸ்வரன் திருவடிகளை-அக்காலத்திலே
நீல கண்டனுடைய சிரஸ் ஸிலே படும்படியாகக் கழுவினான் –
சாஹசிகரான பிரஜைகள்-வழியே வழியே வர வேணும் என்று தீர்த்தத்தை மேலே தெளிப்பாரைப் போலே –

—————–

ஆங்கு ஆரவாரமது கேட்டு- அழல் உமிழும் பூங்கார் அரவு–10-
திசை வாழி எழ -என்னும்படி திரு உலகு அளந்து அருளின போது உண்டான-வார்த்தை கேட்டு –
தன் பரிவாலே பிரதிகூலரான நமுசி ப்ரப்ருதிகள் மேலே விஷ அக்னியை உமிழா நிற்பானாய்-பரிவின் கார்யம் ஆகையாலே
அடிக் கழஞ்சு பெறும் படியாய் இருக்கிற அழகிய சீற்றத்தை யுடைய திரு வநந்த ஆழ்வான்-

—————

மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

மடுவிலே பெரிய முதலையினுடைய வாயிலே அகப்பட்ட யானையை விடுவிக்கைக்காக திருவாழியை விடுக்கைக்கும்
இரண்டு இரண்டு சரீரத்தையும் விட்டு இரண்டும் முக்தமாம் படியும் நினைத்தாய் –
இரண்டும் ஒன்றை ஓன்று விட்டுப் போய் ஸூகிகளாம்படி -என்றுமாம்-
விடும்படிக்கு ஈடாக சங்கல்பம் இன்றிக்கே-திரு ஆழியை விடுகைக்கு நினைத்தாய் –
பூர்வ ஆகாரங்களை விட்டு-முதலை -கந்தர்வனாய்-ஆனை திருவடிகளைப் பெறும்படிக்கு ஈடாகவும்-நினைத்தாய்-

—————–

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் – வேத முதல் பொருள் தான் -விண்ணவர்க்கும் நற்பொருள் தான் -நாராயணன்-13-

மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும் –வேதை க சமதி கம்யனுமாய் –அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் – சர்வேஸ்வரன்-
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –சர்வேஸ்வரன் –

————–

திருமால் -தன் பேரான பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே இவ்வர்த்தத்துக்கு இசையாத ஏகா யனனை நினைத்து
அருளுகிறார் என்று -பட்டர் –பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-உபாயாந்தர பரரையும் -அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள்
ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்-
இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய திரு நாமங்களைப் பேசப் பெறாதே -ஜீவியா நிற்கச் செய்தே -ம்ருதப் ப்ராயராய் இருக்கும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

———

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்
நீர்- விஷ ஜலம் -நீல கண்டன் -என்றபடி –

————–

பல மன்னர் போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
ந்யாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப்பாட்டால் சொல்லுகிறது-

—————

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்
பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்
வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம் –சாத்தி இருப்பார் ஆகிறார் –வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

———————-

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –
இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்–அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய சூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்
அன்றிக்கே-அக்நி கொடுக்கும் ஹவிசை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –
அரி பொங்கிக் காட்டும் அழகு – நித்ய சூரிகள் பரிய இருக்குமவன்-ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு–இவை இவை என்றது நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு
சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –
நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

———–

அழகியான் தானே அரி உருவன் தானேபழகியான் தாளே பணிமின்–22-

ஆபத் சகனானவனே அழகியான் –த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை ஆஸ்ரயிக்க பாருங்கோள்-
பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனைவ்யாதிக்ரஸ்தர் பற்றுமா போலே

—————

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி -ருசியைப் பிறப்பித்து -பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில் பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி
வைத்த படியாலே யாத்ருச்சிகமாக ஸூ க்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –
ஈர நெல் வித்தி என்கிறபடியே விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ
அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை-

—————-

எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டுகொள் கிற்குமாறு –26-
கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

————–

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –27-
மால் தான்-ஈஸ்வரன் வ்யாமுக்தனாய்-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு
கடல் வண்ணா –நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது =பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்-

—————-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–

இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

————–

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

கோயிலிலே வந்து ஸூ லபனானவன் என்னை அடிமை கொண்டான் –இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் . திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –
அரங்கு – சம்சாரம் ஆகிற நாடக சாலை –பிறவி மா மாயக் கூத்து -என்று-சம்சாரம் ஆகிய
நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார்
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

————-

வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –31-

ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-ஒருத்தன் சோச்யனாக- இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள் பேசி முடிக்க ஒண்ணாது –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை-ஏத்தாத அறிவு கேடர்காள் – இவ்வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள ஆச்சர்யம் சொல்லப் புகில்-மகா பாரதம்-

————–

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும் ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன -வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –
சரீரம் அடியாக வந்த வியாதியும்-வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும் கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –

—————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம் பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை அளந்த ஆயாசமோ -என்கிறார் –
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும்
திருவடிகளை கொண்டு- காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ -உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்-

——————–

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –
ஆதி நெடுமால் –சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்-
அணைப்பார் கருத்தனாவான் – ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் – இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது –
அவ்வவ தேசங்களிலே ஆஸ்ரயிப்பார் யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் ஹிருதயத்தில் புகுருகைகாக இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்-
என் என்னில் -தான் ஆகையாலே-

—————–

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிற்கின்றேன்-நின்று நினைக்கின்றேன் –-40-

விசேஷித்து ஓன்று செய்தது இல்லை -அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி இத்தைச் சொல்ல –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு நின்று ஒழிந்தேன்
இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –எது சொல்லிற்று எது பற்றிற்று என்று-விசாரியா நின்றேன்-

——————-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் – இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –
திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –
சம்பத்தாவது திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-திருவேங்கடமுடையானுக்கு
திருப் பல்லாண்டு பாடுவாரும் வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

—————-

ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று அருளிச் செய்த
சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
தத் விஷய ஜ்ஞானம் அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

—————-

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார்
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

——————

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –
இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –

——————

கிளரொளி என் கேசவனே கேடின்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ஸ்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ஸ்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூகத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

———————-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–62-

அபாங்கா பூயாம் சோ யதுபரி-என்னும்படியே-இன்ன வஸ்து என்ன வேண்டா –
ஏதேனும் ஒரு வஸ்துவிலே அவளுடைய கடாஷம் உண்டாகில்-அது சர்வேஸ்வர தத்வம் ஆகிறது –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்தமும் தன் அதீனமாய் -வேறு ஒன்றால் அறியாதது –-ஒரு சேதனர் ஆகில் அறியலாம்

———-

பொன் மகரக் காதானை ஆதிப் பெருமானை நாதானை நல்லானை நாரணனை
நம் ஏழ் பிறப்பு அறுக்கும் சொல்லானை சொல்லுவதே சூது –64-

ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய் –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் -நம்முடைய சம்சாரத்தைப்
போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –சொல்லானை -சப்த மாதரம் –
கை கூலிக் கொடுத்தும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்படி ஸ்ப்ருஹணீ யனானவனை –
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே நமக்கு உத்பாதகனானவன் – ஸ்வாமி யாய் வத்சலன் ஆகையாலே
நாராயண சப்த வாச்யனாய் நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

——————

மாதாய மாலவனை மாதவனை –யாதானும் வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-
சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –தம்முடைய திருவந்தாதி–ஸ்ம்ருதி மாதரம் உடையாருக்கும் பரமபதம் சித்தியாதோ என்கை –
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்

———-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான்
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம் ந வைஷ்ணவா நாம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம் தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று நெஞ்சு பறை கொட்டுகிறது-

————————

ஆயன் துவரைக்கோன் – மாயன் அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று–அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி–அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள்
பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே-அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி
தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்-லோகத்தில் அந்யராய்
ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்–மெய்யான ஞானம் இல்லை –
இடையனாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய் ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
தேர் தட்டிலே நின்று-உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன் நீ சோகிக்க வேண்டா – என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று நினைக்கும்படி சத்ருக்களாய் தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்-

—————

நல்லறம் ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத் -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும் -இவை இறே அவர்கள் வார்த்தை –

பலாபிசந்தி ரஹீதமான கர்மங்கள் இதிஹாச புராணங்களில் சொல்லுகிற திருநாம சங்கீர்தனங்கள்
பூர்வ பாகத்தில் சொன்ன கர்ம யோகம் இவை எல்லாம் நாராயணன் பிரசாதம் அடியாக –
அவை பல பிரதங்கள் ஆம்போது பகவத் பிரசாதம் வேணும் –பகவான் உபாயம் ஆகும் இடத்தில் அவை சஹகரிக்க வேண்டா
என்னும் பிரமாண பலத்தால் சொல்லுகிறேன்
அல்லாதவை போல் அன்றிக்கே உபாயமாக வற்றான இத்தை அன்று என்ன வல்லார் உண்டோ-

—————

அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி–73-

பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் திரு நாடு
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாயபாவம் இவர்களால் அறியப் போகாது-

————

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு
அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து-அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான
ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது
சரணாகதர் ஒரு தலையானால்-பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் -ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-ரஷிப்பான் ஒருவன்
அத்தாலே நிறம் பெற்று க்ருதக்ருத்யனாய்-ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-வேறு ஒன்றை ஏத்தாது என் நா-

————–

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பாட்டும் –கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள்
கேட்ட மனுவும் –ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –ஆச்சர்ய பூதனானவனுடைய
தத மாயையில் பட்ட தற்பு-தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –தத்த்வார்த்தம் –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படுகதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தை -உண்மையை உடைத்தது என்றபடி-

——————–

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த – எம்பெருமான் திரு நாமங்களைக் கேட்டிருந்து –
அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே பரவசனாய்த் துவண்டபடி
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு ஆதிராஜ்ய சூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து பாரவச்யதையைச் சொன்ன படி-
தபஸ்வியான நாரதர் -வால்மீகி கேட்டபின்பு பாரவஸ்யரானது போலவே –

————–

ஏய்ந்த தம் மெய் குந்தமாக –79-

ச்தூலோஹம் க்ருசோஹம் என்று-தானாக சொல்லலாம்படியான சரீரத்தை குந்தமாக -நோயாக-
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-

———–

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய திரு நாமங்களை
லோகங்கள் ஆனவை பரந்து பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

—————-

விதையாக நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்–81-

வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள்
குறைவற்ற நீ விளையப் பண்ணினாய் அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு
வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –

————

சார்ந்தவர்க்குத் தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பிரபன்னராய்க் கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ சீலா நாம் -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச்
செய்வது அறியாமல் அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

——————

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பிதிரும் மனம் இலேன் – இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி-ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்-அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன் எனக்கு ஒப்போ-
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட ஸ்ரீ கிருஷ்ணனை-
என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –
கிருஷ்ணனை தொழுகையே-தொழிலாக காதல் பூண்ட எனக்கு ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈச்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று

—————–

உத்தமன் என்றும் உளன் கண்டாய் –உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –86-

இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்-
இதுக்கு முன்பு நிர்ஹேதுகமாக ரஷித்தவன்-ப்ராப்தி தசையிலும் ரஷிக்கும் –
அவன் ரஷிக்க-இத்தலையால் செய்ய வேண்டுவது -ஆணை இடாமை –

————-

ஓடி அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்–88-

ஆஸ்ரிதர் ஆனவர்களை-ஆள் இட்டு அந்தி தொழாதே தானே ஓடி-அவர்கள் தர்சனத்தால் வந்த
அறிவு கேடு முதலான-துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திருநாமத்தை பிரியமுடன் சொல்லி-தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார் –
இவ்வாத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை -எம்பெருமானே நிர்வாஹகன் என்று இருக்குமவர்கள் வாழ்வார்-

————

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பழுது போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு
ஆஸ்ரயித்து வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு
ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும் உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் –

———-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம் -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-
விலஷணமான பகவத் கைங்கர்யத்தில் அதிகரித்து-ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ளார்க்கும் அப்படியே வர்த்திக்க
வேண்டி இருக்கப் பெற்றவர்கள்-திருவேங்கடமுடையான் திருவடிகளிலே நிரந்தரமாக-ஆஸ்ரயித்தவர்கள்-
அதிலும் விலஷணமான பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ச்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம் –

————

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று வ்யாமுக்தனானவனை-
என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க நின்றபோதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் என்கிறார்-
ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே –

