Archive for the ‘ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ’ Category

ஸ்ரீ கஜேந்திர ரக்ஷண பர சதுஸ் ஸ்லோகி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–உத்தர சதகம்–ஸ்லோகங்கள்-56-57-58-59-

September 28, 2025

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய சரண கிசலயே சம்வஹத்ப்ய அபஹ்ருத்ய
ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந
ஆஷிப்ய உரஸ் ச லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்
தேவ ஸ்ரீ ரெங்க தாம கஜபதி குஷிதே வியாகுல ஸ்தாத் புரோ ந
–56-

கஜபதி குஷிதே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூவின போது

சம்வஹத்ப்ய–திருவடி வருடா நின்ற

தேவீ ஹஸ்த அம்புஜேப்ய –ஸ்ரீ தேவிமாருடைய தாமரைக் கைகளில் நின்றும்

சரண கிசலயே –தளிர் போன்ற திருவடிகளை

அபஹ்ருத்ய–இழுத்துக் கொண்டும்

ப்ரத்யஸ்ய அநந்த போகம் ஜடிதி –ஸ்ரீ ஆதி சேஷன் திரு மேனியை திடீர் என்று துறந்தும்

லஷ்ம்யா ஸ்தந கலச கநத் குங்கும ஸ்தோம பங்காத்-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய செப்பன்ன மென் முலைகளில்
விளங்கா நின்ற குங்கும குழம்புகளில் நின்றும்

ஆஷிப்ய உரஸ்–திரு மார்பை மீட்டுக் கொண்டும்

ஸலபுடே சஷுஷீ விஸ்த்ருணாந–துடிக்கின்ற இமைகளை உடைய திருக் கண்களை மலர மலர விழித்தவராய்

ஸ்ரீ ரெங்க தாம வியாகுல ஸ்தாத் புரோ ந–நிலை கலங்கி நின்ற ஸ்ரீ பெரிய பெருமாள்
நம் கண் முகப்பே எழுந்து அருளி நிற்க வேணும் –

பஞ்ச இந்திரியங்களின் வாயில் அகப்பட்ட நம்மை -அங்கு போன்ற நிலைமையுடன் வந்து
கண் முகப்பே தோன்றி ரஷித்து அருள வேணும் –

ஸ்ரீ கஜேந்திரன் கூக்குரல் கேட்டு நிலை குலைந்த படியை வர்ணிக்கிறார்

ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் இடத் தாமரைப் பூக்களைத் தேடித் திரிந்து ஒரு தாமரை மடுவில் இழிந்து
அங்கு பலவத்தான ஒரு நீர்ப் புழுவாலே இழிப்புண்டு அத்தை ஆயிரம் வருஷம் யுத்தம் பண்ணி
ஸ்ராந்தியாலே ஸ்வ பிரயத்தன நிவ்ருத்தி பிறந்து ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் கூப்பிட்ட போது தளிர் போன்ற
திருவடிகளைப் பிடியா நின்றுள்ள ஸ்ரீ பிராட்டிமார் திருக்கைகளில் நின்றும் பலாத்கரித்து இழுத்தும் –
ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையை அப்பொழுதே விட்டும் திருக் கண்களை மலர விழித்தும்-
ஸ்ரீ பெரிய பிராட்டியார் திரு முலைத்தடத்தில் குங்குமக் குழம்பில் நின்றும் திரு மார்பைப் பேர்த்தும்-
இப்படி வ்யாகுலரான ஸ்ரீ பெரிய பெருமாள் ஆ பன்னரான எங்கள் முன்னே நிரந்தரமாக இருக்கக் கடவது என்கிறார் –

————–

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்வீக்ருத
ப்ரணீத மணி பாதுகம் கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்
அவாஹந பரிஷ் க்ரியம் பதக ராஜம் ஆரோஹத
கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவத் த்வராய நம –57-

கரி ப்ரவர ப்ரும்ஹிதே–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட அளவில் –

அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -ஸ்ரீ சேனை முதலியார் கொடுத்த கைலாக்கை மதியாமலும்

அஸ்வீக்ருத ப்ரணீத மணி பாதுகம்–சஜ்ஜமாக்கப் பட்ட மணி பாதுகைகளை ஸ்வீ கரிக்காமலும்

கிம் இதி ச ஆகுல அந்தப்புரம்–இது என் இது என் என்று ஸ்ரீ திவ்ய மஹிஷிகள் திகைக்கவும் –

அவாஹந பரிஷ் க்ரியம் –வாகன பரிஷ்காரம் ஒன்றும் செய்யாமலும்

பதக ராஜம் ஆரோஹத-ஸ்ரீ பெரிய திருவடி மேல் ஏறா நின்ற

பகவத் த்வராய நம–ஸ்ரீ எம்பெருமானுடைய பதற்றத்துக்கு நமஸ்காரம்

நம்மை ரஷித்து அருளவும் இவ்வாறு த்வரித்து அருளுவான் –

நாராயணாவோ மணி வண்ணா நாகணையாய் வாராய் என் ஆர் இடரை நீக்காய் என்று
ஸ்ரீ கஜேந்திராழ்வான் கூப்பிட்ட போது வியாகுலராய் எழுந்து அருளும் பொழுது
ஸ்ரீ சேனை முதலியார் கை கொடுக்க அத்தைப் பிடித்துக் கொள்ளாமலும்
அந்தப்புரத்தில் அந்தரங்கர் மணி மயமான திருவடிகளை சமர்ப்பிக்க அத்தை அங்கீ கரியாமலும்
அந்தப்புரத்தில் உள்ளார் இது என்ன வ்யாகுலதை என்று கை நெருக்கி இருந்தபடியே
வாகனத்துக்கு வேண்டிய அலங்கார சூன்யராய் இருந்துள்ள ஸ்ரீ பெரிய திருவடியில் மேலே எழுந்து அருளி
த்வரித்த அந்த த்வரைக்குத் தோற்றோம் என்கிறார்

————–

யம் பஸ்யன் விஸ்வ துர்யாம் தியம் அஸக்ருத் அதோ மந்தாரம் மந்ய மாந
ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி தம் தார்ஷ்ட்யம் அத்யஷிபஸ் த்வம்
கிஞ்ச உதஞ்சந் உதஸ்தா தமத கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே
தேவ ஸ்ரீ ரெங்க பந்தோ பிரணமதி ஹி ஜனே காந்தி சீகீ தசா தே –58-

ஸ்ரீ ரெங்க பந்தோ

கஜபதே ப்ரும்ஹதே ஜ்ரும்பமானே சதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் ஓங்கும் அளவில்

யம் தார்ஷ்ட்யம்-வேகம் நிறைந்த யாது ஒரு ஸ்ரீ திருவடியை

யம் பஸ்யன்–பாரா நின்றவராய் -பார்த்து –

அஸக்ருத்-ஒழிவில்லாமல்

விஸ்வ துர்யாம்–உலகங்களை எல்லாம் நிர்வகிக்கின்ற

தியம் அதோ –தனது சங்கல்ப ரூப ஞானத்தையும்

மந்தாரம் –வேகம் அற்றதாக எண்ணா நின்றவராய் இருந்தும்

மந்ய மாந அபி -ஸ்ரீ பெரிய திருவடியுடைய அப்படிப்பட்ட வேகமும் போராது என்று பண்ணி

த்வம் ஹுங்கார ஆஸ்பாலந அங்க்ரி ப்ரஹதிபி–தேவரீர் அதட்டுவதும் தட்டுவதும் காலால் உதைத்துமான கார்யங்களினால்

தம் அத்யஷிபஸ் –அந்த ஸ்ரீ கருடனை வெருட்டி ஒட்டினீர்

மிஞ்ச -அன்றியும்

தம் தார்ஷ்யம் -அந்த ஸ்ரீ கருத்மானையும்

உதஞ்சந் சந் உதஸ்தா–உயரத் தூக்கிக் கொண்டு கிளம்பினீர்

இந்தச் செய்தியை ஆராயும் இடத்து

பிரணமதி ஜனே தி தசா –ஆஸ்ரித ஜன விஷயத்தில் உமது நிலைமை

காந்தி சீகீ–வெருவி பயந்து ஓடுகின்றவனுடைய நிலைமையாய் இரா நின்றது –

ஸ்ரீ பெரிய திருவடி சங்கல்பத்தை விட வேகமாக சென்றாலும் பொறாமல் தூக்கி சென்றாயே –
ரக்ஷண பாரிப்பு இருந்தபடி-

ஸ்ரீ பெரிய திருவடி வேகத்தை நிரூபித்து
தேவர் ஸமஸ்த ஜெகன் நிர்வாஹகமான சங்கல்ப ரூப ஞானத்தையும்
மந்த கதியாக அடுத்து அடுத்து நிச்சயித்து இருக்கச் செய்தேயும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூப்பீடு உயர்வற –

அப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய திருவடி வேகமும் போறாதே
அவரையும் ஹுங்காரத்தாலும் திருக்கைகளாலும் திருவடிகளாலும்
ஆஸ்பாலனம் முதலானவற்றால் ப்ரேரிப்பித்து
பின்னையும் அவரையும் இடுக்கிக் கொண்டு ஸ்ரீ தேவர் எழுந்து அருளிற்று –

இப்படி ஆஸ்ரித ஜன விஷயத்தில் தேவருக்கு உண்டான அவஸ்தை
பயத்ருதன்–பயத்தால் ஓடுமவன் – படியாய் அன்றோ இருந்தது என்கிறார் –

———————-

ஸ்ரீ ரெங்கேசய சரணம் மம அஸி வாத்யா
வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந
ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந
திக் மாம் இதி அநு கஜ கர்ஷம் ஆஜ கந்த —59-

ஸ்ரீ ரெங்கேசய

அநு கஜ கர்ஷம்–ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய கூக்குரல் செவிப்பட்ட உடனே

திக் மாம் இதி–கெட்டேன் கெட்டேன் என்று இழவுக்கு நொந்து கொண்டு

ஸ்ரக் பூஷா அம்பரம் அயதாயதம் ததாந-மாலை ஆபரணம் திருப் பரிவட்டம் ஆகிய இவற்றை
அடைவு கெட அணிந்து கொண்டவராய் –

வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந–பெரும் காற்றிலே அலைந்த ஒரு தாமரைத் தடாகத்தில்
விசாலத்தோடு கூடியவராய்

ஆஜ கந்த-எழுந்து அருளினீர்

இப்படி ஆஸ்ரித பக்ஷபாதியான தேவரீர்

சரணம் மம அஸி –அடியேனுக்கு புகலிடம் ஆகின்றீர்

வன் காற்று அறைய ஒருங்கே மரிந்து கிடந்தது அலர்ந்த மீன்கள் கமலத் தடம் போல்
பொலிந்தன–எம்பிரான் தடம் கண்கள் -திரு விருத்தம்

பெரும் காத்தாலே தாமரைத் தடாகம் போலே திருமாலை திரு ஆபரணம் திருப் பரியட்டங்களை
அக்ரமமாகத் தரித்து பிற்பாடானேன் என்று கர்ஹித்துக் கொண்டு எழுந்து அருளின
தேவரீர் எனக்கும் ரஷகம் ஆகிறது என்கிறார்

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ப்ரமாணத்திரட்டு –

June 7, 2025

1-மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ-தை சீஷா -11-2-அகில ஜகன்மாதாவான பிராட்டியையும் அழிவற்ற தந்தையுமான அச்சுதனையும் அறியாதது அறிவித்த ஆசார்யனையும் விருந்தாகும் பெருந்தக்கோரான வைஷ்ணவர்களையும் தெய்வமாகக் கொள்வாயாக –

2-ஆசரதீத் யாசார்ய-வ்யுத்பத்தி -ஆசரித்து -அனுஷ்டித்துக் காட்டுமவன் ஆசார்யன்

3–ஆசினோதி ஹி ஸாஸ்த் ரார்த்தாநாசாரே ஸ்தாபயத்யபி -ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத
எவன் ஒருவன் சாஸ்த்ரார்த்தங்களை சிஷ்யர்களுக்கு உபதேசித்து -அவர்களை சதாசாரத்திலே நிலை நிறுத்தி தானும் ஆசரிக்கிறானோ அவனே ஆச்சார்யன் எனப்படுமவன்

4-நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.-இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

5-தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||
-2-

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும். அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

6-பூயோ நமோ’பரிமிதாச்யுத பக்தி தத்வ
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ ஶுபைர் வசோபி: |
லோகே’வதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய ||
-3

பகவானிடத்தில் எல்லை இல்லாத பக்திக் கடலில் இருந்து பெருகிய மங்களகரமான வார்த்தைகள் மற்றும் உண்மை ஞானம் வந்து பிறந்ததைப் போலே இருப்பவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவரே சிறந்த குறிக்கோள்.-அவர் பூர்த்தியையும் பக்தி யோகத்தையுமுடையவர். யோகிகளில் சிறந்தவர். அவருக்கு மீண்டும் என் வணக்கங்கள்.

7-மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-
5-

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும். மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.

8-யந் மூர்த்நி மே ஶ்ருதி ஶிரஸ்ஸு ச பாதி யஸ்மிந்
அஸ்மந் மநோரத பதஸ் ஸகலஸ்ஸமேதி |
ஸ்தோஷ்யாமி ந: குல தநம் குல தைவதம் தத்
பாதாரவிந்தம் அரவிந்த விலோசநஸ்ய ||
-6-

புண்டரீகாக்ஷனின் (தாமரைக் கண்ணனின்) திவ்ய திருவடிகளைக் கொண்டாடப் போகிறேன்.-இந்த எம்பெருமானே நம் குலத்துக்கு தனமாகவும், தெய்வமாகவும் விளங்குகிறான். நம்முடைய அதிகமான பக்தி எல்லாம் அந்த எம்பெருமானின் திருவடிகளிலே போய்ச் சேரும். அந்த எம்பெருமானின் திருவடிகளே என்னுடைய தலையிலும், வேதாந்தத்திலும் காணப்படுகின்றன.

9-த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-
ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

10-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

11-ஸக்ருத் த்வதாகார விலோகநாஶயா
த்ருணீ க்ருதாந் உத்தம புக்தி முக்திபி: |
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே’பி தே யத்விரஹோ’திதுஸ்ஸஹ: ||

உன்னுடைய பிரிவைத் தாங்க முடியாதவர்களான, எத்தனை இன்பங்களும் மோக்ஷமும் பெற்றிருந்தாலும் உன்னுடைய திருமேனியை ஒரு முறை பார்ப்பதைக் கருதினால், அவற்றைப் புல்லைப் போல மதிப்பவர்களான சிறந்த வைஷ்ணவர்களின் கருணைப் பார்வைக்கு நான் இலக்காகும் தகுதியை எனக்குக் கொடு.

12-கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||
-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

13-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

14-(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-

15-அஹம் ஸ்லோக க்ருத் -பால-2-40–(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்

16-காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத -பால-4-7-–விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –

17-(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)

18-அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் 

19-நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்

20-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

21-ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன்

22-(யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)

23-வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )

24-புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )

25-ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே

(26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

28-யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத –அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)

29-புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)

(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

31-த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

32-உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-
இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.

33-யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)

34-உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக

34-ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

35-பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களா நாஞ்ச மங்களம் தைவதம் தேவதா நாஞ்ச பூதாநாம் யோ அவ்யய பிதா
எந்த பகவான் பவித்ரங்களுள் பவித்ரனாய் இருக்கிறானோ மங்களங்களுள் மங்களமாய் இருக்கிறானோ தேவதைகளுக்கும் தேவதையாய் இருக்கிறானோ எவன் ஒருவன் ஜீவராசிகளுக்கு எல்லாமே அழிவற்ற தந்தையாய் இருக்கிறானோ

36-ஸ ஹி தேவர ஸம் யுக்தோ மம பர்த்தா மஹாத்யுதி நிர்ப்பயோ வீர்யம் ஆஸ்ரித்ய ஸூந்யே வசதி தண்டகே -ஆர -58-14-
மைத்துனனான லஷ்மணனுடன் கூடியவராய் பரஞ்சோதியான என்னுடைய நாதன் வீர்யத்தைத் துணை கொண்டு பயமற்றவராய் சூன்யமான தண்டவனத்தில் வசிக்கிறார் –

37-யதா திருப்தாச்ச மாதங்க சசச்ச சஹிதோ வநே ததா திவிரவத் ராமஸ் த்வம் நீசசசவத் ஸ்ம்ருத-ஸூந்தர -22-16-
ஒரு காட்டில் மதிப்புடன் கூடிய யானையும் நரியும் சேர்ந்து இருந்தால் எப்படியோ அப்படியே யானை போன்றவர் ராமபிரான் -நீ ஒரு நரியைப் போன்றவன் –

(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

39-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் -புருஷ ஸூக்தம் -பரமபுருஷனே உனக்கும் ஸ்ரீ பூ தேவிகள் பத்னிகள்

40-ஸ்ரீயப்பதி கீதாபாஷ்ய பிரவேசம் -லஷ்மீ நாதன்

41- ஆகார த்ரய ஸம்பன்நாம் அரவிந்த நிவாஸினீம் அசேஷ ஜெகதீஸித்ரீம் வந்தே வரத வல்லபாம்
சேஷித்வ புருஷகாரத்வ ப்ராப்யத்வங்களாகிற மூன்று ஆகாரங்களை யுடையவளும் தாமரையை வசிப்பவளும் எல்லாமே உலகுக்கும் ஈஸ்வரியாய் இருப்பவளும் வரதனுக்குப் பிரியையுமான தேவியை வணங்குகிறேன் –

42-ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா
–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

43-ஸ்ரீ நிவாஸ சப்தேந பாசுபதா திவ்யுதாஸ -ஸ்ருத பிரகாசிகை -ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே என்கிற இடத்திலுள்ள ஸ்ரீ நிவாஸ ஸப்தத்தினால் பாசுபதர் முதலானோர் தள்ளப்படுகின்றனர் –

44-தயா ஸ ராஜ ரிஷி ஸூதோ அபி ராமயா ஸமேயிவ அநுத்தம ராஜ கந்யா -அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபு ஸ்ரீயா விஷ்ணுரிவா மரேஸ்வர -பால –77-30-
அழகியவளாய் உத்தம ராஜபுத்ரியான அந்த ஸீதையுடன் கூடிய ராஜ ரிஷி புத்ரனான ராமபிரான் மிகவும் விரும்பத்தக்க ஸ்ரீ தேவியுடன் கூடிய அமரர்கள் அதிபதியான விஷ்ணு பகவானைப் போலே மிகவும் விளங்கினான் –

45- ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்னுதே -யஜு காட -3-3-தேவனாகிற பகவான் ஸ்ரத்ததா ஸப்த வாஸ்யையான பிராட்டியாலேயே தேவனாக இருக்கும் தன்மையை அடைகிறான் –

46-ஸ்ருணாதி நிகிலான் தோஷாந் ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -பாஞ்சராத்ரம்
ஆஸ்ரிதர்களுடைய தோஷங்களைப் போக்குகிறாள் -அவர்களுடைய அத்வேஷம் ஆபிமுக்யம் முதலான குணங்களைப் பெருக்குகிறாள் 3-அடியார்களாலே தினம் தோறும் ஆஸ்ரயிக்கப் படுகிறாள் -பரம பிராப்யமான பகவானை ஆஸ்ரயித்து இருக்கிறாள் -அடியாருடைய கூக்குரலைக் கேட்க்கிறாள் -அவற்றை எம்பெருமானைக் கேடப்பிக்கிறாள் -ஆகையால் பிராட்டிக்கு ஸ்ரீ எனப்படுகிறாள் –

47-பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வஜநயஸி மாதா தத் அஸி ந:–52-

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன், குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல், அவர்கள் மீது கோபம் கொள்வான். அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்? இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய். இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய். இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

48-மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரியாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் –

49-ௐ ப⁴க³வந்நாராயணாபி⁴மதாநுரூப ஸ்வரூப ரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்யஶீலாத்³
யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ணக³ணாம் பத்³மவநாலயாம் ப⁴க³வதீம் ஶ்ரியம் தே³வீம்-நித்யாநபாயிநீம் நிரவத்³யாம் தே³வதே³வ தி³வ்ய மஹிஷீம் அகி²லஜக³ந் மாதரம் அஸ்மந்மாதரம் அஶரண்ய ஶரண்யாம் அநந்யஶரண: ஶரணமஹம் ப்ரபத்³யே ॥ 1 ॥

50-ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ -யஜு -காட -3-3-உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாகவும் இருப்பவள் –

51-ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீயம் -ஸ்ரீ ஸூக்தம் -9-ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கிறேன் –

52-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் –

53-அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )

54-அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து

55-தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||
-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||
-40-

நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும், சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் ஸிம்ஹாஸனமாகவும். அணிந்துகொள்ளும் பாதுகையாகவும், உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் —

56-ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் 

57-ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது 

58-பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்

59-கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன்

(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

61-ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் 

61-பவந்த மேவாநுசரந் நிரந்தரம்
ப்ரஶாந்த நிஶ்ஶேஷ மநோரதாந்தர: |
கதா’ஹம் ஐகாந்திக நித்ய கிங்கர:
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: ||-
-46-

மற்ற எல்லா விஷயங்களிலுமிருக்கும் ஆசையை அடியோடு விட்டு உன்னையே தொடரும்படி இருந்து, எப்பொழுதும் உனக்கு நித்ய கைங்கர்யம் செய்து உனக்கு ஆனந்தத்தைக் கொடுத்து என் வாழ்கைக்கும் ஒரு பயனைப் பெறுவேன்?

62-ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||-38-

நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-39-

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால் ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–

63-மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்

(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

65-போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா -(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)

66-அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் –

67-ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் –

68-ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

69-தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

70-ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள்

71(69)தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-41

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும், ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்; உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

72-கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்

73-த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யதா |
ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி தத்
ததா’நுஜாநந்தம் உதார வீக்ஷணை: ||-42-

விஷ்வக்ஸேனர் உன்னுடைய ப்ரஸாதத்தையே உண்டு, உன்னுடைய நித்ய மற்றும் லீலா விபூதிகளை நடத்தும் பொறுப்புகளை உன்னிடத்திலிருந்து பெற்றிருக்கிறார்;
எல்லோருக்கும் இனியவரான அவர், உன்னுடைய கண்ணசைவினாலே செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ஒப்புதல் வாங்கி, அவற்றை நடத்தக் கூடியவர்.

74-ஹதாகில க்லேஶமலை: ஸ்வபாவத:
*ஸதாநுகூல்யைகரஸைஸ் தவோசிதை: |
க்ருஹீத தத்தத் பரிசார ஸாதநை:
நிஷேவ்யமாணம் ஸசிவைர் யதோசிதம் ||-43-* த்வதாநுகூல்யைக என்றும் ஒரு பாடம் உண்டு..

துன்பங்களும் தோஷங்களும் இல்லாத, எப்பொழுதும் உனக்குத் தொண்டு செய்யும் அனுபவத்தை உடைய, உனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடியவர்களான, கையில் எப்பொழுதும் கைங்கர்யத்துக்குத் தேவையான மாலை, தூபம், தீபம் முதலியவைகளை ஏந்தி இருப்பவர்களான, உனக்கும் முறையை உணர்த்திக் கைங்கர்யம் செய்யக்கூடியவர்களான, அவர்கள் மற்றும் உன் தன்மைக்கேற்ப உன்னை வணங்கக்கூடிய நித்யஸூரிகளால் வணங்கப்படுபவனே!

75-ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே

78-கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் –

79-ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் 

80-தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

82-மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே

83-உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)

84-அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான்

85-அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் 

86-இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம் —மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

87-அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ

88-மாயாந்து ப்ரக்ருதீம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம் -ஸ்வே -4-10-ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மகேஸ்வரன் என்றும் அறியக் கடவன்

89-அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் தஸ்மிம்ஸ் சாந்யோ மாயயா ஸந் நிருத்த -ஸ்வே -4-9-இந்த மாயையாகிற பிரக்ருதியிலிருந்து மாயியாகிற பகவான் இவ்வுலகைப் படைக்கிறான் -அதில் ஜீவனாகிற மற்ற ஒருவன் மாயையினால் கட்டுண்டு கிடக்கிறான் –

90-யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் 

91-ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா-

92-ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத் -(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான்

93-யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் –

94-ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான்

95-அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் –

96-கஸ்யோதரே ஹரவிரிஞ்சிமுக: ப்ரபஞ்ச:?
கோ ரக்ஷதீமம் அஜனிஷ்டச கஸ்ய நாபே:?|
க்ராந்த்வா நிகீர்ய புநருத்கிரதி த்வதந்ய:
க:? கேந வைஷ பரவாநிதி ஶக்யஶங்க: ||-14-

யாருடைய வயிற்றில் ருத்ரன், ப்ரஹ்மா முதலியவர்களும் இவ்வுலகமும் அடங்கியது? யார் இந்த உலகத்தைக் காப்பவன்? யாருடைய திருநாபியிலிருந்து இவ்வுலகம் படைக்கப்பட்டது? உன்னைத் தவிர வேறு யாரால் இவ்வுலகம் அளக்கப்பட்டு, விழுங்கப்பட்டு மீண்டும் வெளியே உமிழப்பட்டது? இவ்வுலகத்தின் தலைவன் யார் என்பதில் ஸந்தேஹம் இருக்க முடியுமா?

97-த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது-

98-ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள்-

99-த்ரய ஏவாதநா ராஜன் பார்யா தாஸஸ் ததா ஸூதா யத்தே மைதி கச்சந்தி யஸ்யைதே தஸ்ய தத் தனம் -உத்யோக பர்வம்
அரசனே மனைவி வேலைக்காரன் பிள்ளை ஆகிய மூவரும் தனமற்றவர்கள் -அவர்கள் சம்பாதிக்கும் பொருளும் அவர்களுடைய யஜமாநர்களுக்குச் சேருகிறது –

100-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித-தை நா -11-
இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயுமிருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான் –

(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

102-மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன-

103-103-பஸ்யக -காஸ்யபோ பவதி -தை ஆ -1-8- ஞானி என்னும் பொருளுடைய பஸ்யக என்னும் சொல் கஸ்யப என்றும் மாறுகிறது –

104-த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-

105-ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும்

106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

107-ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்

108-பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63-
சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

109-ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள்-

110-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை-

111-இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக –

112-மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்-

113-அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்-

114-ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

115-ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-)

116-ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –

117-உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்

(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

119-தத்வேந யஸ்ய மஹிமார்ணவ ஶீகராணு:
ஶக்யோ ந மாதுமபி ஶர்வ பிதா மஹாத்யை: |
கர்த்தும் ததீய மஹிம ஸ்துதி முத்யதாய
மஹ்யம் நமோ’ஸ்து கவயே நிரபத்ரபாய ||-7

எம்பெருமானின் பெருமை என்னும் கடலில் ஒரு திவலையில் இருக்கும் ஒரு அணுவின் அளவு கூட ருத்ரன், ப்ரஹ்மா போன்றவர்களால் அளக்கமுடியாது. கவிஞன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானின் பெருமைகளைப் பாடத் தொடங்கியதை நினைத்து (இப்படிப்பட்ட நகைப்பிற்குரிய செயலை நினைத்து)
என்னை நானே வணங்கிக் கொள்கிறேன்.

120-யத்வா ஶ்ரமாவதி யதாமதி வாப்ய ஶக்த:
ஸ்தௌம்யேவமேவ கலு தே’பி ஸதா ஸ்துவந்த: |
வேதாஶ் சதுர்முக முகாஶ்ச மஹார்ணவாந்த:
கோ மஜ்ஜதோர் அணுகுலாசலயோர் விஶேஷ: ||-8-

அல்லது, சக்தியற்ற நான் சோர்வடையும் வரையிலோ எனக்குத் தெரிந்த அளவிலோ அவனைக் கொண்டாடுவேன்; இவ்வாறே, வேதங்களும், நான்கு முகங்களைக் கொண்ட ப்ரஹ்மா முதலியவர்களும் எம்பெருமானைக் கொண்டாடுகின்றனர்; கடலுக்குள் மூழ்கி இருக்கும் சிறு கூழாங்கல்லுக்கும் பெரிய மலைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? (ஒன்றும் இல்லை)

121-யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்)

122-தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-55-

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும். மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

123-அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
 –ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

124-ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – 

125-தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள்

126–கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு 

127-ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை 

128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

129-ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்

130-ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான்

131-ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66

132-நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்-

133-சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

134-கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவபரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப்பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்தப் வார்த்தைகளே யாகும்

135 (118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-
எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –

136-ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம்
பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம்
லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் –2-

பெரிய பிராட்டியாரே எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு – நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும்-ஹே லஷ்மீ-இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு–இலக்காகக் கடவோம்

137-ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை:
வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம்
கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–7

ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும். ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை. அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும்-இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை,இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும்.இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்.

138-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )

139-அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

140-யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –

141-மூலப்பிரக்ருதிர் ஈஸாநி ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -66

142-ஆஹு: வேதாந் அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது

மநஸி விலஸதா அக்ஷ்ணா பக்தி ஸித்தாஞ்ஜநேந
ஸ்ருதி சிரஸி நிகூடம் லக்ஷ்மி தே வீக்ஷமாணா:
நிதி மிவ மஹிமாநம் புஞ்ஜதே யே அபி தந்யா:
நநு பகவதி தைவீம் ஸம்பதம் தே பிஜாதா:–12

பகவானுடைய திருக் கல்யாண குணங்கள் அனைத்தையும் கொண்டவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகியே! உனது பெருமையைப் பற்றி வேதாந்தங்களில் நேரடியாக எதுவும் கூறப்படவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் உனது பெருமைகளை அவை மறைமுகமாகக் கூறுகின்றன. இதனைக் கண்டறிவது எப்படி? புதையலை அடைய ஸித்தாஞ்ஜநம் என்ற ஒரு வித கண் மை கொண்டு காண்பது போன்று ,
உனது பக்தி என்னும் கண் மை தடவினால் அந்த வேதாந்த ரகசியங்கள் எளிதாகப் புலப்படும். இதனைச் சிலர் இப்படியாகத் தங்கள் மனதால் எளிதாக அறிந்து விடுகின்றனர்.
அவர்கள் எம்பெருமானின் சம்பந்தம் பெற்றவர்கள் என்று கூறவும் வேண்டுமா?
அப்படி இல்லை என்றால் அவர்களால் இவ்வாறு அறிய இயலாது அல்லவா?

144-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்

145-பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 -பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்

146-ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

147-ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்

148-வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்

149-தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ:
த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி
தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ
ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி
–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10-

தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர்.
இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் –
இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.

150-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –
இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோ –

151-சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்

152-யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்

153-(30-)ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –

154-(38-)துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணம் -ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –ஸூந்தர -16-5-ஒத்த குணம் வயஸ் நடத்தைகளை உடையவளும் ஒத்த குலம் அழகுகளுடன் கூடியவளுமான வைதேஹிக்கு ராமனே தகுந்தவர் -அவருக்கும் கறுத்த கண்களையுடைய இவளே தகுந்தவள்-

155-(118)-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1-
எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –

156-யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10-
எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —

157-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6-
இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –

158-தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞாதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
–ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

159-ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே

160- பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44-
வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –

161-காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-
அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –

162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5
–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

163-(144)-அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —

164-பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11--உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்

165-யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24-
வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –

166(31)த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.

167–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்

168-க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்

169-ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-
நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்

170-விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்

171(146)ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்

172-ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா
–ஸ்ரீ ஸ்தவம்-1-

எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய்–ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ–அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில் –இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ–அந்தப் பெரிய பிராட்டியார் நன்மையை அளிக்கக் கடவள்-

173-ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீத்தை

174-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

175-லஷ்மீ கல்ப லதா உத்துங்க ஸ்தந ஸ்தபக சஞ்சல
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்க மே ரமதாம் மாநச அம்புஜே
–1-10-

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகிற கற்பகக் கொடியில் உள்ள உன்னதமான திரு முலைத் தடமாகிற பூங்கொத்தில் சுழலமிடா நின்ற-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் அன்றோ-ஸ்ரீ ரெங்கநாதனாகிற வண்டு அடியேனுடைய நெஞ்சு ஆகிற
தாமரைப் பூவில் உகந்து வாழ்ந்திடுக-

176-ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38-
வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –

177-மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

178-ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35-
பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்

179-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –

180-தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41-
அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-

181-தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –
தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –

182-புண்யா புண்யாவீஸ்வர ப்ரீதி கோபவ் -புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்

183-பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாப ப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ ஸம்பன்னா ஸா தேவீ மே ப்ரஸீதது -மங்கள ஸம்ஹிதை
தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –

184-அனுக்ரஹ பராம் ருத்தி மநகாம் ஹரிவல்லபாம் நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோதா ஸம் பவாம் -ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம்
அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –

185-186-“சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:
தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7-
த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை:
காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8

இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான
உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில்
பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.

187-ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-
அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–

188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

189-த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவந த்ரயம் -வி நஷ்ட ப்ராய மபவத் த்வயேதாநீம் ஸமேதிதம் -விபு -1-9-123-
தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது –

190-ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முநயஸ் ச தபோதநா ஏதந்தே த்வத் பதச்சாயாம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி -காஸ்யபீயம்
கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –

191-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
29-

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ
திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் 

192-ப்ருதிவ்யப்ஸூ ப்ரலீயதே ஆபஸ் தேஜஸி லீயதே தேஜோ வாயவ் லீயதே வாயுர் ஆகாஸே லீயதே ஆகாஸம் இந்த்ரியேஷு இந்திரியாணி தன்மாத்ரேஷு தன்மாத்ராணி பூதாதவ் லீயந்தே பூதாதிர் மஹதி லீயதே மஹாந் அவ்யக்தே லீயதே அவ்யக்தம் அக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தமஸ் பரே தேவ ஏகீ பவதி -ஸூபால -2-
பூமி ஜலத்தில் லயிக்கிறது -ஜலம் தீயில் லயிக்கிறது -தீ வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் லயிக்கிறது -ஆகாசம் இந்த்ரியங்களுடனும் இந்திரியங்கள் சப்தாதி தன்மாத்ரையுடனும் சேருகின்றன -தன் மாத்ரம் பூதாதி என்னும் தாமஸ அஹங்காரத்தில் லயிக்கிறது –அஹங்காரம் மஹானில் லயிக்கிறது -மஹான் அவ்யக்தத்தில் லயிக்கிறது -அவ்யக்தம் தமஸ்ஸிலே லயிக்கிறது -தமஸ் மேலான தேவனிடம் ஒன்றாகிறது –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –

194-தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது –

195-ஸர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி -கலா முஹூர்த்தா காஷ்டாஸ் ச அஹோ ராத்ராஸ் ச ஸர்வஸ–தை நா -1-8-
மின்னலைப்போன்ற உருவையுடைய புருஷனிடமிருந்து எல்லா நிமிஷங்களும் கலைகளும் முஹூர்த்தங்களும் காஷ்டைகளும் இராப்பகலும் ஆகிய கால தத்வம் எல்லாம் உண்டாயின –

196–வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரோ நாமாநி க்ருத்வா அபி வதந் யாதாஸ்தே -புருஷ ஸூக்தம்
ஆதித்ய வர்ணனாய் ப்ரக்ருதிக்கு அப்பால் எழுந்தருளி இருப்பவனாய் ஸர்வஞ்ஞனாய் எல்லா நாம ரூபங்களையும் படைத்து அவற்றைத் உச்சரித்துக் கொண்டு எழுந்தருளி இருப்பவனான இந்த மஹா புருஷனை நான் அறிகிறேன் –

197-ஸேயம் தேவதைஷத ஹந்தாஹம் இமாஸ்திஸ்ரோ தேவதா அநேந ஜீவேன ஆத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக் -6-3-2-
அப்படிப்பட்ட இந்த தேவதை நான் நெருப்பு நீர் பூமி என்னும் இந்த மூன்று தேவதைகளையும் எண்ணுருவாய் இருக்கும் ஜீவனால் வியாபித்து நாம ரூபங்களைச் செய்யக்கடவேன் -என்று ஸங்கல்பித்தது-

198-ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)
அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –

199-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

———-

200-ஸ்ரீரியை ஸமஸ்த சிதசித் விதாந வ்யஸனம் ஹரே:
அங்கீகாரிபி: ஆலோகை: ஸார்த்த யந்த்யை க்ருத: அஞ்ஜலி:–
ஸ்லோகம் – 1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.-அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.
இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).
இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?
அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள். (அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).
இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.-பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).-இப்படிப்பட்ட பெரியபிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

——–

201-உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ
நிர்வாஹ கோர கித நேம கடாக்ஷ லீலாம்
ஸ்ரீரங்க ஹர்ம்யதல மங்கள தீப ரேகாம்

ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் ஸ்ரியம் ஆஸ்ரயாம:–2-

இவள் தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக் கண்களைத் திறந்து பார்க்கிறாள்-அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன-(கோரகித என்பது அரும்பு போன்ற என்னும் பொருளும், பல்லவித என்ற பதம் உலகங்கள் தளிர்ப்பதையும் கூறுகின்றன)-இப்படியாகத் தனது கடாக்ஷம் நிறைந்த பார்வையை எங்கும் பரவ விடுகிறாள். அது மட்டும் அல்ல–இவள் ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக உள்ளாள்-(ஹர்ம்யதலம் என்பது விமானம் ஆகும்) . இதன் உட்பொருள் என்ன?
தான் அந்த விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித் தருகிறாள்.–இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை உடையவள் யார் என்றால் – ஸ்ரீரங்கராஜ மஹிஷீம் – என்றார்.–பெரிய பெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .–மஹிஷி என்று கூறுவதன் மூலம் அனைவருக்கும் அரசி என்று கூறினார். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாயகியை நாம் வணங்கி நிற்போம்.

————

202-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாச் சோத்பாதயி தவ்யா –தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் –

203 (26)ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-
ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –

204 (27)ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1-
செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் –

205-விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது

206-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73
பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –

206-அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52-
தேவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது

207-ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21-
மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –

208/209-அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத்
அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை

210-விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9-
எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –

211-புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை

212-பத்ம யோநிரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் திவ்யம் சாஷ்ட குணை ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -ப்ரஹ்ம புராணம்
நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்

213-ப்ரஹ்ம அதீநாம் யதாயத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ ய பதே -ப்ரஹ்ம புராணம்
ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்

214-ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

215-ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

216-அம்ருதஸ்யைஷ ஸேது -முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்

217-ஸ ப்ரீதோ அலம் பலாய -த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்

218-பலமத உபபத்தே -ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்

219-ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-
ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்

220-உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

221-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14-
காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-

222-அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –

223-(106)-யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-
எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக –

224-ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-
வானரத்தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –

225-யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்
சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –

226-புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்
உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –

227-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

228-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் ஷிப்ர ப்ரஸாதிநீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -ஸ்வாயம்புவம்
எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-

229-ஆத்மவித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –

230-ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரிசோஷிணீ பவ பங்காப ஹாரிணீ பர நிர்வாணதாயிநீ -ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23
உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –

231-ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள் –

232-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –
லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –

233-மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –
ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –

234-தர்மஞ்ஞ சமய பிரமாணம் வேதாஸ் ச -ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் –

235-யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-

எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

236-த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –ஸூந்தர -55-26-
பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப்பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —

237- ஸாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் மஹா விபூதி ஸம்ஸ்த்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம்-ல த-17-5-
ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ —

238-அஸநாயா அபி பாஸே ச சோக மோஹவ் ஜராம் ருதீ ஷடூர்மிபிர் விசுத்தா —ஸ்ருதி
பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது

239-அபஷய விநா சாப்யாம் பரிணாமர்த்தி ஜென்மபி வர்ஜிதா சக்யதே வக்தும் யஸ் ஸதா அஸ்தீதி கேவலம் -வி பு -1-2-11-
குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்

240-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்
தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-

241-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1-
எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –

242-ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –

243-ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3-
இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –

244-ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-
விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –

245-ஆனந்த ஆத்மா ப்ரஹ்ம -தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்

246-ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் –தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்

247-நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2-
களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –

248-ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் –
எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –

249-ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத்வாச் ச தத் ப்ரஹ்மேத் யபிதீயதே -பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –

250-அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1-
விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –

251-ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்
கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –

252-த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

253-பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ
தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்

253(101)ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்
முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் –

254-ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –

255-256-ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14-
எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –

257-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7-
நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –

257 (193)ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-
ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –

193- ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8
இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்

258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

259-ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.

260-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.

261-சக்தயஸ் பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷ தாக்யயா -பாஞ்சராத்ரம்
பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை –

262-பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி –பரமேஷ்டீ ஸ்ம்ருதஸ் சப்தே ஸ்பர்ஸே து புரூக்ஷ ஸ்ம்ருதஸ் -விஸ்வாத்மா தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்த்யாத்மோ ரஸே ஸ்ம்ருதஸ் -ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருதஸ் -பாஞ்சராத்ரம்
பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –

263-பஞ்சைதாஸ் சக்தயே ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந அசேஷ ஜெகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா -பாஞ்சராத்ரம்
இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –

264-ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி ஸம்பவா -வராஹ பு -34-40-
அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –

265-ந பூத சங்க சமஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந -சாந்தி -206-60-
இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –

266-பஞ்ச சக்தி மயோ தேவ-பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்

267-ஸத்த்வம் விஷ்ணு ப்ரகாசகம் -ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-

268-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸகமநாமயம்
ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக
–ஸ்ரீ கீதை 15-6
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-

269-ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்
அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —

270-யத்ர தூமஸ் தத்ராக்நி -தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-

271-தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-
விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-

272-பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –

273-அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்

274-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

275-யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச –எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –

276-அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6-

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்

277-ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7-
கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –

278-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்
பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்

279-நீலதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி

280-தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67-
சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –

281-ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

282-ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

283-ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம்
கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –

284-க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50
யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –

285-ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ-சாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-

286-ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று –

287-ஸ்லோகமும் பொருளும் மூலத்திலேயே உள்ளது

288-யுவா குமார -ருக்வேத –யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் -யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –

289-ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-
இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் –

290-புருஷம் க்ருஷ்ண பிங்களம் -தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்

291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

293-கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்

294-ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது

295-ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

296-ஸ்ரீ பகவாநுவாச-
பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ–
நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷

ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –

296-க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –

297-நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –

298-(20)-தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15
இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –

299-பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய தஸ்ய அநபாயிநீ தேவீ தத் தர்ம தர்மிணீ -பாஞ்சராத்ரம் –
நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –

299-(128)-ந காங்க்ஷே விஜயம் கிருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச.–
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா—৷৷1.32৷৷

கண்ணா போரில் வெற்றியையோ -அரசையோ -சுகங்களையோ -நான் விரும்ப வில்லை
கோவிந்தன் எங்களுக்கு அரசினால் என்ன பயன் – போகங்களினாலோ உயிருடன் இருப்பதனாலோ என்ன பயன்-கோவிந்த -சப்தம் -கன்றுகளுக்கு ரக்ஷகனாய் இருந்து வைத்து -பந்துக்களுக்குத் தீமை செய்ய தூண்டவோ-

300-அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருதஸ் அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி அஹமர்த்தம் விநா அஹந்தா நிராதாரா ந ஸித்த்யதி -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது

301-(291)-291-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-
ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்

302-188-188-திவ்ய மால்ய அம்பர தரா ஸ்நாதா பூஷண பூஷிதா பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே -வி பு -1-9-105-
திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –

303-ராஜ ரஜோ சிவஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குண ஸாலிநஸ் -லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் –

304-(227)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ -சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –

305-தத்ர திவ்ய வபுர் ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தந ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன –அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –

306-(81)-வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –

307-ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –

308(60)-புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

309-வ்யூகேஷு சைவ சர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ ததா வ்யூஹீ பவத்யேஷா மம சைவ அநபாயினீ -பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –

310-தைஸ் தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சார்ங்கிண கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அநு காமிநீ -லஷ்மீ தந்த்ரம் -17-4-
அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்

311-குணைர் விவாசை ரூபைஸ் ச ஸ்வாத்ம நா வா ஆத்ம நீஸ்வரம் நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -பாஞ்சராத்ரம்
குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –

311-ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
தவத் ஆச்லேஷ உதகர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ச்ருதி: அபி
–28-

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

312(174)-அநுகல தநு காண்ட ஆலிங்க நாரம்ப சும்பத்
ப்ரதிதிச புஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:
ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா
ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–
-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3

ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.

313-ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐச்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குணராசய:
–32–

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

314-அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மிமஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே
–33–

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

315-யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

315-தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்
–25-

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

317-ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49-

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?

318-யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி
–48-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன்
தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான்.
நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

319-அநு ஜனு அநு ரூப சேஷ்டா ந யதி சமா கமம் இந்திரா அகர்ஷியத்
அசரசம் அதவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவம் அகரிஷ்யத ரங்க ராஜ நர்ம—49-

பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே-
புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்

320(64)ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே
சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8-

ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-

320(199)-யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–

இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.

321-பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம்
வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந
கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந்
அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44-

ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே –
பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –

322-ஆத்மன் யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சே த்யாகாரைஸ் தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வா தயந்த்யாத்த ரூபா தூரீ குர்யான் நஹி மதுரதாதுக்த சிந்தோஸ் தரங்காத்
பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –

323-வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –

324-ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-
ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –

325/326-க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –

327-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-
அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –

328-ஏஷோ அணுர் ஆத்மா சேதஸா வேதிதவ்ய -முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்

329-த்ரஸ ரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா -ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்தப் ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்

330-ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ

331-ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-
அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்

332-(60)புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145
பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –

333-சவும்ய அஸம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயைதத் தேவி பூரிதம் -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –

334(252)த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-
தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –

335-தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம்-
மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –

335 (139)அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்

336-ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் ஈஸ்வரன் ஸர்வ பூதாநாம் -எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்

337(100)யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்

338-அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான் –

339-யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22-
எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் –

340-ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-
குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –

341-ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுபரோதாத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-
ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-

———-

342-ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3-
ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –

343-யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத் பிரயந்த்யபி ஸம் விஸந்தி -தத் விஜிஜ்ஞாஸஸ்வ தத் ப்ரஹ்மேதி -தை ப்ருகு -1-
எதனிடமிருந்து இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக –

344-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -சாந்தோ -3-14-1-
அந்தப் பிரஹ்மத்தினிடமிருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் இவை எல்லாமே ப்ரஹ்மம் அன்றோ என்று சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் –

345–காரணந்து த்யேய -அதர்வசிகை -காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது –

346-அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -1-1-1-கர்மவிசாரத்தில் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது

347-ஜன்மாத் யஸ்ய யத-1-1-2-இவ்வுலகின் பிறப்பு முதலியவை எதனிடமிருந்தோ அதுவே ப்ரஹ்மம்

348-ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -ஆனுசா பர்வம்-எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) 

349-292-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம்
ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –

350–ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-

351-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )

352-258-விஸ்வம் நாராயணம் ஹரிம் -தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே –

353-வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )

354-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால்

355-நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் 

356-(அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-

357-358-359-(162)162-சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்

360–ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்
அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யமுன முனிவரை ஸ்துதிக்கிறேன்

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–வியாக்யானம் –

May 15, 2025

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா
—ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஸ்ருத் யர்த்த சார ஜனகம் ஸ்ம்ருதி பால மித்ரம்
பத்மோல்ல ஸத் பகவத் அங்க்ரி புராண பந்தும்
ஞானாதி ராஜம் அபய ப்ரத ராஜ புத்ரம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் நமாமி
–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த தனியன்

(வேதப் பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய்
ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு -மலர வைக்கும் -இளஞ்சூரியனாய்,
ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் -தாமரை இணை அடிகள் -பழைய உறவினராய்,-திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
ஞானங்களுக்கு -அதி ராஜம் -பேரரசராய்,
அபய ப்ரத ராஜரின் பிள்ளையாய்,
பரம காருணிகரான-பரம காருணிகம்-பெரியவாச்சான் பிள்ளையைப் போலவே
இவரும் ஞானாதி ராஜம் -பரம காருணிகர் என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபீஷ்டவ்தி ஸ்ரீ யம் தேவீம் அகிலாத்ம ஏக மாதரம்
விஷ்ணு பத்நீம் விஸாலாஷீம் யாமுனார்யோ மஹா மதி —

எல்லாமும் ஆத்மாக்களுக்கும் ஒரே தாயாய் -விஷ்ணு பத்நீயாய் -பரந்த திருக் கண்களை யுடையவளான ஸ்ரீ தேவியை மஹா புத்திமானான யாமுனாசார்யர் ஸ்துதிக்கிறார்-

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

(நான்காம் அத்தியாயத்தில்-நான்கு கீதா ஸ்லோகங்கள் -அவதார ரஹஸ்யங்கள் ஆறு அர்த்தங்கள்
2-45-2-48-சதுஸ் ஸ்லோகி -நான்கு ஸம்ஹிதைகள்
கோதா சதுஸ் ஸ்லோகி -ராமானுஜ சதுஸ் ஸ்லோகி-
மண்டோதரி சதுஸ் ஸ்லோகி
பல இருந்தாலும் பிரசித்தமானது ஆளவந்தார் அருளிச் செய்த இந்தப் பிரபந்தமே)

மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று கொண்டு இச் சேதனனுக்கு ஸ்வரூப அநுரூபமாக உபகாரகராகிறார் -அகில ஜகன் மாதாவான பிராட்டியும் -அவ்வயயஸ் பிதாவான ஈஸ்வரனும் –அறியாதது அறிவித்த ஆச்சார்யனும் -அதிதி ஸப்த வாஸ்யனான அவனடியாரும் -என்று இந் நால்வர் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே உத்தேச்ய பிரதிபத்தி பண்ணி உஜ்ஜீவிக்கக் கடவன் என்றும் வேதாந்தங்களிலே வ்யாக்யாதமாக விதிக்கையாலே விசேஷஞ்ஞர் எல்லோரும் விரும்பி அனுஷ்ட்டிக்க வேண்டும்படி விசேஷ யர்த்தங்களாய் இறே இவ்வர்த்தங்கள் தான் இருப்பது –இந் நால்வர் பண்ணும் உபகாரமும் நவரத்ன மாலையிலே நன்றாகக் காணலாம் இறே –

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவரத்ன மாலை —

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

(சரணாகதன் ஆனவன் –
1-தன்னையும் –
2-தனக்கு விரோதியான தேஹத்தையும் –
3- தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களையும் –
4-சம்சாரிகளையும் –
5- தேவதாந்தரங்களையும் –
6-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் –
7- ஆச்சார்யர்களையும் –
8- பிராட்டியையும் –
9-ஈஸ்வரனையும் –
நினைத்து இருக்கும் படி எங்கனே என்னில் –

1- உடம்பில் வேறுபட்டு நித்யனாய் ஒருபடிப் பட்டு அணுவாய் –ஞானத்தையும் ஆனந்தத்தையும் வடிவாக யுடையனாய் ஜ்ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் இருப்பிடமாய் எம்பெருமானை ஒழிய வேறு ஓன்று நினைத்தால் சொல்லுதல் செய்ய மாட்டாதே -எம்பெருமானுக்கே உரியனாய் தன் கார்யத்துக்கு தான் கடவன் அன்றிக்கே -அவனையே பலமாக யுடையனாய் இருக்கும் என்று தன்னை நினைப்பான் –

2- தன்னை உள்ளபடி அறிய ஒட்டாதே விபரீத ஜ்ஞானத்தை ஜனிப்பித்து இருபத்து நாலு தத்துவங்களினுடைய திரளாய் அநித்யமாய் எப்போதும் ஒக்க பரிணமிக்கக் கடவதாய் ஒரு நாளும் ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே அநந்த துக்கங்களை விளைப்பிக்கக் கடவதாய் சப்தாதி விஷயங்களிலே மூட்டி நசிப்பிக்கும் என்று தன் தேஹத்தை நினைப்பான் –

3-ஆத்ம ஜ்ஞானத்தையும் பகவத் ஜ்ஞானத்தையும் பகவத் விஷயத்தில் ருசியையும் த்வரையையும் குலைத்து தேஹாத்மா அபிமானத்தையும் அஹங்கார மமகாரங்களையும் காம க்ரோதாதிகளையும் விளைப்பித்து பலபடியாலும் -அனர்த்தத்தை பண்ணுவார்கள் என்று தேஹத்தைப் பற்றி வரும் பந்துக்களை நினைப்பான் —

4-பகவத் அனுபவத்துக்கும் பகவத் கைங்கர்யத்துக்கும் விரோதிகளாய் சம்சார வர்த்தகராய் இருப்பார்கள் என்று சம்சாரிகளை நினைப்பான் –

5-அஜ்ஞராய் அசக்தராய் எம்பெருமான் பக்கலிலே பிறந்து அவன் கொடுத்த பதங்களை யுடையராய் எதிரிட்டு துர்மாநிகளாய் தங்களைப் போர பொலிய நினைத்து நாட்டாரை பிரமிப்பித்து அனர்த்தத்தைப் பண்ணுவார் சிலர் என்று தேவதாந்தரங்களை நினைப்பான் —

6-பகவத் ஜ்ஞானத்துக்கும் இதர விஷய வைராக்யத்துக்கும் பகவத் பக்திக்கும் வர்த்தகராய் -உசாத் துணையாய் –பிராப்யத்துக்குஎல்லை நிலமாய் -இருப்பார்கள் என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை நினைப்பான் –

7- தன் கடாஷத்தாலே என்னைத் திருத்தி சர்வேஸ்வரன் கைக் கொள்ளுகைக்கு யோக்யனாம் படி பண்ணி அவன் திருவடிகளிலே சேர்த்து அறியாதன அறிவித்து-திருவாய் -2-3-2- ஸ்வாமியாய் என்றும் ஒக்க அடிமை கொள்ளும் மஹோபகாரகன் -என்று ஆசார்யனை நினைப்பான்-

8- நம்முடைய சர்வ அபராதத்தையும் பொருப்பித்து ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும் குலைத்து அவனுடைய காருண்ய வாத்சல்யாதி குணங்களைக் கிளப்பி நமக்கு புருஷகார பூதையாய் மாதாவாய் ஸ்வாமிநியாய் ப்ராப்யையாய்—இருக்கும் என்று பிராட்டியை நினைப்பான் –

9- சிருஷ்டி காலத்திலேயே சரீரத்தையும் இந்த்ரீயங்களையும் தந்து அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கி அத்வேஷத்தையும் ஆபிமுக்யதையும் சத் சங்கதி தொடக்கமான ஆத்ம குணங்களையும் பிறப்பித்து சதாசார்யனோடே சேர்த்து நம்முடைய சர்வ அபராதங்களையும் பொறுத்து சம்சார சம்பந்தத்தையும் கழித்து அர்ச்சிராதி மார்க்கத்தையும் -பரமபதத்தையும் -குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மா பாவி நித்ய கைங்கர்யம் கொள்ளும் ஸ்வாமி என்று சர்வேஸ்வரனை நினைப்பான் –

நவார்த்த ரத்ன மாலேயம் சத் பிர்தார்யா சதா ஹ்ருதி
பாத்தா யோ நா அதியசசா  தம் ஜகத் குரும் ஆஸ்ரயே —

ஸ்ரீ நவ ரத்ன மாலை  முற்றிற்று-)

இப்படிப்பட்ட உபகாரங்களை அனுசந்தித்து
சீதை என்பதோர் தெய்வம் -பெரிய திரு -10-2-5-
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் -இரண்டாம் திருவந்தாதி-57
தேவு மற்றறியேன் -கண்ணி -2-
குலதெய்வம் -பெரிய திரு -2-6-4-
என்று நால்வர் பக்கலிலும் தேவதா பிரதிபத்தியைப் பண்ணா நின்றார்கள் இறே

செம்பொன் நீண் முடி எங்கள் ராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்
கும்பனொடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ—-10-2-5-

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-

ஆகையாலே ஸகல வேதாந்த வித் அக்ர கண்யராய்-ஆஸ்திக அக்ரேஸராய் -பரபஷ ப்ரதிஷேப ஸ்வ பக்ஷ ஸ்தாபகத்வத்தாலே ஆளவந்தார் என்றும் அகில லோக பிரஸித்தமான அபிமானத்தை யுடையரான யாமுனாச்சார்யர் தான் ஸதாச்சார்ய ஸ்ரேஷ்டரானமை தோற்ற
ஆசரதீத் யாசார்ய
ஸ்வயம் ஆசரதே யஸ்து ஸ ஆசார்ய இதி ஸ்ம்ருத–என்கிறபடியே ஆதர அதிசயத்தாலும்
ஸ்வ அபிமான அந்தர்பூதமான அஸ்மதாதிகள் எல்லோரும் இவ்வர்த்தங்களை அனுஷ்டித்து ஆத்ம உஜ்ஜீவனத்திலே அத்யபி நிஷ்டராக வேணும் என்கிற தம்முடைய ஆகஸ்மிக கிருபையாலும் -உபகாரகரான இந்நால்வர் பக்கலிலும் தமக்குண்டான பிரதிபத்தி விசேஷத்தை க்ரந்தஸ்தமாக பிரகாசிப்போம் என்று திரு உள்ளம் பற்றி பிரதமத்திலே
மாத்ரு தேவோ பவ -என்று மஹா உபகாரகையாகச் சொல்லப்பட்ட பெரிய பிராட்டியாருடைய ஸ்வரூப குண விபூதிகளை அனுசந்தித்து அவ்வனுபவ ஜெனீத ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே தத் விஷய ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராகிறார் –
காந்தஸ்தே -இத்யாதியாலே

பித்ரு தேவோ பவ -என்று தொடங்கிச் சொல்லப்படும் மூவரிடத்தில் உண்டான விசேஷ பிரதிபத்தியை ஸ்தோத்ரம் ரத்னத்திலே வெளியிட்டு அருளினார் -எங்கனே என்னில் -பிரதமத்திலே
ஆச்சார்ய தேவோ பவ -என்று மஹா உபகாரகராகச் சொல்லப்பட்ட ஆச்சார்ய விசேஷத்தில் தமக்குண்டான பாவ பந்த விசேஷங்களை
நமோ அசிந்த்ய அத்புத-1- -என்றும்
தஸ்மை நம-2- -என்றும்
பூயோ நம -3- -என்றும்
ப்ரணமாமி நம -4- -என்றும் பிரகாசிப்பித்தார்

நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே |
நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே ||

நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை
எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் அடைந்தார்.
அவர் எப்பொழுதும் பகவானையே த்யானித்தில் கொண்டிருப்பவர். பகவத் பக்திக் கடலாக இருப்பவர்.
இப்படிப்பட்டவரை வணங்குகிறேன்.

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநாநுராக மஹிமாதிஶயாந்தஸீம்நே |
நாதாய நாத முநயே’த்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம் ||

மது என்னும் அஸுரனைக் கொன்ற எம்பெருமானின் திருவடிகளில் சிறந்த ஞானம் மற்றும் பக்தியின் வடிவமாக
விளங்குபவர் ஸ்ரீமந் நாதமுனிகள். அவருடைய திருவடிகளே எனக்கு இவ்வுலகிலும் பரமபதத்திலும் புகலாக இருக்கும்.
அவரே என் தலைவர். இப்படிப்பட்டவரை நான் வணங்குகிறேன்.

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

நம்மாழ்வாரின் திருவடிகளே எனக்கும் என் குலத்தவர்களுக்கும், தாய், தந்தை, மனைவி, மக்கள், சிறந்த செல்வம் மற்றும் எல்லாமாகும்.
மகிழ மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், கைங்கர்யச் செல்வத்தை உடையராயிருக்கும், நம் வைஷ்ணவ குலத்துக்குத்
தலைவரான நம்மாழ்வாரின் இரண்டு திருவடிகளில் என் தலையை வைத்து வணங்குகிறேன்.)

நிருபாதிக பிதாவான ஈஸ்வர விசேஷத்தில் தமக்குண்டான பிரதிபத்தி விசேஷத்தை
யன் மூர்த்நி மே -6- -என்று தொடங்கி பஹு பிரகாரமாக பிரகாசிப்பித்தார்

வருவிருந்தை -பெரியாழ்வார் -4-8-2-
விருந்தாகும் பெருந்தக்கோர் -பெரிய திருமொழி -6-6-10-
என்கையாலே அதிதி ஸப்த வாஸ்யரான ததீய விஷயத்தில் தமக்குண்டான விசேஷ பிரதிபத்தியை
த்வத் ஆஸ்ரிதாநாம் –என்றும்
தவ தாஸ்ய ஸூக ஏக சங்கிநாம் -என்றும்
ஸக்ருத் த்வதாகார -என்றும் வெளியிட்டார் இறே

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண:-ஶ்லோகம் 20 – ||

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவது
ஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

செம்மொழி வாய் நால்வேத வாணர் வாழும் திரு நறையூர் மணி மாடச் செங்கண் மாலைப்
பொய்ம்மொழி  யொன்றில்லாத மெய்ம்மையாளன் புலங்கைக் குல வேந்தன் புலமை யார்ந்த
அம்மொழி வாய்க் கலிகன்றி யின்பப் பாடல்  பாடுவார் வியனுலகில் நமனார் பாடி
வெம்மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெரும் தக்கோரே–6-6-10-

ஆனால் மாத்ரு தேவோ பவ -என்கிற பிராட்டிமார் வைபவம் அங்கு ப்ரதிபாதிக்க வில்லையே வென்னில்
கஸ் ஸ்ரீ ஸ்ரீய-என்றும்
தயா ஸஹாஸீநம் -என்றும்
ஸூசிப்பித்த மாத்ரம் இறே ஸ்தோத்ரத்தில் உள்ளது –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

தயா ஸஹாஸீநம் அநந்தபோகிநி
ப்ரக்ருஷ்ட விஜ்ஞாநபலைக தாமநி |
பணாமணி வ்ராத மயூக மண்டல
ப்ரகாஶ மாநோதர திவ்யதாமநி ||-ஶ்லோகம் 39 –

ஆதிசேஷன் சிறந்த ஞானத்தையும், பலத்தையும் உடையவன், தன்னுடைய பணாமணிகளில் இருக்கும் ரத்னங்களின் ஒளியால்
ஒளிவிடும் திருமடியில், பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளியிருக்கும் திவ்ய அந்தப்புரத்தைக் கொண்டிருக்கிறான்;
இப்படிப்பட்ட திருவனந்தாழானின் திருமேனியில், எம்பெருமான் திவ்யமாக சயனித்திருக்கிறான்–


அப்படியாகில் இவ்வளவு போராதோ -இதுக்காக ஒரு பிரபந்தம் நேர வேண்டுவான் என் என்னில்
பேராளன் பேரோதும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்கிற
பாகவத அநுவர்த்தனமாகிற பரமப்ராப்ய லாபம் ஆச்சார்யனாலேயாய்-ஆச்சார்ய லாபம் ஈஸ்வரனாலேயாய் -ஈஸ்வர லாபம் பெரியபிராட்டியாராலே யாகையாலே
இந்நால்வரிலும் மஹா உபகாரிகையாய் இறே இவள் தான் இருப்பது –
ஆகை இறே மாத்ரு தேவோ பவ என்றும் பிரதமோபாத்தை யாயிற்று -இப்படி ஸர்வ வ்யாவ்ருத்த உபகார ஸீலை யாகையாலே ஸாமான்யமான ஆகாரேண ப்ரதிபாதித்த அளவன்றிக்கே தத் விசேஷமாக ஒரு பிரபந்தம் நேர வேணும் என்று நிர்ணயித்து விஷயத்திலே தமக்குண்டான பாவ பந்தம் எல்லாம் தோன்ற சதுஸ் ஸ்லோகியாலே உப ஸ்லோகிக்கிறார் –

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-

வந்துஅவர் எதிர்கொள்ள* மாமணி மண்டபத்து*
அந்தம்இல் பேரின்பத்து* அடியரோடு இருந்தமை*
கொந்துஅலர் பொழில்* குருகூர்ச்சடகோபன்* சொல்-
சந்தங்கள்ஆயிரத்து* இவைவல்லார் முனிவரே

கர்ம பரதந்த்ரனான ப்ரம்மாவின் ப்ரஸாதத்தாலே
ஸோக ஸ்லோகத்வம் ஆகத -(ஸமாஷரைச் சதுர்ப்பிர்ய பாதைர் கீதோ மஹாத்மநா ஸோ அநு வ்யாஹரணாத் பூயஸ் ஸோக ஸ்லோகத்வம் ஆகத–யாதொரு சோகமானது சமமான எண்ணிக்கையுடைய அக்ஷரங்களுடன் கூடிய நான்கு பாதங்கள் கொண்டதாக அந்த மஹாத்மாவான வாழ்மீகியினால் பாடப்பட்டதோ அந்தப் சோகம் அடிக்கடி உச்சரிப்பதால் ஸ்லோகமாயிற்று -)-என்கிறபடியே
சோக வேக ஜெனிதமான ஸ்லோகங்கள் போல் அன்றிக்கே ஸூ மங்கள ஆகாரையான இவள் ப்ரஸாதம் அடியாக வந்ததாகையாலே ஸூ ஸ்லோகங்களாய் இறே இஸ் ஸ்லோகங்கள் தான் இருப்பது -(ராஜ்ஜியம் துரந்து -வனவாசம் சென்று – சீதா நாஷ்டா- ஜடாயு இழந்த சோகங்கள் நிறைந்த ஸ்ரீ இராமாயண)
இனி அங்குப் போனாலும் –அஹம் ஸ்லோக க்ருத் -(நான் ஸ்ரீ மன் நாராயணன் விஷயமாக உத்தம ஸ்லோகங்களை இயற்றுபவன்)என்று உத்தம ராஜ கன்யையான இவள் விஷயமாக உத்தம ஸ்லோக ரஸநை பண்ணி உஜ்ஜீவிக்கை இறே உள்ளது
க்ருத்ஸ்னம் ஸீதாயஸ் சரிதம் மஹத் -என்று (காவ்யம் இராமாயணம் க்ருத்ஸ்னம் ஸீதாயாச் சரிதம் மஹத் பவுலஸ்த்ய வதம் இத்யேவ சகார சரிதவ்ரத –விரத அனுஷ்டானமுடைய அவ்வால்மீகி சீதாதேவியின் பெரும் கதையான இராமாயணம் முழுவதையும் பவ்லஸ்ய வதம் என்றே இயற்றினார் -)எல்லாமே ஸீதா சரிதமாய் இருக்கவும் –
ரகுவர சரிதம் -(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸம மதுரோபநதார்த்த வாக்ய பத்தம் -ரகுவர சரிதம் முனி ப்ரணீதம் தஸ ஸிரஸ்ச் ச வதம் நிஸா மயத்வம் –பால -2-44-தானாகவே அமைந்த ஸமாஸ ஸந்தச் சேர்க்கைகளை உடையதும் சமமாயும் மதுரமாயும் சேர்ந்து இருக்கிற அர்த்தங்களுடன் கூடிய வாக்கியங்கள் இணைக்கப் பெற்றதும் வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டதும் ரகுவர சரிதம் என்றும் ராவண வதம் என்றும் பெயர் பெற்றதுமான கதையைக் கேட்கச் செய்யுங்கள்)என்று சொல்லப்படுவதாய் -கங்கா சம்பவாத் யஸத் கதா கீர்த்தனை வர்ணன முகத்தாலே –அதி விஸ்தாரமாய் -துர்ஜ்ஜேயமான ஸ்ரீ இராமாயணம் போல் அன்றிக்கே விசேஷண விசேஷ்ய உபய ப்ரதாநமான -திருமாலவன் கவி (திருவிருத்தம் -48)-(திரு விசேஷணம் மால் விசேஷ்ய -சமமாக அன்றோ அது) போலும் இன்றிக்கே -விசேஷண பரமேயா யிருக்கவும் அதி ஸங்க்ரஹ மாகையாலே துரவகாஹமான ஸ்ரீ ஸப்தம் போலும் இன்றிக்கே அநாக்ராதா வத்யமாய்(ஆக்ராத அநவத்யமாய்-குற்றத்தின் வாசனை கூட இல்லாமல்) -வைதக்த்ய வர்ண குண கும்பந (சிறந்த எழுத்துக்களின் வரிசைகளில் சேர்க்கை)கௌரவங்களாலே கண்டூல கர்ண குஹரராய்க் கொண்டு கர்ணாம்ருதமாகப் பானம் பண்ணலாம் படி பரம போக்யமாய் -ப்ரேம யுக்தருக்கு ஸ்வார்த்த ப்ரகாஸந சாதுர்யத்தை யுமுடைத்தான சதுஸ் ஸ்லோஹீ ஸூ க்ரஹமாய் இருக்கையாலே அகில பிரபந்த விலக்ஷணமாய் இருக்கும் –

பகவத் ஸ்தோத்ரம் பண்ணுவார்க்கு எல்லாம் ஸ்தோத்ர ரத்னம் முதலானாப் போலே -பிராட்டி விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணுவாருக்கு எல்லாம் இப்பிரபந்தம் மூல க்ரந்தமாகையாலே முக்யமாய் இருக்கும் -இவள் மூலமாக விறே எல்லாமே உண்டாவது -ஆகையிறே ஸ்தோத்ர சதுஸ் ஸ்லோகிகளை அடியொற்றி கத்ய த்ரயமும் ஸ்ரீ ஸ்துதி முதலான பஞ்ச ஸ்தவமும் ஸ்ரீ குண ரத்ன கோஸமும் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் முதலான திவ்யப்ரபந்தங்களும் அவதரித்தன-

ஆக இத்தால் மாத்ரு தேவோ பவ என்கிற வாக்யார்த்த விவரணமான ஸ்ரீ ஸூக்தார்த்தத்தை இஸ் ஸ்லோக ரூபேண வெளியிடுகிறார் –
அதில் பிரதம ஸ்லோகத்தால் –ஸ்ரீ யம் தேவீம் உபஹ்வயே ஸ்ரீர்மா (அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் ஸ்ரீயம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –-ஸ்ரீ ஸூக்தம் -8-ஸர்வ வ்யாபியான பகவானை முன்னிட்டு இருப்பவளும் சரீரமாகிற -அல்லது ஓங்காரமாகிற -ரதத்தின் நடுவிலே இருப்பவளும் கஜங்களின் நாதத்தாலே திருப்பள்ளி யுணருமவளுமான ஸ்ரீ தேவியை அருகில் அழைக்கிறேன் -என் விஷயத்தில் பிராட்டி ப்ரீதி அடையட்டும் -)என்கிற வாக்யங்களாலும்
விஷ்ணோர் ஸ்ரீ – (நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீம் யதா ஸர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -விஷ்ணு பு -1-8-17–ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்குச் செல்வமாய் இருப்பவளாய் இறையும் அகலகில்லாதவளான இந்தப் பிராட்டி நித்யையே -ப்ராஹ்மண உத்தமரே எப்படி பகவான் ஸர்வ வியாபியாய் இருக்கிறானோ அப்படியே இவளும் ஸர்வ வியாபிநியாய் இருக்கிறாள்) என்கிற வாக்யங்களாலும்
ஸ்ரீ வத்ஸ வஷா (தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15-இந்த ராமபிரானே தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் -ஸர்வ தாரகனாய் -சங்கு சக்ர கதா தரனாய் -ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் எப்போதும் ஸ்ரீ தேவியுடனே கூடியவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையானவனான நாராயணன் )என்கிற தத் உப ப்ரும்ஹணங்களாலும்
ப்ரதிபாதிக்கிற தத் அசாதாரணமான திரு நாமத்தை ஸார்த்தமாக அனுசந்திக்கிறார் –

வ்யக்தமேஷ மஹோ யோகீ பரமாத்மா ஸநாதந
அநாதி மத்யநித நோ மஹத பரமோ மஹான்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தர
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ ரஜய்ய சாஸ்வதோ த்ருவ
மா நுஷம் வபுராஸ்தாய விஷ்ணு சத்யபராக்கிரம
சர்வை பரிவ்ருதோ தேவைர் வா நரத்வமுபாகதை
சர்வ லோகேஸ்வர சாஷால் லோகா நாம்ஹித  காம்யயா
சராஷஸ பரீவாரம் ஹதவரம் ஸ்த்வாம் மஹாத்யுதி–யுத்த -114-14/15/16/17–

—————–

முதல் ஸ்லோகம் அவதாரிகை
ஸ்ரீஞ்ஸேவாயாம் -என்கிற தாதுவிலே நிஷ்பந்நமாகையாலே ஸேவா வாசியான ஸ்ரீ ஸப்தத்தில்
ஸ்ரயதி இதி ஸ்ரீ
ஸ்ரீயத இதி ஸ்ரீ

என்கிற கர்த்தரி கர்மணி வ்யுத்பதி த்வய சித்தங்களான பகவத் ஆஸ்ரயணத்தையும்
தத் தேதுகமான உபய விபூதி சேஷத்வத்தையும் உடையதாய்
அத்தாலே ஸ்ரீ என்று ஸர்வ உத்கர்ஷ ஹேதுவான திருநாமத்தையும் உடையையாய் ஞான ஸக்த்யாதி கல்யாண குண பரிபூர்ணையுமான உன்னைப் பரிமித ஞாந சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்கிறார் –

காந்தஸ் தே புருஷோத்தம பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

வியாக்யானம்
காந்தஸ்தே புருஷோத்தம
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ (
ஸஹஸ்ராஷஸ் ஸஹஸ்ர பாத் -பரம புருஷன் முடிகள் ஆயிரத்தையும் கண்கள் ஆயிரத்தையும் தாள்கள் ஆயிரத்தையும் யுடையவன் )
பூர்ணம் புருஷேண(
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மான் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஸ்சித் வ்ருஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ் தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -எவனைக் காட்டிலும் சிறியதும் பெரியதும் ஒன்றில்லையோ எவனொருவன் பரம பதத்தில் ஒப்பற்றவனாய் வணங்காத வ்ருக்ஷம் போல் எழுந்தருளி இருக்கின்றானோ அந்தப்புருஷனாலே இது அனைத்தும் நிறைந்துள்ளது -)
புருஷம் மஹாந்தம்(
வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே -வேத புருஷனாகிற நான் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும் ஸூர்யன் போல் பிரகாசிப்பவனும் பிரக்ருதிக்கு அப்பாற் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன் -அவனை இம்மாதிரி அறிபவன் இங்கேயே முக்தனாக ஆகிறான் -மோக்ஷத்திற்கு வேறு வழியில்லை )
புருஷ ஏவேதம் ஸர்வம்
(புருஷ ஏவேதம் ஸர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் -கழிந்தவையும் இருப்பதையும் இனி வருமாவையுமாகிய எல்லாமே புருஷனே )
ஸ யஸ்சாயம் புருஷே
-(ஸ யஸ்சாயம் புருஷே யஸ்சா ஸாவாதித்யே ஸ ஏவம–யாவனொரு பரமாத்மா இந்த ஜீவனிடம் இருக்கிறானோ -எவனொருவன் ஆதித்யனுள் இருக்கிறானோ அவன் ஒருவனே )
ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே-(யஸ் ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் -ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவம் ஸூ வர்ண -தஸ்ய யதா கப் யாஸம் புண்டரீக மேவ மஷிணீ–ஸூர்யனுக்கு நடுவில் ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப் பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூ வர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள )
மஹா புருஷ பூர்வ ஜ-
(ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவந நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேஸ மஹா புருஷ பூர்வ ஜ -செந்தாமரைக் கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகையெல்லாம் உண்டாக்கினவனே -இந்திரியங்கள் நியமிப்பவனே -கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்து உனக்கேயாக வேணும் -)
ஜாநாதி புருஷோத்தமம்-(
யோ மாமேவ அஸம் மூடோ ஜாநாதி புருஷோத்தமம் ஸ ஸர்வ வித் பஜதி மாம் ஸர்வ பாவேந பாரத -அர்ஜுன எவனொருவன் புருஷோத்தமனான என்னை மயக்கமற்றவனாய் அறிகிறானோ அவன் எல்லாம் அறிந்தவன் -எல்லா விதத்தாலும் அவன் என்னை பஜநம் செய்கிறான்)
புருஷ புண்டரீகாக்ஷ ஸம்ஜ்ஞக-(புண்டரீகாக்ஷன் என்னும் பெயரை யுடையவன் பரம புருஷன்)
தம் விநா புருஷோத்தமம்-(
ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் –செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதிலும் சமர்த்தனா யிருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறு ஒருவனும் காணப்படுகிறதில்லை)
உத்தம புருஷஸ் த்வன்ய-(த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.
)
க்ஷமஸ்வ புருஷோத்தம(உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக ))
புருடோத்தமனடி
-பெரியாழ்வார் -4-7-11
புருடோத்தமன் -4-7-2-
புருடோத்தமமே -4-2-1-
என்னும் இத்யாதி ப்ரமாண சதங்களாலே ஸகல சேதன அசேதன விலக்ஷணனான பறவை யேறு பரம்புருடன் -என்றவாறு -இத்திருநாமம் தான் த்ரிவித சித் அசித் ப்ருந்த வைலக்ஷண்யத்தை ஸாப்தமாகக் காட்டக் கடவது இறே
புருஷ என்றும் அசித் வ்யாவ்ருத்தரான பத்தரையும்
உத் புருஷ என்று தத் வ்யாவ்ருத்தரான முக்தரையும்
உத்தர புருஷ என்று அவர்களில் வ்யாவ்ருத்தரான நித்யரையும் சொல்லி
உத்தம புருஷ என்று தத் வ்யாவ்ருத்தனான ஈஸ்வரனைச் சொல்லிற்று இறே
ஹேய மூலமான அசித்தும்
ஹேய ஸஹிதரான பத்தரும்
ஹேய ரஹிதரான முக்தரும்
ஹேய ப்ராக் அபாவரான நித்யரும்
ஹேய நிவர்த்தகனுக்கு சத்ருஸர் அன்று இறே
ஸ்வரூப ஸ்வபாவ அந்யதா பாவ யுக்தங்களான சேதன அசேதனங்களைப் பற்ற தத் உபய அநந்யதா பாவ ரூப வைலக்ஷண்யத்தாலே தத் உபய விலக்ஷணன் என்று கொண்டு புருஷோத்தமன் என்கிறார்
யஸ்மாத் ஷரமதீதோ அஹம் அஷராதபி சோத்தம
அதோ அஸ்மி வேதே லோகே ச ப்ரதித புருஷோத்தம
என்னைக் கடவது இறே
த்வாவிமவ் இத்யாதி-

ஆக இப்படி ஸர்வ உத்க்ருஷ்டனாக ப்ரதிபாதிக்கப்படுகிற பரமபுருஷன் சர்வாதிகையாக ப்ரமாண ப்ரஸித்தையாய் இருக்கிற உனக்கு அநு ரூபனான பதி

அதவா
புருஷோத்தம தே காந்த
ஷணு தாநே
-என்று தாந வாசியாய்
புரு ஸநோ தீதி புருஷ -என்று அதிக தாதாவைச் சொல்லி -அவர்களில் உத்தமன் என்று மோஷாதி ஸகல பல ப்ரதன்
ஐஸ்வர்யம் -இத்யாதிப்படியே பரம உதாரை என்றும் ப்ரஸித்தையான உனக்குப் பதி என்னவுமாம்

புருஷோத்தமஸ் தே காந்த
மங்களா நாஞ்ச மங்களம்
-என்று சொல்லப்படுகிறவன் -ஸகல மங்கள ஆஸ்பதத்வேந பிரஸித்தையான உனக்குப்பதி
புருஷோத்தமஸ் தே காந்த
நாரீணாம் உத்தமைக்குப் பதியாம்
போது புருஷோத்தமனாக வேணும் இறே -விஸ்வ பதியானல் யாயிற்று இவளுக்குப் பதி என்னாலாவது –
இவள் தான் லோக பர்த்தாவை இறே மம பர்த்தா என்று வரிப்பது(ஸ்ரீ ரெங்க நாதா என்னாதா -அரங்கமாளி என்னாளி -லோக பர்த்தா மம பர்த்தா -மூவர் அனுபவம்) -அல்லாதாரை நீசஸஸவத் என்றும் ஒரு நரியாக விறே எண்ணுவது –
புருஷோத்தமன் தே -என்கையாலே
ராகவ –துல்ய சீல வயோ வ்ருத்தாம் அர்ஹதி -என்னும் அர்த்தமும்
ஏதத் ப்ரதிகோட் யர்த்தம் –புருஷோத்தமஸ்ய த்வம் -என்று அஸி தேஷணா தம் அர்ஹதி -என்னும் அர்த்தமும் தோற்றுகிறது
உனக்கேற்கும் -திருவாய் -10-10-6-என்று இவள் அவனுக்கு சத்ருசையாய் இருக்குமா போலே அவனும் திருத்தக்க செல்வனாய் -நான்முகன் -62-இறே இருப்பது

புருஷோத்தமஸ் தே காந்த
லஷ்மீஸ் ச பத்ந்யவ்
-என்று பத்நீ ஸம்பந்தத்தாலே அவனுக்கு உத்கர்ஷம் சொன்னாப் போலே –புருஷோத்தமஸ் தே காந்த என்று பதி ஸம்பந்தத்தாலே இவளுக்கு உத்கர்ஷம் சொல்கிறார்
ஸ்ரீ யபதி என்று அவனுக்கு உத்கர்ஷம்
வரத வல்லபா என்று இறே இவளுக்கு உத்கர்ஷம்

தே காந்த புருஷோத்தம
உனக்குக் காந்தனான பின்பிறே அவன் புருஷோத்தமன் ஆயிற்று-
கஸ் ஸ்ரீ ஸ்ரீய என்ற பின்பிறே புருஷோத்தம க-என்றது
ஜெகன்நாதோ அபி நாராயணோ தந்யம் மந்யத ஈஷாணாத் (ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத் தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா –-ஸ்ரீ ஸ்தவம் 6-மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.-அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?) -என்று வேதாந்தங்கள் பரதத்வம் என்று நிர்ணயித்ததும் உன்னுடைய பாத சிஹ்னங்களை அவன் மார்பிலே கண்டபின்பிறே
ஸஹ தர்ம சாரிணியான இவளைப் பாணி க்ரஹணம் பண்ணின பின்பாயிற்று அவன் ஸ்ரீ மானுமாய் சர்வாதிகனுமாய் அநு ரூபாக்ஷனுமாய் முமுஷு உபாஸ்யனுமாய் யாய்த்து -ஆகையிறே
திரு நின்ற பக்கம் திறவிது -நான்முகன் -62-என்று ஸத்துக்கள் பரிக்ரஹித்து அல்லாதார் திருவில்லாத தேவராகையாலே நிஸ் ஸ்ரீ கராய் புருஷ அதமராய் விருபாஷராய் அனுபாஸ்யராய் யாயிற்று -ஆகையிறே –ஸ்ரீ நிவாஸ சப்தேந பாஸூ பதா திவ்ய தாஸ -என்று அருளிச் செய்ததும்
காணிலும் உருப்பொலார் -திருச்சந்த -69-
திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு -நான்முகன் -54 என்று ஸத்துக்கள் பரித்யஜித்ததும் –

தே காந்த புருஷோத்தம
திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார்
-திருவாய் -1-6-9-என்று இவளுக்கு கேள்வனான பின்பிறே பெருமையுடைய பிரானாராயிற்று –
ஸ்ரீயா விஷ்ணுர் அஸூ ஸூபே -என்று இவள் தனக்கென்ன இட்டுப் பிறந்த தன்மையாகையாலே இறே அப்ரமேய தேஜஸ்ஸை யுடையனாய் அவன் விளங்கிற்று –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
திருமகள் தன்னோடும் திகழ்கின்ற
-10-6-9-என்னைக் கடவது இறே

புருஷோத்தம
புருஷாணாம் உத்தம
-என்ற ஷஷ்ட்டி விபக்தியாதல்
புருஷே ஷுத்தம -என்ற ஸப்தமீ விபக்தியாதல்
புருஷோத்தம-என்று ஸர்வேஸ்வராபேஷயா ப்ரஹ்மாதிகளுடைய அதமத்வம் ப்ரதிபாதிக்கையாலே தத் பத்னிகளில் காட்டிலும் இவளுடைய வ்யாவ்ருத்தியும் தோற்றுகிறது –
மலை மங்கையும் -நா மங்கையும் பூ மங்கைக்குப் போலியாக மாட்டார்கள் இறே நா பதியும் உமா பதியும் ரமா பதிக்கு உபமானமானவன் என்றிறே இவளுக்கு அவள் ஒப்பாவது –
ஆக இத்தால் தத் பத்நீத்வத்தாலும் நாரகோடி கடிதையாகையாலும் அவனை ஆஸ்ரயித்துத் தத் சேஷ பூதையாய் சத்தை பெற்று இருக்கும் -என்கிற கர்த்த்யர்த்தம் சொல்லப்பட்டது
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10-
திருமகளும் செம்பொன் திருவடி யினிணை வருட -பெரிய திருமொழி -7-8-1-என்கிறபடியே அகிஞ்சித்க்கரனுக்கு சேஷத்வம் இல்லாமையாலே இவள் தான் கிஞ்சித்கரித்து ஸ்வரூப லாபமாய் இருப்பாள் ஒருத்தி இறே -அவதார தசையிலும் திருமங்கை போத்தந்தாள் -பெரியாழ்வார் -1-3-7-என்று கிஞ்சித்கரித்தாள் இறே

இனிமேல் -ஸர்வ லோக மாதாவாகையாலும் -ஸர்வ ஸ்வாமிநீ யாகையாலும் ஸகல சேதனருக்கும் ஆஸ்ரயிக்கப் படா நின்றாள் என்கிற கர்மணி வ்யுத்பத்தியில் ஸித்தமான உபய விபூதி சேஷத்வத்தை அருளிச் செய்கிறார் -பணி பதி -இத்யாதியால்
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினீ
ஸ்ரீயதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதேச பரம் பதம்
என்னும் இத்யாதி ப்ரமாண சித்தங்களாய் இறே இவ் வ்யுத்பத்தி த்வயமும் இருப்பது –

ஆகில் உப ஜீவ்ய ப்ரமாண அநுஸாரேண வ்யுத்பத்தி த்வயத்தை அருளிச் செய்யாதே வ்யுத் க்ரமமாக அருளிச் செய்வான் என் என்னில் -கடகையான இவளுக்குச் சேதன ஈஸ்வரர் பக்கல் சம்பந்தம் அவிசிஷ்டமாய் இருந்ததே யாகிலும் -பித்ருத்வ ப்ரயுக்தமான ஹித ஸ்ரோதா வ்ருத்தியாலே கலங்கி ஸாபராதரான இச்சேதனரை நிக்ரஹிக்கத் தேடும் என்று-கிமேதந் நிர்த்தோஷ க -என்று உசித உபாயங்களாலே அவனை வசீகரித்து அனுக்ரஹ ஏக பரனாம்படி திருத்தும் போது தத் ஸம்பந்தம் அவஸ்ய அபேக்ஷிதமாகையாலும்
இனித்தான் பிராட்டியை ஆஸ்ரயிக்கிறது தத் சம்பந்தம் விஸிஷ்டை என்றாகையாலும் –புருஷோத்தமஸ் தே காந்த -என்று பிரதான்யேன கர்த்தயர்த்தத்தை அருளிச் செய்து -அநந்தரம் தத் ஸம்பந்த ஸ்தாப்யமான கர்மண் யர்த்தத்தை யருளிச் செய்கிறார்
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ(பாஞ்சராத்ர ஸம்ஹிதை) -என்று இவ்வர்த்த கிரமத்தை ஸ்வயமேவ அருளிச் செய்தான் இறே
தேவ தேவ திவ்ய மஹிஷீம் அகில ஜெகன் மாதரம் -என்று பாஷ்யகாரரும் இவருடைய திவ்ய ஸூக்தியை உட்க்கொண்டு பகவத் ஸமாஸ்ரயணத்தை பிரதானமாக அருளிச் செய்தார் இறே
இனித்தான் பகவத் விஷயத்தைப் பற்றுகை -பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்டியாலே இறே -பிராட்டியைப் பற்றுமது பகவத் ஸம்பந்த விஸிஷ்டை என்று இறே -இங்கனம் அன்றிக்கே தத் ஸம்பந்த ரஹிதமாகப் பற்றுமன்று தலையும் செவியும் தரியுண்டு வைரூப்ய விநாசங்களே பலித்துவிடும் இறே -ஆகையால் இவ்வாகாரத்தைப் பற்ற இங்கனே அருளிச் செய்யக் குறை யில்லை –

ஆகில்–மச் சேஷ பூதா-என்று (மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -பாஞ்சராத்ரம் -ஸ்ரீ தேவி எனக்கு சேஷபூதையாய் இருப்பவள் -மற்ற எல்லாருக்கும் ஈஸ்வரீயாய் இருப்பவள் -எனக்குப் பிரியையாய் இருப்பவள் )அருளிச் செய்தபடி பிராட்டியும் பகவத் சேஷ பூதையானால் சேஷ பூதர்கள் எல்லாரும் ஸர்வ சேஷிக்கு சேஷமாய் இருக்கை ஒழிய உபய விபூதியும் பிராட்டிக்கு சேஷமாய் இருக்கும் என்கைக்கு பிரமாணம் என் என்னில்
ஸர்வே ஹ்யாத்மாந –தாஸ பூதாஸ் -என்று உபய விபூதியும் பரமாத்ம சேஷமானால் -தத் பத்நியான இவளுக்கு அகில சேதனரும் சேஷ பூதர் என்னுமிடத்தில் ப்ரமாணந் வேஷணம் வேண்டா விறே -பர்த்தாவுக்கு சேஷமான க்ருஹ க்ஷேத்ர புத்ராதிகள் பார்யைக்கும் சேஷம் என்னுமிடம் லோக ஸித்தம் இறே -அவன் தான் உபய விபூதியையும் இவளுக்குப் படுக்கைப் பற்றாக்கி இறே வைப்பது
ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ-யஜுர் காட 3-3-என்று–(உலகிற்கு ஈஸ்வரியாகவும் சர்வாதிகனுக்குப் பத்னியாயும் இருப்பவள் )
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் த்வாம் இஹ உபஹ்வயே ஸ்ரீ யம் -ஸ்ரீ ஸூக்தம் -9–
(ஸர்வ பூதங்களுக்கும் ஈஸ்வரியாய் ஸ்ரீ தேவியான உன்னை இங்கு வரும்படி அழைக்கின்றேன் )
மகாரஸ்து தயோர் தாஸஸ்
-(அகாரேண உச்யதே விஷ்ணுஸ் ஸர்வ லோக ஏக ஈஸ்வரோ ஹரி -உத்த்ருதா விஷ்ணுநா லஷ்மீர் உகாரேண உச்யதே ஸதா மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவ லக்ஷணம் -ஸ்ருதி –ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் ஹரி என்றும் விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறாள் -அவர்களுக்கு மகார வாஸ்யனான ஜீவன் தாஸன் என்பதே பிரணவத்தின் பொருள் -)என்று இவ்வர்த்தத்தில் பிரமாணங்களும் உண்டிறே
அஸ்யா மம ச சேஷா ஹா விபூதிரூபயாத்மிரா -(பஞ்ச ராத்ரம் -உபய விபூதியில் இவளுக்கும் எனக்கும் சேஷமாய் இருக்கும் )என்றும்
ஸர்வேஷாம் ஈஸ்வரீ மம வல்லபா -என்றும் இவ்வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்தான் இறே
திரு நாரணன் தொண்டர் -3-7-4-
திருமாலுக்கு உரிய தொண்டர் -6-9-11-திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -திருப்பல்லாண்டு -11-
திருமாற்கரவு -முதல் திருவந்தாதி -53-என்று
மிதுன சேஷத்வம் ஸர்வ அசாதாரணம் என்னும் இடத்தை தத்வ வித்துக்களான நம் ஆழ்வார்களும் அருளிச் செய்தார்கள் இறே

