Archive for July, 2014

தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை -42-60 –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 31, 2014

சூர்ணிகை -42-

அவதாரிகை –

இனி ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் அநாதயசித சம்பந்த
தத் வியோக
தத் அன்வயங்களாலே
பத்த
முக்த
நித்ய
ரூபேண த்ரி பிரகாரமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம் தான்
பக்த
முக்த
நித்ய
ரூபேண
மூன்றுபடிப் பட்டு இருக்கும் –

———————————————

சூர்ணிகை -43-

இதில் பத்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார்

பத்தர் என்கிறது
சம்சாரிகளை –

அதாவது பக்தர்கள் ஆகிறார்கள்
தில தைல வத் தாரு வஹ்நி வத் துர் விவேச குண த்ரயாத்மக அநாதி
பகவந் மாயா திரோஹித ஸ்வ ஸ்வரூபராய் அநாதி அவித்யா சஞ்சித அநந்த
புண்ய பாப ரூப கர்ம வேஷ்டிதராய்
தத் கர்ம அனுகுண விவித விசித்திர தேவாதி ரூப தேக விசேஷ ப்ரவிஷ்டராய்
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணியும்
தேக அனுபந்திகளில் மமதா புத்தியையும் பண்ணி
துர்வாசனா ருசி விவசராய் ஸ்வ ஸ்வ கர்ம அனுகுண
ஸூக துக்க பரம்பரைகளை
அனுபவிக்குமவர்கள் –

———————————————————————————-

சூர்ணிகை -44-

இனி முக்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

முக்தர்
என்கிறது
சம்சார சம்பந்தம்
அற்றவர்களை –

அவர்கள் ஆகிறார்கள் –
அநாதி கர்ம -ப்ரவாஹ பிரயுக்தமான சம்சார சம்பந்தம் நடவா நிற்கச் செய்தே
மோஷ ருசிக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷம் அனுபவத்தாலே ஆதல்
சாமான்யேன அனுஷ்டிக்கும் பிராயச் சித்த கர்மங்களாலே யாதல்
அநபி சம்ஹித பலமாய அதியுத் கடமான ப்ரமாதிக புண்யங்களாலே ஆதல் –
ஷயித்து-அது அடியாக –

ஜாயமான தசையில் பகவத் கடாஷத்தால் யுண்டான
சத்வோத் ரேகத்தாலே மோஷ ருசி பிறந்து
சத் குரு சமாஸ்ரயண சம் பிராப்த வேதாந்த வேத்ய
பர ப்ரஹ்ம ஞானராய்
தத் பிராப்தி ரூப மோஷ சித்யர்த்தமாக
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மங்களை பல சங்க கர்த்ருத்வ
த்யாக பூர்வகமாக அனுஷ்டித்து

தர்மேண பாப மப நுததி -(தைத் –2-6-தர்மங்களால் பாபத்தை விலக்குகிறான் )என்றும்
கஷாயே கர்ம அபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்ததே
(புண்யங்களால் ஞான உதய பிரதிபந்த வினைகள் கழிந்து ஞானம் பிறக்கிறது )-என்றும்
சொல்லிற்றே

அந்த சத் கர்ம அனுஷ்டானத்தாலே ஜ்ஞான உத்பத்தி விரோதி
ப்ராசீன கர்மம் ஷயித்த வாறே அந்தக்கரணம் நிர்மலமாய்
பகவத் ஏக அவலமபியான சமயக் ஞானம் உதித்து
அநந்தரம் –

ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம்
ஷீண பாப நாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே -என்கிறபடியே

இப்படி பஹூதர ஜன்ம சாத்தியமான கர்ம ஞானங்களால் பிறந்த
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூப பக்தி மூலமாக வரும்
பகவத் பிரசாதத்தாலே ஆதல் –
அன்றிக்கே
தன்னுடைய நிர்ஹேதுக சௌஹாரத்த விசேஷத்தாலே
யாத்ருச்சிகாதி ஸூஹ்ருத
பரம்பரைகளை கல்பித்து அது அடியாக விசேஷ கடாஷத்தை பண்ணி

அநந்தரம்
அத்வேஷத்தை ஜனிப்பித்து
ஆபிமுக்யத்தை யுண்டாக்கி
சாத்விக சம்பாஷணத்தை விளைத்து

அவ் வழியாலே
சதாச்சார்யா சமாஸ்ரயணத்திலே மூட்டி
தத் உபதேச முகேன தத்வ ஞானத்தை பிறப்பித்தல்
தன்னுடைய விசேஷ கடாஷம் தன்னாலே தத்வ ஞானத்தை பிறப்பித்தல் செய்து
மகா விஸ்வாச பூர்வகமாக தன் திருவடிகளை உபாயம் என்று நிற்கும்படி பண்ணும்
பகவத் ஆகஸ்மிக கிருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த
துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதன மூலமான
பகவத் பிரசாதத்தாலே யாதல் சம்சாரிக்க சகல திருத்தங்களும் கழிந்து
ஆவிர் பூத ஸ்வரூபராய்
பகவத் அனுபவ கைங்கர்ய ஏக போகரானவர்கள் –

அவிசேஷண-முக்தர் -என்கிறது
சம்சார சம்பந்தம் அற்றவர்களை -என்கையாலே
பகவத் அனுபவத்தில் ருசி இன்றிக்கே
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
சம்சார நிவ்ருதியை யுண்டாக்கிக் கொண்டு
தேச விசேஷத்திலே போய் ஸ்வ ஸ்வரூப அனுபவம் பண்ணி இருக்கும்
கேவலரையும் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————

சூர்ணிகை -45-

இனி நித்யர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

நித்யர் என்கிறது
ஒருநாளும் சம்சரியாத
சேஷ
சேஷசநாதிகளை –

இத்தால் முக்தரை வ்யாவர்த்திக்கிறது –
நிவ்ருத்த சம்சாரர் இறே அவர்கள் –
இவர்கள் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் இறே

அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூராயஸ் சரஸ்த பந்தா (ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32 )(
அபகரிக்கப் படாமல் உள்ள இயல்பான கைங்கர்யம் பெற்ற நித்யர்கள் )என்றார் இறே பட்டர் –
நித்யோ நித்யா நாம (கட -5-13- நித்யர்களில் நித்யமானவனும் )-என்றும்
ஜ்ஞாஜஜௌ த்வாவஜா வீச நீ சௌ (ஸ்வே -1-9-)
(பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
ஓன்று வலிமை உடையதும் ஓன்று வலிமை அற்றதும்)-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தே

அசந்நேவ-(தை -2-6-1-இல்லாதவர்கள் ஆகிறார்கள்)என்பது
சந்தமேனம் (தை -2-6-1-இருப்பவர்கள் ஆகிறார்கள் )-என்பது ஆகிறது
பகவத் விஷய ஞான ராஹித்ய சாஹித்யங்களாலே இறே

ஆகையால் இவர்களை நித்யர் என்கிறதும்
பகவத் ஞானத்துக்கு ஒரு நாளும் சங்கோசம் இல்லாமையாலே என்று கொள்ள வேணும்

இந்த வைபவத்தைப் பற்றி இறே
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா (எந்த பரமபதத்தில் பகவத் அனுபவத்தில் முதன்மையாக நித்யர்கள் உள்ளனரோ)-என்றும்
யத்ர ருஷய பிரதமஜா யே புராணா (எந்த பரமபதத்தில் அனைத்தையும் நேரே காணக் கூடிய நித்யர்கள் முன்பே உள்ளனரோ )-என்றும்
ஸ்ருதி இவர்களை ஸ்லாகிக்கிறது

ஸ்ரீ பாஷ்ய காரரும் இவர்கள் யுடைய வைபவத்தை
ஸ்வ சந்தா அனுவர்த்தி (பகவானுடைய இச்சையை பின்பற்றியே உள்ள )இத்யாதியாலே
ஸ்ரீ கத்யத்திலே பரக்க அருளிச் செய்தார்

ஆகையால் -ஒரு நாளும் சம்சரியாதே -என்ற போதே -இவர்களுடைய
வைபவம் எல்லாம் சொல்லிற்று ஆயிற்று

அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந் விதனாய்
கைங்கர்ய பரர்க்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலே
திரு வநந்த வாழ்வானை சேஷன் என்கிறது –

நிவாச சய்யா ஆசனம் பாதுகாம் சுகோபதாந வர்ஷ ஆதப வாராணாதிபி
சரீர பேதைஸ் ச தவ சேஷதாம் கதைர் யசோசிதம சேஷ இதீரிதே ஜனை (ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -40-)-என்று இறே
ஸ்ரீ ஆளவந்தாரும் அருளிச் செய்தது –

மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாய் இராதே சர்வேஸ்வரன் அமுத செய்த சேஷம் ஒழிய
அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாசனர் என்று
சேனை முதலியாரை நிரூபிக்கிறது
த்வதீய புக்தோ ஜஜித சேஷ போஜினா-(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -42 ) என்றார் இறே ஆளவந்தாரும்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய வை ப்ர புக்த சிஷ்டாச் யத ஸைந்ய ஸத்பதி (ஸ்ரீ ஸூந்தர பஹு ஸ்தவம் 74) –
என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –

ஆதி -சப்தத்தாலே
சேஷ சேஷாசன கருட ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிஜாரிக பரிசரித சரண யுகள -என்கிறபடியே
பகவத் கைங்கர்ய ஏக போகராய் இருந்துள்ள வைனதேய பிரமுகரான நித்ய சித்தரை எல்லாம் சொல்லுகிறது –

—————————————————————————————————-

சூர்ணிகை -46-

அவதாரிகை –
பூர்வோகதமான ஸ்வரூப வைலஷ்ண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு
அவித்யாதி தோஷ சம்பந்தம் வந்தபடி என்-
என்கிற சங்கையில்
சத்ருஷ்டாந்தமாக தத் ஹேதுவை அருளிச் செய்கிறார் –

ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்சர்க்கத்தாலே
ஔஷண்ய
சப்தாதிகள்
யுண்டாகிறாப் போலே

ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே
அவித்யா
கர்ம
வாசனா
ருசிகள்
உண்டாகிறன-

அதாவது
ஸ்வ பாவாத ஏவ நிர்விகாரமாய் சீதளமாய் இருக்கிற ஜலத்துக்கு
அக்னியோடு சம்ஸ்ருஷ்டியான ஸ்தாலியோட்டை சம்சர்க்கத்தாலே
ஔ ஷண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்கள் யுண்டாகிறாப் போலே

ஸ்வத ஞான ஆனந்த அமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும்
குண த்ரய ஆஸ்ரய அசித் சம்பந்தத்தாலே
அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாகிறன என்கை-

இவருடைய திருத் தம்பியாரும் ஆச்சார்ய ஹிருதயத்திலே(10)
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் -என்று அருளிச் செய்தார் இறே

இப்படி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே (6-7-22)
நிர்வாணமய ஏவாயமாத்மா ஞான மயோமல துக்காஞ்ஞா நாமலா
தர்மா பிரக்ருதேஸ் தே ந சாத்மந ஜலஸ்ய ச அக்னி
சம்ஸ்ருஷ்ட ஸ்தாலீ சங்காத ததாபி ஹி சப்தோத்ரேகாதிகான்
தர்மான் தத் கரோதி யதா முனே ததாத்மா ப்ரக்ருதௌ
சங்காத அஹம் மாநாதி தூஷித
பஜதே ப்ராக்ருதான் தர்மா நன்ய ஸ்தேப்யோபி சோவ்யய–என்று சொல்லப் பட்டது –

1-அவித்யை யாவது -அஞ்ஞானம்
அது தான் ஜ்ஞான ஜ்ஞான அநுதய -அந்யதா ஞான –விபரீத ஞான
ரூபேண அநேக விதமாய் இருக்கும்

2-கர்மமாவது கரண த்ரய க்ருதமாய் புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்
அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நானா வித போக சாதன தயா பஹூ விதமாய் இருக்கும்
பாபமும் அக்ருத்ய கரண கிருத்திய அகரண பகவத் அபசார பாகவத் அபசாரா அசஹ்யா அபசார ரூபேண அநேகவிதமாய் இருக்கும்

3-வாசனை ஆவது முன்பு செய்து போந்த வற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான சம்ஸ்காரம்
இது தான் ஹேது பூதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

4-ருசியாவது ரசாந்தரத்தாலும் மீட்க ஒண்ணாத படி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்
இதுவும் விஷய பேதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாயிற்றன -என்னாமல்-
உண்டாகிறன -என்கையாலே
இவற்றின் உடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப் பட்டது-

————————————————————————————————

சூர்ணிகை -47

இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான்
எவ் வவஸ்தையில் கழிவது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அசித்து கழிந்த வாறே
அவித்யாதிகள்
கழியும்
என்பார்கள் –

அதாவது
காரண நிவ்ருதயயா கார்ய நிவ்ருத்தி யாகையாலே
அசித் சம்பந்தம் நிபந்தனமாக வந்த இவையும்
தத் சம்பந்தம் கழிந்தவாறே கழியும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி

என்பார்கள் -என்ற இத்தை பர மதமாக்கி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களுக்கு பகவத் பிரசாத விசேஷத்தாலே
அசித்து கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே
அந்த நியமம் இல்லை என்று இவருக்கு கருத்து என்று சொல்லுவாரும் உண்டு

அது முக்கியம் அன்று
அவர்கள் திரு மேனியோடு இருக்கச் செய்தே பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்ததே யாகிலும்
வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகளவும்
யானும் உளன் ஆவான் என் கொலோ (பெரிய திருவந்தாதி 76)-என்கையாலே
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி (சாந்தோக்யம் -ப்ரஹ்மத்தைக் கண்டவன் அனைத்தையும் கண்டவன் ஆகிறான் )
என்கிற முக்த அவஸ்தையில் வைசத்யம்
அசித்து கழிவதற்கு முன்பு இல்லாமையாலே –

ஆக
கீழ்ச் செய்தது ஆயிற்று
ஆத்ம ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும் என்றும்
அதில் பக்த சேதனருக்கு அவித்யா உத்பத்தி மூலமும்
தந் நிவ்ருத்தி கரமும்
சொல்லி நின்றது –

——————————————————————————————

சூர்ணிகை -48-

இப்படி உக்தமான த்ரிவித ஆத்மா வர்க்கமும்
இத்தனை சேதனர் என்று சங்கயேயமாய் இருக்குமோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இம் மூன்றும்
தனித் தனியே
அனந்தமாய்
இருக்கும் –

அதாவது
வர்க்ய த்ரயமுமாக அநந்தம் என்று தோற்றும் என்று நினைத்து
தனித் தனியே என்று விசேஷிக்கிறார் –

அனந்தமாய் இருக்கும் என்றது
அசங்கயேயமாய் இருக்கும் என்றபடி –

—————————————————-

சூர்ணிகை -49-

உக்தமான ஜீவ அனந்யத்துக்கு விரோதியான
ஐக ஆத்ம்ய வாதத்தை நிராகரிக்கிறார் மேல் –

சிலர்
ஆத்மா பேதம் இல்லை
ஏக ஆத்மாவே உள்ளது
என்றார்கள் –

சிலர் என்று அநாதரோ கதியாலே அருளிச் செய்கிறார்
இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ என்னில்
ஜீவ அத்வைத பிரதிபாதிக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள்

அதாவது
ப்ரஹ்ம அத்வைதம் என்றும்
ஜீவ அத்வைதம் என்றும்
சாஸ்திர பிரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாய் இருக்கும்

அதில் ப்ரஹ்ம அத்வைதம் ஆவது
பிரகார்ய அத்வைதம்
ஜீவ அத்வைமாவது
பிரகார அத்வைதம்

இதுக்கு நியாமகம் ஏது என்னில்
ப்ரஹ்ம ப்ரகரணங்களில் —
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -(சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மம் )
ஐத தாத்ம்யம் இதம் சர்வம் -(சாந்தோக்யம் -6-8-7-அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்டது )
புருஷ ஏவேதம் சர்வம் (ஸ்வே -3-15-இந்தப் புருஷனே இவை அனைத்தும் )-என்று
சாமாநாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை பிரதிபாதிக்கையாலும் –

சாமாநாதி கரண்யம் பிரகார பேத விசிஷ்ட பிரகாரயேகத்வ பரமாகையாலும் –

ஏகஸ் சன் பஹூதா விசார (பரமாத்மா ஒன்றாக இருந்தபடி பலவற்றையும் வியாபிக்கிறான் )-என்று
பிரகார பஹூத்வம் கண்டோக்த மாகையாலும்

ஐக்ய விதிக்கு சேஷமான –
தேக நா நாஸ்தி (ப்ரஹ்மாவை விடுத்து ஏதும் இல்லை )–இத்யாதி
பேத நிஷேதம் விஹித ஐக்ய விரோதி பேத விஷயமாகையாலும்

பிரகாரி பஹூத்வ நிஷேத பரமாகையாலும்

ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருஸ்யதே (ப்ரஹ்மதுக்கு நிகரானதும் மேலானதும் காணப்படுவது இல்லை )-என்று
ப்ரஹ்ம துல்ய பிரகாராந்தர நிஷேத
கண்டோக்தியாலும் பிரகார அத்வைதமே ப்ரஹ்ம அத்வைதம்-

ஜீவ பஹூத்வம் ஸ்ருதி சித்தமாகையாலும்
அல்லாத போது பக்த முக்த வ்யவஸ்த அனுபபத்தியாலும்
உபதேச அனுபபத்தியாலும்
ஸூகாதி வ்யவஸ்த அனுபபத்தியாலும்

புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப சதுர்விதோ விபே தோயம் மித்தயா ஜ்ஞான நிபந்தன
தேவாதி பேத அபத் வஸ்தே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-98 )
(ஜீவாத்மா தேவனும் அல்லன் -மனிதனும் அல்லன் -ஸ்தாவரம் அல்லன் -விலங்கு அல்லன் என்று
கூறப்பட்ட நான்கு விதமான வேறுபாடுகள் தவறான ஞானத்தால் ஏற்படுகிறது
தேவன் முதலான வேறுபாடுகள் நீங்கும் போது மெய்யான ஞானம் ஏற்படுகிறது )-இத்யாதி களிலே
தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோக்தமாகையாலும்
முக்தாத்மாக்களுக்கு சாம்யத்தை ஸ்ருதி சொல்லுகையாலும் ஜீவ அத்வைதம் பிரகார அத்வைதமே

இது தான் ஸ்ருத பிரகாசிகையிலே
ஆதிபரத -சதுஸ்லோகீ வியாக்யான உபக்ரமத்திலே
ப்ரஹ்ம அத்வைதம் ஜீவாத வைதஞ்சேத்ய அத்வைதம் த்விவிதம் சாஸ்திர பிரதிபாத்யம் -என்று தொடங்கி
ஸ்ரீ வேத வியாச பட்டராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப் படுகிற ஜீவ அத்வைதத்துக்கு ஹிருதயம் அறியாதே
ஆத்ம பேதம் இல்லை -ஏகாத்மாவே உள்ளது என்று
சில குத்ருஷ்டிகள் சொன்னார்கள் -என்கை-

——————————————————————————–

சூர்ணிகை -50-

அது அயுக்தம் என்னும் இடம் சாதிக்கிறார் –
அந்த பஷத்தில்
ஒருவன்
ஸூகிக்கிற காலத்தில்
வேறே ஒருவன்
துக்கிக்க கூடாது –

அதாவது
அப்படி ஆத்ம பேதம் இல்லாத பஷத்தில்
அஹம் ஸூகி -என்று ஒருவன் ஸூகோத்தரனாய் இருக்கிற காலத்தில்
அஹம் துக்கீ -என்று ஒருவன் துக்கோதரனாய் இருக்கிற
இந்த ஸூக துக்க வியவஸ்தை கூடாது என்கை

ஸூக துக்கங்கள் இரண்டும் ஏக ஆஸ்ரய கதமாகில்
உபய பிரதி சந்தானமும் ஒருவனுக்கே யுண்டாக வேணும் இறே
ஆகையால் ஸூக துக்கங்கள் நியதங்கள் ஆகையாலே
ஆத்மா பேதம் யுண்டாக வேணும் என்று கருத்து-

—————————————————————

சூர்ணிகை -51-

அந்த ஸூக துக்க வியவஸ்தைக்கு ஹேது
தேக பேதம் என்கிறவர்கள் உக்தியை அனுவதிக்கிறார்

அது
தேக பேதத்தாலே
என்னில்

————–

சூர்ணிகை -52-

அதுக்கு அனுபபத்தி சொல்லுகிறார் –

சௌபரி சரீரத்திலும்
அது
காண
வேணும் –

அதாவது
தேஹ பேதம் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது என்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இந்த ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்

ஸ்மரியாது ஒழிகிறது சம்ஸ்காரத்தின் யுடைய அனுதபவத்தாலே ஆதல்
நாசத்தாலே ஆதல்
சரீராந்தரத்தில் ஸூக துக்க ச்ம்ரிதாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும்
இரண்டில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும் ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும்

ஆகையால்
ஸூக துக்க நியமத்துக்கு
ஹேது தேக பேதம் என்ன ஒண்ணாது-

———————————————————–

சூர்ணிகை -53-

இப்படி ஸூக துக்க வ்யவஸ்த அனுபபத்தியே என்று
ஏகாத்மா என்னும் பஷத்தில்
பக்த முக்தா வ்யவஸ்தா அனுபபத்தியும்
சிஷ்யாச்சார்யா வ்யவஸ்தா அனுபபத்தியும்
யுண்டு என்கிறார் மேல்

ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யனாகையும்
கூடாது

அதாவது -ஏகாத்மா வாகில் –
அநேக ஜன்மம் ஸஹஸ்ர ஸீம் சம்சார பதவீம் வ்ரஜந் மோஹ சரமம்
ப்ரயா தோ சௌ வாசநா ரேணு குண்டித (ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19 )
(பல ஆயிரக் கணக்கான பிறவிகளில் சம்சாரத்தில் உழன்றபடி
மயக்க வாசனைகளால் உண்டாகும் துன்பத்தை அடைகிறான் )-என்கிறபடியே
ஒருவன் சம்சரிக்கையும்

சுகோ முக்கோ வாமதேவோ முக்த (சுகர் முக்தரானார் வாமதேவர் முக்தரானார் )–என்கிறபடியே
ஒருவன் முக்தனாகையும்

தத் விஞ்ஞாநார்த்தம் ச குருமே வாபி கச்சேத் சமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
தஸ்மை ச விதவான் உபசந்நாய சம்யக் பிரசாந்த சித்தாய சமாந் விதாய
யே நாஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் (முண் -1-2-12.13)
(இத்தகைய ப்ரஹ்ம ஞானத்தை அடையும் பொருட்டு வேதங்களை அத்யயனம் செய்த அவன் –
அவன் கையில் ஸமித் போன்றவற்றை எடுத்தவனாக வேத அத்யயனம் செய்தவரும்
ப்ரஹ்மத்தைக் குறித்து நன்கு அறிந்தவரும் ஆகிய ஆச்சார்யனை அடைய வேணும் தன்னிடம் வந்தவனும் –
தன்னிடம் வணக்கம் நிறைந்தவனும் தனது மனத்தை வசப்படுத்தினவனும் ஆகிய அந்த சிஷ்யனுக்கு
ஆச்சார்யன் செய்ய வேண்டியது என்ன என்னில் -தான் எந்த ஒரு வித்யை மூலமாக
ஸ்வரூபம் மற்றும் குணங்களால் மாறுபாடு இல்லாத பரமபுருஷனை அறிகின்றாரோ
அத்தகைய ப்ரஹ்ம வித்யையை அந்தச் சிஷ்யனுக்கு நேர்மையாக உபதேசிக்க வேண்டும் ) -என்கிறபடியே
ஒருவன் சிஷ்யனை வந்து உபசத்தி பண்ண
ஒருவன் ஆச்சார்யனாய் இருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாது என்கை-

————————————————————————

சூர்ணிகை -54-

இன்னமும் ஒரு அனுப பத்தி சொல்லுகிறார் –

விஷம
சிருஷ்டியும்
கூடாது –

அதாவது ஏகாத்மா வாகில்
தேவ திர்யகாதி ரூபேண சில ஸூகோத்தரமாகவும்
சில துக்க கோத்தரமாகவும்
இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷமமாக சர்வேஸ்வரன் சிருஷ்டிக்க கூடாது என்கை

ஜீவ பேதமும்
கர்ம தாரதர்யமும் இறே
விஷம சிருஷ்டிக்கு ஹேது-

———————————————————————————————–

சூர்ணிகை -55-

இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ்
இவ்வளவே அன்று –
இப் பஷத்துக்கு ஸ்ருதி விரோதமும் யுண்டு -என்கிறார் –

ஆத்ம பேதம்
சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும் –

அதாவது -ஏகாத்மா என்கிற பஷம்
நித்யோ நித்யாநாம் சேதனச் சேதனாநாம் ஏகோ பஹூநாம் யோ விததாதி காமாந் (கட -5-13 )
(நித்யர்களில் நித்யமானவனும் சேதனர்களில் சேதனனும் ஆகிய அவன்
அனைவருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன் ) -என்று
ஆத்ம பேதத்தை சொல்லுகிற ஸ்ருதிக்கும் சேராது -என்றபடி –

———————————————————————

சூர்ணிகை -56-

இந்த ஸ்ருதி ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்னில்
போக்தா போக்கியம் (அனுபவிக்கும் சேதனம் அனுபவிக்கப்படும் அசேதனம் )-என்றும்
ப்ருதக் ஆத்மாநம் (ஸ்வே –1-6–ஆத்மாவையும் அவனை நியமிப்பவனாயும் தனித் தனியாக ) –என்றும்
ஜஞாஜ்ஜௌ த்வவாஜௌ (ஸ்வே -1-9-பிறப்பற்ற அந்த இருவரில் ஒருவன் அறிந்தவன் ஒருவன் அறியாதவன் )-என்றும்
அந் யோந்தர ஆத்மா விஞ்ஞானமய (மநோ மயனைக் காட்டிலும் வேறான ஞான மயனாக உள்ளவனும்
உள்ளே காணப் படுபவனும் ஆகிய ஆத்மா வேறாக உள்ளான் )-என்றும்
ஜீவ ஏகத்வ ப்ரதிகாதிகைகளான அநேக ஸ்ருதிகளோடும்
விரோதிக்கும் ஆகையால்
இது ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்று இறே அவர்கள் சொல்லுவது
அத்தை நிஷேதிக்கிறார்

ஸ்ருதி
ஔபாதிக பேதத்தை
சொல்லுகிறது
என்ன
ஒண்ணாது –

ஔபாதிக பேதமாவது
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும்

———————————————————-

சூர்ணிகை -57-

ஔபாதிக பேதம் என்ன ஒண்ணாமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

மோஷ
தசையிலும்
பேதம்
யுண்டாகையாலே –

அதாவது
சதா பஸ்யந்தி-(ப்ர-5-10 )
நித்ய ஸூரிகள் எப்போதும் அந்த விஷ்ணுவுடைய உயர்ந்த இடத்தைப் பார்த்த படியே உள்ளனர் )என்றும்
மம சாதரம்யம் ஆகதா -(கீதை -14-2-எனது ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் ) என்றும்
முக்தாநாம் பரமா கதி (முக்தர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள் )என்றும்
சாயுஜ்யம் பிரதிபந்நாயே(ஸாயுஜ்யம் அடைகிறார்கள் ) -என்றும்
யஸ்மின் பதே விரா ஜந்தே முகதாஸ் சம்சார பந்தனை
(எந்த இடத்தை அடைவதால் முக்தர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபடுகிறார்களோ )-என்றும்

மோஷ தசையில் ஆத்ம பேதத்தை ஸ்ருதிகள் சொல்லுகையாலே
அப்படி சொல்ல ஒண்ணாது என்கை

மோஷ தசையாவது
சர்வோபாதி விநிர்முக்த தசை இறே

அந்த தசையிலும் ஆத்ம பேதம் ஸ்ருதி சித்தம் ஆகையாலே
நித்யோ நித்யா நாம் -என்கிற ஸ்ருதியும்
ஆத்ம பேதத்தை சொல்லுகிறது என்றது ஆயிற்று –

———————————————————————————————-

சூர்ணிகை -58–

அவதாரிகை –

ஆனால் ஆத்ம பேத பிரதிபதிக்கு ஹேதுவாய்
ஔபாதிகமாய் இருந்துள்ள
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒரு பிரகாரத்தாலும் பேத கதனத்துக்கு யோக்யதை இல்லாதபடி இறே மோஷ தசை இருப்பது —

அவ் விடத்தில் ஆத்ம பேதம் சித்திக்கிற படி எங்கனே
என்கிற வாதி பிரஸ்னத்தை அனுவதிக்கிறார்

அப்போது தேவ மனுஷ்யாதி
பேதமும்
காம க்ரோதாதி
பேதமும்
கழிந்து
ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய்
ஒரு படியாலும் பேதம் சொல்ல
ஒண்ணாத படி
இருந்ததே யாகிலும்
திருஷ்டாந்த முகேன பேதத்தை
சாதிக்கிறார்

———-

சூர்ணிகை -59-

பரிமாணமும் எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள்
ரத்னங்கள்
வ்ரீஹ்கள்
தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும்
சித்தம் –

அதாவது
அளவும் தூக்கமும் வடிவும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வ்ரீஹகள் முதலான பதார்த்தங்களுக்கு
பேதகமாய் இருப்பதொரு லஷணம் இல்லை யாகிலும்
அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி
ஏக ஆகாரமான முக்த ஆத்மாக்களுக்கும்
ஸ்வரூப பேதம் சித்திக்கும் என்றபடி —

———————————————————-

சூர்ணிகை -60-

கீழ்ச் சொன்னவற்றை எல்லாம் அனுபாஷித்துக் கொண்டு
நிகமிக்கிறார்

ஆகையால்
ஆத்ம பேதம்
கொள்ள வேணும் –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று –
சிலர் ஆத்ம பேதம் இல்லை
ஏகாத்மாவே உள்ளது என்றார்கள் -என்று(49) தொடங்கி
இவ்வளவாக முன்பு தாம் அருளிச் செய்த
ஜீவ அனந்த்ய பிரதிபடமான ஏகாத்ம வாதத்தை உத்ஷேபித்து
யுக்தியாலும்
சாஸ்த்ரத்தாலும்
பஹூ முகமாக அத்தை தூஷித்து
ஆத்ம பேதத்தை சாதித்தார் ஆயிற்று –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை -31-41- –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 31, 2014

இப்படி ஆத்மாவுக்கு ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள கர்த்ருத்வத்தை இல்லை என்று
ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வத்தைக் கொள்ளுகிற சாங்க்யரை நிராகரிக்கிறார் —
சிலர் என்று தொடங்கி –

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –

சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –

குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –

மூல பிரகிருதிர் நாம ஸூக துக்க மோஹாத் மகாநி லாகவ பிரகாச சலந
உபஷ்டம்பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீந்த்ரியாணி
கார்யைக நிரூபண விவேகாநி அந்யூந அநதிரேகாணி சமுதாமுபேதானி
சத்வ ரஜஸ் தமாம்ஸி த்ரவ்யாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –

(ஸ்ரீ பாஷ்யம் -2-2-1-மூலப்ரக்ருதி என்பது சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களைக் கொண்டதாகும்
இவை மூன்றும் சரி சமமான தசையில் -ஒன்றை ஓன்று விஞ்சாத விதத்தில் உள்ளன
இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸூகம் துக்கம் மற்றும் மயக்கம் -மோஹம் என்பதாகும்
சத்வம் அதிகமாகும் போது ஸூ கம் ஏற்படும் -சரீரம் எடை குறைவாகத் தோன்றும் –
இந்திரியங்களும் நன்கு இயங்கும் இத்தையே லகவ ப்ரகாசங்கள் என்பர்
ரஜஸ் அதிகமாகும் போது துக்கம் ஏற்படும் -அசைவு மற்றும் இந்திரியங்கள் செயல் ஆற்றுவதும் நிகழும்
சலனம் -சஞ்சலமான இயல்பு கொண்டபடியும்
உஷ் டம்பநம் -யாரையேனும் வாக்குவாதத்துக்கு இழுத்தபடியே இருப்பர்
தமஸ் அதிகமாகும் போது மயக்கம் ஏற்படும் -சரீரம் பளுவாக உணரப்படும் -இந்திரியங்கள் மறைக்கப்படும் -கௌரவம் ஆவரணம்
இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும்
அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணர வல்லதாக -அல்லது நிரூபிக்கும்படியாக இருக்கும்
சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றையும் சம நிலையில் கொண்டதான மூலப்ரக்ருதியானது அசேதனமாக உள்ள போதிலும்
எண்ணற்ற சேதனர்களுடைய இன்பத்துக்கும் மோக்ஷத்துக்கும் உதவுவதாக உள்ளது -)

அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே (கட -2-18-பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை )-இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம் பிரதி சேஷித்து-

ஹந்தா சேந் மந்யதே ஹந்தும் ஹதச் சேன் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே (கட –2-19-)
(கொல்பவன் நான் இவனைக் கொல்கிறேன் – என்று எண்ணினாலும்
கொல்லப்படுபவன் -நான் கொல்லப்பட்டேன் -என்று எண்ணினாலும்
இருவரும் உண்மையை அறியவில்லை -காரணம் –
அவன் கொல்வதும் இல்லை -இவன் கொல்லப்படுபவனும் இல்லை -)-என்று
ஹநநாதி க்ரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்

ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நாந்யம் குணேப்யே கர்த் தாரம் யதா த்ரஷ்ட அநு பஸ்யதி -(ஸ்ரீ கீதை –14-49-)
(குணங்களைக் காட்டிலும் வேறு கர்த்தா இல்லை என்று எப்போது காண்கிறானோ )என்றும்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது பிரகிருதி ருஸ்யதே
புருஷஸ் ஸூக துக்காநாம் போக்த்ருத்வே ஹேது ருஸ்யதே – (ஸ்ரீ கீதை -3-20-)
(சரீரத்தின் இந்திரியங்கள் செயல் ஆற்றுவதில் ப்ரக்ருதியே காரணம் என்றும்
ஸூக துக்க அனுபவங்களில் புருஷனே காரணம் என்றும் கூறப்படுகின்றன -)என்றும் சொல்லுகையாலும்

இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆய்த்து அவர்கள் சொல்லுவது –

————————————————————————————————–

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் –

அப்போது இவனுக்கு
சாஸ்திர வஸ்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்

அதாவது
பிரக்ருதிக்கே கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்த்ரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸூக துக்க ரூப பல போக்த்ருத்வம்
சேராது -என்கை-

சேதனன் கர்த்தா வாகாத போது சாஸ்தரத்துக்கு வையர்த்த்யம் பிரசங்கிக்கும்
சாஸ்திர பலம் ப்ரயோக்தரி(பூர்வ மீமாம்சையில் -கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் பயன் அளிப்பவன ஆகும் )
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்(2-2-33-சாஸ்திரம் பயன் உள்ளது என்றாக வேணும் என்றால் ஜீவாத்மா கர்த்தா வாகிறான் )-
என்னக் கடவது இறே –

இனித் தான்
ஸ்வர்க்க காமோ யஜத-(ஸ்வர்க்கத்தை விரும்புமவன் யஜ்ஜம் பண்ணக் கடவன் )
முமுஷூர் பரஹ்மோபாசீத் (மோக்ஷத்தை விரும்புமவன் ப்ரஹ்மத்தை உபாசிப்பானாக )-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இறே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இறே

அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் (ஸாஸ்த்ரங்கள் சாசனங்கள் ஆகும் )-என்னக் கடவது இறே
சாசனமாவது பிரவர்த்தகம்
சாஸ்தரத்துக்கு பிரவர்த் கத்வம் போத ஜனந த்வாரத்தாலே
அசேதனமான ப்ரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இறே

ஆகையால் சாஸ்திரம் அர்த்தவத்தாம் போது
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆக வேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
அப்போது இவனுக்கு சாஸ்திர வஸ்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

————————————————————————————————

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –

————————————————————————————————-

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சம்சர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூக்கள்
அவற்றின் யுடைய சம்சர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி

பிரக்ருதே க்ரிய மாநாணி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே -(ஸ்ரீ கீதை -3-27-அனைத்த்து செயல்களும் அனைத்து விதங்களிலும்
பிரகிருதியின் குணங்களால் செயல்படுகின்றன
ஆனால் அஹங்காரத்தால் மூடப்பட்ட அறிவு கொண்ட ஒருவன் –
நான் கர்த்தா ஆவேன் -என்று எண்ணுகிறான் )என்னக் கடவது இறே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்த வர்த்த வாத் (2-3-33-ஸாஸ்த்ரம் பயன் உள்ளது என்றாய் வேண்டும் என்றால் )-என்கிற ஸூத்ரத்திலே
பூர்வ பஷ ஸித்தாந்த ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

———————————————————————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வ யத்தமோ
பரா யத்தமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –

பராத்து தச் ச்ருதே (2-3-40-ஜீவாத்மாவுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவால் உண்டாகிறது -ஸ்ருதி கூறுவதால் – )-என்று
வேதாந்த ஸூத்ரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பரா யத்தம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே

சாஸ்த்ர அர்த்தவத் வாத்துக்காக கர்த்ருத்வம் ஆத்ம தர்மம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தர்மமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –

இவனுடைய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்

இப்படி கர்த்ருத்வம் பரமாத்மா யத்தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத ப்ரயத்நா பேஷஸ்து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்தி யாதிப்ய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –

அதாவது
விஹித ப்ரதி ஷித்தங்களுக்கு வையர்த்தி யாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –

எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமாந்யேந பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்

அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும்
அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்

அனுக்ரஹாத்மகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாத்மகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்

இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –
ஆதா வீஸ்வர தத் தயைவ புருஷஸ் ஸ்வா தந்த்ரிய சக்தயா
ஸ்வயம் தத் தத் ஞான சிகீர்ஷண பிரத்யத்நாந் யுத்பாதயந் வர்த்ததே தத்ர உபேஷ்ய
தத் அனுமத்ய விததத் தந் நிக்ரஹ அனுக்ரஹவ் தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததஸ் சர்வஸ்ய புமஸோ ஹரி (ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ தத்வ சாரத்தில் -46)
(ஆத்மாவுக்கு வழங்கப்படுவதான முதல் அனுமதி என்ற ஸூவதந்த்ரமாகிய சக்தி காரணமாக
ஆத்மாவானவன் தானாகவே அந்த அந்த விஷயங்களில் செயல் ஆற்றுவதற்கான ஆசை மற்றும் முயற்சிகளை ஏற்படுத்துகிறான்
அவற்றில் செய்யக் கூடாதவற்றில் உதா சீனமும் -செய்யக்கூடியவற்றில் அனுமதியும் அளித்தபடி உள்ள ஈஸ்வரன்
அதற்குத் தண்டனை அளித்தல் மற்றும் அனுக்ரஹம் புரிதல் ஆகியவற்றைச் செய்கிறான்
இதன் மூலம் அனைவருடைய கர்மபலனை ஸ்ரீ ஹரி அளித்தபடி உள்ளான் -)-என்று அடியிலே

சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப் புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –

அவ்விடத்திலே
அசாஸ்த்ரீயங்களிலே உபேஷித்தும்
சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –

இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று ஸ்ரீ தீப பிரகாசத்திலே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள்
இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –

ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேப்யோ லோகேப்ய
உநநிநீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி –
(ஸ்ரீ கௌஷீ தகீ உபநிஷத்தில் -எந்த ஒரு ஆத்மாவை இந்த லோகத்தில் இருந்து உயர்த்த
சர்வேஸ்வரன் எண்ணுகிறானோ -அந்த ஆத்மாவையே நல்ல செயல்கள் புரியும்படி செய்கிறான் –
எந்த ஆத்மாவை நரகத்தில் ஆழ்த்த எண்ணுகிறானோ
அந்த ஆத்மாவை தீய செயல்கள் செய்யும் படியாகத் தூண்டுகிறான் – )-என்று
உநநிநீஷையாலும் அதோ நிநீஷையாலும் சர்வேஸ்வரன் தானே
சாத்வ சாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்

இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதி மாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவஸ்தனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய்
அதி கல்யாணங்களான கர்மங்களிலே ருசியை ஜனிப்பிக்கும் –

யாவன் ஒருவன் அதி மாத்ர பிராதி கூல்யத்தில் வ்யவஸ்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்கிப்பிக்கும் என்று
இந்த ஸ்ருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே

இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வஸ்ய பிரபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வச மந்விதா–(ஸ்ரீ கீதை -10-8-)
(நானே அனைத்தும் தோன்றுவதற்கான காரணம் ஆவேன் -அனைத்தும் என்னால் செய்யப்படுகிறது –
என்று அறிந்து கொள்ளும் அறிஞர்களாகிய பக்தர்கள் என்னை இடைவிடாது உபாசிக்கிறார்கள் )என்று தொடங்கி

தேஷாம் சத்த யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி
தே தேஷாம் ஏவ அனுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞானம் ஜம் தமஸ்
நாசயாம் யாத்ம பாவஸ்த்தோ ஜ்ஞான தீபேன பாஸ்வதா -(ஸ்ரீ கீதை -10-10 /10-11)
(எப்போதும் என்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்னும் ஆசை கொண்டவர்களாக
என்னை மிகுந்த அன்புடன் உபாசிப்பவர்களுக்கு என்னை அடைவதற்கான
புத்தி யோகத்தை நானே அளிக்கிறேன்
அப்படிப்பட்டவர்களை அனுக்ரஹிக்கும் விதமாக நான் அவர்களுடைய உள்ளத்திலே நிலைத்து நின்று
அறியாமையால் ஏற்படும் இருளை என்னைக் குறித்த ஞானம் என்ற ஒளியால் அழிக்கிறேன் )என்றும் –

அசத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீஸ்வரம் (ஸ்ரீ கீதை -16-8-)
அவர்கள் இந்த உலகம் ஸத்யம் அற்றது பரமாத்மாவை ஆதாரமாகக் கொண்டது அல்ல
என்னால் நியமிக்கப்படுவது அல்ல என்று கூறுகிறார்கள் ) -என்று தொடங்கி

மாமாத்ம பர தேஹேஷூ ப்ரதவிஷந் தோப்ய ஸூ யகா (ஸ்ரீ 16-18-_
(தங்கள் உடலிலும் மற்றவர்கள் உடலிலும் அந்தர்யாமியாக உள்ளை என்னை வெறுத்து
என்னைக் குறித்து பொறாமை அடைகிறார்கள் )என்னும் அது அளவாக
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி

தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷூ நாரத மாந் ஷிபாம் யஜஸ் ரம
ஸூபாநா ஸூரீஷ் வேவ யோநிஷூ (ஸ்ரீ கீதை -16-19-)
(இப்படியாக யார் என்னை வெறுக்கிறார்களோ -பாபம் செய்கிறார்களோ -கொடியவர்களோ -அப்படிப் பட்டவர்களை
நான் இந்த ஸம்ஸார சுழற்சியிலே தொடர்ந்து உழலும்படியாக அசூரப் பிறவிகளிலே தள்ளுகிறேன் )-
என்றும் அருளிச் செய்கையாலே

ஆகையால்
அநுமந்த் த்ருத்வமே சர்வ சாதாரணம்
பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்

க்ருத பிரயத்நா பேஷூஸ்து -என்கிற ஸூத்ரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
(ஸ்ரீ ப்ரஹ்ம -3-2-40-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத்–
பலனை அளிப்பதால் முந்தையதே என்று பாதராயணர் கூறுகிறார் – )

இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு

ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து

அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று

இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இறே-

———————————————————————————-

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன -(ப்ரு -3-7-22-விஞ்ஞானத்தில் உறைபவன் யாரோ )
விஞ்ஞான மய-(தைத் -2-4-1-ஞான மயமாக உள்ளவனும் )
விஞ்ஞானம் யஜ்ஞம் தனுதே-(தை -2-5-ஞானம் யஜ்ஜத்தை இயற்றுகிறது )
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-6-)
(ஞான மயம் ஆனவனும் -அனைத்து குணங்களும் நீங்கப் பெற்றவனும் -இதனால் தூய்மையாக உள்ளவனும் )
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-40-இந்த உலகம் ஞான ஸ்வரூபமாகவே உள்ளது )
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி த்வைதிநோ அதத்ய தர்சிந -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-14-31 )
(ஞான மயமான ப்ரஹ்மத்தை இவ்விதம் அறிவதே உண்மையானது –
இரண்டு என்று எண்ணியபடி உள்ளவர்கள் உண்மை அறியாதவர் ஆவர் ) -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதிக்கிறார்

ஞான
ஆஸ்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

———————————————————-

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சார பூத குணமாய்
நிரூபக தர்மமே
இருக்கையாலும் -சொல்லிற்று

அதாவது
ஞானம் ஸ்வ ஆஸ்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சார பூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதித்வேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –

இது தான்
தத் குண சாரத் வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞத்வத் (2-3-29-)
(ஞானம் என்ற குணத்தை இன்றியமையாத -சாரமாகக் கொண்டுள்ளதால்
ஜீவ பர ஆத்மாவானது ஞானம் என்று கூறப்படுகிறது ) -என்றும்

யாவதாத்ம பாவித வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் (2-3-30-)
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதாலும் ஆத்மாவை ஞானம் என்று கூறுவதில் தவறு இல்லை )-என்றும்
ஸூத்ர த்வத்தாலும் சொல்லப் பட்டது –

ஞான மாத்ர வ்யபேதேசஸ்து ஜ்ஞானஸ்ய பிரதாந குணத்வாத்
ஸ்வரூப அனுபந்த்தித் வேந ஸ்வரூப நிரூபக குணத்வாத்
ஆத்ம ஸ்வரூபஸ்ய ஞானவத் ஸ்வ பிரகாசத்வாவோப பத்யதே (ஆத்மாவானது ஞானமே ஆகும் என்று உரைக்கும்
கருத்தானது ஞானம் முதன்மையான குணமாக உள்ளதாலும் ஆத்மாவை நிரூபிக்கின்ற குணமாக உள்ளதாலும்
ஆத்ம ஸ்வரூபம் போலே தானே பிரகாசிக்கப்பதாலும் ஆகும் )-என்று இறே
ஸ்ரீ வேதாந்த தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

————————————————————————————-

சூர்ணிகை -38-

நியாம்ய மாகை ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —

அதாவது
ய ஆத்மநி திஷ்ட்டந் ஆத்மநோ அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்மா அந்தர்யாமி அம்ருத (ப்ரு -3-7-22-)
யார் ஆத்மாவில் உள்ளானோ -யார் ஆத்மாவில் புகுந்து உள்ளானோ -யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ –
யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவினுள் புகுந்து நியமிக்கிறானோ அவனே உன் ஆத்மா –
உனக்கு அந்தர்யாமியாக உள்ள அவன் அழிவற்றவன் )-இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-

ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீர பூதமான இவ் வாத்ம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-

இப்படி
தச் சரீர தயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பிரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்னத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

—————————————————————————————

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன் சத்தை இல்லையாம்படி
இருக்கை –

அதாவது
ஏஷ சேதுர் விதரண -(ப்ரு –4-4-22-சம்சாரத்தைக் கடக்க உதவும் பாலம் இவனே என்றும் )
ஏதத் சர்வம் ப்ரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம் (இந்த அனைத்தும் உயர்ந்த அந்த ஆத்மாவிடமே நிலை பெற்று நிற்கின்றன )
ஏவ மேவ சாஸ்மிந் நாத்மநி சர்வாணி பூதானி சர்வ ஏவாத்மா நஸ் சமர்பிதா –
(இந்த அனைத்தும் அந்த உயர்ந்த ஆத்மாவிடமே நன்கு காக்கப்பட்டு நிற்கின்றன )
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்ய சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத (ப்ரு -3-8-9-)
கார்க்கி இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே ஸூர்யனும் சந்திரனும் நிலைக்கிறார்கள்)-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே

இவ் வாத்ம வஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூப ஆஸ்ரித தத்வத்துக்கும் சதா அனுவர்த்தி ரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்

ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவ ஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
அவ்வவோ த்ரவ்யங்களை ஆஸரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்ய த்வாரா ஆதாரமாய் இருக்கும்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவ த்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆஸ்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உத்பந்நங்களாயும்
நிதயங்கள் நித்யா இச்சா சித்தங்களாயும்-இருக்கை
இவ் வர்த்தத்தை ( ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் )
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் விவேகித்தார்-

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்ப ஆஸ்ரிதம் என்று சொல்கிறது

குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
த்யௌஸ் ஸ ஸந்த்ரார்க்க நஷத்ராகம் திசோ பூர் மஹோததி வாஸூ தேவஸ்ய வீர்யேண விக்ருதாநி மஹாத்மாந –
(சந்திரன் ஸூர்யன் நக்ஷத்ரங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயம் திசைகள் பூமி சமுத்திரங்கள் போன்ற பலவும்
வாஸூ தேவனுடைய வீர்யத்தாலே நிலையாக உள்ளன என்று மஹாத்மாக்கள் கூறுகிறார்கள் )-என்கிறபடியே
ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற

இப்படி இச்சாதீன சத்தா ஸ்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்

பரமாத்வானுடைய இச்சை இவ் வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர இச்சா அதீநமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆஸ்ரயமாய் சங்கல்ப ஆஸ்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்

இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இவ் வாத்ம சங்கல்பம் இல்லாத
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தெளிவது

ஜாக்ராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ஸ்ரீ மத் ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————————————————————-

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்கை-

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –

சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வ பிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லா வற்றாலும்
சேஷிக்கு அதிசய கரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே (2-9-4)-என்று ஆழ்வார் அருளிச் செய்தது –

பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பர சேஷீ –
(பிறருக்கு சந்தோஷத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற எண்ணம் எவைகளுக்குத் தன்மையோ
அவைகள் அனைத்தும் சேஷன் -அடிமை -மகிழ்வை அடைபவன் சேஷீ -அடிமைச் செயலை ஏற்பவன் -)என்று
சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –

இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்ய அதிசய சித்தயே உபய அனுபயைகைக ஜூஷாதௌ சேஷ சேஷி நௌ-
(எந்த ஒரு தலைவனுக்காக -எந்த ஒரு பொருள் -இருவரை அடைதல் அல்லது ஒருவரை மட்டும் அடைதல்
என உள்ளதோ -அதாவது தலைவனுடைய விருப்பத்துக்கு ஏற்ப -அவர்கள் அடிமை மற்றும் எஜமானன் ஆவார்கள் )என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்த்யதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜ்யதே -(ஒருவன் விருப்பத்திற்கு ஏற்ப பயன் கொள்ளத் தகுதியாக உள்ள
நிலையே அடிமை என்று கூறப்படுகிறது –ஸர்வேஸ்வரனால் அனைத்து லோகங்களும் தனது விருப்பப்படி
உபயோகப் படுத்தப் படுகிறது )-என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யஸ் யாஸ்யாமி ந தமந்தரேமி-(யஜுர் -யாருக்கு நான் அடிமையாக உள்ளேனோ அவனை நான் மீற மாட்டேன் )என்றும்

பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-(ஆரண்ய -15-6-)
காகுத்ஸத்த வம்சத்தில் வந்தவனே -பல வருஷங்கள் நீ உள்ளவரை நான் உனக்கு வசப்பட்டு நிற்பேன் )என்றும்

தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந நாந்யதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச -(அனைத்து ஆத்மாக்களுக்கும் ஸர்வேஸ்வரனுக்கு இயல்பாகவே அடிமையானவர்கள்
இந்த லோகத்திலும் மோக்ஷ நிலையிலும் அவர்களுக்கு ஸ்வ தந்திரம் என்னும் இலக்கணம் இல்லை )என்றும்

ஸ்வோஜ் ஜீவ நேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரேஸ்
ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர (ஸ்ரீ விஷ்ணு தத்வம் )
(உனக்கு கரை ஏறுவதற்கான விருப்பம் இருந்தால் -அல்லது அழியாமல் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தால்
இயல்பாகவே உள்ள ஆத்மாவின் தன்மையையும் ஸ்ரீ ஹரியான ஈஸ்வரனுடைய எஜமானனாக உள்ள தன்மையையும்
எப்போதும் சிந்தித்தபடியே இருப்பாயாக )-என்றும்

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-

—————————————————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ் வாத்ம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை –

இது தான் என்கிறது –
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்ம வஸ்து தான் -என்றபடி –

க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –

ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது
சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை

ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது

கிருஹ ஷேத்திர தாஸ தாசே பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்ட கநிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்

களத்ரமும்-சோம ப்ரதமோ விவிதே கந தர்வோ விவித உத்தர த்ருதீ யோக் நிஷ்டே பதிஸ் துரீயஸ்தே மனுஷ்யஜா
(சந்திரன் முதல் பர்த்தா -கந்தர்வன் அடுத்த பர்த்தா -அக்னி மூன்றாவது பர்த்தா -மனுஷ்யன் நான்காவது பர்த்தாவாக அறிவாய் )-என்று
பாணி க்ரஹண அனந்தரம் ஸோமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே
அநேக சாதாரணமாய் இருக்கும்

இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் ஸித்யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை

ப்ருதுக் ஸிதிதி களுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
ப்ருதக் உப லப்தியைச் சொல்லுகிறது

அப்போதைக்கு இது தான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபய அநர்ஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –

அயமே வாத்ம சரீர பாவ
ப்ருதக் சித்த்ய அநர்ஹ ஆதார தேய பாவ
நியந்த்ரு நியாம்ய பாவ
சேஷ சேஷி பாவச் ச -(ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹத்தில் -)
ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுக்கும் இடையே உள்ள சம்பந்தம் இதுவே ஆகும்
தனித்தனியே இருக்க இயலாத இவை இரண்டுக்கும் இடையே
ஆதாரம் -ஆதேயம் நியந்தரு-நியாம்யம் சேஷி சேஷ என்னும் சம்பந்தங்கள் உள்ளன )என்றும்

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷைதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய சரீரம் (ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹத்தில் -)
(எந்த ஓன்று தாங்கப்படுவதாகவும் -நியமிக்கப்படுவதாகவும் சேஷனாகவும் உள்ளதோ
அது தன்னைத் தாங்கும் ஆத்மாவை விட்டு அகன்று தனியாக நிற்க இயலாத பிரகாரமாக உள்ளது
இதுவே சரீரத்தின் லக்ஷணம் )-என்றும்

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்
ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
நியந்த்ரு நியாமக பாவம்
ஆதார ஆதேய பாவம்
சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
ஸ்ருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரத்வம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக
கீழே
ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை 8-30– –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 30, 2014

சூர்ணிகை -8

அஜடமாகை யாவது
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை –

அஜடத்வம் ஆவது –
அநந்ய அதீன பிரகாசத்வம் -ஸ்வயம் பிரகாசத்வம் -என்றபடி
ஸ்வயம் பிரகாசத்வம் ஆகையாவது -வாகிறவோபாதி
தீபம் தீபாந்தர நிரபேஷமாக ஸ்வ வ்யவஹாரத்துக்கு ஹேது
பிரகாசாந்தார நிரபேஷமாக ஸ்வ வ்யவஹாரத்துக்கு ஹேதுவாகை –
அத்தை அருளிச் செய்கிறார் –
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை -என்று

ஹிருதய நதர் ஜ்யோதி புருஷ (ப்ரு –6-3-7-ஹ்ருதயத்தில் பிரகாசித்த படியே உள்ள ஆத்மா )-என்றும்
அதராயம புருஷச ஸ்வ யமஜயோதிர் பவதி (ப்ரு -6-3-9-இங்கு ஆத்மா தானாகவே வெளிப்படுகிறான் )-என்றும்
விஞ்ஞானகன (ப்ரு-4-4-12 -ஞானமே வடிவாக உள்ளான் )-என்றும்
ஆத்மா ஜஞான மய- (ஸ்ரீ விஷ்ணு புரணம்-6-7-32- -ஆத்மா ஞான மயமாகவே உள்ளான் )-என்றும்
தச்ச ஞான மயம் வயாபிஸ்வ சமவேதய மநூபமம (ஸ்ரீ விஷ்ணு புரணம்-1-22-42- அந்த ஆத்மா ஞான மயமாகவே உள்ளான் –
எங்கும் நிறைந்து -தானே தன்னை அறிகிறான் -தனக்கு ஒப்புமை இல்லாதவன் )-என்றும்
ஆத்மா சமவேதயம் தத ஜ்ஞானம் (ஆத்மாவைக் குறித்து தானாகவே அறியப் படுகிறது )-என்றும்
சொல்லக் கடவது இறே-

——————————————————-

சூர்ணிகை -9

ஆனந்த ரூபமாகை யாவது
ஸூ கரூபமாய் இருக்கை –

ஆனந்த ரூபமத்வம் ஆவது –ஸ்வ ஏவ இஷ்டத்வம்
அதாவது
ஸ்வ பாவமே அனுகூலமாய் இருக்கை –

அனுகூலம் ஸூகம் துக்கம் பிரதிகூலமிதி சத்தே
ஸ்வாத்மா ஸ்வஸ்ய அனுகூலோ ஹீதயா தம சாஷிக ஏவ ச -(ஸூகம் என்பது ஏற்புடையது –
துக்கம் என்பது ஏற்புடையது அல்ல -தனது ஆத்மா ஏற்புடையவனே யாவான்
அவன் தனக்குத் தானே சாக்ஷியாக உள்ளான் )என்கிறபடியே
தனக்குத் தானே ஸூகமாய் இருக்கை –

————————————————————-

சூர்ணிகை -10-

அவதாரிகை –

இப்படி ஆத்மஸ்வரூபம் ஸூக ரூபமாய் இருக்கும் என்னுமிதில்
ஸூப்த பிரபுத்த பிரத்யபிஞ்ஞையை பிரமாணமாக
அரளிச் செய்கிறார் –

உணர்ந்தவன்
ஸூகமாக உறங்கினேன்
என்கையாலே
ஸூக ரூபமாகக்
கடவது –

ஸூகமாக உறங்கினேன் என்கிற பிரத்யபிஞ்ஞை தானே இதில் பிரமாணம்
என்று இறே தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

ஸூ ஷுப்தி தசையில் பராக் அர்த்தம் அனுபவம் இல்லாமையாலும்
பிரத்யகாததச புராணம் யுண்டாகையாலும்
ஸூ பதோதத்தினாலே பராம்ருஷடமான ஸூகம் ஸ்வரூப ஸூகம் ஆகவேணும் இறே –

இப்போது ஸூகம் பிறக்கும் படி உறங்கினேன் என்று அன்றோ
ஸூகமாக உறங்கினேன் என்கிற இதுக்கு பொருள் என்ன ஒண்ணாது –
பிரதிபத்தி சரீரம் அப்படி அன்றிக்கே
இனிதாகப் பாடினேன் -என்கிறாப் போலே இருக்கையாலே

இது தன்னை பாஷ்யத்தில்
ஏவம் ஹி ஸூப்தோததி தஸ்யை பராமர்ச ஸூகம் அஹம் அஸ் வாப்ஸம் இதி
அநேன ப்ரத்ய வமர்சனேனே ததாநீம் ஸூகம் பவதி ததா ததாநீம் அஸ்வாப்யம்
இத்யேஷா பிரதிபத்தி இதி அதத் ரூபத்வாத் பிரதிபத்தே –(உறக்கத்தில் இருந்து எழுகின்ற எந்த ஒருவனும் –
அஹம் -நான் -என்பதில் இருந்து விலகி உள்ளதும் மற்ற அனைத்துக்கும் எதிர்த் தட்டாக உள்ளதும் ஆகிய
ஞானம் ஆகிய நான் அஞ்ஞானத்துக்கு ஸாக்ஷியாக இருந்தேன் என்று கூறுவது இல்லை
மாறாக நான் ஸூகமாகவே உறங்கினேன் என்று அல்லவோ உறக்கத்தில் இருந்து எழுந்த
ஒருவனின் நினைவுகள் உள்ளன -) என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார் –

ஸ்வரூபம் அனுகூலம் அன்றாகில் ப்ரேமாஸ் பதத்வம் கூடாது
(ஆத்ம ஸ்வரூபம் ஏற்புடையது அன்றாகில் அதில் நமக்குத் பற்றுதல் ஏற்படவும் செய்யாதே )

ஆச்சர்ய வத் பஸ்யதி கச்சி நேநம்-(ஸ்ரீ கீதை 2-29-உயர்ந்தவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்புடன் காண்கிறான் )
இத்யாதிகளாலும் இவ்வர்த்தம் சித்தம் –

ஆர்த்ரம் ஜலதி (பிரகாசித்த படி உள்ளது )-என்றும்
நிர்வாண மய ஏவாய மாத்மா (ஆனந்த மயமானவன் )-என்றும்
ஜ்ஞாநாநாந்த மயஸ் த்வாத்மா (ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ரூபமாக யுடையவன் )-என்றும்
ஜ்ஞாந ஆனந்த ஏக லஷணம்-இத்யாதி
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலும் ஆத்மாவினுடைய ஆனந்த ரூபத்வம் ஸூஸ்பஷ்டம் –

ஆக
கீழே
ப்ரக்ருதே பரத்வம் சொல்லுகையாலே
தேஹாத்ம வாதம் நிரஸ்தம் ஆய்த்து –

அஜடத்வ
ஆனந்த ரூபங்களைச் சொல்லுகையாலே
ஜடாத்ம வாதம் நிரஸ்தம் ஆய்த்து –

————————————————————

சூர்ணிகை -11

நித்யமாகை யாவது
எப்போதும் யுண்டாகை –

நித்யமாவது சர்வ கால வர்த்தித்வம்

—————————————————————

சூர்ணிகை -12-

அவதாரிகை –
ஏதத் விரோதி சங்கையை
அனுவதித்துப்
பரிஹரிக்கிறார் –

எப்போதும் யுண்டாகில்
ஜன்ம
மரணங்கள்
யுண்டாகிற படி என் என்னில்
ஜன்மமாவது தேக சம்பந்தம்
மரணமாவது தேக வியோகம் –

அதாவது
ஆத்மா சர்வ கால வர்த்தியாய் இருக்குமாகில்
பிரஜாபதி பிரஜா அஸ்ருஜத-(நான்முகன் உயிர்களைப் படைத்தான் )என்றும்
சந்மூலாஸ் சோம்யேமாஸ் சர்வா பிரஜா (அனைத்துமே ஸத் என்னும் ப்ரஹ்மத்தையே காரணமாக கொண்டவை ஆகும் )-என்றும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே (அனைத்தும் எதனிடம் இருந்து உத்பத்தி ஆனதோ )-என்றும்
யத பிர ஸூதா ஜகத பிரஸூதி தோயேன ஜீவாந் வ்யசசர்ஜ பூம்யாம் (ப்ரக்ருதியானது எந்த ப்ரஹ்மத்தின் இடம் தோன்றியதோ
அத்தகைய ப்ரஹ்மா நீர் முதலானவற்றுடன் ஆத்மாவையும் படைத்தது )-இத்யாதி
ஸ்ருதி வாக்யங்களால் ஆத்மாவுக்குச் சொல்லப் படுகிற
ஜனன மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில்

அவற்றில் சொல்லுகிற ஜன்மம் ஆவது தேக சம்பந்தம்
மரணம் ஆவாது தேக வியோகம் -என்கை –

நித்யன் ஆகில் சிருஷ்டிக்கு முன்பு ஏக தவாவதாரணம் கூடாது என்னில்
ஏக தவமாவது
நாம ரூப விபாக பாவம் ஆகையாலே கூடும்

சம்ஹார தசையில் ஆத்மா இல்லையாகில் ஈஸ்வரனுக்கு உபாதானத்வம் கூடாது
அக்ருதா அப்யாக்ம க்ருத விப்ர நாசங்களும் வரும்-
ஆகையாலே ஆத்மா நித்யத்வம் கொள்ள வேணும்

ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் (கட -2-18-அவன் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை ) -என்றும்
ஜ்ஞா ஜஜௌ த்வா அஜவ் வீச நீசௌ-(ஸ்வ –1-19-அறிந்தவன் அறியாதவன் என்று
இரண்டு பிறப்பட்டவர்கள் ஈசன் அநீசன் என்று கூறப்படுகிறார்கள் )என்றும்
நித்யோ நித்யானாம் (ஸ்வே -6-13- நித்யர்களுக்குள் நித்தியமாக உள்ளவன் )-என்றும்
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்ய நாதீ உபாவபி -(ஸ்ரீ கீதை -13-19- ப்ரக்ருதி புருஷன் என்ற ஜீவாத்மா இரண்டும்
எப்போதும் சேர்ந்தே எல்லை அற்ற காலமாக உள்ளன )-என்றும்
‘ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய
அஜோ நித்யச் சாஸ்வதோயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே–ஸ்ரீ கீதை -2-20 -(ஆத்மா பிறப்பதும் இல்லை –
இறப்பதும் இல்லை -முன்பு உண்டாகி பின்பு இல்லாததும் இல்லை –
ஆத்மா பிறப்பற்றவன் -நித்யமானவன் -அனைத்துக் காலங்களிலும் உள்ளவன் -பழமையானவன்
சரீரம் கொல்லப் பட்டாலும் ஆத்மா கொல்லப் படாதவன் -என்றும்
ஆத்மா நித்யத்வ பிரதி பாதகங்களான
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் அநேகங்கள் இறே-