———————–

அடியேற்கு வேம்பும் கறியாகும் என்று-94-

நீ ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்
கறியாகக் கொள்ளுவோம் என்று அபிமானிக்க-வேம்பு கறியாகுமா போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரந்தர் மஜ்ஞ-இதிவத்
சரணாகதி தர்மம் அறிந்தவர்கள் தோஷவானையும்-கைக் கொள்ளுவார்கள் -என்றபடி-

———–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும் புண்யார்ஜனம் பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இப்போது அறிந்தேன் -சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்- அதுக்கடியான சேஷியான நாராயணன் நீ
இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

இத்தால் –
1-ப்ராப்யமான கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு விரோதியான அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படி பரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை நடுங்கித்
தம் கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும் அருளிச் செய்தார் ஆய்த்து-

மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும் காரண பூதனான நாராயணனே
சர்வ ஸ்மாத் பரன் என்று பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் -வியாக்யானங்களுடன்–

May 31, 2019

ஸ்ரீ மத் த்வாரகா விஷயமான அருளிச் செயல்கள் –
பெரியாழ்வார் -4–1–6-/-4-7-8-/-4-7–9-/-4–9–4-/-5–4–10-/
நாச்சியார் -1–4-/-9-8-/-12–9-/-12–10-/
பெரிய திருமொழி -6–6–7-/-6–8–7-
நான்முகன் -71-
திருவாய் மொழி -4-6-10-/-5-3–6-/

———————-

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் – -4 1-6 –

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச-
வரண்டு வளைந்து -நரம்பும் எலும்பும் -தோன்றும்படி இருக்கையாலே
பொல்லாதான வடிவை உடைய பேய்ச்சியான அவள் முடியும்படியாக –
புணர் முலை வாய் மடுக்க வல்லானை —
அந்த வடிவை மறைத்து -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி -என்கிறபடியே
யசோதை பிராட்டி யோடு ஒத்த வடிவைக் கொண்டு வருகையாலே
தன்னில் தான் சேர்ந்துள்ள முலையில் -அவள் முலை கொடா விடில்
தரியாதாளாய் கொண்டு -முலைப்பால் உண்-என்று கொடுத்தால் போல் –
தானும் முலை உண்ணா விடில் தரியாதானாய் கொண்டு பெரிய அபிநிவேசத்தோடே
வாயை மடுத்து உண்ண வல்லவனை –
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி -என்கிறபடியே வருகிற போதே அவள் க்ர்த்ரிமம் எல்லாம்
திரு உள்ளத்திலே ஊன்ற தர்சித்து இருக்க செய்தே -அவள் தாயாகவே இருந்து
முலை கொடுத்தால் போலே -தானும் பிள்ளையாகவே இருந்து முலை உண்டு அவளை முடித்த
சாமர்த்தியத்தை சொல்லுகிறது -வல்லானை-என்று
மா மணி வண்ணனை
விடப்பால் அமுதால் அமுது செய்திட்ட -என்கிறபடியே அவளுடைய விஷப் பாலை
அம்ர்தமாக அமுது செய்து -அவளை முடித்து ஜகத்துக்கு சேஷியான தன்னை நோக்கிக்
கொடுக்கையாலே -நீல ரத்னம் போலே உஜ்ஜ்வலமான திருமேனியை உடையவனாய் இருந்தவனை
மருவும் இடம் நாடுதிரேல்
திரு உள்ளம் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம் தேடுகிறி கோள் ஆகில்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு- பவளம் எறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் –

—————————————————

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4 7-8 –

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து-
கடலை செறுத்து-அணை கட்டி – படை வீடு செய்தது ஆகையாலே -திரை பொரு கடலால்
சூழப் பட்டு இருப்பதாய் -திண்ணியதான மதிளை உடைத்தாய் இருக்கிற ஸ்ரீ மத் த்வாரகைக்கு ராஜாவானவன்
வண் துவராபதி மன்னன் -இறே
தன் மைத்துனன் மார்க்காய் –
ஸ்ரீ கிருஷ்ண ஆஸ்ரய ஸ்ரீ கிருஷ்ண பலா ஸ்ரீ கிருஷ்ண நாதச்ச பாண்டவா –என்கிறபடியே
தன்னையே தங்களுக்கு ஆஸ்ரயமும் -பலமும் -நாதனும் ஆகப்
பற்றி இருக்கிற -தன் மைத்துனமாரான பாண்டவர்களுக்கு பஷ பாதியாய் நின்று
அரசனை அவிய அரசினை அருளும்-
பொய் சூதிலே அவர்களை தோற்ப்பித்து-அவர்கள் ராஜ்யத்தை தாங்கள் பறித்து கொண்டு
பத்தூர் ஓரூர் கொடுக்க சொன்ன இடத்தில் கொடோம் என்று தாங்களே அடைய
புஜிப்பதாக இருந்த துரியோததா நாதி ராஜாக்கள் விளக்கு பிணம் போலே விழுந்து போகப்
பண்ணி -ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு –
மகத்யாபதி சம்ப்ப்ராப்தே ச்மர்தவ்யோ பகவான் ஹரி -என்று
ஆபத் தசையிலே ஸ்மரிக்க படுபவனாக -ஸ்ரீ வசிஷ்ட பகவானாலே
திரௌபதிக்கு சொல்லப் பட்டவனாய் –
ஹரிர் ஹராதி பாபானி துஷ்ட சித்ரை ரபி ஸ்மர்த-என்கிறபடியே
ஸ்மரித்த வர்களுடைய சகல பாபங்களையும் போக்கும் அவனான புருஷோத்தமன் பொருந்தி வர்த்திக்கிற ஸ்தலம்
நிரை நிரையாக நெடியன யூபம் –
ஓரோர் ஒழுங்காய் கொண்டு -நெடிதாய் இருந்துள்ள -பசுக்கள் பந்திக்கிற யூபங்கள் ஆனவை
நிரந்தரம் ஒழுக்கு இட்டு-
இடைவிடாமல் நெடுக சென்று இருப்பதாய்
இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை-
இரண்டு கரையும் ஒத்து யாக தூமம் கந்தியா நிற்கிற கங்கையினுடைய கரை மேல்
கண்டம் என்னும் கடி நகரே –

———————————————

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –
வட திசை மதுரை

வடக்கு திக்கில் மதுரை –
தென் திசை மதுரை உண்டாகையாலே விசேஷிககிறது
சாளக் கிராமம்
புண்ய ஷேத்ரங்களில் பிரதானமாக எண்ணப்படும் ஸ்ரீ சாளக் கிராமம்
வைகுந்தம்-
அப்ராக்ருதமாய் -நித்ய வாசத்தலமான ஸ்ரீ மத் வைகுண்டம்
துவரை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய மணவாளராய் வீற்று இருந்த ஸ்ரீ மத் த்வாரகை
யயோத்தி
அயோத்தி நகர்க்கு அதிபதி -என்கிற படியே ஸ்ரீ ராம அவதார ஸ்தலமாய் அத்யந்த அபிமதமாய் இருந்துள்ள ஸ்ரீ அயோதியை
இடமுடை வதரி
-நர நாராயண ரூபியாய் கொண்டு -திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளி
உகப்புடனே எழுந்து அருளி இருக்கும் ஸ்தலமாய் -இடமுடைத்தாய் இருந்துள்ள ஸ்ரீ பதரி
இடவகயுடைய –
இவற்றை வாசச்தானமாக உடையனான
வெம் புருடோத்தமன் இருக்கை
ஆஸ்ரிதரான நமக்கு இனியனான புருஷோத்தமன் உடைய இருப்பிடம்
தடவரை அதிர தரணி விண்டிடிய –
பகீரதன் தபோ பலத்தாலே இறக்கிக் கொடு போகிறபோது
வந்து இழிகிற வேகத்தைச் சொல்லுகிறது -உயர்ந்த நிலத்தில் நின்றும்
வந்து இழிகிற வேகத்தால் மந்த்ராதிகளான பெரிய மலைகள் சலிக்கும்படி
தரணி வண்டிடிய
பர்வதத்தில் நின்றும் பூமியில் குதிக்கிற அளவிலே பூமி விண்டு இடிந்து விழ
தலை பற்றி கரை மரம் சாடி
வர்ஷங்களுடைய தலை அளவும் செல்லக் கிளம்பி
கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்து
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே
ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும்படி -வேகித்து கொண்டு இழியா நின்ற கங்கை உடைய கரை மேலே
கண்டம் என்னும் கடி நகரே –

———————–

ஸ்ரீ மத் த்வாரகையிலே -பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய இருந்தவன்
வர்த்திக்கிற தேசம் இது என்கிறார் –

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னும்
அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – 4-9 4-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய-
நரகாசுரன் திரட்டி வைத்த -ராஜ கன்னிகைகளாய் -அவனை நிரசித்த அநந்தரம்
அங்கு நின்றும் கொண்டு வந்து -திருமணம் புணர்ந்து அருளின பதினாறாயிரம் தேவிமார்
ஆனவர்கள் -தங்களுடைய பிரேம அனுகுணமாகவும் -ப்ராப்ய அனுகுணமாகவும் நித்ய பரிசர்யை பண்ண
துவரை என்னும் அதில்-
ஸ்ரீ மதுரையில் எழுந்து அருளி நிற்க செய்தே -இங்கு உள்ள எல்லாரையும் அங்கு கொடு
போய் வைக்க திரு உள்ளம் பற்றி -ஸ்வ சங்கல்ப்பத்தாலே உண்டாகினது ஆகையாலே
அத்யந்த விலஷணமாய்-ஸ்ரீ மத் த்வாரகை என்று பிரசித்தமான திருப் படை வீட்டிலே
நாயகராகி வீற்று இருந்த மணவாளர்-
அவர்களுக்குத் தனித் தனியே -என்னை ஒழிய அறியார்-என்னும்படி நாயகராய் கொண்டு
தன்னுடைய வ்யாவர்த்தி தோன்ற எழுந்து அருளி இருந்த மணவாளர் ஆனவர் –
மன்னு கோயில் –
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள சூத்தரத்தை தரித்து –
தமக்கு
அனந்யார்ஹராய் -அநந்ய போகராய்-இருக்கும் அவர்களோடு கலந்து
அடிமை கொள்ளுகைகாக -அழகிய மணவாளப் பெருமாளாய்க் கொண்டு –
அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே -நித்ய வாசம் பண்ணுகிற கோயில் –
புது நாள் மலர் கமலம்-
அப்போது அலர்ந்த செவ்வி தாமரைபூ வானது
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய ஸ்பர்ஹநீயமான திரு வயிற்றிலே
பூவை ஒப்பான் -பூவையே போல்வதாக என்றபடி
பொது நாயகம் பாவித்து-
சர்வ நிர்வாஹகத்தை பாவித்து
அதாவது
ஜகத் காரண தயா சர்வ நிர்வாஹகமாய் இருக்கிற இருப்பை -தான் உடையதாகப் பாவித்து -என்கை-
இறுமாந்து –
இந்த நினைவாலே கர்வித்து
பொன் சாய்க்கும்-
மற்று உண்டான தாமரைகளின் உடைய அழகைத் தள்ளி விடா நிற்கும்
புனல் அரங்கமே –
இப்படி இருந்துள்ள ஜல ஸம்ருத்தியை உடைத்தாய் இருந்துள்ள திருவரங்கமே –