ஆக இப்படி வேதங்களாலும் -வேதாந்த வேத்யனாலும் -மிக்க வேதியராலும் ப்ரதிபாதிக்கப்பட்ட உபய விபூதி சேஷித்வத்துக்கு பிரதிசம்பந்தி வக்தவ்யமாகையாலே உபய விபூதியில் உள்ளாரும் இவளுக்கு கிஞ்சித்கரித்து சேஷபூதரராய் இருக்கும்படியை பிரயோகிப்பதாகத் திரு உள்ளம் பற்றி-
அதில் பிரதமத்திலே நித்ய ஸூரிகளில் தலைவரான திருவனந்தாழ்வான் இவள் விஷயத்திலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெற்று இருக்கும்படியை அருளிச் செய்கிறார் -பணி பதி –இத்யாதியாலே –

அதாவது
இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி யணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த-1-1–என்றும்
வாயோர் ஈரைஞ்சூறு -1-2-
மன்னிய பல் பொறி சேர் ஆயிரவாய் வாளரவின் சென்னி மணிக்குடுமி-பெரிய திருமடல் – -என்றும் சொல்லுகிறபடியே
மதுரவாறு-திருமாலை -35 -என்றும்
இன்பவாறு -திருக்குறுந்தாண்ட -2- என்றும்
சொல்லும்படி நிரதிசய போக்யமான பகவத் அனுபவத்துக்கு அனுபவ பரிவாஹ ரூபமாக வாயாரப் புகழுகைக்கு ஈடாகப் பலவாய்த்தலைகளை உடையனாய் –
அநந்ததா பவதி –என்கிறபடியே அநேக தேஹங்களைப் பரிக்ரஹித்து -அசேஷ சேஷ விருத்தியிலும் அன்வயித்து -சேஷ வ்ருத்தி பரரான அசேஷருக்கும் உபமான பூமியாய் –ஆங்கார வாரத்தில் படியே -நான்முகன் திரு -10-அஸ்தானே பய சங்கை பண்ணி அழல் உமிழ்ந்து அனவரத மங்களா சாஸன பரனாய் இருக்கையாலே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் -5-10-11-என்றும்
யதோசிதம் சேஷ -என்றும் திருநாமங்களை உடையனாய்
ப்ரக்ருஷ்ட விஞ்ஞான பல ஏக தாமாவாய்
உனக்குப் படுக்கையான முறையாலே –நாகணை மிசை நம்பிரான் -என்று எல்லாருக்கும் புருஷகார பூதனாய்
ஏவம் வித் பாதேநாத் யாரோஹதி(கௌஷீதகி -1-51-இப்படியறிபவன் பகவானுடைய படுக்கையின் மேல் அடியிட்டு ஏறுகிறான் ) என்றும் பர்யங்க வித்யையில் படியே தன் மடியிலே அடியிட்டு ஏறலாம்படி ஆஸனமாய் -அந்தரங்கனாய் -பகவத் ஸ்வரூப நிரூபக பூதையான உன்னைப்போல் நாகணை மிசை நம்பிரான் -என்று அவனுக்கு ஸர்வ ஸ்மாத் பரத்வ ஸூசகனாய்
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷோ அசேஷ ஸூ ரார்ச்சித -தஸ்ய வீர்யம் ப்ரபாவஞ்ச ஸ்வரூபம் ரூபமேவ ச -ந ஹி வர்ணயிதும் ஸக்யம் ஞாதும் வா த்ரிதஸை ரபி –(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-5-21-எல்லாத் தேவர்களாலும் பூஜிக்கப்படும் சேஷன் பாதாளத்தின் அடியிலே எழுந்தருளி இருக்கிறார் -அவருடைய வீர்யம் பெருமை ஸ்வரூபம் ரூபம் ஆகியவைகளை தேவர்களாலும் வர்ணிக்கவோ அறியவோ முடியாது )என்கிறபடியே அபரிச்சேத்ய ஸ்வரூப ரூப குண விபவதாதிகளை உடையவனுமான திருவனந்தாழ்வான் பள்ளி கொண்டு அருளினால் படுக்கையாய் இருந்தால் சிங்காசனமாய் இப்படி பஹு முகமாக அடிமை செய்து லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –

பணி பதி ஸப்தத்தாலே –ஸைத்ய மார்த்தவ ஸுரப்ய விசால உந்நதத்வாதியான பர்யங்க குணங்கள் பிரகடிதங்கள் ஆகிறன –பஞ்ச சயனம்-திருப்பாவை -19- என்னக் கடவது இறே

சய்யா ஆஸனம் -என்று த்வயத்தைச் சொன்னது -த்வயத்தில் படியே –திருமாற்கு அரவு –சென்றால் குடையாம் –முதல் திரு -53-
நிவாஸ சய்யா ஆஸந -என்று தொடங்கி இருவருமாக சேர்த்தியிலே அஹம் சர்வம் கரிஷ்யாமி -(பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதச் ச தே -அயோத்தி -31-25-நீர் பிராட்டியுடன் கூட மலைத்தாழ்வாரைகளில் விளையாடுவீர் -அடியேன் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் -தூங்கும் போதும் -உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன் -)என்று பண்ணும் ஸர்வ வித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம் –
யதா யதா ஹி கௌசல்யா – (கிம் சைநாம் ப்ரதி வஹ்யாமி க்ருத்வா விப்ரியமீத்ருஸம் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீவச் ச ஸகீவ ச -பார்யா வத் பகிநீவச் ச மாத்ருவச் ச உப திஷ்டதி -அயோத்யா -12-68-கௌசல்யா தேவி தாஸியைப் போலும் சகியைப் போலும் மனைவியைப் போலும் சஹோதரியைப் போலும் தாயைப் போலும் ஸூஸ்ருஷை செய்யும் போதெல்லாம் இப்படிப்பட்ட அநிஷ்டமான கார்யத்தைச் செய்துவிட்டு அவளுக்கு என்ன பதில் சொல்லுவேன் -)என்றும் ஒரு அபலை அப்ராப்த விஷயத்தில் பலபடியாகப் பரிசர்யை பண்ணினாள் என்றால் ப்ரக்ருஷ்ட ஞான சக்திகளையுடைய இவன் ப்ராப்த விஷயத்தில் பல அடிமைகளும் செய்கை ப்ரதிபன்னம் இறே -இப்படி பரத்வத்தில் பல அடிமைகள் செய்யும் அளவன்றிக்கே -தேவத்வே தேவ தேஹேயம் (புநச் ச பத்மா ஸம்பூதா ஆதித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததாஸீத் தரணீ த்வியம் -அன்யேஷு ஸாவதாரேஷு விஷ்ணோர் ஏஷ அநபாயினீ -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -விஷ்ணோர் தேஹ அனுரூபாம் வை கரோத்யேஷா ஆத்மநஸ் தநும் -ஸ்ரீ விஷ்ணு புரா -1-9-143-144-145)பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் -கிருஷ்ண அவதாராத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் இருக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்திற்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்ளுகிறாள் -இப்பிராட்டி -)என்று அனுவர்த்தித்த இவளைப்போலே அவதாரம் தோறும் அடுத்த வடிவு கொண்டு இதுக்கென்று ஸ்ருஷ்டனாய் –ஸீதாம் உவாச -(ஸா ப்ராதுச் சரணவ் காடம் நிபீட்ய ரகு நந்தன -ஸீதாம் உவாஸாதியஸா ராகவஞ்ச மஹா வ்ரதம் -அயோத்யா -31-2-ரகுநந்தனாய் பெரும் கீர்த்தியினனான லஷ்மணன் தமையனின் பாதங்களை நெருக்கிப் பிடித்துக் கொண்டு பிராட்டியையும் ஆஸ்ரித ரக்ஷணமாகிய பெரிய விரதத்தையுடைய பெருமாளையும் பார்த்துச் சொன்னான் -)என்று இவள் புருஷகாரமாக இவள் சமஷத்திலே ஸ்வ அபேக்ஷித்ங்களைப் பேசி வைதேஹ்யா ஸஹ என்றும் இவள் சேர்த்தியிலே பாவஞ்ஞனாய் அஹம் ஸர்வம் என்றும் ஸர்வவித கைங்கர்யங்களையும் பிரார்த்தித்து அடிமை செய்யப்பெற்று
ப்ரகர்ஷயாமி யில் படியே உகப்பித்து உவந்து பணி செய்து -10-8-10-என்னும்படி ரமித்து லப்த ஸ்வரூபனாய் இருப்பான் ஒருவன் இறே
அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது -2-8-1-
தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே -பெரிய திரு -7-7-9-
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை -8-7-1-என்று
இருவருமாக சேர்த்தியிலே அடிமை செய்து வாழும்படியை ஆழ்வார்கள் அனுசந்தித்தார்கள் இறே
இவர் தாமும் ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநி என்றும் அருளிச் செய்தார் இறே
சேஷ போகே ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -(மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம் பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை)என்று பாஷ்யகாரர்
ஸ்ரீஸ்தநாபரணம் தேஜஸ் –உத் சங்கே அநந்த போகிந-(ஸ்ரீஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசம் ஆஸ்ரயே -சிந்தாமணி மிவோத் வாந்தமுத் சங்கே அநந்த போகிந –ஸ்ரீரெங்கராஜ ஸ்தவம் -1-8-திருவானந்தாழ்வான் மடியிலே கக்கப்பட்ட மாணிக்கம் போலும் பிராட்டியின் திருமுலைத் தடங்களுக்கு ஆபரணம் போலும் இருக்கும் ஸ்ரீ ரெங்கநாதனான தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன் ) -பட்டர் –

பணி பதி சய்யா ஆஸனம்
போக பிரியா போகவதீ போகீந்த்ர சயான ஆசானா
-(ப்ராஹ்மம் ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -120-போகப்பிரியை போகவதி போகீந்த்ரனான ஆதிசேஷனைப் படுக்கையாகவும் ஆசனமாகவும் கொண்டவள்-)என்று இவளுக்கு அசாதாரணமாக ஆநைஸயநாதியான அடிமை செய்யும் படியை ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்திலே சொல்லிற்று இறே
ஸ்ரீ மதே -த்வயம் –என்கிறபடியே கைங்கர்யம் ஸித்திப்பதும் ரஸிப்பதும் கைங்கர்ய வர்த்தகையாய் பரம ப்ராப்யையான இவள் சேர்த்தியிலே யாகையாலே இவள் சேர்த்தியிலே அடிமை செய்கை இறே ஸ்வரூப ப்ராப்தம் -ஆகையிறே –திருமாலே நின்றே ஆட்ச்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான் என்றே – -8-3-8-என்று ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பிரார்த்தித்து அருளிற்று –
ஸ்ரீ நிவாஸே –பக்தி ரூபா பவது(அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே விநத விவித பூத வ்ராத ரக்ஷ ஏக தீஷே ஸ்ருதி ஸிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா –ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -எல்லா உலகையும் படைத்து அளித்து அழிப்பதை விளையாட்டாகக் கொண்டவனும் விசேஷமாய் பல பூத ஸமூஹங்களை ரஷிப்பதையே விரதமாகக் கொண்டவனும் வேதாந்தத்தில் விளங்குபவனுமான ஸ்ரீ நிவாஸனான ப்ரஹ்மத்தின் இடத்தில் பக்தி ரூபமான ஞானம் எனக்கு உண்டாகட்டும் -)
ஸ்ரீய காந்தோ யஸ் தத் பாதாப்ஜே பரிசரண ஸக்தம் பவது மே
-(ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்-வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத-வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–ஸ்ரீ வேதாந்த தீப முதல் மங்கள ஸ்லோகம்–ஸ்ரீயப்பதியாய் சிறந்த கல்யாண குணங்களுக்கு ஒரே இருப்பிடமான சரீரத்தை யுடையவனாய் -குற்றம் ஒன்றும் அற்றவனாய் பரமபத நிலையனாய் -வாக்குக்கும் மனஸுக்கும் எட்டாதவனாய் -அடியார்களின் கண்களுக்கு இலக்காமவனாய் ஆதிபுருஷனான அனந்தனுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்வதற்கு என் மனம் ஆசை கொள்ளட்டும் -)என்று கைங்கர்ய உபகரணமான பக்தியையும் கைங்கர்யத்தையும் இவள் சந்நிதியிலே பிரார்த்தித்து அருளினார் இறே

அனந்தன் பாலும் கருடன் பாலும் -5-4-8-என்று இவனுக்கு அனந்தரம் வ்யாமோஹ விஷயமான பெரிய திருவடி இவள் விஷயத்திலே கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் நிறம் பெறும் படியை அருளிச் செய்கிறார் மேல் –வேதாத்மா என்றும் தொடங்கி -ஆஸன பதம் காகாஷி நியாயத்தாலே மேலோடும் அன்வயித்து –வேதாத்மா விஹகேஸ்வர ஆஸனம் வாஹனம் -என்று யோஜித்துக் கொள்வது –

வேதாத்மா
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரி வ்ருத் தே ஸிரோ காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூர் வாமதேவ்யம் ப்ருஹத்ர தந்தரே பஷவ் யஞ்ஞா யஞ்ஜீயம் புச்சம் சந்தாம்ஸ் யங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம
-என்கிற ஸுவ் பர்ண ஸ்ருத்யர்த்தத்தை விவஷித்து வேதாத்மா என்கிறார் –
த்ரயீ மய -என்றார் இறே இவர் தாமும்
வேதாத்மா
வேதா திஷ்டாத்ருதயா வேதாநாம் ஆத்மா
வேதா அதிஷ்டா த்ருதையினாலே வேதாநாம் ஆத்மா-
என்று தத் புருஷனாதல்
தத் விசிஷ்டத்வேந தத் சாமானாதி கரண்யத்தாலே வேத ஆத்மா யஸ்யேதி -என்று பஹு வ்ரீஹி யாதல் –
இத்தால் இவனுடைய ஸர்வஞ்ஞத்வம் ஸூசிதமாயிற்று -அம்ருத அஹராணாதிகளிலே இவனுடைய சக்தி மகத்துவம் ஸித்தம் இறே

(நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.)

விஹகேஸ்வர
புள்ளரையன் புகழ் குழறும் –
பெரியாழ்வார் -4-9-5-என்கிறபடியே பக்ஷிராஜன் என்று ப்ரஸித்தனாய் இருப்பான் ஒருவன் இறே -இத்தால் –ஸத்யஸ் (ப்ருத்யஸ் )ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர-என்று ஸ்ரீ சாத்வாதிகளிலே (ஸத்யஸ் ஸூபர்ணோ கருடஸ் தார்ஷ்யஸ்து விஹகேஸ்வர –ஸாத்வம் –ஸத்யன் ஸூபர்ணன் கருடன் தார்ஷ்யன் விஹகேஸ்வரன் -என்பவை பெரிய திருவடியின் வ்யூஹ ரூபங்கள் )ப்ராணாதி பஞ்சகாதிபதித்வேந அவஸ்திதனான இவனுடைய வ்யூஹ விசேஷத்தைச் சொல்லுகிறது -இவன் தான் நித்ய விபூதியிலே ஓடும் புள்ளேறி –1-8-1-என்று அடிமை செய்யும் அளவன்றிக்கே லீலா விபூதியிலும் கூடத் தொடர்ந்து நாக பாச விமோசனம் பண்ணுவது
அருளாழி புட்க்கடவீர் அவர் வீதி ஒருநாள்-1-4-6- –என்றும்
அசுரர் உயிர் எல்லாம் தகர்த்துண்டு உழலும் புட்ப்பாகன்–8-10-6- -என்றும் சொல்லுகிறபடி ஆஸ்ரித ரக்ஷணத்துக்கும் தத் விரோதி நிரஸனத்துக்கும் அனுகூலனாம் படி கிருபாசமுத்திரமாய் இருப்பானோ ஒருவன் இறே -ஏவம் வித வைபவனான பெரிய திருவடி எழுந்தருளி இருந்தால் ஸிம்ஹாஸனமுமாய் உலாவி அருளும் போது வாஹனமுமாய் கிஞ்சித்கரித்து லப்த ஸ்வரூபனாய் இருக்கும்

வாஹனம்
விஸ்லேஷ தசையில் வெஞ்சிறைப்புள் (1-4-1)-என்று வெறுக்கும்படியும் அஞ்சிறைப்புள் -(பெரிய திரு 9-2-8) என்றும் சம்ஸ்லேஷ தசையில் ஸ்லாகிக்கும்படியும் அத்தலைக்கு அந்தரங்க வாஹனமாய்
த்வத் அங்கரி சம்மர்த்த கிணாங்க ஸோபியாய் விஜய த்வஜமாயிருக்கிற விநதா தநயன்
ஊரும் புட்கொடியும் அஃதே
-10-2-3-
தாஸஸ் ஸஹா வாஹநம் ஆஸநம் த்வஜ -என்றும் சொல்லுகிற ஸர்வவித கைங்கர்யங்களிலும் அன்விதனாய் -சத்தை பெற்று இருக்கும் என்கிற அர்த்தத்தை ஆஸநம் வாஹநம் -என்கிற பத த்வயமும் பிரகாசிப்பிக்கிறது –
பொரு சிறைப்புள் உவந்தேறும் பூ மகளார் -1-9-3-
திருவிருந்த மார்வன் -நான்முகன் -92-
கருடன் மேற்கொண்ட-மூன்றாம் திரு -57-என்று சொல்லுகிறபடியே இவள் சேர்த்தியிலே இவர்கள் அடிமை செய்யும்படியை தர்சிப்பித்து அனுபவித்தார்கள் இறே -இத்தால் கருடா கருடாஸநா – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -100-கருடை என்னும் பெயரை யுடையவள் -கருடனை ஆஸனமாக யுடையவள்) என்கிற ப்ரமாணார்த்தம் சொல்லப்பட்டது –

வேதாத்மா வாஹநம் -என்கையாலே
ஸ்வ குண அநு குணமாக ஸ்வ ஸ்வ தாமஸ வாஹனங்களையுடைய அதம தேவதா பார்யைகளில் இவளுக்கு உண்டான உத்கர்ஷம் தோற்றுகிறது –
பறவையேறு பரம் புருடா –5-4-2-என்கிறபடியே கருட வாஹனன் என்கை அவனுக்கு சர்வாதிகத்வ த்யோதகமானால் போலே இவளுக்கும் ஸர்வ உத்கர்ஷ ஹேதுவாய் இருக்குமிறே –
பணி பதி சய்யா ஆஸனம் வாஹனம் வேதாத்மா -என்கையாலே அன்யோன்யம் விருத்த ஜாதியரையும் யுகபத் அவிருத்தமாக அடிமை கொள்ளுகிற அகடித கடநா ஸாமர்த்யம் தோற்றுகிறது
புட் கொடியாய் தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே -பெரிய திரு -7-7-9-என்று சர்வாதிகத்வ லக்ஷணங்கள் மூன்றையும் சேர்த்து அனுபவித்தால் போலே -இவரும் காந்தஸ்தே –இத்யாதியாலே விஷ்ணு பத்நீத்வ சேஷ ஸாயித்வ கருட வாஹனத்வங்களை யுகபத் ஏவ அருளிச் செய்தாராயிற்று –

ஆக இப்படி அகில ஸூரி பரி ப்ருடரான சேஷ பெரிய திருவடி யுடைய சேஷத்வம் சொன்ன போதே சேஷாஸநர் முதலான அசேஷ சேஷ வர்க்கத்தினுடைய சேஷத்வமும் கைமுதிக நியாய ஸித்தம் இறே
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிநா
ஹதா கில கிலேசமலை
-என்கிற ஸ்லோக த்வயத்தாலும் அகில ஸூரி வர்க்கங்களும் அகில ஜெகன் மாதாவான இவள் திறத்தில் அடிமை செய்யும் படியை இவர் தாமே அருளிச் செய்தார் இறே –
ஸ்ரீயா ஸஹ ஆஸீநம் -என்று இவளோட்டைச் சேர்த்தியிலே இறே அசேஷ பரிஜனமும் அடிமை செய்வது-இவருடைய ஸ்ரீ ஸூக்தியின் படியே பாஷ்ய காரரும் ஸ்ரீ வல்லப என்று தொடங்கி –சேஷ சேஷாஸந ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –(ஸ்வாபி⁴மத நித்ய நிரவத்³யாநுரூப ஸ்வரூபரூப கு³ண விப⁴வ ஐஶ்வர்ய * ஶீலாத்³யநவதி⁴காதிஶய அஸங்க்²யேய கல்யாண கு³ண க³ண ஶ்ரீவல்லப⁴! * ஏவம்பூ⁴த பூ⁴மி நீளா நாயக!ஸ்வச்ச²ந்தா³நுவர்த்தி ஸ்வரூப ஸ்தி²தி ப்ரவ்ருʼத்தி பே⁴தா³ஶேஷ ஶேஷதைக ரதி ரூப * நித்ய நிரவத்³ய நிரதிஶய ஜ்ஞாநக்ரியைஶ்வர்யாதி³ * அநந்த கல்யாண கு³ண க³ண * ஶேஷ ஶேஷாஶந க³ருட³ ப்ரமுக² * நாநாவித⁴ * அநந்த பரிஜந பரிசாரிகா பரிசரித * சரணயுக³ள!-சரணாகதி கத்யம் -5)என்று அனுசந்தித்து அருளினார் இறே
தந் யாஸ்தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே –
இனித்தான் திருமகள் என்று இறே குற்றேவல் செய்வது-
சேஷ சேஷாஸநாதி ஸர்வம் பரிஜனம் பகவதஸ் தத்ததவஸ்தோசித பரிசர்யாயா மாஜ்ஞாப நந்த்யா -என்று இவருடைய ஆஜ்ஞ அனு வர்த்தந பரராய் இறே அசேஷ பரிஜனமும் இருப்பது –

அவன் தான்
ஸஹ பத்ந்யா -(கதே புரோஹிதே ராம ஸ்நாதோ நியத மாநஸ ஸஹ பத்ந்யா விஸாலாஷ்யா நாராயண முபாகமத் -அயோத்யா -6-1-புரோஹிதர் சென்றவுடன் ராமன் குளித்து மனதை அடக்கி பரந்த கண்களையுடைய பத்னியுடன் கூடியவனாய் நாராயணனை ஆராதனம் செய்ய அடைந்தான் -)என்று பத்நீ ஸஹிதனாய் ப்ராப்த விஷய பரிசர்யை பண்ணும் என்கையாலும் -ப்ரஹ்மாதிகள் ஸதயிதராய்க் கொண்டு தாஸ தாஸீ கணமாய் இருப்பர்கள் என்றும் மேலே சொல்லுகையாலும் இவர்களும் ஸ பத்நீகராய்க்கொண்டு விஷ்ணு பத்னிக்கு அடிமையாய் இருப்பர்கள் என்னுமிடம் ஸித்தம் இறே -இவர்கள் தான் அஞ்சலி விஸோகைகளோடும் காந்தி வாருணிகளோடும் ருத்ர அநு கீர்த்திகளோடும் ஸூத்ரவதியோடும் ஸூதர்சன பத்னி விஜய பத்னியோடும் கூட ஸ குடும்பமாக இறே ஜகத் குடும்பியான ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வது-ஆகையிறே –பரிஜன பரிசாரிகா பரிசரித சரண யுகள –என்று அருளிச் செய்தது -இவர்கள் தான் பாகவத ஸத்கார தசையிலும் –பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவி -பூசித்து நல்குவது தம் தேவியரோடே சேர விறே

இனி இவர்களிலும் இவர்கள் மஹிஷிகள் -தேவ தேவ திவ்ய மஹிஷிக்கு அந்தரங்க பரிசாரகைகளாய் இருக்கும்படியை –ஸைன்ய துரீண பிராண ஸஹாயாம் ஸூத்ரவதீ மாஸிஸ்ரயமம்பாம் -ஸ்ரீ பதலாஷாலாஞ்சித ஸேவா ப்ரோதல ஸத்தோர் வல்லி விலாஸம்-1-51-ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திருவடிகளில் சாத்தின செம்பஞ்சுச் சாறு தன்னால் அடையாளம் இடப்பெற்ற கைங்கர்ய அர்த்தமான ப்ரேரத வஸ்திரத்தினால் விளங்கா நின்ற கொடி போன்ற கையின் அழகை யுடையவளும் ஸ்ரீ சேனை முதலியாரின் பிரிய பத்னியுமான ஸ்ரீ ஸூத்ரவதி தேவி என்கிற தாயாரை ஆஸ்ரயித்தேன் -என்றும்
தார்ஷ்யா பக்ஷ திவதஸ்ய வல்லபாம் ருத்ரயா ஸஹ ஸூ கீர்த்திம் அர்ச்சயே -ஹர்ஷ பாஷ்பமபி கீர்த்தி மர்த்திநாம் யந் முகேந கமலா கடாஷயேத் -1-54-ஸ்ரீ பெரிய பிராட்டியார் அபேக்ஷகர்களுக்கு ஆனந்த பாஷ்யத்தையும் கீர்த்தியையும் எந்த பெரிய திருவடியின் பத்னிகளுடன் மூலமாக கடாக்ஷித்து உண்டாக்குவாரோ-ருத்ரா -ஆனந்த பாஷ்யம் பெறுகச் செய்பவள்-ஸூகீர்த்தி -சிறந்த கீர்த்தி அளிப்பவள்-இருவரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு நேத்ர ஸ்தாநீயர்கள் –-ஸ்ரீ பெரிய திருவடியின் பஷ மூலம் போல் காதலியான நிரந்தரமான ஆலிங்கனத்துக்கு உரியவர்களைப் பூஜிக்கிறேன்-என்று பட்டர் அருளிச் செய்தார் இறே

இனி பூமி நீளைகளும் இவளுக்கு சேஷ பூதராய் ஸேவித்து இருப்பர்கள் -ஸ்ரீ ஸஹாய உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித-(வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ ஸஹாயோ ஜனார்த்தன -உபாப்யாம் பூமி நீளாப்யாம் ஸேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் ஸேவிக்கப்பட்டு விளங்குகிறாள் – )என்றது இறே
மாதவ த்வயி –அஹம் ஸிஷ்யா ச தாஸி ச பக்தா ச -(ஸ்ரீ வராஹ புராணம் -ஸ்ரீ மந் நாராயணனே பூமியாக நான் உன்னிடத்தில் சிஷ்யையாகவும் தாஸியாகவும் பக்தையாகவும் இருப்பவள் -)என்று தான் அருளிச் செய்தாள் இறே
உத்புல்ல பங்கஜ தடாக மிவோபயாநி ஸ்ரீ ரெங்கராஜமிஹ தக்ஷிண ஸவ்யஸீம்நோ -லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்ஸீம் சாயாமிவாப் யுதயிநீமவ நீஞ்ச தஸ்யா -(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -63-இந்தக் கர்ப்ப க்ருஹத்தில் மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள ஸ்ரீ ரெங்கநாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன் -வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் விளையாடுகிற ராஜ அன்னப் பேடை போன்றுள்ள பெரிய பிராட்டியாரையும் மேன்மேலும் வளர்கின்றதான அவளுடைய நிழல் போல் இருக்கும் பூமிப்பிராட்டியையும் அடையக் கடவேன்)என்று இவளுக்குப் பதச் சாயை போலே பரதந்த்ரர்களாய் இருப்பர்கள் என்றும்
புஷ்பாங்க ராகங்களோ பாதி போக உபகரணங்களாய் -ஸ்தந பாஹு த்ருஷ்டிகள் போலே அவயவ பூதராய் இறே அல்லாத மஹிஷீ வர்க்கங்கள் இருப்பது என்றும் பட்டர் அருளிச் செய்து அருளினார் இறே
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர் -திருவுரு -3-என்னைக் கடவது இறே

ஆகவே பூமி நீளைகள் முதலான மஹிஷிகளும் திருவடி திருவனந்தாழ்வான் முதலான ஸூரி வர்க்கமும் கரை கண்டோர் -திருவாய் -8-3-10-என்கிற முக்தரும் இவளுக்கு சேஷபூதர் என்று சொல்லுகையாலே நித்ய விபூதி யடங்க இவளுக்கு சேஷமாய் இருக்கும் என்னுமிடம் தர்சிக்கப்பட்டது -அநந்தரம் லீலை விபூதியில் அடங்க இவளுக்கு சேஷமாய் இருக்கும் என்னுமிடத்தை அருளிச் செய்ய உபக்ரமித்து -அதில் பிரதமம் லீலா விபூதி காரணமான மூலப்பிரக்ருதி இவளுக்கு சேஷமாய் இருக்கும்படியைத் தர்சிப்பித்து அருளுகிறார் -யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ஜெகன் மோஹிநீ மாயா தே யவனிகா

அநாதி அஞ்ஞானத்தாலே ஜகத்தை மோஹிப்பிக்கக் கடவதாய் -விசித்திர கார்யகராண உபகரணமாகையாலே மாயா ஸப்த வாஸ்யையாய் இருக்கிற மூலப்பிரக்ருதி ஸுந்தர்ய லாவண்ய யவ்வநாத் அநந்த குண கண விஸிஷ்டமான உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹமும் தத் ஆதாரமான திவ்யாத்ம ஸ்வரூபமும் பிரதிகூலர் த்ருஷ்டி கோசாரமாகாமல் மறைக்கைக்குத் திரையாய் இருக்கும் -திரையாவது-அந்தர் வர்த்தி பதார்த்தங்களை பஹிச்சரருக்குத் தெரியாதபடி திரோதானம் பண்ணுவதாய் -ஸூக்ல கிருஷ்ண ரக்த தந்துக்களால் சமைக்கப்பட்டு நாநா வர்ணங்களாலே விசித்ரையாய் அத்யாச்சர்ய விசிஷ்டையாய் இருபத்தொன்று -இதுவும் திவ்ய தம்பதிகளுடைய தியாத்ம ஸ்வரூபத்தையும் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் திவ்ய அவயவங்களையும் அநாஸ்ரிதருக்குக் கோசரியாதபடி அஞ்ஞானத்தை விளைத்துத் திரோதாயகமான திரஸ்கரணியாய் இருக்கையாலும்
லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம்(அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ அநு ஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய -தைத் நா -10-5-சிவப்பு -ராஜஸம் வெளுப்பு ஸத்வம் கறுப்பு தாமஸம் நிறங்களுடன் -குணங்களுடன் -கூடியதாய் -தன் போன்ற பல பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாய் -பிறப்பற்றதுமான பிரக்ருதியாகிற ஒரு ஸ்த்ரீயைப் பிறப்பற்றவனாகிற ஒரு ஸம்ஸாரி ஜீவன் ப்ரீதியுடன் புஜிக்கிறான் -இவனைப்புஜித்த மற்றொரு முமுஷு ஜீவன் இவனை விட்டுச் செல்கிறான் -) –என்கிறபடியே குணத்ரய விஸிஷ்ட விசித்திர கர்ம ஸூத்ரத்தாலே கட்டுப்பட்டு விசித்திர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே ஆச்சர்ய தமையாய் இருக்கையாலும் திரையாக நிரூபிக்கிறார் –

ஜகன் மோஹிநீ
பரமாத்மா விஷயமாகவும் பிரத்யாகாத்ம விஷயமாகவும் ஸ்வ விஷயமாகவும் அந்யதா ஞான விபரீத ஞானங்களைப் பிறப்பித்து -அத்தாலே ஜகத்தை மோஹிப்பிக்கையாலே -ஜகன் மோஹிநீ-என்கிறார் –பரமாத்மாவின் இடத்தில் அந்யதா ஞானம் விபரீத ஞானங்களைப் பிறப்பிக்கையாவது -ஸ்ரீ யபதியாய் -நிகில ஹேய ப்ரத்யநீக கல்யாண குண விஸிஷ்டனாய் -உபய விபூதியில் நிர்வாஹகனாய் இருக்கிற புருஷோத்தமனை -நிர்விசேஷ சிந் மாத்ர வஸ்து -என்று மாயாவாதம் சொல்லுதல் -சித் அசித் ஈஸ்வரர்கள் மூன்றும் ஏகத்ரவ்ய பரிணாமம் -என்று பேதாபேதம் சொல்லுதல் -கர்ம அனுஷ்டானத்துக்குச் சேதனன் உண்டாகில் பல பிரதானத்துக்குக் கர்மம் உண்டாகில் இனி ஈஸ்வரன் ஏதுக்கு -என்று தத் ஸத் பாவத்தை இசையாது ஒழிதல் -ஏவமாதிகளான புத்திகளைப் பிறப்பிக்கை –
பிரத்யாகாத்மாவின் இடத்தில் அந்யதா ஞானம் விபரீத ஞானங்களைப் பிறப்பிக்கை யாவது அநாத்மன் யாத்ம புத்திர்யா -(அநாத்மன் யாத்ம புத்திர்யா சாஸ்வே ஸ்வமிதி யா மதி ஸம்ஸார தரு ஸம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -விஷ்ணு பு -6-7-11-ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்னும் புத்தியும் தனதல்லாத வஸ்துவில் தன்னுடையது என்னும் புத்தியும் ஸம்ஸாரமாகிற விஷ வ்ருக்ஷத்தில் விருத்திக்கு இருவகையாக விருக்கும் விதையாகும் -)-என்கிறபடியே தேஹமே ஆத்மா என்னுதல் -இந்திரியாதிகளை ஆத்மா என்னுதல் -தேஹ பரிணாமம் என்னுதல் -அந்ய சேஷம் என்னுதல் -ஸ்வ தந்த்ரம் என்னுதல் -ஏவமாதியான விப்ரதிபத்திகளை விளைக்கை –ஸ்வ விஷயமாக விபரீத தீயை விளைக்கை யாவது -ஸ்வ கார்யமான ஸப்தாதிகளிலே போக்யத்வ புத்தியைக் பிறப்பிக்கை -இவ்வர்த்தத்தை பாஷ்யகாரர் பகவத் ஸ்வரூப திரேதாந கரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாஸ் ச போக்ய புத்தேர் ஜநநீம்மாம் தாரய -சரணாகதிகத்யம் -12-(பகவத் ஸ்வரூபத்தை மறைப்பதும் விபரீத ஞானத்தை உண்டாக்குவதும் தன் விஷயமாக போக்ய புத்தியை விளைப்பதுமான பிரகிருதியில் இருந்து என்னைத் தாண்டுவிப்பாயாக )என்று அருளிச் செய்தார் இறே –

மாயா ஸப்தத்தாலே
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யாந் மாயிநம் து மஹேஸ்வரம்-ஸ்வே -4-10 –
(ப்ரக்ருதியை ஆச்சார்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் அந்த மாயையைத் தூண்டுபவனை மஹேஸ்வரன் என்றும் அறியக் கடவன்) –என்கிறபடியே மூலப் பிரக்ருதியைச் சொல்கிறது -இது தான் மாயை யாகையாலே இறே ஜகன் மோஹினியாயிற்று –அநாதி மாயயா ஸூப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே ( கௌட காரிகை -21-அநாதி மாயையாகிற பிரக்ருதியிலே கட்டுண்டு உறங்குகிற ஜீவன் எப்போது உணர்கிறானோ )என்னைக் கடவது இறே -அஞ்ஞான ஹேதுவாய் இறே இதுதான் இருப்பது –
ஆக இப்படி மாயா ஸப்த வாஸ்யையாய் -ஜகன் மோஹினியான மூலப்ப்ரக்ருதி யவனிகா ரூபேண கிஞ்சித்கரித்து சேஷமாய் இருக்கும் என்றதாயிற்று -யவனிகையாகில் அந்தரவர்த்திகளோடு பஹிச் சாரரோடு வாசியற த்ருஷ்ட்டி பிரசரண விரோதத்தாலே அந்யோன்ய அவலோகந ரோதினியாய் இறே இருப்பது -அப்படியே பிரக்ருதியை யவனிகையாக நிரூபிக்கும் போது பிராட்டிக்கும் கர்ம வஸ்யத்வமும் அத்தாலே பகவன் மாயா திரோஹித ஞானத்வமும் அங்கீ கரித்ததாய் விடுமிறே -ஆகையால் இது சேரும்படி என் என்னில்-தச் சேஷபூதையாய் -தந் நியாம்யையாய் -தத் அதீன வியாபாரத்தையுமுடைத்தான ப்ரக்ருதி ஸ்வாமினியாய் நியாமகையுமாய் இருக்கிற இவளுடைய ஸர்வ விஷய த்ருஷ்ட்டி திரோதானம் பண்ண மாட்டாது இறே
மாயயா ஸந் நிருத்த -என்று கொண்டு கர்ம வஸ்யையாக விறே மாயா திரோஹித ஸ்வ ப்ரகாஸையாய் இருப்பது -ஈஸ்வரனைப் போலே அகர்ம வஸ்யையான இவளுக்குத் திரோதானம் கூடாது இறே -ஆகையாலே பிரதிகூலருக்கும் தத் ஸ்வரூப ரூபாதிகள் யாதாவாகத் தோற்றாதபடி திரோதானம் பண்ணுமத்தைப் பற்றத் திரஸ்கரணியாக ரூபித்தவித்தால் ஒரு விரோதமில்லை

ஆக-கீழ் நித்யவிபூதியிலுள்ளார் இவளுக்கு சேஷபூதராய் இருக்கும்படியை தர்சிப்பித்து அருளி -லீலா விபூதி காரணமான மூலப்ப்ரக்ருதி யினுடைய சேஷத்வத்தை அருளிச் செய்து -ததாராப்த அண்டாந்தர் வர்த்திகளாய் தாத்ருஸ ப்ரக்ருதி மோஹிதராய் -கர்ம வஸ்யருமான ப்ரஹ்மாதிகள் ஸ பத்நீகராய்க் கொண்டு இவளுக்கு அடிமையாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் மேல் -ப்ரஹ்ம ஈஸாதீத்யால்

திரை வளைத்து இருக்க வேண்டும்படி லோக விலக்ஷணரான திவ்ய தம்பதிகளைச் சொல்லி ஜாக்ரதஸ் ஸ்வ பதச்ச -என்று கொண்டு திரைக்குள்ளொடு புறம்போடு வாசியற உடலாய் மன்னி வழுவிலா அடிமை செய்து வாழும் அந்தரங்கரைச் சொல்லி
திரை தன்னைச் சொல்லி-திரைக்குப் புறம்பு நின்று ஸேவித்து இருக்கும் அவர்களைச் சொல்லுகிறது –
கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் இறே
நீறாடி தான் காண மாட்டாத
கார் செறிந்த கண்டத்தான் எண் கணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி
-என்று அருளிச் செய்தார்கள இறே ஸர்வஞ்ஞரான ஆழ்வார்கள் –
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நாட்டம் ஆயிரத்தானும் தாந்தாம் கற்ற பெற்றியால் வணங்கும் அத்தனை போக்கி கரையருகே நின்று கூப்பிடுகிறவர்கள் கரை காண மாட்டார்கள் இறே –சிவற்கும் திசை முகற்கும் தாம் அறியலாமோ –என்னக் கடவது இறே

ப்ரஹ்ம ஈஸ இத்யாதி
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
–(யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை -தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரஸாதம் முமுஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே –தை நா -11-எவன் பிரமனை முன் படைத்தானோ எவன் வேதங்களையும் அவனுக்கு உபதேஸித்தானோ அப்படிப்பட்ட தேவனும் தன் விஷயமான ஞானத்தை பிரகாசிப்பவனுமான பரமபுருஷனை மோக்ஷமடைய விரும்பும் நான் சரணம் அடைகிறேன் – )என்கிறபடியே திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநே பிறக்கையாலே உனக்குப் புத்ரனான ப்ரஹ்மா தஜ்ஜ்யேஷ்ட புத்ரனாகையாலே உனக்குப் பவ்த்ரனான ருத்ரன் –
ஆதி ஸப்தத்தாலே –ஸேந்தர (ஸ ப்ரஹ்மா ஸ ஸிவஸ் சேந்தரஸ் ஸோ அக்ஷர பரம ஸ்வராட் -தை நா -11-அவனே ப்ரஹ்மாவுக்கும் அந்தர்யாமி -அவனே சிவனுக்கும் அந்தர்யாமி -அவனே இந்திரனுக்கும் அந்தர்யாமி -அவனே அழிவற்றவனாய் மேலானவனாய் கர்ம வஸ்யன் இல்லாதவனுமான முக்தனுக்கும் அந்தராத்மா )-தளிரொளி இமையவர் தலைவன் -நின்ற சசிபதியை -வெண் பகட்டில் ஒருவன் -என்று இவர்களோடே ஸஹ படிக்கும் படியான நிலைமையுடைய இந்த்ரனையும் –இந்த்ரனுள்ளிட்ட தேவர் குழாத்தையும் சொல்லுகிறது –
ஆக இப்படி விபூத ஸ்ரேஷ்டரான ப்ரஹ்ம ருத்ரர்கள் முதலான தேவதா ஸமூஹம் உனக்கும் தாஸ கணமாய் -தத் பத்னிகளான ஸரஸ்வதீ ருத்ராணீ இந்த்ராணீ ப்ரக்ருதிகளும் தத் தாஸீ பூதரான அப்சரஸ் ஸமூஹங்களும் உனக்கும் தாஸீ கணமாய் தாஸ கிருத்யத்திலே அந வரத அந்வயத்தை உடையராய்க் கொண்டு ஸத்தை பெற்று இருப்பர்கள் -இத்தால் நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் –சேலேய் கண்ணார் பலர் சூழ ஸேவித்து இருக்கும்படியைச் சொல்லிற்று ஆயிற்று –

திருமாலைக் கை தொழுவர் –
ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே பூதஸ்ய ஜாதஸ் பதிரேக ஆஸீத்
-(முதலில் பூதங்களுக்கு எல்லாம் ஒரே பதியான ஹிரண்யகர்ப்பன் -ஜீவாத்ம ஸமூஹத்தைத் தன்னுள் கொண்ட பகவான் -இருந்தான் )என்றும்
யோ தேவாநாம் ப்ரதமம் புரஸ்தாத் விஸ்வாதிகோ ருத்ரோ மஹர்ஷிஸ் ஹிரண்ய கர்ப்பம் பஸ்யதி ஜாயமாநம் ஸ நோ தேவஸ் ஸூபயா ஸ்ம்ருத்யா ஸம்யுநக்து -(ஸம்ஸாரமாகிற புண்ணைப் போக்கடிப்பதால் ருத்ர ஸப்த வாஸ்யனாய் -மஹா ஞானியான எந்த பகவான் தேவர்களுக்குள் முதல்வனான ஹிரண்யகர்ப்பன் ஆதியில் பிறக்கும் போது அவனைக் கடாஷிக்கிறானோ அந்தப் தேவன் நமக்கு நல்ல புத்தியை அளிக்கட்டும் -) என்றும் சொல்லுகிறபடியே காரணத்வ நிபந்தநோத் கர்ஷ தர்சனத்தாலே ஈஸ்வரத்வ சங்காஸ் பதரான ப்ரஹ்ம ருத்ராதிகளோடு தச்சங்கா ஆநஸ்பதரான இந்த்ராதிகளோடு வாசியற ஸர்வரும் இவளுக்கு தாஸ பூதர் என்று தோற்றுகைக்காக -ஸூர வ்ரஜ -என்கிறார் -இங்கனே யாகில் (ஸ்ருஷ்ட்டி ஸம்ஹார )ஜகத் காரண பூதராக ப்ரமாண ப்ரஸித்தராய் இருக்கிற இவர்கள் இம்மிதுனத்துக்கு இனமினமாக வழிபாடு செய்வார்கள் என்று சொல்லுகை கீழ்ச் சொல்லுகிற ப்ரமாணங்களுக்கு விருத்தமன்றோ என்னில் -கீழ்ச் சொன்ன ஹிரண்யகர்ப்ப ருத்ர ஸப்தங்கள் யோகத்தாலும் அபர்யவஸாந வ்ருத்தியாலும் நாராயணனை ப்ரதிபாதிக்கிறன வாகையாலே விரோதமில்லை –

ஆகையிறே -ந ப்ரஹ்மா நேஸாந -என்று (ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -ந ப்ரஹ்மா நேஸாந –தத்தேஜோ ஹிரண்யம் அண்டம் -தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயதே –த்ர்யக்ஷ ஸூலபாணி புருஷோ அஜாயத -மஹா உபநிஷத் -நாராயணன் ஒருவரே முதலில் இருந்தார் -பிரமனும் இல்லை சிவனும் இல்லை -அவரிடமிருந்து ஸூவர்ண மயமான அண்டம் யுண்டாயிற்று -அதில் நான்முகனான பிரமன் பிறந்தான் –முக்கண்ணனாய் ஸூல பாணியான புருஷன் உண்டானான் )இவர்களை ஸம்ஹாரியராகச் சொல்லி
அத புருஷோ ஹ வை நாராயணோ ஆகாமயந ப்ரஜாஸ் ஸ்ருஜேயேதி -நாராயணாத் இந்த்ரோ ஜாயதே நாராயணாத் துவாதச ஆதித்யா ருத்ரோ வசவஸ் ஸர்வாணி சந்தாம்ஸி -என்றும்(நாராயண உபநிஷத் -புருஷனான நாராயணன் பிரஜைகளை ஸ்ருஷ்ட்டிக்கக் கடவேன் என்று ஸங்கல்பித்தான் -நாராயணனிடம் இருந்து பிரமன் பிறந்தான் -நாராயணனிடம் இருந்து ருத்ரனும் யுண்டானான் -நாராயணனிடம் இருந்து இந்திரன் பிறந்தான்-நாராயணனிடம் இருந்து பன்னிரண்டு ஆதித்யர்களும் ருத்ரர்களும் வஸூக்களும் எல்லா வேதங்களும் தோன்றினர் )
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயத –
த்ரி யஷச் ஸூல பாணி புருஷோ அஜாயத
-என்று இவர்களை ஸ்ருஜ்யராகச் சொல்லிற்று -ஆகையிறே -ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் -என்று நாராயணனே ஸகல ஜகத் காரண பூதன் -என்று உபநிஷத்துக்கள் ஓதிற்று –
நான்முகக் கொழு முளை ஈன்று முக்கண் ஈசனோடு தேவு பல நுதலி மூவுலகும் படைத்த யுக்தி மாயக்கடவுள் மா முதலடியே -என்றும்
நான்முகன் தன்னோடு தேவருலகோடு உயிர் படைத்தான் -என்றும் இவ்வர்த்தத்தை த்ரமிட உபநிஷத்து தர்சிப்பித்தது இறே
ஹஸ்யோதரே ஹர விரிஞ்சி முகஸ் ப்ரபஞ்ச -என்றும்
விபர் நாபீ பத்மோ விதி சிவ நிதாநம் –என்றும் (த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமத் வைதமதிகம் த்ரிகாதஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்கான் விகடயன் விபோர் நாபீ பத்மோ விதி சிவ நிதானம் பகவத ததன்யத் ப்ரூ பங்கீ பரவத்தி ஸித்தாந்தயதி யஸ் -ர ஸ்த 1-116-மும்மூர்த்திகளும் சமர் என்றும் இம்மூன்று மூர்த்திகளும் ஒன்றே என்றும் இம்மூன்றைக்காட்டிலும் மேற்பட்டதொன்றே பரதத்வம் என்றும் சொல்லும் விப்ரபத்திகளைப் போக்கடிப்பதாய் -பிரமருத்ரர்களுக்கு மூலக்கிழங்காய் இருக்கிற பெரிய பெருமாளுடைய நாபிக்கமலமானது அவனை ஒழிந்த எல்லாப்பொருள்களும் அவளுடைய புருவ நெறிப்புக்கு வசப்பட்டு இருப்பது என்றும் நமக்கு முடிவு கட்டித்தருகின்றது)ஆழ்வார்களை அடியொற்றின ஆச்சார்யர்களும் இப்படி தர்சிப்பித்தார்கள் இறே –

இப்படி உபய உபநிஷத் ப்ரஸித்தமான ஜகத் காரணத்வத்திலே -ஸ்திர சர ரசநா தாரதம்யத்திலே ப்ரமாணமான ப்ரூ பங்கத்தையுடையளாய் -ஸ்வர்க்க துர்க்கதியாதிகளைப் பண்ணும் போது ஸ்வ இங்கித பராதீனனாயக் கொண்டு ஸர்வத்தையும் பண்ணும்படி தத் வல்லபையாய் -அவனுடைய -சித் அசித் விதாந வ்யாஸனத்தை ஸார்த்த மாக்குமவளாய் -தத் பத்னியாகையாலே ஸர்வ லோகத்துக்கும் மாதாவாய் -அவன் பிதாவாகையாலே ஸர்வருக்கும் பிதா மாதாக்கள் –மாதவ என்னும்படி (ஸர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ கச்சத்வமேகம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -ஆரண்ய பர்வம் -192-56-புருஷ ஸ்ரேஷ்டர்களே எல்லாமே உலகங்களுக்கும் தந்தையும் தாயும் லஷ்மீ நாதனே -சரணமடையத்தகுந்த இவனை சரணமடையுங்கள் )திருமால் இறே -ஆகையிறே -திசைமுகனார் தங்களப்பன் -பெரிய திருமொழி -2-2-7–என்றும் –நான்முகற்குத் தந்தை காண்- -11-5-2- என்றும் ப்ரஹ்மாதிகளுக்கும் பிதா வென்றும் –பித்ரு தேவோ பவ -என்கிறபடியே -ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்-நான்முகன் -96- -என்றும் –பரதேவதை யாகவும் அருளிச் செய்தது -இவர்கள் தாங்களும் எந்தை எமக்கு அருள் என நின்றும்-பெரிய திரு மொழி -4-1-4 -என்று பித்ருத்வத்தை அனுசந்தித்து —எம்மை — நின்னுள்ளே தோன்றிய இறைவா –திருவாய் -2-2-10-என்று பித்ருத்வ ப்ரயுக்தமான சேஷ சேஷி பாவ ஸம்பந்தத்தை உணரந்து –இறையாதல் அறிந்து ஏத்திக் கந்த மலர் கொண்டு தொழுது -மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் -அந்தியம் போதிலே திருவந்திக் காப்பிட்டு -சிற்றம் சிறுகாலையிலே வந்து திருப்பள்ளி உணர்த்தி -அலங்கலம் தொடையல் கொண்டு -மா நிதி கபிலை முதலான படி மெய்க்கலம் காண்டற்கு ஏற்பன வாயின கொண்டு -என்று சொல்லும்படி ஆராத உபகரணங்களை எல்லாம் ஏந்திக்கொண்டு அடியிணை பணிந்து -வண்ணச் சிறு தொட்டில் வரக்காட்டுவது
இடைவிரவிக் கோத்த உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ விடு தருவது
எழிலுடைக் கிண் கிணி தந்துவனாய் நிற்பது –
சங்கின் வலம்புரியும் அங்கைச் சரி வளையும் போத்தருவது
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு தொழுவது
ஓதக்கடலின் ஒளி முத்தின் ஆரமும் சாதிப்பவளமும் சந்தச் சரிவளையும் விடு தருவது
ஆகவிப்படி நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமால்
-பெரியாழ்வார் -4-1-5-என்கிறபடியே இவர்கள் எல்லாரும் சேஷ சேஷி பாவ முறையாலே ஸ்ரீயப்பதிக்கு அடிமை செய்து -என் திரு மார்வன் தன்னை -திருவாய் -7-6-7-என்று தொடங்கி அருளிச் செய்த படியே இவர்கள் தங்கள் மஹிஷிகளோடே விசிஷ்டத்துக்குப் பிரகாரமாய் இருக்கையாலே இருவருக்கும் சேஷபூதராய் இருக்கும்படியைத் திரு உள்ளம் பற்றி-ப்ரஹ்ம ஈஸாதி ஸூர விரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண -என்கிறார் –

தாஸீ கண -லோகத்திலே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்ய ஹேதுவான பரிபூர்த்தியை யுடைய பாரதியைப் பாத சேடியாயுடையவளாயிறே -மலைமகளுக்குத் தலைமகளான கலைமகள் மலர் மகளுக்கு மனை யடிமை என்றபோதே மற்றுள்ளார் அடிமை என்னுமிடம் சொல்ல வேண்டா விறே
த்ரய ஏவாதநா ராஜன் பார்யா -என்கிற நியாயத்தாலே ப்ரஹ்மாதிகள் சேஷபூதர் என்றபோதே தத் பத்னிகளுக்கும் சேஷத்வம் ஸித்தமாய் இருக்க-ஸதயித -என்று விசேஷித்து அருளுவான் என் என்னில் -ப்ரஹ்மாதிகள் பக்கல் சிலருக்கு ஈஸ்வரத்வ சங்கா பிராந்தியாலே தத் பத்நிகள் பக்கலிலும் லஷ்மி யம்சம் பிராந்தி உண்டாய் இருக்குமிறே -தந் நிராகரண அர்த்தம் ஸதயித –என்று விசேஷித்து அருளுகிறார் -அவர்கள் பக்கல் ஈஸ்வரத்வ சங்கா நிராகரண ஸ்ருத்யாதிகளாலே தத் பத்நிகள் பக்கல் லஷ்மி யம்ச வாதமும் நிராக்ருதமிறே என்னில் -தாத்பர்யத்தாலே ஸித்திப்பதிலும் சப்ததஸ் சொல்லுகை மிகவும் ஸ்பஷ்டமாய் இருக்குமிறே -அது தோன்ற இப்படி அருளிச் செய்யக் குறையில்லை -ஆக இப்படி பிரதானரான ப்ரஹ்மாதிகள் இவளுக்கு சேஷபூதரானால் இவ்வருகு உள்ளார் சேஷபூதர் என்னுமிடம் கிம்புநர் நியாய ஸித்தம் இறே –ஆக உபய விபூதியில் இவளுக்கு சேஷமென்று தர்சிப்பித்தாராயிற்று –

இப்படி காந்தஸ்தே புருஷோத்தம-என்று கர்த்ரு அர்த்தத்தையும்
பணி பதி —– தாஸீ கண -என்று கர்மண் யர்த்தத்தையும் உடையவளா கையாலே ஸ்ரீ என்றும் உனக்குத் திருநாம என்கிறார் –ஸ்ரீரித்யேவ ச நாம தே -இத்யாதியாலே
ஸ்ரீயத இதி ஸ்ரீ –என்றும்
ஸ்ரயத இதி ஸ்ரீ –-என்றும் சொல்லுகிற வ்யுத்பத்தி த்வயார்த்தமும் உண்டானாலிறே ஸ்ரீ ஸப்தம் ஸார்த்தமாவது -அன்றிக்கே கீழ்ச் சொன்ன விஷ்ணு பத்நித்வத்துக்கும் உபய விபூதியில் சேஷித்வத்துக்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தேட வேணுமோ -ஸர்வ சேஷித்வ வாசகமாய் உனக்கு அசாதாரணமான திரு நாமமே போதாதோ -என்கிறார் ஆகவுமாம் –
ஸ்ரீ ரித்யேவ ச நாம தே பகவதி –
அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண -என்றும்
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் -என்றும்
பொங்கு புணரி -பெரிய திருமொழி -6-10-9-என்றும் அர்த்தத்தைச் சொல்லிப் பின்பு ஸப்தத்தைச் சொன்னால் போலே
இங்கும் ஸ்ரீ ஸப்தார்த்தத்தை முந்துற அருளிச் செய்து -அநந்தரம் ஸ்ரீ ஸப்தத்தை அருளிச் செய்கிறார் –ஸ்ரீரிதி -என்று
தேவோ நாம ஸஹஸ்ரவாந் -என்று பேராயிரம் கொண்டதோர் பீடுடையனானாலும் நாராயணன் என்றும் அவனுக்கு நிரூபகமானாப் போலே –லஷ்மீ என்றும் தொடங்கி அநேகம் திருநாமங்கள் உண்டே யாகிலும் இவளுக்கு அசாதாரண நிரூபக ஸ்ரீ என்கிற திருநாமமாகையாலே –ஸ்ரீரித்யேவ ச நாம தே -என்கிறார் –ஸர்வாதிக வஸ்துவுக்கு வாசக ஸப்தம் இது வல்லதில்லாமையாலே -ஸ்ரீரித்யேவ-என்று அவதரிக்கிறார் –

ஸ்ரீங் ஸேவாயாம் -ஸ்ரு விஸ்தாரே -ஸ்ரு-ஹிம்ஸாயாம் -ஸ்ரு-ஸ்ரவணே -இத்யாதி தாது பேதத்தாலே ஸ்ரீ ஸப்தத்துக்கு அநேக அர்த்தங்கள் உண்டாயிறே இருப்பது (தொண்டு செய்தல் -குணங்களைப் பெருக்குதல் -பாபங்களை ஹிம்ஸித்து-தொல்லை செய்தல் -காதால் கேட்பது )-அவ்வர்த்த பேதங்களைப் பற்ற நிருக்தி பேதங்கள் உண்டாய் இருக்குமிறே -ஆகையாலே –ஸ்ரீ யத இதி ஸ்ரீ -ஸ்ருணாதீதி -ஸ்ரீ -ஸ்ருணோதீதி -ஸ்ரீ -ஸ்ராவயதீதி -ஸ்ரீ -இத்யாதி நிருத்திகள் இவ்விடத்திலே விவஷிதங்கள் –
ஸ்ருணாதி நிகிலான் தோஷான் – ஸ்ரூணாதி ச குணைர் ஜகத் -ஸ்ரீ யதே ச அகிலைர் நித்யம் ஸ்ரயதே ச பரம் பதம் -ஸ்ரயந்தீம் ஸ்ரீய மாணாஞ்ச ஸ்ருண்வதீம் ஸ்ருணதீமபி -என்று இவைகள் தான் ப்ரமாண ப்ரஸித்தங்களாய் இறே இருப்பது -அகில சேதனருக்கும் ஆஸ்ரயணீயையாய் -தான் அவனை ஆஸ்ரயித்து லப்த ஸ்வரூபையாய் -ஆஸ்ரித தோஷங்களை ஹிம்ஸித்து -அத்வேஷாதி குணங்களை விஸ்தரிப்பித்து -ஆஸீததைன்ய யுக்திகளை ஸ்ரவித்து -இவர்களை அங்கீ கரிக்கைக்கு அனுகுணமான வசனங்களை அவனை ஸ்ரவிப்பிக்கை முதலான ஆகாரங்கள் புருஷகார பூதையான பிராட்டிக்கு அவஸ்ய அபேக்ஷிதங்கள் வாகையாலே இந்நிருக்திகள் எல்லாவற்றையும் ஸ்ரீ ஸப்தத்துக்கு அர்த்தமாக ஆச்சார்யர்கள் அனுசந்திப்பார்கள் –

இப்படி கீழ்ச் சொன்ன ஆகாரங்களாலே அவனுக்கும் பூஜ்யையாய் இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –பகவதி -என்று –தத்ர பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா ஸமந்வித -என்று பகவச் சப்தம் பூஜ்ய வாசியாய் -அகில சேதனருக்கும் பூஜ்யனான அவன் தனக்கும் பூஜ்யையாய் இருக்கும் என்றபடி –பகவந் நாராயணனுக்கு பூஜ்யையாகையாலே இறே -பகவதீம் என்றும் அருளிச் செய்தது -ஆகையிறே –நன் மார்பின் மேலும் -என்று அர்ச்சிக்கிறது -இப்படி ஸ்வரூபத்தாலும் குணத்தாலுமாயிருக்கும் ஞான ஸக்த்யாதி குணங்களையுடையளாய் ஹேய குண ரஹிதையுமாய் இருக்கையாலே –பகவதி -என்கிறார் –
மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
-என்கிறபடியே (மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் – முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம் சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும் பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது – பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன – அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் – கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன)ஹேய குண ராஹித்ய ஸத் குண ஸாஹித்யங்கள் இரண்டும் பகவச் ஸப்த வாஸ்யங்களாய் இறே இருப்பது -ஆகையிறே -ஷண்ணாம் பக இதீரணா -என்று பகவச் ஸப்தத்துக்கு ஞாநாதி குணங்கள் அர்த்தமாகவும் -அந் -என்கிற பதத்துக்கு ஹேய குண ராஹித்யம் அர்த்தமாகவும் பட்டர் வியாக்யானம் செய்தருளிற்று -அந் -என்கிறது நஞர்த்தமாய் இருக்கிறது எங்கனே என்னில் -ந என்கிறவிடத்தில் ந் அ என்ற பிரிவு உண்டாய் அதிலே ந் என்கிறது ப்ரக்ருதியாய் அ என்கிறது ஸூக முக உச்சாரணமாய் இறே இருப்பது -இவ்விடத்தில் அந் என்று முன் பின்னாய் பின் முன்னாய் இருக்கிறது -சாந்தஸ பிரயோகம் இருக்கும்படி -இவ்விடத்தில் -பஸ்யக -காஸ்யபோ பவதி என்றாப் போலே -என்று இறே அருளிச் செய்தது -ஆகையாலே ஹேய குண ராஹித்ய ஸத் குண ஸாஹித்யங்கள் பகவச் சப்த வாஸ்யங்கள் என்னத் தட்டில்லை

இவ்விடத்தில் ஹேயமாவது -ஆஸ்ரித தோஷ குண ஹானிகள் பார்த்து அவர்களை உபேஷிக்கை –தத் ராஹித்யமாவது -அவையிரண்டும் அடுகுவளமாக அங்கீ கரிக்கை -ஆர்த்த அபாராதைகளான ராக்ஷஸிகளை அபராதமே பற்றாசாக அங்கீகரித்து ரக்ஷித்தாள் இறே –த்ராஹி த்ராஹி -(நாதனான பகவானை நோக்கி த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-)என்ற அண்டஜ அதமனையும் -காகாசூரனையும் அங்கீகரித்துத் திருவடிகளிலே தலையாக ரஷித்ததும் உண்டு இறே –குணங்களாவன ஞான சக்த்யாதிகள் –தத் ஸாஹித்யமாவது -அவை ஸ்வ ரக்ஷண ஹேதுவாய் தன் பக்கலிலே சுவறி விடுகை யன்றிக்கே பர ரக்ஷணத்துக்கு உறுப்பாகப் புற வெள்ளமிடும்படி ஸம்பன்னமாய் இருக்கை -இவற்றை ஸ்வ ரக்ஷணத்துக்கு உறுப்பாக்காமல் –தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் – (ஸரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலசர்த்தக மாம் நயேத் யதி காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருஸம் பவேத் -ஸூந்தர -39-30-சத்ருக்களின் பலத்தை அழிப்பவரான ஸ்ரீ ராமபிரான் லங்கையை பாணங்களால் கலங்கச் செய்து என்னை அழைத்துப் போவாராகில் அப்படிச்செய்வது அவருக்கே தகுந்ததாகும் -) என்றிருந்து–ஸீதோ பவ -என்றும்(யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தப யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹநூமத-ஸூந்தர -53-29-எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு -ஏக பத்நீத்வ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக -) பவேயம் சரணம் ஹி வ -என்றும் (ததஸ் ஸா ஹ்ரீமதீ பாலா பர்த்துர் விஜய ஹர்ஷிதா அவோசத் யதி தத் தத்யம் பவேயம் சரணம் ஹி வா –ஸூந்தர -58-90-லஜ்ஜை நிரம்பியவளாய் கணவனின் ஜயத்தைக் கேட்டு ஆனந்தம் அடைந்தவளான அப்பிராட்டி அக்கனவு உண்மையானால் உங்களுக்கு நான் அடைக்கலமாகிறேன் என்று உரைத்தாள்)என்றும் பர ரக்ஷணத்துக்கு உறுப்பாக்கினாள் இறே -இவற்றை குணம் என்னாலாவது -பரார்த்தமான போதிறே -ஆகையிறே –குணகணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே –சகலம் ஸம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த (பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –63- சேஷாசநாதி பரிஜனங்களும்-சத்ர சாமராதி பரிச் சதங்களும்-கிரீட குண்டலாதி பூஷணங்களும்-திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்-ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்-பரமபதமும்-அண்டங்களும்-ஸ்வ அசாதாரண விக்ரஹமும்-திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்-ஆகிய இவை எல்லாவற்றையும்-ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்-)-என்று அருளிச் செய்தது –இவன் குணங்களுக்கு வ்யாவர்த்யர் தத் வ்யதிரிக்தர் -இவள் குணங்களுக்கு வ்யாவர்த்யன் அவன் -அவன் குணங்கள் பும்ஸ்த்வ ப்ரயுக்தமான ஸ்வா தந்தர்ய விசிஷ்டமாய் பித்ருத்வ ப்ரயுக்தமான ஹித ஸ்ரோதோ வ்ருத்தியாலே கலங்கின போதுண்டான பிரதாபத்தாலே துராசதமாய் -அத ஏவ புருஷகார சாபேக்ஷமாயிருக்கும் –ஆகையிறே இவள் குணங்களாலே தத் கோஷ்ட்டி லகுதரை யாயிற்று –

ஆக இப்படிப் பாபமே பச்சையாக அங்கீகரிக்கைக்கு ஹேதுவாய் பரார்த்த ஏக வேஷமான ஞான சக்த்யாதி கல்யாண குண பூர்த்தியைப் பகவச்சப்தம் சொல்லுகிறது –ஞானாதி ஷட் குண மயா –என்றும்(ததைவைகா பரா சக்தி ஸ்ரீஸ்தஸ்ய கருணாஸ்ரய ஞாநாதி ஷட் குண மயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி பரா-ஸநத்குமார ஸம்ஹிதை -கருணைக்கோர் இருப்பிடமானவளாய் ஞானம் முதலான ஆறு குணங்கள் நிரம்பப் பெற்றவளாய் மேலான ப்ரக்ருதியாகச் சொல்லப்படுபவளான ஸ்ரீ தேவி அந்த பகவானுடைய மேலானதொரு சக்தியாவாள் -)என்றும்-ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி ப்ரபாவிநீம்(அஹி ஸம்ஹிதை -21-9--ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் என்னும் ஆறு கிரணங்களையுடைய ஸ்ரீ தேவியை) -என்னக் கடவது இறே –ஸ திசது பகவாந சேஷ பும்ஸாம் -(இதி விவிதமஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பராத்மமயம் ஸ நாதஸ்ய ப்ரதி ஸது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிரபஜந் மஜராதிகாம் ஸ சித்திம் —வி பு -6-8-64-பிறப்பற்றவனும் பழமையானவனுமான எந்த விஷ்ணுவுக்குப் பலவிதமான ப்ரக்ருதி என்ன -அதைக் காட்டிலும் மேலான திவ்ய மங்கள விக்ரஹம் என்ன-ஆத்ம ஸ்வரூபம் என்ன-இவை இம்மாதிரியாக சரீரங்களாய் இருக்கின்றனவோ -அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு இவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ ஸித்தியை அருள்வானாக -)-என்றும் –ஸ்மார்த்தவ்யோ பகவான் -(மஹத்யாபதி ஸம் ப்ராப்தே ஸ்மார்கத்தவ்யோ பகவான் ஹரி -பேராபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத்தக்கவன்)என்றும் –மோததே பகவான் – (அநியோஜ்யோ அப்ரமேயஸ் ச யஸ்து காம சரீர த்ருத் -மோததே பகவான் பூதைர் பால க்ரீடாநைரிவ -சபா -40-78-எதிர்த்துப் பேசப்படாதவனும் அறிய முடியாதவனும் -இஷ்டப்பட்ட உருவங்களை தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி ஸந்தோஷிக்கிறான்) என்றும்-பகவன் நாராயண -என்றும் அவனை நிர்த்தேசித்தாப் போலே தத் துல்ய சீலையான இவளை வ்யவஹரிப்பதும் பகவதீ என்று இறே -இந்தப்பூர்த்தி தான் கீழ் –புருஷோத்தமன் என்று சொன்ன பூர்த்திக்கு அடியாயிறே இருப்பது –பகவன் நாராயண -த்வயம் -என்றிறே அவன் பூர்த்திக்கு அடியுடைமை –ஸ்வதஸ் ஸ்ரீ –-இத்யாதி –

(ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்
–ஸ்ரீ குணரத்னகோசம் 31–மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.-இதனால்தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.-ஒரு இரத்தினக்கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.-ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.-இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.)

இப்படிப்பட்ட அதிசய சாலியான உன்னை யதாவத்தாக ஸ்தோத்ரம் பண்ணப்போமோ -என்கிறார் –த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று –த்வாம் -உக்தத்ப்ரக்ரியையாலே விஷ்ணு பத்னியாய் தத் இதர ஸர்வ ஸ்வாமிநியாய் -தத் அனுரூப அசாதாரணமான நாம நிர்திஷ்டையாய் -பகவத் விலக்ஷண ஞான சக்த்யாதி கல்யாண குண பூஷிதையாய் -இவ்வாகாரங்களினாலே ஸகல உபநிஷத் ப்ரஸித்தையான உன்னை –த்வாம் வயம் கதம் ப்ரூம-ப்ரஹ்ம பாவனைக நிஷ்டரான ஸநகாதிகளுக்கும் உபய பாவநா நிஷ்டரான ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரஹ்ம ப்ரதிபாதகங்களான வேதங்களுக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாத ப்ரபாவத்தை யுடைய உன்னைப் பரிமித ஞான சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்கிறார் –
ந தே வர்ணயிதும் சக்தா குணான் ஜிஹ்வாபி வேதஸ ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ்த்யாஷீ கதாசன -வி பு -1-9-133-(பிரமனின் நாவும் உன்னுடைய குணங்களை வர்ணிக்க சக்தி யுடையவனல்லன் -தாமரைக் கண்களை யுடைய பிராட்டியே அருள் புரிவாயாக -எங்களை ஒருபோதும் விட்டுச் செல்ல வேண்டா-) -என்றும்
ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -(பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் – )-என்றும் –உத்பாஹுஸ் த்வாம் உபநிஷதஸாவாஹ நைகா நியந்த்ரீம் -என்னைக் கடவது இறே

உத்பாஹு: த்வாம் உபனிஷத் அஸௌ ஆஹ ந ஏகா நியந்த்ரீம்
ஸ்ரீமத் ராமாயணம் அபி பரம் ப்ராணிதி த்வத் சரித்ரே
ஸ்மர்த்தார: அஸ்மத் ஜநநி யதமே ஸேதிஹாஸை: புராணை:
நிந்யு: வேதா ந அபி ச ததமே த்வந் மஹிம்நி ப்ராமாணம்.
–14-நான் பிறப்பதற்குக் காரணமாக இருந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! இத்தகைய ஸ்ரீஸூக்தம் போன்றவை மட்டும்
தங்கள் கைகளை உயர்த்தி உன்னைப் புகழ்ந்து நிற்கவில்லை.
ஸ்ரீமத் இராமாயணமும் உனது சரிதத்தை வெகுவாகவே கூறியுள்ளது
(ஸ்ரீரங்கநாதனுக்கும் இராமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த இராமன் ஆராதனை செய்து வந்த பெருமாள் ஸ்ரீரங்கநாதன் ஆவான்.
இதனால்தான் இராமாயணத்தைக் கூறுகிறார் போலும்). இவை மட்டும் அல்ல, பராசரர் போன்ற ஸ்ம்ருதி ஒதியவர்களுக்கும் கூட – புராணங்கள், வேதங்கள் ஆகியவை உன்னைக் குறித்துக் கூறுவதாகப் பல மேற்கோள்களையும் ஆதாரங்களையும் காண்பித்தனர்.-இங்கு இராமாயணமானது இவளது சரிதத்தைக் கூறுவதாக எவ்விதம் கூறினார்?
இதனை வால்மீகி முனிவரே – ஸீதாயாச் சரிதம் மஹத் – ஸீதையின் சரிதமே இதில் ப்ரதானம் – என்று கூறியதைக் காண்க


நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் திருமால் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9- என்றும் –மா மலராள் வார் சடையான் என்றும் இவர்கட்க்கு எண்ணத்தானாமோ –மூன்றாம் திரு -97-என்றும் ப்ரஹ்மாதிகளும் இவளுடைய வைபவத்தை ஸ்தோத்ரம் பண்ண அஸமர்த்தர் -என்று அருளிச் செய்தார்கள் இறே -மேலே மேலே புருஷர்களைக் கல்பித்து உத்ப்ரேஷித்த அளவிலும் ஓரொரு குணங்களை அவதி காண ஒண்ணாமையாலே யதோ வாசே நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந -(எந்த ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்படமாட்டான் )–என்று வேதங்களும் நிவ்ருத்தமாம்படி நிரவதிகமான ஆனந்தத்துக்கும் ஹேதுபூதையாய் -சுலகித பகவத் வைஸ்வாரூப்ய அனுபாவையுமான இவளுடைய பிரபாவம் பரிச்சேதிக்க ஒண்ணாது என்னுமிடம் சொல்ல வேண்டாவிறே –

வயம்-என்று ஆத்மநி பஹு வசனம் –என்னுடை யாருயிரார் என்னுமா போலே ஷேப உக்தியாகவுமாம் –மஹ்யம் நமோ அஸ்து கலயே -என்று தம்மைக் கர்ஹித்துக் கொண்டார் இறே –
ஸ்தோதும் கே வயமித்யதச்ச ஜக்ருஹு ப்ராஞ்சோ விரிஞ்சாதய -என்னக் கடவது இறே
யத் யாவத் தவ வைபவம் ததுசித ஸ்தோத்ராய தூரே ஸ்ப்ருஹா ஸ்தோதும் கேவயம் இதி அத: ச ஜக்ருஹு: ப்ராஞ்ச: விரிஞ்சி ஆதயச்ச அபி ஏவம் தவ தேவி வாங் மநஸயோ: பாஷா அநபிக்ஞம் பதம் காவாச: ப்ரயாதாமஹே கவயிதும் ஸ்வஸ்தி ப்ரசஸ்த்யை கிராம்.–5-(அம்மா! ஸ்ரீரங்கநாயகியே! உன்னுடைய மகிமையானவை எப்படிப்பட்டவை,-அதற்கு அளவு ஏதும் உள்ளதா, அது எத் தன்மை உடையது என்று உணர்ந்து, அந்த மகிமைகளைப் புகழ்ந்து கூறும் விருப்பம் யாருக்கு உள்ளது? பல யுகங்களாக இருந்து, அதனால் மிகவும் அனுபவமும் அறிவும் பெற்றுத் திகழ்கின்ற ப்ரம்மன் முதலானோர், உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடுவதற்கு எண்ணம் கொண்டனர். ஆயினும் அவர்கள், “இவளைப் பற்றி நம்மால் புகழ்ந்து பாட இயலுமா? நாம் எம் மாத்திரம்?”, என்று கூறும் சொற்களையே கூறினர். இப்படியாகச் சொற்களால் மட்டும் அன்றி மனதால் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உனது பெருமைகள் உள்ளன. இதனை நன்றாக அறிந்திருந்தும், உனது பெருமைகளை வர்ணிக்கச், சரியாகச் சொற்களைக் கூட அமைக்கத் தெரியாத நான், முயற்சி செய்கிறேன். ஆயினும் உனது அருள் மூலமாக அப்படிப்பட்டச் சொற்களுக்கும் நன்மைகள் உண்டாக வேண்டும்) அதவா
வயம் -மஹார்ண வாந்தர் நிமஞ்ஜதோராணு குலாசலயோ கோ விசேஷ-என்கிறபடியே வேதங்களுக்கும் சதுர்முகப் பிரமுகருக்கும் –அபி மே ஜென்மம் சதுர்முகாத்மநா என்றும் அவர்களைத் த்ருணீ கரித்திருக்கிற தமக்கும் அந்யோன்யம் தாரதம்யம் உண்டேயாகிலும் இவளுடைய மஹிமார்ணவத்திலே மக்நராமிடத்தில் ஒரு வைஷம்யம் இல்லாமையாலே எல்லாரையும் கூட்டிக்கொண்டு வயம் என்கிறார் ஆகவுமாம் –மாதங்கச்ச மஹான் இத்யாதி -கீழ் உக்தரானவர்களோடு ஒருவராய்ப் பரிச்சேதிக்க மாட்டாமை அன்றிக்கே எல்லாரும் கூடி ஏக கண்டராய்ப் பேசினாலும் மேல் எல்லை காண ஒண்ணாது என்று வயம் என்கிறாராதல் –
த்வாம் வயம் -அவன் எவ்விடத்தான் யான் யார் -என்னுமா போலே -ஸ்தோத்ர ஸ்தோதவ்ய கத யுத்க்ர்ஷ அபகர்ஷங்களுடைய எல்லை நிலத்தை ஸூஸிப்பைக்காக த்வாம் வயம் -என்கிறார் –(திருவல்லவாழ் கோனாரை அடியேன் என்னுமா போல் )அவரை நாம் –அவ்வண்ணத்தவர் என்னுமத்தனை என்றால் போலே -த்வாம் வயம் கதம் ப்ரூம -என்கிறார் –

ஆக இத்தால் -பகவத் விலக்ஷண ஞான ஸக்த்யாதி கல்யாண குண பூர்ணையாய் -குணங்களுக்கு வாசகமாய் -ஸர்வ உத்கர்ஷ ப்ரகாசகமான திருநாமத்தை யுடையையாய் சதயிதரான ப்ரஹ்மாதிகளை தாஸ தாஸீ கணமாக உடையயாய் -அண்ட காரணமான மூலப்பிரக்ருதி நிர்வாஹகையாய் -விஷ்ணு பத்நீ என்கிற மேன்மையை யுடையயாய்-இவ்வாகாரங்களாலே ஸ்ருதி ஸ்ம்ருதி ப்ரமாண ப்ரஸித்தையாய் இருக்கிற உன்னைப் பரிமித ஞான சக்திகரான நாங்கள் பரிச்சேதித்துப் பேசுவது எங்கனே என்று பிராட்டியுடைய பெருமையைத் தர்சிப்பியா நின்று கொண்டு –ஸ்துமஹே வயம் நிமிதி தம் ந சக்னுமே -என்றால் போலே ஸ்தோத்ரா ஷேப புரஸ் ஸரமாக ஸ்தோத்ர அந்நிவ்ருத்தராகிறார் -இஸ் ஸ்லோகத்தால் கடவல்லி யுபநிஷத் ஸித்தமான த்வயத்தில் ஸ்ரீ ஸப்தத்தை ஸார்த்தமாக அனுசந்தித்து அருளினார் யாயிற்று –

அமதம் மதம் மதம் அத மதம் ஸ்துதம் பரி நிந்திதம் பவதி நிந்திதம் ஸ்துதம்
இதி ரெங்கராஜம் உதஜூ குஷத் த்ரயீ ஸ்துமஹே வயம் கிம் இதி தம் ந சக்நும
–ர ஸ் – 1-13-பர ப்ரஹ்மம் அறியப் படாதது என்று எண்ணப் பட்டால்=அப்போது அது அறியப் பட்டதாகிறது –பின்னையும் பர ப்ரஹ்மம் அறியக் கூடியது என்று கருதப் பட்டால் அறியப் படாதது ஆகிறது-பர ப்ரஹ்மம் ஸ்துதித்து முடிக்கத் தக்கது என்று கருதப் பட்டால் அது இகழப் பட்டதாகிறது-உள்ளபடி ஸ்துதிக்க முடியாது என்று கருதப் பட்டால் ஸ்துதிக்கப் பட்டதாகிறது-என்று இவ்விதமாக வேதமானது எம்பெருமான் இடத்தில் முறையிட்டுக் கிடக்கிறது-இப்படி இருக்க-அந்த ஸ்ரீ ரெங்கராஜனை அறிவிலிகளான நாம்-சக்தியும் பக்தியும் இல்லாத நாம்-பஹு வசனம் கவி மரபு –ஸ்துத்ய அநதி காரம் சர்வ சாதாரணம் என்பதால் பஹு வசனம் என்றுமாம் –என்ன வென்று-ஸ்துதிக்க இழிகிறோம்–ஸ்துதிக்க வல்லோம் அல்லோம் –யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச -வேத ஸ்ருதியை அடி ஒற்றி அருளிச் செய்கிறார் –

—————

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே தாந்தே தயாந்தே விதன்–2-

லோகைகேஸ்வரி -லோகத்துக்கு ஒரே ஈஸ்வரியாய் இருப்பவளே
லோக நாத தயிதே-லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு பிரிய மஹிஷியாய் இருப்பவளே(பந்தார் விரலி-விபூதியையும் விபூதிமானையும் அணைத்துக் கொண்டு )
தாந்தே-கருணா கல்பவல்லியே
யஸ் யாஸ்தே -எந்த உன்னுடைய
நிரவதிம்-அளவற்றதும்
ஸ்வத நித்யாநுகூலம் –இயற்கையாகவே பகவானுக்கு எப்போதும் அனுகூலமாய் இருப்பதுமான
மஹிமாநம் -பெருமையை
பிரபு த்வத் வல்லபோ அபி -ஈஸ்வரனான உன்னுடைய வல்லவனும்
ஆத்மந இவ -தன்னுடைய பெருமையைப் போலே
இயத்தயா-இவ்வளவு என்று
மாதும் ந அலம் -அளவிட்டு அறிய மாட்டானோ
தாம் த்வாம் -அப்படிப்பட்ட உன்னை
தாஸ இதி -தாசன் என்றும்
ப்ரபன்ன இதி ச -சரண் அடைந்தவன் என்றும்
தே த யாம் விதன் அஹம் -உன்னுடைய கருணையை அறியும் நான்
நிர்ப்பய–பயம் அற்றவனாய்
ஸ்தோஷ்யாம் –ஸ்துதிக்கிறேன்

அவதாரிகை -(ஸ்தோத்ரம் பாடமாட்டேன் என்றும் இருந்த ஆளவந்தார் -போர் புரியமாட்டேன் என்ற அர்ஜுனன் போல்-அது ஷத்ரிய கர்மயோகம் -இது இவருக்கே வைதிக கர்மயோகம் )
ஜ்யேஷ்டானாகையாலே ராஜ்ய தாரங்களைப் பறி கொடுத்துச் சரணமடைந்த ஸூக்ரீவனைப் போலே -ஜ்யேஷ்ட புத்ரன் கையிலே அவை இரண்டையும் –பொய்ச் சூதில் தோற்க்கையாலே -பொறை யுடை மன்னரான பாண்டவர் தம்முடைய பாஞ்சாலியை -மறுக்கி வல் வலைப்படுத்துகைக்கு -அரசர் தம் அரசற்கு இளையவனான துச்சாதனன் அவ்வணியிழையைச் சென்று என் தமக்கு உரிமை செய் என்று சுரி குழலையும் துகிலையும் பற்றி வர வீர்க்க -கிருஷ்ணயையும் கோ கிரஹண ப்ராப்த்தையாய்க் கொண்டு -அஸூத்தையாய் ஏக வஸ்த்ரையான என்னை குருக்களுடைய முன்னே நயிப்பிக்கை அந்யாயம் காண் -என்று கூப்பிடச் செய்தேயும் கலை தலைகளைக் கைவிடாமையாலே -கைவிடும்படி ஸம் ப்ராப்தமான மஹா ஆபத்திலே –ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் -இத்யாதி(ஹா க்ருஷ்ண த்வாரகா வாஸிந் க்வா அஸி யாதவ நந்தன -இமாமவஸ்தாம் ஸம் ப்ராப்தாம நாதாம் கிமுபேஷஸே -சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத -கோவிந்த புண்டரீ காஷ ரக்ஷமாம் சரணாகதாம் –சபா பர்வம் -66-கிருஷ்ணனே -த்வாரகா வாஸியே -யாதவ குல நந்தனனே -எங்கிருக்கிறாய் -இவ்வவஸ்தையை யடைந்த அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -சங்க சக்ர கதா பாணியே -த்வாரகையிலே நிற்பவனே -அடியவரை நழுவ விடாதவனே -கோவிந்தனே -செந்தாமரைக் கண்ணா -சரணாகதையான என்னைக் காத்தருள்வாயாக – )
எங்குற்றாய் எம்பெருமான்
-இவ்வவஸ்த்தையை ஆபன்னையாய் அநாதையான என்னை ஏதுக்காக உபேக்ஷிக்கிறாய் -உன்னுடைய ஆஸ்ரித ரக்ஷண த்வரை எங்கே போயிற்று -சங்கு சக்ர கதா பாணே –இத்யாதி -ரக்ஷண பரிகரங்களான சங்கு சக்ராதிகளைத் தரித்துக் கொண்டு -இங்கே அடுத்து அணித்தாக வந்து நின்று ஆஸ்ரிதரை நழுவ விடாதவனுமாய்-இடக்கை வலக்கை அறியாத அஞ்ஞருக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸர்வ ஸூ லபனாய் ஆபன்னரானாருடைய ஆர்த்தியை ஹரிக்கும்படி அலர்ந்த செந்தாமரைப் பூப் போலே இருக்கிற திருக்கண்களை யுடையையாய் இருக்கிறவனே –சரணாகதையான என்னை ரக்ஷிக்க வேணும் என்று ஆக்ரந்திக்கும் படி அபிமான பங்கமாகப் பரிபவிக்க அதற்காக அவர்கள் தங்குமூராகப் புக்கைந்து வேண்டிப் பெறக் கொடாமையாலே ஊரொன்று வேண்டிலும் -கத்தக் கதித்துக் கிடந்த பெரும் செல்வம் ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாதே தன் குடி கெடும்படி தானே மண்ணாள்வானான கொத்துத் தலைவன் -ஸூஸ்யக்ரமும் ( குண்டூசியும் கூட )கொடேன் என்றும் தள்ளி விடுகையாலே ஒன்றும் பெறாத உரோடத்தாலே -பார் ஒன்றிப் பாரதம் கை செய்தும் ஸ்தான ப்ரஷ்டராய்த் தளர்ந்து பறி கொடுத்த ராஜ்யத்தை பிராபிக்கைக்கு -பற்றலர் வீயக்கோல் கையிலே கொண்டு பார்த்தன் செல்வத்தேர் ஏறு சாரதியாய் -கழல்கள் சலங்கைக் கலந்து எங்கும் ஆரவாரிப்ப கையும் மாக்கோலும் பிடித்த கடிவாளக்கயிறும் விரித்த தலையுமாய்க் கொண்டு விநயம் தோற்ற முன்னின்றானை அர்ஜுனனும் ஹே கிருஷ்ண என்றழைத்து உபய ஸேனா மத்யத்திலே ரதத்தை ஸ்தாபி என்று பாரித்துக் கொண்டு தர்ம ஷேத்ரத்திலே(தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே ஸம வேதா யுயுத்ஸவ மாமகா பாண்டவாஸ் சைவ கிமகுர்வத சஞ்சய-1-1-சஞ்சயனே தர்மக்ஷேத்ரமான குருஷேத்ரத்தில் யுத்தம் செய்ய விரும்பியவர்களாய்க் கூடின என் பிள்ளைகளான துர்யோதனாதியரும் பாண்டவர்களும் என்ன செய்தார்கள் -) -சினப்போரிலே -யுயுத்ஸவ -என்னும்படி உத்யுக்தனாய் -இத்தைக்கொண்டு மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலருமாய்க் கொண்டு -பாரித்து எழுந்த படை மன்னனான அந்தகன் சிறுவனைக் கண்ட இந்திரன் சிறுவனும் -அஸ்தானே ஸ்நேஹ காருண்ய தர்ம அதர்மபி யாகுலனாய் பந்துக்கள் பக்கல் வத பீதியாலே -கிம் நோ ராஜ்யேன கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா -யேஷாமர்த்தே காங்ஷிதம் நோ ராஜ்யம் போகாஸ் ஸூகாநி ச -த இமே அவஸ்திதா யுத்தே-1-33- -என்று ராஜ்ய போக ஸூகங்களும் ஸ்வ ஜன ரக்ஷணார்த்தமாயன்றோ இருப்பது -அவர்கள் தாங்களே யுத்தத்தில் அவஸ்திதரான பின்பு அவர்களை ஹிம்ஸித்து ராஜ்ய போகங்களால் என்ன பிரயோஜனமுண்டு -ந ஹி மே ஜீவிதே நார்த்த-(எனக்கு உயிரினால் பயனில்லை )என்றும் ந காங்ஷே விஜயம் கிருஷ்ண- ந ச ராஜ்யம் ஸுகாநி ச-1-32–என்று கொண்டு -விஸ்ருஜ்ய சைரம் சாபம் (ஏவமுக்த்வார்ஜுந​: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஸத் விஸ்ருஜ்ய ஸஸரம் சாபம் ஸோகஸம்விக்நமாநஸ​:-1-47-சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக் களத்தில் இவ்வாறு சொல்லி விட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப் பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்)-என்னும்படி போர்ப்படைகளையும் விட்டு ந யோத்ஸ்யாமி (ஸர்வதா அஹம் ந யோத்ஸ்யாம் இத் யுக்த்வா –உபாவிஸத் -கீதாபாஷ்யம் -1-ஒருபோதும் நான் யுத்தம் செய்ய மாட்டான் என்றும் உட்கார்ந்தான் )என்று யுத்தாந் நிவ்ருத்தனானபடியைக் கண்டு -மாம் -என்று (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -18-66)தன் ஸுலப்யத்தைக் காட்டி -கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணி (நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயாச்யுத ஸ்திதோऽஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசநம் தவ-18-73-அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.)யுத்தே ப்ரவர்த்திப்பித்த கிருஷ்ணனைப் போலே- விஸ்மார்ய தஸ்யாத்மகம் -என்கிறபடியே (சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ச்ய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம் வைஷ்ணவ்யா குணமாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந் பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந் ஸ்ரீரங்கேச்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–20-ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?-இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான். அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான். மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்? இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று, மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?) பிராட்டி விஷயத்திலே அநாதி காலம் இழந்த அனுபவ பரீவாஹ ரூப வாசிக கைங்கர்யமாகிற ஸ்தோத்ரத்திலே பாரித்துக் கொண்டு உத்யுக்தராய் விஷய வைலஷண்யத்தைப் பார்த்தவாறே -வேதங்களாலும் வைதிக புருஷர்களாலும் எல்லை காண ஒண்ணாதபடி அபரிச்சேதயமாய் இருக்கையாலும் -தத் வைலக்ஷண்ய அனுரூப ஸ்தோத்ர கரண ஹேதுவான ஞான சக்திகள் தமக்கு இல்லாமையாலும் -ஸ்தோத்ர ஸ்தோதவ்ய கத உத் கர்ஷ அப கர்ஷங்களுடைய ஸீமா பூமியை அனுசந்தித்து இப்படிப் பூர்ண விஷயத்தைப் புல்லியரான நாம் பேசில் -மாசூணாதே -மழுங்காதே –என்கிறபடியே அவத்யத்தை விளைப்பதில் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை இழந்து கடந்து நிற்கையே கர்த்தவ்யம் என்று கருதி -அழுக்கு உடம்புடன் எச்சில் வாயால் தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் பாவியேன் பிழைத்தவாறு என்றும் அஞ்சினேற்கு –என்கிறபடியே பீத பீதராய்த் தம்மை கர்ஹித்துக் கொண்டு த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று கொண்டு ஸ்தோத்ராந் நிவ்ருத்தரான இவரை