——————————————————————–

சூர்ணிகை -13-

அவதாரிகை –
அசித் விலஷணமாய்-அஜடமாய் -ஆனந்த ரூபமாய் –
நித்தியமாய் இருந்தாலும்
விபுவாய் இருக்கலாம் இறே
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் அணு என்று அறியும் படி
எங்கனே என்று ஜிஜ்ஞஸூ பிரஸ்நத்தை அனுவதிக்கிறார்

அணுவான
படி
என்
என்னில் –

—————————————————————–

சூர்ணிகை -14-

அவதாரிகை –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப் போவது
வருவதாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா
அணுவாகக்
கடவது –

அதாவது
ஹ்ருதிஹ் யேவாய மாத்மா (ப்ர-3-6-இதயத்தில் ஆத்மா உள்ளது )-என்று ஹிருதய ஸ்திதியையும்

தேன ப்ரத்யோ தே நைஷ ஆத்மா நிஷ்க்ராமதி சஷூ ஷோவா
மூர்த் நோவா அந்யேப்யோவா சரீரே தேசேப்ய (ப்ருஹ் –4-4-2-இறக்கும் போது இதயத்தில் உள் பகுதியில் உண்டாகும்
ஒளியின் உதவியுடன் இந்த ஆத்மா கண் மூலமாகவோ தலை வழியாகவோ
அல்லது சரீரத்தின் மற்ற பகுதிகளின் வழியாகவோ வெளியே கிளம்புகிறான் )-என்று உத்க்ரமணததையும்

யேவை கேசாச்மால் லோகாத் ப்ரயந்தி சந்தர மசமேவ தே சர்வே கச்சந்தி (கௌஷீ –1-2-இங்கு இருந்து புறப்படும்
அனைத்து ஆத்மாக்களும் சந்த்ர மண்டலத்தையே அடைகின்றன )-என்று கமநத்தையும்

தஸ்மால் லோகாத் புனரேத் யஸ்மை லோகாயஸ் (ப்ரு -4-4-6- அந்த லோகத்தில் இருந்து
கர்மம் இயற்றுவதற்காக மீண்டும் வருகிறான் )-என்று ஆகமனத்தையும்

நிர்தோஷ பிரமாணமான வேதாந்த சாஸ்திரம் சொல்லுகையாலே
அணுவாகக் கடவது -என்கை

விபுவாகில் இவை ஒன்றும் கூடாது இறே

சூத்ரகாரரும் ஆத்மவினுடைய அணுத்வம் சாதிக்கிற அளவில்
உத்க்ராந்தி கத்யாகதீ நாம் (2-3-20-சரீரத்தில் இருந்து வெளிக் கிளம்புதல் -நகர்தல் -மீண்டும் திரும்புதல்
ஆகியவை கூறப்படுவதால் விபு அல்லன் ) -என்று
இவற்றாலே இறே முந்துற சாதித்தது

ஏஷ அணுராத்மா சேதஸா வேதிதவ்ய (முண் -3-1-9-அத்தகைய அணு அளவுள்ள ஜீவாத்மா )-என்றும்

வாலாக்ர சத பாகஸ்ய சத்தா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவஸ்ச விஜ்ஞ்ஞேய-(ஸ்வே -5-9-நெல் நுனியின் நூறில் ஒரு பங்கை
எடுத்து அதனை நூறு பாகமாக வெட்டினால் அதில் ஒரு பாகமே ஜீவனுடைய அளவு என்று அறிய வேண்டும் )- என்றும்

ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி திருஷ்ட (ஸ்வே –5-8-சாட்டை நுனியில் உள்ள முள் போன்று நுண்ணியவன் )-என்றும்

ஸ்வரூப அணு மாதரம் ஸ்யாத் ஜ்ஞானானந்தைக லஷணம்-
த்ரசரேணு பிரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா (அணு அளவே உள்ளது -ஞான மயமானது –
மூன்று அணுக்கள் சேர்ந்த அளவுள்ள துகளாக நின்று கோடிக்கணக்கான ஒலியுடன் பிரகாசிக்கிறது )-இத்யாதி

ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலும்
ஆத்மாவினுடைய அணுத்வம் சம் ப்ரதிபன்னம் –

——————————————————————–

சூர்ணிகை -15

இப்படி இருக்குமாகில் -சர்வ சரீர அவயாபியான ஸூக துக்க அனுபவம்
எங்கனே என்கிற சங்கையை
அனுவதிக்கிறார் –

அணுவாய்
ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில்
ஸூக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –

அதாவது
அணு பரிமாணமாய ஹிருதய பிரதேச மாத்ரத்திலே நின்று விடுமாகில்
பாதே மே வேதனா சிரசி மே வேதனா பாதே மே ஸூகம் சிரசி மே ஸூகம் (எனது கால்கள் வலிக்கிறது –
எனது தலை வலிக்கிறது -எனது கால்கள் ஸூகமாக உள்ளன -எனது தலை ஸூகமாக உள்ளது )-என்று
ஆபாதசூடம் சரீரம் எங்கும் ஒக்க
ஸூக துக்கங்களை புஜிக்கிற படி
எங்கனே என்னில் -என்கை —

————————————————————————————-

சூர்ணிகை -16-

அதுக்கு உத்தாம் அருளிச் செய்கிறார் –

மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்திலே இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வ்யாபிக்கையாலே
அவற்றைப் பூஜிக்கத்
தட்டில்லை –

அதாவது
மணி த்யுமணி தீபாதிகள் ஆகிற ப்ரபாவாத் பதார்த்தங்கள்
ஏக தேசஸ்தங்களாய் இருக்கச் செய்தேயும்
தத் பிரபை சுற்று எங்கும் வ்யாபிக்கிறாப் போலே

ஆத்மா ஹிருதய பிரதேசத்திலே இருக்கச் செய்தேயும்
தத் தர்மமான ஜ்ஞானம் எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே
சரீரம் எங்கும் ஒக்க ஸூக துக்கங்களை
புஜிக்கைக்கு ஒரு பிரதி ஹதி இல்லை -என்கை

இது தான்
குணாத் வா லோக வத் (2-3-26)
(கிரணங்கள் போன்று தனது குணத்தால் பரவுகின்றான் )-என்கிற ஸூத்ர அர்த்தம் –

வாசப்தோ மதாப்தர வ்யாவ்ருத் த்யர்த்த தத ஆத்மா
ஸ்வ குணேன ஜ்ஞாநேன சகல தேகம் வியாப்ய அவஸ்திதம்
ஆலோகவத் யதா மணி த்யுமணி ப்ரப்ருதீ நாம ஏக தேச வர்த்தி நாம் ஆலோக
அநேக தேச வ்யாபீ த்ருச்யதே தத் வத் ஹிருதயஸ் தஸ்யாத்
மநோ ஜ்ஞானம் சகல தேஹம் வ்யாப்ய வர்த்ததே
ஜ்ஞாது ப்ரபா ஸ்தாநீ யஸ்ய ஜ்ஞானஸ்ய ஸ்வாஸ்ரயாத் அந்யத்ர வ்ருத்திர்
மணி ப்ரபாவத் உப பத்யத இதி பிரதம ஸூத்ரே ஸ்தாபிதம் -என்று இறே இதுக்கு ஸ்ரீ பாஷ்யம்

(ஸூத் ரத்தில் உள்ள -வா -மற்றக் கருத்துக்களைத் தள்ளுகிறது
ஆத்மாவானது தன்னுடைய தர்ம பூத ஞானத்தால் அனைத்து சரீரங்களிலும் பரவி நிற்கும்
ஸகல தேஹம் என்றது ஸகல சரீரங்கள் என்றும் சரீரத்தில் ஸகல இடங்களிலும் என்றும் பொருள்
ஆகவே -ஆலோகவத் -ஒளியைப் போன்று ஆகும்
இரத்தினம் ஸூர்யன் போன்றவை ஓர் இடத்தில் மட்டும் உள்ள போதிலும் அவற்றின் பிரகாசம் எங்கும் பரவி இருப்பதைக் காணலாம்
இதே போல் இதயத்தில் மட்டுமே ஆத்மா உள்ள போதிலும் அதன் ஞானம் சரீரம் முழுவதும் பரவி நிற்கிறது –
ஒளியுடன் கூடிய இரத்தினத்தின் ஒளி போன்று அறிபவனாக உள்ள ஆத்மாவின் ஞானம் என்பது
தன்னுடைய இருப்பிடம் ஆதாரமான ஆத்மாவையும் கடந்து பிரகாசிக்கும் என்பதை முதல் ஸூத்ரத்திலேயே கூறினோம் – )

இப்படி ஜ்ஞான வ்யாப்தியாலே சர்வத்தையும் புஜிக்கும் என்னும் இடம்
ப்ருக தாரண்யத்திலே சொல்லப் பட்டது –

பிரஜ்ஞயா வாசம் சமாருஹ்ய வாசா சர்வாணி நாமாந் யாப்நோதி
பிரஜ்ஞ யாக்ராணம் சமாருஹ்ய க்ராணேந ஸர்வாந் கந்தா நாப்நோதி
பிரஜ்ஞயா சஷூஸ் சமாருஹ்ய சஷூஷா சர்வாணி ரூபாண் ஆப்நோதி
பிரஜ்ஞயா ஸ்ரோத்ரம் சமாருஹ்ய ஸ்ரோதரேண சர்வாஜ் ஞா சப்தாந் ஆப்நோதி
பிரஜ்ஞயா ஜிஹ்வாம் சமாருஹ்ய ஜிஹ்வயா சர்வாந் ரஸாநா ஆப்நோதி
பிரஜ்ஞயா ஹஸ்தௌ சமாருஹ்ய ஹஸ்தாப்யாம் சர்வாணி கர்மாண்யாப் நோதி
பிரஜ்ஞயா சரீரம் சமாருஹ்ய சரீரேண ஸூக துக்கே ஆப் நோதி
பிரஜ்ஞயா உபஸ்தம் சமாருஹ்ய உபஸ்தே நாநா நதம் ரதிம ப்ரஜாம் சாப் நோதி
பிரஜ்ஞயா பாதௌ சமாருஹ்ய பாதாபயாம் சர்வா கதீர் ஆப்நோதி
பிரஜ்ஞயா தியம் சமாருஹ்ய தியா விஞ்ஞா தவ்யம் காமமாப் நோதி –
என்று இப்படி சொல்லுகையாலே –

(கௌஷீ தகீ –ஞானம் மூலம் வாக்கை அடைந்து அனைத்துப் பெயர்களுடன் சம்பந்தம் அடைகிறான்
ஞானம் மூலம் மூக்கை அடைந்து அனைத்து மணங்களையும் அனுபவிக்கிறான்
ஞானம் மூலம் செவியை அடைந்து அனைத்து ஆசைகளையும் கேட்க்கிறான்
ஞானம் மூலம் நாக்கை அடைந்து அனைத்து சுவைகளையும் உணர்கிறான்
ஞானத்தால் கைகளை அடைந்து அனைத்து செயல்களையும் செய்கிறான்
ஞானத்தால் அனைத்து சரீரங்களையும் அடைந்து-சரீரத்தில் எங்கும் செண்டு – இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்
ஞானத்தால் ஆண் குறியை அடைந்து மக்களைப் பெறுகிறான்
ஞானத்தால் கால்களை அடைந்து வேண்டிய இடங்களுக்குச் சொல்லுகிறான்
ஞானத்தால் புத்தியை அடைந்து தனது விருப்பங்களை அடைகிறான் -என்றும் உண்டே -)

————————————————————————————————

சூர்ணிகை -17-

ஏக சரீர மாத்ரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை
பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வ்யாப்தியாலே யாக
வேண்டாவோ -என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஒருவன் ஏக காலத்திலே
அநேக தேஹங்களைப்
பரிக்ரஹிக்கிறதும்
ஜ்ஞான வ்யாப்தியாலே –

ஒருவனுக்கே அநேக தேக பரிக்ரஹம் கால பேதத்தாலே
சம்பவிக்கும் இறே-
அத்தை வ்யாவர்த்திக்கைக்காக
ஏக காலத்திலே -என்கிறது-

ஏக காலே அநேக தேக பரிக்ரஹம்
சௌபரி பரப்ருதிகள் பக்கலிலே
சம் பிரதி பன்னம் இறே –

——————————————————

சூர்ணிகை -18-

அவ்யக்தம் ஆகையாவது
கட படாதிகளை
க்ரஹிக்கிற சஷூராதிகளாலே
தோற்றாது இருக்கை –

சேத நாதி யோக்யானி கடபடா தீனி வஸ்தூனி யை ப்ரமாணைர் வ்யஜ் யந்தே
தைரயமாத்மா ந வ்யஜ்யதே இத் அவ்யக்த -(ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-25-அழிந்து போதல் போன்றவை
முதலானவைகளுக்கு ஏற்றதாக உள்ள குடம் துணி எந்தக் கண் முதலான இந்த்ரியங்களால் அறியப் படுகின்றனவோ
அந்த இந்த்ரியங்களால் ஆத்மா காணப்படடமல் உள்ளதால் அது அவ்யக்தம் எனப் படுகிறது )-என்று இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தது
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்

இங்கன் அன்றிக்கே
ஒரு பிரமாணத்தாலும் தோற்றாது இருக்கை என்னில்
துச்சத்வம் வரும் இறே

ஆகையாலே
மானஸ ஜ்ஞானம் கம்யம் இத்தனை யல்லது
ஐந்த்ரிய ஜ்ஞான கம்யம் அன்று என்கை

அவ்யக்த சப்தார்த்தம்
சென்று சென்று பரம் பரமாய் -என்று தொடங்கி
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும்
ஞானம் கடந்ததே -என்று
ஐந்திரிய ஞான அகோசரத்வத்தை இறே அருளிச் செய்தது-

—————————————————————————————–

சூர்ணிகை -19-

அசிந்த்யமாகை யாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது
இருக்கை –

அதாவது
யத சேத் யாதி விசஜாதீயஸ் தத ஏவ சர்வ வஸ்து விசஜாதீ யத் வேன
தத் தத் ஸ்வ பாவ உக்த தயா சிந்த யிதிம் அபி நார்ஹ (2-25-எந்த ஒரு காரணத்தால் வெட்டுவதற்கு
ஏற்றதாக உள்ள வாள் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதோ அந்தக் காரணத்தால்
ஆத்மாவானது மற்ற பொருள்களை போன்று தன்மை கொண்டது அல்ல –
ஆகவே அந்தப் பொருள்களுடைய இயல்பான தன்மையுடன் ஆத்மா சேர்ந்து உள்ளதாக எண்ண இயலாது )-என்று இறே
இதுக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார் –

இங்கன் அன்றிக்கே
அச்சிந்த்யத்வம் ஆவது
ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யம் அன்றிக்கே இருக்கை என்னில் –
ஆத்மா ஸ்வரூப விஷயமான ஸ்ரவண மனனாதிகளுக்கு வையர்த்த்யம் ப்ரசங்கிக்கும் இறே
ஆகையால் அசித் சஜாதீய புத்த்ய அநர்ஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது –

ஆக
அவ்யக்தோயம சிந்தயோயம் (2-25)-என்று
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தபடியே –
இவரும்
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் ப்ரகடநார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தது –

—————————————————————————

சூர்ணிகை -20-

நிர்வவவமாகை யாவது
அவயவ சமுதாயம் அன்றிக்கே
இருக்கை –

அதாவது –
விஞ்ஞான மய-(தை -4-1-ஞான மயமாகவே உள்ளான் )என்றும்
விஞ்ஞான கன-(ப்ரு –4-4-12-ஞானமே ரூபமாக உள்ளான் )என்றும் சொல்லுகிறபடியே
ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே
அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை –

—————————————————————————-

சூர்ணிகை -21-

நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை–

அதாவது –
அம்ருதாஷர மஹர-(ஸ்வே –1-10- மரணம் அற்றவன் அழிவு அற்றவன் -மாற்றம் அற்றவன் )-என்றும்
ஆத்மா சுத்தோ ஷர -(ஸ்ரீ வராஹ புராணம் -2-13-17-ஆத்மா தூய்மை யானவன் -மாற்றம் அற்றவன் -)-என்றும்
அஷர சப்த வாஸ்யமான வஸ்துவாகையாலே
ஷண ஷரண ஸ்வ பாவம் ஆகையாலே
ஷர சப்த வாஸ்யமான அசித்துப் போலே விகரிக்கை அன்றிக்கே
சதைக ரூபமாய் இருக்கை

ஆகை இறே-
அவிகார்யோயம் (2-25-ஆத்மா மாறுபாடு அடையாதவன் )-என்று
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தது –

——————————————————————————-

சூர்ணிகை -22-

அவதாரிகை –
ஏவம் பரகாரமாகையாலே ச்சேத் யாதி
விசஜாதீயமாய் இருக்கும்
என்கிறார் மேல் –

இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம்
அக்னி
ஜலம்
வாதம்
ஆதபம்
தொடக்க மானவற்றால்

சேதித்தல்
தஹித்தல்
நனைத்தல்
சோஷிப்பித்தல்
செய்கைக்கு
அயோக்யமாய் இருக்கும் –

இப்படி
அவ்யக்த்வாதிகள் நாலையும் அநு பாஷிக்கிறது ஆதல்
நிர்விகாரத் மாத்ரத்தை யாதல்

அதாவது
சஸ்த்ர அக்னி யாதிகளை ஸ்தேதந தஹநாதிகளை பண்ணும் போது
தத் வஸ்துக்களில் வியாபித்து செய்ய வேண்டுகையாலும்
ஆத்மா சர்வ அசித் தத்வ வியாபகன் ஆகையாலே
அவற்றில் காட்டில் அத்யந்த சூஷ்ம பூதன் ஆகையாலும்
வ்யாப்யமாய் ஸ்தூலமாய் இருக்கிற இவை
வியாபகமாய் சூஷ்மமான ஆத்ம வஸ்துவை
வியாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலும்
சஸ்த்ர அக்னி ஜல வாதா தபாதிகளால் வரும்
ஸ்தேதன தஹன க்லேதன சோஷணங்களுக்கு
அநந்ஹமாய் இருக்கும் என்கை –

நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக
ந சைநம் க்லே தயந்த்யாபோ ந சோஷயதி மாருத-(ஸ்ரீ கீதையில் –2-23-இந்த ஆத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை -அக்னி எரிப்பது இல்லை -தண்ணீர் நனைத்து இல்லை –
காற்று உலர வைப்பது இல்லை )-என்றும்
அச்சேத்ய அயமதஹய அயம் அக்லே தய அசோஷ்ய ஏவ ச
நித்ய சர்வ கத ஸ்தாணு அசலோயம் ஸநாதன (ஸ்ரீ கீதையில் -2-24-இந்த ஆத்மா வெட்டப்பட இயலாதவன் –
எரிக்கப்பட்ட இயலாதவன் -நனைக்கப்பட இயலாதவன் -உலர்த்தப்பட்ட இயலாதவன் –
நித்யமானவன்-எங்கும் நிறைந்து உள்ளவன் -நிலையாக உள்ளவன் -ஸாஸ்வதமாக உள்ளவன் )-என்றும்
அருளிச் செய்தான் இறே –

————————————————————————————————

சூர்ணிகை -23-

அவதாரிகை –

இப்படி நிர் விகாரமான ஆத்ம வஸ்துவுக்கு
பரிணாமித்வம் கொள்ளுகிற
ஆர்ஹத மதம் அயுக்தம் என்னும் இடத்தை
தர்சிப்பிக்கிறார் மேல் –

ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணன்
என்றார்கள் –

ஆர்ஹதர் ஆகிறார் –
ஜைனர் அவர்கள் -பாதமே வேதனா (எனது கால்கள் வேதனை அளிக்கிறது )-இத்யாதி
ப்ரகாரேண ஆபாத சூடம் தேஹத்தில் யுண்டான துக்கா யனுபவம்
ஆத்மா தேக பரிணாமம் அல்லாத போது கூடாது ஆகையால்
ஆத்மா ஸ்வ கர்ம அனுகுணமாக பரிக்ரஹிக்கும்
கஜ பீபிலாதி சரீரங்களுக்கு அனுகூலமாக பரிணமித்து
தத் தத் ஏக பரிமாணனாய் இருக்கும் என்று இறே சொல்லுவது –
அத்தை அருளிச் செய்கிறார் –
தேக பரிமாணன் -என்றார்கள் -என்று-

——————————————————————————

சூர்ணிகை -24-

அவதாரிகை –

அத்தை நிராகரிக்கிறார் –

அது
ஸ்ருதி விருத்தம் –

இவ்விடத்தில் இவர்க்கு விவஷிதையான ஸ்ருதி ஏது என்னில்
அம்ருத அஷர மஹர (ஆத்மா மரணம் அற்றவன் மாறுபாடு அற்றவன் )-என்று
ஆத்மாவினுடைய நிர் விகாரத்வ பிரதிபாதிகையான ஸ்ருதி யாக வேணும் –

தேக பரிமாணன் என்கிற பஷம்
ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் -என்று
இவர் தாமே தத்வ சேகரத்திலே அருளிச் செய்கையாலே –

ஏஷ அணுர் ஆத்மா (இந்த ஆத்மா அணு அளவே உள்ளான் )–
வாலாக்ர சத பாகஸ்ய(நெல்லின் நுனியை நூறு பாகமாக வெட்டினால் வரும் ஒரு பாகத்தின் அளவு கொண்டவன் ) -இத்யாதி
ஸ்ருதிகளும் தேக பரிமாண பஷத்துக்கு பாதிகைகள் ஆகையாலே
அவற்றையும் இவ் விடத்திலே சொல்லுவாரும் உண்டு –

—————————————————————————————————–

சூர்ணிகை -25-

அவதாரிகை –

ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும்
அருளிச் செய்கிறார் –

அநேக தேகங்களை
பரிக்ரஹிக்கிற
யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யமும் வரும் –

அதாவது
தேக பரிமாணம் -என்னும் பஷத்தில்
சம் சித்த யோகராய்
சௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேகங்களை பரிகிரஹிக்கும் அவர்களுக்கு
தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாக சினனமாக்கிக் கொண்டு
அவ்வவ தேகங்களை பரிக்ரஹிக்க வேண்டி வரும் என்கை –

பரகாய பிரவேச முகேன அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு
ஸ்தூலமான சரீரத்தை விட்டு ஸூஷ்மமான சரீரத்தை பரிக்ரஹிக்கும் அளவில்
இதுக்கு எல்லாம் அது அவகாசம் போராமையாலே சைதில்யம் வரும் என்னவுமாம் –

ஏவஞ்சாத்மா கார்த்ஸ்ந்யம் (2-2-32-ஆத்மாவிற்கு நிறைவின்மை ஏற்படுவதால் )-என்கிற ஸூத்ரத்திலே சொல்லுகிறபடியே
அல்ப மகத் பரிமாணங்களான கஜ பீபிலிகாதி சரீரங்களை
ஸ்வ கர்ம அனுகுணமாக
பரிஹரிக்கும் அவர்களுக்கு
கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிஹரிக்கும் அளவில்
கஜ சரீர சம பரிமாணமாய் இருக்கும் அந்த ஸ்வரூபத்துக்கு
பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே
சைதில்யம் வரும் என்று
இங்கனே இவ் வாக்யத்துக்கு யோஜித்தாலோ என்னில்
யோகிகள் ஸ்வரூபதுக்கு என்கையாலே
அது இவ் விடத்தில் இவருக்கு விவஷிதம் அன்று-

——————————————————————–

சூர்ணிகை -26-

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஞானத்துக்கு
இருப்பிடமாய்
இருக்கை –

ஞானமாவது
ஸ்வ சத்தா மாத்ரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி
ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாய் இருப்பதொரு
ஆத்ம தர்மம்

இதுக்கு ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் இரண்டும் தேஜோ த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயமாய் இருக்குமா போலே

தானும் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருக்கச் செய்தே
ஸ்வ தர்மமான ஜ்ஞானத்துக்கு தன்னை ஒழிய
ப்ருதக் ஸ்திதி யுப லம்பங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாய் இருக்கை

அத யோ வேதேதம் ஜிக்ராணீதி ச ஆத்மா -(சாந்தோக்யம் -8-12-4- யார் ஒருவன் யான் இதை முகர்கிறேன் –
என்று உணர்கிறானோ அவனே ஆத்மா )

மனசை வைதாந் காமாந் பஸ்யந் ரமதே-(சாந்தோ -8-12-5-மனம் கொண்டு அவன் அனைத்து விருப்பங்களையும் )

ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி -(சாந்தோ –7-26-2-ப்ரஹ்மத்தைக் கண்டவன் ம்ருத்யு எனப்படும் அவித்யையை அடைவது இல்லை )

விஜ்ஞா தார மரே கேந விஜாநீயாத-(ப்ரு -2-4-44-எதன் உதவியால் ஒருவன் அறிபவனை அறிகிறான் )

ஜாநாந் யே வாயம் புருஷ-(சாந்தோ -7-26-2-இந்தப் புருஷன் நிச்சயமாக அறிகிறான் )

ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷிடா ஸ்ரோதா ரசயிதா க்ராதா மந்தா போக்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ-(ப்ர–4-9-அந்தப் புருஷனே
காண்பவன் கேட்ப்பவன் சுவைப்பவன் முகர்பவன் சிந்திப்பவன் அறிபவன் செய்பவன் -ஞான மயமாக உள்ளவன் ஆவான் )

ஏவமே வாஸ்ய பரி த்ரஷ்டு (ப்ர–6-5–இப்படியாகப் பார்ப்பவனுக்கே சொந்தமாக உள்ளவையும் )-

இத்யாதி ஸ்ருதிகளாலே ஜ்ஞாத்ருத்வம் சித்தம்-

———————————————————————————————

சூர்ணிகை -27-

ஏவம் பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை
இசையாதே
ஜ்ஞானம் மாத்ரம் என்று சொல்லுகிற
பௌத்தாதிகள் யுடைய மதத்தை
நிராகரிக்கைக்காக தத் தத் பஷத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மா
ஜ்ஞானத்துக்கு
இருப்பிடம் அன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம்
ஆகில் –

———————————————————————–

சூர்ணிகை -28-

அஹம் இதம் ஜாநாமி-என்கிற
பிரத்யஷத்தாலே
அத்தை நிராகரிக்கிறார் –

நான் அறிவு என்று
சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன்
என்னக் கூடாது –

அதாவது –
ஆத்மாவுக்கு ஞான ஆஸ்ரயம் அன்றிக்கே
கேவலம் ஜ்ஞானமாய் இருக்கும் அளவே உள்ளதாகில்
நான் அறிவு -என்று தன்னை ஞான மாத்ரமாக சொல்லுகை ஒழிய
நான் இத்தை அறியா நின்றேன் -என்று தன்னை ஞாதாவாகச் சொல்லக் கூடாது -என்கை –

இவ் வாதத்தை நான் அறியா நின்றேன் என்கையாலே
விஷய க்ராஹியானதொரு ஜ்ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம் என்னும் இடம் தோற்றா நின்றது இறே
இப்படி ஆத்மாவினுடைய ஞாத்ருத்வம் ப்ரத்யஷ சித்தம் ஆகையாலே அபாதிதம் என்று கருத்து –

இதம் அபிவேத்மி இதி ஆத்ம வித்த்யோர் விபேதே ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து -(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-10-
நான் இதனை அறிந்து கொள்கிறேன் -என்ற சிந்தனையின் மூலமே ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும் உள்ள வேற்றுமை தெளிவாகிறது
இவை இரண்டும் ஒன்றே என வாதம் செய்யும் போது இவை இரண்டின் மூலம் அறியப்படும் விஷயம் மட்டும் ஏன் விலக்கப்பட வேண்டும்
மூன்றும் ஒன்றே எனக் கூற வேண்டியது தானே – ) –என்று பட்டரும்
இப்படி இறே பௌதம மத நிரா கரணம் பண்ணுகிற இடத்தில் அருளிச் செய்தது —

———————————————————————————————————–

சூர்ணிகை -29-

அவதாரிகை –
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞான ஆஸ்ரயமாய் -என்று
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி
மற்றவை இங்கு சொல்லாது ஒழிவான் ஏன்
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா
போக்தா
என்னுமிடம்
சொல்லிற்று ஆய்த்து-

———————————————————————-

சூர்ணிகை -30-

அவதாரிகை –

இப்படி பிரதிஞ்ஞா மாத்ரத்திலே போராது
என்று அதுக்கு ஹேதுவை அருளிச்
செய்கிறார் –

கர்த்ருத்வ
போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள்
ஆகையாலே

ஹேய உபாதேய ஜ்ஞான மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மன
தத் தத் ப்ரஹாணோ பாதான சிகீர்ஷா கர்த்ரு தாஸ்ரய (ஆத்மாவின் ஞானத்துடன் கூடிய தன்மை என்பது
நன்மை மற்றும் தீமை இவற்றை அறிவதற்கு ஆதாரமாக உள்ளது –
அவற்றை விடுதல் மற்றும் கைக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஏற்படும் ஆசை என்பதே
செயல் ஆற்றக் காரணம் ஆகிறது – )-என்கிறபடியே
ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேய உபாதேய பிரதிபத்திக்கு ஹேதுவாய் இருக்கும்

அவ்வோ ஹேயங்களை விடுகையிலும்
உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீஷா கர்த்ருத்வம் அடியாக இருக்கும்
கர்த்தாவுக்கு இறே சிகீர்ஷை யுள்ளது
அந்த சிகீர்ஷை தான் ஜ்ஞான அவஸ்தா விசேஷம் இறே

அத்தோடு கர்த்ருத்வதுக்கு உண்டான பிரதயாசத்தியைக் கடாஷித்து
கர்த்ருத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசரித்து அருளிச் செய்கிறார்

அல்லது
கர்த்ருத்வம் ஆவது க்ரியாஸ்ரத்வம் ஆகையாலே அத்தை
ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று முக்கியமாக சொல்லப் போகாது இறே

கிரியை யாவது –
ஜ்ஞானாதி இச்சதி ப்ரயததே கரோதி (அறிகிறான் விரும்புகிறான் முயல்கிறான் செய்கிறான் )-என்று
ஜ்ஞான சிகீர்ஷா ப்ர யத்ந அநந்தர பாவியான ப்ரவ்ருத்தி யாகையாலும்
தத் ஆஸ்ரயம் கர்த்ருத்வம் ஆகையாலும்
அத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசார பிரயோகம் என்றே கொள்ள வேணும்

இனி போக்த்ருத்வம் ஆவது போகாஸ்ரயத்வம்
போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஜ்ஞானம்
அது ஜ்ஞான அவஸ்த விசேஷம் இறே
தத் ஆஸ்ரயத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று
சொல்லுகையாலே இதுவும் ஔபசாரிகம்

இப்படி ஜ்ஞாத்ருத்வதுக்கும் இவற்றுக்கும் உண்டான
ப்ரத்யா சத்தி அதிசயத்தாலே
தத் ஐக்ய கதனம் பண்ணலாம் படி இருக்கையாலே
ஜ்ஞாத்ருத்வம் சொன்ன போதே
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்று ஆய்த்து என்ன தட்டில்லை இறே –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -அவதாரிகை/ சித் பிரகரணம்-சூர்ணிகை -1-7— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 29, 2014

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-

லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –

வாழி யுலகாரியன் வாழியவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

——————————————————–

அவதாரிகை —

அநாதி மாயயா ஸூக்த -என்கிறபடியே –
அநாதி அசித் சம்பந்த நிபந்தனமாக
அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –

ஆத்ம ஸ்வரூபம்
பிரக்ருதே பரமாய் –
ஞானானந்தமயமாய் –
பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -இருக்கும் படியை அறியப் பெறாதே –

தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று ஜடமான தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணியும்
தேஹாதிரிக ஆத்மஞானம் பிறந்ததாகில் –
ஈஸ்வரோஹம் அஹம் போகி-ஸ்ரீ கீதை –16-14- -என்று ஸ்வ தந்திர புத்தியைப் பண்ணியும்
சேஷத்வ ஞானம் யுண்டாய்த்தாகில் அப்ராப்த விஷயங்களில் அத்தை விநியோகித்தும்

இப்படி
யோன்யதா சாந்த மாதமான அந்யதா பிரதிபத்யதே
கிம் தேன ந க்ருதம பாபம சோரேணா த்மாபஹாரிணா -மஹா பாரதம் -என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபத்தில் அந்யதா பிரதிபத்தி ரூபமாய்

அகில பாப மூலமான
ஆத்மாபஹாரத்தைப் பண்ணி
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான
சப்தாதி போகைகத தத் பரராய்
விசித்ரா தேக சம்பதீஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சமயுதா-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்கிறபடியே
கரண களேபர விதுரமாய்
போக மோஷ சூன்யமாய்
அசித விசேஷிதமாய்க் கிடக்கிற தசையிலே –

பரம தயாளுவான சர்வேஸ்வரன்
ஸ்வ சரண கமல சமாஸ்ரையண உபகரணமாக கொடுத்த சரீரத்தைக் கொண்டு
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கலாய் இருக்க