———————————————-

பத்தாம் பாட்டு -தட வரை -இத்யாதி -அவதாரிகை –
கீழில் பாட்டிலே உகந்து அருளின நிலங்களோடு ஒக்க தம் திரு மேனியை விரும்பினான் -என்றார் –
இப்பாட்டில் -அவற்றை விட்டு தம்மையே விரும்பின படியை அருளி செய்கிறார் –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 4-10 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே –
பரப்பை உடைத்தான மலையிலே பிரகாசமுமாய் –
தேஜஸ்சாலே விளங்கா நிற்பதுமாய் –
பரிசுத்தமுமான பெரிய கொடி எல்லாருக்கும் காணலாம் இருக்குமா போலே –
பெரிய பர்வத சிகரத்திலே அதி தவளமாய் மிளிருகிற பெரிய கொடி போலே –
மிளிருகை -திகழுகை
சுடர் ஒளியாய் –
நிரவதிக தேஜசாய்
நெஞ்சின் உள்ளே தோன்றும் –
ஹ்ருதய கமலத்துள்ளே தோன்றா நிற்கும்
என் சோதி நம்பீ –
தேஜஸ்சாலே பூரணன் ஆனவனே
சுடர் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
ஒளி -திவ்ய மங்கள விக்ரகம்
சோதி -குணங்கள்
நம்பீ -குறை வற்று இருக்கிற படி
என் -என்று இவை எல்லாம் தமக்கு பிரகாசித்த படி
தம்முடைய திரு உள்ளத்தே திவ்ய மங்கள விக்ரகத்தோடே பிரகாசித்த படி
இவர் திரு உள்ளத்தே புகுந்த பின்பு திரு மேனியிலே புகர் உண்டாய் -பூர்த்தியும் உண்டான படி –
சிக்கனே சிறிதோர் இடமும் -இத்யாதி
இவர் சரமத்திலே இப்படி அருளி செய்கையாலே -அனுபவித்த ஸ்ரீ கிருஷ்ண விஷயம் உள்ளே பூரித்த படி
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
ப்ரஹ்மாதிகளுக்கு முகம் கொடுக்கிற திரு பாற் கடலும் –
சதா பச்யந்தி -படியே நித்ய சூரிகளுக்கு முகம் கொடுக்கிற பரம பதமும் –
ப்ரனயிநிகளுக்கு முகம் கொடுக்கிற ஸ்ரீ மத் த்வாரகையும் –
இடவகைகள் இகழ்ந்திட்டு-
இப்படிக்கொத்த இடங்களை எல்லாம் –
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும் புல் -என்கிறபடியே உபேஷித்து
என்பால் இடவகை கொண்டனையே-
இவற்றில் பண்ணும் ஆதரங்கள் எல்லாவற்றையும் என் பக்கலிலே பண்ணினாயே –
உனக்கு உரித்து ஆக்கினாயே –
என் பால் இட வகை கொண்டனையே -என்று
இப்படி செய்தாயே என்று அவன் திருவடிகளில் விழுந்து கூப்பிட
இவரை எடுத்து மடியில் வைத்து -தானும் ஆஸ்வச்தனான படியைக் கண்டு-ப்ரீதராய் தலை கட்டுகிறார் –
அதனில் பெரிய என் அவா -என்று நம் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்
பிறந்த அபிநிவேசம் எல்லாம் -இப் பெரியாழ்வார் பக்கலிலே ஈஸ்வரனுக்கு பிறந்த படி -இத் திரு மொழி –
தனிக் கடலே –
ஈஸ்வரனுடைய முனியே நான்முகன் -வட தடமும் -இத்யாதி-

—————————————-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி -கிருஷ்ணனை ஸ்மரித்த வாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –
எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –புராண -பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –மகரத்வஜனை நினைக்கும்படியாய் வந்து விழுந்தது
சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-
கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –பிணா -என்று பெண் பேர் –
கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது
காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
சவிபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –
காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –
அவரைப் பிராயம் தொடங்கி -அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச -பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி
என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன் வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –
தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-
இந்த முலைகளை தொழுது வைத்தேன் -இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –
ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

சிறியாத்தான் பணித்ததாக நஞ்சீயர் அருளிச் செய்யும் படி –
இவள் பிறந்த ஊரில் திர்யக்குகளுக்குத் தான் வேறு பொது போக்கு உண்டோ
கண்ணுறக்கம் தான் உண்டோ –என்று
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -திருவாய் -6-7-2-வி றே பண்ணிக் கொண்டு இருப்பது –
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தையே தாத்மனோ ஹிதம் ஹரிர் ஹரிர் ஹரிரிதி
-வ்யாஹரேத் வைஷ்ணவ புமான் -வங்கி புரத்து நம்பி நித்ய கிரந்தம் –
என்னுமா போலே யாய்த்து
கரிய குருவிக் கணங்கள்-
வடிவாலும் பேச்சாலும் உபகரிக்குமவை யாய்த்து –
மாலின் வரவு சொல்லி –
அவன் முன்னடி தோற்றாதே வரும்படியைச் சொல்லி
மருள் இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது மெய்யாக வற்றோ
கிந்நு ஸ்யாச் சித்த மஓஹோ அயம் -சீதா பிராட்டி பட்டது எல்லாம் ஆண்டாளும் படுகிறாள் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான் ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே —
எல்லாருடையவும் ரஷணத்தில் ஒருப்பட்டு இருக்கிறவன்
பதினாறாயிரம் பெண்களோடு ஆனைக்கு குதிரை வைத்து பரிமாறின பரம ரசிகன்
ப்ரணய தாரையிலே விஞ்சி இருக்கும் பெருமான்
அகடிதகட நா சாமர்த்தியத்தை உடையவன்
அவன் வார்த்தை சொல்லா நின்றன –

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ-
இது மெய்யாக வற்றோ –

———————————————————————————————–

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்-

இவள் விரஹத்தாலே தரிப்பற்று நோவு படுகிற சமயத்திலே -வளர்த்த கிளியானது முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தை
இவளுக்கு சாத்மியாதே தசையிலே சொல்லிக் கொண்டு அங்கே இங்கே திரியத் தொடங்கிற்று
இது தான் ச்வைரமாக சஞ்சரிக்கும் போது அன்றோ நம்மை நலிகிறது -என்று பார்த்து கூட்டிலே பிடித்து அடைத்தாள்-(கண்ணன் நாமமே குழறிக் கொல்ல கூட்டில் அடைக்க கோவிந்தா என்றதே )
அங்கே இருந்து கோவிந்தா கோவிந்தா என்னத் தொடங்கிற்று –
கோவிந்தா கோவிந்தா –
நாராயணாதி நாமங்களும் உண்டு இ றே –
இவள் தான் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று கற்பித்து வைக்கும் இ றே
அது மர்மம் அறிந்து உயிர் நிலையிலே நலியா நின்றது –
இவன் தான் பசுக்களை விட்டுக் கொண்டு தன்னைப் பேணாதே அவற்றினுடைய ரஷணத்துக்காக அவற்றின் பின்னே போம்
தனிமையிலே யாய்த்து -கோவிந்தன் -பசுக்களை அடைபவன் -இவள் தான் நெஞ்சு உருகிக் கிடப்பது –
இப்போது அந்த மர்மம் அறிந்து சொல்லா நின்றதாய்த்து –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
இது சோற்றுச் செருக்காலே இ றே இப்படிச் சொல்லுகிறது -அத்தைக் குறைக்கவே தவிருகிறது -என்று பட்டினியே விட்டு வைத்தாள்
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்று இ றே அவள் நினைவு –
விண்ணப்பம் செய்வார்கள் -அத்யயன உத்சவத்தில் -மிடற்றுக்கு எண்ணெய் இட்டு -பட்டினி விட்டு- மிடற்றிலே கணம் மாற்றிப்
பாடுமா போலே உயரப் பாடுகைக்கு உடலாய் விட்டது
அவன் திருவடிகளைப் பரப்பின இடம் எங்கும் இது த்வநியைப் பரப்பா நின்றது
கிருஷ்ணாவதாரத்தை விட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீ வாமன அவதாரத்தை சொல்லியாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி
நாட்டிலே தலையான பழியை பிராபித்து -நாட்டார்க்கு துக்க நிவர்த்தகமாய் நமக்கு தாரகமான(-திரு நாமம் ) -இவளுக்கு மோஹ ஹேது வாகா நின்றது
இது என்னாய்த் தலைக் கட்ட கடவதோ -என்று நாட்டிலே தலையாய் இருப்பதொரு பழியை பிராபித்து –

உங்கள் நன்மை இழந்து தலையிடாதே-
அவன் தானே வரும் அளவும் பார்த்து இருந்து இலள்-இவள் தானே போவதாக ஒருப்பட்டாள்-என்று உங்கள் நன்மையை இழந்து கவிழ தலை இடாதே
முகம் நோக்க முடியாதபடி லஜ்ஜையால் தலை கவிழ்ந்து கிடப்பதைக் சொல்கிறது –

சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–
நெற்றிகள் உயர்ந்து தோன்றா நின்றுள்ள மாடங்களால் சூழ்ந்து தோன்றா நின்றுள்ள ஸ்ரீ மத் த்வாரகையிலே கொடு போய் பொகடுங்கோள்-
பதினாறாயிரத்து ஒரு மாளிகையாக எடுத்து -என்னை அதிலே வைத்து அவன் அவர்களோடு ஒக்க அனுபவிக்கலாம் படியாக-
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள்

———————————————————————————–

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சித் தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

மன்னு மதுரை -பகவத் சம்பந்தம் மாறாத -என்றபடி தொடக்கமாக –வண் துவாராபதி தன்னளவும்
அவ்வளவு போலே பூமி உள்ளது –
அவன் உகந்து அருளின தேசங்களே பூமி –வாசஸ் ஸ்தவயமான தேசம் – என்று இருக்கிறாள் போலும்-

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித்
மதுரைப் புறத்து -என்று தொடங்கி–துவராபதிக்கு உய்த்திடுமின் -என்கிறாள் இ றே
தன்னை உறவுமுறையார் உய்த்து பெய்து கொடு போய் விட வேண்டி
தாழ் குழலாள் துணிந்த துணிவை-
தன் மயிர் முடியை பேணாமையிலே தோற்று அவன் தன் வழி வரும்படி இருக்கிற இவள் தான் துணிந்த துணிவை –

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
ஸ்ரீ மத் த்வாரகையிலே மாளிகையோடு ஒக்குமாய்த்து இவ் ஊரும்

புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –
இனி தான் பண் மிக்கு -பாவ பந்தம் வழிந்து புறப்பட்ட சொல் என்று தோற்றி இருக்கிற வற்றை அப்யசிக்க வல்லார்கள் –
தனக்கு கால் நடை தாராத தசையிலே- தேசிகரைப் பார்த்து- நீங்கள் என்னை கொடு போங்கோள்- என்ன வேண்டாதே –
அவன் அனுமதிப்படியே- ஆதி வாஹிக குணம் நடத்த – அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய்- ஸ்ரீ வைகுண்டத்திலே-அனுபவிக்கப் பெறுவர்

————————–

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே
இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான் அடிக் கீழ் எய்த கிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன்
சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே–6-6-7

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –
பூதனை முடியும்படி
அவளுடைய வடிவுக்கு தக்க
பெரிய முலையை உண்டு

முது துவரைக் குலபதியாக் காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டான்அடிக் கீழ் எய்த கிற்பீர் –
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
பசுக்களின் பின்னே பெருத்த இலைக் குழலை ஊதிக் கொடு போய் -அவற்றை மேய்த்து –
மீண்டு திரு வாய்ப்பாடியிலே புகுந்து –
இடைப் பெண்கள் உடைய வளை தொடக்கமான வற்றை கொண்டவன்
திருவடிகளை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்க வேண்டி இருப்பீர்

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் –
மலைத் தாழ்வரைகளில் உண்டான ரத்னங்களைக் கொடு வந்து
பூமி அடைய உஜ்ஜீவிக்கும்படி சம்ருத்தியைத் தள்ளா நின்றுள்ள
ஜல சம்ருத்தியை உடைத்தாய்
தர்ச நீயமான பொன்னி நாட்டை உடையவன் –

சிலைத் தடக்கை குலச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
பெரிய ஆண் பிள்ளை யானவன்
அவ் வாண் பிள்ளை தனத்தை நிர்வஹித்துக் கொடுக்கைக்காக
ஆஸ்ரயிக்கிற தேசம் –

——————————————————-

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே —6-8-7-

கட்டேறு நீள் சோலைக் –
இந்த்ரன் உடைய காவல் காடு என்கிற மதிப்பாலே மிக்க அரணை உடைத்தாய் இருக்கிற-

காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை –
அர்ஜுனனும் தாமுமாய் யமுனா தீரத்தில் பூம் பந்து இறட்டு
விளையாடா நிற்க
அக்னி ஒரு ப்ராஹ்மன வேஷத்தை கொண்டு வந்து நிற்க
நீ இந்த்ரன் உடைய காட்டை புஜி-என்று விட்டான் –

மூட்டி விட்டானை –
துஷ்ட மிருகங்களின் மேலே விட்டானாய்
தான் கிட்டுகைக்கு பயப்படுமா போலே
பிரவேசிப்பிக்கையில் உண்டான அருமை சொன்னபடி –

மெய்யமர்ந்த பெருமானை –
இன்னும் ஆரேனும் அர்த்தித்து வரில் செய்வது என்-என்று
திரு மெய்யத்தில் வந்து சந்நிஹிதன் ஆனவனை-