பெரிய பிராட்டியார் நமக்கு மேன்மை ஸ்வரூபமானவோபாதி நீர்மையும் ஸ்வரூபம் காணும் -ஆனபின்பு பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவாய்க் காணும் நாம் இருப்பது -விசேஷித்து மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலும் –கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் (கிம் ம்ருஷ்டம் ஸூத வசனம் புநரபி ம்ருஷ்டம் ததேவ ஸூத வசனம் ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம் ததேவ பரிபக்வம் ஸூத வசனம் -எது போக்யமானது -சிசுவான குழந்தையின் மழலைச் சொல்லே போக்யமானது -மறுபடியும் இனிதாய் இருப்பது பாலனான அக்குழந்தையின் பிள்ளைப் பேச்சுக்களே -போக்யமான ஸகல பதார்த்தங்களிலும் போக்யமாயுள்ளது யுவாவான அப்பிள்ளையின் அறிவு நிரம்பிய அந்த வார்த்தைகளே யாகும் )-என்கிற நியாயத்தாலும்-இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே –என்கிறபடியே உம்முடைய மழலைச் சொல் போக்யமாகக் காணும் இருப்பது -என்று இவருடைய வாக் வ்ருத்தி ரூப ஸ்தோத்ரத்தாலே ஸ்தோத்ர கரண விரோதியான அவித்யாதிகள் நசித்து ஸ்தோத்ர கரண ஹேதுவான ஞானம் சக்த்யாதிகள் உண்டாய் நிர்ப்பயராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராம்படி –அஞ்சல் என்று காவி போல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினார் –என்கிறபடியே அபய ப்ரதாந பூர்வகமாக -மயர்வற மதிநலம் அருளினன் –என்கிறபடியே இவர் பக்கலிலே கருணா கடாக்ஷத்தைப் பண்ண பூ வளரும் திருமகளால் அருள் பெற்று நிவ்ருத்த விரோதிகராய் ப்ராப்தமான பரபக்த்யாதிகளை உடையராய்க் கொண்டு தத் ஸ்வரூப ரூபா -குண விசேஷங்களை விசதமாக சாஷாத்காரித்து அனுபவ பரிவாஹ ரூபமான வாசிக கைங்கர்யத்திலே ப்ரவ்ருத்தராகிறார்

கீழ் பரத்வ அனுசந்தானத்தாலே பயப்பட்டு நிவ்ருத்தரானார் -இங்கு கீழ் ஸ்தோத்ர ஆரம்ப அபேஷ சம்பந்த ஞானம் பூர்வகமாக சரணம் புகுந்து ஹேதுவாகச் சொன்ன ஸ்தோதவ்ய குண உத்கர்ஷத்தை த்ருடீ கரியா நின்று கொண்டு ததுபசித ஸுலப்ய விசேஷ அனுசந்தானத்தாலே பயம் சமித்து ஸமாஹிதராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராகிறார் -என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே -என்கிறபடி விஷய வைலக்ஷண்ய அனுசந்தானத்தாலும் -ஸ்வ தோஷ அனுசந்தானத்தாலும் ஸ்தோதாக்களுக்கு ஒரு பயம் ஜனிக்கும் -அந்தப்பயம் ஸுலப்யாதி குண அனுசந்தானத்தாலே சமிக்கவும் கண்டோம் இறே -துரந்தஸ்யாநாதே -என்று தொடங்கி ஸ்வ தோஷ அனுசந்தானத்தாலே பயப்பட்டு –தவ ஸ்மாரம் ஸ்மாரம் குண கண மிதீச்சாமி கதபீ -என்று பகவத் குண அனுசந்தானத்தாலே அப்யங்கதானார் இறே –ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தை ஆந -9-1-எந்தப் ப்ரஹ்மத்தின் இடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எத்தனிடமும் பயப்பட மாட்டான் –) -என்னக் கடவது இறே

(போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ் தெரிந்து
சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர் தனக்கோர்
ஏற்றமென்றே கொண் டிருக்கிலு மென் மனம் ஏத்தி யன்றி
ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.–89-)

இனித்தான் ஸ்தோத்ர இச்சை உண்டானாலும் -ஸ்தோது மீஹாமஹே யுக்தாம் பாவய பாரதீம் (ஹே ஸ்ரீர் தேவி ஸமஸ்த லோக ஜநநீம் த்வாம் ஸ்தோதும் ஈஹா மஹா யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய ப்ரேம ப்ரதாநாம் தியம் பக்திம் பந்தய நந்தய ஆஸ்ரிதம் இமம் தாஸம் ஜனம் தாவகம் லஷ்யம் லஷ்மி கடாக்ஷ வீசி விஸ்ருதேஸ் தே ஸ்யாம சாமீ வயம் -ஸ்ரீ ஸ்தவம் –2-பெரிய பிராட்டியாரே –எல்லா உயிர்கட்க்கும் தாயாகிய உம்மை –அடியோம் ஸ்துதிக்க விரும்புகிறோம் –உம்மை ஸ்துதிப்பதற்குத் தகுதியான வாக்கை எமக்கு நீர் அருள வேணும்–அன்பு மிகுந்த பக்தியை வளரச் செய்ய வேணும் –பக்தியை நல்லதாகச் செய்ய வேணும் -பரம பக்தி அளவாக வளரச் செய்ய வேணும் -என்கை-உம்மை அடைந்து இருக்கின்ற இந்த ஜனத்தை -அடியேனை ––உம்முடைய ஏவல் சேவகனாக -அடிமை கொண்டு ––நீர் ஏற்று மகிழ்ந்து அடியேனை ஆனந்தப் படுத்த வேண்டும் -இந்த அடியோங்களும் உம்முடைய –அமீ -என்று-கடாக்ஷம் பெறாமல் துவண்டு கிடைக்கும் நிலையை ஏஹி பஸ்ய சரீராணி -படியே உடம்பைத் தொட்டுக் காட்டுகிற படி – –கடாக்ஷ வீக்ஷணங்கள் ஆகிற அலைகளின் பரவுதலுக்கு –இலக்காகக் கடவோம்)-என்றும் ஸூக்திம் ஸமக்ரயது நஸ் (ஸூக்திம் ஸமக்ரயது ந: ஸ்வயம் ஏவ லக்ஷ்மீ: ஸ்ரீரங்கராஜ மஹிஷீ மதுரை: கடாக்ஷை: வைதக்த்ய வர்ண குண கும்பந கௌரவை: யாம் கண்டூல கர்ண குஹரா: கவய: தயந்தி–குணரத்னகோசம் 7–ஸ்ரீரங்கநாயகியைக் குறித்த இந்த ஸ்லோகங்களில் குறையுடன் கூடிய சொற்கள் பல இருக்கக் கூடும்.-ஆயினும் அவற்றைத் திருத்த நான் எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை.-அந்த ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் இவற்றைப் பிழை திருத்தி ஏற்றுக் கொள்வாள்.-இப்படியாக என் மீதும், எனது துதிகள் மீதும், குளிர்ந்த அவள் அருள் பார்வை பொழிந்து நிற்கும். இதன் மூலம் எனது துதிகளில் பொருள் விளக்கும் அழகு (அணி போன்றவை) , சொல்லின் அழகு, தெளிவான நடை, இனிமையான பதங்கள் போன்றவை தாமாகவே ஏற்பட்டு விடும். இதனால் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் எனது துதிகளைத் தங்கள் காதுகளால் பருகும் நிலை உண்டாகி விடும்)என்றும் சொல்லுகிறபடியே விஷய வைலக்ஷண்ய அனுகுணமாக அநாக்ராதாவத்யமாய் அநிமிஷ நிஷேவ்யமான ஸப்த சந்தர்ப்ப ஹேதுவான ஸம்யக் ஞான பகுதிகள் பெரிய பிராட்டியாருடைய கருணா கடாக்ஷத்தாலே அல்லது ஸித்தியாது இறே-யம் த்வம் தேவி நிரீக்ஷஸே –ஸ புத்திமான் (ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸ குலீநஸ் ஸ புத்திமான் ஸ குரஸ் ஸ ச விக்ராந்தோ யம் த்வம் தேவி நிரீக்ஷஸே -வி பு -1-9-131-தேவியே நீ எவளைக் கடாஷிக்கிறாயோ அவனே சிறந்தவன் -அவனே குணவான் -அவனே பாக்கியசாலி -அவனே நற்குலத்தவன் -அவனே புத்திமான் -அவனே சூரன் -அவனே பராக்ரமசாலி )-என்னக் கடவது இறே -ஆகையால் ஸ்வ விஷய ஸ்தோத்ரத்திலே பாரித்துக் கொண்டு ப்ரவ்ருத்தரானபடியையும் -விஷய வைலக்ஷண்ய அனுரூப ஸ்தோத்ர கரண ஞான சக்திகள் தமக்கு இல்லாமையால் ஸ்தோத்ராந் நிவ்ருத்தரானபடியையும் கண்டு இவர் பண்ணுகிற ஸ்தோத்ர ஸ்ரவண கௌதுகத்தாலே யதா ஸ்தோத்ரம் பண்ண வல்லராம்படி இவர் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி யருள -அத்தை அறிந்து காருண்ய ரூபையான இவள் கருணைக்கு இலக்காய் -தாது பிரஸாதான் மஹிமாந மீஸம் தமக்ரதும் பஸ்யதி வீத சோகா(அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்) -என்றால் போலே தாந்தே மயி தே தயாம் விதந்தே மஹிமாநம் நிர்ப்பயஸ் ஸ்தோஷ்யாமி -என்று கொண்டு விஷயத்தை மாறுபாடுருவப் பேசுகிறேன் என்றும் ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் —

இப்படிப் பெரிய பிராட்டியாருடைய ப்ரஸாதம் பெற்றாராகில் இவர் இப்போது விசேஷமாக அறிந்து பேசுகிறது என் என்னில் -கீழ் வேதங்களும் ப்ரஹ்மாதிகளும் பேச நிலமல்ல என்றார் -இங்கு எங்களுக்கும் மணாளனாய் ப்ரஹ்மாதிகளுக்கும் ஜனகனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ சக்தியாய் இருக்கிற ஸர்வேஸ்வரனுக்கும் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாது என்கிறார் –யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு-நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத-என்று -இதுவாய்த்து இவர் பிராட்டி ப்ரஸாதத்தாலே பெற்ற விசேஷம் -இவ்விசேஷ கடாக்ஷம் இல்லாதவர்-இவள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறியாமல் பகவத் அந்தரங்க விசேஷணத்வ த்யோதகமான அர்த்தமாக –பகவத் சத்தை-அஹந்தை -பிரபை -இச்சை -சக்தி -வித்யை என்றும் -ப்ரக்ருதே புருஷாச் ச அந்நியஸ் த்ருதீயோ நைவ வித்யதே —என்கிறபடியே ஸ்ரீ ஸ்ரீ சர்களுடைய ப்ரக்ருதி புருஷ ரூப விபக்த விபூதி விசேஷ அபிமானத்வ த்யோதகமாக மூலப்ப்ரக்ருதிரீஸாநி -என்றும் -சொல்லுகிறவற்றைக் கொண்டு- ஸ்வரூபத்தை அசேதனமாக ப்ரமிப்பது -கர்ம வஸ்யை என்பது -ஸர்வாதி (ஸத்தாதி)விசிஷ்ட பகவான் தானே ஸ்ரீ என்பது ஸ்திரி ரூப நித்ய விக்ரஹாந்தர விசிஷ்டனான அவனே இவள் என்பது -தைத்ய மோஹனார்த்தமாகப் பெண்ணாக அமுதூட்டின வடிவு போலே ஸ்வயமேவ போகார்த்தமாகப் பரிக்ரஹித்த காதாசித்க காந்த விக்ரஹ விசிஷ்டனானவனே ஸ்ரீ என்பதாய்க் கொண்டு இப்புடைகளிலே பகவத் ஐக்யம் சொல்லுவது -அநித்யை என்பதாய்க் கொண்டு அநர்த்தப்படுவர்கள் -ஆஹுந் வேதா ந மாநம் -இத்யாதி

(யோ யோ ஜகதி பும்பாவ ஸ விஷ்ணுரிதி நிஸ்ஸய யோ யஸ்து நாரீ பாவ ஸ்யாத் தத்ர லஷ்மீர் வ்யவஸ்திதா -ப்ரக்ருதே புருஷாச் சாந்யஸ் த்ருதீயோ நைவ வித்யதே அத கிம் பஹுநோக்தேந நரநாரீ மயோ ஹரி -ஸநத் குமார ஸம்ஹிதை –உலகில் ஆண்மை காணப்படும் இடமெல்லாம் ஹரி இருக்கிறான் என்பது நிச்சயம் -பெண்மையுள்ள இடமெல்லாம் பிராட்டி இருக்கிறாள் -ப்ரக்ருதிக்கு அபிமானியாகிற பிராட்டியையும் புருஷ அபிமானியான பகவானையும் தவிர மூன்றாவது ஒன்றும் இல்லை -பல சொல்லி யென் -ஸ்த்ரீ புருஷர்கள் எல்லாமாய் இருப்பவன் ஸ்ரீ மந் நாராயணனே –)

ஆஹு: வேத ந அமாநம் கதிசன கதிசா ராஜகம் விஸ்வம் ஏதத்
ராஜந்வத் கேசித் ஈஸம் குணிநம் அபி குணை: தம் தரித்ராணம் அந்யே
பிக்ஷௌ அந்யே ஸுராஜம்பவம் இதிச ஜடா: தே தலாதலி அகார்ஷு:
யே தே ஸ்ரீரங்க ஹர்ம்ய அங்கண கநகலதே நக்ஷணம் லக்ஷ்யம் ஆஸந்
–ஸ்ரீ குணரத்ன கோஸம்–11-

ஸ்ரீரங்க விமானத்தில் காணப்படும் தங்கக் கொடியே! ஸ்ரீரங்கநாயகி! இங்கு பல விதமான, அறிவற்ற மனிதர்கள் உள்ளனர்.-அவர்கள் – வேதங்கள் அனைத்தும் சரியானவை அல்ல, அவை பரம் பொருளைக் காண்பிக்க வில்லை என்றனர்(இது பௌத்தர்கள், ஜைனர்களைக் குறிக்கும்); இந்த உலகம் இறைவனால் இயக்கப்படுவது அல்ல என்றனர் (இது சாங்கியர்களின் கொள்கை); நல்ல தலைவனாக மட்டும் ஒருவன் உண்டு என்றனர் (இது கணாத மதம் ஆகும்); சிலர் அனைத்தையும் ஆள்பவனாகவும், பல குணங்களை உடையவனாகவும் பரம் பொருள் உள்ள போதிலும் அவனுக்குக் குணங்கள் கிடையாது என்றனர் (இது அத்வைதம்); மேலும் சிலர் பிச்சை எடுக்கும் ஒருவனிடம் இறைவனுக்கான தன்மை உண்டு என்றனர் (இது சைவ மதம்) – இப்படியாகப் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து, கைகளால் அடித்தும் கொள்கின்றனர்.அவர்கள் அனைவரும் உனது கடாக்ஷம் நிறைந்த பார்வை பெறாதவர்கள் என்பது)

இவர் அங்கன் அன்றிக்கே திவ்ய சஷுஸ்ஸைப் பெற்றவராகையாலே தத் ஸ்வரூப ஸ்வ பாவங்களை உள்ளபடி அறிந்து –பரம சேதனை என்றும் –அகர்ம வஸ்யை என்றும் ப்ரக்ருதியாதி வ்ருத்தை என்றும் –பகவத் ஸ்வரூப பின்னை என்றும் நித்யை என்றும் தத் அந்தர் அபிமதை என்றும் ஸர்வ உத் க்ருஷ்டை என்றும் சர்வேஸ்வரனாலும் பரிச்சேதிக்க ஒண்ணாத மஹிமாவை யுடையவள் என்றும் நிர்ணயித்து அனுபவிக்கிறார்

மநஸி விலஸதாஷ்ணா பக்தி சிந்தாஞ்சநேந ஸ்ருதி ஸ்ரஸி நீகூடம் லஷ்மி தே வீக்ஷமாணா -நிதிமிவ மஹிமாநம் புஞ்சதேயே அபி தன்யா ந நு பகவதி தைவீம் ஸம் பதம் தே அபி ஜாதா —
பகவதி -ஸகல கல்யாண குண சம்பன்னையாய் இருக்கிற
ஹே லஷ்மி -வாரீர் பெரிய பிராட்டியாரே
தந்யா -தனம் ப்ராப்தா தன்யா –என்கிறபடியே தேவரீர் கடாக்ஷ விஷயத்வ ரூப பாக்யத்தை உடையவர்களாய் இருக்கிற
யே அபி -யாதொரு புருஷர்கள் -யே அபி-என்கிற இத்தால் அவர்களுடைய அதிசயம் வாசா மகோசரம் என்று ஸூசிதம்
பக்தி சித்தாஞ்சநேந -உன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் அநிதர ஸாதாரண ப்ராவண்யமாகிற கூடாரத்த ப்ரகாசக சித்தாஞ்சன விசேஷம் போலே இரா நின்றும் –
மநஸி விலஸதா -அத ஏவ ஹிருதயத்திலே ப்ரகாசியா நின்றுள்ள

அக்ஷணா -திருஷ்ட்டியாலே -ஞானக் கண்ணாலே என்றபடி
ஸ்ருதி ஸ்ரஸி -உபநிஷத்துக்களிலே -ஜாத்யேக வசனம் -ஸ்ருதி ஸ்ரஸ்ஸூ என்றபடி
நி கூடம் -அத்யந்த வேத ரஹஸ்யமாகையாலே மறைக்கப்படா நின்றுள்ள
தே மஹிமாநம் -உன்னுடைய ஸ்வரூபாதி ஐஸ்வர்யத்தை
நிதிமிவ வீக்ஷமாணாஸ் ஸந்த – ஆபத்துக்கு உறு துணையாம் சேம வைப்புப் போலே சாஷாத் கரியா நின்று கொண்டு
புஞ்சதே-அனுபவிக்கிறார்களோ
தே புருஷா தைவீம் ஸம் பதம் -அவர்கள் மோக்ஷ ஹேதுபூத மாய் தேவ சம்பந்த த்யோதமான குணங்களை யுடையவர்

திருவுக்கும் திருவாகிய என்றும் –ஸ்ரீ ஸ்ரீய என்றும் –அகலகில்லேன் என்றும் -நீ தண்ணீர் தண்ணீர் என்னும்படியான அந்தப் பகவத் விக்ரஹமாகிற ஐஸ்வர்யத்தை அபி சாஷாத்காரித்து அபிஜாதா தநு -அனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் அன்றோ –அபிமுகீ க்ருத்ய ஜாதா –உத் பன்னா பவந்தீதிஷே –என்னக் கடவது இறே

தே -என்று யுஷ்மச் ஸப்த சம்போதாதைகளாலே சேதனத்வமும் ப்ரஹ்மேஸாதி -இத்யாதியாலே கர்ம வஸ்ய தாதாம்யா பாவமும் –மாயா தே யவனிகா -என்று ப்ரக்ருதேர் அந்யதவமும்-காந்தஸ்தே புருஷோத்தம-என்று வ்யதிகரணத்தாலே -பகவத் ஸ்வரூப பின்னத்வமும் -ஸர்வாணி ரூபாணி காட உப கூடாநி -என்று நித்யத்வமும் –லோக நாத தயிதே -என்று பகவத் அபிமதத்வமும் –லோக ஏக ஈஸ்வரி -என்று ஸர்வ உத் க்ருஷ்டதையும் –ப்ரபுர் மாதுர் ந அலம் -என்று அபரிச்சேத்யத்வமும் -இவரால் ப்ரதிபாதிக்கப் பட்டது இறே –
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ் -என்றும் விஷ்ணு பத்னீ (அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-120-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள்) -என்றும் பர்த்ரு பத்னிகளுடைய ஸ்வரூப பேதமும் –பத்ம ப்ரியா (பத்மபிரியா ஸூ ப்ரஸந்நா -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ர நாமம் -48 –பத்மத்தில் பிரியமுள்ளவள் -மிகவும் பிரசன்னையாய் இருப்பவள்) என்றும் தொடங்கி பரம சேதனத்வமும் –பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ (ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்) -என்று பிராக்ருதேர் அந்யத்வ அகர்ம வஸ்யத்வ பகவத் அபிமதத்வாதிகளும் –நித்யைவைஷா -என்று நித்யத்வமும் –ஸர்வ உத் க்ருஷ்டா ஸர்வ மயீ (ஸர்வ உத்க்ருஷ்டா ஸர்வ மயீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -43- -எல்லாரையும் விட உயர்ந்தவள் -எல்லாமாய் இருப்பவள்)-என்று உத் க்ருஷ்டதையும் –வாசஸ் பரம ப்ரார்த்தயிதா ப்ரபத்யேந் நியதஸ் ஸ்ரீயம்(வாசஸ் பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேன் நியதஸ் ஸ்ரீயம் -ஸுநக ஸம்ஹிதை –வாக்குக்கு எட்டாத பிராட்டியின் ஸ்வரூபத்தை அடைய விரும்புமவன் நியமமாக அப்பிராட்டியை சரணம் அடையக் கடவன்) -என்று அபரிச்சேத்யத்வமும் ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தங்களாய் இறே இருப்பது –தேவி ஸ்ருதிம் பகவதீம் (தேவி ஸ்ருதிம் பகவதீம் ப்ரதமே புமாம்ஸ: த்வத் ஸத் குண ஒக மணிகோச க்ருஹம் க்ருணந்தி தத் த்வார பாடந படூநிச ஸேதிஹாஸ ஸந்தர்க்கண ஸ்ம்ருதி புராண புரஸ்ஸராணி–ஸ்ரீ குணரத்ன கோஸம்-10–தாயே! ஸ்ரீரங்க நாயகி! முன்னோர்கள் பலரும், மிகவும் உயர்ந்த வேதங்கள் நான்கையும் உன்னுடைய இனிமையான திருக் கல்யாண குணங்கள் என்னும் உயர்ந்த கற்கள் வைத்துள்ள ஒரு பெட்டி என்றே கருதி அவற்றை மிகவும் போற்றி, பாதுகாத்து வந்தனர். இந்தப் பெட்டியைத் திறக்கும் திறவு கோலாக (சாவி) உள்ளவை எவை என்றால் – இதிகாசங்கள் (இராமாயணம், மஹாபாரதம்), மீமாம்ஸை போன்றவை (ஸந்தர்க்கணம்), ஸ்ம்ருதிகள் – என்பவை ஆகும்.)-என்று பட்டரும் அருளிச் செய்தார் இறே -ஏதாத்ருஸ ப்ரமாண ப்ரஸித்தி தோற்ற -யஸ்யாஸ்தே –என்கிறார் –

தே -என்று கீழ்ச் சொன்ன ஆகாரங்கள் எல்லாம் நிறம் பெறும்படி அதி விலக்ஷணமாய் -தத் ஆஸ்ரயமான அசாதாரண ஸ்வரூபத்தை அருளிச் செய்கிறார் –உணர் முழு நலம் –என்கிறபடியே கட்டடங்க விஞ்ஞான கநமாய் பிரஞ்ஞானகநமாய் -பகவத் ஸ்வரூபம் போலே –ஞான ஆனந்த மய (-நாயம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா -ஞான ஆனந்த மயஸ் த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந –இந்த ஜீவாத்மா தேவனும் அல்லன் -மிருகமும் அல்லன் -மரமும் அல்லன் -நாலுவகைப்பட்ட இந்த சரீரங்களில் இருக்கும் ஞான ஆனந்த மயமான ஆத்மா பரமாத்மாவுக்கு தாஸனாய் இருப்பவன் அன்றோஅசேதன பரமாத்மா இருவராலும் வேறுபட்ட ஆத்மா என்றபடி–) -என்கிறபடி ஞான ஆனந்த பிராஸுர்யத்தையுடைய திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் -ஆழ்வார் யவன் -அவன் என்று பகவத் ஸ்வரூபத்தை யத் தச் ஸப்தங்களாலே அனுபவித்தால் போலே -இவரும் பிராட்டியுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தை –யஸ்யாஸ்தே -என்று யத் தச் ஸப்தங்களாலே நிர்த்தேசித்து அனுபவிக்கிறார் –
தே -படர்க்கையாக அன்றிக்கே முன்னிலையாக அருளிச் செய்கையாலே இவர் பண்ணுகிற ஸ்தோத்ர ஸ்ரவணத்திலே தனக்குண்டான கௌதுகம் தோன்ற முன்னே வந்து முகம் காட்டி சாஷாத் கரிப்பித்தபடியும் தோற்றுகிறது -குருகைக் காவலப்பன் யோகத்தில் –எங்கும் பக்கம் நோக்கறியாதே அனுபவிக்கிற ஸர்வேஸ்வரன் அவ்வனுபவத்தை விட்டு இவர் பக்கலிலே வ்யாமோஹம் பண்ணினபடி கண்டால் மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய விசிஷ்டையாய் -ஸர்வ ஸூலபையான இவள் இவரை விஷயீ கரிக்கச் சொல்ல வேணுமோ -இவர் தான் –நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு —என்கிறபடியே இருவருடையவும் அருள் கொண்டாடும் அடியவராய்த்து -அவ்விஷயீ காரம் இவர் அளவில் அன்றிக்கே இவ்வம்சத்தார் எல்லாருக்கும் நைசர்க்கம் இறே
மஹிமாநம் -கீழ் காந்தஸ்தே என்றும் தொடங்கிச் சொன்ன உபய விபூதி சேஷித்வ ரூபமான மஹிமாவை
மஹிமாநம் -ஸர்வேஸ்வரனுக்கு அத்யந்த அனுரூபங்களுமாய் இருக்கிற ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் குணாதி வைலக்ஷண்யத்தையும் அனுசந்தித்துத் திரள மஹிமாநம் என்கிறார் –
தே மஹிமாநம்-என்கையாலே -மஹிமாநம் ஈசம் -என்கிற மஹிமாவில் வ்யாவ்ருத்தி தோற்றுகிறது -இது அவனையும் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணுமது இறே
த்வத் வல்லப -ந ஜீவேயம் ஷணமபி (சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாஸம் தரிஷ்யதி -ந ஜீவேயம் ஷணமபி விநா தாமஸிதேஷணாம் –ஸூந்தர -66-10-ஸீதை ஒரு மாஸம் தரித்து இருப்பாளாகில் வெகுகாலம் பிழைத்து இருந்தவளாகிறாள் -கறுத்த கண்களையுடைய அவளைவிட்டு ஒரு க்ஷண நேரமும் நான் பிழைத்து இருக்க மாட்டேன்)-என்று இறையும் அகலகில்லாத உன்னுடைய உள் மானம் புற மானமாய் அனுபவித்து அந்தரங்கனாய் அத்யந்த அபிமதனாய் இருக்கிறவன் –
ப்ரபு -யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் (யோ வேத்தி யுகபத் ஸர்வம் ப்ரத்யஷேண ஸதா ஸ்வதஸ் தம் ப்ரணம்ய ஹரிம் ஸாஸ்த்ரம் நியாயதத்வம் ப்ரசஷ்மஹே -நாதமுனிகள் அருளிச் செய்த நியாயதத்வம் -எவனொருவன் எப்போதும் எல்லா வஸ்துக்களையும் ஒரே சமயத்தில் தானாகவே நேரில் அறிகிறானோ -அந்த ஹரியை வணங்கி நியாயதத்வம் என்னும் கிரந்தத்தைச் சொல்லுகிறோம்)-என்று ஸர்வத்தையும் ஏக காலத்திலேயே சாஷாத்கரிக்க வல்ல ஸாமர்த்யத்தை யுடையவன் -அதவா உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடையவன் –

இயத்தயா மாதும் நாலம் -இப்படி உனக்கும் வல்லபனாய் -பிரபுவாய் இருக்கிறவனும் இவ்வளவென்று பரிச்சேதிக்க மாட்டான் –
த்வத் வல்லபஸ்தே மஹிமாநம் மாதும் நாலம் –
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு
-என்றும் தான் முயங்கும் –(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்-தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு ——100-)என்கிறபடியே குமிழ் நீருண்டு கண்ணாஞ்சுழலை இடுமது ஒழிய பரிச்சேதிக்க சக்தனோ
தே மஹிமாநம் இயத்தயா மாதும் -சமர்த்தோ த்ருஸ்யதே கச்சித் (ந ஸம் பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே -சமர்த்தோ த்ருஸ்யதே கஸ்சித் தம் விநா புருஷோத்தமம் -பரம ஸம்ஹிதை -செல்வங்களைச் சேர்த்துக் கொடுப்பதாலும் ஆபத்துக்களை அடியோடு போக்குவதாலும் ஸமர்த்தனாய் இருப்பவன் அந்தப் புருஷோத்தமனைத் தவிர வேறொருவனும் காணப்படுகிறதில்லை –) -என்று அதி ஸமர்த்தன் என்னா அபரிச்சேத்ய வஸ்துவைப் பரிச்சேதிக்கலாமோ -பரிச்சேதிக்கிறோம் என்றும் இத்தைப் பரிச்சேதிக்க இழிந்தானாகில் அசமர்த்தனாய் விடுமத்தனை –
தே மஹிமாநம் மாதும் நாலம் –
தன் மஹிமாவைத் தான் அளவிட்டு அறிய மாட்டாதவன் தன் ஸ்வரூப வைலஷண்ய யுக்தமான உன்னுடைய மஹிமாவை அறிய வல்லனோ –
மஹிமாநம் மாதும் நாலம் –
ஸ்வ ஸ்வரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதித்து அறியாதவன் உன்னுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ -ரூப வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ -குண வைலக்ஷண்யத்தைப் பரிச்சேதிக்கவோ-எத்தைத் தான் இவன் பரிச்சேதிப்பது -தர்மியான ஸ்வரூப வைலக்ஷண்யம் சத்தயா தாரகமாகையாலே –ந ஜீவேயம் ஷணமபி -என்னப் பண்ணும் -ரூப வைலக்ஷண்யம் தஞ்சேயம் அஸி தேஷணா –என்கிறபடியே ததோ அப்யதிகமாய் இருக்கும் -குண வைலக்ஷண்யம் தத் குணங்களை லகூ கரிக்கும்படி யாயிருக்கும் (லுகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -சரணம் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த குணம் அன்றோ )-
இயத்தயா மாதும் நாலம்
அபரிச்சேத்யம் அத்தனை என்றும் அளவிடுமல்லால் இவ்வளவு என்றும் பரிச்சேதிக்க மாட்டான்

இவ்வர்த்தத்தை த்ருஷ்டாந்த முகேந த்ருடீ கரிக்கிறார் –ஆத்மந இவ –என்று –ஆத்மநோ மஹிமாநமிவ தே மஹிமாநமியத்தயா மாதும் நாலம்தனக்கும் தன் தன்மை அறிவரியானை என்கிறபடியே தாம் தம் பெருமை அறியாதாப் போலே உன்னுடைய மஹிமாவை இவ்வளவு என்று அறிய மாட்டான் -அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஓரொன்றே அபரிச்சேத்யம் இறே -ஆனந்த குணத்தைப் பரிச்சேதிக்க இழிந்த வேதங்கள் பட்டது படுமத்தனை -உன்னுடைய பெருமையைப் பேச இழிந்த இவனும் -அவனுடைய யதோ வாசோ நிவர்த்தந்தே (யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்ஸந -தைத் ஆ -9-1- எந்த ப்ரஹ்மத்தினிடமிருந்து மனத்துடன் கூடிய வாக்குகள் அதை அளவிட்டு அறியாமல் திரும்புகின்றனவோ அந்தப் பரமாத்மாவின் ஆனந்தத்தை அறிந்தவன் எதனிடமும் பயப்பட மாட்டான் –) -என்கிறதுக்கு விஷயம் இதுவாய்த்து –ஆத்மந இவ என்றும் தே மஹிமாநம் என்றும் அருளிச் செய்கையாலே பிராட்டிக்கு அனுரூபங்களான அவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் சேர்த்து அனுபவித்தமை தோற்றுகிறது -பாஷ்யகாரரும் -பகவந் நாராயண -என்றும் –அபிமத அனுரூப ஸ்வரூப ரூப குண -என்றும் இருவருடையவும் ஸ்வரூபாதிகளைச் சேர்த்து அனுபவித்து அருளினார் இறே
த்வத் வல்லபோ அபி -என்கிற அபி ஸப்தம் சமுச்சய அர்த்தமாய் கீழ்ச் சொன்ன ப்ரஹ்மாதிகளோடே இவனையும் சமுச்சயித்து -நுண் உணர்வில் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் -என்றும் எல்லையில் ஞானத்தன் –என்கிறபடியே அதி ஸூஷ்ம ஞானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஸ்வதஸ் ஸர்வஞ்ஞனான ஈஸ்வரனும் க்ருத சங்கேதராய்ப் பேசிலும் உன்னுடைய மஹிமாவைப் பரிச்சேதிக்க மாட்டார்கள் என்கை -அல்ப ஞானம் சக்திகரான ப்ரஹ்மாதிகளோடே அதிசயித ஞான சக்திகனான ஈஸ்வரனை சமுச்சியிக்கலாமோ -என்னில் -இவர்களுக்கு அந்யோன்யம் ஞான தாரதம்யம் உண்டேயாகிலும் இவளுடைய மஹிமார்ணவத்திலே மக்நராம் இடத்தில் ஒரு விசேஷம் இல்லாமையால் இங்கனே யோஜிக்கத் தட்டில்லை -பர்வத பரமாணுக்களுக்கு அணுத்வ மஹத்வ ரூபேண அந்யோன்யம் வாசியுண்டே யாகிலும் மஹார்ணவத்திலே மக்னங்களாம் இடத்திலே தன்னில் ஒரு வாசியில்லை இறே –
அதவா -அபி ஸப்தம் அதிசயத்திலேயாய் –யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் (யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் யஸ்ய ஞானமாயம் தபஸ் –முண்ட -1-1-10–எந்தப் பரமாத்மாவானவன் எல்லாமே வஸ்துக்களுடைய ஸ்வரூபத்தையும் ஸ்வ பாவங்களையும் அறிகிறானோ -எவனுடைய ஸங்கல்பமானது ஞானமயமாய் இருக்கின்றதோ —) –என்றும் –பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே (பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே –6–இந்தப் பரமாத்மாவுக்குப் பலபடிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்றும் அறியப்படுகிறது –) -என்கிற குணங்களை சமுச்சயித்து -ஆத்மா இவ தே –என்கிறபடியே ஸர்வஞ்ஞனாய் ஸர்வ சக்திகனுமாய் இருக்கிறவனும் என்னவுமாம் -அங்கனும் அன்றிக்கே –த்வத் வல்ல பச்ச ந ப்ரபு த்வஞ்ச -என்று சமுச்சயித்து உனக்கு வல்லபனான அவனும் அவனுக்கு வல்லபையான நீயும் க்ருத சங்கேதராய்ப் பரிச்சேதிக்கப் பார்த்தாலும் பரிச்சேதிக்கப் போகாது -என்கை –

இப்படி லோக விலக்ஷண ஞான சக்திகரான இருவரும் பரிச்சேதிக்க மாட்டார்கள் என்கை -இவர்களுடைய ஸர்வஞ்ஞதைக்குச் சேருமோ என்னில் -அபரிச்சேதய வஸ்துவை அளவிடுகிறேன் என்கை அஞ்ஞதைக்கு எல்லை நிலமாய் இருக்கும் -ஆகையால் இப்படிச் சொல்லக் குறையில்லை -இவ்வர்த்தத்தைத் தத்வ வித் அக்ரேஸரான ஆழ்வான் –தேவி த்வன் மஹிமா வதிர் ந ஹரிணா நாபி த்வயா ஞாயதே -என்று தொடங்கி ஸ்பஷ்டமாக ப்ரதிபாதித்து அருளினார் இறே

தேவி த்வந் மஹிம அவதிர் ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே
யத் யப்யேவ மதாபி நைவ யுவயோஸ் சர்வஜ்ஞதா ஹீயதே
யந் நாஸ்த்யேவ ததஜ்ஞாதம் அநு குணாம் சர்வஞ்ஞதாயா விது
வ்யோமாம் போஜ மிதந்தயா கில விதந் ப்ராந்தோய மித்யுச்யதே
 –ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ)

இப்படி ஸர்வஞ்ஞராய் ஸர்வ சக்திகராய் இருக்கிற இருவருக்கும் பரிச்சேதிக்க ஒண்ணாமைக்கு ஹேதுவேன் -என்ன -அருளிச் செய்கிறார் –நிரவதிம் –என்று -இது தான் ஹேது கர்ப்ப விசேஷணமாய் அவதி ரஹிதமாகையாலே ஒருவருக்கும் பரிச்சேதிக்கப் போகாது என்கை -இத்தால் அபரிச்சின்ன வஸ்துவைப் பரிச்சேதிக்க மாட்டாமை ஸர்வஞ்ஞத்வத்துக்கு பஞ்சகம் என்றதாயிற்று –
இப்படி அவனுடைய மஹிமாவானது ஆஸ்ரிதற்கு அனுபவ யோக்யமாய் -ப்ராப்ய அந்தர் கதத்வ ஞாபகமாய் சேஷி சேஷ பூதர் இருவருக்கும் அனுகூலமாய் (அனுபவமும் ப்ரீதியும் கைங்கர்யமும் பிராப்திகளே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் )-எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி யூழி தொறும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருக்கும் என்கிறார் –நித்ய அனுகூலம் ஸ்வதஸ் -என்று
ஸ்வதஸ் நித்ய அனுகூலமாய் இருக்கையாவது -தன்னதொரு ஸ்வ பாவத்தாலே நிலா தென்றல் சந்தனம் போலே எப்போதும் சேதன ஈஸ்வரர் இருவர்களுக்கும் அனுகூலமாய் இருக்கை –
த்வாம் -கீழ் ப்ரதிபாதிக்கப்பட்ட பரத்வத்தாலே வந்த ப்ரஸித்தியை உடைய உன்னை -இப்படி ஸ்தோத்ரம் தான் இவருக்கு (இருவருக்கும்)ஸ்வரூப ப்ரயுக்தமாகையாலே அத்தலையில் நிறைவையும் இத்தலையில் குறைவையும் பார்த்துப் பிற்காலிக்க வேண்டாதபடியான சம்பந்தம் உண்டாகையாலே தாஸ இத்யஹம் நிர்ப்பய ஸ்தோஷ்யாமி -என்கிறார் –

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தார் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனைப் பாடிப் பறை கொள்ளுகைக்காக -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று சம்பந்தத்தை முன்னிட்டால் போலே இவரும் பிராட்டியுடைய உத் கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையும் பார்த்துக் கதம் ப்ரூம -என்று பிற்காலித்தவர் -தத் அவிநா பாவ ஸம்பந்த அனுசந்தானத்தாலே ஸமாஹிதராய் ஸ்தோத்ரத்திலே ப்ரவர்த்திக்கக் குறையில்லை –பணி பதி என்று தொடங்கி த்வத் தாஸ தாஸீ கண –என்று உபயவிபூதியில் உள்ளாரும் இவளுக்கு சேஷபூதர் என்று சொல்லுகையாலே தம்முடைய சேஷத்வமும் அர்த்தாத் ஸித்தமாய் இருக்க இங்கு விசேஷித்து அருளிச் செய்வான் என் என்னில் ஆஷே பத ப்ராப்தமாகையைப் ஆபிதாமுகம் முக்யமாகையாலே தாஸோஹம் -என்கிறார் –அரங்கமாளி என்னாளி விண்ணாளி -என்றும் ஸ்ரீ ரங்க நாத மம நாத(ஸ்ரீ ரெங்கநாத மம நாத -ஸ்ரீ ரெங்ககத்யம் -7-ஸ்ரீ ரெங்க நாதனே என்னுடைய நாதனே) என்றும் விசேஷித்து அனுசந்தித்தார்கள் -அங்கு ஸ்வரூபம் சொல்லிற்று -இங்கு ஸ்தோத்ர கரண யோக்யதைக்காகச் சொல்லுகிறது என்னவுமாம்

த்வதீய ஹேதுவை அருளிச் செய்கிறார் –ப்ரபந்ந -என்று -த்வாம் ப்ரபந்நோ காம் நிர்ப்பய ஸ்தோஷ்யாமி -அசரண்ய சரண்யையான உன்னை (பற்றிலார் பற்ற நின்ற என்றபடி )அநந்ய சரணனான நான் சரணம் புகுந்தேன் -என்னுடைய பூர்வ அபராதங்களையும் உன்னுடைய பூர்த்தியையும் அனுசந்தித்து அப்பூர்த்திக்கு அனுரூப ஸ்தோத்ர கரண காரண ஞான சக்த்யாதி அனுசந்தானத்தாலே நிர்ப்பயனாய் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் –பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் –-என்கிறபடியே உன்னுடைய ஆஸ்ரித விரோதி நிரசன அனுசந்தானத்தாலே என்னுடைய பூர்வ அபராதங்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை -ஆர்த்த அபராதைகளாய் வதார்ஹராய் இருப்பாரையும் ந கஸ்சின் ந அபராத்யதி (பாபாநாம் வா ஸூபாநாம் வா வாதார்ஹாணாம் ப்லவங்கம -கார்யம் கருணமார்யேண ந கச்சின் நாபராத்யதி-யுத்த -116-44- வானர பாபிகளாயினும் புண்யமுள்ளவராயினும் கொல்லத்தகுந்தவர்களாக இருந்தாலும் குணவானாய் இருப்பவனால் அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் -அபராதம் செய்யாதவன் ஒருவனுமே இல்லையே –)என்றும் மறுதலைத்து மன்றாடி ரக்ஷிப்பது -அவர்கள் பயம் சமிக்கும் படி பவேயம் சரணம் ஹி வ -என்று உன்னுடைய அபய பிரதானத்தினுடைய நீர்மையை அனுசந்தித்தால் உன்னுடைய பூர்த்திக்கு அஞ்ச வேண்டியதில்லை -ஆர்த்த அபராதைகளாய் வதார் ஹராய் இருப்பாரையும் மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலே த்வத் கருணா நிரீஷண ஸூதா என்னும்படியான உன்னுடைய கடாக்ஷ ப்ரபாவத்தையும் அனுசந்தித்தால் என்னுடைய அஞ்ஞான அசக்திகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை-

த்வாம் ப்ரபந்ந அஹம் நிர்ப்பய –உபயாந்தரங்களைப் பற்றினால் இறே –வர்த்ததே மே மஹத் பயம் –(காலேஷ்வபி ச சர்வேஷு திஷு ஸர்வாஸூ ச அச்யுத சரீரே ச கதவ் சாபி வர்த்ததே மே மஹத்பயம் -ஜிதந்தே -1-9-அச்யுதனே -எல்லாப் புண்ய காலங்களிலும் எல்லாத் திசைகளிலும் உள்ள புண்ணிய ஷேத்ரங்களிலும் -தர்ம சாதனமான சரீரத்திலும் சரீராந்தர கதியிலும் அடியேனுக்கு அதிகமாக பயம் உள்ளது –)என்னும்படி பயப்பட வேண்டுவது –
த்வாம் ப்ரபந்ந அஹம் நிர்ப்பய —
உபாய பூதனான ஈஸ்வரனைப் பற்றினேனோ –வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க -(நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-)என்னும்படி அவனுடைய ஸ்வா தந்தர்யத்தை நினைத்து அஞ்சுகைக்கு -பாபமே பச்சையாக அங்கீ கரித்து -பரதந்த்ர ஏக வேஷையாய் -பர்த்தாவான அவனையும் –த்ராஹி த்ராஹீ தீ என்று கடிப்பிக்க வல்ல ஸுலப்யத்தையுமுடைய உன்னைப் பற்றின எனக்கு உபாய விஷயமாகக் கர்தவ்ய அம்சம் ஒன்றும் இல்லாமையாலே உபேய பூதையான உன் விஷயத்திலே –அஹம் ஸ்லோக க்ருத் -என்று அனுபவ பரிவாஹ ரூபமான ஸ்லோக ரசனையைப் பண்ணி ஸ்துதிக்கிறேன் என்கிறார்
த்வாம் ப்ரபந்ந -என்கையாலே தாம் பத்ம நேமிம் சரணம் அஹம் ப்ரபத்யே -(சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்)என்கிற ஸூக்த்தார்த்தத்தை அனுஷ்டித்தமை தோற்றுகிறது – இத்தை அடியொற்றி இறே பாஷ்யகாரரும் –ப்ரபத்யே -என்று பற்றிற்று –

ஆக இப்படி ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தராய்க் கொண்டு ஸ்ருதிச் சாயையாலே ஸ்தோத்ரம் பண்ணுகிறார் –
லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -(அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ -யஜுர் ஸம்ஹிதை -4-4-12-இவ்வுலகிற்கு ஈஸ்வரியாகவும் விஷ்ணுவுக்குப் பத்னியாகவும் இருப்பவள் —)என்று –
இப்பத த்வயத்தாலும் அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ –என்கிற ஸ்ருதி அர்த்தம் ஸூசிதமாயிற்று
லோக ஏக ஈஸ்வர-லோக்யத இதி லோக -என்கிற பிரகிரியையாலே ப்ரமாண சித்தங்களான த்ரிவித சேதன அசேதனங்களுக்கும் அத்விதீய நிர்வாஹகன் -ஈஸ்வர ஸப்தம் ஸ்ருதியாதிகளிலே ப்ரதிபாதிக்கிற ஸர்வ சேஷித்வத்தையும் காட்டுகிறது –
பதிம் விஸ்வஸ்ய -(பதிம் விஸ்வஸ் யாத்மேஸ்வரம் –நாராயணம் -தைத் நா -11–உலகிற்கெல்லாம் பதியாய் இருப்பவனும் தனக்குத்தானே ஈஸ்வரனாய் இருப்பவனும்)என்று ஸர்வ சேஷித்வத்தையும்
யாஸ் பாஸ்ஸ மஹேஸ்வர -(யத் வேதாதவ் ஸ்வரஸ் ப்ரோக்தா வேதாந்தே ச ப்ரதிஷ்டித -தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய யஸ் பரஸ் ஸ மஹேஸ்வர -தை நா -10-24- வேதத்தின் ஆதியிலும் அந்தத்திலும் யாதொரு ஸ்வரமானது சொல்லப்படுகிறதோ -தனக்குக் காரணமான அகாரத்தால் ஒடுங்கிய ஓங்காரமாகிய ஸ்வரத்துக்குப் பொருளாய் இருப்பவனே மகேஸ்வரன் –)என்று யோ லோகத்ரயம் ஆவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர என்னும் ஸர்வ நியந்த்ருத்வத்தையும் நாராயண அனுவாகங்களிலே ப்ரதிபாதித்தது இறே -இப்படி ஸர்வ நியாந்தாவானவனுக்கு வேறொரு நியந்தா வில்லை என்னுமத்தை -ஆத்மேஸ்வரம் -என்றும் நாதனை ஞாலம் விழுங்கும நாதனை என்றும் ப்ரதிபாதித்தது இறே(வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற-நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே –திரு விருத்தம் 79)
லோக ஏக ஈஸ்வர என்றவிடத்திலே ஏக சப்தத்தாலே –ஏகஸ் ஸ்வதந்த்ரோ ஜகதோ பபூவ -(–ஏகஸ் ஸ்வ தந்த்ரோ ஜகதோ பபூவ -தை -நா -11-உலகிற்கு ஒரே ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியாய் நாராயணன் விளங்கினான்) -என்றும்ஷராத்மாநா வீஸதே தேவ ஏக – (க்ஷரம் ப்ரதாநம் அம்ருத அக்ஷரம் ஹர ஷாரத்மாநா வீஸதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது பிரக்ருதியே -அம்ருதமாகையால் அக்ஷரம் எனப்படுபவன் ஜீவனே -பிரகிருதி ஜீவர்களை ஒரு தேவன் நியமிக்கிறான்)என்றும் ஏக ஸாஸ்தா ந த்வீதீயோ அஸ்தி கச்சித் -(ஏகஸ் ஸாஸ்தா ந த்வதீயோ அஸ்தி ஸாஸ்தா கஸ்ஸித் யோ ஹ்ருச்சயஸ் தமஹமநு ப்ரவீமி-தேநைவ யுக்தஸ் பிரவணாதி வோதகம் யதா நியுக்தோ அஸ்மி ததா வஹாமி -ஆச்வ பர்வம் -27-1-நாராயணன் ஒருவனே நியமிப்பவன் -நியமிப்பவர் வேறு இல்லை -எந்த பகவான் ஹ்ருதயத்தில் எழுந்தருளி இருக்கிறானோ அவனையே நான் சொல்லுகிறேன் -ஜலம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலே -அவனுடன் சேர்ந்தவனாய் அவன் ஏவின வேலையைத் தாங்கிச் செல்லுகிறேன்)என்றும் இத்யாதி ப்ரமாணங்களிலே ஸர்வ நியந்த்ருத்வம் இவனுக்கு ஐகாந்திகமாகச் சொல்லுகையாலே அத்விதீய நிர்வாஹகத்வம் சொல்லுகிறது -இப்படி அத்விதீய ஸர்வ நிர்வாஹகன் பத்னியாகையாலே லோக ஏக ஈஸ்வரி -என்கிறார் -இத்தால் –ஈஸாநா தேவீ புவநஸ்ய அதி பத்நீ –என்றும்
விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -(விஸ்வஸ்ய பர்த்ரீ ஜகதஸ் ப்ரதிஷ்டா -யஜுர் காட -3-3–உலகிற்கு ஸ்வாமிநியாகவும் ஆதாரமாகவும் இருப்பவள்)என்கிற ஸ்ருத்யர்த்தம் ஸூசிதம்
அதவா
லோக
ஸப்தத்தாலே லோக சித்தனான லோக நாதனையும் சொல்லி தத்வத்ரய நிர்வாஹிகை -என்னவுமாம்
பும் ப்ரதாநேஸ்வக்ரேஸ்வரீம் -(ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்)என்னக் கடவது இறே –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற விடத்தில் ஸர்வ சப்தத்துக்கு ஸங்கோசம் இல்லாமையாலும் கர்மணி வ்யுத்பத்தியில் கர்த்ரு சங்கோச ராஹித்யத்தாலும் ஈஸ்வர ஈஸ்வரி என்னத் தட்டில்லை -அவன் பரம ப்ரணயி யாகையாலே இவளுக்கு நியாம்யனாய் ப்ருகுடி படனாய் இறே இருப்பது –யஸ்யா வீஷ்ய -ஜெகன்நாதோ அபி இத்யாதி –

ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ
ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம்
க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா -ஸ்ரீ ஸ்தவம்–1-

ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணன் இந்த உலகில் பலவகையான சேதனங்களையும், அசேதனங்களையும் படைத்து வருகிறான்.அப்படிப் படைத்து வரும்போது, தனது படைப்புகள் பயன் உள்ளவையா, அல்லவா என்று எண்ணுகிறான்.இதனால் அவனுக்கு ஒரு விதமான சோர்வு உண்டாகிறது (இதனை வ்யஸனம் என்றார்).இந்தச் சோர்வை பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியார் நீக்குகிறாள் – எப்படி?அவனது படைப்புகள் அனைத்தையும் தாம் ஒப்புக்கொண்டதாக கூறி, அவற்றைப் பயனுள்ளதாகச் செய்கிறாள்.(அங்கீகாரிபி என்ற பதம் ஏற்பதையும், ஸார்த்த யந்த்யை என்ற பதம் பயனுள்ளதாக மாற்றுதலையும் குறிக்கின்றன).இவள் தனது சம்மதத்தை பெரியபெருமாளிடம் எப்படிக் கூறுகிறாள் என்றால், திருவாய் மூலமாக அல்ல.பெரியபெருமாளிடம் உள்ள வெட்கம் காரணமாக, இவள் தனது கண்களால், கண்களின் அசைவால் பெரியபெருமாளுக்குச் சம்மதத்தை உணர்த்துகிறாள் (இதனை ஆலோகை என்ற பதம் கூறுகிறது).இப்படிப்பட்ட பெரிய பிராட்டியான ஸ்ரீரங்கநாச்சியாருக்கு எனது அஞ்ஜலிகள்!

ஐஸ்வர்யம் மஹ தேவ வா அல்பம் அதவா த்ருச்யதே பும்ஸாம் ஹி யத்
தல் லஷ்ம்யாஸ் சமு தீக்ஷணாத் தவ யதஸ் சார்வத்ரிகம் வர்த்ததே
தேநை தேந ந விஸ்மயே மஹி ஜகந்நாதோ அபி நாராயண
தந்யம் மந்யத ஈஷணாத் தவ யதஸ் ஸ்வாத்மா நமாத் மேஸ்வரா -ஸ்ரீ ஸ்தவம்–6-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ, அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.-அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ, அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது. எனவே பரப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?-இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்றபல தன்மைகள் நித்யமாக உள்ளன.

இப்படி ஸர்வ நிர்வாஹகனான ஸர்வேஸ்வரனும் நியாம்யனாகைக்கு ஹேது வென் என்ன ததத் யந்தர் அபிமதையாகையாலே என்கிறார் –லோக நாத தயிதே -என்று –சக்ரத்தான் –தண் துழாய்த் தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் –என்கிறபடியே(சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த் தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண் தேனமரும் பூ மேல் திரு ——100-)என்கிறபடியே ஸர்வ நியந்தாவாய் ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரனும் அதி வ்யாமுக்தனாய் நியாம்யனாம்படி தத் வல்லபையாய் இருக்குமவன் என்கை -(ஸ்ரீ வாஸூ தேவர் மஹிஷி பும் ப்ரதாநேஸ்வரேஸ்வரீ -ஸ்ரீ லஷ்மீ ஸஹஸ்ரநாமம் -1- ஸ்ரீ வாஸூ தேவனுடைய மஹிஷி சித் அசித் ஈஸ்வரர்களுக்கு ஈஸ்வரியாய் இருப்பவள்)
அதவா
லோக ஏக ஈஸ்வரி
என்கிற லோக நியந்த்ருத்வத்துக்கு ஹேது லோக நாத தயிதை யாகையாலே என்னவுமாம் –
லோக நாத தயிதே -ராமஸ்ய தயிதா பார்யா -(ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் ப்ராண சம ஷிதா -பால-1-26–ராமனுக்குப் பிரியபத்னியாயும் எப்போதும் அவனுடைய ப்ராணனைப் போலே நன்மையைச் செய்பவளாகவும் இருப்பவள் ஸீதை)என்னக் கடவது இறே -ஸ அபராத சேதனரை அபராத அனுகுணமாக தண்டிக்கும் நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனோடே கடிப்பித்து ரஷிப்பிக்கும் இவளுக்கு இதம் ப்ரதமமில்லாத ஈஸேஸி தவ்ய ஸம்பந்தமும் -தத் பத்நீத்வ ஸம்பந்தமும் ப்ரதானமாகையாலே –லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -என்று உபய ஸம்பந்தத்தையும் அருளிச் செய்கிறார் –இவள் தாயாய் -என்று தொடங்கி -அவனுக்குப் பத்னியாய் -என்று ஸம்பந்த த்வயத்தையும் அருளிச் செய்தார் இறே அபியுக்த அக்ரேஸரான பிள்ளை லோகாச்சார்யாரும் –

(இவள் தாயாய் இவன் க்லேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்நியாய்-இனிய விஷயமாய் இருக்கையாலே கண் அழிவற்ற புருஷகாரம்–ஸ்ரீ முமுஷுப்படிசூரணை -128-அவன் தன்னை வைலஷண்யத்தை கண்டு பிச்சேறி தன் சொல் வழி நடக்கும் படி அபிமத விஷயமாய் இருக்கையாலே -கண் அழி வற்ற புருஷகாரம்-என்கை-)

ஸ்தோத்ரத்தில் ப்ரவ்ருத்தராவது -பரத்வ அனுசந்தானத்தாலே நிவ்ருத்தராவது -தாஸன் என்பது -ப்ரபன்னன் என்பது -ஸம்பந்தத்தை முன்னிடுவது -தத் வசீகரண ஸாதனமான ஸுலப்யத்தைச் சொல்வதாய்க்கொண்டு ஸ்தோத்ரத்திலே உத்யுக்தரானாலும் -ஸ்தோத்ர விரோதியான அவித்யாதிகள் நசித்து ஸ்தோத்ர கரண சாதன ஞான பக்திகள் உண்டான போதிறே ஸ்தோத்ர ப்ரவ்ருத்தி ஸபலமாவது -ஆனபின்பு அவை இரண்டுமே இல்லையென்று நிவ்ருத்தரான நீர் இப்போது ப்ரவர்த்திகைக்கு ஹேது வென் என்ன-என்னுடைய அவித்யாதி நிவர்த்தகமாய் ஞான பூர்த்தி ப்ரதமுமான ப்ரஸாத விசேஷத்தை என் பக்கலிலே பண்ணி அருளுகையாலே உன்னுடைய தயா ப்ரபாவத்தை அறிந்து பய ரஹிதனாய் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார் –தாந்தே தயாம் தே விதந் -என்று –

(தாந்தே -இரண்டு அர்த்தங்கள் – சம்போதானம் என்றும் -தாந்தி உள்ள புருஷர்களிடத்தில் கடாஷிக்கிறீர் என்றுமாம்)

இப்படி இவ்விசேஷ கடாக்ஷம் இல்லாத போது கீழ் நிவ்ருத்தரான இவர் உடனே ஸ்தோத்ரத்திலே ப்ரவர்த்திக்கக் கூடாது இறே –த்வாம் ஸ்தோதுமபி நேஸாநாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா –என்று தத் ப்ரஸாதத்தை ஒழிய ஸ்தோத்ரம் பண்ண ஷமரன்று என்றது இறே(ப்ரஹ்மாத்யாஸ் ஸகலா தேவா முனயச்ச தபோதன -த்வாம் ஸ்தோதுமபி நேஸாகாஸ் த்வத் ப்ரஸாத லவம் விநா -பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன்னுடைய அருளில் ஒரு துளியாவது இருந்தாலொழிய உன்னை ஸ்துதிக்க வல்லார் அல்லர் –) -ஆன பின்பு இவர் ஸ்தோத்ரம் பண்ண வல்லராம்படி இவருக்கே விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினாள் என்கிற இவ்விசேஷம் ஸித்திக்கைக்காக தாந்தே மயி -என்று கூட்டிக் கொள்வது –
தாந்தே மயி-க்ருபோத்தம்பக தீநாவஸ்தா விஸிஷ்டனாய் ப்ரபன்னனான என் விஷயத்திலே –
அதவா -தாந்தே –என்று ஸம்புத்தி யாகவுமாம் -கருணாம்ருத ஸம் வர்த்திதையான கற்பகக் கொடியே –லஷ்மீ கல்பக வல்லீ -லஷ்மீ கல்ப லதா -மலர் வைகு கொடி -இன்னிள வஞ்சிக்கொடி -ஒருவல்லித் தாமரையாள் –என்கிறபடியே கனக கமலத்தில் உண்டான கல்பக லதை போலே –லோக நாதனான தெய்வ வந்து துதைந்த வென் பெண்மை -என்னலாம் படி தத் ஸம்ஸ்லேஷத்தாலே துவண்ட வடிவை யுடையவளே –

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி
புல்கு  தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே —8-7-8-

மன்னு மரகதக் குன்றின் மருங்கே யோர் ————77
இன்னிள வஞ்சிக் கொடி யொன்று   நின்றது தான்
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கிடையே  ——–78
மின்னாய் இளவேய்   இரண்டாய்    இணைச் செப்பாய்
முன்னாய தொண்டையாய்க் கெண்டைக் குலம் இரண்டாய் ——79
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே-பெரிய திருமடல் 

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்-அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை-ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,-திருவல்லிக் கேணியான் சென்று.

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4-


தே –மாத்ருத்வ ப்ரயுக்த வாத்சல்ய விசிஷ்டையான உன்னுடைய
தே தயாம் என்றும் பகவத் கிருபையை வ்யாவர்த்திக்கிறார் -பகவத் காருண்யத்திலும் அதிசயித்து இறே காருண்ய ரூபையான இவள் கருணை இருப்பது –

(லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா
ரஷக சர்வ சித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே
–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்)

தே தயாம் -வதார்ஹ காகாசூர விபீஷணாதிகளை -சரண உக்திகள் கைம்முதலாக ரஷித்த காகுத்ஸனுடைய கோஷ்ட்டியையும் (கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாராமல் -வம்ச ஏற்றத்தாலேயே இப்பத பிரயோகம் )-ஆர்த்த அபராதைகளான ராக்ஷஸிகளைச் சித்ரவதம் பண்ணத் தேடின சொல் மிறுங்கனான பவனாத்மஜன் பக்கல் –பாபாநாம் வா ஸூபாநாம் வா —என்னும் –ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநாம் குர்வந்தீ நாம் பராஞ்ஞயா –(ராஜ ஸம்ஸ்ரய வஸ்யாநம் குர்வந்தீநாம் பரஞ்ஞயா விதேயேநாம் ச தாஸீநாம் ந குப்யேத் வாநரோத்தம -யுத்த -116-38- வானர ஸ்ரேஷ்டனே ராஜாவுக்குப் பரதந்த்ரர்களும் அவனுடைய ஆஜ்ஜையினால் எனக்குத் துன்பத்தைச் செய்பவர்களும் அவனுக்கு வசப்பட்டவர்களுமான தாஸிகளிடத்தில் எவன் கோபிப்பான் –)என்று மறுத்து மன்றாடி ரஷித்த உன்னுடைய தயா வைபவத்தாலே லகூ கரிக்கும்படி யன்றோ கருணா சகியான ஷாந்தியின் பிரபாவம் இருப்பது -இப்படி பகவத் காருண்ய ஷாந்திகளிலும் அதிசயிதமான பிராட்டியினுடைய கருணா சகியான ஆகஸ்மிக ஷாந்தியை –ஸாந்த்ர மஹா கஸ –கஸ் ஸூகயது -(மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா-ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத: ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50–பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி-என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்-தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன் தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.-ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே-அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய். இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.-ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும் உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்) என்று பட்டர் பிரார்த்தித்து அருளினார் இறே -இன்னமும் க்ருபயா பர்யபாலயத் –(ஸ தம் நிபதிதம் பூமவ் சரண்ய சரணாகதம் வாதார்ஹமபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -ஸூந்தர -38-35–பூமியில் விழுந்தவனும் சரணமடைத்தவனுமான அந்தக் காகாசூரனை கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் சரணமடையத் தகுந்தவனான ராமபிரான் தன் அருளாலே ரக்ஷித்தான்)என்று பலிபுக்கான காகத்தை ரக்ஷித்த கிருபைக்கும் அடி –த்ராஹி தராஹீதீ பர்த்தாரம் உவாச தயயா விபும் –என்னும் (த்ராஹி தராஹீதி பர்த்தாரம் உவாஸ தயயா விபும் -நாதனான பகவானை நோக்கி காத்தருள்வாயாக காத்தருள்வாயாக -என்று கிருபையுடன் கூறினாள் பிராட்டி-)என்னும் உன் தயை இறே
தயாம் —ஸ்வார்த்த நிரபேஷா பரதுக்க அஸஹிஷ்ணுதா தயா – (-ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா தயா -ஸ்ரீ பாஷ்யம் -தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது –)என்கிற லஷண லஷிதையான க்ருபை –மர்ஷயாமீஹ துர்ப்பலா (தாஸீநாம் ராவணஸ்யாஹம் மர்ஷயாமீஹா துர்ப்பலா -யுத்த -116-41- அவர்களுடைய கண்கள் கலங்கக் காணமாட்டாத துர்ப்பலையான நான் ராவணனுடைய தாசிகளாகிற இவர்களை மன்னிக்கிறேன்-) என்ற உன் பக்கலிலே அனுஷ்டான சேஷமாய் அன்றோ இருப்பது –

விதந் -இப்படி ஸமாப்யதிக ரஹிதையாய் -ஸர்வ லோக ப்ரஸித்தையாய் -த்வத் தயை ஏக தாரகனாய் தயநீயனான என்னை விஷயீ கரித்த உன் தயா ப்ரபாவத்தை அறியா நின்று கொண்டு –தாந்தே புருஷே தே தயாம் விதந் -என்று ஸாமான்யமாக யோஜிக்கவுமாம் -அப்போதும் அந்த நியாயம் தமக்கும் ஒக்கும் இறே -இப்படி சாமான்யேன வரும் அந்வயத்திலும் விசேஷ அந்வயத்துக்கு விசேஷ பிரயோஜனம் உண்டு

(தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம் நன் எப்போதும் வஸிக்கிறேன் –)

(தீனர்கள் இடமும் மட்டுமே தயை என்பதை விட திருவடியை அடைந்த பிரபன்னனிடம் பொழிந்த தயைக்கு விசேஷம் உண்டே-பிரஹலாதன் கூப்பிட்ட குரலுக்கும் கஜேந்திரன் கூப்பிட்ட குரலுக்கும் வந்து ரஷித்ததும் திரௌபதிக்கு உதவினதும் விசேஷம் அன்றோ)

லோகைகேஸ்வரி– லோக நாத தயிதே-யஸ் யாஸ்தே –நிரவதிம -ஸ்வதோ -நித்ய அனுகூலம் -மஹிமாநம் -பிரபுஸ் -த்வத் வல்லபோ அபி-ஆத்மந இவ-இயத்தயா- மாதும் -நாலம் -தாம் த்வாம் அஹம் -தாஸ இதி ப்ரபன்ன இதி-ச -தாந்தே மயி தே தயாம் விதன்-நிர்ப்பய-ஸ்தோஷ்யாம் -இத் அந்வயம்

———————————————-

அவதாரிகை -பிரதம ஸ்லோகத்தாலே பெரிய பிராட்டியாருடைய ஸர்வ உத்கர்க்ஷ ப்ரகாசகமான பரத்வத்தை அனுசந்தித்து –அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்றால் போலே ஸர்வ உத் க்ருஷ்ட விஷயத்தை ஸர்வ அபக்ருஷ்டனான நான் ஸ்தோத்ரம் பண்ணுகையாவது என் -என்று பீதராய் –த்வாம் வயம் கதம் ப்ரூம -என்று நிவ்ருத்தரானார் –
த்வதீய ஸ்லோகத்தாலே நிவ்ருத்தரான தம்முடைய ஸ்தோத்ர ஸ்ரவண கௌதுகத்தாலே ஸ்தோத்ர விரோதிகள் நசித்து ஸ்தோத்ர கரண காரண ஞானாதிகள் உண்டாம்படி கடாஷித்து தயையைப் பண்ண -அத்தை அறிந்து -சம்பந்த ஞான பூர்வகமாக சரணம் புகுந்து -கீழ் ஸ்தோத்ர ஆரம்பாஷேப ஹேதுவாகச் சொன்ன ஸ்தோத்தவ்யகத உத்கர்ஷத்தை முகாந்தரேண த்ருடீ கரியா நின்று கொண்டு தத் உபச் லிஷ்ட ஸுலப்ய விசேஷத்தை அனுசந்தித்து ஸ்தோத்ரு கத தயநீய தசானுரூப ஹேதுவாலே ஸ்துத்யாரம்ப ஸமாதானம் பண்ணினார் -இப்படி ஸ்தோத்ர ஆரம்பாஷேப சமாதானே வ்யாஜேன பிராட்டியினுடைய பரத்வ ஸுலப்யங்களை அனுசந்தித்து -ஸ்தோத்ரத்திலே உபக்ரமித்து -தத் ஸர்வ சமாஸ்ரயணீயத்வ க்யாபன அர்த்தமாக ஸகல புருஷார்த்த ப்ரதத்வத்தை உதாஹரண ஸஹிதமாக உபபாதிக்கிறார் -இதில் -ஈஷத்வத் -இத்யாதியாலே –

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3-

தத் அலாபதஸ்–அந்தக் கடாக்ஷம் இல்லாமையால்
ப்ராக் நஷ்டம் -முன் நஸித்துக் கிடந்ததான
த்ரி புவனம்-மூவுலகும்
சம்ப்ரதி–இப்போது
ஈஷத் -சிறிது போது
த்வத் கருணா நிரீஷணஸூதா சந்து ஷணாத் –உன்னுடைய கருணா கடாக்ஷமாகிற அம்ருத வர்ஷத்தினாலே
அநந்தோ தயம்-அளவற்ற பெருமையை உடைத்தாகும் படி
ரஷ்யதே-காப்பாற்றப்படுகிறது
ந்ருணாம்-மானிடர்களுக்கு
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ-ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் இவைகளில்
ஸ்ரேயோ -மேன்மையானது-(அத்வா -மூன்று பாதைகளில்)
அரவிந்த லோசன மன காந்தா -தாமரைக் கண்ணனின் மனத்துக்கு இனியவளான ஸ்ரீ தேவியின்
பிரசாதாத் ருததே–அருள் இல்லாமல்
ந ஹி சம்பாவ்யதே -ஏற்படாதது அன்றோ

(த்ரி புவனம் -மூலப்பிரக்ருதி விகாரம் இல்லாதது -மற்ற விகாரமாயும் மற்றவற்றை பிறப்பிப்பதாயும் –மஹான் -அஹங்காரம் -இத்யாதி பிருத்வி -மற்றவற்றைப் படைக்காமல் -எல்லாம் –க்ருத க்ருதாக்ருத அக்ருத-நித்ய விபூதி இல்லாமல் அனைத்தும் லீலா விபூதியையும் சொன்னவாறு –
அநந்த உதயம் -முன்பு பிரளயத்தில் நசித்துக் கிடந்தோம் என்ற எண்ணமே இல்லாமல் –ஒழிவில் காலம் எல்லாமே -முன்பு இழந்தவற்றையும் மறக்கும்படி கைங்கர்யம் போல் –த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத்-)

தாந்தே மயி தே தயாம் விதந் அஹம் நிர்ப்பயஸ் ஸ்தோஷ்யாமி -என்று நாம் உம்மைக் கடாஷித்தோமாகவும் -அத்தாலே உம்முடைய அபிமதம் சித்தித்தாகவும் சொன்னீர் -லோகத்திலே சேதநருக்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களுக்கு ஹேதுக்கள் அவ்வவருடைய புண்ய பாபங்களாய் யன்றோ இருப்பது -ஆயிருக்க உம்முடைய அபிமதம் நம்முடைய கடாக்ஷத்தாலே சித்தித்தது என்னுமிடம் நம் பக்கலிலே ஆதார அதிசயத்தாலே சொன்ன வித்தனை இறே -என்ன -நான் ஒரு விஷயத்திலே பக்ஷபாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -வஸ்து ஸ்திதியை ஆராய்ந்து பார்த்தவிடத்தில் த்ரி க்ஷணா அவஸ்தாயியாய் -நசித்துப் போகிற புண்ய பாபங்கள் மூர்த்தீ கரித்திருந்து பலப்ரதமாகிறன வல்ல விறே -புண்யா புண்யா ஈஸ்வர ப்ரீதி கோபவ் – (-புண்யம் பாபம் என்பது ஈஸ்வரனுடைய ப்ரீதி கோபங்களே யாகும்)-என்கிறபடியே-துன்ப வின்ப வினைகளுக்கு (துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்-உயர நின்றது ஓர் சோதி யாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந் தான் தனை அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினைஅச்சு தன் தனைத்-தயர தற்கு மகன் தனை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.-3-6-8-)_நிர்வாஹகனான ஈஸ்வரனுடைய ப்ரிய அப்ரியங்கள் அபிமத அநபிமத ஸித்திகளுக்கு ஹேதுக்கள் -அவனுடைய கோப ப்ரசாதங்களுக்கும் அடி உன்னுடைய கடாக்ஷ ததபர்வங்களாகையாலே ஸகல சேதனருடைய அநர்த்தாப்யுதயங்களுக்கு ஹேது -உன்னுடைய கருணா கடாக்ஷ லாப அலாபங்களாய் இருக்கும் -ஆன பின்பு என்னுடைய அபிமத ஸித்திக்கே யன்றிக்கே –ஸகல சேதனருக்கும் ஐஸ்வர்யாதிகளால் ஸ்ரேயஸ்ஸூ உன்னுடைய ப்ரஸாதத்தாலே அல்லது சம்பவியாதிறே என்று தத் புருஷார்த்த பிரதத்வத்தை ஸ தாஹரணமாகப் ப்ரதிபாதிக்கிறார் -ஈஷத் இத்யாதி ஸ்லோகத்தாலே-

பிராட்டியினுடைய அனுக்ரஹ ஏக தேசம் அநந்த அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அநந்தாப்யுதய ஸித்திக்கும் நிதானம் என்கிற விசேஷ த்யோதனார்த்தமாக ஈஷத் -என்கிறார் –த்வத் ப்ரஸாத லவம் விநா –என்றது இறே –த்வச் ஸப்தத்தாலே –ப்ரணிபாத பிரசன்னையாய் -ஷிப்ர ப்ரஸாதினியாம் படியான அசாதாரண ஸ்வ பாவம் ஸூசிக்கப்படுகிறது –இத்தால் நிக்ரஹ அனுக்ரஹ ஸ்வ பாவனான ஈஸ்வரனில் வ்யாவ்ருத்தமான அனுக்ரஹ ஏக ஸ்வபாவத்வம் சொல்லப்பட்டது –பத்மே ஸ்திதா பத்ம வர்ணா பத்ம நாபப்ரியா ஸூபா -ஸதா அனுக்ரஹ சம்பந்நா ஸா தேவீ மே ப்ரஸீதது –(மங்கள ஸம்ஹிதை தாமரையில் இருப்பவளாய் -தாமரை நிறத்தவளாய் -தாமரை யுந்தியான் மனைவியாய் -மங்கள ஆகாரையாய் எப்போதும் அருள் நிரம்பியவளான அந்தப் தேவி என்னிடம் அருள் புரியட்டும் –)என்றும்
அனுக்ரஹ பராம் ருத்திம் அநகாம் ஹரி வல்லபாம் -நமாமி கமலாம் காந்தாம் ஷமாம் ஷீரோத சம்பவாம் –என்றும் (-ஸ்ரீ லஷ்மீ அஷ்டோத்தர சதம் அருள் நிரம்பியவளாய் -செல்வமாய் இருப்பவளாய் -பாபமற்றவளாய் -ஹரிக்குப் பிரியையாய் கமலையாய் காந்தையாய் பொறுமையாய் பாற்கடலில் உதித்தவளுமான பிராட்டியை நமஸ்கரிக்கிறேன் –)என்றும் அனுக்ரஹ ஏக ஸ்வபாவத்வம் சொல்லப்பட்டது இறே

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத்-உன்னுடைய அநிஷ்ட நிவர்த்தன இஷ்ட ப்ராபண அனுகுணமான கருணையை ஹேதுவான யுடைத்தான கடாக்ஷ லேஸ அம்ருத உத்ரேகத்தாலே –
கருணா நிரீஷணம் -கருணா ஹேதுக நிரீஷணம் -கருணயா விஷயீ கரணம் நிரீஷண ஸப்தத்தாலே உபகரிக்கிறதாகவுமாம் -கருணா ப்ரேரிதமாய் இறே நிரீக்ஷணம் உண்டாவது –காருண்ய மாருதா நீதை (த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை: காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-ஸ்ரீ தேவராஜ அஷ்டகம்—ஸ்லோகம் 8:–காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்.)-என்றது இறே –நிரீக்ஷண ஸூதா சந்துஷணாத் -த்வதீஷண ஸூதா ஸிந்து வீசி விஷேபஸீகரை –(சம் தப்த்தம் விவிதைர் துஃகை: துர்வசைரேவம் ஆதிபி:தேவ ராஜ தயா ஸிந்தோ தேவ தேவ ஜகத் பதே!!”-தேவராஜ அஷ்டகம் 7த்வ தீக்ஷண ஸுதா ஸிந்து வீசிவிக்ஷேப கரை: காருண்ய மாருதா நீதை ஸ்ஸீகரைர் அபிஷிஞ்ச மாம்!!”-8-இப்படிப்பட்ட பலவித துக்கங்களினால் சூழப்பட்டு, தாபங்கள் மிகுந்தவனாக வாழும் அடியேனை, தேவாதி தேவர்களின் தேவனான, ஸ்ரீ தேவராஜ மஹா பிரபுவான உந்தன் கருணையின் குளிர்ச்சி தான் சீர்படுத்த வேண்டும்.-காருண்யம் என்னும் மாருதத் தென்றலால் தள்ளப்பட்ட உம்முடைய கடாக்ஷம், குளிர்ச்சியுள்ள கடல் அலைகளில்-நீர்வீழ்ச்சிகளில், அடியேனை,உம்முடைய கைங்கர்யமாகிற ஸாம்ராஜ்யத்தில் பட்டாபிஷேகம் செய்யும்படி நன்றாக திருமஞ்சனம் செய்து வைக்க வேண்டுகிறேன்)என்கிறபடியே.–கடாக்ஷ அம்ருத த்ருஷ்டிகளாலே என்கை -ஏவம் பூத கடாக்ஷம் தான் சகலாத்ம ஸஞ்ஜீவனமாய் இருக்கையாலே ஸூதையாக நிரூபிக்கிறார் -ஸூதையாலுண்டான ஸம்யக் உல்லாஸத்தாலே -கடாக்ஷ நிஷேபத்தாலே என்கை –
ரஷ்யதே -உபத்ரவ ரஹிதமாக ஸ்தாபிப்பப்படுகிறது –
ப்ராக் -உன்னுடைய உபேஷா காலத்திலே
தத் அலாப -உன்னுடைய நிரீக்ஷணா லாபத்தால் அல்லது உன்னுடைய கோபத்தால் அன்றிறே –கஸ் குப்யேத் வாநரோத்தம –எந்தத் சொல் மினுங்கனுக்கும் உபதேசிக்கிற உனக்கும் கோபமுண்டாக ஸம்பாவனை இல்லை இறே -நஷ்டம் -விநஷ்ட ப்ராயமான –
த்ரிபுவனம் -இத்தால் த்ரைலோக்ய அந்தர் வர்த்தியான ஸகல ஜனங்களையும் உப லஷிக்கிறது –மஞ்சா க்ரோஸந்தி இதிவத்
ஸம் ப்ரதி -உன்னுடைய கடாக்ஷ வீஷாக்ஷண லஷ்யமான தசையிலே –
அநந்தோதயம் யதா பவதி -பூர்வ காலத்திலும் அதிசயித அப் யுதயமாம் படி -ரஷ்யதே -ப்ராக் தத் அலாபதோ நஷ்டம் த்ரிபுவனம் ஸம் ப்ரதி ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷணாத் அநந்தோதயம் ரஷ்யதே –

துர்வாஸ சாபத்தாலே நிஸ்ஸ்ரீகமாம்படி புவன த்ரயத்தையும் பரித்யஜித்து பயோததியிலே பிராட்டி எழுந்தருளின போது தத் கடாக்ஷ அபாவத்தாலே அசன்னேவ என்னும்படி நஷ்டமான த்ரிபுவனம் -பின்பு –ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -(ஷீரோதாஸ் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவாந் -வி பு -1-8-16-அம்ருத மதன காலத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீ தேவி உண்டானதாகக் கேள்விப் படுகிறேன் -ப்ருகுவுக்கு க்யாதி என்னும் பத்னியிடம் பிராட்டி யுண்டானதாகத் தாங்கள் சொல்வது எப்படி–மைத்ரேயர் பராசர மகரிஷியிடம் கேட்க )என்றும் –செழும் கடலமுதினில் பிறந்த அவளும் -பெரிய திரு மொழி -2-7-1-என்னும்படி அமுதில் வரும் பெண்ணமுதாய் அவதரித்து (அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்-கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே விண்ணவர் அமுது உண அமுதில் வரும்-பெண் அமுது உண்ட எம் பெருமானே-ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே)-திவ்ய மால்யாம் பரதரா ஸ்நாதா பூஷண பூஷிதா -பஸ்யதாம் ஸர்வ தேவாநாம் யயவ் வஷஸ் ஸ்தலம் ஹரே – (-வி பு -1-9-105-திவ்யமான மாலைகளையும் வஸ்திரங்களையும் தரித்தவளாய் ஸ்நாநம் செய்தவளாய் —ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவளான பிராட்டிக்கு எல்லாத் தேவர்களும் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே எம்பெருமானுடைய திருமார்பை அடைந்தாள் –)-என்கிறபடியே(லஷ்மீ கல்யாண ப்ரக்ரியை) ஸ்நாதையாய் மஹார்ஹ வஸநையாய் சித்ர மால்ய அநு லேபையாய்க் கொண்டு -திகழ்கின்ற திருமார்பில் சேர்ந்து -பெரிய திரு மொழி -2-7-1-என்றும் அகலகில்லேன் இறையும் -6-10-10-என்று திருக் கலந்து சம்ச்லேஷித்த அநந்தரம் -உன்னுடைய காருண்ய ஸீதல கடாக்ஷ ஸூதா வர்ஷத்தாலே வழிய வார்க்க-அநந்தரம் அத்தாலே சத்தை பெற்று ஸம்ருத்தியான படியை இஸ் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
த்வயா தேவி பரித்யக்தம் ஸகலம் புவன த்ரயம் -விநஷ்ட ப்ராயம் அபவத் த்வயேதா நீம் சமேதிதம் -(விபு -1-9-123- தேவியே உன்னால் கைவிடப்பட்ட மூவுலகு முழுவதும் நசித்துக் கிடந்தது -இப்போது உன் அருளாலே உஜ்ஜீவித்தது )என்று இவ்வர்த்தம் இந்த்ரனாலே சொல்லப்பட்டது இறே -இப்படி அந்வய வ்யதிரேகங்களாலே ப்ரஹ்ம இந்திரனின் ப்ரப்ருதி சேதனருடைய ஐஸ்வர்யம் பிராட்டியினுடைய கடாஷாதீனம் என்னுமிடம் தர்சிக்கப்பட்டது –
ப்ரஹமாத் யாச்ச ஸூராஸ் ஸர்வே முந யச்ச தபோதநா -ஏதந்தே த்வத் பதச்சாயம் ஆஸ்ரித்ய கமலேஸ்வரி – (காஸ்யபீயம்-கமலையே பிரமன் முதலான எல்லாத் தேவர்களும் தவத்தையே தனமாகக் கொண்ட முனிவர்களும் உன் திருவடி நிழலை அண்டி உஜ்ஜீவிக்கிறார்கள் –)என்னக் கடவது இறே-யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் -இத்யாதி(யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம் ஐஸ்வர்ய ஹேதுரிதி சர்வ ஜநீநம் ஏதத் தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்–29–யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள் உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும்-(ஆளவந்தாரும் கஸ் ஸ்ரீ இத்யாதி ) தேவரீரை அன்றோ-திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )

அதவா –ஈஷத் த்வதித்யாதி -ப்ருதிவ்யப்ஸூ லீயதே -இத்யாரப்ய -என்றும் –ஆபஸ் பரே தேவ ஏகி பவதி –என்றும் –ந ப்ரஹ்மா நே ஸாந -என்றும் -ஆஸீ திதம் தமோ பூதம் அபிரஞ்ஞாதம் அலக்ஷணம் -அப்ரதர்க்யம் அவிஞ்ஜேயம் ப்ரஸூப்த்தமிவ ஸர்வதா -(ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8-இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார் –)என்றும் ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றுமோர் யாதுமில்லா அன்று-என்றும் இத்யாதிப்படியே ஸர்வ ஸம்ஹார காலத்திலே உன்னுடைய கடாக்ஷ அம்ருத வ்ருஷ்ட் யலாபத்தாலே அசன்னேவ என்னும்படி நாம ரூப விபாக அநர்ஹமாய் நஷ்டமான த்ரிபுவனமானது-அப ஏவ ஸஸர்ஜாதவ் -தத் ஸ்ருஷ்ட்வா –-(ததேவ அநு ப்ராவிஸத் -தை ஆந -6-அந்த ஜகத்தை ஸ்ருஷ்டித்தவன் -அந்த ப்ரஹ்மம் அதை வியாபித்தது )என்று சொல்லுகிற ஸ்ருஷ்ட்டி காலத்திலே –நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -ஸர்வே நிமேஷ ஜஜ்ஜிரே -ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர-அநேந ஜீவேநாத்மநா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -நான்முகனை நாராயணன் படைத்தான் -இத்யாதி ப்ரமாண ப்ரகாரேண அண்டங்களினுடையவும் தத் அந்தர்வர்த்தி தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர்வித பூதங்களுடையவும் ஸ்ருஷ்ட் யுன்முகனாய்க் கொண்டு –ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி –தேஜ ஐஷத -ஆப ஐஷந்த -என்று(ததைஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத தத் தேஜ ஐஷத பாஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தபபோ அஸ்ருஜத –தா ஆப ஐஷந்த –சாந்தோ -6-2,3,4)-அந்தப்பர ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக்கடவேன் என்று சங்கல்பித்தது -அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது -தேஜஸ்ஸை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் நான் பலவாகக் ஆகக்கடவேன் என்றும் சங்கல்பித்தது -அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது -ஜலத்தை சரீரமாகக் கொண்ட அந்தப்ப்ரஹ்மம் சங்கல்பித்தது –) என்று ஸ்ருஷ்டிக்கு கடவனாய் பார்த்து அருளின போது –யத் ப்ரூபங்கா ப்ரமாணம் ஸ்திர சர ரஸநா தாரதம்யே முராரே –ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸனம் ஹரே அங்கீ காரி பிராலோகைஸ் ஸார்த்த யந்த்யை –உல்லாஸ பல்லவித பாலித ஸப்த லோகீ நிர்வாஹ கோரகித கடாக்ஷ லீலாம் –அஸேஷ ஜெகதாம் சர்க்க உபசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் –என்று தொடங்கி –யஸ்யா வீஷ்யா முகம் ததிங்கித பராதீனோ விதத்தே அகிலம் —(யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே: வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4–இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)இத்யாதி ப்ரமாண ப்ரகரேண உன்னுடைய ப்ருகுடி படனாய் -த்வத் இங்கித பராதீனனாய்க் கொண்டு சமஸ்த சித் அசித் விதானம் பண்ணுகிற அவனுடைய அந்தக்கடாக்ஷ அனுகுணமாகக் கருணா அம்ருத கடாக்ஷ நிக்ஷேபங்களை நீ பண்ணுகையாலே யன்றோ நாம ரூப விபாக அர்ஹமாய்க் கொண்டு ரக்ஷிக்கப்படுகிறது -ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் -ஸம் ப்ரத்யனந்தோ தயம் யதா பவதி ததா ரஷ்யதே

(ப்ருகுடி படனாய்-புருவ அசைப்பைக்கு பராதீனனாய் -அவன் கடாக்ஷத்துக்கு அனுகுணமாய் -பொருத்தமாய் -அன்றோ தேவரீர் கடாக்ஷம்)

ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரதி ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் நந்தோ தயம் ரஷ்யதே-எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் —என்கிறபடியே கடும் கோடையில் கமர் பிளந்து உலர்ந்து போந்த பயிரானது நினைவற மேகமேறி வர்ஷித்தால் சத்தை பெற்றுத் தரித்து பலபர்யந்தமாப் போலே –மழைக்கண் மடந்தையான நீ குளிரக்கடாஷிக்கையாலே யன்றோ முன்பு நஷ்டமான ஜகத்து இப்போது மஹீ மஹீ தர ஜலதி ரூபமாய் தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூப சதுர்வித தேஹ பிரவேச சதுரரான ஆத்மாக்களை யுடைத்தாய் -போக்ய போக உபகரண போக ஸ்தான ரூபேண அபி வ்ருத்தமாய்த்து என்று அப்யய (ஸம்ஸார )பூர்விகையான ஸ்ருஷ்டியிலே இவளுக்கு அந்வயம் சொல்லவுமாம் -இப்படி ஜகத் காரணத்வத்தில் இவளுக்கு அந்வயமுண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான் அருளிச் செய்த வார்த்தையை இவ்விடத்தில் அனுசந்திப்பது -அதாவது -இவ்வர்த்ததில் ஸந்தேஹமுண்டோ –ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி ப்ரஜாஸ் சோத்பாதயி தவ்யா -(தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் )என்று பிரமாணம் சொல்லுகையாலே ஸஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயமுண்டு என்று அருளிச் செய்தது –

யுக்தார்த்த ஸமர்த்தன வ்யாஜத்தாலே ஸகல புருஷார்த்தங்களும் தத் ப்ரஸாத அதீனமாய் இருக்கும் என்கிறார் –ஸ்ரேய-இத்யாதியாலே -யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே–ந்ருணாம்-சம்ஸ்ருத் -யஷர -வைஷ்ணவாத் வஸூ-ஸ்ரேய-கர்ஹிசித் ந சம்பாவ்யதே ஹி –
அரவிந்த லோசன -தஸ்ய யதா கப் யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -என்று கம்பீராம்பஸ் ஸமுத்பூதமாய் -ஸூம்ப்ருஷ்ட நாளமாய் -ரவிகர விகசிதமுமான புண்டரீக தளம் போலே அமலாயதேஷணன் இறே அவன்(அமல ஆயத-மிகப்பெரிய அமலங்களாக விழிக்கும் கரியவாகி புடை பெயர்ந்து அப்பெரியவாய திருக்கண்கள்) –ஏதத் துல்ய சீலையான அஸி தேஷ்ணை இறே இவள் -த்வத் ப்ரஸாதாத்ருதே –என்ன வமைந்து இருக்க -இவ்விசேஷணம் என் என்னில் –ஜிதந்தே -தாமரைக் கண்ணனை -என்று உபய விபூதியையும் எழுத்து வாங்குகிற அனைத்துலகுமுடைய அரவிந்த லோசனனையும் வசீகரிக்க வல்ல வாலப்ய ப்ரஸித்தி தோற்ற விசேஷிக்கிறார் -இத்தால் சர்வ ஸ்மாத் பரனாய் ஸ்வதந்த்ரனான அவனும் இவள் ப்ரஸாத பாத்ரமானார்க்கு ஒழியக் கார்யம் செய்யான் என்னுமிடம் தோற்றுகிறது

(ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஸ்யதே ஹிரண்ய ஸ்மஸ்ருர் ஹிரண்ய கேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸூவர்ண தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம் -1-6-7-ஸூர்யனுக்கு நடுவிலே ஸூ வர்ணம் போல் அழகிய உருவையுடைய எந்த இந்தப்பரம புருஷன் காணப்படுகிறானோ அவன் ஸூவர்ணம் போன்று அழகான மீசையையும் கேசங்களையும் எல்லா அவயவங்களையும் உடையவன் -அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரை போன்று இரு கண்கள் உள –)

(ஜிதந்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே விஸ்வ பாவன நமஸ்தே அஸ்து ஹ்ருஷீகேச மஹா புருஷ பூர்வஜ –ஜிதந்தே -1-1--செந்தாமரைக்கண்ணா உன்னால் இவ்வாத்ம வஸ்து ஜெயிக்கப்பட்டது -இது என்னுடையதல்லவே -உன்னுடையதாயிற்றே -உலகை எல்லாமே உண்டாக்கியவனே இந்திரியங்களை நியமிப்பவனே கொடுப்பதில் சிறந்த மஹா புருஷனே முற்பாடானாய்ப் பிறப்பவனே -இவ்வாத்ம வஸ்து எனக்காகை தவிர்ந்த உனக்கேயாக வேணும் )

(ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் —யாதிருச்சா ஸூஹ்ருதம்-விஷ்ணோர் கடாக்ஷம்-அத்வேஷம்-ஆபி முக்யம்-சாத்விக சம்பாஷணம்ஆச்சார்ய பிராப்தி )

அரவிந்த லோசந மந காந்தா -என்கையாலே -விஷ்ணோர் கடாக்ஷம் -யம் பஸ்யேன் மது ஸூதந –(விஷ்ணோர் கடாக்ஷம் -விஷ்ணுவின் கடாக்ஷ ஸத்வ குணத்தை அளிக்க வல்லது-ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதந ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேயஸ் ஸ வை மோஷார்த்த சிந்தக–சாந்திபர்வம் -358-73 பிறக்கும் போது எவனை மது ஸூதனன் காண்கிறானோ அவன் ஸாத்விகன் என்று அறியத்தக்கவன் -அவனே மோக்ஷ புருஷார்த்தத்தைத் சிந்திப்பவன் –)என்று சொல்லுகிற அவனுடைய ஸுஹார்த்த ப்ரகாசகமான கடாக்ஷமும் ஏதத் அதீனம் என்னுமிடம் சித்தமிறே – மந காந்தா -ததத்யந்த அபிமதை -என்றபடி -கீழ் காந்தஸ்தே என்றும் இங்கு மந காந்தா -என்றும் சொல்லுகையாலே பரஸ்பர அனுகூலதயா ஸர்வ அபிமத பிரதத்வத்திலே உபயருக்குமுள்ள ஸுஹ்ருத ஸாம ரஸ்யம் ஸ்பஷ்டமாயிற்று –அஸ்யா தேவ்யா -இத்யாதி ப்ரஸாதாத் –(அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ஸாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் -ஸூந்தர -15-52–தேவிவின் மனம் பெருமாளிடமும் அவர் மனம் அவளிடமும் நிலை நிற்கிறது)தயா விசேஷத்தாலே – காந்தா ப்ரஸாதாத் -ப்ரஸாத பரமவ் -என்று (ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ் தன்யோஹம் அர்ச்சயிஷ்யாமி இத்யாஹ மால்ய உப ஜீவந -வி பு -5-19-21–மேலான அருளை யுடையவர்களும் ஸ்வாமியாய் இருப்பவர்களுமான இந்த ராமகிருஷ்ணர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் -நான் தன்யனானேன் -அவர்களைப் பூஜிக்கிறேன் என்று பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் சொன்னார் –)என்றுசொல்லுகிற அவனுடைய ப்ரஸாதத்துக்கும் அடியான ப்ரஸாதத்தாலே -மழைக்கண் மடந்தை யாகையாலே அவனுடைய குளிர்ந்த அருளும் வெந்நீர் என்னலாம் படி அதி சீதளமாய் இறே சீதள ஸ்வ பாவயையான இவள் தயை இருப்பது -ருதே -அனுக்ரஹ ஏக ஸ்வ பாவையான இவளுக்கு ஓரிடத்திலும் நிக்ரஹம் சம்பவியாமையாலே தன் நிவ்ருத்தி ரூப ப்ரஸாதா யோகத்தால் ஒழிய என்கை -தயா விசேஷ ரூப ப்ரஸாதத்தால் ஒழிய -என்றபடி –

ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவ அத்வஸூ -பாரிசேஷ்ய ப்ரமாணத்தாலும் புருஷார்த்த சமபி வ்யாஹாரத்தாலும் –ஸம்ஸ்ருதி -ஸப்தம் ஐஸ்வர்ய பரம் –ஐஸ்வர்யம் அஷர கதிம் பரமம் பதம் வா –என்று விஸதீ கரித்து அருளினார் இறே (பட்டர்)-ஆனால் ஐஸ்வர்யத்தை ஸம்ஸ்ருதி சப்தத்தால் அருளிச் செய்வான் என் என்னில் –கொள் என்றும் கிளர்ந்து எழுந்த பெரும்செல்வம் நெருப்பாக –என்று சொல்லுகிறபடியே ஐஸ்வர்யம் அல்லல் எனத் தோற்றி எரி தீயில் சுடும்படியான வைராக்யத்தாலே –இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யானும் வேண்டேன் –பெற்றாலும் ஆதரியேன் -வானாளும் செல்வமும் இம்மண்ணரசும் யான் வேண்டேன் – -என்று ஐஹ லௌகிகமான ஐஸ்வர்யத்தையும் -பார லௌகிகமான ஐஸ்வர்யத்தையும் பரித்யஜித்து –மா ஸ்ம பூத் -என்று(தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே | இதராவஸதேஷு மா ஸ்ம பூத் அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 55 –
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.) இருக்கும் ஸ்வ அபிப்ராயத்தாலும் -அநர்த்தாக்யம் என்னும்படி அநர்த்தாவஹம் ஆகையாலும் -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமாகையாலும் –தனம் ப்ராப்ய மாத்யன் உச்சைர் ந மாம் ஸ்மரேத்அநர்த்தாக்யம் தனம் ப்ராப்ய மாத்யந்துச் சைர் ந மாம் ஸ்மரேத் -அநர்த்தம் என்னும் தனத்தை அடைந்து மிகவும் மதமடைந்தவனாய் என்னை நினைப்பதில்லை) என்கிறபடி மத ஹேதுவாய் -பகவத் ஸ்மரண விரோதியாய் -இவ்வாகாரங்களினாலே ஸம்ஸாரம் அவத்யகரமாய் இருக்கையாலும் –ஸம் ஸ்ருதி சப்தத்தாலே ஐஸ்வர்யத்தை அருளிச் செய்கிறார் –அக்ஷர ஸப்தத்தாலே ஆத்ம அனுபவத்தைச் சொல்லுகிறது –வைஷ்ணவாத்வ ஸப்தத்தாலே –ஸோ அத்வந பாரமாப்நோதி -என்கிற கதி விசேஷ த்வாரா பகவத் ப்ராப்தியை லஷிக்கிறது -இவற்றில்

(விஞ்ஞான சாரதிர் யஸ்து மநஸ் ப்ரக்ரஹவான் நர-ஸோ அத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் -கட-1-3-9--எவனொருவன் நல்ல ஞானத்தை சாரதியாகவும் மனத்தை கடிவாளமாகவும் கொண்டிருக்கிறானோ அவன் ஸம்ஸாரத்துக்கு அக்கரையான விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறான் –)

இவற்றில் ஸ்ரேயஸ் ஸ்ரேஷ்ட தம ஸூகம் –என்றும் அவற்றைத் தரும் ஸூஹ்ருத விசேஷமுமாகவுமாம்(புண்ய ஸ்ரேயஸீ ஸூஹ்ருதம் வ்ருஷ -புண்யம் ஸ்ரேயஸ் ஸூஹ்ருதம் வ்ருக்ஷம் -தர்மம் -என்னும் நாலு பாதங்களும் ஒரே பொருளை யுடையவை)

ந்ரூணாம் -அகில ஷேத்ரஞ்ஞருக்கு எல்லாம் என்றபடி –ந ஸம் பாவ்யதே -ந ஸித்யதி -என்றபடி ––மூன்றுக்கும் பிரமாணங்கள்-மூன்றிலும் திருவின் பிரசாதம் ஸ்பஷ்டம் -திரு மா மகள் தன்னருளால் உலகில் தேர் மன்னராய் –என்றும் –செடியாராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமால் -என்றும் –திருமகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே –என்றும் அருளிச் செய்தபடியே ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாப ரூப புருஷார்த்தங்கள் எல்லாம் பெரிய பிராட்டியாருடைய ப்ரஸாதத்தால் அல்லது பெற அரிதாகையாலே –ஸம் ஸ்ருத் யக்ஷர வைஷ்ணவாத் வஸூ ஸ்ரேய ப்ரஸாஸாத்ருதே நிரூணாம் ந ஸம் பாவ்யதே ஹி -என்கிறார் –பத்ம யோநி ரிதம் ப்ராப்ய படந் ஸ்தோத்ரம் தத பரம் -திவ்யம் ச அஷ்ட குண ஐஸ்வர்யம் தத் ப்ரஸாதாச் ச லப்தவான் -என்றும்(-ப்ரஹ்ம புராணம் நாபிக்கமலத்தில் இருந்து உண்டான நான்முகன் இந்த ஸ்தோத்ரத்தை அடைந்து படைத்து அதன்பின் திவ்யமான எட்டுவிதச் செல்வத்தையும் அப்பிராட்டியின் அருளாலே அடைந்தான்)என்றும்(
ப்ரஹ்மாதீநாம் யதா யத்தம் வைபவம் யஸ்ய ஸா ஸ்வயம் –தஸ்ய கைமுத்ய நிர்த்தார்யம் ஈஸ்வரத்வம் ஸ்ரீ யபதே – (-ப்ரஹ்ம புராணம் ப்ரஹ்மாதிகளுடைய வைபவம் எவளாலேயோ அந்தப்பிராட்டி எவனுக்கு சேஷபூதையோ அந்த ஸ்ரீ யப்பதியின் ஈஸ்வரத்வம் கிம் புநர் நியாய ஸித்தம்)என்று ப்ரஹ்ம ஐஸ்வர்யத்தோடு ப்ரஹ்ம ஜனகனான ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யத்தோடு வாசியற தத் ப்ரஸாத அதீனமாயிருக்கும் படியைப் ப்ரதிபாதித்தது இறே –ஆ குக்ராம நியாமகாத் -என்றும் ஏகோ முக்தாத பத்ர ப்ரஸல மணி கணாத் காரி -என்றும் –ஐஸ்வர்யம் அக்ஷரம் கதிம் -என்றும் பட்டரும் இவ்வர்த்தத்தை ப்ரகடீ கரித்து அருளினார் இறே

ஆகுக்ராம நியாமகாத் அபி விபோ: ஸர்வ நிர்வாஹகாத்
ஐச்வர்யம் யத் இஹ உத்தரோத்தர குணம் ஸ்ரீரங்கபர்த்து: ப்ரியே
துங்கம் மங்களம் உஜ்ஜ்வலம் கரிமவத் புண்யம் புந: பாவநம்
தந்யம் யத் தத் அதச்ச வீக்ஷ்ணபுவ: தே பஞ்சஷா விப்ருஷ
:–15–

ஸ்ரீரங்கநாதனின் மனதைக் கவர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகி! ஒரு சிறிய நாட்டை ஆளும் அரசன் தொடக்கமாக, அனைத்தையும் (உனது அருளால்) ஆள்பவனாக உள்ள ப்ரம்மன் வரையில் உள்ளவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களிடம் இருக்கும் செல்வங்கள்; மேலும் இந்த உலகில் காணப்படும் மேரு மலை போன்ற உயர்ந்த பொருள்கள்,
இரத்தினம் போன்ற ஒளிவீசும் பொருள்கள், இமயமலை போன்ற பருத்த பொருள்கள், யாகம் முதலான புண்ணியப் பொருள்கள் – இவை அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கக்கூடிய வல்லமை – எப்படி உண்டாகுகிறது? எனது தாயே! ஸ்ரீரங்கநாயகீ! கருணையும் கடாக்ஷமும் வீசுகின்ற உனது பார்வை மூலமாக அல்லவோ?-தேவரீருடைய கடாக்ஷகந் தளிதங்களான ஐந்து ஆறு திவலைகளால் நன்மை பெற்று விளங்குகின்றன –

ஏக: முக்தாதபத்ர ப்ரசல மணி கணாத்காரி மௌளி: மநுஷ்ய:
த்ருப்யத் தந்தாவளஸ்த: ந கணயதி நதாந் யத் க்ஷணம் க்ஷோணி பாலாந்
யத் தஸ்மை திஷ்டதேந்ய: க்ருபணம் சரண: தர்சயந் தந்த பங்க்தீ
தத் தே ஸ்ரீரங்கராஜ ப்ரணயிநி நயந: உதஞ்சி்த ந்யஞ்சிதாப்யாம்–
16-

இந்த உலகின் நிலை என்ன? ஒரு மனிதன் மிகுந்த மன மகிழ்வுடன், யானை மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டு , முத்துக் குடையைப் பிடித்தபடி, அந்தக் குடையில் உள்ள ரத்ன மணிகள் அசையும்படி வருகிறான். அந்த இரத்தினங்கள் உள்ள அவனது க்ரீடமோ “கண கண” என்று ஒலி எழுப்புகிறது. அவனிடம் அரசர்கள் கூட வந்து வணங்கி நிற்கின்றனர். ஆயினும் அவனோ அந்த அரசர்களைப் பொருட்படுத்தாமல் சென்று விடுகிறான்.
மற்றொரு மனிதன் எந்த கதியும் இல்லாதவனாக, தனது ஏழ்மையை தன்னுடைய பற்களின் இளிப்பு மூலமாக அந்த யானை மீது உள்ளவனுக்குக் காண்பிக்கிறான். முதல் மனிதன் செல்வக் களிப்பில் உள்ளதும், அடுத்தவன் வறுமையின் பிடியில் உள்ளதும் ஏன்? ஸ்ரீரங்கநாதனின் ப்ராணனாகவே உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அருள் நிறைந்த பார்வை திறப்பதும் மூடுவதாலும் அல்லவா இந்த ஏற்றத் தாழ்வுகள் உள்ளன?

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

-ப்ரஸாதாத்ருதே ஸ்ரேயோ ந ஸம் பாவ்யதே -என்கையாலே -அவனுடைய ஸகல பல ப்ரதத்வமும் -ஏதத் அதீனம் என்னுமிடம் தோற்றுகிறது –அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி -யஸ்யா வீஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம் -(ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜெகதாம் சர்க்க உப சர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க் கதிம் ஆப வர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வந் ஹரி யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் க்ரீடேயம் கலு ந அந்யதா அஸ்ய ரஸதா ஸ்யாத் ஐக ரஸ்யாத் தயா –1-எல்லா உலகங்களுக்கும்–ஸ்ருஷ்ட்டி சம்ஹார ரக்ஷணங்களையும் –ஸ்வர்க்கத்தையும் நரகத்தையும் மோக்ஷ ஸ்தானத்தையும்-மற்றும் உள்ள எல்லாவற்றையும் –உண்டு பண்ணா நிற்கிற எம்பெருமான் –யாவள் ஒரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு–அந்த முகத்தின் புருவ நெறிப்பு முதலிய குறிப்புகளைப் பின் சென்றவனாய் –ஸ்ருஷ்ட்டி முதலாக கீழ்ச் சொன்ன எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறானோ-அப்படி அவள் முகக் குறிப்பைப் பின் செல்லா விடில்–இந்த எம்பெருமானுக்கு –அப்பிராட்டியோடே –ஒரு நீராக ஒருமித்து இருக்க வேண்டிய காரணத்தினாலே -ஸ்ருஷ்ட்டி முதலான இந்த விளையாட்டானது–இந்த எம்பெருமானுக்கு ஆனந்தத்தை விளைப்பதாக–ஆக மாட்டாது அன்றோ –அந்தப் பெரிய பிராட்டியார் –நன்மையை அளிக்கக் கடவள்)என்று ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளும் புருஷார்த்த ஸ்ருஷ்டியும் ததிங்கித பராதீனமானால் புருஷார்த்த ப்ரதத்வம் தத் அதீனம் என்று சொல்ல வேண்டா விறே -ஹி -ஸப்தம் ஸ்ரீ ஸூக்த்தாதி ப்ரஸித்த பரம் -இவளுடைய ப்ரஸாதமும் -பிரபாவமும் -இந்த்ராதிகள் பிரபாவம்-ப்ரஸாதம் போலே கால பேத பேத்யமாய் இருக்கும் அது –ஸத்ய ஸங்கல்ப அதீன ப்ரபாவமாகையாலே இது ஏக ரூபமாய் இருக்கும் என்றபடி –

நநு -அம்ருதஸ்யைஷ ஸேது -(-முண்ட -2-2-5-ஸம்ஸாரக்கடலின் அக்கரையான மோக்ஷத்தை அடைய இந்த பகவானே ஸேது -அணை -உபாயம் ஆவான்) என்றும்-ஸ ப்ரீதோ அலம்பலாய -(த்ரமிட பாஷ்யம் -ப்ரீதியடைந்த பகவானே பலனைக் கொடுக்க சக்தன்)என்றும் –பலமத உப பத்தே – (-ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-27-இந்தப் பரம புருஷனிடமிருந்தே மோக்ஷ பலம் உண்டாகிறது -அதுவே பொருந்தியதாகையால்) என்றும்-மோக்ஷ மிச்சேஜ் ஜநார்த்தநாத் – (ஆரோக்யம் பாஸ்கராதிச் சேத் தனமிச்சேத் ஹுதாஸநாத் ஈஸ்வராத் ஞானம் அன்விச்சேத் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -மாத்ஸ்ய புராணம் -67-41-ஸூர்யனிடமிருந்து ஆரோக்யத்தை விரும்பக்கடவன் -அக்னியிடமிருந்து பொருளை விரும்ப வேண்டும் -ஈஸ்வரனிடமிருந்து ஞானத்தை விரும்பக் கடவன் -ஜனார்த்தனனிடமிருந்து மோக்ஷத்தை விரும்பக் கடவன்) இத்யாதி பிரமாணங்கள் மோக்ஷ பிரதத்வத்தை முகுந்தனுக்கே அசாதாரணமாக ப்ரதிபாதியா நிற்க (மு கு த சரண்ய முகுந்தத்வம்-மு மோக்ஷம் கு லீலா விபூதி த தருபவள் -உத்பலா வதகே -)-இங்கே பிராட்டிக்கு மோக்ஷ உபாயத்வம் சொல்லுகை ஸ்வ இதர சமஸ்த ஸஹாயா நபேஷ உபாயத்வத்துக்குச் சேருமோ வென்னில் -இவள் புருஷகாரமானால் அல்லது ஈஸ்வரன் கார்யம் செய்யான் -என்கிற நிச்சய நிபந்தனமாகப் பரம்பரயா மோக்ஷ பிரதத்வம் சொன்ன இத்தால் தந்நிரபேஷ உபாயத்வ விரோதம் பிரசங்கியாது இறே –உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் –என்று உபாயத்வம் ஸ்வதஸ் ஸித்தமானாலும் இவள் புருஷீ கரியாத விடத்தில் அது காரியகரமாகாது இறே -அந்வய வ்யதிரேகங்களாலே தலை பெற்றாரும் தலை அறுப்புண்டாருமயிறே இருப்பது –

உபா தத்தே சத்தா ஸ்திதி நியமந ஆத்யை சித் அசிதவ்
ஸ்வம் உத்திஸ்ய ஸ்ரீ மாந் இதி வததி வாக் ஓவ்பநிஷதீ
உபாய உபேயத்வ தத் இஹ தவ தத்வம் ந து குணவ்
அத த்வாம் ஸ்ரீ ரெங்கேசய சரணம் அவ்யாஜம் அபஜம்
–2-87-

ஹே ஸ்ரீ ரெங்கநாதனே -ஸ்ரீ மந் நாராயணன் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி நியமனம் முதலிய காரியங்களால் சேதன அசேதனங்களைத் தனக்கேயாக ஸ்வீ கரிக்கிறான் என்றும் உபநிஷத் வாக்கியங்கள் சொல்லுகின்றன -ஆகையால் இங்கு உபாயத்வமும் உபேயத்வமும் உனக்கும் ஸ்வரூபன் -குணங்கள் அல்ல -இவை ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் அல்லவே ––ஆகையால் உம்மை நிர்வ்யாஜமான உபாயமாக அடைந்தேன் -அநந்ய சாதனர் என்று சரணம் புகுகிறார் –

(சரண வரண காலத்தில் ஷமிஷ்யாமி –இவளால் தலை யெடுக்குமாம் கல்யாண குணங்கள்- மாம் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள் –கார்ய காலம் -அநிஷ்ட நிவாரகம் இஷ்ட பிராப்தி-ஆஸ்ரித கார்ய ஆபாத குணங்கள் அஹம் -இதற்கு புருஷகாரம் வேண்டாமே-ஞானம் சக்த்யாதி குணங்களைத் தடுக்க ஸ்வா தந்தர்யம் பிரதிபந்தகமில்லையே – -பின்பு கைங்கர்யம் ஒன்றை பத்தாக்கித் தர வேண்டும்)

அதில் புருஷகார ஸாபேஷத்வம் உபாய நைரபேஷ்ய பஞ்சகமாகாதோ -என்னில் -ஸ்வீ கார தசையில் ஸ்வீ கர்த்தவ்ய ஸா பேஷமானவோபாதி புருஷகார ஸா பேஷமானாலும் பல ப்ரதான தசையில் பல பிரதத்வ ஹேதுவான ஞான சக்த்யாதிகளால் பூர்ணனாகையாலே உபய நிரபேஷமாகக் கார்யம் செய்ய வல்லனாகையாலே புருஷகார சாபேஷத்வம் உபாய நைரபேஷ்ய பஞ்சகமாகாது இறே -இத்தால் கார்ய காலத்தில் ஸா பேஷத்வம் நிரபேஷத்வ பஞ்சகமாகாது என்றதாயிற்று -ஆகையிறே உபாய ஸ்வீ காரத்தில் புருஷ ஸா பேஷமுமாய் புருஷகார ஸா பேஷமுமாய் இருக்கும் -கார்ய காலத்தில் உபய நிரபேஷமாய் இருக்கும் என்றும் ஆச்சார்ய அக்ரேஸரரான பிள்ளை லோகாச்சார்யாரும் அருளிச் செய்தது – புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹானி  வாராதோ -என்கிற சங்கையில்-அருளிச் செய்கிறார் -உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –-கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –சூரணை -268–அதாவது-சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் – ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் – ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி  பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் – புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை – கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து –நிரபேஷமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகாரத்தில்– -ஸ்வீ கர்த்தாவும்- ஸ்வீ கரிப்பிக்கும் அவளும் வேணுமே – ஸ்வீ கர்த்தா இல்லை என்றால் ஸ்வீ காரமும் இல்லையே – புருஷகாரம் இல்லை என்னில் அதிகாரம் இல்லை ஸ்வீகார அநந்தரம் -கார்ய பல -காலத்தில் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி சமயத்தில் இருவரையும் எதிர் பார்க்காமல் தானே செய்யுமே-ஆக நைர பேஷ்யத்துக்கு பங்கம் இல்லையே –சரணமாகும் தன தான் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–சரம ஸ்லோகம் -ஏக சப்தம் -இரண்டு பக்ஷங்கள் –என்னை தவிர வேறே ஒன்றுமே உபாயம் இல்லை ஸ் வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது – இதே போல் ஆத்மாவை பரமாத்மா அழிக்க முடியுமா -சக்தி இருந்தாலும் சத்ய சங்கல்பனாகையாலே அழிக்க மாட்டான் -இங்கும் கார்யம் செய்ய வல்லவன் -புருஷனை எதிர்பார்ப்பது போல் புருஷகாரத்தையும் எதிர்பார்க்கிறான்) லஷ்ம்யா ஸஹ ரக்ஷக- (லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீ கேஸோ தேவ்யா காருண்ய ரூபயா ரக்ஷகஸ் ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச நீயதே -லஷ்மீ தந்த்ரம் -28-14- காருண்யமே வடிவெடுத்த பிராட்டியுடன் கூடியே பகவான் ரக்ஷகன் ஆகிறான் என்றும் எல்லா சித்தாந்தங்களிலும் வேதாந்தங்களிலும் புகழப்படுகிறான்-)என்கிறவிடத்தில் இவளுக்கும் உபாய அந்வயம் சொல்லிற்றிறே யென்னில் -அங்கும் அப்ரதானார்த்தே திருதீயை யாகையாலே அப்ரதான ரக்ஷணமான புருஷகார பாவம் சொல்லுகிறது – உபாய வரண ப்ரதிபாதகமான பூர்வ வாக்கியத்திலே வாத்சல்யாதிவத் ஞான சக்த்யாதிவத் -விக்ரஹ வத் இவளையும் உபாய விசேஷணமாகச் சொல்லுகையாலே இவளுக்கு குணாதிவத் உபாயத்வம் சித்தமிறே யென்னில் -வாத்சல்யாதிகள் ஆஸ்ரயண ஸுவ் கர்ய ஆபாதங்களாகவும் ஞான சக்த்யாதிகள் ஆஸ்ரித கார்ய ஆபாதங்களாகவும் விக்ரஹம் ஸூபாஸ்ரயமாகவும் உபயோகிக்குமவை யாகையாலே இவற்றுக்குத் தத் அனுவிதாயித்வ மாத்ரமே இறே உள்ளது -இப்படியே இவளும் தத் அனுவிதாயியாய் இருக்கையாலே புருஷகார பாவமே இவளுக்கு நியதமாய் இருக்கும் என்று இறே த்வயத்திலும் நிர்ணயித்தது -கிஞ்ச குணாதிகளுக்கு உபாயத்வ யுண்டாகிலும் இவளுக்கு புருஷகார பாவம் நியதமாய் இருக்கும் என்றிறே ஆச்சார்யர்கள் நிர்வஹித்தது -ஆகையால் இவளுக்குப் புருஷகார பாவமே அங்கீ கார்யம் என்றதாயிற்று

(நார-குணங்கள் -சரணம் விக்ரஹம் -ஸ்ரீ பிராட்டிக்கு சம்பந்தம் -இவை மூன்றும் விசேஷணங்கள் -அவர தத்துவத்தில் நின்றும் வ்யாவ்ருத்தி -பூர்வ வாக்கியத்திலே வாத்சல்யாதிவத் ஞான சக்த்யாதிவத் -விக்ரஹ வத் இவளையும் உபாய விசேஷணமாகச் சொல்லுகையாலே-என்றவாறு -வாத்சல்யாதி -கல்யாண குணங்கள் -உபாயத்தில் அன்வயம் உண்டே-என்னில்-தத் அனுவிதாயித்வ மாத்ரமே இறே உள்ளது-அனு பின்தொடர்தல் –அப்ரதானம் -கௌனம் இவை என்றவாறு)

லஷ்மீ குணாதிகளுக்கு விசேஷணத்வம் அவிசிஷ்டமாய் இருக்க குணங்களுக்கு உபாயத்வம் அங்கீ கரித்துப் பிராட்டிக்கு புருஷகாரத்வம் அங்கீ கரிக்கைக்கு ஹேது என் என்னில் -குணங்கள் கார்ய உபயோகிகளாகையாலும் இவளுக்கு கார்ய உபயோகித்வம் இல்லாமையாலும் குணங்களுக்கு உபாயத்வமும் இவளுக்குப் புருஷகாரத்வமும் அங்கீ கரிக்கத் தட்டில்லை –

நநு பிராட்டிக்கு உபாயத்வ கொள்ளில் உபாய நைர பேஷ்யம் ஸித்தியாதோபாதி குணங்களுக்கு உபாயத்வம் கொள்ளில் தந் நைர பேஷ்ய ஹாநி வாராதோ என்னில் -குணங்கள் ப்ருதக் புத்தி ப்ரவர்த்தகம் அல்லாமையாலே குண த்வாரா குணி கார்யம் செய்கை நைர பேஷ்ய பஞ்சகம் அன்று-த்ரவ்யத்வேந பிராட்டிக்கு ப்ருதக் புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை யுண்டாகையாலே தத் உபாயத்வே உபாய நைர பேஷ்யம் ஜீவியாது இறே -ஆகையிறே உபாயா அனுஷ்டான ப்ரகாசகமான பூர்வ வாக்கியத்தில் சித்ரகுமாநய-என்கிற விடத்தில் போலே பிராட்டிக்கு உப லக்ஷணத்வமும் உபேய பிரார்த்தனா ப்ரகாசகமான உத்தர வாக்கியத்தில் தண்டிநமாநய என்கிறவிடத்தில் போலே விசேஷணத்வமும் நிர்ணயித்து அனுசந்தித்ததும் – இரண்டு இடத்திலும் ஸப்தம் ஒத்து இருக்கையாலே ஏக பிரகாரமாக உபயத்ர நிர்வாஹம் பண்ண ப்ராப்தமாயிருக்க ஏகத்ர உபலக்ஷணத்வமும் அந்யத்ர விசேஷணத்வமும் என்று இப்படி விபஜிக்கிறதுக்கு கமணிகை என் -என்னில் வாக்ய த்வயத்திலும் விசேஷ்ய ப்ரதிபாத்ய ஸப்தங்கள் சமானமாய் இருக்கச் செய்தேயும் -அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் சித்யாதர்த்த நிர்ணய -என்கிற நியாயத்தாலே (அர்த்தாத் ப்ரகரணால் லிங்காதவ் ஸித்யார்த்த நிர்ணய -அர்த்தத்திலிருந்தும் பிரகரணத்திலிருந்தும் -அடையாளங்களிருந்தும் -ஒவ்சித்யத்திலிருந்தும் பொருளை நிர்ணயிக்க வேண்டும் –)பூர்வ வாக்யம் உபாய பிரகரணமாகையாலே வாத்சல்யாதி குண விசிஷ்டன் உபாயம் என்றும் -உபேய பிரகரணமான உத்தர வாக்கியத்தில் ஸர்வ சேஷியான வஸ்துவே உபேயம் என்றும் -விபஜித்து அர்த்த நிர்ணயம் பண்ணினால் போலே -விசேஷண ப்ரதிபாதக ஸப்தங்கள் உபயத்ர சமானமாய் இருந்ததே யாகிலும் உபாய பிரகரணத்தில் பகவத் உபாயத்வ நைர பேஷ்ய ஸித்திக்காக பிராட்டிக்கு உபாயத்வ அநங்கீகாரேண புருஷகாரத்வம் கொள்ளுகை உசிதமாகையாலும் உபேய ப்ரகரணத்தில் மிதுன விஷய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமாகையாலும் பிராட்டிக்கு விசேஷணத்வம் கொள்ளுகை உசிதமாகையாலும் -ஆகிற இவ்வர்த்த ஸ்வாரஸ்யத்தைப் பற்ற இப்படி விபஜிக்கத் தட்டில்லை

(ஸ்ரீ மத் பூர்வ வாக்கியத்தில் உபலக்ஷணம் என்றும் ஸ்ரீ மதே உத்தர வாக்கியத்தில் விசேஷணமாகவும் அர்த்தம் கொள்கிறோம் -பிரகரணத்துக்குச் சேர–அர்த்தம் –பிரகரணம் -இடத்துக்குப் பொருத்தமாகப் பொருள் கொள்ளுவது -லிங்கம் அடையாளம் -உசிதமாக பொருள் கொள்ள வேண்டுமே-வாத்சல்யாதி குண விசிஷ்டன்-ஸர்வ சேஷியான வஸ்து-விபஜித்து அர்த்த நிர்ணயம் பண்ணினால் போலே–மாலுக்கு இரண்டு விதமாகக் கொண்டது போல் திருவுக்கும் இரண்டு விதமாகக் கொள்வதில் தப்பில்லையே)

உபலக்ஷணமாவது -உப லஷ்யாத் பஹிர்ப்பூதமாய் உப லஷ்ய ப்ரதீத் யுபாயமான தர்ம விசேஷம் -சாகாயாம் சந்த்ர-இத்யாதி -பிதாவுக்கு ஹித பரத்வம் அசாதாரணமாய் ப்ரிய பரத்வம் இருவருக்கும் அவிசிஷ்டமாய் இருக்கை லோக ஸித்தம் இறே -மாதாவுக்கு ப்ரஜா ஹித பரத்வம் பாரதந்தர்ய பஞ்சகம் இறே –
கிஞ்ச -சரணம் என்றும் ஏகவசன பிரயோகம் பண்ணினால் உப லக்ஷணமாய் விசேஷணத்துக்கும் உபாய அந்வயம் சம்பவித்தது விடும் என்றும் தத் வ்யாவ்ருத்யர்த்தம் இறே த்வி வசன ப்ரயோகம் பண்ணுகிறது -த்வி வசனம் மற்ற ஒன்றையும் ஸஹியாது இறே -விசேஷ்ய ப்ராதான்யத சொன்ன த்வி வசனம் பத்னீ விசேஷணத்துக்கும் அவிசிஷ்டம் என்னில் -அப்போதும் ப்ரதான்யம் விசேஷ்யத்துக்கேயாய் விசேஷணத்துக்கு அப்ராதான்யமாகையாலே அப்ரதான உபாயமான புருஷகார பாவமே ஸித்தித்து விடுமிறே (தண்டு வைத்த புருஷன் -நாநாவித பசுக்களுடன் கூடிய கோவிந்தன் -உபலக்ஷணம் பஹிர் பூதம் -சரணாகா பஹு வசனம் -நான்கு திருவடிகளைச் சொல்லவில்லையே -சரணம் என்றும் ஏக வசனமும் சொல்லவில்லையேயே -சரணவ்-இரண்டு திருவடி இணைகள் -)-இருவரும் ப்ரத்யேக யுபாயம் என்னுமது லஷ்மீ விசிஷ்டம் உபாயம் என்கிறதோடு சேராது -விசிஷ்டம் உபாயம் என்று அங்கீ கரித்து இவளுக்கும் பல பிரதத்வம் சொல்லும் போது ஈஸ்வரனுக்குப் பல ப்ரதான ஹேதுவான ஞான சக்த்யாதிகள் இன்றியிலே ஒழிய வேணும் -ஞான சக்த்யாதிகள் உண்டு என்னில் அப்போது ஏததுபாய பாவ நிரபேஷமாக ஸ்வயமேவ பல ப்ரத க்ஷமன் இறே -பலப்ரதான ஹேதுவான ஞான சக்த்யாதிகள் உண்டாக்குகிறாள் என்னில் -குணங்கள் வந்தேறியாய் ஸ்வாபாவிகங்கள் இன்றியிலே ஒழியும் -ஸ்வா தந்தர்யதிரோஹிதங்களான வாத்சல்யாதிகளை பிரகாசிப்பிக்கிறாப் போலே திரோஹித ஞானம் சக்திகளை பிரகாசிப்பிக்கிறாள் என்னில் -அவற்றுக்கு ஸ்வாதந்தர்யம் போலே இவற்றுக்கு ஒரு திரோதாயக குணமில்லை -உண்டு என்னில் -ஞானம் அக்தே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -3-10-8-என்கிறபடியே ஞானம் கொண்டு சோம்பாதே நிரந்தர ஸ்ருஷ்ட்டி பண்ணக்கூடாது இறே -யேந கேந பிரகாரேண உபாய அந்வயம் சொல்லில் -சீதோ பவ -(யத் யஸ்தி பதி ஸூஸ்ரூஷா யத் யஸ்தி சரிதம் தபஸ் யதி வா அஸ்த்யேக பத்நீத்வம் ஸீதோ பவ ஹனூமத-ஸூந்தர -53-29-எனக்கு பதி ஸூஸ்ரூஷை உள்ளதாகில் -என்னால் தவம் செய்யப்பட்டு இருக்குமாகில் -என் நாதனுக்கு ஏக பத்நீ விரதம் உள்ளதாகில் ஹநுமானுக்கு அக்னியாகிய நீ குளிர்ந்தவனாவாயாக) என்ன வல்ல திவ்ய சக்தி உண்டாயிருக்க ஸ்வ பாரதந்தர்ய ஹானி வாராமல் அந்தராத்மா ச மே ஸூத்த – (ஆஸம்ஸேயம் ஹரி ஸ்ரேஷ்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி -அந்தராத்மா ச மே ஸூத்தஸ் தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா -ஸூந்தர -37-14-வானரத் தலைவனே என் கணவன் விரைவிலேயே என்னை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கிறேன் -என் மனம்- தன்னை ரக்ஷிக்கத் தான் முயற்சி செய்வதாகிற -அசத்தி யற்று இருக்கிறது -அவனிடம் குணங்கள் பலவுள்ளன –) என்று ஸ்வ ரக்ஷணே ஸ்வ ப்ரவ்ருத்தி யாகிற அஸூத்தி இத்தலையில் இல்லை என்றும் -தஸ்மிம்ச் ச பஹவோ குணா என்றும் உபாய பூர்த்திக்கு அடியான குணபூர்த்தி அத்தலைக்கே உள்ளது என்றும் தர்சிப்பித்து ஸ்வ ப்ராப்திக்கும் தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று ஸ்வ ஸ்வரூப அனுரூப பாரதந்தர்ய அனுசந்தானமாக தந்நிரபேஷ உபாயத்வத்தைப் பார்த்திருக்கும்படியான இவள் பரி ஸூத்த ப்ரக்ருதிக்கு அது சேராது இறே

நநு -ஸ்ரீயப்பதியே உபாயம் என்றும் அங்கீ கரிக்க வேண்டுமாகையாலே நிரூப்ய ஸ்வரூபத்துக்குச் சொன்ன உபாயத்வம் நிரூபக ஸ்வரூபத்துக்கும் -யத்யபி ஸச் சித்த -(யத்யபி ஸச் சித்தோ ந நிர்ப்புக்ண தைவதம் குண கணம் மனஸா அநு தாவேத் ததாப் யந்தர்க்குணாமேவ தேவதாம் பஜதே தத்ராபி ஸ குணைவ தேவதா ப்ராப்யதே -த்ரமிட பாஷ்யம்-சத்தாகிற ப்ரஹ்மத்தை த்யானிப்பவன் தேவனாகிற அந்த ப்ரஹ்மத்தை விட்ட குண ஸமூஹத்தை மனஸ்ஸினாலே தியானிக்க முடியாவிடினும் குணங்களுடன் கூடிய தேவதையையே உபாஸிக்கிறான் -அதிலும் குணத்துடன் கூடிய தேவதையையே அடைகிறான் –) என்கிற நியாயத்தாலே அநிவர்த்யமாய்க் கொண்டு தன்னடையே வாராதோ என்னில் ஸ்வரூப நிரூபகத்வேந நிரூப்ய நிரூபகங்களுக்கு அவர்ஜனீய ஸம்பந்தம் உண்டேயாகிலும் உபாய வரண தசையில் ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்தங்கள் உபயோகம் இல்லாமையாலே நிரூபக மாத்ரமாய் நிற்கிறாப் போலே பகவத் ஸ்வரூப நிரூபகமான லஷ்மீ ஸ்வரூபமும் காரணத்வ தசையில் போலே உபாய தசையில் தன்னால் கொள்வ தொரு பிரயோஜனம் இல்லாமையாலே தத் ஸ்வரூப நிரூபக மாத்திரத்திலே அன்வயித்து தத் அசாதாரண உபாயத்வத்தில் அந்வயியாமல் இருக்கையாலே நிரூபகமான ஏதத் ஸ்வரூபத்துக்கு உபாயத்வம் வாராது இறே –
கிஞ்ச -உபாய விசேஷணமான குண விக்ரஹங்களுக்கு சவுகர்ய ஆபாகத் வேனவும் கார்ய ஆபாகத் வேனவும் ஸூபாஸ்ரயத் வேனவும் கார்ய பேதம் உண்டாகிறாப் போலே -தத் விசேஷண பூதையான பிராட்டிக்கும் உபாய தசையில் உபாயத்வ ரஹிதமாகப் புருஷகாரத்வ ரூப காரியபேதம் உண்டாகத் தட்டில்லை–லஷ்மீ பர்த்துர் தாஸ தாஸஸ்ய தாஸ – (புவந பவந ஸ்தித்யபாய ஏக ஹேதோ லஷ்மீ பர்த்துர் நரஹரிதநோர் தாஸ தாஸஸ்ய தாஸ-பாகவதம்-உலகங்களைப் படைத்து அளித்து அழிக்கும் ஒரே காரண புருஷனாய் இருக்கும் ஸ்ரீயப்பதியான நரஸிம்ஹனுக்கு தாஸனுக்கும் தாஸனுக்கும் தாஸனாய் இருக்கிறேன் –)என்றும் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் – சேஷத்வ ஸ்வரூபத்துக்கும் -(விருத்திக்கு பிரமாணம் மேல் )–ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே ஜகத் பதி இத்யாதி என்றும் -திருமாலே நின்றே ஆட்ச்செய்ய -(8-3-)-என்கிறபடியே -என்கிறபடியே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய தசையில் கைங்கர்யத்துக்கும் மிதுனமே பிரதிசம்பந்தியாக வேண்டினவோபாதி உபாய அனுரூபமான உபாய தசையிலும் அவஸ்ய அபேக்ஷிதமான உபாய பிரதிசம்பந்தித்வத்தில் ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சஹாயா அந பேஷமான உபாயத்தினுடைய மாம் ஏகம் என்கிற நைரபேஷ்ய பஞ்சகமான உபாயத்வத்தில் அந்வயமற்று தத் அவிரோதமாகப புருஷகாரத்வ ரூப ப்ரதி சம்பந்தித்வத்திலே இவளுக்கு அன்வயமாகக் கடவது –

(சேஷத்வம் -பக்தபக்தர்களுக்கும் -கைங்கர்யமும் அடியார் அடியாருக்கும் -கொண்டு உபாயத்வ ஒன்றுக்கும் மாம் ஏகம் -என்று ஸஹாயாந்தர நிரபேஷமாக கொள்ள வேண்டும் -கத்யத்தில் பிராட்டியை முதலில் பற்றியதும் மோக்ஷத்துக்கு அன்று- அவனே உபாயம் என்ற உறுதி மாறாமல் இருக்கவே தானே-உபாய உபாயமாக புருஷகாரம் பண்ணுபவள் என்றவாறு)

நநு –ஸ்வா யம்புவே ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஷிப்ர ப்ரஸாதி நீம் தேவீம் சரண்யாம் சிந்தயேதிதி -(எல்லா இஷ்டங்களையும் தருமவளும் அழகியவளும் ஸம்ஸார ஸாகரத்தை தாண்டுவிப்பவளும் விரைவில் அருள் செய்யுமவளுமான பிராட்டியை சரணமடையத் தகுந்தவளாக நினைக்கக் கடவன்-)என்றும் வைஷ்ணவே –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்-ப்ராஹ்மே –ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ர பரி ஸோஷிணீ –பவ பங்காப ஹரிணீ பர நிர்வாணதாயிநீ – (ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில –)என்றும் -இத்யாதி பிரமாணங்கள் இவளுடைய உபாய பாவத்தைச் சொல்லிற்றே யாகிலும் அவை சரண்யனுடைய இச்சானுவிதாயித்வ ஸூ சகங்களாகக் கடவது -இதுக்கு நியாமகம் என் என்னில் –லஷ்மீ புருஷ காரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ -ஏதஸ் யாச் ச விஸேஷோ அயம் நிகமாந்தேஷு சப்த்யதே -என்றும்
லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா –நான்யதா லக்ஷணம் பவேத்- (ஆகிஞ்சன்ய ஏக சரணா கேசித் பாக்யாதிகா புநஸ் -மத் பதாம் போருஹ த்வந்த்வம் ப்ரபத்ய ப்ரீத மாநஸா -லஷ்மீம் புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந -மத் ஷமாம் ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம் ப்ராபக மேவ மாம் லப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ் யந்தே மாமேவா நந்ய மாநஸா -விஷ்வக்ஸேன ஸம்ஹிதை-அழகிய முகத்தையுடைய சேநா பதியே ஒரு கைம்முதலும் அற்று இருக்கையையே பற்றாசாகக் கொண்ட சில பாக்யசாலிகளோ வென்னில் என் திருவடித்தாமரை இணையை அன்புடன் கூடிய மனத்தராய்ச் சரணடைந்து லஷ்மீ தேவியைப் புருஷகாரமாகப் பற்றி என் பொறுமைக்கு இலக்காகி என்னையே ப்ராப்ய ப்ராபகங்களாக அடைந்த க்ருதார்த்தர்களாய் வேறு ஒன்றிலுமே நெஞ்சு செல்லப் பெறாதவர்களாய் என்னையே அடைவார்கள்-அஹம் மத் ப்ராப்த் யுபாயேர் வை ஸாஷால் லஷ்மீ பதி ஸ்வயம் லஷ்மீ புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ ஏதஸ்யாஸ் ச விசேஷோ அயம் நிகமாந்தேஷு ஸூப்த்யதே -பாஞ்சராத்ரம் –லஷ்மீ பதியான நானே என்னையடைய உபாயமாவேன் -என் பிரியையான லஷ்மீ யானவள் புருஷகாரத்தினால் என்னை அடைய உதவி புரிகிறாள் -புருஷகாரத்துவமாகிற இப்பெருமை இவளுக்கு வேதாந்தங்களில் சொல்லப்படுகிறது –- –மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமரிஷிபி -மமாபி ச மதம் ஹ்யேதந் நாந்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்சராத்ரம் –ஸம்ஸாரத்தில் கீழே விழுகின்ற ஜந்துக்களுக்கு என்னை அடையும் விஷயத்தில் லஷ்மீ தேவியானவள் பரம ரிஷிகளாலே புருஷகாரத்துவத்தில் நியமிக்கப்பட்டு இருக்கிறாள் -எனக்கும் இதுவே இஷ்டம் -வேறான உபாயத்வமாகிற ஆகாரம் இல்லை –)என்றும் -புருஷகாரத்வத்தையே லக்ஷணமாகச் சொல்லி அந்யதா லக்ஷணம் இல்லையென்று உபாயத்வத்தை நிஷேதித்தது இறே -அந் வயத்திலும் வ்யதிரேகம் அர்த்த தார்ட்யத்துக்கு உறுப்பாகையாலே -இதுவே பிரபல ப்ரமாண ப்ரஸித்தமாகையாலும் பகவத் அபிமதமாகையாலும் பிராட்டிக்கு அத்யந்த அபிமதமாகையாலும் ஸம்ப்ரதாய ஸித்தமாகையாலும் ஏதத் அனுகுணமாக அவற்றைத் யோஜிக்கத் தட்டில்லை -தத் அநனுகுணமாக இவற்றை யோஜிக்குமிடத்தில் பிரபல ப்ரமாண விரோதமும் -பகவத் அநபிமதத்வமும் லஷ்மி அநபிமதத்வமும் சம்பிரதாய விரோதமும் ஸம்பவிக்கும் -ஆகையாலே ஸகல ப்ரமாண ப்ரமாத்ரு பரிக்ருஹீதமான புருஷகார பாவமே சார அசார விவேக சதுரர்க்குப் பரிக்ராஹ்யம் என்றதாயிற்று–தர்மஞ்ஞமைய ப்ரமாணம் வேதாச் ச -(ஆபஸ்தம்ப ஸூத்ரம் –தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரம் முக்கியமான பிரமாணம் வேதங்களும் பிரமாணம் )-யத் தாசாரதி ஸ்ரேஷ்ட -(யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததேவேதரோ ஜந: ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே-3-21-எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள்.-அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.)-மேலையார் செய்வனகள் வேண்டுவன –என்னக் கடவது இறே
ஆக-இஸ் ஸ்லோகத்தாலே பெரிய பிராட்டியார் ஸ்வ கருணா கடாக்ஷ லேசத்தாலே ஸ்வ ஆஸ்ரிதருக்கு ஸகல புருஷார்த்தங்களையும் ப்ரஸாதித்து அருளுவார் -ஸகல புருஷார்த்த விலக்ஷண மோக்ஷத்தை தத் அசாதாரண உபாய பூதனாய் ஸ்வ வஸ வர்த்தியாய் ஸ்வ அபாங்க இங்கித பராதீனனான ஈஸ்வரனைக் கொண்டு கொடுப்பித்து அருளுவர் -ஆனபின்பு புருஷார்த்தங்களோடு -விலக்ஷண புருஷார்த்தத்தோடு விசேஷமற ஸகல ஸ்ரேயஸ்ஸூம் தத் ப்ரஸாதத்தாலே அல்லது சம்பவியாது என்னுமிடத்தை ஸ்த்திரீ கரித்து அருளினார் ஆய்த்து -ஸ்ரீ ஸாத்வதத்திலே அவனுக்கு மோக்ஷ பிரதத்வமும் தேவிக்கு ஐஸ்வர்ய பிரதத்வமும் விபஜித்து ஸ்வயமேவ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே

தாமரைக் கை அவனது செந்தாமரைக் கை இவளது –

————-

அவதாரிகை
த்ரயாணாம் பரதாதீநாம் ப்ராத்ரூணாம் தேவதா ச யா -ராமஸ்ய ச மந காந்தா ப்ராணேப்யோ அபி கரீயஸீ –
(ஸூந்தர -55-26-பரதன் முதலான மூன்று சஹோதரர்க்கும் எந்தப் பிராட்டியானவள் தேவதையாய் இருக்கிறாளோ -ராமனுக்கும் மநோ வல்லபையாய் ப்ராணனைக் காட்டிலும் ப்ரியையாய் இருக்கிறாளோ —)என்கிற ப்ரமாண அனுஸாரேண –காந்தஸ்தே புருஷோத்தம-என்று கர்த்தரி யர்த்தத்தையும்(ஸ்ராயதே -தான் பற்றுவதையும் )-பணி பதி என்று தொடங்கிக் கர்மண் யர்த்தத்தையும் (மற்றவர்கள் இவளைப் பற்றுவதையும் )அனுசந்தித்து -ஆக -இப்படி உபய விபூதியில் உள்ளாருக்கும் ஆஸ்ரயணீயையாய் -உபய விபூதி நாதனை ஆஸ்ரயித்துக் கொண்டு இருக்கையாலே ஸ்ரீ என்றும் அசாதாரணமான திருநாமத்தை உடையையாய் -அவனுக்கும் பூஜ்யையாம் படியான குண பூர்த்தியை யுடைய உன்னை ஞான சக்த்யாதி குண ஹீனனான நான் ஸ்தோத்ரம் பண்ணுவது எங்கனே என்று பீத பீதராய் ஸ்தோத்ராந் நிவ்ருத்தரானார் பிரதம ஸ்லோகத்திலே

இப்படி நிவ்ருத்தரான படியைக்கண்டு இவர் பண்ணுகிற ஸ்தோத்ரத்தை ஸ்ரவித்து -ஸ்ரவிப்பித்தால் அன்றோ ஸ்ருணோதீதி -ஸ்ரீ -ஸ்ராவயதீதி —ஸ்ரீ -என்கிற நிருக்த் யநுரூப அசாதாரண நாமம் நமக்கு நிலை நிற்பது -ஆனபின்பு இவர் யதா ஸ்தோத்ரம் பண்ண வல்லராம் படி கடாஷிப்போம் என்று கணிசித்து -இவர் பக்கலிலே கருணா கடாக்ஷத்தைப் பண்ண -இதொரு தயா விசேஷம் இருந்தபடி என் என்று தத் ஸுலப்ய அனுசந்தானத்தாலே ஸமாஹிதராய் ஸம்பந்த ஞான பூர்வகமாக சரணம் புகுந்து -கீழ் ஸ்ரீ யதே -ஸ்ரயதே -என்று சொன்ன வ்யுத்பத்தி த்வயார்த்தமும் –அஸ்ய ஈஸாநா -இத்யாதி வேதாந்த ஸித்தம் என்னுமிடத்தை லோக ஏக ஈஸ்வரி லோக நாத தயிதே -என்று ஸூசிப்பியா நின்று கொண்டு ஸமாஹிதராய் பயமும் சமித்து ஸ்தோத்ரத்திலே ப்ரவ்ருத்தரானார் த்வதீய ஸ்லோகத்திலே –

இப்படி ஆக்ஷேப சமாதான வ்யாஜேந ப்ரவ்ருத்தமான ஸ்லோக த்வயத்தாலும் -தத் பரத்வ ஸுலப்யங்களை அனுசந்தித்து -திருவடிகளை ஆஸ்ரயித்தாருக்குத் தத் கடாக்ஷ லேசத்தாலே ஸகல புருஷார்த்தங்களும் ஸம்பவிக்கும் -அது இல்லாதாருக்கு ஒரு ஸ்ரேயஸ்ஸூம் சித்தியாது (ஸ்ருணாதி -சகல அநிஷ்டங்களையும் போக்கி அருளி –ஸ்ரீநாதி -சகல இஷ்டங்களையும் அளித்து அருளுகிறாள்)என்று கொண்டு பிராட்டியினுடைய ஸர்வ சமாஸ்ரயணீயத்வ க்யாபந அர்த்தமாக ஸகல புருஷார்த்த பிரதத்வத்தை அருளிச் செய்தார் த்ருதீய ஸ்லோகத்தாலே

ஆக இப்படி ஸ்லோக த்ரயத்தாலும் ப்ரக்ருதியான ஸ்ரீ சப்தார்த்தை அருளிச் செய்து -அநந்தரம் ப்ரத்யயமான மதுப்பின் அர்த்தத்தை அருளிச் செய்வதாகத் திரு உள்ளம் பற்றி பகவத் ஸ்வரூப ரூப குணாதிகளிலே தத் ஸஹ தர்ம சாரிணியான இவளுடைய ஸ்வரூபாதிகளுக்கு யுண்டான அயோக வ்யச்சேதத்தை அநுஸந்தியா நின்று கொண்டு -லஷ்ம்யா ஸஹ –ரக்ஷக -ஸ்ரீ யா ஸார்த்தம் —என்கிறபடியே உபய விபூதிக்கும் நித்ய ரக்ஷகமாய் நித்ய ப்ராப்யமான நித்ய யோகத்தை அனுபவித்து நிரஸ்த சமஸ்த பிரதிபந்தகராய் ப்ராப்த பரிபூர்ண மநோ ரதராய் –திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –என்கிறபடியே ஸ்ரீயப்பதியினுடைய நிர்ஹேதுக கிருபையாலே நிரதிசய ஆனந்தத்தை பிராபித்து ஸ்தோத்ரத்தைத் தலைக்கட்டுகிறார் -துரீய ஸ்லோகத்தாலே –

(லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸோ திவ்யோ காருண்ய ரூபயா ரக்ஷக சர்வ சித்தாந்தே வேதாந்ததே அபி ச ..-இங்கு நித்ய ரக்ஷகமாயும் வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி:-அங்கு அனுபவ தசையில் மட்டுமே தானே -ஆகவே நித்ய ப்ராப்யமான நித்ய யோகத்துக்கு இரண்டு பிரமாணங்கள் காட்டி அருளிச் செய்கிறார்)

(மேல் நாராயண சப்தார்த்தங்களை ஸ்தோத்ர ரத்னத்தில் அருளிச் செய்கிறார்)

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்
யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி தான்
யாஹூ ஸ் வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே(அநந்த -பாடபேதம் )–4-

சாந்த –ஷடூர்மிகள் அற்றதாய்
ஆநந்த -ஆனந்த மயமாய்(அநந்த -பாடபேதம் -த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் )
பரமம்–தனக்கு மேலானது அற்றதாய்
ப்ரஹ்ம–பெரியதாய் இருப்பதாலும் -பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதாய் இருக்கும்
ஹரே யத் ரூபம் -ஹரியினுடைய யாதொரு ஸ்வரூபம் உண்டோ
ததோ அபி-அதைக் காட்டிலும்
தத் ப்ரியதரம்-அந்த பகவானுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதும்
மூர்த்தம்-கண்ணால் காணக் கூடியதும்
ப்ரஹ்ம -ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதும்
யத் யத்புதம்-மிகவும் அத்புதமானதுமான
ரூபம் யத் -யாதொரு ரூபம் உண்டோ
யதா ஸூ கம் விஹரதோ –இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு
யன்யானி ரூபாணி யாநி –மற்றும் யாவை சில ரூபங்கள் உண்டோ
தாநி சர்வாணி -அந்த ரூபங்கள் எல்லாம்
தே -உனக்கு
ஸ்வைர் அநுரூப ரூப விபவைர்-அசாதாரணங்களாய் தகுந்தவையாய் இருக்கும் திவ்ய ரூபங்களால்
காடோப கூடாநி ஆஹூ-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவை என்று பிரமாணங்கள் சொல்லுகின்றன

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம்-என்கிற இவ்வளவாலே திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் –சாந்தா நந்தம் சிதா நந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம் -மஹா விபூதி ஸம் ஸ்தாநம் ஸர்வதஸ் சமதாம் கதம் -(ல த-17-5- ஆறு ஊர்மிகளும் அற்றதாய் அளவற்றதாய் ஞானானந்த மயமாய் உயர்ந்ததாய் நிலையானதாய் பெரிய விபூதிகளையும் திருமேனியையும் யுடையதாய் எங்கும் சம நிலையைப் பெற்றதான யாதொரு ப்ரஹ்ம ஸ்வரூபம் உண்டோ ) என்கிற திவ்யாத்ம ஸ்வரூப நிர்ணாயக பிரமாணத்தை உட்க்கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது –
சாந்தேதி -சாந்தியாவது -அசநாயா அபிபிபாஸே ச சோக மோஹௌ ஜராம்ருதீ ஷடூர் மிபிர் விஸூத்தா -(பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறு ஊர்மிகள் அற்றது) என்ற ஸ்ருதி ஸித்த ஷடூர்மி ரஹிதமாய் -அபஷய விநாசாப்யாம் பரிணாமர்த்தி ஜன்மபிவர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் ஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-(குறைவு படுதல் நாசமடைதல் மாறுபாடு அடைதல் வளருதல் பிறத்தல் இவைகள் அற்றவனாகவும் எப்போதும் இருக்கிறான் என்றே சொல்லப்படுபவனாகவும் இருப்பவன் பகவான்) என்ற புராண ரத்ன யுக்த பிரகாரத்தாலே ஷட்பாவ விகார ரஹிதமுமாய் இருக்கை -இத்தால் அகில ஹேய ப்ரத்ய நீகமாய் இருக்கும் திவ்யாத்ம ஸ்வரூபம் என்றதாயிற்று -1-ஸ்வயம் ஹேய ரஹிதமாய் இருக்கை யன்றிக்கே 2-ஹேய பிரதிபடமுமாய் -3ஸ்வ ஆஸ்ரித ஹேய நிவர்த்தகமுமாய் இறே இருப்பது (துயரறு சுடரடி -துயர் அறுப்பவர் என்றும் தமது துயரை அறுப்பவர் என்றும் போல் )-ஹேய ப்ரத்ய நீகம் சொன்ன இப் பதத்தாலே கல்யாணைக தாநத்வமும் அர்த்ததா சித்தமாயிற்று –ஹேய ப்ரத்ய நீகம் புக்கவிடத்தே கல்யாணைக தாநத்வமும் புகும் என்று இறே அருளிச் செய்தது –அருகலிலாய பெருஞ்சீர் -திருவாய் -1-9-3-என்கிறபடியே (அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந –ஸ்வரூப -சரணாகதி கத்யம்-தாழ்வு அனைத்துக்கும் எதிர்த்தட்டாயும் மங்களங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் இருக்கும் ஸ்வரூபத்தை யுடையவன்-)அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாந என்று உபய லிங்க விஸிஷ்ட வஸ்துவை அனுபவித்து அருளினார் இறே பாஷ்யகாரர் –ஈஸ்வரன் அகில ஹேய ப்ரத்ய நீக அநந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -என்று தத் திவ்ய ஸூக்தியைப் பின்சென்று அனுபவித்து அருளினார் இறே பிள்ளை லோகாச்சார்யரும் – சாந்தானந்தம் சிதாநந்தம் -என்று முக்த கண்டமாகச் சொன்ன லஷண த்வயத்தில் இங்கு ஒன்றை ஓன்று லஷிக்கிறது -இத்தால் அபஹத பாப்மா விஜர-என்று தொடங்கி ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்ப-என்ற ப்ரமாண அர்த்தம் சொல்லிற்று (-யஸ் ஆத்மா அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யுர் விசோகோ விஜிகத்ஸோ அபி பாஸஸ் ஸத்ய காமஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸோந் வேஷ்டவ்ய-சாந்தோ -8-7-1- எந்த ஆத்மாவானவன் பாபமற்றவனாகவும் கிழத்தனமற்றவனாகவும் ம்ருத்யுயற்றவனாகவும் சோகமற்றவனாகவும் பசியற்றவனாகவும் வீண் போகாத இஷ்டத்தையும் சங்கல்பத்தை யுமுடையனாகவும் இருக்கிறானோ அவன் தேடத்தக்கவன் –)-

அநந்த பதத்தாலே –த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் என்றபடி -அதாவது விபுத்வாத் தேசதஸ் பரிச்சேத ரஹிதமாய் -நித்யத்வாத் காலதஸ் பரிச்சேத ரஹிதமாய் -ஸமஸ்த வஸ்து பிரகாரித்வாத் ஸ்வ சத்ருஸ வாஸ்து பரிச்சேத ரஹிதமாய் இருக்கும் –என்றபடி –

அதவா –சாந்த ஆனந்த என்ற பாடமாய் –ஞான ஆனந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–(எந்தப் பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது – )என்கிறபடியே ஆனந்த மயனாய் இருக்கும் என்னவுமாம் –உணர் முழு நலம் -என்னக் கடவது இறே –முழு உணர்வும் முழு நலமுமாய் யதா சைந்தவகந என்னுமாப் போலே விஞ்ஞான கனமுமாய் பிரஞ்ஞான கனமுமாய் இறே ஸ்வரூபம் இருப்பது -இத்தால் ஸ்வ அனுபவ தசையில் ப்ரகாசமுமாய் ஸூக ரூபமுமாய் இருக்கும் என்கை –

(ஞான ஆனந்தமயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மந —யதா சைந்தவ கநோ அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ரஸ கந ஏவ ஏவம்-வா அரே அயமாத்மா அநந்தரோ அபாஹ்ய க்ருத்ஸனோ ப்ரஞ்ஞான கந ஏவ -ப்ருஹ்தா -6-5-3–எந்தப்பரமாத்மாவின் ஸ்வரூபம் ஞானாநந்த மயமாயுள்ளதோ —எப்படி உப்புக்கட்டியானது வெளியிலும் உள்ளேயும் முழுவதும் ரஸம் நிறைந்துள்ளதோ அப்படியே இந்த ஆத்மா வெளியேயும் உள்ளேயும் முழுவதும் ஞான மயமாகவே உள்ளது –)

சாந்தாநந்த -என்று ஸ்வரூப நிரூபகங்களான ஞான ஆனந்த அமலத் வாதிகளைச் சொன்ன வித்தால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞான சக்த்யாதி அஸங்க்யேய கல்யாணம் குண கணங்களும் யுக்த பிராயங்கள் -ஸ்வரூப அனுபந்திகளாய் இறே இவை இருப்பன-சஹஸ்ராக்ஷ-ஸர்வஞ்ஞ-சஹஸ்ர சீர்ஷா புருஷ -பரா அஸ்ய சக்தி -இத்யாதி ப்ரமாண சித்தமிறே

மஹா விபூதி-மஹத்துக்களாய் ஸூத்த அஸூத்தங்களான விபூதி த்வயத்தை யுடைத்தாய் -அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட -திருவிருத்தம் -33–அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3-பாதோ அஸ்ய விச்வா பூதாநி -த்ரி பாதாஸ்யா அம்ருதம் திவி —(ஏதாவா நஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ஸ் ச பூருஷ -பாதோ அஸ்ய விஸ்வ பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி -பு ஸூ -3- இவனுடைய மஹிமை இப்படிப்பட்டது பரமபுருஷன் அதைக்காட்டிலும் மேலானவன் -எல்லா உலகங்களும் இவனுடைய விபூதியில் கால் பாகம் -பரம பதத்தில் இவனுடைய விபூதியில் அழிவற்ற முக்கால் பாகம் உள்ளது –)என்கிறபடியே உபய விபூதி யோகமும் சொல்லுகிறது –

பரமம் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று நிரூபமாகையாலே ஸர்வ உத்க்ருஷ்டமாய்

யத் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –(ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் ஸோ அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேதி -தை ஆந -1-2-விகாரமற்று இருப்பதால் ஸத்யமாயும் ஞானமயமாயும் அளவற்றதாய் இருப்பதால் அநந்தனாயுமுள்ள ப்ரஹ்மத்தை ஹ்ருதய குஹையில் இருப்பதாக எவன் அறிகிறானோ -அவன் ஸர்வஞ்ஞனான ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் –) ஆனந்தோ ப்ரஹ்ம — (தை ஆந -5-ஆனந்த மயனான ஆத்மாவே ப்ரஹ்மம்) ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்ய்ஜாநாத் – (தை ப்ருகு -6-ஆனந்தம் ப்ரஹ்மம் என்றும் அறிந்தார்) நிஷ்களங்கோ நிரஞ்சன் -(நிஷ் களங்கோ நிரஞ்ஜநோ நிர் விகல்போ நிராக்யாதஸ் ஸூத்தோ தேவ ஏகோ நாராயண — நாராயண உபநிஷத் -2–களங்கமற்றவனாய் தோஷமற்றவனாய் ப்ராக்ருதமான பேத நாமங்கள் அற்றவனாய் சுத்தனாய் இருக்கும் தேவன் நாராயணன் ஒருவனே –)ந தத் சமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஓத்தார் மிக்கார் இலையாய -2-3-2-
சம்ஜாயதே (ஸம்ஜ்ஞாயதே யேந ததஸ்த தோஷம் ஸூத்தம் பரம் நிர்மல மேக ரூபம் -ஸந்த்ருஸ்யதே வாப்யதிகம்யதே வா தத் ஞானம் அஞ்ஞானம் அதோ அந்யதுக்கம் – எந்த அறிவினால் தோஷம் அற்றதும் சுத்தமானதும் மிகவும் மலமற்றதும் ஒப்புயர்வற்றதுமான அந்தப்பரவஸ்து அறியப்படுகிறதோ பார்க்கப்படுகிறதோ அதுவே ஞானம் -அதைக் காட்டிலும் வேறானது அஞ்ஞானம் –) இத்யாதி-மனன் உணர்வளவிலன் -இத்யாதி ப்ரமாண ஸித்தியை -யச் -சப்தம் ஸூ சிப்பிக்கிறது

ப்ரஹ்ம -ப்ருஹத்த்வாத் ப்ரும்ஹணத்வாச் ச ப்ரஹ்ம இத்யபிதீயதே – (பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது அது –) என்று நிரதிசய ப்ருஹத்வ ப்ரும்ஹணத்வம் யுக்தமாய் இத்தால் ஸ்வரூப விபுத்வம் சொல்லுகிறது
ரூபம் -ஸ்வரூபம்
ஆக அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக தானமாய் த்ரிவித பரிச்சேத ரஹிதமாய் -விபூதி த்வய நிர்வாஹகமுமாய் நிருபமுமாய் விபுபாய் ஸகல உபநிஷத் பிரஸித்தமான திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுபவித்தாராய்த்து
சாந்த-என்கையாலே அவிகாராய ஸூத்தாயா –(அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மநே சதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -வி பு -1-2-1- விகாரமற்றவனாய் -ஸூத்தனாய் -நித்யனாய் -பரமாத்மாவாய் எப்போதும் ஒருபடிப்பட்ட ரூபத்தை உடையனாய் -எல்லாரையும் ஜெயிப்பவனான விஷ்ணுவுக்கு நமஸ்காரம் –) என்கிற பத த்வய அர்த்தமும் அநந்த பதத்தாலே நித்யாய என்கிற பதார்த்தமும் பரம் ரூபம் என்கையாலே பரமாத்மநே என்கிற பதார்த்தமும் மேலே ரூபம் என்கையாலே சதைக ரூப ரூபாய என்கிற பதார்த்தமும் ஹரேர் ப்ரஹ்ம என்கையாலே விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே -என்கிற பதார்த்தமும் ஸ்பஷ்டமாயிற்று –

ஹரே -ஹரிர் ஹரதி பாபாநீ — (ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரபி ஸ்ம்ருத அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக -ஹர்யஷ்டகம்-கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ –)என்கிறபடியே ஸ்வ ஆஸ்ரிதருடைய ஸ்வ ப்ராப்தி பிரதிபந்தக ஸகல பாப நிவர்த்தகனானவனுடைய

(அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல் அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-ஆர்த்தி ஹரத்வமே பத்தாம்பத்தின் அனுபவம் )


அதவா -ஹரே -தேவ தேவோ ஹரி பிதா –
– (த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126– தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –)என்கிறபடியே ஸகல சேதனருக்கும் ஸாஷாத் பிதாவானவனுடைய -என்றாகவுமாம் –பித்ரு மாத்ரு ஸூதா (பித்ரு மாத்ரு ஸூத ப்ராத்ரு தார மித்ரா தயோரபி வா ஏகைக பல லாபாய ஸர்வ லாபாய கேசவ தந்தை தாய் மகன் ஸஹோதரன் மனைவி நண்பன் முதலானோர் ஒவ்வொரு பலனை அடைவதன் பொருட்டாவார்கள் -கேசவன் எல்லாப் பலன்களையும் அடைவதற்காக ஏற்பட்டவன்)-இத்யாதி-நாம ஸஹஸ்ரவான் — (ஸஹஸ்ராஸ்யஸ் ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரசரணோ விபு ஸஹஸ்ர பாஹுஸ் ஸர்வஜ்ஜோ தேவோ நாம ஸஹஸ்ரவாந் -பாரதம்-முடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் கால்கள் ஆயிரம் கைகள் ஆயிரம் கொண்டவனாய் ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் விளங்கும் பகவான் பேராயிரம் யுடையவன் )என்கிறபடியே ஆயிரம் பேருடைய பிரானாயிருக்கவும் இவ்விடத்தில் ஹரி என்ற திரு நாமத்தை அருளிச் செய்ததுக்குக் கருத்து என் என்னில் -பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகப் பற்றின ப்ரீதி அதிசயத்தாலே –அவாவறச் சூழ் அரியை –என்றால் போலே ஸ்வ அனுபவ ஸகல பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாக ஸ்வ அபேக்ஷிதமான இருவருமான சேர்த்தியை யதா மநோ ரதம் அபிநிவேசம் தீர அனுபவித்து படியை ஸ்பஷ்டமாக்குகைக்காக ஹரி என்ற திருநாமத்தை அருளிச் செய்கிறார் –ஸர்வ அபேக்ஷித ப்ரதானான ஸர்வேஸ்வரனை -என்று இறே அருளிச் செய்தது – ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணம் ஏவ ச -ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் தரிரி தீர்யதே (ஹர்யஷ்டகம் -பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் –)என்கிறபடியே –நெற்றில் மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி -பெரிய திரு-11-6-3-என்றும் தம பரே தேவ ஏகீ பவதி —என்கிறபடியே தன் ஸங்கல்பத்தில் ஏகி பவிக்கும்படியான ஸர்வ என்றும் (ரக்ஷது த்வாம் அசேஷாணாம் பூதாநாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜாதபவஜ் ஜகத் -வி பு -5-5-14–எவனுடைய நாபிக் கமலத்தில் இருந்து உலகம் உண்டாயிற்றோ ஸர்வ பூத காரணானான அந்த ஹரி உன்னை ரக்ஷிக்கட்டும் –)என்றும் ஹர்த்ருத்வத்தையும் -அசேஷாணாம் ஹி பூதாநாம் ப்ரபவோ ஹரியஸ்ய நாபி ஸமுத்பூத பங்கஜா தபவஜ் ஜகத் –-என்கிறபடியே அப்யய பூர்வகமான ஜகத் காரணத்வத்தையும் ப்ரதிபாதிக்கிற இத்திருநாமத்தை அருளிச் செய்கையாலே நாராயண சப்தார்த்தத்தை விவஷித்து அருளிச் செய்தார் என்னுமிடம் தோற்றுகிறது – நராஜ்ஜாதாநி தத்தவாநி –ஆபோ நாரா இதி ப்ரோக்தா — (-நராஜ் ஜாதாநி தத்தவாநி நாராணீதி ததோ விது -தாந்யேவ சாயநம் தஸ்ய தேந நாராயண ஸ்ம்ருத-ஆநு பர்வம் -186-7–நரனாகிற பகவானிடமிருந்து உண்டானவை தத்துவங்கள் எல்லாம் -ஆகையாலே அவற்றை நாரங்கள் என்று அறிகின்றனர் -அவையே அவனுக்கு இருப்பிடமாயின -ஆகையால் அவன் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் –)என்கிறபடியே ஜகத் காரணத்வ வாசகமாய் இறே நாராயண ஸப்தம் தான் இருப்பது -அந்த ஜகத் காரணத்வந்தான் –ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று நான்முகன் தன்னொடு தேவருலகோடு உயிர் படைத்தான் —என்கிறபடியே (ஆபோ நாரா இதி ப்ரரோக்தா ஆபோ வை நர ஸூநவே தா யதஸ்யாயநம் பூர்வம் தேந நாராயண ஸ்ம்ருத-மநு -1-10-ஜலம் நாரம் எனப்படுகிறது -நரனாகிற பகவானிடம் இருந்து உண்டானதன்றோ அது -அந்த ஜலம் அவனுக்கு முதலில் இருப்பிடமாயிற்று -ஆகையால் அவன் நாராயணன் எண்ணப்படுகிறான் –)(ஆஸீதிதம் தமோ பூதம ப்ரஞ்ஞா தம லக்ஷணம் -அப்ரதர்க்யம விஜ்ஜேயம் ப்ரஸூப்த்மிவ ஸர்வதா –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் விஸ்ருஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத் –ஸோ அபித்யாய சரீராத் ஸ்வாத் ஸிஸ்ரூஷுர் விவிதா ப்ரஜா –அப ஏவ ஸ சர்ஜாதவ் தாஸூ பீஜமவாஸ்ருஜத்–மநு1-5,6.7.8-இவ்வுலகம் தமஸ்ஸில் லயித்து இருப்பதாய் -ப்ரத்யக்ஷம் இல்லாததாய் -அனுமானத்தாலும் அறியப்படாததாய் -தர்க்கத்தாலும் அறியப்படாததாய் -சப்தத்தாலும் அறியப்படாததாய் -எல்லாவிதத்திலும் காரியம் செய்ய முடியாததாய் -ஆதியில் இருந்தது –அந்தப் பரமாத்மா விதவிதமான பிரஜைகளை ஸ்ருஷ்டிக்க விரும்பி ஸங்கல்பித்துத் தன் சரீரத்திலிருந்து ஜலத்தை முதலில் ஸ்ருஷ்டித்தார் -அதில் ஜீவனாகிய விதையை விதைத்தார்)அப்யய பூர்வகமாய் இருக்குமிறே -அந்த அப்யய பூர்வகமான ஜகத் காரணத்வத்தை இத்திரு நாமம் பிரதிபாதிக்கையாலே நாராயண பத பர்யாயம் என்னுமிடம் சித்தமிறே -ஆகையாலிறே –விஸ்வம் நாராயணம் ஹரிம் -(-தை நா -11-உலகிற்கு எல்லாமே அந்தர் யாமியாயும் ஸம்ஹாரகனாகவும் இருப்பவன் நாராயணனே ) என்றும் –அற்புதன் நாராயணன் அரி –என்றும் வேதாந்த த்வயத்திலும் நாராயண பதத்வ பர்யாயமாக ஹரி ஸப்தத்தை அருளிச் செய்தார் இறே

(ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்யாநபாயாம் ச்ரியம்
ஸம்ஸ்ரீத்யாச்ரயணோசிதாகில குணஸ்யாங்க்ரீர் ஹரேராச்ரயே |
இஷ்டோபாயதயா ச்ரியாச ஸஹிதாயாத்மேஸ்வராயார்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம:-
ஸ்ரீஅஷ்ட ஸ்லோகீ-6-

பிராட்டியை முன்னிட்டு எம்பெருமானிடத்தில் கைங்கர்ய ப்ரார்த்தனையைத் தெரிவிக்கிறது. உலகத்தை நியமிப்பவனாம் எம்பெருமானுடைய அன்பைப் பெற்றவளும் என்றைக்கும் அழிவில்லாதவளுமான பிராட்டியை முன்பு ஆச்ரயித்து ஆச்ரயணத்துக்குத் தேவையான எல்லாக் குணங்களையும் பெற்றிருக்கும் எம்பெருமானுடைய திருவடிகளை நான் பற்றுகிறேன். எனக்கு இஷ்டமான மோக்ஷத்துக்கு உபாயமாகப் பற்றுகிறேன். பிராட்டியுடன் கூடியவனும் சேதனங்களுக்கு நியாமகனுமான எம்பெருமானை உத்தேசித்தே நித்தியமான எல்லா விதமான கைங்கர்யத்தைச் செய்யவும் அடியேனுக்குக் கைங்கர்ய பலத்தில் ஸம்பந்தம் இராமலும் தடையின்றிச் செய்ய வேண்டும் எனப் ப்ரார்த்திக்கிறேன்.)

(-மந்த்ர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸஸ்வரூபம் கதிர்கம்யம்
சிக்ஷிதமீக்ஷிதேந புரத: பஸ்சாதபி ஸ்தாநத: |
ஸ்வாதந்தர்யம் நிஜ ரக்ஷணம் ஸமுசிதா வ்ருத்திஸ் ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ||
2-

பெரிய திருமந்த்ரமான திருவஷ்டாக்ஷரத்தில் நடுவில் உள்ள ‘நம:’பதத்தால் மனிதனுடைய கதி கம்யம் என்று சொல்லக்கூடிய உபாய உபேயங்கள், ஸ்வரூபம் இவை சிக்ஷிக்கப் பட்டன. முன் பதமான ப்ரணவத்தை அநுஸரித்தும், பின் பதமான ‘நாராயண’ பதத்தை அநுஸரித்தும் உள்ள இடத்தை அநுஸரித்தும் மூவகையான பொருள் கூறப்படுகிறது. தனக்குரிமை, தன் ரக்ஷணம், பிறர்க்குரியனல்லாமை இவை எம்பெருமானுக்கே என்று கூறி அதனால் அநுபவிக்கும் இடத்தில் ஸுகத்திலும் தனக்கு ஸம்பந்தமின்மையைக் காட்டுகிறது.)

(அஷ்ட ஸ்லோகியில் உபாய பாவத்தையும் பிராப்ய பிரார்த்தனையும் ஹரி ஸப்தத்தாலே அருளிச் செய்துள்ளார் -அன்றோ த்வயத்தில் பூர்வ உபாய வாக்கியங்களில் நாராயண பதத்துக்கு ஸத்ருசமாக அன்றோ ஹரி பதமும் உள்ளது)

அநந்தரம் கீழ் அனுபூதமாய் அமூர்த்தமுமான ஸ்வரூபத்துக்கு ஆஸ்ரயமாய் -மூர்த்தமான திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவிக்கிறார் -மூர்த்தம் ப்ரஹ்ம –என்று தொடங்கி யதத்யத்புதம் -என்னுமளவாக –மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்-
மூர்த்தம்
-ஸ்பர்ச ரூபாதி குணங்களோடே கூடி பரமபத பர்யங்காதி தேச பரிச்சின்ன விக்ரஹமாய் இருக்கை (தானே ஸங்கல்பித்து பரத்வாதி பஞ்ச பிரகாரங்களில் அளவுக்கு உட்பட்ட தன்மையில் மூர்த்தமாக தன்னைக்காட்டி அருளுகிறவன் -தமர் உகந்த திருமேனி இத்யாதி – )-
மூர்த்தம் -சக்தய பஞ்ச விக்யாதா பஞ்ச உபநிஷதாக்யயா — (பாஞ்சராத்ரம்-பஞ்ச உபநிஷத்துக்கள் என்றும் பெயர் பெற்ற ஐந்து சக்திகள் ப்ரஸித்தி பெற்றவை )என்கிறபடியே-பஞ்ச உபநிஷத்துக்களாவன –பரமேஷ்டீ புமாந் விஸ்வோ நிவ்ருத்திஸ் ஸர்வ ஏவ ஹி —என்கிறபடியே பரமேஷ்டி புருஷ விஸ்வ நிவ்ருத்தி ஸர்வ ஸம்ஜ்ஜிகங்களான அப்ராக்ருத பூத பஞ்சகங்கள் -ஏவம்வித பஞ்ச உபநிஷத்துக்கள் தான் ஸப்தாதி பஞ்ச குண விஸிஷ்டங்களாய் இருக்கையாலே- பரமேஷ்டீ ஸ்ம்ருதச் சப்தே ஸ்பர்ஸே து புருஷா ஸ்ம்ருத-விஸ்வாத்ம தேஜஸி ப்ரோக்தோ நிவ்ருத்யாத்மா ரஸே ஸ்ம்ருத ஸர்வாத்மா கதிதோ கந்தே விஷயே புருஷஸ் ஸ்ம்ருத- (பாஞ்சராத்ரம்-பரமேஷ்டி புமாந் விஸ்வன் நிவ்ருத்தி ஸர்வன் என்னும் ஐந்தும் பஞ்ச உபநிஷத்துக்களாம் -பரமேஷ்டி ஸப்தத்தையும் புமாந் ஸ்பர்சத்தையும் விஸ்வன் ரூபத்தையும் நிவ்ருத்தி ரஸத்தையும் ஸர்வன் கந்தத்தையும் புருஷன் விஷயத்தையும் உடையவனாகச் சொல்லப் படுகிறது –)என்கிறபடியே பரமேஷ்ட்யாதி சம்ஜ்ஜிகங்களான பூத பஞ்சகமும் -ஸப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்த சம்ஜ்ஜிக பஞ்ச குணத்வேந ப்ரமாண ப்ரஸித்தங்களாய் இருக்குமிறே -ஆகையாலே ஏதாத்ருஸ பஞ்சகுண காஸ் ஆகாசாத் யப்ராக்ருத பூத பஞ்சகமாய் இருக்கையாலே மூர்த்தம் –என்கிறார் –

இச்சேதனன் கர்ம அனுகுணமாகப் பரிக்ரஹிக்கும் தேஹமாகிலிறே –மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம் –பெரிய திரு-1-9-6-என்றும் மஞ்சு சேர் வான் ஏரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கை -பெரிய திரு -9-7-8-என்கிறபடியே பிராகிருத பஞ்ச பூத மயமாய் இருப்பது -இங்கன் இன்றிக்கே –பஞ்சை தாச் சக்த்ய ப்ரோக்தா பரஸ்ய பரமாத்மந -அசேஷ ஜகதாதாரா பதே திவ்யே வ்யவஸ்திதா – (பாஞ்சராத்ரம்-இவைகளைக் காட்டிலும் மேலானவனான பரமாத்மாவுக்கு சக்திகளாகச் சொல்லப்படும் இவ்வைந்தும் பரமபதத்திலிருந்து கொண்டு எல்லா உலகையும் தாங்குகின்றன –) என்று-பகவச் சக்தித்வேந ஸமஸ்த கார்ய பதார்த்த ஆதாரங்களாய்க் கொண்டு பரமபதத்திலே ஏதத் விக்ரஹமாயும் ததீய விக்ரஹங்களாயும் விமான மண்டப கோபுர ப்ரஸாதாதி ரூபேணவும் பரிணமிக்கிற அப்ராக்ருத பூத பஞ்சகமாய் இறே இருப்பது -ஆகையாலேயிறே -ந தஸ்ய பிராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதோ அஸ்தி சம்பவா – (வராஹ பு -34-40-அவனுக்கு மாம்ஸம் மஜ்ஜை எலும்பு ஆகிய இவற்றாலுண்டான ப்ரக்ருதி சம்பந்தமுள்ள உடம்பு இல்லை –)- ந பூத சங்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்மந – (-சாந்தி -206-60- இந்தப் பரமாத்மாவின் திருமேனி பஞ்ச பூதங்களுடைய சேர்க்கையால் உண்டானதன்று –) என்றும்-பஞ்ச சக்தி மயோ தேவ-– (பாஞ்சராத்ரம் -ஐந்து சக்திகளை உருவாகக் கொண்ட தேவன்) ப்ராக்ருதத்வ நிஷேத பூர்வகமாக அப்ராக்ருதத்வத்தை ப்ரதிபாதிக்கிறது -இப்படி அப்ராக்ருதமாகையாலே ஸூத்த ஸத்வ மயமுமாயிறே விக்ரஹம் இருப்பது -ரஜஸ் தமஸ்ஸுக்கள் கலசாதே ஸூத்தி யோகத்தால் -கேவல ஸத்வமாய் –ஸத்வம் விஷ்ணு ப்ரகாசகம் -(ஸத்வ குணமானது விஷ்ணுவைப் பிரகாசிப்பது-) என்றும்-தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாச கமநா மயம் – (தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகமநாமயம்-ஸுகஸங்கேந பத்நாதி ஜ்ஞாநஸங்கேந சாநக –ஸ்ரீ கீதை 15-6-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.ஆரோக்யத்தை அளிப்பது-ந வேதாந்தாத் சாஸ்திரம்- ந மது மதநாத் சாத்விக பதம்- ந சத்வாத் ஆரோக்யம் ந புத பஜனாத் போத ஜனகம் ந முக்தே ஸுக்யம் ந த்வய வஸனாத் ஷேம கரம் -தேசிகன் இங்கும் ஸத்வ குணம் ஒன்றே ஆராக்யம் அளிக்கும் என்கிறார் அன்றோ )என்றும் அதி ப்ரகாசக வஸ்துவாகையாலே ஞான ஆனந்த மய சேதன தத் குண திரோதாயக த்ரிகுணாத்மக ப்ராக்ருத சரீரம் போல் அன்றிக்கே ஸ்வ வைலக்ஷண்யத்தாலே ஸ்வ அந்தர் கத சாமீகர(தங்கம் ) ப்ரகாசக மாணிக்ய மஞ்ஜூஷை போலே (மாலே மணி வண்ணா -ஸுலப்ய குணங்கள் வெளிப்பட்டு காட்டுமாப் போல்)ஸ்வாந்தஸ் ஸ்தித திவ்யாத்ம ஸ்வரூப தத் குண கண ஸம்யக் ப்ரகாஸந சாதுர்ய ஸஹிதமுமாய் இருக்கும் -இப்படி அப்ராக்ருதமாய் ஸூத்த ஸத்வாத்மகமாய் இருந்ததே யாகிலும் -ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் -(ஸவ்யம் பாதம் ப்ரசார்ய ஸ்ரீததுரித ஹரம் தக்ஷிணம் குஞ்சயித்வா ஜாநுந் யாதாய சவ்யேதரமிதர புஜம் நாக போகே நிதாய-பஸ்ஸாத் பாஹு த்வயேந ப்ரதிபட சமநே தாரயன் சங்கசக்ரே தேவீ பூஷாதி ஜூஷ்டோ ஜநயது ஜெகதாம் சர்ம வைகுண்ட நாத –அஷ்டாக்ஷர த்யான ஸ்லோகம்-அடியார் துன்பத்தைப் போக்கும் இடது திருவடியையே நீட்டி -வலது திருவடியை மடக்கி -வலது கையை வலது முழங்காலில் பொருத்தி இடதுகையை ஆதிசேஷன் மேல் வைத்து பின்னுள்ள இரண்டு கைகளால் விரோதிகளை நிரசிக்கும் சங்கு சக்கரங்களைத் தரித்து தேவிமார் கௌஸ்துபம் முதலான ஆபரணங்கள் முதலியவற்றால் சேவிக்கப் பெற்றவனாய் விளங்கும் வைகுண்டநாதன் உலகிற்கு ஸூகத்தை அளிப்பானாக —)இத்யாதிப்படியே சரண கமல கர கமல நயன அரவிந்த வக்த்ர அரவிந்த ப்ரமுக திவ்ய அவயவ சங்காத்மகமாய் இருக்கையாலே -யத்ர தூமஸ் தத்ர அக்னி – (தார்க்கிக்க வாக்கியம் –எங்கு புகையுள்ளதோ அங்கு நெருப்பு இருக்கும்-) இதிவத்-அநித்யத்வ வ்யாப்த ஸ அவயத்வ ஹேதுவாலே அநித்யத்வ வ்யாப்ய ஸ அவயத்வ ப்ரயுக்த ப்ராக்ருத சரீரவத் அநித்யத்வம் ப்ரசங்கிக்குமே என்னில் -ந ப்ரஸங்க ஸர்வத்ர அநித்யத்வே ஸ அவயவத்வம் ஹேதுவாக மாட்டாது -பின்னை ஏது என்றால் அவயவ ஆராப்தமே அநித்யத்வே ஹேதுவாகக் கடவது -இங்கன் அன்றாகில் ஹஸ்த பாதாத் யவயவ ஸம் யுக்தனான சேதனனுக்கும் அநித்யத்வம் பிரசங்கிக்கும் -ஆகையால் திவ்ய விக்ரஹத்துக்கு அவயவ ஆராப்தத்வே பிரமாணம் இல்லாமையாலும் -ஸதா பஸ்யந்தி ஸூரயா –பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஜ்ஞாநேந – (தத் விஷ்ணோர் பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரயோ -சாமவேதம் -3-18-2-4-விஷ்ணுவினுடையதான அந்தப் பரம பதத்தை நித்ய ஸூரிகள் எப்போதும் காண்கின்றனர்-என்றும்–பஸ்யந்தி ச ஸதா தேவம் நேத்ரைர் ஞாநேந -அறிவாகிற கண்களாலே தேவனை எப்போதும் காண்கின்றனர் –)இத்யாத் யுப ப்ரும்ஹணங்களாலே நித்யத்வேந ப்ரதீதங்களாகையாலும் விக்ரஹ நித்யத்வம் சித்தமிறே

(அவயவ ஆராப்தத்வமே அநித்யத்வே ஹேதுவாகக் கடவது –உண்டாகி இருந்தால் தானே அநித்யத்வம் வரும் -ஜீவாத்மா அவயவங்களுடன் கூடிய இருந்தாலும் ஆத்மா நித்யம் தானே -உருவானது உண்டானது என்றால் அநித்தியம் வரும் –கூடியே இருந்தால் அநித்தியம் வராதே –)

(அஜாயமாநோ பஹுதா விஜாயதே -பு ஸூ -2-4-பிறப்பற்றவனாயினும் பலபடியாகப் பிறக்கிறான் பரமபுருஷன்-ஸ்ரீபகவாநுவாச–பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப–4-5-
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.-மேல் விபவ -அவதாரங்களில் உருவான அவயவங்கள் -பரிணாமமுடன் இருப்பதால் அநித்யமாக இருக்குமோ என்னில் இல்லை என்கிறார் –கர்ம வஸ்யன் அல்லவே -இச்சா க்ருஹீதம் அன்றோ என்றும் மேல் விளக்கி அருளுகிறார்)

இங்கனேயாகிலும் இது தான் அநந்த அவதார கந்தமாகையாலே இந்த விக்ரஹத்தினின்றும் ஸாது பரித்ராண அர்த்தமாக –பஹுதா விஜாயதே -பஹுநி -பிறப்பில் பல் பிறவிப்பெருமான் -என்னும்படி யுகே யுகே ஸம்பவிக்கிற பாஹு திவ்ய ஜென்மங்கள் தோறும் அஸங்க்யாதங்களான அபிமதோரு தேஹங்கள் யுண்டாகையாலே உபசயாத்மக ப்ராக்ருத தேஹம் போலே ஸதத விகார ஆஸ்பதமாய் இருக்குமோ என்னில் –யஸ்ய திவ்யம் ஹி தத் ரூபம் ஹீயதே வர்த்ததே ந ச (எவனுடைய அந்த திவ்ய ரூபமானது குறைவதும் வளர்வதும் இல்லை –)-சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்தி பெற்றியோய் –என்கிறபடியே கர்ம அனுகுண விகார ரஹிதமாகவும் -சம்பவாம் யாத்ம மாயயா -(அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா-4-6–ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், தனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறான்-அவதரிக்கிறான்)-தேவரீர் இரக்க வேண்டி வந்து பிறந்ததும் —தேவைரர்த்திதோ ஐஜ்ஜே -(ஸ ஹி தேவைருதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு ஸநாதந -அயோத்யா -1-7--கொழுத்தவனான ராவணனுடைய வதத்தை விரும்பும் தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டவரும் பழமையானவருமான விஷ்ணு மனுஷ்ய லோகத்தில் ராமனாகப் பிறந்தார் –) என்றுஇச்சா க்ருஹீதமாகவும் சொல்லுகையாலே ஏக ரூபமாயும் இருக்கும் -கர்மக்ருத விகாரம் தோஷாயவும் இச்சா க்ருஹீத விகாரம் குணாயவுமாகையாலே ஏகரூபமாக இருக்கத் தட்டில்லை -அநேக விக்ரஹம் பரிக்ரஹிக்கச் செய்தேயும் சதைக ரூப ரூபாய-என்றதிறே-

கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -என்று ப்ரஸ்னம் பண்ண –யதாத்மகோ பகவான் -என்று உத்தரம் யுக்தமான வனந்தரம் கிமாத்மகோ பகவான் -என்று ப்ரஸ்னம் பண்ண –ஞானாத் மகோ பகவான் என்றும் அஜடத்வ அபிப்ராயேண ஞானத்தவ மஹத்வம் உத்தரமாகச் சொல்லுகையாலே (-கிமாத்மிகா பகவதோ வ்யக்தி -யதாத்மகோ பகவான் -கிமாத்மகோ பகவான் -ஞாநாத் மகோ பகவான் -பாஞ்சராத்ரம்பகவானுடைய திருமேனி எத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறானோ அத்தாலானது -பகவான் எவ்வுருவாய் இருக்கிறான் -ஞான மயனாய் இருக்கிறான் பகவான்)ஞானாத்மகமான பகவத் ஸ்வரூபம் ஸ்வரூப அனுரூபமாய் –வித்யுல்லேகேவ பாஸ்வரா -(லதோயாத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா -தை நா -11-நீல மேகம் கொண்ட மின்னல் போல் ஒளிவிடுவது திருமேனி)நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி -திருவாய் -6-10-1-என்றும் ஒண் சுடர்க்கற்றையை -திருவாய் -1-7-4-என்றும் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் –(தம் த்ருஷ்ட்வா தே ததா தேவா சங்க சக்ர கதா தரம் -அபூர்வ ரூப ஸம்ஸ்தானம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -வி பு -1-9-67–சங்கு சக்ர கதாதரனாய் அபூர்வமான திருமேனியமைப்பை யுடையவனாய் உறுதியானவனாய் தேஜோ ராஸியான அந்தப் பகவானைக் கண்ட தேவர்கள் ஸ்துதிக்கத் தொடங்கினர் –) இத்யாதி ப்ரமாண பிரகாரேண நிரவதிக தேஜோ ரூபமுமாய் இருக்கும் – பகவத் விக்ரஹமும் நித்ய முக்தர் விக்ரஹங்களும் பஞ்ச உபநிஷண் மயமாகையாலே யுக்த விசேஷண விஸிஷ்டத்வம் அவிஷ்டமாய் ஏக ஜாதீய த்ரவ்யமாய் இருந்ததே யாகிலும் ஏக ஜாதீய த்ரவ்யாத்மக மனித்யுமணி மஹோ மத்யே கத்யோத காந்திவத் ஸாவதிக தேஜோ ரூப ததீயா விக்ரஹத்தை கதியோதகல்பம் என்னலாம்படி நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கை -(மணி ஸூர்யன் ஒளிக்கு முன் மின்மினி போல் அவன் அருளாலே பெற்ற முக்த நித்யர்களின் திருமேனி ஒளி அவனது திவ்ய மங்கள விக்ரஹ தேஜஸ்ஸுக்கு ஒவ்வாததாய் அன்றோ இருக்கும் )-ஏதத் விஷயம் -இனி அவ்வளவன்றிக்கே நிரவதிக சவுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்ய யவ்வநாத் யநந்த குண கண சமவேதமாய் -ஸ்புரத் கிரீட –ஸ்வ உசித விசித்ர -இத்யாதி யுக்த பிரகிரியா –ஸ்புரத் கிரீட மகுடாத் யசங்க்யேய திவ்ய பூஷண பூஷிதமாய் ஆபரண கோடியிலும் ஆயுத கோடியிலும் அந்விதங்களான சங்க சக்ர கத அஸி ஸார்ங்காத் யசங்க்யேய திவ்யாயுத ஸோபிதமாய் –
(ஸ்புரத் கிரீடாங்கத ஹாரகண்டிகா
மணீந்த்ர காஞ்சீகுண நூபுராதிபி: |
ரதாங்க ஶங்காஸி கதா தநுர்வரைர்
லஸத் துளஸ்யா வநமாலயோஜ்ஜ்வலம் ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —ஶ்லோகம் 36 –

எம்பெருமான் ஒளிவிடும் திருமுடி (கிரீடம்), தோள் காப்புகள், ஹாரம், கழுத்தில் அணியும் சங்கிலி, ஸ்ரீகௌஸ்துப மணி, திவ்ய அரை நாண், திவ்ய சதங்கைகள் முதலிய திவ்ய ஆபரணங்களாலும், திருவாழி, திருச்சங்கு, திருநாந்தகம் என்னும் வாள், கௌமோதகீ என்னும் கதை, சார்ங்கம் என்னும் வில் ஆகிய திவ்ய ஆயுதங்களாலும், அவனுடைய திருமேனி ஸம்பந்தத்தால் ஒளி விடும் திருத்துழாய் மற்றும் வனமாலையால் மிகவும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறான்.