அத்தைச் செய்யாதே –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
அதன் வழியே போய்

ஆறு நீஞ்சக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரை ஏறலாய் இருக்க
நீர் வாக்காலே ஒழிகிக் கடலிலே புகுவாரைப் போலே
சம்சார நிஸ்தரணத்துக்கு உடலானவற்றையும்
சமசரணத்துக்கு உடலாக்கி

அநாதி அவித்யா சஞ்சித அநந்த புண்ய பாப ரூப கர்ம அனுகுணமாக
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து
பிறந்த ஜன்மம் தோறும் துரந்த-(துர அந்த அந்தமில்லாத ) தாபத் த்ரய தவாநல தஹ்யமானராய்
இப்படி அநாதிகாலம் போரா நிற்கச் செய்தேயும்

அதீத அநாகதம் அறியாமையாலே
அதிலே ஒரு கிலேசம் இன்றிக்கே
கர்ப்ப
ஜன்ய
பால்ய
யௌவன
வார்த்தக
மரண
நரக ரூப
அவஸ்த சப்தகத்தை பிராபித்து
துக்க பரம்பரைகளை அனுபவித்து

இப்படி அநந்த கிலேச பாஜனமான சம்சார சாகரத்திலே அழுத்திக் கிடந்தது அலைகிற
சேதனருடைய அனர்த்த விசேஷத்தை அனுசந்தித்து
இவர்கள் யுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு போருகிற
சர்வபூத ஸூஹ்ருதான சர்வேஸ்வரன்

ஏவம சமஸ்ருதி சகர்ச்தே பராமயமானே ஸ்வ கர்மபீ ஜீவே
துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காபயுபஜாயகே —
(காபி உபயாஜயகே – -காபி சபரி / காபி குகன் போலே )-என்கிறபடியே
தன்னுடைய திரு உள்ளத்தில் பிறந்த அபார காருண்யத்தாலே –

ஜாயமானம ஹி புஷமா யம பஸ்யேன் மது ஸூதன
சாத்விகஸ் ச து விஜஞ்ஞேயச ச வை மோஷார் ததசிந்தக -என்கிறபடியே
ஜாயமான காலத்தில் பண்ணின விசேஷ கடாஷத்தாலே
நிரஸ்த ரஜஸ் தமஸ் சகனாய்
பிரவ்ருத்த சத்வ குணகனாய்
முமுஷூவான சேதனனுக்கு
தத்வ ஜ்ஞானம் பிறந்தால் அல்லது மோஷ சித்தி இல்லாமையாலே
தத்வ ஞான சமபாதயாம் அளவில் அது
சாஸ்திர ஜன்யமாதல்
உபதேசகமாய் ஆதல் -வேண்டுகையாலும் –

சாஸ்திர ஜனயமாம் அளவில்
சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம -என்கிறபடியே
பஹூ கிலேச சாத்தியம் ஆகையாலே
துஸ் சாதமாகையாலும்

வருந்தி சாதிக்கப் பார்த்தாலும்
அனனதபாரம பஹூ வேதி தவயம அல்பசச காலோ பஹவசச விக்னா -என்கிறபடியே
சேதனர்-மந்த மதிகளுமாய்
மந்த ஆயுஸ்ஸூக்களுமாய்

அதுக்கு மேலே
விக்னங்களும் அனந்தங்களாய் இருக்கையாலே
எல்லாருக்கும் ஒக்க சித்திக்கை அரிதாய் இருக்கையாலும்

இனித் தான்
சாஸ்திர அப்யாசத்துக்கு அனதிகாரிகளான ஸ்த்ரி சூத்ராதிகளுக்கு
முமுஷூத்வம் யுண்டானாலும் நிஷ் பிரயோஜனமாம் படி இருக்கையாலும்
உபதேசக மயமாம் அளவில் யுக்த தோஷம் ஒன்றும் இல்லாமையாலும்
இந்த விசேஷத்தை திரு உள்ளம் பற்றி

சகல சாஸ்திர நிபுணராய்
சகல சேதன உஜ்ஜீவன காமராய்
பரம காருணிகரான-
பிள்ளை லோகாச்சார்யார்

ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலே
துரவகாஹமாம் படி பரக்கச் சொல்லப் படுகிற
சித் அசித் ஈஸ்வர
தத்வங்களின் யுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை
அகில சேதனர்க்கும்
ஸூ க்ரஹமாகவும்
ஸூ வ்யகதமாகவும்
இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
ஆச்சான் பிள்ளை
முதலான பூர்வாச்சார்யர்கள் யுடைய பிரபந்த நிர்மாணத்துக்கும் கருத்து இதுவே இறே

நிர் அஹங்காரராய்
பர சமருததி -ஏக – பிரியராய்
க்யாதி லாபாதி நிரபேஷராய்
இருக்கிறவர்கள் பலரும் பிரபந்தம் இட வேண்டுவான் என்-

ஒருவரிட்ட பிரபந்தத்தை மற்றும் உள்ளவர்கள் பரிபாலனம் பண்ண அமையாதோ -என்னில்
ஆழ்வார்கள் பலரும் ஏக கண்டராய் அருளிச் செய்கையாலே
அர்த்தத்துக்கு ஆப்ததை- சித்தித்தாப் போலே

ஆச்சார்யர்கள் பலரும் ஏக கண்டமாக அருளிச் செய்த அர்த்தம் என்று
மந்தமதிகளும் விச்வசிக்கைக்காக –

இன்னமும் ஓர் ஒன்றில் அவிசிதமான அர்த்த விசேஷங்கள்
ஓர் ஒன்றிலே விசதமாய் இருக்கும் –

அதுக்கடி
ஸூக்தி விசேஷங்களும்
சங்கோச விஸ்தரங்களும் –
இது ஏக கர்த்ருகங்களான பிரபந்த விசேஷங்களுக்கும் ஒக்கும் –

———————————————————————-

சித் பிரகரணம் –

சூர்ணிகை -1-
முமுஷூவான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

முமுஷூ வாகிறான் மோஷம் இச்சை யுடையவன்
சம்சார விமோசனத்தில் இச்சை யுடையவன் -என்றபடி

முமுஷூ வானவன் என்கையாலே
சம்சார நிவ்ருத்தியிலே ஒருவனுக்கு இச்சை யுண்டாகையில் உள்ள அருமை தோற்றுகிறது-

இந்த இச்சை பிறவாமை இறே அநாதி காலம் சம்சரித்தது
உஜ்ஜீவயிஷூவான சர்வேஸ்வரனும் இந்த இச்சை பிறக்கும் அளவு இறே பார்த்து இருக்கிறது –
சம்சாரத்தைப் பூண் கட்டிக் கொள்ள இச்சிக்க கடவ ஆத்மாவுக்கு
தந் நின்வ்ருத்தியில்
இச்சை பிறக்கை துர்லபம் இறே

இப்போது இவர் சேதனன் -என்றது ச அபிப்ராயம்
அதாவது
சைதன்ய பிரயோஜனம் யுண்டாகத் தொடங்குகிறதும் இப்போது என்கை –

அநாதி காலம் வ்யர்த்தமே பிறத்தது இத்தனை இறே சைதன்யம் –
அதாவது உஜ்ஜீவனதுக்கு உறுப்பாகாமை

இனித் தான் சம்சார நிவ்ருதியை இச்சிக்கிறது
நிரதிசய ஆதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணையான பகவத் பிராப்திக்கு உறுப்பாக இறே
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் அது இறே -உணர்வு ஆவது

ஆத்ம பிராப்திக்கு உறுப்பாக சம்சார நிவ்ருத்தியை இச்சித்தாலும்
விபரீத ஞான கார்யமாம் இத்தனை

ஆகையால் பகவத் பிராப்திக்கு விரோதியான
சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு
அப்படி இருந்துள்ள மோஷம் ஆகிற புருஷார்த்தம் சித்திக்கும் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்கை –

தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடுமோ என்னில்
பரீஷ்ய லோகானா–முண்டக உபநிஷத் – –
ஜாயமான -இத்யாதி -சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிற பிரகிரியையாலே கூடும் –

உண்டாக வேணும் –என்ற
அவச்ய அபேஷித்வம் தோற்ற அருளிச் செய்கையாலே
தத்வ ஞானான் மோஷ லாபம் -என்கிற இது
சகல சித்தாந்த சாதாரணம் இறே
மோஷத்திலும் தத்வத்திலும் இறே விப்ரபத்தி உள்ளது –

ஆனால் ஜ்ஞானான் மோஷம் -என்கிற நியமம் கொள்ளும் போது –
பசுர் மனுஷ்ய பஷி வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தேனைவ தே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா–என்றும்
ஞான யோக்யதை இல்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும்
வைஷ்ணவ சம்பந்தத்தாலே மோஷ சித்தியைச் சொல்லுகிற வசனங்களுக்கு வையர்த்த்யம் வாராதோ -என்னில் -வாராது
அவற்றுக்கு முமுஷுத்வம் தானும் இல்லை இறே –

இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே
மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –

அங்குத் தானும்
முமுஷ்த்வமும் –
தத்வ ஞானமும் -இவற்றின் -பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே
கார்யகரமாகச் சொல்லுகிறது –

ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது
அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –

தத்வ ஞானம் என்னாதே
தத்வ த்ரய ஞானம் என்கையாலே
தத்தவங்களை அதிகமாகவும் நயூநகமாகவும் கொள்ளுகிற
பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் அர்த்தாத் பிரதிஷிப்தங்கள்-

இவர் தாம் தத்வ த்ரயம் என்று நிர்ணயிக்கைக்கு பிரமாணம் என் -என்னில்
நிர்தோஷ பிரமாணமான வேதா நாதம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மதவா -என்று
போக்த்ரு சப்தத்தாலும்
போக்ய சப்தத்தாலும்
ப்ரேரிதா சப்தத்தாலும்
சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றையும் இறே சொல்லுகிறது –
ஆகையால் வேதாந்த பிரதிபாத்யம் தத்வ த்ரயமுமே என்று நிச்சயித்து
மோஷம் யுண்டாம் போது தத்வ த்ரய ஞானமும் யுண்டாக வேணும் -என்கிறார் –

ஆனால் -தமேவம விதவா நமருத இஹ பவதி
நாந்ய பந்ததா அயநாய விதயதே – -என்று
வேதாந்தங்களில் பகவத் தத்வ ஞானம் ஒன்றுமே மோஷ சாதனம் என்னா நிற்க
தத்வ இதர–தத்வாந்தர- பரிஜ்ஞானத்தையும் இவர் மோஷ சாதனமாக அருளிச் செய்வான் என் -என்னில்

பகவத் தத்வத்தை அறியும் போது
சகல சேதன அசேதன விலஷணமாகவும்
இவற்றுக்குக் காரணமாகவும்
வியாபகமாகவும்
தாரகமாகவும்
நியாமாகவும்
சேஷியாகவும்
அறிய வேண்டுகையாலும்

தத்வாந்தரங்களை அறியாத போது இப்படி அறிய விரகு இல்லாமையாலும்
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்னக் குறை இல்லை –

போக்தா போக்யம் ப்ரேரிதாரம ச மத்வா -என்றும்
ப்ருதகாத்மா நம ப்ரேரிராதம ச மத்வா -ஜூஷடச் ததஸ தேனா மருத்தவ மீதி -என்கிற
ஸ்ருதிகளுக்கும் ஹிருதயம் இது இறே
இங்கன் அன்றாகில் தமேவம வித்வான் -இத்யாதி ஸ்ருதியோடு
இதுக்கு விரோதம் வரும்
ஆகையால் இந்த சுருதி சாயையாலே இவரும் அருளிச் செய்தார் ஆகையாலே
வேதாந்த விரோதி பிரசங்கமே இல்லை –

—————————————————————

சூர்ணிகை -2-

அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்

சித்தாவது -சைதன்ய ஆதாரமான வஸ்து
அசித்தாவது சைதன்ய அநாதாரமான வஸ்து
ஈஸ்வரன் ஆகிறான் யோக வைஷிகாதித ந்தரத்தில் உள்ளார் சொல்லுகிற கணக்கிலே
ஒரு புருஷ விசேஷம் அன்றிக்கே
வேதாந்திகள் சொல்லுகிற
சிதசித நியந்தா –
ஷரம பிரதான மமருதா ஷரம ஹர ஷராதமா நா வீசதேவ ஏக –
பிரதான ஷேத்ரஞ பத்திர குணேச -என்னக் கடவது இறே-

——————————————————–

சூர்ணிகை -3-

அவதாரிகை –

உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –

சித் என்கிறது
ஆத்மாவை –

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும்
ஆச்சான் பிள்ளையும்
முதலான ஆச்சார்யர்கள் தத்வ த்ரயம் அருளிச் செய்கிற இடத்தில்
அசித் உபக்ரமமாக அருளிச் செய்தார்கள்
இவர் சித் உபக்ரமமாக அருளிச் செய்தார்

இதற்க்கு கருத்து
அசித் தத்வம் ஹேயதயா ஜ்ஞாதவ்யம் ஆகையாலும்
ஈஸ்வர தத்வம் உபாதேயதயா ஜ்ஞாதவ்யன் ஆகையாலும்
இப்படி இரண்டு தத்வத்தையும் அறிகைக்கு அதிகாரியான சேதனனுடைய ஸ்வரூபம் தன்னை
முதலிலே அறிந்து கொள்ள வேணும் இறே என்று –

அவர்கள் தான் அப்படி அருளிச் செய்வான் என் என்னில்
ஆத்மாவினுடைய ப்ரக்ருதே பரத்வஜ்ஞ்ஞா நம பிரகிருதியை அறியாத போதே கூடாமையாலே
முந்துற பரக்ருத தத்வத்தை அறிந்து
அநந்தரம்
தத் வ்யதிரிக்தனாய்
தத் அநதர்வர்த்ததியான ஆத்மாவை அறிந்து
அநந்தரம்
ஆத்மாவுக்கு அந்தர்யாமியாய்
சரீரத்துக்கு ஆத்மாவைப் போலே
உபயத்துக்கும் அபிமானியாய் இருக்கிற பரமாத்வாவினுடைய ஸ்வரூபத்தை அறிகை
புத்தயா ஆரோஹகரம் ஆகையாலே அருளிச் செய்தார்கள் –

அசித் உபக்ரமாக சொல்லுகிற இது
அன்ன மயம் தொடக்கி
ஆனந்த மயம் அளவும் ஆரோஹிதத ஸ்ருதி மரியாதையைச் சேரும்

சித் உபக்ரமாக சொல்லுகிற இது
போக்தா போக்கியம் ப்ரேரிதாரமா -இத்யாதி ஸ்ருதிக்குச் சேரும்
ஆகையால் இரண்டு க்ரமமும் வேதாந்த சித்தம் –

சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷினே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
எங்கனே என்னில்
சித் உபக்கிரம யோஜனைக்கு தானே ஸ்வ ரசமாய் இருந்தது இறே

அசித் உபக்கிரம யோஜனையில் வந்தால் க்ரம விஷயா அன்று அவர்கள் அப்படி அருளிச் செய்தது –
சமசதபதமாக அருளிச் செய்கையாலே சமாசத்தில் அப்யர்ஹிதமாதல்
அலாபச தரமாதல்
முற்படக் கடவது என்கிற நியாயத்தைப் பற்ற
அலபாச தரமான சித் சப்தம் முன்னாக அருளிச் செய்தார்கள் இத்தனை

அபயர்ஹிதனான ஈஸ்வரன் தன்னை முதலில் எடாதே
சித் சப்தத்தாலே சேதனனைச் சொல்லிற்று
அலாபசதரம பூர்வமா -என்கிற அனுசாசன பதித்தாலே

இப்படி இரண்டு க்ரமமும் -வேத வைதிக -பரிக்ருஹீதம் ஆகையாலே
இரண்டும் முக்யம் என்று கொள்ளக் குறை இல்லை-

சித் சப்தம் ப்ரேஷோபலப்திச சித் சமவித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா -என்று
ஞான வாசி சப்தங்களோடு சஹ படிதம் ஆகையாலும்
ஜ்ஞான ஆஸ்ரய வஸ்துவில் இதுக்கு பிரசித்தி ப்ராசுயம் இல்லாமையாலும்
ஷராதம நா வீசதே தேவ ஏக –
ஆதமா நம ந தரோ யமயதி யமாதமா ந வேத யச்யாத்மா சரீரம் –
ஆத்மா ஜ்ஞான மயோமல-என்று
இப்படி ஸ்ருதி ச்ம்ருதிகளிலே பல இடங்களிலும் சொல்லுகையாலே
ஆத்ம சப்தத்துக்கு ஜீவ விஷயத்தில் பிரசித்தி ப்ராசுர்யம் யுண்டாகையாலும்
சித் -என்கிறது
ஆத்மாவை -என்று ஸ்புடமாக அருளிச் செய்கிறார்-

—————————————————————————-

சூர்ணிகை -4-

அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளிலே ஒன்றைச் சொல்லலாய் இருக்க
இப்பொழுது ஆழ்வார் அருளிச் செய்த சந்தையை எடுத்தது –
(நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-)
தத்வ பிரதிபாதகங்களான ஸ்ருதியாதிகளில் காட்டில்
தத்வ தர்சிகளில் பிரதானரான ஆழ்வாருடைய வசனமே
தத்வ நிர்ணயத்துக்கு முக்ய பிரமாணம் என்று தோற்றுகைக்காக –
விதயச ச வைதிகாச த்வதீய கம யீரமேநோ நுசாரிண—20-என்று இறே
பரமாச்சார்யர் அருளிச் செய்தது –

(த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —20)

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது
மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவதுஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)

ஸ்வரூபம் ஆவது -ஸ்வ மமான ரூபம் -அதாவது -அசாதாரண ஆகாரம்
சென்று சென்று பரம் பரமாய் -என்றது
போய்ப் போய்ப் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற
அன்னமய
பிராணமய
மநோ மயங்களுக்கு
அவ்வருகாய் என்ற படி –

தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய்-என்கிற இடத்தில்
புத்தி சப்தத்தால்
மஹத் அனுக்ருஹீதமான அந்த கரணத்தைச் சொல்லுகிறதோ
ஜ்ஞானத்தை சொல்லுகிறதோ -என்னில்
இவருக்கு இங்கு விவஷிதம் ஞானம் ஆக வேண்டும்

தத்வ சேகரத்தில்
தேஹாதி வைலஷண்யம் அருளிச் செய்கிற இடத்தில்
அப்படி அருளிச் செய்கையாலே –

தேஹேந்தரிய மன பிராண தீபயோ நய (ஆத்ம ஸித்தி )-என்று இறே ஆளவந்தாரும் அருளிச் செய்தது-

———————————————————————————————

சூர்ணிகை -5

அவதாரிகை –

உத்தேசம் –
லஷணம் –
பரீஷை -என்று மூன்று வகைப் பட்டு இறே தத்வ நிர்ணயகரம் இருப்பது –

அதில் –
சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று தத்வ த்ரயத்தையும் உத்தேசித்து

உத்தேச க்ரமத்திலே
அவற்றினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக நினைத்து
பிரதமத்திலே
சித் சப்தோதிஷ்டனான ஆத்மாவினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக உபக்ரமித்து
தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய் -என்று தொடங்கி
சேஷமாய் இருக்கும் -என்னும் அளவாக
ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்தார் –

அத்தைப் பரீஷிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில்
ஆத்ம ஸ்வரூபத்தின் யுடைய
தேஹாதி வைலஷனண்யத்தை சோதிப்பதாக
தஜ் ஜிஜா ஸூகளுடைய -ப்ரஸ்னத்தை-கேள்வியை
அநு பாஷிக்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-

இது தன்னை தத்வ சேகரத்தில்
இவர் தாமே விஸ்தரேண அருளிச் செய்கிறார் –

தேஹம் அநேக அவயவ சங்கா தாத்மகம் என்னும் இடம் சித்தம் –
அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் யுண்டாகில்
அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும்

அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமும்
அவற்றில் மமதா புத்தியும்
மமதா வ்யவஹாரமும் கூடாது

ஓர் அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில்
அது விச்சின்னம் ஆனால் அவயவ அநந்தரம் அது அனுபவித்ததை ஸ்மரிக்கக் கூடாது
பின்பு அஹம் புத்தி வியவஹாரங்களும்
மமதா புத்தி வ்யவஹாரங்களும் தவிர வேணும் –
சர்வ சர்வ வ்யாபீயான ஸூ க துக்க அனுபவமும் கூடாது-

அவயவ சங்காத் மகம் அன்று சரீரம்
அவயவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –
உப லம்ப அனுபத்திகள் இல்லாமையாலே அவயவ ஸ்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே-

கிஞ்ச பால தேஹோஹம அந்தஞான யுவதே தேஹோஹம் பஹூ ஞான மம சரீரம் -என்று
சரீரம் அஹம் அர்த்தங்களில் பிறக்கும் பேத பிரதிபத்தியும்
பேத வ்யவஹாரமும் கூடாது –

மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது –
முக்யே பாதம் இல்லாமையாலே –

அன்றிக்கே
அஹம் புத்திக்கு சரீரம் விஷயம் என்று கொண்டாலும்
ஸ்ருதியாலும்
ஸ்ருத்யர்த்தா பததிகளாலும்
தேஹாதி ரிக்தனாய்
தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –

பாஹ்ய இந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரியங்களையும் அறிகையாலே
இப்படிக் கொள்ளாத போது –
யாவன் ஒருவனான நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் –
அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் -என்கிற பிரதி சந்தானமும் கூடாது –

சஷூஷே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்

ச்ரோத்ரமே ஆத்மாவாகில் பதிரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்

இப்படி மற்றை இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

(இதுவரை சாருவாக மத கண்டனம்
மேலே சங்கர மத கண்டனம் )

அந்த கரணமும் ஆத்மா வாக மாட்டாது
ஸ்மார்த்தாவினுடைய ஸ்மராணாதி கார்யங்களுக்கு கரணமாக கல்பிதம் ஆகையாலே
இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது
ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே

கரணமும் இது தானே என்ன ஒண்ணாது –விருத்தம் ஆகையாலே
வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணமாகில்
அது இல்லாதவனுக்கு ஸ்மர்த்தி கூடாது
ஆந்தர கரணமாகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேரிட்டதாய் விடும்
ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்திரியார்த்தத சம்பந்தம் யுண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும்
ஆகையால் மனசும் ஆத்மாவாக மாட்டாது

பிராணங்களும் ஆத்மா வாக மாட்டாது
சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்கு
சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம்-

(மேலே பௌத்த மத கண்டனம் )

ஜ்ஞானமும் ஆத்மா வாக மாட்டாது
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்று ஷணிகமுமாய்
ஆத்ம தர்மமுமாய் தோற்றுகையாலே
ஸ்திரமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்னும் இடம்
நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் -என்கிற
பிரத்யபிஜ்ஞையாலே சித்தம் -என்று
இப்படி விஸ்தரேன அருளிச் செய்தார் இறே-

——————————————————————————

சூர்ணிகை -6-

அவதாரிகை –

இப்படித் தனித் தனியே எடுத்துக் கழிக்கும் அளவில் கிரந்த விஸ்தாரமாம் என்று
மந்த மதிகளுக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி
தேஹாதிகளை சமுசசித்யோ பாதானம் பண்ணி –
அவற்றில் காட்டில் ஆத்மாவுக்கு யுண்டான வைலஷண்யத்தை
சில உக்தி விசேஷங்களாலே ஸூக்ரஹமாக
அருளிச் செய்கிறார் –

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள்-என்று  ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும் –
அதாவது
தேகாதிகள் ஆனவை என்னுடைய தேஹம் என்னுடைய இந்த்ரியம்
என்னுடைய மனசு என்னுடைய பிராணன் என்னுடைய புத்தி என்று
மமதா புத்திக்கும்
மமதா வ்யவஹாரத்துக்கும் விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த பூதனான ஆத்மாவுக்கு அநயமாய்த் தோற்றுகையாலும்
அப்படியே
இது தேஹம் இது இந்த்ரியம் -என்று இதம் புத்தி வ்யவஹார விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த வ்யதிரிகதமாய்த் தோற்றுகையாலும்
அங்கன் அன்றிக்கே
ஆத்மா அஹம் அர்த்த பூதனாய்க் கொண்டு தோற்றுகையாலும் -என்றபடி –

இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும் –
இவை என்று தேக இந்த்ரியாதிகளை பராமர்சிக்கிறது
தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமை யாவது
ஜாகரத் தசையில் ஸ்தூலோஹம் க்ருசோஹம் இத்யாதிகளாலே
அஹம் புத்த்யா வ்யவஹார விஷயமாகக் கொண்டு
ஆத்மத்வேன தோற்றி இருந்ததே யாகிலும்
ஸூ ஷுப்தி தசையில் அப்படி தோற்றாது இருக்கை –

ஆத்மா எப்போது தோற்றுகையாவது
உறங்குவதற்கு முன்பு இவை எல்லாம் அறிந்து இருந்த நான்
உறங்குகிற போது என் உடம்பு உட்பட அறிந்திலேன் என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணுகையாலே
உபய அவஸ்தையிலும் தேஹாந்த்யன்யனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்று தோற்றுகை –

அதவா
ஜனன மரண பாக்த்வத்தாலே தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
நான் ஜன்மாந்தரத்தில் பண்ணின வதினுடைய பலம் இது -என்கிற
லோக வ்யவஹாரத்தாலே
ஆத்மா ஜனன மரணாதி ரஹிதனாய்க் கொண்டு எப்போதும் தோற்றுகையாலே என்னவுமாம் –

அப்படியே
சஷூ ராதி ரூபேண தோற்றி இருக்கிற இந்த்ரியங்கள்
அந்த பதிராதி -குருடன் செவிடு – அவஸ்தைகளில் தோற்றாமையாலும் –
சங்கல்பாதி ஹேது தாவென தோற்றி இருக்கிற மனஸ்
ஒரு கால விசேஷங்களிலே மூடமாய்க் கொண்டு ஒன்றும் தோற்றாமையாலும்-
உச்வாச நிச்வாதிகளாலே தோற்றி இருக்கிற பிராணங்கள் ஒரோ மோஹ தசைகளிலே
நெற்றியைக் கொத்திப் பார்க்க வேண்டும்படி தோற்றாமையாலும் –
விஷய க்ரஹண வேளையில் பிரகாசிக்கிற ஞானம் விஷய கிரஹண் அபாவ தசையில் தோற்றாமையாலும்

இப்படி அன்றிக்கே
நான் கண்ணும் செவியும் முன்பு விளங்கி இருந்தேன்
இப்போதும் அந்தனும் பத்திரனும் ஆனேன்
முன்பு என்னுடைய மனஸ் விசதமாய் இருக்கும் இப்போது ஒன்றும் தெரிகிறது இல்லை
நான் அப்போது நிஷ் பிராணனாய்க் கிடந்தேன் -இப்போது ச பிராணன் ஆனேன்
எனக்கு அப்போது ஞானம் யுண்டாய் இருந்தது -இப்போது நசித்தது -என்று
இவை தோற்றின போதொடு தோன்றாத போதொடு வாசி அற
ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்

இவை பலவாகையாலும் ஆத்மா ஒருவன் ஆகையாலும்
மீண்டும் இவை என்று தேஹாதிகளைப் பரமாசிக்கிறது –
தேஹத்துக்கு பன்மை அநேக அவயவ சங்காததம் ஆகையாலே
இந்திரங்களுக்கு பன்மை சஷூர் ச்ரோத்ராதி வ்யக்தி பேதத்தாலே
மனசுக்கு பன்மை மநோ புத்தி சித்த அஹங்கார ரூபமான பேதத்தாலே
பிராணனுக்குப் பன்மை பிராணாபாநாதி பேதத்தாலே
புத்திக்கு பன்மை கடஜ்ஞ்ஞான படஜ்ஞ்ஞாநாதி பேதத்தாலே
இப்படி
தேகாதிகள் ஓர் ஒன்றே பலவாகையாலும் –

இங்கன் அன்றிக்கே –
அஹம் புத்தி வ்யாவஹாராஹனான ஆத்மா ஒருவன் ஆகையாலும்

ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்
அதாவது
இப்படி தேஹாதி பிரகாரத்தையும் ஆத்மாவினுடைய பிரகாரத்தையும் நிரூபித்தால்
ஆத்மா தேகாதிகள் ஆனவற்றில் வேறு பட்டு இருப்பான் ஒருவன் என்று
அவஸ்யம் அங்கீ கரிக்க வேணும் -என்கை-

————————————————————————————————

சூர்ணிகை -7

அவதாரிகை –

இப்படி உக்தியாலே சாதிதமான அர்த்தத்தை
சாஸ்திர பலத்தாலே த்ருடீகரிக்கிறார்

இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்

கண் அழிவு யுண்டே யாகிலும் -என்கையாலே
சர்வதா இதுக்கு கண் அழிவு சொல்ல ஒருவருக்கும் போகாது
அது தான் யுண்டாய்தாகிலும்
இவ்வாத்மா -ஸ்ருதி ஸ்ம்ருத்யாதி சகல சாஸ்திர சித்தம் ஆகையாலே
சாஸ்திர பலம் தானே இவ்வாதத்தை சாதிக்கும் என்று கருத்து –

பஞ்ச விமசோயம புருஷ –
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –
பூதாதி கவர்க்கேண சவர்க்கேண இந்திரியாணி ச
டவர்ர்ரக்கேண தவர்க்கேண ஞான கநாததயச ததா
மநா பகாரேணை வோகதம பகாரேண தவஹங்கருதி
பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா

(பஞ்ச விமசோயம புருஷ –புருஷன் 25 வது தத்வம் ஆகிறான்
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –ஆத்மா 25 வது தத்வம் ஆகிறான்
பூதாதி கவர்க்கேண -க வரிசையால் உள்ள எழுத்துக்களால் பஞ்ச பூதங்களும்
சவர்க்கேண இந்திரியாணி ச-ச வரிசையில் உள்ள எழுத்துக்களால் கர்ம இந்திரியங்களும்
டவர்க்கேண தவர்க்கேண ஞான கநாததயச -ட வரிசை எழுத்துக்களால் ஞான இந்திரியங்களும்
ததா மநா பகாரேணை வோக்தம் -அப்படியே ப என்பதால் மனசும்
பகாரேண தவஹங்கருதி பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே-மீதம் உள்ள ப வரிசை எழுத்துக்களால்
அகங்காரமும் மஹத் தத்துவமும் ப்ரக்ருதியும் கூறப்பட்டன
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா– ம என்பதால் 25 வது தத்துவமான ஆத்மா கூறப்பட்டான் -என்றும் )

ய பர ப்ரக்ருதோ ப்ரோக்த புருஷ பஞ்ச விம்சக
ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே
ஆத்மா சுத்த தோஷரச் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதோ பரா/
ப்ரவிருததயபச யௌ ந சத ஏக சயாகி லஜத துஷூ பிண்ட
ப்ருதக் யத பும்சத சிர பாணாயாதி லஷண
தத அஹமி குத்ரைதாம் சம்ஜ்ஞாம் ராஜந் கரோம் யஹம் -ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்

(ய பர ப்ரக்ருதோ ப்ரோக்த புருஷ பஞ்ச விம்சக ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே–25 வது தத்துவமாக
எந்தப் புருஷன் கூறப்பட்டானோ அவனே அனைத்து பூதங்களிலும் ஆத்மா எனப்படுகிறான் -என்றும்
ஆத்மா சுத்த தோஷரச் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதோ பரா–ஆத்மா தூய்மையானவன்-அழிவற்றவன் -சாந்தமானவன் –
மூன்று குணங்கள் அற்றவன் -சரீரத்தைக் காட்டிலும் வேறானவன் –
ப்ரவிருத்தய பச யௌந சத ஏகஸ் யாகில ஜந் துஷூ -அவனுக்கு வளர்த்தல் தேய்தல் இல்லை
பிண்ட ப்ருதக் யத பும்ஸச் சிரஸ் பாண்யாதி லஷண தத அஹமிதி குத்ரைதாம் ராஜந் கரோம்யஹம் —எந்த ஒரு
காரணத்தால் தலை கை கால் போன்ற உறுப்புக்கள் கொண்ட சரீரமானது ஆத்மாவைக் காட்டிலும் வேறானதாக உள்ளதோ
அந்தக் காரணத்தால் ஆத்மா என்று இதன் பெயரை எங்கு கூறுவேன் என்றும்
கிம் தவ மேதச் சிர கிம நு உர சதவ ததோ தரம கிமு பாதாதி கம தவமவை
தவைதத் கிம மஹீ பதே சமசதா வயவேபயச தவம ப்ருதக் பூப வ்யவஸ்தித
கோஹமிதயவ நிபுணோபூதவா சிந்தய பார்த்திவ–நீ இந்தத் தலையா அல்லது தலை உன்னுடையதா
நீ இந்த வயிறா அல்லது வயிறு உன்னுடையதா
நீ இந்தக் கால் ஒன்றவையா அல்லது இவை உன்னுடையதா –
நீ அனைத்தைக் காட்டிலும் வேறாக உள்ளாய் -நீ அனைத்தையும் அறிந்தவன் அன்றோ
அப்படி எனில் இவற்றில் நீ யார் என்று சிந்திப்பாய் -)

பஞ்சபூதாத் மகே தேஹே தேஹீ மோஹ தமோ வ்ருத
அஹம் மமை ததித் யுச்சை குருதே குமதிர் மதிம்
ஆகாசவாயு வக்நி ஜல ப்ருதிவீப்ய ப்ருதக் ஸ்திதே
அநாத் மந் யாத்ம விஞ்ஞானம் ந கரோதி களேபரே-என்று

(தூய்மையான ஜீவாத்மா -தீய புத்தி காரணமாக இருளால் சூழப் பட்டவனாக-
ஐந்து பூதங்களுடைய மாறுபாடாக உள்ள இந்தச் சரீரத்தில் நான் என்னுடையது என்று அகப்படுகிறான்
பஞ்ச பூதங்களைக் காட்டிலும் வேறாக ஆத்மா உள்ள போது
யார் இந்தச் சரீரத்தை ஆத்மா என எண்ணுவான் )

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல சாஸ்திர பிரதிபன்னமான
ஆத்மாவினுடைய தேஹாதி விலஷணத்வம் –
துர பன்னவம் என்று நினைத்து இறே
சாஸ்திர பலத்தாலே ஆத்மா தேஹாதி
விலஷணனாக கடவன் என்று ஸூ நிச்சயமாக அருளிச் செய்தது –

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-587-596.