மட்டேறு கற்பகத்தை –
பரிமளம் மிக்கு வாரா நின்றுள்ள
கல்பக விருஷத்தை –

மாதர்க்காய் –
ஸ்ரீ சத்ய பாமைப் பிராட்டி பக்கல்
தாதர்த்தத்தை முடிய நடத்தின் படி –

வண்டுவரை நட்டானை –
இந்தரனுக்கு நரகாசுரன் உடன் விரோதம் விளைய
அவனுக்காக எடுத்து விட்டு
அவனை அழித்து
மீண்டு வந்து ஸ்வர்க்கத்தை குடி ஏற்றுகிற அளவிலே
இந்த்ராணி யானவள் -கல்பக வருஷத்தின் பூ வர
உங்களுக்கு இது பொராது இறே
உடம்பு வேர்க்கும் இறே
தரையில் அல்லது கால் பாவாதே -என்று இங்கனே
தன்னுடைய தேவதத்வத்தையும்
இவள் உடைய மனுஷ்யத்வத்தையும் சொல்லி
ஷேபித்துச் சூடினாள்-
அவளும் கிருஷ்ணன் தோளைப் பற்றி -இத்தை என் புழக் கடையில் நட வேணும் -என்ன
அத்தை பிடுங்கிக் கொடு போந்து
ஸ்ரீமத் த்வாரகையிலே நட்டு
பின்னை யாய்த்து திரு மஞ்சனம் பண்ணிற்று
தான் சோபன -நன்றாக -குடி ஏறுவதற்கு முன்பே தன்னைக் குடி இருத்தினவன்
தன் புழக் கடையிலே ஒரு குப்பை மேனியைப் பிடுங்கினான் என்று
வஜ்ரத்தை கொண்டு தொடருவதே -என்று
பிள்ளை அமுதனார் பணிக்கும் படி –

நாடி நறையூரில் கண்டேனே –
என்னுடைய அபேஷிதம் செய்கைக்காக
திரு நறையூரிலே வந்து நின்றவனைக்
காணப் பெற்றேன் –

—————————————————-

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71–

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது
அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான்
அறியப் போமோ -என்கிறார்
சேயன் மிகப் பெரியன் –
யதோவாசோ நிவர்த்தந்தே -என்று
வாக் மனஸ் ஸூ களுக்கு நிலமில்லாத படியாலே
ப்ரஹ்மாதிகளுக்கும் தூரச்தனாய் இருக்கும்
அணியன் சிறியன்-
சம்சாரிகளுக்கும் இவ்வருகாய் பிறந்து
அனுகூலர்க்கு அண்ணி யானாய் இருக்கும்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன்
அண்ணி யனானமைக்கு உதாரஹனம்
இடையனாய்
ஸ்ரீ மத் த்வாரகைக்கு நிர்வாஹகனாய்
ஒரு ஷூத்ரனுக்கு-ஜராசந்தன் – தோற்க வல்ல ஆச்சர்ய குணத்தை உடையவன் –
அன்று ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்
தேர் தட்டிலே நின்று
உன்னுடைய சகலத்துக்கும் நானே கடவன்
நீ சோகிக்க வேண்டா –
என்று அருளிச் செய்த வார்த்தையை தஞ்சமாக
நினைத்து இருக்கைக்கு அடியான
தத்வ ஞானம் இன்றிக்கே ஈஸ்வரன்
தா நஹம் த்விஷத க்ரூரான் -என்று
நினைக்கும்படி சத்ருக்களாய்
தாங்களும் கிருஷ்ணன் எங்களுக்கு சத்ரு என்றும் இருப்பார்கள்

————————-

இவளுக்குக் கிருஷ்ணன் திருவடிகளில் உண்டான ஐகாந்தியத்தை நினைத்து,
அவனை ஏத்துங்கோள்; இவள் பிழைப்பாள்,’ என்கிறாள்.

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படு மறை வாணனை வண் துவ ராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே–4-6-10-

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால் –
தன் நெஞ்சாலே மதித்து வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அறியாள் இவள்.
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த–ஸ்ரீ ராமா. பால. 18 : 27 தொட்டில் பருவமே தொடங்கிப் பரம சினேகிதராய் இராநின்றார்’ என்கிறபடியே,
பிறை தொழும் பருவத்திலும் பிறை தொழுது அறியாள்.
முலையோ முழுமுற்றும் போந்தில; பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம் இவள் பரமே!’-திருவிருத்தம், 60 என்று
நீங்கள் ஆச்சரியப்படும்படி அன்றோ அவ் விளமைப் பருவத்திலும் இருந்தது?
இனி, ‘இப்போது பர்வதத்தை விட்டுப் பதர்க் கூட்டத்தைப் பற்றுமோ?
ஆகையாலே, இன்னார்க்கு இன்னது பரிஹாரம் என்று ஒன்று இல்லையோ? அது அறிந்து பரிஹரிக்க வேண்டாவோ?
முழங்கால் தகர மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே யன்றோ நீங்கள் செய்கிற பரிஹாரம்?
தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களின் சம்பந்தம் இவளுக்குப் பொறாது,’ என்று அறிய வேண்டாவோ?’ என்கிறாள் என்றபடி.
அநந்ய தைவத்வம் – ‘வேறும் பற்றக்கூடிய ஒரு தெய்வம்-ஆஸ்ரய தேவதை – உண்டு, அது ரஷிக்கிறது -காப்பாற்றுகிறது,’ என்று
நினைக்க விரகு இல்லை கண்டாய் எனக்கு.
ஸஹபத்நியா -சுந். 28 : 12– என்று, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவர் புகும் போதும் இவர்க்கு எடுத்துக் கை நீட்டப் புகுமத்தனை போக்கி,
பெரியபெருமாள் தாம் உத்தேசியமாகப் புக்கு அறியேன்.
இயம்க்ஷமாச -ராவணன் பலவாறாகப் பிதற்றிய வார்த்தைகளையும் ராக்ஷசிகளுடைய கைகளாலும் வாயாலும் அச்சம் உறுத்துதலையும் –
தர்ஜன பர்த்தஸ்னங்களையும் பொறுத்திருந்ததும் ‘அவருடைய ஓர் இன் சொல் கேட்கலாம்’ என்று கண்டாய்.
பூமௌசஸய்யா – ‘இத் தரைக் கிடை கிடந்ததும்– தவாங்கே சமுபாவிசம் -தேவரீருடைய மடியில் படுத்துக்கொண்டேன்,’ என்கிறபடியே, ‘
அவருடைய மடியில் இருப்பு ஒருகால் சிந்திக்குமோ?’ என்னுமதனாலே கண்டாய்.
நியமஸ்தர்மமே – ரக்ஷகத்வம் -காப்பாற்றும் தர்மம் அவர் தலையிலே’ என்னுமதனாலே கண்டாய் நான் இருந்தது; என்றது, –
ந த்வா குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்க தேஜஸா -ஸ்ரீ ராமா. சுந். 22 : 20– பத்துத் தலைகளையுடையவனே! எரிக்கப்படுவதற்குத் தகுந்தவனே!
எனக்கு ஆற்றல் இருந்தும், என்னுடைய கற்பாகிய ஒளியால் உன்னைச் சாம்பலாகச் செய்யேன்,’ என்று
ராவணனைப் பார்த்துக் கூறியது ஸ்ரீ ராமபிரானை நினைத்து’ என்றபடி.
பதிவிரதாத்வம் – ஏதத் விரதம் மம -சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாத்தல் எனக்கு விரதம்,’ என்றவருடைய விரதம் ஒழிய,
எனக்கு’ என ஒரு சங்கல்பத்தை உண்டாக்கி இவற்றை அழிக்க நினைத்திலேன் கண்டாய்.
விபலம் மம இதம் – தப்பாதவையும் தப்பிவிட்டன. ‘எது போலே?’ என்னில்,
மாநுஷாணாம் கிருதக்னேஷூ கிருதமிவ –ஆத்மாநம் மானுஷம் மன்யே ‘நான் என்னை மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்றவர்க்கும்
உண்டே அன்றோ மனிதத் தன்மை? அவரை ஒழிந்தார் திறத்துச் செய்த காரியங்களைப் போன்று விழுந்தது. என்றது,
தப்பாதது தப்பிற்று,’ என்றபடி, ‘அதற்கு அடி என்?’ என்னில்,
மம இதம் – ‘அவர் பக்கல் குறையில்லை; அதற்கு இலக்கு நான் ஆகையாலே,’ என்றாள் பிராட்டி.

அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினாற்சுடு வேன்!அது தூயவன்
வில்லினாற்றற்கு மாசு என்று வீசினேன்.’– என்ற கம்ப நாடர் திருவாக்கு

நும் இச்சை சொல்லி –
உங்களுக்கு இஷ்டமானவற்றைச் சொல்லி; என்றது, ‘பொருளின் உண்மையைப் பார்த்தாலும் இவளைப் பார்த்தாலும்
வேறு தெய்வங்களின் சம்பந்தம் பொறாததாய் இருந்ததே அன்றோ?
இனி உள்ளது உங்களுக்குத் தோற்றிய வார்த்தைகளைச் சொல்லுகையாயிற்றே அன்றோ?’ என்றபடி.
நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் –
துர்விருத்தர் செய்வதை விருத்தவான்கள் செய்வர்களோ?
தோள் அவனை அல்லால் தொழா’ என்றே அன்றோ நீங்கள் சொல்லுவது?
ஆதலால், நீங்கள் -விக்ருதர்கள் -இவற்றுக்கு வேறுபட்டவர்களாமவர்கள் அல்லிரே,’ என்றபடி. ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்ன,

மன்னப்படு மறை வாணனை –
வேதைக சமைதி கம்யனை -நித்யமான வேதங்களாலே சொல்லப்படுகையாலே வந்த ஏற்றத்தினையுடையவனை;
மன்னப்படுதல் -நித்தியமாய் இருத்தல். என்றது, மனிதனுடைய புத்தியினாலே உண்டானவை அல்லாமையாலே,
வஞ்சனை முதலான தோஷங்கள் இன்றிக்கே, முன்னே முன்னே உச்சரித்துப் போந்த கிரமத்திலே பின்னே பின்னே
உச்சரித்து வருகின்ற தன்மையைப் பற்றச் சொன்னபடி.
அன்றிக்கே ‘மன்னுகையாவது, பயிலுதலாய், ஓதுகின்ற விதியின்படி வந்துகொண்டிருக்கும் வேதங்களால் சொல்லப்படுகின்றவனை’ என்னுதல்.
ஆக, ‘ஆகமம் முதலானவைகளில் சொன்னவற்றைக்கொண்டோ பரிஹரிக்கப் பார்ப்பது?
வேதங்களால் அறியப்படுகின்றவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறாள் என்றபடி.

வண் துவராபதி மன்னனை –
கேட்டார் வாய்க் கேட்டுப் போகாமே கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம்படி வந்து அவதரித்தவனை.
நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே,
தேர்ப் பாகனார்க்கு மோஹித்த இவளை, வண் துவராபதி மன்னன் திருநாமத்தைச் சொல்லித் தெளியச் செய்யப் -ஆஸ்வசிக்க –
பாருங்கோள்,’ என்பாள், ‘வண் துவராபதி மன்னனை ஏத்துமின்’ என்கிறாள்.

ஏத்துமின் –
வாய் படைத்த பிரயோஜனம் பெற ஏத்துங்கோள்.
சீர் பரவாது, உண்ண வாய் தான் உறுமோ ஒன்று?’-பெரிய திருவந். 52- என்று அன்றோ நீங்கள் சொல்லுவது?

ஏத்துதலும் தொழுது ஆடும் –
நீங்கள் க்ருதார்த்தைகளாம் – செய்யத்தகும் காரியத்தைச் செய்து முடித்தவர்கள் ஆகுமளவே அன்று;
அதசோ அபயங்கதோ பவதி ‘பிறகு அவன் அச்சம் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே,
ஏத்தின உடனேயே -ப்ரபுத்தையாய் -தெளிவை யுடையவளாய்த் தொழுது ஆடுவாள்.

தொழுது ஆடுமே
உணர்த்தி உண்டானால் செய்வது அது போலே காணும். என்றது, ‘தரித்து –
வியாபார க்ஷமை -ஆடுதற்குத் தக்க ஆற்றலை யுடையவளும் ஆவாள்,’ என்றபடி.

—————————————————————-

கீழ் -அன்னை, நீ செய்கிற இதனைப் பொறுக்க மாட்டாள்’ என்ன, “அன்னை என் செய்யும்” என்று,
அவள் பொறாமல் செய்வது என்? என்னுமளவிலே நின்றாள்.
இப் பாசுரத்தில், நீ இப்படி ஒரு விஷயத்தில் வியவசிதையானபடி -அறுதியிட்டிருப்பதை அறிந்தால்,
அவள் ஜீவியாள் கிடாய் – பிழைக்க மாட்டாள் என்ன,
அவள் பிழைத்தால் என்? முடிந்தால் என்? என்கிறாள்.