ஸ்வோசிதவிவித⁴விசித்ராநந்த * ஆஶ்சர்ய நித்ய நிரவத்³ய * நிரதிஶய ஸுக³ந்த⁴ நிரதிஶய ஸுக²ஸ்பர்ஶ * நிரதிஶய ஔஜ்ஜ்வல்ய * கிரீட மகுட சூடா³வதம்ஸ * மகரகுண்ட³ல க்³ரைவேயக * ஹார கேயூர கடக * ஶ்ரீவத்ஸ கௌஸ்துப⁴ முக்தாதா³ம * உத³ரப³ந்த⁴ந * பீதாம்ப³ர காஞ்சீகு³ண நூபுராத்³யபரிமித * தி³வ்யபூ⁴ஷண! *

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம்
– (ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ அஸ்மி க்ரீஷ்மே ஸீதமிவ ஹ்ரதம் ஸாம்யாமி பரிநிர்வாமி ஸூகம் மாமேதி கேவலம் கோடையில் குளிர்ந்த குளத்தில் குடைந்தாடுவது போல் இந்த ப்ரஹ்மத்தினுள் குடைந்தாடுகிறேன் -அதனால் சாந்தனாகிறேன் -தாபம் ஆறினவனாகிறேன் -ஸூ கத்தையே அடைகிறேன் –)-என்கிறபடியே ஸகல தாப ஹரமாய் –அளவில்லா சிற்றின்பம் யவை ஒழிந்தேன் -4-9-10-என்னலாம் படி சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் யோகி த்யேயமாய் ஸூபாஸ்ரயமுமாய் இருக்கிற விக்ரஹ வைலக்ஷண்யத்தை அனுசந்தித்து -மூர்த்தம் ப்ரஹ்ம -என்கிறார் –
இதில் சவுந்தர்யாமாவது -சர்வதா அனுபவியா நின்றாலும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஏகைக அவயமே அபூர்வவத் விஸ்மயகர அநேக போக பரம்பரா ஜனக அத்யந்த சக்தியாலே -ஸதா பஸ்யந்தி -பண்ணுகிற ஸூரிகளை நிரதிசய காந்தி சாகர ஸ்வ தரங்க தாடன தரள சித்த வ்ருத்திகராம் படி தத்த்ருஷ்ட்டி நிமஞ்ஞந ஷமமான திவ்ய அவயவ ஸூஷுமை -சவுந்தர்ய ஸாகரத்திலே ஆழங்கால் பட்டுக் கரையேற மாட்டாதே –அரும்பினை அலரை -பெரிய திரு -7-10-1-என்னலாம் படியான யவ்வநாத் முகீ பூத ஸூகுமார தநு -(க்வ யவ்வன உந்முகீ பூத ஸூகுமார தநுர் ஹரி க்வ வஜ்ர கடிநா போக சரீரோ அயம் மஹா ஸூர-மோக்ஷ -4-50 யவ்வனத்தை நோக்கி நிற்கும் ஸுகுமார்யத்துடன் கூடிய தேஹத்தை யுடைய கண்ணன் எங்கே -வஜ்ரம் போல் கடினமான சரீரத்தையுடைய இவ்வசுரன் எங்கே –)-என்றதறே

ஸுகந்தியமாவது -தெருவெல்லாம் காவி கமழ் -திருவாய் -9-6-1-என்கிறபடியே த்ரிபாத் விபூதி யடைய –வாஸம் செய் -10-10-2-என்னுமா போலே ஸ்வ காந்தியாலே வாசிதமாம்படி சர்வதோதிக்கமாகப் புறப்பட்டு ப்ரவஹிக்கிற நாநாவித திவ்ய கந்தம்-ஸர்வ கந்த ஸர்வ ரஸசாந்தோக் -3-14-2-பரமாத்மா எல்லா கந்தங்களையும் யுடையவன் -எல்லா ரசங்களையும் யுடையவன்-என்னக் கடவது இறே-

ஸுகுமார்யாமாவது -புஷ்ப ஹாஸ இதி நாம துஹாநம் ஸுகுமார்யமதி வாங்மனசம் ந
–என்கிறபடியே பேசப் பிசகும்படியாய் திவ்ய மஹிஷிகள் வடிக்கோல வாள் நெடும் கண்களாலே அடுத்தடுத்துப் பார்க்கிற பார்வையிலும் தாந்தி ஸீலமாய் –மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -9-2-10- என்கிறபடியே கூசித் தொட வேண்டும்படியான புஷ்ப ஹாசாக்யமாய் இருக்கிற அத்யந்த மார்த்தவம்

ரங்க பர்த்து அபி லோசநஸ் சர்சாம் சாகச ஆவலிஷு லேகய மாநம் புஷ்ப ஹாஸ இதி நாம துஹா நம் ஸுவ்குமார்யம் அதி வாங் மநசம் ந –ரெங்க ராஜ சத்வம் -88-
தன் மேல் கண்கள் படுவதையும் ஸாஹஸ காரியங்களின் வரிசைகளில் எழுதும்படி செய்யா நிற்பதும் பெரிய பெருமாள் தானே நோக்கினாலும் சஹியாத மார்த்வம் புஷ்ப ஹாசம்-என்னும் திரு நாமத்தை விளைவிப்பதுமான ஸ்ரீ பெரிய பெருமாளாது ஸுவ்குமார்யமானது நம்முடைய வாக்குக்கும் சிந்தைக்கும் விஷயம் அன்று )

(வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82–)

(மென்மையான அடி இல்லாமல் மென்மை என்றே சொல்லலாம்படி –புஷ்ப ஹாசாக்யமாய் இருக்கிற அத்யந்த மார்த்தவம்-மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தே கூடு பூரிக்கும்.)

லாவண்யமாவது -ஏகைகஸ்மிந் பரம வயவே அநந்த சவுந்தர்ய மக்நம் ஸர்வம் த்ரஷ்யே கதமிதி முதா மாமதா மந்த சஷுஸ் -த்வாம் ஸுப்ராத்ர வ்யதிகரகரம் ரங்க ராஜ அங்ககாநாம் தல் லாவண்யம் பரிணமயிதா விஸ்வ பாரீண வ்ருத்தி –என்கிறபடியே ஒரோ அவயவங்களின் மேலே அநந்த சவுந்தர்யத்திலே முழுகினதாகக் கொண்டு சவுந்தர்ய ஸாகரத்திலே ஆழங்கால் பட்டுக் கரையேற மாட்டாதே தடுமாறுகிற நித்ய முக்தர் திருக்கண்களை –முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ –என்கிறபடியே திவ்ய அவயவங்களுக்கு அந்யோன்யமுண்டான ஸுப்ராத்ரத்தாலே தத் வ்யதிகரத்தைப் பண்ணா நின்று கொண்டு -ஸர்வ பாரீண வ்ருத்தியாய் ஸர்வ அவயவங்களையும் கரை கண்டு அனுபவித்துக் கரையேற்றவற்றாய் அத்தாலே லாவண்யமாகிற மரக்கலம் என்று சொல்லலாம்படியாய் ஸுந்தர்ய சாகர நிமக்நருக்கு நாவம் போலே தாரகமாய் ஆபாத சூடம் அவிரதமாய் ப்ரவஹிக்கிற நிரவதிக காந்தி சாகர கல்லோல மாலை போலே விளங்குகிற ஸமுதாய ஸூஷுமை
ஹே மந்த -அல்ப லாவண்யம் என்று ஓன்று உண்டு என்றும் அறியாத சஷுஸ்ஸு -கண்ணே –ஏகமேகம் ஏகைகம் தஸ்மிந் -ஓரொன்றான அவயவத்தில் -பரம் -அதன் மேலே –அநந்தம் ஸுந்தர்யம் தஸ்மிந் மக்நம் ஸத் -அபரிச்சின்னமான சவுந்தர்யத்தில் முழுகினதாய்க் கொண்டு –ஸர்வம் -மற்று எல்லா அவயவ சவுந்தர்யத்தையும் கதம் -எங்கனே –த்ரஷ்யே -அனுபவிக்கப் போகிறேன் –இதி -என்று -முதா -வ்யர்த்தமாக -மா மதா -மா மந்த -விசாரம் மா குரு -சங்கியாதே கொள் –யத என்றும் அத்யாஹாரம் -யாதொரு காரணத்தாலே –ரங்கராஜ அங்காநாம் -பெரிய பெருமாளுடைய திவ்ய அவயவங்களுக்கு -(ஸுப்ராதுர்பாவ-ஸுப்ராத்ரம் -தஸ்ய வ்யதிகரம் கரோதீதி தத்) -ஒன்றுக்கொன்று நல்ல ப்ராதாவாய் இருக்கையினுடைய -ஸுகட்யத்தினுடைய -சம்பந்தத்தைப் பண்ணா நின்றுள்ள -(வ்யதிகர )சாங்கத்யம்-தத் கரோதீதி ததோக்தம் ஸுஹார்த்தம் இத்யர்த்த -(தத் )ஸர்வ விலக்ஷணமான (லாவண்யம் )சமுதாய சோபையானது அன்றிக்கே -தஸ்ய லாவண்யம் -என்றாய் பெரிய பெருமாளுடைய லாவண்யம் என்றபடியாகவுமாம் (த்வயம் )ஸர்வத்தையும் அனுபுபூஷிக்கிற உன்னை -(விஸ்வஸ்மிந் பாரீணா வ்ருத்தி யஸ்ய தத் )ஸர்வ அவயவத்திலும் அக்கரைப்பட்ட அனுபவத்தை உடைத்தானதாக (பரிணமயிதா )பண்ணப் போகிறது -விஸ்வேஷு ஸர்வேஷ்வயவேஷு –பராங்கதா -வ்ருத்தி -அநுபவோ யஸ்ய தத் ததோக்தம் -பரிணமயிதா-பரிணதம் கர்த்தா ல்யுட்

யவ்வனமாவது -யுவா குமார (யவ்வனத்தை யுடையவனாகவும் சிறிது பாலனாகவும் இருப்பவன் –யுவா அகுமார -என்று பதச்சேதம் -அகுமார என்றவிடத்திலுள்ள நஞ் ஷத் -சிறிது என்னும் அர்த்தத்தில் பிரயோகிக்கப் பட்டுள்ளது –)என்கிறபடியே கௌமார அவஸ்தையில் கழிவான தசையாய் யவ்வன அவஸ்தா ப்ராதுர்ப்பாவமாய் இருக்கை –க்வ யவ்வநோந் முகீ பூத ஸூகுமார தனுர் ஹரி -என்றது இறே -ஏதாத்ருஸ ஸ்திதியே நிலை நிற்கையாலே நித்ய யவ்வனமாய் இருக்கும் – ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக அஸங்க்யாத திவ்ய விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி ஸைஸவாத் யவஸ்தா பன்னனாகிலும் இந்த யவ்வன அவஸ்தை குலையாமையால் அன்றோ –உன்னையும் ஓக்கலையில் கொண்டுதமில் மருவி உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழ-என்று ஸைஸவ அவஸ்தையிலே யவ்வனம் கண்டு அனுபவித்தது –

ஆக ஏதாத்ருஸ அஸங்க்யேய கல்யாண குண விஸிஷ்டதையால் உண்டான திவ்ய விக்ரஹ வைலக்ஷண்யத்தை மூர்த்தம் என்று தொடங்கி அனுபவிக்கிறார் -ப்ரஹ்ம ஸப்தத்தாலே விக்ரஹத்தினுடைய அதி மஹத்த்வமும் -ஸ்வ ஆஸ்ரித அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வக விஞ்ஞான விகாஸகத்வமும் விவஷிதம் -இதற்கு மூர்த்தம் ப்ரஹ்ம -என்றிறே திரு நாமம் –(ததோபி தத் ப்ரியதரம் )ஆனந்த மய ஸ்வரூபத்திலும் ஆனந்தாவஹ தத் அசங்க்யாத குணங்களிலும் அதிசயித சவுந்தர்யாதி குண யோகத்தாலே நிரதிசய ஆனந்தாவஹமாய் -அத ஏவ-நிரவதிக ப்ரீதி விஷயமாய் இருக்கை – இச்சா க்ருஹீதா அபிமதோரு தேஹ -(ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அசவ் ஸ்வ ஸக்தி லேசோத்த்ருத பூத சர்க்க இச்சா க்ருஹீ தாபிமதோரு தேஹஸ் ஸம்ஸாதிதா அசேஷ ஜகத்திதோ அசவ் -வி பு -6-5-84-இந்த பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறிய பகுதியினாலேயே தரிக்கப்பட்ட பூதங்களை யுடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் ) என்னக் கடவது இறே-(தத் பிரியதாம் )தஸ்ய ப்ரியதாம் என்னுதல் -தத் என்றும் வ்யஸ்தமாக்கி யத் தத் என்றும் யோஜிக்கவுமாம் -அப்போது –புருஷம் க்ருஷ்ண பிங்களம் -ஸர்வ யஞ்ஞ மயம் வபு -த்யேயஸ் ஸதா -கிரீட குண்டல தரம் -(புருஷம் க்ருஷ்ண பிங்களம் தை நா -12-கறுப்பும் மஞ்சளும் கலந்த உருவையுடைய புருஷன்-கா த்வன்யா த்வாம் ருதே தேவி ஸர்வ யஞ்ஞமயம் வபுஸ் அத்யாஸ்தே தேவ தேவஸ்யே யோகி சிந்த்யம் கதாப்ருத -வி பு -1-9-122-ஹே தேவி கதவைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்-த்யேஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயணன் சரஸிஜாஸந சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவாந் கிரிடீ ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர -நரஸிம்ஹ புராணம் ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவனும் சங்க சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் –கிரீட குண்டல தரம் மித்ராணாம் அபயப்ரதம் -கிரீட குண்டலங்களைத் தரித்து இருப்பவனும் நண்பர்களுக்கு அபயம் அளிப்பவனுமான பகவான்-)இத்யாதி விக்ரஹ வைலக்ஷண்ய ப்ரதிபாதக ப்ரமாண பிரதிஸித்தி அதிசயத்தை த்யோதிப்பிக்கிறது -(ரூபம் ) இங்கே ரூப ஸப்தம் விக்ரஹ பரம் -யச்சப்தம் -ஏகரூபத்வ நித்யத்வ நிரவத்யத்வ அசிந்த்யத்வ ப்ரகாசக ப்ரமாண ப்ரஸித்தி பரம் -(அத்யத்புதம் )ஸ்வ சன்னிவேச பூர்வோக்த சவுந்தர்யாத் அநந்த குண யோகங்களாலே -அபி நவரஸ ஜனகமாய் அதி விஸ்மயா வஹமாய் இருக்கை –இவ்விடத்திலே –ஸ்வ அபித அனுரூப ஏக ரூப–விக்ரஹ -என்கிற சூர்ணிகா த்வய ப்ரதிபாதித விக்ரஹ வைலக்ஷண்யம் எல்லாமே அனுசந்தேயம்
இத்தால் ஸ்வரூப தத் குணாத்யந்த அபிமதமாய் -அதி விஸ்மயா வாஹமாய் -ஸ்ருதி ஸ்ம்ருதியாதி பிரசித்தமான ஸ ஆலம்பன யோக விஷயா அசாதாரண விக்ரஹத்தை ஸூபாஸ்ராயமாக அனுபவித்தாராய்த்து –யோகி த்யேயம் இறே -(ஸதா த்யேயம் -எப்போதும் நினைக்கத் தக்கது)
மேல் இந்த விக்ரஹத்தின் நின்றும் ஆஸ்ரித அர்த்தமாகப் பரிக்ரஹித்த வ்யூஹ விபவ அந்தர்யாமி ரூபங்களை அனுபவிக்கிறார் –யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி – யதா ஸூ கம் விஹரதோ-அன்யானி யாநி ரூபாணி சந்தி தாநி சர்வாணி-என்று ஸம்பந்தம் -(யாநி )இவ்விடத்தில் யச் சப்தம் –ஜென்ம கர்ம ச மே திவ்யம் – (ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத– த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும் மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான்) என்கிறஅவதார ரஹஸ்ய ப்ரகாசக ப்ரமாண ப்ரஸித்தியை ஸூ சிப்பிக்கிறது –யாநி என்கிற பஹு வசனம் –அஜாயமாநோ பஹுதா விஜாயதே –பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -திருவாய் -2-9-5-பஹுநி ரூபாணி -ஸதஸோ அத ஸஹஸ்ரஸ –(ஸ்ரீ பகவாநுவாச-பஸ்ய மே பார்த்த ரூபாணி ஸதஸோத ஸஹஸ்ரஸ– நாநா விதாநி திவ்யாநி நாநா வர்ணா க்ருதீநி ச–৷৷11.5৷৷-ஸ்ரீ பகவான் கூறினான் -குந்தீ புத்திரனே -என்னுடைய எங்கும் உள்ள உருவங்களைக் காண்பாய் –மேலும் நூற்றுக் கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் இருப்பவையாய் பலவகைப் பட்டவையாய் ஆச்சர்யமானவையாய் பல நிறங்களையும் ஆகாரங்களை உடையவையான சரீரங்களையும் காண்பாய்-பார் -பஸ்ய –உடனே -பார்க்கும் படி ஆக்குகிறேன் என்றபடி –) இத்யாதிகளில் சொல்லுகிற அவதார அசங்க்யாதத்வத்தை ஸூசிப்பிக்கிறது -(அன்யானி ) பரரூபத்தினின்றும் ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்கு பிறக்கையாலே தத் சன்னிவேச வர்ணாதிகளைப் போலே வைலக்ஷண்ய விசிஷ்டங்களாய் இருக்கை –அந்நிய –என்கிறாப் போலே அன்யானி என்கையாலே வ்யாவ்ருத்தியும் தோற்றுகிறது –

(யதா ஸூகம் )மனுஷ்ய சஜாதீயனாய் அவதரித்த தசையிலும் ஸ்வா பாவிக ஸூகாதி நிவ்ருத்தி என்ன துக்க பாக்த்வம் என்ன இவை இன்றிக்கே கேவலம் ஸூகமாய் இருக்குமாதொரு படி -(ஸூ கம் யதா பவதி ததா )க்ரியா விசேஷணமான அவ்யயம் (விஹரத) என்கிற இத்தால் அவதார ரூபங்கள் இச்சா க்ருஹீதங்கள் என்னுமிடமும் —வீட்டைப் பண்ணி விளையாடும் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -கிரீடதோ பலகஸ்யேவ ) (க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிஸாமய -வி பூ -1-2-18-சிறுவனைப் போலே விளையாடும் அந்தப்பாகவானுடைய ஜகத் ஸ்ருஷ்டியாதிகளாகிற செயல்களைக் கேட்ப்பாயாக –) என்கிறபடியே க்ரீடார்த்தங்களாய் இருக்கும் என்னுமிடம் கர்ப்பிதம் -ஆகையால் இவனுடைய சரீர க்ரஹணம் கர்ம க்ருதமின்றிக்கே -கேவலம் தர்ம த்ராணார்த்த மாயிருக்கும் என்கை -(நா காரணாத் ) (நாகாரணாத் காரணாத் வா காரணாகாரணாந் ந ச சரீர க்ரஹணம் வ்யாபின் தர்ம த்ராணாய கேவலம் -வி பூ -5-1-50-ஸர்வ வியாபியே நீ சரீரத்துடன் பிறப்பது ஸூகத்தின் பொருட்டாவது துக்கத்தின் பொருட்டாவது ஸூக துக்கச் சேர்க்கையின் பொருட்டாவது ஆவதில்லை -தர்ம ரக்ஷணத்திற்காகவே உன் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது –)இத்யாதி-(ஸர்வாணி தாநி )கீழ்ச் சொன்ன இத்தால் ஸ்வரூப ரூபாதிகளில் அத்யல்பமாகிலும் பெரிய பிராட்டியாராலே அநந்விதமாய் இருப்பதில்லை என்னுமிடத்தை த்யோதிப்பைக்காக ஸர்வாணி தாநி என்கிறார் -(ஸர்வாணி ரூபாணி )என்றாப் போலே இருக்கிறதாய்த்து (தைஸ் ஸ்வைரநுரூப ரூப விபவை )உன்னுடைய அசாதாரணங்களான அனுரூப ரூப விபவங்களாலே -அனுரூபங்களான ரூப ஸம்பத்துக்களாலே என்கை –
அதவா ரூபங்களாகிற விபவங்களாலே என்னவுமாம் -இவ்விடத்தில் ரூப ஸப்தம் –பகவன் நாராயண அபிமத அனுரூபங்களான ஸ்வரூப ரூப குண விபூதிகளைச் சொல்லுகிறது -(யதா ஸூகம் விஹரதோ ஹரேஸ் ஸர்வாணி ரூபாணி தைஸ்தைரனுரூப ரூப விபவைர் காடோப கூடா நீத்யாஹு )த்வத் அபிமத அனுரூபங்களான தத் ஸ்வரூப ரூப குணாதிகள் -தத் அபிமத தத் ஸ்வரூபாத் யநுரூபங்களான உன்னுடைய ரூபாதிகளிலே யதா க்ரமம் த்ருட ஸம்பந்தங்களாய் இருக்கும் என்றும் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் -வசிஷ்ட பராசர பாரஸர்யாதிகளான பரமரிஷிகள் சொல்லுவார்கள்

அனுரூபமாய் இருக்கையாவது -ரத்ன காஞ்சன நியாயத்தாலே ஸ்வ ஸம்பந்திக்கு ஸோப அதிசய ஹேதுவாய் இருக்கை -(காடோப கூடாநி ) வியோக அநர்ஹங்களாய் இருக்கும் என்கை -இறையும் அகலகில்லேன் -என்று இருக்க-அவன் ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்க- இருவர் ஸ்வரூபாதிகளும் வியோகித்து இருக்க விரகுண்டோ –விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயினி -ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் -திருவிருந்த மார்பன் -என்றும் -திரு மெய்யுறைகின்ற -என்றும் -தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவும் –இத்யாதி ப்ரமாண ப்ரவர்த்தகரான தத்வ தர்சிகள் இந்நித்ய யோகத்தைச் சொன்னார்கள் –

(தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர ஸ்ரீ வத்ஸ வஷா நித்யஸ்ரீர் அஜய்ய ஸாஸ்வதோ த்ருவ -யுத்த -114-15-இந்த ராமபிரான் தமஸ்ஸுக்கு மேற்பட்டவனாய் ஸர்வ தாரகனாய் சங்கு சக்ர கதாதரனாய் ஸ்ரீ வத்ஸம் என்னும் மருவைத் திரு மார்பிலே யுடையவனாய் ஜெயிக்கப்படாதவனாய் நித்யனாய் நிலையனானவனான நாராயணன் –)

இத்தால் (1)சாபராத சேதனர் ஸ்வ அபராதத்தை நினைத்து அஞ்சி அகலாமல் ருசி பிறந்த போதே ஆஸ்ரயிக்கலாம் படி புருஷகார பூதையான இவள் சந்நிதி அவஸ்யம் வேண்டுகையாலும் -(2)பிராப்தி தசையில் சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் கலந்தாப் போலே நிரதிசய போக்யார்த்தமாகவும் –(3)வைதேஹ்யா ஸஹ –என்கிறபடி இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை முறையாகையாலும்(4) அடிமை தான் ஸித்திப்பதும் ரசிப்பதும் சேர்த்தியிலே யாகையாலும் இப்படி உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற –இங்கும் அங்கும் திருமாலன்றி இன்புற விரகில்லாமையாலே -எழில் மலர் மாதரும் தானுமாய்க் கொண்டு இவ்வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருக்கிற நித்ய யோகத்தை அனுசந்தித்து அருளினாராய்த்து –

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே
.–7-9-11-

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–
7-10-1-

மதுப் யர்த்த ப்ரதிபாதகமான இஸ் ஸ்லோகத்தாலும் பிரதம ஸ்லோகத்தாலும் நாராயண ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம் -எங்கனே என்னில் –சாந்தாநந்த –என்று தொடங்கி திவ்யாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலே அயன ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம்-குண குணிகள் அப்ருதக் ஸித்தங்களாகையாலே குணியான ஸ்வரூபத்தைச் சொன்ன இது தந் நிரூபக குணங்களான ஞான ஆனந்த அமலத்வாதிகளுக்கும் -நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞான சக்த்யாதிகளுக்கும் சவுகர்ய ஆபாதகங்களான வாத்சல்ய ஸுசீல்யாதிகளுக்கும் உப லக்ஷணம் –மூர்த்தம் –ரூபம் -என்று தொடங்கிச் சொன்ன திவ்ய விக்ரஹம் -தத் குணங்களான காந்தி ஸுகுமார்யாதிகளுக்கும் ததாதேயமான திவ்ய பூஷணங்களுக்கும் ஆபரண கோடியிலே அந்விதமான திவ்ய ஆயுதங்களும் உப லக்ஷணம் -தே -என்று பெரிய பிராட்டியாரைச் சொன்னது பூமிப் பிராட்டி தொடக்கமான மற்றை நாச்சிமாருக்கும் உப லக்ஷணம் -பணி பதி என்று நித்ய ஸூரிகளைச் சொன்னது சத்ர சாமராதிகள் தொடங்கி பரமாகாசத்துக்கும் உப லக்ஷணம் -மாயா -என்று பிரக்ருதியைச் சொன்னது பத்தாத்மாக்களுக்கும் கால மஹதாதி விகாரங்களுக்கும் உப லக்ஷணம் –ப்ரஹ்மேஸாதி -என்று அண்டத்துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களைச் சொன்னபோதே அண்டமும் ஸித்தம் இறே –ஆக நார ஸப்தார்த்தமும் சங்க்ருஹீதம்விக்ரஹத்தைச் சொன்ன போதே சரண ஸப்தார்த்தம் சங்க்ருஹீதம் -உபாய உபேயங்களுக்கு அவிசிஷ்டமான நித்ய யோகத்தைச் சொல்லுகையாலே உபாய ஸ்வீ காரமும் உபேய பிரார்த்தனையும் யுக்த ப்ராயம் -அதவா ஸ்லோக த்ரயத்தாலே பூர்வ வாக்யார்த்தத்தையும் துரீய ஸ்லோகத்தாலே உத்தர வாக்யார்த்தத்தையும் அனுசந்திக்கவுமாம் –

நநு -இஸ் ஸ்லோகத்தில் இருவருடையவும் நித்யயோகம் சொல்லுகிறதாகில் –பரமாத்மா பரோ யோ அசவ் நாராயண சமாஹ்வய-தஸ்ய அநபாயிநீ சக்திர் தேவீ தத் தர்ம தர்மிணீ — (-பாஞ்சராத்ரம் –நாராயணன் என்னும் பெயரையே யுடையவனாய் மேலானவனாயுள்ள எந்தப் பரமாத்மா ஒருவன் இருக்கிறானோ அவனை விட்டுப் பிரியாத சக்தியாகவும் அவனுடைய குணங்களையே தன்னிடம் யுடையவளாகவும் இருப்பவள் லஷ்மீ தேவி –)என்றும்-விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ-என்றாப் போலே திரள ஒரு பாசுரம் இட்டு அருளிச் செய்யாமல் -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகள் -லஷ்மீ ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே யதாக்ரமம் கடாச்லிஷ்டங்களாய் இருக்கும் என்றும் இப்படி விபஜித்து அருளிச் செய்வான் என் என்னில் -(1)த்வயத்தில் பிரதம பதத்தில் விசேஷ்ய பரமான நாராயண பதத்தில் பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ப்ரதிபாதிக்கையாலும் -(2)தத் விசேஷண பரமான ஸ்ரீ சப்தத்தில் பிராட்டியினுடைய ஸ்வரூப ரூப குணாதிகளை ப்ரதிபாதிக்கையாலும் (3)உபயருடையவும் ஸ்வரூபாதிகளுக்கு உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை மதுப்பு ப்ரதிபாதிக்கையாலும் மதுப்பர்த்த ப்ரகாசகமான இஸ் ஸ்லோகத்தாலே புருஷகார உபாயங்களுடைய ஸ்வரூபாதிகளுக்கு அந்யோன்யம் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை விஸ்தரேண அருளிச் செய்யக் குறையில்லை –

(ஸ்ரீ தாதர்த்தம் ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டும்
ஸ்ரீ மத் நாராயண ஸ்வரூப ரூப சரணம் -ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டும்
ஆகவே பிரித்து அவிநா பாவ ஸம்பந்தத்தை விஸ்தரேண அருளிச் செய்யக் குறையில்லை -)

இப்படி பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளோடே பிராட்டிக்கு உண்டான அவிநா பாவ சம்பந்தத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பி அனுசந்தித்தார்கள் –தேவ ஜூஷ்டாம் -என்றும் –ஸ்ரீமன் நாராயண -என்றும் -தத் ஸ்வரூபாதிகளோடே ஏதத் அவிநா பாவ சம்பந்தத்தை வேதாந்தங்கள் விரும்பிற்றன –அஹந்தா ப்ரஹ்மணஸ் தஸ்ய ஸா அஹமஸ்மி ஸநாதநீ -ஆத்மா ஸ ஸர்வ பூதாநாம் அஹம் பூதோ ஹரி ஸ்ம்ருத -அஹந்தயா விநா அஹம் ஹி நிருபாக்யோ ந ஸித்த்யதி -அஹமர்த்தம் விநா அஹந்தயா நிராதாரா ந ஸித்த்யதி –(-லஷ்மீ தந்த்ரம் -17-30,31-பழமையானவளான நான் ப்ரஹ்மமாகிற அந்த பகவானுக்கு அஹந்தை -நான் என்னும் தன்மை -யாயிருக்கிறேன் -ஸர்வ பூதங்களுக்கும் ஆத்மாவான ஹரியானவர் அஹம் பூதராய் இருக்கின்றார் -அஹந்தையை விட்டு அஹமர்த்தமானது பெயரற்றதாய் ஸித்திக்காது -அஹமர்த்தத்தை விட்டு அஹந்தையானது ஆதாரமற்றதாய் ஸித்திக்காது) இத்யாதிகளாலே பகவத் ஸ்வரூப அவிநாபாவ ஸம்பந்தம் ஸ்பஷ்டமாயிற்று –கா சா அந்யா த்வாம்ருதே தேவி -ஸர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -(வி பு -1-9-122-ஹே தேவி கதையைத் தரித்தவனும் தேவதேவனுமான எம்பெருமானுடைய யோகிகளால் நினைக்கத்தக்கதும் சர்வ யஞ்ஞமயமுமான சரீரத்தில் உன்னைத்தவிர வேறு எவன் இருக்கிறான்) என்றும் -ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -என்றும் யயவ் வக்ஷஸ் ஸ்தலம் ஹரே —இத்யாதிகளாலே விக்ரஹ அந்வயம் விசதமாய்த்து –



ராஜ ராஜோ அகிலஸ் யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர -காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோஸ் ஸத் குணாஸாலிந -தயிதா அஹம் ஸதா தேவீ ஞான ஆனந்த மயீ ஸதா -அநவத்யா அநவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மிணீ
— (-லஷ்மீ தந்த்ரம் -17-30,31-ராஜராஜனாய் இவ்வுலகிற்கு எல்லாமே பரமேஸ்வரனாய் இருப்பவன் பகவான் -காந்தனாய் நற்குணங்கள் பொருந்தியவனாய் -தேவனான அந்தப் விஷ்ணுவிற்கு நான் தேவியாய் -எப்போதும் பிரியையாய் -ஞானானந்த மயியாய் எப்போதும் குற்றமற்ற குணங்களையும் தேஹத்தையும் யுடையவளாய் எப்போதும் அவனுடைய தர்மங்களையே தர்மமாக யுடையவளாய் இருப்பவள் )இத்யாதிகளாலே குண அவிநா பாவம் கோஷிக்கப்பட்டது –



வைகுண்டே து பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே -(-சைவபுராணம் –
மேலான உலகமான வைகுண்டத்தில் ஜகத்பதியும் நினைக்க ஒண்ணாத ஸ்வரூபத்தை யுடையவருமான விஷ்ணு பாகவதர்களுடனும் கூடியவராய் ஸ்ரீ தேவியுடன் கூட எழுந்தருளி இருக்கிறார் –) என்றும்-தத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவ தேவோ ஜனார்த்தன -ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவஸ் ஸநாதன (அங்கு தேவதேவனாய் ஜனார்த்தனன் வாஸூ தேவனே என்னும் பெயர்களைக் யுடையவனாய் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனாய் பிராட்டியுடன் கூடியவனான ஸ்ரீ மன் நாராயணன் எழுந்தருளி இருக்கிறான் –)-என்றும் வைகுண்டே து பரே லோகே ஸ்ரீஸஹாயோ ஜனார்த்தன
– (-உபாப்யாம் பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -வைகுண்டமாகிற மேலான உலகத்தில் ஸ்ரீ தேவியுடன் கூடிய பகவான் பூமி நீளைகள் இருவராலும் சேவிக்கப்பட்டு விளங்குகிறாள் –)இத்யாதிகளாலே விபூதி அந்வயம் விஸ்தரிக்கப்பட்டது –



ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன – (நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரிவம்சம் -113-52-பாற்கடலில் பள்ளிகொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே மதுராபுரிக்கு வந்திருக்கிறான் –)என்றும் -தேவத்வே தேவதேஹயம் மனுஷ்யத்தவே ச மானுஷீ –ராகவத்வே அபவத் ஸீதா -(புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145-பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –) என்றும்–வ்யூஹேஷு சைவ ஸர்வேஷு விபவேஷு ச ஸர்வஸ-ததா வ்யூஹீ பவத் யேஷா மம சைவ அநபாயிநீ
-(-பாஞ்சராத்ரம் -எல்லா வ்யூஹங்களிலும் எல்லா விபவங்களிலும் என்னை விட்டுப் பிரியாதவளாய் இப்பிராட்டியும் அவதாரம் எடுக்கிறாள் –) இத்யாதிகளாலே வ்யூஹ விபவா அவிநா பாவம் வ்யாக்யாதம் யாயிற்று –



தைஸ்தைரநு குணைர் பாவைர் யாஹம் தேவஸ்ய சாரங்கிண–கரோமி ஸகலம் கிருத்யம் ஸர்வ பாவ அனுகாமிநீ –
(லஷ்மீ தந்த்ரம் -17-4-அந்தந்தத் தன்மைகளோடு கூடிய நான் சார்ங்கம் என்னும் வில்லாண்ட தேவனை எல்லாத் தன்மைகளிலும் பின் தொடர்ந்தவளாய் எல்லாக் காரியங்களையும் செய்கிறேன்) இத்யாதிகளாலே ஐஸ்வர்ய அந்வயம் ஆதரிக்கப்பட்டது – இப்படி பிரத்யேகமாக ப்ரதிபாதிக்கை யன்றிக்கே –குணைர் விவாஸை ரூபைச் ச ஸ்வாத்மநா வா ஆத்ம நீஸ்வரம் -நியச்சந்தீம் அகண்டாண்ட நியந்த்ரீஞ்ச ஸ்துமஸ் ஸ்ரீ யம் -(பாஞ்சராத்ரம் குணங்களாலும் செயல்களும் ரூபங்களாலும் தன்னிடத்தில் ஈஸ்வரனை அடக்கிக்கொண்டு இருப்பவளாய் எல்லா அண்டங்களையும் நியமிப்பவளான ஸ்ரீ தேவியை ஸ்துதிக்கிறோம் –)என்று ஸகல அவிநா பாவ சம்பந்தமும் ஸங்க்ரஹிக்கப்பட்டது இறே

(ஸ்வரூப ரூப குண விபூதி ஐஸ்வர்ய வ்யூஹ விபவ -அந்தர்யாமித்வம்-அர்ச்சா -ஸகல அவிநா பாவ சம்பந்தங்களுக்கும் பிரமாணம் காட்டி அருளி மேல் இவற்றுக்கு அருளிச் செயல்களையும்-ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூக்திகளையும் – அருளிச் செய்கிறார்)

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள்1-3-1- தன்னோடும் பிரிவிலாத திருமகள்- -இத்யாதிகளாலே ஸ்வரூப அவிநாபாவ சம்பந்தமும் –என் திருமகள் சேர் மார்பனே -7-2-9– திருமார்வினில் சேர் திருமாலே-9-4-1- – -அலர்மேல் மங்கை யுறை மார்பா -6-10-10- திருமகளும் கூறாளும் தனி யுடம்பன் -4-8-1- ரூப அவிநாபாவ சம்பந்தமும்-நிகரில் புகழாய் -மிகும் திருமால் சீர்க்கடலை -பெரிய திருவந்தாதி -69-என்று குண அவிநாபாவ சம்பந்தமும்-திருமால் வைகுந்தம் -10-7-8-என்றும் விபூதி யந்தர்பாவமும் -திருமால் கடல் -மாதவா கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-1-5-5- –சீ மாதவன் கோவிந்தன் -8-2-7–திருமால் வந்தென் நெஞ்சு நிறையப் புகுந்தான் -10-8-1–வேங்கடத்தென் திருமால்-நாச்சியார் -8-1– -என்று வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதார அவிநாபாவமும்–பூம்பாவை யாகம் புணர்வது இருவரவர் முதலும் தானே -2-8-1-அல்லி மலர் மகள் போக மயக்குகளாகியும் நிற்க்கும் அம்மான் –3-10-8-எல்லா கருமங்களை செய் -என்று ஜகத் ஸ்ருஷ்ட்டி யுந் முகாத் யந்தர்பாவமும் ஆழ்வார்களாலும் அனுசந்திக்கப்பட்டது இறே

இவர்களை அடி ஒற்றின ஆச்சார்ய ஸ்ரேஷ்டரான பட்டரும் –ஸ்வரூபம் ஸ்வா தந்தர்யம் பகவத இதம் சந்த்ரவதனே -த்வதாஸ்லேஷோத் கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே -த்வமாசீர் மாதஸ் ஸ்ரீ கமி துரிதமித் தந்த்வலிபவைஸ் தத் அந்தர்பவாத் த்வாம் ந ப்ருதகபி தத்தே ஸ்ருதிரபிர- (சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது? இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய். வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக்கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவேதான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!) என்று ஸ்வரூப அவிநா பாவ ஸம்பந்தமும் – அநு கலதநு காண்டாலிங்க நாரம்ப ஸூம்பத் – (ஜசாக ஸ்ரீஸக அநோகஹ ருத்தி:ஸ்தந நயந குளுச்ச ஸ்பார புஷ்ப த்விரேபா ரசயது மயி லக்ஷ்மீ கல்ப வல்லீ கடாக்ஷாந்–-ஸ்ரீ குணரத்ன கோஸம்-3-ஸ்ரீரங்கநாதன் ஒரு கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருள்பவனாக உள்ளான்-அப்படிப்பட்ட கற்பகமரம் போன்று உள்ள அவனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளாள்–இவளுடைய படர்தல் காரணமாக, அவனது கிளைகள் போன்ற நான்கு திருத்தோள்களும் நான்கு திசைகளிலும் பரவி நின்று,அவளை மேலும் அணைத்துக் கொள்கின்றன-இப்படிப்பட்ட செழிப்புடையவளான அவளது ஸ்தனங்கள், அந்தக் கொடியில் உள்ள மலர்க் கொத்துக்கள் போன்று உள்ளன-அந்த மலர்ச் செண்டுகளை மொய்க்கும் வண்டுகள் போன்ற கண்களைக் கொண்டு அவள் உள்ளாள்-இப்படி உள்ளவள் யார் என்றால் – லக்ஷ்மீ கல்ப வல்லீ – என்றார். அவள் மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள்-அவள் தனது அருள் நிறைந்த பார்வையை என் மீதும் (ஸ்ரீரங்கநாதன் மீது படர விட்டது போன்று ) சிறிது படர விடுவாளாக.)என்று ரூப ஸம்பந்தமும் – ப்ரஸகந பல ஜ்யோதிர் ஞாநைஸ்வரீ விஜய ப்ரதா ப்ரணத வரண ப்ரேம ஷேமங்கரத்வ புரஸ் ஸரா -அபி பரிமள காந்திர் லாவண்ய மர்ச்சிரிதீந்திரே -தவ பகவதச் சைதே ஸாதாரணா குண ராசய –(ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்; அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது; அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி – ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?) -அன்யே அபி யவ்வன முகா யுவயோஸ் சமாநா ஸ்ரீ ரெங்க மங்கள விஜ் ரும்பண வைஜயந்தி -தஸ்மிம்ஸ்தவ த்வயி ச தஸ்ய பரஸ்பரேண ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வ தந்தே -என்றும் (ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ! என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது. இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.-இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.“உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!)என்றும் -யுத்வத் வாதவ் துல்யே அப்ய பர வஸதாஸத்ருஸம்ந –(யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ருசமந ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந் த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–34–ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும் ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன – மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல், அடியார்களின் பகைவர்களை அழித்தல், என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு. உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் – இரக்கம் நிரம்பிய மனம், ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல், கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன. இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.)என்றும் இத்யாதிகளாலே குண அவிநா பாவமும் – தத்ர ஸ்ரக் ஸ்பர்ஸ கந்தம் ஸ்புரதுபரி பணா ரத்ன ரோஸிர் விதாநம் விஸ்தீர்ய அநந்த போகம் -(தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம் விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம் தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அர்ஹதா த்வாம் அஸங்க்யை: அந்யோந்ய அத்வைத நிஷ்டா கநரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–25-இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது; அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது – இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான். அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான். அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன. இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்? இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய். நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள். இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?)என்று விபூதி யந்தர் பாவமும்- ததிமாதம் மத்நதஸ் ஸ்ராந்தி ஸாந்த்யை –ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ – (ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:-பகவதி ததிமாதம் மத்நத: ச்ராந்தி சாந்த்யை ப்ரமத் அம்ருத தரங்க வர்த்தத: ப்ராதுராஸீ: ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–49- -பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப்பாற்கடலைக் கடைந்த போது எம்பெருமானின் திருக்கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக்கைகளை உடைய அவன், தயிர் கடைவது போன்று திருப்பாற்கடலைக் கடைந்தான். இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய். இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாறகடலில் இருந்து, வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?) என்று வ்யூஹ அந்தர் பாவமும்- யதி மநுஜதி ரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தோநுஜநுநுரூபா தேவி நாவா தரிஷ்யா -அஸரஸமபவிஷ்யன் நர்ம நாதஸ்ய மாதர் தரதளதரவிந்தோ தந்தகாந்தாய தாஷி – (தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக்கண்களை உடையவளே! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய். அப்படி நீ அவனது அவதாரங்களின்போது அவனுடன் பிறக்கவில்லை என்றால், அந்த அவதாரங்கள், சுவையற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?)-என்றும் அநுஜநுரநுரூப ரூப சேஷ்டா ந யதி ஸமாகம மிந்த்ரா அகரிஷ்யத் -அசரஸமதாவா அப்ரியம் பவிஷ்ணு த்ருவமாகரிஷ்யத ரங்கராஜ நர்ம – (பெரிய பெருமாள் அவதரித்து அருளும் அவதாரங்கள் தோறும் பெரிய பிராட்டியார் அந்த அந்த அவதார அநு குணமான விக்ரஹ சேஷ்டிதங்களை உடையவளாய்க் கொண்டு ஸம்லேஷிக்கா விடில் அந்த அவதார லீலை ரஸ்வத் இன்றிக்கே- புருஷகாரம் இல்லாமல் ஆஸ்ரித ரக்ஷண சித்தி ரூப அநிஷ்ட சாதிக்கையும் ஆகும் என்கிறார் — அநிஷ்டவஹமாக நிச்சிதமாக ஆகும்)என்று விபவ அந்தர் பாவமும் – ஸ்ரீ ஸ்தநா பரணம் தேஜஸ் ஸ்ரீ ரங்கேசயம் – (ஆஸ்ரயே சிந்தாமணிம் இவ உத்வாந்தம் உத்ஸங்கே அநந்த போகிந –8- ஸ்ரீ பெரிய பிராட்டியாருடைய திரு முலைத் தடங்களுக்கு அலங்காரமானதும் –எல்லாருக்கும் தன்னைப் பற்ற ஸ்வரூப லாபமாய் இருக்க தனக்கும் அவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்குமே-ஸ்ரீ ஆதி சேஷனுடைய –திரு மடியிலே-கக்கப்பட்ட–சிந்தாமணி போன்றதும்–ஸ்ரீ திரு வரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் பச்சை மா மலை திரு மேனியனான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய ஒப்பற்ற தேஜஸ்ஸை ஆஸ்ரயிக்கிறேன்-)என்று அர்ச்சாவதார அந்தர் பாவமும் ஸ்ரீயை ஸமஸ்த சித் அசித் விதாந வ்யஸனம் ஹரே -என்றும் யத் ப்ரூ பங்கா ப்ரமாணம் -(யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே: வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:-ஸ்ரீ குணரத்ன கோஸம்-–4– இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும். இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ, ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான். யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன. ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும். இவளது திருக் கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் – ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது. அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)என்றும் அநு சிகினி சிகீவ க்ரீடசி ஸ்ரீ சமஷம் –(பிரளய சமய ஸூப்தம் ஸ்வம் சரீர ஏக தேசம் வரத சித் அசித் ஆக்யம் ஸ்வ இச்சையா விஸ்த்ருணாந கசிதம் இவ கலாபம் சித்ரம் ஆதத்ய தூந்வந் அநு சிகிநீ சிகீ இவ க்ரீடசி ஸ்ரீ சமஷம்–44- ஹே வரத-பிரளய காலத்தில் ஒடுங்கிப் போன சேதன அசேதன ஆத்மகமான தனது திருமேனியின் ஏக தேசத்தை –தன் சங்கல்பத்தினாலேயே விசித விசித்திர ஜகத் ரூபமாய்ப் பரப்பா நின்று கொண்டு–மயில் பெடையின் எதிரே–நாநா விதமான தோகையை ஆகாசத்தை அளாவியது போலே–விரித்து உதறுகின்ற ஆண் மயில் போலே ஸ்ரீ பெரிய பிராட்டியார் முன்னிலையில் தேவரீர் விளையாடா நின்றீர்-ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமே ஸ்தூல சித் அசித் விசிஷ்டமாக பரிணமிக்கிறது என்றவாறு-கலாபம் ஆண் மயிலுக்கே -அதே போலே ஜகத் காரணத்வம் அவனுக்கே – பிராட்டிக்கு இல்லை -என்றவாறு –அவன் ஸ்ருஷ்ட்டி செய்து அருளுவதும் அவளது லீலைக்காகவே –)என்று ஜகத் வியாபார அந்தர் பாவமும் ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் இறே- ஆத்மந்யாத்மா வபுஷி ச வபுர் வைபவைர் வைபவஞ்சேத் யாகாரைஸ்தைரநு குண தயா ஸர்வ பாவாநுயாதா -இச்சா ரூபாண்யபி பகவதஸ் ஸ்வாதயந்த்யாத்தரூபா தூரீ குர்யான்நஹி மதுரதாதுக்த ஸிந்தோஸ் தரங்காத் – (பகவத் ஸ்வரூபத்தில் தன் ஸ்வரூபமும் அவனுடைய தேஹத்தில் தன் தேஹமும் அவனுடைய விபூதிகளில் தன் வைபவமும் அடங்கும்படி இப்படிப்பட்ட ஆகாரங்களாலே அவனுக்குத் தகுந்தவளாய் அவனுடைய எல்லா நிலைகளையும் பின் தொடருமவளாய் பகவானுடைய இச்சையினால் எடுக்கப்பட்ட அவதார ரூபங்களையும் அவற்றுக்குப் பொருந்தின உருவங்களை எடுப்பதன் மூலம் இனிக்கச் செய்பவளான பிராட்டிக்கு இனிமையே வடிவாய் இருக்கும் பகவத் அனுபவமாகிற பாற்கடலின் அலைகளில் இருந்து நம்மை விலக்க மாட்டாளன்றோ –)என்று பிராட்டிக்கு உண்டான பகவத் ஸ்வ ரூபாத் யவிநா பாவ ஸம்பந்தத்தை அபி யுக்தர்களும் அனுசந்தித்தார்கள் இறே –
ஆக இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலும் -அவற்றை அடி ஒற்றின ஆழ்வார்கள் திவ்ய ப்ரபந்தங்களாலும் ப்ரதிபாதிக்கிற திவ்ய தம்பதிகளுடைய ஸ்வரூபாதிகளுக்கு அந்யோன்யம் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை இஸ் ஸ்லோகத்தால் அருளிச் செய்தாராய்த்து –

(அபிமத அனுரூப -இவள் அணுவாய் இருக்க விபுவான அவனுக்கு அனுரூபமத்வமும் அதிசய ஆகாரமுடையவள் என்று ஸ்தோத்ரம் பண்ணவும் எவ்வாறு பொருந்தும் என்பதை அடுத்து விளக்கி அருளுகிறார்)

இப்படி இருவருக்கும் உண்டான அவிநா பாவ ஸம்பந்தத்தை அருளிச் செய்கிறவிடத்தில் ப்ரதமத விபுவான பகவத் ஸ்வரூபத்தோடே லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அனுரூப ஸ்வரூப ஸம்பந்தம் சொல்லுமளவில் -பிராட்டிக்கும் ஸ்வரூபத விபுத்வம் அங்கீ கரிக்க வேணும் -ஸ்வரூப விபுத்வம் அங்கீ கரித்தாலிறே பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசய ஆகாரேண ஸ்துதியும் ஸித்திப்பது

பத்நிக்கி பதி ஸ்வரூப அனுரூப்யா அவஸ்யம்பாவித்வத்தை ஸ்ருதியும் ஸூசிப்பித்தது இறே -விஷ்ணுவுக்குப் பத்னியாம்போது வ்யாபன லீலையாக வேணும் –பகவன் நாராயண அபிமத அனுரூப ஸ்வரூப ரூப-என்று பகவத் ஸ்வரூப அனுரூபத்வத்தை பாஷ்யகாரரும் பிரதமத்திலே ஸாதித்து அருளினார் இறே -இப்படி ப்ரமாண ஸித்தமுமாய் -ப்ரமாத்ரு ஸித்தமுமாய் -யுக்தி யுக்தமுமான விபுத்வத்தை அங்கீ கரியாமல் அணுத்துவத்தை அங்கீ கரிக்கும்போது பகவத்வ ரூப ஏகதேச வ்யாப்தியே இறே சித்திப்பது -அது ஸகல சேதன சமானமாகையாலே பிராட்டிக்கு ஓர் அதிசயித்த ஸ்தோத்ரம் ஸித்தியாது –அனுரூப ரூப விபவை -என்கிற பதத்துக்கும் பகவத் ஸ்வரூபாதிகளும் அல்ப தேசமாகிலும் இவளால் அநந்விதமாய் இருபத்தொரு இடமில்லை என்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிற ஸர்வாணி என்கிற பதத்துக்கும் வையர்த்தமும் வரும் -அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விகாஸக சக்தியால் விபுபாய் இருக்கும் என்னில் -அப்போது சாமான ந்யாயத்தாலே ஸகல ஆத்மாக்களுக்கும் ஸ்வரூப விகார அங்கீ காரத்திலே தோஷமின்றிக்கே ஒழியும் -ஆத்ம நிர்வாகரத்வ ப்ரதிபாதிதமான ப்ரமாணங்களுக்கும் விரோதமாம் – ஆகில் ஞான வ்யாப்தியைச் சொல்லுகிறது என்னில் –வாலாக்ர ஸத பாகஸ்ய -என்று தொடங்கி –ஸ சாநந்த்யாய கல்பதே –(வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –)என்று முக்தாத்மாக்களுக்கும் ஞான வ்யாப்தி யுண்டாகையாலே இங்கு ஒரு அதிசயமும் அனுரூபத்வமும் ஸித்தியாது -இவர்களைப் போலே ப்ரத்வம்ச அபாவம் மாத்திரமே இன்றிக்கே ப்ராக் அபாவத்தைப் பற்றச் சொல்லுகையாலே அதிசயமும் அனுரூபத்வமும் ஸித்திக்கிறது என்னில் -அது நித்யருக்கும் உண்டாகையாலே அவை இரண்டுமே ஸித்தியாது -கிஞ்ச அனுரூபத்வ உக்தியாலே அதிசய ஸ்துதி ஸித்திக்கிறது என்னில் அந்த அனுரூபத்துவமாவது -அணுத்துவத்தில் வைஷம்யம் உண்டானாலும் ஸ்வ தந்த்ர சேஷியைக் குறித்து சேஷத்வ பாரதந்தர்யங்களாலே அதிசயாவஹத்வம் என்னில் அதுவும் ஸகல சேதன அசேதன சமானமாகையாலே விசேஷம் ஸித்தியாது – கிஞ்ச –யதா ஸர்வதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -த்வயதைத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –-இத்யாதிகளிலே ஸ்வரூபதோ விபுத்வம் ப்ரஸித்தமாய் இருக்க தத் அங்கீ காரேண அணுத்துவ அங்கீகாரமும் ப்ரமாண விரோதமும் பிரசங்கிக்கும் – ஆக அனுரூபத்வ சித்திக்காகவும் -அதிசயித ஸ்துதி ஸித்திக்காகவும் ப்ரமாண வையர்த்த நிவ்ருத்தி யர்த்தமாகவும் பிராட்டிக்கு ஸ்வரூப விபுத்வம் அவர்ஜனீயமாகையாலே அவஸ்யம் அங்கீ கார்யமிறே என்னில்

(விபு சர்வ மூர்த்தவ த்ரவ்யம் சம்யோகம் -அளவுக்கு உட்பட்ட வடிவுடன் உள்ள பொருள்களை ஸ்பர்சிப்பது -ப்ரஹ்மம் விபு -முக்தர்களின் தர்மபூத ஞானமும் விபு -கண்ணுக்கு பட வேண்டிய அவஸ்யம் இல்லை –பிராட்டி அணு என்றால் ஜீவாத்மா கோஷ்ட்டியில் சேர்க்க வேண்டி வரும் -விபு என்றால் ஈஸ்வர கோஷ்ட்டியில் சேர்க்க வேண்டி வரும் -அவன் ஸர்வகதா போல் இவளும் -விஷ்ணு புராணம் –யதா ஸர்வகதா விஷ்ணு என்கிறது –பிராட்டியின் ஸ்வரூபம் நன்றாக அறிய மேல் விளக்கி அருளுகிறார் -)

(ஸ்வரூபத்தால் அணுவாக இருந்தாலும் அகடி கடநா சக்தியால் -அவனது சங்கல்பத்தால் வந்த சக்தி -ரூபத்தால் விபு –விக்ரஹ வியாப்தி -இத்தை ஏற்றுக்கொண்டால் தான் அனைத்து வாக்யங்களுக்கும் பொருந்த படி அருளிச் செய்ய முடியும்)

மைவம் (மா ஏவம் இப்படியாக இல்லை )லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபிக்கும் அளவில் ஸ்வரூப விபுத்வம் கூடாது -எங்கனே என்னில் –போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஷராத்மாநாவீஸதே தேவ ஏக -இத்யாதி வேதாந்த ஸித்தமான அர்த்தங்கள் நம் தர்சனத்துக்கும் உண்டிறே – (ஏதத் ஜேயம் நித்யமேவாத்ம ஸம்ஸ்த்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித் போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் -ஸ்வே -1-12-ஆத்மாவினுள் அந்தர்யாமியாய் இருக்கும் இந்தப் பர ப்ரஹ்மமானது என்றும் அறியத் தகுந்தது -இதைக் காட்டிலும் அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை -அனுபவிப்பவனான ஜீவனுக்கு அந்தர்யாமியாயும் அனுபவிக்கப்படும் அசித்துக்கு அந்தர்யாமியாகவும் நியமிப்பவனான தம்முடைய ஸ்வரூபத்தோடு கூடியவனாய் ஆக இப்படி ப்ரஹ்மம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது –) (க்ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் ஹரா ஷராத்மாநா வீசதே தேவ ஏக -ஸ்வே -1-10-க்ஷரம் எனப்படுவது மூலப்பிரக்ருதி யாகும் -அழிவற்றவனாய் இருக்கையாலே அக்ஷரம் எனப்படுமவன் போக்தாவான ஜீவனாவன் -அசித்தையும் ஜீவனையும் ஒரு தேவனே நியமிக்கிறான் –) இவற்றில் அசித் தத்வ அந்தர் பூதையோ -ஜீவதத்வ அந்தர் பூதையோ -ஈஸ்வர தத்வ அந்தர் பூதையோ -தத்வ த்ரய அதிரிக்தையோ -என்று விகல்பித்து நிரூபிக்கும் அளவில் அசித்து ஞான சூன்யமாகையாலும் இவள் ஞாத்ருத்வ விசிஷ்டை யாகையாலும் -ஞாத்வ அஞ்ஞத்வ விரோத பிரசங்கத்தாலே அசித் தத்வ அந்தர் பாவம் கூடாது -ஈஸ்வர த்வித்வ பிரசங்கத்தாலும் –ஈஸதே தேவ ஏக -என்கிற ஏகத்வ ஸ்ருதியோடும் –ந தத் ஸமஸ்ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச்சாப் யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -ஸ்வே -6-8-அவனுக்கு ப்ராக்ருதமான சரீரமும் இந்திரியங்களும் இல்லை -அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படுவதில்லை -இவனுடைய மேலான சக்தியும் இயற்கையான ஞான பல கிரியைகளும் விதவிதமாகச் சொல்லப்படுகின்றன –)என்கிற சமாதிக தரித்ரத்வ ப்ரகாசாக ஸ்ருதியோடும் விரோதம் பிரசங்கிக்கையாலும் ஈஸ்வர அந்தர் பாவம் கூடாது -பகவத் ஐக்யம் சொல்லில் பத்நீத்வ பரமான ஸ்ருதியோடும் பேத பரமான ஸ்ருதியோடும் விரோதம் பிரசங்கிக்கும் -ஐக்ய பரங்களான ஸ்ருதிகள் அத்யந்த பாரதந்தர்யத்தாலே அவிநா பாவ நிபந்தனங்கள் -பேத ப்ரதிபாதங்கள் ஸ்வரூப பேத பரங்கள் -கிஞ்ச ஈஸ்வர த்வித்வத்தில் அந்யோன்யம் ஆஞ்ஞா வ்யாகாதத்தாலே அநீச்வரத்வமும் பிரசங்கிக்கும் -அதிரிக்த தத்வத்தில் ப்ரமாணம் இல்லாமையால் தத்வ த்ர்ய அதி ரிக்தை என்னக் கூடாது –இனி பாரி சேஷ்யாத் ஜீவ தத்வ அந்தர் பூதை என்னுமிடம் ஸித்தம்

ஆனபின்பு –ஏஷோ அணுர் ஆத்மா -த்ரசரேணு ப்ரமாணாஸ்தே ரஸ்மிகோடி விபூஷிதா -என்று (-முண்ட -3-1-9-அணுவாகிற இந்த ஜீவாத்மா மனத்தாலே அறியத்தக்கவன்-என்றும்-ஞானமயமான கோடிக்கணக்கான கிரணங்களையுடைய அந்த ஜீவர்கள் த்ரஸ ரேணுவைப்போல் அளவுள்ளவர்கள்)ஆத்மாக்களுக்கு அணுத்துவத்தை லக்ஷணமாகச் சொல்லுகையாலும் ஜீவ சமஷ்டி வாசகமான மகாரத்தில் –மாங்–மாநே -என்கிற தாதுவாலே (மதி ஹர்ஷே –ஆனந்தமுடையவன் என்றும் மந ஞாநே அவபோதநே –ஞானமயன் ஞானமுடையவன் என்றும் தாதுக்கள் உண்டே)ஆத்மாக்கள் அணு பரிமாணர் என்று சொல்லுகையாலும் ஜீவ தத்வ அந்தர் பூதையான இவளுக்கும் அணுத்துவம் அவர்ஜனீயமாகையாலே ஸ்வரூப விபுத்வம் சேராது -கிஞ்ச ஜீவ தத்வ அந்தர் பாவத்தை அங்கீ கரித்து அணுத்துவ அநங்கீகாரேண -அணுத்வஸ்ய ஏதத் வ்யதிரிக்த ஜீவ விஷயத்வேன விபுத்வம் ஏதத் விஷயம் (அணுத்துவமே தத் வ்யதிரிக்த ஜீவவிஷயம் ஜீவத்வே அபி விபுத்வம் ஏதத் விஷயம் )என்னில் -அப்போது ஜீவத்வம் அணுத்துவ வ்யாப்தமாகையாலே (வ்யாப்தமாகாமையாலே)ஜீவ லக்ஷணத்துக்கு அவ்யாப்தி தோஷம் பிரசங்கிக்கும் –விபுத்வே சதி சேதனத்வம் –என்கிற ஈஸ்வர லக்ஷணத்துக்கு அதி வ்யாப்தியும் பிரசங்கிக்கும் (அசேதனமாகவும் விபுவாகவும் முக்தர்களின் தர்மபூத ஞானமும் அங்குள்ள காலதத்வமும்)-ஜீவ அணுத்துவ ப்ரதி பாதிகையான ஸ்ருதியோடும் விரோதிக்கும் -ஆகையிறே ஸ ச அனந்த்யாய கல்பதே -என்கிற (வாலாக்ர சதபாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேயஸ் ச ச அனந்த்யாய கல்பதே -ஸ்வே -5-9-கோதுமை நுனியின் நூற்றில் ஒரு பங்கை நூறு கூறிட்டதில் ஒரு பகுதியே ஜீவன் என்றும் அறியத்தக்கவன் -அவன் முக்தியடையும் போது ஞானத்தின் மூலம் அளவற்றவனாகிறான் –)இடத்திலும் முக்தருக்கும் ஸ்வரூப விபுத்வம் சொல்லாமல் ஞான வியாப்தியை ப்ரதிபாதிக்கிறது -இவ்வர்த்தம் ப்ரதீப தாவேச – (ப்ரதீபவதா வேஸஸ் ததா ஹி தர்சயதி–ப்ரஹ்ம ஸூத்ர-4-4-15-விளக்கைப்போல் தேசாந்தரத்திலும் வியாபித்து இருத்தல் ஜீவனுக்கும் அறிவினால் முடியும் –வாலாக்ர –என்று தொடங்கும் ஸ்ருதியும் அப்படியே காண்பிக்கிறதன்றோ)இத்யாதி ஸூத்ரத்திலே ப்ரதிபாதித்தது இறே

நநு முக்தருக்கு ஜீவத்வ ஸாம்யத்தாலே அவர்ஜனீயமான அணுத்துவத்துக்கு பாதக பிரமாணம் இல்லாமையாலும் -தத் அனுக்ராஹக ப்ரமாண ஸத்பாவத்தாலும் அணுத்துவம் அங்கீகரிக்கலாம் -பிராட்டிக்கு ஜீவத்வ சாம்ய யாகாரத்தாலே ப்ராப்தமான அணுத்துவத்துக்கு தத் வியாபக ப்ரமாணம் பாதகமாகையாலே அணுத்துவம் கூடாதிறே என்னில் -மைவம் -தத் விபுத்வ பிரமாணங்கள் ஸ்வரூப விபுத்வ பரங்கள் அன்றிக்கே விக்ரஹ வ்யாப்தி ப்ரதிபாதங்களாகையாலே தத் அணுத்துவ பாதகங்கள் அல்லவிறே என்கை -நநு யதா பிரமாணம் தத் விபுத்வ அங்கீகாரத்தில் பாதகம் இல்லாமல் இருக்கவும் பிரமாணங்களுக்கு அந்யார்த்தம் கல்பிக்கை யுக்தமில்லாமையாலே தத் விபுத்வ பிரமாணங்கள் தத் அணுத்தவே பாதகங்கள் இறே என்னில் விபு த்வய அசம்பவமே இவ்விடத்தில் பாதகம் ஆகையால் அணுத்துவம் அவர்ஜனீயம் என்கை –

நநு காலாதிகளுக்கு விபுத்வம் உண்டாயிருக்கவும் ஈஸ்வர த்வித்வம் வராதாப் போலே லஷ்மீ விபுத்வத்திலும் ஈஸ்வர த்வித்வம் பிரசங்கியாமையாலே அது விரோதம் அன்றே என்னில் -காலாதிகளுக்கு விபுத்வம் உண்டாய் இருக்கவும் ஈஸ்வர த்விதம் வராதாப் போலே என்கிற த்ருஷ்டாந்தம் சேராது -எங்கனே என்னில் சைதன்ய அநாதார்த்தவே சதி விபுத்வம் -என்கிறது இறே லக்ஷணம் -சைதன்ய ஆதாரத்வே சதி விபுத்வம் -ஈஸ்வர லக்ஷண மாகையாலே சைதன்ய விசிஷ்டையான இவளுக்கு விபுத்வம் கொள்ளில் ஈஸ்வர த்வித்வம் பிரசங்கிக்கையாலே இவளுக்கு அணுத்துவமே அசாதாரண லக்ஷணம் என்னத் தட்டில்லை

நநு –யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர -உத்தம புருஷஸ் த்வந்ய-என்று ஸர்வ வ்யாபகத்வத்தாலும் ஸர்வ நியந்த்ருத்வத்தாலும் (வியாபித்து தாங்கி-நியந்த்ருத்வ- ஸ்வாமியாய் -மூன்றும் சேர்ந்த புருஷோத்தமன் -15 அத்யாயம் -)ஈஸ்வரனுக்கு ஜீவ அநந்யத்வம் சாதித்தாப் போலே –யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் –இத்யாதி (வ்யாபகத்வ நியந்த்ருத்வ-இரண்டுக்கும் பிரமாணங்கள்)பிரமாண சித்தங்களான ஸர்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வங்களாலே பிராட்டிக்கு ஜீவஜாத் யநந்தர்பாவம் சாதிக்கலாமிறே -எங்கனே என்னில் –நேய மாத்ம ஜாத் யந்தர்ப்பூதா –குத–ஸர்வ வ்யாபகத்வாத் ஸர்வ நியந்த்ருத்வாத் யதா ஈஸ்வர ததா சேயம் தஸ்மாத் ததேதி –என்று பஞ்ச அவயமான அனுமானத்தாலே (நேய மாத்ம ஜாத் யந்தர்ப்பூதா –(ப்ரதிஜ்ஜை )-குத–ஸர்வ வ்யாபகத்வாத் ஸர்வ நியந்த்ருத்வாத் (இரண்டு ஹேதுக்கள் )யதா ஈஸ்வர (உதாஹரணம் )ததா சேயம் (உப நயனம் )தஸ்மாத் ததேதி(நிகமனம் )ஆத்ம தத்வ அநந்யத்வம் சாதித்து -அத ஏவ தஜ் ஜாதீயத்வா கதாணுத்வம் நிவ்ருத்தமாகையாலும் ஸ்ரீ யப்பதியே ஸர்வ வியாபக வஸ்து -என்று அங்கீகரிக்க வேண்டுகையாலும் நிரூப்ய நிரூபக அவிநா பாவ சம்பந்தம் நிபந்தனமாக நிரூப்ய ஸ்வரூபத்துக்கு உண்டான விபுத்வம் தந் நிரூபக ஸ்வரூபத்துக்கும் அவர்ஜனீயமாகக் கொண்டு தன்னடையே வருகையாலும் இவளுக்கு ஸ்வரூபதோ விபுத்வம் நியாயத ப்ராப்தமாகையாலும் அணுத்வ பக்ஷம் அயதார்த்தமிறே என்னில்

(ஆனால் அவனைப்போல் இவள் ஸர்வ நியாந்தா அல்லவே -அவனுக்கு ஸ்வரூப வ்யாப்தி உண்டு -இரண்டும் இவள் இடத்தில் இல்லையே -த்ருஷ்டாந்தம் எடுக்கக்கூடாதே)

மைவம் -இவ்விடத்தில் த்ருஷ்டாந்த யுக்த தார்ஷ்டாந்திகங்கள் ஸத்ருசங்கள் அன்றிறே -ஸ்வரூப விபத்வத்தாலும் ஸர்வ நியந்த்ருத் வத்தாலும் இறே ஸர்வேஸ்வரனுக்கு ஜீவ அந்யத்வத்தை ஸாதித்தது -தார்ஷ்டாந்தகத்தில் அந்த ஹேதுத்வம் இல்லை இறே -எங்கனே என்னில் -பிராட்டிக்கு ஆத்மஜாத் யநந்தர்பாவ சாதகங்களாகச் சொன்ன ஹேது த்வயத்தில் -பிரதம ஹேது விக்ரஹ வியாப்தி விஷயமாகையாலே ஸ்வரூப அஸித்தம் -அங்கு விக்ரஹ வ்யாப்தியைச் சொல்லுகிறது என்கைக்கு த்யோதகம் என் என்னில் -ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே -ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத் யேததாஹ கதம் பவான் -என்று செழும் கடல் அமுதினில் பிறந்தாள்-– (ஷீரோதாச் ஸ்ரீஸ் ஸமுத்பன்னா ஸ்ரூயதே அம்ருத மந்தநே ப்ருகோ க்யாத்யாம் ஸமுத்பன்னேத்யே ததாஹ கதம் பவான் -வி பு -1-8-16-அம்ருதம் கடைந்த காலத்தில் பாற்கடலில் இருந்து ஸ்ரீ தேவி யுண்டானதாகச் சொல்லப்படுகிறது -ப்ருவுவிற்கு க்யாதி என்னும் மனைவியிடம் உண்டானதாகத் தாங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்)-என்றும் ப்ருகு பந்தியான க்யாதியினிடத்தில் பிறந்தாள் என்றும் பராசர பகவான் உபதேசிக்கக் கேட்ட மைத்ரேய பகவான் நித்யையான லஷ்மிக்கு உத்பத்திமத்வம் உண்டானால் நித்யத்வம் கூடும்படி எங்கனே என்று ப்ரஸ்நம் பண்ண -அதுக்கு உத்தரமாக -நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோர் ஸ்ரீர் அநபாயிநீ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம -என்று உபதேசித்தான் -அது எங்கனே என்னில் –நித்யாநாம் நித்யனாய் -அவ்யய பிதாவான ஸர்வேஸ்வரன் ஸாது பரித்ராண அர்த்தமாக ஸர்வ ஜாதியிலும் அவதரித்து -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -முதல் திரு -44 என்றும் உமர் உகந்துகந்த உருவம் நின்னிருவம் -திருவாய் -8-1-4-என்கிறபடியே ஆஸ்ரிதர் உகந்த அவ்வோ திருமேனிகளாலே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தைகளிலும் யாதொருபடி ஸந்நிஹிதனாகிறான் -அப்படியே நித்யையாய் ஜகன்மாதாவாய் விஷ்ணுவுக்கு ஸம்பத் ரூபையாய் அநபாயினியாய் இருக்கிற இவளும் மாத்ருத்வ ப்ரயுக்தமான வாத்சல்யத்தாலே அவதரித்து தத் ரூப அனு ரூபங்களான அவ்வோ ரூப விசேஷங்களாலே ஸர்வத்ர சந் நிஹைதையாய் இருக்கும் -ஆகையால் உத்பத்திமத்வம் நித்யத்வ பஞ்சகம் அன்று-கர்மக்ருத உத்பத்தியாகில் இறே தோஷாயவாவது -அனுக்ரஹ அர்த்தமான அவதாரம் குணயவாம் இத்தனை -என்று பிரதி வசனம் பண்ணுகையாலே ஸர்வ வ்யாபித்துவ வசனம் அர்த்தாந்தர விஷயம் -இவ்வளவு அன்றிக்கே –புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா – (புநச் ச பத்ம ஸம்பூதா ஹ்யா நித்யோ அபூத் யதா ஹரி -யதா து பார்க்கவோ ராமஸ் ததா ஆஸீத் தரணீ த்வியம் -ராக்வத்வே அபவத் ஸீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷு சாவதாரேஷு விஷ்ணோர் ஏஷா அநபாயினீ தேவத்வே தேவதேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அனுரூபம் வை கரோத் யேஷா ஆத்மநஸ் தநும் -வி பு -1-9-143,144.145-பகவான் ஆதித்யனாய் அவதரித்த போது பிராட்டி பத்மையானாள் -பரசுராமனான போது தரணியானாள் -ராகவனான போது சீதையாகவும் கிருஷ்ண அவதாரத்தில் ருக்மிணியாகவும் ஆனாள் -மற்ற அவதாரங்களிலும் இவள் பகவானைப் பிரியாதவளாய் இருக்கிறாள் -அவன் தேவனாய் அவதரிக்கும் போது இவளும் தேவ தேஹம் எடுக்கிறாள் -மனுஷ்யனாகும் போது இவளும் மனுஷ்யையாகிறாள் -விஷ்ணுவின் தேஹத்துக்குத் தகுந்ததாகத் தன் தேஹத்தை அமைத்துக் கொள்கிறான் இப்பிராட்டி –)இத்யாதிகளாலே மேலும் இந்த விக்ரஹ வியாப்தியே ப்ரதிபாதிக்கப்பட்டது இறே சவும்ய அசவ்ம்யைர் ஜகத் ரூபைஸ் த்வயை தத் தேவி பூரிதம் –( -வி பு -1-9-121–தேவியே அழகியதும் க்ரூரமானதுமான உருவங்களால் இவ்வுலகமானது உன்னால் வியாபிக்கப் பட்டுள்ளது –) என்று மேலே விவரிக்கையாலே த்வயை தத் விஷ்ணு நா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் (த்வம் மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரிபிதா -த்வயைதத் விஷ்ணுநா சம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் -வி பு -1-9-126-தாயே எல்லா உலகங்களுக்கும் நீ அன்னை -தேவனாகிய ஹரி தந்தை -உன்னாலும் விஷ்ணுவாலும் இவ்வுலகம் வியாபிக்கப்பட்டுள்ளது –)என்கிறதும் விக்ரஹ வ்யாப்தி விஷயம் – ஆகையாலே இவளுக்கு ஸ்வரூப வ்யாப்தி பரிஹாரேண விக்ரஹ வ்யாப்தியே உள்ளது என்றும் நீர்ணீதமாய்த்து

(யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்-என்கிற விஷ்ணு புராண வசனத்துக்குத் விஷ்ணு எப்படி வியாபிக்கிறாரோ அப்படியே இவளும் வியாபிக்கிறாள் என்று கொள்ளாமல் -வியாபிக்கிற விஷ்ணு எத்தகையவனோ அத்தகையவளே இவள் -வியாப்தியைத் தொடாமல் அர்த்தம் சொல்லலாம் அன்றோ -யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்- எங்கள் ஆழ்வான் வியாக்யானம் -பகவான் விபுத்வேன ஸர்வ கதா வியாபகன் -அவனுடைய சக்தியாலேயே இவள் அணுவாக இருந்தாலும் எங்கும் எல்லாம் அவன் இருக்கிறானோ அங்கு எல்லாம் இவளும் வியாபிக்கிறாள் -ஸர்வ கதனான விஷ்ணு எந்தத்தன்மையானோ இவளும் அந்த ஸ்வ பாவங்களுடன் இருக்கிறாள் -சர்வகதராயும் கல்யாண குணங்கள் இவை பொது )

கிஞ்ச -இருவருக்கும் ஸ்வரூப வ்யாப்தியைச் சொல்லில் –தேவ திர்யங் மனுஷ்யேஷு புந்நாம பகவான் ஹரி ஸ்தீரீ நாம்நீ லஷ்மீர் மைத்ரேய -நா அநயோர் வித்யதே பரம் -அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -(மைத்ரேயரே தேவர் திர்யக் -ஊர்வன -மநுஷ்யர்கள் ஆகிய ஜீவ ராசிகளுள் ஆணாய் இருப்பது பகவான் ஹரியின் அம்சம் பெற்றது -பெண்ணாய் இருப்பது லஷ்மியின் அம்சம் பெற்றது -இவ்விருவரைக் காட்டிலும் மேலானதில்லை –)என்ற விபூதி விபாக விரோதம் பிரசங்கிக்கும் – த்விதீய ஹேதுவான ஸர்வ நியந்த்ருத்வம் பாகர் அஸித்தமாகையாலே சாத்ய சாதக சத்தேது வன்று -எங்கனே என்னில் ஸகல புருஷ நியந்த்ருத்வத்தை இறே அங்கு புருஷ தத்வ அந்யத்வ சாதகமாகச் சொல்லிற்று -அந்த ஸர்வ நியந்த்ருத்வம் இவளுக்குக் கூடாது இறே –ஏகோந நியந்த்ருத்வம் இறே இவளுக்கு உள்ளது – அது தன்னிலும் அந்தப்பிரவிஸ்ய நியந்த்ருத்வம் இல்லை இறே – தாவன் மாத்ரத்தாலே ஆத்மஜாத் யநந்தர்ப்பாவம் கொள்ளும் போது சர்வருக்கும் அபும்ஸ்தவம் பிரசங்கிக்கும் -ஸ்வ சரீர மாத்ரத்துக்கும் அநீசனாய் இருப்பான் ஒருவன் இல்லை இறே (பகவான் லஷ்மி ச ஆஸ்துமா ஜாதியில் சேர மாட்டார்கள் -அநு பிரவேசம் பண்ணியோ பண்ணாமலோ ஒரு சிலரை நியமிக்கிறார்கள் -என்னில் -சர்வ வியாபகம் -விக்ரஹ வியாபகம் குறைத்து -அந்தர் பிரவேசமும் இல்லாமல் -சர்வரையும் குறைத்து ஒரு சிலரை -என்று குறைத்தால் -ஜீவர்களும் அந்தரப்ரவேசம் இல்லாமல் ஒரு சிலரை நியமிப்பது; ஜீவன் ஜாதியில் பெற மாட்டார்கள் என்றும் வருமே )- ஆக இப்படி ஆத்ம தத்வ அந்யத்வ ஸாதகங்களான ஹேது த்வயமும் அசித்தங்களாகையாலும் நிரூப்ய நிரூபகங்களுக்கு அவிநா பாவம் உண்டாகிலும் லஷ்மீ ஸ்வரூப நிரூபித பகவத் ஸ்வரூபத்துக்கே வியாப்தி சொல்லுகையாலே ஜீவ தத்வ அந்தர் பூதையாய் தஜ்ஜாதீயத்வேந ப்ராப்தமான அணுத்துவத்தை ஸ்வரூபமாக உடைய இவளுக்கு ஸ்வரூபதோ விபுவான ஈஸ்வரனைப் போலே ஸ்வரூப வியாப்தி இல்லை என்று நிர்ணயிக்கப்பட்டது –

ஆகில் யத் ப்ரஹ்ம ரூபம் தத்தே அனுரூப ரூப விபவைர் காடோப கூடாநி -என்று ஸர்வ வியாபக ஸ்வரூபத்தோடே தந் நிரூபக பூதையான லஷ்மீ ஸ்வரூபத்துக்கு அவிநா பாவ சம்பந்தம் சொல்லுகையாலே சன்னியோக விஸிஷ்ட நியாய ஸித்தமான (சன்னியோக விஸிஷ்ட நியாயம் -சேர்க்கை விதிக்கப்பட்டதால் இருவருக்கும் இல்லை என்ற இருவருக்கும் உண்டு என்ற சொல்ல வேண்டுமே )ஸ்வரூப விபுத்வம் இவ்விடத்தில் சேரும்படி எங்கனே என்னில் -இப்படி அனுபபத்யமாந அர்த்த தர்சனத்தாலே உபபத்யமாந அர்த்தாந்தரத்தைக் கல்ப்பிக்கை யாகிற அர்த்தாப்பத்தி ப்ரமாண ஸித்தமமான அகடிதகடநா ஸக்தியாலே அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விபுவான ஈஸ்வர ஸ்வரூபத்தோடே பரிசமாப்ய வியாபித்து இருக்கையை இவ்விடத்தில் சொல்லுகையாலே விரோதமில்லை – எங்கனே என்னில் -மஹதோ மஹீயான்(அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ: | தமக்ரதும் பஶ்யதி வீத ஶோகோ தாது ப்ரஸாதாத் மஹிமாந மீஸம் –தைத் நா -9-1-அணுவைக் காட்டிலும் அணுவாய் மஹத்தைக் காட்டிலும் மஹத்தான பரமாத்மா இந்த ஜீவனுடைய ஹ்ருதய குகையில் இருக்கிறான் -கர்ம ஸம்பந்தம் அற்றவனாய் மஹிமசாலியான அப்பரமாத்மாவை அவன் அருளாலே கண்டு சோகம் நீங்கப் பெறுகிறான்) என்னும்படி அதி மஹத்துவமான ஈஸ்வரன் அணோரணீயான் -என்கிறபடியே அணீயாநாம் அணீயனாயக் கொண்டு அணு வியக்திகள் தோறும் அசங்குசிதமாக நிரங்குச ஐஸ்வர்யத்தோடே தன்னுடைய அகடிதகடநா சக்தியால் பரிசமாப்ய வர்த்திக்குமா போலே தத் ஸ்வரூப நிரூபக பூதையான இவளும் அணுவாய் இருக்கவும் நிரூப்ய வஸ்து வியாபித்து நிற்கும் இடம் எங்கும் ஈஸ்வரீம் என்று சுருதி ப்ரஸித்தமான தன்னுடைய அகடிதகடநா சக்தியாலே வியாபித்து விபூவாய் இருக்கை இவ்விடத்தில் விவஷிதமாகையாலே விரோதமில்லை இறே – ஆகையாலே ஸ்வரூபதோ விபுவான ஈஸ்வர தத்வ வ்யாவ்ருத்தியும் கேவலம் குணதோ விபுவான ஆத்ம தத்வ வ்யாவ்ருத்தியும் சைதன்ய அநாதாரமான அசித் தத்வ வ்யாவ்ருத்தியும் -பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசயித ஸ்தோத்ரமும் ஸித்திக்கும் இறே

(ஆகாசம் -குடாகாசம் -ஆகாசத்தில் ஒரு பகுதி தானே -அணுவுக்குள் விபுவான இவன் முழுவதுமாக பரிசமாப்ய வர்த்திக்கும் -ப்ரஹ்மத்தின் ஒரு பகுதி இல்லை ஜாதிவத் வியாபித்து இருக்குமாப் போலே-இவள் ஈஸ்வர சேதன அசேதன வ்யாவ்ருத்திக்குக் காரணங்களையும் அருளிச் செய்கிறார் -)

அனுரூப்யமாவது –ஈசேதே தேவ ஏக –ஈச்வரஸ் ஸர்வ பூதாநாம் (எல்லா வித்யைகளுக்கும் ஈசன் -எல்லா பூதங்களுக்கும் ஈஸ்வரன்)என்கிற தத் ஸ்வரூபத்துக்கு அனுரூபமாக அஸ்யே ஸாநா –ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் என்னும்படி இருக்கை இறே உசிதம் -அதவா -அவனுடைய சத்தை ஏதத் அதீனையாய் இவளுடைய சத்தை தத் அதீனையாய் இருக்கை அந்யோன்ய அனுரூபத்துவமாகவுமாம் -எல்லாப்படியாலும் உனக்கேற்கும் –10-10-6- என்னும்படி துல்ய சீலையாய் இருக்கை இறே அனுரூப்யமாவது –

(அவனுடைய சத்தை ஏதத் அதீனையாய் இவளுடைய சத்தை தத் அதீனையாய் இருக்கை -இன்றியமையாமை -உண்டே -மாயா சீதா -விருத்தாந்தம்)