July 28, 2014

587-

588-

589-

ராமோ -சதா விஜயதே
கோதண்டத்தால் தானே வெற்றி
விஜய கோதண்ட ராமன் மகேந்திர பள்ளி   சேவை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சேவை
கண்ணனுக்கு பிறந்த நம் ஆழ்வாரை கற்பார் ராம பிரானை அல்லால் கற்பரோ
காளிய நர்த்தன கண்ணன் தனி சேவை
உத்சவர் -அழகு -பழமையும் சேர்ந்த நேர்த்தி
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
ராம ராவண யுத்தம்
திருவடி அடித்ததும் கோபம்
அர்ஜுனன் அடி பட்டதும் கண்ணன் கோபம்
பக்த அபராதம் பொறுக்க
ஈஸ்வரன் அவதரித்து பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமையாலே
கோபச்ய  வசவே இவ
கோபத்துக்கு வசனம் கோன் வசமி
சித்த குரோத -கோபம் வந்தால் ஜகமே நடுங்கமே –
சசல்ல ராஜா அம்பு மழை போலே பெய்தது கட்டி வைக்க
வில் விழ -ராவணன்
சசால முமோஷ வீர -வெறும் கை வீரன்
கொண்டாடுகிறார்
வில் கை வீரன் ராமன்
நாம் எல்லாம் வெறும் கை வீரர்
அருள் கிட்ட இதுவே வழி
என்னை காப்பாற்ற திறமை இல்லை
வில விழுந்ததும்
எடுக்காமல் இருந்தால் அப்பொழுதே  வென்று இருப்பான்
தோற்றோம் ஜிதந்தே -சொன்னாதும்
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு
அவன் தான் தோற்றேன் என்பான்
க்ரீடம் மகுடம் அம்பால் துளைக்க
திகைத்து நின்றான்
தேரில்லை கிரீடம் இல்லை
பரிஸ்ராந்தி
நிராயுத பாணி யுத்த நீதி அறிந்த இஷ்வாகு குலம்
இன்று போய் நாளை வா
புது தேர் வில் கொண்டு வா
அருள் பெற வருவானா வில் தேர் இல்லாமல் இந்த குணம் ஏத்தி சேர்க்க
கூரத் ஆழ்வான் மிகுந்த வியப்பு -ரகு வீரன்
பெருமை கோபம் ஷமை மன்னிப்பு எளிமை எதில் சேர்க்க இந்த செயலை
யார் பேச்சுக்கும் கிட்டாத குணக் கடல்
பொலிவு இழந்து நடந்து போகிறான் வெட்கி தலைகுனிந்து

590

காலத்தை கழிக்கின்றீரே
ராமன் திரு நாமம் பேச –
வில்லின் மகாத்மயம்
சாபம் சார்ங்கம் வில் சிலை ஆற்றல்
அந்த வில்லின் இடம் நாம்தொர்க்க வேண்டும்
கை கூப்பினால் அம்பு மழை பொழியாது கருணை மழை பொழியும்
60 சர்க்கம்
அடுத்த 7 சர்க்கங்கள் கும்பகர்ணன்
மகேந்திர பள்ளி
8 அடிஉயர மூலவர் விபவம் [ஓலே
கவசம் சாத்தி சேவை
தங்கம் வெள்ளி கவசம் ராமர் சீதை லஷ்மணன் ஆஞ்சநேயர் கவசம் உடன்செவை
ஆஜானுபாஹூ
புண்டாம் திருஷ்டி சித்த அபஹாரினாம் ரூப ஔதார்ய சேஷ்டிதங்களால்
கீழ் கோட்டை -எழுந்து அருளி இங்கே பிரதிஷ்டை
ராமோ ராமோ -ராம பூதம் ஜகம்
60 சர்க்கம்
கும்ப கர்ணனை எழுப்ப
உயிர் பிச்சை பெற்று வந்த கலக்கம்
சாபங்கள் தான் காரணம்
ராகவன் பாணம் நினைத்து
நெருப்பு கங்குல்
வருண வாயுஅக்னி பகவான் சேர்ந்த பாணம
ஆனந்ரன்யன் -இஷ்வாகு வம்சம் சாபம் –
ராமன் முன் இருந்த அரசன் சாபம்
வேகவதி -நெருப்பில் குதித்து மாய
பலி தீர பார்க்கிறாள்
ரம்பா வருண புத்ரி  சாபம்
பெருத்த உடல் உடன் கும்ப கர்ணன் தூங்க
கள்ளு ரத்தம் மாமிச குடங்கள் அடுக்கி
அரகில் போகவே பயம்
தயங்கி போனார்கள்
மூச்சுக் காற்றில் தூக்கி போடப் பட்டார்கள்
ரத்ன  மயமான கட்டில்
விலங்குகள் ஓட்ட விட்டு
ஆணை குதிரை ஒட்டகம் குதித்தும் பலன் இல்லை
சங்கு ஒலிஎழுப்ப
தண்ணீர் காதில் கொட்டி
1000 யானைகள் மார்பில் மிதிக்க
1000 பெரி ஓசை
அசைந்து கொடுத்தான்
1000 குடம் தண்ணீர் காதில் விட
சற்றே இமை அசைய
புரண்டு விழிக்க
உணவு வகைகள் காட்ட
உண்டான்
கிமர்த்தம் –
அரசன் தேவை இல்லாமல் எழுப்ப மாட்டானே
யுபாஷன் சேனாவதி மந்த்ரி இடம் கேட்க செய்திசொன்னான்
சீதை -காரணமாக ராமன் மனிசன் வந்து
ராவணன் இடம் சென்று பேசி பின்பு யுத்த பூமி செல சொல்ல
நடை நடந்து வந்தான்
சுக்ரீவன் இத்தை கண்டு கிஷ்கிந்தைக்கே போக முற்பட

591

வெண்ணெய் அளைந்த –நாரணா  நீராட  வாராய்
பிள்ளை பிடிவாதம்
புழுதி அளைந்த -கருப்பான திரு மேனி -பரப்பாக அழகு
உத்சவர் திருமஞ்சனம் சேவை
துளசி மாலை மட்டும் அணிந்து
அங்கங்கள் அழகு மாறி –
நீரால் –
சங்க தாரை பத்ம தாரை
பால் –
தயிர் –
தேன்-
தேனே இன்னமுதே என்று  என்றே கூத்து சொல்ல
மஞ்சள்
சந்தனம்
அர்ச்சகர் கை வண்ணம் -நேராக சாத்தி
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
பாண்டியன் கொண்டை
தாயார் சாய்ந்த கொண்டை
அலங்காரம் உடன் சேவை
யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு
விஜய கோதண்ட ராமர் -சிதம்பரம் அருகில்
60 சர்க்கம்
கும்பகர்ணன் ராவணன் பவனம்
காலை  இடி வைத்தால் போலே நடக்க
பெருத்த உடல் படைத்தவன் யார்
61 சர்க்கம் ராமன் கேட்க
விபீஷணன் பதில்
விச்ரவன் புதல்வன் ராவணன் தம்பி
பிறந்த பொழுதே பலம் உடையவன்
தேவர்களை வாயில் போட்டுக் கொண்டான் பிறந்ததுமே
இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு அடிக்க
குட்ட ஐராவதம் இந்த்ரன் சாய
ப்ரஹ்மா சபித்து –
மிருத கல்பம் போலே தூங்கி
கால வரை சொல்ல ராவணன் கேட்க
6 மாசம் தூங்கி
ஒரு நாள் விழித்து உண்டு
நீலன் சரபன் அங்கதன் திக்கு காக்கும் பொறுப்பு கொடுத்து
62 சர்க்கம்
ராவணன் இடம்  வார்த்தை ஆட –
அண்ணனை வணங்கி
அணைத்து ஆசனம் கொடுத்து
நூறு யோஜனை பெருத்த கடலை தாண்டி
குரங்கு வந்து ஊரை கொளுத்தி
அனைவரும் அழித்து
பாலர் வயதானவர் பெண்டுகள் தான் மிச்சம்
கஜானா காலி
அரக்கர் பெரும் போர் செய்ய இல்லை
தேவர்கள் கூட வெல்ல முடியாதவர்களை குரங்குகள் அழிக்க

592

சுந்தரி -சீதையை வால்மீகி
பிரவசம் பார்த்த
லவ குசர் பெற்று எடுத்து
சுந்தரி வைபவம்
அழகுக்கு எற்ற சுந்தர கோதண்ட ராமன்
நல்லூர்  கிராமம்
கருடன் -கைங்கர்ய ஸ்ரீ மான் சேவை
பழைமை மிக்க திருக் கோயில் –
மங்கள வாத்தியம் வாசிக்க ஆள் இல்லை
கைங்கர்யம் பண்ணும் பாக்கியம் இழந்து
உடல் கால் கை வாய் பெற்ற பலன் கொண்டு
விஸ்வக்சேனர்
ஆழ்வார்கள்
ஆச்சார்யர்கள் சேவை
சுந்தர கோதண்ட ராமர் திருக் கோயில்
எழில் கொஞ்சும்
மனஸ் தாவும் மந்தி பாய் வடவேங்கட மா மலை –
அஞ்சலி ஹஸ்தம் ஆஞ்சநேயர்
கோதண்டமும் ராமனும் சுந்தரம் தான்
சுந்தரனும் சுந்தரியும் சேர்ந்து மோஷம் தருவார்கள்
நல்லூர் ராமன் தர்சனம்
கும்ப கர்ணன் உபதேசம் சொல்ல
காதில் ஏறாதே
63 சர்க்கம்
கஜானா கலி
மனிசன் இடம் தோற்றாய்
குரங்குகள் அளிக்க
குறை உன் இடத்தில் தான்
நீ நடக்க கூடாததை செய்ததால்
நடக்ககூடாதவை நடக்க
மாற்றான் மனைவிக்கு ஆசைப் பட்டாய்
சனாதன தர்மம் –
பொறுமை சகிப்பு காட்ட வேணும்
பாபம் பலன் உடனே பெற்றாய் ராவணா
யோசிக்காமல் தப்பான வழி
காமம் தப்பான இடத்தில்
கர்மம் அர்த்த காம மோஷம்
சாம பேத தண்டம் ஆராயாமல்
அஹங்காரம் செருக்கால் காமம் வசப் பட்டாய்
இப்பொழுது சீதையை மீண்டும் சமர்பித்து
விபீஷணன் நல்லது சொன்னான்
ராவணன் கோபம் கொண்டான்
ஆபத்தில் இருக்கும் எனக்கு உதவாமல்
நண்பனும் இல்லை கூட பிறந்தவனும் இல்லை
வீண் வார்த்தை
கும்ப கர்ணன் உணர்ந்தான்
சோகப் படாதே
தனித்து சென்று போர் புரிவேன்
என்னில் உன்னை மிகவும் விரும்புவேன்
ஜனஸ்தானம் தனியாக 14000 பேரை கொன்றவன்
ஐவரும் சேர்ந்து போக
ராமன் மாண்டதாக தண்டோரா போட்டால் சீதை மயங்குவாள்
நீ அனுபவிக்கலாம்
தப்பான வார்த்தை பேச

593-
ஸ்ரீ நிதிம் -தேவராஜம் ஆஸ்ரிதர்
கேட்பவர்கள் கெடுக்கும் வரத்தை தரும் வரதன்
பெரும் தேவியாருக்கும் நிதி
நம் போல்வாருக்கும் நிதி
ராமர் கோயில் -திருப்பாதிரிப் புலியூர் -திருவகீந்த்ர புரம் அருகில்
தென் நாதன் தரிசிக்கும் வழியில்
கருட நதி அருகில்
பலாவ்ருஷம் தல வ்ருஷம்
ராம தூதன் -சேவை -சிறிய மூர்த்தி
ஜெயந்தி 10008 மாலை சமர்ப்பித்து கொள்கிறார் –
வீரம் விவேகம் தைர்யம் சக்தி குடி கொண்ட
128 சர்க்கம்
பாதி கடந்தோம்
65 சர்க்கம் பார்த்து இருக்கிறோம்
கும்ப கர்ணன் வதைப் படலம்
உறங்குகின்ற –எழுந்திராய்
மாய வாழ்வு எல்லாம் இறங்குகின்றது
கரங்கு போலே வில் பிடித்த
கால தேவன் பாசக் கயிறில் அழுந்த போகிறீர்கள்
இடை பேரா -துயில் எழுப்பி
குலத்து இயல்பு அழிந்தது –
புலத்திய வம்சம் மரியாதை அளித்து
கெடுத்தனை ஒ நின் பெரும் கிளையை
தையலை விட்டு
சரணம்
இல்லையாகில்
இருந்து தேம்புதல்
படை சிதறுவதை பார்ப்பது வேறு வழி
இற்றை நாள் வரை -கொற்றவன் ஆரிய -பெயர்ந்து போயினான் –
ஆழியாய் இவன் ஆகுவான் தாழ்விலாத் தம்பியன்
உள்ளத்தால் நல்லவன்
சுக்ரீவன்-நம் பக்கல் இழுக்க
கூட்டிக்   கொண்டு நின்றது நல்லது சுக்ரீவன்
விபீஷணன் வந்து அண்ணனை வணங்கி
இங்கே வந்தது தப்பாது
அமரரும் பெற்றால் ஆகாதே நீ இருந்த இடம்
அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ
ராம அமர்த்தம் உணர்ந்தவன்
தவம் செய்து திருவடி பெற்றாய்
அயோதியை வேந்தர்க்கு அடைக்கலம் ஆகி
நீர்க்கடல் கழிக்க நீ மிச்சம் இருக்க வேண்டும் உனக்கும் அமிர்தம் கொடுக்க வந்தேன்
போர்க்கோலம் செய்து
கார்க்கோல மேனியானை கூடுதி
இந்த வாழ்வு இப்படி தான் முடியும்
ஆலம் கண்டு அஞ்சி
சுக்ரீவனும் ஓடுவான்
சண்டை போடுவது உறுதி

594-

அபாதாம் ஆபகத்தாரம் பூயோ பூயோ ஸ்ரீ ராமன்
தனிப் பெரும் நாயகன் வீரன்
கருடன்
நதி யும் கருட நதி
லஷ்மி வராகன் லஷ்மி நரசிங்கன்
பொய்யிலாத மணவாள மா முனிகள் சேவை
காலே காலே வர வர முனி கல்பய மங்களா நாம்
பெரும்தேவி தாயார் ஆகார த்ரயம் காட்டி அருளி
65 சர்க்கம் –
கும்ப கர்ணன்
அரக்கர் தேவை அற்ற துர்போதனை
பெருமைக்கு வீரத்துக்கும் தகுதி இல்லாத மந்த்ரிகள் சேனாபதிகள்
நீரில்லா வெளுத்த மேகம் தான் சப்திக்கும்
மகோரதன் தப்பாக உபதேசம்
இந்த்ரனை வென்ற கும்ப கர்ணன் தனியே போவேன் சொல்லி புறப்பட
படையை திரட்டி போக சொல்லி ராவணன் அனுப்ப
ரத்ன குண்டலங்கள் மாலை சாதி புறப்பட்டான்
கடிய திருமேனி எடுத்து போக
அபசகுனங்கள்
கழுகு மாலை போலே விழ
ஆதித்யன் மந்த ஓளி வீச
த்ருஷ்ட்வா வானர ஸ்ரேஷ்டம் -சூறாவளி வந்து மேகம் வீசுவது போலே
கபி கன
உலக்கை கையில் கொண்டு வந்த கும்பகர்ணன்
66 சர்க்கம்
வானரர்கள் ஓட அரக்கர்கள் கண்டு மகிழ
அங்கதபெருமாள் ஓன்று போலே போராட கூப்பிட
பல முதலிகள் மாள
பல கடலில் குதிக்க
பயந்து ஓடினால் நல்ல பெயர் இல்லை
குல பெருமை முக்கியம்
அங்கதபெருமாள் மீண்டும் உபதேசிக்க
ராமனை முன்னிட்டு வந்து இருக்கிறோம்
சீதை யை மீட்டு தானே போக வேண்டும்
சாமான்ய குரங்குகள் நாங்கள்

595

ஹஸ்திகிரி-வேதங்கள் காண முடியாது
நம் போல்வார் மனத்திலும் மலையிலும்
ஒப்பார் மிக்கார் இல்லாத
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயணபுரம் -பிரதானம்
சம்ப்ரதாயம் ரஷித்து
ஆளவந்தார் வேண்டுகோளை நிறைவேற்றி
ராமானுஜரை ஆக்கி
திருக் கச்ச நம்பி இடம் பேசி
கற்பக மரம்
கன்னத்தில் குழி -திரு முக மண்டலம்
வரத அபய ஹஸ்தம் நிமிர்ந்த திரு மார்பு
வைகாசி விசாகம் கருட சேவை -வையம் பிரசித்தம்
கொடை அழகு -வள்ளல் என்பதை கேட்க
நடை அழகு ஸ்ரீ ரெங்கம்
சத்சங்கங்கள் நிறைய
கருட வாகனம் தானே அனைத்தும் அளிக்கும்
67 சர்க்கம்
ஹனுமான் அங்கதன் சுக்ரீவன் இலக்குவன் இடம் சண்டை போட்டு ராமன் இடம் முடிந்தான்
176 ஸ்லோகங்கள் -பெரிய சர்க்கம்
பெரிய உடம்பு என்பதால்
நலன் நீளன் மைந்தன் அங்கதன்  முதலிகளைத் தேற்றி
மேகம் தண்ணீரை கொட்டுவது போலே
மரங்கள் மலை முகடுகளை போட்டாலும் அசையாமல் கும்ப கர்ணன் –
ஹனுமான் -எதிர்த்து வந்தார்
தலைக்கு மேலே பரச்ந்து மலைகளை போட
சூலத்தால் பொடி பொடி ஆக்கினான்
முட்டியால் சண்டை போட்டார்கள் –
சூலத்தால் அடிக்க
ஹனுமான் விழ
ரிஷபன் சரபன் நீலன  ஐவரும் சேர்ந்து எதிர்க்க
பல ஆயிரம் குரங்குகள் சேர்ந்து சண்டை போட
பார்வை நெருப்பு போலே
பில த்வாரம் போலே வாய்
ராஷசர்கள் மகிழ
ராமா சரணம் குரங்குகள் ஓட
அங்கதன் ஹனுமான் சுக்ரீவன் -ராமனை வர விடுவதா நாம் சண்டை போட்டு முடிப்போம்
சூலம் வீச
ஒதுங்கி தப்பித்து கொள்ள
ஓங்கி குத்த அங்கதன் சாய
சுக்ரீவன் வர
ஆகாயம் தாவி சண்டை போட
இந்த்ரனை குபேரனை வென்றாய்
என்னிடம் தோற்ப்பாய்

596-

ராம கமல பத்ராஷா சர்வ மனஸ் ஆனந்தம் கொடுப்பவன்
தாமரை  கண்கள் கொண்டே
புண்டரீகாஷான்
அனைவரையும் ஈர்க்கிறார்
ஜடப் பொருள்களையும் கூட
கல்கள் நதிகள் -கூட
கோதண்ட ராமர் -திருக் கோயில் –
வரதராஜர் கோயில் –
தங்கி தர்சிக்க வேண்டும் –
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா ஒ
பூத்தன பழுத்தன அபி வருஷா -சுமந்த்ரன் சொல்லி –
வளைந்த கோதண்டம்
அம்பையும் வில்லையும் கண்டு நாம் நிம்மதியாக தூங்கலாம்
கலங்கா பெரு நகரம் காட்டுவான்
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி
கண் பார்வை செல்லும் இடமே ஸ்ரீ வைகுண்டம்
தயரதர்க்கு மகன் அல்லால் தஞ்சம் இல்லை
அரக்கர் கோனைச்  செற்ற நம் சேவகனார் –
67 சர்க்கம் –
சுக்ரீவன் ஆகாசம் தாவி சண்டை போட
வஜ்ராயிதம் போலே மலைகள் கொண்டு தாக்க
சூலம் கொண்டு அடிக்க
ஆஞ்சநேயர் தடுத்து உடைக்க
குரங்குகள் மகிழ
சுக்ரீவன் மயங்க
தூக்கி கொண்ட பாசறைக்கு போக
அரசன் மாண்டால்  சைன்யம் அழியுமே
ஆஞ்சநேயர் பெரிய ரூபம் எடுக்க
ராமன் தானே காக்க வேண்டும்
குளிர் காற்று சுக்ர்தீவன் நினைவு வர
பறந்து ராமன் அருகில் நிற்க –
கும்ப கர்ணன் திரும்பி வர
இலக்குவன் பானம் பிரயோகம் செய்ய
எங்கே ராமன் கேட்க
காட்டி
கண்டவர் விண்டிலர்
சண்டை தொடங்க
விபீஷணன் மூலம் பேசி பார்த்தேன்
மீண்டும் நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல்
கைகள் அறுந்து விழ
விருத்ராஷன் அழிந்தது போலே விழ
பூ மா தேவி ரிஷிகள் தேவர்கள் மகிழ
கும்ப கர்ணன் அழிந்தான்
இந்த்ரஜித் மட்டுமே உள்ளான் ராவணன் உடன் –

———————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-577-586.

July 28, 2014

577-

முதல் ச்லோஹம் –
நாரதர் -நல்ல பண்கள் உடையவன் -16 கேள்விகள்
இஷ்வாகு வம்ச பிரபவான் ராமன் பெயர் பெற்றவன்
128 சர்க்கம்
பால 77
119 சர்க்கம் அயோத்யா காண்டம்
75 ஆரண்ய காண்டம்
67 கிஷ்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம் 68 சர்க்கம்
அரச குடி அருளி ஊர்  அர்கம் கோதண்ட ராமர் திருக் கோயில்
பல பக்தர்கள் ஜீரநோத்தமம் திருப்பணி
40 சர்க்கம்
ராவணன் கிரீடம் சுக்ரீவன்
த்வந்த யுத்தம்
கிரீடங்கள் பூமியில் தள்ளி
ரத்தம் தெரிய
ஆகாசத்தில் பூமியில் புரண்டு போராடி அன்யோன்யம்
பிடி யுத்தம்
பெரும் வீரர்கள் இருவரும்
மாயப் போர்
பல உருவங்கள் காட்டி ராவணன்
சுக்ரீவன் குழம்பி
வலையில் சிக்காமல் ஆகாசம் பறந்து
ஏமாற்றம் சிக்காமல் ராம பார்ச்வம் அருகே வந்து குதிக்க
செயலை கண்ட குரங்குகள் உத்சாகம்
41 சர்க்கம்
அங்கத பெருமாளை தூது இறுதி வாய்ப்பு
ராமோ வசனம் –
மகுடம் தான் தள்ளினேன்
தலைகளை இல்லையே
வெட்கி பின் பக்கம் இருக்க
சம்சயே –தலைவர்கள் சாகாச செயல் செய்ய கூடாதே
தேவை அற்ற கலவரம்
யுத்த நீதி படி சண்டை போடலாம்
சுக்ரீவா நீ அரசன்
வானர கூட்ட தலைவன்
உனக்கு ஏதாவது தீங்கு வந்து இருந்தால் இந்த சீதை மீட்டு என்ன செய்வேன்
பக்தன் இடம் ப்ரீத்தி
பிராட்டி விட்டு
கிம் கார்யம் சீதா மாமா
லஷ்மனனாளால் பரதனால் சத்ருணனை அடைந்து என்ன லாபம் நான் உயிர் இருந்து என்னலாபம்
உனக்கு அரச மரியாதை கிடைக்காமல்
தன்னையே விட்டு கொள்ள
ஸ்ரீ நாதன் பக்தர் நாதன்
தழு தழுத்த குரலில் ராமன் சொல்ல
துர் நிமித்தம்
அரக்கர் அழிவார்கள்
நான்கு புறமும் வளைத்து
கோடி வானரங்கள் சூழ
விட்டில் பூச்சி போலே
அரக்கர்களை எதிர்த்து
36 கோடி வானரங்கள்
சிங்கம் யானை பலம்
பல்லைக் கடித்து ஆவேசத்துடன் நிற்க

578

அகில  புவன ஜனமே –ஸ்ரீனிவாச பக்தி ரூபா
பிரசன்ன திருவதனம்
ஸ்ரீ ராமன் கைகளில் சங்கு சக்கரம்
ராய புரம் பிரசன்ன ராகவ பெருமாள் திருக் கோயில்
அம்புறா துணி மட்டும் வில் இல்லாமல்
சதுர புஜ ராமன் பொன் புத கூடம்
யோக ராமர்
தற்ப சயன ராமர்
கையில்  வில் இல்லாமல் இங்கே
வீர விஜய பக்த ஆஞ்சநேயர்
41 சர்க்கம்
36 கோடி வானரர்கள் முற்றுகை
எங்கும் இடம் இல்லாமல்
அங்கதன்-கோட்டை மதிளை தாவி தூதன்
நாகங்கள் யஞ்ஞர் அரக்கர் தலைவன் ராவணன்
பரஹ்மா வரம் செல்லாது அதர்ம வழியில் போனதால்
இலங்கை துவாரத்தில் அதர்மம் தண்டனை கொடுக்க நிற்கிறேன்
இடம் இல்லை உனக்கு
தூதோஹம் கோசலேந்தரஷ்ய  வாலி அரசன் மகன்
ராமன் செய்தி சொல்லி
விபீஷணன் அரசை ஆளுவான்
கைது பண்ண சொல்லி
கைகளில் ஈடுக்கி தாவி
வாலி ராவணனை இடுக்கி முன்
மேலே -கை விட விழுந்தார்கள்
விமானம் கலசம் உடைத்து கீழே தள்ளி
வஜ்ராயிதம் போலே
ராமன் இடம் செய்தி சொல்லி -சண்டை ஆரம்பம்
சுஷேணன் வாசல் சுத்தி பார்த்து
42 சர்க்கம்
சண்டை மூள
மலை மேலே நின்று இலங்கை பார்த்து
ராமன் ஆணை இட
மழையும் மரமும் பற்களும் நகமும் ஆயுதங்கள் வானரங்களுக்கு
கர்ஜித்து
ஜெயா ஜெயா ராகவென அதிபாலயதே
வாழி வாழி கோஷம் எங்கும்
குமுதன் 10 கோடி வானர உடன்
எல்லா புறமும் சூழ
பேரி வாத்தியங்கள் முழங்க
10 லஷம் அரக்கர்
யானை குதிரை தேர் சக்கரம் கோஷம்
ஜெயா சுக்ரீவ் கோஷம்

579

ருப ஔதார்யம்
பும்ச  திருஷ்டி அபஹாரம்
சந்திர காந்த தேஜஸ்
பிரசன்னா ராகவ பெருமாள் திருக் கோயில்
ராமன் இலக்குவன் கையில் கை இல்லை
அபய ஹஸ்தம் –
அம்புறா துணி திரு முதுகில் தரித்து இருவரும்
இலக்குவன் கை கூப்பி
சங்கு சக்கரம் தரித்து
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -அனைத்தும் தாமரை
அடித்தலமும் தாமரையே —
நெஞ்சத்து அகலாது என்கின்றாளால்
கண்ணபுரத்து அம்மானைக் கண்டால் கொலோ –
தாமரை பற்றிய சூர்யன் போல சுழன்று வரும் ஆழி ஏந்தி
சந்தரன் போன்ற சங்கத்தையும் ஏந்திய தாமரை கை
சிரித்த திருமுகம்
ஆஞ்சநேயர் கதை இடுக்கி
அழகை பருகிக் கொண்டே அழகு காட்டி
43 சர்க்கம்
தவந்த யுத்தம்
யுகம்
7 நாள் -அது 18
இரவும் பகலும் சண்டை இங்கே
குரங்குகள் பகலில் சக்தி
ஆகாசம் கடல் ராவண ராம யுத்தம் சமம் இல்லை
43 சர்க்கம்
இலக்கு கண் வைத்து இயங்க -வெற்றி நோக்கி
ராவணன் தொண்டர்
உயர்ந்த இலக்கு இல்லாமல் ஒருவர்க்காக தொண்டு செய்ய
எதற்காக புரிந்து நிலை நின்ற செயல்
தர்மம்
இல்லற தர்மத்துக்காக ரசிக்கும்
கொள்கை ஒன்றே குறியாக
குரங்குகள் தர்மத்துக்காக
சத்யம் வெல்ல
ராஷசர்கள் ராவணனுக்காக -அதர்ம கொள்கைக்காக
அங்கதன் இந்தரஜித்
பிரகச்தன் -சுக்ரீவன்
ஜம்புமாலியை ஹனுமான் அளிக்க முதல் நாளில்
நிகும்பனை நீலன் அழிக்க

580

சஞ்சீவி ஆஞ்சநேயர் –
ஹிந்து hospital தாம்பரம்
பக்த ஆஞ்சநேயர்
வராத ஆஞ்சநேயர்
கான சங்கீத ஆஞ்சநேயர்
சஞ்சீவி தூக்கி
சந்தான கரணி-அனைத்தும் போக்கும்
கதை பிடித்து தாவும் திருக் கோலம்
மேலே சீதா ராமர் லஷ்மணர்
புத்தி பலம் யஜஸ் வாக் சாதுர்யம்  ஆரோக்கியம் ஆயுள் அருளி
44 சர்க்கம்
இந்த்ரஜித்  மாய யுத்தம்
நாக பாசத்தால் கட்டி
இறுமாப்பு
சீதை கூட்டி மயங்கி உள்ள ஸ்ரீ  ராமர் காட்டி
கருடன் வந்து ரஷித்து அடுத்த 6 சர்க்கங்கள்
இரவில் குரங்குகள் ஒய்வு
இங்கே தேவர்களே வானரம்
மின் மினி மின்னுவதுபோலே கண்கள்
ராமன் லஷ்மணன் குரங்குகளை பாதுகாத்து இரவு பொழுதில்
ஒளி குறைந்து ஒலி கூடி
பறை முரசம் சங்கு ஒலி
கடலை கலக்குமா போலே அரக்கர் அழித்து
அங்கதன் இந்த்ரஜித் யுத்தம்
மாயமாக மறைந்து
அம்புகள் சாரா மலைபொலெ   விட்டு
நாகா பாசம் -கட்டு படுத்தும் மயக்கம் அடைய செய்யும் -நாகாஸ்திரம் உடனே கொள்லும்
கருடன் கொண்டு நிவாரணம்
கோரமான நாக பாசத்தால் ராம லஷ்மனர்கட்டி
மாய யுத்தம்
45 சர்க்கம்
இந்த்ரஜித் எங்கே தேட அனுப்பி
நீலன் அங்கதன் ரிஷபன் ரிஷ்பகந்தன் தேட
மேலம் பாசம் வர
இறுக்கி
இறுமாந்து இந்த்ரஜித்
ராமன் கையில் வில் கீழே விழ
திருமேனி சரங்களால்
குரங்குகள் தவிக்க
ரணபூமி