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே–5-3-6-

அன்னை என் செய்யில் என்-
அவள் பிழைத்தால் என்? முடியில் என்? என்கிறாள்.
குரவ : கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா”- ஸ்ரீ விஷ்ணுபுராணம், 5. 18 : 22
விரக அக்னியினால் கொளுத்தப்பட்டிருக்கிற நமக்குப் பெரியோர்கள் என்ன செய்வார்கள்” என்கிறபடியே,
முடியாதே இருப்பார்க்கு அன்றோ இதனை பரிஹரிக்க – நீக்க வேண்டுவது,
கையற்றார்க்கு இது கொண்டு காரியம் என்?
நன்று-தாயாருடைய நாசம் ஒரு தலையாகவும் மீளாதபடியாய்,
இவள் நாயகனுடைய ஸுந்தரியாதிகளில் -அழகு முதலானவைகளில்- ஈடுபட்டவள் ஆனாள்’ என்று
ஊரார் பழி சொல்லுவார்களே என்ன,

ஊர் என் சொல்லில் என்-
அவர்கள் பழி சொல்லில் என்?
குணங்களைச் சொல்லில் என்?
“கொல்லை” என்னுதல், “குணமிக்கனள்” என்னுதல், இத்தனை அன்றோ அவர்கள் பழி சொல்லுவது.

தோழிமீர்-
தாய் என் செய்யில் என், ஊர் என் சொல்லில் என்’ என்று நீங்கள் மேல் விழுந்து என்னை இவ் விஷயத்தில் –
பிரவணையாக்குகை -ஈடுபாடு உடையவளாக ஆக்குகை அன்றிக்கே,
தாய் பிழையாள், ஊரார் பழி சொல்லுவர்கள்’ என்று இதனைப் பழியாகச் சொல்லுமளவு உங்களது ஆன பின்பு.

என்னை –
“தாய் வாயிற் சொற்கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்” என்கிற
தாயார் பிழையாள், ஊரார் பழி சொல்லுவார்கள்’ என்றால் மீளாதபடி இவ் விஷயத்தில் ஈடுபாடுடையவளாய்
இருக்கிற என்னை.

இனி-
உங்கள் சொல்லும் கேளாதபடி கைகழிந்த பின்.

உமக்கு –
இது பழி’ என்று மீட்கப் பார்க்கிற அளவிலே நிற்கிற உங்களுக்கு.

ஆசை இல்லை-
இனி என் பக்கல் உங்களுக்கு நசை அற அமையும்.

தோழிமீர் –
இதற்கு முன்பு எல்லாம் ‘தோழி’ என்று உயிர்த் தோழி ஒருத்தியையும் பார்த்து வார்த்தை சொல்லிப் போந்தாள்;
இப்போது இவளுடைய துணிவின் மிகுதியைக் கண்டவாறே
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி யாகிலும் மீட்க வேணும்’ என்று ஆய வெள்ளம் எல்லாம் திரண்டன;
அதனாலே ‘தோழிமீர்’ என்கிறாள்.

அகப்பட்டேன்-
இப்போது ‘ஹிதம்’ என்கிற புத்தியாலே ஒரு வார்த்தை சொன்னோமே யாகிலும், ஊரார்க்கும் தாய்மார்க்கும்
இவ்வருகே எங்களிடத்தில் ஒரு வாசி நினைத்திருக்க வேண்டாவோ உனக்கு” என்ன,
அது அப்படியே, அதில் குறை இல்லை; என்னைக் கடல் கொண்டது காணுங்கோள், நான் என் செய்வேன் என்கிறாள்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதிமன்னன் –
“சிறியார் பெரியார்’ என்ற வாசி இன்றிக்கே எல்லாரையும் ஒரு சேர ஆழப் பண்ணும் கடலிலே அன்றோ நான் அகப்பட்டது.
ரூப ஒளதார்ய குணை:”-ரூபம் என்றது, வடிவழகை. ஒளதார்யம் என்றது, அதனை எல்லாரும் அநுபவிக்கலாம்படி
தன்னை முற்றக் கொடுத்துக் கொண்டிருக்கையை.
“குணம்” என்றது, கொள்ளுகிறவனைக் காட்டிலும் தாம் தாழ நின்று கொடுக்கும் சீலத்தை.
தன் மேன்மை தோற்ற இருந்து கொடுக்கும் அன்று ஆள் பற்றதே அன்றோ;
அதற்காகத் தாழ நின்றாயிற்றுத் தன்னைக் கொடுப்பது.
“பும்சாம்” – அந்த அழகும் கொடையும் சீலமும் வயிர உருக்கானவாம்; என்றது, பலம் அற்ற பெண்கள் படுமதனை
வன்னெஞ்சரையும் படுத்த வல்லனவாம் என்றபடி.
அன்றிக்கே, “பிரகிருதி புருஷர்கள்” என்றால் போலேயாய், அசித்துக்கு வேறுபட்டவர்கள் எல்லாரையும்
ஈடுபடுத்த வல்லன என்னவுமாம்.
“திருஷ்டி சித்தாபஹாரிணம்”-கண்களுக்கு மனத்தின் துணை வேண்டாமலே, கண்களைப் பின் செல்லுமத்தனை நெஞ்சு.
தாய் வேறு, கன்று வேறு ஆக்கும் விஷயம் அன்றோ என்றபடி.
(மனத்தினைத்‘தாய்’ என்றும், மற்றைக் கரணங்கள் மனத்தினைப் பின் செல்லுவன ஆதலின், அவற்றைக் ‘கன்று’ என்றும்
அருளிச்செய்கிறார். ஸ்ரீ பரதாழ்வானையும் கைகேசியையும் வேறாக்கின விஷயம் அன்றோ இது என்பது, தொனிப் பொருள்,)
யத்ருஷ்ய பிரதமஜாயே புராணா “எந்தப் பரம பதத்தில் எல்லாவற்றையும் காண்கிறவர்களும், எப்பொழுதும் உள்ளவர்களும்,
பகவானுடைய அநுபவத்தில் எப்பொழுதும் ஒருபடிப் பட்டவர்களும்” என்னும்படி இருக்கிறவர்கள்
ஆகையாலே ‘முன்னை அமரர்’ என்கிறது.
நித்ய ஸூரிகளுக்கும் சத்தைக்குக் காரணமாயிருக்கிற மேன்மையுடையவன் ஆதலாலே முதல்வன்’ என்கிறது.
அன்றிக்கே, அப் பொழுதைக்கு அப் பொழுது ஆசைப் படக்கூடிய-நித்ய ஸ்ப்ருஹா- விஷயமானவன் என்னுதல்.
ஆக, அத்தகைய விஷயத்திலே அன்றோ நான் அகப்பட்டது என்பதனைத் தெரிவித்தபடி.

வண் துவராபதி மன்னன்’
என்றதனால், முதன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற துறை அல்லாததிலேயோ நான் இழிந்தது’
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராக வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்”
என்கிறபடியே பெண்களுக்கு உடம்பு கொடுத்துக் கொண்டிருக்கிற நம் துறையிலே அன்றோ இழிந்தது
என்பதனைத் தெரிவிக்கிறாள்.
அன்றிக்கே, ‘மன்னன்’ என்றதனால் மேன்மை தோற்ற ஓலக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிற இடமே நன்றாய் விட்டது
நீர்மை தோற்ற இருக்கிற இடத்தில் விழுகிற பிரம்புகளிற் காட்டில் என்பதனைத் தெரிவிக்கிறாள் ஆதலுமாம்.

மணி வண்ணன்-
அவ் விரண்டும் இல்லையே யாகிலும் விட ஒண்ணாததாயிற்று வடிவழகு.
காதலி துவக்குண்பது வடிவழகிலே அன்றோ.

வாசுதேவன்-
வடிவழகு இல்லையாகிலும் விட ஒண்ணாததாயிற்றக் குடிப் பிறப்பு.
ஸ்னுஷா தசரதஸ் யாஹம் -நான் தசரத சக்கரவர்த்தியினுடைய மருமகள்” என்கிறபடியே,
பிராட்டி தனக்குப் பேற்றுக்கு உடலாக நினைத்திருப்பது ‘சக்கரவர்த்தி மருமகள்’ என்னும் இதனையே காணும்.
ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹாநாம் முக்யஸ்ய விதிதாத்மந: ஸ்நுஷா தசரதஸ்யாஹம் சத்ருசைந்ய பிரதாபிந:”- சுந். 33 : 15, 16
சத்ரு சைன ப்ரதாபி ந -எதிரியின் படையினை வருந்தச் செய்யுமவர்” என்கிறபடியே,
எங்கள் மாமனார் உளராகில் எனக்கு இவ்விருப்பு இருக்க வேணுமோ? பகைவர்களும் ஜீவிக்க, ஜீவித்தவரோ அவர்.

முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன்-
அவனுடைய நைர் க்ருண்யத்தோடே -அருள் அற்ற தன்மையோடு நீர்மையோடு,
ஊராருடைய பழியோடு புகழோடு வாசி அற்றால் போலே,
அவன் மேன்மையோடு சௌலப்யத்தோடு வாசி அற இரண்டும் ஆகர்ஷகமாய் -மனக் கவர்ச்சியாய் இருக்கிறதாயிற்று இவளுக்கு.

வலையுள் . . . அகப்பட்டேன் –
அந்தப் பொதுவானதில் அன்றிக்கே, அவன் என்னைக் குறித்து நோக்கின
நோக்கிலும் புன் முறுவலிலும் அன்றோ நான் அகப்பட்டது.
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடா நிற்க,
எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார்,
“கமலக்கண் என்னும் நெடுங்கயிறு” எனக் கடவதன்றோ.
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – அருளிச் செயலில்– பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 12, 2019

ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–
தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -ஸ்ரீ மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான ஸ்ரீ எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-
ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

——————-

ஸ்ருதி பிரக்ரியையால் நாராயணனே நிகில ஜகத்துக்கும் காரண பூதன்
ப்ரஹ்மாதிகள் கார்ய கோடி கடிதர் என்னுமத்தை உபபாதித்தார் கீழ் –
இதில் –இதிஹாச பிரக்ரியையால் சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை உபபாதியா நின்று கொண்டு-
ப்ரஹ்மாதி களுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள நன்மைகள் எல்லாம் எம்பெருமானுடைய பிரசாதா யத்தம் -என்கிறார்
தத்தவம் ஜிஜ்ஞா சமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை தத்த்வமேகோ மஹா யோகீ ஹரிர் நாராயண ஸ்ம்ருத-பார சாந்தி -357-88-என்கிற
ஸ்லோகத்திற் படியே விசாரிக்கும் போது சர்வேஸ்வரன் ஒருத்தனே என்று ஈஸ்வரத்வம் சொல்லுகிறதாகவுமாம்-

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2-

———————–

ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாக அவன் கண் வளர்ந்து அருளின இடங்களிலும்
முட்டக் காண வல்லார் இல்லை -நான் அவனை எங்கும் உள்ளபடி அறிந்தேன் -என்கிறார்-
அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளிற்றும் –
அவன் காட்டக் கண்ட நான் அறிந்தபடி-ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போகாது-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

———————–

சர்வேஸ்வரனோடு ஒக்க வேறு சிலரை ஈஸ்வரர்களாகச் சொல்லுவதே என்று
ருத்ராதிகள் யுடைய ப்ரஸ்துதமான அநீஸ்வரத்தை அருளிச் செய்கிறார் –
பிரமாண உபபத்தி களாலே நிர்ணயித்து என்னை யடிமை கொண்ட எம்பெருமானைத் திரளச் சொன்னேன் –
என்று –தாம் அறிந்தபடியை உபபாதிக்கிறார் –

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4–

————————–

நானே ஈஸ்வரன் என்னும் இடம் நீர் அறிந்தபடி எங்கனே என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய-
இத்தை யுபசம்ஹரித்த நீ இங்கே வந்து திருவவதாரம் பண்ணி ரஷகன் ஆகையாலே -என்கிறார் –
எனக்கு சர்வமும் பிரகாரம் ஆகில் இறே நீர் சொல்லுகிறபடி கூடுவது என்று ஸ்ரீ எம்பெருமான் அருளிச் செய்ய-
ஜகத்து அவனுக்கு பிரகாரம் என்னும் இடத்துக்கு உறுப்பாக-உன்னுடைய ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களாலே-
சகல ஆத்மாக்களுக்கும் உபாதான காரணம் ஆகையாலே சர்வமும் உனக்குப் பிரகாரம் என்கிறார் -என்றுமாம் –
அந்தராத்மதயா பிரகாசித்து நின்ற -இவ் வர்த்தம் வேறு ஒருவர் அறிவார் இல்லை –
தேவரே அறிந்து அருள வேணும் என்கை-