நநு விபுவான சர்வேஸ்வரன் அகடிகடநா சாமர்த்தியத்தாலே அணு ஸ்வரூபனாய் கொண்டு அணு வியக்திகள் தோறும் ஜாதிவத் வியாபித்து இருக்குமாப் போலே -இவளும் அணுவாய் இருக்கவும் அகடிகடநா சக்தியாலே விபுவாய்க் கொண்டு வியாபித்து இருக்கும் என்கிறவிடத்தில் த்ருஷ்டாந்தம் கூடாது -எங்கனே என்னில் -விபுவான ஈஸ்வரனுக்கு உபாத் யவச்சேத மாத்ரத்தாலே இறே அணுத்வ விபுத்வங்கள் சொல்லுகிறன-ஸ்வரூபதஸ் அணுத்துவம் சொல்ல ஒண்ணாது இறே -அகடிகடநா சக்தியாலே அணுத்துவ மஹத்வ ரூப விருத்த சமுச்சயம் கூடும் என்னில் அப்போது ஸர்வ அத்வைத பேதாபேத பக்ஷங்களும் அங்கீகார்யங்களாம் இறே -ஆகையாலே பிரதிவஸ்து பூர்ணத்வமாவது -ஓரொரு உபாத் யவசின்ன ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல சக்தியை யுடைத்தாய் இருக்கை -இங்கன் அன்றிக்கே அந்தர் வியாப்தியை ஸ்வரூப சாமாப்ய வியாப்தி என்று அங்கீகரிக்கும் போது பஹிர் வியாப்தி சேராது -கிஞ்ச -நிரவயமான ஆத்மாவுக்கு ஷட் பாவ ராஹித்யத்தாலே உள்ளென்றும் புறம்பென்றும் ஒரு வ்யவஹாரம் கூடாமையாலே அந்தர் வ்யாப்தியே அங்கீகார்யம் -ஆகையாலே பகவத் அந்தர் வியாப்தி த்ருஷ்டாந்த பலத்தாலே லஷ்மீ விபுத்வம் அஸாத்யம்

கிஞ்ச -ஸ்வரூப வியாப்தியும் விக்ரஹ வியாப்தியும் இன்றிக்கே அகடிகடநா சக்தியாலே அணு ஸ்வரூபையாய் இருக்கவும் விபுவோடே வியாபித்து இருக்கும் என்னில் ஸ்வரூப விகாரித்வம் அங்கீகரித்ததாய் விடும் -அப்போது ஆத்ம நிர்விகாரத்வ ப்ரதிபாதிக பிரமாணங்களுக்கு விரோதம் பிரசங்கிக்கும் -ஆனபின்பு லஷ்மீ ஸ்வரூப விபுத்வமே அங்கீகார்யம் -ஜீவத்வே அபி விபுத்வ அங்கீகாரத்திலும் அணுத்வே ஸதி சேதனத்வம் என்கிற ஜீவ லக்ஷணத்துக்கு அவ்யாப்த்யதி வ்யாப்தி தோஷ பரிஹார அர்த்தமாக அணு சேதனத்வம் ஏதத் வ்யதிரிக்த ஜீவ விஷயம் -பரதந்த்ர சேதனத்வம் ஏதல் லக்ஷணம் என்றும் ஸ்வ தந்த்ர சேதனத்வம் ஈஸ்வர லக்ஷணம் என்றும் லஷண பேதம் கல்பிக்கலாம் இறே -அன்றிக்கே ஜீவ லக்ஷணத்தில் அணு ஸப்தம் பரிச்சின்ன மாத்ர பரமாய்-பகவத் பராதீனையான இவள் விஷயத்தில் ஸ்வதந்த்ர குண பரிச்சேதன வர்த்திக்கிறதாகவுமாம் -அதாவது -ஸ்வரூபதோ நிரதிசயத்வே யபி பாரதந்தர்யாதி யோகத்தாலே குணதஸ்ஸ அதிசய யுக்தையாய் இருக்கும் என்றபடி -இத்தால் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் ஸ அதிசயரான சேதனரில் வ்யாவ்ருத்தியும் -தத் உபயதோ நிரதிசயனான ஈஸ்வரனில் வ்யாவ்ருத்தியும் -ஸித்திக்கும் இறே -ஆகையால் ஜீவ தத்வ அந்தர் பாவத்திலும் ஸ்வரூபதோ விபுவாகையாலே பகவத் ஸ்வரூப அனுரூபத்வமும் அதிசயேந ஸ்துதியும் சித்திக்கையாலே அணுத்துவம் அநங்கீகார்யம் இறே என்னில்–மைவம் -சர்வேஸ்வரன் அணு த்ரவ்யங்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக்கும் என்னுமிடம் கூடாதாகில் -அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்தித–அந்தப் ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜனாநாம் -யஸ் ஆத்மாநமந்தரோ யமயதி -என்று (யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருஸ்யதே ஸ்ரூயதே அபி வா அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வியாப்ய நாராயணஸ் ஸ்திதஸ் -தை நா -11-இவ்வுலகில் காண்பனவும் கேட்பனவாயும் இருக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான்)(அந்தப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -யஜுர் ஆர -3-11-21-ஸர்வ அந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான்)(யஸ் ஆத்மனி திஷ்டன் ஆத்மந அந்தரோ யமாத்மா ந வேத யஸ்யாத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா அந்தர்யாம் யம்ருத -ப்ருஹ் -5-7-22- எவனொருவன் ஆத்மாவில் நின்றும் கொண்டும் ஆத்மாவின் உள்ளிருந்தும் விளங்குகிறானோ எவனை ஆத்மா அறியவில்லையோ எவனுக்கு ஆத்மா சரீரமோ எவன் ஆத்மாவை உள்ளே நுழைந்து நியமிக்கிறானோ அந்தப் பரமாத்மாவே அம்ருதமயனாய் உனக்கும் அந்தர்யாமியாய் விளங்குமவன் )என்று அந்தர் வியாப்தியைச் சொல்லுகிற பிரமாணங்களுக்கு வையர்த்தமும் -பரந்த தண் பரவையுள் நீர் தொறும் –கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் –பரந்த அண்டமிது எனக் கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே -என்கிற திவ்ய ஸூக்தியோடும் விரோதிக்கும் -வியாப்பிய வியாபகங்களான ஜீவ ஈஸ்வர ஸ்வரூபங்கள் ஞான மயங்களாகையாலே தேஜோ த்ரவ்யங்களாய் அதிஸ்வச் சங்களாய்க் கொண்டு ப்ரதிகாதா பாவத்தாலே அந்யோன்யம் அந்தப் பிரவேசிக்கை மிகவும் உபபன்னமாகையாலே ஜாதி வியக்தி தோறும் பரிஸமாப்ய வர்த்திக்குமா போல பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்று ஸ்ருதி ஸித்தமான அகடிகடநா சக்தியாலே வியாப்ருத வஸ்துக்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக்கக் குறையில்லை இறே -இப்படி ஸ்ருதி ஸித்தமாய் யுக்தி யுக்தமுமான அந்தர் வியாப்தி பஹிர் வியாப்திக்கு விரோதமாகாமையாலும் விருத்த சமுச்சய பக்ஷங்களில் விருத்த சமுச்சய நிபந்தனமாக ஈஸ்வரனுடைய அகடிகடநா சக்தியைக் கொள்ளாமையாலே பரபஷத்தின்படி ஆகாமையால் அது தத் பிரதிபந்தி யல்லாமையாலும் விபு ஸ்வரூபன் அகடிகடநா சக்தியாலே அணுக்கள் தோறும் ஸ்வரூபேண பரிஸமாப்ய வர்த்திக் கிறாப் போலே பிராட்டியும் அணு ஸ்வரூபையாய் இருக்கவும் அகடிகடநா சக்தியாலே விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கையாகிற விபுத்வம் இஸ் ஸ்லோகத்தில் விவஷிதமாகையாலே விரோதமில்லை –

(ஸ்ருதி ஸித்தமாய் யுக்தி யுக்தமுமான அந்தர் வியாப்தி பஹிர் வியாப்திக்கு விரோதமாகாமையாலும்-என்றது ஞான த்ரவ்யம் தேஜோ விஷயம் தடுக்காது -கீழே சொல்லி -ஜாதியானது வ்யக்தி தோறும் முழுவதும் வர்த்திக்குமே -அகடி கடநா சாமர்த்தியத்தாலே முழுவதும் வர்த்திக்கலாம் -இவ்வாறு இரண்டையும் கொள்ளும் போது பிரதிபந்தகங்கள் சொல்ல முடியாது என்றபடி -)

கிஞ்ச –ஏக மேவ அத்விதீயம் — (ஸதேவ ஸோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக் -6-2-1-குழந்தாய் ஆதியில் சத்தாகிற ப்ரஹ்மமாகவே இவ்வுலகம் இருந்தது -ஒன்றாகவே விளங்கிற்று -இரண்டு அற்றதாய் விளங்கிற்று -நிமித்த உபதான சஹகாரி காரணங்களாக ப்ரஹ்மமே இருந்தது என்றபடி –)என்கிறபடியே ஜகத்துக்கு த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே யாகையாலே –ப்ரக்ருதிச்ச ப்ரதிஞ்ஞாத் த்ருஷ்டாந்த அநுப ரோதாத் – (ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23-ப்ரஹ்மம் உபாதான காரணமாகவும் ஆகிறது -அப்படி இருந்தாலேயே ஒன்றை அறிந்தால் எல்லாமே அறிந்ததாகும் என்னும் ப்ரதிஜ்ஜையும் ம்ருத் பிண்ட கடாதி த்ருஷ்டாந்தமும் ஓட்டுமாகையால்-)என்கிற ஸூத்ர பிரகாரத்திலே உபாதான காரணமாய்க் கொண்டு ப்ரஹ்மம் ஜகத்தாகப் பரிணமிக்கும் போது தன்னுடைய சக்தியாலே ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராமல் பரிணமிக்குமா போலே -இவளும் அணுவாய் இருக்கவும் -அகடிகடநா சக்தியாலே தன் ஸ்வரூபத்துக்கு விகாரம் வாராமல் விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கக் குறை இல்லாமையாலும் -லஷ்ய வர்க்கத்துக்கு எல்லாம் ஏறுகிற லக்ஷணத்தை விட்டு லஷ்ய விபாகம் பண்ணி லஷண பேதம் கல்பிக்கை யுக்தம் அல்லாமையாலும் -ஜீவ விஷயத்தில் அணு ஸப்தம் -ஜ்யாயா நந்தரிஷாத் – (ஏஷ ம ஆத்மா அந்தர் ஹ்ருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா ஜ்யாயா நந்தரிஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாந் அப்யோ லோகேப்யஸ் -சாந்தோக்ய -3-14-3- ஹ்ருதயத்தின் உள்ளிருக்கும் இந்த என்னுடைய ஆத்மாவானவன் பூமியைக் காட்டிலும் அந்தரிக்ஷத்தைக் காட்டிலும் தேவலோகத்தைக் காட்டிலும் இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காட்டிலும் பெரியவன் –)என்கிற மஹத்வ பிரதி கோடியான அணுத்துவத்தைச் சொல்லுகையாலே வாலாக்ரே–இத்யாதிப்படியே ஸூஷ்ம பரிணாமத்தைச் சொல்லுமத்தனை அல்லது பரிச்சின்ன மாத்ரபரம் அல்லாமையாலும் ஜீவ தத்வ அந்தர் பூதையாய் -தஜ் ஜாதீயத்வேந ஆகதமான அணுத்துவத்தை ஸ்வரூபமாக யுடைய இவள் தம்முடைய அகடிகடநா சக்தியாலே ஸ்வ விகார ரஹிதமாக விபு ஸ்வரூபத்தோடே வியாபித்து இருக்கும்படியை இஸ் ஸ்லோகத்தாலே வியாக்யானம் பண்ணி யருளினாராய்த்து –

அதவா -விக்ரஹ வியாப்தியை (மட்டுமே)இஸ் ஸ்லோகத்திலே ப்ரதிபாதிக்கிறது என்றும் அருளிச் செய்வர் -ஆகில் –யத் ப்ரஹ்ம ரூபம் -என்று ப்ரதமம் ஸ்வரூபத்தைச் சொல்லுவான் என் என்னில் –மூர்த்தம் ப்ரஹ்ம -என்று சொல்லுகிற திவ்ய விக்ரஹம் திவ்யாத்ம ஸ்வரூபத்திலும் ப்ரியதரமாய் இருக்கும்படியை பிரகாசிப்பிக்கைக்காக முந்துற முன்னமே ஸ்வரூபத்தை ப்ரதிபாதித்தது அத்தனை என்றும் யோஜித்துக் கொள்வது -இந்த யோஜனையில் –ஹரேச் சாந்தாநந்த மஹா விபூதியில் பரமம் ப்ரஹ்ம யத் ஸ்வரூபம் ததோ அபி தத் ப்ரியதரம் அத்யத்புதம் மூர்த்தம் ப்ரஹ்ம யத் ரூபம் -யத் விக்ரஹம் அஸ்தி தச்ச யதா ஸூகம் விஹரதோ ஹரேரந்யாநி யாநி ஸர்வாணி ரூபாணி சந்தி தாநி ச தைஸ்தைர் அனுரூப ரூபா விபவை –விக்ரஹ விபவை -காடோப கூடா நி –ஸ்லிஷ்ட பரிஷ்வங்காந் யாஹூ -இத் யன்வய

பிரதம யோஜனையில் -ஹரேச் சாந்தாநந்த மஹா விபூதி-பரமம் ப்ரஹ்ம யத் ரூப மஸ்தி தச்ச ததோபி ப்ரியதரம் அத்யத்புதம் மூர்த்தம் ப்ரஹ்ம யத் ரூபமஸ்தி தச்ச யதா ஸூகம் விஹரதோ ஹரேரந்யாநி யாநி ஸர்வாணி ரூபாணி சந்தி தாநிச தைஸ்தைரநு ரூப ரூப விபவை –ஸ்வரூபாதி விபவை காடோப கூடாந்யாஹு -என்று ஸ்வரூபாதிகளை பிரத்யேகமாக சம்பந்தித்து யோஜித்துக் கொள்வது –

ஆக இஸ் ஸ்லோகத்தாலே–யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -என்று தொடங்கி –தத் விஜிஜ்ஞாஸஸ்வ –என்றும் (யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே-யேந ஜாதாநி ஜீவந்தி -யத் பிரயந்த்யபி ஸம் விசந்தி-தத் விஜிஜ்ஞாஸஸ்வ-தத் ப்ரஹ்மே தி -தைத்ரியம் பிருகுவல்லி -எதனிடமிருந்தது இந்த பூதங்கள் பிறக்கின்றனவோ -உண்டானவை எதனால் உயிர் வாழ்கின்றனவோ -பிரளய காலத்தில் எதனிடம் லயிக்கின்றனவோ அதுவே ப்ரஹ்மம் என்று அதை அறிவாயாக – )-தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத -)ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாநிதி சாந்த உபாஸீத–(சாந்தோக்யம் -3 -14-1)அந்த ப்ரஹ்மத்தினிடம் இருந்தே பிறக்கையாலும் அதிலேயே லயிக்கையாலும் அதனாலேயே உயிர் வாழ்வதாலும் -இவையெல்லாம் ப்ரஹ்மம் அன்றோ என்றும் சாந்தனாய் உபாஸிக்கக் கடவன் )என்றும் –காரணந்து த்யேய (அதர்வசிகை )(காரண வஸ்துவே த்யானிக்கத் தக்கது )-என்றும் –அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாசா -1-1-1-(கர்மவிசாரத்தின் பிறகு அக்காரணத்தாலேயே ப்ரஹ்மத்தை அறிவதில் இச்சை உண்டாகிறது )-என்றும் -ஜன்மாத்யஸ்ய யத-1-1-2 (இவ்வுலகிலன் பிறப்பு முதலியவை எத்தனிடமிருந்தோ –அதுவே ப்ரஹ்மம் )என்றும் –த்யேயோ நாராயணஸ் ஸதா -(ஆலோட்ய ஸர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புந புந -இதமேகம் ஸூ நிஷ்பன்னம் த்யேயோ நாராயணஸ் ஸதா -எல்லா ஸாஸ்த்ரங்களையும் ஆராய்ந்து மறுபடியும் மறுபடியும் விசாரித்தாலும் நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் என்னும் பொருளே நன்கு தேறி நிற்கும் ) என்றும் த்யேயஸ் ஸதா -என்றும் -சொல்லுகிற ப்ரமாண பிரகாரத்திலே

பகவத் த்யேயத்வ ஹேதுவான ஜகத் காரணத்வத்தை ப்ரதிபாதிக்கிற நாராயண ஸப்த பர்யாயமாய் பூர்வ வாக்கியத்தில் படியே -ஸ்வீ க்ருத உபாயனுக்கு ப்ராப்தி பிரதிபந்தக ஸகல பாப நிவர்த்தந கத்வ ஹேதுகமாய் -ஸ்வ இதர ஸமஸ்த ஸஹாயாந பேஷ உபாயத்வ ப்ரகாசகமாய்–

உத்தர வாக்கியத்தில் படியே ப்ரார்த்திதப்ராயனுக்குப் பரம ப்ராப்யமான அனுபவ கைங்கர்யாதிகளில் ஸ்வ போக்த்ருத்வாதி ரூப விரோதி நிவ்ருத்திக்கும் வாசகமாய் இருக்கிற ஹரி ஸப்தத்தை ப்ரயோகித்து -தத் வாஸ்யனான ஸர்வேஸ்வரனுடைய ஸ்வரூபாதிகள் -புருஷகார ஏக லக்ஷணையாய் -ப்ராப்ய ஏக வேஷையாய் -கைங்கர்ய பிரதி சம்பந்திநியுமாய் -தத் வர்த்தகையுமான பிராட்டியினுடைய ஸ்வரூபாதிகளாலே காடாச் லிஷ்டங்களாய் இருக்கும் என்றும் திவ்ய தம்பதிகளுடைய நித்ய யோகத்தை அருளிச் செய்கையாலே-

ப்ரயத பாணி சரணமஹம் ப்ரபத்யே (கை கூப்பியவனாய் நான் சரண் அடைகிறேன்)-ஸ்வஸ்தி சம்பாதேஷ் வபயம்நோ அஸ்து (மங்களங்களுக்கு இடையூறு ஏற்படும்போது எங்களுக்கு பயமின்மை யுண்டாகட்டும் )-என்கிற ப்ரமாண ப்ராகாரத்திலே வாக்ய த்வ யுக்த உபாய உபேயங்களை விசதீகரித்து அருளினார் என்னுமிடம் வ்யக்தமாகிறது –

விஸ்வம் நாராயணம் ஹரிம் -என்று ஸ்ருதியும் நாராயண ஸப்தத்தோடு ஹரி ஸப்தத்தை ஸஹ படித்தது இறே –வாஸூ தேவம் ஜகத் யோநிம் நவ்மி நாராயணம் ஹரிம் (வாஸூ தேவ ஹரி சப்த வாஸ்யனாய் ஜகத்காரணனான ஹரியை நமஸ்கரிக்கிறேன் )-ரஷிஷ்யதி ஹரி ஸ்ரீ மான் ஸ்ரீ தாநிதி நிச்சயாத்(ஸ்ரீ மானான ஹரி அடியார்களைக் காத்து அருள்வான் என்னும் நிச்சயத்தினால் ) -என்று ஜகத் காரணத்வ வாசகமான நாராயண ஸப்தத்தோடு ஹரி ஸப்தத்தை பிரயோகித்தது -தத் வாஸ்யனோடே லஷ்மீ ஸம்பந்தத்தையும் அனுசந்தித்து உபாய வரணம் பண்ணி –நாராயணாய நாதாய ஹரயே ஸ்ரீ மதே நம(ஹரி ஸப்த வாஸ்யனான ஸ்ரீ மந் நாராயணாகிற ஸ்வாமிக்கு நமஸ்காரம் ) -என்று ஸ்வ போக்த்ருத்வாதி விரோதி நிவர்த்தகனாய் ஆர்த்தி ஹரனாகையாலே ஹரி ஸப்தம வாஸ்யனாய் -ஸர்வ சேஷியுமான நாராயணனும் -ஸர்வ ஸ்வாமிநியுமான பெரியபிராட்டியாருமான நித்ய யோகத்தை ப்ரதிபாதித்து அனுபவ கைங்கர்யாதிகளை பிரார்த்தித்தார்கள் இறே பரம வைதிகரும் –கதிர் கம்யச்சாசவ் ஹரி -என்னக் கடவது இறே (அவித்யாதோ தேவே பரிப்ருடதயா வா விதி தயா ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதி மன்யா மவிதுஷாம் -கதிர் கம்யஸ் சாஸவ் ஹரிரிதி ஜிதந்தாஹ்வய மநோ ரஹஸ்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சவுனக முனி -பட்டர் முக்தகம் -பகவத் விஷயத்தில் அறியாமையினாலாவது நன்றாக அறிந்து இருப்பதினாலேயாவது தனது பக்தியின் ஆதிக்யத்திலாவது இவ்வுலகில் வேறு உபாயத்தை அறியாதவர்களுக்கு உபாயமும் உபேயமும் இந்த ஹரியே என்றும் ஜிதந்தே என்ற பெயரையுடைய மந்திரத்தின் ரஹஸ்யத்தை பகவான் சவுனகமுனி வெளிப்படுத்தினார் அன்றோ)-இதுதான் பகவான் ஹரி என்கிறபடியே உபாய பூர்த்தியையும் உபேய பூர்த்தியையும் உடைத்தான திருநாமம் இறே

—————

ஆக-சதுஸ் ஸ்லோகியாலே -ஹ்ரீச் ச தே லஷ்மீச் ச பத்ன்யவ் –விஷ்ணு பத்னீ -விஷ்ணோர் ஸ்ரீ -தேவ தேவ திவ்ய மஹிஷீம் –இத்யாதி ப்ரமாண ஸித்தமான விஷ்ணு பத்நீத்வத்தையும்
அஸ்ய ஈஸாநா ஜகத–ஈஸாநா தேவீ புவநஸ்ய -ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற ப்ரமாண ப்ரதிபாத்யமான உபய விபூதி சேஷித்வத்தையும் உடையளாய் –
தாம் பத்ம நேமிம் சரணமஹம் ப்ரபத்யே –என்கிறபடியே அசரண்ய சரண்யையாய் (பற்றிலார் பற்ற நின்றவன்)-
உதாரம் –என்கிறபடியே ஸகல புருஷார்த்த பிரதையாய்
சமன்வய அவிரோத சாதன பல விஷயமான சாரீரிக ஸாஸ்த்ர சதுர் அத்யாயீ சமதிகதனான
ஸர்வேஸ்வரனுக்கு
ஸர்வ பிரகார அபிமத அனுரூப ஸ்வரூப ரூப குணாதிகளை யுடையளாய்க் கொண்டு
தத் ஸ்வரூபாத் யவிநா பூதையாய் இருக்கையாலே
தேவ ஜூஷ்டாம் (சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம் தாம் பத்மினீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே-ஸ்ரீ ஸூக்தம் -5–உலகோர்க்கு குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும் தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும் வண்மை மிக்கவளும் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும் ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்-அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன் –உன்னை வேண்டுகிறேன்-என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும்)என்கிற தந் நித்ய யோகத்தையும் உடையளாய் இருந்துள்ள பெரிய பிராட்டியாருடைய வைபவத்தை பஹு முகமாகப் பேசி அனுபவித்து
இப்படி ஸர்வ பிரகாரத்தாலும் மாத்ரு தேவோ பவ -என்கிற வேதாந்த வாக்யார்த்தத்தை ஸ்வ ஆஸ்ரிதரான அஸ்மதாதிகளும் -அறிந்து -அனுசந்தித்து -உஜ்ஜீவிக்கும் படி உபகரித்து அருளினாராய்த்து –

(மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -என்று கொண்டு இச் சேதனனுக்கு ஸ்வரூப அநுரூபமாக உபகாரகராகிறார் -1-அகில ஜகன் மாதாவான பிராட்டியும் -2-அவ்வயயஸ் பிதாவான ஈஸ்வரனும் -3-அறியாதது அறிவித்த ஆச்சார்யனும் -4-அதிதி ஸப்த வாஸ்யனான அவனடியாரும் –என்று இந் நால்வர் பக்கலிலும் உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே உத்தேச்ய பிரதிபத்தி பண்ணி உஜ்ஜீவிக்கக் கடவன் என்றும் வேதாந்தங்களிலே வ்யாக்யாதமாக விதிக்கையாலே விசேஷஞ்ஞர் எல்லோரும் விரும்பி அனுஷ்ட்டிக்க வேண்டும்படி விசேஷ யர்த்தங்களாய் இறே இவ்வர்த்தங்கள் தான் இருப்பது)

ஸ்தோத்ர-சதுஸ் ஸ்லோகீ -இரண்டிலும் -நாலும் உண்டேயாகிலும் ஒன்றுக்கு பிரதம வாக்யத்திலே நோக்கு -ஒன்றுக்கு த்வதீய வாக்யத்திலே நோக்கு -ஸ்வாதயந் நிஹ ஸர்வேஷாம் த்ரயந்தார்த்தம் ஸூ துர்க்ரஹம் ஸ்தோத்ர யாமாஸ (யோகீந்த்ரஸ் தம் வந்தே யாமுநாஹ்வயம் -ஆளவந்தார் தனியன்-அறியவரிதான வேதாந்தார்த்தத்தை அனைவருக்கும் ரஸிக்கச் செய்து கொண்டு ஸ்தோத்ரம் செய்தருளின யாமுந முனிவரை ஸ்துதிக்கிறேன்)என்று கொண்டு துர்க்ரஹமான வேதாந்தார்த்தங்களை ஸூக்ரஹ ஸ்வாதுக்களாம் படி ஸ்தோத்ரமாகப் பண்ணி யருளினார் என்கையாலும் இப்பிரபந்தங்களில் ப்ரதிபாதிக்கிற அர்த்தங்களை நிரூபித்துப் பார்த்தால் அவ்வர்த்தங்களாயே இருக்கையாலும் இந்நாலு வாக்யத்தையும் இவற்றுக்கு வாக்யார்த்தமாக யோஜிக்கலாம் இறே

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–22

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுதுபோக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

மஹதி திவ்ய யோக பர்யங்கே அனந்த போகினி ஸ்ரீ மத வைகுண்ட ஐஸ்வர்யாதி
திவ்ய லோகம் ஆத்ம காந்த்யா விஸ்வம் ஆப்யா யந்த்யா  சேஷ சேஷாச நாதி சர்வ பரிஜனம்
பகவத தத்தத வஸ்தோ சித பரிசர்யாயாம் ஆஜ்ஞா பயந்த்யா சீல ரூப குண விலாசாதிபி
ஆத்ம அனுரூபயா ஸ்ரீ யா சஹ ஆஸீனம்-(ஸ்ரீ வைகுண்ட கத்யம்)ஸ்ரீமத் வைகுண்ட நகரம் முதலான திவ்ய லோகங்கள் எல்லாவற்றையும் தன் காந்தியால் போஷிப்பவளாய் சேஷன் விஷ்வக்சேனர் முதலான பரிஜனங்கள் அனைவரையும் அந்தவந்த நிலைகளுக்குத் தகுந்த கைங்கர்யங்களிலே ஆஜ்ஜை இடுபவளாய் -சீல ரூப குண விலாஸாதிகளாலே தன்னை ஒத்தவளான ஸ்ரீ தேவியுடன் திருவனந்தாழ்வான் மடியிலே எழுந்தருளி இருப்பவனை

யத் பதாம்போஜ கடிதா பிரணதிர் துர்லபாந் யபி
பதாநி பரமாம் முக்திம் ஸூதே தாம் ஸ்ரீ யம் ஆஸ்ரயே
—ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன்–யாருடைய திருவடித் தாமரைகளை சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ப்ரணாமமானது -துர்லபமான பெரிய பதங்களையும் அளித்து அதற்கும் மேலான -தன்னில் மேம்பட்ட -கைவல்யமும் முக்தி தானே -ஆகவே இங்கு பரமமான ஸ்ரீ வைகுண்டம் ப்ராப்தியையும் அருளும் -அப்படிப்பட்ட ஸ்ரீ மஹா லஷ்மியை வணங்குகிறேன்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கீதா சதுஸ்லோகி -ஸ்ரீ பகவத் திரு அவதார ரஹஸ்யங்கள்-

October 18, 2024

ஸ்ரீ பகவாநுவாச-
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந.–
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப—
৷৷4.5৷৷

ஸ்ரீ பகவாநுவாச-கண்ணன் கூறினார்
ஹே அர்ஜுனா
தவ ச -உனக்குப் போலே
மே -எனக்கு
பஹூநி ஜந்மாநி .–கணக்கற்றவையான பிறவிகள்
வ்யதீதாநி-கடந்து விட்டன
ஹே பரந்தப-எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே
தாநி ஸர்வாணி-உன்னுடைய மற்றும் என்னுடைய எல்லாப் பிறவிகளையும்
அஹம் -நான்
வேத -அறிவேன்
த்வம் -நீ
ந வேத்த -அவற்றை அறிய மாட்டாய்

ஸ்ரீ பகவான் கூறினான் -அர்ஜுனா உனக்குப் போலே எனக்கும் கணக்கற்ற பிறவிகள் கடந்து விட்டன –
அவை அனைத்தையும் நாம் அறிவேன் -ஆனால் நீ அவற்றை அறிய மாட்டாய் –

நான்கு ஸ்லோகங்கள்-ஆறு ரஹஸ்யங்கள் –அவதாரஸ்ய சத்யத்வம் –என்கிறான் இதில் —

மேலே மூன்று ஓன்று ஓன்று ஆக ஆறும் அருளிச் செய்வான் –

உன்னைப் போலே பல பிறவிகள் எனக்கும் கழிந்தன – -த்ருஷ்டாந்தம் அறிந்த ஒன்றை காட்டியே தானே சொல்ல வேன்டும் –
பிரசித்தம் -ஸ்தூலா நிந்ததி நியாயம் —
நஸ சீதாத் –ந அஹம் அபி ராகவா -அக்குளத்தில் மீன் -என்றான் –
பத்து என்பது மனசில் பிடிக்க– அஜாயமானோ பஹுதா விஜாயத-
எனக்கு உன் பிறவி என் அவதாரங்கள் எல்லாம் தெரியும் -எல்லாம் மெய்யே
உனக்கு பிறப்பு-எனக்கு அவதாரம் -ஆவிர்பூதம் —
பிறந்தவாறும் -ஒருத்தி மகனாய் பிறந்து -எளிமையை அனுபவிக்க ஆழ்வார்கள் –

அஜாய மானோ பஹுதா விஜயதா
சன்பம் பல பல செய்து
அணைவது அரவணை மேல் –இணைவனாம் எப்பொருட்கட்க்கும்
தேவ -உபேந்த்ரன்
மனுஷ்ய -ராம கிருஷ்ண
சங்கமம் விலங்கு வராஹ நரஸிம்ஹ ஹயக்ரீவ
ஸ்தாவரம் குப்ஜா மரம்
விஜாயதே -நன்றாக -பிறக்கப் பிறக்க தேஜஸ் விஞ்சி அன்றோ அவனுக்கு -ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்

ஜென்ம ப்ரதிபாஸம் -தோற்றங்கள் கழிந்து விட்டன சொல்லாமல் ஜென்மங்கள் கழிந்து விட்டன
உண்மை என்பதை நேராகச் சொல்லாமல் பல -பஹத்வம் -முடிந்தமை -கழிந்தமை -பல பிறவிகள் கழிந்து விட்டன
தவ ச -அவனது த்ருஷ்டாந்தம் -அதே போல் உண்மை யானவையே –
குண ராசிகளின் வெளிப்பாடே அவதாரங்கள்
அவற்றையும் எண்ண முடியாது -இவற்றையும் எண்ண முடியாது –
முன்பு விவஸ்வானுக்கு உபதேசித்தது இவன் நினைவில் உள்ளது என்பதைக் காட்டவே -எனது -உனது -முன் பிறவிகளை அறிவேன் -என்கிறான்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன.
உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.

அர்ஜுனனோ கர்ம பந்தத்துக்கு உட்பட்ட ஜீவன். ஆகையால் பழைய பிறவிகளைப் பற்றிய ஞாபகம் இல்லை.
கிருஷ்ணன் அவதார புருஷன். ஈசுவரனே ஒரு வடிவத்தின் மூலம் தன்னை விளக்குவது அவதாரமாகும்.
அவர் நித்திய சுத்தனாக, முக்தனாக, பூரண ஞானமுடையவராக இருக்கிறார்.
ஆகையால் தாம் முன்பு எடுத்த எல்லா ஜன்மங்களும் அவருக்குத் தெரியும்.
வேறு ஒரு வடிவந்தாங்கியிருந்து விவஸ்வானுக்கு அன்று புகட்டினார்.
இன்று இவ்வடிவெடுத்து அர்ஜுனனுக்குப் புகட்டுகிறார்.

ஜீவர்கள் வினையில் கட்டுண்டு பிறவி எடுக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது.
பகவானோ நித்திய முக்தன். தர்மம் அதர்மம் ஆகிய வினையேதும் அவரிடத்து இல்லை.
பின்பு அவர் பிறவி எடுப்பது எப்படி? விடை வருகிறது:

৷৷4.5৷৷ஷ்ரீபகவாநுவாச அநேந ஜந்மநஃ ஸத்யத்வம் உக்தம்’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’ இதி வசநாத்,
தவ ச இதி தரிஷ்டாந்த தயா உபாதாநாச்ச.

৷৷4.5৷৷ஏஷூத்தரஂ க்ரமாத் பகவாநுவாச’பஹூநீத்யாதிபிஃ’. நஹி பூர்வ ஜந்மநாமேகத்வபஹுத்வே பரிஷ்டே, ந ச தஜ்ஜ்ஞாநாஜ்ஞாநே இதி ஷங்காயாமாஹ ‘அநேநேதி’. கதஂ ஜந்மநஃ ஸத்யத்வமுக்தஂ? பஹுத்வாதீதத்வதஜ்ஜ்ஞாநாதி ஹி வாசநிகதயா ப்ரதீயத இத்யத்ராஹ ‘பஹூநீதி’.’அயமபிப்ராயஃ’ ‘இதாநீந்தநஸ்த்வஂ ததாநீந்தநாய கதமுக்தவாந்?’ இதி ப்ரஷ்நே ஜந்மாந்தரேணாஹமுக்தவாந், தச்சேதாநீமநுஸந்தாய வதாமீதி ஸாக்ஷாதுத்தரமுச்யேத, தஸ்ய ச ப்ரஷ்நஸ்யாந்யபரத்வஸ்ய பூர்வஂ ஸஹேதுக முக்தத்வாதவஷ்யஂ ப்ரஷ்டவ்யேஷ்வர்தேஷு யத்பரத்வமத்ர வ்யாகர்துஂ ஷக்யஂ தத்பராண்யேவ பஹூநீத்யாதி விஷேஷணாநி; ஸத்யத்வே ஹி பஹுத்வாதீதத்வாதீநி ஸ்வரஸாநி ஜந்மாநீதி சோக்தம், ந ஜந்ம ப்ரதிபாஸா இதி,’தவ ச'(ஜென்ம தோற்றம் என்று சொல்லாமல் ஜென்மம் என்பதால் அத்வைதி மதம் நிரசனம் )இத்யபரிஷ்டஸ்யார்தஸ்ய உபாதாநமப்யேதத்ஸத்யத்வதரிஷ்டாந்தாபிப்ராயமந்தரேண ந கடதே, ந சார்ஜுநஸ்ய ஜந்ம மித்யா, தஸ்ய வா ததாத்வப்ரதிபாஸஃ, தத்ஸம்பவே வா கரிஷ்ண ஜந்மநி குதோஸ்ய ஸஂஷயஃ? இதி.

————————

அஜோபிஸந் நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.—
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா—৷৷4.6৷৷

அஜோபிஸந் -கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு அற்றவனாய் இருந்து கொண்டே-அபி சந் -இப்படியும் இருந்து கொண்டு –
அவ்யயாத்மா -அபி சந் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய்க் கொண்டே
பூதாநாம் -எல்லாப் பொருள்களுக்கும்
ஈஸ்வரோபிஸந்.—ஈஸ்வரனாகவும் இருந்து கொண்டே
ஸ்வாம் ப்ரக்ருதிம் -எனக்கே உரிய அப்ராக்ருத திரு மேனியை
அதிஷ்டாய –தரித்துக் கொண்டே
யாத்ம மாயயா—என் சங்கல்பத்தாலேயே
ஸம்பவாமி -பலபடியாகப் பிறக்கிறேன்

காமத்தால் ஏற்பட்ட பிறப்பற்றவனாய் -கர்மத்தால் ஏற்பட்ட அழிவும் இல்லாதவனாய் –
எல்லாப் பொருள்களுக்கும் ஈஸ்வரனாய் இருந்து கொண்டே –
எனக்கு உரிய திரு மேனியைத் தரித்துக் கொண்டே –
என் சங்கல்பத்தாலேயே பிறக்கிறேன்

முதல் ஸ்லோகத்தில் ஓன்று – மூன்று ரஹஸ்யங்கள் இதில் –
அடுத்த இரண்டிலும் இரண்டு -அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவதா –ஒன்றும் குறையாமல் அவதாரம்

அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண ஏக குணாத்மகம் –திவ்ய மங்கள விக்ரஹம் -இத்யாதி –
ப்ரக்ருதிம்-ஸ்வபாவம் -மாறாமல் -நீல தோயத மத்யஸ்தாம் –
வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்.
தமேவ விதித்வாதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய৷—ஸ்வேதாஸ்வத்ர உபநிஷத் – 3.1.8৷৷
ஸ ஹோவாச மஹாத்மநஷ்சதுரோ தேவ ஏக க ஸ ஜகார புவநஸ்ய கோபாஸ்தம் காபேய நாபிபஷ்யந்தி
மர்த்யா அபிப்ரதாரிந்பஹுதா வஸந்தம் யஸ்மை வா ஏததந்நம் தஸ்மா ஏதந்ந தத்தமிதி ৷৷–ப்ரஹதாரண்யகம் 4.3.6 ৷৷

மீனில் உடம்பு முழுவது நீர் போலே எங்கும் ஸ்ரீ தேவி இவனுக்கு எல்லா அவதாரங்களிலும் –
ஆமையான கேசனே –என்ன கேசபாசம் -கொண்டாடுகிறார் –
சரீரம் உண்டோ உனக்கு -மூன்றாவது கேள்வி –எதனால் செய்யப்பட்டது -நம்மது பாஞ்ச பவ்திக்கம் —
மாத்ரு யோனி பரீஷை –வீட்டு இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபணம் –
பஞ்ச சக்தி மயம் -உபநிஷத் மயம் -அப்ராக்க்ருதம் அன்றோ அவன் திவ்ய மங்கள விக்ரஹம்

சுத்த சத்வ மயத்வஞ்ச –பதில் இதற்கு -எதனால் அவதாரம் கேள்விக்கு
ஸ்வேச்சா மாத்ர நிதானதா –ஆசைப்பட்டு இச்சையால் –அஜோபிஸந்ந அவ்யயாத்மா பூதாநாம் ஈஷ்வரோபிஸந்.—
சன் மூன்று இடத்திலும் –

அஜோபிஸந் -பிறவாதவனாக இருந்து கொண்டு —
முடிவு இல்லாதவனாக கொண்டு –
ஈஸ்வரனாக இருந்து கொண்டு –
தேரோட்டியாக இருந்தாலும் நான் தான் ரதி –

ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா-
எனக்கே உரித்தான அப்ராக்ருதமான திருமேனியை எடுத்துக் கொண்டு -சங்கல்பத்தால் அவதரிக்கிறேன் –
பன்னி பன்னி வியாக்யானம் -பிறக்காதவன் -வேறுபட்டவன் -ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஸ்ரீ ராமானுஜர் முத்திரை ஸ்ரீ ஸூக்தி–
அசித் பத்த முக்த நித்ய -இவர்களில் மாறி -என்பதற்கு நான்கு சப்தங்கள் –
பிறக்கும் அனைத்தும் பத்தாத்மா விட மாறு பட்டவன் -அஜோபி சன்
அஜ- பிறப்பிலி பல் பிறவி பெருமான் -அசித் ஸ்வரூப விகாரம் -பத்தன் ஸ்வபாவத்தால் விகாரம்
குறைவில்லாமல் அடுத்து -அவ்யயாத்மாசன் முக்தர் முன்பு குறைபட்டு -இவன் நிர்விகாரம் எப்பொழுதும்
நித்யர் அஸ்ருப்ஷ்ட சம்சார கந்தன் -பூதானாம் ஈஸ்வரோ சன் -அவர்கள் சொத்து நான் ஸ்வாமி –

ஐந்து விரல்கள் போலே -அங்குஷ்ட மாத்ர -நான்கையும் விட மாறுபட்ட கட்டை விரல் –
நான்கும் இது சேர்ந்தால் தானே வேலை செய்யும் –
அவனுக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம் -சுத்த சத்வமயம் -எங்கு சேவித்தாலும் நமக்கும் சத்வம் வளரும் —
சுபாஸ்ரயம் -அர்ச்சா ரூபங்களும்-
கோல நீள கொடி மூக்கும் -கொடி பூத்து தாமரைக் கண்கள் —
கனிந்து செவ்வாய் -நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனி என்னுள் நிறைந்தானே –

கிரீட மகுட சூடாவதாம்ச –ஹார கேயூர –மகர குண்டல –மின்னு மா மகர குண்டலங்கள் –
மை வண்ண –இருவராய் வந்தார் –கை வண்ணம் தாமரை -இத்யாதி –
ஆற்று இடை கரை புரண்டு ஓடும் –காவேரி ஆறு -ஐந்தலை அரவே–அவ்வரவம் சுமத்தோர் அஞ்சன மலையே –
கரு மணி கோமளம் –பச்சை மா மலை போல் மேனி -பவள வாய் -கமலச் செங்கண் –
அம் மலை பூத்ததோர் அரவிந்த வனமே –10-தாமரை -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே —
திருவடிகள் -திருக்கைகள் உந்தி தாமரை -திருமார்பு தாமரை —
திருக் கண்கள் -என்னையும் பேச வைத்து -ஆகியவை -நிகர் இல்லையே –
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்வேன் உலகத்தோரே –
பொன் இவர் மேனி அச்சோ ஒருவர் அழகிய வா –

கர்மத்தால் பிறக்காததால் பர ப்ரஹ்மம் -அஜன்-தன்மைகளை விடாமல் பிறக்கிறேன்
அரி அயன் அரன் -அரி -அஜன் -ஹரன் -நான்முகனும் நாபியில் பிறந்ததால் அஜன்

அவ்யய ஆத்மா அபி சந் -கர்மத்தால் ஏற்படும் அழிவு இல்லையே
ராமாவதாரம் -11000-கிருஷ்ண அவதாரம் -110-வருஷங்கள் கழித்து தீர்த்தம் ப்ரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளுகிறார்
பூதா நாம் ஈஸ்வர அபி சந் –ஸமஸ்த பூதங்களின் உள்ளே புகுந்து இயக்குகிறேன் –
இப்படி அஜா அபி சந் -அவ்யயா ஆத்மா பூதா நாம் ஈஸ்வர அபி சந் -அஜஹத் ஸ்வ பாவங்கள் விடாமல் அவதரிக்கிறேன்
அர்ச்சாவதாரங்களிலும் இவை உண்டு
பூர்ணம் –சர்வம் பூர்ணமஸ்ய -அவன் இவன் என்று கூழேன் மின்
உபய லிங்கம் -எல்லா நிலைகளிலும் –
சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸமஸ்த கல்யாண பூர்ணன் அவாப்த ஸமஸ்த காமன்
-இவற்றுக்கும் உப லக்ஷணம்
அதிஷ்டானம் -உள்ளே புகுந்து இயக்குதல் -தன்னுடைய பிரக்ருதியை -அசாதாரண தன்மையை ஸ்வ பாவத்தை -எடுத்துக் கொண்டு அவதரிக்கிறேன் –
முக் குணங்களைச் சொல்ல வில்லை -இங்கு ப்ரக்ருதி என்று –
பஞ்ச உபநிஷத் -ந பூத சங்க ஸம்ஸ்தானம் –
கோப ப்ரக்ருதி கோபமே இயல்வாக்க கொண்ட என்பது போல்
ஸ்வ பாவம் விட்டுப் புரியாதது போல் பிரகிருதி –
திவ்ய மங்கள விக்ரஹம் -அப்ராக்ருதம் -பஞ்ச உபநிஷத் மயம் -ரஹஸ்யம் என்கிற அர்த்தத்தில் –
ஸூத்த சத்வ மயம் -பரமேஷ்டி புமான் நிவ்ருத்த விஸ்வ ஸர்வ –பஞ்ச பூதங்கள் போல் இவை உண்டாக்கப்படுபவை அல்ல –

ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் –அங்கே போலவே இங்கும்
பரம் சுடர் உடம்பாய்

ஆத்ம மாயையால் அவதாரம்
பொய் மித்யை அல்ல -ஆச்சர்யம் -புரிய முடியாதது-விசித்ரம் – -ஸங்கல்பம் என்றவாறு
ஆசையாலே -தனது முடிவு என்பதையே-விசித்திரமான இச்சை – -மாயை -என்கிறார்

மூன்றாலும் புருஷோத்தமன் அஜ அவ்யயாத்மா பூதானாம் ஈஸ்வர –
பிறப்பு -அசேதன வஸ்துக்களுக்கு அழிவு போல் அல்லவே இவனுக்கு – -ஆத்மாவுக்கு போல் பந்தம் போல் இல்லை
அவ்யயம் -தேயாத குறையே இல்லாத -முக்தர் முன்பு ஞானம் மங்கி இருந்தார்களே -அவர்களை விட
உயர்ந்தவன்
பூதாநாம் ஈஸ்வரோபி சந் -நித்யர்களை விட உயர்ந்தவன் -இவர்களும் இவனால் இயக்கப்பட்டு இருப்பார்களே
இப்படி மூன்று சொற்களால் புருஷோத்தமன் இவன் ஒருவனே என்று காட்டி அருளுகிறான்

৷4.6৷৷ஆத்மநஃ அவதார ப்ரகாரஂ தேஹ யாதாத்ம்யஂ ஜந்ம ஹேதுஂ ச ஆஹஅஜத்வா (பத்த வ்யாவ்ருத்தி-பிறப்பிலி -ஸ்தம்ப சம்பவாமி )வ்யயத்வ (ஆங்கு மலராது குவியாது-முக்த  வ்யாவ்ருத்தி )ஸர்வேஷ்வரத்வாதி (நித்ய வ்யாவ்ருத்தி )ஸர்வஂ பாரமேஷ்வரஂ ப்ரகாரம் அஜஹத் ஏவ ஸ்வாஂ ப்ரகரிதிம் அதிஷ்டாய ஆத்ம மாயயா ஸஂபவாமி ப்ரகரிதிஃ ஸ்வபாவஃ, (ப்ரக்ருதி சப்தம் பஞ்ச பூதம் என்றும் ஸ்வ பாவம் என்றும் இங்கு ஸ்வ பாவம் )ஸ்வம் ஏவ ஸ்வபாவம் அதிஷ்டாய ஸ்வேந ஏவ ரூபேண ஸ்வேச்சயா ஸஂபவாமி இத்யர்தஃ.

ஸ்வரூபஂ து ‘ஆதித்ய வர்ணஂ தமஸஃ பரஸ்தாத்.’ (யஜுர்வே0 31.18)’க்ஷயந்தமஸ்ய ரஜஸஃ பராகே.’ (ஸாம0 17.1.4.2)’ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மயஃ புருஷஃ’ (சா0 உ0 1.6.6) தஸ்மிந்நயஂ புருஷோ மநோ மயோ மரிதோ ஹிரண்மயஃ.’ (தை0 உ0 1.6.1)’ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யுதஃ புருஷாததி.’ (யஜுர்வே0 32.2)’பாரூபஃ ஸத்ய ஸஂகல்ப ஆகாஷாத்மா ஸர்வ கர்மா ஸர்வ காமஃ ஸர்வ கந்தஃ ஸர்வ ரஸஃ.’ (சா0 உ0 3.14.2)’மாஹா ரஜநஂ வாஸஃ’ (பொன்னிற ஆடை போல் -பரி0 உ0 2.3.6) இத்யாதி (உபாஸ்யமான திவ்ய மங்கள விக்ராஹ வர்ணனை )ஷ்ருதி ஸித்தம்.

ஆத்ம மாயயா ஆத்மீயயா மாயயா.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ (வே0 நி0 த0 வ0 22) இதி ஜ்ஞாந பர்யாயஃ அத்ர மாயா ஷப்தஃ. (ஞான ரூபமான சங்கல்பம் )ததா ச அபி யுக்த ப்ரயோகஃ ‘மாயயா ஸததஂ வேத்தி ப்ராணிநாஂ ச ஷுபாஷுபம்’ இதி. ஆத்மீயேந (தன்னுடைய )ஜ்ஞாநேந ஆத்ம ஸஂகல்பேந இத்யர்தஃ.அதஃ அபஹத பாப்மத்வாதி ஸமஸ்த கல்யாண குணாத்மகத்வஂ ஸர்வம் ஐஷ்வரஂ ஸ்வபாவம் அஜஹத் ஏவ ஸ்வம் ஏவ ரூபஂ தேவ மநுஷ்யாதி ஸஜாதீய ஸ்தாநஂ குர்வந் ஆத்ம ஸஂகல்பேந தேவாதி ரூபஃ ஸஂபவாமி.(பல பிறப்பாய் ஒளி வரும் -என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் )

தத் இதம் ஆஹ ‘அஜாயமாநோ பஹுதா விஜாயதே’ (யஜுர்வேத 31.19) இதி ஷ்ருதிஃ. இதர புருஷ ஸாதாரணஂ ஜந்ம அகுர்வந் தேவாதி ரூபேண ஸ்வஸஂகல்பேந உக்த ப்ரக்ரியயா ஜாயத இத்யர்தஃ.’பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந. தாந்யஹஂ வேத ஸர்வாணி’ (கீதா 4.5)’ததாத்மாநஂ ஸரிஜாம்யஹம்৷৷’ (கீதா 4.7)’ஜந்ம கர்ம ச மே திவ்யமேவஂ யோ வேத்தி தத்த்வதஃ.’ (கீதா 4.9) இதி பூர்வாபராவிரோதாச்ச.ஜந்ம காலம் ஆஹ(இவை ரூப பரம் அல்ல ஸ்வரூப பரம் என்றால் விரோதங்கள் வருமே என்றவாறு )

৷৷4.6৷৷அத ப்ரகாராதிப்ரஷ்நத்ரயோத்தரமநந்தரஷ்லோக இத்யாஹ ‘அவதாரேதி’. அஜாவ்யயஷப்தாப்யாஂ ப்ரகரிதிபுருஷயோரிவ ஸ்வரூபதோ தர்மதஷ்ச விகாரா ந ஸந்தீத்யுச்யதே; அஜாவ்யயஷப்தௌ கர்மகரிதஜந்மமரணநிவரித்திபரௌ வா; தேந ஹேயப்ரத்யநீகத்வமுக்தஂ பவதி.’பூதாநாமீஷ்வரோபி’ இதி கல்யாணகுணாகரத்வாப்ரச்யுதிருபலக்ஷ்யதே. யத்வா அஜஷப்தேந ஸ்வரூபதஃ ஷரீரத்வாரா ச ஜந்மயுக்தாசித்க்ஷேத்ரஜ்ஞாப்யாஂ வ்யாவர்தநம்.’அவ்யயாத்மா’ இத்யாத்மஷப்தஸ்ய ஸ்வபாவபரதயா நஞோத்யந்தாபாவபரதயா ச கதாசிஜ்ஜ்ஞாநஸங்கோசாதிமதோ முக்தாத்வ்யாவரித்திஃ.’ஈஷ்வரஷப்தேந’ நித்யாஸங்குசிதஜ்ஞாநேப்யோ நித்யமுக்தேப்யோ வ்யவச்சேதஃ.’அவ்யயாத்மா’ இத்யத்ராபி பூர்வோத்தரவத்’அபி ஸந்’ இத்யநுஷஞ்ஜநீயம். அத்ர ச பூர்வார்தேந தரிதீயசதுர்தபாதாப்யாஂ ச ப்ரஷ்நத்ரயஸ்ய க்ரமாத்பரிஹாரஃ. ஆதிஷப்தேநேஷ்வரத்வோபலக்ஷிதஸர்வஜ்ஞத்வஸத்யஸங்கல்பத்வாவாப்தஸமஸ்தகாமத்வாதீநி கரிஹ்யந்தே.’ஸர்வமிதி’ ந கஸ்யசிதபி ஸ்வபாவலேஷஸ்ய ஹாநிரிதி பாவஃ. பரமேஷ்வரஸம்பந்தி பாரமேஷ்வரஂ, பரமேஷ்வரத்வப்ரயுக்தமித்யர்தஃ.’அபி ஸத்’ இத்யஸ்ய வர்தமாநநிர்தேஷஸ்ய தாத்பர்யமாஹ ‘அஜஹதேவேதி’. ஏதேந தத்ததவதாரேஷு தாஸு தாஸ்வவஸ்தாஸு ச பாரமேஷ்வரஸ்வபாவஸ்ய ஸத ஏவ ஸ்வேச்சாயா திரோதாநமாத்ரமிதி ஸூசிதம்; ததா சாஹுஃ’குணைஃ ஷட்பிஸ்த்வேதைஃ ப்ரதமதரமூர்திஸ்தவ பபௌ ததஸ்திஸ்ரஸ்தேஷாஂ த்ரியுகயுகலைர்ஹி த்ரிபிரபுஃ. வ்யவஸ்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்கரிதிவஷாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணிதமஹாமங்கலகுணஃ৷৷வரதராஜஸ்தவே16 இதி. அவதாரேஷு ஹி பரமேஷ்வரத்வஂ வ்யபதிஷ்யதே.’ஈஷந்நபி மஹாயோகீ’ ம.பா.5.68.14’கரிஷ்ண ஏவ ஹி லோகாநாஂ’ ம.பா.2.38.23’வ்யக்தமேஷ மஹாயோகீ பரமாத்மா’ வா.ரா.6.1.11 இத்யாதிபிஃ. நாத்ர ப்ரகரிதிஷப்தேந’ப்ரகரிதிஂ ஸ்வாமவஷ்டப்ய விஸரிஜாமி’ 9.8 இத்யாதிஷ்விவ த்ரிகுணா ப்ரகரிதிருச்யதே, அவதாரேஷ்வபி தத்விக்ரஹஸ்ய த்ரிகுணோபாதாநத்வாபாவாத். யதோக்தஂ’ந பூதஸங்கஸஂஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மநஃ’ ம.பா.’ந தஸ்ய ப்ராகரிதா மூர்திர்மாஂஸமேதோஸ்திஸம்பவா’ வா.பு.பூ.34.40வ.பு.14.41. இதி. அதோத்ராவதாரோபயுக்தாந்யா ப்ரகரிதிருச்யத இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரகரிதிஃ ஸ்வபாவ’ இதி.’ப்ரகரிதிஃ பஞ்சபூதேஷு ஸ்வபாவே மூலகாரணே’ இதி நைகண்டுகாஃ. விக்ரஹஸ்யாபி’நித்யாலிங்கா ஸ்வபாவஸஂஸித்திஃ’ ர.ப்ரா. இத்யேகாயநஷ்ருத்யநுஸாரேண நிருபாதிகஸ்வாஸாதாரணவிஷேஷணத்வாத் ஸ்வபாவஷப்தேநோபாதாநம். கோபலீவர்தந்யாயாச்சாத்ர விக்ரஹாக்யஸ்வபாவவிஷேஷபரதா, ஸ்வபாவபர்யாயப்ரகரிதிஷப்தேநாபரிதக்ஸித்திலாபேபி’ஸ்வாஂ’ இதி நிர்தேஷோ ஜீவஸாதாரணத்ரிகுணப்ரகரிதிவ்யவச்சேதார்த இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஸ்வமேவேதி’.’அந்தரதிகரணபாஷ்யேப்யேதத்வ்யாக்யாதஂ”ஸ்வமேவ ஸ்வபாவமாஸ்தாய ந ஸஂஸாரிணாஂ ஸ்வபாவமித்யர்தஃ’ இதி. ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர விக்ரஹபரத்வஂ’அதிஷ்டாய’ இத்யநேநஸூசிதஂ ஸ்வாதந்த்ர்யஂ ச தர்ஷயதி ‘ஸ்வேநைவ ரூபேணேதி’. யத்வா’ஸ்வமேவ ஸ்வபாவஂ’ இத்யாத்யேகவாக்யஂ ஸங்கலிதார்தபரம், தததிஷ்டாயேத்யேததந்தஂ பூர்வார்தஸ்யார்தஃ,’ஸ்வேநைவ ரூபேண’ இதி து தரிதீயபாதஸ்ய’ஸ்வேச்சயா’ இதி சதுர்தபாதஸ்ய. அஸ்யாஂ யோஜநாயாஂ ப்ரகரிதிஷப்தோவதாரோபாதாந பூததிவ்யவிக்ரஹமேவாஹ.அவதாரவிக்ரஹோபாதாநபூதப்ரகரிதேர்பஹுஷ்ருதிஸித்ததாமாஹ ‘ஸ்வஸ்வரூபமிதி’.’ஸ்வரூபஂ’ ப்ரஹ்மணோபரம்’ இதி ப்ரயோகாத் ஸ்வரூபஷப்தோத்ர விக்ரஹபரஃ. “ஆதித்யவர்ணஂ தமஸஃ பரஸ்தாத்” இத்யநேநாப்ராகரிதத்வஂ, ஸ்வாஸாதாரணநிரதிஷயதீப்தியுக்தத்வஂ ச ஸித்தம். தத்ப்ரகரணே ச தேஷவிஷேஷவர்தித்வநித்யஸூரிஸேவ்யத்வலக்ஷ்மீபதித்வாதிகமபி பாவ்யம்.’க்ஷயந்தம்’ இத்யத்ர ரஜஷ்ஷப்தோ மூலப்ரகரிதிவிஷயஃ, ந து லோகவிஷயஃ’தமஸஃ பரஸ்தாத்’ இத்யநேந துல்யார்தத்வாத். ரஜோகுணகத்வாச்ச ரஜஷ்ஷப்தேநோபாதாநம். வ்யாப்தஸ்ய தேஷவிஷேஷே’க்ஷயந்தம்’ இதி நிவாஸவசநாத்விக்ரஹவத்த்வஂ ஸித்தம். ஏவஂ பரமபதநிலயநித்யவிக்ரஹஸத்பாவஃ ஷ்ருதித்வயேந தர்ஷிதஃ. தஸ்யைவ விக்ரஹஸ்யாவதாரதஷாஂ தர்ஷயதி ‘ய ஏஷ’ இதி.’ஆதித்யவர்ணஂ”ஹிரண்மயஃ’ இதி ச ஏக ஏவ வர்ணஃ ப்ரதியோகிபேதாதீநப்ராதிகூல்யாநுகூல்யாப்யாஂ முகபேதேந நிர்திஷ்யதே. யதாஹுர்த்ரமிடாசார்யாஃ’ஹிரண்மய இதி ரூபஸாமாந்யாச்சந்த்ரமுகவத்’ இதி. யத்வா, ஹிரண்யவிகாரத்வவ்யவச்சேதார்தஂ த்ரமிடபாஷ்யம். தத்ர’மயூரகண்டச்சவிஷுத்தஹேம’ இதி ஷில்பஷாஸ்த்ராநுஸாராச்ச்யாமத்வஸித்திஃ. அதவா ஸ்வேச்சயா தத்ர தத்ர ரூபபேதேபி ந தோஷஃ; யுகாதிபேதே பர்யாயதஃ ஸிதரக்தாதிவிகல்பிதவாஸுதேவாதிவ்யூஹரூபபேதவத். தஸ்யைவ ஹரிதயாந்தர்வர்தித்வே ஷ்ருதிமுதாஹரதி ‘தஸ்மிந்நிதி’.’மநோமய’ இதி விஷுத்தேந மநஸா ப்ரசுரஃ க்ராஹ்ய இத்யர்தஃ. ஆப்யாஂ ஷ்ருதிப்யாமுபாஸநஸ்தாநவிஷேஷஸ்திதிர்தர்ஷிதா. காரணவாக்யேபி தஸ்ய ஸத்பாவஂ தர்ஷயதி ‘ஸர்வ’ இதி.’வித்யுத’ இதிபதஂ வித்யுத்வர்ணாதித்யந்யத்ர வ்யாக்யாதம். “ஷாந்த உபாஸீத” சாஂ.உ.3.14.1 இதி பூர்வோக்தமுபாஸநஂ’ஸ க்ரதுஂ குர்வீத’ இத்யநூத்ய தச்சேஷதயா விதீயமாநேஷு பாரமார்திகேஷு குணேஷு விக்ரஹஸ்ய ஸஹபாடஂ தர்ஷயதி ‘பாரூப’ இதி. பாஸ்வரரூப இத்யர்தஃ. “மாஹாரஜநஂ வாஸஃ” இத்யேஷா ஷ்ருதிஃ ஷாரீரகே வ்யாக்யாதா “தஸ்ய ஹ வா ஏதஸ்ய புருஷஸ்ய ரூபஂ யதா மாஹாராஜநஂ வாஸஃ” பரி.உ.2.3.6 இத்யாதிநாகாரவிஷேஷஂ சாபிதாய, இதி. ஸர்வாஸு சாஸு ஷ்ருதிஷு விலக்ஷணஸ்தாநவிஷிஷ்டத்வவர்ணவிஷேஷபுருஷஷப்தாதிபிஃ பூர்வோபாத்தபுருஷஸூக்தவாக்யைகார்தத்வஂ ஸித்தம். ஷஷ்டீஸமாஸே ஸ்வஸ்வாமித்வலக்ஷணஃ ஸம்பந்தோத்ர விவக்ஷித இத்யாஹ ‘ஆத்மீயயேதி’.’மாயா வயுநஂ ஜ்ஞாநம்’ இதி நிகண்டூபாதாநம். ஸ்வேச்சாவதரணப்ரகரணே ஸ ஏவார்த உசித இதி பாவஃ. நிகண்டுஸித்தமர்தஂ தந்மூலபூதாபியுக்தப்ரயோகேண த்ரடயதி ‘ததா சேதி’.’மாயயா வேத்தி’ இதி நிர்தேஷாதியஂ மாயா நிகண்டுஸித்தஂ ஜ்ஞாநமேவ, பரப்ரஸித்தமாயாயாஸ்தத்த்வார்தப்ரகாஷகத்வாபாவாதிதி பாவஃ. ஏதேந ப்ரகரிதிஷப்தஸ்யாத்ர த்ரிகுணாத்மகப்ரகரிதிவிஷயத்வஂ மாயாஷப்தஸ்ய மித்யார்தபரத்வஂ ச’ஷங்கரோக்தஂ’ ப்ரத்யுக்தம்.’ஆத்மமாயயா’ இத்யஸ்ய ந பரமார்ததோ லோகவதிதி வ்யவச்சேதஷ்சாயுக்தஃ; அந்யேஷாமபி ஜந்மநஸ்தந்மதே மித்யாத்வாத்யவிஷேஷாத். பலிதஂ வக்துமாஹ ‘ஆத்மீயேந ஜ்ஞாநேநேதி’. ஜ்ஞாநமாத்ரஸ்ய கதமவதாரஹேதுத்வம்? ததா ஸதி ஸர்வதாவதாரப்ரஸங்காதித்யத்ராஹ ‘ஆத்மஸங்கல்பேநேத்யர்த’ இதி.

ஷ்லோகஸ்ய பிண்டிதார்தஂ விஷதயதி ‘அத’ இதி.’அபஹதபாப்மத்வாதீத்யநேந தஹரவித்யாஸுபாலோபநிஷத்ப்ரபரிதிஷு’ நிர்தோஷத்வமங்கலகுணாகரத்வப்ரதிபாதகாநாஂ வாக்யாநாஂ ஸ்மாரணம்.’ஸமஸ்தகல்யாணகுணாத்மகத்வமித்யாதிநா”ஸமஸ்தகல்யாணகுணாத்மகோஸௌ ஸ்வஷக்திலேஷாத்தரிதபூதஸர்கஃ. இச்சாகரிஹீதாபிமதோருதேஹஃ ஸஂஸாதிதாஷேஷஜகத்திதோஸௌ’ வி.பு.6.5.84 இத்யாதி ஸ்மாரிதம். ஈஷ்வரஸ்வபாவஃ ஸர்வோப்யுபயலிங்கத்வேந ஸங்கரிஹ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’ஸர்வமைஷஂ ஸ்வபாவமிதி’. ஸ்வமேவ ரூபமித்யாதிநா’ஸமஸ்தஷக்திரூபாணி தத்கரோதி ஜநேஷ்வரஃ. தேவதிர்யங்மநுஷ்யாதிசேஷ்டாவந்தி ஸ்வலீலயா’ வி.பு.6.7.70 இத்யாதி பகவத்பராஷரவசநஂ ஸ்மாரிதம். அஜத்வஷ்ருத்யா ஸ்மரிதிரியஂ பாத்யேதேத்யத்ராஹ ‘ததிதமாஹேதி’. அஜாயமாநத்வஜாயமாநத்வோக்த்யா வ்யாஹதத்வாதந்யபரேயஂ ஷ்ருதிரித்யத்ராஹ ‘இதரேதி’.’அஜாயமாநஃ’ இதி ஸாமாந்யநிஷேதோ’பஹுதா விஜாயதே’ இதி விஷேஷவிதாநஸந்நிதாநாத்ஸங்குசிதவிஷயஃ. அதோ விரோதே ஷாந்தே தாத்பர்யாந்தரஂ ந கல்ப்யம். ந சேதஂ “பஹு ஸ்யாம்” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இதிவஜ்ஜகத்ரூபேண பஹுபவநம் “தஸ்ய தீராஃ பரிஜாநந்தி யோநிம்” இத்யநந்தரவாக்யைர்முமுக்ஷூணாமத்யந்தோபகாரகாவதாரரஹஸ்யஜ்ஞாநஸ்யைவ வக்துமுசிதத்வாத், அஸ்ய ச ததைகார்த்யாதிதி பாவஃ. ஸத்யமித்யாத்வாப்யாஂ விரோதபரிஹாரஷங்காஂ ப்ரதிக்ஷேப்துஂ’ப்ரகரிதிஂ ஸ்வாமதிஷ்டாய’ இத்யஸ்ய விக்ரஹபரத்வே மாயாஷப்தஸ்ய ஜ்ஞாநபரத்வே ச ஹேத்வந்தரமாஹ’பஹூநீதி’.’வேத, ஸரிஜாமிதிவ்யம்’ இதி ஷப்தைர்ஜந்மநோ புத்திபூர்வத்வேச்சாமாத்ரகரிதத்வதிவ்யத்வாதீநி ப்ரதீயந்தே. மாயாதிஷப்தஸ்யாவித்யாதிபரத்வே து ததகிலஂ விருத்யேத. நஹ்யத்ர ஜந்மஷப்தோ ஜந்மப்ரதிபாஸவாசீ; ந ச ப்ரத்வஸ்தபர்யாயோ வ்யதீதஷப்தோ பாதபரஃ; ந ச மாயாகரிஹீதஸ்ய ஸர்வவேதித்வம்;நாபி மித்யாபூதே ஸரிஷ்டிஷப்தஃ; ந ச த்ரிகுணப்ரஸூதஸ்ய திவ்யத்வமிதி பாவஃ.

—————

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத—
அப்யுத்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸருஜாம் யஹம்
—৷৷4.7৷৷

பாரத—பரத குலத்தில் உதித்தவனே
யதா யதா ஹி -எந்த எந்தக் காலங்களில்
தர்மஸ்ய -அறத்திற்கு
க்லாநிர் பவதி -வாட்டம் ஏற்படுகிறதோ –
அ தர்மஸ்ய-அறத்திற்கு எதிரான மறத்திற்கு
அப்யுத்தாநம் -(பவதி )–எழுச்சி ஏற்படுகிறதோ-உத்தானம் -எழுவது
ததா-அந்த அந்தக் காலங்களில்-ததா-ஒரு முறை இருந்தாலும் இரண்டு முறை சொன்னதாகவே கொள்ள வேண்டும்
அஹம் -நான்
ஆத்மாநம் -என்னையே
ஸருஜாமி –படைத்துக் கொள்கிறேன்

பரத குலத்திலே உதித்தவனே –எந்த எந்த காலங்களில் தர்மத்திற்கு வாட்டம் ஏற்படுகிறதோ –
அதர்மத்துக்கு எழுச்சி ஏற்படுகிறதோ -அந்த அந்தக் காலங்களில் நான் என்னையே படைத்துக் கொள்கிறேன்

பிறவியின் காலம் முடிவு செய்வார் யார் -நமக்கு கர்மம் –
தர்மத்திற்கு தலைக் குனிவு -அழியும் பொழுது என்று சொல்ல வில்லை –
நானே அவதரிக்கிறேன் -எவ்வப் பொழுது -முடிவும் நானே எடுக்கிறேன் -எல்லாம் எனக்கு அடங்கி –
தர்மம் குலைய அதர்மம் தூக்குமே –இச்சா க்ருஹீத அபிமத வேஷம் -நிரபேஷமாக அவதரிக்கிறார் –

யதா யதா -இரட்டை -எப்போது எப்போது-யுகத்துக்கு உள்ளேயும் -கால நியமம் இல்லாமல் – -யுகம் தோறும் அவதாரம் அடுத்த ஸ்லோகத்தில் –
கால அநியமும் யுக அநியமும் -இரண்டையும் சொன்னவாறு –
ஜீவாத்மாவுக்கு -கர்மம் யுந்த பிறவி -கர்மம் பழுத்து பயன் தர வேண்டுமே –
இவனுக்கோ காருண்யம் இல்லாத சமயமே இல்லையே -இயற்கையான காருண்யம்
மீனாய் ஆமையுமாய் –கற்கியுமாம் –இன்னம் கார் வண்ணனே –பிறந்து பிறந்து ஒளி விஞ்சி அன்றோ இருக்கிறான் –

வேதத்தால் சொல்லப்பட்டதே தர்மம்
இதம் குரு -இதம் மா குரு சொல்லுமே -இத்தைச் செய் நன்மை பயக்கும் -இத்தைச் செய்யாதே தீமை விளையும் செய்யாதே என்றும் சொல்லும்
ஜைமினி சோதனா – லக்ஷண அர்த்த -ஸ்ரேயஸ் தரும் படியும் இருக்கும்

க்லானி-குறைபாடு -மறையும் பொழுது தான் பிறக்கிறேன் என்று இல்லை -சிறிது குறைபாடு ஏற்பட்டாலே பிறக்கிறான்
அப்படி ரக்ஷிக்கும் தர்மம் ஒரு நாளும் அழியாதே -சநாதனம் -அதனாலே ஆகும் –

ஆத்மாநம் -ஸ்வரூபத்தை இங்கே சொல்ல வில்லை -உடலோடு கொடியவன் என்பதும் இல்லை -திருமேனியும் நித்யம் –
அப்ராக்ருத விக்ரஹத்துடன் அவதரிப்பதையே சொன்னவாறு -அஹம் ஸ்ருஜாமி -நானே என்னைப் படைத்துக் கொள்கிறேன் –

৷4.7৷৷ந கால நியமஃ அஸ்மத் ஸஂபவஸ்ய; யதா யதா ஹி தர்மஸ்ய வேதேந உதிதஸ்ய சாதுர் வர்ண்ய சாதுராஷ்ரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய(வேதத்தால் விதிக்கப்பட்ட  வர்ணாஸ்ரம வரம்பு மீறாமல் ) கர்தவ் யஸ்ய க்லாநிஃ பவதி, யதா யதா ச தத் விபர்ய யஸ்ய (வேத பாஹ்ய குத்ருஷ்டிகள் )அதர்மஸ்ய அப்யுத்தாநஂ ததா அஹம் ஏவ (ஏவகாரம் -நானே -ஸஹ காரி நிரபேஷமாக சாஷாத்தாக நானே )ஸ்வ ஸஂகல்பேந உக்த ப்ரகாரேண ஆத்மாநஂ ஸரிஜாமி.ஜந்மநஃ ப்ரயோஜநம் ஆஹ(ஸ்வரூபத்தை பிறப்பிக்க முடியாதே -ஆத்மாநாம் -திவ்ய மங்கள விகிரஹத்துடன் படைத்துக் கொள்கிறேன் என்கிறான் )

(தன்னை தூஷிப்பதைப் பற்றி சொல்லாமல் -வேதம் வாழ்தல் எல்லாமே வாழும் -சாஸ்த்ர யோனித் வாத் -வேதைக சமைதி கம்யன் -ஊற்றம் உடையாய் -உளன் -சுடர் மிகு ஸ்ருதியும் உளன்)

৷৷4.7৷৷கதா? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மகாலமாஹேதி’. யுகா நியமஸ்ய வக்ஷ்யமாணத்வாத்’யதா யதா’ இதி வீப்ஸா யுகாந்தர்வர்திகாலாநியமபரேத்யபிப்ராயேணாஹ ‘ந காலேதி’. ஜீவவத்புண்யாபுண்யவிபாககரிதோ வா, வ்யவஸ்தித ஸ்வஸங்கல்பகரிதோ வா, மந்வந்தரமஹாகல்பாதிரூபோ வா காலநியமோ நாஸ்தீத்யர்தஃ. ப்ரமாணதஃ ஸ்வரூபதஷ்ச க்லாநிப்ரகாரஸூசநாய பாஹ்யதர்மதர்மைகதேஷவ்யவச்சேதாய ச’வேதேநோதிதஸ்யேத்யாதிவிஷேஷணம்’.’வேதேநோதிதஸ்ய கர்தவ்யஸ்ய’ இதி தர்மலக்ஷணமப்யுக்தஂ பவதி. அதர்மஷப்தே நஞோ விரோதிவிஷயத்வமபிப்ரேத்யோக்தஂ’தத்விபர்யயஸ்யேதி’. ததஷ்சாவைதிகாகமோதிதஸ்ய வர்ணாஷ்ரமாதிவ்யவஸ்தாரஹிதஸ்ய தத ஏவாகர்தவ்யஸ்யேதி பூர்வோக்தப்ரகாரவைபரீத்யஂ பலிதம். தர்மக்லாநேரதர்மோத்தாநஸ்ய ச துலாக்ரநமநோந்நமநவத்பரஸ்பராவிநாபாவித்வஂ ச தர்ஷிதம். ததேத்யத்ராபி’யதாயதா’ இத்யேதத்ப்ரதிநிர்தேஷரூபத்வாத்வீப்ஸாநுஸந்தேயா. தர்மஸ்ய க்லாநிமபி ந ஸஹே, கிஂ புநர்விச்சேதஂ? இதி க்லாநிஷப்ததாத்பர்யம். ஏவமதர்மஸ்யோத்கமமாத்ரமபி ந ஸஹே, கிமுத ஷாகாநுஷாகதாஂ? இத்யப்யுத்தாநஷப்தாபிப்ரேதம்.’அஹஂ ஸரிஜாமி’ இத்யத்ராபேக்ஷணீயாந்தராதர்ஷநாத்’அஹமேவ ஸ்வஸங்கல்பேநேத்யுக்தம்’. தேந காலஸ்யாப்யதிஷ்டாதுஸ்தஸ்ய காலபரதந்த்ரத்வஂ பரிஹரிதஂ பவதி.’ஆத்மாநஂ ஸரிஜாமி’ இத்யேதந்ந தாவத்ஸ்வரூபவிஷயஂ, தஸ்ய நித்யத்வாத், ஆத்மாஷ்ரயாதிப்ரஸங்காச்ச. நாபி ஜீவவிஷயஂ, தஸ்ய ப்ரகரணாஸங்கதத்வாத். நாப்யாத்யவிக்ரஹவிஷிஷ்டஸ்வாத்மவிஷயஂ, தஸ்யாபி ரூபஸ்ய நித்யத்வாத்; அதோவதாரவிக்ரஹ விஷிஷ்டஸ்வாத்மாத்ர’ஆத்மாநம்’ இதி நிர்திஷ்யத இத்யபிப்ராயேணோக்தஂ’உக்தப்ரகாரேணேதி’.

———–

எந்தக் காலத்தில் பிறக்கிறாய் என்பதுக்கு கீழ் பதில்
இதில் பிறந்ததனால் பிரயோஜனம் என்ன என்பதற்குப் பதில்

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்.–
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே—৷৷4.8৷৷

ஸாதூநாம்-நல்லோர்களை
பரித்ராணாய –நன்கு ரக்ஷிப்பதின் பொருட்டும்
துஷ் க்ருதாம்–தீயவர்களை
விநாஸாய -அழிப்பதின் பொருட்டும்
ச .–உம்மைத் தொகை
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய -அறத்தை நன்கு நிலை நிறுத்துவதில் பொருட்டும்
ஸம்பவாமி யுகே யுகே—அந்த அந்த யுகங்களில் பலபடியாகப் பிறக்கிறேன் –

நல்லோர்களை நன்கு காக்கும் பொருட்டும் -தீயவர்களை அழிப்பதன் பொருட்டும் –
தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதன் பொருட்டும் -அந்த அந்த யுகங்களில் பலபடியாக பிறக்கின்றேன்

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

சாது -அநந்ய பக்தர்கள் -நாமங்கள் சேஷ்டிதங்கள் ரூபங்கள் மட்டுமே வாக்கிலும் நெஞ்சிலும் –
க்ஷணம் காலம் பிரிந்தாலும் கல்பம் போலே எண்ணி –
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
இவர்களுக்கு திரு முகம் காட்டி அருளவே யுகம் யுகமாக மீண்டும் மீண்டும் திருவவதாரம் –
சாது சம்ரக்ஷணார்தம் தானே முக்கிய காரணம் -அது பண்ண
துஷ்டர்களை அழித்து- நாசம் -இல்லை விநாசம் -தூள் தூளாக்கி என்றபடி
இவை நடந்தால் தர்மம் நிலை பெரும் –
சாது -வர்ணாஸ்ரம தர்மம் நழுவாமல்–பிரகலாதன் –மாலாகாரர்–போன்ற பக்தர்கள்
தொழும் காதல் களிறு அளிப்பான் -மழுங்காத ஞானமே படையாக இருக்க -சக்கரப் படையும் இருக்க —
கதறி கண்ணா கண்ணா என்று அலர–முதலை மேல் சீறி வந்து –சுடர் சோதி -மறையாமல் இருக்க அன்றோ –
கொடியேன் பால் காண வாராய்-

சாலப் பல நாள் -யுகம் தோறும்-உயிர்கள் காப்பானே-கோலத் திரு மா மகளுடன்-

ரஷணம் என்றாலே -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் தானே –

சாதுக்களை ரக்ஷிப்பதற்காக மேலோட்டம்
வைஷ்ணவ அக்ரேஸர் –அநந்யார்ஹ பக்தி ஒன்றிலே நோக்கம் –
ஆஸ்திகர் -தேவதாந்த்ர பரர்களும் – அவர்களுக்குள்ளும் அந்தர்யாமியாய் பூஜிப்பவர்களும் -நேராக அவனையே -மூன்றாம் வகை
இங்கு சாது என்றது இந்த மூன்றாம் வகை -உன்னால் அல்லால் யாவராலும் ஒரு குறை வேண்டேன் –
2-56-வஸீ கார ஸம்ஹிதை பார்த்தோம் -ஞான யோகத்தில் மிக உயர்ந்த நிலை -ப்ரஹ்லாதன் எடுத்துக் காட்டு –
உடலையும் பொருட்படுத்தாமல் கடிப்பதை அறியாமல் இருந்தானே
பரித்ராணாம் -முழுமையாக நன்றாக ரக்ஷிப்பது -சேர்ந்தால் தரிப்பர் -ஒரு பகல் விஸ்லேஷம் ஆயிரம் ஊழி போல் –
சாதுக்களுக்கு -வெளி விரோதி -தீயோர்-உள் விரோதி -அவனைக் காணாமல்-அணைக்காமல் – இருப்பது -தன்னைக் கொடுத்து தரித்து இருக்கப் பண்ண வேண்டுமே –
ச காரம் -உம்மைத்தொகை -அன்வாசயம் -இரண்டாம் பக்ஷ பிரயோஜனம் -என்றவாறு -இத்தை அவதரிக்காமலே செய்ய முடியுமே
சாது பரித்ராணாமே முக்ய பிரயோஜனம் -அவதரித்தது தானே தன்னைக் காட்டவும் அணைக்கவும் பெறப்பெறுவார்கள்
தர்மம் ஸம் ஸ்தாபனம் -நன்றாக நிலை பெறச்செய்வது ரிஷிகள் ஆச்சார்யர்கள் மூலம் செய்யாமல் -நேராகச் செய்வது
செய்து காட்டி -அனுஷ்டானம் -பெருமாள் -இளைய பெருமாள் -பரத்தாழ்வான் -சத்ருக்கனன் மூலம் விசேஷ தர்ம அனுஷ்டானம் –
அதுக்கும் மேல் யாரைக் குறித்து செய்ய வேண்டும் என்றும் காட்டி அருளி -அஹம் ஹி ஸர்வ யஜ்ஜாநாம் போக்தா பிரபு ஏவச –
ஆராதனத்தில் ஊற்றம் வர அவனைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமே -இதுவே தர்ம ஸம் ஸ்தாபனம் –

பிறவி சத்யம் -பெருமைகள் குறையாமல் -பஞ்ச சக்தி மயம் -இச்சை அடியாக –
தர்மம் தலைக் குனிவு காலம் உணர்த்தும் -காரணங்கள் மூன்று -இப்படி ஆறும்

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்று தானா நல்லார் அடையும் பயன்?
காக்கப்  படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :

৷4.8৷৷ஸாதவ உக்த லக்ஷண தர்மஷீலா வைஷ்ணவாக்ரேஸரா மத் ஸமாஷ்ரயணே ப்ரவரித்தா மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் அவாங் மநஸகோசரதயா(நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் -ஈனச் சொல்லே
நானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தினாலும் எங்கு எய்தும் )மத்தர்ஷநாத் றதே ஸ்வாத்ம தாரண போஷணாதிஸுகம் அலபமாநா அணு மாத்ர காலம் அபி கல்பஸஹஸ்ரஂ மந்வாநாஃ (ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ )ப்ர ஷிதில ஸர்வகாத்ரா பவேயுஃ (கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -உள்ளம் சோர –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் )இதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந (கோவிந்தற்கு ஓர் குற்றேவல் செய்யாமல் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி )தேஷாஂ பரித்ராணாய தத் விபரீதாநாஂ விநாஷாய ச (பரித்ராணாயா -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உட்பகை -விஸ்லேஷாதிகள் -இங்கே வெளிப்பகை -நெருப்பு என்று நின்ற திருமாலே -)க்ஷீணஸ்ய வைதிக தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப ப்ரதர்ஷநேந தஸ்ய ஸ்தாபநாய ச (சாஷாத் தர்மம் -தன்னை நிலை நிறுத்த -சிந்தையந்தி மாலாகாரர் போல்வாருக்கக் காட்டி அருள )தேவ மநுஷ்யாதி ரூபேண யுகே யுகே ஸஂபவாமி. (ஸம் -பிறந்து ஒளி விஞ்சி -பெருமை தேடி )க்ருத த்ரேதாதி யுக விஷேஷ நியமஃ அபி நாஸ்தி இத்யர்தஃ.

৷৷4.8৷৷கிமர்தஂ? இதி ப்ரஷ்நஸ்யோத்தரமுச்யத இத்யாஹ ‘ஜந்மந’ இதி. ஸாதுஷப்தோத்ர நாஸமர்தாதிவிஷயஃ, துஷ்கரிச்சப்தப்ரதியோகிரூபத்வாத்; அதஃ ஸுகரிதிவிஷயோயமித்யபிப்ராயேணோக்தஂ ‘உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி.’உக்தலக்ஷணஷப்தேந”வேதேநோதிதஸ்ய’ இத்யாதி பராமரிஷ்யதே. யே புநருக்தலக்ஷணதர்மேண தேவதாந்தராண்யேவ உபாஸதே; யே ச வைஷ்ணவாஃ’ப்ரதர்ஷநவித்யாதிந்யாயேந’ தத்தத்தேவதாவிஷிஷ்டவேஷேணைவ பகவந்தமுபாஸதே; ந தேஷாமவதாரப்ரதர்ஷநேத்யந்தநிர்பந்தஃ; தத்தத்தேவதாகஞ்சுகிதவேஷேணைவ ததபேக்ஷிதஸகலப்ரதாநோபபத்தேரித்யபிப்ராயேணோக்தஂ ‘வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பகவத்பக்தவர்யா இத்யர்தஃ.’உக்தலக்ஷணதர்மஷீலா’ இதி’வைஷ்ணவாக்ரேஸரா’ இதி பதாப்யாஂ’ந சலதி நிஜவர்ணதர்மதோ யஃ’ வி.பு.3.7.20’வர்ணாஷ்ரமாசாரவதா’ வி.பு.3.8.9 இத்யாதி ஸூசிதம். யதாவஸ்திதமுபாயஂ ப்ராப்யஂ சாவலம்பமாநா இதி ச பலிதம். த்ராணஂ ஹி நாமாத்ராநிஷ்டநிவர்தநபூர்வகேஷ்டப்ராபணம். ஏவஂவிதவைஷ்ணவாக்ரேஸராணாமநிஷ்டஷ்ச பகவதலாபஃ; தத்ஸமாஷ்ரயணபூர்வகஂ தல்லாபேநைவ ச தஸ்யாநிஷ்டஸ்ய நிவர்தநமித்யபிப்ரேத்யோச்யதே’மத்ஸமாஷ்ரயண’ இத்யாரப்ய’ஆலாபாதிதாநேநேத்யந்தம்’. நஹ்யமீஷாமந்நபாநதாம்பூலாதிதாரணபோஷணாதிகம், கிந்து’அஹஂ கரிஷ்ண ஏவ ஸர்வஂ’ இத்யபிப்ராயேணோச்யதே’மத்தர்ஷநாத்விநா ஸ்வாத்மதாரணபோஷணாதிகமலபமாநா’ இதி. அதர்ஷநஂ சாநிஷ்பந்நயோகாவஸ்தத்வாத். யத்யமீ மத்ஸாக்ஷாத்காராத்பூர்வமல்பஂ காலஂ லோசநே மீலயித்வா ஸஹேரந், ததாஹமபி தாதரிஷீஂ தேஷாமவஸ்தாஂ ஸஹேயாபி, நத்வேதே ததேத்யபிப்ராயேணோக்தஂ ‘க்ஷணேத்யாதி’.’த்ருடிர்யுகாயதே த்வாமபஷ்யதாம்’ பாக.10.31.15 இத்யாதிகமிஹ பாவ்யம். அதர்ஷநதுஃகஸ்ய ச சரமாவஸ்தோச்யதே’ப்ரஷிதிலஸர்வகாவா பவேயுரிதி’. ஸ்வவிஷ்லேஷபரிக்லிஷ்டாநாமுஜ்ஜீவநாய ப்ரவரித்தஸ்ய க்ரமாத்பக்தாநுபாவ்யாகாரா உச்யந்தே’மத்ஸ்வரூபசேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேநேதி’. நஹ்யபவர்கஸுகாதிவதவதாரமந்தரேண ஸ்வஸங்கல்பமாத்ரேணைவ தத்தாதுஂ ஷக்யமிதி பாவஃ.’பரித்ராணாய’ இத்யத்ரோபஸர்கேண விவிதாநிஷ்டநிவரித்திபூர்வகவிவிதேஷ்டப்ராப்திஃ ஸூசிதேத்யபிப்ராயேண’மந்நாமகுணகர்மேத்யாதிகஂ தாரணேத்யாதிகஂ ஸ்வரூபசேஷ்டிதேத்யாதிகஂ’ சோக்தம். ஸ்வரூபமத்ர விக்ரஹஃ. ஏவஂ ஸாதூநாமாந்தரபயாத்பரித்ராணமுக்தம்; அத தேஷாமேவ பாஹ்யபயாத்பரித்ராணமுச்யத இத்யபிப்ராயேணாஹ’தத்விபரீதாநாஂ விநாஷாய சேதி’. சகாரோந்வாசயார்தஃ. இதமப்யுக்தமந்தராதித்யாதிகரணபாஷ்யே’ஸாதவோ ஹ்யுபாஸகாஃ, தத்பரித்ராணமேவோத்தேஷ்யம்; ஆநுஷங்கிகஸ்து துஷ்கரிதாஂ விநாஷஃ, ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தேஃ’ இதி. பாகவதாநாமபராதோ ஹி துஷ்கரித்த்வகாஷ்டேத்யபிப்ராயேண’தத்விபரீதாநாமித்யுக்தம்’.’ரிபூணாமபி வத்ஸலஃ”மச்சரைஸ்த்வஂ ரணே ஷாந்தஸ்ததஃ பூதோ பவிஷ்யஸி’ இதிவத்துஷ்கரிதாமபி விநாஷோ நாத்யந்தவிநாஷஃ; கிந்து, வைபரீத்யஹேதுபூதராக்ஷஸப்ரபரிதிஷரீரக்ரந்த்யாதிவிநிவர்தநம்; தந்நிவரித்தௌ ச தேஷாமபி தார்மிகத்வஂ ஸம்பவேதிதி ஸோபி தர்மஸஂஸ்தாபநபர்யவஸிதஃ. மச்சேஷபூதமாராதநஂ மயைவ ஹி ஸ்தாபநீயமித்யபிப்ராயேண’மதாராதநரூபஸ்யேத்யுக்தம்’. அநுஷ்டாநமுகேநோபதேஷமுகேந ச தர்மப்ரவர்தநஂ வ்யாஸாதித்வாராபி ஷக்யம்; ஆராத்யரூபப்ரதர்ஷநேந பக்த்யுத்பாதநமவதாராஸாதாரணப்ரயோஜநம்; பரஷ்ஷதபருஷவாதீ ஜந்மத்ரயஷத்ருஃ ஷிஷுபாலோபி ஹி கரிஷ்ணதர்ஷநேந ப்ரீதிமாந்பூத்வா முக்திஂ கத இத்யபிப்ராயேண’ஆராத்யஸ்வரூபப்ரதர்ஷநேநேத்யுக்தம்’.’ருபௌதார்யகுணைஃ புஂஸாஂ தரிஷ்டிசித்தாபஹாரிணாம்’ வா.ரா.2.3.29 இத்யாதி ச பாவ்யம். ஏதேந தர்மஸ்ய ஸம்யக்ஸ்தாபநஂ ஹி ஸ்வபர்யந்ததயா ஸ்தாபநமித்யுக்தஂ பவதி.’யுகே யுகே’ இதி வீப்ஸாதாத்பர்யஂ வ்யநக்தி’கரிதத்ரேதாதீதி’. ந து ப்ரதியுகமவஷ்யஂ ஸம்பவாமி, நாபி யுகவிஷேஷநிர்பந்த இதி பாவஃ.