581

தேவர்கள் பயம் போக்க ராவணனை அழித்து
ஸ்கந்தன் -ராதா நகர் -ராம சுப்ரமண்யன் திருக் கோயில்
60 வருஷம் பழைமை
அற்புதமான திருக் கோலம்
ஹயக்ரீவ பெருமாள் சேவை
உபதேச முத்தரை புஸ்தகம் சங்கு சக்கரம் ஏந்தி
ஞான ஆனந்தம்
ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம் பரமா முத்ரா
வடை மாலை சாத்தி உத்சவர்
ராம நாமம் சொல்லி பிரசாதம் அதே நாக்குக்கு
46 சர்க்கம்
நாக பாசங்களால் கட்டுப் பட்டு
இந்த்ரஜித் கர்வம்
ராவணன் உடம் வெற்றி சரித்ரம் சொல்லி
குரங்குகள் யார் காப்பார் பார்க்க
சுக்ரீவன் நீலன்  அங்கதன் அனைவரும் வந்து
நீண்ட மூச்சு விட்டார்கள்
மாயைக் கட்டி விளக்க
இந்தரஜித் விரட்ட தேட
விபீஷணன் கண்ணுக்கு பட்டான்
குரங்குகள் கண்ணுக்கு பட வில்லை
வேகமாக ஆகாச பேச்சுபேச-இந்த்ரஜித்
இனி யார் வந்தாலும் காக்க இயலாது
குலம் அளிக்க வந்தார்களை கட்டிப் போட்டோம்
திண்மை இல்லாமல் பயத்தால் போராட முடிய வில்லை
நீலன் மைந்தன் அனைவரையும் அடிக்க
முதல் நாள் இரவே யுத்தம் முடிந்தது ராஷசர் இடம் காட்ட
சுக்ரீவன் பயந்து பேச
விபீஷணன் தேற்ற
வெற்றி தோல்வி மாறி மாறி வரும் சண்டையில்
இறக்க வில்லை
சத்ய தர்மம் அருகில் இருப்பார் பயப்பட வேண்டாமே
சுக்ரீவன் கண்ணநீரை துடைத்து
சேனை இரண்டாக் பிரித்து
அனைவரும்ஒரே இடம் வேண்டாம்
சுற்று சூழ்ந்து ராம லஷ்மணரை காத்து
47 சர்க்கம்
சீதை இடம் காட்டுகிறார்
அரக்கிகள் -திரிசடை  முதலானவரை
புஷ்ப விமானம் வந்து கிடக்கும் ராம லஷ்மணர் காட்ட
தண்டரை போட்டு அறிவிக்க வெற்றி முரசு
துக்கம் உடன் இருக்கும் வானவர்
நடுவில் மயங்கி இருக்க
சாரா கல்பத்தில் கிடப்பத கண்டாள்
பிராண நாதன் இல்லையோ
முன்பே மாயா சிரச் காட்டி
சோகம் மிக்கு
யோசித்து -முன்பு மாயை
நாம் உயிர் உடன் இருக்க ராமன் உண்டே

582

ராமாயா சீதையா பதயே நாம
ரகுபதி ராகவன்
கௌசல்யை குலமதலை
சீதை கண்டால் யுத்த பூமியில்
ராம சுப்பிரமணியர் கோயில் ராதா நகர்
ராதாராமன் இங்கே
ராமனும் கண்ணனும் -தரமி ஐக்கியம்
ராதா பக்தியின் உருவம்
ருக்மிணி சத்யபாமா சகேத ராஜ  கோபாலன்
வடக்கே ராதா
கவசம் அணிந்து சேவை
சரண் அடைந்தார் -விரோதி போக்கி -இஷ்ட பிராப்தி
சீதை -திரிஜடை சொல்லி ஆஸ்வாசம்
48 சர்க்கம்
சீதைக்கு பெருத்த ஐயம்
குழந்தை உண்டே
யாகம் செய்யும் ராஜா சத்திர யாகம் செய்வான் ஷத்ரியன் பட்ட மகிஷி ஆவேன் ஜோதியர் சொல்லி
மூன்றுமே சொன்னார்களே
அடர்ந்த தலை கேசம்
புருவம் சமமாக இல்லை
வட்ட வடிவு நகங்கள்
மணி போன்ற வர்ணம்
சுப லஷனம் நான் தான் ராணி ஆவேன் ஜோஸ்யர் சொன்னார்கள்
ஜானவாசம் வீரம் காட்டி
அவனோ நாக அஸ்தரம் கட்டுப் பட்டு கிடப்பானா
கௌசல்யைக்கு என்ன சொல்வோம்
புலம்ப
திரிஜடை சமாதானம்
சரமா -மனை
பழ வடியேன் -எப்போதும் தொண்டு
நல்ல அரக்கர்களும் உண்டே குடும்பமே உதவி
முகம் தெளிவு பார்த்து மரணம் இல்லை
சுற்றி இருந்து பாதுகாத்த வானர வீரர்கள் உத்சாகம்
இன்றியமையாமை சீதை இருக்க ராமன் இருப்பார்
புஷ்பக விமானம் இன்றும் இருக்கிறதே
கவலை வேண்டாம்
முகம் கோரமாக இல்லை
அசோகா வனம் திரும்ப
49 சர்க்கம்
சத்வ குணம் ஆத்மா பலத்தால் ராமன் எழ
இலக்குவன் கண்டு அலுத்து புலம்ப
வாழ்வே இல்லை இலக்குவன் இல்லாமல்
தந்தை மகன் அனைத்தும் இருவரும் இருவருக்கும்
யார் சமாதானம் சொல்ல
விபீஷணன் உன்னை பட்டாபிஷேகம் செய்வன் சொன்னது பொய்யா
விபீஷணன் வர
இந்த்ரஜித் வருவதாக வானரங்கள் பயப்பட
50 சர்க்கம்
ஆலோசனை
சுஷேணன் கூற
அமுதம் பாற் கடல் அருகில்  மூலிகை
சஞ்சீவினி விசல்யா சந்தான காரணி
சந்திர த்ரோன மலைகள்
கடல் கொந்தளிக்க
கருதமான் வர
ஆசனம் சகா
சிறகு வீசி வர

583

ஹயக்ரீவர் -தேசிகன் தபஸ் புரிந்து கருடன் சேவை சாதித்து
மந்த்ரம் உபதேசித்து
ஹயக்ரீவன் பிரத்யஷம்
கருடன் தண்டகம்
பாம்புகள் திரு மேனி தரித்து
வைகுண்ட வாச வர்தின
சுருதி சிரச் அமுதம் போன்ற கருடன்
கடலைக் கடைய -மந்தர மலை போல் இருந்து கடைந்து கொடுத்த கருடனை வணங்குகிறார்
நாக பாசம் -கட்டுண்டு
ராமன் எழ -லஷ்மணன்
சிறகு காற்றால் சந்நிதானாம் பாசம் விட்டு ஓட
50 சர்க்கம்
சம்பா ரெட்டி பாளையம் -மேட்டு பாளையம் அருகில் கோதண்ட ராமர் திருக் கோயில்
விமானம் வடதேசம் போலே
நீண்ட கருட கொடி செவி
அஞ்சிறைய பறவை ஏறி
காய்ச்சின பறவை மிர்ந்து
காய்சின வேந்தே திருப் புளிங்குடி
ராமானுஜர் சக்கரத் ஆழ்வார் சேவை
முக்கோல் தரித்து காஷாய ஆடை நேர் கொண்ட பார்வை உபதேச அதரம்
பஞ்ச ஆயுதம்ஆழ்வார் கருட ஆழ்வார் என்போம் –
50 சர்க்கம்
ராமன் புலம்ப
ஓசை உடன் கருடன்
தாச சகா வாசனம் ஆசனம் -ஆளவந்தார்
திருவடிகள் துகைக்கப் பட்டு கைங்கர்யம் பட்டம் தோளில் வடு
கைங்கர்த்ய செல்வம்
விந்தை சிறுவன் மேலாப்பின் கீழே வருவானை
வெய்யில் காப்பான் பிருந்தாவனத்தில் கண்டோமே
வினதா திரு மகனார்
ராமன் நாக பாசங்களையும் விலக்கி
நீர் யார் ராமன் கேட்க
வைனதேயன்
கழுகு அரசன்
நண்பன் உயிர் நான்
நாக பாசம் -இந்த்ரன் கந்தர்வர் விலக்க முடியாது
கத்ரு-வினதா இருவர் மனைவிகள்
கத்ரு பிள்ளைகள் நாகம்
கபட மாய யுத்தம் அரக்கர் செய்வார்கள்
தேவர் பிரார்த்தனை நடக்கும் சீதையை அடைவீர்
விடை கொடு கேட்டு போக
பிரத்யஷணம் பண்ணி  அணைத்து போக
குரங்குகள் சிங்க நாதம் ஆரவாரம்
ராவணன் செவியில் பட

584
ராமாயா சீதாயா பதயே நம
தேசம் -பாடல்கள் படி ரூபங்கள்
கறுத்த திரு மேனி தமிழகத்தில்
வடக்கே சலவைக் கல் வெளுத்த
காலே கோலே ராமன் நாசிக் இரண்டும் உண்டே
சம்பா ரெட்டி பாளையம் வெள்ளை சலவைக் கல் திரு உருவம்
சீதை பிரிந்து வெளுத்த -பசலை -உடல் மாற்றம் பிரிவால் உண்டே
சீதா லஷ்மணன் ஆஞ்சநேயர் உடன் சேவை
உத்சவர் -வளைந்த வில் பற்றி
கைங்கர்யம் யுத்தம் -தோளில் தூக்கி
சத்வ குணம்
51-52-ஆஞ்சநேயர் -பூம் ராஷன்
53 வஞ்ச தந்தன் 54 அங்கதன் அழித்தது
அகம்பனன் வந்து முடிந்து 55-56
பிராஸ்தன் வந்து முடிந்தது 57-58
ராவணன் குரங்குகள் ஆராவாரம் கேட்டு
சங்கை -ஒற்றன் அனுப்பி பார்த்து வர சொல்லி
ராமன் லஷ்மணன் பிழைத்த விஷயம் சொல்ல
பாசக் கயிற்றால் யானை கட்டி பலத்தால் அறுத்து எறிந்தது போலே
பூம் ராஷனை சண்டைக்கு அனுப்ப
மதம் ஏறிய யானை படை குதிரை படை தேர் படை உடன் போக
அப சகுனங்கள்
கழுகு விழ
கபந்தன் ஆட
பொருட்படுத்தாமல் சண்டை களம் வந்து ஹனுமான் கையால் மாண்டான்
சூலம் அட்டகாசம் கையில்
உடல்கள் சிதறி
ரத்தம் ஆறாக ஓட
மலைகள் மரங்கள் கொண்டு வானரங்கள்
ஹனுமான் வந்து பெரிய மலை வீசி தலை
தேர் பொடி பொடி யாக
பெரிய மலை பெயர்ந்து வீசி முடிக்க
வஜ்ரா தந்தன் புறப்பட
மீண்டும் அபசகுனங்கள்
அங்கதன் பெருமாள் ரஷிக்க வந்தார்
இரவும் பகலும் சண்டை
54 சர்க்கம் அங்கதன் அவனை முடிக்க
கத்தி கேடயம் கொண்டு சண்டை
கத்தி வீசி தலை விழ
அகம்பனன் வருவான் அடுத்து

585-

தில்லைச் சித்ரகூடம்
குலசேகர பெருமாள்
ராமன் தன்னை என்று கொலோ கண் குளிர காணும் நாளே
எங்கள் தனி முதல்வன்
எம்பெருமான்
கதிரோன் குல விளக்கு
சயன திருக் கோலம்
மேலே வீதி கோதண்ட ராமர் தனி சன்னதி
அரச மரம் ஸ்தலவ்ருஷம்
தனி கருடன் சன்னதி
ஹனுமான் பெரிய திருமணி
விஸ்வக்சேனர்
ராமானுஜர் திருப்பதி கோவிந்தராஜர் சந்நிதி நிர்மாணம்
தொட்டாசார்யர் சோளங்கி புறம் அக்காரக் கனி ஸ்ரீனிவாச மகா குறு
பிரதிஷ்டை மீண்டும் சிதம்பரம்
யானைபெருமிதம்
சிங்கம் தேஜஸ்
அநேக வாகனங்கள்
55 சர்க்கம் -58
அகம்பனன் ஹனுமான் முடித்து
நீலன் பிரகச்தன் முடித்து
வஜ்ரதந்தனை அங்கதன் முடித்த பின்பு
அகம்பனன் ராவணன் மந்த்ரி
துர்நிமித்தம் இடது கண் துடிக்க
ஆகாசம் ஒலி கேட்டு
ஊழிக் காற்று போலே
அரக்கர் தங்களையே அழிக்க
தூசி பறக்க
ரத்த ஆறு தண்ணீர் தூசி கலசி
ஆஞ்சநேயர் 56 சர்க்கம்
மைந்தன் நலன் கூடி வந்து
மகா தேஜஸ்
மலை எடுத்து வீசி
பாணங்களால் உடைத்து
மரம் வீசி முஷ்டியால் அடித்து
நகம் முஷ்டி மலை மரம் இவையே ஆயுதம்
57 சர்க்கம்
யுத்த களம் சுற்றி பார்த்து ராவணன் சேனாபதி பிரகச்தன் ஆணை

586-
தில்லை நிகர் –எல்லையில் சீர் -நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவார்களே –
105 பாசுரங்கள்
திறல் விளங்கு மாருதி உடன் இருந்தான் தன்னை
தன உலகம் புக்கது ஈறாக
குலசேகர பெருமாள் –
வராத ராஜ பெருமாள் அபயஹச்தம்
பெரும்தேவி தாயார் ஆகார த்ரய -வல்லபாம்
பிரகச்தன் இடம் ராவணன் பேச
வானரங்கள் திட்டம் இட்டு சண்டை போட அறியார்
மாய யுத்தம் அறியார்
நாமோ ஆகாசத்தில் கூட நின்று சண்டை போடுவோம்
பிரகச்தன் முன்பு சீதை திரும்பி கொடுக்க சொன்னான்
இப்பொழுது சண்டை ஆரம்பம் ஆனபின்பு
முன் வைத்த காலை பின் வைக்க கூடாது
உனக்காக போராடி மடிவேன்
நான்கு சேனாபதிகள் கூட்டிபோக
மீண்டும் துர் நிமித்தங்கள்
சுழல் காற்று வீச
விட்டில் பூச்சி விளக்கில் விழுந்து
நீலன் கைகளால் அடி பட்டு மாண்டு போக போகிறான்
ராமன் அவன் வீர வேஷம் கண்டு யார் விபீஷணன்
மூன்றில் ஒரு பங்கு சேனைகள் அதிபதி
த்விபிதன் துர்முகன் ஜாம்பவான் அவன் சேனாபதிகளை முடிக்க
ரத்த சேறு பெருக
நீலன்   தவந்த யுத்தம்
மரம் வேரற்று விழுந்தால் போலே விழுந்தான்
ஆனந்தம்
59 சர்க்கம்
ராவணன் யோசிக்க
தானே தான் போக வேண்டும்
அரக்கர் கூட்டம் புலம்ப
தேரிலே அமர்ந்து 9 சேனாபதிகள் புடை சூழ்ந்து
மேகம்  கடல் போலே
யானைகள் சூழ
இந்த்ரஜித் அகம்பனன் மகோதரன் பிசாசன் கும்பன் நிகும்பன் போன்ற 9 பேர் புடை சூழ வர –

——————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-567-576..

July 28, 2014

567

ராமாயா ராம சந்த்ராயா–சீதையா நம
பிரசன்னா ரகுநாத பெருமாள் திருக் கோயில்
நீண்ட திரு உருவம்
திருஷ்டி ஆலத்தி கழித்து  திரு அந்திக் காப்பு
குறை இல்லாமல் இருக்க கண் எச்சில் படாமல் பல்லாண்டு
அத்யத்புத திருக் கோயில்
பக்தாஞ்சலி ஆஞ்சநேயர்
அணை கட்டி முடிக்க பட்டது
இலங்கை வந்து சேர்ந்தான்
கோஷம் கேட்க
கருட வ்யூஹம் வைத்து
சுகனை விடுதலை பண்ணி
செய்தி சொல்ல சொல்லி
பலம் அறிவான்
நடக்க முடியாததை செய்தார்கள்
24 சர்க்கம்
பூமி நடுங்க குரங்குகள் ஆரவாரம்
வாத்தியங்கள் ஓசை
சீதை சிறை -மனஸ் அளவில் சீதை அடைந்து –
அங்கதன் -நெஞ்சு பகுதியில்
ரிஷபன் வலது பக்கம்
கந்த மாதவன்
சேனை உடன் தலைவர்
தலை பகுதி ராமன் லஷ்மணன் ஜாம்பவான்
தான் முன்னே நிற்கும் தலைவன்
முதல் அடி தான் வாங்க
தேர் ஒட்டி முன்னாள் கிருஷ்ணன்
பார்த்த சாரதி இன்றும் சேவை
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும்
சுக்ரீவன் வால் பகுதியில் இருக்கட்டும்
சுகனை விடுதலை செய்ய ஆணை இட்டார்
ராவணன் இடம் சீதை கொடு இல்லை உயிர் விடுசொல்லி
அக்கரை போனதும் ராமன் விட்டதும் சொல்லி
கோபம் வந்தது ராவணனுக்கு
சிறுவன் மகாத்மியம் அறியாமல் பேசினான்
குபேரன் யமன் சூர்யன் பயப்பட
25 சர்க்கம்
சுகன் சாரணர் வேற ரூபம் உடன் சென்று செல்ல சொல்ல
சேனை உடன் கலந்து
வானர சைன்யம் உடன் கலந்து
யார் தலைவர்
பலம் பலவீனம்
குரங்கு வேஷம் கொண்டு போக
ஆசை கொண்டு மயக்க முடியாதே
கை கூப்பி அஞ்சலி ஒன்றே
விபீஷணன் உஜ்ஜீவித்தானே
சேனை எண்ண முடியாதே
மாறு வேஷம் விபீஷணன் அறிந்து
கட்டி ராமன் இடம்
கிருதாஞ்சலி
பலா பலங்கள் அறிய வந்தோம்
விபீஷணன் இடம் நீயே காட்டு
தனி வீரன்
பார்த்து கண்டதை சொல்லப் போகிறார்கள் –

568
மிக்க இறை நிலையும் –ஓதும் குருகையர் கோன்
1102 பாசுரங்கள் திருவாய் மொழி
நல்ல ராமர் நல்ல சென  வானர கணக்கை சுக சாரணர் பேச
ஒற்றர் சொல்ல
சண்டை போடலாம் சீதையை திரும்பி கொடுக்க வேண்டும் இரண்டில் ஓன்று
பஞ்ச முக ஆஞ்சநேயர் பெரும் களத்தூர்
அர்த்த பஞ்சகம்
அஞ்சு கருத்துகள்  அறிய வேண்டியவை
திரு வாய் மொழி சொல்ல வந்தவை
நரசிம்ஹ ஆஞ்சநேய  ஹயக்ரீவ
சக்கரத் ஆழ்வார் விஜய வல்லி
16 திருக்கரங்கள்
பின்னால் நரசிம்ஹர் சேவை தெள்ளிய சிங்கர் பெருமை தான்
நான்கு திருக் கரங்களிலும் சக்கரம் பிடித்து சேவை
லஷ்மி நரசிம்ஹர் உத்சவர்
ஆயுள் ஆரோக்கியம்  ஐஸ்வர்யம் மூன்றும் அருளி
25 சர்க்கம்
ராமனுக்கு ஜெயா பல்லாண்டு பாடி சுகன் வர
ராமன் லஷ்மணர் சுக்ரீவன் விபீஷணன் நால்வரும் சேர்ந்து
வெற்றிக்கு
பகை வேண்டாம்
மைதிலியை தாசரதி இடம் கொடுத்து
கருணை நேர்மை புரிந்து கொண்டு
ராவணன் பிடித்த முயலுக்கு மூன்றே கால்
சர்வ தேவர்கள் திரண்டு எதிர்த்து வந்தாலும் பயம் இல்லை
கோபம் மிக்கு
அரண்மனை உட்பரிகை ஏறி
சேனையில் யார் யார்சொல்லு கேட்கிறான்
சூரர் மகா பலர் இஷ்டப் படி உருவம் கொள்வார் யார்
சுக்ரீவன் மந்த்ரிகள் யார்
பெரிய வானரங்களை அறிமுகம் செய்ய
இந்த அடுத்த சர்க்கம் இதுவே
இலங்கையை அழிக்க வல்கவர் ஒவொருவரும்
ஹனுமான் போல துல்ய வீரர்கள் இவர்கள்

569

30 லஷம் வானர வீரர்கள்
சரபன் 40 லஷம் வீரர்கள்
பனசன் அடுத்து 50 லஷம் வீரர்கள் புடை சூழ
வினதன்
கதனன் அடுத்து விக்ராந்த பலவான் தேஜஸ்வி
கோடி கணக்கான வானரர்கள்  எங்கே ராவணன் தேட
கருட வ்யூஹம் எதிர்க்க முடியாதே
எண்ணிக்கை அதிகம்
உத்சாகம் மிக்கு இருக்க –
ராஷஸ வீரர்களும் அதிகம்
பிராப்த உகந்த கைங்கர்யம் ஈடு பட்டு வானர வீரர்கள்
அதி முக்கிய வீரர்கள் இனி மேல் அறிமுகம்

570

571

பஞ்ச முக ஆஞ்சநேயர் சேசை
அர்த்த பஞ்சகம்
தொண்டுக்கே திரு வடி
28 சர்க்கம்
துர்க்காம் -மலை போலே சுக்ரீவன் நிற்க
கணக்கு அப்புறம் சொல்கிறார்

572

சித்திரங்கள் பல ஸ்ரீ ராமாயணத்தில் இருந்து
அஞ்சனானந்தம் -சீதை சோகம் போக்க ஸ்ரீ ராம திரு நாமம்
அந்தசோகம் ஆகிய நெருப்பை கொண்டு இலங்கையை எரிக்க
பட்டாபி ராமர் கொலு வீற்று இருக்க
30 -40 சர்க்கம் ராம ராவணயுத்தம்
ஒற்றன் சொன்னதை பார்த்தோம்
என்னை புரிந்து
ராமன் கருணையால் தப்பித்தேன்
சீதைதிருப்பி கொடு இல்லை சண்டை போடு
வானரர்கள் யார் மகன்
சோமன் -ததிமகன்
அங்கதன்
வாயு புத்திரன்
அக்னி புத்திரன் நீலன்
பெருமை சொல்ல இயலாத

573

ராமாயா ராமசந்த்ராயா–சீதையா பதயே நாம
ஸ்ரீ ராம நாம மகிமை
ஹரே ராம ஹரே ராம
ரமேயிதி ராமாய
2 கோடி ராம நாம நாமங்கள்
ஒருவரே 50 லஷம் ஸ்ரீ ராம நாமம் எழுதிக் கொடுத்து
ராஜ கீழ்ப்பாக்கம்
பட்டாபி ராமர்
அனைவர் உடன் சேவை
பஞ்சாயிதனம் வடக்கே
குடும்பத்துடன் சேவை
பாண்டி பஞ்சவடி
கும்பகோணம் ராமர் திருக் கோயில் அமர்ந்த
பட்டாபி ராமர் இடது பக்கல் சீதை
கல்யாண ராமன் வலது பக்கம்
சீதை த்யாகம் பக்தி உறுதி
பரதன் ராமன் திரு உள்ளம்
சத்ருக்னன் -பாகவதர் தொண்டு
ஆஞ்சநேயர்-பெருமாள் பிராட்டி அடியார் அனைவருக்கும் தொண்டு
மாயா சரஸ் பார்த்து வருந்தி சீதை
கடலை கடந்தாய்
ராவணன் இடம் அழிவாயா
ராவணா ராமன் சரீரம் உடன் என்னை சேர்த்து வைப்பாயா
ராவணன் தேடி சேனாபதி ஆள் வர
ராவணன் நாடகம்
பிரகச்தன் ஆலோசனை
பொய்யான தலையும்வில்லும் மறைந்து போக ராவணன் புறப்பட்டதும் போக
அத்தனையும் போய் மாயையால்
பிரகச்தன் இடம் ஆலோசனை
அரக்கர்களை கூட்ட
சேனையை சேர்க்க
கடைசி வரை முடிவு எடுக்காத தன்மை
பறை அடித்து சேர்க்க சொல்லி
எந்த லார்யம் சொல்லாமல் கூப்பிட
வருவார்களோ மாட்டார்களோ ஐயம் இருக்க
33 சர்க்கம்
சரமா விபீஷணன் மனைவி உண்மை எடுத்து  சொல்ல
பொய்யான தலை
திரிஜடை கனவு முன்பு பார்த்தோம்
குடும்பமே நல்லது செய்ய
சரமா ஆஸ்வாசம் படுத்த
மென்மையாக பேசி
இங்கேயே இருந்து நல்லது பேசும் ஏற்றம்
ராமனை கொள்ள முடியாதே
கையில் வில் உண்டே
உலகை காப்பவன் உன்னையும் காப்பவன்
ராஜ தர்மம் அறிந்தவன்
மாயாவி நாடகம்
சோகம்  தீரும்
வானரங்கள் சப்தம் கேட்கிறதே
ஒலிகள் சிங்க நாதம், ராமன் இருப்பதை காட்டுமே
உன்னை மடியில் அமர்த்தி அயோதியை கூட்டிப் போவான்
பட்டாபிஷேகம் நடக்க போகிறது
34 சர்க்கம்
ராவணன் செய்யும் மந்திர ஆலோசனை செய்வதைபார்த்து வருவேன்
சரமா புறப்பட்டு போகிறாள்

574

ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம தத் துல்யம்
யார் பேசினாலும் ரசிக்கும்
மாருதி நகர் -கோடி நாம -எழுதப்பட்ட மேடை
ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம்
திரு மேனியும் ஸ்ரீ ராம நாமம்சொல்லிக் கொண்டே
ஸ்ரீ ராம ஜெயம் எழுதும் பழக்கம் உண்டே
தொண்டர்கள் கடமை
சாந்தி நிலவும்
ஐஸ்வர்யம் மட்டும் போதாதே இறை உணர்வும் பக்தியும் வேண்டும்
ராம பிரபு-சொல்லிக் கொண்டே
34 சர்க்கம்
சரமா ராவணன் பேசுவதை கேட்டு வர போகிறாள்
மறைந்து இருந்து பார்க்கும் சக்தி கொண்டவள்
ஒதுக்கு புறத்தில் யாரும் கேட்காமல் திருநபி வந்து சொல்ல
விருத்தமான மந்த்ரி தாய் இருவரும் சீதை திரும்பி கொடுக்க உபதேசம் செய்தார்கள்
பல முறை சொல்லியும் மறுத்து
சண்டை இட்டு ஆள நினைக்கிறான்
ராஜாசர் அழிவு காலம்
தப்பு வழி-திருந்த வாய்ப்பு இருந்தும் திருந்தாமல்
வாய்ப்பை பலன் படுத்தாமல் ego
வானர ஆரவாரம்
அனைவரும் நடுங்க
மன்னவர் குற்றம் தங்களை  அழிக்கும்
35 சர்க்கம்
மால்யவான் உபதேசிக்க
வானரங்கள் ஆரவாரம் மிக்கு
மந்த்ரிகளை வசவு பாடுகிறான் ராவணன் –
ராம விக்கிரமம் அறிந்து வென்றே தீருவார் அறிந்து
துர்தசையிலும் உண்மை பேச மந்த்ரிகள்
மால்யவான் பேச
சாம  பேத தானம் அப்புறம் தண்டம்
சீதை திருப்பி கொடுத்து ராமன் இடம் நட்பு
தேவர்கள் தர்மம் பக்கம்
த்ரேதா யுகம் தர்மம் தான் வெல்லும்
அரக்கர் தர்மம் ராஜ தர்மம் மீறி நடக்கிறாய்
கலி யுகம் -அதர்மம் தலை தூக்கும்
ரிஷ்கள் சாபம் பெற்று இருக்கிறாய்
தர்மம் காக்க ரிஷிகள்
சுபாகு மாரீசன் விஸ்வாமித்ரர் யாகம் அழிக்க
மனிசர் வானரர் -மூலம் சாக -வரம் பெற வில்லை
துர் நிமித்தம்  பல தெரிய

575
ஆஞ்சநேயர் முக்ய பிராண தேவதை
ஹனுமாம் கதி
அயோதியை காக்கும் திருக் கோயில்
திரு மார்பும் வாயும்வேங்கை வாசல் தனிக் கோயில்
வியாசராயர் பிரதிஷ்டை
5 அடி உயரம் வெண்ணெய்   காப்பு
அஞ்சேல் -வலது
சௌகந்திகா புஷ்பம்
வடை மாலை வெற்றிலை மாலை
ஏலக்காய் மாலை
பக்தர் இஷ்டப்   பட்ட படி –
35 சர்க்கம்
மால்யவான் நல்லது சொல்ல -துர் நிமித்தம் தெரிய –
மேகம் ரத்தம் மழை பொழிய
நஷத்ரம் ஒளி இல்லாமல்
நதிகள் திசை மாறி
பூத்து குலுங்கும் செடி பூக்காமல்
நரி ஊளை இட
கால தேவன் வாசலில் வந்து சிரிக்க
சீதை சமர்பித்து விட சொல்ல -கேட்காமல்
36 சர்க்கம்
கைலாசம் அசைத்தவன்
கடலைக் குடிப்பேன்
தொடை நடுங்கி அஹிதம் பேசுகிறீர்
மனிதன் காட்டு பழம் தின்னும்
தகப்பனால் வெளி ஏற்றப் பட்டவன்
வானர -சுக்ரீவன் அழிப்பேன் பார்ப்பீர்
மால்யவான் ஜெயா வெற்றி உண்டாகட்டும் சொல்லி விலக
கிழக்கு பிரகச்தன்
தெற்கில் மகோ பார்ச்வன்
மேற்கில் இந்திர ஜித்
வடக்கு சுகன் சாரணன் தானே இருந்து
இறுமாப்பு கொண்டான்
ராமன் 37 சர்க்கம்
விபீஷணன் சொல்ல
நளன்-மைந்தன் -அங்கதன்-
நான்கு சிஷ்யர் அனுப்பி -விபீஷணர் நண்பர் பெயர்கள் அனலன் சம்பாவி நான்கு பெயரும் சென்று கண்டு
10000 சேனை ரதங்கள் 20000 குதிரை
கோடி அரக்கர் தயார்
ராவணன் குபேரன் உடன் 60 லஷம் பேர் உடன் கூட போக
வானர சைன்யம் அரக்கர் சைன்யம் வெல்லும்
கிழக்கு நீலன்
தெற்கு அங்கதன்
ஹனுமான் மேற்கு
தானே வடக்கு -இலக்குவன் உடன்
சுக்ரீவன் ஜாம்பவான் நடுவே
7 பேர்
தவிர மனிசர் வடிவம் இல்லாமல்
ராமன் லஷ்மனர்விபீஷணன் நால்வர்
மற்றவர் வானர வேஷம் தான்

576

நமோ கோதண்ட ஹஸ்தாயா –
அம்பு கொண்டு அடியார்களை ரஷித்து -விரோதிகளை அழித்து-
அரச குடி -விருத்தாசாலம் அருகில் -கோதண்ட ராமர் கோயில் பூவரகம் –
இயற்க்கை எழில் மாறாத
ஸ்ரீ மூஷ்ணம் -ஸ்ரீ பூவராஹா பெருமாள் ஆஸ்தானம்
ஓலைச் சேவடிகண்டார்கள்
சக்கரத் தண்ணீர் அருகில் கிடைத்த திரு விக்ரகம்
காங்கேய மன்னன் செப்பன் இட்டுபிரதிஷ்டை செய்தான்
கருட ஆழ்வார் விஷ்வக் சேனர் நம் ஆழ்வார் சேவை
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
38 சர்க்கம்
திரிகூட மலை மேல் இலங்கை
சுபேதா மலை மேல் ஏறி ஸ்ரீ ராமன் இலங்கை பார்க்க
இலக்குவன் சுக்ரீவன் கூட்டிப் பார்க்க
பௌலச்ய குல மரியாதை மீறி
இலங்காம் ராவண பாலிதாம் –
அனைத்தையும் கண்டார்கள்
விபீஷணன் விளக்கி கூற
39 சர்க்கம் –
சூர்ய ஒளியில் இலங்கை காண
சம்பக அசோகா வகுள சால ஆல மரங்கள் கண்டார்கள் –
பெரிய காடுகள் முதல் மலையில்
குரங்குகள் அங்கெ செல்ல ஆசை
குழப்பம் ஏற்படுத்தினார்கள் அங்கெ சென்று
100 யோஜனை அகலம்
10 யோஜனை நீளம் 20 யோஜனை அகலம் நகரம்
தோரணங்கள் பல கண்டு
கோட்டை கதவுகள்
40 சர்க்கம்
சுக்ரீவன் மல் யுத்தம்
மைய மண்டபத்தில் ராவணன்
கால் பிடித்து சாமரம் வீச செருக்குடன் ராவணன் இருக்க
வெண் பட்டாடை சந்தனம்பூசி இருக்க
ஐராவதம் குத்தி அகன்ற மார்பு
சுக்ரீவன் கண்டு கோபித்து
தாவ –
கிரீடங்களை உத்தைது
மல் யுத்தம் மூண்டது

———————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-557-566..