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

———————-

வேறு ஒருத்தர் அறிவார் இல்லையோ என்ன -பாஹ்ய குத்ருஷ்டிகளால்-அறியப் போமோ -என்கிறார்
இப்படி எம்பெருமான் யுடைய ஈஸ்வரத்வத்தை இசையாத பாஹ்யரையும் குத்ருஷ்டிகளையும் இகழுகிறார் –என்றுமாம்-

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6-

——————————

அவர்கள இகழ நீர் நிரபேஷர் ஆகிறீரோ-என்று எம்பெருமான் கேட்க-
நீ யல்லது எனக்கு கதி இல்லாதாப் போலே உன் கிருபைக்கு நான் அல்லது பாத்ரம் இல்லை -என்கிறார் –
பூர்ணனான உனக்கு அபூர்ணனான என்னை ஒழிய-அபாஸ்ரயம் இல்லை –
உன்னுடைய சேஷித்வ ஸ்வரூபத்தாலும்-என்னுடைய சேஷத்வ ஸ்வரூபத்தாலும் விடப் போகாது –

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

—————–

நிருபாயராகை யன்றோ நெடுங்காலம் நாம் இழந்தது-உபாய அனுஷ்டானத்தைப் பண்ணினாலோ வென்று திரு உள்ளம் கேட்க
உபாய அனுஷ்டான சக்தர் அல்லாத நமக்கு-தசரதாத்மஜன் அல்லது துணையில்லை -என்கிறார் –
உன்னை ஒழிய வேறு ஓன்று அறியேன் என்கிறது என் என்னில்–
வேறு உள்ளது கழுத்துக் கட்டி யாகையாலே என்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை–8-

————————–

அவனைத் துணையாக வேண்டுவான் என்-ப்ரஹ்ம ருத்ராதிகளாலே ஒருவர் ஆனாலோ என்னில்
அவர்களும் ஸ்வ தந்த்ரரமாக ரஷகராக மாட்டார் –ஸ்ரீ எம்பெருமானுக்கு சேஷ பூதர் என்கிறார் –
நாமே யன்றிக்கே ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்களுடைய ஆகிஞ்சன்யம் பற்றாசாக வாய்த்து
ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிப்பது என்கிறார் -என்றுமாம் –
வேறு ஒருத்தர் துணை இல்லை என்றது-பூர்ணராக சம்ப்ரதிபன்னர் ஆனவர்களுக்கு
தம் தாம் குறையை இவனுக்கு அறிவித்து-தங்கள் அபேஷிதம் பெருகையாலே -என்கிறார் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9–

——————————

ஸ்ரீ எம்பெருமானை ஆகிஞ்சன்யம் மிகவுடைய நம் போல்வாருக்குக் காணலாம்
ஸ்வ யத்னத்தால் அறியப் புகும் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று -என்கிறார்-
திரு நாபி கமலத்திலே அவ்யவதாநேந பிறந்தேன் என்றும்-
ஜடை தரையிலே தாழும் படி சாதன அனுஷ்டானம் பண்ணினேன்-என்றும்
ஸ்வ சக்தியில் குறைய நினையாத-ப்ரஹ்ம ருத்ராதிகள் வாழ்த்த மாட்டரே-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10–

——————————–

ஆனபின்பு எம்பெருமானை சர்வ கரணங்களாலும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-
வணங்குவித்துக் கொள்ளுகைக்கு லஷணம் சொல்லுகிறது –
சூழப் பட்ட திருத் துழாய் வர்த்தியா நின்று-ஆதிராஜ்ய சூசகமான முடியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய திருநாமத்தை
மாறாமல் நினைத்து-உதாரமான கையைக் கூப்பி-மகுடம் தாழ்த்தி வணங்குமின்கள்
புஷ்பயாதி உபகரணங்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே-உங்கள் தலையை தாழ்த்தி வணங்குங்கோள்-

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11-

————————

ஸ்ரீ எம்பெருமான் -என்னை ஆஸ்ரயிங்கோள் என்று சொல்லுகிறது என்-என்ன
நீ யுன்னை ஆஸ்ரயியாதாரைக் கெடுத்து-ஆஸ்ரயித்தாரை வாழ்விக்கையாலே-என்கிறார் –
வேதத்தாலும் எங்கும் புக்கு-உன்னை உணராதவர்கள் அதபதிக்கும்படியாக மதித்தாய் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

—————————

மோஷ யுபாயத்தை அறியாதே சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்
ஸ்ரீ எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

——————————–

இப்படி இராதார் உண்டோ என்னில்-ஹேயரான சமய வாதிகள் சொல்லுவதைக் கேட்டு
அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

————————————–

இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்
ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க மார்க்கண்டேயன் கண்டபடியே அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் –

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

———————————

உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன –
நான் ஸ்ரீ எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷ பாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்-
ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆனபின்பு
நம்முடைய சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை
நயாசோ நாம பகவதி – -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம் இப் பாட்டால் சொல்லுகிறது-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

————————————-

நம்மளவே அன்று -எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-
ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும்படியை -என்கிறார்-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

—————————————–

ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணத்திலும் ஸ்ரீ பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
குறி கொண்டு ஸ்ரீ பகவானையே பஜிக்கும் அதிலும்-ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரீயது என்கிறார் –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

——————————–

எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்-
ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –
ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷ பாதியோ நான் என்ன -அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-
பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

———————————-

இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான ஸ்ரீ சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –
நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –
ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும் உன்னாலே
உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –
பிரித்து சொல்லுகிறது என்-
அக்நியும்-குல பர்வதங்களும்-எட்டுத் திக்கும்-அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர் களுமான-
இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

————————————-

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின ஸ்ரீ எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –
இப்படி பூரணன் ஆனவனுக்கு ஆஸ்ரித அர்த்தமாக-வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது –
ஸ்ரீ நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

—————————————-

ஆன பின்பு சர்வ காரணமான ஸ்ரீ நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
ஸ்ரீ நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது –

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

———————————-

அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்
அவை எல்லாவற்றையும் ஸ்ரீ எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–
அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-தன் அபிமத சித்திக்கு
இவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

—————————————-

ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான் அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன
யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-
அவர்கள் கார்யம் தலைக் காட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

——————————————–

ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே
அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –
ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

—————————————

இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று
அவன் படியை வெளியிடுகிறார்-
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்கு மாறு–26-

———————————–

எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான் என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்-
பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார்

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

—————————————-

ஸ்ரீ பிராட்டி யோட்டை சம்ச்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-
அவன் லீலை-வாலியைக் கொன்ற ஜயமும்-ராவண வதமும் புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் –
ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-நெஞ்சு அழியும்படி யாய் இறே இருப்பது
இது என்று பிரத்யஷமாதல் -ஈடுபாடு ஆதல்-வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

—————————–

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-
தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்
ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுடைய வடிவு
தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் –
மதிக்கில் இவனுடைய திரு மேனியை-ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை –

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

———————————

அப்பேர் அழகோடு -ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே -என்னை யடிமை கொண்டவன் –
என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் -அவ்வளவு அன்றிக்கே
நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்
இனி ஸ்ரீ திருப் பாற் கடலில் ஸ்ரீ திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்-
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-அவசர ப்ரதீஷனாய் ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளி-அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு ஸ்ரீ திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

——————————

எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன் ஸ்ரீ எம்பெருமானேயான பின்பு-அபரிமித துக்க
பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –
நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்-இடர் வந்த இடத்தில் அவ்விடரைப் பரிகரிக்கும்-
அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் –

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

———————————–

அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே மண்டி நசித்துப் போருவார்கள் –
ஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன –
ஒரு நொடி மாதரம் போது போக்கு இன்றி-ஆச்சர்ய குணத்தில் அகப்படாதது பரஹிம்சை
ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை-ஆஸ்ரயியுங்கோள்–

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

————————————-

தாம் ஸ்ரீ கிருஷ்ண சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –
அசாதாரணையான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டிக்கும்-அல்லாதாருக்கும் ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் –

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

—————————–

என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –
உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க-வரில் பொகடேன் கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –

குறிப்பு எனக்கு க் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

—————————-

ஸ்ரீ திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு
இது ஸ்ரீ திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –
லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

—————————-

ஸ்ரீ எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –
அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்து ஸ்ரீ திருக் குடந்தை தொடக்கமான-
ஸ்ரீ திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –
பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் –

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

——————————–

ஸ்ரீ எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் –
ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-முதலிலே சகல பதார்த்தமும் அவனுடைய சங்கல்ப்பத்தாலே
யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-
ஆதி நெடுமாலை விவரிக்கிறது –

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

———————————-

மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே -ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில்
அந்த தேவதைகளோடு கூடவடைய நசிக்கும் -என்கிறார் –
ஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே பண்ணும் அபிமானமும்
அத்தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்கா பண்ணும்-வ்யாபாரமாகிற காட்டழைபபும் அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் –

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

——————————————-

லோக வ்ருத்தாந்தம் ஆன படியாகிறது என்று கை வாங்கி-தமக்கு ஸ்ரீ திருமலையையும்
அங்கு நின்று அருளுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-
மலையிலே பெரிய அருவிகள் ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய ரத்ன தீப்தியை ஆனை அக்நி என்றும் சர்ப்பம் மின் என்றும்
பயப்பட்டு ஒதுங்கும் திருமலை–
அன்றிக்கே
நெருப்புக்கு பயப்பட்டு யானை-மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் –
இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல் என்று அந்வயம்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

——————————–

ஸ்ரீ திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிகப் படுகிற-பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

————————————-

ஸ்ரீ எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-
நான் ஸ்ரீ திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

——————————-

நான் அவன் கையிலே அகப்பட்டேன் -ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக ஸ்ரீ திருமலையிலே சென்று
நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் -நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –
ஸ்ரீ திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-

——————————————

பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் அங்கு நில மிதியாலே அநந்ய ப்ரயோஜனராய் சமாராதன
உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

————————————————

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-பிரதிகூல நிரசன சீலனானவன்
நிற்கிற ஸ்ரீ திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே எல்லாரும் போங்கள் என்கிறார் –
குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே -கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-
அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற ஸ்ரீ திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

——————————–

அயர்வறும் அமரர்களுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க பிராப்யம் ஸ்ரீ திருமலை -என்கிறார் –
வெறும் சம்சாரிகளுக்கே அன்று -நித்ய சூரிகளுக்கும் பிராப்யம் திருமலை –என்கிறார் –

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

——————————-

திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற ஸ்ரீ திருமலையை
எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-
அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில் நன்று-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

——————————–

ஸ்ரீ திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-அவன் விரும்பி ஸ்ரீ திருமலையை அனுபவிக்கிறார் –
ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-ரஷணத்துக்கு உறுப்பாகையாலே ஸ்ரீ திருமலையை ஊர் என்கிறது –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

——————————————

ஸ்ரீ திருமலை பிராபகமாக-வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே
இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள் நித்ய சூரிகள்-
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து
பரம ப்ராப்யமான ஸ்ரீ திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48

———————————–

பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய திரு நாமங்களைச்
சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-எல்லார்க்கும் அடுப்பது-

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

———————————————-

ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் ஸ்ரீ எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
அதாவது -தத் விஷய ஜ்ஞானம்
அவன் வார்த்தை -அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

—————————

அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் ஸ்ரீ பரம பதத்திலும் இல்லை -என்கிறார் –
ஸ்ரீ சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்-
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே அவனும் எனக்கு ஒப்பு அன்று –

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

——————————

ஸ்ரீ எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-
இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

————————–

ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –
இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை-

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53–

——————————–

சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-
சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

தேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

——————————–

இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து -ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் –
உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-
ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

———————————————-

இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –
அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும்
தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி-
அவன் தானே சாஷியாகத் தோற்றான் –

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56-

————————————–

அவனுடைய ஸ்வீகாரம் தான் புண்ய பலமாய் அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –
அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன-
அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ஸ்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-
ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

——————————–

அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த ஸ்ரீ எம்பெருமான் பக்கலிலே-
தமக்குப் பிறந்த ஸ்நேஹத்தை அருளிச் செய்கிறார்-
என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து -பின்னையும்
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை
தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி
அத்தாலே தான் உளனான வனுக்கு-ஸ்நேஹத்தை உண்டாக்கினேன்-

என்நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்தாய்
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – 58-

——————————————-

தம்மளவில் இல்லாதபடி ஸ்ரீ எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு
ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்-
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று –
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