————

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –

அவதார ரஹஸ்யம் -அனுசந்திப்பவன் -திவ்யம் ஜென்மம் -திவ்யம் கர்மம் –
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -மாயம் என்ன மாயமே–
உண்மையாக அறிந்து கொண்டால் -ஐயம் இல்லாமல் திரிவு இல்லாமல் -சங்கை இல்லாமல் –
அதே ஜென்மத்தில் –என்னை அடைகிறான் -பிராரப்த கர்மம் அதே சரீரத்தில் முடித்து
மே ஜென்மம் மே கர்மம் மே திவ்யம் -இவனுக்கும் திவ்யமாக இருக்குமே —
ஒளியால் வெண்ணெய் உண்டான் –ஏலா பொய்கள் உரைப்பான் –

அதி மானுஷ சீல வ்ருத்த வேஷை
அதி வ்ருத்த அமர விக்ரம ப்ரதாபை
அதி லங்கித சர்வ லோக சாம்யம்
வரயே வைஷ்ணவ வைபவ அவதாரம்
––ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம்-1–

அதி அத்புதங்களான ஸ்வபாவத்தாலும் –
வியாபாரத்தாலும்-
அலங்காரத்தாலும் –
விக்ரமத்தாலும் –
பிரதாபத்தாலும்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனான பரம புருஷனுடைய விபவ அவதாரத்தை
புகழ்ந்து பேசத் தொடங்குகிறேன் என்று ப்ரதிஜ்ஜை பண்ணுகிறார் இதில்

மக்களுக்குத் திவ்யம் -ஆச்சர்யம் என்று மட்டும் இல்லை
தனக்கே ஆனந்தம்
தன் சரிதை கேட்டு பெருமாள் மகிழ்ந்தானே -ம்ருத சஞ்சீவனம் –
பீஷ்மர் சொல்லக் கேட்டான்
பூரி ஜெகந்நாதப்பெருமாள் இந்த சேவை தானே
ஸ்ரீ ரோகிணி தேவி சொல்ல கேட்டு கண்கள் விரிந்து ஸேவை

அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –

அவதார ரஹஸ்ய அங்கமாகக் கொண்ட பக்தியே -பிரபத்தி போல் சரீர அவசனத்திலே பேறு
இங்கு அதே சரீரத்தில் பிராரப்த கர்மாக்கள் போக்கி அருளி பேற்றை அளிக்கிறான்
அங்கமாகக் கொள்ளாத பக்தி யோகத்தால் பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பேறு

பிறவாத பரம்பொருள் பிறப்பவன் போன்று தனது மாயாசக்தியால் காட்டிக் கொள்கிறான்.
அங்ஙனமே கர்மத்துக்கு அதீதமான அவதார மூர்த்தி சத்கர்மங்கள் யாவையும் செய்து வருபவனாகத் தென்படுகிறான்.
இவ்வுண்மையை உள்ளபடி சுவானுபவத்தில் அறியும் ஆத்மசாதகர்கள் தாங்களும்
அங்ஙனம் உலகில் வாழ்ந்து பிறவிப் பெருங்கடலை நீத்த வல்லவராகின்றனர்.

ஒரு தத்துவத்தை விசாரித்து அறிந்துகொள்ளுதல் மிகக் கஷ்டமானது.
ஆனால் அதே தத்துவத்தை அவதார புருஷன் ஒருவன் தனது ஜீவிதத்தின் மூலம் விளக்குகிறான்.
மேலும் அவன் அருளுக்கு உறைவிடமாகிறான். அவனை நேரில் காண இயலாதவரும் அவனைப் பற்றி
நினைக்க நினைக்க அவனது சொரூபத்தை அறிகிற பரிபாகம் அடைகின்றனர்.

இராமபிரான், ஸீதாதேவி, கிருஷ்ணன், ராதை இவர்கள் சரித்திர பூர்வமானவர்களல்ல என்றும்,
சும்மா உருவகப்படுத்திக் கூறப்பட்டவர்களே யென்றும், இதிஹாஸங்கள் வெறும் அத்யாத்மிக அர்த்தங்களை மட்டும்
உடையன வென்றும் நினைக்காதே. அவர்கள் உன்னைப் போலவே
ஊனும் உதிரமும் பெற்ற சரீரத்தை யுடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் தெய்வீகம் வாய்ந்தவர்களாதலால் அவர்களுடைய வாழ்க்கைகளைச் சரித்திர பூர்வமாகவும்
ஆத்மீக உண்மைகளை விளக்குவனவாகவும் கொள்ளலாம்.
ஸமுத்திரமும் அதன் அலைகளும் போல பிரம்மமும் அவதாரங்களுமாகும்.

திவ்விய குணங்களுடனும் திவ்விய சக்திகளுடனும் அவதார புருஷர்கள் மண்ணுலகில் அவதரிக்கிறார்கள்.
அவர்கள் தாழ்ந்ததிலிருந்து மிக உயர்ந்த எந்தச் சமாதி நிலையிலும் எளிதில் புகுவார்கள்; திரும்புவார்கள்.
அரசன் அரண்மனையில் அன்னியர் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குந்தான் போக முடியும்.
அரசனுடைய குழந்தையோ அரண்மனையின் எந்த மூலைக்குப் போய் வரலாம்.
அவதார புருஷர்களை அறிந்துகொள்வது அரிதான காரியமாகும். எல்லையற்ற அகண்ட வஸ்து எல்லைக்குட்பட்ட
கண்டத்துள் அடங்கி இருப்பதற்கு ஒப்பாகும் அவர்களது வாழ்க்கை.
ஸ்ரீ ராமபிரான் இவ்வுலகில் அவதரித்தது ஏழு ரிஷிகள் மாத்திரமே
அவர் ஈசுவராவதார மென்பதைத் தெரிந்து கொண்டிருந்தனர்.
எனவே, இவ்வுலகில் எப்போது ஈசுவரன் வந்த போதிலும் சரியே,
சிலர் மட்டுமே அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தெரிந்துகொள்வர்.

ஈசுவரன் அனந்தன்; ஸர்வ சக்திமான். அவன் அருள் மயமான தனது தெய்வீக சக்தியை
மானிட சரீரத்தில் தோற்றுவித்து, நம்மிடையே ஓர் அவதார புருஷனாகத் தோன்றத் திருவுளங் கொள்ளலாம்.
ஈசுவராவதாரத்தினின்றும் அருள்வெள்ளம் பெருகிப் பக்தர்களை இன்புறுத்துகிறது.
வார்த்தைகளால் இவ்விஷயத்தை விளக்க முடியாது. ஞானக் கண்ணால் தான் இந்த உண்மையைப் பார்த்துத்
தெரிந்து கொள்ளவேண்டும். இதை நம்பவேண்டுமானால், ஈசுவரனை அனுபூதியில் காணவேண்டும்.

என்ன சாதனம் செய்து ஞானியர் ஈசுவரனைத் தெரிந்து கொள்ள வல்லவர்களானார்கள்? விடை வருகிறது:

৷4.9৷৷ஏவஂ (இப்படிப்பட்ட -கீழ் ஸ்லோகங்களில் சொன்னபடி )கர்ம மூல பூத ஹேய த்ரிகுண ப்ரகரிதி ஸஂஸர்க ரூப ஜந்ம ரஹிதஸ்ய (பிறப்பால் தாழ்ச்சி இல்லையே ப்ரக்ருதி சம்பந்தம் இல்லையே-கர்ம  மூலம் இல்லை இச்சா க்ருஹீதாம் )ஸர்வேஷ்வரத்வ ஸர்வ ஜ்ஞத்வ ஸத்ய ஸஂகல்பத்வாதி ஸமஸ்த கல்யாண குணோபேதஸ்ய ஸாது பரித்ராண மத்ஸமாஷ்ரயணைக ப்ரயோஜநஂ திவ்யம் அப்ராகரிதஂ மதஸாதாரணஂ (அசாதாரணம் -அந்தர்யாமி போல் அல்லவே-ஸாஷாத்தாக )மம ஜந்ம சேஷ்டிதஂ ச (அப்ராக்ருதமாய் -தாழ்ச்சி அற்றதாய் -பரம போக்யமாய் -நெஞ்சால் நினைப்பரிய -அளவிட முடியாத -இமையோர் தமக்கும் நினைப்பரிதால் -அம்ருத மயமாய் -இவை மூன்றும் ஜென்மங்களுக்கு சேஷ்டிதங்களுக்கும் உண்டே -மே திவ்யம் -அதி மானுஷ –எனக்கு வியப்பாக உள்ளதே -அலாப்ய லாபம் போல் )தத்த்வதஃ யோ வேத்தி (உள்ளபடி அறிந்து -சம்சயம் விபர்யயம் அல்லாமல் )ஸ வர்தமாநஂ தேஹஂ பரித்யஜ்ய புநஃ ஜந்ம ந ஏதி மாம் ஏவ ப்ராப்நோதி.மதீய திவ்ய ஜந்ம சேஷ்டித யாதாத்ம்ய விஜ்ஞாநேந வித்வஸ்த ஸமஸ்த மத் ஸமாஷ்ரயண விரோதி பாப்மா அஸ்மிந் ஏவ ஜந்மநி யதோதித ப்ரகாரேண மாம் ஆஷ்ரித்ய மதேக ப்ரியோ மதேக சித்தோ மாம் ஏவ ப்ராப்நோதி.தத் ஆஹ(அவன் ஜென்மம் நமக்கு என்று கோல நம் ஜென்மம் தந்தை கால் விலங்கு போல் வெடிக்கும் அன்றோ-பிறந்தவாறும் -திடமாக இங்கேயே இருக்க சரணாகதி அன்றோ -நீ நெய் உண்டாய்– நாம் கண் உண்டோம்– பிரதிகூலர் மண் உண்டார்கள்  )

ஞானம் அனுஷ்டான பேதம் -ருசி பேதம் -சாஸ்த்ர விதிகள் பேதம் -பக்தி யோகம் -அவதார ரஹஸ்ய ஞான அங்கம் கொண்ட பக்தி யோகம் -பிரபத்தி -மூன்றும்
வெவ்வேறே அதிகாரிகளுக்கு -லகு உபாயம் குரு உபாயம் -அத்யந்த பாரதந்தர்ய ஞானமும் -மஹா விஸ்வாசமும் வேண்டுமே
அனைத்துக்கும் ஆள் உண்டே
அஞ்ஞானம் -ஞானாதிக்யம் -பக்தி பாரவஸ்யம் –
அர்ஜுனன் நேரே ஸாஷீ –

৷৷4.9৷৷ப்ராஸங்கிகஸ்யாவதாரயாதாத்ம்யகதநஸ்ய பரமப்ரகரிதமோக்ஷோபயோகித்வமுச்யதே ‘ஜந்ம கர்ம’ இதி ஷ்லோகேந.’ஏவமிதி’ ‘அஜோபி’ 4.6 இத்யாதிநோக்தப்ரகாரேணேத்யர்தஃ.’திவ்யஂ’ இத்யஸ்யைவார்தஃ’அப்ராகரிதமிதி’.’மதஸாதாரணமித்யநேந’ “பஹு ஸ்யாஂ ப்ரஜாயேய” சாஂ.உ.6.2.3தை.ஆ.6.2 இத்யுக்தஜந்மவ்யவச்சேதஃ. வஹ்ந்யௌஷ்ண்யவத்தர்மிக்ராஹகப்ரமாணஸித்தஃ பதார்தாந்தரேஷ்வதரிஷ்டஷ்ச ப்ரகாரோ ந தர்கபாத்ய இதி பாவஃ.’ஜந்ம கர்ம ச மே திவ்யம்’ இத்யுக்தே ஜந்மவத்தத்தேதுபூதஂ புண்யமபி கிமஸ்தி?. இதி ஷங்காவ்யுதாஸாய’சேஷ்டிதமிதி’ வ்யாக்யாதம்.’தத்த்வத’ இதி ஸஂஷயவிபர்யயரஹிதமித்யர்தஃ.’தேஹஂ பரித்யஜ்ய’ இத்யுக்தே ப்ராரப்தகர்மபர்யவஸாநதேஹஂ பரித்யஜ்யேதி ஸாதாரணப்ரதீதிஃ ஸ்யாத், தத்வ்யவச்சேதாய ‘வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யுக்தம்’. ஏதச்ச’யோ வேத்தி ஸ புநர்ஜந்ம நைதி’ இதி வேதிதரித்வாவஸ்தாபேக்ஷயா புநர்ஜந்மப்ரதிஷேதாத்பலிதம்.’புநர்ஜந்ம நைதி’ இத்யநேந விரோதிநிவரித்திருச்யதே;’மாமேதி’ இதீஷ்டப்ராப்திஃ. ந கேவலஂ விரோதிநிவரித்திமாத்ரேண ஸ்வாத்மாநந்தாநுபவமாத்ரம், அபித்வவதாரரஹஸ்யஜ்ஞாநவாந்மாமேவ ப்ராப்நோதீத்யவதாரணார்தஃ. நநு வர்தமாநதேஹஂ பரித்யஜ்யேத்யாத்யயுக்தம், ப்ராரப்தகர்மாவஸாநே ஹி மோக்ஷஃ ஷாரீரகே நிர்ணீதஃ, ப்ராரப்தஸ்ய ச கர்மணஃ கியந்தி ஜந்மாநி ஸாத்யாநீதி ந நியமஃ; வ்யாஸாதிஷ்வநியமதர்ஷநாத். ந ச ஜந்மகர்மஜ்ஞாநமாத்ராந்மோக்ஷஃ, தீர்ககாலநைரந்தர்யாதரஸேவநீயதுஷ்கரதரகர்மஜ்ஞாநாநுகரிஹீதோபாஸநஷாஸ்த்ரார்தநைரர்தக்யப்ரஸங்காதித்யத்ராஹ ‘மதீயேதி’. திவ்யஜந்மசேஷ்டிதஜ்ஞாநேநோபாஸநவிரோதிநாஂ ஸமஸ்தாநாஂ பாபாநாஂ நிவரித்தத்த்வாதஸ்மிந்நேவ ஜந்மநி ஜந்மாந்தராரம்பகபாபாஂஷப்ரஷமநஸமர்தபுஷ்கலோபாஸநநிஷ்பத்தேர்ந ஜந்மாந்தரபரிக்ரஹஃ. ஸ்மரந்தி ச’விநிஷ்பந்நஸமாதிஸ்து முக்திஂ தத்ரைவ ஜந்மநி’ வி.பு.6.7.35 இதி. ஏவஂ சோபாஸநபௌஷ்கல்யஹேதுதயாஸ்யாபிதாநாத் பரம்பரயா மோக்ஷஸாதநத்வமிதி நோபாஸநஷாஸ்த்ரவையர்த்யமிதி பாவஃ.’யதோதிதப்ரகாரேண மாமாஷ்ரித்யேதி’ புஷ்கலத்யாநாவஸ்தோச்யதே.’மதேகப்ரிய’ இதி து பக்திரூபாபந்நதோக்திஃ. அஹமேக ஏவ ப்ரியஃ ப்ரீதிவிஷயோ யஸ்ய ஸ மதேகப்ரியஃ’ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்தமஹம்’ 7.17 இதி வக்ஷ்யதே. ஏதேந புருஷார்தாந்தரநிஷ்டவ்யவச்சேதஃ.’மேதகசித்த’ இதி ஸமாத்யவஸ்தா. மய்யேகஸ்மிந்நேவ சித்தஂ யஸ்ய ஸ மதேகசித்தஃ.

———–———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் அருளிச் செய்து அருளிய–ஸ்ரீ சதுஸ்லோகீ –ஸ்லோகம் 1 -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம்-

October 11, 2024

ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்தனியன்

யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

அவதாரிகை –
நம் தர்சனத்துக்கு பிரதானம்
ரஹஸ்ய த்ரயம் -என்றும்
ஸ்லோக த்வயம் -என்றும்
சதுஸ் ஸ்லோகீ –என்றும்
நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

இதில் திரு மந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் பிரதிபாதிக்கப் படுகையாலே-
அந்த புருஷார்த்தத்துகு உபாய சிந்தை பண்ணுகிறது சதுஸ் ஸலோகியாலும் -ஸ்லோக த்வயத்தாலும் –

(ஸ்லோக த்வயம் என்றது ஸ்திதே மனசீ-என்று தொடங்கும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
உபாயத்தை விளக்குவது இந்த ஸ்லோக த்வயமும் சதுஸ் ஸ்லோகியும் என்றவாறு )

இவ் விடத்தில் சதுஸ் ஸ்லோகியால் செய்கிறது என் என்றால் –
ஸ்ரீ நம்பெருமாளுக்கு தேவதாந்தரங்களில் காட்டில் வாசி
மோஷ ப்ரதத்வமும் ஜகத் காரணத்வம் -என்கிற இவை –
இவை தான் எத்தாலே வந்தது என்றால்
ஸ்ரீயபதித்தவ -ஸ்ரீ நாராயணத்வங்களாலே வந்த
பரத்வாதி குணங்களாலே -என்கை-

வேதார்த்தமாய் இருந்துள்ள அர்த்த பஞ்சகத்துக்கு விவரணமான ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு
பர்யாலோசனம் பண்ணி இருந்துள்ள
ஸ்ரீ ஆளவந்தார் ஸதோத்ரீ கரித்து
ஸ்ரீ யபதித்தவ நிபந்தனமான சௌலப்யாதி குணங்களை
அனுபவிக்கிறார் -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியாலே-

இதில் முதல் ஸ்லோகத்தால் –
ஸ்ரீ பிராட்டியினுடைய –ஸ்ரீ நாராயண சம்பந்த நிபந்தனமான பரத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –
இரண்டாம் ஸ்லோகத்தாலே-
அந்த பரத்வத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீ பிராட்டி யுடைய புருஷகாரத்வம் சொல்லப் படுகிறது
மூன்றாம் ஸ்லோகத்தாலே
இப்படிக் கொத்த சௌலப்யாதி குணங்களை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
ஜகத் காரணத்வத்திலும் அந்தர் பாவம் உண்டு –
என்னும் இடத்தைச் சொல்லி உபாய கீர்த்தனம் பண்ணப் படுகிறது –
நாலாம் ஸ்லோகத்தாலே
கீழ் சொன்ன உபாய பல ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது –

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ்
சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி
ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

——–

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

————

காந்தஸ் தே புருஷோத்தம –
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போது ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்பந்த நிபந்தன நிரூபணம் பண்ண வேணும் –
இவனையும் இவளுடைய சம்பந்தத்தாலே என்றும் நிரூபிக்க வேண்டும்
அது எங்கனே -என்னில்

க ஸ்ரீ ஸ்ரீய–ஸ்தோத்ர ரத்னம் -12-என்றும்
ஸ்ரீ ய ஸ்ரீ யம் பக்த ஜனைக ஜீவிதம் -ஸ்தோத்ர ரத்னம் -45-என்றும் –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -செய்ய கண்ணா உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா–பெரிய திருமொழி -7-7-1- -என்றும்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் -திருவாய் மொழி -7-2-9-என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போதும் காந்தஸ் தே புருஷோத்தம -என்னும் படியாய் இறே இருப்பது –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-
ஸ்தோத்ர ரத்னம் -12

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||
–ஶ்லோகம் 45 –

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

திருவுக்கும் திருவாகிய செல்வா –ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –திரு மார்பா-உன்னைத் தளர்ந்தார் தாவளமாக்குமவளை திரு மார்விலே யுடையவனே(தளர்ந்தார் தாவளமாக்குமவளைஇவன் ரக்ஷகன் ஆக்குபவளே இவள் –இதில் புருஷகார பூதை என்கிறார் –கீழே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று )என் திருமகள் சேர் மார்பனே என்னும் –
‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.

‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.-அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.

பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,

நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது
செய்யா நிற்கச் செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.

இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பர்த்தா தே புருஷோத்தம -என்னாதே-
காந்தஸ் தே புருஷோத்தம -என்பான் என் என்னில் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா
–சுந்தர -16-5-என்றும்
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாத்ய அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம்
-சரணாகதி கத்யம் -1- என்றும்
ஸ்ரீ வல்லப -சரணாகதி கத்யம் -6- என்றும் –
யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸதி ரச ரரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசி யத் பாத சிஹ்னைச் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ருப்ய அநுபாவா
ஸா ந ஸ்ரீ ராஸ் த்ருணீ தாமம்ருத லஹரிதீ லங்கா நீ யைர பாங்கை
-ஸ்ரீ குணரத்ன கோசம் -4-என்றும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-என்றும்
பிரயோகம் பண்ணுகிறார்கள் இறே –

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் –
அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே
–ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பாலா -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

ஹரி என்னுதல் -விஷ்ணு -என்னுதல் -செய்யாதே புருஷோத்தம -என்பான் என் என்றால் –
தவாவி மௌ புருஷௌலோகே ஷரஸ் சாஷர ஏவ ச
ஷரஸ் சர்வாணி பூதாநி கூடஸ்தோ அஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத்யு தாஹ்ருத
யோ லோகத்ரயமா விஸய பிபர்த்யவ்யய ஈஸ்வர
யஸ்மாத் ஷரமதீ தோ அஹ்ம ஷராதபி சோத்தம
அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதின புருஷோத்தம
-ஸ்ரீ கீதை -15/16/17/18 –

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

லோகே -சாஸ்த்ரங்களில்(எந்த ஒன்றால் லோகத்தை அறிகிறோமே அதுவே இங்கு லோகே )
க்ஷர: ச அக்ஷர: ஏவ ச த்வாவிமௌ-த்வௌ இமௌ- புருஷௌ ஏவ -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி யிருக்கையால்) க்ஷர புருக்ஷன் எனப்படும் ப₃த்₃த₄ ஜீவனும், அழியும் இயல்வில்லாமையால் (அக்ஷரன்) எனப்படும் முக்த ஜீவனும் ஆகிய இரண்டு(வகையான ) இப் புருக்ஷர்களே (பிரஸித்தி பெற்றவர்கள்)
க்ஷர: – க்ஷர புருக்ஷன்
ஸர்வாணி பூ₄தாநி – எல்லா ப ₃த்₃த₄ ஜீவனுமாவான்
அக்ஷர: – அக்ஷர புருக்ஷன்
கூடஸ்த:₂ உச்யதே – (அசித் ஸம் ₃பந்த₄மற்ற ) முக்தாத்மா எனப் படுகிறான்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

ய: து – எவன் ஓருவன்
லோக த்ரயம் – அசித், ப₃த்₃த₄ ஜீவன், முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும்(லோக்யதே -இதி லோகம் -அவலோகநம் -பார்க்கப்படும் பொருள்கள் -இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டவை -)
ஆவிஶ்ய – வியாபித்து(ப்ரவேஸம் ஆவேசம் உள்ளே புகுந்து வியாபித்து )
பி₃ப₄ர்த்தி – (அவற்தைத்) தாங்குகிறானோ
(அவன்)
அவ்யய: – அழிவற்றவனாய்
ஈஶ்வர: – (அனைத்தையும்) நியமிப்பவனாய்
பரமாத்மா இதி உதா₃ஹ்ருத:- பரமாத்மா என்று(ஆத்மா நாராயண பர இத்யாதி ஸ்ருதிகள்) ஶாஸ்த்ரங்களில் சொல்லப்படுபவனாய்
உத்தம: புருஷ: – (இக் காரணங்களால்) மிக மிக மேலான புருஷனாயிருப்பவன்-விலக்ஷண -அத்விதீயன்
அந்ய: – (முற்கூறிய க்ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும்)வேறு பட்டவன்

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

அஹம் – நான்
யஸ்மாத் – யாதொரு காரணத்தினால்
க்ஷரம் – க்ஷர புருஷனை-பத்த ஜீவாத்மாவைக் கூட்டிலும்
அதீத: – கடந்து நிற்கிறேனோ
அக்ஷராத் அபி – அக்ஷர புருஷனை -முக்தனைக் காட்டிலும்-கூட
உத்தம: ச – மேலானவனாய் இருக்கிறேனோ
அத: – அக் காரணத்தினாலேயே
வேதே ₃லோகே – ஶ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும்(அபி நிஷ்பத்ய ச உத்தம புருஷ சாந்தோக்யம்-லோகம் -பார்க்கும் கருவி இங்கு -ஸ்ம்ருதி )
புருஷோத்தம: – புருஷோத்தமன் என்று
ப்ரதி₂த: அஸ்மி –புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

அசித்தானது -ஸ்வரூப அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும்
சித்தானது -ஸ்வ பாவ அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும் –
ஆக உபய அந்யதா பாவ ரஹிதன் ஈஸ்வரன் -என்று கொண்டு
தனக்கு விபூதி பூதமான சேதன அசேதன விலஷணன் என்று இட்டு – புருஷோத்தம -என்கிறது அன்றோ -என்கிறார் –

பணி பதிஸ் சய்யா –
ஒரு ராஜாவுக்கு அபிமதையாய் இருப்பாள் ஒருத்தி கண்ட போது ரசிப்பது இத்தனை ஒழிய
ஒரு படுக்கையிலே ஏறப் பெறாதே யாய்த்து இருப்பது
அங்கன் அன்றிக்கே
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப -என்றும்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -என்றும்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்றும்
இப்படி பிரமாணம் உண்டாகையாலே கேவலம் அபிமதையான மாத்ரம் அன்றிக்கே
அனுரூபையுமாய் இருக்கையாலே அவனுக்கான படுக்கை இவளுக்கும் பிராப்தம் -என்கிறார்

பணி பதி -என்கையாலே –
அகாரேணோச்யதே விஷ்ணுச் சர்வ லோக ஈஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ ருகாரேணோசயதே சதா
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே
-அயோத்யா -31-25–என்றும்
சொல்லுகிற படியே ஆத்ம வஸ்துவுக்கு ஒரு மிதுன சேஷத்வம் பரம புருஷார்த்தம் ஆகையாலே
இங்கும் வாசூகி தஷக ப்ரப்ருதிகளான அஷ்ட மகா நாகங்களுக்கு- பர்ப்ருடனாய் -தலைவனாய் –
சேஷ பூதருக்கும் தலையாய் இருந்துள்ள திரு வநந்த ஆழ்வான்
இருக்கும் போது உன் திருப் படுக்கை -என்கிறார் –

ஆசனம் வாஹனம் -வேதாத்மா விஹகேஸ்வரோ-
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரிவ்ருத் தே சிரோ காயத்ரம் சஷூ ஸ்தோம ஆத்மா
சாம தே தநூர் வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்தரே
ப ஷௌ யஜ்ஞா யஜஞியம் புச்சம் சந்தாம் ச்யங்கா நி
திஷ்ணியா சபா யஜூம்ஷிநாம
– என்கிறபடியே
நாக ஜாதிகளுக்கு நாயகனான அனந்தன் திருப் படுக்கை ஆனால் போலே
இங்கும் வேத மயனாய் பறவைகளுக்கு ஆதாரனாய் இருந்துள்ள பெரிய திருவடி
இவளுக்கு ஆசன வாகனங்கள் -என்கிறார்

அபிமதை யானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமாய் இருக்கும்
ஏக ஆசனத்தில் கொண்டு இருக்க யோக்யதை அன்றிக்கே ஆய்த்து இருப்பது
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்திர் பாகவதைச் சஹ
-என்கிறபடியே
இவள் அனுகூல ரூபாயாய் இருக்கையாலே இவனுக்கான ஆசனமும் வாகனமும் இவளுக்கும் பிராப்தம்
என்று அருளிச் செய்கிறார் –

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால்
நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷ பூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறு மணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி

கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்ய விஷ அநல ஸிக உஜ்ஜ்வல –சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்கர்ம்ய அத்தி ஜகத் த்ரயம் –
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷ அசேஷ ஸூரார்ஜித-தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபம் ஏவ ச –
ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசை அபி
-ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-

பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில்
சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க –
இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி

தயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநீ -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-
ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை
தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே

வேதாத்மா விஹகேச்வரோ-வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி
இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –
அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்
விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு

பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று

ஆக -இப்படி கீழ்ச் சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு நித்ய விபூதி சம்பந்தம் சொல்லப் பட்டது –
இனி மேல் ஸ்லோக சேஷத்தாலே லீலா விபூதி யோகம் என்ன
தத் அந்தர் வர்த்திகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதி தேவ கணங்கள் உடைய
சேஷத்வம் என்ன இவை சொல்லப் படுகிறது
அது எங்கனே என்றால் –

யவநிகா மாயா ஜகன் மோஹி நீ –
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மகேஸ்வரம்–ஸ்வேதர -4-10– -என்றும் –
பிரகிருதி மாயை -அத்தை தூண்டுபவன் மகேஸ்வரன் –
இந்த்ரோ மாயாபி புரூரூப ஈயதே -ப்ருஹத் 4-5-19– இந்த்ரன் பிரகிருதி ஆகிற மாயையினால்
பல உருவங்களுடன் சஞ்சரிக்கிறான் -என்றும்
தைவி ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே
-கீதை -7-14-என்றும்
இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிற பகவன் மாயை அன்றோ உனக்கு யவநிகை –
ஒரு திரையின் உள்ளிருக்கும் பேரைப் புறம்பில் அவர் காணாத படியாய்
புறம் இருக்கும் பேரை உள்ளிருக்கும் அவர்கள் காணாத படியாய் யாயிற்று இருப்பது
அங்கன் அன்றிக்கே –ஜகன் மோஹிநீ -என்று எம்பெருமானுக்குத் திரோதாயிகையாய் இருக்கை அன்றிக்கே
ஜகத்துக்குத் திரோதாயிகையாய் இருக்கும் -என்கிறார் –

யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை -பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பத்தை அருளிச் செய்தபடி-

மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு

ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சப்த்தாதிகளால் விசித்திரமாக
போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே
கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று

ப்ரஹ்மேஸாதி ஸூரா வ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
பூலோகம் தொடங்கி சத்ய லோகம் பர்யந்தமாக மேல் உள்ள லோகங்கள் என்ன
அதல விதல ஸூதல பாதாளோத்தால ரஸாதல போகவதீ பர்யந்தமான கீழ் ஏழு லோகங்கள் என்ன
இவற்றில் காணப் பட்டு உடையராய் இருந்துள்ள தேவ கணங்கள் என்ன
இவர்களுக்கு கொத்து முதலிகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதிகள்-என்ன
சரஸ்வதி ருத்ராணீ புலோ மஜாப் ப்ரப்ருதிகளாய் இருந்துள்ள தேவ ஸ்திரீகள் என்ன
அப்ஸரோ கணங்கள் என்ன
இவர்கள் எல்லாரும் ஆண் அடிமையும் பெண் அடிமையுமாய் இருக்கும் -என்கிறார்

ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ்
–சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்-இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜகண -போன்ற பதங்கள் பிரயோகம்–சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்- தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –

இவை எல்லாம் யதார்த்தம் யன்றோ –
ஸ்தோத்ரம் யன்றோ
இது எங்கனே கூடும்படி -என்றால்
ஸ்ரீரித் யேவ ச நாம தே –
ஸ்ரீ என்று அன்றோ உனக்குத் திரு நாமம் –

இத்தாலே இவளுக்கு சர்வ சேஷணீத்வமும் தெரிவிக்கப் பட்டதோ -என்றால்
ஸ்ரீங் சேவாயாம் -என்கிற தாதுவாலே தன்னை ஒழிந்த சேதன அசேதனங்களாலே
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி களுக்காக ஆஸ்ரயிக்கப் படுகிறாள் என்று கொண்டு -ஸ்ரீ -என்கிறது –
அதுக்கு பிரமாணம் –
கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணிம் ஈஸ்வரீம் சர்வ பூதானாம்-ஸ்ரீ ஸூக்தம் -9- -என்றும்
அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீம் -ஸ்ரீ நீளா ஸூக்தம் -என்றும் -உண்டாகையாலே-
ஸ்ருணோதி ஸ்ராவயதி –கேட்டு கேட்விப்பிக்கிறாள்
ஸ்ருனாதி -குற்றம் நீக்கி சேர்க்கிறாள்

ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று

ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம் பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால்
அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்

ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ்ரீணாதி ச குணை ஜகத் ஸ்ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம்
–அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-

நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்

அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு

இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்

யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால்-நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே –ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது

பகவதி –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ஸ்ரீ ஸூந்தர –16-5- -என்கிறபடியே
எம்பெருமானொடு ஒக்க ஹேய பிரதி படமாய் இருந்துள்ள கல்யாண குணைகதாநத்வம் சொல்லப் படுகிறது –

மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரனே
சம்பர்த்தேதி ததா பார்த்தா பகாரோ அர்த்தத் வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யச்ய யசசச் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத் மன்ய கிலாத்மனி
ச ச பூ தேஷ்வ சேஷ ஷூ வகாரார்த் தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாசுதேவச்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரி பாஷா சமன்வித
சப்தோஸ்யம் நோபா சாரேண த்வன்யத்ர ஹ்யுபசாரத
– ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-72–78-

மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே
சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் –
முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம்
சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும்
பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது –
பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன –
அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் –
கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும்
எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால்
சொல்லப்படுகின்றன –
மைத்ரேயரே இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹா சப்தம் பர ப்ரஹ்மமான வாஸூ தேவனுக்கே உரித்தானது –
வேறு ஒருவரையும் குறிக்காது –பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது என்னும் பரி பாஷையுடன் கூடிய இந்த சப்தம்
அவன் விஷயத்தில் உபசாரிகமாகச் சொல்லப்படுவது இல்லை –

மற்ற விஷயங்களில் அமுக்யமாக சொல்லப்படுகிறது -என்று சொல்லப்பட்டது அன்றோ-என்று கொண்டு பிரமாணம் உண்டு ஆகையாலே-ஸ்ரீய பதியை நிர்தேசிக்கும் போது

இதி விவித மஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பாராத்ம மயம் சனாத நஸ்ய
பிரதி சது பகவாந சேஷ பும்ஸாம் ஹரிர பஜன் மஜராதி காம் ச சித்திம்
—ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-8-64-
பிறப்பற்றவனும் பழமையான எந்த விஷ்ணுவுக்கு பலவிதமான ப்ரக்ருதி என்ன -அத்தைக்கு காட்டிலும் மேலான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என்ன இவை இம்மாதிரியாக சரீரங்களாக இருக்கின்றனவோ அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு முதலியவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ சித்தியை அருளுவானாக

மஹத்யா பதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகபான் ஹரி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-64-என்றும்-பேர் ஆபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத் தக்கவன்

அநி யோஜ்யோ அப்ரமேயச்ச யஸ்து காம சரீரத் ருத்
மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ
-சபா பர்வம் 40-78–என்றும்
ஏவப்படாதவனும் அறிய முடியாதவனும் இஷ்டப்பட்ட உருவங்களைத் தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி சந்தோஷிக்கிறான்

பகவன் நாராயண -என்றும் –
இப்படி வ்யவஹரிக்க வடுப்பதாய் இறே இருப்பது
அவளை நிர்தேசிக்கும் போது -பகவதீம் ஸ்ரீயம் தேவீம் -என்றும்
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி -என்னும் படியாய் இருக்கும்

ப்ரூம கதம் த்வாம் வயம்-
கதம் ப்ரூம எப்படி சொல்வோம் –
வயம் -அறிவிலிகளான நாங்கள் -த்வாம் -இப்படிப் பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை
ஈஸ்வர குணஸ்த்வம் பண்ணும் போது
அநந்தா வை வேதா -என்கிற வேதங்களும் அகப்பட
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் பிபேதி குதஸ்நேதி
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ
-என்று கொண்டு
அளவுகோல் முறிந்து மடங்கும் படியாய் இறே இருப்பது –
அவன் தன்னையும் அகப்பட
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யையாய் -( ஸ்ரீ குணரத்ன கோசம் )
பகவானுடைய விஸ்வரூப அனுபவத்தையும் தன்னுடைய போகாரம்பமாகிற விளையாட்டாலே கை அளவாக ஆக்குபவளான அந்த ஸ்ரீ தேவி –யாய் இருந்துள்ள உன்னை மந்த மதிகளுக்கு அக்ரேசரராய் இருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது -என்று கொண்டு பிராட்டியினுடைய பரத்வத்தை பிரதிபாதிக்கிறார் -ஸ்ரீ ஆளவந்தார் -இதில்

பகவதி
எந்தவித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை உணர்த்தவே –பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –

ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –

த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை

வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்

கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்

தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே
ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும்
அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்

ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன

ஸ்ரீ மஹா லஷ்மீ சேதன வஸ்துவே என்று காட்டவே
தே -உனக்கு என்றும்
த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன

தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் –
தே -யவனிகா -உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை

வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்
ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று
பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-

ஆகவே -ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே–ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை –
இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே

இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும்
தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும்
ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை

ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம்
வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது -என்று கூறப்படுகிறது –

இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால்
ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-

ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில்
அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும்
அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன

உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள -காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –

ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக
தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் –
இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –

இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்

ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் -நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்

ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் -ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள
வஸ்துவை ப்ரகாசமயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்

இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –
இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள
ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது
என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –

மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது

ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –

ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் –
அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது

அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில்
உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது
முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –

ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது –
ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –

இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்

ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து குறைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள
இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்

இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து

விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்மவசப்பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல
ஆதித்யாநாம் அஹம்—ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ -10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்
அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே

அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –

உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே
தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –

அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது

ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை

ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்

ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்
மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை
அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்

மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான
விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே
லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே
தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும்
மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –

ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே
மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —
என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –
கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –

இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட
நியாயம் மூலமே கொள்ள வேண்டும்

தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை
சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் –
என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்

காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே
பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை
ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து

த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று
இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –

இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே
இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே

——————————————————-

ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;  தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

————–

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் –
சர்வ பல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் –

அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை –
க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-

அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையை புருஷார்த்தம் –
அடியார் -பிராப்தம் -ஆச்சார்யரால் -அவர் மூலம் பிராட்டி -அவள் மூலம் அவன் –
ஸ்தோத்ர ரத்னம் நான்கு பேரையும் அருளி -இதில் -பிராட்டி பற்றி விவரணம் –

பகவானுக்கு பத்னி -என்பதால் அகில லோக ஸ்வாமினீ -நாயனார் ஆச்சான் பிள்ளை –
புருஷோத்தமா தே காந்த -உனக்கு நாயகன் அதனால் இவை உனக்கும் சொத்து -ஆச்சான் பிள்ளை
சேஷம் சொத்து -அவனுக்கு போலவே இவளுக்கும் -விநியோகம் கொள்ள தக்கவர் -தேசிகன் –

நிரவதிக நிரதிசய மஹிமா -அவனது -உபாசிப்பார்க்கு கிருபை -அவனே பலம் -நான்கு அத்யாய சுருக்கம் –

அவனுக்கு சமம் பிராட்டி -ஸமஸ்த பதார்த்தங்களும் சேஷம் -பக்தி பிரபத்தி செய்தால் இவளும் பலம் -இவளும் பல ரூபம் –
நான்கு வகை சிறப்புக்களும் இவளுக்கும் உண்டு –
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் -பிராட்டிக்கு ஆதிக்யமும் சாம்யமும் கீழேயும்
கிருபாதிசயம் -கிருபையை கிளப்ப இவள் -இத்தை பார்த்தால் ஆதிக்யம்
கைங்கர்யம் பெற்று அவன் உகப்பது போலே இவளும் -பிரதி சம்பந்தி -இருவரும் – அத்தால் சாம்யம்
அடுத்த படி -ஜகத் காரணத்வாதிகள் அவனுக்கு மட்டுமே
அபிமதையாயும் அனுரூப மாயும் -பிராட்டி -பரிமளம் புஷ்பம் போலே –

ஸ்ரீயதே– ஸ்ரேயதே –இரண்டும் உண்டே -பர்த்தா -தாய் முறை இரண்டும் என்றபடி
அவனுக்கு சேஷம் அனைத்தும் -முதல் அத்யாயம் -அதே போலே இவளுக்கும் –

காந்தஸ் தே புருஷோத்தம
தே காந்த புருஷோத்தம –
புருஷோத்தம தே காந்த –
இப்படி இரண்டு யோஜனை –

ராமம் தசரதன் வித்தி –தசரதன் ராமம் வித்தி -இரண்டும் வியாக்யானம் தனி ஸ்லோகத்தில் –ராமன் இடம் பேர் அன்பு லஷ்மணா உனக்கு -சக்ரவர்த்தி இடம் பிதா போன்ற ப்ரீதி இல்லை -இங்கேயே இல்லை –
அங்கு நினைப்பாயோ -ராமனுக்கு பிரியம் என்பதாலாகிலும் எண்ணி நினைக்க வேண்டும்
கிழவன் காமி -என்று அன்றோ லஷ்மணன் கோபம் இங்கு -சுமந்திரன் வந்து சொன்ன வார்த்தை –
பிராதா பர்த்தா -சகலமும் -மம ராகவா -இப்படிச் சொன்னவன் தாய் தந்தை ஜென்ம பூமி விட்டு வந்த துக்கம் இருக்காதே

புருஷோத்தம தே காந்த -முதலில் சொல்லி -சப்த்தார்த்தம் அறிந்தால் -மறு பிறவி இல்லை
மூன்று வித சமாசம் –
ஷரம் -அக்ஷரம் -முக்தாத்மா -பிரவேசித்து தரித்து பணி உகந்து நியமித்து –ஸமஸ்த இதர வியாவ்ருத்தி
புருஷ — உத் புருஷ — உத்தர புருஷ –புருஷோத்தம —
அறிவுடையவன் புருஷன் -அசித்தை விட வேறுபட்டு -உத் புருஷ -சரீர சம்பந்த பத்தாத்மா -சம்சாரியில் வேறு பட்டு
உத்தர -முக்தாத்மாவில் வேறுபாட்டு -புருஷோத்தமன் நித்யரில் வேறுபட்டு-சிறப்புடைமை
அவன் தே காந்தா -பதி-
புரு சனாதி புருஷா
-அனைத்தையும் தருபவன் -தர்மம் அர்த்தம் காமம் -மோக்ஷம் –
மண்டோதரி பிரலாபம் -வியக்தம் -பரமாத்வாக அறிந்தேன் -பஹுவாக கொடுப்பவன் என்பதால் –
ரிஷிகளுக்கு தர்மம் -விபீஷணனுக்கு லங்கை ஐஸ்வர்யம் சுக்ரீவனுக்கு காமம் -ஜடாயு மோக்ஷம் –  தனக்கு கைவல்யம் –

ஐஸ்வர்யம் -அக்ஷரம் -மோக்ஷம் —லஜ்ஜை உதார பாவ -யதுகிரி நாயகி தாயார் -நித்யம் அனுசந்தானம் தீர்த்தம் சாதிக்கும் பொழுது
அஞ்சலிக்கு ஈடாக தர முடியவில்லையே மோக்ஷம் கொடுத்த பின்பும் -ராகவன் –அஸீ தேக்ஷிணா-தே காந்த புருஷோத்தம –
யஸ்ய ஜநகாத்மஜ அப்ரமேயம் -மாரீசன் -தே காந்தா புருஷோத்தம -உனக்கு காந்தன் இல்லையோ அதனால் புருஷோத்தமன்
ஸ்ரத்தா-லஷ்மி சம்பந்தம் பெற்றால் தானே –க ஸ்ரீ ஸ்ரீய-முதலில் சொல்லி புருஷோத்தம க அப்புறம் சொன்னது போலே —

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே
–ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பால -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்-வேதாத்மா விஹகேச்வரோ-நித்ய விபூதி சேஷ பூதர்கள்
பதி பத்னி நியாயத்தாலே -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
புருஷோத்தமனுக்கு போன்று உமக்கும் -தேசிகன் சம்ப்ரதாயம் –
நான்கு விதத்திலும் சமம் ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையாலே வியாக்யானம் –

பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ் வாயன் என்கோ -முதலில் திருக் கண்கள் -பின்பு திரு அதரம்
சம்சாரி போல உண்டியே உடையே -ருசியை மாற்றி -கண்களாலே குளிரக் கடாக்ஷித்து –
அந்த வலையிலே சிக்காமல் விலக–மந்த ஸ்மிதம் பண்ண -அதுக்கு விலக்க முடியாமல் சிக்கிக் கொண்டேன் –
என் முன்னே நின்றார் -கை வண்ணம் தாமரை -வசப்படாதவள் போலே இருக்க -மந்த ஸ்மிதம் பண்ண-அதுக்கும் மேலே –
தந்த பந்தி வாய் திறந்து-பரபாக வர்ணம் -வாய் கமலம் போலும் -கண் அரவிந்தம் -வலையிலே சிக்கிக் கொண்டேன் –
அடியும் அஃதே -திருவடிகளில் விழுந்தேன்
நிர்தேசம் -சப்த பிரயோகம் வைத்து -பாஞ்ச ராத்ர வசனங்கள் -ஜீவனைச் சொல்லி பரமாத்மாவைச் சொல்லும் -மாறியும் உண்டே
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வர –
கடகத்வம்- புருஷகாரத்வம் -இரண்டு ஸம்ப்ரதாயத்திலும் உண்டே –

காந்தஸ் தே -முதலில் -சொல்லி -இந்த பகவத் சம்பந்தம் பிரதானம் என்பதைக் காட்டி
பணி பதஸ் இத்யாதி -சேதன சம்பந்தம் அப்புறம்
தாய் -பிரியம் நோக்கு -தகப்பன் ஹிதம் -நோக்கு -லோகத்தில் -வத்ஸலையான மாதா —
மண் தின்ன விட்டு ப்ரத்ய ஒளஷதம் விடுவாள் -இசைந்து போலே காட்டி பரிகாரம் –
உசித உபாயம் -கொண்டு சேர்ப்பிப்பாள்-உத்தம ஸ்த்ரீ -இடம் வசப்பட்டவன் அவன் -எனவே பகவத் சம்பந்தம் பிரதானம்

திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -இருவருக்கும் சேஷ பூதர்
பணி பதஸ்
–நித்யர் பலராய் இருக்க -இங்கு முதலில் -13-காரணங்கள் நாயனார் ஆச்சான் பிள்ளை –
அனுபவம் -போக்யத்தைச் சொல்லிச் சொல்லி அனுபவிக்க வேண்டுமே –
அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அனுபவித்து –
வாயோர் ஈரைஞ்சூறு–ஆயிரம் வாயாலே -அனுபவித்து புகழ்ந்து பேசும் ரசிகர் –
நித்ய ஸூரிகளுக்கும் சரீரம் உண்டா – அத்வைதி -சரீரம் இல்லை
வியாசர் இரண்டும் -சுத்த சத்வமயம் –
பாரிப்புடன் கைங்கர்யம் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் –
ச ஏகதா பவதி -இத்யாதி -பல சரீரம் பரிக்ரஹம் –சென்றால் குடையாம்-இத்யாதி-
சக்கரவர்த்தி -கைகேயி இடம் கெஞ்சி -சரண் -பல வகையாக -கௌசல்யை இடம் செய்யாமல் கைகேயிடம் செய்தேன் -என் பாபம்
பத்னி- தாய் -உடன் பிறந்தவள் -சக்ரவர்த்தி உடன் கூட வரும் பெண்டிர்க்கு ஆலத்தி எடுத்து -பலவிதமாக கௌசல்யை –
இவனுக்கு ஞானம் சக்தி பாரிப்பு மிக்கு இருந்து கைங்கர்யம் செய்தமை சொல்ல வேண்டுமோ –
தாய் குழந்தை -பசு கன்று -போலே பகவானை அனுபவிக்க வேண்டுமே ப்ரீதியுடன் -பொங்கும் பரிவுடன் –
பெரியாழ்வாரும் நித்தியமாக செல்லுமே மங்களா சாசனம் –அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் -அஸ்தானே பயசங்கை

பிராட்டி சம்பந்தம் திரு அநந்த ஆழ்வான் சம்பந்தம் ஓக்க -அருளிச் செய்தது -கடகத்வம் துல்யம் இருவருக்கும் –
ஆஜகாம -யஸ்ய சக லஷ்மணா -முன்னிட்டே ஆஸ்ரயம் -ஸ்ரீ விபீஷணன்
ஸ்வரூப நிரூபகம் இரண்டும்
சேர்த்தியில் -சொல்லி -கைங்கர்யம் செய்வதை அருளிச் சொல்லி -மிதுனம் கைங்கர்ய பிரதிசம்பந்தி –
ஸ்ரீ மதே நாராயண நம-அர்த்தம் -ஆனந்தம் நமக்கும் மிதுனத்துக்கும் சேர்த்தியிலே செய்தாலே தானே -முறை –
பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-
கைங்கர்யம் சேர்த்தியில் -திருவாராதானமும் மனைவியும் புருஷனும் சேர்த்தியிலே -ஸ்ரத்தையுடன்
பத்னிமார்கள் கூட இருந்தே கைங்கர்யம் -பணி பத விஹகேஸ்வர -உப லக்ஷணை-யால் அர்த்தாத் சித்தம்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாஸ்மத்யே
லலிதை -பெண் எலி -சரித்திரம் -திரி நொந்திய புண்ணிய பலன் –
ஐகரஸ்யம் -ஸ்ரீ பூமி நீளா தேவிமார்கள் -அவயவ பாவம் –
ஆசனம் -திரு அநந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கு –
அனந்தன் பாலும் கருடன் பாலும் -இந்த வகையிலே இங்கும் –
வேதாத்மா -வேதமயன் –

யவநிகா மாயா ஜகன் மோஹிநீ–மோகம் உண்டு பண்ணும் மாயா பிரகிருதி திரை
தேவரீருக்கு -ஜகத் சப்தம் பத்த ஜீவாத்மாக்களைச் சொன்னபடி
ஜீவ ஸ்வரூபம் பர ஸ்வரூபம் இரண்டையும் மறைக்கும்
மோகம் -அஞ்ஞானம் -ஞான சூன்யம் – -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் – -சரீரம் பிரகிருதி காரிய காரண சம்பந்தம் –
ஹேயப்ரத்ய நீகன்-ஹேயம் -போக்குபவன் -ஞான ஏக கல்யாண குணன்–நாராயணன் பரமாத்மா -உபய லிங்கம் –
யாதவ பிரகாசர் மதம் -இவர் திருப்புட் குழியில் இருந்த அவர் இல்லை -ப்ரஹ்மம் -மூல காரணம் –
பரிணாமம் அடைந்து -ப்ரஹ்மத்துக்கு விகாரம் உண்டு -ப்ரமாதி ஈஸ்வரர்கள்- ஜீவாத்மா அசித்துக்கள் -இதனால் –
நிர்விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் பரமாத்மா -அத்வைதம் –
சரீரமே தேகம் -ஸ்வ தந்த்ர மோகம் -அன்யா சேஷத்வ மோகம் -ஜீவ ஸ்வரூப மோகம்
பிரகிருதி இன்பமாக இல்லா விட்டாலும் தோற்றும் மோகம் -ஆக மூன்றுக்கும் திரை
திரைக்கு உள்ளே இருப்பார்க்கும் வெளியில் இருப்பவரையும் மறைக்கும் –
பெரிய பிராட்டியாரை போலவே நாமும் என்பர் – பூர்வ பக்ஷம்
ஸ்ரீ பாகவதம் -மாயா சப்தம் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொல்லும் ஸ்லோகங்கள் உண்டே
ஜீவன் மாயா வஸ்யம் -என்று சொல்லும் -மாயையை அடக்கி ஆள்பவன் பரமாத்மா –
அத்வைதம் ப்ரஹ்மத்துக்கும் மாயா வஸ்யம் சொல்லும்
மாயைக்கு ஸ்வாமிநீ -நியாந்தா பெரிய பிராட்டியார் -மறைக்கும் சக்தி இல்லையே அவளுக்கு –
சிறைக்குள் உள்ள கைதியும் அரையனும் இருந்தாலும் -கட்டுப்படுத்துவது கைதியைத் தானே –
கர்ம சம்பந்தம் துக்க ஹேது -என்றவாறு-

ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
லீலா விபூதி சேஷ பூதர்கள் -தேவ கூட்டங்கள் என்ன அவர்கள் பத்னிகள் என்ன –
பிரகிருதி -ப்ரமாதிகளும் அறிய முடியாத படி அன்றோ -மாயா வஸ்யர்கள் இவர்களும் –
கிருஷ்ணன் ருக்மிணி தாயார் பிரளய கலக ரசம் ஸ்ரீ லஷ்மிக்கும் கிட்டாத ரசம் அல்லையோ –
உனக்கு உள்ள மஹிமை எனக்கு இல்லையே என்று சொல்லி உகந்த ருக்மிணி தாயார் -பாகவதம் கோஷிக்கும்
சரஸ்வதி ஸ்ருஷ்டித்து -பத்தினியாக -மரீஸாதி புத்திரர்கள் -இந்த விவாகம் கூடாது –
தனக்கு பிறந்த பெண்ணை -கல்யாணம் பண்ணக் கூடாதே -சரணாகதி பகவான் இடம் பண்ண
சிவன் பார்வதி -ஸ்தானம் -அரையில் வஸ்திரம் இல்லையே -யார் வந்தாலும் பெண்ணாக போவதாக சாபம் –
மோகினி ரூபம் காட்ட சிவன் பிரார்த்திக்க – அப்ராக்ருத திவ்ய ரூபம் –
சிரிக்க -பிராகிருத மோகினி -ஸ்ருஷ்டித்து அதுக்கு சிவன் வசப்படட சரித்திரம் பாகவதம் உண்டே –
அவர்களே வசப்பட்டு மோகிக்க நம் போல்வாரைச் சொல்லவும் வேண்டுமோ-

ஆகாசம் -பஞ்ச பூதங்களில் ஓன்று -இமானி தேவாநி ஜாயந்தே இத்யாதி -என்ற போது –
பர ப்ரஹ்மத்தைக் குறிக்கும் -ஆகாச தல் லிங்காத்-எங்கும் பிரகாசிக்கும் பொருள் என்ற அர்த்தத்தில் –
ருத்ர ஹிரண்ய கர்ப்ப திரு நாமங்கள் விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் உண்டே –
வாஸுதேவா பராயணா -சனகாதிகள் -ஸ்ருஷ்டிக்க உதவி செய்ய இசைய வில்லையே –
அப்புறம் ருத்ர ஸ்ருஷ்ட்டி -ரோதனம் -அழுவது -பிரளயத்தில் அழியும்படி செய்வதாலும் –
ஆஹ்லாத சீதா நேத்ரா -ஆனந்த பாஷ்யம் பண்ணும்படி ஆளும்படி விஷ்ணு ருத்ரன் அர்த்தம் -பாஷ்யத்தில் பட்டர் –
ஹிரண்ய கர்ப்பம்-ஸூந்தரமான பரமபதம் -பகவானைத் தாங்கும் பரமபதம் -என்றவாறு –
ஆதி -சப்தத்தால் இந்திரன் -இவன் தரமே அவர்களும் என்றவாறு –
கைமுத நியாய சித்தம்-அனைவரும் – இவர்களைச் சொன்ன போதே
இவர்கள் பத்னிமார்கள் -பெரிய பிராட்டியாருக்கு தாசீ -சித்தித்த அர்த்தம் –
பார்யை புத்ரன் தாசன் -இவர்கள் -ஸ்ரீ தனமாக உத்யோகம் மூலம் கார்யம் செய்து தனம் கொண்டு வந்தாலும் –
இவர்கள் சம்பாதிக்கவும் அவர்கள் ஸ்வாமிக்குத் தான் சொத்து

மாதா -பிதா- மாதவா -சேஷி தம்பதிகள் -பித்ருத்வம் -ஜகத் காரணத்தவம்
மாத்ருத்வம் பெரிய பிராட்டியாருக்கு –
பெரிய பிராட்டியாருக்கும் பொதுவானது தேசிக சம்ப்ரதாயம் –
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ குண ரத்ன கோசம்- ஸ்பஷ்டமாக இவற்றை அருளிக் செய்துள்ளார்கள்
அசேஷ ஜெகதாம் சர்கோ–ப்ரூவம் -இங்கீத பராதீன -ஜகம்

——–

ஸ்ரீ சதுஸ்ஸ்லோகி -ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள்

அவதாரிகை –
மாத்ரு தேவோ பவ-பெரிய பிராட்டியாரை மாதாவாகவும் -எம்பெருமானை பிதாவாகவும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணின ஆச்சர்யரையும்-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -பாகவத உத்தமர்களையும் – அதிதியாகவும் –ஆத்ம க்ஷேமம் அடைய நால்வரும் உபகாரங்கள் செய்து அருளுகிறார்கள் அன்றோ –

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை -ஸ்ரீ -பெரியவாச்சான் பிள்ளை என்றும் சொல்வர் –

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த இரண்டு வியாக்கியானங்கள் உண்டு

சாஸ்வதம் –நிலை நின்ற புருஷார்த்தம் –பரம பதத்தில் சென்று சேர்ந்து இருப்பது மட்டும் புருஷார்த்தம் இல்லை –
அடியார் குழாங்களை உடன் கூடி அவர்கள் முக விலாசம் பண்ணும் படி கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்
அடியவர்களுக்கும்- பாகவத சேஷத்வமே -சரம பர்வ நிலை -உடன் கூடுவது என்று கொலோ என்று பாரிப்பதே முக்கியம் –

பாகவத சம்பந்தம் ஆச்சார்யராலே —
ஆச்சார்ய சம்பந்தம் எம்பெருமானாலே –
அவனை பெறுவது பிராட்டியாலே -ஆகையால் நால்வரையும் சொல்லிற்று

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியும் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னமும் -மூல ஸ்தோத்திரங்கள் -.

பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் காட்டி அருளிய படியே பின்பு வந்த ஸ்தோத்திரங்கள் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில்–ஆச்சார்யர் -பிராட்டி -எம்பெருமான் -பாகவத உத்தமர்கள் நால்வரையும் ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியில் தனியாக பிராட்டி பற்றி நாம் அறிய அருளிச் செய்கிறார் -அனைவரும் கிரஹிக்கும் படி
ஸ்ரீ -போன்று சுருங்கியும் இல்லாமல்
ஸ்ரீ ராமாயணம் போன்று விரிவாகவும் இல்லாமல்
நான்கு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –

புருஷோத்தம
தான் மஹநீய விஷயம் -தன் இடம் ப்ரீதி பக்தி செய்ய வேண்டும் -எல்லாம் தன் சொத்து –
தான் ஸ்வாமி -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் அவனது அன்றோ –
தன்னை ஒழிந்த அனைத்துக்கும் தானே ஸ்வாமி –
அசையும் பொருள்களும் அசையாத பொருள்களும் எல்லாம் அவன் இட்ட வழக்கு

காந்தஸ்ய
பிராட்டியின் பெருமையை சொல்லி –
நித்ய ஸூரிகள் -திரு அநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
இவர்கள் அனைவரும் மிதுனத்துக்கு சேஷம் .

ஸ்ரீ
திரு நாமம்
ஸ்ரீ யதே
அனைவராலும் ஆஸ்ரயிக்க படுபவள் –
அவளும் அவனை ஆஸ்ரயித்து இருப்பவள் -பத்னி என்ற முறையால் –
அனைவரும் அனைத்தும் சொத்து இவளுக்கு பத்னி என்பதால் -உபய விபூதிகளுக்கும் ஸ்வாமிநி-அவன் ஸ்வாமி –
புருஷோத்தமன் நாயகன் என்பதால் -உபய விபூதியும் இவள் சொத்து என்றபடி

அனைவருக்கும் அவனுக்கு சொத்து -விவசாயி போலே ஸமஸ்த பதார்த்தங்களையும் உண்டாக்கி -அளித்து -அழிக்கிறான்-
எல்லாம் அவன் விருப்பத்துக்கு விநியோகம் -எல்லை அற்ற பெருமை -விரோதிகள் ஒன்றும் இல்லை –
அதே போலே பிராட்டிக்கும்

பக்தி பிரபத்தி போது -பல பிராப்தி இருவரும் அருளுகிறார்கள் -இதில் சாம்யம் –

தென் ஆச்சார்ய சம்பிரதாயத்தில்
ஆதிக்யமும் –
சாம்யமும் –
சேஷமும் உண்டு –

அவள் கிருபை போல் அவன் இடம் இல்லை என்பதால் ஆதிக்யமும் -ஏற்றமும் —
கிருபை கடலாக அவன் இருந்தாலும் கிளப்பி தருபவள் இவள் அன்றோ

கிட்டி கைங்கர்யம் செய்யும் பொழுது உகக்கிறார்கள் இருவரும் -இதில் சாம்யம் –

ஜகத் காரணம் போன்றவை அவனுக்கே தான் -இதில் அடுத்த படி தானே அவள்

தேசிகன் -நான்கு அத்தியாயத்தில் உள்ளது போலே சாம்யம் அனைத்திலும் என்பார் –
எல்லா வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மம் இடம் சேரும் என்பது முதல் அத்தியாயத்தில் –
ப்ரஹ்மமே பலம் என்று சொல்லும் நான்காவது அத்யாயம்

அபிமதமாயும் அநு ரூபமாயும் இருப்பவள் பெரிய பிராட்டி –
பரிமளத்தால் புஷ்பத்துக்கு பெருமை போல இவளால் அவனுக்கு பெருமை –
உபய விபூதியும் சொத்து என்பதை முதல் ஸ்லோகத்தால் அருளுகிறார்-

தாய் முறையால் அனைவராலும் ஆஸ்ரயிக்கப் பட்டும் —
பத்னி என்பதால் தானே அவனை ஆஸ்ரயித்தும் இருக்கிறாள் -என்பதால் -ஸ்ரீ சப்தம் முதலில் –

சரிர மீமாம்சையில் ஸ்ரீ வேத வியாசர் முதல் அத்தியாயத்தில் அனைத்தும் அவனது சேஷ பொருள்கள் – அவன் விநியோகத்துக்குத் தான் –

ஸ்ரீ காந்தஸ்தே புருஷோத்தம –பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –மாயா -ஜெகன் மோஹிநீ-
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்-சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி-ப்ரூம கதம் த்வாம் வயம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகம் -சுமத்ரா தேவி வாக்கியம் –
இளைய பெருமாள் இடம் பெருமாள் கூட —தசரதன் ராமம் வித்தி –

தே காந்த புருஷோத்தம -என்றும் –

காந்தஸ்தே புருஷோத்தம -என்றும் இரண்டு நிர்வாகங்கள் –

எங்கும் பெருமாள் இடம் தான் அன்பு உனக்கு –
சக்கரவர்த்தி இடம் அன்பு அவர்களுக்கு இல்லை -ப்ரீதி பிதா இடம் எங்கு இல்லை -பெருமாள் தான் சர்வம் –
காட்டுக்குப் போகும் போது சக்கரவர்த்தியை நினைக்கா விடிலும் -உனக்காக சக்கரவர்த்தி இடம் பிரியம் இல்லா விடிலும் –
பெருமாள் விரும்பும் சக்கரவர்த்தியை விரும்பு -என்று ஒரு கருத்து –

பிறந்த இடமான திரு அயோத்தியை -தாய் -தந்தை -மூவகை விருப்பம்
காட்டில் போகும் பொழுது ஜென்ம பூமியை பற்றியோ -தாய் தந்தையை பற்றியோ நினைத்து வருத்தம் ஏற்பாடாகி கூடும் –
அவனே எல்லாம் என்று கருத்து

ராமோ தசரதன் வித்தி -என்று ஸ்லோக க்ரமம் படி அர்த்தம் கொண்டு பெருமாளே சக்கரவர்த்தி என்று கொள் என்றுமாம் –

பெருமாளை காட்டுக்கு போக சொல்லும் போது இளைய பெருமாள் கோபம் கொண்டார் –
சுமந்திரன் தந்தைக்கு என்ன செய்து என்று கேட்டதும் –
மம ராகவ-சகல வித பந்து -எனக்கு ஜென்ம பூமி தாய் தந்தை -அனைத்தும் பெருமாளே –
இருக்கும் போதே தகப்பனாக நினைக்காதவன் -இப்போது சொல்வதில் வியப்பு இல்லையே

திராட்ச்சை தேனில் ஊறினது போலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தில் ஆழ்ந்து வியாக்யானம் செய்து அருளுகிறார்

அதே போலே இங்கும் -புருஷோத்தம தே காந்த –

புருஷோத்தம வித்யை அறிந்தோம் ஆனால் புனர் ஜென்மம் பக்தி யோகனுக்கும் இல்லை என்கிறான் ஸ்ரீ கீதையில்
அக்ஷரம் –முக்தர் –ஷரம்–இவற்றோடு வேறுபட்டு
பிரவேசித்து -தரித்து -கைங்கர்யம் கொண்டு உகந்து
வேறுபட்டு -சிறந்த புருஷார்த்தம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே

புருஷன் –உத் புருஷன் –உத்தர புருஷன் -உத்தம புருஷன்
அறிவுடையவன் -அசித்தை விட வாஸி புருஷன்
உத் புருஷன் -சரிர சம்பந்தம் விட்ட முக்தர்
உத்தர புருஷன் -சரிர சம்பந்தம் இல்லாத நித்யர்
இவர்கள் அனைவரிலும் வேறுபட்ட ஸ்ரேஷ்டன் புருஷோத்தமன் –

அவன் தே காந்த : உனக்கு அன்பனான பதி என்கிறார் -ரூட் அர்த்தமாக –
புரு -தர்ம அர்த்த காமம் மோட்ஷம் -அனைத்தையும் வாரி வழங்குபவன்

மண்டோதரி வார்த்தை -பல பிரதானம் பண்ணி அருளும் புருஷோத்தமன் -பெருமாள் என்கிறாள்
ரிஷிகளை ரக்ஷணம் பண்ணி தர்மம்
ஸ்ரீ விபீஷணன் -சுக்ரீவ மஹாராஜர் இருவருக்கும் அரசு அருளி -அர்த்தம்
வாலி ஜடாயு -மோட்ஷம் அருளி
கைவல்யம் தன்னை தானே அனுபவிக்கும் படி எனக்கு அருளினார் என்கிறாள் மண்டோதரி

அந்த புருஷோத்தமன் உனக்கு காந்தன் –
ஸ்ரீ பட்டர் யதுகிரி நாச்சியார் பிரசாதத்துடன் வேதாந்தி யாய் இருந்த நஞ்சீயரை ஸம்ப்ராயத்துக்கு கொண்டு வந்தார் –

திரு முகத்தில் பிராட்டிக்கு லஜ்ஜையாம் -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று
ஐஸ்வர்யம் அஞ்சலி பரம் அஸ்மின் லஜ்ஜியதி -ஸ்லோகம் -தினம் சொல்லி தீர்த்தம் பிரசாதம் வாங்கிக் கொள்கிறோம்

தே காந்த புருஷோத்தமன் -உனக்கு அன்பனான பதி என்பதால் தான் புருஷோத்தமன் ஆனான் என்று அர்த்தம்

மாரிசன் -இராவணன் சம்வாதம் ..தேஜஸ் அனுபவித்தவன் மாரிசன் ..
ப்ரஹ்மச்சாரி ராமனை முன்பு பார்த்தவன் ..சீதா பதி இப்போது ..அப்ரமேயம் -அளவுக்கு அப்பாற்பட்டது ..

பிராட்டி சம்பந்தத்தால் ..லட்சுமி சம்பந்தத்தால் தேவன் ..வரனுக்கு வது சம்பந்தம் ..
தேஜஸ் பார்க்கலாம் இப்போ கூட ..அரை ஒன்றாகும் கல்யாணத்துக்கு பின்பு ..
அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற திரு நாமமும் இவருக்கு ..

ஸ்தோத்திரங்கள் பல சேர்த்து தொடுத்து வ்யாக்யானம் ..
புருஷோத்தமன் கஹா போன்ற ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தையும் எடுத்து காட்டுகிறார் .
பட்டர் உயர்ந்த தத்வம் கண்டு பிடிக்க சிரமம் பட்டாலும் முடியவில்லை ..
திரு மார்பில் பட்டு -லட்சுமி பத சம்பந்தத்தால் இவனே புருஷோத்தமன் என்று அறிந்ததாம் .

பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –ஆசனம் இருவருக்கும் சேர்த்து —
விருப்பத்திற்கு ஏற்ப சேஷ பூதர் நித்யர்கள்
மிதுனத்துக்கே சேஷம் வாஹனம் -அவனுக்கு போலவே இவளுக்கும் –

பகவன் நாராயண அபிமத அநு ரூப -கத்யத்திலும் -பட்ட மஹிஷி -திரு அநந்த ஆழ்வானும் மிதுனத்தில் பாதுகை .-
பகவத்  சம்பந்தம்  சொல்லி  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லுவார் ..
வேறு  சில  இடத்தில்  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லி  அவன்  சம்பந்தம் ..

பங்கய  கண்ணன்  என்கோ  பவள  செவ்வாயன்  என்கோ ..கண்ணை  பதி  சொல்லி  அதரம்    சொல்லுகிறார் . .
ஈட்டில்  நம்  பிள்ளை -சம்சாரிகளை  போல  இருக்கும் என்னை -ருசியை  மாத்தி  தன்  இடம்  ருசியை  மாத்த-
விஷய  ப்ராவண்யம்  விட்டு  விட்டு  தன்  மேல்  பெறுக  கடாஷித்தான்  

முதலில் ..அதிகாரியாக  ஆக்கினான் .. அந்த  வலையில்  சிக்கி  கொள்ள  வில்லை ..
ஆலோசித்து  மந்த ஸ்மிதம்   பண்ணி  வலை  படுத்துகிறான் ..
திரு  மங்கை  மன்னனும் -போக  பிச்சை  விரும்பி கை  வண்ணம்  தாமரை . கைகளை  காட்டி  
வேண்டி   கொண்ட  போது  வச  படாதவள் போல இருந்தார் .. மந்த  ஸ்மிதம்  பண்ணினான் –
வாய் திறந்து  பூர்ணமாக  சொல்லாமல்  வாய்  கமலம்  போலும் .. அந்த  வலையிலும்  சிக்கி  கொள்ளவில்லை ..
கண்  இணையும்  அரவிந்தம் -சிக்கி  கொண்டேன் ..அங்கு  கண்களைச்  சொல்லி  வாயை  சொல்ல
இவர்  உதடு  துடிக்க  வாய்  சொல்லி  கடாக்ஷித்து  வச  பட்டேன்-.  அடியும்     அஃதே   அடையாளம்    என்கிறார் .

பிராட்டி  ஜீவாத்மவை  பரமாத்மவிடம்  சேர்த்து  வைக்கிற  -கடகத்தவம் ..இரண்டு   இடத்திலும் சம்பந்தம் ..
ஈஸ்வரன்  சம்பந்தம்  சொல்லி  சேதன  சம்பந்தம்   சொல்லுவார்  சில  இடத்தில் ..
இரண்டில்  பிரதானம்  பரமாத்ம  சம்பந்தம் -காந்தஸ்தே  புருஷோத்தம :-என்பதில்  தெரிகிறது ..

ஹிதம் -தகப்பனின் நோக்கு  .. பிரியம் -தாய்  போல ..
வத்சலையான  மாதா  பிள்ளையை  பேஹணியாமல் மண்ணை  திண்ண  விட்டு  பின்பு   ஒளஷதம்  இடுவாள்  தாய் ..
அவனின்  நிக்ரஹம்க   மாத்தி  அனுக்கிரஹம்  செய்பவள்  அவள் ..தோஷம்  இல்லாதவன்  யார்  என்பாள்  தாயார் ..

தயை -வத்சல்யம் -க்ஷமை  குணங்களுக்கு  பிரயோஜனம்  வேணுமே -..உபய  விபூதியும்  பிராட்டிக்கும்  சேஷம் -தேசிகன் ..
திரு  மாலே  நானும்  உனக்கு  பழ   அடியேன் –திரு -பெரிய  பிராட்டிக்கும்  என்றும்   சொல்வதால்

ஜீவாத்மா   பலர்  இருக்க -நித்யரும்  பலரும்  இருக்க  திரு  அநந்த ஆழ்வானை  
முதலில்   அருளியது  14 காரணம்  காட்டுகிறார்  ஆச்சான் பிள்ளை  .
நித்யரில்  தலைவர் .. அனுபவிக்கிறார் ..ப்ரீதி  தருகிறார் ..
ஸ்வரூப -ரூப -குண -விபூதி-சேஷ்டிதங்கள் – அனுபவிக்கும்  போது  தித்திக்கிறது  
அந்த  அனுபவம் ..வாய் ஓர்  ஈர்  ஐநூறு ..அவையும்  போராது  அனுபவங்களின்  புகழை  சொல்ல ..
அதனால் -பணிபதி முதலில்  ..

சரீரம்  உண்டா  ? நித்யர்களுக்கு ..வியாசர்  ஹேய  சரீரம்  இல்லை சுத்த  சத்வ மய  சரீரம்  உண்டு  என்கிறார் ..
பல  சரீரங்கள்  கொண்டு  பல  வித  கைங்கர்யம்  செய்கிறார்கள் .பாரிப்பு  மிக  உண்டு ..
அஹம்  சர்வம்  கரிஷ்யாமி  என்கிறார்  லக்ஷ்மணன் ..
ஸ்ரீ குலசேகர பெருமாள்  அனுபவம் -மன்னு  புகழ்   திரு மொழி -சுற்றம்  எல்லாம்  பின்  தொடர  தொல்  கானம்  அடைந்தவனே -என்கிறார் ..
பொய்  இல்லாத  பாடல் -அனைவரின்  கைங்கர்யமும்  பண்ணினதால் -சுற்றம்  எல்லாம்   இவன்  தான்  ..
அது  போல  சென்றால்  குடையாம்  -பல  ரூபத்தால்  கைங்கர்யம்  என்பதால்  முதலில் ..

கௌசல்யை -தாய் -தமக்கை பாரியை  மட்டும்  இல்லை ..தசரதன்  வருத்த  பட  நம்  பிள்ளை  
இந்த  சுலோகத்துக்கு  அர்த்தம் -ஆலத்தி எடுப்பாளாம்   உடன்  பிறந்தவள்- போல  –
போன  இடத்தில்  ஒரு  பெண்ணை  கல்யாணம்  பண்ணி  கொண்டு  வந்தால்  கூட  என்பார் ..அவள்  இடம்  ப்ரீதி  காட்டாமல்  கைகேசி  இடம்  ப்ரீதி  செய்தான்   என்கிறார் ..

ஞானம்  -பலம்  ப்ரீதி  வுடன்  திரு அநந்த ஆழ்வான்  கைங்கர்யம்  செய்பவர் ..பணிபதி  செய்யாஸ்  ஆசனம் -அதனால்  முதலில்  .

தாய் -குழந்தை  போல  பசு -கன்று  போல  நாமும்  அவன்  இடம்  ப்ரீதி  காட்டணும்  என்கிறார் ..
பொங்கும்  பரிவால்  பட்டர்  பிரான்  பெற்றார்  பெரிய ஆழ்வார் ..சுத்தமான  பரிவு -தாய்  ஸ்தானத்தில் இருந்து ..

அங்கு  ஆரவாரம்  அது  கேட்டு  அழல்   உமிழும்  -திரு  மழிசை  ஆழ்வார் ..சாம  கானம்  கேட்டு –
அயோத்தியை -ஸ்ரீ  வைகுண்டம் -சற்றுக்கள்  பிரவேசிக்க  முடியாத இடத்திலும் .
பரம  பத  நாதனுக்கு  சாம   ஞானம்  ஆரவாரம்  என்று  நினைந்து அழல்  உமிழ்கிறார் -இவ்வளவு பரிவு -அதி சங்கை பண்ணி

விட்டு பிரியாத தர்மம் மிக முக்கியம் பிராட்டிக்கு ..இத்தாலே அவனை தெரிந்து கொள்ள கூடிய ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்ரீ யபத்வம் –
இவனுக்கே அசாதாரணம் -திரு இல்லா தேவர் –

ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகத்திலும் ஸ்ரீ நிவாஸே தீப்தே –
திருவரங்கம் என்றாலே மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜர் -..

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
திருவனந்த ஆழ்வான்-சம்பந்தமும் ஸ்வரூப நிரூபிதா சம்பந்தம் -பாதுகை ஆசனம் -இத்யாதி –

உடையவன் எம்பெருமானே
அதனால் சேர்த்து அருளுகிறார் -ஸ்ரீ யப்பதி சம்பந்தத்தையும் பணிபதி சம்பந்தத்தையும்-கடகத்வம் இருவருக்கும் உண்டே –

நாகணை மீசை எம்பிரான் சரணே சரண் -என்பதால் இளைய பெருமாளை முன்னிட்டு சரணாகதி அடைந்தது போலே –
சேர்த்தி சொல்லி -சேர்த்தியில் பண்ணும் கைங்கர்யத்தையும் அருளிச் செய்கிறார்
இத்தாலே -த்வயம் போலே

திரு அனந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கும் பத்னிமார்களும் உண்டே -சேர்ந்தே மிதுனத்துக்கு கைங்கர்யம் செய்கிறார்கள் –
ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டுமே -பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்தே பெரிய பெருமாள் திருவாராதனம் செய்து அருளினால் போலே
பிராட்டியின் அந்தபுரத்துக்குள் போக இவர்களின் பத்னிமார்களுக்கு தான் அதிகாரம்
பூமி நீளா தேவமார்களுக்கும் -இவர்கள் கூட சேந்து சேர்த்தியில் கைங்கர்யம் –
லலிதை சரித்திரம் -முன் ஜென்மத்தில் பெண் எலி பூனை சப்தத்தால் த்ரீ நொந்தப் பட்டு பிரகாசித்ததாம்
புஷ்பம் சந்தனம் போலே –தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே-கைங்கர்யத்தில் களை அறுகை

அனந்தன் பாலும் கருடன் பாலும் –சேர்ந்து இங்கும் அருளுகிறார் -..

யவனிகா மாயா ஜெகன் மோஹினி ..மூன்று வஹை மோகம் -மாய -பிரக்ருதிக்கு ..
தன்னை பற்றியும் -சித் பற்றியும் -ஈஸ்வரனையும் பற்றிய மோகம் ..அறிய ஒட்டாமல் மறைத்து விடும் –

அஞ்ஞானம் பல வகைகள் உண்டு -ஞானம் உதயமே இல்லாமல் -சம்சய விபரீத –
முத்து சிப்பியை வெள்ளி என்பது போலே -அந்யதா ஞானம் -….
அதனால் ஜெகன் மோஹினி என்று பிரக்ருத்யை சொல்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீகம்
தன் சம்பந்தத்தால் அனைவரின் ஹேயங்களை அழிக்கிறவன் ..உண்மையாக தெரிந்து கொள்வது தான் ஆத்மாவுக்கு க்ஷேமம் —
ஸ்ரீ யபதித்தவம்–அகில ஹேய ப்ரத்ய நீகம் -கல்யாண குணை ஏக -நாராயண பரமாத்மா நிச்சயமாக நான்கையும் தெரிந்து கொள்ள வேண்டுமே ..

யாதவ பிரகாச மதம் நிரசிக்கிறார் – ஸ்ரீ பாஷ்யத்தில் ..மூல பிரக்ருதியால் வந்தவை மூன்று தத்துவங்கள் என்பார் இவர் மதம் ..

அத்வைதி -பரமாத்ம ஒன்றே உண்டு –திருமேனி குணங்கள் இல்லை என்பர் -இவை போன்ற மோஹங்கள் பல

மாய  வஸ்யம் -ஜீவாத்ம ..பகவானை  சொல்லும்  போது மாயை  சக -அடக்கி  ஆளுபவன்  என்பார் -அத்வைதத்தில் ..  

ப்ரஹ்மதுக்கும்  மாய  வஸ்யம்  என்று  சொல்லுவார் ..ஸ்ரீ  ராம  நவமி  உத்சவம்

ஸ்வாமி ..காலஷேபம்   ஆன பின்பு -சங்கர  ஜெயந்தி ..மாயை  ப்ரஹ்மத்தை  சூழ்ந்து   கொண்டது  என்பார் ..

மாயைக்கு  ஸ்வாமினி நியாமினி  -பிராட்டி ..சிறைச்சாலையில்  குற்றம்   செய்தவரும்  ராஜாவும்  இருந்தாலும்  துக்கம்  யாருக்கு ..
அது  போல  மாயையில்  அகப்பட்டவன்   ஆவான் ..சரீரம் -சிறை  சாலை .. இருவரும்  இருக்கிறோம் .
அவனுக்கு  உகப்பு  ஜீவனுக்கு  துக்கம்  கர்மத்தால் ..பிராட்டிக்கும்   கர்ம சம்பந்தம்  இல்லை ..
பத்தினி  என்பதால்  அனைவரும்  அவளுக்கு  சொத்து ..

ப்ரஹமாதி   -தேவர்  கூட்டம்  அவர்களின்  பத்னிமார்களும்  தாச -தாசி கணா- .
திரை  பிரம்மா  போன்றோரையும்  மறைத்ததாம் ..மாய  வத்சர்  அனைவரும் ..
பிரகிருதி   மோகம்  இவர்களையும் விடாதாம் ..

வ்யாஸர்  அருளிய  ஸ்ரீ  பாகவதம் ..சுகர்  .பிரணய  கலகம்-ருக்மிணி -கண்ணன்  அழகாக   வெளி ஏற்று கிறார்  ..
பிரம்மா  சரஸ்வதியை  சிருஷ்டித்தார் —தான் ஸ்ருஷ்டித்த பெண்ணை திருமணம் பல இடங்களில்
சிவன் ப்ரஹ்மாதிகள் மோகம் உண்டே பாகவதத்தில் -யாருக்கும் யார்க்கும் வசப்படாதவர் விஷ்ணு ஒருவருமே —-
மாயை யால் ப்ரஹ்மாதிகளே மோகம் அடைய நம்மைப் பற்றிக் கேட்க வேண்டாமே

ஆகாசம் -பஞ்ச  பூதங்களில் ஓன்று ..ஆகாசம் -பரமாத்மாவையும்  சொல்லுமா  ?..
அனைத்துக்கும்  காரணம்  என்ற  ப்ரமாணங்களால் ஆகாசம் -ப்ரஹ்மம் ..அர்த்தம்  பிரசித்தம்  .. பிரசித்த  அர்த்தம் ..
லோக  அனுபவத்தை  வைத்து  கொண்ட  அர்த்தம்  பொருத்தம்  இல்லாத  போது .. ப்ரஹ்ம  சூத்திரத்தில்  விஸ்தாரம்  ..

எங்கும்  பிரகாசிக்கும்  பொருள் என்ற  விற்பதியை   சொல்லி பரமாத்மவைச்  சொல்லுகிறார் ..
அது  போல  ஹிரண்ய  கர்ப -ஜம்பு -ருத்ர  போன்ற வை   ஜகத்  காரணம்  என்று  சொல்வதால்  எம்பெருமானையே குறிக்கும் ..
ப்ரம்மனையும் சிவனையும்  குறிக்காது ..இதை  பட்டர்  விஷ்ணு  ஸஹஸ்ரநாம வியாக்யானத்தில்  அருளி  செயகிறார் ..

அஞ்ஞானம்   5 வகை   ப்ரஹ்மா  சிருஷ்டித்தார் ..ஜனகன்  ஜனகாதிகளை  உதவிக்கு  கூப்பிட  வரவில்லை ..
கோபம் . அடைந்தான்  ப்ரஹ்மா  … அப்பொழுது  தான்  ருத்ர  ஸ்ருஷ்டி  பண்ணுகிறான் ..

ஆனந்த  கண்  களால் அனுபவிக்க  பண்ணும்  விஷ்ணு -ருத்திரன்  ..
தன்  கல்யாண  குணங்களால்   ஈடு  பட்டதால் ..ருத்ர  அர்த்தம்  இப்படி  பட்டர்  பண்ணுகிறார் .. ஹிரண்ய -ஸ்வர்ணம் -தங்கம்  சுந்தரமான  பரம  பாதத்தைச்  சொல்லி

தன்  கர்பத்தில்  அவனை  தங்குவதால்  விஷ்ணுவே   ஹிரண்ய  கர்ப  என்கிறார் ..ப்ரஹ்மா  ஆதி -சப்தத்தால் …

சிவன்  இந்திரன்  போன்றாரையும்  சொல்லி ..இவர்களின்  பத்னிமார்களிலும்    அடிமை  செய்பவர்கள் ..

பார்யை புத்ரன் -தாசன் ..தனம்  தேடி  கொடுப்பவர்கள் ..கைங்கர்யம்  பெற்று  கொள்பவர்கள்  சேர்த்தியில் ..

மாதவ ..மாத -பிதாவாக  இருக்கும்  பெரிய  பிராட்டியாரும்  எம்பெருமானும் ..பித்ருத்வம் -ஜகத் காரணத்வம்..

சேர்த்தியில்  பதி -பத்தினி  சேர்ந்து  கைங்கர்யம்  பண்ண  வேணும் ..

ஜகத்  காரணத்வம்  பிராட்டிக்கு  இல்லை -தென்  கலை சம்ப்ரதாயம்  .

இருவருக்கும்  உண்டு -தேசிகர்  ஸம்ப்ர தாயம் ..

மாத்ருத்வம்  பெரிய  பிராட்டிக்கு -தென்  கலை ..ஸ்ரீ  ஸ்தவத்தில்  ஆழ்வான்  –
பட்டரும்   ஸ்ரீ  குண  ரத்ன  கோசத்தில் ..பிராட்டிக்கு  ஜகத்  காரணத்வம்  இல்லை  என்று  
ஸ்பஷ்டமாக  அருளி  செய்து  இருக்கிறார்கள் -..

———————————————————————–—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் அருளிச் செய்து அருளிய–ஸ்ரீ சதுஸ்லோகீ –

October 10, 2024

ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்தனியன்

யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம


காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்

வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ

ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:

ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 1 

ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;  தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:

நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:

தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ

லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 2

“எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே நாயகியாகவும் ஒரே நாதனான நாராயணனின் மார்பில் உறைபவளே! பொறுமையுள்ளவளே! உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்

ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண

ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே 

நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம்

ஸம்ப்ரத்யனந்தோதயம் 

ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன:

காந்தா ப்ரஸாதாத்ருதே 

ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்

வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–சது:ஶ்லோகீ -ஸ்லோகம் 3

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது. அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது. ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒருபோதும் எதிர் பார்க்கப் படுவதில்லையன்றோ”

சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:

மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்

யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி

ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தேசது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||


சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும்,  தாமரையில் வசிப்பவளும், எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா சதுச்லோகீ –

January 21, 2023

ஸ்ரீ கோதா சதுச்லோகீ – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது.

திருமலை அனந்தாழ்வான் விஷயமாக திருவேங்கடமுடையான் தானே அருளிச் செய்த தனியன்கள்:

1) அகிலாத்ம குணா வாஸம் அஜ்ஞாந திமிராபஹம்|

ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஆத்மாவுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.

2) ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹ த்வயம்|

ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்ய மஹம் பஜே||

ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித் தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

முதலியாண்டான் மற்ற திவ்ய தேசங்களில் -திருவேங்கடத்தில் மட்டும் அனந்தாழ்வான் சாதிப்பார்

தனியன்

“சக்ரே கோதா சதுச் லோகீம் யோ வேதார்த்த பிர கர்ப்பிதம்

ஸ்ரீ வேங்கடேச சத் பக்தம் தம் நந்த குரும் பஜே”️

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச் லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், 
திருவேங்கடமுடையானின் பரம பக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன்.
--------------

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை |
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா ஸூப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்யஸ்  த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்திரம் -போலே

நிஸ் சம உத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கச விலுலிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

மாலைக் கட்டிய மாலை -மாலையாலே மாலாக்கிய கோதை

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸூபகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகள் –ஸூபகயா-செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸூப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாம் அபாங்கை–
இத் தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்திகளை – திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகளை – அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளியவள் ஸ்ரீ ஆண்டாள். இவை உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம். ஈடு இணையற்ற வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் இந்த ஸ்ரீ ஸூக்திகளை கேட்டு இவ்வுலகத்தார் சுப்ரபாதமாக கேட்டு துயில் துறந்து விழித்து எழுகிறார்கள். ஆண்டாள் குழல்களில் சூடிக் களைந்ததால் பூச்சரங்கள் கண்ணனை பிச்சேற்ற வல்லவை, கோதை சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான். ‘கோதா’ என்றால் ‘மாலை’. ஆண்டாளே மாலை, அதாவது ‘மாலை’ மாலை கட்டினாள். ‘திருமாலைக்’ கட்டினாள், – தன் வார்த்தையால். கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள், திருப்பாவையாக! இத்தகு அகில ஜகன் மாதாவுடைய குளிர்ந்த கடாக்ஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்!

எந்த நாச்சியாருடைய இணையற்ற உயர்ந்த அருளிச்செயல்கள் வேதங்களின் தலையான பாகமான உபநிஷத்தின் ஆபரணங்களாக ஆகிறதோ, எந்த நாச்சியாருடைய காதலன் (எம்பெருமான்) அவள் குழலில் சூடிக் களைந்த மாலையில் மிகவும் ஆசை யுடையவனாய் உள்ளானோ, எந்த நாச்சியாருடைய, வேதம் போன்ற மங்களமான திரு வாக்கினால் உலகம் நல் விடிவு பெற்றதாக ஆகிறதோ, அப்படிப்பட்ட லோக மாதாவான ஆண்டாள் நாச்சியார் அடியேனைத் தமது திருக் கண் நோக்கமாகிற அமுத மழையாலே நனைத்தருள வேணும்.

————–

மாதா சேத் துலஸீ பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா யதி |
ஜ்ஞாதாரஸ் தனயாஸ் த்வதுக்தி ஸரஸ ஸ்தந்யேந: ஸம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வ மந்ய ஸூலபா சாதாரணா ஸ்ரீ ரஸி”||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 2-

மாதா சேத் துலஸீ
த்வ மாதா துளஸீ

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –மே ஸூதா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || கோதா ஸ்துதி -(1)

ஸ்ரீவிஷ்ணுசித்த‌ருடைய‌ குல‌மென்னும் நந்த‌ன‌த் தோட்ட‌த்தில் (தோன்றிய‌) க‌ற்ப‌கக்கொடியும்,
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌னென்னும் ஹ‌ரிச‌ந்த‌ன‌ க‌ற்ப‌க‌ விருக்ஷ‌த்தை அணைவ‌தால் (ம‌ண‌ம் புரிவ‌தால்) பார்க்க‌த் த‌க்க‌வ‌ளாயும்,
க்ஷ‌மையின் வ‌டிவேயான‌வ‌ளாயும், (ஸாக்ஷாத் பூமிதேவியாயும்), க‌ருணையினால் ம‌ற்றோர் ல‌க்ஷ்மிதேவி
போன்ற‌வ‌ளாயுமான‌ கோதையை (வாக்கைய‌ளிக்கும் தேவியை) புக‌லொன்றில்லாவ‌டியேன் ச‌ர‌ண‌ம் ப‌ணிகிறேன்.

தாதஸ்து தே மதுபித: ஸ்துதி லேசவச்யாத்
கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |
த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்
லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் || கோதா ஸ்துதி(10)

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.
அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து ,
அவனுக்கு அணிவித்த பிறகு தான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரிய தம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதாரஸ்-
ஞானம் -அறிவு -ஜ்ஞாதா-அறிபவன் -தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்-வாய் சொல் அமுதத்தையே தாய்ப் பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ஸ்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீயை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

 “கேசவ பிரியையான துளசி தேவி மாதா நந்தவனத்தில் ஆழ்வார் திரு மகளாராய் – வேயர் பயந்த விளக்காய் ஸ்ரீ விஷ்ணு சித்த குலத்தில் அவதரித்தீர்! நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்ற உம்முடைய ஆசையை நிறை வேற்றி வைத்தாரன்றோ எதிராசர்!”
“பிரிய தமன் அதாவது பிரியமானவன், அரங்கத்து அரவின் அணை அம்மான், ஸ்ரீ ரெங்க நாதன் மூடு பல்லக்கில் எழுந்து அருள, கேசவ நம்பியை கைப்பிடித்தாயே. பிரிய தமன் உன் புக்ககத்திலே குடி புகுந்தார்,” (பெரியாழ்வாருடைய அகம் தான் இன்று ஆண்டாள் சந்நிதி. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம்! ) “ஆண்டாளே உம்முடைய வாய் சொல் அமுதத்தை – வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவையை, இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த ஜ்ஞானவான்கள் இருக்க, ‘போய பிழை புகுதருவான்’ என்று சொல்லி மற்றவர்க்கும் கிட்டி உய்யும்படி எளிதான, சாதாரணமான புகலாய் இருக்கிறீர்! “
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரே! தேவரீருக்குத் திருத்தாயார் யாரென்னில் துளசிச்செடி. தேவரீருக்குத் திருத்தகப்பனார் யாரென்னில் பரமபாகவதோத்தமரான ஸ்ரீ விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். தேவரீருக்குத் திருத்தமையனார் யாரென்னில் யதிராஜரான ஸ்வாமி ராமாநுஜர். தேவரீருடைய ப்ராணநாதன் யாரென்னில் திருவரங்கநாதன். தேவரீருடைய குழந்தைகள் யாரென்னில், தேவரீருடைய அமுதவாய்மொழிகளான முலைப்பாலைப் பருகி வளர்க்கப்பட்ட ஞானவான்கள். தேவரீருடைய அமுதவாய்மொழிகளை அறியாத சாமான்யர்களுக்கெல்லாம் தேவரீர் எப்படி அடையத்தகுந்த புகலாக இருக்கிறீர்?
——————

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வஸ்ய கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணா ஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்-
தன் காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட

ஜன ஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

பாசி தூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

கிடந்தது இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் –2-8-7-

ஸ்வஸ்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வஸ்மை பிர ஸூநார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப் பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப் பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –

உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த – ஸ்ரீ ரஹஸ்ய சிகாமணி —

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹப் பாடல்கள் –

இடம் பெற்றார் எல்லாம் என் உடலாய் நிற்க
இடர்ப் பிறப்பு ஒன்றும் இவை இல்லா என்னை அன்பால்
அடம் ( திடம் ) பற்றாம் இவன் என்று நினைத்தான் யாவன்
அவன் ஆவி சரியும் போது அறிவு மாறி
உடம்பில் தான் தாரூம் -( கட்டை ) உபலமும் (கல்லும் ) போலே கிடக்க நானே
உய்யும் வகை நினைந்து உயர்ந்த கதியால் என் தன்
இடம் பெற்று என்னுடன் வாழ எடுப்பன் என்ற
எம்பெருமான் அருள் பெற்று மருள் செற்றோமே

இரண்டு உரையாத நம் ஏனம் உரைத்த உரை இரண்டின்
திரண்ட பொருள்கள் தெளிந்து அடி சூடினம் திண் இருளால்
சுருண்ட நம் ஞானச் சுடர் ஓளி சுற்றும் பரப்பதன் முன்
புரண்டது நம் வினை போம் இடம் பார்த்து இனிப் போம் அளவே

மலையும் குலையும் என்று எண்ணியும் வன் பெரும் புண் திரங்கித்
தலையும் வெளுத்த பின் தானே அழிய இசைகின்றிலீர்
அலையும் கடல் கொண்ட வையம் அளித்தவன் மெய்யருளே
நிலையென்று நாடி நிலை நின்ற பொய்ம்மதி நீக்குமினே

வராஹ சரம ஸ்லோக ஸங்க்ரஹ ஸ்லோகம்

ஸ்வஸ்த்தம் சித்தம் ஸூகமபி வபுஸ் தாது சாம்யம் ச க்ருத்வா
ஸ்வாத் மாநம் ச ஸ்ம்ருதி பத மஜம் விஸ்வ ரூபம் விதந்வந்
காலே ப்ராப்தே கரண விலயாத் காஷ்ட்ட பாஷாண கல்பாந்
நாத போத்ரீ நயது க்ருபயா நாதித ஸ்வம் பதம் ந –

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵 ️
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்!

கல்பத்தின் ஆதியில் எம்பெருமானால் உலகோர்கள் யாவருடைய நன்மையையும் மனதில் கொண்டு, தன்னை ஏத்திப் பாடுதல், தன்னையே அடைந்திருத்தல், தன்னைப் புஷ்பங்களால் அர்ச்சித்தல் ஆகியவை சொல்லப்பட்டது. அதைக் கேட்ட பூமிப்பிராட்டியார் இவற்றை உலகோர்கள் யாவரும் அறியும்படி செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பரமவைதிகரான ஸ்ரீவிஷ்ணுசித்தரான பெரியாழ்வார் திருமகளாராய் வந்து பிறந்தார். அந்த உதாரகுணமுடைய கோதை நாச்சியாரைப் போற்றுகிறோம்!

—————

ஆகூதஸ்ய பரிஷ்க்ரியாம் அனுமபாம் ஆஸேசனம் சக்ஷுஷோ:
ஆனந்தஸ்ய பரம்பராம் அனுகுணாம் ஆராம சைலேசிது: |
தத்தோர் மத்ய கிரீட கோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யா மோத ஸமேதித ஆத்ம விபவாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||–ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 4 

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தஸ்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர் மத்ய க்ரீட கோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூக ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

விளக்கம்:

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய பகவானுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள் ஸ்ரீ ஆண்டாள். தனது அழகு அலங்காரங்களால் கண்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பவள். திருமங்கை தங்கிய சீர் மார்வன் தாம் விரும்பி, நாள் தோறும் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திருமுடியிலே தரித்து ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி, இவ்வாறு பகவானை பிச்சேற்றி மகிழச் செய்யும் பெருமையுடைய ஸ்ரீ கோதா பிராட்டியை நாம் ஸ்துதி செய்து வணங்குவோமாக!

திருவேங்கடமலையிலும், திருமாலிருஞ்சோலை மலையிலும் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய அபிப்ராயம் நிறைந்த செயலுக்கு மிகவும் அழகூட்டுமவளாயும், சேவிக்கும் அடியவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை உண்டு பண்ணுமவளாயும், அவனுக்கு எல்லாவிதத்திலும் தக்கவளாய், நிரந்தர ஆனந்தவெள்ளமூட்டும்படி அவனது திருமார்பிலும், திருமுடியிலும் அணியும் தான் சூடிக்களைந்த குங்குமம், பூமாலை ஆகியவற்றின் மணத்தினால் பெருகும் வைபவத்தை உடையவளாய், உதாரவாக்காளரான ஆண்டாள் நாச்சியாரைப் போற்றுகிறோம்!

தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந் மௌளி மால்ய பர ஸம் பரணேன பூய:|
இந்தீவரஸ்ரஜ மிவாதததி த்வதீயாந்யா
கேகராணி பஹுமாந விலோகிதாநி || .கோதா ஸ்துதி -20–போக ரஸாந் -கண்ணின் கடாக்ஷ குளிர்ச்சியால் அலங்காரம்

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது,
நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,தந்யமாயிற்று மேலும்,
நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து,
அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்) மாலைபோல் அமைந்துள்ளது.
தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்;
ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில்,
நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

தையொரு திங்களும் தரைவிளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*
உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்*
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கைவேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! 1

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம் அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த
தந் நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா தந்த்ரி நிநாத மதுர ச கிராம் நிகும்பை

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாஸ்த்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம்.
ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்?
அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம்

இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

———————–

ஸ்ரீ ஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள் ☘

🌸 ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (1)

🌸 மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (2)

🌸 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே |

நந்த நந்தன ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் || (3)

🌸 கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம் |

பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் || (4)

—————–
“கோவிந்தன்” என்ற திருப்பெயர் திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பதாகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்..
1. மத்ஸ்யாவதாரத்தில் “கோ” எனப்படும் வேதங்களைத் திருமால் காத்த படியால்,
“கோவிந்தன்” என்கிற திருநாமம், மத்ஸ்யாவதாரத்துக்குப் பொருந்துகிறது..
2. கூர்மாவதாரத்தில் “கோ” எனப்படும் மலையைத் தன் முதுகிலே தாங்கி நின்றதால், அவருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமானதே!..
.
3. வராக அவதாரத்தில் “கோ” எனப்படும் பூமியை மீட்டதால், அவரையும் கோவிந்தன் எனலாம்..
4. நரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனின் துதியாகிய “கோ”வை (“கோ” என்றால் நல்வார்த்தை) ஏற்று அருள்புரிந்தபடியால், நரசிம்மரும் கோவிந்தனே!..
5. “கோ” எனப்படும் பூமியை அளந்ததால், வாமன மூர்த்தியும் கோவிந்தன் ஆவார்..
6. “கோ” எனப்படும் பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியதால், பரசுராமருக்கும் கோவிந்தன் என்ற பெயர் பொருத்தமாகவே உள்ளது..
7. “கோ” எனப்படும் பூமியை ஆண்டதால், ராமனும் கோவிந்தனே!…
8. “கோ” எனப்படும் பூமியைத் தனது கலப்பையாலே உழுதபடியால், பலராமனையும் கோவிந்தன் எனலாம்..
9. “கோ” எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்த கண்ணனும் கோவிந்தனே என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை..
10. “கோ” எனப்படும் பூமியில் அறத்தை நிலைநாட்ட, நாளைய தினம் அவதரிக்கப் போகும் கல்கியையும் கோவிந்தன் என்றே கூறலாம்!…
————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்துக்குள் ஸ்ரீ மன் நாதமுனிகள் விஷயமாக சதுஸ் ஸ்லோஹி –

July 9, 2022

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீமத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லாபஸ் ஸ்ரீ தர்ஸ்சதா –

அபயப்ரதா நாமா நமஸ் மதகுரு மஹம் பஜே
யத் கடாஷா தயம் ஜந்துர புநர் ஜன்மதாம் கத

————————————————-

ஸ்ரீ பகவத் ஸ்தோத்ரம் பண்ணப் புக்கவர்
ஆசார்ய ஸ்துதியிலே பார்ப்பான் என் -என்னில்
கர்னே ஸ்ப்ருஷ்டே கடிம் சாலயதி -போலே அசங்கதம் -என்னில்
ஸ்ரீ பகவத் விஷயத்தைத் தமக்கு ஸ்துதி விஷயம் ஆக்கிக் கொடுத்த உபகார ஸ்ம்ருதியாலும்
ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு அடியான ஜ்ஞான வைசத்யார்த்தமாகவும்
அவிக்ன பரி சமாப்த் யர்த்தமாகவும் -பண்ணுகிறார் -ஆகையாலே சங்கதம் –

ஆனால் மானசமாக அமையாதோ -என்னில்
இப் பிரபந்தத்தை அதிகரிப்பார்க்கு உபகாரம் ஆகையாலே வாசிகம் ஆக்கினதும் யுக்தம் –

உபகார ச்ம்ருதியாலே வந்த ஆசார்ய அனுவர்த்தனம் பிரமாண பிரசித்தம் –
ஆசார்ய தேவோ பவ -என்றும்
நம ருஷிப்யோ மந்திர க்ருத்ப்ய -என்றும்
ச ஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும்
மந்த்ரே தத் தேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ -என்றும்
ஒரு ரத்னத்தை ஒருவன் கொடுத்தால் அதனுடைய மஹார்க்கத்தை அறியக் கொடுத்தவனை
ஆதரிக்க பிரமாணம் வேண்டுமோ -ஆகையால் இது உபபன்னம் –

ஜ்ஞான வைசத் யார்த்தமாக ஆசார்ய அனுவர்த்தனம் சிஷ்டாசார ப்ராப்தம் –
அபி வந்தா குரு நாதௌ-சிஷ்யதீ பதமி நீர வீன் –இது மீமாம்சகா -என்றும்
யதா கனன் கனித்ரேண-இதி மனு -என்றும்
யஸ்ய பிரசாதாத் வஷ்யாமி நாராயண கதாமிமாம் -இதி வைசம்பாயன -என்றும்
லௌகிகம் வைதிகம் வாபி -இதி மனு -என்றும்

அங்கனே ஆகில்
ஸ்வ ஆசார்யனை விட்டு அவர் குருக்களை பற்றுவான் என் என்னில்
ஆசார்ய ஸ்துதியிலும் ஆசார்ய பிரியம் இறே உத்தேச்யம் –
ஸ்வாஸ்ரயணத்தில் காட்டில் ஸ்ரீ பெரிய முதலியாரை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
ப்ரீதி மிக்கு இருக்கையாலே அதைப் பேசுகிறார் –

ஸ்ரீ பெரிய முதலியார் ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் ப்ராவண்யம் அடியாக பிறந்த ஜ்ஞாநத்தை
ஸ்ரீ ஆழ்வார் பிரசாதத்தாலெ பெற்று -தம் அளவிலே பர்யவசிக்கை அன்றிக்கே
பின்பு உள்ளார்க்கும் உபகாரமாம் படி
இந்த தர்சன ஸ்தாபகர் ஆனபடியாலும் –
ஸ்ரீ மணக்கால் நம்பி -பெரிய முதலியார் உடைய அர்த்தம் இது
உம்முடைய பேற்றுக்கு எல்லாம் அவருடைய திருவடிகளிலே சம்பந்தமே -என்கையாலும்
அவரை ஆஸ்ரயிக்கிறார்

இதை நினைத்து இறே ஸ்ரீ பட்டர் – ப்ரதமமபி குரும் நாத மீடே -என்றதும் .
வேத காரணமான பிரணவம் வேதாத் யந்தம் களிலே ஆனால் போலே –

இங்கும் ஆதி அந்தம் களிலே ஆசார்ய ஸ்துதி யாய்
நடுவிலே பகவத் ஸ்தோத்ரம் ஆக இருக்கிறது –

முதலிட்டு மூன்று ஸ்லோகத்தாலே
ஸ்ரீ பெரிய முதலியாரை நமஸ்கரிக்கிறார் –

————————————————————————

ஸ்லோகம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தில் ஒருவனைக் கவி பாடப் புக்கால்
அவன் ஐஸ்வர்யத்தைச் சொல்லிக் கவி பாடுமா போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஐஸ்வர்யமான ஜ்ஞான வைராக்யங்கள் உடைய பிரகர்ஷத்தை சொல்லி நமஸ்கரிக்கிறார் –

மனமாசு தீரும் அருவினையும் சாரா
தனமாய தானே கை கூடும் –புனமேய
பூந்துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தாம் தொழா நிற்பார் தமர் -முதல் திருவந்தாதி -43-என்று
ஸ்ரீ வைஷ்ணவனுக்கு தனம் பக்த்யாதிகள் என்று சொல்லிற்று இறே –

நமோ அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
நாதாயா முநயே அகாத பகவத் பக்தி சிந்தவே–1-

நமோ –
அஹம் அபி ந மம பகவத ஏவ அஹம் அஸ்மீத் ஏவம் அமமதாம் யோஜயத்யதோ நம இதி -என்கிறபடியே
எனக்கு உரியேன் அல்லேன் –
பெரிய முதலியாருக்கு சேஷம் -என்கிறார் –

நமோ விஷ்ணவே -என்கிறாப் போலே –
நமோ நாதாயா -என்கிறார் உபகார ஸ்ம்ருதி யாலே –

ஓம் நமோ விஷ்ணவே (ஷடத் அக்ஷரீ )-என்றும்
நம இத்யேவ வாதி ந -என்றும்
நம ரிஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
தேஷாமபி நமோ நம -என்றும் சொல்லக் கடவது இறே –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் -ஸ்ரீ ரங்க நாதன் என்று திருநாமம் சாற்றுகையாலே
நாதன் என்று திரு நாமம் ஆகிறது –
எப்படிப் பட்டவர் -என்னும் அபேஷையில் சொல்லுகிறது –

அசிந்த்ய –
இவருடைய ஜ்ஞானாதிகள் இன்னாருடைய ஜ்ஞானாதிகள் போலே இருக்கும் என்று
நினைக்க ஒண்ணாது -என்னுதல்
இவ்வளவு என்று ஜ்ஞானாதிகராலும் -பரிச்சேதிக்க ஒண்ணாது -என்கை

அத்புத –
கீழ் இயத்தா ராஹித்யத்தைச் சொல்லுகையாலே-க்ருஹீதாம்சம் அனுசந்தித்தார்க்கு
ஆச்சர்ய அவஹமாய் இருக்கும் -என்கை –
அமுதூரும் என்றக்கால் -இத்யாதியில் க்ருஹீதாம்சம் இனிதாய் இருக்கும் என்றது இறே –

அக்லிஷ்ட –
வ்யாசாதிகளைப் போலே ஸ்வ யதன சாத்திய தபஸ்ஸாலே வந்தது அன்றிக்கே
ததாமி புத்தி யோகம் தம் -என்றும்
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே வருத்தம் அற்று இருக்கை-

ஜ்ஞான –
ஜ்ஞானம் ஆவது -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை –
அதாவது –
ஆத்மா ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷம் என்றும்
அசித் ஸ்வரூபம் த்யாஜ்யம் என்றும் –
ஈஸ்வரன் உபயோர் நியந்தா என்றும் -அறிகை –

ஜ்ஞானம் என்றால் இவ் விசேஷத்தைக் காட்டுகிறது
தத் ஜ்ஞானம் அஜ்ஞானம் அதோ அந்ய துக்தம்-என்றும்
வித்ய அந்ய அசில் பனை புணம் -என்றும்
வ்யதிரிக்த விஷய ஜ்ஞானம் அநர்த்தா வஹம் என்றும் அதி சூத்ரம் என்றும் -சொல்லிற்று இறே –

வைராக்ய –
இவ் விலஷண ஜ்ஞானத்தாலே பகவத் வ்யதிரிக்தங்களில்
நிஸ்ப்ருஹராய் இருக்கை –
வேண்டேன் மனை வாழ்க்கையை -பெரிய திருமொழி -6-1-

ராசயே –
ராசி என்று சமூஹம்-
ஜ்ஞான இராசே –வைராக்ய ராசயே –
ஜ்ஞான வைராக்யங்கள் ஒன்றாய் இருக்க ராசயே -என்பான் என் -என்னில் –
ஸ்ரீ பகவத் ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்கள் ஆகையாலே பல –
பிதரம் மாதரம் -என்று த்யாஜ்ய விஷயங்களும் பலவாகையாலே சொல்லலாம் –

லோகத்தில் விலஷணர் உடைய ஜ்ஞான வைராக்யங்கள் எல்லாம் இவருடைய
ஜ்ஞான வைராக்யங்களிலே அந்தர்ப்பூதம் ஆம்படி இருக்கையாலே சொல்லுகிறது -என்றுமாம் –

யத் கிஞ்சித் சாது குர்வந்தி யஸ் தத் வேத யத்ச வேத ச மயைத துக்த இதி –
யத் கிஞ்சித் சாத்வ நுஷ்டிதம் கர்ம யச்ச சர்வ சேதன கதம்
விஜ்ஞானம் ததுபயம் யதி யஜ்ஞான கர்மாந்தர்கதம் ச ரைக்வ -இதி -என்றும்
லோகத்தில் அனுஷ்டிதமான கர்மங்களும் ஞானங்களும் யாவன் ஒருத்தன் உடைய
கர்ம ஞானங்களிலே அந்தர் கதமாய் இருக்கும் -அவன் தானே கிடீர் ரைக்வன் -என்று பார்த்து சொல்லுமா போலே

முநயே –
ந விவேதாத்மநோ காத்ரம் -என்றும்
பஸ்யந்நபி ந த்ருஷ்ட்வான் -என்கிறபடியே
த்தேய வஸ்துவை சர்வதா சாஷாத் கரிக்கை

ஏது செய்தால் மறக்கேன் மனனே -பெரிய திரு மொழி -9-3-3- என்றும்
என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -திருவாய் மொழி -7-3-6- என்றும்
இவர் கிருஷ்ணனை அனுசந்தித்து இருக்க ராஜாவாலும் சமாதி பங்கம் பண்ணப் போயிற்று இல்லை –

ராம மேவா நுபச்யந்த -என்னுமா போலே –

அகாத பகவத் பக்தி சிந்தவே –
பக்தியாவது ஜ்ஞான விசேஷமாய் இருக்க -பக்தியைப் பிரித்துச் சொல்லிற்று –
அதினுடைய ப்ராசுர்யம் சொல்லுகைக்காகவும் –
ப்ரதான்யம் சொல்லுகை தோற்றுகைக்காகவும் –

பக்தி யாகிறது -சிநேக பூர்வம் அனு த்யானம் பக்தி -என்றும்
ஸ்வாமிநி தாசச்ய சிநேக மயீ ஸ்திதி -என்றும் சொல்லுகிறபடியே-
அனுபவ ஆசை -அனுபவிப்பதில் விருப்பம் –

பகவச் சப்தத்தாலே பரம பதத்தில் இருப்பைச் சொல்கிறது –
வாஸூ தேவோ அஸி பூர்ண – என்று ஷாட் குணிய பூர்ணனாய் இறே இருப்பது

அகாத
அஷோப்ய-கலக்க ஒண்ணாத –
அர்த்தாந்தரம் -பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஒருவரால் நிலை கொள்ள ஒண்ணாது இருக்கை –

சிந்தவே –
காதல் கடலின் மிகப் பெரிது –திருவாய்மொழி -7-3-6-என்றும்
ஆசை என்னும் கடல் -பெரிய திருமொழி -4-9-3- என்றும்
ஈஸ்வரனுக்கும் நிலை கொள்ள ஒண்ணாதே
தாம் அதில் புக்கு அமிழ்ந்தபடியாய் இருக்கை –

அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே
முனயே அகாத பகவத் பக்தி சிந்தவே நாதாய நம -என்று அந்வயம் –

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப் பற்றிய ஞானம் -ஞானமாவது தத்வ த்ரய -சித் அசித் ஈஸ்வர தத்தவங்களை விஷயமாக உடைத்தாய் இருக்கை-அர்த்த பஞ்சக ஞானம் என்றுமாம்
அன்னை அத்தன் புத்ரன் பூமி வாசவார் குழலார் இவர்களைப் பற்றிய வைராக்யங்கள் -இரண்டுமே கும்பலாகக் குவிந்து இவராக ஆயிற்று

(பகவத் பக்தி ரசத்துக்கு -ஆழ்ந்ததோர் கடல் போலே இருப்பாரே -கலக்க முடியாதபடி –
பகவத் பக்திக்கு சமுத்திரம் என்றும்
பகவத் பக்தி யாகிற சமுத்திரத்தை தம்மிடம் கொண்டவர் என்றுமாம் )

————————————————————————–

ஸ்லோகம் -2- அவதாரிகை
முதல் ஸ்லோகத்தாலே பரத்வ விஷயமான ஜ்ஞானாதிகள் உடைய பிரகர்ஷம் சொல்லிற்று
இந்த ஸ்லோகத்தாலே அவதார விஷயமான ஜ்ஞானாதிகள் ஆகையாலே
அதினுடைய ப்ரக்ருஷ்ட தரத்வம் சொல்லுகிறது

அன்றிக்கே
கீழ் சொன்ன ஜ்ஞானாதிகள் தம்மளவில் பர்யவசியாதே
என்னளவும் வர வெள்ளம் கோத்தது –
என்னவுமாம் –

தஸ்மை நமோ மது ஜிதங்க்ரி ஸரோஜா தத்தவ
ஜ்ஞான அனுராக மஹிமா அதிசய அந்த ஸீம்நே
நாதாயா நாத முநயே அத்ர பரத்ர சாபி
நித்யம் யதீய சரனௌ சரணம் மதீயம்-2-

மது ஜிதங்க்ரி ஸரோஜா -எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பற்றின
தத்தவ ஜ்ஞான–உண்மை உணர்ச்சி என்ன
அனுராக –ஆசை என்ன
மஹிமா அதிசய அந்த ஸீம்நே–இவற்றின் பெரு மேன்மைக்கு எல்லை நிலமாயும்
நாதாயா-எனக்கு நாதராயும் இருக்கிற
தஸ்மை நாத முநயே நமோ–அந்த நாத முனிகளுக்கு நமஸ்காரம்
அத்ர பரத்ர சாபி-இவ்வுலகத்திலும் மேல் உலகத்திலும்
நித்யம் யதீய சரனௌ-எப்போதும் -எந்த ஸ்ரீமந் நாதமுனிகளுடைய திருவடிகள்

தஸ்மை நமோ –
நமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை -என்றும்
நமோ நமஸ்தே ஆஸ்து சஹஸ்ர க்ருத்வ-என்றும் சொல்லுகிறபடியே –
இன்னம் அவர்க்கு அடியேன் -என்கிறார் –

மது ஜீத் –
அநிருத்தராய் வந்து அவதரித்து
முதல் களையான மதுவை நிரசித்தால் போலே
பகவத் ப்ராப்தி பந்தகங்களைப் போக்குமவன் -என்கை –

அங்க்ரி –
அந்த ஸ்வ பாவத்திலே -குணைர் தாஸ்யம் உபாகத -என்று பெரிய முதலியார் தோற்று இருக்கும் படியையும்
அவருடைய அனன்யார்ஹ சேஷத்வமும் சொல்லுகிறது –

ஸரோஜ –
சம்பந்தம் இல்லா விடிலும் விட ஒண்ணாத போக்யதையைச் சொல்லுகிறது –
விகாசம் செவ்வி குளிர்ச்சி பரிமளம் முதலான வற்றுக்குத் தாமரையை ஒரு படிக்குப் போலியாகச்
சொல்லலாய் இருக்கை –

தத்தவ ஜ்ஞான –
தத்வ ஜ்ஞானம் ஆவது –
அவதார விஷய ஜ்ஞானமும்
ஆஸ்ரித பாரதந்த்ர்ய விஷய ஜ்ஞானமும் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேகம் புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன -ஸ்ரீ கீதை -4-9-என்று
தானே அருளிச் செய்தான் இறே –

தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம் -என்றும்
அஹத்வா ராவணம் சங்க்யே-என்றும்
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக் நஞ்சாபி மாந்த
பவேன் மம ஸூகம் கிஞ்சித் பஸ்மாசாத் குருதாம் சிகி -என்று அருளிச் செய்தான் இறே சக்கரவர்த்தி திருமகன் –
அப்யஹம் ஜீவிதம் ஜ்ஹ்யாம் -என்றும்
ஆத்மாநாம் நாதி வர்த்தேதா -இத்யாதி

அனு ராக-
அனு ராகம் ஆவது -இவற்றை எல்லாவற்றையும் அனுபவித்தால் அல்லது நிற்க ஒண்ணாத ப்ரேமம் –

மஹிமா அதிசய அந்த ஸீம்நே –
ஜ்ஞான அநு ராகங்கள் உடைய மஹத்த்வத்தின் முடிவே எல்லையாய் இருக்குமவர்க்கு
மஹிமா -மஹத்த்வம் –
மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

நாதாயா –
அஸ்மத் நாதாயா –

நாத முநயே –
இத் தர்சனத்துக்கு நாதனே -என்று
மது சூதனை யன்றி மற்று இலேன் -திருவாய்மொழி -2-7-6-என்று இருக்கும்
மஹாத்மாக்களாலே கொண்டாடப் படுவாராய் ஆயிற்று –
தத்வ ஹிதங்களை திரு வுள்ளத்திலே கூடு பூரிக்குமவர் –
தஸ்மை நம -என்று அந்வயம் –

உபகார ஸம்ருதியாலே அவரை ஆதரித்தீர் ஆகில்
ஐஹிக ஆமுஷ்மிகங்களுக்கு வேண்டாவோ -என்று பகவத் அபிப்ராயமாக அருளிச் செய்கிறார் –
அத்ர பரத்ர சாபி –
சம்சாரத்திலும்
பிராப்யமான நித்ய விபூதியிலும் –

நித்யம் –
நித்ய அக்னி ஹோத்ரம் போல் அன்றிக்கே
அனவரதம் -என்கை –

யதீய சரனௌ –
என்னை இவ் வவஸ்தாபன்னனாக்கிய திருவடிகள் –

சரணம் –
உபாய உபேயங்கள் இரண்டும்

மதீயம் –
பெரிய முதலியார் திருவடிகள் ஆகில் எனக்கு இரண்டுமாய் இருக்கும் -என்கை –
அதாவது -சம்சார தசையிலே பகவானே உபாயம் என்று உபதேசித்து
உபாயாத்யவசாயத்துக்கு அடியான ஸ்வ அனுக்ரஹத்தாலே
பகவத் பிராவணயத்தை விளைத்தும்
பிராப்ய தேசத்தில் சென்றால் நித்ய ஸூரிகள் கோஷ்டியில் பிரவேசிப்பித்தும்
பின்பு நித்ய ஸூரிகளோபாதி உத்தேச்யமாய் இருக்கையாலும் -அப்படிச் சொல்கிறது –

அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரனௌ மதீயம் சரணம்
மது ஜிதங்க்ரி சரோஜ தத்தவ ஜ்ஞான அனுராக மஹிம
அதிசய அந்த சீம்னே நாதாய தஸ்மை
நாத முனயே நம -என்று அந்வயம் –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ —
வானவர் நாடு –
ஆச்சார்யர் திருவடிகளே உத்தேச்யம்
சரணம் -உபாயம் உபேயம் இரண்டுமே என்றபடி -)

பகவத் தத்வ ஞானமும் பகவத் அநு ராகமும் இவர் இடம் சேர்ந்து விசரமித்தன போலும் -ஆகவே இவற்றுக்கு இவரே ஸீமா பூமி –

மனுஷ்ய ஆனந்தமே தொடங்கி-தே யே சதம் – என்கிற க்ரமத்தாலே
ஈஸ்வர ஆனந்தத்திற்கு எல்லையாய் இருக்கும் இருப்பு போலே
இவருக்கும் தத் விஷய ப்ரேமத்துக்கு எல்லையாய் இருக்கும் இருப்பு –

——————————————————————————-

ஸ்லோகம் -3- அவதாரிகை –

த்ருஷார்த்தனுக்குத் தண்ணீர் குடிக்கப் பர்யாப்தி பிறவாதாப் போலே
பின்னையும் அவர்க்கு அடியேன் -என்கிறார்

ஆஸ்ரிதரை ஒரு காலும் நழுவ விடாத அச்யுத விஷயத்திலே
ஜ்ஞான பக்த்யாதிகள் ஆகையாலே
தம்மளவில் பர்யவசியாதே
பகவத் விஷயத்துக்கு அபூமியான சம்சாரம் எங்கும்
வெள்ளம் இடும்படியான இவர் உடைய
ஜ்ஞான பக்திகள் உடைய
பிரக்ருஷ்டதையைச் சொல்லுகிறது –

பூயோ நமோ அபரிமித அச்யுத பக்தி தத்தவ
ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி
யோகாய நாத முநயே யமிநாம் வராய-3-

அபரிமித அச்யுத பக்தி –அளவில்லாத பகவத் பக்தி என்ன
அபரிமித தத்தவ ஜ்ஞாநம்–அளவில்லாத தத்வ ஞானம் என்ன
அம்ருதாப்தி பரிவாஹ ஸூபைர்–இவை யாகிற அமுதக் கடலின் பரிவாஹம் போன்று பிரசன்ன சீதளங்களான
வசோபி-ஸ்ரீ ஸூக்தி களாலே
லோகே -இவ் வுலகத்தில்
அவதீர்ண பரமார்த்த –அவதாரம் செய்து இருக்கிற பரம புருஷார்த்தமாயும்
சமக்ர பக்தி யோகாய –பரி பூர்ணமாயும் இருக்கிற பக்தி யோகத்தை உடையவராய்
யமிநாம் வராய–யோகிகளின் சிறந்தவரான
நாத முநயே -பூயோ நமோ—நாத முனிகளுக்கு மறுபடியும் நமஸ்காரம்

பூயோ நமோ
புனஸ்ஸ நம
நமோ நமஸ்தே -என்கிறபடியே

அபரிமித –
கிடந்த பாயிலே வெள்ளம் கோத்தால் போலே
இருந்த இடங்களிலே வந்து கிட்டும்படி
எல்லை இறந்து இருக்கை –

அச்யுத –
நியந்த்ருத்வ ஸ்வாமித்வாதி கல்யாண குணங்களாலே குறை வற்று இருக்கை -என்னுதல் –
ஏக ரூபமாய் இருக்கும் -என்னுதல்
என்றும் ஆஸ்ரித அர்த்தமாய் இருக்கும் இருப்பை நழுவ விடாதவன் -என்னுதல் –
ஆர்ந்த புகழ் அச்சுதன் -திருவாய்மொழி -3-5-11- என்றும்
நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -திருவாய்மொழி -3-6-8-என்கிறபடியே
ஆஸ்ரிதரை தம் தாம் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாதவன் -என்னுதல் –

பக்தி தத்தவ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ ஸூபைர் வசோபி –
பக்தி தத்வ ஜ்ஞானங்கள் ஆகிற
அம்ருதாப்தி யினுடைய பரிவாஹ ரூபமான
ஸூபமான வசஸ் ஸூக்களாலே-
உபாயம் ஈஸ்வரன் ஆகையாலே ஜ்ஞான பக்திகள் போக ரூபமாய்
அபரிச்சின்னமாய் இருக்கும் -என்கை –

பரிவாஹம் ஆவது -அவ்வவ ரஷண அர்த்தமாக
அதிக ஜல நிர்க்க மனஸ் ரோதஸ்ஸூ –
வசஸ் ஸூக்களுக்கு ஸூபத்வம் ஆவது –
அவிஸ் தர்ம சந்திக்தம் -இத்யாதிகளை உடைத்தாய் இருக்கை

லோகே –
பகவத் பக்திக்கு மேட்டு மடையான சம்சாரத்திலே
சைஷா பார்க்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமன் ப்ரதிஷ்ட்டிதா -என்று
பரம பதத்தில் பரிமாறக் கடவ பக்தியை
நான் முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் -திருவாய்மொழி -7-5-1-என்கிறபடியே
சம்சாரத்தில் நடையாடும்படி பண்ணினபடி –

அவதீர்ண –
ஈஸ்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –

பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

பக்தி யோகாய –
பக்தியை உடையரான –
உக்தமான பக்தி தத்வ ஜ்ஞானங்கள் இரண்டையும்
பக்தி சப்தத்தாலே சொல்லிற்று

நாத முநயே யமிநாம் வராய –
முடியானே -திருவாய்மொழி -3-8- யில் சொல்லுகிற படியே
அவனை அல்லது அறியாத கரணங்களை உடையராய் இருப்பார்க்குத் தலைவர் ஆனவருக்கு
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -முதல் திருவந்தாதி -11-என்று
இருக்கும் அவர்களுக்கு வரணீயராய் இருக்குமவர் -என்றுமாம்-

அபரிமித அச்யுத பக்தி தத்வ ஜ்ஞானம்
அம்ருதாப்தி பரிவாஹ ஸூ பைர் வசோபி
லோகே அவதீர்ண பரமார்த்த சமக்ர பக்தி யோகாய
யமிநாம் வராய நாத முனயே பூயோ நம -என்று அந்வயம்-

ஸ்ரீ ஸூக்திகளை பக்தி பரிவாஹம் என்றது –சொல்லாவிடில் சரீரம் தரிக்க முடியாது -பக்தி பலாத்காரத்தாலே அவதரித்த சொற்கள்
அம்ருத பரிவாஹம் -பிரசன்னமாயும் மதுரமாயும் சீதளமாயும்
ஸ்ரீ நியாய தத்வம் போன்ற இப்பொழுது லுப்தமான கிரந்தங்களும்-நித்ய காலக்ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் -இவையே பின்பு ஏடு படுத்தப் பட்டு நம்மளவும் வந்தனவே
யோகம் -குருகைக் காவல் அப்பன் அளவு மட்டுமே –
பக்தி -நெஞ்சு கனிந்து ப்ரீதி ரூபமான த்யானம் -பரமார்த்த சமக்ர -இரண்டு விசேஷங்கள் -ஸ்வயம் பிரயோஜனம் -என்றும் அவனை பிராபிக்க பர்யாபதமான உபகரணம் என்றது ஆயிற்று –
அவதீர்ண –
ஈச்வராவதாரம் போலே இறே
ஸ்வயம் பிரயோஜனமான பக்த்யவதாரம் –
பரமார்த்த –
பரம பிரயோஜன ரூபமாய் இருக்கை –
சமக்ர –
அதனில் பெரிய அவா -என்னும்படி குறைவற்று இருக்கை –

(வசோபி – ஸ்ரீ -ந்யாய தத்வம் -கிரந்தம் ஸ்ரீ தேசிகன் போன்றார் காட்டி அருளி உள்ளார்கள்
நித்ய கால ஷேப ஸ்ரீ ஸூக்திகளும் உண்டே
பக்தி யோகம் -ஸ்ரீ -குருகை காவல் அப்பனுக்கு பிரசாதித்து அருளிய யோக சாஸ்திரமும் –
ஸ்ரீ -மணக்கால் நம்பி போல்வாருக்கு சாதித்து அருளிய பிரபத்தி சாஸ்திரமும் –
பரமார்த்த -சமக்ர -இரண்டு விசேஷணங்கள்-பரம புருஷார்த்தம் என்றும் -பரி பூர்ணம் -என்றும் –
ஸ்வயம் பிரயோஜனம் என்றதாயிற்று -)

———————————————————————————

ஸ்தோத்ரம் -65-அவதாரிகை –

ராமோ த்விர் நாபி பாஷதே-என்கிற சங்கல்பத்தை விட்டீரே யாகிலும்
ஸ்ரீ பெரிய முதலியாரோடு வித்யையாலும்
ஜன்மத்தாலும் உண்டான சம்பந்தத்தையே பார்த்து அருளி –
என்னுடைய நன்மை தீமைகளைப் பாராதே
விஷயீ கரிக்க வேணும் -என்ன

அதுக்குக் கண்ணழிவு இல்லாமையாலே
அப்படிச் செய்கிறோம் -என்று ஈஸ்வரன் அனுமதி பண்ண

தாம் அனுமதி பெற்றாராய்
ஸ்தோத்ரம் தலைக் கட்டுகிறது –

அக்ருத்ரிம த்வச் சரணார விந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதி மாத்மவந்தம்
பிதாமஹம் நாத முநிம் விலோக்ய
ப்ரஸீத மத் வ்ருத்தம சிந்தயித்வா–65-

அக்ருத்ரிம –
க்ரியயா நிர்வ்ருத்த க்ருத்ரிம தத் ரஹித அக்ருத்ரிம
ஸ்வாபாவிக -இத்யர்த்த –
ஒரு செய்கையால் உண்டாக்கப் பட்டது க்ருத்ரிமம் -செயற்கை
அப்படி அற்றது அக்ருத்ரிமம் -இயற்கையானது –
குலம் தானே யோகி குலம் ஆகையாலே
நை சர்க்கிகம் -என்கை –
மெய்யான ப்ரேமம் -என்னவுமாம் –

தவச் –
ப்ராப்த சேஷியான உன்னுடைய

சரணார விந்த –
ஆஸ்ரிதருக்கு இழியும் துறையை போக்யமான
திருவடிகளை –

ப்ரேம ப்ரகர்ஷாவதிம்-
ப்ரேமாதிஸய ஸீமா பூமி யானவர்
நமக்கு இதர விஷயங்களில் ப்ரேமம் எல்லாம்
இவர்க்கு வகுத்த விஷயத்திலே இறே இருப்பது –

மாத்மவந்தம் –
பகவத் சேஷத்வம் ஸ்வரூமாகவே
ஆத்மா யாதாம்ய ஜ்ஞானம் உடையவர் -என்கை –
தநவந்தம் -என்னுமா போலே –

பிதாமஹம் நாத முநிம் –
குடல் துடக்கை உடையராய்
பகவத் ஜ்ஞான நிதியாய்
உள்ளவரை –

விலோக்ய –
கடாஷித்து

ப்ரஸீத –
அபராதங்களைப் பொறுத்து அருள வேணும் –

மத் வ்ருத்தம சிந்தயித்வா –
அஸ்த் கர்மத்தை விஸ்மரிக்கக் கடவராக வேணும் -என்கை –

மத் வ்ருத்தம் -என்று
சத் கர்மத்தை நினைக்கிறது –
வ்ருத்தவான் என்றால் சத் கர்ம யுக்தனை இறே சொல்லுகிறது –

ஸ்வ கதமான வற்றை அநாதரித்து
பெரிய முதலியார் சம்பந்தம் எனக்குத் தஞ்சமாக வேணும் என்று பிரார்த்தித்து
ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டுகிறார் –

(பிதாமஹத்வம் வித்யையாலும் ஜென்மத்தாலும் –ஸ்ரீ ஈஸ்வர பட்டாழ்வார் இவர் திருத் தந்தை – )

—————————————————————————–

ப்ரஹர்ஷயிஷ்யாமி என்கிற இத்தால் பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்ற ஸம்ப்ரதாய தாத்பர்யத்தை அறுதி யிட்டார்

த்வயத்தில் உத்தர வாக்கியத்தில் நமஸ் ஸப்தம் கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்னப் பண்ணுகை
ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -என்று ஆழ்வாரும்
மற்றை நம் காமன்கள் மாற்று -என்று நாச்சியாரும்
ஐம்புலன் அகத்தடக்கி -என்று தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்று ஸ்ரீ மத் லோகாச்சார்யாரும்
அஹம் அந்நாத -என்ற போக்த்ருத்வத்துக்கு முன்னே அஹம் அன்னம் என்று

தன்னுடைய போக்யத்வத்தை அன்றோ முக்தன் சொல்லுவதாக ஸ்ருதியும் ஓதிற்று
போக்த்ருத்வமும் போக்யத்வாய விறே
புங்க்தே ஸ்வ போகம் அகிலம் பதி போக சேஷம் -என்னா நின்றது இறே –

—————–

இப்படிப்பட்ட புருஷார்த்தத்துக்கு உபாயமாக அவன் தன்னையே பற்றுகிறார் ஆளவந்தார்-

ந தர்ம நிஷ் டோஸ்மி -என்று கர்ம ஞானாதிகளைக் கை விட்டது அஞ்ஞான அசக்திகளால் அன்று
பல விலம்பம் என்றும் அல்ல
அவதார ரஹஸ்ய ஞான ஸஹ க்ருத பக்தி ரூப உபாயாந்தரம் தேஹ அவசானத்திலே பலிக்கும் என்று
ஏவம் யோ வேத்தி தத்த்வத த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாமேதி -என்று கீதாச்சார்யன் அருளிச் செய்தான் அன்றோ
அவ்வழியாலும் கை வையாதே எம்பெருமானையே தஞ்சமாகப் பற்றியது உபாயாந்தர சாமான்யம் அப்ராப்தம் என்று அன்றோ —

ஸ்வரூப விருத்தம் என்று இறே கை விட்டது
ப்ரபாகாந்தர்ப் பரித்யாகத்துக்கும் அஞ்ஞான சக்திகள் அன்று
ஸ்வரூப விரோதமே பிரதான ஹேது -என்று அன்றோ ஸ்ரீ வசன பூஷண நிஷ் கர்ஷம்
ஆகையால் அன்றோ விதி ரஹஸ்யத்தில் பரித்யஜ்ய என்று உபாயாந்தர பரித்யாகத்தை விதித்தான்
ஸ்நாத்வா புஞ்ஜீத -என்னுமா போலே விட்டே பற்ற வேண்டும் -என்று இறே சம்பிரதாய நிஷ் கர்ஷம் –

——————-

இதில் ஆதி அந்தங்களில் பிதா மஹாரான ஸ்ரீ மன் நாதமுனிகளை நிர்தேசித்து உள்ளார்

ஸ்ரீ காட்டு மன்னார் கோயில் கோபால ரத்னத்தைத் தனக்குத் தந்த மஹா உபகாரகரான ஆச்சார்யன்

என்று முதற் கண் மூன்று ஸ்லோகங்களாலே ஸ்துதித்தார்

தன்னுடைய சரணாகதி தர்மத்தையும் அநாதரித்து அவர் சம்பந்தமான கண்ணழிவு அற்ற உபாயத்தையே பார்த்து
அடியேனைக் கடாக்ஷிக்க வேண்டும் என்று விண்ணப்பித்து தலைக் கட்டுகிறார்

தனமாய தானே கை கூடும் -என்று ஸ்ரீ வைஷ்ணவ தனமான ஞான பக்தி வைராக்யங்களோடே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்தோடே வாசியற எல்லாமே ஆச்சார்ய அதீநம் என்றபடி

ஆச்சார்ய வைபவத்தில் உபக்ரமித்து ஆச்சார்ய வைபவத்தில் உப ஸம்ஹாரம் செய்யும் உத்க்ருஷ்ட ஸ்தோத்ர ரத்னம் –

————————————————————-

யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்த அசேஷ கல்மஷ
வஸ்து தாம் உபயாதோ அஹம் யாமுநேயம் நமாமி தம்

எவர் உடைய திருவடித் தாமரையை தியானிப்பதால் எல்லா பாபங்களும் அழியப் பெற்று
அடியேன் ஒரு பொருள் ஆனேனோ அத்தகைய ஸ்ரீ யாமுனாசார்யரை வணங்குகிறேன் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் /ஸ்ரீ தாடீபஞ்சகம் /ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்–

November 13, 2021

ஸ்ரீ ராமபிரான் அருளிச்செய்த ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ் க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வ ரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே–1-

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–2-

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி–3-

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் கணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி–4-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுர ப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி–5-

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம்

– (ஸ்ரீ ஹரிவம்ச புராணம் – சேஷ தர்மம் -47- அத்யாயம்)

—————

ஸ்ரீ தாடீ பஞ்சகம்

இந்த அத்புதமான ஸ்தோத்ரம்
ஸ்ரீகூரத் தாழ்வான் அருளிச் செய்தது என்றும்,
ஸ்ரீ முதலி யாண்டான் அருளிச் செய்தது என்றும் பெரியோர்கள் ஒருவாறு பணிப்பர்.

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர்

யார் அருளிச் செய்த ஸ்தோத்ரமானாலும், எம்பெருமானாரது விஜயங்களை எடுத்துரைப்பதாய்,
செவிக்கினிய செஞ்சொற்களாக அருளிச் செய்யப் பட்ட இந்த ஸ்தோத்ரம் நமக்கு நித்யாநுசந்தேயமாக
இருக்க வேணும் என்னும் காரணத்தினால் ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான்
இருவருடைய தனியன்களையும் அவற்றின் பொருளோடு விண்ணப்பிக்கப்படுகின்றன.

ஸ்ரீ கூரத் தாழ்வான் தனியன்

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம யுக்தி மதீ மஹே
யத் யுக்தயஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ர தாம்

யவருடைய திவ்ய ஸ்ரீ ஸூக்திகள் எல்லாம் வேதமாகிற பெண்ணின் கழுத்துக்கு மங்கள ஸூத்ரமாக
(மாங்கல்யமாக) விளங்க, அந்த ஸ்ரீவத்ஸ சிஹ்நர் என்னும் திருநாமம் உடையவரான
ஸ்ரீகூரத் தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ முதலி யாண்டான் தனியன்கள்

1–பாதுகே யதிராஜஸ்ய கத யந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் யஹம்

யாரொருவர், எம்பெருமானாருடைய திருவடி நிலைகளாக (பாதுகைகளாக) அறியப் படுகிறாரோ,
அந்த தாசரதி என்னும் திரு நாமம் உடையவரான ஸ்ரீ முதலி யாண்டானுடைய
திருவடி யிணைகளை அடியேனுடைய தலையால் தாங்குகிறேன்.

2-யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சகம் உத்தமம்
ராமாநுஜார்ய சஸ் சாத்ரம் வந்தே தாசாரதிம் குரும்

யாரொருவர் பக்த நகரமான தொண்டனூரில் (ராமாநுஜருடைய விஜயத்தைப் போற்றும்படி)
ஸ்ரீதாடீ பஞ்சகம் என்னும் உத்தமமான ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தாரோ,
அந்த ராமாநுஜருடைய ப்ரிய சிஷ்யரும், தாசரதி என்னும் திருநாமம் உடையவருமான
ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்.

————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்த த்வாந்த நிராச வாசரபதிர் ஜைநே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் த்ரை வித்ய ஸூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி––முதல் ஸ்லோகம்–

நாஸ்திகர்கள் பாஷண்டர்கள் எனப்ப டுபவர்.
காட்டுத் தீ வளர்த்தால் எவ் விதம் மரங்கள் அழியுமோ அது போன்று,
எம்பெருமானார் பாஷண்டர்களை அழித்தார்.

சார்வாகர், பௌத்தர் முதலிய மலைகளை மிகவும் எளிதாக எம்பெருமானார் சாய்த்தார்.

பௌத்தம் என்ற இருளுக்குச் சூரியன் போன்று எம்பெருமானார் அவதரித்தார்.

ஜைனர்கள் என்ற யானைகளைச் சிங்கம் போன்று விரட்டினார்.

மாயாவாதிகள் என்ற நாகங்களைத் தனது நிழல் மூலமே அழிக்கின்ற கருடன் போன்று விளங்கினார்.

ஸ்ரீரங்கநாதனின் திருக் கோயிலைத் திருத்தி, பெருமையுடன் நின்றார்.

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹாந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாசநி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய ஸூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள் –
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –

ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

————

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-இரண்டாம் ஸ்லோகம்–

பாஷண்டம் (நாஸ்திர்கள்), ஷண்டம் (பௌத்தம் முதலானோர்) ஆகிய மலைகளை
இந்திரனின் வஜ்ராயுதம் தண்டிப்பது போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் தண்டிக்கிறது.

மறைமுகமான பௌத்தர்கள் என்ற பெரிய கடலைக் கலக்கும் மத்து போன்று எம்பெருமானாரின் த்ரி தண்டம் உள்ளது.

“இருள் தருமா ஞாலம்” என்பதற்கு ஏற்ப வேதாந்தத்தின் ஆழ் பொருள்கள்,
இந்த உலகில் ஏகதண்டிகளின் (அத்வைதிகள்) பிடியில் சிக்கி நின்றது.
அந்த இருளை நீக்கும் தீபமான த்ரி தண்டியாக எம்பெருமானார் நின்றார்.

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜஸ்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –

சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

————

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத் வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதி கதக சிரோ வஜ்ர தண்டம் த்ரி தண்டம் –மூன்றாம் ஸ்லோகம்–

எம்பெருமானாரின் த்ரிதண்டம் இந்த உலகில் உள்ள சிஷ்யர்களுக்கும் ஞானத்தை அளிப்பதற்காக உள்ளது.
இந்த உலகில் பல விதமான வாதங்கள் தோன்றின்.
அவற்றை சீர் செய்து, சரியான வாதத்தை நிலைநாட்டிய த்ரிதண்டம் இதுவாகும்.

வேதாந்தத்தில் உள்ள ஸத் வித்யை, வைஸ்வாநார வித்யை போன்ற பல வித்யைகளை விளக்கிட்டு
நமக்குக் காண்பிப்பதற்காக உள்ளது இந்த த்ரிதண்டமாகும்.

“கலியும் கெடும் கண்டு கொண்மின்,” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தது போன்று,
கலியின் கொடுமைகள் அனைத்தையும் அழிக்கும் கால தண்டம் போன்றது.

வேதங்களுக்குத் தவறான பொருள் கூறும் மதங்களால் தளர்ந்து போன வேத புருஷனுக்குக் கை கொடுக்கும் தண்டம் போன்றது.
மூன்று உலகங்களையும் வெற்றி கொண்டதற்கு ஈடாக உள்ள வெண் கொற்றக் குடையின் மணிக் காப்பு போன்றது.
எதிர்வாதம் செய்பவர்களின் தலைகளைத் துண்டாக்கும் வஜ்ர தண்டம் போன்றது – எம்பெருமானாரின் த்ரிதண்டமாகும்.

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம் –
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம் போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத் வித்யா தீப தண்டம் –
சத் வித்யா முதலான -அஷி வித்யா -வைச்வாநர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத் வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத் வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலளவாய திசைஎ எட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரி புவன விஜயஸ் சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது

7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம் –
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி

ஆக இப் புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரி தண்டத்தின் பெருமை கூறிற்று-

————

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரி யுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத் வித்யா தீப ஸூத்ரம் சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–நான்காம் ச்லோகம்–

வேதம் என்ற பெண்ணின் கழுத்தில் ஸ்ரீமந்நாராயணனே நாயகன் என்று அறிவிக்கும்
தாலி போன்று எம்பெருமானாரின் யஜ்ஞோபவீதம் உள்ளது.

த்ரியுகம் என்பது எம்பெருமானாரின் ஒரு திருநாமம் ஆகும்.

அப்படிப்பட்ட அவரது திருவடிகளை அடைவதற்குப் பற்றிக் கொண்டு ஏறும் கயிறு போன்று, இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

மிகவும் உயர்ந்த வித்யைகள் மேலும் ப்ரகாசமாக எரியும் திரிநூலாக இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

கலியில் கொடுமைகளை அழிப்பதற்கு வந்த எமனின் பாசக் கயிறு போன்று இவரது யஜ்ஞோபவீதம் உள்ளது.

எம்பெருமானாரின் திருவடிகளை அடைந்தவர்களது உள்ளம் ஒரு தாமரை என்று வைத்துக் கொண்டால்,
இவரது யஜ்ஞோபவீதம் அந்தத் தாமரையின் தண்டு போன்று உள்ளது.

மற்ற மதத்தவர்கள், தங்கள் மதப்படி தங்களது யஜ்ஞோபவீதத்தை துறந்தால் மட்டுமே மோஷம் அடைவர்.

ஆனால் அவர்கள் எம்பெருமானாரின் யஜ்ஞோபவீத அழகைப் பார்த்தவுடனேயே மோக்ஷம் அடையலாம்.

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூத்ரம் போன்றதும் –
ஜகத் அநீஸ்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுக பத யுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூத்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இறே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இறே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத் வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலி கதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம் போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ஸ்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

————-

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

ஸ்ரீ ப்ரார்த்தநா பஞ்சகம்

ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம் –
இப்பிரபந்தம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் சிஷ்யர் ஸ்ரீ கடிகா சஹஸ்ர ஆச்சார்யாரோ –
ஸ்ரீ ஸ்ருதி ப்ரகாசிகா ஆச்சார்யரான ஸ்ரீ ஸூதர்சன பட்டரோ –
ஸ்ரீ எறும்பி அப்பாவோ –
ஸ்ரீ கோயில் அண்ணண் திருப்பேரானாரோ -என்பர் –

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் க்ருபயா பரயா தவ
மம விஜ் ஞாபநம் இதம் விலோக்ய வரதம் குரும்–ஸ்லோகம் -1-

அடியேன் குருவான வரத குரு ஆச்சார்யரை திரு உள்ளத்தில் கொண்டு
உபய விபூதியையும் நித்தியமாக யுடைய காரேய் கருணை இராமானுசா-
அடியேனுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அருள்வாய்

யதிகளின் தலைவரே! கைங்கர்ய ஸ்ரீயை உடையவரே!
பரமமான க்ருபையோடே (அடியேனுடைய) ஆசார்யரான நடாதூர் அம்மாளைப் பார்த்து,
அடியேனுடையதான இந்த விண்ணப்பத்தை தேவரீர் திருச் செவி சாற்றியருள வேணும்.

மேலே இரண்டாம் ஸ்லோகம் தொடங்கி ஆறாம் ஸ்லோகம் வரை உள்ள ஐந்து விண்ணப்பங்களை
பரம கிருபா மாத்திரை ப்ரசன்னாச்சார்யரான கிருபையினாலே
அடியேனுடைய சிறுமையைப் பாராமல்
ஞான பக்தி வைராக்யங்கள் நிறையப்பெற்ற வரத குருவின் பெருமை ஒன்றையுமே கடாக்ஷித்து
மேலே உள்ள ஐந்து பெருப் பெருத்த விண்ணப்பங்களுக்கு அங்கமாக
இந்த ஒரு விண்ணப்பம் கேட்டு அருள வேணும் என்கிறார்

இந்த ஐந்து விண்ணப்பங்களாலே இதுக்கு பிரார்த்தனா பஞ்சகம் என்ற பெயராயிற்று

———-

இதில் பகவத் விஷய பற்று வைக்க இடையூறாக உள்ள
பாஹ்ய விஷய ஸங்கத்தைப் போக்கி அருள வேணும் என்கிறார் –

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிவர்த்தய வாசநாம் –ஸ்லோகம் -2-

வாசனா ருசிகளை போக்கி அருள பிரார்த்தனை இதில் –
எண்ணற்ற காலங்கள் பாவங்களையே செய்து, அதன் வாசனையானது என்னுள்ளே ஊறிக் கிடக்கிறது.
யதிராஜரே! இதனால் நான் தவறுகளைத் தொடர்ந்தபடி உள்ளேன்.
இவ்விதம் இருக்கின்ற உலக விஷயங்களில் இருந்து எனது புலன்களை மீட்க வேண்டும்.

வாஸனா ஸப்தம் ருசிகளுக்கும் உப லக்ஷணம்
புத்தி பூர்வகமான ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சை ருசி என்றும்
அபுத்தி பூர்வகமாக ப்ரவ்ருத்திற்கு காரணமான இச்சையே வாஸனை யாகும்
காமம் ஒழிந்தால் க்ரோதாதிகளும் ஒழியுமே

————–

உலகோரைப் பார்த்தார்
விஷயாந்தரங்களிலே பற்று மிக்கு புத்ராதிகளைப் பிரார்த்தித்து வருகிறார்களே
உபய விபூதி நாதர் ஸகல அபீஷ்ட பிரதர் அன்றோ
அவர்கள் வேண்டிக்கொண்டால் ஹித பரரான தேவரீரே அவற்றைத் தராமல் ஒழிந்து
அதுக்கும் மேலே அவற்றிலே வைராக்யத்தையும் தந்து அருள வேணும் என்கிறார்

அபி ப்ரார்த்த யமா நாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –ஸ்லோகம் -3-

விஷயாந்தர வைராக்யம் பிறப்பித்து அருள பிரார்த்தனை இதில் –
யதிராஜரே! நான் உம்மிடம் புத்திரன், வீடு, செல்வம் முதலானவற்றைக் கேட்கக் கூடும்.
ஆனால் அவற்றை விலக்கி, நீவீர் எனக்கு வைராக்யத்தை அளிக்க வேண்டும் –
காரணம் எனது நன்மையை மட்டுமே அல்லவா நீவிர் எண்ணியபடி உள்ளீர்.

புத்ர ஷேத்ராதி- ஆதி ஸப்தத்தாலே
ஐஹிக போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாவற்றையும் சொன்னபடி
ஹித காரின் -ஹித ஏக காரின் -ஆச்சார்ய சம்பந்தம் மோக்ஷத்திற்கே ஹேதுவாய் இருக்குமே –

—————–

பகவத் பாகவத அபசாராதிகள் பிரகிருதி ஸம்பந்தத்தினால் ஸ்வ ப்ரயத்னத்தினால்
தவிர்க்க முடியாது என்று உணர்ந்து
அவை நேராதபடி தம்மை நடத்தி அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

யதா அபராதா நஸ்யுர்மே பஃதேஷூ பகவத்யபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –ஸ்லோகம் -4-

பாகவத அபசாராதிகள் நேராதபடி அருள பிரார்த்தனை இதில் –

யதிராஜரே! முக்தி அடையும் வரையில், இந்த உடலுடன் இங்கு வாழும் நான்,
ஒரு போதும் பகவானையோ அவனது அடியார்களையோ அவமானப்படுத்தி விடக் கூடாது.

பாகவத அபசாரத்தை விட பகவத் அபசாரம் நேர்வது மிக குறைவு
பகவத் அபி -அபி சப்தத்தால்-ஆஸ்திகர்களுக்கு அச்சம் இருப்பதால் இது நேராது ஆகிலும் என்றவாறு
நிஷித்தங்கள் நான்கினுள் இவை இரண்டையும் சொன்னது
அஸஹ்ய அபசாரம் அக்ருத்ய கரணம் -போன்றவற்றுக்கும் இவை உபலக்ஷணம் –

——————-

மநோ வாக் காயங்கள்
ஸத் புருஷ ஸஹ வாஸத்தாலும்
ஸத் கிரந்த அனுசந்தான ஸம்பாஷணத்தாலும் ஆளும்படி
செய்து அருள வேணும் என்று பிரார்திக்கிறார் இதில் –

ஆமோஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலேஷே போ அஸ்து நஸ் சத்பி ஸஹ வாஸம் உபேயுஷாம் –ஸ்லோகம் -5-

கீழே யாவத் தேஹம் -இங்கு ஆ மோக்ஷம் –
ரஜஸ் தமஸ் குணங்கள் உள்ள ப்ரக்ருதி -கழிந்து பரம பதம் செல்லும் வரை
கால ஷேபம் திருமால் அடியாரோடே ஸஹ வாஸம் –
பூர்வாச்சார்ய பிரபந்த கால ஷேபம்-வேண்டி பிரார்த்தனை இதில் –
லக்ஷ்மண முனியே! இந்த உடல் பிரியும் காலம் வரை நான் உமது ப்ரபந்தங்களையே ஆராய்ந்தபடி,
அவற்றையே கால க்ஷேபம் செய்தபடி எனது பொழுதைக் கழிக்க வேண்டும்.

த்வத் பிரபந்த
தேவரீர் அருளிச் செய்த நவ ரத்னங்களிலும்
தேவரீரைப் பற்றிய இராமானுஜ நூற்றந்தாதி யதிராஜ சப்ததி யதிராஜ விம்சதி ஆர்த்தி பிரபந்தம் போல்வனவும்
இவற்றின் அனுசந்தானமும் ஸத் ஸஹவாசமுமே மோக்ஷத்துக்கு அனுகூலமாகும் என்பதைக்
காட்ட- ஆ மோக்ஷம் பத பிரயோகம் இதில் —

————–

எம்பெருமானாருடைய பிரபத்திக்கு விஷயமான அருளிச் செயல்கள்
தமது நாவுக்கு இனியவாகும் படி அருள் செய்ய பிரார்த்தனை இதில் –

பராங்குச முனீந்திராதி பரமாசார்ய ஸூக்தயா
ஸ்வதந்தாம் மம ஜிஹ்வாயை ஸ்வத ஏவ யதீஸ்வர –ஸ்லோகம் -6-

ஆழ்வார்களையே பரமாச்சார்ய சப்தத்தால் -அருளி- செவிக்கு இனிய செஞ்சொல் –
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருக்க பிரார்த்தனை இதில் –

சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத யுள்ளம் பெற இராமானுச முனி தன் வாய்ந்த
மலர்ப்பாதம் வணங்குகிறேன் -ஸ்ரீ அனந்தாழ்வான்

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா -ஸ்ரீ எம்பார்

இவை இன்றும் இனித்தாலும் அகலகில்லேன் இறையும் என்ற பிராட்டி பிரார்த்தனை போல் இவரும்
தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணும் செவிக்கு இனிய செஞ்சொற்கள் ஆகையால் இந்தப்பிரார்தனை –

————-

இத் யேதத் சாதரம் வித்வான் ப்ரார்த்தநா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–ஸ்லோகம் -7

ஸ்வாமி திருவடிகளில் பேரின்பத்தை இந்த ஸ்லோகங்கள் சொல்ல பெறுவார் என்று
பலன் அருளிச் செய்து நிகமிக்கிறார்

சாதரம் படன்-என்று
பொருள் உணர்ந்தோ உணராமலோ சொன்னாலும் பலன் கிட்டுவது நிச்சயம் என்றவாறு –

யதிராஜரின் திருவடிகளின் மீது வைக்கப்பட்ட இந்த ஐந்து விண்ணப்பங்களை
யார் ஒருவர் பக்தியுடன் படிக்கிறார்களோ,
அவர்கள் எம்பெருமானாரின் திருவடிகளின் மீது மேலும் பக்தி பெறுவர்.

பகவத் பக்தி
பாகவத பக்தி
ஆச்சார்ய பக்தி
ஒன்றுக்கு ஓன்று ஸ்ரேஷ்டம்
ஆச்சார்யர் திறத்திலே பரமபக்தியை விட வேறே ஒன்றே ஸ்ரேஷ்டம் இல்லையே
ஆகவே இத்தை அனுசந்தானத்தால் உண்டாகும் யதிராஜ பாத பங்கஜ பரம பக்தி
கைகூடும் என்று நிகமித்து அருள்கிறார் –

————–

காஷாய ஸோபி கமநீய ஸிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருஸோர் மமாக்ரே –ஸ்லோகம் -8-

ஸ்வாமி திவ்ய மங்கள விக்ரஹம் திவ்ய சோபை எப்பொழுதும்
நம் கண்களுக்கு விளங்க பிரார்த்தனை –

துவராடையால் விளங்குவதும்
அழகிய குடுமியின் அமைப்பை யுடையதும்
முக்கோலால் ஒளி பெற்ற திருக்கையை யுடையதும்
வெளுத்த பூணூலை யுடையதும்
ஒளி விடுகிற திருமண காப்பை யுடையதும்
உதியா நின்ற ஆதித்யனோடே ஒத்து உள்ளதான
தேவரீருடைய திருமேனியானது
காண விரும்பிய அடியேனுடைய இரண்டு கண்களுக்கு எதிரிலே இருக்கும்படி அருள்வாய் என்றபடி –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

எம்பெருமானாருடைய இயற்கையான திருமேனி அழகை
பெருமாள் கோயிலிலே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாருக்கு
சிவந்து நெடுகி வலியராய்
ஆயத்தாச்ச ஸூ வ்ருத்தாச்ச–பாஹவா -என்கிறபடியே
ஆஜானு பாஹுவாய் நடுவே வருகிறவர் –
என்ற வர்ணனை இங்கே நினைக்கத் தகும் –

——–

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஜ்ஞாத்வா ஆர்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் சவகீயேப்யோ யதிராஜாய மங்களம் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார் வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தான்
யுல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் /ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்/ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம் /ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —–

October 2, 2021

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள் —

யஸ்ய ப்ரஸாத கலயா
பதிர ஸ்ருனோதி
பங்கு பிரதாவதி
ஜவேந வக்தி ச மூக
அந்த ப்ரபஸ்யதி
ஸூதம் லபதே ச வந்த்யா
தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி

ராமானுஜரை சம்பிரதாயத்துக்கு வரவழைக்க ஆளவந்தார் ஆ முதல்வன் மானசீகமாக கடாக்ஷித்து சரணம்

யஸ்ய ப்ரஸாத கலயா –அருள் வெள்ளத்தால்
பதிர ஸ்ருனோதி -காது கேட்க்காதவன் கேட்ப்பான் –
வேறே சம்ப்ரதாயம் கேட்டு வீணாக்கப் போகாமல் கேட்க வேண்டாதத்தை கேட்பது

பங்கு பிரதாவதி -நொண்டி ஓடுவான் -எங்கும் செல்லாமல் –
(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” என்கிறபடியே -(தார்ஷ்யாத்ரி — திரு அஹோபிலம் )
எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.

ஜவேந வக்தி ச மூக -ஊமையும் பேசுகிறான் -நவக்ரந்தங்கள் வெளி வந்தனவே

அந்த ப்ரபஸ்யதி -குருடனும் நன்றாக பார்க்கிறான் -பார்க்க வேண்டாதவற்றை பார்ப்பவன் குருடன்

ஸூதம் லபதே ச வந்த்யா -மலடியும் பிள்ளைகளை பெறுகிறாள் -சிஷ்ய கூட்டங்கள் சேரப் பெற்றார்
12000 ஸ்ரீ வைஷ்ணவர் 700 சந்யாசிகள் கிடைக்கப் பெற்றார்

தம் தேவதேவ வரதம் சரணம் கதோஸ்மி -தேவாதி ராஜா வரதா சரணம் அடைகிறேன் –

——–

காஞ்சிபுரத்தின் மகிமையை ஆளவந்தார் நன்றாகவே அறிவார். அதாவது,
‘புரீணாமபி ஸர்வாஸாம் ஸ்ரேஷ்ட்டா பாப்ஹரா ஹி ஸா’ என நகரங்கள் அனைத்திலும் சிறந்ததாய்
பாவத்தைப் போக்கடிப்பதாக, புண்ணியத்தை வளரச் செய்வதாக இருக்கிறது காஞ்சிபுரம்.
முக்தி தரும் ஏழு தலங்களுள் ஒன்றானது என்று எண்ணிக்கொண்டே வந்தார்.
ஆனால், யாதவப் பிரகாசரின் பிடிவாத வேதாந்த பாடங்களும், அவரின் துர்நடத்தையும் கண்டு
மிகவும் மன வருத்தம் கொண்டு, கூடவே ஸ்ரீராமானுஜரைப் பற்றியும் எண்ணம் கொண்டு
இவ்வாறு சொல்லத் தொடங்கினார்:

‘‘அஸந்த ஏவாத்ர ஹி ஸம்பவந்தி
ஹஸ்திகாயாமிவ ஹவ்யவாஹ:
அத்ரைவ ஸந்தோ யதி ஸம்பவந்தி
தத்ரைவ லாபஸ்ஸர ஸீருஹாணாம்’’

இதன் பொருள்,
‘‘நெருப்புச் சட்டியில் உள்ள நெருப்பு போல, இவ்வுலகில் துஷ்டர்களே உள்ளனர்.
இதிலே நல்லோர்களாகச் சிலர் காணப்படுகின்றனர். இது எப்படி உள்ளதெனில்,
நெருப்புச் சட்டியிலேயே தாமரை புஷ்பங்கள் பூத்தது போலாகும்’’ என்பதாகும்.

பிறகு ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்தார்.
பேரருளாளனை சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, ஸ்ரீஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நோக்கி,
‘‘இவர்களில் அந்த இளையாழ்வார் (ஸ்ரீராமானுஜர்) யார்?’’ என்று கேட்டார்.
திருக்கச்சி நம்பிகள் மிக அழகாக ‘‘அதோ சிவந்து நெடுகி வலியராய் நீண்ட கைகளுடன்
நடுவே வருகிறாரே அவர்தான் ஸ்ரீராமானுஜர்’’ என்று காட்டியருள,
ஸ்ரீஆளவந்தாரும் மானசீகமாக கடாட்சம் செய்து அருளினார்.
தன்னுடைய கம்பீர நயனங்களாலே மீண்டும், மீண்டும் செவ்வரியோடே, மதுரப்பார்வையினால் பார்த்தருளி
‘ஆம் முதல்வன் இவன்’ என்று விசேஷமாக உகந்து கடாட்சித்து அருளினார்.
அதாவது, நம் வைஷ்ணவ தரிசனத்திற்கு ஏற்ற முதல்வன் இவன்தான் என்று கூறினார்.

உடனே ஸ்ரீஆளவந்தார் வேகமாக விரைந்து
மீண்டும் பேரருளாளன் சந்நதிக்கு வந்து நமஸ்
கரித்தார். எல்லா சிஷ்யர்களும் எழுந்தருளி
யிருந்தனர். அப்போது ஸ்லோகம் ஒன்றை உரக்கச் சொன்னார்:

‘‘யஸ்ய ப்ரஸாத கலயா பதிர: ச்ருணோதி பங்கு:
ப்ரதாவதி ஜவேனசவக்தி மூக:று
அந்த: ப்ரபச்யதி ஸுதம் வபதேச
வந்த்யா, தம்தேவமேல வரதம் சணம்
கதோஸ்மிறுறு’’

அதாவது, ‘‘எந்த பேரருளாளனுடைய அனுக்ரஹத்தின் காரணமாக செவிடன் கேட்கும் சக்தியுடையவனாக ஆகிறானோ,
காலில்லாதவன் வேகமாக நடக்க வல்லவனாக ஆகிறானோ, ஊமை பேசவல்லவனாக ஆகிறானோ,
மலடியும் பிள்ளையைப் பெறுகிறாளோ, அந்த தேவப் பெருமாளான வரதராஜனை சரணமடைகிறேன்.”
பிறகு, ‘‘ஒரு விண்ணப்பம்,’’ என்றும் பிரார்த்தனை செய்தார்.
‘‘நம் ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு ஸ்ரீ ராமானுஜரைத் தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.

ஏனெனில், ஒரு அத்வைதியாகக்கூட இல்லாமல் வெறும் பிடிவாதம் பண்ணக்கூடிய வேதாந்தியான
யாதவப் பிரகாசரிடம் படிப்பதும் அவரிடம் மறுப்பு சொல்லி வெறுப்பையும், கோபத்தையும் சம்பாதிப்பதும் என்று
இப்படியே காலம் கழிந்தால், ஸ்ரீராமானுஜருடைய அவதார காரியம் என்ன ஆவது என்கிற ஆதங்கத்தில் அவ்வாறு பிரார்த்தித்தார்.
பிறகு, ஸ்ரீஆளவந்தார் தம் முதலிகளுடனும், சிஷ்ய கணங்களுடனும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.

திருக்கச்சி நம்பியிடம் பிரியாவிடை பெற்றபோது, ‘‘அடியேனுக்கு நல்வார்த்தை கூறலாகாதா?’’ என்ற போது,
ஸ்ரீஆளவந்தார் சில நல்ல வார்த்தைகளைக்கூறி சமாதானப்படுத்தி, ஆனந்தக் கண்ணீரோடு நின்று கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகளை ஆரத்தழுவி சமாதானம் செய்தார்.
‘‘ஸ்ரீராமானுஜரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளும்,’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இதற்கிடையில் காஞ்சிபுரத்திலேயே ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு நாட்டை ஆண்டு கொண்டிருந்த பல்லவ மன்னனின் பெண்ணுக்கு பிரம்மராட்சஸ் பிடித்திருந்தது.
மிகுந்த கவலையோடு இருந்த பல்லவ மன்னன் பல வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து பார்த்தும் பலனில்லாமல் போயிற்று.
இந்தக் கவலையினால் ராஜ்ய நிர்வாகத்தை சரிவர நடத்த இயலவில்லை.
மேலும், பற்பல மந்திரவாதிகளை அழைத்து வந்து தம் பெண்ணைக் காண்பித்தார்.

அப்படியும் பலனில்லாது போயிற்று. நாளுக்கு நாள் மன்னனுக்கும், ராணிக்கும் கவலை பெருகியபடி இருந்தது.
அவரது கன்னிகையோ நாளுக்குநாள் மெலிந்து கொண்டே வந்தாள். முகம் வெளிறிப்போய்,
எதுவுமே சாப்பிட முடியாது நோயால் பீடிக்கப்பட்டு, எதிலுமே நாட்டமில்லாமல் ‘ஹாய், ஹோய்’ என்று கத்திக் கொண்டிருந்தாள்.
இதனாலேயே பல்லவ மகாராணி கல்யாணி கவலைப்பட்டு கவலைப்பட்டு, பரலோகம் சென்றடைந்தாள்.

பல்லவ மன்னனுக்கு எல்லாமே சூன்யமாகப் போனது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் அரசனிடம், யாதவப் பிரகாசரைப் பற்றி கூறி,
அவர் இங்கு எழுந்தருளினால், ராஜகுமாரிக்கு விடிவு கிடைக்கும் என்று உறுதியாக மந்திரிமார்கள் கூற,
அவரை உடனே அழைத்து வருமாறு பல்லவ அரசன் ஆணையிட்டான்.

ஆணையை மேற்கொண்டு யாதவப் பிரகாசர், ஸ்ரீராமானுஜரை அழைத்துக்கொண்டு, தன் சிஷ்யர்கள் புடைசூழ
பல்லவராஜனின் அரசவைக்கு ஏகினார். பல்லவ அரசன் இவரைப் பலவாறு மன்றாடி கேட்டுக் கொண்டு தம் கன்னிகையை சரிசெய்யுமாறு கூறினான்.

உடனே, யாதவப் பிரகாசரும் ஏதோ ஜெபிப்பதுபோல் சில மந்திரங்களைக்கூறி சிறிது தீர்த்தத்தை அவள்மீது தெளிக்க,
யாருக்குமே அடங்காத, ஏன் பதிலேகூட சொல்லாத பிரம்மராட்சஸ் இவருக்கு மட்டுமே பதில் கூறியது.
‘‘நீ ஏன் இங்கு வந்தாய்?’’ என வினவியது.
யாதவப் பிரகாசரோ, தன்னுள் தேங்கிய பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,
சற்றே தள்ளி நின்று, ‘‘நீ யார்? ஏன் இவளைப் பிடித்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? என்ன செய்தால் விட்டு விடுவாய்?’’
என்று பல்வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார்.

‘‘ஹே… யாதவனே, நீ ஜெபிக்கும் மந்திரம் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயோ?’’ என்று கூறி
அவர் ஜெபித்த மந்திரத்தை அப்படியே கூறியது.
‘‘உன் ஜெபத்திற்கும், மந்திரத்திற்கும் நீ தெளித்த ஜலத்திற்கும், இவளை விட்டுவிட்டுப் போவேனோ?
அவ்வளவு சக்தி, உனக்கும், உன் மந்திரத்திற்கும் உன் ஜெபத்திற்கும் கிடையாது,’’ என்று கர்ஜித்தது.
‘‘அட! நான் சொன்ன மந்திரங்களை அப்படியே சொல்கிறாயே! அப்படியானால் நீ உண்மையில் யார்?’’ என்று தவிப்புடன் கேட்டார்.

‘‘இது மட்டுமா? உன்னுடைய முன் ஜென்மமும், என் முன் ஜென்மமும் எனக்குத் தெரியும்,’’ என்றது.
‘‘அப்படியானால், நான் யார்? நீ யார் என்று கூறலாகாதோ?’’
‘‘இதோ பார்! உன் போன ஜென்மத்தில் மதுராந்தகம் என்ற இடத்திலுள்ள ஒரு ஏரிக்கரையிலுள்ள புற்றில்
உடும்பு என்ற ஜந்துவாக நீ இருந்தாய். அப்போது ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
திருமலை திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும்போது மதுராந்தகம் வந்தடைந்தனர்.

சற்று இளைப்பாற எண்ணி, ஏரியில் நீராடி, பகவத் ஆராதனங்களை முடித்துக் கொண்டு வந்த ஆகாரத்தை உண்டு
ஏரியில் கைகளை அலம்பினார்கள். அந்த நீரை நீங்கள் பருகியதால், அந்தக் கருணையால் இப்போது
வேதாந்தம் பேசும்படியான ஒரு வித்வத்துவ ஜென்மத்தை கிடைக்கப் பெற்றிருக்கிறீர்கள்.
அதன் காரணமாகத்தான் உனக்கு சிஷ்யனாக, இதோ எதிரில் அவதாரமாக நிற்கும் ஸ்ரீ ராமானுஜரையும் பெற்றிருக்கிறாய்.

நான் செய்த தவறு என்னவெனில் என்னுடைய அந்தணப் பிறவியில் வேதத்தை தவறாக உச்சரித்ததும்,
யாகத்தில் மந்திரத்தை தவறாகச் சொன்னதுமே ஆகும். அதனாலேயே இப்படி பிரம்ம ராட்சஸ் ஆனேன்.’’
‘‘நீ சொன்ன வரையில் சந்தோஷம். ஆனால், இந்த ராஜ கன்னிகையை விட்டு விட்டுப் போ,’’ என்று யாதவப் பிரகாசர் கூறினார்.
‘‘நீ சொன்னால், நான் போக வேண்டுமோ? நான் போவேனா என்ன?’’ என்று பிரம்மராட்சஸ் கோரமான குரலில் கர்ஜித்தது.

‘‘சரி, யார் சொன்னால் இவளை விட்டுவிடுவாய்?’’ என்று யாதவப் பிரகாசரும் விடாமல் கேட்டார்.
அப்போது கண்களில் நீர் மல்க பிரம்மராட்சஸ் சாந்தமாகப் பேசத் தொடங்கியது.
‘‘உம்மிடம் பாடம் பயிலும் மாணவரான நித்யஸுரிகளில் ஒருவர், அதோ உள்ளாரே,’’ என்று கூற
‘‘அது யார்?’’ என்று யாதவப் பிரகாசரும் வினவ,
ஸ்ரீ ராமானுஜரைக் காட்டி, ‘‘இவர் என் தலையை, தன் காலால் தீண்டி,
‘‘நு போவுதி’’ என்று கூறினால் அவளை விட்டு விடுகிறேன்,’’ என்று கம்பீரமாகவும், அமைதியாகவும் கூறியது.

யாதவப் பிரகாசர் இளையாழ்வாரை (ஸ்ரீராமானுஜரை) நோக்கி பிரம்மராட்சஸ் சொன்னதுபோல் செய்யவும் என்று கூறியவுடன்,
அப்படியே, தன் காலால் அவளைத் தீண்டி, ‘இவளை விட்டுப்போ’ என்று கூறிய மறுகணமே அவளை விட்டு பிரம்மராட்சஸ் நீங்கி,
நீங்கியதற்கு அடையாளமாக, அங்குள்ள மரத்தாலான கம்பத்தின் கணுவை முறித்துவிட்டுச் சென்றது.

யாதவப் பிரகாசரும், அந்த சமயத்தில் ஸ்ரீராமானுஜரை மனதாரப் புகழ்ந்து கொண்டாடி சிஷ்ய கணங்களுடன் தன் மடத்திற்கு வந்தார்.
அந்த சமயத்தில், அப்படி புகழ்ந்தாரே தவிர, ஸ்ரீராமானுஜர் மேல் இந்த சம்பவத்தால்,
அதிகமான பொறாமையும் கோபமும் யாதவப் பிரகாசருக்கு உண்டாயிற்று.
அதேசமயம், இந்த சம்பவத்திற்குப் பிறகு இளையாழ்வாரின் புகழ் மேலும் ஓங்கியது.

———————–

ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்த முக்த ஸ்லோகங்கள்

சித்திரை புனர்வஸு – ஸ்ரீ முதலியாண்டானின் திருநக்ஷத்திரம்

தனியன்
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா|
தஸ்ய தாஸரதே: பாதௌ ஸிரஸா தாரயாம்யஹம் ||

அர்த்தம்:
யதிராஜருடைய பாதுகைகள் எவருடைய பெயராலே (முதலியாண்டான் என்று) வழங்கப்படுகின்றனவோ,
தாஸரதி எனும் திருநாமமுடைய அந்த முதலியாண்டானின் திருவடிகளை யான் தலையாலே தரிக்கிறேன்.

வைபவச் சுருக்கம்:
ஸ்வாமி எம்பெருமானார் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் (கிபி 1027) பிரபவ வருடத்தில்
பச்சைப் பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் புருஷமங்கலத்தில்/வரதராஜபுரத்தில்
சித்திரை மாதம் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்ரம் வாதூல கோத்ரத்தில்
எம்பெருமானாருக்கு மருமகனாகவும், பரதனின் அம்சமாகவும் “தாசரதி” என்னும் திருநாமத்தோடு அவதரித்தவர்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி.

எம்பெருமானாருடைய சிஷ்யர்கள் அனைவருக்கும் நிர்வாஹகராக இருந்தமையால் “முதலியாண்டான்” என்று அழைக்கப்பெற்றார்.

எம்பெருமானாருடைய திருவடி ஸ்தானமாயிருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால்
எம்பெருமானாருடைய திருவடி நிலை இன்றளவும் “முதலியாண்டான்” என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி எம்பெருமானார் நியமனத்தாலே, பெரிய நம்பிகள் திருக்குமாரத்தியான அத்துழாய்க்குச்
சீதன வெள்ளாட்டியாகி தாஸவ்ருத்திகள் செய்த பெரியவர் இவர்.

எம்பெருமானார் இவரைத் தமது த்ரிதண்டாமாக அபிமானித்தார்.

முதல் திருவந்தாதி ப்ரபந்தத்துக்கு தனியன் அருளிச்செய்தார் ஸ்வாமி முதலியாண்டான்.

——–

முக்த ஸ்லோகங்கள்

முதலியாண்டான் அருளிச் செய்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ ஸ்ருதி சத சிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுல தர தாமேத்ய ஸ புந
உபா வேதவ் க்ரந்தவ் கடயிதுமலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஜஜ்ஜே ராமா வரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர —

ஸ்ரீ வேத வியாஸர் திருவவதரித்து ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் இயற்றி வேதாந்த பொருளை விளக்கி அருளினார்
அவரே தாமே மீண்டும் ஸ்ரீ நம்மாழ்வாராக திரு அவதரித்து செவிக்கு இனிய செஞ் சொற்களாலே அவற்றை விவரித்து அருளினார்
இந்த உபய வேதாந்தங்களையும் உபபத்திகளாலே ஏக ஸாஸ்த்ரமாக்கி அருளுவதற்காகவே
அவரே மீண்டும் ஸ்ரீ ராமானுஜராக திரு அவதரித்து அருளினார் –

—————–

ய: பூர்வம் பரதார்த்தித: பிரதிநிதிம் ஸ்ரீ பாதுகாமாத்மந:
ராஜ்யாய ப்ரததௌ ஸ ஏவ ஹி குரு: ஸ்ரீ தாஸரத்யாஹ்வய:
பூத்வா லக்ஷ்மண பாதுகாந்திமயுகே ஸர்வாத்மநாம் ஸ்ரேயஸே
ஸாம்ராஜ்யம் ஸ்வயமத்ர நிர்வஹநி நோ தைவம் குலஸ்யோத்தமம்–ஸ்லோகம்–1-

எவனொருவன் முற்காலத்தில் பரதனால் ப்ரார்திக்கப் பட்டு அரசாளுவதற்குத்
திருப்பாதுகையைத் தனக்கு ப்ரதிநிதியாகக் கொடுத்தானோ,
அந்த ராமனே தாசரதி (முதலியாண்டான்) என்ற திருநாமமுள்ள ஆசார்யனாய்,
கலி காலத்தில் நம் குலத்திற்கு உத்தம தெய்வமான ஸ்ரீ ராமானுஜ பாதுகையாகி
அனைத்து ஆத்மாக்களும் உஜ்ஜீவிக்கும் படி
ஸ்ரீவைஷ்ணவ ஸாம்ராஜ்யத்தைத் தானே இங்கு நடத்திக் கொண்டிருக்கிறான்.

ஸ்ரீவைஷ்ணவ ஸிரோபூஷோ ஸ்ரீ ராமானுஜ பாதுகா|
ஸ்ரீ வாதூல குலோத்தம்ஸ: ஸ்ரீ தாசரதி ரேததாம்||–ஸ்லோகம்–2-

ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைக்கு அலங்காரமாயிருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் பாதுகையாய்,
வாதூல குலத்திற்குச் சிறந்த அலங்காரமான ஸ்ரீ தாசரதியெனும் முதலியாண்டான்
வெற்றி பெருவாராக என்பதாக அமைந்த ஸ்லோகம்.

ஸ்ரீ ராமாம்ஸ ஸமாஸ்லிஷ்டம் பாஞ்சஜன்யாம்ஸ ஸம்பவம்|
பஞ்ச நாராயணஸ்தாந ஸ்தாபகம் குருமாஸ்ரயே||–ஸ்லோகம்–3-

ஸ்ரீராமனின் அம்ஸத்தோடு கூடியவராய், பாஞ்சஜன்ய அம்ஸமாக அவதரித்தவராய்,
ஐந்து நாராயண ஸ்தலங்களை ஸ்தாபித்தவரான முதலியாண்டானை ஆஸ்ரயிக்கிறேன்.

யஸ் சக்ரே பக்த நகரே தாடீ பஞ்சக முத்தமம்
ராமனுஜார்ய ஸச்சாத்ரம் வந்தே தாசரதிம் குரும்–ஸ்லோகம்–4–

பக்த நகரத்தில் எவரொருவர் சிறந்த தாடீபஞ்சக ஸ்தோத்திரத்தை இயற்றினாரோ,
ராமானுஜாச்சார்யரின் ஸத் சிஷ்யரான ஸ்ரீ முதலியாண்டானை வணங்குகிறேன்

——–

ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ ப்ரபாவ ஸ்லோகம்

வித்யா விமுக்திஜநநீ விநயாதி கத்வம்
ஆசாரஸம்பத் அநுவேலவிகாஸசீலம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்
சித்ரம் ந தாசரதி வம்ஸ ஸமுத்பவாநாம்||–ஸ்லோகம்:

மோகஷத்திற்கு உறுப்பான ஜ்ஞானம், சிறந்த அடக்கம், அநுஷ்டானச் செல்வம், சிறந்த குணம், ஆகியவை
எம்பெருமானாருடைய கருணைக்கு இலக்கான முதலியாண்டான் வம்சத்தினற்கு
வாய்துள்ளதில் வியப்பில்லை என்பதாக அமைந்த ஸ்லோகம்.

—–

ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் — அருளிச் செய்தவை —

ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வின்யச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம் –1-

காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ்,
மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும்,
இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும்,
ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

——

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முக்தஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருசி பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம் –2-

கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும்,
முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும்,
தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும்,
தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே!
உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

————-

கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப் நேஷ்யாமி திவசான் –3-

காவிரிக் கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும்,
மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே!
உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி
மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

————–

கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷோ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-

எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்?
அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான
காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்?
ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான
ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

———–

பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிக்த நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் நஹ –5-

பாக்கு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்
மகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய
வழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான
ஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்
காவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இறே
ஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ

——————————-

ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் –6-

அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம்.
ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

———–

அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி –7–

உண்மையில் உமது அருகில் வாராத ஒரு நாயின் சம்பந்தமான
பொய்யான அபவாதத்தினால் சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன் வெகு சமீபத்திலே வந்த போது
ஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்

————————-

பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய்,
எப்படி குழந்தையை நோக்கி ஓடி வருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க
ஓடி வந்து அருள் செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

———-

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்ஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி —

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்),
கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும்,
அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும்,
கயா ஷேத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு
உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்