July 28, 2014

557-

நாக அஸ்தரம் கருடன் ராமன் கைங்கர்யம்
அபய ஹஸ்தம்
போருமே என்ன்றும் சொல்லியருளும் முத்தரை
18 சர்க்கம்
3/13/33/ஸ்லோகங்கள்
விபீஷணன் சரணா கதி
சக்ருத்-ஒரே தடவை
மூன்று தடவை சரணம்
கருத்து சொல்லி
பவந்தம் -உன் திருவடிகளை பற்ற வந்தேன்
திரு உள்ளம் கருத்து தெளிவி படுத்த
பவந்தம் சரணம் கத -வேறு பிரயோஜனம் இல்லை
மூன்றாவது தடவை திருவடிகளில் விழுந்து
ராகவம் -சீதை முன்னிட வில்லையே
பிராட்டி பற்றாத படியால் கைக் கொள்ள கூடாது
தவாச்மி ச -உனக்கும் அடிமை
உம்மை தொகை
பிராட்டிக்கும் அடிமை நினைவு கொண்டு பேச
வலிய சிறை புகுந்தாள்
ராவணன் அழிக்க போக வில்லை
ஜகன் மாதா
நல்லபில்ல்கை தயார் படுத்த
கடாஷம் அருளி
ஆனயேனம் ஹரிஸ்ரேஷ்ட
சீக்கிரம் கூட்டி வர சொல்லி

558

ஆழி மழைக் கண்ணா –சார்ங்கம் உதைத்த சர மழை போல்
விராட பர்வதம் பாராயாணம் –
மழை பொழிய –
ராமன் சம்பந்தம்
வாழ உலகினில் பெய்திடாய்
தண்ணீர் மழை பொழிய
கருணை மழை பொழிய
கோதண்டம் இருந்து
வளைந்த திருக் கழுத்து
ஆஞ்சநேயர் -தினமும் பருகி இளைமை மாறாமல் சேவை
உத்சாகம் மாறாமல்
ஹாரத்தி
வெறும் புறத்தில் ஆலத்தி கழிக்க வேண்டும் படி இருக்கும் அழகு
கர்ப்பூர நீராஞ்சனம்
மங்களார்த்தம்
விபீஷணன் -சுக்ரீவனை அனுப்பி கூட்டி வர சொல்லி
யார் மூலம் வந்தானோ
பாகவதன் மூலம் இருவரும் சேர
நெருங்கிய தொடர்பு
மத்தியஸ்தர் வேண்டுமே
புருஷோத்தமன் -அவன்
நாம் எல்லாம் ஸ்திரீ பிராயர்
சரணம் சொல்லி மன்னிப்பு
பாகவதர் shock  absorbar   போலே
விபீஷணன் மேல் -சுக்ரீவனுக்கு நேரடி கோபம் இல்லை
சரணம் சரனௌ பிரபத்யே தஞ்சமாக பற்றி
கத்யர்த்தம் புத்யர்த்தம்
புத்தியால் பற்றுவதே
வேறு புகல் இல்லை
உறுதி கொண்டு
செயல் இல்லை
புத்துணர்வு மட்டுமே சரணா கதி
அனைத்தையும் விட்டு உன்னையே பற்றி
அறிவு வர ஒன்றையும் கொள்ளாமல் பற்ற வேண்டும் -நான்கு அரக்கர்கள் உடன் குதித்தான் ஆகாசத்தில் இருந்து

559

பொலிக பொலிக பொலிக
சாந்தி சாந்தி சாந்தி
19 சர்க்கம்
சமுத்திர ராஜன் இடம் சரண் அடைகிறார்
தாமரை கண்ணன்கதிரவன் சிறுவன் –சுக்ரீவன் குலத்துக்கு சிறந்த
சரணம் அடைந்தால் பிராணன் விட்டே கூட காப்பாற்றும் குணம்
பொற் பாதம் தொழுதியால்
ராவணன் தம்பி திருவடி விழுந்து
துரந்து உன் திருவடிகளே சரண் என்று வந்தான்
சர்வ தரமான் சர்வ காமான் பரித்யஜ்ய
உலகம் அளந்த பொன்னடியே அனைத்தும்
எல்லாமாக திருவடியை பற்று
வாசுதேவன் சர்வம் -மகாத்மா துர்லபம் கண்ணன் கீதை
வஷசா அணைத்து கொண்டான் ராமன்
காக்க வைத்தோம் நொந்து போய் இருப்பானே
கண்ணீர் நீர் விழ
மனசில் புண்ணை ஆற்ற
பேச்சாலே குளிர தடவி
கண்களால் பருகினான்
வாக்கால் சமாதானம் செய்து
கேட்டதும் உருகினான் விபீஷணன்
அவனோ இஷ்வாஹு குலதனம்
நாமோ ராவணன் தம்பி
உருகினான் பருகினான்
ஆதி மூலமே அரை குலைய தலை குலைய
சென்று நின்று தொட்டு கஜேந்திர வரதன் கபீச்தலம்
புண் பட வைத்தேன்
விபீஷணா உன் மனம் பின் பட வைத்தேன்
மேல் உத்தரீயம் ஒத்தி ஒத்தி வேதி கொடுத்து
பக்தர் உள்ளம்
இருக்கும் வியந்து என்னை பொன்னடி கீழ் –கண்டு கொண்டே வீற்று இருந்தான்
அரக்கன் பின்னே தோன்றிய இழவு தீர இளையவர்க்கு வைத்த மௌலி அடியேனுக்கும் அருள வேண்டும் –

560-

பிருந்தாவனம் இருஞ்சி நிலம் காடாக இருக்க
மேய்ச்சல் நிலமாக மாற்றி ஓடே இரவில்
பிருந்தாவனத்தில் ராமன் ஆஞ்சநேயர்
அயோத்யா மதுரா–
அயோத்தியில் ராமர்
கிஷ்கிந்தையில் ஆஞ்சநேயர்
பிதுக் கோட்டை தஞ்சாவூர் சாலை -பிருந்தாவனம்
இரண்டு மூலவர் -ஒரு உத்சவர்
சஞ்சீவி பர்வதம் தூக்கி சேவை விமானத்தில்
அபயஹஸ்தம் சேவை
19 சர்க்கம்
அதர்ம வழி விட்டு தர்ம வழி வந்தாலும் சங்கை
ராமன் கால தாமதம் இல்லாமல் உடனே தம் கோஷ்டியில் சேர்த்து கொண்டு
அரக்கர் பலம் பலவீனம் என்ன
உங்கள் நாட்டில் என்று கேட்க வில்லை
நீ நடவடிக்கையால் அரக்கரில்லை
நின்னோடும் எழுவர் ஆனோம்
தம் கோஷ்டி
விபீஷ்ணச்து தர்மாத்மா
பிறப்பால் இருந்தாலும் பண்பால் இல்லையே
ப்ரஹ்மா தவம் புரிந்து பெரிய வரம்
ப்ரஹச்தன் சேனாபதி
இந்த்ரஜித்
கும்பகர்ணன்
பல வீரர் உண்டே
அனைவரையும் அழித்து உன்னை பட்டாபிஷேகம் செய்வேன்
அதே இடத்தில் லஷ்மணன் வைத்து பட்டாபிஷேகம்
இக்கரையிலே செய்து
கூரத் ஆழ்வான் பரத்வம் பீரிட்டு வந்த செயல் பராத்பரன்
அதிமாநுஷ ஸ்தவம்
குரங்குகளை வைத்து அணை கட்டி
நேர்மையான மனிசன் -கடவுள் மரியாதா புருஷோத்தமன்
தம்பி -அரசே வேண்டாம்
விஜ்வரா பிரமோதா –
மாடு புது கன்று குட்டி பால் கொடுக்க -ஆசை
சுக்ரீவன் பழைய
அன்று ஈன்ற கன்று விபீஷணன் –
கடல் அரசன் இடம் சரண் அடைய சொல்கிறான்
தனக்கு கை கண்ட மருந்து

561

அஞ்சனானந்தம் –
வெண்ணெய் காப்பு
அரசர் போன்ற அலங்காரம்
அழகன் அலங்காரம்
பக்தி தான் -அலங்காரம்
எறும்போ ஈ தொடாதே
ஏலக்காய் வெற்றிலை மாலை
அபயஹச்தம்
வீர திருக்கோலம்
புராதன் பக்தி ஆஞ்சநேயர்
20 சர்க்கம்
விபீஷணன் இடம் கேட்டு பாலம் அணைகட்ட
கடலில் ஆணை கட்ட
சமுத்ரம் ராகவோ கச்ச சரணம்
உலகம் ராமன் திருவடி பற்ற
தனக்கு கண் கண்ட மருந்து
எருது கெட்டாருக்கும் கடுக்காய் போலே
இவனுக்கு பலித்த சரணா கதி
தொழுகை ஏற்றுக் கொள்ள வேண்டியவன்
வானர படைக் கடல் சமுத்திர கடல்
ஒற்றனை அனுப்பி ராவணன்
ஆபத்து நெருங்கி
தூதன் போலே
சுக்ரீவன் யாரோ யார் மனைவி தூக்க போனால் உனக்கு என்ன தூதன்
வாலி என் நண்பன்
பறவை ரூபம் எடுத்து கொண்டு வந்தான்
செய்தி சொல்லி
கேட்ட வானரர்கள் கோபம்
இறக்கை பிடித்து இழுக்க
ஐயோ
தூதன் கொல்லலாமா
ஹனுமான் வந்த பொழுது கொள்ளாமல் விட்டோமே
ராமன்   விட சொல்லி
மீண்டும் பறந்து சுக்ரீவா செய்தி என்ன
நான் நண்பன் இல்லை
ராமனுக்கு விரோதி ஆனால் அவன் அழிவான்
சொல்லு
அனைவரும் அழிவார்கள்
தூதன் இல்லை
ஒற்றன் போலே வந்தவன்
விட சொல்லி
21 சர்க்கம்
ராமன் சரணா கதி
கடல் முன்னே கடல் படுத்து
குணக்கடல் சமுத்ரம் முன்னே கிடந்தது
உத்தரீயம் கட்டி தர்ப்பம் அணையாக கிடந்தது  பட்டினி கிடந்தது சரண்
ஆயிரம் பசு மாடு தானம் கொடுத்த ராமன் வழி வேண்டும் தானம் கேட்டு சரண் அடைகிறான் –

562-

563-

புனர்வசு -கௌச்துக அம்சம் –
பக்தி வளர்த்து ஷத்ரியன்-ஆழ்வார்
ராமன் சரித்ரம் கேட்டே ஆழ்வார் ஆனார்
கோதண்ட ராமர் சந்நிதி –
ஆழ்வார் ஆசார்யர் சேவை
குலசேகர பெருமாள்
பெருமாள் திரு மொழி
அகன்ற திரு மார்பு திண்ணிய தோள்கள்
ராமானுஜர் சேவை பிரபத்தி சாஸ்திரம் விரித்து உரைத்த தேசிகர்
21 சர்க்கம்
சமுத்திர ராஜன் இடம் சரண்
பலிக்க வில்லை
பணிவை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை சமுத்திர ராஜன் இடம்
கூடாத இடத்தில் பணிவை காட்டாதே
அடியேன் -புரிந்து கொள்ளும் பேர்கள் இடம் தான்
விஸ்வாமித்ரர் வசிசிஷ்டர் போல்வார் அறிவர்
பாடம் புரிந்து கொள்ள முடிவு
சாமம் சமாதானம் முடியவில்லை
தண்டனை
மயிலே மயிலே இறகு போடுமோ
வில்லை கீழே வைத்து கை கூப்பி சரண்
பலிக்க வில்லை
சௌமித்ரெ-வா
குறிப்பால் அறிந்து
நினைத்ததை செயல் படுத்தும்
அம்பால் பணிய வைக்க
சாபமாநய சொல் வேற
மட்டும் கொண்டு வர
சரமம்
குச்சி கொண்டுவர
விஷம்  கக்கும் சரம் கொண்டு வா
ஒரே தொழில் -படுக்கை தானே இருவரும் –
ஆதி சேஷன் கடல்   இரண்டும் படுக்கை ஸ்தானம்
வெள்ளை வெள்ளத்தை –கள்ள நித்தரை கொள்ளும்
கடலை கலக்க
சாகரம் சோஷயிஷ்யாமி
மைதானம் -குரங்கு நடந்து போகும்
ஊழித் தீ போலே முகம் கோபம்
குணம் ஏறி குன்றின் மேல் நின்றவன் கோபம் தாங்க முடியாதே
நாண் ஒலி எழுப்ப
லோகம் நடுங்க
22 சர்க்கம்
கடல் அரசன் மன்னிப்பு
சேது அணை கட்டி
சமுத்ரம் மத்யம் கடல் அரசன்
மலைக்கு மேல் சூர்யன் உதித்தால் போலே
கை கூப்பி
கங்கா யமுனா மனைவியர்புடை சூழ
ராகவம் -அப்ரமேயம் கைகூப்பி வந்தார்கள்

564

வில்லை கொண்டே அணை கட்டி
கோதண்ட ராமர் சேவை
வில்லில் மணி கட்டி
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்ய
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில்  வந்து சிதையாதே
வில் ஆண்டான் தன்னை
22 சர்க்கம்
ஐந்து பூதங்கள் நிலை மாறாதே
கை கூப்பி சரண் என்று கடல் அரசன் வர
உனக்கு பகைவன் யார் -அவனை அழிக்க அம்பு
ராமன் கூட அடியார்க்காக பொய் சொலவாரா  வால்மீகி
உத்தரேன-பாலை வனம் -திருடர் தண்ணீர் பருக
பாபச் செயல்கள்
கிழக்கு பார்த்து இருந்தவர்
வடக்குபார்த்து திரும்பி அம்பை விட்டார்
தேசம் தாண்டி திருடர்களை அழிக்க
கூரத் ஆழ்வான் -சங்கை
2000 மைல் தூரம்
ராவணன் அழிக்க திரும்ப வேண்டாம்
கிட்டே வேற
சேது கட்ட புண்ய பூமி ஆக்க
புண்ய பூமி ஏழு மலை நம் போல்வார் பிடிக்க
காடு  தண்ணீர் ரூபம்
ஏஷ சேது –விஸ்வ கர்மா பிள்ளை நளன்
வரம் உண்டு மறந்து இருந்தான் -கல் தொட்டு கொடுத்தால் மிதக்கும்
ஆடி பாடின
அணை கட்ட

565

ஸ்ரீ ராம ராமேதி
அமிர்தம் போன்ற திரு நாமம்
வால்மீகி திருத்தி பக்தன் ஆக்கிய பெருமை
ஆனந்தமான குடும்பம் மகிழ்ச்சி  தரும் மனோபாவம் கொடுக்கும்
நல்லது பலவும் ஏற்படும்
பிரசன்னா ஸ்ரீ ராமர் திருக் கோயில்
ரகுநாத பெருமாள்
புதுக் கோட்டை அருகில்
1828 ஸ்தாபனம்
ரகுநாத தொண்டைமான் எழுப்பிய
புத்திர பேரு வேண்டி பெற்றார்
நன்மை தெரிவிக்க திருக் கோயில்
ராம மந்த்ரம் ராம மந்த்ரம்
செல்வம் பெற கோபால மந்த்ரம்
சக்கரவர்த்தி -இரண்டே குழந்தைகள்
கண்ணன் பகு குடும்பி நிறைய குழந்தைகள் பட்டாபிஷேகம் இழந்த குளம்
2009 சம்ரோஷனம்
கருடன் சேவை
கின் கர சிறகு அடித்து கைங்கர்யங்கள் பல
அணைகட்டும் -22 சர்க்கம் –
சமுத்ரராஜன் வழி விட
நலன் தொட்டுக் கொடுக்கும் கல்கள் மிதக்கும்
naasa  புகைப்படம்
இருக்கலாம் –
இதிகாசம் நம் இடம்
விண் வெளி கோலம் மூலம்
lhs-rhs
பல்லாயாரிரம் ஆண்டுகள்
17 லஷம்
records  பல தெரிந்த காலம் தொடங்கி
த்வாரகை பழைய 5000 வருஷம்
எங்கும் ராமர் கோயில்
கோடிக் கணக்கான மக்கள் ஆழ்ந்து நம்பி
கல் பாறை வைத்து மிதக்க பட்டது
வானரங்கள் உத்சாகம்
5 நாள்கள் அணை கட்டு முடிக்க
14 யோஜனை முதல் நாள்
மொத்தம் 100 யோஜனை
தள்ளிப் போக பாறை எடுத்து
2 நாள் 20
21 22 23 3/4/5/நாள்கள்
குரங்குகள் மலையை நூக்க-
நிறைய குரங்குகள் மலை குறைய இருப்பதால்
அனைவருக்கும் ராம கைங்கர்யம்
குரு ஊசி மரம் தூக்கி போன கதை
குளித்துத் தாம் புரண்டிட்டோடி
கட்டட கலை அறியாமல்
மெதுவாக செய்கிறீர்களே
ஹனுமான் வேகமாக செய்ய வேண்டாமா
பூச்சு பூச மணலை
உடம்புசிலிர்த்து-
கொத்தனார் பூச்சு
கல் அடுப்பவர் சிற்றாள்
ஹனுமான் சந்தோஷம் இவை கைங்கர்ய ஆசை ஈடுபாடு கண்டு –

566

கலையும் -கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
-சிலையும் கனியும் துணையாக சென்றான்
வென்றி  செருக்களத்து
மலை கொண்டு அணை கட்டி
வாள் அரக்கர் தலை பத்தும் அறுத்து உகந்தான் சாள கிராமம் அடை நெஞ்சே
உத்சாகம் உடன் -சபல சித்தம் கொண்ட வானரங்கள் கொண்டு கட்டி உகந்தான்
நர்த்தன கிருஷ்ணன் சேவை
சந்தான கிருஷ்ணன் உருண்டு திரண்ட திருக் கைகள்
சக்கரத் ஆழ்வார்
செல்வர் -பழி சாதிக்க
தச மூர்த்தி என்பர் ஸ்ரீ ரெங்கம்
விஸ்வக்சேனர் ஆழ்வார் சேவை
லஷ்மி ஹயக்ரீவர்
ராமாநுஜர் தேசிகன்
பெரிய நீரை படைத்து
அங்கு கிடந்தது -உறைந்து
கடைந்து
அடைத்து -கல்லைக் கொண்டு
உடைத்து
தனுஷ்கோடி வில்லின் நுனி யாழ் உடைத்தான் –
போக்கு வரவு கூடாதே
புண்ய ஸ்தலம் ஆக்க
ஸ்ருங்கி புரம் இன்றும் தலையால் வணங்க
வானர படை அணைமேல்
சீமந்தம் நெற்றி வகுடு பிளத்தல்
வகுடு போலே அணை
மீன்கள் நிறைந்த
அங்கதன் தோளில் இலக்குவன்
ஹனுமான் தோளில் ராமன்
தேவதைகள் வணங்கி
கடல் அரசனுக்கு நன்றி சொல்லி
சுக நிமித்தங்கள் 23 சர்க்கம்
பகைவர்கள் அழிய
கரடிகள் குரங்குகள் ஜெயம்
சந்தரன் எரிக்குமா போலே
மலை முகடு நடுங்க
அந்தி நிறம் மிகவும் சிவந்து
பருந்துகள் தலை கீழ விழ
வெற்றி நிச்சயம்
குரங்குகள் தொண்டு
வைய நாதன் சரணம் வணங்கி
100 யோஜனை நீளம் 10 யோஜனை  அகலம்
மலை முந்நீர் அதர்பட கலங்கும்படி
சிறு வீடு மணல் கட்டி விளையாடுவது போலே அணையும் கட்டி

————————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-547-556..

July 28, 2014

547-

ஆபதாம் –ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம் –
பழைய வண்ணாரப் பேட்டை கோதண்ட ராமர் ஸ்ரீநிவாசன் திருக் கோயில் –
இரண்டு வாசல்கள் -பக்தி பிரபக்தி இரண்டு மார்க்கம் போலே
கோயில் காப்பான் வாசல் காப்பான் -இருவரையும்
ஆஞ்சநேயர் கை கூப்பி கதை பற்றி சேவை பக்த ஆஞ்சநேயர்
சேவை செய்வதேபக்தி பஜ சேவாயாம் தாது
16 சர்க்கம்
நான்கு பேர் கதை உடன் விபீஷணன் ஆகாசம் தாவி
இருவர் கை இருவர் கால்கள் பிரதிநிதி
சாஷ்டாங்க பிரமாணம்
கை கூப்பி நின் பாதமே தஞ்சம்
ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
அநந்ய கதி ஆகிஞ்சன்யம் இரண்டும்  –
உன் திருவடியே புகல் வேறு ஒரு போக்கிடம் இல்லை
அந்தரிஷகத ஸ்ரீ மான்
ராஷசன் தம்பி ஸ்ரீ மான் –
கெட்ட சகவாசம் துரந்து விட்டு வகுத்த-பிராப்தஸ்ரீ  ராமன் திருவடி சேர்ந்த ஸ்ரீ மதவம்
நல்ல வார்த்தை சொல்ல ஆள் இல்லை
பிடித்த வார்த்தை சொல்வார் பலர் உண்டே
கெட்ட காலம் நல்லார் வார்த்தை காதில் விழாதே
17 சர்க்கம்
சரணா கதி நுட்பமான கருத்துக்கள்
தனி ஸ்லோக வ்யாக்யானங்கள்
அபாய பிரதான சாரம்
ஆஜகாம முகூர்த்தம்
வந்தான்
சீக்கிரம் வந்தான்
எங்கு ராமன் இருந்தானோ அங்கு
ச லக்ஷ்மணன் -கூட இருக்கும் பொழுது
ஆஜகாம –
ராமன் இருக்கும் இடம் போனான் சொல்ல வில்லை
அவன் திருவடி நிழலே தன வீடு
கோயிலுக்கு வந்தோம் வீட்டுக்கு போனோம் சொல்ல வேண்டும்
விரைவாக வந்தான் ஆஜகாம மொகூர்தேனே
புத்தி பேதலிக்கும்
ராமன் விட இருக்கும் இடம் யத்ர ராமன்
ச லஷ்மணன் பாகவதர் மூலம் பற்ற –

548-

வேதம் கடல் கடைந்து திருவாய் மொழி அமுதம் கொடுத்தார் நம் ஆழ்வார்
வண்ணாரப் பேட்டை –
ஆழ்வார்கள் சேவை
விஷ்வக் சேனர் -சேவை
திரு கச்சி நம்பி சேவை
ராமானுஜர் மா முனிகள் சேவை
விபீஷண ஆழ்வான்
பிரகலாதன் ஆழ்வான் கஜேந்திர ஆழ்வான்
இலக்குவன் முன்னிட்டு சரண்
தம்பி சொல் கேளாத கோஷ்டி விட்டு தம்பி அஒல் கேட்பவன் கோஷ்டி வந்து
சரணா கத ஜாதி நாம் எல்லாரும்
அரக்கர் காகாசுரன் வாசி இன்றி
17 சர்க்கம்
சுக்ரீவன் பார்த்து ராமன் பேரால் பரிவால் நடுங்கி
பெரியாழ்வார் பரிந்து பல்லாண்டு அருள
சக்தன் என்ற எண்ணம் இல்லாமல்
மென்மை யானவன்  -பரிந்து
ஒரு விபீஷணன்
அநேக ஆயுதங்கள் கொண்டு வந்தா
ஒரே கதை கொண்டு
பிடித்த அழகிலே அறியலாமே அவன் வீரத்தை
அத்தை அஞ்சலி செய்து பிடித்து -கூப்பிய கைக்குள் கதை கொண்டு
ராமன் மர்மம் அறிந்து
அவனை உருக்கப் பண்ணுமே
அடிமை ஆவாரே கை கூப்பி அஞ்சலி செய்தால்
இத்தை நம்பியே நாம்
நம சொல்லி  அபசாரம் மன்னித்து விடுவாய்
பெருமாளை உருக வைக்கும் அஞ்சலி
அனைவரையும் கொள்ள வந்தான்
ராமன் ஒருவனை அழித்தால் நாம் எல்லாரும் அழிவோம்
கேட்டதும் குரங்குகள் மரம் மலை கைகளில் கொண்டு
திரு வெண் கொற்றக் கோடை சாமரம் செய்து அடிமை செய்தது போலே
குரங்குகள்
இதுவும் ராமனுக்கு தொண்டே
கால் கீழே வைக்க வில்லை
அரக்கன் ஆகாசத்தில் நிற்க வல்லவன்
பற்று ஆலம்பனம் பிடிமானம் இல்லையே
ராமன் திருவடி பற்றியே ஆலம்பனம்
ராமன் அனைவருக்கும் பொது என்றான் –
எல்லா தீமைகளும் உள்ளவன் சொல்லிக் கொண்டான்
முதலிகள் பற்றி பெருமாளை சரணம் அடைகிறான் –

549-

அகலகில்லேன் இறையும்–உன் அடிக் கீழ் இருந்து புகுந்தேன்
கோதண்ட ராமர் ஸ்ரீநிவாசன் திருக் கோயில்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -திருவடி காட்டும் திருக்கைகள்
பிராட்டி புருஷகாரமாக பற்றி
17 சர்க்கம் –
விபீஷணன் -வலியச் சிறை புகுந்ததே -இவனை கடாஷிக்க
லக்ஷ்மணன் முதலிகள் திருவடிகளில் விழுந்து
12 ஸ்லோகம் பேச
ராவணன் தீய நடத்தைகொண்டவன்
அவன் தம்பி அதே கர்ப்பம்
அவன் பாபங்களும் சேர்ந்து உண்டே
தனக்கு உள்ள குற்றங்களை சொல்லிக் கொண்டு சரணம் புக
துடிப்பு வேண்டுமே
சரணாகதன் தவிக்க வேண்டும்
பயம் சோகம் வந்தாலே சரணாகதன் ஆவோம்
கையாலாத நிலை
அழைத்து போக அவன் வர தடுக்க மாட்டோம்
ஷட்வித -வேண்டுமே –
ஆனுகூலயச்ய சங்கல்பம்
பிராதி கூலச்ய வர்ஷனம்
ரஷிச்ய விசுவாசம் -lift  நம்பி ஏறுகிறோம் ஜடப் பொருள்
தாய் தந்தை காப்பார்கள் உறுதி வேண்டுமே
விழுந்தால் பிடிக்க அம்மா இருக்க குழந்தை படி ஏறுகிறதே
அடிப்படை குணம்
சொத்து அவனது
உடையவன் விட மாட்டான்
வர்ணம் -ரஷிக்க வேண்டி
கார்ப்பண்யம்
ஆத்மா சமர்ப்பணம்
தோள்களை  ஆரத் தழுவி இவ்வாவியை ஆரவில்லை செய்தனன்
ஆறும் வேண்டும்
சர்வ லோக சரண்யா ராகவாயா நமஸதுதே
நிவேதயாத -அனைவரையும் பார்த்து
மாம் ஷிப்ரம்
சீக்கிரம் சடக்கெ என
ராகவா
மகாத்மானாம்
சர்வ லோக சரண்யாயா
சரணம் –

550

அநந்ய சாத்யே –மகா விசுவாச பூர்வகம் -சரணா கதி
குற்றங்கள் மலை போலே
சம்சாரம், போக்கி உடலை தொலைத்து -பாபங்களை நீக்கி -மோஷம்
ஆண்கள் பெண்கள் விலங்கு -அனைவருக்கும்
சித்தோ உபாய ச்வீகாரம்
திருவடிகளே உபாயம்
சீதா  தேவியால் அனுக்ரகிக்கப் பட்டு
முதலிகள் புருஷாகாரமாக
அலர் மேல் மங்கை தாயார் ஆண்டாள் சேவை
ஞானம் நலமான பக்தி வைராக்கியம்
வினக்ஸ மகா ரிஷி
திருமலை திருக் கண்ணா புறம் திரு வள்ளிக் கேணி வைகானச
ஸ்ரீ ரெங்கம் காஞ்சி ஆழ்வார் திருநகரி பாஞ்ச ராத்ரம்
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன் சேஷ பீடம்
ஆஞ்சநேயர் சேவை
நிவேதயதே மாம் ஷிப்ரம் -17 சர்க்கம்
சரண்யன் தகுதி
சரணா கதன் தகுதி
கால தேச நியமம் இல்லை -யாரும் பண்ணலாம்
த்ரௌபதி அந்த மூன்று நாளில் செய்து பலன் பெற்றாள்
விபீஷணன் முழுக்கு போடாமல் சரணம்
யார் காலில் விழ வேண்டும் -நியமம் உண்டு
புருஷோத்தமன் புண்டரீ காஷன் ஸ்ரீ யபதி
சர்வ லோக சரண்யன்
ராகவன் -ரகு குலம் எளிமை உண்டே
மகாத்மா -மேன்மை
பரத்வம் சௌலப்யம் இரண்டும் பறை சாற்றப் படுகிறது
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் -சோகம் மூன்றும் நமக்கு தகுதி
மாம் ஷிப்ரம்
நிவேதிக்க   வேண்டும்
நிர்வேதிக்க கூடாது
நல் வார்த்தை சீக்கிரம் சொல்ல வேண்டும்
சுக்ரீவன்
தப்பான நேரம் தப்பான எண்ணம் ராஷசன் தம்பி சுக்ரீவன்
சொல்லி இருப்பதற்கு நேர் மாறாக
எப்படி நம்ப
விரோதி சீதை தூக்கி போனவன் தம்பி
ஒற்றன்
கொல்ல வேண்டும்
இதுவே ராஜ நீதி
பொறுப்பவர்களில் தலைவா ராமா இவனை மன்னிக்க கூடாது
தீர்க்க சிந்தனை
ராமன் யோசிக்க
இருவரும் தம்தம் காலில் விழுந்தவர்களை காக்க நினைக்க -பட்டர் அருளுவாராம்

551-

ஸ்ரீ ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம்
மிருத சஞ்சீவினி
கோதண்ட ராமர் சேவை
தனிக் கோயில் ஆஞ்சநேயர்
உத்சவர் உடன் ஆஞ்சநேயர் சேவை
லஷ்மி நரசிம்ஹர் சேவை
ஸ்ரீநிவாசன் உடன் கூட சேவை
சுக்ரீவன் வார்த்தை
குற்றங்கள் கூற
எங்கள் குலம் இஷ்வாகு குலம் யாரையும் கை விட மாட்டார் -சுருக்கமாக வரத்தை சொல்லி
மைந்தன் ஜாம்பவான் அங்கதன் ஆஞ்சேநேயர் பேசப் போகிறார்கள்
மற்றவருக்கும் கொல்ல அபிப்ராயம்
திரு முகம் வாடினத்தை கண்டு மாற்று
ஏற்று கொள்ள வேண்டாம்
அங்கதன் -சத்ரு பக்கம் வந்தவனை ஆராயாமல் ஏற்று கொள்ள கூடாதே
நல்லவர் போலே வேஷம்
உள்ளே புகுந்து தீய புத்தி காட்டுவார்கள்
ஜாம்பவான் சங்கை உண்டே
இலங்கைக்கு  ஆபத்து-கூடப் பிறந்தவனை விட்டு வந்தவன்
நம்மையும் விடுவான்
மைந்தன் பேசுகிறான் -உள்ளம் ஆராய்ந்து -பேச்சை மட்டும் பார்க்காமல் செயல் பாடியும் அறிந்து
ஆஞ்சநேயர் –
வாலில் நெருப்பை வைக்க -தூதுவனை கொல்ல கூடாது சொன்னவன்
பண்பாளன் மந்த்ரி தலைவன்
மதுரமாக அர்த்தம் உள்ளபடி பேச
விபீஷணன் கெட்டவன் அல்லன் நல்லவன் ஏற்றுக் கொல்ல வேண்டும்
ஒற்றனாக வர வில்லை
ராவணனுக்கு நல்லது கூறியவன்
உண்மையான புத்தி உடையவன்
கையால் ஆகாமல் பயந்து வந்தவன்
காலம் தேசம் பார்க்காமல் ஏற்று கொள்ள வேண்டுமே
கொதித்த பொழுதே சரணம் ஆக விழ
தீயவன் அறிந்த பின்பு விட்டு வந்தான்
ராமன் பெருமை அறிந்து வந்தவன்
குற்றம் இல்லை
நம்பிக்கை உடன் வந்து இருக்கிறான்
தானே நேராக வந்து அதிக விசுவாசம் கொண்டு
ராஜ்ஜியம் விரும்பி வந்தான்
இருவர் சொல்லியதை ஏற்று கொள்ள வில்லை
ராமன் பதில் பார்ப்போம்