———————————-

இவர் தன்னை விடில் செய்வது என் என்று ஸ்ரீ எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-
என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது –
விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் –

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

——————————-

ஸ்ரீ எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-
தானே வந்து அபிநிவிஷ்டனான சம்பத்து எனக்கு உள்ளது –அது தானும் இன்று-

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

—————————–

ஸ்ரீ பெருமானே ரஷகனாக வல்லான் என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை ஈஸ்வரர்களாக
பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-
மாம்பழம் உண்ணி ந்யாயத்தாலே
ஸ்ரீ சம்பந்தம் இல்லாதாரை ஸ்ரீ மான்களாகச் சொல்லும்படி அன்றிக்கே ஞானத்துக்கு விஷயம் ஸ்ரீயபதி தானே-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62-

———————————-

நான் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –
தரித்து இருந்தேன் ஆகைக்காக-பூசித்துக் காலத்தைப் போக்கினேன் என்றுமாம்-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

——————————–

அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-
உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-
அழகியது என்று அப்ராப்தம் அன்றிக்கே-நமக்கு உத்பாதகனானவன் –ஸ்வாமியாய் வத்சலன் ஆகையாலே
ஸ்ரீ நாராயண சப்த வாச்யனாய்-நம்முடைய சம்சார சம்பந்தத்தை அறுக்கும் திருநாமத்தை உடையவனைச் சொல்லுவதே
இவ்வாத்மாவுக்கு உறுவது –

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

——————————-

ஸ்மர்தவ்யனான ஸ்ரீ எம்பெருமானுடைய நீர்மையாலே ஸ்ரீ பரம பத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு
அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே
ஸ்ரீ பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய
ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-
ஸ்ம்ருதோ யச்சதி சோபனம் -என்கிறபடியே
பரமபத ப்ராப்திக்கு ஸ்மர்தவ்யனுடைய நீர்மையாலே
ஸ்மரண மாதரத்துக்கு அவ்வருகு வேண்டா என்று தாத்பர்யம்

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

———————————–

நான் ஸ்ரீ எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்
அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66-

——————————–

நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –
பஹூ குணனான ஸ்ரீ எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் –
நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இறே என்கிறார் ஆகவுமாம் –
இங்கனே என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-
ஆபிஜாத்யத்தை உண்டாக்கவுமாம் –அதிலே தோஷத்தை உண்டாக்கவுமாம் –
இவை அன்று உத்தேச்யம்-அவனை ஏத்துகையே உத்தேச்யம்

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச
சீரணனை ஏத்தும் திறம்-67-

————————————

யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய
ராஜ குலத்தை அருளிச் செய்கிறார் –
அந்தரங்கருக்கு வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே-பிரகாசிக்கில் என்னாகிறதோ என்று
நெஞ்சு பறை கொட்டுகிறது-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

————————————-

செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே
சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்
பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே கிடிகோள்-
கவி பாடுகைக்கு ஸ்வரூப ரூப குணங்களால் குறைவற்று நின்றவனை யாத்ருச்சி கமாக லபித்தேன் –

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

———————————

இஜ் ஜகத்துக்கு ஸ்ரீ எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-
கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-
வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி-எங்கனே என்னில்
நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ பிரசித்தம் அன்றோ -என்கிறார் –

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

—————————————–

ஸ்ரீ எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-
பிரளயம் கொண்ட பூமியை எடுத்து ரஷித்தது அறியாது இருந்த அளவேயோ –
சம்சார பிரளயத்தில் நின்றும் எடுக்க
அவன் அருளிச் செய்த வார்த்தையைத் தான் அறியப் போமோ -என்கிறார்

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

————————–

ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் –
இவ் வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –
நீர் ஓதினீர் ஆகில் இதுக்குப் பொருள் சொல்லும் என்னச் சொல்லுகிறார் –என்றுமாம்-

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

—————————-

அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று –
வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-
அவன் என்றும் உண்டாக்கி வைத்த ஸ்ரீ பரம பதத்தை-நீல கண்டன்-அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-
என்கிறவர்களால் காணப் போகாது
ஸ்ரீ க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-உபாய பாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்-

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-

—————————–

தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்-
ந ஷமாமி கதாசன-ந நத்யஜேயம் கதஞ்சன -ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-அவிருத்தமாக செய்து அருளின படி –
ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக ஸ்ரீ திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து –
அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க-
ஸ்ரீ திருவடியும் ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல -இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
ஸ்ரீ திருவடியை இட்டுப் பொறுப்பித்தது -இவனை அவன் கைக் கொள்ளப் பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

————————–

ஏவம்விதமான ஸ்ரீ எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

—————————-

லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

————————————–

என்னுடைய தோஷத்தையும் பாராதே ஸ்ரீ எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-
என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

——————————-

உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்
அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க
நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

——————————

ஸ்ரீ எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-
ஸ்ரீ பரம பதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார்
ஸ்ரீ பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் ஸ்ரீ பரம பதம்-என்று ஆசைப்பட்டு
அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை –
சரீரம் வ்ரணவத் பச்யேத் -என்னும்படி யாக நோயாக விரும்புவர்கள் -என்கிறார்

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

——————————————-

லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது –
இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –
பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும்-தெரியாதபடி மறைத்து காத்து ரஷித்த
ஸ்ரீ கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள்

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

————————————–

நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-
என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி ஸ்ரீ பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

————————————————-

ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் –
இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்-
செவ்விப் பூக்களை கொண்டு ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-வாய் விட்டு ஏத்த மாட்டாத-
ஸ்ரீ சர்வாதிகன் என் உள்ளத்தைக் கலந்தான் -அவ்வழகையும் மேன்மையும் உடையவன் என்கை-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

—————————————-

ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில் சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய்
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று – தரிக்க மாட்டாதே இருக்கும் –
சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்-
இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –என்றுமாம்-

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் த்ண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

——————————————

ருத்ரனும் ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-
அவனோபாதி நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் —

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

————————————-

ஸ்ரீ எம்பெருமான் திரு நாம சங்கீர்த்தனம் எனக்கு நித்ய கர்ம அனுஷ்டானம் –
மற்று வேறு ஒன்றில் நெஞ்சு செலுத்த ஒண்ணாதபடி -ஸ்ரீ எம்பெருமான்
என் நெஞ்சுக்குள்ளே உறைகின்றான் காண்மின் -என்கிறார்-
எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரொ என்று அழைக்க
இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்த-

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

———————————–

ஆழ்வார் தம்முடைய ஆஸ்திக்யத்தின் உறைப்பை நன்கு வெளியிட்டு அருளுகிறார் –
அல்லாதாருக்கும் சர்வேஸ்வரன் உளன் என்று உபபாதித்தேன்
நீயும் இவ்வர்த்தத்தை உண்டு என்று நினைத்து இரு என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

———————————–

சர்வ ரக்ஷகன் அவனே என்பதை மூதலிக்கிறார் —
தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆனபடியைக் காட்டுகிறார்-

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

———————————-

இப்பாட்டிலும் அவ்வர்த்தத்தையே விஸ்தரிக்கிறார் –
உபாடாந்தரங்களை அனுஷ்ட்டிக்கும் ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டர்கள் போல் அன்றிக்கே -ஸ்வரூப உசிதங்களான-திரு விளக்கு எரிக்கை
திருமாலை எடுக்கை போன்ற பிரவ்ருத்திகளையும் உபாய புத்தி இன்றிக்கே ஸ்வயம் புருஷார்த்த புத்தியுடன் அனுஷ்ட்டித்து
அவன் நிர்ஹேதுக கிருபை அன்றி பேற்றுக்கு உபாயம் இல்லை என்று அத்யவசித்து
காம்பறத் தலை சிரைத்து அவன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்-
அகிஞ்சனராய் இருக்கும் நிவ்ருத்தி தர்ம நிஷ்டர் -இவர்களுக்கு தானே நேரில் சென்று அயர்வுகளை தீர்க்கும் ஸ்ரீ எம்பெருமான்
திரு நாமங்களையே மகிழ்ந்து பாடி வாழ்வதே வாழ்வு-

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

—————————————–

ஸ்ரீ எம்பெருமானை ஆச்ரயிப்பதுபோல் காட்டிலும் பாகவதர்கள் பாதம் பணிதல் பாங்கு என்னும் பரம ரகஸ்யார்த்தை
வெளியிட்டு அருளுகிறார் –
கீழே மாறாய தானவனை 18-பாசுரத்தில் மேலும் இத்தையே அருளிச் செய்கிறார்-
சித்திர்ப் பவதி வா நேதி சம்சய வுச்யுதஸேவி நாம் ந சம்சயோஸ்தி தத் பக்த பரிசர்ய ஆரதாத்மநாம் -மோக்ஷ ஏக ஹேது அன்றோ
மார்பிலே கை வைத்து உறங்கலாம் -அதனால் -பழுதாகது ஓன்று அறிந்தேன்-என்று கம்பீரமாக அருளிச் செய்கிறார் –
இங்கே பாகவதர்களை ஆஸ்ரயிக்கையாலே-அங்கே நித்ய சூரிகளுக்கு அடிமை செய்யப் பெறுவார் என்கிறது-

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

—————————————

ஸ்ரீ பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட் செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
ஸ்ரீ திருவேங்கடமுடையான் பக்கலிலே பல வகைப்பட்ட மலர்களை நன்றாக சமர்ப்பித்தவர்களே யாவர் –
ஸ்ரீ பகவானை ஆராதித்தவர்கள் விண்ணாள்வர் -என்றபடி-
விலஷணமான ஸ்ரீ பாகவத பிராப்தி காமராய்-அது பெற்றவர்கள் பாகவதராலே அங்கீ க்ருதர் ஆனவர்கள் -என்கிறார்
ஸ்ரீ எம்பெருமான் திரு உள்ளத்தில் செல்லுவன அறிந்து-அதுக்கு ஈடான அடிமைகளில் ஸ்நேஹித்து-
அவன் பக்கலில் பிரவணர் ஆனவர்களாலே-விஷயீ க்ருதர் ஆனவர்கள் -யதோ உபாசனம் பலம்

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

—————————————

ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயங்கள் என்று உறுதி கொண்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
உபய விபூதில் உள்ளார்க்கும் நிர்வாஹகராகும் படியான பெருமையை யுடையவர்கள் -என்கிறார் –
நித்ய சூரிகளோபாதி இங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களும்-ப்ரஹ்மாதிகளுக்கு பூஜ்யர் -என்றபடி

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

————————————–

நான் கர்ப்ப வாசம் பண்ணும் போதே தொடங்கி ஸ்ரீ எம்பெருமான் என்னை ரஷித்திக் கொண்டு
வருகையால் ஒரு காலும் அவனை மறந்து அறியேன் என்கிறார் –
கர்ப்பத்திலே இருந்த நாள் தொடங்கி-ஸ்ரீ எம்பெருமான் என்னை நோக்கிக் கொண்டு போருகையாலே-
என்றும் திரு இருந்த மார்பன் சிரீ தரனுக்கு-ஆளாகவும் பெற்று
வ்யாமுக்தனானவனை-என் நெஞ்சிலே வைத்து-என்றும் ஒக்க
நின்ற போதொடு இருந்த போதொடு வாசி அன்றிகே-மறந்து அறியேன் –
என்கிறார்-ஜாயமான கடாஷம் பண்ணுகையாலே

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

———————————-

ஸ்ரீ எம்பெருமான் ரக்ஷித்து அருளியதை மறந்தறியேன் என்றும்
நான் ஸ்ரீ எம்பெருமானுக்கு மங்களா சாசனம் பண்ணுவதை மறந்தறியேன் -என்றுமாம் –
ரஷிக்கைக்கு உறுப்பான-ஸ்வாபாவிகமான சேஷி சேஷ பாவமான சம்பந்தத்தை யுடையவனே
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தவர்-உன்னை விடத் துணியார் -என்கிறார்

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

——————————–

சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள் செய்ய வேண்டும் –
குற்றமே வடிவாக உள்ளவர்களை இகழ்ந்து ஒழிய வேண்டுமே அன்றி கைக் கொள்வது தகாது என்று திரு உள்ளம் பற்றலாகாது –
வேப்பிலை கைக்கும் என்றாலும் இத்தை கறியாகச் சமைத்து உட் கொள்ள வேணும் என்னும் விருப்புடையார்க்கு
அது கறி யாகும் அன்றோ -அப்படியே தெரிந்தவர்கள் என்னைக் கைக் கொள்ளுவார்கள் –
மெய் தெளிந்தார் என் செய்யார் –எது நினைத்தாலும் செய்யக் கூடியவர்களே
அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ -அல்லது அவற்றில் திருக் கண் செலுத்தாமலோ
அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் –
அத்யந்த ஹேயன் ஆகிலும்-என்னை விஷயீ கரித்து அருள வேணும்
என்னிலும் தண்ணி யாரையும்-யதிவா ராவணஸ்வயம்-என்னும்படியே
வஸ்து ஸ்த்திதி அழகியதாக அறியுமவர்கள் என்றும்-விஷயீ கரிக்கப் படுமவர் என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