552

புள்ளின் வாயை -கீண்டானை -குள்ளக் குளிர்ந்து  நீராடாதே
கள்ளம் தவிர்ந்து
கண்ணன் ராமன் இருவரையும்
கொக்கு வடிவ அசுரம் கொன்றவன் புள்ளின் வாய்
பொல்லா அரக்கர் ராவணன் கிள்ளிக் களைந்தான்
நல்ல அரக்கன் உண்டு
பக்திமான் உண்டே விபீஷணன்
சூர்பணகை  கூட நல்ல அரக்கன் என்று கொண்டாடி
18 சர்க்கம்
ஹனுமான் நல்லவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்
இரண்டையும் ராமன் கொள்ளாமல் மூன்றாவது
புதுக் கோட்டை துவார்  கிராமம்
தவாறாக மேலை வாசல்
துவார சமுத்ரம்
துவார பாஷ்யம் வம்சத்தார் உள்ளவர்
ஸ்ரீ பாஷ்யம் எழுத உதவி கூரத் ஆழ்வான்
அவர் சீடர் வம்சம் கௌசிக கோத்ரம்
அதனால் ஊர் பெயர்
சீதா லஷ்மணன் ஆஞ்சநேயர் சமேத கோதண்ட ராமர் திருக் கோயில்
2012 உத்சவர் பிரதிஷ்டை -ஏரியில் கிடைத்ததாக சொல்கிறார்கள்
அக்னி ஆறு அருகில்
ராமன் -ஒரு பாதி சுக்ரீவன் சொன்னதை
ஒரு பாதி ஆஞ்சநேயர் சொன்னதை சேர்த்து
தீயவன் ஆனாலும் ஏற்று கொள்ள வேண்டும்
அனைவருக்கும் பொது
மனம் மாறி இசைந்தால் போதுமே
இதை நம்பி தான் நாம் வாழ்கிறோம்
வித்வான்
பண்டிதான் -குற்றம் தேடுவார்கள்
நல்லது இருக்கா தேட
கோ வித்வான் -வித்வான் யார்
ராமன் குற்றம் பார்ப்பது கை விட இல்லை
கை கொள்ள
அவனையும் ஏற்று கொண்டால் தான் ராமனுக்கு பெருமை
மிக தாழ்ந்தவனுக்கும் அருளி
உயர்ந்த கதி அளிக்க
18 சர்க்கம்
அத ராமன் -அப்படி பட்ட ராமன்
சுக்ரீவனை சமாதானம்
தன்னாலே சங்கை பட் கூடாது
இருவரும் ராமன் பக்தர்
அவனை விட்டு விபீஷணனை கூட்டி
ராமன் பிரசன்னா சிரித்த திரு முகம்
நானும் பேசலாமா கேட்டு
மூன்று ஸ்லோகங்கள் சரம வார்த்தை அருளப் போகிறார் –

553

அசாத்திய சாதனம் –மத் கார்யம்  -செய்து அருள வேண்டும்
ஆஞ்சநேயர் -சேவை கதை பற்று
கருட ஆழ்வார் தாசன் சகா ஆசனம் வினத்தை சிறுவன் வேதாத்மா
ஆசார்யர் சேவை -ராமானுஜர் -தேசிகன் -சேவை
முக்தி பொதுவான சொத்து சாதித்த
திருக் கல்யாண உத்சவம்
இரண்டாவது வார்த்தை பேச தெரியாத ராமன் மூன்று வார்த்தை பேச -ராம சரம ச்லோஹம்
வராஹ ஸ்லோகம் இரண்டு ஸ்லோகங்கள்
கிருஷ்ண சரம ச்லோஹம் ஒரே
சக்ருதேவ –ததாமி ஏதத் வ்ரதம் மம
சுக்ரீவனை சமாதானம் செய்து
காலில் விழுந்தவனை கை விட கூடாதே
மித்ர பாவேன–
சுக்ரீவன் பயப்பட
வாலியை வென்றேன்
தம்பி மனைவியை கூட்டிப் போனான்
காலில் விழுந்த தம்பியை தள்ளி விரட்டி இரண்டு குற்றம்
நீ அது போலே –
எனக்கும் குற்றம் வருமே
மித்திரன் நண்பன் வேஷம் வந்தாலும் போதும்
நத்யஜேயம் விடத் தக்கவன் அல்லன்
கதஞ்சன என்ன நிலைகளிலும் விடத் தக்கவன் அல்லன்
தோஷம் உடன் வந்தாலும்
ராஜ்ஜியம் போனால் வசிஷ்டர் கேட்டு இதைக்கேட்டால் –
கை விட்டால் –
சான்றோர் ஏற்க மாட்டார்கள்
இஷ்வாகு குலம் மனு சாஸ்திரம் அறிந்து
இன்னும் 14 வருஷம் காட்டுக்கு போக சொல்லி
கீர்த்தி நல்லது நடக்காது
சம்ப்ராப்தன் -அசைலம் -உறுதி உடன் நம்பிக்கை உடன் வந்து இருக்கிறான்
ராமானுஜர் கோஷ்டி
ராமன் விக்ரஹம் -தேவை இடாதவர் –
தேவை உட்டவர் கண்ணன்
சர்வ தரமான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சர்ரணம் விரஜ
தேவை வைத்தாரே
தோஷம் -வேஷம் உடன் வந்தாலும் ராமன் கொள்வான்
வில் தோள் ஆற்றல் உடையவர் வார்த்தை
சுக்ரீவன் பதில் சொல்ல
துர் தசையில் ராவணன் இருக்க விட்டு வந்தான் தம்பி
நம்மையும் கை விட்டால்
வந்தது அரசு கேட்டு
சீதை கிடைத்த பின்பு அவன் இருந்தால் என்ன போனால் என்ன சமாதானம் சொல்வார்-
554-

ராமாயா -சீதா பதி வணங்கி
பத்ரம் -மங்
நோய் நாடி நோய் முதல் நாடி
சுக்ரீவன் பயம் அறிந்து ராமன் பதில்
தனக்கு உள்ள சக்தி சொல்லி சமாதானம்
மித்ரா பாவேன முதலில் சொல்லி
சீதா லஷ்மண ஹனுமத் ஸ்வாமி கோதண்ட ராமர் திருக் கோயில்
சாளக்ராம மாலை தரித்து சேவை
மூலவர் திரு மஞ்சனம் சேவை
சந்தனக் காப்பு
புருஷ சூக்தம் பாராயணம்
நான்கு வேதங்களில் உண்டே
வேதே ஷூ புருஷ சூக்தம்
பாரதம் கீதை
புராணங்களில் விஷ்ணு புராணம்
சுக்ரீவன்
18 -சர்க்கம் 5/6 ஸ்லோகம்
சரணா கதி சாஸ்திரம் கற்று
பெரியோர் அனுஷ்டானம்  அறிந்து
நம்மை விட்டு போனாலும்
ராஜ்ஜியம் கிடைத்தால் சீதை நம் இடம் கிடைக்க
அப்புறம் நம் உடன் இருக்க வேண்டாமே
ஏற்று கொண்டு வாதம்
ஏற்றுக் கொள்ளாமலும் வாதம்
ராஜ்ஜியம் கிடைத்த பின் போனாலும்
அபய  பிரதான சாரம்
ராஜ்ஜியம் எதிர் பார்த்து வந்து இருக்கிறான் சொல்லலாமா
ஹனுமானும் சொல்லி ராமனும் சொல்லி
தாழ்ந்த பலனுக்கு வர மாட்டானே
அநந்ய பிரயோஜனன்
ராமனுக்கு தொண்டே பலன்
விபீஷணன் வார்த்தை முக்கியம்
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -துரந்து பற்று இல்லாமல் வந்தேன் –
உன் கைங்கர்யம் எதிர் பார்த்து வந்தான்
நாம் நல்லது பண்ண ஆசை எனக்கு ஆசை எதிர் பார்த்து வர வில்லை
ஹனுமான் இதனால் வெளிப் படுத்தி
ராமன் சொல்வது குத்தி சொல்லும் வார்த்தை
அரசை வேண்டி அண்ணனை கொன்று நீயே
உன்னயு கை விட்டு இருக்க வேண்டாமே இது காரணம் கை விட என்றால்
இவன் இடம் மட்டும் எதனால் இதை குற்றமாக கொள்ள வேண்டும்
தம்பி பரதன் போலே ஆக மாட்டார்கள்
பிள்ளை தன்னை போலே இல்லை
சுக்ரீவன்னினைப்பதை அறிந்து
நண்பன் என்றால் சுக்ரீவன் நீ தான் சொல்லி
பிசாசான் தானாவான் –இச்சன் கரிகனேச்வர
அங்குள் அக்ரேன விரல் நுனியால் அழிப்பேன்
ராமன் வாக்கியம் நம்பி வாழ்வோம்

555

திரு மஞ்சனம் சேவை
மஞ்சள் காப்பை சேவை
சந்தன காப்பை சேவை
பச்சை துளசி மாலை
ஈரம் சொட்டும் நிலை
சஹச்ர தாரை -பத்ம சங்க சக்கர தாரை
துண்டு பாகை போலே கட்டி -ஈரம் உறிஞ்ச பரிவுடன்
அலங்காரம் உடன் சேவை
18 சர்க்கம்
இரண்டாவது -சுக்ரீவன் பயத்தை போக்க
பிசாசா –இச்சன் கரி கணேஸ்வர
தானவர்கள் யஷர்கள் அரக்கர்கள் சேர்ந்து வந்தாலும் விரல் நுனியால் அழிப்பேன்
பிளந்து  வளைந்த உகிரான்
கிருத நக  நரசிம்ஹ அவதாரம் நினைவு
இச்சன் விருப்பப் பட்டால் -சங்கல்பத்தால்
சுக்ரீவன் நினைக்க புரிந்து
அறி கணேஸ்வர குரங்கு கூட்ட தலைவன்
நினைத்தால் உனக்கு பட்டாபிஷேகம் நினைத்து நடத்தினவன்
ரிஷி -கதை
வேதம் கதை
குரங்கு கூட்ட கதை
மெதுவாக கதைகள் சொல்லி
உயர்ந்த கருத்து எப்போளுதாகிலும் சொல்லி
புறா வேடன் கதை
ஆண் புறா தனித்து இருக்கும் கிளை கீழே உட்கார
வீடு தேடி சரணம்
வேட்டையாடி ஆகாரம் கிடைக்க வில்லை
தானே நெருப்பிலே விழுந்து
உடல் கொடுத்து வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தில் உண்டே கம்பர்
தம்பி தான்
சரணம் கதற வில்லி
நான் உயிர் கொடுக்க வேண்டாம்
சிபி சக்கரவர்த்தி எங்கள் குலம்
ஆர்தா பிராணன் விட்டே விரோதி காக்க வேண்டும்
குரங்கு மனிதன் புலி கதை அப்புறம் சொல்கிறான் –
மனுஷ்ய புத்தி -காட்ட பண்ணினேன்
இவனுக்கு அடைக்கலம் கொடுத்து
கவலை படாதே உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்
கை விட மாட்டேன் -உறுதி பட கூறினார்

556-

இயம் சீதா மமசுதா–சீதா திருக் கல்யாணம்
துவா கோதண்ட ராமர் திருக் கோயில் சேவை
லோகம் மங்களம் அர்த்தமாக –
மலை மாத்தல் ஆடி ஆடி –ஈட்டம் கண்டிட கூடுமேல்
ஆட்டம் மேவி  –
ஊஞ்சல்   உத்சவம் –
சீர் வரிசை ஆடைகள் ஆபரணங்கள்
அம்மி -சடாரி கொண்டு -நடத்தி காட்டி
பொறி முகம் -ராஜ ஹோமம்
திரு மாங்கல்ய தாரணம்
பல்லாண்டு பல்லாண்டு நமக்காக
எங்கும் இன்புற்று இருக்க -திருமால் –
உறுதி கை விட மாட்டான்
18 சர்க்கம்
சக்ருதேவ பிரபன்னாயா –எதத் விரதம் மம
கங்கணம்
எடுத்த சங்கல்பம் விடாமல்
ஒரு தடவை சரணம்ன் என்றவனுக்கு
வாய் வார்த்தையாக
நாக்கு புரண்டு வாயில் வர அதுவும் அவனது இன்னருளே
ஆசை ஒன்றே வேண்டும்
ஆர்த்தோவா-
ஒரு தடவை
சடக்கு என்று
எத்தனை தடவை சொன்னாலும் ஒரு தடவை சொன்னதுக்கு சமம் பெறப் போகும் பேற்றை பார்த்தால்
தவாஸ்மி உன்னையே எதிர் பார்த்து
ச -சீதையும் சேர்த்து
சர்வ பூதேப்யோ அபயம் ததாமி
எல்லார் இடம் இருந்தும்
அபயம் அளிக்கிறேன்
தன்னையும் சேர்த்து -ஆபத்து யார் இடமும் இல்லாமல்
பாபங்கள் பார்த்து தண்டனை தானும் கொடுக்காமல்
மூக்கு அறிந்தவர் சொல்லும் பொய்யானால்
மூன்று வார்த்தைகள் சொல்லி
சர்வ தர்மான்
அபிஷிக்த ஷத்ரியன் வில் பிடித்தவன் சொல்ல
பட்டாபிஷேக கோலம்
கல்லில் அமர்ந்துய் அசைக்க மாட்டாமல் வார்த்தை
தேர் மேலே இருந்து இல்லை
நான் விட மாட்டேன்
நீ பற்று அவன் சொல்ல
சுக்ரீவன் சமாதானம்
அவனையே சென்று கூட்டி வர சொல்லி
போவதற்கு உள்ளே ராவணனே வந்து இருந்தால்
நாடே வாழ்ந்து போம்
நால்வர் மட்டும் இல்லையே
ராஷச குலமே வாழ்ந்து போம்
காகுஸ்தம்
சுக்ரீவன் மனம் மாறி எங்கள் மேல் அன்பு அவன் ஒருவன் இடம் காட்ட சொல்லி
இளையவனுக்கு அளித்த மௌலி எனக்கும் வைத்து

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-537-546..

July 28, 2014

537

அம் கண் மதிள் –வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி
குல சேகர ஆழ்வார் –
ஆதவன் கதிரவன் சூர்யன் ஞாயிறு கிராமம்
செங்குன்றம் அருகில்
சூர்யனார் கோயில் ஸ்வர்ண ஆஞ்சநேயர் ஸ்வர்ண ராமர்
வேப்ப அரச மரம் ஸ்தல வருஷங்கள்
ஆரோக்கியம் பாஸ்கரா இச்சதி
அரசரமர்ந்தான் அடி சூடும் அரசு
ஸ்வர்ண ராமனுக்கு கட்டியம் சொல்லும் இவை
கிஷ்கிந்தை புறப்பட்டு தெற்கு நோக்கி மகேந்திர கிரி அடைந்து
வேலா வனம் தாண்டி திருப் புல்லாணி வந்து
4 சர்க்கம்
படை பிரித்து -சேனாபதி நியமித்து
ராஷசர் அருகில் வந்தோம்
கடலை காணவே ஆனந்தம்
அணை கட்ட போவதை நினைந்து கடல் ஆரவாரம் அலைகள் சிரிக்க
அலைகள் நுரை வரவேற்று
ராமன் திருவடி படுமே
மீன்கள் திமிங்கலம் முத்து சிப்பிகள்
ஆகாசம் கடல் ராமன் நீலம்
குண கடல்
தண்ணீர் கடல்
வேறுபாடு இல்லாமல் கலந்து இருக்க
ஆர்பரிக்க -குரங்கும் கடலும்
5 சர்க்கம்
ஆற்றாமை துன்பம் மிக்கு
விரக தாபம்
கழிய மிக்கதோர் காதல்
மாசறு சோதி
ஊர் எல்லாம் துஞ்சி
பேரமர் காதல்
பின் நின்ற காதல் பக்தி தொடற
கழிய மிக்கதோர் காதல் அடுத்து
சீதை மீட்டு
ஜனகன் இடம் என்ன சொல்வேன்
தவிக்க
சோகம் எப்பொழுது போகும் அழுது அலற்றி
சூர்யன் ராமன் படும் துன்பம் பார்க்க மாட்டாமல் அஸ்தமிக்க

538

இயம் சீதா மமசுதா–
சீதா மரி
ராமன் சூர்ய வம்ச
லஷ்மி நாராயணன் சக்கரத் ஆழ்வார் பூமிக்கு அடியில் கிடைத்த
ஆச்சர்யமான திருக் கோலம்
16 திருக்கரங்கள்
யோக நரசிம்ஹர் ஆதி சேஷ பீடம் மேல் சேவை
அம்பரீஷர் ஏகாதசி துர்வாசர் சாபம்
ஜெயந்தரன் முடிக்க கை சக்கரத்தால் சூர்யனை மறைத்து
இடது திரு மடியில் லஷ்மி சௌம்ய   திரு முகம் நாராயணன் சேவை
6 சர்க்கம்
விபீஷண சரணா கதி அடி எடுத்து
17 சர்க்கம் வரை
முக்கிய கட்டம்
அனைத்தும் முன்னுரை
ராவணன் மந்திர ஆலோசனை
நுழைய முடியாத இலங்கையில் ஹனுமான் வந்து
உத்தமன் -மந்த்ரி பேச்சை கேட்டு
நண்பர் பேச்சை கேட்டு
உறவினர் பேச்சை கேட்டு நடப்பவன்
தானே செய்பவன் -மதமன்
தாழ்ந்தவன் அதமன் யார் சொல்லியும் கேட்காமல்
தானும் சிந்திக்காமல்
மந்திர ஆலோசனை மூன்று விதம் இது போலே
ஒருமித்த கருத்து
வெவேறு கருத்து இருந்தும் ஒருவர் கருத்தை ஏற்று நடந்து
பல கருத்து முடிவு இல்லாமல்
ஹனுமான் உதவி கொண்டு சாகரம் கடந்து ராமன் வருவான்
வற்று அடிக்க சக்தன்
7 சர்க்கம்
கவலை பட வேண்டாம் வெற்றி  உறுதி
பசப்பு வார்த்தை பேசி
ஆயுதங்கள் பல உண்டே  நம்மிடம்
கைலாச சிகரம் போலே குபேரேன் வென்று வந்தாய்
புஷ்பக விமானம் கொண்டு வந்தாய்
மண்டோதரி கல்யாணம்
கால பைரவன் வருணன் வென்றாய்
இந்த்ரஜித் உலகம் கலக்க சக்தன்
பாசிகள் ஆமைகள் மீன்கள் கடலில் உண்டே
ப்ரஹ்ம சொல்லி இந்த்ரனை விட்டாய்
அனைவரையும் வெல்ல சக்தன் நீ என்றார்கள்

539-

பவித்ரானாம்பவித்ரானம்
மங்களா நாம்  மங்களம்
லோக நாதன் ஜகத் பிரபு
மஞ்சள் சாத்தி கல்யாண வராத ராஜ சேவை
மஞ்சள் நீராட்டம்
மஞ்சள் காப்பு
லஷ்மி ஹயக்ரீவர் வாக்குக்கு கடவுள்
ஆஞ்சநேயர் சந்நிதி கைகள் கூப்பி அஞ்சலி ஹஸ்தம்
பதக்கம் சீதா ராமர்
விநய வேஷம்
நல்லை நெஞ்சை நாம் தொழுதும்
நெஞ்சமே -தொழுது எழு
காஞ்சி நம் ஆழ்வார் நெஞ்சுக்கு உபதேசம்
8 சர்க்கம்
ராவணன் சேனாபதிகள் வெற்றி உறுதி பேச
பிரகச்தன் பேச
ஹனுமான் வஞ்சித்து வந்தார்
நாம் கவனக் குறைவால் இருந்தோம்
அத்தனை செய்தும் கேள்வி கேட்க ஆள் இல்லை அப்பொழுது
நேர்மை உடன் வந்தால் அழிவு உறுதி ஆஞ்சநேயர் அறிந்தார்
முகூர்த்தே உலகம் உள்ள குரங்குகளை அழிப்பேன்
கபட சந்நியாசி
வேஷம் மீண்டும் போட சொல்லி
வஜ்ர தந்தன் பேச
மனிச வேஷம் போட்டு பரதன் ஆள்கள் போலே சேர்ந்து
உபாயம் இது தான்
கும்ப கர்ணன் மகன் பேச
தனித்து போவேன்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் தடம் பொங்கத் தங்கோ
வேட்டை ஆடி முடிப்பேன் உறுதி
தூண்டி விடுவது போலே
9 சர்க்கம்
பலரும் பேசிய பின்பு
விபீஷணன் பேச
கை கூப்பி வணங்கம் செய்து நல்ல வார்த்தை பேச
சாமம் தானம் பேதம் இல்லா விட்டால் சண்டை வேண்டாம்
தெய்வ சகாயம் இல்லாதார் இடம் சண்டை போடலாம்
ராமன் மனைவி கொண்டு வந்தது குற்றம்
சூர்பணகை தனது தப்பால் தண்டனை பெற்றாள்
மைதிலி மீண்டும் கொடுத்து விட்டால் தீர்வு உண்டே இல்லா விட்டால்
அனைவரும் முடிய போவது உறுதி –

540-

பத்ரம் -மங்களம்
பத்ராசலம் –
அமர்ந்த திருக் கோலம்
ஞாயிறு –
சீதா மாதா கருணை பொழியும் கண்கள்
சாளக்ராம சாத்தி
வில்லையும்
காதல் வீரம் இரண்டையும்
சங்கு சக்கரம் பற்றி சேவை
லஷ்மணர் தனித்து சேவை
உத்சவர் திரு மஞ்சனம் சேவை
ஸ்வர்ண கல்யாண ராமர்
ராவணன் மந்த்ராலோசனம்
9 சர்க்கம்
தசரதர் இடம் மைதிலி சமர்ப்பிக்க
கோபம் சோகம்  தர்மம் அளிக்கும் விட வேண்டும்
கீர்த்தி ரதி
சந்ததி நான்காக இருக்க சமர்ப்பிக்க வேண்டும்
விபீஷணன் சொல்ல
10 சர்க்கம்
அசுப நிமித்தங்கள் தெரிய
ஆந்தனையும் நல்லது உபதேசிக்க
ராவணன் மாளிகை சென்று
முத்துகள்
யானைகள் நிறைந்த
கந்தர்வர்கள் வாழும் இடம் போலே
வேத விற்பன்னர் வேத கோஷம் செய்ய
சிங்காசசனம் இருக்க
வணங்கி பேச தொடங்கி
காரண கார்யம்
நல்லது சொன்னான்
பிடித்ததை சொன்னான்
தம்பி சொன்னான்
சீதை காலை வாய்த்த அன்றே அசுப குனங்கள்பட
அக்னி எரியாமல்
ஹவுஸ்
ஹவ்யங்களில் எறும்பு உஊர
மாடுகள் பால் கொடுக்காமல்
குதிரை புல்லை இருக்க
வாயசம் காக்கை கூட்டம் வ்பட்டம் இட
கழுகு பருந்துகள் சுற்றி வர
மாம்சம் கிடைக்குமா பார்த்து
பிராய சித்தம் சீதையை ராமன் இடம் கொடுத்தால் தான்
தன் அடியார் அது செய்யார்செய்தாலும் நன்றே செய்தார் -ஆழ்வார்
தெற்கு நோக்கி சயனம் மன்னுடைய விபீடனற்க்காக மலர் கண் வைத்து
நன்றாக நடக்க பேசினான் –
பக்தர்கள் இடம் விருப்பம்

541-

542-

நீர் கடலை நோக்கி போவது போலே
நமஸ்காரங்கள் கேசவ பெருமாள்
திருக் குழல்
புல்லாங்குழல்
குழல் அழகர்
கண் அழகர்வாய் அழகர் –குழல் அழகர்
அலை எரிகிற தலை மயிர் கற்றை
சடை முடி தரித்தும்
கேசவ -பன்னிரு திரு நாமங்களில் முதல்
பெரிய பாளையம் அருகில் வடமதுரை சிற்றூர்
ஆதி கேசவ பெருமாள் வடிவு அழகு ராமர் உடன் சேவை
ஆஞ்சநேயர் மூலவர் முதலில்
கருடன் சந்நிதி -உயரமான கோபுரம் கருடன் மேலே
ஆஞ்சநேயர் பஞ்ச கச்சம் சாத்தி சேவை
மண் பெண் பொன் வாசனை வைகுண்டமே வேண்டாம் என்றவர்
வெண்ணெய் வெற்றிலை சந்தன காப்பு
13 சர்க்கம்
விபீஷணன் நல்லது கூறி -கும்ப கர்ணன் இடித்து உரை பேசி
பார்ச்வன் -ராவணனுக்கு தவறான உபதேசம் செய்கிறான்
சம்மதம் இல்லாமல் அனுபவிக்க
சாபம் -பெண்ணை சம்மதம் இல்லாமல் தீண்ட கூடாது
ராவணன் திருப்தி பட பார்ச்வன் பேச
கையில் தேன் இருக்க சாப்பிடாமல் வேடிக்கை பார்ப்பாரா
எதிரிகள் எதிர்த்து வந்தால் அப்புறம் பார்ப்போம்
ஆசைப் பட்டபடி செய்ய வேண்டும்
ஆபத்து வந்தால் சமாளிக்கலாம்
ராவணன் -முன்பு இப்படி செய்து சாபம் பெற்றேன்
குஞ்சி ஹச்தலா சத்ய லோகம் போக பார்த்து
காதல்
அனைத்து அனுபவிக்க
இச்சை இல்லாமல்
ப்ரஹ்மன் கொடுத்த சாபம்
தலை சுக்கு நூறாகா வெடிக்கும்
அதில் இருந்து பலாத்காரம் விட்டேன் -கடலுக்கு ஒப்பான காற்றுக்கு ஒப்பான வீரம் அடக்க இதுவே காரணம்
வஜ்ரா பானத்துக்கு  கூட பயப்படாமல் இருப்பவனை சாபம் ஒன்றால் கட்டுப் பட்டு வைத்தது

543-

லஷ்யதே -அனைவரையும் கடாஷிக்கும் ஆதி லஷ்மி சேவை
ஸ்ரீ நிவாசன் சேவை
விஷ்வக் சேனர் சூத்திர தேவி உடன் திரு மால் இரும் சோலை சேவை
நர்த்தன கண்ணன்
14 சர்க்கம்
ராஷசர் கும்பகர்ணன் வாக்கியம் கேட்டு
ஹிதம் அர்த்த உக்தம் உள்ள வார்த்தைகள் விபீஷணன்
பாம்பு பிடித்து
விஷம் உள்ள முள்
ஆசை தான் விஷம்
சீதை பிடித்து வைத்து
கடி படுவாய்
ஒரே பெண் -கணவன் பார்வை வேற மற்றவர் பார்வை வேறே
அதர்மம் வழி போகிறாய் நாக பாம்பு
தாசரதாயா -தாசரதி பிள்ளை பொருட்டு விட்டு விடுவாய்
இதற்க்கு உள்ளே
அம்பு -நெருப்பு கங்கை ஆகும் மேலே பட்டதும்
குலம் அழிவதற்கு முன்னே விட்டு விட
ஆகாயம் காடு நீர் எங்கும் போகமுடியாது உன்னை அளிக்கும்
யஷன் அசுரர் தேவர் யார் இடம் பயப் படா விட்டாலும்
அம்பு தர்மம் குரல் உன்னை விடாதே
உவர்கள் அல்பம்
காமாசுகாஷ்டகம்
அவன் தண்டிக்க யார் உதவியாலும் தப்ப முடியாதே
தர்ம பிரதானன்
இஷ்வாகு குலம்
வாலி கார்த்த வீர்ய அர்ஜுனன் அடி பட்டு
இவர்கள் கூழாங்கல் போலேராமன் மலை போலே
யோசிக்காமல் கார்யம் இறங்கி அழியாதே
உன் ஆசைக்காக  நாட்டை அளிக்காதே
15 சர்க்கம்
இந்த்ரஜித் பேச
பயந்த கோழை போலே பேச
என் பெருமை அறியீரா
இந்த்ரனை வென்று
ஐராவதம் வாலை சுழற்றி
விபீஷணன் பேச
நீ சிறுவன் மூடன் அல்ப மதி மூடாத்மா அத்யந்த துர்மதி
இந்த்ரன் வென்றது சந்தர்ப்ப சூழ் நிலை
இப்பொழுது உங்கள் பலம் குன்றி அதர்ம வழி போனதால்
ராமன் தர்மமே வடிவு எடுத்து உள்ளான்

544

ஆபதாம் அபகத்தாராம் -நன்மைகள் கொடுத்து தீமைகள் போக்கி
கிலேசம் போக்கி அருள் புரியும் ராமன்
கிலேச நாசன் கேசவன்
ஆதி கேசவ பெருமாள் பெரிய பாளையம் வடமதுரை
அபய ஹஸ்தம்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -நாச்சியார்
கேசவ -பிரமன் ருத்ரன் இருவரையும் படைத்து நிர்வாஹகன்
திரு வாட்டாறு பெருமாள் ஆதி கேசவன்
நாபி பிரமன் இல்லை படைக்கும் முன் ஆதி கேசவ பெருமாள்
ஹிரன்ய வதை படலம் கம்பர் இது மூலம் விபீஷணன் கூற
மனசில் பட வலி உறுத்தி எடுத்துக் காட்டு அருள
சிறுக்கனுக்காக தோன்றி
கோபம் வந்தால் இலங்கை தாங்காது
சாது மிரண்டால் காடு கொள்ளது
இருக்கும் தெய்வமும் ஹிரன்யனே நம-
வர பலத்தால்
தபஸ் கோடி வருஷம் இருந்து
நீரில் சாகிலன்
சாபமும் சென்று சாரா
நள்ளின் சாகிலன்
இந்தளத்தில் தாமரை போலே பிரகலாதன்
சுக்ரர் பிள்ளைகள் சண்டன் குரு
ஓத புக்க உந்தை பேர் உரை
வேதத்தின் உச்சியின் உள் பொருள் உரைத்தான்
கை கூப்பி கண்ணா நீர் வழிய
ஆதி நாயகன் பேர் அன்றி வேறு ஒன்றும் அறிகிலேன்
யாவையும் தரும்
குலம் தரும் –நீள் விசும்பு அருளும்
நாரதர் உபதேசம்
யார் தூண்ட சொல்கிறாய்
இந்த கேள்வி கேட்க தூண்டியவன்
உலகம் தாங்கி உள்ளே புகுந்து
முன் இலன் பின் இலன்
தருமமும் தர்மத்தின் பயனும் -எங்கும் உள்ளான்
குன்றினும் உளன் தூணிலும் உளன் நீ சொல்லும் சொல்லிலும் உளன்
அனூர் அணியாம் மகத்திலும் பெரியது
தூணை பிளக்க
கையால் ஏற்ற
பிளந்தது தூண் வளந்தது சீயம்
கிழித்தது கீழும் மேலும்
மடியில் வித்து அழித்து
தீதாய் விளைவது திண்ணம்
அவன் கதி தான் உனக்கும்

545

சுநிவிஷ்டம்
ஹிதம்
முழுவதும்
நல்ல தம்பி விபீஷணன்
அப்ரவீத் திரும்பி பேச
வைத்து சுடு சொல்லால்
ராவணன் கால சோதித-
காலம் முடியப் போகிறதே
கால தேவனால் தூண்டப் பட்டு
தனி ஸ்லோகம் வியாக்யானம்

546

வேத வேத்யே–சாஷாத் ராமாயண
திசை முகன் -ஐயம் பேட்டை ஆஞ்சநேயர் திருக் கோயில் சேவை
பெரிய குளம் நீர் தளும்பி
ஹனு  வீங்கி சேவை -விநய
16 சர்க்கம்
விபீஷணன் நால்வர் உடன் புறப்பட்டு –
அணை கட்டி 4 நாள்
நாட்டை துரந்து நாட்டை கிட்ட 20 நாள்
பங்காளி -குழி பறிப்பாரை நம்ப கூடாதே
வஜ்ராயுதம் நினைத்து பயம் இல்லை -ராவணன் வார்த்தை –
தாமரைக் காடு -பிறர் நலம் கவலைப் படாமல் தங்கள் நலம் கருதுவார் கண்டே பயம்
அந்தணன்
சபலம் புத்தி பிறர் மனைவி இடம்
காண பிடிக்க வில்லை
காலால் தள்ளி
கூடாத அன்பு
தேனிகள் தேனை பறித்து போவார்கள் -தேனீக்களுக்கு பலன் இல்லை
யானை தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டால் போலே உன்னுடன் இருப்பது
குலத்துக்கு கோடரி போலே நீ
இனி இங்கே இருக்க கூடாது
விபீஷணன் முடிவு
கருணன் செஞ்சோறு கடன்
அதர்மம் துணைக்கு சென்று
தப்பு நடக்கும் இடத்தில் விலக வேண்டும்
ஆழ்வார்கள் கர்ணன் பாடாமல்
விபீஷண ஆழ்வான்
விதுரன் பிரகலாதன் விபீஷணன் ஆழ்வான்
வகுத்த இடம் சேர்ந்ததால்
நால்வரும் கூட
கதை வர மாட்டேன் சொல்ல வில்லை
அந்தரிஷா கதா ஸ்ரீ மான்
ஆகாசம் தாவி ஸ்ரீ மான் பட்டம்

——————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்