——————————

ஸ்ரீ திரு நாட்டில் சேருவதற்கு பாங்காக-பரம பக்தி நிரம்பப் பெற்றேன்-
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்றால் போலே –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்றுமாம் –
ப்ரஹ்மாதிகளுக்கு என்னைக் கண்டால் கூச வேண்டும் படி-ஜ்ஞான பக்திகளாலே பூரணன் ஆனேன்-
அதுக்கு மேலே புண்ய பலம் புஜிக்கும்-ஸ்வர்க்காதி லோகங்களையும்-புண்யார்ஜனம் பண்ணும் பூமியையும் உபேஷித்து
அவற்றில் விலஷணமாய் இடமுடைத்தான-ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி
இப்போது பரபக்தி யுக்தனானேன் என்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

————————————–

நிர்ஹேதுகமாக ரஷிக்கும் ஸ்வ பாவனாய்-அதுக்கடியான சேஷியான ஸ்ரீ மன் நாராயணன் நீ
நன்கு அறிந்தேன் நான்-இப்பொருள் எனக்கு அழகியதாக கை வந்தது என்கிறார்-

சகல பிரபஞ்சத்துக்கும் காரணனான ஸ்ரீ நாராயணனே பர தெய்வம் என்று முதல் பாட்டிலே ப்ரதிஜ்ஜை பண்ணி
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் நியாயம் இவற்றாலும் -ஸ்ரீ யபதித்தவாதி சின்னங்களாலும் அத்தையே நெடுக உபபாதித்திக் கொண்டு வந்து
அடியில் பண்ணின ப்ரதிஜ்ஜைக்குத் தகுதியாக ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை நிலை நாட்டித் தலைக் கட்டுகிறார்
தேவதாந்த்ர பரத்வ ப்ரமத்தை தவிர்த்து ஸ்ரீ மன் நாராயணன் இடத்திலே பரத்வத்தை ஸ்தாபிப்பதிலேயே இப்பிரபந்தத்தின் முழு நோக்கு –

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி– அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 12, 2019

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

ஸ்ரீ சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்
தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து
தத் அவஸ்தா பன்னம் ஆகையில் ஸ்வ அனுபவ ப்ரீத்ய அதிசயத்தாலும்
வேதா வலம்பந த்ருஷ்டிகளாலே -ஈஸ்வர ஈசிதவ்ய யாதாம்யம் சகத்திலே பிரகாசிக்கப் பெறாதே
திரோஹிதமாய் இருக்கிற படியைக் கண்டு
க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹஸ்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்
அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-
ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———————————————–

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

நான் முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி
ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் –
ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –
அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –
ஆழ் பொருள்
மங்கிப் போகிற பொருள் -என்றுமாம் –
சிந்தாமல் -இத்யாதி
நீங்கள் விசாரித்து கை விடாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திரு அவதாரம்
விபவ சம்வஸ்தரம்
தை மாசம்
கிருஷ்ண பஷம் தசமி
குருவாரம்
மக நஷத்ரம் துலா லக்னம்
ஸ்ரீ பார்க்கவ மகரிஷிக்கு திரு அவதாரம்
ஸ்ரீ கனகாங்கி அப்சரச ஸ்திரீ தாயார்
வளர்த்தவர் ஸ்ரீ ஹரிதாசர் -ஸ்ரீ பத்ம வல்லி -பிறம்பு அறுத்து ஜீவிக்கும் குறவ ஜாதி
ஸ்ரீ சுதர்சன அம்ச பூதர்
ஸ்ரீ பக்தி சாரர் -மகிஷா சார புரதீசர் -பார்க்கவாத்மஜர் –திரு மழிசைப் பிரான் –
திரு ஆராதன பெருமாள் -ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
சிஷ்யர் ஸ்ரீ கணி கண்டன் -த்ருடவ்ரதர்
ஆசார்யர் ஸ்ரீ பேயாழ்வார்
மங்களாசாசன திவ்ய தேசங்கள்–18-
ஸ்ரீ கோயில் –ஸ்ரீ திருமலை- ஸ்ரீ பெருமாள் கோயில் –
ஸ்ரீ யத்தோதகாரி -ஸ்ரீ திருக் குடைந்தை -ஸ்ரீ திருப்பேர் –
ஸ்ரீ அன்பில் -ஸ்ரீ கபிஸ்தலம் -ஸ்ரீ திரு ஊரகம்
ஸ்ரீ திருப் பாடகம் -ஸ்ரீ திருக் குறுங்குடி -ஸ்ரீ திரு வல்லிக் கேணி
ஸ்ரீ திருக் கோட்டியூர்- ஸ்ரீ திரு எவ்வுள்ளூர்- ஸ்ரீ திருத் த்வாரகை
ஸ்ரீ திருக் கூடல் -ஸ்ரீ திருப் பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்

ஸ்ரீ பிராஞ்ஞன் என்னும் சத்சூத்தரர் தனது பார்யை உடன் இவர் அமுத செய்த மிகுந்த பாலை
ஸ்வீகரித்து கிழத்தனம் விட்டு ஸ்ரீ கணிகண்டனை -பாகவதோததமரை பெற்று எடுத்தார்கள்
க்ருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நகநிர் பிண்ணம் கிருஷ்ணா கூடாதஷிணா-வேத வாக்கியம் எடுத்துக் கொடுத்த விருத்தாந்தம் –

தனியன் –
மகாயாம் மகரே மாசி சக்ராம் சம்பார்க்க வோத்பவம்
மகீசார புராதீசம் பக்திசார மகாம் பஜே

சக்தி பஞ்சமயவிக்ரஹாத்மனே சுக்தி ஹார ஜித சித்த ஹாரிணே
முக்தி தாயக முராரி பாதயோர் பக்திசார முனையே நமோ நம-

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திரு மழிசை அமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையின் மகத்து இங்கு உதித்தான் வாழியே
எழில் சந்த விருத்தம் நூற்று இருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லான் வாழியே
நன் புவியில் நாலாயிரத்து முநநூற்றான் வாழியே
நங்கள் பக்தி சாரர் இரு நல பதங்கள் வாழியே

————————————————————————–

ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூக்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –
நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –

வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏகஸ்திஷ்டதி விச்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்

என்நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத்த்ருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்
மொழி செப்பி -ஏவம்விதமான ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து
வாழலாம் -உஜ்ஜீவிக்கலாம்
நெஞ்சே -மனசே நீ சஹ கரிக்க வேணும்

மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ -செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ -ஸ்ரீ மழிசைக்கும் ஸ்ரீ திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
ஸ்ரீ பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஸ்ரீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

————————————————————————–

அவதாரிகை –
ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க
அதுக்கு களை பிடுங்குகிறார் –
ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி –
அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1

ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே–
தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் –
சர்வேஸ்வரன் சிருஷ்டிக்கு உபகரணமாக
நாலு முகத்தை உடைய பிரம்மாவை சிருஷ்டித்தான்

நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்-
பின்பு பிரம்மாவும் தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –

யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை-
இப்படி துர்வகா ஹமான பொருளை நானே அனுபவித்துப் போகில்-சம்சாரிகள் அனர்த்தப் பட்டு போவார்கள் என்று
செம்பிலும் கல்வெட்டிலும் வெட்டுமா போலே பிரபந்தத்தில் இட்டு
இதுக்கு பிரதானனாய் அறிவித்தேன்
ஆழ் பொருளை -என்று நசிக்கிற பொருளை -என்றுமாம் –
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நான் சொன்ன அர்த்தத்தின் அருமையையும்
உணர்ந்து இவ்வர்த்தம் மங்காமல் புத்தி பண்ணுங்கோள்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருமழிசைப் பிரான் சாத்தி அருளிய திவ்ய நாமங்கள்–

March 9, 2019

ஆதி அந்தம் இல்லவன்
ஆதி பூதம்
ஆதி தேவன்
ஆலிலை துயின்ற ஆதி தேவன்
ஆதி பெருமான்
ஆக்கை கொடுத்து ஆழ்த்த கோன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்
அத்தன்
ஆயன்
ஆழியான்
ஆளும் எம்பிரான்
ஆமையான கேசவன்
ஆய்ச்சி பிள்ளை
அஞ்சனத்த வண்ணன்
அனந்தன் மேலே கிடந்த எம் புண்ணியன்
அனந்த சயனன்
அன்பாவாய் ஆராவமுதவமாய் அடியேனுக்கு என்பாவாய் எல்லாம் நீ யாவாய் பொன் பாவை கேள்வா
அண்ணல்
அரங்கன்
அணியன்
அரங்க வாணன்
அற்புதன்
அரி உருவான்
அச்யுதன்
அழகியான்

போக மூர்த்தி
பூமி நாதன்
சக்ரபாணி
தேவ தேவன்
ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
ஏக மூர்த்தி
இலங்கை கட்டழித்தவன்
இலங்கை கட்டளித்த காகுஸ்தன்
எம் ஈசன்
இமையோர் பெருமான்
என் கண்ணன்
என் நெஞ்சம் மேய் என் இருள் நீக்கி எம்பிரான்
என்றும் திரு இருந்த மார்பன்
எந்தை
எட்டு எழுத்து
ஞான மூர்த்தி
ஞானப் பிரான்

காரணனன்
கடல் கிடந்த கண்ணன்
கடல் கிடைக்கும் மாயன்
கள்வன்
கண்ணன்
கார் செறித்த கண்டன்
கற்பவை நீ
கரும்பு இருந்த கட்டி
கரு கலந்த காள மேகன்
கவிக்கு நிறை பொருள்
கேசன்
கற்றவை நீ
கேட்ப்பார்க்கு யரும் பொருளாய் நின்ற அரங்கன்
கூத்தன்
கொண்டல் வண்ணன்
கோவலன்
கண்ணபிரான்

மாதவன்
மால்
மாயன்
மது ஸூ தன்
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி தலையாமை தான் ஒரு கைப்பற்றி அலையாமல் பீற்றக் கடைந்த பெருமான்
மங்கை மன்னு வாழ் மார்பன்
மண்ணளந்தான்
மண் அளந்து கொண்ட காலன்
மாயன்
மாய வாமனன்
மேக வண்ணன்
மெய்ப்பொருள்
மிகப்பெரியவன்
மூன்று மூர்த்தி
முகுந்தனார்
முத்தனார்

நாதன்
நற்கிரிசை நாரணன்
நின்மலன்
நாலு மூர்த்தி
நாக மூர்த்தி சயனமாய்
நாகணைகே கிடந்த நாதன்
நல்லான்
நாராயணன்
நாங்கள் கண்ணன்
நெடுமால்
நீள் முடியின்
ஒளி உருவன் ஒருவனாகி தாரணி இடர்ந்து எடுத்தவன்

பாலன்
பாம்பின் அணையான்
பத்ம நாபன்
பங்கயகே கண்ணன்
பாவை சேரும் மார்பன்
பாவ நாச நாதன்
பிறப்பு அறுக்கும் சொல்லான்
பொன் மகரக் காதன்
பூவை வண்ணன்
புண்ணியத்தின் மூர்த்தி
புண்டரீகன்
புனிதன்

சாம வேதி கீதன்
சார்ங்க பாணி
சீர் அண்ணன்
செம் கண் மால்
சேயன்
சிங்கமாய தேவ தேவன்
ஸ்ரீதரன்
ஸ்ரீ யன்
தம்பிரான்
தன் ஓப்பான் தான்
திரு வேங்கடத்தான்
திரு இருந்த மார்பன்
தோன்று ஜோதி

துவரைக் கோன்
உத்தமன்
உகப் புருவான்
உலகம் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான்
வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன்
வள்ளலார்
வைகுண்டச் செல்வனார்
வீரன்
வேதன்
வேத முதல் பொருள்
வேத கீதன்
வேலை வண்ணன்
வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அழித்த கண்ணன்
வேங்கடத்து மேயான்
வில் கை வீரன்
வில்லி ராமன்
விண் கடந்த ஜோதி
விண்ணவர்க்கு நற் பொருள்
விண்ணின் நாதன்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –